text
stringlengths
329
95.8k
மீனவர்கள் நமக்காக வந்தார்கள், நம்மோடு நின்றார்கள். தமிழர் என்ற உணர்வில் நம்மோடு கலந்தார்கள். நெய்தல் நிலத்து மாந்தர் முல்லை நிலத்து உரிமைக்காகப் போராடினர். இது நம் மரபின் தொடர்ச்சிதான். நாடெங்கிலும் இருந்து படையெடுத்து வந்த நீங்கள் அனைவரும் உழவர்களும் அல்ல, ஆயரும் அல்ல. நீங்களும் தமிழர் என்ற ஒற்றை அடையாளத்தோடுதான் வந்தீர்கள். சில மலையாளிகள், வடகிழக்கு இந்திய மாந்தர் நம்மோடு இணைந்திருந்தார்கள். மனிதர் என்ற இணைப்பு அவர்களுக்குப் போதுமானதாக இருந்தது. உலகெங்கிலும் உள்ள தமிழர்கள் வீதியில் நின்றார்கள். இனம் அவர்களைப் பிணைத்தது. இசுலாமியர், கிறித்தவர், இந்து என்ற மாறுபாடின்றி அனைவரும் நம்மைத் தமிழினத்தின் அடையாளத்துடன் பொருத்திக்கொண்டோம். நிச்சயமாக, போராடிய அனைவரும் மாடு வளர்க்கவும் இல்லை, வளர்க்கப்போவதுமில்லை. போராட்டத்தின் போக்கு திட்டமிட்டு திசை மாற்றப்பட்டது. அந்தத் ’திருப்பணியில்’ எவரெல்லாம் ஈடுபட்டார்கள் என்ற ஆய்வு நமக்கு வேண்டாம். நமது ஒற்றுமைதான் நம்மை வழிநடத்தியது, உலகைத் திரும்பிப் பார்க்கச் செய்தது. ஜல்லிக்கட்டு வழக்கில் இந்திய அரசு பிறப்பித்த அறிவிக்கை (2016) நேற்று திரும்பப் பெறப்பட்டுவிட்டது. இது மிக முக்கியமான நல்விளைவு. அந்த அறிவிக்கையை எதிர்த்துத்தான் உச்ச நீதி மன்றத்தில் வழக்கு நடக்கிறது. ‘அந்த அறிவிக்கையே இப்போது இல்லை. ஆகவே வழக்கை முடித்துவிடலாம்’ என இந்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கூறிவிட்டார். ஆக, உச்சநீதிமன்ற வழக்கில் தீர்ப்பே வராமல் போகலாம். ஒருவேளை தீர்ப்பு வந்தாலும் அதை அரசு பொருட்படுத்தத் தேவையில்லை. ஏனெனில், தமிழக அரசின் சட்டம் குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெற்றுவிடும். அதைக்கொண்டு நாம் ஏறுதழுவல், மஞ்சுவிரட்டு உள்ளிட்ட விளையாட்டுகளை நடத்தலாம். இந்திய விலங்கு நல வாரியத்தின் 2011 ஆணை நீக்கப்பட வேண்டும். அதுதான் காளைகளைக் காட்சிப்படுத்தல் பட்டியலில் இணைத்த ஆணை. அதுவரை, நாம் போராடித்தான் தீர வேண்டும். எந்த வடிவத்தில் போராடுவது என இப்போது சிந்திக்க வேண்டாம். இப்படிச் சிந்தித்து நாம் தைப்புரட்சியை நிகழ்த்தவில்லை. இலக்கை எட்டும்வரை நம் விருப்பம் மாறக் கூடாது. சென்னை மெரினா கடற்கரை அருகே, மீனவர்களின் சந்தை எரிக்கப்பட்டு அவர்களது வாழ்வாதாரம் குலைந்துள்ளதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். மீனவச் சமூக உறவுகளுக்கு வேறுபல இழப்புகளும் ஏற்பட்டுள்ளன. அவர்கள் மீதான வழக்குகள் அவர்களுக்குப் பெரும் சுமையாகியுள்ளன. மெரினாவில் மட்டுமல்ல உலகெங்கும் களமிறங்கிய அனைவரின் சார்பாகவும் நான் ஒரு செயல்திட்டத்தை முன் வைக்கிறேன். 1. மீனவர்களின் சந்தையைக் கட்டித் தருவோம். 2. நமக்காகப் போராட வந்த, உணவும் நீரும் அளித்த மீனவர்கள் மீது வழக்குகள் தொடுக்கப்பட்டிருந்தால் அவ்வழக்குகளை நடத்தும் பொறுப்பை நாம் ஏற்போம். 3. மீனவர் குப்பத்தில் நம் போராட்டத்திற்கு அவர்கள் ஆற்றிய உதவிகளுக்காக ஒரு நன்றித் தூணை நாட்டுவோம். இந்நிகழ்வில் அவர்களோடு கலந்து கொண்டாடுவோம். இதுதான் செயல்திட்டம். மேற்கண்ட செயல்களுக்காக எவரும் நன்கொடையை அனுப்ப வேண்டாம். செம்மை அமைப்பில் நாங்கள் அவ்வாறு நன்கொடை வாங்குவதை முன்னிறுத்துவதில்லை. இப்பணிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றுவோம். அவற்றுக்கான நிதித் தேவையைத் திட்டமிட்ட பின்னர் அறிவிக்கிறேன். இயன்றவரை நேரில் வந்து மக்கள் முன்னிலையில் கொடுங்கள். அயல் நாடுகளில், ஊர்களில் இருப்போர் தங்கள் நண்பர்கள், உறவினர்கள் வழியாக ஏற்பாடு செய்யலாம். நீங்களோ உங்கள் பிரதிநிதிகளோ நேரில் வந்து தொகை வழங்கும்போது, நமக்குள்ளான வெளிப்படைத்தன்மை உறுதிப்படும். நமது இலக்குகள் மேன்மையானவை, நாம் தெரிந்தெடுத்த பாதைகளோ உன்னதமானவை, நமது அன்பும் அக்கறையும் அனைத்திலும் மேலானவை. தமிழர்களின் அறப் போராட்டத்தை இவ்வுலகம் வியக்கிறது. நாம் செய்யப்போகும் அறப் பணிகளை இவ்வுலகம் போற்றட்டும். மீனவர்கள் – போராட்டக்காரர்கள் என்ற பிரிவினை நமக்குள் இல்லை. இதை வார்த்தைகளால் விவரிக்க வேண்டாம். நாமும் அவர்களும் ஒன்றுதான் என்ற நம் உணர்வைச் செயலாக்குவோம் வாரீர்! Author ஆசிரியர்Posted on January 24, 2017 January 24, 2017 Categories அரசியல் சமூக ஆய்வு Post navigation Previous Previous post: தமிழ் நாடு பொலிஸ் Next Next post: ஈழப்போராட்டம் அதன் பிரதான போக்கு முன்னுதாரணமல்ல. Search for: Search Categories Announcements Uncategorised கட்டுரைகள் அரசியல் சமூக ஆய்வு அரசியல் தீர்வு இலங்கைத் தமிழர் போராட்டம் இலங்கையில் உள்ள ஏனைய அரசியல் அமைப்புகள் சர்வ தேச அரசியல் பொதுவிடயம் கவிதைகள் சமூக விழிப்பு பொது விடயம் போராட்டம் செய்திகள் இணையத்தளங்கள் நடேசன் இணையம் பூந்தளிர் தூ தேனி தமிழ் நியூஸ் வெப் பத்மநாபா மலையகம் அதிரடி அதிரடி மீடியா ஈ.பி.ஆர்.எல்.எவ். ரெலோ நியூஸ் விடிவெள்ளி எங்கள் பூமி சலசலப்பு இடதுசாரிகள் Recent Comments NIYAYAM on பிரபாகரனை அழிக்க இந்திய அரசுக்கு ஆதரவாக இருந்த தமிழக தலைவர்கள்… ராஜபக்சே கேட்கவே இல்லை… திடுக்கிடும் தகவல் ஆசிரியர் on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை…. NIYAYAM on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை…. SDPT - புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது. on புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது.
ராபி மற்றும் ரிச்சர்டின் உரையாடல் சிறப்பான ஒன்று. இப்படியான உரையாடல்கள் இரு தரப்பையும் புரிந்துகொள்ள உதவும். ரிச்சர்ட் டாக்கின்ஃச் ( Richard Dawkins) இவர் கிறித்துவ மதத்தை தழுவிய பெற்றோருக்கு பிறந்து , பின்னர் கடவுளின் இருப்பை கேள்வி கேட்ட ஆரம்பித்தவர். இவர் பெரும்பாலும் கிறித்துவ விவிலியத்தின் பழைய ஏற்பாட்டில் ( Old Testament )சொல்லப்படும் கடவுளை ஒட்டி கேள்விகளை எழுப்புபவர். பல புத்தகங்கள் , விவாதங்கள், மற்றும் உரையாடல்கள் மூலம் அவரின் கருத்தை கொண்டு செல்பவர். இவர் ஒரு உயிரியல் ஆய்வாளர் (Evolutionary Biologist). இவர் தனது அமைப்பின் குறிக்கோளாக சொல்வது https://richarddawkins.net/aboutus/ //The mission of the Richard Dawkins Foundation is to promote scientific literacy and a secular worldview. Some might see this as two distinct missions: 1) Teaching the value of science, and 2) Advancing secularism.// ராபி சாக்ஃச் (Rabbi Jonathan Sacks) இவர் ஒரு யூதர். இவர் தான் ஏன் ஒரு யூதர் என்று அவரே சொல்கிறார். "Why I am a Jew” http://www.rabbisacks.org/why-i-am-a-jew/ . இவரும் பல புத்தகங்களை எழுதியுள்ளவர். இவர் எழுதிய Not in God’s Name ( Confronting Religious Violence) பலராலும் பாராட்டப்பட்ட ஒன்று. தகவலுக்காக: ஆபிரகாமிய மதங்களில் கிறித்துவம் மற்றும் இசுலாம் போலில்லாமல் , யூத மதம் இரண்டு அடையாளங்கள் கொண்டது. அடிப்படையில் அது ஒரு இனம் ( race ). இந்த இனத்தில் பிறந்தவர் தான் இயேசு (Yeshua) . யூத மத நம்பிக்கைகளை எதிர்த்து புரட்சி செய்தவரும்கூட‌. பிற்காலத்தில் அவரது பேரில் ஒரு மதம் உருவானது வரலாறு. ஒருவரின் யூத அடையாளம் என்பது இரண்டு வழிகளில் வருவது. “Descent,” & “Consent.” தாய் (mother) யூதராக இருந்தால் , குழந்தையின் யூத அடையாளம் Descent Jew .வேறு மதத்தில் இருந்து மாறுவதால் வரும் அடையாளம் Consent Jew. Debate - Richard Dawkins vs Jonathan Sacks விவாதம் குறித்தான எனது பார்வை இந்த விவாதம் முழுக்க முழுக்க ஒரு யூதருக்கும், கிறித்துவப் பின்னனியில் இருந்து வந்து, தற்போது கிறித்துவம் காட்டும் கடவுளை கேள்வி கேட்கும் ஒருவருக்கும் நடக்கும் விவாதமாகவே உள்ளது. இதனை பொதுவான கடவுள் நம்பிக்கை குறித்தான விவாதமாக என்னால் ஏற்க முடியவில்லை. ராபி எல்லா இடத்திலும் கிறித்துவத்தைவிட யூதம் சிறந்தது என்ற ஒப்பீடுகளை வைத்தே அவரின் தரப்பை நியாயப்படுத்துகிறார். ராபி , உலம்/அண்டம் குறித்த உரையாடலின் போது இவ்வாறு ஒன்றைச் சொல்கிறார் ..to understand the system you need to be outside of system ..... இப்படிச் சொல்லி, அதனால் படைத்தவன் ( creator ) system - ற்கு வெளியேதான் இருக்க முடியும் என்று நிறுவ முயல்கிறார். @ 10:22 கடவுள் உலகைப் படைத்தவர், அவர் உலகிற்கு வெளியே உள்ளவர் என்றால், அந்த கடவுளைப் படைத்தவர் யார்? என்ற கேள்விக்குள் அவர் போக நினைக்கவில்லை. அதுவே போதும் என்று அவரது பயணத்தை சராசரி மதப் பற்றாளர்கள் போல நிறுத்திக்கொள்கிறார். அவர் சொல்லும் to understand the system you need to be outside of system முக்கியமானது. இதை கடவுளுக்கும் பொருத்திப் பார்க்க வேண்டும். கடவுளைப் பற்றி அறிய , அதையும் தாண்டிப் போக வேண்டும். @ 21:29 ‍- 22:30 ராபி, விவிலியத்தை கிறித்துவத்தின் வழியில் படிக்கக்கூடாது என்கிறார் ( don’t read bible in Christian way ). @ 27:02 -27:39 அவர் யூதம் கிறித்துவத்தை, இசுலாத்தைவிடச் சிறந்தது என்கிறார். இங்கே ஒரு சராசரி மதப் பிரச்சார‌ யுத்தியே தெரிகிறது. இவர் பொதுவான "கடவுள்" என்ற கருத்தாக்கம் குறித்து பேசவில்லை. இந்த வாய்ப்பில் தனது ம‌தத்தைச் சரி என்று நிறுவ முயல்கிறார் என்றே நினைக்கிறேன். ராபி சொன்னதில் பிடித்த ஒன்று , "அறம் என்பது மதத்திற்கு அப்பாற்பட்ட ஒன்று" சொன்னதே. பெரும்பாலன மத குருக்கள் "மதம் அற்றவன் அறம் அற்றவன்" என்று சொல்லிக்கொண்டு இருக்கும்போது இவர், "மதத்திற்கும் அறத்திற்கும் தொடர்பில்லை" என்கிறார். @ 31:00-34:20 ( Religion don’t have any role in Moral ) சல்மான் ருஃச்டி பற்றிய உரையாடலின் @ 45:03 - 41:00 போது 'ராபி' கருத்துச் சுதந்திரந்தை ஆதரிக்கிறார். "மதங்களை எதிர்த்துப் பேசும் சுதந்திரம் அனைவருக்கும் வேண்டும்" என்கிறார். 'ஒரு மதம் அதை யாரும் விமர்சிக்கக்கூடாது என்று மூடிவைத்து காலம் தள்ள முடியாது' என்கிறார். இங்கேயும் இவர் யூதம் கருத்துச் சுதந்திரத்தை ஆதரிக்கிறது என்று சொல்கிறார். ஆனால் வசதியாக இயேசுவின் கருத்துச் சுதந்திரத்திற்கு யூதம் என்ன செய்தது, என்பதை மறந்து விடுகிறார். இவரே இந்த உரையாடலின் ஆரம்பத்தில் ரிச்சர்டின் புத்தகம் தனது நம்பிக்கையை புண்படுத்தியது ( offended ) என்றும் புலம்புகிறார். இரட்டை வேடம் போல் உள்ளது இவரது பேச்சு. ஒரு குழந்தை பிறந்தவுடன் அதற்கு மதச் சுமைகளை சுமத்த வேண்டாம் என்று நான் சொல்வது போல , ரிச்சர்டும் ஒரு வாதத்தை முன் வைக்கிறார். 28:21 - 29:12 12 (Labeling a child) . ஆனால் இதை ராபி , குழந்தையின் குடியுரிமை மற்றும் மொழி அடையாளம் போல இதுவும் ஒன்று என்று சொல்லி சமாளிக்கிறார். @ 30:49 - 31:02 ராபி அதுகுறித்து பேசுவதை அவசரமா தவிர்ப்பது போலவே எனக்கு தெரிந்தது. "தேங்கிவிடும் குட்டை" என்று நான் அடிக்கடி சொல்வேன். அதுபோலவே ரிச்சர்டும் super natural குறித்தான ஒரு கருத்தை முன் வைக்கிறார். @ 42:40- 44:05 "When you admit it is super natural, by definition it is not understandable" . தெரியாத ஒன்றை தெரியாது என்று சொல்லும்போது, அதை தேடலுக்கான ஒரு வாய்ப்பாக அறிவியல் எடுத்துக்கொள்கிறது. மதம் இன்றைய அறிவியலால் நிரப்பமுடியாத கேள்விகளை கடவுள் என்று சொல்லி , துதிப்பாடல் தயார் செய்ய ஆரம்பிக்கிறது. The concept (theory) of god http://kalvetu.balloonmama.net/2015/10/the-concept-theory-of-god.html Image courtesy: https://en.wikipedia.org/wiki/African_art நன்றி சித்தார்த் மற்றும் தமிழழகி (G + வழியாக) . Posted by கல்வெட்டு at 10/26/2015 11:34:00 AM 0 comments Labels: god, Rabbi Jonathan Sacks, Richard Dawkins Wednesday, October 14, 2015 டெமாக்ரடிக் கட்சி 2016 அதிபர் வேட்பாள‌ர் தேர்விற்கான விவாதம் -1 ஆரம்பத்தில் இருந்தே தெளிவான பதில்களையும் தெளிவான நிலைப்பாடுகளை சரியான காரணம் கொண்டும் விளக்கி, பலரைக் கவர்ந்தார் 'பெர்னி சான்டர்ஃச்'. இவர் யார் என்று தெரியாதவர்கள்கூட நேற்று இவரின் பேச்சைக் கேட்டபிறகு அவரைப்பற்றி அறிந்துகொள்ள தேடு தேடு என்று தேடி, ரிபப்ளிகன் கட்சியின் என்டர்டெயினர் Trump ன் ட்வீட்டர் ட்ரெண்ட்டையே தாண்டிப்போனார்கள். முதல் முறையாக இவர பேசுவதைக்கேட்ட பலர் , most honest person என்றுதான் சொல்லுகிறார்கள். இவரின் திட்டங்கள் மற்றும் நிலைப்பாடுகளில் ஏதும் குறை காண முடியாதவர்கள் , இவரை நாட்டின் எதிரிபோல காண்பிக்க சொல்லும் விசயம் வியட்நாம் போர். இவர் வியட்நாம் போரின்போது தான் போரிடமுடியாது என்று சொன்னதைச் சுட்டிக்காட்டுவார்கள். வியட்நாம் போர் காலத்தில் இவர் அந்த‌ போரில் ஈடுபடாமல் Conscientious Objector Status கேட்டவர். Wiki -Conscientious Objector Status A conscientious objector is an "individual who has claimed the right to refuse to perform military service"on the grounds of freedom of thought, conscience, and/or religion. In general, conscientious objector status is only considered in the context of military conscription and is not applicable to volunteer military forces நேற்றும் அந்தக் கேள்வி வைக்கப்பட்டது. சுற்றி வளைக்காமல் தெளிவாக தன் பதிலைச் சொன்னார். " நான் வியட்நாம் போரை ஆதரிக்கவில்லை. அதை அந்த வயதில் எதிர்த்தேன். அதனால் போரில் ஈடுபடுத்திக்கொள்வதில் இருந்து விலக்கு கேட்டேன்" என்றார். சரியோ தவறோ அதிபர் சொன்னால் போரிடும் அதிகாரவர்க்க இராணுவ நிலைபாடுகள் இல்லாமல், சுயமாகச் சிந்தித்து தனக்கு சரியில்லை என்றால் போருக்கு போவது இல்லை என்ற நிலைப்பாடு சுய சிந்தனை பகுத்தறிவு சார்ந்தது. அதைத்தான் அவர் அக்காலத்தில் செய்தார். நேற்று அதைச் சொல்ல அவர் தயங்கவும் இல்லை. அதுபோல 'எட்வர்ஃட் ஃச்னோடன்' பற்றி கேட்டபோதும் தயக்கமே இல்லாமல், "ஃச்னோடன்" மக்களுக்கு சேவை செய்துள்ளார். அதையும் கணக்கில் எடுக்க வேண்டும்" என்று நேரடியாக்ச் சொன்னார். 'ஃச்னோடன்' பற்றிப் பேசுவதே தேசத்துரோக செயலாக பார்க்கப்படும் இந்தக் காலத்தில் , இவர் அதை விவாத மேடையில் சொன்னது முக்கியமானது. கிளிண்டன் மின்னஞ்சல் குறித்த கேள்விக்கு அது குறித்து கவலை இல்லை என்று சொல்லி கிளிண்டனுக்கு பெரும் நிம்மதியைக் கொடுத்தார். கிளிண்டன் உடனே இவருக்கு கைகொடுத்து நன்றி தெரிவித்தார். இது எல்லாம் ரிபப்ளிகன் நாடகத்தில் காணவே முடியாத காட்சிகள். இலவச கல்லூரி, சோசியல் செக்யூரிட்டி விரிவாக்கம், பங்குச் சந்தையில் நடக்கும் பரிவர்த்தனைகளுக்கு வரி (nominal financial transactions tax on speculative trading in stocks, bonds, derivatives, and other financial instruments) புவி வெப்பம‌யமாதல் என்று எல்லாவற்றுக்கும் தெளிவான திட்டங்கள் மற்றும் தொலை நோக்குப் பார்வை கொண்டவராக இருக்கிறார் 'பெர்னி சான்டர்ஃச்'. இவருக்கு போட்டியாளராக இருக்கும் கிளிண்டனோ, தான் பெண் என்பதை மட்டும் சுட்டிக்காட்டி ஓட்டு சேகரிக்க முயல்கிறார். எனது குடும்ப பெயர் பார்த்து பார்த்து வாக்களிக்க வேண்டாம். ஆனால் நான் பெண் , உங்கள் குழந்தையிடம் அவளும் ஒரு நாள் அதிபராகலாம் என்று நீங்கள் சொல்லலாம். பெண் என்பதால் நான் வித்தியாசமான அதிபராக இருப்பேன். நான் ஒரு பெண் பெண் பெண்....... இப்படித்தான் நேற்று 'ஃகிலாரி கிளிண்டன்' ' பேசிக்கொண்டு இருந்தார். குடும்பபெயரால் வரும் தீமைகள் வேண்டாம் என்ற தொனியில் பேசிவிட்டு, பெண் என்பதால் சலுகை கேட்பதுபோல பேசுவது என்பது இரட்டை வேடம். அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான டெமாக்ரடிக் கட்சியின் உள்கட்சி தேர்தலை ஒட்டி நடந்த விவாதத் களத்தில் ஆரம்பக் கேள்வியே "வெற்றிபெற வேண்டும் என்ற நோக்கில் எதையும் மாற்றிப் பேசுவீர்களா?" என்று 'ஆண்டர்சன் கூப்பர்' எடுத்த எடுப்பிலேயே கிளின்டணைக் கேட்டார். ஆம் சமீப காலங்களில் அவரின் நிலைப்பாடுகள் பல்டியடித்துகொண்டு உள்ளது. விவாதத்தில் எதையாவது உருப்படியாகப் பேசினாரா என்றால் இல்லை. முன்னாள் First lady அதன்பிறகு ஒபாமவுடன் பிரைமரியில் மோதியது, அதே ஒபாமா அமைச்சரவையில் வெளியுறவுத்துறையை நிர்வாகம் செய்தது போன்ற செயல்களால், மக்களுக்கு அவரது பெயர் நன்கு அறிமுகமாயுள்ளது. இதை அவர் பயன்படுத்திக் கொள்ளப்பார்க்கிறார். வெற்றி பெற்றால் முதல் பெண் அதிபர் என்று வரலாற்று புத்தகத்தில் இடம் பெறலாம் கிளிண்டன். திட்டங்கள், தொலை நோக்குப்பார்வை (Policy based political agenda ) என்று ஏதும் இருப்பதாக தெரியவில்லை. வால் ஃச்ட்ரீட் மற்றும் பெரிய வங்கிகள் விசயத்தில் அவரின் நிலைப்படு என்ன என்பது அவருக்கே தெரியாதுபோல். பூசி மெழுகினார். *** இந்த‌ இருவர் தவிர விவாத களத்தில் இருந்தவர்கள் "மார்ட்டின் ஒ மாலி" (Martin O’Malley ) "சிம் வெப்" (Jim Webb ) மற்றும் "லிங்கன் ச்சஃவே" ( Lincoln Chafee) *** மார்ட்டின் ஒ மாலி" (Martin O’Malley ) மார்ட்டின் 2007 இல் இருந்து 2015 வரை மெரிலேண்ட் (Maryland) கவர்னராக இருந்தவர். 'ஃகிலாரி கிளிண்டன்' ஒபாமைவை எதிர்த்து போட்டியிட்டபோது (2008) அவரை ஆதரித்தவரும்கூட. ஆனால், இப்போது கிளிண்டனின் நிலைப்பாடுகளில் நம்பிக்கையில்லை என்று அவருடன் போட்டியாளராக இருக்கிறார். மெரிலேண்ட் கவர்னராக இவர் செய்த நல்ல விசயங்களைச் சொன்னார். வால் ஃச்ட்ரீட் , வங்கி போன்ற பிரச்சனைகளில் இவர் கிளிண்டனை கடுமையாக எதிர்த்தார்.முடிவுரையின்போது 'ரிபப்ளிகன் கட்சியைபோல் அல்ல டெமாக்ரடிக் கட்சி 'என்று அழுத்தமாக கோடிட்டுக்காட்டினார். ஜிம் வெப் (Jim Webb). முன்னாள் செனட்டர் இவர் வெர்சினியா மாநிலத்தில் இருந்து செனட்டராக தேர்ந்தெடுக்கப்பட்ட இவர் பல நல்ல சட்டங்களை முன்மொழிந்து செயல்படுத்தியதாகச் சொன்னார். பெர்னியுடன் சேர்ந்தும் சிலவற்றைச் செய்துள்ளார்போல தெரிகிற‌து. 'சிஎன்என்' விவாதத்தில் இவருக்கு நேரம் கொடுக்கப்படவில்லை என்று 'ஆண்டர்சன் கூப்பரோடு' மல்லுக்கட்டிக் கொண்டு இருந்தார். ஆண்டர்சனோ "நீங்கள் அனைத்திற்கும் ஒத்துகொண்டே விவாதத்திற்கு வந்தீர்கள்" என்று சொல்லிக்கொண்டே இருந்தார். மேடையில் யார் நடுவில் இருப்பது போன்றவை வேட்பாள‌ர்களின் செல்வாக்கை வைத்து தீர்மானிக்கப்படும். வேட்பாளர்களுக்கு கொடுக்கப்படும் நேரம் கூட அப்படித்தானா? லிங்கன் ச்சஃவே ( Lincoln Chafee ) முன்னாள் ரோஃட் அய்லேண்ட் (Rhode Island) கவர்னரான இவர் மிகவும் பரிதாபமாகவே இருந்தார். அவருக்கே அவர் வேட்பாளராக இருப்பது சந்தேகமாக உள‌ளது போல. "வங்கிகள் சார்ந்த சட்டம் (Glass-Steagall provisions) சார்பான ஓட்டெடுப்பில் வங்கிகளை மேலும் பெரிதாக்கும் ஒன்றிற்கு ஏன் சாதகமாக ஓட்டுப்போட்டீர்கள்?" என்ற கேள்விக்கு, "அது வந்து இங்க பாரு தம்பி நான், அப்பத்தான் மொத தபாவா செனட்டுக்கு வந்தேன். எல்லாரும் கூட்டமா ஓட்டுப்போடும்போது நானும் எதுக்கோ போட்டேன்" என்ற‌ ரீதியில் சொன்னபதில் அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியது. அவரின் ஆதரவாளர்கள அவரை வறுத்து எடுப்பார்கள் என்று நினைக்கிறேன். ******** ஒவ்வொரு விவாதத்தின் முடிவிலும் கார்ப்பரேட் தொலைக்காட்சிகள் 'இவர்தான் இந்த விவாத வின்னார்' என்று சம்பிரதாயமாக சொல்லியே ஆக வேண்டிய கட்டாயம் போல. மில்லியனர்கள், பெரிய வங்கிகளுடன் ,கார்ப்பரேட் ஊடகங்களையும் எதிர்க்கிறேன் என்று சிஎன்என் அமைத்துக்கொடுத்த மேடையிலேயே விளாசிய சான்டர்ஃச் நிச்சயம் இவர்களுக்கு டார்லிங்காக இருக்க மாட்டார். நினைத்தபடி கிளிண்டனே விவாத வெற்றியாளர் என்று கூவ ஆரம்பித்துவிட்டார்கள். அப்படி என்ன சொன்னார் கிளிண்டன்? என்று இதுவரை எனக்குப் புரியவில்லை. முதல்முறையாக பெர்னி சான்டர்ஃசின் பேச்சைக் கேட்ட என் மகன் , அரைமணி நேரத்தில் அவரின் தொண்டராகிவிட்டான். "நான் ஒரு மில்லியனர் கிடையாது. என் தேர்தல் செலவிற்கு வரும் பணம் அனைத்தும் மக்களிடம் இருந்து ஐந்தும் பத்துமாக வரும் நன்கொடையே. நீங்களும் உதவுங்கள்" என்று பெர்னி சொன்னவுடன், ஒரு போட்டியில் அவன் வென்ற‌ $100 யில் இருந்து , $50 டாலரை இவருக்கு இப்பவே அனுப்புங்கள் என்று அடம் பிடித்தான். இல்லாவிட்டால் " FEEL THE BERN" என்று இருக்கும் அவரின் பிரச்சார டிசர்ட் ஆவது வாங்கி அவருக்கு உதவுங்கள் என்று நச்சரிக்க ஆரம்பித்துவிட்டான். இடையிடையே விவாதம் சார்ந்த சிஎன்என் இணைய வாக்கெடுப்பிலும் கலந்துகொண்டு பெர்னிக்கு வாக்கைச் செலுத்தினான். காலையில் எழுந்து அவருக்கு ஒரு கடிதம் எழுத வேண்டும் என்று நிற்கிறான். இன்னும் அதிக ஊடக வெளிச்சம் கிடைத்தால் பெர்னி அதிக இளைஞர்களைக் கவர்வார் என்பது உறுதி. Posted by கல்வெட்டு at 10/14/2015 11:46:00 AM 0 comments Labels: Bernie Sanders, Clinton, Democratic Debate 2016, Primary 2016, USA Tuesday, October 13, 2015 சர்வரோக நிவாரணி ஆதி பல்பொடி உணவே மருந்து என்பது நம் முன்னோர்களின் வாக்கு. இங்கே முன்னோர்கள் எனப்படுபவர்கள், ஆதி ஆதி ஆஆஆ ஆதி அந்தம் எல்லாம் தாண்டிய ஆதிமனிதர்கள். இந்த ஆதி காலம் என்பது ஆத்தீசூடிக்கு முன்னால் உள்ள காலம். ஆதி காலம் என்பது இந்த ஆதாமுற்கு முந்திய முன்னால் உள்ள காலம். காலங்களுக்கு முந்திய காலம். கலாமாலும் கண்டுபிடிக்கமுடியாத காலம்.ஆத்திச்சூடியும் இருந்தாலும் இது அவை எல்லாவற்றுக்கும் முந்திய காலம். அக்காலத்தில் இருந்தவர்கள் வாயால்தான் சாப்பிட்டுள்ளார்கள் என்பதை எங்களது பேசு புக் மடத்தில் பேசிப் பேசிக் கண்டுபிடித்தோம். சுமார் 20 ஆயிரம் பேசு புக் பயனாளிகள் பேசிப் பேசியே கண்டுபிடித்த புதிய கண்டுபிடிப்புதான் இதுவரை மனிதகுலம் கண்டுபிடித்த அனைத்திலும் சிறந்தது என்று "தாமசு ஆல்வா எடிசன்" ( ஆல்வா -வில் உள்ள "ஆ" வை கவனிக்க) இன்று கனவில் அனைவருக்கும் செய்தியைச் சொன்னார். இதுதான் அந்தக் கண்டுபிடிப்பு. "ஆதி மனிதன் வாயால் சாப்பிட்டான்" . சுமார் 20 ஆயிரம் பேசு புக் பயனாளிகள் பேசிப் பேசியே கண்டுபிடித்த சிற‌ப்புக்கொண்டது இது. பேசிப் பேசி கண்டுபிடிக்க முடியாத அல்லது பேசு பொக் கணக்கு இல்லாத சாதரண மனிதர்கள் பலநேரம் "ஆதி என்றால் எந்த ஆண்டு என்று கி.மு வில் ஒரு எண் சொல்லு" என்கிறார்கள் இவர்களின் பேச்சைக் கேட்கவேண்டாம் என்று அவசரச் செய்தியும் அனுப்பப்பட்டுள்ளது. எனவே நம்பிக்கையாளர்கள் பேசு பொக் பக்கம் வந்து எங்கள் பசனைக் கூட்டத்தில் சேர்ந்து பேசிப் பேசி பலவற்றைக் கண்டுபிடிப்போம் வாருங்கள். ஆதி மனிதனின் பெயரே ஆதிதான். ஆதி1 ஆதி2 ஆதி 3 என்று பெயர் இருக்கும். ஆதி மனிதன் எப்படி எண்களைப் பயன்படுத்தினான் என்று நீங்கள் கேட்பீர்களேயானல் உங்களைப் பார்த்து சிரிப்பதைத்தவிர‌ வேறுவழியில்லை. எல்லாம் தெரிந்தவன்தான் ஆதி. அடுத்த தலைவர் படத்திற்குகூட "ஆதி" என்றுதான் பெயர் வைக்கப்பட உள்ளது. ஆதி மனிதன் வாயால் சாப்பிட்டான் என்ற கண்டுபிடிப்பைக் பேசு பொக் மடத்தில் ஆதிக் கடவுள் அறிவித்த தருணம் ஆதி உலகில் முக்கியமானது. அவர் சொன்னபோது அனைவரும் ஆதி ஆதி ஆஆ தீ ஆதி ஆதி ஆத்தாடி ஆதி ஆதி ஆடிப் பாத்தாடி ஆதி ஆதி எல்லாம் ஆஆ தீ! என்ற பசனைப்படலை கூக்குரலிட்டு மகிழ்ந்தார்கள். ஆதிமனிதன் போலவே ஆனால் ஒரே ஒரு "ஆதி ஆடு" மட்டும் ஆப்பிள் சாப்பிட்ட காரணத்தால் எதிர்த்து கேள்வி கேட்டது. "நாமும்தான் வாயால் சாப்பிடுகிறோம் எல்லாப் பக்கிகளும்தானே வாயால் சாப்பிடுது. நீங்க என்ன புச்சா கண்டுபிடிச்சிட்டீக?" என்றது அந்த ஆதி ஆடு சாரி கறுப்பு ஆடு. ஒரு கேள்வியால் காண்டாகிப்போன ஆதிக்கடவுள், அவரை பேசு போக் மடத்தில் இருந்து விலக்கிவிட்டார். இருந்தாலும் ஏதாவது ஒரு பதில் சொல்லி கூட்டத்தைக் தக்க வைக்க வேண்டியதன் அவசியத்தை உண‌ர்ந்தார் ஆதிக்கடவுள். மருதையில் மண்டபம் பிடித்து "ஆதி மனிதன் வாயால் சாப்பிட்டான்" என்ற உண்மையை விளக்கிக்கொண்டிருந்த தனது செயலாளரை புறாவைவிட்டு வரவ‌ழைத்தார். (ஆதி ஆதி ஆதி எல்லாம் ஆதிமுறை) . புஃச்ப வாகனத்தில் வந்து இறங்கிய செயலாளர், இறங்கும்போதே கொஞ்சம் வித்தியாசமாக் தெரிந்தார். என்னவென்று நேரடியாகக் கேட்டால் கடவுளின் பதவிக்கு இழுக்கு என்று எண்ணி, ஆதி கடவுள் மோந்து பார்த்தார். உரேகா ..ஆம் மருதையில் இருந்து வந்திறங்கிய செயலாளரின் வாயில் இருந்து ஒருவித புதிய‌நெடி வந்துகொண்டு இருந்தது. அது என்ன என்று கேட்ட ஆதிகடவுளிடம் , தான் மருதை அரசரடி டீக்கடையில் வாங்கிய பல்பொடி பாக்கெட்டைக் குடுத்தார் செயலாளர். அந்தக் கணமே அதற்கு ஆதி பல்பொடி என்று நாமகரணம் சூட்டினார் ஆதி கடவுள். அடுத்த நாள் பேசு பொக் கூட்டத்தில் இவ்வாறு ஆதிக் கடவுள் அறிவித்தார். உணவே மருந்து. ஆதி வாயால் சாப்பிட்டான். ஆதி பல்வெளக்கிய பிறகு சாப்பிட்டான். ஆதி பல்பொடியில் பல்வெளக்கிய பிறகு சாப்பிட்டான். என்ன வேணுமினாலும் சாப்பிடலாம் . எவ்வளவு வேணுமினாலும் சாப்பிடலாம். ஆனால் ஆதி பிராண்ட் பல்பொடியில் பல்வெளக்கிய பிறகே சாப்பிட வேண்டும். அனைத்து தொண்டர்களும் ஆரவரம் செய்தார்கள். ஆதி ஆதி ஆஆ தீ ஆதி ஆதி ஆத்தாடி ஆதி ஆதி ஆடிப் பாத்தாடி ஆதி ஆதி எல்லாம் ஆஆ தீ! என்ற பசனைப்படலை கூக்குரலிட்டு மகிழ்ந்தார்கள். அனைவருக்கும் பலவித பேனர்கள் வழங்கப்பட்டது. ஆதி பல்பொடியே அனைத்திற்கும் மருந்து. மார்சியன் படத்தில் கீரோ ஆதி பல்பொடியை எடுக்காமல் போனதாலே பிரச்சனை வந்தது. ஆதி பல்பொடியில் பல்வெளக்கிய பிறகு பச்சைப் பாம்பை, கருநாகம் விசத்தில் வறுத்து சாப்ப்பிட்டாலும் ஒன்னியும் ஆவாது. முடவர்கள் ஆதி பல்பொடியில் பல் வெளக்கிய பிறகு நடக்கிறார்கள். குருடர்கள் ஆதி பல்பொடியில் பல் வெளக்கிய பிறகு பார்க்கிறார்கள். பல் இல்லாத பாட்டிகளுக்கு பல் முளைக்கிறது ஆதி பல்பொடியால். மூட்டை முடிச்சுகளுடன் புதிய ஆதிச் செய்தியை பரப்ப மேற்கண்ட பேனர்களுடம் தொண்டர்கள் கெளம்பினார்கள். பக்கவாட்டு குறிப்பு: "தமிழ் பேலியோ" மதத்திற்கும் இதற்கும் தொடர்பு அல்ல. இது முழுக்க முழுக்க புனைவு. Posted by கல்வெட்டு at 10/13/2015 11:34:00 AM 0 comments Labels: ஆதி பல்பொடி, தமிழ் பேலியோ, புனைவு, பேலியோ Friday, October 09, 2015 வண்ணங்களில்தான் எண்ணம் - ஒடிலி டொனால்ட் ஒடிட்டா உள்ளூரில் இருக்கும் டுயூக் (Duke) பல்கலைக்கழகம் ஒரு தனியார் பல்கலைக்கழகம். இது பலசிறப்புகளைக் கொண்டது. அமெரிக்காவில் மருத்துவத்துறையில் முதல் பத்து முக்கிய கல்லூரிகள் என்று எடுத்தால் இது அந்த பட்டியலில் வந்துவிடும். அதுபோல வணிக மேலாண்மைப் படிப்புகளிலும். ஆப்பிள் நிறுவனத்தின் தற்போதைய முதன்மை செயல் அதிகாரி (CEO) டிம் குக் (Tim Cook) இங்கு வ‌ணிக மேலாண்மைப் மேற்படிப்பு படித்தவர். இந்த பல்கலைக்கழகம் குறித்தும் அது தோன்றிய வரலாறும் இணையத்தில் படிக்கக்கிடைக்கிறது. Duke University: A Brief Narrative History http://library.duke.edu/rubenstein/uarchives/history/articles/narrative-history நான் பேசப்போவது இந்தப் பல்கலையில் 10 வருடங்களுக்கு முன் ஆரம்பித்த கலைக் காட்சியகம் குறித்தானது. மருத்துவம், மேலாண்மை மற்றும் தொழில் நுட்ப படிப்புகளில் சிறந்து விளங்கும் இந்த பல்கலைக்கழகம், கலைத்துறையிலும் சிற‌ந்து இருக்க வேண்டும் என்று, 10 வருடங்களுக்கு (2005) முன் புதிய பெயருடன் புதுப்பிக்கப்பட்டது. Nasher Museum Of Art At Duke University http://nasher.duke.edu/about/ இப்போது அது 10 ஆவது ஆண்டுவிழாவைக் கொண்டாடுகிற‌து. இதன் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, "ஒடிலி டொனால்ட் ஒடிட்டா" (Odili Donald Odita) என்ற ஓவியர் வரைந்த சுவரோவியம் ( Mural ) முக்கியமானது. "ஒடிலி ஒடிட்டா" அமெரிக்கர். ஆப்ரிக்க கறுப்பினத்தவர். இவர் பாணி ஓவியம் ஒருவித சீரான வடிவங்கள் கொண்டது. "நேர்த்தியில் வண்ணம்" என்று சொல்லலாம். http://www.odilidonaldodita.com/ “Color in itself has the possibility of mirroring the complexity of the world as much as it has the potential for being distinct.” -Odili Donald Odita டுயூக் பல்கலை அமைந்துள்ள இடம் "டுர்ஃகாம்" (Durham) ஆகும். இது 45% வீத கறுப்பின மக்கள்தொகை கொண்ட ஊர். இந்த ஊரைப்பற்றிய ஒரு வெளிப்பாடாக இருக்க வேண்டும் என்ற நோக்கில் ஒடிட்டா வரைந்த ஓவியமே எனக்கு அவரைப்பற்றிய அறிமுகம். இவரின் சிறப்பு இவர் தேர்ந்தெடுக்கும் வண்ணங்களில் உள்ளது. 2007 ல் இவர் வரைந்த ஃபுளோ (FLOW) என்னும் சுவரோவியம் அசத்தியடிக்கும் ஒன்று. FLOW @ Kaplan Hall, the lobby of the Lois & Richard Rosenthal Center for Contemporary Art http://www.odilidonaldodita.com/exhibitions/flow/index.html Posted by கல்வெட்டு at 10/09/2015 11:42:00 AM 0 comments Labels: art, Duke, Nasher Museum, Odili Donald Odita Wednesday, October 07, 2015 ஃபெர்னி ஃசான்டர்ஃச் - Bernie Sanders For USA President 2016 சமீப காலமாக என்னைக் கவர்ந்தவராக இருப்பவர் , அமெரிக்க சனாதிபதி தேர்தலுக்கான டெமாக்ரடிக் கட்சியின் வேட்பாளர்களில் ஒருவராக இருக்கும் ஃபெர்னி ஃசான்டர்ஃச் (Bernie Sanders ) அவர்கள். எனது அமெரிக்க அரசியல் அறிவு (அறிந்துள்ளது) என்பது கடுகளவுகூட இருக்காது. ஏதாவது ஒரு இடத்தில் விளம்பரம்/செய்தி என்று ஒருவர் வித்தியாசமாக இருப்பதாகத் தோன்றினால், அவர் குறித்து அதிகம் தேடி அதன் பின்னர் அறிந்துகொள்வேன். அப்படியான தேடலில் தெரிந்துகொண்ட நபர்தான் ஃபெர்னி ஃசான்டர்ஃச். 2016 ஆம் ஆண்டிற்கான அமெரிக்க சனாதிபதி தேர்தலில் , டெமாக்ரடிக் கட்சி சார்பாக போட்டியிடும் வேட்பாளர் தேர்தலில் (Primary Election ) களத்தில் உள்ளார். Primary- ஒரு கட்சி அதற்கான சனாதிபதி வேட்பாளரை தேர்ந்தெடுக்கும் தேர்தல். ஆச்சரயப்படுத்துகிறார் இவர். இவர் ஏற்கனவே சொந்த ஊரில் மேயராக இருந்தவர். இப்போது அமெரிக்க செனட்டராக இருப்பவர். (United States Senator from Vermont). இவரின் வயது ஒரு குறையாகப் பார்க்கப்படுகிறது. என்னளவில் அதிக வயது என்பது தடை அல்ல. ஒருவேளை இந்தியா போன்ற பரம்பரை அரசியலில் அதை ஒரு குறையாகப் பார்க்கலாம். இவர் மாற்றத்தைக்கொண்டுவருவார் என்று இவரின் பேச்சு செயல்பாடுகள் நம்பிக்கை அளிக்கிற‌து. இவர் பிரச்சனைகளைப் பற்றி மட்டும் பேசுகிறார். அதற்கான தீர்வாக தனது தரப்பு விளக்கம், என்ன செய்யலாம் என்றும் சொல்கிறார். தனக்கு போட்டியாக இருந்தாலும் , மற‌ந்தும் மற்றவர்களின் தனிச் செயல்பாடுகளை விமர்சிப்பது இல்லை. "பிரச்சனையில் மற்றவர்களின் கருத்து என்ன என்று சொல்லுங்கள் அதைப்பற்றி பேசுகிறேன் தனிநபரைப் பற்றி அல்ல" என்று தெளிவாகச் சொல்லிவிடுகிறார். ஒவ்வொரு முறை ஃகிலாரி கிளிண்டன் பற்றியும், அவரின் சமீபகால மின்னஞ்சல் பிரச்சனைகள் குறித்தும் இவரிடம் கேள்வி கேட்கப்படுகிறது. இவர் அதற்காக சொல்லும் பதில், ஃகிலாரி கிளிண்டனையே இவருக்கு ஓட்டுப்போட வைத்துவிடும். அந்த அளவிற்கு தெளிவாக உள்ளார். ஒபாமாவின் சமீபத்திய ஈரான் ஒப்பந்ததை ஆதரிக்கிறார். அடுத்த நாடுகள் தொடர்பான பிரச்சனைகளுக்கு போர் ஒரு தீர்வு அல்ல என்பதிலும், பேச்சுவார்த்தைதான் தீர்வு என்பதிலும் தெளிவாக உள்ளார். வளைகுடா நாடுகளில் நடக்கும் பிரச்சனைகள் அனைத்தும் மதம் சார்ந்த ஒன்று என்றும் ,அதில் அமெரிக்கா முன்னிற்காமல், செளதி போன்ற மதக்காப்பாளர்களை பொறுப்பேற்க வைக்கவேண்டும் என்று சொல்வது முழுக்க முழுக்கச் சரி. ஒரு காலத்தில் இலவசமாக இருந்த கல்லூரிப் படிப்புகள் இப்படி விலையேற்றம் அடைந்து இருப்பதற்கு அவர் சொல்லும் தீர்வு சரியானதுதான். "மாணவர்கள் போராடவேண்டும் நான் அவர்களோடி இணைந்தே வெற்றி காண்பேன்" என்கிறார். சோசியலிஃச்ட் என்றால் கெட்டவார்த்தை போல பார்க்கும் மக்களிடம், அதைப்பற்றி பேசி விளக்கிமுய‌ற்சிக்காமல், டென்மார்க் போன்ற அய்ரோப்பிய நாடுகளை உதாரணம் காட்டி "அதுபோல இருப்பதுதான் டெமாக்ரட்டிக் சோசியலிஃச்ட்" என்று எளிதாக விளக்குகிறார். அமெரிக்காவில் சோசியல் செக்யூரிட்டி எனப்படும் (இந்திய பிராவிடெண்ட் பண்டு போல but not same) வைப்புநிதியை ஊற்றி மூடவேண்டும் என்று சொல்லும் ரிபப்ளிகன் கட்சி வேட்பாளர்கள் போல் இல்லாமல், அதை விரிவுபடுத்தி , ஓய்வுபெறும் வயதைக் குறைத்து, மக்களுக்கு பயன்கொடுப்பேன் என்கிறார். வெர்சினியா சுரங்கத்தொழிர்கள் ஃகிலாரி கிளிண்டன் ஆதவாளர்களாக இருந்தவர்கள். ஒபாமாவிற்கும் , ஃகிலாரி கிளிண்டன் கிளிண்டனுக்கும் நடந்த பழைய பிரைமரி போட்டிகளில்கூட இவர்கள் அதிக அளவு வாக்குகளில் ஃகிலாரி கிளிண்டனை ஆதரித்தவர்கள் இவர்கள் . இப்போது ஃபெர்னி ஃசான்டர்ஃச் பக்கம் பார்வையைத் திருப்பி உள்ளார்கள். Bernie Sanders Speaks With Katie Couric - Full Interview https://www.youtube.com/watch?v=XpgJYNaIeqo Bernie Sanders For President https://www.youtube.com/channel/UCW4EM_U8f6sXf1IFsTU_DRQ https://berniesanders.com/ Posted by கல்வெட்டு at 10/07/2015 11:36:00 AM 0 comments Labels: அமெரிக்கா, அரசியல் The concept (theory) of god The concept (theory) of god is not a definite one. This allows anyone to say "yes there is god", or "no, there is no such thing called god". Unless someone defines, "what is god?", and that definition is acceptable (to you /me/ anyone) , then only can they (who got convinced by the definition of god) start searching for god. Once you found the meaning of the word, god, you can look for its existence. This is how I see the concept of God. When science was at 100th mile mark, people said, "our god is at 200th mile mark. Can your science explain what is at 200th mile mark?". At one point science did reach that 200th mile mark. That pissed of many people, so they moved their god's existence to 300th mile mark by saying, "no, our god is at the 300th mile mark. You see a misty object there, can your science explain that? " The beauty of science is, it won’t stop at any point assuming anything as a definite answer. Science will disprove its own discovery/theory as it travels/explores more. The so called. "fictional god", only lives in the gaps of science. As you know, the Bible was written by folks who thought the Earth was flat. This makes the bible useless after the discovery of the Earth being round. The Bible is just an example of all the "fictional" holy books that fall into this category. Science is trying to explore the unknown. On the other side, the unknown is being labeled as "God." Have fun with your label! -Kalvetu God of The Gaps - Neil DeGrasse Tyson https://www.youtube.com/watch?v=ytaf30wuLbQ Posted by கல்வெட்டு at 10/07/2015 09:04:00 AM 0 comments Labels: god, க‌டவுள் Thursday, October 01, 2015 A Sinner In Mecca - Movie மகனின் பள்ளியில் "உலக வரலாறு" என்ற பாடம் உள்ளது. அதில் சிந்துவெளி நாகரிகம் தொடங்கி யூதர்களின் வரலாறு என்று எல்லாம் படிக்கிறார்கள். அது குறித்து பேசும்போது எனது தரப்பு கருத்துக்களையும் சொல்வேன் என் மகனிடம். நேற்று திடீரென்று "அப்பா என்னோடு மெக்காவிற்கு வருவீர்களா? என்றான். நான் சின்னவயதில் நடைபயணமாக பழனி மலை போக நினைத்த போது, என்னுடன் என் அப்பா வந்தார். பக்திமாலை, மண்ணாங்காட்டி ,மூத்த சாமியார் , பசனை ,சடங்குகள் இல்லாமல் நான் எனக்கே ஒரு துளசி மாலையைப் போட்டுகொண்டு அப்பாவுடன் நடக்கத்துவங்கிவிட்டேன். தேர்தல் காலம் அது. அப்பா வழிநெடுக டீக்கடையில் நின்று நின்று செய்தி கேட்டுவருவார். "கன்னிவாடி" என்று நினைக்கிறேன், அதுதாண்டி அப்பாவால் நடக்க முடியவில்லை. நான் மட்டும் தனியாக நடக்க, அப்பா பேருந்தில் ஏறி அடுத்த கிராமத்தில் இறங்கி எனக்காக காத்து இருப்பார். செல்போன்கள் இல்லாத காலம். வெறும் நம்பிக்கையுடன் அப்பா காத்து இருக்க, நானும் அதே நம்பிக்கையுடன் ஓட்டமும் நடையுமாக அப்பாவை வந்தடைவேன். என் பார்வையில் படும் வண்ணம் ஊரின் முகப்பிலேயே அப்பா இருப்பார். இருவரும் கொஞ்ச நேரம் பேசிவிட்டு , சாப்பாடு தண்ணீர் குடித்துவிட்டு, நான் மறுபடியும் நடக்க ஆரம்பிப்பேன். அப்பா பேருந்தில் ஏறி அடுத்த நிறுத்ததில் இறங்குவார். இப்படி தொடர்ந்தது எங்கள் பயணம். நான் நடக்கும்போது என்னைக்கடந்து செல்லும் சின்ன மோட்டார் வாகனக்காரர்கள் என் அருகே நிறுத்தி என்ன என்று விசாரித்துச் செல்வார்கள். தனியா நடக்கும் சிறுவன் என்பதால். அவர்கள் மறக்காமல் என் அப்பாவைப் பார்த்தால் பையன் இங்கே வருகிறான் என்றும் சொல்லிச் செல்வார்கள் அவரிடம். எட்டாம் வகுப்பு படித்துக்கொண்டு இருந்தேன் அந்தப் பயணத்தின்போது நான். அதற்கு அடுத்து திருச்செந்தூருக்கு நடக்க வேண்டும் என்ற எங்கள் திட்டம் மதுரை தாண்டியவுடன் நின்றுவிட்டது. அப்பாவால் நடக்கமுடியவில்லை. எனவே நாங்கள் அப்படியே ஊருக்கு திரும்பிவிட்டோம். என் அண்ணனுடன் சேர்ந்து பலமுறை திருப்பரங்குன்றம் நடந்து சென்றுள்ளேன். அத்தகைய பயணங்கள் எல்லாம் நாங்கள் தனியாகச் செல்வதே. இப்போது என் மகன் மெக்கா செல்ல வேண்டும் என்ற‌வுடன் எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால் மெக்கா இசுலாமியர் அல்லாதவர்களுக்கு அனுமதி இல்லாத இடம் என்று அவனிடம் சொன்னவுடன் அவனுக்கு மகிழ்ச்சி போய்விட்டது. மதுரை மீனாட்சி அம்மன் கோவில் பிரகாரத்தில் பல இசுலாமியர்கள் கடை வைத்து இருப்பார்கள். கோவில் உள்பிரகாரத்தில் மற்ற மதத்தவர்களுக்கு அனுமதி இல்லை. இதுவே தவறு. கடவுள் என்ற ஒரு கான்செஃப்ட்டிற்கு இது முரணானது. கடவுள் மதம் பார்த்தா அருள் பாலிக்கிறார்? இசுலாம் அதைவிட அடுத்தபடிக்கு எடுத்துச் செல்கிறது. ஊர்பக்கமே வரக்கூடாது, இடத்தை பார்க்கவேகூடாது என்று சொல்கிற‌து. மதங்கள் அரசியல் கட்சிகளைவிட மோசமானவை. ஒரு கட்சிக்காரன் மாற்றுக்கட்சி தலைவரை அவர் வீட்டில் வைத்துக்கூட பார்க்கமுடியும். ஆனால் ஒரு மதத்துக்காரன் அடுத்த மதத்தின் முக்கிய/புனித இடம் / ஊருக்குள்ளேகூட போகமுடியாது. **** சமீபத்தில் நடந்த மெக்கா விபத்து குறித்து பேச‌ Parvez Sharma ( https://en.wikipedia.org/wiki/Parvez_Sharma ) என்பவர் ஒரு பண்பலை நிகழ்ச்சிக்கு வந்து இருந்தார். அந்த நிகழ்ச்சியின் வழியாக எனக்கு இந்தப்படம் அறிமுகமானது. அந்தப்படம் குறித்த Dr Joy ன் பார்வை.http://www.drjoy.com/movie_reviews/a-sinner-in-mecca/ http://asinnerinmecca.com/ http://www.imdb.com/title/tt4666618/ இந்தப் படத்தின் இயக்குநர் "பெர்வேஃச்" "ஒருபால் ஈர்ப்புள்ள" ஒரு இசுலாமியர். த‌ன்னை ஒருபால் ஈர்ப்பாளராக பொதுவில் அறிவித்துக்கொண்டவர் 'பெர்வேஃச்'. மதவாதிகளிடம் இருந்து இதற்குமுன்னரே பல சிக்கல்களை அனுபவிப்பவர் . இசுலாத்தில் ஒருபால் திருமணங்கள் அல்லது ஒருபாலினச் சேர்க்கை தடை செய்ய‌ப்பட்ட ஒன்று. ஒருபாலினச் சேர்க்கையாளர் என்றவுடனே மத அடிப்படையில் இவருக்கு மெக்காவும் மறுக்கப்பட்ட ஒன்றாகிவிடுகிறது. ஆனால் கடவுளுக்கும் எனக்கும் இடையில் யாரும் இல்லை என்று இவர் துணிந்து செல்கிறார் மெக்காவிற்கு தன்மத கடமைகளை நிறைவேற்ற வேண்டும் என்று. http://asinnerinmecca.com/about/ // Every able-bodied Muslim is commanded by Allah to embark on this spiritual Hajj pilgrimage to Mecca at least once in a lifetime. Islam’s heart beats here. Equipped with nothing more than my faith and my iPhone, I leave my 21st-century life in America and arrive in Saudi Arabia, where the Islamic calendar, much like its subjugated citizenry, is stuck in the 1400s. In Mecca, I weep as I behold the sight indelibly marked on my mind and on every prayer rug I have known since I was a child: millions of devotees in white robes circling a large black cube, the Kaaba. As I gather courage to film on my iPhone I ponder: “Surely Allah allowed me here, because he accepts me as I am.” // மெக்காவில் யாருக்கும் தெரியாமல் படம் எடுப்பது என்பது தற்கொலைக்குச் சமமானது. இவர் தனது மெக்கா பயணத்தின் போது எடுத்த ஆவணப்படம் நிறைய கதைகளை சொல்லும் என்று நினைக்கிறேன். அமெரிக்காவில் September 4, 2015அன்று இந்தப்படம் வெளியாகும் என்று அறிவிப்பு சொல்கிறது. இந்தப்படம் எப்படியும் இந்தியாவில் தடைசெய்யப்பட்டுவிடும். எனவே இதை நாமும் இந்தியாவில் தடை செய்யக்கோருவோம் இப்போதே.
இருக் கட்சிகளின் சார்பிலும் நிறைய சினிமா,விளையாட்டுத் துறை நட்சத்திரங்கள் போட்டியிட்ட தேர்தல் இதுவாகத்தான் இருக்கும். ஆளுங்கூட்டணி சார்பில் விளயாட்டுத் துறை பிரபலங்களாக போட்டியிட்ட சனத், சுசந்திகா ஆகியோரில் சனத் மாத்தறை மாவட்டத்தில் முதலாவதாய் வந்திருக்கும் நிலையில் சுசந்திக்கா கேகாலையில் தோல்வியடைந்துள்ளார். சினிமா பிரபலங்களைப் பொறுத்தவரை காலியில் கீதா குமாரசிங்க தோல்வியடைந்த போதும் தேசியப்பட்டியலில் மாலினி பொன்சேகாவுக்கு இடம் கிடைக்கும் என நம்பலாம். தோல்வியுற்றோர் சுசந்திகா ஜெயசிங்க கீதா குமாரசிங்க ஆளுங் கட்சி சார்பில் வென்ற ஒரே நட்சத்திரம் ஐக்கியத் தேசியக் கட்சியைப் பொறுத்த வரை முன்னாள் Mrs World மற்றும் தற்போதைய மேல்மாகாண எதிர்க்கட்சி தலைவி ரோசி சேனநாயக்க, நடிகரும் சப்ரகமுவ மாகாண எதிர்க்கட்சி தலைவருமான ரஞ்சன் ராமநாயக்க ஆகியோர் வெற்றிப் பெற்றுள்ளனர். இவர்கள் நீண்டகாலமாக தீவிர அரசியலில் தாம் சார்ந்த கட்சியில் பற்றுறுதியோடு தோல்வியின் போதும் இருந்தவர்கள். ஆக இவர்களின் தெரிவு பொருத்தமானதே. ரோசி சேனநாயக்க ரஞ்சன் ராமநாயக்க எனினும் நடிகை உபேக்ஷா ஸ்வர்ணமாளிக்கு எல்லாம் என்னத் தெரியும். இவரும் வென்றிருக்கிறார் அதுவும் ஐக்கியத் தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் கரு ஜயசூரியவை விட அதிகமான வாக்குகளுடன் இவருக்கு வாக்களித்த மக்களின் மன நிலை கொஞ்சமும் புரியவே இல்லை. இதே உடையோடு பாராளுமன்றம் செல்லாமல் இருந்தால் சரி. இவரது "சன்ச்சலா" பாடல் எனக்கு ரொம்பவும் பிடித்த ஒன்று. உபேக்ஷா சரத் + ஜேவிபி + அர்ஜுன கூட்டில் போட்டியிட்டு வென்ற ஒரே நட்சத்திரம் அர்ஜுன ரணதுங்க. அவரது தைரியமான அரசியல் முடிவுகள் நிச்சயமாக பாராட்டப்பட வேண்டிய ஒன்று. இவர்கள் என்றில்லை டிவியில் வருவதால் ஊடகவியலாளர்களான ஸ்ரீரங்கா, புத்திக்க பத்திரன, மனுஷ்ய நாணயக்கார, சுசில் கிண்டேல்பிட்டிய, சுதர்மன் போன்றோரும் நமக்கு நட்சத்திரங்கள்தான். இவர்களில் முதல் மூவர் மட்டுமே வென்றிருக்கின்றனர். இடுகையிட்டது தர்ஷன் நேரம் முற்பகல் 8:27 1 கருத்துகள் லேபிள்கள்: அரசியல், கிரிக்கெட், சினிமா, தேர்தல் ஞாயிறு, 11 ஏப்ரல், 2010 புதிய பாராளுமன்றத்தில் மலையகம் இனி இந்த பாழாய்ப் போன அரசியற் கணிப்புகளை எல்லாம் சொல்லக் கூடாது. பிறகு நம்ம மக்களைப் புரிந்துக் கொள்ளவே முடியவில்லை. எத்தனை அழகாகக் கவிழ்க்கிறார்கள். போட்டிக் கொஞ்சம் கடுமையாக இருக்கும் என்ற என் அடிமன ஆசை எல்லாம் நிறைவேறாமல் மகத்தான வெற்றியைப் பெற்றிருக்கிறது ஆளும் கூட்டமைப்பு அரசாங்கம். மாத்தளையில் நான் கணித்ததுப் போல மூன்றுக்கு இரண்டு என்பதாக இல்லாமல் நான்குக்கு ஒன்று என்ற ரீதியில் மாபெரும் வெற்றிப் பெற்றிருக்கிறது அரசு. கூட்டமைப்பின் சார்பில் நான் எதிர்வு கூறிய நால்வரே வென்றிருக்கின்றனர். எனினும் மூன்றாமிடத்திற்கு போட்டியிடுவார் என நான் கருதிய லக்ஷ்மன் வசந்த ஆகக்கூடிய விருப்பு வாக்குகளை பெற்று முதலாமிடத்திற்கு வந்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் பத்து வருடங்களாக பாராளுமன்றில் இருக்கும் ரஞ்சித் அலுவிஹார தோல்வியுற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. கண்டியைப் பொறுத்தவரை நாவலப்பிட்டியில் முன்னாள் அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகேயின் அட்டகாசத்தால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள முடிவுகள் இருபதாம் தேதி சில நிலையங்களில் நடைபெறும் மறு வாக்களிப்புக்குப் பின்னர் பெரும் மாற்றங்கள் இன்றி வெளிவரும் என நினைக்கிறேன். அது பெரும்பாலும் ஏழு , ஐந்தாக இருக்கலாம். எனினும் மனோ கணேசன் தெரிவாக மாட்டார் என்றே அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. நுவர எளிய வாக்காளர்கள்தான் என்னை அப்படியே கவிழ்த்து விட்டனர். உண்மையில் இது அமைச்சர் ஆறுமுகம் தொண்டமானின் அரசியல் சாணக்கியத்திற்கு கிடைத்த வெற்றி. ஆளுங் கூட்டமைப்புக்கு கிடைத்த ஐந்து உறுப்பினர்களில் முதல் மூவர் தொழிலாளர் காங்கிரசை சேர்ந்தவர்கள் தலைவர் ஆறுமுகம் தொண்டமானுடன், முன்னாள் மத்திய மாகாண கல்வியமைச்சர் ராதாக்ருஷ்ணன், ராஜதுரை ஆகியோரோடு அடுத்த இரு இடங்களில் சி.பி ரத்னாயக்க, நவீன் திசாநாயக்க ஆகியோர் தெரிவாகி உள்ளனர். ஐக்கியத் தேசியக் கட்சியைப் பொறுத்தவரை பாராளுமன்றிற்கு முதன்முறையாக இளைஞர்களான திகாம்பரம், ஜே.ஸ்ரீரங்கா ஆகியோர் தெரிவாகியுள்ளனர். எழுவரில் ஐவர் தமிழர்கள்.மகிழ்ச்சி. தொழிலாளர் காங்கிரசில் போட்டியிட்டு தெரிவானவர்கள் மூவர் தேசியப்பட்டியலில் இருவர் என ஐவர் பாராளுமன்றத்திற்கு செல்லப் போகின்றனர். இரண்டு அமைச்சுப் பதவிகள் கிடைக்கலாம். (தொண்டா குடும்பத்தினர் பங்களிப்பின்றி ஒரு அமைச்சரவை இலங்கையில் இருந்ததுதான் உண்டா 77 க்குப் பின்) . செயற்றிறன் மிக்கவர்கள் எனக் கருதப்படும் எதிர்கட்சியைச் சேர்ந்த இருவரும் நம் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் பாராளுமன்றில் நிறையவே குரலெழுப்புவர் என நம்பலாம். அப்புறம் பதுளையில் இருந்த இரண்டு தமிழர் பிரதிநிதித்துவத்தையும் வெற்றிக்கரமாய் இழந்திருக்கிறோம். இதுதான் புதிய பாராளுமன்றில் மலையகத்தின் நிலைமை. இடுகையிட்டது தர்ஷன் நேரம் முற்பகல் 9:19 2 கருத்துகள் லேபிள்கள்: அரசியல், தமிழ், தமிழ்க்கட்சிகள், மலையகம் வியாழன், 8 ஏப்ரல், 2010 2010 பொதுத்தேர்தலில் மலையகம் இலங்கையின் ஏழாவது பாராளுமன்றத்திற்கான தேர்தல் இன்றைய தினம் நடைபெறுகிறது. ஆளுங்கட்சியின் வெற்றி உறுதியாகி இருக்கும் நிலையில் அது எதிர்பார்க்கும் மூன்றிலிரண்டு பெரும்பான்மை கிட்டாது என்பதே என் எண்ணம். முழு இலங்கையினதும் நிலவரம் தொடர்பில் ஆராயாது கருத்து சொல்லல் பொருத்தமாக இராது என்பதால் மலையகத்தின் மூன்று மாவட்டங்களிலும் பெறப்படக்கூடிய பெறுபேறு தொடர்பில் நான் அவதானித்த அறிந்த விடயங்களின் அடிப்படையிலமைந்த சிறு கணிப்பே இப்பதிவு. முதலில் மாத்தளை மாவட்டம். நான் வாழும் மாவட்டம். 80 % சதவீதம் பெரும்பான்மையினரையும் 10 % சதவீதம் தமிழரையும் 8 % முஸ்லிம்களையும் வாக்காளர் இடாப்பில் கொண்ட இம்மாவட்டத்தில் 5 பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படப் போகின்றனர். எனது கணிப்பின் படி இங்கு மேற்படி ஐந்து ஆசனங்கள் ஆளும் ஐக்கிய மக்கள் கூட்டணிக்கு மூன்றும் பிரதான எதிர்கட்சியாக வரப்போகும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு இரண்டுமாக பிரியப்போகின்றது. ஆளுங் கட்சி சார்பில் தெரிவாகப் போகும் மூவரில் ஒரு பதினைந்து வருடங்களுக்கு முன் ஒரு சிறிய நகரமாக மட்டுமே இருந்த தம்புள்ளவை தூங்கா நகரமாக மாற்றிய அமைச்சர் ஜனக்க பண்டார தென்னகோன், முன்னால் அமைச்சரும் மத்திய மாகாண முதலமைச்சருமான நந்திமித்ரா ஏக்கநாயக்க ஆகியோரின் வெற்றி நிச்சயமான நிலையில் மூன்றாவது இடத்திற்கு தெரிவாவது அமைச்சர் ரோகன திசாநாயக்கவா இல்லை புதுமுகம் லக்ஸ்மன் வசந்த பெரேராவா என்பதே கேள்விக்கிடமாகி உள்ளது. ரோகன ஏலவே மாவட்டத்திற்கு நிறைய சேவைகள் செய்துள்ள போதும் லக்ஷ்மன் வாரியிறைக்கும் பணம் அவருக்கு சாதகமாக உள்ளது. ஐக்கியத் தேசியக் கட்சியின் சார்பில் பாரம்பரியமாகவே எப்போதும் நிகழ்வது போல முன்னால் அமைச்சர் அலிக் அலுவிகாரவின் இரு புதல்வர்களான முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மற்றும் முன்னாள் மத்திய மாகாண சபை முதல்வர் ,தற்போதைய எதிர்க்கட்சி தலைவர் வசந்த ஆகியோரே தெரிவாகப் போகின்றனர். சஞ்சீவ கவிரத்ன, ரோகன பண்டாரநாயக்க ஆகியோர் கணிசமான வாக்குகளைப் பெறலாம். ஜேவிபி சரத் பொன்சேகா கூட்டான ஜனநாயக முன்னணி ஆசனம் எதையும் கைப்பற்ற போவதில்லை. அதன் படி சென்ற முறை ஜேவிபி சார்பாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் வென்று இம்முறை ஜனநாயக முன்னணியில் போட்டியிடும் சுஜாதா அழகக்கோனின் வெற்றி உறுதி. இங்கு சிறும்பான்மையினத்தைச் சேர்ந்த ஒருவர் தெரிவாக வாய்ப்பில்லை என்பது வெள்ளிடைமலை. இருப்பினும் விகிதாசார தேர்தல் முறையின் அனுகூலமான பக்கத்தை சரியாகப் பயன்படுத்தினால் அது சாத்தியமே. அதாவது மாவட்டத்தில் அதிக ஆசனங்களை பெறும் என நிச்சயமாக நம்பப்படும் கட்சியில் உள்ள சிறும்பான்மை வேட்பாளர் இருவருக்கு அனைத்து சிறும்பான்மையினரும் திரண்டு தமது வாக்குகளை அளிப்பதோடு மூன்றாவது விருப்பு வாக்கை எந்த ஒரு பெரும்பான்மை வாக்காளருக்கும் அளிக்காது விடல். எனினும் அத்தனை தீர்க்கதரிசனம் நம் மக்களுக்கு இல்லையாதலால் அது இன்னும் பல வருடங்களுக்கு சாத்தியப்படப் போவதில்லை. அடுத்து கண்டி மாவட்டம். மத்திய மாகாண தலைநகரம். அதிகமான உறுப்பினர்களாக 12 உறுப்பினர்கள் இங்கே தேர்ந்தெடுக்கப்படப் போகின்றனர். 14 சதவீத முஸ்லிம்களும் 13 சதவீத தமிழர்களும் 70 சதவீத சிங்களவர்களும் வாக்களிக்க உள்ளனர். ஐக்கய தேசியக் கட்சியின் கொட்டைகளில் ஒன்று. இப்போதெல்லாம் நிலைமை அப்படி இல்லை ஆக இங்கும் ஆளும் கூட்டணியே வெற்றிப் பெறப் போகிறது. எனது கணிப்பின் பிரகாரம் ஆசனங்கள் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ஆறு, ஐக்கிய தேசியக் கட்சி ஐந்து, ஜனநாயக முன்னணி ஒன்று என்ற ரீதியில் ஆசனங்கள் பிரியலாம். ஆளுங் கூட்டணியின் அறுவர் கெஹெலிய ரம்புக்வெல்ல, மகிந்தானத அலுத்கமகே, சரத் அமுனுகம , எஸ். பி. திசாநாயக்க என்பதெல்லாம் நிச்சயமான நிலையில் எஞ்சியிருக்கும் இரு இடங்களுக்கு லோகன் ரத்வத்த, திலும் அமுனுகம, பைசர் முஸ்தபா என்போரிடையே பாரியப் போட்டி நிலவக்கூடும். முஸ்லிம்கள் பெரும்பாலும் ஐக்கிய தேசியக் கட்சிக்கே வாக்களிப்பர் என்ற போதிலும் அமைச்சர் பைசர் ஹாரிச்பத்துவ தொகுதியில் செய்துள்ள சேவைகளைக் கருதுமிடத்து அவருக்கான வாய்ப்புகளும் பிரகாசமாகவே உள்ளன. மிகுந்த ஆளுமையுள்ளவர். தமிழர்களில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் ஆளுங் கட்சி சார்பில் போட்டியிடும் துரை மதியுகராஜாவின் தோல்வி நிச்சயம். ஐக்கியத் தேசியக் கட்சியில் தெரிவாகும் ஐவரை எதிர்வு கூறல் சற்றுக் கடினம்தாம். சென்றமுறை பெருவாரியான வாக்குகளால் வென்றவர்கள் எல்லாம் இம்முறை ஆளுந்தரப்பில் பைசர் முஸ்தபா,கெஹெலிய ரம்புக்வெல்ல ஆகியோர். திஸ்ஸ அத்தநாயக்க தேசியப்பட்டியலில் எனவே லக்ஷ்மன் கிரியெல்ல, அப்துல் காதர் தவிர ஏனையோர் புதுமுகங்களாய் இருக்கப் போகின்றனர். சென்றமுறை திகாமடுல்ல மாவட்டத்தில் போட்டியிட்டு வென்று இம்முறை மீண்டும் தன் பிறந்தகத்தில் களமிறங்கும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவுப் ஹக்கீம் அவர்களின் வெற்றியும் ஏலவே நிச்சயிக்கப்பட்ட ஒன்று. ஆக அடுத்த இரண்டு இடத்திற்கு பலத்தப் போட்டி நிலவப் போகிறது. இப்போட்டியில் சென்ற முறை வென்ற ஹலீம் அவர்களின் வெற்றி சற்றேக் கேள்விக்குறியாக உள்ளது. அந்த இரண்டு இடங்கள் ஹலீம்,மனோ கணேஷன், சித்ரா மண்திலக்க, லக்கி ஜெயவர்தன ஆகியோரில் இருவருககே செல்லக்கூடிய வாய்ப்புண்டு. மனோ கணேசனின் கண்டி மாவட்டத்திற்கான பிரவேசமானது 16 வருடங்களுக்குப் பின் தமிழ் பிரதிநிதித்துவத்தை பெறும் வாய்ப்பை பிரகாசமாக்கி உள்ளது எனினும் அது அத்தனை எளிதில் கிட்டி விடப் போவதில்லை. தமிழர்கள் அனைவரும் சிந்தித்து முறையாக தமது வாக்கை பயன்படுத்தினால் மட்டுமே அது சாத்தியம். ஐக்கிய தேசியக் கட்சி வெறுமனே நான்கு ஆசனங்களை மட்டுமே வென்றால் அதுவும் கேள்விக் குறியாகும். சரத் ஜேவிபி கூட்டுக்கு 1 ஆசனம் கிடைக்கலாம். நுவரஎளிய மாவட்டம் 7 பாராளுமன்ற உறுப்பினரை தெரிவு செய்யவென 56 % தமிழர்களும் 40 % சிங்களவர்களும் 3 % முஸ்லிம்களும் வாக்களிக்க உள்ளனர். மலையகத்தில் ஐக்கிய தேசியக் கட்சி வெல்லப் போகும் ஒரே மாவட்டம் இதுதான். ஏழு ஆசனங்களும் என் கணிப்பின் படி ஐக்கிய தேசியக் கட்சிக்கு நான்கு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கு இரண்டு மலையக மக்கள் முன்னணிக்கு ஒன்று என்ற ரீதியில் பிரியலாம். ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் அதிக வாக்குகளை சந்தேகத்துக்கு இடமின்றி பழனி திகாம்பரம் பெறுவார். சதாசிவம், உதயகுமார், ஸ்ரீரங்கா, பியதாச ஆகியோர் மற்றைய மூன்று ஆசனங்களுக்கும் போட்டியிடுவர். ரேணுகா ஹேரத் கணிசமான வாக்குகளை பெறலாம். பாரம்பரியமாய் தொண்டா குடும்பத்தினர் கைக்காட்டிய திசைக்கு வாக்களித்த மக்களின் மனநிலையில் பாரிய மாற்றம் ஏற்பட்டிருப்பது தெளிவாகிறது. இம்முறைத் தெரிவாகக் கூடியோரில் பெரும்பான்மையினர் பாராளுமன்றத்திற்கு புதியவர்கள். ஸ்ரீரங்கா ஊடகவியலாளராக மலையக மக்களின் பிரச்சினைகளை வெளிக்காட்டியிருப்பது உண்மை என்ற போதும் ஒரு ஈழத்தமிழர் மலையகத்தில் வாக்கு கேட்பது தொடர்பில் படித்த இளைஞர் மத்தியில் பெறும் அதிருப்தி நிலவுகிறது. ஆக அவரது தெரிவு ஒன்றும் அத்தனை சுலபமில்லை. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பை பொறுத்தவரை தெரிவாகப் போகும் இருவரில் ஒருவர் அமைச்சர் C .B. ரத்னாயக்க மற்றையவர் அமைச்சர் ஆறுமுகம் தொண்டமானா? அல்லது நவீன் திசானாயக்கவா என்பதுதான் தெரியவில்லை. மலையகத்தின் ஏகபோகத் தலைவனாக இருந்த தனக்கு இப்படி ஒரு நிலை வரும் என ஜூனியர் தொண்டா கனவிலும் நினைத்திருக்க மாட்டார். இதுவரை பாராளுமன்றை அலங்கரித்த அவரது கட்சியினரான முத்து சிவலிங்கம், ஜெகதீஸ்வரன் போன்றோர் இம்முறை தோல்விக்குப் பயந்து பாதுகாப்பாக தேசியப்பட்டியலில் புகலிடம் தேடிக்கொண்டனர். எனினும் ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பே மீள ஆட்சியமைக்கப் போகும் நிலையில் தான் எதிர் கட்சியில் இருப்பதில் பிரயோசனமில்லை என்ற அடிப்படையில் அவர் இம்முடிவை எடுத்திருப்பின் அது பாராட்டத் தக்கதே. எது எப்படியானாலும் நாம் தொழிலாளர் காங்கிரசுக்கே என்ற நிலையுள்ளவர்களின் வாக்குகளால் எப்படியும் ஆறுமுகம் தொண்டமான் தப்பிப் பிழைப்பார் என்றே நம்புகிறேன். மற்றும் படி புத்திரசிகாமணி, அருள்சாமி எல்லாம் தோல்வி நிச்சயமானவர்கள். அருள்சாமி மத்திய மாகாண கல்வி அமைச்சராக இருந்த காலக் கட்டத்தில் அவர் கொடுத்த ஆசிரிய நியமனம் தொடர்பில் எல்லாம் எனக்கு கடுமையான விமர்சனம் உண்டு. மலையக மக்கள் முன்னணியில் மறைந்த அமைச்சர் சந்திரசேகரனின் துணைவியார் தெரிவாவார் என நினைக்கிறேன். பார்ப்போம் தேர்தல் முடிவுகள் வெளிவந்தவுடன் என் கணிப்புகள் எத்தனைத் தூரம் சரியாக இருக்கிறது என. இடுகையிட்டது தர்ஷன் நேரம் பிற்பகல் 4:04 0 கருத்துகள் லேபிள்கள்: அரசியல், இலங்கை, தேர்தல், மலையகம், மாத்தளை புதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு இதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom) இந்த வார பொன்மொழி "ஒலகத்தில உன்னை விட பெரியவன் யாருமில்ல அதுனால நீ யாருக்கும் பயப்படாதே, அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாருமில்லை அதுனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே" என் எழுத்தையும் அங்கீகரித்தவர்கள் கிளிக்கிப் பாருங்கள் நன்றி கலை கிளிக்கிப் பாருங்கள் விகடனில் என் பதிவு கிளிக்கிப் பாருங்கள் நான் தர்ஷன் மாத்தளை, மலையகம், Sri Lanka பெரிதாக சொல்ல எதுவுமில்லை பல வலைப்பூக்களை பார்த்து ஆர்வத்தால் எழுத வந்த ஒருவன் எனது முழு சுயவிவரத்தைக் காண்க பழசு ► 2013 (2) ► மே (1) ► பிப்ரவரி (1) ► 2012 (1) ► ஜனவரி (1) ► 2011 (12) ► டிசம்பர் (2) ► அக்டோபர் (5) ► ஜனவரி (5) ▼ 2010 (34) ► டிசம்பர் (1) ► நவம்பர் (2) ► அக்டோபர் (1) ► ஆகஸ்ட் (1) ► ஜூலை (2) ► ஜூன் (2) ► மே (5) ▼ ஏப்ரல் (3) பாராளுமன்ற தேர்தலில் நட்சத்திரங்கள் புதிய பாராளுமன்றத்தில் மலையகம் 2010 பொதுத்தேர்தலில் மலையகம் ► மார்ச் (4) ► பிப்ரவரி (9) ► ஜனவரி (4) ► 2009 (57) ► டிசம்பர் (16) ► நவம்பர் (11) ► அக்டோபர் (1) ► செப்டம்பர் (1) ► ஆகஸ்ட் (1) ► மே (1) ► ஏப்ரல் (4) ► மார்ச் (16) ► பிப்ரவரி (6) இவற்றைப் பற்றியும் எழுதியிருக்கிறேன் சினிமா (39) அரசியல் (20) இலங்கை (20) காதல் (17) கவிதை (16) மலையகம் (14) கிரிக்கெட் (11) அனுபவம் (10) இந்தியா (10) இசை (9) ரஜினி (8) ஏ. ஆர். ரஹ்மான் (7) பெரியார் (6) மதம் (5) விஞ்ஞானம் (5) ஈழம் (4) விளையாட்டு (4) பொது (3) மூடநம்பிக்கை (3) கனவுக் கன்னியர் (2) நகைச்சுவை (2) விகடன் (2) இளையராஜா (1) படங்கள் (1) பிரபலங்கள் அ.முத்துலிங்கம் இந்திரா பார்த்தசாரதி இரா.முருகன் உயிர்மை எஸ். ராமகிருஷ்ணன் சாரு நிவேதிதா ஜெயமோகன் ஞாநி பா. ராகவன் பாலகுமாரன் பிரபஞ்சன் வண்ணதாசன் விமலாதித்த மாமல்லன் ஷாஜி நான் பார்ப்பவை தருமி 1202. FIFA '22 - ஒரு வழியாக முதல் ரவுண்டு முடிந்தது. நாக் அவுட் ஆரம்பித்தாகி விட்டது. ஏதோ ஒரு வழியாக பிடித்த சில ஆட்டங்களைத் தேர்ந்து பார்த்தாகி விட்டது. இனி எல்லாவற்றையு... 8 மணிநேரம் முன்பு வினவு! ஜி 20 நாடுகளின் கூட்டமைப்பின் தலைமை பொறுப்பு: கார்ப்பரேட் கொள்ளைக்கான ஏற்பாடு! - தத்தம் நாடுகளின் உள்ள உழைக்கும் மக்களை சுரண்டுவது இயற்கை வளங்களை சூறையாடுவதையே ஜி 20 நாடுகளின் மாநாட்டின் நோக்கமாக கொண்டுருப்பதால் இதற்கெதிராக போராடுவோம். 10 மணிநேரம் முன்பு Envazhi புதிய தொழில்நுட்பத்தில் ஏஆர் ரகுமான் இயக்கிய படம்… பார்த்து ரசித்த தலைவர் ரஜினி! - சென்னை: மெய்நிகர் உண்மை (விர்ச்சுவல் ரியாலிட்டி) தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ள ஏஆர் ரகுமானின் ‘லி மஸ்க்’ திரைப்படத்தை நடிகர் ரஜினிகாந்த் கண்டு ரசித்... 2 நாட்கள் முன்பு நெஞ்சின் அலைகள் 2022 நவம்பர் 23 இல் நாசா ஆர்டிமிஸ் -1 காமிரா அனுப்பிய முதல் பூமியின் படம் - 2022 நவம்பர் 23 இல் நாசா ஆர்டிமிஸ் -1 காமிரா அனுப்பிய முதல் பூமியின் படம் Unmanned Spaceship Orion NASA’s Artemis 1 Shares First Image of Earth on the W... 6 நாட்கள் முன்பு Cable சங்கர் சாப்பாட்டுக்கடை - ஆற்காடு மெஸ்- தோற்ற கதை. - பல சாப்பாட்டுக்கடைகளைப் பற்றி எழுதியிருக்கிறேன். 40-50 வருட பாரம்பரியம் உள்ள கடைகள் முதற் கொண்டு, புதியதாய் ஆரம்பித்திருக்கும் கடைகள் வரை எழுதியிருக்கிறேன்... 4 வாரங்கள் முன்பு பிச்சைக்காரன் ஜெயமோகனும் சாருவும் கனிந்து விட்டார்களா? - சாரு கனிந்து விட்டார் ஜெயமோகன் கனிந்து விட்டார் என ஒரு வித எதிர்மறைத் தொனியில் சிலர் விஷ்ணுபுரம் விருதை முன்வைத்து பேசுவதைக் காண மு... 2 மாதங்கள் முன்பு LOSHAN - லோஷன் பொன்னியின் செல்வன் - ஒலி நூல் - பொன்னியின் செல்வன் - என் பால்ய வயதுக் கனவு அது. என் கனவுகளில் எனக்கு double acting.வந்தியத்தேவனும் நானே; அருண்மொழிவர்மனும் நானே..திரைப்படமாக வந்தால்..அப்பட... 3 மாதங்கள் முன்பு கணேஷ் அலையாடும் மனது - சொந்த ஊரில் ஏகப்பட்டப் பிரச்சினைகளின் உந்துதலில் எப்படியாவது நாலு காசு சம்பாரிச்சு நாமும் வாழ்ந்து காட்டவேண்டும் என்ற நினைப்போடு ஏதாவதொரு வழி கிடைக்காதா ... 3 மாதங்கள் முன்பு பிச்சைப்பாத்திரம் குமுதம் - உலக சினிமா கட்டுரைகள் - பாகம் ஒன்று - சுவாசம் பதிப்பகம் மூலம் சமீபத்தில் வெளியான 'சர்வதேசத் திரைப்படங்கள்' - பாகம் ஒன்று நூலிற்காக எழுதப்பட்ட முன்னுரை. oOo அலுவலக மதிய உணவிற்குப் பிறகு சிறுநட... 4 மாதங்கள் முன்பு என் உளறல்கள் ரணிலின் கில்லி - ஜூலை 9ந்திகதி காலை எவராவது நாட்டின் அடுத்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தான் என கூறி இருந்தால் ரணிலை தவிர அனைவரும் சிரித்திருப்போம். 1977 ஆம் ஆண்டு ப... 4 மாதங்கள் முன்பு புதிய மலையகம் கந்தப்பளையில் காணி ஊழல்! காரணமானவர்கள் யார்? - அரசியல்!இந்தப் பெயரில் இடம்பெறும் ஊழல்கள், அக்கிரமங்கள், அநியாயங்கள் அனைத்தும் நமது நாட்டுக்கு கிடைத்த பெரும் சாபக்கேடு. இதனாலேயே அரசியல்வாதிகள் மீது மக்க... 5 மாதங்கள் முன்பு கலையகம் அன்டன் பாலசிங்கம் திரிபுபடுத்திய சுயநிர்ணயம் பற்றிய லெனினின் மேற்கோள் - *"தமிழ் மொழியின் பெயரில் ஈழம் பிரிவதையும் லெனின் எழுதிய கோட்பாடு அங்கீகரிக்கின்றது"* என்பது மாதிரி தமிழ்த்தேசியம் பேசும் சிலர் உளறிக் கொண்டிருக்கிறார்... 6 மாதங்கள் முன்பு தீராத பக்கங்கள் க்ளிக் - 19 (தொடர்கதை) - தனக்குத்தான் அலாரம் அடிக்கிறது என்ற பிரக்ஞையோடு எரிச்சலும் சேர்ந்தே வந்தது. கண் விழித்தாள் பூங்குழலி. குட்நைட் ப்ளக்கிலிருந்து பழக்கமான சின்ன வெளிச்சம் ... 8 மாதங்கள் முன்பு யுவகிருஷ்ணா குழந்தை அண்ணா! - பல்லவர் தலைநகரம். சீன யாத்ரிகர் யுவான்சிங்கின் பயணக் குறிப்புகளில் இடம்பெற்ற ஊர். நான்காம் நூற்றாண்டிலேயே இங்கு பல்கலைக்கழகம் இருந்திருக்கிறது. நாளந்தா ... 1 ஆண்டு முன்பு Paraiyoasai's Blog சர்க்கரை உண்பதால் சர்கரை நோய் வருகிறது. ஏகதிபத்திய எதிர்ப்பா? பிற்போக்க? - 1 ஆண்டு முன்பு அதிஷா யாருக்காக உன் இந்தி... - யாருக்காக உன் இந்தி... கடந்த சில நாள்களாக இந்திக்கு எதிரான குரல்கள் இணையமெங்கும் ஒலிப்பதை பார்க்கிறோம். இந்தி தெரியாது போடா என்பதை பெருமையோடு பகிர்ந்துக... 2 ஆண்டுகள் முன்பு வால் பையன் உலக பொருளாதாரம்! - சீன ராணுவம் ஹாங்காங்கில் நுழையும் நான் முன்னமேல்லாம் ஜோசியம் பார்க்கல. தங்கம் விலை ஏற ட்ரம்பின் அடாவடிதனம் காரணம். ஒவ்வொரு நாட்டின் பண மதிப்பு டாலர் இண்டெக... 3 ஆண்டுகள் முன்பு என் பயணத்தின் பிம்பங்கள்...! இன்னும் எவ்வளவு தொலைவு? (A) - *நி*லவின் நுரை நிரம்பி வழியும் முன்னிரவு. பசிய இலைகள் எல்லாம் இருளின் கரும் போதைக்குள் ஆழ்ந்து மெல்ல அசைந்து கொண்டிருந்த குளிரின் நேரம். பறவைக்கூடுகளி... 3 ஆண்டுகள் முன்பு IdlyVadai - இட்லிவடை எதுக்கும் இடத்தை ரிசர்வ் செய்து வைப்போம்... - நான் வந்துட்டேன்னு சொல்லு.. திரும்ப வந்துட்டேன்னு.. 3 ஆண்டுகள் முன்பு மொழியும் நிலமும் தேர்தல் கலப்புக் கூட்டணிகளும் கலையும் கூட்டணிகளும். - தேர்தல் அறிவிக்கப்பட்டுவிட்டது. இனிக் கூட்டணிகள் பற்றிய ஊகங்கள், கணக்கீடுகள், அறிவுரைகள். ஆலோசனைகள் என உள்ளுர் டீக்கடை பெஞ்சுகளில் துவங்கி உலகளாவிய தொலைக்... 3 ஆண்டுகள் முன்பு :: தமிழினியன் :: rus karıma fantastik hediyem - sevgili seks okurları. Ben Murat Büyük bir firmada yöneticiyim bundan 5 yıl önce Rusya ya gittiğim zaman Rus bir kızla … 3 ஆண்டுகள் முன்பு மேடை 'வீர இளைஞர்களின் மகாத்மா' - *-இராமானுஜம் நிர்ஷன்-* “இளைஞர்களே, எழுந்துநில்லுங்கள். தோல்வியில் துவண்டு வறுமையில் வாடிக்கொண்டிருக்கும் சமுதாயத்தை பலமான கரங்களால் மாற்றியமைப்போம். பலவீன... 3 ஆண்டுகள் முன்பு பேயோன் 2019 இலக்குகள் - முழுநேர எழுத்தாளன் ஆகக் கூடாது அப்புறம் இன்னொரு வேலை கிடைக்காது நண்பர்களுடன் இன்னும் பழக வேண்டும் நட்புகள் சாத்தியமில்லை என்பதை அவ்வப்போது மறக்க வேண்டும் இ... 3 ஆண்டுகள் முன்பு வெண்ணிற இரவுகள்....! குட்டி இளவரசன் - 5 ஆண்டுகள் முன்பு அனுஜன்யா புத்தாண்டில் பூங்காவலம் - பற்றியும் பற்றாமலும் - *இந்தப் புத்தாண்டின் துவக்க தினம் ஞாயிறில் வந்தது ஹாங் ஒவரில் சிரமப்படும் பலருக்கு நிம்மதியாக இருக்கக்கூடும். இதனை குடியின் பின்விளைவான தலைவலி என்று தட்... 5 ஆண்டுகள் முன்பு குசும்பு வாடா வாடா வந்துப்பார்டா! - 5 ஆண்டுகள் முன்பு பேசுகிறேன் மாயா - "அப்போ நான் பொறப்படவா?", எழுந்தவனைத் தோளைப் பிடித்து அமுக்கினான் ஸ்ரீவத்சன். "ஏண்டா! எத்தனை மாமாங்கமாச்சு உன்னை பாத்து. பேசன்னு நெனைச்சது எதையும் பேசலை... 6 ஆண்டுகள் முன்பு சினிமாவும்....நானும் 12 Angry Men - பத்துக்கு பத்து அளவில் - எழுதுவதை நிறுத்தி பல வருடங்கள் ஆயிற்று.. என் வலைபூ-வை இழுத்து முடி இருப்பங்க நினைத்து போன எனக்கு இன்ப அதிற்சி.. இன்று கூட என் நண்பர்கள் வந்து பர்த்து போய்... 6 ஆண்டுகள் முன்பு தேஜஸ்வினி இறைவி - எல்லா படங்களை பார்த்தாலும் (தெறி, 24 போன்ற சூர மொக்கைகளை தவிர ) சில படங்களை பார்க்கும் போதுதான் எழுத வேண்டும் என தோன்றும். தவிர முதல் முறையா படத்துக்கும் வ... 6 ஆண்டுகள் முன்பு கார்த்தியின் பார்வையில்.. King Cobra (2016) - 5129682 6 ஆண்டுகள் முன்பு வார்த்தைகள் எனியோ மோரிகோனி என்னும் இசை மேதை - (ஆனந்த விகடன் 16/03/2016 இதழில் வெளியான ‘தங்கத்தின் பேரானந்தம்!’ கட்டுரையின் மூல வடிவம்) ஆஸ்கார் மற்றும் கோல்டன் குளோப்-யின் இசைக்கான விருதுகளை இந்த ஆண்டு ... 6 ஆண்டுகள் முன்பு " ALL IN ALL " அழகுராஜா கடை வழுவுச்சம் - முன்னால் சென்றுகொண்டிருந்த மூன்று ஜீப்புகளும் ஒரு வளைவுக்கு முன் அப்படியப்படியே நின்றன. இஞ்சினை அணைத்துவிட்டு இறங்கினேன். இடப்புறமிருக்கும் பாறையில் எப்போத... 6 ஆண்டுகள் முன்பு உலகசினிமா ரசிகன் சென்னை திரைப்பட திருவிழா 2016. - நண்பர்களே... சென்னை திரைப்பட திருவிழாவில் காண வேண்டிய காவியங்களை, நண்பர் கோவை ஆ.வி.அவர்கள் பரிந்துரை செய்து பதிவிட்டுள்ளார். கீழ்க்கண்ட இணைப்பில் செல்க... h... 6 ஆண்டுகள் முன்பு மருதன் பிகார் தேர்தல் : பாஜக கற்கப்போவதில்லை! - பாஜக பிகாரிடம் இருந்து எதையுமே கற்கவில்லை, கற்கவும் செய்யாது, அருண் ஜெட்லி என்டிடிவியில் சற்று முன் உரையாடியதைப் பார்க்கும்போது என் நம்பிக்கை இன்னமும் வலுவ... 7 ஆண்டுகள் முன்பு கொழந்த's blog Feels Like We Only Go Backwards - I used to smoke weed and I don’t even smoke weed anymore. Because, it’s like… the world’s intense enough as it is. – Kevin Parker சரக்கு, லாகிரி வஸ்துகள் எ... 7 ஆண்டுகள் முன்பு கனவுகளின் காதலன் இறந்த உறவுகளின் புதிய முகிழ்கள் - *வாழ்க்கையின் *ஒரு தருணத்தில் தன்னை தாயுடன் தனியே விட்டு சென்றுவிட்ட ஒரு தந்தை மீது அன்புடன் இருக்க ஒரு மகனிடம் என்ன காரணம் இருக்க முடியும். தந்தையின் நிழ... 7 ஆண்டுகள் முன்பு Surveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்! மெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review] - தியேட்டரில் ஒரு படம் பார்ப்பதற்கு முன், இப்பெல்லாம், உண்மைத் தமிழன், ரீ டிப், இந்து, டைம்ஸ், lucky, cable sankar, என்று பல இடத்திலும் எட்டிப் பார்த்து , ... 8 ஆண்டுகள் முன்பு தத்தக்க பித்தக்க திரும்ப வந்திட்டன் - கிட்டத்தட்ட 4 வருடங்களாக நான் இந்தப்பக்கம் வரவேயில்லை. இங்க என்ன நடந்தது நடந்துகொண்டு இருக்கெண்டும் எனக்குத் தெரியாது. நான் திருமண வாழ்க்கை மற்றும் என்னுடை... 8 ஆண்டுகள் முன்பு மெய் சொல்லப் போறேன் அடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம் - 1. நான் எஞ்ஞான்றும் அலைபாய்ந்தபடியேயிருப்பேனோ? அப்படித்தான் எண்ணுகிறேன். ஏடல்கள் என்னைப் பீடித்திருப்பதால் அவ்வாறில்லாதிருத்தல் சாத்தியமற்றதெனக்கு. நான் என... 8 ஆண்டுகள் முன்பு Cheers with Jana மணிரட்னத்தின் பாலிவூட் சைன்ஸ்பிக்ஸன்............ - சுப்பர் ஸரார் ரஜினியின் எந்திரன், மற்றும் பாலிவூட் சுப்பர் ஹீரோ சாருஹானின் ராஒன் என்பவற்றையும் விட மிகப்பிரமாண்டமாக அதேவேளை விறுவிறுப்பும் லாஜிக் பிசகாத ... 9 ஆண்டுகள் முன்பு அறிவியல் மக்களுக்கே! அறிவியல் சமூக மாற்றத்திற்கே!! மூளை சித்தரிக்கப்படுகிறது - மூளையின் நரம்பு செல்கள் கட்டமைப்புகள் எப்படி அமைந்துள்ளன என்பதை கம்ப்யூட்டரில் மாடல் செய்வதற்காக அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா ஒரு பில்லியன் டாலர் நிதி ஒதுக்கியி... 9 ஆண்டுகள் முன்பு நூறு பூக்கள் மலரட்டும் ஆசிட் அரக்கர்கள் - டெல்லி மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட பிரச்னையின் சூடு தனிவதற்குள், தமிழ்நாட்டில் பெண்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்துவிட்டன. மாணவிகள்... 9 ஆண்டுகள் முன்பு தமிழில் அறிவியல் டிஎன்ஏ என்பது தானாக உருவாக முடியுமா? - டாரிவினின் உயிர் தளிப்பு கொள்கை - டார்வினின் உயிர்தளிப்பு கொள்கைக்கு பல எதிர்ப்புகள், எதிர்வாதங்கள் இருந்த போதிலும் உயிர்களின் அடிப்படையான மிகவும் சிக்கலான அமைப்புகள் தானாக எப்படி உருவாக மு... 9 ஆண்டுகள் முன்பு மருதமூரான் Life of Pi: உங்களைத் தேடித்தரும் திரைமொழி! - எல்லாமும் பறிக்கப்பட்ட நிலையில் யாருமேயற்ற தீவொன்றில் தனித்து விடப்பட்டதாக உணர்ந்திருக்கிறீர்களா? அல்லது அப்படிப்பட்ட கனவையாவது கண்டிருக்கிறீர்களா? ஆம், ... 9 ஆண்டுகள் முன்பு பிகேபி 7 Day Forecast - Source:pkp.blogspot.com *Copyright 2011* www.PKP.in;. All rights reserved. Click here to email us 9 ஆண்டுகள் முன்பு முகிலனின் பிதற்றல்கள் இதுவும் ஒரு காதல் கதை - 17 - பகுதி-1 பகுதி-2 பகுதி-3 பகுதி-4 பகுதி-5 பகுதி-6 பகுதி-7 பகுதி-8 பகுதி-9 பகுதி-10 பகுதி-11 பகுதி-12 பகுதி - 13 பகுதி-14 பகுதி-15 பகுதி-16 காஃபி கப்பை கையி... 10 ஆண்டுகள் முன்பு யோ வொய்ஸ் வடுகபட்டிகாரனே உனக்கு எனது இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் - ஒரு காலத்தில் உன்னை காதலிக்கும் போது உலகையே உன் பார்வையால் பார்த்தேன் நீ காதலித்தவற்றை காதலித்தேன் நீ வெறுத்தவற்றை வெறுத்தேன் உன் வார்த்தைகளை தெய்வ வாக்காகவே... 10 ஆண்டுகள் முன்பு சிதைவுகள்... kama kadhaigal and padangal: HUGE BREASTS WITH CLEAVAGE - 10 ஆண்டுகள் முன்பு தரங்கம் வேண்டாம்.. விலகிவிடு! - காதல் மாதத்தை முன்னிட்டு சிங்கைக்கவி நிரூஜா எழுதிய 'கொன்றுவிடு' கவிதையின் எதிர்க்கவிதை இது. குரல் வடிவம் அவருடையது வேண்டாம் விலகிவிடு *வேண்டாம்.. வில... 10 ஆண்டுகள் முன்பு Kaarthik Koffee Klub இக்குதே கண்கள் விக்குதே - கடந்த இரண்டு நாட்களாக வித்தகனில். ஜோஷ்வா ஸ்ரீதரின் முந்தைய படமான வெப்பம் அளவுக்கு இல்லை என்றாலும் நன்றாகவே உள்ளன. என் விருப்பத்திற்குரிய பாடகிகள் ஷ்ரேயா, ச... 11 ஆண்டுகள் முன்பு செ.பொ.கோபிநாத் பாலைவெளியில் பதியும் சுவடுகள் - நிஜங்கள் எழுதாத மொழியொன்றின் விம்பமாய் உறக்கத்தில் விழிக்கின்றது கனவு எழுதப்படாத மௌனங்கள் அங்கே வார்த்தைகளாய் பிரவாகிக்க மிக நெருக்கமாய் நாம், வீண் அவஸ்தைகள்... 11 ஆண்டுகள் முன்பு நா வெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு? - உபுண்டு இயங்குதளத்தில் www.vettri.lk இற்குச் சென்று இணையத்தில் வெற்றி FM இனைக் கேட்க முடியாது. வின்டோஸ் மீடியாப் பிளேயர் Plug-in இல்லாது உலாவியில் தொடரறா ந... 11 ஆண்டுகள் முன்பு butterfly Surya கிகுஜிரோ.. - தாய் தந்தையில்லாமல் தன் பாட்டியுடன் தனிமையில் வசிக்கிறான் சிறுவன் மாசோவ். தனிமை கொடுமை, அதிலும் இளம்பருவத்தில் பிஞ்சு மனசின் தனிமை உள்ளத்தை உருகவைக... 12 ஆண்டுகள் முன்பு பிற மொழிப்படங்கள்... தமிழில்... Inception (2010) – யாரும் தற்கொலைக்கு முயற்சிக்காதீங்க... - இதுவரை வெளிவந்த படங்களிலேயே, மிகத்திறமையான, கடினமான, வியக்க வைக்கும் திரைக்கதை கொண்ட படம் எது என்றால், யோசிக்காமல் சொல்லலாம் Memento என்று... இரண்டாம் இடத... 12 ஆண்டுகள் முன்பு மயில்ராவணன் அகநாழிகை - படைப்பிலக்கியத்தின் தனித்துவக்குரல் - அகநாழிகை ஜூன் இதழ் வழமை போலவே நல்ல காத்திரமாக வந்துள்ளது. வாசுவின் தலையங்கமே நமக்கு பல விசயங்களை சொல்லாமல் சொல்லி செல்கின்றது.ரொம்ப அருமையா சில வார்த்தைக... 12 ஆண்டுகள் முன்பு க.கோபி கிருஷ்ணா. போலிப் பதிவர் சந்திப்பு... - தமிழ்ப்பதிவர்களின் இரண்டாவது சந்திப்பு ஏற்கனவே முடிந்துவிட்டாலும் அது ' *இருக்கிற*' மாதிரியான குஜால் சந்திப்பாக அமைந்திருக்காததால் கவலையடைந்த பதிவர்கள் சிலர... 12 ஆண்டுகள் முன்பு கலை - இராகலை தியானம் - அன்பு,அமைதி, நிம்மதி, சந்தோஷம் போன்றவைகளை மேம்படுத்தி உள் மன உணர்வை வலுப்படுத்துவதே தியானம் என பொதுவாக நாம் வரையரை கூறலாம் என நான் நினைக்கின்றேன். தியானம...
செம்மண், வண்டல் மண், மணல் கலந்த செம்மண் மற்றும் அமிலத்தன்மை கொண்ட லேட்டரைட் எனப்படும் மண் வகை தென்னை சாகுபடிக்கு ஏற்றது. அதிக களிமண் மற்றும் வடிகாலில்லாத மண் வகைகள் தென்னை சாகுபடிக்கு ஏற்றதல்ல. 2. நடவு பருவங்கள்: ஆடி மற்றும் மார்கழி மாதங்கள், பாசன மற்றும் வடிகால் வசதியுள்ள இடங்களில் மற்ற மாதங்களிலும் நடலாம். 3. நடவு இடைவெளி: 25 அடிக்கு 25 அடி (7.5 ஒ 7.5 மீ) என்ற கணக்கில் நடவு செய்யலாம். இதனால் ஒரு எக்டர் நிலப்பரப்பில் 175 தென்னங்கன்றுகள் நடலாம். ஓரக்கால்களில் நடவு செய்ய 20 அடி இடைவெளி போதுமானதாகும். 4. நடவு முறை: 3 அடி நீள, அகல, ஆழ குழிகள் தோண்டி அதிலே 1.3 சதவீதம் லிண்டேன் தூள்களை தூவிவிடவேண்டும். அந்தக்குழியை 2 அடி உயரத்திற்கு (60 செ.மீ) மக்கிய தொழு உரம் செம்மண் மற்றம் மணல் ஆகியவற்றை சமமாகக் கலந்து நிரப்பவேண்டும். வெளித்தோன்றும் வேர்கள் அனைத்தும் நீக்கப்பட்ட தென்னங்கன்றுகளை குழியின் நடுவே மண் கலவையை எடுத்து விட்டு நடவு செய்யவேண்டும். நாற்றையும் அதனுடன் கூடிய தேங்காயையும் மண் அணைப்பு செய்து சுற்றிலும் அழுத்திவிடவேணும். நட்ட கன்றுகளுக்கு பின்னிய தென்னை ஓலை அல்லது பனை ஓலை கொண்டு நிழல் அமைத்துத் தரவேண்டும். தென்னங்கன்றுகளைச் சுற்றி சேரும் மண்ணை அடிக்கடி அப்புறப்படுத்தவேண்டும். வருடாவருடம் வட்டப்பாத்தியை அகலப்படுத்தவேண்டும். 5. நீர் மேலாண்மை: ஐந்தாம் ஆண்டு முதல் தென்னங்கன்றுகளுக்கு நீர் ஆவியதாலுக்கேற்ப கீழ்க்காணும் நீர் மேலாண்மைத் திட்டத்தை சொட்டு நீர்ப்பாசனம் அல்லது வட்டப்பாத்தி பாசனம் மூலம் கடைப்பிடிக்கலாம். பகிரவும்: Facebook WhatsApp Email Twitter பசுமை விவசாயம் என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்
வீடுகளுக்கான தேவை வெகுவாக அதிகரித்து வருவதன் காரணாக, கடந்த ஜனவரி மாதம் முதல் செப்டம்பா் மாதம் வரை இந்தியாவின் 7 முக்கிய நகரங்களில் வீடுகள் விற்பனை 87 சதவீதம் உயா்ந்துள்ளது. அத்துடன், கரோனா நெருக்கடிக்கு முந்தைய 2019-ஆம் ஆண்டின் முதல் 9 மாத விற்பனையே அது விஞ்சியுள்ளது. இது குறித்து வீடு-மனை வா்த்தக ஆலோசனை நிறுவனமான அனராக் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது: கடந்த ஜனவரி முதல் செப்டம்பா் வரையிலான இந்த ஆண்டின் முதல் 9 மாதங்களில் சென்னை, தில்லி-என்சிஆா், மும்பை பெருநகரப் பகுதி (எம்எம்ஆா்), கொல்கத்தா, பெங்களூரு, ஹைதராபாத், புணே ஆகிய 7 முக்கிய நகரங்களில் 2,72,709 வீடுகள் விற்பனையாகின. இது, கடந்த ஆண்டின் இதே மாதங்களில் விற்பனையான வீடுகளின் எண்ணிக்கையை விட 87 சதவீதம் அதிகமாகும். அந்த மாதங்களில் குறிப்பிட்ட 7 நகரங்களிலும் 1,45,651 வீடுகள் விற்பனையாகியிருந்தன. வீடுகளுக்கான தேவை அதிகரித்து வருவதன் காரணமாக கரோனா நெருக்கடியால் சரிந்திருந்த வீடுகள் விற்பனை தற்போது சரிவிலிருந்து மீண்டுள்ளது. அதுமட்டுமின்றி, நெருக்கடிக்கு முந்தைய 2019-ஆம் ஆண்டின் முதல் 9 மாதங்களில் விற்பனையான 2,61,358 வீடுகளின் எண்ணிக்கையை இந்த ஆண்டின் முதல் 9 மாத விற்பனை விஞ்சியுள்ளது. ADVERTISEMENT கரோனா பரவலைத் தடுப்பதற்காக நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட பொதுமுடக்கம் காரணமாக, 2020-ஆம் ஆண்டின் முதல் 9 மாத கால வீடுகள் விற்பனை 1,38,344-ஆக சரிந்தது. வீடுகளை வாங்குவதற்கு மானியம் வழங்குவது, பதிவுக் கட்டணத்தைக் குறைப்பது உள்ளிட்ட சலுகை திட்டங்களை மகாராஷ்டிரம் போன்ற மாநிலங்களின் அரசுகள் அறிமுகப்படுத்தியதையடுத்து, நாட்டின் வீடு-மனை சந்தை புத்துயிா் பெற்றது. இதன் விளைவாக, 2021-ஆம் ஆண்டின் முதல் 9 மாதங்களில் வீடுகள் விற்பனை 2,36,516-ஆக உயா்ந்தது. அந்த வேகம் இந்த ஆண்டும் தொடா்ந்துள்ளது. கடந்த ஜனவரி முதல் செப்டம்பா் வரையிலான மாதங்களில், தில்லி-என்சிஆா் பகுதியில் 49,138 வீடுகள் விற்பனையாகின. முந்தைய ஆண்டின் இதே மாதங்களில் அந்தப் பகுதியில் விற்பனையான 22,478 வீடுகளின் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் இது இரு மடங்காகும். அதே போல், மும்பை பெருநகரப் பகுதியிலும் இந்த மாதங்களில் வீடுகள் விற்பனை 67 சதவீதம் அதிகரித்துள்ளது. 2021-ஆம் ஆண்டின் முதல் 9 மாதங்களில் 48,716-ஆக இருந்த வீடுகள் விற்பனை, நடப்பு ஆண்டின் இதே மாதங்களில் 81,315-ஆக உள்ளது. பெங்களூரில் வீடுகள் விற்பனை 81 சதவீதம் அதிகரித்து 37,645 ஆகியுள்ளது. மதிப்பீட்டு மாதங்களில் கடந்த ஆண்டு அந்த நகரில் 20,780 வீடுகள் விற்பனையாகியிருந்தன. புணேவிலும் கடந்த ஆண்டு ஜனவரி - செப்டம்பா் காலகட்டத்தில் 24,043-ஆக இருந்த வீடுகள் விற்பனை, இந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 40,598-ஆக அதிகரித்துள்ளது. இது, 69 சதவீத உயா்வாகும். மதிப்பீட்டு மாதங்களில், ஹைதராபாத்தில் வீடுகள் விற்பனை இரண்டு மடங்கு அதிகரித்து 35,980-ஆகியுள்ளது. கடந்த ஆண்டின் இதே மாதங்களில் அந்த நகரில் 14,376 வீடுகள் விற்பனையாகியிருந்தன. சென்னையில் 2021-ஆம் ஆண்டின் முதல் 9 மாதங்களில் 12,290 வீடுகள் விற்பனையாகியிருந்தன. அது, இந்த ஆண்டின் அதே மாதங்களில் 57 சதவீதம் அதிகரித்து 7,843 ஆகியுள்ளது. இந்த காலகட்டத்தில் கொல்கத்தாவில் 7,415 வீடுகள் விற்பனையாகின. 2021-ஆம் ஆண்டின் இதே மாதங்களில் விற்பனையான 15,743 வீடுகளின் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் இது இரண்டு மடங்கு அதிகமாகும். பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த மத்திய ரிசா்வ் வங்கி கடந்த மே மாதம் முதல் ரெபோ விகிதத்தை 1.9 சதவீதம் உயா்த்தியது. அதன் விளைவாக, குறைந்தபட்சம்6.5 சதவீதமாக இருந்த வீட்டுக் கடன்கள் மீதான வட்டி விகிதங்கள் 8 சதவீதம் வரை உயா்ந்தன. அது மட்டுமன்றி, கடந்த ஓராண்டில் வீடுகளின் விலையும் 10 சதவீதம் வரை உயா்ந்தது. இருந்தாலும், இந்த கடன் விகித அதிகரிப்பு, விலை உயா்வு போன்றவற்றின் தாக்கம் வீடுகள் விற்பனையில் எதிரொலிக்கவில்லை என்று அந்த புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. அனராக் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களில் குறிப்பிட்ட 7 நகரங்களில் விற்பனையான தனி வீடுகள், அடுக்கு மாடி குடியிருப்புகள், வரிசை வீடுகள் உள்ளிட்ட அனைத்து வகை வீடுகளும் இடம் பெற்றுள்ளன. Subscribe to Notifications ADVERTISEMENT MORE FROM THE SECTION தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 குறைந்தது! தனி நபா் கடனளிப்பு: ரூ.5 லட்சம் கோடியைக் கடந்தது எஸ்பிஐ ஏற்ற, இறக்கத்தில் பங்குச் சந்தை: சென்செக்ஸ் 34 புள்ளிகள் சரிவு! தொடர்ந்து 4வது நாளாக 40 ஆயிரத்தைத் தாண்டிய தங்கம் விலை! தமிழக விவசாயிகளுக்கு பரோடா வங்கி ரூ.134 கோடி கடன் டிவிஎஸ் மோட்டாா் விற்பனை உயா்வு அந்நியச் செலாவணி கையிருப்பு 55,014 கோடி டாலராக உயா்வு சிட்டி யூனியன் வங்கியில் ஜிஎஸ்டி செலுத்தும் வசதி TRENDING TODAY ஆசிரியர் Gujarat Elections Low Pressure Area TTV Dhinakaran மகா தீபத் திருவிழா TRENDING WEEK சந்திரசேகா் ராவ் மெஹபூபா முஃப்தி நரேந்திர மோடி குஜராத் ஜெ.பி.நட்டா LATEST NEWS நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் சட்டப்பேரவை தேர்தல் குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் டெஸ்ட் கிரிக்கெட் Gujarat LATEST SECTIONS தமிழ்நாடு இந்தியா தற்போதைய செய்திகள் சினிமா வேலைவாய்ப்பு ADVERTISEMENT Copyright - dinamani.com 2022 The New Indian Express | Samakalika Malayalam | Kannada Prabha | Edexlive | Indulgexpress | Cinemaexpress | Event Xpress
ஈழ கலைஞர்களின் வேர்வையை உழைப்பை தங்களின் இலாபத்துக்கு மட்டும் பயன்படுத்தும் சில இணைய ஊடகங்கள் பற்றி தனது ஆதங்கத்தை காட்சி வடிவில் கொண்டுவந்து இருக்கிறார் இயக்குனர் ,நாங்கள் கொடுக்கும் மரண அறிவித்தல் முதல் கொண்டு பிறந்தநாள் வரை பணம் வாங்கி கொண்டு பிரசுரிக்கும் இணையங்கள் ஈழ படைப்புக்களை மட்டும் தங்கள் அனுசரணை லோகா போட்டால் தான் போடமுடியும் என்னும் வாதமும் ,அதற்கு அவர்கள் எந்த கொடுப்பனவும் கொடுக்க மாட்டார்கள் என்பதுதான் வேதனையான விடயம் . தெளிவாக ஒரு படைப்பை எடுத்து முதலில் கலைஞர்கள் ஒற்றுமை முக்கியம் என்பதை ஆணி அடித்தால் போல சொல்லி போகிறார் இயக்குனர் வாழ்த்துக்கள் அனைத்து நடிகர்களுக்கும் . Filed in: ஈழ சினிமா,காணொளிகள் « Previous Koonal Maanal கோணல் மாணல் ..8 Next » கவிஞர் நா.முத்துக்குமாரின் மறைவுக்கு பிரான்சில் இன்று 17.08.2016 மரியாதை வணக்கம் செலுத்தப்பட்டுள்ளது.
முல்லைப் பெரியாறு ,காவிரி நீர் பிரச்சினை இன்னும் வெளியுலகுக்கு தெரியாமல் எத்தனையோ பிரச்சினைகள் உள்ளன . மனித வாழ்க்கைக்கு மிகவும் இன்றியமையாதது தண்ணீர் என்பதை திருவள்ளுவரே கூறியுள்ளார் .மனித நாகரீகம் தோன்றியதே நதிக்கரைகளில்தான் என்பதை நாம் வரலாற்றுக் குறிப்புகள் வாயிலாக அறிந்துகொள்ள முடிகிறது . இந்நிலையில் நம் மக்கள் தண்ணீர் பிரச்சினைகள் மீது காட்டும் அலட்சியம் எதிர் காலத்தில் உள் நாட்டு போர்களுக்கும் உலகப் போருக்கும் வழி வகுக்கக் கூடிய வகையில் அமைந்துள்ளது . 2025 ம் ஆண்டில் ஆசிய ஆப்பிரிக்க நாடுகளில் கடும் குடி நீர் பஞ்சம் ஏற்பட்டு அதன் காரணமாக போர் நிகழ வாய்ப்புள்ளதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கிறது . இத்தருணத்தில் ஒரு வரலாற்று நிகழ்வை நினைவு கூற கடமைப் பட்டுள்ளோம் . நமது தேசப் பிதாவான காந்தியடிகள் தண்ணீர் சிக்கனத்தை கடை பிடிப்பதில் மிகுந்த பற்று கொண்டிருந்தார் .அவர் தினமும் அதிகாலையில் பல் தேய்த்து முகம் கழுவ ஒரு ஜக் நீரை மட்டுமே பயன்படுத்துவார் .ஒரு முறை காந்தியடிகள் பண்டித நேருவுடன் அலகாபாத்தில் தங்கியிருந்தார் . ஒரு நாள் காந்தியடிகள் முகம் கழுவும் நேரத்தில் ஒரு முக்கியமான பிரச்சினை பற்றி நேருவுடன் பேசிக்கொண்டிருந்ததால் நீரின் மீது கவனம் செலுத்தாமல் முகத்தை கழுவாமலே நீரை சிந்திவிட்டார் . அப்போது அதைக் கவனித்த நேரு காந்தியடிகளிடம் ஜக்கை வாங்கி இன்னொரு ஜக் நீரை எடுத்து வர முற்பட்டார்.ஆனால் காந்தியோ நேருவைத் தடுத்தார் .எனக்குப் பாத்தியப் பட்டது இந்த ஒரு ஜக் நீர்தான் ,அதை வீணாக்கியது என் தவறு .அதனால் இன்று முகம் கழுவ வேண்டாம் என்று கூறிவிட்டார் . நம் சந்ததியினர் மீதும் நாட்டு மக்களின் மீது எத்தனை அக்கறை இருந்திருந்தால் காந்தி அவ்வாறு செய்திருப்பார் . எனவே இன்றைய கால கட்டத்தில் ஒரு பகுதியில் தண்ணீர் தேவைக்கு அதிகமாகக்கிடைத்தாலும் தேவைக்குமட்டுமே பயன்படுத்தவேண்டும். அவ்வாறு செய்வதன் மூலம் அது தண்ணீர் பஞ்சமுள்ளவர்களுக்கோ அல்லது வருங்கால சந்ததியினருக்கோ பயன்படும் . அதன் மூலம் இன்று நடப்பது போன்ற தண்ணீர் போர்கள் படிப் படியாகக் குறைந்து நாடு வளமும் நலமும் அடையும் .காந்தி வழியை நாமும் பின்பற்றுவோமா .... Posted by கூடல் பாலா at 11:12 முற்பகல் இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Twitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர் Labels: முல்லைப் பெரியாறு 9 கருத்துகள்: கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது… காந்தியத்தின் கொள்கையை பின்பற்றினால்தான் நாடு அமைதியாக இருக்குமே அப்படி இருந்தால் எப்படி அரசியல் நடத்துவர்கள் நம் அரசியல்வாதிகள்... மக்கள் பிரச்சனையை கூற உணர தீர்க்க நல்ல தலைவர் யாரும் இல்லை இங்கு... 1:06 பிற்பகல், ஜனவரி 29, 2012 இருதயம் சொன்னது… மிக நல்ல பதிவு ..... நீர் ஆதாரங்கள் வேகமாக குறுகி வரும் சூழலில் தண்ணீர் என்பது மிகவும் விலை மதிப்புள்ளது என்பதை சுட்டி காட்டும் பதிவு . பகிர்வுக்கு நன்றி 8:31 பிற்பகல், ஜனவரி 29, 2012 ad சொன்னது… காந்தி சொன்னதையெல்லாம் யார் கேட்கிறார்கள் இன்று? நல்லதோர் பதிவுதான்.ஆனால்,இதை ஏற்று நடப்பவர்கள் எத்தனைபேர் என்றுதான் தெரியவில்லை. 11:01 பிற்பகல், ஜனவரி 29, 2012 Mahan.Thamesh சொன்னது… இயற்கையாக கிடைக்கும் வளங்கள் அத்தனையும் எம் எதிர்கால சந்ததியை சென்றடைய நாம் அவ் வளங்களை சிக்கனமாக பயன்படுத்துவதிலே தங்கியுள்ளது . நம்மில் எத்தனை பேர் உணர்த்து செயல்படுகிறோம் . பகிர்வுக்கு நன்றி சகோ . 11:49 பிற்பகல், ஜனவரி 29, 2012 கூடல் பாலா சொன்னது… @கவிதை வீதி... // சௌந்தர் // கருத்துக்கு நன்றி அண்ணா! 11:34 முற்பகல், ஜனவரி 30, 2012 கூடல் பாலா சொன்னது… @இருதயம் கருத்துக்கு நன்றி சகோதரர் இருதயம்... 11:35 முற்பகல், ஜனவரி 30, 2012 கூடல் பாலா சொன்னது… @சுவடுகள் கருத்துக்கு நன்றி சகோ! 11:35 முற்பகல், ஜனவரி 30, 2012 கூடல் பாலா சொன்னது… @Mahan.Thamesh நல்ல கருத்து தமேஷ் !நன்றி! 11:36 முற்பகல், ஜனவரி 30, 2012 Siva சொன்னது… " Ghandi’s clothing was simple because he believed that if it were more than simple he would be guilty of taking someone else’s share." காந்தியின் எழிமையை அனைவரும் உணர்ந்தால் உலகம் என்றுமே சுவர்க்கம்; மின் ஆற்றல் பகிர்விலும் கூட! இதனை உணர்ந்தால் ஒரு சிறு தொகுதி மக்களை/அவர்தம் சந்ததியினரை ஆபத்திற்குள்ளாக்குவது எந்தவகையில் நியாயம்?! நிலையான வாழ்க்கை முறைக்கு கீழ்வரும் சுட்டியை சொடுக்குக.
"நந்தினி காரை கிளப்பின போது காலை ஐந்த(...TRUNCATED)
"அடுத்த ஆண்டின் தொடக்கத்தில விற்பனைக(...TRUNCATED)
"தமிழில் பிற மொழிச்சொற்களை தவிர்ப்பத(...TRUNCATED)
README.md exists but content is empty. Use the Edit dataset card button to edit it.
Downloads last month
0
Edit dataset card