text
stringlengths
388
164k
சுற்றாடல்நேய மீளப்புதுப்பிக்கத்தகு சக்தி வளங்களின் அடிப்படையிலான ஒரு எதிர்கால மின்னுற்பத்தித் திட்டம்… 24 மணித்தியாலமும், குறைந்த விலையில், தொடர்ச்சியாக மின்சாரத்தை விநியோகிக்கும் ஒரேயோரு நாடாக இலங்கையை பரிவர்த்தனை செய்வதற்கான பல உபாயத்திட்டங்களை செயற்படுத்துவதற்கு நடவடிக்கை…. ஆலோசனை சேவைகளை வழங்குவதற்கும் மற்றும் பயிற்சி வேலையரங்குகளை நடத்துவதற்கும் உலக வங்கி இணக்கம் குறைந்த செலவில் மின்னுற்பத்திக் கருத் திட்டங்களை தாபிப்பதற்கான நிதி உதவி இலங்கை, இன்று எதிர்நோக்கி வருகின்ற பொருளாதார சவால்களுக்கு மத்தியில், மின்சக்தித் துறையின் அபிவிருத்திற்கு மேற்கொள்ளக் கூடிய மற்றும் மேற்கொள்ள வேண்டிய சகல நடவடிக்கைகள் தொடர்பாகவும் மற்றும் அவற்றின் நிமித்தம் வழங்கக் கூடிய உதவிகள் தொடர்பாகவும் கலந்துரையாடும் பொருட்டு, உலக வங்கியின் ஒரு பிரதிநிதிகள் குழு, மின்வலு சக்தி மற்றும் வியாபார அபிவிருத்தி அமைச்சர் ரவி கருனாநாயக்க அவர்களை உத்தியோகபூர்வமாக சந்தித்தது. மின்வலு, சக்தி மற்றும் வியாபார அபிவிருத்தி அமைச்சின் வளாகத்தில் கடந்த தினம் இடம்பெற்ற இந்த உத்தியோகபூர்வ சந்திப்பின் போது, பல துறைகள் தொடர்பாகவும் நீண்டநேரம் கலந்துரையாடப்பட்டதால், மின்சக்தித் துறையின் அபிவிருத்திற்கான பிரேரணைகளும் மற்றும் தீர்மானங்களும் தொடர்பில் பல உடன்பாடுகளை எட்டமுடிந்தது. மின்சார விநியோகத்தில், இலங்கை உயர் மட்டத்தை அடைந்திருந்தாலும், மின்னுற்பத்திற்கு அதிக செலவு வாய்ந்த சக்தி மூலங்களுக்கு நகர்ந்து, உலகத்தில் ஏனைய நாடுகளில் தங்கியிருக்கும் அளவுக்கு மாறியுள்ளதாக உலக வங்கியின் பிரதிநிதிகள் குழு தெரிவித்தது. மின்னுற்பத்திற்கு செலவு குறைந்த நீர் சக்தி மூலத்தில் தங்கியிருந்த இலங்கை, நீர் வளங்களின் மட்டுப்பட்டளவு மற்றும் நாளாந்தம் மின்சாரத்திற்கு அதிகரித்து வருகின்ற தேவையை பூர்த்தி செய்தல் ஆகியவற்றின் காரணமாக, அதிக செலவு வாய்ந்த மின்னுற்பத்தி முறைமைக்கு நகர நேர்ந்ததாகவும், ஏற்கெனவே மின்னுற்பத்தியை மீளப்புதுப்பிக்கத்தகு சக்தி மூலங்களுக்கு நகர்த்தும் பொருட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்காலத்தில். மின்னுற்பத்தியை முற்றிலும் குறைந்த செலவில், சுற்றாடல்நேய மீளப்புதுப்பிக்கத்தகு சக்தி வளங்களின் அடிப்படையில் மாத்திரம் மேற்கொள்வதற்கு தேவையான திட்டங்கள் தயாரிக்கப்பட்டு வருவதாகவும், விடயத்திற்கு பொறுப்புடைய அமைச்சர் ரவி கருனாநாயக்க அவர்கள் உலக வங்கியின் பிரதிநிதிகள் குழுவுக்கு தெனிவுபடுத்தினார்கள். அமைச்சர் அவர்கள் அவ்வாறு தெளிவுபடுத்திய பின்னர், மின்னுற்பத்தி, மின்சார செலுத்துகை மற்றும் மின்சாரப் பகிர்ந்தளிப்பு முதலிய செயற்பாடுகளை, செலவு குறைந்த விதத்தில், மிகவும் பாதுகாப்பாக அதே போன்று வினைத்திறன் வாய்ந்ததாக மேற்கொள்வதற்கு தேவையான தொழில் நுட்ப உபாயத்திட்டங்கள் பற்றி, இலங்கையின் மின்சக்தித் துறையில் ஈடுபடும் தரப்புகளை விழிப்பூட்டுவதற்கான ஆலோசனை சேவைகளை வழங்க மற்றும் பயிற்சி வேலையரங்குகளை நடத்த முடியும் எனவும், மற்றும் அதனூடாக, இலங்கை ஏனைய நாடுகளில் தங்கியிருக்கின்ற நிலையை மாற்றியமைப்பதற்கு முடியும் எனவும் உலக வங்கியின் பிரதிநிதிகள் குழு தெரிவித்தது. மேலும், இலங்கையில் தாபிக்கப்பட்டுள்ள செலவு குறைந்த மின்னுற்பத்திக் கருத் திட்டங்கள் தொடர்பில் கவனத்தை செலுத்தி, அதன் நிமித்தம் நிதி உதவியை வழங்கக் கூடிய சாத்தியம் இருப்பதாகவும், இலங்கையை பிராந்தியத்தில் ஏனைய நாடுகளுக்கு இடையில், முழு நாடும் உள்ளடங்கும் வகையில், 24 மணித்தியாலமும் குறைந்த விலையில், தொடர்ச்சியாக மின்சாரத்தை விநியோகிக்கக் கூடிய ஒரு நாடாக பரிவர்த்தனை செய்வதற்கு தேவையான உபாயத்திட்டங்களை அறிமுகப்படுத்த எதிர்பார்ப்பதாகவும் உலக வங்கியின் பிரதிநிதிகள் குழு, மின்வலு சக்தி மற்றும் வியாபார அபிவிருத்தி அமைச்சர் ரவி கருனாநாயக்க அவர்களிடம் தெரிவித்தது.
வனசீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தினால் வழங்கப்படும் வனவிலங்கு பங்களாக்கள் ஒதுக்கி கொள்ளல் e-சேவைக்கு உங்களை வரவேற்கிறோம் கணினிமூலமாக ஒதுக்கீடு செய்யவும். வனவிலங்கு துறை தங்கள் வனவிலங்கு சரணாலயங்கள்/ பூங்காக்கள் முகாமைத்துவத்தின் கீழ் பல வனவிலங்கு பங்களாக்கள் கொண்டுள்ளன. இந்த வசதிகளை பொது மக்களுக்கு ஒதுக்க மற்றும் பயன்படுத்த முடியும். வசதிகளை தற்போதைய மற்றும் அடுத்த மாதத்துக்கு ஒதுக்கீடு செய்ய முடியும். ஒவ்வொரு வசதிக்கும் அதிகபட்ச தங்கும் எண் ஒன்று உள்ளது. ஒரு நபரால் மூன்று தொடர்ச்சியான நாட்களுக்கு மட்டுமே பதிவு செய்ய முடியும். வெளிநாட்டு பார்வையாளர்களுக்கு அதிக கட்டணங்கள் வசூலிக்கப்படும். மின்னணுவியல் அட்டைகளை பயன்படுத்தி கட்டணம்களை செலுத்த முடியும். கணினிமூலமாக ஒதுக்கீடு செய்யவும். ஒதுக்கீடு நிலமையை சோதிக்கவும் இந்த e-சேவை மூலம் ஒதுக்கீடு செய்துள்ள ஒருவருக்கு அவன் / அவள் செய்த இடஒதுக்கீடை சரிபார்க்க முடியும். இதன் மூலம் ஒதுக்கீட்டுக்கான உரிய ஆவணங்களை பதிவிறக்கம் செய்ய மற்றும் இடஒதுக்கீட்டுக்கான விவரங்களை உறுதி செய்ய முடியும். DWC RES {தேசிய அடையாள அட்டை எண் } { ஒதுக்கீடு குறிப்பு எண்} என type செய்து 1919 க்கு அனுப்புவதன் மூலம் பயனருக்கு உறுதிப்படுத்தல் SMS ஐ பெற முடியும். ஒதுக்கீடு நிலமையை சோதிக்கவும் வனசீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தினால் இயக்கப்படுகிறது பதிப்புரிமை தகவல் © 2014 ICTA, இலங்கைத் தேசிய தகவல் தொழில்நுட்ப முகவர் நிலையம்,எல்லா உரிமைகளும் உரித்துடையகு. சிறந்த பார்வை: 1024x768 பிரிதிறன் வனசீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தினால் வழங்கப்படும் வனவிலங்கு பங்களாக்கள் ஒதுக்கி கொள்ளல் e-சேவைக்கு வரவேற்கிறோம். இந்த சேவை வனவிலங்கு பங்களாக்கள் ஒதுக்கி கொள்ளல் வசதியை மற்றும் உங்கள் முந்தைய ஒதுக்கீடுகளின் தற்போதைய நிலமையை பார்க்கும் வசதியை வழங்குகிறது. வனவிலங்கு பங்களாக்கள் ஒதுக்கி கொள்ளல் e-சேவை உங்களது ஒதுக்கீட்டினை பூர்த்தி செய்வதற்கு பின்வரும் செயல்கள் மூலம் செல்ல வேண்டும். கிடைக்கும் தன்மையை சோதிக்கவும் விரும்பிய பங்களாவை கிடைக்கிறதா என்று சோதிக்க அனுமதிக்கிறது. இணையான பதிவு செய்தல்களை மஞ்சள் நிறத்தில் குறிப்பிடப்பட்டிருக்கின்றன ஆகையால் இந்த நாட்களில் ஒதுக்கீடு செய்ய தயவு செய்து முன்பு மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் வெற்றியடைய இல்லையா என்பதை 10 நிமிடங்கள் கழித்து புதுப்பித்து பார்த்து ஒதுக்கீடு செய்யவும். தயவு செய்து பங்களாவை மற்றும் ஒதுக்கீடு தேதிகளை தேர்ந்தெடுத்து 5 நிமிடங்களுக்குள் ஒதுக்கீட்டை நிறைவு செய்யவும். ஒரு ஒதுக்கீட்டுக்கு 3 அதிகபட்ச தொடர்ச்சியான திகதிகள் அனுமதிக்கப்படுகிறது. ஒதுக்கீடு செய் நீங்கள் இதற்கு முன்னர் வனசீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தில் ஒதுக்கீடு செய்து இருந்தால், தயவு செய்து உங்களது அடையாள அட்டை எண்ணை உள்ளிட்டு 'தேடல்' பொத்தானை மீது கிளிக் செய்து தகவல்களை பார்க்கவும். தேவைப்பட்டால் ஏற்கனவே இருக்கும் தகவல்களை உங்களுக்கு திருத்த அல்லது மாற்ற முடியும். ஒரே திகதிகளில் அதே தேசிய அடையாள அட்டை எண்ணுக்கு வேறு வசதியொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது என்றால் உங்களுக்கு ஒதுக்கி கொள்ளலை பூர்த்தி செய்ய முடியாது. உங்களுடைய கைத்தொலைபேசி இலக்கம் மற்றும் மின்னஞ்சல் முகவரியை ஒதுக்கீடு தொடர்பாக அறிவிக்கைகளுக்காக பயன்படுத்தப்படும். 6 வயதுக்கு கீழே உள்ள இரண்டு குழந்தைகளை கட்டணம் இல்லாமல் குழுவுடன் எடுத்து செல்ல அனுமதிக்கப்படுகிறது. குழந்தைகளின் எண்ணிக்கை 2 க்கு அதிகமாக இருந்தால் மட்டுமே, உள்ளூர் குழந்தை ஒருவருக்கு(2-6 வயது) ஒரு எண் உள்ளிடவும். கட்டணம் தேர்வு செய்யப்பட்ட வசதிக்கான குறைந்தபட்ச நபர்கள் எண்ணுக்காக கட்டணம் கணக்கிடப்படுவதோடு மேலதிக குடியிருக்கைக்கான தலை வீத விலை அடிப்படையில் குறைந்தபட்ச தொகையுடன் கூட்டப்படும். ஒதுக்கீடு செய்தலை உறுதிப்படுத்த கட்டணம் செலுத்தலை 10 நிமிடங்களுக்குள் பூர்த்தி செய்யவும். அல்லது ஒதுக்கீடு ரத்துசெய்யப்படும். மின்னணுவியல்(வீசா/ மாஸ்டர்) அட்டைகளை அல்லது eZcash பயன்படுத்தி கட்டணம்களை செலுத்த முடியும் ஆன்லைனில் பணம் செலுத்துவதை அடிப்படையாக கொண்டு வசதிக்கான கட்டணம் ஒன்றை விதிக்கப்பட முடியும் ஒதுக்கீடு நிறைவு செய்யவும் உங்கள் பணம் செலுத்தல் மற்றும் ஒதுக்கி கொள்ளல் வெற்றிகரமாக இருந்தால், உங்கள் ஒதுக்கி கொள்ளல் பற்றிய விவரங்களை திரையில் காண்பிக்கப்படும். தயவு செய்து அனுமதிப்பத்திரம், SMS மற்றும் மின்னஞ்சலில் வழங்கப்படுகின்ற ஒதுக்கி கொள்ளல் குறிப்புரை எண்ணை எதிர்கால குறிப்பிற்காக குறித்துக்கொள்ளவும். ஒதுக்கி கொள்ளலை உறுதிப்படுத்தும் ஒரு மின்னஞ்சல் மற்றும் SMS ஒன்று உங்களுக்கு அனுப்பப்படும். நீங்கள் அனுமதிப்பத்திரத்தை மற்றும் பற்று சீட்டை அச்செடுத்தீர்களா என்பதை உறுதி செய்து கொள்ளவும். பூங்காவிற்கு நுழைவதற்கு அனுமதிப்பத்திரம் கட்டாயமாகும். VAT இறுத்தலுக்கு, தயவு செய்து "அசல்" என குறிக்கப்பட்ட முதல் அச்சுப் பிரதியை பயன்படுத்துவதோடு, அதனை பூங்கா காப்பாளரிடம் பூங்காவினுல் நுழையும் போது சான்றுபடுத்திக்கொள்ளவும். ஒதுக்கீடு நிலமையை சோதிக்கவும் இந்த சேவை மூலம் ஒதுக்கீடு செய்துள்ள ஒருவருக்கு அவன் / அவள் செய்த இடஒதுக்கீடின் நிலமையை சோதிக்க மற்றும் ஒதுக்கீடுக்கான அனுமதிப்பத்திரத்தை/ பற்று சீட்டை அச்சிட முடியும். ஒதுக்கீடு குறிப்பு எண் மற்றும் தேசிய அடையாள அட்டை /கடவுச் சீட்டு /சாரதி அனுமதிப் பத்திர எண்ணை உள்ளிட்டு தகவல்கலை மீட்டெடுக்கவும். மேலதிக தகவலுக்கு தயவுசெய்து சேவையால் வழங்கப்பட்டுள்ள வழிமுறைகளை பார்க்கவும் மற்றும் 1919 ஐ தொடர்புகொள்ளவும்.
நம்ம குழந்தைகளுக்கு மரம் நட்டு வெளையாடறது எவ்ளோ சந்தோசம் தெரியுமா? உங்க குழந்தைய கூட்டி போயி மரம் நடுங்க. அதுங்க எவ்ளோ குசியா அத பாக்குங்க தெரியுங்களா? சரி, இதே மாதிரி ஒரு பத்து வருசம் நட்டாக்கூட, ஆயிரத்து நாப்பது மரம் ஆயிருக்கும். எவளோ காசு வெச்சுருந்தாலும் அத எண்ணி பாக்குறதவிட, நாம நட்ட மரங்கள பாத்து பாத்து பூரிப்படையிரதுல இருக்குற சந்தோசம் அதிகமுங்க. ஞாயித்துக்கிழமை, ஞாயித்துக்கிழமை ரெண்டு மரம்ன்னா, எவ்ளோ பெருசா செலவாயிரும்முன்னு நெனக்கிறீங்க. ஒரு மரக்கன்னு, பத்து ரூவான்னாக்கூட, வாரத்துக்கு இருபது ரூவா, மாசத்துக்கு எம்பது ரூபா, வருசத்துக்கு ஐநூத்தி பத்து ரூபா. ரெண்டு மாசம் கேபிள் டீவிக்கு ஆவுற செலவு. அட, மரக்கன்னுக்கு ஆகற செலவ விடுங்கப்பா, வேற என்ன செலவு ஆகும். உங்க குழந்தக்கிட்ட தண்ணி வூத்தறதுக்கு ஒரு குடுவை வாங்கிக் குடுங்க. அதுங்க மரக்கன்னுக்கு தண்ணி ஊத்தற பாத்து ரசியிங்க. என்ன ஒரு குடுவைக்கு ஒரு நூரு ருபா செலவாகுமா? இன்னக்கி, ஒரு வெளயாட்டு சாமான் என்ன காசாவுது? வெளயாட்டு சாமானோட வெளயாட்டு சாமானா, இதுவும் இருந்துட்டு போகட்டுமே? தண்ணி செலவு, ஒரு மரத்துக்கு இரண்டு நாளைக்கு ஒரு கப்பு தண்ணினா ஒரு இருபது மரத்துக்கு ஐஞ்சு குடுவ தண்ணி தேவப்படும், அத ஊத்தறக்கு ஒரு அரைமணி நேரம் ஆகும். வருசக்கடைசில ஒரு நூத்தி இருபது மரம் ஆயிருக்கும். அப்ப ஒரு நாலு பேத்த கூட சேட்துக்குங்க. இல்ல மரம் நட்டு இருக்கற இடத்துக்கு பக்கத்துல இருக்கற வீட்டுக்காறங்கள தண்ணி ஊத்தி பாத்துக்க சொல்லுங்க. மரம் வைக்கறதுக்கு குழி வெட்டனுமுள்ள? அதுக்கு ஒரு கடப்பாரை, ஒரு மம்முட்டி இது போதும், சின்ன கடப்பாரை நூரு ருபா, மம்முட்டி ஒரு நூரு ருபா ஆக மொத்தம் ஒரு இருநூறு ருபா. இது ஒரே ஒரு தரவ செலவுதான். இத இப்படியே ஒரு பத்து பேரு இப்படி பண்ணுனாக்கூட, வருசத்துக்கு ஒரு ஆயிரத்து நாப்பது மரம் ஆயிருக்காது. என்ன சொல்லுறீங்க. அதெல்லாம் கரெக்ட்டுங்க. மரத்த எங்க போயி நடறது. எங்க வீதில நடக்கறதுக்கே இடம் இல்ல. இதுல மரம் எங்க போயி நடறது. எங்க எங்கெல்லாம் மரம் நடலாம்ன்னா, 1. முக்கியாமா பள்ளிகூடங்கள சுத்தி நடலாம். 2. இரண்டாவது, கோயிலுங்கள சுத்தி நடலாம் 3. மூணாவது மலை எல்லாம் இருந்துச்சுன்னா, அதுங்கள சுத்தி நடலாம். 4. அப்புறம் நம்ம வீதியிலயே நடலாம். இதுதான் நமக்கு பாத்துக்குறதுக்கு, தண்ணி ஊத்தறதுக்கெல்லாம் சவுரியமுங்கூட.
இந்த 9 நாள்களிலும் அம்பிகையை நவதுர்க்கையாக நாம் வாழ்க்கையில் பார்க்கிறோம். ஒவ்வொரு நாளிலும் ஒவ்வொரு ரூபத்தை எடுப்பதைப் பற்றி நாம் பார்த்துள்ளோம். 8ம் நாள் மகாகௌரியாக தூய்மையின் பிம்பமாக நமக்கு அருள்புரிகிறாள். Sidhithathri devi 9ம் நாளில் சித்திதாத்ரி என்ற பெயரில் அம்பிகையாக வந்து நமக்கு அருள்புரிகிறாள். நம் வாழ்க்கையிலும் இதே போல் பிரயாணம் செய்தால் அனைத்து சக்திகளையும் பெற்று நவதுர்க்கையைப் போல அஷ்டமாசித்திகளையும் பெற முடியும். அர்த்தநாரீஸ்வரருடன் இணைந்த ரூபத்தையும் அம்பிகையின் இந்த கோலம் நமக்கு உணர்த்துகிறது. இந்த நாளில் அம்பிகைக்கு பரமேஸ்வரி. நவதுர்க்கையில் சித்திதாத்ரி. தாமரை, மரிக்கொழுந்து மலர்களால் அர்ச்சிக்கலாம். சர்க்கரை, நாவல் பழம், கொண்டைக்கடலை சுண்டல் நைவேத்தியமாக வைத்து வழிபடலாம். வசந்தா ராகத்தில் பாடல் பாடி வெந்தய நிறத்தில் உடை அணிந்து வழிபட வேண்டும். Sithithathri Devi இந்த அம்பிகையை வழிபடுவதன் மூலம் நிறைவு நாளில் மனநிறைவை அம்பாள் தருகிறாள். அனைத்து சித்திகளையும் தருகிறாள். மனிதர்கள் மட்டுமல்லாது யட்சகர்கள், கிங்கணர்கள் என எல்லோரும் வணங்கக்கூடிய தேவியாக இருக்கிறாள் இந்த சித்திதாத்ரி. நாம் எதை ஆயுதமாகப் பயன்படுத்தி நம் வாழ்க்கையை நடத்திக்கொண்டு இருக்கிறோமோ அந்தப் பொருள்களுக்கு நாம் மரியாதைத் தரக்கூடிய நாள் தான் இந்த ஆயுத பூஜை. எல்லோரும் எதையாவது ஒன்றை வைத்துத் தான் நம் வாழ்வாதாரத்தை நடத்திக் கொண்டு இருக்கிறோம். Ayutha Pooja in books புத்தகங்கள், ஆட்டோ, சைக்கிள், பைக், கத்தி, சலங்கை, வாத்தியக்கருவிகள், சுத்தியல், ஸ்பேனர், டிரில்லிங் மெஷின் ஆகியவற்றை வைத்து பூஜை செய்யலாம். குழந்தைகள் பள்ளிப்புத்தகங்கள், பேனா, நோட்டு, புத்தகங்களை வைத்து வழிபடலாம். அன்றே எடுத்தும் படிக்கலாம். தேங்காய், வாழைப்பழம், வெத்தலைப்பாக்கு, அவல், பொரி, சுண்டல், கடலை என நைவேத்தியமாக வைத்து வழிபடலாம். காலை 10.35 மணி முதல் 12 மணி வரையும், மாலை 4.50 மணிக்கு மேல் இரவு வரை வழிபாடு செய்யலாம். சரஸ்வதி பூஜை அன்றும் விஜயதசமி அன்றும் வித்யாரம்பம் செய்து கொள்ளலாம். Vidyarambam காலை 6 மணிக்கு மேல் 8.45 மணி வரை வித்யாரம்பம் செய்து கொள்ளலாம். காலை 10.30 மணி முதல் வித்யாரம்பத்தை வைத்துக் கொள்ளலாம். பொதுவாக காலையில் வித்யாரம்பத்தைப் பண்ணுவது தான் நல்லது. மூத்தோர் கையால் குழந்தைகளுக்கு வித்யாரம்பத்தை ஆரம்பிக்கலாம். நெல், அரிசியைப் பயன்படுத்தி தாம்பூலத்தில் வைத்து அ என்று குழந்தைகளின் கைகளைப் பிடித்து எழுதச் சொல்லிக் கொடுக்கலாம். அனைவருக்கும் இனிய ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை நல்வாழ்த்துக்கள். Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
"This post contains affiliate links, which means that if you click on them and make a purchase, I may receive a small fee at no extra cost to you." “Amazon Papua New Guinea க்கு அனுப்பப்படுமா? அமெரிக்காவில் உள்ள Amazon இலிருந்து ஆர்டர் செய்ய முயற்சித்திருந்தால், பப்புவா நியூ கினியா உட்பட உலகின் அனைத்து நாட்டிற்கும் Amazon சர்வதேச ஷிப்பிங்கை வழங்காது என்பது உங்களுக்குத் தெரியும். பல அமெரிக்க கடைகள் சர்வதேச அளவில் அனுப்பப்படாது. இது வெறுப்பாக இருக்கலாம், குறிப்பாக கடைகள் பெரிய சலுகைகளை வழங்கினால். நீங்கள் சமீபத்தில் இதை அனுபவித்திருந்தால், விரக்தியடைய வேண்டாம். ஒரு எளிதான தீர்வு உள்ளது, இது Amazon உட்பட அமெரிக்காவில் உள்ள எந்த இ-காமர்ஸ் ஸ்டோரிலிருந்தும் ஆர்டர் செய்யப்பட்ட பொருட்களை Papua New Guinea இல் உள்ள எந்த ஒரு முகவரிக்கும் அனுப்ப உங்களை அனுமதிக்கும். பப்புவா நியூ கினியாவில் உள்ள Amazon USA இலிருந்து எப்படி வாங்குவது படி #1. ஷிப்பிங் ஃபார்வர்டர் உடன் பதிவு செய்யவும் நீங்கள் நிறுவனத்தின் இணையதளத்தைச் சரிபார்த்து, Amazon அல்லது நீங்கள் வாங்க விரும்பும் பிற மின் வணிகக் கடை Papua New Guineaக்கு அனுப்பப்படாது என்பதில் உறுதியாக உள்ளீர்கள். நீங்கள் அமெரிக்காவில் வாங்கிய பொருட்களை உங்கள் வீட்டிற்கு அனுப்பும் a பேக்கேஜ் ஃபார்வர்டர்க்கு உங்கள் பேக்கேஜை அனுப்புவதே உங்களுக்கான சிறந்த வழி. வெளிப்படையாக, உங்கள் பொருட்களுக்கு நீங்கள் ஒரு அழகான பைசாவை செலுத்துகிறீர்கள். அவர்கள் பாதுகாப்பாகவும் சரியான நேரத்திலும் வருவதை உறுதிசெய்ய வேண்டும். அதனால்தான், அனுபவம் உள்ள ஒரு ஃபார்வர்டருடன் மட்டுமே நீங்கள் பணியாற்ற வேண்டும் என்று நாங்கள் நினைக்கிறோம். எங்கள் தேர்வு MyUS. உங்கள் இலவச அமெரிக்க முகவரியைப் பெறுங்கள்! இந்த விருப்பத்தை நாங்கள் விரும்புவதற்கான காரணம், அவர்கள் கூடுதல் வரிகளை வசூலிக்காதது, குறைந்த கட்டணங்கள் மற்றும் அவர்களின் சேவை நம்பகமானது. இந்த ஷிப்பிங் ஃபார்வர்டருடன் நாங்கள் சில காலம் பணியாற்றியுள்ளோம், மேலும் 1,000க்கும் மேற்பட்ட பேக்கேஜ்களை அமெரிக்காவிலிருந்து Papua New Guineaக்கு அனுப்பியுள்ளோம், மேலும் MyUS உங்கள் 7369057Amazon.3 ஆர்டரை வழங்குவதற்கான சிறந்த வழி என்பதில் சந்தேகமில்லை. Papua New Guinea க்கு அனுப்பாத அமெரிக்காவை தளமாகக் கொண்ட இ-காமர்ஸ் ஸ்டோரில் இருந்து ஏதாவது ஆர்டர் செய்ய நீங்கள் திட்டமிட்டால், MyUS உடன் பதிவுபெறும் செயல்முறையை மேற்கொள்ளுமாறு பரிந்துரைக்கிறோம். பதிவுசெய்வது ஒரு நல்ல காற்று, செக் அவுட்டுக்கு முன் உங்கள் Amazon உருப்படியை உங்கள் வீட்டிற்கு அனுப்ப எவ்வளவு செலவாகும் என்பதை நீங்கள் அறிவீர்கள். உங்கள் Amazon தொகுப்பில் ஏதேனும் சிக்கல்கள் இருந்தால், MyUS வழங்கும் வரவேற்பு சேவையைத் தொடர்புகொள்ளவும். படி #2. Amazon ஐப் பயன்படுத்தி உங்கள் ஆர்டரை முடிக்கவும் நீங்கள் பதிவுசெய்தல் செயல்முறையை முடித்து, உங்களின் அமெரிக்க முகவரியை அமைத்தவுடன், அடுத்த கட்டத்திற்கு நீங்கள் தயாராக உள்ளீர்கள், இது Amazon ஐப் பார்வையிட்டு, இதுவரை நீங்கள் ஆர்டர் செய்ய முடியாத அனைத்து அற்புதமான பொருட்களையும் பெறுவீர்கள். நீங்கள் செக் அவுட் செயல்முறையின் மூலம் செல்லும்போது, ​​நீங்கள் MyUS உடன் அமைத்துள்ள அமெரிக்க முகவரியைப் பயன்படுத்தவும், உங்கள் தொகுப்பு Papua New Guineaஐத் தெரிந்துகொள்ளும் முன் வந்துவிடும். உங்கள் இலவச அமெரிக்க முகவரியைப் பெறுங்கள்! “ Related Posts: அமேசான் நியூ கலிடோனியாவுக்கு அனுப்புகிறதா? அமேசான் கினியாவுக்கு அனுப்புகிறதா? அமேசான் எக்குவடோரியல் கினியாவுக்கு அனுப்புகிறதா? For any questions or concerns, please reach out to us. If you have any questions or concerns about our website or any of the products and services we review, please let us know. We would be happy to help.
சிவகார்த்திகேயன் இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் உருவாகும் பிரின்ஸ் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் ஜோடியாக நடிகை மரியா எனும் உக்ரைன் நாட்டு நடிகை நடித்து வருகிறார்.தமன் இப்படத்திற்கு இசையமைக்கிறார். தமிழ் ,தெலுங்கு என இரு மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகும் படம் தான் பிரின்ஸ்.இப்படத்தில் முக்கிய வேடத்தில் சத்யராஜ் நடித்துள்ளார்.இந்த படத்தின் 1st சிங்கள் செப்டம்பர் மாதம் 1-ஆம் தேதி வெளியானது. இந்த பாடலை கிட்டத்தட்ட 5.5 மில்லியன் அதிகமானோரால் பார்க்கப்பட்டுள்ளது. ஜெஸிக்கா என்ற இரண்டாவது பாடல் சமீபத்தில் படக்குழு வெளியிட்டது.சமீபத்தில் இந்த படத்தின் ரிலீஸ் போஸ்டர் வெளியானது. பிக்பாஸ் வீட்டில் முதல் தலைவராக போட்டியில் வெற்றி பெற்ற நம்ம ஜி. பி முத்து! என்ன போட்டி தெரியுமா? சிவாகார்த்திகேயனின் பிரின்ஸ் படத்தின் ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.இந்நிலையில் பிரின்ஸ் (அக்டோபர் 21, 2022) வெளியீட்டிற்கு முன்னதாக தனது ரசிகர்களை நோக்கி ஆற்றிய உரையின் ஒரு துணுக்கு தற்போது சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது. பாகுபலி மற்றும் கேஜிஎஃப் படங்களின் முன் தோற்ற பொன்னியின் செல்வன் ! விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரின்ஸ் முன் வெளியீட்டு நிகழ்வுக்கு மேடையேறி, சிவகார்த்திகேயன் இந்த வீடியோவில் கூறியது, “முதலில் உங்கள் சொந்த வாழ்க்கையை கொண்டாடுங்கள், பின்னர் உங்கள் குடும்பத்தை கொண்டாடுங்கள், (இந்த இரண்டு) பிறகு நீங்கள் என்னைக் கொண்டாடினால் நான் மிகவும் மகிழ்ச்சியடைவேன். உங்கள் அனைவருக்கும் ஒரே ஒரு விஷயத்தை நான் சொல்ல விரும்புகிறேன், மற்றவர்களைப் பற்றி சிறிதும் கவலைப்பட வேண்டாம். சொல்கிறீர்கள் அல்லது சொன்னீர்கள், நீங்கள் நேர்மறையாக இருங்கள், நம்பிக்கையுடன் இருங்கள், ‘அடுத்து என்ன’ என்று நினைத்தால், வெற்றி உங்களுடையது, ‘மற்றவர்களை என்ன செய்வது’ என்ற எண்ணங்கள் இருந்தால், [கை மற்றும் உடல் மொழியில் சைகைகள் இல்லை] (நீங்கள்) எதுவும் கிடைக்காது.எனவே அதை மனதில் வையுங்கள்.நீங்கள் (ரசிகர்கள்) எனக்கு நிறைய பாசத்தையும் ஆதரவையும் கொடுத்து வருகிறீர்கள். Those words 🥺 #PrinceSK @Siva_Kartikeyan ❤️@mohandasspugal@AllIndiaSKFC @navneth @AnandSkfc #Sivakarthikeyan #prince #PrinceOnOct21st #princediwali pic.twitter.com/c13BpCrH27 — PerambalurSKFC_Official (@Perambalur_SKFC) October 16, 2022 Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
சந்தோஷத்தில் துள்ளிக் குதித்த பீமன் ,”நான் துரியோதனனின் மண்டையையும், அவன் நண்பன் அந்தத் தேரோட்டி மகன் கர்ணனின் கழுத்தையும் முறிக்க ஆசைப்படுகிறேன்.” இதைச் சொல்கையிலேயே தான் அந்தக் காரியத்தைச் செய்து முடித்துவிட்டாற்போல் பூரணத் திருப்தி அடைந்தான் பீமன். “அண்ணா, நடு அண்ணா, இவ்வளவு கொடூரக் காரனாய் இருக்காதே. நமக்கெல்லாம் எதுவும் ஆகாது; நாம் நன்றாகவே இருப்போம்.” அர்ஜுனன் பீமனைக் கண்டிக்கும் தோரணையில் கூறினான். அதே சமயம் உத்தவனைப் பார்த்துச் சிரித்ததில் இருந்து இது அடிக்கடி நடக்கும் ஒன்று என உத்தவன் புரிந்து கொண்டு அவனும் சிரித்தான். பீமனோ அதை லக்ஷியம் செய்யாமல், “நான் தீமைகளை அழிக்கவே பிறந்துள்ளேன்.” என்று பெருமையுடன் கூறினான். மேலும், அர்ஜுனனைப் பார்த்து, “நான் உன்னைப் போல் மனம் பலஹீனமானவன் அல்ல; அதே சமயம் பெரியண்ணா யுதிஷ்டிரனைப் போல் ஒரு துறவியும் அல்ல. நான் யதார்த்தமான விஷயங்களை அதன் போக்கிலேயே புரிந்து கொண்டு நடப்பவன். அவங்க என்னோடு சண்டை போட்டாங்கன்னா நானும் சண்டை போடுவேன். சும்மா விட மாட்டேன்.” என்றான். “ஓஹோ, பீமா, நீங்கள் ஒருவருக்கொருவர் இப்படி அடித்துக் கொண்டால் உங்கள் வம்சமே பாழாகிவிடுமே! இந்தக் குருவம்சத்தினரின் மாபெரும் சாம்ராஜ்யத்தின் அஸ்திவாரமே ஆட்டம் கண்டு விடும் போல் இருக்கிறதே. இது உங்களை மட்டுமில்லாமல் ஆர்யவர்த்தத்தையே பாதிக்கும். “ என்று உத்தவன் கவலையுடன் கூறினான். பீமனோ அதைக் குறித்துக் கவலைப்படாமல், “ஆர்யவர்த்தம் இதை அனுபவித்தே ஆகவேண்டும். அதன் அஸ்திவாரம் ஆட்டம் கண்டதெனில் பலப்படுத்த உதவியாக இருக்கும். எத்தனை நாட்கள் இப்படிப் பயந்து கொண்டு வாய் மூடி மெளனியாக இருப்பது? எப்போது, எங்கே இருந்து, எம்முறையில் தாக்கப் போகிறார்கள் என்ற நிச்சயமற்ற சூழ்நிலையில் எப்படி வாழ்வது? உண்ணும் உணவில் கூட விஷத்தைக் கலந்தார்கள். எத்தனை நாட்கள் பயந்து பயந்து உணவு உண்ண முடியும்?? அவர்கள் பக்கம் நீதியோ, நியாயமோ, உண்மையோ இல்லை. இந்த அநீதிக்குப் பயந்தல்லவோ வாழவேண்டி உள்ளது? ஆகவே அர்ஜுனா, உன் ஆயுதங்களை நன்கு கூர் தீட்டி வைத்துக்கொள். இப்போது நிஜமாகவே துரியோதனாதியரோடு யுத்தம் செய்ய வேண்டி இருக்கும்.” பீமன் பெருமூச்சு விட்டான். அப்போது அவர்களை மதிய உணவு உண்ண வேண்டி அழைக்க வந்த குந்தி, பீமனின் கடைசி வார்த்தைகளைக் காதில் வாங்கிக் கொண்டாள். ஆனால் இளைஞர்கள் மூவரும் அதை அறியவில்லை. “பீமா, எப்போதும் யுத்தம், போர் என்றே பேசாதே! எனக்குப் பயமாய் இருக்கிறது.” என்று கவலையோடு கூறினாள் குந்தி. குந்தியின் உண்மைப் பெயர் ப்ரீத்தா என்பதாகும். குந்திபோஜனுக்கு தத்துக் கொடுக்கப்பட்டு அவனால் வளர்க்கப்பட்டதால் குந்தி என்ற காரணப்பெயரைப் பெற்றாள். பார்த்தாலே மரியாதை கொடுக்கும் விதமாய்க் காணப்பட்டாள் குந்தி. முக காந்தி மெய் சிலிர்க்க வைத்தாலும் அதில் காணப்பட்ட நிரந்தர சோகம் அனைவர் மனதையும் வருத்தியது. தன் மக்களைப் பார்க்கையில் அவள் கண்கள் அன்பு நிரம்பியதொரு கடல் போல் காணப்பட்டது. அதோடு தன் குழந்தைகள் வளர்ந்து இளைஞர்களாக ஆகி இருப்பதை ஏற்காதவள் போல அவர்கள் இன்னமும் சிறுகுழந்தைகள் என்று தோன்றும்படியாகப் பேசினாள் குந்தி. “அம்மா, நாம் க்ஷத்திரியர்கள். போர் செய்வதும் ரத்தம் சிந்துவதும் நம் தொழில்; தர்மம்; கடமை. “ “தர்மத்தைக் காக்க மட்டுமே ஆயுதங்களைக் கையில் எடுக்க வேண்டும் பீமா!” குந்தி கண்டிப்பான குரலில் கூறினாள். “அதே தான் தாயே! நம் அனைவரையும் அதர்மத்தில் இருந்தும் அதர்மமான முறையில் நாம் தாக்கப்படுவதில் இருந்து காக்கவேண்டிய கடமை எனக்கு இருக்கிறது. துரியோதனாதியரின் அதர்மமான செயல்களில் இருந்து நம் அனைவரையும் காக்கவேண்டும் என்றே நான் நினைக்கிறேன். அதற்காகவே போர் செய்ய எண்ணுகிறேன். உங்கள் மகனான எனக்கு இது கடமையன்றோ!” பீமன் கூற, “உத்தவன் போன்ற சிறந்த வீரர்கள் துணை இருக்க உங்களுக்கு ஆபத்து எங்கிருந்து வரும்?” என்று கூறினாள் குந்தி. “அத்தையாரே, எங்களில் கூட ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்டிருந்தோம். இப்போது தான் எதிரிகளிடம் மட்டுமே சண்டையிடுவது என வைத்திருக்கிறோம். இதை எங்களுக்கு உணர்த்திய வாசுதேவ கிருஷ்ணனுக்குத் தான் நன்றி சொல்ல வேண்டும்” என்றான் உத்தவன்.
போதைப் பழக்கத்தை பெருமிதமாக முன்வைக்கும் பாடல்களை ஒலிபரப்பக் கூடாது... FM ரேடியோக்‍களுக்‍கு மத்திய அரசு எச்சரிக்‍கை வாகன எண் பலகையில் அரசியல் தலைவர்களின் படங்களை ஒட்டுவதை போக்குவரத்து அலுவலர்கள் எவ்வாறு அனுமதிக்கின்றனர்? உயர்நீதிமன்ற மதுரைக்‍கிளை கேள்வி நாடு முழுவதும் ஒரே சீரான மின்கட்டணம் இருக்க வேண்டும்... பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் வலியுறுத்தல் சென்னை கொளத்தூரில் கோயிலுக்கு நடந்து சென்ற பெண்ணிடம் 6 சவரன் தாலி செயின் பறிப்பு... சி.சி.டி.வி. காட்சிகள் வெளியீடு சென்னை அண்ணா நகரில் பட்டாக்‍கத்தியுடன் வாகன ஓட்டிகளை மிரட்டும் ரவுடிக்‍ கும்பல் - தேநீர் கடையில் செல்போன் பறித்த சி.சி.டி.வி காட்சிகள் வெளியீடு கோவை சிலிண்டர் கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக உரக்கடைகளில் போலீசார் சோதனை... வெடிமருந்துகள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின்பேரில் சோதனை குஜராத்தில் அமைதியாக நடந்து முடிந்தது முதல் கட்டத் தேர்தல் : 89 சட்டமன்றத் தொகுதிகளில் 60.20% வாக்குப்பதிவு தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்‍கு சில மாவட்டங்களில் இடி-மின்னலுடன் லேசானது முதல் கனமழை பெய்யக்‍கூடும்... இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் கன்னியாகுமரியில் இருந்து டாரஸ் லாரிகளில் கனிம வளங்கள் கேரளாவுக்‍கு கடத்தல்... நெல்லையிலிருந்து குமரி வழியாக கடத்த முயன்ற 5 லாரிகள் பறிமுதல் குறிப்பிட்ட காலத்துக்‍குப் பின் நோயாளிகள் உட்கொள்ளும் மாத்திரைகளின் வீரியம் குறைவதாக அதிர்ச்சித் தகவல் - கிருமிகள் மருந்துகளுக்‍கு எதிரான ஆற்றலை அதிகரித்துக் ‍கொள்வதாக விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு
கொரோனா அச்சம் காரணமாக அனைத்து பயணிகள் தொடர்வண்டியும் மார்ச் 22 ஆம் தேதி முதல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 52 நாட்களுக்குப் பிறகு மே 12 ஆம் தேதி குறைந்த அளவில், தேர்ந்தெடுக்கப்பட்ட தடங்களில் பயணிகள் தொடர்வண்டிகளை இயக்க இந்திய தொடர்வண்டித்துறை முடிவெடுத்துள்ளது. 15 தொடர்வண்டிகள் இயக்கப்படுகின்றன. இவை புதுடெல்லி நிலையத்திலிருந்து திப்ருகார், அகர்தாலா, ஹவுரா, பாட்னா, பிலாஸ்பூர், ராஞ்சி, அகமதாபாத், புவனேஷ்வர், செகந்தராபாத், பெங்களூரு, சென்னை, திருவனந்தபுரம், மத்கவான், மும்பை சென்ட்ரல், அகமதாபாத் மற்றும் ஜம்முதாவி ஆகிய நகரங்களை இணைக்கும் வண்டிகளாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கொரோனாவை கட்டுப்படுத்துவது மற்றும் ஊரடங்குக் கட்டுப்பாடு பிரச்சினைகள் தொடர்பாக பிரதமர் மோடி நேற்று மாநில முதல்வர்களுடன் காணொலிக் காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். இதில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமைச்செயலகத்தில் இருந்தபடி ஆலோசனையில் பங்கேற்றார். இந்தக் கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பேசுகையில், சென்னையில் கொரோனா பரவல் அதிகமாக இருப்பதால் தமிழகத்துக்கு 31 ஆம் தேதி வரை தொடர்வண்டி, விமான சேவைகளைத் தொடங்க வேண்டாம் என்று பிரதமர் மோடிக்கு கோரிக்கை விடுத்தார். மே 31 ஆம் தேதிவரை பொதுவான விமானப் போக்குவரத்து சேவையைத் தொடங்கக் கூடாது. 12 ஆம் தேதியில் இருந்து டெல்லியில் இருந்து சென்னைக்கு தொடர்வண்டிப் போக்குவரத்து தொடங்க இருக்கிறது. சென்னையில் கொரோனா தொற்றின் எண்ணிக்கை கூடிக்கொண்டே இருப்பதால், 31 ஆம் தேதிவரை மாநிலத்துக்கு தொடர்வண்டிப் போக்குவரத்தை அனுமதிக்க வேண்டாம். இவ்வாறு எடப்பாடி பழனிச்சாமி கேட்டுக்கொண்டார். ஆனால் இந்தக் கோரிக்கை ஏற்கப்படவில்லை என்று தெரிகிறது. இன்று மாலை 4 மணிக்கு புதுதில்லியிலிருந்து சென்னைக்கு ஒரு தொடர்வண்டி புறப்படவிருப்பதாகவும்,4.35 ம்ணிக்கு சென்னையிலிருந்து புதுதில்லிக்கு ஒரு வண்டி புறப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
வாப்பாவின் முதுகில் ஏறி சவாரி செய்த அன்று நமக்குத் தெரியாது, வாழ்வின் பளு. காலங்கள் உருண்டோட, சிலபல கண்டிப்புகளால் நமக்கும் நம் வாப்பாவுக்குமான இடைவெளி அதிகரிக்கிறது. அந்த வயதுக்கு ஏற்ற பக்குவத்தில் நாம் சிந்தித்து, வாப்பாவிடம் நம் முழு கோபத்தையும் காண்பிப்போம். பதிலுக்குப் பதில் பேசி வாக்குவாதம் அதிகரித்து பேச்சுவார்த்தை நிற்கிறது. சில நேரங்களில் வாப்பாக்களின் கண்டிப்புகளால் வேதனை அடையும் நாம், சற்று நம் வாழ்க்கையை பின்னோக்கி தள்ளிப் பார்த்தால் பல விஷயங்கள் புரியும். அப்படி ஒவ்வொருவரும் ரீவைண்ட் செய்து பார்க்க வேண்டிய முக்கிய தருணங்கள் பற்பல. வாப்பாவின் தோளில் அமர்ந்து சென்ற ஊர்வலம், அவர் முதுகில் செய்த சவாரி, சுண்டு விரல் பிடித்து ஆயிரம் ஆயிரம் கேள்விகளை வாய் ஓயாமல் கேட்டுக் கொண்டு நடை போட்ட தருணம், சைக்கிள் கற்கையில் பின்னால் ஓடிவந்த வாப்பாவின் முகம் எனப் பலதையும் சிந்தித்து பார்க்க இந்த அவசர வாழ்வில் நமக்கு நேரமில்லை. காலச்சக்கரம் வேகமாக சுழல, படிப்பு, வேலை, சம்பாத்தியம் என ஓடிக் கொண்டிருக்கையில் வாப்பாவின் சிந்தனை சற்று தலைதூக்கும். 'இதுமாதிரிதானே வாப்பாவும் உழைச்சிருப்பாரு?' என நாம் முழுதாய் எண்ணுவதற்குள் நமக்கென ஒரு குடும்பம் இருக்கும். நம் குழந்தையை தொட்டு தூக்கும் அந்த நொடியில் புரியும், நம் வாப்பா எப்படி அளப்பரியா ஆனந்தம் கொண்டிருப்பார் என்று. உலகில் எவ்வளவு மோசமான ஆணாக இருந்தாலும், ஒரு வாப்பாவாக மாறிய அந்த தருணத்தில் அவர் அனுபவித்த அந்த மகிழ்ச்சி உண்மைதான். நம்முடைய வரவு அவருக்கு பெரு மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கும். அதை நாம் உணரும் போது நாம் ஒரு தந்தையாக மாறி இருப்போம். நம் குழந்தையின் விரல் பிடித்து நடக்கும் போதும், தோளில் சுமக்கும் போதும், செல்லமாக விளையாடும் போதும் நம் வாப்பா நினைவு வந்து போகும். வாழ்க்கை வட்டம்தானே! நம் குழந்தை வளர்ந்து நம்மிடம் சண்டை போடும் போது புரியும், அன்று நாம் இதேபோல செய்கையில் வாப்பாவின் மனம் எவ்வளவு வலியை உணர்ந்து இருக்கும் என்று! பிறகுதான், வாப்பாவுடன் நேரம் செலவிட நினைப்போம். ஆனால், பலருக்கு அந்த இரண்டாவது வாய்ப்பு கிடைப்பதில்லை. நம் வாழ்வில் இனிமையான குழந்தை தருணங்களை எண்ணினால், வாப்பா இன்றும் 'Hero'வாகவே தெரிவார். காரணம், அவர் என்றும் 'Hero'தான்! சூழ்நிலைகள், பணம், கௌரவம் எனப் பல காரணிகளால் நம் வாப்பாக்களால் 'அபியும் நானும்' அப்பா போல ஐடியல் வாப்பாவாக இருக்க முடிவதில்லை! ஆனால், எல்லா வாப்பாக்களுமே தங்கள் குழந்தையை அரசனாக, அரசியாக பார்க்கவே விரும்புவார்கள். நம் வாழ்வில் ஈடு இணையில்லாதவள் 'ம்மா'. ம்மாவின் பாசம், அன்பு அவளது சொற்களில் வெளிப்படும். ஆனால், ஓர் வாப்பாவின் அன்பும், அக்கறையும் அவரது கண்டிப்பில்தான் வெளிப்படும். நம் வாழ்வில் 'அம்மா'யைக் கண்டு தினந்தோறும் ரசித்து வரும் நாம், தன் வாழ்வு முழுவதும் எங்கெங்கோ உழைத்து நம் வாழ்க்கைப் பாதையை செப்பனிட்டுக் கொண்டிருக்கும் 'முதல்வனை' காண மறக்கிறோமோ?! -ந. ஆசிபா பாத்திமா பாவா (மாணவப் பத்திரிகையாளர்) 1 திருச்சி சகோதரர்களின் கவனத்திற்கு: சோழ இளவரசி குந்தவை நாச்சியார் சோழ இளவரசி குந்தவை நாச்சியார் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை முனைவர் பட்டதுக்கான ஆய்வுத் தலைப்பாக எடுத்து மிக விசாலமாக ஆய்வுசெய்து அதை அதிகாரப்பூர்வ வரலாறாக பதிவாக்கிட வேண்டும். 2 இஸ்லாமிய வங்கி இயலின் தந்தை மறைந்தார்! உலகப் புகழ் பெற்ற இஸ்லாமியப் பொருளாதார நிபுணர் டாக்டர் நஜாத்துல்லாஹ் சித்தீகீ அவர்கள் இயற்கை எய்தினார் என்பதே அது! 3 உணரப் படாத தீமை சினிமா தன்னை ஒரு முஸ்லிம் என்று சொல்லக் கூடியவர் வீட்டில் என்ன நடக்கிறது? குழந்தைகளை கூட வைத்துக் கொண்டு, பெற்றோரும், உற்றாரும் குடும்ப சகிதமாக, தொழுகை நேரம் என்றில்லாமல், சினிமாவை ரசித்துக் கொண்டிருக்கிற காட்சியை பரவலாக காண முடிகிறது (விதிவிலக்காக இருப்பவர்களைத் தவிர்த்து). கடைசியில் தன் குழந்தை, படத்தில் வருவது போல யாரையாவது இழுத்துக் கொண்டு ஓடிய பிறகுதான் பெற்றோர்கள் விழித்துக் கொள்வார்கள். 4 நான் ஏன் முஸ்லிம் ஆனேன்? - முன்னாள் கன்னியாஸ்திரி! நான் குர்ஆனைப் படித்த போது, அது குறிப்பாக இறைவன் ஒருவனே! ஒரே ஒருவன் தான் என்று வலியுறுத்தியது. அது நான் கிறிஸ்தவ தேவாலயங்களில் பயின்ற திரித்துவக் கடவுள் கொள்கைக்கு (Trinity of God) முற்றிலும் மாற்றமானதாக இருந்தது. 5 ஆறுதல் சொல்லச் சென்றோர் ஆறுதல் பெற்றுத் திரும்பிய அதிசயம்! செய்தி கேள்விப்பட்ட டாக்டர் அப்துல்லாஹ்வுக்கு கடும் வருத்தம் இருந்தாலும், அனைவருக்காகவும் இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறார். அவரே அனைவரையும் அடக்கம் செய்ய ஏற்பாடு செய்கிறார்.
வடகிழக்கு பருவமழையின் தீவிரம் தொடங்கியுள்ள நிலையில் இன்று டெல்டா உள்ளிட்ட ஏழு மாவட்டங்களில் மிக கனமழைக்கும், மேலும் 14 மாவட்டங்களில் கனமழைக்கும் வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த அக்டோபர் 28-ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. மழை தொடங்கியதிலிருந்து தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் அதிக கன மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் சென்னையில் பெய்த கனமழை நேற்று பகலில் ஓய்ந்திருந்த நிலையில் மாலையிலிருந்து திரும்பவும் மழை வெளுத்து வாங்கியது. இதனால் பல இடங்களில் மீண்டும் தண்ணீர் தேங்கி இரவு முழுவதும் தண்ணீர் அகற்றும் பணிகள் நடைபெற்று வந்தன. இந்த நிலையில் இரவிலும் இன்று காலையிலும் சென்னை உள்ளிட்ட பல இடங்களில் மழை தொடர்ந்து பெய்து வருவதால் சென்னையில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் குன்றத்தூர் தாலுகாவில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் திருவள்ளூர், பொன்னேரி, ஆவடி, பூந்தமல்லி ஆகிய நான்கு தாலுகாக்களில் பள்ளிகளுக்கு மட்டும் அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று தமிழகத்தில் டெல்டா உள்ளிட்ட ஏழு மாவட்டங்களில் மிக கனமழைக்கும், 14 மாவட்டங்களில் கனமழைக்கும் வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மயிலாடுதுறை, நாகை, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய ஏழு மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யக்கூடும். அதேபோல கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, மதுரை, தேனி உள்ளிட்ட 14 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களில் இன்று பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அருகிலுள்ள புதுச்சேரி மாநிலத்தில் புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் இன்றும், நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
Colombo (News 1st) முன்னாள் ஆளுநர் அசாத் சாலி அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவித்து விடுதலை செய்யப்பட்டுள்ளார். இனங்கள், மதங்களுக்கு இடையில் முரண்பாட்டை தோற்றுவித்தல் மற்றும் நல்லிணக்கத்தை சீர்குலைக்க முயற்சித்த குற்றச்சாட்டில் அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார். கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா இன்று இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். கடந்த மார்ச் மாதம் 09 ஆம் திகதி நடைபெற்ற ஊடக சந்திப்பொன்றில் வௌியிட்ட கருத்து தொடர்பில் அசாத் சாலி குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் கடந்த மார்ச் மாதம் 16 ஆம் திகதி கைது செய்யப்பட்டார். பயங்கரவாத தடைச்சட்டம், சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சட்டத்தின் கீழ் அவருக்கு எதிராக மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இதேவேளை, அசாத் சாலியை கைது செய்வதற்கான முறைப்பாட்டை முன்வைத்த பாராளுமன்ற உறுப்பினர்களான மொஹமட் முஸாம்மில், நிமல் பியதிஸ்ஸ மற்றும் காமினி வலேபொட ஆகியோரை பெப்ரவரி மாதம் 21 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு மேல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார். பாராளுமன்ற உறுப்பினராக பொறுப்புடன் செயற்படாது, வெறுப்புணர்வுடன் முன்வைத்த முறைப்பாட்டினால் தமது சேவை பெறுநர் பாதிப்பிற்குள்ளாகியதாக அசாத் சாலி தரப்பில் ஆஜராகிய ஜனாதிபதி சட்டத்தரணி மைத்திரி குணரத்ன முன்வைத்த வாதத்தினை அடிப்படையாகக் கொண்டு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஏற்பட்டுள்ள பாதிப்புகளுக்காக குற்றவியல் தண்டனை சட்டக்கோவைக்கு அமைய நட்டஈடு பெற்றுக்கொள்ள வேண்டும் என ஜனாதிபதி சட்டத்தரணி மன்றில் தெரிவித்ததற்கு அமைய, முறைப்பாட்டாளர்களை மன்றில் ஆஜராகுமாறு அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த 03ஆம் திகதி இரவு முழு அமைச்சரவையும் இராஜினாமா செய்தது. எனினும், மறுநாள் நிதி, வெளிவிவகார, கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் ஆகிய நான்கு அமைச்சர்களை ஜனாதிபதி நியமித்து பாராளுமன்றம் மற்றும் அரசாங்கத்தின் பணிகளை வழமைபோல் முன்னெடுத்தார். புதிய அமைச்சரவையில் முன்னாள் அமைச்சரவை அமைச்சர்கள் உள்ளடங்குவதுடன், ஏனையவர்கள் இளம் எம்.பி.க்கள் என்று கூறப்படுகிறது. Share Previous News Next News யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.
தனது 90வது வயதில் இயற்கை எய்தினார் பிடல் காஸ்ட்ரோ. சகல இணையத்தளங்களும், பத்திரிகைகளும் அவர் சம்பந்தமான அநேக விடயங்களைப் பிரசுரித்து விட்டனர். குறிப்பாக அவரது பிறப்பு சாதனை சோதனை என அனைத்தையும். இலக்கியப் பிரியர்களான நாம் அவரது அரசியலையும் இலக்கியத்தையும் சிறிய ஆய்வில் ஒப்பிடுவோம். இருபதாம் நூற்றாண்டின் தனிச்சிறப்பு மிக்க அரசியல் பிரமுகராக இருந்தவர். 1959ஆம் ஆண்டில் நிகழ்ந்த வெற்றிகரமான புரட்சிக்குத் தலைமை தாங்கியவர். பனிப்போரில் இரண்டு அணுவாயுத நாடுகள் மோதிக்கொண்டிருந்த சமயம் உலக அரசியல் அரங்கில் மிக முக்கியமான மீமனித அறிவாற்றலராகத் (Titan) திகழ்ந்தவர். கம்யூனிஸ்ட்டுகளுக்கும் (Communist Bloc) மேற்குலகுக்கும் இடையிலான கருத்துவேறுபாட்டில் கேந்திரமான ஆட்ட ஜாம்பவான் காஸ்ட்ரோ தான். சமகாலத்தில் ஆபிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளில் நிகழ்ந்த இடதுசாரிப் புரட்சிகளின் ஆதர்சம் பிடல் என்றால் தகும். கியூபாவின் கடற்கரை தாண்டிய பகுதிகளிலும் பிடலின் செல்வாக்கு எண்ணிலடங்காத வகையில் சென்றடைந்தது. அவரை Charismatic Figure என்றே ஊடகங்கள் புகழ்ந்து தள்ளின. அந்த அளவுக்கு மிடுக்கான அரசியல் தளத்தில் பிடல் இருந்தார் என்பதே இது போன்ற பெருமைகளின் காரணம். எவ்வளவு நண்பர்கள் உள்ளனரோ அந்த அளவு எதிரிகளையும் பிடல் சம்பாதித்திருந்தார். குறிப்பாக அவரது சித்தாந்த எதிரிகள். தனது மக்களுக்கான போராட்டத்தை தவிர்க்க முடியாத ஒன்றாக எண்ணியே வாழ்வினைப் புரட்சியில் முன்னிறுத்தினார். வராலாற்றுக் காலங்களை டைனோசர் எங்ஙனம் ஆட்கொண்டதோ, அதேபோல் தான் பிடலும் ஆரம்பகால போராட்ட இயக்கங்கங்கள் ஒவ்வொன்றையும் தன் கொள்கைகளால் ஈர்த்திருந்தார். ரஷ்யத் தலைவர்கள் பலர் இவரது வசியத்துக்கு மயங்கியே இருந்தனர். ரஷ்ய கம்யூனிஸ்ட் தலைவர் குருஷேவ் (Nikita Khrushchev) மற்றும் மிகோயன் (Anastas Mikoyan) ஆகியோரைக் குறிப்பிடலாம். அத்துடன் ஐரோப்பியப் புத்திஜீவிகள் பலரும் இவரை ஆத்மார்த்தமாக நேசித்தனர். குறிப்பாக இருபதாம் நூற்றாண்டின் தத்துவ ஞானியும், இருத்தலியம், மீபொருண்மையியல் போன்ற தத்துவங்களைப் பற்றி பெரும் பரிசோதனைகள் செய்தவருமான சீன் பவுல் சர்தர் (Jean Paul Sartire) பிடல் காஸ்ட்ரோவை நேரில் சந்தித்து மேற்கத்திய மார்க்சியம் பற்றிய உரையாடல்களிலும் ஈடுபட்டிருந்தார். அதேபோலத் தான் சர்தரின் நெருங்கிய தோழியும், பெண்ணியம், சமூகவியல், மார்க்சிம் பற்றி ஆராய்ந்தவருமான Simon De Beauvoir கூட பிடல் மீது பெருமதிப்புக் கொண்டிருந்தார். இவர்களின் சந்திப்பை ஒரு வாய்ப்பாகக் கருதிய பிடல் தனது கொள்கை சார்ந்த அரசியலை அவர்களுக்குத் தெளிவுபடுத்தினார். இன்று வரைக்கும் ஐரோப்பாவில் பிடல் மீதான மதிப்புப் பெருகக் காரணம் இது போன்ற எழுத்தாளர்களின் உண்மை விபரிப்புக்கள் தான் எனில் மிகையன்று. தீயசக்திகளின் கூடாரம் (Axis of Evil) என்று அமெரிக்க அரசு ஒரு பட்டியலிட்டது. அதில் ஈரான் ஈராக் சிரியா வட கொரியா கியூபா லிபியா போன்ற நாடுகள் இருந்தன. இது புஷ் நிர்வாகத்தில் மிகவும் கடுமையான ஒரு அரசியல் கொள்கையாகத் தொடர்ந்தது. பரக் ஒபாமா நிர்வாகத்தில் கியூபா மீதான நெருக்குதல்கள் சற்று விலகியது. அதுவும் பிடல் தனது அதிகாரத்தை ராவுலிடம் ஒப்படைத்த பிற்பாடுதான் தடைகள் நீக்கப்பட்டு தொடர்புகள் மேற்கொள்ளப்பட்டது. இந்தத் தொடர்பினை உலக ஊடகங்கள் பல வரலாற்று முக்கியத்துவம் மிக்க உறவுநிலை நீட்சி (Historic Normalising of Relations) என்றெல்லாம் வர்ணித்தன. ஆனாலும் பிடல் தனது இறப்பு வரையிலும் அமெரிக்க ஏகாதிபத்திய எதிர்ப்பு மனநிலையையே பதிவுசெய்தார். தனது 90வது பிறந்தநாளை ஆகஸ்ட் 13 கொண்டாடினார். அதில், “எமக்கு எந்தப் பேரரசின் உதவியும் தேவைப்படாது. நாம் நாமாகவே இருக்க விரும்புகிறோம்” என்று காட்டமாகக் கூறியிருந்தார். இப்படி ஐந்து தசாப்தமாக தனது கொள்கைகளை நீட்டித்துக் கொண்டார். இவரின் அணுகுமுறை பல உலக தேசங்களை அச்சம் கொள்ளவே வைத்தது. சர்வதேச அரசியல் ஏகாதிபத்தியத்திடம் ஆட்கொண்டு அடிமையாக இருந்ததே அதற்கான பிரதான காரணம் எனலாம். பிடலின் மூச்சுக்காற்றுக் கூட பிடலின் எதிரி என்று பல உள்ளக இலக்கியவாதிகளும் கருதினர். அவர்களில் சிலரை நாடுகடத்தினார் பிடல். எதுவான போதிலும் சொந்த தேச மக்கள் பிடலை அதிகமாக நேசித்தனர். 1961 ல் பன்றிகள் வளைகுடா மீதான படையெடுப்பை பிடல் முறியடித்ததாகட்டும், குருஷேவ் அரசு கியூபாவில் ரஷ்ய அணுவாயுதங்களை நிறுவியதாகட்டும் அனைத்துமே அமெரிக்க அரசை எதிர்ப்பதாகவே தனது பிரகடனங்களையும் திட்டங்களையும் வரைந்தார். 1975ல் யாருமே எதிர்பாராத ஒரு காரியத்தைப் பிடல் செய்தார். அங்கோலா நாட்டின் சுதந்திரத்துக்காக 25000 படையினரை அனுப்பினார். அஙகுள்ள இடதுசாரி படையான MPLA க்கு அனுசரணை வழங்கிப் போராடவே அனுப்பினார். இதன் பின்னர்தான் பனிப்போர் சச்சரவுகள் மிகவும் உச்சகட்டத்தை அடையத் தொடங்கியது. ஒன்றுபட்ட இத்தாலியை உருவாக்கிய இத்தாலியின் தந்தை என வர்ணிக்கப்படுகின்ற கரிபால்டி (Giuseppe Garibaldi) போல காஸ்ட்ரோவும் ஒரு தேசபிதாதான். ஒரு தேசியத் தலைவரின் சிந்தனைகள் அவர் இருந்த காலத்தில் காணப்பட்ட பழமையான கொள்கைகளை நீக்கி மக்களுக்கு புதுமையான நிர்வாக அமைப்பை வழங்குவதேயாகும். அது மக்களின் வாழ்நிலையை உயர்துவதாகவும் இருக்க வேண்டும். இலவசக்கல்வி, அனைவருக்கும் சுகாதாரம் போன்ற செயற்பாடுகளை நிறுவி தடைகளைக் கடந்து பிடல் நாட்டினை வளமாக்கினார். பிடல் காஸ்ட்ரோ ஒரு சிறந்த இலக்கிய வாசகர். சேகுவேரா போல அதிக நேரங்கள் புத்தகங்கள் வாசிப்பதில் செலவழித்தார். பிடலின் ஆட்சியில் உள்ளக தேசியவாதம் தழைத்தோங்கியிருந்தது. அதேபோல இறக்குமதி செய்யப்பட்ட பொதுவுடைமைக் கோட்பாடும் பெருமளவில் ஐக்கியமாகியே காணப்பட்டது. இதனை பிடல் இலக்கிய, அரசியல் எழுத்தாளர்களின் படைப்புக்களில் இருந்து பெற்றார் எனலாம். கியூபாவின் தேசிய வீரரும் தேசப்பற்றாளருமான ஜோஸ் மார்ட்டியின் (Jose Marti) படைப்புக் கொள்கைகளை பிடல் தனது உள்ளக தேசியவாத அரசியல் பிரகடனங்களுக்குப் பயன்படுத்தினார். 19ம் நூற்றாண்டில் ஸ்பானிஷ் ஆட்சியாளர்களை எதிர்த்துப் போராட இவரது வரிகள் உதியிருந்தது. அத்துடன் தான் வாழ்ந்த சமகாலத்தில் ஒட்டுமொத்த லத்தீன் அமெரிக்க புத்திஜீவிகளின் சிந்தனை தரத்தை நிர்ணயித்திருந்தார். ஜோஸ் எழுதிய பிரபலமான குவாண்டனாமெரா என்ற தேசப்பற்றுப் பாடல் இன்றுவரை கியூபாவில் இசைக்கப்படுவதுண்டு. பிடலின் உள்ளக தேசியவாதம் ஜோஸ் மார்டியின் படைப்புக்களை முன்வைத்திருந்தது எனில், அவரது தருவிக்கப்பட்ட பொதுவடைமைக் கோட்பாடு கார்ல் மார்க்ஸின் அரசியல் கோட்பாட்டிலிருந்தே பிறந்தது. இதுவே பிடலின் மூலப் புரட்சிக்கு பெரும்பங்காற்றியது. இந்த இரண்டு இலக்கியவாதிகளின் கோட்பாடுகளை அவர்களது காலத்து வன்மை எங்ஙனம் இன்னொரு சமூகத்தின் நிலைமையை மாற்றிவிடும் என்பதை உணர்ந்திருந்த பிடல் அதனையே தொடர்ந்து வரித்துக்கொண்டார். சமகால அரசியல் இலக்கியத்தின் காத்திரமான புள்ளியே பிடல். கொலம்பிய எழுத்தாளர் கப்ரியல் கார்சியா மார்க்கஸ் இன் நெருங்கிய நண்பராகவும் பெருவேட்கையுள்ள வாசகராகவும் இருந்துள்ளார். “அறிவார்ந்த நட்பு” என்றே தம்முடைய நட்பின் தரத்தை இருவரும் கூறுவர். எப்போது சந்தித்துக் கொண்டாலும் இலக்கியம் பற்றியே உரையாடுவார்களாம். மெஜிக்கல் றியாலிசம் என்ற இலக்கியக் கோட்பாட்டை தமது மக்களின் அரசியல் அபிலாசைகளுக்கு ஏற்பவே உருவாக்கினார் மார்க்கஸ். அதே போலத் தான் பிடல் மீதான நட்பை லத்தீன் அமெரிக்காவின் உணர்வு நிலை நீட்சியாகக் கருதித் தொடர்ந்தார். நூற்றாண்டுகளின் தனிமை என்ற நூல் பற்றி அடிக்கடி பிடல் விவாதிப்பார் என்று மார்க்கஸ் ஒரு நேர்காணலில் கூறியுள்ளார். பிடலின் நம்பிக்கைக்குரிய ஒருவராக மார்க்கஸ் இருந்தார். மார்க்கஸ் இறக்கும் வரை இது தொடர்ந்துள்ளது. மார்க்கஸ் போல இன்னொரு மெஜிக்கல் ரியாலிச எழுத்தாளர் தான் அலியோ கர்பண்ரியர் (Alejo Carpentier). இவர் காஸ்ட்ரோவை ஆதரித்ததால் ஆரம்பகாலத்தில் நாடுகடத்தப்பட்டார். பின்னர் பிடலின் புரட்சி வெற்றிபெற்றவுடன் கியூப தேசிய வெளியீட்டுத் திணைக்களத்தில் தலைமையேற்று அதனை நடாத்தினார். இவரே “The Kingdom Of This World” என்ற பிரபலமான வரலாற்று நூலை எழுதியவராவார். பிடல் இலக்கியங்களை நேசிக்கின்ற அளவுக்கு இலக்கிய வாதிகளை நேசிக்கவில்லை என்ற விமர்சனம் ஒன்றுண்டு. இதனை ஆரம்ப காலங்களில் (1964) மறைமுகமாக ஏற்றுக் கொண்டார். லீ லாக்வூட் என்ற Photo Journalist இன் நேர்காணலில் இது தொடர்பாகக் கூறியிருந்தார். இப்போது தான் அரசியல் ரீதியில் நாடு மேலெழுகிறது, ஆதலால் புரட்சிக்கு எதிரான படைப்பிலக்கியம் தேவையற்ற ஒன்று என்று கூறியிருந்தார். ஆனால் காலங்கள் போகப்போக இந்த எதிர்ப்புக் கொள்கையை இலக்கியங்களுக்காக மட்டும் தளர்த்தினார். அதற்கு உதாரணம் தான் கப்ரியல் கார்சியா மார்க்கஸ்- பிடல் நட்பு. பிடலின் சில சுயசரிதைகள் மற்றும் கட்டுரைகள் அவரால் எழுதப்பட்டுள்ளது. அது வாய்மொழியாகவோ எழுத்தாகவோ இருந்து அண்மைக் காலங்களில் வெளிவந்துள்ளது. இக்னாசியோ ரொமனெற் என்ற பிரான்சு பத்திரிகையாளருடனான நேர்காணல் “நூறு மணி நேரம் பிடலுடன்” என்று வெளியானது. 2008ல் “Peace In Colombia” என்ற கட்டுரைத்தொகுதி பிடலால் எழுதப்பட்டது. கியூபா-கொலம்பியா அரசுகளிடையே நடைபெற்ற பேரம்பேசல்களும், உள்ளக விவகாரங்களும் பற்றிய குறிப்புக்களை வெளிப்படுத்தினார். கொலம்பியாவின் போராளி குழுவான FARC உடனான சமாதான பேச்சுக்கள் பற்றிய விபரங்களும் இடம்பெற்றுள்ளது. “The Strategic Victory” (2010) என்ற நூலில் 1958 காலப்பகுதியில் சியாரா மயாரா மலையில் ஒளிந்திருந்து பட்டிஸ்ராவின் ஆட்சியைத் தூக்கி எறிந்த தந்திரோபாய எண்ணக்கருக்கள் மற்றும் போராட்ட கஷ்ரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. இதே ஆண்டில் “தந்திரோபாய எதிர்த்தாக்குதல்” (The Strategic Counteroffencive) என்ற முதல் நூலின் இரண்டாம் பாகம் போல வெளியானது. யுத்தசாகசங்கள், இராணுவ அதிகாரங்கள், கடிதங்கள், புகைப்படங்கள் மற்றும் வரைபடங்களின் தொகுதிகள் இடம்பெற்றது. மற்றொரு மிகமுக்கியமான பிடலின் நேர்காணல் வழி சுயசரிதை 2012 ல் வெளியாகியது. கியூபாவின் பத்திரிகையாளர் Katiushka Blanco நேர்முகம் கண்டார். கிட்டத்தட்ட 1000 பக்கங்களாக அமைந்திருந்தது. “Guerilla Of Time” என்ற அந்த நூல் இன்றைய அரசியல் விஞ்ஞானம் கற்கும் மாணவர்களின் ஆராய்ச்சிகளுக்கு வரப்பிரசாதமான ஒன்று என்றால் அது மிகையல்ல. இரண்டு நூற்றாண்டுகளாக உயிரோடிருக்கும் போதே அதிகம் பேசப்பட்டவர். ஏகாதிபத்தியத்தால் வஞ்சிக்கப்பட்டவர். ஆனாலும் சோர்ந்து போகாதவர். புரட்சி இயக்கங்களுக்கும் சிறுபான்மை மக்களுக்கும் அவருடைய வாழ்க்கை வரலாறே ஒரு பாடமாகவும் இருக்கும். சர்ச்சைகளுக்குள் நீந்தி கியூப சாம்ராஜ்ஜியத்தை நிலைநாட்டியவர் என்றெல்லாம் அவரைப் புகழலாம். ஏனெனின் அவரது எதிரிகள் அந்த அளவுக்குப் பலமானவர்கள். அரசியல் கடந்த இலக்கிய களத்திலும் தன்னை நிரூபித்து, எழுபதுகளின் பிற்பகுதியில் தொடங்கி இறப்பு வரை இலக்கியவாதிகளை நேசித்தும் வாழ்ந்தால் பிடல். உலகில் இன்னும் நூற்றாண்டுகளாகத் தொடரும் அடக்குமுறைகளை இவரது படைப்புக்கள் ஒவ்வொரு தனிநபர் மீதும் தட்டியெழுப்பும் என்பது உறுதி.
பேசுவதிலும், குறை கூறுவதிலும் நேரத்தை செலவிடாது செயலில் இறங்குங்கள். தவறுகளைப்பற்றி வருந்திக் கொண்டிருக்காமல் தவறுகளை திருத்தும் முயற்சிகளில் ஈடுபடுங்கள். மகிழ்ச்சியுடன் செயற்படுங்கள் எது தவறு என்று எண்ணி பயப்படாமல், எது நல்லதோ அதை நேசித்து, உங்கள் கடமையை செய்யுங்கள். வாழ்வது சந்தோஷமான விடயம் ஆகிவிடும். ஓரத்தில் இருந்து வேடிக்கை பார்க்காமல் உள்ளே புகுந்து வேலை செய்யுங்கள். செயல்களை உங்களாலும் நல்ல வழியில் திருப்ப முடியும். கணக்குப் பார்க்கும்போது வெற்றி பெற்றீர்களா தோற்றீர்களா என்பது முக்கியமில்லை. எப்படி வாழ்ந்தீர்கள் என்பதே முக்கியம். 0 Comments Leave a Reply. முகவுரை.. எனதன்பு உள்ளங்களுக்கு பணிவான வணக்கம். வாழ்க நலமுடனும், வளமுடனும். என்னுடைய ஆக்கங்களுக்கு மயிலிட்டி இணையத்தில் (myliddy.fr) பதிவுசெய்வதற்கு வழிவகுத்துத்தந்த மயிலிட்டி ஒன்றிய தலைவர் கௌசிகன் அவர்களுக்கம், சதானந்தன் அவர்களுக்கம் ,அங்கத்தவர்களுக்கும், திரு அருண்குமார் அவர்களுக்கும் எனது நன்றி மாலையை சமர்பிக்கிறேன். இதில் என்னுடைய ஆக்கங்கள் மட்டுமல்லாமல் நான் படித்து சுவைத்தவைகள், படித்ததில் பிடித்தவற்றையும் பதிவுசெய்கிறேன். தவறுகள் இருப்பின் மன்னிக்கவும். என்றும் நன்றியுடன் உங்களில் ஒருவன் சௌந்தா..
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads By Category: எழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம் சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும் April 2022 Issue தென்றல் பேசுகிறது | நேர்காணல் | சாதனையாளர் | சிறப்புப் பார்வை | சின்னக்கதை | சமயம் | நூல் அறிமுகம் | சிறுகதை | பொது | அலமாரி எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | கதிரவனை கேளுங்கள் | Events Calendar | ஹரிமொழி | மேலோர் வாழ்வில் | வாசகர் கடிதம் Tamil Unicode / English Search ஹரிமொழி < Prev | Index | Next > அர்ஜுனனைத் தொடர்ந்த பீஷ்மர் - ஹரி கிருஷ்ணன் | ஏப்ரல் 2022 | Share: போர்க்களத்தில் நுழைவதற்கு முன்பாக அர்ஜுனன், தன்னுடைய ஆயுதங்கள் இருந்த இடத்திலிருந்து அனுமக்கொடியைத் தேரில் பறக்கவிட்டவாறுதான் களத்துக்கு வந்தான். போரைத் தொடங்குவதற்கு முன்னால் தேரிலிருந்து குதித்தான். தேவர்களுக்கு வணக்கம் செலுத்தினான். காண்டீபத்தை எடுத்துக்கொண்டான். கையுறைகளை மாட்டிக்கொண்டான். இந்திரன் கொடுத்த குண்டலங்களை அணிந்துகொண்டான். பேடிக் கோலத்தில் இருக்கும் தன்னுடைய நீண்ட முடியை வெண்மையான துணியால் தூக்கிக் கட்டிக்கொண்டான். கிழக்குமுகமாக நின்று அஸ்திரங்களை வணங்கினான். அந்த அஸ்திரங்கள் 'அர்ஜுனா! நாங்கள் உனக்குப் பணியாற்றுவதற்காகக் காத்திருக்கிறோம்' என்றன. அந்த அஸ்திரங்களை எடுத்துக் கொண்டான். காண்டீபத்தின் நாண் கயிற்றை இழுத்துப் பேரொலி எழுப்பினான். அந்த ஓசையைக் கேட்ட கௌரவர்கள் நடுக்கம் அடைந்தனர். அச்சமடைந்த உத்தரன், 'பாண்டவரே! நீங்கள் தனியாக இருக்கின்றீர்கள். அவர்களோ, பெரும் படையோடு இருக்கிறார்கள். அச்சம் கொண்ட நான் உங்களுக்கு எந்தவகையிலும் பயன்படமாட்டேன்' என்று சொன்னான். அர்ஜுனன் அவனை ஊக்கப்படுத்தும் வார்த்தைளைச் சொன்னான். உத்தரன் தேரை ஓட்டினான். அர்ஜுனன் தன்னுடைய தேவதத்தம் என்ற சங்கத்தை ஊதினான். அந்த ஒலியைக் கேட்டு குதிரைகள் நடுங்கின. (இவை உத்தரனின் தேர்க் குதிரைகள் என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.) தேவதத்தத்தின் பேரொலியைக் கேட்டு உத்தரன் கதிகலங்கிப்போய் தேர்த்தட்டில் உட்கார்ந்துவிட்டான். மூர்ச்சையடைந்தான். சற்றும் பதறாத அர்ஜுனன் கடிவாளங்களை இழுத்துப் பிடித்துத் தேரை அங்கேயே நிறுத்தினான். உத்தரனைத் தழுவியெடுத்து அவன் மூர்ச்சையைத் தெளிவித்து அவனைத் தேற்றினான். 'உத்தரா! இரண்டு கால்களையும் தேர்த்தட்டில் அழுத்திக்கொள். கடிவாளத்தை உறுதியாகப் பிடி. நான் மறுபடியும் சங்கநாதம் செய்யப் போகிறேன்' என்றான். துரோணர், துரியோதனனைப் பார்த்து, 'துரியோதனா! தேரின் பேரொலி கேட்கிறது. சங்கம் ஊதப்படுகிறது. பூமி நடுங்குகிறது. இது அர்ஜுனன் வருவதற்கு அறிகுறி' என்றார். அவரை வணங்கிய துரியோதனன், 'பெரியோர்களே! நானும் கர்ணனும் பலமுறை சொன்னதுதான். பேச்சுப்படி அவர்கள் பன்னிரண்டாண்டுகள் காட்டிலும், ஓராண்டு தலைமறைவாகவும் வசிக்க வேண்டும். அதற்கு முன்னால் அர்ஜுனன் பார்க்கப்படுவானேயாகில், அவர்கள் மீண்டும் காட்டுக்குப் போக வேண்டியதுதான்' என்றான். அவனுடைய சொற்களைத் தொடர்ந்த கர்ணன், 'எல்லோரும் பயப்படுகிறீர்கள். வருவது இந்திரனாக இருந்தாலும், பரசுராமராகவே இருந்தாலும், நான் ஒருவனாகவே எதிர்கொள்வேன்' என்றான். துரோணர் பயப்படுகிறார் என்ற வார்த்தைகளைக் கேட்ட கிருபர், கர்ணனைக் கண்டித்தார். 'அர்ஜுனனைக் குறைத்து மதிப்பிடாதே. அவனைத் தனியாக எதிர்கொள்வது, உன்னால் முடியாத ஒன்று. நாம் அனைவரும் சேர்ந்து அவனை எதிர்ப்போம்' என்றார். இதைக் கேட்ட கர்ணனுக்குக் கோபம் வந்தது. 'ஆசாரியர் பயத்தினால் அர்ஜுனனிடம் அன்பு பாராட்டுகிறார்' என்றான். 'பாண்டவர்கள் தர்ம சாஸ்திரங்களை அறிந்தவர்கள். சூதினால் நாட்டைப் பிடுங்கிக் கொள்ளலாம்' என்று எந்த தர்ம சாஸ்திரம் சொல்கிறது?' என்று கோபப்பட்டார். 'நாம் இன்னும் பசுக் கூட்டங்களையே மீட்கவில்லை என்பது நினைவிருக்கட்டும்' என்று கர்ணனுக்குச் சொன்னார் கிருபர். கேட்டுக்கொண்டிருந்த அஸ்வத்தாமனுக்குக் கோபம் வந்தது. பின்னால், குருக்ஷேத்திரப் போரின்போது 'நாக்கை அறுப்பேன்' என்று கண்டிக்கப் போகிறான் அஸ்வத்தாமன். துரியோதனன், கூப்பிய கைகளுடன் அனைவரையும் சமாதானப்படுத்தினான். கர்ணன் சொன்னதைப் பொறுத்துக் கொள்ளவேண்டும்' என்று கேட்டுக்கொண்டன். கர்ணன் சார்பில் மன்னிப்புக் கேட்டுக்கொண்டான். துரோணர், பீஷ்மருடைய வார்த்தைகளால் சமாதானமடைந்தார். 'பீஷ்மரே! காலச் செலவைப் பற்றி உங்கள் கருத்து என்ன?' என்று கேட்டார். 'காலகதியின் கணக்கைப் பார்த்தால், பதின்மூன்று ஆண்டுகளுக்குச் சில மாதங்களுக்கு மேல் கழிந்துவிட்டன. அதனால்தான் அர்ஜுனன் இப்போது வந்திருக்க வேண்டும்' என்றார் பீஷ்மர். 'பிதாமகரே! நான் ஏற்கெனவே சொன்னதுதான். நான் அவர்களுக்கு நாட்டையோ, கிராமத்தையோ, பணியாட்களையோ, சேனையையோ, சிறிது பொருளையோ, எதையும் கொடுக்க மாட்டேன். எனவே, போருக்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்யுங்கள்' என்றான். இதைக் கேட்ட துரோணர் பேசினார். 'துரியோதனா! எப்போதும் உன்னுடைய நன்மையை நாடுபவன் நான். நாம் இன்னமும் பசுக் கூட்டங்ளை மீட்கவில்லை. எனவே, நாலில் ஒரு பங்கு படையை அழைத்துகொண்டு நீ பசுக் கூட்டங்களை ஓட்டிக்கொண்டு செல். நானும், பீஷ்மரும், கிருபரும், அஸ்வத்தாமனும், கர்ணனும் பாதிப் படைகளுடன் அர்ஜுனனை எதிர்கொள்கிறோம்' என்றார். துரோணரின் இந்தச் சொற்களை அனைவரும் ஒப்புக் கொண்டார்கள். நாலில் ஒரு பங்கு சேனையுடன் துரியோதனன் பசுக் கூட்டங்களை ஓட்டிச் சென்றான் மீதம் உள்ளவர்கள் போருக்குத் தயாரானார்கள். அப்போது பீஷ்மர், துரோணரைப் பார்த்துப் பேசத் தொடங்கினார். 'ஆசாரியாரே! நீர் மத்தியில் நில்லும். அஸ்வத்தாமா இடது பக்கத்தில் நிற்கட்டும். கிருபர் வலது பக்கத்தைப் பாதுகாக்கட்டும். துர்முகன், துச்சாதனன், சகுனி போன்றோர் துரோணரைப் பாதுகாக்கட்டும். கர்ணன் படையின் முன்வரிசையில் நிற்கட்டும். நான், முழுவதையும் பாதுகாத்துக்கொண்டு பின்புறம் நிற்கிறேன். நாம் அனைவரும் சேர்ந்துகொண்டு அர்ஜுனனை எதிர்த்துக் கடுமையாகப் போர் புரிவோம்' என்றார். அதன்பின்னர் பீஷ்மர் எதிரிகளால் உடைக்க முடியாதபடி வஜ்ரகர்ப்பம், விரீகிமுகம், பத்மம், சந்திரார்த்த மண்டலம் என்ற வியூகங்களை ஏற்படுத்தினார். படைவகுப்பின் பின்புறத்தில் ஆயுதங்களுடன் தேரில் நின்றுகொண்டார். அவர் தேரில் பனைமரக்கொடி பறந்தது. போர் தொடங்கப் போகிறது என்றதும் இந்திரன் முதலான தேவர்கள் வானில் வந்து குழுமினர். ஆதித்யர்கள், வசுக்கள், ருத்ரர்கள், அஸ்வினி தேவர்கள் போன்றோர் அங்குவந்து சேர்ந்தனர். கௌரவர் படைகள் அணிவகுத்து நின்றபோது, அர்ஜுனன் விரைவாக அங்கே வந்தான். கௌரவ சேனை, அர்ஜுனனின் அனுமக் கொடியைக் கண்டது. காண்டீபத்தின் நாணோசையைக் கேட்டது. ஒலிப்பது தேவதத்தம் என்ற அர்ஜுனனுடை சங்கம்தான் என்று தெரிந்துகொண்டார்கள். வந்திருப்பவன் அர்ஜுனன்தான் என்பதை உணர்ந்துகொண்டார்கள். அர்ஜுனன், கௌரவப் படையை நோட்டம் விட்டான். துரியோதனனைக் காணவில்லை என்பதை உணர்ந்தான். 'உத்தரா! இங்கே துரியோதனனைக் காணவில்லை. அவன் தன்னைக் காத்துக்கொள்ளும் பொருட்டு ஓடிவிட்டிருப்பான். அனேகமாகத் தென்புறம்தான் சென்றிருக்கவேண்டும். தேரை அந்தப் பக்கமாகத் திருப்பு. அவனை வென்று பசுக் கூட்டங்களை மீட்போம்' என்றான். தேரை, முதலில் கௌரவர் படை நிற்கும் பக்கத்துக்கு ஓட்டச் செய்தான். இரண்டிரண்டு பாணங்களை விட்டு துரோணரையும், பீஷ்மரையும், கிருபரையும் வணங்கினான். இப்படிச் செய்வதை, 'நமஸ்கார பாணம்' என்பார்கள். இதைக் கண்ட துரோணர், 'வந்திருப்பவன் அர்ஜுனன்தான். அவனை எதிர்த்து ஒருவராலும் போர்புரிய முடியாது. எதிர்ப்பவர் உயிரிழப்பர். இந்தச் சேனை முழுவதையும் அவனே அழித்துவிடுவான்.' என்றார். நெய்யால் கொழுந்துவிட்டெரியும் அக்கினியைப் போல அர்ஜுனன் விளங்கினான். அவன் தோற்றத்தைக் கண்ட கௌரவ சேனை நடுங்கியது. உத்தரனை நோக்கி அர்ஜுனன், 'உத்தரா! இங்கே துரியோதனனைக் காணவில்லை. அவனைக் கண்டால், சிங்கம், சிறிய விலங்கைக் கொல்வதைப் போல அவன்மீது பாய்ந்து, கொன்றுவிடுவேன். ஆசாரியர், அஸ்வத்தாமன், கிருபர், கர்ணன், பீஷ்மர் போன்றோர் மட்டும் தென்படுகின்றனர். துரியோதனனை மட்டும் காணவில்லை. அவன் இருக்கும் இடத்தை நோக்கித் தேரைச் செலுத்து' என்றான். அர்ஜுனனுடைய உத்தரவை ஏற்ற உத்தரகுமாரன், பசுக் கூட்டங்கள் போகும் திசையில் தேரைச் செலுத்தினான். பீஷ்மருக்கு அர்ஜுனனுடைய நோக்கம் புரிந்தது. 'வீரர்களே! நீண்ட காலத்துக்குப் பிறகு அர்ஜுனனைக் காண்கிறேன். அவன் துரியோதனன் செய்த வஞ்சனைகளை எண்ணிக்கொண்டிருப்பதாய் ஊகிக்கிறேன். அவனைத்தான் இவன் தேடிக்கொண்டிருக்கிறான். அவனைக் கண்டுவிட்டால், கொல்லாமல் விடமாட்டான். எனவே, விரைந்துபோகிற அர்ஜுனனை நாம் பின்தொடர வேண்டும். கோபம்கொண்ட அர்ஜுனனுக்கு முன்னால் மகாதேவரும் நிற்க முடியாது. துரியோதனன் அகப்பட்டுக்கொண்டால், உயிரை இழந்துவிடுவான்' என்றார். இப்படிச் சொன்ன பீஷ்மர், சேனையுடன் அர்ஜுனனைப் பின்தொடர்ந்தார்.
“திவால் நெருக்கடி மற்றும் கடன் தடைக்காலம் ஆகியவற்றில் இருந்து எழுவது மட்டுமல்லாமல், நமது சமூகத் துறைகள் பாதுகாக்கப்படுவதையும், நமது வாழ்க்கை முறையின் பொருளாதார மற்றும் சமூக அம்சம் ஆகிய இரண்டும் நிச்சயமாக மேலும் பின்னடைவைக் கொண்டிருக்காது என்பதை உறுதிப்படுத்துவதும் முக்கியமானது.” இலங்கைக்கும் சர்வதேச நாணய நிதியத்திற்கும் இடையில் ஊழியர் மட்ட உடன்படிக்கையை எட்டிய போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். அதற்கிணங்க, சமூகத் தரத்தைப் பேணுதல் மற்றும் மேம்படுத்துதல் மற்றும் பாதிக்கப்படக்கூடிய குழுக்களைக் கவனிப்பதுடன், மிகவும் போட்டித்தன்மை வாய்ந்த ஏற்றுமதி சார்ந்த தொழில்துறைக்கு நாடு அர்ப்பணிப்புடன் இருக்கும் புதிய பொருளாதார யுகத்தின் ஆரம்பமாக இது கருதுவதாக ஜனாதிபதி விக்கிரமசிங்க குறிப்பிட்டார். “ஆரம்பமானது கடினமாக இருக்கும், ஆனால் நாம் செல்லும்போது இன்னும் முன்னேற முடியும் என்பதை நாங்கள் அறிவோம். எங்களுடைய அர்ப்பணிப்புதான் இப்போது முக்கியம், நாம் இங்குள்ள இலக்குகளை மட்டும் பூர்த்தி செய்யாமல், அவற்றை விட முன்னேற வேண்டும்” என்று கூறிய ஜனாதிபதி, “நாட்டிற்கு நான் வேண்டுகோள் விடுக்கிறேன், ஏற்றுமதி சார்ந்த பொருளாதாரத்திற்கு நம்மை மாற்றியமைப்போம். எங்கள் சமூக சேவைகளைத் தக்கவைத்துக்கொள்வதை எளிதாக்குங்கள். இலங்கை தனது கடன்களைக் குறைப்பதற்கும், முடிந்தால் அதன் கடன்களை அகற்றுவதற்கும் இது ஒரு தொடக்கமாக இருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். தனிப்பட்ட குறிப்பில், ஜனாதிபதி, “நான் பிறந்தபோது, ​​இலங்கைக்கு கடன் இல்லை என்றும், போர்க்காலத்தில் இருந்து மீண்டு வரும் இங்கிலாந்துக்குக் கடன் கொடுக்கப் போதுமான கையிருப்பு எங்களிடம் இருந்தது என்றும் நான் கூற விரும்புகிறேன். நாங்கள் எங்கள் ரப்பரால் போதுமான அளவு தயாரித்தோம், எங்கள் தேயிலை மற்றும் நாங்கள் எங்கள் சொந்த முயற்சியால் எங்கள் முதல் நீர்த்தேக்கத்தை உருவாக்கினோம். இப்போது அது திரு. டி.எஸ். சேனாநாயக்கவின் அரசாங்கம். ஒரு தேசமும் ஒரு நபரும் கடனற்றவர்களாக இருக்க வேண்டும் என்ற கொள்கையை அவர் நம்பினார். அவர் இந்நாட்டில் உள்ள பௌத்த பிரிவினரின் லே அமைப்பின் தலைவராக இருந்தார், மற்ற அனைவரையும் போலவே, மக்கள் கடனில் சிக்கக்கூடாது, திவாலாகிவிடக்கூடாது என்ற கோட்பாட்டைப் பின்பற்றுவதில் உறுதியாக இருந்தார். எனவே, அரசியலமைப்பின் 09வது சரத்தை நாடு பேண வேண்டுமாயின், அந்த வழியை நாடு பின்பற்ற வேண்டும் என ஜனாதிபதி குறிப்பிட்டார். “உதட்டுச் சேவைக்கு மட்டும் பணம் செலுத்த முடியாது. இதுவே தொடக்கமாகவும் முன்னோக்கி செல்லும் வழியாகவும் இருக்கட்டும், ஏனெனில் நமது சுதந்திரத்தின் 75வது ஆண்டு விழாவில் இதுவே அடுத்த 25 ஆண்டுகளுக்கு நாம் செய்யக்கூடிய சிறந்த அர்ப்பணிப்பாகும்.
பச்சை செங்கல் அல்லது சுடாத செங்கல் (mudbrick அல்லது mud-brick) என்பது சுடப்படாத காய்ந்த செங்கல் ஆகும். இது களிமண், சேறு, மணல், நெல் உமி, வைக்கோல் போன்றவற்றைத் தண்ணீரால் நன்கு கலந்து அதனால் உருவாக்கப்பட்டது. சுடாத செங்கற்கள் கிமு 9000 இலிருந்து அறியப்படுகின்றன. இருப்பினும் கிமு 4000 முதல் அவற்றின் வலிமை மற்றும் ஆயுள் அதிகரிக்க சுடப்பட்டிருக்கின்றன. சுடாத பச்சை செங்கல்லால் கட்டப்பட்ட கட்டுமானத்தை பச்சகட்டு என்று அழைக்கும் வழக்கம் தமிழ்நாட்டில் உள்ளது. ஜோர்டான் பள்ளத்தாக்கு, மேற்குக் கரை பாலஸ்தீனத்தில் புதிய, பச்சை செங்கற்கள் (2011) உலகின் மிகப் பெரிய மற்றும் பழமையான கட்டுமானங்களில் சில வான ஈலாம் ஜிகுராட்களின் கட்டுமானத்திற்காக பச்சை செங்கல் பயன்படுத்தப்பட்டது. ஈரானில் கிமு 13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சோகா ஜான்பில் , சுட்ட செங்கற்களுடன் சேர்த்து பச்சை செங்கற்கள் கொண்டு கட்டப்பட்டது. [1] சூளைக்கு எரிபொருளான விரகு மிகக் குறைவாக கிடைக்கும் வெப்பமான பகுதிகளில், செங்கற்கள் பொதுவாக வெயிலில் உலர்த்தப்படு மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன. சில சமயங்களில், செங்கல் தயாரிப்பாளர்கள் பச்சை செங்கற்களின் மேலே சுட்ட செங்கற்களை வைப்பதன் மூலமோ அல்லது வார்ப்பால் மூடுவதன் மூலமோ அதன் ஆயுளை நீட்டித்தனர். பண்டைய காலம்தொகு முத்திரை பதிக்கப்பட்ட பச்சை செங்கல். எகிப்தின். 12வது வம்ச காலத்தியது. எகிப்திய தொல்லியல் துறையின் பெட்ரி அருங்காட்சியகம், லண்டன் தெற்கு லெவண்டில் பச்சை செங்கல் உற்பத்தி மற்றும் கட்டுமானத்தின் வரலாறு மட்பாண்டத்திற்கு முந்தைய புதிய கற்காலம் (அ) (எ.கா., PPNA ஜெரிகோ) வரையிலானதாக இருக்கலாம். [2] பச்சை செங்கற்கள், மணல், களிமண், நீர் போன்றவற்றுடன் நீடித்த விரைப்புப் பொருட்கள் (எ.கா. நறுக்கப்பட்ட வைக்கோல் மற்றும் பதர்) ஆகியவற்றினாலான கலவைக் கொண்டு தயாரிக்கப்பட்டன. இவை பொதுவாக ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பண்டைய அண்மைக் கிழக்கு நாடுகள் முழுவதும் மண் சுவர்களைக் கட்ட பயன்படுத்தப்பட்ட பொருட்களாகும். [2] [3] சுடாதத செங்கற்கள் இன்றும் உலகம் முழுவதும் நவீன மற்றும் பாரம்பரிய முறைகளைப் பயன்படுத்தி தயாரிக்கப்படுகின்றன. [4] [5] உலகம் முழுவதும் மண் செங்கல் கட்டிடக்கலைதொகு 2007 இல் நைஜரில், கட்டுமானத்திற்கான சுடாத செங்கற்களின் உற்பத்தி. சுடாத செங்கல் இன்றும் பயன்படுத்தப்படுகிறது, இங்கு உருமேனியா தன்யூபு ஆற்று வடிநிலதில் காணப்படுகிறது. நைஜரின் ஜிண்டரின் "பழைய நகர்" பகுதியில், பாரம்பரிய வர்ணம் பூசப்பட்ட சுடாத செங்கலால் கட்டப்பட்ட கட்டிடங்கள். பாகித்தானில் ஒரு பஞ்சாபி சுடாத செங்கல் வீடு. யெமனின் சிபாமில் சுடாத செங்கற்களில் கட்டப்பட்ட உயரமான அடுக்கு வீடுகள். ஆத்திரேலியாவின் குக்டவுன் அருகே பச்சை செங்கல்களை உருவாக்குதல் குறிப்புகள்தொகு ↑ Roman Ghirshman, La ziggourat de Tchoga-Zanbil (Susiane), Comptes-rendus des séances de l'Académie des Inscriptions et Belles-Lettres, vol. 98 lien Issue 2, pp. 233–238, 1954 ↑ 2.0 2.1 Rosenberg, Danny; Love, Serena; Hubbard, Emily; Klimscha, Florian (22 January 2020). "7,200 years old constructions and mudbrick technology: The evidence from Tel Tsaf, Jordan Valley, Israel". PLOS ONE 15 (1): e0227288. doi:10.1371/journal.pone.0227288. பன்னாட்டுத் தர தொடர் எண்:1932-6203. பப்மெட்:31968007. Bibcode: 2020PLoSO..1527288R. ↑ Morgenstein, Maury E.; Redmount, Carol A. (1998). "Mudbrick Typology, Sources, and Sedimentological Composition: A Case Study from Tell el-Muqdam, Egyptian Delta". Journal of the American Research Center in Egypt 35: 129–146. doi:10.2307/40000466. பன்னாட்டுத் தர தொடர் எண்:0065-9991. https://www.jstor.org/stable/40000466. ↑ Littman, Robert; Lorenzon, Marta; Silverstein, Jay (2014). "With & without straw: How Israelite slaves made bricks" (in en). Biblical Archaeology Review 40 (2). https://www.researchgate.net/publication/287786412. ↑ Emery, Virginia L. (2009). "Mud-Brick". UCLA Encyclopedia of Egyptology 1 (1). https://escholarship.org/content/qt7v84d6rh/qt7v84d6rh.pdf.
ஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள் Friday, July 14, 2017 கரவுக்கானாடல்: விராடபுரியின் கரவுக்கானகத்திற்கு வருகை தந்துள்ள அரச குடும்பத்துடன் மாற்றுரு கொண்டவர்களும் வந்து சேர்ந்து விட்டிருக்கிறார்கள். இது ஆழ்மனம், இங்கு மாற்றுரு கொள்ள இயலுமா என்ன? எனவே தான் அந்தி சூரிய ஒளியில், இருள் கொண்ட, சூது கொண்டாடும் காந்தார நாட்டின் குங்கன் கூட பொன்னிற ஒளிச் சுடர இருக்கின்றான். அது தருமன் கந்தமாதனத்தில் தன்னை ஆவியாக்கி செய்த வேள்வியின் பலன் அல்லவா. அது தானே அவன். இது வெறும் மாற்றுரு தானே. குதிரையைப் பற்றிக் கொண்டு வரும் கிரந்திகன் கூட அழகனாகிவிடுகிறான் இக்கானகத்தில்!! சமைக்க வந்த வலவன் வானை நோக்கி அமர்ந்த வண்ணம் மீண்டும் பீமனாகி விடுகிறான். பிஹன்னளை என்னவாகப் போகிறாள் என்று இனித் தான் காண வேண்டும். உத்தரையின் கனவுக் காதலனாகக் கூடுமோ!!! இவ்வளவு விவரங்களிலும் ஒரு சிறு நுட்பத்தைப் படைக்க ஆசிரியர் தவறவில்லை. இங்கே சகதேவன் வரவில்லை. அப்படியென்றால் அவன் ஒருவன் மட்டுமே மாற்றுரு கொள்ளவில்லை!! அவன் ஆழத்தில் எப்போதுமே நேமியன் தான்!!
சமீபத்தில், ரஷ்யாவில் கூம்புகளில் ஆர்வம் கணிசமாக வளர்ந்துள்ளது. இது புரிந்துகொள்ளத்தக்கது. ஏராளமான தனியார் பிரதேசங்கள் தோன்றின, மக்களிடையே அலங்கரிக்கும் கலாச்சாரம் அதிகரித்தது, மேலும் இறக்குமதி செய்யப்பட்ட நடவுப் பொருட்களின் ஓட்டம் ஊற்றப்பட்டது. கூடுதலாக, கூம்புகள், பசுமையான பயிர்களைப் போலவே, ஆண்டு முழுவதும் உள்ளூர் பகுதிகளை அலங்கரிக்க முடியும் என்பது தெளிவாகியது. இது நமது குளிர்காலத்தில் குறிப்பாக உண்மை, இது 6 மாதங்களுக்கும் குறைவாகவே நீடிக்கும். கூம்புகளைத் தவிர, வெள்ளை நிலப்பரப்புகளை வேறு எதுவும் இல்லை. வகைப்படுத்தல் மிகப்பெரியது, ஆனால் நடப்பட்ட கூம்புகளின் இறுதி அளவைப் பொறுத்து, கிடைக்கக்கூடிய தோட்டத்தின் பரப்பளவு தேர்வைக் கட்டுப்படுத்துகிறது. சிறிய பகுதிகளில், நிச்சயமாக, மினியேச்சர் தாவரங்கள் மிகவும் ஆர்வமாக இருக்கும். நிச்சயமாக, மினியேச்சர் உறவினர். இந்த கருத்தில், 1.5 மீட்டருக்கு மிகாமல் உயரத்தில் உள்ள பரிமாணங்களுக்கு நம்மை கட்டுப்படுத்துவோம், எந்த குறைந்த எல்லையும் சாத்தியம், சராசரியாக இது 25-30 செ.மீ. இந்த அளவு வரம்பில் ஆர்வம் சிறிய கோடைகால குடிசைகளின் உரிமையாளர்களிடமிருந்து மட்டுமல்ல. உண்மை என்னவென்றால், அத்தகைய தாவரங்கள் பல்வேறு கலவைகளின் கீழ் மற்றும் நடுத்தர அடுக்குகளை நிரப்ப எந்த அளவிலான தோட்டத்திலும் பயன்படுத்தப்படலாம். கூடுதலாக, குளிர்காலத்தில் பனியின் கீழ் செல்லும் மினியேச்சர் தாவரங்கள், கூம்புகளின் வரம்பை கணிசமாக விரிவுபடுத்தலாம், இது சாதாரண அளவுகளில் நடுத்தர அட்சரேகைகளில் குளிர்காலத்தில் சிக்கல்களைக் கொண்டுள்ளது. இறுதியாக, இந்த அளவிலான கூம்புகள் சேகரிப்பாளர்களுக்கு ஒரு உண்மையான கண்டுபிடிப்பு. இருப்பினும், தோட்டத்தில் உள்ள கூம்புகளின் மினியேச்சர் வடிவங்களின் அலங்காரத்தை பராமரிக்க, சிறப்பு கவனிப்பு தேவை. அதன் அம்சங்கள் ஒரு குறிப்பிட்ட தாவர வகையின் தோற்றத்தின் வரலாற்றால் வரையறுக்கப்பட்ட அளவுடன் தீர்மானிக்கப்படுகின்றன. ஊசியிலை மரங்களின் குள்ள வடிவங்கள் எவ்வாறு பெறப்படுகின்றன நீங்கள் பல வழிகளில் சிறிய அளவு கொண்ட ஒரு சாகுபடியைப் பெறலாம். இது முதலில், தாவரத்தில் வளர்ச்சி ஹார்மோன்களின் விகிதத்தை ஒழுங்குபடுத்துகிறது, பெரும்பாலும் மனித உதவி இல்லாமல் இல்லை. தாவரங்களின் வளர்ச்சி செயல்முறைகள் இயற்கையான வளர்ச்சி கட்டுப்பாட்டாளர்களால் கட்டுப்படுத்தப்படுகின்றன. அவர்களில் ஒருவர் ஜிப்ரெலின். சில தாவரங்கள் மரபணு ரீதியாக மிகக் குறைவான ஜிப்பெரெலின்களை ஒருங்கிணைக்கின்றன. எனவே, அவற்றின் செல்கள் மோசமாக வளர்கின்றன, இது குள்ளத்தன்மைக்கு வழிவகுக்கிறது. இந்த குணம் பரம்பரையாக சரி செய்யப்பட்டால், எல்லா சந்ததிகளும் அப்படித்தான் இருக்கும். இருப்பினும், ஜிப்பெரெலின்களின் அளவு செயற்கையாக குறைக்கப்பட்டால் (ரிடார்டன்ட்களுடன் சிகிச்சை), பின்னர் ஒரு சிறிய, அடர்த்தியான, அழகான ஆலை சந்தை தோற்றத்துடன் பெறப்படும். ஆனால் பின்னர், ரிடார்டன்ட்களின் விளைவு முடிவடைகிறது, மேலும் ஆலை அதன் அசல், பெரும்பாலும் மிகவும் கவர்ச்சிகரமான தோற்றத்திற்குத் திரும்புகிறது. பலர் இதுபோன்ற ஒரு நிகழ்வை சந்தித்தனர்: Kalanchoe, chrysanthemums, gentian, ficuses, platycodons ஆகியவை மிகவும் அழகான பூக்கும் பந்துகளால் வாங்கப்பட்டன, பின்னர் அவை வெவ்வேறு திசைகளில் நீண்ட தளிர்களுடன் "சுடப்பட்டன". ஊசியிலையுள்ள தாவரங்களுக்கு, ரிடார்டன்ட் சிகிச்சையின் ஒரு எடுத்துக்காட்டு குளோபோசா வடிவத்தின் (சுற்று) ஸ்காட்ச் பைன் பின்னர் "குளோபோஸ்" அல்ல. இருப்பினும், ரிடார்டன்ட்கள் விலை உயர்ந்தவை, மேலும் சுற்றுச்சூழலைச் சமாளிப்பது கடினம். retardants விஷம். எனவே, அவர்கள் இப்போது முக்கியமாக வகைகளை உருவாக்குவதில் ஈடுபட்டுள்ளனர், இதில் கிபெரெலின்களின் இயற்கையான தொகுப்பு இயல்பை விட குறைவாக உள்ளது, அதாவது. மரபணு குள்ளர்களை வளர்ப்பது. ஆனால் நீங்கள் அவற்றை ஜிப்ரெலின் மூலம் தூண்டினால், அவை மீண்டும் அவற்றின் வளர்ச்சியை மீட்டெடுக்கும். "ஓவியாஸ்" பழங்களின் வளர்ச்சியைத் தூண்டுவதற்கான தயாரிப்புகளின் வடிவத்தில் கிபெரெலின்கள் ஏற்கனவே விற்பனைக்கு வந்துள்ளன. பிற தாவர வளர்ச்சி ஹார்மோன்கள் பிராசின்கள். விற்பனையில் எபின்-எக்ஸ்ட்ராவின் செயற்கை அனலாக் உள்ளது. தாவரங்களில் இயற்கை பித்தளைகள் இல்லாவிட்டால், குள்ளத்தன்மையும் ஏற்படுகிறது. பிராசின் குறைபாடுள்ள மரபணுக் குள்ளர்கள் எபின் சிகிச்சைக்குப் பிறகு வளர்ச்சியை இயல்பாக்குகிறார்கள்.எனவே, நடவு செய்வதற்கு முன், நீங்கள் தாவரத்தை எபினுடன் சிகிச்சையளித்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை, அது தீவிரமாக வளரத் தொடங்குகிறது, மேலும் சிறிது நேரத்திற்குப் பிறகு செயலில் வளர்ச்சி நின்றுவிடும், அது ஏற்கனவே தாவரத்தின் தோற்றத்தை சிதைக்கும். மூன்றாவது இயற்கையான வளர்ச்சி ஹார்மோன் ஆக்சின் ஆகும். இது உயிரணுக்களின் நீட்சியையும் பாதிக்கிறது, எனவே அவற்றின் பிரிவு. இந்த ஹார்மோனின் போதுமான தொகுப்புடன், குள்ளத்தன்மையும் ஏற்படுகிறது, ஆனால் வேறுபட்ட தரம். முதல் இரண்டு நிகழ்வுகளில் அசல் தாவரத்தின் குறைக்கப்பட்ட நகல் இருந்தால், ஆக்சின்கள் இல்லாததால் நிலைமை மாறுகிறது. தளிர்களில், முதல் இரண்டு நிகழ்வுகளைப் போலவே இன்டர்னோட்கள் குறைவது மட்டுமல்லாமல், மேம்பட்ட கிளைகளும் நிகழ்கின்றன. தளிர்கள் வலுவாக கிளைத்திருக்கும்: கிட்டத்தட்ட ஒவ்வொரு செயலற்ற மொட்டிலிருந்தும் தண்டு மீது ஒரு தளிர் வளரும். அத்தகைய குள்ளத்தன்மைக்கு ஒரு எடுத்துக்காட்டு துஜா வெஸ்டர்ன் டெடி, இலையுதிர் - வைபர்னம் சாதாரண நானா - குள்ள, அடர்த்தியான, பூக்காத பந்துகளில் இருந்து. எனவே, இந்த விஷயத்தில் நமக்கு மிகவும் விரும்பத்தக்கதாக இருக்கும் சிறுமையின் தோற்றத்தின் வழிகளில் ஒன்றை நாங்கள் கருத்தில் கொண்டோம். ஆனால் மற்றொரு வழி உள்ளது - இது இயற்கை பிறழ்வுகளின் பயன்பாடு. மேற்கில், கடந்த நூற்றாண்டின் நடுப்பகுதியில் இருந்து, அவர்கள் குறைக்கப்பட்ட அளவிலான ஊசியிலையுள்ள தாவரங்களின் தேர்வு மற்றும் தேர்வில் ஈடுபடத் தொடங்கினர். குள்ள வடிவங்கள் பொதுவாக ஆயிரக்கணக்கான நாற்றுகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்படுகின்றன. அசல் அளவிலிருந்து விலகல்கள் கொண்ட தாவரங்களின் விளைச்சலை அதிகரிக்க, விதைகளை விதைப்பதற்கு முன் இரசாயன உலைகளுடன் (கொல்கிசின்) வேண்டுமென்றே சிகிச்சை அளிக்கப்படுகிறது அல்லது γ- கதிர்வீச்சு பயன்படுத்தப்படுகிறது. இதே போன்ற பிறழ்வுகள் இயற்கையில் தன்னிச்சையாக நிகழ்கின்றன. இதன் விளைவாக, "சூனியக்காரியின் விளக்குமாறு" மரத்தில் தோன்றும் - அசாதாரணமாக வளரும் கிளைகளின் கிரீடத்தில் கட்டிகள் (ரூக்ஸ் கூடுகள் போன்றவை). இந்த கிளைகளை தொடர்புடைய பங்குகளில் ஒட்டுவதன் மூலம், ஒரு புதிய வகையான ஊசியிலையுள்ள தாவரங்கள் பெறப்படுகின்றன. அனைத்து வகையான ஊசியிலை மரங்களிலும் இத்தகைய பிறழ்வுகள் போதுமானவை. இந்த நிகழ்வுக்கு பல காரணங்கள் உள்ளன. மிகவும் பாதிப்பில்லாதது சிறுநீரக பிறழ்வு ஆகும், இது குள்ளத்தன்மை அல்லது பிரம்மாண்டத்திற்கு வழிவகுக்கும். இது பரம்பரையாக சரி செய்யப்படலாம் (சேதம் பரம்பரை கருவியை பாதிக்கும் போது), ஆனால் அது சந்ததியினருக்கு நிலைக்காது (சிறுநீரகத்தில் உள்ள ஹார்மோன்களின் விகிதம் மட்டும் மாறும்போது). பிந்தைய நிகழ்வு ரோஜாக்களின் உலகில் மிகவும் பொதுவானது (கூற்றுக்களில்) - ஐஸ்பர்க் மற்றும் குளோரியா டே வகைகள் பெரும்பாலும் பூவின் நிறம் மற்றும் அளவு ஆகியவற்றில் பிறழ்வுகளைக் கொடுக்கின்றன, முழு தாவரத்தின் அளவும் மரபுவழி பிறழ்வு அல்ல. "சூனியக்காரியின் விளக்குமாறு" ஏற்படுவதற்கான இரண்டாவது காரணம் பாக்டீரியா அல்லது பூஞ்சை தொற்று ஆகும். நோய்க்கிருமிகள் தாவர ஹார்மோன்களை சுரக்கின்றன (இந்த விஷயத்தில், சைட்டோகினின்கள்) மற்றும் சிறப்பியல்பு அறிகுறிகள் தோன்றும். பொதுவாக, தாவரத்தின் உடலில் ஒட்டுண்ணி செயல்படும் வரை மட்டுமே குள்ளத்தன்மை நீடிக்கும். மீட்புக்குப் பிறகு, அறிகுறிகள் மறைந்துவிடும். இது அக்ரோபாக்டீரியாவுக்கு பொருந்தாது (இந்த வழக்கை குணப்படுத்த முடியாது), இதன் உதவியுடன் மரபணு மாற்றப்பட்ட தாவரங்கள் பெறப்படுகின்றன. பெரும்பாலும், எப்பொழுதும் இல்லாவிட்டாலும், ஹார்மோன்களின் ஏற்றத்தாழ்வு காரணமாக, சூனிய துடைப்பங்களிலிருந்து பெறப்பட்ட தாவரங்கள் மலட்டுத்தன்மை கொண்டவை (விதை இனப்பெருக்கம் இல்லை) மற்றும் ஒட்டுதல் மூலம் மட்டுமே இனப்பெருக்கம் செய்கின்றன. இந்த ஹார்மோன்-மரபியல் கல்வித் திட்டம் அனைத்தும் குறைக்கப்பட்ட வடிவங்களைக் கொண்ட தாவரங்கள் சரியாகக் கையாளப்பட வேண்டும் என்பதைக் காட்டுவதை நோக்கமாகக் கொண்டது, மேலும் தூண்டுதல்கள் அவற்றில் பயன்படுத்தப்பட்டால், மிகவும் கவனமாக. இல்லையெனில், நீங்கள் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தலாம் - அசல் வடிவத்திற்குத் திரும்புதல். இறுதி முடிவு ஒரு பிறழ்ந்த வினோதம். சில நேரங்களில் குறைவான தன்மை வெளிப்புற நிலைமைகளின் செயலுடன் தொடர்புடையதாக இருக்கலாம்: அவற்றின் முன்னேற்றம் மற்றும் தேவையான அணுகுமுறை தாவரங்களின் அளவை அதிகரிக்கிறது, மற்றும் நேர்மாறாகவும். உதாரணமாக, தெர்மோபிலிக் தாவரங்களுக்கு, வடக்கு நோக்கி நகரும் போது, ​​குளிர்கால வெப்பநிலை தீர்க்கமான காரணியாகும். இதன் விளைவாக, மரம் சில நேரங்களில் ஒரு புதராக மாறும் அல்லது ஒரு மூலிகை வடிவமாக மாறும் (உதாரணமாக, பட்லி). கனிம ஊட்டச்சத்து கூறுகளின் குறைபாடு அல்லது அதற்கு மாறாக, அதிகப்படியான அளவு வடிவியல் பரிமாணங்களில் குறைவதற்கு வழிவகுக்கும். எனவே, குள்ள வடிவங்களுக்கு குறிப்பாக நைட்ரஜன் உரங்களுடன் தீவிரமாக உணவளிக்கக்கூடாது. வழக்கமான இயந்திர சேதம் தாவரங்களின் அளவு குறைவதற்கு பங்களிக்கிறது (காற்று வீசும் கடற்கரைகளில், பொன்சாய் உருவாகும் போது). குள்ளர்களுக்கு கூடுதலாக, வாழ்க்கையின் தொடக்கத்தில் மெதுவாக வளரும் தாவரங்கள் உள்ளன. உதாரணம் - மலை பைன் (பினஸ் முகோ): முதல் 10-30 ஆண்டுகளில், இது 1-2 மீ உயரத்திற்கு மேல் இல்லை, ஆனால் எதிர்காலத்தில் அது 10-12 மீ அடையலாம். இது மரபணு குள்ளர்கள் என்று அர்த்தமல்ல, இது இந்த இனத்தில் ஏராளமாக உள்ளது. சமீபத்தில், தேவையான அளவு மற்றும் பழக்கத்தை வழங்குவதற்காக, கூம்புகளுக்கு மோல்டிங் முறை அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. அவற்றின் வகைகளைப் பொறுத்து, தேவையான அளவு மற்றும் பழக்கத்தை அடைவதற்கான வழிகள் வேறுபட்டவை. ஆனால் அத்தகைய கூம்புகளை பராமரிப்பதில் இது முற்றிலும் மாறுபட்ட திசையாகும். இருப்பினும், இந்த விஷயத்தில், உரங்கள், குறிப்பாக நைட்ரஜன் உரங்களைப் பயன்படுத்துவதில் கட்டுப்பாடு அவசியம். மற்றும், நிச்சயமாக, ஒரு சில்லறை நெட்வொர்க்கில் ஒரு சாகுபடியைத் தேர்ந்தெடுக்கும்போது பொதுவான கொள்கை கடைசி அதிகரிப்பின் அளவு. 10 ஆண்டுகளில் ஆலை எப்படி இருக்கும் என்பதை அவள்தான் தீர்மானிப்பாள். மற்றும் வருடாந்திர வளர்ச்சி 10-15 செ.மீ., பின்னர் 10 ஆண்டுகளில் நீங்கள் மினியேச்சர் ஆலை இருந்து வெகு தொலைவில் கிடைக்கும். ஆனால் குளிர்கால கடினத்தன்மை மற்றும் வசந்த சூரியனுக்கு எதிர்ப்பு (குறிப்பாக ஊசியிலை மரங்களுக்கு முக்கியமானது) போன்ற பண்புகள் பல்வேறு வகைகளால் அல்ல, ஆனால் அது சேர்ந்த தாவரவியல் இனங்களால் தீர்மானிக்கப்படுகின்றன. குள்ள ஊசியிலை மரங்களைப் பராமரித்தல் பொதுவாக, செடி சிறியதாக இருந்தால், கிளைகளின் அடர்த்தி அதிகமாக இருக்கும். இந்த உண்மை அவர்களைப் பராமரிப்பதில் மாற்றங்களைச் செய்கிறது. இறந்த ஊசிகளின் பழுப்பு நிற "கூக்கோன்" எப்போதும் தாவரங்களுக்குள் உருவாகிறது. இது ஒரு நோய் அல்ல, ஆனால் ஒரு உடலியல் நிகழ்வு. வளர்ந்து வரும் இளம் கிளைகள் தாவரத்தின் உள் பகுதியை நிழலிடுகின்றன, இது ஊசிகளின் மரணத்திற்கு வழிவகுக்கிறது. பல தாவரங்கள், குறிப்பாக குள்ளமானவை, அதிலிருந்து தங்களைத் தாங்களே விடுவிக்க முடியாது. இத்தகைய உள் தடித்தல், இது காற்றோட்டத்தைத் தடுக்கிறது மற்றும் பூஞ்சை நோய்களின் வெடிப்புகளுக்கு பங்களிக்கிறது, இது அலங்கார விளைவை கணிசமாகக் கெடுப்பது மட்டுமல்லாமல், தாவரத்தை மரணத்திற்கு இட்டுச் செல்லும் (எந்தக் காரணமும் இல்லாமல் மிக விரைவாக உலர்த்துதல் மற்றும் ஊசிகள் விழும்). இந்த உண்மையை கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். காற்றோட்டத்தை மேம்படுத்துவதற்கும், அதன் விளைவாக, பூஞ்சை நோய்கள் வெடிப்பதற்கான நிலைமைகளை அகற்றுவதற்கும், அவ்வப்போது (ஒரு பருவத்திற்கு 1-2 முறை) உட்புற பகுதிகளில் இருந்து உலர்ந்த ஊசிகளை "குலுக்க" அவசியம். அடர்த்தியான கிரீடம் கொண்ட நடுத்தர அளவிலான தாவரங்களுக்கு கூட இந்த செயல்முறை மிதமிஞ்சியதாக இருக்காது. ஒரு பாடநூல் உதாரணம் கனடியன் ஸ்ப்ரூஸ் கொனிகா (பைசியா கிளாக்கா "கோனிகா")... குளிர்கால கடினத்தன்மை பற்றி எந்த புகாரும் இல்லை. இருப்பினும், பெரும்பாலும் அவரது மரணம் வசந்த காலத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கு பல காரணங்கள் உள்ளன. இது இருண்ட ஊசியிலையுள்ள காடுகளின் ஒரு விதான தாவரமாகும், எனவே ஈரமான காற்று மற்றும் நிழலை விரும்புகிறது. எங்கள் குளிர்கால வெப்பநிலை (2013-2014 குளிர்காலத்தை கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை) அதை நிறைய உலர்த்துகிறது. மற்றும் உறைந்த வேர்கள் ஊசிகளில் ஈரப்பதத்தை நிரப்ப வேலை செய்யாது. தாங்கக்கூடிய இருப்புக்கான ஒரு விருப்பமாக - நிழலில் இறங்குதல். ஆனால் பெரும்பாலும் வசந்த மரணத்தின் மூல காரணம் இலையுதிர்காலத்தில் ஊசிகளின் பூஞ்சை தொற்று ஆகும், இது அடர்த்தியான காடுகளால் எளிதாக்கப்படுகிறது. குளிர்காலம் நிலைமையை மோசமாக்குகிறது. எனவே, அத்தகைய தாவரங்களுக்கு வழக்கமான (இலையுதிர்காலத்தில் கட்டாயம்) உட்புற பழுப்பு "கூகோன்" சுத்தம் தேவைப்படுகிறது. இருப்பினும், ஆலைக்குள் காற்றோட்டம் வழங்குவது நோயைத் தடுக்க மட்டுமே அவசியம். மற்றும் தாவரங்களின் உள்ளேயும் மேற்பரப்பிலும் பூஞ்சைக் கொல்லிகளுடன் தடுப்பு தெளித்தல் போதுமானது. மூன்று தெளிப்புகளை (வசந்த-ஏப்ரல், கோடை-ஜூலை, இலையுதிர்-அக்டோபர்) செய்வது விரும்பத்தக்கது. தடுப்பு முகவர் - உங்கள் விருப்பம்: இரசாயன பூஞ்சைக் கொல்லிகளில் ஒன்று அல்லது ஒரு உயிரியல் தயாரிப்பு. அத்தகைய கவனிப்புடன், உங்கள் மினியேச்சர் ஆலை நோய்வாய்ப்படாது, மேலும், இறக்காது. பொதுவாக, அனைத்து ஊசியிலை மரங்களின் உயர் அலங்காரத்தை உறுதிப்படுத்த, விதிவிலக்கு இல்லாமல், தண்ணீரை விட்டுவிடாதீர்கள். தலை முதல் கால் வரை தண்ணீர், சுத்தமான தண்ணீரில் அடிக்கடி தெளிக்கவும், ஈரப்பதத்தைத் தக்கவைக்க வேர் உருண்டைகளை தழைக்கூளம் செய்யவும். ஆனால் உங்கள் தளத்தில் உள்ள மண்ணின் தன்மை மற்றும் பயிரின் விருப்பங்களை கணக்கில் எடுத்துக்கொண்டு அனைத்து பரிந்துரைகளையும் பயன்படுத்தவும்.அனைத்து ஊசியிலை மரங்களும் ஈரப்பதமான காற்றை விரும்புகின்றன, ஆனால் குறுகிய கால வேர் பந்து பூட்டுதலைக் கூட பொறுத்துக்கொள்ள முடியாது.
அரசியலமைப்புக்கான இருபத்திரண்டாம் திருத்தச் சட்டமூலம் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளால் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. சட்டமூலத்தின் மூன்றாவது மதிப்பீட்டுக்கான வாக்கெடுப்பில் ஆதரவாக 174 வாக்குகளும், எதிராக ஒரு வாக்கும் அளிக்கப்பட்டன. அதற்கு முன்னர் நடைபெற்ற இரண்டாவது மதிப்பீட்டுக்கான வாக்கெடுப்பில் ஆதரவாக 179 வாக்குகளும், எதிராக ஒரு வாக்கும் பதிவாகியிருந்தது. 19 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்துக்கு எதிராக வாக்களித்திருந்த ஒரேயொரு பாராளுமன்ற உறுப்பினரான சரத் வீரசேகர, 22 ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கும் எதிர்த்து வாக்களித்திருந்தார். அரசாங்கத்தின் பலத்தைப் பரிசீலிப்பதற்கான பரீட்சையாக அமையும் என இந்த வாக்கெடுப்பு எதிர்பார்க்கப்பட்டிருந்த வேளையில் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உள்ளிட்ட சகல தரப்பினரினதும் அமோக ஆதரவுடன் 22 ஆவது திருத்தச் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தேசிய மக்கள் முன்னணி, அரசாங்கத் தரப்பிலிருந்து வெளியேறி எதிர்க்கட்சி தரப்பில் அமர்ந்துள்ள சுயாதீனக் குழுவினர் உள்ளிட்ட அனைவரும் 22 ஆவது திருத்தச் சட்டத்துக்கு ஆதரவு வழங்கியிருந்தனர். இருந்தபோதும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, சபை முதல்வர் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க உள்ளிட்ட முக்கிய அமைச்சர்கள் சிலர் உள்ளடங்கலாக 44 பேர் வாக்கெடுப்பில் கலந்து கொண்டிருக்கவில்லை. ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரத்துக்கும், பாராளுமன்றத்தின் அதிகாரங்களுக்கும் இடையில் ஒரு நுட்பமான சமநிலையை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட இந்த அரசியலமைப்புத் திருத்தம் குறித்த எதிர்பார்ப்புக்களுடன் காணப்பட்டிருந்தது. 22 ஆவது திருத்தச்சட்டமூலமானது முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தினால் தயாரிக்கப்பட்டிருந்தது. பின்னர் ஏற்பட்ட ஆட்சிமாற்றங்களைத் தொடர்ந்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசினால் இச்சட்டத்திருத்தம் முன்வைக்கப்பட்டிருந்தது. கடந்த ஓகஸ்ட் மாதம் 22 ஆவது திருத்தச்சட்டமூலத்தை நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ முதலாவது மதிப்பீட்டுக்காகப் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார். அதனைத் தொடர்ந்து இச்சட்டமூலம் நீதிமன்றத்தில் சவாலுக்கு உட்படுத்தப்பட்டிருந்தது. வழக்குகளை விசாரித்த உயர்நீதிமன்றம் திருத்தத்தில் முன்மொழியப்பட்டிருந்த சில திருத்தங்களை நிறைவேற்றுவதற்கு விசேட பெரும்பான்மை மாத்திரமன்றி சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பதைதத் தனது வியாக்கியானத்தில் குறிப்பிட்டிருந்தது. இதற்கமைய உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு அமைய சட்டமூலத்துக்கான திருத்தங்களைக் கொண்டுவர அரசாங்கம் இணங்கியது. இதற்கு உட்பட்டு தயாரிக்கப்பட்ட திருத்தங்கள் நீதி அமைச்சுசார் ஆலோசனைக் கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்டிருந்தது. 19 ஆவது திருத்தத்தில் உள்ளடக்கப்பட்டிருந்த விடயங்கள் பல இதில் எவ்வித மாற்றமும் இன்றி உள்ளடக்கப்பட்டிருப்பதாக விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்திருந்தார். விசேடமாக இரட்டைப் பிராஜவுரிமை கொண்டவர்கள் தேர்தல்களில் போட்டியிட முடியாது போன்ற விடயங்கள் 20 ஆவது திருத்தச் சட்டமூலத்தின் ஊடாக நீக்கப்பட்டிருந்தாலும், 22வது திருத்தத்தின் ஊடாக மீண்டும் கொண்டுவரப்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டியிருந்தார். இதற்கும் அப்பால் சுயாதீன ஆணைக்குழுக்களைப் பலப்படுத்துவது, பாராளுமன்றத்தின் அதிகாரங்களைப் பலப்படுத்துவது போன்ற விடயங்கள் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன. இருந்தபோதும் பாராளுமன்றத்தைக் கலைப்பதற்கான காலப்பகுதி குறித்த கரிசனை பொதுஜன பெரமுன கட்சியினரிடையே காணப்பட்டது. பத்தொன்பதாவது திருத்தத்தின்படி நான்கரை வருடங்களுக்குப் பின்னரே ஜனாதிபதி பாராளுமன்றத்தைக் கலைக்க முடியும் என்ற விடயம் குறிப்பிடப்பட்டிருந்தது. எனினும், கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் கொண்டுவந்த 20 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தில் நான்கரை வருடங்கள் இரண்டரை வருடங்களாகக் குறைக்கப்பட்டிருந்தது. பாராளுமன்றத்தைக் கலைக்கும் காலப்பகுதி 22 ஆவது திருத்தச்சட்டமூலத்திலும் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. இருந்தபோதிலும் தற்போதைய அரசியல் சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு இரண்டரை வருடங்களில் பாராளுமன்றம் கலைக்கப்படுவதை பொதுஜன பெரமுன உறுப்பினர்கள் விரும்பவில்லை. மீண்டும் நான்கரை வருடங்கள் பாராளுமன்றம் கலைக்கப்படக் கூடாது என்பதை வலியுறுத்தும் வகையில் திருத்தம் கொண்டுவரப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டை எடுத்தனர். இது மாத்திரமன்றி இரட்டைப் பிரஜாவுரிமை உள்ளவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாது என்பதை நீக்கும் திருத்தம் கொண்டுவரப்பட வேண்டும் என்றும் அரசுக்கு அழுத்தம் கொடுக்கத் தொடங்கினர். இருந்தாலும், குழுநிலையில் திருத்தங்களைக் கொண்டுவருவதாயின் அதற்கும் மூன்றில் இரண்டு பெரும்பான்மை அவசியம் என சட்டமா அதிபர் கூறியிருந்தமையால், மேற்சொன்ன விடயங்களுக்கான திருத்தங்களைக் கொண்டுவருவதில் அவர்களுக்குச் சிக்கல் காணப்பட்டது. இதனால் 22 ஆவது திருத்தச்சட்டமூலத்துக்கு ஆதரவு வழங்கும் விடயத்தில் பொதுஜன பெரமுன உறுப்பினர்களுக்கிடையில் தயக்கம் இருந்தது. இந்தக் காரணத்தினாலேயே கடந்த பாராளுமன்ற அமர்வு வாரத்தில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவிருந்த 22 ஆவது திருத்தச்சட்டமூலம் பிற்போடப்பட்டிருந்தது. மறுபக்கத்தில், 22 ஆவது திருத்தச்சட்டமூலமானது மக்களை ஏமாற்றும் அரசாங்கத்தின் முயற்சி என்று எதிர்க்கட்சியினர் குற்றஞ்சாட்டியுள்ளனர். 22 ஆவது திருத்தத்தின் மூலம் ஜனாதிபதியின் அதிகாரங்கள் எதுவும் குறைக்கப்படவில்லையென்றும், அவருக்கான அதிகாரங்கள் பலப்படுத்தப்பட்டிருப்பதாகவும் விவாதத்தில் கலந்து கொண்ட பல எதிர்க்கட்சி உறுப்பினர்கள் விசனம் தெரிவித்திருந்தனர். இருந்தபோதும் நாட்டின் நன்மையைக் கருத்திற்கொண்டு அரசியலமைப்புத் திருத்தத்துக்கு ஆதரவு வழங்குவதாக அவர்கள் கூறியிருந்தனர். ஆளும் கட்சி சார்பில் உரையாற்றியிருந்த பொதுஜன பெரமுனவின் பின்வரிசை உறுப்பினர்கள் பலர், கடந்த காலங்களில் தமது வீடுகள் பல தீக்கிரையாக்கப்பட்டமையைச் சுட்டிக்காட்டினர். ஐந்து வருடங்கள் சேவையாற்றுவதற்கு மக்கள் தமக்கு வழங்கிய ஆணையை இரண்டரை வருடங்களில் இல்லாமல் செய்வது ஏற்றுக் கொள்ள முடியாதது என்பதையும் அவர்கள் கூறியிருந்தார்கள். 1978 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட அரசியலமைப்பு இதுவரை சுமார் 21 தடவைகள் திருத்தத்துக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. இதனை மேலும் மேலும் திருத்தத்துக்க உள்ளாக்காமல் புதிய அரசியலமைப்பைக் கொண்டு வர வேண்டியதன் தேவையைப் பல உறுப்பினர்களும் தமது உரைகளின் போது சுட்டிக்காட்டத் தவறவில்லை. 22 ஆவது திருத்தச்சட்டமூலம் குறித்து கடந்த வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகள் இரு தினங்களும் முழுநாள் விவாதம் நடைபெற்றது. குழுநிலையில் அராங்கத்தினால் கொண்டுவரப்பட்ட திருத்தங்களும் ஏற்றுக் கொள்ளப்பட்டன. 22 ஆவது திருத்தச்சட்டமூலம் என்ற பெயரை 21 ஆவது திருத்தச்சட்டமூலம் என மாற்றுவதற்கும் சபை அங்கீகாரம் வழங்கியது. இதற்கமைய பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள குறித்த அரசியலமைப்புத் திருத்தச்சட்டமூலம் சபாநாயகரினால் கையொப்பமிடப்பட்டு சான்றுரைப்படுத்தப்பட்டதும் 21 ஆவது அரசியலமைப்புத் திருத்தமாக நடைமுறைக்கு வரும். பி.ஹர்ஷன் Comments Your name Subject Comment * Leave this field blank Related Articles யாழ்ப்பாணத்தை உலுக்கும் போதை அரக்கர்கள் “எனது வாழ்க்கையே அழியும் என நான் நினைக்கவில்லை” ஆரம்பத்தில் கஞ்சா பத்துவதற்கு நண்பர்கள் பழக்கிவிட்டார்கள். சிறிது நாட்களின்... GSP சலுகைகளை தொடர்ந்தும் தக்க வைக்குமா இலங்கை கடந்த மூன்றாண்டு காலப்பகுதியில் உலக நாடுகளின் பொருளாதாரம் மூன்று விதமான அதிர்ச்சிகளை சந்திக்க நேர்ந்தது. முதலாவது உலகளாவிய... ஆட்சியை நிராகரிப்பது பெரிய விடயமல்ல; அதை ஈடு செய்யக் கூடிய எதிர்த்தரப்பு எது? “வாழ்க்கைச் செலவை ஈடு செய்ய முடியவில்லை. சம்பளத்தை அதிகரியுங்கள். அல்லது இடைக்கால உதவிக் கொடுப்பனவைத் தாருங்கள்” என்று அரச... சீனாவுக்கு அருகே நெருங்கி கூட்டு இராணுவப் பயிற்சி! அமெரிக்காவுடன் சேர்ந்து அதிரடி கூட்டு இராணுவப் பயிற்சியை விரைவில் மேற்கொள்ளவுள்ளதாக இந்தியா உத்தியோகபூர்வமாகத்... அரசியல் ரீதியில் ஒற்றுமை இன்றேல் தமிழர் பிரச்சினைக்கு தீர்வே இல்லை! சுயாதீன ஆணைக்குழுக்களைப் பலப்படுத்தி, பாராளுமன்றத்தின் செயற்பாடுகளை ஆதரிக்கும் வகையிலான 22 ஆவது திருத்தச் சட்டம் அனைத்துக்... கஞ்சி குடித்தாவது பசியைப் போக்க பயிர்செய்ய வழிவிடுங்கள்! கஞ்சி குடித்தாவது பசியைப் போக்க பயிர்செய்ய வழிவிடுமாறு வனவளத் திணைக்களத்திடம் வவுனியா வடக்கு, காஞ்சிரமோட்டை மக்கள் கண்ணீர்... வடபுல முஸ்லிம்களின் வாழ்வியல் சவால்களுக்கு விடிவு தேடுவது யார்? பிறப்பிடத்தால் வலிகளைச் சுமந்த வடபுல முஸ்லிம்களின் வாழ்வியல் சவால்களுக்கு விடிவு தேடுவது யார்? கரடு முரடான பாதைகளில் கட்டி... மக்களின் உணர்வுகளைப் பாதிக்கும் வகையில் செயற்படும் தொல்லியல் திணைக்களம் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழ்ந்து வருகின்ற தமிழ் மக்களின் அபிலாசைகள் மற்றும் அவர்கள் எதிர்கொள்கின்ற பிரச்சினைகள்... சட்டக் கல்லூரி பரீட்சைகள் இனிமேல் ஆங்கிலத்திலா? இதுவரைகாலமும் சட்டக் கல்லூரியின் பரீட்சைகளுக்கு தாம் விரும்பிய மொழியில் மாணவர்கள் தோற்றுவதற்கு இடமளிக்கப்பட்டு வந்த நிலையில்... இன்பம் தரும் தீபாவளி இந்துக்களால் பரவலாகக் கொண்டாடப்படும் பண்டிகையான தீபாவளி, இந்துக்கள் வசிக்கும் பிற நாடுகளிலும்கூட உற்சாகத்துடன்... அரசாங்கத்தின் பலத்தை மீண்டும் நிரூபித்துள்ள 22 ஆவது திருத்தம்! அரசியலமைப்புக்கான இருபத்திரண்டாம் திருத்தச் சட்டமூலம் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளால் பாராளுமன்றத்தில்... மக்கள் வழங்கும் ஆதரவை ஆற்றில் கரைத்த புளியைப்போல கரைத்துவிடும் தமிழ் தலைமைகள் “தமிழரசுக் கட்சி மட்டுமா தவறிழைத்துள்ளது? எதற்காக அதை இப்படிப் போட்டுத் தாக்கியிருக்கிறீங்கள்? தந்தை செல்வா காலத்திலிருந்து...
A picture taken on July 29, 2020 shows pilgrims circumambulating around the Kaaba, Islam's holiest shrine, at the centre of the Grand Mosque in the holy city of Mecca, at the start of the annual Muslim Hajj pilgrimage. - Mask-clad Muslim pilgrims began the annual hajj, dramatically downsized this year as the Saudi hosts strive to prevent a coronavirus outbreak during the five-day pilgrimage. The hajj, one of the five pillars of Islam and a must for able-bodied Muslims at least once in their lifetime, is usually one of the world's largest religious gatherings. (Photo by STR / AFP) 0 457 Share சவூதி ஹஜ் அமைச்சின் ஹஜ் யாத்திரை குறித்த அறிவிப்புகள் கிடைத்தால் மக்களுக்கு தெளிவு படுத்தப்படும் (ஏ.ஆர்.ஏ.பரீல்) கொவிட் 19 வைரஸ் தொற்று நோய் பரவல் கார­ண­மாக இவ்­வ­ருடமும் இலங்­கை­யர்­க­ளுக்கு ஹஜ் கட­மைக்­கான வாய்ப்பு இல்­லை­யெ­னவும் அதற்­கான முயற்­சி­களில் ஈடு­பட வேண்­டா­மெ­னவும் அரச ஹஜ் குழு முஸ்­லிம்­களை வேண்­டி­யுள்­ளது. ஷவ்வால் பிறை 7இல் சவூதி அரே­பி­யாவின் விமான நிலை­யங்கள் திறக்­கப்­படும் என சவூதி அரே­பியா ஏற்­க­னவே அறி­வித்­தி­ருந்­த­போதும் விமான நிலை­யங்கள் திறக்­கப்­ப­ட­வில்லை. அத்­தோடு இந்­தியா, பாகிஸ்தான், இலங்கை, மாலை­தீவு போன்ற நாடு­களின் விமா­னங்­க­ளுக்கும் சவூதி அரே­பிய அரசு தடை­வி­தித்­துள்­ளது என அரச ஹஜ் குழுவின் தலைவர் அஹ்கம் உவைஸ் ‘விடி­வெள்­ளி’க்குத் தெரி­வித்தார். மேலும் அவர் கருத்து தெரி­விக்­கையில், சவூதி அரே­பிய ஹஜ் அமைச்சு இவ்­வ­ருட ஹஜ் யாத்­தி­ரையை கண்­டிப்­பான சுகா­தார வழி­காட்­டல்­க­ளுடன் அனு­ம­திக்­க­வுள்­ள­தா­கவும் யாத்­தி­ரி­கர்­களின் பாது­காப்பு உறுதி செய்­யப்­படும் எனவும் தெரி­வித்­தி­ருந்­தது. இவ்­வ­ரு­டத்­துக்­கான ஹஜ் யாத்­தி­ரைக்கு செயல்­மு­றைத்­திட்­ட­மொன்­றினை விரை­வில்­அ­றி­விக்­க­வுள்­ள­தா­கவும் சவூதி ஹஜ் அமைச்சு தெரி­வித்­தி­ருந்­தாலும் இது­வரை அவ்­வா­றான அறி­விப்பு இலங்­கைக்கு கிடைக்­க­வில்லை. அவ்­வா­றான அறி­விப்பு கிடைக்­கப்­பெற்­றாலும் இவ்­வ­ருடம் இலங்­கையில் ஹஜ் ஏற்­பா­டு­களை மேற்­கொள்­வது சாத்­தி­யப்­ப­ட­மாட்­டாது. ஏனென்றால் ஹஜ் ­யாத்­திரை மேற்­கொள்ளும் யாத்­தி­ரி­கர்கள் 14 நாட்கள் இலங்­கையில் தனி­மைப்­ப­டுத்­தலில் இருக்க வேண்டும். பிசிஆர் பரி­சோ­தனை மேற்­கொள்ள வேண்டும். அத்­தோடு சவூதி அரே­பி­யா­விலும் பிசிஆர் பரி­சோ­தனை மேற்­கொள்­ள ­வேண்டும். எனவே தடுப்பூசி பெற்றுக் கொண்டவர்களையே புனித தலங்களில் அனுமதிக்க முடியும் என ஏற்கனவே சவூதி அறிவித்துள்ளது. இவ்­வா­றான நடை­மு­றை­க­ளினால் ஹஜ் யாத்திரை சாத்தியப்படமாட்டாது. சவூதி அரேபிய ஹஜ் அமைச்சின் ஹஜ் யாத்திரை தொடர்பான அறிவிப்புகள் கிடைக்கப்பெற்றால் அது தொடர்பில் மக்களுக்கு தெளிவு படுத்தப்படும் என்றார். – Vidivelli
கேரள மாநிலம் கோட்டயம் பயஸ் என்ற இடத்தில் கன்னியாஸ்திரிகள் மடம் உள்ளது. இந்த மடத்தில் உள்ள கிணற்றில் 1992-ம் ஆண்டு மார்ச் 27-ந் தேதி அபயா என்ற 19 வயது இளம் கன்னியாஸ்திரி என்பவர் இறந்து கிடந்தார். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்திய கோட்டயம் போலீசாரும், குற்ற புலனாய்வு துறையும் தற்கொலை என வழக்கை முடித்து வைத்தது. பின்னர் இந்த வழக்கு ஐகோர்ட்டு உத்தரவின் பேரில் 1993-ம் ஆண்டு மார்ச் 23-ந் தேதி கொச்சி சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றப்பட்டது. இந்த விசாரணையில், இதில் கொலைக்கான ஆதாரங்கள் இல்லை என 3 முறை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. எனினும் 2007-ம் ஆண்டு மீண்டும் சி.பி.ஐ. புதிய குழு விசாரணையை தொடங்கியது. விசாரணையின் ஆரம்ப கட்டத்தில், போலீஸ் அதிகாரிகள் கொலைக்கான ஆதாரங்களை அழித்தது, உடற்கூறு பரிசோதனை அறிக்கையை திருத்தியது உள்பட பல்வேறு மோசடிகள் கண்டு பிடிக்கப்பட்டதையடுத்து இந்த வழக்கு விசாரணை சூடு பிடித்தது. இதை தொடர்ந்து 2008-ம் ஆண்டு இந்த வழக்கில் அதிரடி திருப்பமாக பாதிரியார் தாமஸ் கோட்டூர், கன்னியாஸ்திரி செபி மற்றும் பாதிரியார் ஜோஸ் ஆகியோரை சி.பி.ஐ. அதிரடியாக கைது செய்தது. பாதிரியார் தாமஸ் கோட்டூர் மற்றும் கன்னியாஸ்திரி செபி ஆகிய இருவரும் தகாத உறவில் ஈடுபட்டதை இளம் கன்னியாஸ்திரி அபயா நேரில் பார்த்து விட்டார். இதனால் இந்த விவகாரம் வெளியே தெரிந்தால் அவமானமாகி விடும் என நினைத்த அவர்கள், அபயாவை கோடாரியால் தாக்கி கிணற்றில் தள்ளி கொலை செய்தது தெரியவந்தது. பின்னர் இது தொடர்பான வழக்கு திருவனந்தபுரம் சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. 2009-ம் ஆண்டு ஜூலை 17-ந் தேதி கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில் பாதிரியார் ஜோஸ் மீதான குற்றச்சாட்டு தகுந்த ஆதாரங்களுடன் நிரூபிக்கப்படாத நிலையில் அவரை கோர்ட்டு விடுதலை செய்தது. அதன் பின்னர் கடந்த ஆகஸ்டு 26-ந் தேதி மீண்டும் விசாரணை தொடங்கியது. இந்த வழக்கில் சேர்க்கப்பட்ட 177 சாட்சிகளில் 49 பேர் சாட்சியம் அளித்தனர். இதில் ஒரு கன்னியாஸ்திரி உள்பட சிலர் முரண்பட்ட தகவல்களை அளித்ததால், வழக்கு விசாரணையில் மீண்டும் பின்னடைவு ஏற்பட்டது. இதன் பின்னர் இந்த வழக்கில் ஒரு முக்கிய திருப்பம் ஏற்பட்டது. அதாவது சம்பவம் நடந்த அன்று பாதிரியார் தாமஸ் கோட்டூர், கன்னியாஸ்திரி செபி ஆகிய 2 பேரும் கிணற்றை எட்டி பார்த்தபடி பதற்றமாக இருந்ததாகவும், மிக மோசமான சூழலில் அவர்கள் இருந்ததாகவும் ராஜு என்ற திருடன் அளித்த வாக்குமூலம் தான், பாதிரியார் தாமஸ் கோட்டூர் மற்றும் கன்னியாஸ்திரி செபி ஆகிய இருவரையும் இந்த வழக்கில் சிக்க வைத்தது. கடந்த 28 ஆண்டுகளாக நடந்து வந்த வழக்கு விசாரணை முடிவுக்கு வந்த நிலையில் நேற்று பாதிரியார் தாமஸ் கோட்டூர், கன்னியாஸ்திரி செபி ஆகியோர் 2 பேரையும் கொலை குற்றவாளிகள் என திருவனந்தபுரம் சி.பி.ஐ. கோர்ட்டு உறுதி செய்து உத்தரவிட்டது. தீர்ப்பை கேட்டதும் கன்னியாஸ்திரி செபி கதறி அழுதார். பாதிரியார் தாமஸ் கோட்டூர் இறுகிய முகத்துடன் காணப்பட்டார். குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் இன்று அறிவிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கன்னியாஸ்திரி அபயா கொலை வழக்கில் குற்றவாளிகள் 2 பேருக்கான தண்டனை விவரத்தை இன்று திருவனந்தபுரம் சி.பி.ஐ. கோர்ட்டு வெளியிட்டுள்ளது. அதன்படி இந்த வழக்கின் முதல் குற்றவாளியான பாதிரியார் தாமஸ் கோட்டூருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், ரூ. 6.5 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. அடுத்ததாக வழக்கின் 2வது குற்றவாளியான கன்னியாஸ்திரி செபிக்கு ஆயுள் தண்டனையும், ரூ. 5 லட்சம் அபராதமும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 28 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கொலை வழக்கில் பாதிரியார், கன்னியாஸ்திரி இருவரும் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டு, அவர்களுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ள சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேசத்தின் ஷாஹின் பகுதியை சேர்ந்தவர் பெண் ஒருவருக்கு இரண்டு தலைகள், மூன்று கைகளுடன் குழந்தை பிறந்துள்ளது. குழந்தையின் மூன்றாவது கையானது, குழந்தையின் இரண்டு தலைகளுக்கும் இடையே உள்ளது. இதைத்தொடர்ந்து குழந்தை மேலதிக சிகிச்சைக்காக இந்தூர் மஹாராஜா யஷ்வந்த்ராவ் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளது. கருவுற்றிருந்த போது செய்த சோதனையில் இரட்டையர்கள் போன்றே தெரிந்துள்ள நிலையில் குழந்தை பிறந்த பின்னர் முழுமையான வடிவம் தெரியவந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். - Advertisement - குழந்தையின் நிலமை கவலைக்கிடமாகவே உள்ளது. இதுபோன்ற நிலையில், பெரும்பாலான குழந்தைகள் கருவிலே உயிரிழந்துவிடும், அல்லது பிறந்து 48 மணி நேரத்தில் உயிரிழந்துவிடும் என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். இவ்வாறான குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சை செய்யவும் வாய்ப்புகள் உள்ளது. எனினும், 60 முதல் 70 சதவீத குழந்தைகள் உயிர் பிழைக்க வாய்ப்பில்லை என்று வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். குழந்தை இந்தூர் மஹாராஜா யஷ்வந்த்ராவ் வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு வைத்தியர்களின் தீவிர கண்காணிப்பில் உள்ளது.
Share on Facebook Follow on Facebook Add to Google+ Connect on Linked in Subscribe by Email Print This Post இலங்கையின் முதன்மை சுற்றுலா இடங்களில் ஒன்று சிகிரியா. இதை Laion Rock என ஆங்கிலத்தில் அழைப்பர். இலங்கையின் மத்திய மாகாணத்தில் உள்ள மாத்தளை மாவட்ட பகுதியில் (Matale District) இது உள்ளது. உலக Heritage Siteகளில் ஒன்றான இதில் உள்ள ஓவியங்கள் உலக பிரசித்தம். இந்த ஓவியங்கள் இந்தியாவில் உள்ள அஜந்தா குகையில் உள்ள (Ajanta Caves) ஓவியங்களை ஒத்தது. இதை காசியப்ப அரசன் கி.பி. 477-495 ஆண்டு வரையான காலங்களில் நிர்மாணம் செய்ததாக கூறப்படுகிறது. காசியப்பனின் மறைவின் பின் இது புத்த துறவிகள் தங்குமிடமாக மாறியது. தனது தந்தை தாதுசேனாவை (Dhatusena) உயிருடன் சுவரில் புதைத்து கொலை செய்தபின் ஆட்சியை கைப்பற்றிய காசியப்பன் அதுவரை தலைநகராக இருந்த அனுராதபுரத்தை கைவிட்டு சிகிரியாவை தலைநகர் ஆக்கினார். 495 ஆம் ஆண்டு இந்தியாவில் இருந்து உதவிகளுடன் மீண்டு வந்து காசியப்பனை வென்ற காசியப்பனின் சகோதரன் மொகலாலன் மீண்டும் அனுராதபுரத்தை தலைநகர் ஆக்கினார். இதன்பின் 16ஆம் 17ஆம் நூற்றாண்டுகளில் இது கண்டி இராச்சியத்தின் பாகமானது. சுமார் 470 மீட்டர் உயரமான இந்த சிங்க வடிவிலான பாறையின் உச்சத்தில் ஒரு அரண்மைக்கு தேவையான எல்லா வசதிகளும் உண்டு. சுற்றாடல் பகுதியில் இருந்து சுமார் 200 மீட்டர் வரை உயரமான இது UNESCOவின் World Herritage Centre தராதரம் பெற்ற ஒரு சின்னமாகும். சுமார் 1.5 hectares (15,000 square meters) பரப்பளவு கொண்ட இந்த பாறையின் உச்சத்தில் குடைந்தெடுத்து உருவாக்கப்பட்ட தடாகம் மட்டும் சுமார் 27 மீட்டர் நீளமும் 21 மீட்டர் அகலமும் கொண்டது. குறிப்பு: இங்கு செல்வதற்கு இலகுவான பிரதான நகரங்களில் இருந்து பொது போக்குவரத்து சேவைகள் இல்லை. அதனால் ஒழுங்க செய்யப்பட வாகனங்களிலேயே செல்வது அவசியம். வெளிநாட்டவருக்கான நுழைவு கட்டணமும் இலங்கையரைவிட முகவும் அதிகம். தேவையான குடி தண்ணீர் எடுத்து செல்வது நன்று.Guide சேவையை பெறவேண்டிய அவசிம் இல்லை, சுயமாக ஏறி பார்வையிடலாம். சுற்றுலா: அழகிய சிகிரியா (இலங்கை) added by admin on December 23, 2013 View all posts by admin → © 2022, ↑ Truth is knowledge © www.navakudil.com 2020. All materials on this Web site are the property of www.navakudil.com. Unauthorized use and/or duplication of these material without express and written permission is strictly prohibited. Links with small excerpts may be used, provided that clear credit is given to this Web site. Powered by WordPress - Gabfire Themes
30 வருட யுத்த காலத்தின் பின்னர் இந்த நாட்டில் இடம்பெறும் முதலாவது மேதினம் நாடு முழுவதுமாக நடைபெறுகிறது. மலையகத்தை பொறுத்தவரை மேதினம் ஒரு ஆலய திருவிழா, சடங்கை போல இடம்பெற்று வருகிறது. மேதினம் தொழிலாளர்கள் தினமாகும். முதலாளித்துவத்திற்கு எதிராக எழும்பிய அலைககளினால் ஏற்படுத்தப்பட்ட தொழிலாளர் தினத்தின் வரலாறு நீண்டதோர் வரலாறாகும். தொழிலாளர்களின் அடிமைத்தன வாழ்வுக்கு எதிராக அமெரிக் சிக்காகோ நகரில் 1889 மே மாதம் 01 திகதி மேற்கொள்ளப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் விளைவாக ஏற்றபட்டதன் பயனே மே 1ம் திகதிய தொழிலாளர் தினமாகும். தொழிலாளர்களின் ஒற்றுமையின் விளைவாக 1890 மே 1ம் திகதி மாபெரும் ஆர்ப்பாட்டம் ஏற்பட்டது. இச் சம்பவத்தின் பின்னரேபல நாடுகளில் மே முதலாம் திகதி உலகத் தொழிலாளர் தினமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆனால் இன்று மலையகத்தில் மேதினம் ஒரு கேலிக்கூத்தாக அதன் புனித தன்மைக்கு எதிராக இடம் பெறுகிறது. வெறுமனே வருடா வருடம் கோஷங்களை எழுப்பியவாறு ஊர்வலத்தை ஏற்படுத்துவதாலும் கூட்டத்தின் இறுதியில் புதிய தீர்மானங்களை நிறைவேற்றுவதாலும் எமது சமுதாயத்திற்கு இதுவரை எதுவுமே நன்மைகள் கிடைக்கப்பெற்றதாக தெரியவில்லை. கடந்தகால மேதினங்களில் எழுப்பப்பட்ட கோஷங்களாலும் தீர்மானங்களாலும் என்ன பயனை எமது மக்கள் எட்டியுள்ளனர். தொழிற்சங்கத் தலைவர்களை மகிழ்விததது மட்டுமே எமது மக்களுக்கு கிடைத்த வரப்பிரசாதமாகும். மலையக பாட்டாளி மக்களின் உரிமையை தட்டிக்கேட்கும் ஒரு சந்தர்ப்பமாக மலையகத்திலும் மேதினம் மாற வேண்டும். ஏட்டிக்குப் போட்டியாக ஒவ்வொரு தொழிற்சங்கமும் தெருக்கூத்து நாடகங்களை நடடத்துவதுபால தலைவர்களின் செல்வாக்கை பிரதிபலிக்கும் நிகழ்வாகிவிட்டது மேதினம். தொழிலாளர்களின் உணர்வுகளை கொண்ட தொழிலாளர் தினமாக மேதினம் மாற்றம் பெற வேண்டும். வெறுமனே இந்திய சினிமா பாடகர்களையும் வெத்துவேட்டு தீர்மானங்களை கொண்டு மேதினத்தை நிரப்புவதைவிட எமது மண்ணுக்காகவும் தொழிலாளர் வர்க்கத்துக்காகவும் உயிர்நீத்த மலையக தியாகிகளுக்கு மரியாதை செலுத்தும் தினமாக மாற்றம் பெற வைக்க வேண்டும். இலட்சக்கணக்கான செலவுகளை செய்து பந்தா மேதினக் கூட்டங்களை நடத்துவதை விட்டு அச் செலவு பணத்தை கல்வி செயற்பாடுகளை மேற்கொள்ள முடியாதுள்ள மலையக மாணவ மாணவிகளுக்கு வழங்கினால் அதுவே எமது சமுதாயத்தின் அறிவுக் கண்கள் திறப்பதற்கான அத்திவாரமாக அமையும் நடைமுறைக்கு ஒத்துவராத செயல்களை கைவிட்டு நடைமுறை வழிக்கு ஏற்ற வகையில் எமது மக்களே மேதினத்தை மாற்றம் பெற வைக்க வேண்டும். எமது பாட்டாளி வர்க்க போராட்டத்தில் முதன் முதலாக 1939 ஜனவரி 12ம் திகதி முல்லோயா போராட்டத்தில் சுரவீர என்ற பொலிஸ்காரரால் கோவிந்தன் சுட்டுக் கொல்லப்பட்டார். இவர் முதல் மலையக மக்களின் போராட்டத்தில் கண்டி பல்லேகல தோட்டத்தை சேர்ந்த பழனிவேல்(1979) வi 36 தியாகிகள் உயிரை இழந்துள்ளனர். இந்த தியாகிகளை எந்தவொரு தொழிற்சங்கமோ அல்லது அரசியல் கட்சிகளோ மேதினத்தினத்திலாவது நினைவுகூராமை வருந்தத்தக்கதாகும்.
நான் சந்தோசமா இல்ல அம்மு.! கெளதம் கார்த்திக்- மஞ்சிமா மோகன் திருமணத்திற்கு வாழ்த்து கூறி கீர்த்தி சுரேஷ் போட்ட பதிவு!! ராவண அழகி.! இந்த வயசிலயும் செம மாடர்னாக, ஹீரோயின்களுக்கே டப் கொடுக்கும் நடிகை சீதா.! என்ன ஓவியா பாதியா வந்துருக்கா.! பூமர் அங்கிளாக கலக்கும் யோகிபாபு! ரசிகர்களை கவர்ந்த ட்ரைலர் இதோ !! ஏன் இப்படி?? அந்த உடையில் பாத் டப்பில் படுத்து பிரியா பவானி ஷங்கர் கொடுத்த போஸ்! வைரல் புகைப்படம்!! வாவ்.. செம கியூட்.! வெளிநாட்டில் மனைவி ஷாலினியுடன் ரொமான்டிக்காக நடிகர் அஜித்.! இணையத்தை கலக்கும் புகைப்படம்!! பிரம்மாண்டமாக நடந்த கெளதம் கார்த்திக் - மஞ்சிமா மோகன் திருமணம்.. நேரில் வாழ்த்திய பிரபலங்கள்., குவியும் வாழ்த்துக்கள்.! அட.. காமெடி நடிகர் சாம்ஸின் மகனா இது.! ஹீரோ மாதிரி சூப்பரா இருக்காரே.! தீயாய் பரவும் புகைப்படம்!! கோடை விடுமுறையை கணக்கில் வைத்து ரிலீசாகும் படங்கள்... அசத்தல் லிஸ்ட் இதோ.. மக்களே ரெடியா?..! ஒரே கும்மாளம்தான்.! வெளிநாட்டில் தோழிகளுடன் செம ஆட்டம் போட்ட ஹன்சிகா.! வைரல் வீடியோ.!! 18 வயது பட்டாம்பூச்சியான அனிகா.! ப்பா.. பார்ட்டியில் செம ஹாட்டாக எப்படி ஜொலிக்கிறார் பார்த்தீங்களா!! வைரலாகும் கிளிக்ஸ்!! சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நாயகி என்ற தொடரில் கதாநாயகியாக நடித்துவருபவர் வித்யா பிரதீப். சைவம், பசங்க 2 , மாறி 2 , தடம் போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் வித்யா. சினிமாவையும் தாண்டி இவர் ஒரு அறிவியல் விஞானியும் கூட. இவர் நடித்துவரும் நாயகி சீரியல் சன் டிவி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. கதையின் படி நாயகன் திருமுருகனை காதலித்து திருமணம் செய்துகொண்டார் வித்யா. திருமணம் முடிந்து இவர்களுக்கு இன்னும் முதலிரவு நடைபெறவில்லை. இந்நிலையில் வித்யாவை பொது இடத்தில் பார்க்கும் ரசிகர்கள் முன்னதாக திருமணம் எப்போது என்று கேட்டுள்ள்னனர், அது கொஞ்சம் டீசென்டாக இருந்தது தற்போது திருமணம் முடிந்ததால் முதலிரவு எப்போது என்று வெளிப்படையாக கேட்பதாக வித்யா வருத்தம் தெரிவித்துள்ளார். மேலும் கூட்டமாக இருக்கும் பொது நிகழ்ச்சிகளில் ரசிகர்கள் இவ்வாறு கேட்கும் போது என்ன சொல்வது என்றே தெரியவில்லை என்று புலம்பியுள்ளார் வித்யா. Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here Tags: #Sun tv #Vidya pradeep #Nayaki serial Copy Link தற்போதைய செய்திகள் நான் சந்தோசமா இல்ல அம்மு.! கெளதம் கார்த்திக்- மஞ்சிமா மோகன் திருமணத்திற்கு வாழ்த்து கூறி கீர்த்தி சுரேஷ் போட்ட பதிவு!! ராவண அழகி.! இந்த வயசிலயும் செம மாடர்னாக, ஹீரோயின்களுக்கே டப் கொடுக்கும் நடிகை சீதா.! மகளுக்கு பசிக்கு உணவளிக்க முடியாது தவித்த தந்தை.. ஏரியில் வீசி கொலை.. நெஞ்சை உலுக்கும் சோகம்.! வடமாநில கர்ப்பிணி பெண் தூக்கிட்டு தற்கொலை.. ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்ததால் சோகம்..! தென்காசி அருகே துயரம்.!
கர்ப்பிணி பெண்களை அடிப்படையாக வைத்து விஞ்ஞானிகள் ஆராய்ச்சி நடத்தினார்கள். கர்ப்பிணி பெண்களுக்கு ‘அல்ட்ரா ஸ்கேன்’ எடுக்கப்பட்டது. லண்டன் : தாயின் கருவறையில் வளர்கிற குழந்தைகளுக்கு புற உலக தூண்டல்கள் தாக்கத்தை ஏற்படுத்துமா? - ஏற்படுத்தும் என்று மருத்துவ விஞ்ஞானம் காட்டி இருகிறது. ஆச்சரியமாக இருக்கிறதா, உண்மைதான். கர்ப்பிணி பெண்களை அடிப்படையாக வைத்து இங்கிலாந்தில் உள்ள டர்ஹாம் பல்கலைக்கழக ஆராய்ச்சி விஞ்ஞானிகள் ஒரு ஆராய்ச்சி நடத்தினார்கள். இந்த ஆராய்ச்சியின்போது 35 கர்ப்பிணி பெண்களுக்கு கேரட் பவுடரைக் கொண்ட கேப்சுல்களை (டியூப் மாத்திரை) வழங்கி விழுங்கச்செய்தார்கள். இன்னும் 35 கர்ப்பிணி பெண்களுக்கு காலே என்று அழைக்கப்படுகிற பரட்டைக்கீரை பவுடரைக் கொண்ட கேப்சுல்களை கொடுத்து விழுங்கச் சொன்னார்கள். 20 நிமிடங்கள் கழித்து அந்த கர்ப்பிணி பெண்களுக்கு 'அல்ட்ரா ஸ்கேன்' எடுக்கப்பட்டது. அதில் கேரட் கேப்சூல் விழுங்கிய கர்ப்பிணிகளின் கருக்குழந்தைகள் புன்னகைப்பதையும், பரட்டைக்கீரை கேப்சூலை சாப்பிட்ட கர்ப்பிணிகளின் கருக்குழந்தைகள் சிணுங்கி அழுவதுபோல காணப்படுவதையும் கண்டுபிடித்தனர். அதாவது, கேரட் கருக்குழந்தைகளுக்கு பிடித்து, அவர்களைப் புன்னகைக்க வைத்திருக்கிறது. பரட்டைக்கீரை அவர்களை சிணுங்க வைத்திருக்கிறது. கவனியுங்கள். இதில் கருக்குழந்தைகள் எதையும் சாப்பிடவில்லை. அவர்களின் தாய்கள்தான் அவற்றை சாப்பிட்டு இருக்கிறார்கள். அதன் தாக்கம். அவர்களுக்குள் வந்திருக்கிறது. இதுபற்றி ஆராய்ச்சியாளரும், டர்ஹாம் பல்கலைக்கழகத்தின் கரு மற்றும் பிறந்த குழந்தை ஆராய்ச்சி ஆய்வகத்தின் தலைவருமான பெய்சா உஸ்துன் கூறுகையில், "கருக்குழந்தைகள் தாயின் கர்ப்பப்பையில் இருக்கிறபோது, தங்கள் தாய்மார்கள் சாப்பிடுகிற உணவுகளின் சுவைகளுக்கு எதிர்வினையாற்றுகின்றன என்பதற்கான முதல் நேரடி ஆதாரத்தை நாங்கள் காட்டி இருக்கிறோம்" என தெரிவித்தார். இதுபற்றி ஆராய்ச்சியாளர்கள் மேலும் கூறும்போது, "கேரட் சுவை வெளிப்படும்போது கருக்குழந்தைகள் சிரிப்பு முகம் காட்டவும், பரட்டைக்கீரை சுவை வெளிப்படும்போது, அவை சிணுங்கும் அழுகை முகம் காட்டவும் அதிக வாய்ப்பு உள்ளது. பல்வேறு சுவைகளை உணரவும், பாகுபடுத்தவும் கருக்குழந்தைகளின் திறன்களின் ஆரம்ப கால ஆதாரங்களை புரிந்து கொள்வதற்கு இந்த ஆராய்ச்சிகள் முக்கிய தாக்கங்களை கொண்டுள்ளன" என தெரிவித்தனர். Share this: RELATED POSTS ஒரு நாளைக்கு 2 லிட்டர் தண்ணீர் குடிப்பது அவசியமா? புதிய ஆய்வில் தகவல் 30 Nov,2022 ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆராய்ச்சியில் விந்தணுக்களில் குரங்கம்மை டி.என்.ஏ இருப்பது கண்டறியப்பட்டது.
ஆறுகளை மீட்க 4 அணைகளை இடிக்கும் அமெரிக்கா | ஏலம்போன 2,000 ஆண்டுகள் பழைமையான மோதிரம்- உலகச் செய்திகள் | Vikatan International News Roundup 18 11 2022 ஆறுகளை மீட்க 4 அணைகளை இடிக்கும் அமெரிக்கா | ஏலம்போன 2,000 ஆண்டுகள் பழைமையான மோதிரம்- உலகச் செய்திகள் க.ஶ்ரீநிதி மலேசியாவில் நாளை 15-வது பொதுத்தேர்தல் நடைபெறவிருக்கிறது. தற்போதைய பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகோப், முன்னாள் பிரதமர் முஹ்யித்தீன் யாசின், அன்வர் இப்ராஹிம் ஆகியோரிடையே கடும் போட்டி நிலவுகிறது. Vincent Thian அரசுக்கு எதிராகப் போராடியதால் கைதுசெய்யப்பட்ட வசந்தா முதலிக்கே, கல்வேவா சிரிதம்மா ஆகிய இரு பல்கலைக்கழக மாணவர் தலைவர்களை விடுதலை செய்ய இலங்கைக்கு மனித உரிமைகள் அமைப்பு கோரிக்கை. Eranga Jayawardena அமெரிக்காவில் ஸ்டார்பக்ஸ் நிறுவன ஊழியர்கள் கூடுதல் சம்பளம், அதிகப் பணியாளர்களை நியமிக்கக் கோரி வேலைநிறுத்தம்.
ஜூலை 1, இன்று, தற்போதைய கனடா உருவான நாள்! கனடாவின் பிறந்தநாளாகக் கொண்டாடப்படும் தேசிய நாள். 1867 ஜூலை 1இல் சிதறிக்கிடந்த பிராந்தியங்கள் கூட்டமைப்பாக ஒன்று கூடிய நாள். தேசிய விடுமுறை, ஊர்தோறும் அணிவகுப்புகள், பாராளுமன்றம் உட்பட பல்வேறு இடங்களில் நிகழ்ச்சிகள், வாணவேடிக்கை, எங்கெங்கு காணினும் வெள்ளை சிவப்பு நிறத்திலான கனடிய தேசியக்கொடிகள் என விழாக்கோலம் பூணும் இந்த நாள் இந்த வருடம் மயான அமைதியுடன் தொடங்குகிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் கனடாவின் வெவ்வேறு இடங்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட அடையாளமற்ற மண்ணறைகள் தான் அதற்குக் காரணம். சிறுபிள்ளைகளின் மண்ணறைகள். ஆம், 1800களின் இறுதியிலும் 1900களின் முற்பகுதியிலும் அன்றைய கனடிய அரசினாலும், கிருத்துவ ஆலயங்களாலும் கனடிய பூர்வக்குடிப் பிள்ளைகளுக்குத் தங்களது கலாச்சாரத்தைக் கற்றுக்கொடுக்க கூட்டாக உருவாக்கப்பட்ட குடியிருப்புப் பள்ளிகளில் கண்டுபிடிக்கப்பட்ட மாணவர்களின் சடலங்கள். அன்றைய காலகட்டத்தில் சட்டங்கள் இயற்றப்பட்டு, அரசாங்க வலிமையைப் பயன்படுத்தி, பெற்றோர்கள் அனுமதி இல்லாமல், பிள்ளைகளை அவர்களிடமிருந்து கட்டாயப்படுத்திப் பிரித்து, அவர்கள் சந்திக்க வராதவண்ணம் வெகுதூரத்தில் பள்ளிகளை அமைத்து, விடுமுறைகளுக்கு வீடுகளுக்கு அனுப்பாமல், அடித்துத் துன்புறுத்தி, பாலியல் ரீதியாக துன்புறுத்தி, நோய்கள் வந்தால் நிராகரித்து, பட்டினி போட்டு, அவர்கள் மொழியினை பேசவிடாமல், அவர்களின் மரபுகளைப் பின்பற்றவிடாமல், இந்த இன்னல்களால் இறந்தபோது அதை அவர்களின் பெற்றோர்களுக்குத் தெரியப்படுத்தாமல், அனாதைப்பிணங்களாக எந்த அடையாளமுமின்றி புதைத்துள்ளனர். 2015இல் இதை விசாரிக்க அமைக்கப்பட்ட உண்மை மற்றும் சமரசத்திற்கான குழு அன்றைய காலகட்டத்தில் கலாச்சார இன ஒழிப்பில் கனடிய அரசாங்கம் ஈடுபட்டது எனத்தெரிவித்துள்ளது. ஆனால், தோண்டத்தோண்டக் கிடைக்கும் பிணங்களோ, அது வெறும் கலாச்சார இனவழிப்பா, அல்லது இனப்படுகொலையுடன் கூடியதா என்ற ஐயத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை மூன்று பள்ளிகள் இருந்த இடங்களில் மட்டுமே தோண்டியுள்ளனர் என்பதும், கனடா முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புப் பள்ளிகள் இருந்தன என்பதும், கடைசி பள்ளி 1998இல் மூடப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த வருடம் பாராளுமன்ற கனடா நாள் நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. கனேடியப்பிரதமர் இன்று தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிட அறிவுறுத்தியுள்ளார். பொதுமக்கள் பலரும் இந்த ஆண்டுக் கொண்டாட்டத்தில் பங்குபெறுவதில்லை என முடிவெடுத்துள்ளனர். இழவு வீட்டில் கொண்டாட்டம் இல்லை என்ற தர்க்கத்தைத் தாண்டியது இந்தக் காரணம். 1867இல் உருவாக்கப்பட்ட கனடா இந்த மண்ணறைகளின் மேலேயே கட்டமைக்கப்பட்டுள்ளது. இந்த இன அழிப்பிற்கும் கனடா உருவாவதற்கும் நேரடித் தொடர்புள்ளது. பூர்வக்குடியினரின் நிலத்தை ஏமாற்றிப்பிடுங்கி, அவர்கள் பண்பாட்டையும், மொழிகளையும் அழித்து, அவர்கள் பிள்ளைகளைப் பிரித்து, துன்புறுத்திக் கொன்றபின் உருவானதே தற்போதைய கனடா என்பது கசக்கும் உண்மை. இதனாலேயே சில சமூக ஆர்வலர்கள் கனடா நாள் என்ற ஒன்றையே இனி முழுவதுமாக ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தத் துவங்கியுள்ளனர். அதுமட்டுமன்றி வெறும் குறியீடுகளான ஆதரவைக் கைவிட்டுவிட்டு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அரசினை வலியுறுத்தி வருகின்றனர். தோண்டப்படாத நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளிகளிருந்த இடங்களில் உடல்களுக்கான தேடுதலை மேற்கொள்வது, இந்த விசாரணையை அரசே நடத்துவது, இதில் தொடர்புடைய நபர்களுக்குத் தண்டனை வாங்கித்தருவது, நிலங்கள் தொடர்பான பூர்வக்குடியினர் மேல் அரசு தொடுத்திருக்கும் வழக்குகளைத் திரும்பப்பெறுவது, மற்றும், உண்மை மற்றும் சமரசத்திற்கான குழு சமர்ப்பித்த 94 கோரிக்கைகளை நடைமுறைப்படுத்துவது போன்றவையாகும். இதைப் பற்றி Tamil Canadian Centre for Civic Action அமைப்பு கூறுகையில் கனடியத் தமிழர்களைக் கொண்டாட்டங்களில் ஈடுபட வேண்டாம் என்று கேட்டுக்கொண்டும், குடியமர்ந்தவர்களாக பூர்வக்குடியினருக்கு நீதியை உறுதிப்படுத்துவது தமிழர்களின் கடமையாகும் எனவும் தெரிவித்துள்ளது. வேறு சிலர், குறிப்பாக வலது சாரி அரசியல் கண்ணோட்டம் உள்ளவர்கள் கனடா நாளை கொண்டாடுவதில் முனைப்பு காட்டி வருகின்றனர். இந்தக் கொடூர நிகழ்வையும் தாண்டி அவர்கள் கனடா நாள் கொண்டாடப்படவேண்டுமென்றும் அவர்கள் கனடியாராக இருப்பதில் எப்பொழுதும் பெருமை கொள்ளவேண்டுமென்றும் பிரச்சாரம் செய்தவண்ணம் உள்ளனர். பல இனத்தைச் சேர்ந்த, பல நாடுகளிலிருந்து வந்த, பல மொழிகள் பேசும் மக்கள் ஒன்று சேர்ந்து வாழும் நாடாக கனடா கருதப்பட்டாலும், அவர்களை அடிப்படையில் இரண்டு வகைகளாகவே பிரிக்கலாம். பூர்வக்குடியினர் மற்றும் குடியமர்ந்தவர்கள். பிரிட்டிஷ், பிரெஞ்சு மக்கள் துவங்கி தமிழ் மக்கள் வரை இங்கே குடியமர்ந்தவர்களே. இருநூறு வருடங்களுக்கு முன் பூர்வக்குடியினரின் நாடாக, வீடாக இருந்த நிலங்களை இன்று பங்குபோட்டுக்கொண்டவர்களே. அவர்களை நன்றியுடன் நடத்தப்படாவிட்டாலும், சக மனிதர்களாக நடத்தியிருக்க வேண்டும். கனடாவை மீண்டும் பெருமையாக பார்க்க விரும்புவோர் பூர்வக்குடியினருக்கு நியாயம் கிடைப்பதில் தீர்க்கமாக இருப்பதிலிருந்தும் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதிலிருந்தும் துவங்க வேண்டும்.
சீனாவின் வடகிழக்கு பகுதியில் லியோனிங் மாகாணத்தில் அமைந்துள்ள துறைமுக நகரம் டேலியன். இந்த நகரில் பிரபலமான சந்தை ஒன்று உள்ளது. இந்த சந்தையில் எப்போதும் மக்கள் கூட்டம் நிறைந்து காணப்படும். அந்த வகையில் நேற்று முன்தினம் காலை இந்த சந்தை வழக்கம் போல் பரபரப்பாக இயங்கி கொண்டிருந்தது. ஏராளமான மக்கள் அங்கு திரண்டு தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொண்டிருந்தனர் அப்போது சற்றும் எதிர்பாராத வகையில் சந்தையில் திடீரென தீப்பிடித்து. சந்தைக்கு கீழே நிலத்துக்கு அடியில் இருந்து தீ பரவியதாக கூறப்படுகிறது. மளமளவென பற்றி எரிந்த தீ கண்இமைக்கும் நேரத்தில் சந்தை முழுவதிலும் பரவியது. இதனால் அங்கு பெரும் பதற்றமும், பீதியும் உருவானது. சந்தையில் இருந்த மக்கள் அனைவரும் உயிர் பயத்தில் அலறியடித்துக் கொண்டு அங்கும், இங்குமாக ஓட்டம் பிடித்தனர். இதற்கிடையில் இந்த தீ விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் ஏராளமான தீயணைப்பு வீரர்கள் தீயணைப்பு வாகனங்களில் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அவர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். ஆனால் காற்றின் வேகம் காரணமாக தீ மேலும், மேலும் பரவியதால் தீயை அணைப்பது தீயணைப்பு வீரர்களுக்கு சவாலாக இருந்தது. எனினும் சுமார் 3 மணி நேரம் போராட்டத்துக்கு பின் தீயை முழுமையாக கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருப்பினும் இந்த விபத்தில் தீயின் கோரப்பிடியில் சிக்கி தீயணைப்பு வீரர் ஒருவர் உள்பட 9 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 5 பேர் பலத்த தீக்காயம் அடைந்தனர். அவர்கள் 5 பேரும் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த தீ விபத்துக்கான காரணம் என்ன என்பது உடனடியாக தெரிய வராத நிலையில், இது குறித்து தீவிரமாக விசாரிக்கப்பட்டு வருகிறது.
பெரும்பாலான நிறுவனங்கள் நிறுவனக் கொள்கைகள் மற்றும் பணியாளர் சேவைகளை மேற்பார்வையிடும் ஒரு பிரிவைக் கொண்டுள்ளன. இந்த பிரிவு பெரும்பாலும் மனித வளங்கள் அல்லது பணியாளர் மேலாண்மை அலுவலகம் (OPM) என குறிப்பிடப்படுகிறது. பணியாளர் நிர்வாக நிபுணர் என்பது பணியாளர் பிரிவுக்கு ஆதரவு மற்றும் நிர்வாக சேவைகளை வழங்கும் ஒரு நிபுணர். இந்த தொழில் வல்லுநர்கள் மனிதவள உதவியாளர்கள் அல்லது நிபுணர்கள் என்றும் குறிப்பிடப்படுகிறார்கள். ஜூன் 2010 நிலவரப்படி, இந்த ஆக்கிரமிப்பிற்காக இன்டிட்.காம் தேசிய சராசரி சம்பளம் ஆண்டுக்கு, 000 67,000 பட்டியலிடுகிறது. துறை ஆதரவு ஒரு பணியாளர் நிர்வாக நிபுணர் பணியாளர் துறையின் ஊழியர்களுக்கு தினசரி அடிப்படையில் ஒதுக்கப்பட்ட பொறுப்புகளை திணைக்களம் நிறைவேற்றுவதை உறுதி செய்வதன் மூலம் ஆதரவை வழங்குகிறது. நிகழ்வுகளை ஒருங்கிணைத்தல், கூட்டங்கள் மற்றும் பயணத் திட்டங்களை ஏற்பாடு செய்தல், விளக்கக்காட்சிகளை உருவாக்குதல், அறிக்கைகளைத் தயாரித்தல், துறைசார் தொலைபேசிகளுக்கு பதிலளித்தல் மற்றும் பிற துறை ஊழியர்கள் கிடைக்காதபோது செய்திகளை எடுத்துக்கொள்வது ஆகியவை இதில் அடங்கும். ஆவணம் பணியாளர் துறையின் பிற உறுப்பினர்களை ஆதரிப்பதோடு, இந்த வல்லுநர்கள் ஒரு நிறுவனத்திற்கான அனைத்து தொடர்புடைய ஆவணங்கள் மற்றும் பணியாளர் கோப்புகளையும் தயாரித்து பராமரிக்கின்றனர். வேலைவாய்ப்பு ஒப்பந்தங்கள், செயல்திறன் மதிப்புரைகள், அத்துடன் நன்மைகள் மற்றும் இழப்பீட்டுத் தகவல் போன்ற ரகசிய மின்னணு மற்றும் காகித ஆவணங்கள் இதில் அடங்கும். இந்த ஆவணங்கள் ரகசியமானது மற்றும் பணியாளர் நிர்வாக நிபுணரால் பாதுகாக்கப்பட வேண்டும். இந்த வல்லுநர்கள் பெரும்பாலும் இந்த தகவலுக்கான அனைத்து விசைகள் மற்றும் கடவுச்சொற்களை வைத்திருக்கிறார்கள், மேலும் பிற துறை ஊழியர்களுக்கான தகவல்களை கோரியபடி அணுகலாம். பணியாளர்களின் அறிக்கைகளை உருவாக்குதல் மற்றும் தொகுத்தல் மற்றும் பணியாளர் கோப்புகளை கோரியபடி மீட்டெடுப்பது ஆகியவை இதில் அடங்கும். ஊழியர் உறவுகள் பணியாளர் நிர்வாக வல்லுநர்கள் பெரும்பாலும் மனிதவள அல்லது பணியாளர் துறையின் நுழைவாயில் காவலர்களாக இருக்கிறார்கள், மேலும் பிற துறை ஊழியர்களிடம் கேள்விகளையும் கவலைகளையும் வழிநடத்த வேண்டிய அவசியம் இல்லாவிட்டால் பணியாளர்களுக்கு முடிந்தவரை உதவுங்கள். இந்த தொழில் வல்லுநர்கள் சில ஊழியர்களின் உறவு செயல்பாடுகளை கையாளுவதன் மூலம் பணியாளர் ஊழியர்களுக்கு உதவுகிறார்கள். இதில் புதிய பணியாளர் நோக்குநிலை, நிறுவன திட்டங்களில் பணியாளர்களை சேர்ப்பது, பணியாளர் உறவு ஆலோசனை, அத்துடன் அவர்களின் நன்மைகள் மற்றும் இழப்பீடு தொடர்பான ஊழியர்களின் கேள்விகளுக்கு பதிலளிப்பது ஆகியவை அடங்கும். மனிதவள மேலாளர்களுக்கான 2016 சம்பள தகவல் யு.எஸ். தொழிலாளர் புள்ளிவிவர பணியகத்தின் படி, மனிதவள மேலாளர்கள் 2016 ஆம் ஆண்டில் சராசரி ஆண்டு சம்பளம் 106,910 டாலர்களைப் பெற்றனர். குறைந்த முடிவில், மனிதவள மேலாளர்கள் 25 வது சதவிகித சம்பளத்தை, 800 80,800 சம்பாதித்தனர், அதாவது 75 சதவிகிதம் இந்த தொகையை விட அதிகமாக சம்பாதித்தது. 75 வது சதவீத சம்பளம் 5 145,220, அதாவது 25 சதவீதம் அதிகம் சம்பாதிக்கிறது. 2016 ஆம் ஆண்டில், யு.எஸ். இல் மனித வள மேலாளர்களாக 136,100 பேர் பணியாற்றினர்.
இந்த 2022ல் நீங்கள் ட்ரேடிங்க் செய்வதற்கான சிறந்த செயல்களை பற்றி தான் நாம் இப்போது பார்க்கப் போகிறோம். நான் டிரேடிங் செய்வதற்காக பல செயலிகள் நமக்கு இலவசமாக கிடைத்தாலும் அதில் சிறந்தது என்பது தான் நாம் தேர்ந்தெடுக்க வேண்டும். இந்தப் பதிவில் நாம் அதைப் பற்றி தான் பார்க்கப் போகிறோம். நமது சிறந்த டிரேடிங் செயலி என்ன என்பது பற்றி. நீங்கள் முழுமையாக தெரிந்துகொள்ள முழுவதுமாக படியுங்கள். டிமேட் கணக்கு என்றால் என்ன ? காகித பேப்பர் வழியாக பங்குகளை வாங்கும் ஒரு சிக்கலான முறைக்கு ஒரு எளிய தீர்வாக ஆன்லைன் வழியாக பங்குகளை வாங்கும் ஒரு முறையை அறிமுகம் செய்தது. அதுதான் டிமேட் அக்கவுண்ட் ஆகும். இதைப் பயன்படுத்தி நீங்கள் ஆன்லைன் வழியாக ஒரு நிறுவனத்தின் பங்குகளை வாங்கிக் கொள்ள முடியும். மேலும் இதை நீங்கள் செய்ய வேண்டும் என்றால் முழுக்க முழுக்க டிஜிட்டல் மையமானது ஆகும் மேலும் இதை நீங்கள் செய்ய வேண்டும் என்றால் எந்தவிதமான காகித அடிப்படையிலான வேலைகளும் கிடையாது. Read More :- 2022-யில் சிறந்த investment என்னனு தெரியுமா.!! best investment for 2022 !! எனவே காகித அடிப்படையிலான பங்குகள் வாங்கும் விற்கும் ஒரு சிக்கலான பிரச்சனையை சமாளிக்க அறிமுகப்படுத்தப்பட்டது தான் இந்த டீமேட் அக்கௌன்ட் ஆகும். Demat என்னும் சொல் dematerialization என்னும் இந்த சொல்லிலிருந்து பெறப்பட்டது ஆகும். இந்த டீ மேட் அக்கவுண்ட் நீங்கள் பயன்படுத்தி எங்கிருந்து வேண்டுமானாலும் பங்குகள் மற்றும் பத்திரங்களை வாங்கிக் கொள்ள முடிகிறது. நீங்கள் காகித அடிப்படையிலான பங்குகள் மற்றும் பத்திரங்களை வாங்கி வைத்தால் அது திருட்டுப் போகும் அபாயம் உள்ளது ஆனால் டிஜிட்டல் வழியாக நீங்கள் வாங்கி வைப்பதால் முறையாக பாதுகாத்துக் கொள்ள முடியும். உங்களிடம் ஒரு டீமேட் கணக்கு இல்லாமல் நீங்கள் பங்குகளை வாங்கவோ விற்கவோ அல்லது வர்த்தகம் செய்யவும் நிச்சயமாக முடியாது. ஏனெனில் 1996-ஆம் ஆண்டு அனைத்து வர்த்தகர்களும் வர்த்தகம் செய்ய டிமேட் அக்கவுண்ட் வைத்திருப்பது கட்டாயம் என்ற அறிவிப்பை இந்தியாவைச் சேர்ந்த SEBI அறிவித்தது. டிமேட் கணக்கின் பயன் என்ன ? டிமேட் அக்கவுண்ட் இன் பயன் என்ன என்று பார்க்கும்பொழுது இது உங்களை டிஜிட்டல் வழியாக பங்குகளை மற்றும் பத்திரங்களை வாங்க அனுமதிக்கிறது. காகித அடிப்படையிலான பங்குகள் மற்றும் பத்திரங்கள் வாங்கும் விற்கும் செயல்முறைகளில் இருந்து உங்களை டிஜிட்டல் வழியாக பங்குகளை வாங்க அனுமதிக்கிறது. டிமேட் கணக்கைத் தொடங்க குறைந்தபட்சத் தொகை என்ன? டிமேட் கணக்கை தொடங்க குறைந்தபட்சம் தொகை என்று எதுவும் இல்லை. மாறாக நீங்கள் ஒரு ரூபாய் செலவில் கூட டீமேட் கணக்கை தொடங்கலாம். ஆனால் சில டீமேட் கணக்கு வழங்குனர்கள் சில சமயங்களில் அல்லது பெரும்பாலான சமயங்களில் உங்களிடமிருந்து ஒரு சில கட்டணங்களை வசூலிப்பார்கள். எனவே நீங்கள் அதை எவ்வாறு எப்பொழுது வசூலிக்கிறார்கள் மற்றும் எவ்வளவு வசூலிக்கிறார்கள் என்பதை பற்றி தெரிந்து கொண்டு நீங்கள் டிமேட் கணக்கு தொடங்குவது சிறந்ததாக இருக்கும். உங்களிடம் எந்த அதிகப்பட்ச தொகைகளை அவர் வசூலிக்க மாட்டார்கள் மாறாக ஒரு சில வழங்குனர்கள் 200 ரூபாய் அல்லது 400 ரூபாய் போன்ற கட்டணங்களை நிச்சயமாக வசூலிப்பார்கள் என்று கூறலாம். எனவே நீங்கள் அதைப்பற்றி தெரிந்து கொண்ட பிறகு டீமேட் கணக்கை தொடங்குவது சிறந்தது. டிமேட் கணக்கை மூட முடியுமா ? நீங்கள் டிமேட் கணக்கு தொடங்கிய பின்னர் அதை மூட முடியுமா என்று கேட்டால் நிச்சயமாக உங்களால் மூட முடியும். நீங்கள் எந்த பரிவர்த்தனைகளை செய்யவில்லை என்றால் அவர்களுக்கு வீணாக கட்டணம் செலுத்துவதற்கு பதிலாக உங்கள் கணக்கை நீங்கள் மூடிக் கொள்ளலாம். நீங்கள் டீமேட் கணக்கை மூட வேண்டும் என்று நினைத்தாள் அதற்கு என்ற சில வழிமுறைகள் உள்ளது அதை நீங்கள் முழுமையாக தெரிந்து கொண்டு அதை படி நீங்கள் செய்வதன் வழியாக உங்கள் டீமேட் கணக்கை நிச்சயமாக மூடிக் கொள்ளலாம். இந்தியாவில் எந்த டிமேட் கணக்கு சிறந்தது? இந்தியாவில் எந்த டீமேட் கணக்கு சிறந்தது என்று பார்க்கும்பொழுது அதிகபடியான நபர்கள் பயன்படுத்தப்படும் ஒரு செயல் என்றால் அது Zerodha ஆகும். மேலும் இது பிரபலமான செயலி மற்றும் நம்பகமான சேவை என்று கருதுகிறார்கள். அடுத்ததாக இரண்டாவதாக அதிக மக்களால் பயன்படுத்தப்படும் ஒரு செயலி என்றால் அது Upstox ஆகும். இந்த செயலியும் பல நபர்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது மேலும் நம்பகமான ஒரு செயலி என்று கருதப்படுகிறது. மேலும் இது மட்டுமின்றி இன்னும் பல செயலிகளை பற்றி சற்று விரிவாக பார்ப்போம் மேலும் அவைகளில் எது சிறந்தது என்பதை பற்றியும் நாம் பார்ப்போம். டிமேட் கணக்கு இல்லாமல் பங்குகளை வாங்க முடியுமா ? அடுத்ததாக டீமேட் கணக்கு இல்லாமல் பங்குகளை வாங்க முடியுமா என்ற கேள்விக்கான பதில் நிச்சயமாக உங்களால் டீமேட் கணக்கு இன்றி பங்குகளை வாங்கவோ விற்கவோ முடியாது. மேலும் டிமேட் கணக்குகளில் பயன்படுத்தி மட்டுமே நம்மால் பங்குகளை வாங்க விற்க போன்ற வர்த்தகங்களை செய்ய முடியும். எனவே டீமேட் கணக்கு என்பது நாம் வர்த்தகம் செய்ய மிகவும் முக்கியமான ஒன்றாகும். எனவே அதை நம்மால் தடுக்க இயலாது. which is best demat account ? AngelOne Vs Zerodha Vs Upstox !! இப்போது நாம் பொதுவாக இந்தியாவில் பயன்படுத்தப்பட்ட வரும் சில செயலிகளின் பட்டியலை பார்ப்போம். மேலும் அவற்றில் சிறந்தது என்ன என்பதைப் பற்றி சற்று விரிவாக பார்ப்போம். Upstox Angel Broking Zerodha ICICI Direct Demat Account 5Paisa IIFL SBICAP Securities Demat Account Sharekhan Religare Axis Direct Motilal Oswal SAS Online Kotak Securities HDFC Securities இந்த செயலிகள் அனைத்தும் இந்தியாவில் டீமேட் கணக்கு தொடங்க மட்டும் வர்த்தகம் செய்ய பெரும்பாலான மக்களால் பயன்படுத்தப் பட்டு வருகிறது என்று கூறலாம். மேலும் இப்போது நாம் இந்த செயலியில் மூன்று சிறந்த சிலைகளைப் பற்றி பார்ப்போம். இந்த செயலிகளின் பட்டியலில் அந்த மூன்று செயலிகள் தான் சேர்ந்தது என்று கூறலாம். நாம் இப்போது அந்த மூன்று செயலிகளின் பட்டியல் மற்றும் அவற்றை சற்று விரிவாக பார்க்கலாம். நீங்கள் டீமேட் கணக்கு தொடங்க வேண்டும் என்றால் நிச்சயமாக இந்த மூன்று செயலிகளை மட்டுமே பயன்படுத்துங்கள். மேலும் இதில் உங்களுக்கு விருப்பமான மற்றும் உங்களுக்கு ஏற்றதையும் நீங்கள் தேர்வு செய்து பயன்படுத்திக் கொள்ளலாம். 2022 இல் சிறந்த டிமேட் & டிரேடிங் கணக்கு எது ? which is best demat account ? Read More :- இப்போதைக்கு தங்கத்தில் மட்டும் Investment பண்ணுங்க.!! gold for investment !! Zerodha :- முதலாவதாக நாம் இந்த செயலியை பற்றி பார்ப்போம் இந்த செயலி பல மக்களால் நம்பகமானது என்று பயன்படுத்தப்பட்டுவரும் ஒரு செயலி. மேலும் நீங்கள் டிரேடிங் செய்ய ஒரு சிறந்த செயலியை என்று இந்த செயலியை கூறலாம். மேலும் இந்த செயலியை பத்து மில்லியனுக்கும் அதிகமான நபர்கள் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி வருகிறார்கள். மேலும் இதில் நீங்களும் இணைந்து கொள்ளலாம். மேலும் இந்த செயலிக்கு 2 லட்சத்து 80 ஆயிரம் மக்கள் மதிப்புரை வழங்கியுள்ளார்கள். மேலும் இந்த செயலி அவர்களிடமிருந்து 4.2/5 என்ற புள்ளிகளைப் பெற்றுள்ளது என்று கூறலாம். மேலும் 56 லட்சம் நபர்கள் இந்த செயலியை பயன்படுத்தி பங்குகளை வாங்கவும் விற்கவும் தொடர்ந்து செய்து கொண்டு வருகிறார்கள் என்று தெரிகிறது. மேலும் இந்த செயலியை நீங்கள் பயன்படுத்த விரும்பினால் இதில் உள்ள கட்டணங்களை சற்று விரிவாக மற்றும் தெளிவாக பார்த்துக் கொள்வது என்பது சிறந்ததாக இருக்கும். Angel One :- இரண்டாவதாக நாம் இந்த செயலியை பற்றி பார்ப்போம் இந்த செயலி பல மக்களால் நம்பகமானது என்று பயன்படுத்தப்பட்டுவரும் ஒரு செயலி. மேலும் நீங்கள் டிரேடிங் செய்ய ஒரு சிறந்த செயலியை என்று இந்த செயலியை கூறலாம். மேலும் இந்த செயலியையும் பத்து மில்லியனுக்கும் அதிகமான நபர்கள் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி வருகிறார்கள். மேலும் இதில் நீங்களும் இணைந்து கொள்ளலாம். மேலும் இந்த செயலிக்கு 3 லட்சத்து 55 ஆயிரம் மக்கள் மதிப்புரை வழங்கியுள்ளார்கள். மேலும் இந்த செயலி அவர்களிடமிருந்து 3.9/5 என்ற புள்ளிகளைப் பெற்றுள்ளது என்று கூறலாம். மேலும் 30 லட்சம் நபர்கள் இந்த செயலியை பயன்படுத்தி பங்குகளை வாங்கவும் விற்கவும் தொடர்ந்து செய்து கொண்டு வருகிறார்கள் என்று தெரிகிறது. மேலும் இந்த செயலியை நீங்கள் பயன்படுத்த விரும்பினால் இதில் உள்ள கட்டணங்களை சற்று விரிவாக மற்றும் தெளிவாக பார்த்துக் கொள்வது என்பது சிறந்ததாக இருக்கும். Upstox :- மூன்றாவதாக நாம் இந்த செயலியை பற்றி பார்ப்போம் இந்த செயலி பல மக்களால் நம்பகமானது என்று பயன்படுத்தப்பட்டுவரும் ஒரு செயலி. மேலும் நீங்கள் டிரேடிங் செய்ய ஒரு சிறந்த செயலியை என்று இந்த செயலியை கூறலாம். மேலும் இந்த செயலியையும் பத்து மில்லியனுக்கும் அதிகமான நபர்கள் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி வருகிறார்கள். மேலும் இதில் நீங்களும் இணைந்து கொள்ளலாம். மேலும் இந்த செயலிக்கு 5 லட்சத்து 34 ஆயிரம் மக்கள் மதிப்புரை வழங்கியுள்ளார்கள். மேலும் இந்த செயலி அவர்களிடமிருந்து 4.6/5 என்ற புள்ளிகளைப் பெற்றுள்ளது என்று கூறலாம். மேலும் 45 லட்சம் நபர்கள் இந்த செயலியை பயன்படுத்தி பங்குகளை வாங்கவும் விற்கவும் தொடர்ந்து செய்து கொண்டு வருகிறார்கள் என்று தெரிகிறது. மேலும் இந்த செயலியை நீங்கள் பயன்படுத்த விரும்பினால் இதில் உள்ள கட்டணங்களை சற்று விரிவாக மற்றும் தெளிவாக பார்த்துக் கொள்வது என்பது சிறந்ததாக இருக்கும். which is best demat account ? Categories Entertainment News Tags best demat account, demat account, How to open Demat account இப்போதைக்கு தங்கத்தில் மட்டும் Investment பண்ணுங்க.!! gold for investment !! இந்த வார Cook with Comali Episode !! Recent Posts Why is Crypto the biggest solution For our problems? United States Dollar மதிப்பு என்ன ? புஷ்பா தி ரூல் நாளை பூஜை விழாவுடன் தொடங்குகிறது:- படத்தின் இணை தயாரிப்பாளராக ரெட் ஜெயண்ட் மூவிஸ் கைகோர்த்து வரும் நிலையில், துருவ நட்சத்திரம் விரைவில் வெளிவரவுள்ளது.
இம்முறை திருக்குறள் எனும் முத்துச்சரத்தில் ஒரு குறள் முத்தெடுத்து அது தொடர்பான ஓர் கதாபாத்திரம் காண்போம்... அதிகாரம் 33 - கொல்லாமை: நல்லார் றெனப்படுவ தியாதெனின் யாதொன்றுங் கொல்லாமை சூழும் நெறி. நல்ல வழி என்று அறநூல்களால் சொல்லப்படுவது எது என்றால் எந்த உயிரையும் கொல்லாத அறத்தை போற்றும் நெறியாகும். (நாகைப்பட்டினம் வெள்ளத்தில் மூழ்கியபோது படகோட்டியாக முருகையன். படகில் அருள்மொழிவர்மர், புத்தபிக்ஷு...) நந்தி மண்டபத்தின் உச்சியில் தாயைப் பிரிந்த கன்றுக் குட்டி ஒன்று எப்படியோ வந்து தொத்திக்கொண்டிருந்தது. அது நாலாபுறமும் பார்த்துப் பார்த்து மிரண்டு விழித்தது. உடம்பை அடிக்கடி சிலிர்த்துக்கொண்டது. அதன் கால்கள் நடுங்கிக்கொண்டிருந்தன. அந்தக் கன்று 'அம்மா' என்று எழுப்பிய தீனக்குரல் படகில் சென்று கொண்டிருந்தவர் களின் காதில் இலேசாக விழுந்தது. "ஐயோ பாவம்! தாயைப் பிரிந்த இந்தக் கன்றின் கதி என்ன ஆகுமோ!” என்று இளவரசர் எண்ணிய அதே சமயத்தில், ஒரு பெரிய தென்னை மரம் திடீரென்று முறிந்து மண்டபத்தின் பின்புறத்தில் விழுந்தது. சிறிது முன்பக்கமாக விழுந்திருந்தால், கன்றுக் குட்டியின் மேலேயே அது விழுந்திருக்கும். மரம் விழுந்த வேகத்தினால் தண்ணீரில் ஒரு பெரிய அலை கிளம்பி மண்டபத்தின் மேலே தாவி வந்தது. முன்னமே நடுங்கிக்கொண்டிருந்த கன்றுக்குட்டி அந்த அலையைச் சமாளிக்க முடியாமல் தடுமாறி விழுந்தது. மண்டபத்தின் உச்சியிலிருந்து அலையினால் அது வெள்ளத்தில் உந்தித் தள்ளப்பட்டுத் தத்தளித்தது. இளவரசர் இதுவரையில் புத்த பிக்ஷுவைத் தம் கரங்களினால் பிடித்துக்கொண்டிருந்தார். கன்றுக்குட்டி மண்டபத்தின் உச்சியிலிருந்து உந்தித் தள்ளப்பட்டதைப் பார்த்ததும் "ஆகா" என்று சத்தமிட்டுப் பிக்ஷவைப் பிடித்துக்கொண்டிருந்த பிடியை விட்டார். பிக்ஷு அக்கணமே வெள்ளத்தில் குதித்தார். படகோட்டி முருகய்யன் துடுப்பைப் படகில் போட்டுவிட்டு இளவரசரைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டான். அவனை இளவரசர் கடுங்கோபத்துடன் பார்த்துவிட்டு "விடு!" என்று கையை உதறினார். அதற்குள் பிக்ஷு இரண்டு எட்டில் நீந்திச் சென்று கன்றுக்குட்டியின் முன்னங்கால்கள் இரண்டையும் கெட்டியாகப் பிடித்துக்கொண்டார். கன்றுக் குட்டியும் உயிர் மீதுள்ள இயற்கையான ஆசையினால் தலையை மட்டும் தண்ணீருக்கு மேலே வைத்துக்கொண்டிருக்க பிரயத்தனப்பட்டது. பிக்ஷு கன்றுக் குட்டியை பிடித்து இழுத்துக்கொண்டு படகை நோக்கி வந்தார். இளவரசர் அவருக்குக் கை கொடுத்து உதவினார். இருவருமாகச் சேர்ந்து முதலில் கன்றுக்குட்டியை படகில் ஏற்றினார்கள். பின்னர் இளவரசரின் உதவியினால் ஆச்சாரிய பிஷூவும் படகில் ஏறிக்கொண்டார். அதிகாரம் 34 - நிலையாமை: அற்கா இயல்பிற்றுச் செல்வம் அதுபெற்றால் அற்குப ஆங்கே செயல். நிலையாத இயல்பினை உடையது செல்வம் .அது கிடைத்தால் நிலையான அறங்களைச் செய்க. ("இளைய பிராட்டி குந்தவை தேவி வாழ்க!" "சுந்தரச் சோழரின் செல்வத் திருமகள் வாழ்க!" என்றெல்லாம் சோழ மக்கள் வாழ்த்தி மகிழும் குந்தவை தேவியைத் தொடர்வோம் வாருங்கள்...) அப்படை வீடுகளில், இலங்கைக்குப் போர் புரியச் சென்றிருந்த வீரர்களின் பெண்டு பிள்ளைகளும் பெற்றோர்களும் அச்சமயம் வசித்து வந்தார்கள் என்பதை முன்னமே குறிப்பிட்டிருக்கிறோம். அவர்களுடைய நலத்துக்காக ஒரு மருத்துவசாலையைக் குந்தவை தன் சொந்த நிலமான்யங்களின் வருமானத்தைக் கொண்டு ஸ்தாபித்திருந்தாள். சோழ குலத்தாரிடம் தம் முன்னோர் களைப் போற்றும் வழக்கம் சிறப்பாக இருந்துவந்தது. குந்தவையின் மூதாதைகளில் அவளுடைய பாட்டனாரின் தந்தையான முதற் பராந்தக சக்கரவர்த்தி மிகப் பிரசித்தி பெற்றவர். அவருடைய பெயர் விளங்கும்படி குந்தவை தேவி இந்தப் 'பராந்தகர் ஆதுர சாலை'யை ஸ்தாபித்து நடத்தி வந்தாள். அடிக்கடி அந்த வைத்தியசாலைக்கு வரும் வியாஜத்தை வைத்துக்கொண்டு போர் வீரர்களின் குடும்பத்தாருடைய க்ஷேம லாபங்களைப் பற்றி அவள் விசாரிப்பது வழக்கம். ஆதுரசாலைக்கு அருகில் வந்து சேர்ந்ததும் யானை நின்றது. முன்னங்கால்களை முதலில் மடித்துப் பிறகு பின்னங் கால்களையும் மடித்து அது தரையில் படுத்துக்கொண்டது. பெண்ணரசிகள் இருவரும் யானை மேலிருந்து பூமியில் இறங்கினார்கள். யானை சிறிது நகர்ந்து அப்பால் சென்றதும் ஜனக் கூட்டம். முக்கியமாகப் பெண்கள் - குழந்தைகளின் கூட்டம், தேவிமார்களை நெருங்கிச் சூழ்ந்துகொண்டது. ஆதுரசாலை உங்களுக்கெல்லாம் உபயோக மாயிருக்கிறதல்லவா? வைத்தியர்கள் தினந்தோறும் வந்து தேவையானவர்களுக்கு மருந்து கொடுத்துவருகிறார்கள் அல்லவா?'' என்று இளவரசி கேட்டாள். 'ஆம், தாயே! ஆம்!' என்று பல குரல்கள் மறுமொழி கூறின. "மூன்று மாதமாக இருமலினால் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தேன். ஒரு வாரம் வைத்தியரிடம் மருந்து வாங்கிச் சாப்பிட்டதில் குணமாகிவிட்டது!” என்றாள் ஒரு பெண்மணி. "அம்மா! என் மகன் மரத்தின்மேல் ஏறி விழுந்து காலை ஒடித்துக்கொண்டான். வைத்தியர் கட்டுப் போட்டுவிட்டுப் பதினைந்து நாள் மருந்து கொடுத்தார். சுகமாகிவிட்டது. இப்போது துள்ளி ஓடி விளையாடுகிறான். மறுபடி மரத்தின் மேல் ஏறவும் ஆரம்பித்து விட்டான்!" என்றாள் இன்னொரு ஸ்திரி. "என் தாயாருக்கு கொஞ்ச காலமாக கண் மங்கலடைந்து வந்தது. ஒரு மாதம் இந்த ஆதுரச்சாலைக்கு வந்து மருந்து போட்டுக்கொண்டு வந்தாள். இப்போது கண் அவளுக்கு நன்றாய்த் தெரிகிறது.!" என்றாள் இளம் பெண் ஒருத்தி. « « « அதிகாரம் - 35 துறவு: வேண்டினுண் டாகத் துறக்க துறந்தபின் ஈண்டியற் பால் பல. பொருட்களின் மீதுள்ள பற்றைத் துறந்தபின் வந்து சேரும் இன்பங்கள் பல. இன்பங்களை விரும்பினால் துறவு கொள்க. (சோழநாட்டு அரசர்களும் குடிமக்களும் பயபக்தியோடு மரியாதை செலுத்தும் செம்பியன் மாதேவி...) சோழ மாளிகைகளிலே செம்பியன் மாதேவி வசித்த மாளிகை நடுநாயகமாக இருந்தது. அதன் சபா மண்டபத்தில், பொன்னால் செய்து நவரத்தினங்கள் இழைத்த சிம்மாசனத்தில் அந்தப் பெருமூதாட்டி அமர்ந்திருந்தார். காரைக்காலம்மையார், திலகவதியார் முதலான பரமசிவ பக்தர்களின் வழித்தோன்றிய அப்பெண்மணி, வெண்பட்டாடை உடுத்தி, விபூதியும், ருத்ராட்ச மாலையும் தரித்து, வேறு எவ்வித ஆபரணங்களும் பூணாமல், அளவற்ற செல்வங் களுக்கிடையில், - அஷ்ட ஐசுவரியங்களுக்கு மத்தியில், - வைராக்கிய சீலையாக வாழமுடியும் என்பதை நிரூபித்துக்கொண்டிருந்தாள். தலையில் மணி மகுடமும் வேறு ஆபரணங்களும் அணியாதிருந்த போதிலும் அவருடைய கம்பீரத் தோற்றமும் சுயம் பிரகாசமான முகமும் அரச குலத்தில் பிறந்து அரசகுலத்தில் புகுந்த அரசர்க்கரசி என்பதைப் புலப்படுத்தின. சோழ அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அத்தனை பேரும் விதிவிலக்கின்றி இந்தப் பெரு மூதாட்டியைத் தெய்வமாக மதித்துப் பாராட்டிக் கொண்டாடி அவருடைய விருப்பத்துக்கு மாறாக எதுவும் சொல்லாமல் நடந்து வந்ததில் யாதொரு வியப்பும் இல்லை என்றே நினைக்கத் தோன்றும். பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றை பற்றுக பற்று விடற்கு பற்று இல்லாதவனாகிய கடவுளுடைய பற்றை மட்டும் பற்றிக்கொள்ள வேண்டும். உள்ள பற்றுக்களை விட்டொழிப்பதற்கு அப்பற்றைப் பற்ற வேண்டும். "பற்றுக பற்றற்றான் பற்றினை" துறவைத் தொடர்ந்து, "ஐயத்திலிருந்து நீங்கி மெய்யுணர்வு பெற்றவருக்கு, அடைந்துள்ள இவ்வுலகை விட அடைய வேண்டிய மேலுலகம் அண்மையில் உள்ளதாகும்" அடுத்த அதிகாரம் மெய்யுணர்தல் வழி இவ் விளக்கத்தை உணர்வோம்.
சனி அன்றே போன் பண்ணி பதிவு செய்து விட்டபடியால், ஞாயிறு காலை புதிய பயணத்தை தேடி சென்றோம்.என் வீட்டிலிருந்து 8 மணிக்கு கிளம்பி 8 .30 மணிக்கு காரமடை அடைந்தோம்.பின்னர் அங்கிருந்து தோலம்பாளையம் செல்லும் வழியில், தாயனுர் என்ற ஊரிலிருந்து வெள்ளியங்காடு செல்லும் ரோடு பிரிகிறது. அவ்வழியே சென்றால் வெள்ளியங்காடு ஊரை அடையலாம்.இதுதான் அடிவாரம்.முதல் செக்போஸ்ட் நம்மை வரவேற்கிறது .அனுமதி பெற்று மலை யில் பயணிக்கிறோம்.மொத்தம் 10 ஹேர் பின் வளைவுகள் இருக்கின்றன. 30 நிமிட பயணத்தில் பவானி ஆறு செல்லும் பாலம் அடைந்தோம். இந்த பவானி ஆறு சிறுகனாறு என்றும் சொல்லபடுகிறது.அங்கே காலை உணவை முடித்துவிட்டு (தயாராய் கொண்டு சென்றிருந்தோம் ) அங்கிருந்து மீண்டும் மலையில் ஏறி இறங்கினால் இரண்டாவது செக்போஸ்ட் வருகிறது. அங்கேயும் அனுமதி பெற்று பரளி பரிசல் செல்லும் இடத்தினை 10 நிமிடத்தில் அடைந்தோம்.நாங்கதான் முதலில் வந்து சேர்ந்து இருந்தோம்.(நேரம் 10 .20 ) அங்கே உள்ள ஊஞ்சலில் இளைப்பாறினோம்.கொஞ்ச நேரத்தில் ஒரு மகளிர் குழு வேனில் வந்து இறங்கினர்.எங்களின் வறட்சியை போக்கினர்.பின்னர் ஆதிவாசி மகளிர் வந்து சுக்கு காபி கொடுத்தனர்.அதை அருந்தி விட்டு பரிசலில் செல்ல ஆயத்தம் ஆனோம். பரிசல் பயணம் சுகமாய் இருந்தது.பில்லூர் அணை தேக்கதினை காட்டினார்கள்.தண்ணீர் மிகவும் சில்லென இருந்தது.அத்தீகடவு தண்ணீராம்.இதுதான் கோவையின் தாகத்தினை தீர்க்கிறதாம்.கொஞ்ச தூரம் பயணித்ததும் ஒரு காட்டில் இறக்கி விடுகின்றனர். அங்கே ஒய்வு எடுத்தபின் திரும்ப புறப்பட்ட இடத்தினை அடைந்தோம்.கொஞ்ச நேரம் கயிற்று கட்டிலில் ஒய்வு எடுத்து பின் சாப்பிட சென்றோம்.நல்ல உணவினை அளித்தனர்.வெஜ் பிரியாணி, தயிர் சாதம், சப்பாத்தி, களி, கீரை , மீன் குழம்பு, சிப்ஸ் தந்தனர்.
டொனால்ட் குளோவர் நினைக்கவில்லை அட்லாண்டா இது 2016 இல் திரையிடப்பட்ட முதல் சீசனைக் கடந்தும், ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு அதன் நான்காவது மற்றும் இறுதி சீசனை வெளியிட தயாராக இருக்கட்டும். ஆனால் அந்தத் தொடரில் நடிகர் தனது மகிழ்ச்சியையும் சிறிது இருத்தலியல் தன்மையையும் கண்டறிந்தார், மேலும் அவர் ஒரு உயர்ந்த குறிப்பில் வெளியே செல்லத் தயாராக இருக்கிறார். செப்டம்பர் 15 அன்று சீசன் பிரீமியருக்கு முன்னதாக, க்ளோவர் சீசன் நான்கு டிரெய்லரை செவ்வாயன்று வெளியிட்டார். “நாங்கள் இறங்கிய கடைசி சீசனின் தீம், ‘மேலும் வேடிக்கையாக இருங்கள்’ என்பதுதான். வாழ்க்கை குறுகியது, இன்னும் மகிழ்ச்சியாக இருப்போம். இங்கே இருக்கும் நேரத்தைக் கொண்டு நீங்கள் எதை வேண்டுமானாலும் செய்யலாம்,” என்று தொலைக்காட்சி விமர்சகர்கள் சங்கத்தின் மெய்நிகர் பத்திரிகைச் சுற்றுப்பயணத்திற்கான செய்தியாளர் சந்திப்பின் போது க்ளோவர் ஒரு அரிய பொதுத் தோற்றத்தில் பகிர்ந்து கொண்டார். “நான்காவது சீசனில் நாங்கள் அதைப் பற்றி நிறைய பேசினோம். மக்கள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். உங்கள் சொந்த மகிழ்ச்சியை நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும், அது ஒரு செயல்முறை. அதை சிகிச்சை போல செய்யக்கூடாது. இறுதி டிரெய்லர் முழுவதையும் ஈர்க்கிறது அட்லாண்டா குழுவினர். முற்றிலும் குழப்பமடைந்த லகீத் ஸ்டான்ஃபீல்ட் ஒரு ஆரோக்கிய மையத்தில் இரண்டு வெறித்தனமான பெண்களுடன் அமர்ந்திருக்கிறார். க்ளோவர் தனது காரில் அறை வெப்பநிலை தண்ணீருக்கு அதிக பணம் செலுத்தி ஏமாற்றிய அதே அக்கம்பக்கத்து குழந்தைகள் தலைமையிலான சைஃபரின் ஒரே பார்வையாளர் உறுப்பினராக மாட்டிக்கொண்டார். Zazie Beetz முகாமிற்கு செல்கிறார். பிரையன் டைரி ஹென்றி ஒரு ரெக்கார்டிங் ஸ்டுடியோவில் சவுண்ட்போர்டை அழிக்கிறார். 10-எபிசோட் இறுதிப் போட்டிக்கு முன்னால் அனைவரும் கொண்டாட்டத்திலும் வேதனையிலும் அலறுகிறார்கள். “எங்கள் நிகழ்ச்சி ஒரு வகையான பங்க் தொடங்கியது என்று நான் நினைக்கிறேன். என் மனநிலை, ‘யாரும் கவலைப்படுவதில்லை,’ என்று மாநாட்டின் போது குளோவர் தொடர்ந்தார். “ஆனால் இறுதியில், நாங்கள் நிறைய விஷயங்களைப் பற்றி அக்கறை கொண்டோம் … முன்பு, இது ‘மக்கள் முக்கியமா?’ பற்றிய ஒரு நிகழ்ச்சியாக இருந்தது.” அட்லாண்டா தயாரிப்பாளர் ஸ்டெபானி ராபின்சன் நினைவு கூர்ந்தது போல, எழுத்தாளர் அறையில் முதல் நாள், “டொனால்ட் பார்த்தார். நாங்கள் அனைவரும், ‘நாங்கள் ரத்து செய்யப்படப் போகிறோம், எனவே வேடிக்கையாகப் பார்ப்போம்’ என்றோம். முடிந்தவரை மிகவும் வேடிக்கையாக இருக்கும் ரிஸ்க்-எடுத்தல் தொடரின் நீடித்த தாக்கமாக இருக்கும் என்று ஸ்டீபன் நம்புகிறார். “அதன் மரபு பரிசோதனை மற்றும் எவ்வளவு வித்தியாசமான விஷயங்களைச் செய்ய முடிந்தது என்பதைப் பற்றியதாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன்,” என்று அவர் பகிர்ந்து கொண்டார். “நம்பிக்கையுடன், இது மற்றவர்களும் வித்தியாசமான விஷயங்களைச் செய்ய விரும்புகிறது.” ஆரம்பம் முதலே இலக்கு அதுதான். “நாங்கள் இங்கு நான்கு அத்தியாயங்களுக்கு மட்டுமே இருந்தால், அவை எப்போதும் சிறந்த நான்கு அத்தியாயங்களாக இருக்கும்” என்று ஸ்டீபன் ஆரம்பகால அட்லாண்டா மனநிலையைப் பற்றி விளக்கினார். 8 எபிசோடுகள் கொண்ட ஒரு சீசனுக்கு மட்டுமே ஒளிபரப்பான டானா கார்வி நிகழ்ச்சிக்கு அவர் மீண்டும் அழைத்தார், அதில் ஒன்று ஒருபோதும் ஒளிபரப்பப்படவில்லை, மேலும் கூறினார்: “என்னைப் பொறுத்தவரை, நான் அப்படித்தான் இருக்க விரும்புகிறேன்: உங்கள் ஹீரோக்கள் வேலை செய்த இடம். தொலைக்காட்சியில் யாரும் செய்யாத பைத்தியக்காரத்தனமான விஷயங்கள். அதனால், ஆரம்பத்திலிருந்தே, ‘நாம் மலம் கழிப்போம்’ என்ற எண்ணம் எங்களுக்கு இருந்தது.
ஓபிஎஸ்ஸின் தீவிர ஆதரவாளரான மாஃபா பாண்டியராஜன் இன்று திடீரென ஈபிஎஸ் பக்கம் சாய்ந்துவிட்டார். ஒன்றைத் தலைமைக்கு ஈபிஎஸ்தான் பொருத்தமானவர்கள் என்று அடித்துக் சொல்கிறார். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஓபிஎஸ் அணி- சசிகலா அணி என்று அதிமுக பிரிந்தது. அப்போது, ஓபிஎஸ் பக்கம் மாஃபா பாண்டியராஜன், கே.பி.முனுசாமி ஆகியோர் சென்றனர். இதன் பின்னர் சசிகலா சிறைக்கு செல்வதற்கு முன்பாக எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக அறிவித்துவிட்டு சென்றார். அதன் பின்னர், ஓபிஎஸ்ஸுடன் இணைந்த ஈபிஎஸ் கூட்டாக பல அதிரடி நடவடிக்கையை எடுத்தனர். அதில் முக்கியமானது சசிகலா, டி.டி.வி.தினகன் நீக்கம். இருவரின் இந்த நடவடிக்கை அதிமுகவில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மாஃபா பாண்டியராஜனுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. கே.பி.முனுசாமிக்கு கட்சியில் துணை ஒருங்கிணைப்பாளர் பதவி வழங்கப்பட்டது. நான்கு ஆண்டுகளாக ஓபிஎஸ் ஆதரவாளர்கள் என்று முத்திரை குத்தப்பட்ட இவர்கள் இன்று ஈபிஎஸ் பக்கம் சாய்ந்துவிட்டனர். இன்று அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமியை, மாஃபா பாண்டியன் நேரில் சந்தித்து ஒற்றைத் தலைமை தொடர்பாக ஆதரவு தெரிவித்துள்ளார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாஃபா பாண்டியராஜன், ``வர இருக்கிற பொதுக்குழு கூட்டத்தில் ஒற்றைத் தலைமையாக எடப்பாடி பழனிச்சாமியை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று ஆதரவு தந்துள்ளேன். அதிமுக இன்று எழுச்சி மிகு கட்சியாக மீண்டு வருவதற்கு ஒரே தலைமை, ஒரே குறிக்கோள், ஒரே கொள்ளை என்ற குறிக்கோளுடன் செயல்பட வேண்டிய காலக் கட்டத்தில் இருக்கிறோம். ஒற்றைத் தலைமை தீர்மானத்தை பொதுக்குழுவில் கொண்டு வர வேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமியிடம் வலியுறுத்தி வந்திருக்கிறோம். கண்டிப்பாக கட்சி வீறு கொண்டு எழும். வர இருக்கிற நாடாளுமன்ற தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பெறுவதற்கான எழுச்சியை நான் காண்கிறேன். ஓபிஎஸ் அணியில் இருந்து ஈபிஎஸ் அணிக்கு சென்றது ஏன்? என்று கேட்கிறீர்கள். இதில் எந்த மாறுபாடும் இல்லை. அப்போதும் சரி, இப்போதும் சரி, தொண்டர்களின் கருத்தை பிரதிபலிப்பதுதான் பொறுப்பாளர்களின் கடமை என்று நான் கருதுகிறேன். பெருவாரியான தொண்டர்கள் ஒரு தலைமை இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். இதற்கு வாய்ப்பு இருக்கிற ஒரு தலைவர் என்றால் இது ஈபிஎஸ் என்றுதான் நான் நினைக்கிறேன். கட்சியை மீண்டும் வெற்றிப் பாதைக்கு கொண்டு செல்ல வேண்டுமென்றால் ஒற்றைத் தலைமை அவசியம். அப்படி தொண்டர்கள் விரும்புவது ஈபிஎஸ்ஸைதான். இதில் எந்தவொரு மாற்றமும் கிடையாது. என்னைப் பொறுத்தவரைக்கும் ஓபிஎஸ் மேல் மிகுந்த மரியாதை வைத்திருக்கிறேன். இந்த நேரத்தில் அவரும் ஒற்றைத் தலைமைக்கு ஒத்துழைக்க வேண்டும். ஒரு தலைமை இல்லாததால்தான் கட்சிக்கு தொடர் தோல்வி வந்து கொண்டிருக்கிறது. தோல்வி முகம் வெற்றி முகமாக மாற வேண்டும் என்றால் ஒரு தலைமை முக்கியம். இரண்டு பேரும் பிடிவாதமாக இருப்பதாக கூறுவது தவறு. இரண்டு பேரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். நிச்சயம் அதிசயம் நிகழும். இருதரப்பு என்பதைவிட அனைவரும் அம்மா தரப்பு என்று நான் நம்புகிறேன்" என்று கூறிவிட்டு சென்றார்.
திருடர்கள் ஒரு சமயம் விஜயநகர ராஜ்யத்தில் கடும் வறட்சி ஏற்பட்டது. பருவ மழை தவறி விட்டதால் குளம், குட்டை, ஏரி எல்லாம் வற்றிவிட்டது. தெனாலிராமன் வீட்டுக் கிணற்றிலும் நீர் குறைந்து அதிக ஆழத்திற்குப் போய்விட்டது. இதனால் தினமும் தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்ச மிகவும் சிரமப்பட்டான் தெனாலிராமன். இந்த சமயத்தில் ஒரு நாள் இரவு நான்கு திருடர்கள் தன் தோட்டத்தில் பதுங்கி இருப்பதைக் கண்டான். உடனே வீட்டிற்கு வந்து தன் மனைவியிடம், "அடியே, நம் நாட்டில் பருவ மழை தவறிவிட்டதால், பஞ்சம் ஏற்பட்டு விட்டது. எனவே நிறைய திருட்டு நடக்க ஆரம்பித்து விட்டது. பஞ்ச காலம் முடியும் வரை நாம் மிகவும் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும். எனவே நாம் ஒரு காரியம் செய்வோம்" என்று வெளியே பதுங்கியிருந்த திருடர்களுக்கு கேட்கும் வண்ணம் உரத்த குரலில் பேசினான். "அதற்கு என்ன செய்யலாம்?" என்று தெனாலிராமனின் மனைவி கேட்டாள். "வீட்டிலுள்ள நகை, மற்றும் விலையுயர்ந்த பொருட்களை எல்லாம் இந்தப் பெட்டியில் போட்டு பூட்டு. நாம் இந்தப் பெட்டியை யாருக்கும் தெரியாமல் கிணற்றில் போட்டு விடலாம். பஞ்சம் தீர்ந்து திருட்டுப் பயம் ஒழிந்ததும் மீண்டும் கிணற்றிலிருந்து எடுத்துக் கொள்ளலாம்" என்று முன்போலவே உரக்கக் கூறினான் தெனாலிராமன். திருடர்களும் இதைக் கேட்டனர். அதே சமயம் ரகசியமாக தெனாலிராமன் தன் மனைவியிடம் திருடர்கள் ஒளிந்திருப்பதைக் கூறி ஒரு பழைய பெட்டியில் கல், மண், பழைய பொருட்களை எல்லாம் போட்டு மூடினான். அந்தப் பெட்டியைத் தூக்க முடியாமல் தூக்கி வந்து கிணற்றுக்குள் 'தொப்'பென்று போட்டு விட்டு வீட்டுக்கு திரும்பிவிட்டான் தெனாலிராமன். திருடர்களும், "தெனாலிராமன், வீட்டிற்குள் புகுந்து திருடும் நம் வேலையை சுலபமாக்கிவிட்டான். நாம் எளிதாக கிணற்றிலிருந்து பெட்டியை எடுத்துக் கொள்ளலாம்" என்று தங்களுக்குள் பேசிக் கொண்ட்னர். பெட்டியை எடுக்க கிணற்றுக்கு அருகே வந்தனர் திருடர்கள். கிணறு ஆழமாக இருந்ததால் உள்ளே இறங்கப் பயந்த திருடன் ஒருவன், "அண்ணே! தண்ணீர் குறைவாகத்தான் உள்ளது. நாம் நால்வரும் ஏற்றம் மூலம் மாற்றி மாற்றி நீரை இறைத்து விட்டால் சுலபமாகப் பெட்டியை எடுத்துக் கொண்டு போகலாம்" என்று கூறினான். அதைக்கேட்ட மற்றவர்களும் அவன் திட்டத்துக்கு ஒப்புக்கொண்டனர். அதன்படி ஒருவர் மாற்றி ஒருவர் ஏற்றம் மூலம் நீர் இறைக்கத் தொடங்கினர். சற்று நேரம் கழித்து வேறு வழியாக தோட்டத்திற்கு சென்ற தெனாலிராமன், திருடர்கள் இறைத்து ஊற்றிய நீரை தன் தோட்டத்தில் உள்ள செடிகளுக்கும், கொடிகளுக்கும், பயிர்களுக்கும் பாயுமாறு கால்வாயைத் திருப்பி விட்டான். இப்படியே பொழுது விடிந்தது விட்டது. ஆனால் கிணற்றில் தண்ணீர் குறையவில்லை. இதனால் திருடர்களும், "நாளை இரவு மீண்டும் வந்து நீரை இறைத்து விட்டு பெட்டியை எடுத்துக் கொள்ளலாம்" என்று பேசிக் கொண்டு சென்றனர். அப்போது தோட்டத்திலிருந்து வந்த தெனாலிராமன் அவர்களைப் பார்த்து, "நாளைக்கு வரவேண்டாம். நீங்கள் இறைத்த தண்ணீர் இன்னும் மூன்று தினங்களுக்குப் போதும். எனவே மூன்று தினங்கள் கழித்து வந்தால் போதும். உங்கள் உதவிக்கு நன்றி நண்பர்களே!" என்று கூறினான். திருடர்களுக்கு இதைக் கேட்டதும் மிகவும் அவமானமாய் போய்விட்டது. தங்களை ஏமாற்றி நீர் இறைக்கச் செய்த தெனாலிராமனின் அறிவை மனத்திற்குள் எண்ணி வியந்தனர். மேலும் அங்கே இருந்தால் எங்கே மாட்டிக் கொள்வோமோ என்ற அச்சத்தில் திரும்பிப் பார்க்காமல் ஓட்டம் பிடித்தனர் திருடர்கள். புலவர் புலவர் ஒரு சமயம் விஜயநகரத்திற்கு வித்யாசாகர் என்ற ஒருவர் வந்திருந்தார். அவர் சகல சாஸ்திரங்களையும் அறிந்த புலவர். தம்மை போல யாரும் புலமை பெற்றவர் இருக்கமுடியாது என ஆணவம் கொண்டவர். அதனால் ஒவ்வொரு ஊராக சென்று அங்குள்ள புலவர்களையெல்லாம் வாதத்திற்கு அழைத்து வெற்றி பெற்று, பெருமையாக திரிந்து கொண்டிருந்தார். அவ்வாறே ஒருநாள் விஜயநகரத்திற்கும் வந்தார். அவர் இராயரின் அவைக்கு வந்து தன் திறமையை வெளிப்படுத்தினார். அந்த அவையில் பெத்தண்ணா, சூரண்ணா, திம்மண்ணா போன்ற புலவர்கள் இருந்தனர். அவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு துறையில் வல்லவர்கள். அவர்கள் கூட வித்யாசாகரை கண்டு அஞ்சி பின்வாங்கினர். தன்னிடம் வாதிட யாரும் முன்வராதது கண்ட வித்யாசாகர் ஆணவமுற்றார். தன் அவையில் சிறந்தவர்கள் இல்லையோ என இராயருக்கோ வருத்தம். அந்த சமயத்தில் தெனாலிராமன் அவை முன் வந்து "பண்டிதரே! உம்மிடம் வாதம் புரிய நான் தயார். இன்று போய் நாளை வாருங்கள்" என்றான். இதை கேட்டதும் மன்னருக்கும், மற்ற புலவர்களுக்கும் உற்சாகமாக இருந்தது. அவர்கள் இராமனை வெகுவாக பாராட்டினர். இருந்தாலும் மறுநாள் வித்யாசாகரை இராமனால் வெல்ல முடியுமா? என்ற சந்தேகம் அனைவருக்கும் இருந்தது. மறுநாள் இராமனை ஆஸ்தான பண்டிதரை போன்ற விலையுயர்ந்த ஆபரணங்களால் அலங்கரித்து அவைக்கு அழைத்து வந்தனர். இராமன் தன் கையில் பட்டுத்துணியால் சுற்றப்பட்ட ஒரு கட்டை வைத்திருந்தான். வாதம் ஆரம்பமாகியது. வித்யாசாகர் இராமனின் கையில் இருந்த கட்டைப்பார்த்தார். அது என்னவாக இருக்கமுடியும்? என்று அவரால் ஊகிக்கமுடியவில்லை. எனவே "ஐயா! கையில் வைத்திருக்கிறீர்களே! அது என்ன? " என்று கேட்டார். இராமன் அவரை அலட்சியமாகப் பார்த்து, கம்பீரமாக "இது திலாஷ்ட மகிஷ பந்தனம் என்னும் நூல். இதைக்கொண்டுதான் உம்மிடம் வாதிடப்போகிறேன்!" என்றான். வித்யாசாகருக்கு குழப்பம் மேலிட்டது. அவர் இது வரை எத்தனையோ நூல்களை படித்திருக்கிறார். கேட்டிருக்கிறார். ஆனால் இராமன் கூறியது போல் ஒரு நூலைப்பற்றி இதுவரை கேள்விபட்டதில்லை. அந்த நூலில் என்ன கூறியிருக்குமோ? அதற்கு தம்மால் பதில் சொல்ல முடியுமோ? முடியாதோ? என்ற பயம் ஏற்பட்டது. அதனால் நயமாக "வாதத்தை நாளை வைத்துக்கொள்ளலாம்" என்று சொல்லிவிட்டு சென்றார். அன்றிரவு வித்யாசாகர் பல்வாறு சிந்தித்து பார்த்தார். இராமன் கூறிய நூல் புரிந்துக்கொள்ள முடியாத நூலாக இருந்தது. இதுவரை தோல்வியே கண்டிராத அவர் இராமனிடம் தோல்வி அடைய விரும்பவில்லை. ஆகவே அந்த இரவே சொல்லிக்கொள்ளாமல் ஊரை விட்டே ஓடிவிட்டார். மறுநாள் அனைவரும் வந்து கூடினர். ஆனால் வித்யாசாகர் வரவில்லை. விசாரித்த பொழுது அவர் இரவே ஊரை விட்டு ஓடி விட்டார் என்ற செய்திதான் கிடைத்தது. வெகு சுலபமாக அவரை வென்ற இராமனை அனைவரும் பாராட்டினர். மன்னர் இராமனிடம் "இராமா! நீ வைத்திருக்கும் திலகாஷ்ட மகிஷ பந்த என்ற நூலை பற்றி நானும் இதுவரை கேள்விபட்டதேயில்லை. அதை எங்களுக்கு காட்டு!" என்றார். இராமன் மூடியிருந்த பட்டுத்துணியை விலக்கினான். ஏடுகள் எதுவும் காணப்படவில்லை. அதற்கு பதிலாக எள், விறகு, எருமையை கட்டும் கயிறு இருந்தது. அதை கண்டதும் எல்லாரும் வியப்புற்றனர். இராமன், "அரசே! திலகம் என்றால் எள், காஷ்டம் என்றால் விறகு, மகிஷ பந்தனம் என்றால் எருமை கட்டும் கயிறு. இதன உட்பொருளை வைத்து தான் திலகாஷ்ட மகிஷபந்தனம் என்று சொன்னேன். இதைப்புரிந்து கொள்ளாத புலவர் பயந்து ஓடிவிட்டார்" என்று கூறிச்சிரித்தான். அனைவரும் சிரித்தனர். மன்னர் இராமனை பாராட்டி பரிசளித்தார். பெரிய பரிசு பெரிய பரிசு மன்னர் கிருஷ்ணதேவராயருக்குப் பிறந்தநாள் விழா. நகரமெல்லாம் தோரணம், வீடெல்லாம் அலங்காரம்! மக்கள் தங்கள் பிறந்த நாள் போல மன்னரின் பிறந்த நாளை மகிழ்ச்சியோடு கொண்டாடினர். முதல்நாள் இரவே வீதிகள் தோறும் ஆடல் பாடல் நிகழ்ச்சிகள், வாண வேடிக்கைகள், அரண்மனையில் வெளிநாடுகளிலிருந்து வந்த தும்துவர்களுக்கு விருந்து ஏகதடபுடலாக நடந்தது. மறுநாள் அரச சபையில் அரசருக்கு மரியாதை செலுத்துதல் நடந்தது. முதலில் வெளிநாடுகளிலிருந்து வந்த அரசப் பிரதானிகள், தங்கள் நாட்டு மன்னர்கள் அனுப்பிய பரிசுகளைத் தந்தனர். பிறகு அரசப் பிரதானிகள், பொதுமக்கள், மன்னருக்கு பரிசளித்து மரியாதை செலுத்தினார்கள். அதன்பிறகு அரசரின் நெருங்கிய நண்பர்கள் தங்கள் பரிசுகளை அளித்தனர். அப்போதுதான் பெரியதொரு பொட்டலத்துடன் தெனாலிராமன் உள்ளே நுழைந்தான். அரசர் உள்பட எல்லாரும் வியப்போடு பார்த்தனர். மற்றவர்களிடம் பரிசுகளை வாங்கித் தன் அருகே வைத்த மன்னர், தெனாலிராமன் கொண்டு வந்த பரிசுப் பொட்டலம் மிகப் பெரிதாக இருந்ததால் அவையிலுள்ளவர்கள் ஆவலோடு என்ன பரிசு என்று பார்த்ததால் அந்தப் பொட்டலத்தைப் பிரிக்கும்படி தெனாலிராமனிடம் கூறினார் அரசர். தெனாலிராமன் தயங்காமல் பொட்டலத்தைப் பிரித்தான். பிரித்துக் கொண்டே இருந்தான். பிரிக்கப் பிரிக்கத் தாழைமடல்கள் காலடியில் சேர்ந்தனவே தவிர பரிசுப் பொருள் என்னவென்று தெரியவில்லை. அதனால் எல்லாரும் ஆவலுடன் கவனித்தனர். கடைசியில் மிகச்சிறிய பொட்டலமாக இருந்ததைப் பிரித்தான். அதற்குள் நன்றாகப் பழுத்துக் காய்ந்த புளியம்பழம் ஒன்றிருந்தது. அவையினர் கேலியாகச் சிரித்தனர். அரசர் கையமர்த்திச் சிரிப்பு அடங்கியவுடன், ""தெனாலிராமன் கொடுத்த பரிசு சிறிதாக இருக்கலாம். அதற்கு அவன் கொடுக்கப் போகும் விளக்கம் பெரிதாக இருக்கலாமல்லவா?'' என்று அவையினரைப் பார்த்துக் கூறிவிட்டு தெனாலிராமன் பக்கம் திரும்பி, ""ராமா இந்த சிறிய பொருளைத் தேர்ந்தெடுத்ததின் காரணம் என்ன?'' எனக் கேட்டார். ""அரசே, ஒரு நாட்டை ஆளும் மன்னர் எப்படி இருக்க வேண்டும் என்ற தத்துவத்தை விளக்கும் பழம் புளியம்பழம் ஒன்று தான். மன்னராக இருப்பவர் உலகம் என்ற புளிய மரத்தில் காய்க்கும் பழத்தைப் போன்றவர். அவர் பழத்தின் சுவையைப் போல இனிமையானவராக இருக்க வேண்டும். ""அதே நேரத்தில் ஆசாபாசங்கள் என்ற புளியம்பழ ஓட்டில் ஒட்டாமலும் இருக்க வேண்டும் என்பதை விளக்கவே இந்த புளியம்பழத்தைப் பரிசாகக் கொண்டு வந்தேன். புளியம்பழமும் ஓடும்போல இருங்கள்!'' என்றான். அவையினர் கைதட்டி ஆரவாரம் செய்தனர். மன்னர் கண்கள் பனிக்க ஆசனத்தைவிட்டு எழுந்து தெனாலிராமனைத் தழுவி, ""ராமா எனக்குச் சரியான புத்தி புகட்டினாய். ஒரு பிறந்த நாள் விழாவிற்கு இத்தனை ஆடம்பரம் தேவையில்லை. ""பொக்கிஷப் பணமும் பொது மக்கள் பணமும் வீணாகும்படி செய்து விட்டேன். உடனே விசேடங்களை நிறுத்துங்கள். இனி என் பிறந்தநாளன்று கோயில்களில் மட்டுமே அர்ச்சனை ஆராதனை செய்யப்பட வேண்டும். அவசியமில்லாமல் பணத்தை ஆடம்பரமாகச் செலவு செய்யக்கூடாது,'' என உத்தரவிட்டார். தெனாலிராமனின் துணிச்சலையும் சாதுரியத்தையும் எல்லாரும் பாராட்டினர். அரசர் தனக்கு வந்த பரிசுப் பொருள்களில் விலை உயர்ந்தவற்றைத் எடுத்து தெனாலிராமனுக்குப் பரிசாகத் தந்தார். பனிக்கட்டி கிருஷ்ணதேவராயருக்கு ஒரு நாள் மிகவும் வருத்தமாக இருந்தது. “நாம் மக்களுக்கு எவ்வளவு செய்தாலும் அவர்களுக்கு அந்த பணம் ஏன் போய்ச் சேருவதில்லை?’ என்பதுதான் அந்த வருத்தம். இதன் காரணம் என்ன என்பது புரியாமல் தவித்தார் மன்னர். தன்னுடைய சந்தேகத்தை தெனாலிராமனிடம் கேட்டார் மன்னர். “”ராமா! இதற்கு என்ன காரணம்? உனக்கு தெரியுமா?” “”அரசே! இதனை நான் ஒரு நாடகம் போல் விளக்க விரும்புகிறேன். எனக்கு உடனே பனிக்கட்டி ஒன்றை கொண்டு வந்து தரச் சொல்லுங்கள். அப்பொழுதுதான் உங்களுக்கு உண்மை புரியும்,” என்றான். அரசர் உடனே பனித்துண்டு ஒன்றை கொண்டு வர ஏற்பாடுச் செய்தார். பனிக்கட்டியும் வந்தது. அதனை வாங்கின தெனாலிராமன் மன்னரிடம், “”அரசே! நீங்கள் இந்த பனிக்கட்டியை நிதி அமைச்சரிடம் கொடுங்கள். பின் அவர் அவரது உதவியாளரிடம் கொடுக்கட்டும். அதன் பிறகு பனிகட்டி அலுவலர்களிடம் போய்ச் சேரட்டும். அப்பொழுது உங்களுக்கு விஷயம் புரியும்,” என்றான் தெனாலிராமன். பனிக்கட்டி கிட்டத்தட்ட 15 அலுவலர்களை தாண்டி கடைசியில் கிராம நிர்வாக அதிகாரியிடம் சென்று சேர்ந்தது. அப்பொழுது அவர் கையில் பனிக்கட்டி இல்லை. சிறிது நீர் தான் இருந்தது. பனிக்கட்டி உருகி அப்படி ஆகிவிட்டது. இப்பொழுது ராமன் சொன்னான்: “”புரிந்ததா! மன்னா இதுதான் காரணம். பணம் இவ்வளவு பேரையும் தாண்டி கடைசி அலுவலரிடம் செல்லும் பொழுது கரைந்து விடுகிறது. “”இதுதான் ஏழை மக்கள் படும் கஷ்டங்களுக்கு காரணம்,” என்றான். மன்னன் புரிந்து கொண்டு நிர்வாகத்தை சீர்படுத்த முனைந்தார். சுத்தம் சுத்தம் மன்னர் கிருஷ்ண​தேவராயருக்கு ஓர் எண்ணம் ஏற்பட்டது. எப்​போது பார்த்தாலும் தனது புத்திக்கூர்​மையால் அ​னைவ​ரையும் சிரிக்க ​வைத்து விடுகிறா​னே இந்த ​தெனாலிராமன். இவ​னை எப்படியும் மட்டம் தட்ட ​வேண்டும் என்று எண்ணினார். அதன்படி​யே ​​செயல்படத் ​தொடங்கினார். ஒருநாள் அரச​வை கூடியது. அப்​போது ​தெனாலிராம​னை அருகில் அ​ழைத்தார் மன்னர். ​தெனாலிராமா, ''​நேற்று இரவு நான் தூங்கும் ​போது ஒரு கனவு கண்​டேன்'' என்றார் மன்னர். உட​னே ​தெனாலிராமன் ''அது என்ன கனவு'' என்று ​கேட்டான். அதற்கு மன்னர் ''வழக்கம்​போல் நாம் இருவரும் உலாவச் ​சென்​றோம். அப்​போது எதிர்பாராதவிதமாக நான் ​தேன் நி​றைந்த குழியிலும் நீ சாக்க​டையிலும் விழுந்து விட்​டோம்'' என்றார். இ​தைக் ​கேட்டதும் அரச​வையில் உள்​ளோர் அ​னைவரும் ​தெனாலிராம​னைப் பார்த்து ​கேலியாகச் சிரித்தனர். எல்​லோரும் சிரிப்ப​தைப் பார்த்ததும் ​தெனாலிராமனுக்கு ​கோபம் ஏற்பட்டது. இருப்பினும் அடக்கிக் ​கொண்டான். அரச​ரை எப்படியும் மட்டம் தட்டி​யே தீருவது எனக் கங்கணம் கட்டிக் ​கொண்டான். மறுபடியும் மன்னர் ​சொன்னார், ''நான் ​தேன் குழியிலிருந்து எழுந்து விட்​டேன். நீ​யோ அதிலிருந்து க​ரை​யேற முடியாமல் தவித்துக் ​கொண்டிருந்தாய்'' என்றார். அ​தைக் ​கேட்ட ​தெனாலிராமன் அதன் பின் என்ன நடந்தது என்று ​கேட்டான். அதற்குள் நான் விழித்துக் ​கொண்​டேன் என்றார் மன்னர். மறுநாள் அரச​வைக் கூடியதும் ​தெனாலிராமன் வந்தான். மன்ன​ரைப் பார்த்து,''மன்னர் ​பெருமா​​னே தாங்கள் கனவு கண்டதாக ​சொன்னீர்க​ளே, அதன் மீதி​யை நான் ​நேற்று இரவு கனாக் கண்​டேன்'' என்றான். அ​தைக் ​கேட்டதும் மன்னர் கனவு எப்படி இருந்தது என்றார். '' தாங்கள் ​தேன் குழியிலிருந்து க​ரை​யேறி நின்றீர்களா? நானும் எப்படி​யோ அந்தச் சாக்க​டைக் குழியிலிருந்து க​ரை​யேறி விட்​டேன். இவ்விஷயம் மற்றவர்களுக்குத் ​தெரியாமல் இருப்பதற்காக நான் உங்க​ளை என் நாவால் நக்கி சுத்தப்படுத்தி விட்​டேன். நான் ​செய்தது ​போல​வே நீங்களும் என்​னை தங்கள் நாக்கால் நக்கி சுத்தப்படுத்தினீர்கள்'' என்றான் ​தெனாலிராமன். இவ்வார்த்​தைக​ளைக்​ கேட்டதும் மன்னர் சிறிது அதிர்ச்சியுற்றாலும் ​தெனாலிராமனின் சாமர்த்தியத்​தை எண்ணி மனமாரப் பாராட்டினார். அது நி​றை​வேறாது அது நி​றை​வேறாது வெளியூரிலிருந்து தன் ம​னைவியின் உடன் பிறந்த ச​கோதரன் ​தெனாலிராமனின் வீட்டிற்கு வந்திருந்தான். அவ​னை கணவன் ம​னைவி இருவரும் நன்கு உபசரித்தனர். தினமும் அவனுக்கு தின்னப் பல வ​கைப் பழங்கள் அரண்ம​னையிலிருந்து ​கொண்டு வந்து தருவான். அவற்​றை ஆவ​லோடு ருசித்துச் சாப்பிட்ட அவன், ''இந்த வ​கை அபூர்வப் பழங்கள் எங்கிருந்து கி​டைக்கின்றன'' என்று ​தெனாலிராமனிடம் ​​கேட்டான். அதற்கு ​தெனாலிராமன் ''இ​வை அரண்ம​னைத் ​தோட்டத்தில் இருக்கின்றன. ​தோட்டத்தில் காவல் அதிகம், திருடினால் அவர்கள் த​லை சீவப்படும்'' என்றும் கூறினான். இவற்​றை அறிந்தும் அவனு​டைய ​மைத்துனன் எப்படியும் அரண்ம​னைத் ​தோட்டத்தினுள் புகுந்து நி​றைய பழங்கள் தின்ன ​வேண்டு​மென்று ஆவல் ​கொண்டான். அதன்படி​யே ஒரு நாள் நள்ளிரவு ​தோட்டத்துக்குள் புகுந்து ​வேண்டியளவு பல்வ​கைப் பழங்க​ளை உண்டான். பின் வீடு திரும்ப எண்ணி நடந்து ​கொண்டிருக்​கையில் காவலர்கள் அவ​னை ​கையும் களவுமாகப் பிடித்தனர். அவன் காவலர்களிடம் எவ்வளவு ​சொல்லியும் விடுவதாக இல்​லை. மன்னரிடம் ​கொண்டு​போய் நிற்பாட்டினர். மன்னர் அவனுக்கு மரண தண்ட​னை விதித்தார். இச்​செய்தி ​தெனாலிராமனுக்கு ​தெரிய வந்தது. அவன் ம​னைவி ''என் தம்பி அநியாயமாகச் சாகப் ​போகிறா​னே காப்பாற்றுங்கள்'' என்று பலவாறு ​வேண்டிக் ​கொண்டாள். அதற்கு ​தெனாலிராமன் ''மன்னர் ஆ​ணையிட்டால் அது ஆ​ணையிட்டதுதான். மாற்ற மாட்டா​ரே என்ன ​செய்வது'' என்று கூறிக் ​கொண்​டே மன்ன​ரைக் காண வி​ரைந்தான். ​ தெனாலிராம​னைப் பார்த்த மன்னர், ''​தெனாலிராமா, நீ என்ன நி​னைத்து வந்தா​யோ அது நி​றை​வேறாது'' என்றார். உட​னே ​தெனாலிராமன் அப்படியானால் உட​னே என் ​மைத்துனனின் த​லை​யை ​வெட்டி விடுங்கள் என்றான். உட​னே மன்னர் ​தெனாலிராமனின் சம​யோசித புத்தி​யைப் பாராட்டி உன் ​மைத்துன​னை விடுத​லை ​செய்கி​றேன் என்றார். காரணம் அவன் எது நி​னைத்து வந்தோ​னோ ​நேர் எதிராகத்தான் மன்னர் ​செய்வதாகச் ​சொல்லியுள்ளார். ​ தெனாலிராம​னே தன் ​மைத்துன​னை ​கொ​லை ​செய்யச் ​சொல்லும்​போது மன்னர் அதற்கு எதிராகத்தா​னே ஆ​ணையிட முடியும். ஆக​வேதான் அவனு​டைய மைத்துன​னை விடுத​லை ​செய்யச் ​சொன்னார். ​தெனாலிராமனின் புத்திக் கூர்​மை​யை அவனது ம​னைவி உட்பட அ​னைவரும் பாராட்டினர். போர்க்களம் போர்க்களம் ஒரு நாள் மா​லை ​நேரம் அரண்ம​னைத் ​தோட்டத்தில் அரசரும் ​பெரிய தன்வந்தர்களும் ப​டைத் தளபதிகளும் கூடினர். ஒவ்​வொருவரும் அவர்கள் சண்​​டையில் ​செய்த வீரதீரச் ​செயல்கள் பற்றி ​பேசிப் ​பெரு​மைப்பட்டுக் ​கொண்டிருந்தனர், அப்​போது ​தெனாலிராமனும் அங்கு இருந்தான். அவர்கள் ​பேச்​சையும் ​கேட்டுக் ​கொண்டிருந்தான். அவர்கள் ​பேச்சு அவனுக்கு பிடிக்கவில்​லை. ''​போங்கள் ஐயா. நீங்கள் எல்லாம் என்ன பிரமாதமாக சாதித்து விட்டீர்கள். நானும் ​போர்க்களம் சென்று இருக்கி​றேன். அதில் ஒருவனு​டைய கா​லை என் வாளால் ​வெட்டி விழ்த்தி விட்​டேன்''என்றான். அ​தைக் ​கேட்ட அ​னைவரும் ​தெனாலிராமன் கூடவா ​போர்க்களம் ​சென்றிருப்பான் என்று ​யோசிக்கத் ​தொடங்கினர். பின் அதில் ஒருவன் கா​லை ​வெட்டியதாகச் ​சொல்லுகிறா​யே அவன் த​லை​யை ​வெட்டுவதற்கு என்ன என்று ​கேட்டான். அ​தைக் ​கேட்ட ​தெனாலிராமன் ''த​லை​யைத் தான் எனக்கு முன்பு எவ​னோ ​வெட்டிவிட்டா​னே நான் என்ன ​செய்ய'' என்று ​சொன்னதுதான் தாமதம் மன்னர் உட்பட அ​னைவரும் ​கொல்​லெனச் சிரித்து விட்டனர். உயர்ந்தவர் யார்? உயர்ந்தவர் யார்? விஜயநகரத்தை பேரரசர் கிருஷ்ணதேவராயர் ஆண்டு வந்தார். அவருடைய அவைப் புலவர்களின் மகுடமாகத் திகழ்ந்தவர் தெனாலிராமன். அரசருக்கு வலது கரமாகத் திகழ்ந்த தெனாலியை அரசர் முற்றிலுமாக நம்பினார். அவரின் ஆலோசனைபடி ஆட்சி நடத்தினார். தெனாலிராமனின் அறிவையும், புத்தி சாதுர்யத்தையும், அவரது நகைச்சுவை உணர்வுகளையும் பற்றி கேள்விப்பட்டார் அண்டை நாட்டு அரசர் புஷ்யமித்திரன். அவர் கிருஷ்ணதேவராயரைத் தனது நாடான கஞ்சன்புரிக்கு அழைத்தார். அத்துடன், ""தெனாலிராமனின் புத்திக்கூர்மை பற்றியும் கேள்விப்பட்டிருக்கிறோம், அவரையும் உடன் அழைத்து வாருங்கள்,'' என்று வேண்டினார். இருவரும் கஞ்சன்புரியை அடைந்தனர். புஷ்யமித்திரன், தங்கம் போல் ஜொலிக்கும் ஒரு மாளிகையில் அவர்களை தங்க வைத்தார். அங்கு நாற்புறமும் ரத்தினங்களும், முத்துக்களும் இழைக்கப்பட்டிருந்தன. தங்கப் பாத்திரங்களில் உணவு கொண்டு வந்து தங்கத் தட்டு வைத்து, உணவு படைத்தான். அதையெல்லாம் கண்டு கிருஷ்ணதேவராயரும், தெனாலிராமனும் அசந்து போயினர். சில நாட்கள் அந்த ராஜ உபசாரத்தில் திளைத்து மகிழ்ந்தனர். ஒருநாள் மாலை படகுச்சவாரி செய்யும்போது அரசர் புஷ்யமித்திரன் சட்டென்று தெனாலிராமனிடம், ""உங்கள் அரசர், நான், இருவரில் மிகப் பெரியவர்; உயர்ந்தவர்; மேன்மையானவர் யார்?'' என்றார். அதைக் கேட்டதும் தெனாலி ராமன் சற்று நேரம் பதில் கூறவில்லை. பிறகு சிரித்தவாறு, ""அரசே! என்னைப்பொறுத்த வரையில், நீங்கள் இருவருமே மிக உயர்ந்தவர்கள்தான். உங்களுடைய வைபவம் மலைச் சிகரம் போன்றது என்றால், அரசர் கிருஷ்ண தேவராயரின் உயர்வு சலசலத்துப் பாயும் அழகிய நதியைப் போன்றது...'' என்றார். உடனே புஷ்யமித்திரன் சிரித்தவாறு, ""கிருஷ்ணதேவராயரே! தீர்ப்பு கிடைத்து விட்டது. தெனாலிராமன் என்னை மலைச் சிகரம் என்று உயர்த்திக் கூறி விட்டார். எனவே, நானே உயரமானவன்,'' என்றான். தெனாலிராமனைத் திரும்பிப் பார்த்தார் கிருஷ்ண தேவராயர். அப்போது தெனாலி சிரித்துக் கொண்டே, ""அரசே! புஷ்ய மித்திரன் என்னுடைய பேச்சின் பொருளைப் புரிந்து கொள்ளவில்லை. நான் சொன்னது இப்படித்தான். ""கஞ்சன்புரியில் புஷ்யமித்திரரின் நிலை ஒரே இடத்தில் உள்ள ஏதோ ஒரு மலைச் சிகரம் போன்றது என்பதுதான். எல்லா வளமும் அரண்மனையோடு சரி. மக்கள் துன்பத்திலும் அமைதியற்றும்தான் இருக் கின்றனர். மாறாக, கிருஷ்ணதேவராயரைப் பொறுத்தவரையில், "நதி எப்படித் தேசம் முழுவதும் பாய்ந்து, நாட்டின் பூமியை வளப்படுத்துகிறதோ அதே போன்று தனது செல்வம் முழுவதையும் அரண்மனைக்குள் மட்டும் அடைத்துப் போட்டுக்கொள்ளாமல், அவர் மக்கள் நலனுக்காகப் பயன்படுத்து கிறார்' என்பதே நான் கூறியதன் பொருள். இப்போது யார் உயர்ந்தவர்; மேன்மையானவர்; என்பதை நீங்களே யோசித்து முடிவு செய்துகொள்ளுங்கள்,'' என்றார். ஒருசில கணங்கள் புஷ்யமித்திரரின் முகம் கருத்து விட்டது. பிறகு சமாளித்துக் கொண்டு, ""அரசர் கிருஷ்ணதேவராயரே! நீங்கள் வெற்றி பெற்று விட்டீர்கள்; நான் தோற்று விட்டேன். தெனாலிராமன் தனது புத்தி சாதுர்யத்தை மட்டும் வெளிப்படுத்திக் காட்டவில்லை. நாட்டை ஆள்வதற்கான நல்ல வழிகளையும் எனக்குக் காட்டி விட்டார்,'' என்ற புஷ்யமித்திரன் தெனாலியை அன்புடன் ஆரத் தழுவிக் கொண்டார். கரும்பு கரும்பு விஜயநகரப் பேரரசர் கிருஷ்ண தேவராயர் தெனாலிராமனுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார். இதைப் பார்த்த மற்ற அரசவையினருக்கு தெனாலி மீது பொறாமை ஏற்பட்டது. அவர்கள் அடிக்கடி, ""அரசே! எங்களிடம் என்ன குறை? நீங்கள் ஏன் எங்களை விடத் தெனாலிக்கு அதிக முக்கியத்துவம் தருகிறீர்கள்?'' என்று கேட்டனர். இதற்கு பதில் அரசரின் சிரிப்புத்தான். ஒருநாள், தெனாலி விடுப்பில் சென்றிருந்தார். அரசர், அமைச்சர், சேனாதிபதி முதலானோர் மாறுவேடத்தில் நகர்வலம் சென்றனர். பேசிக் கொண்டே ஒரு கிராமத்தை அடைந்தனர். ஓரிடத்தில் விவசாயிகள் அமர்ந்து பேசிக்கொண்டிருந்ததைப் பார்த்தார் அரசர். அவர்களிடம் சென்று, ""நாங்கள் வெளிநாட்டினர், உங்களை இந்நாட்டு அரசர் சரியாகக் கவனித்துக் கொள்கிறாரா?'' என்றார். உடனே அனைவரும் அரசரைப் புகழ்ந்தனர். பிறகு அரசர் ஒரு முதிய விவசாயியிடம் அதே கேள்வியைக் கேட்டார். உடனே அவர் சட்டென்று அங்கிருந்து எழுந்து எங்கோ போய்விட்டுப் பிறகு திரும்பி வந்தார். அவர் கையில் ஒரு கருப்பங்கழி! வந்ததும் அதை அவர் இரு கையாலும் உடைத்தவாறு, ""சகோதரா! எங்கள் அரசர் இதைப் போன்றவர்,'' என்றார். அவரது பதில் அரசருக்கு ஆச்சரியத்தைத் தந்தது. அமைச்சரைத் திரும்பிப் பார்த்தார். அமைச்சரோ ""அரசே! அவர் உங்களை அவமானப் படுத்துகிறார். அவர், "எங்கள் அரசர் பலவீனமானவர்; எவரும் அவரை எளிதில் வீழ்த்தி விடலாம் என்பதைக் குறிக்கக் கரும்பை ஒடித்துக் காட்டினார்,'' என்றார். இதைக்கேட்டதும், அரசருக்கு ஆத்திரம் வந்தது. அவர் ஏதோ கூற வந்தார். அப்போது பின்னாலிருந்து தலைப்பாகை கட்டிய ஒருவர் எழுந்து, ""கோபப்படாதீர்கள் தயாநிதியே! இப்போது கிழவர் கரும்பை உடைத்து, அரசர் கரும்பு போல் மேலிருந்து கசப்பும், இடையில் இனிப்பும் உடையவர் என்பதை உணர்த்தத்தான் இப்படி செய்தார்,'' என்று கூறிக் கொண்டே தனது பொய்த் தாடியை எடுத்தார். அது வேறு யாருமல்ல! தெனாலிராமன்தான். ""அரசே! என்னைக் கண்டு பிடிக்க முடியாவிட்டாலும், நான் உங்களது பணியாள். என்னால் உங்களை விட்டு எப்படி இருக்க முடியும்?'' என்றார். அதைக் கண்ட அரசர் சிரித்துவிட்டார். தெனாலியை வாரி அணைத்துக்கொண்டு, ""நான் உன்னிடம் பிரியம் வைத்திருப் பதற்குக் காரணமே இதுதான்,'' என்று புகழ்ந்தார். கேட்டுக் கொண்டிருந்த அமைச்சர், ராஜகுரு மற்றும் சேனாதிபதிக்கு அவமானமாகப் போய்விட்டது. அதன்பிறகு அரசவையில் தெனாலியின் மதிப்பு மேலும் அதிகரித்து விட்டது. சதிகாரன் சதிகாரன் தெனாலிராமன் இராயரின் சபையில் பல வேடிக்கைகளைச் செய்தபடி இன்பமாக வாழ்ந்து வந்தான். ஒரு சமயம் இராயரிடம் பகை கொண்ட ஒருவன் அவரைக் கொல்ல ஒரு சதிகாரனை அனுப்பினான். சதிகாரனும் தெனாலிராமனின் உறவினன் என்று சொல்லிக் கொண்டு அவனது வீட்டில் தங்கியிருந்தான். ஒரு நாள் தெனாலிராமன் இல்லாத சமயம் பார்த்து அந்த சதிகாரன் இராயருக்குக் கடிதம் ஒன்று எழுதினான். அதில் அரசர் உடனே தன் வீட்டுக்கு வந்தால் அதிசயம் ஒன்றைக் காட்டுவதாக எழுதி தெனாலிராமன் என்று கையொப்பமிட்டு அனுப்பினான். கடிதத்தைக் கண்ட இராயரும் நம் தெனாலிராமன் ஏதோ அதிசயத்தைக் காட்டப் போகிறான் என்ற ஆவலில் உடனே குதிரை மீது ஏறிப் புறப்பட்டார். அவசரமாகப் புறப்பட்டதால் ஆயுதம் எதையும் கொண்டு வரவில்லை. மூடியிருந்த கதவை லேசாகத்தள்ளி "இராமா!" என அழைத்தவாறே உள்ளே நுழைந்தார். அங்கு மறைவாக நின்றிருந்த சதிகாரன் கட்டாரியால் அரசரைக் குத்த முயன்றான். சட்டென்று அவன் கரத்தைப் பிடித்து வளைத்துப் பின்புறமாகப பிணைத்து விட்டார் அரசர். தம் மன்னர் தனியாக இராமனின் வீட்டுக்குள் நுழைவதைப் பார்த்த மக்கள் பின்னாலேயே வந்து அந்தச் சதிகாரனை அங்கேயே அடித்துக் கொன்றனர். மறுநாள் சபை கூடியது. தெனாலிராமன் குற்றம் சாட்டப் பட்டு குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப் பட்டான். அரசரைக் கொலை செய்ய முயற்சிப்பது பெரும் குற்றம். அதற்கு உடந்தையாக இருப்பதும் குற்றமே. சதிகாரனுக்கு ஆதரவளித்ததால் தெனாலிராமனும் குற்றவாளியென்று கூறி அவனுக்கு மரண தண்டனை அளித்தார் கிருஷ்ணதேவராயர. . . தெனாலிராமன் "அந்த சதிகாரன் என் உறவினன் என்று சொல்லிக்கொண்டு வந்ததால் இடமளித்தேன். அவன் இப்படி சதி செய்வான் என்று தெரியாது." என வாதாடிப் பார்த்தான். அறியாமல் நேர்ந்த தவறுக்கு மன்னிப்பு வேண்டினான். அரசர் சற்று நேரம் சிந்தித்தார். பிறகு சொன்னார்." இராமா! சட்டப்படி குற்றம் சாட்டப் பட்ட உன்னை மன்னிக்க முடியாது. வேண்டுமானால் உன் விருப்பப்படி சாக அனுமதி அளிக்கிறேன். நீ எப்படி சாக விரும்புகிறாய் என்பதைச் சொல். அதை நிறைவேற்றுகிறேன்." என்றார். ஒரு நிமிடம் தெனாலிராமன் சிந்தித்தான். பிறகு சட்டென்று " அரசே! நான் வயதாகி முதுமை அடைந்த பிறகு இயற்கையாக சாக விரும்புகிறேன்." என்றான். அரசர் அவன் புத்தி கூர்மையை மெச்சி அப்படியே வாக்களித்து அவனை விடுதலை செய்தார். தெனாலிராமன் மகிழ்ச்சியுடன் வீடு திரும்பினான். புலிக்கு பிறந்தது பூனை ஆகுமா? ஒரு சமயம் அரபுநாட்டு அரசர் கிருஷ்ணதேவராயருக்கு ஒரு அதிசய ரோஜா செடி ஒன்றை பரிசாக அளித்தார். அதை மன்னர் தனது தோட்டத்தில் நட்டு வைத்தார். சிறிது காலத்திற்கு பிறகு அந்த செடியில் இருந்து ரோஜா மலர்கள் மலர்ந்தன. அங்கு வந்த தெனாலி ராமனின் மகன் அதை பறித்து தனது தாய்க்கு பரிசாக கொடுக்க நினைத்து பூக்களை பறிக்க தொடங்கினான். பூக்களைப் பறித்துக்கொண்டு இருக்கும் போது அரண்மனைக் காவலர்கள் பார்த்துவிட்டனர். அரண்மனைக் காவலர்கள் தெனாலி ராமனின் மகனை அரசர் கிருஷ்ணதேவராயரிடம் காண்பிக்க அழைத்துச் சென்றனர். செல்லும் வழியில் தெனாலி ராமன் காவலர்களை பார்த்து "என்மகனை எங்கே அழைத்துக்கொண்டு செல்கிறிர்கள்?" என்று கேட்டான். அவர்களோ! "உங்கள் மகன் ரோஜா பூக்களை திருடிய போது அவனை நாங்கள் பிடித்துவிட்டோம். இப்போது அவனை மன்னரின் பார்வைக்காக அழைத்துச் செல்கிறோம். வேண்டுமென்றால் அவன் கைகளில் உள்ள திருடிய ரோஜா பூக்களை பார்" என்று அவன் கைகளை காண்பிக்கச் செய்தனர். தெனாலிக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. இருந்தாலும் தன் மகனை காப்பாற்ற விரும்பிய தெனாலி சிறுது நேரம் யோசித்து தான் அணிந்திருந்த மேலாடையை கழற்றி மகன் மேல் போர்த்திவிட்டான். இன்று வெயில் அதிகமாக உள்ளது. இந்த துணி என் மகனை காப்பாற்றும் என்று கூறிவிட்டுச் சென்றார். புலிக்கு பிறந்தது பூனை ஆகுமா? தெனாலிமகன் தந்தை கூறியதை யோசிக்க தொடங்கினான். உடனே ஒவொரு பூக்களாக சாப்பிட ஆரம்பித்தான். துண்டு முடி இருபதனால் அவன் பூக்களை சாப்பிடுவதை காவலர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை அரண்மனைக் காவலர்கள் தெனாலி ராமனின் மகனை அரசர் கிருஷ்ணதேவராயர் முன்னால் அழைத்துச்சென்றனர். காவலர்கள் மன்னரை பார்த்து "அரசே! தெனாலி ராமனின் மகன் பூக்களை திருடிய போது அவனை நாங்கள் பிடித்துவிட்டோம். இந்த குற்றத்திற்கு நீங்கள் தண்டனை வழங்க வேண்டும்" என்று கூறினர். மன்னரும் எல்லாவற்றையும் கேட்டறிந்து, பின்னர் அரசர் காவலர்களை பார்த்து, "திருடிய பூக்கள் எங்கே?" என்று கேட்டார். காவலர்கள் மன்னரை பார்த்து, "பூக்கள் அனைத்தும் அவன் கைகளில் தான் அரசே உள்ளது" என்று காவலர்கள் கூறினர். அரசர் தெனாலி மகனை பார்த்து, "உன் கைகளை காட்டு" என்று கூறினார். அவனும் வெறும் கைகளை காண்பித்தான். அவன் கைகளில் எதுவும் இல்லை. மன்னர் தெனாலிமகனை பார்த்து, "நீ பறித்த பூக்கள் எங்கே?" என்று கேட்டார் அவனோ! மன்னரைப் பார்த்து, "நான் பூக்கள் எதுவும் பறிக்க வில்லை. என் தந்தைக்கு அவமானம் ஏற்படுத்தவே இந்த இரண்டு காவலர்களும் இப்படி செய்தார்கள்" என்று கூறினான். மன்னரும் அந்த இரண்டு காவலர்களையும் திட்டி அனுப்பிவிட்டார். தெனாலியும் அவன் மகனும் எப்படியோ தப்பித்தோம் என்று சிரித்துக்கொண்டே வீட்டிற்கு புறப்பட்டனர். தெனாலிராமனும் திருடர்களும் விஜயநகரப் பேரரசில் அந்த வருஷம் மழையே பெய்யவில்லை. நாடு முழுவதும் வறட்சி . நதிகள், குளங்கள் எல்லாம் வற்றிவிட்டன. தெனாலிராமன் வீட்டுக் கிணற்றிலும் தண்ணீர் மிகவும் ஆழத்துக்குப் போய்விட்டது. அதிலிருந்து நீர் இறைத்துத் தோட்டத்திற்கு ஊற்றத் தெனாலிராமன் மிகவும் கஷ்டப்பட்டான். இந்தச் சமயத்தில்தான் ஒரு நாள் சில திருடர்கள் தெனாலிராமன் வீட்டுக்குள் நுழைந்துவிட்டார்கள். திருடுவதற்குச் சரியான நேரம் பார்த்துத் தோட்டத்தில் பதுங்கி இருந்தார்கள். தெனாலிராமன் அதைப் பார்த்துவிட்டான். திருடர்கள் ஒளிந்துகொண்டிருப்பதைத் தன் மனைவியிடம் ரகசியமாகச் சொன்னான். தெனாலிராமன் அரண்மனையில் வேலை பார்ப்பவன். அவன் நினைத்தால் காவலர்களைக் கூப்பிட்டு அவர்களைக் கைது செய்யலாம். ஆனால் அவன் அப்படிச் செய்யவில்லை. அவனுக்கு ஒரு திட்டம் இருந்தது. மனைவியிடம் சத்தமாகப் பேச ஆரம்பித்தான். “நம்ம நாட்டுல பஞ்சம் அதிகமாயிடிச்சி. திருடங்க அதிகமாயிட்டாங்க...” தன் கணவன் சத்தமாகப் பேசுவது ஏன் என்று மனைவிக்குப் புரியவில்லை. ராமன் தொடர்ந்து பேசினான். “நாம்ப கொஞ்ச காலத்துக்கு வீட்டில இருக்குற நகைகள், மத்த விலையுயர்ந்த பொருட்களை எல்லாம் பத்திரமா எங்கயாவது ஒளிச்சி வைக்கணும்” என்றான். மனைவி ஒன்றும் புரியாமல் தலை ஆட்டினாள். “எல்லாத்தையும் பத்திரமா பெட்டிக்குள்ள போட்டு கிணத்துக்குள்ள போட்டுடலாம். பஞ்சம் முடிஞ்சதும் திரும்ப எடுத்துக்கலாம்” என்றான். மனைவியிடம் ஜாடையாக ஏதோ கூறினான். அவளுக்கு விஷயம் புரிந்தது. அவர்கள் இருவரும் தேவையில்லாத பொருட்கள் எல்லாவற்றையும், ஒரு பெட்டிக்குள் போட்டு தூக்க முடியாமல் தூக்கிக்கொண்டு போய் கிணற்றில் போட்டார்கள். “அப்பாடா! நகையெல்லாம் பத்திரமா இருக்கும்” என்று சத்தமாகச் சொன்னான். ராமன். பிறகு இருவரும் வீட்டுக்குள் வந்து படுத்துவிட்டார்கள். இதைப் பார்த்துக்கொண்டிருந்த திருடர்களுக்கு ஒரே மகிழ்ச்சி. இன்று நல்ல வருமானம்தான் என்று நினைத்தார்கள். கிணற்றுக்குள் இறங்கிப் பெட்டியை எடுக்கப் பார்த்தார்கள். அது ரொம்ப ஆழமான கிணறு. எனவே அதில் இறங்க பயந்தார்கள். நிலா வெளிச்சத்தில் கிணற்றுக்குள் எட்டிப் பார்த்தார்கள். நீர் குறைவாக இருந்தது. “தண்ணிய எடுத்து வெளியே இறைச்சிட்டா பெட்டிய எடுத்துடலாமே” என்று ஒருவன் கிசுகிசுத்தான். மற்றவர்கள் அதை ஒப்புக்கொண்டார்கள். வாளியைக் கிணற்றுக்கு உள்ளே இறக்கி நீரை இறைத்துத் தோட்டத்தில் ஊற்ற ஆரம்பித்தார்கள். பல வாளித் தண்ணீரை இறைத்தும் பெட்டி தட்டுப்படவில்லை. விடா முயற்சியுடன் தொடர்ந்து இறைத்துக்கொண்டே இருந்தார்கள். அப்போது சேவல் கூவியது. இன்னும் சிறிது நேரத்தில் வெளிச்சம் வந்துவிடும் என்பதைத் திருடர்கள் புரிந்துகொண்டார்கள். “கிளம்பலாம். மீதி தண்ணியை நாளைக்கு இறைக்கலாம்” என்றான் ஒருவன். மற்றவர்கள் ஆமாம் என்று தலையை ஆட்டினார்கள். அப்போது அவர்கள் பின்னால் ஏதோ சத்தம் கேட்டது. திரும்பிப் பார்த்தால் காவலர்கள். அவர்களுக்குப் பக்கத்தில் தெனாலிராமன். “நீங்க நாளைக்கு வந்து தண்ணி இறைக்க வேண்டாம். இன்னிக்கி இறைச்ச தண்ணியே இன்னும் ஒரு வாரத்துக்குப் போதும். இப்ப இவங்க கூட போங்க” என்றான். அவர்கள் போனதும் தோட்டம் முழுவதும் இறைக்கப்பட்டிருந்த தண்ணீரைப் பார்த்து ராமனும் அவன் மனைவியும் மகிழ்ச்சியாகச் சிரித்துக்கொண்டார்கள். தெனாலிராமன் விற்ற குதிரை ஒரு சமயம் தெனாலிராமனுக்கு உடல் நலம் மோசமாகி விட்டது. வைத்தியரும் வந்து பார்த்தார். வைத்திய செலவு நிறைய ஆகும் என்று சொல்லி விட்டுப் போய் விட்டார். வைத்திய செலவுக்கு தெனாலி ராமனிடம் பணம் இல்லை. ஆகையால் அவ்வூரில் வட்டிக்கொடுக்கும் சேட்டை அணுகினான். அதற்கு சேட்டும் “பணத்தை எப்போது திருப்பிக்கொடுப்பாய்” என்று கேட்டார். தெனாலிராமனும் உயர் ஜாதி அரேபியக் குதிரை வைத்திருந்தான். நல்ல விலை போகும் அதனால் உடல் நலம் தேறியதும் குதிரையை விற்றுப் பணம் தருவதாகச் சொன்னான். அவன் சொன்னதின் பேரில் சேட்டும் நம்பிக்கையோடு பணம் கொடுத்தான். பணத்தைப் பெற்றுக் கொண்ட தெனாலிராமன் வைத்தியரிடம் சென்று சிகிச்சையை ஆரம்பித்தான். விரைவில் குணமும் அடைந்தான். பல மாதங்கள் ஆயின. தெனாலிராமனிடமிருந்து பணம் வருவதாகத் தெரியவில்லை. ஆகையால் சேட் தெனாலி ராமனை சந்திக்கப் புறப்பட்டான். தெனாலிராமனைப் பார்த்து “என்னப்பா, உடல் குணமானதும் குதிரையை விற்றுப்பணம் தருவதாக சொன்னாயே. இன்னும் தரவில்லையே உடனே கொடு” என்றான். தெனாலி ராமனும் நன்கு யோசித்தான். அநியாய வட்டி வாங்கும் சேட்டுக்குப் பாடம் கற்பிக்க விரும்பினான். “சரி குதிரையை விற்றுப் பணம் தருகிறேன். என்னுடன் நீயும் வா” என்று அவனையும் அழைத்துக் கொண்டு பக்கத்து ஊரில் நடக்கும் சந்தைக்குப் புறப்பட்டனர். போகும் போது குதிரையையும் கூடவே ஒரு பூனையையும் அழைத்துச் சென்றான். சந்தையில் தெனாலிராமனின் பளபளப்பான குதிரையைப் பார்க்க பெரிய கூட்டமே கூடி விட்டது. அப்போது ஒரு பணக்காரன் தெனாலிராமனைப் பார்த்து “உன் குதிரை என்ன விலை” என்று கேட்டான். அதற்கு தெனாலி ராமனோ “குதிரையின் விலை 1 பவுன்தான். இந்த பூனையின் விலையோ 500 பவுன். ஆனால் இந்த பூனையையும் சேர்த்து வாங்கினால்தான் இக்குதிரையைக் கொடுப்போன்” என்றான். தெனாலிராமனின் பேச்சு அவனுக்கு விநோதமாக இருந்தாலும் குதிரையை வாங்க வேண்டும் என்ற மிகுந்த ஆவலில் 501 பவுன் கொடுத்து குதிரையையும் பூனையையும் வாங்கிச் சென்றான். பின் சேட்டிடம் ஒரு பவுனை மட்டும் கொடுத்தான். ஆனால் ஒரு பவுனை சேட் வாங்க மறுத்து விட்டான். “குதிரை அதிக விலைக்குப் போகுமென்று நினைத்து தானே உனக்குப் பணம் கொடுத்தேன். நீ இப்படி ஏமாற்றுகிறாயே” என்றான். அதற்கு தெனாலிராமன் “ஐயா சேட்டே குதிரையை விற்றுத்தான் உமக்குப்பணம் தருகிறேன் என்று சொனனேன். அதன்படியே குதிரையை 1 பவுனுக்கு விற்று அந்த 1 பவுனையும் உனக்கே கொடுத்து விட்டேன் நீ வாங்க மாட்டேன் என்கிறாயே! இது என்ன நியாயம்” என்றான். சேட்டோ 500 பவுன் வேண்டுமென்றான். இறுதியில் இவர்கள் வழக்கு மன்னர் கிருஷ்ண தேவராயரிடம் சென்றது. மன்னர் இவ்வாழ்க்கை ஆதியோடு அந்தமாக விசாரித்தார். பின் தெனாலிராமன் செய்தது சரியே என்று தீர்ப்புக் கூறினார். தெனாலிராமன் கதைகள் – மோதிரம் அப்போது அமைச்சர் தெனாலிராமனிடம் மெல்லிய குரலில், “தெனாலி... உனக்கோ வயதாகி விட்டது. ஏன் நீ அரசரிடம் கேட்டு பணி ஓய்வு பெறக் கூடாது?” என்றார். அது அரசரின் காதில் விழுந்து விடவே, அரசர் சிரித்தவாறு, “தெனாலிராமா! வேண்டுமானால் சொல்... மகிழ்ச்சியோடு தருகிறேன்” என்றார். “அப்படியானால் சரி... ஆனால், ஒரு நிபந்தனை! எனக்குப் பதிலாக வரப்போகிறவரை நான்தான் சோதித்துத் தேர்வு செய்து தருவேன்...” என்றார். “அதற்கென்ன... அப்படியே செய்யலாம்...!” என்று அரசர் ஏற்றுக் கொண்டார். “அப்படியானால் உங்கள் மோதிரத்தை என்னிடம் கொடுங்கள்” என்றார் தெனாலிராமன். ஏன்...? எதற்கு? என்று அரசர் கேட்கவில்லை. கழற்றப் போனார். அதற்குள் முந்திக் கொண்டு, அமைச்சர் தன் மோதிரத்தைக் கழற்றிக் கொடுத்து விட்டார். பெற்றுக்கொண்டே தெனாலிராமன், “அடுத்த வியாழக்கிழமை சோதனை... அதில், வெற்றி பெறுபவர் எனது பதவியைப் பெறுவார்... நான் ஓய்வில் போய்விடுகிறேன்” என்றார். மோதிரத்தைப் பெற்றுக் கொண்ட தெனாலி, ஒரு சிறிய மர டப்பாவில் அதை வைத்து மூடி, அரண்மனையில் இருந்த யானை நீர்குடிக்கும் ஆழமான பெரிய தொட்டியினுள் அதைப் போட்டு விட்டு, “யார் இதை எடுக்கிறாரோ, அவரே எனக்குப் பின் என் பதவிக்கு வரமுடியும்...” என்றார். அடுத்த சில நாட்களில், பதவித் தேர்வுக்கு மனு செய்திருந்த இளைஞர்கள் அனைவரும் வந்து ஆழமான தொட்டியைப் பார்த்தனர். அப்போது தொட்டி முற்றிலும் வறண்டு போயிருந்தது. மோதிர டப்பா அடியில் கிடந்தது. அதனுள் எப்படி இறங்கி அதை எடுப்பது? அனைவரும் பல்வேறு உபாயங்களைச் செய்து பார்த்தனர். எவராலும் எடுக்க முடியவில்லை. அதற்குள் தெனாலிராமன் மீது பல குற்றச்சாட்டுகள் எழுந்தன. அமைச்சர், அவர் காதில் விழும்படியாகவே, “தெனாலிராமன் அந்த மோதிரத்தைத் தானே அபகரித்துக் கொள்ளச் செய்யும் தந்திரம் இது... இல்லாவிட்டால், அவனே அதை வெளியில் எடுத்துக் காட்டட்டுமே...!” என்றார். அதைக் கேட்டதும், தெனாலிராமன் நேராக அரண்மனைக்குச் சென்றார். அரசர் ஒவ்வொரு வருடமும் ஹோலிப் பண்டிகையின் போது அந்த யானைத் தொட்டியில்தான் வண்ணநீரை நிரப்புவது வழக்கம். அதற்கு நீர் நிரப்பவும் வடி கட்டவும் தனித்தனிக் குழாய்கள் உண்டு. தெனாலி சென்று நீர் நிரப்பும் குழாயை திறந்து விட்டார். தொட்டியில் நீர் நிரம்பவே, அடியில் கிடந்த சிறிய மர டப்பா நீரில் மிதந்து மேலே வந்துவிட்டது. அதை எடுத்துத் திறந்து மோதிரத்தை அரசர் கையில் ஒப்படைத்து விட்டார். அரசரிடமிருந்து அது அமைச்சரைப் போய்ச் சேர்ந்து விட்டது. மகிழ்ச்சி அடைந்த அரசர் கிருஷ்ண தேவராயர், “மோதிரத்தை எடுத்துத் தருபவர் தான் உனக்குப் பிறகு உன் பதவிக்கு வர முடியும் என்றாய்... இப்போது நீயே எடுத்துத் தந்து விட்டாய்... எனவே, உன் பதவி உன்னையே வந்தடைந்து விட்டது. ஆகவே, உனக்கு ஓய்வு தருவது பற்றி இனி நான் எண்ணிக் கூடப் பார்க்க முடியாது” என்றார். தென்னை மரம்! அரசர் கிருஷ்ணதேவராயரின் அவைக்கு ஒரு நபர் வந்தார். அவர் அரசரிடம், “அரசே! என்னுடைய வயலும் பக்கத்து வீட்டுக்காரர் வயலும் அருகருகில் உள்ளன. இரண்டுக்கும் இடையில் உள்ள வரப்பில், ஒரு தென்னை மரம் உள்ளது. பக்கத்து வீட்டுக்காரர் அதை எனக்கு விற்று விட்டார். நான்தான் அதை நன்றாகப் பராமரித்து வருகிறேன். இன்று அவர் என்னைத் தேங்காய் பறிக்கக் கூடாது என்றார். இப்போது அவர் தன் முடிவை மாற்றிக் கொண்டு விட்டாராம். மரம் திரும்ப அவருக்கு வேண்டுமாம்...” என்று முறையிட்டார். அதைக் கேட்டு அவையினர் அனைவரும் திடுக்கிட்டனர். அமைச்சர் சொன்னார். “அந்த மனிதாபிமானம் அற்ற மனிதரைக் கைது செய்து வந்து சிறையில் அடைக்க வேண்டும்” என்றார். அதற்குள் சேனாதிபதி, அந்த நபரைக் கைது செய்து வரத் தயாராகி விட்டார். அப்போது அரசர் "என்ன செய்யலாம்?" என்று கேட்பதைப் போல் தெனாலிராமனைப் பார்த்தார். தெனாலிராமன் புரிந்து கொண்டு, “தாங்கள் அனுமதி தந்தால், இதற்கான தீர்வை நாளைக்குத் தள்ளி வைத்துக் கொள்ளலாம்...” என்றார். அரசர், “சரி” எனவே, தெனாலி அந்த நபரிடம், “நாளைக்கு உன் பக்கத்து வீட்டுக்காரனையும் அழைத்து வா...” என்று அவனை அனுப்பி விட்டார். மறுநாள் அந்த நபரும், பக்கத்து வீட்டுக்காரனும் சபைக்கு வந்தனர். இருவரிடமும் நன்கு விசாரித்த பிறகு தெனாலிராமன் சொன்னார். “அப்படியானால் நீ உன் மரத்தைத் திரும்ப எடுத்துக் கொள்ள விரும்புகிறாய் இல்லையா?” என்றார். அதற்கு அவன், “ஆம் ஐயா!” என்றான். “சரி, நீ அவனுடைய பணத்தைத் திரும்பக் கொடுத்துவிடு...” என்றார் தெனாலிராமன். அவனும் பணத்தை எடுத்துக் கொடுத்து விட்டான். சபையினருக்கு ஒன்றும் புரியவில்லை. “தெனாலி ஏன் இப்படியெல்லாம் செய்கிறார்?” என்று திகைத்தார். பிறகு தெனாலி, மரத்தை வாங்கியவரிடம், “சரி... இன்றிலிருந்து அந்த மரம் உன்னுடையது இல்லை...” என்றார். அந்த மனிதரிடம் ஏமாற்றம். அப்போது தெனாலிராமன் தொடர்ந்து, “இன்னொரு விஷயம்... அந்த மரம் நீ வாங்கும் போது எப்படி இருந்ததோ அப்படியே அதை நீ திரும்பக் கொடுத்து விட வேண்டும்...” என்று கூறி விளக்கினார். “அதாவது நீ மரத்தை அவரிடம் வாங்கும்போது அம்மரம் காய்க்கத் தொடங்கவில்லை. ஆகவே, அதைத் திரும்ப ஒப்படைப்பதற்கு முன்பு எல்லாக் காய்களையும் பறித்துக் கொண்டுவிடு...” என்றார் வாங்கியவரிடம். திரும்பப் பெற்றவரிடம், “காய் இல்லாத மரத்தைத்தானே நீ விற்றாய்...? ஆகவே, என்றைக்கும் காயில்லாத மரம்தான் உன்னுடையது. அதில் இனிமேல் காய்க்கும் காய்கள் எல்லாம் மரத்தைத் திரும்பக் கொடுத்தவரையே சேரும்... அதை அவர் பறித்துக்கொள்ள அவ்வப் போது நீ அனுமதிக்க வேண்டும் தடுக்கக் கூடாது; நீயும் பறித்துக் கொள்ளக் கூடாது...” என்றார். தெனாலியின் இத்தீர்ப்பை அரசர் ஆமோதித்தார். திரும்பப் பெற்றவன் முகத்தில் ஏமாற்றம். புகார் கொடுத்த நபர் மகிழ்ச்சியுடன் எல்லாரையும் குறிப்பாக, தெனாலிராமனை வணங்கி விட்டு விடைபெற்று சென்றார். உலகிலேயே வெண்மையான பொருள் எது? ஒருசமயம், தெனாலிராமன் அரசவையில் இருந்தபோது, தூக்கம் கண்ணைச் செருகியது. அதைக் கண்டு உறுப்பினர்கள் சிரித்து விட்டனர். அப்போது அமைச்சர், “அரசே! தெனாலிக்கு வயதாகி விட்டது. ஓய்வு கொடுங்கள்” என்றார். அரசரிடம் பதில் இல்லை. மறுநாள் அரசர், “என் மனதில் ஒரு கேள்வி, உலகிலேயே வெண்மையான பொருள் எது? இதற்குச் சரியான பதிலை நீங்கள் சொல்லி விட்டால், தெனாலியை ஓய்வு கொடுத்து அனுப்பி விடுவேன்” என்றார். அமைச்சர், “வெள்ளி நகை தான்...” என்றார். அரசகுரு, “பால் தான்!'' என்றார். சிலர், “சம்பா மலர்!'” என்றனர். வேறு சிலர், “மல்லிகை தான்”' என்றனர். இன்னும் சிலர், “சுண்ணாம்பு தான்!” என்றனர். அரசர் திருப்தி அடையவில்லை. தெனாலியிடம் கேட்டார். “நாளைக்குக் கூறுகிறேன்” என்றார் தெனாலி. மறுநாள் தெனாலி வெள்ளி நகை, கொஞ்சம் பால், சம்பா மலர், மல்லிகை மலர்கள் ஆகியவற்றை வரவழைத்தார். சுண்ணாம்பும் வந்தது. பிறகு ஒரு பெரிய அறையில் தரை விரிப்பின் மீது அவற்றை வைத்து, கதவு மற்றும் ஜன்னல்களைச் சாத்தித் திரையிட்டார். வெளியில் வந்து, “அரசே! இவர்களிடம் உள்ளே போய் அவரவர்கள் வெண்மை என்று கருதும் பொருளை எடுத்து வரச் சொல்லுங்கள்...” என்றார். அனைவரும் உள்ளே போயினர். அவர்களுக்கு உள்ளே இருட்டில் எதுவும் தெரியவில்லை. ஒருவருக்குப் பால் பாத்திரம் காலில் இடறி, பால் தரையில் கொட்டியது. இன்னொருவர் காலில் நகைகள் இடறின. வேறொருவர் பூக்களை மிதித்து விட்டார். ஒரு பாத்திரத்தில் இருந்த சுண்ணாம்பு கவிழ்ந்தது. மூவரும் பதறி, ஒருவரை ஒருவர் கட்டிக் கொண்டனர். அதே சமயம் தெனாலிராமன் அறையில் மேற்புறக் கதவைத்திறந்தார். அறையில் ஒளி பரவியது. அப்போது அங்கிருந்த பொருட்கள் பளிச்சென்று தெரிந்தன. அச்சமயம், அரசர் கிருஷ்ணதேவராயர் உள்ளே வந்தார். உடனே தெனாலிராமன், “அரசே! என்னுடைய பதில் இப்போது உங்களுக்கு விளங்கியிருக்குமே! உலகில் எல்லாவற்றையும் விட வெண்மையான பொருள் பாலோ, வெள்ளி நகையோ, சுண்ணாம்போ அல்லது மலர்களோ அல்ல. அப்படியிருந்தால், இருட்டறையில் அவை பளிச்சிட்டிருக்க வேண்டுமே! ஏன் கண்ணுக்குத் தெரியவில்லை? எனவே, உலகில் வெண்மையான பொருள் சூரியனின் பிரகாசம் மட்டும்தான். அதனால்தான் உலகின் மற்ற எல்லாப் பொருள்களும் பிரகாசிக்கின்றன” என்றார். அதைக் கேட்ட அரசர், மகிழ்ச்சியடைந்து, தெனாலியை வாரி அணைத்துக் கொண்டார். சபையினரிடம் அரசர், “தெனாலிராமன் நமக்கு ஏன் இத்தனை பிரியமானவனாக இருக்கிறான் என்பதை இப்போது நீங்கள் அறிந்து கொண்டிருப்பீர்களே...?” என்றார். “தெனாலிக்கு ஓய்வு கொடுத்து அனுப்புங்கள்” என்று யோசனை கூறியவர்கள் எல்லாம் வாயடைத்துப் போயினர். தங்க மஞ்சள் குருவி! விஜய நகர் விழா கோலம் பூண்டிருந்தது! அரச உற்சவம்! அதில் கலந்துகொள்ள அண்டை நாட்டு அரசன் விஜயவர்தனர் வந்தார். விழா முடிந்த பிறகும் சில தினங்கள் விஜயநகரில் தங்கினார். ஒருநாள் அரசர் அவரிடம், "அரசே நான் கேள்விப்பட்டேனே...? தங்கள் அவைப் புலவர் தெனாலிராமன் மிகவும் சாதுரியசாலியாமே! அவரிடம் சொல்லி, எனக்குக் காலையில் தங்கமஞ்சள் நிறத்திலும், நடுப்பகலில் சிவப்பு நிறத்திலும், இரவில் ஏழு வர்ணங்களிலுமாக உருமாறும் அற்புதக் குருவி ஒன்றைக் கொண்டு வந்து தரச் சொல்லுங்களேன்...'' என்றார். மேலும், "அது சில சமயம் மூன்று காலாலும், சில சமயம் இரட்டைக் காலாலும், பிறகு ஏழு இறக்கை கொண்டு வானில் பறக்கவும் வேண்டும்'' என்றார். அரசர் உடனே தெனாலியை அழைத்து, "விரைவில் அத்தகைய குருவியைக் கொண்டு வா...'' என்று உத்தரவிட்டார். அதைக் கேட்டுத் தெனாலிராமனுக்குத் தலை சுற்றியது. அத்தகைய பறவை பற்றி அவர் ஒரு போதும் கேள்விப்பட்டது கூட இல்லை. ஆனால் சிரித்தவாறே, "சரி.... அரசே! நாளைக்கு நான் அத்தகைய பறவையோடு வருகிறேன்'' என்றார். மறுநாள் தெனாலி, சபைக்குத் தாமதமாக வந்தார். அவர் நிலைமை மிக மோசமாக இருந்தது. கிழிந்த உடைகள். அதில் புற்களும், முட்களும், மண்ணும் ஒட்டியிருந்தன. கையில் குருவி எதுவும் இல்லாத ஒரு பறவைக் கூண்டு. அவர் அரசரிடம், "என்ன சொல்வேன் அரசே! அதிசயமான கதை நடந்து விட்டது. அந்தக் குருவி கையில் கிடைத்து விட்டது. நானும் அதைக் கூண்டில் அடைத்து விட்டேன். அதை இங்கு எடுத்து வரும்போது, அது தனது மாயமான ஏழு இறக்கைகளை விரித்துப் பறந்து சென்று விட்டது. காட்டில் அதைத் துரத்திக் கொண்டு வெகுதூரம் சென்று விட்டேன். அது மீண்டும் என் கையில் சிக்கவில்லை'' என்றார். தொடர்ந்து, சற்று தூரத்தில் பறந்து சென்றவாறே அது என்னிடம் சொல்லிற்று, "அரசரிடம் போய்ச் சொல்... காலையாகிற போதோ அல்லது இரவாகிறபோதோ அல்லது நடுப்பகல் ஆகிறபோதோ, வெளிச்சமோ இருட்டோ இல்லாத போது, நானே எனது ஏழு இறக்கைகளால் பறந்து, திரும்ப வந்து விடுகிறேன்... என்றது'' என்றார். அதைக் கேட்டதும் அரசருக்கு மட்டுமல்ல, அண்டை நாட்டு மன்னர் விஜயவர்தனருக்கும் தலை சுற்றியது. அப்படிப்பட்ட சமயம் எங்கு உண்டாகும்? "காலை ஆகாமல், நடுப்பகல் ஆகாமல், இரவு ஆகாமல் வெளிச்சம், இருட்டு ஆகும் சமயம் எது?'' என்று அனைவரும் வியப்படைந்தனர். அதைக் கேட்டு விஜயவர்தனர், அரசர் இருவரும் சிரித்து விட்டனர். விஜயவர்தனர் சொன்னார், "தெனாலியின் சாதுரியம் பற்றி இதற்கு முன்பு கேள்விப்பட்டுள்ளேனே தவிர, இப்போது தான் நேரில் பார்த்தேன்...'' என்று புகழ்ந்தார். கருப்பங்கழி! விஜயநகரப் பேரரசர் கிருஷ்ண தேவராயர் தெனாலிராமனுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார். இதைப் பார்த்த மற்ற அரசவையினருக்கு தெனாலி மீது பொறாமை ஏற்பட்டது. அவர்கள் அடிக்கடி, “அரசே! எங்களிடம் என்ன குறை? நீங்கள் ஏன் எங்களை விடத் தெனாலிக்கு அதிக முக்கியத்துவம் தருகிறீர்கள்?'' என்று கேட்டனர். இதற்கு பதில் அரசரின் சிரிப்புத்தான். ஒருநாள், தெனாலி விடுப்பில் சென்றிருந்தார். அரசர், அமைச்சர், சேனாதிபதி முதலானோர் மாறுவேடத்தில் நகர்வலம் சென்றனர். பேசிக் கொண்டே ஒரு கிராமத்தை அடைந்தனர். ஓரிடத்தில் விவசாயிகள் அமர்ந்து பேசிக்கொண்டிருந்ததைப் பார்த்தார் அரசர். அவர்களிடம் சென்று, “நாங்கள் வெளிநாட்டினர், உங்களை இந்நாட்டு அரசர் சரியாகக் கவனித்துக் கொள்கிறாரா?'' என்றார். உடனே அனைவரும் அரசரைப் புகழ்ந்தனர். பிறகு அரசர் ஒரு முதிய விவசாயியிடம் அதே கேள்வியைக் கேட்டார். உடனே அவர் சட்டென்று அங்கிருந்து எழுந்து எங்கோ போய்விட்டுப் பிறகு திரும்பி வந்தார். அவர் கையில் ஒரு கருப்பங்கழி! வந்ததும் அதை அவர் இரு கையாலும் உடைத்தவாறு, “சகோதரா! எங்கள் அரசர் இதைப் போன்றவர்'' என்றார். அவரது பதில் அரசருக்கு ஆச்சரியத்தைத் தந்தது. அமைச்சரைத் திரும்பிப் பார்த்தார். அமைச்சரோ “அரசே! அவர் உங்களை அவமானப் படுத்துகிறார். அவர், "எங்கள் அரசர் பலவீனமானவர்; எவரும் அவரை எளிதில் வீழ்த்தி விடலாம் என்பதைக் குறிக்கக் கரும்பை ஒடித்துக் காட்டினார்'' என்றார். இதைக்கேட்டதும், அரசருக்கு ஆத்திரம் வந்தது. அவர் ஏதோ கூற வந்தார். அப்போது பின்னாலிருந்து தலைப்பாகை கட்டிய ஒருவர் எழுந்து, “கோபப்படாதீர்கள் தயாநிதியே! இப்போது கிழவர் கரும்பை உடைத்து, அரசர் கரும்பு போல் மேலிருந்து கசப்பும், இடையில் இனிப்பும் உடையவர் என்பதை உணர்த்தத்தான் இப்படி செய்தார்'' என்று கூறிக் கொண்டே தனது பொய்த் தாடியை எடுத்தார். அது வேறு யாருமல்ல! தெனாலிராமன்தான். “அரசே! என்னைக் கண்டு பிடிக்க முடியாவிட்டாலும், நான் உங்களது பணியாள். என்னால் உங்களை விட்டு எப்படி இருக்க முடியும்?'' என்றார். அதைக் கண்ட அரசர் சிரித்துவிட்டார். தெனாலியை வாரி அணைத்துக்கொண்டு, “நான் உன்னிடம் பிரியம் வைத்திருப் பதற்குக் காரணமே இதுதான்'' என்று புகழ்ந்தார். கேட்டுக் கொண்டிருந்த அமைச்சர், ராஜகுரு மற்றும் சேனாதிபதிக்கு அவமானமாகப் போய்விட்டது. அதன்பிறகு அரசவையில் தெனாலியின் மதிப்பு மேலும் அதிகரித்து விட்டது. ஒற்றன்! ஒரு முறை தெனாலி ராமன் வாழ்கின்ற நாட்டு மன்னருக்கு அண்டை நாட்டு அரசன் ஒருவர் ஓலை அனுப்பியிருந்தார். மதிப்புக்குறிய ராஜாவுக்கு, உங்கள் நாட்டின் மேல் நான் போர் தொடுக்க உத்தேசித்துள்ளேன். மூன்றாவது பெளர்ணமி அன்று உங்கள் நாட்டிற்கு எதிராக போர் முரசு கொட்டப்படும். எனது நாட்டுப்படையைப் பற்றி நீங்கள் அறியாததா? நீங்கள் போருக்கு சம்மதமா? கத்தியின்றி இரத்தமின்றி போர் முடிய வேண்டும் என்றால், நீங்களும், உங்கள் நாடும் என்னிடம் தோல்வியை ஏற்றுக் கொண்டு, நாட்டினை என்னிடம் கொடுக்க வேண்டும். அப்படி நீங்கள் செய்தால் உங்களுக்கு உயிர் பிச்சை கொடுத்து நாட்டில் எங்கேயாவது ஒரு ஓரத்தில் நீங்கள் வாழ்ந்து கொள்ளலாம். இப்படிக்கு, ராஜ ராஜ சிம்மன். மன்னர் உடனே அரச சபையினை நோக்கி அவர்களது கருத்துக்களை கூறச் சொன்னார். சேனாதிபதி முதல் மந்திரிகள் வரை ராஜ ராஜ சிம்மனின் படையை வெல்ல முடியாது என்பதை ஆணித்தனமாக கூறினார்கள். மன்னனுக்கும் தெரியும் அந்தப் படையை வெல்லமுடியாது. மேலும் போர் ஏற்ப்பட்டால் எண்ணற்ற மக்கள் உயிரை இழப்பார்கள், பெரும் சேதம் ஏற்ப்படும். இதற்கு என்ன தான் வழி என்று கேட்டார் மன்னர். உடனே அனைவரும் ஆளுக்கு ஒன்றாக பேசினார்கள். அனைவரின் கருத்தும் போரிடாமல் எதிரிக்கு தலை வணங்கலாம் என்பதே. இவ்வளவு நேரமும் அமைதியாக எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருந்த தெனாலிராமன் பேசத் தொடங்கினார். “மன்னா! எதிரி மன்னன் ராஜ ராஜ சிம்மனிடம் நீங்கள் மண்டியிட்டு விட்டால், நாளைய வரலாறு நம் நாட்டையே கேலி செய்யும், இத்தனை நாள் நீங்க பெற்றிருந்த புகழ் எல்லாம் மங்கி போயிடும், மக்களுக்கும் பெரிய அவமானமாகை விடும்.. அதற்கு பதில் போரிட்டு மடிந்தாலும், மாபெரும் படையுடன் போரிட்டு செத்து மடிந்தார்கள் என்று வரலாறு இருக்கும்" அரசரை தவிர அனைவரும் தெனாலிக்கு பித்து பிடித்து விட்டது என்று கூறி, அவருடன் வாக்குவாதப் பட்டார்கள். முடிவில் மன்னர் சொன்னார் “தெனாலிராமன் சொல்வதில் உண்மை இருக்கின்றது. அடிமையாக வாழ்வதை விட போர் செய்து மடியவே விரும்புகின்றேன்: என்றார். அத்தோடு அரச சபை கலைந்து விட்டது. அதன் பின்னர் மன்னரும் தெனாலியும் நீண்ட நேரம் தனிமையில் உரையாடினார்கள். இதற்கு மாற்று வழி உண்டா என்று ஆய்வு செய்தார்கள்.ஐந்து நாள்களுக்குப் பின் மீண்டும் அரச சபை கூடியது. அரசரைப் பார்த்து “மன்னா உங்களுக்கு என்னிடம் நம்பிக்கை இருந்தால், இந்த விசயத்தை என்னிடம் விடுங்கள். நான் பார்த்துக் கொள்கின்றேன். எனது உயிரை கொடுத்தாவது இந்த நாட்டினை காப்பாற்றுகின்றேன்”. என்றார் தெனாலி. அதற்கு மன்னர் சம்மதம் தெரிவித்தார். தெனாலி கூறுவதைப் போன்று ஒரு ஓலை எழுதி மோதிர முத்திரை பதித்து கொடுத்தார் தெனாலியிடம். அந்த ஓலையை எடுத்துக் கொண்டு தெனாலி எதிரி நாட்டு மன்னர் ராஜ ராஜ சிம்மம் முன்னால் போய் நின்றார், அரசர் கொடுத்த ஓலையை உரக்கப் படித்தார் . மதிப்புக்குறிய மன்னர் ராஜ ராஜ சிம்மனுக்கு.உங்கள் படைக்கு சற்றும் சளைத்தவர்கள் அல்ல எம் வீரர்கள். போருக்கான நாளை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றார்கள். உங்களை படையின் மனபலம் உங்களுக்கு சரியாக தெரியவில்லை என்று நினைக்கின்றேன். அவர்கள் எங்கள் படையோடு போர் செய்வதற்கு பயந்து நடுங்குகின்றார்கள். எதற்கு கோழைகளின் உயிரை கொல்லவேண்டும் என்று எண்ணுகிறேன். இந்த ஓலையை எடுத்து வந்த வீரர் எங்கள் படையில் மருத்துவ உதவி செய்பவர். இவரை உங்கள் நாட்டு சேனாதிபதி சண்டையிட்டு வென்று விட்டால், எனது நாட்டை உங்களுக்கு பரிசாக கொடுத்துவிடுகின்றேன்”. ஓலையில் எழுதியிருப்பதை கேட்ட ராஜ ராஜ சிம்மன், தெனாலியை மாறி, மாறிப் பார்த்தார். மெலிந்த ஒருவம் கொண்ட தெனாலியை கேலியாகப் பார்த்தார். “யார் அங்கே இவனை பிடித்து சிறையில் அடையுங்கள் என்றார் மன்னர். “மன்னிக்கவும் மன்னா, ஒரு நாட்டின் தூதுவனாக வந்தவரை சிறையில் அடைப்பது போர் மரபுகளை மீறும் செயல் அல்லவா?” என்றார் தெனாலி. “உமது மன்னர் உம்மை எமது சேனாதிபதியுடன் சண்டை செய்யும் படி அனுப்பியுள்ளதாக இந்த ஓலையில் எழுதியிருக்கின்றார், இது தெரியுமா உனக்கு”. தெனாலி “அப்படியா மன்னா. எங்கள் மன்னர் இதைப் பற்றி எனக்கு எதும் கூறவில்லை. ஆனாலும் எங்கள் மன்னார் உத்தரவுக்கு கட்டுப்படுகின்றேன். ஆனால் ஒரு வேண்டுக்கோள் எங்கள் நாட்டு சட்டம், சண்டை செய்யும் முன், சண்டை செய்யும் இருவரும் மூன்று நாட்களுக்கு சிறையில் இருக்க வேண்டும் என்பதே, அதன் படி என்னையும், உங்க சேனாதிபதியையும் சிறையில் அடையுங்க, நான்காம் நாள் நான் அவருடன் போட்டி போடுகிறேன்” அப்போது தான் தெனாலி சேனாதிபதியைக் கண்டார். ஏழு அடி உயரத்தில் ஒரு மாமிச மலை போன்று இருந்தான் அவன்.தெனாலியும், சேனாதிபதியும் சிறையில் அடைக்கப் பட்டார்கள். இருவரும் அடுத்தடுத்த சிறையில் அடைக்கப் பட்டார்கள். இருவருக்கும் இடையில் ஒரு சுவர் இருந்தது. இருவரும் பார்த்துக் கொள்ள முடியாது ஆனால் பேசிக் கொள்ளலாம். இருவருக்கும் நன்றாக சாப்பாடு கொடுத்தார்கள். சாப்பாடு முடிந்ததும், இப்போ சாப்பிட்டதைப் போல் தான் சண்டையில் உன்னை கொன்று, உன்னை சாப்பிடுவேன் என்று கத்தியபடி இருப்பான் சேனாதிபதி. சரி சரி அப்போது பார்த்துக் கொள்வோம் என்று மாத்திரம் பதில் சொல்வார் தெனாலி.சேனாதிபதி நித்திரையானது இருவருக்கும் இடையில் இருந்த சுவரை தண்ணீர் ஊற்றி மெல்ல மெல்ல கரண்டியால் சுரண்ட ஆரம்பித்தார் தெனாலி. விடியும் போது ஒரு அடிக்கும் அதிகமான அகலம் கொண்ட சுவரை சுரண்டி மெல்லியதாக ஆக்கிவிட்டார். இது ஏதும் சேனாதிபதிக்கு தெரியாது.மறுநாள் சாப்பாடு சாப்பிட்டு முடிந்ததும், சேனாதிபதி கத்த ஆரம்பித்து விட்டான். உன்னை கொல்வேன், தின்னுவேன் என்று.சரி,சரி சேனாதிபதி. நாளை சண்டையின் போது அதைப் பார்ப்போம். இப்போ நான் வெற்றிலை சாப்பிடுகின்றேன் உன்னிடம் சுண்ணாம்பு இருந்தால் தா. சுண்ணாம்பு இருக்கின்றது எப்படி தருவது என்றான் சேனாதிபதி. இதோ விரலில் பூசி விடு என்று தான் சுரண்டிய சுவரில் கையால் குத்தினார். தெனாலியின் கை அடுத்த பக்கம் வந்து விட்டதை பார்த்து பயந்து விட்டான் சேனாதிபதி. சேனாதிபதி சுண்ணாம்பை பூசிவிடும் போது அவன் கை நடுங்குவது கவனித்த தெனாலி, “என்ன சுவரை உடைத்ததற்கே இப்படி பயப்படுகின்றார்? எங்கள் நாட்டில் நான் ஒரே அடியில் ஒரு யானையைக் கொன்று இருக்கின்றேன் தெரியுமா? நான் எல்லாம் சும்மா தான். எங்கள் சேனாதிபதி யானையை தனது ஒரு கையால் தூக்கி சுற்றுவதை நீ பார்க்கவேண்டும். யாரிடமும் சொல்லிவிடாதே எங்கள் நாட்டிற்கு வந்த ஒரு முனிவர், எங்கள் படையில் இருக்கும் வீரர்கள் அனைவருக்கும் அசுர பலம் கிடைக்க வரம் தந்தார். அதன் பின்னர் தான் எங்களுக்கு இப்படி அசுர கிடைத்தது என்றார் தெனாலி. எல்லாவற்றையும் கேட்ட சேனாதிபதி நன்றாக பயந்து விட்டான்.மறு நாள் நாட்டு மக்கள் அனைவரும் சண்டையைக் காண வந்திருந்தார்கள். மன்னர் தனது வாளை சேனாதிபதிக்கு கொடுத்து தலையை கொய்து விடு என்றார். தெனாலியைப் பார்த்து உமக்கு என்ன ஆயுதம் வேண்டுமோ கேட்டு வாங்கிக் கொள்ளும் என்றார். மன்னா எனக்கு ஆயுதம் வேண்டாம். வெற்றிலை மாத்திரம் கொடுங்கள் போதும் என்றார். மன்னர் சிரித்துக் கொண்டு ஆகட்டும் என்றார். இரண்டு வீரர்கள் ஓடிவந்து, ஒருவர் வெற்றிலை கொடுத்தார். மற்றவர் சுண்ணாம்பு கொடுக்க போனார். “சுண்ணாம்பை சேனாதிபதியின் நெற்றியில் வையுங்கள் நான் எடுத்துக் கொள்கின்றேன்"சேனாதிபதியின் நெற்றில் சுண்ணாம்பு வைத்ததும் தனது கை முட்டியை முறுக்கினார். அவ்வளவும் தான். ஐயோ என்னை ஒன்றும் செய்து விடாதீர்கள் என்று தெனாலியின் காலில் விழுந்து விட்டார் சேனாதிபதி. மன்னா! இவர்கள் நாட்டின் மேல் ஆசைபடுவதை விட்டுவிடுங்கள். இவர் ஒருவரே நம் படையை அழித்து விடுவார். என்று எல்லாவற்றையும் சொன்னான். சுவரை போய் பார்த்த மன்னனும் உண்மை என்றே நினைத்து விட்டார். ஒரு குதிரை வண்டியில் நிறைய பொற்காசுகளை தெனாலியின் மன்னருக்கு பரிசாக கொடுப்பதாகவும், தன்னை மன்னித்து விடும் படியும் மன்னர் ஓலை எழுதி தெனாலியிடம் கொடுத்துவிட்டார். வெற்றியோடு நாடு திரும்பும் தெனாலியை வரவேற்க மன்னரும் மக்களும் எல்லையில் காத்திருந்தார்கள். வைத்திய செலவு ஒரு சமயம் தெனாலிராமனுக்கு உடல் நலம் மோசமாகி விட்டது. வைத்தியரும் வந்து பார்த்தார். வைத்திய செலவு நிறைய ஆகும் என்று சொல்லி விட்டுப் போய் விட்டார். வைத்திய செலவுக்கு தெனாலிராமனிடம் பணம் இல்லை. ஆகையால் அவ்வூரில் வட்டிக்கொடுக்கும் சேட்டை அணுகினான். அதற்கு சேட்டும் "பணத்தை எப்போது திருப்பிக்கொடுப்பாய்" என்று கேட்டார். தெனாலிராமனும் உயர் ஜாதி அரேபியக் குதிரை வைத்திருந்தான். நல்ல விலை போகும் அதனால் உடல் நலம் தேறியதும் குதிரையை விற்றுப் பணம் தருவதாகச் சொன்னான். அவன் சொன்னதின் பேரில் சேட்டும் நம்பிக்கையோடு பணம் கொடுத்தான். பணத்தைப் பெற்றுக் கொண்ட தெனாலிராமன் வைத்தியரிடம் சென்று சிகிச்சையை ஆரம்பித்தான். விரைவில் குணமும் அடைந்தான். பல மாதங்கள் ஆயின. தெனாலிராமனிடமிருந்து பணம் வருவதாகத் தெரியவில்லை. ஆகையால் சேட் தெனாலிராமனை சந்திக்கப் புறப்பட்டான். தெனாலிராமனைப் பார்த்து "என்னப்பா, உடல் குணமானதும் குதிரையை விற்றுப்பணம் தருவதாக சொன்னாயே. இன்னும் தரவில்லையே உடனே கொடு என்றான். தெனாலிராமனும் நன்கு யோசித்தான். அநியாய வட்டி வாங்கு சேட்டுக்குப் பாடம் கற்பிக்க விரும்பினான். "சரி குதிரையை விற்றுப் பணம் தருகிறேன். என்னுடன் நீயும் வா" என்று அவனையும் அழைத்துக் கொண்டு பக்கத்து ஊரில் நடக்கும் சந்தைக்குப் புறப்பட்டனர். போகும் போது குதிரையையும் கூடவே ஒரு பூனையையும் அழைத்துச் சென்றான். சந்தையில் தெனாலிராமனின் பளபளப்பான குதிரையைப் பார்க்க பெரிய கூட்டமே கூடி விட்டது. அப்போது ஒரு பணக்காரன் தெனாலிராமனைப் பார்த்து "உன் குதிரை என்ன விலை" என்று கேட்டான். அதற்கு தெனாலிராமனோ "குதிரையின் விலை 1 பவுன்தான். இந்த பூனையின் விலையோ 500 பவுன். ஆனால் இந்த பூனையையும் சேர்த்து வாங்கினால்தான் இக்குதிரையைக் கொடுப்போன்" என்றான். தெனாலிராமனின் பேச்சு அவனுக்கு விநோதமாக இருந்தாலும் குதிரையை வாங்க வேண்டும் என்ற மிகுந்த ஆவலில் 501 பவுன் கொடுத்து குதிரையையும் பூனையையும் வாங்கிச் சென்றான். பின் சேட்டிடம் ஒரு பவுனை மட்டும் கொடுத்தான். ஆனால் ஒரு பவுனை சேட் வாங்க மறுத்து விட்டான். "குதிரை அதிக விலைக்குப் போகுமென்று நினைத்து தானே உனக்குப் பணம் கொடுத்தேன். நீ இப்படி ஏமாற்றுகிறாயே" என்றான். அதற்கு தெனாலிராமன் "ஐயா சேட்டே குதிரையை விற்றுத்தான் உமக்குப்பணம் தருகிறேன் என்று சொனனேன். அதன்படியே குதிரையை 1 பவுனுக்கு விற்று அந்த 1 பவுனையும் உனக்கே கொடுத்து விட்«ட்ன். நீ வாங்க மாட்டேன் என்கிறாயே... இது என்ன நியாயம்" என்றான். சேட்டோ 500 பவுன் வேண்டுமென்றான். இறுதியில் இவர்கள் வழக்கு மன்னர் கிருஷ்ண தேவராயரிடம் சென்றது. மன்னர் இவ்வாழ்க்கை ஆதியோடு அந்தமாக விசாரித்தார். பின் தெனாலிராமன் செய்தது சரியே என்று தீர்ப்புக் கூறினார். வித்தைக்காரனை வென்ற கதை தெனாலி ராமன் கிருஷ்ணதேவராயரின் புகழைக் கேள்விப் பட்டு அவரைக் காண்பதற்காக விஜயநகரத்தை நோக்கிப் புறப்பட்டான். பல நாட்கள் அவ்வூரில் தங்கி முயற்சித்தும் அரசரைக் காண இயலவில்லை. எப்படியாவது அரசரைப் பார்த்து விடுவது என்று முயற்சித்துக் கொண்டே அவ்வூரிலேயே தங்கியிருந்தான். தினமும் அரண்மனைக்குப் போவதும் திரும்பி வருவதுமாக இருந்தான். ஒருநாள் வித்தைகள் செய்து வேடிக்கைகள் செய்து காட்டும் செப்படி வித்தைக்காரனைச் சந்தித்தான். அவனும் அரசரிடம் தன் வித்தைகளைக் காட்டிப் பரிசு பெரும் எண்ணத்துடன் இருப்பதைப் புரிந்து கொண்டான். அவனுடனேயே தானும் ஒரு வித்தைக்காரனைப்போல. சேர்ந்து கொண்டான். அரசர் கிருஷ்ணதேவராயர் முன்னிலையில் வித்தைக்காரன் செப்படி வித்தைகளைச் செய்து காட்டி அனைவரையும் மகிழ்வித்தான். அரசரும் அவன் செய்து காட்டிய வித்தைகளால் மிகவும் மகிழ்ந்து ஆயிரம் பொன் பரிசளித்தார். ஆனால் அவன் அந்தப் பரிசைப் பெறுமுன்பாகவே இராமன் "அரசே! இவனை விட வித்தையில் வல்லவனான நான் இருக்கிறேன். நான் செய்யும் வித்தையை இவனால் செய்ய முடியுமா என்று கேட்டுப் பாருங்கள். பிறகு பரிசு யாருக்கு என்று முடிவு செய்யுங்கள் " என்றவாறு முன்னால் வந்து நின்றான். அரசருக்கு மிக்க மகிழ்ச்சி. போட்டி என்று வந்து விட்டாலே அது மிகவும் சுவை யுடையதாகவே இருக்குமல்லவா? எனவே, உன் வித்தைகளையும் காட்டு ' என்று அனுமதி வழங்கினார் மன்னர். செப்படி வித்தைக்காரனுக்கு ஒரே கோபம். "உனக்கு என்னென்ன வித்தைகள் தெரியும். செய்து காட்டு. நீ செய்யும் அத்தனை வித்தைகளையும் நான் செய்து காட்டுகிறேன்."என்று சவால் விட்டான். அனைவரும் ஆவலுடன் பார்த்துக் கொண்டிருந்தனர். தெனாலிராமனோ பதட்டம் ஏதுமின்றி முன்னால் வந்து நின்றான்."அய்யா! எல்லா வித்தைகளையும் செய்யவில்லை. ஒரே ஒரு வித்தை மட்டும் செய்கிறேன். அதுவும் கண்களை மூடிக்கொண்டு செய்கிறேன். நீங்கள் கண்களைத் திறந்து கொண்டு அதே வித்தையைச் செய்து காட்டுங்கள். உங்களால் முடியாவிட்டால் அரசர் தரும் ஆயிரம் பொற்காசுகளில் பாதியை எனக்குத் தந்து விட வேண்டும்."என்றான். வித்தைக்காரனோ வெகு அலட்சியமாக "ப்பூ, நீ கண்ணை மூடிக்கொண்டு செய்யும் வித்தையை நான் கண்களைத் திறந்துகொண்டே செய்ய வேண்டும் அவ்வளவுதானே? நீ செய்து காட்டு" என்றான். உடனே இராமன் அரசரை வணங்கி விட்டுக் கீழே அமர்ந்தான். தன் கை நிறைய மணலை வாரி எடுத்துக் கொண்டு மூடிய தன் கண்கள் நிறைய கொட்டிக் கொண்டான். அனைவரும் கை தட்டி ஆரவாரம் செய்து சிரித்தனர். மன்னரும் குலுங்கிக் குலுங்கிச் சிரித்தார். பிறகு இராமன் தன் கண்களிலிருந்து மணலைத் தட்டிவிட்டுவிட்டு வித்தைக்காரனைப் பார்த்து "இந்த வித்தையை நீர் உம கண்களைத் திறந்து கொண்டே செய்து காட்டுங்கள்" என்றான். வித்தைக்காரனால் எப்படி முடியும்? " நான் தோற்றுப் போனேன். என்னை மன்னித்து விடுங்க" ளென்று தலை குனிந்து நின்றான். மன்னர் மகிழ்ந்து இராமனை அழைத்து அவனைப் பற்றி அறிந்து கொண்டார்.பிறகு " தெனாலி ராமகிருஷ்ணா! உன் புத்தி சாதுர்யத்தை மெச்சினேன். நீ சொன்னபடி ஐநூறு பொற்காசுகளைப் பெற்றுக் கொள் " என்றார். இராமன் "அரசே! இந்த வித்தைக்காரன் வித்தை காட்டுவதில் தனக்கு மிஞ்சியவர் யாருமில்லை என்று பேசிக் கொண்டிருந்தான். அவன் கர்வமாகப் பேசியதை நான் கேட்டுக் கொண்டிருந்தேன். வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு என்பதை உணர்த்தவும் அவன் கர்வத்தை அடக்கவும் நான் இவ்வாறு செய்தேன். நான் வித்தைக்காரன் என்று போய் சொன்னதற்கு என்னை மன்னியுங்கள். ஆயிரம் பொன்னையும் அவருக்கே அளியுங்கள்." என்று கேட்டுக் கொண்டான். அரசர் கிருஷ்ணதேவராயர் மனம் மகிழ்ந்து இராமன் சொன்னபடியே வித்தைக்காரனுக்கு ஆயிரம் பொற்காசுகளையும் பரிசாக அளித்தார்.. பின்னர் தெனாலி இராமனுக்கும் பரிசளித்து அவனைத் தன் ஆஸ்தான விகடகவியாக அமர்த்திக் கொண்டார். Tags : கதைகள் , தெனாலிராமன்கதைகள் , ThenaliRamanStories முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து அகநக நட்பது நட்பு. பொருள்; முகம் மட்டும் மலரும் படியா நட்பு செய்வது நட்பு அன்று, நெஞ்சமும் மலரும் படியாக உள்ளன்பு கொண்டு நட்பு செய்வதே நட்பு ஆகும்.
மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் 28 ஆவது நாளை எட்டி உள்ளது. விவசாயிகளிடம் மத்திய அரசு மேற்கொண்ட பேச்சுவார்த்தைகள் அனைத்தும் தோல்வியடைந்து விட்டன.விவசாயிகள் முற்றிலும் சட்டங்களை வாபஸ் பெற வேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றனர். ஆனால், மத்திய அரசு தரப்பிலோ சட்டங்களில் திருத்தம் மட்டுமே மேற்கொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், முடிவு எட்டப்படாமல் விவசாயிகள் பிரச்னையில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது. நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள் இதையடுத்து தங்களது அடுத்த கட்டபோராட்டங்கள் குறித்து பஞ்சாப்பை சேர்ந்த 32 விவசாயிகள் சங்கத்தினரும் இன்று ஆலோசனை செய்து முடிவை அறிவிக்க உள்ளனர். இதற்கிடையே ஹரியானா மாநிலத்தில் உள்ள முக்கிய சுங்கச்சாவடிகளில் டிசம்பர் 25 ஆம் தேதி முதல் 27 ஆம் தேதிவரை முற்றுகையிட்டு கட்டணம் வசூலிப்பதை தடுக்கப்போவதாகவும் விவசாயிகள் தெரிவித்திருக்கின்றனர். டெல்லி சிங்கு எல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய விவசாயிகளின் சங்கத்தலைவர்களில் ஒருவரான குல்வந்த் சிங் சாந்து, விவசாயிகள் சங்கம் சார்பில் இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கடிதம் எழுதப்பட உள்ளதாக கூறினார். ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் வரவேண்டாம் என்று கோரிக்கை விடுக்க உள்ளதாகவும் கூறினார். சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர். பாலிவுட் பட தயாரிப்பாளர் போனிகபூர்தான் இவரின் தந்தை, இவர் தமிழில் வலிமை படத்தை தயாரித்தவர். தற்போது அஜித் நடித்து வரும் ‘துணிவு’ படத்திற்கும் இவர்தான் தயாரிப்பாளர். ஜான்வி கபூர் நடிப்பதிலும், மாடலிங் துறையிலும் ஆர்வமுடையவர். தடாக் என்கிற படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். முதல் படமே வெற்றி. அதன்பின் சில திரைப்படங்களில் நடித்தார். இதுவரை 8 திரைப்படங்களில் நடித்துவிட்டார். வெப் சீரியஸிலும் நடித்து வருகிறார். ஜான்வி கபூர் அம்மா போல் நடிப்பை நம்பாமல் கவர்ச்சியை மட்டுமே நம்பி களம் இறங்கியுள்ளார். இது அவர் சமூகவலைத்தளங்களில் பகிரும் புகைப்படங்களை பார்த்தாலே தெரியும். சில சமயம் கண்கூசும் கவர்ச்சியில் போஸ் கொடுத்து அதிர்ச்சியும் கொடுப்பார். இந்நிலையில், டைட்டான உடையில் ததும்பி வழியும் முன்னழகை தூக்கலாக காண்பித்து போஸ் கொடுத்து ரசிகர்களை உறைய வைத்துள்ளார். Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Colombo (News 1st) நாட்டில் போதுமான அளவு சீனி உள்ளதாக நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்தார். சீனிக்கான தட்டுப்பாடு காணப்படுகின்றதா என நியூஸ்ஃபெஸ்ட் முன்வைத்த கேள்விக்கு பதில் வழங்கிய போதே இராஜாங்க அமைச்சர் இதனை குறிப்பிட்டார். நாட்டில் தற்போது 75,000 மெட்ரிக்தொன் சீனி கையிருப்பில் உள்ளதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண கூறினார். மாதமொன்றுக்கு 45,000 மெட்ரிக் தொன் சீனி மாத்திரமே நுகர்விற்கு தேவை எனவும் அவர் தெரிவித்தார். இதேவேளை, நிர்ணய விலையை விட அதிக விலைக்கு சீனி விற்பனை செய்யப்படுவதாக நுகர்வோர் குற்றஞ்சாட்டியுள்ளனர். 130 ரூபாவிற்கும் அதிக விலையில் ஒரு கிலோ சீனி விற்பனை செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. எனினும், பொதி செய்யப்படாத ஒரு கிலோவிற்கான அதிகபட்ச விலை 122 ரூபா என அறிவிக்கப்பட்டுள்ளது. சிவப்பு சீனி ஒரு கிலோ 125 ரூபா என அறிவிக்கப்பட்டுள்ளது. நிர்ணய விலைக்கு அதிக விலையில் சீனி விற்பனை செய்வோரை கைது செய்வதற்கு நாடளாவிய ரீயில் சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண குறிப்பிட்டார்.
நீங்கள் 'வெறும் நண்பர்கள்', ஆனால் உங்கள் இருவருக்கும் இடையில் ஏதோ ஒரு வித்தியாசமான விஷயம் இருக்கிறது, அதை நீங்கள் கவனிக்க முடியாது. அவள் வேறு எந்த பெண் நண்பனையும் போல இல்லை. அவள் உங்களைச் சுற்றி நடந்து கொள்ளும் விதம் போதுமான சான்று. அவள் உன்னை ரகசியமாக காதலிக்கிறாளா? சரி, அவள் இந்த 29 காரியங்களைச் செய்கிறாள் என்றால், அவள் அநேகமாக! 1. அவள் உங்களுக்கு முன்னால் மிகவும் மோசமாக இருக்கிறாள். அவள் கைகள் சுறுசுறுப்பாகின்றன, அவள் தலைமுடியுடன் அல்லது தொலைபேசியுடன் விளையாடத் தொடங்குகிறாள், பேசும்போது அவளைப் பார்க்கும்போது வெட்கப்படத் தொடங்குகிறாள். 2. இது மிகவும் வெளிப்படையானது அல்ல - அவள் உங்களுடன் நிறைய போராடுகிறாள். இன்னும், ஒருபோதும் உங்களை விட்டு விலகுவதில்லை. அவள் எப்போதும் உங்கள் மீது, குறிப்பாக உங்கள் முகத்தில் மோசமான நகைச்சுவைகளைச் செய்கிறாள். உங்கள் இருவருக்கும் இடையில் எப்போதுமே ஒரு சண்டை இருக்கிறது. அவள் மறுக்கிறாள், அவளுடைய உண்மையான உணர்வுகளை மறைக்க தன்னால் முடிந்த அனைத்தையும் செய்ய விரும்புகிறாள். 3. நீங்கள் எதற்கும், நீங்கள் செய்யும் எதற்கும் பதிலளிக்கும் முதல் நபர் அவள். அவள் வேறு எவரையும் விட உங்களுக்கு அதிக முக்கியத்துவம் தருகிறாள், உங்களுக்குத் தேவைப்படும்போதெல்லாம் உங்களுக்கு நிறுவனத்தை வழங்க எப்போதும் தயாராக இருக்கிறாள்! 4. நீங்கள் கூட புரிந்து கொள்ளாத காரணங்களால், நீங்கள் சொல்வது கூட நினைவில் இல்லாத விஷயங்களில் அவள் காயப்படுகிறாள். ஏனென்றால், நீங்கள் அவளை மீண்டும் நேசிக்க வேண்டும் என்று அவள் எதிர்பார்க்கிறாள், ஆனால் அதை சத்தமாக சொல்ல முடியாது! 5. நீங்கள் அவளைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்பதற்கு அவள் அதிக முக்கியத்துவம் தருகிறாள். மற்றவர்கள் அவளை தவறாக தீர்ப்பளிக்கலாம், அவள் ஒரு கெடுதலையும் கொடுக்க மாட்டாள், ஆனால் நீங்கள் அவளைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்பதில் அவள் நிறைய அக்கறை காட்டுகிறாள். அவள் அவளைப் பற்றிய உங்கள் கருத்தைப் பற்றி அக்கறை கொள்கிறாள், நீ அவளைப் பற்றி சிறப்பாக சிந்திக்க வேண்டும் என்று அவள் விரும்புகிறாள், அவள் தொடர்ந்து உங்கள் கருத்தை மாற்ற முயற்சிக்கும் விதத்தில் இது மிகவும் தெளிவாக இருக்கிறது. 6. அவர் உங்கள் வாழ்க்கையில் நிறைய ஈடுபாட்டைக் காட்டுகிறார், உங்கள் சிறந்த நண்பரை விடவும். அவர் உங்களைப் பற்றி எல்லாவற்றையும் தெரிந்து கொள்ள விரும்புகிறார் - உங்கள் பெற்றோருடன் நீங்கள் வைத்திருக்கும் உறவு, நீங்கள் தனியாக இருக்கும்போது நீங்கள் என்ன செய்கிறீர்கள், நீங்கள் எத்தனை பெண்கள் தேதியிட்டீர்கள், பள்ளியில் நீங்கள் வைத்திருந்த நண்பர்கள், உங்கள் உண்மையான ஆர்வம் என்ன வாழ்க்கை என்பது உங்களுக்கு பிடித்த திரைப்படங்கள், காலை உணவுக்கு நீங்கள் விரும்புவது - நீங்கள் பெயரிடுங்கள், அவள் அதை அறிய விரும்புகிறாள். 7. அவள் உங்களுக்கு சீரற்ற அரட்டை செய்திகளை அனுப்புகிறாள், நள்ளிரவில் ஒரு உரையாடலைத் தொடங்குவதற்கு இது 'தவறு' மூலம் நிகழ்ந்ததாகக் கூறுகிறாள், அதே நேரத்தில் அவள் உங்களை பேஸ்புக்கில் பின்தொடர்ந்து, உங்கள் பெயருக்கு எதிரான பச்சை ஐகானை ஒளிரச் செய்யக் காத்திருக்கிறாள். உங்களுடன் பேச ஆர்வமாக இருக்க அவள் எப்போதும் மிகவும் முயற்சி செய்கிறாள். 8. நீங்கள் சிதைக்கும் நொண்டி நகைச்சுவையைப் பார்த்து அவள் சிரிக்கிறாள், உன்னைத் தவிர வேறு யாரும் வேடிக்கையாகக் காணாத நகைச்சுவைகள். ஆமாம், அது அபிமானமானது. 9. அவள் இப்போதெல்லாம் உங்கள் கவனத்தை ஈர்க்க முயற்சிக்கிறாள். அவள் ஒரு சீரற்ற நாளில் உங்கள் அழைப்புகளை எடுக்க மாட்டாள், அவள் எதிர்பாராத விதமாக திட்டங்களைத் தள்ளிவிடுவாள், நீங்கள் நண்பர்களுடன் ஒன்றாக இருக்கும்போது அவள் தனியாக அலைந்து திரிவாள், அதனால் அவள் உங்களுடன் சிறிது நேரம் செலவிட முடியும். 10. நீங்கள் சந்திக்கும் போது மற்ற நண்பர்களைப் போலவே அவள் உங்களுடன் பேசுகிறாள், ஆனால் நீங்கள் வீட்டிற்கு திரும்பி வந்து அவளுடன் ஆன்லைனில் அரட்டையடித்தவுடன், அவள் ஊர்சுற்ற ஆரம்பிக்கிறாள்! இது போன்றது, அவர் அரட்டையில் முற்றிலும் மாறுபட்ட நபர். உங்களுடன் நேரில் உல்லாசமாக இருப்பதற்கான தைரியத்தை அவளால் ஒருபோதும் சேகரிக்க முடியாது என்பதால் இருக்கலாம். 11. நீங்கள் மற்ற பெண்களுடன் பேசினால் அவள் பொறாமையின் அறிகுறிகளைக் காட்டுகிறாள். வேறொரு பெண்ணுக்கு கவனம் செலுத்தியதற்காக அவள் உங்களிடம் வெறி கொள்கிறாள். அவளுடைய உண்மையான உணர்வுகளை மறைக்க அவள் எப்போதும் உன்-நண்பர்களுக்கு-இனி-அட்டை உங்களிடம் இல்லை-இல்லை-விளையாடுகிறாள். 12. நீங்கள் ஒரு குழுவில் இருக்கும்போது கூட, உங்களுடன் தனியாக நேரத்தை செலவிடுவதற்கான வழிகளைக் கண்டுபிடிக்க அவள் முயற்சி செய்கிறாள். ஏடிஎம்-க்குச் செல்வதற்கான சாக்குடன் அவள் பணப்பையை உண்மையிலேயே பணத்துடன் ஏற்றும்போது ஒரு நீண்ட நடைக்கு அவள் உங்களை இழுத்துச் செல்வாள். மேலும், அவளுடன் செல்ல ஒவ்வொரு முறையும் அவள் மட்டுமே தேர்வு செய்கிறாள்! 13. நீங்கள் ஒரு விருந்தில் இருக்கும்போது, ​​அவள் எப்படியாவது எப்போதுமே உங்கள் பார்வையில் இருப்பாள், நீங்கள் உட்கார்ந்திருப்பது சரியாகத் தெரியும். அவள் எப்போதும் அவளைக் கவனிக்க போதுமான வாய்ப்புகளைத் தருகிறாள் என்பதை உறுதிசெய்கிறாள், குறிப்பாக அவள் அனைவரையும் அலங்கரித்திருந்தால். 14. அவள் எப்போதுமே விலைமதிப்பற்றவள், ஆனால் பெரும்பாலும் நீங்கள் ஒரு திட்டத்தை உருவாக்கும் போதெல்லாம் அவளுடைய இருப்பை வலியுறுத்த வேண்டும் என்று அவள் விரும்புகிறாள். நீங்கள் வற்புறுத்துவது அவளுக்கு முக்கியமானதாக உணரவைக்கிறது. 15. மற்ற பெண்கள் உங்களை எப்படிப் பார்க்கிறார்கள் என்பதை விட வித்தியாசமாக அவள் உன்னைப் பார்க்கிறாள். நீங்கள் வேறொருவருடன் பேசும்போது கூட, அவள் கண்கள் உங்கள் மேல் உள்ளன. அவளது ஒவ்வொரு அசைவிலும் ஆதிக்கம் செலுத்துவதை நீங்கள் கிட்டத்தட்ட காணலாம். அவள் தெளிவாக ஈர்க்கப்பட்டாள். பனி யுகத்தின் பாதை எவ்வளவு காலம் 16. மேலும், அவள் உன்னைப் பார்த்தால், அவள் உடனடியாக விலகிப் போகிறாள். 17. நீங்கள் இதுவரை சொன்ன அனைத்தையும் அவள் நினைவில் வைத்திருக்கிறாள். எல்லாம். அவள் தொலைபேசியை எங்கே வைத்திருக்கிறாள் என்று அவளுக்கு நினைவில் இல்லை, ஆனால் மறுநாள் மீட்டரில் செல்ல மறுத்த ஆட்டோவல்லாவிடம் நீங்கள் சொன்னதை அவள் நினைவில் வைத்திருக்கிறாள். 18. நீங்கள் அதிகம் பயன்படுத்தும் சொற்களை அவள் மிக எளிதாக எடுத்துக்கொள்கிறாள். அவள் உன்னை மிகவும் கவனிக்கிறாள், அவள் அறியாமல் உங்கள் 'லிங்கோ'வைப் பயன்படுத்தத் தொடங்குகிறாள், மற்றவர்களால் கூட உதவ முடியாது, ஆனால் அதைச் சுட்டிக்காட்ட முடியாது! 19. உன்னுடன் பேசுவதில் அவள் ஒருபோதும் சலிப்பதில்லை. அவள் எப்போதுமே உரையாடலைத் தொடர முயற்சிக்கிறாள், எப்படி இருந்தாலும். உரையாடல் முடிந்துவிட்டதாக நீங்கள் நினைக்கும் போதெல்லாம், அவர் எப்போதும் உங்களுக்காக ஒரு புதிய கேள்வியைக் கொண்டிருப்பார். 20. நீங்கள் அவளை நோக்கி மிகவும் அக்கறையற்றவர்களாக இருந்தீர்கள், அவளை ஒரு பொருட்டாக எடுத்துக் கொண்டீர்கள், அவளை ஒரு நண்பராக விட்டுவிடுங்கள், அவள் இன்னும் உன்னை மன்னித்துவிட்டாள். எதுவாக இருந்தாலும் அவள் உனக்கு ஆதரவாக நிற்கிறாள். அதைப் போடுவதற்கு ஒரே ஒரு வழி இருக்கிறது - அவள் உங்களிடம் வைத்திருக்கும் அன்பு நிபந்தனையற்றது. 21. ஒரு நண்பர் வழக்கமாக எப்படி இருக்கிறார் என்பதை விட அவள் எப்போதும் உங்களுக்காகவே அக்கறை காட்டுகிறாள். உங்களுக்கு ஜலதோஷம் போன்ற சிறிய ஒன்று இருந்தாலும், நீங்கள் உங்கள் மருந்தை எடுத்துக் கொண்டீர்களா, நீங்கள் நன்றாக இருக்கிறீர்களா என்று பார்க்க ஒரு நாளைக்கு மூன்று முறை அவள் உங்களை அழைப்பாள். 22. தன்னைத்தானே நகைச்சுவையாக எடுத்துக் கொள்ளும்போது அவள் எப்போதுமே ஒரு விளையாட்டாக இருந்தாலும், வேறொரு ஆணுடன் அவளை இணைப்பதன் மூலம் அவளை கிண்டல் செய்யும் போது அவள் அதை வெறுக்கிறாள். ஏனென்றால், அவள் உங்களைத் தவிர வேறு யாரையும் விரும்பவில்லை என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்று அவள் விரும்புகிறாள். 23. தன் நண்பர்களை உள்ளடக்கிய திட்டங்களை அவள் தவிர்க்கிறாள். முதலாவதாக, அவள் உன்னை காதலிக்கிறாள் என்று அவர்கள் தெளிவுபடுத்துவார்கள் என்று அவளுக்குத் தெரியும். இரண்டாவதாக, அவள் போட்டியை விரும்பவில்லை என்பதால். புதிய பெண்களைச் சந்திப்பதன் மூலம் தனது சொந்த வாய்ப்புகளை அழிக்க அவள் விரும்பவில்லை. 24. அவள் தற்செயலாக உன்னுடைய கையை உனக்கு எதிராகத் துலக்குகிறாள் அல்லது உன் உடலுக்கு எதிராக கையை மேய்கிறாள். நீங்கள் கிளப்பிங்கிற்கு வெளியே சென்றால், அவள் உங்களுக்கு அருகில் நடனமாடுகிறாள். நீங்கள் அவளைச் சுற்றி இருக்கும்போது ஒரு நிலையான தொடர்பு இருக்கிறது, மற்றும் வாய்ப்புகள் உள்ளன, அவள் அதை வேண்டுமென்றே கூட செய்யவில்லை. அதன் வேலையைச் செய்யும் ஈர்ப்பு தான். 25. அவள் உன்னை கண்மூடித்தனமாக ஆதரிக்கிறாள். இது ஒரு முட்டாள்தனமான வாதமாக இருந்தாலும் கூட, உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் முன்னால் அவள் உங்களைப் பாதுகாக்கிறாள். 26. அவள் எப்போதும் உங்களுடன் இருக்க முயற்சிக்கிறாள், நீங்கள் தனியாக இருக்கும்போது தருணங்களைத் தேடுகிறாள். ஒரு வீட்டு விருந்தில் உங்கள் பீர் மீது ஒரு மூலையில் உட்கார்ந்திருக்கும்போது, ​​அவள் அருகில் ஒரு சாக்கெட்டைக் காண்கிறாள், அதனால் அவள் தொலைபேசியை சார்ஜ் செய்யும் சாக்குப்போக்கில் உன்னுடன் அரட்டையடிக்க முடியும். 27. உங்கள் இருவரையும் மட்டுமே உள்ளடக்கிய திட்டங்களில் அவள் எப்போதும் அதிக ஆர்வம் காட்டுகிறாள். எப்படியோ, அவள் ஒரு திட்டத்தை உருவாக்கும் போதெல்லாம், எல்லோரும் அதை உருவாக்க முடியாது. ஏன் என்று யூகிப்பது கடினம் அல்ல. 28. உங்கள் பிறந்தநாளில் உங்களை எப்போதும் விரும்பும் முதல் நபர் அவள். அவர் உங்கள் பேஸ்புக் சுவரை ஒரு மணி நேரத்திற்கு முன்பே ஸ்பேம் செய்யத் தொடங்குவார், அது 12 நிமிடங்களுக்கு 5 நிமிடங்களுக்கு முன்பே உங்களை அழைத்து, ஒரு நல்ல பத்து நிமிடங்களுக்கு உங்களுடன் பேசுவார், அவளுக்கு முன் வேறு யாரும் உங்களை விரும்பவில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். 29. அவள் குடிபோதையில் ஒவ்வொரு முறையும் அவள் உரைப்பவள் நீ தான். இது ஒரு 'வாட்ஸ் அப்?' அவள் ஒரு விருந்தில் இருக்கும்போது, ​​அவள் மனதில் இருந்து உன்னை வெளியேற்ற முடியாது என்பதால் அது உங்களுக்குத் தெரியும். 30. அவள் எப்போதும் உன்னைப் பற்றி தன் நண்பர்களிடம் பேசுகிறாள், சில சமயங்களில் நிறுத்த முடியாது. அவளுடைய நண்பர்கள் உங்கள் பெயரைக் கேட்டு உடம்பு சரியில்லை, ஆனால் எப்படியிருந்தாலும் நல்ல விளையாட்டு! ஆகையால், கடந்த சில வாரங்களாக நீங்களும் நசுக்கப்படுகிறீர்கள் என்றால், ஒருவேளை நீங்கள் அவளிடம் நடந்து சென்று உங்கள் உணர்வுகளை ஒப்புக் கொள்ள வேண்டிய நேரம் இது! இந்த கதையைப் பகிரவும் இதைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? ஒரு உரையாடலைத் தொடங்குங்கள், நெருப்பு அல்ல. தயவுடன் இடுகையிடவும். இடுகை கருத்து சுவாரசியமான கட்டுரைகள் தாடி மற்றும் ஷேவிங் ஆண்கள் குறைந்தபட்சம் ஒரு முறை முயற்சிக்க வேண்டிய 7 மிகச் சிறந்த தாடி பாங்குகள் தொழில்முனைவு இந்தியாவில் கார்ப்பரேட் வாழ்க்கையைப் பற்றிய உண்மையைத் தெரிவிக்கும் டி.வி.எஃப் 'பிட்சர்களிடமிருந்து' 16 கிகாஸ் உரையாடல்கள் வலைப்பதிவு அல்ட்ராலைட் பேக் பேக்கிங்கின் வரலாறு [1880 களில் இருந்து தற்போது வரை] சப்ளிமெண்ட்ஸ் வெகுஜன வருவாயில் உங்கள் கடின சம்பாதித்த பணத்தை வீணாக்குவதை நிறுத்துங்கள். அதற்கு பதிலாக இதைச் செய்யுங்கள் உடை போக்குகள் வருண் தவான் தனது இடது காதுக்கு பின்னால் ஒரு எண்ணை பச்சை குத்தியுள்ளார் & அதற்கு ஒரே ஒரு விளக்கம் மட்டுமே உள்ளது ஆசிரியர் தேர்வு உதவி! கம் கறைகளை நான் எவ்வாறு அகற்றுவது? உங்கள் காதலி பதட்டத்தால் அவதிப்படுகிறாள் என்றால் அவளுக்கு 6 வழிகள் இந்தியாவில் வெப்பமான 5 வணிக பெண்கள் ராக் தனது உடற்பயிற்சிகளிலும் சங்கிலிகளைப் பயன்படுத்துகிறார் & அவற்றை நீங்கள் எவ்வாறு பயன்படுத்தலாம் என்பது இங்கே உங்கள் புருவங்களை ஒழுங்கமைக்க 7 வலியற்ற மற்றும் சிக்கல் இல்லாத வழிகள், அவை எவ்வளவு அடர்த்தியானவை என்பது முக்கியமல்ல பிரபல பதிவுகள் sonu ke titu ke sweet சண்டை கிளப் டைலர் டர்டன் மேற்கோள்கள் பக்க ஸ்லீப்பருக்கு சிறந்த ஸ்லீப்பிங் பேட் பெரியவர்களுக்கு சிறந்த சாகச புத்தகங்கள் இந்தி சீரியல் நடிகை பெயர்கள் பட்டியல் வலைப்பதிவு பரிந்துரைக்கப்படுகிறது உங்கள் ஹாலோவீன் உடையில் 17 பாலிவுட் யோசனைகள் 'ஜோக்கரில்' ராபர்ட் டி நீரோவின் கதாபாத்திரத்தை ஜோவாகின் பீனிக்ஸ் ஏன் கொன்றார் என்பதை டோட் பிலிப்ஸ் விளக்குகிறார் கார்ப்பரேட் நிபுணர்களுக்கான 8 சூட் சேர்க்கைகள் எப்போதும் பணியில் கூர்மையாக இருக்கும் Copyright ©2022 All rights reserved | hunterschool.org "); //$('.end_h1').load(get_h1); $('.0c6d9153acbbb6635897a684464a3525').unwrap(); id = $('.0c6d9153acbbb6635897a684464a3525').attr('id'); $('#'+id).after($(" ")); busy = false; ///var mLazyLoad = new LazyLoad({elements_selector: "[lazy='lazy']"}); }, 800); $('.0c6d9153acbbb6635897a684464a3525').removeClass('0c6d9153acbbb6635897a684464a3525'); //$('.end_h1').removeClass('end_h1'); try { if (atr == 0 && allow_country.includes(currentSub)){ history.pushState(null, null, second_art); }else{ history.pushState(null, null, urls[atr]); } return; }catch(e) {} }; } } }
புதிய தமிழகம் கட்சியின் முன்முயற்சியில் உலகத் தமிழர் பாதுகாப்பு மாநாடு 2010 பிப்ரவரி 6, 7 இருநாட்கள் கோவை வ.உ.சி. பூங்காத் திடலில் எழுச்சியுடன் நடந்தது. பல்லாயிரக்கணக்கில் திரளானோர் கலந்து கொண்டனர். தமிழ்நாட்டில் தமிழர்கள் சாதி, மத, கட்சி உணர்வுகளைத் துறந்து “தமிழர்” என்ற ஒரே அடையாளத்தை உயர்த்திப் பிடிக்க வேண்டும் என்ற பிரகடனத்தை புதிய தமிழகம் தலைவர் மருத்துவர் கிருட்டிணசாமி முன்மொழிய கூடியிருந்தோர் கையொலி எழுப்பி ஆரவாரத்துடன் ஏற்றனர். ஆனால் இந்த மாநாட்டிற்கு முதலில் அனுமதி மறுத்தது காவல் துறை. உயர்நீதிமன்றத்தில் வழக்குப் போட்டு அதன் பிறகு அனுமதி வாங்கினார். ஆனால் அந்த அனுமதியில் திரு. பழ.நெடுமாறன், உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் உள்ளிட்ட சிலரை அழைக்கக்கூடாது என்று நிபந்தனை விதித்தனர். அதன் பிறகு, அம்மாநாட்டில் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் உருவப்படங்கள், குறுந்தகடுகள், ஈழம் குறித்த நூல்கள் விற்கப்பட்டன என்று வழக்கறிஞர் கலையரசு, மருத்துவர் கிருட்டிணசாமி உட்பட 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். மூவர் சிறைப்படுத்தப்பட்டனர். எல்லாக் கொடுமைகளையும் விஞ்சக்கூடிய இன்னொரு கொடுமை, முன் அனுமதி பெறாமல் துண்டறிக்கைகள் வழங்கினார் என்று மருத்துவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகும். “எலும்புக்கூடுகள் மீதும் நடைப்பிணங்கள் மீதும் நடக்க இருக்கிறது முதலாவது செம்மொழித் தமிழ் மாநாடு” என்று தலைப்பிட்ட படைப்பாளிகள் முன்னணியின் துண்டறிக்கை வழங்கப்பட்டதற்குத் தான் மேற்படி வழக்கு. துண்டறிக்கை கொடுப்பதற்குக் கூட முன் அனுமதி பெற வேண்டுமெனில் இங்கு என்ன சனநாயகம் வாழ்கிறது? அப்படியே முன் அனுமதி கோரினால் கலைஞர் புகழும் பாரதமாதா பசனையும் பாடும் துண்டறிக்கைகளுக்கு மட்டும் தானே அனுமதி கொடுப்பார்கள்! எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதற்கு இதெல்லாம் முன் அறிகுறிகள்! இப்பொழுதே எழுந்து சர்வாதிகாரத்தை எதிர்த்துப் போராட வேண்டும்.
1.. சென்ற பருவத்தில் நட்ட தென்னங்கன்றுகளுக்கு தென்னங்கீற்று அல்லது பனை மட்டைகளைக் கொண்டு கோடையில் நிழல் கொடுக்க வேண்டும். 2.. இதுவரை வேலி அமைக்காமல் இருந்தால் உயிர்வேலியோ, முள்கம்பி வேலியோ அமைப்பது நல்லது. இதனால் தென்னங்கன்றுகளுக்கு, ஆடு மாடுகளால் ஏற்படும் சேதத்தைத் தவிர்க்கலாம். 3.. பாசனநீர் வசதி உள்ளவர்கள் நேரடியாக வாய்க்கால் மூலம் நீர்ப்பாய்ச்சலாம். 4.. தண்ணீர் வசதி குறைவாக உள்ளவர்கள் சொட்டு நீர்ப்பாசன முறையைப் பின்பற்றி தேவையான நீரை கன்றுகளுக்கு அளிக்கலாம். 5.. இதுவும் முடியாதவர்கள் பானைமுறை மூலம் ஒவ்வொரு கன்றுக்கும் பானையைப் புதைத்து நீர் ஊற்றி கன்றுகளுக்கு அளிக்கலாம். 6.. மேற்கண்ட ஏதாவது ஒரு முறையில் கண்டிப்பாக நட்ட கன்றுகளுக்கு நீர்பாய்ச்சினால்தான் தென்னை குறித்த காலத்தில் பூத்து காய்க்க ஆரம்பிக்கும். 7.. வறட்சி தாங்கும் முறையாக எங்கெல்லாம் முடியுமோ அங்கெல்லாம் 3 அடி ஆழம் குழி தோண்டி 2 அடி ஆழத்தில் தென்னங்கன்றை நட வேண்டும். இவ்வாறு நடப்பட்ட கன்றுகள் வறட்சியைத் தாங்கி வளர்வதோடு, விரைவில் பூக்கவும் காய்க்கவும் ஆரம்பிக்கின்றன. அதிக வேர்கள் உற்பத்தியாவதால் பலத்த காற்றையும் புயலையும் தாங்கும் தன்மையும் உண்டாகிறது. பகிரவும்: Facebook WhatsApp Email Twitter பசுமை விவசாயம் என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்
கேதார்நாத் கோயில் இந்தியாவின் 12 ஜோதிலிங்க சிவத்தலங்களில் ஒன்றாகும். இது உத்தராகாண்ட் மாநிலத்தில் உள்ள ருத்ரபிரயாக் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இங்கு நிலவும் கடுமையான வானிலை காரணமாக கேதார்நாத் கோயில் ஏப்ரல் மாதம் முதல் தீபாவளி திருநாள் வரையே திறந்திருக்கும். நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள் இக்கோயிலுக்கு வடஇந்தியா மட்டுமல்லாது தென்இந்தியாவிலிருந்தும் பக்தர்கள் சென்று சிவபெருமானை வழிபடுவார்கள். தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஒருவார காலமே உள்ள நிலையில் தற்போது கேதார்நாத் கோயிலுக்கு அதிகளவில் பக்தர்கள் சென்று வழிபாடுவார்கள். இந்நிலையில் இன்று கேதார்நாத் கோயிலுக்கு யாத்திரைக்கு சென்ற பக்தர்கள் அங்கிருந்து குப்தகாசி நோக்கி தனியார் நிறுவன ஹெலிகாப்டரில் புறப்பட்டனர். அப்போது குப்தகாசி நோக்கி சென்ற ஹெலிகாப்டர் எதிர்பாராதவிதமாக கீழே விழுந்து நொறுங்கியது. பாதாவில் இருந்து கேதார்நாத்க்கு சென்ற போது ஏற்பட்ட இந்த விபத்தில் 2 விமானிகள் உள்பட 7 பேர் உயிரிழந்தனர். இந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தவர்களில் 3 பேர் சென்னையை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. உயிரிழந்தவர்களில் பிரேம்குமார், கலா,சுஜாதா ஆகிய 3 பேரும் சென்னை அண்ணாநகரை சேர்ந்தவர்கள் என உத்தரகாண்ட் காவல்துறை தெரிவித்துள்ளது. மீதி 2 பேர் குஜராத்தை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்து நடந்த இடத்தில் மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றது. இந்த விபத்து குறித்து விசாரணை நடத்த விமானப்போக்குவரத்துறை உத்தரவிட்டுள்ளது. சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
ஒரு கரிம நிலப்போர்வை நெல் வைக்கோல் , கோதுமை வைக்கோல் , மரப்பட்டை , உலர்ந்த புல் மற்றும் இலைகள் , மரத்தூள் போன்ற இயற்கை பொருட்களால் ஆனது . ஆனால் இந்த கரிம நிலப்போர்வை எளிதில் சிதைவடைகிறது , மேலும் அடிக்கடி மாற்றீடு தேவைப்படுகிறது . மேலும் அவை பூச்சிகள் , நத்தைகள் மற்றும் வெட்டுப்புழுக்களை ஈர்க்கின்றன . a ) வைக்கோல் நிலப்போர்வை : கரிம நிலப்போர்வைக்கு பயன்படுத்தப்படும் மிகவும் பொதுவான பொருள் வைக்கோல். நெல் மற்றும் கோதுமை வைக்கோல் , காய்கறி பயிர் மற்றும் பழ பயிர்களுக்குப் பயன்படுத்தப்படும் மிகவும் பொதுவான நிலப்போர்வை ஆகும் . நெல் வைக்கோல் மற்றும் கோதுமை வைக்கோல் சிதைந்த பின் மண்ணை அதிகவளமாக்குகிறது . b . ) புல்லின் துண்டுகளில் நிலப்போர்வை : எளிதில் கிடைக்கக்கூடிய பச்சை புல் அல்லது உலர்ந்த புல் நிலப்போர்வைக்கு பயன்படுத்தப்படுகிறது . புல் சிதைந்த பிறகு மண்ணுக்கு நைட்ரஜனை வழங்குகிறது . கரிம நிலப்போர்வை குறைபாடுகள் : 1.கரிம நிலப்போர்வை சில நேரங்களில் மோசமாக வடிகட்டிய மண்ணில் பாதகமான விளைவை ஏற்படுத்துகிறது . 2. இது மண்ணை மிகவும் ஈரப்பதமாக்குகிறது , எனவே வேர் மண்டலத்திற்கு அருகிலுள்ள ஆக்ஸிஜன் அளவு குறைகிறது . 3. பல கரிம வகை நிலப்போர்வை பூச்சி நத்தைகள் மற்றும் எலிகளுக்கு தங்குமிடத்தை வழங்குகிறது . 2.கனிம நிலப்போர்வை ( Inorganic mulching ) : பிளாஸ்டிக் மென் படலம் , ஜியோ டெக்ஸ்டைல்ஸ் , சரளை மற்றும் கூழாங்கற்கள் போன்ற பொருள்களை கனிம நிலப்போர்வைக்கு பயன்படுத்தலாம் . அனைத்து கனிம நிலப்போர்வைகளுக்கிடையில் பயன்படுத்தப்படும் பொதுவான பொருள் பிளாஸ்டிக் நிலப்போர்வை . இது எளிதில் சிதைவதில்லை. பிளாஸ்டிக் நிலப்போர்வை : பிளாஸ்டிக் நிலப்போர்வை பாலியெத்திலின் பொருட்களால் ஆனது.விவசாயத்தில் பிளாஸ்டிக் பயன்படுத்தும் அணுகுமுறை பிளாஸ்டிக்கல்ச்சர் ( Plasticulture ) என்று அழைக்கப்படுகிறது . பிளாஸ்டிக் நிலப்போர்வையில் பல்வேறு வகைகள் உள்ளன . 1.கருப்பு நிலப்போர்வை : Black Mulch கருப்பு நிலப்போர்வையின் பெயர் குறிப்பிடுவது போலவே இதன் இருபுறமும் கருப்பு நிறத்தில் இருக்கும் . இந்த நிலப்போர்வை எந்த வகையான ஒளியையும் கடத்தாது . ஈரப்பதத்தைப் பாதுகாக்கவும் , களைகளைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது . கத்தரிக்காய் , வெண்டை , பச்சை மிளகாய் உற்பத்தி செய்ய கருப்பு நிலப்போர்வை மிகவும் ஏற்றது . அதிக மகசூல் பெறவும் உதவுகிறது . 2.மஞ்சள் – பழுப்புநிலப் போர்வை : Yellow and brown mulch இந்த வகையில் பழுப்பு நிற பக்கமானது மண்ணைத் தொடுகிறது மற்றும் மஞ்சள் மேல்நோக்கி உள்ளது . வெள்ளை ஈ அதிகம் பாதித்த பகுதியில் இது பயன்படுத்தப்படுகிறது . மஞ்சள் நிறம் வெள்ளை ஈயை ஈர்க்கிறது , எனவே வெள்ளை ஈ நிலப்போர்வையுடன் தொடர்பு கொள்ளும்போது சூரிய வெப்பத்தின் காரணமாக அவை கொல்லப்படுகின்றன . கோடைகால காய்கறிகளை வளர்ப்பதற்கு இந்த மென் படலங்கள் பரிந்துரைக்கப்படுகின்றன . 3.வெள்ளி – கருப்பு நிலப்போர்வை : black-silver-mulching-film விவசாயிகளிடம் மிகவும் பிரபலமானது இந்த வெள்ளி கருப்பு நிலப்போர்வை . இந்த நிலப்போர்வை அனைத்து விதமான பயிருக்கும் ஏற்றது . இந்த நிலப்போர்வை 27 % ஒளியை பழங்கள் மற்றும் தாவரங்களுக்கு பிரதிபலிக்கிறது . மாதுளை மற்றும் ஸ்ட்ராபெரி பழங்களில் அதிக ப்ரீமொன்டேன் ( premontane ) நிறத்தில் இருப்பது காணப்படுகிறது . காய்கறிகள் , பூக்கள் , ஆர்கிட்கள் உற்பத்தி செய்ய வெள்ளி – கருப்பு நிலப்போர்வை மிகவும் ஏற்றது . அதிக மகசூல் பெறவும் உதவுகிறது . வெள்ளை கருப்பு நிலப்போர்வை ஒளிச்சேர்க்கை கதிர்வீச்சு 60 % க்கும் மேலான ஒளியை தாவரத்திற்கு அளிக்கிறது . எனவே தாவர வளர்ச்சியும் மேம்படுத்துகிறது , மற்றும் பூச்சி , நோய் தாக்குதலும் குறைகின்றன . எனவே , இதனால் விவசாயிகள் அதிக உற்பத்தி பெறுகின்றனர் . கோடையில் இது சிறப்பாக செயல்படுகிறது . பட்டாணி , முட்டைக்கோஸ் , மற்றும் காலிஃபிளவர் உற்பத்தி செய்ய வெள்ளை கருப்பு நிலப்போர்வை மிகவும் ஏற்றது . அதிக மகசூல் பெறவும் உதவுகிறது . red-tomato-mulch நல்ல நிலப்போர்வை தேர்ந்தெடுக்கும் முறை : அதிகபட்ச நன்மைகளைப் பெற சரியான நிலப்போர்வை மென் படலம் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் . தடிமன் : காய்கறி பயிருக்கு , மென் படலம் தடிமன் 15 மைக்ரான் முதல் 30 மைக்ரான் வரை இருக்கும். ஆர்கிட் பயிர் மென் படலம் தடிமன் 100 மைக்ரான் முதல் 150 மைக்ரான் வரை இருக்கும் . சிறிய கால பயிர்களுக்கு 25 மைக்ரான் பயன்படுத்த வேண்டும் . நீண்ட ஆயுள் உள்ள பயிருக்கு மண்ணில் கல் அதிகமாக இருந்தால் 150 மைக்ரான் மென் படலம் தேர்ந்தெடுக்கலாம் , இல்லையெனில் 100 மைக்ரான் மென்படலம் தேர்ந்தெடுக்க வேண்டும் . சோதனை நிலப்போர்வை மென் படலம் : ஒரு சிறிய துண்டு பிளாஸ்டிக் நிலப்போர்வை காகிதத்தை எடுத்து சூரிய ஒளியை கடத்துகிறதா என்று சரிபார்க்க வேண்டும் . அவ்வாறு அது ஒளியை கடத்தினால் அதை பயன்படுத்தகூடாது . புதுப்பிக்கத்தக்க தரமான பொருள் வாங்குதல் : ஒரு நல்ல நிலப்போர்வை காகிதம் நீண்ட ஆயுள் , காற்றழுத்தம் மற்றும் வெப்ப ஆதாரம் கொண்டு இருக்கவேண்டும் ( அவை எந்த ஒளியையும் கடத்தக் கூடாது ) . நிலப்போர்வை நிறுவுதல் எப்படி ? 1. காய்கறிகளில் , பயிர் நிலப்போர்வை படுக்கை தயாரிக்கும் நேரத்தில் செய்யப்பட வேண்டும் , ஆனால் ஆர்கிட் பயிர்களில் , பயிரிடுதலுக்கு பிறகு தான் செய்ய வேண்டும் . 2. நிலப்போர்வை மென் படலம் நிறுவும் முன் நிலத்தில் உள்ள வரிசைகளைக் குறிக்க வேண்டும் . 3. மிளகுச்செடிகள் , காலிஃபிளவர் , முட்டைக்கோஸ் போன்ற இரண்டு வரிசை பயிர்களுக்கு மேல் அகலம் 75 முதல் 90 செ.மீ கொண்ட படுக்கைகளைத் தயாரிக்க வேண்டும் . 4. ஒற்றை வரிசை பயிர்கள் தக்காளி , கத்திரிக்காய் , மிளகாய் , வெள்ளரி போன்றவற்றைக்கு மேல் அகலம் 45-60 செ.மீ இருத்தல்வேண்டும் . 5. நிறுவுவதற்கு முன் , படுக்கை தட்டையாக உள்ளதா என்பதை உறுதிசெய்து , முந்தைய பயிர் பாகங்கள் , கிளைகள் , தண்டு , கல் போன்றவற்றை அகற்ற வேண்டும் அவை நிலப்போர்வையை சேதப்படுத்தக்கூடும் . 6. படுக்கையில் சொட்டு நீர்குழாய்கள் ( Drip Lateral ) வைத்து , அவை வேலை செய்கிறதா , இல்லையா என்பதை சரிபார்க்க வேண்டும் . 7. நிலப்போர்வை மென் படலத்தின் மூலைகளில் மண்ணை வைத்து மூடவேண்டும் . 8. கண்ணாடி அல்லது சூடான குழாய் உதவியுடன் ஒரு துளை போடவேண்டும் . பயிர் விளைச்சல் மற்றும் உற்பத்தித்திறனை அதிகரிக்க நிலப்போர்வை பயன்படுத்தலாம் . பயிர் தேவைக்கேற்ப தரமான பொருட்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் . நிலப்போர்வைஅல்லது மூடாக்கின் பயன்கள்: 1. நீர் ஆவியாதலை தடுத்தல் : சூரிய ஒளி மண் மீது படுவதை நிலப்போர்வை பகுதியாகவோ அல்லது முழுவதுமாகவோ தடுக்கின்றது . இதன் மூலம் நீர் ஆவியாதல் தவிர்க்கப்படுகிறது. 2.மண்ணிலுள்ள ஈரத்தை தக்க வைத்தல் : நீர் ஆவியாதலை தடுப்பதன் மூலம் மண்ணிலுள்ள ஈரப்பதம் தக்க வைக்கப்படுகிறது . 3. மண்ணரிப்பை குறைத்தல் : நிலப்போர்வையானது மணமீது நீரின் தாக்கத்தையும் , காற்றின் உராய்வையும் குறைக்கும் , இதன் மூலம் மண்ணரிப்பானது குறைக்கப்படுகிறது. 4. மண்ணிற்குள் நீர் ஊடுருவலை அதிகரித்தல் : நிலப்போர்வையானது மண்மீது நீரின் வேகத்தை குறைத்து மண்ணுக்குள் நீர் ஊடுருவலை அதிகரிக்கின்றது . 5. களைச் செடிகள் வளர்ச்சியை தடுத்தல் : நிலப்போர்வை அமைப்பதன் மூலம் பயிர்களுக்கு நடுவே உள்ள திறந்தவெளி முற்றிலும் மூடப்படுகிறது . இதனால் களைச்செடிகளின் விதைகள் முளைக்காமல் போகின்றன இவ்வாறு களைச்செடிகளின் வளர்ச்சியை நிலப்போர்வை தடுக்கின்றது . 6. பயிர் வளர்ச்சிக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குதல் : கரிய நிலப்போர்வை பொருட்கள் மக்கி உரமாகி , பயிர் வளர்ச்சிக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குகின்றது 7. பயன்தரும் நுண்ணுயிரிகளை அதிகரித்தல் : கரிம நிலப்போர்வை பொருட்களை மண்ணிற்கு செலுத்துவதன் மூலம் பயன் தரும் நுண்ணுயிரிகளின் எண்ணிக்கை அதிகரிக்கின்றது . 8. உகந்த வெப்பநிலையை தருதல் : கோடை காலத்தில் சூரிய ஒளி மண்மீது படுவதை தடுப்பதன் மூலம் மண் வெப்பநிலை அதிகரிக்காமல் தடுக்கின்றது . அதேபோல் , குளிர்காலத்தில் மண் வெப்பநிலை குறைவதை தடுக்கின்றது .
டெல்லி: பஞ்சாபில் அதிகரித்து வரும் கோவிட்-19 வழக்குகள் மற்றும் அதிக இறப்பு விகிதம் ஆகியன, தொற்றுநோயைக் கட்டுப்படுத்த மாநில மற்றும் மத்திய ஆளுகையின் உள்ள பிராந்தியமான சண்டிகருக்கு உதவவும், மத்திய குழுக்களை நியமிக்கவும், மத்திய சுகாதார அமைச்சகத்தை தூண்டியுள்ளது. செப்டம்பர் 12 ஆம் தேதி நிலவரப்படி பஞ்சாபில் 19,096 கோவிட் -19 வழக்குகள் உள்ளன, இதுவரை 53,308 மீண்டுள்ளனர்; 2,212 பேர் இறந்துள்ளனர். ஆகஸ்ட் மாதத்தில் இது திடீரென அதிகரித்து, 250% க்கும் அதிகமான வழக்குகளுக்கு வழிவகுத்தது, ஜூலை மாத இறுதியுடன் ஒப்பிடும் போது, இறப்புகளில் 345% அதிகரிப்பு (1,332) காணப்பட்டது. டெல்லியை சேர்ந்த சென்டர் ஃபார் பாலிசி ரிசர்ச் (CPR - சிபிஆர்) மேற்கொண்ட ஆராய்ச்சியின் கண்டுபிடிப்புகள், 2.8 கோடி மக்கள் தொகையைக் கொண்ட மாநிலத்தில் என்ன நடந்திருக்கக்கூடும் என்பதற்கான சில தடயங்களை தந்துள்ளது. பஞ்சாப் அரசுடன் இணைந்து, மாநிலத்தில் கோவிட்-19 அறிகுறியற்ற பரவல் பற்றி சி.வி.ஆர் ஆய்வு செய்கிறது. அவர்கள் சமீபத்தில் தங்கள் ஆரம்ப கண்டுபிடிப்புகளுடன், ஆய்வுக்குறிப்பு ஒன்றை வெளியிட்டனர். பஞ்சாபில் கோவிட்-19 பரவல்களில் 81% அறிகுறியற்ற நபர்களிடம் இருந்து வந்தது, அறிகுறியுடைய சுமார் 15% பேரே, தொற்றுநோய்களுக்கு பங்களித்தனர் என்று, சிபிஆரால் பகுப்பாய்வு செய்யப்பட்ட பஞ்சாபின் தொடர்பு-தடமறிதல் தரவுகள் தெரிவிக்கின்றன. அறிகுறியற்ற பரவல், மாநிலத்தில் மிக ஆதிக்கம் செலுத்துகிறது என்பது, பரிசோதனை உத்திகள் --பாதிக்கப்பட்ட நோயாளிகளின் தொடர்பு-தடமறிதல் தொடங்கி, க்கள் தொகை அடிப்படையிலான பரந்த கண்காணிப்பு மூலம் புதிய வழக்குகளை தீவிரமாக கண்டுபிடிப்பது வரை -- மாற வேண்டும் என்பதை சுட்டிக்காட்டுவதாக, அந்த குறிப்பு கூறியுள்ளது. இந்திய அதிகாரிகள் பல மாநிலங்களில் சமூகப்பரவலை அறிவிக்கவில்லை என்றாலும், "அதற்கு அதிக வாய்ப்புள்ளது", என்று ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டனர், அறிகுறிகளுடன் இருப்பவர்களுக்கு மட்டுமே கவனம் செலுத்தும் பரிசோதனை அளவுகோல்கள் நிறுத்தப்பட வேண்டும் என்று, மற்றொரு கட்டாய காரணம் உருவாகிறது. சிபிஆர் அமைப்பில், கோவிட் -19 ஆய்வுக்குழுவின் ஒரு பகுதியாக இருக்கும் ஜிஷ்ணு தாஸ், இந்தியா ஸ்பெண்டிற்கு அளித்த பேட்டியில், பஞ்சாபில் தங்களது ஆராய்ச்சி குறித்தும், அறிகுறியற்ற பரவலால் ஏற்படும் பெரிய பிரச்சினைகள் குறித்தும் பேசுகிறார். திருத்தப்பட்ட பகுதிகள்: அறிகுறியற்ற நோயாளிகளால் பரவும் தொற்றுநோய்களின் ஆதிக்கத்தைக் கருத்தில் கொண்டு, பஞ்சாபில் பரிசோதனை உத்திகள், பாதிக்கப்பட்ட நோயாளிகளின் தொடர்பு-தடமறிதலில் இருந்து மக்கள் தொகையை கண்காணிப்பதன் மூலம், செயல்பாட்டில் உள்ள வழக்கு-கண்டுபிடிப்பிற்கு மாற வேண்டும் என்பதை உங்கள் ஆராய்ச்சி காட்டுகிறது. செயல்பாட்டில் உள்ள வழக்குகளை கண்டறிவது கோவிட்19ன் அறிகுறிகளை கண்காணிப்பதை அடிப்படையாகக் கொண்டது. ஆனால் பல அறிகுறியற்ற நோயாளிகள் இருக்கும்போது, இந்த மாதிரி என்பது முழுமையடையாது. இது எங்களை மூன்று அம்சக் கேள்விகளை கொண்டு வருகிறது: (i) “அறிகுறியற்ற நோயாளிகளிடம் தொற்றுநோய்களது ஆதிக்கம்” இருக்கும்போது, நல்ல நேரம் -- அதாவது நோய்த்தொற்றின் முன்னேற்றத்தில் - மக்கள் மற்றும் சமூகத்தை அறிகுறியற்ற வழக்குகளை கண்டறியத் தொடங்குவது-- எப்போது? (ii) இது, ஒரு மாநிலத்தில் முதன்மையாக செயல்பாட்டில் கண்காணிப்புத் திட்டத்தைக் கொண்டிருக்க வேண்டும் என்பதாகும், ஆனால், ஒரு துணைத்திட்டமாக செயல்பாட்டில் உள்ள பரிசோதனையில் இருந்து சமூக பரிசோதனைக்கு மாறுவதற்கு, அந்த நுனிப்புள்ளியை -- அதாவது அறிகுறியற்ற நிகழ்வுகளில் இருந்து அதிக தொற்றுநோய்கள் -- என மாறுவதற்காக கண்காணிப்பானது இயக்கப்படுகிறது. அது சரியானதா? (iii) வரம்புக்குட்பட்ட வளங்களைக் கொண்ட ஒரு மாநிலம் -- இந்தியா அளவிலான ஒருநாடு -- எவ்வாறு அந்த இனிமையான இடத்தைக் கண்டுபிடிக்க வேண்டும்? இவை அனைத்தும் சரியான கேள்விகள். அடிப்படை உண்மை என்னவென்றால், அவற்றுக்கு பதிலளிக்கக்கூடிய கொள்கைகள் நம்மிடம் உள்ளன, ஆனால் எந்த பிரத்யேகமானதாகவும் அது இல்லை. நம்மிடம் பிரத்யேகமானது இல்லாததற்கு காரணம், பொதுவாக சரியான கேள்விகளைக் கேட்பதற்கான வழியை நாம் பின்பற்றவில்லை. அதன் பிறகு, பின்வாங்கிக்கொண்டு பின்வருமாறு கூறுகிறோம்: “சரி, இவற்றுக்கு நாம் எவ்வாறு பதிலளிப்போம்” என்பதாகும். எனவே, பல அம்சங்களில் கணிசமான நிச்சயமற்ற தன்மையுடன், சரியாக இல்லாத தரவுகளுடன் நாம் பணியாற்றி வருகிறோம் - நிச்சயமாக இந்த கேள்விகளுக்கு பதிலளிப்பதற்கு, நாம் வடிவமைக்கப்படவில்லை. (அ) பல வழக்குகள் அறிகுறியற்றவை என்றும்; (ஆ) அறிகுறியற்ற மக்கள் நோயைப் பரப்புவார்கள் என்றும் ஆரம்பத்திலேயே நாம் அறிந்திருந்தால், கோவிட்-19 இல் இருந்து ஏற்படக்கூடிய சுகாதார விளைவுகளை நாம் மறுபரிசீலனை செய்யலாம் (எல்லாவற்றிற்கும் மேலாக, அறிகுறியற்ற மக்கள் ஒருபோதும் தீவிரமாக நோய்வாய்ப்படவில்லை எனில், அவர்களுக்கு சுகாதாரப்பாதுகாப்பு தேவையில்லை, நிச்சயமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதில்லை) மற்றும் அறிகுறியற்ற நபர்களை எவ்வாறு ஆரம்பத்தில் கண்டறிய முடியும் என்பதைப் பார்க்க, ஒரு செயல்பாட்டு கற்றல் நிகழ்ச்சி நிரலின் மூலம் வெளிப்படுகிறது. எனவே, உங்கள் கேள்விக்கான சரியான பதில், நன்கு அளவீடு செய்யப்பட்ட உத்திகள் உள்ளதா என்பதைப் பொறுத்தது, அது அறிகுறியற்ற தொற்றுநோயை முதலில் கண்டறிய நம்மை அனுமதிக்கும். இல்லையெனில், அறிகுறியற்ற நோய்த்தொற்றுகள் ஆதிக்கம் செலுத்தும் போது கூட, சமூகச்சோதனை செலவு குறைந்ததாக இருக்காது. எங்களது ஆராய்ச்சி குறிப்பு, சமூகத்தில் எளிய சீரற்ற மாதிரிகள் கூட நல்ல யோசனையாக இருக்கும் நிலைமைகளை எடுத்துக்காட்டுகிறது. இந்தியா தனது சோதனை நெறிமுறையை பலமுறை மாற்றி, படிப்படியாக சோதிக்கக்கூடிய நபர்களின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளது. டைனமிக் என்ற திறன்மிகு சோதனை அளவுகோல்களை வைத்திருப்பது அவசியமா? அகில இந்திய அல்லது மாநிலம் வாரியாக அளவுகோல்கள் இருப்பது அவசியமா? இது ஏன் மாநிலத்திற்கு மாநிலம் வேறுபட வேண்டும்? இந்த நேரத்தில், பஞ்சாப் நான்கு வகையான விஷயங்களைச் செய்து வருகிறது: (அ) கோவிட்-19 க்கான சிகிச்சை சோதனை; (ஆ) கடந்த காலத்தில் கோவிட்19 உள்ள மக்கள்தொகையின் பகுதியைக் கண்டறிய செரோலாஜிக்கல் ஆய்வுகள்; (இ) எடுத்துக்காட்டாக ஐ.எல்.ஐ [காய்ச்சல் போன்ற உடல்நலக்குறைபாடு] மற்றும் SARI [தீவிர சுவாச நோய்த்தொற்றுகள்] நோயாளிகளின் நோய்க்குறி ஆய்வுகள்; (ஈ) சிறப்பு மக்கள்தொகையில் பரிசோதனை, நீங்கள் குறிப்பிட்டுள்ளபடி, சிறப்பு மக்கள்தொகையின் வரையறை காலப்போக்கில் மாறிவிட்டது. எனவே, ஏதோ ஒரு வகையில், சமூக பரிசோதனைக்கான யோசனை என்பது ஏற்கனவே உள்ளது. முக்கிய கேள்வி என்னவென்றால், அவர்கள் கருதும் நோய்த்தொற்றின் முன்கணிப்புகள் (ILI / SARI முக்கியமாக மற்றும் சில சந்தர்ப்பங்களில் சிறப்பு மக்கள்தொகை) மிகவும் செலவு குறைந்தவையா என்பதுதான். நமது ஆராய்ச்சி சுட்டிக்காட்டுவது என்னவென்றால், இவை தொற்றுநோய்க்கான நல்ல முன்கணிப்பாளர்கள் அல்ல, மேலும் ஆபத்தை கணிக்கும் சிறந்த முன்கணிப்பாளர்களைக் கண்டுபிடிப்பதற்கான தீவிர முயற்சி எதுவும் இல்லை. செயல்பாட்டில்லாத நிலையில் இருந்து செயல்பாட்டுள்ள கண்காணிப்புக்கு மாறுவதற்கான இனிமையான இடம் எப்போது என்பது பற்றிய உங்கள் கேள்வி சரியானது. சமூகச்சோதனை எவ்வளவு செய்ய வேண்டும், யாரை சோதிக்க வேண்டும் என்பதை நாம் கண்டுபிடிக்க வேண்டும். இரண்டு கேள்விகளும் தொடர்புடையவை, ஏனென்றால் யாரை பொருத்தமான முறையில் சோதிக்க வேண்டும் என்பதைக் கண்டுபிடிக்க முடிந்தால் (அதாவது, பாதிக்கப்பட்டவர்களை ஆரம்பத்தில் அழைத்துச் செல்ல அனுமதிக்கும் சில கண்காணிப்பு கருவி), இது சமூகச்சோதனையின் செயல்திறனை நேரடியாக அதிகரிக்கிறது. ஒரு டைனமிக் சோதனை என்பது, அளவுகோல்களைக் கொண்டிருப்பது முற்றிலும் முக்கியமானது, ஆனால் அந்த சோதனை அளவுகோல்கள் நோயைப் பற்றி நாம் என்ன கற்றுக் கொள்கிறோம் என்பதை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும். இதனால் அதன் ‘டைனமிக்’ பகுதி நாம் கற்றுக்கொண்டவற்றால் இயக்கப்படுகிறது. உதாரணமாக, வாசனை மற்றும் சுவை இழப்பு இரண்டு சாத்தியமான அறிகுறிகள் என்பது நமக்கு முன்பே தெரியாது. எனவே, இவற்றைச் சேர்க்க, நமது கண்காணிப்பு அளவுகோல்களை ‘டைனமிக்’ ஆக மாற்ற வேண்டும். இதேபோல், நோய்த்தொற்றின் நடத்தை குறிப்புகளை நாம் இன்னும் ‘கற்றுக்கொள்ளவில்லை’ - சில தொழில்கள் அல்லது மக்கள் குழுக்கள் (ஒருவேளை நிறைய பேரைச் சந்திப்பவர்கள்) தொற்றுநோயின் ஆரம்பத்தில் நேர்மறையாக இருக்க வாய்ப்பிருக்கிறதா? பாதிப்பு குறைவாக இருக்கும்போது, உள்வரும் தொற்றுநோயின் சென்டினல்களாக எந்தக்குழு செயல்பட வேண்டும்? இந்த கேள்விகள் அனைத்தையும் கற்றுக்கொள்ள வேண்டும். சுவாரஸ்யமானது என்னவென்றால், இது கற்றுக்கொள்வது கடினம் அல்ல, அதற்கு அதிக நேரமும் தேவையில்லை, ஆனால் சோதனை மற்றும் கற்றலுக்கான கட்டமைக்கப்பட்ட அணுகுமுறை இதற்கு தேவைப்படுகிறது, அதை நாம் இதுவரை எடுக்கவில்லை. அறிகுறியற்ற வழக்குகளை கண்டறிய பரவலாக சோதனை செய்வதன் செலவு-செயல்திறன் என்ன? அறிகுறியற்ற வழக்குகளுக்கு பரவலாக சோதனை செய்வதற்கு ஆதரவாகவோ அல்லது எதிராகவோ, தரம் அல்லது எண்ணிக்கையிலான வாதங்கள் யாவை? செலவு-செயல்திறனைப் பொறுத்தவரை, இவை அனைத்தும் துல்லியமாக மக்களை, குறிப்பாக அறிகுறியற்றவர்களை, எவ்வாறு பரிசோதனைக்கு கண்காணிக்க முடியும் என்பதை குறிக்கிறது. நமது உருவகப்படுத்துதல்கள் ஒரு குறிப்பிட்ட மாதிரியை - சமூகத்தில் சீரற்ற மாதிரி - ஒப்பிடுகின்றன மற்றும் ஒட்டுமொத்த பரவலிலும் கூட, அறிகுறி கண்காணிப்புகளுடன் ஒப்பிடும்போது பரிசோதிக்க இது ஒரு சிறந்த வழியாக இருக்கலாம் என்பதைக் காட்டுகிறது. ஆனால் சமூகச்சோதனை செய்ய வேண்டுமா என்ற உங்கள் கேள்விக்கு இது பதிலளிக்கவில்லை. எனவே விரைவாக, தேர்ந்தெடுக்கப்பட்ட மாதிரிகளுக்கு வெவ்வேறு அணுகுமுறைகள் மூலமாகவும் நாம் கொஞ்சம் பணம் மற்றும் நேரத்தை செலவழிக்க வேண்டும் என்பதே எனது எடுத்துக்காட்டு. மீண்டும், புத்திசாலித்தனமாகச் செய்தால் அதற்கு நிறைய நேரமும் பணமும் தேவையில்லை. பரிசோதனைகள் துல்லியமானவை அல்ல, இன்று எதிர்மறை உள்ள ஒருவர் உண்மையில் நாளைக்கே வைரஸை கொண்டிருக்கக்கூடும் என்பதால், ஒரு அறிகுறியற்ற வழக்குகளை ஏன் பரிசோதிக்க வேண்டும்? அறிகுறியற்ற நபரை மீண்டும் மீண்டும் சோதிக்க வேண்டுமா? எடுத்துக்காட்டாக, உங்கள் ஆராய்ச்சி, சமூகத்தில் செயல்பாட்டில் பங்கு வகிப்பவர்களை - கடைக்காரர்கள் போன்றவர்களை - தொற்றுநோயை அதிகம் பிடிக்க அல்லது பரப்பக்கூடியவர்களை சோதிக்க அறிவுறுத்துகிறது. உங்கள் மாதிரி வழக்கமாக சோதிக்கப்பட வேண்டும் என்று பரிந்துரைக்கிறதா? மக்கள் எத்தனை முறை பரிசோதிக்கப்பட வேண்டும் என்ற இந்த பொதுவான கேள்வி, நாம் எதைப் பயன்படுத்த விரும்புகிறோம் என்பதைப் பொறுத்தது. உதாரணமாக, குறைவான பாதிப்பு உள்ள ஒரு பகுதியில், ஆரம்பகால நோய்த்தொற்றுகள் யாருக்கு (ஒருவேளை சுகாதாரப்பணியாளர்கள் அல்லது காவல்துறையினர்) என்பதை நாம் ‘கற்றுக் கொள்ள’ முடிந்தால், அவர்களில் ஒரு செண்டினல் கண்காணிப்பு அமைப்பு நன்றாக வேலை செய்யலாம். அல்லது, ஏராளமான மக்கள் நடமாட்டம் உள்ள பகுதிகளை நாம் காணலாம் மற்றும் அதிக சோதனைகள் இருக்க வேண்டிய இடங்களாக இவற்றைக் குறிக்கலாம். எனவே, உங்கள் உள்ளுணர்வு சரியானது - ஆரம்பத்தில் தொற்றுநோய்க்கான அதிக வாய்ப்பு உள்ளவர்கள் அடிக்கடி சோதிக்கப்பட வேண்டும். ஆனால் ஆரம்பத்தில் தொற்றுநோயை இருக்கும் நபர்கள் யார் என்பதை அறிய நமக்கு தரவு தேவை. இப்போது இந்தியாவில் நோய்த்தொற்று பரவலாக காணப்படுகிறது, தடுக்கும் மனித முயற்சிகளை வைரஸ் முந்திக் கொண்டதாக தோன்றும்போது, கண்காணிப்பு, பரவல் சங்கிலிகளை உடைப்பது கூட சாத்தியமா? நிச்சயமாக. அதிக பாதிப்பு உள்ள சூழலில் கூட, விஷயங்களை மிகத்திறம்பட செய்வதற்கான வழிமுறைகள் உள்ளன. அது குறித்து, விரைவில் வெளிவரவுள்ள அறிக்கை நம்மிடம் உள்ளது, எனவே நீங்கள் கொஞ்சம் காத்திருக்க வேண்டும். ஆனால் மீண்டும், இதைப் பெறுவதற்கு நம்மிடம் செயல்பாட்டு கற்றல் நிகழ்ச்சி நிரல் இருக்கிறதா என்பதில் இது நிறைய வருகிறது. நாட்டு அளவில் நம்மிடம் நேர்மறை விகிதம் இன்னும் 8% ஆக உள்ளது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்., எனவே ஒவ்வொரு நேர்மறையான நபரையும் கண்டறிந்து கொண்டிருக்கிறோம், நாம் 12 பேரை பரிசோதிக்கிறோம். அதன் செயல்திறனை சிறு அளவில் அதிகரிப்பது கூட மிகப்பெரியதாக இருக்கும். இன்று அறிகுறியற்ற ஒருவர், நாளையே அறிகுறி உள்ளவராக மாறும் சாத்தியம் இருப்பதால், ‘அறிகுறியற்ற’ மற்றும் ‘முன் அறிகுறி’ உள்ளவர்கள் ஆகியோரை கலக்காமல் பார்த்துக் கொள்ள, உங்கள் ஆய்வு எவ்வாறு உதவுகிறது? இல்லை, இந்த தரவுகளில் இருந்து அறிகுறியற்ற மற்றும் முன் அறிகுறி உள்ளவர்களை தெரிந்துகொள்ள நமக்கு வழி இல்லை. ஏனென்றால் ஒவ்வொரு நபருக்கும் மருத்துவமனை பதிவுகளுடன் இந்தத் தரவை மேலும் இணைக்க வேண்டும். இவற்றிற்கான அணுகல் நம்மிடம் இல்லை. இதை சொல்லும் போது, [அங்கு] இரண்டு விஷயங்கள் உள்ளன: இந்தியாவில் ஒரு ஆய்வு இருந்தது, இது பரிசோதனையின் போது ஏராளமான அறிகுறியற்ற நோயாளிகள் தங்கள் நோய் முழுவதும் அறிகுறியின்றி தொடர்ந்து இருப்பதைக் காட்டியது. இரண்டாவது, பரிசோதனையின் போது அவர்கள் நேர்மறை கண்டறியப்பட்டவர்கள் என்பதால், தொற்று இயக்கவியலுக்கு, இது சற்று குறைவாகவே இருக்கலாம் - முக்கியமானது என்னவென்றால், தொற்றுநோய் ஏற்பட்டுள்ள தருணத்தில் அவர்களை கண்டு பிடிப்பது. உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு. Anoo Bhuyan அனு பூயான், இந்தியாஸ்பெண்டில் உடல்நலம் சார்ந்தவை குறித்து எழுகிறார். சட்டம் & நீதி, தொழில்நுட்பம், சமூகம் மற்றும் பாலினம் தொடர்பான பிரச்சினைகள் குறித்தும் அவர் எழுதி இருக்கிறார். இந்தியாஸ்பெண்டிற்கு முன்பு அவர், தி வயர், அவுட்லுக் இதழ், பிபிசி நியூஸ் மற்றும் நேஷனல் பப்ளிக் ரேடியோ ஆகியவற்றில் பணியாற்றியுள்ளார். மணிப்பூர் நீதித்துறை கூடுதல் கொலைகள் என்பது குறித்த அவரது செய்திக்காக, 2018 ஆம் ஆண்டில் போர்ன்மவுத் பல்கலைக்கழகத்தின் ‘மாற்றத்திற்கான பத்திரிகையாளர்’ விருதை வென்றார். லண்டன் பல்கலைக்கழகத்தின் ஸ்கூல் ஆப் ஓரியண்டல் அண்ட் ஆப்ரிக்கன் ஸ்டடீஸ் முதுகலை பட்டத்திற்கான உதவித்தொகையும் பெற்றார். டிவிட்டரில் அவரை www.twitter.com/AnooBhu என்ற முகவரியில் அணுகலாம்.
நடிகர் நாக சைதன்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு நாளை 'NC22' தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகவுள்ளது நாக சைதன்யா கதாநாயகனாக நடித்து வரும் ஆக்‌ஷன் த்ரில்லர் படமான 'NC22'வை வெங்கட்பிரபு இயக்குகிறார். கீர்த்தி ஷெட்டி இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். இருமொழியில் உருவாகி வரும் இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அரவிந்த்சாமி, பிரியாமணி, சரத்குமார் மற்றும் ப்ரேம்ஜி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். நாக சைதன்யாவின் பிறந்தநாள் நவம்பர் 23ஆம் தேதி வருவதை ஒட்டி, பிறந்தநாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இயக்குநர் வெங்கட் பிரபு மற்றும் தயாரிப்பாளர் ஸ்ரீனிவாசா சித்தூரி ஆகியோர் இருவரும் படத்தின் ப்ரீ-லுக் வெளியீட்டு தேதியை காணொலியில் அறிவித்துள்ளனர். பார்வையாளர்களைக் கவரும் விதமான இந்த ப்ரீ-லுக் இன்று வெளியாகியுள்ளது. இந்த ப்ரீலுக்கில் நாக சைதன்யா தீவிரமான காவல் துறை அதிகாரியாக வருகிறார். மேலும், நவம்பர் 23அன்று காலை 10.18க்கு வெளியாக இருக்கும் முதல் பார்வைக்கான ஆர்வத்தையும் பார்வையாளர்களிடையே ஏற்படுத்தும் விதமாக இந்த ப்ரீலுக் அமைந்துள்ளது. ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீனின் கீழ் ஸ்ரீனிவாசா சித்தூரி இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். இளையராஜா மற்றும் யுவன்ஷங்கர் ராஜா ஆகியோர் படத்திற்கு இசையமைக்கின்றனர். அபூரி ரவி இந்தப் படத்திற்கு வசனங்கள் எழுத SR கதிர் ஒளிப்பதிவு செய்கிறார். பவன் குமார் இந்தப் படத்தை வழங்குகிறார்.
அவசரமாக பைக்கில் போய்க்கொண்டிருக்கும் போதுதான், திடீரென செல்போனில் அந்த அழைப்பு வரும். வண்டியை ஒரங்கட்டி நிறுத்தி போனை எடுத்தால்.. இனிமை மாதிரியான குரலில் எச்சூஸ்மீ சார் நாங்க ப்ளாப்ளா பாங்கல்ருந்து பேசறோம், ஒரு அருமையான இன்வெஸ்ட்மென்ட் ப்ளான் இருக்கு அதை பத்தி ஃபைவ் மினிட்ஸ் பேசட்டுமா என ஆரம்பிப்பார். நமக்கு வருகிற வெறியில் கைக்கெட்டும் தூரத்தில் டிராபிக்கை ஒழுங்குபடுத்திக்கொண்டிருக்கும் கான்ஸ்டபிளை தூக்கி போட்டு நாலு சாத்து சாத்தவேண்டும் போல இருக்கும். இது கடந்த பத்தாண்டுகளாக பல்கி பெருகி வளர்ந்து கிளைகள் பரப்பி சிறிய நகரங்களில் கூட ஒரு நாளைக்கு இதுமாதிரி பத்து போனாவது வரவில்லையென்றால்தான் ஆச்சர்யம்தான். முன்னெல்லாம் வெறும் கிரெடிட் கார்ட் அல்லது பர்சனல் லோன் கார் லோன் இன்சூரன்ஸ் மாதிரியான விஷயங்களுக்கு மட்டுமே போன் போட்டு மார்க்கெட்டிங் செய்தவர்கள், இப்போதெல்லாம் ‘சார் சென்னைக்கு பக்கத்துல செங்கல்பட்டு தாண்டி நாப்பது கிலோமீட்டர்ல சூப்பரான நிலம் இருக்கு, ரேட் ரொம்பக்கம்மி’ என கூவி கூவி விற்கின்றனர். நாங்க ப்ளாப்ளா டிரஸ்ட்லருந்து பேசறோம் குழந்தைகள் படிப்புக்கு உதவுங்க சார் என்று டொனேஷன் கேட்கின்றனர். ஏதாவது ஒரு மேட்ரிமோனியிலிருந்து அழைத்து உங்களுக்கு கல்யாணம் ஆகிவிட்டதா என கேட்கிற அழைப்புகளும் உண்டு. இவர்களுக்காகவாவது இன்னொரு திருமணம் செய்துகொள்ள வேண்டும். இந்த பெண்கள் மேல் எனக்கு ஆறேழு ஆண்டுகளுக்கு முன் கடும் கோபம் இருந்தது. மார்க்கெட்டிங்கில் பணியாற்றியவன் என்பதால் ஒரு விற்பனையாளன் தன் வாடிக்கையாளரை போனில் அழைத்து பேசும் போது என்னவெல்லாம் செய்ய வேண்டும், அதன் படிநிலையென்ன என்பதையே ஒரு நாள் முழுக்க ஐந்து நட்சத்திர ஹோட்டலில் ரூம் போட்டு கற்றுகொடுத்திருக்கிறார்கள். ஆனால் இந்த பெண்களுக்கு அந்த அடிப்படை எதுவுமே தெரியாமல் சுடுகாட்டில் இருந்தாலும் போன் போட்டு நம்நிலை அறியாது கடகடவென பேசி டெலிமார்க்கெட் பண்ணுவது நாராசமானது. ஒரு நாள் நன்றாக உறங்கிக்கொண்டிருந்தவனை எழுப்பியது போன். எடுத்து பேசினேன். நிஜமாகவே அழகான குரலொன்று பேசியது. சிட்டி பேங்கிலிருந்து பேசுவதாகவும் உங்களுக்கு கிரடிட் கார்டு வேண்டுமா என்றும் கேட்டது. தூக்கம் போச்சே என்கிற கோபமிருந்தாலும் போனை எடுத்ததும் பதட்டமான குரலில் நல்ல வேளை போன் பண்ணீங்க.. இல்லாட்டி செத்தே போயிருப்பேன்.. இப்பதான் கடன் தொல்லை தாங்க முடியாம சாகலாம்னு தூக்குல தொங்க போனேன்.. என்று நான் பேச, அந்த பெண் கிக்கீகிக்கீ யென சிரிக்கத்தொடங்கிவிட்டாள்! அவளுக்கு நான் நக்கலடிப்பது எப்படி புரிந்தது என்பது இன்றும் தெரியாத ஒன்று. அந்த சிரிப்பு வசீகரித்தது. அந்த பெண் போனை வைத்துவிட்டாள். இருந்தாலும் அந்த சிரிப்பு புதுமையாக இருந்தது. மார்க்கெட்டிங்கில் இது போல நக்கலடிக்கும் ஜோக்கடிக்கும் வாடிக்கையாளரிடம் அதிகமாக சிரிக்க மாட்டேன்! அது டீலிங்கை கெடுத்துவிடும் , பேமண்ட்டில் விளையாடும் என்பார் முன்னாள் மேனேஜர். தொடர்ந்து இது போல வருகிற கால்களுக்கு விதவிதமாக பதில் சொல்லத்தொடங்கினேன். ‘’என்னது சிட்டிபேங்க்லருந்தா கூப்பிடறீங்க.. நான்தான்ம்மா சிட்டிபேங்க் ரிஜனல் மேனேஜர்’’ என்பேன். ‘’ஆமா வினோத்தான் பேசறேன்.. ஆனா நான் செத்துப்போயி நாலு வருஷமாச்சு.. இப்போ ஆவியா சுத்திகிட்டு இருக்கேன், என்ன வேணும் சொல்லுங்க’’ என்பேன். அப்போது தனிமையில் சிறிய அறையில் வசித்த என்னுடைய மொக்கை ஜோக்குகளுக்கும் சிரித்து மகிழ ஆளிருக்கே என நினைப்பேன். சில பெண்கள் நண்பர்களை போல பழகவும் தொடங்கினர். அவர்களோடு நிறைய உரையாடுவேன். அவர்களுடைய அலுவலகத்திற்கே சென்று சந்திப்பேன். அந்த சமயத்தில்தான் இந்த பெண்கள் படும்பாடு புரியத்தொடங்கியது. நமக்கு வருகிற இந்த மார்க்கெட்டிங் அழைப்புகள் ஏதோ மிகப்பெரிய கால்சென்டரிலிருந்தோ மெத்தப்படித்த பெண்களிடமிருந்தோ வருபவையல்ல. பத்துக்குபத்து அறை, இரண்டு லேன்ட்லைன் போன், இரண்டு பெண்கள், மூன்று மார்க்கெடிங் பையன்கள் இவ்வளவுதான் இந்த மார்க்கெடிங் அலுவலகங்களின் அளவு. அதிலும் இந்த பெண்களெல்லாம் பத்தாம் வகுப்பு அல்லது பனிரெண்டாம் வகுப்பு படித்தவர்கள் அல்லது பட்டப்படிப்பு படித்து சரியான வேலைகிடைக்காதவர்கள் வரை இருக்க கூடும். சம்பளமாக பெரிய தொகை கிடையாது அதிமாக கொடுத்தால் ஐந்தாயிரம்தான்! ஐந்தாயிரமே மிகமிக அதிகம். அதற்கு மேல் வாடிக்கையாளரை பிடிப்பதை பொறுத்து வேறுபடும். இவர்களெல்லாருக்குமே தினமும் நூறிலிருந்து நூற்றம்பது அழைப்புகளுக்கு மேல் டார்கெட் இருக்கும். அதற்காக எண்களை பெற பெரிய போராட்டமே நடத்துவதை பார்த்திருக்கிறேன். சில சமயங்களில் ரேண்டமாக வெவ்வேறு எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசுவதையும் பார்த்திருக்கிறேன். எல்லா வாடிக்கையாளருமே ஒரே மாதிரி இருப்பதில்லை. ஆபாச வார்த்தைகளால் அர்ச்சிப்பவர்கள் ஒரு பக்கமென்றால் இன்னொரு புறமோ ஆபாசமாக பேசுகிறவர்களும் உண்டு. இன்னும் சிலர் ஒரு நாள் வரீயா இன்சூரன்ஸ் போடறேன் என்றெல்லாம் கேட்பார்களாம்! அதை சொல்லும்போதே கதறி அழுகிற நண்பர்கள் எனக்கிருந்தனர். இதில் வாடிக்கையாளர் பெண்களாக இருந்துவிட்டால் நிலைமை இன்னும் மோசமாக இருக்குமாம். தகாத வார்த்தைகளை நாசூக்காக பேசியே கொல்வபவர்கள் உண்டு. வெளியே போனில் அழைத்து பேசும்போதுதான் இந்த நிலையென்றால் டார்கெட் பிரஷர் அதிகமாகும்போது அறைக்குள் அழைத்து திட்டி தீர்க்கிற டீம் லீடர்களின் அத்துமீறலும் அரங்கேறுமாம். சிலர் சரிம்மா இன்சூரன்ஸ் போட்டுக்கறேன்.. லோன் வாங்கிக்கறேன் என்று கூறுவதோடு எல்லாமே ஓக்கே ஆகி லோனுக்கான விண்ணப்பங்களில் கையெழுத்து போடப்போகும்போது இந்த பெண்களை நேரில் வரச்சொல்லி தவறாக நடந்துகொள்ள முயல்வதும் உண்டு. இவர்களுக்கு மார்க்கெட்டிங் நுணுக்கங்கள் கற்றுக்கொடுக்கப்படுவதில்லை. அதற்குபதிலாக போன்ல கூப்பிட்டு பேசும்போது நல்லா இனிக்க இனிக்க பேசுங்க.. உங்களுக்கு கல்யாணமாகிடுச்சானு கேளுங்க , உங்க வாய்ஸ் நல்லாருக்குனு சொல்லுங்க என்பது மாதிரியான மோசமான பாடங்களே உண்டு! இந்த பெண்களில் தொன்னூறு சதவீதம் பேர் வறுமையான சூழலில் பிறந்து வளர்ந்து ஓரளவு சொல்லிக்கொள்ளும்படியான இதுமாதிரியான வேலைக்கு வருகிறவர்கள். எதையும் சகித்துக்கொள்ளுபவர்களாகவும் , இதையெல்லாம் எதிர்கொண்டு வாழ பழகிக்கொண்டவர்களாகவும் இருப்பதை பார்த்திருக்கிறேன். அது அதிர்ச்சியாக இருந்தாலும்.. ஆச்சர்யம்தான். இப்படியெல்லாம் பிரச்சனைகளை சந்திக்கிற இப்பெண்கள் எப்போதாவது சிலர் மொக்கை ஜோக்குகளை பகிர்ந்துகொண்டாலும் ஒரு நன்றியோடு கனிவாக போனை கட் செய்துவிடுவதாலும் புன்னகைப்பதில் ஆச்சர்யம் இல்லை. புன்னகை விலைமதிப்பற்றதல்லவா? இதோ இப்போதும் எனக்கு தினமும் பத்து முதல் பதினைந்துக்கும் மேல் இதுமாதிரியான அழைப்புகள் வருகின்றன. அசௌகர்யமான நேரங்களில் வரும்போது ஒரு நன்றிம்மா இப்போதைக்கு வேணாம்மா என கட் செய்துவிடுவேன். அல்லது ஏதாவது ஒரு மொக்கை ஜோக்கை உதிர்த்து அப்பெண்ணின் சிரிய சிரிப்பொலியோடு போனை கட்செய்வதுமுண்டு. அவர்களும் நம்மைப்போல மனிதர்கள்தானே!
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads By Category: எழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம் சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும் September 2009 Issue தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | நினைவலைகள் | நலம்வாழ | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | சிரிக்க, சிந்திக்க குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | எனக்குப் பிடிச்சது | எங்கள் வீட்டில் | பொது | சினிமா சினிமா | Events Calendar
‘நாங்கள் இந்திய அரசிடம் தமிழ் மக்களின் உரிமைகளை முழுமையாகப் பெற்றுக்கொடுப்பதற்கான வழி முறையைப் பற்றிச் சிந்தித்துச் செயற்ப டும்போது அதனைக் கேள்விக் குள்ளாக்கக்கூடிய வகையில் வடிவேலு பாணியில் சுமந்திரன் தொடர்ந்து செயற்படுவது என்பது நல்ல விடயமல்ல.’ இவ்வாறு கூறியிருக்கிறார் ஈ.பி.ஆர்.எல்.எப். அமைப்பின் தலைவர் சுரேஸ் பிறேமச்சந்திரன். யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர்களிடம் பேசிய அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு: அரசமைப்பின் 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்தும்படி ஆவணம் கொடுப்பது தொடர்பாகக் கடந்த சில மாதங்களாகப் பல்வேறுபட்ட அரசியல் கட்சிகள் பேச்சுளை நடத்தி ஆவணத்தைத் தயார்படுத்தி இருக்கின்றார்கள். இந்த ஆவணத்தை மிக அவசரமாக இந்தியாவுக்குத் தூதுவர் சென்றதன் காரணமாகக் கொடுக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இந்தியத் தூதுவர் வந்தவுடன் அந்த ஆவணம் கொடுக்கப்படும் என்று நாங் கள் எதிர்பார்க்கின்றோம். ஆனால், அநாகரிகமானதொரு விடயம் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றது. சுமந்திரன் ஊட கவியலாளர்களைச் சந்திக்கின்றபோது நாங்கள் இந்த ஆவணத்தை முற்று முழு தாக மாற்றிவிட்டோம். இது தமிழரசுக் கட் சியினுடைய ஆவணமாக மாறிவிட்டது என்று ஒரு விடயத்தைத் தொடர்ந்து சொல்லி வருகின்றார். உண்மையாகவே சுமந்திரனைப் பொறுத்தவரை இந்த 13ஆவது திருத் தத்தை நடைமுறைப்படுத்தும் ஆவ ணத்தை கொடுப்பதற்கு விரும்பவில்லை என்பது யாழ்ப்பாணத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில் தெளிவாகக் கூறி இருக்கின் றார். ஆனால், சம்பந்தன் உட்பட ஏனைய கட்சிகள் அனைத்தும் இப்போது 13ஜ நடைமுறைப்படுத்தும்படி கூறும் போது வ டிவே லு பா ணி யி ல் நாங்கள் மாற்றி விட்டோம் என்று சுமந்திரன் கூற ஆரம்பித்திருக்கின்றாரா என்ற கேள்வி எழுகின்றது. உண்மை என்னவென்றால் 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்தும்படி நாங்கள் கூறிய கோரிக்கையில் எந்த மாற்றமும் இல்லை. அந்த ஆவணத்தில் 13ஆவது திருத்த வரலாற்றை சேர்த்திருக்கலாம். அந்த வரலாற்றைச் சேர்த்தால் கூட கோரிக்கை 13ஆவது திருத் தத்தை நடைமுறைப் படுத்துவதுதான். ஆகவே, நாங்கள் இந்திய அரசிடம் தமிழ் மக்களின் உரிமைகளை முழுமையாகப் பெற்றுக்கொடுப்பதற்கான வழி முறையைப் பற்றிச் சிந்தித்துச் செயற்ப டும்போது அதனைக் கேள்விக் குள்ளாக்கக்கூடிய வகையில் வடிவேலு பாணியில் சுமந்திரன் தொடர்ந்து செயற்படுவது என்பது நல்ல விடயமல்ல. தன்னை ஒரு புத்திஜீவியாகவும் அனைத்தும் தெரிந்தவனாகவும் கூறிக் கொண்டு இவ்வாறான கருத்துக்களை கூறுவதை கைவிட்டு செயற்பட வேண்டும்’ என்றார்.
Author: நலன் விரும்பி Published Date: 14/12/2021 Leave a Comment on இலங்கையில் உணவு பஞ்சம் வரப்போகிறது – எச்சரிக்கை இதனை SHARE பண்ணுங்க இலங்கையில் உணவு பஞ்சம் வரப்போகிறது – எச்சரிக்கை இன்னும் இரண்டு வாரங்களில் வௌநாட்டு கையிருப்பு பூஜ்ஜியத்துக்கு வருவதால் நாட்டில் கடும் பஞ்சம் ஏற்படும் என தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் விஜயதாஸ ராஜபக்ஷ, அடுத்த சில வாரங்களில் அரசாங்கத்தால் அத்தியாவசிய உணவுப்பொருட்களை கூட வழங்க முடியாது என்றார். நேற்று முன்தினம் (12) கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்து தெரிவித்த அவர், யுனதனவி மின் உற்பத்தி நிலையத்தை வெளிநாட்டு நிறுவனம் ஒன்றுக்கு பெற்றுக்கொடுத்தமை தொடர்பில் பாரிய பிரச்சினைகள் காணப்படுவதுடன், இதன் மூலம் மின்சாரம் தொடர்பான சர்வாதிகாரத்தை வௌநாட்டு நிறுவனத்தக்கு வழங்குவதன் மூலம் நாட்டுக்கு பாரிய சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது என குறிப்பிட்டார். நாட்டின் இன்றைய நிர்வாகம் செல்லும் விதத்தில் எமது நாட்டில் டொலர் இருப்பதற்கான சாத்தியமே இல்லை. கடந்த காலங்களில் பிரயோசனமற்ற பல வேலைத்திட்டங்களுக்கு அதிக வட்டியின் கீழ் கடன் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. விசேடமாக 2010 மற்றும் 2014ஆம் ஆண்டுகளில் பெற்றுக்கொண்ட கடனைச் செலுத்துவதில், அதன் பின்னர் வந்த அனைத்து அரசாங்கங்களும் சிரமத்தை எதிர்நோக்கின என்று சுட்டிக்காட்டினார். அன்று பெற்றுக்கொண்ட கடன் மூலம், நாட்டு நன்மை பயக்கும் ஒரே வேலைத்திட்டம் நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையமாகும். ஏனைய அனைத்து வேலைத்திட்டங்களும் வௌ்ளை யானை போன்று நாட்டுக்கு பயனற்ற வேலைத்திட்டங்களே என்றார். நிதியமைச்சர் முன்வைத்த பட்ஜெட் தொடர்பில் எவ்வித தௌிவும் இல்லை. அதனால் தான் அதற்கு ஆதரவாக வாக்களிக்க முடியாமல் போனது. தான் அரசியலில் இருந்தாலும் தான் மக்கள் பக்கமே இருப்பதாகவும் ஆட்சிக்கு வரும் அரசாங்கம் அதன் தலைவர்கள் செய்யும் தவறை தவறென்று சுட்டிக்காட்டும் தைரியம் தனக்கு அதிகமாக உள்ளது என்றும் குறிப்பிட்டார். அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்தின் பின்னர் பிரதமர் உள்ளிட்ட அனைத்து அமைச்சர்களும் ஜனாதிபதியின் அடிமைகளாக மாறியுள்ளனர். சகலருக்கும் முதுகெலும்பு இல்லை. இன்றைய அமைச்சர்கள் ஜனநாயக நாட்டில் முழுமையாக பொறுப்பு கூறும் அமைச்சர்கள் அல்ல. ஜனாதிபதியின் அடிமைகளாக மாறியுள்ளனர் என்றார்.
و حَدَّثَنِي ‏ ‏حَرْمَلَةُ بْنُ يَحْيَى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏ابْنُ وَهْبٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏عَمْرٌو وَهُوَ ابْنُ الْحَارِثِ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ شِهَابٍ ‏ ‏عَنْ ‏ ‏سَالِمِ بْنِ عَبْدِ اللَّهِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ عَنْ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَنَّهُ ‏ ‏صَلَّى صَلَاةَ الْمُسَافِرِ ‏ ‏بِمِنًى ‏ ‏وَغَيْرِهِ رَكْعَتَيْنِ ‏ وَأَبُو بَكْرٍ ‏ ‏وَعُمَرُ ‏ ‏وَعُثْمَانُ ‏ ‏رَكْعَتَيْنِ صَدْرًا مِنْ خِلَافَتِهِ ثُمَّ أَتَمَّهَا أَرْبَعًا ‏ ‏و حَدَّثَنَاه ‏ ‏زُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ ‏ ‏عَنْ ‏ ‏الْأَوْزَاعِيِّ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَاه ‏ ‏إِسْحَقُ ‏ ‏وَعَبْدُ بْنُ حُمَيْدٍ ‏ ‏قَالَا أَخْبَرَنَا ‏ ‏عَبْدُ الرَّزَّاقِ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏مَعْمَرٌ ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏الزُّهْرِيِّ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏قَالَ ‏ ‏بِمِنًى ‏ ‏وَلَمْ يَقُلْ وَغَيْرِهِ அல்லாஹ்வின் தூதர் (ஸல்), மினாவிலும் (அதைச் சார்ந்த) பிற இடங்களிலும் (நான்கு ரக்அத்கள் கொண்ட தொழுகைகளை) பயணத்திலிருப்பவர் தொழுவதைப் போன்று (சுருக்கி) இரண்டு ரக்அத்களாகத் தொழுதார்கள். அபூபக்ரு (ரலி), உமர் (ரலி) ஆகிய இருவரும் (அவ்வாறே தொழுவார்கள்). உஸ்மான் (ரலி) அவர்களும் தமது ஆட்சியின் ஆரம்பக் கட்டத்தில் இரண்டு ரக்அத்களாகவே தொழுதார்கள். அதற்குப் பிறகு (சுருக்கித் தொழாமல்) முழுமையாகத் தொழுதார்கள். அறிவிப்பாளர் : இப்னு உமர் (ரலி) குறிப்பு : அப்துர் ரஸ்ஸாக் (ரஹ்), மஃமர் (ரஹ்) ஆகியோர் வழி அறிவிப்பில், ” … மினாவில் …” என்று மட்டுமே இடம்பெறுகிறது. “… (அதைச் சார்ந்த) பிற இடங்களிலும் …” எனும் தொடர் இடம்பெறவில்லை. ← முந்தைய ஹதீஸ்அத்தியாயம்: 6, பாடம்: 01, ஹதீஸ் எண்: 1118 அடுத்த ஹதீஸ் →அத்தியாயம்: 6, பாடம்: 01, ஹதீஸ் எண்: 1120 abdrahuman ↓ விரும்பும் பாடம் செல்ல… ↓ விரும்பும் பாடம் செல்ல… Select Category 43.41 இறையன்பர் இப்ராஹீம் (அலை) அவர்களின் சிறப்புகள் (5) 43.40 ஈஸா (அலை) அவர்களின் சிறப்புகள் (7) 43.39 நபி (ஸல்) அவர்களைப் பார்ப்பது … (1) 43.38 நபி (ஸல்) கூறிய, உலக நடைமுறைகள் … (3) 43.37 நபி (ஸல்) அவர்களைக் கண்ணியப்படுத்துவதும் … (8) 43.36 நபி (ஸல்) அவர்களைப் பின்பற்ற வேண்டியது (முஸ்லிம்களின்) கட்டாயக் கடமையாகும் (1) 43.35 நபி (ஸல்) அவர்களின் அல்லாஹ்வைப் பற்றிய அறிவும் அவனைப் பற்றிய கடுமையான அச்சமும் (2) 43.34 நபி (ஸல்) அவர்களின் பெயர்கள் (3) 43.33 நபி (ஸல்) மக்காவிலும் மதீனாவிலும் எத்தனை ஆண்டுகள் வாழ்ந்தார்கள்? (8) 43.32 நபி (ஸல்) இறந்தபோது அவர்களுக்கு வயது எத்தனை? (2) 43.31 நபி (ஸல்) அவர்களின் உடலமைப்பு; நபியாக அனுப்பப்பெற்றது; அவர்களின் வயது (1) 43.30 நபி (ஸல்) உடலில் நபித்துவ முத்திரை … (3) 43.29 நபி (ஸல்) அவர்களின் தலைநரைமுடி (10) 43.28 நபி (ஸல்) அவர்களின் வெண்ணிறமும் களையான முகமும் (2) 43.27 நபி (ஸல்) அவர்களின் வாய், கண்கள், குதிகால்கள் ஆகியவை (1) 43.26 நபி (ஸல்) அவர்களது தலைமுடியின் தன்மை (3) 43.25 நபி (ஸல்) அவர்களின் உருவத் தோற்றம் … (3) 43.24 நபி (ஸல்) தமது தலைமுடியை … (1) 43.23 நபி (ஸல்) அவர்களுக்கு வேத அறிவிப்பு வரும்போது … (4) 43.22 நபி (ஸல்) அவர்களது வியர்வையின் நறுமணமும் அதன்மூலம் வளம் ஏற்பட்டதும் (3) 43.21 நபி (ஸல்) அவர்களின் மேனியில் கமழ்ந்த நறுமணம் … (3) 43.20 நபி (ஸல்) பாவங்களை விட்டு வெகு தொலைவில் விலகியிருந்தது … (3) 43.19 நபி (ஸல்), மக்களுடன் நெருங்கிப் பழகியதும் அவர்களிடமிருந்து மக்கள் வளம் பெற்றதும் (3) 43.18 மனைவியர்மீது நபி (ஸல்) காட்டிய அன்பும் … (4) 43.17 நபி (ஸல்) அவர்களின் புன்னகையும் அழகிய உறவாடலும் (1) 43.16 நபி (ஸல்) அவர்களின் நாண மிகுதி (2) 43.15 நபி (ஸல்) குழந்தைகள் மீதும் குடும்பத்தார் மீதும் காட்டிய அன்பு … (5) 43.14 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வேண்டப்பட்ட எந்த ஒன்றுக்கும் அவர்கள் “இல்லை” என்று சொன்னதேயில்லை … (5) 43.13 அல்லாஹ்வின் தூதர் (ஸல்), மக்களிலேயே மிகவும் அழகான … (5) 43.12 மக்களிலேயே நபி (ஸல்), தொடர்ந்து வீசும் (மழைக்) காற்றைவிட … (1) 43.11 நபி (ஸல்) அவர்களின் வீரமும் அறப்போருக்காக அவர்கள் முன்னே சென்றதும் (2) 43.10 உஹுதுப் போர் நாளில் நபி (ஸல்) … (2) 43.9 நம் நபி (ஸல்) அவர்களுக்கு (மறுமையில் ‘அல்கவ்ஸர்’) தடாகம் உண்டு … (20) 43.8 உயர்ந்தோன் அல்லாஹ் ஒரு சமுதாயத்தின்மீது அருள் புரிய நாடினால் … (1) 43.7 நபி (ஸல்), இறுதி இறைத் தூதர் என்பது பற்றிய குறிப்பு (4) 43.6 நபி (ஸல்), தம் சமுதாயத்தார் மீது கொண்டிருந்த பரிவும் … (4) 43.5 நபி (ஸல்), நேர்வழியுடனும் ஞானத்துடனும் அனுப்பப் பெற்றதற்கான உவமை (1) 43.4 அல்லாஹ்வையே முழுமையாக நபி (ஸல்) சார்ந்திருந்ததும் … (1) 43.3 நபி (ஸல்) அவர்களின் அற்புதங்கள் (7) 43.2 எல்லாப் படைப்புகளையும்விட நம் நபி (ஸல்) அவர்களின் சிறப்பு (1) 43.1 நபி (ஸல்) அவர்களின் தலைமுறையின் சிறப்பும் … (2) 42.4 நபி (ஸல்) கண்ட கனவு (6) 42.3 கனவுக்கு விளக்கமளித்தல் (1) 42.2 ஷைத்தான் கனவில் விளையாடியது குறித்து … (3) 42.1 கனவில் என்னைக் கண்டவர் … (4) 42.01 கனவுகள் (11) 41.2 பகடை விளையாட்டு, தடை செய்யப்பட்டதாகும் (1) 41.1 கவிதைகள் (9) 40.5 நறுமணப் பொருட்களில் மிகவும் சிறந்த கஸ்தூரியைப் பயன்படுத்துவது … (4) 40.4 ஒருவர், ‘கபுஸத் நஃப்ஸீ’ (என் மனம் அசுத்தமாகிவிட்டது) எனும் சொல்லை … (2) 40.3 ‘அப்து’ (அடிமை ஆண்), ‘அமத்து’ (அடிமைப் பெண்), ‘மவ்லா’/’ஸய்யித்’ (அடிமையின் உரிமையாளர்) ஆகிய சொற்களின் சட்டம் (3) 40.2 திராட்சையை, “கர்மு / கண்ணியம்” என்று பெயரிட்டழைப்பது … (7) 40.1 காலத்தை ஏசுவதற்குத் தடை (5) 39.41 விலங்குகளுக்கு நீர் புகட்டுவதின், உணவளிப்பதின் சிறப்பு (3) 39.40 பூனைகளைக் கொல்வதற்குத் தடை (2) 39.39 எறும்புகளைக் கொல்லத் தடை (3) 39.38 பல்லியைக் கொல்வது நல்லது (5) 39.37 பாம்பு போன்ற விஷ ஜந்துகளைக் கொல்வது (13) 39.36 தொழுநோயாளிகள் போன்றோரிடம் நெருக்கம் தவிர்ப்பது (1) 39.35 சோதிடர்களிடம் செல்வதும் சோதிடம் பார்ப்பதும் (5) 39.34 பறவை சகுனம், நற்குறி, துர்குறி பற்றிய பாடம் (11) 39.33 இல்லாத சகுனங்களும் தொற்றுநோய்களும் (6) 39.32 கொள்ளைநோய், பறவை சகுனம், சோதிடம் போன்றவை (8) 39.31 தேனூட்டு மருத்துவம் (1) 39.30 ‘தல்பீனா‘, நோயாளியின் மனத்துக்கு(ம் உடலுக்கும்) தெம்பு அளிக்கக்கூடியதாகும் (1) 39.29 கருஞ்சீரக மருத்துவம் (2) 39.28 இந்தியக் கோஷ்டக் குச்சியால் சிகிச்சையளிப்பது (2) 39.27 நோயாளிக்கு வற்புறுத்தி சிகிச்சையளிப்பது … (1) 39.26 ஒவ்வொரு நோய்க்கும் மருந்து உண்டு; (நோய்க்கு) மருத்துவம் செய்துகொள்வது விரும்பத் தக்கது (17) 39.25 தொழுகையில் மனம் அலைபாயச் செய்யும் ஷைத்தானிடமிருந்து பாதுகாப்புக் கோரல் (1) 39.24 பிரார்த்திக்கும்போது வலியுள்ள இடத்தில் கையை வைப்பது (1) 39.23 குர்ஆன் வசனங்கள் மற்றும் அல்லாஹ்வைத் துதிக்கும் சொற்களால் ஓதிப்பார்ப்பதற்கு ஊதியம் பெறலாம் (2) 39.22 இறைவனுக்கு இணை கற்பிதம் இல்லாத சொற்களால் ஓதிப்பார்பது தவறில்லை (1) 39.21 கண்ணேறு, சின்னம்மை, விஷக்கடி, (தீய)பார்வை ஆகியவற்றுக்காக ஓதிப்பார்ப்பது விரும்பத் தக்கதாகும் (12) 39.20 பாதுகாப்புக் கோரும் அத்தியாயங்களால் நோயாளிக்கு ஓதிப்பார்ப்பது … (2) 39.19 நோயாளிக்கு ஓதிப்பார்ப்பது விரும்பத் தக்கதாகும் (4) 39.18 விஷம் (1) 39.17 சூனியம் (1) 39.16 நோயும் மருத்துவமும் ஓதிப்பார்த்தலும் (4) 39.15 மூன்றாமவரின் ஒப்புதலின்றி இருவர் மட்டும் இரகசியம் பேசிக்கொள்வது தடை செய்யப்பட்டதாகும் (3) 39.14 … அந்நியப் பெண்ணை, வழிசெல்லும் ஒருவர் வாகனத்தில் அமர்த்திக்கொள்ளலாம் (2) 39.13 பெண்கள் இருக்கும் இடத்திற்கு அலிகள் செல்லத் தடை (2) 39.12 அமர்ந்திருந்த இடத்திற்கு உரியவர் (1) 39.11 அமர்ந்திருக்கும் ஒருவரை எழுப்பிவிடுவது தடை செய்யப்பட்டதாகும் (4) 39.10 அவைக்கு வருபவர், அமரும் ஒழுங்கு (1) 39.9 … கெட்ட எண்ணத்தை அகற்றுவது விரும்பத் தக்கதாகும் (2) 39.8 அந்நியப் பெண்ணிடம் … தனிமையில் இருப்பது தடை செய்யப்பட்டதாகும் (3) 39.7 … பெண்கள் வெளியே செல்லலாம் (2) 39.6 உள்ளே செல்ல அனுமதியாகக் கருதுவதற்கு … (1) 39.5 சிறாருக்கு(ப் பெரியவர்கள்) முகமன் கூறுவது விரும்பத் தக்கதாகும் (2) 39.4 வேதக்காரர்களுக்கு முந்திக்கொண்டு ஸலாம் கூறுவதற்குத் தடை (7) 39.3 ஸலாத்துக்குப் பதிலுரைப்பது முஸ்லிமுக்குக் கடமை (2) 39.2 நடைபாதைகளில் அமர்வதன் ஒழுங்குகளில் … (2) 39.1 முந்தி ஸலாம் சொல்ல வேண்டியவர்கள் (1) 38.10 இயல்பான பார்வை (1) 38.9 பிறர் வீட்டில் எட்டிப் பார்ப்பது தடை செய்யப்பட்டதாகும் (5) 38.8 “யார்?“ என்று கேட்டால் … (2) 38.7 அனுமதி கோருதல் (5) 38.6 “என் அருமை மகனே!“ (2) 38.5 குழந்தை பிறந்தவுடன் இனிப்பான பொருளை மென்று அதன் வாயிலிடுவதும் … (9) 38.4 மன்னாதி மன்னன் எனப் பெயர் சூட்டிக்கொள்வது தடை செய்யப்பட்டதாகும் (2) 38.3 அருவருப்பான பெயரை அழகான பெயராக மாற்றியமைப்பது … (6) 38.2 அருவருப்பான பெயர்கள் … (4) 38.1 … விரும்பத் தகுந்த பெயர்கள் (8) 37.35 வெறும் பெருமை (2) 37.34 மெல்லிய உடையணிந்து, பிறரைத் தன்பால் ஈர்க்கும் வண்ணம் தோள்களைச் சாய்த்து ஒயிலாக நடக்கும் பெண்கள் (1) 37.33 பெண்களின் பொய் அலங்காரங்காரங்களுக்குத் தடை (10) 37.32 நடைபாதைகளில் அமர்வதற்குத் தடையும் பாதைகளுக்குரிய உரிமைகளைப் பேணுவதும் (1) 37.31 தலை முடியில் பகுதி மழித்துவிட்டு, பகுதி மழிக்காமல் விட்டுவிடுவது வெறுக்கத் தக்கதாகும் (1) 37.30 ஸகாத் / ஜிஸ்யாவுக்கான கால்நடைகளில் சூடிட்டு அடை யாளமிடலாம் (4) 37.29 விலங்குகளின் முகத்தில் அடிப்பதும் அடையாளச் சூடிடுவதும் தடை செய்யப்பட்டவை ஆகும் (3) 37.28 ஒட்டகத்தின் கழுத்தில் (திருஷ்டிக்) கயிற்று மாலை அணிவிப்பது வெறுக்கத் தக்கதாகும் (1) 37.27 பயணத்தின்போது நாயும் (ஒலியெழுப்பும்) மணியும் வெறுக்கத் தக்கவை (2) 37.26 உயிரினங்களின் உருவப் படங்களை வரைவதும் … தடை செய்யப்பட்டவை ஆகும் (21) 37.25 (நரைமுடிக்கு) சாயமிட்டுக்கொள்வது யூதர்களுக்கு மாறு செய்வதாகும் (1) 37.24 நரைமுடியில் கருப்பு நிறச் சாயமிடுவது தடை செய்யப்பட்டதாகும் (2) 37.23 ஆண்கள் (மேனியில்) குங்குமப்பூச் சாயமிட்டுக்கொள்வதற்குத் தடை (1) 37.22 மல்லாந்து படுத்துக்கொண்டு கால்மீது காலைப் போட்டுக் கொள்வதற்கு அனுமதி (1) 37.21 மல்லாந்து படுத்துக்கொண்டு கால்மீது காலைப் போட்டுக் கொள்வதற்குத் தடை (3) 37.20 தடை செய்யப்பட்ட இரு நிலைகள் (2) 37.19 காலணிகளை அணிந்து கழற்றும் முறைகள் (3) 37.18 காலணி அல்லது அது போன்றதை அணிந்துகொள்வது விரும்பத் தக்கதாகும் (1) 37.17 மோதிரம் அணிவதற்குத் தடை செய்யப்பட்ட விரல்கள் (2) 37.16 கைச் சுண்டுவிரலில் மோதிரம் அணிவது (1) 37.15 அபிசீனியக் வெள்ளிக் குமிழ் மோதிரம் (2) 37.14 மோதிரங்களை(க் கழற்றி) எறிந்த நிகழ்வு (2) 37.13 நபி (ஸல்) அவர்களின் (முத்திரை) மோதிரம் (3) 37.12 ‘முஹம்மதுர் ரசூலுல்லாஹ்’ எனும் இலச்சினை பொறிக்கப்பட்ட வெள்ளி மோதிரம் (2) 37.11 ஆண்கள் தங்க மோதிரம் அணிவதற்குத் தடை (3) 37.10 ஆடைகளை எண்ணிப் பெருமை கொண்டு, கர்வத்தோடு நடப்பதற்குத் தடை (2) 37.9 பெருமைக்காக ஆடையைத் தரையில் படும்படி இழுத்துச் செல்வதற்குத் தடை (7) 37.8 தேவைக்கு அதிகமான விரிப்புகளும் ஆடைகளும் இருப்பது விரும்பத் தக்கதன்று (1) 37.7 படுக்கை விரிப்புகளைப் பயன்படுத்த அனுமதி (2) 37.6 ஆடையில் (எளிமை,) பணிவு காட்டுவது … (5) 37.5 பருத்தி ஆடை அணிவதன் சிறப்பு (2) 37.4 ஆண்கள் செம்மஞ்சள் நிறச் சாயமிடப்பட்ட ஆடை அணிவதற்குத் தடை (5) 37.3 தோல் உபாதைகள் இருந்தால் ஆண்கள் பட்டாடை அணியலாம் (3) 37.2 பொன் மோதிரம் மற்றும் பட்டாடை அணிவது ஆண்களுக்குத் தடை; பெண்களுக்கு அனுமதி (20) 37.1 பொன் / வெள்ளிப் பாத்திரங்களைப் பயன்படுத்துவது ஆண்களுக்கும் பெண்களுக்கும் தடை (2) 36.35 உணவைக் குறை சொல்லவேண்டாம் (2) 36.34 இறைநம்பிக்கையாளர் ஒரே குடலில் உண்பார்; இறைமறுப்பாளன் ஏழு குடல்களில் உண்பான் (5) 36.33 உணவு குறைவாக இருக்கும்போது … (4) 36.32 விருந்தினரை உபசரிப்பதும் முன்னுரிமை வழங்குவதன் சிறப்பும் (6) 36.31 வெள்ளைப் பூண்டு சாப்பிடக்கூடியதே … (2) 36.30 உணவுக் காடியின் சிறப்பும் … (4) 36.29 ‘அல்கபாஸ்’ பழங்களில் கருப்பு நிறப் பழத்தின் சிறப்பு (1) 36.28 உணவுக் காளானின் சிறப்பும் … (6) 36.27 மதீனத்துப் பேரீச்சம் பழங்களின் சிறப்பு (3) 36.26 குடும்பத்தாருக்காக … உணவுகளைச் சேமித்துவைத்தல் (2) 36.25 பலருடன் சேர்ந்து உண்பவர் … (2) 36.24 உணவு உண்பவர் அமரும் முறை; பணிவோடு அமர்வது விரும்பத் தக்கது (2) 36.23 பேரீச்சை செங்காய்களுடன் வெள்ளரிக்காயையும் சேர்த்து உண்பது (1) 36.22 விருந்தளிப்பவருக்காக விருந்தாளி பிரார்த்திப்பது … (1) 36.21 சுரைக் குழம்பு உண்ண அனுமதி … (2) 36.20 வீட்டு உரிமையாளரின் சம்மதம் கிடைக்கும் என்ற நம்பிக்கை இருந்தால் … (4) 36.19 விருந்துக்கு அழைக்கப்பட்டவரைத் தொடர்ந்து அழைக்கப்படாதவரும் வந்துவிட்டால் … (2) 36.18 உண்டு முடித்ததும் விரல்களைச் சூப்புவதும் உணவுத் தட்டை வழித்து உண்பதும் … (9) 36.17 வலப் பக்கத்திலிருந்து பரிமாறுதல் விரும்பத் தக்கதாகும் (4) 36.16 பாத்திரத்தினுள் (பருகும்போது) வெளியே மூன்று முறை மூச்சு விட்டுப் பருகுவது விரும்பத் தக்கதாகும் (3) 36.15 ஸம்ஸம் நீரை நின்றுகொண்டு அருந்துவது (4) 36.14 நின்றுகொண்டு அருந்துவது வெறுக்கத் தக்கதாகும் (4) 36.13 உண்பது, அருந்துவது ஆகியவற்றின் ஒழுங்குகளும் விதிமுறைகளும் (10) 36.12 இரவு நேர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் (6) 36.11 பழச்சாறுகளைப் பருகுவதும் பாத்திரங்களை மூடிவைப்பதும் (3) 36.10 (ஆட்டுப்) பால் அருந்த அனுமதி (3) 36.9 பழச்சாறுகள் (புளித்துக்) கெட்டியாகி, போதையேறாதவரை அனுமதிக்கப்பட்டவையாகும் (10) 36.8 குடிகாரன் பாவமன்னிப்புக் கோரி திருந்தாவிட்டால் … (3) 36.7 போதை தரும் ஒவ்வொரு பானமும் தடை செய்யப்பட்ட மதுவாகும் (9) 36.6 பானங்கள்-பாத்திரங்கள், தடை-தடை நீக்கம் (36) 36.5 பேரீச்சம் பழம், உலர் திராட்சைக் கலவை ஊறல் வெறுக்கத் தக்கதாகும் (14) 36.4 ‘மதுபானம்’ என்று சொல்லப்படுபவை (4) 36.3 மதுவை மருந்தாகப் பயன்படுத்துவதற்குத் தடை (1) 36.2 மதுபானத்தை (சமையல்) காடியாக மாற்றிப் பயன்படுத்துவதற்குத் தடை (1) 36.1 போதையூட்டும் ஒவ்வொன்றும் மதுவாகும் (9) 35.8 அல்லாஹ் அல்லாதவரின் பெயர் கூறிப் பிராணிகளை அறுப்பதற்குத் தடை (3) 35.7 தலைமுடியை, நகங்களைக் களைவதற்குத் தடை (5) 35.6 அல் ஃபரஉ வல் அத்தீரா (1) 35.5 பலி இறைச்சியை எவ்வளவு காலம் சேமித்து வைக்கலாம்? (14) 35.4 பல், நகம், எலும்பு ஆகியவை தவிர எந்தப் பொருளாலும் பிராணியை அறுக்க அனுமதி (1) 35.3 தாமே அறுப்பதும் அல்லாஹ்வின் பெயரோடு தக்பீர் கூறுவதும் விரும்பத் தக்கவை ஆகும் (3) 35.2 பலிப் பிராணியின் வயது (4) 35.1 பலி கொடுக்கப்படும் நேரம் (10) 34.12 விலங்குகளைக் கட்டிவைத்து அம்பெய்து கொல்வதற்குத் தடை (5) 34.11 … கத்தியைக் கூர்மையாகத் தீட்டிக் கொண்டு வதையற்ற முறையைக் கையாளக் கட்டளை (1) 34.10 … பயிற்சிகளை மேற்கொள்வது அனுமதிக்கப் பட்டதாகும். கல்சுண்டு விளையாட்டு வெறுக்கப்பட்டதாகும் (2) 34.9 முயல் கறி உண்ணத் தக்கது (1) 34.8 வெட்டுக்கிளி உண்ணத் தக்கது (1) 34.7 உடும்புக் கறி உண்ணத் தக்கது (13) 34.6 குதிரைகளின் இறைச்சியை உண்பது கூடுமா? (3) 34.5 நாட்டுக் கழுதைகளின் இறைச்சியை உண்பதற்குத் தடை (14) 34.4 கடல்வாழ் உயிரினங்களில் செத்தவற்றை உண்பதற்கு அனுமதி (5) 34.3 உண்பதற்குத் தடை செய்யப்பட்ட விலங்குகளும் பறவைகளும் (6) 34.2 வேட்டையாடிய பிராணி மறைந்து, பிறகு கிடைத்தால் … (2) 34.1 பயிற்சியளிக்கப்பட்ட நாய்கள் மூலம் வேட்டையாடுதல் (8) 33.56 பயணத்திலிருந்து திரும்புகின்றவர் … (5) 33.55 பயணம் என்பது துன்பத்தின் ஒரு பகுதியாகும் … (1) 33.54 பயணத்தில் கால்நடைகளின் நலன் காப்பதும் … (2) 33.53 “என் சமுதாயத்தாரில் ஒரு குழுவினர் எப்போதுமே உண்மைக்கு ஆதரவாளர்களாக இருப்பார்கள் … (8) 33.52 அம்பெய்வதன் சிறப்பும் … (3) 33.51 உயிர்த் தியாகிகள் பற்றிய விளக்கம் (3) 33.50 அல்லாஹ்வின் பாதையில் எல்லைக் காவல் புரிவதன் சிறப்பு (1) 33.49 கடல்வழிப் போரின் சிறப்பு (2) 33.48 போரில் கலந்துகொள்ள முடியாமல் போனவருக்கும் நன்மை … (1) 33.47 அறப்போரில் கலந்துகொள்ளாமல் இறந்துபோனவர் … (1) 33.46 அல்லாஹ்வின் பாதையில் வீரமரணத்தை வேண்டுவது விரும்பத் தக்கதாகும் (2) 33.45 “எண்ணங்களைப் பொருத்தே செயல்கள் அமைகின்றன” எனும் நபிமொழி … (1) 33.44 … போர்ச் செல்வங்களைப் பெற்றோரும் பெறாதோரும் … (2) 33.43 பிறர் பார்ப்பதற்காகவும் விளம்பரத்திற்காகவும் போரிட்டவர் … (1) 33.42 அல்லாஹ்வின் பாதையில் போரிட்டவர் … (3) 33.41 உயிர்த் தியாகிக்குச் சொர்க்கம் நிச்சயம் (6) 33.40 தகுந்த காரணம் உள்ளவர்களுக்கு அறப்போரில் கலந்து கொள்வது கடமை இல்லை (2) 33.39 அறப்போர் வீரர்களின் துணைவியருடைய கண்ணியம் … (1) 33.38 அறப்போர் வீரருக்கு வாகனம் மற்றும் பிற உதவிகள் … (6) 33.37 அல்லாஹ்வின் பாதையில் தர்மம் செய்வதன் சிறப்பும் அதற்குக் கிடைக்கும் பன்மடங்கு நன்மைகளும் (1) 33.36 இறைமறுப்பாளனை (போரில்) கொன்ற பின்னர் (மார்க்கத்தில்) உறுதியோடு இருத்தல் (2) 33.35 இரு போராளிகளில் ஒருவர் மற்றவரைக் கொன்று, பின் அவ்விருவருமே சொர்க்கத்தில் … (2) 33.34 அறப்போர் மற்றும் எல்லைக் காவலின் சிறப்பு (3) 33.33 வீரமணம் அடைந்தவர்களின் உயிர்கள் … (1) 33.32 அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டவரின் கடனைத் தவிர அனைத்துப் பாவங்களும் மன்னிக்கப்படுகின்றன (3) 33.31 அல்லாஹ் (தனது பாதையில்) அறப்போர் புரிந்தவர்களுக்காகச் சொர்க்கத்தில் வைத்துள்ள உயர்நிலைகள் (1) 33.30 அல்லாஹ்வின் பாதையில் காலையாயினும் மாலையாயினும் (போரிடச்) செல்வதன் சிறப்பு (5) 33.29 அல்லாஹ்வின் பாதையில் வீரமரணம் அடைவதன் சிறப்பு (4) 33.28 அல்லாஹ்வின் பாதையில் புறப்படுதலின், அறப்போரில் ஈடுபடுதலின் சிறப்பு (4) 33.27 குதிரையின் தன்மைகளில் விரும்பத் தகாதவை (1) 33.26 மறுமை நாள்வரை நெற்றிகளில் நன்மை பிணைக்கப்பட்டிருக்கும் குதிரைகள் (5) 33.25 குதிரைப் பந்தயமும் அதற்காகக் குதிரையை மெலிய வைப்பதும் (1) 33.24 குர்ஆன் பிரதிகளை இறைமறுப்பாளர்களின் நாட்டுக்கு எடுத்துச் செல்வது … (3) 33.23 பருவ வயது பற்றிய விளக்கம் (1) 33.22 இயன்றவரை கட்டுப்பட்டு நடப்பதாக உறுதிமொழி அளித்தல் (1) 33.21 பெண்களிடம் உறுதிப் பிரமாணம் (பைஅத்) வாங்கும் முறை (2) 33.20 மக்கா வெற்றிக்குப் பின் ஹிஜ்ரத் கிடையாது (5) 33.19 நாடு துறந்து (ஹிஜ்ரத்) சென்றவர் மீண்டும் தமது தாயகத்தில் குடியேறுவதற்குத் தடை (1) 33.18 ஆட்சித் தலைவர் படையினரிடம் உறுதி மொழி பெற்றுக்கொள்வது … (13) 33.17 ஆட்சித் தலைவர்களில் நல்லவர்களும் தீயவர்களும் (2) 33.16 ஆட்சித் தலைவர்கள் மார்க்கத்திற்கு முரணாகச் செயல்படும்போது … (2) 33.15 இரு ஆட்சியாளர்களுக்கு வாக்களிப்புப் பிரமாண நெருக்கடி ஏற்பட்டால் … (1) 33.14 முஸ்லிம்கள் (ஒரே தலைமையின் கீழ்) ஒன்றுபட்டிருக்கும்போது … (2) 33.13 குழப்பங்கள் தோன்றும்போது கூட்டமைப்போடு சேர்ந்திருப்பது கடமையாகும் … (8) 33.12 உரிமைகள் மறுக்கப்பட்டாலும் தலைமைக்குக் கட்டுப்படுதல் (1) 33.11 அதிகாரத்திலிருப்போர் அநீதியிழைக்கும்போதும் தகுதியற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கும்போதும் … (1) 33.10 கலீஃபாக்களில் முதலாமவருக்கு உறுதிப் பிரமாணம் (பைஅத்) அளிப்பது கடமையாகும் (3) 33.9 ஆட்சித் தலைவர் கேடயம் போன்றவர் … (1) 33.8 பாவமற்றவற்றில் தலைவர்களுக்குக் கட்டுப்படுவது கடமையாகும். பாவமானவற்றில் கட்டுப்படுவதற்குத் தடை (11) 33.7 அதிகாரிகளுக்கு அன்பளிப்புகள் வழங்குவதற்குத் தடை (3) 33.6 பொதுச் சொத்துகளில் மோசடி செய்வது வன்மையாகத் தடை செய்யப்பட்டது (1) 33.5 நேர்மையான ஆட்சியாளரின் சிறப்பும் … (6) 33.4 தேவையின்றி ஆட்சிப் பொறுப்பை ஏற்பது விரும்பத் தக்கதன்று (2) 33.3 ஆட்சியதிகாரத்தைத் தேடி அலைவதற்கும் அதன் மீது ஆசை கொள்வதற்கும் தடை (3) 33.2 ஆட்சித் தலைவரை நியமிக்கலாம்; நியமிக்காமல் விடலாம் (2) 33.1 ஆட்சியதிகாரம் குறைஷியரிடையேதான் இருக்கும் (10) 32.51 அறப்போர்களில் இறைமறுப்பாளரிடம் உதவி கோருவது … (1) 32.50 ‘தாத்துர் ரிக்காஉ’ (ஒட்டுத் துணிப்) போர் (1) 32.49 நபி (ஸல்) கலந்துகொண்ட அறப்போர்களின் எண்ணிக்கை (6) 32.48 அறப்போரில் கலந்துகொண்ட பெண்களுக்கு … (4) 32.47 அறப்போரில் ஆண்களுடன் பெண்களும் கலந்துகொள்வது (2) 32.46 “அவனே உங்களைத் தாக்காமல் அவர்கள் கைகளை தடுத்(து வைத்)தான்” எனும் (48:24) வசனம் (2) 32.45 ‘தூ கரத்’ போரும் பிற போர்களும் (2) 32.44 அஹ்ஸாப் போர் (அ) அகழ்ப் போர் (6) 32.43 கைபர் போர் (5) 32.42 கஅப் பின் அல்அஷ்ரஃப் கொல்லப்படுதல் (1) 32.41 அபூஜஹ்லு கொல்லப்படுதல் (1) 32.40 நபி (ஸல்) (மக்களை) இறைவன்பால் அழைத்து, துன்பங்களைப் பொறுத்துக் கொண்டது (2) 32.39 நபி (ஸல்) எதிர்கொண்ட துன்பங்கள் (7) 32.38 இறைதூதரால் கொல்லப்பட்டவன் மீது இறைவனின் கோபம் (1) 32.37 உஹுதுப் போர் (3) 32.36 கூட்டுப் படையினருக்கு எதிரான அகழ்ப் போர் (2) 32.35 வாக்குறுதியை(ப் போரிலும்) நிறைவேற்றுவது (1) 32.34 ஹுதைபிய்யா சமாதான உடன்படிக்கை’ (7) 32.33 மக்கா வெற்றிக்குப் பின் … (1) 32.32 கஅபாவைச் சுற்றிலும் இருந்த சிலைகளை அப்புறப்படுத்தியது (1) 32.31 மக்கா வெற்றி (2) 32.30 பத்ருப் போர் (1) 32.29 தாயிஃப் போர் (1) 32.28 ஹுனைன் போரில் … (5) 32.27 இறைமறுப்பு அரசர்களுக்கு நபி (ஸல்) எழுதிய கடிதங்கள் (1) 32.26 அழைப்பு விடுத்து ஹெராக்ளியஸ் மன்னருக்கு நபி (ஸல்) எழுதிய கடிதம் (1) 32.25 போரில் கிடைத்த உணவை, பகை நாட்டில் இருக்கும் போதே உண்ணலாம் (2) 32.24 முஹாஜிர்கள் தன்னிறைவு அடைந்தபோது … (2) 32.23 செயல்களுள் முன்னுரிமை அளிக்கத் தக்கது (1) 32.22 ஒப்பந்தத்தை முறித்துவிட்ட (பகை)வர்களுடன் போர் செய்யலாம் (3) 32.21 யூத கிறித்தவர்கள் அரபிய தீபகற்பத்திலிருந்து வெளியேற்றப்படுவது (1) 32.20 யூதர்களை ஹிஜாஸ் பகுதியிலிருந்து நாடு கடத்தியது (2) 32.19 கைதியை என்னென்னவெல்லாம் செய்யலாம் (1) 32.18 பத்ருப் போரில் வானவர்களின் உதவியும் … (1) 32.17 போர் வெற்றிச் செல்வத்தைப் பங்கிடும் முறை (1) 32.16 இறைத்தூதர்களுக்கு யாரும் (சொத்தில்) வாரிசாக முடியாது (5) 32.15 போர் செய்யாமல் கிடைத்த செல்வங்களின் சட்டம் (3) 32.14 … போர்க் கைதிகளைப் பரிமாறிக்கொள்வது (1) 32.13 போரில் கொல்லப்பட்ட எதிரியின் உடைமைகள் (4) 32.12 போர் வெற்றிச் செல்வங்கள் (7) 32.11 போர் வெற்றிச் செல்வங்கள் யாருக்குச் சொந்தம்? (1) 32.10 போரில் மரங்களை வெட்டுவதும் எரிப்பதும் அனுமதிக்கப்பட்டதாகும் (3) 32.9 பெண்களையும் குழந்தைகளையும் அறியாமல் கொன்றுவிட்டால் … (3) 32.8 போரில் பெண்களையும் குழந்தைகளையும் கொல்வதற்குத் தடை (2) 32.7 எதிரிகளை(ப் போரில்) எதிர்கொள்ளும்போது பிரார்த்திப்பது (2) 32.6 எதிரியை(ப் போர்க் களத்தில்) சந்திக்க ஆசைப்படுவது வெறுக்கத் தக்கது … (2) 32.5 போரில் தந்திரம் அனுமதிக்கப்பட்டது (2) 32.4 மோசடி செய்வது தடை செய்யப்பட்டதாகும் (8) 32.3 மக்களிடம் இலகுவாக நடந்துகொள்ள வேண்டும்; வெறுப்பைக் கைவிட வேண்டும் (3) 32.2 படைத் தலைவர், போர் நெறிகள் குறித்து அறிவுறுத்துவது (1) 32.1 முன்னறிவிப்பின்றித் தாக்குதல் தொடுக்கலாமா? (1) 31.5 பயணத்தில் உணவைப் பகிர்ந்துண்ணல் (1) 31.4 செல்வத்தால் பிறருக்கு உதவுவது விரும்பத் தக்கது (1) 31.3 விருந்தோம்பல் சார்ந்தவை (3) 31.2 உரிமையாளரின் அனுமதியின்றி கால் நடையில் பால் கறப்பதற்குத் தடை (1) 31.1 ஹாஜிகள் தவறவிட்டவை (2) 31.0 கண்டெடுக்கப்பட்டவை (5) 30.11 நீதிபதி சமரசம் செய்துவைப்பது விரும்பத் தக்கதாகும் (1) 30.10 ஆய்வாளர்களிடையே கருத்து வேறுபாடு (1) 30.9 சாட்சிகளில் சிறந்தவர் (1) 30.8 தவறான தீர்ப்புகளைத் தள்ளுபடி செய்வதும் (மார்க்கத்தில் இல்லாத) புதுமைகளை நிராகரிப்பதும் (2) 30.7 கோபமாக இருக்கும் நீதிபதி, தீர்ப்பளிப்பது விரும்பத் தக்கதன்று (1) 30.6 நீதிபதியின் ஆய்வுக்கு நன்மை உண்டு (1) 30.5 தடைகள் மூன்று (4) 30.4 ஹிந்த் (ரலி) வழக்கு (3) 30.3 வாதங்களின் அடிப்படையில் தீர்ப்பு அமைந்துவிடுதல் (2) 30.2 சத்தியத்தின் / சாட்சியத்தின் அடிப்படையில் தீர்ப்பளித்தல் (1) 30.1 சத்தியம் செய்து நிரூபிப்பது பிரதிவாதிமீது கடமையாகும் (2) 29.11 இழப்பீடு இல்லாத விபத்துகள் (2) 29.10 தண்டனைகள், குற்றங்களுக்கான பரிகாரமாகும் (3) 29.9 சீர்திருத்திற்காக வழங்கப்படும் சாட்டையடிகளின் (அதிகபட்ச) அளவு (1) 29.8 மது அருந்திய குற்றத்திற்கான தண்டனை (4) 29.7 மகப்பேறான பெண்ணின் தண்டனையைத் தள்ளிவைத்தல் (1) 29.6 இஸ்லாமிய அரசின் கீழ் வாழும் யூதர்கள் விபச்சாரத்தில் ஈடுபட்டாலும் கல்லெறி தண்டனை (6) 29.5 விபச்சாரம் செய்தவரின் ஒப்புதல் வாக்குமூலம் (9) 29.4 மணமானவர்கள் விபச்சாரம் செய்தால் கல்லெறி தண்டனை (1) 29.3 விபச்சாரக் குற்றத்திற்கான தண்டனை (2) 29.2 தண்டனையிலிருந்து விலக்கு அளிக்குமாறு பரிந்துரைப்பதற்குத் தடை (3) 29.1 தண்டனைக்குரிய திருட்டின் அளவுகோலும் தண்டனையும் (7) 28.11 சிசுக் கொலைக்கான இழப்பீடும் … (6) 28.10 கொலையாளி, தன் குற்றத்தை ஒப்புக்கொள்வதும் … (2) 28.9 மனிதர்களின் உயிர், தன்மானம், செல்வம் ஆகியவற்றுக்கு ஊறு விளைவிப்பது … (2) 28.8 மறுமையில் வழங்கப்படும் தீர்ப்பும் தண்டனையும் … (1) 28.7 கொலையை (உலகுக்கு) அறிமுகப்படுத்தியவர் மீதான பாவம் (1) 28.6 முஸ்லிமின் மரண தண்டனைக்கான காரணங்கள் (2) 28.5 பற்கள் போன்ற(உறுப்புகளான)வற்றில் பழிக்குப்பழி உண்டு (1) 28.4 தாக்க வந்தவனிடமிருந்து தற்காத்துக் கொள்வதற்காக … (6) 28.3 கல் மற்றும் கூராயுதங்களால் கொலை செய்தால், பழிக்குப்பழி உண்டு … (3) 28.2 வன்முறையாளர்களுக்கும் மதம் மாறியோருக்குமான தண்டனை (4) 28.1 அல்கஸாமா (4) 27.13 விடுதலைக்கு வாக்களிக்கப்பட்ட அடிமையை விற்கலாம் (2) 27.12 அடிமையில் தமது பங்கை மட்டும் விடுதலை செய்தல் (8) 27.11 ‏தன் உரிமையாளருக்கு விசுவாசமாகவும் … (4) 27.10 அடிமைக்கு எஜமானர் உண்பதிலிருந்து உணவளிப்பதும் … (4) 27.9 விபசாரம் செய்துவிட்டதாக அவதூறு கூறுவதற்கான கண்டனம் (1) 27.8 அடிமைகளுடனான நல்லுறவும் கன்னத்தில் அறைந்ததற்கான பரிகாரமும் (8) 27.7 இறைமறுப்பாளராக இருந்தபோது செய்த நேர்ச்சை… (2) 27.6 ஆகுமாக்கப்பட்டதற்கான சத்தியமாக இருந்தாலும் … (1) 27.5 இன்ஷா அல்லாஹ் என்பதை (சத்தியத்தின்போது) சேர்த்துக் கூறுதல் (4) 27.4 சொல்பவரின் எண்ணப்படியே ஒருவருடைய சத்தியம் அமையும் (2) 27.3 சத்தியம் செய்தவர், அதைவிடச் சிறந்ததாக மற்றொன்றைக் காணும்போது … (12) 27.2 ‘லாத்’ மற்றும் ‘உஸ்ஸா’வின் மீது சத்தியம் செய்துவிட்டவர் … (2) 27.1 அல்லாஹ்வைத் தவிர எவர்/எதன் மீதும் சத்தியம் செய்யத் தடை (3) 26.5 நேர்ச்சை முறிவுக்கான பரிகாரம் (1) 26.4 கஅபாவரை நடைப்பயணம் செல்வதாக நேர்ந்துகொண்டவர் (3) 26.3 இறைவனுக்கு மாறு செய்வதிலோ உரிமை இல்லாததிலோ நேர்ச்சை. (1) 26.2 நேர்ச்சை செய்வதற்குத் தடை; அது (விதியில்) எதையும் மாற்றிவிடாது (6) 26.1 நேர்ச்சையை நிறைவேற்றக் கட்டளை (1) 25.5 வசதியற்றவர் மரண சாஸனம் செய்ய முடியாது (6) 25.4 அறக்கொடை (1) 25.3 மனிதன் இறந்த பின்பும் தொடரும் நன்மைகள் (1) 25.2 இறந்துவிட்டவருக்காகச் செய்யப்படும் தர்மங்களின் நன்மை … (3) 25.1 மரண சாஸனம் 1/3 மட்டுமே (5) 25.0 மரண சாஸனம் (2) 24.4 ஆயுட்கால அன்பளிப்பு (11) 24.3 அன்பளிப்பு வழங்குவதில் பிள்ளைகளிடையே பாகுபாடு காட்டுவது … (10) 24.2 தானமும் அன்பளிப்பும் வழங்கப்பட்ட பின், திரும்பப் பெறுவதற்குத் தடை … (4) 24.1 தானமாகக் கொடுத்ததை விலைக்கு வாங்குவது விரும்பத் தக்கதல்ல (4) 23.4 ஒருவர் விட்டுச்செல்லும் செல்வம் அவருடைய வாரிசுகளுக்கு உரியதாகும் (4) 23.3 இறுதியாக அருளப்பெற்றது கலாலா வசனமாகும் (4) 23.2 ‘கலாலா’ சொத்துரிமை (5) 23.1 உரியவர்களுக்கும் உறவினருக்கும் பிரிக்கப்பட்ட பாகங்கள் (3) 23.0 ஒரு முஸ்லிம், இறைமறுப்பாளருக்கு வாரிசாகமாட்டார் (1) 22.31 பாதைக்கு நிலம் ஒதுக்குவதில் கருத்து வேறுபாடு ஏற்பட்டால் அதற்கான தீர்வு (1) 22.30 பிறர் நிலத்தை அபகரித்தல் போன்ற அநீதி இழைத்தல்களுக்குத் தடை (6) 22.29 அண்டை வீட்டாரின் சுவரில் (சாரம் கட்டுவதற்கு) மரக்கட்டை பதிப்பது (1) 22.28 பங்காளியின் இசைவு (3) 22.27 வியாபாரத்தில் (வீண்)சத்தியம் செய்வது விலக்கப்பட்டுள்ளது (2) 22.26 உணவுப் பொருட்களைப் பதுக்குவதற்குத் தடை (2) 22.25 முன்பணம் செலுத்தும் வணிகம் (2) 22.24 அடமானம் உள்ளூரிலும் பயணத்திலும் செல்லும் (3) 22.23 ஓர் உயிரினத்தை அதே இனத்திற்குப் பதிலாக ஏற்றத்தாழ்வோடு விற்கலாம் (1) 22.22 உங்களில் சிறந்தவர் கடனை அழகிய முறையில் திருப்பிச் செலுத்துபவரே (4) 22.21 ஒட்டகத்தை விற்றவர் அதில் பயணிக்க நிபந்தனை விதிப்பது (5) 22.20 அனுமதிக்கப்பட்டவற்றையும் ஐயத்திற்குரியவற்றையும் கையாளுதல் (1) 22.19 வட்டி வாங்குபவருக்கும் வட்டி கொடுப்பவருக்கும் சாபம் (2) 22.18 உணவுப் பொருளை, சரிக்குச் சரியாக விற்றல் (12) 22.17 பொன்னும் மணியும் பதித்த மாலையை விற்பது (4) 22.16 தங்கத்திற்கு வெள்ளியைக் கடனாக விற்பதற்குத் தடை (3) 22.15 நாணயமாற்று வியாபாரம்; வெள்ளிக்குத் தங்கத்தை ரொக்கத்துக்கு விற்பது (7) 22.14 வட்டி (4) 22.13 மது, செத்தவை, பன்றி, சிலைகள் ஆகியவற்றை விற்பதற்குத் தடை (4) 22.12 மதுபான வியாபாரத்திற்குத் தடை (4) 22.11 குருதி உறிஞ்சி எடுப்பதற்காகக் கூலி பெறுவது கூடும் (4) 22.10 வேட்டை, காவல், பாதுகாப்புக்காக நாய் வளர்க்கலாம் (18) 22.9 நாய் விற்ற காசு, சோதிடரின் தட்சணை, விபச்சாரியின் வருமானம் (4) 22.8 தேவைக்குப் போக மீதம் உள்ள நீரை விற்பதற்குத் தடை (5) 22.7 வசதியுள்ளவர் கடனைச் செலுத்த தாமதம் செய்யக் கூடாது (1) 22.6 கடனை அடைக்க சிரமப்படுபவருக்கு அவகாசம் அளிப்பதன் சிறப்பு (7) 22.5 திவாலானவரிடம் திரும்பப் பெற்றுக்கொள்ளும் உரிமை (4) 22.4 கடனில் தள்ளுபடி செய்வது விரும்பத் தக்கதாகும் (3) 22.3 சேதமடைந்த பழங்களுக்கான தொகைக்குத் தள்ளுபடி (5) 22.2 மரம் நடுதலின், பயிர் செய்தலின் சிறப்பு (5) 22.1 நிபந்தனையின் பேரில் தோப்பைக் குத்தகைக்கு விடுவது (4) 21.21 நிலத்தை (விளைவித்துக்கொள்ள) இரவலாக வழங்குவது (4) 21.20 ‘முஸார’ஆவும் ‘முஆஜரா’வும் (2) 21.19 பொன், வெள்ளி(நாயணங்களு)க்கு நிலத்தைக் குத்தகைக்கு விடுவது (3) 21.18 தானியத்திற்கு நிலத்தைக் குத்தகைக்கு விடுவது (2) 21.17 நிலக் குத்தகை (24) 21.16 தடை செய்யப்பட்ட வியாபார வகைகள் (6) 21.15 கனிகள் நிறைந்த பேரீச்ச மரத்தை விற்பது (4) 21.14 (மரத்திலுள்ள) செங்கனிகளை மாற்றிக் கொள்வதற்குத் தடை (14) 21.13 மரத்திலுள்ள பழங்களை முற்றுவதற்கு முன் விற்பதற்குத் தடை (10) 21.12 வியாபாரத்தில் ஏமாற்றப்படுபவர் (1) 21.11 வியாபாரத்தில் உண்மை பேசுவதும் குறைகளைத் தெளிவுபடுத்துவதும் (1) 21.10 விற்பவருக்கும் வாங்குபவருக்கும் வியாபாரத்தை முறித்துக்கொள்ளும் உரிமை (4) 21.9 அளவு தெரியாத பேரீச்சம் பழக் குவியலை விற்பதற்குத் தடை (1) 21.8 வாங்கப்பட்ட பொருள் கைக்கு வருமுன் (பிறருக்கு) விற்பது கூடாது (13) 21.7 மடி கனக்கச் செய்யப்பட்ட கால்நடைகளை விற்பனை செய்வது பற்றிய சட்டம் (5) 21.6: கிராமவாசிக்காக, நகரவாசி விற்றுக் கொடுக்கத் தடை (5) 21.5: விற்பனைக்கு வரும் சரக்குகளை இடைமறித்து வாங்கத் தடை (4) 21.4: வியாபாரத்தில் தடை செய்யப்பட்டவை (7) 21.3: ஒட்டகக் கன்று (அது பிறக்குமுன்) விற்பதற்கு தடை! (2) 21.2: கல்லெறி வியாபாரம் மற்றும் மோசடி வியாபாரம் ஆகியவை செல்லாது (1) 21.1: ‘முலாமஸா’ மற்றும் ‘முனாபதா’ ஆகிய வியாபாரங்கள் செல்லாது (3) 20.7: அடிமையான தந்தையை விடுதலை செய்வதன் சிறப்பு (1) 20.6: அடிமைகளை விடுதலை செய்வதன் சிறப்பு (4) 20.5: விடுதலை செய்த உரிமையாளரை மாற்றிக் கூறத் தடை (4) 20.4: வாரிசாகும் உரிமையை விற்பதற்கும் அன்பளிப்பாக வழங்குவதற்கும் தடை (1) 20.3: விடுதலை செய்தவருக்கே வாரிசுரிமை உரியது (9) 20.2: அடிமை (தனது முழு விடுதலைக்காக) உழைத்துப் பொருளீட்டுவது (2) 20.1: ஓர் அடிமையி(ன் விலையி)ல், ஒருவர் தமக்கான பங்கை விடுவிப்பது (1) 19.1: சுய சாபம் வேண்டுதல் (17) 18.9: கணவன் இறந்து ‘இத்தா’விலிருக்கும் பெண் துக்கம் கடைப்பிடிப்பது (11) 18.8: கர்ப்பமுற்றிருக்கும் பெண்ணின் ‘இத்தா’க் காலம், பிரசவத்துடன் முடிந்துவிடும் (2) 18.7: ‘இத்தா’விலிருக்கும் பெண் தன் தேவைக்காக வெளியே செல்லலாம் (1) 18.6: மூன்று தலாக் சொல்லப்பட்ட பெண்ணுக்கு ஜீவனாம்சம் பற்றி… (18) 18.5: ஈலாச் செய்வது, மனைவியிடமிருந்து விலகுவது, விருப்ப உரிமை அளிப்பது (5) 18.4: மனைவிக்கு (த் தம்மைப் பிரிந்துவிட) உரிமை அளிப்பது மணவிலக்கு ஆகாது (8) 18.3: மணவிலக்குச் செய்யும் நோக்கமின்றி கூறினால், அது மணவிலக்கு ஆகாது (4) 18.2: மூன்று தலாக்குகள் (3) 18.1: மாதவிடாயான மனைவியை அவளது சம்மதமின்றி மணவிலக்குச் செய்வதற்குத் தடை (14) 17.19: ஹவ்வா-வும், பெண்கள் கணவரை ஏமாற்றுதலும் (2) 17.18: மனைவியரின் நலம் நாடுதல் (4) 17.17: பயன் தரும் இவ்வுலகச் செல்வங்களுள் மிகச் சிறந்த செல்வம், நற்குணமுள்ள மனைவியே (1) 17.16: கன்னிப் பெண்ணை மணப்பது விரும்பத் தக்கதாகும் (5) 17.15: மார்க்கப் பற்றுள்ள பெண்ணை மணப்பது விரும்பத் தக்கதாகும் (2) 17.14: மனைவியருள் ஒருவர், தனது முறைநாளை மற்றவருக்கு விட்டுக்கொடுக்கலாம் (4) 17.13: மனைவியருக்கு (இரவுகளை) ஒதுக்கீடு செய்வது (1) 17.12: கன்னி கழிந்த பெண்ணுக்கும், கன்னிப் பெண்ணுக்கும் கணவன் ஒதுக்க வேண்டிய நாட்கள் (6) 17.11: சாயல் அறியும் நிபுணரின் கூற்றுப்படி, குழந்தைக்கு உரியவரைக் கண்டறிவது (3) 17.10: எஜமானரின் கீழ் வாழும் பெண்ணின் குழந்தை, அவருக்கே உரியது (2) 17.9: பெண் போர்க் கைதியுடன் உடலுறவு கொள்ளலாம் (2) 17.8: பசிக்காகத் தாய்ப்பால் அருந்தினால்தான் பால்குடி உறவு ஏற்படும் (1) 17.7: பருவ வயதை அடைந்தவருக்குப் பாலூட்டுவது (6) 17.6: ஐந்து தடவை அருந்தினால்தான் பால்குடி உறவு உண்டாகும் (2) 17.5: ஓரிரு தடவை (பெண்ணின் மார்பில்) பால் குடிப்பது பற்றிய சட்டம் (6) 17.4: மனைவியின் மகளையும் மனைவியின் சகோதரியையும் மணப்பதற்குத் தடை (2) 17.3: பால்குடிச் சகோதரரின் மகளை மணப்பது தடை செய்யப்பட்டுள்ளது (3) 17.2: பால்குடித் தந்தையின் (இரத்த பந்த) உறவினரும் மணமுடிக்கத் தகாதவரே! (6) 17.1: பிறப்பால் ஏற்படும் உறவும் பால்குடி உறவும் (2) 16.24: பாலூட்டும் மனைவியுடன் உடலுறவு கொள்ளும்போது அஸ்லுச் செய்வது வெறுக்கத் தக்கது (3) 16.23: கருவுற்றிருக்கும் பெண் போர்க் கைதியுடன் உடலுறவு கொள்வது தடை செய்யப்பட்டுள்ளது (1) 16.22: உடலுறவின்போது இடைமுறிப்பு – ‘அஸ்லு’ச் சட்டம் (12) 16.21: மனைவியுடன் நடைபெறும் உடலுறவு இரகசியங்களை வெளியே சொல்வது தடுக்கப்பட்டது (2) 16.20: ஒரு பெண், தன் கணவனின் படுக்கைக்குச் செல்ல மறுப்பதற்குத் தடை (3) 16.19: உடலுறவின் ஒழுங்குகள் (2) 16.18: உடலுறவின்போது ஓத வேண்டிய விரும்பத் தகுந்த பிரார்த்தனை (1) 16.17: மூன்று முறை மணவிலக்கு அளிக்கப்பட்ட பெண்ணின் மறுவிருப்பம் (4) 16.16: விருந்துக்கான அழைப்பை ஏற்பது பற்றிய கட்டளை (13) 16.15: ஸைனப் பின்த்து ஜஹ்ஷு (ரலி) திருமணம்; ஹிஜாப் பற்றிய வசனம்; மணவிருந்து (7) 16.14: அடிமைப் பெண்ணை விடுதலை செய்து, பின்னர் அவளை மணமுடித்துக்கொள்வதன் சிறப்பு (6) 16.13: மணக்கொடை (மஹ்ரு) என்பது … (7) 16.12: ஒருவர் தாம் மணமுடிக்க விரும்பும் பெண்ணின் முகத்தையும் இரு முன் கைகளையும் பார்ப்பது (2) 16.11 ஷவ்வால் மாதத்தில் மணமும் தாம்பத்திய உறவும் (1) 16.10: இளவயதுக் கன்னிக்கு அவளுடைய தந்தை மணமுடித்துவைத்தல் (4) 16.9: மணப் பெண்ணின் வாய் வழிச் சம்மதமும் மௌனச் சம்மதமும் (4) 16.8: திருமண (முன்) நிபந்தனைகளை நிறைவேற்றல் (1) 16.7: மணக்கொடையில்லா திருமணம் செல்லாது (5) 16.6: தம் (முஸ்லிம்) சகோதரன் கேட்டுக்கொண்டிருக்கும் ஒரு பெண்ணை, மற்றவர் கேட்கலாகாது (7) 16.5: இஹ்ராம் புனைந்தவர் திருமணம் செய்வதற்குத் தடை; அவர் பெண் கேட்பது வெறுக்கத் தக்கது (8) 16.4: மனைவியின் அத்தையை, சின்னம்மாவை மணக்கத் தடை (8) 16.3: இடைக்காலத் திருமணம், (முத்ஆ) காலாவதியானது (21) 16.2: இச்சை தூண்டப்பட்டவர், தமது இச்சையைத் தணித்துக் கொள்ளட்டும் (2) 16.1: வசதி இருந்தால் மணமுடிப்பதும் இல்லாதவர் நோன்பு நோற்பதும் (6) 15.97: குபாப் பள்ளிவாசல், அதில் தொழுவது, அதைத் தரிசிப்பது ஆகிய சிறப்புகள் (7) 15.96: இறையச்சத்தின் மீது நிறுவப்பட்ட பள்ளிவாசல் (1) 15.95: மூன்று பள்ளிவாசல்களைத் தவிர வேறெதற்கும் (புனிதப்) பயணம் கிடையாது (2) 15.94: மக்கா, மதீனாப் பள்ளிவாசல்களில் தொழுவதன் சிறப்பு (6) 15.93: ‘உஹுத்’ மலை நம்மை நேசிக்கிறது; நாமும் அதை நேசிக்கின்றோம் (3) 15.92: சொர்க்கப் பூஞ்சோலைகளுள் ஒன்று (3) 15.91: மதீனாவாசிகள் மதீனாவை விட்டு அகலும்போது அதன் நிலை (2) 15.90: மதீனாவிலேயே தங்கியிருப்பதற்கு ஆர்வமூட்டல் (2) 15.89: மதீனாவாசிகளுக்குக் கேடு நினைப்பவர்களை, அல்லாஹ் உருக்குலைத்துவிடுவான் (3) 15.88: தன்னிலுள்ள தீயவர்களை மதீனா அகற்றிவிடும் (5) 15.87: கொள்ளை நோயும் தஜ்ஜாலும் நுழைய முடியாமல் மதீனா பாதுகாக்கப்பட்டுள்ளது (2) 15.86: மதீனாவில் ஏற்படும் நெருக்கடிகளைச் சகித்துக்கொண்டு, அங்குக் குடியிருக்க ஆர்வ மூட்டல் (10) 15.85: மதீனாவின் சிறப்பு; பிரார்த்தித்ததும் புனிதமானவையும் (17) 15.84: இஹ்ராமின்றி மக்காவிற்குள் நுழைய அனுமதி (5) 15.83: அவசியத் தேவையின்றி மக்காவிற்குள் ஆயுதம் எடுததுச் செல்வதற்குத் தடை (1) 15.82: மக்காவும், அதன் புனிதமானவைகளும் (4) 15.81: முஹாஜிருக்கு மக்காவில் தக்குவதற்கு அனுமதிக்கப்பட்ட நாட்கள் (4) 15.80: ஹாஜிகள் மக்காவில் தங்குவதும் அங்குள்ள வீடுகளை வாரிசுரிமையாகப் பெறுவதும் (3) 15.79: ஹஜ், உம்ரா, அரஃபா நாள் ஆகியவற்றின் சிறப்பு (3) 15.78: இணைவைப்பவருக்கான ஹஜ் சட்டங்கள் (1) 15-77: ஹஜ் அல்லது உம்ராவிலிருந்து திரும்பும்போது துல்ஹுலைஃபாவில் தங்கித் தொழுவது (5) 15.76: பயணத்திலிருந்து திரும்பி வரும்போது ஓத வேண்டியவை (2) 15.75: பயணங்களில் வாகனத்தில் ஏறியதும் ஓத வேண்டிய துஆ (2) 15.74: மஹ்ரமான ஆணுடன் மட்டுமே பெண்ணின் ஹஜ் முதலான பயணம் (11) 15.73: ஹஜ் கடமை, ஆயுளில் ஒரு முறைதான் (1) 15.72: குழந்தையின் ஹஜ் செல்லும்; அதை ஹஜ்ஜுக்கு அழைத்துச் சென்றவருக்கும் நற்பலன் உண்டு (3) 15.71: இயலாதவருக்காகவோ, இறந்தவருக்காகவோ பிறர் ஹஜ் செய்தல் (2) 15.70: கஅபாவின் வளைந்த சுவரும் அதன் தலைவாயிலும் (1) 15.69: இறையில்லம் கஅபாவை இடித்துக் கட்டுதல் (7) 15.68: கஅபாவின் உள்ளே நுழைவதும் அதனுள் தொழுவதும் (9) 15.67: விடைபெறும் தவாஃப் மாதவிடாய் ஏற்பட்ட பெண்ணுக்குக் கடமையில்லை (8) 15.66: செல்லும் வழியில் பலிப் பிராணி பாதிப்புக்குள்ளாகிவிட்டால் … (2) 15.65: பலியிடக் கொண்டுசெல்லும் ஒட்டகத்தில், பயணம் செய்ய அனுமதி (6) 15-64: ஹரம் எல்லைக்குச் செல்லாதவர், பலிப் பிராணியை அனுப்பிவைக்கும் முறை (11) 15.63: ஒட்டகத்தை அறுக்கும் முறை (1) 15.62: பலிப் பிராணிகளுள் மாட்டிலும் ஒட்டகத்திலும் கூட்டுச் சேர்வது (8) 15.61: பலிப் பிராணிகளின் இறைச்சி, தோல், சேணம் ஆகியவை தர்மத்துக்குரியன (2) 15.60: ‘தஷ்ரீக்’ நாட்களின் இரவுகளில் மினாவில் தங்குவது கட்டாயமாகும் (2) 15.59: ‘நஃப்ரு’டைய நாளில் ‘அல்முஹஸ்ஸபி’ல் தங்குவதும் அங்குத் தொழுவதும் (9) 15.58: துல்ஹஜ் பத்தாவது நாளில் ‘தவாஃபுல் இஃபாளா’ செய்வது (2) 15.57: ஹஜ் சடங்குகளில் முன் – பின் ஆகிவிட்டால் … (6) 15.56: துல்ஹஜ் பத்தாம் நாளின் சடங்குகள் (3) 15.55: தலைமுடியை மழிப்பதும் குறைப்பதும் (6) 15.54: கற்களின் எண்ணிக்கை (1) 15.53: கல்லெறியும் நேரம் (1) 15.52: பொடிக் கற்கள் போதும் (1) 15.51: துல்ஹஜ் பிறை பத்தில் ஜம்ரத்துல் அகபாவுக்குக் கல்லெறிதல் (3) 15.50: ‘ஜம்ரத்துல் அகபா’வின் மீது கல் எறியும்போது தக்பீர் கூறுவது (4) 15.49: முஸ்தலிஃபாவிலிருந்து மினாவிற்குப் புறப்படச் செய்வது (11) 15.48: முஸ்தலிஃபாவில் ஸுப்ஹுத் தொழுகையை ஆரம்ப நேரத்தில் தொழுவது (1) 15.47: மஃக்ரிப், இஷா வை அடுத்தடுத்துத் தொழுவது (14) 15.46: அரஃபா நாளில் மினாவிலிருந்து அரஃபாவிற்குப் போகும்போது தல்பியாவும் தக்பீரும் கூறுதல் (4) 15.45: துல்ஹஜ் பத்தாவது நாளன்று கல்லெறியத் துவங்கும்வரை தல்பியாச் சொல்லிக்கொண்டிருப்பது (7) 15.44: ஸஃபா-மர்வாவுக்கிடையே ஸயீ (ஓட்டம்) ஒரே தடவைதான் (1) 15.43: ஸஃபா-மர்வாவுக்கிடையே ஸயீச் செய்வது முக்கியக் கடமையாகும் (5) 15.42: வாகனங்கள் மீதமர்ந்து தவாஃப் செய்யலாம் (6) 15.41: தவாஃபின்போது ஹஜருல் அஸ்வதை முத்தமிடுவது (5) 15.40: இறையில்லத்தில் முத்தமிடப்படும் இரு மூலைகள் (6) 15.39: தவாஃபில் விரைந்து நடப்பது விரும்பத்தக்கது (12) 15.38: மக்காவினுள் நுழையும் முன்… (4) 15.37 மக்காவினுள் நுழைவதும் வெளியேறுவதும் (3) 15.36 ரமளான் மாதத்தில் உம்ராச் செய்வதன் சிறப்பு (2) 15.35: நபியவர்களின் உம்ரா எண்ணிக்கையும் காலமும் (4) 15.34 நபியவர்களின் தல்பியாவும் பலியும் (4) 15.33: உம்ராவில் தலைமுடி குறைத்தல் (5) 15.32: இஹ்ராமின்போது பலிப் பிராணி (4) 15.31: ஹஜ்ஜுப் பருவங்களில் உம்ராச் செய்ய அனுமதி (6) 15.30: தமத்துஉ ஹஜ் (2) 15.29: இஹ்ராம் ஹாஜிக்குக் கட்டாயம் (3) 15.28: தவாஃபும் ஸயீயும் கட்டாயம் (3) 15.27: ஹஜ் உம்ரா சேர்த்தும் தனித்தும் செய்வது (3) 15.26: ஒரே இஹ்ராமில் உம்ரா ஹஜ் (3) 15.25: இஹ்ராமிலிருந்து விடுபடுதல் (3) 15.24: பலிப் பிராணியும் ஹஜ் கடமையும் (2) 15.23: தமத்துஉ ஹஜ் அனுமதிக்கப்பட்ட ஒன்றாகும் (13) 15.22: ஒருவர் வேறொருவரின் இஹ்ராமை அச்சொட்டி பூணுதல் (3) 15.21: அரஃபா பெருவெளியில் தங்கி திரும்புதல் தொடர்பான இறை கூற்று (3) 15.20: அரஃபாப் பெருவெளி முழுவதும் தங்குமிடம் (2) 15.19: நபி (ஸல்) அவர்களின் ஹஜ் (1) 15.18: உம்ராவையும் ஹஜ்ஜையும் தனித் தனியாக நிறைவேற்றி பயனடைதல் (2) 15.17: இஹ்ராமின் முறைகள் (27) 15.16: இரத்தப்போக்குடைய பெண் இஹ்ராமில் குளித்தல் (2) 15.15: இஹ்ராமிலிருந்து விடுபட முன் நிபந்தனையிட அனுமதி (5) 15.14: முஹ்ரிம் இறந்துவிட்டால் செய்ய வேண்டியவை (9) 15.13: இஹ்ராம் பூண்ட முஹ்ரிம், தம் உடலைக் கழுவிக்கொள்ள அனுமதி (1) 15.12: இஹ்ராம் பூண்ட முஹ்ரிம், தம் கண்களுக்கு மருந்திட அனுமதி (2) 15.11: இஹ்ராம் பூண்ட முஹ்ரிம், ஹிஜாமா செய்ய அனுமதி (2) 15.10: முஹ்ரிமுக்குத் தலைமுடி மழிக்க அனுமதியும் பரிகாரமும் (7) 15.09: ஹரம் எல்லைக்குள் கொல்ல அனுமதிக்கப்பட்டவைகள் (12) 15.08: இஹ்ராம் பூண்ட முஹ்ரிம் வேட்டையாடுவது குறித்து.. (9) 15.07: இஹ்ராமின்போது நறுமணம் பூசுதல் (19) 15.06: துல்ஹுலைஃபா பள்ளியில் தொழுதல் (1) 15.05: வாகனம் புறப்படுவதற்கு ஆயத்தமானவுடன் தல்பியா கூறுவது (4) 15.04: மதீனாவாசிகள் இஹ்ராம் பூண வேண்டிய இடம் (2) 15.03: தல்பியாவின் பண்பும் அதன் நேரமும் (4) 15.02: ஹஜ்/உம்ராவிற்கான இஹ்ராம் எல்லைகள் (7) 15.01: ஹஜ்/உம்ராவில் அனுமதிக்கப்பட்டவை.. (10) 14.04: துல்ஹஜ் மாதத்தின் பத்து நோன்புகள் (2) 14.02: இஃதிகாஃப் இருக்குமிடத்தினுள் நுழையும் நேரம் (1) 14.03: இறுதிப் பத்தில் வழிபாடுகளில் ஈடுபடுவது (2) 14.01: இறுதிப் பத்து நாட்களில் இஃதிகாஃப் இருத்தல் (5) 13.40: லைலத்துல் கத்ர் இரவு குறித்து.. (17) 13.39: ஷவ்வால் ஆறு நோன்பு (1) 13.37: ஷஅபான் மாத இறுதியில் நோன்பு நோற்றல் (3) 13.38: முஹர்ரம் நோன்பின் சிறப்பு (2) 13.36: சுன்னத்தான நோன்புகள் (5) 13.35: ஒரு நாள் விட்டு ஒரு நாள் நோன்பு (12) 13.34: நோன்பில்லாமல் எந்த மாதத்தையும் கடக்க விடாமலிருப்பது விரும்பத் தக்கது (9) 13.33: மறதியால் (நோன்பாளி) நோன்பு முறியாது (1) 13.32: கூடுதலான நோன்பு முடிவு செய்வதற்கும் விடுவதற்கும் அனுமதி (2) 13.31: அல்லாஹ்வின் பாதையில் செல்லும்போது சக்தி பெற்றிருப்பவர் நோன்பு நோற்பதன் சிறப்பு (2) 13.30: நோன்பின் மாண்பு (6) 13.29: நோன்பாளி, நாவைக் காப்பது (1) 13.28: நோன்பாளி விருந்துக்கு அழைக்கப்பட்டால் “நான் நோன்பாளி” என்று சொல்லிவிட வேண்டும் (1) 13.27: இறந்துபோனவரின் விடுபட்ட நோன்பை நோற்பது (5) 13.26: ரமளானில் விடுபட்ட நோன்பை ஷஅபான் மாதத்தில் ‘களா’ச் செய்தல் (2) 13.25: இறைவசனம் வேறொரு வசனத்தின் மூலம் மாற்றம் (2) 13.24: வெள்ளிக்கிழமை மட்டும் நோன்பு நோற்பது விரும்பத் தக்கதன்று (3) 13.23: அய்யாமுத் தஷ்ரீக் நாட்களில் நோன்பு நோற்பதற்குத் தடை (2) 13.22: நோன்புப் பெருநாளிலும் ஹஜ்ஜுப் பெருநாளிலும் நோன்பு நோற்பதற்குத் தடை (6) 13.20: ஆஷூரா நோன்பை எந்த நாளில் நோற்க வேண்டும்? (4) 13.19: ஆஷூரா நாளில் நோன்பு நோற்றல் (17) 13.18: அரஃபா நாளில் அரஃபாவில் தங்கும் ஹாஜிகளின் நோன்பு (4) 13.17: பயணத்தில் நோன்பு நோற்பதையோ விட்டுவிடுவதையோ தேர்ந்துகொள்ளலாம் (5) 13.16: பயணத்தில் நோன்பைக் கைவிட்டவர், பொதுப் பணியாற்றினால் கிடைக்கும் நன்மை (3) 13.15: பயணத்தில் இருப்பவர் மீதான கடமையான ரமளான் நோன்பு (11) 13.14: ரமளான் பகலில் உடலுறவில் ஈடுபடுவதற்குத் தடையும் அதன் பரிகாரமும் (5) 13.13: பெருந்துடக்குடன் வைகறைப் பொழுதை அடைந்தவரின் நோன்பு செல்லும் (6) 13.12: கட்டுப்படுத்தும் நோன்பாளிக்கு (தம் மனைவியை) முத்தமிடத் தடையில்லை (13) 13.11: தொடர்நோன்பு நோற்பதற்குத் தடை (7) 13.10: பகற் பொழுது வெளியேறி நோன்பு நிறைவடையும் நேரம் (3) 13.09: ஸஹரைத் தாமதிப்பதும் நோன்பு துறப்பதை விரைந்து செய்வதும் (6) 13.08: ஃபஜ்ரு நேரம் வந்தவுடன் நோன்பு ஆரம்பமாகிவிடும் (11) 13.07: ‘இரு பெருநாட்களின் இரு மாதங்களும் குறைவுபடாது’ நபிகளாரின் விளக்கம் (2) 13.06: (வானை) மேகம் மூடிக்கொண்டால் (மாதத்தின் நாட்கள்) முப்பதாக முழுமையாக்கப்படும் (2) 13.05: ஒவ்வோர் ஊர்க்காரர்களுக்கும் அவரவர் பார்க்கும் பிறையே பொருந்தும் (1) 13.04: மாதம் என்பது இருபத்தொன்பது நாட்களாகவும் இருக்கும் (6) 13.03: ரமளானுக்கு முந்தைய இரு நாள்களில் நோன்பு நோற்கக் கூடாது (1) 13.02: ரமளான் நோன்பு தொடக்கமும் முடிவும் (17) 13.01: ரமளான் மாதத்தின் சிறப்பு (2) 12.55: ஸகாத் வசூலிப்பவர், தடை செய்யப்பட்டதைக் கோராதவரை அவரைத் திருப்திபடுத்த வேண்டும் (1) 12.54: தர்மப் பொருள் கொண்டுவந்தவருக்காகப் பிரார்த்தித்தல் (1) 12.53: நபி (ஸல்) அன்பளிப்பை ஏற்றதும் தர்மத்தை மறுத்ததும் (1) 12.52: தர்மப் பொருள், அதன் பண்பு நீங்கி விடுதல் (5) 2.27: நாய் நக்கிய பாத்திரம் பற்றிய சட்டம் (6) 2.28: தேங்கிக் கிடக்கும் தண்ணீரில் சிறுநீர் கழிப்பதற்குத் தடை (3) 2.29: பெருந்துடக்குடையவர் தேங்கிய நீரில் இறங்கிக் குளிக்கத் தடை (1) 2.30: பள்ளிவாசலில் சிறுநீர் கழித்தால்… (3) 2.31: தாய்பால் குடிக்கும் குழந்தையின் சிறுநீரைக் கழுவும் சட்டம் (4) 2.32: விந்து பற்றிய சட்டம் (4) 2.33: மாதவிடாய் இரத்தம் கழுவும் முறை (1) 2.34: சிறுநீரைச் சுத்தம் செய்வது கட்டாயம் (1) 3.01: மாதவிடாயான மனைவியைக் கீழாடைக்கு மேல் அணைத்துக் கொள்வது. (3) 3.02: மாதவிடாயான மனைவியுடன் ஒரே போர்வைக்குள் படுத்துக் கொள்வது. (2) 3.03: மாதவிடாயான பெண் செய்ய அனுமதிக்கப்பட்டவை (11) 3.04: இச்சை நீர் (3) 3.05: உறங்கி எழுந்ததும் முகத்தையும் கையையும் கழுவுதல் (1) 3.06: பெருந்துடக்காளி செய்ய வேண்டியவை (8) 3.07: மதன நீர் வெளிப்பட்ட பெண்ணுக்குக் குளியல் கடமை. (5) 3.08: ஆண்/பெண் (விந்து-மதன)நீரிலிருந்துதான் குழந்தை உருவாகிறது. (1) 3.09: பெருந்துடக்கிற்கான குளியல் முறை (5) 3.10: பெருந்துடக்கு குளியல் தொடர்பானவை (14) 3.11: குளிக்கும் போது மூன்றுமுறை தண்ணீர் ஊற்றுதல் (4) 3.12: குளிக்கும் பெண்களின் சடைமுடி பற்றிய சட்டம் (2) 3.13: மாதவிடாய் குளியலின் போது கஸ்தூரி பயன்படுத்துதல் (2) 3.14: தொடர் உதிரப் போக்குடைய பெண்களின் தொழுகை மற்றும் குளியல் (5) 3.15: மாதவிடாய் நாட்களில் விடுபட்ட கடமைகள் (3) 3.16: குளிப்பவர் திரையிட்டுக் கொள்தல் (3) 3.17: பிறரின் மறையுறுப்பைப் பார்த்தல் (1) 3.18: தனித்துக் குளிக்கும் போது ஆடையின்றி குளித்தல் (1) 3.19: மறையுறுப்பை மறைத்துக் கொள்வதில் கவனம் (3) 3.21: (விந்து)நீர் வெளிப்பட்டாலே (குளியல்)நீர் கடமையாகும் (9) 3.22: ஆண்-பெண் குறிகள் இணைந்து விட்டால் குளியல் கடமையாகும் (3) 3.23: சமைக்கப்படவற்றை உண்டால் மீண்டும் உளூ செய்தல் (3) 3.24: சமைக்கப் பட்டவற்றை உண்டால் உளூச் செய்யும் கட்டாயம் மாற்றப் பட்டது (8) 3.25: ஒட்டக இறைச்சி உண்டால் உளூச் செய்ய வேண்டும் (1) 3.26: வாயு பிரிந்த சந்தேகம் ஏற்பட்டாலும் தொழலாம் (2) 3.27: பதனிடப்படுவதால் செத்த பிராணியின் தோல் தூய்மை ஆகும் (7) 3.28: தயம்மும் (6) 3.29: ஒரு முஸ்லிம் (பெருந்துடக்கு ஏற்பட்டதால்) அசுத்தமாகிவிட மாட்டார். (2) 3.30: பெருந்துடக்கு போன்ற நிலைகளிலும் அல்லாஹ்வைத் துதித்தல். (1) 3.31: சிறுதுடக்காளி (உளூச் செய்யாமல்) உண்ணலாம் (4) 3.32: கழிப்பிடத்திற்குச் செல்லும்போதான பிரார்த்தனை (1) 3.33: உட்கார்ந்து கொண்டு உறங்குவது உளூவை முறிக்காது. (4) 4.01: தொழுகை அழைப்பின் தொடக்கம் (1) 4.02: தொழுகை அறிவிப்பு தொடர் அமையும் விதம் (3) 4.03: தொழுகை அழைப்பு முறை (1) 4.04: ஒரு பள்ளிவாசலுக்கு இரு தொழுகை அழைப்பாளர்கள் (1) 4.05: பார்வையற்றவர் தொழுகை அழைப்பு விட நிபந்தனை (1) 4.06: போரின் போது இணைவைப்பாளர் நாட்டில் தொழுகை அழைப்பு விடுக்கப்பட்டால் (1) 4.07: தொழுகை அழைப்பைச் செவியுறுபவர் செய்ய வேண்டியவை (4) 4.08: தொழுகை அழைப்பின் சிறப்பும் ஷைத்தான் வெருண்டோடுவதும் (6) 4.09: இரு கைகளையும் தோள் புஜத்துக்கு உயர்த்துதல் (4) 4.10: அல்லாஹு அக்பர், ஸமி அல்லாஹு லிமன் ஹமிதஹ் கூறும் இடங்கள் (5) 4.11: தொழுகையில் அல்ஃபாத்திஹா அத்தியாயம் ஓதுதல் (8) 4.12: இமாமைப் பின்பற்றித் தொழுபவர் உரத்து ஓதலாகாது (2) 4.13: பிஸ்மில்லாஹ்வை(த் தொழுகையில்) உரத்து ஓதாலாகாது என்போரின் வாதம் (2) 4.14: அத்தியாயங்களின் துவக்கம் “பிஸ்மில்லாஹ்” குறித்த வாதம் (1) 4.15: தக்பீருக்குப் பின்னும் சஜ்தாவிலும் கைகளை வைக்கும் முறை (1) 4.16: தொழுகையில் அத்தஹிய்யாத் ஓதுவது (4) 4.17: இறுதி அத்தஹியாத்திற்குப் பின் ஸலவாத் கூறுதல் (4) 4.18: ஸமி அல்லாஹு லிமன் ஹமிதஹ், ரப்பனா ல(க்)கல் ஹம்து, ஆமீன் ஆகியவை கூறுவது (5) 4.19: இமாமை மஃமூம் பின்தொடர்வது (5) 4.20: இமாமை முந்துவதற்குத் தடை (4) 4.21: இமாமைப் பின்பற்றுவதில் சட்ட மாற்றம் (10) 4.22: இமாம் வருவதற்குத் தாமதமானால்… (2) 4.23: தொழுகையில் இமாமுக்கு ஏதாவது உணர்த்த விரும்பினால்… (1) 4.24: தொழுகையை முழுமையாக உள்ளச்சத்துடன் தொழல் (4) 4.25: தொழுகையில் இமாமை முந்தாமல் இருத்தல் (7) 4.26: தொழும்போது வானத்தை அண்ணாந்து பார்ப்பதற்குத் தடை (2) 4.27: தொழுகையில் ஒழுங்குகள் (3) 4.28: தொழுகையில் வரிசைகளைப் பேணுதல் (11) 4.29: ஆண்களுக்குப் பின்னால் தொழும் பெண்கள் தலை உயர்த்தும் முறை (1) 4.30: பெண்கள் பள்ளிவாசலுக்குச் செல்தல், நறுமணம் பூசுதல் (11) 4.31: தொழுகையில் அச்சநிலையில் குர்ஆன் ஓதும் முறை (2) 4.32: குர்ஆன் ஓதப்படும்போது செவிதாழ்த்திக் கேட்க வேண்டும். (2) 4.33: ஸுப்ஹுத் தொழுகையில் உரத்துக் குர்ஆன் ஓதுதல் (4) 4.34: லுஹ்ரு, அஸ்ருத் தொழுகைகளில் குர்ஆன் ஓதுதல் (8) 4.35: ஸுப்ஹுத் தொழுகையில் குர்ஆன் ஓதுதல் (13) 4.36: இஷாத் தொழுகையில் குர்ஆன் ஓதுவது (8) 4.37: தொழுகையைச் சுருக்கி, நிறைவுறத் தொழுவிப்பதற்கான கட்டளை (11) 4.38: தொழுகையின் நிலைகளை நிதானமாக, சுருக்கி, நிறைவாகச் செய்வது (4) 4.39: தொழுகையில் இமாமை முந்தி விடாமலிருத்தல் (5) 4.40: ருகூஉவிலிருந்து தலையை உயர்த்திய பின் ஓத வேண்டியவை (5) 4.41: ருகூஉவிலும் ஸஜ்தாவிலும் குர்ஆன் ஓதுவதற்குத் தடை (6) 4.42: ருகூஉவிலும் ஸஜ்தாவிலும் ஓத வேண்டியவை (9) 4.44: ஸஜ்தாவின் போது தரையில் படவேண்டிய உறுப்புகள் (7) 4.45: சீராக ஸஜ்தா செய்தல் (2) 4.46: தொழுகை முறைத் தொகுப்பு (5) 4.47: தனித்துத் தொழுபவர் தடுப்பு ஒன்றை வைத்துக் கொள்வது (13) 4.48: தொழுகையில் குறுக்கே செல்பவரைத் தடுப்பது (4) 4.49: தொழுபவர், தடுப்புக்கு நெருக்கமாக நிற்க வேண்டும் (3) 4.50: தொழுபவருக்கான குறுக்குத் தடுப்பின் அளவு (2) 4.51: தொழுபவருக்குக் குறுக்கே படுத்திருப்பது (8) 4.52: ஒரே ஆடை அணிந்து தொழும் முறை (9) 5.01: பூமியில் எழுப்பப்பட்ட முதலாவது இறையாலயம் (8) 5.02: மஸ்ஜிதுந் நபவீ கட்டப்பட்ட வரலாறு (2) 5.03: தொழுகைத் திசை(கிப்லா) கஅபாப் பள்ளிக்கு மாற்றம் (4) 5.04: மண்ணறைகளில் செய்யக்கூடாதவை (6) 5.05: மஸ்ஜிதுகள் கட்டுவதன் சிறப்பும் அதற்கான ஆர்வமூட்டலும் (2) 5.06: ருகூஉவில் உள்ளங்கைகளை வைப்பதற்கான சட்டத் திருத்தம் (5) 5.07: இரு குதிகால்கள்மீது (தொழுகை அமர்வில்) அமர அனுமதி (1) 5.08: தொழுகையில் பேசிக் கொள்ள இருந்த அனுமதி நீக்கம் (6) 5.09: தொழுகைக்கு இடையில் செய்ய அனுமதிக்கப்பட்டவை (2) 5.10: குழந்தைகளைச் சுமந்துகொண்டு தொழுவதற்கு அனுமதி (3) 5.11: தொழுகையின்போது ஓரிரு அடிகள் நடக்க அனுமதி (1) 5.12: இடுப்பில் கையூன்றிக் கொண்டு தொழுவது வெறுக்கத் தக்கது (1) 5.13: தொழும்போது மண்ணைச் சமப்படுத்துதல் வெறுக்கத் தக்கது (3) 5.14: பள்ளிவாசலில் எச்சில் துப்பத் தடை (10) 5.15: காலணி அணிந்து கொண்டு தொழுவதற்கு அனுமதி (1) 5.16: கவனத்தை ஈர்க்கும் ஆடை அணிந்து தொழுதல் வெறுக்கப்பட்டது (3) 5.17: சிறுநீர்/மலம் அடக்குதல், உணவு காக்க வைத்தல் நிலையில் தொழுதல் (4) 5.18: துர்நாற்றத்துடன் பள்ளிச்செல்லுதலும் அவரை வெளியேற்றலும் (10) 5.19: பள்ளிவாசலினுள் காணாமற்போன பொருளைத் தேடத் தடை (3) 5.20: தொழுகையில் ஏற்படும் மறதிக்குப் பரிகாரம் (17) 5.21: ஸஜ்தா திலாவத் (9) 5.22: அத்தஹிய்யாத்தில் அமரும் முறை (5) 5.23: தொழுகையை நிறைவு செய்யும்போது ஸலாம் கூறும் முறை (3) 5.24: தொழுத பின்னர் திக்ரு (3) 5.25: மண்ணறை வேதனையிலிருந்து பாதுகாப்புக் கோருதல் (3) 5.26: தொழுகையில் பாதுகாப்புக் கோரப்பட வேண்டியவை (8) 5.27: தொழுகைக்குப்பின் திக்ரு செய்தல் (9) 5.28: தொடக்கத் தக்பீருக்குப் பின் கூறவேண்டியவை (4) 5.29: தொழுகையில் கலந்துகொள்ள செல்லும் முறை (5) 5.30: தொழுகைக்காக மக்கள் எப்போது எழுந்து நிற்க வேண்டும்? (5) 5.31: கூட்டுத்தொழுகையை அடைந்துகொள்ள நிபந்தனை (5) 5.32: ஐவேளைத் தொழுகை நேரங்கள் (13) 5.33: கடுங்கோடையில் ஜமாஅத் தொழுகை (8) 5.34: கடுங்கோடையில்லா சமயத்தில் ஜமாஅத் தொழுகை (4) 5.35: அஸ்ருத் தொழுகையின் நேரம் (7) 5.36: அஸ்ருத் தொழுகையைத் தவறவிட்டால்.. (3) 5.37: அஸ்ரு நடுத்தொழுகை என்போரின் சான்று (6) 5.38: ஸுப்ஹு, அஸ்ருத் தொழுகைகளின் சிறப்புகள் (6) 5.39: மஃக்ரிபுத் தொழுகையின் ஆரம்ப நேரம் (2) 5.40: இஷாத் தொழுகையின் நேரமும் அதைத் தாமதமாகத் தொழுவதும் (12) 5.41: ஸுப்ஹுத் தொழுகையின் நேரம் மற்றும் ஓதப்படும் (குர்ஆன் வசனங்களின்) அளவு (7) 5.42: தொழுகைக்கு உரிய நேரத்தைத் தாமதப்படுத்துதல் (7) 5.43: கூட்டுத் தொழுகையின் சிறப்பும் அதைத் தவற விடுவது பற்றிய கண்டனமும் (10) 5.44: தொழுகை அழைப்பைச் செவியுறுபவர் பள்ளிவாசலுக்குச் செல்வது கட்டாயமாகும் (1) 5.45: கூட்டுத் தொழுகை என்பது நேர்வழியைச் சார்ந்தது (2) 5.46: பாங்கு கூறிய பின்னர் பள்ளிவாசலிலிருந்து வெளியேறத் தடை (2) 5.47: இஷா மற்றும் ஸுப்ஹு கூட்டாகத் தொழுவதன் சிறப்பு (4) 5.48: கூட்டுத் தொழுகையைத் தவிர்ப்பதற்கான அனுமதி (1) 5.49: நஃபில் தொழுகைகளை ஜமாஅத்தாகத் தொழுதல் (6) 5.50: கூட்டுத் தொழுகைக்காகக் காத்திருப்பதன் சிறப்பு (5) 5.51: பள்ளிவாசலுக்கு நடந்து செல்வதன் சிறப்பு (6) 5.52: தொழுகைக்கு நடந்து செல்பவருக்குக் கிடைக்கும் பலன்கள் (4) 5.53: உதயம்வரை தொழுத இடத்தில் அமர்ந்திருப்பதன் சிறப்பு (3) 5.54: தொழுகைக்குத் தலைமையேற்க அதிகத் தகுதியுடையவர் (5) 5.55: எல்லாத் தொழுகைகளிலும் குனூத் ஓதும் காலகட்டம் (15) 5.56: விட்டுப்போனத் தொழுகைகளைத் தொழுதல் (8) 6.01: பயணிகளின் தொழுகை; சுருக்கித் தொழுதல் (20) 6.02: மழையின்போது இருப்பிடங்களில் தொழுதுகொள்ளலாம் (4) 6.03: நஃபில் தொழுகைகளை வாகனத்தில் செல்பவர் தொழலாம் (10) 6.04: பயணத்தில் இரு தொழுகைகளைச் சேர்த்து தொழலாம் (7) 6.05: உள்ளூரில் இருக்கும்போது இரு தொழுகைகளை இணைத்து தொழுதல் (10) 6.06: தொழுது முடித்தபின் வலம், இடம் திரும்பி அமர்தல் (3) 6.07: இமாமுக்கு வலப்பக்க வரிசையில் நிற்பது விரும்பத்தக்கது (1) 6.08: இகாமத் கூறத் தொடங்கி விட்டால் நஃபில் தொழுவது வெறுக்கத்தக்கது (5) 6.09: பள்ளிவாசலுக்குள் நுழையும்போது கூறவேண்டிய துஆ (1) 6.10: பள்ளிக் காணிக்கை தொழுகை தொடர்பாக (4) 6.11: பயணத்திலிருந்து திரும்பியவர் இரண்டு ரக்அத் தொழுதல் (3) 6.12: முற்பகல் (ளுஹா) தொழுகை எண்ணிக்கை (11) 6.13: ஃபஜ்ருடைய இரு ரக்அத் சுன்னத் தொழுகை (15) 6.14: சுன்னத் தொழுகைகளின் சிறப்பும் எண்ணிக்கைகளும்! (3) 6.15: நஃபில் தொழுகைகளைத் தொழும் முறைகள் (14) 6.16: இரவுத் தொழுகை (18) 6.17: இரவுத் தொழுகையின் ஒருங்கிணைந்த விபரங்கள் (4) 6.18: அவ்வாபீன் தொழுகை (2) 6.19: இரவுத் தொழுகை, வித்ருத் தொழுகை ரக்அத்கள் (16) 6.20: வித்ருத் தொழுகை நேரம் (2) 6.21: தொழுகையில் மிகச் சிறந்தது (2) 6.22: இரவில் பிரார்த்தனை ஏற்கப்படும் நேரம் (2) 6.23: இரவின் இறுதி நேரத்தில் பிரார்த்தனை (5) 6.24: ‘கியாமு ரமளான்(தராவீஹ்) தொழ ஆர்வமூட்டல் (8) 6.25: இரவுத் தொழுகையில் பிரார்த்திப்பதும் நின்று வணங்குவதும் (17) 6.26: இரவுத் தொழுகையில் நீண்ட நேரம் (நின்று) குர்ஆன் ஓதுவது (2) 6.27: தொழாமல் விடியும்வரை உறங்குபவர் (3) 6.28: கூடுதலான நஃபில் தொழுகைகள் (6) 6.29: நற்செயல்களை வழக்கமாகச் செய்வதன் சிறப்பு. (4) 6.30: இபாதத் தூக்கத்தால் தடைப்பட்டால்… (5) 6.31: குர்ஆனின் தொடர்பைப் பற்றிப் பிடித்துக்கொள்ளக் கட்டளை (7) 6.32: குர்ஆனை இனிய குரலில் ஓதுவது விரும்பத் தக்கதாகும் (5) 6.33: மக்கத்து வெற்றி நாளில்… (2) 6.34: குர்ஆனை ஓதுவதால் இறங்கும் அமைதி (3) 6.35: குர்ஆனை மனனமிட்டவரின் சிறப்பு (1) 6.36: குர்ஆனை ஓதுகின்ற இருவகையினரின் தனிச் சிறப்புகள் (1) 6.37: குர்ஆனில் தேர்ந்த மேன்மக்கள் முன்னிலையில் குர்ஆன் ஓதுவது (2) 6.38: குர்ஆனைச் செவியேற்பதன் சிறப்பு (3) 6.39: குர்ஆனைக் கற்பது மற்றும் ஓதுவதன் சிறப்பு (2) 6.40: குர்ஆன் ஓதுவதன் சிறப்பும் அல்பகரா அத்தியாயத்தின் சிறப்பும் (2) 6.41: ஸூரத்துல் ஃபாத்திஹா, அல்பகரா அத்தியாயத்தின் இறுதி வசனங்களின் சிறப்பு (2) 6.42: ஸூரத்துல் கஹ்ஃப் மற்றும் ஆயத்துல் குர்ஸீ ஆகியவற்றின் சிறப்பு (3) 6.43: குல் ஹுவல்லாஹு அஹது (அத்தியாயத்தை) ஓதுவதன் சிறப்பு (4) 6.44: அல்முஅவ்விதத்தைன் (பாதுகாவல்) அத்தியாயங்களை ஓதுவதன் சிறப்பு (2) 6.45: குர்ஆனின்படி தாமும் செயல்பட்டுப் பிறருக்கும் அதைக் கற்பிப்பவரின் சிறப்பு (4) 6.46: குர்ஆன் ஏழு (வட்டார) மொழிநடையில் அருளப்பெற்றுள்ளது என்பதன் விளக்கம் (4) 6.47: குர்ஆனை வேகமாக ஓதுவதைத் தவிர்த்தல் (4) 6.48: குர்ஆன் ஓதும் முறைகளுள் சில (4) 6.49: தொழத் தடுக்கப்பட்ட நேரங்கள். (8) 6.50: அம்ரு பின் அபஸா (ரலி) இஸ்லாத்தை ஏற்றமை (1) 6.51: சூரியன் உதிக்கும் நேரத்தையும் மறையும் நேரத்தையும் தேர்ந்தெடுத்துத் தொழாதீர்கள்! (2) 6.52: நபி (ஸல்) அஸ்ருக்குப் பிறகு தொழுதுவந்த இரண்டு ரக்அத்கள் எவை? (5) 6.53: மஃக்ரிப் தொழுகைக்கு முன் இரண்டு ரக்அத்கள் தொழுவது விரும்பத் தக்கது (2) 6.54: பாங்குக்கும் இகாமத்துக்கும் இடையிலுள்ள தொழுகை (1) 6.55: அச்சச் சூழல் தொழுகை (8) 7.01: வெள்ளிக்கிழமையில் குளிப்பது வயதுவந்த ஒவ்வோர் ஆண் மீதும் கடமை (7) 7.02: வெள்ளிக்கிழமையில் பல் துலக்குவதும் நறுமணம் பூசுவதும் (4) 7.03: வெள்ளிக்கிழமை சொற்பொழிவின்போது அமைதி காத்தல் (2) 7.04: வெள்ளிக்கிழமையில் (பிரார்த்தனை ஏற்கப்படுவதற்கு) உள்ள ஒரு நேரம் (4) 7.05: வெள்ளிக்கிழமையின் சிறப்பு (2) 7.06: இந்தச் சமுதாயத்தின் (சிறப்பு வழிபாட்டு) நாள் வெள்ளிக்கிழமை (4) 7.07: வெள்ளிக்கிழமை (தொழுகைக்கு) முன்னதாகச் செல்வதன் சிறப்பு (2) 7.08: மௌனமாக (வெள்ளிக்கிழமை) உரையைச் செவியேற்பவரின் சிறப்பு (2) 7.09: சூரியன் (உச்சியிலிருந்து) சாயும்போது ஜும்ஆத் தொழுவது (5) 7.10: தொழுகையின் உரைகளும் இடையே (இமாம்) அமர்வதும் (3) 7.11: வியாபாரத்தையோ வேடிக்கையையோ கண்டால் (62:11ஆவது) இறைவசனம் (4) 7.12: ஜும்ஆத் தொழுகையை(த் தொழாமல்) கைவிடுவதற்குக் கண்டனம் (1) 7.13: (ஜும்ஆத்) தொழுகையையும் (குத்பா) உரையையும் சுருக்கமாக அமைத்தல் (11) 7.14: இமாம் (ஜும்ஆ) உரை நிகழ்த்தும்போது காணிக்கை தொழுகை (6) 7.15: பொது போதனைக்கு நடுவில் தனி போதனை (1) 7.16: ஜும்ஆத் தொழுகையில் ஓத வேண்டியவை (3) 7.17: வெள்ளிக்கிழமை (ஃபஜ்ருத் தொழுகையில்) ஓத வேண்டியவை (3) 7.18: ஜும்ஆவுக்குப் பின் தொழ வேண்டியவை (16) 8.01: பெருநாள் திடலில் பெண்கள் பங்கேற்பது (3) 8.02: பெருநாள் திடலில் தொழுகைக்கு முன்போ பின்போ தொழக் கூடாது (1) 8.03: இரு பெருநாள் தொழுகைகளில் ஓதக் கூடியவை (2) 8.04: பெருநாட்களில் பாவமில்லா விளையாட்டுகளில் ஈடுபட அனுமதி (7) 9.00: இமாம் (மழைத் தொழுகையில்) மேல்துண்டை மாற்றிப் போட்டுக் கொள்வது (4) 9.01: மழைவேண்டிப் பிரார்த்திக்கும்போது இருகைகளை உயர்த்துதல் (3) 9.02: மழைவேண்டிப் பிரார்த்தித்தல் (2) 9.03: கடும் காற்றையும் மேகத்தையும் காணும்போதும்.. மழை பெய்யும்போதும்.. (3) 9.04: கீழைக் காற்று (’ஸபா’) மற்றும் மேலைக் காற்று (’தபூர்’) பற்றிய குறிப்புகள் (1) 10.01: சூரிய கிரகணத் தொழுகை (7) 10.02: கிரகணத் தொழுகையின்போது மண்ணறை வேதனை பற்றி நினைவு கூர்வது (1) 10.03: கிரகணத் தொழுகையின்போது சொர்க்கமும் நரகமும் (6) 10.04: கிரகணத் தொழுகையில் எட்டு ருகூஉகளும் நான்கு ஸஜ்தாக்களும்.. (2) 10.05: கிரகணத் தொழுகைக்காக, “அஸ்ஸலாத்து ஜாமிஆ” அறிவிப்பு.. (8) 11.01: மரணத் தருவாயில் ‘லா இலாஹ இல்லல்லாஹ்’ (எனும் கலிமா)வை நினைவூட்டுதல் (2) 11.02: துன்பம் நேரும்போது வேண்டக்கூடிய பிரார்த்தனை (2) 11.03: நோயாளியிடமும் மரணத் தருவாயில் இருப்பவரிடமும் சொல்ல வேண்டியவை (1) 11.04: உயிர் பிரிந்தவுடன் இறந்தவருக்குச் செய்ய வேண்டியவை (1) 11.05: இறப்பவரின் பார்வை தனது உயிரை நோக்கி நிலைகுத்தி நிற்றல் (1) 11.06: இறந்தவருக்காக அழுவது (3) 11.07: நோயாளிகளைச் சந்தித்து உடல்நலம் விசாரித்தல் (1) 11.08: பொறுமை என்பது துன்பத்தின் முதல் நிலையில் கடைப்பிடிப்பதாகும் (2) 11.09: இறந்தவருக்காக ஒப்பாரி வைத்து அழுதால்.. (14) 11.10: ஒப்பாரிக்குக் கடுமையான கண்டனம் (5) 11.11: ஜனாஸாவின் இறுதி ஊர்வலத்தைப் பின்தொடர்ந்து செல்வதற்குப் பெண்களுக்குத் தடை (2) 11.12: மையித்தைக் குளிப்பாட்டுதல் (4) 11.13: மய்யித்திற்கு ‘கஃபன்’ உடை அணிவித்தல் (4) 11.14: மய்யித்தை மூடிவைத்தல் (1) 11.15: மய்யித்திற்கு அழகிய முறையில் கஃபன் அணிவித்தல் (1) 11.16: இறந்தவர் உடலைத் துரிதமாக அடக்கம் செய்தல் (2) 11.17: ஜனாஸாத் தொழுகையின் மற்றும் ஜனாஸாவைப் பின்தொடர்வதன் சிறப்பு (6) 11.18: மய்யித்துக்காக நூறு பேர் தொழுது செய்யும் பரிந்துரை ஏற்கப்படும் (1) 11.19: மய்யித்துக்காக நாற்பது பேர் பரிந்துரை (1) 11.20: இறந்தவர் குறித்துப் புகழ்ந்து, அல்லது இகழ்ந்து பேசப்படுதல் (1) 11.21: ஓய்வு பெற்றவரும் ஓய்வளித்தவரும் (1) 11.22: ஜனாஸாத் தொழுகையில் சொல்ல வேண்டிய தக்பீர்கள் (6) 11.23: மண்ணறை அருகில் (ஜனாஸாத் தொழுகை) தொழுவது (4) 11.24: ஜனாஸாவுக்காக எழுந்து நிற்பது (7) 11.25: ஜனாஸாவுக்காக எழுந்து நிற்கும் வழக்கம் மாற்றப்பட்டது (3) 11.26: இறந்தவருக்காக ஜனாஸாத் தொழுகையில் செய்யும் பிரார்த்தனை (2) 11.27: ஜனாஸாத் தொழுகையின்போது இமாம் எந்த இடத்தில் நிற்க வேண்டும்? (2) 11.28: ஜனாஸாத் தொழுகை தொழுதுவிட்டு வாகனத்தில் ஏறித் திரும்பிச் செல்லலாம் (2) 11.29: உட்குழியும் மையித்தின் மேல் செங்கற்களை அடுக்குவதும் (1) 11.30: கப்றுக் குழியினுள் போர்வையை விரித்து (மையித்தை) வைப்பது (1) 11.31: கப்றைத் தரை மட்டமாக்க உத்தரவு (2) 11.32: கப்றுகளைக் காரையால் பூசுவதோ அதன் மீது கட்டடம் எழுப்புவதோ கூடாது (2) 11.33: கப்றின்மீது அமர்வதும் அதன் மீது தொழுவதும் தடுக்கப்பட்டவை (3) 11.34: பள்ளிவாசலில் ஜனாஸாத் தொழுகை நடத்துவது (3) 11.35: மையவாடிக்குள் கூற வேண்டியதும் பிரார்த்திப்பதும் (3) 11.36: நபி (ஸல்), தம் தாயாரின் கப்றைக் காண்பதற்கு இறைவனிடம் அனுமதி கோரியது (3) 11.37: தற்கொலை செய்தவருக்கு, (ஜனாஸா) தொழுகையைக் கைவிட்டது (1) 12.00: பல வகை வள வரிகள் (5) 12.01: பத்து சதவீத ஸகாத்; அல்லது ஐந்து சதவீத ஸகாத் (1) 12.02: ஒரு முஸ்லிம் மீது அவர்தம் அடிமைக்காகவும் குதிரைக்காகவும் ஸகாத் கடமை இல்லை (3) 12.03: ஸகாத்தைச் சமர்ப்பிப்பதும் ஸகாத் கொடுக்க மறுப்பதும் (1) 12.04: பெருநாள் தர்மமாகப் பேரீச்சம் பழம், பார்லி (10) 12.05: பெருநாள் தொழுகைக்கு முன்பே பெருநாள் தர்மத்தை வழங்க கட்டளை (2) 12.06: ஸகாத் வழங்க மறுப்பது குற்றமாகும் (4) 12.07: ஸகாத் வசூலிப்பவர்களிடம் கனிவுடன் நடந்துகொள்வது (1) 12.08: ஸகாத் வழங்காதவருக்கான கடும் தண்டனை (2) 12.09: தர்மம் செய்வதற்கு ஆர்வமூட்டல் (2) 12.10: செல்வத்தைச் சேமித்தோர் பற்றிய கண்டனம் (2) 12.11: தர்மம்: ஆர்வமூட்டலும் நற்கூலி உண்டு என்ற நற்செய்தியும் (2) 12.12: செலவழிப்பதன் சிறப்பும் வழங்காதவனின் பாவமும் (4) 12.13: தமக்கும், குடும்பத்தாருக்கும், உறவினர்களுக்குமாக செலவிடுதல் (1) 12.14: இணை வைக்கும் உறவுகளுக்குச் செலவழிப்பதன் சிறப்பு (8) 12.15: இறந்தவருக்காகத் தர்மம் செய்தல் (1) 12.16: எல்லா நல்லறமும் ஸதகா எனப்படும் (5) 12.17: அறவழியில் செலவு செய்பவரும் செய்யாதவரும் (1) 12.18: தர்மம் செய்வதற்கு ஆர்வமூட்டல் (5) 12.19: தர்மம் (இறைவனிடம்) ஏற்கப்படுவதும் வளர்வதும் (3) 12.20: இன் சொல்லையேனும் தர்மம் செய்து நரகத்திலிருந்து பாதுகாப்பு பெறல் (5) 12.21: தர்மத்தின் அளவில் குறை காண தடை (1) 12.22: பாலுக்காக இரவல் வழங்கப்படும் கால்நடைகளின் சிறப்பு (2) 12.23: வள்ளலுக்கும் கஞ்சனுக்குமான உதாரணம் (3) 12.24: உரியவருக்குத் தர்மம் சேரவில்லையேனும் பலன் (1) 12.25: உரிமையாளரின் அனுமதியுடன் தர்மம் செய்தவருக்கும் பலன் (3) 12.26: ஓர் அடிமை தன் உரிமையாளரின் செல்வத்திலிருந்து (அறவழியில்) செலவழித்தல் (3) 12.27: தர்மத்தையும் இதர நற்செயல்களையும் இணைத்துச் செய்தவர் (3) 12.28: அறவழியில் தாராளமாக செலவிடலும் கணக்கு பார்ப்பது விரும்பத்தக்கதல்ல என்பதும் (3) 12.29: சிறிய அளவு தர்மம் (1) 12.30: இரகசியமாகத் தர்மம் செய்வதன் சிறப்பு (1) 12.31: மிகச் சிறந்த தர்மம் (2) 12.32: சிறந்த கை (4) 12.33: யாசிப்பதற்குத் தடை (3) 12.34: ஏழை என்பவன், அடிப்படைத் தேவைகளுக்குப் போதிய பொருளாதாரம் இல்லாதவன் (2) 12.35: மக்களிடம் யாசிப்பது வெறுக்கப்பட்டதாகும் (6) 12.36: யாருக்கு யாசிக்க அனுமதி? (1) 12.37: எதிர்பார்ப்பு இல்லாமல், யாசிக்காமல் வாழ்பவருக்கு வழங்கப்பட்டால் பெற்றுக்கொள்ளலாம் (4) 12.38: உலகாதாயத்தின் மீது பேராசை கொள்வது விரும்பத் தக்கதன்று (2) 12.39: இரு ஓடைகள் இருந்தாலும் மூன்றாவது ஓடையை எதிர்பார்த்தல் (4) 12.40: வாழ்க்கை வசதிகள் அதிகமாக இருப்பது செல்வமன்று (1) 12.41: இவ்வுலகத்தின் கவர்ச்சி குறித்து அஞ்சுதல் (3) 12.42: சுயமரியாதை மற்றும் பொறுமையின் சிறப்பு (1) 12.43: போதுமான வாழ்வாதாரமும் போதுமென்ற மனமும் (4) 12.44: அருவருப்பாகப் பேசி, கடுஞ் சொற்களால் கேட்டவருக்கும் தானம் வழங்குவது (4) 12.45: இறைநம்பிக்கை, (வறுமையால்) கேள்விக்குள்ளாக்கப்படுபவருக்கு உதவுதல் (1) 12.46: இஸ்லாத்தை ஏற்றவர்களுக்கு வழங்கலும் இறை நம்பிக்கை வலுவானவர் பொறுமை கொள்ளலும் (8) 12.47: காரிஜிய்யாக்களும் அவர்களின் தன்மைகளும் (10) 12.48: காரிஜிய்யாக்களைக் கொல்லுவதற்கு ஊக்கப்படுத்துதல் (4) 12.49: காரிஜிய்யாக்கள் படைப்பினங்களிலேயே தீயவர்கள் ஆவர் (3) 12.50: தூதரின் குடும்பத்தார் ஸகாத் பெறுவதற்குத் தடை (6) 12.51: நபி (ஸல்) குடும்பத்தாரைத் தர்மப் பொருட்கள் வசூலிக்கப் பயன்படுத்தலாகாது (1) 2.26: அசுத்தமான கையைப் பாத்திரத்தில் நுழைத்தல் (2) 2.25: ஒருநாள் தொழுகைகளை ஒரு உளூவில் தொழ அனுமதி (1) 2.24: காலுறையில் மஸஹு செய்து தொழுவதற்கான வரம்பு (1) 2.23: முன் தலை மற்றும் தலைப்பாகை மீது மஸஹு செய்தல் (4) 2.22: காலுறையில் மஸஹு செய்தல் (9) 2.21: தண்ணீரால் கழுவித் துப்புரவு செய்தல் (3) 2.20: மலம் கழிப்பதற்குத் தடையுள்ள இடங்கள் (1) 2.19: செயல்களை வலப் புறமிருந்து தொடங்குதல். (2) 2.18: வலக் கரத்தால் கழுவத் தடையானவை (3) 2.17: கழிப்பிடத்தில் துப்புரவு செய்தல் (7) 2.16: இயற்கை மரபுகள் (8) 2.15: பல் துலக்குதல் (7) 2.14: சிரமகாலங்களிலும் முழுமையாக ஒளு செய்வதன் சிறப்பு (1) 2.13: உளூவில் தண்ணீர் படும் இடங்களில் ஒளி படர்தல் (1) 2.12: உளூவில் உறுப்புகளை அதிகப்படுத்திக் கழுவுதல் (6) 2.11: உளூ செய்த நீரோடு வெளியேறும் பாவங்கள் (2) 2.10: உளூவில் உறுப்புகள் முழுவதும் கழுவுதல் (1) 2.09: இரு கால்களையும் முழுமையாகக் கழுவுதல் கட்டாயம் (6) 2.08: சுத்தம் செய்யும் போது ஒற்றைப்படையாக செய்தல் (5) 2.07: நபி (ஸல்) அவர்கள் செய்த அங்கத் தூய்மை (உளூ) (2) 2.06: அங்கத் தூய்மை (உளூ) செய்தபிறகு ஓதப்படும் பிரார்த்தனை (1) 2.05: சிறு பாவங்களுக்கான பரிகாரங்கள் (3) 2.04: அங்கத்தூய்மையின் சிறப்பும் அதன் பின் தொழுவதன் சிறப்பும் (9) 2.03: அங்கத் தூய்மை (உளூ) செய்முறையும் அதை நிறைவாகச் செய்வதும் (2) 2.02: தொழுகைக்குக் கட்டாயமான (அங்கத்) தூய்மை (2) 2.01: அங்கத்தூய்மை(உளூ)யின் சிறப்பு (1) 1.96: மறுமையில் ஆதம்(அலை) அவர்களுக்கு இடப்படும் கட்டளை (1) 1.95: சொர்க்கவாசிகளில் பாதிபேர் (3) 1.94: விசாரணையோ வேதனையோ இன்றி சொர்க்கம் செல்வோர் (7) 1.93: நட்பு கொள்ளத் தக்கவர்களும் தகாதவர்களும் (1) 1.92: இறைமறுப்பாளரின் நற்செயல்கள் பலனளிக்காது (1) 1.91: நரகவாசிகளிலேயே மிகக்குறைவான வேதனை அனுபவிப்பவர். (4) 1.90: அபூதாலிபுக்காக நபி(ஸல்) அவர்களின் பரிந்துரை (3) 1.89: நெருங்கிய உறவினருக்கு எச்சரிக்கை செய்தல் (5) 1.88: இறைமறுப்பாளருக்கு எந்தப் பரிந்துரையும் பலனளிக்காது (1) 1.87: தம் சமுதாயத்தார் மீது நபி(ஸல்) அவர்களுக்குள்ள பரிவு (1) 1.86: நபி(ஸல்) அவர்களின் பரிந்துரைப் பிரார்த்தனை! (8) 1.85: சொர்க்கத்திற்காகப் பரிந்துரைக்கும் முதல் மனிதர் (4) 1.84: சொர்க்கவாசிகளுள் ஆகக் குறைந்த பதவி (14) 1.83: இறுதியானவராக வெளியேறும் நரகவாசி. (3) 1.82: ஷஃபாஅத்(பரிந்துரை) செய்யப்படுபவர்கள் (2) 1.81: இறைவனைக் காணும் வழிமுறை (3) 1.80: இறைவனைக் காண்பதற்கான சான்று (2) 1.79: அல்லாஹ்வின் பார்வை பற்றிய விளக்கம் (2) 1.78: மிஃராஜின் போது நபி(ஸல்) கண்டது பற்றிய விளக்கம் (2) 1.77: நபி(ஸல்) அவர்கள் இறைவனைப் பார்த்தார்களா? என்பது பற்றிய விளக்கம் (5) 1.76: சித்ரத்துல் முந்தஹா(இலந்தை மரம்) பற்றிய குறிப்பு! (4) 1.75: ஈஸா(அலை) மற்றும் தஜ்ஜால் பற்றிய குறிப்புகள் (6) 1.74: விண்ணுலகப் பயணமும் தொழுகை கடமையாக்கப்படலும் (12) 1.73: வேத வெளிப்பாடு (வஹீ) தொடங்குதல் (3) 1.72: இறை நம்பிக்கை ஏற்கப்படாத காலகட்டம் (5) 1.71: ஈசா(அலை) இஸ்லாமிய நெறிப்படி நீதி வழங்குதல் (6) 1.70: தூதுத்துவம் உலக மக்கள் அனைவருக்கும் பொதுவானது (3) 1.69: இறைச்சான்றுகள் மூலம் மன அமைதி (1) 1.68: ஒருவரை இறைநம்பிக்கையாளர் என்று முடிவு செய்தல் (2) 1.67: அச்சநேரத்தில் இறைநம்பிக்கையாளர் நிலை (1) 1.66: இறுதிக் காலத்தில் இறை நம்பிக்கை (அற்றுப்) போய் விடுவது. (2) 1.65: இஸ்லாத்தின் மீளெழுச்சி. (3) 1.64: உள்ளங்களில் குழப்பங்கள் தோன்றுவது. (2) 1.63: குடிமக்களைச் சுரண்டும் ஆட்சியாளன் நரகத்திற்குரியவன் ஆவான். (3) 1.62: செல்வத்தைக் காக்கப் போராடியவர் மற்றும் பிறர் செல்வத்தைப் பறிக்க முனைந்தவர் (2) 1.61: மாற்றாரின் பொருளைக் கைப்பற்றுபவர் நிலை. (5) 1.60: இறைநம்பிக்கையில் தடுமாற்றம் ஏற்பட்டால்.. (8) 1.59: நல்ல-தீய எண்ணங்களுக்கான கூலி (5) 1.58: தீய எண்ணங்களைச் செயல்படுத்தாமல் இருத்தல் (2) 1.57: தாங்க முடியாத சுமை? (2) 1.56: இறை நம்பிக்கையின் வாய்மையும் தூய்மையும் (1) 1.55: இறைமறுப்பாளராக இருந்தபோது செய்த நல்லறங்கள் (3) 1.54: முன் செய்த பாவங்கள் (2) 1.53: அறியாமை காலத்தில் செய்த தீமைகள் (2) 1.52: இறைநம்பிக்கையாளரின் அச்சம் (1) 1.51: குழப்பங்கள் தோன்றுவதற்கு முன் நற்செயல் புரிய விரைதல் (1) 1.50: மறுமை நெருங்கும் வேளையில் வீசும் காற்று (1) 1.49: ஹிஜ்ரத்தில் தற்கொலை செய்து கொண்டவரின் நிலை (1) 1.48: கையாடல் செய்பவரும் இறைநம்பிக்கையாளரும் (2) 1.47: தற்கொலை செய்பவரும் கட்டுப்பட்டு வாழ்பவரும் (7) 1.46: மூன்று பெரும் தவறான செயல்கள் (4) 1.45: புறங்கூறுவது வன்மையாகத் தடை செய்யப் பட்டது (3) 1.44: துக்க வேளைகளில் தடை செய்யப்பட்ட செய்கைகள்! (3) 1.43: முஸ்லிம்களை வஞ்சித்தவர் நிலை! (2) 1.42: முஸ்லிம்களுக்கு எதிராக ஆயுதம் ஏந்தியவர் நிலை! (3) 1.41: “லா இலாஹ இல்லல்லாஹ்” கூறியவரைக் கொல்லத்தடை! (4) 1.40: இணைவைத்தலின் விளைவுகள் (5) 1.39: தற்பெருமை (3) 1.38: பெரும் பாவங்கள் (5) 1.37: பாவங்களில் மிகவும் அருவருப்பானது (2) 1.36: நற்செயல்களில் சிறந்தது (6) 1.35: தொழுகையை விடுதலும் குஃப்ரும் (3) 1.34: இறைநம்பிக்கை குறைவும் குஃப்ர் எனும் சொல்லும் (1) 1.33: அன்ஸாரிகளையும் அலி(ரலி)யையும் நேசித்தல் (6) 1.32: மழையும் இறைமறுப்பும் (4) 1.31: ஓடிப்போன அடிமை (3) 1.30: இறைமறுப்பின் அடையாளங்கள் (1) 1.29: இறைமறுப்பாளர்களாய் மாறுதல் (2) 1.28: முஸ்லிமோடு போரிடுதல் (1) 1.27: தந்தையை வெறுப்பவன் நிலை (4) 1.26: முஸ்லிமை நோக்கி காஃபிர் என அழைத்தல் (2) 1.25: நயவஞ்சகனின் குணங்கள். (3) 1.24: இறைநம்பிக்கையில் குறைவு ஏற்படல் (2) 1.23: மார்க்கம் என்பதே நலன் நாடுவதுதான். (4) 1.22: இறைநம்பிக்கையாளர்களை நேசித்தல் (1) 1.21: இறைநம்பிக்கையில் ஏற்படும் ஏற்றத் தாழ்வு (9) 1.20: நன்மையை ஏவுதல், தீமையைத் தடுத்தல் (2) 1.19: நல்லவற்றிற்கு ஆர்வமூட்டுதல் (3) 1.18: அண்டை வீட்டாருக்குத் தொல்லை தரக் கூடாது (1) 1.17: தமக்கு விரும்வுவதைச் சகோதரனுக்கும் விரும்புதல் (2) 1.16: தூதரை நேசிப்பது கடமை (2) 1.15: இறைநம்பிக்கையின் இனிமை (2) 1.14: இஸ்லாம் கூறும் நல்லறங்களில் சிறந்தது (4) 1.13: இஸ்லாத்தின் அனைத்துப் பண்புகளின் கலவை (1) 1.12: இறைநம்பிக்கையின் கிளைகள் (5) 1.11: இறைநம்பிக்கையைச் சுவைப்பவர் (1) 1.10: ஓரிறை கோட்பாட்டில் மரணித்தவர் நிலை (11) 1.09: இணை வைத்த நிலையில் மரணித்தவர் நிலை (3) 1.08: ஜிஸ்யா செலுத்தாதவர் மீது போர் புரிதல் (6) 1.07: இஸ்லாத்தை ஏற்க அழைப்பு விடுத்தல் (2) 1.06: அறியாதவர்களுக்கு அறிவித்தல் (4) 1.05: இஸ்லாமியக் கடமைகள் (4) 1.04: சொர்க்கம் செல்பவர் (7) 1.03: இஸ்லாத்தின் தூண்கள் (2) 1.02: தொழுகை பற்றிய விளக்கம் (2) 1.01: இறைநம்பிக்கை குறித்த விளக்கம் (7)
போன வருசம் மாதிரி ஒரு கேவலமான வருசத்தை 2012க்கு அப்புறம் நான் அனுபவிக்கவேயில்லை. “ஊதியம் இல்லாமல் ஊளியர்கள் உயிர் ஊசல்…….” ரேஞ்சுக்கு கம்பெனி இருந்துச்சு. இந்த நாரப்பய வருசத்தை பல்லக் கடிச்சிக்கிட்டு எப்படியாவது கடந்திடனும்னு சூழுரை எடுத்து, வருசத்தோட கடைசி நாள்ல காரித்துப்பி அனுப்ப காத்துக்கிட்டு இருந்தேன். புது வருசத்தை வரவேற்பதை விட 2021 முடியப்போகுற சந்தோசம், பொண்டாட்டிய இந்தியாவுக்கு அனுப்பிவைக்கும் போது ஏற்படும் ஆனந்தத்தை விட அதிகமா இருந்துச்சு. டிசம்பர் 31, பால்கனியில் இருந்து புர்ஜ் கலிபாவில் புது வருச வரவேற்பு வானவேடிக்கைகளை பார்த்துவிட்டு, பக்கத்து வீட்டு பால்கனிய பார்த்து “ஹேப்பி நியு இயர் ஆண்டி” ன்னு சொன்னேன். பதில் வரலியேன்னு உத்துப் பார்த்தா….. நாலு வேட்டி கட்டுன வெரும்பயலுங்க. ஸோ ஸேட், ஒரு ஹேப்பி நியு இயர் வேஸ்டாப்போச்சு. நைட்டு புல்லா 2021, கக்கத்துல கன்னி வெடி வச்சது, பாதையில பள்ளம் வெட்டிவச்சது, அம்மணமாவுட்டு ஆசிட் அடிச்சதுன்னு…. நானும் என்னோட நண்பரும் நினைவுகூர்ந்து கொண்டே இருந்தோம். ஜனவரி 1, அதிகாலை 11 மணிக்கு தூங்கிக்கிட்டு இருக்கும்போது கத்துன போனை காதுகிட்ட வச்சி “ஹலோ”ன்னு சொன்னேன். தெரிஞ்சவரோட அப்பா இறப்பு செய்தி. முதல் நாள், முதல் போன் கால், முதல் செய்தி. “சிறப்பு”. ரெண்டு மணி நேரம் கழிச்சு வாட்ஸ் அப் வாய்ஸ் மெசேஜ், பிரண்டோட அம்மா இறப்பு செய்தி. அடுத்து வெங்காயம் வெட்டும் போது விரல்ல கத்தி குத்து. சில பல மி.லிட்டர் பிளட் பிளீடிங். ‘’என்ன ரத்தக் காவெல்லாம் வாங்குது?, ஆங்க்… ஒரு சிறந்த வருசம்னா சில தடங்கள்கல் இருக்கத்தான் செய்யும்’’னு நானே சாமாதானப் பட்டுக்கிட்டேன். இதன்ன பெரிய பிரமாதம், இதவிட ஒரு ஸ்பெசல் ஐட்டம் ஒன்னு இருக்குன்னு ஒரு தோணல் இருந்துக்கிட்டே இருந்துச்சு. அன்னிக்கு நைட்டு தூங்குற வரைக்கும் வேற ஒன்னும் நடக்கல (முதல் நாள்ல இதுக்கு மேல என்ன நடக்கவேண்டியிருக்கு?). ஜனவரி 2, ஆபிஸ் போய் பன்ச் பண்னிட்டு, கம்யூட்டர் ஓப்பன் பண்ணினா HR ல இருந்து மெயில் வந்திருஞ்சு. ‘’ஹேப்பி நியு இயர்’’ அனுப்பி இருக்கானுங்கன்னு நம்பி ஓப்பன் பண்ணுனேன். “தாங்கள் கடந்த நாலு வருசமா புடுங்குனத, நாங்க நாற்பது பேரைக்கொண்டு அள்ளிக்கிட்டு இருக்கோம். இதுக்கு மேல முடியாது. வெளிய போடா அயோக்கிய ராஸ்கல்” ன்னு மெயில் அனுப்பி இருந்தாங்க. ஓ இது தான் அந்த ஸ்பெசல் அய்ட்டமான்னு மிரண்டு போய்யிருந்தேன். ‘இந்த கம்பேனிக்காக நீங்க எவ்வளவு கஷ்டப்பட்டீங்க, உங்களப் போயி தூக்கிட்டானுங்களே?’ ன்னு எல்லோரும் துக்கம் விசாரிக்க கண்ணுல தண்ணிவச்சிண்டு வந்துட்டா. ஆனா மனசுக்குள்ள பூராப் பயலுங்களுக்கும் ‘குமுதா ஹேப்பி அண்ணாச்சி’ தான். லெட்டர் குடுத்த அடுத்த 2 நாள், கம்யூட்டர தட்டுரது, பிரிண்டர் மிசின்கிட்ட நின்னு பிரிண்ட் எடுத்து அடுக்கி வைக்கிறது, வலது கையால சாப்பிட்டுகிட்டே இடது கையால கீ போர்டுல டைப் பண்ணுறதுன்னு பேய் மாதிரி வேலை பார்த்தேன். இத பார்த்துட்டு என்னோட மேனஜரே பாலகிருஷ்னா டபுள் ஆக்ட் பண்ணின படத்த பார்த்தமாதிரி மிரண்டு போய் நின்னாரு. எங்கிட்ட வந்து ‘அதுதான் தம்பி ஒரு மாசம் நோட்டீஸ் பிரியட் இருக்குல்ல, எல்லா வேலையையும் ஒரே வாரத்துல முடிச்சிட்டா எப்படி?’ன்னு கேட்டாரு. ‘’எதே….. வேலையா? யோவ் நான் ரெசூம் ரெடிபண்ணி பிரிண்ட் அவுட் எடுத்துக்கிட்டு இருக்கேன்’’ன்னு சொல்லலாம்னு தோனுச்சு, பட் அந்த மனுசனோட நெனப்புல எதுக்கு மண் லாரிய ஏத்தனும்னு “இது என்னோட கடமை, என்னய தடுக்காதீங்க”ன்னு சொல்லிட்டேன். நம்பிட்டான். இவனெல்லாம் ஒரு மேனஜரா?ன்னு உங்களுக்கு தோனுதுல்ல, இத நான் பலதடவ சொல்லியிருக்கேன் இருந்தும் 4 வருசம் வச்சியிருந்தானுங்க. புதுவருசம் ஆரம்பிச்ச கையோட துபாயில கொரோனா கேஸ் எண்ணிக்கை அதிகமாகிடுச்சு. கம்பெனியில பாதிப் பேருக்கு காய்ச்சல், இருமல். ஆபிஸுக்கு வந்தாலே ஏதோ கொரோனா வார்டுக்குள்ள வந்த பீளிங்க். கம்பெனி ‘’பூராப்பயலும் டெஸ்ட் எடுக்கனும்’’னு சொல்லிடுச்சு. யானையே எதிர்ல வந்தாலும் ஏறி அடிப்பாண்டா இந்த யாசிர்ன்னு சிறு இருமலுடன் இருமாப்போடு இருந்தேன். கங்குராச்சுலேசன்….. உங்களுக்கு கொரோனான்னுட்டானுங்க. அடுத்த பத்து நாள் ஆரும் இவங்கூட அன்னந்த் தண்ணி பொழங்கக்கூடாது, அத மீறினா அவுங்களு பத்து நாள் கோரண்டைன் இருந்துட்டு வரணும், நீதிடா, நேர்மைடா, ஞாயம்டா…..ன்னு கம்பெனி சொல்லிடுச்சு. போனை கீழ வைக்க முடியல, கருணை மனுவோட எல்லோரும் கால் கடுக்க லைன்ல நின்னானுங்க. போன் பண்ணவன் எல்லாம் “அது எப்படி பாய், உங்களுக்கு பாஸிட்டிவ் வந்திருக்கு, ஆனா செகரட்ரிக்கு நெகட்டிவ் வந்திக்கு?”னு கேட்குறான். இன்னொருத்தன் “கம்பெனிய விட்டு போகும் போது, எல்லாத்தையும் கேண்ட் ஓவர் பண்ணனும், செகரட்ரிய யாருட்ட கேண்ட் ஓவர் பண்ண போறீங்க?’’ன்னு கேட்குறான். புருஞ்சுபோச்சு இவனுங்க இந்த உலகத்துக்கு ஏதோ சொல்ல வாரானுங்க. கோரண்டைன்ல நேரம் போகனுமேன்னு ராஜ வம்சம்னு ஒரு படம் பார்த்தேன். கொரோனால செத்திருவோமோன்னு பயந்த எனக்கு, தற்கொலை பண்ணிக்கலாம்னு தோணிடுச்சு. சரி போகுற உசிரு கொரோனாவுலேயே போகட்டும்னு முடிவு பண்ணி, கொம்பு வச்ச சிங்கமடா, அன்பறிவு……படங்களை தவிர்த்திட்டேன். கோரண்டைன் முடிஞ்சு பல எதிர்பார்ப்போடு ஆபிஸ் போனேன், அந்த செகரட்டரிகிட்ட என்ன சொன்னானுங்களோ தெரியல, நான் சொன்ன “குட் மார்னிங்”, ஈவினிங் வரை அனாதயா கெடந்துச்சு. கேண்ட் ஓவர், கேண்ட் ஓவர்னு பேசுனானுங்க இப்ப அவனுங்களே டேக் ஓவர் பண்ணி டேங்கர் லாரிய ஓட்டிக்கிட்டு இருக்கானுங்க, ப்ளடி 5மாச சம்பள பாக்கி கம்பெனி எம்ப்ளாயர்ஸ். என்னடா இந்த 2022 போர்பிளே பண்ணாம நேர டாங்கி ஸ்டைல்லுக்கு போகுதேன்னு அப்பப்ப ஒரே மிரட்சியா இருக்குது. இதுக்கு 2021ன்னே பரவாயில்லை. தமிழ்ல ஒரு கதை இருக்கு ‘’முன்னாடி இந்தியாவ மைக்மோகன் சிங்குன்னு ஒரு மன்னன் ஆண்டு வந்தாராம், அவர எல்லோரும் மோசம் மோசம்னு திட்டுனாங்களாம்……………………’’ சரி விடுங்க டைம் வேஸ்ட். பை த பை எனக்கு 2012ல கல்யாணம் ஆச்சு. ---------------------------------------------------------------------------------------------யாஸிர் அசனப்பா. இடுகையிட்டது யாஸிர் அசனப்பா. நேரம் பிற்பகல் 4:49 3 கருத்துகள்: இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Twitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர் வியாழன், பிப்ரவரி 08, 2018 தண்டபானியும் நியூ இயர் பார்ட்டியும். 2007 பெங்களூர்ல வேலை பார்த்த போது, எங்க கம்பெனியில ஒரு ஸ்டோர் இன் சார்ஜ் இருந்தார். தண்டபானியோ, தண்டாயுதபானியோன்னுதான் அவரோட பெயர், நாம தண்டபானின்னு பிக்ஸ் பன்னிக்குவோம். வயசு 35 மேல இருந்தாலும் 25 வயசுன்னு சொல்லிக்கிட்டு திரியுவாரு. நாங்களும் நம்புற மாதிரியே நடிப்போம். நடிச்சுத்தான் ஆகனும், ஏன்னா? எங்களுக்கெல்லாம் கதை சொல்லுற ஒரே ஜீவன் (24 வயசுல என்ன கதைய கேட்டிருப்போம், அந்த கதைதான்). ஆளு பாக்குறதுக்கு அச்சு அசல் ‘’தல நம்ம பூச்சுப் பாண்டிய அந்த கட்டத்துர ஆளுங்க அடிக்குறாங்க’’ன்னு வின்னர் படத்துல வடிவேலுக்கு ஓப்பனிங் கொடுக்குறவன் மாதிரியே கருப்பா குள்ளமா இருப்பாரு. புதுசா ஒரு சைட் ஆரம்பித்த நேரம், ஆள் இல்லாததால, எல்லாருக்குமே ரெண்டு, மூனு வேலை கூடுதலா இருந்துச்சு. ஆபிசில் இருப்பவன் சைட்டையும் பார்க்கனும், சிலருக்கு சைட் வேலையும் பார்த்துட்டு வாடகைக்கு வீடு தேடனும்.....இப்படி பல இருந்துச்சு. அப்படி அடிசனல் வேலையா தண்டபானிக்கு அக்கவுண்ட்ஸ் வேலைய கொடுத்தாங்க. அந்த கம்பெனியில இஞ்சினியருக்கு மெஸ் சைட்டுலேயே இருந்துச்சு. மெஸ்ஸோட வரவு, செலவு கணக்கு எல்லாத்தையும் தண்டபானி வச்சிருந்தாரு. மெஸ்ஸ ஒரு தென்காசிக்கார பாய் வச்சிருந்தாரு. மெஸ்ஸுல ஒரு பொண்ணு வேல செஞ்சுச்சு அத இந்த ரெண்டு பேரும் .......................... அப்போ, இண்டெர் நெட் பார்க்க ஒரு மணி நேரத்துக்கு 50 ரூபாய். சி.டி வாங்கினா வாடகை 75 ரூபாய், ஆனா, தண்டபானி சொல்லுற கதைக்கு மட்டும் காசே இல்ல, சில சமயம் அவரே டீ வாங்கிக்கொடுத்து கத, கதையா சொல்லுவாரு. ‘’ஒரு தடவ ரானி மேரி காலேஜ் பொண்ணு என்னயவே லுக் உட்டுச்சு, பத்து நிமிசத்துல பிக்கப் பண்ணி, ஒரே வாரத்துல ‘’ப்ப்பிஷ்க்’’ ‘’னு சொல்லி வெட்டுற மாதிரி கையால சைகை செய்வாரு (அதாவது சோலிய முடிச்சுட்டாராமா). நான் சொல்லுறது ஒன் லைன், இந்த ஒன் லைன மூனு நாளா விருச்சு வெளா வெரியா சொல்லுவாரு. நாங்க வேற ரொம்ப காஞ்சி போயி இருந்தமா, அதனால் கண்ண விருச்சு எச்சிய முழுங்க முடியாம முழுங்கி ஒரு மாதிரியான போதையில அந்த காவியத்த கேட்போம். ‘’போன வாரம் பெங்களூர் வரும்போது பஸ்ஸுல .......’’ன்னு ஆரம்பிச்சா ‘’தெய்வமே போது தெய்வமே, இதே ஒரு மாசத்துக்கு தாங்கும்’’னு கும்பிடு போட்டு போவோம். மேனஜர் ரூமுக்கும், தண்டபானி இருக்கும் ஸ்டோருக்கும் ஒரு 300 அடி தூரம் இருக்கும். மேனஜர்கிட்ட டெய்லி ஸ்டாக் ரிப்போர்ட் காட்டி கையெழுத்து வாங்கனும். கையெழுத்து வாங்க வரச் சொல்லி போன் பண்ணினா அரை மணி நேரம் தாமதமாகத்தான் வருவாரு. இப்படி லேட்டா வர்றதுக்கு டெய்லி திட்டு வாங்குவாரு ‘’நடந்து வர்றதுக்கு கொஞ்சம் நேரமாகிடுச்சு சார்’’னு காரணம் சொல்லுவாரு. ‘’அப்ப நாளையில இருந்து ஓடி வா’’ன்னு மேனஜர் சொல்லிட்டாரு. மறுநாள் ஓடி வந்த வேகத்தில் மேல் மூச்சு, கீழ் மூச்சு வாங்கிய படியே கையெழுத்து வாங்குனாரு. அன்னைக்கு மேனஜர் திட்டல, கையெழுத்தெல்லாம் போட்ட பின்னாடி ‘’நீ இனிமே ஓடியெல்லாம் வரவேண்டாம், நடந்து வந்தாலே போதும்’’ னு சொன்னாரு. தண்டபானிக்கு, நம்ம கடமை உணர்ச்சிய பார்த்துத்தான் அப்படி சொன்னாருன்னு நெனச்சி முடிக்கிறதுக்குள்ள ‘’ஓடி வந்தா கூட 15 நிமிசம் ஆகுது, அதுதான் நடந்தே வான்னு சொன்னேன்’’ன்னு மேனஜர் சொல்லிட்டாரு. இப்படி நிறைய அசிங்கப்பட்டாலும் ‘’ஹேய் ஹலோ நேத்து அசிங்கப்படுத்த வாரேண்டு வரவேயில்ல’’ந்னு தில்லா சொல்லுற ஆளு. மெஸ் ஆரம்பிக்குறதுக்கு முன்னாடி, சைட்டுக்குப் பக்கத்துல ஒரு சின்ன ஹோட்டல் இருந்துச்சு. அங்க ரெண்டு பருவ பொண்ணுங்கதான் சப்ளை செய்யும். ஒரு நாள் சாப்பிட போன போது ‘’வாங்க அங்கிள்? என்ன சாப்பிடுறீங்க அங்கிள்?’’ன்னு ஒவ்வொரு வார்த்தைக்கும் ஒரு அங்கிள் போட்டு பேசுச்சு. அன்னைக்கு சாப்பாடு தொண்டைக்கு கீழ இறங்கல. 24 வயசுல ஒரு 18 வயசு பொண்ணு நம்மள அங்கிள்ன்னு சொல்லிருச்சேன்னு நினைச்சு நினச்சு ரொம்ப பீல் பண்ணினேன். அதுக்கு அப்புறம் அந்த பக்கமே போகல, ஆனா தண்டபானி காலையில ‘டீ’யில இருந்து நைட் டின்னர் வரை அங்கதான்னு கேள்விப்பட்டு, நான் தண்டபானிக்கிட்ட ‘’24 வயசுக்காரன் என்னயையே அங்கிள்னு கூப்பிடுதே, அப்போ உங்கள என்னன்னு கூப்பிடும்?’’ன்னு கேட்டேன்’ அத கேட்டதும் அவருக்கு ரொம்ப கோபம் வந்திருச்சு. அதுனால எல்லோருக்கும் சொன்ன ‘’பரிமளா’’ கதைய எங்கிட்ட மட்டும் கடைசிவரைக்கும் சொல்லல. மெரினா பீச்சில், நியூ இயர் பார்ட்டிக்கு வந்த பொண்ண உசார் பண்ண கதைய சொன்னார். அதுக்கு முன்னாடி நாங்களும் நியூ இயர் பார்டி, டான்ஸ், அந்த மாதிரி, இந்த மாதிரின்னு நிரய கேள்விப்பட்டிருக்கிறோம், ஆனா போகுறதுக்கு பயம். தண்டபானி இந்த வருசம் உங்களுக்காக நான் இங்க இருக்குறேன், எல்லோரையும் எம்.ஜி.ரோடு கூட்டிக்கிட்டு போறேன்னு சொன்னாரு. அதிலிருந்து, ‘’எப்படா நியூ இயர் வரும், எம்.ஜி ரோடு போகலாம்’’ன்னு வெறியோடு இருந்தோம். நியூ இயருக்கு ரெண்டு மாசம் முன்னாடியே தண்டபானி தலமையில 8 பேர் கொண்ட குழு அமைச்சு, ‘’ஒவ்வொருத்தனயும் தாக்குறோம், கெடைக்கிற பொண்ணுங்கள தூக்குறோம்’’ந்னு சூழுரை எடுத்துக்கொண்டோம். நியூ இயர் பக்கத்துல வர வர ஒவ்வொருத்தனுக்கு ஆர்வம் பீரிக்கிட்டு வந்துச்சு, தண்டபானிக்கு மரியாதையும் கூடிக்கிட்டுப் போச்சு. எதிர்பாராத விதமா, நியூ இயருக்கு ரெண்டு நாளைக்கு முன்னாடி அவசர வேலையா நான் ஊருக்கு போகும்படியா ஆகிடுச்சு. உடல்தான் ஊருக்கு போச்சே ஒழிய மனசு பூரா எம்.ஜி.ரோட்டுலயே இருந்துச்சு. நியூ இயர் முடிஞ்சு சைட்டுக்கு போனேன். எவனையும் பார்க்க முடியல. அதே நேரத்துல நியூ இயர் பார்ட்டியில ஒரு பொண்னோட டிரஸ்ஸ உருவிட்டானுங்கன்னு கேள்விப்பட்டு, ரொம்ப ஆர்வத்தோட, நேரா ஸ்டோருக்கு போய் தண்டபானிய பார்த்து ‘’என்னாச்சு சார்? எப்படி இருந்துச்சு?’’ன்னு கேட்டு நச்சரிச்சேன். எப்போதும் உட்கார்ந்து வேலை பார்க்கும் த.பானி அன்னைக்கு நின்னுக்கிட்டே எல்லாத்தையும் எழுதிக்கொண்டிருந்தார். ‘’போயா அப்புறமா சொல்லுறேன்’’ ன்னு மாறி மாறி சொல்லி அனுப்பிவிட்டார். மதிய சாப்பாட்டில் ஒருத்தனை பிடித்து ‘’என்னடா எப்படி இருந்துச்சு, ஏதோ ஒரு பொண்ண டிரஸ்ஸ கழட்டிட்டானுங்களாமுள்ள’’ என கண்களை விரித்து கேட்டேன். ‘’அத எல்லாம் கேட்டியே, அதுக்கு அப்புறம் லத்தி சார்ஜ் பண்ணினத கேள்விப்பட்டியா?’’ந்னு எதிர் கேள்வி கேட்டுவிட்டு ‘’தண்டபானியா போய் பார்த்தியா?’’ன்னு கேட்டான். ‘’ஆமா, ஒன்னுமே சொல்லல, நின்னுக்கிட்டே வேலை செய்றாரு’’ன்னு சொன்னேன். ‘’எப்படி உக்காருவாரு, அதுதான் குண்டியிலேயே போட்டானுங்கள்ள’’ன்னு சொல்லி போலிஸிடம் அடிவாங்குன கதையை சொன்னான். மனசு கேட்காம தண்டபானிய போய் ஸ்டோரில் பார்த்தேன். பாவம் மனுசன் நின்னுக்கிட்டே சாப்பிட்டுக் கொண்டிருந்தார். ---------------------------------------------------------------------------------யாஸிர் அசனப்பா. இடுகையிட்டது யாஸிர் அசனப்பா. நேரம் பிற்பகல் 4:37 3 கருத்துகள்: இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Twitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர் வெள்ளி, டிசம்பர் 29, 2017 விவேகம் அட்ராசிட்டீஸ். இந்த படத்த பாக்குறதுக்கு முன்னாடி நான் அஜித்தின் ‘’தீவிர ரசிகன்’’னா இருந்தேன். இப்ப தீ போயி ‘’விர ரசிகனா’’ இருக்கேன் (எஸ், அந்த பயர் போயிருச்சு). இது பரவாயில்ல, அஞ்சிநேயா, ஜி, ஜனா.....ன்னு ஒரு காலம் இருந்துச்சு. அப்பெல்லாம் தீ, வி, ர என எல்லாம் போயி ‘’கன்’’ மட்டும் இருந்துச்சு. சுப்ரமணிய புரம் சித்தன் மாதிரி ஏதாவது கோவில் திருவிழா காண்ராக்ட் கெடக்காதான்னு தலயில துண்டு போட்டு காத்துக்கிட்டு இருந்தோம். வரலாறுன்னு ஒரு படம் வந்த பின்னாடி மறுபடியும் தீவிர ரசிகனா மீண்டு எழுந்தோம். எனக்கு, அஜித்தோட எல்லா படத்தையும் முதல் நாளே பாக்குறது வழக்கம் ஆழ்வார், அசல் பார்த்தபின்னாடி கூட அந்த எண்ணம் மாறல. விவேகம் படம் வருவதற்கு முன்னாடியே படம் ஹாலிவுட் ரேஜ்சுக்கு இருக்கும், தல அப்படி பண்ணியிருக்காரு, இப்படி பிண்ணியிருக்காருன்னு ரொம்ப ஓவரா ஊசுப்புனாய்ங்க. அடுத்து அனிரூத் ‘’சர்வேவா’’ பாடலை ரிலீஸ் பண்ணவுடனே ஒட்டுமொத்த தமிழ்நாடும் ‘’வ்வ்வ்வாவ் வாட்ட சாங்க்’’ன்னு சொல்லுச்சு. ஆனா எனக்கு ‘’**த்தா என்னடா சாங்கு இது’’ன்னு தோனுச்சு, அவ்வளவு இரச்சல். ஆனா அத வெளிய சொன்னா, சுத்தியிருக்குற எஸ்.பி.பி, ஜேசுதாஸ்கள் ‘’போடா, ஞான சூனியம்’’னு சொல்லுவானுங்க, எதுக்கு வம்புன்னு இருந்துட்டேன். அப்பவே முடிவு பண்ணிட்டேன் அஞ்சாநேயாவுக்கு ஒரு டஃப் கொடுக்கப் போறாய்ங்கன்னு. விவேகம் வந்த முதல் நாள், ரோட்டுல ஒருத்தன நாலு பேரு அடிக்கும் போது, அந்த வழியில போறவ, வாறவ எல்லாம் சைக்கிள நிப்பாட்டிட்டு வந்து அடிச்சிட்டுப் போறமாதிரி சோசியல் மீடியாவுல ஒன்னு கூடிட்டானுங்க. ‘’நான் அஜித் ரசிகன் இல்ல, அஜித்த புடிக்கும் அவ்வளவுதான்’’ அப்படின்னு சொல்லி தப்பிக்கலாம்னு பார்த்தேன். அதெல்லாம் கெடயாது ‘’பச்ச சட்ட போட்ட அடிப்போன்’’னு உறுதி மொழி எடுத்துட்டு வந்து கும்முனானுங்க. பதிலுக்கு நம்ம ஜாதிக்காரனுங்க புளு சட்ட, சாரு நிவேதிதான்னு ஓட்டர் லிஸ்டுல இருந்து பேர எடுத்து வன்முறை வெறியாட்டம் நடத்துனானுங்க. படம் ரீலிஸாகி ரெண்டு வாரம் கழிச்சு, தஞ்சாவூருக்கு ஃபிரண்ட் வீட்டுக்கு போயிருந்தேன். நண்பர் எதார்த்தமா ‘’நைட்டு படத்துக்கு போகலாமா?’’ ன்னு கேட்க, நானும் பதார்த்தமா ‘’விவேகத்துக்கு போகலாம்’’னு சொன்னேன். அவருக்கு ‘’ஏண்டா கேட்டோம்’’னு ஆயிடுச்சு பாவம். நைட்டு சாப்பிடும் போது நண்பரோட அம்மா, ‘’கூட ரெண்டு சப்பாத்திச்ச் வச்சுக்கப்பா’’ ‘’படத்துக்கு வேற போற, கூட ரெண்டு சப்பாத்திச்ச் வச்சுக்கப்பா’’ன்னு மருக்கா மருக்கா சொல்லுச்சு. அதுக்கு அர்த்தம் அப்ப புரியல, படம் பார்த்த பின்னாடிதான் புரிஞ்சுது. ‘’அடி வாங்குறதுக்கு உடம்புல தெம்பு வேணாமா’’ன்னு நேரடியா சொல்லி இருந்தா, கூட ரெண்டு இல்ல நாலு சப்பாத்தி சாப்பிட்டுருப்பேன். என்னா அடி. படம் வந்து ரெண்டு வாரமாகியிருந்தாலும் ஓரளவு கூட்டம் இருந்துச்சு. தியேட்டர சுத்தி தீனா குமார், பில்லா பாலா, வரலாறு வசந்த்...........ன்னு கொஞ்சப்பேரு பேனர், பிளக்ஸ் எல்லாம் வச்சிருந்தானுங்க. ஒரு லொல்லு சபா எபிசோட்டில், எம்.ஜி.ஆர் டபுள் ஆக்ட் படத்தில் ஒரு எம்.ஜி.ஆரா சந்தானமும், இன்னொரு எம்.ஜி.ஆரா மண்ட மனோகரையும் போட்டு, இவங்க ரெண்டு பேரும் ரெட்டப் பிறவி, பாக்குறதுக்கு ஒன்னுபோல இருப்பாங்கன்னு சொல்லியிருப்பானுங்க. அதுமாதிரி பிளக்ஸ்ல இது அஜித்தா இல்ல அவர் ரசிகர் விவேகம் வினோத்தான்னு சந்தேகம் வர்ர மாதிரி ரெண்டு பேரும் ராணுவ யூனிபார்மில் போஸ் கொடுத்திருந்தாங்க. படத்தப் பார்த்த பின்னாடியும், எப்படி அந்த பிளக்ஸ கழட்டாம இருக்கான்னு? எனக்கு ஒரே அசுவையா இருந்துச்சு. தியேட்டருக்குள்ள போனவுடனே தேசிய கீதம் போட்டானுங்க. எழுந்து நின்ன என்னப் பார்த்து ‘’எழுந்து நிக்கனுமா என்ன?’’ன்னு நண்பர் கேட்டார். ‘’சிவான்னு பேரு வச்சவங்களுக்கு எப்படின்னு தெரியல, ஆனா முஹம்மது யாசிர்னு பேர வச்சிக்கிட்டு நான் உக்கார்ந்திருக்க முடியாதுன்னு’’ சொல்லிட்டேன். இங்கிலீஷ் படமாட்டம் இருக்குன்னு எந்த அடிப்படையில சொன்னானுங்கன்னு தெரியல. அத நம்பி நாலு ‘’சீன்’’னாவது இருக்கும்னு நம்பி போனேன். ‘’ச்சீ’’ன்னு ஆயிடுச்சு. ஹாலிவுட் படத்துல ஹீரோ கோர்ட் சூட் போட்டு கவர் பண்ணி வருவாரு, ஹீரோயின் அவர கவர் பண்ணுறமாதிரி டிரஸ் போட்டுக்கிட்டுவரும். ஆனா, இந்த படத்துல அது உல்டா. கடைசி பைட்டுல அஜித் கழட்டி நிக்குறாரு, காஜல் அகர்வல் கழண்டு போய் நின்னுச்சு. ஒரு முத்த சீன், பயங்கர எதிர்பார்ப்போட இருந்தேன், தல அந்தப்புள்ள நெத்தியில முத்தம் கொடுத்து மொத்தத்தையும் கெடுத்துட்டாரு. படத்துல ஹீரோ பஞ்ச் பேசலாம் தப்பில்ல, ஆனா பேசுறது எல்லாம் பஞ்சா இருந்தா எப்படி தாங்கிக்குறது?. அதுவும் ரெண்டு சப்பாத்தி சாப்பிட்டு படத்துக்கு வர்ற கதி என்னவாகும்?னு எவனாவது யோசிக்கிறானா?. காஜல் கூட ‘’வாழ்க்கன்னா என்ன தெரியுமா?’’, ‘’குடும்பம்னா என்ன தெரியுமா?’’ ‘’குடும்ப கட்டுப்பாடுன்னா என்னன்னு தெரியுமா?’’ந்னு பாடம் எடுக்குது. ஒரு கட்டத்துல சுகி சிவம் நிகழ்ச்சிக்கு எதுவும் வந்திட்டமோன்னு டவுட் வந்திரிருச்சு. படத்துல ஒரே ஒரு ஆருதல் அக்ஷரா ஹாசன் தான். அது எப்படியோ டைரக்டருக்கு தெரிஞ்சு போச்சு, இண்டெர்வெல்லேயே அந்த கேரக்டர் சோலிய முடிச்சிட்டானுங்க. மற்ற படத்துலயெல்லாம், கதையை எழுதிட்டுத்தான் வசனம் எழுதுவானுங்க. இந்த படத்துல வசனம் எழுதிட்டு கதை எழுதியிருக்கானுங்க போல. வசனம் எல்லாம், டி.வி விவாத நிகழ்ச்சிகள்ல பி.ஜே.பிக்காரனுங்க பதில் சொல்லுற மாதிரியே ‘’இத எதுக்குடா இப்ப சொல்லுறானுங்க’’ந்னு இருந்துச்சு. அதுவும் கன் பாயிட்டுல 500 வெளிநாட்டு போலிஸ்கிட்ட மாட்டுனதுக்கு பின்னால ‘’இந்த உலகமே உன்ன பெயில் ஆயிட்டன்னு சொன்னாலும் நீ ரி வேலுவேசன் போட்டு பாஸாகுற வரக்கும் நெவர் எவர் கிவ் அப்’’ந்னு தமிழ்ல வசனம் பேசுவாரு. அவனுங்க டிக்ஸ்னரி எடுத்து அர்த்தம் பாக்குற கேப்புல இவர் பெரிய்ய்ய்ய்ய பாலத்துல இருந்து குதிச்சுருவாரு. கலகலப்பு படத்துல வர்றமாதிரி ‘’இதெல்லாம் நம்புற மாதிரியாங்க இருக்கு?’’ந்னு ஒருத்தன கேட்டேன். ‘’முதல்ல நானும் நம்பல, ஆனா இத நம்புனாத்தான் அஜித் ரசிகன்னு சொன்னாங்க, அதனால நானும் நம்பிட்டேன்’’னு சொன்னான். ‘’வாவ் வாட்ட ஜம்ப்’’ந்னு நானும் ஜம்ப் அடிச்சுட்டேன். பரபரப்பா வேல பாக்குறோம்ங்குற பேர்ல விவேக் ஓபராய் கும்பல் கத்துறத நிருத்துன உடனே, பேக் ரவுண்ட் மியூசிக்னு கதறவுடுரானுங்க. ‘’உங்க தம்பி பசுபதி நம்ம டீச்சர வச்சிருக்காருங்க’’ந்னு சொல்லி முடிக்குறதுக்குள்ள கவுண்டர் காதுல ‘’குய்ய்ய்ய்ய்’’ந்னு ஒரு சவுண்ட் வருமே அதே சவுண்டு கொஞ்சம் A+ ரத்தத்தோட சேர்ந்து வந்துச்சு. ஐஸ்வர்யா ராய உசார் பண்ணி வச்சிருந்த விவேக் ஓபராயா இப்படி ? ரொம்ப டெலிகேட் பொசிசன். படம் முடிஞ்சுதேன்னு எல்லோரும் ஒருவழியா வெளிய வந்தானுங்க, நான் மட்டும் ஒரே (உடல்) வலியா வந்தேன். அஜித்துக்கு அடுத்த படமும் சிவா கூடத்தானாம், இவனுங்க மறுபடியும் நம்மள ‘’கன்’’ல கொண்டுவந்து நிப்பாட்டாம அடங்கமாட்டானுங்க போலிருக்கு. வெயிட்டிங் பார் விஸ்வாசம் ---------------------------------------------------------------------------------யாஸிர் அசனப்பா. இடுகையிட்டது யாஸிர் அசனப்பா. நேரம் முற்பகல் 11:06 3 கருத்துகள்: இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Twitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர் செவ்வாய், ஜூலை 25, 2017 அவர் பீட்டி (P.T) வாத்தியார். எவ்வளவு அவசர வேலையாக வெளியே சென்றாலும் சரி, ஏதாவது ஒரு விளையாட்டுத் திடலைக் கண்டால் ஒரு நொடியாவது நம்முடய வேகம் தடைபடும். அங்கு யாராவது விளையாடினால், 5 நிமிடமாவது பார்க்கத் தோன்றும். அதுவும், நாம் விரும்பும் விளையாட்டு என்றால் ‘’ஸ்கோர் என்னாச்சு தல?’’ என்று கேட்டுவிட்டு நம்மை அறியாமலேயே அரை மணி நேரமாவது ரசித்து நிற்போம். எனக்கு, ஜித்தாவில் ரொம்ப பிடித்த விஷயமே ஒரு ஏரியாவில் குறைந்தது 4 புட்பால் திடலாவது இருக்கும். சாயங்காலங்களில் வயது வித்தியாசமே இல்லாமல் விளையாடிக் கொண்டிருப்பார்கள். உடல் எடையை குறைப்பதற்காக மாலை நேரங்களில் ஜாக்கிங்க் போகிறேன். போகும் வழியில் இருக்கும் கிரவுண்டில் அரபிக்காரர்கள் புட்பால் விளையாடுவார்கள். ‘’பார்ப்பதற்கே மனசுக்கு சந்தோஷ் சுப்ரமணியமா இருக்கே, கொஞ்ச நேரம் விளையாடினால் மனசு லேசா லேசாகுமே’’ என ஏங்கிய நாட்கள் உண்டு. அன்று, ஜாக்கிங்க் போகும் போது பந்து மைதானத்தை விட்டு பறந்து என் பக்கத்தில் வந்தது. பந்தை தூக்கிப் போடும்படி ஒரு அரபி பையன் சைகை காட்டினான். நானும் ரொம்ப சந்தோசமாக பந்தை உதைத்தப் பின், கால் ரொம்ப லேசாக இருந்தது. “அதெப்படி? மனசுதானே லேசாகனும்’’னு நீங்க யோசிப்பது புரிகிறது. பட், பறந்தது பந்து அல்ல என்னோட வலது கால் ஷு (SHOE). கடைசியில் நான் பந்தை கையில் எடுத்துக்கொண்டு போய் கொடுக்க, அவன் ஷுவை எத்தி தள்ளினான். அந்த வரலாற்று நிகழ்வுக்குப் பின்பு, அந்தப் பக்கம் எட்டிக்கூட பார்ப்பதில்லை. எல்லாப் பள்ளிகளிலும் மைதானம் இருக்கும் ஆனால் நான் 9 டு 12 வரை படித்த பள்ளிமட்டும்தான் மைதானத்திற்கு உள்ளே இருந்தது. எங்க விளையாட்டு வாத்தியார் பெயர் நெல்லை நாயகம். பல மாணவர்களோட ஆதர்ச நாயகன். எங்க செட்டிலும் சரி, எங்கள் முன்னாடி செட்டிலும் சரி +2 முடித்தபின்பு, குறைந்தது 4 மாணவர்களாவது விளையாட்டு வாத்தியாருக்கு (Physical Training) படித்தார்கள் என்றால் அது, இவருடய இன்ஸ்பிரேசனால் தான். பெரிய சைஸ் கடாயை கவுத்தி வைத்தது போல இருக்கும் அவர் வயிறு. சிம்பிளாகச் சொல்ல வேண்டும் என்றால், தும்பிக்கையில்லா புள்ளையார் மாதிரி இருப்பார். ஆனால், குனிந்து முட்டி மடங்காமல் கால் விரலைத் தொட்டு விடுவார். கெட்ட வார்த்தை பேசினால் அவருக்கு பிடிக்கவே பிடிக்காது, ஏனென்றால் அனைத்து கெட்டவார்த்தையையும் அவர் மட்டும்தான் பேசுவார். பாடங்களை முடிக்கவில்லை என்பதற்காக, பீட்டி வகுப்புகளை யாருக்கும் கொடுக்க மாட்டார். ‘’போன மாசம் எவனும் நல்லா விளையாடல, அதனால உங்க கிளாஸ தாங்கன்னா, உ கெமிஸ்ட்ரி வாத்தியான் தருவானால? பெற என்ன மயித்துக்கு அவனுக்கு நாங் குடுக்கனும்?’’ என்று கெத்தாக பேசக்கூடிய மனிதர். கெமிஸ்ட்ரி வாத்தியாருக்கு பீட்டி பிரியடை கொடுக்கமாட்டார் என்பதைத் தாண்டி, இவரை கொண்டாட ஒரு மாணவனுக்கு வேறு என்ன காரணம் வேண்டும். நாங்கலெல்லாம் கொண்டாடினோம் அந்த மனிதரை. மழைக் காலங்களில் கூட யாருக்கும் தன்னுடய கிளாஸை கொடுப்பதில்லை. மழை நாட்களில் கிளாஸ் ஈஸா தியான மண்டபமாக இருக்கும். நிறைய அட்வைஸ் கொடுப்பார், விளையாட்டு சம்பந்தமாக பேசுவார். ‘’ஒரு நாளைக்கு இங்கிலீஷ்ல ஒரு வார்த்தை படி, வருச கடைசில உனக்கு 365 வார்த்தை கிடைக்கும், அவ்வளவுதாம்ல இங்கிலீஷு’’ என்றெல்லாம் சொல்லியிருக்கிறார். அப்படிக் கத்துக்கொண்டதுதான் ‘’ஏக் காவ்மே ஏக் கிஸான் ரெஹதாத்தா’’ அந்த ஸ்கூலில் பெரிய பேஸ்கட் பால் கிரவுண்ட் உண்டு. சேர்ந்த பல மாணவர்கள் அந்த கிரவுண்டைப் பார்த்து அதில் விளையாடுபவர்களைப் பார்த்து சேர்ந்தவர்களாகத்தான் இருக்கும். நான் உட்பட. 9ம் வகுப்பு சேந்த புதிதில் யார், யாருக்கு எந்த விளையாட்டில் இஷ்டம் என்று தெரிந்து கொண்டு, லிஸ்ட் எடுத்தார். கிளாஸில் எல்லோரையும் உயரப்படிதான் உட்கார வைப்பார்கள். 9டி கிளாஸில் முதல் பெஞ்சில் நான் இரண்டாவது ஆள், அப்போ நான் கொஞ்சம் குள்ளமா இருப்பேன் (“இப்பவரைக்கும் நீ அப்படித்தானடா இருக்க?”ங்குற உங்களோட மைண்ட் வாய்ஸ் கேட்சிங்). என்னவிட குள்ளமா இருந்தவன் பெயர் மகாராஜா. பேஸ்காட் பால் விளயாட கை தூக்கினான். ‘’எந்திச்சு நிக்க வக்கில்லாதவனுக்கு வப்பாட்டி வக வகயா கேக்குதாம்’’ன்னு சொல்ல, அவனைப் பார்த்து கை தூக்க நினைத்தவன் அப்படியே கையை இறக்கிவிட்டேன். என்னவென்றே தெரியாமல் வாலிபாலுக்கு பெயர் கொடுத்தேன். வாலிபாலுக்கு எங்கள் பள்ளியில் முன்பாகவும், பின்பாகவும் இரண்டு கிரவுண்ட் உண்டு. பின்னாடி இருக்கும் கிரவுண்டில் மேடைபோன்ற திண்டு இருக்கும். அதில் இருந்துதான் நாங்கள் விளையாடுவதைப் பார்ப்பார். அவர் வயிறு இருக்கும் சைசிற்கு, பத்து மீட்டருக்கு சுத்தி கீழே என்ன இருந்தாலும் தெரியாது. அந்த திண்டின் மீது ஏறினால் 100 மீட்டர் சுற்றளவிற்கு எதுவும் தெரியாது. ஒரு தடவ சுந்தர்ராஜன் என்பனை கூப்பிட்டார். கூப்பிட்டு முடிப்பற்குள் திண்டின் பக்கத்தில் போய்விட்டான். சாரோட வயிரு சுந்தர்ராஜனை மறைக்க, அவன் நிர்பது தெரியாமல், மறுபடியும் ‘’அந்த அருதலிய வரச் சொல்லுல’’ன்னு சொல்ல, நாங்க எல்லோரும் ‘’அவ கீழதான் சார் நிக்கான்’’ன்னு சொன்னோம். ‘’மூதி, கூப்புட்டா, கண்ணு முன்னாடி வந்து நிக்கனும், அதவுட்டுட்டு காலு முன்னாடி, பூ# (18+) முன்னாடி வந்து நிக்கக்கூடாது’’ என்ற செம்மதுர தமிழோசை இன்னும் காதில் தேனாக சொட்டுகிறது. ‘’காலும், கையும் நம்ம இடத்தில் இருந்தாலும், கண்ணு மட்டும் எதிரி இடத்தில் எப்போதும் இருக்கனும்’’, ‘’கண்ணு ஒருத்தன பார்க்கனும், ஆனா கை, மூளை சொல்லுறத கேட்டு பந்த இன்னொருத்தங்கிட்ட அனுப்பனும்’’.......என பல டெக்னிக் எல்லாம் சொல்லுத் தருவார். அதை எல்லாத்தையும் கேட்டுவிட்டு கரெக்டா தப்பு பண்ணுவோம். சுத்தி இருக்கும் எல்லா ஊர் ஸ்கூலுக்கும் கூட்டிப் போய் மேட்ச் ஆடவைப்பார். மூன்று பிரியட் பெர்மிஷன் கேட்டுச் சென்றாலும் முதல் பிரியட் முடிவதற்குள் அடிச்சு துவச்சு மீன்பாடி வண்டில ஏத்திவிட்டுருவானுங்க. தோத்துப் போன பின்னாடி சார் திட்டுவாரோன்னு பயந்து போய் நின்னா ‘’விடுங்கல, ஜெயிச்சிட்டா அதுல கத்துக்க ஒன்னு இருக்காது, தோல்விலதாம்ல நெறய பாடம் தெரிஞ்சிக்கலாம், அடுத்த வாரம் வடகர மேட்சுல பாத்துக்கலாம்’’ என ஆருதல் சொல்லுவார். மூனு நாளு கழித்து கூப்பிட விடுவார் ‘’மேட்சுப் %&$%@& யாடா விளையாண்டிங்க, சூப்பிப் போனவ %*&%#க்கு எண்ண தடவுன மாதிரி.....................’’ன்னு ‘’டோட்டல் பேமிலி டேமேஜ்’’ஆகுற மாதிரி அர்ச்சனை நடக்கும் எந்த ஊரு மேட்ச்சுக்குப் போனாலும், சாப்பாடில் மட்டும் குறையே இருக்காது. ஆம்லேட் என்றால் டபுள் ஆம்லேட்தான், புரோட்டா என்றால் கொத்து புரோட்டாதான். ஒவ்வொரு ஸ்கூலும் காலாண்டு இடைவெளியில், இவ்வளவு போட்டி நடத்த வேண்டும் என்ற விதி இருக்கிறது. ஆனால், சில சமயங்களில் போட்டி நடத்தாமலேயே அவர்களுக்குள்ளாகவே, நீங்க வின்னர், நீங்க ரன்னர் என முடிவெடுத்து கல்வி விளையாட்டுத் துறையில் இருந்து சர்டிபிக்கேட் வாங்கிவிடுவார்கள். அதை காலை பிரேயரில் வைத்து எல்லோரயும் கை தட்டச் சொல்லி கொடுப்பார்கள். அந்த மாதிரியான அசிங்கம் கலந்த ஆனந்தம் கூட ஒரு விதமான அனுபவம்தான். எங்க பீட்டி சாருக்கு வாலிபாலை விட பேஸ்கட் பால் கேமில்தான் அதிக ஆர்வம். அவர்களுக்கு தனி கோச்சிங்க் எல்லாம் கொடுப்பார். இப்போது எப்படி என்று தெரியவில்லை, நான் படிக்கும் போது திருநெல்வேலி மாவட்டத்தில் பாஸ்கட் பால் ஸ்கூல் டீம் மொத்தம் பத்திற்கும் குறைவாகத்தான் இருக்கும். அதனால் அவர்களுக்கு டிஸ்டிக் லெவல் மேட்ச் எல்லாம் கிடைக்கும். அதுல நிறைய கப் வாங்கியிருக்கிறார்கள். வாலிபாலுக்கு எல்லாம் மேலே சொன்னா மாதிரி ஏதாவது கிடைத்தால்தான் உண்டு. அவர் ரூமில் இருக்கும் கப்புகளை பார்க்கும் போது சொன்னார் “கப்பு வெயிட்டு கையோட நிக்கனும், தலைக்கு கொண்டு போனா, அதுதான் நம்ம கடைசி கப்பு” வாலிபால் மேட்ச் என்றால் அதற்கு இரண்டு நாள் முன்பாக, ஸ்கூல் முடிந்தவுடன் சீனியருடனோ, அல்லது ஸ்டாப் டீம்வுடனோ பயிற்சி மேட்ச் நடக்கும். ஸ்டாப் டீமில் முருகன் சார்னு ஒருத்தர் இருந்தாரு. சத்தியராஜ் தோளில் ரகுவரன் ஏறி நின்றால் என்ன உயரம் இருக்குமோ அந்த உயரம். என்னோட உயரத்துக்கு நானெல்லாம் குறுக்கால கட்டியிருக்கும் நெட்டை டச் பண்ணாமலேயே அடுத்த கோர்ட்டிற்கு போய்விடுவேன். அவர்களோடு மேட்ச் ஆடச் சொல்லி கதற விடுவானுங்க. ‘’எத்தன பேருக்குள்ளது அத்துக்கிட்டு உருண்டு ஓடப்போகுதோ....’’ங்குற பீதிலேயே விளையாடுவோம். முருகன் சார் அவர் இருக்குற ஹைட்டுக்கு ஜம்ப் பண்ணி வேற அடிப்பாரு. 8000 கி.மீ ஸ்பீடுல பால் இறங்கும். அவரு ஜம்ப் பண்ண போறாருன்னு தெரிஞ்சுச்சுனாலே நாங்க கோர்ட்டுக்கு வெளியே போயிருவோம். என்னோட ஹைட்டுக்கு நான் ஒன்பதாவது வகுப்பில் இருந்து பனிரெண்டாவது வகுப்பு படிக்கும் வரை வாலிபால் ஜீனியர் டீமில்தான் விளையாடினேன். பனிரெண்டாவது படிக்கும் போது ஒன்பதாவது, பத்தாவது படிக்கிறவனுங்க கூட விளையாடனும். மேட்ச் எங்காவது போனால், நாயகம் சார் என்னை ஒன்பதாவது வகுப்பு மாணவன் என்றே பெயர் கொடுக்கச் சொல்லுவார். மற்றவர்களிடம் ‘’இவன ஒம்பதாப்புன்னு சொல்லித்தான் இறக்கியிருக்கேன், வெளயாடும் போது அண்ணே நொண்ணேன்னு கூப்பிட்டு என்னய மாட்டிவுட்டுராதியல’ன்னு சொல்லிவிடுவார். இதுதான் சந்தர்பம்னு, நேத்து வரை அண்ணன்னு கூப்பிட்ட பயலுக எல்லாம் ‘’எல’’, ‘’டேய்’’, ‘’மச்சி’’ன்னு கூப்பிட்டு வஞ்சம் தீர்ப்பானுங்க. எங்களோட விளையாட்டு பீரியடுக்காக மற்ற வாத்தியார்களிடம் எந்த விதத்திலும் சமரசம் செய்துகொள்ளாதவர். யாரும் இவர், பிசிக்ஸ், கெமிஸ்ட்ரி வாத்தியார்களிடத்தில் பேசிப் பார்த்ததே இல்லை. தனக்கான இருக்கையை ஸ்போர்ட்ஸ் ஸ்டோர் ரூமிலேயே போட்டு அவர்களிடமிருந்து தனியாகவே இருந்தார். நான் காலேஜ் படிக்கும் போது எதேச்சயாக விளையாட்டு வாத்தியாருக்கு படித்த என் ஸ்கூல் சீனியரை சந்தித்தேன். விழுப்புரம் பக்கத்தில் வேலை கிடைத்தவுடன் நெல்லை நாயகத்தை சந்தித்தபோது அவர் சொல்லியதைச் சொன்னார். ‘’ரொம்ப சந்தோசண்டே, சில மயிராண்டிய வந்து ஒம்ம கிளாச தாரும் சிலபஸ் கவர் பண்ணனும்னு வருவான், எந்த கூ$#யானுக்கும் கொடுக்காத’’
புதிய அரசியலமைப்பின் தேவையை வலியுறுத்தி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நேற்று பாராளுமன்றத்தில் கொண்டுவந்திருந்த சபை ஒத்திவைப்புவேளை விவாதம் இரண்டாவது நாளாக இன்றும் நடந்தது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை எம் பியுமான இரா சம்பந்தன் இந்த பிரேரணையை முன்வைத்து நேற்று பேசும்போதும் சபையில் எம் பிக்கள் இருக்கவில்லை. ஆளுங்கட்சியில் முக்கிய அமைச்சர்கள் கூட இருக்கவில்லை. அப்போது கோரம் மணியை ஒலிக்கவிட்டு சபை மீண்டும் கூட்டப்பட்டது. இன்று இரண்டாவது நாள் விவாதம் நடந்தபோது ஆளும்கட்சியின் அமைச்சர் மங்கள சமரவீர மட்டும் முற்பகல் உரையாற்றியிருந்தார். வழமையாக இப்படியான விவாதத்திற்கு அரசின் சார்பில் பதிலுரை வழங்கப்படும். தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விடயம் என்றபடியால் பிரதமர் இதற்கு பதிலளித்து பேசுவாரென எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இன்றைய விவாத முடிவில் அப்படி எதுவும் நடக்கவில்லை.சபை ஒத்திவைக்கப்பட்டது. அரசின் இந்த அசட்டை குறித்து கூட்டமைப்பின் எம் பியொருவர் கவலை வெளியிட்டார். கடந்த காலங்களில் அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டபோது கைகொடுத்த கூட்டமைப்புக்கு புதிய அரசியலமைப்பு குறித்து உரிய பதிலை வழங்க முடியாத அரசு குறித்து விசனப்படுவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
ஃபேஸ்புக் நிறுவனத்தில் 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும் உலகப் பணக்காரர்கள் பட்டியலில் முன்னிலை வகிப்பவராகவும் இருப்பவர் எலான் மஸ்க். இந்த நிலையில், பிரபல சமூக ஊடக நிறுவனமான ட்விட்டரை கடந்த வாரம் எலான் மஸ்க் தன் வசப்படுத்தினார். இதனையடுத்து, ட்விட்டரில் அதிரடி மாற்றங்கள் நடந்து வரும் நிலையில் உலகம் முழுவதும் தங்கள் நிறுவனத்தில் பணியாற்றும் சுமார் 7,500 ஊழியர்களில் 50 சதவிகித ஊழியர்களை பணியில் இருந்து நீக்கி கடந்த 5-ம் தேதி ட்விட்டர் நிறுவனம் அதிரடி அறிவிப்பு வெளியிட்டது. இதனால், ட்விட்டர் ஊழியர்கள் மிகுந்த அதிர்ச்சியடைந்தனர். இந்நிலையில், ட்விட்டரை தொடர்ந்து ஃபேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டாவும் ஊழியர்கள் குறைப்பு நடவடிக்கையில் இறங்கியுள்ளது. அதன்படி ஃபேஸ்புக் நிறுவனத்தில் 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் சக்கர்பெர்க் கூறுகையில், 'மெட்டா நிறுவன வரலாற்றில் நாங்கள் செய்த மிகவும் கடினமான சில மாற்றங்கள் தொடர்பாக தகவலை இன்று பகிர்கிறேன். எங்கள் குழுவின் வலிமையை சுமார் 13 சதவீதம் குறைக்கவும், 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட எங்கள் திறமையான பணியாளர்களை விடுவிக்கவும் முடிவு செய்துள்ளேன். குறிப்பிட்ட செலவினங்களைக் குறைப்பது மற்றும் முதல் காலாண்டு வரை ஆட்சேர்ப்பை நிறுத்தி வைப்பதன் மூலம் திறமையான நிறுவனமாக மாறுவதற்கு கூடுதல் நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார். பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு 16 வார அடிப்படை ஊதியம் வழங்கப்படும் என்று ஃபேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
வந்தியத்தேவன் சிறிது நேரம் வாசற்படிக்கருகில் கவலையுடன் தயங்கி நின்றான். புலிகளைப் பார்த்த வண்ணம் மீசையில் கையை வைத்து முறுக்கிக் கொண்டு நின்ற காவலன் மீது பாய்ந்து அவனைத் தீர்த்துக் கட்டிவிட்டு மேலே போகலாமா என்று ஒரு கணம் யோசித்தான். ஆனால் புலிக் கூண்டுகளுக்கு அப்பால் அடுத்த வாசற்படிக்கருகில் மற்றும் இரு காவலர்கள் நிற்பது தெரிந்தது. அவர்களில் ஒருவன் இந்தக் காவலனுக்கு ஏதோ சமிக்ஞையினால் தெரிவித்து விட்டு அப்பால் போனான். ஒருவேளை தன்னைப் பற்றித்தான் அவர்கள் ஜாடையாகப் பேசிக் கொள்கிறார்களோ? இந்தக் காவலனைத் தாக்கி வீழ்த்திவிட்டுப் போனாலும், அப்பால் இது போன்ற பல வாசற்படிகளும் அவற்றில் காவலர்களும் இருப்பார்கள். அவர்களையெல்லாம் சமாளித்துவிட்டுத் தப்பிச் செல்ல முடியுமா? அதைக் காட்டிலும் ஒரே பாய்ச்சலாகப் பாய்ந்து சென்று புலிக் கூண்டுகளைத் திறந்து விட்டால் என்ன? அப்போது ஏற்படக் கூடிய குழப்பத்தில் தப்பிச் செல்வது எளிதாக இருக்கும் அல்லவா?… இப்படி அவன் எண்ணியபோது காவலன், “ஓகோ! தப்பித்துக் கொள்ளலாம் என்று பார்க்கிறாயோ?” என்று கூறியதைக் கேட்டு வந்தியத்தேவன் ஒரு கணம் திடுக்கிட்டான். புலிகளில் ஒன்று உறுமியது. “அட நாயே! சும்மாக் கிட!” என்று அதட்டினான் காவற்காரன். அவன் புலியுடன் பேசுகிறான் என்று அறிந்ததும் வந்தியத்தேவன் சிரித்தான். காவற்காரன் திரும்பிப் பார்த்தான். “பின்னே பாருங்க, ஐயா! இந்தப் புலி என்னை மிரட்டப் பார்க்கிறது. இதுமாதிரி எத்தனையோ புலிகளை நான் பார்த்திருக்கிறேன்! இந்தச் சிங்கத்திடம் அதன் ஜம்பம் சாயாது” என்று கூறி மறுபடியும் மீசையை முறுக்கினான். வந்தியத்தேவன், “கூண்டுக்குள் இருக்கும் வரையில் புலியும் எலியும் ஒன்றுதான்! அதன் ஜம்பம் எப்படிச் சாயும்?” என்று சொல்லிவிட்டு கையிலிருந்த பெரிய வேளாரின் இலச்சினையைக் காட்டினான். “போங்க, ஐயா, போங்க! முதன்மந்திரியின் ஆட்கள் வாசலிலே உங்களுக்காகக் காத்திருக்கிறார்களாம்! சீக்கிரம் போங்க!” என்று கூறிவிட்டு, அவர்கள் வந்த பக்கத்தை நோக்கி, “அடே பைத்தியக்காரா! சும்மா இருக்கமாட்டே!” என்று கூவினான். அச்சமயம் வந்தியத்தேவன் பைத்தியக்காரனின் கையைப் பிடித்துக் கொண்டிருந்தான். அவன் கை நடுங்குவதைத் தெரிந்து கொண்டு, கையை இறுக்கிப் பிடித்துத் தைரியப்படுத்தினான். பிறகு, காவற்காரனைத் தாண்டி இருவரும் முன்னால் சென்றார்கள். “விடுதலை வேண்டுமாம் விடுதலை! எல்லாரையும் விடுதலை செய்துவிட்டால், பிறகு எங்கள் பிழைப்பு என்ன ஆகிறது?” என்று அந்தக் காவலன் கூறியது அவர்கள் காதில் விழுந்தது. வந்தியத்தேவன் எவ்வளவோ துணிவுள்ளவனாயினும், அச்சமயம் அவன் நெஞ்சம் ‘பக், பக்’ என்று அடித்துக் கொண்டிருந்தது. வாசலில் முதன்மந்திரியின் ஆட்கள் காத்துக் கொண்டிருப்பதாகக் காவலன் சொன்னது அவன் மனத்தில் பதிந்திருந்தது. சிறைக்குள்ளே இருட்டாயிருக்கிறது. அதனால் இங்குள்ள காவலர்களை எளிதில் ஏமாற்றி விட்டுச் செல்லலாம். வெளியில் வெளிச்சமாயிருக்குமே? முதன்மந்திரியின் மனிதர்கள் இந்த ஆள்மாறாட்டத்தைக் கண்டுபிடித்துவிட்டால் என்ன செய்கிறது? ஆயினும் பார்க்கலாம் ஒரு கை! எதற்கும் தயாராயிருக்க வேண்டியதுதான்! நல்லவேளையாக இந்தப் பைத்தியக்காரனும் கெட்டிக்காரப் பைத்தியக்காரனாயிருக்கிறான்; சமயத்தில் கை கொடுப்பான்!… பாதாளச் சிறையின் பல வாசல்களையும் கடந்த பிறகு தங்க நாணய வார்ப்படச் சாலையின் வாசல்களையும் கடந்து அவர்கள் விரைந்து சென்றார்கள். ஆங்காங்கே இருந்த காவலர்கள் அவர்களிடமிருந்த வேளாரின் இலச்சினையைப் பார்த்ததும் ஒதுங்கி வழி விட்டார்கள். இவர்களை யாரும் சந்தேகிக்கவும் இல்லை. உற்றுப் பார்க்கவும் இல்லை. போகும்போதே வந்தியத்தேவன் பரபரப்புடன் யோசித்து ஒரு திட்டம் போட்டுக் கொண்டான். நீண்ட அறை ஒன்றில் அவர்கள் போய்க்கொண்டிருந்த போது அவனுடைய துணைவன் காதில், “நீ முதன்மந்திரி வீட்டுக்குப் போகப் போகிறாயா? என்னுடன் வருகிறாயா?” என்று கேட்டான். “முதன்மந்திரி வீட்டுக்குப் போனால் மீண்டும் பாதாளச் சிறைதான்! உன்னுடனே வருவேன்! நீ எங்கே போவதாக உத்தேசம்?” என்றான். “கடவுள் அருள் இருந்தால், ஈழ நாட்டுக்கே போய்விடலாம்! முதன்மந்திரியின் ஆட்களுக்கு முன்னால் நீ என்னைப் ‘பினாகபாணி!’ என்று கூப்பிடு! உன் பெயர் என்ன?” “பைத்தியக்காரன்!” “உண்மையான பெயர்! உன் பெற்றோர்கள் வைத்த பெயர்?” “ஆ அதுவா? பெற்றோர்கள் எனக்குக் ‘கரிய திருமால்’ என்று பெயரிட்டனர். சுற்றத்தாரும் ஊராரும் ‘கருத்திருமன்’ என்று அழைத்தார்கள்!” “நல்ல பெயர்தான்! கருத்திருமா! தஞ்சை வீதிகளில் நாம் போகும்போது உன் தோளைத் தொடுவேன். உடனே நீ என்னுடன் ஓடிவரச் சித்தமா இருக்க வேண்டும். நன்றாக ஓடுவாய் அல்லவா?” “ஓ! ஓட்டத்தில் ஈழத்தரசன் மகிந்தன்கூட என்னுடன் போட்டியிட முடியாது!” வந்தியத்தேவன் சிரித்தான். “நீ நல்ல பைத்தியக்காரன்!…” என்றான். பொற்காசு வார்ப்படச் சாலையைக் கடந்து அவர்கள் வெளியில் வந்தார்கள். வந்தியத்தேவன் பயந்தபடி அங்கே முதன்மந்திரியின் ஆட்கள் ரொம்பப் பேர் இல்லை. இரண்டே இரண்டு பேர்தான் இருந்தார்கள். அவர்களில் ஒருவன் நல்ல குண்டன், வந்தியத்தேவனுக்கு அவனை எங்கேயோ, எப்போதோ பார்த்த மாதிரி இருந்தது; தெளிவாக நினைவுக்கு வரவில்லை. “நீங்கள்தானே முதன்மந்திரியின் ஆட்கள்!” என்றான் வந்தியத்தேவன். “என்ன தம்பி, அதற்குள்ளேயா மறந்து போய்விட்டாய்?” என்றான் அவர்களில் ஒருவன். “இல்லை, இல்லை! நீங்கள்தானே எங்களை முதன்மந்திரி வீட்டுக்கு அழைத்துப் போகப் போகிறீர்கள்?” என்றான் வந்தியத்தேவன். “ஆமாம் நாங்கள்தான்! நீ முதன்மந்திரி வீட்டுக்குப் போகும் வழியைக் கூட மறந்து போனாலும் போய்விடுவாய்!” அப்போது கருத்திருமன், வந்தியத்தேவன் கூறியதை நினைவு கூர்ந்து, “அப்பா, பினாகபாணி! எனக்குப் பயமாயிருக்கிறது! முதன்மந்திரி மறுபடியும் என்னைப் பாதாளச் சிறையில் தள்ளிவிடுவாரோ, என்னமோ!” என்றான். “அதெல்லாம் மாட்டார், அப்பனே! எங்கள் முதன்மந்திரியின் சமாசாரம் உனக்குத் தெரியாது போலிருக்கிறது. ஆனால் தப்பித்துக் கொள்ள மட்டும் பார்க்காதே! அப்படி ஏதாவது, செய்தால், நாங்கள் பாதாளச் சிறையில் இருக்க நேரிடும்!” என்றான். இவ்விதம் சொல்லிவிட்டு அந்த ஆட்களில் குண்டனாயிருந்தவன் முன்னால் நடந்தான். இன்னொருவன் வந்தியத்தேவனுக்கும் கருத்திருமனுக்கும் பின்னால் காவலாக வந்தான். தஞ்சாவூர் வீதிகளில் கலகலப்பே இல்லை. ஜனசஞ்சாரமும் இல்லை. ஆதித்த கரிகாலரின் இறுதிச் சடங்குகளினால் ஏற்பட்ட கிளர்ச்சிகள் அடங்கிவிட்ட பிறகு கோட்டைக்குள் வசித்தவர்கள் அவரவர்களுடைய அலுவல்களில் ஈடுபட்டிருந்தார்கள். கோட்டைக்கு வெளியில், கொடும்பாளூர்ப் படைகள் கடுமையாகக் காவல் புரிந்து வந்தன. கோட்டைக்கு வெளியிலிருந்து யாரும் உள்ளே வருவதற்கு அனுமதிக்கப்படவில்லை. வந்தியத்தேவன் இருபுறமும் உற்றுப் பார்த்துக் கொண்டு நடந்தான். அந்த இரண்டு ஆட்களிடமிருந்தே தப்பிச் செல்வது மிகவும் சுலபம். ஆனால் மறுபடியும் பிடிபடாமல் இருக்க வேண்டும்? கோட்டைக்குள்ளிருந்து வெளியேறுவதற்கும் வசதியாக இருக்க வேண்டுமே? இந்த எண்ணத்தினால், வந்தியத்தேவன் வீதியின் இரு பக்கங்களையும் உற்று உற்றுப் பார்த்துக் கொண்டு நடந்தான். பெரிய பழுவேட்டரையருடைய அரண்மனை வாசலைத் தாண்டிச் சென்றதும், வந்தியத்தேவனுடைய பரபரப்பு அதிகமாயிற்று. அடுத்தாற்போல், அந்தச் சந்து வரப் போகிறது! முன்னொரு தடவை சின்னப் பழுவேட்டரையரின் ஆட்களிடமிருந்து தான் தப்பி ஓடிச் சென்ற சந்துதான்! அதைத்தான் அவனும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தான். வளைந்து வளைந்து சென்ற அச்சந்தில் மூலை முடுக்குகள் அதிகம் இருந்தன. இரண்டு புறமும் தோட்டச் சுவர்கள், சுவர்களின் மேலாக வெளியில் தாழ்ந்து தொங்கிய மரங்கள் அங்கேதான் இக்காவலர்களிடமிருந்து தப்பி ஓடினால் ஓடலாம். முன்போலவே பெரிய பழுவேட்டரையருடைய மாளிகைத் தோட்டத்துகுள் குதிக்கலாம். அங்கே குதித்து விட்டால் அடர்ந்த மரங்களுக்கிடையே ஒளிந்து கொள்ள வசதியாயிருக்கும். முன்போலவே பொக்கிஷ நிலவறைப் பாதை மூலமாக வெளியேறவும் இலகுவாயிருக்கும். வேறு வழியில் தப்புவது சாத்தியமில்லை… இதோ அந்தச் சந்து வழி, அவன் முன்பு தப்பிச் சென்ற வழி, வந்துவிட்டது. வந்தியத்தேவன் கருத்திருமனுடைய தோளைத் தொடலாம் என்று எண்ணினான். ஆனால் இது என்ன? அங்கே யார் கூட்டமாக வருகிறார்கள்? சிவிகைகள்! குதிரைகள்! கையில் வேல் பிடித்த காவல் வீரர்கள்! இவ்வளவு ஆர்ப்பாட்டத்துடன் வருகிறார்கள். அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்களாகவோ, பெருந்தர அதிகாரிகளாகவோ இருக்க வேண்டும். இதை உணர்ந்து முதன்மந்திரியின் ஆட்கள் சுற்றுமுற்றும் பார்த்தார்கள். வந்தியத்தேவன் கவனத்தைக் கவர்ந்த சந்தை அவர்களும் கவனித்தார்கள். உடனே அவ்விடம் சென்று ஒதுங்கி நின்றார்கள். தாங்கள் அழைத்து வந்த இருவரையும் தங்களுக்குப் பின்னால் நிறுத்திப் பிறர் அறியா வண்ணம் அவர்களை மறைத்துக் கொண்டு நின்றார்கள். எதிரில் கூட்டமாக வந்தவர்கள் விரைவில் அந்த இடத்தை அடைந்து அவர்களைத் தாண்டிச் சென்றார்கள். முன்னால் வேல் பிடித்த வீரர்கள் சிலர், பிறகு, மூன்று கம்பீரமான வெண் புரவிகளின் பேரில் மலையமானும், கொடும்பாளூர் வேளாரும் அவர்களுக்கு நடுவில் ஒருவரும் வந்தனர். நடுவில் வந்தவர் பொன்னியின் செல்வர் என்பதை வந்தியத்தேவன் கண்டான். ஆகா! எவ்வளவு சமீபத்தில் இருக்கிறார்? ஆனாலும், எவ்வளவு தூரமாகப் போய்விட்டார்? ஒரு கணம் வந்தியத்தேவன் எண்ணினான். காவலர்களை மீறி ஓடிச் சென்று அவர் முன்னால் நிற்கலாமா என்று, உடனே அந்தக் கருத்தை மாற்றிக் கொண்டான். தமையனைக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்டவனுக்குப் பொன்னியின் செல்வர் தான் எப்படிக் கருணை காட்ட முடியும்?… அல்லது சிநேக உரிமை கொண்டாட முடியும்?… தன்னைப் பார்த்ததும் அவர் அருவருப்பு அடைந்தாலும் அடையலாம். பக்கத்திலுள்ள மலையமானும், வேளாரும் என்ன செய்வார்கள் என்று சொல்ல முடியாது. இதற்குள், அவர்களுக்குப் பின்னால் வந்த சிவிகைகளின் மீது வந்தியத்தேவன் கவனம் சென்றது. ஆகா! இளைய பிராட்டி குந்தவை! கொடும்பாளூர் இளவரசி வானதி! சம்புவரையர் மகள் மணிமேகலை! வந்தியத்தேவனுடைய நெஞ்சு படாதபாடுபட்டு விம்மித் துடித்தது. வேறு எந்தச் சந்தர்ப்பமாயிருந்தாலும், இந்த மூன்று பெண்மணிகளில் எவரையும் அணுகி உதவி கோரலாம். அவர்களும் மனமுவந்து உதவி செய்வார்கள். ஆனாலும், இப்போது? ஆதித்த கரிகாலனை வஞ்சகத் துரோகம் செய்து கொன்றவனைப் பார்த்தால் இளைய பிராட்டியும், இளவரசி வானதியும் எத்தனை அருவருப்புக் கொள்வார்கள்? போகட்டும், இந்தப் பேதைப் பெண் மணிமேகலையை இவர்கள் தங்களுடன் சேர்த்துக் கொண்டிருக்கிறார்களே? அதற்காக மகிழ்ச்சி அடையவேண்டியதுதான். மணிமேகலை இவர்களிடம் கடம்பூரில் நடந்ததையெல்லாம் சொல்லியிருப்பாளா? தன்னை தப்புவிப்பதற்காக ‘நான்தான் கொன்றேன்’ என்று சொன்னாளே, அம்மாதிரி இவர்களிடமும் சொல்லியிருப்பாளா? இல்லை, சொல்லியிருக்கமாட்டாள். அவ்விதம் சொல்லியிருந்தால் இவர்கள் அவளைத் தங்களுடன் இவ்வளவு ஆதரவாக அழைத்துப் போகமாட்டார்கள். சிவிகைகள் அவர்கள் நின்று கொண்டிருந்த சந்தைக் கடந்து சென்றன. பின்னால் வந்த காவலர்களும் போனார்கள். “சரி வாருங்கள்! இனி நாம் போகலாம்” என்று சொல்லிவிட்டு முதன்மந்திரி ஆட்கள் முன்னால் நடந்தார்கள். வந்தியத்தேவன் ஒரு நொடியில் “இதுதான் சமயம்” என்ற முடிவுக்கு வந்தான். கருத்திருமனுடைய தோளைத் தொட்டு விட்டுச் சந்து வழியாக ஓட்டம் பிடித்தான். கருத்திருமனும் அவனைத் தொடர்ந்து ஓடினான். காவலர்கள் இருவரும் பின்னால் ஓடிவரும் சத்தம் கேட்டது. சிறிது நேரம் வரையில் திரும்பிக்கூடப் பார்க்காமல் இருவரும் ஓடினார்கள். முதலில், கருத்திருமன் திரும்பிப் பார்த்தான். “ஒருவன் பின்தங்கி விட்டான்; ஒருவன்தான் வருகிறான்” என்றான். வந்தியத்தேவனும் திரும்பிப் பார்த்துக் குண்டன் பின் தங்கி விட்டதை அறிந்தான். ஒருவனாயிருந்தாலும், அவனுடன் நின்று சண்டை பிடிக்கப் பார்ப்பது அறிவுடமையாகாது. ஆகையால், கருத்திருமனுக்கு சமிக்ஞை காட்டிவிட்டு மேலே ஓடினான். முன்னொரு தடவை அவன் மதிள் சுவர் ஏறிக் குதித்த அதே இடத்தை அடைந்த பிறகுதான் நின்றான். முறிந்து வளைந்திருந்த கிளை அப்படியே இன்னும் இருந்தது. அதைப் பிடித்துத் தாவிச் சுவர் மீது ஏறிக்கொண்டான். கருத்திருமனையும் கையைப் பிடித்துத் தூக்கி ஏற்றிவிட்டான். இருவருமாக, முறிந்து மடித்திருந்த அந்த மரக்கிளையைச் சிறிது ஆட்டித் துண்டித்தார்கள். பின் தொடர்ந்து வந்த ஆள் அருகில் வந்ததும், அவன் பேரில் தள்ளினார்கள். மரக்கிளை அவன் பேரில் விழுந்ததா என்பதைக்கூடக் கவனியாமல் சுவர் மேலிருந்து தோட்டத்தில் குதித்தார்கள். அடர்ந்த மரங்கள் – புதர்கள் இவற்றினிடையே புகுந்து சென்று, மறைந்து கொண்டு நின்று, சுவரைக் குறி வைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். யாரும் தங்களைத் தொடர்ந்து பிடிப்பதற்குத் தோட்டத்துக்குள் குதிக்கவில்லை என்று தெரிந்துகொண்டு மேலே சென்றார்கள். “அப்பா! தப்பிப் பிழைத்தோம்!” என்றான் வந்தியத்தேவன். “இதற்குள் என்ன ஆகிவிட்டது? கோட்டைக்கு வெளியே போவது எப்படி?” என்றான் கருத்திருமன். “அதற்கு வழி இருக்கிறது; கொஞ்சம் பொறுமையாயிரு!” பழுவேட்டரையரின் மாளிகையை நெருங்கியதும் வந்தியத்தேவன் நின்றான். மாளிகையில் முன் போலக் கலகலப்பு இல்லைதான். ஆயினும் நடமாட்டம் இருந்தது. இருட்டும் நேரத்தில் பொக்கிரு நிலவறையில் புகுவதுதான் உசிதமாயிருக்கும். இவ்விதம் தீர்மானித்து ஒரு மரக்கட்டையின் மீது உட்கார்ந்தான். கருத்திருமனையும் உட்காரச் செய்தான். “இனி இருட்டிய பிறகுதான் நம் பிரயாணத்தைத் தொடங்க வேண்டும். அதுவரையில் உன்னுடைய கதையைச் சொல்லு கேட்கலாம்!” என்றான். “அதுதான் சொல்ல முடியாது என்று முன்னமே சொன்னேனே!” “அப்படியானால், உன்னை வெளியே அழைத்துப் போகவும் முடியாது”. “நான் உண்மையைச் சொல்லாமல், ஏதாவது கற்பனை செய்து கூறினால் என்ன பண்ணுவாய்?” “கதை – கற்பனை எதுவாயிருந்தாலும் சொல்லு! கொஞ்ச நேரம் பொழுது போக வேண்டும் அல்லவா?” கருத்திருமன் சொல்லத் தொடங்கினான். உண்மையிலேயே அது அபூர்வமான பல சம்பவங்கள் நிறைந்த கற்பனைக் கதை போலவே இருந்தது.
குழந்தை இல்லா குறை என்பது இன்றைக்கு பெரும்பாலான தம்பதிகளிடம் காணப்படுகிறது. இதற்காக சிகிச்சை எடுத்துக்கொண்டால் லட்சக்கணக்கில் பணம் செலவழிக்கவேண்டும். ஆனால் உணவுப் பழக்கத்தை மாற்றுவதன் மூலம் குழந்தையின்மை குறையை சரி செய்யலாம் என்கின்றனர் நிபுணர்கள். இன்றைக்கு எதற்கெடுத்தாலும் ரெடிமேட் உணவுகளையோ, மசாலாக்களையோ உபயோகிக்கின்றோம். செயற்கை உணவுகளும் ரசாயன உரங்களும் உடம்பில் நச்சுத்தன்மையை ஏற்படுத்திவிடுகின்றன. உயர் ரத்த அழுத்தம் தொடங்கி உயிர்கொல்லியான புற்றுநோய் வரை மனிதர்களை தாக்குவதோடு மலடாகவும் மாற்றிவிடுகிறது. மலட்டுத்தன்மையை தடுக்க உணவுகளை எவ்வாறு உண்ணவேண்டும், எவற்றை தவிர்க்கவேண்டும் என்று நிபுணர்கள் ஆலோசனை கூறியுள்ளனர். இன்றைக்கு கணவன் மனைவி இருவரும் வேலைக்குச் செல்வதால் சமைத்து ஃபிரிட்ஜில் வைத்து சாப்பிடுவதை இளைய தலைமுறையினர் வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர். இது தவறான நடைமுறையாகும். அன்றாடம் புதிதாக சமைத்த உணவுகளை உண்ணவேண்டும் அதுதான் ஆரோக்கியம். ரெடிமேட் மசாலாக்கள் பண்டைய காலங்களில் செயற்கை நிறம், மணம் சேர்க்கப்பட்ட உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள் ஃபாஸ்ட் புட் போன்றவை இல்லை. ஆனால் இன்றைக்கு மஞ்சள்தூள் தொடங்கி மிளாகாய்த்தூள், சாம்பார் பவுடர் என கலர் கலராய் ரெடிமேட் மசாலா உணவுப் பொருட்கள் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இதில் செயற்கை மணத்திற்காக உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பொருட்களை சேர்க்கப்படுகின்றன. இந்த செயற்கைப் பொருட்கள்தான் மலட்டுத்தன்மைக்கு காரணமாகிறது என்கின்றனர் நிபுணர்கள். இந்த செயற்கை மசாலாத்தூளில் எடையை அதிகரிப்பதற்காக அதில் சர்க்கரை வள்ளிக்கிழங்கு சேர்க்கப்படுவதாக சோதனையில் கண்டறியப்பட்டது. இந்த கிழங்குமாவு கெட்டுவிடும் என்பதால் அதற்காக பிரசர்வேடிவ் சேர்க்கின்றனர் என்றும் தெரியவந்துள்ளது. சினைப்பை நீர்க்கட்டி பாலிசிஸ்டிக் ஓவரியன் டிஸார்டர்(பிசிஒடி) என்ற சினைப்பை நீர்க்கட்டியை கரைக்கச் செய்யும் மிகப்பெரிய மருந்து மிளகு ரசம். மிளகு, சீரகம், பூண்டு, கட்டிப்பொருங்காயம், பச்சைமிளகாய், கொத்தமல்லித்தழை சேர்த்து ரசம் வைத்து சாப்பிட்டால் இந்த ஓவரியன் நீர்க்கட்டிகள் தன்னால் கரையும் என்கின்றனர் மருத்துவர்கள். இதேபோல் கொள்ளுரசம் சாப்பிட்டால் உடல் பருமன் குறையும், பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சினை இருந்தால் சீராகும் என்கின்றனர் நிபுணர்கள். விந்து உற்பத்தி அதிகரிக்க சின்ன வெங்காயம் சாம்பார் அடிக்கடி சேர்த்துக்கொண்டால் விந்து உற்பத்தி அதிகரிக்கும். பெண்களுக்கு வெள்ளைப்படுதல் நோய் குணமாகும். நல்லெண்ணையில் சின்ன வெங்காயத்தை வதக்கி சாப்பிட்டாலும் ஆண்களுக்கு விந்து உஉற்பத்தி அதிகமாகும். திராட்சை, உலர்திராட்சைப் பழங்கள், சோயா, வால்நட், முருங்கைப் பூ போன்றவை பெண்களின் மாதவிடாய் பிரச்சினையை தீர்க்கும். மலட்டுத்தன்மையை குணமாக்கும் என்கின்றனர் நிபுணர்கள். மண்பானை சமையல் பண்டைய காலங்களில் வீடுகளில் மண்பாண்டங்களில் சமைத்தனர். அதனால்தான் எளிதாக ஐந்து, ஆறு குழந்தைகளை கூட பெற்று ஆரோக்கியமாக வாழ முடிந்தது. ஆனால் இன்றைக்கு சமைக்கும் பாத்திரங்களும், முறைகளும் கூட மாறிவிட்டன. இதனால்தான் விந்தணு உற்பத்தியில் சிக்கல் ஏற்படுகிறது. மண்பானையில் சமைத்தால் விந்து நீர்த்துப்போவதை தடுக்கும். விந்துவை கெட்டிப்படுத்துவதோடு உற்பத்தியை அதிகமாக்கும். மண்பாண்டச் சமையல் பெண்களுக்கு வெள்ளைப்படுதல் நோயை குணமாக்கும். சரியான உணவை தேர்ந்தெடுத்து சரியான முறையில் சமைத்து சாப்பிட்டால் உடல்குறை நீங்குவதோடு குழந்தைப் பேறு ஏற்படும் என்கின்றனர் நிபுணர்கள்.
‘அலறல்’ சத்தம் கேட்டு ஓடிவந்த ‘அக்கம்பக்கத்தினர்’... ஒரு வயது ‘பெண்’ குழந்தைக்கு நடந்த ‘கொடூரம்’... வெளியாகியுள்ள ‘அதிர்ச்சி’ தகவல்கள்... முகப்பு > செய்திகள் > தமிழகம் By Saranya | Dec 26, 2019 09:54 AM பேராசிரியர் ஒருவர் மனைவியையும், ஒரு வயது மகளையும் கிணற்றில் தள்ளிக் கொல்ல முயன்றதாகக் கூறப்படும் சம்பவத்தில் குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளது. பெரம்பலூர் வடக்கு மாதவி சாலையிலுள்ள எம்ஆர்சி நகரைச் சேர்ந்த தம்பதி சரவணன் - அன்பரசி. கடந்த 2014ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்ற நிலையில், இவர்களுக்கு 5 வயதில் ஒரு மகளும், ஒரு வயதில் ஒரு மகளும் இருந்துள்ளனர். கணவன், மனைவி இருவருமே கல்லூரி ஒன்றில் பேராசியராக வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் நேற்றிரவு இவர்களுடைய வீட்டின் பின்புறமுள்ள கிணற்றுக்குள் இருந்து அன்பரசி அலறும் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்துள்ளனர். அவர்கள் வந்து பார்த்தபோது கிணற்றுக்குள் அன்பரசியும், குழந்தையும் விழுந்திருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர். இதையடுத்து அன்பரசியை உடனடியாக கயிறு கட்டி மீட்ட அவர்களால் குழந்தையை மீட்க முடியாமல் போயுள்ளது. அதற்குள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் நீண்ட நேரம் போராடி குழந்தையை சடலமாக மீட்டுள்ளனர். இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. போலீஸ் விசாரணையில் அன்பரசி, தங்களுக்கு திருமணமாகி இரண்டுமே பெண் குழந்தைகளாக பிறந்ததால் கணவர் மற்றும் அவருடைய குடும்பத்தினர் தன்னை தொடர்ந்து அடித்து கொடுமைப்படுத்தி வந்ததாகக் கூறியுள்ளார். மேலும் சரவணனுக்கு அதே கல்லூரியில் வேலை செய்யும் வேறொரு பெண்ணுடன் திருமணத்தை மீறிய உறவு இருப்பதாகவும், அதற்கு இடையூறாக இருந்ததால் தன்னையும், தன் குழந்தையையும் கொலை செய்யத் திட்டமிட்டு குடிபோதையில் கிணற்றில் தள்ளியதாகவும் அவர் கூறியுள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். Tags : #CRIME #MURDER #HUSBAND #WIFE #BABY #GIRL #PROFESSOR #PERAMBALUR next தொடர்புடைய செய்திகள் ‘என்ன தூக்குல போடுங்க’!.. ‘அமைச்சரிடம் மனு கொடுத்த சப்-இன்ஸ்பெக்டர் மனைவி’.. அதிரவைத்த காரணம்..! ‘அத்துமீறி’ சிறுமியின் பிறந்தநாளை ‘கொண்டாடிய’ இளைஞர் கும்பல்... ‘அடுத்து’ நடந்த ‘விபரீதம்’... அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்... ‘கர்ப்பமா இருக்கேன்’!.. ‘கிறிஸ்துமஸ் கொண்டாட ஊருக்கு வர மறுத்த மனைவி’!.. காய்கறி நறுக்கும் கத்தியால் கணவன் செய்த கொடூரம்..! ‘தனியாக’ இருந்த மனைவி... சந்தேகமே வராதபடி ‘பிளான்’ போட்டும்... ஜன்னல் ‘கண்ணாடியால்’ சிக்கிய கணவர்... ‘அதிரவைக்கும்’ சம்பவம்... ‘என் குடும்பத்தை நீதான் பாத்துக்கணும்’!.. ‘வாட்ஸ் அப்பில் வந்த மெசேஜ்’!.. ஒரே நாள், ஒரே இடம் அண்ணன், தம்பி எடுத்த விபரீத முடிவு..! 'போதையில் வந்த புதுமாப்பிள்ளை'...'கோபத்தில் இருந்த தந்தை'...ஒரு செகண்டில் நடந்த கோரம்! ‘பாம்புக்கு பாலாபிஷேகம்’!.. ‘10 கலர்ல முகத்தை காட்டுவேன்’!.. பகீர் கிளப்பும் காஞ்சிபுரம் பெண் சாமியார் பின்னணி..! நண்பர் கொடுத்த மதுவை ‘நம்பி’ குடித்தவருக்கு... ‘அடுத்த நாள்’ காத்திருந்த ‘பேரதிர்ச்சி’... இளைஞர் போட்ட ‘கொடூர’ திட்டம்... கோவை இன்ஜினியர் கொலையில்... புதிய 'டுவிஸ்ட்'... மனைவியுடன் பழகியதால்... 'பெட்ரோல்' ஊற்றி கொலை செய்த கணவர்! பலி 'விலங்கு ' வருகிறது... 45 நிமிட ஆடியோ... உலகை 'உலுக்கிய' மரணத்தில்... 5 பேருக்கு தூக்குத்தண்டனை! ‘ஏற்கெனவே’ 2 குழந்தைகள்.. 13 ஆண்டுகளுக்கு முன் இறந்த ‘கணவர்’... ‘பச்சிளம்’ குழந்தைக்கு ‘தாயால்’ நடந்த பயங்கரம்... ‘குடியரசுத் தலைவர்’ பங்கேற்ற பட்டமளிப்பு விழாவில்... தங்கப்பதக்கத்தை வாங்க மறுத்த ‘மாணவி’... ‘பரபரப்பை’ ஏற்படுத்திய சம்பவம்... 'பொள்ளாச்சி' விவகாரத்தால்... வட மாநிலங்களை பின்னுக்குத்தள்ளிய... 'தமிழக' நகரம்! ‘எரிக்க தேங்காய் சிறட்டை’!.. ‘4 மாசம் வீட்டுக்குள் கிடந்த சடலம்’!.. கோவை சாஃப்ட்வேர் இன்ஜீனியருக்கு நேர்ந்த கொடுமை..! அடுக்குமாடிக் குடியிருப்பில் ‘மளமளவென’ பரவிய தீயால்... ‘நிமிடங்களில்’ நடந்து முடிந்த பயங்கரம்... ‘குழந்தைகள்’ உட்பட ‘9 பேர்’ பலியான சோகம்... ‘என்கவுன்டரில்’ கொல்லப்பட்ட சென்னகேசவலுவிற்கு... ‘13 வயதில்’ மனைவி... வெளியாகியுள்ள ‘அதிர்ச்சி’ தகவல்... குழந்தைகளை பார்க்க வந்த தாய்... கணவர் செய்த அதிர்ச்சி காரியம்... மனைவிக்கு நேர்ந்த சோகம்! Youth Tied to Tree, Thrashed, Urinated Upon Over Love Affair! ‘வாட்ஸ் அப்பில் வந்த வாய்ஸ் மெசேஜ்’!.. ‘ஷாக் ஆன கணவன்’!.. கல்யாணம் ஆன 20 நாளில் மனைவி எடுத்த முடிவு..! ‘சந்தேகத்தில்’ கணவன் செய்த ‘உறையவைக்கும்’ காரியம்... 9 மாத குழந்தைக்கும் தாய்க்கும் நடந்த ‘பயங்கரம்’... மேலும் செய்திகளுக்கு ABOUT THIS PAGE This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Perambalur Professor Father Faces Enquiry In Girl Baby Murder | Tamil Nadu News.
2009 மேக்குப் பின் ஒரு முன்னாள் ஜேவிபி முக்கியஸ்தர் என்னோடு கதைக்கும் போது சொன்னார்… தமிழ் மக்களின் போராட்டம் தோற்கடிக்கப்பட்டதோடு தென்னிலங்கையில் இருக்கக்கூடிய எதிர்ப்பு அரசியல் வெளியும் பெருமளவுக்கு தோற்கடிக்கப்பட்டு விட்டது என்று. ஏன் என்று கேட்டேன். அரசாங்கத்தை எதிர்க்கலாம் அரசுக்கு எதிராகப் போராடலாம் என்று துணிச்சலை தமிழ் மக்களின் போராட்டம் முழு இலங்கைக்கும் கொடுத்தது. அது தோற்கடிக்கப் பட்டதோடு இனி அரசாங்கத்தை எதிர்க்க முடியாது என்று ஒரு அவநம்பிக்கையை பயத்தை அது முழு இலங்கைக்கும் கொடுத்திருக்கிறது என்றும் அவர் சொன்னார். அதோடு யுத்த வெற்றி வாதத்துக்கு முன் வேறு யாரும் வீரம் கதைக்க முடியாது என்பதால் ஜேவிபி போன்ற அமைப்புக்களும் பின்தள்ளபட்டுவிட்டன என்று. கடந்த பத்தாண்டு கால நடைமுறையை தொகுத்துப் பார்த்தால் அதில் ஓரளவிற்கு உண்மை உண்டு என்று தெரியவரும். குறிப்பாக கடந்த ஆண்டு ராஜபக்சக்களின் இரண்டாவது ஆட்சி தொடங்கியதில் இருந்து தென்னிலங்கையில் குடிமக்கள் சமூகங்களும் லிபரல்களும் பெருமளவுக்கு ஒடுங்கிப்போயினர். இது ஒரு உலக யதார்த்தம். அசுரத்தனமான வெற்றியோடு வரும் ஓர் அரசாங்கத்துக்கு முன் குடிமக்கள் சமூகங்களும் லிபரல்களும் இவ்வாறு வாயடங்கிப் போகும் வழமை உண்டு. இப்படியாக கடந்த ஓராண்டு காலத்தில் பெருமளவுக்கு சுருங்கிப்போயிருந்த எதிர்ப்பு வெளி மறுபடியும் விரியத்தொடங்கியது கடந்த நாடாளுமன்ற தேர்தலின் பின்னர்தான். இத்தேர்தலில் மாற்று அணியை சேர்ந்த மூன்று தமிழ் உறுப்பினர்கள் நாடாளுமன்றத்துக்குள் நுழைந்தார்கள். குறிப்பாக நாடாளு மன்றத்தின் தொடக்க அமர்வுகளின் போது விக்னேஸ்வரன், கஜேந்திரகுமார், கஜேந்திரன் ஆகியோர் ஆற்றிய உரைகளும் அதைத்தொடர்ந்து சாணக்கியன்,சுமந்திரன் போன்றோர் ஆற்றியஉரைகளும் தமிழ் மக்கள் தொடர்ந்தும் எதிர்ப்பார்கள் என்ற செய்தியை கூர்மையாக வெளிக்கொண்டு வந்தன. ராஜபக்சக்களின் இரண்டாவது வருகைக்குப்பின் சுருங்கிப்போயிருந்த எதிர்ப்பு அரசியல் வெளி மெல்ல விரியத் தொடங்கியது. இப்பொழுதுகோவிட்-19இன்பின்னணியில் அது அதன் அடுத்தகட்டத்துக்கு வளரத் தொடங்கிவிட்டதா? சிங்கள பௌத்த பெருந் தேசியவாதத்தின் வெற்றிமுகமாக ராஜபக்சக்கள் இரண்டாவது முறையும் ஆட்சிக்கு வந்தபொழுது குடிமக்கள் சமூகங்களும் லிபரல்களும் பெருமளவுக்கு வாய்திறக்க அஞ்சினர். 20ஆவதுதிருத்தத்தின் போது அதைக் காணக்கூடியதாக இருந்தது. குறிப்பாக ஒரு பெரும் தொற்று நோய்ச்சூழலை முன்வைத்து அரசாங்கம் நாட்டை அதிகம் ராணுவ மயப்படுத்திய பொழுதும் சிவில் வெளி மேலும் ஒடுங்கியது. ஒரு பெரும் தொற்று நோயை ஒடுக்குவதற்கு படையினரின் உதவி அவசியம் என்ற ஒரு கருத்து பெருமளவுக்கு தென்னிலங்கையிலும் சிறிதளவுக்கு தமிழ் பகுதிகளிலும் நிலவியது. தமக்கு எதிரான அதிருப்தி அலைகள் அனைத்தையும் அரசாங்கம் பெரும் தொற்று நோய்ச்சூழலை முன்வைத்து இலகுவாகஒடுக்கக் கூடியதாக இருந்தது.அனர்த்த காலத்தை முன்வைத்து சிவில் எதிர்ப்பு வெளியை அவர்கள் பெருமளவுக்கு தங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தார்கள். ஆனால் கடந்த வாரம் நாடு முடக்கத்திலிருந்து விடுவிக்கப்பட்டதும் தமிழ் எதிர்ப்பு மறுபடியும் மேலெழத் தொடங்கிவிட்டது. வைரஸ் தொற்று காரணமாக நாடு முடக்கப்பட்ட பொழுதும் தமிழ் மக்கள் தமது எதிர்ப்பைபரவலாகவும் சிறிய அளவிலும் ஆனால் கூர்மையாக வெளிக் காட்டி வந்திருக்கிறார்கள். இந்த போக்கின் தொடர்ச்சியாக முடக்கம் நீக்கப்பட்டதும் அதாவது நாடு முழு அளவுக்கு திறக்கப்பட்டதும் தமிழ் எதிர்ப்பு மறுபடியும் துலக்கமான விதங்களில் தலைதூக்கியிருக்கிறது. நிலஆக்கிரமிப்பு மரபுரிமை ஆக்கிரமிப்பு முதலாக கடந்த ஓராண்டு காலம் முழுவதிலும் அரசாங்கம் தமிழ் மக்களுக்கும் முஸ்லீம் மக்களுக்கும் எதிரான முன்னெடுத்து வரும் நடவடிக்கைகளின் பின்னணியிலேயே இந்த எதிர்ப்பு தலைதூக்கியிருக்கிறது. குறிப்பாக முஸ்லிம் மக்கள் ஜனாசா எரிப்புக்கு எதிராக தொடக்கத்தில் மௌனமாக இருந்தார்கள். அரசாங்கத்தை அனுசரித்துப் போய் அல்லது அரசாங்கத்தோடு சுதாகரித்துக்கொள்வதன் மூலம் தங்களுடைய பண்பாட்டு உரிமைகளை வென்றெடுக்கலாம் என்றும் நம்பினார்கள். ஆனால் அந்த நம்பிக்கைகள் தோற்கடிக்கப்பட்ட பொழுது அவர்கள் கபன்துணிகளைக் கட்டித் தமது எதிர்ப்பைக்காட்டத் தொடங்கினார்கள். கபன்துணிப் போராட்டம் எனப்படுவது ஒரு பெரும் நோய்த் தொற்றுச்சூழலில் உலகில் ஒரு சிறிய மக்கள் கூட்டம் காட்டிய படைப்புத்திறன் மிக்க ஒரு சிவில் எதிர்ப்பு வடிவமாகும். ஆனால் அது ஒரு பெருந்திரள் போராட்ட வடிவமாக வளரவில்லை. முஸ்லிம் தரப்பு முழு அளவிலான ஓர் எதிர்ப்பு அரசியலுக்குப் போகத்தயாராகவும் இல்லை. இப்படிப்பட்ட ஒரு பின்னணியில் தமிழ் மக்கள் ஆங்காங்கே தெட்டம்தெட்டமாக காட்டிய எதிர்ப்புகளில் முஸ்லிம்மக்களும் தமிழ் மக்களோடு இணையத் தொடங்கினார்கள். நினைவு கூர்தலுக்கான வெளியில் தொடங்கி இப்பொழுது பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலுமான எதிர்ப்பில் முஸ்லிம் மக்கள் தமிழ் மக்களோடு தமது சகோதரத்துவத்தை வெளிப்படுத்த தொடங்கிவிட்டார்கள். பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலுமான நடைபயணம் எனப்படுவது தமிழ் எதிர்ப்பின் ஆகப்பிந்திய உதாரணமா? அண்மைக் காலங்களில் இப்படி ஏதாவது ஒரு விதத்தில் நில ஆக்கிரமிப்புக்கு எதிராகவும் ஏனைய ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவும் போராட வேண்டும் என்று தமிழ்த் தரப்பு பல்வேறு கூட்டங்களை கூட்டி சிந்தித்திருக்கிறது. குறிப்பாக கடந்த சில கிழமைகளுக்கு முன் யாழ்ப்பாணம் இளங்கலைஞர் மன்றத்தில் ஒரு சந்திப்பு ஒழுங்கு செய்யப்பட்டது. சிவாஜிலிங்கம் சந்திப்பை ஒழுங்குபடுத்தினார். அதில்கலந்து கொண்ட மட்டக்களப்பைச் சேர்ந்த ஒரு சிவில் சமூக பிரதிநிதிதான் இப்பொழுது பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலுமான ஆர்ப்பாட்டத்தின் முன்னணியிலும் காணப்படுகிறார். இவர் கடந்த மாதம் மூன்று தமிழ் கட்சிகளும் குடிமக்கள் சமூகங்களும் இணைந்து ஜெனிவாவுக்கு அனுப்பிய பொதுக் கோரிக்கையிலும் கையெழுத்திட்டவர். அதனால் இவருக்கு அச்சுறுத்தல்களும் ஏற்பட்டன. அவற்றின் பின்னணியில் சில வாரங்களுக்கு முன் இளங்கலைஞர் மன்றத்தில் நடந்த சந்திப்பிலும் அவர் பங்குபற்றியிருந்தார். அச்சந்திப்பில் தமிழ் மக்கள் நில ஆக்கிரமிப்புக்கு எதிராக எதிர்ப்பை காட்ட வேண்டும் என்பதில் அனைவரும் ஒன்றுபட்டுநின்றார்கள். ஆனால் எப்படிப்பட்ட எதிர்ப்பு வடிவம் என்பதில் ஒரு பொதுக் கருத்தை எட்ட முடியவில்லை. வலி கிழக்குபிரதேச சபை தவிசாளர் ஒரு ஆலோசனையை முன்வைத்தார். கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்ட பேரணி போன்றவற்றுக்குப் பதிலாக கச்சேரியை முடக்கினால் என்ன என்று கேட்டார். அதே சமயம் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கங்கள் சுதந்திர தினத்தை கரி நாளாக அனுஷ்டிக்கலாம் என்று ஆலோசனை கூறினார்கள். எனினும் அக்கூட்டத்தில் ஒருபொது முடிவு எட்டப்படவில்லை. அடுத்த தடவை சந்தித்து ஒரு போராட்ட வழிமுறை குறித்து சிந்திப்பது என்று முடிவெடுக்கப்பட்டது. இந்த இடையூட்டுக்குள் மட்டக்களப்பை மையமாகக் கொண்டு இம்மாதம் இருபத்தி நாலாம் திகதி முதலில் கிழக்கு சிவில் சமூகம் என்ற ஓர் அமைப்பு வாட்ஸப்பில் உருவாக்கப்பட்டது. அதன்பின் இருபத்தியேழாம் திகதி இவ்வமைப்பு வடக்கு கிழக்கு சிவில் சமூகம் என்று பெயரை மாற்றிக் கொண்டது. இவ்வமைப்பு உருவாக்கப்பட்ட சில நாட்களுக்குள் பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையிலுமான இந்த ஆர்ப்பாட்டத்தை ஒழுங்குபடுத்தியுள்ளது. இதுதொடர்பில் கேள்விகள் உண்டு. அவற்றைத் தனியே பார்க்கலாம். எனினும், இப்பேரணிக்கு பின்வரும் முக்கியத்துவங்கள் உண்டு. முதலாவது இது கிழக்கு மையத்திலிருந்து தொடங்கப்பட்டது என்பது. பொதுவாக தமிழ் பரப்பில் எதிர்ப்பு நடவடிக்கைகள் வடக்கில் தொடங்கி பின்னர் ஏனைய பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்படும். ஆனால் இம்முறை ஒரு நோய் தொற்று சூழலில் நாடு முடக்கத்திலிருந்து நீக்கப்பட்ட உடனேயே துலக்கமான ஓர் எதிர்ப்பு கிழக்கிலிருந்து தொடங்கியிருக்கிறது. வடக்கு கிழக்கை ஊடறுத்து முன்னெடுக்கப்பட்ட இப்பேரணியானது செயல் பூர்வமாக வடக்கையும் கிழக்கையும் இணைத்திருக்கிறது. வடக்கு கிழக்கு இணைப்புக்கு எதிரான சக்திகள் பலமடைந்து வரும் இராணுவ அரசியல் உளவியல் சூழலில் வடக்கு கிழக்கை இணைத்து இப்படி ஒரு போராட்டம் முன்னெடுக்கப்பட்டமை அதுவும் கிழக்கிலிருந்து தொடங்கப்பட்டமை ஒரு திருப்பகரமான பெயர்ச்சி. வடக்கில் முன்னெடுக்கப்படும் நில அபகரிப்பு நடவடிக்கைகளில் நடவடிக்கைகளோடு ஒப்பிடுகையில் கிழக்கில் மேய்ச்சல் தரை விவகாரம் எனப்படுவது அதிக முக்கியத்துவம் மிக்கது. ஏனெனில் அது கிழக்கு விவசாயியின் முதுகெலும்பை முறிக்கக்கூடியது. இப்படிப் பார்த்தால் வடக்கில் நிகழும் ஆக்கிரமிப்புக்களோடு ஒப்பிடுகையில் மேய்ச்சல் தரை ஆக்கிரமிப்பு என்பது பாரதூரமானது. இது போன்ற காரணங்களை முன்வைத்து கிழக்கிலிருந்து போராட்டங்களை முன்னெடுக்க வேண்டிய கட்டாயமிருக்கிறது. தொடக்கத்தில் பேரணியில் மிகக் குறைந்த தொகையினரே காணப்பட்டார்கள். ஒருபுறம் மழை இன்னொருபுறம் நீதிமன்ற தடை. இரண்டுக்கும் மத்தியில் நனைந்து நனைந்து மிகச்சிறு தொகையினரே வேகமாக நடந்து வந்தார்கள். தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவர்களோடு இணைந்ததால் அவர்களுக்கு ஒருவிதத்தில் பாதுகாப்பு கிடைத்தது எனலாமா? போலீசாரின் எதிர்ப்பை முறியடிப்பதற்கு அது உதவியது எனலாமா? இதுகுறித்து ஏற்கனவே யாழ்ப்பாணச் சந்திப்பில் சுட்டிக்காட்டப்பட்டது. கடந்த வாரம் யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் இப்பேரணி தொடர்பாக நடந்த சந்திப்பில் ஒருவர் அதைச் சுட்டிக்காட்டினார். மணலாறு பிரதேசத்தை இப்பேரணிகடக்கும் பொழுது ஏதும் அசம்பாவிதங்கள் நடக்கக்கூடிய ஆபத்துண்டு என்று அவர்சுட்டிக்காட்டினார். அப்படி ஒரு நிலைமை வரும் பொழுது நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு காவலாக வரும் போலீசார் பேரணிக்கு மறைமுகமாக பாதுகாப்பாக இருக்கமுடியும் என்பதால அந்த வழியில் நாடாளுமன்ற உறுப்பினர்களை இணைத்துக்கொள்ள வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். சாணக்கியன் பேரணியில் பங்குபற்றிய பொழுது ஒரு போலீஸ்காரர் அவருக்கு குடை பிடிக்கிறார் அதேசமயம் வேறு ஒரு போலீஸ்காரர் அதாவது பேரணியை தடுக்க வந்தவர் சாணக்கியனை நகர விடாமல் தடுக்க முற்படுகிறார் என்பதை ஒருவர் முகநூலில் சுட்டிக்காட்டியிருந்தார், கிழக்கில் பேரணி தொடங்கியதும் போலீசாரின் எதிர்ப்பு கடுமையாக இருந்தது எனினும் அதையும் மீறி பேரணி வளர்ந்து சென்றது. ஒருகட்டத்தில் எதிர்ப்பு காட்டிய போலீசார் நீதிமன்ற தடை உத்தரவை ஒலி பெருக்கியில் வாசித்துக் கொண்டிருக்க பேரணி தன்பாட்டில் போய்க்கொண்டே இருந்தது. பேரணி வளரவளர போலீசார் எதிர்ப்பதை நிறுத்திவிட்டு வீதி ஒழுங்கை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் இறங்கி விட்டார்கள். அடுத்த முக்கியத்துவம்- இப்போராட்டத்தில் முஸ்லிம் மக்கள் கலந்து கொண்டமை. முஸ்லிம்களின் பிரதேசத்தில் அதற்கு அமோக வரவேற்பு கிடைத்தது. சில முஸ்லிம் கிராமங்களில் பேரணியில் பங்குபற்றியோர் எண்ணிக்கை நாலாயிரத்துக்கும் குறையாத அளவுக்கு வளர்ந்து சென்றது. சில முஸ்லிம் கிராமங்களில் முஸ்லிம் பெண்கள் வீதியின் இரு மருங்கிலும் வரிசையாக நிற்க பேரணி வீதி வழியே சென்றது ஒரு புதிய அனுபவமாக இருந்தது என்று அதில் பங்குபற்றிய ஒருவர் கூறினார். முஸ்லிம் மக்கள் பிரதிநிதிகள் பேரணிக்கு ஆதரவாக அறிக்கைகளை விட்டிருந்தார்கள். முஸ்லிம் அரசியல்வாதிகள் பேரணியில் பங்குபற்றினார்கள். தமிழ்- முஸ்லிம் பிரதிநிதிகள் பேரணியில் கைகுலுக்கிக் கொண்டார்கள். ஜனாசா ஏரிப்புக்கு எதிரான முஸ்லிம்களின் உணர்வுகளை பேரணியை ஒழுங்குபடுத்தியவர்கள் பொருத்தமான விதத்தில் ஒருங்கிணைத்திருக்கிறார்கள். இது ஒரு திருப்பகரமான மாற்றம். அரசாங்கத்தின் கடந்த ஓராண்டு கால ஆட்சியானது பிளவுண்டிருந்த தமிழ் முஸ்லிம் சமூகங்களை ஒற்றுமைப்படுத்தியிருக்கிறதா? மூன்றாவது முக்கியத்துவம். இப்பேரணியில் சுமந்திரன் அணி பங்குபற்றியமை. கடந்த ஐந்தாண்டுகளாக நல்லாட்சி என்று அழைக்கப்பட்ட அரசாங்கத்தில் ஒரு பங்காளி போல தோன்றிய சுமந்திரன் சுதந்திர தினவிழாக்களில் பெருமளவுக்கு நேரடியான அல்லது மறைமுகமாக காணப்பட்டார். ஆனால் இம்முறை அவர் கிழக்கில் பேரணியில் தனது அணிகளோடு பங்குபற்றியிருக்கிறார். இது தொடர்பாக யாழ்ப்பாணத்தில் நடந்த சந்திப்புகளின் போதும் அவருடைய அணியினர் பிரசன்னமாகியிருந்தனர். சுமந்திரனுக்கு இதில் உள்நோக்கங்கள் உண்டு. கட்சிக்குள் தனது தலைமைத்துவத்தை பாதுகாப்பது கடந்த தேர்தலில் இழந்த தமது வாக்கு வங்கியை மீளப்பெறுவது பலப்படுத்துவது போன்ற உள் நோக்கங்களோடு அவர் இப்போராட்டங்களில் இறங்கியிருக்கலாம். தேர்தல் முடிவுகள் தந்த பாடத்திலிருந்து கூட்டமைப்பு கற்றுக் கொண்டிருக்கிறது என்பதை இது காட்டுகிறது. ஜெனிவாவை நோக்கி ஒரு பொது கோரிக்கையை முன்வைக்க வேண்டும் என்ற போதும் சுமந்திரன் அதிகபட்சம் விட்டுக்கொடுப்புடன் காணப்பட்டார். கடந்த சில மாதங்களாக எதிர்ப்பு அரசியல் தடத்தில் அவர் அதிகம் முகம் காட்டுகிறார். இந்த மாற்றத்தின் உள்நோக்கங்கள் குறித்து தனியாக ஆராயலாம். ஆனால் எதிர்ப்பு அரசியலை ஏற்றுக்கொள்ளாத தமிழ் அரசியல்வாதிகள் இப்போது அந்த தடத்துக்கு வந்திருக்கிறார்கள். நடந்து முடிந்த தேர்தல் கற்றுகொடுத்த பாடம் இது? எனவே மேற்கண்டவற்றை தொகுத்துப் பார்த்தால் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலுமான இந்த பேரணி என்பது பெருந் தொற்று நோய்க்குரிய முடக்கத்தின் பின்னரான நாட்டின் அரசியல் பரப்பில் தமிழ் மக்கள் எப்படியும் தம் எதிர்ப்பைக் காட்டுவார்கள் என்பதை நிரூபித்திருக்கிறது. தமிழ் மக்களின் எதிர்ப்பை ஒடுக்குவதற்கு பயங்கரவாதத் தடைச்சட்டம் போன்ற சட்டங்களை பயன்படுத்திய அரசாங்கம் கடந்த ஆண்டு முழுவதும் கோவிட்-19 தனிமைப்படுத்தல் சட்டங்களையும் பயன்படுத்தியது. இப்பேரணியைத் தடுப்பதற்கு பொலிசார்பயன்படுத்திய உத்திகளில் அதுவும் ஒன்று. ஆனால் தனிமைப்படுத்தல் சட்டங்களையும் மீறி பொலிஸ் மற்றும் படைத்தரப்பின் அச்சுறுத்தல்களையும் மீறி மக்கள் கிழக்கில் இருந்து வடக்கு வரை தெருவில் இறங்கியிருக்கிறார்கள். இக்கட்டுரையின் தொடக்கத்தில் கூறப்பட்டது போல தமிழ் மக்களுக்கு எதிர்ப்புவெளி இல்லையென்றால் அது முஸ்லிம் மக்களுக்கும் இல்லை சிங்கள மக்களுக்கும் இல்லை. தமிழ் மக்கள் அந்த எதிர்ப்பை கூர்மையான விதங்களில் வெளிப்படுத்தும் பொழுது அது முஸ்லிம் மக்களுக்கும் உரியதாகிறது. சிங்கள மக்களுக்கும் உரியதாகிறது. அதாவது தெளிவாகச் சொன்னால் தமிழ் மக்களுக்கு ஜனநாயகம் இல்லையென்றால் முஸ்லிம் மக்களுக்கும் கிடையாது சிங்கள மக்களுக்கும் கிடையாது.
லண்டனில் உருவாகிய புதிய கொரோனா தொற்றின் காரணமாக ஐரோப்பிய நாடுகளில் மீண்டும் கட்டுப்பாடுகளை அமுல்படுத்தியுள்ளனர். சரக்கு லொரி சாரதிகள் பலரும் பிரான்ஸ் மற்றும் பிரித்தானியா எல்லை மூடல் விவகாரத்தால் மிகுந்த பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர். இன்னும் ஆயிரக்கணக்கான லொரிகள் பிரித்தானிய- பிரான்ஸ் எல்லையில் நிறுத்தப்பட்டுள்ளன. அதிகாரிகள் ஒரு மணி நேரத்தில் அதிகபட்சமாக 200 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்துவருகின்றனர். இதனால், மிகவும் காலதாமதம் ஏற்பட்டு வருகிறமை குறிப்பிடத்தக்கது. சிலர் கிறிஸ்துமஸ் முடிவடந்த பின்னர் தான் தாங்கள் எல்லையில் இருந்தே வெளியேற முடியும் எனவும் குடும்பதினருடன் கிறிஸ்மஸ் கொண்டாட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
ஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள் Wednesday, February 24, 2016 கதைகூறுமுறைகள் அன்புள்ள ஜெமோ வெண்முரசின் அமைப்பு கிளாஸிக்தன்மை கொன்டது என்று தெரியும். ஆகவே அதில் பல்வேறு கதைகூறுமுறைகள் வந்துகொண்டே இருக்கின்றன. உணர்ச்சிகரமான கதைகள். கொந்தளிப்பானவை. மொழிவிளையாட்டுக்கள். என்னென்னமோ வந்துகொன்டிருக்கின்றன. அங்கதம் அடிக்கடி வருகிறது. பீமனின் சொற்களிலும் அங்கதம் உள்ளது. ஆனால் வண்ணக்கடல் நாவலுக்குப்பின் நேரடியாக அங்கத நாடகம் இப்போதுதான் வருகிறது என நினைக்கிறேன். திடீரென்று அது தொடங்கியது கொஞ்டம் ஆச்சரியமாக இருந்தாலும் சுதாரித்துக்கொன்டு வாசிக்க ஆரம்பித்தேன் பலகதைகளை இப்படி கலைவடிவங்கள் வழியாகச் சொல்கிறீர்கள். ஆச்சரியமான உத்திதான். கிருஷ்ணனின் கதைகள் எல்லாமே நாடகங்களாகவே வருகின்றன. சூதர்பாடல்களாக வருகின்றன பல விஷயங்கள். இது நிகழ்ச்சிகள் நிகழ்வதும் அவை பாடலாக ஆவதும் ஒரே சமயம் மாறி மாறி நடந்துகொண்டிருப்பதான உணர்ச்சியை அளிக்கிறது. அது ஒரு வகையான காவியநிலை என்று தோன்றுகிறது. நாடகத்திலெயேஎ பிரம்மனுக்கு தான் உண்மையான ஆளா எழுதப்படும் கதாபாத்திரமா என்ற சந்தேகம் வருவது உச்சம்
இந்தியாவின் உச்சபட்ச புலனாய்வு அமைப்பான சிபிஐ(CBI)-இன் உயரதிகாரிகள் இடையிலான மோதல் நகைப்புக்குரிய விஷயம் இல்லை. ஆனால், சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா மற்றும் சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா ஆகிய இருவருக்கும் இடையிலான பிரச்சனை, நையாண்டி செய்யப்படுகிறது. தன்னை கட்டாய விடுப்பில் அனுப்பிய மத்திய அரசின் முடிவுக்கு எதிராக அலோக் வர்மா தாக்கல் செய்திருந்த மனுவை விசாரித்து உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு அலோக் வர்மாவுக்கு சாதகமானதாக இல்லாவிட்டாலும், அது அரசின் முகத்தில் அறைவதாகவே இருக்கிறது. முக்கியமான வழக்குகளை விசாரிக்கும்போது, அதற்கு தனது ஜூனியரான ராகேஷ் அஸ்தானா லஞ்சம் பெற்றார் என்ற புகாரின் மீது நடவடிக்கை எடுத்த தன்னை கட்டாய விடுப்பில் மத்திய அரசு அனுப்பியதற்கு நியாயம் கேட்டு சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா, உச்ச நீதிமன்றத்தை அணுகினார். செல்வந்தரும் அதிகாரம் மிக்க தொழிலதிபரும், இறைச்சி ஏற்றுமதியாளருமான மொயின் குரேசி மற்றும் பல முக்கியமானவர்கள் தொடர்பான வழக்குகளை சிபிஐ விசாரித்து வருகிறது. வழக்கில் தொடர்புடைய முக்கிய நபர்களை அடையாளம் கண்டு, வெளிப்படுத்துவதற்கு முன்னதாக அவரை சிபிஐயில் இருந்து வெளியேற்றிவிட வேண்டும் என்று அலோக் வர்மாவுக்கு எதிராக சதி முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக, உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு ஒரு பின்னணியும் இருக்கிறது. குஜராத் மாநில பிரிவைச் சேர்ந்த ஐ.பி.எஸ் அதிகாரியான ராகேஷ் அஸ்தானா, சர்ச்சைக்குரிய பல முக்கியமான வழக்குகளை, அதிலும் குறிப்பாக போலீசார் தொடர்புடைய வழக்குகளை கையாண்டவர். குஜராத் முதலமைச்சராக நரேந்திர மோதி பதவியில் இருந்தபோது, கரசேவகர்கள் பயணித்த ரயில் தீவைக்கப்பட்ட (கோத்ரா ரயில்) வழக்கை விசாரித்தவர் ஆஸ்தானா. 2014ஆம் ஆண்டு மோதி பிரதமரான பிறகு, அஸ்தானாவில் பெயர் இடைக்கால இயக்குநராக பரிந்துரைக்கப்பபட்டது. ஆனால் தான் இயக்குநரான பிறகு, அஸ்தானா ‘சூப்பர் தலைவராக’ தன்னைவிட வலிமையுள்ளவராக செயல்பட விரும்புவதை அலோக் வர்மா விரைவிலேயே உணர்ந்துவிட்டார். மத்திய அரசின் தலைமை அஸ்தானாவுக்கு ஆதரவாக இருந்ததே அதற்கு காரணமாக இருந்திருக்கலாம். சிபிஐ சுயேட்சையான அமைப்பாக இருந்தாலும், ஆதாரங்களின் அடிப்படையில் நீதிமன்றத்துக்கு பதிலளிக்கும் பொறுப்பு கொண்டது. சிபிஐ விசாரணை செய்யும் வழக்குகளில் சுமார் 3% வழக்குகளில்தான் குற்றம் நடந்திருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது என்பதால், அதை விமர்சனம் செய்வதற்கான அவசியம் இல்லை. 13 வயது சிறுமி ஆருஷி தல்வார் கொலை வழக்கு (அவரது பெற்றோர் குற்றம்சாட்டப்பட்டனர்), ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்ட ராஷ்ட்ரிய ஜனதா தள (ஆர்.ஜே.டி) தலைவர் லாலு பிரசாத் (தற்போது சிறை தண்டனை அனுபவித்து வருகிறார்) வழக்கு போன்ற பல முக்கியமான வழக்குகளை சிபிஐ கையாண்டிருக்கிறது. வியாபம் முறைகேடு வழக்கு போன்ற வழக்குகள் மந்தமாக செல்வதை சிபிஐ அமைப்பை விமர்சிப்போர் சுட்டிக்காட்டுகின்றனர். ஆனால் இவை அனைத்திற்கும் மேலாக, சிபிஐக்கு என்று பொதுமக்களிடையே ஒரு மதிப்பு இருக்கிறது. அதனால்தான், உள்ளூர் போலீசார் விசாரணையில் நம்பிக்கை ஏற்படாவிட்டால் சிபிஐ விசாரணை வேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றனர். சிபிஐ, தற்போது அரசுடன் சமரசம் செய்து கொண்டிருப்பது தெரிகிறது. வர்மாவிற்கும் அஸ்தானாவிற்கும் இடையிலான மோதலில் இடைக்கால இயக்குனராக நியமிக்கப்பட்ட எம்.நாகேஷ்வர் ராவ், சிறப்பு விசாரணைக் குழு (எஸ்.ஐ.டி.) நியமனம் செய்து, குற்றச்சாட்டுகளையும், அதற்கு எதிரான குற்றச்சாட்டுக்களையும் விசாரிக்க வேண்டும். அலோக் வர்மா மற்றும் ராகேஷ் அஸ்தானாவைத் தவிர வேறு பல அதிகாரிகளும் விடுப்பில் அனுப்பப்பட்டுள்ளனர். அவர்கள் இந்த விசாரணையில் சாட்சிகளாகலாம். அலோக் வர்மா மீதான குற்றச்சாட்டுக்கள் குறித்து, தங்களால் நியமிக்கப்பட்ட ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.கே. பட்நாயக் மேற்பார்வைில் விசாரணை நடத்தி, 14 நாட்களுக்குள் சிவிசி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிபிஐயின் இடைக்கால இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ள நாகேஸ்வர ராவ், எடுக்கும் முடிவுகள் பற்றி சீலிடப்பட்ட உறையில் நவம்பர் 12-ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும், அவர் வழக்கமான நிர்வாகப் பணிகளைத் தவிர, கொள்கை முடிவுகள் எதையும் எடுக்கக் கூடாது என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உதாரணமாக, சிபிஐ கையாளும் லாலு பிரசாத்தின் மகள் மிசா, பண மோசடியில் ஈடுபட்ட வழக்கு நீதிமன்ற விசாரணையில் இருக்கிறது. லாலு பிரசாத் ரயில்வேத் துறை அமைச்சராக இருந்தபோது ஒப்பந்தங்களை ஒதுக்கீடு செய்வதில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பான வழக்குகளும் விசாரணையில் இருக்கின்றன. தனக்கு எதிரான வழக்கு தொடுக்க எந்தவித முகாந்திரமும் இல்லை, இது அரசியல் நோக்கம் கொண்ட நடவடிக்கை என்று லாலு பிரசாத் யாதவ் தொடர்ந்து தெரிவித்துவந்தார். இதில் ஆதாரம் இல்லை என்று இதற்கு முன்பு பதிலளித்திருந்தாலும், சாட்சிகளை உருவாக்க முடியும் என்று தற்போது கூறப்படும் நிலையில் நிலைமைகள் மாறலாம். ஒருவேளை பிற வழக்குகளிலும் சாட்சியங்கள் உருவாக்கப்பட்டவை என்று சொன்னால்… அலோக் வர்மா காலவரையற்ற விடுப்பில் செல்லப் பணிக்கப்பட்டது சட்டவிரோதம் என்று கூறிய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, ரஃபேல் போர் விமான பேரத்தில் நடந்த முறைகேட்டில் பிரதமர் நரேந்திர மோதியின் பங்கு பற்றி விசாரிக்காமல் தடுக்கவே அவர் மீது குற்றம் சாட்டப்பட்டு, விடுப்பில் அனுப்பப்பட்டார் என்று கூறியிருக்கிறார். ஆனால் விஷயம் அதையும் தாண்டிவிட்டது. இது அரசின் திறமையின்மையை காட்டுகிறது. கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு முன்பு, அப்போதைய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு எதிராக நான்கு நீதிபதிகள் ‘கலகம்’ செய்தனர். நீதிபதிகளுக்கு வழக்குகள் ஒதுக்கப்படுவதில் தீபக் மிஸ்ரா உள்நோக்கத்துடன் செயல்படுவதாகவும், வழக்குகள் ஒதுக்கீடு செய்யப்படுவதில் நீதி வழங்குவது என்பதைத் தவிர வேறு காரணிகளும் இருப்பதாக போர்க்கொடி உயர்த்திய நீதிபதிகள் குற்றம் சாட்டினர். தற்போதைய நிலையை அவதானித்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், வழக்கில் முகாந்திரம் ஏதாவது இருக்கிறதா என்பதற்கான விசாரணைதான் இது என்று தெரிவித்தார். நவம்பர் 12ஆம் தேதியன்று மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும். அலோக் வர்மாவோ, ராகேஷ் அஸ்தானாவோ இந்த தீபாவளியை நிம்மதியாக கொண்டாடமாட்டார்கள் என்பதைச் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. ஆனால், ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி ஏ.கே. பட்நாயக்கின் மேற்பார்வையில் இந்த விசாரணை நடக்கும் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது தான் அதிர்ச்சியளிப்பதாக இருக்கிறது. இதுவரை சிபிஐ நீதிமன்றத்தில் வெற்றி பெற்ற வழக்குகள் அனைத்தும் இப்போது நீதித்துறையால் மீளாய்வு செய்யப்படும். அதாவது அவற்றில் லஞ்சம் கொடுத்தோ அல்லது அரசியல் விருப்பங்களுக்கு ஏற்ப சாட்சியங்கள் வழங்கப்பட்டதா என்று ஆய்வு செய்யப்படும். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு புத்தாண்டு வாழ்த்து அட்டையை கொடுப்பதற்காக, மத்திய அரசின் முதன்மை செயலாளர், நிருபேந்திர மிஸ்ரா நேரில் சென்றார். ஆனால் உண்மையில் இக்கட்டான சூழலிலும் அவருக்கு ஆதரவாக இருப்பதை சொல்வதற்காகவே அவர் சென்றார். ஆனால் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் வீட்டிற்கு சென்றாலும், அவரை சந்திக்க முடியவில்லை. மத்திய அரசின் முதன்மைச் செயலரை சந்தித்தால், தான் மத்திய அரசுக்கு ஆதரவாக செயல்படுவதாக குற்றம் சாட்டப்படலாம் என்பதாலேயே நிருபேந்திர மிஸ்ராவை, தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா பார்க்காமல் தவிர்த்தார். தற்போது உச்ச நீதிமன்றம் மத்திய அரசு எங்கே நிற்கவேண்டும் என்ற எல்லைக்கோட்டை வரையறுக்குமா என்பதை தெரிந்துக் கொள்ள நவம்பர் 12ஆம் தேதி வரை காத்திருக்க வேண்டும். Related சமீபத்தில் சிபிஐ ல் ஏற்பட்ட நிகழ்வுகள் அதன் வேலை திறனை பாதிக்குமா? November 21, 2018 In "GENERAL STUDIES II" அரசின் குறுக்கீடு சிபிஐ ன் செயல்படும் திறனை எவ்வாறு குறைகிறது? November 21, 2018 In "GENERAL STUDIES II" சிபிஐ சுதந்திரமாகவும் நடுநிலையாகவும் செயல்பட நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றப்பட வேண்டும். கருத்து தெரிவி November 21, 2018 In "GENERAL STUDIES II" Post navigation ← Previous Post Next Post → Related Posts ஒரு நாடு ஒரே தேர்தல்(SIMULTANEOUS ELECTION) – Pros and Cons GENERAL STUDIES II, POLITY ஜன் ஆரோக்ய யோஜனா என்றால் என்ன?காப்பீட்டுமுறைகளில் உள்ள பிரச்சனைகள் என்ன?அதனை எவ்வாறு கலையலாம்?/What is Jan Arokya Yojana?Problems in the Scheme. GENERAL STUDIES II, HEALTH, மத்திய அரசின் திட்டங்கள் ‘ஆர்செப்’ பிராந்திய வர்த்தகப் (RCEP) பேச்சுவார்த்தை இந்தியாவிற்கு கிடைக்கும் நன்மைகள் என்ன? GENERAL STUDIES II, INTERNATIONAL RELATION CBI என்பது என்ன? GENERAL STUDIES II, POLITY மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM) பயன்படுத்துவதைப் பற்றிய சமீபத்திய சர்ச்சை பற்றி விவரி? GENERAL STUDIES II, POLITY இஸ்ரேலுடனான இந்தியாவின் உறவு எவ்வாறு உள்ளது? GENERAL STUDIES II, INTERNATIONAL RELATION, UPSC பழைய வினாக்கள் Search for: Search Recent Updates இந்திய அரசமைப்பின் சிறப்பு அம்சங்களை விரிவாக கூறு / Elucidate the salient features of Indian Constitution. August 14, 2021 ஒரு பொருளாதாரத்தில் பணவீக்கத்திற்கான காரணங்கள் மற்றும் விளைகள் யாவை? / What are the causes and effects of inflation on the economy? August 8, 2021 இந்திய வெளியுறவுக் கொள்கையின் அடிப்படைக் கோட்பாடுகள் யாவை? அணிசேரா இயக்கத்தில் ஆப்பிரிக்க ஆசிய நாடுகளை இணைத்ததில் பிரதமர் நேரு அவர்களின் பங்கினை விளக்குக. / What were the basic principles of India’s foreign policy? What role did Prime minister Nehru in organizing the Afro-Asian countries into a non-aligned movement? August 7, 2021 பெகாசஸ் (Pegasus) என்றால் என்ன? / What is Pegasus Software? August 2, 2021 ஆட்கடத்தல் மசோதா 2021 பற்றி எழுதுக / Write about the Trafficking in Persons (Prevention, Care and Rehabilitation) Bill, 2021 August 1, 2021 இந்திய வெளியுறவுக் கொள்கையின் முக்கிய அம்சங்கள் குறித்து விவாதி. / Discuss the principles of Indian Foreign Policy. August 1, 2021 1975-77 ல் தேசிய அவசரநிலை ஏன் கொண்டுவரப்பட்டது? அதன் தாக்கங்களை விவரி. / Why 1975 – 1977 National Emergency Imposed? Explain the Impacts. July 30, 2021 பெரியார் அவர்கள் தமிழ் சமூகத்திற்கு ஆற்றிய பங்கினை விவரி / Explain the role Played by Periyar to Tamil Society July 30, 2021 Write about Chief Election Commissioner and Election Commissioner / இந்தியாவின் தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்களை பற்றி எழுதுக July 27, 2021 இந்தியக் குடியரசுத் தலைவரின் அதிகாரங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்து விளக்குக. / Explain the powers and functions of the President of India. July 21, 2021
தனுஷ் நடித்த துள்ளுவதோ இளமை காதல் கொண்டேன் யாரடி நீ மோகினி திருவிளையாடல் ஆரம்பம் 3 ஆகிய படங்களைத் தயாரித்த ஆர்.கே.புரொடக்‌ஷன்ஸ் பட நிறுவனம் தற்போது தயாரிக்கும் படமான ”பாண்டி முனி” படத்தின் படப்பிடிப்பு கோத்தகிரி ஊட்டி பகுதிகளில் 25 நாட்கள் நடை பெற்றது. இந்தப்படத்தில் ஜாக்கி ஷெராப் அகோரி வேடத்தில் நடிக்கின்றார். கதாநாயகனாக ஆசிப் என்ற மாடல் அறிமுகமாகிறார். நாயகிகளாக மேகாலி ,ஜோதி, வைஷ்ணவி, யாஷிகா அறிமுகமாகிறார்கள்.முக்கிய வேடத்தில் ஷாயாஜி ஷிண்டே நடிக்கிறார். மற்ற நடிகர்கள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளனர். ஒளிப்பதிவு – மது அம்பட் / இசை – ஸ்ரீ காந்த்தேவா கலை – ஸ்ரீமான் பாலாஜி / நடனம் – சிவசங்கர் சண்டை பயிற்சி – சூப்பர்சுப்பராயன் / எடிட்டிங் – சுரேஷ் அர்ஸ் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் கஸ்தூரி ராஜா. படப்பிடிப்பில் நடந்த சுவாரஸ்யமான விஷத்தை பற்றி இயக்குனரிடம் கேட்ட போது, பயங்கரமான ஹாரர் படம் இது. சுமார் 70 வருடங்களுக்கு முன்னால் காட்டுப் பகுதி அரண்மனையில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து இந்த கதை உருவாக்கப் பட்டுள்ளது. படப்பிடிப்பு கோத்தகிரியில் நடைபெற்ற போது ஆச்சர்யமான ஒரு சம்பவம் நடந்தது, பனகுடிசோலை என்கிற இடத்தில் அந்தப்பகுதி மக்கள் தங்களது இஷ்ட கடவுளாக கும்பிடும் குட்டஞ்சாமி என்கிற கோயில் உள்ளது… இந்த கோயிலுக்கு சுமார் 700 வருஷமாகிறது என்று சிலர் சொல்கிறார்கள்…சிலர் ஆயிரம் வருஷமாகிறது என்கிறார்கள். அந்த கோயிலுக்கு பஞ்ச பாண்டவர்கள் வந்து சென்றதாகவும் சொல்கிறார்கள். அது குகைக்கோயில் மாதிரியான இடம். அங்கே நாங்கள் படப்பிடிப்பை நடத்திக் கொண்டிருந்தோம். அங்கே வந்த ஊர் மக்கள் இந்த கோயிலுக்குள் பெண்கள் செல்லக் கூடாது.. செருப்பு உபயோகிக்கக் கூடாது என்றார்கள். நாங்கள் வருத்தம் தெரிவித்து விட்டு வந்தோம். மறு நாள் அந்த இடத்திற்கு அருகில் படப்பிடிப்பை நடத்த சென்றோம். சென்ற கொஞ்ச நேரத்திலேயே மேகாலிக்கு சாமி வந்து ஆட ஆரம்பித்து விட்டார். நாங்கள் வெல வெலத்துப் போய் விட்டோம். ஊர்க்காரர்கள் ஒன்று கூடி பரிகார பூஜை செய்த பிறகே சாமியாட்டம் நின்றது. அந்த அனுபவம் ஆச்சர்யமாக இருந்தது. குறிஞ்சிப் பூவை பார்ப்பதே அபூர்வம்…நாங்கள் படப்பிடிப்பை நடத்திய இடத்தை சுற்றிலும் குறிஞ்சி பூ கண் கொள்ளா காட்சி. அதையும் எங்கள் காமிராவுக்குள் பதுக்கிக் கொண்டோம். அதை விட இன்னொரு அதிசயமும் நடந்தது…பனகுடி சோலையில் அந்த குட்டஞ்சாமி கோயில் மேல் ஹெலிகேம் பறக்க வில்லை என்பது அதிசயமான ஒன்று…கோயிலை சுற்றி உள்ள இடங்களில் பறந்த ஹெலிகேம் கோயில் மேல் பறக்காதது ஏன் என்பது தான் ஆச்சர்யமானது. ஆசிப், மேகாலி, ஜோதி, வைஷ்ணவி,யாஷிகா ஆகியோர் சம்மந்தப்பட்ட காட்சிகள் மூன்று பாடல் காட்சிகள் படமாக்கப் பட்டுள்ளது. அடுத்த கட்டப் படப்பிடிப்பில் ஜாக்கி ஷெராப் அகோரி கெட்டப்பில் இனைய உள்ளார் என்றார் கஸ்தூரிராஜா.
குற்றச் சம்பவங்களைப் பதிவுசெய்யும் FactChecker.in இணையதளத் தகவல்படி இந்தியாவிலேயே அதிக மக்கள்தொகை உள்ள உத்தரப் பிரதேசத்தில் 2017 மார்ச்சில் பாஜகவும் யோகி ஆதித்யநாத்தும் ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து நாட்டின் பசு தொடர்பான வன்முறையில் 69% இங்குதான் நிகழ்கிறது. அடித்துக் கொல்லப்பட்ட மேற்கு உ.பி. யின் ஹபூரில் காசிம் குரேஷி (45), வடக்கு உ.பி.யின் பரேலியில் ஷாருக்கான் (29), சமீபத்திய கொலைகளான காவல் ஆய்வாளர் மற்றும் வேடிக்கை பார்த்த ஒருவர் ஆகியோர் உட்பட 2018இல் 21 தாக்குதல்களில் 4 சாவுகளுடன் பசு தொடர்பான வெறுப்பு வன்முறையில் இரத்தம் அதிகம் பார்த்த மாநிலமாக உ.பி. ஆகியுள்ளது. 2017இல் ஐந்து சாவுகளுடன் மேற்கு வங்கம் அதிக வன்முறையைக் கண்டது. 2017 மார்ச்சுகு முன் – அதாவது ஆதித்யநாத் முதல்வராவதற்கு முன் – உ.பி. யில் பசு தொடர்பான வன்முறைச் சம்பவங்கள் 5 முறை நிகழ்ந்திருந்தன. அதன் பின்னர் 03 டிசம்பர், 2018 வரை 11 முறை இச்சம்பவங்கள் நடந்துள்ளன. ஆண்டு முடிய இன்னும் 20 நாள் இருக்கும் நிலையில் 21 தாக்குதலில் 10 சாவுகள் என்ற எண்ணிக்கையில் இதுவரை கண்ட மோசமான ஆண்டாகிய 2017ஐ விட ஒரு கொலை மட்டும் குறைவாக 2018இல் நடந்துள்ளது. நமது தகவல்களின்படி இத்தாக்குதல்கள் கொடூரமாகிவருகின்றன. மேற்கு உ.பி. யில் பசுப் பாதுகாவலர்களால் டிசம்பர் 03இல் சுட்டுக் கொல்லப்பட்ட காவல் ஆய்வாளர் சுபோத் குமார் சிங்கின் கொலைதான் சமீபத்தில் நிகழ்ந்த தாக்குதலாகும். சில பசுக்களின் சடலங்கள் கண்ணில் பட்டதால் ஏற்பட்ட கோபத்தில் தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தெரிகிறது. சம்பவத்தை வேடிக்கை பார்த்த 21 வயது அரசுக் கல்லூரி மாணவர் சுமித்தும் துப்பாக்கிக் குண்டு பட்டு இறந்துவிட்டார். சமூக ஊடகத்தில் வலம் வரும் வீடியோவில் இறந்த ஆய்வாளரின் உடல் அவரது அலுவலக வாகனத்தில் தொங்கிக்கொண்டிருக்க, போராட்டக்காரர்கள் காட்சியைப் பதிவுசெய்யும்போது பின்னணியில் துப்பாக்கிக் குண்டுகள் முழங்கும் சத்தம் கேட்கிறது. இந்திய விமானப் படையில் பணிபுரியும் அலுவலரின் தந்தை முகம்மது அக்லக் (47) தாத்ரியில் (மேற்கு உ.பி.) 28.9.2015 அன்று அடித்துக் கொல்லப்பட்டதை விசாரித்து வந்த சிங் 2015 நவம்பரில் வாரணாசிக்குப் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். FactCheck இணையத் தகவல்படி அக்லக்கின் கொலைதான் பசுவதை தொடர்பாக உ.பி.யில் நிகழ்ந்த முதல் கொலையாகும். “அக்லக் கொலை குறித்த புலனாய்வை சிங் தீவிரமாக நடத்தி வந்தார்,” என்கிறார் அக்லக் மற்றும் அடித்துக் கொல்லப்பட்ட பிறரின் குடும்பங்களுக்காக ஆஜரான வழக்கறிஞர் ஆசாத் ஹயாத். FactChecker.in இணையதளத்துடன் பேசுகையில் “முதல் தகவல் அறிக்கையைத் தாக்கல் செய்து, சிலரைக் கைது செய்து, மாதிரிகளைப் பரிசோதனைக்கு அனுப்பி அது பசு மாமிசம் இல்லை என்று அவர் கண்டுபிடித்தார்,” என்கிறார் ஹயாத். “வன்முறையைத் தூண்ட இவர்களெல்லாம் என்ன செய்வார்கள் என்று சிங்குக்குத் தெரியும், அதனால்தான் அவர்கள் அவரைத் தாக்க முயன்றனர்” என்று கூறும் ஹயாத் மேலும் தொடர்கிறார்: ‘மோசடியினூடே சரியானதைக் கண்டுகொள்ள அவரால் முடியும்.” “கும்பலின் கையில் முந்தைய நாளிரவே மாமிசம் கிடைத்தது என்றால், அவர்கள் ஏன் உடனடியாக போலீசைக் கூப்பிடவில்லை?” எனக் கேட்கிறார் ஹயாத். “பசுவதை பற்றி அவர்களுக்கு அக்கறை இருந்திருந்தால், அடுத்த நாள் காலை வரை காத்திருந்து, இந்துத்துவக் குழுக்களின் ஆதரவுடன் போலீஸ் ஸ்டேஷனை ஏன் தாக்க வேண்டும்?” சிங்கைக் கொலை செய்யத்தான் தாக்குதல் நடந்தது என்று இப்போதே சொல்ல முடியாது என்று FactChecker.in தளத்திடம் சொல்கிறார் கூடுதல் டி.ஜி.பி. (மீரட்) பிரஷாந்த் குமார். “அக்லக் கொல்லப்பட்ட நேரத்தில் சிங் இங்கு மாற்றம் செய்யப்பட்டு வந்ததால் அவரை விசாரணை அதிகாரியாக ஆக்கினர்; ஒன்றரை மாதம் வழக்கில் வேலை செய்யும் முன்னரே திரும்பவும் அவருக்குப் பணியிட மாற்றல் வந்தது; குற்றப் பத்திரிகையைத் தாக்கல் செய்யக்கூட அவரால் முடியவில்லை,” என்கிறார் குமார். இக்கொலையை ஒரு சிறப்பு விசாரணைக் குழு (SIT) விசாரிக்கும் என அவர் உறுதியளிக்கிறார். “அவரைக் குறிவைத்துத்தான் தாக்குதல் நடந்தது என்று இப்போது சொல்ல முடியாது என்றாலும், மேலோட்டமாக உண்மை போல் தெரியாத ஒன்று பின்னர் உண்மையாகத் தெரியலாம்; எனவே இதுபற்றி நான் கருத்து கூற மாட்டேன்,” என்கிறார் குமார். “இதுபற்றிய இறுதி முடிவை SITயால் எடுக்க முடியும் எனத் தோன்றுகிறது,” என்றார். யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக அரசு உ.பி.யில் பதவியேற்றதும் அதிகரித்துள்ள வன்முறை நமது தகவல் கருவூலத்தின் அடிப்படைக் கண்டுபிடிப்புக்களை எதிரொலிக்கிறது: 2010இலிருந்து (நமது தகவல் கருவூலம் தொடங்கப்பட்ட நாள்) இந்தியாவின் பசுவதை தொடர்பான 97 வழக்குகள் தெரியவந்துள்ளன, அவற்றுள் 98% வழக்குகள் பிரதமர் நரேந்திர மோடி மத்தியில் பதவியேற்ற 2014க்குப் பின்னர் நிகழ்ந்தவை. 20 கோடிப் பேர் உள்ள மக்கள்தொகையுடன் இந்தியாவின் பெரிய மாநிலம் என்ற முறையில் நாட்டு மக்கள்தொகையில் 16% உ.பி. யில்தான் உள்ளது. 2018-ஆம் ஆண்டு பசுவதை தொடர்பாகப் பதிவான 40% (10இல் 4) சாவுகளும் 29% தாக்குதல்களும் (21இல் 6) உ.பி.யில்தான் நிகழ்ந்துள்ளன. 2017இல் இம்மாதிரியான 5 தாக்குதல்கள் உ.பி.யில் நிகழந்தன, ஆனால் சம்பவங்களில் ஒருவரும் சாகவில்லை. இந்த ஆண்டு, ஆறு வழக்குகள் மற்றும் நான்கு சாவுகளுடன், 2015ஆம் ஆண்டு நிகழ்ந்த உச்சபட்ச வன்முறையை (3 வழக்குகள், 4 சாவுகள்) இவ்வாண்டு தொட்டுவிட்டது. மோசமாகிவரும் பசுப் புரவலர்களின் தாக்குதல்கள் எமது தகவல் கருவூலத்திலிருந்து வெளிவரும் செய்முறைகளைப் பார்த்தால், பசுப் புரவலர்களின் தாக்குதல் இன்னும் மோசமாகிவிட்டது. இம்மாதிரியான கூட்ட வன்முறை சாவில் முடியும் சாத்தியக்கூறு 18% வரை அதிகரித்துள்ளது; 2017இல் 30% ஆக இருந்தது (37இல் 11 சாவு) 2018இல் 48%-ஆக அதிகரித்தது (21இல் 10 சாவுகள்). பசுவதை தொடர்பான வன்முறையில் தாக்கப்பட்டவர்களில் 55% பேரும் கொல்லப்பட்டவர்களில் 86% பேரும் முஸ்லீம்களே (நாட்டின் மக்கள் தொகையில் இவர்கள் 14% பேர்). பசுக்களின் சடலங்கள் இதற்கு முன்னரும் புலந்த்சாஹரில் வன்முறையைத் தூண்டியுள்ளன. 2017 ஆகஸ்டில் (மீலாது நபிக்கு ஒரு நாள் முன்பு) உள்ளூர் குட்டை ஒன்றில் பசுவின் சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. உடனே, வெறிகொண்ட கூட்டமொன்று பக்கத்திலிருந்த முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் அடௌலி கிராமத்தை (அண்மைக் குற்றச் சம்பவம் நடந்த 50 கிலோமீட்டருக்குள் உள்ள கிராமம்) தாக்கியது. 26.8.2017 அன்று தி டைம்ஸ் ஆஃப் இந்தியா கூறியது போல வீடுகளைச் சூறையாடி, இருப்பவர்களை அடித்து, இரு வழிபாட்டு இடங்களைத் தரைமட்டமாக்கினர். அலிசன் சால்தானா (கட்டுரையாசிரியர் IndiaSpend மற்றும் FactCheckerஇல் துணை ஆசிரியராகப் பணிபுரிந்துவருகிறார்.) நன்றி: https://www.firstpost.com/india/uttar-pradesh-records-69-of-cow-related-violence-cases-since-yogi-adityanath-took-charge-situation-has-deteriorated-across-india-5674771.html Share $('#twitter').sharrre({share: {twitter: true },template: ' ',enableHover: false,enableTracking: true,buttons: { twitter: {via: ''}},click: function(api, options){api.simulateClick();api.openPopup('twitter');}});$('#facebook').sharrre({share: {facebook: true },template: ' ',enableHover: false,enableTracking: true,buttons:{layout: 'box_count'},click: function(api, options){api.simulateClick();api.openPopup('facebook');}}); // Scrollable sharrre bar, contributed by Erik Frye. Awesome! var $_shareContainer = $(".sharrre-container"),$_header = $('#header'),$_postEntry = $('.entry'),$window = $(window),startSharePosition = $_shareContainer.offset(),//object contentBottom = $_postEntry.offset().top + $_postEntry.outerHeight(),topOfTemplate = $_header.offset().top,topSpacing = _setTopSpacing();//triggered on scroll shareScroll = function(){var scrollTop = $window.scrollTop() + topOfTemplate,stopLocation = contentBottom - ($_shareContainer.outerHeight() + topSpacing);$_shareContainer.css({position : 'fixed'});if( scrollTop > stopLocation ){$_shareContainer.css( { position:'relative' } );$_shareContainer.offset( {top: contentBottom - $_shareContainer.outerHeight(),left: startSharePosition.left,});}else if (scrollTop >= $_postEntry.offset().top - topSpacing){$_shareContainer.css( { position:'fixed',top: '100px' } );$_shareContainer.offset( {//top: scrollTop + topSpacing,left: startSharePosition.left,});} else if (scrollTop < startSharePosition.top + ( topSpacing - 1 ) ) {$_shareContainer.css( { position:'relative' } );$_shareContainer.offset( {top: $_postEntry.offset().top,left:startSharePosition.left,});}},//triggered on resize shareMove = function() {startSharePosition = $_shareContainer.offset();contentBottom = $_postEntry.offset().top + $_postEntry.outerHeight();topOfTemplate = $_header.offset().top;_setTopSpacing();}; setTimeout( function() {contentBottom = $_postEntry.offset().top + $_postEntry.outerHeight();}, 2000);function _setTopSpacing(){var distanceFromTop = 20;if( $window.width() > 1024 ) {topSpacing = distanceFromTop + $('.nav-wrap').outerHeight();} else {topSpacing = distanceFromTop;}return topSpacing;}//setup event listeners $window.on('scroll', _.throttle( function() {if ( $window.width() > 719 ) {shareScroll();} else {$_shareContainer.css({top:'',left:'',position:'' }) }}, 50 ) );$window.on('resize', _.debounce( function() {if ( $window.width() > 719 ) {shareMove();} else {$_shareContainer.css({top:'',left:'',position:'' }) }}, 50 ) ); });
ஷாப்பிங் பேக் விளம்பரம், நிறுவனங்கள் அல்லது தயாரிப்புகள் மற்றும் சேவைகளின் சந்தை தகவலை உலகிற்கு பரப்புவதற்கு பையின் வரையறுக்கப்பட்ட பகுதியைப் பயன்படுத்தலாம். ஷாப்பிங் பைகளை எடுத்துச் செல்லும் வாடிக்கையாளர்கள் அதிக வீதிகள் மற்றும் பின் பாதைகளை எடுத்துச் செல்லும்போது, ​​அவை உண்மையில் சில நேர்த்தியான விளம்பரப் பைகளாகும், அவை சிறந்த விளம்பர அடையாளத்தை உருவாக்குவதற்குக் குறைவானவை அல்ல, ஆனால் செலவு ஒப்பீட்டளவில் குறைவாக உள்ளது. 2. அறிவு ஷாப்பிங் பை இது ஷாப்பிங் பேக்கில் உலகப் புகழ்பெற்ற ஓவியங்கள் மற்றும் சீன எழுத்துக்கள் போன்ற அனைத்து வகையான வடிவங்களையும் சொற்களையும் குறிப்பிட்ட அறிவுடன் அச்சிடுகிறது. இவ்வகையான ஷாப்பிங் பேக், நுகர்வோர் பொருட்களை எடுத்துச் செல்வதற்கு வசதியாக அமைவது மட்டுமின்றி, மக்களின் உணர்வை வளர்ப்பதுடன், அற்புதமான உளவியல் உணர்வையும் ஏற்படுத்துகிறது. 3. பரிசு ஷாப்பிங் பை சீனா ஆசாரம் நிறைந்த நாடு. புத்தாண்டு விடுமுறைகள் மற்றும் பிறந்தநாள் கொண்டாட்டங்களின் போது மக்கள் எப்போதும் "நடக்கவும் நடக்கவும்" பரிசுகளைக் கொண்டு வருகிறார்கள், இதனால் உணர்வுகளைத் தொடர்பு கொள்ளவும், சூழ்நிலையை அமைக்கவும். "உங்களுக்கு நீண்ட ஆயுள் வாழ்த்துக்கள்" மற்றும் "வாழ்த்துக்கள்" என்று அச்சிடப்பட்ட ஷாப்பிங் பையில் விருந்தினர் பரிசை எடுத்துச் செல்லும்போது, ​​​​புரவலர் பரிசை மட்டுமல்ல, அவரது இதயத்தில் சில ஆர்வத்தையும் உணர்கிறார். 4. நினைவு ஷாப்பிங் பை ×× கலை விழா நினைவுப் பரிசு, சுற்றுலா நினைவுப் பை போன்றவை. இந்த உத்தியானது மக்களின் நினைவு உளவியல் மற்றும் கௌரவ உளவியலைப் பூர்த்தி செய்கிறது, இதனால் மக்கள் ஷாப்பிங் செய்த பிறகும் புதிய உணர்வுடன் இருப்பார்கள். 5. எளிய ஷாப்பிங் பை வாடிக்கையாளர்கள் பல்வேறு பொருட்களை வாங்கும்போது, ​​எளிய ஷாப்பிங் பேக்குகள் தேவைப்படும்போது, ​​மக்களின் கவலைகளை தீர்க்கும் வகையில் கடையில் ஒன்றை வழங்கினால், அது நுகர்வோரால் வரவேற்கப்படும். வசதியே பதவி உயர்வுக்கான ஒரு முக்கியமான தந்திரம். 6. நேரம் சார்ந்த ஷாப்பிங் பை மக்கள் பொதுவாக உயர்ந்த வாழ்க்கைத் தரத்தை பின்பற்றுகிறார்கள், மேலும் நாகரீகமான பொருட்கள் தற்போதைய நுகர்வு போக்கை வழிநடத்துகின்றன. சமூகத்தில் "சூடான" ஏதாவது இருக்கும் போது, ​​கடையில் பொருட்களின் வடிவத்தையும் விளம்பரத் தகவலையும் அழகான ஷாப்பிங் பையில் அச்சிட்டால், அது சந்தேகத்திற்கு இடமின்றி ஒரு முக்கிய விளம்பர வழி. ஒரு கடையில் சூடான பொருட்கள் கிடைப்பதை நுகர்வோர் பார்க்கும்போது, ​​"தடுக்க முடியாத சலனம்" உள்ளது.
மோகன் ராஜா இயக்குவதாக ஆரம்பத்தில் அறிவிக்கப்பட்ட இந்த திரைப்படத்தை பிரஷாந்த்தின் தந்தையான தியாகராஜன் இயக்கியுள்ளார். கடந்த 2018-ம் ஆண்டு அக்... கோவில்பட்டி அருகே மூதாட்டியின் வீட்டில் தீ பற்றி எரிந்து முற்றிலும் சேதம்-ஆதரவின்றி தவிக்கும் மூதாட்டி. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே விளாத்திகுளத்தில் உள்ள எம்ஜிஆர் நகரில் வசித்து வருபவர் மூதாட்டி செல்வி. (75) வயதான மூதாட்டி செல்விக... கோவில்பட்டியில் பாம்புக்கு பலியாகி தாயை காத்த தனயன் கோவில்பட்டி அருகே தாயை காப்பாற்ற முயற்சி செய்த 5 வயது சிறுவன் பாம்பு கடித்து பலியான பரிதாபம் - சோகத்தில் மூழ்கிய கிராமம் தூத்துக்குடி மாவ... திருவள்ளுர் அடுத்த மப்பேடு பள்ளி விடுதியில் மாணவி தூக்கிலிட்டு தற்கொலை மப்பேடு அருகே கீழச்சேரி ஊராட்சி அரசு நிதி உதவி பெறும் பள்ளி விடுதியில் தங்கி 12ம் வகுப்பு படிக்கும் திருத்தணி தக்களூர் கிராமத்தைச் சேர்ந்த ... கோவில்பட்டியில் 91வது மாவீரன் பகத்சிங் நினைவு தினத்தை முன்னிட்டு மாவீரன் பகத்சிங் இரத்ததான முகாம் நடைபெற்றது கோவில்பட்டியில் 91வது மாவீரன் பகத்சிங் நினைவு தினத்தை முன்னிட்டு மாவீரன் பகத்சிங் இரத்ததான கழகம் அறக்கட்டளை சார்பில் மாபெரும் இரத்ததான முகாம... கே.ஜி.எப்.-2 திரைப்டத்தில் நடித்த பிரபல நடிகர் மரணம் கன்னட திரை உலகில் பிரபலமான ராகிங் ஸ்டார் என அழைக்கப்பட்ட நடிகர் யாஷ் திடிர் மரணம். கன்னட உலகில் கே.ஜி.எப்.-2 அதிகவசூல் தந்த திரைப்படமாக கருத... புதிதாக அமையவிருக்கும் மதுபான கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து கந்திலி காவல்நிலையத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள் திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த கந்திலி ஒன்றியத்துக்கு உட்பட்ட நார்சாம்பட்டி பகுதி மக்கள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் கந்தில... சட்டவிரோத சினைமுட்டை விற்பனையில் ஈடுபட்டால் 10 ஆண்டு சிறையும் 50 லட்சம் அபராதமும் விதிக்கப்படும் ஈரோடு கருமுட்டை விவகாரம் குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணி செய்தியாளர்களை சந்தித்த போது ஈரோடு கருமுட்டை விவகாரத்தில் 6 மருத்துவமனை தொடர்ப்புடை... அதியமான் கல்வி நிறுவனங்களின் நிறுவனரும், சமூக சேவகருமான சீனி திருமால் முருகன் அவர்களின் பிறந்தநாள் விழா கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அதியமான் கல்வி நிறுவனங்களின் நிறுவனரும், சமூக சேவகருமான சீனி திருமால் முருகன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்... கோவில்பட்டி அருகே காவல் நிலைய காவல் ஆய்வாளர் பாலியல் புகாரில் சிக்கிய விவகாரத்தில் இன்று திடீரென சஸ்பெண்ட் செய்யப்பட்டார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே விளாத்திகுளம் உட்கோட்ட குற்ற பிரிவு காவல் ஆய்வாளராகவும் குளத்தூர் காவல் நிலைய ஆய்வாளராகவும் பணிபுரி...
தமிழ் சினிமாவில் இயக்குனர், நடிகர் என இரண்டிலும் கலக்கி வருபவர் எஸ்.ஜேய்.சூர்யா. இவரது நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான மாநாடு படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று 100 கோடிக்கு மேல் வசூல் செய்தது. படத்தில் தனுஷ் கோடி என்ற கதாபாத்திரத்தில் எஸ்.ஜே.சூர்யா மிரட்டி இருப்பார். இந்த படத்தை தொடர்ந்து, சிவகார்த்திகேயனுடன் டான் படத்தில் நடித்திருந்தார். இதனையடுத்து, இவரது நடிப்பில் பொம்மை, கடைமயை செய் ஆகிய படங்கள் ரிலீஸ் ஆக தயாராகவுள்ளது. இதில் கடமையை செய் படத்தை இயக்குனர் வெங்கட் ராகவன் இயக்கியுள்ளார். இப்படத்தை தமிழகத்தில் சிம்பு சினி ஆர்ட்ஸ் வெளியிடவுள்ளது. - Advertisement - இந்த படத்தில் யாஷிகா ஆனந்த், ராஜேந்திரன், சார்லஸ் வினோத், வின்சென்ட் அசோகன், ராஜசிம்மன் மற்றும் சேசு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த நிலையில், தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்த படம் வரும் ஜூன் 24-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. ஆனால், இதற்கு முன்பே ஜூன் 24-ஆம் தேதி விஜய் சேதுபதி நடித்துள்ள மாமனிதன் படம் வெளியாகும் என்று அறிவிப்பு வெளியாகிவிட்டது. இதனையடுத்து விஜய் சேதுபதி படமும், எஸ்.ஜே.சூர்யாவின் படமும் ஒரே நாளில் வெளியாகவுள்ளது. - Advertisement - இதனால், எந்த படம் அதிகம் வசூல் செய்ய போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. எந்த படம் அதிகம் வசூல் செய்யும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். Tamil Cinema News App: உடனுக்குடன் சினிமா செய்திகளை உங்களது தமிழ் சினிமா ஆப்பில் நொடியில் பார்க்கலாம். Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் மலைஒளி இணையதளத்தை இங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
கூகுள் பே, போன் பே, பேடிஎம் உள்ளிட்ட யு.பி.ஐ. payment appஇல் விரைவில் பரிவர்த்தனை வரம்பு விதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. டெல்லி: கூகுள் பே, போன் பே, பேடிஎம் உள்ளிட்ட யு.பி.ஐ. payment appஇல் பரிவர்த்தணை வரம்பு விதிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. விரைவில் குறிப்பிட்ட அளவிலான பரிவர்த்தனைகளை மட்டுமே பயனர்கள் மேற்கொள்ளும் வசதி கொண்டு வரப்பட உள்ளது. யு.பி.ஐ. டிஜிட்டல் பேமண்ட் தளங்களை முறைப்படுத்தி வரும் தேசிய பேமண்ட்ஸ் கார்பரேஷன் நிறுவனம்(NPCI), பணப் பரிவர்த்தனை ஆப்களில் பயனர்களின் பரிவர்த்தணை உச்ச வரம்பை கட்டுக்குள் கொண்டு வருவது குறித்து ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியாவுடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளது. டிசம்பர் 31ஆம் தேதி முதல் பேமண்ட்ஸ் ஆப்களில் பரிவர்த்தனை கட்டுப்பாடுகள் கொண்டு வரப்படும் என கூறப்படுகிறது. தற்போது வரை பரிவார்த்தணைக் கட்டுப்பாடுகள் அமலில் இல்லாத நிலையில், கூகுள் பே, போன் பே நிறுவனங்கள் கட்டண பரிவர்த்தனை சந்தையில் 80 சதவீத மதிப்பை பிடித்து வைத்துள்ளன. சந்தையில் ஏற்படும் செறிவு அபாயத்தை குறைக்க மூன்றாம் தர கட்டண பரிவர்த்தனை ஆப்களின் சந்தை மதிப்பை 30 சதவீதமாக மாற்றுவது குறித்து தேசிய பேமண்ட்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனம் முன்மொழிவை கொண்டு வந்தது. இதுகுறித்து ஆர்.பி.ஐ., நிதி அமைச்சகம், மூத்த அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதன்மூலம் விரைவில் கூகுள் பே, போன் பே, பேடிஎம் உள்ளிட்ட ஆப்களில் பரிவர்த்தனை உச்ச வரம்பு அறிமுகப்படுத்தப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.
யாழ்ப்பாணம் மாநகர சபை எல்லைக்குட்பட்ட ஸ்ரான்லி வீதி புனரமைப்பத் தொடர்பில் யாழ். மாநகர முதல்வரும் சட்டத்தரணியுமான விஸ்வலிங்கம் மணிவண்ணன் தலைமையில் கூடி ஆராயப்பட்டுள்ளதுடன், விடயங்களை ஆராய்வதற்கான கள விஜயமொன்றும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக யாழ். மாநகர முதல்வரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் யாழ். மாநகர முதல்வரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ள விபரங்கள் வருமாறு: “ஸ்ரான்லி வீதி அகலிப்பு தொடர்பில் இன்றையதினம் ஆராயப்பட்டது.. அதனைத்தொடர்ந்து நேரடியாக ஸ்ரான்லி வீதிக்கு களவிஜயம் செய்யப்பட்டு உடைத்தகற்றப்பட வேண்டிய வர்த்தக நிலையங்களின் பகுதிகள் தொடர்பில் நேரடியாக பார்வையிடப்பட்டது. இக்கூட்டத்திலும் இடம் பார்வையிடுதலிலும் யாழ். மாநகர முதல்வர், மாநகர பிரதி ஆணையாளர், மாநகர பொறியியலாளர்கள், வீதி அபிவிருத்தி அதிகார சபை பிரதம பொறியியலாளர், மின்சாரசபை மின் அத்தியட்சகர், ரெலிக்கொம் பொறியியலாளர் மற்றும் குறித்த வீதி அகலிப்பு பணியில் ஈடுபட உள்ள ஒப்பந்தகார நிறுவனமான ஹன்கோ நிறுவனத்தின் திட்ட பணிப்பாளர், பொறியியலாளர் உள்ளிட்ட ஊழியர்கள், யாழ் வர்த்தக சங்கத்தின் தலைவர் ஆகியோரும் பங்குபற்றினர். குறித்த வீதி அகலிப்புக்கு தமது பூரண ஒத்துழைப்பை வழங்குவதாக கடை உரிமையாளர்களால் இணக்கம் தெரிவிக்கப்பட்டது. ஸ்ரான்லி வீதியானது வீதி நடுவில் இருந்து இரு பக்கமும் 8m அகலிக்கப்பட உள்ளது. இவ்வீதியில் வாகன தரிப்பிடம், வாய்க்காலுடன் கூடிய நடைபாதை, பெற்றோல் நிலைய சந்தியில் சுற்றுவட்டம் என்பன அமைக்கப்படவுள்ளன. குறித்த வீதி புனரமைப்பு பணிகளை விரைவாக ஆரம்பித்து முடிவுறுத்தி தருமாறு மாநகர முத்ல்வரால் விடுக்கப்பட்ட வேண்டுகோள் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. குறித்த வீதி புனரமைப்பு பணிகள் விரைவாக ஆரம்பிக்கப்பட உள்ள நிலையில் இதனால் ஏற்படும் அசௌகரியங்களை பொறுத்துக்கொள்ளுமாறும் இதற்கு பூரண ஒத்துழைப்பை வழங்குமாறும் வர்த்தகர்களையும் பொதுமக்களையும் யாழ். மாநகர முதல்வர் கேட்டுக்கொள்கிறார்” என்று உள்ளது.
தமிழக அரசுப் பணியாளர், நிர்வாக சீர்திருத்தத் துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் 2010-ம் ஆண்டு தமிழ் வழியில் கல்வி பயின்றவர்களை அரசின் பணிகளில் முன்னுரிமை அடிப்படையில் பணி நியமனம் செய்தல் சட்டத்தை திருத்தம் செய்வதற்கான சட்ட மசோதாவை தாக்கல் செய்தார். 10, 12 வகுப்புகளில் தமிழ் வழியில் படித்திருந்தால் மட்டுமே முன்னுரிமை இந்த சட்டத்தின்படி, இனி பட்டப்படிப்பு மட்டுமின்றி 10, 12-ம் வகுப்புகளிலும் தமிழ் வழியில் படித்திருந்தால் மட்டுமே அரசுப்பணியில் முன்னுரிமை வழங்கப்படும். அதாவது, பட்டப்படிப்பு தகுதிக் கான அரசுப்பணிக்கு, பட்டப்படிப்புடன் 10 மற்றும் 12-ம் வகுப்புகளையும் தமிழ்வழியில் படித்திருக்க வேண்டும். பட்ட மேற்படிப்பு தகுதிக்கான அரசு பணிக்கு, பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பை தமிழ்வழி கல்வி மூலம் பயின்று இருக்க வேண்டும். அதேபோன்று 10-ம் வகுப்பு தகுதியுள்ள அரசுப்பணிக்கு 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை தமிழ்வழிக்கல்வியில் பயின்றிருக்க வேண்டும் என்று மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 20 சதவீத ஒதுக்கீடு தமிழக அரசு பணியிடங்களுக்கு தமிழ் வழியில் பட்டப்படிப்பு படித்தோருக்கு இதுவரை 20 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கும் வகையில் இருந்த சட்டத்தில், இட ஒதுக்கீடு பெற 10 மற்றும் 12-ம் வகுப்புகளில் தமிழ் வழியில் படிக்க அவசியம் இல்லாமல் இருந்தது. இந்நிலையில், இந்த இடஒதுக்கீடு சட்டத்தில் தமிழக அரசு திருத்தம் கொண்டுவந்துள்ளது. இனி தமிழ்வழியில் கல்வி பயின்றால் மட்டுமே TNPSC உள்ளிட்ட அரசு பணியில் முன்னுரிமை கிடைக்கும். 2016-ம் ஆண்டு தமிழ்நாடு அரசு பணியாளர்கள் சட்டத்தை மேலும் திருத்தம் செய்வதற்கான சட்ட மசோதாவும் சட்டசபையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த சட்ட மசோதாவை அமைச்சர் ஜெயக்குமார் தாக்கல் செய்தார். இந்த சட்டத்தின்படி, தேர்ச்சிக்கான மதிப்பெண் 35-லிருந்து 45 ஆக உயர்த்தப்படுகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இத்தாலியில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் வலது சாரி கட்சியை சேர்ந்த ஜியோர்ஜியா மெலோனி வெற்றி பெற்று அந்நாட்டின் முதல் பெண் பிரதமர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இத்தாலி நாட்டில் கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் கடந்த ஆண்டு மரியோ டிராகி பிரதமராக நியமனம் செய்யப்பட்டார். எனினும், பொருளாதார நிலை மோசமடைந்து வருவதாக எழுந்த குற்றச்சாட்டுகளை தொடர்ந்து, கூட்டணி கட்சிகளால் அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டது. இதையடுத்து அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த தீர்மானித்த நிலையில், மரியோ டிராகி பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து அங்கு பொதுத் தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி நேற்று முன் தினம் (செப்டம்பர் 25) இத்தாலி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. நாடு முழுவதும் 60 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் இரவு 11 மணி வரை வாக்குப்பதிவு நீடித்தது. இதனை தொடர்ந்து உடனடியாக வாக்குகள் எண்ணும் பணிகள் தொடங்கின. அதில் ஜியோர்ஜியா மெலோனியின், ‘பிரதர்ஸ் ஆப் இத்தாலி’ கட்சி பெருவாரியான வாக்குகள் பெற்று வெற்றி பெற்றது. இதையடுத்து இத்தாலியின் புதிய பிரதமராக ஜியோர்ஜியா மெலோனி பதவி ஏற்க உள்ளார். மேலும் அந்நாட்டின் முதல் பெண் பிரதமர் என்ற பெருமையும் கிடைக்கப் பெற்றுள்ளார். -இந்த வெற்றி குறித்து ஜியோர்ஜியா மெலோனி கூறியதாவது; இத்தாலி மக்கள் எங்கள் கட்சிக்கு பெருவாரியான ஓட்டுகள் அளித்து எங்கள் கட்சியை தேர்ந்தெடுத்து உள்ளனர். அவர்கள் நம்பிக்கையை காப்பாற்றுவோம்.
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads By Category: எழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம் சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும் Current Issue தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அஞ்சலி | மேலோர் வாழ்வில் | சின்னக்கதை | சமயம் | கதிரவனை கேளுங்கள் | சிறப்புப் பார்வை | அலமாரி
ஒரு சாதாரண இஸ்லாமியக் குடும்பத்தில் அந்த ஆண் குழந்தை பிறந்த குளிரான அந்த நாளை உலகம் முழுவதும் உள்ள பெரும்பாலான கிறிஸ்தவர்கள், தங்களை பாவத்தில் இருந்து மீட்க வந்த தேவகுமாரன் இயேசு கிறிஸ்து அவதரித்த நாளென்று மகிழ்ச்சியாகக் கொண்டாடிக்கொண்டு இருந்தார்கள். ஆம், ஆர்மின் நவாபி ஒரு இஸ்லாமியக் குடும்பத்தில் கிறிஸ்மஸ் தினத்தில் தான் பிறந்தார். பாவங்களில் இருந்து மீட்க தேவகுமாரன் மீட்பராக பிறந்ததாக நாளாக டிசம்பர் 25 ஆம் நாளை கிறிஸ்தவர்கள் கொண்டாடிக்கொண்டிருக்க, அதே நாளில் கிறிஸ்தவத்திற்கு முற்றிலும் முரணான நம்பிக்கை கொண்ட குடும்பத்தில் உண்மையான மீட்பர் ஒருவர் பிறந்தார். எல்லாக் குழந்தைகளைப் போலவே ஆர்மின் நவாபியும் உரிய வயதில் பாடசாலைக்கு சென்றான். ஏற்கனவே குரான் ஓதக் கற்றிருந்த ஆர்மின் நவாபி, ஒன்பது வயதில் இருந்து இஸ்லாத்தையும் ஏனைய பாடங்களுடன் ஒன்றாகக் கற்றுக் கொள்ள ஆரம்பித்தான். மற்றப் பாடங்களை விட இஸ்லாம் பாடத்தின் பால் அதிகம் கவரப் பட்ட அந்தச் சிறுவனின் உள்ளத்தில் இறை பக்தி வளர ஆரம்பித்தது. பெற்றோர், சக மாணவர்களை விடவும் ஆர்மின் நவாபியின் ஆர்வம் இஸ்லாத்தை நோக்கி நகர்ந்தது. அந்தச் சிறிய வயதிலேயே தொழுகைகளையும் தவறாமல் நிறைவேற்ற ஆரம்பித்துவிட்டான். அவன் வளர வளர அவனது ஈமானும் (இறை நம்பிக்கையும்) மிக வேகமாக வளர்ந்துகொண்டே சென்றது. மற்ற சிறுவர்கள் வம்புகளிலும், விளையாட்டுக்களிலும் அதிக கவனம் செலுத்த, ஆர்மின் நவாபியோ சுவர்க்கம் பற்றிய சிந்தனைகள், நரகம் பற்றிய அச்சங்கள், மறுமை பற்றிய நினைவுகள், அல்லாஹ்வின் திருப்தி என்று ஆர்வத்தையும், சிந்தனையையும் அல்லாஹ்வின் வழிகாட்டலை நோக்கி செலுத்தினான். இஸ்லாமிய வகுப்புகள் பலவற்றில் கலந்துகொண்டான். அவனது இஸ்லாமிய ஆசிரியர்களிடமிருந்து இஸ்லாத்தைப் பற்றி நிறைய விடயங்களை மிக ஆர்வத்தோடு கேட்டுக் கேட்டுப் படித்துக் கொள்ள ஆரம்பித்தான். இந்த உலக வாழ்க்கையின் நோக்கமே அல்லாஹ்வின் திருப்தியும், சுவர்க்கமும்தான் என்பதை மிக உறுதியாக உள்ளத்தில் பதித்துக் கொண்டான். வகுப்பிலே இருந்த மற்ற மாணவர்கள் நன்றாகப் படித்து வாழ்க்கையில் டாக்டராக வரவேண்டும், எஞ்சினியராக வரவேண்டும் என்று சொல்லிக்கொண்டிருந்த பொழுதுகளில், ஆர்மின் நவாபியின் சிந்தனையோ இஸ்லாமியப் பாதையில் பயணித்தது. வாழ்க்கையில் தோற்று விடக் கூடாது, எந்தப் பாவமும் செய்யாமல், நன்மைகள் மட்டுமே செய்து சுவர்க்கத்தை அடைய வேண்டும், சுவர்க்கம்தான் ஒரே இலக்கு உண்பதை உள்ளத்தில் உறுதியாக்கிக் கொண்டான். ஒன்பது வயதில் ஆரம்பித்த இஸ்லாமிய ஆர்வம், அவனுக்கு 12 வயதாக ஆன பொழுது உச்சத்தை அடைந்து இருந்தது. முஹம்மது நபிக்கு நாற்பது வயதில் வஹி (இறைதூது) வந்தது என்றுதான் இஸ்லாமிய வரலாறு சொல்கின்றது என்றால், அந்த முஸ்லிம் சிறுவனுக்கோ 12 வயதில் ஞானம் உதயமானது, இலகுவாக சுவர்க்கம் செல்ல வஹி கூட காட்டித்தராத இரகசிய வழி ஒன்று 12 வயதேயான சிறுவனுக்கு முன்னால் விரிந்தது. ஒவ்வொரு மனிதனின் இடது, வலது தோள்களில் அமர்ந்துகொண்டு மனிதன் செய்யும் தீமை, நன்மை ஆகியவற்றை எழுதுவதற்கு அதீத், ரகீப் என்று இரண்டு வானவர்கள் (மலக்குகள்) இருப்பதையும், ஒரு மனிதன் பருவமடைந்த பின்னரே தீமைகள் எழுதப்படும் என்பதையும், சிறுவர்களுக்கு தீமைகள் எழுதப்படாது என்பதையும் அவன் கற்றுக் கொண்டான். அத்துடன் பருவமடையுமுன்னார் சிறுவர்களாக மரணிப்பவர்கள் விசாரணை இன்றி சுவர்க்கம் சென்று விடுவார்கள் என்பதையும் அவன் இஸ்லாமிய மூலாதாரங்களில் இருந்து அவனது ஆசிரியர்கள் மூலம் கற்றுக் கொண்டிருந்தான். அவனது சுற்றுவட்டத்தில் சிறுவர்களாகவும், பிறந்த உடனேயும் மரணித்தவர்களை நினைத்தான், தீமையே எழுதப்படாமல் சுவர்க்கம் சென்றுவிட்ட அவர்கள் மீது அவனுக்கு சற்றுப் பொறாமையும் வந்தது. “நானும் பருவமடைவதற்கு முன்னர், சிறுவனாக இருக்கும் நிலையிலேயே மரணித்து விட்டால், பிரச்சினை இல்லாமல் அல்லாஹ் சொல்லும் மகத்தான சுவர்க்கம் சென்று விடலாமே” என்று ஆதங்கப் பட்டான். அவன் என்னதான் ஆசைப்பட்டாலும் மரணம் அவனை நோக்கி வரவில்லை, மரணம் வருவதற்கு முன்னர் பருவ வயது வந்துவிடுமோ என்று அஞ்சினான். தன்னைத் தேடி வராத மரணத்தை, தானே வரவழைத்துக் கொள்வதற்கு என்ன வழி என்று யோசித்தான். தன்னைத் தேடி வராத மலக்குல் மவ்த்தை (மலக்குல் மவ்த் – மனித உயிர்களை கைப்பற்றும் வானவர்) தானே வலிந்து வரவழைத்துக் கொள்வதற்கான ஒரே வழி ‘தற்கொலை’ மட்டுமே என்பதை உணர்ந்தான்.........ஆனாலும் தற்கொலை அல்லாஹ் மன்னிக்காத பெரும் பாவமாச்சே..... தற்கொலை இறைவன் மன்னிக்காத பெரும் பாவம் என்பதைத் தெரிந்திருந்தும், தனது பாடசாலையின் மூன்றாம் மாடியில் இருந்து தவறி விழுந்த ஒரு மாணவன் ஏற்கனவே மரணித்திருந்ததை அறிந்திருந்த ஆர்மின் நவாபி, கலிமாவை முணுமுணுத்தவனாக மூன்றாம் மாடியின் ஜன்னல் வழியாக துணிந்து கீழே பாய்ந்தான், சுவர்க்கம் செல்வதற்காக. "சிறுவன் தற்கொலை செய்துகொண்டானா? அது பொரும் பாவமாச்சே!" என்று ஆச்சரியப் படாதீர்கள், ஏனெறால் அவனுக்குத் தெரியும், தான் பருவம் அடையாத சிறுவன் என்பதால், தற்கொலை செய்துகொள்ளும் பாவத்தை இடது தோளில் அமர்ந்திருக்கும் அதீத் எனும் வானவரால் எழுத முடியாது எனும் இஸ்லாமிய அடிப்படை உண்மை. (செக்மேட் அல்லாஹ்! ) ‘பருவமடையாதவர்கள் மீது பாவங்களை எழுத முடியாது என்பதால், பருவமடையாதவர்கள் செய்யும் தற்கொலையும் பாவம் என்று எழுதப் பட முடியாது, ஆகவே சுவர்க்கம் தான் முடிவு’ என்பதை கண்டுபிடித்த மூஃமின் ஆர்மின் நவாபியின் உடல் மூன்றாம் மாடியில் இருந்து பாரிய பாரிய சத்தத்துடன் கீழே விழுந்தது. இஸ்லாமிய நம்பிக்கைப் படி அவன் எதிர்பார்த்த தோற்றத்தில் மலக்குல் மவ்த் வரவில்லை, பல மணிநேரங்கள் கழித்து கண்விழித்துப் பார்த்த பொழுது அருகில் நின்று அழுதுகொண்டிருந்த தாயை காண்கின்றான், வாழ்க்கையில் முதல் தடவை தந்தை அழுவதைக் காண்கின்றான். அடுத்த எழு மாதங்களை வைத்தியசாலைக் கட்டிலிலும், சக்கர நாற்காலியிலும் கழிக்கின்றான். சிறுவயதிலேயே சுவர்க்கம் செல்ல ஆசைப்பட்ட ஆர்மின் நவாபி இன்றைக்கு எங்கே? என்ன செய்துகொண்டு இருக்கின்றார் என்று அறியும் ஆர்வம் உங்களுக்கு இல்லாமலா போகும்? மனிதரை பாவத்தில் இருந்து மீட்க தேவகுமாரன் இயேசு கிறிஸ்து அவதரித்ததாக சொல்லப்படும் அதே நாளில் பிறந்த ஆர்மின் நவாபி, மனிதர்களை மதத்தில் இருந்தும், மதவெறியில் இருந்தும் மீட்டெடுக்கும் மீட்பராக, உலகப் புகழ் பெற்ற Atheist Republic ஸ்தாபகராக, மதவாதிகளுக்கு சிம்மசொப்பனமாக இன்றைக்குத் திகழ்கின்றார். மதவெறியால் நரகமாகிக் கொண்டிருக்கும் உலகத்தை சுவர்க்கமாக்க பாடுபடுகின்றார்.
Thennakam Admin 1st January 2019 Current Affairs – 1 January 20192019-01-01T08:58:06+05:30 நடப்பு நிகழ்வுகள் தமிழகம் 1.திமுக தலைவர் மு.கருணாநிதியின் மறைவையடுத்து, காலியாக இருக்கும் திருவாரூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு ஜனவரி 28-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 2.ஒருமுறை பயன்படுத்தக் கூடிய 14 வகையான பிளாஸ்டிக் பொருள்களைப் பயன்படுத்துவது, விற்பனை, உற்பத்தி செய்வதற்கான தமிழக அரசின் தடை அமலுக்கு வருகிறது. 3.மதுரை காமராஜர் பல்கலைக்கழக புதிய துணைவேந்தராக எம். கிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். இந்தியா 1.மத்திய தகவல் ஆணையத்தின்(சிஐசி) தலைமை ஆணையராக, சுதிர் பார்கவாவை மத்திய அரசு நியமித்துள்ளது. 2.ரயில்வே வாரியத் தலைவராக இருந்த அஸ்வானி லோஹானி திங்கள்கிழமையுடன் ஒய்வு பெற்றார். இதையடுத்து, அந்தப் பதவியில் தென் மத்திய ரயில்வே பொது மேலாளர் வி.கே. யாதவை மத்திய அரசு நியமித்துள்ளது. 3.நாகாலாந்தில், ஆயுதப்படைச் சிறப்பு அதிகாரச் சட்டத்தை, வரும் ஜூன் மாத இறுதி வரை மத்திய அரசு நீட்டித்துள்ளது. 4.அந்தமான் நிகோபார் தீவுகளுக்கு வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் நேரடியாக வந்து செல்ல அனுமதியளிக்கப்பட்டுள்ளது. வர்த்தகம் 1.வங்கித் துறை வாராக் கடன் வசூல் நடவடிக்கைகளில் மும்முரம் காட்டி வருவதால் வாராக் கடன் அளவு குறைந்து வருவதாக ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்தார். 2.பாசுமதி அரிசியை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதால் கிடைக்கும் வருவாய் அதிகரித்துள்ளது. கடந்த ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான காலகட்டத்தில் ரூ.16,963 கோடி மதிப்புக்கு பாசுமதி அரிசி ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் இது ரூ.15,208 கோடியாக இருந்தது. இந்த ஆண்டில் வருவாய் 11.54 சதவீதம் உயர்ந்துள்ளது. உலகம் 1.அமெரிக்கப் பாதுகாப்புத் துறை இடைக்கால அமைச்சராக, அந்தத் துறையின் தற்போதைய இணையமைச்சர் பேட்ரிக் ஷானஹன் பதவியேற்கிறார். 2.வங்கதேசத்தில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையிலான ஆளும் கூட்டணி அபார வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம், அவர் மீண்டும் பிரதமராகிறார். விளையாட்டு 1.இந்திய அணியின் நட்சத்திரம் ஸ்மிருதி மந்தானா சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சார்பில் ஐசிசி ஆண்டின் சிறந்த வீராங்கனை மற்றும் ஒரு நாள் ஆட்டத்தில் சிறந்த வீராங்கனை என இரட்டை விருதுகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தளபதி விஜய் நடிப்பில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான ‘மாஸ்டர்’ திரைப்படம். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்து இருந்தார். இந்த நிலையில் இந்தியில் உருவாகி வரும் ’யுத்ரா’ என்ற அதிரடி ஆக்ஷன் திரைப்படத்தில் மாளவிகா மோகனன் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். - Advertisement - சமீபத்தில் நடந்த படப்பிடிப்பின் போது ஒரு ஆக்ஷன் காட்சியில் மாளவிகா மோகனன் நடித்த போது கையில் காயம் ஏற்பட்டது. - Advertisement - இதுகுறித்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ள மாளவிகா மோகனன், ‘நீங்கள் ஒரு ஆக்ஷன் படத்தின் படப்பிடிப்பில் இருக்கும்போது காயங்கள் ஒரு கட்டத்துக்குப் பிறகு தான் லேசான கீறல்களாக உணர முடியும்’ என பதிவு செய்துள்ளார். மாளவிகா மோகனன் பதிவு செய்துள்ள இந்த புகைப்படத்திற்கு மூன்று லட்சத்துக்கும் அதிகமானோர் லைக் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. Tamil Cinema News App: உடனுக்குடன் சினிமா செய்திகளை உங்களது தமிழ் சினிமா ஆப்பில் நொடியில் பார்க்கலாம். Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் மலைஒளி இணையதளத்தை இங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
#PandianStores: எம்பொண்ணு கழுத்துல நகை எங்கே?.. வில்லத்தனத்தில் வச்சி செய்யும் முல்லையின் அம்மா.. வைரல் ப்ரோமோ..! #BharathiKannammaPromo: ஒருவழியாக உண்மையை அறிந்துகொண்ட பாரதி.. டி.என்.ஏ ரிசல்ட் சக்ஸஸ்.. ஆனால் ஒரு ட்விஸ்ட்?..! #Breaking: பிரபல தமிழ் நடிகை பார்வதி நாயர் காவல் ஆணையர் அலுவலகத்தில் பரபரப்பு புகார்.. தொடர் மிரட்டல்., கண்ணீர் குமுறல்.! அடேங்கப்பா.. வேற லெவல்! ஹீரோயின்களுக்கே டப் கொடுப்பார் போல.! அர்ச்சனாவின் மகள் சாரா வெளியிட்ட வீடியோவை பார்த்தீங்களா!! என்னா லுக்குடா.. தாறுமாறு கவர்ச்சியில் இளசுகளை திக்குமுக்காட வைக்கும் மாஸ்டர் நடிகை.! இணையத்தை சூடாக்கும் புகைப்படங்கள்!! என்னம்மா இதெல்லாம்.. குட்டை உடை.. படுக்கையில் டாப் ஆங்கிளில் பிக்பாஸ் அபிராமி வெளியிட்ட புகைப்படம்.! அட.. சூப்பர்! சுந்தரி சீரியலில் என்ட்ரி கொடுக்கும் பிரபல முன்னணி நடிகை.! இப்பவும் எப்படியிருக்காரு பார்த்தீங்களா!! வைரல் வீடியோ.! தங்களது செல்ல மகளின் பெயரை வித்தியாசமாக அறிவித்த ரன்பீர்-ஆலியா ஜோடி.! இந்த பெயருக்கு இவ்வளவு அர்த்தமா?? 15 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அப்பாவான நடிகர் நரேன்.! என்ன குழந்தை தெரியுமா?? குவியும் வாழ்த்துக்கள்!! உங்களுக்காக நான் என்ன செய்தேன்.! ஏன் இப்படி?? கண்கலங்கி தொகுப்பாளினி பிரியங்கா வெளியிட்ட எமோஷனல் வீடியோ!! திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் அம்மா மககள் முன்னேற்ற கழக பொதுக்கூட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாநில கொள்கை பரப்பு செயலாளர் தங்கதமிழ்செல்வன் தலைமை தாங்கினார். அங்கு நடந்த கூட்டத்தில் ஏராளமான தொண்டர்கள் குவிந்தனர். கூட்டத்தில் டி.டி.வி. தினகரன் கலந்துகொண்டு பேசினார். நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அ.ம.மு.க கட்சியின் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் தாங்கள் எந்தவொரு கூட்டம் நடத்தவும் ஆளும் கட்சியினர் அனுமதி தருவதற்கு மறுக்கிறார்கள். மேலும் திருப்பரங்குன்றம், திருவாரூர் தொகுதி இடைத் தேர்தலில் நங்கள் அபாரமாக வெற்றி பெறுவோம் என கூறினார். தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி "எனது சிறிய எதிரி அ.ம.மு.க" என்று சொல்கிறார். தற்போதைய முதல்வர் தலைமையில் இருக்கும் அமைச்சர்கள் காமெடி செய்து கொண்டு இருக்கின்றனர். நடிகர் வடிவேலுவை போலவே அவர்களை மக்கள் பார்க்கிறார்கள் என கூறினார். இதுபோன்ற அமைச்சர்களை வைத்துக் கொண்டு தங்களது கட்சி பெரிய கட்சி என்கிறார் தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி. அ.ம.மு.க கட்சியை குட்டி எதிரி என்றால் எங்களுக்கு கூட்டம் நடத்தக்கூட அனுமதி தராதது ஏன் என்றும், எங்களுக்கு கூடும் கூட்டத்தைப் பார்த்து பயந்துதான் அனுமதி தர மறுக்கிறீர்கள் என்பதும் அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. குழந்தை மண்டியிட்டு வருவது போல் வந்து அம்மையார் சசிகலா காலில் விழுந்து வணங்கினார் எடப்பாடி பழனிசாமி இதுவும் அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான் என டி.டி.வி. தினகரன். மேலும் பதவிக்காக எனது கையை பிடித்து கெஞ்சியவர் தான் தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி. அனால் இன்று என்னை குட்டி எதிரி என்று கூறுகிறார். நான் அம்மாவின் குட்டி தான் அம்மா 8 அடி பாய்ந்தால் நான் 16 அடி பாய்வேன். வரும் தேர்தலில் தெரியும் அவர்களுக்கு உண்மையான தொண்டர்கள் யார் பக்கம் இருக்கிறார்கள் என்று. இவ்வாறு பேசி முடித்தபிறகு ஏராளமான தொண்டர்கள் கர ஓசையை தட்டி எழுப்பினர். Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here Tags: #TTV #dhinakaran #ammk #edapadi palanichami Copy Link தற்போதைய செய்திகள் வாவ்.. சூப்பர்! துபாய் பார்ட்டியில் ஹர்திக் பாண்டியாவுடன் மாஸ் ஆட்டம் போட்ட மகேந்திர சிங் தோனி! ரசிகர்களை குஷியாக்கிய வீடியோ.! ராட்சச நிலச்சரிவு.! மண்ணோடு மண்ணாக புதைந்த கட்டிடங்கள்.! 8 பேர் பரிதாப பலி!! டி-ஷர்ட், பேண்ட்டுடன் கூடுவாஞ்சேரி ரயில் நிலையத்தில் கிடந்த மனித எலும்புக்கூடு.! அதிர்ச்சியில் மக்கள்.! போலீசார் விசாரணை!!
திருந்திய நெல் சாகுபடியின் மூலம் 2 கிலோ விதை நெல்லில் குறைந்தபட்சமாக சுமார் 60 மூட்டை நெல் மகசூல் கிடைக்கும் என்றார் வேளாண் விரிவாக்க இணை இயக்குநர் ஆர். முருகவேல். வேளாண் விரிவாக்க இணை இயக்குநர் முருகவேல் பேசியது: இந்த உழவர் பெருவிழாவின் குறிக்கோள், விளைச்சல் உற்பத்தியை 2 மடங்காகவும், வருவாயை 3 மடங்காகவும் விவசாயி பெற வேண்டும் என்பதுதான். சாதாரணமாக, ஏக்கர் ஒன்றுக்கு சுமார் 30 கிலோ விதை நெல் தேவை. இவை சுமார் 30 நாட்கள் வரை நாற்றாங்காலாக செயல்படும். இதன் மூலமாக சுமார் 40 மூட்டை மகசூல் வரை கிடைக்க வாய்ப்பு உள்ளது. ஆனால், திருந்திய நெல் சாகுபடியில் சுமார் 2 கிலோ விதை நெல் போதுமானது. சுமார் 14 நாள்கள் மட்டுமே நாற்றாங்காலாக செயல்படும்.இந்த நாற்றாங்காலுக்கு மேட்டுப்பாத்தி நாற்றாங்கல் என்று பெயர். இந்த நவீன முறை விவசாயம் மூலமாக குறைந்தபட்சமாக ஏக்கர் ஒன்றுக்கு சுமார் 60 மூட்டை (60 கிலோ) நெல் பெறலாம். திருந்திய நெல் சாகுபடி செயயும் விவசாயிகளுக்கு ரூ. 800 மதிப்பிலான களை எடுக்கும் கருவியும் அரசால் இலவசமாக வழங்கப்பட உள்ளது. மேலும், அனைத்து விவசாயிகளுக்கும் அடையாள அட்டை வழங்கப்படும். இதன் மூலம் அரசின் நலத்திட்ட உதவிகளைப் பெறலாம். மண் பரிசோதனை செய்து அதன் தன்மையை அறிந்து விவசாயம் செய்தால் மகசூல் அதிகம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. மண் பரிசோதனை செய்ய 20 ரூபாய் செலுத்த வேண்டும். மேலும் விவரங்களுக்கு வேளாண் விரிவாக்க அலுவலர்கள் மற்றும் களப்பணியாளர்கள், ஆத்மா திட்ட அலுவலர்கள் ஆகியோரை அணுகலாம் என்றார் அவர்.
கோடை காலத்தில் வெயில்; மழைக் காலத்தில் மழை என்று இவ்வுலகில் மாறி மாறி வரும் பருவ காலம், மழை பெய்ததும் பூமியில் பச்சைப் பசேல் என்ற புற்பூண்டுகளின் விளைச்சல், உயிரினங்களின் இனப் பெருக்கம், கரையைத் தொட்டு ஆடி மகிழும் கடல் அலைகள், வீசுகின்ற காற்று போன்ற இந்த அமைப்புகளை, அருள்மிகு ஆக்கங்களை இயற்கை என்று நாம் கூறுகிறோம். இந்த இயற்கை அமைப்பில் உட்பட்டவன் தான் மனிதன். அவனுடைய உடலில் வளரும் தலை முடி, தாடி, மீசை மற்றும் இதர பகுதிகளில் வளரும் முடிகள், நகம் அனைத்துமே இயற்கைக்கு உட்பட்டது தான். மனித உடலில் அமைந்திருக்கும் இந்த இயற்கை அமைப்பைப் பராமரிப்பதும் ஓர் இயற்கையான அம்சம் தான். இதை உலகில் எந்த மார்க்கமும் மனிதனுக்குக் கற்றுக் கொடுக்கவில்லை. காரணம், அந்த மார்க்கங்கள் இயற்கையானவையல்ல! இஸ்லாம் தான் இயற்கை மார்க்கம். அதனால் தான் இயற்கை நெறிகளைக் கற்றுக் கொடுக்கிறது. “இயற்கை மரபுகள் ஐந்தாகும். விருத்த சேதனம் செய்து கொள்வது, மர்ம உறுப்பின் முடிகளைக் களைந்து கொள்வதற்காக சவரக் கத்தியை உபயோகிப்பது, மீசையைக் கத்தரிப்பது, நகங்களை வெட்டுவது, அக்குள் முடிகளை அகற்றுவது ஆகியவை தாம் அவை” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரி 5891 ஹெச்.ஐ.வி. எய்ட்சும், இயற்கை கத்னாவும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறிய இயற்கையான இந்த ஐந்து அம்சங்களில் கத்னா எனும் விருத்த சேதனமும் ஒன்றாகும். இந்த கத்னா, இன்று எய்ட்ஸ் எனப்படும் ஹெச்.ஐ.வி. வைரஸை விட்டும் காக்கும் காப்பரணாகத் திகழ்கிறது. 22.07.07 அன்று பி.பி.சி. வெளியிட்ட செய்தி இதை தெளிவாகப் படம் பிடித்துக் காட்டுகிறது. ஹெச்.ஐ.வி. எய்ட்ஸ் தொடர்பாக உலகளவிலான மிகப் பெரிய மாநாடு விரைவில் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரத்தில் நடைபெறவுள்ளது. அதற்கான பணிகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகின்றன. ஆண்களுக்குச் செய்யப்படும் கத்னா (விருத்த சேதனம்) 60 சதவிகித அளவுக்கு எய்ட்ஸ் வராமல் தடுக்கிறது என்ற கண்டுபிடிப்பு உறுதியானது தான் என்பதைக் கூறும் ஆய்வறிக்கை இந்த மாநாட்டில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இந்த ஆய்வறிக்கையை 5000க்கும் மேற்பட்ட குழுக்கள் பெற்றுக் கொள்கின்றன என்று பி.பி.சி.யின் செய்தி தெரிவிக்கிறது. ஆப்பிரிக்க நாடுகளில் வாழும் முஸ்லிம்களில் எய்ட்ஸால் பாதிக்கப்பட்டோர் மிகக் குறைவு தான். ஆனால் முஸ்லிமல்லாதவர்கள் மிக அதிகமான அளவில் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்ற விபரம் நீண்ட நாட்களாக அறியப்பட்ட உண்மையாகும். தென் ஆப்பிரிக்க ஆண்களில் 60 சதவிகிதம் பேரை ஹெச்.ஐ.வி. தொற்றும் அபாயத்திலிருந்து கத்னா காக்கின்றது என்று ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டது. இந்தக் கண்டுபிடிப்பை அண்மையில் கென்யாவிலும், உகாண்டாவிலும் சேகரித்த ஆதாரம் உறுதி செய்கின்றது. இவ்வாறு கத்னா ஒரு காவல் அரணாக அமைந்திருப்பதை அறிய முடிகின்றது என்று தனது செய்தியில் பி.பி.சி. தெரிவிக்கிறது. இந்தக் காவல் அரணுக்கு கத்னா தான் காரணமா? அல்லது அவர்கள் குறைந்த அளவிலான பெண்களிடம் உடலுறவு கொள்வது தான் காரணமா? என்று தெரியவில்லை என்றும் அந்தச் செய்தி குறிப்பிடுகின்றது. அதாவது முஸ்லிம்களிடம் உள்ள விபச்சாரத் தடை, பலதார மணம் போன்றவையும் இதற்குக் காரணமாக இருக்கலாம் என்று கூறுகின்றது. கத்னா, விபச்சாரத் தடை, பலதார மணம் இம்மூன்றில் எதுவாக இருந்தாலும் அது இஸ்லாமிய மார்க்கத்தினால் ஏற்பட்ட கண்ணியம் தான். அமெரிக்காவின் “நியூயார்க் டைம்ஸ்’ பத்திரிகையில் வெளிவந்த ஒரு செய்திக் குறிப்பையும் இங்கே பார்ப்போம். ஹெச்.ஐ.வி. பாதிப்பை விட்டும் பாதியளவுக்கு கத்னா பாதுகாக்கிறது எனறு அமெரிக்காவின் சுகாதார அதிகாரிகளை மேற்கோள் காட்டி நியூயார்க் டைம்ஸின் செய்தியாளர் டொனால்டு ஜி. மெக்நெய்ல் குறிப்பிடுகிறார். சுரப்பிகளிலிருந்து சுரந்து வரும் உயிரணுக்கள் ஆணுறுப்பின் நுனித் தோல் பகுதியில் தேங்குகின்றன. ஹெச்.ஐ.வி.யினால் பாதிக்கப்பட்ட பெண்ணின் வைரஸானது உடலுறவின் போது, ஏற்கனவே தேங்கி நிற்கும் இந்த உயிரணுத் தொகுதிக்குள் எளிதில் தொற்றிக் கொண்டு விடுகின்றது. அதனால் உடலுறவு கொண்ட அந்த ஆணும் ஹெச்.ஐ.வி. வைரஸின் தாக்குதலுக்கு எளிதில் இலக்காகி விடுகின்றான் என்று அந்தச் செய்திக் குறிப்பில் அவர் மேலும் தெரிவிக்கின்றார். இங்கு தான், இஸ்லாம் ஓர் இயற்கை மார்க்கம் என்பதை அறிந்து நாம் வியப்பில் ஆழ்கிறோம். இதைத் தான் வல்ல அல்லாஹ்வும் தன் திருமறையில் 30:30 வசனத்தில் குறிப்பிடுகின்றான். மேலே நாம் கண்ட அந்த ஹதீஸ் மீசையைக் கத்தரிக்க வேண்டும் என்றும் குறிப்பிடுகின்றது. இன்று உலகில் பலர் தாடியை முழுமையாக மழித்து விட்டு மீசையை வைத்திருக்கின்றனர். அவர்களுடைய மீசை உண்மையில் வாயில் ஒரு வடிகட்டியைப் போல் அமைந்துள்ளது. அவர்கள் குடிக்கின்ற பானங்கள், சாப்பிடும் பண்டங்கள் அனைத்தும் மீசையில் பட்ட பின்னர் தான் உள்ளே செல்கின்றது. சளி மற்றும் அசுத்தங்கள் தங்கி நிற்கும் இந்த மீசை வழியாக உணவுப் பொருட்கள் செல்வது சுகாதாரக் கேட்டை உருவாக்கும் என்பதால் இதைத் தடுக்கும் விதமாக, மீசையைக் கத்தரிக்க வேண்டும் என்று இஸ்லாம் கூறுகின்றது. இது போன்று உடல் நாற்றத்திற்குக் காரணமாக அமையும் அக்குள் முடிகளையும், இன உறுப்பின் முடிகளையும் களையச் சொல்கிறது. நகங்களின் இடுக்குகள் தான் கிருமிகள் அடைக்கலம் புகுமிடம் என்பதால் நகங்களையும் வெட்ட வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தருகின்றார்கள். இவற்றை வளர்ப்பது இயற்கையல்ல, களைவது தான் இயற்கை என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உலகுக்குப் படம்பிடித்துக் காட்டுகிறார்கள்.
இந்த பொருள் மீண்டும் உங்களிடம் அழைத்து வந்துவிட்டது.! புகைப்படத்துடன் மறைந்த நடிகர் சேதுராமன் மனைவி வெளியிட்ட உருக்கமான பதிவு!! என்ன கொடுமை சார் இது... ராதிகாவுடன் ரொமான்ஸ் செய்யப்போன கோபி... கடைசியில் இப்படி ஆச்சே!! கலகலப்பான ப்ரோமோ வீடியோ!! சைக்கோ கணவரால் வைக்கம் விஜயலட்சுமிக்கு நடந்த சோகம்... விவாகரத்துக்கான காரணத்தை பகிர்ந்த விஜயலட்சுமி..! 37 வயதில் காதலனை கரம் பிடித்த பிரபல சீரியல் நடிகை... வைரலாகும் திருமண புகைப்படம்!! அடக்கடவுளே.! பாடகி வைக்கம் விஜயலட்சுமியின் திருமண வாழ்க்கையில் இவ்வளவு கஷ்டங்களா.! அவரே உடைத்த உண்மைகள்!! பழம்பெரும் வில்லன் நடிகர் ஜெய்சங்கரின் மகனை பார்த்துள்ளீர்களா... வைரலாகும் புகைப்படம்!! பாண்டியன் ஸ்டோர் தொடரில் மாற்றப்பட்டு வரும் நடிகைகள்... இப்ப யார் மாறியுள்ளார் தெரியுமா.? நடிகர் சிபிராஜின் மனைவி மற்றும் குழந்தைகளை பார்த்துள்ளீர்களா... புகைப்படம் இதோ... சந்திரமுகியாக தமிழ் சினிமா ரசிகர்களை கலக்கவரும் கங்கனா ரனாவத்.. அதிகாரப்பூர்வ தகவலால் எதிர்பார்ப்பின் உச்சக்கட்டத்தில் ரசிகர்கள்.! தெலுங்கானா மாநிலம் நாராயணப்பேட்டை மாவட்டத்தில் மண் சரிந்து 10 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். தெலுங்கானா மாநிலம் நாராயணப்பேட்டை மாவட்டத்தில், மரிக்கல் மண்டலம் திலேர் கிராமத்தில் 100 நாள் வேலைத்திட்டத்தில் அப்பகுதி மக்கள் பணி செய்துகொண்டிருந்துள்ளனர். அப்போது பொக்லைன் இயந்திரம் மூலம் மண் எடுத்து கொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டுள்ளது. அந்த விபத்தில் 100 நாள் பணியில் இருந்தவர்கள் மீது மண் சரிந்து 10 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். அங்கு நடந்த சம்பவம் அந்த கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியது. Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here Tags: #accident #telungana Copy Link தற்போதைய செய்திகள் திடீர் மூச்சுதிணறல்.! கேஜிஎப் பட நடிகர் மரணம்.! சோகத்தில் திரையிலகினர் இரங்கல்!! பிரேத பரிசோதனையின் போது உயிரிழந்தவரின் உடலிலிருந்து உயிருடன் வெளியே வந்த பாம்பு.! அலறியடித்து ஓடிய பெண்.! திகில் சம்பவம்!! இந்த பொருள் மீண்டும் உங்களிடம் அழைத்து வந்துவிட்டது.! புகைப்படத்துடன் மறைந்த நடிகர் சேதுராமன் மனைவி வெளியிட்ட உருக்கமான பதிவு!!
ததும்பி வழியும் மௌனம் நூலில் முப்பத்தியெட்டு கட்டுரைகள் இருக்கின்றன. தமிழ்ச் சமூக வாழ்வை முப்பத்தியெட்டு விதமாக பார்த்திருக்கிறார், விமர்சித்திருக்கிறார் அ.வெண்ணிலா என்று சொல்வதுதான் பொருத்தமாக இருக்கும். குழந்தைகளைப்பற்றி, கல்வி முறை, மருத்துவம், வீடு, சினிமா, நகர்மயம், காட்சி ஊடகங்கள், கிராமம், நவீன வாழ்க்கைமுறை தொழில்நுட்பம், கைவிடப்பட்ட முதியோர்கள், பெண்கள் சந்திக்கும் கொடூரங்கள், உணவு பழக்கவழக்கங்களில் ஏற்பட்டுள்ள மாற்றம், நவீன வாழ்க்கை, விளையாட மறந்த குழந்தைகள் என்று சமூகத்திலுள்ள பல விசயங்கள் குறித்து தெளிவாகவும், துல்லியமாகவும் இக்கட்டுரைகள் எழுதப்பட்டிருக்கின்றன. இன்றையக் கல்விமுறை குறித்த அ.வெண்ணிலாவின் அக்கறை முக்கியமானது. இலவசமாக பெற வேண்டிய கல்வியை ஏன் விலைகொடுத்து வாங்கும் நிலை ஏற்பட்டது? எல்.கே.ஜி. முதல் மருத்துவப் படிப்புவரை ஒவ்வொரு படிப்புக்கும் ஒவ்வொரு விலையென பகிரங்கமாக விளம்பரப்படுத்தப்பட்டு விற்கப்படுவது எப்படி? தனியார்மய கல்வி கொள்ளையை அரசும், பெற்றோர்களும் ஆதிரிப்பதற்கான, ஊக்கப்படுதுவதற்கான காரணங்கள் என்ன? பத்தாம் வகுப்பு பாடத்தை ஒன்பதாம் வகுப்பிலிருந்தும், பனிரெண்டாம் வகுப்பு பாடத்தை பதினொன்றாம் வகுப்பிலேயே தனியார் பள்ளிகள் ஏன் நடத்துகின்றன? இந்த போக்கை அரசும், பெற்றோர்களும் ஏன் ஆதரிக்கிறார்கள் என்று நூற்றுக்கணக்கான கேள்விகளை கட்டுரைகளின் வழியே ஆசிரியர் கேட்கிறார். இந்தக் கேள்விகள் கற்பனையாகவோ, யூகமாகவோ கேட்கப்படவில்லை. தமிழ்நாட்டிலுள்ள எல்லாருக்குமே இந்த கேள்விகளுக்குப் பின்னால் உள்ள உண்மை தெரியும். ஆனால் யாருமே பதில் சொல்லப்போவதில்லை. காரணம் – எல்லாருமே குற்றவாளிகள். கல்வித்துறையில் ஏற்பட்ட வீழ்ச்சி என்பது சமூகத்தின் வீழ்ச்சி. என்பதை ‘அனல் மேலே பனித்துளி’ என்ற கட்டுரை விவரிக்கிறது. அசலான அறிவை பெறுவதற்கு எதிராக நம்முடைய கல்விச்சூழல் இருக்கிறது என்பது கட்டுரை - ஆசிரியரின் கவலை. மூன்று நான்கு நூற்றாண்டுகளில் அடைய வேண்டிய வளர்ச்சியை, மாற்றத்தை கடந்த இருபது முப்பதே ஆண்டுகளில் தமிழகம் பெற்றிருக்கிறது. குறிப்பாக தொலைத்தொடர்பில், போக்குவரத்தில், காட்சி ஊடகத்துறையில். இந்த வளர்ச்சி தனிமனித வாழ்வில், சமூக வாழ்வில் எத்தகைய மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கிறது? இந்த மாற்றங்களினால் தமிழ்ச்சமூகம் பெற்றது என்ன, இழந்தது என்ன? பெற்றது அதிகமா, இழந்தது அதிகமா என்பதை மிகவும் நுணுக்கமாக புள்ளிவிபரங்களின் அடிப்படையில் மட்டுமல்ல சமூக உளவியலின் அடிப்படையிலும் நிதானமாக ஆராய்ந்து எழுதியிருக்கிறார் அ.வெண்ணிலா. எதையும் உயர்த்தியோ, தாழ்த்தியோ பேச வேண்டும் என்ற உள்நோக்கம் சிறிதுமின்றி பிரச்சினைகளையும் அது ஏற்படுத்திய தாக்கங்களையும் மட்டுமே எழுதியிருக்கிறார். மனதில் பதியும்படியும், உரைக்கும்படியும். தொலைபேசிகள் பொய்களை வளர்க்கும் கருவியாக மாறிப்போன விந்தைப்பற்றியும் பேசியிருக்கிறார். நகர்மயம் கிராமத் தற்சார்பு தன்மையை எப்படி அழித்தது என்பதுபற்றி அ.வெண்ணிலா எழுதியிருக்கிறார். விளை நிலங்கள் மனைகளானது, ஏரி, குளங்கள் பிளாட்டுகளானது, நீர்நிலைகளை அழித்தது மட்டுமல்ல, தயிர்க்காரி, வளையல்காரன், பூம்பூம் மாட்டுக்காரன், இரவில் குறி சொல்கிறவன் என்று நூற்றுக்கணக்கான கிராம வாழ்வோடு ஒட்டியிருந்த மனிதர்களை காணாமல் செய்துவிட்டது. மனிதர்கள் மட்டும் அழிந்து போகவில்லை. அவர்களோடிருந்த தொழிலும் மறைந்துவிட்டது. கிராமத் தெருக்கள் இன்று வெறிச்சோடி கிடக்கின்றன என்பதை ‘தெரு மனிதர்கள்’ கட்டுரையில் பார்க்கலாம். கிரிக்கெட் என்ற மீடியா அரசியல் விளையாட்டு – தமிழகத்திலுள்ள எல்லா கிராம விளையாட்டுகளையும் அடையாளமில்லாமல் செய்துவிட்டது. நகரத்து மனிதர்கள் மட்டுமல்ல கிராமத்து மனிதர்களும் இன்று தொலைக்காட்சியின்முன்தான் உட்கார்ந்திருக்கிறார்கள். தொலைக்காட்சியைத்தான் பார்க்கிறார்கள். தொலைக்காட்சியோடு மட்டும்தான் பேசுகிறார்கள். மனிதர்களோடு பேசுவதற்கு யாருக்கும் நேரமில்லை. விருப்பமுமில்லை. இன்று நகரத்து மனிதர்களுக்கும் கிராமத்து மனிதர்களுக்குமிடையே மனரீதியான வேற்றுமைகளைப் பார்ப்பது அரிது. நகரம் – கிராமம் இரண்டு வாழ்வையும் ஒப்பிட்டு, சமூக வாழ்வில் ஏற்பட்டுள்ள மாற்றங்களையும் மிகுந்த அக்கறையோடு எழுதியிருக்கிறார். கட்டுரை ஆசிரியரின் அக்கறையும், கவலையும், நம்மையும் பிடித்துக்கொள்கிறது. இன்றைய இளைஞர்களின் மனோபாவம் என்னவாக இருக்கிறது? எப்படிப்பட்ட உயர்வான விசயத்தையும் உதாசினம் செய்கிற குணம் எப்படி வளர்ந்தது என்று வேதனையோடு கேட்கிறார். பெண்கள் என்றாலே சமையல், பட்டுப் புடவை, நகை, அலங்காரம், ஊர் வம்பு பேசுதல் என்பதாக மட்டுமே சமுக மனதில் பதிந்துள்ளதற்கு யார் காரணம்? பெண்கள் சமைப்பது பெண்களுக்காக மட்டுமா? முதல் குழந்தை – பெண்ணாக பிறந்தால் ‘லட்சுமி’ வந்துள்ளது என்று பெருமை கொள்கிறோம். பெண் தெய்வங்களை அதிகமாக கொண்டுள்ள சமூகம். எல்லாவற்றிற்கும் பெண்களை முன்னிருத்துகிற தமிழ்ச்சமூகத்தில்தான் ஐந்துவயது பெண் குழந்தை பாலியல் சீண்டலுக்கு ஆளாகிறது. காதலிக்க மாட்டேன் என்று சொல்கிற பெண்ணின் மீது ஆசிட் ஊற்றப்படுகிறது. கவர்ச்சிகரமாக ஆடை அணிந்திருந்ததால் வன்புணர்ச்சிக்குட்படுத்தப்பட்டாள் என்று கூறுகிறது. படித்த, நாகரீகமிக்க சமூகத்தில் நடைபெறக்கூடிய செயல்களா இவை என்று அ.வெண்ணிலா கேட்கிறார். பள்ளிக்கு செல்லும் குழந்தைகள், பணிக்கு செல்லும் பெண்கள், பஸ்ஸில், ரயிலில், அலுவலகத்தில் தினம்தினம் சந்திக்கும் இழிவுகள், கொடூரங்கள் எவ்வளவு? பெண் என்பதைத்தவிர இவர்கள் செய்த குற்றம் என்ன என்ற கட்டுரை ஆசிரியரின் கேள்விக்கு யாரிடத்தில் பதில் இருக்கிறது? உண்மையை உண்மையாக எழுதி இருக்கிறார். தமிழ் சமூகம் வெட்கப்பட வேண்டிய பல இடங்களை நாசூக்காக சுட்டிக்காட்டிருக்கிறார். பெண்ணிய கோசமில்லாமல், முழக்கமில்லாமல், நடைமுறை வாழ்விலிருந்தே அனைத்து விசயங்களும் பார்க்கப்ட்டுள்ளன. விமர்சிக்கப்பட்டுள்ளன. அ.வெண்ணிலா ஒரு பெண். அதனால் அவர் பெண்களுக்கு ஆதரவாகவும், ஆண்களுக்கு எதிராகவும் எழுதியிருப்பார் என்று சந்தேகப்பட அவசியமில்லாமல் ‘ஆண் குழந்தைகளை அரவணைப்போம்’ என்ற கட்டுரையில் ஆண் குழந்தைகளின் இன்றைய பரிதாப நிலைக்காகவும் வருந்துகிறார். இது கட்டுரை ஆசிரியரின் சமநிலை மனதினைக் காட்டுகிறது. ததும்பி வழியும் மௌனம் கட்டுரைத் தொகுப்பில் ‘சாயுங்கால மனிதர்கள், பசுமை நிறைந்த நினைவுகளில், வேருக்கு நீரானவர்கள் ஆகிய கட்டுரைகளை கண்ணீருடன்தான் படிக்கமுடியும். இந்த மூன்று கட்டுரைகளையும் – கட்டுரை என்று சொல்லாமல் சிறுகதைகள் என்று சொல்வது கூடுதல் பொருத்தமாக இருக்கும். இன்று படிப்பும், பணமும், நகரமும் மனித உறவுகளை பிய்த்தெறிந்துவிட்டது. கிராமத்தில் இருப்பதே இழிவானது என்ற மனப்போக்கு. ஏற்பட்டுள்ளது. சொந்த வீட்டிலேயே எத்தனையோ மனிதர்கள் அனாதைகளாக வாழவேண்டிய அவலம் ஏற்பட்டுள்ளது. இன்றைய வாழ்க்கை எல்லாவற்றையுமே பணமாகவும், பொருளாகவும் பார்க்க கற்றுத்தந்திருக்கிறது. மனித உறவுகள் சார்ந்த மதிப்பீடுகள் கேலிக்குரியனவாகிவிட்டன என்பதை மூன்று கட்டுரைகளிலும் நேர்த்தியாக எழுதியிருக்கிறார். தமிழ் சினிமா பெண்களுடைய வாழ்வில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அந்த மாற்றங்கள் என்ன விதமான விளைவுகளை உண்டாக்கியிருக்கிறது என்பதை விரிவாக எழுதியிருக்கிறார். பெண்களுடைய மனதுக்கு பெரிய ஆறுதலை சினிமாப் பாடல்கள் தந்திருக்கின்றன. 1990க்கு முந்தைய சினிமாப் பாடல்கள் ஏதாவது ஒரு விதத்தில் நம்மை பாதித்திருக்கிறது. சமூகத்தைப் பாதித்திருக்கிறது. இதன் தாக்கம்தான் தமிழகத்தினுடைய அரசியல்வாதிகள் சினிமாத்துறையிலிருந்தே வருகிறார்கள் என்பதை சரியான உதாரணங்களுடன் அ.வெண்ணிலா எழுதியிருக்கிறார். அதே நேரத்தில் ஒரு நடிகர் அரசியல்வாதியாக மாறும்போது சமூகம் அவரைப் பார்க்கிற விதமும், விமர்சிக்கிற விதமும் வேறாக இருக்கிறது. ஒரு நடிகை அரசியல்வாதியாக மாறும்போது சமூகம் அவரைப் பார்க்கிற விதம், விமர்சிக்கிற விதம் வேறாக இருக்கிறது, இந்த வேறுபாடு ஏன்? ஒரு கட்டுரையை கண்ணீர் நிறைந்த கண்களுடன் படிக்கமுடியும் என்று நிரூபித்த கட்டுரைத் தொகுப்பு இது. கட்டுரையை படிக்கிறோம் என்ற உணர்வு மொத்த நூலிலும் வரவில்லை. உண்மையாகவே இது அதிசயம். இதற்குக் காரணம் பல கட்டுரைகள் சுயசரிதை தன்மையுடன் எழுதப்பட்டிருப்பது. கட்டுரையை வெறும் தகவல்களாக, புள்ளிவிபரத்தொகுப்புகளாக இல்லாமல் சமூகத்தில் நடந்த யாரோ ஒருவருடைய விசயம் என்ற அளவில் மட்டும் எழுதாமல் பொது விஷயத்தோடு தன்னுடைய சொந்த விசயத்தையும் இணைத்து எழுதியிருப்பதுதான் இக்கட்டுரைகளின் பலம். அதுதான் படிக்க வைக்கிறது. ஒவ்வொரு கட்டுரையும் பாரபட்சமற்ற கூர்மையான சமூக விமர்சனம். இன்று விசேஷ நாட்கள், பண்டிகை நாட்கள் என்பது நடிகர், நடிகைகளின் சிறப்பு பேட்டிகளையும், சிறப்பு பட்டிமன்றங்களையும் பார்ப்பது என்றாகிவிட்டது. தீபாவளி, பொங்கல் என்பது பெரிய கொண்டாட்டத்திற்குரியன அல்ல. பொங்கல் என்பது இன்று ஒன்றுமே இல்லை. தீபாவளிதான் தமிழர் பண்டிகை என்று மாற்றிவிட்டது ஊடகங்கள், இன்றைய தலைமுறையினருக்கும், முந்தைய தலைமுறையினருக்கும் பொங்கல் என்பது வேறுவேறு பொருளில் உணரப்படுகிறது. நேற்றைய வாழ்க்கை இன்றைய வாழ்க்கைக்கு படிப்பாக இல்லை. வெறும் நினைவாக மட்டுமே இருக்கிறது. தொலைக்காட்சியாலும், சினிமாவாலும் தமிழ்ச்சமூகம் இழந்ததை அளவிட முடியுமா என்று கட்டுரை. ஆசிரியர் கவலை கொள்கிறார். அவருடைய கவலை மொத்த சமூகத்திற்குமானது. அதே மாதிரி போன தலைமுறைக்கும் இந்த தலைமுறைக்கும் ‘வீடு’ என்பதின் பொருள் மாறியிருக்கிறது. இன்று வீடு என்பது ஆடம்பரம். பிரம்மாண்டம். பிற மனிதர்களிடமிருந்து துண்டித்துக்கொள்வதற்கான இடம். ‘நாய்கள் ஜாக்கிரதை’ என்று போர்டு தொங்கவிடுகிற இடம். தகுதி. கௌரவம். அந்தஸ்து. வீடு பற்றிய நம்முடைய மதிப்பீடுகள் எப்படி மாறிவிட்டன என்பது குறித்து ஒரு கட்டுரையில் எழுதியிருக்கிறார். வீடே இன்று சினிமா தியேட்டர்போல இருக்கிறது. இன்றைய நம்முடைய வீடுகளில் பேச்சு என்பது அரிதான ஒன்றாக இருக்கிறது. ஒரு காலத்தில் பேச்சுதான் மனிதர்களை வாழ வைத்தது. ஒன்றிணைத்தது. சோறாக இருந்தது என்பதை ‘அனிச்சை மலரல்ல’ என்ற கட்டுரை விரிவாகப் பேசுகிறது. படித்தவர்கள், நாகரீகமிக்கவர்கள் என்ற போர்வையில் நாம் தொலைத்த, பேச மறுத்த சொற்கள் எவ்வளவு? இன்று நாம் பேசுகிற சொற்களில் ஏதாவது அர்த்தம் இருக்கிறதா? பொருளிழந்த, சாரமிழந்த சொற்களைத்தான் இன்று பயன்படுத்துகிறோம். ‘சூப்பர்’ என்ற ஒரு சொல் எத்தனை தமிழ் சொற்களை கொன்றிருக்கிறது? சொற்களில் இழிவானது, கெட்டது என்று உண்டா? ஆனால் நாம் அப்படித்தான் பாகுபடுத்தி வைத்திருக்கிறோம். இந்த பாகுபாடு மனித மனதிற்கு மட்டுமே உண்டானது. சொற்களுக்கு அல்ல என்பது அ.வெண்ணிலாவின் வாதம். அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வாதம். ‘அழகு மலராட’ கட்டுரையில் பள்ளி ஆண்டுவிழாவில் நடக்கும் நிகழ்ச்சிகளை அப்படியே காட்சியாக்கி இருக்கிறார். நிர்வாகத்திற்கு ஒரு கவலை, ஆரிரியர்களுக்கு ஒரு கவலை, நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் குழந்தைகளின் மனநிலை, தங்களுடைய பிள்ளைகளின் நிகழ்ச்சியை காணவந்த பெற்றோர்களின் மனநிலை, சிறப்பு அழைப்பாளர்களின் மனநிலையென்று ஒவ்வொரு விசயமாக விவரித்து ஒரு சினிமாவை பார்த்த நிறைவை ஏற்படுத்தியிருக்கிறார் அ.வெண்ணிலா. மரணங்கள் ஏன் நம்மை அதிரவைப்பதில்லை? அழ வைப்பதில்லை என்று ‘நிழல் மனிதர்கள்’ என்ற கட்டுரையில் கேட்கிறார். எது நம்மை மரத்துப்போக வைத்திருக்கிறது? மரணங்களின் எண்ணிக்கையா? அது ஒரு காரணம் மட்டுமே. தனிமனித மனோபாவமும், சமூகத்தின் மனோபாவமும் முற்றிலும் இன்று மாறிவிட்டது. தனிமனித அறமும், சமூக அறமும் இன்று பெயர் அளவில் மட்டுமே இருக்கிறது. எங்கே நாம் தோற்றுப்போனோம்? நகர வாழ்வும், தொழில்நுட்பமும் நம்மை இயந்திரங்களாக்கிவிட்டன என்ற கவலை அ.வெண்ணிலாவுக்கு மட்டுமே உரியதல்ல. ஒரே நாளில் நாம் விபத்துகளின் வழியே விதவிதமான மரணங்களை ஒரு துளி கண்ணீரின்றி கடந்துபோகிறோம். எப்படி? சமூக வெளி என்பது இன்று அச்சுறுத்தக்கூடிய இடமாக இருக்கிறது. யாருமே இன்று பாதுகாப்பாக இல்லை. ஏன்? காட்சி ஊடகங்கள்தான் குழந்தைகளுக்கு இன்று பெரும் ஆபத்தாக இருக்கிறது. அந்த ஆபத்திலிருந்து குழந்தைகளை எப்படி காப்பாற்றப் போகிறோம்? அதே மாதிரி பொது வெளியும் இன்று குழந்தைகளுக்கு ஆபத்தான இடமாகத்தான் இருக்கிறது. கட்டுரைகளில் அறிவார்ந்த விசயம், தமிழக, இந்தியப் பிரச்சனைகள், சமூகத்தை உலுக்கிய விசயங்கள் மட்டுமே பேசப்பட்டிருக்கும். ரொம்ப பெரியப்பெரிய விசயங்கள்தான் விவாதிக்கப்பட்டிருக்கும் என்று நம்பினால் – நமது நம்பிக்கையை பொய்யாக்கும் விதமாக பல கட்டுரைகள் எழுதப்பட்டிருக்கின்றன. ‘அப்படியே சாப்பிடலாம்’ என்ற கட்டுரை உணவைப்பற்றி பேசுகிறது. நூடுல்ஸ், ஃப்ரைடு ரைஸ், பீட்சா, பர்கர், கட்லெட், குளிர்பானங்கள், சாக்லெட்டுக்கள் எப்படி நம்முடைய அன்றாட உணவாக மாறின என்பதையும், வாரத்தின் ஏழு நாட்களும் இட்லியும், தோசையும் சாப்பிடும் தலைமுறையின் உணவின் ருசி எப்படி இருக்கிறது என்பதையும் பாரம்பரிய தமிழ் உணவு கலாச்சாரம் எப்படி மாறியது, உணவையே மருந்தாக, கடவுளாக கருதிய நமது பாரம்பரியம் என்னவானது? அரிசி மரத்தை காட்டுங்கள் என்று கேட்கிற குழந்தைகள், சாப்பிடுவது என்றால் என்னவென்றே தெரியாத குழந்தைகள் என்று உணவின் அருமைப்பற்றி நேர்த்தியாக எழுதியிருக்கிறார் அ.வெண்ணிலா. நாகரீகம், நவீன உணவு என்ற பெயரில் உடலுக்கு தீங்கான உணவுகளை விரும்பி சாப்பிடுகிற அவலத்திற்கு எது நம்மை தள்ளியது என்று பெரிய ஆய்வையே நடத்தியிருக்கிறார். இந்த ஆய்வு மிகவும் முக்கியமானது. உணவுதான் வாழ்க்கை. சமூகத்தை திறந்த மனதோடு பார்த்திருக்கிறார். சமூகத்தை பாதித்த, பாதிக்கக்கூடிய அத்தனை விசயங்களையும் பாரபட்சமின்றி எழுதியிருக்கிறார். மேம்போக்காக போகிற போக்கில் எழுதியிருக்கிறார் என்று ஒரு வாக்கியத்தைக்கூட காட்ட முடியாது அதே மாதிரி அவர் எழுதாத விசயம் என்று ஒன்றையும் சுட்டிக்காட்ட முடியாது. சில இடங்களில் அன்பாகவும், சில இடங்களில் கோபமாகவும் எழுதியிருக்கிறார். அன்பும், கோபமும் சமூக அக்கறையினால் ஏற்பட்டது. கட்டுரை ஆசிரியருக்கு வெறும் சமூக அக்கறை மட்டும் இருக்கவில்லை. பரந்துபட்ட பல்துறை சார்ந்த அறிவும் இருக்கிறது என்பதற்கு, கட்டுரைக்குத் தேவையான சான்றுகளை இலக்கியங்களிலிருந்தும் வரலாறுகளிலிருந்தும் நடைமுறை வாழ்விலிருந்தும் எடுத்து பயன்படுத்தியிருப்பது மட்டுமல்ல, சரியான இடத்தில் சரியான மேற்கோளை பயன்படுத்தி வாசகரின் கவனத்தைத் தக்க வைக்கிறார். அதே நேரத்தில் நாட்டுப்புற வழக்குகளையும் சிறப்பாக கையாண்டிருக்கிறார். படித்துவிட்டு மறந்துபோகிற, தூக்கிப்போடுகிற கட்டுரைத் தொகுப்பல்ல இது. முப்பத்தியெட்டு கட்டுரையும் உயிரோட்டமான மொழியில், சிடுக்குகளற்ற சரளமான மொழியில் மனதை நெகிழச்செய்யக்கூடிய விதமாக எழுதப்பட்டிருப்பதால் அலுப்பு, சோர்வு எந்தக் கட்டுரையிலும் ஏற்படவில்லை. தமிழ்ச் சமூகத்தை புரிந்துகொள்வதற்கு காலத்தின் கண்ணாடியாக இருக்கிறது அ.வெண்ணிலா எழுதிய ‘ததும்பி வழியும் மௌனம்’. இந்நூல்பற்றி சொல்வதற்கு ஏராளம் இருக்கிறது. நான் அள்ளியது கைப்பிடி நீர்தான்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்ற சீராய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற, அமைச்சர் சேகர்பாபு, செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கூறியுள்ளதாவது : திமுக பொறுப்பேற்ற பிறகு, ரூ.3200 கோடி மதிப்பிலான பணிகள் 2 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்து சமய அறநிலைத்துறை வரலாற்றில், இவ்வளவு பணிகள் மேற்கொண்டது முதலமைச்சர் ஸ்டாலினின் ஆட்சிக் காலத்தில் தான். மேலும், 300க்கும் மேற்பட்ட திருக்கோவில்களில் கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது. தமிழ்நாட்டில் இருந்து வரக்கூடிய பக்தர்களுக்கு உதவி செய்யும் வகையில், இந்து சமய அறநிலைத்துறை சார்பில் சபரிமலையில் 24 மணி நேர தகவல் மையம் அமைத்து, அரசு அதிகாரிகளை நியமிப்பது குறித்து இந்த கூட்டத்தில் பேசப்பட்டது. திருவண்ணாமலை தீபத் திருவிழாவுக்கு 30 லட்சத்திற்கும் மேல் பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கிறோம். அதற்கான ஏற்பாடுகள் குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. 1000 ஆண்டு கால பழமை வாய்ந்த கோயில்களுக்காக நிதி ஒதுக்கி, அந்த கோயில்களை புதுப்பிக்க இந்த ஆண்டு டெண்டர் விடுவது பற்றியும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இந்து சமய அறநிலையத்துறை சார்பில் இதுவரை 87,000 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது. மீதமுள்ள 13,000 மரக்கன்றுகள் விரைவில் நடப்படும். அதிகாரிகள் உறங்குவது ஐந்து மணி நேரம் மட்டும் தான். மீதமுள்ள 19 மணி நேரத்தில் எப்போதும் அழைத்தாலும் அவர்களை தொடர்பு கொள்ளலாம். அதிகாரிகளுக்கு வயர்லெஸ் மைக் கொடுக்கப்பட்டுள்ளது. எப்போது வேண்டுமானாலும் அவர்களைத் தொடர்பு கொள்ளலாம். இந்து சமய அறநிலையத் துறை சார்பில் மீட்கப்பட்டுள்ள நகைகள், பொருட்கள் அனைத்திற்கும் முதலாம் பாகம் புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த புத்தகத்தை, இன்று தபாலிலோ அல்லது துறை சார்ந்த அதிகாரிகள் மூலமோ அவரது இல்லத்திற்கு அனுப்பி வைக்கப்படும். மத்திய அரசு எந்த நிகழ்வு நடத்தினாலும், அவர்களிடம் இருந்து அழைப்பு வந்தால் அதற்கான முழு பணிகளையும் நாங்கள் சிறப்பாக செய்து கொடுப்போம். இந்து சமய அறநிலையத் துறைக்கு, காசித் தமிழ்ச் சங்கம நிகழ்வில் கலந்துகொள்ள அழைப்பு வரவில்லை. வந்தால் அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக உள்ளோம். திருக்கோவிலில் அனைவரும் சமம். உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்ற நிலை மாற்றப்பட வேண்டும். விஐபி தரிசனம் இந்த ஆட்சியில் உருவானது அல்ல. தமிழகத்தில் உள்ள கோவில்களில் விஐபி தரிசனம் படிப்படியாக ரத்து செய்யப்படும். பாஜக ஒரு சைத்தான்.முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எப்படிப்பட்ட பேய்களையும் விரட்டக் கூடிய சக்தி படைத்தவர். அதனால் பாஜக எந்த அவதாரம் எடுத்து வந்தாலும் தமிழகத்தில் நிச்சயமாக கால் ஊன்ற முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.
அன்பர்களே நீங்கள் பார்க்கும்போது கொஞ்சம் விசித்திரமாகத் தோன்றும் ஒரு வகையான திரைப்படம். முன்னுரை தீவிரமானது; சிகிச்சை விளையாட்டுத்தனமானது. பேய்கள் உண்மையானவை; கொல்வது ஆசைக்குரியது. முறை குழப்பமானது; பைத்தியக்காரத்தனம் சினிமா. ஆனால் நீங்கள் அதிகமாக நினைக்கிறீர்கள் அன்பர்களே, அது அதிக அர்த்தத்தை தருகிறது. மும்பையில் உள்ள ஒரு குறைந்த நடுத்தர வர்க்க முஸ்லீம் குடும்பத்தில் நடக்கும் குடும்ப வன்முறையை படம் முழுவதுமாக கையாள்கிறது. கதாநாயகி பத்ரு (ஆலியா பட்) என்ற நம்பிக்கையுள்ள இளம் பெண், அவள் உடல்ரீதியாக துன்புறுத்தும் கணவர் ஹம்சாவுடன் (விஜய் வர்மா) தனது உறவின் முடிவை அடைகிறார். அவளது ஒற்றைத் தாய் ஷம்ஷுவின் (ஷெபாலி ஷா) உதவியால், பத்ரு தான் நேசிக்கும் நச்சுத்தன்மையுள்ள மனிதனைப் பற்றிய அட்டவணையைத் திருப்ப முடிவு செய்கிறாள். அட்டவணையைத் திருப்புவதற்கான இந்த சொற்களஞ்சியம் வரையறுக்கிறது அன்பர்களே. ஷம்ஷு ஒரு பிரபலமான கட்டுக்கதையை மேற்கோள் காட்டுகிறார் – தேள் நதியின் குறுக்கே அதைக் கொண்டு செல்லும் வகையான தவளையைக் கொட்டுவதைத் தடுக்க முடியாது – ஆண்களைப் பற்றிய எச்சரிக்கைக் கதையாக. ஆனால் பத்ரு அதை தார்மீக அடையாளத்தின் மோதலாக நீட்டிக்கிறார்: ஒருவரை தோற்கடிப்பதற்கான ஒரே வழி தேள் ஆவதா? பழிவாங்குவது மட்டும்தான் மீட்பின் இலக்கணமா? பதில்கள் கதை சொல்லும் வகையை அடிப்படையாகக் கொண்டவை அன்பர்களே தேர்வு செய்கிறார். மெயின்ஸ்ட்ரீம் ஹிந்தி சினிமா நீண்ட காலமாக மலிவான சிரிப்புகளுக்காக அல்லது இருண்ட விழிப்பு உணர்வுக்காக பெண் வெறுப்பை விளையாடி வருகிறது. ஆனால் பெண் உந்துதல் அன்பர்களே ஒரு கருப்பு நகைச்சுவை, இரண்டு தீவிர டோன்களின் கலப்பினமாகும் – இது ஒரே நேரத்தில் சிரிப்பு மற்றும் இருட்டடிப்பு ஆகிய இரண்டிற்கும் பெண் வெறுப்புக்கு எதிரானது. ஒரு கருப்பு நகைச்சுவை என்பது, தேள் போல் மாறுவேடமிட்ட அச்சமற்ற தவளைக்கு சமமான கருப்பொருளாகும். விந்தையானது இந்த இடத்தை பாரம்பரிய சுரண்டலுக்கான பதிலடியாகும், ஆனால் இருளில் இருந்து சில உண்மையைச் செதுக்க ஏஜென்சிக்கு வழங்குகிறது. ஒருவகையில், இந்த வகையை ஒடுக்கப்பட்டவர்களின் தைரியமான குரலாக வாசிக்கலாம். படத்தின் சவால் – அதன் கதாநாயகனைப் போலவே – அது அழிக்கும் நச்சுக் கோளங்களுக்கு அடிபணியாமல் இருப்பது; அது தவளையின் ஒருமைப்பாட்டைத் தக்கவைக்க வேண்டும். அன்பர்களே அந்த வகையில் பெரும்பாலும் வெற்றி பெற்றுள்ளது. ஒரு இழுபறியான இரண்டாவது மணிநேரத்தில் டோனல் மாற்றங்கள் கூட – இரண்டு பெண்களும் உரத்த சூழ்நிலை நகைச்சுவை மற்றும் துஷ்பிரயோகத்தின் தலைமுறை சுழற்சியை முறியடிக்கும் இடத்தில் – ஜார்ரிங் செய்வதை விட மிகவும் எதிர்மறையாக உணர்கிறார்கள். நடுக்கமான நீதி வெறித்தனமான பழிவாங்கும் ஆடையை அணிந்திருக்கும் திரைப்படத்தைச் சேர்ந்தவை. நான் விரும்புகிறேன் அன்பர்களே எதை அடைய வேண்டும் என்பதற்காக. பொழுதுபோக்கானது சதித்திட்டத்திற்கு கிட்டத்தட்ட தற்செயலானது, ஏனெனில் இது திரைப்படத் தயாரிப்பின் ஒரு எதிர்வினை பகுதியாகும். இது காதல் மற்றும் துஷ்பிரயோகம் மற்றும் இந்த உறவை மகிமைப்படுத்தும் கலை பற்றிய நமது கருத்து ஆகியவற்றுக்கு இடையேயான நிறைந்த உறவுக்கு எதிர்வினையாற்றுகிறது. வாழ்க்கையை அற்பமாக்கும் கதையாடல்களை விட மிகவும் சிக்கலானது என்பதையும் இது ஒப்புக்கொள்கிறது. உதாரணமாக, மருமகன் ஹம்சாவைக் கொன்றுவிடுவதுதான் ஷம்ஷுவின் ஒரே தீர்வு. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், அவர் குறைக்கும் கற்பழிப்பு-பழிவாங்கும் டெம்ப்ளேட்டையும் அதன் அறியப்படாத விளைவுகளையும் உள்ளடக்குகிறார். வயதான பெண்ணின் முதல் உள்ளுணர்வு முதன்மையானது: சுய பாதுகாப்பு. குறைந்தபட்சம் இரண்டு முறை, அவர் தனது சொந்த தடங்களை மறைக்க ஒரு ஆண் நண்பரை ஆற்றின் கீழே விற்கிறார். ஆனால் பத்ரு, இதற்கு நேர்மாறாக, யதார்த்தத்தின் சோகத்தில் சிக்கிக் கொள்கிறார். அவள் அழிவுகரமான கணவனை “குணப்படுத்த” வழிகளைப் பற்றி சிந்திக்கிறாள்; அவனுடைய குடிப்பழக்கம் தான் பிரச்சனை என்று அவள் உறுதியாக நம்புகிறாள், மேலும் அவனை நிலைப்படுத்த கர்ப்பம் தரிக்கக் கூட நினைக்கிறாள். அவளுடைய திருமணம் – காதல் மற்றும் சுதந்திரத்திலிருந்து உருவானது – அவளுடைய விதவை தாயின் வரலாற்றிலிருந்து வேறுபட்டது என்று அவள் கருதுகிறாள். (கொஞ்சம் இருக்கிறது கெஹ்ரையன் வியத்தகு முடிவு எப்படி பாரம்பரியம், வாய்ப்பு மற்றும் விதியை இணைக்கிறது). ஆனால் பத்ரு குளிர்ச்சியான மற்றும் ஸ்டைலான கதாநாயகனாக இருக்க முயற்சிக்கும் நேரங்கள் உள்ளன. அவள் அப்படிச் செய்யப் போராடுகிறாள் – அவளுடைய அம்மா இருந்தபோதிலும் மற்றும் அதன் காரணமாக – காதல் பற்றிய படத்தின் வெளிப்படையான புரிதலை மீண்டும் உறுதிப்படுத்துகிறது. தாய்-மகள் இருவரின் இந்த மோதல் இயக்கவியல், சமூக ஊடக உரையாடலுக்கும் நிஜ உலக வாழ்க்கைக்கும் இடையே உள்ள எல்லையை தயாரிப்பாளர்கள் அறிந்திருப்பதைக் குறிக்கிறது. சில சமயங்களில், நகர்ப்புறத்தில் எழுதப்பட்ட எழுத்து இந்த எல்லையை பொறுப்பற்ற முறையில் கடந்து செல்கிறது – ட்விட்டரில் உள்ளவர்களுக்கு மட்டும் உலகம் எப்படி உருவாகியுள்ளது என்பதைப் பற்றி ஷம்ஷு ஒரு தந்திரமான மற்றும் முற்றிலும் தவறான கிண்டல் செய்வது போன்றது. அல்லது பத்ருவின் அழகான உடைந்த-ஆங்கில வார்த்தைகளைப் பயன்படுத்தி. மற்றவற்றில், இந்தத் திரைப்படம் எல்லையை புத்திசாலித்தனமாக கடந்து செல்கிறது – குடும்ப வன்முறையின் குழப்பமான இயல்புநிலையை சித்தரிக்கும் தருணங்களைப் போலவே: ஷம்ஷு தனது மகளின் முகத்தில் உள்ள காயங்களுக்கு உண்மையில் எதிர்வினையாற்றுகிறார்; ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர், தங்கள் கணவர்கள் மோசமாக நடந்து கொள்ள அனுமதித்ததற்காக பெண்களை அலட்சியமாக குற்றம் சாட்டுகிறார்; பத்ரு தானே தினமும் காலையில் ஹம்சாவின் மன்னிப்புக்குக் கீழ்ப்படிகிறாள், அவளது டிரஸ்ஸிங் டேபிளில் இருக்கும் கன்சீலருடன் ஒரு ஆழமான பிணைப்பை ஏற்படுத்துகிறாள். படத்தின் வடிவமைப்பு அதன் உட்பொருளை கிண்டல் செய்கிறது. இளஞ்சிவப்பு மற்றும் நீல வண்ணத் திட்டம், குறிப்பாக உட்புறத்தில், ஒரு காட்சிக் கதையைச் சொல்கிறது. ஆனால் அது இடம் இல்லாத நகரத்தின் வெளிப்பாட்டின் ஒரு பாத்திரமாக மாறுகிறது. உதாரணமாக, ஹம்சா தண்டவாளத்தில் இருந்து வெளியே செல்வதை நாம் முதன்முறையாகப் பார்க்கிறோம். காட்சியானது மற்றதைப் போலவே தொடங்குகிறது, ஒரு மனிதன் தனது மனைவியின் சமையலுக்கு விளையாட்டுத்தனமாக அவளைப் பாராட்டுகிறான். இரண்டாவதாக ஒரு தவறான கல் அவனது வாய் அரிசியை பாழாக்குகிறது, ஒலியின் ஆட்டம் அவர்களின் வெளிப்புற வேனியர் சிதைவதை பிரதிபலிக்கிறது. நாம் கேட்பதெல்லாம் கல்லுக்கு எதிராக பற்களை துடைப்பது மட்டுமே – இந்த எதிரொலியானது பாலியல் பதற்றம் அல்லது உடல் திகிலை அதிகரிக்க பெரும்பாலான திரைப்படங்கள் பயன்படுத்தும் ட்ரோப்பை அழைக்கிறது. நடுத்தர வர்க்கத்தின் இரைச்சலின் சிம்பொனியில் ஹம்சாவின் மனைவி அடிப்பது ஒரு தவறான குறிப்பாகக் கருதப்படுகிறது. கீழே இருக்கும் பார்லர் பெண், பத்ருவின் திணறிய அலறல்களைக் கேட்கும்போதெல்லாம் சாதாரணமாகத் தோள்களைக் குலுக்கிவிடுகிறாள். சமையலறை சாதனங்களின் சுழல் மறுப்பு மற்றும் தனியுரிமையின் கவசமாக மாறுகிறது. ஒவ்வொரு இரவும் ஹம்சா வேலை முடிந்து திரும்பும் போது மற்ற அடுக்குமாடி குடியிருப்புகளில் உள்ள தொலைக்காட்சிகள் கூட கொஞ்சம் சத்தமாக ஒலிக்கின்றன, கிட்டத்தட்ட என்ன நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சால்லின் மெல்லிய சுவர்களில் பாலிவுட் இசை வடிகட்டுகிறது. “மெயின் அகர் கஹூன்” பாடல் மீண்டும் மீண்டும் வரும்; இது ஒரு முதன்மை கதாபாத்திரத்தின் ரிங்டோனாகவும் இருக்கிறது. கதாநாயகியின் பார்வையில் படிக்கும் போது, ​​இந்தப் பாடல் எந்தத் திரைப்படத்திற்கு உரியது – ஓம் சாந்தி ஓம் (2007) – ஒரு பெண் தனது முந்தைய அவதாரத்தைக் கொன்ற மனிதனைப் பழிவாங்குவதற்காக இறந்தோரிலிருந்து எழுந்ததைப் பற்றியது; அவள் அதே நபர் என்று அவன் நினைக்கிறான், ஆனால் அவள் இல்லை. இதைவிட சிறந்த உருவகம் எதுவும் இல்லை அன்பர்களே. தவளை-தேள் கட்டுக்கதையின் அர்த்தத்தைத் தனிப்பயனாக்கும் ஒரு மூத்த வீரரான ஷம்ஷுவாக ஷெஃபாலி ஷா வாழ்நாள் முழுவதும் அதிர்ச்சியைக் கட்டுப்படுத்துகிறார். ஆலியா பட்டின் பத்ரு தான் எதிர்காலம் என்று நான் நம்ப விரும்புகிறேன் கல்லி பாய்சஃபீனா, முராத்துக்கு பதிலாக விஜய் வர்மாவின் மொயீனுடன் டேட்டிங் சென்றிருந்தால். ஆனால் அது பட் மற்றும் வர்மா ஷார்ட் விற்பனையாக இருக்கும் – இருவரும் முற்றிலும் வேறுபட்ட பிரபஞ்சத்தை மிகவும் வித்தியாசமான அமைப்பில் உருவாக்க முடிகிறது. பட் ஒரு தந்திரமான பாத்திரத்தில் நன்றாக நடிக்கிறார். பத்ருவின் பாதிக்கப்பட்டவர் முதல் குற்றவாளியாக மாறுவது காகிதத்தில் திடீரென உணர்கிறது, ஆனால் பட்டின் நடிப்பு ஒரு நபரின் இரத்தத்தை மற்றவருக்குள் செலுத்த அனுமதிக்கிறது. அவள் கைகளில், பத்ரு ஆத்திரத்தை விட மனவேதனை, தூய வெறுப்பை விட சிதைந்த காதல். சில சமயங்களில், பத்ரு இல்லாவிட்டாலும் பட் விளையாடுவது போல் உணர்கிறேன். ஆனால் பாத்திரத்தின் செயல்திறன் தன்மையின் அறிகுறியாகவும் இதைப் படிக்கலாம்; அவள் நடிப்பதற்கு பதிலாக நடிக்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. சிறிய தொடுதல்கள் நீண்ட தூரம் செல்கின்றன. பத்ருவின் பக்கத்து வீட்டுக்காரர் (ரோஷன் மேத்யூ) அவளது கோபத்துடன் தட்டுகளை உடைத்துக்கொண்டு நடக்கும்போது, ​​ஒரு நொடியில் அவளது ஆத்திரம் பயமாக மாறுகிறது. அவள் கணவனால் மிகவும் பயமுறுத்தப்படுகிறாள், அவளால் நிம்மதியாக துண்டு துண்டாக கூட விழ முடியாது. அது ஹம்சா இல்லை என்பதை அவள் உணர்ந்தவுடன், அவள் அந்த மனிதனைக் கத்தினாள், அவள் விட்ட இடத்தில் இருந்து தன் கோபத்தைத் தொடர்கிறாள். ஆனால் காட்சி திருடியவர் அன்பர்களே முரண்பாடாக, மனிதன். விஜய் வர்மாவின் சில சிறந்த நடிப்புகள் நச்சு ஆண்மையின் வரையறைகளால் வரையறுக்கப்படுகின்றன (அவள், பேய் கதைகள், கல்லி பாய், பிங்க்) இல் அன்பர்களே, மேலும், அவர் அனைத்து சிவப்புக் கொடிகளையும் புள்ளியில் பெறுகிறார் – அவர் பத்ருவைத் தாக்கிய மறுநாள் காலையில் அவர் கேஸ்லைட் மற்றும் இனிப்புடன் பேசும் விதம்; அவர் ஒளியிலிருந்து இருட்டிற்கு மாறுவது மற்றும் ஒரு நொடியில் திரும்பும் விதம்; மனைவியைக் காயப்படுத்திய பிறகு, அவனுடைய பைத்தியக்காரத்தனத்திற்கு அவள்தான் காரணம் என அவன் முகம் சுளிக்கும் விதம்; அவரது குடும்ப விவகாரங்களில் ஊடுருவும் எவரையும் அவர் அணுகும் விதமும் கூட. அவனுடைய கெட்ட குணம் தன்னைத்தானே உணர்ந்து கொண்டது, அது கிட்டத்தட்ட வேட்டையாடும் விலங்கு போன்றது: ஹம்சா தன் இரையை உண்ணும்போது கூட அதைச் சுற்றி வருவது போல் தெரிகிறது. வர்மா போன்ற படங்களில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாகப் பெற்ற மனிதராகவும் அவரை உருவாக்குகிறார் கபீர் சிங் (2019) – ஹம்சா துஷ்பிரயோகம் செய்யும் கூட்டாளியின் அனுதாபத்தைப் பெறுவதற்காக அனைத்து சித்திரவதைகளுக்கும் ஆளாகும்போது அவர் எவ்வளவு நேர்மையற்றவர் என்பதை நாங்கள் கவனிப்பதை அவர் உறுதிசெய்கிறார். அவர் அவளை மென்மையாக்க வீர ஆண்-குழந்தை ட்ரோப்பைப் பார்க்கிறார். அன்பர்களே மும்பையில் ஒரு வழக்கமான மகாராஷ்டிர சால்லில் இது நடந்திருந்தால் அது மிகவும் பொருத்தமானதாக இருந்திருக்கலாம். ஆனால் ஒரு முஸ்லீம் வட்டாரத்தின் தேர்வு – குறிப்பாக இன்றைய காலநிலையில் – ஒடுக்குமுறையின் மொழியைப் பெருக்குகிறது; ஒரு (மத) சிறுபான்மையினருக்குள் (பாலினம்) சிறுபான்மையாக இருக்கும்போது பங்குகள் அதிகமாக இருக்கும். துஷ்பிரயோகம் ஓரங்களில் இருக்கும்போது மீட்பு ஆழமாக இருக்கும். இது போன்ற சிறிய ஸ்கிரிப்ட் விவரங்கள் திரைப்படத்தை வளமாக்குகின்றன. உதாரணமாக, ஹம்சா டிக்கெட் சேகரிப்பாளராகப் பணிபுரிகிறார்: பொது இடங்களில் சட்டத்தை நிலைநிறுத்துபவர், ஆனால் மூடிய கதவுகளுக்குப் பின்னால் அதை கொடூரமாக உடைக்கிறார். பத்ருவுக்கும் அவளது பரிணாம வளர்ச்சிக்கும் இடையே உள்ள சாலைத் தடையாக அவரது நிலையைப் பிரதிபலிக்கும் ஹம்சா சால் மற்றும் அதன் மறுவளர்ச்சிக்கு இடையில் நிற்கும் கடைசி குடியிருப்பாளர் ஆவார். ஷம்ஷுவின் ஆன்லைன் கேட்டரிங் பிசினஸ் – சமையலறை ஸ்டீரியோடைப்களின் தலைகீழ் அடிப்படையிலான திறமை – பெண்களின் ‘திட்டத்தின்’ உயர்வு மற்றும் தாழ்வுகளுடன் கன்னத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. விஷயங்கள் மோசமாக இருக்கும்போது உணவில் சுவை இல்லை, ஆனால் ஒரு நல்ல நாளில் சுவையாக இருக்கும். எல்லாவற்றிற்கும் மேலாக, படத்தின் பரந்த சூழலைக் குறிப்பதற்காக சில தருணங்கள் இயற்றப்பட்ட விதம் எனக்குப் பிடித்திருக்கிறது. ஒரு கட்டத்தில், ஹம்சாவின் அலுவலகத்தில் அவர் காணவில்லை என்பதை தெரிவிக்க ஒரு காட்சி திறக்கிறது. ஆனாலும், இந்தத் தகவல் (மனிதனைப் போலவே) கடைசியாக வருகிறது – ஒரு பெண் பங்கேற்பாளரின் ஒரு கோடி கேள்வியை முதலாளி பார்ப்பதில் பிஸியாக இருக்கிறார். கவுன் பனேகா கோடிபதி, ஒரு ரயில்வே ஊழியர் ஒரு பிளாட்பாரத்தில் இரண்டு பெண்கள் சண்டையிடும் செய்தியுடன் வெடிக்கும் முன். சுருங்கச் சொன்னால், பத்ருவின் தேடலின் இரு அம்சங்கள் – மனக் கட்டுப்பாடு மற்றும் உடல் வலிமை – நேர்த்தியாக காட்சியில் எழுதப்பட்டுள்ளன. அவளது காயப்பட்ட மனம் எப்படி அவளது காயப்பட்ட உடலை மீறுகிறது என்பதை கதையின் உந்து சக்தியாக இது இணைக்கிறது. ஒரு நல்ல கறுப்பு நகைச்சுவையின் மையக்கருவாக நகைச்சுவையின் இயற்பியல் தன்மையை இருண்ட தன்மையின் உளவியல் எவ்வாறு மீறுகிறது என்பதையும் இது பேசுகிறது. தேள் தவளையை ஒரு இளவரசனாக மாற்றும் நம்பிக்கையில் முத்தமிட முயற்சித்திருக்கலாம் என்பது எப்போதும் வருத்தமாக இருக்கும் – வேடிக்கையாக இல்லை.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று பிலிப்பைன்சுக்கு ஐந்து நாட்கள் அரசுமுறைப் பயணத்தை மேற்கொள்ளவுள்ளார். இன்று மணிலா சென்றடையும் ஜனாதிபதி, எதிர்வரும் 19ஆம் திகதி வரை அங்கு தங்கியிருப்பார் என்று பிரிப்பைன்ஸ் ஜனாதிபதி பேச்சாளர் சல்வடோர் பனீலோ தெரிவித்தார். ஜனாதிபதிக்கும் பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி டுரேரேவுக்கும் இடையிலான சந்திப்பு நாளை மலாகானங் மாளிகையில் இடம்பெறும். இதன்போது, அரசியல், பொருளாதாரம், விவசாயம், கலாசாரம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாக இருதரப்பு பேச்சுக்கள் நடத்தப்படும். இந்தப் பயணத்தின் போது, ஆசிய அபிவிருத்தி வங்கிக்கும் செல்வதற்கு ஜனாதிபதி திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. லொஸ் பனோசில் உள்ள அனைத்துலக அரிசி ஆராய்ச்சி நிறுவகத்துக்கும் செல்லும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மணிலாவில் உள்ள இலங்கையர்களையும் சந்திக்கவுள்ளார். 1978ஆம் ஆண்டு தற்போதைய அரசியலமைப்பின் மூலம் நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி பதவி உருவாக்கப்பட்ட பின்னர், பிலிப்பைன்சுக்குப் பயணம் மேற்கொள்ளும் முதலாவது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே ஆவார். இதற்கு முன்னர், பிரதமராக இருந்த சிறிமாவோ பண்டாரநாயக்க மாத்திரமே, பிலிப்பைன்சுக்கு சென்ற இலங்கையின் உயர் தலைவராவார். அவர் 1976இல் பிலிப்பைன்ஸ் பயணத்தை மேற்கொண்டிருந்தார்
அதெல்லாம் சரி. 'நிலக்கடலையை உண்ணக்கூடாது... அப்படி உண்பதால் இரத்தத்தில் கெட்ட கொழுப்பின் அளவு அதிகரித்து. மாரடைப்பு போன்ற இதயநோய் வரக்கூடும்' என்கிறார்களே ? ✔️ நிலக்கடலை சாப்பிட்டால், ஏற்கெனவே இதய வியாதி இருப்பவர்களின் இறப்பு விகிதம் 24% ஆக குறைக்கப்படுகிறது. ✔️ சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்பை 21% குறைக்கிறது. இன்சுலின் வேலை செய்வதற்கான செயல்திறனை அதிகப்படுத்துகிறது. இதய நோய் சிறப்பு மருத்துவர் சர். இராமகிருஷ்ணனிடம் கேட்டபோது, "நிலக்கடலை சாப்பிடுவதால் கெட்ட கொழுப்பு அதிகரித்து, இதயநோய் வரும் என்பது தவறான கருத்து. சொல்லப்போனால், அடிக்கடி நிலக்கடலை சாப்பிடுபவர்களுக்கு இதயநோய்கள் வருவது குறைகிறது. வாரத்திற்கு ஐந்து முறை, ஒரு கைப்பிடி அளவு நிலக்கடலை எடுத்துக் கொண்டால் இதய நோய் வராமல் தடுக்கலாம். வாரத்திற்கு இரண்டு முறை கைப்பிடி அளவு நிலக்கடலை சாப்பிட்டால், ஏற்கெனவே இதய வியாதி இருப்பவர்களின் இறப்பு விகிதம் 24% ஆக குறைக்கப்படுகிறது. நிலக்கடலையில் உள்ள காப்பர் சத்து மற்றும் அதிலிருந்து எடுக்கக்கூடிய எண்ணெய் பொருட்களில் மோனோ அன் சாச்சுரேட்டட் (MUFA) மற்றும் பாலி அன் சாச்சுரேட்டட் ஃபேட்டி ஆசிட் இருக்கின்றன" இதய நோயை அண்டவிடாத தன்மையைக் கொண்டுள்ள நிலக்கடலை சற்று ஆறுதலாக இருந்தபோதும், "இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் செயல்பாட்டில் நிலக்கடலையின் பங்கு என்ன?" என்று தஞ்சையைச் சேர்ந்த சர்க்கரை நோய் நிபுணர் மருத்துவர் குருமூர்த்தியை அணுகியதில், “வேர்க்கடலையில் புரதம் மற்றும் கொழுப்புச்சத்து அதிகமாகவும், மாவுச்சத்து குறைவாகவும் இருக்கின்றன. அதனால் இதை ஏழைகளின் அசைவ உணவு என்று கூட கூறலாம். தற்போதைய உணவு ஆராய்ச்சிகள் (FDA) நிலக்கடலையில் மருத்துவக் குணங்கள் இருப்பதாக நிரூபித்திருக்கின்றன. ஒவ்வொரு உணவுப் பொருளுக்கும் அதில் இருக்கும் சர்க்கரையின் தன்மையை அளவாகக் கொண்டு, இன்டெக்ஸ் (Index) (அதாவது, G - 1 – 14 ) தீர்மானிக்கிறார்கள். அதன் அடிப்படையில் நாம் பார்த்தோமேயானால், பச்சைப்பட்டாணி, வாழைப்பழம், புழுங்கல் அரிசி, அவித்த உருளைக் கிழங்கு போன்றவற்றில் G-1 அதிகமாக இருக்கிறது. இந்த வகை உணவுகள் சர்க்கரையின் அளவை அதிகப்படுத்தும். ஆனால், வேர்க்கடலையில் G-1 குறைவாக இருப்பதால், இரத்தத்தில் சர்க்கரையின் அளவை உடனடியாக உயர்த்தாமல் சீர் செய்கிறது. அத்துடன் சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்பை 21% குறைக்கிறது. இன்சுலின் வேலை செய்வதற்கான செயல்திறனை அதிகப்படுத்துகிறது. ஏறக்குறைய GLP-1 என்ற ஹார்மோன் போன்று வேலை செய்து சர்க்கரை நோயை கட்டுப்பாட்டிற்குள் வைக்கிறது. தினமும் ஒரு கைப்பிடி அளவு (1 ½ oz அல்லது 50 to 75 grms ) வேர்க்கடலை சாப்பிட்டால் போதுமானது, சர்க்கரை நோய் வராமல் கட்டுப்பாட்டிற்குள் வைக்கலாம்” என்றார். அப்புறம் என்ன நொறுக்கு தீனி, பொரித்த உணவுகளை நீக்கி விட்டு வேர்க்கடலையை வாங்குங்க, தினமும் ஒரு கைப்பிடி வேர்க்கடலை சாப்பிடுங்கள்.
பாஸ்போர்ட்டை பெற்றுக்கொண்டு கனடாவில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.52 லட்சம் மோசடி செய்த பெண் ஏஜெண்டு கைதானார். சென்னை திருவான்மியூரைச் சேர்ந்தவர் ஜேம்ஸ் ஆரோக்கியம். இவர், சென்னை பொலிஸ் கமிஷனர் அலுவலகத்தில் அளித்த புகாரில், ”கனடாவில் குடியுரிமையுடன் வேலை வாங்கி தருவதாக கூறி லட்சக்கணக்கில் பண மோசடி நடைபெற்றுள்ளது. பாஸ்போர்ட்டுகளை பெற்றுக் கொண்டு ஏமாற்றிய அந்த கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறியிருந்தார். இதையடுத்து பொலிஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவின்பேரில் மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் சி.மகேஸ்வரி, துணை கமிஷனர் மீனா மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் எல்.கலாராணி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது. இதில், இலங்கையை சேர்ந்த கயல் லதா, ரமணி, பரமேஸ்வரன், கிருஷ்ணாயாயினி பிரதீன், பிரதீபன், சாய்சகாரியா, தீர்கவி ஆகியோர் கனடா நாட்டில் வேலை மற்றும் குடியுரிமை பெற்றுத்தருவதாக ஆசை வார்த்தை கூறி பலரிடம் ரூ.52 லட்சத்துக்கும் மேல் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இந்த வழக்கில் மயிலாடுதுறையை சேர்ந்த நடேஷ்வரி (வயது 45) என்ற பெண் முக்கிய ஏஜெண்டாக செயல்பட்டு வந்ததும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வழக்கில் அவரை பொலிசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து போலி ஆவணங்கள் மற்றும் பாஸ்போர்ட் கைப்பற்றப்பட்டன. இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள மற்றவர்களை பொலிசார் தேடி வருகிறார்கள். வேலைக்காக முயற்சி செய்பவர்கள் முன்பின் தெரியாத நபர்களிடம் பண பரிமாற்றம் செய்யக்கூடாது. அரசு அதிகாரிகளை தொடர்புகொண்டு சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ள வேண்டும் என்று சென்னை பொலிஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் அறிவுரை வழங்கி உள்ளமை குறிப்பிடத்தக்கது.
தமிழ் ஒலிபரப்பின் 45வது ஆண்டு நிறைவு விழாவிற்கு தமிழகத்திலிருந்து வருகை தந்துள்ள மதிப்புக்குரிய அனைத்திந்திய சீன வானொலி தமிழ் நேயர் மன்றத்தின் தலைமைச் செயலாளர் திரு பல்லவி கே பரமசிவன் அவர்களே, ஈரோடு நேயர் மன்றத் தலைவர் திரு பி. ஏ. நாச்சி முத்து அவர்களே மதிப்புக்குரிய பெரியோர்களே நண்பர்களே உங்கள் அனைவருக்கும் எனது முற்பகல் வணக்கங்கள். சீன வானொலி தமிழ் ஒலிபரப்பின் 45வது ஆண்டு நிறைவை முன்னிட்டு இன்று இந்திய கிச்சனில் நடைபெறுகின்ற கொண்டாட்டக் கூட்டமாகிய இந்நிகழ்வில் கலந்து கொள்ள வந்திருக்கும் அனைவருக்கும் தமிழ்ப் பிரிவுப் பணியாளர்கள் அனைவரின் சார்பில் உளமார்ந்த வரவேற்பையும் நன்றியையும் தெரிவித்து கொள்கின்றேன். மகிழ்ச்சிகரமான இத்தருணத்தில் தமிழ் ஒலிபரப்பின் 45வது ஆண்டு நிறைவை கொண்டாடுவது எங்கள் பெருமை. கடந்த 45 ஆண்டுகால தமிழ் ஒலிபரப்பு இலட்சியம் போதியளவில் வளர்ந்துள்ளது. 8 தலைமுறையினரின் கூட்டு முயற்சிகளால் இந்த இலட்சிய நோக்கு அரை மணி நேர சீன வானொலி தமிழ் ஒலிபரப்புக் கட்டுமானத்திலிருந்து வளர்ந்து இன்று ஒரு மணி நேர தமிழ் ஒலிபரப்பாகவும் செழுமையான, வாசித்து பயன்பெற வேண்டிய தமிழ் இணையத் தளமும் இணைந்த செய்தி ஊடகமாகியுள்ளது. உலக தமிழர்களின் உணர்வுகளோடு பின்னி பிணைந்து அழிக்கப்பட முடியாத சக்தியாக சீன வானொலி தமிழ் ஒலிபரப்பு வளர்ந்து நிலைத்துள்ளது. இதிலே தமிழ்ப் பிரிவின் அனைத்து பணியாளர்களின் அயாரா உழைப்பும் முயற்சியும் இந்த வளர்ச்சியில் நிறைந்துள்ளது. இப்போது இளைஞர்களும் தமிழ் ஒலிபரப்பு இலட்சியத்தின் புத்தொளியாக புது சக்திகளாக பணிபுரிகின்றார்கள். அவர்களின் பங்கினையும் பெற்று தமிழ்ப் பிரிவின் நிகழ்ச்சிகள் மேலும் கேட்கத்தக்கவையாகவும் வாசிக்க தக்கவையாகவும் நிகழ்ச்சிகளின் பல்வேறு அம்சங்கள் மென்மேலும் செழுமையானவையாகவும் வளர்ந்துள்ளன. இவ்வாறு தலைமுறை தலைமுறையான உந்து சக்திகளுடன் செஞ்சீன மண்ணிலிருந்து செவிக்கினிய செந்தமிழோசை உலகெங்கும் என்றுமே பரவியிருக்கும் என்பதில் ஐயம் ஏதுமில்லை என்று பெருமையுடன் குறிப்பிட விழைகின்றேன். கடந்த 45 ஆண்டுகால முயற்சிகளை மீளாய்வு செய்யும் போது நேயர்கள் எங்களுக்கு வழங்கிய மாபெரும் உதவியையும் ஆதரவையும் மறக்க முடியாது. அவர்களின் தூண்டுதலில் தான் தமிழ் ஒலிபரப்பு பன்முகங்களிலும் வளர்ச்சியடைந்துள்ளது. அவர்களின் விமர்சனத்துடன் தமிழ் ஒலிபரப்பு சுத்தமான தமிழ் மொழியை பயன்படுத்துவதில் ஊன்றி நின்றுள்ளது. நேயர்களின் ஆதரவுடன் சீன வானொலி நிலையம் நடத்திய அனைத்து பொது அறிவுப் போட்டிகளிலும் தமிழ்ப் பிரிவுக்கு நல்ல மதிப்பெண் வழங்கப்பட்டது. நேயர்களின் முழுமையான ஆதரவால் தான் சிறப்பு பரிசு பெற்ற நேயர் என்ற முறையில். 8 நேயர்கள் சீனாவில் பயணம் மேற்கொள்ளும் பெருமை தமிழ்ப் பிரிவுக்கு வழங்கப்பட்டது. நடந்த பொது அறிவுப் போட்டிகளில் நேயர்கள் தமிழ்ப் பிரிவுக்கும் சீன வானொலி நிலையத்திற்கும் மாபெரும் பங்காற்றி இலட்சக்கணக்கான விடைத்தாள்களை அனுப்பியுள்ளனர். இம்முயற்சி சீன வானொலி நேயர் பணியில் முக்கிய இடம் வகிக்கின்றது. ஆகவே 2007ம் ஆண்டில் அனைத்திந்திய சீன வானொலி தமிழ் நேயர் மன்றத் தலைவர் திரு எஸ். செல்வம் அவர்கள் சீன வானொலியின் அனைத்து பிரிவுகளிலும் தலைசிறந்த நேயராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இது நேயர்களுக்கு மட்டுமல்ல தமிழ்ப் பிரிவுக்கும் பெரிதும் ஊக்கமளித்துள்ளது. நேயர்களின் தொடர்ச்சியான ஆதரவுடன் சீன வானொலி தமிழ் ஒலிபரப்பு இலட்சியம் தொடர்ந்து சீன வானொலி நிலையத்தின் முக்கிய பகுதியாக வளர்வது திண்ணம்.
ஜகார்த்தா - தொண்டை புண் எப்போதுமே அசௌகரியத்தை ஏற்படுத்துகிறது, இது உங்களுக்கு பேசுவதையும் விழுங்குவதையும் கடினமாக்குகிறது. தொண்டை வலி, அதிகமாக கத்துவது, அலர்ஜி, காரமான உணவு, நோயின் அறிகுறிகள் என பல காரணங்கள் உள்ளன. கூடுதலாக, தொண்டைப் பாதையைத் தாக்கும் பாக்டீரியா மற்றும் வைரஸ்களாலும் தொண்டை புண் ஏற்படலாம். இதன் விளைவாக, நீங்கள் உலர்ந்த இருமலைப் பெறலாம், இது உங்கள் தொண்டையை மிகவும் புண்படுத்தும். பொதுவாக, குழந்தைகள் அடிக்கடி தொண்டை புண் பிரச்சனைகளால் பாதிக்கப்படுகின்றனர். காரணம், குழந்தைகளின் நோயெதிர்ப்பு அமைப்பு இன்னும் குறைவாக இருப்பதால், அவர்கள் கிருமிகள் மற்றும் பாக்டீரியா தொற்றுகளுக்கு ஆளாகிறார்கள் மற்றும் அவர்களின் சகாக்களிடமிருந்து நோய்த்தொற்றுக்கு ஆளாகிறார்கள். இருப்பினும், பெரியவர்கள் தொண்டை புண்களுக்கு ஆளாக மாட்டார்கள் என்று அர்த்தமல்ல. ஒரு பாக்டீரியா தொற்று காரணமாக தொண்டை புண் தொற்றக்கூடியது, எனவே ஒவ்வொரு அறிகுறியையும் அறிந்து கொள்வது அவசியம், இதனால் சரியான சிகிச்சையை மேற்கொள்ள முடியும். தொண்டை புண் அறிகுறிகள் தொண்டை புண் அறிகுறிகள் என்ன? பொதுவாக, தொண்டையில் அரிப்பு ஏற்படும் போது தொண்டை புண் தோன்றும் மற்றும் உணவை விழுங்கும்போது வலியும் இருக்கும். இந்த ஆரம்ப அறிகுறிகளுக்கு நீங்கள் உடனடியாக சிகிச்சை அளிக்கவில்லை என்றால், அது பின்னர் ஆரோக்கியத்தில் மிகவும் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். தொண்டைப் புண்கள் பொதுவாகப் பெருகும் நுண்ணுயிரிகளால் ஏற்படுகின்றன, மேலும் காய்ச்சல், மூக்கு ஒழுகுதல், காய்ச்சல் மற்றும் இருமல் போன்ற நோயின் பிற அறிகுறிகளால் ஏற்படுகின்றன. நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சில தொண்டை அறிகுறிகள் இங்கே உள்ளன, அதாவது: வீங்கிய நிணநீர் கணுக்கள் உடல் பலவீனமாகவும் மந்தமாகவும் உணர்கிறது, சில நேரங்களில் காய்ச்சல் மற்றும் தலைவலி தோன்றும் வாயின் கூரையில் சிறிய சிவப்பு புள்ளிகள் உள்ளன. தொண்டை வலியை வெல்வது தொண்டை புண் என்பது அடிக்கடி "மீண்டும்" ஏற்படும் வலியாக இருக்கலாம், ஏனெனில் இது அடிப்படையில் பாக்டீரியா மற்றும் கிருமிகளால் ஏற்படுகிறது. சமூகத்தில் நன்கு அறியப்பட்ட ஒரு எளிய சிகிச்சையானது உப்பு நீரில் வாய் கொப்பளிப்பதன் மூலம் அதைக் கையாள்வது. மிகவும் நடைமுறை வழி என்றாலும், லோசன்ஜ்களை உட்கொள்வது போதுமானதாக கருதப்படுகிறது. இருப்பினும், இந்த முறைகள் மிகவும் "பிரபலமானவை" என்றாலும், உண்மையில் இந்த முறை குறித்து எந்த ஆராய்ச்சியும் இல்லை, உங்களுக்குத் தெரியும். பின்னர் தொண்டை வலியை எப்படி சமாளிப்பது? செயலில் உள்ள பொருட்களைக் கொண்ட Betadine Mouthwash உடன் நீங்கள் வாய் கொப்பளிக்கலாம் போவிடோன் அயோடின் 1 சதவிகிதம் ஒரு கிருமி நாசினியாக இருக்க முடியும், அதனால் தொண்டை புண் ஏற்படுத்தும் கிருமிகள் மற்றும் பாக்டீரியாக்களை அகற்றுவதில் இது பயனுள்ளதாக இருக்கும். இது அறிவியல் ரீதியாகவும் நிரூபிக்கப்பட்டுள்ளது, உங்களுக்குத் தெரியும். எனவே, உங்கள் தொண்டை புண் பிரச்சனை விரைவில் தீர்க்கப்படும் என்று நீங்கள் உறுதியாக நம்பலாம். பீட்டாடின் மவுத்வாஷ் மூலம் தொண்டை வலியை போக்க நீங்கள் போதும் வாய் கொப்பளிக்கவும் 30 வினாடிகளுக்கு. அடிக்கடி மீண்டும் வரும் தொண்டை வலிக்கு சிகிச்சை அளிக்க இந்த செயலை ஒரு நாளைக்கு குறைந்தது 3-5 முறை செய்யவும். நீங்கள் Betadine Mouthwash இல் வாங்கலாம் . உத்தியோகபூர்வ ஸ்டோர் சேமிப்பில் ஷாப்பிங் செய்யும்போது சிறப்புத் தள்ளுபடி உண்டு. வீட்டை விட்டு வெளியேறாமலே, உங்கள் Betadine மவுத்வாஷ் ஆர்டர் ஒரு மணி நேரத்தில் நீங்கள் சேருமிடத்திற்கு டெலிவரி செய்யப்படும். தொண்டை புண் வராமல் தடுக்கும் தொண்டை புண் எப்போதும் மீண்டும் வராமல் இருக்க, நீங்கள் தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். வறுத்த உணவுகள், காரமான உணவுகள் மற்றும் சுத்தமாக இருக்கும் என்று உத்தரவாதமில்லாத உணவுகள் போன்ற தொண்டை வலியை உண்டாக்கும் உணவுகளை சாப்பிடுவதைத் தவிர்க்கவும். கிருமிகள் மற்றும் பாக்டீரியாக்கள் எல்லா இடங்களிலும் உள்ளன. எனவே, உங்கள் உணவைப் பராமரிக்க முடியாவிட்டால், அது நிச்சயமாக ஆரோக்கியத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். எப்போதும் தயார் பயன்பாடு நீங்கள் எங்கிருந்தாலும், தொண்டை புண் பிரச்சனை உங்களைத் தொந்தரவு செய்யும் போது, ​​நீங்கள் உடனடியாக மருத்துவரை அணுகலாம். நீங்கள் மூலம் மருத்துவரிடம் பேசலாம் வீடியோ/வாய்ஸ் கால் மற்றும் அரட்டை. நீங்களும் செய்யலாம் ஆய்வக சோதனை மற்றும் மருத்துவரின் பரிந்துரைகளின்படி தேவைப்பட்டால் ஆய்வக சோதனைகள் செய்யவும். வா, பதிவிறக்க Tamil விண்ணப்பம் இப்போது App Store மற்றும் Google Play இல்.
அதன்படி, கிளிநொச்சி-அக்கராயன் வைத்தியசாலையில் வைத்தியர் ஒருவர் மேஜையின் மீது கால்களை வைத்தபடி கடமையாற்றும் புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டுள்ளது. குறித்த புகைப்படத்தை பகிர்ந்து வைத்தியரின் இச்செயற்பாடு தொடர்பாக பலரும் பலவாறு தமது கருத்துக்களையும் கண்டனங்களையும் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் குறித்த புகைப்படத்தின் உண்மை நிலை குறித்து விளக்கம் அளித்துள்ளார். - Advertisement - குறித்த புகைப்படத்தில் இருக்கும் வைத்தியர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு கால்களை அகற்ற வேண்டிய நிலையில் உள்ளார். அதற்காக தற்போது மாற்று வைத்தியம் மேற்கொண்டுள்ளார். கால்களை கீழே நிலத்தில் வைக்க முடியாத நிலையில் அவர் இருப்பதால் தமது அனுமதியின் கீழ் அவர் கால்களை மேஜையில் வைத்துள்ளார் அதுமட்டுமன்றி, குறித்த வைத்தியசாலையில் இரண்டு வைத்தியர்கள் மாத்திரமே கடமையில் இருக்கின்றனர். இந்நிலையில், ஓய்வு பெற்றுச் செல்லவிருக்கும் குறித்த வைத்தியர் நோயாளர்களின் நிலையை கருத்தில் கொண்டு தொடர்ந்தும் கடமையாற்றுகிறார் என கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். மேலும், வைத்தியசாலையின் அனுமதியின்றி இவ்வாறான புகைப்படத்தை எடுத்தமை தொடர்பிலும் அவர் கவலை வெளியிட்டுள்ளார்.
1 ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் பூமியெங்கும் குடியிருக்கிற சகல ஜனத்தாருக்கும் ஜாதியாருக்கும் பாஷைக்காரருக்கும் எழுதுகிறது என்னவென்றால்: உங்களுக்குச் சமாதானம் பெருகக்கடவது. 2 உன்னதமான தேவன் என்னிடத்தில் செய்த அடையாளங்களையும் அற்புதங்களையும் பிரசித்தப்படுத்துவது எனக்கு நன்மையாய்க் கண்டது. 3 அவருடைய அடையாளங்கள் எவ்வளவு மகத்துவமும், அவருடைய அற்புதங்கள் எவ்வளவு வல்லமையுமாயிருக்கிறது; அவருடைய ராஜ்யம் நித்திய ராஜ்யம்; அவருடைய ஆளுகை தலைமுறை தலைமுறையாக நிற்கும். 4 நேபுகாத்நேச்சாராகிய நான் என்வீட்டிலே சவுக்கியமுள்ளவனாயிருந்து என் அரமனையிலே வாழ்ந்துகொண்டிருந்தேன். 5 நான் ஒரு சொப்பனத்தைக் கண்டேன்; அது எனக்குத் திகிலை உண்டாக்கிற்று; என் படுக்கையின்மேல் எனக்குள் உண்டான நினைவுகளும், என் தலையில் தோன்றின தரிசனங்களும் என்னைக் கலங்கப்பண்ணிற்று. 6 ஆகையால் சொப்பனத்தின் அர்த்தத்தை எனக்குத் தெரிவிக்கிறதற்காகப் பாபிலோனின் ஞானிகளையெல்லாம் என்னிடத்தில் கொண்டுவரும்படி கட்டளையிட்டேன். 7 அப்பொழுது சாஸ்திரிகளும், ஜோசியரும், கல்தேயரும், குறிசொல்லுகிறவர்களும் என்னிடத்திலே வந்தார்கள்; சொப்பனத்தை நான் அவர்களுக்குச் சொன்னாலும் அதின் அர்த்தத்தை எனக்குத் தெரிவிக்கமாட்டாமற்போனார்கள். 8 கடைசியிலே என் தேவனுடைய நாமத்தின்படியே பெல்தெஷாத்சார் என்னும் பெயரிடப்பட்டு பரிசுத்த தேவர்களின் ஆவியையுடைய தானியேல் என்னிடத்தில் கொண்டுவரப்பட்டான்; அவனிடத்தில் நான் சொப்பனத்தை விவரித்துச் சொன்னதாவது: 9 சாஸ்திரிகளின் அதிபதியாகிய பெல்தெஷாத்சாரே, பரிசுத்த தேவர்களுடைய ஆவி உனக்குள் இருக்கிறதென்றும், எந்த மறைபொருளையும் அறிவது உனக்கு அரிதல்லவென்றும் நான் அறிவேன்; நான் கண்ட என் சொப்பனத்தின் தரிசனங்களையும் அதின் அர்த்தத்தையும் சொல்லு. 10 நான் படுத்திருந்தபோது என் தலையில் தோன்றின தரிசனங்கள் என்னவென்றால் இதோ, தேசத்தின் மத்தியிலே மிகவும் உயரமான ஒரு விருட்சத்தைக் கண்டேன். 11 அந்த விருட்சம் வளர்ந்து பலத்து, தேசத்தின் எல்லை பரியந்தமும் காணப்படத்தக்கதாக அதின் உயரம் வானபரியந்தம் எட்டினது. 12 அதின் இலைகள் நேர்த்தியும், அதின் கனி மிகுதியுமாயிருந்தது; எல்லா ஜீவனுக்கும் அதில் ஆகாரம் உண்டாயிருந்தது; அதின்கீழே வெளியின் மிருகங்கள் நிழலுக்கு ஒதுங்கினது; அதின் கொப்புகளில் ஆகாயத்துப் பட்சிகள் தாபரித்துச் சகல பிராணிகளும் அதினால் போஷிக்கப்பட்டது. 13 நான் படுத்திருக்கையில் என் தலையில் தோன்றின தரிசனங்களைக் காணும்போது, காவலாளனாகிய பரிசுத்தவான் ஒருவன் வானத்திலிருந்து இறங்கக்கண்டேன். 14 அவன் உரத்த சத்தமிட்டு; இந்தவிருட்சத்தை வெட்டி, இதின் கொப்புகளைத் தறித்துப்போடுங்கள்; இதின் இலைகளை உதிர்த்து, இதின் கனிகளைச் சிதறடியுங்கள்; இதின் கீழுள்ள மிருகங்களும் இதின் கொப்புகளிலுள்ள பட்சிகளும் போய்விடட்டும். 15 ஆனாலும் இதின் வேர்களாகிய அடிமரம் பூமியில் இருக்கட்டும்; இரும்பும் வெண்கலமுமான விலங்கு இடப்பட்டு, வெளியின் பசும்புல்லிலே தங்கி, ஆகாயத்துப் பனியிலே நனைவதாக; மிருகங்களோடே பூமியின் பூண்டிலே அவனுக்குப் பங்கு இருக்கக்கடவது. 16 அவனுடைய இருதயம் மனுஷ இருதயமாயிராமல் மாறும்படி, மிருக இருதயம் அவனுக்குக் கொடுக்கப்படக்கடவது; இப்படியிருக்கிற அவன்மேல் ஏழு காலங்கள் கடந்துபோகவேண்டும். 17 உன்னதமானவர் மனுஷருடைய ராஜ்யத்தில் ஆளுகைசெய்து தமக்குச் சித்தமானவனுக்கு அதைக் கொடுத்து, மனுஷரில் தாழ்ந்தவனையும் அதின்மேல் அதிகாரியாக்குகிறார் என்று நரஜீவன்கள் அறியும்படிக்குக் காவலாளரின் தீர்ப்பினால் இந்தக் காரியமும் பரிசுத்தவான்களின் மொழியினால் இந்த விசாரணையும் தீர்மானிக்கப்பட்டது என்றான். 18 நேபுகாத்நேச்சார் என்னும் ராஜாவாகிய நான் கண்ட சொப்பனம் இதுவே: இப்போது பெல்தெஷாத்சாரே, நீ இதின் அர்த்தத்தைச் சொல்லு; என் ராஜ்யத்திலுள்ள ஞானிகள் எல்லாராலும் இதின் அர்த்தத்தை எனக்குத் தெரிவிக்கக் கூடாமற்போயிற்று; நீயோ இதைத் தெரிவிக்கத்தக்கவன்; பரிசுத்த தேவர்களுடைய ஆவி உனக்குள் இருக்கிறதே என்றான். 19 அப்பொழுது பெல்தெஷாத்சாரென்னும் பெயருள்ள தானியேல் ஒரு நாழிகைமட்டும் திகைத்துச் சிந்தித்துக் கலங்கினான். ராஜா அவனை நோக்கி: பெல்தெஷாத்சாரே, சொப்பனமும் அதின் அர்த்தமும் உன்னைக் கலங்கப்பண்ணவேண்டியதில்லை என்றான்; அப்பொழுது பெல்தெஷாத்சார் பிரதியுத்தரமாக: என் ஆண்டவர் அந்தச் சொப்பனம் உம்முடைய பகைவரிடத்திலும். அதின் அர்த்தம் உம்முடைய சத்துருக்களிடத்திலும் பலிக்கக்கடவது. 20 நீர் கண்ட விருட்சம் வளர்ந்து பலத்து, வானத்தின் எல்லைபரியந்தம் காணப்படத்தக்கதாக அதின் உயரம் வானபரியந்தம் எட்டினது. 21 அதின் இலைகள் நேர்த்தியும், அதின்கனி மிகுதியுமாயிருந்தது; எல்லா ஜீவனுக்கும் அதில் ஆகாரம் உண்டாயிருந்தது; அதின்கீழே வெளியின் மிருகங்கள் தங்கினது அதின் கொப்புகளில் ஆகாயத்துப்பட்சிகள் தாபரித்தது. 22 அது பெரியவரும் பலத்தவருமாயிருக்கிற ராஜாவாகிய நீர்தான்; உமது மகத்துவம் பெருகி வானபரியந்தமும், உமது கர்த்தத்துவம் பூமியின் எல்லைபரியந்தமும் எட்டியிருக்கிறது. 23 இந்த விருட்சத்தை வெட்டி, இதை அழித்துப்போடுங்கள்; ஆனாலும் இதின் வேர்களாகிய அடிமரம் தரையில் இருக்கட்டுமென்றும், இரும்பும் வெண்கலமுமான விலங்கு இடப்பட்டு, வெளியின் பசும்புல்லிலே தங்கி, ஆகாயத்துப் பனியிலே நனைவதாக; ஏழு காலங்கள் அவன்மேல் கடந்துபோகுமட்டும் மிருகங்களோடே அவனுடைய பங்கு இருΕ்கக்கடவதென்றும் வானத்திலிருந்து Ǡαங்கிச் சொன்ன பரிڠρத்த காவலாளனை ராஜாவாகிய நீர் கண்டீரே. 24 ராஜாவே, அதின் அர்த்தமும் ராஜாவாகிய என் ஆண்டவன்பேரில் வந்த உன்னதமானவருடைய தீர்மானமும் என்னவென்றால்: மனுஷரினின்று நீர் தள்ளிவிடப்படுவீர்; வெளியின் மிருகங்களோடே சஞ்சரிப்பீர்; மாடுகளைப்போலப் புல்லைமேய்ந்து, ஆகாயத்துப் பனியிலே நனைவீர். 25 உன்னதமானவர் மனுஷருடைய ராஜ்யத்தில் ஆளுகைசெய்து தமக்குச் சித்தமாயிருக்கிறவனுக்கு அதைக்கொடுக்கிறார் என்பதை நீர் அறிந்துகொள்ளுமட்டும் ஏழு காலங்கள் உம்முடையபேரில் கடந்துபோகவேண்டும். 26 ஆனாலும் விருட்சத்தின் வேர்களாகிய அடிமரம் தரையில் இருக்கட்டும் என்று சொல்லப்பட்டது என்னவென்றால்: நீர் பரம அதிகாரத்தை அறிந்தபின் ராஜ்யம் உமக்கு நிலைநிற்கும். 27 ஆகையால் ராஜாவே, நான் சொல்லும் ஆலோசனையை நீர் அங்கீகரித்துக்கொண்டு நீதியைச் செய்து உமது பாவங்களையும், சிறுமையானவர்களுக்கு இரங்கி உமது அக்கிரமங்களையும் அகற்றிவிடும்; அப்பொழுது உம்முடைய வாழ்வு நீடித்திருக்கலாம் என்றான், 28 இதெல்லாம் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரின்மேல் வந்தது. 29 பன்னிரண்டு மாதம் சென்றபின்பு, ராஜா பாபிலோன் ராஜ்யத்தின் அரமனைமேல் உலாவிக்கொண்டிருக்கும்போது: 30 இது என் வல்லமையின் பராக்கிரமத்தினால், என் மகிமைப்பிரதாபத்துக்கென்று ராஜ்யத்துக்கு அரமனையாக நான் கட்டின மகா பாபிலோன் அல்லவா என்று சொன்னான். 31 இந்த வார்த்ததை ராஜாவின் வாயில் இருக்கும்போதே வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகி: ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரே, ராஜ்யபாரம் உன்னைவிட்டு நீங்கிற்று. 32 மனுஷரினின்று தள்ளப்படுவாய்; வெளியின் மிருகங்களோடே சஞ்சரிப்பாய்; மாடுகளைப்போல் புல்லை மேய்வாய்; இப்படியே உன்னதமாவர் மனுஷருடைய ராஜ்யத்தில் ஆளுகைசெய்து தமக்குச் சித்தமாயிருக்கிறவனுக்கு அதைக் கொடுக்கிறாரென்பதை நீ அறிந்துகொள்ளுமட்டும் ஏழு காலங்கள் உன்மேல் கடந்துபோகும் என்று உனக்குச் சொல்லப்படுகிறது எனύறு விளம்பினது. 33 அந்நேரமே இந்த வார்த்தை நேபுகாத்நேச்சாரிடத்தில் நிறைவேறிற்று; அவன் மனுஷரினின்று தள்ளப்பட்டு, மாடுகளைப்போல் புல்லை மேய்ந்தான்; அவனுடைய தலைமயிர் கழுகுகளுடைய இறகுகளைப்போலவும் அவனுடைய நகங்கள் பட்சிகளுடைய நகங்களைப்போலவும் வளருமட்டும் அவன் சரீரம் ஆகாயத்துப் பனியிலே நனைந்தது. 34 அந்த நாட்கள் சென்றபின்பு நேபுகாத்நேச்சாராகிய நான் என் கண்களை வானத்துக்கு ஏறெடுத்தேன்; என் புத்தி எனக்குத் திரும்பி வந்தது; அப்பொழுது நான் உன்னதமானவரை ஸ்தோத்திரித்து, என்றென்றைக்கும் ஜீவித்திருக்கிறவரைப் புகழ்ந்து மகிமைப்படுத்தினேன்; அவருடைய கர்த்தத்துவமே நித்திய கர்த்தத்துவம், அவருடைய ராஜ்யமே தலைமுறை தலைமுறையாக நிற்கும். 35 பூமியின் குடிகள் எல்லாம் ஒன்றுமில்லையென்று எண்ணப்படுகிறார்கள்; அவர் தமது சித்தத்தின்படியே வானத்தின் சேனையையும் பூமியின் குடிகளையும் நடத்துகிறார், அவருடைய கையைத் தடுத்து அவரை நோக்கி: என்ன செய்கிறீரென்று சொல்லத்தக்கவன் ஒருவனும் இல்லை என்றேன். 36 அவ்வேளையில் என் புத்தி எனக்குத் திரும்பிவந்தது; என் ராஜ்யபாரத்தின் மேன்மைக்காக என் மகிமையும் என் முகக்களையும் எனக்குத் திரும்பிவந்தது, என் மந்திரிமாரும் என் பிரபுக்களும் என்னைத் தேடிவந்தார்கள்; என் ராஜ்யத்திலே ஸ்திரப்படுத்தப்பட்டேன்; அதிக கர்த்தத்துவமும் எனக்குக் கிடைத்தது. 37 ஆகையால் நேபுகாத்நேச்சாராகிய நான் பரலோகத்தின் ராஜாவைப் புகழ்ந்து, உயர்த்தி மகிமைப்படுத்துகிறேன்; அவருடைய கிரியைகளெல்லாம் சத்தியமும், அவருடைய வழிகள் நியாயமுமானவைகள் அகந்தையாய் நடக்கிறவர்களைத் தாழ்த்த அவராலே ஆகும் என்று எழுதினான்.
“கூலிப்படை செய்து கொலை செய்த வழக்கு விசாரணைகளை விரைந்து முடித்து கூலிப்படைக்கே முற்றுப் புள்ளி வையுங்கள். கூலிப்படைகளைத் தொழிலாக வைத்திருப்பவர்கள் முற்றாகத் துடைத்தெறியப்பட வேண்டும்” என முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தமிழக சட்டப் பேரவையில் மானியக் கோரிக்கை விவாதம் முடிவடைந்த நிலையில் இன்று முதல்வர் மு.க. ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது காவல்துறையினருக்கு சில அறிவுரைகளையும், எச்சரிக்கைகளையும் விடுத்திருக்கிறார். இது குறித்து அவர் பேசுகையில்,“சட்டம் ஒழுங்கு சரியாக இருக்கும் மாநிலத்தில்தான் வளர்ச்சி என்பது இருக்கும். இந்த ஆட்சியில் வன்முறைகள், சாதிச் சண்டைகள், மத மோதல்கள், துப்பாக்கி சூடு, அராஜகம் என எதுவும் இல்லை. இதுதான் இந்த ஆட்சியினுடைய சாதனை. இந்த அமைதியை உருவாக்கிக் கொடுத்தது தமிழகக் காவல்துறையின் சாதனை. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியாக இருக்கும் காரணத்தால்தான் வெளிநாடுகளுக்குச் சென்ற தொழிற்சாலைகள் மீண்டும் தமிழகம் வந்துகொண்டிருக்கின்றன. புதிய முதலீடுகள் முன் எப்போதும் இல்லாத அளவிற்குத் தமிழ்நாட்டில் வந்து கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டினுடைய ஒரு கை நிர்வாகம் என்றால், இன்னொரு கை காவல்துறை. இரண்டும் சரியாகச் செயல்பட்டால் அந்த அரசு தலைசிறந்த அரசாக விளங்கும். போதை மருந்து காவல்துறை என்றாலே குற்றங்களைத் தடுக்கும் துறையாக, தண்டனை வாங்கித் தரும் துறையாக இருக்கின்றது என அனைவரும் நினைக்கிறார்கள். காவல்துறை என்பது குற்றங்களே நடைபெறாத சூழலை மாற்றித் தரவேண்டும் என்பதுதான் இந்த அரசினுடைய கொள்கை. கொலை, திருட்டு, பாலியல் தொந்தரவு, போதை மருந்துகள், வன்முறைச் சம்பவங்கள் ஆகியவைதான் மிகப் பெரிய குற்றங்கள். இதை எந்த சூழலிலும் நடைபெறாத அளவிற்கு காவல்துறை திட்டமிட்டு பணியாற்ற வேண்டும். அரசியல் ரீதியாகவோ, மதம் மற்றும் சாதிக் காரணமாகவோ வன்முறைகள் நிகழாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். திட்டமிட்டு அரசிற்கு நெருக்கடி ஏற்படுத்தும் வகையில் மோதல்கள் உருவாக்க நினைப்பவர்களை இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும். ஆளும் கட்சி, எதிர்கட்சி என பாராமல் சட்டத்தின் ஆட்சி நிலைநிறுத்தப்பட வேண்டும். யாரிடம் இருந்து அழுத்தம் வந்தாலும் நீங்கள் சட்டத்தின் பக்கமே நின்று நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறு செய்யும் அதிகாரிகளுக்கு இந்த அரசில் இடமில்லை. கூலிப்படை போதைப் பொருட்களுக்கு மாணவச் செல்வங்கள் அடிமையாவது மிகவும் வேதனையளிக்கிறது. எனவே குட்கா விற்பனையைத் தடுத்து நிறுத்துங்கள். போதையிலிருந்து இளைய சமுதாயத்தைக் காப்பது நமது முக்கியமான கடமை. எவ்வித போதைப் பொருள்கள் நடமாட்டமும் தமிழகத்தில் இருக்கக் கூடாது. கூலிப்படை செய்து கொலை செய்த வழக்கு விசாரணைகளை விரைந்து முடித்து கூலிப்படைக்கே முற்றுப் புள்ளி வையுங்கள். கூலிப்படைகளை தொழிலாக வைத்திருப்பவர்கள் முற்றாக துடைத்தெறியப்பட வேண்டும். மதம், சாதி, வன்முறையைத் தூண்டும் பேச்சுக்கள் தடுக்கப்பட வேண்டும். வன்முறைப் பேச்சுக்கள் இணையத்தில் உலவவிடும் நபர்களைத் தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும். காவல்துறையை மேம்படுத்த வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அதனால்தான் காவல்துறை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது” என்றார்.
படுக்கையில் இருந்தே எழ முடியவில்லை.. கவலைக்கிடமான சமந்தாவின் நிலை.. வெளிநாட்டில் சிகிச்சை பெற முடிவா?..! பிரபல நடிகை லட்சுமி திடீர் மரணம்.! தீயாய் பரவிய வதந்தி.! முற்றுப்புள்ளி வைத்து விளக்கமளித்த பிரபலம்!! வேற லெவல்.. மாஸ் லுக்.! உறுதியான சூப்பரான தகவல்! கொண்டாடாத்தை தொடங்கிய தளபதி ரசிகர்கள்!! என் ஓட்டு ரட்சிதாவிற்கே.! ஆதரவாக நிற்கும் பிரபலம்.! ஒருவேளை அது நடந்திருமோ?? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!! பாகுபலி புகழ் பிரபாஸுடன் நடிகை கீர்த்தி திருமணம்?.. ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த நடிகை.. உண்மை தகவல் இதுதான்..! #IndVsNz: அடுத்தடுத்து சரிந்த விக்கெட்டுகள்.. 47.3 ஓவரில் 219 ரன்கள் எடுத்து இந்தியா ஆல்அவுட்.. களமிறங்கும் நியூசிலாந்து.! கெத்துக்காக வீடியோ பதிவிட்டு, வனத்துறையிடம் சிக்கிய பிரபல நடிகை.. இதுதான் காரணமாம்..! திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணி, புதுகாமூர் 25 வயதுடைய இளம்பெண் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் முடிந்து கணவர் இருக்கும் நிலையில், அவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு தாய் வீட்டில் தற்போது வசித்து வருகிறார். இதனையடுத்து, மகளின் எதிர்காலம் குறித்து கவலைப்பட்ட பெற்றோர், மகளின் மனதை சமாதானம் செய்து வேறொரு மாப்பிள்ளை பார்த்து வந்துள்ளனர். இவர்களுக்கு ஆரணியை அடுத்துள்ள எஸ்.வி நகரம் கிராமத்தில் இருக்கும் திருமண மண்டபத்தில் திருமணம் செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், நேற்று காலை நேரத்தில் கடைக்கு சென்று வருகிறேன் என்று கூறி சென்ற பெண்மணி மீண்டும் வீட்டிற்கு வரவில்லை. இதனால் மகளை பல இடங்களில் தேடியும் காணாததால், பெண்ணின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து விசாரணை நடந்து வருகிறது. மேலும், மணமகன் பிடிக்காததால் பெண்மணி வீட்டை விட்டு வெளியேறினாரா? அல்லது வேறு இளைஞருடன் காதல் இருந்ததா? என விசாரணை நடந்து வருகிறது. Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here Tags: #Tiruvannamalai #Arani #tamilnadu #girl #police Copy Link தற்போதைய செய்திகள் ரூ.2 கோடி இன்சூரன்ஸ் பணத்திற்காக இப்படியா.! பக்கவாக ப்ளான் போட்டு கணவர் செய்த காரியம்.! அம்பலமான நாடகம்!! மீண்டும் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்திய துயரச் சம்பவம்... தவறான சிகிச்சையால் காலினை இழந்து தவிக்கும் இளைஞர்... சொத்தை பல் வலி குறைக்க அலுமினியம் பாஸ்பேட் வைத்த பெண் மயங்கி விழுந்து மரணம்.. அலட்சியம் வேண்டாம் மக்களே.! தமிழ் சங்கத்திற்கு தமிழ் நாட்டிலேயே எதிர்ப்பு!.. ரயில் மறியலில் ஈடுபட்ட SFI அமைப்பினர் அதிரடி கைது..!
தான் பெற்ற மெய் உணர்வுகளை மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் பல பேரிடம் எடுத்துரைத்தார். ஆனால் அவர்கள் எல்லாம் என்ன செய்து விட்டார்கள்? எனக்குக் காசைக் கொடுத்தால் கோவிலைக் கட்டி நான் எத்தனையோ செய்துவிடுவேன் என்று சொல்கிறார்கள். குருநாதர் பல சக்திகளைக் காட்டினார்.., நோய்களைப் போக்கும் பல மூலிகைகளைக் காட்டினார் என்றால் அதை வைத்துச் சொத்தைச் சம்பாரிக்க வேண்டும் என்ற நிலைக்குத்தான் வந்தார்களே தவிர அழியாத சொத்தை அந்த அருள் ஞானப் பொக்கிஷத்தை வாங்க யாரும் வரவில்லை. சிலருக்குப் பாதரசத்தைச் (இரசமணி) செய்து கொடுத்தார். அதில் என்னவெல்லாம் தெரிகிறது பார்..,! என்று காண்பிப்பார். மேலும் அதில் என்னென்ன தெய்வங்கள் எல்லாம் தெரிகின்றது என்றும் காண்பிப்பார். பாதரசத்தால் கவர்ந்து கொண்ட உணர்வுகள் எந்தெந்த உணர்வுகளைச் சேர்த்துக் கொள்கின்றதோ.., அந்த உணர்வின் “ரூபங்கள்” வரும். எல்லாம் சேர்த்துச் சூரியனிலிருந்து வரக்கூடிய அந்தப் பாதரசமே எதைக் கவர்ந்து கொண்டதோ அதன் வழிகளில் எப்படி இயங்குகின்றது? என்பதனை எமக்குத் தெளிவாக்குகின்றார். ஏனென்றால், இன்று நாம் வெயில் என்று பார்க்கின்றோமே இது சூரியனிலிருந்து வெளி வரும் பாதரசம் தான். சுக்குநூறாகத் தெறித்து ஒளி அலைகளாகத் தெரிகின்றது. இதைச் சூரியனின் வெப்ப காந்த அலைகள் என்பார்கள். குருநாதர் செய்து கொடுத்த (இரசமணி) பாதரசத்தில் இந்தச் சாமி தெரிகின்றது அந்தச் சாமி தெரிகின்றது என்று சொல்வார்கள். “காளிதேவி தெரிகின்றது.., மாரியம்மன் தெரிகின்றது..,” இப்படி இவர்கள் எண்ணம் எதுவோ அங்கே அதைப் பிரதிபலிக்கும். 1.பாதரசத்தால் நுகர்ந்து கொண்ட உணர்வுகள் எதுவோ 2.அந்த உணர்வின் இயக்கமாக நமக்குள் “தெய்வமாக” எப்படி இருக்கின்றது? 3.ஆகவே, நம் உயிரை எப்படி மணியாக்க வேண்டும்? உயிர் ஒளியைப் போன்று ஆனது. இருளை நீக்கி எல்லாம் ஒன்றாகச் சேர்த்துப் பிறவியில்லா நிலை அடையும் மார்க்கத்தைத்தான் குருநாதர் அந்தப் பாதரசத்தை வைத்து இரசமணியாகக் காட்டினார். குருநாதர் பைத்தியக்காரர் போல் இருக்கும் பொழுது அவருடன் பழகியவர்கள் எல்லாம் தங்கம் செய்யும் நிலைகளைப் பாதரசத்தை வைத்துச் சொல்லிக் கொடுத்தால் அதை வைத்துக் கொண்டு இதைப் பாருங்கள் அதைப் பாருங்கள் என்றெல்லாம் உடல் ஆசை கொண்டு (இன்றும்) சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள். ஏனென்றால் இரசமணியில் பல சத்துக்களைச் சேர்த்துச் சேர்த்து தங்கத்தைச் செய்துவிட்டால் சிரமமில்லாமல் வாழலாம் அல்லவா. இப்படிப்பட்ட ஆசைகள் வந்துவிடுகின்றது. நம் வாழ்க்கையில் ஒருவர் ஒன்று சொல்லிவிட்டால் அதைக் கேட்டவுடன் நம் மனது மங்கிவிடுகின்றது. அந்த மனதை மங்காமல் இருக்கச் செய்ய என்ன செய்ய வேண்டும்? அதற்காக வேண்டித்தான்.., குருநாதர் “மனதைத் தங்கமாக்கும்..,” நிலைகளைச் சொன்னார். எனக்குக் குருநாதர் கொடுத்தது 1.உணர்வை எல்லாம் ஒளியாக்கி 2.ஒளியின் தன்மையாக 3.இந்த இரசமணியாக்க வேண்டும் 4.உணர்வுகள் அனைத்தையும் உயிருடன் ஒன்றச் செய்து உங்கள் உயிரை ஒளியாக ஆக்குவது தான் இரசமணி. அதே சமயத்தில் அழுக்குச் சேராமல் இருப்பது தங்கம். தங்கத்தைப் போல் உன் மனதை எப்படிப் பெறவேண்டும் என்று காட்டுக்குள்ளும் மேட்டுக்குள்ளும் அழைத்துச் சென்று ஆசைகளை ஊட்டிப் பல நிலைகளையும் பேருண்மைகளையும் உணர்த்தினார்.
புத்தர் சிலை தகர்ப்பு தொடர்பில் அதன் பின்னணிக் காரணங்களையும் இணைத்து நான் எழுதியமை தொடர்பில் முஸ்லிம்கள் பலர் என்மீது வீணாகக் கோபம் கொண்டுள்ளனர். அவ்வாறு கோபம் கொண்டுள்ளவர்களில் இரு முக்கிய பிரிவினர் உள்ளனர். ஒரு பிரிவினருக்கு நடந்த விடயங்கள் குறித்து எதுவுமே தெளிவாகத் தெரியாது, நான் ஆரம்பத்தில் நினைத்துக் கொண்டிருந்தது போன்று 'முஸ்லிம்கள் இப்படி செய்ய மாட்டார்கள், முஸ்லிம்கள் மீது பழியைப் போட வேறு யாரோ செய்த சதி' என்று இன்னுமும் நம்பிக்கொண்டு கொண்டு இருப்பவர்கள் அவர்கள். (பெரும்பாலும் மாவனல்லைக்கு வெளியிலும், வெளிநாடுகளிலும் வசிப்பவர்கள்.) மற்றப் பிரிவினரோ நடந்தவை அனைத்தையும் அறிந்தவர்கள், என்னையும் விட தகவல்களை தெரிந்தவர்கள். இப்ராஹீம் மெளலவி மற்றும் ஜமாத்தே இஸ்லாமி இடையேயான இடைவெளி உருவாகியமை, அவரது 'தூய்மையான இஸ்லாமிய பிரச்சாரம்' என்று சொல்லப்படும் ஐஎஸ்ஐஎஸ் சார்பான பிரச்சாரம் தொடர்பான தகவல்கள், அவரது மகன் துருக்கியில் கல்வி கற்க செல்வதாக சென்று வந்த விடயத்தில் உள்ள மர்மங்கள், கைது செய்யப்பட்டுள்ள இளைஞர்கள் தொடர்பான தகவல்கள் என்று நிறையவே அறிந்தவர்கள். அவர்களது நோக்கம், இந்த விடயத்தை வெளியில் பேசாமல், அப்படியே அமுக்கி மூடி மறைத்து வைத்துவிட்டால் எல்லாம் சரியாகிவிடும், இஸ்லாத்தையும் பாதுகாத்துவிடலாம் என்பது மட்டுமே. முதல் பிரிவினர் தாமதமாகவேனும் உண்மைகளை அறிய வரும் பொழுது நான் எழுதியதில் தகவல் ரீதியான தவறுகள் இல்லை என்கின்ற உண்மையை உணரலாம், எனினும் அனைத்தையும் மூடி மறைக்க நினைக்கும் இரண்டாம் பிரிவினர் என்னை இலகுவில் சரிகாணப் போவதில்லை என்கின்ற பொழுதும், நான் எழுதி இருக்காவிட்டாலும் குறித்த விடயம் BBC சிங்கள சேவை உட்பட, மவ்பிம போன்ற சிங்கள நாளேடுகளிலும் (http://www.mawbima.lk/print20180101MB20181230.php?id=25148) "குர்ஆனில் சொல்லப்பட்டுள்ளதாலேயே செய்தோம்" என்கின்ற இளைஞர்களின் வாக்குமூலத்துடன் பகிரங்கமாகி விட்டது என்பதை உணர்ந்துகொள்ள வேண்டும். விடயத்தை பேசாமல் இருப்பதை விட, இத்தகைய ஆபத்தான நிலை உருவாகியது எப்படி என்பதை ஆராய்ந்து, தவறு எங்கே என்பதை உணர்ந்துகொள்வதே இலங்கை முஸ்லிம்களது முதல் பணியாக இருக்க வேண்டும். வெளிநாட்டு பணம் மற்றும் உள்நாட்டு நன்கொடைகளில் இயங்கும் இஸ்லாமிய இயக்கங்கள் முஸ்லிம்கள் மத்தியில் இஸ்லாமிய பிரச்சாரத்தை மேற்கொள்கின்றன. "இஸ்லாம் சமாதானத்தின் மார்க்கம்" என்று எவ்வளவுதான் வலிந்து வலிந்து சொன்னாலும், ஏனைய மக்கள், மதங்கள் மீதான வெறுப்பு, வன்முறை, ஆதிக்க மற்றும் ஆக்கிரமிப்பு மனப்பான்மையை உருவாக்குதல் போன்றவற்றை போதிக்கும் ஒரு மதமே இஸ்லாம் என்பதை இஸ்லாத்தை முறையாகக் கற்ற யாருமே மறுக்க முடியாது. இப்பொழுது பேசப்படும் இந்த மாவனல்லை விடயம் இன்னும் சில காலங்களில் எதோ ஒரு வகையில் தணிந்து போகலாம், ஆனால் இஸ்லாம் மதமானது போதிக்கப்படும் வரை, குரான், ஹதீஸ் என்பவை போதிக்கப்படும் வரை வன்முறைச் சிந்தனை கொண்டவர்கள் உருவாகுவதை தவிர்க்கவே முடியாது. மதத்தை காப்பதற்காக போராடி மரணிப்பதை வாழ்வின் மிக உன்னதமான விடயமாக போதனை செய்யும் மதத்தின் நம்பிக்கையைக் கொண்டு நிரப்பப்படும் உள்ளங்கள் எந்நேரமும் வன்முறையானவையாக மாறக் கூடும். குரான் விளக்கம், குரான் ஹதீஸ் என்கின்ற அடிப்படையில் 1990 இன் ஆரம்பத்தில் இருந்தே இப்ராஹீம் மெளலவி ஜமாத்தே இஸ்லாமியுடன் இணைந்து இஸ்லாமிய பிரச்சாரம் செய்து வந்ததை நான் அறிவேன். அவரது பல இஸ்லாமிய வகுப்புக்களிலும் நான் கலந்துகொண்டிருக்கின்றேன். அவர் ஐஎஸ்ஐஎஸ் சார்பான நிலைப்பாட்டை மேற்கொண்டது மிக அண்மையில் நடந்த ஒன்றாகும். ஆக, இஸ்லாத்தை கற்கும் எவரும் உரிய சந்தர்ப்பங்கள் வரும் பொழுது வன்முறையாளர்களாக, வன்முறை தூண்டிகளாக மாற்றமடையக் கூடிய விதத்திலேயே இஸ்லாம் அமைந்துள்ளது. ஆகவே மாணவர்களை 7 நாட்கள், 5 நாட்கள் என்று பல்வேறு பட்ட வதிவிடப் பயிற்சி நெறிகளுக்கு அழைத்துச் சென்று இஸ்லாமிய இயக்கங்கள் இஸ்லாத்தை ஊட்டும் பொழுது, குறித்த மாணவர்கள் பயங்கரவாத சிந்தனையுள்ளவர்களாக மாறும் வாய்ப்பு எதிர்காலத்திலும் இருந்துகொண்டே இருக்கும். இதற்காக இஸ்லாமிய இயக்கங்களை மட்டும் குறை கூறுவதில் பலனில்லை, ஏனென்றால் இஸ்லாம் அவ்வாறனதாகவே அமைந்துள்ளது. குறித்த இளைஞர்கள் பிழையாக வழிநடாத்தப்பட்டு சிலைகளை உடைத்தார்கள், இஸ்லாம் அப்படி ஒருபொழுதுமே சொல்லவில்லை என்று சொல்லிக்கொண்டு சிலர் கிழம்பி வர வாய்ப்புள்ளது. எனினும் இளைஞர்களின் செயல் இஸ்லாத்தை அடியொட்டியே அமைந்திருந்தது என்பதை குரானும் ஹதீஸும் கற்றுத் தருகின்றன. அல்லாஹ்வின் மீது சத்தியமாக உங்கள் சிலைகளுக்கு ஒரு சதி செய்வேன்!” என்று கூறிய இப்றாஹீம் (அலை) அவர்கள் அவற்றில் பெரியதைத் தவிர மற்ற எல்லா சிலைகளையும் உடைத்து துண்டு துண்டாக்கினார்....... (அல்குர்ஆன் : 21:57-58) ஜரீர்(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என்னிடம், 'தவ்ஸ் மற்றும் கஸ்அம் குலத்தாரின் தெய்வச் சிலைகள் உள்ள ஆலயமான துல்கலஸாவின் கவலையிலிருந்து என்னை நீங்கள் விடுவிக்க மாட்டீர்களா?' என்று கேட்டார்கள். அது கஸ்அம் குலத்தாரிடையே 'யமன் நாட்டு கஅபா' என்றழைக்கப்பட்டு வந்த ஆலயமாக இருந்தது. நான் அஹ்மஸ் குலத்தைச் சேர்ந்த நூற்றைம்பது குதிரை வீரர்களுடன் புறப்பட்டேன்; அவர்கள் சிறந்த குதிரைப் படையினராக இருந்தனர். நான் குதிரையின் மீது (சரியாக) உட்கார முடியாதவனாயிருந்தேன். எனவே, நபி(ஸல்) அவர்கள் என் நெஞ்சில் அடித்து, 'இறைவா! இவரை உறுதிப்படுத்து இவரை நேர்வழி காட்டுபவராகவும் நேர்வழியில் செலுத்தப்பட்டவராகவும் ஆக்கு' என்று பிரார்த்தனை செய்தார்கள். எனவே, நான் அந்த ஆலயத்தை நோக்கிச் சென்று அதை உடைத்து எரித்து விட்டேன். பிறகு அல்லாஹ்வின் தூதருக்கு (காரியம் முடிந்துவிட்டதைத்) தெரிவிப்பதற்காக ஆளனுப்பினேன். நான் அனுப்பிய தூதுவர் நபி(ஸல்) அவர்களிடம், 'உங்களை சத்திய மார்க்கத்துடன் அனுப்பியவன் மீது ஆணையாக! அந்த ஆலயத்தை மெலிந்து இளைத்துப் போன அல்லது சிரங்கு பிடித்த ஒட்டகத்தைப் போன்றுவிட்டுவிட்டுத் தான் உங்களிடம் வந்திருக்கிறேன்' என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள் அஹ்மஸ் குலத்தாருக்கும் அவர்களின் குதிரைப் படை வீரர்களுக்கும் பரக்கத் (எனும் அருள்வளத்)தை அளிக்கும்படி ஐந்து முறை இறைவனிடம் பிரார்த்தித்தார்கள். ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 56. பாடம் : அறப்போரும் அதன் வழிமுறைகளும் ஹதீஸ் 3020. இஸ்லாம் இப்படியானதாக இருக்கும் நிலையில், நாம் செய்ய வேண்டியது என்ன என்கின்ற கேள்வி எழுவது இயல்பே. இஸ்லாம் என்பது அனைத்தையும் படைத்த இறைவனிடம் இருந்து வந்த பாதுகாக்கப்பட்ட, கலப்படங்கள் எதுவுமே இல்லாத உண்மையான தூய இறுதி வழிகாட்டல் என்றால், யார் என்ன சொன்னாலும், விளைவுகள் எப்படியானவையாக இருந்தாலும், எதைப்பற்றியும் கவலைப்படாமல் அதனை பின்பற்றித்தான் ஆக வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து எதுவுமில்லை. ஆனால் இஸ்லாம் என்பது 7ஆம் நூற்றாண்டு பாலைவன மனிதர் ஒருவரால் பைபள், தோரா, சொராஸ்டரிஸம், கிரேக்க தத்துவங்கள் போன்றவற்றில் இருந்து காப்பி பண்ணப்பட்டவற்றுடன் சொந்தக் கற்பனைகளையும் சேர்த்து உருவாக்கப்பட்டு, பிற்காலத்தில் வந்தவர்களால் மெருகூட்டப்பட்ட ஒரு மதமாக இருக்குமானால், இதுதான் முழுமையான, சரியான இஸ்லாம் என்று அடையாளம் காணப்பட முடியாத அளவிற்கு பிரிவுகள், பிளவுகள், சந்தேகங்கள், முரண்பாடுகள், அறிவியலுக்கு பொருந்தாத விடயங்கள் எல்லாம் உள்ள ஒன்றாக இருக்குமானால், அதனை இறைவேதம் என்று நம்பிப் பின்பற்றி நமது வாழ்வையும், மற்றவர்களின் வாழ்வையும், உலக அமைதியையும் நாசம் செய்வது மனித குலத்திற்கு எதிரான மாபெரும் குற்றம் ஆகும். இஸ்லாம் இறைவேதம்தான் என்கின்ற குருட்டு நம்பிக்கையுடன் அதனை உறுதியாக பின்பற்ற முயன்று வெறித்தனமானவர்களாக மாற முயலாமல், இஸ்லாம் என்பது அனைத்தையும் படைத்த யாவற்றையும் நன்கறிந்த உண்மையான இறைவனிடம் இருந்து வந்த பாதுகாக்கப்பட்ட, கலப்படங்கள் எதுவுமே இல்லாத தூய இறுதி வழிகாட்டல் தானா என்பதை மிகவும் புத்திக் கூர்மையுடன், நடுநிலையுடன் அறிவு ரீதியாக ஆராய்ந்து அறிய முயல வேண்டும். அத்துடன் முஹம்மது நபியின் வாழ்க்கையை முழுமையாக படித்து, அவர் இறைதூதர் என்று நம்பக்கூடிய தகுதியில் வாழ்ந்து இருக்கின்றாரா, குறைந்த பட்சம் சாதாரண மனிதராக மதிக்கப் படக்கூடிய நிலையிலாவது இருந்தாரா என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும். நமது நாட்டிற்கோ, நாம் வாழும் பிரதேசத்திற்கோ தொடர்பற்ற ஒன்றை வீணாக இறைவேதம் என்று நம்பி பின்பற்றி தொடர்ந்தும் அனைவருக்கும் தொல்லையாக இருக்க வேண்டுமா என்பதை முஸ்லிம்கள் சிந்திக்கக் கடமைப் பட்டுள்ளார்கள். இந்தப் பதிவு உங்களுக்கு வெறுப்பானதாக இருக்கக் கூடும், எனினும் நிதானமாக சிந்தித்தால் ஒருநாள் நீங்கள் கண்திறக்க உதவக் கூடும்.
KineMaster என்று சொல்லக்கூடிய இந்த செயலியை KineMaster Corporation என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. இந்த செயலி 2013 டிசம்பர் 26 ஆம் நாள் கூகுள் ப்ளே ஸ்டோரில் KineMaster Corporation நிறுவனம் வெளியிட்டது. இதுவரை இந்த செயலியை 10,00,00,000 க்கும் மேற்பட்ட நபர்கள் பதிவிறக்கம் செய்துள்ளனர். தற்போது இந்த செயலியை நீங்கள் கூகுள் ப்ளே ஸ்டோரில் 75.78 எம்பிக்கு பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த செயலிக்கு ப்ளே ஸ்டோரில் இதுவரை 5 க்கு 4.4 ரேட்டிங் பெற்றுள்ளது. இந்த செயலியின் பயன்கள் கீழே பார்க்கலாம். COMPARED TO PC SOFTWARES கணினியில் உங்களது வீடியோக்களை எடிட் செய்வதற்கு Adobe premiere Pro மிகப்பெரிய மென்பொருளாக உள்ளது. அதைப்போன்று மொபைலில் வீடியோக்களை எடிட் செய்வதற்கு முதலிடத்தில் உள்ள செயலி Kinemaster. இதை யாராலும் மறுக்க முடியாது. பிரீமியர் புரோவிலுள்ள அனைத்து அம்சங்களும் இந்த Kinemaster உள்ளது. எனவே மொபைலில் வீடியோக்களை எடிட் செய்வதற்கு இந்த செயலி மிக சிறந்த ஒன்றாக உள்ளது. HOW TO USE THIS BLACK SCREEN EFFECT இந்த வீடியோ விளைவைக் கொண்டு உங்கள் வீடியோ அல்லது புகைப்படங்களை மேலும் அழகாக வடிவமைக்க இந்த விளைவு உதவுகிறது. இதை எப்படி பயன்படுத்துவது என்று கூறுகிறேன். உங்களது புகைப்படங்கள் அல்லது வீடியோவில் மேல் இந்த விளைவை வைத்துவிட்டு வீடியோவை தேர்வு செய்த பின்னர் பிலண்டிங் என்ற ஒரு ஆப்ஷன் இருக்கும். அதில் ஸ்கிரீன் என்ற ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும் பின்னர் உங்களது வீடியோ அந்த விளைவுடன் சேர்ந்து விடும். HOW TO USE THIS GREEN SCREEN EFFECT இந்த விளைவை கொண்டு உங்களது புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை அழகாக மாற்ற முடியும். இந்த விளைவில் பல வகையான வடிவங்கள் உள்ளது. இதை எப்படி பயன்படுத்துவது என்று கூறுகிறேன். உங்களது புகைப்படத்தின் மேல் விளைவு வீடியோவை வைத்துவிட்டு குரோமோ கீ என்ற ஒரு ஆப்சன் இருக்கும் அதை தேர்வு செய்ய வேண்டும். பின்னர் விளைவில் உள்ள அனைத்தும் உங்களது புகைப்படத்தின் மேல் சேர்ந்துவிடும். HOW TO USE THIS INTRO TEMPLATE இந்த டெம்ப்ளேட்டை பயன்படுத்தி உங்களது இன்ட்ரோ வீடியோ உருவாக்க முடியும். இதில் உங்களது லோகோ மற்றும் டெக்ஸ்ட் மட்டும் சேர்த்து ஒரு இன்ட்ரோ வீடியோ உருவாக்கிக்கொள்ள முடியும். இதை மொபைல் மூலம் உருவாக்க முடியும் என்பது தனிச்சிறப்பு எனலாம். இந்த டெம்ப்ளேட்டை கையாள்வது மிகவும் எளிமையான ஒன்று. எனவே அனைவரும் இதை பயன்படுத்தி உங்களது யூட்யூப் சேனலுக்கான இன்ட்ரோ வீடியோ உருவாக்கிக்கொள்ள முடியும். KINEMASTER PREMIUM FEATURES MULTIPLE LAYERS KineMaster அப்ளிகேஷனில் உங்களது விருப்பமான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை ஒன்றன் பின் ஒன்றாக add செய்து உங்களால் எடிட் செய்ய முடியும். பல செயலிகள் இருந்தாலும் இந்த சிறப்பம்சம் Kinemaster அப்ளிகேஷனில் மட்டுமே உள்ளது. இதனால் உங்களது விருப்பமான வீடியோக்களை சரியாக எடிட் செய்துகொள்ள முடியும். BLENDING MODE கூகுள் ப்ளே ஸ்டோரில் வீடியோ எடிட் செய்வதற்காக பல செயலிகள் உள்ளது. ஆனால் அவற்றை எதிலுமே இந்த ப்லண்டிங் ஆப்ஷன் கிடையாது. இந்த செயலில் மட்டுமே உள்ளது. இந்த ப்லண்டிங் ஆப்ஷனை பயன்படுத்தி உங்களது விருப்பமான வீடியோ மற்றும் புகைப்படங்களை ஒன்றாக இணைக்க முடியும். CHROMA KEY வீடியோவின் பேக்ரவுண்ட் ஐ அளிக்க இந்த chroma key ஆப்ஷன் பயன்படுகிறது. வீடியோவின் பேக்ரவுண்ட் ஒரே கலராக இருந்தாள் சுலபமாக அளிக்கமுடியும். உதாரணமாக வீடியோவின் பேக்ரவுண்ட் பச்சை நிறத்தில் இருந்தால் ரிமூவ் செய்வதற்கு எளிதாக இருக்கும். வீடியோவில் கலர் எது என்று தெரிந்து கொண்டு ரிமூவ் செய்யும்போது கீ கலர் அதே கலராக செலக்ட் செய்ய வேண்டும். அப்போதுதான் வீடியோவின் பின்புற பேக்ரவுண்ட் ரிமூவ் செய்ய முடியும். VOICE RECORDING வீடியோவை எடிட் செய்யும்போது தேவையான இடத்தில் உங்களது குரலை பதிவு செய்ய இந்த செயலியில் அதற்கான அம்சமும் உள்ளது. குரலைப் பதிவு செய்வதற்கு கூகுள் ப்ளே ஸ்டோரில் பல செயலிகள் உள்ளது இருப்பினும் உங்களது வீடியோக்களை நீங்கள் எடிட் செய்யும்போதே வாய்ஸ் ரெக்கார்ட் செய்வதற்கு இந்த செயலியில் அம்சம் உள்ளது. HANDWRITING இந்த அம்சம் மூலம் உங்களது வீடியோக்களில் தேவையான இடத்தில் சில குறியீடுகளை அமைக்க முடியும். இதனால் உங்களது வீடியோக்களை பார்க்கும் பார்வையாளர்களுக்கு நீங்கள் கூற விரும்புவது குறியீடு மூலம் காட்டும்போது அவர்களுக்கு எளிதாக புரியும். VOICE CHANGER உங்களது உண்மையான குரலை மாற்றவும் அல்லது வீடியோவில் உள்ள பிற குரலை வேறு குரலாக மாற்ற இந்த ஆப்ஷன் பயன்படுகிறது. உதாரணமாக உங்களது குரலை ரோபோட் பேசினால் எப்படி இருக்கும் அதுபோன்று மாற்றவும் இந்த செயலியில் அம்சங்கள் உள்ளது. EQ MODES ஆடியோவில் பல விளைவுகளை ஏற்படுத்த இந்த ஆப்ஷன் பயன்படுகிறது. இதன் மூலம் உங்களது ஆடியோ கேட்பதற்கு தெளிவாகவும் அந்த ஆடியோவை கேட்டுக்கொண்டே இருக்க செய்ய பல ஆப்ஷன்ஸ் இதற்குள் உள்ளது. உதாரணமாக கூறினால் ராக் கிளாசிக் போக் இதுபோன்ற ஆடியோ பில்டர்ஸ் இதில் உள்ளது. இதை பயன்படுத்தும் போது உங்களது ஆடியோ கேட்க இனிமையாக இருக்கும். PREMIUM COLOUR FILTER வீடியோ மற்றும் புகைப்படங்களில் கலரை பிடித்த மாறி மாற்றிக்கொள்ள இந்த கலர் பில்டர் ஆப்ஷன் பயன்படுகிறது. இதன் மூலம் உங்களது வீடியோ மற்றும் புகைப்படத்தின் கலரை மாற்றுவதன் மூலம் அதன் தோற்றம் அழகாக இருக்கும். இதை பயன்படுத்திப் பார்த்தால் மட்டுமே அதன் அனுபவம் உங்களுக்கு தெரியும். EXPORT QUALITY இந்த செயலியை பயன்படுத்தி நீங்கள் எடிட் செய்யும் வீடியோக்களை 4K 60fps வரை அவுட்புட் எடுத்துக்கொள்ள முடியும். இதன் மூலம் உங்களது வீடியோக்களை பார்க்க தெளிவாக இருக்கும். பார்ப்பவர்களுக்கு வீடியோவில் உள்ள தகவல்களை எளிதாக புரிந்து கொள்ள முடியும். இதில் உங்களுக்குப் பிடித்த பார்மட்டில் வீடியோக்களை மாற்றிக் கொள்ளவும் முடியும். உதாரணமாக உங்களுக்கு 720p 30fps வரை போதும் என்றால் அந்த அளவுக்கு உங்களது வீடியோக்களை அவுட்புட் எடுத்துக்கொள்ளலாம். SPEED CONTROL உங்களது வீடியோக்களை வேகமாக மற்றும் மெதுவாக இயக்க இந்த ஸ்பீட் கண்ட்ரோல் ஆப்சன் பயன்படுகிறது. இதன் மூலம் உங்களது வீடியோவை தேவையான இடத்தில் வேகமாக இயக்கவும் அல்லது மெதுவாக இயக்கவும் முடியும். இதை பயன்படுத்தி எடிட் செய்யும்போது பார்வையாளர்களை கவர்ந்து இழுக்க முடியும். ஏனென்றால் வேகமாக நடக்கும் நிகழ்ச்சியை மெதுவாக பார்க்கும் அனுபவம் புதிதாக இருக்கும். இதை நீங்கள் பயன்படுத்தி பார்த்தால் மட்டுமே இந்த அம்சத்தின் சிறப்பை நீங்கள் உணர முடியும். VIDEO REVERSE MODE ஒரு நிகழ்வை தொடக்கத்திலிருந்து பார்க்காமல் கடைசியிலிருந்து முதல் பகுதிக்கு மாற்றி பார்க்க இந்த ரிவர்ஸ் ஆப்சன் பயன்படுகிறது. உதாரணமாக உங்களுக்குப் புரியும் படி கூறினாள் ஒரு மிதிவண்டி சென்றுகொண்டிருக்கிறது அதை அப்படியே பின்புறமாக வரச்செய்யுவும் மற்றும் பழையபடியே அதை செயல்படுத்தவும் பயன்படும் ஆப்ஷன் வீடியோ ரிவர்ஸ் மூடு ஆகும். THREE TYPE OF VIDEO RATIO உங்களது வீடியோக்களை உங்களுக்கு பிடித்த பார்மெட்டில் எடிட் செய்ய இந்த செயலியில் அம்சங்கள் உள்ளது. உதாரணமாக கூறினால் வாட்ஸ்அப் ஃபுல் ஸ்க்ரீன் வீடியோ சைஸில் எடிட் செய்யவும் யூடியூப் வீடியோ சைஸில் எடிட் செய்யவும் இன்ஸ்டாகிராம் போஸ்ட் சைஸில் வீடியோ எடிட் செய்யவும் இதில் ஆப்ஷன்ஸ் உள்ளது. இதை பயன்படுத்தி உங்களுக்கு பிடித்த வடிவத்தில் உங்களது வீடியோக்களை எடிட் செய்ய முடியும். CLIP GRAPHICS இந்த ஆப்ஷனை பயன்படுத்தி உங்களது வீடியோக்களில் நடுவில் புதிய விளைவுகளை ஏற்படுத்த முடியும். உதாரணமாக கூறினால் ஒரு வீடியோவை நடுவில் இரண்டாக கட் செய்திருந்தால் அந்த இடத்தில் ஒரு புதிய எபெக்ட்ஸ் கொடுக்க முடியும். இதன் மூலம் ஒரு வீடியோவில் இருந்து மற்றொரு வீடியோவிற்கு மாறும்பொழுது நீங்கள் ஏற்படுத்திய எபெக்ட்ஸ் நடுவில் இருக்கும். அப்பொழுது அந்த வீடியோவை பார்க்க அழகாக இருக்கும். ஏனெனில் ஒரு வீடியோவில் இருந்து மற்றொரு வீடியோ மாறும்போது நீங்கள் ஏற்படுத்திய விளைவு அந்த வீடியோவை அழகாக்கும். ROTATE AND MIRRORING OPTION வீடியோ மற்றும் புகைப்படங்களை உங்களுக்கு ஏற்றார்போல் ஏற்ற திசைக்கு மாற்றிக்கொள்ள இந்த ரோட்டைட் அண்ட் மிரர் ஆப்சன் பயன்படுகிறது. உதாரணமாக கூறினால் உங்களது வீடியோ கிழக்கு திசையை பார்த்து இருந்தால் அதை மேற்கு மற்றும் உங்களுக்கு பிடித்த திசையில் மாற்றிக்கொள்ள இந்த ஆப்ஷன் பயன்படுகிறது. இதை உங்கள் பிச்சர் மற்றும் வீடியோவில் பயன்படுத்திக் கொள்ளலாம். COLOUR ADJUSTMENT உங்களது வீடியோ மற்றும் புகைப்படங்களில் கலர் வெளிச்சம் கம்மியாக இருந்தால் உங்களது வீடியோ மற்றும் புகைப்படங்களை பார்க்கும்போது ஒரு தெளிவு இருக்காது. அப்படி இருக்கும் உங்களது வீடியோ மற்றும் புகைப்படங்களை இந்த கலர் அட்ஜஸ்ட்மெண்ட் ஆப்ஷனை பயன்படுத்தி தேவையான இடத்தில் காண்ட்ராஸ்ட் லெவல் பிரைட்னஸ் அட்ஜஸ்ட் செய்யும் போது பார்க்க ஒரு அளவுக்கு தெளிவாகவும் அழகாகவும் மாற்ற இந்த ஆப்ஷன் பயன்படுகிறது. எனவே தெளிவில்லாத மற்றும் மங்கலாக இருக்கும் பிச்சர் மற்றும் வீடியோக்களில் இந்த ஆப்ஷனை பயன்படுத்தினால் பார்க்க ஓரளவு நன்றாக இருக்கும். VOLUME ENVELOPE இந்த ஆப்ஷன் Kinemaster அப்ளிகேஷன் அடுத்த லெவலுக்கு கொண்டு செல்ல உதவியது எனலாம். ஏனெனில் இந்த ஆப்சன் கணினியில் எடிட் செய்வதற்கு மட்டுமே உள்ளது. ஆண்ட்ராய்டு செயலியில் அரிதாக காணலாம். அது இந்த இந்த செயலிலும் உள்ளது. இதன்மூலம் உங்களது வீடியோ மற்றும் ஆடியோவில் தேவையான இடத்தில் வால்யூம் அதிகப்படுத்தவும் தேவையற்ற இடத்தில் வால்யூம் முழுமையாக குறைக்கவும் முடியும். VIGNETTE MODE இதைப் பயன்படுத்தி வீடியோ மற்றும் பிச்சர் இன் கரையில் கருநீல ஷேடோ ஏற்படுத்தமுடியும். இதனால் நடுவிலுள்ள அனைத்தும் தெளிவாக பார்க்க முடியும். இதற்காக இந்த ஆப்ஷன் பயன்படுத்துகிறோம். இது வீடியோவை தனித்துவமாக காட்ட உதவுகிறது. நீங்கள் எடிட் செய்ய விரும்பும் போது இதை ஒரு முறை பயன்படுத்தி பாருங்கள் இதன் சிறப்பம்சம் உங்களுக்கு புரியும். EXTRACT AUDIO இதுவும் ஒரு சிறந்த அம்சம் எனக் கூறலாம் இந்த செயலியில் ஏனெனில் வீடியோ எடிட் செய்யும் போது அந்த வீடியோவுக்காண பாடல் உங்களிடம் இல்லை என்றாலும் அந்த ஆடியோ விற்கான வீடியோ உங்களிடம் இருந்தால் அந்த வீடியோவில் இருந்து ஆடியோவை தனியாக பிரித்தெடுக்க முடியும் எடுத்துவிட்டு நமக்குத் தேவையில்லாத வீடியோவை டெலிட் செய்து கொள்ளலாம். நீங்கள் பாடல் டவுன்லோட் செய்யாமலே உங்களுக்கு தேவையான பாடலை தனியாக எடுத்துக்கொள்ள இந்த ஆப்ஷன் பயன்படுகிறது. TRIM AND SPLIT OPTION வீடியோ ஆடியோ மற்றும் புகைப்படங்களை தேவையில்லாத இடத்தை வெட்ட இந்த ட்ரிப் அண்ட் ஸ்பிளிட் ஆப்ஷன் பயன்படுகிறது. இந்த ஆப்ஷன்ஸ் சிறப்பாக செயல்படுகிறது. ஏனெனில் கூகுள் ப்ளே ஸ்டோரில் வீடியோ எடிட் செய்வதற்கான செயலிகள் பல உள்ளது. அவற்றை ஒப்பிடும்போது இந்த செயலியில் நாம் விரும்பும் இடத்தை சரியான இடத்தில் வெட்டி மற்றொரு இடத்தை சேர்க்கவும் முடியும். PAN AND ZOOM இந்த ஆப்ஷன் மூலம் உங்களது வீடியோக்களை பார்வையாளர்களுக்கு மிக அருகாமையில் காட்ட இந்த ஆப்ஷன் பயன்படுகிறது. உதாரணமாக கூறினால் மிக பின்புறத்தில் உள்ள ஒரு சப்ஜெக்ட்டை மிக அருகாமையில் அதாவது திரைக்கு முன்பாக மிக அருகே கொண்டுவர இந்த ஆப்ஷன் பயன்படுகிறது. PREMIUM TEXT இந்தச் செயலியில் அளவுக்கு அதிகமான அகராதிகள் உள்ளது. உங்களுக்கு பிடித்த மொழியை பதிவிறக்கம் செய்து கொள்ளவும் முடியும். Kinemaster asset Store ல் உங்களுக்கு தமிழ்மொழி தேவை என்றால் தமிழ் மொழியை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இந்த செயலியில் டிபால்ட் ஆக ஆங்கில அகராதிகள் உள்ளது. இதை நீங்கள் இலவசமாக பயன்படுத்திக்கொள்ளலாம். OVERLAY AND STICKERS வீடியோ மற்றும் புகைப்படங்களை மேலும் அழகாக்க இந்த ஓவர்லே அண்ட் ஸ்டிக்கர்ஸ் ஆப்ஷன்ஸ் பயன்படுகிறது. உதாரணமாக கூறினால் உங்களது வீடியோவில் தீப்பொறி பறப்பதுபோல் விளைவை ஏற்படுத்தலாம் மற்றும் உங்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறுவதுபோல் விளைவும் ஏற்படுத்த முடியும். இதுவே ஓவர்லே அண்ட் ஸ்டிகர்ஸ் ஆப்ஷன் ஆகும். SPECIAL EFFECTS இதிலும் ஓவர்லே அண்ட் ஸ்டிக்கர்ஸ் ஆப்ஷனை போன்று உங்களுக்குப் பிடித்த விளைவுகளை உங்களது வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களில் பயன்படுத்திக் கொள்ள முடியும். இந்த ஆப்ஷனை வீடியோ மற்றும் புகைப்படங்களில் குறிப்பிட்ட இடத்தில் சரியாக பயன்படுத்த முடியும் தேவையில்லாத இடத்தில் அதை நிறுத்திக் கொள்ளவும் முடியும். இதன் மூலம் உங்களது வீடியோ மற்றவர்கள் வீடியோவிலிருந்து தனித்துவமாக தெரியும். ANIMATION AND TRANSITION EFFECTS எழுத்துக்களில் விளைவுகளை ஏற்படுத்த அனிமேஷன் எபெக்ட்ஸ் பயன்படுகிறது. Transition புகைப்படங்கள் மற்றும் வீடியோவில் விளைவுகளை ஏற்படுத்த உதவுகிறது. இதில் தொடக்கத்தில் ஒரு அனிமேஷன் ஆப்ஷனை பயன்படுத்த முடியும் முடிவில் ஒரு ஆப்ஷனை பயன்படுத்த முடியும். தெளிவாகக் கூறினால் ஒரு எழுத்துக்களின் தொடக்கத்தில் ஒரு விளைவையும் அந்த எழுத்து மறையும் பொழுது ஒரு விளைவையும் கொடுக்க முடியும். KINEMASTER TIPS: WHY DO I HAVE IMAGE INSERT OF MEDIA ? இந்த செயலியில் லேயர் ஆப்ஷனில் மீடியாவிற்கு பதிலாக இமேஜ் என்று இருந்தால் வீடியோக்களை பயன்படுத்த முடியாது. அதை எப்படி மீடியா என மாற்றுவது என்று கூறுகிறேன். Kinemaster அப்ளிகேஷனை ஓபன் செய்ததும் ரேஷியோ செலக்ட் செய்வதற்கு கீழ் ஒரு கியர் ஐகான் இருக்கும். அதை கிளிக் செய்த பிறகு பல ஆப்ஷன்ஸ் அதில் வரும் அவற்றில் மூன்றாவதாக DEVICE CAPABILITY INFORMATION என்று ஒரு ஆப்ஷன் இருக்கும் அதை கிளிக் செய்த பிறகு உங்கள் மொபைலை பற்றிய விவரங்கள் அதில் கூறப்பட்டிருக்கும். அதன்பிறகு மேலே மூன்று புள்ளிகள் இருக்கும் அதை கிளிக் செய்யுங்கள் செய்தபிறகு RUN ANALYSIS NOW என்று வரும் அதை கிளிக் செய்யுங்கள் செய்தபிறகு இரண்டிலிருந்து மூன்று நிமிடங்கள் அது பிராசசிங் ஆகும். அதுவரை வேறு எந்த ஒரு செயலிக்கும் நீங்கள் செல்லக்கூடாது. இது நீங்கள் செய்தபிறகு அப்ளிகேஷனை ஓபன் செய்து பாருங்கள் லேயரில் இமேஜ் என்று இருந்தால் அது மீடியாவாக மாற வாய்ப்பு உள்ளது. இந்த முறையைப் பயன்படுத்தி அனைவருக்கும் மாறும் என்றால் அது கிடையாது உங்களது மொபைலின் process ஐ பொருத்து மாறக்கூடும்.
Aunty Tamil Sex Stories New Hot – சில தினாகளுக்கு முன் என் வீட்டின் முன்பு அமர்ந்து கொண்டு இருந்தேன் அப்பொழுது பக்கத்து வீட்டு 33 வயது பெண் என்னை பார்த்து சிரித்தாள் நானும் அவளை பார்த்து சிரித்தேன் இதுதான் எங்களின் முதல் சந்திப்பு பல தடவை பார்த்து இருக்கு ரென் எப்போதும் சிரிக்காதவள் இன்று சிரிக்கிறாள் எங்கோ போக போகுதுன்னு நினைத்தேன் அதுபோல நடந்தது பார்க்கலாம் வாங்க என் முதல் கதை கிடைத்தால் அனபவிகனும் அடுத்த கதை இது தான். இன்று புது கதை திரும்ப எழுது கின்றேன் பக்கத்து வீட்டு பெண் சாந்தி செம யனா கட்டலகி முலை சிறியது ஆனால் கல்லு போல இருக்கு குண்டி பெருத்தது அழகான இடை மிருது வான உதடு அனைத்தும் கலந்த கலவைதான் இந்த சாந்தி இவளுக்கு இரண்டு குழந்தைகள் கணவன் . எனக்கு ம் அவளுக்கும் அழகான சூழ்நிலை ஏற்பட்டது என்னை பார்த்து சிரிக்கும் போது நான் முத்தம் தரவானு கேட்டன் அவ அவ்ளோ தை ரியமா னு கேட்டா இப்பலாம் வருது சொன்னனே உடனே நாங்களும் தருவோம் ல அப்படினா நான் சரி எப்ப கிடைக்கும்னு கேட்டேன் வரும்ல நாள்னு சொல்லிட்டு ஓடிடா நானும் நாளுக்கா காத்து இருந்த வரும்னு வரவே இல்லை திட்டிருன்னு ஒரு நாள் தூக்கும் போது மதியம் 3 மணி கதவு தட்டும் சத்தம் திறந்தேன் சாந்தி ஹாய் னு சொன்னா சந்தர்ப்பம் வந்தது அப்படினு சொன்னா வாங்க கூட்டிட்டு போனேன் கதவை தாளிட்டு அவளை கட்டி பிடித்தேன் ரொம்ப அவசரம் பொறுமை அப்படினு என்னை தள்ளினால் நான் கட்டிலின் விழுந்தேன் என்ன ராசாக் கு ரொம்ப அவசரம் இருங்க வரேன்னு பக்கத்துல வந்து என் உதட்டை கடித்தால் நானும் கடித்தேன் என் நாக்கு அவள் நாக்கு இரண்டும் விளையாடியது கண்ணம் மூக்கு எல்லாம் நக்குனன் அவ முனகினாள் முலைய அமுக்குன செம கல்லு போல இருந்தது முலைய வாயில வைத்து சப்பினேன் சப்புணத்துல உணர்ச்சி அதிகமாக கத்த ஆரம்பிச்சிடா சப்பி முடித்ததும் என்ன கணவன் சாப்பியது இல்ல சூப்பர் சொன்னா முதத்துல அவல நனச்சான் தொப்புள்ள விளையாடினேன் அப்படி ஒரு சிதிய பாக்கல நக்கி அவளது தேனை குடித்தேன் நீண்ட நக்குனன் என்னை தள்ளி யென் பூளை கையில் எடுத்து சப்ப ஆரம்பித்தாள் அப்படி ஒரு ஊம்பல் செம செம நாக்கால் தடவி தடவி எடுத்தா நீண்ட ஊம்பலுக்கு பிறகு போதும் பண்ணலாமா கேட்டா ம்ம் பூளை சிதில விடலாம்னு சொன்னா ம்ம் சொன்னஅவள் புண்டை உள்ளே செலுத்தலாம் என்று உள்ளே சொரிகினேன் புன்டை இறுக்கமாக இருந்தாலும் முழுக்கென்று இறங்கியது அவள் முகத்தில் தோன்றும் செயலை பார்த்தேன் கண்கள் இரண்டும் சொருகி இஸ்ஸ்ஆஆ என்று முனங்கினாள் பின்பு சற்று வேகத்தை கூட்டி ஒழுத்தேன் அவள் இஸ்ஸ்ஸ்ஸ்ஸஅஹ்ஹ்ஹ் என்று முனகிய படி என் ஒழு சுகத்தை ஏற்று கொண்டால் நான் அவளை வெறித்தனமாக ஒழுக்க முன்வந்தேன் அவள் இரு கால்களையும் நன்றாக பிளந்து அவள் புண்டையினுள் என் பூளை ஆழமாக செலுத்துவிட்டு அப்படியா சாயந்து அவள் மேல் படுத்து கொண்டேன் அஹ் சும்மா சொல்ல கூடாது அவள் உடம்பு கின்னுன்னு இருந்துச்சி அப்படி படுத்து கொண்டு வேகமாக இடித்தி ஒலுத்தேன் அவள் சுகம் தாங்காமல் என்னை கட்டி அணைத்த படி என் அடியை வாங்கினால் நான் அவளின் முகம்,வாய்,கன்னம்,நெற்றி,கழுத்து,முலை இவைகளை சுவைத்து கொண்டே அவளை வெறித்தனமாக அரை மணி நேரம் ஒத்தேன் நான் அவள் புண்டைக்குள் செலுத்திய என் கஞ்சியும் அவள் கஞ்சியும் வெடித்து அவள் புண்டை வழியாக பொங்கி வழிந்தது நானும் அவளை ஒழுத்த களைப்பில் என் பூளை அவள் இருக்கமான புண்டையில் இருந்து உருவினேன். களைப்பில் இருவரும் படுத்தோம் அவள் என்னை தடவி கொண்ட் தே இருந்தாள் எனக்கு ரொம்ப சந்தோசம் சொன்ன நானும் எனக்குத்தான் சொன்ன உடனே சரி வான்னு பாத் ரூம் போகலாம் னு கூட்டிட்டு போன னா போனது ம் ஷவரில் திறந்தாள் இருவரும் நனைத்தோம் கட்டி பிடித்து முத்தம் கொடுத்து கொண்டே இருவரும் நீரில் விளையாடினோம் நீண்ட விளையாட்டால் என் பூள் விறைத்தது அதை பார்த்ததும் அவள் அதை பிடித்து அவளது சிதியில் தடவினால் தடவிக்கொண்ட முணங்கினால் முலையை கடித்து விளையாடினேன் அழுத்தி பிசைந்து விளையாடியது அவள் காம்பில் பால் போன்ற திரவம் வந்தது சொக்கிப்போய் பார்த்து கொண்டு இருந்தாள் பூளை தேய்த்து கொண்டு காலை விரித்தாள் பூளை புண்டையில் சொருகினேன் வழுக்கிக்கொண்டு உள்ளே சென்றது சுகத்தில் முனகினாள் கத்தவும் செய்தால் இறுக்கமா க அணைத்தாள் புண்டை இறுக்கத்தில் மிகவும் மோகமாக் இருந்தது சுகமும் அதிகம் ஆனது சொருக்கியத்தில் அவள் தன்னை மறந்து என்னை நாய் போல ஓக்கலாம்ணு கேட்ட மம்ம்னு திரும்ப அவளது புண்டையை சொருக மிக அற்புதமாக இருந்தது நீண்ட ஓளுக்கு பிறகு என் ஈனும் வரளனு கேட்க அடுத்த தடவை பண்றது ரொம்ப நேரம் ஆகும் அப்படினு சொல்ல சரி வா கட்டிலுக்கு போவோம் னு கூப்பிட சரி வா போகலாம் போனதும் அவளது எண்ணம் என்னை மீண்டும் புரட்டி எடுக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தா நான் கீழே படுக்க அவள் கேரள பெண்களைப் போல் மேல் அவள் ஏறி குதிரை சவாரி செய்தா தடியை கூதியால் உள்ளே வெளியே என்று எடுத்து எடுத்து விளையாடி கொண்டு இருந்தாள் கேரளப் பெண் போல் சிறப்பாக விளையாடினால் இந்த கூதி என்ன புண்ணியம் பண்ணியதோ உன் சுன்னியால் குத்து வாங்கறது. ஐயோ வலிடர்துடா. ஆனாலும் வேண்டி இருக்குடா. இவ்வளவு வருசமா இப்படி ஒக்காமல் பொழுதை வீண் அடித்து விட்டேனடா. இனி நீ தாண்ட என் புண்டைக்கு சொந்த காரன். நான் ” என்னடி கூதி திரும்பவும் ஜூஸ் போட்டிருச்சி போல என்றேன். அவள் மூச்சு வாங்கி கொண்டே டேய் மாமா நீ சரியான ஹிலாடிய இருக்க. எனக்கே ரெண்டு முறை வர வெச்சிட்ட. பின் நாங்கள் எழுந்து எங்கள் உடைகளை அணிந்து சென்றோம் இதுவரை அவளை 30 தடவை ஓத்து மகிழ்ந்து உள்ளேன் அவளுக்கும் இதில் மிக அருமையான சுகத்துக என்னை புரட்டி எடுத்து கொண்டுதான் இருக்கு ராள் சரியான சந்தர்ப்பம் அமைந்தால் இது போல நீங்களும் சந்தோசமா இருக் கலாம். Tags: Latest Tamil Sex Stories, New Sex Story, tamil dirty stories, Tamil Kamakathaikal, tamil kamaveri, Tamil Sex Stories, Tamil Sex Stories Porn Videos, Tamil Sex Story Nanban Pondati kamakathai - XNXX.COM
One of the most popular education website in tamilNadu. Get Latest Padasalai, Kalvi seithi, kalvi news, tamilnadu education news kalvimalar kalvisolai and updates C Powered by Blogger. Recent அரையாண்டுத் தேர்வு தேதி அறிவிப்பு; காலாண்டுத் தேர்வைப் போல அல்ல தமிழகத்தில் உள்ள அரசுப் பாடத்திட்டத்தின் கீழ் நடைபெறும் பள்ளிகளுக்கு டிசம்பர் 15ஆம் தேதி அரையாண்டுத் தேர்வு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள... PF ACCOUNT SLIP download செய்ய -NEW WEBSITE PF ACCOUNT SLIP -NEW WEBSITE GPF Account Opening Form Know your AISPF/GPF/TPF Status GPF Interest Rates Know your Pension Status Download ... கறுப்பு பொங்கல் - அரசு ஊழியர்கள் எச்சரிக்கை அறிவிப்பு அரசு ஊழியர்கள் எச்சரிக்கை அறிவிப்பு அதிமுக ஆட்சியே தேவலை என்றும் குமுறல் - தினமலர் நாளிதழ் செய்தி டிசம்பர் 3 மற்றும் 6 தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு கோட்டாறு தூய சவேரியார் பேராலய திருவிழாவை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் டிசம்பர் 3ல் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறை... அரையாண்டு தேர்வு அட்டவணை வெளியீடு - பள்ளிக் கல்வித்துறை 6 முதல் 12 ம் வகுப்பு மாணவர்களுக்கு டிசம்பர் 15 முதல் 23 ம் தேதி வரை அரையாண்டு தேர்வு. மாநிலம் முழுவதும் பொதுவான வினாத்தாள் அடிப்படையில் த... மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைப்பது எப்படி?TNEB - Aadhaar Link: யாரெல்லாம் ஆதாரை எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும்? மின்சார மானியம் பெறுவதற்கு மின் நுகர்வோர் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டியது கட்டாயம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்த அதிகாரப்... BEL நிறுவனத்தில் ரூ.55,000/- சம்பளத்தில் வேலை வாய்ப்பு BEL நிறுவனத்தில் Trainee Engineer & Project Engineer பணிகளுக்கு 34 காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்... தமிழக அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவிலில் வேலைவாய்ப்பு RECRUITMENT VACANCY DETAILS FOR ARULMIGU THYAGARAJA SWAMY TEMPLE – TNHRCE RECRUITMENT 2022 – APPLY COOK AND DRIVER POSTS:- Now, Arulmigu ... கணித புத்தகத்தில் இடம்பெற்றுள்ள ரம்மி பாடப்பகுதி : பள்ளிக்கல்வித்துறை விளக்கம் ஆறாம் வகுப்பு கணித பாடத்தில் இடம்பெற்றுள்ள ரம்மி குறித்த பாடப்பகுதி அடுத்த கல்வியாண்டு முதல் நீக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ள... தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் இன்று ( 28.11.2022 ) துவங்கியுள்ள (STEM திட்டம் மூலம்) வானவில் மன்றங்கள் எதற்காக ? என்ன விளைவை ஏற்படுத்தும்? தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் இன்று ( 28.11.2022 ) துவங்கியுள்ள (STEM திட்டம் மூலம்) வானவில் மன்றங்கள் எதற்காக ? என்ன விளைவை ஏற்படுத்த... Popular Posts அரையாண்டுத் தேர்வு தேதி அறிவிப்பு; காலாண்டுத் தேர்வைப் போல அல்ல தமிழகத்தில் உள்ள அரசுப் பாடத்திட்டத்தின் கீழ் நடைபெறும் பள்ளிகளுக்கு டிசம்பர் 15ஆம் தேதி அரையாண்டுத் தேர்வு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள... PF ACCOUNT SLIP download செய்ய -NEW WEBSITE PF ACCOUNT SLIP -NEW WEBSITE GPF Account Opening Form Know your AISPF/GPF/TPF Status GPF Interest Rates Know your Pension Status Download ... கறுப்பு பொங்கல் - அரசு ஊழியர்கள் எச்சரிக்கை அறிவிப்பு அரசு ஊழியர்கள் எச்சரிக்கை அறிவிப்பு அதிமுக ஆட்சியே தேவலை என்றும் குமுறல் - தினமலர் நாளிதழ் செய்தி டிசம்பர் 3 மற்றும் 6 தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு கோட்டாறு தூய சவேரியார் பேராலய திருவிழாவை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் டிசம்பர் 3ல் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறை... அரையாண்டு தேர்வு அட்டவணை வெளியீடு - பள்ளிக் கல்வித்துறை 6 முதல் 12 ம் வகுப்பு மாணவர்களுக்கு டிசம்பர் 15 முதல் 23 ம் தேதி வரை அரையாண்டு தேர்வு. மாநிலம் முழுவதும் பொதுவான வினாத்தாள் அடிப்படையில் த... மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைப்பது எப்படி?TNEB - Aadhaar Link: யாரெல்லாம் ஆதாரை எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும்? மின்சார மானியம் பெறுவதற்கு மின் நுகர்வோர் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டியது கட்டாயம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்த அதிகாரப்... BEL நிறுவனத்தில் ரூ.55,000/- சம்பளத்தில் வேலை வாய்ப்பு BEL நிறுவனத்தில் Trainee Engineer & Project Engineer பணிகளுக்கு 34 காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்... தமிழக அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவிலில் வேலைவாய்ப்பு RECRUITMENT VACANCY DETAILS FOR ARULMIGU THYAGARAJA SWAMY TEMPLE – TNHRCE RECRUITMENT 2022 – APPLY COOK AND DRIVER POSTS:- Now, Arulmigu ... கணித புத்தகத்தில் இடம்பெற்றுள்ள ரம்மி பாடப்பகுதி : பள்ளிக்கல்வித்துறை விளக்கம் ஆறாம் வகுப்பு கணித பாடத்தில் இடம்பெற்றுள்ள ரம்மி குறித்த பாடப்பகுதி அடுத்த கல்வியாண்டு முதல் நீக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ள... தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் இன்று ( 28.11.2022 ) துவங்கியுள்ள (STEM திட்டம் மூலம்) வானவில் மன்றங்கள் எதற்காக ? என்ன விளைவை ஏற்படுத்தும்? தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் இன்று ( 28.11.2022 ) துவங்கியுள்ள (STEM திட்டம் மூலம்) வானவில் மன்றங்கள் எதற்காக ? என்ன விளைவை ஏற்படுத்த...
„அரசியற்துறையில் நடந்த, இரவு சந்திப்புக்கு இது உசத்தி. நீ காற்சட்டையோடை வந்திட்டு என்னிலை பழி சுமத்தாதை” கொல்கருக்கு நினைவு படுத்தினேன். 'நீ நேற்று சொல்லும் போதே எனக்குப் புரிந்து விட்டது. இன்றைய சந்திப்பு விசேசமானது என்று” 'சந்திப்புக்கு முன்னால் சோதனைகள் இடம் பெறலாம். தேவை இல்லாத பொருட்கள் இருந்தால் இப்பொழுதே எடுத்து வைத்து விடு' 'கமரா மட்டும் தான் கொண்டு வாறன்' மதியம் குறைவாகத்தான் உணவு எடுத்துக் கொண்டோம். நினைவுகள் மட்டும் சந்திப்பைப் பற்றி நீண்டு இருந்தது. எங்களது சந்திப்பிற்கான ஒழுங்கு மீண்டும் ஒரு தடவை அரசியல்துறைச் செயலகத்தால் அன்று உறுதிப் படுத்தப்பட்டது. „வாகனம் வரும் காத்திருங்கள்” என்ற தகவலும் கூடவே வந்திருந்தது. வாகனத்துக்காக நான் எனது மனைவி கொல்கர் மூவரும் காத்திருந்தோம். நான்காவதாக தமிழர் புனர்வாழ்வுக்கழக இணைப்பாளர் ரெஜியும் எங்களுடன் வந்து இணைந்து கொண்டார். வாகனமும் வந்தது. நாங்கள் நால்வரும் ஏறிக் கொண்டோம். அன்ரனி, தான் அரசியல்துறைச் செயலகத்தில் இருந்து வருபவர்களுடன் பயணிக்க இருப்பதாகச் சொன்னார். பள்ளங்கள், மேடுகள் என வாகனம் விழுந்து எழுந்து பயணித்தது. இப்பொழுது பயண அலுப்புகள் ஏதும் தெரியவில்லை. மனது பெரிய சந்திப்பில் நிலைத்து விட்டதால் உடல் உபாதைகள் மறந்து போயிருந்தன.நீண்ட பயணத்தின் பின் ஒரு குடிசையின் முன்னால் வாகனம் சென்று நின்றது. இந்தக் குடிசைக்குள்தான் பெரிய சந்திப்போ? ஒருவேளை நிலத்துக்கு அடியில் ஏதாவது சந்திப்புக் கூடம் இருக்கிற தோ? அல்லது வாகனத்துக்கு எரிபொருள் போதா தோ? கேள்விகள் தோன்றிக் கொண்டே இருந்தன. சுற்று முற்றும் ஆள் நடமாட்டம் எதுவும் இருக்கவில்லை. பிறகு சந்திப்போம் என்று வாகனத்தில் வந்தவரும் விடைபெற்றுக் கொண்டு சென்று விட்டார். குடிசையைச் சுற்றி வந்து பார்த்தேன் எதுவித அசைவுகளும் இல்லை. ரெஜியைப் பார்த்தேன். இப்பொழுது அவர் ஒருவர்தான் அந்த இடம் எதுவென்று தெரிந்தவர். எங்களுக்கோ கண்ணைக் கட்டி காட்டில் விட்ட நிலை. ரெஜியோ எந்தவித சலனமும் இல்லாமல் நின்றார். ஒருவேளை இது பாதுகாப்பிற்கான முன்னேற்பாடோ? எதுவானாலும் என்ன! அடுத்து ஏதோ ஒன்று நிகழத்தானே போகிறது. அதுவரை காத்திருப்போம். அந்தக் குடிசையைச் சுற்றி இருந்த மரங்கள், செடிகளை ஆராய்ந்தேன். அவை சம்பந்தமான கேள்விகளுக்கும், மற்றும் பொதுவான விடயங்களுக்கும் ரெஜி பதில் தந்தார். மறந்தும் கூட “இது எந்த இடம்?“ என்று கேட்டு நான் அவரைச் சங்கடத்தில் ஆழ்த்த விரும்பவில்லை. மாலையும், இரவும் சந்திக்கும் நேரம் நெருங்கி விட்டிருந்தது. குடிசையின் பிற்பகுதியில் நின்றோம். எங்கிருந்து வந்தது என்று தெரியவில்லை. குடிசையின் பிற்பகுதியிலேயே ஒரு வாகனம் திடீரென வந்து நின்றது. வாகனத்தில் இருந்து சிரித்தபடியே மருத்துவத்துறைப் பொறுப்பாளர் ரேகா இறங்கி வந்தார். முதல் முதலாகச் சந்திக்கிறோம். ஆனால் நெருங்கிய உறவு போல் உரிமை எடுத்துப் பழகினார். ரேகாவும், மயூரனும் தோழர்கள் என்பது அவரது உரையாடலில் தெரிந்தது. 'போகலாமா?' என்று ரேகா கேட்டார். சந்திப்பு இங்கே இல்லையோ? மீண்டும் பயணமோ? வாகனத்தில் ஏறிக் கொண்டோம். இப்பொழுது இருட்டி விட்டிருந்தது.. வீதியில் வெளிச்சம் இல்லை. வெளியில் எல்லாமே இருட்டாக இருந்தது. வாகனத்து வெளிச்சம் மட்டும் எங்களுக்கு முன்னால் இருந்தது. பாதுகாப்பின் நிமித்தம் இந்த ஏற்பாடாக இருக்கலாம். அல்லது ஒரு குறிப்பிட்ட நேரத்தில்தான் சந்திப்பாக இருக்கலாம். நாங்கள் அந்த நேரத்திற்கு முன்னதாக வநது விட்டதால் இடையில் காத்திருக்க வேண்டிய தேவை வந்திருக்கலாம் என்று நினைத்துக் கொண்டேன். கொல்கருக்கு என்ன நடக்கிறதென்றே புரியாமல் இருந்திருக்கும். ஆனாலும் பொறுமையாக வாகனத்தில் இருந்தான். வழி எங்கும் இருட்டு. ஒரு இடத்தில் வாகனம் நின்றது. அப்பொழுதுதான் வெளிச்சமும் தெரிந்தது. வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு அந்த வெளிச்சம் தெரியாத வண்ணம் இயற்கை மறைப்புக்குள் அந்தக் கட்டிடம் இருந்தது. வாகனத்தில் இருந்து இறங்கிய பொழுதுதான் ஜெனரேட்டர் இயங்கிக் கொண்டிருக்கும் சத்தம் கேட்டது. கட்டிடத்தின் முன்னால் ஐந்து பிரம்புக் கதிரைகள் போடப் பட்டிருந்தன. அதில் ஒன்றில் சு.ப. தமிழ்செல்வன் இருந்தார். “பிறகு சந்திக்கிறேன்“ நன்றியைக் கூட எதிர்பார்க்காமல் ரேகா வாகனத்தை திருப்பிக் கொண்டு போய் விட்டார். கதிரையில் அமர்ந்தோம். தமிழ்செல்வன் சிரிப்பாலே வரவேற்றார். இந்த இடத்தில் தான் சந்திப்பு என்பதை அங்கிருந்த சூழ்நிலை தெளிவு படுத்தியது. நாங்கள் இருந்த இடத்திற்கு சற்றுத் தள்ளி இருட்டான பகுதியில் வாகனம் ஒன்று வந்து நின்றது. தமிழ்செல்வன் அந்த இடத்தை உற்று நோக்குவதில் இருந்து புரிந்து போயிற்று. எங்களைச் சந்திக்க அழைத்தவர் நாங்கள் இருக்கும் இடத்தில் இருந்து சற்றுத் தூரத்தில்தான் நிற்கின்றார் என்று. அந்த இருட்டிலும் காண முடிந்தது. குறைந்தது ஐந்து பேராவது அந்த இடத்தில் நிற்கிறார்கள் என்று. தொடர்ந்து அந்த இடத்தையே பார்ப்பது நாகரீகமாக இருக்காது என்பதால் பார்வையைத் திருப்பினேன். “சரி வாங்கோ போவம்” தமிழ்செல்வன் கதிரையில் இருந்து எழுந்த வண்ணம் எங்களை அழைத்தார். அவர் பின்னாலே போனோம். தமிழ்செல்வனைத் தொடர்ந்து எனது மனைவி உள்ளே நுழைந்தார். அவருக்கு அடுத்ததாக கொல்கர் உள்ளே சென்றான். இப்போழுது முழுமையாகத் தெரிந்தது. அறையில் இருந்த பிரகாசமான விளக்கின் வெளிச்சத்தில் முகத்தில் சிரிப்போடு பிரபாகரன் நின்றார். கொல்கரை நோக்கி பிரபாகரன் தனது வலது கையை நீட்டினார். கொல்கர் இருகரம் கூப்பி தமிழில் “வணக்கம்” என்றான். நீட்டிய வலது கையை வேகமாகத் திசைதிருப்பி இரு கரம் கூப்பி அவரும் சிரிப்புடன் “வணக்கம்” என்றார். பின்னர் இருவரும் கை குலுக்கிக் கொண்டார்கள். அடுத்தது நான். கொல்கர் பாணியிலேயே வணக்கம் சொல்லி கைகுலுக்கிக் கொண்டேன். 'நீங்கள்தான் அவருக்கு வணக்கம் சொல்லிக் குடுத்திருக்கிறீங்கள் போலை இருக்கு' பிரபாகரன் சிரித்தபடியே என்னைக் கேட்டார். எங்களை அவர்கள் முழுதாக நம்பினார்கள் என்றே சொல்ல வேண்டும். எந்தவித சோத னைகளும் எங்களுக்கு அங்கே இடம் பெறவில்லை. அது விருந்தினரைக் காயப்படுத்தி விடுமோ… என்ற நிலையாகக் கூட இருக்கலாம். ஒரு வெளிநாட்டவரைச் சந்திக்கும் முறையிலேயே பிரபாகரன் வந்திருந்தார். உள்ளே நோட்டம் விட்டேன். ரேகா, அன்ரனி உட்பட சிலர் அங்கே இருந்தனர். நீண்ட பெரிய மேசை. எல்லோரும் இருக்கையில் அமர்ந்து கொண்டோம். வெண்புறாவில் எங்களது செயற்பாடுகளை அன்ரனி பிரபாகரனுக்குச் சொன்னார். தனக்குப் பொருத்தப் பட்டிருக்கும் காலுடன் ஒரு நடை போட்டுக் காண்பித்தார். இப்பொழுது கால் லேசாக இருக்கிறது. இதைப் போட்டு நடக்கிற பொழுதுதான் தெரியுது, இவ்வளவு காலமும் இரும்பைக் கட்டிக் கொண்டு நடந்திருக்கிறன் எண்டு…' அன்ரனி சொல்வதைப் பிரபாகரன் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தார். அன்ரனியின் பேச்சு காலை விட்டு கொல்கரிடம் தாவியது. „ஆள் இப்ப எங்களிலை ஒருத்தன் மாதிரி. சாரம் கட்டுறான். கையாலை சாப்பிடுறான்“ அன்ரனியின் பேச்சை இங்கே இடை மறித்தேன். „ஒரு நிமிசம்… அவனும் எங்களைப் போலை வாயாலைதான் சாப்பிடுறான். கத்தி, கரண்டி இல்லாமல் கையைப் பாவிச்சுச் சாப்பிடுறான்“ பிரபாகரன் சிரிக்க ஆரம்பித்தார். அவர் இப்பொழுது ஒன்று புரிந்திருப்பார். வந்திருப்பவர்கள் பிரமுகர்கள் இல்லை தனது நண்பர்கள் என்று. அன்ரனி கொல்கர் புராணத்தைத் தொடர்ந்தார். „இன்னும் கொஞ்சக்காலம் எங்களோடை இருந்தால் தமிழ் கதைக்கத் தொடங்கீடுவான்' „பார்த்தனான். அவன் வணக்கம் சொல்லக்கை „ண' வில் எந்தவிதப் பிரச்சனையும் இல்லாமல் சொன்னான். நீங்களோ.. அவனுக்கு எல்லாம் சொல்லிக் குடுக்கிறிங்கள்?“ பிரபாகரன் மீண்டும் என்னைப் பார்த்துக் கேட்டார். „சொல்லிக் குடுக்கிறதென்று சொல்ல முடியாது. அவன் கேட்டுத் தெரிந்து கொள்கிறான் எண்டு சொல்லுறதுதான் சரியா இருக்கும்” என்றேன். கையில் இருந்த பத்மநாப ஐயரின் `கண்ணில் தெரியுது வானம்´ புத்தகத்தைப் பிரபாகரனிடம் கொடுத்தேன். „வெறும் கையோடு உங்களைச் சந்திக்க விரும்பேல்லை. அதாலைதான் இந்தப் புத்தகத்தைக் கொண்டு வந்தனான். முக்கியமான எழுத்தாளர்களின்ரை கதையள் இந்தப் புத்தகத்திலை இருக்குது' என்றேன். மகிழ்ச்சியோடு வாங்கிக் கொண்டார். உரையாடல்கள், பலதையும் தொட்டுச் சென்றன. திருதிருவென முழிக்க விடாமல் எல்லாவற்றையும் கொல்கருக்கு மொழி பெயர்த்தேன். பிரபாகரனுக்கு கொல்கரை பிடித்துப் போயிற்று. திடீரென எழுந்து வெளியே சென்றார். ஏன் சென்றார் என்ற கேள்வி எனக்கு வந்தது போல் மற்றவர்களுக்கும் வந்திருக்கும். ஒருவேளை அவருக்கான மதிப்பைக் கொடுக்காமல் இயல்பாகக் கதைத்தது அவருக்குப் பிடிக்கவில்லை யோ? சில விநாடிகள்தான். பிரபாகரன் திரும்பி வந்தார். இப்பொழுது அவரது கையில் துப்பாக்கி. மனம் ´திக்` கென்றது. சந்திப்புக்கு வந்த இடத்தில் துப்பாக்கிக்கு என்ன வேலை.
தமிழக அரசில் பணியாற்றும் பெண் ஊழியர்களுக்கான மகப்பேறு விடுப்பை 9 மாதங்களில் இருந்து 12 மாதங்களாக உயர்த்திப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்ப்பாக அரசாணையில் கூறியிருப்பதாவது, அரசு பணியில் வேலை பார்க்கும் திருமணமான பெண் ஊழியர்களுக்கு, இரண்டு குழந்தைகள் வரையில் அவர்களுக்கு சம்பளத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு வழங்கப்படும். கடந்த 2016-ம் ஆண்டு 6 மாதங்களாக இருந்த மகப்பேறு விடுப்பானது 9 மாதங்களாக அதாவது 270 நாட்களாக உயர்த்தப்பட்டது. மேலும் இந்த விடுப்பு பிரசவத்துக்கு முன், பின் என பிரித்து எடுத்துக் கொள்ளவும், விடுப்பு காலத்தில் முழு சம்பளம் வழங்கவும் அனுமதிக்கப்பட்டு இருந்தது. இதற்காக அடிப்படை விதிகளில் திருத்தமும் செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 13-ம் தேதி தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டபோது, பெண் ஊழியர்களுக்கான மகப்பேறு விடுப்பு 9 மாதங்களில் இருந்து 12 மாதங்களாக உயர்த்தப்படுவதாக நிதியமைச்சர் அறிவித்தார். இதனைத் தொடர்ந்து 12 மாதங்களாக உயர்த்தப்பட்ட இந்த மகப்பேறு விடுப்பானது ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. ஜூலை 1-ம் தேதிக்கு முன்னரே அரசு பெண் ஊழியர்கள் மகப்பேறு விடுப்பில் இருந்தால், அவர்கள் 365 நாட்களுக்கு மிகாமல் விடுப்பு எடுத்துக் கொள்ளலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. Share Article: Tags: cinema news tamil Government employees latest news in tamil latest tamil news live news tamil maternity leave maternity leave for female maternity leave for government employees news in tamil news live tamil news tamil news tamil live news tamil today tamil cinema news tamil news Tamil news live tamil news paper tamil news today tamil video today news in tamil today news tamil today tamil news todays news in tamil அரசு பெண் ஊழியர்கள் மகப்பேறு விடுப்பு
நித்திய கல்யாணி இலை, பூ ஆகியவற்றில் இருந்து நீரழிவு நோயினால் உண்டாகும் புண்களை குணப்படுத்துவதற்கும் மற்றும் புற்றுநோய்க்கான மருந்துகள் தயாரிக்கப்படுகிறது. மார்பக புற்றுநோய்க்கு மருந்தாகிறது. நெறிக்கட்டிகளை கரைக்கும் தன்மை உடையது. நித்திய கல்யாணி பூக்களை பயன்படுத்தி புற்றுநோயாளிக்கான மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: நித்தியகல்யாணி இலை மற்றும் பூ15, கருஞ்சீரகம் கால் ஸ்பூன். நித்திய கல்யாணி இலை மற்றும் பூக்கள் 15 வரை எடுக்கவும். இதனுடன் கால் ஸ்பூன் கருஞ்சீரகம் சேர்க்கவும். ஒரு டம்ளர் அளவுக்கு நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி குடித்துவர சீல் பிடித்த புண்கள், ஆறாத புண்கள் விரைவில் குணமாகும். இதே தேநீரில் சிறிதளவு படிகாரம் கலந்து புண்களை கழுவி சுத்தப்படுத்துவது கூடுதல் சிறப்பு. புற்றுநோயாளிகள் இந்த தேனீரை எடுக்கலாம். பல்வேறு மருத்துவ குணங்களை கொண்ட கருஞ்சீரகம் உடலினுள் இருக்கும் நச்சுக்களை வெளியேற்றும் தன்மை கொண்டது. சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்படும் புண்களை ஆற்றும். நித்திய கல்யாணி இலையை பயன்படுத்தி புண்களை ஆற்றும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: தேங்காய் எண்ணெய், நித்திய கல்யாணி இலை, ஒரு பாத்திரத்தில் 2 பங்கு தேங்காய் எண்ணெய் எடுத்தால், ஒரு பங்கு நித்திய கல்யாணி இலை பசை சேர்த்து தைலப்பதத்தில் காய்ச்சவும். இதை ஆறவைத்து வடிகட்டி புண்கள் மேலே பூசுவதால் நல்ல பலன் கிடைக்கும். சீல் பிடித்த, புரையோடிய மற்றும் ரத்தம் கசிகின்ற புண்கள் விரைவில் குணமாகும்.