text
stringlengths
388
164k
Tamil Cinema News Update : முன்னணி நடிகரான விஜயகாந்த், ஜிம் ஒன்றில் நடிகர் விஜய் மற்றும் ஸ்டண்ட் மாஸ்டர் ஜாக்குவார் தங்கத்துடன் இருக்கும் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. Written by WebDesk January 13, 2022 8:10:40 pm Follow Us Tamil Cinema Actor Vijayakanth and Vijay Photo Viral : தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகராக உள்ளவர் விஜய். 1984-ம் ஆண்டு வெற்றி என்ற படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர், தொடர்ந்து ஒரு சில படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். அதன்பிறகு 1992ம் ஆண்டு வெளியான நாளைய தீர்ப்பு படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார். ஆனால் ஒரு பெரிய வெற்றி கொடுக்க வேண்டும் என்பதிலும், விஜய் முன்னணி நடிகரான வளர வேண்டும் என்பதிலும் குறியாக இருந்த அவரது அப்பா எஸ்ஏ சந்திரசேகர், 1993-ம் ஆண்டு செந்துரபாண்டி திரைப்படத்தை தொடங்கினார். அப்போது முன்னணி நடிகராக பல வெற்றிப்படங்களை கொடுத்திருந்த விஜயகாந்த் இந்த படத்தில் நடித்தால், விஜய் முன்னணி நடிகராக வளர துணையாக இருக்கும் என்று எஸ்ஏசி நினைத்துள்ளார். இது தொடர்பாக விஜயகாந்துடன் அவர் பேசியுள்ளார். இந்த பேச்சுவார்த்தையின் முடிவில் விஜயகாந்த் இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார். மேலும் எஸ்ஏசிக்காக இந்த படத்தில் விஜயகாந்த் சம்பளமே வாங்காமல் நடித்துள்ளார். மனேராமா விஜயகாந்த், கௌதமி, விஜய் யுவராணி உள்ளிட்டோர் நடித்திருந்த இந்த படத்தின் கதை விஜய்யை சுற்றித்திதான் அமைந்திருக்கும். ஆனால் விஜய்யின் அண்ணனான நடித்த விஜய்காந்த் முக்கிய கேரக்டரில் நடித்தது இந்த படத்திற்கு பலமாக அமைந்தது. இந்நிலையில். தற்போது விஜயகாந்த் ஜிம்மில் விஜய்க்கு உடற்பயிற்சி கற்றுக்கொடுக்கும்போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தில் விஜயகாந்த் விஜயுடன் ஸ்டண்ட் மாஸ்டர் ஜாக்குவார் தங்கம் உள்ளார். “தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “ More Stories on Vijay vijayakanth Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.
"லஞ்சம் கொடுப்பதோ பெறுவதோ சட்ட விரோதமானது. லஞ்சம் தொடர்பான புகார்களை நேரிலோ அல்லது தொலைபேசி வாயிலாகவோ தெரிவிக்க வேண்டிய முகவரி: இயக்குனர், விழிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை, எண். 293, M.K.N சாலை, ஆலந்தூர், சென்னை - 16 அல்லது உள்ளூர் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலர் இணையதளம்: www.dvac.tn.gov.in தொலைபேசி எண்கள்:(044) 22310989/22321090/22321085/22342142;தொலை நகலி: 044-22321005. இத்தளத்தில் தவறான தகவல்கள் இடம்பெற்றிருந்தால் அது குறித்த விவரங்கள் மற்றும் உங்களது கருத்துக்களை dtpwebportal@gmail.com என்ற EmailIDக்கு அனுப்பவும்) Terms and Conditions இவ்வலைத்தளம் சென்னை பேரூராட்சிகளின் இயக்குநரகம் மூலம் பராமரிக்கபட்டு வருகிறது. இத்தளத்தின் உள்ளடக்கமானது, துல்லியமாகவும், நம்பத்தகுந்த வகையிலும் இருப்பதற்கு, அனைத்து வகை முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இருப்பினும், இவற்றை, சட்டம் சார்ந்த அறிக்கையாக அமைக்கவோ அல்லது எந்த ஒரு சட்டம் சார்ந்த நோக்கங்களுக்கோ பயன்படுத்தக்கூடாது. இத்தளம் குறித்து, தெளிவின்மை அல்லது ஐயம் இருப்பின், பயனாளர்கள் தொடர்புள்ள துறை(கள்)/இதர மூலங்கள் வழியாக சரிபார்க்கவும் மற்றும் தேவையான ஆலோசனைகள் பெறவும் அறிவுறுத்தப்படுகிறது. எந்த சூழ்நிலையிலும் இத்தளத்திலுள்ள தரவுகளைப் பயன்படுத்துவதால் எழும் எந்தவொரு செலவு, அளவற்ற இழப்பு அல்லது சிதைவு, மறைமுகமான அல்லது அதன் காரணமாக ஏற்படும் இழப்பு அல்லது சிதைவுகள் ஆகியவற்றுக்கு இத்துறை கட்டுப்பட்டதல்ல. This website is maintained by Directorate of Town Panchayat. Though all efforts have been made to ensure the accuracy and currency of the content on this website, the same should not be construed as a statement of law or used for any legal purposes. In case of any ambiguity or doubts, users are advised to verify/check with the Department(s) and/or other source(s), and to obtain appropriate professional advice. Under no circumstances will this Department be liable for any expense, loss or damage including, without limitation, indirect or consequential loss or damage, or any expense, loss or damage whatsoever arising from use, or loss of use, of data, arising out of or in connection with the use of this website.
இந்திய தமிழகத்தில் தங்கியுள்ள இலங்கையைச் சேர்ந்த இந்திய வம்சாவளியினருக்கு இலங்கை பிரஜாவுரிமை வழங்குவதற்கு ஏற்ற வகையில் பிரஜாவுரிமை சட்டத்தில் திருத்தம் செய்யப்படவிருக்கிறது. இதற்கேற்ப 2003ம் ஆண்டின் 35ம் இலக்க இந்திய வம்சாவளியினருக்கு பிரஜாவுரிமை வழங்கல் சட்டத்தில் திருத்தம் செய்யப்படுவது தொடர்பான சட்டத்திருத்த மூலம் அமைச்சர் தினேஷ் குணவர்த்தனா நேற்று பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார். இதேவேளை 1988ம் ஆண்டின் 39ம் இலக்க நாடற்றவர்களுக்குப் பிரஜாவுரிமை வழங்குதல் சிறப்பேடுகள் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான பிரேரணையொன்றையும் அமைச்சர் தினேஷ் சபையில் சமர்ப்பித்தார். இந்தச் சட்டத் திருத்தத்தின்படி தமிழ் நாட்டில் அகதிகளுக்கான சிறப்பு முகாமில் வசிக்கும் இலங்கையைச் சேர்ந்த இந்திய வம்சாவளியினர் அனைவரும் இலங்கை பிரஜாவுரிமையை பெறுகின்றனர். சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை குறைந்தபோதும் பொருட்களின் விலையில் வீழ்ச்சியில்லை. தொழிலாளர்களின் சம்பளத்தை உயர்த்த நடவடிக்கை அவசியம் சர்வதேச சந்தையில் எண்ணெயின் விலை பெரும் வீழ்ச்சியடைந்துள்ள போதிலும் இலங்கையில் அத்தியாவசியப் பொருட்களின் விலையும் குறைக்கப்படாமல் உள்ளமை எவ்வகையிலும் நியாயமானதல்ல. பெருந் தோட்டத் தொழிலாளர்கள் உட்பட உழைக்கும் தொழிலாளர்கள் வாழ்க்கை செலவு அதிகரிப்பினால் தினசரி வாடி வருகின்றனர். முன்பு எண்ணெய் விலை அதிகரிப்பினால் வாழ்க்கை செலவும் அதிகரித்தமைக்கு காரணமாய் அமைந்தது. அண்டை நாடான தமிழகத்தில் தற்போத ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய்க்கு வழங்குகிறார்கள். உணவுப் பொருட்கள் உட்பட மண்ணெண்ணெய் வறுமை கோட்டின் கீழ் வாழ்கின்ற மக்களுக்கு மானிய விலையில் வழங்கப்படுகி;ன்றது. இதே போல் நாட்டு மக்களின் பசிப் பிணியை போக்க வேண்டியது அரசின் கடமையாகும். எனவே எதிர்வரும் வரவு செலவு திட்டத்தில் தொழிலாளர்களின் வாழக்கை செலவை குறைக்கவும், எண்ணெய் விலையை குறைக்கவும், சம்பளத்தை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெருந் தோட்டத் தொழிற்சங்க கூட்டமைப்பின் செயலாளர் ஓ. ஏ. இராமையா தெரிவித்துள்ளார். பத்து வருடங்களாக தற்காலிக குடிசைகளில் வாழும் தொழிலாளர்கள் நுவரெலியா பம்பரக்கலை தோட்டத்தில் சுமார் 48 குடும்பங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் கடந்த 10 வருடங்களாக தற்காலிக குடிசைகளில் வாழ்ந்து வருகின்றனர். இந்த தற்காலிக குடிசை ஒன்றில் 4,5 பேர் பல சிரமங்களுக்கு மத்தியில் வாழ்கின்றனர். இது சம்பந்தமாக தோட்ட நிர்வாகத்துடன் தொழிற்சங்கங்கள் பேச்சுவார்த்தை நடத்தும்பொழுது காணி வழங்க நடவடிக்கை எடுப்பதாகக் கூறப்படுகின்ற போதிலும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையென தொழிலாளர்கள் விசனம் தெரிவிக்கின்றனர். இத்தோட்டத்தில் சுமார் 160 குடும்பங்கள் வசிக்கின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.
மாதவிலக்கு காலத்தை பெண்கள் மிகவும் கொடுமையான ஒன்றாக எண்ணுவார்கள். அந்த சமயத்தில் அவர்களுக்கு ஏற்படும் வயிற்று வலி, முதுகுவலி போன்றவை அவர்களை பாடாய்ப்படுத்தும். மாதவிலக்கு சுழற்சியானது 28- 30 நாட்களுக்குள் ஏற்பட்டால் உடல் ஆரோக்கியம் சீராக உள்ளது என்று அர்த்தம். மாதவிலக்கு ஏற்படும்போது உடல் அசதி, கால் வலி, தசைவலி உடன் வருகிறதே என வருத்தப்படாதீர்கள். சீரற்ற முறையில் ஏற்படாமல் இருந்தால் அதிக பிரச்சனைகளை ஏற்படுத்தும். மாதவிலக்கு சீரற்ற முறையில் 25 நாட்களுக்கு ஒருமுறை வந்தாலோ அல்லது கால தாமதமாக வந்தாலோ உங்கள் உடலில் பிரச்சனை இருப்பதற்கான அறிகுறியாகக் கூட இருக்கலாம். பருவகால மாற்றம் அல்லது வேறு ஏதாவது பிரச்சனையின் காரணமாக ஒரு முறை ஏற்படலாம். ஆனால் தொடர்ந்து சீரற்ற மாதவிலக்கு ஏற்பட்டால் மருத்துவ ஆலோசனை பெறுவது சிறந்தது. சில உடல்நல பிரச்சனைகளாலும் சீரற்ற மாதவிலக்கு ஏற்படலாம். இங்கு சீரற்ற மாதவிலக்கு உண்டாவதற்கான காரணம் தான் என்ன?… அளவுக்கு அதிகமான உடற்பயிற்சி, உணவுக்கட்டுப்பாட்டை மேற்கொள்ளுதல், உடலில் கொழுப்பின் அளவு மிகவும் குறையும். கொழுப்பு பாலின ஹார்மோன்கள் சுரப்பில் இன்றியமையாத ஒன்று. கொழுப்பு குறையும் போது ஈஸ்ட்ரோஜன் சரியாக சுரக்காது. இதனால் சீரற்ற மாதவிலக்கு ஏற்படும். தைராய்டு பிரச்சனை மற்றும் மன அழுத்த நோய்களுக்கு எடுத்துக் கொள்ளும் மாத்திரைகள் மாதவிலக்கு சுழற்சிக்கு இடையூறு விளைவிக்கும். கொழுப்பு ஹார்மோன் உற்பத்திக்கு தேவை என்றாலும், அளவுக்கு அதிகமாக கொழுப்பு அதிகரிக்கும்போது, ஹார்மோன்களுக்கு இடையே சம நிலையற்ற நிலை உருவாகிவிடும். இதுவே மாதவிலக்கு பிரச்சனைகளைத் தோற்றுவிக்கும். மன அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடிய ஹார்மோன் அதிகமாகும்போது, அது பல பிரச்சனைகளை ஏற்படுத்தும். மன அழுத்தம் இனப்பெருக்க மண்டலத்தை பாதிப்பதால் சீரற்ற மாதவிடாய் ஏற்படும். போதுமான அளவு தூங்காமல் இருத்தல், தாமதமாக தூங்குதல், இரவு நேரப் பணிகளில் ஈடுபடுபவர்கள் பெரும்பாலும் சீரற்ற மாதவிலக்கு பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். வயதாவதும் சீரற்ற மாதவிலக்கிற்கான ஒரு காரணம். மெனோபஸ் நெருங்கும் சமயத்தில் சீரற்ற மாதவிலக்கு ஏற்படும். இது தவிர்க்க முடியாதது. இது குறித்து கவலையடைய தேவையில்லை.
எமது பிரச்சனைகளை பரப்புரை செய்யவேண்டியது மிகமுக்கியமானதொன்று. அதிலும் எமது பிரச்சனையை தெரியாதவர்களுக்கு விளங்கப்படுத்த வேண்டியது அவசியமானதொன்று. இங்கு யார் பார்வையாளர் என்பது முக்கியமானதொன்று. முன்பொருமுறை நலன்புரி அமைப்பொன்று எயிட்ஸ் நோய் பற்றியதமிழர்களுக்கான கூட்டம் ஒன்று நடாத்தியது.அக்கூட்டத்தில் மிகவும் அக்கறையோடு அந்நோய்பற்றி விளங்கப்படுத்திக் கொண்டிருந்தார்கள். ஆனால் பார்வையாளர்களில் 80 விகிதமானோர் 65 வயதிற்கு மேற்பட்டவர்களும், மற்றையவர்கள் வைத்தியத்துறை சார்ந்தவர்களாகவும், வைத்தியர்களாகவும் இருந்தார்கள்.சில விடயங்களை நாம் தெரிந்தோ, தெரியாமலோ கொல்லர் தெருவில் ஊசிவிப்பது போல,செய்ய வேண்டும் என்பதற்காக செய்வது போலச் செய்து வருகின்றோம். இதனால் யாருக்கும் பிரயோசனம் இல்லை. இதைச் செய்தோம், இன்னார் செய்தார்கள் என்று பதிவு செய்யப்படுவதைத்தவிர. மனிதவலுவும், பொருளாதாரவலுவும் குன்றியுள்ள இக்காலப்பகுதியில் மிக கவனமாக குறைந்த வளத்தைக் கொண்டு கூடியபலன் பெறுவது இன்றியமையாதது. இதைவிடக் கொடுமையானதொன்று, அதை பாலா அண்ணாவும் நகைச்சுவை கலந்த மனவருத்தத்தோடு ஒருமுறை குறிப்பிட்டார். அதாவது “இவங்களை லொபி பண்ண என்று விட்டால் இவங்கள் கொஞ்சம் தலையெடுத்தவுடன், அவங்களுடைய சொல்லக் கேட்டுக்கொண்டு வந்து, எங்களை லொபி பண்ண வெளிக்கிடுகிறான்கள்” இப்பிடி தீட்டிய மரத்திலேயே கூர்பார்ப்பவர்கள் எத்தனை பேர்! இப்பொழுது கூட “நாங்கள் சர்வதேசத்தை பரப்புரை செய்து, மிகவும் கடினமாக உழைத்து ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந்துள்ளோம்,அதில் பல குறைகள் இருந்தாலும் `do not rock the boat’ என்ற பாங்கில் மக்களை அமைதியாக இருக்கும் படி, எமக்கு அவர்கள் சொன்னதைஅப்படியே உள்வாங்கி வந்து, இங்கு ஒப்புவிக்கிறார்கள். எம்மவர்கள் எங்களின் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு பரப்புரை செய்கிறார்களா? அல்லது அவர்களின் முன்வைக்கும் தீர்வை எம்மை ஏற்கும் படி, எம்மவர்களே எமக்கே பரப்புரைசெய்கிறார்களா? நாங்கள் எவ்வளவோ இழந்து விட்டோம், இனி இழப்பதற்கென்று ஒன்றுமே பெரிதாக இல்லை. இழந்ததை மீட்பதைத் தவிர. வடக்கு கிழக்கில் இருக்கும் இராணுவத்தை அகற்றுகிறார்களா, இல்லை. சரி குறைக்கிறார்களா என்றால் அதுவும் இல்லை. இராணும் ஒருபுறம், சி.ஐ.டிகள் எல்லாப்புறமும் என அங்குள்ள மக்கள் நித்திய சோதனைக்குள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். நிலமீள் கையளிப்பு, கைதிகள் விடுதலை எல்லாம் மிகவும் மந்தகதியிலேயே நடக்கின்றது. ஐந்து வருடங்கள், பத்து வருடங்கள், இன்னும் சிலர் 15,20 வருடங்கள் என சிறை கம்பிகளுக்கு பின்னால்நாளை எண்ணிக்கொண்டிருக்கிறார்கள். நாங்கள் இலவுகாத்த கிளி போல அவர் வந்து பிரச்சனையைத் தீர்ப்பார், இவர் எங்களைப்பற்றிபேசிக்கொண்டிருக்கிறார் என்று அவர்கள் சொல்லும் கதையை கேட்டுக்கொண்டிருக்கிறோம். காலத்திற்கு காலம் தமிழ் பிரதேசங்களில் மனிதப்புதைகுழிகளையும், பாழடைந்த கிணறுகளில் உடலங்களும் கண்டுபிடிக்கப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன. உலகத்திலே காணாமல் போனவர்கள் நாடுகளின் பட்டியலில் இலங்கை இரண்டாவது இடத்தில் உள்ளது. இன்னும் முதலாது இடத்தை பிடித்துவிடும் சாத்தியமும் உள்ளது. குடும்ப உறவுகள்இருக்கின்றார்களா? இல்லையா? என்று எதுவித முடிவும் இல்லாத நிலையில், எதிர்பார்ப்புகள், ஏங்கங்களுடன் வாழ்ந்து வருகிறார்கள். அவர்கள் தான் இந்த அரசியல் தீர்வு காணுமா?இனி தருவதை வேண்டிக்கொண்டு மௌனமாக இருப்பதா என்று முடிவெடுக்க வேண்டியவர்கள், அவர்களே வீதிக்கு இறங்கி மழையையும், வெய்யிலையும் பார்க்காது போராடும்போது, எமது பரப்புரை செய்யும் அரசியல் தரகர்களுக்கு விளங்கவேண்டும் தமக்களிக்கப்பட்ட கடமையோ, தாங்கள் முன்வந்து ஏற்றுக்கொண்ட கடமையோ தீரவில்லை என்று. இது போதாதென்று இப்போ இரகசிய தடுப்புமுகாங்களும், சித்திரவதைக் கூடங்களும் இருப்பதை சர்வதேசமே ஒப்புக்கொண்டுள்ளது. இப்படி இன்னும் எத்தனை வதைகூடங்களில் அங்கு எமது உறவுகள் தினமும் செத்துக்கொண்டிருக்கிறார்ளோ தெரியாது. இந்த நிலையில் எமது பரப்புரையை விடாது, எமது மக்களுக்கு நிரந்தர தீர்வு ஒன்று கிடைக்கும் வரைதொடர்ந்து செய்வது முக்கியமானது. தொடர் போராட்டங்கள்தான் அரசியல் தீர்வை அமுல்படுத்துவதற்கும், நிரந்த தீர்வை நோக்கி பயணிக்க வழிவகுக்கும். பரப்புரையாளர்கள், தமிழ் அரசியல் வாதிகளை கட்சி கடந்து மக்களுக்காக குரல் கொடுக்க வைக்க வேண்டும். புலம் பெயர் மக்கள், தமிழ் அரசியல்வாதிகள் எம் பிரச்சனையை தீர்த்து வைப்பார்கள் என்று நம்பிக்கொண்டிருக்காமல், சிங்கள அரசியல் தலைவர்வரும் போது கொடுக்கும் அதே அழுத்தத்தை, வேறு கோணத்தில் தமிழ் அரசியல் தலைமைகளுக்கும் கொடுத்து அவர்களையும் அவர்கள்வகிக்கும் பொறுப்புக்கு பதில் அளிக்க வைக்கவேண்டும். இல்லாவிட்டால் அவர்கள் ஆட்சியில் இருக்கும் மட்டும் ஏதாவது சாக்கு போக்குசொல்லி அங்கு தலையையும், இங்கு வாலையும் காட்டி இரு இடத்திலும் இருப்பைத் தக்க வைத்துக்கொள்வார்கள். அந்த நிலை மாற வேண்டும். தேர்தல் நேரத்தில் சொன்ன வாக்குறுதிகளை நடைமுறைப்படுத்துவதை கண்காணிப்பதோடு அது பற்றி அவர்களின் ஒவ்வொரு வெளிநாட்டு விஜயத்தின் போதும் கேள்வி கேட்க வேண்டும். அடுத்தமுறை வெளிநாட்டுக்கு வருவது என்றால் அவர்கள் ஒருதடவைக்கு இருதடவை யோசித்து பதிலோடு வரவேண்டும்.
இலக்கியம் திரைவிருந்து சிற்றிதழ்கள் மருத்துவம் நளபாகம் அறிவியல் வரலாறு சிரிப்'பூ' சட்டம் தகவல் களம் சுற்றுலா கட்டுரைகள் கவிதைகள் சிறுகதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் எழுத்தாளர்கள் குறும்படங்கள் தமிழோசை பொன்னியின் செல்வன் சிவகாமியின் சபதம் திரை விமர்சனம் செய்திகள் புதுவிசை தலித் முரசு சமூக விழிப்புணர்வு பெரியார் முழக்கம் அணி இளைஞர் முழக்கம் தமிழர் கண்ணோட்டம் புன்னகை மாற்று மருத்துவம் செய்தி மடல் சஞ்சாரம் கருஞ்சட்டைத் தமிழர் கனவு கவிதாசரண் மண்மொழி மாற்றுவெளி சிந்தனையாளன் செம்மலர் தமிழ்த் தேசம் மேலும்... பொது இதயம் & இரத்தம் வயிறு தலை பாலியல் உடல் கட்டுப்பாடு சைவம் அசைவம் விண்வெளி சுற்றுச்சூழல் தொழில்நுட்பம் புவி அறிவியல் இயற்கை & காட்டுயிர்கள் தமிழ்நாடு இந்தியா உலகம் வரலாற்றில் இன்று சர்தார்ஜி குட்டீஸ் வக்கீல் & மருத்துவம் பொது அரசியல் குடும்பம் உலகம் இந்தியா தமிழ்நாடு Keetru Science Technology தொழில்நுட்பம் மனம் என்பது என்ன? முனைவர். க. மணி. அதிகாலையில் எழுந்ததும் பல் துலக்கிவிட்டு, நெற்றிக்கு இட்டுக்கொண்டு, நேற்று பாதியில் நிறுத்திவிட்ட பாடத்தைப் படிக்க ஆரம்பிக்கிறார் நமது நண்பர் முருகன். இந்த வேலைகளை செய்வதற்கு அவரது கண்கள் முதலான ஐம்புலன்களும் கால் கை முதலான உடல் கருவிகளும் உதவுகின்றன. கண் முதலான கருவிகளை அறிவுக் கருவிகள் என்றும் கை முதலான கருவிகளை செய்கருவிகள் என்றும் நாம் அழைக்கலாம். இவை யாவும் முருகனின் உடம்புக்கு வெளியே நிகழும் செயல்களுக்குக் காரணமாக உள்ளன. ஆதலால் இவற்றைப் புறக் கருவிகள் என்று அழைப்பது வழக்கம். முருகனின் செயல்களுக்கெல்லாம் புறக்கருவிகள் மட்டுமே காரணம் என்று எப்படிச் சொல்ல முடியும்? இவை வேலைகளைச் செய்வதற்கு முன்பு முருகனுக்குள்ளே, அவனது மூளையில் எண்ணங்கள் உருவாக வேண்டுமல்லவா? அந்த எண்ணங்களின் தொகுப்பைத்தான் நாம் பொதுவாக மனம் என்று குறிப்பிடுகிறோம். மனமானது உள்ளிருந்தபடி செயல்படுவதால்தான் முருகனின் உடல் வெளியிருந்தபடி செயல்படுகிறது. ஆதலால் மனத்தொகுப்பை அகக் கருவி என்று சொல்கிறார்கள். கண்முதலான அறிவுக்கருவிகளையும், கை முதலான செய் கருவிகளையும் புறக்கருவிகள் என்றும் மனத்தை அகக்கருவி என்றும் வகைபடுத்துகிறோம். மனம் என்ற அகக்கருவியை மனம், புத்தி, அகங்காரம், சித்தம், என்று விரித்து நான்காவும் சொல்லலாம். மனம் என்று ஒரு பொதுச் சொல்லலும் அழைக்கலாம். மனத்தை ஒரு பொருளாகக் கொள்ளாமல் மனம், புத்தி, சித்தம், ஆங்காரம் என்று நான்காக விரித்து அழைப்பதற்குக் காரணம் இருக்கிறது. மனம் செயல்படும் விதத்திலிருந்து இப்படி நால்வகை பிரிவுகளை அறிய முடிகிறது. மேலை நாட்டு விஞ்ஞானமும் உளவியலும் மனத்தை இப்படி பாகுபடுத்தி அறிய முற்படுவதில்லை. இந்திய சித்தாங்களில் மட்டுமே இது போன்ற விரிவான விளக்கங்கள் காணப்படுகின்றன. கண்கள் காண்பதை காது அறிவதில்லை. அதுபோலவே காது அறிந்ததை கண்களோ நாக்கோ அறிவதில்லை. எனவே அறிவுக்கருவிகளாகிய இவை வெறும் கேமரா, மைக் போன்ற சாதனங்களே ஒழிய கண்டதையோ உண்டதையோ கேட்டதையோ தாமாக அறிவதில்லை. மூளையில் இவற்றிற்கென்று ஒதுக்கப்பட்ட பகுதிகளில் இவற்றிலிருந்து வழங்கப்பட்ட தகவல்கள் யாவும் உணர்வுகளாக மாற்றப்பட்டு மனம் என்ற கருவியாலேயே அறியப்படுகிறது. மனமானது ஐந்து புலன்களிலிருந்தும் வரும் தகவல்களை ஒருங்கிணைத்து அறிகிறது. மனத்தின் வேலை தகவல்களை ஒருங்கிணைப்பதாக இருந்தாலும் அதனால் கண்டதையோ கேட்டதையோ இன்னதென்று அறிவதற்கு அது புத்தியின் துணை வேண்டும். புத்தி என்பது கம்ப்யூட்டரின் ஹார்ட் டிஸ்க் போன்றது. அதில் பிறந்தது முதல் கண் காது முதலான அறிகருவிகள் மூலம் அறிந்தது, அனுபவத்தால் கற்றது, பள்ளிக்கூடத்தில் பயின்றது ஆகிய அனைத்தையும் பதித்து வைத்துக்கொண்டுள்ளது. மனித மூளையின் செரிபிரல் கார்ட்டெக்ஸின் பெரும்பகுதி இந்தத் தகவல்களுக்காகத்தான் ஒதுக்கப்பட்டுள்ளது. புத்தியில் தகவல்களைப் பதிக்கும் வேலையை மூளையின் மையத்தில் இரு பக்கவாட்டிலுமுள்ள ஹிப்போகேம்ப்பஸ் என்ற எழுத்தாணிதான் செய்கிறது. மனமானது புத்தியின் உதவியுடன் கருவிகள் மூலம் அறிந்ததை இன்னது என்று தெளிகிறது. மனத்தை நாம் கம்ப்யூட்டரின் ரேம் நினைவாகக் கொள்ளலாம். தற்காலிக நினைவு மட்டுமே மனத்தில் இருக்கும். அவை நிரந்தரமாக்கப்படவேண்டுமாயின் புத்தியில் அவை பதிந்தாக வேண்டும். சித்தம் என்பது சிந்திக்கும் வேலையைச் செய்யும் அகக்கருவி. புத்தி வெறும் நினைவகமாக இருப்பதால் அது கோப்புகளை சேமித்து வைக்கும் கிடங்கு என்றுதான் கொள்ளவேண்டும். எனவே சித்தம் எனும் அகக்கருவி மனத்தினால் அறிந்ததை புத்தியின் கண் உள்ள தகவலின் அடிப்படையில் இது இப்படித்தான் என்று நிச்சயிக்கும் வேலையையும் எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்கும் செயலையும்; இப்படி செய்யலாம் என்று திட்டம் போடும் வேலையையும் செய்கிறது. மனம் அறிந்ததை சித்தமானது புத்தியின் உதவியால் நிச்சயம் செய்கிறது என்பதை அறிந்தோம். இத்தனை செயலும் யாருக்காக எனில் அது ஆங்காரம் எனப்படும் இன்னொரு அகக்கருவியின் பயனுக்காகவாம். ஆங்காரம் அல்லது அகங்காரம் இல்லாமல் மனமோ புத்தியோ சித்தமோ செயல்பட்டுப் பயனில்லை. கம்ப்யூட்டரில் புத்திக்கு நிகரான திட நினைவகம் இருந்தும், மனத்திற்கு நிகரான ரேண்டம் அக்சஸ் நினைவு இருந்தும், சித்தத்திற்கு நிகரான மென் பொருட்கள் செயல்பட்டாலும் அதில் ஆங்காரம் எனும் அங்கம் இல்லாதால் கம்ப்யூட்டர் என்ன செய்தாலும் அதன் பயனை அது அனுபவிக்க முடியாமல் போகிறது. மனம், புத்தி, சித்தம், என்ற மூன்று உறுப்புகளை கம்ப்யூட்டர் பெற்றிருந்தாலும் அதற்கு ஆங்காரம் எனப்படும் "நானிருக்கிறேன், என்னுடையது" போன்ற செயல்கள் இல்லாததால் அது சடக் கருவியாகவே உள்ளது. இன்றைய நவீன உளவியலும் நரம்பியலும் சேர்ந்து மூளையின் செயல்களை அக்குவேறு ஆணிவேறாகப் பிரித்து ஆராய்ந்து கொண்டிருக்கிறது. அவர்கள் மனம் புத்தி சித்தம் ஆங்காரம் என்று வேறுபடுத்தி ஆராயாவிட்டாலும் மேற்கூறிய பகுதிகளை வேறு பெயர்களில் சுட்டிக்காட்டியபடி இருக்கிறார்கள். ஆங்காரம் என்பதை அவர்கள் கான்சியஸ் என்று அழைக்கிறார்கள். கான்சியஸானது மூளையில் எப்படி உருவாகிறது என்பதில் நிறைய கருத்து வேறுபாடுகள் உள்ளன. புத்தி எனும் பகுதியை மெமொரி என்று அழைக்கிறார்கள். மனம் என்பதை மென்ட்டல் ஆக்டிவிட்டி என்றும் வெறுமனே மைன்ட் என்றும் அழைக்கிறார்கள். சித்தம் என்பதை 'தாட்' என்று சொல்கிறார்கள். உயிரியல், நரம்பியல், மற்றும் உளவியல் வல்லுநர்கள் மனத்தை மூளையின் செயல்களினால் ஏற்படும் ஒரு நிகழ்வதாக கருதி மூளை நரம்பமைப்பின் அடிப்படையில் மனத்தை விளக்குகிறார்கள். இதை நியூரல் கோரிலேட்ஸ் ஆஃப் கான்சியஸ்னஸ் என்று அழைக்கிறார்கள். மனமானது மூளையில்தான் தோன்றி செயல்படுகிறது என்பதற்கு நிறைய ஆதாரங்கள் இருக்கின்றன. மூளையில் அடிபட்டால் மனம் கலக்கமடைவதை நாம் அறிகிறோம். மனத்தில் ஏற்படும் சித்தக் கோளாறுகளுக்கு மூளையில் செயல்படும் மருந்தைத்தான் பயன்படுத்துகிறோம். மூளையைச் சரிசெய்தால் மனம் சரியாவதை அறிகிறோம். மூளையை பாதிக்கும் கள் சாராயம் மற்றும் லாகிரிப் பொருட்கள் மனத்தையே பாதிக்கின்றன என்பதையும் நாம் அறிவோம். எனவே சுருங்கச் சொல்லவேண்டுமாயின் மனமும் மூளையும் ஒன்றே. மூளை கருவி என்றால் மனம் அதன் செயலாகும். இது இப்படியிருக்க சித்தாந்திகள் மனத்தை மூளையிலிருந்து பிரித்து சுதந்திரமாகவும் தனியாகவும் செயல்படும் கருவியாக வைக்கிறார்கள். மனிதன் இறந்து அவன் உடல் மண்ணில் மறைந்த பிறகும் மனமானது சூக்கும வடிவத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் என்று சொல்கிறார்கள. இந்த இடத்தில் அறிவியலும் ஆன்மிகமும் முறண்பட்டுக் கொள்கின்றன. மனமானது மூளையிலிருந்து பிரிக்க முடியாதது என்று அறிவியல் சொல்ல, ஆன்மிகமோ மூளையிலிருந்து தனித்தும் மனம் செயல்படும் என்று சொல்கிறது. அறிவியல் தன் கருத்தை வலியுறுத்த ஏராளமான ஆதாரங்களை முன்வைக்கிறது. ஆனால் ஆன்மிகமோ சித்தர்களின் சொல் ஒன்றையே ஆதாரமாகக் கொள்கிறது. வேறு நேரடியான காட்சி ஆதாரம் அதனிடம் இல்லை. அறிவியல் ஆய்வாளர்கள் மேலும் ஆராய்ச்சி செய்தால் ஆன்மிகம் சொல்வது உண்மையா இல்லையா என்பது வெளிப்படும். அறிவியல்கூட மூளை என்ற சடப்பொருளிலிருந்து எப்படி மனம் என்கிற உணர்வு எழும்புகிறது என்பதற்கு சரியான விளக்கங்களைத் தரவில்லை. அவர்களும் குழம்பிக் கொண்டிருக்கிறார்கள். மூளையின் செயலும் கம்ப்யூட்டரின் செயலும் அடிப்படையில் ஒன்றுபோலவே இருக்கின்றன. இரண்டிலும் மின்சாரம்தான் செயல்படும் சக்தியாக இருந்துவருகிறது. நரம்பில் மின்சாரம் பாய்வதுபோல கம்ப்யூட்டரின் சிப்பத்திலும் மின்சாரமே பாய்ந்து வேலைகளை செய்கிறது. அப்படியானால் மூளையில் மனம் எனும் உணர்வு எழுவது போல கம்ப்யூட்டரிலும் ஒரு உணர்வு எழுந்தாக வேண்டும். வருங்காலத்தில் மனிதர்கள் கம்ப்யூட்டரை மனித நியூரான்களுக்கு நிகராகச் செயல்படும்படி வைத்துவிட்டார்களானால் அப்போது மனம் என்ற உணர்வு கம்ப்யூட்டருக்கு ஏற்படலாம். ரோகர் பென்ரோஸ் போன்ற தலை சிறந்த கணித கணிணி மேதைகள் மனிதனால் கம்ப்யூட்டருக்கு மூளையின் செயலைப்போன்ற மென்பொருளை வழங்கவே முடியாது என்று உறுதியுடன் இருக்கிறார்கள். மூளையின் செயல்பாட்டைப்போல கம்ப்யூட்டரால் ஒருக்காலும் செய்யவோ செய்விக்கவோ முடியாது என்று நிச்சயமாக நம்புகிறார்கள். ஒருவேளை சித்தாந்திகள் கூறுவதுபோல மூளை வெறும் கருவி மாத்திரம்தனோ; அதில் மனம் எனும் வேறு ஒரு சக்தி நுழைந்து அதை ஆட்டுவிக்கிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது. அப்படி மனமானது மூளைக்கு வேறான சக்தி என்றால் ஏன் பிறந்தபோதே அது முழுவீச்சில் செயல்படாமல் வயதுக்கேற்ப, மூளை வளர்ச்சிக்கெற்ப அதுவும் வளருகிறது? மூளைக்கு வெளியிலிருந்து செயல்படும் ஒரு சக்தி மூளையை வாகனமாகப் பயன்படுத்துமேயானால் அது வாகனத்தின் வளர்ச்சியை நம்பியிருக்கக்கூடாது. என்று வாதிடத் தோன்றுகிறது. ஒரு வேளை மூளை மெள்ள முதிர்வடைவதால்தான் மனத்தின் செயலும் மெள்ள முதிர்வடைவது போலத் தெரிகிறதோ என்றும் வாதிடலாம். இந்த வாத விவாதங்கள் பல நூற்றாண்டுகளாக உலகெங்கும் நிகழ்ந்தபடி இருக்கிறது. முடிவு என்று வருமோ தெரியவில்லை. - முனைவர். க. மணி. பேராசிரியர், பி.எஸ்.ஜி. கலை அறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர். ([email protected])  நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க... வாசகர்களின் கவனத்திற்கு... நீங்கள் படித்து ரசித்த அறிவியல் செய்திகளை கீற்று இணைய தளத்திற்கு அனுப்பலாம். அவ்வாறு அனுப்பும்போது செய்திக்கான ஆதாரத்தை தவறாமல் குறிப்பிடவும். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected].
அவ்வருடம் வகுப்பில் நாற்பத்தேழு குழந்தைகள் இருந்தார்கள். அப்போதெல்லாம் காலை எட்டு மணிக்குப் பாடங்கள் தொடங்கிப் பத்துமணி வரை நடக்கும். பின் பதினைந்து நிமிட இடைவேளை. பிள்ளைகள் சற்றுநேரம் வெளியே போய்த் தாங்கள் கொண்டு வந்திருக்கும் சிற்றுண்டிகளை உண்டு முடித்து, குளிர் பானங்களை அருந்திவிட்டு வருவார்கள். தொடர்ந்து பாடங்கள் நடைபெற்று, பன்னிரண்டு மணியுடன் வகுப்புகள் முடிவுறும். ஒரு மாணவன் இடைவேளையின் பின்னர் வகுப்பில் இல்லாததை அவதானித்தேன். மறு நாள் அவனிடம் விசாரித்த போது அப்பா அழைத்துப் போனதாகச் சொன்னான். 'இனிமேல் இப்படிச்செய்யாதே' என்று சொல்லி விட்டுவிட்டேன். அன்றும் அவன் இடைவேளையின் பின்னர் மாயமாகி விட்டான். மறு நாள் ஆளைத் தப்ப விடக் கூடாது என்று இடைவேளை விடுவதற்கு முன்னதாகவே கதவுக்குக் கிட்ட நாற்காலியைப்போட்டு உட்கார்ந்து அப்பியாசக் கொப்பிகளைத் திருத்த ஆரம்பித்தேன். எதிர்பாராத வேளை திடீரென ஒருவர் என்னை அணைத்து இரு கன்னங்களிலும் முத்தமிட திடுக்கிட்டு நிமிர்ந்தேன். 'டீச்சர், போய்விட்டு வருகிறேன்' என்று சொல்லிவிட்டுத் தடுக்கு முன் பதிலுக்குக் காத்திராமல் ஓடி விட்டார் அவர். மறு நாள் அவரது தந்தையை அழைத்து, பாடசாலை விட்டதும் தான் அழைத்துப் போகலாம் என்று சொல்லி விட்டேன். அதன் பின்னர் ஒழுங்காக வகுப்பிலிருந்தார். நான் ஒய்வு பெற்ற பின்னர் ஒருதடவை தெருவில் இந்த மாணவனைச் சந்தித்தேன். வணக்கம் தெரிவித்து நலம் விசாரித்து சென்றார். Posted by seba at முற்பகல் 12:10 12 கருத்துகள்: Labels: அனுபவங்கள் திங்கள், 26 ஏப்ரல், 2010 அத்தான் ஆசிரியையாய் என் அனுபவங்கள் அத்தான் பெரும்பான்மையாக புதிதாகப் பாடசாலையில் சேருகின்ற (அதாவது முதலாம் ஆண்டு) மாணவர்களுக்கே என்னை ஆசிரியராக நியமிப்பார்கள். முதல் நாள் அழுகையுடன் தான் அநேகர் வருவார்கள். அன்றும் தொடர்ந்து வந்த நாட்களிலும் பல சுவையான, மறக்க முடியாத அனுபவங்களும் ஏற்பட்டதுண்டு. ஒரு மாணவரை, ஒருவர் வகுப்பில் விட்டு விட்டுப் போகவும் மாணவன் 'அத்தான், அத்தான்' என்று அழுது கொண்டு பின்னால் ஓடினார். ஒருவாறு சமாளித்து அழைத்து வந்து வகுப்பில் உட்கார வைத்தேன். சிறிது நேரத்தின் பின் அதிபர் வகுப்பைப் பார்வையிட வந்தார். அவர் என்னிடம் பேசி விட்டு வெளியே போகவும் சின்னவர் 'தம்பி, தம்பி இங்கே வாருங்கோ' என்று அழைக்க அதிபரும் நகைச்சுவையாகப் பேசுபவர், ' என்ன அண்ணே! உங்களுக்கு என்ன வேண்டும்?' என்றார். 'எனது அத்தானை வந்து என்னை வீட்டுக்கு அழைத்துப் போகச் சொல்லுங்கள்.' அதிபர் 'சரி அவர் வரும்வரை வகுப்பில் இருங்கள்,' என்றுசொல்லி விட்டுப் போனார். மதியம் அழைத்துப்போக வந்தவரிடம் 'மாணவன் உங்களுக்கு என்ன உறவு?' என்று கேட்டேன். 'நான் அவனுடைய அப்பா' என்றதும் தான் அவனது தாயார் அழைப்பதைக் கேட்டு அழைக்கிறான் என்பது புரிந்தது. Posted by seba at முற்பகல் 1:37 12 கருத்துகள்: Labels: அனுபவங்கள் வியாழன், 22 ஏப்ரல், 2010 வியட்நாம் நண்பி அளித்த விருந்து வியட்னாம் நண்பி எங்களை ஒரு நாள் விருந்துக்கு வரும்படி அழைத்தார். நான் மறுக்கவும் காரணம் கேட்டார். "ஒவ்வாமை காரணமாக அநேக உணவுகளை நான் சாப்பிட முடியாது என்றேன்." பரவாயில்லை உங்களுக்குச் சரிவராதவற்றை விட்டு விடுகிறேன். நாளை எனது தாய்லாந்து நண்பி ஊருக்குப்போகிறார். அவரை உங்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டும். கட்டாயம் வரவேண்டும்." என்று வற்புறுத்தினார். அவரது கணவர் வந்து எங்களைக் காரில் அழைத்துப் போனார். தாய்லாந்துப்பெண், அவர் கணவர் நியூஸிலாந்தைச சேர்ந்தவர். அவர்களது குழந்தை, எங்களது நீண்ட நாள் நண்பி ஜெசி, குழந்தைகள் இருவர், இன்னுமோர் சீனப் பெண், இத்தனை பேர்தான் விருந்துக்கு வந்தவர்கள். உள்ளே போனதுமே எனக்குச் சமையல் வாசனையில் மூச்சுத் திணற ஆரம்பித்தது. நான் "inhaler" ஐ எடுத்துக்கொண்டு சற்று நேரம் வெளியே நின்று விட்டேன். திரும்ப உள்ளே வந்தவுடன் ஜெஸியின் குழந்தைகள் அருகில் வந்து உட்கார்ந்து விட்டார்கள். சாப்பாட்டு மேசைக்குப் போகும் வரை அவர்கள் அசையவில்லை. பின்னர் அறிமுகப்படலம் நடந்தது. சற்று நேரம் உரையாடிக்கொண்டிருந்தோம். பிறகு, சாப்பிட அழைத்தார்கள். மேசையில் எனக்காகவென பிரியாணி, சிக்கன் கறி, சலட் என்பன தயாராக இருந்தன. மேலும் பல உணவுகள் தயாராக இருந்தாலும எனக்கு ஏற்ற உணவுகளை மட்டும் சாப்பிட்டதாகப் பேர் பண்ணிவிட்டு, சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்து விட்டு மீண்டும் வீடு வந்தோம். அன்றையப் பொழுது இனிமையாகக் கழிந்தது.
'நிலச்சரிவு' நடந்த பகுதியில் 'சுற்றித்' திரியும் 'நாய்'... "எது குடுத்தாலும் சாப்பிடாம வேதனையோட சுத்திட்டு இருக்கு"... மனதை உறைய வைக்கும் 'சோகம்'!!! முகப்பு > செய்திகள் > இந்தியா By Ajith | Aug 10, 2020 02:37 PM கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டத்தை அடுத்த பெட்டிமுடி என்னும் மலைக்கிராம பகுதியில், கடந்த சில தினங்களுக்கு முன் பெய்த கடும் மழை காரணமாக, நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த விபத்தில் சுமார் 80 பேர் வரை மண்ணில் புதைந்துள்ளதாகவும், அதில் இதுவரை சுமார் 40 பேரின் உடல்களை மீட்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் பலர் மண்ணிற்கு அடியில் சிக்கிக் கொண்டிருக்கலாம் என்பதால் அப்பகுதியில் தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கடந்த மூன்று நாட்களாக அப்பகுதியில் மீட்புப் பணிகள் நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில், நாய் ஒன்று அங்குமிங்குமாக சுற்றி தன்னை பாசத்துடன் வளர்த்தவர்களை தேடி கொண்டிருக்கிறது. அங்கு கிடக்கும் துணிகளை மோப்பம் பிடித்து தன்னை வளர்த்தவர்கள் இருக்கிறார்களா என்பதை அறிய முயன்று வருகிறது. அது மட்டுமில்லாமல், யாராவது உணவளித்தால் கூட அதனை உண்ண மறுப்பதாக அப்பகுதியில் மீட்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் நபர்கள் கூறுகிறார்கள். பல வருடங்களாக தன்னை அன்புடன் வளர்த்தவர்களை திடீரென பிரிந்ததன் காரணமாக நாய் மிகவும் சோகத்துடன் அப்பகுதியில் சுற்றித் திரிவதாக அங்குள்ளவர்கள் தெரிவிக்கின்றனர். CLICK HERE!! For the In Depth Updates on all the OTT Content Tags : #MUNNAR LANDSLIDE #RAINFALLS #KERALA மற்ற செய்திகள் 'கணவருக்கு தெரியாமல் வீட்டு மாடியிலேயே'... 'மனைவி செய்துவந்த ரகசிய வேலை'... 'சென்னையில் கொள்ளை புகாரால் வெளிவந்த பகீர் சம்பவம்!'... 'பல மாசமா போராடி கொரோனா-க்கு தடுப்பூசி கண்டு பிடித்த நாடு...' 'ரெஜிஸ்டர் பண்ண போற நேரம் பார்த்து...' - குண்ட தூக்கி போட்ட தொற்றுநோய் நிபுணர்...! 'பைப்புக்குள் பக்காவா பேக்கிங்'... 'பாக்க பால் பவுடர் போல இருக்கும்'... 'ஒர்த் மட்டும் 1000 கோடி ரூபாய்'... கொரோனா நேரத்தில் மிரள வைத்த கும்பல்! 'நல்லா வாழ்ந்த மனுஷன்...' '3 கோடி சொத்துக்காக அப்பாவை தெருவில் தள்ளிய 3 மகன்கள்...' அதோட விடல...' - கண்ணீரோடு தவிக்கும் தந்தை...! 'இவர்களாலேயே கொரோனா முடிவுக்கு வரும்'... 'இதுவும் நல்லதுதான்'... 'ஆய்வாளர்கள் கூறும் குட் நியூஸ்'... 'அவ பத்திரமா இருக்காம்மா...' எங்க குழந்தை எங்கள விட்டு போய்ட்டான்னு எப்படி சொல்வேன்...? 'மனைவிடம் மறைத்து வரும் கணவன்...' நெஞ்சை உருக செய்யும் சோகம்...! மேலும் செய்திகளுக்கு தொடர்புடைய செய்திகள் "போயிருந்தா என்னாயிருக்கும்.. நல்லவேளை!".. கடைசி நேர ட்விஸ்டால் கோழிக்கோடு விமான விபத்தில் இருந்து அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய நபர்! 'இன்னும் 15 நாளில் நடக்க இருந்த சந்தோசம்'... 'ரொம்ப நாள் ஆசைப்பட்டது இதுக்கு தான்'... 'மொத்தமா நொறுங்கி போச்சே'... துணை விமானியின் உருகவைக்கும் பக்கங்கள்! 'நெஞ்சை உலுக்கிய கோர விபத்து'... 'பிரமை பிடித்தது போல இருந்த 3 வயது குழந்தை'... திக் திக் நிமிடங்கள்! Shocking Updates on Kozhikode Plane Crash: 'Flight Tried to Land Twice' before the CRASH that Killed 2 'Pilots' and 16 'Passengers'! Details “குழந்தைங்க தூக்கி வீசப்பட்டாங்க.. பயங்கர அலறல் சத்தம்.. என்ன நடக்குதுனு புரியுறதுக்குள்ள”... கோழிக்கோடு விமான விபத்தில் உயிர் பிழைத்தவர் பகிரும் அதிர்ச்சி தகவல்கள்! ‘கோழிக்கோடு: விமானம் இரண்டாக பிளந்து கோர விபத்து!’.. ‘விமானி உட்பட பலியானோர் எண்ணிக்கை’!.. முழு விபரம்! 'உலகையே உலுக்கிய கோழிக்கோடு விமான விபத்து'... '9 வருடத்திற்கு முன்பே எச்சரித்த நிபுணர்'... வெளியான அதிர்ச்சி தகவல்! Flight With More Than 180 Passengers Crash Lands at Kozhikode ‘கடவுளின் தேசத்தில் இப்படி ஒரு காட்சியா?’.. ‘வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படும் யானையின் சடலம்!’.. இதயத்தை நொறுக்கும் வீடியோ! 'தண்ணீரில் கடவுளின் தேசம்'... 'கேரளாவை உலுக்கியெடுத்த நிலச்சரிவு'... '80 பேரின் கதி என்ன'? 'மகன் கூட +2 பரீட்சை எழுதிய அப்பா, அம்மா...' கத்துக்க வயசெல்லாம் ஒரு மேட்டரே கிடையாது...' அடுத்தது எங்க டார்கெட் என்ன தெரியுமா...? - அசத்தும் குடும்பம்...! 'கள்ளங்கபடம் இல்லாம சிரிக்கிற இந்த முகத்த இனி எங்கய்யா பார்க்கப் போறோம்!?' 3.5 கோடி மக்களை கண்ணீரில் மூழ்கடித்த இந்த வாலிபர் யார்? Kerala Nurse Stabbed To Death And Run Over By Husband Outside Hospital; Police Charge 1st Degree Murder! 'டூட்டி முடிச்சிட்டு வெளியே வந்த நர்ஸ்'... 'உயிருக்கு உயிராக நேசித்த கணவன் செய்த வெறிச்செயல்'... 'சிதைந்த மொத்த குடும்பம்'... அதிரவைக்கும் பின்னணி! மணமகன், மணமகள் உட்பட 'மொத்தம்' 43 பேருக்கு இருக்கு... குற்றம் நிரூபிக்கப்பட்டா 2 வருஷம் 'ஜெயில்' கன்பார்ம்! 'ஒரு பக்கம் ஜேசிபி'... 'மறுபக்கம் அசுர வேகத்தில் வந்த பொலிரோ கார்'... 'சிவனேன்னு நின்று கொண்டிருந்த இளைஞர்'... நெஞ்சைப் பதைபதைக்க வைக்கும் வீடியோ! Kerala and Karnataka at Threat? UN Warns of Islamic State TERRORISTS Found in "Significant Numbers" in these regions! Details 'Sabarimala fame' Activist Rehana Fathima denied Anticipatory Bail by Court; May get Arrested in 'Nude Painting Case'! 'அவங்க இத கத்துக்கணும்ன்னு தான் இப்படி செஞ்சேன்'... 'பெற்ற குழந்தைகளை வைத்து அரை நிர்வாண உடலில் ஓவியம்'... விளாசிய உயர்நீதிமன்றம்! கேரள தங்க கடத்தல் வழக்கில் திடீர் திருப்பம்!.. திருவனந்தபுரத்தில் கடத்திய தங்கம்... திருச்சி நகை கடையில் விற்பனை!.. பகீர் பின்னணி! மேலும் செய்திகளுக்கு ABOUT THIS PAGE This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Munnar dog wander around landslide area in search of his owners | India News.
‏عَنْ ‏ ‏رَبِيعَةَ بْنِ أَبِي عَبْدِ الرَّحْمَنِ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ الْمَلِكِ بْنِ سَعِيدٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي حُمَيْدٍ ‏ ‏أَوْ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي أُسَيْدٍ ‏ ‏قَالَ ‏ قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِذَا دَخَلَ أَحَدُكُمْ الْمَسْجِدَ فَلْيَقُلْ اللَّهُمَّ افْتَحْ لِي أَبْوَابَ رَحْمَتِكَ وَإِذَا خَرَجَ فَلْيَقُلْ اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ مِنْ فَضْلِكَ ‏ قَالَ ‏ ‏مُسْلِم ‏ ‏سَمِعْتُ ‏ ‏يَحْيَى بْنَ يَحْيَى ‏ ‏يَقُولُ كَتَبْتُ هَذَا الْحَدِيثَ مِنْ كِتَابِ ‏ ‏سُلَيْمَانَ بْنِ بِلَالٍ ‏ ‏قَالَ بَلَغَنِي أَنَّ ‏ ‏يَحْيَى الْحِمَّانِيَّ ‏ ‏يَقُولُا ‏ ‏وَأَبِي أُسَيْدٍ ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏حَامِدُ بْنُ عُمَرَ الْبَكْرَاوِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏بِشْرُ بْنُ الْمُفَضَّلِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عُمَارَةُ بْنُ غَزِيَّةَ ‏ ‏عَنْ ‏ ‏رَبِيعَةَ بْنِ أَبِي عَبْدِ الرَّحْمَنِ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ الْمَلِكِ بْنِ سَعِيدِ بْنِ سُوَيْدٍ الْأَنْصَارِيِّ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي حُمَيْدٍ ‏ ‏أَوْ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي أُسَيْدٍ ‏ ‏عَنْ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بِمِثْلِهِ “உங்களில் ஒருவர் பள்ளிவாசலுக்குள் நுழையும் போது, ‘அல்லாஹும்மஃப்தஹ்லீ அப்வாப ரஹ்மதிக’ (இறைவா! உன் கருணையின் வாசல்களை எனக்குத் திறந்திடுவாயாக!) என்று கூறட்டும். பள்ளிவாசலிலிருந்து வெளியேறும்போது, ‘அல்லாஹும்ம இன்னீ அஸ்அலுக மின் ஃபள்லிக’ (இறைவா! உன்னிடம் நான் உன் அருட்(செல்வங்)களிலிருந்து வேண்டுகிறேன்) என்று கூறட்டும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள். அறிவிப்பாளர் : அபூஹுமைத் (ரலி)/அபூஉஸைத் (ரலி) குறிப்பு : அப்துல் மாலிக் ஸயீத் பின் ஸுவைத் அல்அன்ஸாரீ (ரஹ்) வழி அறிவிப்பில்தான் இந்த ஹதீஸை அறிவிப்பவர், நபித்தோழர் அபூஹுமைதா? அன்றி நபித்தோழர் அபூஉஸைதா? எனும் ஐயத்தொனி உள்ளது. “இந்த ஹதீஸை நான் ஸுலைமான் பின் பிலால் (ரஹ்) அவர்களின் ஹதீஸ் ஏட்டிலிருந்து எடுத்து எழுதினேன். அதில், ‘அபூஹுமைது, அபூஉஸைது ஆகிய இருவரும் அறிவித்தனர் என்பதுதான் எனக்கு எட்டிய தகவல் என்று யஹ்யா அல்ஹிம்மானீ (ரஹ்) கூறுகிறார். (எனவே, அபூஹுமைதா? அபூஉஸைதா? எனும் ஐயத்துக்கு இடமில்லை)’ என்று ஸுலைமான் (ரஹ்), குறிப்பிட்டிருக்கிறார்” என யஹ்யா பின் யஹ்யா (ரஹ்)கூறக்கேட்டு, இமாம் முஸ்லிம் (ரஹ்) பதிவு செய்திருக்கிறார்கள். மேலும் காண்பி... ↓ விரும்பும் பாடம் செல்ல… ↓ விரும்பும் பாடம் செல்ல… Select Category 43.37 நபி (ஸல்) அவர்களைக் கண்ணியப்படுத்துவதும் … (8) 43.36 நபி (ஸல்) அவர்களைப் பின்பற்ற வேண்டியது (முஸ்லிம்களின்) கட்டாயக் கடமையாகும் (1) 43.35 நபி (ஸல்) அவர்களின் அல்லாஹ்வைப் பற்றிய அறிவும் அவனைப் பற்றிய கடுமையான அச்சமும் (2) 43.34 நபி (ஸல்) அவர்களின் பெயர்கள் (3) 43.33 நபி (ஸல்) மக்காவிலும் மதீனாவிலும் எத்தனை ஆண்டுகள் வாழ்ந்தார்கள்? (8) 43.32 நபி (ஸல்) இறந்தபோது அவர்களுக்கு வயது எத்தனை? (2) 43.31 நபி (ஸல்) அவர்களின் உடலமைப்பு; நபியாக அனுப்பப்பெற்றது; அவர்களின் வயது (1) 43.30 நபி (ஸல்) உடலில் நபித்துவ முத்திரை … (3) 43.29 நபி (ஸல்) அவர்களின் தலைநரைமுடி (10) 43.28 நபி (ஸல்) அவர்களின் வெண்ணிறமும் களையான முகமும் (2) 43.27 நபி (ஸல்) அவர்களின் வாய், கண்கள், குதிகால்கள் ஆகியவை (1) 43.26 நபி (ஸல்) அவர்களது தலைமுடியின் தன்மை (3) 43.25 நபி (ஸல்) அவர்களின் உருவத் தோற்றம் … (3) 43.24 நபி (ஸல்) தமது தலைமுடியை … (1) 43.23 நபி (ஸல்) அவர்களுக்கு வேத அறிவிப்பு வரும்போது … (4) 43.22 நபி (ஸல்) அவர்களது வியர்வையின் நறுமணமும் அதன்மூலம் வளம் ஏற்பட்டதும் (3) 43.21 நபி (ஸல்) அவர்களின் மேனியில் கமழ்ந்த நறுமணம் … (3) 43.20 நபி (ஸல்) பாவங்களை விட்டு வெகு தொலைவில் விலகியிருந்தது … (3) 43.19 நபி (ஸல்), மக்களுடன் நெருங்கிப் பழகியதும் அவர்களிடமிருந்து மக்கள் வளம் பெற்றதும் (3) 43.18 மனைவியர்மீது நபி (ஸல்) காட்டிய அன்பும் … (4) 43.17 நபி (ஸல்) அவர்களின் புன்னகையும் அழகிய உறவாடலும் (1) 43.16 நபி (ஸல்) அவர்களின் நாண மிகுதி (2) 43.15 நபி (ஸல்) குழந்தைகள் மீதும் குடும்பத்தார் மீதும் காட்டிய அன்பு … (5) 43.14 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வேண்டப்பட்ட எந்த ஒன்றுக்கும் அவர்கள் “இல்லை” என்று சொன்னதேயில்லை … (5) 43.13 அல்லாஹ்வின் தூதர் (ஸல்), மக்களிலேயே மிகவும் அழகான … (5) 43.12 மக்களிலேயே நபி (ஸல்), தொடர்ந்து வீசும் (மழைக்) காற்றைவிட … (1) 43.11 நபி (ஸல்) அவர்களின் வீரமும் அறப்போருக்காக அவர்கள் முன்னே சென்றதும் (2) 43.10 உஹுதுப் போர் நாளில் நபி (ஸல்) … (2) 43.9 நம் நபி (ஸல்) அவர்களுக்கு (மறுமையில் ‘அல்கவ்ஸர்’) தடாகம் உண்டு … (20) 43.8 உயர்ந்தோன் அல்லாஹ் ஒரு சமுதாயத்தின்மீது அருள் புரிய நாடினால் … (1) 43.7 நபி (ஸல்), இறுதி இறைத் தூதர் என்பது பற்றிய குறிப்பு (4) 43.6 நபி (ஸல்), தம் சமுதாயத்தார் மீது கொண்டிருந்த பரிவும் … (4) 43.5 நபி (ஸல்), நேர்வழியுடனும் ஞானத்துடனும் அனுப்பப் பெற்றதற்கான உவமை (1) 43.4 அல்லாஹ்வையே முழுமையாக நபி (ஸல்) சார்ந்திருந்ததும் … (1) 43.3 நபி (ஸல்) அவர்களின் அற்புதங்கள் (7) 43.2 எல்லாப் படைப்புகளையும்விட நம் நபி (ஸல்) அவர்களின் சிறப்பு (1) 43.1 நபி (ஸல்) அவர்களின் தலைமுறையின் சிறப்பும் … (2) 42.4 நபி (ஸல்) கண்ட கனவு (6) 42.3 கனவுக்கு விளக்கமளித்தல் (1) 42.2 ஷைத்தான் கனவில் விளையாடியது குறித்து … (3) 42.1 கனவில் என்னைக் கண்டவர் … (4) 42.01 கனவுகள் (11) 41.2 பகடை விளையாட்டு, தடை செய்யப்பட்டதாகும் (1) 41.1 கவிதைகள் (9) 40.5 நறுமணப் பொருட்களில் மிகவும் சிறந்த கஸ்தூரியைப் பயன்படுத்துவது … (4) 40.4 ஒருவர், ‘கபுஸத் நஃப்ஸீ’ (என் மனம் அசுத்தமாகிவிட்டது) எனும் சொல்லை … (2) 40.3 ‘அப்து’ (அடிமை ஆண்), ‘அமத்து’ (அடிமைப் பெண்), ‘மவ்லா’/’ஸய்யித்’ (அடிமையின் உரிமையாளர்) ஆகிய சொற்களின் சட்டம் (3) 40.2 திராட்சையை, “கர்மு / கண்ணியம்” என்று பெயரிட்டழைப்பது … (7) 40.1 காலத்தை ஏசுவதற்குத் தடை (5) 39.41 விலங்குகளுக்கு நீர் புகட்டுவதின், உணவளிப்பதின் சிறப்பு (3) 39.40 பூனைகளைக் கொல்வதற்குத் தடை (2) 39.39 எறும்புகளைக் கொல்லத் தடை (3) 39.38 பல்லியைக் கொல்வது நல்லது (5) 39.37 பாம்பு போன்ற விஷ ஜந்துகளைக் கொல்வது (13) 39.36 தொழுநோயாளிகள் போன்றோரிடம் நெருக்கம் தவிர்ப்பது (1) 39.35 சோதிடர்களிடம் செல்வதும் சோதிடம் பார்ப்பதும் (5) 39.34 பறவை சகுனம், நற்குறி, துர்குறி பற்றிய பாடம் (11) 39.33 இல்லாத சகுனங்களும் தொற்றுநோய்களும் (6) 39.32 கொள்ளைநோய், பறவை சகுனம், சோதிடம் போன்றவை (8) 39.31 தேனூட்டு மருத்துவம் (1) 39.30 ‘தல்பீனா‘, நோயாளியின் மனத்துக்கு(ம் உடலுக்கும்) தெம்பு அளிக்கக்கூடியதாகும் (1) 39.29 கருஞ்சீரக மருத்துவம் (2) 39.28 இந்தியக் கோஷ்டக் குச்சியால் சிகிச்சையளிப்பது (2) 39.27 நோயாளிக்கு வற்புறுத்தி சிகிச்சையளிப்பது … (1) 39.26 ஒவ்வொரு நோய்க்கும் மருந்து உண்டு; (நோய்க்கு) மருத்துவம் செய்துகொள்வது விரும்பத் தக்கது (17) 39.25 தொழுகையில் மனம் அலைபாயச் செய்யும் ஷைத்தானிடமிருந்து பாதுகாப்புக் கோரல் (1) 39.24 பிரார்த்திக்கும்போது வலியுள்ள இடத்தில் கையை வைப்பது (1) 39.23 குர்ஆன் வசனங்கள் மற்றும் அல்லாஹ்வைத் துதிக்கும் சொற்களால் ஓதிப்பார்ப்பதற்கு ஊதியம் பெறலாம் (2) 39.22 இறைவனுக்கு இணை கற்பிதம் இல்லாத சொற்களால் ஓதிப்பார்பது தவறில்லை (1) 39.21 கண்ணேறு, சின்னம்மை, விஷக்கடி, (தீய)பார்வை ஆகியவற்றுக்காக ஓதிப்பார்ப்பது விரும்பத் தக்கதாகும் (12) 39.20 பாதுகாப்புக் கோரும் அத்தியாயங்களால் நோயாளிக்கு ஓதிப்பார்ப்பது … (2) 39.19 நோயாளிக்கு ஓதிப்பார்ப்பது விரும்பத் தக்கதாகும் (4) 39.18 விஷம் (1) 39.17 சூனியம் (1) 39.16 நோயும் மருத்துவமும் ஓதிப்பார்த்தலும் (4) 39.15 மூன்றாமவரின் ஒப்புதலின்றி இருவர் மட்டும் இரகசியம் பேசிக்கொள்வது தடை செய்யப்பட்டதாகும் (3) 39.14 … அந்நியப் பெண்ணை, வழிசெல்லும் ஒருவர் வாகனத்தில் அமர்த்திக்கொள்ளலாம் (2) 39.13 பெண்கள் இருக்கும் இடத்திற்கு அலிகள் செல்லத் தடை (2) 39.12 அமர்ந்திருந்த இடத்திற்கு உரியவர் (1) 39.11 அமர்ந்திருக்கும் ஒருவரை எழுப்பிவிடுவது தடை செய்யப்பட்டதாகும் (4) 39.10 அவைக்கு வருபவர், அமரும் ஒழுங்கு (1) 39.9 … கெட்ட எண்ணத்தை அகற்றுவது விரும்பத் தக்கதாகும் (2) 39.8 அந்நியப் பெண்ணிடம் … தனிமையில் இருப்பது தடை செய்யப்பட்டதாகும் (3) 39.7 … பெண்கள் வெளியே செல்லலாம் (2) 39.6 உள்ளே செல்ல அனுமதியாகக் கருதுவதற்கு … (1) 39.5 சிறாருக்கு(ப் பெரியவர்கள்) முகமன் கூறுவது விரும்பத் தக்கதாகும் (2) 39.4 வேதக்காரர்களுக்கு முந்திக்கொண்டு ஸலாம் கூறுவதற்குத் தடை (7) 39.3 ஸலாத்துக்குப் பதிலுரைப்பது முஸ்லிமுக்குக் கடமை (2) 39.2 நடைபாதைகளில் அமர்வதன் ஒழுங்குகளில் … (2) 39.1 முந்தி ஸலாம் சொல்ல வேண்டியவர்கள் (1) 38.10 இயல்பான பார்வை (1) 38.9 பிறர் வீட்டில் எட்டிப் பார்ப்பது தடை செய்யப்பட்டதாகும் (5) 38.8 “யார்?“ என்று கேட்டால் … (2) 38.7 அனுமதி கோருதல் (5) 38.6 “என் அருமை மகனே!“ (2) 38.5 குழந்தை பிறந்தவுடன் இனிப்பான பொருளை மென்று அதன் வாயிலிடுவதும் … (9) 38.4 மன்னாதி மன்னன் எனப் பெயர் சூட்டிக்கொள்வது தடை செய்யப்பட்டதாகும் (2) 38.3 அருவருப்பான பெயரை அழகான பெயராக மாற்றியமைப்பது … (6) 38.2 அருவருப்பான பெயர்கள் … (4) 38.1 … விரும்பத் தகுந்த பெயர்கள் (8) 37.35 வெறும் பெருமை (2) 37.34 மெல்லிய உடையணிந்து, பிறரைத் தன்பால் ஈர்க்கும் வண்ணம் தோள்களைச் சாய்த்து ஒயிலாக நடக்கும் பெண்கள் (1) 37.33 பெண்களின் பொய் அலங்காரங்காரங்களுக்குத் தடை (10) 37.32 நடைபாதைகளில் அமர்வதற்குத் தடையும் பாதைகளுக்குரிய உரிமைகளைப் பேணுவதும் (1) 37.31 தலை முடியில் பகுதி மழித்துவிட்டு, பகுதி மழிக்காமல் விட்டுவிடுவது வெறுக்கத் தக்கதாகும் (1) 37.30 ஸகாத் / ஜிஸ்யாவுக்கான கால்நடைகளில் சூடிட்டு அடை யாளமிடலாம் (4) 37.29 விலங்குகளின் முகத்தில் அடிப்பதும் அடையாளச் சூடிடுவதும் தடை செய்யப்பட்டவை ஆகும் (3) 37.28 ஒட்டகத்தின் கழுத்தில் (திருஷ்டிக்) கயிற்று மாலை அணிவிப்பது வெறுக்கத் தக்கதாகும் (1) 37.27 பயணத்தின்போது நாயும் (ஒலியெழுப்பும்) மணியும் வெறுக்கத் தக்கவை (2) 37.26 உயிரினங்களின் உருவப் படங்களை வரைவதும் … தடை செய்யப்பட்டவை ஆகும் (21) 37.25 (நரைமுடிக்கு) சாயமிட்டுக்கொள்வது யூதர்களுக்கு மாறு செய்வதாகும் (1) 37.24 நரைமுடியில் கருப்பு நிறச் சாயமிடுவது தடை செய்யப்பட்டதாகும் (2) 37.23 ஆண்கள் (மேனியில்) குங்குமப்பூச் சாயமிட்டுக்கொள்வதற்குத் தடை (1) 37.22 மல்லாந்து படுத்துக்கொண்டு கால்மீது காலைப் போட்டுக் கொள்வதற்கு அனுமதி (1) 37.21 மல்லாந்து படுத்துக்கொண்டு கால்மீது காலைப் போட்டுக் கொள்வதற்குத் தடை (3) 37.20 தடை செய்யப்பட்ட இரு நிலைகள் (2) 37.19 காலணிகளை அணிந்து கழற்றும் முறைகள் (3) 37.18 காலணி அல்லது அது போன்றதை அணிந்துகொள்வது விரும்பத் தக்கதாகும் (1) 37.17 மோதிரம் அணிவதற்குத் தடை செய்யப்பட்ட விரல்கள் (2) 37.16 கைச் சுண்டுவிரலில் மோதிரம் அணிவது (1) 37.15 அபிசீனியக் வெள்ளிக் குமிழ் மோதிரம் (2) 37.14 மோதிரங்களை(க் கழற்றி) எறிந்த நிகழ்வு (2) 37.13 நபி (ஸல்) அவர்களின் (முத்திரை) மோதிரம் (3) 37.12 ‘முஹம்மதுர் ரசூலுல்லாஹ்’ எனும் இலச்சினை பொறிக்கப்பட்ட வெள்ளி மோதிரம் (2) 37.11 ஆண்கள் தங்க மோதிரம் அணிவதற்குத் தடை (3) 37.10 ஆடைகளை எண்ணிப் பெருமை கொண்டு, கர்வத்தோடு நடப்பதற்குத் தடை (2) 37.9 பெருமைக்காக ஆடையைத் தரையில் படும்படி இழுத்துச் செல்வதற்குத் தடை (7) 37.8 தேவைக்கு அதிகமான விரிப்புகளும் ஆடைகளும் இருப்பது விரும்பத் தக்கதன்று (1) 37.7 படுக்கை விரிப்புகளைப் பயன்படுத்த அனுமதி (2) 37.6 ஆடையில் (எளிமை,) பணிவு காட்டுவது … (5) 37.5 பருத்தி ஆடை அணிவதன் சிறப்பு (2) 37.4 ஆண்கள் செம்மஞ்சள் நிறச் சாயமிடப்பட்ட ஆடை அணிவதற்குத் தடை (5) 37.3 தோல் உபாதைகள் இருந்தால் ஆண்கள் பட்டாடை அணியலாம் (3) 37.2 பொன் மோதிரம் மற்றும் பட்டாடை அணிவது ஆண்களுக்குத் தடை; பெண்களுக்கு அனுமதி (20) 37.1 பொன் / வெள்ளிப் பாத்திரங்களைப் பயன்படுத்துவது ஆண்களுக்கும் பெண்களுக்கும் தடை (2) 36.35 உணவைக் குறை சொல்லவேண்டாம் (2) 36.34 இறைநம்பிக்கையாளர் ஒரே குடலில் உண்பார்; இறைமறுப்பாளன் ஏழு குடல்களில் உண்பான் (5) 36.33 உணவு குறைவாக இருக்கும்போது … (4) 36.32 விருந்தினரை உபசரிப்பதும் முன்னுரிமை வழங்குவதன் சிறப்பும் (6) 36.31 வெள்ளைப் பூண்டு சாப்பிடக்கூடியதே … (2) 36.30 உணவுக் காடியின் சிறப்பும் … (4) 36.29 ‘அல்கபாஸ்’ பழங்களில் கருப்பு நிறப் பழத்தின் சிறப்பு (1) 36.28 உணவுக் காளானின் சிறப்பும் … (6) 36.27 மதீனத்துப் பேரீச்சம் பழங்களின் சிறப்பு (3) 36.26 குடும்பத்தாருக்காக … உணவுகளைச் சேமித்துவைத்தல் (2) 36.25 பலருடன் சேர்ந்து உண்பவர் … (2) 36.24 உணவு உண்பவர் அமரும் முறை; பணிவோடு அமர்வது விரும்பத் தக்கது (2) 36.23 பேரீச்சை செங்காய்களுடன் வெள்ளரிக்காயையும் சேர்த்து உண்பது (1) 36.22 விருந்தளிப்பவருக்காக விருந்தாளி பிரார்த்திப்பது … (1) 36.21 சுரைக் குழம்பு உண்ண அனுமதி … (2) 36.20 வீட்டு உரிமையாளரின் சம்மதம் கிடைக்கும் என்ற நம்பிக்கை இருந்தால் … (4) 36.19 விருந்துக்கு அழைக்கப்பட்டவரைத் தொடர்ந்து அழைக்கப்படாதவரும் வந்துவிட்டால் … (2) 36.18 உண்டு முடித்ததும் விரல்களைச் சூப்புவதும் உணவுத் தட்டை வழித்து உண்பதும் … (9) 36.17 வலப் பக்கத்திலிருந்து பரிமாறுதல் விரும்பத் தக்கதாகும் (4) 36.16 பாத்திரத்தினுள் (பருகும்போது) வெளியே மூன்று முறை மூச்சு விட்டுப் பருகுவது விரும்பத் தக்கதாகும் (3) 36.15 ஸம்ஸம் நீரை நின்றுகொண்டு அருந்துவது (4) 36.14 நின்றுகொண்டு அருந்துவது வெறுக்கத் தக்கதாகும் (4) 36.13 உண்பது, அருந்துவது ஆகியவற்றின் ஒழுங்குகளும் விதிமுறைகளும் (10) 36.12 இரவு நேர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் (6) 36.11 பழச்சாறுகளைப் பருகுவதும் பாத்திரங்களை மூடிவைப்பதும் (3) 36.10 (ஆட்டுப்) பால் அருந்த அனுமதி (3) 36.9 பழச்சாறுகள் (புளித்துக்) கெட்டியாகி, போதையேறாதவரை அனுமதிக்கப்பட்டவையாகும் (10) 36.8 குடிகாரன் பாவமன்னிப்புக் கோரி திருந்தாவிட்டால் … (3) 36.7 போதை தரும் ஒவ்வொரு பானமும் தடை செய்யப்பட்ட மதுவாகும் (9) 36.6 பானங்கள்-பாத்திரங்கள், தடை-தடை நீக்கம் (36) 36.5 பேரீச்சம் பழம், உலர் திராட்சைக் கலவை ஊறல் வெறுக்கத் தக்கதாகும் (14) 36.4 ‘மதுபானம்’ என்று சொல்லப்படுபவை (4) 36.3 மதுவை மருந்தாகப் பயன்படுத்துவதற்குத் தடை (1) 36.2 மதுபானத்தை (சமையல்) காடியாக மாற்றிப் பயன்படுத்துவதற்குத் தடை (1) 36.1 போதையூட்டும் ஒவ்வொன்றும் மதுவாகும் (9) 35.8 அல்லாஹ் அல்லாதவரின் பெயர் கூறிப் பிராணிகளை அறுப்பதற்குத் தடை (3) 35.7 தலைமுடியை, நகங்களைக் களைவதற்குத் தடை (5) 35.6 அல் ஃபரஉ வல் அத்தீரா (1) 35.5 பலி இறைச்சியை எவ்வளவு காலம் சேமித்து வைக்கலாம்? (14) 35.4 பல், நகம், எலும்பு ஆகியவை தவிர எந்தப் பொருளாலும் பிராணியை அறுக்க அனுமதி (1) 35.3 தாமே அறுப்பதும் அல்லாஹ்வின் பெயரோடு தக்பீர் கூறுவதும் விரும்பத் தக்கவை ஆகும் (3) 35.2 பலிப் பிராணியின் வயது (4) 35.1 பலி கொடுக்கப்படும் நேரம் (10) 34.12 விலங்குகளைக் கட்டிவைத்து அம்பெய்து கொல்வதற்குத் தடை (5) 34.11 … கத்தியைக் கூர்மையாகத் தீட்டிக் கொண்டு வதையற்ற முறையைக் கையாளக் கட்டளை (1) 34.10 … பயிற்சிகளை மேற்கொள்வது அனுமதிக்கப் பட்டதாகும். கல்சுண்டு விளையாட்டு வெறுக்கப்பட்டதாகும் (2) 34.9 முயல் கறி உண்ணத் தக்கது (1) 34.8 வெட்டுக்கிளி உண்ணத் தக்கது (1) 34.7 உடும்புக் கறி உண்ணத் தக்கது (13) 34.6 குதிரைகளின் இறைச்சியை உண்பது கூடுமா? (3) 34.5 நாட்டுக் கழுதைகளின் இறைச்சியை உண்பதற்குத் தடை (14) 34.4 கடல்வாழ் உயிரினங்களில் செத்தவற்றை உண்பதற்கு அனுமதி (5) 34.3 உண்பதற்குத் தடை செய்யப்பட்ட விலங்குகளும் பறவைகளும் (6) 34.2 வேட்டையாடிய பிராணி மறைந்து, பிறகு கிடைத்தால் … (2) 34.1 பயிற்சியளிக்கப்பட்ட நாய்கள் மூலம் வேட்டையாடுதல் (8) 33.56 பயணத்திலிருந்து திரும்புகின்றவர் … (5) 33.55 பயணம் என்பது துன்பத்தின் ஒரு பகுதியாகும் … (1) 33.54 பயணத்தில் கால்நடைகளின் நலன் காப்பதும் … (2) 33.53 “என் சமுதாயத்தாரில் ஒரு குழுவினர் எப்போதுமே உண்மைக்கு ஆதரவாளர்களாக இருப்பார்கள் … (8) 33.52 அம்பெய்வதன் சிறப்பும் … (3) 33.51 உயிர்த் தியாகிகள் பற்றிய விளக்கம் (3) 33.50 அல்லாஹ்வின் பாதையில் எல்லைக் காவல் புரிவதன் சிறப்பு (1) 33.49 கடல்வழிப் போரின் சிறப்பு (2) 33.48 போரில் கலந்துகொள்ள முடியாமல் போனவருக்கும் நன்மை … (1) 33.47 அறப்போரில் கலந்துகொள்ளாமல் இறந்துபோனவர் … (1) 33.46 அல்லாஹ்வின் பாதையில் வீரமரணத்தை வேண்டுவது விரும்பத் தக்கதாகும் (2) 33.45 “எண்ணங்களைப் பொருத்தே செயல்கள் அமைகின்றன” எனும் நபிமொழி … (1) 33.44 … போர்ச் செல்வங்களைப் பெற்றோரும் பெறாதோரும் … (2) 33.43 பிறர் பார்ப்பதற்காகவும் விளம்பரத்திற்காகவும் போரிட்டவர் … (1) 33.42 அல்லாஹ்வின் பாதையில் போரிட்டவர் … (3) 33.41 உயிர்த் தியாகிக்குச் சொர்க்கம் நிச்சயம் (6) 33.40 தகுந்த காரணம் உள்ளவர்களுக்கு அறப்போரில் கலந்து கொள்வது கடமை இல்லை (2) 33.39 அறப்போர் வீரர்களின் துணைவியருடைய கண்ணியம் … (1) 33.38 அறப்போர் வீரருக்கு வாகனம் மற்றும் பிற உதவிகள் … (6) 33.37 அல்லாஹ்வின் பாதையில் தர்மம் செய்வதன் சிறப்பும் அதற்குக் கிடைக்கும் பன்மடங்கு நன்மைகளும் (1) 33.36 இறைமறுப்பாளனை (போரில்) கொன்ற பின்னர் (மார்க்கத்தில்) உறுதியோடு இருத்தல் (2) 33.35 இரு போராளிகளில் ஒருவர் மற்றவரைக் கொன்று, பின் அவ்விருவருமே சொர்க்கத்தில் … (2) 33.34 அறப்போர் மற்றும் எல்லைக் காவலின் சிறப்பு (3) 33.33 வீரமணம் அடைந்தவர்களின் உயிர்கள் … (1) 33.32 அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டவரின் கடனைத் தவிர அனைத்துப் பாவங்களும் மன்னிக்கப்படுகின்றன (3) 33.31 அல்லாஹ் (தனது பாதையில்) அறப்போர் புரிந்தவர்களுக்காகச் சொர்க்கத்தில் வைத்துள்ள உயர்நிலைகள் (1) 33.30 அல்லாஹ்வின் பாதையில் காலையாயினும் மாலையாயினும் (போரிடச்) செல்வதன் சிறப்பு (5) 33.29 அல்லாஹ்வின் பாதையில் வீரமரணம் அடைவதன் சிறப்பு (4) 33.28 அல்லாஹ்வின் பாதையில் புறப்படுதலின், அறப்போரில் ஈடுபடுதலின் சிறப்பு (4) 33.27 குதிரையின் தன்மைகளில் விரும்பத் தகாதவை (1) 33.26 மறுமை நாள்வரை நெற்றிகளில் நன்மை பிணைக்கப்பட்டிருக்கும் குதிரைகள் (5) 33.25 குதிரைப் பந்தயமும் அதற்காகக் குதிரையை மெலிய வைப்பதும் (1) 33.24 குர்ஆன் பிரதிகளை இறைமறுப்பாளர்களின் நாட்டுக்கு எடுத்துச் செல்வது … (3) 33.23 பருவ வயது பற்றிய விளக்கம் (1) 33.22 இயன்றவரை கட்டுப்பட்டு நடப்பதாக உறுதிமொழி அளித்தல் (1) 33.21 பெண்களிடம் உறுதிப் பிரமாணம் (பைஅத்) வாங்கும் முறை (2) 33.20 மக்கா வெற்றிக்குப் பின் ஹிஜ்ரத் கிடையாது (5) 33.19 நாடு துறந்து (ஹிஜ்ரத்) சென்றவர் மீண்டும் தமது தாயகத்தில் குடியேறுவதற்குத் தடை (1) 33.18 ஆட்சித் தலைவர் படையினரிடம் உறுதி மொழி பெற்றுக்கொள்வது … (13) 33.17 ஆட்சித் தலைவர்களில் நல்லவர்களும் தீயவர்களும் (2) 33.16 ஆட்சித் தலைவர்கள் மார்க்கத்திற்கு முரணாகச் செயல்படும்போது … (2) 33.15 இரு ஆட்சியாளர்களுக்கு வாக்களிப்புப் பிரமாண நெருக்கடி ஏற்பட்டால் … (1) 33.14 முஸ்லிம்கள் (ஒரே தலைமையின் கீழ்) ஒன்றுபட்டிருக்கும்போது … (2) 33.13 குழப்பங்கள் தோன்றும்போது கூட்டமைப்போடு சேர்ந்திருப்பது கடமையாகும் … (8) 33.12 உரிமைகள் மறுக்கப்பட்டாலும் தலைமைக்குக் கட்டுப்படுதல் (1) 33.11 அதிகாரத்திலிருப்போர் அநீதியிழைக்கும்போதும் தகுதியற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கும்போதும் … (1) 33.10 கலீஃபாக்களில் முதலாமவருக்கு உறுதிப் பிரமாணம் (பைஅத்) அளிப்பது கடமையாகும் (3) 33.9 ஆட்சித் தலைவர் கேடயம் போன்றவர் … (1) 33.8 பாவமற்றவற்றில் தலைவர்களுக்குக் கட்டுப்படுவது கடமையாகும். பாவமானவற்றில் கட்டுப்படுவதற்குத் தடை (11) 33.7 அதிகாரிகளுக்கு அன்பளிப்புகள் வழங்குவதற்குத் தடை (3) 33.6 பொதுச் சொத்துகளில் மோசடி செய்வது வன்மையாகத் தடை செய்யப்பட்டது (1) 33.5 நேர்மையான ஆட்சியாளரின் சிறப்பும் … (6) 33.4 தேவையின்றி ஆட்சிப் பொறுப்பை ஏற்பது விரும்பத் தக்கதன்று (2) 33.3 ஆட்சியதிகாரத்தைத் தேடி அலைவதற்கும் அதன் மீது ஆசை கொள்வதற்கும் தடை (3) 33.2 ஆட்சித் தலைவரை நியமிக்கலாம்; நியமிக்காமல் விடலாம் (2) 33.1 ஆட்சியதிகாரம் குறைஷியரிடையேதான் இருக்கும் (10) 32.51 அறப்போர்களில் இறைமறுப்பாளரிடம் உதவி கோருவது … (1) 32.50 ‘தாத்துர் ரிக்காஉ’ (ஒட்டுத் துணிப்) போர் (1) 32.49 நபி (ஸல்) கலந்துகொண்ட அறப்போர்களின் எண்ணிக்கை (6) 32.48 அறப்போரில் கலந்துகொண்ட பெண்களுக்கு … (4) 32.47 அறப்போரில் ஆண்களுடன் பெண்களும் கலந்துகொள்வது (2) 32.46 “அவனே உங்களைத் தாக்காமல் அவர்கள் கைகளை தடுத்(து வைத்)தான்” எனும் (48:24) வசனம் (2) 32.45 ‘தூ கரத்’ போரும் பிற போர்களும் (2) 32.44 அஹ்ஸாப் போர் (அ) அகழ்ப் போர் (6) 32.43 கைபர் போர் (5) 32.42 கஅப் பின் அல்அஷ்ரஃப் கொல்லப்படுதல் (1) 32.41 அபூஜஹ்லு கொல்லப்படுதல் (1) 32.40 நபி (ஸல்) (மக்களை) இறைவன்பால் அழைத்து, துன்பங்களைப் பொறுத்துக் கொண்டது (2) 32.39 நபி (ஸல்) எதிர்கொண்ட துன்பங்கள் (7) 32.38 இறைதூதரால் கொல்லப்பட்டவன் மீது இறைவனின் கோபம் (1) 32.37 உஹுதுப் போர் (3) 32.36 கூட்டுப் படையினருக்கு எதிரான அகழ்ப் போர் (2) 32.35 வாக்குறுதியை(ப் போரிலும்) நிறைவேற்றுவது (1) 32.34 ஹுதைபிய்யா சமாதான உடன்படிக்கை’ (7) 32.33 மக்கா வெற்றிக்குப் பின் … (1) 32.32 கஅபாவைச் சுற்றிலும் இருந்த சிலைகளை அப்புறப்படுத்தியது (1) 32.31 மக்கா வெற்றி (2) 32.30 பத்ருப் போர் (1) 32.29 தாயிஃப் போர் (1) 32.28 ஹுனைன் போரில் … (5) 32.27 இறைமறுப்பு அரசர்களுக்கு நபி (ஸல்) எழுதிய கடிதங்கள் (1) 32.26 அழைப்பு விடுத்து ஹெராக்ளியஸ் மன்னருக்கு நபி (ஸல்) எழுதிய கடிதம் (1) 32.25 போரில் கிடைத்த உணவை, பகை நாட்டில் இருக்கும் போதே உண்ணலாம் (2) 32.24 முஹாஜிர்கள் தன்னிறைவு அடைந்தபோது … (2) 32.23 செயல்களுள் முன்னுரிமை அளிக்கத் தக்கது (1) 32.22 ஒப்பந்தத்தை முறித்துவிட்ட (பகை)வர்களுடன் போர் செய்யலாம் (3) 32.21 யூத கிறித்தவர்கள் அரபிய தீபகற்பத்திலிருந்து வெளியேற்றப்படுவது (1) 32.20 யூதர்களை ஹிஜாஸ் பகுதியிலிருந்து நாடு கடத்தியது (2) 32.19 கைதியை என்னென்னவெல்லாம் செய்யலாம் (1) 32.18 பத்ருப் போரில் வானவர்களின் உதவியும் … (1) 32.17 போர் வெற்றிச் செல்வத்தைப் பங்கிடும் முறை (1) 32.16 இறைத்தூதர்களுக்கு யாரும் (சொத்தில்) வாரிசாக முடியாது (5) 32.15 போர் செய்யாமல் கிடைத்த செல்வங்களின் சட்டம் (3) 32.14 … போர்க் கைதிகளைப் பரிமாறிக்கொள்வது (1) 32.13 போரில் கொல்லப்பட்ட எதிரியின் உடைமைகள் (4) 32.12 போர் வெற்றிச் செல்வங்கள் (7) 32.11 போர் வெற்றிச் செல்வங்கள் யாருக்குச் சொந்தம்? (1) 32.10 போரில் மரங்களை வெட்டுவதும் எரிப்பதும் அனுமதிக்கப்பட்டதாகும் (3) 32.9 பெண்களையும் குழந்தைகளையும் அறியாமல் கொன்றுவிட்டால் … (3) 32.8 போரில் பெண்களையும் குழந்தைகளையும் கொல்வதற்குத் தடை (2) 32.7 எதிரிகளை(ப் போரில்) எதிர்கொள்ளும்போது பிரார்த்திப்பது (2) 32.6 எதிரியை(ப் போர்க் களத்தில்) சந்திக்க ஆசைப்படுவது வெறுக்கத் தக்கது … (2) 32.5 போரில் தந்திரம் அனுமதிக்கப்பட்டது (2) 32.4 மோசடி செய்வது தடை செய்யப்பட்டதாகும் (8) 32.3 மக்களிடம் இலகுவாக நடந்துகொள்ள வேண்டும்; வெறுப்பைக் கைவிட வேண்டும் (3) 32.2 படைத் தலைவர், போர் நெறிகள் குறித்து அறிவுறுத்துவது (1) 32.1 முன்னறிவிப்பின்றித் தாக்குதல் தொடுக்கலாமா? (1) 31.5 பயணத்தில் உணவைப் பகிர்ந்துண்ணல் (1) 31.4 செல்வத்தால் பிறருக்கு உதவுவது விரும்பத் தக்கது (1) 31.3 விருந்தோம்பல் சார்ந்தவை (3) 31.2 உரிமையாளரின் அனுமதியின்றி கால் நடையில் பால் கறப்பதற்குத் தடை (1) 31.1 ஹாஜிகள் தவறவிட்டவை (2) 31.0 கண்டெடுக்கப்பட்டவை (5) 30.11 நீதிபதி சமரசம் செய்துவைப்பது விரும்பத் தக்கதாகும் (1) 30.10 ஆய்வாளர்களிடையே கருத்து வேறுபாடு (1) 30.9 சாட்சிகளில் சிறந்தவர் (1) 30.8 தவறான தீர்ப்புகளைத் தள்ளுபடி செய்வதும் (மார்க்கத்தில் இல்லாத) புதுமைகளை நிராகரிப்பதும் (2) 30.7 கோபமாக இருக்கும் நீதிபதி, தீர்ப்பளிப்பது விரும்பத் தக்கதன்று (1) 30.6 நீதிபதியின் ஆய்வுக்கு நன்மை உண்டு (1) 30.5 தடைகள் மூன்று (4) 30.4 ஹிந்த் (ரலி) வழக்கு (3) 30.3 வாதங்களின் அடிப்படையில் தீர்ப்பு அமைந்துவிடுதல் (2) 30.2 சத்தியத்தின் / சாட்சியத்தின் அடிப்படையில் தீர்ப்பளித்தல் (1) 30.1 சத்தியம் செய்து நிரூபிப்பது பிரதிவாதிமீது கடமையாகும் (2) 29.11 இழப்பீடு இல்லாத விபத்துகள் (2) 29.10 தண்டனைகள், குற்றங்களுக்கான பரிகாரமாகும் (3) 29.9 சீர்திருத்திற்காக வழங்கப்படும் சாட்டையடிகளின் (அதிகபட்ச) அளவு (1) 29.8 மது அருந்திய குற்றத்திற்கான தண்டனை (4) 29.7 மகப்பேறான பெண்ணின் தண்டனையைத் தள்ளிவைத்தல் (1) 29.6 இஸ்லாமிய அரசின் கீழ் வாழும் யூதர்கள் விபச்சாரத்தில் ஈடுபட்டாலும் கல்லெறி தண்டனை (6) 29.5 விபச்சாரம் செய்தவரின் ஒப்புதல் வாக்குமூலம் (9) 29.4 மணமானவர்கள் விபச்சாரம் செய்தால் கல்லெறி தண்டனை (1) 29.3 விபச்சாரக் குற்றத்திற்கான தண்டனை (2) 29.2 தண்டனையிலிருந்து விலக்கு அளிக்குமாறு பரிந்துரைப்பதற்குத் தடை (3) 29.1 தண்டனைக்குரிய திருட்டின் அளவுகோலும் தண்டனையும் (7) 28.11 சிசுக் கொலைக்கான இழப்பீடும் … (6) 28.10 கொலையாளி, தன் குற்றத்தை ஒப்புக்கொள்வதும் … (2) 28.9 மனிதர்களின் உயிர், தன்மானம், செல்வம் ஆகியவற்றுக்கு ஊறு விளைவிப்பது … (2) 28.8 மறுமையில் வழங்கப்படும் தீர்ப்பும் தண்டனையும் … (1) 28.7 கொலையை (உலகுக்கு) அறிமுகப்படுத்தியவர் மீதான பாவம் (1) 28.6 முஸ்லிமின் மரண தண்டனைக்கான காரணங்கள் (2) 28.5 பற்கள் போன்ற(உறுப்புகளான)வற்றில் பழிக்குப்பழி உண்டு (1) 28.4 தாக்க வந்தவனிடமிருந்து தற்காத்துக் கொள்வதற்காக … (6) 28.3 கல் மற்றும் கூராயுதங்களால் கொலை செய்தால், பழிக்குப்பழி உண்டு … (3) 28.2 வன்முறையாளர்களுக்கும் மதம் மாறியோருக்குமான தண்டனை (4) 28.1 அல்கஸாமா (4) 27.13 விடுதலைக்கு வாக்களிக்கப்பட்ட அடிமையை விற்கலாம் (2) 27.12 அடிமையில் தமது பங்கை மட்டும் விடுதலை செய்தல் (8) 27.11 ‏தன் உரிமையாளருக்கு விசுவாசமாகவும் … (4) 27.10 அடிமைக்கு எஜமானர் உண்பதிலிருந்து உணவளிப்பதும் … (4) 27.9 விபசாரம் செய்துவிட்டதாக அவதூறு கூறுவதற்கான கண்டனம் (1) 27.8 அடிமைகளுடனான நல்லுறவும் கன்னத்தில் அறைந்ததற்கான பரிகாரமும் (8) 27.7 இறைமறுப்பாளராக இருந்தபோது செய்த நேர்ச்சை… (2) 27.6 ஆகுமாக்கப்பட்டதற்கான சத்தியமாக இருந்தாலும் … (1) 27.5 இன்ஷா அல்லாஹ் என்பதை (சத்தியத்தின்போது) சேர்த்துக் கூறுதல் (4) 27.4 சொல்பவரின் எண்ணப்படியே ஒருவருடைய சத்தியம் அமையும் (2) 27.3 சத்தியம் செய்தவர், அதைவிடச் சிறந்ததாக மற்றொன்றைக் காணும்போது … (12) 27.2 ‘லாத்’ மற்றும் ‘உஸ்ஸா’வின் மீது சத்தியம் செய்துவிட்டவர் … (2) 27.1 அல்லாஹ்வைத் தவிர எவர்/எதன் மீதும் சத்தியம் செய்யத் தடை (3) 26.5 நேர்ச்சை முறிவுக்கான பரிகாரம் (1) 26.4 கஅபாவரை நடைப்பயணம் செல்வதாக நேர்ந்துகொண்டவர் (3) 26.3 இறைவனுக்கு மாறு செய்வதிலோ உரிமை இல்லாததிலோ நேர்ச்சை. (1) 26.2 நேர்ச்சை செய்வதற்குத் தடை; அது (விதியில்) எதையும் மாற்றிவிடாது (6) 26.1 நேர்ச்சையை நிறைவேற்றக் கட்டளை (1) 25.5 வசதியற்றவர் மரண சாஸனம் செய்ய முடியாது (6) 25.4 அறக்கொடை (1) 25.3 மனிதன் இறந்த பின்பும் தொடரும் நன்மைகள் (1) 25.2 இறந்துவிட்டவருக்காகச் செய்யப்படும் தர்மங்களின் நன்மை … (3) 25.1 மரண சாஸனம் 1/3 மட்டுமே (5) 25.0 மரண சாஸனம் (2) 24.4 ஆயுட்கால அன்பளிப்பு (11) 24.3 அன்பளிப்பு வழங்குவதில் பிள்ளைகளிடையே பாகுபாடு காட்டுவது … (10) 24.2 தானமும் அன்பளிப்பும் வழங்கப்பட்ட பின், திரும்பப் பெறுவதற்குத் தடை … (4) 24.1 தானமாகக் கொடுத்ததை விலைக்கு வாங்குவது விரும்பத் தக்கதல்ல (4) 23.4 ஒருவர் விட்டுச்செல்லும் செல்வம் அவருடைய வாரிசுகளுக்கு உரியதாகும் (4) 23.3 இறுதியாக அருளப்பெற்றது கலாலா வசனமாகும் (4) 23.2 ‘கலாலா’ சொத்துரிமை (5) 23.1 உரியவர்களுக்கும் உறவினருக்கும் பிரிக்கப்பட்ட பாகங்கள் (3) 23.0 ஒரு முஸ்லிம், இறைமறுப்பாளருக்கு வாரிசாகமாட்டார் (1) 22.31 பாதைக்கு நிலம் ஒதுக்குவதில் கருத்து வேறுபாடு ஏற்பட்டால் அதற்கான தீர்வு (1) 22.30 பிறர் நிலத்தை அபகரித்தல் போன்ற அநீதி இழைத்தல்களுக்குத் தடை (6) 22.29 அண்டை வீட்டாரின் சுவரில் (சாரம் கட்டுவதற்கு) மரக்கட்டை பதிப்பது (1) 22.28 பங்காளியின் இசைவு (3) 22.27 வியாபாரத்தில் (வீண்)சத்தியம் செய்வது விலக்கப்பட்டுள்ளது (2) 22.26 உணவுப் பொருட்களைப் பதுக்குவதற்குத் தடை (2) 22.25 முன்பணம் செலுத்தும் வணிகம் (2) 22.24 அடமானம் உள்ளூரிலும் பயணத்திலும் செல்லும் (3) 22.23 ஓர் உயிரினத்தை அதே இனத்திற்குப் பதிலாக ஏற்றத்தாழ்வோடு விற்கலாம் (1) 22.22 உங்களில் சிறந்தவர் கடனை அழகிய முறையில் திருப்பிச் செலுத்துபவரே (4) 22.21 ஒட்டகத்தை விற்றவர் அதில் பயணிக்க நிபந்தனை விதிப்பது (5) 22.20 அனுமதிக்கப்பட்டவற்றையும் ஐயத்திற்குரியவற்றையும் கையாளுதல் (1) 22.19 வட்டி வாங்குபவருக்கும் வட்டி கொடுப்பவருக்கும் சாபம் (2) 22.18 உணவுப் பொருளை, சரிக்குச் சரியாக விற்றல் (12) 22.17 பொன்னும் மணியும் பதித்த மாலையை விற்பது (4) 22.16 தங்கத்திற்கு வெள்ளியைக் கடனாக விற்பதற்குத் தடை (3) 22.15 நாணயமாற்று வியாபாரம்; வெள்ளிக்குத் தங்கத்தை ரொக்கத்துக்கு விற்பது (7) 22.14 வட்டி (4) 22.13 மது, செத்தவை, பன்றி, சிலைகள் ஆகியவற்றை விற்பதற்குத் தடை (4) 22.12 மதுபான வியாபாரத்திற்குத் தடை (4) 22.11 குருதி உறிஞ்சி எடுப்பதற்காகக் கூலி பெறுவது கூடும் (4) 22.10 வேட்டை, காவல், பாதுகாப்புக்காக நாய் வளர்க்கலாம் (18) 22.9 நாய் விற்ற காசு, சோதிடரின் தட்சணை, விபச்சாரியின் வருமானம் (4) 22.8 தேவைக்குப் போக மீதம் உள்ள நீரை விற்பதற்குத் தடை (5) 22.7 வசதியுள்ளவர் கடனைச் செலுத்த தாமதம் செய்யக் கூடாது (1) 22.6 கடனை அடைக்க சிரமப்படுபவருக்கு அவகாசம் அளிப்பதன் சிறப்பு (7) 22.5 திவாலானவரிடம் திரும்பப் பெற்றுக்கொள்ளும் உரிமை (4) 22.4 கடனில் தள்ளுபடி செய்வது விரும்பத் தக்கதாகும் (3) 22.3 சேதமடைந்த பழங்களுக்கான தொகைக்குத் தள்ளுபடி (5) 22.2 மரம் நடுதலின், பயிர் செய்தலின் சிறப்பு (5) 22.1 நிபந்தனையின் பேரில் தோப்பைக் குத்தகைக்கு விடுவது (4) 21.21 நிலத்தை (விளைவித்துக்கொள்ள) இரவலாக வழங்குவது (4) 21.20 ‘முஸார’ஆவும் ‘முஆஜரா’வும் (2) 21.19 பொன், வெள்ளி(நாயணங்களு)க்கு நிலத்தைக் குத்தகைக்கு விடுவது (3) 21.18 தானியத்திற்கு நிலத்தைக் குத்தகைக்கு விடுவது (2) 21.17 நிலக் குத்தகை (24) 21.16 தடை செய்யப்பட்ட வியாபார வகைகள் (6) 21.15 கனிகள் நிறைந்த பேரீச்ச மரத்தை விற்பது (4) 21.14 (மரத்திலுள்ள) செங்கனிகளை மாற்றிக் கொள்வதற்குத் தடை (14) 21.13 மரத்திலுள்ள பழங்களை முற்றுவதற்கு முன் விற்பதற்குத் தடை (10) 21.12 வியாபாரத்தில் ஏமாற்றப்படுபவர் (1) 21.11 வியாபாரத்தில் உண்மை பேசுவதும் குறைகளைத் தெளிவுபடுத்துவதும் (1) 21.10 விற்பவருக்கும் வாங்குபவருக்கும் வியாபாரத்தை முறித்துக்கொள்ளும் உரிமை (4) 21.9 அளவு தெரியாத பேரீச்சம் பழக் குவியலை விற்பதற்குத் தடை (1) 21.8 வாங்கப்பட்ட பொருள் கைக்கு வருமுன் (பிறருக்கு) விற்பது கூடாது (13) 21.7 மடி கனக்கச் செய்யப்பட்ட கால்நடைகளை விற்பனை செய்வது பற்றிய சட்டம் (5) 21.6: கிராமவாசிக்காக, நகரவாசி விற்றுக் கொடுக்கத் தடை (5) 21.5: விற்பனைக்கு வரும் சரக்குகளை இடைமறித்து வாங்கத் தடை (4) 21.4: வியாபாரத்தில் தடை செய்யப்பட்டவை (7) 21.3: ஒட்டகக் கன்று (அது பிறக்குமுன்) விற்பதற்கு தடை! (2) 21.2: கல்லெறி வியாபாரம் மற்றும் மோசடி வியாபாரம் ஆகியவை செல்லாது (1) 21.1: ‘முலாமஸா’ மற்றும் ‘முனாபதா’ ஆகிய வியாபாரங்கள் செல்லாது (3) 20.7: அடிமையான தந்தையை விடுதலை செய்வதன் சிறப்பு (1) 20.6: அடிமைகளை விடுதலை செய்வதன் சிறப்பு (4) 20.5: விடுதலை செய்த உரிமையாளரை மாற்றிக் கூறத் தடை (4) 20.4: வாரிசாகும் உரிமையை விற்பதற்கும் அன்பளிப்பாக வழங்குவதற்கும் தடை (1) 20.3: விடுதலை செய்தவருக்கே வாரிசுரிமை உரியது (9) 20.2: அடிமை (தனது முழு விடுதலைக்காக) உழைத்துப் பொருளீட்டுவது (2) 20.1: ஓர் அடிமையி(ன் விலையி)ல், ஒருவர் தமக்கான பங்கை விடுவிப்பது (1) 19.1: சுய சாபம் வேண்டுதல் (17) 18.9: கணவன் இறந்து ‘இத்தா’விலிருக்கும் பெண் துக்கம் கடைப்பிடிப்பது (11) 18.8: கர்ப்பமுற்றிருக்கும் பெண்ணின் ‘இத்தா’க் காலம், பிரசவத்துடன் முடிந்துவிடும் (2) 18.7: ‘இத்தா’விலிருக்கும் பெண் தன் தேவைக்காக வெளியே செல்லலாம் (1) 18.6: மூன்று தலாக் சொல்லப்பட்ட பெண்ணுக்கு ஜீவனாம்சம் பற்றி… (18) 18.5: ஈலாச் செய்வது, மனைவியிடமிருந்து விலகுவது, விருப்ப உரிமை அளிப்பது (5) 18.4: மனைவிக்கு (த் தம்மைப் பிரிந்துவிட) உரிமை அளிப்பது மணவிலக்கு ஆகாது (8) 18.3: மணவிலக்குச் செய்யும் நோக்கமின்றி கூறினால், அது மணவிலக்கு ஆகாது (4) 18.2: மூன்று தலாக்குகள் (3) 18.1: மாதவிடாயான மனைவியை அவளது சம்மதமின்றி மணவிலக்குச் செய்வதற்குத் தடை (14) 17.19: ஹவ்வா-வும், பெண்கள் கணவரை ஏமாற்றுதலும் (2) 17.18: மனைவியரின் நலம் நாடுதல் (4) 17.17: பயன் தரும் இவ்வுலகச் செல்வங்களுள் மிகச் சிறந்த செல்வம், நற்குணமுள்ள மனைவியே (1) 17.16: கன்னிப் பெண்ணை மணப்பது விரும்பத் தக்கதாகும் (5) 17.15: மார்க்கப் பற்றுள்ள பெண்ணை மணப்பது விரும்பத் தக்கதாகும் (2) 17.14: மனைவியருள் ஒருவர், தனது முறைநாளை மற்றவருக்கு விட்டுக்கொடுக்கலாம் (4) 17.13: மனைவியருக்கு (இரவுகளை) ஒதுக்கீடு செய்வது (1) 17.12: கன்னி கழிந்த பெண்ணுக்கும், கன்னிப் பெண்ணுக்கும் கணவன் ஒதுக்க வேண்டிய நாட்கள் (6) 17.11: சாயல் அறியும் நிபுணரின் கூற்றுப்படி, குழந்தைக்கு உரியவரைக் கண்டறிவது (3) 17.10: எஜமானரின் கீழ் வாழும் பெண்ணின் குழந்தை, அவருக்கே உரியது (2) 17.9: பெண் போர்க் கைதியுடன் உடலுறவு கொள்ளலாம் (2) 17.8: பசிக்காகத் தாய்ப்பால் அருந்தினால்தான் பால்குடி உறவு ஏற்படும் (1) 17.7: பருவ வயதை அடைந்தவருக்குப் பாலூட்டுவது (6) 17.6: ஐந்து தடவை அருந்தினால்தான் பால்குடி உறவு உண்டாகும் (2) 17.5: ஓரிரு தடவை (பெண்ணின் மார்பில்) பால் குடிப்பது பற்றிய சட்டம் (6) 17.4: மனைவியின் மகளையும் மனைவியின் சகோதரியையும் மணப்பதற்குத் தடை (2) 17.3: பால்குடிச் சகோதரரின் மகளை மணப்பது தடை செய்யப்பட்டுள்ளது (3) 17.2: பால்குடித் தந்தையின் (இரத்த பந்த) உறவினரும் மணமுடிக்கத் தகாதவரே! (6) 17.1: பிறப்பால் ஏற்படும் உறவும் பால்குடி உறவும் (2) 16.24: பாலூட்டும் மனைவியுடன் உடலுறவு கொள்ளும்போது அஸ்லுச் செய்வது வெறுக்கத் தக்கது (3) 16.23: கருவுற்றிருக்கும் பெண் போர்க் கைதியுடன் உடலுறவு கொள்வது தடை செய்யப்பட்டுள்ளது (1) 16.22: உடலுறவின்போது இடைமுறிப்பு – ‘அஸ்லு’ச் சட்டம் (12) 16.21: மனைவியுடன் நடைபெறும் உடலுறவு இரகசியங்களை வெளியே சொல்வது தடுக்கப்பட்டது (2) 16.20: ஒரு பெண், தன் கணவனின் படுக்கைக்குச் செல்ல மறுப்பதற்குத் தடை (3) 16.19: உடலுறவின் ஒழுங்குகள் (2) 16.18: உடலுறவின்போது ஓத வேண்டிய விரும்பத் தகுந்த பிரார்த்தனை (1) 16.17: மூன்று முறை மணவிலக்கு அளிக்கப்பட்ட பெண்ணின் மறுவிருப்பம் (4) 16.16: விருந்துக்கான அழைப்பை ஏற்பது பற்றிய கட்டளை (13) 16.15: ஸைனப் பின்த்து ஜஹ்ஷு (ரலி) திருமணம்; ஹிஜாப் பற்றிய வசனம்; மணவிருந்து (7) 16.14: அடிமைப் பெண்ணை விடுதலை செய்து, பின்னர் அவளை மணமுடித்துக்கொள்வதன் சிறப்பு (6) 16.13: மணக்கொடை (மஹ்ரு) என்பது … (7) 16.12: ஒருவர் தாம் மணமுடிக்க விரும்பும் பெண்ணின் முகத்தையும் இரு முன் கைகளையும் பார்ப்பது (2) 16.11 ஷவ்வால் மாதத்தில் மணமும் தாம்பத்திய உறவும் (1) 16.10: இளவயதுக் கன்னிக்கு அவளுடைய தந்தை மணமுடித்துவைத்தல் (4) 16.9: மணப் பெண்ணின் வாய் வழிச் சம்மதமும் மௌனச் சம்மதமும் (4) 16.8: திருமண (முன்) நிபந்தனைகளை நிறைவேற்றல் (1) 16.7: மணக்கொடையில்லா திருமணம் செல்லாது (5) 16.6: தம் (முஸ்லிம்) சகோதரன் கேட்டுக்கொண்டிருக்கும் ஒரு பெண்ணை, மற்றவர் கேட்கலாகாது (7) 16.5: இஹ்ராம் புனைந்தவர் திருமணம் செய்வதற்குத் தடை; அவர் பெண் கேட்பது வெறுக்கத் தக்கது (8) 16.4: மனைவியின் அத்தையை, சின்னம்மாவை மணக்கத் தடை (8) 16.3: இடைக்காலத் திருமணம், (முத்ஆ) காலாவதியானது (21) 16.2: இச்சை தூண்டப்பட்டவர், தமது இச்சையைத் தணித்துக் கொள்ளட்டும் (2) 16.1: வசதி இருந்தால் மணமுடிப்பதும் இல்லாதவர் நோன்பு நோற்பதும் (6) 15.97: குபாப் பள்ளிவாசல், அதில் தொழுவது, அதைத் தரிசிப்பது ஆகிய சிறப்புகள் (7) 15.96: இறையச்சத்தின் மீது நிறுவப்பட்ட பள்ளிவாசல் (1) 15.95: மூன்று பள்ளிவாசல்களைத் தவிர வேறெதற்கும் (புனிதப்) பயணம் கிடையாது (2) 15.94: மக்கா, மதீனாப் பள்ளிவாசல்களில் தொழுவதன் சிறப்பு (6) 15.93: ‘உஹுத்’ மலை நம்மை நேசிக்கிறது; நாமும் அதை நேசிக்கின்றோம் (3) 15.92: சொர்க்கப் பூஞ்சோலைகளுள் ஒன்று (3) 15.91: மதீனாவாசிகள் மதீனாவை விட்டு அகலும்போது அதன் நிலை (2) 15.90: மதீனாவிலேயே தங்கியிருப்பதற்கு ஆர்வமூட்டல் (2) 15.89: மதீனாவாசிகளுக்குக் கேடு நினைப்பவர்களை, அல்லாஹ் உருக்குலைத்துவிடுவான் (3) 15.88: தன்னிலுள்ள தீயவர்களை மதீனா அகற்றிவிடும் (5) 15.87: கொள்ளை நோயும் தஜ்ஜாலும் நுழைய முடியாமல் மதீனா பாதுகாக்கப்பட்டுள்ளது (2) 15.86: மதீனாவில் ஏற்படும் நெருக்கடிகளைச் சகித்துக்கொண்டு, அங்குக் குடியிருக்க ஆர்வ மூட்டல் (10) 15.85: மதீனாவின் சிறப்பு; பிரார்த்தித்ததும் புனிதமானவையும் (17) 15.84: இஹ்ராமின்றி மக்காவிற்குள் நுழைய அனுமதி (5) 15.83: அவசியத் தேவையின்றி மக்காவிற்குள் ஆயுதம் எடுததுச் செல்வதற்குத் தடை (1) 15.82: மக்காவும், அதன் புனிதமானவைகளும் (4) 15.81: முஹாஜிருக்கு மக்காவில் தக்குவதற்கு அனுமதிக்கப்பட்ட நாட்கள் (4) 15.80: ஹாஜிகள் மக்காவில் தங்குவதும் அங்குள்ள வீடுகளை வாரிசுரிமையாகப் பெறுவதும் (3) 15.79: ஹஜ், உம்ரா, அரஃபா நாள் ஆகியவற்றின் சிறப்பு (3) 15.78: இணைவைப்பவருக்கான ஹஜ் சட்டங்கள் (1) 15-77: ஹஜ் அல்லது உம்ராவிலிருந்து திரும்பும்போது துல்ஹுலைஃபாவில் தங்கித் தொழுவது (5) 15.76: பயணத்திலிருந்து திரும்பி வரும்போது ஓத வேண்டியவை (2) 15.75: பயணங்களில் வாகனத்தில் ஏறியதும் ஓத வேண்டிய துஆ (2) 15.74: மஹ்ரமான ஆணுடன் மட்டுமே பெண்ணின் ஹஜ் முதலான பயணம் (11) 15.73: ஹஜ் கடமை, ஆயுளில் ஒரு முறைதான் (1) 15.72: குழந்தையின் ஹஜ் செல்லும்; அதை ஹஜ்ஜுக்கு அழைத்துச் சென்றவருக்கும் நற்பலன் உண்டு (3) 15.71: இயலாதவருக்காகவோ, இறந்தவருக்காகவோ பிறர் ஹஜ் செய்தல் (2) 15.70: கஅபாவின் வளைந்த சுவரும் அதன் தலைவாயிலும் (1) 15.69: இறையில்லம் கஅபாவை இடித்துக் கட்டுதல் (7) 15.68: கஅபாவின் உள்ளே நுழைவதும் அதனுள் தொழுவதும் (9) 15.67: விடைபெறும் தவாஃப் மாதவிடாய் ஏற்பட்ட பெண்ணுக்குக் கடமையில்லை (8) 15.66: செல்லும் வழியில் பலிப் பிராணி பாதிப்புக்குள்ளாகிவிட்டால் … (2) 15.65: பலியிடக் கொண்டுசெல்லும் ஒட்டகத்தில், பயணம் செய்ய அனுமதி (6) 15-64: ஹரம் எல்லைக்குச் செல்லாதவர், பலிப் பிராணியை அனுப்பிவைக்கும் முறை (11) 15.63: ஒட்டகத்தை அறுக்கும் முறை (1) 15.62: பலிப் பிராணிகளுள் மாட்டிலும் ஒட்டகத்திலும் கூட்டுச் சேர்வது (8) 15.61: பலிப் பிராணிகளின் இறைச்சி, தோல், சேணம் ஆகியவை தர்மத்துக்குரியன (2) 15.60: ‘தஷ்ரீக்’ நாட்களின் இரவுகளில் மினாவில் தங்குவது கட்டாயமாகும் (2) 15.59: ‘நஃப்ரு’டைய நாளில் ‘அல்முஹஸ்ஸபி’ல் தங்குவதும் அங்குத் தொழுவதும் (9) 15.58: துல்ஹஜ் பத்தாவது நாளில் ‘தவாஃபுல் இஃபாளா’ செய்வது (2) 15.57: ஹஜ் சடங்குகளில் முன் – பின் ஆகிவிட்டால் … (6) 15.56: துல்ஹஜ் பத்தாம் நாளின் சடங்குகள் (3) 15.55: தலைமுடியை மழிப்பதும் குறைப்பதும் (6) 15.54: கற்களின் எண்ணிக்கை (1) 15.53: கல்லெறியும் நேரம் (1) 15.52: பொடிக் கற்கள் போதும் (1) 15.51: துல்ஹஜ் பிறை பத்தில் ஜம்ரத்துல் அகபாவுக்குக் கல்லெறிதல் (3) 15.50: ‘ஜம்ரத்துல் அகபா’வின் மீது கல் எறியும்போது தக்பீர் கூறுவது (4) 15.49: முஸ்தலிஃபாவிலிருந்து மினாவிற்குப் புறப்படச் செய்வது (11) 15.48: முஸ்தலிஃபாவில் ஸுப்ஹுத் தொழுகையை ஆரம்ப நேரத்தில் தொழுவது (1) 15.47: மஃக்ரிப், இஷா வை அடுத்தடுத்துத் தொழுவது (14) 15.46: அரஃபா நாளில் மினாவிலிருந்து அரஃபாவிற்குப் போகும்போது தல்பியாவும் தக்பீரும் கூறுதல் (4) 15.45: துல்ஹஜ் பத்தாவது நாளன்று கல்லெறியத் துவங்கும்வரை தல்பியாச் சொல்லிக்கொண்டிருப்பது (7) 15.44: ஸஃபா-மர்வாவுக்கிடையே ஸயீ (ஓட்டம்) ஒரே தடவைதான் (1) 15.43: ஸஃபா-மர்வாவுக்கிடையே ஸயீச் செய்வது முக்கியக் கடமையாகும் (5) 15.42: வாகனங்கள் மீதமர்ந்து தவாஃப் செய்யலாம் (6) 15.41: தவாஃபின்போது ஹஜருல் அஸ்வதை முத்தமிடுவது (5) 15.40: இறையில்லத்தில் முத்தமிடப்படும் இரு மூலைகள் (6) 15.39: தவாஃபில் விரைந்து நடப்பது விரும்பத்தக்கது (12) 15.38: மக்காவினுள் நுழையும் முன்… (4) 15.37 மக்காவினுள் நுழைவதும் வெளியேறுவதும் (3) 15.36 ரமளான் மாதத்தில் உம்ராச் செய்வதன் சிறப்பு (2) 15.35: நபியவர்களின் உம்ரா எண்ணிக்கையும் காலமும் (4) 15.34 நபியவர்களின் தல்பியாவும் பலியும் (4) 15.33: உம்ராவில் தலைமுடி குறைத்தல் (5) 15.32: இஹ்ராமின்போது பலிப் பிராணி (4) 15.31: ஹஜ்ஜுப் பருவங்களில் உம்ராச் செய்ய அனுமதி (6) 15.30: தமத்துஉ ஹஜ் (2) 15.29: இஹ்ராம் ஹாஜிக்குக் கட்டாயம் (3) 15.28: தவாஃபும் ஸயீயும் கட்டாயம் (3) 15.27: ஹஜ் உம்ரா சேர்த்தும் தனித்தும் செய்வது (3) 15.26: ஒரே இஹ்ராமில் உம்ரா ஹஜ் (3) 15.25: இஹ்ராமிலிருந்து விடுபடுதல் (3) 15.24: பலிப் பிராணியும் ஹஜ் கடமையும் (2) 15.23: தமத்துஉ ஹஜ் அனுமதிக்கப்பட்ட ஒன்றாகும் (13) 15.22: ஒருவர் வேறொருவரின் இஹ்ராமை அச்சொட்டி பூணுதல் (3) 15.21: அரஃபா பெருவெளியில் தங்கி திரும்புதல் தொடர்பான இறை கூற்று (3) 15.20: அரஃபாப் பெருவெளி முழுவதும் தங்குமிடம் (2) 15.19: நபி (ஸல்) அவர்களின் ஹஜ் (1) 15.18: உம்ராவையும் ஹஜ்ஜையும் தனித் தனியாக நிறைவேற்றி பயனடைதல் (2) 15.17: இஹ்ராமின் முறைகள் (27) 15.16: இரத்தப்போக்குடைய பெண் இஹ்ராமில் குளித்தல் (2) 15.15: இஹ்ராமிலிருந்து விடுபட முன் நிபந்தனையிட அனுமதி (5) 15.14: முஹ்ரிம் இறந்துவிட்டால் செய்ய வேண்டியவை (9) 15.13: இஹ்ராம் பூண்ட முஹ்ரிம், தம் உடலைக் கழுவிக்கொள்ள அனுமதி (1) 15.12: இஹ்ராம் பூண்ட முஹ்ரிம், தம் கண்களுக்கு மருந்திட அனுமதி (2) 15.11: இஹ்ராம் பூண்ட முஹ்ரிம், ஹிஜாமா செய்ய அனுமதி (2) 15.10: முஹ்ரிமுக்குத் தலைமுடி மழிக்க அனுமதியும் பரிகாரமும் (7) 15.09: ஹரம் எல்லைக்குள் கொல்ல அனுமதிக்கப்பட்டவைகள் (12) 15.08: இஹ்ராம் பூண்ட முஹ்ரிம் வேட்டையாடுவது குறித்து.. (9) 15.07: இஹ்ராமின்போது நறுமணம் பூசுதல் (19) 15.06: துல்ஹுலைஃபா பள்ளியில் தொழுதல் (1) 15.05: வாகனம் புறப்படுவதற்கு ஆயத்தமானவுடன் தல்பியா கூறுவது (4) 15.04: மதீனாவாசிகள் இஹ்ராம் பூண வேண்டிய இடம் (2) 15.03: தல்பியாவின் பண்பும் அதன் நேரமும் (4) 15.02: ஹஜ்/உம்ராவிற்கான இஹ்ராம் எல்லைகள் (7) 15.01: ஹஜ்/உம்ராவில் அனுமதிக்கப்பட்டவை.. (10) 14.04: துல்ஹஜ் மாதத்தின் பத்து நோன்புகள் (2) 14.02: இஃதிகாஃப் இருக்குமிடத்தினுள் நுழையும் நேரம் (1) 14.03: இறுதிப் பத்தில் வழிபாடுகளில் ஈடுபடுவது (2) 14.01: இறுதிப் பத்து நாட்களில் இஃதிகாஃப் இருத்தல் (5) 13.40: லைலத்துல் கத்ர் இரவு குறித்து.. (17) 13.39: ஷவ்வால் ஆறு நோன்பு (1) 13.37: ஷஅபான் மாத இறுதியில் நோன்பு நோற்றல் (3) 13.38: முஹர்ரம் நோன்பின் சிறப்பு (2) 13.36: சுன்னத்தான நோன்புகள் (5) 13.35: ஒரு நாள் விட்டு ஒரு நாள் நோன்பு (12) 13.34: நோன்பில்லாமல் எந்த மாதத்தையும் கடக்க விடாமலிருப்பது விரும்பத் தக்கது (9) 13.33: மறதியால் (நோன்பாளி) நோன்பு முறியாது (1) 13.32: கூடுதலான நோன்பு முடிவு செய்வதற்கும் விடுவதற்கும் அனுமதி (2) 13.31: அல்லாஹ்வின் பாதையில் செல்லும்போது சக்தி பெற்றிருப்பவர் நோன்பு நோற்பதன் சிறப்பு (2) 13.30: நோன்பின் மாண்பு (6) 13.29: நோன்பாளி, நாவைக் காப்பது (1) 13.28: நோன்பாளி விருந்துக்கு அழைக்கப்பட்டால் “நான் நோன்பாளி” என்று சொல்லிவிட வேண்டும் (1) 13.27: இறந்துபோனவரின் விடுபட்ட நோன்பை நோற்பது (5) 13.26: ரமளானில் விடுபட்ட நோன்பை ஷஅபான் மாதத்தில் ‘களா’ச் செய்தல் (2) 13.25: இறைவசனம் வேறொரு வசனத்தின் மூலம் மாற்றம் (2) 13.24: வெள்ளிக்கிழமை மட்டும் நோன்பு நோற்பது விரும்பத் தக்கதன்று (3) 13.23: அய்யாமுத் தஷ்ரீக் நாட்களில் நோன்பு நோற்பதற்குத் தடை (2) 13.22: நோன்புப் பெருநாளிலும் ஹஜ்ஜுப் பெருநாளிலும் நோன்பு நோற்பதற்குத் தடை (6) 13.20: ஆஷூரா நோன்பை எந்த நாளில் நோற்க வேண்டும்? (4) 13.19: ஆஷூரா நாளில் நோன்பு நோற்றல் (17) 13.18: அரஃபா நாளில் அரஃபாவில் தங்கும் ஹாஜிகளின் நோன்பு (4) 13.17: பயணத்தில் நோன்பு நோற்பதையோ விட்டுவிடுவதையோ தேர்ந்துகொள்ளலாம் (5) 13.16: பயணத்தில் நோன்பைக் கைவிட்டவர், பொதுப் பணியாற்றினால் கிடைக்கும் நன்மை (3) 13.15: பயணத்தில் இருப்பவர் மீதான கடமையான ரமளான் நோன்பு (11) 13.14: ரமளான் பகலில் உடலுறவில் ஈடுபடுவதற்குத் தடையும் அதன் பரிகாரமும் (5) 13.13: பெருந்துடக்குடன் வைகறைப் பொழுதை அடைந்தவரின் நோன்பு செல்லும் (6) 13.12: கட்டுப்படுத்தும் நோன்பாளிக்கு (தம் மனைவியை) முத்தமிடத் தடையில்லை (13) 13.11: தொடர்நோன்பு நோற்பதற்குத் தடை (7) 13.10: பகற் பொழுது வெளியேறி நோன்பு நிறைவடையும் நேரம் (3) 13.09: ஸஹரைத் தாமதிப்பதும் நோன்பு துறப்பதை விரைந்து செய்வதும் (6) 13.08: ஃபஜ்ரு நேரம் வந்தவுடன் நோன்பு ஆரம்பமாகிவிடும் (11) 13.07: ‘இரு பெருநாட்களின் இரு மாதங்களும் குறைவுபடாது’ நபிகளாரின் விளக்கம் (2) 13.06: (வானை) மேகம் மூடிக்கொண்டால் (மாதத்தின் நாட்கள்) முப்பதாக முழுமையாக்கப்படும் (2) 13.05: ஒவ்வோர் ஊர்க்காரர்களுக்கும் அவரவர் பார்க்கும் பிறையே பொருந்தும் (1) 13.04: மாதம் என்பது இருபத்தொன்பது நாட்களாகவும் இருக்கும் (6) 13.03: ரமளானுக்கு முந்தைய இரு நாள்களில் நோன்பு நோற்கக் கூடாது (1) 13.02: ரமளான் நோன்பு தொடக்கமும் முடிவும் (17) 13.01: ரமளான் மாதத்தின் சிறப்பு (2) 12.55: ஸகாத் வசூலிப்பவர், தடை செய்யப்பட்டதைக் கோராதவரை அவரைத் திருப்திபடுத்த வேண்டும் (1) 12.54: தர்மப் பொருள் கொண்டுவந்தவருக்காகப் பிரார்த்தித்தல் (1) 12.53: நபி (ஸல்) அன்பளிப்பை ஏற்றதும் தர்மத்தை மறுத்ததும் (1) 12.52: தர்மப் பொருள், அதன் பண்பு நீங்கி விடுதல் (5) 2.27: நாய் நக்கிய பாத்திரம் பற்றிய சட்டம் (6) 2.28: தேங்கிக் கிடக்கும் தண்ணீரில் சிறுநீர் கழிப்பதற்குத் தடை (3) 2.29: பெருந்துடக்குடையவர் தேங்கிய நீரில் இறங்கிக் குளிக்கத் தடை (1) 2.30: பள்ளிவாசலில் சிறுநீர் கழித்தால்… (3) 2.31: தாய்பால் குடிக்கும் குழந்தையின் சிறுநீரைக் கழுவும் சட்டம் (4) 2.32: விந்து பற்றிய சட்டம் (4) 2.33: மாதவிடாய் இரத்தம் கழுவும் முறை (1) 2.34: சிறுநீரைச் சுத்தம் செய்வது கட்டாயம் (1) 3.01: மாதவிடாயான மனைவியைக் கீழாடைக்கு மேல் அணைத்துக் கொள்வது. (3) 3.02: மாதவிடாயான மனைவியுடன் ஒரே போர்வைக்குள் படுத்துக் கொள்வது. (2) 3.03: மாதவிடாயான பெண் செய்ய அனுமதிக்கப்பட்டவை (11) 3.04: இச்சை நீர் (3) 3.05: உறங்கி எழுந்ததும் முகத்தையும் கையையும் கழுவுதல் (1) 3.06: பெருந்துடக்காளி செய்ய வேண்டியவை (8) 3.07: மதன நீர் வெளிப்பட்ட பெண்ணுக்குக் குளியல் கடமை. (5) 3.08: ஆண்/பெண் (விந்து-மதன)நீரிலிருந்துதான் குழந்தை உருவாகிறது. (1) 3.09: பெருந்துடக்கிற்கான குளியல் முறை (5) 3.10: பெருந்துடக்கு குளியல் தொடர்பானவை (14) 3.11: குளிக்கும் போது மூன்றுமுறை தண்ணீர் ஊற்றுதல் (4) 3.12: குளிக்கும் பெண்களின் சடைமுடி பற்றிய சட்டம் (2) 3.13: மாதவிடாய் குளியலின் போது கஸ்தூரி பயன்படுத்துதல் (2) 3.14: தொடர் உதிரப் போக்குடைய பெண்களின் தொழுகை மற்றும் குளியல் (5) 3.15: மாதவிடாய் நாட்களில் விடுபட்ட கடமைகள் (3) 3.16: குளிப்பவர் திரையிட்டுக் கொள்தல் (3) 3.17: பிறரின் மறையுறுப்பைப் பார்த்தல் (1) 3.18: தனித்துக் குளிக்கும் போது ஆடையின்றி குளித்தல் (1) 3.19: மறையுறுப்பை மறைத்துக் கொள்வதில் கவனம் (3) 3.21: (விந்து)நீர் வெளிப்பட்டாலே (குளியல்)நீர் கடமையாகும் (9) 3.22: ஆண்-பெண் குறிகள் இணைந்து விட்டால் குளியல் கடமையாகும் (3) 3.23: சமைக்கப்படவற்றை உண்டால் மீண்டும் உளூ செய்தல் (3) 3.24: சமைக்கப் பட்டவற்றை உண்டால் உளூச் செய்யும் கட்டாயம் மாற்றப் பட்டது (8) 3.25: ஒட்டக இறைச்சி உண்டால் உளூச் செய்ய வேண்டும் (1) 3.26: வாயு பிரிந்த சந்தேகம் ஏற்பட்டாலும் தொழலாம் (2) 3.27: பதனிடப்படுவதால் செத்த பிராணியின் தோல் தூய்மை ஆகும் (7) 3.28: தயம்மும் (6) 3.29: ஒரு முஸ்லிம் (பெருந்துடக்கு ஏற்பட்டதால்) அசுத்தமாகிவிட மாட்டார். (2) 3.30: பெருந்துடக்கு போன்ற நிலைகளிலும் அல்லாஹ்வைத் துதித்தல். (1) 3.31: சிறுதுடக்காளி (உளூச் செய்யாமல்) உண்ணலாம் (4) 3.32: கழிப்பிடத்திற்குச் செல்லும்போதான பிரார்த்தனை (1) 3.33: உட்கார்ந்து கொண்டு உறங்குவது உளூவை முறிக்காது. (4) 4.01: தொழுகை அழைப்பின் தொடக்கம் (1) 4.02: தொழுகை அறிவிப்பு தொடர் அமையும் விதம் (3) 4.03: தொழுகை அழைப்பு முறை (1) 4.04: ஒரு பள்ளிவாசலுக்கு இரு தொழுகை அழைப்பாளர்கள் (1) 4.05: பார்வையற்றவர் தொழுகை அழைப்பு விட நிபந்தனை (1) 4.06: போரின் போது இணைவைப்பாளர் நாட்டில் தொழுகை அழைப்பு விடுக்கப்பட்டால் (1) 4.07: தொழுகை அழைப்பைச் செவியுறுபவர் செய்ய வேண்டியவை (4) 4.08: தொழுகை அழைப்பின் சிறப்பும் ஷைத்தான் வெருண்டோடுவதும் (6) 4.09: இரு கைகளையும் தோள் புஜத்துக்கு உயர்த்துதல் (4) 4.10: அல்லாஹு அக்பர், ஸமி அல்லாஹு லிமன் ஹமிதஹ் கூறும் இடங்கள் (5) 4.11: தொழுகையில் அல்ஃபாத்திஹா அத்தியாயம் ஓதுதல் (8) 4.12: இமாமைப் பின்பற்றித் தொழுபவர் உரத்து ஓதலாகாது (2) 4.13: பிஸ்மில்லாஹ்வை(த் தொழுகையில்) உரத்து ஓதாலாகாது என்போரின் வாதம் (2) 4.14: அத்தியாயங்களின் துவக்கம் “பிஸ்மில்லாஹ்” குறித்த வாதம் (1) 4.15: தக்பீருக்குப் பின்னும் சஜ்தாவிலும் கைகளை வைக்கும் முறை (1) 4.16: தொழுகையில் அத்தஹிய்யாத் ஓதுவது (4) 4.17: இறுதி அத்தஹியாத்திற்குப் பின் ஸலவாத் கூறுதல் (4) 4.18: ஸமி அல்லாஹு லிமன் ஹமிதஹ், ரப்பனா ல(க்)கல் ஹம்து, ஆமீன் ஆகியவை கூறுவது (5) 4.19: இமாமை மஃமூம் பின்தொடர்வது (5) 4.20: இமாமை முந்துவதற்குத் தடை (4) 4.21: இமாமைப் பின்பற்றுவதில் சட்ட மாற்றம் (10) 4.22: இமாம் வருவதற்குத் தாமதமானால்… (2) 4.23: தொழுகையில் இமாமுக்கு ஏதாவது உணர்த்த விரும்பினால்… (1) 4.24: தொழுகையை முழுமையாக உள்ளச்சத்துடன் தொழல் (4) 4.25: தொழுகையில் இமாமை முந்தாமல் இருத்தல் (7) 4.26: தொழும்போது வானத்தை அண்ணாந்து பார்ப்பதற்குத் தடை (2) 4.27: தொழுகையில் ஒழுங்குகள் (3) 4.28: தொழுகையில் வரிசைகளைப் பேணுதல் (11) 4.29: ஆண்களுக்குப் பின்னால் தொழும் பெண்கள் தலை உயர்த்தும் முறை (1) 4.30: பெண்கள் பள்ளிவாசலுக்குச் செல்தல், நறுமணம் பூசுதல் (11) 4.31: தொழுகையில் அச்சநிலையில் குர்ஆன் ஓதும் முறை (2) 4.32: குர்ஆன் ஓதப்படும்போது செவிதாழ்த்திக் கேட்க வேண்டும். (2) 4.33: ஸுப்ஹுத் தொழுகையில் உரத்துக் குர்ஆன் ஓதுதல் (4) 4.34: லுஹ்ரு, அஸ்ருத் தொழுகைகளில் குர்ஆன் ஓதுதல் (8) 4.35: ஸுப்ஹுத் தொழுகையில் குர்ஆன் ஓதுதல் (13) 4.36: இஷாத் தொழுகையில் குர்ஆன் ஓதுவது (8) 4.37: தொழுகையைச் சுருக்கி, நிறைவுறத் தொழுவிப்பதற்கான கட்டளை (11) 4.38: தொழுகையின் நிலைகளை நிதானமாக, சுருக்கி, நிறைவாகச் செய்வது (4) 4.39: தொழுகையில் இமாமை முந்தி விடாமலிருத்தல் (5) 4.40: ருகூஉவிலிருந்து தலையை உயர்த்திய பின் ஓத வேண்டியவை (5) 4.41: ருகூஉவிலும் ஸஜ்தாவிலும் குர்ஆன் ஓதுவதற்குத் தடை (6) 4.42: ருகூஉவிலும் ஸஜ்தாவிலும் ஓத வேண்டியவை (9) 4.44: ஸஜ்தாவின் போது தரையில் படவேண்டிய உறுப்புகள் (7) 4.45: சீராக ஸஜ்தா செய்தல் (2) 4.46: தொழுகை முறைத் தொகுப்பு (5) 4.47: தனித்துத் தொழுபவர் தடுப்பு ஒன்றை வைத்துக் கொள்வது (13) 4.48: தொழுகையில் குறுக்கே செல்பவரைத் தடுப்பது (4) 4.49: தொழுபவர், தடுப்புக்கு நெருக்கமாக நிற்க வேண்டும் (3) 4.50: தொழுபவருக்கான குறுக்குத் தடுப்பின் அளவு (2) 4.51: தொழுபவருக்குக் குறுக்கே படுத்திருப்பது (8) 4.52: ஒரே ஆடை அணிந்து தொழும் முறை (9) 5.01: பூமியில் எழுப்பப்பட்ட முதலாவது இறையாலயம் (8) 5.02: மஸ்ஜிதுந் நபவீ கட்டப்பட்ட வரலாறு (2) 5.03: தொழுகைத் திசை(கிப்லா) கஅபாப் பள்ளிக்கு மாற்றம் (4) 5.04: மண்ணறைகளில் செய்யக்கூடாதவை (6) 5.05: மஸ்ஜிதுகள் கட்டுவதன் சிறப்பும் அதற்கான ஆர்வமூட்டலும் (2) 5.06: ருகூஉவில் உள்ளங்கைகளை வைப்பதற்கான சட்டத் திருத்தம் (5) 5.07: இரு குதிகால்கள்மீது (தொழுகை அமர்வில்) அமர அனுமதி (1) 5.08: தொழுகையில் பேசிக் கொள்ள இருந்த அனுமதி நீக்கம் (6) 5.09: தொழுகைக்கு இடையில் செய்ய அனுமதிக்கப்பட்டவை (2) 5.10: குழந்தைகளைச் சுமந்துகொண்டு தொழுவதற்கு அனுமதி (3) 5.11: தொழுகையின்போது ஓரிரு அடிகள் நடக்க அனுமதி (1) 5.12: இடுப்பில் கையூன்றிக் கொண்டு தொழுவது வெறுக்கத் தக்கது (1) 5.13: தொழும்போது மண்ணைச் சமப்படுத்துதல் வெறுக்கத் தக்கது (3) 5.14: பள்ளிவாசலில் எச்சில் துப்பத் தடை (10) 5.15: காலணி அணிந்து கொண்டு தொழுவதற்கு அனுமதி (1) 5.16: கவனத்தை ஈர்க்கும் ஆடை அணிந்து தொழுதல் வெறுக்கப்பட்டது (3) 5.17: சிறுநீர்/மலம் அடக்குதல், உணவு காக்க வைத்தல் நிலையில் தொழுதல் (4) 5.18: துர்நாற்றத்துடன் பள்ளிச்செல்லுதலும் அவரை வெளியேற்றலும் (10) 5.19: பள்ளிவாசலினுள் காணாமற்போன பொருளைத் தேடத் தடை (3) 5.20: தொழுகையில் ஏற்படும் மறதிக்குப் பரிகாரம் (17) 5.21: ஸஜ்தா திலாவத் (9) 5.22: அத்தஹிய்யாத்தில் அமரும் முறை (5) 5.23: தொழுகையை நிறைவு செய்யும்போது ஸலாம் கூறும் முறை (3) 5.24: தொழுத பின்னர் திக்ரு (3) 5.25: மண்ணறை வேதனையிலிருந்து பாதுகாப்புக் கோருதல் (3) 5.26: தொழுகையில் பாதுகாப்புக் கோரப்பட வேண்டியவை (8) 5.27: தொழுகைக்குப்பின் திக்ரு செய்தல் (9) 5.28: தொடக்கத் தக்பீருக்குப் பின் கூறவேண்டியவை (4) 5.29: தொழுகையில் கலந்துகொள்ள செல்லும் முறை (5) 5.30: தொழுகைக்காக மக்கள் எப்போது எழுந்து நிற்க வேண்டும்? (5) 5.31: கூட்டுத்தொழுகையை அடைந்துகொள்ள நிபந்தனை (5) 5.32: ஐவேளைத் தொழுகை நேரங்கள் (13) 5.33: கடுங்கோடையில் ஜமாஅத் தொழுகை (8) 5.34: கடுங்கோடையில்லா சமயத்தில் ஜமாஅத் தொழுகை (4) 5.35: அஸ்ருத் தொழுகையின் நேரம் (7) 5.36: அஸ்ருத் தொழுகையைத் தவறவிட்டால்.. (3) 5.37: அஸ்ரு நடுத்தொழுகை என்போரின் சான்று (6) 5.38: ஸுப்ஹு, அஸ்ருத் தொழுகைகளின் சிறப்புகள் (6) 5.39: மஃக்ரிபுத் தொழுகையின் ஆரம்ப நேரம் (2) 5.40: இஷாத் தொழுகையின் நேரமும் அதைத் தாமதமாகத் தொழுவதும் (12) 5.41: ஸுப்ஹுத் தொழுகையின் நேரம் மற்றும் ஓதப்படும் (குர்ஆன் வசனங்களின்) அளவு (7) 5.42: தொழுகைக்கு உரிய நேரத்தைத் தாமதப்படுத்துதல் (7) 5.43: கூட்டுத் தொழுகையின் சிறப்பும் அதைத் தவற விடுவது பற்றிய கண்டனமும் (10) 5.44: தொழுகை அழைப்பைச் செவியுறுபவர் பள்ளிவாசலுக்குச் செல்வது கட்டாயமாகும் (1) 5.45: கூட்டுத் தொழுகை என்பது நேர்வழியைச் சார்ந்தது (2) 5.46: பாங்கு கூறிய பின்னர் பள்ளிவாசலிலிருந்து வெளியேறத் தடை (2) 5.47: இஷா மற்றும் ஸுப்ஹு கூட்டாகத் தொழுவதன் சிறப்பு (4) 5.48: கூட்டுத் தொழுகையைத் தவிர்ப்பதற்கான அனுமதி (1) 5.49: நஃபில் தொழுகைகளை ஜமாஅத்தாகத் தொழுதல் (6) 5.50: கூட்டுத் தொழுகைக்காகக் காத்திருப்பதன் சிறப்பு (5) 5.51: பள்ளிவாசலுக்கு நடந்து செல்வதன் சிறப்பு (6) 5.52: தொழுகைக்கு நடந்து செல்பவருக்குக் கிடைக்கும் பலன்கள் (4) 5.53: உதயம்வரை தொழுத இடத்தில் அமர்ந்திருப்பதன் சிறப்பு (3) 5.54: தொழுகைக்குத் தலைமையேற்க அதிகத் தகுதியுடையவர் (5) 5.55: எல்லாத் தொழுகைகளிலும் குனூத் ஓதும் காலகட்டம் (15) 5.56: விட்டுப்போனத் தொழுகைகளைத் தொழுதல் (8) 6.01: பயணிகளின் தொழுகை; சுருக்கித் தொழுதல் (20) 6.02: மழையின்போது இருப்பிடங்களில் தொழுதுகொள்ளலாம் (4) 6.03: நஃபில் தொழுகைகளை வாகனத்தில் செல்பவர் தொழலாம் (10) 6.04: பயணத்தில் இரு தொழுகைகளைச் சேர்த்து தொழலாம் (7) 6.05: உள்ளூரில் இருக்கும்போது இரு தொழுகைகளை இணைத்து தொழுதல் (10) 6.06: தொழுது முடித்தபின் வலம், இடம் திரும்பி அமர்தல் (3) 6.07: இமாமுக்கு வலப்பக்க வரிசையில் நிற்பது விரும்பத்தக்கது (1) 6.08: இகாமத் கூறத் தொடங்கி விட்டால் நஃபில் தொழுவது வெறுக்கத்தக்கது (5) 6.09: பள்ளிவாசலுக்குள் நுழையும்போது கூறவேண்டிய துஆ (1) 6.10: பள்ளிக் காணிக்கை தொழுகை தொடர்பாக (4) 6.11: பயணத்திலிருந்து திரும்பியவர் இரண்டு ரக்அத் தொழுதல் (3) 6.12: முற்பகல் (ளுஹா) தொழுகை எண்ணிக்கை (11) 6.13: ஃபஜ்ருடைய இரு ரக்அத் சுன்னத் தொழுகை (15) 6.14: சுன்னத் தொழுகைகளின் சிறப்பும் எண்ணிக்கைகளும்! (3) 6.15: நஃபில் தொழுகைகளைத் தொழும் முறைகள் (14) 6.16: இரவுத் தொழுகை (18) 6.17: இரவுத் தொழுகையின் ஒருங்கிணைந்த விபரங்கள் (4) 6.18: அவ்வாபீன் தொழுகை (2) 6.19: இரவுத் தொழுகை, வித்ருத் தொழுகை ரக்அத்கள் (16) 6.20: வித்ருத் தொழுகை நேரம் (2) 6.21: தொழுகையில் மிகச் சிறந்தது (2) 6.22: இரவில் பிரார்த்தனை ஏற்கப்படும் நேரம் (2) 6.23: இரவின் இறுதி நேரத்தில் பிரார்த்தனை (5) 6.24: ‘கியாமு ரமளான்(தராவீஹ்) தொழ ஆர்வமூட்டல் (8) 6.25: இரவுத் தொழுகையில் பிரார்த்திப்பதும் நின்று வணங்குவதும் (17) 6.26: இரவுத் தொழுகையில் நீண்ட நேரம் (நின்று) குர்ஆன் ஓதுவது (2) 6.27: தொழாமல் விடியும்வரை உறங்குபவர் (3) 6.28: கூடுதலான நஃபில் தொழுகைகள் (6) 6.29: நற்செயல்களை வழக்கமாகச் செய்வதன் சிறப்பு. (4) 6.30: இபாதத் தூக்கத்தால் தடைப்பட்டால்… (5) 6.31: குர்ஆனின் தொடர்பைப் பற்றிப் பிடித்துக்கொள்ளக் கட்டளை (7) 6.32: குர்ஆனை இனிய குரலில் ஓதுவது விரும்பத் தக்கதாகும் (5) 6.33: மக்கத்து வெற்றி நாளில்… (2) 6.34: குர்ஆனை ஓதுவதால் இறங்கும் அமைதி (3) 6.35: குர்ஆனை மனனமிட்டவரின் சிறப்பு (1) 6.36: குர்ஆனை ஓதுகின்ற இருவகையினரின் தனிச் சிறப்புகள் (1) 6.37: குர்ஆனில் தேர்ந்த மேன்மக்கள் முன்னிலையில் குர்ஆன் ஓதுவது (2) 6.38: குர்ஆனைச் செவியேற்பதன் சிறப்பு (3) 6.39: குர்ஆனைக் கற்பது மற்றும் ஓதுவதன் சிறப்பு (2) 6.40: குர்ஆன் ஓதுவதன் சிறப்பும் அல்பகரா அத்தியாயத்தின் சிறப்பும் (2) 6.41: ஸூரத்துல் ஃபாத்திஹா, அல்பகரா அத்தியாயத்தின் இறுதி வசனங்களின் சிறப்பு (2) 6.42: ஸூரத்துல் கஹ்ஃப் மற்றும் ஆயத்துல் குர்ஸீ ஆகியவற்றின் சிறப்பு (3) 6.43: குல் ஹுவல்லாஹு அஹது (அத்தியாயத்தை) ஓதுவதன் சிறப்பு (4) 6.44: அல்முஅவ்விதத்தைன் (பாதுகாவல்) அத்தியாயங்களை ஓதுவதன் சிறப்பு (2) 6.45: குர்ஆனின்படி தாமும் செயல்பட்டுப் பிறருக்கும் அதைக் கற்பிப்பவரின் சிறப்பு (4) 6.46: குர்ஆன் ஏழு (வட்டார) மொழிநடையில் அருளப்பெற்றுள்ளது என்பதன் விளக்கம் (4) 6.47: குர்ஆனை வேகமாக ஓதுவதைத் தவிர்த்தல் (4) 6.48: குர்ஆன் ஓதும் முறைகளுள் சில (4) 6.49: தொழத் தடுக்கப்பட்ட நேரங்கள். (8) 6.50: அம்ரு பின் அபஸா (ரலி) இஸ்லாத்தை ஏற்றமை (1) 6.51: சூரியன் உதிக்கும் நேரத்தையும் மறையும் நேரத்தையும் தேர்ந்தெடுத்துத் தொழாதீர்கள்! (2) 6.52: நபி (ஸல்) அஸ்ருக்குப் பிறகு தொழுதுவந்த இரண்டு ரக்அத்கள் எவை? (5) 6.53: மஃக்ரிப் தொழுகைக்கு முன் இரண்டு ரக்அத்கள் தொழுவது விரும்பத் தக்கது (2) 6.54: பாங்குக்கும் இகாமத்துக்கும் இடையிலுள்ள தொழுகை (1) 6.55: அச்சச் சூழல் தொழுகை (8) 7.01: வெள்ளிக்கிழமையில் குளிப்பது வயதுவந்த ஒவ்வோர் ஆண் மீதும் கடமை (7) 7.02: வெள்ளிக்கிழமையில் பல் துலக்குவதும் நறுமணம் பூசுவதும் (4) 7.03: வெள்ளிக்கிழமை சொற்பொழிவின்போது அமைதி காத்தல் (2) 7.04: வெள்ளிக்கிழமையில் (பிரார்த்தனை ஏற்கப்படுவதற்கு) உள்ள ஒரு நேரம் (4) 7.05: வெள்ளிக்கிழமையின் சிறப்பு (2) 7.06: இந்தச் சமுதாயத்தின் (சிறப்பு வழிபாட்டு) நாள் வெள்ளிக்கிழமை (4) 7.07: வெள்ளிக்கிழமை (தொழுகைக்கு) முன்னதாகச் செல்வதன் சிறப்பு (2) 7.08: மௌனமாக (வெள்ளிக்கிழமை) உரையைச் செவியேற்பவரின் சிறப்பு (2) 7.09: சூரியன் (உச்சியிலிருந்து) சாயும்போது ஜும்ஆத் தொழுவது (5) 7.10: தொழுகையின் உரைகளும் இடையே (இமாம்) அமர்வதும் (3) 7.11: வியாபாரத்தையோ வேடிக்கையையோ கண்டால் (62:11ஆவது) இறைவசனம் (4) 7.12: ஜும்ஆத் தொழுகையை(த் தொழாமல்) கைவிடுவதற்குக் கண்டனம் (1) 7.13: (ஜும்ஆத்) தொழுகையையும் (குத்பா) உரையையும் சுருக்கமாக அமைத்தல் (11) 7.14: இமாம் (ஜும்ஆ) உரை நிகழ்த்தும்போது காணிக்கை தொழுகை (6) 7.15: பொது போதனைக்கு நடுவில் தனி போதனை (1) 7.16: ஜும்ஆத் தொழுகையில் ஓத வேண்டியவை (3) 7.17: வெள்ளிக்கிழமை (ஃபஜ்ருத் தொழுகையில்) ஓத வேண்டியவை (3) 7.18: ஜும்ஆவுக்குப் பின் தொழ வேண்டியவை (16) 8.01: பெருநாள் திடலில் பெண்கள் பங்கேற்பது (3) 8.02: பெருநாள் திடலில் தொழுகைக்கு முன்போ பின்போ தொழக் கூடாது (1) 8.03: இரு பெருநாள் தொழுகைகளில் ஓதக் கூடியவை (2) 8.04: பெருநாட்களில் பாவமில்லா விளையாட்டுகளில் ஈடுபட அனுமதி (7) 9.00: இமாம் (மழைத் தொழுகையில்) மேல்துண்டை மாற்றிப் போட்டுக் கொள்வது (4) 9.01: மழைவேண்டிப் பிரார்த்திக்கும்போது இருகைகளை உயர்த்துதல் (3) 9.02: மழைவேண்டிப் பிரார்த்தித்தல் (2) 9.03: கடும் காற்றையும் மேகத்தையும் காணும்போதும்.. மழை பெய்யும்போதும்.. (3) 9.04: கீழைக் காற்று (’ஸபா’) மற்றும் மேலைக் காற்று (’தபூர்’) பற்றிய குறிப்புகள் (1) 10.01: சூரிய கிரகணத் தொழுகை (7) 10.02: கிரகணத் தொழுகையின்போது மண்ணறை வேதனை பற்றி நினைவு கூர்வது (1) 10.03: கிரகணத் தொழுகையின்போது சொர்க்கமும் நரகமும் (6) 10.04: கிரகணத் தொழுகையில் எட்டு ருகூஉகளும் நான்கு ஸஜ்தாக்களும்.. (2) 10.05: கிரகணத் தொழுகைக்காக, “அஸ்ஸலாத்து ஜாமிஆ” அறிவிப்பு.. (8) 11.01: மரணத் தருவாயில் ‘லா இலாஹ இல்லல்லாஹ்’ (எனும் கலிமா)வை நினைவூட்டுதல் (2) 11.02: துன்பம் நேரும்போது வேண்டக்கூடிய பிரார்த்தனை (2) 11.03: நோயாளியிடமும் மரணத் தருவாயில் இருப்பவரிடமும் சொல்ல வேண்டியவை (1) 11.04: உயிர் பிரிந்தவுடன் இறந்தவருக்குச் செய்ய வேண்டியவை (1) 11.05: இறப்பவரின் பார்வை தனது உயிரை நோக்கி நிலைகுத்தி நிற்றல் (1) 11.06: இறந்தவருக்காக அழுவது (3) 11.07: நோயாளிகளைச் சந்தித்து உடல்நலம் விசாரித்தல் (1) 11.08: பொறுமை என்பது துன்பத்தின் முதல் நிலையில் கடைப்பிடிப்பதாகும் (2) 11.09: இறந்தவருக்காக ஒப்பாரி வைத்து அழுதால்.. (14) 11.10: ஒப்பாரிக்குக் கடுமையான கண்டனம் (5) 11.11: ஜனாஸாவின் இறுதி ஊர்வலத்தைப் பின்தொடர்ந்து செல்வதற்குப் பெண்களுக்குத் தடை (2) 11.12: மையித்தைக் குளிப்பாட்டுதல் (4) 11.13: மய்யித்திற்கு ‘கஃபன்’ உடை அணிவித்தல் (4) 11.14: மய்யித்தை மூடிவைத்தல் (1) 11.15: மய்யித்திற்கு அழகிய முறையில் கஃபன் அணிவித்தல் (1) 11.16: இறந்தவர் உடலைத் துரிதமாக அடக்கம் செய்தல் (2) 11.17: ஜனாஸாத் தொழுகையின் மற்றும் ஜனாஸாவைப் பின்தொடர்வதன் சிறப்பு (6) 11.18: மய்யித்துக்காக நூறு பேர் தொழுது செய்யும் பரிந்துரை ஏற்கப்படும் (1) 11.19: மய்யித்துக்காக நாற்பது பேர் பரிந்துரை (1) 11.20: இறந்தவர் குறித்துப் புகழ்ந்து, அல்லது இகழ்ந்து பேசப்படுதல் (1) 11.21: ஓய்வு பெற்றவரும் ஓய்வளித்தவரும் (1) 11.22: ஜனாஸாத் தொழுகையில் சொல்ல வேண்டிய தக்பீர்கள் (6) 11.23: மண்ணறை அருகில் (ஜனாஸாத் தொழுகை) தொழுவது (4) 11.24: ஜனாஸாவுக்காக எழுந்து நிற்பது (7) 11.25: ஜனாஸாவுக்காக எழுந்து நிற்கும் வழக்கம் மாற்றப்பட்டது (3) 11.26: இறந்தவருக்காக ஜனாஸாத் தொழுகையில் செய்யும் பிரார்த்தனை (2) 11.27: ஜனாஸாத் தொழுகையின்போது இமாம் எந்த இடத்தில் நிற்க வேண்டும்? (2) 11.28: ஜனாஸாத் தொழுகை தொழுதுவிட்டு வாகனத்தில் ஏறித் திரும்பிச் செல்லலாம் (2) 11.29: உட்குழியும் மையித்தின் மேல் செங்கற்களை அடுக்குவதும் (1) 11.30: கப்றுக் குழியினுள் போர்வையை விரித்து (மையித்தை) வைப்பது (1) 11.31: கப்றைத் தரை மட்டமாக்க உத்தரவு (2) 11.32: கப்றுகளைக் காரையால் பூசுவதோ அதன் மீது கட்டடம் எழுப்புவதோ கூடாது (2) 11.33: கப்றின்மீது அமர்வதும் அதன் மீது தொழுவதும் தடுக்கப்பட்டவை (3) 11.34: பள்ளிவாசலில் ஜனாஸாத் தொழுகை நடத்துவது (3) 11.35: மையவாடிக்குள் கூற வேண்டியதும் பிரார்த்திப்பதும் (3) 11.36: நபி (ஸல்), தம் தாயாரின் கப்றைக் காண்பதற்கு இறைவனிடம் அனுமதி கோரியது (3) 11.37: தற்கொலை செய்தவருக்கு, (ஜனாஸா) தொழுகையைக் கைவிட்டது (1) 12.00: பல வகை வள வரிகள் (5) 12.01: பத்து சதவீத ஸகாத்; அல்லது ஐந்து சதவீத ஸகாத் (1) 12.02: ஒரு முஸ்லிம் மீது அவர்தம் அடிமைக்காகவும் குதிரைக்காகவும் ஸகாத் கடமை இல்லை (3) 12.03: ஸகாத்தைச் சமர்ப்பிப்பதும் ஸகாத் கொடுக்க மறுப்பதும் (1) 12.04: பெருநாள் தர்மமாகப் பேரீச்சம் பழம், பார்லி (10) 12.05: பெருநாள் தொழுகைக்கு முன்பே பெருநாள் தர்மத்தை வழங்க கட்டளை (2) 12.06: ஸகாத் வழங்க மறுப்பது குற்றமாகும் (4) 12.07: ஸகாத் வசூலிப்பவர்களிடம் கனிவுடன் நடந்துகொள்வது (1) 12.08: ஸகாத் வழங்காதவருக்கான கடும் தண்டனை (2) 12.09: தர்மம் செய்வதற்கு ஆர்வமூட்டல் (2) 12.10: செல்வத்தைச் சேமித்தோர் பற்றிய கண்டனம் (2) 12.11: தர்மம்: ஆர்வமூட்டலும் நற்கூலி உண்டு என்ற நற்செய்தியும் (2) 12.12: செலவழிப்பதன் சிறப்பும் வழங்காதவனின் பாவமும் (4) 12.13: தமக்கும், குடும்பத்தாருக்கும், உறவினர்களுக்குமாக செலவிடுதல் (1) 12.14: இணை வைக்கும் உறவுகளுக்குச் செலவழிப்பதன் சிறப்பு (8) 12.15: இறந்தவருக்காகத் தர்மம் செய்தல் (1) 12.16: எல்லா நல்லறமும் ஸதகா எனப்படும் (5) 12.17: அறவழியில் செலவு செய்பவரும் செய்யாதவரும் (1) 12.18: தர்மம் செய்வதற்கு ஆர்வமூட்டல் (5) 12.19: தர்மம் (இறைவனிடம்) ஏற்கப்படுவதும் வளர்வதும் (3) 12.20: இன் சொல்லையேனும் தர்மம் செய்து நரகத்திலிருந்து பாதுகாப்பு பெறல் (5) 12.21: தர்மத்தின் அளவில் குறை காண தடை (1) 12.22: பாலுக்காக இரவல் வழங்கப்படும் கால்நடைகளின் சிறப்பு (2) 12.23: வள்ளலுக்கும் கஞ்சனுக்குமான உதாரணம் (3) 12.24: உரியவருக்குத் தர்மம் சேரவில்லையேனும் பலன் (1) 12.25: உரிமையாளரின் அனுமதியுடன் தர்மம் செய்தவருக்கும் பலன் (3) 12.26: ஓர் அடிமை தன் உரிமையாளரின் செல்வத்திலிருந்து (அறவழியில்) செலவழித்தல் (3) 12.27: தர்மத்தையும் இதர நற்செயல்களையும் இணைத்துச் செய்தவர் (3) 12.28: அறவழியில் தாராளமாக செலவிடலும் கணக்கு பார்ப்பது விரும்பத்தக்கதல்ல என்பதும் (3) 12.29: சிறிய அளவு தர்மம் (1) 12.30: இரகசியமாகத் தர்மம் செய்வதன் சிறப்பு (1) 12.31: மிகச் சிறந்த தர்மம் (2) 12.32: சிறந்த கை (4) 12.33: யாசிப்பதற்குத் தடை (3) 12.34: ஏழை என்பவன், அடிப்படைத் தேவைகளுக்குப் போதிய பொருளாதாரம் இல்லாதவன் (2) 12.35: மக்களிடம் யாசிப்பது வெறுக்கப்பட்டதாகும் (6) 12.36: யாருக்கு யாசிக்க அனுமதி? (1) 12.37: எதிர்பார்ப்பு இல்லாமல், யாசிக்காமல் வாழ்பவருக்கு வழங்கப்பட்டால் பெற்றுக்கொள்ளலாம் (4) 12.38: உலகாதாயத்தின் மீது பேராசை கொள்வது விரும்பத் தக்கதன்று (2) 12.39: இரு ஓடைகள் இருந்தாலும் மூன்றாவது ஓடையை எதிர்பார்த்தல் (4) 12.40: வாழ்க்கை வசதிகள் அதிகமாக இருப்பது செல்வமன்று (1) 12.41: இவ்வுலகத்தின் கவர்ச்சி குறித்து அஞ்சுதல் (3) 12.42: சுயமரியாதை மற்றும் பொறுமையின் சிறப்பு (1) 12.43: போதுமான வாழ்வாதாரமும் போதுமென்ற மனமும் (4) 12.44: அருவருப்பாகப் பேசி, கடுஞ் சொற்களால் கேட்டவருக்கும் தானம் வழங்குவது (4) 12.45: இறைநம்பிக்கை, (வறுமையால்) கேள்விக்குள்ளாக்கப்படுபவருக்கு உதவுதல் (1) 12.46: இஸ்லாத்தை ஏற்றவர்களுக்கு வழங்கலும் இறை நம்பிக்கை வலுவானவர் பொறுமை கொள்ளலும் (8) 12.47: காரிஜிய்யாக்களும் அவர்களின் தன்மைகளும் (10) 12.48: காரிஜிய்யாக்களைக் கொல்லுவதற்கு ஊக்கப்படுத்துதல் (4) 12.49: காரிஜிய்யாக்கள் படைப்பினங்களிலேயே தீயவர்கள் ஆவர் (3) 12.50: தூதரின் குடும்பத்தார் ஸகாத் பெறுவதற்குத் தடை (6) 12.51: நபி (ஸல்) குடும்பத்தாரைத் தர்மப் பொருட்கள் வசூலிக்கப் பயன்படுத்தலாகாது (1) 2.26: அசுத்தமான கையைப் பாத்திரத்தில் நுழைத்தல் (2) 2.25: ஒருநாள் தொழுகைகளை ஒரு உளூவில் தொழ அனுமதி (1) 2.24: காலுறையில் மஸஹு செய்து தொழுவதற்கான வரம்பு (1) 2.23: முன் தலை மற்றும் தலைப்பாகை மீது மஸஹு செய்தல் (4) 2.22: காலுறையில் மஸஹு செய்தல் (9) 2.21: தண்ணீரால் கழுவித் துப்புரவு செய்தல் (3) 2.20: மலம் கழிப்பதற்குத் தடையுள்ள இடங்கள் (1) 2.19: செயல்களை வலப் புறமிருந்து தொடங்குதல். (2) 2.18: வலக் கரத்தால் கழுவத் தடையானவை (3) 2.17: கழிப்பிடத்தில் துப்புரவு செய்தல் (7) 2.16: இயற்கை மரபுகள் (8) 2.15: பல் துலக்குதல் (7) 2.14: சிரமகாலங்களிலும் முழுமையாக ஒளு செய்வதன் சிறப்பு (1) 2.13: உளூவில் தண்ணீர் படும் இடங்களில் ஒளி படர்தல் (1) 2.12: உளூவில் உறுப்புகளை அதிகப்படுத்திக் கழுவுதல் (6) 2.11: உளூ செய்த நீரோடு வெளியேறும் பாவங்கள் (2) 2.10: உளூவில் உறுப்புகள் முழுவதும் கழுவுதல் (1) 2.09: இரு கால்களையும் முழுமையாகக் கழுவுதல் கட்டாயம் (6) 2.08: சுத்தம் செய்யும் போது ஒற்றைப்படையாக செய்தல் (5) 2.07: நபி (ஸல்) அவர்கள் செய்த அங்கத் தூய்மை (உளூ) (2) 2.06: அங்கத் தூய்மை (உளூ) செய்தபிறகு ஓதப்படும் பிரார்த்தனை (1) 2.05: சிறு பாவங்களுக்கான பரிகாரங்கள் (3) 2.04: அங்கத்தூய்மையின் சிறப்பும் அதன் பின் தொழுவதன் சிறப்பும் (9) 2.03: அங்கத் தூய்மை (உளூ) செய்முறையும் அதை நிறைவாகச் செய்வதும் (2) 2.02: தொழுகைக்குக் கட்டாயமான (அங்கத்) தூய்மை (2) 2.01: அங்கத்தூய்மை(உளூ)யின் சிறப்பு (1) 1.96: மறுமையில் ஆதம்(அலை) அவர்களுக்கு இடப்படும் கட்டளை (1) 1.95: சொர்க்கவாசிகளில் பாதிபேர் (3) 1.94: விசாரணையோ வேதனையோ இன்றி சொர்க்கம் செல்வோர் (7) 1.93: நட்பு கொள்ளத் தக்கவர்களும் தகாதவர்களும் (1) 1.92: இறைமறுப்பாளரின் நற்செயல்கள் பலனளிக்காது (1) 1.91: நரகவாசிகளிலேயே மிகக்குறைவான வேதனை அனுபவிப்பவர். (4) 1.90: அபூதாலிபுக்காக நபி(ஸல்) அவர்களின் பரிந்துரை (3) 1.89: நெருங்கிய உறவினருக்கு எச்சரிக்கை செய்தல் (5) 1.88: இறைமறுப்பாளருக்கு எந்தப் பரிந்துரையும் பலனளிக்காது (1) 1.87: தம் சமுதாயத்தார் மீது நபி(ஸல்) அவர்களுக்குள்ள பரிவு (1) 1.86: நபி(ஸல்) அவர்களின் பரிந்துரைப் பிரார்த்தனை! (8) 1.85: சொர்க்கத்திற்காகப் பரிந்துரைக்கும் முதல் மனிதர் (4) 1.84: சொர்க்கவாசிகளுள் ஆகக் குறைந்த பதவி (14) 1.83: இறுதியானவராக வெளியேறும் நரகவாசி. (3) 1.82: ஷஃபாஅத்(பரிந்துரை) செய்யப்படுபவர்கள் (2) 1.81: இறைவனைக் காணும் வழிமுறை (3) 1.80: இறைவனைக் காண்பதற்கான சான்று (2) 1.79: அல்லாஹ்வின் பார்வை பற்றிய விளக்கம் (2) 1.78: மிஃராஜின் போது நபி(ஸல்) கண்டது பற்றிய விளக்கம் (2) 1.77: நபி(ஸல்) அவர்கள் இறைவனைப் பார்த்தார்களா? என்பது பற்றிய விளக்கம் (5) 1.76: சித்ரத்துல் முந்தஹா(இலந்தை மரம்) பற்றிய குறிப்பு! (4) 1.75: ஈஸா(அலை) மற்றும் தஜ்ஜால் பற்றிய குறிப்புகள் (6) 1.74: விண்ணுலகப் பயணமும் தொழுகை கடமையாக்கப்படலும் (12) 1.73: வேத வெளிப்பாடு (வஹீ) தொடங்குதல் (3) 1.72: இறை நம்பிக்கை ஏற்கப்படாத காலகட்டம் (5) 1.71: ஈசா(அலை) இஸ்லாமிய நெறிப்படி நீதி வழங்குதல் (6) 1.70: தூதுத்துவம் உலக மக்கள் அனைவருக்கும் பொதுவானது (3) 1.69: இறைச்சான்றுகள் மூலம் மன அமைதி (1) 1.68: ஒருவரை இறைநம்பிக்கையாளர் என்று முடிவு செய்தல் (2) 1.67: அச்சநேரத்தில் இறைநம்பிக்கையாளர் நிலை (1) 1.66: இறுதிக் காலத்தில் இறை நம்பிக்கை (அற்றுப்) போய் விடுவது. (2) 1.65: இஸ்லாத்தின் மீளெழுச்சி. (3) 1.64: உள்ளங்களில் குழப்பங்கள் தோன்றுவது. (2) 1.63: குடிமக்களைச் சுரண்டும் ஆட்சியாளன் நரகத்திற்குரியவன் ஆவான். (3) 1.62: செல்வத்தைக் காக்கப் போராடியவர் மற்றும் பிறர் செல்வத்தைப் பறிக்க முனைந்தவர் (2) 1.61: மாற்றாரின் பொருளைக் கைப்பற்றுபவர் நிலை. (5) 1.60: இறைநம்பிக்கையில் தடுமாற்றம் ஏற்பட்டால்.. (8) 1.59: நல்ல-தீய எண்ணங்களுக்கான கூலி (5) 1.58: தீய எண்ணங்களைச் செயல்படுத்தாமல் இருத்தல் (2) 1.57: தாங்க முடியாத சுமை? (2) 1.56: இறை நம்பிக்கையின் வாய்மையும் தூய்மையும் (1) 1.55: இறைமறுப்பாளராக இருந்தபோது செய்த நல்லறங்கள் (3) 1.54: முன் செய்த பாவங்கள் (2) 1.53: அறியாமை காலத்தில் செய்த தீமைகள் (2) 1.52: இறைநம்பிக்கையாளரின் அச்சம் (1) 1.51: குழப்பங்கள் தோன்றுவதற்கு முன் நற்செயல் புரிய விரைதல் (1) 1.50: மறுமை நெருங்கும் வேளையில் வீசும் காற்று (1) 1.49: ஹிஜ்ரத்தில் தற்கொலை செய்து கொண்டவரின் நிலை (1) 1.48: கையாடல் செய்பவரும் இறைநம்பிக்கையாளரும் (2) 1.47: தற்கொலை செய்பவரும் கட்டுப்பட்டு வாழ்பவரும் (7) 1.46: மூன்று பெரும் தவறான செயல்கள் (4) 1.45: புறங்கூறுவது வன்மையாகத் தடை செய்யப் பட்டது (3) 1.44: துக்க வேளைகளில் தடை செய்யப்பட்ட செய்கைகள்! (3) 1.43: முஸ்லிம்களை வஞ்சித்தவர் நிலை! (2) 1.42: முஸ்லிம்களுக்கு எதிராக ஆயுதம் ஏந்தியவர் நிலை! (3) 1.41: “லா இலாஹ இல்லல்லாஹ்” கூறியவரைக் கொல்லத்தடை! (4) 1.40: இணைவைத்தலின் விளைவுகள் (5) 1.39: தற்பெருமை (3) 1.38: பெரும் பாவங்கள் (5) 1.37: பாவங்களில் மிகவும் அருவருப்பானது (2) 1.36: நற்செயல்களில் சிறந்தது (6) 1.35: தொழுகையை விடுதலும் குஃப்ரும் (3) 1.34: இறைநம்பிக்கை குறைவும் குஃப்ர் எனும் சொல்லும் (1) 1.33: அன்ஸாரிகளையும் அலி(ரலி)யையும் நேசித்தல் (6) 1.32: மழையும் இறைமறுப்பும் (4) 1.31: ஓடிப்போன அடிமை (3) 1.30: இறைமறுப்பின் அடையாளங்கள் (1) 1.29: இறைமறுப்பாளர்களாய் மாறுதல் (2) 1.28: முஸ்லிமோடு போரிடுதல் (1) 1.27: தந்தையை வெறுப்பவன் நிலை (4) 1.26: முஸ்லிமை நோக்கி காஃபிர் என அழைத்தல் (2) 1.25: நயவஞ்சகனின் குணங்கள். (3) 1.24: இறைநம்பிக்கையில் குறைவு ஏற்படல் (2) 1.23: மார்க்கம் என்பதே நலன் நாடுவதுதான். (4) 1.22: இறைநம்பிக்கையாளர்களை நேசித்தல் (1) 1.21: இறைநம்பிக்கையில் ஏற்படும் ஏற்றத் தாழ்வு (9) 1.20: நன்மையை ஏவுதல், தீமையைத் தடுத்தல் (2) 1.19: நல்லவற்றிற்கு ஆர்வமூட்டுதல் (3) 1.18: அண்டை வீட்டாருக்குத் தொல்லை தரக் கூடாது (1) 1.17: தமக்கு விரும்வுவதைச் சகோதரனுக்கும் விரும்புதல் (2) 1.16: தூதரை நேசிப்பது கடமை (2) 1.15: இறைநம்பிக்கையின் இனிமை (2) 1.14: இஸ்லாம் கூறும் நல்லறங்களில் சிறந்தது (4) 1.13: இஸ்லாத்தின் அனைத்துப் பண்புகளின் கலவை (1) 1.12: இறைநம்பிக்கையின் கிளைகள் (5) 1.11: இறைநம்பிக்கையைச் சுவைப்பவர் (1) 1.10: ஓரிறை கோட்பாட்டில் மரணித்தவர் நிலை (11) 1.09: இணை வைத்த நிலையில் மரணித்தவர் நிலை (3) 1.08: ஜிஸ்யா செலுத்தாதவர் மீது போர் புரிதல் (6) 1.07: இஸ்லாத்தை ஏற்க அழைப்பு விடுத்தல் (2) 1.06: அறியாதவர்களுக்கு அறிவித்தல் (4) 1.05: இஸ்லாமியக் கடமைகள் (4) 1.04: சொர்க்கம் செல்பவர் (7) 1.03: இஸ்லாத்தின் தூண்கள் (2) 1.02: தொழுகை பற்றிய விளக்கம் (2) 1.01: இறைநம்பிக்கை குறித்த விளக்கம் (7)
இந்த வலைதளத்தின் தகவல்களைனைத்தும் சிவகங்கை மாவட்ட நிர்வாகத்தால் கையாளப்படுகிறது. இதில் உள்ள தகவல்கள் மிகச்சரியானதாகவும், தற்போதைய தகவல்களாகவும் இருப்பதற்கான அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டிருந்தாலும் இவைகள் சட்டப்பூர்வமானதாகவோ, வழக்கு விபரங்களுக்கு பயன்படதக்கதாகவோ கருதப்படக்கூடாது. இந்த வலைதள தகவல்களை பயன்படுத்துவதன் மூலம் ஏற்படும் எந்தவிதமான நேரடியான அல்லது மறைமுகமான இழப்புகள், பாதிப்புகள் மற்றும் செலவுகளுக்கு மாவட்ட நிர்வாகம் ஒருபோதும் பொறுப்பேற்காது. இந்த வலைதளத்திலிருந்து இதர பிற வலைதளத்திற்கு செல்ல உதவும் அனைத்து இணைப்பு முகவரிகளும் பொது மக்களின் வசதிக்காக மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளது. எனவே இதர பிற வலைதள பக்கங்கள் எப்போதும் இருப்பில் இருக்குமென்று எங்களால் உறுதிப்படுத்த இயலாது. இந்த வழிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகள் அனைத்தும் இந்திய சட்டங்களின் ஆளுமைக்கு உட்பட்டது. இவற்றில் ஏற்படும் அனைத்து பிரச்சனைகளும் இந்திய நீதிமன்றங்களின் முழுமையான அதிகார வரம்புகளுக்கு உட்பட்டதாகும். காப்புரிமை கொள்கை எங்களுக்கு மின்னஞ்சல் மூலம் கோரிக்கை விடுத்து, எங்களிடமிருந்து உரிய அனுமதி பெற்று, இந்த வலைதளத்திலுள்ள தகவல், விவரங்களை கட்டணமின்றி மறுபதிப்பீடு செய்து கொள்ளலாம். மறுபதிப்பீடுகள் மிகவும் சரியானதாக இருப்பதோடு மட்டுமல்லாமல், தவறான முன்னெடுப்புடையதாகவோ, தூற்றுவதாகவோ இருக்கக்கூடாது. இந்த வலைதளத்திலுள்ள எந்த விவரங்களையும் பிறருக்கு தருவதானாலும் அல்லது பதிப்பிடுவதானாலும், ‘மூலம்’ இன்னதென்று தெளிவாக குறிப்பிடப்படவேண்டும். இந்த வலைதளத்தில் இடம்பெற்ற தகவல், விவரங்களில் மூன்றாம் நபர் அல்லது துறையின் காப்புறுதி கொண்டதாக கண்டறியப்பட்ட தகவல், விவரங்களை மறுபதிப்பீடு செய்ய எங்களால் அனுமதி அளிக்கப்படவில்லை. இந்த விதமான தகவல், விவரங்களை மறுபதிப்பீடு செய்ய சம்மந்தப்பட்ட துறையின் அல்லது மூன்றாம் நபர் அனுமதி பெறப்பட்டிருக்க வேண்டும். இரகசியத்தன்மை கொள்கை பெயர், தொலைபேசி எண்கள், மின்னஞ்சல் முகவரிகள் போன்ற தனி நபரை குறிப்பாக அடையாளப்படுத்தும் தகவல்கள் எதனையும் இந்த வலைதளம் தானாக எடுத்துக்கொள்ளாது. உங்களின் தனிப்பட்ட தகவல்கள் கேட்கப்படும்போது, என்ன காரணத்திற்காக கேட்கப்படுகிறது என்பதை தெரியப்படுத்துவதுடன், அந்த தனிப்பட்ட தகவல்களை பாதுகாப்பதற்கு, தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் அனைத்தும் எடுக்கப்பட்டுள்ளது. இந்த வலைதளத்தில், தன்னார்வமாக அளிக்கப்பட்ட, தனிநபரை குறிப்பாக அடையாளப்படுத்தக்கூடிய, எந்த தகவல்களையும், எந்தவொரு மூன்றாம் நபருக்கு விற்கப்படுவதோ, பகிர்ந்து கொள்ளப்படுவதோ கிடையாது. இந்த வலைதளத்தில் தங்களால் அளிக்கப்படும் எந்த தகவலும், இழப்பு, தவறான பயன்பாடு, உரிமம் இல்லாதவரால் பயன்படுத்துதல், உரிமம் இல்லாதவருக்கு தெரியப்படுத்துதல், மாற்றுதல் மற்றும் அழிவுகள் போன்றவற்றிலிருந்து பாதுகாக்கப்படும். இந்த வலைதளத்தை பயன்படுத்துபவரின் இணைய முகவரி(IP Address), தளத்தின் பெயர்(Domain Name), உலவியின் வகை (BrowserType), இயங்குதளம் (OS), பயன்பாட்டின் தேதி மற்றும் நேரம், பார்க்கப்பட்ட பக்கங்கள் போன்ற சில விவரங்கள் சேகரிக்கப்படுகிறது. இந்த வலைதளத்தை சேதப்படுத்தும் முயற்சிகள் அறியப்பட்டாலன்றி, சேகரிக்கப்பட்ட விவரங்களை கொண்டு வலைதளத்தை பார்வையிடும் தனிநபரை அடையாளப்படுத்தும் முயற்சிகள் எடுக்கப்படாது. இணைப்பு கொள்கை : வெளி வலைதளங்கள் இணைப்பு கொள்கை இந்த வலைதளத்தில் பல இடங்களில் பிற இதர வலைதளங்களுக்கு செல்ல தொடர்பு முகவரிகள் இருப்பதை தாங்கள் அறியலாம். தங்களின் வசதிக்காக மட்டுமே அளிக்கப்பட்டுள்ளன. அவ்வாறு குறிப்பிடப்பட்ட பிற இதர வலைதளங்கள் எல்லா நேரங்களிலும் இயங்கும் நிலையில் இருக்குமென்பதை எங்களால் உறுதி செய்ய இயலாது. மேலும் அவைகளின் இருப்பை கட்டுப்படுத்துதலும் எங்களிடமில்லை. இணையதள கொள்கைகள் உதவி தொடர்பு கொள்ள கருத்து கேட்பு பொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம், சிவகங்கை © இவ்வலைதளத்தின் தகவல்கள் அனைத்தும் சிவகங்கை மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம் தேசிய தகவல் மையம்,
حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏هُشَيْمُ بْنُ بَشِيرٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏هِشَامُ بْنُ حَسَّانَ ‏ ‏عَنْ ‏ ‏قَيْسِ بْنِ سَعْدٍ ‏ ‏عَنْ ‏ ‏عَطَاءٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عَبَّاسٍ ‏ أَنَّ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏كَانَ إِذَا رَفَعَ رَأْسَهُ مِنْ الرُّكُوعِ قَالَ ‏ ‏اللَّهُمَّ رَبَّنَا لَكَ الْحَمْدُ مِلْءُ السَّمَاوَاتِ وَمِلْءُ الْأَرْضِ وَمَا بَيْنَهُمَا وَمِلْءُ مَا شِئْتَ مِنْ شَيْءٍ بَعْدُ أَهْلَ الثَّنَاءِ وَالْمَجْدِ لَا مَانِعَ لِمَا أَعْطَيْتَ وَلَا مُعْطِيَ لِمَا مَنَعْتَ وَلَا يَنْفَعُ ‏ ‏ذَا الْجَدِّ ‏ ‏مِنْكَ ‏ ‏الْجَدُّ ‏ حَدَّثَنَا ‏ ‏ابْنُ نُمَيْرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏حَفْصٌ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏هِشَامُ بْنُ حَسَّانَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏قَيْسُ بْنُ سَعْدٍ ‏ ‏عَنْ ‏ ‏عَطَاءٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عَبَّاسٍ ‏ ‏عَنْ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِلَى قَوْلِهِ ‏ ‏وَمِلْءُ مَا شِئْتَ مِنْ شَيْءٍ بَعْدُ وَلَمْ يَذْكُرْ مَا بَعْدَهُ ‏ நபி(ஸல்) அவர்கள் ருகூவிலிருந்து தலையை உயர்த்தியதும், “அல்லாஹும்ம ரப்பனா ல(க்)கல் ஹம்து மில்அஸ் ஸமாவாத்தி வ மில்அல் அர்ளி வ மா பய்னஹுமா வ மில்அ மா ஷிஃத்த மின் ஷையின் பஃது அஹ்லஸ் ஸனாயி வல்மஜ்தி லா மானிஅ லிமா அஃதைத்த வலா முஃத்திய லிமா மனஃத்த வலா யனஃபஉ தல்ஜத்தி மின்க்கல் ஜத்” என்று கூறுவார்கள். (பொருள் : இறைவா, எங்கள் அதிபதியே! வானங்கள் நிரம்ப, பூமி நிரம்ப, இன்னும் அவற்றுக்கிடையே உள்ளவை நிரம்ப, மற்றும் நீ நாடிய இன்ன பிறவும் நிரம்பப் புகழனைத்தும் உனக்கே உரியது. புகழுக்கும் மாண்புக்கும் உரியவனே! நீ கொடுத்ததைத் தடுப்பவர் எவருமிலர்; நீ தடுத்ததைக் கொடுப்பவர் எவருமிலர். எவ்வளவு செல்வத்தை உடையவராக இருப்பினும் அது, அவருக்கு உன்(விசாரணைப்) பிடியிலிருந்து தப்பிக்கப் பயன்படாது). அறிவிப்பாளர் : இபுனு அப்பாஸ் (ரலி) குறிப்பு : இப்னு நுமைர் (ரஹ்) வழி அறிவிப்பில், “… வமில்அ மா ஷிஃத்த மின் ஷையின் பஃது” வரை மட்டுமே இடம்பெற்றுள்ளது. அத்தியாயம்: 4, பாடம்: 40, ஹதீஸ் எண்: 736 حَدَّثَنَا ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الرَّحْمَنِ الدَّارِمِيُّ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏مَرْوَانُ بْنُ مُحَمَّدٍ الدِّمَشْقِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سَعِيدُ بْنُ عَبْدِ الْعَزِيزِ ‏ ‏عَنْ ‏ ‏عَطِيَّةَ بْنِ قَيْسٍ ‏ ‏عَنْ ‏ ‏قَزْعَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ ‏ ‏قَالَ ‏ كَانَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِذَا رَفَعَ رَأْسَهُ مِنْ الرُّكُوعِ قَالَ ‏ ‏رَبَّنَا لَكَ الْحَمْدُ مِلْءُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَمِلْءُ مَا شِئْتَ مِنْ شَيْءٍ بَعْدُ أَهْلَ الثَّنَاءِ وَالْمَجْدِ أَحَقُّ مَا قَالَ الْعَبْدُ وَكُلُّنَا لَكَ عَبْدٌ اللَّهُمَّ لَا مَانِعَ لِمَا أَعْطَيْتَ وَلَا مُعْطِيَ لِمَا مَنَعْتَ وَلَا يَنْفَعُ ‏ ‏ذَا الْجَدِّ ‏ ‏مِنْكَ ‏ ‏الْجَدُّ ‏ அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ருகூஉவிலிருந்து தமது தலையை உயர்த்தியதும், “ரப்பனா! ல(க்)கல் ஹம்து மில்அஸ் ஸமாவாத்தி வல் அர்ளி வ மில்அ மா ஷிஃத்த மின் ஷையின் பஃது அஹ்லஸ் ஸனாயி வல்மஜ்தி அஹக்கு மா காலல் அப்து வ குல்லுனா ல(க்)க அப்து. அல்லாஹும்ம லா மானிஅ லிமா அஃதைத்த வலா முஃத்திய லிமா மனஃத்த வலா யன்ஃபஉ தல்ஜத்தி மின்க்கல் ஜத்” என்று கூறுவார்கள். (பொருள் : “எங்கள் அதிபதியே! வானங்களும் பூமியும் நிரம்ப, நீ நாடும் இன்ன பிறவும் நிரம்ப புகழனைத்தும் உனக்கே உரியது! புகழுக்கும் மாண்புக்கும் உரியவனே! நாங்கள் அனைவரும் உன் அடிமைகள்தாம்” அடியார்களின் கூற்றுகளில், “இறைவா! நீ கொடுத்ததைத் தடுப்பவர் எவருமிலர்; நீ தடுத்ததைக் கொடுப்பவர் எவருமிலர்; எவ்வளவு செல்வத்தை உடையவராக இருப்பினும் அது, அவருக்கு உன்(விசாரணைப்) பிடியிலிருந்து தப்பிக்கப் பயன்படாது” எனக் கூறுவது மிகவும் தகுதி வாய்ந்த கூற்றாகும்). அறிவிப்பாளர் : அபூஸயீத் அல்குத்ரீ (ரலி) அத்தியாயம்: 4, பாடம்: 40, ஹதீஸ் எண்: 735 حَدَّثَنِي ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏وَابْنُ بَشَّارٍ ‏ ‏قَالَ ‏ ‏ابْنُ الْمُثَنَّى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏عَنْ ‏ ‏مَجْزَأَةَ بْنِ زَاهِرٍ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏عَبْدَ اللَّهِ بْنَ أَبِي أَوْفَى ‏ ‏يُحَدِّثُ ‏ عَنْ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَنَّهُ كَانَ يَقُولُ ‏ ‏اللَّهُمَّ لَكَ الْحَمْدُ مِلْءُ السَّمَاءِ وَمِلْءُ الْأَرْضِ وَمِلْءُ مَا شِئْتَ مِنْ شَيْءٍ بَعْدُ اللَّهُمَّ طَهِّرْنِي بِالثَّلْجِ وَالْبَرَدِ وَالْمَاءِ الْبَارِدِ اللَّهُمَّ طَهِّرْنِي مِنْ الذُّنُوبِ وَالْخَطَايَا كَمَا يُنَقَّى الثَّوْبُ الْأَبْيَضُ مِنْ الْوَسَخِ ‏ حَدَّثَنَا ‏ ‏عُبَيْدُ اللَّهِ بْنُ مُعَاذٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبِي ‏ ‏قَالَ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنِي ‏ ‏زُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏يَزِيدُ بْنُ هَارُونَ ‏ ‏كِلَاهُمَا ‏ ‏عَنْ ‏ ‏شُعْبَةَ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏فِي رِوَايَةِ ‏ ‏مُعَاذٍ ‏ ‏كَمَا يُنَقَّى الثَّوْبُ الْأَبْيَضُ مِنْ الدَّرَنِ ‏ ‏وَفِي رِوَايَةِ ‏ ‏يَزِيدَ ‏ ‏مِنْ ‏ ‏الدَّنَسِ ‏ நபி(ஸல்) அவர்கள் (ருகூவிலிருந்து நிமிர்ந்ததும்), “அல்லாஹும்ம ல(க்)கல் ஹம்து மில்அஸ்ஸமாவாத்தி வ அமில்அல் அர்ளி, வ மில்அ மா ஷிஃத்த மின் ஷையின் பஃது; அல்லாஹும்ம தஹ்ஹிர்னீ பிஸ்ஸல்ஜி வல்பரதி வல்மாயில் பாரித்; அல்லாஹும்ம தஹ்ஹிர்னீ மினத் துனூபி வல்கத்தாயா கமாயுனக்கஸ் ஸவ்புல் அப்யளு மினல் வஸக்” (பொருள் : இறைவா! வானங்கள் நிரம்ப, பூமி நிரம்ப அவற்றுக்குப் பின் நீ நாடிய இன்ன பிறவும் நிரம்ப, புகழனைத்தும் உனக்கே உரியது! இறைவா, (உனது கனிவு எனும்) பனிக்கட்டியாலும் (அருள் எனும்) ஆலங்கட்டியாலும் (பிழை பொறுத்தல் எனும்) குளிர்ந்த நீராலும் என்னைத் தூய்மைப்படுத்துவாயாக! இறைவா, அழுக்கிலிருந்து வெண்மையான ஆடை தூய்மைப்படுவதைப் போன்று பாவங்களிலிருந்தும் தவறுகளிலிருந்தும் என்னைத் தூய்மைப்படுத்துவாயாக!). அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் அபீஅவ்ஃபா (ரலி) குறிப்பு : முஆத் (ரஹ்) வழி அறிவிப்பில், (“வஸக்” எனும் சொல்லுக்குப் பகரமாக) “தரன்” எனும் சொல் இடம்பெற்றுள்ளது. யஸீத் பின் ஹாரூன் (ரஹ்) வழி அறிவிப்பில் “தனஸ்” எனும் சொல் இடம் பெற்றுள்ளது. (மூன்று சொற்களுக்கும் “அழுக்கு” என்பதே பொருளாகும்). அத்தியாயம்: 4, பாடம்: 40, ஹதீஸ் எண்: 734 حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏وَابْنُ بَشَّارٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏عَنْ ‏ ‏عُبَيْدِ بْنِ الْحَسَنِ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏عَبْدَ اللَّهِ بْنَ أَبِي أَوْفَى ‏ ‏قَالَ ‏ كَانَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَدْعُو بِهَذَا الدُّعَاءِ ‏ ‏اللَّهُمَّ رَبَّنَا لَكَ الْحَمْدُ مِلْءُ السَّمَاوَاتِ وَمِلْءُ الْأَرْضِ وَمِلْءُ مَا شِئْتَ مِنْ شَيْءٍ بَعْدُ ‏ அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ருகூஉவிலிருந்து நிமிர்ந்து, “ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ்” என்று கூறிவிட்டு) “அல்லாஹும்ம ரப்பனா ல(க்)கல் ஹம்து மில்அஸ் ஸமாவாத்தி வ மில்அல் அர்ளி வ மில்அ மா ஷிஃத்த மின் ஷையின் பஃது” என்று துதிப்பார்கள் (பொருள் : இறைவா! எங்கள் அதிபதியே! வானங்கள் நிரம்ப, பூமி நிரம்ப, அவற்றுக்குப்பின் நீ நாடிய இன்ன பிறவும் நிரம்ப, புகழ் அனைத்தும் உனக்கே உரியது) என்று புகழ்வார்கள். அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் அபீஅவ்ஃபா (ரலி) அத்தியாயம்: 4, பாடம்: 40, ஹதீஸ் எண்: 733 حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو مُعَاوِيَةَ ‏ ‏وَوَكِيعٌ ‏ ‏عَنْ ‏ ‏الْأَعْمَشِ ‏ ‏عَنْ ‏ ‏عُبَيْدِ بْنِ الْحَسَنِ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ أَبِي أَوْفَى ‏ ‏قَالَ ‏ كَانَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِذَا رَفَعَ ظَهْرَهُ مِنْ الرُّكُوعِ قَالَ ‏ ‏سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ اللَّهُمَّ رَبَّنَا لَكَ الْحَمْدُ مِلْءُ السَّمَاوَاتِ وَمِلْءُ الْأَرْضِ وَمِلْءُ مَا شِئْتَ مِنْ شَيْءٍ بَعْدُ ‏ அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ருகூஉவிலிருந்து தமது முதுகை நிமிர்த்தி விட்டால், “ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ்; அல்லாஹும்ம ரப்பனா ல(க்)கல் ஹம்து மில்அஸ் ஸமாவாத்தி வ மில்அல்அர்ளி வ மில்அ மா ஷிஃத்த மின் ஷையின் பஃது” (பொருள் : அல்லாஹ் தன்னைப் புகழ்வோரின் புகழுரையை ஏற்றுக் கொள்கின்றான். இறைவா! எங்கள் அதிபதியே! வானங்கள் நிரம்ப, பூமி நிரம்ப, அவற்றுக்குப்பின் நீ நாடிய இன்ன பிறவும் நிரம்ப, புகழ் அனைத்தும் உனக்கே உரியது) என்று கூறுவார்கள். அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் அபீஅவ்ஃபா (ரலி) மேலும் காண்பி... ↓ விரும்பும் பாடம் செல்ல… ↓ விரும்பும் பாடம் செல்ல… Select Category 43.37 நபி (ஸல்) அவர்களைக் கண்ணியப்படுத்துவதும் … (8) 43.36 நபி (ஸல்) அவர்களைப் பின்பற்ற வேண்டியது (முஸ்லிம்களின்) கட்டாயக் கடமையாகும் (1) 43.35 நபி (ஸல்) அவர்களின் அல்லாஹ்வைப் பற்றிய அறிவும் அவனைப் பற்றிய கடுமையான அச்சமும் (2) 43.34 நபி (ஸல்) அவர்களின் பெயர்கள் (3) 43.33 நபி (ஸல்) மக்காவிலும் மதீனாவிலும் எத்தனை ஆண்டுகள் வாழ்ந்தார்கள்? (8) 43.32 நபி (ஸல்) இறந்தபோது அவர்களுக்கு வயது எத்தனை? (2) 43.31 நபி (ஸல்) அவர்களின் உடலமைப்பு; நபியாக அனுப்பப்பெற்றது; அவர்களின் வயது (1) 43.30 நபி (ஸல்) உடலில் நபித்துவ முத்திரை … (3) 43.29 நபி (ஸல்) அவர்களின் தலைநரைமுடி (10) 43.28 நபி (ஸல்) அவர்களின் வெண்ணிறமும் களையான முகமும் (2) 43.27 நபி (ஸல்) அவர்களின் வாய், கண்கள், குதிகால்கள் ஆகியவை (1) 43.26 நபி (ஸல்) அவர்களது தலைமுடியின் தன்மை (3) 43.25 நபி (ஸல்) அவர்களின் உருவத் தோற்றம் … (3) 43.24 நபி (ஸல்) தமது தலைமுடியை … (1) 43.23 நபி (ஸல்) அவர்களுக்கு வேத அறிவிப்பு வரும்போது … (4) 43.22 நபி (ஸல்) அவர்களது வியர்வையின் நறுமணமும் அதன்மூலம் வளம் ஏற்பட்டதும் (3) 43.21 நபி (ஸல்) அவர்களின் மேனியில் கமழ்ந்த நறுமணம் … (3) 43.20 நபி (ஸல்) பாவங்களை விட்டு வெகு தொலைவில் விலகியிருந்தது … (3) 43.19 நபி (ஸல்), மக்களுடன் நெருங்கிப் பழகியதும் அவர்களிடமிருந்து மக்கள் வளம் பெற்றதும் (3) 43.18 மனைவியர்மீது நபி (ஸல்) காட்டிய அன்பும் … (4) 43.17 நபி (ஸல்) அவர்களின் புன்னகையும் அழகிய உறவாடலும் (1) 43.16 நபி (ஸல்) அவர்களின் நாண மிகுதி (2) 43.15 நபி (ஸல்) குழந்தைகள் மீதும் குடும்பத்தார் மீதும் காட்டிய அன்பு … (5) 43.14 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வேண்டப்பட்ட எந்த ஒன்றுக்கும் அவர்கள் “இல்லை” என்று சொன்னதேயில்லை … (5) 43.13 அல்லாஹ்வின் தூதர் (ஸல்), மக்களிலேயே மிகவும் அழகான … (5) 43.12 மக்களிலேயே நபி (ஸல்), தொடர்ந்து வீசும் (மழைக்) காற்றைவிட … (1) 43.11 நபி (ஸல்) அவர்களின் வீரமும் அறப்போருக்காக அவர்கள் முன்னே சென்றதும் (2) 43.10 உஹுதுப் போர் நாளில் நபி (ஸல்) … (2) 43.9 நம் நபி (ஸல்) அவர்களுக்கு (மறுமையில் ‘அல்கவ்ஸர்’) தடாகம் உண்டு … (20) 43.8 உயர்ந்தோன் அல்லாஹ் ஒரு சமுதாயத்தின்மீது அருள் புரிய நாடினால் … (1) 43.7 நபி (ஸல்), இறுதி இறைத் தூதர் என்பது பற்றிய குறிப்பு (4) 43.6 நபி (ஸல்), தம் சமுதாயத்தார் மீது கொண்டிருந்த பரிவும் … (4) 43.5 நபி (ஸல்), நேர்வழியுடனும் ஞானத்துடனும் அனுப்பப் பெற்றதற்கான உவமை (1) 43.4 அல்லாஹ்வையே முழுமையாக நபி (ஸல்) சார்ந்திருந்ததும் … (1) 43.3 நபி (ஸல்) அவர்களின் அற்புதங்கள் (7) 43.2 எல்லாப் படைப்புகளையும்விட நம் நபி (ஸல்) அவர்களின் சிறப்பு (1) 43.1 நபி (ஸல்) அவர்களின் தலைமுறையின் சிறப்பும் … (2) 42.4 நபி (ஸல்) கண்ட கனவு (6) 42.3 கனவுக்கு விளக்கமளித்தல் (1) 42.2 ஷைத்தான் கனவில் விளையாடியது குறித்து … (3) 42.1 கனவில் என்னைக் கண்டவர் … (4) 42.01 கனவுகள் (11) 41.2 பகடை விளையாட்டு, தடை செய்யப்பட்டதாகும் (1) 41.1 கவிதைகள் (9) 40.5 நறுமணப் பொருட்களில் மிகவும் சிறந்த கஸ்தூரியைப் பயன்படுத்துவது … (4) 40.4 ஒருவர், ‘கபுஸத் நஃப்ஸீ’ (என் மனம் அசுத்தமாகிவிட்டது) எனும் சொல்லை … (2) 40.3 ‘அப்து’ (அடிமை ஆண்), ‘அமத்து’ (அடிமைப் பெண்), ‘மவ்லா’/’ஸய்யித்’ (அடிமையின் உரிமையாளர்) ஆகிய சொற்களின் சட்டம் (3) 40.2 திராட்சையை, “கர்மு / கண்ணியம்” என்று பெயரிட்டழைப்பது … (7) 40.1 காலத்தை ஏசுவதற்குத் தடை (5) 39.41 விலங்குகளுக்கு நீர் புகட்டுவதின், உணவளிப்பதின் சிறப்பு (3) 39.40 பூனைகளைக் கொல்வதற்குத் தடை (2) 39.39 எறும்புகளைக் கொல்லத் தடை (3) 39.38 பல்லியைக் கொல்வது நல்லது (5) 39.37 பாம்பு போன்ற விஷ ஜந்துகளைக் கொல்வது (13) 39.36 தொழுநோயாளிகள் போன்றோரிடம் நெருக்கம் தவிர்ப்பது (1) 39.35 சோதிடர்களிடம் செல்வதும் சோதிடம் பார்ப்பதும் (5) 39.34 பறவை சகுனம், நற்குறி, துர்குறி பற்றிய பாடம் (11) 39.33 இல்லாத சகுனங்களும் தொற்றுநோய்களும் (6) 39.32 கொள்ளைநோய், பறவை சகுனம், சோதிடம் போன்றவை (8) 39.31 தேனூட்டு மருத்துவம் (1) 39.30 ‘தல்பீனா‘, நோயாளியின் மனத்துக்கு(ம் உடலுக்கும்) தெம்பு அளிக்கக்கூடியதாகும் (1) 39.29 கருஞ்சீரக மருத்துவம் (2) 39.28 இந்தியக் கோஷ்டக் குச்சியால் சிகிச்சையளிப்பது (2) 39.27 நோயாளிக்கு வற்புறுத்தி சிகிச்சையளிப்பது … (1) 39.26 ஒவ்வொரு நோய்க்கும் மருந்து உண்டு; (நோய்க்கு) மருத்துவம் செய்துகொள்வது விரும்பத் தக்கது (17) 39.25 தொழுகையில் மனம் அலைபாயச் செய்யும் ஷைத்தானிடமிருந்து பாதுகாப்புக் கோரல் (1) 39.24 பிரார்த்திக்கும்போது வலியுள்ள இடத்தில் கையை வைப்பது (1) 39.23 குர்ஆன் வசனங்கள் மற்றும் அல்லாஹ்வைத் துதிக்கும் சொற்களால் ஓதிப்பார்ப்பதற்கு ஊதியம் பெறலாம் (2) 39.22 இறைவனுக்கு இணை கற்பிதம் இல்லாத சொற்களால் ஓதிப்பார்பது தவறில்லை (1) 39.21 கண்ணேறு, சின்னம்மை, விஷக்கடி, (தீய)பார்வை ஆகியவற்றுக்காக ஓதிப்பார்ப்பது விரும்பத் தக்கதாகும் (12) 39.20 பாதுகாப்புக் கோரும் அத்தியாயங்களால் நோயாளிக்கு ஓதிப்பார்ப்பது … (2) 39.19 நோயாளிக்கு ஓதிப்பார்ப்பது விரும்பத் தக்கதாகும் (4) 39.18 விஷம் (1) 39.17 சூனியம் (1) 39.16 நோயும் மருத்துவமும் ஓதிப்பார்த்தலும் (4) 39.15 மூன்றாமவரின் ஒப்புதலின்றி இருவர் மட்டும் இரகசியம் பேசிக்கொள்வது தடை செய்யப்பட்டதாகும் (3) 39.14 … அந்நியப் பெண்ணை, வழிசெல்லும் ஒருவர் வாகனத்தில் அமர்த்திக்கொள்ளலாம் (2) 39.13 பெண்கள் இருக்கும் இடத்திற்கு அலிகள் செல்லத் தடை (2) 39.12 அமர்ந்திருந்த இடத்திற்கு உரியவர் (1) 39.11 அமர்ந்திருக்கும் ஒருவரை எழுப்பிவிடுவது தடை செய்யப்பட்டதாகும் (4) 39.10 அவைக்கு வருபவர், அமரும் ஒழுங்கு (1) 39.9 … கெட்ட எண்ணத்தை அகற்றுவது விரும்பத் தக்கதாகும் (2) 39.8 அந்நியப் பெண்ணிடம் … தனிமையில் இருப்பது தடை செய்யப்பட்டதாகும் (3) 39.7 … பெண்கள் வெளியே செல்லலாம் (2) 39.6 உள்ளே செல்ல அனுமதியாகக் கருதுவதற்கு … (1) 39.5 சிறாருக்கு(ப் பெரியவர்கள்) முகமன் கூறுவது விரும்பத் தக்கதாகும் (2) 39.4 வேதக்காரர்களுக்கு முந்திக்கொண்டு ஸலாம் கூறுவதற்குத் தடை (7) 39.3 ஸலாத்துக்குப் பதிலுரைப்பது முஸ்லிமுக்குக் கடமை (2) 39.2 நடைபாதைகளில் அமர்வதன் ஒழுங்குகளில் … (2) 39.1 முந்தி ஸலாம் சொல்ல வேண்டியவர்கள் (1) 38.10 இயல்பான பார்வை (1) 38.9 பிறர் வீட்டில் எட்டிப் பார்ப்பது தடை செய்யப்பட்டதாகும் (5) 38.8 “யார்?“ என்று கேட்டால் … (2) 38.7 அனுமதி கோருதல் (5) 38.6 “என் அருமை மகனே!“ (2) 38.5 குழந்தை பிறந்தவுடன் இனிப்பான பொருளை மென்று அதன் வாயிலிடுவதும் … (9) 38.4 மன்னாதி மன்னன் எனப் பெயர் சூட்டிக்கொள்வது தடை செய்யப்பட்டதாகும் (2) 38.3 அருவருப்பான பெயரை அழகான பெயராக மாற்றியமைப்பது … (6) 38.2 அருவருப்பான பெயர்கள் … (4) 38.1 … விரும்பத் தகுந்த பெயர்கள் (8) 37.35 வெறும் பெருமை (2) 37.34 மெல்லிய உடையணிந்து, பிறரைத் தன்பால் ஈர்க்கும் வண்ணம் தோள்களைச் சாய்த்து ஒயிலாக நடக்கும் பெண்கள் (1) 37.33 பெண்களின் பொய் அலங்காரங்காரங்களுக்குத் தடை (10) 37.32 நடைபாதைகளில் அமர்வதற்குத் தடையும் பாதைகளுக்குரிய உரிமைகளைப் பேணுவதும் (1) 37.31 தலை முடியில் பகுதி மழித்துவிட்டு, பகுதி மழிக்காமல் விட்டுவிடுவது வெறுக்கத் தக்கதாகும் (1) 37.30 ஸகாத் / ஜிஸ்யாவுக்கான கால்நடைகளில் சூடிட்டு அடை யாளமிடலாம் (4) 37.29 விலங்குகளின் முகத்தில் அடிப்பதும் அடையாளச் சூடிடுவதும் தடை செய்யப்பட்டவை ஆகும் (3) 37.28 ஒட்டகத்தின் கழுத்தில் (திருஷ்டிக்) கயிற்று மாலை அணிவிப்பது வெறுக்கத் தக்கதாகும் (1) 37.27 பயணத்தின்போது நாயும் (ஒலியெழுப்பும்) மணியும் வெறுக்கத் தக்கவை (2) 37.26 உயிரினங்களின் உருவப் படங்களை வரைவதும் … தடை செய்யப்பட்டவை ஆகும் (21) 37.25 (நரைமுடிக்கு) சாயமிட்டுக்கொள்வது யூதர்களுக்கு மாறு செய்வதாகும் (1) 37.24 நரைமுடியில் கருப்பு நிறச் சாயமிடுவது தடை செய்யப்பட்டதாகும் (2) 37.23 ஆண்கள் (மேனியில்) குங்குமப்பூச் சாயமிட்டுக்கொள்வதற்குத் தடை (1) 37.22 மல்லாந்து படுத்துக்கொண்டு கால்மீது காலைப் போட்டுக் கொள்வதற்கு அனுமதி (1) 37.21 மல்லாந்து படுத்துக்கொண்டு கால்மீது காலைப் போட்டுக் கொள்வதற்குத் தடை (3) 37.20 தடை செய்யப்பட்ட இரு நிலைகள் (2) 37.19 காலணிகளை அணிந்து கழற்றும் முறைகள் (3) 37.18 காலணி அல்லது அது போன்றதை அணிந்துகொள்வது விரும்பத் தக்கதாகும் (1) 37.17 மோதிரம் அணிவதற்குத் தடை செய்யப்பட்ட விரல்கள் (2) 37.16 கைச் சுண்டுவிரலில் மோதிரம் அணிவது (1) 37.15 அபிசீனியக் வெள்ளிக் குமிழ் மோதிரம் (2) 37.14 மோதிரங்களை(க் கழற்றி) எறிந்த நிகழ்வு (2) 37.13 நபி (ஸல்) அவர்களின் (முத்திரை) மோதிரம் (3) 37.12 ‘முஹம்மதுர் ரசூலுல்லாஹ்’ எனும் இலச்சினை பொறிக்கப்பட்ட வெள்ளி மோதிரம் (2) 37.11 ஆண்கள் தங்க மோதிரம் அணிவதற்குத் தடை (3) 37.10 ஆடைகளை எண்ணிப் பெருமை கொண்டு, கர்வத்தோடு நடப்பதற்குத் தடை (2) 37.9 பெருமைக்காக ஆடையைத் தரையில் படும்படி இழுத்துச் செல்வதற்குத் தடை (7) 37.8 தேவைக்கு அதிகமான விரிப்புகளும் ஆடைகளும் இருப்பது விரும்பத் தக்கதன்று (1) 37.7 படுக்கை விரிப்புகளைப் பயன்படுத்த அனுமதி (2) 37.6 ஆடையில் (எளிமை,) பணிவு காட்டுவது … (5) 37.5 பருத்தி ஆடை அணிவதன் சிறப்பு (2) 37.4 ஆண்கள் செம்மஞ்சள் நிறச் சாயமிடப்பட்ட ஆடை அணிவதற்குத் தடை (5) 37.3 தோல் உபாதைகள் இருந்தால் ஆண்கள் பட்டாடை அணியலாம் (3) 37.2 பொன் மோதிரம் மற்றும் பட்டாடை அணிவது ஆண்களுக்குத் தடை; பெண்களுக்கு அனுமதி (20) 37.1 பொன் / வெள்ளிப் பாத்திரங்களைப் பயன்படுத்துவது ஆண்களுக்கும் பெண்களுக்கும் தடை (2) 36.35 உணவைக் குறை சொல்லவேண்டாம் (2) 36.34 இறைநம்பிக்கையாளர் ஒரே குடலில் உண்பார்; இறைமறுப்பாளன் ஏழு குடல்களில் உண்பான் (5) 36.33 உணவு குறைவாக இருக்கும்போது … (4) 36.32 விருந்தினரை உபசரிப்பதும் முன்னுரிமை வழங்குவதன் சிறப்பும் (6) 36.31 வெள்ளைப் பூண்டு சாப்பிடக்கூடியதே … (2) 36.30 உணவுக் காடியின் சிறப்பும் … (4) 36.29 ‘அல்கபாஸ்’ பழங்களில் கருப்பு நிறப் பழத்தின் சிறப்பு (1) 36.28 உணவுக் காளானின் சிறப்பும் … (6) 36.27 மதீனத்துப் பேரீச்சம் பழங்களின் சிறப்பு (3) 36.26 குடும்பத்தாருக்காக … உணவுகளைச் சேமித்துவைத்தல் (2) 36.25 பலருடன் சேர்ந்து உண்பவர் … (2) 36.24 உணவு உண்பவர் அமரும் முறை; பணிவோடு அமர்வது விரும்பத் தக்கது (2) 36.23 பேரீச்சை செங்காய்களுடன் வெள்ளரிக்காயையும் சேர்த்து உண்பது (1) 36.22 விருந்தளிப்பவருக்காக விருந்தாளி பிரார்த்திப்பது … (1) 36.21 சுரைக் குழம்பு உண்ண அனுமதி … (2) 36.20 வீட்டு உரிமையாளரின் சம்மதம் கிடைக்கும் என்ற நம்பிக்கை இருந்தால் … (4) 36.19 விருந்துக்கு அழைக்கப்பட்டவரைத் தொடர்ந்து அழைக்கப்படாதவரும் வந்துவிட்டால் … (2) 36.18 உண்டு முடித்ததும் விரல்களைச் சூப்புவதும் உணவுத் தட்டை வழித்து உண்பதும் … (9) 36.17 வலப் பக்கத்திலிருந்து பரிமாறுதல் விரும்பத் தக்கதாகும் (4) 36.16 பாத்திரத்தினுள் (பருகும்போது) வெளியே மூன்று முறை மூச்சு விட்டுப் பருகுவது விரும்பத் தக்கதாகும் (3) 36.15 ஸம்ஸம் நீரை நின்றுகொண்டு அருந்துவது (4) 36.14 நின்றுகொண்டு அருந்துவது வெறுக்கத் தக்கதாகும் (4) 36.13 உண்பது, அருந்துவது ஆகியவற்றின் ஒழுங்குகளும் விதிமுறைகளும் (10) 36.12 இரவு நேர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் (6) 36.11 பழச்சாறுகளைப் பருகுவதும் பாத்திரங்களை மூடிவைப்பதும் (3) 36.10 (ஆட்டுப்) பால் அருந்த அனுமதி (3) 36.9 பழச்சாறுகள் (புளித்துக்) கெட்டியாகி, போதையேறாதவரை அனுமதிக்கப்பட்டவையாகும் (10) 36.8 குடிகாரன் பாவமன்னிப்புக் கோரி திருந்தாவிட்டால் … (3) 36.7 போதை தரும் ஒவ்வொரு பானமும் தடை செய்யப்பட்ட மதுவாகும் (9) 36.6 பானங்கள்-பாத்திரங்கள், தடை-தடை நீக்கம் (36) 36.5 பேரீச்சம் பழம், உலர் திராட்சைக் கலவை ஊறல் வெறுக்கத் தக்கதாகும் (14) 36.4 ‘மதுபானம்’ என்று சொல்லப்படுபவை (4) 36.3 மதுவை மருந்தாகப் பயன்படுத்துவதற்குத் தடை (1) 36.2 மதுபானத்தை (சமையல்) காடியாக மாற்றிப் பயன்படுத்துவதற்குத் தடை (1) 36.1 போதையூட்டும் ஒவ்வொன்றும் மதுவாகும் (9) 35.8 அல்லாஹ் அல்லாதவரின் பெயர் கூறிப் பிராணிகளை அறுப்பதற்குத் தடை (3) 35.7 தலைமுடியை, நகங்களைக் களைவதற்குத் தடை (5) 35.6 அல் ஃபரஉ வல் அத்தீரா (1) 35.5 பலி இறைச்சியை எவ்வளவு காலம் சேமித்து வைக்கலாம்? (14) 35.4 பல், நகம், எலும்பு ஆகியவை தவிர எந்தப் பொருளாலும் பிராணியை அறுக்க அனுமதி (1) 35.3 தாமே அறுப்பதும் அல்லாஹ்வின் பெயரோடு தக்பீர் கூறுவதும் விரும்பத் தக்கவை ஆகும் (3) 35.2 பலிப் பிராணியின் வயது (4) 35.1 பலி கொடுக்கப்படும் நேரம் (10) 34.12 விலங்குகளைக் கட்டிவைத்து அம்பெய்து கொல்வதற்குத் தடை (5) 34.11 … கத்தியைக் கூர்மையாகத் தீட்டிக் கொண்டு வதையற்ற முறையைக் கையாளக் கட்டளை (1) 34.10 … பயிற்சிகளை மேற்கொள்வது அனுமதிக்கப் பட்டதாகும். கல்சுண்டு விளையாட்டு வெறுக்கப்பட்டதாகும் (2) 34.9 முயல் கறி உண்ணத் தக்கது (1) 34.8 வெட்டுக்கிளி உண்ணத் தக்கது (1) 34.7 உடும்புக் கறி உண்ணத் தக்கது (13) 34.6 குதிரைகளின் இறைச்சியை உண்பது கூடுமா? (3) 34.5 நாட்டுக் கழுதைகளின் இறைச்சியை உண்பதற்குத் தடை (14) 34.4 கடல்வாழ் உயிரினங்களில் செத்தவற்றை உண்பதற்கு அனுமதி (5) 34.3 உண்பதற்குத் தடை செய்யப்பட்ட விலங்குகளும் பறவைகளும் (6) 34.2 வேட்டையாடிய பிராணி மறைந்து, பிறகு கிடைத்தால் … (2) 34.1 பயிற்சியளிக்கப்பட்ட நாய்கள் மூலம் வேட்டையாடுதல் (8) 33.56 பயணத்திலிருந்து திரும்புகின்றவர் … (5) 33.55 பயணம் என்பது துன்பத்தின் ஒரு பகுதியாகும் … (1) 33.54 பயணத்தில் கால்நடைகளின் நலன் காப்பதும் … (2) 33.53 “என் சமுதாயத்தாரில் ஒரு குழுவினர் எப்போதுமே உண்மைக்கு ஆதரவாளர்களாக இருப்பார்கள் … (8) 33.52 அம்பெய்வதன் சிறப்பும் … (3) 33.51 உயிர்த் தியாகிகள் பற்றிய விளக்கம் (3) 33.50 அல்லாஹ்வின் பாதையில் எல்லைக் காவல் புரிவதன் சிறப்பு (1) 33.49 கடல்வழிப் போரின் சிறப்பு (2) 33.48 போரில் கலந்துகொள்ள முடியாமல் போனவருக்கும் நன்மை … (1) 33.47 அறப்போரில் கலந்துகொள்ளாமல் இறந்துபோனவர் … (1) 33.46 அல்லாஹ்வின் பாதையில் வீரமரணத்தை வேண்டுவது விரும்பத் தக்கதாகும் (2) 33.45 “எண்ணங்களைப் பொருத்தே செயல்கள் அமைகின்றன” எனும் நபிமொழி … (1) 33.44 … போர்ச் செல்வங்களைப் பெற்றோரும் பெறாதோரும் … (2) 33.43 பிறர் பார்ப்பதற்காகவும் விளம்பரத்திற்காகவும் போரிட்டவர் … (1) 33.42 அல்லாஹ்வின் பாதையில் போரிட்டவர் … (3) 33.41 உயிர்த் தியாகிக்குச் சொர்க்கம் நிச்சயம் (6) 33.40 தகுந்த காரணம் உள்ளவர்களுக்கு அறப்போரில் கலந்து கொள்வது கடமை இல்லை (2) 33.39 அறப்போர் வீரர்களின் துணைவியருடைய கண்ணியம் … (1) 33.38 அறப்போர் வீரருக்கு வாகனம் மற்றும் பிற உதவிகள் … (6) 33.37 அல்லாஹ்வின் பாதையில் தர்மம் செய்வதன் சிறப்பும் அதற்குக் கிடைக்கும் பன்மடங்கு நன்மைகளும் (1) 33.36 இறைமறுப்பாளனை (போரில்) கொன்ற பின்னர் (மார்க்கத்தில்) உறுதியோடு இருத்தல் (2) 33.35 இரு போராளிகளில் ஒருவர் மற்றவரைக் கொன்று, பின் அவ்விருவருமே சொர்க்கத்தில் … (2) 33.34 அறப்போர் மற்றும் எல்லைக் காவலின் சிறப்பு (3) 33.33 வீரமணம் அடைந்தவர்களின் உயிர்கள் … (1) 33.32 அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டவரின் கடனைத் தவிர அனைத்துப் பாவங்களும் மன்னிக்கப்படுகின்றன (3) 33.31 அல்லாஹ் (தனது பாதையில்) அறப்போர் புரிந்தவர்களுக்காகச் சொர்க்கத்தில் வைத்துள்ள உயர்நிலைகள் (1) 33.30 அல்லாஹ்வின் பாதையில் காலையாயினும் மாலையாயினும் (போரிடச்) செல்வதன் சிறப்பு (5) 33.29 அல்லாஹ்வின் பாதையில் வீரமரணம் அடைவதன் சிறப்பு (4) 33.28 அல்லாஹ்வின் பாதையில் புறப்படுதலின், அறப்போரில் ஈடுபடுதலின் சிறப்பு (4) 33.27 குதிரையின் தன்மைகளில் விரும்பத் தகாதவை (1) 33.26 மறுமை நாள்வரை நெற்றிகளில் நன்மை பிணைக்கப்பட்டிருக்கும் குதிரைகள் (5) 33.25 குதிரைப் பந்தயமும் அதற்காகக் குதிரையை மெலிய வைப்பதும் (1) 33.24 குர்ஆன் பிரதிகளை இறைமறுப்பாளர்களின் நாட்டுக்கு எடுத்துச் செல்வது … (3) 33.23 பருவ வயது பற்றிய விளக்கம் (1) 33.22 இயன்றவரை கட்டுப்பட்டு நடப்பதாக உறுதிமொழி அளித்தல் (1) 33.21 பெண்களிடம் உறுதிப் பிரமாணம் (பைஅத்) வாங்கும் முறை (2) 33.20 மக்கா வெற்றிக்குப் பின் ஹிஜ்ரத் கிடையாது (5) 33.19 நாடு துறந்து (ஹிஜ்ரத்) சென்றவர் மீண்டும் தமது தாயகத்தில் குடியேறுவதற்குத் தடை (1) 33.18 ஆட்சித் தலைவர் படையினரிடம் உறுதி மொழி பெற்றுக்கொள்வது … (13) 33.17 ஆட்சித் தலைவர்களில் நல்லவர்களும் தீயவர்களும் (2) 33.16 ஆட்சித் தலைவர்கள் மார்க்கத்திற்கு முரணாகச் செயல்படும்போது … (2) 33.15 இரு ஆட்சியாளர்களுக்கு வாக்களிப்புப் பிரமாண நெருக்கடி ஏற்பட்டால் … (1) 33.14 முஸ்லிம்கள் (ஒரே தலைமையின் கீழ்) ஒன்றுபட்டிருக்கும்போது … (2) 33.13 குழப்பங்கள் தோன்றும்போது கூட்டமைப்போடு சேர்ந்திருப்பது கடமையாகும் … (8) 33.12 உரிமைகள் மறுக்கப்பட்டாலும் தலைமைக்குக் கட்டுப்படுதல் (1) 33.11 அதிகாரத்திலிருப்போர் அநீதியிழைக்கும்போதும் தகுதியற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கும்போதும் … (1) 33.10 கலீஃபாக்களில் முதலாமவருக்கு உறுதிப் பிரமாணம் (பைஅத்) அளிப்பது கடமையாகும் (3) 33.9 ஆட்சித் தலைவர் கேடயம் போன்றவர் … (1) 33.8 பாவமற்றவற்றில் தலைவர்களுக்குக் கட்டுப்படுவது கடமையாகும். பாவமானவற்றில் கட்டுப்படுவதற்குத் தடை (11) 33.7 அதிகாரிகளுக்கு அன்பளிப்புகள் வழங்குவதற்குத் தடை (3) 33.6 பொதுச் சொத்துகளில் மோசடி செய்வது வன்மையாகத் தடை செய்யப்பட்டது (1) 33.5 நேர்மையான ஆட்சியாளரின் சிறப்பும் … (6) 33.4 தேவையின்றி ஆட்சிப் பொறுப்பை ஏற்பது விரும்பத் தக்கதன்று (2) 33.3 ஆட்சியதிகாரத்தைத் தேடி அலைவதற்கும் அதன் மீது ஆசை கொள்வதற்கும் தடை (3) 33.2 ஆட்சித் தலைவரை நியமிக்கலாம்; நியமிக்காமல் விடலாம் (2) 33.1 ஆட்சியதிகாரம் குறைஷியரிடையேதான் இருக்கும் (10) 32.51 அறப்போர்களில் இறைமறுப்பாளரிடம் உதவி கோருவது … (1) 32.50 ‘தாத்துர் ரிக்காஉ’ (ஒட்டுத் துணிப்) போர் (1) 32.49 நபி (ஸல்) கலந்துகொண்ட அறப்போர்களின் எண்ணிக்கை (6) 32.48 அறப்போரில் கலந்துகொண்ட பெண்களுக்கு … (4) 32.47 அறப்போரில் ஆண்களுடன் பெண்களும் கலந்துகொள்வது (2) 32.46 “அவனே உங்களைத் தாக்காமல் அவர்கள் கைகளை தடுத்(து வைத்)தான்” எனும் (48:24) வசனம் (2) 32.45 ‘தூ கரத்’ போரும் பிற போர்களும் (2) 32.44 அஹ்ஸாப் போர் (அ) அகழ்ப் போர் (6) 32.43 கைபர் போர் (5) 32.42 கஅப் பின் அல்அஷ்ரஃப் கொல்லப்படுதல் (1) 32.41 அபூஜஹ்லு கொல்லப்படுதல் (1) 32.40 நபி (ஸல்) (மக்களை) இறைவன்பால் அழைத்து, துன்பங்களைப் பொறுத்துக் கொண்டது (2) 32.39 நபி (ஸல்) எதிர்கொண்ட துன்பங்கள் (7) 32.38 இறைதூதரால் கொல்லப்பட்டவன் மீது இறைவனின் கோபம் (1) 32.37 உஹுதுப் போர் (3) 32.36 கூட்டுப் படையினருக்கு எதிரான அகழ்ப் போர் (2) 32.35 வாக்குறுதியை(ப் போரிலும்) நிறைவேற்றுவது (1) 32.34 ஹுதைபிய்யா சமாதான உடன்படிக்கை’ (7) 32.33 மக்கா வெற்றிக்குப் பின் … (1) 32.32 கஅபாவைச் சுற்றிலும் இருந்த சிலைகளை அப்புறப்படுத்தியது (1) 32.31 மக்கா வெற்றி (2) 32.30 பத்ருப் போர் (1) 32.29 தாயிஃப் போர் (1) 32.28 ஹுனைன் போரில் … (5) 32.27 இறைமறுப்பு அரசர்களுக்கு நபி (ஸல்) எழுதிய கடிதங்கள் (1) 32.26 அழைப்பு விடுத்து ஹெராக்ளியஸ் மன்னருக்கு நபி (ஸல்) எழுதிய கடிதம் (1) 32.25 போரில் கிடைத்த உணவை, பகை நாட்டில் இருக்கும் போதே உண்ணலாம் (2) 32.24 முஹாஜிர்கள் தன்னிறைவு அடைந்தபோது … (2) 32.23 செயல்களுள் முன்னுரிமை அளிக்கத் தக்கது (1) 32.22 ஒப்பந்தத்தை முறித்துவிட்ட (பகை)வர்களுடன் போர் செய்யலாம் (3) 32.21 யூத கிறித்தவர்கள் அரபிய தீபகற்பத்திலிருந்து வெளியேற்றப்படுவது (1) 32.20 யூதர்களை ஹிஜாஸ் பகுதியிலிருந்து நாடு கடத்தியது (2) 32.19 கைதியை என்னென்னவெல்லாம் செய்யலாம் (1) 32.18 பத்ருப் போரில் வானவர்களின் உதவியும் … (1) 32.17 போர் வெற்றிச் செல்வத்தைப் பங்கிடும் முறை (1) 32.16 இறைத்தூதர்களுக்கு யாரும் (சொத்தில்) வாரிசாக முடியாது (5) 32.15 போர் செய்யாமல் கிடைத்த செல்வங்களின் சட்டம் (3) 32.14 … போர்க் கைதிகளைப் பரிமாறிக்கொள்வது (1) 32.13 போரில் கொல்லப்பட்ட எதிரியின் உடைமைகள் (4) 32.12 போர் வெற்றிச் செல்வங்கள் (7) 32.11 போர் வெற்றிச் செல்வங்கள் யாருக்குச் சொந்தம்? (1) 32.10 போரில் மரங்களை வெட்டுவதும் எரிப்பதும் அனுமதிக்கப்பட்டதாகும் (3) 32.9 பெண்களையும் குழந்தைகளையும் அறியாமல் கொன்றுவிட்டால் … (3) 32.8 போரில் பெண்களையும் குழந்தைகளையும் கொல்வதற்குத் தடை (2) 32.7 எதிரிகளை(ப் போரில்) எதிர்கொள்ளும்போது பிரார்த்திப்பது (2) 32.6 எதிரியை(ப் போர்க் களத்தில்) சந்திக்க ஆசைப்படுவது வெறுக்கத் தக்கது … (2) 32.5 போரில் தந்திரம் அனுமதிக்கப்பட்டது (2) 32.4 மோசடி செய்வது தடை செய்யப்பட்டதாகும் (8) 32.3 மக்களிடம் இலகுவாக நடந்துகொள்ள வேண்டும்; வெறுப்பைக் கைவிட வேண்டும் (3) 32.2 படைத் தலைவர், போர் நெறிகள் குறித்து அறிவுறுத்துவது (1) 32.1 முன்னறிவிப்பின்றித் தாக்குதல் தொடுக்கலாமா? (1) 31.5 பயணத்தில் உணவைப் பகிர்ந்துண்ணல் (1) 31.4 செல்வத்தால் பிறருக்கு உதவுவது விரும்பத் தக்கது (1) 31.3 விருந்தோம்பல் சார்ந்தவை (3) 31.2 உரிமையாளரின் அனுமதியின்றி கால் நடையில் பால் கறப்பதற்குத் தடை (1) 31.1 ஹாஜிகள் தவறவிட்டவை (2) 31.0 கண்டெடுக்கப்பட்டவை (5) 30.11 நீதிபதி சமரசம் செய்துவைப்பது விரும்பத் தக்கதாகும் (1) 30.10 ஆய்வாளர்களிடையே கருத்து வேறுபாடு (1) 30.9 சாட்சிகளில் சிறந்தவர் (1) 30.8 தவறான தீர்ப்புகளைத் தள்ளுபடி செய்வதும் (மார்க்கத்தில் இல்லாத) புதுமைகளை நிராகரிப்பதும் (2) 30.7 கோபமாக இருக்கும் நீதிபதி, தீர்ப்பளிப்பது விரும்பத் தக்கதன்று (1) 30.6 நீதிபதியின் ஆய்வுக்கு நன்மை உண்டு (1) 30.5 தடைகள் மூன்று (4) 30.4 ஹிந்த் (ரலி) வழக்கு (3) 30.3 வாதங்களின் அடிப்படையில் தீர்ப்பு அமைந்துவிடுதல் (2) 30.2 சத்தியத்தின் / சாட்சியத்தின் அடிப்படையில் தீர்ப்பளித்தல் (1) 30.1 சத்தியம் செய்து நிரூபிப்பது பிரதிவாதிமீது கடமையாகும் (2) 29.11 இழப்பீடு இல்லாத விபத்துகள் (2) 29.10 தண்டனைகள், குற்றங்களுக்கான பரிகாரமாகும் (3) 29.9 சீர்திருத்திற்காக வழங்கப்படும் சாட்டையடிகளின் (அதிகபட்ச) அளவு (1) 29.8 மது அருந்திய குற்றத்திற்கான தண்டனை (4) 29.7 மகப்பேறான பெண்ணின் தண்டனையைத் தள்ளிவைத்தல் (1) 29.6 இஸ்லாமிய அரசின் கீழ் வாழும் யூதர்கள் விபச்சாரத்தில் ஈடுபட்டாலும் கல்லெறி தண்டனை (6) 29.5 விபச்சாரம் செய்தவரின் ஒப்புதல் வாக்குமூலம் (9) 29.4 மணமானவர்கள் விபச்சாரம் செய்தால் கல்லெறி தண்டனை (1) 29.3 விபச்சாரக் குற்றத்திற்கான தண்டனை (2) 29.2 தண்டனையிலிருந்து விலக்கு அளிக்குமாறு பரிந்துரைப்பதற்குத் தடை (3) 29.1 தண்டனைக்குரிய திருட்டின் அளவுகோலும் தண்டனையும் (7) 28.11 சிசுக் கொலைக்கான இழப்பீடும் … (6) 28.10 கொலையாளி, தன் குற்றத்தை ஒப்புக்கொள்வதும் … (2) 28.9 மனிதர்களின் உயிர், தன்மானம், செல்வம் ஆகியவற்றுக்கு ஊறு விளைவிப்பது … (2) 28.8 மறுமையில் வழங்கப்படும் தீர்ப்பும் தண்டனையும் … (1) 28.7 கொலையை (உலகுக்கு) அறிமுகப்படுத்தியவர் மீதான பாவம் (1) 28.6 முஸ்லிமின் மரண தண்டனைக்கான காரணங்கள் (2) 28.5 பற்கள் போன்ற(உறுப்புகளான)வற்றில் பழிக்குப்பழி உண்டு (1) 28.4 தாக்க வந்தவனிடமிருந்து தற்காத்துக் கொள்வதற்காக … (6) 28.3 கல் மற்றும் கூராயுதங்களால் கொலை செய்தால், பழிக்குப்பழி உண்டு … (3) 28.2 வன்முறையாளர்களுக்கும் மதம் மாறியோருக்குமான தண்டனை (4) 28.1 அல்கஸாமா (4) 27.13 விடுதலைக்கு வாக்களிக்கப்பட்ட அடிமையை விற்கலாம் (2) 27.12 அடிமையில் தமது பங்கை மட்டும் விடுதலை செய்தல் (8) 27.11 ‏தன் உரிமையாளருக்கு விசுவாசமாகவும் … (4) 27.10 அடிமைக்கு எஜமானர் உண்பதிலிருந்து உணவளிப்பதும் … (4) 27.9 விபசாரம் செய்துவிட்டதாக அவதூறு கூறுவதற்கான கண்டனம் (1) 27.8 அடிமைகளுடனான நல்லுறவும் கன்னத்தில் அறைந்ததற்கான பரிகாரமும் (8) 27.7 இறைமறுப்பாளராக இருந்தபோது செய்த நேர்ச்சை… (2) 27.6 ஆகுமாக்கப்பட்டதற்கான சத்தியமாக இருந்தாலும் … (1) 27.5 இன்ஷா அல்லாஹ் என்பதை (சத்தியத்தின்போது) சேர்த்துக் கூறுதல் (4) 27.4 சொல்பவரின் எண்ணப்படியே ஒருவருடைய சத்தியம் அமையும் (2) 27.3 சத்தியம் செய்தவர், அதைவிடச் சிறந்ததாக மற்றொன்றைக் காணும்போது … (12) 27.2 ‘லாத்’ மற்றும் ‘உஸ்ஸா’வின் மீது சத்தியம் செய்துவிட்டவர் … (2) 27.1 அல்லாஹ்வைத் தவிர எவர்/எதன் மீதும் சத்தியம் செய்யத் தடை (3) 26.5 நேர்ச்சை முறிவுக்கான பரிகாரம் (1) 26.4 கஅபாவரை நடைப்பயணம் செல்வதாக நேர்ந்துகொண்டவர் (3) 26.3 இறைவனுக்கு மாறு செய்வதிலோ உரிமை இல்லாததிலோ நேர்ச்சை. (1) 26.2 நேர்ச்சை செய்வதற்குத் தடை; அது (விதியில்) எதையும் மாற்றிவிடாது (6) 26.1 நேர்ச்சையை நிறைவேற்றக் கட்டளை (1) 25.5 வசதியற்றவர் மரண சாஸனம் செய்ய முடியாது (6) 25.4 அறக்கொடை (1) 25.3 மனிதன் இறந்த பின்பும் தொடரும் நன்மைகள் (1) 25.2 இறந்துவிட்டவருக்காகச் செய்யப்படும் தர்மங்களின் நன்மை … (3) 25.1 மரண சாஸனம் 1/3 மட்டுமே (5) 25.0 மரண சாஸனம் (2) 24.4 ஆயுட்கால அன்பளிப்பு (11) 24.3 அன்பளிப்பு வழங்குவதில் பிள்ளைகளிடையே பாகுபாடு காட்டுவது … (10) 24.2 தானமும் அன்பளிப்பும் வழங்கப்பட்ட பின், திரும்பப் பெறுவதற்குத் தடை … (4) 24.1 தானமாகக் கொடுத்ததை விலைக்கு வாங்குவது விரும்பத் தக்கதல்ல (4) 23.4 ஒருவர் விட்டுச்செல்லும் செல்வம் அவருடைய வாரிசுகளுக்கு உரியதாகும் (4) 23.3 இறுதியாக அருளப்பெற்றது கலாலா வசனமாகும் (4) 23.2 ‘கலாலா’ சொத்துரிமை (5) 23.1 உரியவர்களுக்கும் உறவினருக்கும் பிரிக்கப்பட்ட பாகங்கள் (3) 23.0 ஒரு முஸ்லிம், இறைமறுப்பாளருக்கு வாரிசாகமாட்டார் (1) 22.31 பாதைக்கு நிலம் ஒதுக்குவதில் கருத்து வேறுபாடு ஏற்பட்டால் அதற்கான தீர்வு (1) 22.30 பிறர் நிலத்தை அபகரித்தல் போன்ற அநீதி இழைத்தல்களுக்குத் தடை (6) 22.29 அண்டை வீட்டாரின் சுவரில் (சாரம் கட்டுவதற்கு) மரக்கட்டை பதிப்பது (1) 22.28 பங்காளியின் இசைவு (3) 22.27 வியாபாரத்தில் (வீண்)சத்தியம் செய்வது விலக்கப்பட்டுள்ளது (2) 22.26 உணவுப் பொருட்களைப் பதுக்குவதற்குத் தடை (2) 22.25 முன்பணம் செலுத்தும் வணிகம் (2) 22.24 அடமானம் உள்ளூரிலும் பயணத்திலும் செல்லும் (3) 22.23 ஓர் உயிரினத்தை அதே இனத்திற்குப் பதிலாக ஏற்றத்தாழ்வோடு விற்கலாம் (1) 22.22 உங்களில் சிறந்தவர் கடனை அழகிய முறையில் திருப்பிச் செலுத்துபவரே (4) 22.21 ஒட்டகத்தை விற்றவர் அதில் பயணிக்க நிபந்தனை விதிப்பது (5) 22.20 அனுமதிக்கப்பட்டவற்றையும் ஐயத்திற்குரியவற்றையும் கையாளுதல் (1) 22.19 வட்டி வாங்குபவருக்கும் வட்டி கொடுப்பவருக்கும் சாபம் (2) 22.18 உணவுப் பொருளை, சரிக்குச் சரியாக விற்றல் (12) 22.17 பொன்னும் மணியும் பதித்த மாலையை விற்பது (4) 22.16 தங்கத்திற்கு வெள்ளியைக் கடனாக விற்பதற்குத் தடை (3) 22.15 நாணயமாற்று வியாபாரம்; வெள்ளிக்குத் தங்கத்தை ரொக்கத்துக்கு விற்பது (7) 22.14 வட்டி (4) 22.13 மது, செத்தவை, பன்றி, சிலைகள் ஆகியவற்றை விற்பதற்குத் தடை (4) 22.12 மதுபான வியாபாரத்திற்குத் தடை (4) 22.11 குருதி உறிஞ்சி எடுப்பதற்காகக் கூலி பெறுவது கூடும் (4) 22.10 வேட்டை, காவல், பாதுகாப்புக்காக நாய் வளர்க்கலாம் (18) 22.9 நாய் விற்ற காசு, சோதிடரின் தட்சணை, விபச்சாரியின் வருமானம் (4) 22.8 தேவைக்குப் போக மீதம் உள்ள நீரை விற்பதற்குத் தடை (5) 22.7 வசதியுள்ளவர் கடனைச் செலுத்த தாமதம் செய்யக் கூடாது (1) 22.6 கடனை அடைக்க சிரமப்படுபவருக்கு அவகாசம் அளிப்பதன் சிறப்பு (7) 22.5 திவாலானவரிடம் திரும்பப் பெற்றுக்கொள்ளும் உரிமை (4) 22.4 கடனில் தள்ளுபடி செய்வது விரும்பத் தக்கதாகும் (3) 22.3 சேதமடைந்த பழங்களுக்கான தொகைக்குத் தள்ளுபடி (5) 22.2 மரம் நடுதலின், பயிர் செய்தலின் சிறப்பு (5) 22.1 நிபந்தனையின் பேரில் தோப்பைக் குத்தகைக்கு விடுவது (4) 21.21 நிலத்தை (விளைவித்துக்கொள்ள) இரவலாக வழங்குவது (4) 21.20 ‘முஸார’ஆவும் ‘முஆஜரா’வும் (2) 21.19 பொன், வெள்ளி(நாயணங்களு)க்கு நிலத்தைக் குத்தகைக்கு விடுவது (3) 21.18 தானியத்திற்கு நிலத்தைக் குத்தகைக்கு விடுவது (2) 21.17 நிலக் குத்தகை (24) 21.16 தடை செய்யப்பட்ட வியாபார வகைகள் (6) 21.15 கனிகள் நிறைந்த பேரீச்ச மரத்தை விற்பது (4) 21.14 (மரத்திலுள்ள) செங்கனிகளை மாற்றிக் கொள்வதற்குத் தடை (14) 21.13 மரத்திலுள்ள பழங்களை முற்றுவதற்கு முன் விற்பதற்குத் தடை (10) 21.12 வியாபாரத்தில் ஏமாற்றப்படுபவர் (1) 21.11 வியாபாரத்தில் உண்மை பேசுவதும் குறைகளைத் தெளிவுபடுத்துவதும் (1) 21.10 விற்பவருக்கும் வாங்குபவருக்கும் வியாபாரத்தை முறித்துக்கொள்ளும் உரிமை (4) 21.9 அளவு தெரியாத பேரீச்சம் பழக் குவியலை விற்பதற்குத் தடை (1) 21.8 வாங்கப்பட்ட பொருள் கைக்கு வருமுன் (பிறருக்கு) விற்பது கூடாது (13) 21.7 மடி கனக்கச் செய்யப்பட்ட கால்நடைகளை விற்பனை செய்வது பற்றிய சட்டம் (5) 21.6: கிராமவாசிக்காக, நகரவாசி விற்றுக் கொடுக்கத் தடை (5) 21.5: விற்பனைக்கு வரும் சரக்குகளை இடைமறித்து வாங்கத் தடை (4) 21.4: வியாபாரத்தில் தடை செய்யப்பட்டவை (7) 21.3: ஒட்டகக் கன்று (அது பிறக்குமுன்) விற்பதற்கு தடை! (2) 21.2: கல்லெறி வியாபாரம் மற்றும் மோசடி வியாபாரம் ஆகியவை செல்லாது (1) 21.1: ‘முலாமஸா’ மற்றும் ‘முனாபதா’ ஆகிய வியாபாரங்கள் செல்லாது (3) 20.7: அடிமையான தந்தையை விடுதலை செய்வதன் சிறப்பு (1) 20.6: அடிமைகளை விடுதலை செய்வதன் சிறப்பு (4) 20.5: விடுதலை செய்த உரிமையாளரை மாற்றிக் கூறத் தடை (4) 20.4: வாரிசாகும் உரிமையை விற்பதற்கும் அன்பளிப்பாக வழங்குவதற்கும் தடை (1) 20.3: விடுதலை செய்தவருக்கே வாரிசுரிமை உரியது (9) 20.2: அடிமை (தனது முழு விடுதலைக்காக) உழைத்துப் பொருளீட்டுவது (2) 20.1: ஓர் அடிமையி(ன் விலையி)ல், ஒருவர் தமக்கான பங்கை விடுவிப்பது (1) 19.1: சுய சாபம் வேண்டுதல் (17) 18.9: கணவன் இறந்து ‘இத்தா’விலிருக்கும் பெண் துக்கம் கடைப்பிடிப்பது (11) 18.8: கர்ப்பமுற்றிருக்கும் பெண்ணின் ‘இத்தா’க் காலம், பிரசவத்துடன் முடிந்துவிடும் (2) 18.7: ‘இத்தா’விலிருக்கும் பெண் தன் தேவைக்காக வெளியே செல்லலாம் (1) 18.6: மூன்று தலாக் சொல்லப்பட்ட பெண்ணுக்கு ஜீவனாம்சம் பற்றி… (18) 18.5: ஈலாச் செய்வது, மனைவியிடமிருந்து விலகுவது, விருப்ப உரிமை அளிப்பது (5) 18.4: மனைவிக்கு (த் தம்மைப் பிரிந்துவிட) உரிமை அளிப்பது மணவிலக்கு ஆகாது (8) 18.3: மணவிலக்குச் செய்யும் நோக்கமின்றி கூறினால், அது மணவிலக்கு ஆகாது (4) 18.2: மூன்று தலாக்குகள் (3) 18.1: மாதவிடாயான மனைவியை அவளது சம்மதமின்றி மணவிலக்குச் செய்வதற்குத் தடை (14) 17.19: ஹவ்வா-வும், பெண்கள் கணவரை ஏமாற்றுதலும் (2) 17.18: மனைவியரின் நலம் நாடுதல் (4) 17.17: பயன் தரும் இவ்வுலகச் செல்வங்களுள் மிகச் சிறந்த செல்வம், நற்குணமுள்ள மனைவியே (1) 17.16: கன்னிப் பெண்ணை மணப்பது விரும்பத் தக்கதாகும் (5) 17.15: மார்க்கப் பற்றுள்ள பெண்ணை மணப்பது விரும்பத் தக்கதாகும் (2) 17.14: மனைவியருள் ஒருவர், தனது முறைநாளை மற்றவருக்கு விட்டுக்கொடுக்கலாம் (4) 17.13: மனைவியருக்கு (இரவுகளை) ஒதுக்கீடு செய்வது (1) 17.12: கன்னி கழிந்த பெண்ணுக்கும், கன்னிப் பெண்ணுக்கும் கணவன் ஒதுக்க வேண்டிய நாட்கள் (6) 17.11: சாயல் அறியும் நிபுணரின் கூற்றுப்படி, குழந்தைக்கு உரியவரைக் கண்டறிவது (3) 17.10: எஜமானரின் கீழ் வாழும் பெண்ணின் குழந்தை, அவருக்கே உரியது (2) 17.9: பெண் போர்க் கைதியுடன் உடலுறவு கொள்ளலாம் (2) 17.8: பசிக்காகத் தாய்ப்பால் அருந்தினால்தான் பால்குடி உறவு ஏற்படும் (1) 17.7: பருவ வயதை அடைந்தவருக்குப் பாலூட்டுவது (6) 17.6: ஐந்து தடவை அருந்தினால்தான் பால்குடி உறவு உண்டாகும் (2) 17.5: ஓரிரு தடவை (பெண்ணின் மார்பில்) பால் குடிப்பது பற்றிய சட்டம் (6) 17.4: மனைவியின் மகளையும் மனைவியின் சகோதரியையும் மணப்பதற்குத் தடை (2) 17.3: பால்குடிச் சகோதரரின் மகளை மணப்பது தடை செய்யப்பட்டுள்ளது (3) 17.2: பால்குடித் தந்தையின் (இரத்த பந்த) உறவினரும் மணமுடிக்கத் தகாதவரே! (6) 17.1: பிறப்பால் ஏற்படும் உறவும் பால்குடி உறவும் (2) 16.24: பாலூட்டும் மனைவியுடன் உடலுறவு கொள்ளும்போது அஸ்லுச் செய்வது வெறுக்கத் தக்கது (3) 16.23: கருவுற்றிருக்கும் பெண் போர்க் கைதியுடன் உடலுறவு கொள்வது தடை செய்யப்பட்டுள்ளது (1) 16.22: உடலுறவின்போது இடைமுறிப்பு – ‘அஸ்லு’ச் சட்டம் (12) 16.21: மனைவியுடன் நடைபெறும் உடலுறவு இரகசியங்களை வெளியே சொல்வது தடுக்கப்பட்டது (2) 16.20: ஒரு பெண், தன் கணவனின் படுக்கைக்குச் செல்ல மறுப்பதற்குத் தடை (3) 16.19: உடலுறவின் ஒழுங்குகள் (2) 16.18: உடலுறவின்போது ஓத வேண்டிய விரும்பத் தகுந்த பிரார்த்தனை (1) 16.17: மூன்று முறை மணவிலக்கு அளிக்கப்பட்ட பெண்ணின் மறுவிருப்பம் (4) 16.16: விருந்துக்கான அழைப்பை ஏற்பது பற்றிய கட்டளை (13) 16.15: ஸைனப் பின்த்து ஜஹ்ஷு (ரலி) திருமணம்; ஹிஜாப் பற்றிய வசனம்; மணவிருந்து (7) 16.14: அடிமைப் பெண்ணை விடுதலை செய்து, பின்னர் அவளை மணமுடித்துக்கொள்வதன் சிறப்பு (6) 16.13: மணக்கொடை (மஹ்ரு) என்பது … (7) 16.12: ஒருவர் தாம் மணமுடிக்க விரும்பும் பெண்ணின் முகத்தையும் இரு முன் கைகளையும் பார்ப்பது (2) 16.11 ஷவ்வால் மாதத்தில் மணமும் தாம்பத்திய உறவும் (1) 16.10: இளவயதுக் கன்னிக்கு அவளுடைய தந்தை மணமுடித்துவைத்தல் (4) 16.9: மணப் பெண்ணின் வாய் வழிச் சம்மதமும் மௌனச் சம்மதமும் (4) 16.8: திருமண (முன்) நிபந்தனைகளை நிறைவேற்றல் (1) 16.7: மணக்கொடையில்லா திருமணம் செல்லாது (5) 16.6: தம் (முஸ்லிம்) சகோதரன் கேட்டுக்கொண்டிருக்கும் ஒரு பெண்ணை, மற்றவர் கேட்கலாகாது (7) 16.5: இஹ்ராம் புனைந்தவர் திருமணம் செய்வதற்குத் தடை; அவர் பெண் கேட்பது வெறுக்கத் தக்கது (8) 16.4: மனைவியின் அத்தையை, சின்னம்மாவை மணக்கத் தடை (8) 16.3: இடைக்காலத் திருமணம், (முத்ஆ) காலாவதியானது (21) 16.2: இச்சை தூண்டப்பட்டவர், தமது இச்சையைத் தணித்துக் கொள்ளட்டும் (2) 16.1: வசதி இருந்தால் மணமுடிப்பதும் இல்லாதவர் நோன்பு நோற்பதும் (6) 15.97: குபாப் பள்ளிவாசல், அதில் தொழுவது, அதைத் தரிசிப்பது ஆகிய சிறப்புகள் (7) 15.96: இறையச்சத்தின் மீது நிறுவப்பட்ட பள்ளிவாசல் (1) 15.95: மூன்று பள்ளிவாசல்களைத் தவிர வேறெதற்கும் (புனிதப்) பயணம் கிடையாது (2) 15.94: மக்கா, மதீனாப் பள்ளிவாசல்களில் தொழுவதன் சிறப்பு (6) 15.93: ‘உஹுத்’ மலை நம்மை நேசிக்கிறது; நாமும் அதை நேசிக்கின்றோம் (3) 15.92: சொர்க்கப் பூஞ்சோலைகளுள் ஒன்று (3) 15.91: மதீனாவாசிகள் மதீனாவை விட்டு அகலும்போது அதன் நிலை (2) 15.90: மதீனாவிலேயே தங்கியிருப்பதற்கு ஆர்வமூட்டல் (2) 15.89: மதீனாவாசிகளுக்குக் கேடு நினைப்பவர்களை, அல்லாஹ் உருக்குலைத்துவிடுவான் (3) 15.88: தன்னிலுள்ள தீயவர்களை மதீனா அகற்றிவிடும் (5) 15.87: கொள்ளை நோயும் தஜ்ஜாலும் நுழைய முடியாமல் மதீனா பாதுகாக்கப்பட்டுள்ளது (2) 15.86: மதீனாவில் ஏற்படும் நெருக்கடிகளைச் சகித்துக்கொண்டு, அங்குக் குடியிருக்க ஆர்வ மூட்டல் (10) 15.85: மதீனாவின் சிறப்பு; பிரார்த்தித்ததும் புனிதமானவையும் (17) 15.84: இஹ்ராமின்றி மக்காவிற்குள் நுழைய அனுமதி (5) 15.83: அவசியத் தேவையின்றி மக்காவிற்குள் ஆயுதம் எடுததுச் செல்வதற்குத் தடை (1) 15.82: மக்காவும், அதன் புனிதமானவைகளும் (4) 15.81: முஹாஜிருக்கு மக்காவில் தக்குவதற்கு அனுமதிக்கப்பட்ட நாட்கள் (4) 15.80: ஹாஜிகள் மக்காவில் தங்குவதும் அங்குள்ள வீடுகளை வாரிசுரிமையாகப் பெறுவதும் (3) 15.79: ஹஜ், உம்ரா, அரஃபா நாள் ஆகியவற்றின் சிறப்பு (3) 15.78: இணைவைப்பவருக்கான ஹஜ் சட்டங்கள் (1) 15-77: ஹஜ் அல்லது உம்ராவிலிருந்து திரும்பும்போது துல்ஹுலைஃபாவில் தங்கித் தொழுவது (5) 15.76: பயணத்திலிருந்து திரும்பி வரும்போது ஓத வேண்டியவை (2) 15.75: பயணங்களில் வாகனத்தில் ஏறியதும் ஓத வேண்டிய துஆ (2) 15.74: மஹ்ரமான ஆணுடன் மட்டுமே பெண்ணின் ஹஜ் முதலான பயணம் (11) 15.73: ஹஜ் கடமை, ஆயுளில் ஒரு முறைதான் (1) 15.72: குழந்தையின் ஹஜ் செல்லும்; அதை ஹஜ்ஜுக்கு அழைத்துச் சென்றவருக்கும் நற்பலன் உண்டு (3) 15.71: இயலாதவருக்காகவோ, இறந்தவருக்காகவோ பிறர் ஹஜ் செய்தல் (2) 15.70: கஅபாவின் வளைந்த சுவரும் அதன் தலைவாயிலும் (1) 15.69: இறையில்லம் கஅபாவை இடித்துக் கட்டுதல் (7) 15.68: கஅபாவின் உள்ளே நுழைவதும் அதனுள் தொழுவதும் (9) 15.67: விடைபெறும் தவாஃப் மாதவிடாய் ஏற்பட்ட பெண்ணுக்குக் கடமையில்லை (8) 15.66: செல்லும் வழியில் பலிப் பிராணி பாதிப்புக்குள்ளாகிவிட்டால் … (2) 15.65: பலியிடக் கொண்டுசெல்லும் ஒட்டகத்தில், பயணம் செய்ய அனுமதி (6) 15-64: ஹரம் எல்லைக்குச் செல்லாதவர், பலிப் பிராணியை அனுப்பிவைக்கும் முறை (11) 15.63: ஒட்டகத்தை அறுக்கும் முறை (1) 15.62: பலிப் பிராணிகளுள் மாட்டிலும் ஒட்டகத்திலும் கூட்டுச் சேர்வது (8) 15.61: பலிப் பிராணிகளின் இறைச்சி, தோல், சேணம் ஆகியவை தர்மத்துக்குரியன (2) 15.60: ‘தஷ்ரீக்’ நாட்களின் இரவுகளில் மினாவில் தங்குவது கட்டாயமாகும் (2) 15.59: ‘நஃப்ரு’டைய நாளில் ‘அல்முஹஸ்ஸபி’ல் தங்குவதும் அங்குத் தொழுவதும் (9) 15.58: துல்ஹஜ் பத்தாவது நாளில் ‘தவாஃபுல் இஃபாளா’ செய்வது (2) 15.57: ஹஜ் சடங்குகளில் முன் – பின் ஆகிவிட்டால் … (6) 15.56: துல்ஹஜ் பத்தாம் நாளின் சடங்குகள் (3) 15.55: தலைமுடியை மழிப்பதும் குறைப்பதும் (6) 15.54: கற்களின் எண்ணிக்கை (1) 15.53: கல்லெறியும் நேரம் (1) 15.52: பொடிக் கற்கள் போதும் (1) 15.51: துல்ஹஜ் பிறை பத்தில் ஜம்ரத்துல் அகபாவுக்குக் கல்லெறிதல் (3) 15.50: ‘ஜம்ரத்துல் அகபா’வின் மீது கல் எறியும்போது தக்பீர் கூறுவது (4) 15.49: முஸ்தலிஃபாவிலிருந்து மினாவிற்குப் புறப்படச் செய்வது (11) 15.48: முஸ்தலிஃபாவில் ஸுப்ஹுத் தொழுகையை ஆரம்ப நேரத்தில் தொழுவது (1) 15.47: மஃக்ரிப், இஷா வை அடுத்தடுத்துத் தொழுவது (14) 15.46: அரஃபா நாளில் மினாவிலிருந்து அரஃபாவிற்குப் போகும்போது தல்பியாவும் தக்பீரும் கூறுதல் (4) 15.45: துல்ஹஜ் பத்தாவது நாளன்று கல்லெறியத் துவங்கும்வரை தல்பியாச் சொல்லிக்கொண்டிருப்பது (7) 15.44: ஸஃபா-மர்வாவுக்கிடையே ஸயீ (ஓட்டம்) ஒரே தடவைதான் (1) 15.43: ஸஃபா-மர்வாவுக்கிடையே ஸயீச் செய்வது முக்கியக் கடமையாகும் (5) 15.42: வாகனங்கள் மீதமர்ந்து தவாஃப் செய்யலாம் (6) 15.41: தவாஃபின்போது ஹஜருல் அஸ்வதை முத்தமிடுவது (5) 15.40: இறையில்லத்தில் முத்தமிடப்படும் இரு மூலைகள் (6) 15.39: தவாஃபில் விரைந்து நடப்பது விரும்பத்தக்கது (12) 15.38: மக்காவினுள் நுழையும் முன்… (4) 15.37 மக்காவினுள் நுழைவதும் வெளியேறுவதும் (3) 15.36 ரமளான் மாதத்தில் உம்ராச் செய்வதன் சிறப்பு (2) 15.35: நபியவர்களின் உம்ரா எண்ணிக்கையும் காலமும் (4) 15.34 நபியவர்களின் தல்பியாவும் பலியும் (4) 15.33: உம்ராவில் தலைமுடி குறைத்தல் (5) 15.32: இஹ்ராமின்போது பலிப் பிராணி (4) 15.31: ஹஜ்ஜுப் பருவங்களில் உம்ராச் செய்ய அனுமதி (6) 15.30: தமத்துஉ ஹஜ் (2) 15.29: இஹ்ராம் ஹாஜிக்குக் கட்டாயம் (3) 15.28: தவாஃபும் ஸயீயும் கட்டாயம் (3) 15.27: ஹஜ் உம்ரா சேர்த்தும் தனித்தும் செய்வது (3) 15.26: ஒரே இஹ்ராமில் உம்ரா ஹஜ் (3) 15.25: இஹ்ராமிலிருந்து விடுபடுதல் (3) 15.24: பலிப் பிராணியும் ஹஜ் கடமையும் (2) 15.23: தமத்துஉ ஹஜ் அனுமதிக்கப்பட்ட ஒன்றாகும் (13) 15.22: ஒருவர் வேறொருவரின் இஹ்ராமை அச்சொட்டி பூணுதல் (3) 15.21: அரஃபா பெருவெளியில் தங்கி திரும்புதல் தொடர்பான இறை கூற்று (3) 15.20: அரஃபாப் பெருவெளி முழுவதும் தங்குமிடம் (2) 15.19: நபி (ஸல்) அவர்களின் ஹஜ் (1) 15.18: உம்ராவையும் ஹஜ்ஜையும் தனித் தனியாக நிறைவேற்றி பயனடைதல் (2) 15.17: இஹ்ராமின் முறைகள் (27) 15.16: இரத்தப்போக்குடைய பெண் இஹ்ராமில் குளித்தல் (2) 15.15: இஹ்ராமிலிருந்து விடுபட முன் நிபந்தனையிட அனுமதி (5) 15.14: முஹ்ரிம் இறந்துவிட்டால் செய்ய வேண்டியவை (9) 15.13: இஹ்ராம் பூண்ட முஹ்ரிம், தம் உடலைக் கழுவிக்கொள்ள அனுமதி (1) 15.12: இஹ்ராம் பூண்ட முஹ்ரிம், தம் கண்களுக்கு மருந்திட அனுமதி (2) 15.11: இஹ்ராம் பூண்ட முஹ்ரிம், ஹிஜாமா செய்ய அனுமதி (2) 15.10: முஹ்ரிமுக்குத் தலைமுடி மழிக்க அனுமதியும் பரிகாரமும் (7) 15.09: ஹரம் எல்லைக்குள் கொல்ல அனுமதிக்கப்பட்டவைகள் (12) 15.08: இஹ்ராம் பூண்ட முஹ்ரிம் வேட்டையாடுவது குறித்து.. (9) 15.07: இஹ்ராமின்போது நறுமணம் பூசுதல் (19) 15.06: துல்ஹுலைஃபா பள்ளியில் தொழுதல் (1) 15.05: வாகனம் புறப்படுவதற்கு ஆயத்தமானவுடன் தல்பியா கூறுவது (4) 15.04: மதீனாவாசிகள் இஹ்ராம் பூண வேண்டிய இடம் (2) 15.03: தல்பியாவின் பண்பும் அதன் நேரமும் (4) 15.02: ஹஜ்/உம்ராவிற்கான இஹ்ராம் எல்லைகள் (7) 15.01: ஹஜ்/உம்ராவில் அனுமதிக்கப்பட்டவை.. (10) 14.04: துல்ஹஜ் மாதத்தின் பத்து நோன்புகள் (2) 14.02: இஃதிகாஃப் இருக்குமிடத்தினுள் நுழையும் நேரம் (1) 14.03: இறுதிப் பத்தில் வழிபாடுகளில் ஈடுபடுவது (2) 14.01: இறுதிப் பத்து நாட்களில் இஃதிகாஃப் இருத்தல் (5) 13.40: லைலத்துல் கத்ர் இரவு குறித்து.. (17) 13.39: ஷவ்வால் ஆறு நோன்பு (1) 13.37: ஷஅபான் மாத இறுதியில் நோன்பு நோற்றல் (3) 13.38: முஹர்ரம் நோன்பின் சிறப்பு (2) 13.36: சுன்னத்தான நோன்புகள் (5) 13.35: ஒரு நாள் விட்டு ஒரு நாள் நோன்பு (12) 13.34: நோன்பில்லாமல் எந்த மாதத்தையும் கடக்க விடாமலிருப்பது விரும்பத் தக்கது (9) 13.33: மறதியால் (நோன்பாளி) நோன்பு முறியாது (1) 13.32: கூடுதலான நோன்பு முடிவு செய்வதற்கும் விடுவதற்கும் அனுமதி (2) 13.31: அல்லாஹ்வின் பாதையில் செல்லும்போது சக்தி பெற்றிருப்பவர் நோன்பு நோற்பதன் சிறப்பு (2) 13.30: நோன்பின் மாண்பு (6) 13.29: நோன்பாளி, நாவைக் காப்பது (1) 13.28: நோன்பாளி விருந்துக்கு அழைக்கப்பட்டால் “நான் நோன்பாளி” என்று சொல்லிவிட வேண்டும் (1) 13.27: இறந்துபோனவரின் விடுபட்ட நோன்பை நோற்பது (5) 13.26: ரமளானில் விடுபட்ட நோன்பை ஷஅபான் மாதத்தில் ‘களா’ச் செய்தல் (2) 13.25: இறைவசனம் வேறொரு வசனத்தின் மூலம் மாற்றம் (2) 13.24: வெள்ளிக்கிழமை மட்டும் நோன்பு நோற்பது விரும்பத் தக்கதன்று (3) 13.23: அய்யாமுத் தஷ்ரீக் நாட்களில் நோன்பு நோற்பதற்குத் தடை (2) 13.22: நோன்புப் பெருநாளிலும் ஹஜ்ஜுப் பெருநாளிலும் நோன்பு நோற்பதற்குத் தடை (6) 13.20: ஆஷூரா நோன்பை எந்த நாளில் நோற்க வேண்டும்? (4) 13.19: ஆஷூரா நாளில் நோன்பு நோற்றல் (17) 13.18: அரஃபா நாளில் அரஃபாவில் தங்கும் ஹாஜிகளின் நோன்பு (4) 13.17: பயணத்தில் நோன்பு நோற்பதையோ விட்டுவிடுவதையோ தேர்ந்துகொள்ளலாம் (5) 13.16: பயணத்தில் நோன்பைக் கைவிட்டவர், பொதுப் பணியாற்றினால் கிடைக்கும் நன்மை (3) 13.15: பயணத்தில் இருப்பவர் மீதான கடமையான ரமளான் நோன்பு (11) 13.14: ரமளான் பகலில் உடலுறவில் ஈடுபடுவதற்குத் தடையும் அதன் பரிகாரமும் (5) 13.13: பெருந்துடக்குடன் வைகறைப் பொழுதை அடைந்தவரின் நோன்பு செல்லும் (6) 13.12: கட்டுப்படுத்தும் நோன்பாளிக்கு (தம் மனைவியை) முத்தமிடத் தடையில்லை (13) 13.11: தொடர்நோன்பு நோற்பதற்குத் தடை (7) 13.10: பகற் பொழுது வெளியேறி நோன்பு நிறைவடையும் நேரம் (3) 13.09: ஸஹரைத் தாமதிப்பதும் நோன்பு துறப்பதை விரைந்து செய்வதும் (6) 13.08: ஃபஜ்ரு நேரம் வந்தவுடன் நோன்பு ஆரம்பமாகிவிடும் (11) 13.07: ‘இரு பெருநாட்களின் இரு மாதங்களும் குறைவுபடாது’ நபிகளாரின் விளக்கம் (2) 13.06: (வானை) மேகம் மூடிக்கொண்டால் (மாதத்தின் நாட்கள்) முப்பதாக முழுமையாக்கப்படும் (2) 13.05: ஒவ்வோர் ஊர்க்காரர்களுக்கும் அவரவர் பார்க்கும் பிறையே பொருந்தும் (1) 13.04: மாதம் என்பது இருபத்தொன்பது நாட்களாகவும் இருக்கும் (6) 13.03: ரமளானுக்கு முந்தைய இரு நாள்களில் நோன்பு நோற்கக் கூடாது (1) 13.02: ரமளான் நோன்பு தொடக்கமும் முடிவும் (17) 13.01: ரமளான் மாதத்தின் சிறப்பு (2) 12.55: ஸகாத் வசூலிப்பவர், தடை செய்யப்பட்டதைக் கோராதவரை அவரைத் திருப்திபடுத்த வேண்டும் (1) 12.54: தர்மப் பொருள் கொண்டுவந்தவருக்காகப் பிரார்த்தித்தல் (1) 12.53: நபி (ஸல்) அன்பளிப்பை ஏற்றதும் தர்மத்தை மறுத்ததும் (1) 12.52: தர்மப் பொருள், அதன் பண்பு நீங்கி விடுதல் (5) 2.27: நாய் நக்கிய பாத்திரம் பற்றிய சட்டம் (6) 2.28: தேங்கிக் கிடக்கும் தண்ணீரில் சிறுநீர் கழிப்பதற்குத் தடை (3) 2.29: பெருந்துடக்குடையவர் தேங்கிய நீரில் இறங்கிக் குளிக்கத் தடை (1) 2.30: பள்ளிவாசலில் சிறுநீர் கழித்தால்… (3) 2.31: தாய்பால் குடிக்கும் குழந்தையின் சிறுநீரைக் கழுவும் சட்டம் (4) 2.32: விந்து பற்றிய சட்டம் (4) 2.33: மாதவிடாய் இரத்தம் கழுவும் முறை (1) 2.34: சிறுநீரைச் சுத்தம் செய்வது கட்டாயம் (1) 3.01: மாதவிடாயான மனைவியைக் கீழாடைக்கு மேல் அணைத்துக் கொள்வது. (3) 3.02: மாதவிடாயான மனைவியுடன் ஒரே போர்வைக்குள் படுத்துக் கொள்வது. (2) 3.03: மாதவிடாயான பெண் செய்ய அனுமதிக்கப்பட்டவை (11) 3.04: இச்சை நீர் (3) 3.05: உறங்கி எழுந்ததும் முகத்தையும் கையையும் கழுவுதல் (1) 3.06: பெருந்துடக்காளி செய்ய வேண்டியவை (8) 3.07: மதன நீர் வெளிப்பட்ட பெண்ணுக்குக் குளியல் கடமை. (5) 3.08: ஆண்/பெண் (விந்து-மதன)நீரிலிருந்துதான் குழந்தை உருவாகிறது. (1) 3.09: பெருந்துடக்கிற்கான குளியல் முறை (5) 3.10: பெருந்துடக்கு குளியல் தொடர்பானவை (14) 3.11: குளிக்கும் போது மூன்றுமுறை தண்ணீர் ஊற்றுதல் (4) 3.12: குளிக்கும் பெண்களின் சடைமுடி பற்றிய சட்டம் (2) 3.13: மாதவிடாய் குளியலின் போது கஸ்தூரி பயன்படுத்துதல் (2) 3.14: தொடர் உதிரப் போக்குடைய பெண்களின் தொழுகை மற்றும் குளியல் (5) 3.15: மாதவிடாய் நாட்களில் விடுபட்ட கடமைகள் (3) 3.16: குளிப்பவர் திரையிட்டுக் கொள்தல் (3) 3.17: பிறரின் மறையுறுப்பைப் பார்த்தல் (1) 3.18: தனித்துக் குளிக்கும் போது ஆடையின்றி குளித்தல் (1) 3.19: மறையுறுப்பை மறைத்துக் கொள்வதில் கவனம் (3) 3.21: (விந்து)நீர் வெளிப்பட்டாலே (குளியல்)நீர் கடமையாகும் (9) 3.22: ஆண்-பெண் குறிகள் இணைந்து விட்டால் குளியல் கடமையாகும் (3) 3.23: சமைக்கப்படவற்றை உண்டால் மீண்டும் உளூ செய்தல் (3) 3.24: சமைக்கப் பட்டவற்றை உண்டால் உளூச் செய்யும் கட்டாயம் மாற்றப் பட்டது (8) 3.25: ஒட்டக இறைச்சி உண்டால் உளூச் செய்ய வேண்டும் (1) 3.26: வாயு பிரிந்த சந்தேகம் ஏற்பட்டாலும் தொழலாம் (2) 3.27: பதனிடப்படுவதால் செத்த பிராணியின் தோல் தூய்மை ஆகும் (7) 3.28: தயம்மும் (6) 3.29: ஒரு முஸ்லிம் (பெருந்துடக்கு ஏற்பட்டதால்) அசுத்தமாகிவிட மாட்டார். (2) 3.30: பெருந்துடக்கு போன்ற நிலைகளிலும் அல்லாஹ்வைத் துதித்தல். (1) 3.31: சிறுதுடக்காளி (உளூச் செய்யாமல்) உண்ணலாம் (4) 3.32: கழிப்பிடத்திற்குச் செல்லும்போதான பிரார்த்தனை (1) 3.33: உட்கார்ந்து கொண்டு உறங்குவது உளூவை முறிக்காது. (4) 4.01: தொழுகை அழைப்பின் தொடக்கம் (1) 4.02: தொழுகை அறிவிப்பு தொடர் அமையும் விதம் (3) 4.03: தொழுகை அழைப்பு முறை (1) 4.04: ஒரு பள்ளிவாசலுக்கு இரு தொழுகை அழைப்பாளர்கள் (1) 4.05: பார்வையற்றவர் தொழுகை அழைப்பு விட நிபந்தனை (1) 4.06: போரின் போது இணைவைப்பாளர் நாட்டில் தொழுகை அழைப்பு விடுக்கப்பட்டால் (1) 4.07: தொழுகை அழைப்பைச் செவியுறுபவர் செய்ய வேண்டியவை (4) 4.08: தொழுகை அழைப்பின் சிறப்பும் ஷைத்தான் வெருண்டோடுவதும் (6) 4.09: இரு கைகளையும் தோள் புஜத்துக்கு உயர்த்துதல் (4) 4.10: அல்லாஹு அக்பர், ஸமி அல்லாஹு லிமன் ஹமிதஹ் கூறும் இடங்கள் (5) 4.11: தொழுகையில் அல்ஃபாத்திஹா அத்தியாயம் ஓதுதல் (8) 4.12: இமாமைப் பின்பற்றித் தொழுபவர் உரத்து ஓதலாகாது (2) 4.13: பிஸ்மில்லாஹ்வை(த் தொழுகையில்) உரத்து ஓதாலாகாது என்போரின் வாதம் (2) 4.14: அத்தியாயங்களின் துவக்கம் “பிஸ்மில்லாஹ்” குறித்த வாதம் (1) 4.15: தக்பீருக்குப் பின்னும் சஜ்தாவிலும் கைகளை வைக்கும் முறை (1) 4.16: தொழுகையில் அத்தஹிய்யாத் ஓதுவது (4) 4.17: இறுதி அத்தஹியாத்திற்குப் பின் ஸலவாத் கூறுதல் (4) 4.18: ஸமி அல்லாஹு லிமன் ஹமிதஹ், ரப்பனா ல(க்)கல் ஹம்து, ஆமீன் ஆகியவை கூறுவது (5) 4.19: இமாமை மஃமூம் பின்தொடர்வது (5) 4.20: இமாமை முந்துவதற்குத் தடை (4) 4.21: இமாமைப் பின்பற்றுவதில் சட்ட மாற்றம் (10) 4.22: இமாம் வருவதற்குத் தாமதமானால்… (2) 4.23: தொழுகையில் இமாமுக்கு ஏதாவது உணர்த்த விரும்பினால்… (1) 4.24: தொழுகையை முழுமையாக உள்ளச்சத்துடன் தொழல் (4) 4.25: தொழுகையில் இமாமை முந்தாமல் இருத்தல் (7) 4.26: தொழும்போது வானத்தை அண்ணாந்து பார்ப்பதற்குத் தடை (2) 4.27: தொழுகையில் ஒழுங்குகள் (3) 4.28: தொழுகையில் வரிசைகளைப் பேணுதல் (11) 4.29: ஆண்களுக்குப் பின்னால் தொழும் பெண்கள் தலை உயர்த்தும் முறை (1) 4.30: பெண்கள் பள்ளிவாசலுக்குச் செல்தல், நறுமணம் பூசுதல் (11) 4.31: தொழுகையில் அச்சநிலையில் குர்ஆன் ஓதும் முறை (2) 4.32: குர்ஆன் ஓதப்படும்போது செவிதாழ்த்திக் கேட்க வேண்டும். (2) 4.33: ஸுப்ஹுத் தொழுகையில் உரத்துக் குர்ஆன் ஓதுதல் (4) 4.34: லுஹ்ரு, அஸ்ருத் தொழுகைகளில் குர்ஆன் ஓதுதல் (8) 4.35: ஸுப்ஹுத் தொழுகையில் குர்ஆன் ஓதுதல் (13) 4.36: இஷாத் தொழுகையில் குர்ஆன் ஓதுவது (8) 4.37: தொழுகையைச் சுருக்கி, நிறைவுறத் தொழுவிப்பதற்கான கட்டளை (11) 4.38: தொழுகையின் நிலைகளை நிதானமாக, சுருக்கி, நிறைவாகச் செய்வது (4) 4.39: தொழுகையில் இமாமை முந்தி விடாமலிருத்தல் (5) 4.40: ருகூஉவிலிருந்து தலையை உயர்த்திய பின் ஓத வேண்டியவை (5) 4.41: ருகூஉவிலும் ஸஜ்தாவிலும் குர்ஆன் ஓதுவதற்குத் தடை (6) 4.42: ருகூஉவிலும் ஸஜ்தாவிலும் ஓத வேண்டியவை (9) 4.44: ஸஜ்தாவின் போது தரையில் படவேண்டிய உறுப்புகள் (7) 4.45: சீராக ஸஜ்தா செய்தல் (2) 4.46: தொழுகை முறைத் தொகுப்பு (5) 4.47: தனித்துத் தொழுபவர் தடுப்பு ஒன்றை வைத்துக் கொள்வது (13) 4.48: தொழுகையில் குறுக்கே செல்பவரைத் தடுப்பது (4) 4.49: தொழுபவர், தடுப்புக்கு நெருக்கமாக நிற்க வேண்டும் (3) 4.50: தொழுபவருக்கான குறுக்குத் தடுப்பின் அளவு (2) 4.51: தொழுபவருக்குக் குறுக்கே படுத்திருப்பது (8) 4.52: ஒரே ஆடை அணிந்து தொழும் முறை (9) 5.01: பூமியில் எழுப்பப்பட்ட முதலாவது இறையாலயம் (8) 5.02: மஸ்ஜிதுந் நபவீ கட்டப்பட்ட வரலாறு (2) 5.03: தொழுகைத் திசை(கிப்லா) கஅபாப் பள்ளிக்கு மாற்றம் (4) 5.04: மண்ணறைகளில் செய்யக்கூடாதவை (6) 5.05: மஸ்ஜிதுகள் கட்டுவதன் சிறப்பும் அதற்கான ஆர்வமூட்டலும் (2) 5.06: ருகூஉவில் உள்ளங்கைகளை வைப்பதற்கான சட்டத் திருத்தம் (5) 5.07: இரு குதிகால்கள்மீது (தொழுகை அமர்வில்) அமர அனுமதி (1) 5.08: தொழுகையில் பேசிக் கொள்ள இருந்த அனுமதி நீக்கம் (6) 5.09: தொழுகைக்கு இடையில் செய்ய அனுமதிக்கப்பட்டவை (2) 5.10: குழந்தைகளைச் சுமந்துகொண்டு தொழுவதற்கு அனுமதி (3) 5.11: தொழுகையின்போது ஓரிரு அடிகள் நடக்க அனுமதி (1) 5.12: இடுப்பில் கையூன்றிக் கொண்டு தொழுவது வெறுக்கத் தக்கது (1) 5.13: தொழும்போது மண்ணைச் சமப்படுத்துதல் வெறுக்கத் தக்கது (3) 5.14: பள்ளிவாசலில் எச்சில் துப்பத் தடை (10) 5.15: காலணி அணிந்து கொண்டு தொழுவதற்கு அனுமதி (1) 5.16: கவனத்தை ஈர்க்கும் ஆடை அணிந்து தொழுதல் வெறுக்கப்பட்டது (3) 5.17: சிறுநீர்/மலம் அடக்குதல், உணவு காக்க வைத்தல் நிலையில் தொழுதல் (4) 5.18: துர்நாற்றத்துடன் பள்ளிச்செல்லுதலும் அவரை வெளியேற்றலும் (10) 5.19: பள்ளிவாசலினுள் காணாமற்போன பொருளைத் தேடத் தடை (3) 5.20: தொழுகையில் ஏற்படும் மறதிக்குப் பரிகாரம் (17) 5.21: ஸஜ்தா திலாவத் (9) 5.22: அத்தஹிய்யாத்தில் அமரும் முறை (5) 5.23: தொழுகையை நிறைவு செய்யும்போது ஸலாம் கூறும் முறை (3) 5.24: தொழுத பின்னர் திக்ரு (3) 5.25: மண்ணறை வேதனையிலிருந்து பாதுகாப்புக் கோருதல் (3) 5.26: தொழுகையில் பாதுகாப்புக் கோரப்பட வேண்டியவை (8) 5.27: தொழுகைக்குப்பின் திக்ரு செய்தல் (9) 5.28: தொடக்கத் தக்பீருக்குப் பின் கூறவேண்டியவை (4) 5.29: தொழுகையில் கலந்துகொள்ள செல்லும் முறை (5) 5.30: தொழுகைக்காக மக்கள் எப்போது எழுந்து நிற்க வேண்டும்? (5) 5.31: கூட்டுத்தொழுகையை அடைந்துகொள்ள நிபந்தனை (5) 5.32: ஐவேளைத் தொழுகை நேரங்கள் (13) 5.33: கடுங்கோடையில் ஜமாஅத் தொழுகை (8) 5.34: கடுங்கோடையில்லா சமயத்தில் ஜமாஅத் தொழுகை (4) 5.35: அஸ்ருத் தொழுகையின் நேரம் (7) 5.36: அஸ்ருத் தொழுகையைத் தவறவிட்டால்.. (3) 5.37: அஸ்ரு நடுத்தொழுகை என்போரின் சான்று (6) 5.38: ஸுப்ஹு, அஸ்ருத் தொழுகைகளின் சிறப்புகள் (6) 5.39: மஃக்ரிபுத் தொழுகையின் ஆரம்ப நேரம் (2) 5.40: இஷாத் தொழுகையின் நேரமும் அதைத் தாமதமாகத் தொழுவதும் (12) 5.41: ஸுப்ஹுத் தொழுகையின் நேரம் மற்றும் ஓதப்படும் (குர்ஆன் வசனங்களின்) அளவு (7) 5.42: தொழுகைக்கு உரிய நேரத்தைத் தாமதப்படுத்துதல் (7) 5.43: கூட்டுத் தொழுகையின் சிறப்பும் அதைத் தவற விடுவது பற்றிய கண்டனமும் (10) 5.44: தொழுகை அழைப்பைச் செவியுறுபவர் பள்ளிவாசலுக்குச் செல்வது கட்டாயமாகும் (1) 5.45: கூட்டுத் தொழுகை என்பது நேர்வழியைச் சார்ந்தது (2) 5.46: பாங்கு கூறிய பின்னர் பள்ளிவாசலிலிருந்து வெளியேறத் தடை (2) 5.47: இஷா மற்றும் ஸுப்ஹு கூட்டாகத் தொழுவதன் சிறப்பு (4) 5.48: கூட்டுத் தொழுகையைத் தவிர்ப்பதற்கான அனுமதி (1) 5.49: நஃபில் தொழுகைகளை ஜமாஅத்தாகத் தொழுதல் (6) 5.50: கூட்டுத் தொழுகைக்காகக் காத்திருப்பதன் சிறப்பு (5) 5.51: பள்ளிவாசலுக்கு நடந்து செல்வதன் சிறப்பு (6) 5.52: தொழுகைக்கு நடந்து செல்பவருக்குக் கிடைக்கும் பலன்கள் (4) 5.53: உதயம்வரை தொழுத இடத்தில் அமர்ந்திருப்பதன் சிறப்பு (3) 5.54: தொழுகைக்குத் தலைமையேற்க அதிகத் தகுதியுடையவர் (5) 5.55: எல்லாத் தொழுகைகளிலும் குனூத் ஓதும் காலகட்டம் (15) 5.56: விட்டுப்போனத் தொழுகைகளைத் தொழுதல் (8) 6.01: பயணிகளின் தொழுகை; சுருக்கித் தொழுதல் (20) 6.02: மழையின்போது இருப்பிடங்களில் தொழுதுகொள்ளலாம் (4) 6.03: நஃபில் தொழுகைகளை வாகனத்தில் செல்பவர் தொழலாம் (10) 6.04: பயணத்தில் இரு தொழுகைகளைச் சேர்த்து தொழலாம் (7) 6.05: உள்ளூரில் இருக்கும்போது இரு தொழுகைகளை இணைத்து தொழுதல் (10) 6.06: தொழுது முடித்தபின் வலம், இடம் திரும்பி அமர்தல் (3) 6.07: இமாமுக்கு வலப்பக்க வரிசையில் நிற்பது விரும்பத்தக்கது (1) 6.08: இகாமத் கூறத் தொடங்கி விட்டால் நஃபில் தொழுவது வெறுக்கத்தக்கது (5) 6.09: பள்ளிவாசலுக்குள் நுழையும்போது கூறவேண்டிய துஆ (1) 6.10: பள்ளிக் காணிக்கை தொழுகை தொடர்பாக (4) 6.11: பயணத்திலிருந்து திரும்பியவர் இரண்டு ரக்அத் தொழுதல் (3) 6.12: முற்பகல் (ளுஹா) தொழுகை எண்ணிக்கை (11) 6.13: ஃபஜ்ருடைய இரு ரக்அத் சுன்னத் தொழுகை (15) 6.14: சுன்னத் தொழுகைகளின் சிறப்பும் எண்ணிக்கைகளும்! (3) 6.15: நஃபில் தொழுகைகளைத் தொழும் முறைகள் (14) 6.16: இரவுத் தொழுகை (18) 6.17: இரவுத் தொழுகையின் ஒருங்கிணைந்த விபரங்கள் (4) 6.18: அவ்வாபீன் தொழுகை (2) 6.19: இரவுத் தொழுகை, வித்ருத் தொழுகை ரக்அத்கள் (16) 6.20: வித்ருத் தொழுகை நேரம் (2) 6.21: தொழுகையில் மிகச் சிறந்தது (2) 6.22: இரவில் பிரார்த்தனை ஏற்கப்படும் நேரம் (2) 6.23: இரவின் இறுதி நேரத்தில் பிரார்த்தனை (5) 6.24: ‘கியாமு ரமளான்(தராவீஹ்) தொழ ஆர்வமூட்டல் (8) 6.25: இரவுத் தொழுகையில் பிரார்த்திப்பதும் நின்று வணங்குவதும் (17) 6.26: இரவுத் தொழுகையில் நீண்ட நேரம் (நின்று) குர்ஆன் ஓதுவது (2) 6.27: தொழாமல் விடியும்வரை உறங்குபவர் (3) 6.28: கூடுதலான நஃபில் தொழுகைகள் (6) 6.29: நற்செயல்களை வழக்கமாகச் செய்வதன் சிறப்பு. (4) 6.30: இபாதத் தூக்கத்தால் தடைப்பட்டால்… (5) 6.31: குர்ஆனின் தொடர்பைப் பற்றிப் பிடித்துக்கொள்ளக் கட்டளை (7) 6.32: குர்ஆனை இனிய குரலில் ஓதுவது விரும்பத் தக்கதாகும் (5) 6.33: மக்கத்து வெற்றி நாளில்… (2) 6.34: குர்ஆனை ஓதுவதால் இறங்கும் அமைதி (3) 6.35: குர்ஆனை மனனமிட்டவரின் சிறப்பு (1) 6.36: குர்ஆனை ஓதுகின்ற இருவகையினரின் தனிச் சிறப்புகள் (1) 6.37: குர்ஆனில் தேர்ந்த மேன்மக்கள் முன்னிலையில் குர்ஆன் ஓதுவது (2) 6.38: குர்ஆனைச் செவியேற்பதன் சிறப்பு (3) 6.39: குர்ஆனைக் கற்பது மற்றும் ஓதுவதன் சிறப்பு (2) 6.40: குர்ஆன் ஓதுவதன் சிறப்பும் அல்பகரா அத்தியாயத்தின் சிறப்பும் (2) 6.41: ஸூரத்துல் ஃபாத்திஹா, அல்பகரா அத்தியாயத்தின் இறுதி வசனங்களின் சிறப்பு (2) 6.42: ஸூரத்துல் கஹ்ஃப் மற்றும் ஆயத்துல் குர்ஸீ ஆகியவற்றின் சிறப்பு (3) 6.43: குல் ஹுவல்லாஹு அஹது (அத்தியாயத்தை) ஓதுவதன் சிறப்பு (4) 6.44: அல்முஅவ்விதத்தைன் (பாதுகாவல்) அத்தியாயங்களை ஓதுவதன் சிறப்பு (2) 6.45: குர்ஆனின்படி தாமும் செயல்பட்டுப் பிறருக்கும் அதைக் கற்பிப்பவரின் சிறப்பு (4) 6.46: குர்ஆன் ஏழு (வட்டார) மொழிநடையில் அருளப்பெற்றுள்ளது என்பதன் விளக்கம் (4) 6.47: குர்ஆனை வேகமாக ஓதுவதைத் தவிர்த்தல் (4) 6.48: குர்ஆன் ஓதும் முறைகளுள் சில (4) 6.49: தொழத் தடுக்கப்பட்ட நேரங்கள். (8) 6.50: அம்ரு பின் அபஸா (ரலி) இஸ்லாத்தை ஏற்றமை (1) 6.51: சூரியன் உதிக்கும் நேரத்தையும் மறையும் நேரத்தையும் தேர்ந்தெடுத்துத் தொழாதீர்கள்! (2) 6.52: நபி (ஸல்) அஸ்ருக்குப் பிறகு தொழுதுவந்த இரண்டு ரக்அத்கள் எவை? (5) 6.53: மஃக்ரிப் தொழுகைக்கு முன் இரண்டு ரக்அத்கள் தொழுவது விரும்பத் தக்கது (2) 6.54: பாங்குக்கும் இகாமத்துக்கும் இடையிலுள்ள தொழுகை (1) 6.55: அச்சச் சூழல் தொழுகை (8) 7.01: வெள்ளிக்கிழமையில் குளிப்பது வயதுவந்த ஒவ்வோர் ஆண் மீதும் கடமை (7) 7.02: வெள்ளிக்கிழமையில் பல் துலக்குவதும் நறுமணம் பூசுவதும் (4) 7.03: வெள்ளிக்கிழமை சொற்பொழிவின்போது அமைதி காத்தல் (2) 7.04: வெள்ளிக்கிழமையில் (பிரார்த்தனை ஏற்கப்படுவதற்கு) உள்ள ஒரு நேரம் (4) 7.05: வெள்ளிக்கிழமையின் சிறப்பு (2) 7.06: இந்தச் சமுதாயத்தின் (சிறப்பு வழிபாட்டு) நாள் வெள்ளிக்கிழமை (4) 7.07: வெள்ளிக்கிழமை (தொழுகைக்கு) முன்னதாகச் செல்வதன் சிறப்பு (2) 7.08: மௌனமாக (வெள்ளிக்கிழமை) உரையைச் செவியேற்பவரின் சிறப்பு (2) 7.09: சூரியன் (உச்சியிலிருந்து) சாயும்போது ஜும்ஆத் தொழுவது (5) 7.10: தொழுகையின் உரைகளும் இடையே (இமாம்) அமர்வதும் (3) 7.11: வியாபாரத்தையோ வேடிக்கையையோ கண்டால் (62:11ஆவது) இறைவசனம் (4) 7.12: ஜும்ஆத் தொழுகையை(த் தொழாமல்) கைவிடுவதற்குக் கண்டனம் (1) 7.13: (ஜும்ஆத்) தொழுகையையும் (குத்பா) உரையையும் சுருக்கமாக அமைத்தல் (11) 7.14: இமாம் (ஜும்ஆ) உரை நிகழ்த்தும்போது காணிக்கை தொழுகை (6) 7.15: பொது போதனைக்கு நடுவில் தனி போதனை (1) 7.16: ஜும்ஆத் தொழுகையில் ஓத வேண்டியவை (3) 7.17: வெள்ளிக்கிழமை (ஃபஜ்ருத் தொழுகையில்) ஓத வேண்டியவை (3) 7.18: ஜும்ஆவுக்குப் பின் தொழ வேண்டியவை (16) 8.01: பெருநாள் திடலில் பெண்கள் பங்கேற்பது (3) 8.02: பெருநாள் திடலில் தொழுகைக்கு முன்போ பின்போ தொழக் கூடாது (1) 8.03: இரு பெருநாள் தொழுகைகளில் ஓதக் கூடியவை (2) 8.04: பெருநாட்களில் பாவமில்லா விளையாட்டுகளில் ஈடுபட அனுமதி (7) 9.00: இமாம் (மழைத் தொழுகையில்) மேல்துண்டை மாற்றிப் போட்டுக் கொள்வது (4) 9.01: மழைவேண்டிப் பிரார்த்திக்கும்போது இருகைகளை உயர்த்துதல் (3) 9.02: மழைவேண்டிப் பிரார்த்தித்தல் (2) 9.03: கடும் காற்றையும் மேகத்தையும் காணும்போதும்.. மழை பெய்யும்போதும்.. (3) 9.04: கீழைக் காற்று (’ஸபா’) மற்றும் மேலைக் காற்று (’தபூர்’) பற்றிய குறிப்புகள் (1) 10.01: சூரிய கிரகணத் தொழுகை (7) 10.02: கிரகணத் தொழுகையின்போது மண்ணறை வேதனை பற்றி நினைவு கூர்வது (1) 10.03: கிரகணத் தொழுகையின்போது சொர்க்கமும் நரகமும் (6) 10.04: கிரகணத் தொழுகையில் எட்டு ருகூஉகளும் நான்கு ஸஜ்தாக்களும்.. (2) 10.05: கிரகணத் தொழுகைக்காக, “அஸ்ஸலாத்து ஜாமிஆ” அறிவிப்பு.. (8) 11.01: மரணத் தருவாயில் ‘லா இலாஹ இல்லல்லாஹ்’ (எனும் கலிமா)வை நினைவூட்டுதல் (2) 11.02: துன்பம் நேரும்போது வேண்டக்கூடிய பிரார்த்தனை (2) 11.03: நோயாளியிடமும் மரணத் தருவாயில் இருப்பவரிடமும் சொல்ல வேண்டியவை (1) 11.04: உயிர் பிரிந்தவுடன் இறந்தவருக்குச் செய்ய வேண்டியவை (1) 11.05: இறப்பவரின் பார்வை தனது உயிரை நோக்கி நிலைகுத்தி நிற்றல் (1) 11.06: இறந்தவருக்காக அழுவது (3) 11.07: நோயாளிகளைச் சந்தித்து உடல்நலம் விசாரித்தல் (1) 11.08: பொறுமை என்பது துன்பத்தின் முதல் நிலையில் கடைப்பிடிப்பதாகும் (2) 11.09: இறந்தவருக்காக ஒப்பாரி வைத்து அழுதால்.. (14) 11.10: ஒப்பாரிக்குக் கடுமையான கண்டனம் (5) 11.11: ஜனாஸாவின் இறுதி ஊர்வலத்தைப் பின்தொடர்ந்து செல்வதற்குப் பெண்களுக்குத் தடை (2) 11.12: மையித்தைக் குளிப்பாட்டுதல் (4) 11.13: மய்யித்திற்கு ‘கஃபன்’ உடை அணிவித்தல் (4) 11.14: மய்யித்தை மூடிவைத்தல் (1) 11.15: மய்யித்திற்கு அழகிய முறையில் கஃபன் அணிவித்தல் (1) 11.16: இறந்தவர் உடலைத் துரிதமாக அடக்கம் செய்தல் (2) 11.17: ஜனாஸாத் தொழுகையின் மற்றும் ஜனாஸாவைப் பின்தொடர்வதன் சிறப்பு (6) 11.18: மய்யித்துக்காக நூறு பேர் தொழுது செய்யும் பரிந்துரை ஏற்கப்படும் (1) 11.19: மய்யித்துக்காக நாற்பது பேர் பரிந்துரை (1) 11.20: இறந்தவர் குறித்துப் புகழ்ந்து, அல்லது இகழ்ந்து பேசப்படுதல் (1) 11.21: ஓய்வு பெற்றவரும் ஓய்வளித்தவரும் (1) 11.22: ஜனாஸாத் தொழுகையில் சொல்ல வேண்டிய தக்பீர்கள் (6) 11.23: மண்ணறை அருகில் (ஜனாஸாத் தொழுகை) தொழுவது (4) 11.24: ஜனாஸாவுக்காக எழுந்து நிற்பது (7) 11.25: ஜனாஸாவுக்காக எழுந்து நிற்கும் வழக்கம் மாற்றப்பட்டது (3) 11.26: இறந்தவருக்காக ஜனாஸாத் தொழுகையில் செய்யும் பிரார்த்தனை (2) 11.27: ஜனாஸாத் தொழுகையின்போது இமாம் எந்த இடத்தில் நிற்க வேண்டும்? (2) 11.28: ஜனாஸாத் தொழுகை தொழுதுவிட்டு வாகனத்தில் ஏறித் திரும்பிச் செல்லலாம் (2) 11.29: உட்குழியும் மையித்தின் மேல் செங்கற்களை அடுக்குவதும் (1) 11.30: கப்றுக் குழியினுள் போர்வையை விரித்து (மையித்தை) வைப்பது (1) 11.31: கப்றைத் தரை மட்டமாக்க உத்தரவு (2) 11.32: கப்றுகளைக் காரையால் பூசுவதோ அதன் மீது கட்டடம் எழுப்புவதோ கூடாது (2) 11.33: கப்றின்மீது அமர்வதும் அதன் மீது தொழுவதும் தடுக்கப்பட்டவை (3) 11.34: பள்ளிவாசலில் ஜனாஸாத் தொழுகை நடத்துவது (3) 11.35: மையவாடிக்குள் கூற வேண்டியதும் பிரார்த்திப்பதும் (3) 11.36: நபி (ஸல்), தம் தாயாரின் கப்றைக் காண்பதற்கு இறைவனிடம் அனுமதி கோரியது (3) 11.37: தற்கொலை செய்தவருக்கு, (ஜனாஸா) தொழுகையைக் கைவிட்டது (1) 12.00: பல வகை வள வரிகள் (5) 12.01: பத்து சதவீத ஸகாத்; அல்லது ஐந்து சதவீத ஸகாத் (1) 12.02: ஒரு முஸ்லிம் மீது அவர்தம் அடிமைக்காகவும் குதிரைக்காகவும் ஸகாத் கடமை இல்லை (3) 12.03: ஸகாத்தைச் சமர்ப்பிப்பதும் ஸகாத் கொடுக்க மறுப்பதும் (1) 12.04: பெருநாள் தர்மமாகப் பேரீச்சம் பழம், பார்லி (10) 12.05: பெருநாள் தொழுகைக்கு முன்பே பெருநாள் தர்மத்தை வழங்க கட்டளை (2) 12.06: ஸகாத் வழங்க மறுப்பது குற்றமாகும் (4) 12.07: ஸகாத் வசூலிப்பவர்களிடம் கனிவுடன் நடந்துகொள்வது (1) 12.08: ஸகாத் வழங்காதவருக்கான கடும் தண்டனை (2) 12.09: தர்மம் செய்வதற்கு ஆர்வமூட்டல் (2) 12.10: செல்வத்தைச் சேமித்தோர் பற்றிய கண்டனம் (2) 12.11: தர்மம்: ஆர்வமூட்டலும் நற்கூலி உண்டு என்ற நற்செய்தியும் (2) 12.12: செலவழிப்பதன் சிறப்பும் வழங்காதவனின் பாவமும் (4) 12.13: தமக்கும், குடும்பத்தாருக்கும், உறவினர்களுக்குமாக செலவிடுதல் (1) 12.14: இணை வைக்கும் உறவுகளுக்குச் செலவழிப்பதன் சிறப்பு (8) 12.15: இறந்தவருக்காகத் தர்மம் செய்தல் (1) 12.16: எல்லா நல்லறமும் ஸதகா எனப்படும் (5) 12.17: அறவழியில் செலவு செய்பவரும் செய்யாதவரும் (1) 12.18: தர்மம் செய்வதற்கு ஆர்வமூட்டல் (5) 12.19: தர்மம் (இறைவனிடம்) ஏற்கப்படுவதும் வளர்வதும் (3) 12.20: இன் சொல்லையேனும் தர்மம் செய்து நரகத்திலிருந்து பாதுகாப்பு பெறல் (5) 12.21: தர்மத்தின் அளவில் குறை காண தடை (1) 12.22: பாலுக்காக இரவல் வழங்கப்படும் கால்நடைகளின் சிறப்பு (2) 12.23: வள்ளலுக்கும் கஞ்சனுக்குமான உதாரணம் (3) 12.24: உரியவருக்குத் தர்மம் சேரவில்லையேனும் பலன் (1) 12.25: உரிமையாளரின் அனுமதியுடன் தர்மம் செய்தவருக்கும் பலன் (3) 12.26: ஓர் அடிமை தன் உரிமையாளரின் செல்வத்திலிருந்து (அறவழியில்) செலவழித்தல் (3) 12.27: தர்மத்தையும் இதர நற்செயல்களையும் இணைத்துச் செய்தவர் (3) 12.28: அறவழியில் தாராளமாக செலவிடலும் கணக்கு பார்ப்பது விரும்பத்தக்கதல்ல என்பதும் (3) 12.29: சிறிய அளவு தர்மம் (1) 12.30: இரகசியமாகத் தர்மம் செய்வதன் சிறப்பு (1) 12.31: மிகச் சிறந்த தர்மம் (2) 12.32: சிறந்த கை (4) 12.33: யாசிப்பதற்குத் தடை (3) 12.34: ஏழை என்பவன், அடிப்படைத் தேவைகளுக்குப் போதிய பொருளாதாரம் இல்லாதவன் (2) 12.35: மக்களிடம் யாசிப்பது வெறுக்கப்பட்டதாகும் (6) 12.36: யாருக்கு யாசிக்க அனுமதி? (1) 12.37: எதிர்பார்ப்பு இல்லாமல், யாசிக்காமல் வாழ்பவருக்கு வழங்கப்பட்டால் பெற்றுக்கொள்ளலாம் (4) 12.38: உலகாதாயத்தின் மீது பேராசை கொள்வது விரும்பத் தக்கதன்று (2) 12.39: இரு ஓடைகள் இருந்தாலும் மூன்றாவது ஓடையை எதிர்பார்த்தல் (4) 12.40: வாழ்க்கை வசதிகள் அதிகமாக இருப்பது செல்வமன்று (1) 12.41: இவ்வுலகத்தின் கவர்ச்சி குறித்து அஞ்சுதல் (3) 12.42: சுயமரியாதை மற்றும் பொறுமையின் சிறப்பு (1) 12.43: போதுமான வாழ்வாதாரமும் போதுமென்ற மனமும் (4) 12.44: அருவருப்பாகப் பேசி, கடுஞ் சொற்களால் கேட்டவருக்கும் தானம் வழங்குவது (4) 12.45: இறைநம்பிக்கை, (வறுமையால்) கேள்விக்குள்ளாக்கப்படுபவருக்கு உதவுதல் (1) 12.46: இஸ்லாத்தை ஏற்றவர்களுக்கு வழங்கலும் இறை நம்பிக்கை வலுவானவர் பொறுமை கொள்ளலும் (8) 12.47: காரிஜிய்யாக்களும் அவர்களின் தன்மைகளும் (10) 12.48: காரிஜிய்யாக்களைக் கொல்லுவதற்கு ஊக்கப்படுத்துதல் (4) 12.49: காரிஜிய்யாக்கள் படைப்பினங்களிலேயே தீயவர்கள் ஆவர் (3) 12.50: தூதரின் குடும்பத்தார் ஸகாத் பெறுவதற்குத் தடை (6) 12.51: நபி (ஸல்) குடும்பத்தாரைத் தர்மப் பொருட்கள் வசூலிக்கப் பயன்படுத்தலாகாது (1) 2.26: அசுத்தமான கையைப் பாத்திரத்தில் நுழைத்தல் (2) 2.25: ஒருநாள் தொழுகைகளை ஒரு உளூவில் தொழ அனுமதி (1) 2.24: காலுறையில் மஸஹு செய்து தொழுவதற்கான வரம்பு (1) 2.23: முன் தலை மற்றும் தலைப்பாகை மீது மஸஹு செய்தல் (4) 2.22: காலுறையில் மஸஹு செய்தல் (9) 2.21: தண்ணீரால் கழுவித் துப்புரவு செய்தல் (3) 2.20: மலம் கழிப்பதற்குத் தடையுள்ள இடங்கள் (1) 2.19: செயல்களை வலப் புறமிருந்து தொடங்குதல். (2) 2.18: வலக் கரத்தால் கழுவத் தடையானவை (3) 2.17: கழிப்பிடத்தில் துப்புரவு செய்தல் (7) 2.16: இயற்கை மரபுகள் (8) 2.15: பல் துலக்குதல் (7) 2.14: சிரமகாலங்களிலும் முழுமையாக ஒளு செய்வதன் சிறப்பு (1) 2.13: உளூவில் தண்ணீர் படும் இடங்களில் ஒளி படர்தல் (1) 2.12: உளூவில் உறுப்புகளை அதிகப்படுத்திக் கழுவுதல் (6) 2.11: உளூ செய்த நீரோடு வெளியேறும் பாவங்கள் (2) 2.10: உளூவில் உறுப்புகள் முழுவதும் கழுவுதல் (1) 2.09: இரு கால்களையும் முழுமையாகக் கழுவுதல் கட்டாயம் (6) 2.08: சுத்தம் செய்யும் போது ஒற்றைப்படையாக செய்தல் (5) 2.07: நபி (ஸல்) அவர்கள் செய்த அங்கத் தூய்மை (உளூ) (2) 2.06: அங்கத் தூய்மை (உளூ) செய்தபிறகு ஓதப்படும் பிரார்த்தனை (1) 2.05: சிறு பாவங்களுக்கான பரிகாரங்கள் (3) 2.04: அங்கத்தூய்மையின் சிறப்பும் அதன் பின் தொழுவதன் சிறப்பும் (9) 2.03: அங்கத் தூய்மை (உளூ) செய்முறையும் அதை நிறைவாகச் செய்வதும் (2) 2.02: தொழுகைக்குக் கட்டாயமான (அங்கத்) தூய்மை (2) 2.01: அங்கத்தூய்மை(உளூ)யின் சிறப்பு (1) 1.96: மறுமையில் ஆதம்(அலை) அவர்களுக்கு இடப்படும் கட்டளை (1) 1.95: சொர்க்கவாசிகளில் பாதிபேர் (3) 1.94: விசாரணையோ வேதனையோ இன்றி சொர்க்கம் செல்வோர் (7) 1.93: நட்பு கொள்ளத் தக்கவர்களும் தகாதவர்களும் (1) 1.92: இறைமறுப்பாளரின் நற்செயல்கள் பலனளிக்காது (1) 1.91: நரகவாசிகளிலேயே மிகக்குறைவான வேதனை அனுபவிப்பவர். (4) 1.90: அபூதாலிபுக்காக நபி(ஸல்) அவர்களின் பரிந்துரை (3) 1.89: நெருங்கிய உறவினருக்கு எச்சரிக்கை செய்தல் (5) 1.88: இறைமறுப்பாளருக்கு எந்தப் பரிந்துரையும் பலனளிக்காது (1) 1.87: தம் சமுதாயத்தார் மீது நபி(ஸல்) அவர்களுக்குள்ள பரிவு (1) 1.86: நபி(ஸல்) அவர்களின் பரிந்துரைப் பிரார்த்தனை! (8) 1.85: சொர்க்கத்திற்காகப் பரிந்துரைக்கும் முதல் மனிதர் (4) 1.84: சொர்க்கவாசிகளுள் ஆகக் குறைந்த பதவி (14) 1.83: இறுதியானவராக வெளியேறும் நரகவாசி. (3) 1.82: ஷஃபாஅத்(பரிந்துரை) செய்யப்படுபவர்கள் (2) 1.81: இறைவனைக் காணும் வழிமுறை (3) 1.80: இறைவனைக் காண்பதற்கான சான்று (2) 1.79: அல்லாஹ்வின் பார்வை பற்றிய விளக்கம் (2) 1.78: மிஃராஜின் போது நபி(ஸல்) கண்டது பற்றிய விளக்கம் (2) 1.77: நபி(ஸல்) அவர்கள் இறைவனைப் பார்த்தார்களா? என்பது பற்றிய விளக்கம் (5) 1.76: சித்ரத்துல் முந்தஹா(இலந்தை மரம்) பற்றிய குறிப்பு! (4) 1.75: ஈஸா(அலை) மற்றும் தஜ்ஜால் பற்றிய குறிப்புகள் (6) 1.74: விண்ணுலகப் பயணமும் தொழுகை கடமையாக்கப்படலும் (12) 1.73: வேத வெளிப்பாடு (வஹீ) தொடங்குதல் (3) 1.72: இறை நம்பிக்கை ஏற்கப்படாத காலகட்டம் (5) 1.71: ஈசா(அலை) இஸ்லாமிய நெறிப்படி நீதி வழங்குதல் (6) 1.70: தூதுத்துவம் உலக மக்கள் அனைவருக்கும் பொதுவானது (3) 1.69: இறைச்சான்றுகள் மூலம் மன அமைதி (1) 1.68: ஒருவரை இறைநம்பிக்கையாளர் என்று முடிவு செய்தல் (2) 1.67: அச்சநேரத்தில் இறைநம்பிக்கையாளர் நிலை (1) 1.66: இறுதிக் காலத்தில் இறை நம்பிக்கை (அற்றுப்) போய் விடுவது. (2) 1.65: இஸ்லாத்தின் மீளெழுச்சி. (3) 1.64: உள்ளங்களில் குழப்பங்கள் தோன்றுவது. (2) 1.63: குடிமக்களைச் சுரண்டும் ஆட்சியாளன் நரகத்திற்குரியவன் ஆவான். (3) 1.62: செல்வத்தைக் காக்கப் போராடியவர் மற்றும் பிறர் செல்வத்தைப் பறிக்க முனைந்தவர் (2) 1.61: மாற்றாரின் பொருளைக் கைப்பற்றுபவர் நிலை. (5) 1.60: இறைநம்பிக்கையில் தடுமாற்றம் ஏற்பட்டால்.. (8) 1.59: நல்ல-தீய எண்ணங்களுக்கான கூலி (5) 1.58: தீய எண்ணங்களைச் செயல்படுத்தாமல் இருத்தல் (2) 1.57: தாங்க முடியாத சுமை? (2) 1.56: இறை நம்பிக்கையின் வாய்மையும் தூய்மையும் (1) 1.55: இறைமறுப்பாளராக இருந்தபோது செய்த நல்லறங்கள் (3) 1.54: முன் செய்த பாவங்கள் (2) 1.53: அறியாமை காலத்தில் செய்த தீமைகள் (2) 1.52: இறைநம்பிக்கையாளரின் அச்சம் (1) 1.51: குழப்பங்கள் தோன்றுவதற்கு முன் நற்செயல் புரிய விரைதல் (1) 1.50: மறுமை நெருங்கும் வேளையில் வீசும் காற்று (1) 1.49: ஹிஜ்ரத்தில் தற்கொலை செய்து கொண்டவரின் நிலை (1) 1.48: கையாடல் செய்பவரும் இறைநம்பிக்கையாளரும் (2) 1.47: தற்கொலை செய்பவரும் கட்டுப்பட்டு வாழ்பவரும் (7) 1.46: மூன்று பெரும் தவறான செயல்கள் (4) 1.45: புறங்கூறுவது வன்மையாகத் தடை செய்யப் பட்டது (3) 1.44: துக்க வேளைகளில் தடை செய்யப்பட்ட செய்கைகள்! (3) 1.43: முஸ்லிம்களை வஞ்சித்தவர் நிலை! (2) 1.42: முஸ்லிம்களுக்கு எதிராக ஆயுதம் ஏந்தியவர் நிலை! (3) 1.41: “லா இலாஹ இல்லல்லாஹ்” கூறியவரைக் கொல்லத்தடை! (4) 1.40: இணைவைத்தலின் விளைவுகள் (5) 1.39: தற்பெருமை (3) 1.38: பெரும் பாவங்கள் (5) 1.37: பாவங்களில் மிகவும் அருவருப்பானது (2) 1.36: நற்செயல்களில் சிறந்தது (6) 1.35: தொழுகையை விடுதலும் குஃப்ரும் (3) 1.34: இறைநம்பிக்கை குறைவும் குஃப்ர் எனும் சொல்லும் (1) 1.33: அன்ஸாரிகளையும் அலி(ரலி)யையும் நேசித்தல் (6) 1.32: மழையும் இறைமறுப்பும் (4) 1.31: ஓடிப்போன அடிமை (3) 1.30: இறைமறுப்பின் அடையாளங்கள் (1) 1.29: இறைமறுப்பாளர்களாய் மாறுதல் (2) 1.28: முஸ்லிமோடு போரிடுதல் (1) 1.27: தந்தையை வெறுப்பவன் நிலை (4) 1.26: முஸ்லிமை நோக்கி காஃபிர் என அழைத்தல் (2) 1.25: நயவஞ்சகனின் குணங்கள். (3) 1.24: இறைநம்பிக்கையில் குறைவு ஏற்படல் (2) 1.23: மார்க்கம் என்பதே நலன் நாடுவதுதான். (4) 1.22: இறைநம்பிக்கையாளர்களை நேசித்தல் (1) 1.21: இறைநம்பிக்கையில் ஏற்படும் ஏற்றத் தாழ்வு (9) 1.20: நன்மையை ஏவுதல், தீமையைத் தடுத்தல் (2) 1.19: நல்லவற்றிற்கு ஆர்வமூட்டுதல் (3) 1.18: அண்டை வீட்டாருக்குத் தொல்லை தரக் கூடாது (1) 1.17: தமக்கு விரும்வுவதைச் சகோதரனுக்கும் விரும்புதல் (2) 1.16: தூதரை நேசிப்பது கடமை (2) 1.15: இறைநம்பிக்கையின் இனிமை (2) 1.14: இஸ்லாம் கூறும் நல்லறங்களில் சிறந்தது (4) 1.13: இஸ்லாத்தின் அனைத்துப் பண்புகளின் கலவை (1) 1.12: இறைநம்பிக்கையின் கிளைகள் (5) 1.11: இறைநம்பிக்கையைச் சுவைப்பவர் (1) 1.10: ஓரிறை கோட்பாட்டில் மரணித்தவர் நிலை (11) 1.09: இணை வைத்த நிலையில் மரணித்தவர் நிலை (3) 1.08: ஜிஸ்யா செலுத்தாதவர் மீது போர் புரிதல் (6) 1.07: இஸ்லாத்தை ஏற்க அழைப்பு விடுத்தல் (2) 1.06: அறியாதவர்களுக்கு அறிவித்தல் (4) 1.05: இஸ்லாமியக் கடமைகள் (4) 1.04: சொர்க்கம் செல்பவர் (7) 1.03: இஸ்லாத்தின் தூண்கள் (2) 1.02: தொழுகை பற்றிய விளக்கம் (2) 1.01: இறைநம்பிக்கை குறித்த விளக்கம் (7)
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில், உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமை வகித்து உறுதி மொழியினை வாசித்தார். இதைத்தொடர்ந்து உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு, தேசிய காசநோய் ஒழிப்பு திட்டம் மூலமாக மாவட்டம் முழுவதும் காசநோய் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவும் இலவச காசநோய் பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு சோதனைகள் செய்வதற்காகவும் வழங்கப்பட்டுள்ள 2 அதி நவீன நடமாடும் டிஜிட்டல் எக்ஸ்ரே வாகனங்களையும் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தொடங்கி வைத்தார். Tags: மக்கள் தொகை செவிலியர் பேரணி மேலும் செய்திகள் கோயில்களில் செல்போன் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும்: இந்து சமய அறநிலையத்துறைக்கு ஐகோர்ட் கிளை உத்தரவு தாமிரபரணி ஆற்றின் பெயரை, பொருநை ஆறு என மாற்றக் கோரி வழக்கு: உரிய முடிவெடுக்க அரசுக்கு ஐகோர்ட் கிளை உத்தரவு ஸ்கூட்டரில் சென்ற மாணவி சிறுத்தை பாய்ந்து படுகாயம் சிறுமிகளின் ஆபாச வீடியோ புகார்; 12 மணி நேர சிபிஐ ரெய்டில் லேப்டாப், செல்போன் சிக்கின: திருச்சி ஆபீசில் வியாபாரி இன்று ஆஜர் கொடநாடு வழக்கு: ஜனவரி 27ம் தேதிக்கு விசாரணை ஒத்திவைப்பு தி.மலை கார்த்திகை தீபத்திருவிழா: நாளை மகா தேரோட்டம்: காலை முதல் இரவு வரை 5 தேர்கள் அடுத்தடுத்து பவனி தொடர் மழையால் அதிரும் பிரேசில்!: நீரில் அடித்து செல்லப்பட்ட வாகனங்கள்.. நிலச்சரிவில் சிக்கி 2 பேர் பலி..!! குஜராத் மாநிலம் சட்டசபை தேர்தலில் வாக்களிக்க ஆப்பிரிக்க மக்களுக்கென பிரத்யேக பூத்: உணவு, ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடிய மக்கள்..! புதுச்சேரியை அதிரவைக்கும் மக்களின் அழுகுரல்.. மணக்குள விநாயகர் கோயில் யானை உயிரிழப்புக்காக கதறும் பக்தர்கள்..!! சிற்பி திட்டத்தின் கீழ் மாணவ, மாணவியர்களுக்கான தேசப்பற்று குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி: அமைச்சர் அன்பில் மகேஷ் பங்கேற்பு
மட்டை வீச்சு, பந்து வீச்சு என இரண்டிலும் சிறப்பாக வெளிப்பட்ட சென்னை அணி மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்பி இருக்கிறது.பெங்களூர் ஒரு கட்டத்தில் வெற்றி பெறும் வகையில் விளையாடினாலும் பின்னர் தொடர்ந்து சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்ததால் தோல்வி அடைந்தது. 8 ஓவர்கள் வீசி 46 ரன்களை மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளை சாய்த்த ரன்தீவ், அஸ்வின் ஆகியோரின் அபார பந்து வீச்சால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியை வென்றது. சென்னை சேப்பாகம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் இன்று நடந்த ஐபிஎல் லீக் போட்டியில் முதலில் ஆடிய சென்னை அணி 183 ரன்கள் எடுத்தது. 184 ரன்கள் எடுத்தால் வெற்றி என கடினமாக இலக்குடன் களமிறங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் அணி, திலகரத்னே தில்சானை முதல் பந்திலும், அதன் பிறகு அதிரடியாக ஆடி 14 ரன்களை 5ந்தே பந்துகளில் குவித்த யூசுஃப் பத்தானை 2வது ஓவரிலும் இழந்தது. நின்றாடி ரன்களை எடுக்க முயன்ற அகர்வால் 7 ரன்களுக்கு ஆட்டமிழக்க 31 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்த நிலையிலேயே அதன் வெற்றிக் கனவு சரிந்தது. ஆனால் விராத் கோலியும், டி வில்லியர்ஸும் மிக அபாரமாக ஆடி ரன்களைக் குவித்தனர். 5 ஓவர்களில் இவர்கள் இருவரும் 52 ரன்களைக் குவித்தனர். 28 பந்துகளில் 4 பெளண்டரிகளுடனும், ஒரு சிக்கசருடனும் 35 ரன்கள் எடுத்திருந்த கோலி ஆட்டமிழந்தார். ஒரு முனையில் டி வில்லியர்ஸ் ரன்களைக் குவிக்க மறுமுனையில் விக்கெட்டுகள் விழுந்த வண்ணம் இருந்தது. 19வது ஓவரில் டி வில்லியர்ஸ் ஆட்டமிழக்க தோல்வி உறுதியானது. டி வில்லியர்ஸ் 44 பந்துகளை ஆடி 5 பெளண்டரிகளுடனும், 2 சிக்சர்களுடனும் 64 ரன்களை எடுத்து ஆட்டமிழிந்தார். இறுதியில் 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 162 ரன்களை மட்டுமே ராயல் சேலஞ்சர்ஸ் அணி எடுத்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 0 பின்னூட்டங்கள்: கருத்துரையிடுக புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு Popular Posts சுஜாதா பிரியர்களுக்காக... ஒரு நாள் ஒரு கோப்புறை - 06/09 தமிழ் எழுத்தாளர்களில் மிகவும் வித்தியாசமானவர் சுஜாதா. இவரின் முப்பது வருடத்திற்கு முந்தைய எழுத்திலும் இப்போதும் ஏதோ ஒரு ஈர்ப்பு இருக்கும். ... வானம் - என்ன வாழ்க்கைடா இது? வானம், சிம்பு படத்தில் இருக்க வேண்டிய அத்தனை அம்சங்களும் இருக்கும் படம், ஆனால் நிச்சயமாய் வழக்கமான சிம்பு படம் இல்லை. இந்த படம் எந்த அளவிற்க... 14/5 - ஒரு நாள் ஒரு ஃபோல்டர் : இலவச மின் நூல்கள் எப்போதுமே அச்சிட்ட புத்தகங்களில் படிக்கிற அந்த அனுபவம் மின் நூல்களில் கிடைப்பதில்லை என்பது உண்மை தான். ஆனால் நமக்கு தேவையான பல நூல்கள் தேடின... டெல்லி வரேன் மகளை பார்க்க.. உன்ன பார்க்க இல்ல - கருணாநிதி கோபம் எப்போதுமே நாசூக்காக பேசுவதிலும் செயல்படுவதிலும் கருணாநிதி வல்லவர். இதற்கு மேலும் கூட்டணியில் நாங்கள் நீடிக்க வேண்டுமா என்பதை காங்கிரசிற்கு உ... சங்கத் தமிழும் எங்கத் தமிழும் - 1 உலகில் இலக்கியங்கள் அதிகம் கொண்ட மொழிகள் என்று நோக்கினால் அது நிச்சயம் ஒற்றைப்படை எண்களுக்குள் அடங்கி விடும். அதிலும் வரிசைப்படுத்தினால் தமி... ஃபேஸ்புக்கை தோற்கடித்தது கூகுள்... இணையம் மூலம் உலகமே சுருங்கி விட்டாலும், பெரும்பாலான இணையப் பயன்பாட்டாளர்களின் நேரம் இந்த இரண்டு நிறுவனங்களின் தளங்களுக்குள் முடிவது மிக சாத... அழைக்கிறது : உங்கள் மனம் விரும்பும் மொபைல் நம்பர் நீங்கள் பிறந்த ஆண்டை, திகதியை பிடித்தமானவர் மொபைல் எண்ணை என எதை வேண்டுமானாலும் உங்களுடையது ஆக்குங்கள். இலவசமாக... உங்கள் மனதுக்கு பிடித்த... ஆம் ஆத்மி தேசிய நடவு செய்ய துணிவு அரவிந்த் கெஜ்ரிவால் , டெல்லி சட்டசபை தேர்தலை வென்ற கையோடு தேசிய அளவிலும் போட்டியிட முடிவு செய்து இருக்கிறார் . மிக நிதானமாக வேட்ப... தேர்தல் முடிவுகளும் சந்தானமும்..! கருத்துக் கணிப்புகள் அனைத்தையும் மக்கள் பொய்யாக்குவார்கள் மக்கள் என்று திமுக முழங்கியது கடைசியில் நடந்து விட்டது. ஆம் அறுபது சதவிகித இடங்க... சச்சினின் சத வேட்டை தொடர்கிறது..! கூடவே தோல்வி ராசியும்...! சச்சின் ஐபிஎல் போட்டிகளில் தனது முதலாவது சதத்தை கொச்சி அணிக்கு எதிராக பதிவு செய்திருக்கிறார். உலக கோப்பை முடிந்தவுடன் சச்சின் ஒய்வு பெற வேண்...
அண்ணல் காந்தியடிகளின் மிக முக்கியமான வாழ்வியல் கோட்பாடு அகிம்சையாகும். இதனை உணர்த்த, இதன் வலிமையை உணர்த்த அவர் பல பக்கங்கள் எழுதியுள்ளார், பேசியுள்ளார், அனுபவித்துள்ளார். அகிம்சை வெற்றிக்கான வழி என்கிறார் காந்தியடிகள். அந்த வெற்றிக்கான வழியைப் பெற பெற சில நிபந்தனைகளையும் அவர் முன்வைக்கிறார். அகிம்சையே மானிட வர்க்கத்தின் நியதி. அகிம்சையே மிருக பலத்தைக் காட்டிலும் கணக்கிலடங்காச் சிறப்பும் உன்னதமும் வாய்ந்தது. அகிம்சை ஒருவரின் தன்மான உணர்விற்கும், சுயமரியாதைக்கும் பாதுகாப்பு தருவது. சொத்துகளை, செல்வங்களை ஆட்கள் வைத்துப் பாதுகாப்பதை விட அகிம்சையைப் பின்பற்றினால் அதுவே மிகப் பெரிய பாதுகாப்பாக இருக்கும். தவறான வழிகளில் சேர்த்த பொருள்களுக்கும், ஒழுக்கக்கேடான நடவடிக்கைகளுக்கும் ஒருபோதும் அகிம்சை துணை நிற்காது. ஒரு நாட்டைத் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் தன்மைக்கு எதிரானது அகிம்சை. அன்புடைய எவரும் அகிம்சை வழி நிற்கலாம். அதற்கு இளைஞர்கள், குழந்தைகள், பெரியவர்கள், பெண்கள் என்ற பாகுபாடு கிடையாது. அன்பிற்கு என்ன வேறுபாடுகள். “ வாழ்க்கைச் செயல்கள் முழுவதும் அகிம்சையில் அமையவேண்டும். இது தனிநபர் நியதி அதே நேரத்தில் திரளான மக்களுக்கும் உரியது.“ என்று அகிம்சைக்கான சில நிபந்தனைகளை அவர் முன்வைக்கிறார். இந்த நிபந்தனைகளைக் கடைபிடிக்கும் நிலையில் அகிம்சை வெற்றி பெறும். உலகம் நன்மைபெறும். அகிம்சையைக் கடைபிடிப்பவர்கள் உலகின் பலசாலிகள் ஆவர். அகிம்சை ஒப்பற்ற ஆற்றல் மிக்க அன்பு ஆயுதம். வாழ்க்கையின் இலக்கு. அஞ்சா நெஞ்சனின் இயற்பண்பு. இது உணர்வு மிக்க கோட்பாடு. வளமையான கோட்பாடு. உலக உயிர்களை வாழ்விக்கிற சக்தி. அகிம்சை தலையாய தர்மம். வன்முறைக்கு எதிரானது அகிம்சை. வன்முறை அதாவது ஒருவரைத் தாக்குதல் என்பதற்குப் பயிற்சிகள் தரப்பெறுகின்றன. அதே முறையில் அகிம்சை முறையில் வாழ்வதற்கும் பயிற்சி அளிக்கப்பட வேண்டும். வன்முறைக்கான பயிற்சிகளைக் காட்டிலும் அகிம்சையைக் கைக்கொள்ள மிகவும் கடினமான பயிற்சிகள் தேவை. பயிற்சியின் முதல் நிலை. கடவுள் மீது நம்பிக்கை கொள்ளல். கடவுள் என்ற அன்பின் மீது பற்று கொண்டவன் வாள் போன்ற கொலைக்கருவிகள் மீது பற்றுடையவனாக ஆகமாட்டான். சண்டைகளைத் தடுத்து நிறுத்தும் பயிற்சியும் அகிம்சைப் பயிற்சியின் அங்கமே ஆகும். இருவர் சண்டை போடுவதைப் பார்த்துவிட்டு அங்கிருந்து விலகிச் செல்பவன் அகிம்சாவாதியாக மாட்டான். மாறாக அந்தச் சண்டையைத் தடுத்து நிறுத்தும் நெஞ்சுரம் மிக்கவன்தான் அகிம்சாவாதியாவான். வன்முறையாளனின் ஆயுதம் கத்தி, கபடா, துப்பாக்கி, அணுகுண்டு. போன்ற எதுவுமாக இருக்கலாம். ஆனால் அகிம்சாவாதி இவற்றை எதிர்கொள்ள ஒரே கேடயம் தான் வைத்திருக்கிறான். அன்பு என்பதே அக்கேடயம். அவ்வன்பிற்குத் துணை நிற்பது கடவுள் கருணை. அகிம்சை என்பது குடும்பத்தில் இருந்தே கற்றுக்கொள்ளக் கூடியது.இதனைக் கற்கத் தனிப் பள்ளி தேவையில்லை. குடும்பமே கற்றுத் தருகிறது. குழந்தைக்கு வன்முறை தெரியுமா. தடி எடுத்துச் சுழற்றத் தெரியுமா. அதனால் அது அகிம்சாவாதியாகாது. அக்குழந்தைக்குள் அன்பும் பேதமில்லாத் தன்மையும் இருக்கவேண்டும். குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரும் அகிம்சையைக் கடைபிடிக்கவேண்டுமானால் ஓர் உறுதி மொழியை எடுத்துக்கொள்ளவேண்டும். “எது நேரிடினும் சரி, கோபத்திற்கு இடம் கொடுக்கமாட்டேன். குடும்பத்தினரை என் இஷ்டத்திற்கு ஆட்டி வைக்கமாட்டேன். அவர்கள் மீது அதிகாரம் செலுத்த மாட்டேன்” என்ற உறுதிமொழியை ஏற்கும் நிலையில் குடும்பம் அகிம்சையின் பயிற்சிப்பள்ளியாகின்றது. குடும்பத்தில் நிலவும் இந்த அமைதி, அகிம்சை மெல்லச் சமுதாயத்திற்கும் பரவும். சமுதாயத்தில் பெருவாரியாகச் சண்டை இல்லாமல்தான் அனைத்தும் நடைபெற்று வருகின்றன. இதனை நாள்தோறும், நாடுகள் அளவிலும் உலக அளவிலும் கொண்டு செல்லும் முறைமையே இன்றைக்குத் தேவை. இந்தப் பயிற்சியே அகிம்சையின் மேலான பயிற்சி. இதனைப் பயின்று உலகம் அமைதியில் திளைக்க ஒவ்வொரு தனிமனிதனும் பாடுபடவேண்டும். ஒரு கோட்டைக்குள் நுழையும் வாயிலில் ஒரு வாசகம் வைக்கப்பட்டிருந்தது. பூமியில் சொர்க்கம் இருப்பின் அது இங்கேதான் அது இங்கேதான் என்பது அந்த வாசகம்.. இந்த வாசகம் எல்லா நாடுகளின் எல்லைக் கதவுகளில் எழுதப்பட வேண்டும்.. இத்தகைய அமைதி ஏற்படும் உலகில் நாடுகளில் ஏற்றத்தாழ்வுகள் இருக்காது. போதைப் பொருட்கள் இருக்காது. மதுபானங்கள் இருக்காது. ஆண், பெண் இருவருக்குமான புனிதத்தன்மை பாதுகாப்புடன் இருக்கும். எல்லாப் பெண்களையும் ஆண்கள் தம் வயதிற்கு ஏற்பத் தாயாகவோ, சகோதரியாகவோ, மகளாகவோ ஏற்று நிற்பர். எல்லா மதங்களும் கண்ணியத்துடன் போற்றப்படும். பெருமிதம், மகிழ்ச்சி பெருகும். உடலுழைப்பு பெருகும்.. முனைவர் மு.பழனியப்பன் இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள். கருத்துக்கள் பதிவாகவில்லை- “அகிம்சையின் வெற்றி” கட்டுரை,கவிதை,நகைச்சுவை,புகைப்படம் போன்ற படைப்புகளை சிறகு பரிசீலனைக்கு அனுப்ப முகவரி editor@siragu.com
முகப்பு Read Stories in English தமிழகம் இந்தியா விளையாட்டு லைப்ஸ்டைல் உலகம் கதைகள் வணிகம் தொழில்நுட்பம் ஃபன் பேக்ட்ஸ் ஆட்டோமொபைல்ஸ் AUSTRALIA முகப்பு > செய்திகள் வசமா வந்து 'இப்படி' சிக்கிட்டோமே...! 'சுற்றி எங்குமே மனுஷ நடமாட்டம் இல்ல...'' திரும்பி எப்படி போறதுன்னும் தெரியல... ' - கடைசியில் நடந்தது என்ன...? '30 வருஷம் போலீஸ் கண்ணுல மண்ண தூவி வாழ்ந்தவரு...' 'திடீர்னு ஒருநாள் வந்து நின்னு...' - 'வாழ்க்கை' ஒரு வட்டம்னு சும்மாவா சொன்னாங்க...! 'அப்படி' மட்டும் நடந்துச்சுன்னா... 'அணு' ஆயுத தாக்குதலுக்கு 'முதல்' டார்கெட் 'நீங்க' தான்...! எங்க கிட்டேயே 'பூச்சாண்டி' காட்டுறீங்களா...? - பகிரங்கமாக 'மிரட்டல்' விடுத்த நாடு...! ரெண்டுல ஒண்ணு பார்த்திடலாம்...! நாம எல்லாரும் ஒண்ணா நின்னு நம்ம 'பவர்' என்னனு 'அவங்களுக்கு' காட்டணும்... ! போடப்பட்டுள்ள 'AUKUS' கூட்டுத் திட்டம்...! அவ்ளோ 'வெறி' ஆகுது...! எங்க 'முதுகு'ல குத்திட்டீங்க இல்ல...? அப்போ எங்ககிட்ட வந்து 'பேசினதெல்லாம்' சும்மா, அப்படி தானே...? - கடுப்பில் கொந்தளிக்கும் நாடு...! என்னையா 'டேட்டிங்' கம்பெனி நடத்துறீங்க...? 'ஆறடி' உயரத்துல 'ஆம்பள' கேட்டா... என்ன 'மூட் அவுட்' பண்ணிட்டீங்க...! - கடுப்பான பெண் செய்த 'அதிர்ச்சி' காரியம்...! என்னங்க சொல்றீங்க.. இவருக்கா இந்த நிலைமை..! கரும்புள்ளியாக மாறிய ‘சேவாக்’ விவகாரம்.. முன்னாள் ‘சிஎஸ்கே’ வீரரின் பரிதாப நிலை..! முட்டி மோதி ஒருவழியா இப்போதான் ‘ஐபிஎல்’ நடக்கப்போகுது.. அதுக்கும் ‘ஆப்பு’ வைத்த ஆஸ்திரேலியா.. சிக்கலில் ஐபிஎல் அணிகள்..! பல கிலோமீட்டர் தூரத்துக்கு ‘மாபெரும்’ சிலந்தி வலை.. மிரண்டுபோன மக்கள்.. ஆய்வாளர்கள் சொன்ன காரணம்..! அப்போ ‘உலகக்கோப்பை’ வின்னர்.. இப்போ நிலைமையே வேற.. முன்னாள் கிரிக்கெட் வீரரின் ‘பரிதாப’ நிலை..! நாம 'அவங்கள' தனியா எதிர்த்தா 'சீன்' ஆயிடும்...! 'எல்லா நாடும் ஒண்ணுக்கூடி எதிர்க்குறது தான் பெஸ்ட்...' - ஆஸ்திரலியா முன்னாள் பிரதமர் கருத்து...! 'எப்பா சாமி!.. பிசிசிஐ-க்கு ஒரு பெரிய கும்பிடு'!.. 10 நாட்கள் போராட்டம்!.. நெகிழ்ந்து போன ஆஸ்திரேலிய வீரர்கள்! "கோலி சீண்டுவாரு... நான் மட்டும் சும்மா இருக்கணுமா"!?.. "இருந்தாலும் சொல்றேன்"... பழைய பகை மறந்து... டிம் பெய்ன் சொன்ன வார்த்தை! ‘பேட்டியில் உண்மையை உளறிய வீரர்’!.. மீண்டும் ‘பூதாகரமாக’ வெடித்த பந்தை சேதப்படுத்திய விவகாரம்.. விசாரணை வலையத்துக்குள் சிக்கும் ‘பெரிய’ தலைகள்..! போச்சு!.. இனி அவ்ளோதான்!.. மனசாட்சி இல்லையா?.. எப்போ வீட்டுக்கு போவோம்னு தெரியாத மைக் ஹசி!.. பயங்கரமான லாக்!! துப்பாக்கி முனையில் கடத்தப்பட்ட முன்னாள் ‘கிரிக்கெட்’ வீரர்.. ஆஸ்திரேலியாவில் நடந்த அதிர்ச்சி..! 'சொந்த நாட்டுக்குள்ள அனுமதி கிடையாது... இங்க ஐபிஎல்லும் இல்ல'!.. 'எங்க போறது?.. என்ன செய்றது'?.. ரண வேதனையில் ஆஸ்திரேலிய வீரர்கள்! 'நான் ஒரு நயா பைசா கூட சம்பாதிக்கலங்க...' 'சும்மா என்ன திட்டிட்டு இருக்காம உருப்படியா 'அதையாச்சும்' பண்ணுங்க...! - கடுப்பான முன்னாள் வீரர்...! 'இந்தியாவில் இருந்து தப்பிக்க... புது ரூட்டை கண்டுபிடித்த முன்னாள் கிரிக்கெட் வீரர்'!.. அடுத்து காத்திருந்த ட்விஸ்ட்!.. ஐபிஎல்லுக்கு இப்படி ஒரு நிலைமையா? 'ஆள விடுங்கடா சாமி'!.. மூட்டை முடிச்சை கட்டிக்கொண்டு... எஸ்கேப் ஆகவிருக்கும் முக்கிய வீரர்கள்!.. கதிகலங்கும் ஐபிஎல் அணிகள்!! என்ன இது, இன்ஹேலர் கொஞ்சம் 'வெயிட்டா' இருக்கே...! 'யூஸ் பண்ணலாம்னு எடுத்தப்போ, திடீர்னு...' - உச்சக்கட்ட அதிர்ச்சியில் உறைந்த பெண்மணி...! ‘நள்ளிரவு கடலுக்கடியில் பயங்கர நிலநடுக்கம்’!.. ‘யாரும் கடற்கரைக்கு போக வேண்டாம்’.. சுனாமி எச்சரிக்கை விடுத்த 2 நாடுகள்..! "இதுனால தான் அந்த 'கேக்'க நான் வெட்டல..." 'முதல்' முறையாக மனம் திறந்த 'ரஹானே'... 'நீ ரொம்ப பெரிய 'மனுஷன்'யா... நெகிழ்ந்து போன ரசிகர்கள்!! 'இவருக்கு வயசாகல!'.. மீண்டும் ஃபார்முக்கு வந்த ‘வீரர்’!.. கோலி, சச்சினின் சாதனையும் முறியடிப்பு! Video : "ஆத்தி... எப்டி எல்லாம் யோசிச்சு 'propose' பண்றாங்க!!... நோட் பண்ணுங்க மக்களே..." காதலனின் அசத்தல் சர்ப்ரைஸால் திக்குமுக்காடி போன 'காதலி'!!! "ஒழுங்கா 'ரூல்ஸ' ஃபாலோ பண்ணுங்க... இல்லன்னா 'ஊருக்கு' கெளம்பிடுங்க..." இந்திய அணிக்கு பகிரங்க 'எச்சரிக்கை'... பரபரப்பு 'சம்பவம்'!!! ‘முரளிதரன் சாதனையை முறியடித்து’... ‘அசத்திய தமிழக சீனியர் வீரர்’... ‘மகிழ்ச்சியில் ரசிகர்கள்’...!!! 'நீ விளையாடு...' 'அப்பாவோட உடலை பார்க்க வர வேண்டாம்பா...' மனச கல்லாக்கிய அம்மா...' - அப்பாவின் ஆசையை நிறைவேற்றிய முகமது சிராஜ்...! 'இது நம்ம லிஸ்ட்டுலயே இல்லையே?!!'... 'ஆசையாக பெயர் வைத்த பெற்றோருக்கு'... 'அடுத்து காத்திருந்த இன்ப அதிர்ச்சி!!!'... 'பிறந்ததுமே அடித்த ஜாக்பாட்!'... 'இனி வரப்போற டெஸ்ட் மேட்ச்களில் நான் விளையாடல...' 'ஷமி அறிவிப்பு...' - அப்போ அவருக்கு பதில் விளையாட போறது யாரு...? 'UKவில் இருந்து யூடர்ன் அடித்த புதிய வகை கொரோனா வைரஸ்!'... கண்ணை மூடி திறப்பதற்குள் ‘இந்த நாடுகளிலும்’ நுழைந்து அட்டகாசம்! 'இப்டி ஆடுனா எப்படி தம்பி’... ‘ட்ரோல் செய்யும் ரசிகர்கள்’... ‘மோசமான ஃபார்மால் இளம் வீரரை கழட்டிவிட திட்டம்’...!!! 'தடுப்பூசி சோதனைக்குப்பின்'... 'சிலருக்கு HIV பாசிட்டிவ்?!!'... 'ஷாக் கொடுத்த போலி முடிவுகளால்'... 'உடனடியாக பரிசோதனையை நிறுத்திய நாடு!!!'... ‘கையிலே ஆகாசம்.. கொண்டு வந்த உன் பாசம்!’... சர்வதேச கிரிக்கெட்டில் முதல் விக்கெட்டை எடுத்த தமிழக வீரர் நடராஜன்!.. வீட்டில் இருந்தே ‘ஆரத்தி’ எடுத்த தாய்!... நெகிழும் நெட்டிசன்கள்! 'பார்த்துட்டோம் யா... 'அந்த மனுஷன' உன்னோட ரூபத்தில பார்த்துட்டோம்'!.. 'ஜட்டு ஆல்ரவுண்டர் மட்டுமா'?.. 'இல்ல... அதுக்கும் மேல'!! ‘இந்திய அணி நிர்வாகம்’... ‘எந்த ஆர்டரில் இறக்கினாலும் சரி’... ‘பேட்டிங் செய்ய தயார்’... ‘அதிரடியாக கூறிய சீனியர் வீரர்’...!!! ‘கொரோனா பாதிப்பு நேரத்திலும்’... ‘24 மணிநேரத்தில் எல்லாமே தீர்ந்து போச்சு’... ‘மகிழ்ச்சியில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம்’...!!! ‘யாரென்று தெரிகிறதா?’... ‘பிசிசிஐ வெளியிட்ட வீடியோ’... ‘சொன்னதை அப்படியே செய்த கங்குலி’...!!! ‘திடீரென அதிகரித்த கொரோனா பரவல்’... ‘6 நாட்கள் மட்டும்’... ‘மீண்டும் கடுமையான முழு ஊரடங்கு பிறப்பித்த நாடு’...!!! ‘இந்தியாவுக்கு எதிரான தொடரில் இருந்து’... ‘ஆஸ்திரேலிய முக்கிய வீரர் விலகல்’... ‘விராட் கோலி போலவே விருப்பம்’...!!! 'கிரிக்கெட்டின் சர்வ வல்லமை படைத்த பேட்ஸ்மேன் இவர்தான்!' - புகழ்ந்து தள்ளிய உலக லெவல் ‘கிரிக்கெட்’ பிரபலம்! ‘வாழ்வின் முக்கியமான தருணம் அது’... ‘அதனால அவர் ஊருக்கு திரும்புவதை மதிக்கிறேன்’... ‘ஆனாலும் இந்திய அணிக்கு பின்னடைவு தான்’... ‘ஆஸ்திரேலிய தலைமை பயிற்சியாளர் கருத்து’...!!! ‘ரசிகர்களுக்கு குட் நியூஸ்’... ‘இந்தியா-ஆஸ்திரேலியா போட்டியை காண’... ‘ஆனா, ஒரு கண்டிஷன்’... ‘வெளியான அறிவிப்பு’...!!! ‘வாழ்த்துக்கள் நட்டு’...!!! 'உங்கள அங்க மீட் பண்றேன்’...!!! 'தமிழக வீரரை பாராட்டிய ஆஸ்திரேலிய வீரர்...!!!’ 'நாங்களும் குடும்பத்த பார்க்க வேண்டாமா!?... என்னங்க நீங்க இப்படி பண்றீங்க?'.. 'ரொம்ப மன உளைச்சலா இருக்கு!'.. விராட் வேதனை! ஐபிஎல் மேட்ச்சுலேயே ஒண்ணும் சாதிக்கல...!!! மோசமாக விளையாடும் இவர் எப்படி...!!! ஆஸ்திரேலியாவில விளையாடுவாரு???... 'நம்ம கைய வச்சே... நம்ம கண்ண குத்த பாக்குறாங்க!'.. கோலி எதிர்பார்க்காத ட்விஸ்ட்!.. உஷாரன ஆஸ்திரேலிய அணி... இந்தியாவுக்கு கொடுத்த ஷாக்! 'கதம்... கதம்... எல்லாம் முடிஞ்சிருச்சு!'.. இந்திய அணியில் தோனி இடத்தை நிரப்பப்போகும் வீரர் 'இவர்' தான்!'.. மிடில் ஆர்டர் செட் ஆனது எப்படி?.. ஃபுல் ஃபார்மில் இந்திய அணி! "அவரோட 'commentary' ரொம்ப 'ஃபேமஸ்',,.. 'இப்டி' நடக்கும்னு 'கனவு'ல கூட நினைக்கல,.." - கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய 'துயரம்'!!! 'தாறு மாறு... என்னா அடி'!.. இங்கிலாந்து அணியை கிழித்து தொங்கவிட்ட மேக்ஸ்வெல்!.. ஆஸ்திரேலியா த்ரில் வெற்றி!.. தொடரையும் கைப்பற்றியது! 'குவாரண்டைனில் இருந்து எஸ்கேப்'... 'ஜாலியா காதலி வீட்டிற்கு வந்து கப்போர்டில் ஒழிந்த இளைஞர்'... 'இதுக்கா ஏணி புடிச்சு எஸ்கேப் ஆகி வந்தேன்'... அல்டிமேட் ட்விஸ்ட்! 'ஆஹா'.. 'அசத்தலான ரிசல்ட்ஸ்'.. 'மனுஷங்களுக்கு' பாதுகாப்பாக 'கருதப்படும்' கொரோனா 'மருந்தை' தயாரித்த 'நாடு'! “கூகுள், பேஸ்புக் நிறுவனங்கள், இதுக்கான பணத்த கொடுக்கணும்!”... சீறிய நாடு.. ‘ஒரே ஒரு எச்சரிக்கையில்’ க்ளீன் போல்டு ஆக்கிய கூகுள்! "கொரோனா தடுப்பு மருந்து மட்டும் ரெடி ஆகட்டும்"... நம்ம மக்கள் எல்லாருக்கும் 'free' தான்... அதிரடி அறிவிப்பு வெளியிட்ட 'பிரதமர்'!!! 'பீர்ல இருந்து கரண்ட்...' 'அட, இந்த ஐடியா செமயா இருக்கே...' - மொதல்ல 1.5 லிட்டர் பீர வச்சு மின்சாரம் உற்பத்தி...! 'ரொம்ப நாள் அவன் கூட வாழ முடியாதுல...' 'கலங்கும் காதலி...' - 61 வயது மூதாட்டியை திருமணம் செய்யும் 27 வயது இளைஞன்...! "அடையாளம் தெரியாதவங்க வேலை இது.. ரொம்ப அட்வான்ஸா பண்ணியிருக்காங்க!" .. கொதித்தெழுந்த பிரதமர்! 'வைரஸ் பரவலைத் தொடர்ந்து...' 'சீனாவிலிருந்து' கிளம்பும் 'அடுத்த பூதம்...' 'ஆஸ்திரேலியாவைத்' தொடர்ந்து 'இந்தியாவுக்கு' வரவிருக்கும் 'ஆபத்து...' 'நீங்க லாக்டவுன் பண்ணுங்க... பண்ணாத போங்க!.. ஆனா எங்கள விட்டுருங்க!'.. உலக நாடுகளுக்கு 'குட் பை' சொன்ன அரசு!.. 2021 வரை "No entry" 'நடிகருக்கு மரண தண்டனை...' 'போதைப்பொருள்' கடத்தியதாக 'குற்றச்சாட்டு...' 'சீனாவின்' செயலால் 'ஆத்திரமடைந்த நாடு...' “வெண்டிலேட்டரே தேவையில்ல.. 2 மாசத்துக்குள்ள உலகெங்கும் கிடைக்கும்!”.. 'கொரோனாவை' எதிர்கொள்ள 'புதிய மருந்து'!.. 'ஆஸ்திரேலிய' அறிஞர்கள் 'சாதனை'! 'உன்னோட உயிரை பத்தி நெனச்சு கூட பாக்கலையே மா'... 'அசந்து போக வைத்த கேரள மாணவி'... நெகிழ வைக்கும் சம்பவம்! "மிரட்டுனா பணியுற ஆளு நாங்க இல்ல..." '18 லட்சம் கோடி' வர்த்தகம் போனாலும் 'பரவால்ல...' சீனாவுக்கு 'கெத்து' காட்டிய 'நாடு...' "அட கொஞ்சம் அமைதியா இருங்கப்பா..." 'நீங்க வேற' சூழ்நிலை புரியாம 'ஆரம்பிக்காதிங்க...' 'போராட்டக்காரர்களிடம்' கெஞ்சும் 'பிரதமர்...' "ஒரு பிரதமர்ன்னு கூட பாக்காம..." "என்னயா இந்த வெறட்டு வெறட்டுற..." "இதெல்லாம் ஆஸ்திரேலியாவுல மட்டும் தான் நடக்கும்..." ‘40 வருஷ காத்திருப்பு’.. நொடியில் மாறிய வாழ்க்கை.. முதியவருக்கு அடிச்ச ‘ஜாக்பாட்’! ஆஸ்திரேலிய பிரதமர் சமைத்த ‘சமோசா வித் மாங்காய் சட்னி’.. அதற்கு பிரதமர் மோடியின் ‘ருசிகர’ பதில்..! 'ஆஸ்திரேலியாவில்' பிறந்த 'புது நம்பிக்கை!...' அடுத்தடுத்து 'பாஸிடிவ் தகவல்கள்...' 'கைவிடாத' விஞ்ஞானிகளின் 'உழைப்பு...' 'பிரம்மாண்ட புழுதிப் புயல்...' 'கடலைக்' கடந்த 'அற்புதக் காட்சி...' 'வைரலாகும் வீடியோ...' 'சீனாவுக்கு' எதிராக அணி சேரும் '7 நாடுகள்...' 'வர்த்தக ரீதியாக' தனிமைப்படுத்த 'முடிவு'... '7 நாட்டு வெளியுறவு அமைச்சர்கள் விவாதம்...' 'கிளிகளை தாக்கும் புதிய வைரஸ்...' 'என்ன வைரஸ்னே தெரியல...' 'பொத்து பொத்துன்னு செத்து விழுது...' 'இதுவும் கொரோனா வைரஸ் மாதிரி தான்...' பல அதிர்ச்சி தகவல்கள்...! என்ன 'அமெரிக்காவுக்கு' சப்போர்ட்டா?... "உண்டு இல்லன்னு பண்ணிடுவோம்"... கடுமையாக 'எச்சரித்த' சீனா! 'இரண்டு மாதத்திற்குப் பிறகு... ‘மே 4-ல் இருந்து... ‘லாக் டவுனை நீக்குவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்த நாடு’! ஊரடங்கில் ‘காதலியை’ பார்க்கபோய் போலீஸில் சிக்கிய வாலிபர்.. கோர்ட்டில் சொன்ன ஒரு ‘காரணம்’.. தண்டனை வழங்காமல் அனுப்பிய நீதிபதி..! '48 மணி நேரத்தில் முழுமையாக குணப்படுத்தலாம்...' 'ஏற்கெனவே மருந்து இருக்கிறது...' 'ஆஸ்திரேலிய' மருத்துவர்களின் வியக்க வைக்கும் 'ஆய்வு முடிவு...' Subscribe our Youtube Channel Like our Facebook Page Follow @behindwoods Follow our Twitter Page Like our Facebook Page ABOUT THIS PAGE This page contains slide shows relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful.
உலக பணக்காரர் எலான் மஸ்க் போட்ட ஒரு லைக்கால், சென்னையைச் சேர்ந்த நிறுவனத்துக்கு ஏழரை கோடி ரூபாய் முதலீடு கிடைத்துள்ளது. கருடா ஏரோ ஸ்பேஸ் என்ற சென்னையில் இயங்கி வரும் நிறுவனம் ட்ரோன் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளது. நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ், உள்நாட்டிலேயே ட்ரோன் தயாரிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு, அக்னீஸ்வர் ஜெயபிரகாஷ் என்பவரால் கடந்த 2015 ஆம் ஆண்டு இந்த நிறுவனம் தொடங்கப்பட்டது. கருடா ஏரோ ஸ்பேஸ் நிறுவனம் ஆழ்வார்பேட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய கருடா ஏரோஸ்பேஸ் குழுவினர், சிங்கப்பூரில் உள்ள சூரியசக்தி மின் உற்பத்தி மையத்தில் உள்ள, 1 லட்சத்து 22 ஆயிரம் சோலார் பேனல்களை பராமரிக்க, தங்களது ட்ரோன் பயன்படுத்தப்படுவதாக கூறினர். தங்களது ட்ரோன் மற்ற நிறுவன ட்ரோன்களைவிட குறைந்த அளவு தண்ணீரை பராமரிப்புக்கு பயன்படுத்துவது குறித்து, அக்னீஸ்வர் ஜெயபிரகாஷ் ட்விட்டரில் பதிவிட்டதாகவும், அதற்கு, உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் லைக் செய்தது மகிழ்ச்சியளிப்பதாகவும் தெரிவித்தனர். Its 122,000 solar panels will be maintained by drone. #Singapore @elonmusk @VincentCoyle1 @berniehollywood @USAmbKeshap @kiranshaw @ActorMadhavan @JoseEstayN @chamath @billpeduto @davidjonesOYW pic.twitter.com/KU2WiqQLz0 — AgnishwarJayaprakash (@AgnishwarJ) July 20, 2021 இதனால், தங்களது நிறுவனத்தில் ஏழரைக் கோடி ரூபாய் முதலீடு செய்ய லண்டனைச் சேர்ந்த நிறுவனம், முன்வந்துள்ளதாக கருடா ஏரோ ஸ்பேஸ் நிறுவனத்தினர் தெரிவித்தனர். சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
இறைவன் தனது சாயலில் மண்ணில் இருந்து உருவாக்கிய உருவத்தின் நாசியில் தனது மூச்சை ஊதியபோது மனிதன் உருப்பெற்றான். அந்த மனிதன் ஆதாம் எனப்பெயர் பெருகிறான்- வேதாகமம். ********************** வீதியில் காத்திருப்பது அவனுக்கு கடினமாக இருந்தது. நாற்பது வயது கடந்து விட்ட பின்பு, நல்ல நோக்கமிருந்தாலும், பெண்ணொருத்திக்காக கல்லூரி மாணவன்போல் நடந்துகொள்வது எப்படி…..? வாழ்வில் ஒரே ஒரு முறை மட்டும் சந்தித்த சீனத்து இளம் பெண்ணொருத்திக்காகக் காத்திருப்பது அந்தரமான குற்ற உணர்வைக் கொடுத்தது. எவ்வளவு நேரம்தான் காத்திருப்பது….? அவனது மனதில் ஒரு திகில் உணர்வு தொடராக நீண்டது. என் சக்திக்கு அப்பாற்பட்ட வேலையில் தலையை கொடுத்துவிட்டேனோ…? அந்தப் பெண் சாமர்த்தியமாக அந்த இடத்தை விட்டு வெளியே வந்தாலும் அவளது பாதுகாப்பை எப்படி உறுதிப்படுத்துவது…? அவளை பொலிசில் கையளிப்பதா – இல்லை மறைத்து வைத்து மீண்டும் சீனாவுக்கு அனுப்புவதா…? இவை எல்லாம் எவ்வளவு பாரதூரமான விடயங்கள் என்பதை எண்ணாமல் வாக்குறுதி கொடுத்தது எவ்வளவு முட்டாள்தனம். வாயாலே சொல்லியதை ஏன் நிறைவேற்ற நினைக்கிறேன்….? ” இந்தக்காலத்தில் என்னைப்போல் ஒரு முட்டாள் இருக்கமாட்டான் “என்று அவன் தன்னைத்தானே நொந்து கொண்டான். தேவையற்ற இந்தப் பிரச்சினையில் தலைகொடுக்காமல் மற்றவர்கள்போல் ஞாயிறு விடுமுறை தினத்தில் வீட்டின் முன்பகுதியில் வளர்ந்திருந்த புல்லை வெட்டியோ இல்லை தோட்டத்தில் வளர்ந்திருத்த செடிகளை வெட்டி நிலத்தை பண்படுத்தியோ இருந்தால் மனைவியிடம் நல்ல பெயர் வாங்கியிருக்கலாம். ஒரு நாள் செய்யும் வேலையின் நன்மதிப்புடன் இரண்டு கிழமைகளை ஓட்டமுடியும். குறைந்தபட்சம் கால்பந்தாட்டத்தையோ அல்லது திரைப்படத்தையோ தொலைக்காட்சியில் பார்த்;திருந்தால் கொஞ்சம் திருப்தியாக இருக்கும். அதுவுமில்லாமல் குளிர்ந்த பியரை குடித்துவிட்டு மதியத்தில் குட்டித்தூக்கம் போட்டிருக்கமுடியும்;. வார விடுமுறையில் செய்யக்கூடிய ஆனால் செய்யத் தவிர்த்துவிட்ட சில விடயங்களை மனதில் நினைத்து தன்னை அலுத்துக்கொண்டான். அவனுக்கும், ஒரு முறை சந்தித்த அந்த சீனப்பெண்ணுக்கும் தவிர வேறு ஒருவருக்கும் தெரியாமல் இந்தக் காரியத்தில் இறங்கியது செய்த தப்புக்கு பொட்டுவைத்து அலங்காரம் செய்த காரியமோ…? ஒருவிதத்தில் இந்த முயற்சி சர்க்கஸ்காரனது கரணம் தப்பினால் மரணம் என்பது போன்;ற நடவடிக்கை. நேரடியாக ஈடுபடாமல் பொலிசிடம் சொல்லியிருக்கலாம்.. அதை ஏன் செய்யவில்லை…? கோழையாக நினைப்பதை தவிர்க்கவா…? அல்லது பட்ரி;க்கின் மேல் இருந்த நட்புணர்வா…? இப்பொழுது வீதியில் இந்த இடத்தில் நிற்பதை யாராவது தெரிந்தவர்கள் பார்த்தால்… எதைச் சொல்லி சமாளிக்க முடியும்——? —- மெல்பனில் தென்பகுதியில் உள்ள பிரதான வீதியில் உள்ளே பிரிந்து செல்லும் சிறிய பாதையில் காலை பதினொரு மணிக்கு “கனவான்களுக்கு மட்டும் ” என சிறிய எழுத்தில் சிவப்பு மின்சாரக்குமிழ் தாவித்தாவி ஓடும் கதவிற்கு சிறிது தொலைவில் நின்று கொண்டு, அந்த மூடிய கதவையே பார்த்து தன்னை நொந்து கொண்டிருந்தான் இரஞ்சன். சித்திரை மாதத்து வெய்யில் அவனது உடலில் சிறு துகள்களை ஜிகினாப் பொடியாக உதிர்த்துக் கொண்டிருந்தது.. அப்போது வீசிய மெதுவான காற்று அந்தப் பொடிகளை அகற்றுவதுபோல் அகற்றி மீண்டும் அந்தத் துகள்கள் உடலில் படியவைத்து அவனைக் கனவுலகிற்கு அழைத்தது. இலையுதிர்காலத்து நீலமேகப்பரப்பில் வெண்பஞ்சுப்பொதிகள் மேற்குத்திசையில் மட்டும் வரிசையாக அடுக்கப்பட்டிருந்தன. மற்றய இடங்கள் நிர்மலமான தோறறத்தைக்கொடுத்தது. அவனுக்கு அருகில் நின்ற மேப்பிள் மரமொன்று தொடர்ச்சியாக சிவப்பு – மஞ்சள் கலந்த வண்ண இலைகளை சத்தமின்றி உதிர்த்து அங்கு நிலவிய அமைதியை மேலும் அதிகமாக்கியது. இவ்வளவு அமைதியாக ஒரு இடம் அதுவும் அந்த மெல்பேன் மாநகரத்தில்…? அந்த வீதியின் இருமருங்கும் வீடுகள் இல்லை. விடுமுறை நாளானதால் மனித நடமாட்டமும் இல்லை. சிறிய தொழிற்சாலைகள் , இரும்பு பட்டறைகள் என்பன இருக்கும் அந்த இடம் ஒரு கைத்தொழில்பேட்டை.. அவனுக்கு எதிரில் இருந்த ரயர்; கடையில் பிறிஜ்ரோன் ரயரின் விளம்பரம் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. அதற்கு இருபுறமும் சில இரும்பு பட்டறைகள் இருந்தன. இருநூறு மீட்டர் தூரத்தில் பிரதான வீதியில் வாகனங்கள் போய்க்கொண்டிருந்தன. ஆனால் எந்த வாகனங்களின் சத்தமும் அவனுக்குக் கேட்கவில்லை. அல்லது அந்த ஓசையை கேட்கும் மனநிலையில் அவன் இல்லை. மனிதர்களுக்கு தாங்கள் விரும்பியதை மட்டும் கேட்கும் தன்மை இருக்கிறது வீதியை பார்த்தபடி தன்னை சுற்றிய அமைதியையும் அந்த இலையுதிர்காலத்து இலைகளின் உதிர்வை இரசித்தபடி, கனவுலகத்தில் சஞ்சரித்தபடி நின்றவன், தேவையில்லாத வேலையை விட்டு திரும்பிப்போவோமா என நினைத்து திரும்பினான்.. அப்படி திரும்பியவனது செவிப்புலனுக்கு நிலத்தில் உதிர்ந்த இலைகளில் பாதங்கள் படும்போது உருவாகும் சலசலப்;பு கேட்டது. இவ்வளவு நேரமும் போர்வையாக அவனைப் போர்த்திருந்த அமைதி குலைந்து. அந்த சீனத்து பெண்தான் பின்பகுதியால் வந்துவிட்டாளா என இடது பக்கம் திரும்பியபோது திடீரென முதுகில் வலது பக்கத்தில் கூர்மையான ஏதோ எரிதணலால் இரண்டு விலா எலும்புகளுக்கும் இடையே துளைபோட்டபடி உள்ளே சென்று அதே வேகத்தில் மீண்டும் வெளியே வந்தது போல் இருந்தது.. அவனது உடல் இயக்கம் இரவில் பவர்கட் வந்து சகல மின்சார சாதனங்களும் இயக்கத்தை நிறுத்துவதுபோல் உடனடியாக நின்ற உணர்வு தெரிந்தது. மிகுந்த வலியுடன் முனகியபடி திரும்பிப் பார்த்தபோது பச்சை கம்பளி முகமூடியணிந்து கருநிற ரீசேட்டும் நீல டெனிம் பாண்டும் வெள்ளை அடிடாஸ் பாதணியும் அணிந்த ஒருவனது இடுங்கிய கண்கள்; தெரிந்தன. அவை அறிமுகமற்றது.. இரண்டுபக்கமும் கூரான கத்தி வெயிலுக்கு ஒளிர்ந்தது. கத்தியில் இரத்தம் துளிகூட தெரியவில்லை. குத்திவிட்டு உதிரம் கத்தியில் படுவதற்கு முன்பாக வேகத்துடன் கத்தியை எடுத்திருப்பதால் இவன் தொழில் முறைக் கொலையாளி போல் தெரிகிறது. மீண்டும் அவனது கையில் கூர்மையான கத்தி உயர்ந்தபோது பாடசாலைக் காலத்து கராத்தே பழகி மஞ்சள் பட்டி எடுத்த நினைவுடன் குனிந்திருந்தபடியே வலது காலை எடுத்து அழுத்தமாக அந்த முகமூடியின் முகத்தில் உதைந்தான்;. அவனது உயரம் குறைவாக இருந்ததால் கழுத்துக்கு வைத்த குறிதவறி உதை நெற்றியில் பலமாக விழுந்தது. தாக்கியவன் இதை எதிர்பார்க்கவில்லை. நிலைகுலைந்து நிலத்தில் விழாமல் குனிந்து தரையில் இடது கையை ஊன்றியபடி வலது கையில் கத்தியை வைத்துக்கொண்டு விலகி அந்த ரயர் கடை நோக்கி ஓடிச் சென்றான். நெற்றியில் உதை விழுவதை அவன் எதிர்பார்க்காததால் வந்த விடயத்தை முடிக்காது தப்புவதில் அவனது கவனம் இருந்தது. இரஞ்சன் அணிந்திருந்த வெள்ளை சேர்ட்டை காயத்திலிருந்து பெருகிய இரத்தம் வட்டமாக முதுகில் நனைத்து பின்பு நிலத்தை நோக்கி வலதுகால் வழியே வடிந்து கொண்டிருந்தது. ‘குத்திவிட்டான் குத்திவிட்டான்’ என ஆங்கிலத்தில் அலறியபடி நேராக பிரதான பாதையை நோக்கியோடி வந்து நடுத்தெருவில் அவன் விழுந்தான். அதற்கு மேல் கண்ணுக்கு எதுவும் தெரியவில்லை. சூரியன் அந்த மதியத்தில் அஸ்த்தமித்து கரிய இரவு உலகத்தை கவ்விக் கொண்டது. நிர்மலமான மேகம் அந்த வெண்பஞ்சு மேகங்கள் தீடீரென மறைந்துவிட்டன. அந்தகாரமான இருட்டு எங்கும் நிறைந்தது. எதுவும் கண்ணுக்கு தெரியாத போது செவிப்புலன் அதிகமாகியது. ஆரம்பத்தில் அன்ரனா வேலை செய்யாத தொலைகாட்சி பெட்டிபோல் இரைந்து சிறிது நேரத்தில் பல ஓசைகள் கேட்கத் தொடங்கியது. வேகமான வாகனங்கள் நிறுத்தும்போது பிரேக்குகள் உராயும் ஓசை அதைத் தொடர்ந்து நிறுத்தும் வாகனக்கதவுகள் கதவை மூடும் ஓசை என பல்வேறு ஓசைகள் தொடர்ந்து ஒலித்தது. பேச்சுக்குரல்கள் புரியாத பல மொழிகளில் கேட்;டது. சில நிமிடத்தில் மெதுவாக ஓசைகள் அடங்கி அந்த இடம் அமைதியாகியது. உடல் இலேசாக மேலெழுந்து கனவுலகத்தில் வான்வெளியில் பறவை ஒன்றைப்போல் சிறகை அடித்து ஓசை எழுப்பாமல் பறப்பதுபோல் இருந்தது. ஈரமான மேக கூட்டத்தின் அணைப்பால் உடல் குளிர்வது போன்று இருந்தது. அந்த குளிரில் உடல் மரத்த போது ஆழ்மனம் விரிந்து கொண்டது. என்னைக் குத்திய பச்சை முகமூடி மனிதன் யாராக இருந்தாலும் அதற்கு பின்பாக இருந்தது அன்று நடந்த சம்பவமே. குத்தியது யார் என்ற தெரியாவிட்டாலும் அதற்கு மூலகாரணம் எனது நண்பன், இல்லை மாஜி நண்பன் பட்ரிக் வொங் என்பது நிச்சயம்.; நான் இறந்தால் யாருக்கு இந்த உண்மை தெரியவரும்…? இனந்தெரியாத ஒருவரால் கொலை அல்லது மர்ம நபரால் கொலை என்ற தலைப்பில் பத்திரிகையில் செய்தி வந்தபின்பு சிலகாலம் விசாரணை செய்துவிட்டு – பொலிஸ் அந்த வழக்கின் கோப்பை மூடிவிடுவார்கள். விக்டோரியா மாநிலத்து கண்டுபிடிக்கப்படாத கொலைகளின் பட்டியலில் அடங்கிவிட்டால் குற்றவாளிகள் தப்பிவிடுவார்கள். யார் இந்த பட்ரிக் வொங்…? எனக்கும் அவனுக்கும் என்ன தொடர்பு…? இலங்கையில் இருந்து குடிபெயர்ந்த எனது குடும்பம், மலேசியாவில் இருந்து குடிவந்த சீன இனத்து பட்ரிக்கின் குடும்பத்தை, பத்து வருடங்கள் முன்பாக அவுஸ்;திரேலியாவில் மேற்கு கரையோரத்தில் அமைந்த சிறியநகரத்தில்; சந்தித்தது.; எங்கள் குடும்பத்தினரைத் தவிர அவனது குடும்பமே வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள். மற்றவர்கள் வெள்ளை நிற அவுஸ்திரேலியர்கள். எனது மனைவியுடன் அவனது மனைவி சூசன் ஒன்றாக வைத்தியசாலையில் வேலைசெய்தார்கள். இதனால் அவர்கள் இடையே ஒரு சினேகிதம் உருவாகியது. இதைவிட எனது மகனும் பட்ரிக்கின் மகனும் ஒரே வகுப்பில் படித்ததுடன் நெருங்கிய நண்பர்களுமாகிவிட்டார்கள். பிள்ளைகள் ஒரே வகுப்பில் படித்தபோது ஏற்பட்ட நட்பினால் இரு குடும்பங்களும் ஒருவர் வீட்டிற்கு ஒருவர் சென்று உணவருந்துவது வரை உறவு வளர்ந்தது. பட்ரிக்கின் மனைவி உளவியல் மருத்துவர். பட்ரிக் மலேசியாவில் மருத்துவ மிசின்களை மார்கட்டிங் செய்யும் பிசினஸ்சில் வேலை செய்திருந்தாலும் அவுஸ்திரேலியாவில் அவனுக்கு ஏற்ற வேலை கிடைக்காததால் பிள்ளைகளை பாடசாலைக்கு அழைத்துச் செல்வது சமையல் செய்வது என குடும்ப பொறுப்புகளை சுமந்தான். நானும் இலங்கையில் வைத்தியராக இருந்தாலும் அவுஸ்திரேலியாவில் தேர்ச்சிபெறவில்லை. வேலை கிடைக்காததால் அவனைப்போல் குடும்ப வீட்டு வேலைகளை செய்துகொண்டு படித்தேன். வெளிநாடுகளில் இருந்து குடியேறிய நாங்கள் எதிர்கொண்ட சவால்கள் பொதுவாக இருந்ததால் பட்ரிக்கின் நட்பு இணைந்தது. அவனிடம் பெருமளவு பணத்தை சம்பாதிக்க வேண்டும் என்ற அவாவால் பல வியாபார விடயங்களைப்பற்றி எப்பொழுதும் பேசியபடி இருப்பான். வசதியாக இருந்த நீ ஏன் மலேசியாவை விட்டு வந்தாய்…? எனக்கேட்டபோது பிள்ளைகளின் கல்விக்காக என்பான். வேலையில்லாததிலும் பார்க்க மனைவியின் சம்பாத்தியத்தில் இருப்பது அவனுக்கு குறையாக இருந்தது. அந்த நாள் என்னால் வாழ்நாளில் மறக்க முடியாதது. ஞாயிற்றுக்கிழமை. மாலைநேரத்தில் சிறிய விருந்திற்காக அவர்களை எங்கள் வீட்டிற்கு அழைத்திருந்தோம். எங்கள் வீட்டிற்கு உணவிற்கு வந்தபோது பட்ரிக்கின்; மனைவி சூசனை முதல்முறையாக சந்தித்தபோது கண்ணை எடுக்க முடியவில்லை. லொரியில் அடிபட்டு நசுங்கிய அலுமினிய பாத்திரம் போன்ற முகம் கொண்ட பட்ரிக் போன்றவனுக்கு இவ்வளவு அழகான தேவதை கிடைத்திருக்கிறாளா என்பது சிறிது பொறாமையாகவும் இருந்தது. பல முறை பார்க்க வைக்கும் அழகுத்தேவதை அவள். எனது மனைவியுடன் அவள் மேல்மாடியில் இருந்து பேசிவிட்டு வரும்போது எதேச்சையாக அவளை மாடிப்படிகளில் சந்தித்தேன். அவளுக்கு சாதாரணமாக ஹலோ என்றதும் அந்த மாடிப்படியின் கைப்பிடியில் பிடித்தபடி உடலின் முழுப்பாரத்தையும் என்னில் பதித்து முத்தமிட்டாள். அப்பொழுது உதட்டுடன் தனது பற்களையும் சேர்த்து கவ்விக்கொண்டாள். எனது உடலில் மலைப்பாம்பின் இறுக்கம் தெரிந்தது. ஒருகணம் என் சுவாசத்தை மறந்துவிட்டேன். உதட்டில் அந்த ஈரமான முத்தம் என்னை நிலை குலைய வைத்தது. அத்துடன் அவளது பற்கள்; கீழ் உதட்டில் உள்பகுதியில் அழுத்தமாக பதிந்தன. மெதுவாக அவளின் தோளில் கையை வைத்து அவளை விலத்தினேன். ஐரோப்பியர் வீட்டின் உள்ளே வரும்போது முத்தமிடுவார்கள். அதுவும் கன்னத்தில் மட்டும்தான். இவள் இப்படி உதட்டில் பல்லைப்பதித்து முத்தமிடுகிறாளே….? நல்லவேளையாக மாடிக்கு செல்லும் படிகளில் அதிகம் வெளிச்சமில்லை. மேலும் மாடிப்படியின் திருப்பத்தில் அன்று எரியும் மின்குமிழ் தன் உபயோகத்தை நிறுத்தியிருந்தது நன்மைக்கே. பட்ரிக்கோ எனது மனைவியோ அந்த இடத்தைப் பார்க்கமுடியாது என்பது சுவாசத்தை இலகுவாக்கியது. மெதுவாக உடல் அதிர்வு குறைந்தபின் குளியலறைக் கண்ணாடியில் உதட்டைப் பிரித்து பார்த்தபோது மெதுவான இரண்டு சிவந்த காயங்கள் தெரிந்தது. காயம் அவளை பலமாக தள்ளியதால் ஏற்பட்டிருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டு பட்ரிக்கை நேரடியாக பார்ப்பதை தவிர்த்தேன். அவளது முத்தம் தொடர்ச்சியாக இரவில் வந்து அவளை நினைவிலும் கனவிலும் கொண்டுவந்தாலும் நட்பும் பயமும் சேர்ந்து கொண்டதால் சூசனை சந்திப்பதை அன்றிலிருந்து தவிர்த்துக் கொண்டேன். என்னால் செய்யக்கூடியது அதுமட்டும்தானே? சிலநாட்களிற்கு பின் பட்ரிக் ஒரு நாள் கேட்டான். ‘உன்னை சூசன் முத்தமிட்டாளா….’ ‘இல்லை’ என மறுத்தேன் சிரித்தபடி. ‘கவனமாக இரு. சூசன் வித்தியாசமான பெண்’ என்றான் பட்ரிக். இவன் தனது மனைவியை பற்றி இப்படிச்சொல்வது புதிராக இருந்தது. ஆனால் எப்படி மேலே விளக்கம் கேட்கமுடியும்…? இதன் பின்பு நான் பரீட்சையில் தேர்வானதால் மெல்பனில் வேலை வந்தது.. அந்தச் சிறு நகரத்தை விட்டு விலகி குடும்பமாக மெல்பனுக்கு குடிவந்தோம். சில வருடங்களின் பின்பாக எனக்கு எதிர்பாராமல் ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசியவன் பட்ரிக். குடும்ப சுகத்தை விசாரித்துவிட்டு ‘ஒரு புதிய கம்பனியின் சார்பாக நான் தாய்லாந்து போகிறேன் அங்கு எனது செலவில் உன்னால் வரமுடியுமா…?’ எனக்கேட்டான். வேறொருவரது பணத்தில் விடுமுறை எடுக்க யாருக்குத்தான் கசக்கும்….? அவன் கூறிய நாட்கள் எனது வேலையில் ஈஸ்டர் விடுமுறை காலமானதால் மனைவியிடம் அனுமதி பெற்று அவனுடன் சென்றேன். பாங்கொக் சென்றதும் அவனது வேலை எது என்பது புரியத் தொடங்கியது. தாய்லாந்திலிருந்து பெண்களை படிப்பதற்காக அவுஸ்திரேலியாவுக்கு எடுப்பது – பின்பு அவர்களை விபசார விடுதிகளில் வேலை செய்யவைத்து பணம் பண்ணுவது. இந்த வியாபாரத்தில் இவன் ஏஜென்டாக தொழில் செய்தான். இதைச் செய்வதற்காக அவனுக்கு இரண்டு இடத்திலிருந்து கமிஷன் கிடைக்கிறது. கல்வி நிலையங்கள்…. மற்றது பெண்கள் வேலை செய்யும் விபசாரவிடுதிகள்.; இதைத் தெரிந்துகொண்டதும் ‘பட்ரிக் ஆளைவிடு… உனது விமானச் சீட்டுப்பணத்தை திருப்பி தருகிறேன்…. நான் திரும்பிப் போகிறேன்” என்றேன். ‘ஏற்கனவே பாங்கொக்கில் தொழில் நடத்துபவர்களைத்தான் நான் எடுக்கிறேன். இவர்கள்;அதிக பணத்தை அவுஸ்திரேலியாவில் உழைத்தபின் விரைவில் இந்த வேலையில் இருந்து விடுமுறை எடுத்துவிடுவார்கள். இவர்களுக்கு நான் முன்னேறும் வழியை காட்டுகிறேன். என்னைப் பொறுத்தவரையில் நான் இவர்களுக்கு மார்கட்டிங் ஏஜென்ட்.’ என்றான். மலேசியாவின் மருத்துவ மிசின்களுக்கு, இப்பொழுது விபசாரம் நடதுவதற்கு என சொல்லி அவனை சீண்டினாலும் ஏற்கனவே ஹோட்டலில் முன்று நாட்கள் தங்குவதற்கு அறையும் அவனால் எடுக்கப்பட்;டதாலும் அவனது தர்க்கத்தில்; நியாயம் சிறிது இருந்ததால் பாங்கொக்கில் மூன்று நாட்கள் தங்கினேன்.; அவன் பாங்கொக்கின் கிளப்புகள் மசாஜ் செய்யும் இடங்களுக்குச் சென்று பெண்களை சந்தித்து விபரங்களை பெற்றபோது எந்த இடத்திலும் தனிப்பட்ட உறவுகளை அந்தப்பெண்களிடம் ஏற்படுத்திக் கொள்ளவில்லை என்பது எனக்கு ஆச்சரியத்தைக் கொடுத்தது. என்னையும் பாங்கொக்கை சுற்றிப் பார்த்துவிட்டுவா எனச்சொல்லி அந்த மூன்று நாளும் வெளியே சுற்றுலா அனுப்பிவைத்தான். புத்த கோயில் அரச அரண்மனை மிதக்கும் மார்கட் என அந்த மூன்று நாட்கள் நான் ஊர் சுற்றினேன். ஒருநாள் இரவு அவனது நடத்தையைப்பற்றி நான் பிரஸ்தாபித்தபோது ‘சூசனிலும் பார்க்க ஒரு அழகியை சந்தித்தால் சொல்லு’ என்றான். அவனது அந்த வார்த்தை ஓரிரு தடவை கோவலனாக விரும்பிய எனது சபலத்தைக் கொன்றுவிட்டது. கேவலமான தொழிலிலும் அவன் ஒரு அறத்தை கடைப்பிடித்தது எனக்குப் பிடித்தது. மெல்பனுக்கு வந்தவுடன் அவனது தொடர்பைத் துண்டித்தேன். இருவருக்கும் அறிமுகமான ஒருவர் மூலம் அவன் இப்பொழுது மிகவும் வசதியாக மெல்பனில் செல்வந்தர்கள் வாழும் பகுதியில் வீடு வாங்கி வாழ்வதாக அறிந்து கொண்டேன். திடீரென ஒரு நாள் ஒரு உணவு விடுதிக்கு அழைத்து உபசரித்தான். தனது பிறீவ்கேசில் இருந்து உருவிய பெரிய அல்பத்தை விரித்து அதில் பல அழகான பெண்களின் படத்தைக் காட்டினான். பலவிதமான உடைகளில் கண்ணைக் கவரும் தோற்றத்துடன் பல ஆசிய நாட்டுப் பெண்கள் இருந்தார்கள். ‘இது என்ன…? ‘இப்பொழுது நாங்கள் சொந்தமாக ஜென்ரில்மன்கிளப்பொன்று தொடங்கி இருக்கிறோம் அதற்கு உனக்கு எனது பிரத்தியேகமான அழைப்பிதழ் என்று சொல்லி நமது சமூகத்தில் பிள்ளைகளின் திருமண அழைப்பிதழ் தரும் பெற்றோர்கள்போல் மிகவும் பெருமிதம் பொங்கத் தந்தான். அந்த அழைப்பிதழில் இருந்த ஜிகினா துகள்கள் எனது விரல்களில் ஒட்டிக்கொண்டது. பழைய நண்பன் என்னை அவனது புதிதாக திறக்கபட்ட கிளப்பிற்கு வரும்படி அழைக்கிறான். மனதில் சஞ்சலம் ஏற்பட்டது. மனதில் போவதற்கு முற்றாக ஒப்புதல் இல்லை சிலவாரங்கள் கடந்தபோது மீண்டும் தொலைபேசியில் அழைத்தான். மறுக்க முடியாமல் அவனது ஜென்ரில்மன் கிளப்பிற்கு ஒரு சனிக்கிழமை சென்றேன். அந்த கிளப் மெல்பனின் தென்பகுதியில் ஒதுக்கமான பகுதியில் அமைந்திருந்தது. உள்ளே சென்றபோது மெதுவான இருள் கவிந்து மதுவின் நெடி பரவியிருந்தது. அதைவிட மென்மையான இசை ஒலித்தது. மதுவினியோகம் நடக்கும் ஒரு நட்சத்திர ஹோட்டலின் வரவேற்பு பகுதிபோல் தோற்றமளித்தது. அங்கு மதுஅருந்தும்போது இளம்பெண்கள் உங்களுடன் வந்து பேசுவார்கள் என்பதை தெரிந்துகொள்ள முடிந்தது. நான் ஒரு பியரை வாங்கி மூலையில் உள்ள சோபாவில் அமர்ந்து குடித்துக் கொண்டிருக்கும்போது கல்லூரி மாணவிபோல் இருந்த சீனப்பெண்ணை பட்ரிக் அழைத்து வந்து அறிமுகப்படுத்தினான். பட்ரிக் மது அருந்துபவன் அல்ல எனவே ‘அனுபவி’ என சொல்லிவிட்டு சென்றான். பட்ரிக் விலகிச் சென்றதும் லின் என அறிமுகப்படுத்திய அந்தப் பெண்ணுடன் பேசமுடியவில்லை. தொடர்ந்து புன்னகைத்தாள். அவளுக்கு ஆங்கிலம் தெரியாது. எனக்கு சீன மொழி தெரியாது. சிரித்தபடி பியரை முடித்ததும் மது அருந்தும் இடத்தில் இருந்து இடப்பக்கத்தில் உள்ள சிறிய வாசலூடாக சிறிது இருளான பகுதியால் கையைப் பிடித்து அழைத்துச் சென்று ஒரு அறைக்குள் வந்தாள். அங்கு கட்டிலுடன் குளியலறை இருந்தது. சாதாரணமாக குளிக்க மட்டும் ஆற்றுக்கு செல்லும் ஒருவனை நீந்துவதற்கு தள்ளுவதற்கான விடயத்தை புரிந்து கொள்ளமுடிந்தது. லின் தொடர்ந்து புன்னகைத்தபடி தனது மேல் ஆடையை மட்டும் விலக்கினாள். காமத்துக்காக வந்த ஆண்களுடன் பேசவேண்டிய தேவையில்லை என அவள் கருதியிருக்கவேண்டும். முன்பக்கத்தை காட்டியபடி நின்றவள் திரும்பியபோது அவளது தோளின் பின்புறத்தில் வட்டமான நகம் பதித்தது போன்ற நான்கு காயங்கள் இருந்தன. காயத்தை சுற்றிய வட்டமான லவண்டர் நிறம் குறைந்தது இரண்டு அல்லது மூன்று நாட்கள் முன்பாக ஏற்பட்டிருக்கவேண்டும். மருத்துவரான எனக்கு அவை முன்பற்களால்; ஏற்பட்டது எனப் புரிவதற்கு அதிக நேரம் எடுக்கவில்லை. அவளை மேலும் உடைகளை களையவேண்டாமென சைகை காட்டினேன். மிகவும் குறைந்த ஆங்கிலத்தில் அவள் பேசிய போது எனக்குப் புரிந்த விடயம்:- லின் ஷங்காயில் இருந்து படிப்பதற்காக ஒரு கிழமை முன்பாக மேற்கு அவுஸ்திரேலியா வந்ததாகவும் நேற்றைய தினம் இங்கு வந்து சேர்ந்ததாகவும் சொன்னாள். இங்குள்ள பெண்கள் ஒரு நாளைக்கு பதினைந்து பேருடன் உடலுறவு கொள்வதாகவும் மூன்று மணி நேரம் மட்டும் தூங்குவதாகவும் அவ்வாறு தன்னால் செய்யமுடியாது என்றும் அழுதாள் அவளது உடலில் முக்கியமாக இடையின் கீழ் சிவந்த தடிப்புகளும் அவளது கூற்றின் உண்மையை உரைத்தன. அவள்மேல் ஏற்பட்ட பரிதாபத்தால் நெஞ்சு கனத்தது. அவளுக்கு உதவி செய்வதற்கு உறுதியெடுத்துக்கொண்டேன். ‘உனக்கு நான் என்ன செய்யமுடியும்…?’ ‘நான் தப்ப விரும்புகிறேன். அடுத்த ஞாயிற்றுக்கிழமை மதியமளவில்; எனக்கு உதவமுடியுமா…? அந்த நேரத்தில் வாடிக்கையாளர் குறைவு” என்றாள். ‘முயற்சிக்கிறேன்’ என்றபோது அழுதபடி காலில் விழுந்தாள். இவ்வளவு காலமும் அடங்கியிருந்த மனிதமும் மூதாதையர் ஒருவரிடம் இருந்து வந்து எனது நிறமூர்த்தத்தில் ஒளிந்துகொண்டிருந்த வீரமும் ஒன்றாகி லின்னிடம் உதவி செய்வதாகச் சொல்லி ‘ஞாயிறு பதினொரு மணிக்கு வெளியே வா மிகுதியை பார்த்துக்கொள்வோம்’ என்றேன் லின்னின் தப்புதல் விடயம் ஏதோ காரணத்தால் வெளிப்பட்டிருக்கவேண்டும். அதற்கு நான் உடந்தை என்பதால் என்னை பழி வாங்கியிருக்கிறான் பட்ரிக். —- வேகமாக ஷைரனை ஒலித்தபடியே மற்றய வாகனங்களைப் புறந்தள்ளியபடி சென்ற அம்புலன்ஸ் வைத்தியசாலையின் வாசலில் நின்றதும் அங்கிருந்து ஸ்ரெச்சரில் தள்ளி ஒப்பரேஷன் தியேட்டருக்கு செல்வது தெரிந்தது.. ஏற்கனவே பொலிஸ் வந்து சேர்ந்தது இப்பொழுது எனது ஒரே நோக்கம் ஆஸ்பத்திரியை விட்டு விலகி வேகமாக பட்ரிக்கின் வீடு செல்லவேண்டும்.;இந்த சம்பவத்தில் பட்றிக் தப்பி விடாமல் பொலிசில் பிடிபடுவது மட்டுமல்ல அவனது கேவலமான பெண்கடத்தல் தொழிலையே காட்டிக் கொடுக்கவேண்டும். அதன்மூலம் ஏராளமான இளம்பெண்கள் பாதுகாக்கப்படுவார்கள் என்ற பொதுவான சிந்தனையும் நண்பன் என்று கூட பார்க்காமல் கொலைசெய்ய துணிந்த பட்ரிக்கை பழிவாங்கவேண்டும் என்ற உணர்வு பீறி எழுந்தது. எப்படி இந்த கிளப்பை நடத்துகிறான் என்ற சூட்சுமத்தை அறிந்து கொண்டால்த்தான் பல கேள்விகளுக்கு விடைகிடைக்கும் என்பதால் மெல்பனின் கிழக்குப் பகுதியில் இருந்த அவனது வீட்டை நோக்கி சென்றேன். ‘முட்டாளாக நீ நடந்ததற்கு அவன் மட்டும் பொறுப்பல்ல. விபசாரவிடுதிக்குபோனது உனது தவறு ‘தவறுகளைப்பேச இது சந்தர்ப்பமில்லை’ ‘உயிரே போகிற இந்தவேளையிலாவது பேசாது இனி எப்போது — பாங்கொக்கில் அவனது தொழில் என்னவென தெரிந்தபின் அவனுடன் நட்பை துண்டித்திருக்கவேண்டும். இல்லை ஜன்ரில்மன் கிளப் என்பதை புரிந்து அங்கு போகாமல் இருந்திருக்க வேண்டும். அதை விட லின் இழுத்தபோது ஏன் அவளைத் தொடர்ந்தாய்? சபலம்தானே. சரி எல்லாவற்றையும் ஏற்றுக்கொண்டாலும் நீர் பெரிய மயிரே? ஏன் பொலிசில் சொல்லி விட்டு வீட்டில் இருந்திருக்க முடியாது…? ‘ ‘தற்போது விடயத்தை துப்பறியவேண்டும். என்னை கொலைசெய்ய ஆள் அனுப்பியதற்கு பழிவாங்கவேண்டும். சட் அப் என்னைத் துளைத்தெடுக்காதே’ தவறுகளை சுட்டிக்காட்டிய மனச்சாட்சியிடம் சொல்லிவிட்டு கீழே பார்த்தபோது மெல்பனின் வீதிகளில் அதிகவாகனங்கள் என குறைப்படுபவர்கள் வான்வெளி எவ்வளவு நெருக்கடியானது என்பதை புரியாதவர்களே. எத்தனைபேரை இடித்தபடி முன்னேறவேண்டி உள்ளது. புவியில் இருப்பவரை விட இல்லாதவர்கள் பல மடங்கு என்பது எவ்வளவு உண்மை. ‘அப்பப்பா மேலே இப்படி இருக்கிறதே…?’ மதியத்தில் கீழே பாதைகள் ஓரளவு அமைதியாக இருந்தது. ஏற்கனவே விலாசம் தெரிந்தபடியால் பட்ரிக்கின் வீட்டை அடையாளம் காணுவது இலகுவாக இருந்தது. அதோ அந்த நீச்சல்குளத்துடன் உள்ள வீடு. மிகவும் அழகான புல்தரையும் தோட்டமும் இருந்தது. வாசலில் கருப்பும் வெள்ளையுமாக இரண்டு பென்ஸ்கார்கள் நின்றன. வீட்டினுள் செல்வது பிரமாதமான விடயமாக இல்லை. கீழே ஒரு அறையில் ஏற்கனவே அறிமுகமான பட்ரிக்கின் மகள் லில்லி இருந்தாள். அவள் இப்பொழுது பல்கலைக்கழகத்தில் படிக்கிறாள். தாயைப்போல் அழகானவள். அவளிடம் மானசீகமான மன்னிப்பை காற்றில் பறவையின் இறகுபோல் உதிர்த்துவிட்டு மேல்மாடியில் சென்று பார்த்தேன். அங்கு ஐந்து அறைகள் எல்லாம் பூட்டியிருந்தது. அறைகளை ஒவ்வொன்றாக பார்த்தபோது எவருமில்லை. எங்கும் பட்ரிக்கோ சூசனோ தென்படவில்லை வெளிநாட்டுக்கு சென்றுவிட்டார்களா…? படுக்கையறையின் கட்டிலின் பக்கத்தில் சிறிய அலுமாரியிருந்தது . அதன்மேல் கண்ணாடிச்சட்டம்போடப்பட்ட அவுஸ்திரேலிய கம்பனி சான்றிதழ்; இருந்தது. அதில் ஜென்ரில்மன் கிளப் —சூசன் வொங் தனி உரிமையாளர் என எழுதப்பட்டிருந்தது. அதற்குப் பக்கத்தில் இருந்த எலக்ரோனிக் போட்டோ அல்பம் பெண்களது விதம் விதமான படங்களுடன் கணத்துக்கு ஒருமுறை மாறிக்கொண்டிருந்தது. கடைசியாக வந்த முகத்தை பார்த்தபோது அதில் சூசனும் எனக்கு அறிமுகமான வேறு ஒரு பெண்ணும்; நீச்சல் உடையில் மிகவும் நெருக்கமாக ஒருவரை ஒருவர் அணைத்தபடி இருந்தார்கள். சில நிமிட நேரத்தில் அந்தப் போட்டோ மீண்டும் வந்தபோது மூளையை கசக்கி பார்த்தபோது கடந்த கிழமை பார்த்த லின்னின் படமாக தெரிந்தது. அந்த இடத்தில் உறைந்துவிட்டேன் யாரோ வாசல் கதவு திறக்கும் சத்தம் கேட்டது. வெளியேறி மீண்டும் வைத்தியசாலைக்கு வந்தபோது வாசலில் இரண்டு பொலிசார் மனைவியையும் மகனையும் விசாரித்தபடி இருந்தனர். அவர்களை விலத்திக்கொண்டு அவசரமாக சேர்ஜரி தியேட்டர் உள்ளே சென்றபோது மூடியிருந்த தியேட்டரில் வைத்தியர்கள் கூட்டமாக ஆப்பரேசன் மேசையில் சரிவாக வைத்த உடலுக்கு பிராணவாயுவை கொடுத்தபடி நின்றார்கள். வலது முதுகில் பாண்டேஜ் இருந்தது. நெஞ்சின் நடுப்பகுதியில் பெரிய காயம் தைக்கப்பட்டிருந்தது. நெஞ்சை திறந்து ஆப்பரேசன் செய்திருக்கிறார்கள் எனத் தெரிந்தது. ‘இது மிகவும் அபூர்வமானது. ஆப்பரேசன் முடிந்து இவ்வளவு நேரமாகியும் ஏன் சுவாசம் வரவில்லை. இதயத்தின் வால்வுகளை மாற்றினாலே உடன் சுவாசிக்க தொடங்கிவிடுவார்களே. இது நுரையீரலின் ஒருபகுதியை எடுத்தது மடடுமே சுவாசத்தை ஏற்படுத்த மருந்தை ஏற்றுவோமா…? ‘ இன்னமும் இரத்தம் தோய்ந்த கையுறை அவரது கைகளில் இருந்தது. அவரே சேர்ஜனாக இருக்கவேண்டும். ‘இல்லை கொஞ்சம் பொறுக்கலாம். இதயம் பலமாக துடிக்கிறது’ என்று விட்டு பலூன்போன்ற ஒன்றை அமத்தியபடி பதில்கொடுத்தார். அவர் மயக்கமருந்து கொடுப்பவர். இப்பொழுது செயற்கை சுவாசம் கொடுக்கிறார் இனிமேல் தாமதித்தால் பட்ரிக்கையும் சூசனையும் பற்றிய விடயத்தை பொலிசில் சொல்லி அந்த அப்பாவி லின்னை காப்பாற்ற முடியாது போய்விடும். என்னையும் ஒப்பரேஷன் வெற்றி ஆனால் உயிர் பிரிந்து விட்டது எனச் சொல்லி முகத்தை மூடிவிடுவார்கள. மூக்கருகில் சென்று அந்த சுவாசிக்காத உடலின் நாசியோடு உள்ளே சென்றேன். களிமண்ணில் ஆதாமை உருவாக்கிய இறைவன் குனிந்து மூக்கில் ஊதி உயிர் கொடுத்த சம்பவம் அக்காலத்தில் மட்டுமா நடந்தது? ‘பேசன்ட் சுவாசம் இப்பொழுது தானாக நடக்கிறது இனிப் பயமில்லை’ என்று மயக்க மருந்தை கொடுக்கும் வைத்தியர் வாயில் இருந்த குளாயை இழுத்தார்.
இந்த டெம்ப்ளேட்டை எப்படி நாம் Kinemaster எடிட் செய்வது என்று இப்பொழுது நாம் பார்க்கலாம் முதலில் இதற்கு பயன்படுத்தக்கூடிய டெம்ப்ளேட்டை டவுன்லோட் செய்யவும் எப்படி டவுன்லோட் செய்ய வேண்டும் என்று மேலே கொடுக்கப்பட்டுள்ளது டவுன்லோட் செய்து முடித்த பிறகு Kinemaster App ஓபன் செய்யவும் பிறகு சென்டரில் உள்ள பிளஸ் ஐகானை கிளிக் செய்து எடிட்டிங்கை தொடங்கவும் முதலில் பக்கத்தில் மேலே மீடியா என்று ஒரு ஆப்ஷன் இணைப்பில் இருக்கும் அதை கிளிக் செய்து உங்களுக்கு தேவையான இமேஜ் அல்லது வீடியோவை உள்ளே இம்போட் செய்யவும் செய்து உடன் Cut ஆக்ஷன் பக்கத்தில் பிரேம் ஐகான் இருக்கும் அதை கிளிக் செய்து இமேஜை சென்டர் பொஸிஷனில் செட் செய்யவும் அதற்குப் பிறகு டிக் செய்து விடவும் அதற்குமேல் Layar கிளிக் செய்து Layer வரும் மீடியாவை கிளிக் செய்து நீங்கள் டவுன்லோட் செய்த டெம்ப்ளேட்டை வீடியோவை இம்போட் செய்யவும் அதை கிளிக் செய்து அதற்கான எடிட்டிங் டூல்ஸ் எல்லாம் ரைட் சைடில் வரும் அதில் கிளி ஸ்குரோல் செய்தால் அதில் பிலண்டிங் என்று ஒரு ஆப்ஷன் இருக்கும் அதை கிளிக் செய்து அதற்குள் Screen என்று ஒரு ஆப்ஷன் இருக்கும் அதை கிளிக் செய்து கொள்ளவும் அதற்கு பிறகு கொஞ்சம் மேலே ஸ்குரோல் செய்தால் அதில் அட்ஜஸ்ட்மெண்ட் என்று ஒரு ஆப்ஷன் இருக்கும் அதை கிளிக் செய்து அதில் இருக்கும் கடைசி பர்சன்டேஜ் கூட்டம் கூட்டி முடித்ததும் டிக் செய்யவும் அதற்குப் பிறகு அந்த வீடியோவிற்கு நீங்கள் என்ன பாடல் வைக்க வேண்டுமென்று விரும்புகிறீர்களோ அந்தப் பாடலை அதற்கு Add செய்யவும் இப்பொழுது பாடநுால் செய்யலாம் அதற்கு நீங்கள் இருக்கும் இடத்திலேயே ரவுண்ட் ஐகானில் ஆடியோ என்று ஒரு ஆப்ஷன் இருக்கும் அதை கிளிக் செய்து உங்களுக்கு பிடித்த பாடலை உள்ளே அட் செய்யலாம் அதற்கு பிறகு வீடியோவை எப்படி எக்ஸ்போர்ட் செய்வது என்று இப்பொழுது பார்க்கலாம் லெஃப்ட் சைடில் Share ஐகான் இருக்கும் அதை கிளிக் செய்து உங்களது வீடியோக்களை நீங்கள் எக்ஸ்போர்ட் செய்து கொள்ளலாம் அது உங்களது கேலரியில் சேவ் ஆகிவிடும் அதற்கு பிறகு உங்கள் சோசியல் மீடியாவில் நீங்கள் அதை பதிவிடலாம். How to Download Template நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் இந்த Page சில குறிப்புகள் கை மாஸ்டரைப் பற்றி இருக்கும் அதற்குக் கீழ் ஸ்குரோல் செய்து சென்றார் கீழே 30 Second Wait செய்து டவுன்லோட் செய்து கொள்ளலாம். How to Use KineMaster WhatsApp Status Video, YouTube Intro Video,Text Animation, Picture Moving Animation and more இவை அனைத்தையும் கைன் மாஸ்டர் ஒன்றில் மிக சுலபமாக எடிட்டிங் செய்யலாம் இந்த ஆப்பை எப்படி நாம் பயன்படுத்தலாம் என்று இப்பொழுது பார்க்கலாம் Kinemaster எனப்படும் பெயரிலுள்ள ஆப் நாம் மொபைலில் இருந்து எடிட் செய்வதற்காக பயன்படுத்தக்கூடிய App இப்பொழுது ஒரு வீடியோவை எடிட் செய்ய வேண்டுமென்றால் சுலபமான முறையில் எடிட் செய்யலாம் அதற்கு இந்த Kinemaster எனப்படும் App நமக்கு உதவியாக இருக்கிறது நமக்குப் பிடித்த ஒரு புகைப்படத்தையோ அல்லது வீடியோவை வைத்து மிக சுலபமாக மொபைலில் இருந்து நாம் எடிட்டிங் செய்யலாம் இந்த App வைத்து வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வீடியோக்களை உருவாக்குவது எப்படி என்று யூடியுப் வீடியோக்களை அப்லோடு செய்யப்பட்டுள்ளது யூடியூப் சேனலில் பெயர் MV Creation Tamil இந்த யூடியூப் சேனலில் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வீடியோக்களை எப்படி உருவாக்குவது என்று தமிழில் வீடியோக்கள் அப்லோட் செய்யப்பட்டுள்ளது அந்த வீடியோக்களை நீங்கள் பார்க்க வேண்டுமென்றால் இந்த click here லிங்கை கிளிக் செய்து நீங்கள் யூடியூப் சேனலுக்கு செல்லமுடியும் அங்கு வீடியோக்கள் 200க்கும் மேற்பட்ட வீடியோக்கள் அப்லோட் செய்யப்பட்டுள்ளது அந்த வீடியோக்களை பார்த்து எப்படி Kinemaster ஐ வைத்து எடிட் செய்ய வேண்டுமென்று நீங்கள் தெரிந்து கொள்ளலாம் . How To Add Song இந்த வீடியோவை எடிட் செய்து முடித்த பிறகு அதில் எப்படி பாடலை இணைப்பது என்று இப்போது பார்ப்போம் உங்களது வீடியோவை எடிட் செய்து முடித்த பிறகு மீடியா லேயர்ஸ் என்று அந்த சர்க்கிள் இருக்கும் அதில் ரைட் சைடில் ஆடியோ என்று ஒரு ஐகான் இருக்கும் அதை கிளிக் செய்து உங்களது பாடலை ஹாய் செய்துகொள்ளலாம். How To Kinemaster Video Export வீடியோவை எப்படி எக்ஸ்போர்ட் செய்வது என்று இப்பொழுது பார்க்கலாம் லெஃப்ட் சைடில் Share ஐகான் இருக்கும் அதை கிளிக் செய்து உங்களது வீடியோக்களை நீங்கள் எக்ஸ்போர்ட் செய்து கொள்ளலாம் அது உங்களது கேலரியில் சேவ் ஆகிவிடும் அதற்கு பிறகு உங்கள் சோசியல் மீடியாவில் நீங்கள் அதை பதிவிடலாம். KineMaster About KineMaster என்பது இந்த ஒரு ஆப் வீடியோ எடிட்டிங் காக யூஸ் செய்யக்கூடிய ஒரு ஆப் இதனை பயன்படுத்தி வீடியோ எடிட்டிங் YouTube Intro Video, WhatsApp Status Video, YouTube Videos and more இந்த Appபிள் மிகவும் சுலபமாக எடிட் செய்யலாம் இதனை முதலில் Google Play Store வெளியிட்டதும் கைன் மாஸ்டர் ஆப்புக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் இருக்கிறது ஏனென்றால் லேப்டாப்பில் பயன்படுத்தும் சாப்ட்வேர் போல் அனைத்துக் கருவிகளையும் உள்ளடக்கி மொபைலுக்கு முதலில் வந்த ஆப் இது Google Play Store இதன் டவுன்லோடு எண்ணிக்கை நான் இந்த ஆர்டிகல் எழுதும்போது 100M+ டவுன்லோட்ஸ் ஆகியிருக்கிறது இதனை பிசியில் எடிட்டிங் செய்யும் நபர்கள் மொபைலில் எடிட்டிங் செய்வதற்கு கைன் மாஸ்டரை டவுன்லோட் செய்து கொள்வார்கள் மேலும் ஒரு வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வீடியோவை உருவாக்க வேண்டுமென்றால் MV Creation Tamil இந்த பெயரை கிளிக் செய்தால் அது உங்களை யூடியூப் விற்கு அழைத்துச் செல்லும் அங்கு வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வீடியோவை எப்படி கை மாஸ்டரின் உருவாக்க வேண்டுமென்று நிறைய வீடியோக்கள் அப்லோடு செய்யப்பட்டுள்ளது அதனை பார்த்து நீங்களும் உங்களுக்கு தேவையான வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வீடியோக்களை உருவாக்கி கொள்ளலாம்.
HomeTamilnadu4 நாள் முழு ஊரடங்கு: சந்தை, கடைகளில் பொருட்கள் வாங்க அலைமோதிய கூட்டம் - சமூக இடைவெளியை மறந்த மக்கள் 4 நாள் முழு ஊரடங்கு: சந்தை, கடைகளில் பொருட்கள் வாங்க அலைமோதிய கூட்டம் - சமூக இடைவெளியை மறந்த மக்கள் Saber April 26, 2020 0 இன்று முதல் 4 நாள் முழு ஊரடங்கு: சந்தை, கடைகளில் பொருட்கள் வாங்க அலைமோதிய கூட்டம் - சமூக இடைவெளியை மறந்த மக்கள் மதுரை மாநகரில் முழு ஊரடங்கை முன்னிட்டு சந்தைகள் மற்றும் கடைகளில் பொருட்கள் வாங்க சமூக இடைவெளியை மறந்து நேற்று மக்கள் கூட்டம் அலைமோதியது. கொரோனா தொற்றை தடுப்பதற்காக மதுரை மாநகராட்சி பகுதிகளில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 6 மணி முதல் 29-ந் தேதி இரவு 9 மணி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இந்த நாட்களில் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது. மருந்து கடைகள் மற்றும் பாலகங்கள் தவிர மற்ற எந்த கடைகளும் திறக்கக்கூடாது. மளிகை கடைகள், தற்காலிக காய்கறி சந்தைகள் உள்பட எந்த அத்தியாவசிய பொருட்களுக்கான கடைகளும் திறக்கப்படாது என அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து 4 நாட்களுக்கு தேவையான அத்தியாவசிய மளிகை பொருட்கள், காய்கறிகள் வாங்குவதற்காக நேற்று மக்கள் கூட்டம் அலைமோதியது. நீண்ட வரிசையில் பொதுமக்கள் நின்று பொருட்களை வாங்கினர். காய்கறி சந்தைகளில் சுமார் 1 கிலோ மீட்டர் தூரத்திற்கு மக்கள் வரிசையில் நின்று இருந்தனர். அதே போல் மளிகை கடைகள் மற்றும் அரிசி கடைகளில் பொதுமக்கள் ஒட்டு மொத்தமாக திரண்டு வந்து வாங்கினர். அதனால் பல இடங்களில் சமூக இடைவெளி கடைபிடிக்க முடியவில்லை. போலீசார் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் வாகனத்தில் ரோந்து சென்று ஒலி பெருக்கி மூலம் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று எச்சரித்தப்படி இருந்தனர். போலீசார் நின்று இருந்த சந்தை பகுதிகளில் மட்டும் சமூக இடைவெளி கடை பிடிக்கப்பட்டது. மற்ற மளிகை கடைகளில் எங்கும் சமூக இடைவெளி கடை பிடிக்கவில்லை. தற்போது ஊரடங்கு நேரத்தில் அத்தியாவசிய கடைகளும், சந்தைகளும் காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை மட்டுமே செயல்பட்டு வந்தது. ஆனால் நேற்று அனைத்து இடங்களிலும் கூட்டம் அதிகமாக இருந்ததால் மாலை 3 மணி வரை மக்கள் பொருட்கள் வாங்க அனுமதிக்கப்பட்டனர். சேலம் மாவட்டத்தில் முழு ஊரடங்கு: சாலைகள் வெறிச்சோடின; வீடுகளில் முடங்கிய பொதுமக்கள் - கடைகள் அடைக்கப்பட்டன சேலம் மாவட்டத்தில் முழு ஊரடங்கு அமலுக்கு வந்ததால் அனைத்து சாலைகளும் வெறிச்சோடி காணப்பட்டன. கடைகள் அடைக்கப்பட்டன. இதனால் பொதுமக்கள் தங்களது வீடுகளில் முடங்கினர். சேலம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நோய் தாக்குதல் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்தவும், கொரோனா வைரஸ் நோய் சமூக பரவலாக மாறாமல் தடுக்கவும் மாவட்டம் முழுவதும் நேற்றும், இன்றும் 2 நாட்கள் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றும், இதனால் பொதுமக்கள் வீடுகளில் இருந்து வெளியே வரக்கூடாது என்றும் கலெக்டர் ராமன் அறிவித்திருந்தார். அதன்படி சேலம் மாவட்டம் முழுவதும் நேற்று காலை முதல் முழு ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்தது. இதனால் காய்கறி, மளிகை கடைகள், இறைச்சி கடைகள், உணவகங்கள், பேக்கரிகள் உள்ளிட்ட அனைத்து கடைகளும் மூடப்பட்டன. பொதுமக்கள் வெளியே வராமல் தங்களது வீடுகளில் முடங்கினர். முழு ஊரடங்கு காரணமாக சேலம் மாநகரில் அஸ்தம்பட்டி, அழகாபுரம், சூரமங்கலம், செவ்வாய்பேட்டை, அன்னதானப்பட்டி, கிச்சிப்பாளையம், அம்மாபேட்டை, பெரமனூர், கொண்டலாம்பட்டி உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் உள்ள காய்கறி மற்றும் மளிகை கடைகள் அடைக்கப்பட்டு இருந்ததால் ஆட்கள் நடமாட்டம் இன்றி சாலைகளும், தெருக்களும் வெறிச்சோடி காணப்பட்டன. முழு ஊரடங்கு நாட்களில் பொதுமக்கள் யாரும் வெளியில் வரவேண்டாம் என்று மாவட்ட நிர்வாகம் மூலம் அறிவுறுத்தப்பட்டிருந்தது. ஆனால் அதையும் மீறி சிலர் தங்களது மொபட் மற்றும் மோட்டார் சைக்கிளில் சாலைகளில் வலம் வந்ததை காண முடிந்தது. அதேசமயம் முழு ஊரடங்கு பற்றி தெரியாத சிலர் வழக்கம்போல் காய்கறிகள் வாங்க சந்தைக்கு வந்தனர். ஆனால் சந்தைகள் மூடப்பட்டு இருந்ததால் அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். ஆவின் பால் மட்டுமே விற்பனை செய்யப்பட்டதால் அதனை பொதுமக்கள் கூடுதலாக வாங்கிச்சென்றதை காண முடிந்தது. சேலம் மாநகரில் போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவுபடி துணை கமிஷனர்கள் தங்கதுரை, செந்தில் ஆகியோர் மேற்பார்வையில் அனைத்து பகுதிகளிலும் போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது தேவையில்லாமல் வெளியே வந்த பொதுமக்களை போலீசார் எச்சரிக்கை செய்ததோடு அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர். அவர்களது வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. மருந்துக்கடைகள் மற்றும் பெட்ரோல் விற்பனை நிலையங்கள் மட்டுமே திறந்திருந்தன. மருத்துவமனை உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டுமே வாகனங்களில் சென்ற சிலரை மட்டும் போலீசார் அனுமதித்தனர். முழு ஊரடங்கு உத்தரவால் சேலம் மாநகரம் முழுவதும் வெறிச்சோடி காணப்பட்டன. அம்மா உணவகங்கள் அனைத்தும் வழக்கம்போல் செயல்பட்டதால் அங்கு காலை மற்றும் மதிய வேளையில் ஏராளமானோர் சாப்பிட்டு சென்றனர். இதே போல், ஓமலூர், தாரமங்கலம், மேச்சேரி, மேட்டூர், எடப்பாடி, பூலாம்பட்டி, கொங்கணாபுரம், சங்ககிரி, வீரபாண்டி, ஆட்டையாம்பட்டி, ஆத்தூர், வாழப்பாடி, ஏற்காடு, கெங்கவல்லி, தம்மம்பட்டி, பெத்தநாயக்கன்பாளையம், பனமரத்துப்பட்டி உள்பட மாவட்டம் முழுவதும் அனைத்து பகுதிகளிலும் ஆட்கள் நடமாட்டம் இன்றி சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. காய்கறி சந்தைகள், உழவர்சந்தைகள், பஸ் நிலையங்கள், சுற்றுலா தலங்கள் என அனைத்தும் மூடப்பட்டு இருந்தன. ஆத்தூரில் முக்கிய சாலையான ராணிப்பேட்டை, கடைவீதி பகுதி வெறிச்சோடி காணப்பட்டது. சுற்றுலா நகரமான ஏற்காடு, மேட்டூர் பகுதி இதே காலக்கட்டத்தில் எப்போதும் சுற்றுலா பயணிகள் நிறைந்து காணப்படும். ஆனால் தற்போது வெறிச்சோடி காணப்பட்டதால், சுற்றுலாவை நம்பி உள்ள வியாபாரிகள் மிகவும் கவலை அடைந்தனர். இதே நிலை நீடித்தால் தங்களது வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி விடும் என்று அவர்கள் தெரிவித்தனர்.
பிர­பல சர்­வ­தேச தொண்டு நிறு­வ­ன­மான ‘கட்டார் சரிட்­டி’­ யினால் இலங்­கையில் செயற்­ப­டுத்­தப்­பட்ட வங்கிக் கணக்­கு­களின் ஊடாக பரி­மாற்­றப்­பட்ட நிதி, எந்­த­வொரு பயங்­க­ர­வாத நட­வ­டிக்­கை­க­ளுக்கும் பயன்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை என்ற விடயம் தக­வ­ல­றியும் விண்­ணப்­பத்தின் ஊடாக உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. இலங்­கையில் கட்டார் சரிட்­டி­யினால் செயற்­ப­டுத்­தப்­பட்ட வங்கிக் கணக்­குகள் முடக்­கப்­பட்­டமை மற்றும் அவ்­வ­மைப்பு தடை செய்­யப்­பட்­ட­தாக வெளி­வந்த ஊடக செய்­திகள் தொடர்பில் பாது­காப்பு அமைச்­சிற்கு கடந்த ஓகஸ்ட் 22ஆம் திகதி தக­வ­ல­றியும் கோரிக்கை சம­ர்ப்­பிக்­கப்­பட்­டது. இதற்கு கடந்த செப்­டம்பர் 12ஆம் திகதி பயங்­க­ர­வாத தடுப்பு மற்றும் விசா­ரணைப் பிரிவின் தகவல் அதி­கா­ரி­யான அதன் பணிப்­பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்­சகர் பிர­சன்ன டி அல்­வி­ஸினால் வழங்­கப்­பட்ட பதி­லி­லேயே மேற்­கண்­ட­வாறு குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. இவ்­வா­றான நிலையில் பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்தின் கீழ் கைது செய்­யப்­பட்டு தற்­போது பிணையில் விடு­தலை செய்­யப்­பட்­டுள்ள சிரேஷ்ட சட்­டத்­த­ரணி ஹிஜாஸ் ஹிஸ்­புல்­லா­வினால் முன்­னெ­டுக்­கப்­பட்ட ‘சேவ் த பேர்ள்’ எனும் அநாதைச் சிறார்கள் பரா­ம­ரிப்பு நிலை­யத்­திற்கும் கட்டார் சரிட்­டி­யினால் நிதி­யு­தவி வழங்­கப்­பட்­டுள்­ளது. எனினும், கடந்த 2021.04.10 ஆம் திகதி அப்­போ­தைய ஜனா­தி­பதி கோட்­டா­பய ராஜ­ப­க்ஷ­வினால் 1979ஆம் ஆண்டின் 48ஆம் இலக்க, பயங்­க­ர­வாதத் தடுப்பு (தற்­கா­லிக ஏற­பா­டுகள்) சட்­டத்தின் 27ஆம் பிரிவின் கீழ் சேவ் த பேர்ளின் செயற்­பா­டு­க­ளுக்கு தடை விதிக்­கப்­பட்­டது. இதே­வேளை, கட்டார் சரிட்டி பயங்­க­ர­வாத அமைப்பு எனவும், இந்த அமைப்பின் ஊடாக பயங்­க­ர­வாத செயற்­பா­டு­க­ளுக்கு நிதி­யு­தவி வழங்­கப்­பட்­டுள்­ளது எனவும் குற்­றப்­பு­ல­னாய்வுப் பிரிவு 2020.09.23ஆம் திகதி கோட்டை நீதி­மன்­றத்தில் தெரி­வித்­தது. இத­னை­ய­டுத்து, இந்த அமைப்பின் பணிகள் அனைத்தும் இலங்­கையில் நிறுத்­தப்­பட்­டது. இதனால், குறித்த அமைப்பின் உத­வி­களை நம்பி வாழ்ந்த ஆயி­ரக்­க­ணக்­கான வறிய மக்கள் பல இன்­னல்­களை இன்றும் எதிர்­நோக்கி வரு­கின்­றனர். “கொழும்பு மேல் நீதி­மன்­றத்தின் உத்­த­ர­விற்­க­மை­யவே இந்த அமைப்­பினால் அமானா வங்­கியில் செயற்­ப­டுத்­தப்­பட்ட இரண்டு கணக்­கி­லக்­கங்­க­ளிலும் காணப்­பட்ட 9 கோடி 17 இலட்­சத்து 78 ஆயி­ரத்து 180 ரூபாவும் 46 சதமும் முடக்­கப்­பட்­டது” என தக­வ­ல­றியும் விண்­ணப்­பத்­திற்­கான பதிலில் பயங்­க­ர­வாத தடுப்பு மற்றும் விசா­ரணைப் பிரிவு குறிப்­பிட்­டுள்­ளது. கொழும்பு மேல் நீதி­மன்­றத்தின் இலக்கம் HC (SPL) 05/2020 எனும் உத்­த­ரவின் கீழேயே மேற்­படி வங்கி கணக்­கி­லக்­கங்கள் முடக்­கப்­பட்­ட­தாக குறித்த விசா­ரணைப் பிரிவு குறிப்­பிட்­டது. “எவ்­வா­றா­யினும், கடந்த ஜூன் 30ஆம் திகதி குறித்த வங்கி கணக்­கி­லக்­கங்­களை முடக்கும் உத்­த­ரவு கொழும்பு மேல் நீதி­மன்­றத்­தினால் நீக்­கப்­பட்­டு­விட்­டது. அத்­துடன் கட்டார் சரிட்டி ஒரு­போதும் இலங்­கையில் தடை செய்­யப்­ப­ட­வில்லை” எனவும் பயங்­க­ர­வாத தடுப்பு மற்றும் விசா­ரணைப் பிரிவு தெரி­வித்­தது. இதே­வேளை, கடந்த 2020ஆம் ஆண்டு முதல் அமுல்­ப­டுத்­தப்­பட்­டுள்ள கட்டார் சரிட்­டியின் நிதி மீதான தடை­யினை நீக்­கு­வ­தற்­கான தீர்­மா­னத்­தினை பாது­காப்பு அமைச்சு சட்­டமா அதி­ப­ருக்கு அறி­வித்­துள்­ளது என உத்­தி­யோ­க­பூர்வ செய்­தி­யினை மின் சக்தி அமைச்சர் காஞ்­சன விஜ­ய­சே­கர கட்டார் சரிட்டின் உயர் அதி­கா­ரி­களை கடந்த ஜூன் 30ஆம் திகதி டோஹாவில் சந்­தித்து தெரி­வித்­தி­ருந்தார். இலங்­கையில் பல மில்­லியன் ரியால்­களைச் செல­விட்டு தொண்டுப் பணி­களை முன்­னெ­டுத்த கட்டார் சரிட்டி நிறு­வ­னத்தை தீவி­ர­வாத முத்­திரை குத்தி, அதன் வங்கிக் கணக்­கு­களை முடக்கி அசௌ­க­ரி­யத்துக்குள்­ளாக்­கி­ய­மை­யா­னது இலங்கை அர­சாங்­கத்தின் முட்­டாள்­த­ன­மான நட­வ­டிக்­கை­யாகும். எனினும், கட்டார் சரிட்டின் செயற்­பா­டு­களை மீண்டும் இலங்­கையில் ஆரம்­பிப்­பது தொடர்பில் இது­வரை எந்தத் தக­வலும் வெளி­யி­டப்­ப­ட­வில்லை. எவ்­வா­றா­யினும், கட்டார் சரிட்­டியின் பணிகள் அடுத்த வருடம் இலங்­கையில் ஆரம்­பிக்­கப்­ப­டலாம் என கொழும்­பி­லுள்ள கட்டார் தூது­வ­ர­லா­யத்தின் உயர் அதி­கா­ரி­யொ­ருவர் நம்­பிக்கை வெளி­யிட்டார். கட்டார் அர­சாங்­கத்தின் நேரடி கட்­டுப்­பாட்டில் 1992ஆம் ஆண்டு ஆரம்­பிக்­கப்­பட்ட இந்­நி­று­வ­னத்­தினால் உல­க­ளா­விய ரீதியில் பல நாடு­க­ளுக்கு தேவை­யான மனி­தா­பி­மான உத­விகள் வழங்­கப்­பட்டு வரு­வ­துடன் அந்­நாட்டு அர­சாங்­கங்­க­ளுடன் மிகவும் நெருங்கி செயற்­பட்டு வரு­கின்­றது. அது மாத்­தி­ர­மல்­லாமல், ஐக்­கிய நாடுகள் போன்ற பல சர்­வ­தேச நிறு­வ­னங்­க­ளுடன் இந்த அமைப்பு நெருங்கி செயற்­ப­டு­கின்­றது. 1997ஆம் ஆண்டு முதல் உல­க­ளா­விய ரீதியில் 77 ஒப்­பந்­தங்­களை மேற்­கொண்டு 76 மில்­லியன் அமெ­ரிக்க டொலர் பெறு­ம­தி­யான பல நிகழ்ச்சித் திட்­டங்­களை கட்டார் சரிட்டி மேற்­கொண்­டுள்­ளது. இந்த ஊடாக பாகிஸ்தான், யெமன், சூடான், ஈராக், நைஜீ­ரியா, சிரியா, பலஸ்தீன், பங்­க­ளாதேஷ் மற்றும் சோமா­லியா போன்ற பல நாடு­களில் குடிநீர், விவ­சாயம், உணவு, சுகா­தாரம், வாழ்­வா­தார உதவி, பாட­சாலை நலன்­புரி, சமூக நலன், மீள்­கு­டி­யேற்றம், மற்றும் அக­தி­க­ளுக்­கான உதவி போன்ற பல மனி­தா­பி­மான மற்றும் அபி­வி­ருத்தி நிகழ்ச்­சிகள் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன. அண்மையில் கட்­டா­ருக்கு விஜயம் செய்த இலங்கை அமைச்­சர்கள் குழு கட்டார் சரிட்­டி அதி­கா­ரி­களை சந்­தித்தபோது… இதற்கு மேல­தி­க­மாக ஐக்­கிய நாடு­களின் அக­தி­க­ளுக்­கான உயர் ஸ்தானி­க­ரா­ல­யத்­துடன் 32 ஒப்­பந்­தங்­களை மேற்­கொண்டு உள்­நாட்டில் இடம்­பெ­யர்ந்­த­வர்­க­ளுக்கும், அக­தி­க­ளுக்கும் தேவை­யான நிதி தொடர்­பான மனி­தா­பி­மான செயற்­திட்­டங்­களை கட்டார் சரிட்டி மேற்­கொண்­டுள்­ளது. இதே­வேளை, இலங்­கைக்கும் கட்­டா­ருக்கும் இடையில் கடந்த 1976ஆம் ஆண்டு முதல் இரா­ஜ­தந்­திர உறவு பேணப்­பட்டு வரு­கின்­றது. அது மாத்­தி­ர­மல்­லாமல், பல்­வேறு சந்­தர்ப்­பங்­களில் இலங்­கைக்கு கட்டார் உள்­நாட்­டிலும், சர்­வ­தேச ரீதி­யிலும் கைகொ­டுத்து உத­வி­யுள்­ளது. இதனால், கட்டார் சரிட்டி, அதன் தொண்டுப் பணி­களை கடந்த 1993ஆம் ஆண்டு முதல் இலங்­கையில் முன்­னெ­டுத்து வரு­கி­றது. பொது­மக்கள் பாது­காப்பு அமைச்சின் கீழுள்ள அரச சார்­பற்ற நிறு­வ­னங்­க­ளுக்­கான செய­ல­கத்தில் FL162614 எனும் இல­கத்தின் கீழ் பதி­வு­செய்­யப்­பட்­டுள்ள இந்த தொண்டர் அமைப்­பினால் கடந்த 2018 வரை சுமார் 14 மில்­லியன் கட்டார் ரியால்கள் பெறு­ம­தி­யான உத­வி திட்­டங்­கள் இலங்­கையில் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளன. இதற்­க­மைய, 30 வரு­டங்கள் நாட்டில் இடம்­பெற்ற யுத்தம் கார­ண­மாக இடம்­பெ­யர்ந்­த­வர்­க­ளுக்­காக ஐந்து பல்­தேவை கட்­டி­டங்கள் இந்த நிறு­வத்­தினால் நிர்­மா­ணிக்­கப்­பட்­டுள்­ளன. அத்­துடன் ஓட்­ட­மா­வடி, ஏறாவூர், கிண்­ணியா மற்றும் பொல­ந­றுவை மாவட்­டத்தின் அது­கல ஆகிய பிர­தே­சங்­களில் கட்டார் சரிட்­டி­யினால் நான்கு வீட­மைப்பு திட்­டங்கள் நிர்­மா­ணிக்­கப்­பட்­டுள்­ளன. நான்கு மில்­லியன் கட்டார் ரியால் பெறு­ம­தி­யான இந்த வீட்டுத் திட்­டத்தில் 22 வீடுகள், சுகா­தார மையம், முன்­பள்ளி, பள்­ளி­வாசல், கிணறு மற்றும் நான்கு கடைகள் ஆகி­யன காணப்­ப­டு­கின்­றன. அது மாத்­தி­ர­மல்­லாமல், சுமார் 1,000க்கும் மேற்­பட்ட அநாதைச் சிறார்­க­ளுக்கு கட்டார் சரிட்­டி­யினால் அனு­ச­ரணை வழங்­கப்­பட்­டுள்­ளது. அது மாத்­தி­ர­மல்­லாமல், கட்­டாரின் தலை­ந­க­ரான டோஹா­வி­லுள்ள இலங்கை தூது­வ­ரா­ல­யமும் கட்டார் சரிட்­டியும் இணைந்து கொவிட் காலத்தில் டோஹாவில் நிர்க்­க­தி­யான இலங்­கை­யர்­க­ளுக்கு உல­ரு­ணவுப் பொருட்கள் விநி­யோ­கிக்கும் செயற்­திட்­ட­மொன்றை முன்­னெ­டுத்­தி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது. இவ்­வாறு இலங்­கையில் பல மில்­லியன் ரியால்­களைச் செல­விட்டு தொண்டுப் பணி­களை முன்­னெ­டுத்த கட்டார் சரிட்டி நிறு­வ­னத்தை தீவி­ர­வாத முத்­திரை குத்தி, அதன் வங்கிக் கணக்­கு­களை முடக்கி அசௌ­க­ரி­யத்துக்குள்­ளாக்­கி­ய­மை­யா­னது இலங்கை அர­சாங்­கத்தின் முட்­டாள்­த­ன­மான நட­வ­டிக்­கை­யாகும். இதன் கார­ண­மாக இலங்­கைக்கு எரி­பொருள் உள்­ளிட்ட அத்­தி­ய­வ­சிய உத­விகள் தேவைப்­பட்ட காலத்தில் குறித்த நிறு­வ­னத்­தினால் இலங்­கையில் இயங்க முடி­யாமல் போனது. அத்­துடன் பொரு­ளா­தார நெருக்­க­டியில் சிக்கித் தவிக்கும் அப்­பாவி இலங்கை மக்­க­ளுக்கு உதவும் வாய்ப்­பு­களும் இதன் மூலம் மறுக்­கப்­பட்­டன. கடந்த அர­சாங்­கத்தின் இன­வாத செயற்­பா­டு­களால் நாட்­டுக்கு ஏற்­பட்ட மிகப் பெரிய பாதிப்­பு­களில் கட்டார் சரிட்­டிக்கு எதி­ரான போலி­யான குற்­றச்­சாட்­டுக்­களும் ஊடகப் பரப்­பு­ரை­களும் முக்­கிய பங்­கு­வ­கித்­துள்ள­தை யாராலும் மறுக்க முடி­யாது. கட்டார் சரிட்டி விரைவில் தனது பணி­களை இலங்­கையில் ஆரம்­பித்து, தொண்டுப் பணிகளைத் தொடர வேண்டும் என்பதே அனைவரதும் எதிர்பார்ப்பாகும்.- Vidivelli
என்று பணியை உங்கள் ஆன்லைன் திருமணத்தின் சுயவிவரத்திற்காகச் பெறுவது பதில்களை உங்கள் வாய்ப்புகளை பாதிக்கும் ஒரே பெண்ணாக இருந்தால், அது உங்கள் திருமண சுயவிவர புகைப்படத்தை உள்ளது. இங்கே உங்கள் திருமண சுயவிவர புகைப்படத்தை எவ்வளவு முக்கியமான பின்னால் சில உண்மைகளை இங்கே. திருமணம் சுயவிவர புகைப்படமும் முதல் அபிப்ராயத்தை பிரின்ஸ்டன் உளவியலாளர்கள் ஜனைன் வில்லிஸ் மற்றும் அலெக்சாண்டர் Todorov படி, அது வெறும் எடுக்கும் 1/10 நாம் சந்திக்க நபர் பற்றி ஒரு உணர்வை உருவாக்க வேண்டும் என்று இரண்டாவது! இந்த தலைப்பில் தங்கள் ஆராய்ச்சி பெறப்படும் முடிவானது இருந்தது "முதல் அபிப்பிராயம்". யாரோ பொருத்தமான சுயவிவரங்களைச் தேடிக்கொண்டிருக்கும்போது, அவர்கள் பார்க்க முதல் விஷயம் உங்கள் புகைப்படம் உள்ளது (நீங்கள் அநாமதேய இருந்தால் மட்டுமே). அவர்கள் தங்கள் மனதை ஒருமுறை, அது அவர்களின் கண்ணோட்டத்தை மாற்றுவது மிகக் கடினம். இந்த இப்போதே புறக்கணிக்கப்படும் கொள்வது உங்கள் சுயவிவரத்தில் மொழிபெயர்க்கலாம். உங்கள் சுயவிவர புகைப்படத்தை வழி கூட முக்கியம்! இங்கே ஒரு முறைசாரா கல்வியாகும் 300+ ஒரு டேட்டிங் தளத்தில் பதிலளித்தவர்களில். இது மூன்று முக்கிய பிரச்சினைகள் வெளியே கொண்டு, அனைத்து சுயவிவர புகைப்படத்தை தொடர்பான. தானியம் இருக்கும் என்று ஏழை தரமான புகைப்படங்கள் (குறைந்த தீர்மானம்) போதுமான புகைப்படங்கள் கொண்ட இல்லை பழைய புகைப்படங்களை இடுகையிடுதல் உண்மையில் நீங்கள் யார் என்பதை உணர்த்த வேண்டாம் என்று சாதாரணமாக உங்கள் சுயவிவர புகைப்படத்தை சிகிச்சை வேண்டாம் மற்றொரு ஆராய்ச்சி ஆய்வு ரோரி McGloin (கனெக்டிகட் பல்கலைக்கழக கம்யூனிகேஷன் துறையில் உதவியாளர் பேராசிரியர்) மற்றும் அவரது சகாக்கள் மக்கள் காட்டியுள்ளன, பொதுவாக, விரும்புகின்றனர் “மேம்பட்ட புகைப்படங்கள்” – சிறந்த விளக்குகளுடன் தான், முடி மற்றும் ஒப்பனை. McGloin படி, நீங்கள் யாராவது ஒரு படத்தை பார்த்து திடீரென்று நீங்கள் அவர்களின் ஆளுமை என்ன பற்றிய தீர்வுகளை செய்து வருகிறோம் அனைத்து போன்ற, என்ன தங்கள் மதிப்புகள், அல்லது நீங்கள் அவர்களுடன் ஒரு தேதியில் செல்ல அல்லது ஒருவேளை அவர்களுடனான உங்கள் வாழ்நாள் முழுவதும் செலவிட வேண்டும். உன்னால் முடியும் இங்கே இந்த ஆய்வில் பற்றி மேலும் படிக்க. கிட்டத்தட்ட அனைத்து முன்னணி திருமணத்தின் தளங்கள் இப்போது சுயவிவரத்தை புகைப்படம் தேடல் முடிவுகளில் சென்டர் டேக்ஸ் அங்கு ஒரு ஸ்மார்ட்போன் பயன்பாட்டை அளிக்கத் துவங்கியுள்ளது போது இந்த கண்டுபிடிப்பு முக்கியமாக உள்ளது. நீங்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட சுயவிவர புகைப்படத்தை வேண்டும் உலகின் மிகப்பெரிய டேட்டிங் தளங்கள் ஒன்று பதில்களை அதிகபட்ச எண் கிடைத்துள்ளது சுயவிவரங்கள் மற்றும் இங்கே எந்த கண்டுபிடிக்க அவர்களது தரவுத் பகுப்பாய்வு அவர்கள் முடித்தார் என்ன உள்ளது. பதிவேற்றிய மக்கள் 4 அல்லது அதற்கு மேற்பட்ட புகைப்படங்கள் குறைவாக போராடி ஒப்பிடும்போது வருங்கால போட்டிகளில் இருந்து பல பதில்களுக்கு கிடைத்தது 4 சுயவிவர புகைப்படங்கள். மேலும், புகைப்படங்கள் விவரங்கள் தான் 9 பெற அதிக வாய்ப்பு முறை “எக்ஸ்பிரஸ் வட்டி” / “ஆர்வம்” பொருத்தமான சுயவிவரங்கள் தகவல்தொடர்பை. 17 உங்கள் திருமண சுயவிவர புகைப்படம் குறிப்புகள் இப்போது அது நீங்கள் கூட்டணி பெரும் சுயவிவர புகைப்படங்கள் ஒரு சில வேண்டும் என்று தெளிவாக உள்ளது என்று, அடுத்த முக்கியமான கேள்வி உங்கள் சுயவிவர புகைப்படங்கள் எடுத்து பற்றி போவது எப்படி இருக்கிறது. நாம் நிபுணர்கள் இந்த தலைப்பில் சொல்ல அவர்கள் பெற்ற அனுபவம் குறித்து வெளியே எடுத்தார்கள் மற்றும் அணிசேர்ந்து கொண்டு 17 நீங்கள் ஒரு வென்ற திருமணத்தின் சுயவிவர புகைப்படத்தை எடுத்து உங்கள் ஆன்லைன் திருமணத்தின் சுயவிவரத்தில் மேலும் பதில்களை உதவ முடியும் என்று குறிப்புகள். 1. குறைந்தது ஒரு headshot சேர்க்கவும் குறைந்தது ஒரு தொழில்முறை headshot உட்பட அவசியம். இந்த உங்கள் முதன்மை சுயவிவர புகைப்படத்தை இருக்க வேண்டும். ஆனால் அது நீங்கள் ஏதாவது மறைத்து என்று உணர்வை தெரிவிக்கும் போன்ற நிச்சயமாக நான்கு வெவ்வேறு headshots மற்றும் வேறு எதுவும் சேர்க்க வேண்டாம் செய்ய. உங்கள் சுயவிவரத்தில் ஒரு சரியான headshot உள்ளடக்காமல் மற்ற கட்சி நீங்கள் யார் ஒரு நல்ல உணர்வு கொடுக்க இல்லை. ரோமன் Griffen படி, ஆசிரியர் இணைய டேட்டிங்: குறிப்புகள், தந்திரங்கள் மற்றும் தந்திரங்களில், நீங்கள் பதிவு படம் தெரு முழுவதும் இருந்து எடுக்கப்பட்ட போது, அது விடாமல் மக்கள் வெளியிடுவதில் நோக்கம் உங்களை போன்ற உள்ளது தோற்கடித்தார் என்ன பார்க்க. 2. உங்கள் ஆளுமை வெளிப்படுத்தவும் பல புகைப்படங்கள் சேர்க்கவும் உங்கள் நம்பகத்தன்மையை அதிகரிக்க மற்றும் கவர்ச்சி உங்கள் headshot இணைந்து பல சுயவிவர புகைப்படங்கள் சேர்க்க இருக்கும் ஒரு சிறந்த வழி. நீங்கள் உங்கள் ஆளுமை வெளிப்படுத்தவும் இந்த புகைப்படங்கள் பயன்படுத்த முடியும். உதாரணத்திற்கு, நீங்கள் ஒரு சீரிய ஒட்ட இருந்தால், ஒரு மிதிவண்டியில் காட்டுகிறது அந்த நிழற்படம் சேர்க்க மறக்காதீர்கள். உங்கள் headshot வியத்தகு உங்கள் நம்பகத்தன்மையை மேம்படுத்தும் இணைந்து உங்கள் முழு உடல் வெளிப்படுத்தவும் என்று பல புகைப்படங்கள். 3. ஒளி தோன்றுக!, ஆனால் அதிக இல்லை நீங்கள் நிச்சயமாக ஒரு நல்ல சுயவிவர புகைப்படத்தை பெற சரியான ஒளி வேண்டும், ஆனால் நேரடி சூரிய ஒளி ஒரு மோசமான யோசனை. சூரிய ஒளி கடுமையான உள்ளது, நீங்கள் பழைய தோன்ற செய்யலாம்! படி புகைப்படம் மேம்படுத்த, ஒரு வீட்டில் அல்லது வெப்பமான நேரத்தின்போதும் இயல்பான லைட்டிங் தோலில் முகத்துதி இல்லை; எனினும், ஒளி ஒரு ஜன்னல் வழியாக செல்கிறது முறை, அது மிகவும் மென்மையான மற்றும் பரவும் உள்ளது. ஒளி ஒரு கோணத்தில் மாதிரி மோதும் எனவே ஒரு ஜன்னல் அடுத்த உங்கள் பொருள் வைப்பது கவனியுங்கள் (ஜன்னல் வழியாக நேராக பார்க்காதபோது). மிகவும் முயற்சியும் இல்லாமல், நீங்கள் ஸ்டூடியோக்கள் நகல் கஷ்டப்படுத்தி அழகான ஒளி உருவாக்கிய. 4. வெளிப்புற புகைப்படங்கள் பெரிய உள்ளன நீங்கள் ஒரு பூங்கா காணலாம் என்றால், கடற்கரை, அல்லது எங்கும் உங்கள் வீட்டுக்கு வெளியே மலர்கள் ஒரு படுக்கை, ஒரு சில நல்ல வெளிப்புற புகைப்படங்களை எடுக்க இயற்கைக் காட்சி பயன்படுத்த. டிஜிட்டல் கேமரா உலக படி, மிகவும் ஈர்க்கின்ற தோற்றச்சித்திரங்களுக்கான, அது விஷயங்களை எளிமையாக வைக்க அடிக்கடி சிறந்ததாகும், எனவே வானத்தில் போன்ற குழப்பமல்லாத பின்னணியில் எதிராக சுட முயற்சி, ஒரு சுவர் அல்லது பசுமையாக. இது உங்கள் பொருள் தனியாகத் உதவும். மேலும், இடையே வெளிப்புற காட்சிகளின் தவிர்க்க 11 க்கு இருக்கிறேன் 1 சூரிய ஒளி போன்ற மணி ஒருவேளை கடுமையானதாகும். 5. நீங்கள் நம்பிக்கை நினைத்தால் நீங்கள் நம்பிக்கை இருக்கும் நீங்கள் நம்பிக்கை இருக்கும்போது உங்கள் புகைப்படங்கள் நன்றாக இருக்கும். நம்பிக்கை பரவுவதாக சிறந்த வழி நீங்கள் நன்கு பொருந்துகிறது என்று ஒரு ஆடை அணிய உறுதி செய்ய உள்ளது. நீங்கள் உங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் இருந்து பாராட்டுக்களை வென்றுள்ளன என்று ஆடைகள் எடு. நிச்சயமாக, நீங்கள் உங்கள் திருமணத்தின் சுயவிவர பல சுயவிவர புகைப்படங்கள் எடுக்க போகிறோம் என்றால், உறுதிசெய்து கொள்ளுங்கள் வேறுபட்ட ஆடைகள் அணிய. நீங்கள் அதே உடை வெவ்வேறு புகைப்படங்கள் விரும்பவில்லை. இது பார்வையாளருக்கு மிகவும் வெளிப்படையான மற்றும் நீங்கள் ஏங்குகின்றனர் என்பதை ஒரு தாக்கத்தை உருவாக்கும். அணுக இங்கே கிளிக் செய்க 9 திருமணத்திற்கு மாதிரி biodata வடிவம். 6. உங்கள் நல்ல பக்க என்ன? ஆம், உங்கள் முகத்தில் ஒரு நல்ல பக்க உண்மையில் உள்ளது என்று உங்கள் இடது பக்கத்தில் தான்! நாம் விளையாடினேன் இல்லை. படி PsychCentral, மனிதர்கள் மனிதர்கள் முகங்கள் வலது பக்கத்தில் படங்களை ஒப்பிடுகையில் மிகவும் இனிமையான இருக்க நேர் இடது பக்கத்தில் உணர வைக்கிறது என்பதே எங்கள் முகம் மற்றும் ஆய்வுப் ஆய்வு இடது பக்கத்தில் உணர்வுகளை ஒரு பெரிய தீவிரம் வெளிப்படுத்துகின்றன. 7. சிரித்த முயற்சி சுயவிவர புகைப்படங்களை எடுக்கும் போது, வெவ்வேறு வெளிப்பாடுகள் முயற்சி. ஒரு பெரிய பெரிய புன்னகை, ஒரு மென்மையான புன்னகை, ஒரு நடுநிலை போஸ், அல்லது இதற்கு இடைப்பட்ட வேறு எந்த நிழல். பின்னர் கவர்ச்சிகரமான என்றால் என்னவென்று அறிய புகைப்படங்கள் பார்க்க. எப்போதும் சிரித்த நம்பிக்கை ஒரு படத்தை தெரிவிக்கும் அது உங்கள் நல்ல பற்கள் வெளிப்படுத்தவும் ஒரு சிறந்த வழி! OKCupid ஆண்களும் பெண்களும் சுயவிவர புகைப்படங்கள் இடையே வேறுபாடு சில சுவாரஸ்யமான முடிவுகளை வெளியிட்டது. நீங்கள் வேண்டும் தங்கள் வலைப்பதிவில் பதவியை படிக்க அத்துடன் சில புதிய யோசனைகளைப் பெற. 8. உங்கள் ஸ்மார்ட்போன் பயன்படுத்தி? நீங்கள் உங்கள் திருமணத்தின் சுயவிவர படங்களை எடுப்பதற்கான உங்கள் நம்பகமான ஸ்மார்ட்போன் பொறுத்து என்றால், நீங்கள் நன்றாக புகைப்படங்களை பெற அதிக விருப்பங்கள் கொடுக்கும் என்று சிறப்பு பயன்பாடுகள் பதிவிறக்கிவிட்டு. இந்த வலைப்பதிவின் படி, போன்ற பயன்பாடுகள் கேமரா + (iOS க்கு) மற்றும் ProCapture இலவச (அண்ட்ராய்டு) சாதாரண தொலைபேசி அமைப்புகளை இணைந்து கூடுதல் அம்சங்களை வேண்டும். மற்றவர்கள் போன்ற சிறப்பு செயல்பாடுகளை வேண்டும் ஸ்லோ ஷட்டர் கேம் (iOS க்கு), இரவு கேம் மற்றும் புரோ HDR ஐ (iOS க்கு, அண்ட்ராய்டு). 9. மூன்றில் ஆட்சி தி மூன்றில் ஆட்சி படங்களை உருவாக்கும்போது தொழில்முறை புகைப்படக்காரர்கள் பயன்படுத்தும் ஒரு வழிகாட்டுதலை. எந்த நல்ல புகைப்படத்தை மூன்றில் ஒரு புகைப்படங்கள் பிரித்து கற்பனை கட்டம் வரிகளை வெட்டும் அனைத்து முக்கிய கூறுகள் வேண்டும். இங்கு விக்கிப்பீடியா இருந்து ஒரு உதாரணம் ஆகும். 10. நீங்கள் squinch எப்படி தெரியுமா? Squinching உங்கள் கண்கள் மிகவும் கச்சிதமான செய்யும் செயலாகும். படி தக்கவைக்குமா, தொழில்முறை உருவப்படம் புகைப்பட பீட்டர் ஹர்லி நீங்கள் உங்கள் படத்தை எடுத்து அடுத்த முறை squinch அறிவுறுத்துகிறது. ஹர்லி போன்ற squinching விளக்குகிறது “பயம் மற்றும் நிச்சயமற்ற நீங்கள் கேமரா பரவலான ஐட் முறைக்க போது நீங்கள் திட்டம் எதிரானதாகக் குறித்தார் நம்பிக்கை மற்றும் சுய-உறுதியை சித்தரிக்க போன்ற ஒரு வழியில் உங்கள் கண்களை squinting நடவடிக்கை.” இங்கே ஒரு உதாரணம் ஆகும். வழியாக தக்கவைக்குமா 11. உட்கார்ந்து போஸ் மாஸ்டரிங் இந்த வலைப்பதிவின் படி, தங்கள் சுயவிவர புகைப்படத்தை அமர்ந்து இருக்கும் நடந்துகொள்ளுமாறு நிர்ப்பந்திக்கின்றன என்றால் ஆண்களும் பெண்களும் வெவ்வேறு நுட்பங்களைப் பயன்படுத்த வேண்டும் (உதாரணத்திற்கு, நீங்கள் இருந்தால் ஒரு ராஜா அல்லது ராணி உங்கள் சிம்மாசனத்தில் உட்கார்ந்து!). இங்கே போஸ் உட்கார்ந்த மாஸ்டர் எப்படி சில குறிப்புகள் உள்ளன: “ஆண்கள், உங்களைக் காட்டிலும் பெரிய பார்க்க, நீங்கள் எப்போதும் காமிராவை நோக்கி உங்கள் முழு உடல் விண்வெளி மற்றும் கோணம் நிறைய வசிப்பதாக பரவலாக உங்கள் முழங்கால் பரவலாம்.” “பெண்களுக்காக, அனுமானித்து நீங்கள் ஒரு கோணத்தில் உட்கார்ந்து வருகிறோம், எப்போதும் முன்புறம் மேற்பட்ட மீண்டும் கால் கடக்க. இந்த வழியற்ற தொடையில் இருக்கிறது. இரண்டாவது, ஒரு கூட தூய்மையான மற்றும் மெலிதான தோற்றம், உங்கள் கணுக்கால் பதிலாக உங்கள் முழங்கால் கடக்க தெரிவு.“ 12. இரட்டை கன்னம் தவிர்ப்பது வெளிப்படையாக, மாதிரிகள் தங்கள் தாய்மொழிகள் தானாக கழுத்து தசைகள் இறுக்க தங்கள் முன் பற்கள் பின்னால் இழுத்து வைத்து பயிற்சி! இந்த யோசனை எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் பார்க்க இந்த வீடியோவைப் பாருங்கள், பின்னர் இந்த இடுகையை விரும்பி பகிர்வதன் மூலம் எங்களுக்கு நன்றி 13. நாங்கள் எங்கள் கைகளில் என்ன செய்ய வேண்டும்? இந்த புரிந்து கொள்ள ஒரு தந்திரமான விஷயம். ஆண்கள் தங்கள் கைகளை என்ன செய்ய தெரியாது பெண்கள் முடிவடையும் முகம் பெற்றபோதிலும் அவர்கள் தங்கள் கைகளை பாவனை தொடங்கும் போது. ஒரு நிபுணர் புகைப்படக் கலைஞரால் இந்த வழிகாட்டும் வீடியோ பாருங்கள், லிண்ட்சே அட்லர், என்று உருவப்படம் புகைப்படங்களுக்கு காட்சியளித்து போது உங்கள் கைகளால் என்ன செய்ய துல்லியமாக சொல்ல. 14. நின்று ஆண்கள் பெண்கள் மற்றும் கேமரா கோணங்களுக்காக போஸ் இந்த வீடியோ டிப்பானி ஹென்ரா ஆன்லைன் சுயவிவர புகைப்படங்களுக்கு போஸ் பெண்கள் நின்று மாஸ்டர் உதவ முடியும் என்று மிகவும் எளிய குறிப்புகள் உள்ளது. கால்ட் “எஸ் போஸ்”, அவர்கள் மட்டும் ஒரு பக்க சுயவிவர முடிவடையும் வேண்டாம் என்று பெண்கள் விட்டு கேமரா இடுப்பு திரும்புதல் ஆனால் தங்கள் தோள் மற்றும் முகத்தில் இழுக்க வேண்டும். ஹென்ரா படி, ஆண்கள் அல்லது தங்கள் கண் மட்டத்திலிருந்து என்று ஒரு கேமரா கோணம் சிறப்பாக இருக்கும் முடியும். 15. உங்கள் தலையை சாய்த்து நேராக கேமரா இறந்த வெறித்து பார்க்கிறீர்கள் ஒரு அசுத்த ஆவிகள் என்றால் மக்கள் ஆச்சரியமாக செய்யலாம். சற்றே கீழே உங்கள் தலையில் சாய்க்காமல் மேல்நோக்கி உங்கள் கண்கள் தூண்டில் போட்டுப் ஒரு நல்ல புகைப்படத்தை உருவாக்க முடியும். 16. பின்னணி புறக்கணிக்க வேண்டாம் பின்னணி கவனம் செலுத்தும் அடிக்கடி ஒரு பெரிய புகைப்படம் மற்றும் ஒரு நல்ல புகைப்படம் இடையே உள்ள வேறுபாடாகும். ஒரு தொங்கும் தொலைபேசி கம்பி, சுவரில் வர்ணத்தை ஒரு மோசமான இணைப்பு, அதன் அனைத்து அசுத்தமாக உள்ளடக்கங்களை அல்லது தவறான புத்தகம் கூறும் ஒரு திறந்த அலமாரியில் இல்லையெனில் ஒரு செய்தபின் நல்ல சுயவிவர புகைப்படத்தை அழிக்க முடியும். 17. நிபுணத்துவம் பெற்ற புகைப்படக் அல்லது இல்லை? நாம் நிச்சயமாக உங்கள் திருமண சுயவிவர புகைப்படங்கள் நிபுணத்துவம் பெற்ற புகைப்படக் பயன்படுத்த பரிந்துரைக்கலாம் (நீங்கள் ஒரு கொடுக்க முடியும் என்றால்). நீங்கள் அவர்கள் இருக்கலாம் புகைப்படக்காரர்கள் தரத்தை தெரியாது உங்கள் நகரம் அல்லது தோராயமாக நகரில் புகைப்படம் ஸ்டூடியோக்கள் எந்த நுழையும் ஒரு நல்ல யோசனை அல்ல. ஒரு பரிந்துரையை உங்கள் நண்பர்கள் கேளுங்கள். பேஸ்புக் அல்லது கூகுள் தேடல் அவர்களின் வேலை நிரூபித்துள்ளன என்று நம்பகமான புகைப்படக் கலைஞர்களுக்கு சுட்டிக்காட்ட முடியும். இங்கே நீங்கள் உங்கள் நகரத்தில் தொழில்முறை புகைப்படக்காரர்கள் தேடலாம் எப்படி இருக்கிறது. சொற்றொடர் பயன்படுத்தவும் “கூட்டணி புகைப்படம்” அல்லது “படம் கூட்டணி” அல்லது “உருவப்படம் ஸ்டூடியோ” அல்லது “உருவப்படம் புகைப்பட” உங்கள் நகரம் அல்லது நகரம் என்ற பெயரில் இணைந்து. நங்கள் கேட்டோம் PhotographyTalk.com இன் அலெக்ஸ் Schult சில பொதுவான கேள்விகளை மக்கள் திருமணம் biodata அல்லது திருமண தளங்கள் ஒரு சுயவிவர புகைப்படத்தை எடுக்கும் போது வேண்டும் அவரது நுண்ணறிவு பகிர்ந்து கொள்ள. ஒரு சுயவிவர படத்தை எடுத்து எந்த பரிந்துரைகளை நீங்கள் ஒரு இருண்ட அல்லது பழுப்பு தோல் போது? இருண்ட தோல் தொனிகளுடன் கூடிய நபர் போட்டோகிராபிங் போது, கூட லைட்டிங் பயன்படுத்தி அவசியம். தளர்வான கண் ஒளி (ஒரு விரைவி ஒரு ஃபிளாஷ் போன்ற) தோல் இயற்கை டன் வெளியே கொண்டுவருவதோடு, அழகான வழி அதன் விவரங்கள் காட்டுகிறார். வாய்ப்புகளை ஒரு இலகுவான பின்னணி முன் பொருள் வைப்பதன் மூலம் இருண்ட தோல் டன் முன்னிலைப்படுத்த மேலும் பார்க்க. இந்த மாதிரி தோல் டன் ஆஃப் அமைக்கிறது என்று படத்தில் மாறாக உருவாக்க உதவும். ஒப்பனை என்ன வகையான ஒரு உருவப்படம் புகைப்படம் அழிக்க முடியும்? ஒரு உருவப்படம் அல்லது சுய உருவப்படம் எடுக்கப்படும்போது, ஒரு சிறிய நீண்ட வழியில் செல்கிறது ஏனெனில் எனது மேக்கப் எளிதாக செல்ல முக்கியம். மேலும் கூட டன் தோல் அவுட் மிருதுவாக மற்றும் அது கொடுக்க அடித்தளத்தை பயன்படுத்தி ஒரு நல்ல யோசனை, கன்னங்கள் சில வண்ண கொண்டு உடலின் வரையறுப்பதில் உதவ ஒரு சிறிய ப்ளஷ் பயன்படுத்தி என. அவர்கள் விரைவில் பாணி கவனிக்க முடியும் என்பதால் ஐ ஷேடோ என்ற மிகச்சிறிய பிரகாசமான வண்ணங்கள் தவிர்க்க. மாறாக, அடித்தளம் மேற்பட்ட நிழல் இருண்ட என்று ஐ ஷேடோ தேர்வு, மற்றும் கருப்பு மஸ்காரா கொண்டு கண் முசி வரையறுக்க என்று ஜோடி. உதடுகள், மீண்டும், இது மலிவான பார்க்க முடியும் பிரகாசமான சிவப்பு போன்ற மிகச்சிறிய பிரகாசமான வண்ணங்கள் பயன்படுத்தி தவிர்க்க. ஒரு நிலையான அடித்தளத்தை மேற்பட்ட நிழல் இருண்ட என்று உதட்டுச்சாயம் ஒரு நிழல் பதிலாக விலகு, இயற்கையான தோற்றத்தை. ஸ்மார்ட்போன்கள் பயன்படுத்தி எந்த குறிப்புகள் சிறந்த உருவப்படங்களின் பெற? ஒரு ஸ்மார்ட்போன் ஒரு உருவப்படம் படப்பிடிப்பு சிறந்த முனை இயற்கை ஒளி நிறைய வழங்குகிறது என்று ஒரு இடம் நாடுகின்றனர் உள்ளது. கூட இன்று சந்தையில் கிடைக்கும் சிறந்த போன்கள் பெரிய ஃப்ளாஷ் இல்லை, அதனால் ஒரு உயர்தர ஷாட் பெற இயற்கை ஒளி பிரகாசம் மூலதனமாய். தொலைவுகளுக்கு படப்பிடிப்பு என்றால், உங்களை அல்லது ஜன்னலுக்கு அருகில் மாதிரி நிலைப்படுத்த மற்றும் இடைவெளிக்கும் மேல் ஒரு வெள்ளை தாள் அல்லது மற்றொரு வெளிர் நிற துணி தொங்கி மூலம் ஒளி பரவுகின்றன. வெளியே படப்பிடிப்பு என்றால், உயர் மாறாக மற்றும் ஆழமான நிழல்கள் தவிர்க்கும் பொருட்டு ஒரு மரத்தின் நிழலில் அல்லது ஒரு கட்டடத்தின் கண்டுபிடிக்க. சுய புகைப்படம் எடுத்து என்றால், டிரைபாடில் மொபைலை அமைக்கும் அல்லது ஏதாவது எதிராக இது வரை சாய்ந்து, சுய டைமர் அமைக்க, மற்றும் புகைப்படம் அந்த வழியில் எடுத்து, இல்லை முழங்கை அளவு தொலைபேசி வெளியே பிடிப்பதன் மூலம்! நீங்கள் அற்புதமான சுயவிவர புகைப்படங்கள் எடுத்து கூடுதல் உதவுக்குறிப்புகளுக்கு படிக்க முடியும் இங்கே. திருமணம் புகைப்பட தவிர்க்க நிலைநிறுத்துகிறது! இங்கே உங்கள் திருமண சுயவிவர புகைப்படம் எடுக்கும் போது நீங்கள் நிச்சயமாக தவிர்க்க வேண்டும் விடுப்பதாக சில. பெண்கள் 1. உங்கள் உதடுகள் எரிச்சலான – இது அநேகமாக Instagram அல்லது பேஸ்புக்கில் பொருள் 2. விடாமல் உங்கள் முடி உங்கள் முகத்தின் பகுதியாக மறைப்பதற்கு – ஷாம்பூ விளம்பரத்தை நிறுவனங்கள் திருமணத்தின் தளத்தில் மாதிரிகள் ஒற்றன் வேண்டாம். 3. சன்கிளாசஸ் உங்கள் முகம் மறைப்பது – ஆன்லைன் சுயவிவரத்தை உருவாக்கத் நோக்கம் பிறரால் பார்க்க வேண்டும். ஆண்கள் 1. பின்னணியில் மற்ற மக்கள் கொண்ட – சில நேரங்களில் அது திருமணம் செய்து கொள்ள விரும்பும் சொல்ல கடினம். 2. தொப்பியை அணி – நீங்கள் வழுக்கை இருந்தால், அது காட்ட அனுமதிக்க. மக்கள் நீங்கள் அல்லாத ஒன்றாக கூட வழுக்கை உள்ளன நினைப்பார்கள். 3. அறிகுறிகள் ஒளிரும் – ஒரு வெற்றி அடையாளம் அல்லது வேறு எந்த அடையாளம் ஒளிரும் நீங்கள் ஒரு கோமாளி போன்ற தோன்ற செய்யலாம். ஜோ சின்னோட் இருந்து போனஸ் குறிப்புகள் ஜோ சின்னோட் ஒரு சீட்டு புகைப்பட மற்றும் நியூயார்க் நகரில் காட்சி கலை பள்ளி ஒரு ஆசிரியரைத். இங்கே நீங்கள் உங்கள் சொந்த அற்புதமான திருமண சுயவிவர புகைப்படத்தை எடுத்து உதவ வேண்டும் என்று ஜோ இருந்து சில நடைமுறை குறிப்புகள் உள்ளன (நிச்சயமாக சில உதவியுடன்!). 1. நேரடி சூரிய ஒளி தவிர்க்க. மேகமூட்டமான வானிலையில் புகைப்படங்கள் கலங்கிய வெளிச்சத்தில் நன்றாக இருக்கும் எப்போதும் உள்ளது. நேரடி சூரிய ஒளி என்று நல்லதல்ல நிழல்கள் ஏற்படும் முடியும். 2. சற்று அதிக கோணத்தில் இருந்து உங்கள் புகைப்படங்களை எடுக்கும் முயற்சி. கண் வரி மேலே இருந்து புகைப்படம் என்றால் ஓவிய புகைப்படங்கள் சிறப்பாக தோன்றும்படி. 3. பெண்கள் தங்கள் கன்னம் மடித்து வைக்கும் வகையில் முயற்சி மற்றும் ஆண்கள் போஸ் ஒரு சாய்ந்து தலை மடிந்த கை தவிர்க்க வேண்டும் கூடாது. 4. முகத்தில் லென்ஸ் குவித்து, பின்புலத்தை வெளியே மங்கலாக முயற்சி. நிச்சயமாக, இந்த பின்னணி பொறுத்தது! 5. கேமரா லென்ஸ் உங்கள் கவனத்தைச். உங்கள் புகைப்படம் பார்க்கும் நபர் விண்வெளி உற்று பார்த்து நீங்கள் எங்கே தேடும் தெரியவில்லை வேண்டாம்!
சீனாவுடன் தொடர்புடைய ரகசிய “காவல் நிலையங்கள்” அமெரிக்கா முழுவதும் அமைக்கப்பட்டுள்ளன என்ற தகவலால் அந்நாட்டின் புலனாய்வு அமைப்பான எஃப்பிஐ கவலை” கொண்டுள்ளது. Safeguard Defenders என்ற அரசு சாரா அமைப்பு கடந்த செப்டம்பர் மாதம் வெளியிட்ட அறிக்கையில், இத்தகைய ரகசிய நிலையங்கள், நியூயார்க் உட்பட உலகம் முழுவதும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எஃப்பிஐ இயக்குநர் கிறிஸ்டோபர் ரே, இது தொடர்பாக அமெரிக்க மூத்த அரசியல்வாதிகளிடம் பேசும்போது, நாடு முழுவதும் இதுபோன்ற மையங்கள் இருப்பதாக கூறப்பட்டும் சேஃப் டிஃபண்டர்ஸ் அறிக்கையைஎஃப்பிஐ கண்காணித்து வருவதாக தெரிவித்தார். இத்தகைய நிலையங்கள் இருப்பதை நாங்கள் அறிவோம். என்னைப் பொறுத்தவரை, சீன காவல்துறை நியூயார்க்கில் அதன் நிலையங்களை சரியான ஒருங்கிணைப்பு இல்லாமல் அமைக்க முயற்சிப்பதாக நினைப்பது கூட மூர்க்கத்தனமானது என்று சொல்லலாம். அது இறையாண்மையை மீறுவதுடன் நிலையான நீதி மற்றும் சட்ட அமலாக்க ஒத்துழைப்பு செயல்முறைகளை மீறி நடப்பதாக கருதப்படும்,” என்கிறார் ரே. அத்தகைய நிலையங்கள் அமெரிக்க சட்டத்தை மீறுகின்றனவா என்று கேட்டதற்கு, “சட்ட ரீதியான அந்த விவகாரத்தையும் எஃப்பிஐ கவனித்து வருகிறது” என்று ரே பதிலளித்தார். மூத்த உளவு அதிகாரியாக கருதப்படும் ரே, அமெரிக்க செனட் சபையின் உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் அரசாங்க விவகாரக் குழு விசாரணையில் ஆஜரானபோதே இவ்வாறு பேசினார். அவரிடம் மூத்த எம்பிக்கள் பலரும் கேள்விகளை எழுப்பினர். பட மூலாதாரம், Getty Images இத்தனை முக்கியத்துவம் எதற்கு? ஸ்பெயினைத் தளமாகக் கொண்ட NGO Safeguard Defenders கருத்தின்படி, சீன பொது பாதுகாப்புப் பணியகங்கள் லண்டனில் இரண்டு மற்றும் கிளாஸ்கோவில் ஒன்று என பல கண்டங்களில் உள்ளன. “வெளிநாட்டு காவல் சேவை நிலையங்கள்” போல செயல்படும் அவை, வட அமெரிக்காவில், டொரான்டோ மற்றும் நியூயார்க்கில் உள்ளன. நாடு கடந்த குற்றங்களை் சமாளிப்பதற்கும் வெளிநாடுகளில் உள்ள சீன பிரஜைகளுக்கு வெளிநாட்டில் ஓட்டுநர் உரிமங்களைப் புதுப்பித்தல் மற்றும் பிற தூதரக சேவைகள் போன்ற நிர்வாக சேவைகளை வழங்குவதற்கும் இந்த பிரிவுகள் உருவாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இருப்பினும் சேஃப்கார்ட் டிஃபண்டர்ஸ் அமைப்பு, “வெளிநாட்டு சீனர்களை உள்ளடக்கிய அனைத்து வகையான சட்டவிரோத மற்றும் குற்றச் செயல்களையும் முறியடிக்க” மோசமான காரியங்களை இலக்காகக் கொண்டு இந்த நிலையங்கள் செயல்படுவதாக கூறுகிறது. ஆனால், அத்தகைய வெளிநாட்டு நிலையங்களை இயக்குவதாக வெளிவரும் தகவல்களை சீனா மறுத்துள்ளது. சீன அதிபர் ஷி ஜின்பிங்கை விமர்சித்த அமெரிக்காவில் உள்ளவர்களை சீன அரசாங்கம் துன்புறுத்துவது, பின்தொடர்வது, கண்காணித்தல் மற்றும் அச்சுறுத்துவது தொடர்பான பல குற்றச்சாட்டுகளை அமெரிக்கா விசாரித்து வருவதாகவும் ரே கூறினார். “இது ஒரு உண்மையான பிரச்னை. இது குறித்து வெளிநாட்டில் உள்ள உளவு அமைப்புகளுடனும் பேசி வருகிறோம். ஏனென்றால் இது இங்கே மட்டும் நடக்கும் விஷயமல்ல,” என்று அவர் தெரிவித்தார். கடந்த அக்டோபரில், அமெரிக்க குடியிருப்புவாசி மற்றும் அவரது குடும்பத்தினரை உளவு பார்த்ததாகவும் தொந்தரவு செய்ததாகவும் குற்றம்சாட்டப்பட்ட ஏழு சீனர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை நீக்கவும் அமெரிக்கா நடவடிக்கை எடுத்தது. அந்த ஏழு பேரில் ஒருவரை திருப்பி அழைத்துக் கொள்ள சீன முயற்சி எடுத்ததன் அங்கமாக இந்த நடவடிக்கையை அமெரிக்கா மேற்கொண்டது. கடந்த மாதம், ஐரிஷ் தலைநகர் டப்ளின் மையத்தில் உள்ள சீன “காவல் நிலையங்களில்” ஒன்று, சேஃப்கார்ட் டிபண்டர்ஸ் அறிக்கையின் விளைவாக மூட உத்தரவிடப்பட்டது. மேலும் கனடா உளவுத்துறை அதிகாரிகள் சமீபத்தில் தங்கள் நாட்டு மண்ணில் சீனா அதிகாரபூர்வமற்ற “போலீஸ்” நிலையங்களைத் திறந்தது தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரித்து வருவதாகக் கூறினர்.
வருசநாடு: தேனி மாவட்டம், கடமலை-மயிலை ஒன்றியம், நரியூத்து ஊராட்சிக்குட்பட்ட பின்னத்தேவன்பட்டியில் 250க்கும் மேற்பட்ட பொதுமக்கள் குடியிருந்து வருகின்றனர். இவர்களுக்கு ஊராட்சி நிர்வாகம் மயிலாடும்பாறை மூல வைகை ஆற்றில் உரை கிணறு அமைத்து, குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலமாக கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் சப்ளை செய்து வருகிறது. கடந்த சில தினங்களாகவே பின்னத்தேவன்பட்டிக்கு முறையான குடிநீர் சப்ளை செய்யப்படவில்லை. இதனால் குடிநீர் வசதி இல்லாமல் பொதுமக்கள் சிரமப்பட்டு வந்தனர். மேலும் குடிநீருக்காக தனியார் தோட்டங்களுக்கு சென்று பொதுமக்கள் மணிக்கணக்கில் காத்துக் கிடந்து குடிநீர் எடுத்து வருகின்றனர். மேலும் இந்த கிராமத்திற்கு தெருவிளக்கு, முறையான சாக்கடை, தெருக்களில் சாலை வசதி இல்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், குடிநீர் மற்றும் அடிப்படை வசதிகள் கேட்டு பின்னத்தேவன்பட்டி கிராம பொதுமக்கள் சார்பில் மாவட்ட நிர்வாகத்திடம் தொடர்ந்து மனு கொடுத்தும் எந்த நடவடிக்கை இல்லை. எனவே கிராமமக்களின் நலனை கருத்தில் கொண்டு குடிநீர் மற்றும் சாக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். Related Stories: கோபி சுற்றுவட்டாரத்தில் தொடர் மழையால் நிரம்பிய அணைகள்: அந்தியூர் அருகே 10 கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை மதுவிற்பனை நேரத்தை பிற்பகல் 2 மணி முதல் இரவு 8 மணி வரை என மாற்ற ஏன் பரிசீலிக்கக்கூடாது?: தமிழக அரசுக்கு ஐகோர்ட் கிளை நீதிபதிகள் கேள்வி குக்கர் குண்டு வெடிப்பு வழக்கு தொடர்பாக நாகர்கோவிலில் மங்களூர் போலீசார் விசாரணை குமரி அருகே பள்ளி பேருந்து கால்வாயில் கவிழ்ந்த விபத்தில் 2 பள்ளி குழந்தைகள், ஓட்டுநர் மற்றும் பாதுகாவலர் உள்ளிட்ட 4 பேர் காயம் திருவண்ணாமலை தீபத் திருவிழாவில், 22 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்க திட்டம் செல்போன் வாங்கிக் கொடுத்து விட்டு, குழந்தைகள் மீது பெற்றோர் அக்கறை காட்டுவதில்லை: ஐகோர்ட் கிளை கண்டனம் மதுவிற்பனை நேரத்தை பிற்பகல் 2 மணி முதல் இரவு 8 மணி வரை என மாற்ற ஏன் பரிசீலினை செய்யக்கூடாது: ஐகோர்ட் கிளை கேள்வி 2024 மக்களவை தேர்தலில் நாம் தமிழர் கட்சி போல், பாஜக தனித்து போட்டியிட தயாரா?: சீமான் கேள்வி தர்மபுரி மாவட்டத்தில் 1,485 வாக்குச்சாவடிகளில் வாக்காளர் பட்டியல் சுருக்க திருத்த சிறப்பு முகாம்-கலெக்டர் நேரில் ஆய்வு போதிய வகுப்பறை இல்லாததால் மரத்தடியில் கல்விகற்கும் மாணவர்கள்-புதிய வகுப்பறை கட்டித்தர வலியுறுத்தல் போக்குவரத்து நெரிசலை குறைக்க ராமேஸ்வரம் நகரில் ஒரு வழிப்பாதை திட்டம்-சுற்றுலா பயணிகள்,பொதுமக்கள் வலியுறுத்தல் வேலூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடக்கும் அக்னிபாத் ராணுவ ஆட்சேர்ப்பு முகாமில் 2வது நாளாக ஆர்வத்துடன் வந்த பெண்கள் புதுக்கோட்டை அருகே 4 பெண் குழந்தைகளின் தாய் மர்மச்சாவு-போலீஸ் விசாரணை காவிரி ஆற்றில் குளிக்க சென்ற மருத்துவ மாணவர் நீரில் மூழ்கி பலி-கரூர் அருகே சோகம் குமரியில் 10 மையங்களில் நடந்த போலீஸ் எழுத்து தேர்வில் 2,981 பேர் ஆப்சென்ட்-ஐ.ஜி. நேரடி ஆய்வு குளத்தில் சடலமாக மிதந்தான் குமரியில் சிறுவன் மர்ம மரண வழக்கு சிபிசிஐடிக்கு மாறுகிறது? மறைந்து போகாத நாட்டுப்புற வழக்கம் மழை வேண்டி கொடும்பாவி எரித்து வழிபாடு-விவசாயிகள் மொட்டை அடித்து பூஜை மாடியில் இருந்து விழுந்து 8 இடங்களில் முறிவு முதுகுதண்டு அறுவை சிகிச்சையால் இயல்பு நிலைக்கு திரும்பிய சிறுமி கம்பம் பள்ளத்தாக்கில் 2-ம் போக நெல் விவசாய பணிகள் தீவிரம்: இயந்திர நடவு மூலம் செலவு குறைவதாக விசாயிகள் மகிழ்ச்சி
அரச இலக்கிய விருது வழங்கும் விழா 2020 இல் நாவல் இலக்கிய பிரிவில் விருது ‘உயிர்வாசம்’, நாவலாசிரியர் தாமரைச்செல்வி அவர்களுக்குவழங்கப்பட்டது. அதே பிரிவில் ‘வலசைப் பறவைகள்’, நாவலாசிரியர் சிவ ஆரூரன் அவர்கள் சான்றிதழ் பெற்றார். நானாவித இலக்கிய பிரிவில் ஆசை இராசையா அவர்களின் ‘விம்பம்’, ஓவியப் புத்தகம் விருதுபெற்றது. அத்துடன் அதே பிரிவில் சான்றிதழைப் பெற்று ‘கள்ளத்தோணி’, ஆசிரியர் என். சரவணனும் ‘யாழ்ப்பாண பொது நூலகம் – அன்றும் இன்றும், நூலாசிரியர் ரூபவதி நடராஜா அவர்களும் மதிப்பளிப்பு பெற்றனர். புலமைத்துவம் மற்றும் ஆய்வு சார் படைப்புக்களில் ‘யாழ்ப்பாணத் தமிழ் அகராதி’, ஆசிரியர் நடராசா சிறிரஞ்சன் விருது பெற்ற நிலையில் அதே பிரிவில் ‘ஈழத்துத் தமிழ்க் கிறிஸ்தவ இலக்கியம்’, ஆசிரியர் ஜெ. ஹறோசனா சான்றிதழ் பெற்றனர். இதேவேளை, சிறுகதை இலக்கியப்பிரிவில் ‘ஒன்பதாவது குரல்’, சிறுகதை நூலாசிரியர் தாட்சாயணிவிருது பெற்றார். அதே பிரிவில் ‘அப்பாவின் தோட்டம்’, சிறுகதை ஆசிரியர் மலரன்னை அவர்களுக்கும் மற்றும் ‘உணர்வுகள் கொன்றுவிடு’, சிறுகதை ஆசிரியர் நிவேதா உதயராயனும் சான்றிதழ் பெற்றனர். கவிதைப் பிரிவில் ‘சிலுவைகளே சிறகுகளாய்’, கவிஞர் மைக்கல் கொலின் சான்றிதழ்பெற்றார். மேற்படி இலக்கிய விருகளைப் பெற்ற நூல்களை ‘ஜீவநதி பதிப்பகம்’, ‘குமரன் பதிப்பகம்’ மற்றும் ‘மகுடம் பதிப்பகம்’ முதலிய ஈழப் பதிப்பகங்கள் வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது. Prevமுந்தய பதிவுபாடசாலை மாணவர்களுக்கு ஊடகங்களும் சிறுவர்களும் தொடர்பில் செயலமர்வு! அடுத்தப் பதிவுதமிழருக்கான உரிமையை வழங்கினால் மாத்திரமே அரசால் நாட்டைக் கட்டியெழுப்ப முடியும் | கஜேந்திரகுமார் பொன்னம்பலம்Next
#PandianStores: எம்பொண்ணு கழுத்துல நகை எங்கே?.. வில்லத்தனத்தில் வச்சி செய்யும் முல்லையின் அம்மா.. வைரல் ப்ரோமோ..! #BharathiKannammaPromo: ஒருவழியாக உண்மையை அறிந்துகொண்ட பாரதி.. டி.என்.ஏ ரிசல்ட் சக்ஸஸ்.. ஆனால் ஒரு ட்விஸ்ட்?..! #Breaking: பிரபல தமிழ் நடிகை பார்வதி நாயர் காவல் ஆணையர் அலுவலகத்தில் பரபரப்பு புகார்.. தொடர் மிரட்டல்., கண்ணீர் குமுறல்.! அடேங்கப்பா.. வேற லெவல்! ஹீரோயின்களுக்கே டப் கொடுப்பார் போல.! அர்ச்சனாவின் மகள் சாரா வெளியிட்ட வீடியோவை பார்த்தீங்களா!! என்னா லுக்குடா.. தாறுமாறு கவர்ச்சியில் இளசுகளை திக்குமுக்காட வைக்கும் மாஸ்டர் நடிகை.! இணையத்தை சூடாக்கும் புகைப்படங்கள்!! என்னம்மா இதெல்லாம்.. குட்டை உடை.. படுக்கையில் டாப் ஆங்கிளில் பிக்பாஸ் அபிராமி வெளியிட்ட புகைப்படம்.! அட.. சூப்பர்! சுந்தரி சீரியலில் என்ட்ரி கொடுக்கும் பிரபல முன்னணி நடிகை.! இப்பவும் எப்படியிருக்காரு பார்த்தீங்களா!! வைரல் வீடியோ.! தங்களது செல்ல மகளின் பெயரை வித்தியாசமாக அறிவித்த ரன்பீர்-ஆலியா ஜோடி.! இந்த பெயருக்கு இவ்வளவு அர்த்தமா?? 15 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அப்பாவான நடிகர் நரேன்.! என்ன குழந்தை தெரியுமா?? குவியும் வாழ்த்துக்கள்!! உங்களுக்காக நான் என்ன செய்தேன்.! ஏன் இப்படி?? கண்கலங்கி தொகுப்பாளினி பிரியங்கா வெளியிட்ட எமோஷனல் வீடியோ!! இந்திய ஆண்கள் மற்றும் மகளிர் கிரிக்கெட் அணியினர் ஒரே நேரத்தில் நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகின்றனர். ஒருநாள் தொடரில் சிறப்பாக ஆடிய இரு அணிகளுமே தொடரை கைப்பற்றியது. இந்நிலையில் இன்று நடைபெற்ற மகளிர் அணிகளுக்கான முதல் T20 போட்டியில் இந்திய மகளிர் அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்துள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பீல்டிங் செய்வதாக அறிவித்தது. முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணியின் டிவைன்( 62), சாட்டர்த்வெய்ட்(33), ஹாத்தி மார்டின்(27) ஆகியோரின் அதிரடி ஆட்டத்தால் நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 159 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணியின் துவக்க வீராங்கனை பிரியா ஆட்டத்தின் முதல் ஓவரிலேயே 4 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதனைத் தொடர்ந்து மந்தனாவுடன் ஜோடி சேர்ந்தார் ரோட்ரிஹியூஸ். இருவரும் எதிரணியின் பந்துவீச்சை அடித்து நொறுக்கினர். அதிரடியாக ஆடிய மந்தனா 24 பந்துகளில் அரைசதமடித்தார். இந்திய மகளிர் அணியில் மிக விரைவில் அடிக்கப்பட்ட அரைசதம் இதுவே ஆகும். ஆனால் சிறப்பாக ஆடிய மந்தனா 58 ரன்னில் ஆட்டமிழக்க ரோட்ரிஹியூசும் 39 ரன்னில் ஆட்டமிழந்தார். அவர்களைத் தொடர்ந்து இந்திய அணியின் விக்கெட்டுகள் மளமளவென சரியத் தொடங்கின. 102 ரன்னிலிருந்து 120 ரன் எடுப்பதற்குள் 5 விக்கெட்டுகள் சரிந்தன. சற்று நிலைத்து நின்று ஆடிய கேப்டன் ஹர்மந்த்பிரீத் கௌரும் 17 ரன்னில் ஆட்டமிழந்தார். அதனைத்தொடர்ந்து அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிய இந்திய மகளிர் அணி 19.1 ஓவரிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 136 ரன்கள் மட்டுமே எடுத்து 23 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here Tags: #Cticket #Women t20 #ind vs nz #Smrithi mandhana Copy Link தற்போதைய செய்திகள் காணாமல் போன பெண் அழுகிய நிலையில் சடலமாக மீட்பு... காவல்துறையினர் விசாரணை..!! மூன்று வயது மகனை தலைகீழாக தூக்கி தரையில் அடித்து கொலை செய்த தந்தை.... கொடூர சம்பவம்...!! குஜராத்தில் வெற்றி பெற மோடியின் பெயர் போதாதா?... காங்கிரஸ் மூத்த தலைவர் அசோக் கெலாட் விமர்சனம்...!! வாவ்.. சூப்பர்! துபாய் பார்ட்டியில் ஹர்திக் பாண்டியாவுடன் மாஸ் ஆட்டம் போட்ட மகேந்திர சிங் தோனி! ரசிகர்களை குஷியாக்கிய வீடியோ.!
தர்ம சன்சத் மற்றும் ஆயத்தக் கூட்டத்தை ஏற்பாடு செய்ய வேண்டாம் என்று நரசிங்கானந்திற்கு போலீஸார் வியாழக்கிழமை நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். (கோப்பு பிரதிநிதி படம்: IANS) தனது ஆத்திரமூட்டும் கருத்துகளால் அடிக்கடி சர்ச்சையைத் தூண்டும் நரசிங்கானந்த், டிசம்பர் 17 முதல் மூன்று நாள் ‘தர்ம சன்சத்’ என்று அழைத்தார். காஜியாபாத் தஸ்னா தேவி கோவிலின் அர்ச்சகர் யதி நரசிங்கானந்திற்கு உத்தரபிரதேச காவல்துறை வியாழக்கிழமை நோட்டீஸ் அனுப்பியுள்ளது, மேலும் மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி பெறாத “தர்ம சன்சத்” மற்றும் ஆயத்த கூட்டத்தை ஏற்பாடு செய்ய வேண்டாம் என்று அறிவுறுத்தியது. கூறினார். தனது ஆத்திரமூட்டும் கருத்துகளால் அடிக்கடி சர்ச்சையைத் தூண்டும் நரசிங்கானந்த், பாஜக முன்னாள் எம்பி பைகுந்த் லால் ஷர்மாவின் பிறந்தநாளான டிசம்பர் 17 முதல் மூன்று நாள் “தர்ம சன்சத்” என்று அழைத்தார். மூன்று நாள் நிகழ்ச்சிக்கான திட்டங்களை வகுப்பதற்காக டிசம்பர் 6 ஆம் தேதி ஒரு ஆயத்த கூட்டம் அழைக்கப்பட்டுள்ளது. காசியாபாத் காவல்துறை கண்காணிப்பாளர் (கிராமப்புறம்) இராஜ் ராஜா கூறுகையில், “அனுமதியின்றி, நூற்றுக்கணக்கான பார்ப்பனர்கள் கலந்துகொள்ளும் மூன்று நாள் தர்ம சன்சத் நிகழ்ச்சிக்கு காவல்துறை அனுமதிக்காது. மேலும், அவர்களுக்கு பாதுகாப்பு வழங்குவது கடினமான பணியாக இருக்கும். மேலும், உள்ளாட்சி அமைப்புத் தேர்தலைக் கருத்தில் கொண்டு மாவட்டத்தில் CrPC பிரிவு 144 இன் கீழ் தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது என்று காவல்துறை அதிகாரி கூறினார். “தர்ம சன்சத்” மற்றும் ஆயத்த கூட்டத்தை ஏற்பாடு செய்ய வேண்டாம் என்று நரசிங்கானந்திற்கு வியாழக்கிழமை காவல்துறை நோட்டீஸ் அனுப்பியது. இதுகுறித்து அர்ச்சகர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “கோயில் வளாகத்தில் தர்ம சன்சத் நடைபெறும், அதனால் அதற்கு அனுமதி தேவையில்லை. மேலும், இது முதல் முறையாக நடத்தப்படவில்லை. நாங்கள் எந்த விலையிலும் ஏற்பாடு செய்வோம். காவல்துறையும் நிர்வாகமும் இடையூறு ஏற்படுத்தினால், பார்ப்பனர்கள் தங்கள் எதிர்ப்பைத் தெரிவிப்பார்கள்.
மேஷம்: குடும்பத்தினரின் எண்ணங்களைப் புரிந்து நிறைவேற்றுவீர்கள். அன்புக்குரியவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். தாய்வழி வழியில் ஒத்துழைப்பு இருக்கும். வீட்டை அழகுபடுத்துவீர்கள். வியாபாரத்தை அதிகப்படுத்துவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் பாராட்டப்படுவீர்கள். புகழும் கௌரவமும் நிறைந்த நாள். ரிஷபம்: எதையும் சமாளிக்கும் திறன் பிறக்கும். ஒன்றாகப் பிறந்தவர்கள் பாசத்தைப் பொழிவார்கள். வீடு, வாகனம் பழுது பார்ப்பீர்கள். பழைய கடனில் ஒரு பகுதியை அடைப்பீர்கள். வியாபாரத்தில் விஐபிக்கள் வாடிக்கையாளர்கள். பணியில் தலைமைத்துவத்தின் ஆதரவைப் பெறுவீர்கள். சிந்திக்கும் திறன் அதிகரிக்கும் நாள். மிதுனம்: கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் உண்டாகும். சில வேலைகளை விட்டுவிடுவீர்கள். நீண்ட நாட்களாக இருந்த பிரச்சனை தீரும். ஆரோக்கியம் மேம்படும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் பெறுவீர்கள். உத்தியோகத்தில் புதிய பலன்கள் கிடைக்கும். திடீர் திருப்பங்கள் நிறைந்த நாள். கடகம்: சந்திராஷ்டமம் காரணமாக சில விஷயங்களில் திட்டமிட்டது ஒன்று, செயல் ஒன்று. உறவினர்கள், நண்பர்களுடன் சண்டை சச்சரவுகள் வந்து நீங்கும். யாரையும் எளிதில் நம்பாதே. வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறையும். அதிகாரிகள் பணியிடத்தில் புகார் கூறுகின்றனர். கவனமாக இருக்க வேண்டிய நாள். சிம்மம்: உங்கள் பிள்ளைகளை புதிய பாதையில் வழிநடத்துவீர்கள். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவீர்கள். மனைவி வழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வாகனத்தை பழுது பார்ப்பீர்கள். பணியாளர்கள் தொழிலில் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். புதிய வேலை வாய்ப்புகள் தேடி வரும். தன்னம்பிக்கை நிறைந்த நாள். கன்னி: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கிடைக்கும். நல்ல செய்தி வந்து சேரும். நீண்ட நாட்களாகப் பார்க்க விரும்பிய ஒருவர் உங்களைத் தேடி வருவார். திடீர் அறிமுகத்தால் ஆதாயம் அடைவீர்கள். வியாபாரத்தில் சில மாற்றங்களைச் செய்வீர்கள். அலுவலகத்தில் மரியாதை. சாதனை படைக்கும் நாள். துலாம்: மனதில் புதிய எண்ணங்கள் வரும். பிள்ளைகள் கேட்பதை வாங்கித் தருவீர்கள். சிக்கனமாகச் செலவு செய்து சேமிக்கத் தொடங்குவீர்கள். ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் பழைய பாக்கி வசூல். வேலையில் உங்கள் திறமைகள் பிரகாசிக்கும். கனவுகள் நனவாகும் நாள். விருச்சிகம்: திட்டமிட்ட பணிகள் தடையின்றி முடிவடையும். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். புதிய வேலை அமையும். வெளியுலகில் புதிய அனுபவம் ஏற்படும். வியாபாரத்தில் கூட்டாளிகள் ஒத்துழைப்பார்கள். வேலையில் சக ஊழியர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். எதிர்பார்ப்புகள் நிறைவேறும் நாள். தனுசு: சில முக்கிய முடிவுகளை தைரியமாக எடுப்பீர்கள். அதே உடன் பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். சொத்து பிரச்சனைக்கு சுமூகமான தீர்வு காண்பீர்கள். வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் உண்டு. அலுவலகத்தில் மேலதிகாரிகள் உங்கள் கோரிக்கையை ஏற்றுக்கொள்வார்கள். வெற்றி நாள். மகரம்: குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். இழுபறியாக இருந்த வேலைகள் கைகூடும். வாகனத்தை பழுது பார்ப்பீர்கள். பயணங்களால் நன்மை உண்டாகும். வியாபாரத்தில் லாபம் கணிசமாக அதிகரிக்கும். வேலையில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். புதிய பாதை தெரிந்த நாள். கும்பம்: ராசியில் சந்திரன் இருப்பதால் அவசரப்பட்டு அவசர முடிவுகளை எடுக்க வேண்டாம். குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் வந்து சேரும். உங்களுக்கு உதவுவோம் என்று சொன்னவர்கள் உங்களுக்கு உதவாமல் இருக்கலாம். வியாபார ஒப்பந்தங்கள் தாமதமாகும். உத்தியோகத்தில் அதிகாரிகளால் தொல்லைகள் ஏற்படும். விழிப்புடன் இருக்க வேண்டிய நாள். மீனம்: குடும்பத்தை விட்டு பிரிந்து செல்வது நல்லது. யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீர்கள். கவலை ஒருவரின் சொந்த பிணைப்புடன் வந்து செல்கிறது. உடல் நலம். வியாபாரத்தில் புதிய முதலீடு செய்யலாம். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் பிரச்சனைகள் வரலாம். கவனமாக இருக்க வேண்டிய நாள்.
இளஞ்சித்திரன் அவசர சிகிச்சைப் பிரிவில் இரவே சிகிச்சை முடிந்து மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்தான். காலையில் தான் அவனைப் பார்க்க அனுமதி வழங்கப்பட்டது. அனுமதி கிடைத்ததும் சக்கர நாற்காலியில் அங்கே வந்தாள் கயற்கண்ணி. அவளுடன் சித்ரா மட்டும் உடன் வந்தார். பல வகையான மருத்துவ உபகரணங்களுக்கு நடுவில் இருந்த படுக்கையில் வயிற்றில் பெரிய கட்டும், தோளில் ஒரு கட்டுமாக மயக்கத்தில் ஆழ்ந்திருந்தான் இளஞ்சித்திரன். முகத்தில் ஆக்சிஜன் பொருத்தப்பட்டிருக்க, உணர்வே இல்லாமல் கிடந்த கணவனைக் கண்டதும் கண்ணீர் பெருகி கயற்கண்ணியின் கன்னம் நனைத்தது. வார்த்தைக்கு வார்த்தை ‘கண்ணு’ என்றழைப்பவன் கண் திறவாமல் கிடந்தான். கணவனின் முகத்தருகே சக்கர நாற்காலியில் சென்று அமர்ந்த கயற்கண்ணி, நடுங்கும் கரங்களால் மெதுவாக அவனின் நெற்றியை தொட்டாள். ‘உனக்கு ஒன்னும் ஆகாம பார்த்துக்குவேன் கண்ணுன்னு வார்த்தைக்கு வார்த்தை சொல்லி அலட்சியமா இருந்தியேய்யா… எனக்கு விழ இருந்த குத்தை எல்லாம் நீ வாங்கிக்கும் எண்ணத்தோடு தேன் அப்படிச் சொன்னியா?’ என்று மானசீகமாகக் கணவனிடம் கேட்டாள். ‘ஆனா நீ இல்லாம போனா நானும் இல்லையேய்யா. அதை ஏன் நீ நினைக்காம போன?’ என்று ஆவேசமாக அவனிடம் கேள்வி கேட்க துடித்த உதடுகளைக் கடித்து அடக்கினாள். “சீக்கிரம் கண்ணை முழிச்சு என்னைய கண்ணுன்னு கூப்பிடுய்யா. உன்கிட்ட நான் பேசணும். நம்ம புள்ள… புள்ளயை பத்தி சொல்லணும்…” என்று வாய் விட்டு சொல்லி அழ ஆரம்பித்தாள். “கயலு, அழாதேமா…” என்று சித்ரா ஆறுதல் சொன்னார். “என்னால முடியலையேமா… புள்ள உண்டானது தெரிஞ்சதும் இவரு எம்புட்டு சந்தோஷப்பட்டாருனு தெரியுங்களாம்மா? இவரு முகத்துல அம்புட்டு சந்தோஷத்தை அன்னைக்குத்தேன் பார்த்தேன். ஆனா இப்போ… இப்போ… இவரு கண்ணு முழுச்சு வந்த பிறகு ஓ புள்ள இப்ப ஏ வயித்துல இல்லன்னு அவரு கிட்ட எப்படிச் சொல்லுவேன்?” என்றாள் கதறலாக. அவளின் கதறல் சித்ராவிற்கும் கண்ணீரை வர வைத்தது. “ம்ம்…” இருவரும் மெல்லிய குரலில் பேசிக் கொண்டிருக்கும் போதே முனங்கல் சப்தம் கேட்க, வேகமாக இளஞ்சித்திரனை பார்த்தனர். இளஞ்சித்திரன் முகத்தைச் சுருக்கிக் கொண்டிருந்தான். “எய்யா…” கயற்கண்ணி மெதுவாகக் கணவனை அழைத்துப் பார்த்தாள். “ம்ம்…” என்று மீண்டும் முனங்கியவன், “க… கண்… கண்ணு…” என்று திணறலாக அழைத்தான். “இங்கன தேன் இருக்கேன்யா…” என்றவள் அவனின் குளுக்கோஸ் ஏறாத கையை மென்மையாக பற்றிக் கொண்டாள். “உ… உனக்கு…” என்று அவளுக்கு என்ன ஆனது என்று கேட்க முயன்றான். “எனக்கு என்னய்யா? நான் நல்லா தேன் இருக்கேன். நீ சீக்கிரம் எழுந்து வந்துருய்யா. அதுதேன் எனக்கு வேணும்…” கதறலாக வர துடித்த அழுகையை அடக்கி கொண்டு சொன்னாள். அவளின் பதிலை கேட்டு அப்படியே அமைதியாகி போனான் இளஞ்சித்திரன். அதன் பிறகு எதுவும் கேட்கவில்லை. மயக்கத்தில் இருந்து மீண்டவன், உறக்கத்திற்குச் சென்றான். செவிலி வந்து அவனைப் பரிசோதிக்க ஆரம்பிக்க, கயற்கண்ணி மீண்டும் அவள் அனுமதிக்கப்பட்ட அறைக்குச் சென்றாள். இளஞ்சித்திரனுக்கு உணர்வு வந்த பிறகு மருத்துவரை சந்தித்துப் பேசிவிட்டு வந்தான் ரித்விக். “டாக்டரு என்ன சொன்னாங்கண்ணே?” என்று விசாரித்தாள் கயற்கண்ணி. “அபாயக் கட்டத்தை இளஞ்சித்திரன் தாண்டிட்டார். இப்போ கான்ஷியஸ் வந்த பிறகு இன்னும் முன்னேற்றம் தெரியுதாம். வயிற்றில் தான் கொஞ்சம் ஆழமான காயம். அது தையல் பிரிக்கக் கொஞ்சம் லேட் ஆகும். தோளில் இருக்குற காயம் கொஞ்சம் சீக்கிரம் சரியாகிடும்னு சொல்லியிருக்காங்க சிஸ்டர்…” என்றான். “உங்களைக் கொல்ல வந்தது யாரு கயல்?” என்று வேதவர்ணா மெதுவாக அவளிடம் விசாரித்தாள். “அவரோட அண்ணே…” என்றாள் கயற்கண்ணி. “வாட்…!” என்று அந்த அறையில் இருந்த மூவருமே அதிர, சாதி விட்டு சாதி தன்னைக் கல்யாணம் செய்ததால் அவர்கள் தங்களைக் கொல்ல முயற்சி செய்கிறார்கள் என்ற உண்மையை அவள் சொல்ல கேட்டவர்கள் வாயடைத்துப் போனார்கள். “ஆணவக் கொலையா?” என்று அதிர்வுடன் கேட்டாள் வேதவர்ணா. அவர்கள் செய்திகளாகப் பார்த்த விஷயம் இப்போது தங்கள் கண்முன்னே நிகழ்ந்ததை நம்பமுடியாமல் விழித்தனர். “அப்போ உங்களைத் திரும்பத் தேடி வருவாங்களா?” என்று சித்ரா கேட்டார். “நாங்க உயிரோடு இருக்குற வரை எங்களைத் துரத்திக்கிட்டுதேன் இருப்பாங்கமா…” என்று கயற்கண்ணி அழுகையுடன் சொன்னாள். “அப்போ இங்கே தேடி வரவும் சான்ஸ் இருக்கே?” என்று வேதா பயந்த குரலில் கேட்க, “இல்ல வரு இங்கே வர முடியாது. ஏற்கெனவே இந்த வழக்கை விசாரிக்க, போலீஸ் வந்தாங்க. எனக்கு முழு விவரம் தெரியாததால் இவங்க இரண்டு பேரும் கண் முழிக்கும் வரை காத்திருக்கச் சொல்லியிருக்கேன். அதனால் ஒரு கான்ஸ்டபிள் இங்கே ஹாஸ்பிட்டலில் தான் இருக்கார். போலீஸ் இங்கே இருக்குற வரை இவங்களைக் கொல்ல வந்தவங்க வர சான்ஸ் இல்லை. போலீஸ் எப்போ வேணும்னாலும் இவங்களை விசாரிக்க வரலாம்..” என்றான் ரித்விக். அவன் அப்படிச் சொன்னதும், “அண்ணே எனக்கு ஒரு உதவி பண்ண முடியுமா?” என்று கேட்டாள் கயற்கண்ணி. “என்ன சிஸ்டர் சொல்லுங்க…” “எங்களைக் கொல்ல வந்தது யாருன்னு உங்க யாருக்கும் தெரிஞ்ச மாதிரி காட்டிக்க வேண்டாம்ணே. நானும் என்கிட்ட போலீஸ் விசாரிச்சா சொல்ல போறது இல்லை…” என்றாள் மெதுவாக. “ஏன் சிஸ்டர்?” “என்ன கயலு இது முட்டாள்தனமா இருக்கு?” “ஏன் கயல் இப்படிச் சொல்றீங்க?” என்று மூவருமே கேள்விகளை வீசினர். “அவரும் இதே தேன் செய்வாருங்கமா. அவர் கண்ணு முழிச்சு போலீஸ்கிட்ட என்ன சொல்ல போறாரோ அதே தேன் நானும் சொல்ல போறேன்…” என்றாள் கயற்கண்ணி. அவள் சொன்னதை மூவராலும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. குழந்தையை அழித்து விட்டார்கள், கணவனும் சாவின் விளிம்பில் இருந்து மீண்டு வந்திருக்கிறான். அப்படியிருக்கக் கொல்ல வந்தவனை அவள் காட்டிக் கொடுப்பது அவர்களுக்குப் பாதுகாப்பு என்று மூவரும் எடுத்து சொல்லியும் ஒரே பிடிவாதமாக இருந்தாள் கயற்கண்ணி. அதே போல் அவள் சொன்னதையே தான் மீண்டும் கண்விழித்துப் போலீஸ் இளஞ்சித்திரனிடம் விசாரணை செய்த போதும் அவனும் சொன்னான். தங்களைக் கொல்ல வந்ததே யார் என்று தெரியாது. முகமூடி போட்டிருந்ததால் யாரென்று தெரியவில்லை. எங்களுக்கு விரோதிகள் யாரும் இல்லை என்று இளஞ்சித்திரன் சொல்ல, அப்போ யார் இவர்களைத் தாக்க வந்தது என்று தெரியாமல் மேலும் விசாரணையை வேறு கோணத்தில் நடத்த காவல்துறையினர் முடிவு செய்தனர். ஆனால் முக்கியமாக இளஞ்சித்திரன் அவனின் சார்பாக எந்தக் கம்ளைண்டும் கொடுக்க மறுத்துவிட்டான். சம்பந்தப்பட்டவனே எந்தக் கம்ளைண்டும் கொடுக்காததால் அவ்வழக்கை விசாரிக்க வந்த போலீஸாரும் அவனைக் கடுமையாகத் திட்டிவிட்டு சென்றிருந்தனர். இளஞ்சித்திரன், கயற்கண்ணி இருவரையும் வினோதமாகப் பார்த்தனர் ரித்விக் குடும்பத்தினர். ஆனால் இருவரின் முடிவில் இருந்தும் சிறிதும் மாற்றம் இல்லை. இரண்டாவது நாள் நன்றாகத் தெளிவாகவே இருந்தான் இளஞ்சித்திரன். காவல்துறையினர் வந்து சென்ற பிறகு மீண்டும் அன்று தான் கயற்கண்ணியை நன்றாகக் கண்விழித்துப் பார்த்தான். கயற்கண்ணி மெதுவாக நடக்க ஆரம்பித்திருந்தாள். அவனின் படுக்கையின் அருகில் ஒரு இருக்கையைப் போட்டு அமர்ந்திருந்த மனைவியின் முகத்தைப் படுத்த படியே அமைதியாகப் பார்த்தான். அவனுக்கு இன்னும் குழந்தையைப் பற்றிய விவரம் சொல்லப்படவில்லை. இரண்டு நாட்களும் மயக்கத்தில் தான் அவனின் பெரும்பான்மையான நேரங்கள் சென்றதால் மனைவியும் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொண்டது அவனின் கருத்தில் படாமல் போனது. தனி அறையில் சிகிச்சை நடந்து கொண்டிருந்தாலும், அவனுக்கு உணர்வு வரும் நேரமெல்லாம் அவளை மெல்ல இங்கே அழைத்து வந்து காட்டிக் கொண்டிருந்தனர். இன்று சற்று தெளிவாக இருந்த கணவனை லேசாகக் கண்கள் கலங்க பார்த்தாள் கயற்கண்ணி. “இங்கன வா கண்ணு…” என்று மென்மையாகத் தன் படுக்கையில் வந்து அமர சொல்லி அழைத்தான் இளஞ்சித்திரன். அவள் இருக்கையில் இருந்து எழுந்து படுக்கையில் அமர, அவளின் முகத்தையே ஆழ்ந்து பார்த்தான். இருவரும் எதுவுமே பேசிக் கொள்ளவில்லை. கண்கள் மட்டும் ஒன்றோடு ஒன்று கலந்து நின்றன. ‘ஏன்யா இப்படிச் செய்த?’ என்று கணவனைக் கேள்வி கேட்க கயற்கண்ணியின் நாவு துடித்தாலும் ஒன்றும் கேட்காமல் அமைதியாகவே பார்த்துக் கொண்டு இருந்தாள். இளஞ்சித்திரனின் பார்வை மனைவியின் தலையில் இருந்து படுக்கையில் தெரிந்த கால் வரை ஆராய்ச்சியாக ஊர்ந்து சென்றது. பின் மெதுவாகக் குளுக்கோஸ் ஏறாத கையை நகர்த்தி மனைவியின் அருகே கொண்டு வந்தவன், அவளின் வயிற்றின் மீது கையை வைத்தான். கையை வைத்த அடுத்த நொடி அவனின் கண்களில் இருந்து சரசரவென்று கண்ணீர் இறங்கி வந்தது. மனைவியிடம் எதுவுமே கேட்கவில்லை அவன்! மனைவியின் வயிற்றில் கையை ஊர்ந்து செல்ல விட்டவன் முகம் கசங்கி, உதடுகள் நடுங்க ஆரம்பித்தன. கண்களிலும் நிற்காமல் கண்ணீர் வடிந்து கொண்டே இருந்தது. ‘புரிந்து கொண்டான். அவன் புரிந்து கொண்டான்…’ என்று உணர்ந்து கொண்ட கயற்கண்ணி “எய்யா…” என்று விக்கித்து அழைத்து உடைந்து அழ ஆரம்பித்தாள். ‘அம்மாவை காப்பாத்த என் கூடச் சேர்ந்து வேண்டிக்கோனு கேட்டேனே தங்கம். ஆனா அம்மாக்குள்ள இருந்த உன்னைய காப்பாத்தணும்னு இந்த அப்பன் நினைக்காம போய்ட்டேனே… அதனால தேன் இந்த அப்பன் வேணாம்னு போய்ட்டியா தங்கம்?’ என்று குழந்தையிடம் அன்று போல் மானசீகமாகக் கேட்டான் இளஞ்சித்திரன். ‘அம்மாக்குள்ள நீ பத்திரமா இருப்ப, அதுனால ஓ அம்மாவை மட்டும் காப்பாத்தினா போதும்னு இந்த அப்பன் நினைச்சுப்புட்டேனே தங்கம். நீ எப்படி என்னைய நினைக்காம போகலாம்னு தேன் இந்த அப்பன் உனக்கு வேணாம்னு முடிவு பண்ணிட்டியா தங்கம்?’ என்று குழந்தையிடம் நியாயம் கேட்பவன் போல உடைந்து போய்க் கேட்டவன் கண்கள் தொடர்ந்து கண்ணீர் சிந்தின. ‘உன்னைய காப்பாத்தாம போன இந்த அப்பனை மன்னிச்சுடு தங்கம்…’ என்று குழந்தையிடம் மனதிற்குள் மன்னிப்பு கேட்டவன், “என்னைய மன்னிச்சுடு கண்ணு. நம்ம புள்ளயை காப்பாத்த முடியாத பாவி ஆகிட்டேன் நான்…” என்று உடைந்த குரலில் மனைவியிடம் மன்னிப்பு கேட்டான். “யோவ்! என்னய்யா இப்படிப் பேசிட்டு…” என்றவள் மேலும் ஒன்றும் சொல்ல முடியாமல் அழுதாள். தனக்காக உயிரையே கொடுக்கத் தயாரானவன் அவன். தன் மேல் ஒரு அடி கூட விழ கூடாது என்று போராடினானே! அவன் கத்தி குத்து வாங்கி அசந்த நேரம் தான் இமயவரம்பன் அவளைத் தாக்கினான். அவனால் முடிந்த வரை அவளைக் காக்க தானே அவன் போராடினான். அவ்வளவு போராடியும் குழந்தை இல்லாமல் போனதில் அவன் மேல் எப்படிக் குறை சொல்ல முடியும்? ஆனால் அப்படியும் அவன் தன்னையே குறை சொல்லிக் கொள்வதை அவளால் ஜீரணித்துக் கொள்ள இயலவில்லை. “நீ என்ன பண்ணுவய்யா? நீ ஒரு தப்பும் பண்ணலையா. எல்லாம் நம்ம விதி! அவ்வளவு தான்…!” என்றாள் விரக்தியாக. “விதி இல்லை கண்ணு, சதி…!” என்று சொன்னவனின் குரல் என்றைக்கும் இல்லாமல் கடுமையாக ஒலித்தது. கணவனின் குரலில் இருந்த பேதத்தைக் கண்டவள், “ய்யா…?” என்று புரியாமல் கேள்வியாக அழைத்தாள். “என் மேல தேன் தப்பு கண்ணு. நாந்தேன் தப்புப் பண்ணிட்டேன். என் தப்புனால தேன் என் புள்ள கருவா இருக்கும் போதே அதோட உசுரு போயிருச்சு. என் தப்பு தேன். என் தப்பே தான்…” என்றான் ஆவேசமாக. “என்னய்யா பேசுற? நீ எதுவும் செய்யலைய்யா.. உன்னையவே நீ ஏன் குறை சொல்லிக்கிற?” முற்றிலும் மாறி போன கணவனின் குரல் அவளுக்குள் பயத்தை விதைக்க அவனைத் தேற்ற முயன்றாள். “அதே தான் கண்ணு. நான் எதுவுமே செய்யலை. அது தேன் நான் செய்த தப்பு. இனியாவது செய்றேன் கண்ணு. செய்றேன்… செய்தே தீருவேன்…” என்று கண்கள் பளபளக்க தீவிரமாகக் கூறினான். “என்னய்யா செய்யப் போற?” பயத்துடன் கேட்டாள். “சொல்றதை விடச் செய்யும் போது தெரிஞ்சுக்கோ கண்ணு. ஆனா எப்பயும் போல என் மேல இருக்குற நம்பிக்கையை மட்டும் விட்டுடாதே…” என்று மனைவியின் கண்களை ஆழ்ந்து பார்த்துச் சொன்னான். அவனின் பேச்சும், தீவிரமும் அவளைத் திகைத்துப் போக வைத்தது. “நீ ஏன் கண்ணு ஏ அண்ணனை போலீசில் காட்டிக் கொடுக்கல?” என்று கேட்டான். “நான் எப்படிய்யா காட்டிக் கொடுக்க முடியும்? என்ன இருந்தாலும் அவரு ஓ கூடப் பிறந்தவர் ஆச்சே… அதுமட்டுமில்லாம நீ எப்படியும் ஓ அண்ணனை காட்டிக் கொடுக்க மாட்டேன்னு ஏ உள்மனசு சொல்லிச்சு. போலீஸ் கிட்ட நீ சொன்னதையே நானும் சொல்லணும்ல? அதனால தேன் நீ சொன்னதையே நானும் சொன்னேன்…” என்றாள் அவளின் பதிலில் இளஞ்சித்திரனின் கண்களில் காதல் பூ பூத்தது. சில முறை அவனே உணர்ந்திருக்கின்றான். அவளும், அவனும் சிந்திப்பதில் ஓர் ஒற்றுமை இருப்பதை. இப்பொழுதும் தான் என்ன நினைப்போம் என்று அவள் உணர்ந்து இருக்கிறாள் என்பதில் மகிழ்வு உண்டானது. ஆனால் இது மகிழ்ந்து கிடக்கும் நேரமல்ல என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டவன் மனைவியின் வயிற்றில் அழுத்தமாகத் தன் கையை வைத்தான். ‘இந்த அப்பனை மன்னிச்சிரு தங்கம்’ என்று வயிற்றில் கரைந்து போன குழந்தையிடம் மீண்டும் மன்னிப்பு கேட்டான். பின் தன் மனைவியின் கையை அழுத்திப் பிடித்து “இப்ப சொல்றேன் கேட்டுக்கோ கண்ணு. இனி உனக்கு மட்டுமில்ல, எனக்கும் உறுதியா எதுவும் ஆக விடமாட்டேன். அதேபோல இனி நமக்குன்னு ஒரு பிள்ளை வந்தால் அதுக்கும் எதுவும் ஆக விடமாட்டேன். நம்ம பரம்பரையையே தழைக்கச் செய்து வாழவைப்பேன்…” என்று உறுதிமொழி போல் மனைவியிடம் சொன்னவன் கண்களில் ஒரு முடிவை எடுத்துவிட்ட உறுதி தெரிய, அதை அவனின் கண்கள் அப்பட்டமாகப் பிரதிபலித்துக் கொண்டிருந்தன. “என்னைய்யா… என்னென்னமோ பேசுற?” என்று கயற்கண்ணி பயத்துடன் கேட்க, “இனிமே பேச்சே இல்ல கண்ணு. செயல்தான்! இதுக்கு மேல என்னைய ஒன்னும் கேட்காதே…!” என்றான். அதன் பிறகு அவன் மனைவியிடம் அதுபற்றி எதுவும் பேசவில்லை. இளஞ்சித்திரனை தனியாகச் சந்திக்க நேர்ந்த போது “நீங்க தவறா நினைக்கலைனா நான் உங்ககிட்ட ஒன்னு கேட்கலாமா இளஞ்சித்திரன்?” என்று கேட்டான் ரித்விக். “என்ன ரித்விக் கேளுங்க? அதுக்கு முன்னாடி நீங்க எங்க உயிரை காப்பாத்தினதுக்கு ரொம்ப ரொம்ப நன்றி ரித்விக். காரில் வரும் போது நீங்க துரிதமா செயல்பட்டது என் கருத்தில் பதிந்து போனது. நீங்க அப்படிச் செயல்பட்டதால் தான் நானும், என் கண்ணுவும் இப்போ உயிரோடு இருக்கோம்…” என்று நன்றி தெரிவித்தான். “அப்படிப் பார்த்தால் எங்க கட்டாய அன்பு அழைத்தல் மூலமா தான் கோவிலுக்கு வந்து ஆபத்தில் மாட்டிக்கிட்டீங்க. நீங்க உங்க வீட்டில் இருந்திருந்தால் இப்படி ஒரு சம்பவமே நடந்திருக்காதுனு நானே கில்டியா ஃபீல் பண்ணிட்டு இருக்கேன் இளஞ்சித்திரன். நீங்க என்னென்னா நன்றி சொல்லிட்டு இருக்கீங்க…” என்று வருத்தத்துடன் சொன்னான் ரித்விக். “இல்ல… அப்படி இல்லை ரித்விக். என்னைக்கா இருந்தாலும் எங்க வாழ்க்கையில் இப்படி ஒரு சம்பவம் நடந்திருக்கும். இப்போ எங்க கூட நீங்க இருந்ததால்தான் என் கூட வந்தவங்ளை தடுக்கச் சண்டை போட்டீங்க. எங்களைக் காப்பாற்றி உடனே ஹாஸ்பிட்டலில் சேர்த்தீங்க. ஒருவேளை நாங்க தனியா வெளியே போகும் போது இப்படி நடந்திருந்தால் காப்பாற்றி ஹாஸ்பிட்டலில் சேர்க்க கூட ஆள் இல்லாம, நாங்களும் கூட இல்லாமல் போயிருக்கலாம். அப்படி எதுவும் எங்களுக்கு நடக்காமல் எங்களைக் காப்பாற்ற தான் கடவுள் உங்களை அனுப்பி வச்சதா நினைக்கிறேன்…” என்றான் இளஞ்சித்திரன். ‘இருக்கலாம். ஒருவருக்கு ஒருவர் சரியான நேரத்தில் உதவி அவர்களுக்குள் இன்னும் நட்பு பலப்படத்தான் இத்தனை இன்னல்கள் தங்களைத் தீண்டி சென்றனவோ? கடவுளின் விருப்பமும் இது தானோ?’ என்று ரித்விக் மனதில் கேள்விகள் ஓடியது. “நீங்க எதுவும் ஃபீல் பண்ணாதீங்க ரித்விக். என்கிட்ட என்னமோ கேட்கணும்னு நினைச்சதை கேளுங்க…” என்றான் இளஞ்சித்திரன். “நீங்க ஏன் உங்க அண்ணனை பற்றிப் போலீசில் சொல்லலை இளஞ்சித்திரன்? சொல்லியிருந்தால் இனியும் இது போல் ஆபத்து உங்களுக்கு வராது இல்லையா?” என்று கேட்டான். “இந்த நேரம் எங்கள் காதல் விஷயத்தை, எங்க வீட்டு நிலைமையைப் பற்றிய முழு விபரமும் உங்க கிட்ட கண்ணு சொல்லியிருப்பாள்னு நினைக்கிறேன் ரித்விக்?” என்று இளஞ்சித்திரன் கேட்டான். அதற்கு ரித்விக் ‘ஆமாம்’ என்று தலையை அசைக்க, “என்னோட அண்ணனும், அப்பாவும் எப்படிப்பட்டவர்கள் என்று இப்போ உங்களுக்குத் தெரிஞ்சிருக்கும். எங்க ஊரில் என்னோட அய்யாவுக்கும், அண்ணனுக்கும் செல்வாக்கு அதிகம். பக்கபலமும் அதிகம். இப்போ ஒருவருக்கு எந்த இடத்தில் பலம் அதிகமாக இருக்கிறதோ, அதே இடத்தில் பலம் குறைந்து ஒன்றும் இல்லாமல் போனால் என்ன ஆகும் ரித்விக்?” என்று கேட்டான் இளஞ்சித்திரன். “கஷ்டமாக இருக்கும், அவமானமாக இருக்கும், கீழே இறங்கிப் போய் விட்டோமே என்று தலைகுனிவாக இருக்கும். உடைந்து போவோம்…” என்று ரித்விக் காரணங்களைச் சொல்ல, “யெஸ்! என் விஷயத்திலும் நீங்க இனி பார்க்கப் போறது அதையே தான் ரித்விக். இங்கே நான் கம்ளைண்ட் கொடுத்திருந்தால் இது எதுவுமே அவ்வளவு சுலபத்தில் நடக்காது ரித்விக். சொந்த ஊருக்குள்ள எப்படித் தலை நிமிர்ந்து நின்னு சாதி வெறி பிடிச்சு ஆடி எத்தனை பேர் உயிரை அலட்சியமாகக் கொன்னாங்களோ அதே இடத்தில், அவங்களால தன் குடும்பத்தில் ஒருத்தரை பலி கொடுத்து தவிக்கும் மனிதர்களின் முன் அவங்க கீழ் இறக்கி வேதனை பட்டு நிக்கணும் ரித்விக். அவங்க தெனாவெட்டா தலை நிமிர்ந்து சுத்தின இடத்திலேயே தலை குனிந்து நிற்கும் அளவுக்கு அவங்க பலத்தை ஒன்றுமில்லாமல் போகச் செய்வது தான் அவங்க சாதி வெறிக்கு பலியான என் குழந்தைக்குக் கிடைத்த வெற்றி ரித்விக்…” என்று கண்கள் பளபளக்க, குரலில் செய்து முடித்துவிடும் வேகத்துடன் கூறினான் இளஞ்சித்திரன்.
தன்முன் கண்ணீருடன் நின்றிருந்த நிஷாந்தியையும் அவளருகே தலைகவிழ்ந்து நின்றிருந்த தன் தம்பி ஆதவனையும் பார்த்த மித்திரனின் பார்வையில் என்ன இருக்கிறது என்று புரியாது நின்றிருந்தனர் இருவரும் … அவர்கள் இருவரையும் அழுத்தமாய் பார்த்தவன் ஒரு நொடி மூச்சை உள்ளிழுத்து நிதானமாய் வெளியேற்றியவன் ” சரி நான் பாத்துகிறேன் .. நீங்க ரெண்டுபேரும் வீட்டுக்கு போங்க … ” என்றவனை தயக்கத்துடன் பார்த்த நிஷாந்தி ” அத்தான் … ” என்று அழைத்தவளின் முகத்தில் இருந்த வருத்தத்தில் தன்னை நிதானித்து புன்னகையுடன் ” ஒன்னும் தப்பா நடக்காது நிஷா .. நான் மேனேஜ் பண்ணிக்கிறேன் .. ஓகேவா … ” என்று கூற அவனை பார்த்து தலையசைத்தவள் அங்கிருந்து நகர நிஷாவின் அருகே நின்றிருந்த ஆதவன் ” சாரிண்ணா .. ” என்று கண்களில் நீர் ததும்ப கூற ” டேய் இதெல்லாம் உனக்கு செட்டே ஆகல எப்போதும் ஜாலியா இருக்க என் தம்பியாவே இரு நோ கில்டி பீலிங்க்ஸ் ஓகேவா .. போடா நிஷா வெயிட் பண்றா பாரு … ” என்று அவனை அனுப்பியவனின் முகத்தில் சிந்தனை ரேகைகள் படர சற்றுநேரத்திற்கு முன் நடந்த நிகழ்வை நினைத்து பார்த்தான் தேவமித்திரன்… தனது தாய் மற்றும் பாட்டியின் சண்டையில் பாட்டிக்கு ஆதரவாக கூறியவன் அங்கிருந்து கிளம்பிய பிறகு அவனுக்கு நிஷாவிடமிருந்து அழைப்பு வர அதை ஏற்றவன் ” ஹலோ … என்ன நிஷா … ” என்று கேட்க நிஷாவோ ” அத்தான் பக்கத்துல இருக்க காஃபி ஷாப்க்கு வர முடியுமா … ” என்றாள்… ” என்ன நிஷா .. இவ்வளவு நேரம் வீட்ல தானே இருந்தேன் அங்கே பேசாம எதுக்கு காஃபி ஷாப்க்கு கூப்டுற … “ ” அத்தான் ப்ளீஸ் .. ஏன் … எதுக்குனு கேக்காம கொஞ்சம் சீக்கிரம் வாங்களேன் ப்ளீஸ் .. ” என்று கூற அவளின் குரலில் இருந்த பதட்டத்தில் என்னவாக இருக்கும் என்ற யோசனையுடன் சரி வரேன் என்று கூறியவன் அடுத்த ஐந்து நிமிடங்களில் அங்கே செல்ல அங்கு நிஷாவுடன் தனது தம்பி ஆதவனும் இருக்க அவர்கள் இருவரையும் கேள்வியாக நோக்கியவன் அவர்கள் இருவருக்கும் எதிரே இருந்த இருக்கையில் அமர்ந்தான்… “என்ன விஷயம் நிஷா எதுக்கு இங்கே வர சொன்ன … ஆதவன் வேற இருக்கான் … என்னாச்சு எதுவும் பிரச்சனையா … “ ” அத்தான் .. அது … வந்து … ” என்று நிஷா பேச முடியாது திணர மித்திரனுக்கு எதுவோ சரியாக படவில்லை … அவன் நினைவுகள் பல வருடங்கள்முன் செல்ல அதை போன்றதொரு நிகழ்வு தான் தற்போதும் நிகழ போகிறதோ என்று எண்ணி கொண்டிருந்தவன் நிஷாவிடம் ” என்ன நிஷா எதுவா இருந்தாலும் தயங்காம சொல்லு … ” என்றான் … ” அத்தான்… அதுவந்து … சாரித்தான் … எனக்கு நம்ம கல்யாணத்துல விருப்பம் இல்லை … ” என்று நிஷா கூற மித்திரனின் முகமோ ஒரு நொடி கோபமாக மாற அதை உணர்ந்த மித்திரன் தன் கோபத்தை வெளிகாட்ட பிடிக்காது தன்னுள் அடக்கியவன் நிஷாவை பார்த்து ” என்ன நிஷா ஆச்சு .. நமக்கு கல்யாணம் பண்ணனும்னு முடிவு பண்ணதுல இருந்து எல்லா ஏற்பாடும் உங்கிட்ட கேட்டுட்டு தானே பண்ணாங்க … அப்ப எல்லாத்துக்கும் சரினு சொல்லிட்டு இன்னும் ஒரு வாரமே கல்யாணத்துக்கு இருக்கப்போ வேணாம்னு சொல்றியே … என்ன தான் நினைச்சுட்டு இருக்க உன் மனசுல … ” என்று மித்திரன் முடிந்தளவு கோபக்குரலில் பேசுவதை தடுக்க நினைத்தாலும் அவனையும் மீறி அது சில இடங்களில் வெளிப்பட்டு தான் இருந்தது.. அவனது கோபக்குரலை கேட்ட நிஷாவிற்கு தான் செய்த தவறை எண்ணி தலை குனிந்தவளின் கண்களில் கண்ணீர் மட்டும் நிற்காமல் வந்து கொண்டிருக்க அவளின் கண்ணீரை கண்ட மித்திரனுக்கு ஆயாசமாக இருக்க ” இதுல நிஷா மேல மட்டும் தப்பு இல்லைனா என்மேலயும் தான் … ” என்று அதுவரை அமைதியாக இருந்த ஆதவன் வாய்திறக்க அவனை கேள்வியாய் நோக்கினான் மித்திரன்… “நானும் நிஷாவும் காதலிக்கிறோம்ணா.. ” என்று கூறிய ஆதவன் மித்திரனின் முகத்தை காண இயலாது தலை கவிழ்ந்தான்… இதைக்கேட்ட மித்திரனுக்கு முன்பு நடந்த நிகழ்வுகளும் அதனால் அவன்இழந்த இரு பாசமான உறவுகளும் மனக்கண்ணில் தோன்ற சோர்ந்து போனான் மித்திரன்… அவனின் தோற்றம் கண்ட இருவரும் ஒரே நேரத்தில் சாரி என்க ஆழ மூச்செடுத்து தன்னை நிதானமாக்கியவன் ஒரு முடிவெடுத்தவனாக இருவரையும் நோக்கினான்… “உங்க காதலை அட்லாஸ்ட் இப்பவாவது சொன்னதுக்கு தைங்ஸ்.. ” என்றவன் வேறெதுவும் பேசாது எழ எதுவும் கூறாது தங்களை திட்டாது கூட எழும் மித்திரனை பார்த்த ஆதவன் “அண்ணா .. ” என அழைக்க ” உங்களோட கல்யாணம் என் பொறுப்பு ..” என்றவன் அங்கிருந்து நகர்ந்தான்… அந்த காபி ஷாஃபை விட்டு வெளியே வந்தவன் காரை எடுத்துக்கொண்டு அமைதியான சூழலை தேடி சென்றான்… அவனது மனதுக்கு நெருக்கமான இடத்துக்கு சென்றான் .. அது அவர்களது தென்னந்தோப்பும் அதனைச் சுற்றியுள்ள அவர்களது வயலும் தான்… அங்கே தான் அவனது மகிழ்வான பல நாட்களை கழித்திருந்தான்.. அவனது விருப்பமான லட்சுமி அத்தையுடனும் தினகரன் மாமானுடம்.. எந்தளவுக்கு அவனுக்கு இன்பம் தந்தனரோ அதை அப்படியே பறித்துவிட்டு சென்றிருந்தனர் அவர்களிருவரும் அவர்களின் காதலுக்காக.. இவர்கள் இருவரும் ஒருவரையொருவர் காதலிக்கவில்லை .. வேறிருவரை காதலித்தனர்.. இந்த விஷயம் தெரிந்த ஒருவன் மித்திரனே ஆவான்.. அந்த சிறுவயதில் அவனுக்கு அது காதல் என்று புரியவில்லை .. வளரும் போது தான் அவனுக்கு அது புரிந்தது.. அவனுக்கு புரிந்தாலும் அந்த விஷயத்தை அவனால் மற்றவர்களுக்கு புரியவைக்க முடியாது போனது .. சிறு பிள்ளையின் வாதம் அங்கே எடுபடவில்லை.. அவனை நம்பாதவர்கள் மேல் இவனுக்கும் நம்பிக்கை இல்லை .. அவர்களை மனதால் சிறிதுசிறிதாக விலகியவன் தன்னுடைய பதினைந்தாவது வயதில் ஹாஸ்டலில் சேர்ந்து மொத்தமாக விலகி கொண்டான்.. அப்போது இருந்தே தன்னுள் இறுகி போனான்.. யாரோடும் இருவார்த்தைக்கு அதிகமாய் பேசியது இல்லை .. தேவையற்று பேசிடவும் இல்லை .. படித்து முடித்தவன் தன்னுடைய சுய முயற்சியாய் தொழில் தொடங்க நினைத்து பேங்க் லோனிற்காக முயற்சி எடுக்க அதற்கு வீட்டினர் அனுமதிக்காது போயினர்.. அவனுக்கு தேவைபட்ட பணத்தை அவர்களே தர அதை கடனாக மட்டுமே தான் வாங்குவேன் என்று கூறி வாங்கி கொண்டவன் இரு வருடங்களிலேயே மொத்த பணத்தையும் வட்டியோடு கொடுத்து வீட்டில் உள்ளவர்களை அதிர்ச்சி ஆக்கியவன் அங்கிருந்து கிளம்பியவன் சென்னையிலே செட்டிலாகி விட்டான்… அவசியமற்று அதிகம் ஊருக்கு வராதவனை அவனுக்கு திருமண ஏற்பாடு செய்திருப்பதாக கூறி அழைத்தனர்… முதலில் திருமணம் எனக்கு இப்போது எதுவும் வேண்டாம் என்று மறுத்தவனின் சொல் அங்கே கேட்பதற்கு ஆளில்லை .. அவனை அழைத்து வர அவனது அப்பாவும் சித்தப்பாவும் சென்றவர்கள் மித்திரனிடம் போராடியே அவனை அழைத்து வந்திருந்தனர்… எல்லாத்தையும் நினைத்து பார்த்து கொண்டிருந்த மித்திரனுக்கு ஏனோ நிஷா தன்னை திருமணம் செய்ய மறுத்தது அந்நேரத்தில் கோவத்தை தந்தாலும் தற்போது ஏனோ கோவம் வரவில்லை … இப்போது இந்த காதலையாவது அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ன செய்வது என்று யோசித்து கொண்டிருந்த மித்திரன் எதையோ முடிவெடுத்தவனாக ஆதவனுக்கு அழைத்தான்… ஆதவன் அண்ணனது அழைப்பை பார்த்ததும் சிறிது பயத்துடனே எடுத்தான் .. ” ஆதவா .. இப்போ நீயும் நிஷாவும் எங்கே இருக்கிங்க… “ ” இன்னும் காஃபி ஷாப்ல தான்ணா இருக்கோம் .. ” என்று தயக்கத்துடன் கூறியவனை கண்டுகொள்ளாத பாவனையில் மித்திரன் ” ஓகே இன்னும் டென் மினிட்ஸ்ல அங்கே வந்துருவேன் .. வீட்டுக்கு மூனுபேரும் சேந்து போகலாம் … ” என்று கூறிய மித்திரன் அழைப்பை துண்டித்துவிட்டு அங்கிருந்து கிளம்பினான் வேகமாக… வெகுநேரமாக போனை காதிலிருந்து எடுக்காது உக்கார்ந்து இருந்த ஆதவனின் முகத்தை பார்த்த நிஷா ” என்னடா ஆச்சு ஏன் இப்படி முழிக்கிற மித்திரன் அத்தான் என்ன சொன்னாரு ..” என்று படபடப்புடன் கேட்க அதற்கு ஆதவனோ ” ம்ம் நம்ம ரெண்டு பேரையும் வீட்டுக்கு கூப்டு போறேனு சொன்னாரு ..” ” ங்ஞே … ஆது விளையாடதடா நான் ஏற்கனவே செம டென்ஷன்ல இருக்கேன்.. “ ” ஆமா ஆமா நீ மட்டும் தான் டென்ஷன்ல இருக்க நான் ரொம்ப ஜாலியா டான்ஸாடிட்டு இருக்கேன் பாரு .. அடியே என் அத்தை மக ரத்தினமே வீட்ல என்ன நடந்தாலும் என்னைய தான் கல்யாணம் பண்ணுவேனு தெளிவா சொல்லி என்னைய கல்யாணம் பண்ணி கண்கலங்காம வச்சு பாத்துக்க வேண்டியது உன் பொறுப்பு .. வா போவோம் .. ” என்று நிஷாவின் கரத்தை ஆதவன் பிடிக்க தன்னை பிடித்த அவன் கரங்களில் பட்டென மறுகரம் கொண்டு அடித்தவள் அவனின் கரத்தை முதுகு புறமாய் திருப்பி முதுகிலே அடித்தாள்.. ” ஏன்டா எருமமாடு எம்புட்டு நேக்கா என்னைய கோர்த்துவிட்டு சார் எஸ்ஸாக பாப்பிங்க கொல பண்ணிடுவேன் பாத்துக்க .. ” என்றவள் அவனை முறைத்து விட்டு முன்னோக்கி செல்ல செல்பவளை பார்த்த ஆதவனின் முகத்திலும் அவர்களிருவரையும் அழைத்து போக வந்த மித்திரனின் முகத்திலும் மெலிதாய் புன்னகை தோன்றியது ..
Healthy Homemade Cake for Kids: கேக் என்றாலே நம் குழந்தைகளுக்கு அலாதி பிரியம்தான்.குழந்தைகளை கவர்வதற்கு எண்ணிலடங்கா பிளேவர்கள் இன்று உண்டு.கண்களை கவரும் வகையில் அனைத்து நிறங்களிலும் இன்று கேக் வகைகள் உண்டு.ஆனால் அவை அனைத்திலும் செயற்கை நிறமூட்டிகளும்,இனிப்பூட்டிகளும் சேர்க்கப்படுகின்றன என்பது மறுக்க முடியாத உண்மை. மேலும் அனைத்து கேக்குகளும் மைதாவினால் செய்யப்படுவதால் குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. அதற்கு என்ன வழி என்றுதானே யோசிக்கின்றீர்கள்.இதோ உங்களுக்கான ஹெல்தியான கேக் ரெசிபி. மைதா,செயற்கை நிறமூட்டிகள்,பேக்கிங் பவுடர் போன்றவை பயன்படுத்தாமல்…Read More Filed Under: பேக்கிங், இனிப்பு, கோதுமை Tagged With: cake for kids, cake without maida, cake without white sugar, cooker cake, cooker cake recipe, healthy cake recipe, Healthy Homemade Cake for Kids, homemade cake recipe, sponge cake, wheat cake டேட்ஸ் அண்ட் நட்ஸ் குக்கர் கேக் December 22, 2018 Leave a Comment Dates and nuts cooker cake டிசம்பர் மாதம் என்றாலே அனைவர்க்கும் மனதில் வருவது வகை வகையான கேக்குகள் தான், அதிலும் ட்ரை புரூட்ஸ் அண்ட் நட்ஸ் கேக்குகள் என்றால் அனைவருக்கும் அலாதி பிரியம்தான்.பாரம்பரியமாக இந்த கேக் வகையானது ஆல்கஹால் அல்லது வேறு வகையான திரவத்தில் 4௦ நாட்கள் ஊற வைத்த பின்னரே தயாரிக்கப்படுகிறது.ஆமாம்!இதை தயாரிக்க பல நாட்கள் வரை காத்திருக்க வேண்டும். இதன் கெட்டியான பதத்தால் பேக் செய்வதற்கும் பல மணி நேரங்கள் எடுத்து கொள்ளும்….Read More Filed Under: இனிப்பு, கேக் Tagged With: cake, cake for kids, christmas cake, Dates and nuts cooker cake, delicious cake, dry fruits cake, healthy cake, homemade cake, nuts cake ஈ-ஸ்டோருக்கு வாங்க நான் Dr.ஹேமா, அல்லது டாக்டர் மம்மி. இப்போ ஆக்டிவா மருத்துவம் பார்ப்பதில்லை. என் இரு சுட்டிப் பிள்ளைகள் என்னை பிசியா வைத்திருக்கிறார்கள்.புதிய பெற்றோர்களுக்கு எப்படி குழந்தை வளர்ப்பதென்று எளிய முறையில் உதவ இந்த வலைதளத்தை ஆரம்பித்துள்ளேன்... மேலும் படிக்க...
படம் குறித்து பரணி ஜெயபால் கூறுகையில், “படிக்கும் வயதில் சிறுவர்களுக்கு நல்ல பெற்றோரும், நல்ல ஆசிரியர்களும் அமைந்து விட்டால் அவர்களது வாழ்க்கை சிறப்பாக இருக்கும். இதில் ஏதேனும் ஒன்று தவறினால் அதன் விளைவு என்ன என்பதைத்தான் இப்படத்தின் கதையாக்கி இருக்கிறோம். படத்தின் இடைவேளைக்கு முன்னால் வரும் 20 நிமிடக் காட்சியை ஒரு உண்மைச் சம்பவத்தை மையமாகக் கொண்டு அமைத்திருக்கிறோம். சிறுவர்கள் வாழ்க்கை, காதலர்கள் வாழ்க்கை என இரண்டு தளங்களில் பயணிக்கும் கதை இடைவேளையில் ஒன்றாக சந்திக்கின்றன. அப்போது பிரச்சினை எழுகிறது. அதன் முடிவு என்ன என்பதை படத்தின் இரண்டாம் பகுதி சொல்லும். இப்படத்தின் நாயகனாக விஜய் வசந்த, நாயகியாக புதுமுகம் விபா நடித்திருக்கின்றனர். காமெடிக்கு தம்பி ராமையா. இது ஓர் ஆக்ஷன், திரில்லர் படமாகும். பரமக்குடி, பாண்டிச்சேரி, கேரளா உள்ளிட்ட பகுதிகளில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. குறிப்பாக கேரள காடுகளில் இந்தப் படத்தை ஷூட் செய்த அனுபவம் மறக்கமுடியாதது. ஒரு முறை நாங்கள் படப்பிடிப்பு நடத்திக்கொண்டிருந்தபோது யானைக் கூட்டம் வந்துவிட்டது. நாங்கள் காமிரா உள்ளிட்ட எல்லாவற்றையும் விட்டுவிட்டு, மரக்கூட்டத்தின் பின்னாள் ஒளிந்து கொண்டோம். கதாநாயகி விபா பயத்தில் அலறிவிட்டார். உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு நின்றார். நல்ல வேளை.. யானைகள் அங்குமிங்கும் சுற்றிப் பார்த்தபடி இருந்துவிட்டு, நகர்ந்துவிட்டன. நாங்கள் தப்பித்துவிட்டோம்,” என்றார். ரேணிகுண்டா படத்தின் இசையமைப்பாளரான கணேஷ் ராகவேந்திரா இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் நாயகி விபா கூறுகையில், “நான் சென்னை பொண்ணு. மாடலிங் பண்ணிட்டிருக்கும் போது கன்னடத்துல ‘ஆட்டா’ என்ற படம் பண்ணினேன். தமிழ்ல இதுதான் எனக்கு முதல் படம். எனது பெரியம்மா மகன் அரவிந்த் சாமி. அதாவது என் அண்ணன்தான் அரவிந்த் சாமி. ‘நல்ல படமா பார்த்து பண்ணு. அதுவும் ஹார்ட் வொர்க் பண்ணு’ன்னு அண்ணன் சொன்னார். இப்படத்துல நான் ஒரு போல்டான ஹீரோயினா நடிச்சிருக்கேன். ஸ்டண்ட்டும் பண்ணியிருக்கேன். கேரளாவிலுள்ள அடர்ந்த காட்டில் ஒன்றரை மாசம் படப்பிடிப்பு நடைபெற்றது. அந்த அனுபவமே ரொம்ப த்ரில்லிங்கா இருந்தது,” என்றார். Facebook Twitter WhatsApp Viber Previous articleகோடீஸ்வர பட்டியலில் ஹன்ஸிகா… கோயில் கட்ட கூட்டம் ரெடி! Next articleஉறவில் உற்சாகம் உச்சமடைய கால்சியம் அவசியம்! Kannan RELATED ARTICLESMORE FROM AUTHOR குடும்ப பெண்களுக்கும் சுயஇன்பம் தேவையான ஒன்றுதான் ஜிவ்வுனு ஏற வ யாகரா போட்டா, ஒரே அடியா போட்டுத்தள்ளுதாம்! இண்டர்நெட் பார்த்து ஆர்டர் போடும் பழக்கம் இருக்கா? பார்த்து கேபிள் கனெக்சனோ கட்டாகும்!
தமிழ் சினிமாவில் 7 ஆண்டுகளாக காதலர்களாக வலம் வருபவர்கள் இயக்குனர் விக்னேஷ் சிவன் – நடிகை நயன்தாரா ஜோடி கடந்த மாதம் ஜீன் 9-ம் தேதி திருமணம் நடைப்பெற்றது. இந்நிலையில் திருமணம் முடிந்த மறுநாளே திருப்பதிக்குச் சென்று தரிசனம் செய்த விக்கி- நயன்தாரா தாய்லாந்து, ஸ்பெயில் போன்ற நாடுகளுக்கு தேனிலவு சென்றனர். இதற்கிடையில் சில தினங்களுக்கு முன் நாங்கள் அம்மா, அப்பா ஆகி விட்டதாகவும் தங்களுக்கு இரட்டை குழந்தை பிறந்துள்ளதாக தெரிவித்தனர். இத்தகைய செய்தியானது ஊடகங்கள் மத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. குறிப்பாக திருமணமாகி 4 மாதங்களே ஆன நிலையில் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றெடுத்தது பல்வேறு கருத்துகளை நெட்டிசன்கள் தெரிவித்தனர். பெரும் சர்ச்சைகளுக்கு மத்தியில் தற்போது நயன் – விக்கி ஜோடி தல தீபாவளியை தங்களது இரட்டை குழந்தைகளுடன் கொண்டாடியுள்ள வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. Wishing you all A very Happy Diwali 🪔 #HappyThalaDiwali #HappyDiwali pic.twitter.com/UDL4yWesPg — Nayanthara✨ (@NayantharaU) October 24, 2022 Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள். Categories பொழுதுபோக்கு Tags நயன்தாரா 12 ஆம் வகுப்பு படித்தவரா?.. பல்வேறு காலியிடங்கள்.. தேர்வு இல்லை.. ரூ.20500 சம்பளம்.. மத்திய அரசு நிறுவனத்தில் வேலை!
சென்னையை தலைமையிடமாகக் கொண்ட இந்திய கடல்சார் பல்கலைக்கழக வளாகத்தில், புதிததாக அமைக்கப்பட்டுள்ள கடல்சார் பணிமனையை மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்து மற்றும் ஆயுஷ் துறை அமைச்சர் திரு சர்பானந்த சோனாவால் நேற்று திறந்து வைத்தார். மேலும் கடல்சார் பல்கலைக்கழக விசாகப்பட்டினம் வளாகத்தில், புதிதாக கட்டப்பட்டுள்ள கட்டடங்களையும் சென்னையிலிருந்து காணொலி காட்சி வாயிலாக அவர் நாட்டுக்கு அர்ப்பணித்தார். இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், மாணவர்கள் உழைப்பின் 100 சதவீதத்தை வழங்கினால் மட்டுமே வெற்றிக்கான வழி பிறக்கும். ஒழுக்கம், அர்ப்பணிப்பு உணர்வு, நேரம் தவறாமை, இலக்கை நோக்கிய பயணம் போன்ற குணங்களால் மட்டுமே வெற்றியை நோக்கிய பயணம் சிறப்பானதாக அமையும்’ என்றார். “மாணவர்களுக்கு உரிய வேலை வாய்ப்பை அளிக்க வேண்டும் என்ற நோக்கத்தைப் பிரகடனம் செய்துள்ள ஆற்றல்மிக்க தலைவரை பிரதமராக நமக்கு பாரத மாதா தந்திருக்கிறாள்” என்றும் அமைச்சர் சோனாவால் தெரிவித்தார். சென்னையை தலைமையிடமாக கொண்ட இந்திய கடல்சார் பல்கலைக்கழகம், தரமான கடல்சார் கல்வி, பயிற்சி, ஆராய்ச்சிக்கான 7 கல்வி நிறுவனங்களை இணைத்து மத்திய பல்கலைக்கழகமாக 2008-ல் அமைக்கப்பட்டது. இந்த பல்கலைக்கழகம் சென்னை, கொச்சி, கொல்கத்தா, மும்பை, நவி மும்பை, விசாகப்பட்டினம் ஆகிய ஆறு வளாகங்களில் இளநிலை, முதுநிலை, முனைவர் பட்டப்படிப்பை வழங்குகிறது. இதனுடன் இணைக்கப்பட்ட 18 கடல்சார் பயிற்சி கல்வி நிறுவனங்களும் உள்ளன. நாடாளுமன்ற உறுப்பினர் திரு பி. ரவீந்திரநாத் (தேனீ), சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் திரு. அரவிந்த் ரமேஷ், பல்கலைக்கழக வேந்தர் திரு சங்கர் ஐஏஎஸ் (ஓய்வு), பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் மாலினி வி சங்கர், சென்னை துறைமுக பொறுப்பு கழக தலைவர் திரு சுனில் பாலிவால் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். *** (Release ID: 1784896) Visitor Counter : 90 Read this release in: English , Urdu , Hindi , Punjabi கப்பல் போக்குவரத்து அமைச்சகம் இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தின் சென்னை வளாகத்தில் கடல்சார் பணிமனையை திரு சோனாவால் தொடங்கி வைத்தார் Posted On: 24 DEC 2021 1:39PM by PIB Chennai சென்னையை தலைமையிடமாகக் கொண்ட இந்திய கடல்சார் பல்கலைக்கழக வளாகத்தில், புதிததாக அமைக்கப்பட்டுள்ள கடல்சார் பணிமனையை மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்து மற்றும் ஆயுஷ் துறை அமைச்சர் திரு சர்பானந்த சோனாவால் நேற்று திறந்து வைத்தார். மேலும் கடல்சார் பல்கலைக்கழக விசாகப்பட்டினம் வளாகத்தில், புதிதாக கட்டப்பட்டுள்ள கட்டடங்களையும் சென்னையிலிருந்து காணொலி காட்சி வாயிலாக அவர் நாட்டுக்கு அர்ப்பணித்தார். இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், மாணவர்கள் உழைப்பின் 100 சதவீதத்தை வழங்கினால் மட்டுமே வெற்றிக்கான வழி பிறக்கும். ஒழுக்கம், அர்ப்பணிப்பு உணர்வு, நேரம் தவறாமை, இலக்கை நோக்கிய பயணம் போன்ற குணங்களால் மட்டுமே வெற்றியை நோக்கிய பயணம் சிறப்பானதாக அமையும்’ என்றார். “மாணவர்களுக்கு உரிய வேலை வாய்ப்பை அளிக்க வேண்டும் என்ற நோக்கத்தைப் பிரகடனம் செய்துள்ள ஆற்றல்மிக்க தலைவரை பிரதமராக நமக்கு பாரத மாதா தந்திருக்கிறாள்” என்றும் அமைச்சர் சோனாவால் தெரிவித்தார். சென்னையை தலைமையிடமாக கொண்ட இந்திய கடல்சார் பல்கலைக்கழகம், தரமான கடல்சார் கல்வி, பயிற்சி, ஆராய்ச்சிக்கான 7 கல்வி நிறுவனங்களை இணைத்து மத்திய பல்கலைக்கழகமாக 2008-ல் அமைக்கப்பட்டது. இந்த பல்கலைக்கழகம் சென்னை, கொச்சி, கொல்கத்தா, மும்பை, நவி மும்பை, விசாகப்பட்டினம் ஆகிய ஆறு வளாகங்களில் இளநிலை, முதுநிலை, முனைவர் பட்டப்படிப்பை வழங்குகிறது. இதனுடன் இணைக்கப்பட்ட 18 கடல்சார் பயிற்சி கல்வி நிறுவனங்களும் உள்ளன. நாடாளுமன்ற உறுப்பினர் திரு பி. ரவீந்திரநாத் (தேனீ), சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் திரு. அரவிந்த் ரமேஷ், பல்கலைக்கழக வேந்தர் திரு சங்கர் ஐஏஎஸ் (ஓய்வு), பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் மாலினி வி சங்கர், சென்னை துறைமுக பொறுப்பு கழக தலைவர் திரு சுனில் பாலிவால் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
“மனிதர்கள் கடவுளரைக் கண்டுபிடித்தபோது வரலாறு தொடங்கியது. மனிதர்களே கடவுளராக மாறும்போது வரலாறு முடிவுக்கு வந்துவிடும்.” - யுவால் நோவா ஹராரி • ஹோமோ சேப்பியன்ஸ் ஹோமோ டியஸாக (லத்தீன் மொழியில் ‘டியஸ்’ என்றால் கடவுள்; ஹோமோ டியஸ் என்றால் மனிதக் கடவுள்) மாறிக் கொண்டிருக்கின்ற இந்நேரத்தில், நமக்கு நாமே எத்தகைய தலைவிதிகளை நிர்ணயித்துக் கொள்ளப் போகிறோம்? • பரிணாம வளர்ச்சியின் முதன்மை ஆற்றலான இயற்கைத் தேர்ந்தெடுப்புச் செயல்முறையின் இடத்தைச் செயற்கைத் தேர்ந்தெடுப்புச் செயல்முறை எடுத்துக் கொள்ளும்போது மனிதகுலத்தின் எதிர்காலம் எவ்வாறு மாறும்? • நம்முடைய விருப்பங்களையும் அரசியல் தேர்ந்தெடுப்புகளையும் பற்றி நம்மைவிட அதிகமாக கூகுளும் முகநூலும் தெரிந்து வைத்திருக்கும்போது ஜனநாயகத்தின் நிலைமை என்னவாகும்? • கணினிகள் மனிதர்களின் வேலைகளைப் பறித்துக் கொண்டு, ‘பயனற்ற வர்க்கம்’ என்ற ஒரு புதிய, மிகப் பெரிய வர்க்கத்தைத் தோற்றுவிக்கும்போது, அரசின் மானிய உதவியோடு வாழும் மக்களை உள்ளடக்கிய நாடுகளுக்கு என்ன நேரும்? • நம்முடைய சொந்த அழிவு சக்திகளிடமிருந்து இந்த மென்மையான உலகத்தையும் ஒட்டுமொத்த மனிதகுலத்தையும் நாம் எவ்வாறு பாதுகாப்போம்? நம்மை அதிர வைக்கின்ற இது போன்ற பல கேள்விகளை நம்மை நோக்கி ஏவி, சுவாரசியமாகவும் சிந்தனையைத் தூண்டும் விதத்திலும் அவற்றுக்கு இந்நூலில் விடை காண முயற்சித்துள்ளார் பேராசிரியர் ஹராரி. 21ம் நூற்றாண்டைச் செதுக்கி வடிவமைக்கக்கூடிய இனிய கனவுகளையும் கொடுங்கனவுகளையும் பற்றிய ஒரு வெள்ளோட்டத்தை ஹோமோ டியஸ் எனும் இந்நூல் நமக்குக் கொடுக்கிறது. About the Author(s) முனைவர் யுவால் நோவா ஹராரி ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்திலிருந்து வரலாற்றில் முனைவர் பட்டம் பெற்றவர். அவர் இப்போது ஜெரூசலம் ஹீப்ரூ பல்கலைகழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். ‘உலக வரலாறு’ குறித்து அவர் தனித்துவமான ஆய்வுகள் நடத்தி வருகிறார். அவருடைய ஆய்வுகள், பின்வரும் பரந்த கேள்விகளுக்கு விடை காணுவதை நோக்கமாகக் கொண்டுள்ளன: வரலாற்றுக்கும் உயிரியலுக்கும் இடையேயான உறவு என்ன? வரலாற்றில் நியாயம் இருக்கிறதா? வரலாற்றின் ஊடாக மக்கள் அதிக மகிழ்ச்சி அடைந்தனரா? ஹராரி நடத்துகின்ற ‘மனிதகுலத்தின் ஒரு சுருக்கமான வரலாறு’ என்ற தலைப்புக் கொண்ட இணையவழிப் பயிற்சி வகுப்பில் 65,000க்கும் அதிகமானோர் பங்கு கொண்டு பயின்று வருகின்றனர். ஹோமோ டியஸ் என்ற இந்நூல் உலகம் நெடுகிலும் வெற்றிகரமாக விற்பனையாகிக் கொண்டிருக்கிறது. உலக அளவில் முப்பது மொழிகளில் இது பிரசுரிக்கப்பட்டுள்ளது. 2012ம் ஆண்டில் பேராசிரியர் ஹராரிக்குப் பொலோன்ஸ்கி விருது வழங்கப்பட்டது.
மலேசியாவில் செவ்வாய்க்கிழமை (நவம்பர் 22) 2,516 புதிய கோவிட் -19 தொற்றுகள் பதிவாகியுள்ளன. தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து நாட்டில் மொத்த வழக்குகளின் எண்ணிக்கை 4,971,936 ஆக உள்ளது. சுகாதார அமைச்சின் CovidNow போர்டல், செவ்வாயன்று புதிய கோவிட்-19 தொற்றுகளில் 2,513 உள்ளூர் பரவல்கள் என்றும், இறக்குமதி செய்யப்பட்ட மூன்று நோய்த்தொற்றுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்றும் தெரிவித்துள்ளது. செவ்வாய்க்கிழமையன்று 2,643 நோயாளிகள் குணமடைந்தனர். இது தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து மலேசியாவில் ஒட்டுமொத்தமாக மீட்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,908,313 ஆக உள்ளது. நாட்டில் தற்போது 27,003 செயலில் உள்ள தொற்றுகள் இருப்பதாகவும், 25,071 அல்லது 92.8% பேர் வீட்டுத் தனிமைப்படுத்தலைக் கடைப்பிடிப்பதாகவும் போர்டல் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் ICU பயன்பாட்டு விகிதம் 63.8% ஆக உள்ளது, பத்து மாநிலங்கள் அல்லது வட்டாரங்களில் 60%க்கும் அதிகமான ICU பயன்பாட்டு விகிதங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதற்கிடையில், சுகாதார அமைச்சின் கிட்ஹப் தரவு களஞ்சியம் செவ்வாயன்று 11 கோவிட் -19 இறப்புகள் பதிவாகியுள்ளன.அதில் 7 பேர் மருத்துவமனைக்கு வெளியே இறந்தவர்கள் என வகைப்படுத்தப்பட்டுள்ளனர். இதனால் மரண எண்ணிக்கை 36,620 ஆக உயர்ந்துள்ளது.
Thennakam Admin 28th October 2017 Current Affairs – 28 October 20172017-10-28T10:45:23+05:30 நடப்பு நிகழ்வுகள் இந்தியா 1.குஜராத்தின் நர்மதா மாவட்டத்தில் ராஜ்பிப்லா நகரில் பழங்குடியினருக்கான பிரத்யோக பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டுள்ளது. அதன் பெயர் பிர்சா முண்டா பழங்குடியினர் பல்கலைக்கழகம். 2.மத்திய குழந்தைகள் மற்றும் பெண்கள் நலத்துறை அமைச்சகம், பாலின சமத்துவத்தை வலியுறுத்தி, சமூக வலைத்தளங்களில் women for women : #IamThatWoman என்ற பிரச்சாரத்தை துவக்கியுள்ளது. 3.இந்திய விமானப்படையின் சேவையில் இருந்து விடுவிக்கப்பட்ட போர் விமானம் TU142M ஐ அருங்காட்சியமாக மாற்ற விசாகப்பட்டினத்தில் சந்திரபாபு நாயுடு அடிக்கல் நாட்டியுள்ளார். 4.சக்சம் திட்டத்தின் ( Saksham Yojna ) மூலம் மகளிர் சுய உதவி குழுவினருக்கு வழங்கப்படும் கடனுக்கான வட்டி விகிதம் 6.5 %லிருந்து 5 % ஆக குறைக்கப்படுவதாக சட்டீஸ்கர் மாநில அரசு அறிவித்துள்ளது. 5.LNG Producer – Consumer Conference 2017 ஜப்பானில் அக்டோபர் 17 -18ல் நடைபெற்றுள்ளது.இந்தியா சார்பில் மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கலந்து கொண்டுள்ளார். உலகம் 1.இரண்டாவது செர்ரி திருவிழா ஷில்லாங்கில் நடைபெறவுள்ளது. 2.சீனாவுக்கான இந்திய தூதராக கெளதம் பம்ப்வாலே நியமிக்கப்பட்டுள்ளார். 3.பிரான்ஸ் நாடாளுமன்றம் தீவிரவாத தடுப்பு சட்டத்தை நிறைவேற்றியுள்ளது. இதன்மூலம் காவல்துறையினர் வாரண்ட் இல்லாமல் எந்தவொரு இடத்திலும் சோதனை செய்ய இயலும்.
பௌத்த துறவிகள் கல்வி கற்கும் பல்கலைக்கழகங்களில் ஒழுக்கம் சீர்குலைந்து வருவதாகவும், பொதுவாக பௌத்த பல்கலைக்கழகங்களுக்குள் நுழையும் துறவிகளில் 45% பேர் இறுதியாண்டில் துறவறத்தை நிறுத்திக்கொள்வது குறித்தும் அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தலைமையில் கூடிய பௌத்தசாசன, சமய மற்றும் காலாசார அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் விவாதிக்கப்பட்டது. இந்நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்கு மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தையும் குழு வலியுறுத்தியது. அதற்கமைய, எதிர்காலத்தில் உயர்கல்வி அமைச்சுடன் கலந்துரையாடி நடவடிக்கை எடுப்பதற்கு எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் விதுர விக்ரமநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார். அண்மையில் பாராளுமன்றத்தில் நடைபெற்ற பௌத்தசாசன, சமய மற்றும் காலாசார அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் கூட்டம் நடைபெற்றபோதே அமைச்சர் இதனைக் கூறினார். வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடும் ஒருசில பௌத்த பிக்குமார் காரணமாக ஒட்டுமொத்த பௌத்த மதத்துக்கும் பாதிப்பு ஏற்படுவதாகவும், இவற்றை நிறுத்துவதற்கு அமைச்சு விரைவில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குழுவில் வலியுறுத்தப்பட்டது. மேலும், குறைந்த வயதில் சிறுவர்களைத் துறவறம் புகச் செய்வது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது. பௌத்தத்தை பாதுகாப்பது அரசியலமைப்பின் மூலம் வழங்கப்பட்டுள்ள பொறுப்பு என்பதால், இது தொடர்பில் குறிப்பிட்ட வேலைத்திட்டம் ஒன்றை தயாரிக்க வேண்டியதன் அவசியத்தை அமைச்சர் வலியுறுத்தினார். இதன்படி அடுத்த கூட்டத்தில் இதுபற்றிக் கலந்துரையாடப்படுவதுடன், அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் உபகுழுவொன்றை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் வலியுறுத்தினார். குழுவின் உறுப்பினர்களான சுஜித் சஞ்சய் பெரேரா, குணதிலக ராஜபக்ஷ உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்களும், அமைச்சின் அதிகாரிகளும் இதில் கலந்துகொண்டனர்.
வாவ்.. செம கியூட்.! வெளிநாட்டில் மனைவி ஷாலினியுடன் ரொமான்டிக்காக நடிகர் அஜித்.! இணையத்தை கலக்கும் புகைப்படம்!! பிரம்மாண்டமாக நடந்த கெளதம் கார்த்திக் - மஞ்சிமா மோகன் திருமணம்.. நேரில் வாழ்த்திய பிரபலங்கள்., குவியும் வாழ்த்துக்கள்.! அட.. காமெடி நடிகர் சாம்ஸின் மகனா இது.! ஹீரோ மாதிரி சூப்பரா இருக்காரே.! தீயாய் பரவும் புகைப்படம்!! கோடை விடுமுறையை கணக்கில் வைத்து ரிலீசாகும் படங்கள்... அசத்தல் லிஸ்ட் இதோ.. மக்களே ரெடியா?..! ஒரே கும்மாளம்தான்.! வெளிநாட்டில் தோழிகளுடன் செம ஆட்டம் போட்ட ஹன்சிகா.! வைரல் வீடியோ.!! 18 வயது பட்டாம்பூச்சியான அனிகா.! ப்பா.. பார்ட்டியில் செம ஹாட்டாக எப்படி ஜொலிக்கிறார் பார்த்தீங்களா!! வைரலாகும் கிளிக்ஸ்!! 23 ஆண்டுகளுக்கு பின்னர் கடனை திருப்பி கொடுத்த நடிகை மும்தாஜ்.. யாரிடம் எவ்வுளவு வாங்கினார் தெரியுமா?..! #PandianStores: எம்பொண்ணு கழுத்துல நகை எங்கே?.. வில்லத்தனத்தில் வச்சி செய்யும் முல்லையின் அம்மா.. வைரல் ப்ரோமோ..! கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர், கெலமங்கலம் புதூர் கிராமத்தை சேர்ந்தவர் லட்சுமணன். இவர் கடந்த 28ம் தேதி விவசாய தோட்டத்தில் கொலை செய்யப்பட்டு பிணமாக இருந்தார். இவரின் சடலத்தை மீட்ட கெலமங்கலம் காவல் துறையினர், விசாரணை நடத்தி வந்ததில் நரபலிக்காக கொலை நடந்தது தெரியவந்தது. அதாவது, இலட்சுமணனின் விவசாய தோட்டத்தில் புதையல் இருக்கிறது என்று மந்திரவாதி கூறியதை கேட்டு பெண்ணை நரபலி கொடுக்க திட்டமிட்டு இருக்கின்றனர். அமாவாசை நாளில் பெண் வராத நிலையில், கோழியை பலியிட்டு நரபலி பூஜை தொடங்கப்பட்டுள்ளது. அந்த சமயத்தில், திடீரென நிகழ்விடத்தில் இருந்த மணியின் மீது பாய்ந்த லட்சுமணன் தொண்டையை கடித்து கொலை செய்ய முயற்சித்து இருக்கிறார். சுதாரித்துக்கொண்ட மணி கட்டையை எடுத்து லட்சுமணனை தாக்கி கொலை செய்து தப்பித்து இருக்கிறார். பின்னர், லட்சுமணனின் உடலை குழியில் வைத்து மணி பூஜைகளை மேற்கொள்ள, நீண்ட நேரம் காத்திருந்தும் புதையல் கிடைக்காததால் மணி தப்பி சென்றுள்ளார். இதனையடுத்து, மணியை கைது செய்த காவல் துறையினர் சிறையில் அடைத்தனர். Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here Tags: #Krishnagiri #Hosur #Keelamangalam #police #Murder Copy Link தற்போதைய செய்திகள் மகளுக்கு பசிக்கு உணவளிக்க முடியாது தவித்த தந்தை.. ஏரியில் வீசி கொலை.. நெஞ்சை உலுக்கும் சோகம்.! வடமாநில கர்ப்பிணி பெண் தூக்கிட்டு தற்கொலை.. ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்ததால் சோகம்..! தென்காசி அருகே துயரம்.! பெங்களூரில் தமிழனுக்கு புளிப்பு மிட்டாய் கொடுத்த ஆட்டோ ஓட்டுநர்.. ரூ.20 க்கு இணங்கி 400 லாஸ்.. குமுறலோ குமுறல்..!
முல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு குருந்துார் மலையை சூழவுள்ள தமிழ் மக்களுக்குச் சொந்தமான சுமார் 400 ஏக்கர் நிலப்பகுதியை பௌத்த பூமியாக சுவீகரிப்பதற்கான நடவடிக்கைகளை தொல்லியல் திணைக்களம் எடுத்துள்ளது. தமிழ் மக்களுக்கு சொந்தமான குடியிருப்பு காணிகள் மற்றும் விவசாய நிலங்கள் அடங்கலாக சுமார் 400 ஏக்கர் நிலத்தை தம்மிடம் ஒப்படைக்குமாறு கரைத்துறைப்பற்று பிரதேச செயலாளரிற்கு, தொல்பொருள் திணைக்களம் எழுத்துமூலமாக அறிவித்துள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தின் குருந்தூர் மலையில், 1932 ஆண்டு உறுதியின்படி- தொல்பொருள் என்ற பெயரிலான வரைபடம் ஒன்றின்படி- 78 ஏக்கர் காணி வழிபாட்டிடம் ஒன்றிற்காக ஒதுக்கப்பட்டிருந்தது. அந்த இடத்தை மீள அளவீட்டிற்காக அறிவிக்கும்படி பிரதேசசெயலாளரிடம் தொல்லியல் திணைக்களம் கேட்டது. இதன்படி கொழும்பிலிருந்து வருகைதந்த நில அளவையாளரால் கடந்த வருட இறுதி பகுதியில் இப்பிரதேசம் அளவீடு செய்யப்பட்டு குருந்தாவ விகாரை தொல்லியல் பிரதேசம் என குறிப்பிட்டு 78 ஏக்கர் வரைபடதில் உள்ளடக்கபட்டிருந்தது. இதன் தொடர்சியாக கடந்த ஜனவரி 18 ஆம் திகதி இராணுவமும் தொல்லியல் திணைக்களமும் இணைந்து தொல்லியல் ஆய்வு பணிகளை குருந்தூர் மலையில் ஆரம்பித்திருந்தனர்.இந்த நிலையில், குருந்தூர் மலையை சுற்றியுள்ள 400 ஏக்கர் காணியை தொல்பொருள் திணைக்கததிற்கு வழங்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த 400 ஏக்கரில், சுமார் 150 ஏக்கர் காணி, தண்ணி முறிப்பு கிராமத்திற்குரிய தமிழ் மக்களுடையதாகும் , மிகுதி காணிகள் நாகஞ்சோலை வனப்பகுதியில் உள்ளடங்குகின்றது. கடந்த பெப்ரவரி மாதம் தமது காணிகளை சுத்தம் செய்து விவசாய நடவடிக்கையில் ஈடுபடும் நோக்கோடு தண்ணிமுறிப்பு கிராம மக்கள் வேலைகளில் ஈடுபட்டிருந்த நிலையில் பௌத்த தேரர்கள் தலைமையிலான தொல்லியல் திணைக்கள குழுவினரால் அவர்கள் தடுத்து நிறுத்த பட்டு அச்சுறுத்த பட்டிருந்த நிலையில் அவசர அவசரமாக இந்த காணிகளை கோரி பிரதேச செயலகத்துக்கு கடிதம் அனுப்பபட்டுள்ளது. இந்த நிலையில் மேலதிகமாக 400 ஏக்கர் காணிகளை கோரியுள்ளமை அந்த பகுதி முழுவதும் சிங்கள குடியேற்றங்களை நிறுவி சிங்கள மயப்படுத்த முயற்சிப்பதாக தெரிகிறது.இந்த காணியை தொல்பொருள் திணைக்களத்திற்கு ஒப்படைக்குமாறு வடமாகாண ஆளுனர் திணைக்களத்திலிருந்தும், கரைத்துறைப்பற்று பிரதேச செயலக அதிகாரிகளிற்கு தொடர் அழுத்தம் கொடுக்கப்பட்டும் வருகிறது.எதிர்வரும் முதலாம் திகதி முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நடைபெறவுள்ள நிலையில் இந்த கூட்டத்தில், தொல்பொருள் திணைக்களம் 400 ஏக்கர் காணி கோரும் விடயம் ஆராயப்படவுள்ளது. அதன் நிகழ்ச்சி நிரலில் இந்த விடயம் உள்ளடக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
தற்போது குறுஞ்செய்தி அனுப்பும் அளவானது மிகவும் குறைவாகவே உள்ளது, இதற்கு காரணம் தினசரி 100 குறுஞ்செய்தி வீதமே அனுப்ப முடியும். ஒரு சில நிறுவனங்களில் மட்டுமே 200 குறுஞ்செய்திகள் அனுப்ப முடியும். இவ்வாறு இருக்கையில் இணையத்தில் இருந்து இருந்து குறுஞ்செய்தி அனுப்ப பல்வேறு தளங்கள் உதவி செய்கிறன. உதாரணமாக way2sms, 160by2 போன்ற பல்வேறு தளங்கள் உள்ளன. இவற்றுக்கும் தற்போது பல வரைமுறைகள் வரையறுக்கப்பட்டுள்ளன. இரவு 9மணி முதல் மறுநாள் பகல் 9மணி வரை மொத்தமாக குறுஞ்செய்தி அனுப்ப முடியாது. இதுபோல இணையம் மூலமாக கைதொலைபேசிகளுக்கு குறுஞ்செய்தி அனுப்ப நாம் எதாவது ஒரு தளத்தினை நாட வேண்டும். இதற்கு பதிலாக முகநூல் தளத்திலிருந்தே குறுஞ்செய்தி அனுப்ப முடியும். இதற்கு Chatsms என்னும் அப்ளிகேஷன் உதவுகிறது. உங்களுடைய முகநூல் கணக்கில் உள்நுழைந்து கொள்ளவும். பின் சுட்டியில் கொடுக்கப்பட்ட அப்ளிகேஷனை உங்கள் முகநூல் கணக்கில் இணைத்துக்கொள்ளவும். மேலே கொடுக்கப்பட்டுள்ள படம் போல் தோன்று. Allow பொத்தானை அழுத்தி இணைத்துக்கொள்ளவும். பின் Apps என்னும் இணைப்பில் உள்ள ChatSMS என்னும் அப்ள்கேஷனை ஒப்பன் செய்யவும். பின் எந்த நாடு என்பதை தேர்வு செய்து, பின் மொபைல் என்னினை உள்ளிட்டு, குறுஞ்செய்தியை டைப் செய்து Send SMS என்னும் பொத்தானை அழுத்தி குறுஞ்செய்தியை அனுப்பி கொள்ளமுடியும்.
இஸ்லாத்தைப் பொறுத்தவரையில் மாதவிலக்கு ஏற்பட்ட பெண்ணை தீண்டத் தகாத அருவருப்பான ஒரு பிறவியாக கணிக்காது ஆன்மா உள்ள ஒரு பெண் ணாகவும், அண்டிப் பழக அருகதையுள்ள ஒரு பெண்ணாகவும், மனிதப் பிறவியாகவுமே போற்று கின்றது. நபி முஹம்மது (ஸல்) அவர்களுடைய காலத்தில் மாத விலக்குள்ள பெண்ணைத் தீண்டத் தகாதவளாக ஒதுக்கி வைக்கும் மக்களுடைய பழக்கங்களைப் பற்றி நபித் தோழர்கள் பின்வருமாறு முறையிட்டார்கள். ‘அல்லாஹ்வின் தூதரே! யூதர்கள் மாதவிடாய் ஏற்பட்ட பெண்களுடன் அமர்ந்து சாப்பிட மாட்டார்கள். வீடுகளில் அவர்களுடன் ஒட்டி உறவாட மாட்டார்கள். இது பற்றி என்ன கூறுகிறீர்கள்?' எனக் கேட்டார்கள். (தங்களு டைய பெண்கள் விஷயத்தில் இப்படித் தான் நடக்க வேண்டுமா என்ற எண்ணத்திலேயே கேட் டார்கள்.) அப்போது அல்லாஹ் பின்வரும் வசனத்தை இறக்கி மாதவிலக்குள்ள பெண்களுடன் நடந்து கொள்ள வேண்டிய முறையை விளக்கப்படுத்தினான். 'மாதவிடாய் பற்றி அவர்கள் உம்மிடம் வினவு கிறார்கள். அது ஒரு அசௌகரியமாகும். எனவே மாத விடாயின், போது பெண்களை விட்டும் விலகியிருங்கள். அவர்கள் தூய்மை யாகும் வரை அவர்களை அணு காதீர்கள். அவர்கள் தூய்மையடைந்த பின் அல்லாஹ் உங்களுக்கு கட்டளையிட்டவாறு அவர்களிடம் செல்லுங் கள் எனறு (நபியே!) நீர் கூறுவீராக. நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்புத் தேடுபவர் களை நேசிக்கிறான். மேலும் தூய் மையானவர் களையும் நேசிக்கின்றான் எனக் கூறுவீராக’ (அல்குர்ஆன் 2:222) இந்த வசனத்தில் மாதவிலக்குள்ள பெண்களிடம் நெருங்காதிருங்கள், விலகி யிருங்கள், தூய்மையடைந்த பின் இணைந்து கொள்ளுங்கள் எனக் கூறப்பட்டுள்ளது. அதற்காகப் பயன்படுத்தப்பட்ட அறபு வார்த்தை ‘இஃதஸிலூ’ என்பதாகும். அதன் மூலச்சொல் ‘அஸ்ல்’ என்பதாகும். இதன் நேரடிப் பொருள் கணவனும் மனைவியும் உடலுறவில் ஈடுபடாமல் இரு பாலுறுப் புகளும் சந்தித்துக் கொள்ளாமல் தவிர்ந்து கொள்வது என்பதாகும். நபி முஹம்மது (ஸல்) அவர்கள் இவ்வசனத்திற்கு விளக்கவுரை கூறியபோது ‘தாம்பத்திய உறவைத்தவிர மாதவிடாய்ப் பெண்ணுடன் மற்றக் காரியங்களைச் செய்து கொள்ளுங்கள்’ எனக் கூறினார்கள். அறிவிப்பவர்: அனஸ்(ரலி)(நூல்: முஸ்லிம்) எனவே, இஸ்லாத்தைப் பொறுத்த வரையில் மாதவிடாய் ஏற்பட்ட பெண்ணுடன் தாம்பத்திய உறவைத் தவிர்த்துக் கொண்டு அன்றாடம் சாதாரணமாக அண்டிப் பழகுவது போன்றே செயலாற்ற வேண்டும் எனக் கூறுகிறது. மாதவிடாய் ஒரு பாவம் என்றோ கடவுளின் சாபம் என்றோ இஸ்லாம் கூறவில்லை. அக்கருத்துடையவர்களின் மூட நம்பிக்கைளையும் சடங்கு சம்பிரதாயங்க ளையும் தகர்த்தெறிந்து பெண்ணின் கௌரவம் காக்கவே அது வழிகாட்டுகிறது. நபிமுஹம்மது (ஸல்) அவர்களின் மனைவி ஆயிஷா (ரலி) கூறியதாவது: “எனக்கு மாதவிடாய் ஏற்பட் டிருக்கும் போது நபி (ஸல்) அவர்கள் எனது மடியில் சாய்ந்து கொண்டு குர்ஆனை ஓதக் கூடியவர்களாக இருந்தார் கள்”. (நூல்:புகாரி: முஸ்லிம்.) ‘எனக்கு மாதவிடாய் ஏற்பட்டிருக்கும் போது என் இடுப்பில் ஆடையைக் கட்டிக் கொள்ளுமாறு நபி(ஸல்) அவர்கள் என்னிடம் கூறுவார்கள். ஆடையைக் கட்டிக் கொண்டதும் என்னை அணைத்துக் கொள்வார்கள்’. (நூல்: புகாரி) நபி(ஸல்) அவர்கள் பள்ளிவாசலில் 'இஃதிகாப்' எனும் வணக்கத்தை நிறைவேற்ற தங்கி யிருக்கும் போது அங்கிருந்தவாறே என் (அறையின்) பக்கமாகத் தலையைக் காட்டு வார்கள். நானோ மாதவிடாய்க் காரியாக இருக்கும் நிலையில் அவர்களது தலையைக் கழுவி விடுவேன். மேலும், அவர்களது தலையை வாரியும் விடுவேன்.’ (நூல்: புகாரி முஸ்லிம். ) 'எனக்கு மாதவிடாய் ஏற்பட்டிருக்கும் போது நான் பருகிய பானத்தை நபி (ஸல்) அவர்களிடம் கொடுப்பேன். அப்போது அவர்கள் நான் வாய் வைத்த இடத்தில் தமது வாயை வைத்து அருந்துவார்கள். மாதவிடாய் ஏற்பட்டிருந்த நான், இறைச்சியுள்ள எலும்புத் துண்டைக் கடித்து விட்டு அதை நபியவர்களிடம் கொடுப்பேன். நான் வாய் வைத்த இடத்தில் அவர்கள் தமது வாயை வைத்துக் கடித்துச் சாப்பிடுவார்கள்’. (நூல்: முஸ்லிம் 505) ‘நாங்கள் ஹஜ் வணக்கத்தைச் செய்வதற்காகப் புறப்பட்டுச் சென்றோம். ‘ஸரீஃப்’ என்ற இடத்தை அடைந்த தும் மாதவிடாய் ஏற்பட்டுவிட்டது. அப்போது நபி(ஸல்) அவர்கள் நான் இருந்த இடத்திற்கு வந்தார்கள். அழுது கொண்டிருந்த என்னைப் பார்த்து ஏன் அழுகிறாய்? என்று வினவினார்கள். இவ்வாண்டு ஹஜ் செய்ய முடியாது என்று கருதுகிறேன் என்றேன். உனக்கு மாதவிடாய் ஏற்பட்டு விட்டதா? என்று கேட்டார்கள். நான் ஆம் என்று சொன்னேன். இந்த மாதவிடாய் ஆத முடைய பெண் மக்கள் மீது அல்லாஹ் ஏற்படுத்தியது. எனவே கஃபதுல்லாஹ்வை (கஅபா ஆலயத்தை) தவாப் (சுற்றி வருவதை) தவிர ஹாஜிகள் செய்கின்ற மற்ற எல்லாக் காரியங்களையும் நீ செய்து கொள் என எனக்கு கூறினார்கள், என ஆயிஷா(ரலி) அறிவிக் கிறார்கள். (நூல் : புகாரி ) ‘கன்னிப் பெண்களும் மாதவிடாய் பெண்களும் பெருநாள் அன்று தொழுகை நடைபெறும் திடலுக்கு வந்தாக வேண்டும். தொழுகையிலிருந்து தவிர்ந்திருக்க வேண்டும். அங்கு நடை பெறும் நன்மையான காரியங் களிலும் முஸ்லிம்களுடைய பிரார்த்தனை களிலும் கலந்து கொள்ள வேண்டும் என நபி(ஸல்) அவர்கள் கட்டளை யிட்டார்கள். அறிவிப்பவர் உம்மு அதிய்யா(ரலி) (நூல் புகாரி மாதவிடாய் ஏற்பட்ட பெண்கள் தொழக் கூடாது, நோன்பு நோற்கக்கூடாது, கஃபா ஆலயத்தை (தவாபு) சுற்றி வரக்கூடாது பள்ளிவாசலில் தங்கக்கூடாது, கணவருடன் உடலுறவு கொள்ளக் கூடாது என்பன போன்ற காரியங்களைத் தவிர ஏனைய விடயங்களில் மற்றப் பெண்களைப் போல் சகஜமாக சாதாரணமாக நடந்து கொள்ளலாம் என நபி(ஸல்) அவர்கள் விளக்கி யுள்ளார்கள். மாதவிடாய் ஏற்பட்ட பெண்களுக்கு இஸ்லாம் வழங்கி யுள்ள மதிப்பும் மரியாதையும் கண்ணியமும் இந்த பொன்மொழிகள் மூலமும் நபிகளாரின் செயற்பாடுகள் மூலமும் புரிந்து கொள்ளலாம். மாதவிடாய் ஏற்பட்ட பெண் இருந்த இடம் தீட்டுப்பட்ட இடம் என்றோ அவளுடைய ஆடையை தீட்டுப்பட்ட ஆடை என்றோ அவளைத் தொட்டவன் முழுமையாக முழுக வேண்டும் என்றோ நபி (ஸல்) அவர்கள் கூறவில்லை. ஒரு பெண்மணி நபி (ஸல்) அவர்களிடம் வந்து, அல்லாஹ்வின் தூதரே! எங்களில் ஒருவருடைய ஆடையில் மாதவிடாய் இரத்தம் பட்டு விட்டால் அவள் எப்படி சுத்தம் செய்ய வேண்டும் என்று கேட்டார். அதற்கு நபியவர்கள் உங்களில் எவருடைய ஆடையிலாவது மாதவிடாய் இரத்தம் பட்டு விட்டால் அதைச் சுரண்டி விட்டு பின்னர் அந்த இடத்தில் தண்ணீர் தெளித்து சுத்தம் செய்து விடட்டும். பின்னர் அந்த ஆடையுடன் தொழுது கொள்ளட்டும் என கூறினார்கள். அறிவிப்பவர்: அஸ்மா பின்த் அபூபக்கர்(ரலி)(நூல்: புகாரி) ஆடையில் மாதவிடாய் இரத்தம் பட்ட இடத்தை மாத்திரம் கழுவி விட்டு அந்த ஆடையை தொழுகைக்கு பயன்படுத்தி கொள்ளலாம் என நபியவர்கள் கூறியதன் மூலம் ‘தீட்டுப்பட்ட ஆடை’ என்ற சிந்தனையை வளர விடாமல் நசுக்கி விடுகிறார்கள். அதுபோல் ‘மாதவிடாய் ஏற்படக்கூடிய நாட்களையும் தாண்டி இரத்தப் போக்கு ஏற்பட்டால் அதனை ஒரு தீட்டாகக் கருதாமல் சாதாரணமாக வெளியேறும் இரத்தமாகக் கருதி சுத்தமாக்கி விடுமாறும் கூறுகி றார்கள். பாதிமா பின்த் அபீ ஹுபைஷ் என்ற பெணமணி நபி(ஸல்) அவர்களிடம் வந்து ‘அல்லாஹ்வின் தூதரே! நான் (மாதவிடாய் காலத்தையும் தாண்டி வெளியாகிக் கொண்டி ருக்கும்) அதிக இரத்தப் போக்கிலிருந்து சுத்த மாவதே இல்லை. எனவே நான் தொழுகையை விட்டு விடலாமா?’ என்று கேட்டார். அதற்கு நபி யவர்கள் ‘அது ஒரு நரம்பு சம்பந்தப்பட்ட நோய். அது மாதவிடாய் அல்ல. மாதவிடாய் ஏற்படும் போது தொழுகையை விட்டு விடு. மாதவிடாய் காலம் கழிந்ததும் இரத்தத்தைச் சுத்தம் செய்து விட்டுத் தொழுது கொள்.’ எனக் கூறினார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) (நூல் :புகாரி முஸ்லிம் ) அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ப்(ரலி) அவர்களின் மனைவி உம்மு ஹபீபா பின்த் ஜஹ்ஷ் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து தனக்கு ஏழு வருடகாலமாக இரத்தப் போக்கு இருந்து வந்தது எனக் கூறி மார்க்கத் தீர்ப்புக் கோரினார். “இது மாதவிடாயல்ல. (வழமை யாக) மாதவிடாய் நிற்கும் நாட்கள் வரை நீ காத்திரு. பின்னர் குளித்து விட்டுத் தொழுது கொள்.” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) (நூல்: முஸ்லிம் ) வழமையான மாதவிடாய்க்கான நாட்களையும் கடந்த பின், தொடராக இரத்தம் வெளியேறுமாயின் அது மாதவிடா யல்ல. நரம்பு சம்பந்தப்பட்ட ஒரு நோய். அதற்காக கவலைப்படாமல் சுத்தம் செய்து விட்டுத் தொழுகையில் ஈடுபடுமாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள். பெண்களுடைய இரத்தப் போக்கைக் காரணம் காட்டி அவர்களை மட்டம் தட்டவு மில்லை. அவர்களுடைய மானம் மரியாதையை ஏலம் போடவுமில்லை. அதற்கான எந்தச் சடங்கு சம்பிரதாயங்களையும் சொல் லிக் கொடுக்கவுமில்லை. மாதவிடாய் ஏற்படுவதால் பெண்களை தீண்டத் தகாத பிறவியாக கணிக்கக் கூடாது என்று இஸ்லாம் உறுதியாகக் கூறி, பெண்மைக்கு அழகு சேர்க்கிறது
One of the most popular education website in tamilNadu. Get Latest Padasalai, Kalvi seithi, kalvi news, tamilnadu education news kalvimalar kalvisolai and updates C Powered by Blogger. Recent அரையாண்டுத் தேர்வு தேதி அறிவிப்பு; காலாண்டுத் தேர்வைப் போல அல்ல தமிழகத்தில் உள்ள அரசுப் பாடத்திட்டத்தின் கீழ் நடைபெறும் பள்ளிகளுக்கு டிசம்பர் 15ஆம் தேதி அரையாண்டுத் தேர்வு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள... PF ACCOUNT SLIP download செய்ய -NEW WEBSITE PF ACCOUNT SLIP -NEW WEBSITE GPF Account Opening Form Know your AISPF/GPF/TPF Status GPF Interest Rates Know your Pension Status Download ... கறுப்பு பொங்கல் - அரசு ஊழியர்கள் எச்சரிக்கை அறிவிப்பு அரசு ஊழியர்கள் எச்சரிக்கை அறிவிப்பு அதிமுக ஆட்சியே தேவலை என்றும் குமுறல் - தினமலர் நாளிதழ் செய்தி டிசம்பர் 3 மற்றும் 6 தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு கோட்டாறு தூய சவேரியார் பேராலய திருவிழாவை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் டிசம்பர் 3ல் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறை... அரையாண்டு தேர்வு அட்டவணை வெளியீடு - பள்ளிக் கல்வித்துறை 6 முதல் 12 ம் வகுப்பு மாணவர்களுக்கு டிசம்பர் 15 முதல் 23 ம் தேதி வரை அரையாண்டு தேர்வு. மாநிலம் முழுவதும் பொதுவான வினாத்தாள் அடிப்படையில் த... மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைப்பது எப்படி?TNEB - Aadhaar Link: யாரெல்லாம் ஆதாரை எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும்? மின்சார மானியம் பெறுவதற்கு மின் நுகர்வோர் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டியது கட்டாயம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்த அதிகாரப்... BEL நிறுவனத்தில் ரூ.55,000/- சம்பளத்தில் வேலை வாய்ப்பு BEL நிறுவனத்தில் Trainee Engineer & Project Engineer பணிகளுக்கு 34 காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்... தமிழக அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவிலில் வேலைவாய்ப்பு RECRUITMENT VACANCY DETAILS FOR ARULMIGU THYAGARAJA SWAMY TEMPLE – TNHRCE RECRUITMENT 2022 – APPLY COOK AND DRIVER POSTS:- Now, Arulmigu ... கணித புத்தகத்தில் இடம்பெற்றுள்ள ரம்மி பாடப்பகுதி : பள்ளிக்கல்வித்துறை விளக்கம் ஆறாம் வகுப்பு கணித பாடத்தில் இடம்பெற்றுள்ள ரம்மி குறித்த பாடப்பகுதி அடுத்த கல்வியாண்டு முதல் நீக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ள... தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் இன்று ( 28.11.2022 ) துவங்கியுள்ள (STEM திட்டம் மூலம்) வானவில் மன்றங்கள் எதற்காக ? என்ன விளைவை ஏற்படுத்தும்? தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் இன்று ( 28.11.2022 ) துவங்கியுள்ள (STEM திட்டம் மூலம்) வானவில் மன்றங்கள் எதற்காக ? என்ன விளைவை ஏற்படுத்த... Popular Posts அரையாண்டுத் தேர்வு தேதி அறிவிப்பு; காலாண்டுத் தேர்வைப் போல அல்ல தமிழகத்தில் உள்ள அரசுப் பாடத்திட்டத்தின் கீழ் நடைபெறும் பள்ளிகளுக்கு டிசம்பர் 15ஆம் தேதி அரையாண்டுத் தேர்வு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள... PF ACCOUNT SLIP download செய்ய -NEW WEBSITE PF ACCOUNT SLIP -NEW WEBSITE GPF Account Opening Form Know your AISPF/GPF/TPF Status GPF Interest Rates Know your Pension Status Download ... கறுப்பு பொங்கல் - அரசு ஊழியர்கள் எச்சரிக்கை அறிவிப்பு அரசு ஊழியர்கள் எச்சரிக்கை அறிவிப்பு அதிமுக ஆட்சியே தேவலை என்றும் குமுறல் - தினமலர் நாளிதழ் செய்தி டிசம்பர் 3 மற்றும் 6 தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு கோட்டாறு தூய சவேரியார் பேராலய திருவிழாவை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் டிசம்பர் 3ல் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறை... அரையாண்டு தேர்வு அட்டவணை வெளியீடு - பள்ளிக் கல்வித்துறை 6 முதல் 12 ம் வகுப்பு மாணவர்களுக்கு டிசம்பர் 15 முதல் 23 ம் தேதி வரை அரையாண்டு தேர்வு. மாநிலம் முழுவதும் பொதுவான வினாத்தாள் அடிப்படையில் த... மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைப்பது எப்படி?TNEB - Aadhaar Link: யாரெல்லாம் ஆதாரை எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும்? மின்சார மானியம் பெறுவதற்கு மின் நுகர்வோர் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டியது கட்டாயம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்த அதிகாரப்... BEL நிறுவனத்தில் ரூ.55,000/- சம்பளத்தில் வேலை வாய்ப்பு BEL நிறுவனத்தில் Trainee Engineer & Project Engineer பணிகளுக்கு 34 காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்... தமிழக அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவிலில் வேலைவாய்ப்பு RECRUITMENT VACANCY DETAILS FOR ARULMIGU THYAGARAJA SWAMY TEMPLE – TNHRCE RECRUITMENT 2022 – APPLY COOK AND DRIVER POSTS:- Now, Arulmigu ... கணித புத்தகத்தில் இடம்பெற்றுள்ள ரம்மி பாடப்பகுதி : பள்ளிக்கல்வித்துறை விளக்கம் ஆறாம் வகுப்பு கணித பாடத்தில் இடம்பெற்றுள்ள ரம்மி குறித்த பாடப்பகுதி அடுத்த கல்வியாண்டு முதல் நீக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ள... தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் இன்று ( 28.11.2022 ) துவங்கியுள்ள (STEM திட்டம் மூலம்) வானவில் மன்றங்கள் எதற்காக ? என்ன விளைவை ஏற்படுத்தும்? தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் இன்று ( 28.11.2022 ) துவங்கியுள்ள (STEM திட்டம் மூலம்) வானவில் மன்றங்கள் எதற்காக ? என்ன விளைவை ஏற்படுத்த...
டெல்லி: யாருடைய தனிப்பட்ட வாழ்க்கை வரலாற்றையும் பாடமாக வைப்பதில் எனக்கு உடன்பாடு இருந்ததில்லை. எனது வாழ்க்கை வரலாற்றையும் பாட நூலில் சேர்ப்பதை நான் விரும்பவில்லை என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். இதுதொடர்பாக டிவிட்டரில் அவர் தனது கருத்தைத் தெரிவித்துள்ளார். அதில் தனிப்பட்ட மனிதர்களின் வாழ்க்கையைப் பாட நூல்களில் பாடமாக வைப்பதில் தனக்கு உடன்பாடு இல்லை என்றும் மோடி தெரிவித்துள்ளார். குஜராத் மாநில அரசு மோடியின் வாழ்க்கையை பாடமாக வைக்க முடிவு செய்துள்ளது குறித்து இப்படிக் கருத்து தெரிவித்துள்ளார் மோடி என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள கருத்தில், சில மாநில அரசுகள் எனது வாழ்க்கைப் போராட்டத்தைப் பாடமாக வைக்க விரும்புவதாக அறிகிறேன். அதை நான் விரும்பவில்லை. தனிப்பட்ட மனிதர்களின், குறிப்பாக உயிருடன் உள்ளவர்களின் வாழ்க்கையைப் பாட நூல்களில் வைப்பதை நான் விரும்ப மாட்டேன். அதிலும் பள்ளிப் பிள்ளைகளுக்கு அதைப் பாடமாக போதிப்பது பொருத்தமாகவும் இருக்காது. இந்தியாவில் எத்தனையோ மாவீரர்கள் உள்ளனர். மகான்கள் இருந்துள்ளனர். அவர்கள் தான் இன்றைய இந்தியாவின் விதைகள். அவர்களைப் பற்றித்தான் இன்றைய இளைஞர்கள் தெரிந்து கொண்டு அவர்களைப் போல நடக்க வேண்டும் என்று கூறியுள்ளார் மோடி. குஜராத் கல்வி அமைச்சர் பூபேந்தர்சின்ஹ் சுடாஸ்மா நேற்று கூறுகையில், மோடியின் வாழ்க்கை வரலாறு அடுத்த ஆண்டு பள்ளிப் பாடமாக வைக்கப்படும் என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல மத்தியப் பிரதேச அரசும் மோடி வாழ்க்கைப் பாடம் குறித்து விருப்பம் தெரிவித்துள்ளது. அதேபோல ராஜஸ்தானும் மோடி வாழ்க்கையை பாடநூலில் சேர்க்கத் திட்டமிட்டு வருகிறது. அதேபோல வாஜ்பாய் வாழ்க்கையையும் பாடமாக்க அது திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ம. லெனின் என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். வணிகவியல், இதழியல் போன்ற துறைகளில் முதுகலைப் பட்டமும், முனைவர் பட்டமும் பெற்றவர். தமிழில் பல சுய முன்னேற்ற நூல்களை எழுதியிருக்கிறார். தமிழ்நாடு அரசின் சிறந்த நூலாசிரியர் விருதுதொகு இவர் எழுதிய இவர் எழுதிய ஐந்து நூல்கள் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலுக்கான பரிசுகளைப் பெற்றிருக்கின்றன. இவர் எழுதிய "இனி எல்லாம் இண்டர்நெட்! " எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 1999 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல் பொறியியல், தொழில்நுட்பவியல் வகைப்பாட்டில் முதல் பரிசு பெற்றிருக்கிறது. இவர் எழுதிய “ஐ.டி எனப்படும் தகவல் தொழில்நுட்பத்தில் வல்லுநராகுங்கள்” எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2006 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் கணிணியியல் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றது. இவர் எழுதிய “எல்லாம் தரும் இதழியல்” எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2006 ஆம் ஆண்டுக்கான இதழியல், தகவல் தொடர்பு வகைப்பாட்டில் பரிசு பெற்றது. இவர் எழுதிய“எளிய தமிழில் எக்ஸெல்” எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2008 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் கணிணியியல் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றது. இவர் எழுதிய“வேகமாகப் படிக்க சில எளிய உத்திகள்” எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2010 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் சிறுவர் இலக்கியம் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றது. ஆதாரம்தொகு தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் முனைவர் கா. மு. சேகர் அவர்களது திருவள்ளுவராண்டு 2043/கார்த்திகை 28, ந. க. எண். ஆமொ2/10268/2012, நாள்: 13-12-2012 கடிதம் மூலம் தமிழ் விக்கிப்பீடியாவில் வெளியிடுவதற்காக தேனி. மு. சுப்பிரமணிக்கு வழங்கிய தமிழ் வளர்ச்சி - சிறந்த நூல்களுக்கான பரிசுகள் பட்டியல்.
பாரத லக்ஸ்மன் பிரேமச்சந்திர கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட துமிந்த சில்வாவை ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய எடுத்த தீர்மானத்தை வலுவிழக்கச் செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மனுக்கள் தொடர்பில், தனது சமர்ப்பணங்களை டிசம்பர் 16 ஆம் திகதி சமர்ப்பிக்குமாறு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு உயர் நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது. இது தொடர்பான மனுக்கள் இன்று முர்து பெர்னாண்டோ மற்றும் யசந்த கோதாகொட ஆகியோர் அடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு முன்னிலையில் அழைக்கப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. துமிந்த சில்வாவுக்கு வழங்கப்பட்டுள்ள பொது மன்னிப்பை வலுவிழக்கச் செய்யும் உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி பாரத லக்ஸ்மன் பிரேமச்சந்திரவின் மகள் ஹிருணிகா பிரேமச்சந்திர, அவரது மனைவி சுமனா பிரேமச்சந்திர மற்றும் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் ஜனாதிபதி சட்டத்தரணி கசாலி ஹுசைன் ஆகியோர் இந்த மனுக்களைச் சமர்ப்பித்துள்ளனர். இந்த மனுக்கள் தொடர்பில் முன்னதாக சீராக்கல் மனுவைத் தாக்கல் செய்திருந்த மனுதாரர்களின் சட்டத்தரணிகள், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை பிரதிவாதியாகக் குறிப்பிட அனுமதி கோரியுள்ளனர். இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட உயர் நீதிமன்றம், கோட்டாபய ராஜபக்சவை சம்பந்தப்பட்ட மனுக்களில் பிரதிவாதியாகக் குறிப்பிட அனுமதித்ததுடன், டிசம்பர் 16ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறும் அவருக்கு அழைப்பாணையை அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
Thennakam Admin 13th February 2018 Current Affairs – 13 February 20182018-02-13T07:46:45+05:30 நடப்பு நிகழ்வுகள் இந்தியா 1.தெலுங்கானா மாநிலத்தின் ஐதராபாத் நகரில் 15 ஆயிரத்துக்கு மேற்பட்ட பள்ளி மாணவர்கள் ஒன்றாக இணைந்து சாலையை தூய்மையாக்கியதை உலக சாதனையாக கின்னஸ் சாதனை புத்தகம் பதிவுசெய்து சான்றிதழ் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. 2.தெலுங்கானாவில் கைதிகள் எண்ணிக்கை குறைந்ததால் மூடப்பட்ட கிளைச்சிறைகளை மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், ஆதரவற்றோர்களுக்கான இல்லமாக மாற்ற அம்மாநில சிறைத்துறை முடிவுச் செய்துள்ளது. உலகம் 1.ஆய்வு நிறுவனமான நியூ வேர்ல்டு வெல்த் சர்வதேச அளவில் செல்வச் செழிப்பு மிக்க 15 நகரங்களை வரிசைப்படுத்தி பட்டியல் ஒன்றை வெளியிட்டுள்ளது. ஒவ்வொரு நகரத்திலும் வசிக்கும் அனைத்து தனிநபர்களின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு அடிப்படையில் இந்தப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் இந்தியாவின் பொருளாதார தலைநகரான மும்பை 12-வது இடத்தைப் பிடித்துள்ளது. நியூயார்க் 3 லட்சம் கோடி டாலர் சொத்து மதிப்புடன் முதலிடத்தில் உள்ளது. லண்டன் இரண்டாவது இடத்திலும் (2.7 லட்சம் கோடி டாலர்), டோக்கியோ (2.5 லட்சம் கோடி டாலர்) மூன்றாவது இடத்திலும் உள்ளன. 2.அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி ஐக்கிய அமீரகத்தின் அபுதாபி நகரில் கட்டப்படும் முதல் இந்துக்கோவிலான ஸ்ரீ அக்‌ஷார் புருசோத்தம் ஸ்வாமிநாராயன் சன்ஸ்தா ஆலையத்திற்கு அடிக்கல் நாட்டினார். விளையாட்டு 1.ஜூனியர் உலகக்கோப்பையில் 149 கிலோ மீட்டர் வேகத்தில் பந்து வீசி அசத்திய நகர்கோட்டிக்கு ராஜஸ்தான் அரசு 25 லட்சம் ரூபாய் பரிசு அறிவித்துள்ளது. 2.ஆஸ்திரேலியா அணி கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் இந்த வருடத்திற்கான சிறந்த டெஸ்ட் வீரருக்கான ஆலன் பார்டர் விருதை பெற்றுள்ளார்.இந்த வருடத்திற்கான விழா மெல்போர்ன் நகரில் நேற்று நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. இன்றைய தினம் 1.இன்று உலக வானொலி தினம் (World Radio Day). ஐக்கிய நாடுகள் சபையில் 1946ஆம் ஆண்டு பிப்ரவரி 13 அன்று வானொலி நிறுவப்பட்டது. யுனெஸ்கோவின் 36ஆவது பொதுச்சபைக் கூட்டத்தில் 2011ஆம் ஆண்டு நவம்பர் 3 அன்று உலக வானொலி தினம் அறிவிக்கப்பட்டது. 2012ஆம் ஆண்டு முதல் ஐ.நாவின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பான யுனெஸ்கோ பிப்ரவரி 13ஆம் தேதியை உலக வானொலி தினமாகக் கடைப்பிடிக்கிறது.
ஒருவர் மக்கா சென்று வர சக்தி பெற்றால் அவர் மீது ஹஜ் கடமையாகி விடும். ஆனால் பெண்களுக்குக் கூடுதலாக ஒரு நிபந்தனை உள்ளது. அவர்கள் ஹஜ் செய்ய வேண்டுமென்றால் ஒன்று, அவள் தன் கணவருடன் செல்ல வேண்டும். அல்லது அவள் தனது தந்தை, மகன், சகோதரன் போன்ற திருமணம் முடிக்க ஹராமான ஆணுடன் செல்ல வேண்டும். ஒரு பெண் மணம் முடிக்கத் தடை செய்யப்பட்ட உறவுகளை அரபியில் மஹ்ரம் என்று கூறுவர். ஒரு பெண் மக்கா சென்று வர பொருளாதாரம், உடல் ஆரோக்கியம் போன்ற வசதிகளைப் பெற்றுள்ளார்; ஆனால் அவளுடன் செல்வதற்குக் கணவனோ அல்லது மஹ்ரமான துணையோ இல்லை என்றால் அவளுக்கு ஹஜ் கடமையில்லை. இது தான் அந்தக் கூடுதல் நிபந்தனையாகும். அறிஞர்களுக்கு மத்தியில் இது தொடர்பாக இரு கருத்துக்கள் நிலவுகின்றன. ஒரு பெண் மஹ்ரம் அல்லது கணவன் இல்லாமல் ஹஜ் செய்யக் கூடாது என்று ஒரு சாரார் கூறுகின்றனர். இந்தக் கருத்தை நிலைநிறுத்த குர்ஆன், ஹதீஸிலிருந்து சில ஆதாரங்களை முன் வைக்கின்றனர். ஒரு பெண் மஹ்ரம் அல்லது கணவன் இல்லாமல் ஹஜ் செய்யலாம் என்று மற்றொரு சாரார் கூறுகின்றனர். அவர்களும் சில ஆதாரங்களை முன்வைக்கின்றனர். நாம் இப்போது இரு சாராரின் கருத்தையும் அதை நிலைநாட்ட அவர்கள் எடுத்து வைக்கும் ஆதாரங்களையும் பார்ப்போம். முதல் சாரார் முன்வைக்கும் வாதங்கள் ஆண்களைப் போன்று பெண்கள் எந்தத் துணையுமின்றி தன்னந்தனியாக ஹஜ் செய்ய முடியுமா? என்றால் செய்ய முடியாது. ஏனென்றால் துணையின்றி மக்காவுக்குச் செல்ல முடியாது. ஒரு பெண் மஹ்ரமுடனே தவிர பயணம் செய்யக் கூடாது என்ற நபிமொழி பெண்களுக்கு ஒரு கட்டுப்பாட்டை, நிபந்தனையை விதித்து விடுகின்றது. حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ الْحَنْظَلِيُّ قَالَ قُلْتُ لِأَبِي أُسَامَةَ حَدَّثَكُمْ عُبَيْدُ اللَّهِ عَنْ نَافِعٍ عَنْ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَا تُسَافِرْ الْمَرْأَةُ ثَلَاثَةَ أَيَّامٍ إِلَّا مَعَ ذِي مَحْرَمٍ ‘திருமணம் செய்யத்தகாத ஆண் உறவினருடன் தவிர மூன்று நாட்கள் ஒரு பெண்மணி பயணம் மேற்கொள்ளக் கூடாது’ என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) நூல்: புகாரி 1086, 1087 ஹஜ் பயணம் என்பது மூன்று நாட்களுக்கு மேற்பட்ட பயணம் என்பதால் இந்த ஹதீஸின் படி ஒரு பெண் ஹஜ்ஜுக்குச் செல்ல முடியாது என்பது இவர்களது வாதம். حَدَّثَنَا أَبُو النُّعْمَانِ حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ عَنْ عَمْرٍو عَنْ أَبِي مَعْبَدٍ مَوْلَى ابْنِ عَبَّاسٍ عَنْ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا تُسَافِرْ الْمَرْأَةُ إِلَّا مَعَ ذِي مَحْرَمٍ وَلَا يَدْخُلُ عَلَيْهَا رَجُلٌ إِلَّا وَمَعَهَا مَحْرَمٌ فَقَالَ رَجُلٌ يَا رَسُولَ اللَّهِ إِنِّي أُرِيدُ أَنْ أَخْرُجَ فِي جَيْشِ كَذَا وَكَذَا وَامْرَأَتِي تُرِيدُ الْحَجَّ فَقَالَ اخْرُجْ مَعَهَا ‘ஓர் ஆண் ஒரு பெண்ணுடன் தனித்திருக்க வேண்டாம். திருமணம் செய்யத் தகாத ஆண் உறவினருடன் தவிர எந்தவொரு பெண்ணும் பயணம் மேற்கொள்ள வேண்டாம்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது சொற்பொழிவில் குறிப்பிட்ட போது ஒரு மனிதர் எழுந்து ‘அல்லாஹ்வின் தூதரே! என் மனைவி ஹஜ் செய்ய நாடுகிறார்; நான் இன்னின்ன போர்களில் பங்கெடுக்க நாடுகிறேன்’ என்று கூறினார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ‘நீர் புறப்பட்டுச் சென்று உம் மனைவியுடன் ஹஜ் செய்வீராக’ என்று கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) நூல்: புகாரி 1862, 3006, 3061, 5233 நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அந்த நபித்தோழரிடம், ‘உன் மனைவி அழகுள்ள வாலிபப் பெண்ணா? அல்லது அழகில்லாதவளா? அவளுடன் மற்ற பெண்கள் இருக்கிறார்களா? அவளுக்குப் போதிய பாதுகாப்பு இருக்கின்றதா? இல்லையா?’ என்றெல்லாம் விசாரிக்கவில்லை. உன் மனைவியுடன் ஹஜ்ஜுக்குப் புறப்பட்டுச் செல்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள். இதிலிருந்து ஒரு பெண் தனது கணவன் அல்லது மஹ்ரமான ஆண் துணையின்றி ஹஜ் செய்யக் கூடாது என்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தெளிவாகவே உணர்த்தி விடுகிறார்கள். இவையே முதல் சாராரின் வாதங்களாகும். பெண்கள் துணையின்றி ஹஜ் செய்யலாம் என்று கூறும் இரண்டாவது சாராரின் ஆதாரங்களைப் பார்ப்போம். (கஅபா எனும்) அந்த ஆலயத்தில் அல்லாஹ்வுக்காக ஹஜ் செய்வது, சென்று வர சக்தி பெற்ற மனிதர்களுக்குக் கடமை. (அல்குர்ஆன் 3:97) இந்த வசனம் ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவாகவே ஹஜ்ஜைக் கடமையாக்குகின்றது. ஒரு பெண் ஹஜ் செய்ய வேண்டும் என்றால் ஒரு மஹ்ரமான துணையுடன் தான் செல்ல வேண்டும் என்று எந்த நிபந்தனையும் இடவில்லை. இது இரண்டாவது சாராரின் வாதமாகும். மஹ்ரமான துணை அல்லது கணவனுடன் தான் ஹஜ் செய்ய வேண்டும் என்ற கருத்தில் முதல் சாரார் எடுத்து வைக்கும் ஹதீஸ்களுக்கு இவர்களின் பதில் வருமாறு: பெண்கள் மஹ்ரமானவருடன் பயணிக்க வேண்டும் என்ற ஹதீஸ்கள் பொதுவான பயணத்தையே குறிக்கின்றன. அந்த ஹதீஸ்களுக்கு 3:97 வசனம் ஒரு விதிவிலக்கை ஏற்படுத்தி விடுகின்றது. அதாவது ஹஜ் பயணத்தைத் தவிர மற்ற பயணங்களில் மஹ்ரமானவர் அல்லது கணவர் இல்லாமல் ஒரு பெண் பயணம் செய்யக் கூடாது என்று தான் விளங்க வேண்டும் என்ற வாதத்தை இவர்கள் முன் வைக்கின்றனர். இதற்குச் சான்றாகப் பின்வரும் ஹதீஸையும் சமர்ப்பிக்கின்றனர். حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ الْحَكَمِ أَخْبَرَنَا النَّضْرُ أَخْبَرَنَا إِسْرَائِيلُ أَخْبَرَنَا سَعْدٌ الطَّائِيُّ أَخْبَرَنَا مُحِلُّ بْنُ خَلِيفَةَ عَنْ عَدِيِّ بْنِ حَاتِمٍ قَالَ بَيْنَا أَنَا عِنْدَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذْ أَتَاهُ رَجُلٌ فَشَكَا إِلَيْهِ الْفَاقَةَ ثُمَّ أَتَاهُ آخَرُ فَشَكَا إِلَيْهِ قَطْعَ السَّبِيلِ فَقَالَ يَا عَدِيُّ هَلْ رَأَيْتَ الْحِيرَةَ قُلْتُ لَمْ أَرَهَا وَقَدْ أُنْبِئْتُ عَنْهَا قَالَ فَإِنْ طَالَتْ بِكَ حَيَاةٌ لَتَرَيَنَّ الظَّعِينَةَ تَرْتَحِلُ مِنْ الْحِيرَةِ حَتَّى تَطُوفَ بِالْكَعْبَةِ لَا تَخَافُ أَحَدًا إِلَّا اللَّهَ قُلْتُ فِيمَا بَيْنِي وَبَيْنَ نَفْسِي فَأَيْنَ دُعَّارُ طَيِّئٍ الَّذِينَ قَدْ سَعَّرُوا الْبِلَادَ وَلَئِنْ طَالَتْ بِكَ حَيَاةٌ لَتُفْتَحَنَّ كُنُوزُ كِسْرَى قُلْتُ كِسْرَى بْنِ هُرْمُزَ قَالَ كِسْرَى بْنِ هُرْمُزَ وَلَئِنْ طَالَتْ بِكَ حَيَاةٌ لَتَرَيَنَّ الرَّجُلَ يُخْرِجُ مِلْءَ كَفِّهِ مِنْ ذَهَبٍ أَوْ فِضَّةٍ يَطْلُبُ مَنْ يَقْبَلُهُ مِنْهُ فَلَا يَجِدُ أَحَدًا يَقْبَلُهُ مِنْهُ وَلَيَلْقَيَنَّ اللَّهَ أَحَدُكُمْ يَوْمَ يَلْقَاهُ وَلَيْسَ بَيْنَهُ وَبَيْنَهُ تَرْجُمَانٌ يُتَرْجِمُ لَهُ فَلَيَقُولَنَّ لَهُ أَلَمْ أَبْعَثْ إِلَيْكَ رَسُولًا فَيُبَلِّغَكَ فَيَقُولُ بَلَى فَيَقُولُ أَلَمْ أُعْطِكَ مَالًا وَأُفْضِلْ عَلَيْكَ فَيَقُولُ بَلَى فَيَنْظُرُ عَنْ يَمِينِهِ فَلَا يَرَى إِلَّا جَهَنَّمَ وَيَنْظُرُ عَنْ يَسَارِهِ فَلَا يَرَى إِلَّا جَهَنَّمَ قَالَ عَدِيٌّ سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ اتَّقُوا النَّارَ وَلَوْ بِشِقَّةِ تَمْرَةٍ فَمَنْ لَمْ يَجِدْ شِقَّةَ تَمْرَةٍ فَبِكَلِمَةٍ طَيِّبَةٍ قَالَ عَدِيٌّ فَرَأَيْتُ الظَّعِينَةَ تَرْتَحِلُ مِنْ الْحِيرَةِ حَتَّى تَطُوفَ بِالْكَعْبَةِ لَا تَخَافُ إِلَّا اللَّهَ وَكُنْتُ فِيمَنْ افْتَتَحَ كُنُوزَ كِسْرَى بْنِ هُرْمُزَ وَلَئِنْ طَالَتْ بِكُمْ حَيَاةٌ لَتَرَوُنَّ مَا قَالَ النَّبِيُّ أَبُو الْقَاسِمِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُخْرِجُ مِلْءَ كَفِّهِ حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ حَدَّثَنَا أَبُو عَاصِمٍ أَخْبَرَنَا سَعْدَانُ بْنُ بِشْرٍ حَدَّثَنَا أَبُو مُجَاهِدٍ حَدَّثَنَا مُحِلُّ بْنُ خَلِيفَةَ سَمِعْتُ عَدِيًّا كُنْتُ عِنْدَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் இருந்த போது ஒரு மனிதர் அவர்களிடம் வந்து வறுமை நிலை பற்றி முறையிட்டார். பிறகு மற்றொருவர் அவர்களிடம் வந்து வழிப்பறி பற்றி முறையிட்டார். உடனே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், ‘அதீயே! நீ ஹீராவைப் பார்த்ததுண்டா?’ என்று கேட்டார்கள். ‘நான் அதைப் பார்த்ததில்லை. ஆனால் அதைப் பற்றி எனக்குச் சொல்லப்பட்டு இருக்கின்றது’ என்று பதிலளித்தேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், ‘நீ நீண்ட நாட்கள் வாழ்ந்தால் நீ நிச்சயம் பார்ப்பாய்! ஒட்டகச் சிவிகையில் அமர்ந்து இருக்கும் ஒரு பெண் இறையில்லம் கஅபாவை தவாஃப் செய்வதற்காகப் பயணித்து ஹீராவில் இருந்து வருவாள். அவள் (வழியில்) அல்லாஹ்வைத் தவிர வேறு எவருக்கும் அஞ்ச மாட்டாள்’ என்று சொன்னார்கள். ‘அப்படியென்றால் நாட்டையே தன் அராஜகத்தால் நிரப்பி விட்ட தய்யி குலத்து வழிப்பறிக் கொள்ளையர்கள் (அப்போது) எங்கே சென்று விட்டிருப்பார்கள்?’ என்று நான் எனக்குள் கேட்டுக் கொண்டேன். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், ‘நீ நீண்ட நாள் வாழ்ந்தால் குஸ்ரூ (பாரசீகப் பேரரசன் கிஸ்ரா)வின் கருவூலங்கள் வெற்றி கொள்ளப்படுவதைப் பார்ப்பாய்’ என்று சொன்னார்கள். நான், ‘(மாபெரும் வல்லரசுக்குச் சொந்தக்காரரான) கிஸ்ரா பின் ஹுர்முஸா (வெற்றி கொள்ளப் படுவார்)?’ என்று கேட்டேன். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், ‘கிஸ்ரா பின் ஹுர்முஸ் தான்’ என்று பதிலளித்தார்கள். அறிவிப்பவர்: அதீ பின் ஹாத்திம் (ரலி) நூல்: புகாரி 3595 வந்தவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வழிப்பறி கொள்ளையைப் பற்றிக் கேட்கின்றார். ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களோ தன்னுடைய ஆட்சிக் காலத்திலும் தனக்குப் பின்னால் ஆட்சி செய்யவிருக்கும் அபூபக்ர், உமர் ஆகியோரின் ஆட்சிக் காலத்திலும் தலைநகராகத் திகழும் மதீனாவை நோக்கி ஒரு பெண் வருவாள் என்று குறிப்பிடவில்லை. இந்த இடத்தில் மதீனாவைக் குறிப்பிடுவதற்குத் தான் அதிக வாய்ப்புள்ளது. ஏனெனில் வந்தவர் வழிப்பறி பற்றிக் கேட்கிறார். ‘அதற்குத் தீர்வு இஸ்லாம் தான்; இஸ்லாம் உலகெங்கும் பரவும்; அப்போது வழிப்பறி போய் விடும்; எனவே அது பற்றிக் கவலைப்படத் தேவையில்லை’ இது தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பதிலின் நோக்கம். அதற்கு அவர்கள் மதீனாவைக் கூட உதாரணமாகக் கூறத் தேவையில்லை. புகாரியின் 3612வது அறிவிப்பில் கூறுவது போல், ‘ஒருவர் ஸன்ஆவிலிருந்து ஹள்ர மவ்த் வரை பயணம் செய்து செல்வார். அல்லாஹ்வைத் தவிர அல்லது தன் ஆட்டின் விஷயத்தில் ஓநாயைத் தவிர வேறெவருக்கும் அவர் அஞ்ச மாட்டார்’ என்று பதில் சொல்லியிருக்கலாம். இன்னும் குறிப்பாக, இந்த ஹதீஸில் சொன்னது போல் புகாரி 3595 ஹதீஸிலும் ஒருவர்’ என்று பொதுவாகச் சொல்லியிருக்கலாம் அல்லவா? மதீனாவைக் கூறாமல் கஅபாவுக்கு வருவாள் என்று கூறுவதிலிருந்தும், பொருள்களைச் சுமந்து வரும் வாணிபக் கூட்டத்தை உதாரணமாகக் காட்டாமல் ஒரு பெண்ணை உதாரணமாகக் காட்டி, அவள் கஅபாவை வலம் வருவாள் என்று கூறுவதிலிருந்தும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இந்த ஹதீஸில் ஒரு முன்னறிவிப்பை மட்டும் செய்யவில்லை; ஹஜ் சம்பந்தப்பட்ட ஒரு முக்கியமான சட்டத்தையும் சமுதாயத்திற்கு முன் வைக்கின்றார்கள். அது தான், ‘ஒரு பெண் தனியாக ஹஜ்ஜுக்குச் செல்லலாம்’ என்பதாகும். கஅபாவிற்கு வந்து தவாஃப் செய்யும் அந்தப் பெண், அல்லாஹ்வைத் தவிர வேறெவருக்கும் அஞ்ச மாட்டாள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிடுவதன் மூலம், அப்பெண் சாதாரணமாக சுற்றுலா வருகின்ற ஓர் உல்லாசப் பயணி அல்ல; மாறாக அல்லாஹ்வை மிகவும் அஞ்சுகின்ற இறையச்சமிக்க பெண்மணி என்று நாம் விளங்கிக் கொள்கிறோம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முன்னறிவிப்புச் செய்தது போலவே, ‘ஒட்டகச் சிவிகையில் இருக்கும் பெண் ஒருத்தி ஹீராவிலிருந்து கஅபாவை வலம் வருவதற்காக அல்லாஹ்வைத் தவிர வேறு எவருக்கும் அஞ்சாதவளாகப் பயணம் செய்து வருவதை (என் கண்களால்) நான் பார்த்தேன்’ என்று அதீ பின் ஹாதிம் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (புகாரி 3595) எனவே ஒரு பெண் தன்னந்தனியாக ஹஜ்ஜுக்குச் செல்வது இகழுக்குரிய செயல் அல்ல; மாறாக புகழுக்குரிய செயல் தான் என்பதை விளங்கிக் கொள்ளலாம். தடை செய்யப்பட்ட ஒரு காரியத்தை, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சிறப்பித்து பாராட்டிச் சொல்ல மாட்டார்கள். இது ஒரு நல்ல காரியம் என்பதால் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அதைச் சிறப்பித்துக் கூறுகின்றார்கள். இவ்வாறு இரண்டாவது சாரார், ‘ஒரு பெண் மஹ்ரமான உறவினர் அல்லது கணவன் இல்லாமல் தனியாக ஹஜ் செய்யலாம்’ என்ற தங்களது வாதத்தை நிலை நிறுத்துகின்றார்கள். தன் மனைவியை ஹஜ்ஜுக்கு அனுப்ப அனுமதி கோரும் ஹதீஸில் அந்த நபித்தோழரிடம், ‘உன் மனைவி அழகுள்ள வாலிபப் பெண்ணா? அவளுடன் மற்ற பெண்கள் இருக்கிறார்களா? அவளுக்குப் போதிய பாதுகாப்பு இருக்கின்றதா?’ என்றெல்லாம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விசாரிக்காமலேயே அந்த நபித் தோழரை அவரது மனைவியுடன் ஹஜ்ஜுக்குச் செல்லுமாறு கட்டளையிடுகின்றார்கள். எனவே ஒரு பெண் தனது கணவன் அல்லது மஹ்ரமான ஆண் துணையின்றி ஹஜ் செய்யக் கூடாது என்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இதன் மூலம் உணர்த்துகின்றார்கள் என்று முதல் சாரார் எடுத்து வைத்த வாதத்திற்கு இரண்டாவது சாரார் அளிக்கும் பதில்: புகாரியின் 3595வது ஹதீஸ் இல்லாவிட்டால் தான் இந்த வாதம் ஏற்புடையது; இந்த ஹதீஸில் வருங்காலத்தில் நடக்கக் கூடிய ஒன்றை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முன்னறிவிப்பு செய்கின்றார்கள். பெண்கள் ஹஜ் செய்வது சம்பந்தமாக இரண்டு தரப்பினரும் ஆதாரப்பூர்வமான ஹதீஸின் அடிப்படையில் தங்கள் வாதத்தை எடுத்து வைக்கின்றார்கள். இதில் முதல் சாராரின் கருத்தை ஏற்றுக் கொண்டால் இரண்டாவது சாரார் எடுத்து வைக்கும் ஆதாரப்பூர்வமான ஹதீஸைப் புறக்கணிக்க வேண்டிய நிலை ஏற்படும். இரண்டாவது சாராரின் கருத்தை ஏற்றுக் கொண்டால் முதல் சாரார் எடுத்து வைக்கும் ஹதீஸ்களைப் புறக்கணிக்க வேண்டிய நிலை ஏற்படும். ஒரு சட்டம் சம்பந்தமாக இரண்டு மாறுபட்ட ஹதீஸ்கள் இருக்கும் போது இரண்டையும் இணைத்து ஓர் இணக்கமான கருத்தைக் காண்பதும் அதன்படி அமல் செய்வதும் ஹதீஸ் கலை அறிஞர்கள் அனைவராலும் ஒப்புக் கொள்ளப்பட்ட ஏகோபித்த முடிவாகும். உதாரணமாக, நின்று கொண்டு தண்ணீர் அருந்துவது தொடர்பாக மாறுபட்ட இரண்டு செய்திகள் உள்ளன. நின்று கொண்டு தண்ணீர் அருந்துவதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள். (நூல்: முஸ்லிம் 3771) நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நின்று கொண்டு தண்ணீர் அருந்தியதை நான் பார்த்தேன் என்று அலீ (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (நூல்: புகாரி 5615, 5616) இப்படி மாறுபட்ட இரண்டு செய்திகள் வரும் போது, நின்று கொண்டு தண்ணீர் அருந்துவது கூடாது; அதே சமயம் உட்கார முடியாத கட்டத்தில் நின்று கொண்டு தண்ணீர் அருந்தினால் தவறில்லை என்று இரண்டு ஹதீஸ்களையும் இணைத்து ஒரு முடிவுக்கு வருகிறோம். இதே போல் பெண்கள் தனியாக ஹஜ் செய்வது தொடர்பான இந்த இரு ஹதீஸ்களையும் இணைத்து ஒரு முடிவுக்கு வர வேண்டும். ஒரு பெண் தனியாக ஹஜ் செய்யச் செல்லலாமா? என்றால் புகாரி 3595 ஹதீஸின் அடிப்படையில் செல்லலாம்; மார்க்கத்தில் இதற்கு அனுமதி உள்ளது; தடையில்லை; அதே சமயம் புகாரி 3006 ஹதீஸ் அடிப்படையில் ஒரு பெண் தன் கணவருடன் அல்லது மஹ்ரமான துணையுடன் ஹஜ் செய்யச் செல்வது சிறந்ததாகும். இப்படி ஒரு முடிவுக்கு வரும் போது இரண்டு விதமான ஹதீஸ்களில் எதையும் புறக்கணிக்கும் நிலை ஏற்படவில்லை; நாம் இரண்டு ஹதீஸ்களையும் செயல்படுத்தி விடுகின்றோம். ஒருவருக்கு ஹஜ் செய்வதற்கான பொருளாதாரம், உடல் வலிமை போன்றவை வந்து விடும் போது ஹஜ் கடமையாகின்றது என்று பார்த்தோம். பெண்களும் இதே நிபந்தனைகளை அடைந்து விட்டால் ஹஜ் செய்ய வேண்டும். எனினும் கணவனோ அல்லது மஹ்ரமான துணையோ இல்லாமல் ஹஜ் செய்வது பாதுகாப்பானதில்லை என்று ஒரு பெண் கருதினால் அவர்களுக்குக் கடமையில்லை. ஒரு பெண் தனியாகவே ஹஜ் செய்து வர முடியும்; தனக்குத் துணை எதுவும் தேவையில்லை என்று கருதினால் அதற்கு மார்க்கத்தில் தடையில்லை. இந்த விஷயத்தில் தங்கள் பயணம் பாதுகாப்பானதா? என்பதை சம்பந்தப்பட்ட பெண் தான் இறையச்சத்திற்கு உட்பட்டு முடிவு செய்ய வேண்டும்.
எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு தன் மீது காழ்ப்புணர்ச்சி காய்ச்சல் ஏற்பட்டிருப்பதாகவும், அது எந்த மருந்தாலும் குணப்படுத்த முடியாத ஒன்று என்றும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- அரசியலில் எதிர்கட்சியினர் ஆளும்கட்சியையும், ஆட்சியையும் விமர்சனம் செய்வது வழக்கமான ஒன்றுதான் என்றாலும் தி.மு.க. செயல்தலைவர் மு.க. ஸ்டாலின், மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டிய டெங்கு காய்ச்சல் குறித்து கூறிவரும் கருத்துக்கள் தவறான தகவல்களை பரப்பி மக்களை மேலும் சிரமத்திற்கு உள்ளாக்கிவிடக் கூடாது என்பதை அவருக்கு நினைவூட்ட கடமைப்பட்டிருக்கிறேன். மக்கள் நல்வாழ்வுத்துறையின் செயல்பாட்டினை சுகாதாரக் குறியீடுகளை கொண்டு மட்டுமே அளவீடு செய்ய முடியும். இந்திய அளவில் தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத் துறையானது சுகாதாரக் குறியீடுகளில் முதன்மை மாநிலமாக தொடர்ந்து திகழ்ந்து வருகிறது. தொற்று மற்றும் தொற்றா நோய்களை தடுப்பதிலும், கட்டுப்படுத்துவதிலும், சிகிச்சை அளிப்பதிலும் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக திகழ்ந்து வருகிறது. பொதுவாக இயற்கை பேரிடர் காலங்களில் பேரிடருக்குப் பின்பு தொற்று நோய் ஏற்படும் என்ற நிலையை மாற்றி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய பகுதிகளில் பெய்த கனமழையை அடுத்து மழை வெள்ளத்தால் ஏற்படும் தொற்றுநோய் அறவே இல்லை என்ற நிலையை எட்டி உலக வரலாற்றில் அளப்பரிய சாதனையை புரிந்துள்ளது. இப்படி மக்கள் நல்வாழ்வுத் துறையின் சாதனைகள் எண்ணிலடங்கா. ஏற்கனவே நான் பல முறை தெளிவுபடுத்தியும் கூட, “காமாலை கண்டவருக்கு கண்டதெல்லாம் மஞ்சள்” என்பது போன்ற நல்ல விஷயங்கள் எல்லாம் கண்களுக்கு தெரியாமல் தனிப்பட்ட அரசியல் காழ்ப்புணர்ச்சியால் விமர்சனம் செய்வதை மட்டுமே வாடிக்கையாகவும் குறை சொல்வதை மட்டுமே கொள்கையாகவும் வைத்திருப்பவர்களுக்கு என்ன பதில் சொல்ல வேண்டும் என்பதை மக்களிடமே விட்டு விடுகிறேன். அரசு எடுத்து வருகின்ற தொடர் நடவடிக்கைகளினால் டெங்கு காய்ச்சல் வெகுவாக கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது. சட்டமன்றத்தில் ஒன்று, வெளியே ஒன்று எனப் பேசுவது தி.மு.க.வினருக்கு வாடிக்கை. ஆனால் சட்டமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் ஒரே கருத்தை தெரிவித்து வருவது அ.தி.மு.க. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பன்றிக்காய்ச்சலால் ஏற்பட்ட அச்சுறுத்தலை மிகச் சிறப்பாக கையாண்டு மக்களை காப்பாற்றியது மக்கள் நல்வாழ்வுத்துறைதான். மேலும் உலக அளவில் ஜிகா வைரஸ் இருந்தபோதும் தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் எங்கோ ஒரு மூலையில் ஒருவருக்கு இருப்பதை ஆரம்ப சுகாதார நிலையம் மூலம் கண்டறிந்து மேலும் பரவாமல் தடுத்ததும் மக்கள் நல்வாழ்வுத் துறைதான். டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் டெங்கு வைரஸ் காய்ச்சல் சிகிச்சைக்கு தேவையான மருந்துகள், இரத்த அணுக்கள், பரிசோதனைக் கருவி, இரத்த கூறுகள் மற்றும் இரத்தம் ஆகியவை போதிய அளவு இருப்பில் வைக்கப்பட்டுள்ளது. அரசு தொடர்ந்து எடுத்துவரும் நடவடிக்கைகளை அறியாதவர் போல, பூனை கண்ணை மூடிக்கொண்டால் பூலோகம் இருண்டு விட்டது என்று நினைத்துக் கொள்ளும் என்ற வகையில் உண்மைக்கு மாறான ஒரு வெற்று அறிக்கையை வெளியிடும் பொறுப்பான பதவியில் உள்ள எதிர்கட்சித் தலைவரின் பொறுப்பற்ற செயல் கண்டனத்திற்குரியது. டெங்கு போன்ற எந்தக்காய்ச்சலையும் கட்டுப்படுத்தி ஓட ஓட விரட்டச்செய்யும் வல்லமை அரசுக்கு உண்டு. ஆனால் எதிர்கட்சித் தலைவருக்கு என்மீது ஏற்பட்டுள்ள “காழ்ப்புணர்ச்சிக் காய்ச்சல்” எந்த மருந்தாலும் குணப்படுத்தமுடியாத ஒன்று. எனவே, எதிர்கட்சித் தலைவர் அரசியல் ஆதாயத்திற்காக வெளியிட்டு வரும் அறிக்கைகள் மூலம் களத்தில் உள்ள மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் களப்பணியாளர்களின் தன்னலமற்ற சிறப்பான சேவையை கொச்சைப்படுத்திட வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
வடகிழக்கு பருவமழை மற்றும் வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம் இந்த நிலையில் சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக தொடர்ச்சியாக கனமழை பெய்து வருவதையடுத்து ஒரு சில பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: இன்று காலை 6 மணி முதல் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு சென்னை போக்குவரத்தின் தற்போதைய நிலவரம் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. மழை பெருக்கு காரணமாக மூடப்பட்டுள்ள சுரங்கப்பாதைகள் பின்வருமாறு: 1. ஈவேரா சாலை கங்கி ரெட்டி சுரங்கப்பாதை 2. வியாசர்பாடி சுரங்கப்பாதை 3. கணேஷபுரம் சுரங்கப்பாதை ஆகியவை மூடப்பட்டுள்ளன மேலும் மழை நீர் பெருக்கு காரணமாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்ட பகுதிகள் பின்வருமாறு: 1. ஈவேரா சாலையில் சென்னை சென்ட்ரல் சந்திப்பிலிருந்து நாயர் சந்திப்பு நோக்கி செல்லும் வாகனங்கள் ஈவேரா சாலை காந்தி இர்வின் சந்திப்பு வழியாக எழும்பூர் நோக்கி திருப்பி விடப்படும் 2. பேந்தியன் ரவுண்டானாவில் இருந்து ராஜரத்தினம் மைதானம் நோக்கி வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை. அவ்வாகனங்கள் பேந்தியன் சாலை வழியாக செல்லலாம். மார்ஷல் ரோட்டில் இருந்து பேந்தியன் ரவுண்டானாவை நோக்கி வாகனங்கள் வர அனுமதி உண்டு என சென்னை மாநகர போக்குவரத்து தெரிவித்துள்ளது Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
சென்னை: அரசமைப்புச் சட்டத்தைத் தகர்க்கும் முயற்சிகளை முறியடிப்போம் என்று மதிமுக தலைவர் வைகோ அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், அவர் இந்திய அரசியலமைப்புச் சட்டம் மற்றும் அதன் பாரம்பரியம் தொடர்பாக விரிவாக குறிப்பிட்டு, அதை பாதுக்காக்க வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டியுள்ளார். 1948 நவம்பர் 4 ஆம் நாள் அரசியல் நிர்ணய சபையில் அரசமைப்புச் சட்ட வரைவுக்குழுத் தலைவர் டாக்டர் அம்பேத்கர் அவர்களால் முன்மொழியப்பட்டு, 1949 நவம்பர் 26 ஆம் நாள் ஏற்றுக்கொள்ளப்பட்டது இந்திய அரசியலமைப்புச் சட்டம். இந்திய அரசிலமைப்புச் சட்டம் ஏற்கப்பட்டு, 73 ஆண்டுகள் ஆகின்றன. இடைக்கால அரசின் பிரதமராக பண்டித ஜவஹர்லால் நேரு அவர்கள் அரசமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டதற்கான குறிக்கோள் தீர்மானத்தை 1946 ஆம் ஆண்டு டிசம்பர் 13 ஆம் தேதி அரசியல் நிர்ணய சபையில் தாக்கல் செய்தார். அதில் அரசமைப்புச் சட்டத்தை உருவாக்குவதற்கான அடிப்படைக் கொள்கைகளும் அதற்கான நடைமுறைகளும் இடம் பெற்றிருந்தன. அரசியல் சாசன வரைவுக் குழு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் அவர்கள் தலைமையில் 1947 ஆம் ஆண்டு ஆகஸ்டு 29 ஆம் நாள் அமைக்கப்பட்டது. இந்திய அரசமைப்புச் சட்டத்தின் இறுதி வரைவு அறிக்கையை 1948 நவம்பர் 4 ஆம் நாள் அரசியல் நிர்ணய சபையில் அண்ணல் அம்பேத்கர் தாக்கல் செய்தார். மேலும் படிக்க | சமூக ஊடகங்களில் பரவும் தேர்வு முடிவுகள் போலி! எச்சரிக்கும் TNPSC இதில் இடம்பெற்றிருந்த ஒவ்வொரு பிரிவின் மீதும் 1949 அக்டோபர் 17 வரை அரசியல் நிர்ணய சபை உறுப்பினர்களின் விரிவான விவாதம் நடந்தது. இதில் மொத்தம் 7653 திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, இறுதி விவாதம் நவம்பர் 14 ஆம் நாள் தொடங்கியது. அனைத்து விவாதங்களும் நிறைவுபெற்று, அரசியல் நிர்ணய சபை உறுப்பினர்கள் அனைவராலும் ஒப்புதல் அளிக்கப்பட்டு 1949 நவம்பர் 26 ஆம் நாள் ஏற்றுக் கொள்ளப்பட்டது. 1950 ஜனவரி 26 இந்திய அரசியலமைப்புச் சட்டம் அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வந்தது. அந்நாளே குடியரசு நாளாக கொண்டாடப்படுகிறது. வரலாற்றுப் புகழ்வாய்ந்த அரசியல் சாசன நாளான நவம்பர் 26 ஆம் நாள், இந்த ஆண்டு கல்லூரிகளில் ‘முன்னுதாரண மன்னர்’ மற்றும் ‘கிராம பாரம்பரிய பஞ்சாயத்து’ உள்ளிட்ட தலைப்புகளில் கருத்தரங்கு நடத்தப்பட வேண்டும் என்று பல்கலைக் கழக மானியக் குழு உத்தரவிட்டுள்ளது. கருத்தரங்கம் நடத்துவதற்கான கருத்துரைகளை இந்திய வரலாற்று ஆய்வுக் கழகம் (ICHR) தொகுத்து அளித்துள்ளவற்றை பயன்படுத்திக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டு இருக்கின்றது. பழங்காலத்திலிருந்தே உலகம் எங்கும் இந்தியர்கள் வசித்து வந்துள்ளனர். இதனால் பாரதம் குறித்து நாம் பெருமைப்பட வேண்டும். பாரதம் குறித்த எண்ணம் போற்றப்பட வேண்டும். அப்போதிருந்தே நாம் ஜனநாயகத்தைப் பின்பற்றி வந்திருக்கிறோம். பாரதத்திலிருந்துதான் ஜனநாயகம் எனும் கருத்து உருவாக்கப்பட்டிருக்கிறது. மேலும் படிக்க | இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் வேலை வாய்ப்பு – முழு விவரம் இந்தியாவின் வேத காலத்திலிருந்தே ‘ஜனபதம்’ மற்றும் ‘ராஜ்யம்’ என இரண்டு வகையான அமைப்புகள் இருந்தன. இதிலிருந்துதான் கிராம பஞ்சாயத்துகள் உள்ளிட்ட அமைப்புகள் உருவாகின. கிராம பஞ்சாயத்துகள் அந்நிய படை எடுப்புகளிலிருந்து நமது பண்பாட்டை காப்பாற்ற உதவின. இதனால்தான் நமது பண்பாடு, கலாச்சாரம் உள்ளிட்டவை இன்னும் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு பல அமைப்புகளைக் கொண்ட பாரதத்தில் ஜனநாயகம் என்பது சுமார் கி.மு. 5000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இருந்து வருகிறது என்பதற்கு தற்போது சான்றுகள் கிடைத்துள்ளன. அதேபோல ‘வேத இலக்கியம்’ பிரபஞ்சத்தின் இருப்பு குறித்துப் பேசுகிறது. அனைத்து உயிரினங்களுக்கான அடிப்படை ஒற்றுமை குறித்து ‘உபநிடதங்கள்’ வலியுறுத்துகின்றன. ‘பகவத் கீதை’ அறிவையும், நல்லொழுக்கத்தையும் போதிக்கிறது என்று கூறப்பட்டுள்ளது. மேலும் படிக்க | திமுக அரசுக்கு இன்னும் 44 அமாவாசைகளே உள்ளது: எடப்பாடி பழனிச்சாமி கணிப்பு நவம்பர் 26 ஆம் நாள் அரசியல் சட்ட நாளை மறைத்து, அரசு சார்பில் கல்லூரிகளில் பாரதம், பகவத் கீதை, வேத இலக்கியம், உபநிடதங்கள், பழங்கால பஞ்சாயத்து முறைகள் குறித்து கருத்தரங்குகள் நடத்துவதற்கு ஒன்றிய பா.ஜ.க. அரசு யூ.ஜி.சி மூலம் அறிப்பை வெளியிட்டு இருப்பது கடும் கண்டனத்திற்கு உரியது. இந்திய அரசமைப்புச் சட்டத்தின் நெறிமுறைகளான இறையாண்மை, சோசலிசம், சமயச் சார்பின்மை, மக்களாட்சி, குடியரசு முறை, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம், தனிமனித மாண்பு, நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாடு இவை அனைத்தையும் தகர்த்து தவிடுபொடி ஆக்கும் வகையில் ஒன்றிய பா.ஜ.க. அரசின் கடந்த எட்டு ஆண்டு கால செயல்பாடுகள் இருக்கின்றன. அரசியல் சட்டத்தையே தகர்க்க முனைந்திடும் இந்துத்துவ சனாதனச் சக்திகளின் முயற்சிகளை முறியடிக்க அரசியல் சாசன நாளில் உறுதி ஏற்போம். மேலும் படிக்க | போலி பணி நியமன ஆணை : எஸ்.பி. வேலுமணிக்கு அடுத்த இடி… தமிழ்நாடு முழுவதும் முறைகேடா? சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள். முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும். கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!! Android Link: https://bit.ly/3AIMb22 Apple Link: https://apple.co/3yEataJ Source link Submit a Comment Cancel reply Your email address will not be published. Required fields are marked * Comment * Name * Email * Website Save my name, email, and website in this browser for the next time I comment. Search Search Recent Posts Minister Mathiventhan has said that it is a healthy thing that everyone is taking more interest in wearing make-up | நிறைய பேர் மேக்கப் போட்டுக்கொள்வது ஆரோக்கியம் – அமைச்சர் மதிவேந்தன் Meteorological Centre Announced Rain from December 5 to 8 in Tamilnadu | டிசம்பர் 5லிருந்து 8வரை உஷாரா இருங்க மக்களே… வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு Erode Government school headmaster forced Schedule Caste students to clean toilets | தாழ்த்தப்பட்ட மாணவர்களை கழிவறையை கழுவ சொல்வதா?… பெரியார் பிறந்த ஈரோட்டில் இப்படி ஒரு கொடுமை சேகர் ரெட்டியிடம் விஜயபாஸ்கர் பெற்ற லஞ்சம் எவ்வளவு? வருமானவரித்துறை பகீர் தகவல் TN Govt Important Notification regarding Aadhaar Linking with Bank Account | வங்கி கணக்குடன் ஆதார் எண் இணைப்பு – கூட்டுறவுத்துறை அறிவுறுத்தல்
அமெரிக்காவைச் சேர்ந்த இந்த நிறுவனம், 1994இல் இந்தியாவில் போர்டு நிறுவனம் தனது கார் தயாரிக்கும் ஆலையை திறந்தது, இந்திய வாகன உற்பத்தி சந்தையில் முதல் முதலில் முதலீடு செய்த நிறுவனத்தின் பெயரை போர்டு நிறுவனம் தான் பெற்றது. இந்தியாவில் இரண்டு ஆலைகள் இவர்கள் இந்தியாவில் இரண்டு ஆலைகளை உருவாக்கினர் ஒன்று சென்னை அருகில் மறைமலைநகரில் ஓர் ஆலையையும், குஜராத்தில் சனந்தில் ஆலையையும் திறந்து தனது நிறுவனத்தை விரிவுபடுத்தியது இந்தியாவை விட்டு வெளியேற காரணம் ஆனால் தற்போது 4.6 லட்சம் வாகனங்களை உற்பத்தி செய்யும் அளவிற்கு இந்த இரண்டு ஆலைகளிலும் திறன் உள்ளது, ஆனால் அதிக உற்பத்தித்திறன் இருந்தும், அதற்கு இணையான விற்பனையை பெறமுடியவில்லை எனவே போர்டு நிறுவனம் தனது இந்தியாவில் உள்ள தனது இரண்டு ஆலைகளையும் மூட முடிவு செய்துள்ளது Ford கார்கள் வாங்க முடியுமா எனினும் ஏற்கனவே வெளிநாடுகளில் போர்டு நிறுவனம் இயங்கிக்கொண்டிருக்கும் இடங்களில் இருந்து இந்தியாவிற்கு இறக்குமதி செய்து விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது, உதிரிபாகங்கள் நிலைமை இந்தியாவில் போர்டு கார்களின் உதிரிபாகங்கள் அதிக அளவில் கிடைக்க ஏற்பாடு எப்பொழுதுமே செய்யப்படும் என கருத்து தெரிவித்துள்ளது போர்டு நிறுவனம். கார் ஜாம்பவான்கள் கார் ஜாம்பவான்களின் இடையில் போர்டு நிறுவனம் இந்தியாவில் இருந்து காணாமல் போனது என்று இந்த பதிவில் இருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டிய உண்மை.
சமீபத்தில் நாடாளு மன்றத்தின் இரு அவை களிலும் தடாலடியாக ஒரே நாளில் விவாதம் வாக் கெடுப்பு நடத்தி நிறைவேற் றப்பட்டுள்ள, 10 சதவீத இட ஒதுக்கீடு (பொருளாதார அடிப்படையைக் கணக்கில் கொண்டு) முன்னேறிய வகுப்பு ஏழைகளுக்கு வேலை வாய்ப்பில் ஒதுக்கீடு செய்யப்படும் என்ற இந்திய அரசியல் சட்டத்தின் 103-வது திருத்தத்தை ஏன், எதற்காக எதிர்க்கிறோம் என்பதை இட ஒதுக்கீடு ஏன், எதற்காக, எப்படி எப்போது ஏற்பட்டது என் பதைப் புரிந்துகொள்ள வாய்ப்பில்லாத இளைய தலைமுறையும், மேலெழுந்த வாரியாக ஏழை களுக்கும் இட ஒதுக்கீட்டை இவர்கள் எதிர்ப்பது என்ன நியாயம் என்று குழம்பியுள் ளவர்களுக்கும் தெளிவுபடுத்துவது மிக அவசியமாகும். இந்த சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீடு நமது நாட்டில் (இந்தியாவில்) ஏன் தேவைப்படுகிறது? உலகில் எங்குமில்லாத சாதி வர்ண தர்மமுறை, தீண்டாமை என்பது பிறப்பை அடிப்படையாகக் கொண்ட சமூக அமைப்பு. மனுதர்மத்தில் முதலாம் அத்தியாயம் 87 ஆவது சுலோகத்தில் "பிரம்மாவானவர் பிராமண, ஷத்திரிய, வைசிய, சூத்திர வருணத்தாருக்கு இம்மைக்கும், மறுமைக்கும் உபயோகமான கருமங் களைத் தனித்தனியாகப் பகுத்தார்". இதன்படி, பிராமணர்களுக்கே கல்வி ஏகபோகம். இதனால், கீழ்சாதிக்காரர்கள் காலங்காலமாய், கல்வியறிவுபெற முடியாதவர்களாகவும், அதன் விளைவாக அரசு வேலைவாய்ப்புகளை நினைத்துப் பார்க்க முடியாத மன ஊனம் உற்றவர்களாக ஆக்கப்பட்டார்கள்! சர்.பி.டி. தியாகராயர், டாக்டர் நடேசன், டாக்டர் டி.எம்.நாயர் ஆகிய திராவிடர் இயக்க முன்னோடிகள் இதனைச் சுட்டிக்காட்டி, (வகுப்புவாரி உரிமை) சமூக நீதி வேண்டும் என்று கேட்டனர். தந்தை பெரியார் காங்கிரசில் இருந்தபோது 1920 முதல் 1925 வரை ஒவ்வொரு மாகாண மாநாட்டிலும் முயன்று வெற்றி பெறாத நிலையில், சமூகநீதிக்காகவே இட ஒதுக்கீட்டுப் பிரச்சினைக்காகவே காங்கிரசை விட்டு 1925 -ல் காஞ்சீ புரத்தில் நடைபெற்ற மாநாட்டிலிருந்து வெளி யேறினார். இவர்களுக்காகத்தான் 1920-ல் பதவியேற்ற நீதிக்கட்சி திராவிடர் இயக்கம் அதன் ஆட்சியின் போது வெள்ளைக்காரர்களிடம் ஆட்சியின் அதிகாரம் இருந்த இரட்டை ஆட்சி முறையிலும் முயற்சித்து, 1921, 1922 என்று இரண்டு வகுப்புவாரி ஆணைகளைப் பிறப்பித்தனர். அது சரியாக செயல்படாததால், தந்தை பெரியார் போன்ற தலைவர்களின் ஊக்கத்தினால், நீதிக்கட்சித் துணையுடன் ஆட்சி அமைத்த டாக்டர் சுப்பராயன் தலைமையில் அமைந்த அமைச்சர வையில் இடம் பெற்ற எஸ்.முத்தய்யா (முதலியார்) ஒரு புது வகுப்புவாரி உரிமை ஆணை (ஜி.ஓ.) அனை வருக்கும் இட ஒதுக்கீடு தரும் வகையில் மக்கள் தொகையில் 3 சதவீதம் உள்ள பிராமணர்களுக்கு 17 சதவீதம் இட ஒதுக்கீடு 1928 முதல் அமலுக்கு வந்தது. அதனால், வகுப்புவாரி உரிமையில், பிராமணரல்லாத வர்களில் ஆதிதிராவிடர், இஸ்லாமியர், கிறிஸ்தவர் என்று பலருக்கும் இட ஒதுக்கீடு தரப்பட்டு இட ஒதுக்கீடு ஒரு சமூகநீதியைத் தந்தது. 100 சதவீத ஏகபோகம் அனுபவித்தவர்களுக்கு 17 சதவீதத்தை ஏற்க மனமில்லை. 1950-ல் அமலான இந்திய அரசியல் சட்டத்தில் கூறப்பட்டிருக்கும் "இது சமத்துவத்திற்கு விரோதம் என்று அடிப்படை" உரிமை கோரி, செண்பகம் துரைராசன் என்பவர் போட்ட வழக்கு, கம்யூனல் ஜி.ஓ. வகுப்புவாரி உரிமை செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் தீர்ப்புக் கூறியதனால், 1928 முதல் 1950 வரை அமலில் இருந்த வகுப்புவாரி உரிமை ஆணை செல்லாததானது. இதற்காக அரசியல் சட்டத்தைத் திருத்த தந்தை பெரியார் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மக்களையும் திரட்டி, ஒரு மாபெரும் போராட்டம் நடத்தினார். அப்போதைய பிரதமராக இருந்த நேரு, சட்ட அமைச்சர் அம்பேத்கருடன் கலந்து, முதல்முறையாக அரசியல் சட்டத்தைத் திருத்தினார். அப்போது கல்வி உத்தியோகங்களில் பிற்படுத்தப்பட்டவர்களை அடை யாளம் காண "சமூக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும்" என்ற சொற்றொடரையே பயன்படுத்தினர். அப்போது நாடாளுமன்றத்தில் இருந்த சிலரும், பொருளாதார ரீதியாக என்பதையும் இணைக்க வேண்டுமென்று விவாதம் எழுந்தது. பிரதமர் நேரு சொன்னார், சாதியால் சமூகத்தில் ஒதுக்கப்பட்டு, கல்வி மறுக்கப் பட்டது பாரம்பரியமானது; தெளிவானது. பொருளாதார அளவுகோல் ஆண்டுக்காண்டு மாறக் கூடியது. இன்றைய பணக்காரன் நாளைய ஏழையாகவும், இன்றைய ஏழை மறுநாள் பணக்காரனாகவும் ஆகலாம். ஆனால், கீழ் சாதிக்காரன் ஒருபோதும் மேல்சாதிக்காரன் ஆக முடியாது; சுடுகாடு கூட தனித்தனிதான். பிறவி அடிப்படை என்பது மாறாத, மாற்ற முடியாத சமூக அடிப்படை. எனவே, நமது அரசியல் சட்ட கர்த்தாக்கள் அந்த இரு சொற்களைப் போட்டார்கள் என்று கருத்தை உள்ளடக்கிய விளக்கம் தந்ததை ஏற்றார்கள். எனவே, இட ஒதுக்கீடு என்பது வறுமை ஒழிப்புத் திட்டமல்ல, பல ஆண்டுகளாக கல்வி, உத்தியோக வாய்ப்பு மறுக்கப்பட்ட சமூக ஊனம் ஏற்பட்டவர்களுக்கு ஏற்படும் அநீதியைக் களையவே. பசி ஏப்பக்காரனுக்குப் பந்தியில் முன் னுரிமை தரவேண்டிய அவசியம் போல, புளி ஏப்பக் காரனுக்குப் பந்தியில் இடம் தருதல் தேவையற்றது. வறுமை ஒழிப்புத்திட்டங்களை அரசு வகுப்பதையும், அனைவருக்கும் அனைத்தும் தருவதையும் நாம் எதிர்ப்பதில்லை. ஆனால், "இட ஒதுக்கீடு என்பது வறுமை ஒழிப்புத் திட்டம் அல்ல" என்பதை உச்சநீதிமன்றமே பல தீர்ப்புகளில் சுட்டிக்காட்டியுள்ளது. பொருளாதார அடிப்படையை அளவுகோலாக்கும் போது அதில் ஏன் முன்னேறிய சாதி ஏழைகள் மட்டும் என்ற பாகுபாடு. ஏன் எல்லா சாதிகளிலும் ஏழைகள் இல்லையா? பிரதமர் மோடி அரசின் அவசர கோலமாக அள்ளித் தெளிக்கும் இந்த ஏற்பாட்டின் முக்கிய நோக்கம், தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு தற்போதுள்ள இட ஒதுக்கீட்டினை ஒழிப்பதற்கு முதல் முயற்சியே இது. "ஒட்டகம் கூடாரத்திற்குள் தலை நீட்டுவது" போன்ற ஆபத்தான தொடக்கம் இது. அண்மையில் நடைபெற்ற 5 மாநில சட்டமன்றத் தேர்தலில், ஆட்சிகளை இழந்த பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். அதற்கு முக்கிய காரணம். அந்த மாநிலங்களில் (இந்தி மாநிலங்களில்) உள்ள உயர் சாதியினரின் கோபம் தாழ்த்தப்பட்ட, மலைவாழ் மக்கள், எஸ்.சி., எஸ்.டி. சட்டத்தை நீர்த்துப் போகச் செய்து தடுத்ததால் தான் என்று ஆர்.எஸ்.எஸ். அமைப்பு, மோடி அரசுக்கு ஒரு ரகசிய அறிக்கை அனுப்பியுள்ளதால், வரவி ருக்கும் 2019 நாடாளுமன்றத் தேர்தலில் அவர்களது வாக்கு வங்கியை மீண்டும் இழக்கக் கூடாது என்ப தற்காக ஒரு தந்திர வியூகமே இது! அது மட்டுமல்ல, மோடி தலைமையிலான பா.ஜ.க., 2014-ல் ஆட்சிக்கு வருவதற்கு முன்னால், ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை கொடுப்போம் என்ற வாக்குறுதியும், கருப்புப் பணத்தை மீட்டு ஒவ்வொரு வரது வங்கிக் கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் போடு வோம் என்பதும் காற்றில் பறந்த வாக்குறுதியாகி விட்டதை - எங்கும் கேட்பதை மாற்றிட இப்படி "ஒரு கல்லில் பல மாங்காய் அடிக்கும்" ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க.வின் இந்த 'மாயமான் வேட்டை' மாதத்திற்கு 68 ஆயிரம் சம்பளம் வாங்குவோர் ஏழைகளா? 5 ஏக்கர் பூமி வைத்திருப்போர் ஏழைகளா? இது ஒரு நிரந்தர அளவுகோல் ஆக முடியுமா? ஆண்டுக்கு ஆண்டு மாறாதா? இப்படி ஆண்டுக்கு ஆண்டு இட ஒதுக்கீடு மாறிக் கொண்டிருக்கமுடியுமா? பிற்படுத்தப் பட்டவர்களுக்கு 'கிரிமீலேயர்' என்பதற்கும், இந்த அளவுகோலுக்கும் மோதல் ஏற்பட்டு குழப்பம் வராதா? "இந்திய அரசியல் சட்டத்தின் 46 ஆவது பிரிவின்படிதான் நாங்கள் பொருளாதாரத்தில் பலவீன மான பிரிவினருக்கு இந்த கல்வி, வேலை வாய்ப் புக்கான ஒதுக்கீட்டை செய் துள்ளோம்" என்று கூறியி ருப்பது, அச்சட்டப் பிரிவு களைத் தவறாகப் பயன் படுத்தியுள்ளதற்கான மிகப் பெரிய திரிபுவாதமாகும். அரசியல் சட்டத்தின் 46 ஆவது பிரிவு ஏன் சேர்க்கப் பட்டது என்றால், மலைவாழ் மக்கள் மற்றும் தாழ்த்தப்பட்ட பலவீனமான பிரிவினர் களுக்கு கல்வியிலும், பொரு ளாதாரத்திலும் முன்னேற்ற மடையச் செய்யவும், காலங் காலமாக அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி, சுரண்டல்களிலிருந்து அவர் களைக் காப்பாற்றி முன்னேற்றுவதற் கான பிரிவு ஆகும். பசியுள்ள பஞ்சைப் பராரிகளுக்கான உணவை கொழுத்தவனுக்குப் போடு வது போன்ற அக்கி ரமம் இது! மரணத்தோடு போராடும் நோயாளிகளுக்குத்தான் தீவிர சிகிச்சைப் பிரிவு. சும்மா உடம்பு "செக் அப்" செய்ப வருக்கு அல்ல என்பதைப் புரிந்தாலே, இந்த விஷமம் எவருக்கும் புரியும். அரசியல் சட்டத்தின் பீடிகையில் உள்ள சமூகநீதி வேறு பொருளாதார நீதி வேறு, அரசியல் நீதி வேறு என்று பிரித்துக் காட்டியுள்ள போது, சமூகநீதியை பொரு ளாதார நீதியோடு போட்டுக் குழப்பலாமா? ஏற்கனவே மண்டல் வழக்கில், இந்த பொருளாதார அளவுகோல் சட்டப்படி செல்லாது என்று தீர்ப்பு 9 நீதிபதிகள் அமர்வில் தரப்பட்டது என்பதால், இது அரசியல் சட்ட விரோதம். ஒடுக் கப்பட்ட மக்களுக்கு விரோதம். சமூக அநீதி யாகும். நன்றி: 'தினத்தந்தி' 15.1.2019 கீழ்க்கண்ட பத்திகள் 'தினத்தந்தி'யில் வெளியிடப் படாதவையாகும். * அதுமட்டுமா? அதனை மீறி கல்வி (அக்காலத்தில் வேதம்) கற்க மற்றவர்கள் முயன்றால், நாக்கை அறுக்க வேண்டும்; காதால் ஓதுவதைக் கேட்டால், காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றவேண்டும் என்கிறது மனு தர்மம் (டாக்டர் அம்பேத்கர்). * (அந்த அடையாளம் ஏற்கெனவே பிற்படுத்தப் பட்டோர் நலம்பற்றி இந்திய அரசியல் சட்டத்தின் 340 ஆவது பிரிவில் உள்ள சொற்றொடர்களே). * அரசியல் சட்டத்தின் 46 ஆவது பிரிவின் தலைப்பே, Promotion of educational and economic interests of Scheduled Castes, Scheduled Tribes and other weaker sections என்பதாகும்.
ஒரு நாடு ஸ்தம்பித்து போய்விட்டது என்பதை வெறும் கதைகளிலும், கட்டுரைகளிலுமே கண்டு வந்த எமக்கு அதன் தாத்பரியத்தைக் கண் முன்னால் காணும் நிலை இப்போதுதான் ஏற்பட்டிருக்கிறது. நான் இங்கிலாந்துக்குள் காலடி வைத்து இப்போது 47 வருடங்கள் ஒன்பது மாதங்கள் ஆகின்றன. நான் காலடி வைத்த நாள் முதல் நேற்றுவரை இங்கிலாந்தில் மாற்றமின்றி நான் கண்ட ஒரேயொரு அடையாளம், ஒரேயொரு மனிதர் இங்கிலாந்தின் இரண்டாவது எலிசபெத் மகாராணியார் என்றால் அது மிகையில்லை. இவர் யார் ? இவர் இத்தகைய ஒரு இடத்தை இங்கிலாந்து மக்கள் மத்தியில் மட்டுமல்ல உலக மக்கள் மத்தியிலும் பெற்றிருக்கக் காரணம் என்ன ? இங்கிலாந்து மகாராணியார் எனும் பதவி ஒன்றினால் மட்டும் எமது மகாராணியார் இத்தகைய பெரு மதிப்பை உலகளாவிய ரீதியில் பெற்றிருக்க முடியுமா ? இக்கேள்விகளுக்கு விடைகாண முயலும்போதுதான் இவரின் மகத்துவத்தைப் புரிந்து கொள்ள முடிகிறது. மகாராணி எனும் பதவியிலிருக்கும் போதும் மனிதத்துவத்தை இழக்காமல் கலாச்சார அடையாள விழுமியங்களைப் பாதுகாத்து வாழ்ந்த இவரின் அயராத சேவையைப் புரிந்து கொள்ள முடிகிறது. இருபத்தைந்து வயது நிரம்பிய இளவரசியாக இளம் தாயாராக கணவனுடன் கெனியா நாட்டுக்கு விஜயம் செய்த இரண்டாவது எலிசபெத் அம்மையார் இங்கிலாந்துக்கு மகாராணியாக திரும்பிய போது அந்த இௐளம் தாயாரின் முன்னால் இருந்த பாரிய கடமையை ஏற்று எத்தகைய வகையில் செயலாற்றி முடித்தார் என்பதற்குச் சரித்திரம் சான்றாக அமைகிறது. அரசர் ஆறாவது ஜோர்ஜ் அவர்களது மூத்த புத்திரியாக லண்டன் Mayfair எனும் இடத்தில் 1926ம் ஆண்டு ஏப்பிரல் மாதம் 21ம் தேதி பிறந்தார் . இளவரசர் பிலிப் என்பவரை 1947ம் ஆண்டு நவம்பர் மாதம் 20ம் தேதி மணந்தார். இன்றைய அரசராகிய மூன்றாவது சார்ள்ஸ் அவர்களோடு சேர்த்து நான்கு குழந்தைகளின் தாயாராவார். 73 ஆண்டுகள் எதுவித குழப்பங்களுமற்ற மணவாழ்க்கையில் இணைந்திருந்த மகாராணியாரின் கணவர் இளவரசர் எடின்பரோ கோமகன் பிலிப் அவர்கள் கடந்த ஆண்டு தனது 99 வயதில் 100 வயதுக்கு ஒரு மாதம் முன்னதாக தனது பூவுடலை நீத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 70 ஆண்டுகாலம் முடி சூடியிருந்த மகாராணியார் எதுவிதமான சர்ச்சைகளுக்குமுட்படாமல் தனது மரணம் வரை முடிக்குரியவராக இருந்தார் என்பது சரித்திரமே ! இத்தகைய ஒரு வெற்றியான வாழ்க்கையை அவர் அடைவதற்கான அவரது விசேடத் தன்மைகள் என்ன? வெற்றியான மகாராணியார் வாழ்க்கை ஏதோ சுமூகமாக ஓடியது என்று சொன்னால் இல்லை என்றே பதில் வரும். அவரைச் சுற்றி அவரது சொந்தங்கள் உறவுகளினால் ஏற்பட்ட பல சர்ச்சைகளை அவர் கையாண்ட விதமே அவரது பண்புக்கு அத்தாட்சியாக இருக்கிறது. அவரது மூத்த மகனாக முடிக்குரிய இளவரசராக இருந்த இன்றைய அரசராக அறிவிக்கப்பட்ட இளவரசர் சார்ல்ஸ் அவர்களது மணமுறிவும் அதைத்தொடர்ந்து அதனுடன் இணைந்து எழுந்த பலவிதமான இளவரசி டயானா சம்பந்தமான சர்ச்சைகளையும் அனைத்து தரப்பினருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் அவர் கையாண்ட விதம் பிரமிக்கத் தக்கது. அதையடுத்து அவரது இரண்டாவது மகனான இளவரசர் ஆண்ட்ரூ அவர்களுடைய மணமுறிவு மட்டுமல்ல , சமீபத்தில் அவர் மீது எழுந்த பாலியல் ரீதியான குற்றச்சாட்டுகள் அனைத்தையும் அவர் பாரபட்சமின்றி அரச கெளரவங்கள் அனைத்தையும் அவரிடமிருந்து விலக்கியதன் மூலமாக ஒரு தாய் எனும் நிலையிலில்லாமல் ஒரு நாட்டின் மகாராணி எனும் நிலையிலிருந்து எடுத்த முடிவுகள் அவர் தனது நாட்டுக்கான சேவைக்குக் கொடுத்த முக்கியத்துவத்தை எடுத்துக் காட்டுகிறது. இங்கிலாந்து அரச பரம்பரைக்குள் முதலாவதாக வந்த வேற்றின பந்தத்தை ஏற்று அதற்குக் காரணமான அவரது பேரனான இளவரசர் ஹரி அவர்களையும் அனுசரித்து அவர் நடந்து கொண்ட விதம் அவரது பண்பினை மேலோங்கி நிற்க வைக்கிறது. அதைத் தொடர்ந்து சமீபத்தில் அவரது பேரன் இளவரசர் ஹரியும் , அவரது மனைவியும் தாம் அரச குடும்பத்துடனான உரிமைகளிலிருந்து விலகிக் கொள்வதாக அறிவித்தது மட்டுமல்ல அமேரிக்காவில் இரச குடும்பத்துக்கு பங்கம் ஏற்படும் வகையில் அளித்த நேர்காணல்கள் அளித்ததையும் உள்வாங்கி அதனை மிகவும் சாதுரியமாகக் கையாண்டு தன்னுடைய மதிப்பை உலகளாவிய ரீதியில் உயர்த்திக் கொண்டார். இப்படியாக நேற்று 08.09.2022 தனது பூவுடலை நீத்து வானுலகம் எய்திய மகாராணியார் தனது பிரத்தியேக வாழ்வில் ஏற்பட்ட பாதிப்புகளை தனது தேச சேவைக்கு எவ்வித பங்கமும் ஏற்படா வகையில் பணியாற்றியதே இவரின் அதியுன்னத பண்பாகக் கணிக்கப்படுகிறது. இதுவரை இவர் தனது 70 ஆண்டுகால முடியாட்சியில் 15 இங்கிலாந்துப் பிரதமர்களைக் கண்டு அவர்களைச் சம்பிரதாயபூர்வமாக நியமித்திருக்கிறார். உலகளாவிய ரீதியில் எடுத்துப் பார்த்தோமானால் இதுவரை 170 நபர்களைப் பிரதமராகப் பார்த்திருக்கிறார், இவர் மகாராணியாகியது செய்த முதலாவது பிரதமர் நியமனம் நான் பிறந்த மண்ணாகிய அப்போதைய சிலோன் என்றழைக்கப்பட்ட இலங்கையின் பிரதமர் டட்லி சேனநாயக்கா ஆவார். இவர் செய்த கடைசிப் பிரதமர் நியமனம் இரண்டு நாட்களுக்கு முன்பாக இங்கிலாந்தின் பிரதமர் லிஸ் ட்ரஸ் அவர்களாவார். இங்கிலாந்தின் முடிக்குரிய மகாராணியாக மட்டுமல்லாமல் பொதுநலவாய நாடுகளின் தலைவியாக இவர் ஆற்றி வந்த கடமைகள் எண்ணிலடங்கா. இதுவரை சுமார் 600 தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் கெளரவ தலைவராக பணியாற்றிய இவரது சேவை அளப்பரியது. தன்னுடைய தலைமையின் கீழுள்ள பொதுநலவாய நாடுகளின் பிரஜைகள் ஒவ்வொருவரையும் தன்னுடைய பிரஜைகளாகவே கருதிச் செயல்பட்டு வந்தவர் இரண்டாவது எலிசபெத் மகாராணியார். இரண்டாவது எலிசபெத் மகாராணியாரின் ஆட்சிக்காலத்தில் முதல் இங்கிலாந்தின் பிரதமராக இருந்தவர் சார் வின்சென்ட் சார்ச்சில் அவர்கள். இவர் பிறந்தது 1874ம் ஆண்டு. இரண்டாவது எலிசபெத் மகாராணியாரின் ஆட்சிக்காலத்தில் கடைசிப் பிரதமராக இருப்பவர் திருமதி லிஸ் ட்ரஸ் . இவர் பிறந்தது 1975ம் ஆண்டு . ஆக மொத்தம் மகாரணியாரின் ஆட்சிக் காலத்தில் இவர் கண்ட பிரதமர்களின் வயது இடைவெளி 100 வருடங்களாகும். இதுவோர் உலக சாதனை என்றால் மிகையில்லை. இத்தனை பிரதமர்களையும், இத்தனை ஆட்சி மாற்றங்களையும் சந்தித்த மகாராணியாரின் பழகும் தன்மையில் மட்டும் எதுவித மாற்றங்களுமேயில்லை, சமூக, விஞ்ஞான, சமய மாற்றங்கள் ஒன்றன்பின் ஒன்றாக ஏற்பட்டுக் கொண்டிருந்தும் மகாராணியாரோ மனிதத்துவம் மீதும், இறையின் மீதும் கொண்ட நம்பிக்கையை இழக்காமல் இருந்ததே அவரது இந்த நன்மதிப்பின் முக்கிய காரணமாகிறது. என்றுமே நாட்டின் அரசியல் மாற்றங்கள் மீதோ அன்றி அரசியல்வாதிகள் மீதோ எதுவிதமான சொந்தக் கருத்துக்களையும் இவர் திணிப்பதேயில்லை எப்போதுமே தனது சொந்தக் கருத்து எதுவாயிருந்தாலும் அரசியலில் நடுநிலைமையையே கடைப்பிடித்து வந்துள்ளார். தன்னுடைய அந்திம காலம் வரை தனது நாட்டுக்கான சேவையை செய்து கொண்டேயிருந்தார் என்பதே இவரது சேவை மனப்பான்மைக்கு எடுத்துக்காட்டாகிறது. வியாழக்கிழமை 08.09.2022 அன்று மறைந்த மகாராணியார் இரண்டு நாட்களுக்கு முன்புவரை அதாவது 06.09.2022 அன்று முன்னால் பிரதமர் பொரிஸ் ஜான்சன் அவர்களது இராஜினாமாவை ஏற்றதோடு புதிய பிரதமர் திருமதி லிஸ் ட்ரஸ் அவர்களை சம்பிரதாயபூர்வமாக பிரமராக நியமித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இன்றுவரை உலகின் எந்தப் பகுதிக்குச் சென்றாலும் மகாரணி ( The Queen) என்று சொன்னால் அனைவரின் நினைவிலும் மேலோங்கி நிற்பது இரண்டாவது எலிசபெத் மகாராணியார் ஒருவரே. இது அவர் மகாராணியார் எனும் சொல்லுக்கு ஏற்படுத்திக் கொடுத்த ஒரு மதிப்பு என்றே எடுத்துக் கொள்வோம். மறைந்த மதிப்பிற்குரிய இரண்டாவது எலிசபெத் மகாராணியாரின் ஆத்மாவுக்கு அஞ்சலி செய்வதோடு அரசராகிய மூன்றாவது சார்ள்ஸ் அவர்கள் தன்னுடைய தாயாரின் பாதையில் ஒரு வெற்றியான அரசராகச் செயல்பட எமது வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்வோம். இங்கிலாந்துப் பிரஜைகளில் ஒருவனாக சக பிரஜைகளோடு எனது துயரையும் பகிர்ந்து கொள்கிறேன். 09.08.2022 இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
திருமணம் முடிந்து மற்ற சடங்குகள் நடந்துக் கொண்டிருக்க கீழே முதல் வரிசையில் அமர்ந்து அதைப் பார்த்துக் கொண்டிருந்தான் அறிவழகன்.கண்கள் எதிரே பார்த்துக் கொண்டிருந்தாலும் மனமோ முன்தினம் நடந்ததையே அவனுக்கு ரிவைண்ட் மோடில் மறுபடியும் மறுபடியும் காட்டி படுத்தி வைத்துக் கொண்டிருந்தது. தன்னையறியாமல் கன்னத்தை தடவுவதும் திடுக்கிட்டு எடுப்பதுமாக திருதிருவென ஆடு திருடிய கள்வன் போல முழித்துக் கொண்டிருந்தவனை கவனித்துப் பார்த்த மூதாட்டி ஒருவர் அவனருகே வந்து, “நீ யாருப்பா உன்னை பார்த்ததே இல்லையே கிரி தம்பிக்கு சொந்தமா?இல்ல சிநேகித புள்ளயா?”என்று கேட்க அப்போது அங்கே வந்த பவித்ரா, “பெரியம்மா!இவன் என் அத்த பெத்த அறுந்த வாலு பேரு அறிவழகன் என் கல்யாணத்தும் போது பார்த்திருப்பீங்களே மறந்துட்டீங்க போல!”என்று விளக்க, “ஓ அந்த புள்ளயா இது!அப்ப ஒட்டடை குச்சி மாதிரி இருந்தப் புள்ள இப்ப வஸ்தாது மாதிரி வளந்து நிக்கவும் அடையாளமே தெரியல ஆமா தம்பி என்ன வேலை பாக்குது?”என்று அவர் வினவ அறிவு பதில் கூறுமுன், “அவென் இந்த ஊரு எம்எல்ஏக்கு கூஜா தூக்குறான்”என்று கூறி பவி சிரிக்க, “பவித்ரா…!”என்று அவன் முறைக்க, “இல்லல்ல கட்சி தொண்டன் போதுமா!எப்பா இந்த உலகத்துல உண்மைய பேச விட மாட்றாங்கபா”என்று கூறியவள் யாரோ அழைக்க அங்கே விரைந்து விட்டாள். இதுவரை இதையெல்லாம் தூண் மறைவில் நின்றுக் கேட்டுக் கொண்டிருந்த சசி கை மறைவில் சிரித்து முடித்தவள், ‘ஓஹோ சாரு பவி அக்காவுக்கு சொந்தமோ!இருடா இதை வச்செ உன்னை ஒரு வழி பண்ணுறேன்’என்று மனதில் கூறிக் கொண்டவள் அங்கே ஜுஸ் தட்டோடு வந்த பெண்ணிடம் அதை தான் வாங்கிக் கொண்டவள் வரிசையாக கொடுத்து வந்து அறிவு முன்பு நீட்டி, “மாமா….!ஜுஸ் குடிங்க மாமா….!”என்று கூற யாரது தன்னை மாமா என்று அழைப்பது என்று திடுக்கிட்டு அவள் புறம் திரும்பியவன் அது சசி என்று தெரிந்ததும், “ஏதே மாமாவா…!இந்தாம்மா யாரை பாத்து மாமான்ன?”என்று அவளை முறைக்க, “உங்களை தான் மாமா!மாமான்னு கூப்பிட்டேன் மாமான மாமான்னு கூப்பிடாம வேற எப்படி மாமா கூப்பிட்றது நீங்களே சொல்லுங்க மாமா!”என்று கிடைத்த இடத்தில் எல்லாம் மாமாவை போட்டு அவனை தாக்க, “இந்தா நிறுத்து உன் மாமா மந்திரத்த!யாரு யாருக்கு மாமா?வந்திட்டா மாமா மச்சான்னுங்கிட்டு”என்று அவன் படபடக்க, “பவித்ரா அக்காவுக்கு நீங்க அத்தை பையன்னா அவருக்கு நீங்க மாமா அவங்க எனக்கு அக்காங்கறதால எனக்கும் நீங்கதான் மாமா! மாமா….!”என்று அவள் இழுக்க, “ஐயோ…ஆஞ்சனேயா! இதெல்லாம் என்னால கேக்க முடியல!இந்தாம்மா சும்மா நொய்நொய்ங்காம போ அங்கிட்டு”என்று நெற்றி கண்ணைத் திறக்க, “என் ஆசை மாமா இங்க இருக்கும் போது நான் ஏன் மாமா அங்கிட்டும் இங்கிட்டும் போகனும் “என்று அவள் கண்ணடிக்க, “ஐய்யோ அபசாரம் அபசாரம்!”என்று கண்களை மூடி கத்தியவன் எழுந்து ஓடிவிட கலகலவென சிரித்தாள் சசிரேகா. திருமண பந்தி கம்மென்ற மணத்தோடு நடந்துக் கொண்டிருந்தது.கையில் பொறியல் வாளியோடு பரிமாறிக் கொண்டிருந்தாள் மீரா.கைக்கும் தலைக்கும் உறை அணிந்திருந்தாள்.பரிமாறும் அனைவருமே அதை அணிய வேண்டும் என்பது அந்த கேட்ரிங்கின் சட்டம்.தன் கண்ணான மாமனின் திருமணத்தில் செய்கிறோம் என்ற எண்ணத்தில் அவள் எந்த வேலையையும் விடவில்லை.காலையில் பாத்திரம் கூட கழுவிக் கொடுத்திருந்தாள். அப்படி பரிமாறியபடி வந்தப் போது, “இந்தாம்மா பொண்ணு இந்த எச்சில் இலைய எடு!கல்யாண பொண்ணோட மாமா சீக்கிரம் சாப்பிட்டு கிளம்பனும் ம் சீக்கிரம் எடுத்து சுத்தம் பண்ணு”என்று அவளை விரட்டியது வேறு யாருமில்லை அனிதாவே தான்.சும்மாவே அவள் யாரையும் மதிக்கமாட்டாள் அதிலும் சிறிய கரைபோட்ட சேலையில் கழுத்தில் பாசிமணி கையில் கண்ணாடி வளையல் என்று இருக்கும் மீராவை விடுவாளா? ஒருகணம் மீரா தயங்க, “ம் என்ன நின்னுக்கிட்டே செத்துட்டியா என்ன?எடு சீக்கிரம்”என்று அதட்ட இலையில் அவள் கைவைக்கும் முன், “மீரா….!”என்று கிரிதரனின் கர்ஜிக்கும் குரல் கேட்க திடுக்கிட்டு திரும்பினர் மீராவும் அனிதாவும். “இங்க என்ன பண்ற மீரா?”என்ற அவனின் கோபக் குரலில் அவளின் முதுகு தண்டு சில்லிட, “மாமா…!அது…”என்று அவள் இழுக்க, “என்ன மதனி!மீரா யாருன்னு தெரியாதா உங்களுக்கு?அவளை இலை எடுக்க சொல்றீங்க!அவ என் அக்கா பொண்ணு!வேலையாள் இல்ல!…மீரா!ஏதோ வீட்டு பொண்ணா வீட்ல செஞ்ச சரி!ஆனா இங்க கல்யாண மண்டபத்துல வந்து யாரோ மாதிரி என்ன இதெல்லாம்?” கிரிதரனின் ரௌத்திராவதாரத்தில் எதற்கும் துணிந்தவள் என்று பெயர் படைத்த அனிதாவே நடுநடுங்கிப் போனாள்.நிஜமாகவே அவளுக்கு மீராவை யாரென்று அடையாளம் தெரியவில்லை.யாரோ வேலையாள் என்று நினைத்து பேசிவிட்டாள்.இப்போது கிரிதரன் இருக்கும் நிலையில் மேலே பேசாமல் பின்வாங்குவதே சாலச்சிறந்தது என்று முடிவெடுத்து, “ஐயோ கிரி தம்பி! எனக்கு நிஜமாகவே மீரா புள்ளய அடையாளம் தெரியல!நம்ம புள்ளன்னு தெரிஞ்சிருந்தா நா அப்புடி சொல்லியிருப்பனா! நீங்க கோவிச்சுக்காம சாப்பிட போங்க தம்பி!பாருங்க நம்ம சமி பசி தாங்காம மயங்கிடுவா போல இருக்கா!”என்று அவன் கவனத்தை தங்கை பக்கம் திருப்பியும் அங்கிருந்து விலகி செல்லும் மீராவை, “மீரா நீ சாப்பிட்டியா?”என்று அவன் கேட்க, “நா..சாப்பிட்டேன் மாமா!நீங்க சாப்பிடப் போங்க! பாவம் அக்கா உங்களுக்காக காத்திட்டு இருங்காங்க போங்க மாமா!”என்று கூறியவள் அங்கிருந்து நகர முயல அவள் கைபிடித்து தடுத்தவன், “எதுக்கு பொய் சொல்லுற?நீ சாப்பிடலேன்னு உன் மூஞ்சியே சொல்லுது!வா இப்ப என்னோடு வந்து சாப்பிடுற அவ்ளோதான்!”என்று மனைவியை மறந்து அவளை இழுத்து செல்பவனை பேவென பார்த்த அக்கா தங்கை இருவரும் அவர்கள் பின்னேயே விரைந்தோடினர். பந்தியில் மணமக்களுக்காக இரண்டு தலைவாழை விரித்து உணவு பறிமாறப்பட்டிருக்க அதில் ஒன்றில் தான் அமர்ந்தவன் மீரா தன் இடப்பக்கத்தில் இருந்த இலையில் அமர வைத்தப் பின்தான் அவளின் கைவிட்டான் அவன்.தன் அருகே சமிகா அமர்ந்தாளா இல்லயா என்று கூட அவன் பார்க்கவில்லை.அவன் தன்னை அழைத்து அமர்த்துவான் என்று காத்திருந்து ஏமாந்த சமிகா கோபத்தோடு அவனின் வலப்பக்கத்தில் அமர, “கிரி தம்பி முதல்ல இனிப்பை எடுத்து உன் பொண்டாட்டிக்கு கொடுப்பா!”என்று யாரோ உறவினர் பெண்மணி கூற அதை கவனிக்காதவனைப் போல, “ஏய் மீரா! உனக்கு ஜாங்கிரின்னா ரொம்ப பிடிக்கும் இல்ல உன் இலைல வெக்கவே இல்லியே இந்த என் ஜாங்கிரிய நீ சாப்பிடு!”என்று தன் இலையிலிருந்து எடுத்து அவன் மீராவின் இலையில் வைக்க பார்த்திருந்த அனைவருமே ஒருகணம் அதிர்ந்துப் போயினர் என்றால் மீராவோ அதிர்ச்சியின் உச்சிக்கே சென்றுவிட்டாள். அவளுக்கு முதலிலேயே அவனோடு அமர்ந்து உண்ணவே சங்கடமாக இருந்தது.அதிலும் அவன் இனிப்பை தன் இலையில் வைத்ததும் திடுக்கிட்டவள் அனிதாவும் சமிகாவும் தன்னை முறைப்பதைக் கண்டு எழுந்தே விட்டாள். “மீரா…! உட்கார்ந்து சாப்பிடு!”என்று கிரி ஆழ்ந்த குரலில் கூற, “அது மாமா நா அப்புறம் வந்து சாப்பிடுறேன் நீங்க சாப்பிடுங்க!”என்று அவள் நகர முயல, “மீரா சாப்பிடுன்னு சொன்னேன்”என்ற அவனின் அதட்டலில் பயந்து அமர்ந்தவள் வேகவேகமாக சாப்பிடத் தொடங்கினாள்.அதன்பின் மவுனமாக பந்தி நடக்க கடைசிவரை அவன் சமிகாவின் பக்கம் திரும்பவும் இல்லை இனிப்பை ஊட்டவுமில்லை.பொறுத்து பொறுத்துப் பார்த்தவள் பசி வயிற்றைக் கிள்ளவே உணவை ஒருகை பார்த்தாள். மூன்றாம் பந்திக்கு மைசூர் பாக்கை பரிமாறியபடி வந்த சசிரேகா அதே வரிசையில் அமர்ந்து உணவருந்திக் கொண்டிருந்த அறிவை கண்டவள், ‘ஓஹோ சாப்பிட்றியா!’என்று எண்ணியவள் அவனுக்கு மட்டும் போடாமல் முன்னே சென்றுவிட, “இந்தாம்மா எனக்கு போடல”என்று அவளை அழைக்க காதே கேளாதவள் போல கடைசிவரை சென்று அவள் திரும்ப, “எனக்கு மட்டும் போடல “என்று அவன் பல்லைகடித்துக் கூற, “என்ன போடல அடியா?”என்று அவள் நக்கலாக கேட்க, “என்ன நக்கலா!மைசூர் பாகு போடல! நான் போயி கங்காதரன் அண்ணேகிட்ட சொல்லுவேன் “என்று அவளை மிரட்ட, “என்னய்யா மிரட்றியா?இவ்ளோ பெரிய பந்திக்கு பரிமாறப்போ தப்பி போறது சகஜம் அதுக்கு போயி சண்டைக்கு வரியா?”என்று அவளும் பேச, “இல்ல நீ வேணும்னே தான் போடல” “உனக்கும் எனக்கும் வாய் தகராறா வாய்கா தகராறா நா ஏன்யா அப்படி பண்ண போறேன்”என்று அவள் கேட்க, “நேத்திக்கு நா உன்ன திட்டினேன்னு உனக்கு கோபம் அதுக்கு தான் பழிவாங்குற” “நேத்திக்கு திட்டினியா எதுக்கு திட்டின? “என்று ஏதுமறியாதவள் போல அவள் கேட்க, “அதுதான் நீ எனக்கு முத்…”என்று தொடங்கியவன் எல்லோரும் இருவரின் தகராறை சுவாரஸ்யமாக பார்ப்பதைக் கண்டு கபக்கென வாயை மூடியவன், “அம்மா தாயே எனக்கு எந்தூரு பாக்கும் வேணாம் நீ போம்மா” என்று ஒற்றை கையில் அவளுக்கு கும்பிடு போட, ‘அது’என்பதுப் போல அவனைப் பார்த்தவள் நக்கலாக சிரித்தபடி சென்றுவிட்டாள். நான்கு மணிக்கு நல்லநேரம் என்பதால் அதுவரை மண்டபத்திலேயே இருந்துவிட்டு மணமக்கள் அவர்கள் காரில் ஏற மீதம் முக்கியமான சொந்தங்கள் அவரவர் வாகனங்களில் ஏறிக் கொள்ள ஒருமணி நேரத்தில் வீடுவந்து சேர்ந்தனர். பவித்ராவும் இன்னுமொரு உறவினர் பெண்மணியும் ஆரத்தி எடுக்க கிரிதரன் வலதுகாலை எடுத்துவைக்க சமிகாவோ இடதுகாலை எடுத்து வைத்து உள்ளே நுழைய, “அடடே என்னம்மா இது கல்யாணமாகி புருஷன் வீட்டுக்கு முதல்ல வர இடது காலை வெச்சு வந்திட்டியே ஏம்மா அனிதா தங்கச்சிக்கு ஒன்னுமே சொல்லிக் கொடுக்கலயா நீ”என்று வயதான பாட்டி ஒருவர் கடிந்துக் கொள்ள, “விடுங்க அப்பத்தா அவ இந்த வீட்டு மருமகளா இருந்தா தானே அதெல்லாம்…”என்று கூறி கிரி நிறுத்த எல்லோரும் திடுக்கிட்டு அவனைப் பார்க்க, “எங்கம்மா பவித்ரா மதனிய மக மாதிரி தான் பாக்குறாங்க அப்ப இவளும் இனிமே அப்படிதானே அதை தான் அப்புடி சொன்னேன்”என்று அவன் முடிக்க அக்கா தங்கை இருவரும் அப்பாடா என்று பெருமூச்சுவிட்டனர். மணமக்கள் இருவரும் கலைவாணியின் அறைக்கு சென்று அவரை வணங்க முகம் கலங்கியிருந்தாலும் அட்சதை தூவி தன் மகன் மண வாழ்க்கை நன்றாக வேண்டும் என்று மனமார வாழ்த்தினார் அவர்.பின் இருவரையும் அழைத்துச் சென்று பாலும் பழமும் கொடுத்தப் பின் சிறிது நேரம் ஓய்வெடுக்க வேண்டும் என்று கூறி கிரி தன் அறைக்கு சென்றுவிட அக்கா தங்கை இருவரும் ஆள் அதிகம் இல்லாத இடத்திற்கு சென்று அங்கிருந்த கல்மேடையில் அமர்ந்தனர். “ஏன்டி சமி!உன் புருஷன் ஏன் ஒருமாதிரியா இருக்கான்? ஏதாவது உங்களுக்குள்ள சண்டையா?”என்று அனிதா விசாரிக்க, “நா எதுக்கு சண்டை போட போறேன்கா!என்னன்னே தெரியல மதியம் சாப்பிட்றதுக்கு கூப்பிட போனேன்ல அப்ப புடிச்சே மூஞ்சிய இஞ்சி தின்ன குரங்கு மாதிரி தான் வெச்சுருக்கான் என்னன்னு கேக்கவும் பயமா இருக்கு…போதாததுக்கு அந்த பிச்சைக்காரிய எப்படி கூட்டி வந்து தன் பக்கத்திலேயே உட்கார்த்தி வச்சுக்கிட்டான் பாத்தியா? எனக்கு அப்படியே அவ கழுத்த நெரிக்கனும் போல இருந்தது “என்று கோபத்தோடு கூற, “அதுதான்டி எனக்கும் அப்படிதான் இருந்தது ஆனா சமி நீ இதை பொறுமையாதான் கையாளனும் அவள ஒரு வார்த்தை சொன்னதும் எப்படி என் மேல பாஞ்சான் பாத்தியில்ல என்ன ஆனாலும் அவளை அவனை நெருங்க விடாத!அவளை பத்தி இல்லாததையும் பொல்லாததையும் சொல்லி அவளை கண்டாலே ஆகாத மாதிரி பண்ணிடு என்ன புரிஞ்சுதா! அப்புறம் ராத்திரிக்கு நா சொன்னத மறந்திடாத!அவன் அப்படியே நம்புற மாதிரி நடிக்கனும்!சரி சரின்னு மண்டைய ஆட்டிட்டு ஏதாச்சும் சொதப்பினே கொன்னே போடுவேன்!”என்று அவள் மிரட்டிக் கொண்டிருந்த நேரம், “சமிதா மதனி எங்கே?மதனி!உங்களை கூப்பிட்றாங்க!”என்று யாரோ அழைக்க, “ந்யூசன்ஸ் நிம்மதியா கொஞ்ச நேரம் உட்கார கூட விடமாட்டேங்குதுங்க!நா போனை தொட்டு இத்தோட டென் அவர்ஸ் ஆயிடுச்சு”என்று மூக்கால் அவள் அழ, “கொஞ்ச நாளுதானேடி நீ சென்னை போனதும் உன் இஷ்டப்படி இருந்துக்க இப்ப சீக்கிரம் போ!”என்று தங்கையை அழைத்துச் சென்றாள். அங்கே சமையலறையில் சமிகா பால் காய்ச்சுவதற்காக எல்லாம் தயாராக இருந்தது.விறகு அடுப்பிற்கு கோலம் போட்டு மஞ்சள் குங்குமம் இட்டு தயார்படுத்தியிருந்தாள் மீரா.சமிகா உள்ளே வரவும் ஒரு ஓரமாக ஒதுங்கி நின்றாள். “சமிகா!அடுப்ப பத்த வெச்சி இந்த பாலை காய்ச்சி எடுமா “என்று பவித்ரா கூற நேராக அங்கிருந்த கேஸ் அடுப்பு முன்பு சென்று அவள் நிற்க, “அங்க இல்லம்மா இங்க இந்த விறகு அடுப்புல தான் பண்ணனும் “என்று முதியவர் ஒருவர் கூற, “என்ன விறகு அடுப்புலயா?நோ நோ எனக்கு அதெல்லாம் பழக்கமில்ல நா இங்கேயே பண்றேன் “என்று அவள் அடம் பிடிக்க, “சமிகா!இது இங்க சம்பிரதாயம் பண்ணிதான் ஆகனும் “என்று கிரி அழுத்தமாகக் கூற வேறு வழியில்லாமல் அடுப்பு அருகே சென்று நின்றவள் பட்டாசை பயந்தபடி கொளுத்தும் சிறுவனைப் போல தூரத்தில் நின்றுக் கொண்டு நெருப்பை வைக்க முயல அது எறிவேனா என்று படுத்த அரைமணி நேரமாகியும் சிறிது கூட நெருப்பு பற்றவில்லை. “மீரா!நீ போய் பத்த வெச்சுக் கொடு விடிஞ்சாலும் அவளால முடியாது”என்று கிரி கூற, “நானா…?”என்று அவள் இழுக்க, “நீயே தான் போய் பத்த வை! மனுசனுக்கு வேற வேலையே இல்லையா இங்கயே எத்தன நேரம்தான் நிக்கறது!”என்று அவன் அதட்ட கோபத்தோடு தன்னை முறைக்கும் சமிகாவை பார்த்து பயந்துக் கொண்டே சென்று இரண்டே நிமிடத்தில் அடுப்பை பற்ற வைக்க சுமார் ஐந்து லிட்டர் அளவு பால் ஊற்றியிருந்த பெரிய பாத்திரத்தை தூக்க முடியாமல் தூக்கி அடுப்பில் வைத்தாள் சமிகா. பால் சுடாகி மேலே பொங்கி வழிய “சமிகா பாலை இறக்குமா பொங்கிடுச்சு பாரு”என்று பவித்ரா கூற கையில் இருந்த துணியால் அதை தூக்க முயன்றவள் அடுப்பின் புகையாலும் பாத்திரத்தின் அதீத சுடாலும், “ஆ…என்னால முடியல ஐயோ கீழ விழப் போகுது”என்று அவள் கீழே போடும் முன் அதை தாங்கிப் பிடித்திருந்தாள் மீரா.மெல்ல அவள் அதை கீழே வைக்க, “சமிகா எல்லாருக்கும் பால் கலந்து குடும்மா”என்று முதலில் பேசிய பெண்மணி கூற, “கை சுட்டிடுச்சு என்னால முடியாது ஏய் மீரா நீயே செஞ்சுடு”என்றவள் கையை ஊதிக் கொண்டே சென்றுவிட தான் செய்வதா என்று மீரா திருதிருவென விழிக்க, “மீரா பால் ஆறுது சீக்கிரம் கலந்துட்டு வா”என்ற கிரி அங்கிருந்து சென்றுவிட்டான்.ஒருவித சங்கடத்தோடு பாலை கலந்து அங்கிருந்த எல்லோருக்கும் கொடுத்தவள் கிரியின் முன் நீட்ட அவளால் புரிந்துக் கொள்ள முடியாத பார்வையோடு அதை எடுத்துக் கொண்டு அகன்று விட்டான். இரவு கிரியின் அறை அழகாக அலங்கரிக்கப்பட்டிருக்க சமிகா அங்கு வந்து வெகுநேரம் சென்றுதான் கிரிதரன் உள்ளே வந்தான்.மயக்கும் புன்னகையோடு அவள் அருகே வந்து அவள் தோளில் கைவைத்தவன், “சமிகா…”என்று கிறக்கமாக அழைக்க, “ஓ கிரண்! ஐம் சாரி எனக்கு ரொம்ப வயிறு வலிக்குது ஐ திங்க் எனக்கு ப்ரீயட்ஸ் டயம் வந்திடுச்சு எப்பவும் இப்படிதான் பெயினா இருக்கும் ஐ ம் சோ சாரி உங்க மூட் ஸ்பாயில் பண்ணிட்டேன் “என்று வயிற்றை பிடித்துக் கொண்டு அவள் அழ ஒருகணம் கண்ணை மூடித் திறந்தவன், “இட்ஸ் ஓகே சமிகா!நீ ரெஸ்ட் எடு! உனக்கு சரியானதுக்கு அப்புறம் பாக்கலாம்”என்றவன், “நீ தூங்கு நா அப்படியே ஒரு வாக் போயிட்டு வரேன் “என்று அவன் வெளியேற, “அப்பா நல்லவேளை போயிட்டான் “என்று நிம்மதியாக மூச்சுவிட்டவள் போர்வையை தலையோடு போர்த்திக் கொண்டு தன் மொபைலை நோண்ட தொடங்கிவிட்டாள். பவுர்ணமி நிலவு பால் போல பொழிய கிணற்றடியில் அமர்ந்து அதையே பார்த்தபடி இருந்தாள் மீரா.இந்நேரம் அங்கே என்ற நினைவே அவளை நிலைகுலைய செய்து கண்ணீரை வர செய்தது.அப்போது அவளின் பின்னிருந்து, “மீரா இந்நேரம் இங்க தனியா என்ன பண்ற?”என்ற கிரியின் குரலில் தூக்கிவாரிப் போட தன் கண்களை அவசரமாகத் துடைத்துக் கொண்டு திரும்பியவள், “மாமா நீங்க இங்க எங்க வந்தீங்க?”என்று அவள் கேட்க, “நா சும்மா கொஞ்சம் காத்து வாங்கலாம்னு வந்தேன்…நிலவு எவ்வளவு அழகா இருக்கு இல்ல “என்று அவன் கேட்க, “ம்…”என்றாள் அவள். “என்னதான் நிலவு மேகங்கற போர்வைக்குள்ள தன்னை மறச்சிக்கிட்டாலும் மேகம் விலகவும் அது வெளிய வந்துதான் தீரனும் இல்ல மீரா!”என்று கூர்பார்வையோடு அவன் கேட்க அந்த கேள்வியில் மறைந்திருக்கும் பொருளை அறிய முடியாமல் திகைத்துவிட்டாள் அவள்.
ஆதிக்கவாதத்துக்கு எதிராக தேசியம் போராட்டம் நடத்தும் போதெல்லாம் அண்ணா வாழ்கிறார் என தேசியம் குறித்த கட்டுரையில் தனது கருத்தை முன்வைக்கிறார் கொல்கத்தாவாவைச் சேர்ந்த ஆய்வறிஞர் கர்க சட்டர்ஜி. பேரறிஞர் அண்ணா Web Desk Updated on : 28 May 2019, 01:12 PM பாகிஸ்தானின் உருது ஆதிக்க ஆட்சியிலிருந்து ‘கிழக்கு பாகிஸ்தான்’ விடுதலையடைந்த ‘வங்கதேச மக்கள் குடியரசு’ என்ற நாடு 1971 – ல் உருவானபோது, அரசியல் விடுதலை, பிரதேச எல்லை விடுதலை என்பதைத்தவிர, இன்னொரு வகையிலும் அந்த விடுதலை முக்கியத்துவம் பெற்றது. வெவ்வேறு தேசிய இனங்களைக் கொண்ட நாடுகளை ‘ஒரே மதம்’ என்ற பிணைப்பு இணைக்கும் பசையாகச் செயல்படும் என்ற நம்பிக்கையைத் தகர்த்த விடுதலை அது. தெற்காசிய மக்களை 'ஒரே நாடு' என்றோ, 'இரு நாட்டவர்' என்றோ கட்டுப்படுத்திவிட முடியாது; அவர்கள் ‘பல தேசிய இனத்தவர்’ என்பதையே வங்கதேச விடுதலை நிரூபித்திருக்கிறது. பல தேசிய இனங்களுள்ள நாட்டில், பல்வேறு இனங்களிலிருந்து பல தந்தையர் உருவாகின்றனர். அப்படி உருவானவர்களில் முதன்மையானவர் அண்ணா என்றே நினைக்கிறேன். தமிழர்களின் தலைவர், இன்று பல்வேறு இன மக்களுக்கும் ஆதர்சமாகத் திகழ்கிறார். அண்ணா ஒரு மாநிலத்துக்கு, ஒரு இனத்துக்கு மட்டும் சொந்தமல்ல, உலக வரலாற்றில் இடம்பெற வேண்டிய தலைவர் என்பதை அவரது அரசியல் பணி உணர்த்துகிறது. இந்தியாவைக் காக்க அண்ணா வழியே உகந்தது இந்தியக் குடியரசின் ஜனநாயகமும் ஒற்றுமையும் அதன் கூட்டாட்சிக் கட்டமைப்பில் தான் வாழ்கின்றன. இதை உணர்ந்திருந்ததால்தான் 1946-ல் இந்திய சுதந்திரம் தொடர்பாக இறுதிசெய்ய, பிரிட்டனிலிருந்து வந்த கேபினட் அமைச்சர்களைக் கொண்ட தூதுக் குழு மாநிலங்களுக்கு அதிக அதிகாரங்கள் இருக்கும் கூட்டமைப்பாக இந்தியாவைச் சிந்தித்தது. மத்திய அரசுக்கு வெளியுறவுத்துறை, ராணுவம், ரூபாய் நோட்டு அச்சடிப்பு. தகவல் தொடர்பு, ரயில்வே போன்றவை மட்டும் பொறுப்புகளாக இருக்கும். ஏனையவை அனைத்தும் மாநிலங்களின் அதிகாரத்தில்! அதாவது, இப்போதைய ஐரோப்பிய ஒன்றியத்தைவிடச் சற்றே நெருக்கமான நாடுகளின் கூட்டமைப்பாக இந்திய அரசு இருந்திருக்கும். அண்ணாவும் இதையே வலியுறுத்தினார். ஒரு வங்காளி என்ற முறையில் கூறுகிறேன். அண்ணா இப்போதும் வாழ்கிறார். ஆதிக்கவாதத்துக்கு எதிராக தேசியம் போராட்டம் நடத்தும் போதெல்லாம் அண்ணா வாழ்கிறார். அண்ணா இன்னமும் வாழ்கிறார் என்று ஏன் கூறுகிறேன் என்றால், வங்காளியான என் மீது ‘இந்தி படிப்பது கட்டாயம்’ என்று மத்திய அரசால் திணிக்கமுடியவில்லை. 1965-ல் அண்ணா தலைமை தாங்கி நடத்திய இந்தி எதிர்ப்புப் போராட்டம்தான் இதற்கு முக்கியக் காரணம். அந்தப் போராட்டத்தால்தான் இந்தி பேசாத நாங்கள் அனைவரும் நிரந்தர மூன்றாம் தரக் குடிமக்களாகிவிடாமல் தப்பித்தோம். அதேசமயம், இந்திய தேசத்தின் இரண்டாம் தரக் குடிமக்களாக, என்றாவது ஒருநாள் முதல் தரக் குடிமக்களாகிவிட வேண்டும் என்ற கனவுகளோடு வாழ்கிறோம். இது தள்ளிப்போடப்பட்ட கனவாகதான் இருக்கிறது. உண்மையான தேசியத்தை அண்ணா சிந்திக்கவைக்கிறார் இந்தி ஆதிக்கத்துக்கு முன் அண்ணாவும் அவருடைய தம்பிகளும் அடிபணியாமல் நின்று, பிற தேசிய இனங்களுக்கு மிகப்பெரிய உதாரணர்களாகியிருக்கிறார்கள். அப்படித் தனித்து நின்றதன் மூலம், தேசியம் என்றால், அதாவது உண்மையான தேசியம் என்றால் என்ன என்று அனைவரையும் சிந்திக்க வைத்திருக்கிறார்கள். இப்போது இந்திய ஒன்றியத்துக்கு மிகப் பெரிய பதற்றத்தைத் தருவது இந்த விஷயம்தான். இந்தி பேசாத மக்களுக்கான இடம் எது என்று வறையறுக்க, இந்தி பேசும் ஆதிக்க வகுப்பு முற்படுகிறது. பெருமுதலாளித்துவத்தின் ஆதரவில் செயல்படும் ஜனநாயக எதிர்ப்புச் சத்திகள் மூலம் தேச ஒற்றுமைக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கிறது. தேசியவாதிகள் கூறும் விளக்கம் நம்மை எங்கே இட்டுச்செல்கிறது என்று பார்க்க வேண்டும். கூட்டாட்சி அமைப்பை ஆக்கிரமித்துள்ள, டெல்லி ஆதிக்கவாதிகள் எங்களைப் பார்த்து கேட்கிறார்கள், ”நீங்கள் முதலில் இந்தியரா அல்லது வங்காளியா?” இப்படிக் குடியுரிமையையும் தேசிய அடையாளத்தையும் வேண்டும் என்றே மோத விடுகிறார்கள். இப்படி நம்முடைய கடந்த காலத்தைச் சிதைத்து, நிகழ்காலத்தை அடிமைப்படுத்தி, எதிர்காலத்தை நிர்மூலமாக்கும் சக்திகளுக்கு எதிராகப் போராடத்தான் அண்ணா நமக்கு மிகவும் தேவைப்படுகிறார். தேசிய இனத்தால் நான் வங்காளி, குடியுரிமையால் நான் இந்தியன். நான் ஏன் இந்தியனாக இருக்கிறேன் என்றால், வங்காளியாக வங்காளத்தில் பிறந்ததால்தானே தவிர, இந்தியாவில் பிறந்ததால் வங்காளியாகிவிடவில்லை. முதலில் இந்தியனாக என்னை அனுமதித்துவிட்டு, அதன் பிறகு வங்காளியாகவோ தமிழனாகவோ போக விருப்பமா என்று யாரும் என்னைக் கேட்கவில்லை. என்னுடைய தேசிய அடையாளம் என்பது விரும்பித் தேர்வுசெய்வதல்ல, அது இயற்கையாக வருவது. எனது தாய் என்னிடத்தில் முதலில் பேசிய வார்த்தைகள் வங்கமொழியிலானவை. அவளும் நானும் பேசிக்கொண்டது வங்காளியில். என்னுடைய குடியுரிமை இன்று இந்தியாவுடையது, நாளையே அது கனடா நாட்டினுடையதாக மாறலாம், நானும் பாலிவுட் நட்சத்திரமும் பா.ஜ.க-வின் ஆதரவாளருமான அக்‌ஷய் குமாரைப் பின்பற்றினால்! வங்காளியாகப் பிறந்த நான் எந்த நாட்டில் இருந்தாலும் வங்காளியாகத்தான் மடிவேன் – தாய்நாடான வங்காளத்தில் மடியவே நான் விரும்புகிறேன். நான் எழுதும் வார்த்தைகள் பலருக்குக் கோபத்தையும் எரிச்சலையும் எற்படுத்தலாம்; பலருடைய புருவங்கள் உயரலாம்; கடுமையான வசைகளால் என்னை அர்ச்சிக்கலாம்; இனி என் குரல் எழும்பாதபடிக்கு என்னை மவுனமாக்கும் வேலையைக் கூடச் சிலர் செய்யலாம். அந்த மவுனத்திலும், மாநிலங்களவையில் அன்றைய மத்திய அரசைப் பார்த்து அண்ணா பேசிய வார்த்தைகள் வாழும். ”பலப்பிரயோகம் செய்து அமைதியை ஏற்படுத்தாதீர்கள்; இதயத்திலிருந்து பேசி சமரசத்தை எற்படுத்துங்கள். அடிப்படை மனித உரிமைகளுக்கு ஆதரவாகக் குரல் கொடுங்கள் என்று ஆளுங்கட்சி உறுப்பினர்களை வேண்டிக்கொள்கிறேன். மக்களுக்கு உண்மையை உணர்த்தும் உங்களுடைய உரிமையைப் பயன்படுத்துங்கள்; ஆனால் மாற்றுக் கருத்துகளை யாரும் பேசக் கூடாது, எழுதக்கூடாது என்று தடை விதிக்கும் சட்டங்களை இயற்றாதீர்கள்!” இந்நாட்டில் இந்தி பேசாதவர்கள் ‘யாரும் என் வாயை அடைத்துவிட முடியாது’ என்று உறுதியேற்கும்போது, நீதிக்காகக் குரல்கொடுக்கும்போது அண்ணா வாழ்கிறார்!
அவள் விருதுகள்: `சினிமாக்கு வந்து 40 வருஷம் ஆகிடுச்சுனு யோசிச்சதில்லை' - நடிகை மீனா!|Visual story | Meena speech in Aval Awards - #Visual Story அவள் விருதுகள்: `சினிமாவுக்கு வந்து 40 வருஷம் ஆகிடுச்சுனு யோசிச்சதில்லை'- நடிகை மீனா |#Visual story இ.நிவேதா & ஆ.சாந்தி கணேஷ் அவள் விருதுகள் வழங்கும் நிகழ்வில், 40 ஆண்டுகளுக்கும் மேலாக ரசிகப் பெருமக்களின் நெஞ்சங்களில் வலம் வந்து கொண்டிருக்கும் மீனாவுக்கு, `எவர்கிரீன் நாயகி' விருதை வழங்கினார்கள், இயக்குநரும் நடிகருமான கே.பாக்யராஜ் மற்றும் நடிகை அம்பிகா. மீனா - கே.பாக்யராஜ் - நடிகை அம்பிகா. ``ஃபீல்டுக்கு வந்து 40 வருஷமாயிடுச்சுன்னு நான் யோசிச்சதே இல்லை; அந்த சக்சஸைக் கொண்டாட நேரமும் இருந்ததில்லை. கொஞ்சநாள் முன்னாடி என் வாழ்க்கையில நடந்த இழப்புல இருந்து என்னை மீட்டெடுத்தது அவள் விகடன்தான். அவள் டீமுக்கு என்னுடைய நன்றி’’ என்று கண்கலங்கினார் நடிகை மீனா. நடிகை மீனா செய்தி வாசிப்பாளராக கரியரை தொடங்கி சீரியல், சினிமா என அடுத்தடுத்த தளங்களில் ஜொலித்துக்கொண்டிருக்கும் பிரியா பவானிஷங்கருக்கு `அவள் ஐகான்’ விருதை, 80-களின் நாயகி நடிகை அம்பிகா வழங்கினார். பிரியா பவானிஷங்கர் - நடிகை அம்பிகா மென்மையான குரலில் பேச ஆரம்பித்தவர், வீக் எண்டில் தன் வீட்டு மொட்டைமாடி சீக்ரெட்; நியூஸ் ரீடிங் சேலஞ்ச்; நடிகர் கார்த்திக்கும் தனக்குமான நட்பு என செம இன்ட்ரெஸ்ட்டிங் தகவல்களைப் பகிர்ந்துகொண்டார். பிரியா பவானிஷங்கர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் அம்மா நாகமணிக்கு `பெஸ்ட் மாம்’ விருது வழங்கப்பட்டது. நடிகர் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடிகர் ஜெயப்பிரகாஷும், நடிகை வடிவுக்கரசியும் விருது வழங்கினார்கள். நாகமணி - விஜய் சேதுபதி - ஜெயப்பிரகாஷ் - வடிவுக்கரசி ``என் குழந்தை முன்னுக்கு வந்ததாலதான், நான் இன்னிக்கு இந்த மேடையில நின்னுகிட்டிருக்கேன்’’ என்று நெகிழ்ந்தார் நாகமணி. நாகமணி 19 இந்திய மொழிகளில் பாடியுள்ள ஒரே பாடகி வாணி ஜெயராமுக்கு `கலைநாயகி’ விருது வழங்கினார்கள் குன்றக்குடி அடிகளாரும், பாடகரும் மருத்துவருமான சீர்காழி சிவ சிதம்பரமும். பாடகி வாணி ஜெயராம் - குன்றக்குடி அடிகளார் ``ஐயா கரங்களால் விருது பெறுவது மகிழ்ச்சி’’ என்று நெகிழ்ந்த வாணியம்மா, தன்னுடைய சிக்நேச்சர் பாடலான `மல்லிகை என் மன்னன் மயங்கும்...’ பாடலைப் பாடினார்.
விற்பனை இயந்திர வணிகம்: விற்பனை இயந்திரங்கள் உண்மையில் எவ்வளவு சம்பாதிக்கின்றன மற்றும் நான் எவ்வாறு தொடங்குவது? 2027 ஆம் ஆண்டளவில் விற்பனை இயந்திர வணிகம் $146.6 பில்லியன் மதிப்பை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தொழில்துறையைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது இங்கே. 2022 ஆம் ஆண்டின் முதல் 10 சிறந்த வணிகப் பள்ளிகள் நீங்கள் மாநிலங்களில் எம்பிஏ திட்டத்தில் சேர விரும்பினால், நீங்கள் தொடங்கக்கூடிய சிறந்த வணிகப் பள்ளிகள் இதோ! புகைப்படக் கலைஞராக எனது பயணம்: எனக்கு ஒரு ஸ்டுடியோ தேவை என்று நான் தீர்மானித்த தருணம் இந்தப் பயணம் மேற்புறத்தில் புகைப்படம் எடுப்பது மட்டுமே. இது உண்மையில் தொழில் முனைவோர் மற்றும் ஒரு படைப்பாளியாக வளர ஆபத்துக்களை எடுப்பது பற்றியது. 2022 இல் வீட்டிலிருந்து கேட்டரிங் வணிகத்தை உருவாக்க உங்களுக்குத் தேவையான அனைத்தும் நீங்கள் சமையலில் மகிழ்ந்து, உங்கள் திறமையைப் பயன்படுத்தி வருமானம் ஈட்ட விரும்பினால், வீட்டு அடிப்படையிலான கேட்டரிங் தொழிலைத் தொடங்குவதை நீங்கள் பரிசீலிக்க விரும்பலாம். உயர் செயல்திறன் கொண்ட குழுவை உருவாக்குவது பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது அனைத்து தலைவர்களும் தங்கள் அணிகள் முடிந்தவரை சிறப்பாக செயல்பட வேண்டும் என்று விரும்புகிறார்கள். ஆனால் அதை அடைய, சரியான முறைகளை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். 4 வெவ்வேறு சிறு வணிகங்களை நீங்கள் மலிவாகத் தொடங்கலாம் மற்றும் உங்கள் சொந்த வீட்டிலிருந்து இயக்கலாம் சிறிய முதல் மூலதனம் மற்றும் குறைந்த நேர அர்ப்பணிப்பு ஆகியவற்றுடன், வீட்டிலிருந்து உங்கள் பக்க சலசலப்பைத் தொடங்க சிறந்த நேரம் இதுவரை இருந்ததில்லை.
நீதிமன்ற நிர்வாக நடவடிக்கைகள் தொடர்பான தீர்மானங்கள் நீதிச்சேவை ஆணைக்குழு ஊடாகவே பொது மக்களுக்கு அறிவிக்கப்படும். அவ்வாறு இல்லாமல் வேறு நபர்களால் விடுக்கப்படும் உத்தியோகபூர்வ அறிவிப்புகள் உத்தியோகபூர்வதானவை அல்ல என நீதி அமைச்சு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக நீதி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கொவிட் தொற்று நிலைமை காரணமாக நீதிமன்ற நிர்வாக நடவடிக்கை தொடர்பில் எடுக்கப்படும் ஏதாவது தீர்மானங்கள் நீதிச்சேவை ஆணைக்குழு அல்லது அந்த ஆணைக்குழுவின் அனுமதியுடன் நீதி அமைச்சினூடாக பொது மக்களுக்கு அறிவிக்கப்படும். அவ்வாறு இல்லாமல் கொவிட் 19 தொற்று நிலைமை காரணமாக நீதிமன்ற நடவடிக்கை தொடர்பில் அல்லது நீதி அமைச்சின் கடமைகள் தொடர்பில் வேறு தரப்பினரால் தெரிவிக்கப்படும் அறிவிப்புகள் உத்தியோகபூர்வமான தல்ல. அத்துடன் நாட்டில் ஏற்பட்டிருக்கும் கொவிட்19 தொற்று நிலைமயுடன் நீதிமன்ற நிர்வாக நடவடிக்கைகள் தொடர்பான தீர்மானங்கள் நீதிச்சேவை ஆணைக்குழுவின் www.jsc.gov.lk அல்லது உயர் நீதிமன்றத்தின் www.supremcourt.lk என்ற இணையத்தளத்தினூடாக தெரிந்துகொள்ளலாம். 🇫🇷பிரான்ஸ் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தாய் மண் யூரிப் சனலுக்கு வாருங்கள்🇫🇷 👍 லைக் பண்ணுங்க 💞ஷேர் பண்ணுங்க 🚀கமெண்ட் பண்ணுங்க 🔔சப்ஸ்கிரைப் பண்ணுங்க மறக்காம பெல் பட்டனை பிரஸ் பண்ணுங்க
வகுப்புவாதம் எல்லா வகுப்புக்கும் சம சந்தர்ப்பமும், சம சுதந்திரமும் வேண்டும் என்கின்றது. சமூகவாதம் தங்கள் சமூகம் மாத்திரம் எப்போதும் உயர்வாகவே இருக்க வேண்டும் என்கின்றது. நமது குடிஅரசு தோன்றியபின் இதன் இரகசியங்கள் வெளியாகி, இவைகள் எல்லாம் மறைந்து, இப்போது வகுப்புவாதிகளை ஒழிப்பது என்பது தவிர, வேறு எவ்விதக் கொள்கையும் திட்டமும் இல்லாமல் போய்விட்டது. வகுப்புவாதிகள் யார், அல்லாதவர்கள் யார் என்று பார்த்தாலோ அது இவைகளை எல்லாம்விட மிக யோக்கியமானதாக இருக்கும். அதாவது, வகுப்பு வித்தியாசம், சாதி உயர்வு-தாழ்வு, ஒரு வகுப்புக்கு ஒரு நீதி ஆகியவைகள் அடியோடு கூடாது என்றும், எல்லா வகுப்புக்கும் சம உரிமையும் சம சந்தர்ப்பமும் இக்கவேண்டும் என்றும் ஏற்பாடு செய்ய வேண்டும் என்பவர்கள்தாம் இக்கூட்டத்தாருக்கு வகுப்புவாதிகளாகத் தென்படுகின்றார்கள். உயர்ந்த வகுப்பு என்பதாக ஒன்று உயர்ந்திருக்க வேண்டும், தாழ்ந்த வகுப்பு என்பதாக ஒன்று தாழ்ந்திருக்க வேண்டும்; பார்ப்பனர்கள் உயர்ந்த வகுப்பு, மற்றவர்கள் அவர்களைவிடத் தாழ்ந்த வகுப்பு; சூத்திரர், பஞ்சமர் என்கின்ற வித்தியாசம் இருக்க வேண்டும்; இந்த வித்தியாசங்களை ஒழிக்க யாரும் முயற்சிக்கக்கூடாது; எவ்விதச் சட்டமும் செய்யக் கூடாது - என்பவர்கள் இவர்களுக்கு வகுப்புவாதிகள் அல்லாதவர்கள். சுருங்கச் சொன்னால், அவர்கள் கொள்கைப்படி பார்ப்பனர்களும் அவர்களை நத்திப் பிழைக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ளவர்களும், அவர்களது கூலிகளும் தவிர மற்றவர்கள் எல்லோரும், அதாவது பார்ப்பனரல்லாதவர்கள் எல்லோரும் வகுப்புவாதிகள் ஆவார்கள். எப்படியென்றால், நாமும் இதைத்தான் சொல்லுகின்றோம். அதாவது, சர்க்காரையும், தேசத்தையும் பிறகு பார்த்துக் கொள்ளலாம். சமூகவாதிகளை முதலில் அழிக்க வேண்டும் என்பதேயாகும். இந்தத் தேசம் பாழாய்ப் போவதற்கும் இந்த சர்க்கார் இங்கு இவ்வளவு அநீதியான ஆட்சி புரிவதற்கும், சமத்துவக் கொள்கை பரவாதிருப்பதற்கும் எந்தச் சமூகத்தார் தங்கள் சமூக நன்மையை உத்தேசித்து எதிரிகளாய் இருக்கின்றார்களோ அந்தச் சமூகத்தார் முதலில் அழிக்கப்பட வேண்டுமென்பதாகும். (குடிஅரசு, தலையங்கம் - 19.5.1929) *** வகுப்புவாரி உரிமை வேண்டாதவன் தன் வகுப்பை உணர முடியாதவனோ, தன் வகுப்பைப் பற்றி சந்தேகப்படத் தக்கவனோ ஆவான். ஒரு வகுப்பான், தன் வகுப்புரிமை கேட்பது தேசத் துரோகம் என்று சொல்லப்படுமானால், அப்படிச் சொல்லுகிறவன் ஒரு தேசத்தையும் சேர்ந்திராத நாடோடி, லம்பாடி வகுப்பைச் சேர்ந்தவனாகத்தான் இருக்க முடியும். நம்மவர்களுக்கு உண்மையான வகுப்புணர்ச்சி இல்லாததாலேயே, நாம் நாடற்ற நாடோடிகளால் அடக்கி ஆளப்பட்டு வருகிறோம். இங்கிலீஷ்காரன் இன்று, அவன் நாட்டின்மீது இத்தனை ஆயிரக்கணக்கான ஆகாயக் கப்பல்கள் பறந்து, பதினாயிரக்கணக்கான வெடிகுண்டுகள் வீழ்ந்து, குழந்தைகளும், குட்டிகளும் மாடங்களும் மாளிகைகளும் நாசமானாலும் கூட, ஓர் உயிர் உள்ள வரை போராடியே தீருவேன் என்று சொல்லுவதன் கருத்து, அவன் வகுப்பு உணர்ச்சியின் - வகுப்புவாதத் தன்மையின் உச்சநிலையேயாகும். நம் நாட்டுக்கு வெளிநாட்டிலிருந்து பிழைக்க வந்தவர்களுக்கு வகுப்பு உணர்ச்சியோ, நாட்டு உணர்ச்சியோ ஏற்படுவதற்கு நியாயமில்லை. ஆகவேதான், ஏன் சண்டை போடவேண்டும்? விட்டுவிட்டுப் போகலாமே என்கின்ற ஞானமும், யார் ஜெயித்தால்தான் என்ன? என்கின்ற ஞானமும் உதயமாகின்றன. அப்படிப்பட்ட ஆட்களுக்கு ஆதிக்கம் வந்ததாலேயே நம் நாட்டிற்கு இப்படி அடிக்கடி படையெடுப்புகளும், ஆபத்துகளும் நேருவது மாத்திரமல்லாமல், இந்நாட்டு மக்களாகிய நாம் நாடோடிகளால், சூத்திரர்களாகக் கருதப்படுகிறோம். மூன்று தலைமுறையோ அல்லது ஒரு நூற்றாண்டோ ஒரே ஊரில் இருந்ததாக ஏதாவது ஓர் ஆரியக் குடும்பத்தை நீங்கள் காட்ட முடியுமா? பிழைப்பு கிடைத்த இடத்தில் வாழ்க்கையும், சவுகரியம் கிடைத்த இடத்தில் ஓய்வும் என்பதில்லாமல் - ஊர் பாத்தியமோ, குலமுறை பாத்தியமோ சொல்லிக் கொள்ள அவர்களுக்கு வசதி உண்டா? அப்படிப்பட்டவர்கள் - நம்மை, நாம் நமது வகுப்புரிமை கேட்பதால் வகுப்புவாதி என்றும் - தேசத் துரோகி என்றும் - உத்தியோக வேடடைக்காரர்கள் என்றும் சொல்வார்களானால், அது நமது கோழைத்தன்மையும், வாழ்க்கையின் மானமற்ற ஈனத்தன்மையின் பயனுமே ஆகும். நாம் உத்தியோக வேட்டைக்காரர்களாம்! ஆம் என்றே வைத்துக் கொள்வோம். நாம் உத்தியோக வேட்டை ஆடுவதில் தப்பு என்னவென்று கேட்கிறேன்? திராவிட நாட்டில் ஒரு பார்ப்பானோ - ஓர் ஆரியனோ உத்தியோக வேட்டையாடுவதும், ஒரு திராவிடன் உத்தியோக வேட்டையாடுவதும் என்றால் யாருக்கு உத்தியோக வேட்டை ஆட உரிமை இருக்கிறது என்று கேட்கிறேன். உத்தியோக வேட்டையாடாத வகுப்பானுக்கு அவன் நாட்டினிடமும், அவன் வகுப்பினிடமும் பொறுப்பில்லை என்பதோடு, அவனை வகுப்புத் துரோகி என்று கூடச் சொல்லத் துணிவேன். ஒவ்வொரு வகுப்புக்கும் அவனது வகுப்பு எண்ணிக்கை அளவுக்கு உத்தியோகம் கொடுக்க ஆட்சேபித்தால் - ஆட்சேபிக்கப்பட்ட வகுப்பை இழிவுபடுத்தியதாகவும், கோழைத்தனமுள்ள, மானமற்ற, யோக்கியதையற்ற வகுப்பாகக் கருதியதாகவும் அர்த்தமாகும். எந்த வகுப்பான் தன்னுடைய வகுப்பு எண்ணிக்கை அளவுக்குத் தனது நாட்டில் உத்தியோக வேட்டையாடிப் பெறவில்லையோ, அந்த வகுப்பான் மானமற்ற கோழை வகுப்பானேவான். நான் ஏன் இப்படிச் சொல்லுகிறேன்? உத்தியோகம் யார் அப்பன் வீட்டுச் சொத்து? உத்தியோகத்துக்குத் தரப்படும் சம்பளம் யார் தாய்-தந்தையார் பாடுபட்ட சொத்து? உத்தியோகம் யாருக்காக, எந்த வகுப்புக்காக நிர்வாகம் செய்யப்படுவது என்பதை ஒரு நாட்டானோ, வகுப்பானோ தெரிந்து கொள்வானேயானால் - மற்ற நாட்டானோ, மற்ற வர்த்தகத்தானோ, மற்ற வகுப்பானோ நம் நாட்டில் வந்து உத்தியோகம் பார்ப்பதைப் பிராணனை விட்டாவது தடுக்க மாட்டானா என்று கேட்கிறேன்.
புதியதாக கம்ப்யூட்டர் ஒன்றினை உங்கள் அலுவலகப் பயன்பாட்டிற்கு வீட்டில் வைத்துப் பயன்படுத்தும் திட்டத்துடன் வாங்கி இருக்கிறீர்களா? அல்லது உங்கள் மகன் அல்லது மகள் இரண்டாம் ஆண்டு இன்ஜினியரிங் பட்டப்படிப்பிற்கு பயன்படுத்த வாங்கி தந்திருக்கிறீர்களா? கம்ப்யூட்டரை இயக்கத் தொடங்கியவுடன் ஸ்பை வேர் எதுவும் வந்திடுமோ என்று பயப்படுகிறீர்களா? ஆம், பாதுகாப்பு எதுவுமில்லாத கம்ப்யூட்டர் இன்டர்நெட்டில் இணைந்த சில நிமிடங்களில் நிச்சயமாய் ஏதேனும் ஸ்பைவேர் புரோகிராமால் பாதிக்கப்படும் அபாயம் நிச்சயமாய் உள்ளது. அதனால் இயக்கத் தொடங்கியவுடன் என்ன செய்யலாம் என்பதனை இங்கு படிப்படியாய்க் காணலாம். 1.விண்டோஸ் இயக்கத் தொகுப்பினை உடனே அப்டேட் செய்திடுங்கள். கண்ட்ரோல் பேனல் சென்று Windows Security Center செல்லவும். அங்கு automatic download என்பதைத் தேர்ந்தெடுத்து கிளிக் செய்திடவும். கம்ப்யூட் டருடன் ஏதாவது பயர்வால் புரோகிராம் அளிக்க ப்பட்டு அது இயங்கிக் கொண்டிருந்தால் விட்டு விடலாம். இல்லை என்றால் Windows XP firewall இயக்கவும். 2. இயக்கத் தொகுப்புடன் ஆன்டி வைரஸ் தொகுப்பு கொடுக்கப்பட்டிருந்தால் அதனை அப்டேட் செய்திடவும். ஆட்டோமேடிக் அப்டேட் என்பதில் டிக் அமைத்து வைக்கவும். 3.விண்டோஸ் எக்ஸ்புளோரர் இயக்கத் தொகுப்புடன் கிடைத்திருக்கும். எனவே ஆப்பரா அல்லது பயர்பாக்ஸ் பிரவுசர்களில் ஒன்றை டவுண்லோட் செய்து இன்ஸ்டால் செய்திடவும். 4.வேறு பிரவுசர் தொகுப்பினைப் பயன் படுத்தினாலும் விண்டோஸ் எக்ஸ்புளோரரை லாக் செய்து வைக்கவும். 5. குறைந்தது இரண்டு ஆண்டி ஸ்பை வேர் தொகுப்புகளை இன்ஸ்டால் செய்து வைக்கவும். என்னைப் பொறுத்தவரை AdAware மற்றும் Microsoft AntiSpyware என்ற இரண்டினையும் பரிந்துரைப்பேன். 6.ஜாவாகூல் சாப்ட்வேர் தளத்திலிருந்து Spyware Blaster and SpywareGuard என்ற இரண்டு புரோகிராம்களை அவசியம் இறக்கிப் பதிந்து வைக்கவும். 7..IESPYAD என்னும் பாதுகாப்பு தொகுப்பினைப் பதிந்து வைக்கவும். இதனைப் பதிந்தால் வெகு மோசமான 20 ஆயிரம் தொகுப்புகளை மைக்ரோசாப்ட் நீக்கிடும். பாதுகாப்பான இன்டர்நெட் உலா வருவதற்கு மேலே காட்டியுள்ள புரோகிராம்களை இயக்கிப் பார்க்கவும்.
“சமநிலை தவறாமல் இருப்பதுதான் முக்கியம். வீட்டில் சிலர் அடுத்தவர்களின் சமநிலையைத் தவற வைப்பதே வேலையாக இருக்கிறார்கள்” என்று ஞாயிற்றுக்கிழமை எபிசோடை பஞ்சாயத்துடன் ஆரம்பித்தார் கமல். போட்டியாளர்களுடன் பேச ஆரம்பித்ததும், சின்ன டாஸ்க் ஒன்றை அறிவித்தார் கமல். அதாவது, தனக்குத் தகுதியான போட்டியாளருக்கு வாளையும் மிகச் சாதாரணமான ஒருவருக்கு அட்டைக் கத்தியையும் கொடுக்க வேண்டும் என்றார் கமல். இந்த டாஸ்க்கிலும் வழக்கம்போல பலரும் தத்தம் சொந்தக் கணக்கைத் தீர்த்துக்கொண்டார்கள். ஷிவினுக்கு அதிக கத்திகளும் அஸீமுக்கு அதிக அளவில் அட்டைக் கத்திகளும் கிடைத்தன. தனக்குக் கிடைத்த அட்டைக் கத்திகளை அஸீம் எண்ணிக்கொண்டிருந்ததைப் பார்த்தபோது பரிதாபமாகத்தான் இருந்தது. பக்கத்திலிருந்த முத்துவிடம், “பல பேருக்கு கேள்வியே புரியலை” என்று பேசி சமாளித்துக் கொண்டிருந்தார் அஸீம். பிறகு, கதிரவனுக்கு மாட்டப்பட்டிருந்த விலங்கின் சாவியை அஸீம் ஒளித்துவைத்துக் கொண்டிருந்த விவகாரத்தை கையில் எடுத்தார் கமல். அதிலும் அஸீம் வறுத்தெடுக்கப்பட்டார். ஏடிகேவின் ராப்பைப் பற்றி அஸீம் மோசமாக ‘கமெண்ட்’ அடித்ததால், ஏடிகேவுக்கு ராப் பாட வாய்ப்பளிக்கப்பட்டது. அதில் பின்னியெடுத்தார் ஏடிகே. பிறகு, இடைவேளையில் தனியாக அமர்ந்து, “என்னையே போட்டுத் தாக்குறாங்களே.. ஒன்னுமே புரியலையே” என்று புலம்பிக் கொண்டிருந்தார் அஸீம். முத்து வந்து அருகில் அமர்ந்தவுடன், “எனக்கு ஒன்னுமே புரியலையே, என்னதான் செய்யிறது? நான் மனிதாபிமானமில்லாம ஒன்னுமே பண்ணலையே மாம்ஸ். என்னை பர்ஸனலா டார்கெட் பண்ற மாதிரி ஃபீல் ஆகுது” என்று அவரிடமும் சொல்லி புலம்பினார். இதற்குப் பிறகு வில் – அம்பை வைத்து அடுத்த விளையாட்டைத் துவங்கினார் கமல். வீட்டிற்குள் இருப்பவர்களில் யார் வில்லாகவும் யார் அம்பாகவும் இருக்கிறார்கள் என்று ஒவ்வொருவரும் சொல்ல வேண்டும். ராஜா – ராணி டாஸ்க்கில் நடந்த ஒரு விவகாரத்தை வைத்து, அமுதவாணன் வில் என்றும் ஜனனி அம்பென்றும் சொன்னார் விக்ரமன். இதில் கடும் ஆத்திரமடைந்தார் அமுதவாணன். பட மூலாதாரம், Vijay Tv/Twitter ஒருவருடன் சேர்ந்து விவாதிப்பதாலேயே ஒருவர் வில்லாகவும் மற்றொருவர் அம்பாகவும் ஆகிவிடுவதில்லை; தான் சொல்லி ஜனனி எதையும் செய்யவில்லை என்று கேமரா முன்பாக கூறிய அவர், வீட்டை விட்டு வெளியேற விரும்புவதாக சொன்னார். பிறகு, தான் ஏன் அப்படிச் சொல்ல வேண்டியிருந்தது என்பதை விக்ரமன் விளக்கினாலும் அமுதவாணன் சமாதானமடைந்ததாகத் தெரியவில்லை. இப்படி அமுதவாணன் ஒரு பக்கமும் அஸீம் மற்றொரு பக்கமும் புலம்பித் தள்ளி, இந்த எபிசோடையே புலம்பல் எபிசோடாக மாற்றிவிட்டார்கள். இந்த வாரம் நாமினேஷன் ஆனவர்களில் இறுதியில் அஸீமும் நிவாஸினியும் எஞ்சியிருந்தார்கள். இதில் யார் வெளியேற்றப்படுவார்கள் என கமல் கேட்டபோது, பலரும் அஸீம் பெயரையே சொன்னார்கள். ஆனால், நிவாஸினி வெளியேற்றப்பட்டார். அஸீம் காப்பாற்றப்பட்டாலும், மனிதர் மிகவும் சோர்வடைந்திருந்தார். கடந்த வாரம், ராஜா – ராணி டாஸ்க்கில் விறுவிறுப்பாகக் கழிந்துவிட்டது. இந்த வாரம் பிக் – பாஸ் என்ன செய்யப் போகிறார் என்று பார்க்க வேண்டும். ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை Play video, “சொத்துகளை விற்று 200 பூனைகளை வளர்க்க விரும்பும் ‘சந்தோஷ் குடும்பம்'”, கால அளவு 1,41 01:41
பாராளுமன்ற உறுப்பினர்களால் நன்கொடையாக வழங்கப்பட்ட தொன்னூரு இலட்சத்து இருபத்தைந்தாயிரம் ரூபாவை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள், கடந்த மே மாதம் 9 ஆம் திகதி இடம்பெற்ற கலவரத்தின்போது கொலை செய்யப்பட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொலன்னறுவை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரலவின் மனைவியிடம் நேற்று (14) கையளித்தார். பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் நேற்று நடைபெற்ற ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களின் குழுக் கூட்டத்தின் பின்னர் இந்த பணத்தை ஜனாதிபதி கையளித்தார். பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ அதற்கான காசோலையை ஜனாதிபதியிடம் கையளித்ததுடன், ஜனாதிபதி அதனை மறைந்த பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரலவின் மனைவி மற்றும் மகன்களிடம் வழங்கினார். பாராளுமன்ற உறுப்பினர்கள் 183 பேர் அதற்காக நிதியுதவி அளித்துள்ளனர். பாராளுமன்ற உறுப்பினர்களின் மாதிவெல வீடமைப்புத் தொகுதியில் உள்ள ஆளுங்கட்சியைச் சேர்ந்த 20 பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட “மாதிவெல மிதுரோ” கழகம் மறைந்த பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரலவுக்காக இந்நிதியை சேகரிக்க ஆரம்பித்ததாகவும் அதன் பின்னர் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் ஆதரவு கிடைத்தமை விசேட அம்சம் என்றும் பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ இங்கு தெரிவித்தார். கொல்லப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரளவிற்கு ஓய்வூதியம் வழங்க ஏற்பாடு செய்யுமாறு பிரதி சபாநாயகர் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்தார். இதற்கு முன்னர் படுகொலை செய்யப்பட்ட மாத்தறை மாவட்ட முன்னாள் அமைச்சர் கீர்த்தி அபேவிக்ரம எம்.பிக்கு ஓய்வூதியம் வழங்கப்படுவதனால் அத்துகோரளவின் குடும்பத்திற்கும் அவரது ஓய்வூதியத்தை பெற்றுக் கொடுக்க முடியுமென்றும் அவர் கூறினார். இந்நிகழ்வில் பிரதமர் தினேஷ் குணவர்தன, முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரும் கலந்துகொண்டனர். Videos play பிம்ஷானியை அவரது பதவியில் இருந்து நீக்க முயற்சிக்கும் பொலிஸ் மா அதிபரின் வெள்ளை மற்றும் கருப்பு மகன்கள்!
1. தாமிரத்தை சுவாசித்தால் புற்று நோய் ஏற்படும் என்று எந்த ஆராய்ச்சியும் கூறவில்லை. விகடன் முட்டாள்கள் நடத்திய ஆராய்ச்சியில் மட்டும் அது கூறப் படுகிறது. 2. தாமிரத்தை பிரிக்கும் போது காற்றில் வெளியாகும் சல்ஃபர் டை ஆக்ஸைடும் புற்று நோயை ஏற்படுத்தும் வாயு அல்ல. 3. ஸ்டெர்லைட் தொழிற்சாலை SIPCOT வளாகத்தில் இருக்கும் ஒரு தொழிற்சாலை. அவ்வளவுதான். தமிழகத்தின் சுற்றுச்சூழல் பயங்கரவாதிகள் வளாகத்தையே மூட வேண்டும் என்று சொல்கிறார்கள். லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதரத்தைப் பறிக்க இவர்கள் சொல்கிறார்கள் என்பது தமிழக மக்களுக்குப் புரிய வேண்டும். 4. ஸ்டெர்லைட் தொழிற்சாலைக்கு எல்லா மாசுகட்டுப்பாட்டு வாரியங்களும் பச்சைக் கொடி காட்டியிருக்கின்றன. அவை அனைத்தும் சேர்ந்து பொய் சொல்கின்றன என்று புலம்பினால் போதாது. நிரூபிக்க வேண்டும். 5. தாமிரத்தைப் பிரிக்கும் போது வெளியாகும் சல்ஃபர் டை ஆக்ஸைட்டில் 99.5% சல்ஃப்யூரிக் அமிலம் தயாரிக்கப் பயன்படுத்தப் படுகிறது என்று நிறுவனம் சொல்கிறது. இதை யாரும் மறுத்ததாகத் தெரியவில்லை. 6. தூத்துக்குடியின் காற்று மாசு பட்டிருக்கிறது என்பது தில்லியின் காற்று மாசுபட்டிருக்கிறது என்பது போன்ற உண்மை. ஆனால் அதற்கு இந்தத் தொழிற்சாலை மட்டும் காரணம் என்று சொல்வது சரியாக ஆகாது. தூத்துகுடியில் கணக்கற்ற தொழிற்சாலைகள், குறிப்பாக ரசாயனத் தொழிற்சாலைகள், இயங்குகின்றன. கில்பர்ன் ரசாயனத் தொழிற்சாலை ஸ்பிக், Heavy water plant கனநீர்த் தொழிற்சாலைகள், மெஜுரா கோட்ஸ் போன்ற தொழிற்சாலைகளும் தூத்துக்குடியில்தான் இருக்கின்றன. 7. இவை அனைத்தையும், அல்லது இவற்றில் பெரும்பாலானவற்றை மூடினால் தான் சுத்தமான காற்று கிடைக்கும். தொழில் முன்னேற்றம் வேண்டுமா, வேண்டாமா என்பதை மக்கள்தாம் தீர்மானிக்க வேண்டும். உலகெங்கிலும் இது போன்ற முடிவுகள் எடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஆனால் எந்த வேலைக்கும் வழி இல்லாமல் பத்திரிகைத் தொழிலுக்கு வந்து இறங்கி இருக்கும் அரைகுறைகளின் பேச்சைக் கேட்டுக் கொண்டோ அல்லது சுற்றுச்சூழல் பயங்கரவாதிகளின் அச்சுறுத்தல்களைக் கேட்டுக் கொண்டோ அல்ல. அறிவியல் அறிஞர்கள் சொல்வதைக் கேட்டுக் கொண்டு. நாங்கள் அறிவியல் அறிஞர்கள் சொல்வதையும் கேட்கமாட்டோம் என்ற முடிவையும் தூத்துக்குடி மக்கள் எடுக்கலாம். ஆனால் அவர்களிடம் இவற்றைப் பற்றிய தெளிவான தகவல்கள் போய்ச் சேர வேண்டும். பெரும்பாலான தமிழகப் பத்திரிகைகளும் ஊடகங்களும் உண்மையான தகவல்கள் மக்களிடம் சேர வேண்டும் என்ற நோக்கத்தோடு செயல்படும் என்ற நம்பிக்கை எனக்கு இதுவரை வரவில்லை. 8. வேதாந்தாவின் தொழிற்சாலை அதனால் மூடப்பட வேண்டும் என்று சில முழு மடையர்கள் கூறி வருகிறார்கள். இந்தியா இன்றும் முதலாளித்துவ நாடுதான். ஒரு வேதாந்தா போனால் இன்னொரு போதாந்தா வருவார். மக்களுக்கு வாழ்வாதாரம் வேண்டுமென்றால் முதலீடு நமக்கு அவசியம். அது காற்றில் கிடைப்பது அல்ல. ஒன்று அரசு முதலீடு செய்ய வேண்டும். அல்லது தனியார் முதலீடு செய்ய வேண்டும். அரசிடம் முதலீடு செய்ய பணம் இல்லை. தனியாரைத்தான் நாட வேண்டும். சுற்றுச்சூழல் பயங்கரவாதிகள் பச்சைக் கொடி காட்டிய பிறகுதான் தொழிற்சாலைகள் அமைக்கப்பட வேண்டும் என்றால் அது இன்னும் நூறாண்டுகள் ஆனாலும் நடக்காது. 9. நமக்கு வேலைகள் வேண்டும் என்றால் உற்பத்தித் தொழிற்சாலைகள் அவசியம். உற்பத்தித் தொழிற்சாலைகள் உருவாக்கப்பட வேண்டுமென்றால் அதற்கு நாம் குறைந்தபட்ச விலையாவது கொடுத்தாக வேண்டும். எதுவும் கொடுக்க மாட்டேன் எனக்கு வேலையும் வேண்டும் என்று சொன்னால் ஏதும் நடக்காது. தமிழ்நாட்டில் முதலீடு குறைந்து கொண்டே வருகிறது என்பது உண்மை. 2015ல் 20000 கோடி இருந்தது 2017ல் சுமார் 3100 கோடியாகக் குறைந்து விட்டது என்று ஒரு புள்ளி விவரம் சொல்கிறது. கர்நாடகத்தில் 1.5 லட்சம் கோடிக்கும் மேல் முதலீடு நடந்திருக்கிறது. தமிழகத்தை விட 50 மடங்கு அதிகம்.
மைக்ரோ, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களில் (எம்.எஸ்.எம்.இ), சில்லறை, மற்றும் 5.5 மில்லியன் கடன் வாங்குபவர்களுக்கு பொதுத்துறை வங்கிகள் (பி.எஸ்.பி) 6.45 லட்சம் கோடி ரூபாய் கடன்களை அனுமதித்ததாக நிதி அமைச்சகம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது. மார்ச் 1 முதல் மே 15 வரை விவசாய மற்றும் கார்ப்பரேட் துறைகள். அந்த தொகையில், மே 15 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 50 பில்லியன் ரூபாய் அனுமதிக்கப்பட்டுள்ளது என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது. செவ்வாயன்று, நிதியமைச்சர் அலுவலகம் (எஃப்.எம்.ஓ) ட்வீட் செய்தது: “மார்ச் 1 முதல் மே 15 வரை பி.எஸ்.பி.க்களால் ரூ .6.45 லட்சம் கோடிக்கு மேல் கடன்கள் அனுமதிக்கப்பட்டன, துறைகளில் இருந்து 54.96 லட்சம் கணக்குகளுக்கு MSME கள், சில்லறை, விவசாயம் மற்றும் நிறுவனங்களிலிருந்து; மே 8 அன்று அனுமதிக்கப்பட்ட R 5.95 கோடியுடன் ஒப்பிடும்போது குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ”என்று நிதியமைச்சர் அலுவலகம் செவ்வாய்க்கிழமை ட்வீட் செய்தது. தொழில்துறை நடவடிக்கைகளின் புத்துயிர் பெறுவதற்கான உண்மையான நடவடிக்கை கடன்களின் உண்மையான விநியோகமாகும் என்று நிபுணர்கள் தெரிவித்தனர். பணமதிப்பிழப்பு தரவை உடனடியாக வெளியிட நிதி அமைச்சகத்தால் முடியவில்லை. இது குறித்து நிதி அமைச்சக செய்தித் தொடர்பாளர் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. “தொழில்துறை நடவடிக்கைகள் கடன் வாங்குவதற்கு நேரடியாக விகிதாசாரமாகும். நிறுவனங்கள் முதலீட்டில் கிடைக்கும் வருமானத்தில் நம்பிக்கை இல்லாவிட்டால் அனுமதிக்கப்பட்ட வரம்பிலிருந்து பணத்தை எடுக்க மாட்டார்கள். அவர்கள் அனுமதித்த வரம்புகளை அவர்கள் அகற்றாதபோது, ​​இது தானாகவே பொருத்தமற்ற செயல்பாட்டைக் குறிக்கிறது, “என்று பெயரிட விரும்பாத சிறு தொழில்களின் பிரதிநிதி ஒருவர் கூறினார். கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளான பொருளாதாரத்தை புத்துயிர் பெற ஆத்மனிர்பர் பாரத் அபியான் (இந்தியாவில் தன்னிறைவு பெற்ற இந்தியா முன்முயற்சி) க்கு விவசாயத் துறை மற்றும் எம்.எஸ்.எம்.இ.களுக்கு எளிதான கடன் மற்றும் பாதுகாப்பற்ற கடன்கள் அவசியம். “பொதுத்துறை வங்கிகள் மார்ச் 20 முதல் மே 15 வரை அவசர கடன் வரிகளாகவும், மூலதன மேம்பாடுகளாகவும் 1.03 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் அனுமதி அளித்தன, இது ரூ .65,879 இலிருந்து கணிசமான அதிகரிப்பு ஆகும் அவை மே 8 வரை அனுமதிக்கப்பட்டன ”என்று நிதியமைச்சர் கூறினார். அலுவலகம் ட்வீட் செய்தது. ஐந்து பகுதி தொகுப்பின் முதல் தவணையை அறிவிக்கும் அதே வேளையில், எஃப்.எம். நிர்மலா சீதாராமன் நிறுவனங்களுக்கு ரூ .3 லட்சம் கோடி அவசர மூலதன வசதியை அறிமுகப்படுத்தினார், வலியுறுத்தப்பட்ட எம்.எஸ்.எம்.இ க்களுக்கு ரூ .20,000 கோடி துணை கடன் மற்றும் ஒரு ‘நிதியை உருவாக்க முன்மொழிந்தார் எம்.எஸ்.எம்.இ க்களுக்கான மூலதன நிதி ஆதரவை வழங்க ரூ .10,000 மில்லியனுடன் ஒரு நிதி. READ தீபாவளி சலுகைகள்! ஆப்பிள் 18,900 ஏர்போட்களை இலவசமாக வழங்குகிறது, இதனால் சலுகையைப் பெறுங்கள். தொழில்நுட்பம் - இந்தியில் செய்தி கடந்த இரண்டு மாதங்களில் மாநில வங்கிகள் 5.66 லட்சம் ரூபாய் கடன்களை அனுமதித்ததால், இந்தியாவின் பொருளாதாரம் “மீட்கத் தயாராக உள்ளது” என்று மே 7 அன்று அமைச்சகம் தொடர்ச்சியான ட்வீட்டுகளில் கூறியது. , எம்.எஸ்.எம்.இ., சில்லறை, வேளாண்மை மற்றும் கார்ப்பரேட் துறைகளைச் சேர்ந்த 2 மில்லியன் கணக்கு வைத்திருப்பவர்கள். இது குறித்து இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அறைகளின் (அசோகாம்) தலைவர் நிரஞ்சன் ஹிரானந்தானி கூறினார்: “தொழிலுக்கு பணம் தேவை, முக்கியமாக எம்.எஸ்.எம்.இ. பணம் அனுமதிக்கப்பட்டிருப்பது நல்லது, இப்போது வழங்கல் விரைவில் நடக்க வேண்டும். “ பிஹெச்.டி வர்த்தக மற்றும் தொழில்துறை சம்மேளனத்தின் மூத்த துணைத் தலைவர் சஞ்சய் அகர்வால், இந்த தடைகள் விரைவில் வழங்கல்களாக மாற்றப்படுவது மிக முக்கியமானது என்றார். Anu Priya “வலை நிபுணர். பாப் கலாச்சாரம். சிந்தனையாளர், உணவுப்பொருள்.” SaveSavedRemoved 0 Previous கோவிட் -19: கேம்பிரிட்ஜில் கற்பித்தல் அடுத்த கல்வியாண்டில் ஆன்லைனில் செல்லும் - உலக செய்தி Next 'சீனாவுடனான வர்த்தக ஒப்பந்தம் மூன்று மாதங்களுக்கு முன்பு செய்ததை விட வித்தியாசமாக உணருங்கள்': டிரம்ப் - உலக செய்தி Related Articles Added to wishlistRemoved from wishlist 0 அறிமுகப்படுத்தப்பட்ட 48 நிமிடங்களுக்குப் பிறகு கேடிஎம்ஸின் சூப்பர் பைக் கையிருப்பில் இல்லை, முன்பதிவு எப்போது தொடங்கும் என்பதை அறிவீர்கள் Added to wishlistRemoved from wishlist 0 புதிய ஹோண்டா சிவிக் முதல் படம் வெளியிடப்பட்ட புதுப்பிப்பு விவரங்கள் Added to wishlistRemoved from wishlist 0 எலோன் மஸ்க்கின் காதலி மீண்டும் பச்சை குத்தப்பட்ட படம் சோஷியல் மீடியாவில் வைரலாகிவிட்டது – எலோன் மஸ்க்கின் காதலியின் டாப்லெஸ் புகைப்படம் தீப்பிடித்தது, பின்னால் பச்சை குத்தியது சமூக ஊடகங்களில் வைரலாகியது
தனது ( Larencce Charitable trust ) அறக்கட்டளைக்கு யாரும் நன்கொடை வழங்க வேண்டாம் நடிகர் ராகவா லாரன்ஸ் வேண்டுகோள் வைத்துள்ளார் இயக்குனருன் நடிகருமான ராகவா லாரன்ஸ். இதுகுறித்து அவர் அளித்த அறிக்கையில், அனைவருக்கும் வணக்கம், இரண்டு விஷயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். முதலாவதாக, சந்திரமுகி 2 படத்திற்காக எனது உடலை மாற்றுவதற்கு நான் எடுக்கும் ஒரு சிறிய முயற்சியைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். இந்த மாற்றத்தைக் கொண்டு வந்த எனது பயிற்சியாளர் சிவா மாஸ்டருக்கு நன்றி. உங்கள் அனைவரின் ஆசியும் எனக்கு வேண்டும். இரண்டாவதாக, இத்தனை ஆண்டுகளாக என்னுடைய ( Larencce Charitable trust ) அறக்கட்டளைக்கு நன்கொடை வழங்கிய நன்கொடையாளர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். நீங்கள் அனைவரும் எனக்கு ஆதரவாக நின்று உங்கள் நன்கொடைகளால் எனது சேவைக்கு ஆதரவளித்தீர்கள். என்னால் இயன்றதைச் செய்துள்ளேன், தேவைப்படும் போதெல்லாம் உங்களிடமிருந்து உதவியைப் பெற்றுள்ளேன். இப்போது, ​​நான் நல்ல இடத்தில் இருக்கிறேன், மேலும் பல திரைப்படங்களில் ஒப்பந்தமாகி வருகிறேன், இனி மக்களுக்குச் சேவை செய்யும் முழுப் பொறுப்பையும் நானே ஏற்க முடிவு செய்துள்ளேன். எனவே, ( Larencce Charitable trust ) அறக்கட்டளைக்கு உங்கள் பணத்தை நன்கொடையாக வழங்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். உங்கள் ஆசிர்வாதம் மட்டும் எனக்கு போதும். இத்தனை வருடங்களாக நான் பெற்ற ஆதரவுக்கும் அன்புக்கும் நான் நன்றியுள்ளவனாக இருப்பேன்.
'அடுத்தடுத்த புரோமோஷன்கள்.. சம்பள உயர்வை' அறிவித்து மாஸ் காட்டும் 'தாராள' ஐடி நிறுவனம்.. கொண்டாட்டத்தில் ஊழியர்கள்!! முகப்பு > செய்திகள் > உலகம் By Behindwoods News Bureau | Nov 11, 2020 10:42 PM அக்டோபர் 1, 2020 முதல் காக்னிசண்ட் ஊழியர்களுக்கான பதவி உயர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மூத்த ஊழியர்களுக்கான பதவி உயர்வு ஜனவரி-மார்ச் 2021-ஆம் காலாண்டில் அறிவிக்கப்படும் என்றும் அந்நிறுவனம் ஊழியர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சலில் தெரிவித்துள்ளது. Click Here for All New Titles Releasing Directly on OTT (List Updates Daily) ஊழியர்களுக்கான மின்னஞ்சலில், காக்னிசண்டின் தலைமை மக்கள் அதிகாரி பெக்கி ஸ்க்மித், “அக்டோபர் 1 முதல் அமல்படுத்தப்படும் அசோசியேட் மட்டத்தில் இருப்பவர்களுக்கு புரோகிராமர் ஆய்வாளர்களாக பதவி உயர்வு வழங்குகிறோம் என்பதை பகிர்ந்து கொள்வதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இதேபோல் சீனியர் அசோசியேட்டிற்கான பதவி உயர்வு 2021 ஜனவரி 1 முதல் அமல்படுத்தப்படும். இது பதவி உயர்வு பெற்ற அவர்களின் மேலாளர்களால் அறிவிக்கப்படும்” என்று அவர் தெரிவித்துள்ளார். இந்த பதவி உயர்வுகள் தகுதி அடிப்படையிலானவை என்பதும், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள போனஸ் 2019 ஐ விட அதிகமானவை என்பதும் குறிப்பிடத்தக்கது. அத்துடன் ஆகஸ்ட் மாதத்தில், அனைத்து மட்டங்களுக்கும் செயல்திறனை அதிகரிப்பதற்காக பதவி உயர்வுகள் ஒரே சுழற்சியில் அமல்படுத்தப்படும் என்றும் தொடர்ச்சியான உயர் செயல்திறன் கொண்ட ஊழியர்களுக்கு அதற்கேற்ப வெகுமதி வழங்கப்படும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்நிறுவனம் சுமார் 2.8 லட்சம் ஊழியர்களை கொண்டுள்ளது. இவர்களில் பெரும்பாலோர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. Tags : #IT #INDIA #PROMOTION #COGNIZANT #EMPLOYEES மற்ற செய்திகள் ‘ஆட்ட நாயகனை தாரை வார்த்து கொடுத்த அணி’...!! ‘இப்டி ஆகும்னு நினைச்சுக்கூட பார்த்திருக்க மாட்டாங்க’...!! ‘மொத்தமும் மாறிப் போச்சே’...!! ‘ஆச்சரியத்தில் ரசிகர்கள்’...!!! 'ஒழுங்கா என்கூட வாழு...' 'அப்படியொரு கல்யாணமே நடக்கல...' 'அப்போ எப்படி மேரேஜ் சர்டிபிக்கேட்...? - அதிர்ச்சியில் உறைந்த இளம்பெண்...! "அடுத்த '2' வருஷம் 'ஐபிஎல்' ஆடாதீங்க..." மும்பை அணியை குறிப்பிட்டு 'ட்வீட்' போட்ட 'வாசிம்' ஜாஃபர்,,.. " எதுக்கு அப்டி சொல்லியிருப்பாரு??.." ஓ...! 'டெஸ்ட் மேட்ச்ல அவர் விளையாடலையா...' 'அப்போ ஆஸ்திரேலியா கன்ஃபார்மா ஜெயிச்சிடும்...' - மைக்கேல் வாகன் ட்வீட்...! 'பக்தி சேனலில் இருந்து வந்த மெயில்... லிங்க்-அ கிளிக் பண்ணா... 'அந்த' மாதிரி படங்களுக்கு போகுது'... அதிர்ந்து போன பக்தர்... விசாரணையில் 'பகீர்' தகவல்! 'தமிழகத்தின் இன்றைய (11-11-2020) கொரோனா அப்டேட்...' சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில்...' - முழு விவரங்கள் உள்ளே...! மேலும் செய்திகளுக்கு தொடர்புடைய செய்திகள் IT Firm Cognizant to Roll Out Promotions for Employees; Check When it Will Be Effective From ‘ரசிகர்களுக்கு குட் நியூஸ்’... ‘இந்தியா-ஆஸ்திரேலியா போட்டியை காண’... ‘ஆனா, ஒரு கண்டிஷன்’... ‘வெளியான அறிவிப்பு’...!!! ‘வாழ்த்துக்கள் நட்டு’...!!! 'உங்கள அங்க மீட் பண்றேன்’...!!! 'தமிழக வீரரை பாராட்டிய ஆஸ்திரேலிய வீரர்...!!!’ ‘அடித்தது யோகம்!’.. இரட்டிப்பு மகிழ்ச்சி கொடுத்த பிரபல இந்திய ஐடி நிறுவனம்!.. ‘குஷியில்’ 80% ஊழியர்கள்! 'இனி நிரந்தரமாவே Work From Home தானா?!!'... 'புதிய தளர்வுகளால்'... 'IT, BPO ஊழியர்களுக்கு அடிக்கப்போகும் ஜாக்பாட்!!!'... Good News For IT and BPO Companies: Govt Relaxes Work From Home Rules; Industry Calls It 'Game-Changer' ‘நீங்க சொல்றது நம்புற மாதிரியே இல்லயே’... ‘உங்களுக்கு தெரியாம எப்படி நடந்துச்சு???’... கேள்விகளால் துளைத்து எடுக்கும் சேவாக்...!!! மாட்டிக் கொண்ட ரவி சாஸ்திரி...!!! இதுக்கு ஒரு ‘எண்டே’ இல்லையா..! இந்தியாவில் இருந்து ‘சீனாவுக்கு’ பறந்த விமானம்.. கடைசியில் பயணிகளுக்கு ‘காத்திருந்த’ அதிர்ச்சி..! ‘அந்த மனசுதான்’...!!! ‘இவ்ளோ உயரத்துக்கு கொண்டு போயிருக்கு’... ‘தனி ஒருவராக இந்திய மனிதரின் சாதனைக்கு!!’... 'அமெரிக்காவில் கிடைத்த வெகுமதி’!!! Cognizant Makes BIG Announcement on Hikes and Promotions; CEO Shares Details! 'இனி H-1B விசா தேர்விற்கு புதிய Rule???'... 'திடீர் பரிந்துரையால்'... 'இந்தியர்களுக்கு எழுந்துள்ள அடுத்த பெரும் சிக்கல்!!!'... “ஒரு பக்கம் TCS, Infosys-ல் 99% வொர்க் ஃப்ரம் ஹோம்!”.. ஆனால் HCL, Tech Mahindra-வின் ‘மாற்று’ முடிவு!.. Wipro உள்ளிட்ட ஐடி நிறுவனங்களின் யோசனை இதுதான்! “இவர்களைத் தவிர” மற்ற வெளிநாட்டவர் இந்தியா வரத் தொடங்கலாம் - மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு! 'திடீர் கட்டுப்பாடுகளால் H-1B விசா விவகாரத்தில்'... 'பெரும் சிக்கலில் இந்தியர்கள்!!!'... ' IT நிறுவனங்களுக்கு வைக்கப்பட்டுள்ள செக்!'... ‘இலவச சேவை’ வழங்கப்போகும் Netflix.. எப்போ தெரியுமா..? வெளியான ‘அசத்தல்’ அறிவிப்பு..! “இவ்வளோ வேலை பண்றீங்களா?”.. “என்ன சிம்ரன் இதெல்லாம்?”.. சிக்கிய பெண் உளவாளி.. அம்பலமான சீனா! ‘2021 ஜுன் மாதம் வரைக்கும்’ .. ‘கொரோனா’ தொற்று காலக்கட்டத்தில் ஊழியர்களுக்கு அமேசான் கொடுத்த அடுத்த அதிரடி ஆஃபர்! அரசு ஊழியர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்!.. 'இனி என்ன... பண்டிகைய கொண்டாட வேண்டியது தானே!'.. முழு விவரம் உள்ளே “இது என்னடா புது சோதனை? காஷ்மீர் சீனாவுல இருக்கா?”.. ட்விட்டருக்கு எதிராக வலுத்த கண்டனம்! .. அடுத்த சில மணிநேரங்களில் நடந்த ‘பரபரப்பு’ சம்பவம்! 'பெரிதும் எதிர்பார்க்கப்படும் கோவிஷீல்டு தடுப்பூசி'... 'எந்த மாதம் மக்கள் பயன்பாட்டுக்கு வரும்???' - வெளியான அதிரடி அறிவிப்பு!!! மேலும் செய்திகளுக்கு ABOUT THIS PAGE This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Popular IT firm to roll out promotions for employees | World News.
வட்டி வீத அதிகரிப்பால் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணத் திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்துமாறு வங்கிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். ஏற்கனவே பெறப்பட்ட கடன்களுக்கான வட்டி வீதங்கள் அதிகரிப்பினால் பாதிக்கப்பட்டவர்களுக்கே இந்த திட்டம் பொருந்தும். நிதி பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை தொடர்பான ஆலோசனைக் குழுவில், நாடாளுமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். தற்போதுள்ள நிதிக் கொள்கைகளின் மூலம், அடுத்த வருட இறுதிக்குள் பணவீக்கம் 4 முதல் 5 சதவீதமாகக் குறைவடையும் என மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க சுட்டிக்காட்டினார். Videos play பிம்ஷானியை அவரது பதவியில் இருந்து நீக்க முயற்சிக்கும் பொலிஸ் மா அதிபரின் வெள்ளை மற்றும் கருப்பு மகன்கள்!
ஸ்கொட்லாந்தில் எடின்பரோவில் உள்ள போர்டோபெல்லோ கடற்கரையில் மைக் அர்னாட் என்பவர் ஒரு வினோத உயிரினத்தை கண்டுள்ளார். இந்த உயிரினம் புவியில் உள்ள உயிரினத்தை காட்டிலும் வித்தியாசமாக உள்ளதாக உணர்ந்த அவர், இது ஒருவேளை வேற்றுக்கிரக உயிரினமாக இருக்கக்கூடும் என அஞ்சினார். (படம் : SWNS) அந்த உயிரினத்தை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்ட அவர் கூறும்போது, நான் இதனை வித்தியாசமான முட்களுடன் பார்த்தேன். அது என்னவென்று எனக்குத் தெரியவில்லை. பிரகாசமான பச்சை மற்றும் தங்க நிறங்கள் என்னை நேராக ஈர்த்தது. நான் அதைப் புரட்டினேன், அதில் நிறைய சிறிய கால்கள் இருப்பதைக் கண்டேன். நான் அதைப் போன்ற எதையும் பார்த்ததில்லை. அது ஒரு வேற்றுகிரக உயிரினமாக இருக்கக்கூடும் என்று என் மனதுக்கு தோன்றியது. என்று அவர் கூறினார். (படம் : SWNS) இருப்பினும், ஸ்கொட்டிஷ் வனவிலங்கு அறக்கட்டளையைச் சேர்ந்த பீட் ஹாஸ்கெல் அவரது கூற்றை நிராகரித்து, அந்த உயிரினத்தை ஒரு கடல் எலி அல்லது ஒரு வகை புழு என அடையாளம் காட்டினார். (படம் : SWNS) தண்ணீருக்கு வெளியே இருப்பது சற்று விசித்திரமாகத் தெரிகிறது, ஆனால் இது ஒரு வகையான கடல் முட்புழு. இது இங்கிலாந்து கடற்கரை முழுவதும் காணப்படுகிறது” என்று ஹாஸ்கெல் கூறினார். பளபளக்கும் பச்சை மற்றும் தங்க முட்கள் காரணமாக இது அசாதாரணமாகவும் மற்ற கடல் உயிரினங்களிலிருந்து வேறுபட்டதாகவும் கானப்படுகிறது. தனக்கு ஆபத்து வரும்போது எச்சரிக்க, அதன் முட்கள் பச்சை, நீலம் அல்லது சிவப்பு நிறத்தில் ஒளிரும். அவை 30 செமீ நீளம் வரை வளரக்கூடியவை மற்றும் சிறிய நண்டுகள், ஹெர்மிட் நண்டுகள் மற்றும் பிற புழுக்களை இது உண்கிறது என்பது குறிப்பிடத்த்கது.
ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 12ம் தேதி கேரள சிறுதொழில் முனைவோர் தினமாகவும் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி இந்த ஆண்டு இது ஒரு முக்கிய மாநாடாகக் கருதப்படுகிறது. கேரள தொழில் வளர்ச்சிக் கழகம், டெக்னோபார்க், இன்போபார்க், கின்ஃப்ரா, ஸ்டார்ட் அப் வில்லேஜ், டை கேரளா மற்றும் சிஐஐ ஆகிய அமைப்புகள் இணைந்து நடத்தவுள்ள இந்த மாநாட்டில் சுமார் 2,000 இளம் சிறுதொழில் முனைவோர் கலந்து கொள்ள உள்ளனர். ஐ.டி. மற்றும் ஐ.டி. அல்லாத தொழில்நுட்பத் துறைகளில் ஈடுபட்டுள்ள சிறுதொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் விதமாக இம்மாநாட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சிறுதொழில் தொடங்கும் இளைஞர்களின் கனவுகளை நனவாக்கும் வகையில் அவர்களுக்கு இந்த மாநாடு உபயோகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இளைஞர்கள் மத்தியில் சிறுதொழில் தொடங்கும் சிந்தனைகளை வளர்க்கும் விதமாகவும், கேரளாவின் அனைத்துத் துறை வளர்ச்சிகளிலும் சிறுதொழில்கள் முக்கியத்துவம் பெறும் விதமாகவும் இந்த எஸ் அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது. சிறுதொழில் தொடங்க விருப்பமுள்ள இளைஞர்கள் ஆர்வத்துடன் அத்தகைய தொழிகளைத் தொடங்கவும் இந்த அமைப்பு வழி காட்டுகிறது. எஸ் அமைப்பின் லோகோவை கேரள முதல்வர் உம்மன் சாண்டி கடந்த 18ம் தேதி தொடங்கி வைத்தார். ஏற்கனவே, கடந்த 2012ல் கேரள அரசு அறிவித்திருந்த மாணவர்களுக்கான சிறுதொழில் கொள்கை அம்மாநிலம் முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
மும்பை: இந்தியாவில் மொத்த கோவிட்19 வழக்குகள் இப்போது 50 லட்சத்தை கடந்துள்ளது. மும்பையில் இப்போது 8,200 க்கும் மேற்பட்ட இறப்புகளுடன் 1,75,000 க்கும் அதிகமாக பாதிப்பு உள்ளது. நகரத்தில் உள்ள மருத்துவமனை படுக்கைகள், குறிப்பாக தீவிர சிகிச்சை பிரிவுகள், சில வாரங்களுக்கு முன்பு வரை இருந்ததை விட தற்போது அதிக நெருக்கடியில் இருப்பதாக தெரிகிறது. இது ஏன் நடக்கிறது? இதை நிர்வாகம் எவ்வாறு கையாள்கிறது? தெற்கு மும்பையில் உள்ள பம்பாய் மருத்துவமனையில் பொது மருத்துவம் மற்றும் தொற்றுநோய்கள் பிரிவு நிபுணரான கவுதம் பன்சாலியுடன், நாம் பேசவிருக்கிறோம்ம். படுக்கைகளை நிர்வகிப்பதற்காக மும்பை மாநகராட்சி, குடிமை அமைப்பு மற்றும் நகரத்தின் தனியார் மருத்துவமனைகளுக்கு இடையே தலைமை ஒருங்கிணைப்பாளராகவும் உள்ளார். திருத்தப்பட்ட பகுதிகள்: சில மாதங்களுக்கு பின், தீவிர சிகிச்சைப்பிரிவுகள் உட்பட மருத்துவமனைகள், படுக்கைகளுக்கு திடீர் தேவையும் நெருக்கடியும் காணப்படுவது ஏன்? ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் நாம் மிகச்சிறந்த நிலையில் இருந்தோம். செப்டம்பர் மாதத்தில், வழக்குகளின் எண்ணிக்கையில் ஒரு பெரிய எழுச்சியை நிச்சயம் கண்டோம். அதற்கு இரண்டு அல்லது மூன்று காரணங்கள் உள்ளன: ஒன்று, ஊரடங்கு கிட்டத்தட்ட முற்றிலும் தளர்த்தப்பட்டுள்ளது, மேலும் மக்கள் மற்ற இடங்களில் இருந்து சிகிச்சைக்கு வருகிறார்கள். இதன் காரணமாகவே இது இரண்டாவது அலை போன்றதாக நீங்கள் கூறலாம் - மும்பையில் வழக்குகள் அதிகரித்துள்ளன. ஆனால் ஊரடங்கு ஏன் செயல்படுத்தப்பட்டது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இது மக்களுக்கு கல்வி கற்பித்தல், கோவிட் 19 ஐ எதிர்த்துப் போராட என்ன செய்ய வேண்டும் என்பது குறித்த விழிப்புணர்வை பரப்புகிறது. இது ஒரு புதிய நோய், புதிய சவால் மற்றும் அனைவருக்கும் ஒரு புதிய கற்பித்தலானது. இதற்கிடையில், நாம் சுகாதார உள்கட்டமைப்பைத் தயாரிக்க வேண்டியிருந்தது. மார்ச் மாதத்தில் இந்த நோய் நம்மைத் தாக்கியபோது நமது சுகாதார உள்கட்டமைப்பு தயாராக இல்லை. ஐ.சி.யு.கள் மற்றும் வார்டில் எதிர்மறை அழுத்தத்தை உருவாக்க, வெவ்வேறு நுழைவு மற்றும் வெளியேறும் புள்ளிகளை [கோவிட் மற்றும் கோவிட் அல்லாத நோயாளிகளுக்கு] அமைக்க வேண்டும். இப்போது வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது, நாம் போதிய படுக்கைகளுடன் ஆயாத்தமாக இருக்கிறோம். இடையில், படுக்கைகளுக்கு கொஞ்சம் பற்றாக்குறை இருந்தது. சில நர்சிங் ஹோம்களை ஒரு மாதத்திற்கு முன்பு மூடிவிட்டோம், ஏனென்றால் - அதிக கட்டணம் வசூலித்தல் மற்றும் அதிக இறப்பு விகிதம் என அங்கே சில சிக்கல்கள் இருந்தன . அவை கிட்டத்தட்ட தீர்த்து வைக்கப்பட்டுள்ளன. கோவிட் பணியில் இருந்து நீக்கப்பட்ட அந்த 73 மருத்துவமனைகளை பற்றி நீங்கள் பேசுகிறீர்கள். இவற்றில் 27 இப்போது மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. அது சரியானதா? நேற்று [செப்டம்பர் 14], நாங்கள் நகராட்சி ஆணையர் மற்றும் முதல்வருடன் ஒரு சந்திப்பை நடத்தினோம் - வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப் போகிறது என்று நாங்கள் கருதுகிறோம். கூடுதலாக, மற்ற இடங்களிலிருந்தும் நோயாளிகளின் வருகை உள்ளது - சாங்லி, துலே, கோலாப்பூர், நாசிக், புனே போன்றவற்றிலிருந்து. மும்பைக்கு மாநிலம் முழுவதிலும் இருந்து வழக்குகள் வருகின்றன. மும்பையில் சிறந்த சுகாதார உள்கட்டமைப்பு, சிறந்த மருத்துவர்கள், திறமையான சுகாதார வல்லுநர்கள் இருப்பதாகவும், அவர்கள் சிறந்த சிகிச்சையைப் பெறுவார்கள் என்றும் கருதுவதால் மக்கள் மும்பையில் சிகிச்சை பெற விரும்புகிறார்கள். எனவே, நாங்கள் 27 மருத்துவ இல்லங்களைத் திறந்தோம், அவை ஒவ்வொன்றும் 25 க்கும் மேற்பட்ட படுக்கைகளைக் கொண்டுள்ளன. அவர்கள் நன்கு ஒழுங்குபடுத்தப்பட்டவர்கள், எம்.டி மருத்துவர்கள் [மேம்பட்ட மருத்துவ பட்டங்களுடன்] மற்றும் முக்கியமான பராமரிப்பு நிபுணர்களைக் கொண்டுள்ளனர். நேற்று [செப்டம்பர் 14], நாங்கள் மாநகராட்சி ஆணையர் மற்றும் முதலமைச்சரை சந்தித்தோம் - வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், இந்த எண்ணிக்கையும் மேலும் அதிகரிக்கப் போகிறது என்று நாங்கள் கருதுகிறோம். கூடுதலாக, மற்ற இடங்களில் இருந்தும்- சாங்லி, துலே, கோலாப்பூர், நாசிக், புனே போன்றவற்றிலிருந்து நோயாளிகள் வருகின்ற்னர். மும்பைக்கு மாநிலம் முழுவதிலும் இருந்து நோயாளிகள் வருகின்றனர். மும்பையில் சிறந்த சுகாதார உள்கட்டமைப்பு, சிறந்த மருத்துவர்கள், திறமையான சுகாதார வல்லுநர்கள் இருப்பதாகவும், அவர்கள் சிறந்த சிகிச்சையைப் பெறுவார்கள் என்றும் கருதுவதால் மக்கள் மும்பையில் சிகிச்சை பெற விரும்புகிறார்கள். எனவே, நாங்கள் 27 மருத்துவ இல்லங்களைத் திறந்தோம், அவை ஒவ்வொன்றும் 25 க்கும் மேற்பட்ட படுக்கைகளைக் கொண்டுள்ளன. அவை நன்கு ஒழுங்குபடுத்தப்பட்டவர்கள், எம்.டி மருத்துவர்கள் [மேம்பட்ட மருத்துவ பட்டங்களுடன்] மற்றும் முக்கியமான பராமரிப்பு நிபுணர்களைக் கொண்டுள்ளன. உங்களிடம் 100 படுக்கைகள் இருந்தால், உதாரணமாக, அவற்றில் இப்போது எத்தனை பேர் மும்பைக்கு வெளியில் இருந்து வந்தவர்கள் இருக்கிறார்கள்? இந்த மருத்துவமனைகளில் - நர்சிங் ஹோம்ஸ் மற்றும் பெரிய தனியார் மருத்துவமனைகள்- அனுமதிக்கப்பட்டவர்களில் சுமார் 30% முதல் 40% பேர் (மும்பை பெருநகரப் பகுதிக்கு வெளியே இருந்து - அதாவது பிவாண்டி, தானே, கல்யாண், டோம்பிவ்லி, நவி மும்பை, உல்ஹாஸ் நகர் போன்றவற்றில் இருந்து வந்தவர்கள் . கோவிட்டுக்கு முந்தைய நேரங்களில் அந்த எண்ணிக்கை என்னவாக இருந்திருக்கும் - உதாரணமாக, கடந்தாண்டு இந்த நேரத்தில்? நாடு முழுவதும் இருந்தும், பிற நாடுகளில் இருந்தும் கூட மக்கள் சிகிச்சைக்காக மும்பைக்கு வருகிறார்கள், மும்பை சிறந்த சுகாதார உள்கட்டமைப்பை குறிப்பாக தனியார் மருத்துவமனைகளில் கொண்டுள்ளது. எனவே, மும்பை ஒரு மருத்துவச்சுற்றுலாவுக்குரிய இடமாகும். எனவே, கடந்த ஆண்டு இந்த நேரத்தில், சுமார் 60% முதல் 70% நோயாளிகள் நாட்டின் பிற பகுதிகளில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் வந்திருப்பார்கள். ஆனால் இப்போது, கோவிட்டுடன் நாம் வேறுபட்ட சூழ்நிலையை எதிர்கொள்கிறோம், அதற்கு வெவ்வேறு படுக்கை ஏற்பாடு, மேலாண்மை தேவைப்படுகின்றன, அதனால்தான் மும்பைக்கு வெளியில் இருந்து 30% முதல் 40% கோவிட் படுக்கைகள் ஆக்கிரமிக்கப்படும்போது இது ஒரு பிரச்சினையாக உள்ளது. மருத்துவமனைத்துறையைத் தவிர, அனைத்து தொழில்களும் வீழ்ச்சியடைந்துவிட்டன என்ற தவறான கருத்து உள்ளது - இது செழித்துக் கொண்டிருக்கிறது என [மக்கள் நினைக்கிறார்கள்]. ஆனால் மருத்துவமனைகள், முக்கியமாக தனியார் மருத்துவமனைகள் பெரும் இழப்பை சந்தித்துள்ளன - கோவிட் சூழல் காரணமாக, இந்த விகிதம் அரசால் தடுக்கப்பட்டுள்ளது. அதற்கு மேல் கட்டணம் வசூலிக்க முடியாது. கோவிட் அல்லாத நோயாளிகள் அதிகம் இல்லை. எனவே இன்று விகிதாசாரத்தில், மும்பைக்கு வெளியில் இருந்து வரும் நோயாளிகளின் விகிதத்தை நீங்கள் அதிகமாகக் கொண்டுள்ளீர்கள், இது அமைப்பில் ஒரு சுமையை வைக்கிறது, ஏனெனில் நியாயமான எண்ணிக்கையிலான படுக்கைகள் கோவிட்டுக்கு மட்டுமே ஒதுக்கபப்ட்டுள்ளது. அது சரியானதா? சரிதான். உதாரணமாக, பம்பாய் மருத்துவமனையில், எங்களிடம் இரண்டு கட்டிடங்கள் உள்ளன - ஒன்று கோவிட்டுக்கு, மற்றொன்று கோவிட் அல்லாதவைக்காக. கோவிட் கட்டிடம் எப்போதும் நிரம்பியுள்ளது. கோவிட் அல்லாத கட்டிடத்தில், மக்கள் இப்போதுதான் வரத் தொடங்கியுள்ளனர். முன்னதாக, அவர்கள் பீதியில் இருந்தனர்; கோவிட் தொற்றிக் கொள்ளும் என்ற பயத்தில் மருத்துவமனைக்கு பொதுமக்கள் செல்ல விரும்பவில்லை. மக்கள் இப்போது வரத் தொடங்கிவிட்டார்கள். ஆனால் இன்னும் அவசரகால அறுவை சிகிச்சைகள் மட்டுமே நடக்கிறது; ஒரு சில தேர்ந்தெடுக்கப்பட்ட அறுவை சிகிச்சைகள் நடந்து வருகின்றன. எனவே, ஒரு கோவிட் அல்லாத நோயாளிக்கு தேவைப்பட்டால், மும்பையில் ஒரு ஐ.சி.யு. வில் படுக்கையைப் பெற வாய்ப்புள்ளதா? ஆமாம். கோவிட் அல்லாதவற்றிற்கும் முற்றிலும் திறந்திருக்கிறது. படுக்கைகள் உள்ளன. கோவிட் அல்லாத நோயாளிகளுக்கு படுக்கைகள் கிடைப்பதில் எந்த பிரச்சனையும் இல்லை. மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனைகளுக்கான இடத்தில் நீங்கள் நிர்வகிக்கும் மொத்த படுக்கைகளின் எண்ணிக்கை என்ன? இப்போது, ​​33 பெரிய தனியார் மருத்துவமனைகளில் - அதாவது பம்பாய் மருத்துவமனை, ப்ரீச் கேண்டி, இந்துஜா, லீலாவதி, ஜாஸ்லோக் போன்றவை - 2,600 கோவிட் படுக்கைகள் உள்ளன. இவற்றில் 1,600 ஆக்சிஜனேற்ற வசதியுள்ள படுக்கைகள், 590 ஐ.சி.யூ படுக்கைகள். நாங்கள் நேற்று திறந்த 27 நர்சிங் ஹோம்களில், 390 ஐசியு படுக்கைகள் மற்றும் 1,700 ஆக்ஸிஜனேற்ற படுக்கைகள் சேர்த்துள்ளோம். அரசு மருத்துவமனைகளில், கோவிட் படுக்கைகளின் திறனைக் குறைத்தோம், ஏனெனில் கோவிட் அல்லாத பகுதியையும் திறந்தோம். உதாரணமாக, நாயர் மருத்துவமனை முற்றிலும் ஒரு பிரத்யேக கோவிட் மருத்துவமனையாக இருந்தது. இப்போது, ​​50% படுக்கைகள் கோவிட்டுக்கும், 50% படுக்கைகள் கோவிட் அல்லாதவைக்கும் உள்ளன. ஆனால் எங்களது பெரிய வசதிகளில் திறனை அதிகரித்துள்ளோம். இந்த வசதிகளில் எங்களிடம் 11,000 ஆக்ஸிஜனேற்ற படுக்கைகள் உள்ளன - என்.எஸ்.சி.ஐ வொர்லி, பி.கே.சி, நெஸ்கோ, தஹிசார், முலுண்ட் போன்றவை. ஜம்போ வசதிகள் தனிமைப்படுத்தல் அல்லது தனிமைப்படுத்தப்பட்ட மையங்கள் அல்ல. அவை முழு அளவிலான மருத்துவமனைகள், ஆக்ஸிஜனேற்றப்பட்ட படுக்கைகள், வென்டிலேட்டர்கள், பை-பேப் இயந்திரங்கள், நாசி சிகிச்சை இயந்திரம், எக்ஸ்ரே, சோனோகிராபி, 2 டி எக்கோ மற்றும் ஒவ்வொரு வசதியிலும் ஒரு நோயியல் ஆய்வகம். அவர்களிடம் எல்லா வகையான மருந்துகளும் உள்ளன - [ரெமிட்சிவிர், டோசிலிசுமாப் போன்றவை] - இது முற்றிலும் இலவசம். மக்கள் ஏன் வரவில்லை என்பதைப் புரிந்துகொள்ள ஜம்போ வசதிகளை ஆய்வு செய்தோம். இவை தனிமைப்படுத்தப்பட்ட அல்லது தனிமைப்படுத்தும் மையங்கள் மட்டுமே என்ற கருத்து உள்ளது. நான் சொன்னது போல், அவை முழு அளவிலான மருத்துவமனைகள். இரண்டாவதாக, மருத்துவர்கள் நன்றாக இருக்க மாட்டார்கள் என்று அவர்கள் நினைக்கிறார்கள். அனைத்து ஜம்போ வசதிகளும் இப்போது அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை ஊழியர்களால் நடத்தப்படும் - சியோன், நாயர் மற்றும் கேஇஎம் மருத்துவமனைகள் போன்றவை. அவர்கள் ஏற்கனவே தலா இரண்டு அலகுகளை அனுப்பியுள்ளனர் - ஒவ்வொரு அலகுக்கும் 40-50 மருத்துவர்கள் உள்ளனர். மேலும், அனைத்து ஜம்போ வசதிகளும் பெரிய தனியார் மருத்துவமனைகளால் கண்காணிக்கப்படும் - பம்பாய் மருத்துவமனை மற்றும் ப்ரீச் கேண்டி ஆகியவை என்.எஸ்.சி.ஐ வொர்லி டோம் கண்காணிக்கும். சிறந்த நிபுணர் மருத்துவர்களைக் கொண்ட லீலாவதி மற்றும் இந்துஜா, பி.கே.சி ஜம்போ மையத்தை கவனிப்பார்கள். கோஸ்கிலாபென் மற்றும் நானாவதி மருத்துவமனைகளால் நெஸ்கோ கோரேகான் மையம் கவனிக்கப்படும். முலண்ட் மையம், ஃபோர்டிஸ் மருத்துவமனையால் கவனிக்கப்படும். அத்தகைய ஏற்பாட்டை இன்று [செப்டம்பர் 15 அன்று] செய்துள்ளோம். தனியார் மருத்துவமனைகள், மருத்துவ இல்லங்கள் மற்றும் ஜம்போ மையங்களில் நோயாளிகளை நிர்வகிக்க போதுமான மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் இருக்கிறார்களா? ஆமாம், தனியார் மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ மனைகளில், மருத்துவர்கள் பற்றாக்குறை இல்லை. அரசு [எம்.சி.ஜி.எம் அல்லது கிரேட்டர் மும்பை மாநகராட்சி] மருத்துவமனைகளிலும், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு பஞ்சமில்லை. நாங்கள் எதிர்கொண்ட ஒரே ஊழியர்கள் மற்றும் மனிதவள பற்றாக்குறை ஜம்போ மையங்களில் மட்டுமே இருந்தது. அதனால்தான் மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை ஊழியர்களை இந்த மையங்களில் நிறுத்தினோம். மேலும், ஐ.சி.யு பராமரிப்புக்காக தனியார் மருத்துவமனைகளில் இருந்து சிறந்த நிபுணர் மருத்துவர்களை நியமித்தோம். எனவே நேற்று முதல், ஜம்போ மையங்களிலும் எந்த ஊழியர்களுக்கும் பஞ்சமில்லை. நோயாளியின் ஓட்டத்தைப் பார்த்து, அவர்கள் இன்று மருத்துவமனைக்கு வரும் நிலையில், இந்த நோயை நிர்வகிப்பதில் நாங்கள் எங்கிருக்கிறோம் என்பதில், ஒரு தொற்றுநோய் நிபுணராக உங்களது உணர்வு என்ன? இது ஒரு புதிய நோய், தினமும் புதிய சவால்களும் கற்றல்களும் உள்ளன. ஒவ்வொரு நாளும், நாங்கள் எங்கள் வழிகாட்டுதல்களை மாற்றுகிறோம். சில நேரங்களில் 50 வயதுக்கு மேற்பட்ட நோயாளிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டும் என்று கூறுகிறோம். சில நேரங்களில் மீண்டும், அறிகுறியற்ற நோயாளிகளுக்கு, வீட்டு தனிமையே சிறந்தது என்று நாங்கள் கூறுகிறோம். இந்த நோயின் வைரஸ் வீரியம் குறைந்துவிட்டதை நாம் காண்கிறோம். இப்போது, நோயாளிகள் ஏப்ரல்-ஜூன் மாதங்களில் இருந்ததைப் போல மிக மோசமான கட்டத்தில் இல்லை. அது ஒரு பயங்கரமான நேரம். ஒருவேளை நோயாளிகள் போதுமான அளவு படித்திருக்கலாம், அவர்கள் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள், போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக்கொள்கிறார்கள் - இப்போது, ரெம்டெசிவிர் போன்ற மருந்துகள் போதுமானளவு கிடைக்கின்றன. அது நிச்சயமாக நமக்கு நிறைய உதவுகிறது - இது வைரஸை நிறுத்தாது, ஆனால் வைரஸ் சுமையை குறைக்கிறது. எனவே மருந்துகள், படுக்கைகள் மற்றும் ஆக்ஸிஜன் கிடைப்பதால், [நாங்கள் சிறப்பாக நிர்வகிக்க முடிகிறது]. வென்டிலேட்டரை விட ஆக்ஸிஜன் முக்கியமானது. ஒவ்வொரு நோயாளிக்கும் வென்டிலேட்டர் தேவையில்லை. மும்பைக்கு வெளியில் இருந்து வரும் நோயாளிகள் தான், குறிப்பாக ஐ.சி.யு-களில் நாம் காணும் கூடுதல் சுமை என்று நீங்கள் சொல்கிறீர்கள். அது குறையவோ அதிகரிக்கவோ வாய்ப்புள்ளதா? மே அல்லது ஜூன் மாதங்களில் இருந்ததைப் போன்ற நிலைக்கு நாம் திரும்பி வருகிறோம், நோய் தானாகவே பரவவில்லை என்றாலும், நோயாளியின் சுமை தொடர்ந்து அதிகரித்து வருகிறது? நோயாளியின் சுமை செப்டம்பர் இறுதி வரை தொடர்ந்து உயரும் என்று நான் நினைக்கிறேன். அதன் பிறகு, விஷயங்கள் தீர்ந்துவிடும். அக்டோபர் முதலாவது வாரத்திற்குப் பிறகு, வழக்குகளின் எண்ணிக்கை குறையக்கூடும் என்று நினைக்கிறேன். ஆனால் அது அதிகரித்தால், நாங்கள் அதற்கேற்ற மையங்களுடன் தயாராக இருக்கிறோம். எங்களுக்கு [போதுமான] படுக்கைகள் உள்ளன. ஜம்போ மையங்களில் 30-40% படுக்கைகள், தனியார் மருத்துவமனைகளில், 10-20% படுக்கைகள், ஐ.சி.யுகளில், 1-3% படுக்கைகள் காலியாக உள்ளன. அவை எல்லா நேரத்திலும் காலியாக இருப்பதாக அர்த்தமல்ல; நிலையான வரத்து உள்ளது. முன்னதாக, மும்பையில் ஒருநாளைக்கு 4,000 சோதனைகள் மட்டுமே செய்து கொண்டிருந்தோம். மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் சோதனைகளை அனுமதிக்கும் முதல் நகரம் மும்பை. இப்போது தினமும், நாங்கள் 15,000 முதல் 16,000 சோதனைகளை செய்கிறோம். நாங்கள் வைரஸை விரட்டுகிறோம். எண்ணிக்கை பற்றி கவலைப்படவில்லை. இறப்பு விகிதத்தை குறைக்க விரும்புகிறோம், அதை குறைக்க முடியும். உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு. Govindraj Ethiraj Govindraj Ethiraj is a television and print journalist who has reported and written on Indian business for over 25 years. He is a media executive and entrepreneur whose public interest journalism ventures including IndiaSpend, FactChecker and BOOM, are safeguarding the transparency, accuracy, and integrity of news in specific and the internet in general in India and world-wide. Previously, he was Founder-Editor in Chief of Bloomberg TV India, Editor (New Media) with Business Standard newspaper, and in various capacities at CNBC-TV18, The Economic Times and leading business magazine. He continues to anchor seasonal shows in the business, economy and financial markets space, on Indian broadcast television and on digital. Govindraj was named a 2018 McNulty Prize Laureate in recognition for his leadership with BOOM, IndiaSpend, and FactChecker. He is a Fellow of the Inaugural Class of Ananta Aspen’s India Leadership Initiative and the Aspen Global Leadership Network, and winner of the 2014 BMW Responsible Leaders Awards.
பார்த்திபன் கட்சி அலுவலகத்திலிருந்து கோபத்துடன் வெளியேறியவர் நேரே காரில் சென்று வீட்டில் இறங்கினார். வீட்டின் அமைதி அவர் மனதுக்கு சங்கடத்தை தர யோசனையில் சுருங்கிய நெற்றியை தடவியபடி வீட்டினுள் நுழைந்தவரின் பார்வையில் முதலில் பட்டது சோபாவில் வெறித்த முகத்துடன் சிலை போல அமர்ந்திருக்கும் மனைவியும் அவரை தேற்றிக் கொண்டிருக்கும் மகளும் தான். ஹாலில் டிவி ஓடிக்கொண்டிருக்க சகாதேவன் கையை பிசைந்தபடி அஸ்வினுடன் நிற்க அபிமன்யூ அவரை போலவே கண்ணை மூடி நெற்றியை தடவியபடி இன்னொரு சோஃபாவில் அமர்ந்திருந்தான். இத்தனை ஆண்டுகளில் மனைவி இவ்வாறு இருந்து பார்த்திராதவர் பதற்றத்துடன் “சுபிம்மா” என்று ஆதங்கத்துடன் அவர் அருகில் சென்று அமர்ந்தவர் அவரின் தலையைத் தடவிக்கொடுக்க கணவரின் அருகாமையை கூட உணரமுடியாதவராய் அவர் கல் போல அமர்ந்து இருந்தார். பார்த்திபன் மெதுவாக ” சுபிம்மா! நீ இப்போ டிவில பார்த்ததை நெனைச்சு மனசை போட்டு குழப்பிக்காதம்மா! நம்ம அபி சின்ன பையன். இந்த வயசுல மத்தவங்க பண்ணாத தப்பையா அவன் பண்ணிட்டான்? நம்ம பையனை நம்மளே புரிஞ்சிக்கலன்னா எப்பிடிம்மா?” என்று மகனுக்கு ஆதரவாக பேச சுபத்ரா திகைத்தவராய் கண்ணீருடன் அவரை பார்த்தவர் சட்டென்று எழுந்தார். கண்ணீரை சுண்டிவிட்டபடி “மத்தவங்க பண்ணாத தப்பையா பண்ணிட்டான்னு எவ்ளோ சுலபமா சொல்லிட்டிங்க? நமக்கு கல்யாணம் ஆன நாள்ல இருந்து இன்னைக்கு வரைக்கும் நீங்க என்னை தவிர வேற ஒருத்தியை நினைச்சு பாத்திருங்கிங்களா? அதை விடுங்க! கல்யாணத்துக்கு முன்னாடியும் நீங்க காதலிச்ச முதலும் கடைசியுமான பொண்ணு நான் தானேங்க! ஆனா இன்னைக்கு நம்ம பையன் என்ன மாதிரியான வாழ்க்கைமுறையில சிக்கிருக்கானு உங்களுக்கும் புரிஞ்சும் எப்பிடி உங்களால அவனுக்கு சப்போர்ட் பண்ண முடியுது?” என்றார் ஆதங்கத்துடன். அஸ்வின் ஏதோ சொல்ல வர அவனை கை உயர்த்தி தடுத்தவர் “அவன் லண்டன் போன நாள்ல இருந்து இன்னைக்கு வரைக்கும் அவனையோ அஸ்வினையோ நான் எதுவும் கேட்டது இல்லை. ஏன்னா ரெண்டு பேரு மேலயும் நான் முழு நம்பிக்கை வச்சிருந்தேங்க! என் புள்ளைங்க எங்க போனாலும் நம்ம கலாச்சாரத்தை மறக்க மாட்டாங்கன்னு குருட்டுத்தனமா நம்பியிருந்தேனே! அதுக்கு கிடைச்ச வெகுமதியா இன்னைக்கு பையனை சரியா வளர்க்காத அம்மாவா நான் இன்னைக்கு தோத்து போய் நிக்குறேன்” என்று சொல்ல அதற்கு மேல் பொறுக்க முடியாத அஸ்வின் அவரை அணைத்துக் கொண்டான். “மா! நீங்க என்னைக்குமே எங்க மூனு பேருக்கும் நல்ல அம்மாவா தான் இருந்திருங்கிங்க. வீட்டு டிரைவரோட மகனான என்னை சொந்த பையன் மாதிரி பார்த்துக்கிட்டு பெத்த பையன் என்ன படிக்கணும்னு நெனைச்சானோ அதே படிப்பை அந்த டிரைவரோட மகனுக்கும் குடுத்து இன்னைக்கு என்னை இந்த சமுதாயத்துல ஒரு நல்ல இடத்துல வைச்சிருக்கிற பெரியமனசு உங்களுக்கும், அங்கிளுக்கும் தான் இருக்கு. எங்க அம்மா முகம் எனக்கு கிட்டத்தட்ட மறந்து போச்சுனா அதுக்கு காரணம் நீங்க காட்டுன அன்பும் அக்கறையும் தான்மா! நீங்க என்னைக்குமே ஒரு நல்ல அம்மா தான். இனிமே இப்பிடி சொல்லி எங்களை கஷ்டப்படுத்தாதிங்க” என்று அவரைத் தேற்ற அவரால் கண்ணீர் மட்டும் தான் வடிக்க முடிந்தது. அபிமன்யூவால் இவை அனைத்தையும் வேடிக்கை மட்டும் தான் பார்க்க முடிந்தது. அழுதுக் கொண்டிருக்கும் அன்னையை தேற்றும் தைரியம் அவனுக்கு இல்லை என்பதே உண்மை. அந்த வீடியோ வெளியானதற்கு அவன் ஒன்றும் அலட்டிக்கொள்ளவில்லை. அஸ்வின் பதறியதற்கு கூட “அது எதுவுமே பொய் இல்லையேடா! அப்புறம் ஏன் வீணா டென்சன் ஆகுற? விடு! மார்ஃபிங்னு சொல்லிக்கலாம்” என்று நண்பனை அமைதிப்படுத்த முடிந்த அவனால் அன்னையிடம் அதை வெளிப்படையாக சொல்ல முடியவில்லை. நெறித்த புருவங்களுடன் யோசனையில் இருந்தவனின் காதில் சைரன் சத்தம் விழ அஸ்வினை திரும்பி பார்த்தான் அவன். அதற்குள் வெளியே கேட்ட சத்தம் என்னவென்று பார்க்க சென்ற சகாதேவன் வாசலிலேயே திகைத்து நிற்க வீட்டினுள் நுழைந்தனர் சில அதிகாரிகள். இவ்வளவு நேரம் யோசனையில் இருந்த அபிமன்யூ எழுந்து “யார் நீங்க? திடுதிடுப்புனு வீட்டுக்குள்ள வந்தா என்ன அர்த்தம்?” என்று கேட்டபடி அவர்களிடம் வர அவர்களின் ஒருவர் அடையாள அட்டையை காட்டி “சார் வீ ஆர் ஃப்ரம் சி.பி.ஐ. மெடிசின் பர்சேஸ் டெண்டர்ல நடந்த ஊழல் சம்பந்தமா உங்க அப்பாவை அரெஸ்ட் பண்ண வந்திருக்கோம்” என்று கூற அவன் அதிர்ச்சியில் உறைந்து போய் நின்றான். சகாதேவன் பதறிப்போய் ” சார்! அதுல உண்மையா என்ன நடந்துச்சுனு……..” என்று ஏதோ சொல்லவர அவர் அருகில் நின்ற பார்த்திபன் அவரது தோளில் கை வைத்து அழுத்தியவர் கண்களால் ஏதோ குறிப்பாய் உணர்த்த அவர் தர்மசங்கடத்துடன் அமைதியானார். அமைதியாக அதிகாரிகளை பார்த்தவர் “நான் உங்க கூட வர சம்மதிக்கிறேன் ஆபிசர்” என்று சொல்ல அபிமன்யூ வேகமாக அவர் அருகில் வந்து “டாட்! ஐ வோண்ட் அலோ தெம் டு அரெஸ்ட் யூ” என்று உணர்ச்சிவசப்பட்டவனாய் பேச சுபத்ரா மீண்டும் அவரின் தலையில் விழுந்த இடியில் அழ மறந்து சிலையானார். பார்த்திபன் தம்பியையும் மகனையும் சமாதானம் செய்தவர் மனைவியின் வெறித்த பார்வையில் தெரிந்த அந்நியத்தன்மையில் மனமுடைந்து தான் போனார். சுபத்ராவின் அருகில் அவர் சென்று அவரை சமாதானம் செய்ய முயல “போதுங்க! இது நாள் வரைக்கும் புருஷன், குடும்பம், குழந்தைங்கன்னு வேற எதையும் பத்தி தெரிஞ்சுக்காம இருந்துட்டேன். நான் உங்களை கண்மூடித்தனமா நம்புனேனே! நீங்களும் என்னை ஏமாத்திட்டிங்களே! ஒரு மனைவியாவும் நான் தோத்து போயிட்டேங்க” என்று வாயில் கைவைத்து அழுகையை அடக்கியபடி அவரது அறைக்குள் செல்ல ஜனனி அழுகையுடன் அவரைத் தொடர்ந்து ஓடினாள். பார்த்திபன் அவரை தொடர்ந்து செல்ல முயல அதிகாரிகள் “சார் டைம் ஆச்சு. நம்ம கெளம்பலாமா?” என்று கேட்டபடி அவரின் கையைப் பிடிக்க அபிமன்யூவிற்கு அந்த காட்சியில் கோபம் தலைக்கேறியது. அந்த அதிகாரியை நோக்கி கோபத்துடன் அடிவைத்தவனை தடுத்த பார்த்திபன் “அவர் அவரோட கடமையை தானே செய்யுறாரு! அவரை தடுக்காத. எப்போவும் சந்தோசம் மட்டுமே இருக்கிற நம்ம வீட்டுல இந்த மாதிரி நிகழ்வு நடக்க யாரு காரணமோ அவங்க கிட்ட காட்டுறதுக்கு இந்த கோவத்தை சேர்த்து வைச்சுக்கோ” என்று மகனை அமைதி படுத்தினார். சகாதேவனிடம் திரும்பியவர் “கட்சி வேலையை நீ பாத்துக்கோ சகா. அபிக்கு அனுபவம் பத்தாது” என்று சொல்ல அவர் அண்ணனை கண்ணீருடன் அணைத்து கொண்டார். பார்த்திபன் அஸ்வினை பார்த்தவர் “அபி கூட இருந்து இந்த வீட்டை பொறுப்பா பாத்துக்கோடா. அவனுக்கு பொறுமை கெடயாது. ஒரு நல்ல நண்பனா அவன் கூட இருந்து அவனுக்கு நல்லது கெட்டது சொல்லி புரிய வைக்கணும்” என்று அவன் தோளில் தட்டிக்கொடுத்து விட்டு அதிகாரிகளுடன் வெளியேறினார். சகாதேவன் பொறுக்க இயலாமல் அண்ணன் பின்னாலே சென்றவர் ஜீப் வெளியேறும் வரை கண்ணீருடன் பார்த்துக்கொண்டே அந்த நடைபாதையிலேயே அமர்ந்து விட்டார். சுபத்ராவோ அழுகையில் ஒரு புறம் கரைய அபிமன்யூவுக்கு தலைக்குள் ஏதோ பூகம்பம் வருவது போல உணர்வு. எங்கே தவறு நடந்திருக்கும் என்று யோசித்தவனுக்கு முதலில் மனக்கண்ணில் தோன்றிய முகம் ஸ்ராவணி தான். அவள் தான் அன்று பப்பில் அவனுடன் இருந்தவள். அன்றைய காட்சிகள் தான் செய்தியில் ஒளிபரப்ப பட்ட காட்சி. ” நாற்காலில உக்காரணும்கிற உன்னோட ஆசைக்கு முற்றுப்புள்ளி வைக்க தான் நான் பொறந்திருக்கேன் மிஸ்டர் அபிமன்யூ பார்த்திபன். இப்போ நீ ஜெயிச்சிருக்கலாம். பட் அந்த நாற்காலி உனக்கு இல்ல” என்று கையை கட்டிக்கொண்டு சொன்னவளின் நினைவில் கை முஷ்டி இறுக “ஸ்ராவணி” என்று அவள் பெயரை கடித்து துப்பினான் அவன். அதே நேரம் ஜஸ்டிஸ் டுடேவில் விஷ்ணு அவனுக்கு தெரிந்த வல்லுநர்களிடம் ஆலோசனை நடத்தி கொண்டிருந்தான். அவனது டீமும் அவனுடன் இருக்க ஸ்ராவணி, மேனகா மற்றும் ரகுவுக்கு மனதில் பயம் இருந்தாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் சின்சியர் சிகாமணிகளாக மீட்டிங்கில் அமர்ந்திருந்தனர் அவர்கள். ரகு தான் பதற்றத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் தண்ணீரை குடித்தான். வந்திருந்தவர்கள் “விஷ்ணு சார் இப்போ இருக்கிற டெக்னாலஜியில டிவி நெட்வொர்க்கை ஹேக் பண்ணுறது ரொம்ப கஷ்டம். அப்லிங்கிங் பத்தி தெரிஞ்ச இதே ஆபிஸ்ல இருக்கிறவங்க ஹெல்ப் இல்லாம இந்த ஹேக்கிங் நடந்திருக்க வாய்ப்பில்ல” என்று சொல்ல ரகுவுக்கு குடித்து கொண்டிருந்த தண்ணீர் புரையேற மேனகா தான் அவன் முதுகில் கை வைத்துத் தட்டிக்கொடுத்தாள். ஸ்ராவணி அவனை உறுத்து விழிக்கவும் ரகு அவளின் காதில் “வனி! இந்த வளர்ந்து கெட்ட மனுஷன் நேருல பாத்த மாதிரியே சொல்லுறான்டி” என்றான் பதற்றத்துடன். ஸ்ராவணி “நீ உன்னோட ஃபேஸ் ரியாக்சனை கொஞ்சம் கன்ட்ரோல் பண்ணு. யாரும் எதையும் கண்டுபிடிக்க மாட்டாங்க” என்று சொல்லிவிட்டு நிமிர்ந்து உட்கார்ந்தாள். விஷ்ணு அந்த வல்லுனர்களிடம் “எங்க ஆபிஸ்ல அப்பிடி யாரும் ஹெல்ப் பண்ணிருக்க மாட்டாங்க. என்னோட ஸ்டாஃப்சை நான் முழுசா நம்புறேன். நான் கேட்டுக்கிட்டதுக்காக இவ்ளோ தூரம் வந்ததுக்கு ரொம்ப நன்றி சார்” என்று அவர்களுக்கு கை கொடுத்தவன் அவர்களை வழியனுப்பி வைக்க அவர்களுடன் செல்ல மேனகா ரகுவை கெஸ்ட் ரூமிற்கு அழைத்து சென்றாள். ஸ்ராவணியும் மீட்டிங் ஹாலை விட்டு வெளியேற போனவள் போன் அடிக்கவும் அட்டெண்ட் செய்து “ஹலோ விக்கி” என்று பேசியபடியே அந்த அறையை விட்டு வெளியேறினாள். அவனிடம் பேசி விட்டு வைத்தவள் ரகுவுடன் வந்த மேனகாவைக் கண்டதும் “விக்கி யூ.எஸ்ல இருந்து இன்னும் டூ டேய்ஸ்ல வர்றான் மேகி” என்றதும் இருவரும் மகிழ்ச்சியுடன் ஸ்ராவணியை பார்த்தனர். ரகு “அப்போ சீக்கிரமாவே ஸ்ராவணி சுப்பிரமணியம் ஸ்ராவணி விக்ரமா மாற போறாங்க” என்றுச் சொல்லிக் கிண்டலடிக்க ஸ்ராவணி சிரித்தாள். “வந்ததும் ஃபர்ஸ்ட் என்கேஜ்மென்ட்டுனு அவனே பேரண்ட்ஸ் கிட்ட சொல்லிட்டானாம். அப்புறம் இந்த மாசத்துலயே ஒரு முகூர்த்த நாளை பாக்க சொல்லி ரெண்டு வீட்டுக்காரங்க கிட்டவும் பேசிட்டு எனக்கு சொல்லுறான் இந்த ராஸ்கல்” என்றாள் அவள் கேலியாக. மேனகா ஸ்ராவணியிடம் “அவன் உன்னை ரொம்ப லவ் பண்ணுறான் வனி. இவ்ளோ நாள் உன்னை பாக்காம அமெரிக்கால இருந்ததே ஆச்சரியம் தான்” என்று சொல்லி தோழியை வாழ்த்திவிட்டு அவளது கேபினுக்கு சென்றாள். அன்று நாள் முழுவதும் ஸ்ராவணிக்கு மிகவும் இனிமையாக போகவே அவளுக்கே சந்தேகம் வந்தது. “வனி! இவ்ளோ ஸ்மூத்தா நாள் போகுதே! இது சரியில்ல” என்று சொல்லிக்கொண்டவள் மாலை அலுவலகம் முடிந்ததும் மேனகாவிடம் ஸ்கூட்டியை கொடுத்து அவளை வீட்டுக்கு சென்றுவிடும்படி கூறியவள் பார்த்திபனின் கைதுக்கு பிறகு இன்னும் முடிவடையாத தன்னுடைய அசைன்மெண்டுக்கு அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று யோசித்துவிட்டு அதை குறித்து வைத்துவிட்டு தாமதமாக தான் கிளம்பினாள். ஆபிஸை பூட்டிய செக்யூரிட்டி “வனி மேடம்! உங்களுக்காக அன்னைக்கு சேனலுக்கு வந்தாருல்ல, அந்த உயரமான சார் பார்க்கிங் ஏரியால வெயிட் பண்ணிட்டு இருக்காங்க” என்று சுட்டிக்காட்ட அவள் பார்க்கிங் ஏரியா பக்கம் திரும்பி பார்த்தாள். அங்கே காரின் மீது சாய்ந்து அமர்ந்திருந்தவனைக் கண்டதும் “இவன் இந்நேரம் அவனோட தகப்பனை நெனைச்சு பரிதவிச்சு போயிருக்கணுமே! இங்க என்ன பண்ணிட்டிருக்கான்?” என்ற யோசனையுடன் அவனை நோக்கி அடியெடுத்து வைத்தாள். அவள் அவன் இடத்தை அடைந்ததும் தலையில் வைத்திருந்த கையை எடுத்தவன் ஏளனமான உதட்டுவளைவுடன் ” வந்துட்டிங்களா ரிப்போர்ட்டர் மேடம்” என்றபடி தரையில் இறங்கியவனின் பார்வை அவளைக் கூறுபோட ஸ்ராவணி அந்த பார்வையிலிருந்தக் கோபத்தை கறிவேப்பிலை போல ஒதுக்கி தள்ளிவிட்டாள். கையை கட்டிக்கொண்டு அவனை அமர்த்தலாகப் பார்க்க அபிமன்யூ “பார்ட்டில நீ ஒருத்தனை அறைஞ்சல்ல, அப்போ நீ ரொம்ப தைரியமான பொண்ணுனு நெனைச்சேன். ஆனா இப்பிடி கேவலமா என்னோட பெர்சனல் வீடியோவை லீக் பண்ணிட்டு அந்த டென்சன்ல சுத்துற டைம் பாத்து எங்க அப்பாவையும் அரெஸ்ட் பண்ண வச்சல்ல! ஹாட்ஸ் ஆஃப் ஸ்ராவணி சுப்பிரமணியம்” என்று கை தட்ட அவளுக்குமே உள்ளே கொஞ்சம் குற்றவுணர்ச்சியாக தான் இருந்தது. மற்றவர்களின் சொந்த வாழ்க்கையை பட்டவர்த்தனமாக பறைசாற்றுவது அவளுக்குமே பிடிக்காத விஷயம் தான். ஆனால் அபிமன்யூவின் தந்தையைக் கட்டுப்படுத்தி அவரை சிறைக்கு அனுப்பப் போட்டத் தூண்டிலில் இரையாக வைக்க அந்த வீடியோ மட்டுமே அவள் வசம் இருந்தது. “நான் டெபுடி சீஃப் மினிஸ்டரா ஆக கூடாதுனு இவ்ளோ லோ லெவல்ல இறங்கி என் அப்பாவை ஜெயிலுக்கு அனுப்பிருக்கியே! இது தான் உங்க பத்திரிக்கை தர்மமா?” என்று பல்லை கடித்தபடி கேட்க ஸ்ராவணி சலிப்புடன் தலையை தடவிக்கொண்டவள் கேலி நிரம்பிய குரலில் “என்ன பார்த்திபன் கனவு பகல் கனவா போயிடுச்சு போலயே? எம்.எல்.ஏ சார் அதான் ரொம்ப சூடா இருக்கீங்கனு நினைக்கேன்” என்கவும் அபிமன்யூ அவளை நெருங்கி வர இருவரும் எதிரும் புதிருமாக நின்றனர். ஸ்ராவணி தொடர்ந்து “நீயும், உங்க அப்பனும் சுத்தமா புத்தி இல்லாதவங்கனு நீ இப்போ பேசுறதுல இருந்தே தெரியுது. லிசன்! நான் ஒன்னும் அவரை ஜெயிலுக்கு அனுப்பல. டிபார்ட்மெண்டுக்கு அவரை பத்தி கம்ப்ளெயிண்ட் பண்ணுனேன். எனக்குக் கிடச்ச ஆதாரங்களை அவங்க கிட்ட குடுத்தேன். அவ்ளோ தான்” என்று சொல்ல அபிமன்யூ இறுகிய கைமுஷ்டியை காரில் குத்தி ஆத்திரத்தைக் காண்பித்தான். அவனது கோபத்தைப் பொருட்படுத்தாது “அவர் அங்க இருக்கிறது தான் அவருக்கும் பாதுகாப்பு. நீ நடந்த விஷயத்தை பத்தி முழுசா தெரிஞ்சிக்காம என்னை இப்பிடி இரிடேட் பண்ணாத ஓகே!” என்று சொல்லிவிட்டு நகர முயல அதற்குள் அவள் கையைப் பற்றி இழுத்தான் அபிமன்யூ. அவனது இறுகியபிடியில் புஜம் வலிக்க தொடங்கவே “லீவ் மீ இடியட்! இல்லனா செக்யூரிட்டியை கூப்பிட வேண்டியிருக்கும்” என்று ஸ்ராவணி சொல்ல அவன் கோபத்தில் சிவந்த விழிகளால் அவளை வெறித்தபடியே பேசத் தொடங்கினான். “எப்போவும் சந்தோசம் மட்டுமே நிறைஞ்சிருக்கிற எங்க வீடு இன்னைக்கு சோகமயமா இருக்க நீ தான் காரணம். உன்னோட ஸ்டுப்பிட் நியாயம், தர்மம் இதெல்லாம் விட எனக்கு எங்க அப்பா தான் முக்கியம். காட்ஃபாதர்டி அவர் எனக்கு. அவரை ஜெயிலுக்கு அனுப்பி எங்க அம்மாவோட கண்ணீருக்கும் காரணமாயிட்டல்ல! பதவியேத்துக்க இன்னும் ஒரே ஒரு நாள் தான் இருக்கு. அதுக்கு அப்புறமா ஏன்டா இவன் கிட்ட மோதுனோம்னு உன்னை நினைக்க வைக்கல, நான் அபிமன்யூ இல்லடி” என்று கோபத்துடன் உரைத்தவனின் கையை உதறினாள் ஸ்ராவணி. அவனை கேலியுடன் பார்த்தவள் “ஒரு நாளுக்கு அப்புறம் நீ என்ன சி.எம்மா ஆக போற? நீ வெறும் எம்.எல்.ஏ தான்டா! உன்னால என்னை எதுவும் பண்ண முடியாது. பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் தம்பி” என்று கிண்டலாகச் சொல்லிவிட்டு அவன் பதிலுக்குக் காத்திருக்காமல் நடக்கத் தொடங்கினாள் அவள். அவள் செல்வதை கடுப்புடன் பார்த்தவன் காரினுள் அமர்ந்து கார் கதவை படீரென்று சாத்திவிட்டு ” நீ பண்ணுன இந்த காரியம் எப்பிடி என் குடும்பம் மொத்தத்தையும் உலுக்கி, என் அப்பாவோட கவுரத்தை நாசம் பண்ணுச்சோ அதே மாதிரி உன் வாழ்க்கைலயும் இதே சம்பவங்களை நடத்தி காட்டல, நான் பார்த்திபனுக்கு பிறந்தவன் இல்லடி” என்று இறுகிய குரலில் சொன்ன அபிமன்யூ அரைவட்டமடித்து அந்த காம்பவுண்டிலிருந்து காரைக் கிளப்பி வெளியேறினான்.
இலங்கையில் 9,75,000 இந்திய வம்சா வளியினர், பிரஜா உரிமை இல்லாமல், நாடற்றவர்களாக நாதியற்று இருந்த காலத்தில், இதற்கு ஒரு தீர்வு காண வேண்டுமென்பதற்காக, சாஸ்திரி - சிரிமாவோ ஒப்பந்தம் போடப்பட்டது. இந்த ஒப்பந்தம் 1964 அக்டோபர் 30-ஆம் தேதி கையொப்பமிடப்பட்டது. இன்றோடு 50 ஆண்டு நிறைவாகிறது. எதற்காக இந்த ஒப்பந்தம்? 1815 கால கட்டத்தில், கண்டி ராஜ்ஜியம் வீழ்த்தப்பட்டு, ஆங்கிலேயர் ஆட்சியில் இலங்கையின் மய்யப் பகுதியான மலையகத்தில், ஆங்கிலேயர் காப்பி பயிரிட்டனர். காப்பித் தோட்டப் பணிகளுக்கு தொழிலாளர்கள் தேவைப்பட்டதால், தமிழகத்தின் திருநெல்வேலி, இராமநாதபுரம், தஞ்சாவூர் ஆகிய பகுதிகளிலிருந்து தொழிலாளர்களை கடற்கரை வரை கூட்டம் கூட்டமாக நடத்தி அழைத்துச் சென்றனர். அங்கிருந்து கடலில் பயணித்தபோது பலர், தவறுதலாக வங்கக் கடலில் விழுந்து மாண்டனர். மன்னாரில் இறக்கி மலையகம் வரை அடர்ந்த காடுகள் வழியாக அழைத்துச் சென்றபொழுது, பலரும் நோய்வாய்பட்டும், காட்டு விலங்குகளுக்கு பலியாகியும் இறந்தனர். பயணத்தின்போது சோறு, தண்ணீர் இல்லை. 1842-லிருந்து 1945 வரை இந்தியாவிலிருந்து நான்கு முறை இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்டோரை மனிதநேயமின்றி அடிமைகளைபோல் அழைத்துச் சென்றனர். பிரடெரிக் நார்த் என்ற ஆங்கிலேயர் பரிபாலனத்தில், இலங்கையில் இருந்த ஆங்கில அரசுகள் இந்திய வம்சாவளியினரை, மனிதர்கள் என்று நினைக்காமல் பார்சல் பொருளாக நடத்தின. தமிழ்நாட்டில் அன்றைக்கு எஸ்டேட் மேனேஜ்மெண்ட் அலுவலகங்கள் செங்கல்பட்டு, வட ஆர்க்காடு, தென் ஆர்க்காடு, சேலம், சிவகாசி, கோயம்புத்தூர், தஞ்சாவூர் போன்ற மாவட்டங்களில் துவக்கப்பட்டன. இதற்கு தலைமையிடமாக திருச்சியில் "பிளான்டேஷன் கோஸ்ட் ஏஜென்சி' என்ற அமைப்பு செயல்பட்டது. இதன் மூலம் தமிழகத்திலுள்ள ஏழ்மையான மக்கள் இலங்கைக்கு தோட்டத் தொழிலுக்காக அனுப்பப்பட்டனர். தோட்டத் தொழிலில் ஈடுபட்டபோது அங்குள்ள கடுங்குளிரும், சூழலும் ஒத்துகொள்ளாமல் 70,000 இந்திய வம்சாவளியினர் இறந்ததாக கொழும்பு "அப்சர்வர்' ஏடு அப்போது தெரிவித்தது. பஞ்சம், வறட்சி, கொள்ளை நோய் இங்கிருந்து சென்றவர்களை வாட்டி வதைத்தன. ஒரு கட்டத்தில் காப்பி பயிர்கள் சரியாக விளையவில்லையென்று, ஆங்கிலேயர்கள் தேயிலை, ரப்பர், தென்னை, சிங்கோனா என்று விளைச்சலை மாற்றினர். கடுமையாக உழைத்த இந்த தொழிலாளர்கள் கங்காணி முறையில் கண்காணிக்கப்பட்டனர். ÷ அப்பகுதியில் பாடப்பட்ட நாட்டுப்புற பாடல் ஒன்று: கண்டி கண்டி எங்கா தீங்கா கண்டி பேச்சு பேசாதீங்க சாதி கெட்ட கண்டியிலே சங்கிலியன் கங்காணி பயத்திலும், அச்சத்திலும் தொழிலாளர்கள் வாழ வேண்டிய நிலைமை இருந்தது. காலை 6 மணியிலிருந்து இரவு 7 மணி வரை கடும் உழைப்பு. அந்த உழைப்பின்போது, காட்டில் உள்ள அட்டைகள் அவர்கள் ரத்தத்தை உறிஞ்சின. இதிலிருந்து அவர்கள் தப்பி போக முடியாதவாறு வேலிகள் இருந்தன. தப்ப முயன்று அகப்பட்டால் கடுமையான தண்டனை உண்டு. இது சுருக்கமான வரலாறு. இலங்கை, 4.2.1948 அன்று ஆங்கிலேயரிடமிருந்து விடுதலை பெற்றது. அன்றைய தினத்திலிருந்து இந்திய வம்சாவளி தோட்டத் தொழிலாளர்களுக்கு பிரஜா உரிமை மறுக்கப்பட்டு, சட்ட விரோதமாக குடியேறியவர்களாக அறிவிக்கப்பட்டனர். விடுதலை பெற்ற இலங்கை அரசு இதனைக் கண்டு கொள்ளவில்லை. இவர்கள் படும் அவஸ்தைகள், அன்றைய பிரதமர் நேருவின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது. நேரு இதுகுறித்து இலங்கை அதிபர் கொத்லவாலாவிடம் பேசினார். 1954-இல் டில்லி வந்த கொத்லவாலா, நேருவின் கையைப் பிடித்துக் கொண்டு, "நீங்கள் இலங்கை வந்தபோது, உங்கள் கூட்டத்தில் எங்கள் நாட்டினர் கல் வீசினார்கள் என்று எங்கள் மீது கோபம் காட்டாதீர்கள். இந்திய வம்சாவளியினரின் பிரச்னைகளை தீர்க்க ஒத்துழைப்புத் தாருங்கள்' என்று மன்றாடி கேட்டுக் கொண்டார். பின்னர் நேரு - கொத்லவாலா ஒப்பந்தம் கையொப்பமிடப்பட்டது. நேரு - கொத்லவாலா ஒப்பந்தத்தின்படி, மலையக தமிழ் மக்களுக்கு பிரஜா உரிமை வழங்க இலங்கை அரசு எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை என்பது மட்டுமல்லாது, நேரு காலமான பின்பு, இந்திய வம்சாவளியினரை இந்தியாவிற்கு திருப்பி அனுப்புவதிலேயே இலங்கை கவனமாக இருந்தது. நேருவின் அணிசேராக் கொள்கை, பஞ்சசீலம் இவற்றின் அடிப்படையில், அண்டை நாடுகளுடன் ஒத்துழைக்க வேண்டுமெனவும், சீன இந்திய போர் போன்றவைகளை காரணமாக வைத்து, சிரிமாவோ } சாஸ்திரி ஒப்பந்தத்தை உருவாக்க சரியான நேரம் இதுதான் என்றும் முடிவு செய்து பண்டார நாயகா 1964 அக்டோபர் 22-ஆம் தேதி தில்லி வந்தார். சிரிமாவோவின் கோரிக்கையை இந்திய அரசு ஏற்றது. இதனைத் தொடர்ந்து இலங்கையின் வற்புறுத்தலால், சாஸ்திரி } சிரிமாவோ ஒப்பந்தம் கையொப்பமானது. இந்திய அரசு இலங்கையின் கோரிக்கையை வாய்மூடி ஏற்றுக் கொண்டது. பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி, வெளியுறவுத் துறை அமைச்சர் சுவரண் சிங், தமிழக அமைச்சர் வி. ராமய்யா ஆகியோர் பங்கேற்ற கூட்டத்தில் இந்த ஒப்பந்தத்திற்கு இசைவு கொடுக்கப்பட்டது. தமிழக அமைச்சரான வி. ராமய்யா அப்போது வாய் திறந்து எந்த கருத்தையும் சொல்லவில்லை. இந்த ஒப்பந்தத்தின்படி, இலங்கையில் பிரஜா உரிமையற்று, நாடற்றவர்களாக இருக்கும் 9,75,000 பேரில் 5.25 லட்சம் பேருக்கு இந்தியாவும், 3 லட்சம் பேருக்கு இலங்கையும் குடியுரிமை வழங்குவது, மீதமுள்ள 1.5 லட்சம் பேரின் நிலையை பிற்பாடு முடிவெடுப்பது என்கிற ஒப்பந்தம் 1964 அக்டோபர் 30 அன்று கையெழுத்தானது. இதே 1964-இல் சேது சமுத்திரத் திட்டம் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்த பின்பும் கிடப்பில் போடப்பட்டதும், கச்சத்தீவு தமிழர்களின் விருப்பத்திற்கு மாறாக காவு கொடுக்கப்பட்டது என்பதும் வேறு விஷயம். தமிழக தலைவர்கள் அண்ணா, ராஜாஜி, ம.பொ.சி. போன்றோர் தமிழகத்தின் கருத்து அறியாமல் இந்த ஒப்பந்தம் எப்படி ஏற்றுக் கொள்ளப்பட்டது என வினா எழுப்பினர். ஒப்பந்தம் 1964-இல் கையெழுத்தானாலும், 1967-இல்தான் நடைமுறைக்கு வரும் என்று ஒப்புக் கொண்டனர். ஆனால், 1965 - 66-லேயே சில தோட்ட தொழிலாளர்களின் குடும்பங்களை இந்தியாவிற்கு அனுப்பியது இலங்கை அரசு. ஆரம்பத்தில் தமிழகத்திலிருந்து தமிழர்களை எப்படி அழைத்துச் சென்றார்களோ, அதே போன்று சாரை சாரையாக கப்பலில் ஏற்றி தூத்துக்குடியிலும் சென்னையிலும் படகு மூலம் இராமேஸ்வரத்திலும் கைதிகள் போல் இந்திய மணலில் இறக்கி விட்டனர். என்ன வேதனை? அப்படி வந்து இறங்கியவர்களுக்கு இந்தியா, தொடர்பற்ற மண்ணாக தெரிந்தது. தங்களுடைய மூதாதையரின் மண்ணில் திக்கு தெரியாமல் திகைத்தனர். இங்குள்ள மாறுபட்ட சூழலில், ஜீவனத்துக்கு வழியில்லாமலும், தொழில் தொடங்க கடனுக்கு மன்றாடுதல் எனவும் நிலைகுலைந்து போயினர். மீண்டும் தேயிலைத் தோட்டத் தொழிலுக்காக கொடைக்கானல், நீலகிரி, மூணாறு, வால்பாறை, கர்நாடகத்தில் உள்ள சிக்மகளூர், கேரளா, டார்ஜிலிங் வரை பயணித்தனர். பலர் துயரம் பொறுக்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டனர். இந்திய மண்ணோ, அவர்களை தங்களுடைய சகோதரர்கள் என நினைக்காமல், சிலோன்காரர்கள் என்ற பிரிவினையோடு பார்த்தது. இதனால் பலர் உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டு பைத்தியக்காரர்களான கதைகளும் உண்டு. இதே நிலைமை இன்று வரை நீடிக்கிறது. பல குடும்பங்கள் வேதனையான வாழ்க்கையை இன்றும் அனுபவித்து வருகின்றனர். 1983 கலவரங்களுக்கு பின் ஈழத்திலிருந்து வந்து அகதிகளாக இருப்போர் இப்போது படுகின்ற துன்பங்களை போன்றுதான், அன்று மலையகத் தமிழர்களும் சொந்த நாட்டுக்குத் திரும்பிய பிறகும் கஷ்டங்களை அனுபவித்தனர். மனித உரிமைகள், மானுடம் என பேசிடும் நாம், 50 ஆண்டுகளுக்கு முன்னால் நிறைவேறிய சாஸ்திரி } சிரிமாவோ ஒப்பந்தம், மலையக மக்களை சாவு குழிக்கும், அடிமை சாசனத்திற்கும் அழைத்துச் சென்றது என்ற ரணமான செய்தியைப் பதிவு செய்யும் நிலையில் இருக்கின்றோம். பிஜித் தீவு காப்பி தோட்டத்தில் தமிழர்கள் பட்ட பாடுகளை கண்ட பாரதி, "விதியே விதியே, தமிழ் சாதியே என் செய்ய நினைத்தாய்?' என்று பாடினானே, அந்த வரிகள்தான் நினைவுக்கு வருகிறது. - கே.எஸ். ராதாகிருஷ்ணன்- தினமணி Posted by KUMURUM MALAIKAL at 2:57 AM No comments: மலையக மக்களின் நட்பு சக்திகளை சரியாக அடையாளம் காண்போம் மலையகத்தில் பதுளை மீரியபெத்த என்ற இடத்தில் அண்மையில் நடைபெற்ற மண்சரிவினால் உயிரிழந்த, பாதிக்கப்பட்ட மக்களுக்கான ஆதரவுக் கரங்களை நீட்டும் முகமாகவும், மரணித்தவர்களுக்கான கண்ணீர் அஞ்சலிக்காகவும் இந்திய வம்சாவழித் இலங்கைத் தமிழர் (SLTCIO) என்ற அமைப்பு ஒழுங்கு செய்திருந்த நிகழ்வு ஒன்றில் கலந்து கொள்ளும் வாய்ப்பொன்று எனக்கு கிடைத்தது. இலங்கைப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக திகழும் இந்த உழைக்கும் மக்களின் நலன்களில் நீண்ட காலமாகவே எனக்கிருந்த ஈடுபாடு என்னை இந்த நிகழ்வில் கலந்து கொள்ள என்னை இழுத்துச் சென்றது. புலம் பெயர் தேசம் ஒன்றில் முதல்? தடவையாக மலையக மக்களின் நிகழ்வு ஒன்றில் வடக்கு, கிழக்கு தமிழ்ப் பிரநிதிகள் கலந்து கொண்டதாக கூட்டத்தை ஒழுங்கு செய்தவர்களின் பேச்சுக்களில் குறிப்பிட்டனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவிகளை நிதிகளாகவும், பொருட்களாகவும் சேர்த்து அனுப்புதல் என்பதுவும் இந்த நிகழ்வின் ஒரு நோக்கமாக இருந்தது. மேலும் மலையக மக்களின் பிரச்சனையை மலையக மக்கள் தவிர்ந்த ஏனை வடக்கு, கிழக்கு மக்களுக்கு எடுத்தியம்பும் ஒரு ஏற்பாடாகவும் இதனைப் பார்க்கலாம் என்ற கருத்துக்களையும் ஏற்பாட்டாளர்கள் முன்வைத்தனர். இந்த கூட்டதை ஒழுங்கு செய்தவர்கள் யாவரும் மலையகத்தை பிறப்பிடமாக கொண்டவர்களாகவே இருந்தனர். ஆனால், இன்று மத்தியதர வர்க்க வாழ்க்கை முறைகளுக்குள் தம்மை இணைத்துக் கொண்டு அந்த வர்க்க குணாம்சத்துடன் வாழ்க்கை நடாத்துகின்றனர் என்ற செயற்பாடுகளே இங்கு மேலோங்கி இருந்தது. மக்களின் துயரத்தை பகிரும் ஒரு நிகழ்வில் ஒரு கொண்டாட்டத் தன்மை சற்று தலைதூக்கியிருந்தது என் பார்வையில் வருந்தத்தக்கதாக உணரப்பட்டது. இது எனது மனவலையிலிருந்து இருந்து உதிர்ந்தவைதான். வேறு எந்த குறை கூறும் நோக்கம் கொண்டு இங்கு நான் இதனைப் பதிவு செய்யவில்லை என்பதை சம்மந்தப்பட்டவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். கூட்டத்தில் கலந்து கொண்ட சிலரிடையே என்னையொத்த மனவலையின் பிரதி பலிப்பு இருந்ததை நான் உணர்ந்தும் கொண்டேன். இது திட்டமிட்டு நடைபெற்ற தவறு அல்ல? மாறாக ஏதேச்சையாக நடைபெற்ற தவறு என்ற எண்ணமும் என் மனவலையில் போராட்டமாக இன்றும் நடைபெற்று கொண்டிருக்கின்றது. தமிழ் (பேசும்) மக்கள் என்ற உணர்வலைகள் ஊடாக வடக்கு, கிழக்கு மக்களுடன் இணைவது என்ற இனத்துவ உணர்வுகளே மேலோங்கியிருக்கக் காணப்பட்டது. இலங்கையின் தலமைத்துவ வர்க்கமான இந்த அடிமட்ட உழைக்கும் மக்களின் சமூக மாற்றத்திற்கான முக்கியத்துவம் இங்கே சற்றே மறைந்திருந்தது காணக் கூடியதாக இருந்தது. மேலும் வடக்கு, கிழக்கில் இந்த உழைக்கும் மக்களின் நண்பர்கள் யார் என்பதை அடையாளம் காண்பதில் நாடு கடந்த தமிழீழம், மாநகர கவுன்சிலர், தேர்தலில் எதிர்காலத்தில் நிற்கப் போகின்றவர்கள் என்ற மேற்தட்டு வர்க்க செயற்பாட்டாளர்களே இவர்களால் அடையாளப்படுத்தப்பட்டிருந்தது. இது இவர்களின் வர்க்கக் அடிப்படையிலான ஐக்கிய முன்னணித் தந்திரோபாயக் கண்ணோட்டத்தில் உள்ள தப்புத் தாளங்களையே எடுத்தியம்பி நின்றன. இந்த அமைப்பின் பெரும்பாலான செயற்பாட்டாளர்களிடம் இருந்த ‘வெள்ளந்தித்தனம்’ மலையக உழைக்கும் அடிமட்ட மக்களுக்கான விடுதலைக்கான நட்புச்சக்திகளை இனம் காணுவதில் தவறான போக்கிற்கு இழுத்துச் செல்லப்பட்டதாக என்னால் உணரப்பட்டது. இந்நிகழ்வின் பிரமுகர்களாக மீண்டும், மீண்டும் (கவனிக்க மீண்டும் மீண்டும்)) இனம் காட்ட பேசப்பட்ட பேச்சுக்கள், செயற்பாடுகள் போன்றவற்றின் வெளிப்படும் சேதியின் அடிப்படையில் இதனை நான் இங்கு பதிவு செய்கின்றேன். நம்பிக்கையுடன் பலகாலமாக என்னால் அவதானிக்கப்பட்டு வந்த மலையக சகாக்கள் சிலர் பேச்சுக்கள் கூட ஏமாற்றம் அழிப்பதாகவே இருந்தது. காரணம் இவர்கள் வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் பிரமுகர்கள் என்று அதிகமாக முதன்மைப்படுத்தி சுட்டிக் காட்டி பேசிய பேச்சுக்கள் ஆகும். இந்த நிகழ்விற்கு பெருமை சேர்ப்பவர்கள் யார் என்பதை அடையாளப்படுத்துவதில் இவர்கள் இந்த பிரமுகர்களிடம் தொங்கிக்கொண்டு இருப்பதாகவே இவர்கள் தம்மை காட்டிக் கொண்டனர். இவர்களின் இந்த பேச்சு, செயற்பாடுகள் ஒரு ஆரோக்கியமான தடங்களாக மலையக பெரும்பான்மை அடிமட்ட மக்களின் விடிவிற்கு அமையப் போவது இல்லை. ஒரு நல்ல முயற்சிற்கான நிகழ்வு சரியான நட்பு சக்திகளை அடையாளப்படுத்தாமல் எங்கேயோ இழுத்துச் செல்லப்படுவது போன்ற உணர்வலையை என்னிடம் இருந்து பிரித்தெடுக்க என்னால் முடியவில்லை என்பதை இங்கு மன வருத்ததுடன் பதிவு செய்ய விருப்புகின்றேன். ஒரு துயர் பகிர்வு நிகழ்வில் ‘யாரும்’ கலந்து கொள்ள அனுமதிப்பது இதற்கான சபை நாகரிகம், மரியாதை என்பது வேறு. மாறாக இவர்களே, இவர்களாலே இந்த துயர் பகிர்வு பெருமை, முழுமை அடைகின்றது என்ற கருத்தியல் அப்படையில் நடந்து கொள்வது வேறு. மலையக மக்களின் வாழ்க்கைகான சமூகப் புரட்சி வெற்றியளிக்க வேண்டுமாயின் அங்கும், இங்கும் இந்த மக்களின் நலன்களில் உண்மையான அக்கறையுள்ளவர்களின் தலைமைத்துவத்தை உருவாக்கி நண்பர்கள் யார், நட்பு இல்லாத சக்திகள் யார்? என்பதை சரியாக இனம் கண்டு அவர்களுடன் ஐக்கிய முன்னணி அமைத்தல் வேண்டும். புரட்சிகரமாக வேலைத்திட்டத்தின் அடிப்படையில் இந்த மக்கள் அணிதிரட்டி வழி நடத்தி சரியான நட்பு சக்திகளுடன் ஐக்கியப்பட்டு இணைந்து இந்த மக்களின் தலமையில் போராடினால், செயற்பட்டாலே அது சாத்தியம் ஆகும். இதில் மனிதத்துவமே முன்னிலைப்படுத்தப்பட வேண்டும் மாறாக இனம், மொழி, மதம் முன்னிலை பெற்றலால் வேணும் என்றால் உசுப்பேத்தி தேர்தலில் வெற்றி பெற்று தொண்டமான்காளாக வர உதவுமே தவிர இந்த மக்களின் நிரந்தர வடிவிற்கான செயற்பாடாக அமையப் போவதில்லை. என்ன இன்னும் ஒரு ஆறுமுகம், செந்தில்களை மலையகத்தில் மட்டும் இல்லை புலம்பெயர் தேசங்கள் எல்லாம் உருவாக்க முடியுமே தவிர மலையக மக்களுக்கான விடிவு கிடைக்க உதவப் போவதில்லை. இந்த நிகழ்வில் உங்களால் முன்னிலைப்படுதப்பட்ட பிரமுகர்கள் மனோகணேசன், விக்னேஸ்வரன் வகையறாக்கள் என்பதை கண்கெட்ட பின்பு சூரிய நமஸ்காரம் செய்வது போல் உணரப்படக் கூடாது என்ற அக்கறையில் இங்கு இதனைப் பதிவு செய்கின்றேன். இதில் நாங்கள் யாரும் தவறிவிடக் கூடாது என்பதை ஈழவிடுதலைப் போராட்டதின் முடிவுகளில் இருந்து பாடங்களை கற்றுக்கொள்வோம். இந்த துயர் பகிர்வு நிகழ்வுகளில் மேலோங்கி நின்ற தவறான சில விடயங்களை இங்கு பதிவு செய்கின்றேன். இந்நிகழ்வைப் பார்த்தால் அது ‘மௌனிக்கப்பட்டவர்’களின் சாம்பலில் இருந்து புறப்பட விளையும் தவறான நட்பு, நடப்புக்களையே எனக்கு உணர்த்தி நிற்கின்றது.
தற்போது கடற்கரையில் பொழுதை கழிக்க சென்றுள்ள மாளவிகா அங்கிருந்து பகிர்ந்துள்ள போட்டோக்கள் அனைத்தும் வைரலாகி வருகிறது. Malavika தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் முன்னிட்டு மொழிகளில் மிக பிரபலமாக நடிகை இருந்து வந்தவர் மாளவிகா. கடந்த 1999 ஆம் ஆண்டு அஜித்குமார் நடிப்பில் வெளியான உன்னைத்தேடி என்னும் படத்தின் மூலம் தமிழ் திரை உலகிற்கு அறிமுகமாகி இருந்தார் மாளவிகா. Malavika தனது 19 வது வயதில் நாயகியாக என்ட்ரி கொடுத்திருந்தார். இதைத்தொடர்ந்து ஆனந்த பூங்காற்றே என்னும் படத்திலும் அஜித்துக்கு ஜோடியாகவே இவர் நடித்தார். மூன்றாவது படமாக ரோஜாவனம் என்னும் படத்தில் சிந்துவாக தோன்றியிருந்தார். இந்த படத்தில் கார்த்திக், லைலா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். Malavika பின்னர் கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் இவருக்கு வாய்ப்புகள் கூட தொடங்கியது. தொடர்ந்து வெற்றி கொடி கட்டு படத்தில் அமுதாவாக வந்து கருப்பு தான் எனக்கு பிடித்த கலரு என மனதை கவர்ந்திருந்தார் மாளவிகா. Malavika அதிக கவனம் செலுத்தி வந்த இவர் பேரழகு, வசூல் ராஜா எம்பிபிஎஸ் உள்ளிட்ட படங்களில் காமியோ ரோலில் நடந்தார். 2005 ஆம் ஆண்டு ரஜினி காந்த் நடிப்பில் வெளியான சந்திரமுகி படத்தில் 3 நாயகிகளில் ஒருவராக நடித்து மீண்டும் பிரபலமானார் மாளவிகா. Malavika இதை அடுத்து இவருக்கு பாலிவுட் பக்கமும் வாய்ப்புகள் கிடைத்தது. அங்கு அதிக படங்களில் நடித்த மாளவிகா. தொடர்ந்து காமியோ ரோல்களிலேயே நடித்து வந்தார். தமிழில் பல படங்களில் தோன்றியுள்ள இவருக்கு சமீபத்தில் தமிழ் பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை என்றே தோன்றுகிறது. Malavika இறுதியாக கோல்மால் என்னும் படத்தில் நடித்திருந்தார் மாளவிகா. 44 வயதாகும் இவர் அவ்வப்போது தனது அழகான புகைப்படங்களை இன்ஸ்டாகிராமிலும் பதிவு செய்து வருகிறார். அந்த வகையில் தற்போது கடற்கரையில் பொழுதை கழிக்க சென்றுள்ள மாளவிகா அங்கிருந்து பகிர்ந்துள்ள போட்டோக்கள் அனைத்தும் வைரலாகி வருகிறது. Follow Us: Download App: RELATED STORIES வெளிநாட்டில் பேச்சிலர் பார்ட்டி கொண்டாடிய ஹன்சிகா... குடித்துவிட்டு தோழிகளுடன் அலப்பறை செய்யும் வீடியோ வைரல் முதன்முதலில் ரூ.1 கோடி சம்பளம் வாங்கிய தமிழ் ஹீரோ ராஜ்கிரண் தான்... அதுவும் எந்த படத்துக்காக தெரியுமா? மொழி கடந்து தொடரும் வசூல் வேட்டை... அஜித், சூர்யா பட சாதனைகளை அசால்டாக தட்டித்தூக்கி கெத்து காட்டும் லவ் டுடே அஜித் உடன் எடுத்த ரொமாண்டிக் போட்டோ உடன் இன்ஸ்டாகிராமில் எண்ட்ரி கொடுத்த ஷாலினி - அதற்குள் இத்தனை பாலோவர்களா.! லவ் டுடே பாணியில் வித்தியாசமான கதைகளத்தில் ஜீவா நடித்துள்ள ‘வரலாறு முக்கியம்’ படத்தின் டிரைலர் வெளியானது Top Stories வெளிநாட்டில் பேச்சிலர் பார்ட்டி கொண்டாடிய ஹன்சிகா... குடித்துவிட்டு தோழிகளுடன் அலப்பறை செய்யும் வீடியோ வைரல் NZ vs IND: 2வது ஒருநாள் போட்டி மழையால் பாதிப்பு..! சஞ்சு சாம்சனுக்கு ஆதரவாக வெகுண்டெழுந்த ரசிகர்கள் சைனீஸ் ஸ்டைலில் ஜிஞ்சர் கார்லிக் சிக்கன் செய்யலாம் வாங்க! முதன்முதலில் ரூ.1 கோடி சம்பளம் வாங்கிய தமிழ் ஹீரோ ராஜ்கிரண் தான்... அதுவும் எந்த படத்துக்காக தெரியுமா? அதிமுகவை பலவீனப்படுத்தியதே ஓபிஎஸ்,ஈபிஎஸ் தான்..! டிடிவி தினகரன் திடீர் பாய்ச்சல் Recent Videos லவ் டுடே பாணியில் வித்தியாசமான கதைகளத்தில் ஜீவா நடித்துள்ள ‘வரலாறு முக்கியம்’ படத்தின் டிரைலர் வெளியானது
உக்ரைன் நெருக்கடிக்குத் தீர்வுகாண, “ஆக்கப்பூர்வமான பங்கை” வகிக்கத் தயாராக இருப்பதாக சீன அதிபர் ஜி ஜின்பிங் புதன்கிழமை தெரிவித்ததாக, சீன அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. ரஷ்யப் பிரதிநிதியான விளாடிமிர் புட்டினுடனான ஒரு தொலைபேசி உரையாடலில், “சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் ஒரு பொறுப்பான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும், இதனால் உக்ரேனில் நெருக்கடிக்கு சரியான தீர்வு காணப்பட வேண்டும்” என்று கூறினார். “சீனா தனது ஆக்கப்பூர்வமான பாத்திரத்தை வகிக்க தயாராக உள்ளது,” என்று சீன அரசு நடத்தும் தொலைக்காட்சி Xi மேற்கோள் காட்டியது. சீனா எப்போதுமே வரலாற்றுச் சூழல் மற்றும் பிரச்சினையின் தகுதிகளின் அடிப்படையில் நிலைமையை சுயாதீனமாக மதிப்பிடுகிறது என்றும், உலக அமைதி மற்றும் உலகப் பொருளாதார ஒழுங்கின் ஸ்திரத்தன்மையை தீவிரமாக ஊக்குவித்து வருவதாகவும் சீன அதிகாரபூர்வ செய்தி நிறுவனம் சின்ஹுவா தெரிவித்துள்ளது. உக்ரைன் நெருக்கடிக்கு பொறுப்பான முறையில் தீர்வு காண அனைத்து தரப்பினரும் அழுத்தம் கொடுக்க வேண்டும், இந்த நோக்கத்திற்காக சீனா தொடர்ந்து தனது பங்கை வகிக்கும் என்று ஜி கூறினார். எக்ஸ்பிரஸ் பிரீமியத்தில் சிறந்தது பிரீமியம் பிரீமியம் பிரீமியம் பிரீமியம் எவ்வாறாயினும், ரஷ்யா-உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு மத்தியஸ்தம் செய்ய Xi முன்வந்தாரா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை, பெய்ஜிங்கின் முந்தைய தயக்கத்தை நீக்குகிறது. ரஷ்யாவின் நெருங்கிய நட்பு நாடான சீனா, உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பைக் கண்டிக்க மறுத்துவிட்டது, புடின் ஒரு சிறப்பு இராணுவ நடவடிக்கையைத் தொடங்கினார், இது அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் ரஷ்யா மீது கடுமையான தடைகளை விதிக்கவும், கியேவுக்கு ஆயுத விநியோகத்தை அதிகரிக்கவும் வழிவகுத்தது. பிப்ரவரி 24 அன்று மாஸ்கோ உக்ரைன் மீது முழு அளவிலான படையெடுப்பைத் தொடங்கியபோது ரஷ்ய-உக்ரைன் மோதல் போராக மாறியது. புடின் தனது பங்கிற்கு, Xi இன் வலுவான தலைமையின் கீழ் சீனாவின் குறிப்பிடத்தக்க வளர்ச்சி மற்றும் சாதனைகளை வாழ்த்துகையில், சீன அதிபரின் புதிய முயற்சிகளான Global Security Initiative (GSI) க்கு ரஷ்யாவின் ஆதரவை வெளிப்படுத்தினார் மற்றும் சீனாவின் உள் விவகாரங்களில் தலையிடும் எந்த சக்தியையும் எதிர்த்தார் Xinjiang, Hong Kong மற்றும் Taiwan போன்ற பிரச்சினைகள், மற்றவற்றுடன், ஒரு தவிர்க்கவும். சீனாவுடன் பலதரப்பு ஒருங்கிணைப்பை வலுப்படுத்த ரஷ்யா தயாராக உள்ளது என்று அவர் குறிப்பிட்டார், இதனால் உலகின் பன்முகத்தன்மையை அதிகரிப்பதில் ஆக்கபூர்வமான முயற்சிகளை மேற்கொள்வதற்கும், மேலும் நியாயமான மற்றும் நியாயமான சர்வதேச ஒழுங்கை நிறுவுவதற்கும், Xinhua அறிக்கை கூறியது. புட்டினுடனான தனது உரையாடலின் போது, ​​இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து, சீனாவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் உலகளாவிய கொந்தளிப்பு மற்றும் மாற்றங்களை எதிர்கொள்வதில் ஒரு நல்ல வளர்ச்சி வேகத்தை பராமரித்து வருவதாகக் குறிப்பிட்டார். இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார மற்றும் வர்த்தக ஒத்துழைப்பு நிலையான முன்னேற்றத்தை அடைந்துள்ளது, ஹெய்ஹே-பிளாகோவெஷ்சென்ஸ்க் குறுக்கு-எல்லை நெடுஞ்சாலை பாலம் போக்குவரத்திற்கு திறக்கப்பட்டுள்ளது, இரு நாடுகளையும் இணைக்கும் புதிய சேனலை உருவாக்குகிறது என்று ஜி கூறினார். நடைமுறை இருதரப்பு ஒத்துழைப்பின் நிலையான மற்றும் நீண்ட கால வளர்ச்சிக்கு அழுத்தம் கொடுப்பதற்காக ரஷ்ய தரப்புடன் இணைந்து பணியாற்ற சீன தரப்பு தயாராக உள்ளது என்று ஜி கூறினார். இறையாண்மை மற்றும் பாதுகாப்பு, அத்துடன் அவர்களின் முக்கிய அக்கறைகள், தங்களின் மூலோபாய ஒருங்கிணைப்பை ஆழப்படுத்துதல் மற்றும் ஐக்கிய போன்ற முக்கியமான சர்வதேச மற்றும் பிராந்திய அமைப்புகளில் தொடர்பு மற்றும் ஒருங்கிணைப்பை வலுப்படுத்துதல் ஆகியவற்றில் ஒருவருக்கொருவர் தொடர்ந்து ஆதரவளிக்க ரஷ்யாவுடன் இணைந்து பணியாற்ற சீனா தயாராக உள்ளது. நாடுகள், பிரிக்ஸ் அமைப்பு மற்றும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு, என்றார். வளர்ந்து வரும் சந்தை நாடுகள் மற்றும் வளரும் நாடுகளிடையே ஒற்றுமை மற்றும் ஒத்துழைப்பை மேம்படுத்தவும், சர்வதேச ஒழுங்கு மற்றும் உலகளாவிய நிர்வாகத்தை மிகவும் நியாயமான மற்றும் நியாயமான திசையை நோக்கி நகர்த்தவும் ரஷ்யாவுடன் இணைந்து பணியாற்ற சீனா தயாராக உள்ளது.
வெளியீட்டு நேரத்தில், ஃபெடெக்ஸ் ஒரு கணினியை அனுப்புவதற்கான மலிவான கட்டணங்களை தொடர்ந்து வழங்கியது, ஆனால் விநியோக நேரம், சேவை கட்டணம் மற்றும் கப்பல் விருப்பங்கள் யு.எஸ். தபால் சேவை, யுபிஎஸ் மற்றும் ஃபெடெக்ஸ் இடையே பெரிதும் மாறுபடும். ஒரு நிறுவனம் டெஸ்க்டாப் கம்ப்யூட்டர் சிஸ்டம்ஸ் போன்ற பெரிய, பெரிய பொருட்களுக்கு குறைந்த விலையில் சேவையை வழங்கக்கூடும், ஆனால் செலவு குறைந்த வார இறுதி விநியோகத்தைக் கொண்டிருக்கவில்லை. மற்றொரு நிறுவனம் மலிவான சிறிய அளவிலான கப்பல் போக்குவரத்தை வழங்கக்கூடும், ஆனால் நிகழ்நேர கண்காணிப்பு சேவைகளுக்கு அதிக கட்டணம் வசூலிக்கலாம். நீங்கள் அனுப்பும் முன் ஒப்பீட்டு ஷாப்பிங் தான் சிறந்த ஒப்பந்தத்தைப் பெறுவதை உறுதி செய்வதற்கான ஒரே வழியாகும். கப்பல் செலவு கால்குலேட்டர்கள் யு.எஸ். தபால் சேவை, யுபிஎஸ் மற்றும் ஃபெடெக்ஸ் ஆகிய மூன்று சேவைகளும் அந்தந்த வலைத்தளங்களில் கப்பல் செலவு கால்குலேட்டர்களை வழங்குகின்றன (வளங்களில் இணைப்புகளைப் பார்க்கவும்). நகரம் மற்றும் மாநிலம் அல்லது ஜிப் குறியீடு, மற்றும் கப்பல் எடை மற்றும் மதிப்பிடப்பட்ட பரிமாணங்களைப் பயன்படுத்தி, தோற்றம் மற்றும் விநியோக இடங்கள் இரண்டையும் வழங்குமாறு கேட்கப்படுவீர்கள். உங்கள் கப்பல் கட்டணக் கணக்கீடு மூலம், காப்பீடு, டெலிவரி மீது கையொப்பம் மற்றும் மேம்பட்ட கண்காணிப்பு திறன்கள் போன்ற கூடுதல் சேவைகளைச் சேர்க்கவும் நீங்கள் தேர்வு செய்யலாம். டெஸ்க்டாப் கணினி ஏற்றுமதி ஒப்பீடு டெஸ்க்டாப் கணினிகள் அவற்றின் சுத்த அளவு மற்றும் எடை காரணமாக மிகப்பெரிய கப்பல் சவாலை வழங்கும், ஆனால் நீங்கள் ஒரு ஆப்பிள் ஐமாக் டெஸ்க்டாப் கம்ப்யூட்டரை அனுப்புகிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள், இது மேக்வொல்ட் 17 அங்குல அகலத்திலும் உயரத்திலும், 7 அங்குல ஆழத்திலும் 19 பவுண்டுகளிலும் அளவிடும். வெளியீட்டு நேரத்தில், நீங்கள் நாடு முழுவதும் கப்பல் அனுப்புகிறீர்களோ அல்லது ஒரு சில மாநிலங்களுக்கு அப்பால் இருந்தாலும், ஃபெடெக்ஸ் மலிவான விருப்பத்தை வழங்குகிறது. புளோரிடாவிலிருந்து கலிபோர்னியாவிற்கு ஒரு கப்பல் முழு கண்காணிப்புடன் நான்கு நாள் டெலிவரிக்கு $ 30 க்கு கீழ் உள்ளது; இதேபோன்ற ஏற்றுமதி அஞ்சல் அலுவலகத்தில் $ 35 மற்றும் யுபிஎஸ் உடன் $ 36 ஆகும். புளோரிடாவிலிருந்து நியூ ஜெர்சிக்கு கப்பல் அனுப்புவது ஃபெடெக்ஸுடன் $ 17 மட்டுமே, ஆனால் யுபிஎஸ் உடன் $ 23 மற்றும் யு.எஸ். தபால் சேவையுடன் $ 27. லேப்டாப் அல்லது டேப்லெட் ஷிப்பிங் ஒப்பீடு ஒரு டேப்லெட் அல்லது மடிக்கணினி பரிமாணம் மற்றும் எடை இரண்டிலும் சிறியது, இது எப்போதும் மலிவான கப்பல் போக்குவரத்துக்கு வழிவகுக்கும். டெல்லின் வலைத்தளத்தின்படி, உற்பத்தியாளரின் இன்ஸ்பிரான் 15 மடிக்கணினி, 5 பவுண்டுகளுக்கும் குறைவான எடையைக் கொண்டது மற்றும் 15 அங்குல அகலமும், 10 அங்குல உயரமும், ஒரு அங்குல தடிமனும் கொண்டது. வெளியீட்டு நேரத்தில், ஃபெடெக்ஸ் குறுக்கு நாட்டு கப்பல் போக்குவரத்துக்கான போட்டியை வென்று, நான்கு நாள் விநியோகத்திற்கு $ 13 வசூலிக்கிறது, யு.எஸ். தபால் சேவையுடன் $ 14 மற்றும் யுபிஎஸ் உடன் $ 19. புளோரிடாவிலிருந்து நியூ ஜெர்சிக்கு அனுப்பப்பட்ட அதே தொகுப்பு யு.எஸ். தபால் சேவை அல்லது ஃபெடெக்ஸுடன் $ 11 ஆகும், அதே நேரத்தில் யுபிஎஸ் அதே தொகுப்புக்கு $ 16 வசூலிக்கிறது. மூன்று நிறுவனங்கள் ஒப்பிடுகையில் இந்த கட்டுரையின் வெளியீட்டின் போது ஃபெடெக்ஸ் தொடர்ச்சியாக மிகக் குறைந்த கப்பல் விருப்பங்களை வழங்கியது, ஆனால் உங்கள் விருப்பப்படி பல கூடுதல் காரணிகள் உள்ளன. எடுத்துக்காட்டாக, யு.எஸ். தபால் சேவை மட்டுமே இலவச சனிக்கிழமை விநியோகத்தையும் அஞ்சல் அலுவலக பெட்டிகள், இராணுவ தபால் நிலையங்கள் (APO கள்) மற்றும் கடற்படை தபால் நிலையங்கள் (FPO கள்) ஆகியவற்றிற்கும் அனுப்புகிறது. மறுபுறம், ஃபெடெக்ஸ் மற்றும் யுபிஎஸ் இரண்டும் விரிவான கண்காணிப்பு சேவைகளை வழங்குகின்றன. கூடுதலாக, நுகர்வோர் செலவு நுண்ணறிவுக்கு கூடுதலாக, ஒப்பீட்டு தயாரிப்பு மற்றும் சேவை மதிப்புரைகளை வழங்கும் ஒரு நிறுவனமான சீபிசம்.காம் படி, ஃபெடெக்ஸ் மற்றும் யுபிஎஸ் இரண்டும் வாடிக்கையாளர் சேவை திருப்தி கணக்கெடுப்புகளில் தபால் அலுவலகத்தை விட தொடர்ந்து அதிக மதிப்பெண்களைப் பெற்றுள்ளன. பேக்கேஜிங் பரிசீலனைகள் முடிந்தால், கணினியை அதன் அசல் பெட்டி மற்றும் பொதி பொருள்களைப் பயன்படுத்தி அனுப்புவது எப்போதும் சிறந்தது. இல்லையெனில், ஒரு பெட்டியைத் தேர்ந்தெடுக்கவும் - இது நீங்கள் முன்பு பயன்படுத்திய ஒன்று அல்லது கணினிக்காக நீங்கள் குறிப்பாக வாங்கிய ஒன்று - இது மின்னணு சாதனங்களின் எல்லா பக்கங்களிலும் குறைந்தது ஒரு அங்குல கூடுதல் இடத்தை வழங்குகிறது. இது ஸ்டைரோஃபோம் வேர்க்கடலை அல்லது குமிழி மடக்கு போன்ற பேக்கேஜிங் பொருட்களுக்கு நிறைய இடத்தை அளிக்கிறது. போதுமான அளவு சீல் டேப்பைக் கொண்டு பெட்டியைப் பாதுகாக்கவும், அனைத்து முகவரித் தகவல்களும் இருண்ட மையில் தெளிவாக அச்சிடப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்தவும்.
நம்ம ஊருக்கு என்னதான் ஆச்சு? நல்ல காமெடி படங்கள் ஏன் ஓடுவதில்லை என்று இரண்டு நாளாக ஒரே விசனம். விக்கித்து கக்கித்து தொண்டையை அடைத்துவிட்டது துக்கம். அக்மார்க் அன்ட்ரட் பர்சென்ட் காமெடிபடமான நிமிர்ந்து நில்லே ஒடவில்லை என்றால் வேறு என்னபடம்தான் சார் இந்த ஊரில் ஓடும். உங்களுக்கெல்லாம் எப்படிப்பட்ட படத்தைத்தான் சார் எடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள். ஒரு விநாடி கூட படம் பார்ப்பவர் சோர்ந்து விடக்கூடாதென்று நொடிக்குநொடி நொடிக்கு நொடி கஷ்டப்பட்டு வியர்வையை சிந்தி உழைத்து சிரிப்பு வெடியை கிள்ளிப்போட்டுக்கொண்டேயிருந்த அற்புதமான கலைஞர்களை இப்படித்தானே தோற்டித்து அவமதிக்கிறோம். ( விறுவிறுப்பான விமர்சனத்துக்கு நடுவில் ஒரு சின்ன விளம்பர இடைவேளை – உலகெங்கும் நல்ல காமெடி படங்கள் நாடகங்கள் மற்றும் போட்டோக்கள் வந்து மக்கள் எப்போதும் சிரித்தமூஞ்சியுடன் இன்பமாக சந்தோஷமாக வாழ ஆதரிப்பீர் போடிசார்கார் ‘’ஆப் கீ பார் போடி சர்க்கார்’’) இது எந்தளவுக்கு சிறப்பான காமெடி படம் என்பதை விளக்க படத்தின் சில விஷயங்களை மட்டும் சாம்பிளுக்கு பார்ப்போம். முதலில் படத்தின் தலைப்பிலிருந்து தொடங்குவோம். தலைப்பே மிகச்சிறந்த பொலிடிகல் சட்டையர்! இன்று தமிழக அமைச்சர்களை பீடித்திருக்கிற கொடிய நோயான குனிஞ்சமேனியாவை சாடுகிற வகையில் நிமிர்ந்து நில் என்று தலைப்பு வைத்ததிலேயே சமுத்திரக்கனியின் நகைச்சுவை உணர்ச்சி பளிச்சிடவில்லையா!. அம்மாவுக்கோ அதிமுக அம்மாஞ்சிகளுக்கோ இந்த விஷயம் புரியவில்லை போலிருக்கிறது. புரிந்திருந்தால் தடை விதித்திருப்பார்கள். அதிமுக தொண்டர்களுக்கு இதெல்லாம் புரிகிற அளவுக்கு மூளை இருந்தால் இந்நேரம் கட்சியை விட்டு போய் ஏதாவது மானம் மரியாதை கிடைக்கிற கட்சிக்கு மாறியிருப்பார்களே. பல அதிரடி ஆக்சன் காமெடி காட்சிகள் நிறைந்த படம்தான் நிமிர்ந்து நில் என்றாலும் எமோஷனல் காட்சிகளுக்கு குறைவேயில்லை. இந்தப்படத்தில் அம்மாவின் தொண்டர்களில் முக்கியமானவர்களில் முக்கியமானவரான சரத்குமார் கூட இருக்கிறார். அவர்தான் சிபிஐ ஆபீசர். படத்தில் வருகிற முதலமைச்சர் போர் அடிக்கும்போதெல்லாம் சரத்குமாரை கூட்டிவந்து நிற்கவைத்து நாக்கை புடுங்கிக்கொள்வதுபோல திட்டுகிறார். சரத்குமாரும் நெளிந்து நெளிந்து வாங்கிக்கொள்கிறார். உண்மைக்கு நெருக்கமாக படமெடுக்க வேண்டியதுதான் அதுக்காக இப்படியா..? ஒருமுறை முதலமைச்சரிடம் திட்டுவாங்கிவிட்டு சோகமாக தன்னந்தனியாக அழாத குறையாக புலம்பிக்கொண்டே வருகிற காட்சியில்தான் எவ்வளவு இயல்பாக உண்மையாக அய்யுய்யயோ பார்க்கிற யாருக்குமே கண்கள் கலங்கி குளமாகிவிடும். அப்படி ஒரு காட்சி. படத்தின் முதல் காட்சியிலேயே அப்பா இல்லாத பையனான ஜெயம் ரவியை நாமக்கல் கோழிப்பண்ணை ஸ்கூல் ஒன்றில் கொண்டுபோய் சேர்த்து வன்கொடுமை செய்கிறார் அவருடைய அம்மா! எப்பயும் மாநிலத்திலேயே முதல் மதிப்பெண் அந்த பள்ளி மாணவர்கள்தான் வாங்குவாங்களாம், பெருமையாக சொல்லுவார் ஸ்கூல் ஓனர் நாசர். அந்த நாமக்கல் கோழிப்பண்ணையில் 12 ஆண்டுகள் படிக்கும் ஜெயம்ரவிக்கு ஒரு கல்லூரியில் சீட்டு கிடைக்கிறது அங்கே ஐந்தாண்டுகள் படிக்கிறார். இதெல்லாம் முதல் ஐந்து நிமிடத்தில் காட்டப்படுகிறது. வாழ்க்கையின் 12ஆண்டுகளை கோழிப்பண்ணையிலும் பிறகு 5 ஆண்டுகள் ஆட்டுமந்தையிலும் கழித்துவிட்டவரை, திடீரென படிப்பு முடிந்துவிட்டது உனக்கு வயசாகிடுச்சு என சொல்லி வெளியே விரட்டிவிடுகிறார்கள். 17ஆண்டுகள் என்னதான் படித்தாரோ ஒரு மண்ணாங்கட்டியும் தெரியாத மரமண்டையாக ஊருக்குள் வருகிறார். சின்னத்தம்பி பிரபுவுக்காச்சும் தாலியைத்தவிர குஷ்புவோடு டூயட் பாடுகிற கிஸ்ஸடிக்கிற சாந்திமுகூர்த்தம் பண்ணுகிற அளவுக்கு உலகம் தெரியும். ஆனால் ஸ்டேட் பஸ்ட் எடுத்த பெரியதம்பி ஜெயம்ரவிக்கோ அதுகூட தெரியாத அப்பாவியாக இருக்கிறார். அமலாபால்தான் படம் முழுக்க ஜெயம்ரவியைப்போட்டு கஷ்டப்படுத்துகிறார். டூயட் காட்சிகளில்கூட ஜெயம்ரவிக்கு என்ன செய்வதென்று தெரியாமல்தீடிர் தீடிர் என அமலாபாலின் இடுப்பை பிடித்துக்கொண்டு ஃபீல்பண்ணுகிறார் பாவம்! அப்பாவி அம்பியான ஜெ.ரவி 17வருடமாக ரோட்டுக்கு கூட வந்ததில்லை போல! சாலையில் நடக்கும்போது ஒரமாக நடக்க வேண்டும் என்பதுகூட தெரியாமல்.. முதல் காட்சியிலேயே ஒன்வேயில் நடுரோட்டில் நடக்கிறார்.. அந்த வழியாக போகிற ஆட்டோக்காரர் கேவலமாக திட்டிவிட்டு போகிறார். அவரை சுற்றி எல்லோரும் செல்போனில் பேசுகிறார்கள் கம்ப்யூட்டரில் காதலிக்கிறார்கள் மிரண்டு போய் பார்க்கிறார்! ஒரே பெண் நாலைந்து பேரை காதலிக்கிறார் என்று கோபப்படுகிறார். சூரிதான் வந்து உலகத்தை அவருக்கு புரியவைக்கிறார்! ஜெயம்ரவிக்கு அம்மாவின் பொற்கால ஆட்சியில் தீயசக்திகளின் சதியான் கட்டான மின்வெட்டு பிரச்சனை கூட தெரியவில்லை பாருங்கள். இயங்காத ட்ராபிக் சிக்னலில் நின்றுகொண்டு டிராபிக் ஜாம் பண்ணுகிறார். அவரால் போக்குவரத்து நெரிசல் உண்டாகிறது. அதுபோதாதென்று போலீஸ்காரர் மூஞ்சியில் பீச்சாங்கையை வைத்து கடுப்பேத்துகிறார்! கேட்டால் அப்பாவியாம்… பஸ்ஸிலேயே வாழ்க்கையில் பயணிக்காத அந்த அப்பாவியின் பேண்டிலிருந்து ஒருவர் பர்ஸை திருடிவிடுகிறார்.. அய்யோ என் பர்ஸு என்று கதறுகிறார் ஹீரோ! அவரை விரட்டிக்கொண்டு ஓடினால் திருடனை விட்டுவிட்டு இவரை பிடித்துக்கொள்கிறார்கள்… உஃப்.. இப்படி பார்ப்பவரை பதறவைக்கும் காட்சிகள் நிறைந்த படம்தான் இது. இப்படி பல பாதிப்புகளுக்கு உள்ளாகும் ஹீரோவை ஜெயிலில் போட்டுவிட அங்கே சப்பளாங்கட்டை போட்டு அமர்ந்திருக்கிற அவருக்கு ஞானம் வருகிறது! உடனே அம்மா அப்பா முயல் பூனை உலகம் கவர்மென்ட் ஆபீஸ் லஞ்சம் ஊழல் அக்கிரமம் ரமணா ஜென்டில்மேன் முதல்வன் அன்னா ஹசாரே அர்விந்த் கேஜரிவால் நீயா நான என எல்லாமே தெரிந்துவிடுகிறது. உடனே இயக்குனரும் மேற்சொன்ன படங்களிலிருந்து கொஞ்ச கொஞ்ச சீன்களை பொறுக்கிப்போட்டு புயலென புறப்பட்ட ஜெயம்ரவியின் உதவியோடு இந்தியாவை வல்லரசாக மாற்றுகிறார். படம் முழுக்க ஏகப்பட்ட மெசேஜ்களை சொல்லிக்கொண்டே இருக்கிறார் இயக்குனர். உலகில் இருக்கிற எல்லா துன்பங்களுக்கும் காரணம் ஆசை என்றார் புத்தர். ஆனால் இயக்குனர் எல்லா பிரச்சனைக்கும் காரணம் அரசு அலுவலகங்களில் வாங்குற லஞ்சம்தான் அதை ஒழிச்சிட்டா இந்தியாவை வல்லரசாக்கிடலாம் என்கிறார். அடடா! விடாப்பிடியாக ஜெயம்ரவியையும் கோபிநாத்தையும் போட்டு பிதுக்கி லஞ்சம் ஊழலை ஒழித்துக்கொண்டிருக்கும்போதுதான் தான் எடுத்துக்கொண்டிருப்பது சினிமா என்று நினைவு வருகிறது இயக்குனருக்கு உடனே ஆந்திராவிலிருந்து நாலைந்து ஆன்ட்டிகளை அழைத்துவந்து ஜாலியாக கவர்ச்சி டான்ஸ் ஆடவிடுகிறார்! அவர்களும் வாங்கின காசுக்கு வஞ்சகம் பண்ணாமல் ஆட்டி ஆட்டி ஆடுகிறார்கள். நாலைந்து டாடா சுமோகளை பறக்கவிடுகிறார். ஜெயம்ரவி டபுள் ஆக்சனில் சண்டைபோடுகிறார் சமூகசீந்தனை பீய்ச்சி அடித்து படம் பார்ப்பவர் முகத்தில் தெறிக்கிறது! எப்போதும் போல இறுதியில் தர்மம் வெல்கிறது. அவ்வளவு பிராடு வேலைகள் பண்ணின ஜெயம்ரவியை ‘’இந்த கோர்ட்’’ எப்போதும் போல விடுதலை செய்துவிடுகிறது! படம் முடிய லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்து ஆடியன்ஸெல்லாம் பிட்ஸ்வந்ததுபோல விரைப்பாக நிமிர்ந்துநிற்கிறார்கள்.
இப்பழம் கீமோ தெராப்பி எனும் இராஸயன சிகிச்சை முறையைவிட 10000 மடங்கு அதிக சக்தியுடன் புற்று நோய் அல்லது புற்று அணுக்களைக் கொல்ல வல்லது. ஆங்கிலத்தில் Sour Sop பழம் அல்லது Graviola மரத்தின் பழமான இது ஒரு வகை சீத்தா பழமாகும். இது ஓர் அற்புதமான புற்று நோய் கொல்லியாகும். கீமோ அல்லது இரஸாயன சிகிச்சையைவிட 10,000 மடங்கு அதிக சக்தியுடன் இயங்கவல்லது. நாம் இது பற்றி ஏன் இன்னமும் அறியாது இருக்கின்றோம்? பல பெரிய நிறுவனங்கள் பல ஆண்டுகளான புற்றுநோய் ஆய்விற்காக செலவளித்த பணத்தை மீண்டும் பெறுவதற்காக இப்பழத்தின் முக்கிய அம்சங்களை செயற்கையாக வெளியிட முயன்றுகொண்டிருக்கின்றன, அதனால்தான். ஆகவே, இதுபற்றி நீங்கள் இப்போது அறிந்துள்ளதால் உங்களுக்குத் தெரிந்தோருக்கு இப்பழத்தைப் பற்றி அறிவிக்கலாம். நீங்களும் அவ்வப்போது இப்பழத்தை உண்ணவோ அதன் இரசத்தைப் பருகியோ வரலாம். இனிப்பும் புளிப்பும் கலந்த இதன் சுவை பருகுவதற்கு மிகவும் நன்றாக இருக்கும். முற்றிலும் இயற்கையானதால் இதனால் பக்க விளைவுகள் ஏதும் ஏற்படாது. உங்கள் தோட்டத்தில் இப்பழமரத்தை நீங்களும் நட்டுவைக்கலாம். இப்பழமரத்தின் பிற பாகங்களுக்கும் பல பயன்கள் உண்டு. மேற்கொண்டு விவரங்களுக்கு “Graviola fruit” என கூகிள் செய்யவும் ஆசிரியர் prsamyபிரசுரிக்கப்பட்டது 4 ஜனவரி, 2014 8 ஓகஸ்ட், 2014 பிரிவுகள் உடல்நலம்குறிச்சொற்கள் சீத்தா பழம்,புற்ற நோய்Leave a comment on உடல்நலம் – கிராவியோலா பழம் (சீத்தா பழ வகை) மனோபலம் உடையோர் தவிர்க்கும் 13 விஷயங்கள் 1. அவர்கள் தங்கள் நிலையை நினைத்து எப்போதுமே வருத்தப்படுவதில்லை. தங்களின் சூழ்நிலை குறித்தோ தாங்கள் நடத்தப்படும் விதம் குறித்தோ புண்படுத்தப்படும் விதம் குறித்தோ என்றுமே வருந்துவதில்லை. அவர்கள் தங்களின் செயல்களுக்கும் அவற்றின் விளைவுகளுக்கும் பொறுப்பேற்கக் கற்றுக்கொண்டுள்ளனர். தங்கள் செயல்களுக்கான காரணத்தை அவர்கள் பிறர் மீது சாற்றுவதில்லை வாழ்க்கையில் நடப்பவை அடிக்கடி நியாயமற்றவையாக இருக்கும் என்பதை அவர்கள் இயல்பாகவே உணர்ந்துள்ளனர். மிகவும் சோதனைமிகு காலங்களிலிருந்து தாங்கள் அடைந்த கற்றல் குறித்து சுய விழிப்புணர்டனும் நன்றியுடனும் வெளிப்படுகின்றனர். ஒரு சூழ்நிலை மிகவும் மோசமாகும் போது அவர்கள் “பரவாயில்லை” அல்லது “அடுத்து என்ன” என்பன போன்ற சொற்றொடர்களைப் பயன்படுத்துவர். 2. தங்களின் சக்தி பறி்க்கப்பட அவர்கள் அனுமதிப்பதில்லை மனோபலம் உடையவர்கள் பிறர் தங்களைச் சிறுமைப்படுத்தவோ புண்படுத்தவோ அனுமதிப்பதில்லை. அவர்கள் தங்களின் செயல்கள், உணர்ச்சிகள் ஆகியவை தங்களின் கட்டுப்பாட்டிற்குட்டவை என்பதைப் புரிந்துகொண்டுள்ளனர். அவர்கள் புறவிஷயங்களுக்குத் தாங்கள் எவ்வாறு பதில்செயல்படுகின்றனர் என்பதிலேயே தங்களின் வலு அடங்கியுள்ளது என்பதை உணர்ந்துள்ளனர். 3. சூழ்நிலையில் ஏற்படும் மாற்றங்களைக் கண்டு பயப்படுவதில்லை. மனோபலம் உடையவர்கள் மாற்றங்களை ஏற்றுக்கொண்டும் சவல்களை வரவேற்கவும் செய்கின்றனர். பயம் என அவர்களுக்கு ஒன்றிருப்பின் அது தாங்கள் அறியாதனவற்றைக் கண்டல்ல மாறாக, தாங்கள் தேக்க நிலை, நிலவும் சூழலில் மனநிறைவு ஆகியவற்றை அடைந்திடுவோமா என்பதிலேயே பெரிதும் பயப்படுகின்றனர். மாற்றம், நிலையில்லாமை ஆகியவற்றை உடைய ஒரு சூழல் மனோபலம் மிக்க ஒருவருக்கு ஆற்றலளிக்கவே செய்து அவர்களைச் சிறப்பாகச் செயல்படச் செய்கின்றன. 4. தங்களால் கட்டுப்படுத்த முடியாத விஷயங்களில் தங்களின் சக்தியை அவர்கள் விரயம் செய்வதில்லை காலையில் வேலைக்குச் செல்லும்போது வாகன நெரிசல், தொலைந்துபோன பயணப்பெட்டி அல்லது பிறர் குறித்து அவர்கள் குறை கூறிக்கொண்டிருப்பதில்லை. ஏனெனில், இவை யாவுமே தங்களின் சக்திக்கு அப்பாற்பட்டவை என்பதை அவர்கள் உணர்ந்துள்ளனர். தங்களின் மறுமொழி, பதில்செயல்கள், மனப்பாங்கு ஆகியவையே ஒரு மோசமான சூழலில், தாங்களால் கட்டுப்படுத்தக்கூடியவை என்பதை அவர்கள் உணர்ந்துள்ளனர். 5. பிறரை எவ்வாறு தாங்கள் திருப்திபடுத்தக்கூடும் என்பது பற்றி கவலைப்படுவதில்லை. பிறரைச் சதா திருப்திபடுத்துவதிலேயே தங்களின் வாழ்நாளை வீணாக்குவோரைச் சந்தித்துள்ளீர்களா? அல்லது, அதற்கு எதிர்மாறாக, தாங்கள் ஆற்றல்மிக்கவர்கள் எனும் இமேஜை வலுப்படுத்துவதற்காகப் பிறரை புண்படுத்துவோரைச் சந்தித்துள்ளீர்களா? இவ்விரண்டுமே நல்லதல்ல. மனோபலம் மிகுந்தவர்கள் பிறர்பால் அன்புடனும் நியாயத்துடனும் நடந்துகொள்வர், மற்றும் தேவைப்படும்போது மட்டுமே பிறரைத் திருப்திபடுத்துவர், ஆனால் நியாயத்தை எடுத்துரைப்பதற்கு அவர்கள் பயப்படமாட்டார்கள். அதே வேளை, சிலர் மன அதிருப்தி அடையக்கூடிய சூழலை ஏற்றுக்கொண்டும் தேவைப்படும்போது அச்சூழலை வெகு நயத்துடன் சமாளிக்கவும் முற்படுவர். 6. நன்கு ஆலோசிக்கப்பட்ட ஆனால் அபாயகரமான நடவடிக்கைகளில் ஈடுபடுவது இடர்பாடான சூழ்நிலைகளில் நன்கு ஆலோசிக்கப்பட்ட ஆனால் அபாயமான நடவடிக்கைகளில் ஈடுபட தயங்கமாட்டார்கள். முட்டாள்தனமான முயற்சிகளில் கண்மூடித்தனமாக ஈடுபடுவதிலிருந்து இது பெரிதும் வேறுபட்டதாகும். மனவலிமையுடைய ஒரு தனிநபர், தான் எதிர்நோக்கக்கூடிய அபாயச் சூழ்நிலை மற்றும் அதனால் விளையக்கூடிய நற்பயன்களை வெகு விரிவாக கணக்கிட்டும் அச்சூழலில் உள்படையாகவுள்ள எதிர்மறையான விளைவுகளையும், ஏன், அதன் வெகு மோசமான விளைவுகளையும் விரிவாகக் கணக்கிட்ட பிறகே நடவடிக்கையில் ஈடுபடுவர். 7. கடந்தகால நினைவுகளிலேயே வாழ்வது கடந்தகால அனுபவங்களுக்கும் அவற்றிலிருந்து கற்றுக்கொண்டவற்றிற்கு ஒப்புமையளித்து அல்லது அவற்றை மனதார ஏற்றுக்கொள்வதில் ஓர் ஆற்றல் உள்ளடங்கியுள்ளது. ஆனால், கடந்தகால ஏமாற்றங்களில் அல்லது கடந்துசென்ற மகிழ்ச்சிகரமான நாள்களிலேயே தங்களின் மனோசக்தியை இலயித்திலிருக்கச் செய்வதை மனோபலம் மிக்கவர்களால் தவிர்த்திட முடியும். அவர்கள் தங்களின் பெரும்பாலான சக்தியை உகந்த நிகழ்கால மற்றும் எதிர்காலத்தை உருவாக்குவதில் செலவளிக்கின்றனர். 8. செய்த தவற்றையே அவர்கள் மீண்டும் மீண்டும் செய்வதில்லை பைத்தியம் எனும் வார்த்தையின் விளக்கம் நமக்கெல்லாம் தெரியும், அல்லவா? அதாவது, ஏற்கனவே அடையப்பட்டதைக் காட்டிலும் மேலும் மேலும் நல்ல விளைவை எதிர்பார்த்து ஒரே விதமான நடவடிக்கைகளில் மேற்கொள்வதாகும். மனோபலம் மிக்க ஒருவர் தனது கடந்தகால நடத்தைக்காக முழு பொறுப்பேற்றும் செய்யப்பட்ட தவறுகளிலிருந்து கற்றுக்கொள்ளவும் முயலுவார். சரியான, பலன்மிக்க வழியில் சுய-பிரதிபலிப்பு செய்திடும் ஆற்றலானது, வியத்தகு வெற்றியாளர் மற்றும் தொழில் முனைவர்களின் ஒரு வெகு வலுவான ஆற்றலாகும் என்பதை ஆய்வுகள் காட்டுகின்றன. 9. பிறர் வெற்றியைக் கண்டு வெறுப்படைவது பிறர் வெற்றியைக் கண்டும் அதனால் உண்மையான மகிழ்ச்சியும் உற்சாகமும் அடைவதற்கு மனவலிமை வேண்டும். மனோபலம் உடையோர் இந்த ஆற்றலைப் பெற்றுள்ளனர். பிறரின் வெற்றியைக் கண்டு அவர்கள் அவர்கள் பொறாமை கொள்வதில்லை (இருந்தபோதும் வெற்றியடைவதற்கு அந்த தனிநபர் என்ன செய்தார் என்பதற்கான அணுக்கக் குறிப்புகள் எடுத்திட அவர் தயங்கமாட்டார்.) குறுக்கு வழிகளைத் தேடாமல், வெற்றிகளுக்கான தங்களின் சொந்த வாய்ப்புகளுக்காக அவர்கள் கடுமையாக உழைத்திடவும் தயங்கமாட்டார்கள். 10. தோல்வியினால் மனமுடைவது ஒவ்வொரு தோல்வியும் மேம்பாடு அடைவதற்கான ஒரு வாய்ப்பாகும். பெரும் தொழில் முனைவர்கள் கூட தங்களின் ஆரம்ப முயற்சிகள் தோல்விகள் பலவற்றில் முடிந்தன என்பதை ஏற்றுக்கொள்வதற்குத் தயங்குவதில்லை. மனோபலம் மிக்கவர்கள், ஒவ்வொரு தோல்வியிலிருந்தும் கிடைக்கப்பட்ட கற்றல் தங்களின் இறுதி இலக்கை மேலும் அணுக்கமாக அடைவதற்கு உதவும் வரை அவர்கள் மீண்டும் மீண்டும் தோல்வியைத் தழுவிட தயங்குவதில்லை. 11. தனிமையைக் கண்டு பயப்படுவதில்லை மனோபலம் உடையோர் தாங்கள் தனிமையில் இருக்கும் நேரங்களை அனுபவிக்கவும் அவற்றைப் போற்றிப் பாதுகாக்கவும் செய்கின்றனர். மனம் சரியில்லாத நேரங்களை, பிரதிபலிக்கவும், திட்டமிடவும், உற்பத்தித்திறனை வளர்க்கவும் பயன்படுத்துகின்றனர். மேலும் முக்கியமாக, தங்களின் மகிழ்ச்சி, மனநிலை ஆகியவற்றை உயர்த்திட பிறரை நம்பியிருப்பதில்லை. பிறருடன் இருக்கும் வேளைகளில் மகிழ்ச்சியாக இருப்பது போன்றே அவர்கள் தனிமையில் இருக்கும் போதும் மகிழ்ச்சியாகவே இருக்கின்றனர். 12. உலகம் தங்களுக்குக் கடமைப்பட்டுள்ளது என எதிர்பார்ப்பதில்லை தற்போது நிலவிவரும் பொருளாதாரநிலையில், எல்லா மட்டங்களிலும் உள்ள நிர்வாகிகளும் ஊழியர்களும், தங்களின் தயார்நிலை, கல்வி ஆகியவற்றிற்கும் அப்பால், உலகம் தங்களுக்கு எவ்வகையிலும், ஊதியம், பலன்கள், சுகமான வாழ்க்கை ஆகியவை குறித்து கடமைப்படவில்லை எனும் விழிப்புணர்வை மேலும் மேலும் அதிகமாகப் பெற்றுவருகின்றனர். மனோபலம் மிக்கவர்கள் முயற்சி எனும் அரங்கின் ஒவ்வொரு கட்டத்திலும், உழைத்திடவும், தங்களின் சொந்த முயற்சியிலேயே வெற்றிபெறவும் தயார் நிலையில் இருப்பார்கள். 13. உடனடியான விளைவுகளை எதிர்பார்ப்பதில்லை எத்தகைய நடவடிக்கை அல்லது முயற்சியாக இருந்தபோதும், மனோபலம் மிக்க மக்கள் அவை நீண்டகாலத்திற்கு நீடிக்கக்கூடும் எனும் எண்ணத்திலேயே அதில் ஈடுபடுகின்றனர். உடனடி விளைவுகளுக்கான எதிர்பார்ப்பைத் தவிர்த்திட அவர்கள் தெரிந்துவைத்திருக்கின்றனர். அவர்கள் தங்களின் சக்தியையும் நேரத்தையும் கணக்காகச் செலவளித்தும் செல்லும் வழியில் கடக்கும் ஒவ்வொரு மைல்கல், ஏற்படும் சிறு சிறு வெற்றி ஆகியவற்றில் மகிழ்வுறுகின்றனர். அவர்களுக்கு “நிலைத்திருக்கும் ஆற்றல்” உள்ளது. உண்மையான மாற்றத்திற்கு நீண்ட காலம் தேவைப்படும் என்பதை அவர்கள் புரிந்துவைத்திருக்கின்றனர். உங்களுக்கு மனவலிமை உள்ளதா? உங்கள் திறன்களை மறுவலுப்படுத்திட நீங்கள் ஏன் இன்றே முயலக்கூடாது? ஆசிரியர் prsamyபிரசுரிக்கப்பட்டது 4 ஜனவரி, 2014 பிரிவுகள் பொதுகுறிச்சொற்கள் எதிர்பார்ப்பு,தவிர்க்க வேண்டியவை,மனவலிமை,மனோபலம்,முயற்சிLeave a comment on மனோபலம் உடையோர் தவிர்க்கும் 13 விஷயங்கள்
உள்ளதைக் கொண்டு போதுமாக்க வேண்டும் என்பதைப் பார்த்தோம். உள்ளதைக் கொண்டு போதுமாக்க வேண்டும் என்று சொன்னால் இந்த உலகத்திலேயே நாம் பார்க்கலாம்; நல்லவர்கள் எல்லாம் கஷ்டப்படுவார்கள். தீயவர்கள் எல்லாம் நல்ல நிலையில் இருக்கக்கூடிய ஒரு நிலையைப் பார்க்கிறோம். நேர்மையாக, சரியான அடிப்பûயில் இருக்கக் கூடியவன் ஏழ்மையில் வாடுவான். லஞ்சம் வாங்கி மோசடி செய்து ஹராமான அடிப்படையில் வியாபாரம் செய்பவன் செல்வச் செழிப்பில் இருப்பதைப் பார்க்கிறோம். பெரும்பாலும் இந்த நிலையில் தான் இருக்கின்றார்கள். நேர்மையாக நடப்பவர்களும் செல்வந்தர்களாக இருக்கிறார்கள். ஆனால் குறைவாக இருக்கிறார்கள். இப்படிப்பட்ட நிலையில் இது எப்படி நியாயம் என்ற ஒரு கேள்வி நமக்குள் எழுவதைப் பார்க்கிறோம். இதற்கு இஸ்லாம் பலவிதமான பதிலைத் தருகிறது. இந்த உலகத்தில் எப்படிப்பட்ட கோடீஸ்வரனாக இருந்தாலும் அவருக்கு 100 சதவீதம் நிறையிருக்கிறது என்று சொல்ல முடியாது. அவருக்குச் செல்வம் வேண்டுமானால் நிறையாக இருக்கலாம். மற்ற குறை இல்லை என்று சொல்ல முடியாது. உதாரணத்திற்கு, கோடீஸ்வரனாக இருப்பான்; ஆனால் கிட்னி ஃபெய்லியர் என்று கூறி விடுவார்கள். தனது சிறுநீரைக் கூட வெளியேற்ற முடியாமல் இருப்பார். இப்படி அல்லாஹ் குறை நிறையை இந்த உலகில் சரி சமமாகத் தான் போட்டிருக்கிறான். நாம் என்ன நினைக்கிறோம் என்றால் பணம் மட்டும் தான் செல்வம் என்று நினைக்கிறோம். ஆனால் பணம் இருந்து நோய் இருப்பவனை விட பணம் இல்லாமல் நோயின்றி இருப்பவன் சிறந்தவன் என்பதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். அல்லாஹ் மனிதனை குறை நிறையுடன் தான் படைத்திருக்கிறான். இப்படி ஒருவன் நினைப்பானேயானால் அவன் கவலைப்படமாட்டான். இக்கரைக்கு அக்கரை பச்சை என்று சொல்வார்களே! அது போல அனைத்தும் சமமாகத் தான் இருக்கும். உதாரணத்திற்கு, பெரிய பணக்காரராக இருப்பார். ஆனால் சுகர் என்று சொல்லி விடுவார்கள். இனிப்பு உண்ணக் கூடாது என்று கூறியிருப்பார்கள். அதேபோல சில நோய்களுக்கு மாமிசம் தின்னக் கூடாது என்று சொல்லி இருப்பார்கள். ஆனால் அவனுடைய வீட்டில் வேலை செய்யக் கூடியவன் வாய் ருசியாக சாப்பிடுவான். அவனைப் பார்த்து இவன் ஏங்குவான். அவன் செல்வம் வைத்திருந்தாலும் அவனால் விரும்பியதை உண்ண முடியாமல் அல்லாஹ் குறையைக் கொடுத்திருப்பதைப் பார்க்கிறோம். இந்த ஏற்றத் தாழ்வுகளை வைத்துக் கொண்டு அல்லாஹ்வை குறை சொல்லக் கூடிய அறிவிலிகளைப் பார்க்கிறோம். ஆனால் இப்படி ஏற்றத்தாழ்வு இருந்தால் தான் நல்லது. அப்போது தான் மனிதன் அல்லாஹ்விற்குப் பணிந்து நடப்பான். 100 சதவீதம் நிறையைக் கொடுத்தால் மனிதன் அல்லாஹ்விற்கு கட்டுப்பட்டு நடக்க மாட்டான். பின்னர் துஆ என்ற ஒன்று அவசியமாகாது. குறைகள் இருந்தால் தான் மனிதன் தனது தேவையை அல்லாஹ்விடம் கேட்பான். அப்போது தான் அவன் இறையச்சத்துடன் நடப்பான். இந்த ஏற்றத் தாழ்வைக் காட்டி இறை மறுப்புக் கொள்கையான நாத்திகத்தைப் பேசுகிறர்கள். உண்மையிலேயே இப்படிப் பட்ட ஏற்றத்தாழ்வை அல்லாஹ் இந்த உலகத்தில் ஆக்கியதன் மூலம் தான் அல்லாஹ் தான் ஹகீம் (ஞானமுள்ளவன்) என்பதை நிரூபிக்கின்றான். உதாரணத்திற்கு, அனைவருக்குமே கண் பார்வை நன்றாக இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். எவனாவது கண்ணைப் பற்றிச் சிந்திப்பானா? என்று பார்த்தால் சிந்திக்க மாட்டான். அதைப் பற்றியான அறிவு வளர்ந்திருக்காது. அதை வைத்துப் பிழைப்பு நடத்தக் கூடியவர்களின் நிலை என்னவாகும்? அவன் பாதிக்கப்படுவான். அதேபோல யாரும் நொண்டியாக இல்லாமல் நன்றாக நடக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். எவனும் காலைப் பற்றி சிந்தித்திருக்க மாட்டான். அப்படி கால் நொண்டியாக இருப்பதால் தான் அதைப் பற்றி, எலும்பை எப்படிச் சேர்ப்பது? என்று கண்டுபிடிக்கிறான். அதன் மூலம் ஒரு கூட்டம் பிழைப்பு நடத்துகிறது. உதாரணத்திற்கு எடுத்துக் கொள்வோம். அல்லாஹ் அனைவருக்கும் ஒரு கோடி ரூபாய் தந்து விட்டான் என்று வைத்துக் கொள்வோம். நிலைமை என்னவாகும்? இந்த உலகம் ஒரு வாரம் கூட இயங்காது; அழிந்து விடும். எவனும் வேலைக்குப் போகமாட்டான். இப்போதே அரசின் இலவசத் திட்டங்களால் வேலைக்குச் செல்பவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாகச் செய்திகள் கூறுகின்றன. எல்லோரிடமும் காசு இருந்தால் யார் வேலை செய்வார்கள்? இதை வைத்து அல்லாஹ்வை குறை கூறப் பயன்படுத்துகிறார்கள். ஆனால் இதன் மூலமாகத் தான் அல்லாஹ், ஞானமிக்கவன் எனபதை நிரூபிக்கிறான். எனவே இப்படி இருந்தால் தான் ஒருவர் மற்றவரைச் சார்ந்து இருப்பார். உதாரணத்திற்கு வியாபாரியைச் சார்ந்து மக்கள்; மக்களை சார்ந்து வியாபாரிகள். நோயாளியைச் சார்ந்து மருத்துவர்; மருத்துவரைச் சார்ந்து நோயாளி. இப்படித் தான் உலகம் இயங்க முடியும் அதே போல் நாம் அனைவரும் செல்வத்தை மட்டும் பாக்கியம் என்று எண்ணுகிறோம். அது மட்டும் பாக்கியமில்லை. நம் உடலில் உள்ள அனைத்து உறுப்புக்களும் சீராக இயங்குவதே ஒரு பெரிய பாக்கியமாகும். அல்லாஹ்வே இதைக் கூறிக் காட்டுகிறான்: மனிதனை அவனது இறைவன் மரியாதையுடன் வாழச் செய்து இன்பத்தை யும் வழங்கி சோதிக்கும் போது “என் இறைவன் என்னைக் கண்ணியமாக நடத்தினான்” என்று கூறுகிறான். அவனது செல்வத்தை அளவுடன் வழங்கி சோதிக்கும் போது “என் இறைவன் என்னை அவமானப்படுத்தி விட்டான்” எனக் கூறுகிறான். அல்குர்ஆன் 89:15, 16 இதை இன்றைக்கு மனிதன் நிதர்சனமாகக் கூறுவதைப் பார்க்கிறோம். அதேபோல் இன்றைக்கு நேர்மையாக நடப்பவர்களைப் பார்த்து பிழைக்கத் தெரியாதவன் எனறெல்லாம் கூறி கேலி செய்வதைப் பார்கிறோம். ஆனால் அந்த மறுமையில் நாம் அவர்களைக் கேலி செய்யலாம். அது தான் நிலையான இன்பம் என்பதைப் புரிந்து கொண்டால் நாம் கவலைப்பட மாட்டோம். செல்வத்தின் மீதுள்ள பேராசை நம்மை விட்டு அகன்றுவிடும். மற்றவர்களைப் பார்த்து பொறாமைப்பட மாட்டோம். என்ன தான் கூறினாலும் பணக்காரர்கள் சொகுசாகத் தான் இருக்கிறார்கள். கார், பங்களா என்று இன்பத்தை அனுபவிக்கிறார்கள். மினரல் தண்ணீரைக் குடிக்கிறார்கள். அந்த மாதிரியான இன்பத்தை நாம் அனுபவிக்கவில்லை என்பது ஒரு குறையாகத் தான் இருக்கும். என்ன தான் நோய் நொடி இல்லாமல் இருந்தாலும் இப்படிப்பட்ட ஒரு எண்ணம் ஏழையாக வாழக்கூடிய அனைவருக்கும் வரும். அதற்கு நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யாருக்கு அல்லாஹ் நன்மையை நாடுகின்றானோ அவரை சோதனைக்கு உள்ளாக்குகின்றான். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரி 5645 இப்படிப்பட்ட ஒரு எண்ணம் யாருக்காவது வந்தால் அவன் செல்வம் அதிகமாக இல்லை என்று கவலைப்படமாட்டான். இந்த உலகத்தில் நாம் அனுபவிக்கும் அனைத்து துன்பங்கள், வேதனை அனைத்திற்கும் அல்லாஹ் சொர்க்கத்தைப் பகரமாகத் தருகின்றான் என்ற நம்பிக்கை நமக்கு வர வேண்டும். அதே போல் நாம் செய்த அமல்கள் குறைவாக இருந்தால் அதைச் சரி செய்வதற்கு அல்லாஹ் துன்பங்களைத் தருகிறான். இதற்கு நபி (ஸல்) அவர்கள் ஒரு செய்தியைக் கூறுகிறார்கள்: நீங்கள் அனுபவிக்கும் வருத்தம், துன்பம், வேதனை அனைத்திற்கும் அல்லாஹ் சொர்க்கத்தைப் பகரமாக்குகிறான் என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு முஸ்லிமைத் தைக்கும் முள் உள்பட அவருக்கு நேரிடும் துன்பம், நோய், துக்கம், கவலை, தொல்லை, மனவேதனை ஆகிய எதுவாயினும் அதற்கு பதிலாக அவருடைய பாவங்களி-ருந்து சிலவற்றை அல்லாஹ் மன்னிக்காமல் இருப்பதில்லை. அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரி 5642 அல்லாஹ் மறுமையிலே கொடுக்கவிருக்கும் தண்டனையை நாம் ஒப்பிட்டுப் பார்க்கும் போது இதுவெல்லாம் ஒரு செல்லமாகத் தட்டுவதைப் போன்று தான் என்பதை நாம் முதலில் விளங்கிக் கொள்ள வேண்டும். அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் என்னிடம், “சொர்க்கவாசியான ஒரு பெண்மணியை உங்களுக்குக் காட்டட்டுமா?” என்று கேட்டார்கள். நான், “ஆம்; (காட்டுங்கள்)” என்று சொன்னேன். அவர்கள், இந்தக் கறுப்பு நிறப் பெண்மணி தாம் அவர். இவர் (ஒரு தடவை) நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “நான் வலிப்பு நோயால் (அடிக்கடிப்) பாதிக்கப்படுகிறேன். அப்போது என் (உடலி-ருந்து ஆடை விலகி) உடல் திறந்து கொள்கின்றது. ஆகவே, எனக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்” என்றார். நபி (ஸல்) அவர்கள், “நீ நினைத்தால் பொறுமையாக இருக்கலாம். (இதற்கு பதிலாக) உனக்கு சொர்க்கம் கிடைக்கும். நீ விரும்பினால் உனக்குக் குணமளிக்கும்படி அல்லாஹ்விடம் நான் பிரார்த்திக்கிறேன்” என்று சொன்னார்கள். இந்தப் பெண்மணி, “நான் பொறுமையாகவே இருந்து விடுகிறேன். ஆனால், (வலிப்பு வரும்போது ஆடை விலகி) என் உடல் திறந்து கொள்கிறது. அப்படித் திறந்து கொள்ளாமல் இருக்க அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்” என்று சொன்னார். அவ்வாறே நபி (ஸல்) அவர்கள் இப்பெண்ணுக்காகப் பிரார்த்தனை செய்தார்கள். நூல்: புகாரி 5652 அப்படியானால் நமக்கு இந்த உலகத்தில் ஏற்படும் கஷ்டம், சோதனையைப் பொறுத்துக் கொண்டால் அதற்கு அல்லாஹ் கூலியை வழங்குவான் எனற நம்பிக்கையை நாம் நமது உள்ளத்தில் ஏற்றுக் கொள்ள வேண்டும். இதற்குச் சான்றாக நபி (ஸல்) அவர்கள் மற்றொரு விஷயத்தைக் கூறுகிறார்கள். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் கூறுகிறான்: நான் என் அடியானை, அவனது பிரியத்திற்குரிய இரு பொருட்களை(ப் பறித்து)க்கொண்டு சோதித்து, அவன் பொறுமை காப்பானேயானால், அவற்றுக்கு பதிலாக சொர்க்கத்தை நான் அவனுக்கு வழங்குவேன். அறிவிப்பவர்: அனஸ் பின் மா-க் (ரலி) நூல்: புகாரி 5653 இந்த உலகத்தில் அல்லாஹ் தந்த செல்வங்களை நாம் அனுபவிக்க வேண்டும் என்றால் அதற்குக் கண் மிகவும் அவசியமாகும். கண் என்பது 50 சதவீதம் அருட்கொடையை வழங்கியுள்ளது. உதாரணத்திற்கு நாம் இந்த கண்ணிருப்பதால் தான் அதிகம் பணம் செலவு செய்கிறோம். நாம் அழகான ஆடை வாங்குகிறோம். அழகான வீட்டை வாங்குகிறோம். எல்லாப் பொருளையும் அழகானதென்று தேர்ந்தெடுத்து வாங்குவதற்குக் காரணம் இந்தக் கண். எனவே இந்த ஒரு மிகப்பெரிய பாக்கியத்தை அல்லாஹ்விற்காக நாம் இழப்பதின் காரணத்தினால் அல்லாஹ் நமக்கு சொர்க்கத்தைத் தருகிறேன் என்று கூறுகிறான். அதற்காக நாம் புலம்பக்கூடாது. அல்லாஹ்வைத் திட்டவும் கூடாது. நாம் பொறுமையாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால் தான் நமக்குச் சுவனம் கிடைக்கும். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இறை நம்பிக்கையாளரின் நிலையைக் கண்டு நான் வியப்படைகிறேன். அவரது (வாழ்வின்) அனைத்து அம்சங்களும் (அவருக்கு) நன்மையாகவே அமையும். இறை நம்பிக்கையாளருக்கு அல்லாமல் வேறெவருக்கும் இ(ந்தப் பாக்கியமான)து கிட்டுவதில்லை. அவருக்கு ஏதேனும் மகிழ்ச்சி ஏற்பட்டால், அவர் நன்றி செலுத்துகிறார். அது அவருக்கு நன்மையாக அமைகிறது. அவருக்கு ஏதேனும் துயரம் நேர்ந்தால், அவர் பொறுமை காக்கிறார். அதுவும் அவருக்கு நன்மையாக அமைந்துவிடுகிறது.
’’மாமிசக் கடைக்காரன் ஆடு வெட்டுவதை ஒரு தொழிலாகச் செய்வது போன்று நீ கோயிலில் பூஜை செய்யும் வேலை செய்கிறாய். இதற்கு சம்பளம் தவிர வேறு எதை எதிர்பார்க்கிறாய்?’’ ’’என்ன சாமி, என்னோட வேலையையும் கசாப்புக் கடைக்காரன் வேலையையும் ஒண்ணாச் சொல்றீங்க! சாதாரண பூஜையை வேலைன்னு சொன்னாக்கூட பரவாயில்லை. விஷேச தினத்திலும் ராப்பகலா சிரத்தையுடன் உழைச்சதுக்கு எதுவும் கிடைக்காதுன்னு சொல்றீங்களா?’’ ’’சிறப்பு என்று எதுவும் கிடையாது. அமாவாசை இரவில் குபேரனுக்கு பூஜை செய்தால் பணம் கொட்டும் என்பது உண்மையானால் எவரும் உழைக்கவே வேண்டியதில்லை. எல்லோரும் பூஜை செய்துவிட்டு ஒரு பையுடன் வானத்தில் இருந்து கொட்டும் தங்கத்திற்காக காத்திருக்க வேண்டியதுதான். ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு மனித்துணியும் சிறப்பானவையே…’’ என்று சிரித்ததும் சிந்தனையில் ஆழ்ந்தார் சங்கரன். ’’மந்திரங்களுக்காவது மகிமைகள் இருக்கிறது என்பதை ஒப்புக்கொள்கிறீர்களா?’’ ’’நான் எதை ஒப்புக்கொள்கிறேன் என்பது முக்கியமல்ல. ஆனால், மகிமையுள்ள வார்த்தைகள் இருக்கின்றன. ஆனால் அவற்றை மந்திரங்கள் என்று மதிக்க வேண்டியதில்லை. ஒருவரை காலில் பலமாக மிதித்துவிட்டு அவரிடமே, ‘மன்னித்துக் கொள்ளுங்கள்…’ என்று பதற்றத்துடன் உண்மையாகவும் மனப்பூர்வமாகவும் கேட்டுக் கொண்டால், அந்த வார்த்தைகள் மந்திரம் போன்று ஏற்றுக் கொள்ளப்படும். அதே நபரிடம், ‘குறுக்கே எருமை மாடு மாதிரி நிக்கிறியே’ என்று கோபப்பட்டால், எதிர்மறை விளைவு கண்டிப்பாக இருக்கும். ஒரே ஒரு கெட்டவார்த்தை கொலை செய்யத் தூண்டலாம் என்பது போலவே ஒரே ஒரு வார்த்தை உயிரை காப்பாற்றவும் செய்யலாம். ஆனால் இந்த வார்த்தைகள் எல்லாம் மனிதர்களுக்குத்தான் தேவைப்படுமே தவிர கடவுளுக்கு அல்ல. குறிப்பிட்ட மொழியில், குறிப்பிட்ட எழுத்துக்களை மந்திரமாக பூஜித்தால் மட்டுமே கடவுள் அருள் பெற முடியும் என்று சொல்வது கடவுளுக்குச் செய்யும் அவமானம்!’’ ’’அப்படின்னா நான் பூஜையின் போது சொல்லும் மந்திரங்கள் எல்லாம் கடவுளுக்குப் போய்ச் சேராதா?’’ ’’பேசத் தெரியாத குழந்தையைக் கொஞ்சுவதற்கு தாயும், தந்தையும் மழலை மொழியில் என்னென்னவோ வார்த்தைகளை பேசுவார்கள். அதற்கெல்லாம் அர்த்தம் இல்லை என்பதாலே அவற்றை வீண் வார்த்தைகள் என்று சொல்ல முடியாது. கும்பிட வருபவர்களுக்கு நிம்மதி கொடுப்பதால், உன்னுடைய மந்திரத்திற்கும் பலன் இருப்பதாகவே எடுத்துக் கொள்…’’ பூசாரியாக இருப்பதால் மட்டும் கடவுளிடம் தனியே மதிப்பும் பலனும் கிடைக்காது என்பதில் சங்கரன் மிகவும் கவலை அடைந்திருந்தார். அவரை திசைதிருப்பும் விதமாக அவரது குடும்பம் பற்றி விசாரித்தேன். ’’பொம்பளைங்களை புரிஞ்சுக்கவே முடியாதா சாமி, தேவதை மாதிரி இருக்கிற என் பொண்டாட்டி சில நேரத்தில பேய் மாதிரியும் இருக்கா…’’ என்றார். ’’இதைத்தான் அவரும் சொல்லுவார். பெண்களை தெய்வமாக வைத்து பூஜிக்கும் இதே மனிதகுலம்தானே, அவளை சதைப் பொருளாக வைத்து வியாபாரமும் செய்கிறது. அவளை உயரத்தில் தூக்கி வைப்பது அல்லது கீழே போட்டு மிதிப்பது என்று இரண்டு துருவங்களில்தான் கையாளுகிறது உலகம். அதனாலே அவள் அதிசயமாகவும், ரகசியமாகவும் மட்டுமல்ல ஆபத்தாகவும் மாறிப் போனாள். தன்னை அடக்கியாள நினைக்கும் ஆண்களின் சுயநலத்தை வெறுத்து, அவர்களிடமிருந்து தன்னைக் காத்துக்கொள்ள பல்வேறு அவதாரம் எடுக்கிறாள். அதனாலே அவள் ஒவ்வொரு கணமும் பெண் புரியாத புதிராகத்தான் இருப்பாள். அவளை முழுமையாக அறிந்துகொள்ள நினைக்காதே, நீ காணாமல் போய்விடுவாய்…’’ ’’நான் கேட்கிறதால் எங்க வீட்டுப் பிரச்சினைன்னு நினைக்காதீங்க, ஏன் இப்ப பெண்கள் தப்பு பண்றது அதிகமாயிடுச்சு?’’ ’’பெண்களும் ஆண்களும் சேர்ந்துதானே தப்பு செய்ய முடியும்? அப்படியென்றால் தப்பு செய்யும் ஆண்களின் எண்ணிக்கையும் அதிகமாயிருக்கிறது என்றுதானே அர்த்தம்? தனியாகப் பெண்களை பிரித்து குற்றம் சாட்டாதே. ஒவ்வொரு பெண்ணின் தவறுக்குப் பின்னாலும் கண்டிப்பாக ஆண் இருப்பான்’’ என்றதும் அமைதியடைந்தார். ஆளரவமற்ற அந்த நேரத்தை மரங்களின் அசைவும், வண்டுகளின் சப்தங்களும் இன்னும் அழகாக்கின. உடம்பை அசைக்கவும் சோம்பேறித்தனமாக இருந்தாலும், அதுவும் சுகமாக இருந்தது. ’’சாமி… சுனாமி, புயல்னு அடிக்கடி வர்றதைப் பார்த்தா விரைவில் மனிதர்களே இல்லாத நிலை வரும் போலிருக்கே?’’ ’’மனிதர்களுக்கு உயிர் பயம் இருக்கும் வரை, மனித குலம் அழியவே அழியாது. பயம்தான் மனிதகுலத்தை இன்னமும் உயிர்ப்புடன் வைத்திருக்கிறது…’’ ’’புரியலையே சாமி’’ ’’ஆரம்ப காலங்களில் காட்டு மிருகங்களுக்குப் பயந்து மனிதன் ஒன்று சேர்ந்து வாழத் தொடங்கினான். அதற்குப்பின் எதிரி குழுவினருக்குப் பயந்து ஒற்றுமையாக வாழத் தொடங்கினான். இன்று அண்டை நாட்டுக்காக, அரசுக்காக, சட்டத்துக்காக பயந்து குடும்பமாக, தெருவாக, ஊராக சேர்ந்து வாழ்கிறார்கள்…’’ ’’மனிதன் எதற்குமே பயப்பட வேண்டியதில்லை எனும் அளவுக்கு விஞ்ஞானம் வளர்ந்து விட்டதே..?’’ ’’இப்பொழுது மனிதனை பயமுறுத்துவதே விஞ்ஞானம்தானே. பயணிகள் விமானத்தை விட போர் விமானங்கள்தான் அதிகம். நேருக்கு நேராக சண்டை போட்ட காலம் போய், இன்று உயிர் அணுக்களை காற்றில் அனுப்பியே மனிதகுலத்தை பயமுறுத்த முடிகிறது. இன்னும் சொல்லப் போனால் அணுகுண்டு பயத்தினால்தான் பல நாடுகள் போர் நிகழ்த்தாமல் இருக்கிறது. இந்த பயம்தான் மனிதகுலத்தை வாழ வைத்துக் கொண்டிருக்கிறது…’’ ‘’அப்படின்னா, அறிவியல் வளர்ச்சி நல்லதுக்கு இல்லைன்னு சொல்றீங்களா?’’ ’’நான் சொல்வதால் எந்த அறிவியல் வளர்ச்சியும் நின்றுவிடப் போவதில்லை. வளர்ச்சி என்பது நிகழ்ந்து கொண்டேதான் இருக்கும். ஆனால் ஒவ்வொரு வளர்ச்சியின் மறுபக்கமும் அழிவும் சேர்ந்தே வளரும். தொழிலில், விவசாயத்தில் பெரும் புரட்சி நடந்திருப்பது தெரிகிறது. ஆனால் அதனுடைய எச்சமான புகையும், மாசு கலந்த நீரும்தான் இன்றைய மனிதனுக்கு உண்டாகும் பல்வேறு நோய்களுக்கும் காரணம். ஒருபுறம் மனிதனுக்கு நிறைய சம்பளம் கொடுக்கும் பிரமாண்டமான தொழிற்சாலைகள்தான், விஷத்தன்மை நிறைந்த காற்றையும், நீரையும் வெளியே அனுப்புகின்றது. இவற்றையெல்லாம்விட மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், இந்த அறிவியல் வளர்ச்சிகளால் பெறும் பயன்கள் எல்லாமே மேல் மட்ட மக்களுக்கு மட்டும்தான். ஆனாலும் இவற்றில் இருந்து தப்பித்து மனிதனால் மீண்டும் காட்டுவாசியாக வாழமுடியாது என்பதால் அறிவியல் புரட்சிகளுக்கான விலையை கொடுத்துத்தான் தீரவேண்டும்…’’ ’’அதான் உலகை காப்பாற்ற சுற்றுச்சூழல் இயக்கம் வந்தாச்சே… அரசாங்கமும் நிறைய உதவி செய்றாங்க…’’ ‘’ஒருபுறம் கடன்களை அள்ளிக் கொடுத்து தொழிற்சாலைகளை வளர்த்துவரும் அரசுகள், அந்த பாவத்திற்கு பிராயசித்தம் போன்று பசுமை இயக்கங்களுக்கு உதவி செய்கிறது. ஆனால் இந்த இயக்கங்களால் நிலைமையை மாற்றிவிட முடியாது என்பது அந்த இயக்கத்தினருக்குத் தெரியும், அரசுக்கு தெரியும், ஏன் அந்த தொழிற்சாலைகளுக்கும் தெரியும். ஏனென்றால் அந்த பசுமை இயக்கங்களை செயல்படுத்துவதும் பெரும் முதலைகளே. ஆனால், மக்கள் மட்டும் ஏதோ நடந்துவிடப் போகிறது என்று ஆவலோடு காத்துக்கொண்டே இருப்பார்கள்.’’ ’’நீங்க சொல்றதைப் பார்த்தா இந்த உலகமே தவறான பாதையில் போகுது போலிருக்கே…’’ ’’இந்த உலகம் முழுமையுமே தங்களுக்காக படைக்கப் பட்டது என்ற எண்ணத்தில் மனிதர்கள், எதையும் செய்யும் உரிமையுடன் செயல்படுகிறார்கள். அவன் செய்யும் தவறுகளால் என்றாவது ஒரு நாள் இந்த உலகில் மனிதர்கள் மட்டுமின்றி, வேறு எந்த உயிர்களுமே இல்லாமல் போகலாம். எந்த உயிருமே வாழ லாயக்கில்லாமல் போனாலும் பூமிக்கு எதுவும் நேராது. அது மீண்டும் தன்னைத்தானே புதுப்பித்துக் கொள்ளும். அப்போது மீண்டும் மரமும், பறவையும், விலங்குகளும், மனிதர்களும் தோன்றலாம். அதற்காக எந்த கடவுளும் அவதாரம் எடுத்து வரவேண்டியதில்லை, எல்லாம் தானே நடந்துவிடும்.’’ ’’யாரோ சிலர் செஞ்ச தப்புக்கு எதுக்காக எல்லா மனிதர்களுக்கும் தண்டனையா?’’ ’’ஆம் சங்கரா. மனிதர்கள் நன்மைக்காகவே உழைத்த இயேசு, காந்தி போன்றவர்களுக்கு இந்த உலகம் என்ன பரிசு கொடுத்தது என்று தெரியாதா? நல்லவராக வாழ்வதும், கெட்டவராக வாழ்வதும் அவரவர் இயல்பு என்று எடுத்துக் கொள்ள வேண்டியதுதான். நல்லதுக்கு பாராட்டுப் பத்திரம் கொடுப்பதும், கெட்டவர்களைத் தண்டிப்பதும் கடவுளின் வேலையில்லை. மாட்டிக் கொள்ளாமல் தவறு செய்பவன், சட்டத்திடம் இருந்து தப்பித்துக் கொள்வது உண்டு. அதுபோலவே நல்லவன் வாழ்நாள் முழுவதும் துன்பப்படுவதும் உண்டு. இதற்கு முற்பிறவியை காரணம் காட்டித்தான் பல மதங்கள் இன்னமும் உயிருடன் வாழ்ந்து கொண்டிருக்கிறது. சில இடங்களில் எத்தனை அடி தோண்டினாலும் தண்ணீர் வருவதில்லை, ஆனால் தோண்டியதும் தண்ணீர் வரும் இடங்களும் உண்டு. அப்படித்தான் மனிதர்களுக்கு வாழ்க்கை அமைந்து விடுகிறது. சிலர் எத்தனை நல்லவராக இருந்தாலும் மிகப்பெரிய நன்மை பெற்று விடுவதில்லை. இதுபோன்ற பிரச்னைகளுக்கு யாரிடமும் தீர்வு இல்லை என்பதுதான் உண்மை’’ ’’எதிர்காலத்துக்காக ஒழுங்காகத் திட்டம் போட்டு வாழ்ந்தால்..?’’ ’’எதிர்காலத்துக்காக திட்டம் போடுபவனால் நிகழ்காலத்தில் வாழவே முடியாது சங்கரா…’’ ’’வங்கிகளில் சேமிப்பது, இன்சூரன்ஸ் எடுப்பதுகூட அபத்தம் என்கிறீர்களா?’’ ’’இன்று சாப்பிடாமல் நாளைய உணவுக்காக சேமிக்காதே என்கிறேன். ஒருவேளை அந்த ‘நாளை’ வராமலே போகலாம்’’ ’’உங்ககூட பேசிக்கிட்டு இருந்தா வாழ்க்கை மேல பயம்தான் வருது. நீங்கள் எதையுமே தோல்விக் கண்ணோட்டத்தில் பார்க்கிறீர்கள், எதிர்மறையாகவே சிந்தனை செய்கிறீர்கள்’’ என்று குற்றம் சாட்டினார் சங்கரன். ’’இத்தனை நேரம் என்னிடம் பேசிய பின்னரும் இப்படிப் பேசத் தோன்றுகிறதா? இந்த மனிதகுலம் அழிவை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறது என்று நான் சொல்வது தீர்க்கதரிசனம் அல்ல. இன்றைய நிகழ்வு இப்படியே தொடர்ந்தால் நடக்கப் போவதைச் சொல்கிறேன். உண்மையைச் சொன்னால் எதிர்மறை சிந்தனையாகத் தெரிகிறது. ஆனால், மக்கள் அனைவரையும் சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்லும் வழி என்னிடம் இருக்கிறது, என்னை பின்பற்றுங்கள். நான் சொல்லும் நேரத்தில் தியானம் செய்யுங்கள், பூஜை செய்யுங்கள், மந்திரம் ஓதுங்கள் என்றால் என்னை தீர்க்கதரிசி என்று கொண்டாடுவீர்கள் அப்படித்தானே? உண்மையைச் சொல்வதற்காக நான் கவலைப்படவில்லை. மனிதகுலம் தோல்வியை நோக்கிப் போவது எத்தனை உண்மையோ, அத்தனை உண்மை இந்த மண்ணிலேயே ஒவ்வொரு மனிதனும் எத்தனை நெருக்கடிகள், துன்பங்கள் வந்தாலும் சொர்க்கத்தைக் காணமுடியும் என்பதும். சின்னச் சின்ன சந்தோஷங்களை பேரின்பமாக நினைத்து மனிதர்கள் வாழ்வதைப் பார்ப்பதுதான் என் ஆவல்…’’ என்று சாய்ந்து கொண்டேன். ’’சாமி நீங்க தடுத்தாலும் நான் கேட்கப் போறதில்லை. உங்ககிட்ட பேசுனதை மனசுல வைச்சுக்கிட்டு இனி நான் ஊரெல்லாம் போய்பேசப் போறேன். நான் உங்களோட சீடன்னு சொல்லப்போறேன். அதேநேரம் ஏதாவது ஒரு கடவுளை ஆதர்சமா வச்சிக்கிடலாம், அது யாரா இருக்கலாம்னு மட்டும் சொல்லுங்க…’’ என்று கேட்டார் சங்கரன். ‘‘எல்லா கடவுளுமே மனிதர்களால் படைக்கப் பட்டவர்கள்தானே, அதனால் உனக்குப் பிடித்த ஒன்றை நீயே தேர்வு செய்துகொள். இல்லையென்றால் நீயே புதிதாக ஒன்றை உருவாக்கிக் கொள்…’’ என்றேன்.
அழகு, இன்றைய தினத்தில் உலகெங்கிலும் படித்த, நாகரீக மனிதர்களில் 90% மக்கள் உறவை முடிவு செய்வது இந்த அழகு தான். வெங்காயம், தக்காளி, காய்கறிகளை போல, மனிதர்களையும் தோற்றத்தை வைத்து எடைப்போடும் காலத்தில் நாம் வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம். மாத வருமானத்தில் அழகை சீர்காக்க என ஓர் தனி பகுதியை ஒதுக்கி வாழும் மக்களும் ஏராளமானோர் இருக்கிறார்கள். இவர்களை எல்லாம் குறிவைத்து தான் என்னவோ, உலகம் முழுக்க சில வினோதமான அழகு சாதன கருவிகளும், முறைகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இயற்கைக்கு புறம்பாக கூட சில கருவிகளை பயன்படுத்துகிறார்கள். அவரவர் மரபணு பொறுத்து தான் உடல் வடிவம் உருவாகிறது, உடற்பயிற்சி செய்தாலும் கூட ஃபிட் ஆகுமே தவிர அதன் நிலை மாறாது. இவர்கள் அதை மாற்ற தான் சில வினோத அழகு சாதன கருவிகளை கண்டுபிடித்துள்ளனர், இவற்றில் பெரும்பாலான கண்டுபிடிப்புகள் ஆசியாவிலும், குறிப்பாக சீனாவில் தான் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது…. அழகை அதிகரிக்கும் முகமூடி யாரும் கொள்ளைக்காரர்கள் என பயந்துவிட வேண்டாம். இது முக அழகை அதிகரிக்க உதவும் முகமூடி. இது முகத்தின் தசை பயிற்சிக்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்டது. என்றும் இளமையாக இருப்பதற்காக இதை பயன்படுத்துகிறார்கள். இதன் வேலையே தசைகளின் சுருக்கம் ஏற்படாமல் தடுத்து இறுக்கமாக்குவது தான். இதன் விலை $23 டாலர்கள். இதன் பெயர் – Facewaver Exercise Mask. மார்பகத்தை பெரிதாக்க உதவும் குக்கீஸ் இந்த குக்கீஸில் மிரிஃபிக்கா பிளான்ட் எனப்படும் பெண்களின் ஹார்மோன்களை தூண்டும் இயற்கை பொருள் சேர்க்கப்படுகிறதாம். இவை பர்மா, தாய்லாந்து போன்ற நாடுகளில் கிடைக்கின்றன. இந்த குக்கீஸ் சாப்பிட்டால் மார்பகம் பெரிதாக வளரும் என நம்புகிறார்கள். இதன் விலை $21 டாலர்கள், பெயர் எப் – கப் குக்கீஸ். மூக்கை நேராக்குவதற்கு… இது ஓர் கிளிப் போன்ற வடிவில் இருக்கிறது. மூக்கை நேராக அறுவை சிகிச்சை மேற்கொள்ள தயங்குபவர்கள் இதை பயன்படுத்தலாம் என கூறுகிறார்கள்,. இதன் பெயர் ஹானா ட்சன் நோஸ் ஸ்ட்ரெய்ட்னர். பார்க்க வலி ஏற்படுத்தும் வகையில் இருப்பது போல காட்சியளித்தாலும், இது பயன்படுத்தும் போது அவ்வளவு வலி தவறுவதில்லை என பயன்படுத்துபவர்கள் கூறுகிறார்கள்.இதன் விலை $43 டாலர்கள். அழகாக சிரிக்க பயிற்சி சிரிக்கும் போது வாய் அழகாக மற்றும் சுருக்கம் இன்றி காட்சியளிக்க இதை பயன்படுத்துகிறார்கள்.இது பிளாஸ்டிக் கொண்டு தயாரிக்கப்பட்ட கருவி ஆகும். இது, முகத்தின் தசைகள் இறுக்குமாவதற்கும் உதவுகிறதாம். இதன் விலை $56 டாலர்கள். இதன் பெயர் Face Slimmer Exercise Mouthpiece. மார்பக மசாஜ் கருவி மனித கை போல இருக்கும் இந்த ஸ்டிக், மார்பக மசாஜ் கருவியாம். மார்பகத்தின் தசைகளுக்கு பயிற்சி தர இதை பயன்படுத்துகிறார்கள். அழகான மார்பக தோற்றம் பெற இதை உபயோகப்படுத்துகிறார்கள். இதன் விலை $52 டாலர்கள் மற்றும் இதன் பெயர் Breast Gymnastic hand massager. முக சுருக்கங்களை போக்க உதவும் ஹேர் ரிப்பன் கரக்குரி (Karakuri) என்பது இதன் பெயர். நெற்றியின் இருபுறமும் சீப்பு போல வடிவம் சேர்க்கப்பட்டுள்ள இந்த ரிப்பனை இறுக்கமாக பொருத்திக்கொள்வதால், முக சுருக்கம் குறைக்கப்படுகிறதாம். இதன் விலை $89 டாலர்கள். அழகாக முகத்தை அகலப்படுத்த… இதை வாயில் பொருத்தி, இரு காதுகளில் மாட்டிக்கொள்ளும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது. இது, முகத்தின் சுருக்கத்தை போக்க உதவுவதாக பயன்பாட்டாளர்கள் கருதுகிறார்கள். இதன் பெயர் Bigan Beauty Face Expander, விலை $89 டாலர்கள். மார்பக முலைகளை அழகாக்க.. சிலருக்கு மார்பக முலைகள் பார்க்க அழகாவும், எடுப்பாகவும் இருக்காது, இதை சரி செய்து, அழகாக வைத்துக்கொள்ள, இந்த கருவியை பயன்படுத்துகிறார்கள். இது மார்பக பகுதியை மெல்ல உறிஞ்சி இறுக்கமாக எடுப்பான வடிவை ஏற்படுத்துமாம். இதை தினமும் ஓரிரு நிமிடங்கள் பயன்படுத்தினால் போதுமான கூறுகிறார்கள். இதன் விலை $67 டாலர்கள், பெயர் – Inverted Nipple Suction Dream Charm Adjuster. நாக்கு பயிற்சிக்கு… நாக்கிற்கு பயிற்சி தரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த கருவி, முக தசைகளை இறுக்கமாக வைத்துக்கொள்வதற்கும் பயன்படுகிறதாம். இதை வாயில் மாட்டிக்கொண்டு நாவிற்கு பயிற்சி அளித்தல் வேண்டும். இதன் விலை $51 டாலர்கள், பெயர் – Kuwate Sukkiri Tongue Exerciser. அழகான கண் இமைகளுக்கு உபயோகிக்க கடினமாக காட்சியளிக்கும் இந்த கருவி, அழகான இரட்டை கண் இமைகள் (Eyelids) பெற உதவுகிறதாம். கன்னத்தில் ஒரு ஸ்டிக்கை ஊன்றி, மறு ஸ்டிக்கை இமை பகுதியில் தேய்த்து பயிற்சி செய்தல் வேண்டுமாம். இதன் விலை $45 டாலர்கள், பெயர் – Futae Compass Make Up Eyelid Brush.
தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு குறைந்து வருவதால் பள்ளி, கல்லூரிகளை எப்போது திறக்கலாம் என்பது குறித்தும், தமிழக அரசு அறிவித்த ஊரடங்கு நாளை மறுதினத்துடன் முடிவடையும் நிலையில் மருத்துவ நிபுணர்கள், மாவட்ட கலெக்டர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று ஆலோசனை நடத்தினார். அதன்படி,புதிய தளர்வுகள் பற்றிய அறிவிப்பு இன்று வெளியாகும் என தெரிகிறது. கொரோனா தொற்று பரவாமல் தடுக்க கடந்த மார்ச் 25ம் தேதி முதல் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு பல தளர்வுகளுடன் இன்னும் அமலில் உள்ளது. தமிழகத்தில் அரசு அறிவித்த ஊரடங்கு 31ம் தேதியுடன் (நாளை மறுதினம்) முடிவடைகிறது. மத்திய அரசின் அறிவிப்பை தொடர்ந்து, தமிழகத்திலும் வருகிற நவம்பர் 30ம் தேதி வரை ஊரடங்கை அமல்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதேநேரம், பொதுமக்களின் வசதிக்காக ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தளர்வுகளுடன் புதிய தளர்வுகள் அறிவிப்பது குறித்தும், கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு பணிகள் குறித்தும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று காலை 10.45 மணிக்கு சென்னை தலைமை செயலகத்தில் இருந்தபடி அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, விஜயபாஸ்கர், ஆர்.பி.உதயகுமார், தலைமை செயலாளர் சண்முகம், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், தமிழக டிஜிபி திரிபாதி மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். மாவட்ட கலெக்டர்கள் ஆலோசனை கூட்டத்தை தொடங்கி வைத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது: தமிழகத்தில் கொரோனா நோய் பரவல் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. முக்கியமாக, மாநிலத்திலுள்ள அனைத்து மாவட்டங்களிலும், நோய் தொற்று பரவல் குறைந்து கொண்டே வருகிறது. இதை கருத்தில் கொண்டுதான் பிரதமர், தமிழ்நாட்டை போல் பிற மாநிலங்கள் செயல்பட வேண்டும் என பாராட்டினார். கோவிட் நோய் தொற்று கட்டுப்பாடு, சிகிச்சை மற்றும் நிவாரண பணிகளுக்காக இதுவரை அரசு ரூ.7,372 கோடியே 25 லட்சம் செலவு செய்துள்ளது. மருத்துவம் சார்ந்த செலவினம் ரூ.1,983 கோடியும், நிவாரணம் சார்ந்த செலவினம் ரூ.5,389 கோடியும் ஆகும். மருத்துவர்களின் சிறப்பான சேவையால் நோய் தொற்று 7.39 சதவீதத்திற்கு கீழ் கொண்டு வரப்பட்டு நோய் பரவல் கட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளது. கடந்த 17 நாட்களாக ஒவ்வொரு நாளும் நோய் தொற்று எண்ணிக்கை 5 ஆயிரம் நபருக்கும் கீழ் உள்ளது. கடந்த 4 நாட்களாக 3 ஆயிரம் பேருக்கு கீழாக குறைந்துள்ளது. சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்தில் இருந்து 30 ஆயிரமாக குறைந்துள்ளது. 1.53 சதவீதம் இறப்பு மட்டுமே உள்ளது. இறப்பை குறைக்க மாவட்ட கலெக்டர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். திரையரங்கு உரிமையாளர்களிடம் இருந்து திரையரங்குகளை திறக்க கோரிக்கைகள் வந்தவண்ணம் உள்ளது. அதுபற்றி மருத்துவ நிபுணர்கள் மற்றும் ஆட்சி தலைவர்கள் கூறும் கருத்தின் அடிப்படையில் அரசு நடவடிக்கை மேற்கொள்ளும். கோயம்பேடு மார்க்கெட்டில் உணவு தானிய அங்காடிகள், காய்கறி மொத்த மார்க்கெட்கள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. தினசரி கிருமி நாசினி, மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. பழக்கடை, மொத்த வியாபாரம், சில்லறை கடைகள் திறக்க கோரிக்கைகள் வருகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை செய்து அரசு உரிய நடவடிக்கை எடுக்கும். தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. இந்த சூழ்நிலையில் பள்ளிகள், கல்லூரிகள் திறப்பது குறித்தும் இன்றைக்கு மாவட்ட ஆட்சி தலைவர்கள் சொல்கின்ற ஆலோசனைகள், மருத்துவ நிபுணர்கள் சொல்கின்ற ஆலோசனைபடி அரசு கவனத்தில் எடுத்துக்கொண்டு செயல்படுத்தப்படும். இப்பொழுது தீபாவளி பண்டிகை வர இருக்கிறது. சென்னை மாநகரத்தில் தெருக்கள் முழுவதும் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கிறது. பலர் முகக்கவசம் அணியாமல் இருக்கிறார்கள். காவல் துறையை சேர்ந்த அதிகாரிகள் விழிப்புணர்வை தொடர்ந்து ஏற்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும். அப்பொழுதுதான், அவர்கள் முகக்கவசம் அணியக்கூடிய சூழ்நிலை உருவாகும், நோய் பரவலை தடுக்க முடியும். பருவமழை துவங்குகிற இந்த சூழ்நிலையில் தமிழகம் முழுவதும் எங்கும் தண்ணீர் தேங்காமல் மாவட்ட நிர்வாகம் பார்த்துக் கொள்ள வேண்டும். தண்ணீர் தேங்கினால் டெங்கு கொசு உற்பத்தியாகி, டெங்கு காய்ச்சல் ஏற்படும். ஆகவே, மாவட்ட நிர்வாகம் விழிப்போடு இருந்து செயல்பட வேண்டும். கொரோனா வைரஸ் பரவலை தடுப்பது குறித்து பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தாலும், சில மாவட்டங்களில் திடீரென்று அதிகரித்து விடுகிறது, அப்படி அதிகரித்து விடாமல் மாவட்ட கலெக்டர்கள் பார்த்துக் கொள்ள வேண்டும். சில மாவட்டங்களில் கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை 100க்கு மேல் இருக்கிறது. தீபாவளி வருவதற்குள் 100க்கு கீழ் கொண்டுவர வேண்டும். 100க்கு கீழ் இருந்தால் 50க்கு கீழ் குறைக்க வேண்டும். 50க்கு கீழுள்ள மாவட்டங்களில் நோய் கொரோனா இல்லை என்ற சூழ்நிலையை உருவாக்க வேண்டும். சட்டம், ஒழுங்கை சீர்குலைப்பதற்கு சிலர் முயற்சி செய்கிறார்கள். அதையெல்லாம் கவனமாக கண்காணித்து, மக்களுக்கு எவ்வித பாதிப்புமின்றி, காவல் துறை தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். கொரோனா வைரஸ் நோய் பரவல் தமிழகத்திலே படிப்படியாக குறைய தொடங்கி இருக்கிறது, இது வரவேற்கத்தக்கது. இன்னும் குறுகிய காலத்தில், தமிழகத்தில் கொரோனா வைரஸ் நோய் பரவல் இல்லை என்ற நிலையை உருவாக்க பாடுபட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். மாவட்ட கலெக்டர்களுடன் ஆலோசனை சுமார் 2 மணி நேரத்திற்கும் மேல் நடந்தது. கலெக்டர்களுடனான ஆலோசனை முடிந்த பிறகு நேற்று பிற்பகல் 2.30 மணிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில், ஜெனீவாவில் இருந்து வீடியோ கான்பரன்சிங் மூலமாக உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி டாக்டர் சவுமியா சுவாமிநாதன் கலந்து கொண்டார். மேலும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் விஞ்ஞானியும் சென்னை, தேசிய தொற்று நோய் நிலைய துணை இயக்குனருமான டாக்டர் பிரதீப் கவுர், உலக சுகாதார அமைப்பு (தமிழ்நாடு) முதுநிலை மண்டல குழு தலைவர் டாக்டர் கே.என்.அருண்குமார், ஈரோட்டில் இருந்து இந்திய மருத்துவ கழகத்தின் தலைவர் டாக்டர் சி.என்.ராஜா, வேலூர் சிஎம்சி கல்லூரி இயக்குநர் டாக்டர் ஜெ.வி.பீட்டர், சென்னை மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் தோணிராஜன் மற்றும் டாக்டர்கள் கலந்து கொண்டனர். மாவட்ட கலெக்டர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்கள் அரசுக்கு அளிக்கும் ஆலோசனைகளை தொடர்ந்து தமிழகத்தில் வருகிற நவம்பர் 1ம் தேதி முதல் கூடுதலாக என்னென்ன தளர்வுகள் அறிவிக்கலாம் என்பது குறித்து இறுதி முடிவு செய்யப்படும். அதைத்தொடர்ந்து இன்று அல்லது நாளை தமிழகத்தில் அறிவிக்கப்பட்ட உள்ள புதிய தளர்வுகள் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி மக்களுக்கு அதிகாரப்பூர்வமாக தெரிவிக்க திட்டமிட்டுள்ளார். அதன்படி கடந்த 5 மாதத்திற்கு மேல் திறக்கப்படாமல் உள்ள பள்ளி, கல்லூரிகள் நவம்பர் மாதம் திறக்கப்பட அதிக வாய்ப்புள்ளது. முக்கியமாக 10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்த மருத்துவ குழு பரிந்துரை செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதேபோன்று, பல்வேறு நிபந்தனைகளுடன் நவம்பர் 1ம் தேதி முதல் திரையரங்குகளை திறக்கவும் அனுமதி அளிக்கப்படலாம்.
RPA ARTICLE IN TAMIL – ROBOTIC PROCESS AUTOMATION இவன் தானியங்கியின் தலைவன் கலியுகத்தின் இறைவன் எந்திரன் October 22, 2020 admin RPA ARTICLE IN TAMIL – ROBOTIC PROCESS AUTOMATION இவன் தானியங்கியின் தலைவன் கலியுகத்தின் இறைவன் எந்திரன் அன்றாட வாழ்வில் RPA: நமது அன்றாட வாழ்வில்… Continue Reading → Posted in: TECHNOLOGY Filed under: DEFINE RPA, EXAMPLES OF RPA TOOLS, functions of RPA technology, HOW RPA TECHNOLOGY WORKS, HOW RPA WORKS IN TAMIL, operations of RPA technology, ROBOTIC PROCESS AUTOMATION IN TAMIL, RPA ARTICLE IN TAMIL, RPA ARTICLE IN TAMIL - ROBOTIC PROCESS AUTOMATION, RPA ARTICLE IN TAMIL - ROBOTIC PROCESS AUTOMATION இவன் தானியங்கியின் தலைவன் கலியுகத்தின் இறைவன் எந்திரன், RPA IN INDUSTRIES, RPA IN TAMILOGY, RPA ROBOTIC PROCESS AUTOMATION IN TAMIL, RPA tamil article, RPA TECHNOLOGY IN TAMIL, RPA TECHNOLOGY TAMIL ARTICLE, RPA TOOLS, RPA USE IN INDUSTRIES EXAMPLES, RPA USES IN TAMIL, RPA தவறான புரிதல்கள், THE ADVANTAGES OF RPA, WHAT IS RPA TECHNOLOGY, இவன் தானியங்கியின் தலைவன் கலியுகத்தின் இறைவன் எந்திரன், கலியுகத்தின் இறைவன் எந்திரன், போக்குவரத்தில் RPA please enter the title Search for: Categories Categories Select Category CBSE (8) ENGG NOTES (6) ENGG QUIZ (12) ENGINEERING (9) FRENCH (17) HOSTING (1) KOTLIN (1) LINUX (2) ONLINE JOBS (3) PYTHON (16) TECH NEWS (10) TECHNOLOGY (34) TRB CSE (3) TRICKS (7) Recent Posts DNS IN TAMIL – இவன் வலைத்தளத்தின் முகவரி இணையத்தின் PHONE BOOK | DNS PROTOCOL IN TAMIL EXPLAINED October 29, 2021 CONFIGURE WORDPRESS ROBOTS.TXT FILE IN TAMIL(WORDPRESS IN TAMIL) | தாங்கள் தங்களின் வலைத்தளத்தில் ROBOTS.TXT கோப்பை எவ்வாறு அமைப்பது October 22, 2021 EC8551 SMTP IN TAMIL | இவன் மின்னஞ்சலின் மூலம் தகவலை சேர்க்கும் போக்குவரத்து SMTP ஒரு பார்வை October 21, 2021 LEARN IMAP PROTOCOL IN TAMIL | இவன் மின்னஞ்சலின் மின்னஞ்சல் தகவலின் தலைமகன் IMAP PROTOCOL ஒரு பார்வை October 21, 2021
ஊருக்குள் நுழையும்போதே மாசு இல்லாத காற்று, தூசு இல்லாத வீதிகள் கொண்டு நம் மனத்தை மகிழச்செய்யும் இந்த அழகிய சிற்றூர் கோவில் நகரமான குடந்தைக்குத் தெற்கே ஏழு கி.மீ தொலைவில் காவிரியின் கிளை நதியான திருமலைராஜன் ஆற்றின் கரையில் உள்ளது. தஞ்சையை ஆண்ட நாயக்கர்களின் ஆட்சிக்காலத்தில் மந்திரியாக இருந்த திப்பையா, இங்கிருக்கும் அந்தணர்களின் மூதாதையர்களுக்கு தானமாகக் கொடுத்ததால் இக்கிராமம் திப்பையாராஜபுரம் என அழைக்கப்பட்டது என்று காஞ்சி ஸ்ரீபரமாசார்யாள் கூறி உள்ளார்கள். திப்பையாராஜபுரம் என்ற பெயர் காலப்போக்கில் மருவி திப்பிராஜபுரம் ஆனது. சதுர வடிவில் நான்கு தெருக்கள் அழகாக உள்ளன. அபிராமி சமேத சோளேஸ்வரர் கோவில் அக்ரஹாரத்தின் வடகிழக்கு மூலையிலும் பெருமாள் கோவில் தென்மேற்கு மூலையிலும் அமைந்து அக்ரஹாரத்தின் லட்சணத்தோடு உள்ளது. ஸ்ரீஅபிராமி அம்பிகை சமேத விக்ரம சோளேஸ்வரர் கோவில் விக்ரம சோழனால் ப்ரம்மஹத்தி தோஷத்திலிருந்து விடுபடுவதற்காகக் கட்டப்பட்டது. பூமி, நீளா சமேத வரதராஜ பெருமாள் கோவிலின் தீபாராதனையை தெற்கு வீதி தொடங்கும் இடத்திலிருந்து எங்கு நின்றாலும் பார்க்கலாம். அக்ரஹாரங்களின் சிறப்பே அதுதான். வருடாவருடம் சங்காபிஷேகம், தேவசேனா கல்யாணம், ராதாகல்யாணம், நவராத்திரி, கந்த சஷ்டி போன்ற உத்ஸவங்கள் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. வாஜபேயம், சோமயாகம், கருட சயனம் ஆகிய யாகங்கள் செய்த சிறந்த வேத பண்டிதர் ஸ்ரீநாராயணஸ்வாமி ஸ்ரௌதிகள் இவ்வூரைச் சேர்ந்தவர். வாஜ்பேய யாகம் செய்ததற்காக அவரை சிறப்பித்து பரமாசார்யாள், வெண்கொற்றக்குடை அளித்தார். இந்த ஊரை சிறப்பித்த ஸ்ரீவைத்யநாத சாஸ்திரிகள் ஸமஸ்கிருத இலக்கணத்தில் நிபுணர்.அவ்ர் ஸமஸ்கிருத இலக்கணத்தில் பல புத்தகங்கள் எழுதியதோடு இவ்வூரில் அருள் பாலிக்கும் தெய்வங்களின் மேல் பல ஸ்லோகங்கள் இயற்றி உள்ளார். ஹரிகதா கலைஞரான ஹரிகதா கௌஸ்துபம் ஸ்வாமிநாத ஐயர் ஸ்தல பாகவதராக இருந்துகொண்டு ஏகாதசி பஜனைகளும், ராதா கல்யாண உத்ஸவங்களும் நடத்தி வந்தார். ஸ்ரீ பி.என்.ராமமூர்த்தி தீக்ஷிதர் சிறந்த உபன்யாசகரோடல்லாது சோமயாகம் செய்தவர். தமிழ் நாடு இயல் இசை நாடக மன்றத்தால் 'கலைமாமணி' விருது வழங்கப்பட்டவர். இவ்வூரைச் சேர்ந்த யக்ய நாராயண தீக்ஷிதர் நித்ய அக்னிஹோத்ரம் செய்ததோடு சோம யாகமும் செய்தவர். இங்கு வாழ்ந்த ஸ்ரீசீதாராம கனபாடிகள் வேத பாஷ்யங்களில் ஆழ் புலமை பெற்றவர். காஞ்சி மடம், திருப்பதி தேவஸ்தானம், மனித வள அமைச்சகம் ஆகியவற்றால் அங்கீகரிக்கப்பட்டவர். அவர் திப்பிராஜபுரம் வேத பாடசாலையில் ஆசிரியராக இருந்தவர். அவருடைய புத்திரர் ஸ்ரீஅனந்தநாராயண கனபாடிகள் தற்போது கும்பகோணம் சங்கர மடத்தில் கிருஷ்ண யஜுர் வேத அத்யாபகராக உள்ளார். பிரம்ம வித்ய சபா: ஸ்ரீகாஞ்சி பரமாச்சார்யாளின் ஆசியுடன் சுமார் 66 வருடங்களுக்கு முன் சமய தத்துவ பிரசங்களுக்காக ஆரம்பிக்கப்பட்டது. இச்சபை உபநிஷதங்கள், புராணங்களைப்பற்றி வாராந்திர பிரசங்கங்கள் நடத்தி வந்தது. ஸனாதன தர்மத்தில் தேர்ந்தவர்களான பல பண்டிதர்கள் இதில் பங்கேற்று, அறிவுக்கூர்மை மிகுந்த திப்பிராஜபுரவாசிகளுக்கு மேலும் மெருகூட்டியுள்ளனர்.. திப்பிராஜபுரவாசிகள் கலைகளில் மிகுந்த நாட்டம் உடையவர்கள். பல தலை சிறந்த கலைஞர்கள் இங்கு வந்து, இசை நிகழ்ச்சிகள், நாட்டிய நிகழ்ச்சிகள், சமயச்சொற்பொழிவுகள், இசைப்பேருரைகள் நிகழ்த்தியுள்ளனர். மற்ற தஞ்சை மாவட்ட வாசிகளைப்போலவே திப்பிராஜபுர வாசிகளும், இயற்கையிலேயே சிறந்த புத்திக்கூர்மை, கலைஞானம் உடையவர்கள். திப்பிராஜபுரவாசிகள் இன்றளவும் ஸ்ரீபரமாச்சார்யாளின் அனுக்கிரகத்தால் ஒற்றுமையாக, தன்னலமற்று, பங்களித்து, பகிர்ந்து வாழ்கிறார்கள். இவ்வூர் வாசிகள் அக்கிரஹாரத்தை பழமை மாறாமல் பாதுகாத்துவருவது மிகவும் போற்றத்தக்கது.
தமிழில் பைரவா, ரஜினி முருகன், சர்க்கார், அண்ணாத்த உள்ளிட்ட பல படங்களில் நடித்திருப்பவர் கீர்த்தி சுரேஷ். இவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது லேசான அறிகுறிகளுடன் எனக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மிகுந்த கவனமாக இருந்தும் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டும், கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நான் இப்போது என்னை தனிமைப்படுத்திக்கொண்டு, சிகிச்சை எடுத்து வருகிறேன். என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள், தங்களை பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.வைரஸ் பரவலின் வேகம் அச்சுறுத்துகிறது. தயவு செய்து அனைவரும் கொரோனா தடுப்பு விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். இதுவரைக்கும் தடுப்பூசி போட்டுக் கொள்ளாமல் இருந்தால், அவசியம் தடுப்பூசி செலுத்திக் கொள்ளுங்கள். இதை செய்தால் மட்டுமே உங்களையும், உங்கள் அன்புக்கு உரியவர்களையும் பாதுகாக்க முடியும்.கொரோனா தொற்றிலிருந்து விரைவில் குணமடைந்து மீண்டும் படப்பிடிப்புக்கு செல்வேன். இவ்வாறு கீர்த்தி சுரேஷ் தெரிவித்துள்ளார்.கடந்த சில மாதங்களுக்கு முன் கீர்த்தி சுரேஷ் தடுப்பூசி செலுத்திக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தின்… கலை இலக்கியத் துறைகளின் அசுர வளர்ச்சியால்¸ ஒரு காலத்தில்… இலங்கையின் கலை இலக்கிய சிருஷ்டிகள் பெரிதும் தாக்கப்பட்ட வண்ணமாகவே இருந்தன. சிறிமா அம்மையாரின் தலைமையில் சோசலிச கூட்டரசு உருவாகியது…. சுதேசிய சிந்தனைக்கு இடதுசாரிகள் பாதை அமைத்தனர்… பல்துறை இறக்குமதிகள் தடை செய்யப்பட்டன…. உள்ளுர் உற்பத்திக்கு ஊக்கம் கொடுக்கப்பட்டது…. இந்த சுதேசிய நடவடிக்கையால் இந்திய நாட்டுத் திரைப்படங்கள் கட்டுப்படுத்தப்பட்டன…. புத்தகங்கள்¸ சஞ்சிகைகளின் இறக்குமதிகள் கட்டுப்படுத்தப்பட்டன.. இலங்கை தமிழ் சினிமா படத் தயாரிப்பாளர்களை அரசு ஊக்குவித்தது. மிக வேகமாக பல தமிழ்ப் படங்கள் உருவாகின. வானொலி நாடகங்கள்…. வானொலி பாடல்கள் எல்லாமே இலங்கைப் படைப்புக்கள் ஆயின. நடிப்புக் கலைஞர்கள்¸ கதாசிரியர்கள்¸ பாடலாசிரியர்கள்¸ பாடகர்கள் இசையமைப்பாளர்கள் என்று உள் நாட்டுக் கலைஞர்கள் உருவாகினார்கள். வீரகேசரி பதிப்பகம் இலங்கை எழுத்தாளர்களின் புகழ் பெற்ற பல நாவல்களை மலிவு பிரசுரங்களாக வெளியிட்டன. பல இலக்கியப் படைப்புக்கள் வேகமாகத் தோன்றின…. இந்த பொற்காலம் 70 களிலிருந்து 80 கள் வரை ஒளி வீசிப் பிரகாசித்தன….. அந்த 70¸ 80 காலங்களில்… இலங்கை வானொலி உள்நாட்டுக் கலைஞர்கள் உருவாகுவதற்கு காரணமாகியது. இந்த ஒளிமயமான எதிர் காலத்தை உருவாக்குவதற்கு அன்று இலங்கை வானொலி தமிழ்ச் சேவை பணிப்பாளர் சபையில் உறுப்பினராகவிருந்த எச்.என்.பி.முகைதீன் அவர்களும்¸ இன்னும் பல தமிழ் அறிஞர்களும் செயல்பட்ட வரலாறு பெருமைக்குரியதாகும். ….அந்த ஒளிமயமான எதிர்காலம்¸ திடீரென ஜே.ஆரின் திறந்தப் பொருளாதாரக் கொள்கையால் மீண்டும் இருள்மயமாகிப் போனது! இருந்தாலும்… அந்த இன்பமயமான நாட்களை மீட்டிப் பார்ப்போம்.! இலங்கை வானொலி மெல்லிசைத் துறையில் பல புகழ் பூத்த கலைஞர்கள் நூற்றுக் கணக்கில் அறிமுகமாகினார்கள்.! அவர்களைப் பற்றி ஓர் ஆழமான ஆய்வு நூலினை எழுதுவதற்கு மனம் ஆசைபடுகிறது!... அது வரையிலும் சிலரைப் பற்றிய சிறிதளவிலான அறிமுகப் பணியை செய்வது முதற்கட்ட முயற்சியாகும். தற்போது நினைவில் நிற்கும் சில பிரபல்யங்களை எனது முகநூல் பக்கத்தில் முதல் கட்டமாக பதிவிடுகின்றேன். பாடகர்¸ கலைஞர் சூரியகுமார் முத்தழகை இலங்கை ரசிகர்களும் ஏன் தமிழக ரசிகர்களும் அறியாதவர்கள் இல்லை.! இவர் 1971 ம் ஆண்டு இலங்கை வானொலியில் அறிமுகமாகினார். ஏ.எம்.ராஜா போன்ற குரல் உடையவர் என்று¸ அன்று எல்லோரினதும் பாராட்டைப் பெற்றவர். அன்னை பராசக்தி… என்று தொடங்கும் இவரது முதல் பாடல் 1972 ல் வெளிவந்தது. இசையமைப்பாளர் எம்.எஸ்.செல்வராஜாவின் இசையில் புன்னகை செய்வாயா.. பெண்ணே புன்னகை செய்வாயா.. என்ற பாடலை நாம் மறக்க முடியாது. பொப்பிசை பாடலான வெக்கம் வந்ததோ… வெறுப்பும் வந்ததோ… என்ற பாடலும் மனதில் நிற்கின்றது. இப் பாடலை எழுதியவர் மலையகக் கவிஞர் சக்தி பாலஐயா ஆவார்..! இவர் கவிமணி சி.வி வேலுப்பிள்ளையை தமிழ்க் கவிதை உலகுக்கு அறிமுகப் படுத்தியவர். இவர் பொப்பிசை கவிஞர் என்பது புதியத் தகவலாகும்! முத்தழகு அவர்கள் இலங்கை தமிழ் சினிமாவில் மிக முக்கியமான பாடகராக வலம் வந்தார். அனுராகம் படத்தில் எண்ணங்களாலே இறைவன்தானே…¸ பொன் வண்ணத்தாலே வரைந்து விட்டானே.. எழில் கொஞ்சும் மலையகமே..¸ இளவேனிலே… மனவானிலே..¸உன்னை வரைந்தேனே...உள்ளமதிலே... புதிய காற்று படத்தில் ஓஹோ என் ஆசை ராதா..¸ இந்தாம்மா..அவள் ஒரு ஜீவநதியில் பருவம் பதினாறு.. உன் பார்வை பல நூறு..¸ சம்மதமா சொல்லித் தரவா… போன்ற நெஞ்சம் மறக்காத பாடல்களை பாடியுள்ளார். இவரது டூயட் பாடல்களில் கலாவதியே நிறைய பாடல்கள் பாடியுள்ளார். சிங்கள திரைப்படங்களிலும் இவர்கள் இருவரும் ஜோடியாக பல பாடல்கள் பாடியுள்ளார்கள். அன்று ஏ.எம்.ராஜாவும்¸ ஜமுனா ராணியும் பாடிய “ஜீவனமே கமன சன்சாரே…” என்ற பிரபல்யமான பாடலை மீண்டும் முத்தழகும்¸ கலாவதியும் பாடியுள்ளது குறிப்பிடத்தக்கதாகும். இந்தப் புகழ் பூத்த கலைஞருக்கு நம் நாட்டு கலையுலக வரலாற்றில் ஓர்பசுமையான பதிவு நிலைத்திருக்கும்! அடுத்ததாக.. திரைப் பட…. வானொலிப் பாடகியான திருமதி கலாவதி முன்னணி வகிக்கின்றார். இவர் 1972 களில் இலங்கை வானொலியில் அரங்கேற்ற நிகழ்சியின் மூலம் அறிமுகமாகினார். இனிமையான குரலால் ரசிகர்களைக் கவர்ந்த இவர்;¸ இலங்கை சிங்கள…. தமிழ்த் திரைப்படத் துறையில் கணிசமான பாடல்களைப் பாடியுள்ளார். விக்டர் ரத்நாயக்க இசையில் பாப்பா முகத்தில் பால் நிலவு பட்டுத் தெறிக்கிது… அதனைத் தொடர்ந்து… சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு..¸ இரவிலே வீசும் இளங் காற்றும் சந்திரனும்… மலரன்பன் எழுதி¸ மோகன் ராஜ் இசையமைத்த மகாவலியே.. மாநதியே… என்ற பாடலும்¸ சோலையோரம் மாலை நேரம் சல சல நதிக் கரையிலே…¸ என்ற மலரன்பனின் வரிகளில்¸ சரத் விக்ரம இசையிலும் இவர் பாடியுள்ளார். கே..கே. மதிவதனன் எழுதிய சொல்லத்தான் நானும்… தேனில் சுவை சேர்த்து.. என்ற பாடலை டி.கிருஷ்ணனும் இவரும் இணைந்து பாடியுள்ளனர். பொப் இசை பாடகர் ஏ.ஈ.மனோகரனோடுதான் தனது முதல் பாடல் அமைந்தது என்று கலாவதி கூறுகின்றார். எம்.எஸ்.செல்வராஜின் இசையில் ஜி.சின்னசாமி வரிகளில் சங்கீதமே.. சௌபாக்கியமே… பாடலும்¸ கோமாளிகள் (1976) படத்தில் சம்மதமா.. சொல்லித் தரவா… என்ற பாடலையும்¸ புதிய காற்று (1974) படத்தில் ஓஹோ என்னாசை கண்ணா… என்ற பாடலையும் முத்தழகோடு சேர்ந்து பாடியுள்ளார். எம்.எஸ் செல்வராஜ் இசையில்¸ அவள் ஒரு ஜீவ நதி படத்தில் ஈழத்து ரத்தினத்தின் பாடலான மாத்தளையில் மாசி மாதம் திரு விழா… என்ற பாடலையும் பாடியுள்ளார். தென்றலும் புயலும் படத்தில் திருமலை பத்மநாதன் இசையில் சந்திர வதனத்தில் இந்த நீலப் பூ… மற்றும் ஏ.மகேந்திரன் இசையில்¸ ஜி.சின்னசாமி வரிகளில்… சோலைக் குயில்கள் பாடும் கீதம்… ஸ்டான்லி பீரிஸ் இசையில் சிங்களப் பாடகர் பிரடி சில்வாவுடன் தே கூடய பிட்டே பந்தா நும்ப எனவா கந்த உடின்… (1981) என்ற பாடல் சிங்கள பட உலகில் பிரபல்யமாகி இவருக்குப் புகழை கூட்டியது. வானொலிப் பாடல்கள்.. தமிழ்.. சிங்களத் திரைப்படப் பாடல்கள் கணிசமான அளவில் பாடி¸ நமது நாட்டு கலையுலகத்துக்குப் பெருமை சேர்த்த பாடகி கலாவதிக்கு இலங்கை தமிழ்.. சிங்களக் கலையுலகின் வரலாற்றுப் பதிவில் சில பிரதானப் பக்கங்கள் உண்டு..! இன்னும் நம் இலங்கை வானொலியில் புகழ் பெற்ற பாடல்களைத் தந்த திருமதி ஜெகதேவி விக்னேஷ்வரன் எம் மனதில் நிற்கின்றார். தமிழகப் பாடகி பி.சுசிலாவுக்கு இணையாகப் பாடி வந்தவர். 1977 ல் அரங்கேற்றம் நிகழ்ச்சி மூலம் அறிமுகமானவர். 1978ல்; இசையமைப்பாளர் ஆர்.முத்துசாமி இசையில்¸ ஆனை முகன் தம்பி ஆறுமுகன்... என்று பாடிய பாடல் 1979 ல் ஒலிபரப்பாகியது. எழுத்தாளர் அகலங்கன் எழுதி¸(?) மெல்லிசை மன்னர்களில் ஒருவரான எஸ் கே..ராமமூர்த்தியின் இசையில் சேற்று வயல் காட்டினிலே நாற்று நட வந்த பெண்ணே… என்ற கிராமிய பாடல் ஒன்றையும்¸ ஷெல்லிதாசன் எழுதிய சிரித்து சிரித்து வந்தவளே… உன் சிரிப்பின் ரகசியம் என்னடியோ… என்ற பாடலையும் பாடியுள்ளார். கார்மேகம் நந்தா எழுதிய… இக் கரையில் இல்லாத வாழ்க்கையைத் தேடி… என்ற பாடல் மோகன் ராஜ் இசையிலும்¸ ஆறறிவு படைத்த மானிடனே… பாடல் எஸ்.கணேஷ்ராஜ் இசையிலும் வெளிவந்தன. ஜெகதேவியின் மிக உணர்ச்சிபூர்வமான இரண்டு பாடல்கள் இவரை இசைத்துறையில் மிகவும் பிரபல்யமாக்கியது. ஒன்று கவிஞர் வைரமுத்துவின் போரை எதிர்க்கும் பாடலான எங்கே பூமியில் போர்கள் இல்லையோ… அங்கே கூவுக பூங்குயிலே…¸ இப் பாடலுக்கு எம்.எஸ்.செல்வராஜா இசையமைத்துள்ளார். இப்பாடலை கேட்டு ரசிக்கும் எந்த ஒரு ரசிகனுக்கும் கவிஞர் ஷம்ஸ் எழுதி¸ தேமதாச இசையமைப்பில் நிரோஷா விராஜினி பாடிய வெள்ளி சிறகடிக்கும் வெண் புறாவே… நேரம் இன்னும் வரவில்லையோ.. பாடலும் சரிநிகரானது என்பது நினைவில் வரும்..! மற்றொரு புகழ் மிக்க பாடலான தாய் நாட்டு உரிமைக்காக ஏங்கும்… என் தேசக் காற்றும்.. என் தோட்டப் பூவும்.. என் தாயின் மடியும்… எனக்கில்லையா? என்ற பாடல் கருத்திலும்¸ இசையிலும் உருக்கமாக அமைந்திருந்தது.. இப் பாடலுக்கு எம். மோகன்ராஜ் ( Muthuswamy Mohanraaj ) இசையமைத்துள்ளார். ஆனந்த ரமேஷ் வரிகள் எழுதியுள்ளார். இன்னும் ஒரு பாடல் மயில் வாகனம் சர்வானந்தா எழுதி¸ மோகன்ராஜ் இசையமைத்த இளமையே.. இசை தரும் இனியத் தென்றலே.. என்ற பாடல் மிகவும் ரசிக்கக்கூடிய “மெலடி” யை கொண்ட பாடலாகும். ஜெகதேவி இரண்டு திரைப்படங்களுக்கு பாடியுள்ளார். ‘’எங்களில் ஒருவன்” படத்தில் முத்தழகுவுடன் இணைந்து உன்னைத் தேடி வந்ததோர் தோகை… என்ற பாடலும்.. பாதை மாறிய பருவங்கள் படத்தில்… முகிலே.. என்ற பாடலும் மோகன்ராஜ் இசையில் வெளிவந்தன.. நம் நாட்டு மெல்லிசை உலகில் மறக்க முடியாத பாடகியான இவருக்கு இலங்கை வானொலி இசை வரலாற்றில் ஒரு முக்கியமான இடம் உண்டு. மேலும் இங்கு இன்னொரு கவிஞரை… கலைஞரை நினைவூட்டிக் கொள்ள வேண்டும். சிறுகதை படைப்பாளர்¸ நாவலாசிரியர்¸ தமிழ்¸ சிங்கள மொழி பெயர்ப்பு எழுத்தாளர்¸ மெல்லிசை பாடலாசிரியர்¸ பாடகர் ஆகிய பல்துறை கலைஞராக மாத்தளை மண்ணுக்கு புகழ் சேர்த்தவர் மலரன்பன் ஆவார். தனது படைப்புகளுக்கு நான்கு முறை அரச சாகித்திய விருதுகளைப் பெற்றுள்ளார். பாடலாசிரியரான மலரன்பன்¸ எம்.எஸ்.செல்வராஜா இசையமைப்பில் 14 பாடல்களைக் கொண்ட இரண்டு ஒலிப் பேழைகளுடன் (Album) 4 இருவட்டுகளும் மெல்லிசைத்துறையில் இவரே முதன் முதலாக வெளியிட்டுள்ளார். பாடகர் ரகுநாதன் பாடிய மூங்கிலின் நாதமும்… தென்றலின் கீதமும் உன் புகழ் பாடுதம்மா… என்ற பாடல் மலரன்பனுக்கு புகழ் சேர்த்த பாடல்களில் ஒன்றாகும்.. மலரன்பனின் பாடல் வரிகளுக்கு ..இசையமைப்பாளர்கள்.. எம்.எஸ்செல்வராஜா..எம்.மோகன்ராஜ்.. ஜெயவிக்ரம ஆகியோர் இசையமைக்க முத்தழகு..கலாவதி..ஜெகதேவி..உட்பட இன்றைய முன்னணி பாடகர்களான மகிந்தகுமார்..ஜெகதீசன்..அக்னி சிவகுமார்..நிரோஷா விராஜினி.. நிலுக்ஷி ஜெயவீரசிங்கம்..ஆகியோர் பாடியுள்ளனர். ஆதர மீனா.. ஹலோ மிஸ்டர்..¸ மம டிரெக்டர்.. ஆகிய இரு சிங்களப் படங்களுக்கும்.. ரத்தரங் மங் ஆதரே என்ற சிங்கள படத்தின் தமிழாக்கமான அப்பாவி கண்கள் படத்துக்கும் பாடல்கள் எழுதியுள்ளார். கலைஞர் மலரன்பன் அவர்களை இலங்கை கலை இலக்கிய வரலாற்றுப் புத்தகத்தில் பதிவு செய்வதற்கு சில அழகான பக்கங்கள் காத்துக்கொண்டிருக்கின்றன…!
சீன அரசின் இரகசியமான உயர்மட்ட ஆய்விலிருந்து சிஞ்ஜியாங்கில் உள்ள உய்குர்கள் மற்றும் பிற இன சிறுபான்மையினரை நூறாயிரக்கணக்கில் வீட்டிலிருந்து வெகு தொலைவில் உள்ள புதிய வேலைகளுக்கு அனுப்பும் சீனாவின் கொள்கை அவர்களின் இனச்செறிவைக் குறைக்க வழிவகுக்கிறது. உயர்மட்ட அதிகாரிகளின் பார்வைக்காக தயாரிக்கப்பட்ட இந்த ஆய்வறிக்கை தவறுதலாக வலைத்தளத்தில் பிரசுரிக்கப்பட்டு விட்டது. இந்த ஆய்வறிக்கையும், சீனா முழுவதும் உள்ள தொழிற்சாலைகளில் சேகரிக்கப்பட்ட தகவல்களும், சீனாவின் பிரச்சார அறிக்கைகளும் BBC ஆல் வெளியிடப்பட்ட கட்டுரைக்கு ஆதாரங்களாக உள்ளன. சீன அரசாங்கமோ இப்பிராந்தியத்தின் இனச்செறிவை மாற்ற முயற்சிப்பதாக சொல்லப்படும் குற்றச்சாட்டை மறுக்கிறது. இடமாற்றங்கள் வருமானத்தை உயர்த்தவும், நீண்டகால கிராமப்புற வேலையின்மை மற்றும் வறுமையை போக்கவும் வடிவமைக்கப்பட்டுள்ளதாகக் கூறுகிறது. ஆனால் BBCஆல் திரட்டப்பட்ட ஆதாரங்கள் அரசின் இக்கொள்கை, சமீபத்திய ஆண்டுகளில் சிஞ்ஜியாங் முழுவதும் கட்டப்பட்ட “மறு கல்வி முகாம்கள்” போன்று மக்களை வற்புறுத்தலுக்கு உள்ளாக்கும் தன்மையுள்ளது என்பதை வெளிப்படுத்துகின்றன. மேலும் அவர்களின் வாழ்க்கை முறை மற்றும் சிந்தனைகளை மாற்றி சீனருடன் ஒன்றாக கலக்க வைக்கும் நோக்கத்துடன் இக்கொள்கை வடிவமைக்கப்பட்டுள்ளது என்பதைக் காட்டி நிற்கின்றன. இவ்வாறு வற்புறுத்தி அணிதிரட்டப்பட்ட மக்களைக் கொண்டு செய்யப்பட்ட பொருட்கள் எந்த அளவுக்கு உலக சந்தையில் கலந்துள்ளது என்பது பலரதும் அக்கறைக்கு உள்ளாகியுள்ளது. உய்குர்களின் உழைப்புக்கும் மேற்கு நாட்டு நிறுவனங்கள் இரண்டுக்கும் உள்ள தொடர்புகள் தொடர்பாக BBC ஆராய்ந்து வருகிறது. சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சி நடத்தும் ஊடகத்தில் ஒளிபரப்பப்பட்ட ஒரு காணொலி அறிக்கை, 4,000 கி.மீ தூரத்தில் உள்ள அன்ஹுய் (Anhui) மாகாணத்தில் ஒரு கிராமத்து மக்களின் அன்றாட விவசாய வாழ்க்கையை காட்டுகின்றது. பின்னர் கிராம மையத்தில் அதிகாரிகள் குழுவொன்று ஒரு சிவப்பு விளம்பரப் பதாகையின் கீழ் அமர்ந்திருப்பதைக் காட்டுகிறது. இரண்டு முழு நாட்கள் அவர்கள் அவ்வாறு காத்திருந்த போதும் கிராமத்திலிருந்து ஒரு நபர் கூட அங்கு பதிவு செய்ய முன்வரவில்லை. எனவே அதிகாரிகள் வீடு வீடாக செல்லத் தொடங்குகிறார்கள். அடுத்து வரும் காட்சிகள் ஜின்ஜியாங்கில் உள்ள உய்குர்கள், கசாக் மற்றும் பிற சிறுபான்மையினரை தொழிற்சாலை மற்றும் சிறுதொலில் வேலைகளுக்கு மாற்றுவதற்கான சீனாவின் பாரிய நடவடிக்கையை காட்டும் முக்கியமான காட்சிகள். இது அவர்களின் வீடுகளிலிருந்து கணிசமான தூரத்தில் உள்ள இடங்களுக்கு அவர்களை மாற்றுவதை பெரும்பாலும் உள்ளடக்கியுள்ளது. சீனாவின் இக்கொள்கை தீவிரமடையத் தொடங்கிய 2017 இல் ஒளிபரப்பப்பட்டிருந்தாலும் இந்தக் காணொலி சர்வதேச செய்தி அறிக்கையில் இதுவரை இடம்பெறவில்லை. அ திகாரிகள் ஒரு தந்தையிடம் பேசுகிறார்கள். அவர் தனது மகள் புசாயனாப்பை தூர இடத்துக்கு அனுப்பத் தயங்குகிறார். எங்கள் வாழ்க்கையை இங்கே நடத்த முடியும். எமது இயல்பான வாழ்க்கையை வாழ்வோம்.” என்று கெஞ்சுகிறார். அவர்கள் நேரடியாக 19 வயது புசாயனாப்பிடம் பேசுகிறார்கள். அவள் அங்கே தொடர்ந்து தங்கினால் விரைவில் திருமணம் செய்து கொள்வாள். அதன்பின் ஒரு போதும் வெளியேற முடியாது என்று அவளிடம் சொல்கிறார்கள். அவளை சிந்திக்குமாறு கேட்கிறார்கள். அரசாங்க அதிகாரிகள் மற்றும் அரசு - தொலைக்காட்சி பத்திரிகையாளர்களின் தீவிர அழுத்தத்தின் மத்தியிலும் அவள் தலையை அசைத்து, நான் போகமாட்டேன் என்று பதிலளித்தாள். ஆனாலும் அழுத்தம் தொடர்கிறது. இறுதியில் அழுதவாறே மற்றவர்கள் சென்றால் நான் செல்வேன், என்று கூறுகிறாள். இறுதியில் புசாயனாப் போன்று அணிதிரட்டப்பட்ட ஆட்கள் தாய்மார்களிடமிருந்து கண்ணீருடன் விடைபெறுவதாக காட்டி காணொலி முடிகிறது. அவர்கள் தங்கள் குடும்பத்தையும் கலாச்சாரத்தையும் விட்டு வெளியேறுகிறார்கள். மனித உரிமைகள் மற்றும் நவீன அடிமைத்துவம் என்பவற்றில் நிபுணரான பேராசிரியர் லாரா மர்பி (Laura Murphy) இங்கிலாந்தின் ஷெஃபீல்ட் ஹலாம் (Sheffield Hallam) பல்கலைக்கழகத்தில் பணிபுரிகிறார். இவர் 2004 மற்றும் 2005 இல் சின்ஜியாங்கில் வசித்து வந்தவர். அதன் பின்னர் பலதடவைகள் அங்கு சென்று வந்துள்ளார். இந்த திட்டங்களில் மக்கள் தன்னார்வத்துடன் கலந்து வருகிறார்கள் என்று சீன அரசாங்கம் தொடர்ந்து கூறுகிறது. ஆனால் இது ஒரு வற்புறுத்தல் முறை என்பதையும் மக்கள் அதனை மறுதிலிக்க அனுமதிக்கப் படுவதில்லை என்பதை இந்தக் காணொலி முற்றிலும் வெளிப்படுத்துகிறது. என்று அவர் சொல்கிறார். மக்களை வறுமையிலிருந்து உயர்த்துவது தான் நோக்கம் என்று விபரிக்கப்பட்டாலும், மக்களின் வாழ்க்கையை முற்றிலுமாக மாற்றுவதற்கும், குடும்பங்களை பிரிப்பதற்கும், மக்களைக் கலைப்பதற்கும், அவர்களின் மொழியை மாற்றுவதற்கும் ஒரு உந்துதல் இதன் பின்னால் இருக்கிறது. அவர்களின் கலாச்சாரம், குடும்ப கட்டமைப்புகளை சிதைவதனால் வறுமை குறைவதற்கு மாறாக அதிகரிக்கவே வாய்ப்புக்கள் உள்ளன. என்று அவர் கூறிகிறார். 2013 ஆம் ஆண்டில் பெய்ஜிங்கிலும், 2014 இல் குன்மிங் நகரத்திலும் பாதசாரிகள் மற்றும் பயணிகள் மீதான இரண்டு மிருகத்தனமான தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இது உய்குர் இஸ்லாமியவாதிகள் மற்றும் பிரிவினைவாதிகளால் நடத்தப்பட்டதாக சீனா குற்றம் சாட்டியது. அன்றிலிருந்து சின்ஜியாங்கில் சீனாவின் அணுகுமுறையில் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் காணலாம். அந்த மாற்றத்தில் முக்கியமானவை இந்த “மறு கல்வி முகாம்கள்” மற்றும் “வேலைவாய்ப்பு இடமாற்றங்கள்”. இவற்றினூடாக பழைய கலாச்சாரத்துக்கும் இஸ்லாமிய நம்பிக்கைக்கும் உள்ள விசுவாசத்திற்கு பதிலீடாக நவீன பொருள்முதல்வாதத்துக்கும் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் உய்குர்களை மாற்றுவது. சீனாவின் பெரும்பான்மையான ஹான் கலாச்சாரத்திற்குள் உய்குர்களை ஒருங்கிணைப்பதற்கான இந்த குறிக்கோள், மேலே குறிப்பிட்ட சீன ஆய்வறிக்கையில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. தொழிலாளர் இடமாற்றங்கள் உய்குர் சிறுபான்மையினர் மீது செல்வாக்கு செலுத்துவதற்கும், அவர்களை சீனர்களுடன் ஒருங்கிணைப்பதற்கும் ஒரு முக்கியமான முறையாகும் என்று சொல்கிறது. இந்நடவடிக்கை அவர்களின் சிந்தனையில் மாற்றத்தை கொண்டு வருவதாகவும் முடிவு செய்கிறது. உய்குர் மக்களை அவர்களின் இடங்களிலிருந்து அகற்றி அப்பிராந்தியத்தில் அல்லது பிற சீன மாகாணங்களில் உள்ள வேறு இடங்களுக்கு மாற்றம் செய்வது, உய்குர் மக்கள் அடர்த்தியைக் குறைக்கிறது என்று அது கூறுகிறது. இந்த அறிக்கை மே 2018 இல் சின்ஜியாங்கின் ஹோடன் (Hotan) பிரிவில் நடத்தப்பட்ட கள ஆய்வுகளின் அடிப்படையில் தியான்ஜினில் (Tianjin) உள்ள நங்காய் (Nankai) பல்கலைக்கழக கல்வியாளர் குழுவால் எழுதப்பட்டது. பல்கலைக்கழகத்தால் தவறுதலாக வலைத்தளத்தில் வெளிவிடப்பட்ட இவ்வறிக்கையை அங்கிருந்து நீக்கப்பட முன்னர் வெளிநாட்டிலிருந்த உய்கர் ஆராய்ச்சியாளர் ஒருவர் கண்டுபிடித்து தரவிறக்கம் செய்து விட்டார். வாஷிங்டனில் உள்ள கம்யூனிசத்துக்கு பலியானவர்களின் நினைவு அறக்கட்டளையின் அறிஞர் கலாநிதி அட்ரியன் சென்ஸ் (Dr. Adrian Zenz), இந்த அறிக்கையின் ஆங்கில மொழிபெயர்ப்பை உள்ளடக்கிய தனது சொந்த பகுப்பாய்வை எழுதியுள்ளார். இது முன்னெப்போதும் இல்லாத வகையில், சிஞ்சியாங்கின் அரசாங்கத்துடன் உயர்மட்ட தொடர்புகளுள்ள முன்னணி கல்வியாளர்கள் மற்றும் முன்னாள் அரசாங்க அதிகாரிகளால் எழுதப்பட்ட நம்பகத்தனமான அறிக்கை என்று அவர் BBC பேட்டியில் கூறினார். அவர்களது பூர்வீக பிரதேசத்தில் அதிகப்படியான மக்கள் தொகைச் செறிவைக் குறைப்பதற்காக, தொழிலாளர் இடமாற்றத்தை ஒரு வழியாகப் பயன்படுத்துவது என்பதை ஒத்துக்கொள்வது என்பது இந்த அறிக்கையின் மிகவும் அதிர்ச்சியூட்டும் ஒப்புதல். என்று தெரிவிக்கிறார். அவரது பகுப்பாய்வில், அமெரிக்க ஹோலோகாஸ்ட் நினைவு அருங்காட்சியக முன்னாள் மூத்த ஆலோசகரான எரின் ஃபாரெல் ரோசன்பெர்க்கின் (Erin Farrell Rosenberg) சட்டபூர்வமான கருத்தும் உள்ளது. பலவந்தமான இடமாற்றம் மற்றும் துன்புறுத்தலின் ஆகிய மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்கு நங்காய் அறிக்கை நம்பகமான ஆதாரங்களை வழங்குகிறது என்பது அக்கருத்தாகும். சீன வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட ஒரு எழுத்துப்பூர்வ அறிக்கையில், இந்த அறிக்கை ஆசிரியரின் தனிப்பட்ட பார்வை மட்டுமே. அதன் பெரும்பாலான உள்ளடக்கங்கள் உண்மை இல்லை என்று கூறியுள்ளது. சின்ஜியாங்கைப் பற்றி தெரிவிக்கும் போது ஊடகவியலாளர்கள் சீன அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ தகவல்களை அடிப்படையாகப் பயன்படுத்துவார்கள் என்று நாங்கள் நம்புகிறோம். என்று தெரிவித்துள்ளது. தன்னார்வ ஈடுபாட்டுக்கு உத்தரவாதம் மற்றும் தொழிற்சாலைகள் தொழிலாளர்களை சுதந்திரமாக வெளியே போய்வர அனுமதிக்கின்றமை என்பவை வறுமையை எதிர்த்துப் போராடுவதற்கான முயற்சியை உத்தரவாதப்படுத்தும் என்று நங்காய் அறிக்கை ஆசிரியர்கள் உயர்வாக எழுதியுள்ளார்கள். ஆனால் அந்தக் கூற்றுக்கள் நடைமுறையில் செயல்படும் விதம் குறித்து அவர்கள் வழங்கும் விவரங்கள் அந்தக் கூற்றுகளோடு முரண்படுகின்றன. தன்னார்வ ஈடுபாட்டு மாயை எத்தனை தொழிலாளர்களை அணிதிரட்ட வேண்டும் என்று அதிகாரிகளுக்கு இலக்குகள் வழங்கப்படுகின்றன. இலக்குகளை பூர்த்தி செய்ய அழுத்தம் உள்ளது. ஆட்சேர்ப்பு நிலையங்கள் ஒவ்வொரு கிராமத்திலும் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் 19 வயதான புசாயனாப்பின் விஷயத்தைப் போலவே கூட்டாக அணிதிரட்டவும் மற்றும் வீடுகளுக்கு சென்று ஆட்சேர்க்கவும் அதிகாரிகள் பணிபுரிந்தனர். ஹோடன் (Hotan) பிரிவில் ஆய்வு மேற்கொள்ளப்பட்ட நேரத்தில் ஏற்கனவே 250,000 தொழிலாளர்கள் (அதன் மொத்த உழைக்கும் வயது மக்கள்தொகையில் ஐந்தில் ஒரு பங்கு) ஏற்றுமதி செய்யப்பட்டபின்னும் இலக்குகள் எட்டப்படவில்லை. ஒவ்வொரு கட்டத்திலும் கட்டுப்பாடுகள் உள்ளதற்கான அறிகுறிகள் உள்ளன. அணிதிரட்டப்பட்ட அனைவரும் அரசியல் சிந்தனைக் கல்வி கட்டாயமாக்கப்படுகிறது. பின்னர் குழுக்களாக தொழிற்சாலைகளுக்கு கொண்டு செல்லப்படுகின்றனர். அவர்களை பாதுகாக்கவும் நிர்வ‍கிக்கவும் அவர்களுக்கு தலைவராக ஒரு அரசியல் அதிகாரி உடன் வருவார். தங்கள் நிலங்களை அல்லது கால்நடைகளை விட்டுவிட்டு வெளியேற விரும்பாத விவசாயிகள், அவர்கள் இல்லாத நேரத்தில் அவற்றை நிர்வகிக்கும் பொறுப்பை ஒரு மையப்படுத்தப்பட்ட அரசாங்கத் திட்டத்திற்கு மாற்ற ஊக்குவிக்கப்படுகிறார்கள். அவர்கள் புதிய தொழிற்சாலைகளுக்கு வந்தவுடன், அதிகாரிகளுடன் ஒன்றாக வதிவதற்கும் மையப்படுத்தப்பட்ட நிர்வாகத்தின் கீழ் வைக்கப்படுகிறார்கள். அதேவேளை சீனாவில் உள்ள இனவாதம் இந்த திட்டத்தை செயற்படுத்துவதற்குத் தடையாக இருப்பதாகவும் இந்த அறிக்கை தெரிவிக்கிறது. சீனாவின் கிழக்கு பகுதியிலிருக்கும் பிற மாகாணங்களுக்கு பெருமளவான உய்குர்களின் வருகையை எதிர்க்கும் அங்குள்ள உள்ளூர் பொலிசார் அவர்களை திருப்பி அனுப்புவதும் நடக்கிறது. அத்துடன் சிஞ்ஜியாங்கில் சீனாவின் கொள்கைகள் மிகவும் கடுமையக இருப்பதாகவும் அறிக்கையில் சில இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாக, மறு கல்வி முகாம்களில் வைக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை சிஞ்ஜியாங்கில் தீவிரவாதத்துடன் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையை விட மிக அதிகமாக இருப்பதாகக் கூறுகிறது. “முழு உய்குர் மக்களையும் கலகக்காரர்களாக கருதக்கூடாது என்று அது கூறுகிறது. சுதந்திரமாக போய்வரும் உரிமை நாடகம் ஹுவாபு (Huafu) ஆடை நிறுவனம் சீனாவின் கிழக்கு மாகாணமான அன்ஹுய் (Anhui) மாகாணத்தில் உள்ள ஹூவாய்பீ (Huaibei) நகர் தொழிற்பேட்டையில் அமைந்துள்ளது. இந்த தொழிற்சாலைக்குதான் புசாயனாப் அனுப்பப்பட்டார். இத்தொழிற்சாலையை BBC பார்வையிடப் போன போது ஐந்து மாடி உய்குர் தங்குமிடக் கட்டடம் பெரும்பாலும் வெறுமையாக காணப்பட்டது. ஒரு சாளரத்தில் மட்டும் ஒரு சோடி காலணிகளைக் காணக்கூடியதாக இருந்தது. வாயில் பாதுகாப்புக் காவலர் உய்குர் தொழிலாளர்கள் நாட்டின் கோவிட் கட்டுப்பாடுகள் காரணமாக வீட்டிற்குத் திரும்பிச் சென்றுவிட்டனர் என்று தெரிவித்தார். ஹுவாபு நிறுவனம் எமக்கு அளித்த அறிக்கையில் நிறுவனத்தில் தற்போது சின்ஜியாங் தொழிலாளர்கள் வேலை செய்யவில்லை. என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அமேசான் நிறுவனத்தின் இங்கிலாந்து இணையத்தளத்தில் ஹுவாபு நூல் கொண்டு தயாரிக்கப்பட்ட தலையணைகள் விற்பனையில் உள்ளன. இருப்பினும் இந்த தயாரிப்பு BBC பார்வையிட்ட குறிப்பிட்ட தொழிற்சாலையுடன் சம்பந்தப்பட்டுள்ளதா அல்லது நிறுவனத்திற்கு சொந்தமான பிற தொழிற்சாலைகள் ஒன்றில் தயாரிக்கப்பட்டதா என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை. அமேசான் கட்டாய உழைப்பு பயன்படுத்துவதை சகித்துக் கொள்ளளாது என்றும், அதன் விநியோகச் சங்கிலித் தொடர் விதிகளை திருப்தி செய்யாத தயாரிப்புகளைக் கண்டறிந்தால், அவை விற்பனையிலிருந்து நீக்கப்படும் என்றும் அமேசான் BBCஇற்கு தெரிவித்தது. BBC சீனாவை தளமாகக் கொண்ட சர்வதேச பத்திரிகையாளர்களுடன் இணைந்து மொத்தம் ஆறு தொழிற்சாலைகளுக்கு சென்றது. குவாங்டாங் (Guandong) மாகாணத்தில் உள்ள டோங்குவான் லுஷோ (Dongguan Luzou) காலணி தொழிற்சாலையில், உய்குர் ஊழியர்கள் தனியான தங்குமிடங்களில் இருப்பதாக ஒரு தொழிலாளி கூறினார். அவர்களுக்கென்று தனியான உணவகமும் உள்ளதாக தெரிவித்தார். உள்ளூர்வாசி ஒருவர் அத்தொழிற்சாலை அமெரிக்க ஸ்கெச்சர்ஸ் (Skechers) நிறுவனத்திற்கு பொருட்களை உருவாக்குகிறது என்று கூறினார். உய்குர் தொழிலாளர் ஸ்கெச்சர்ஸ் தயாரிப்புக்களை உருவாக்குவதைக் காட்டும் உறுதிப்படுத்தப்படாத காணொலிகள் சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டிருந்தன. அவற்றுனூடாக இந்த தொழிற்சாலை ஸ்கெச்சர்ஸ் நிறுவனத்துடன் தொடர்பு படுத்தப்பட்டிருந்தது. கட்டாய உழைப்பை தாம் சகிப்பதில்லை என்று ஸ்கெச்சர்ஸ் ஓர் அறிக்கையில் கூறியது. ஆனால் அது டோங்குவான் லுஷோவை ஒரு உற்பத்தியாளராக பயன்படுத்தியதா என்ற கேள்விகளுக்கு அது பதிலளிக்கவில்லை. டோங்குவான் லுஷோ எமது கேள்விகளுக்கு பதிலளிக்கவில்லை. அத்தொழிற்சாலையில் செய்யப்பட்ட நேர்காணல்களில், உய்குர் தொழிலாளர்கள் தங்கள் ஓய்வு நேரத்தில் தொழிற்சாலையை விட்டு வெளியேற சுதந்திரம் இருப்பதாக தெரிய வந்தது. ஆனால் நாம் பார்வையிட்ட பிற தொழிற்சாலைகளில், அதற்காக சான்றுகள் தெளிவாக இருக்கவில்லை. குறைந்தது இரண்டு இடங்களில் சில கட்டுப்பாடுகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. வூகான் நகரில் உள்ள தொழிற்சாலையில் இருந்த ஏறத்தாழ 200 உய்குர் தொழிலாளர்கள் வெளியே செல்ல அனுமதிக்கப்படவில்லை என ஒரு ஹான் சீன ஊழியர் தெரிவித்தார். தனது அரசியல் கல்விப் பயிற்சியைத் தொடங்க புசாயனப் தனது கிராமத்தை விட்டு வெளியேறிய மூன்று மாதங்களுக்குப் பிறகு, சீன அரசு-தொலைக்காட்சி குழுவினர் அவளை மீண்டும் சந்திக்கிறார்கள். இந்த முறை அன்ஹுயில் உள்ள ஹுவாபு ஆடை நிறுவனத்தில் சந்திப்பு நடக்கிறது. இம்முறை சீன கலாச்சாரத்தில் அவளின் ஒருங்கிணைப்பே செய்தி அறிக்கையின் மையப் பொருளாகும். ஒரு காட்சியில், புசாயனப் தனது தவறுகளுக்காக திட்டு வாங்குகிறாள். அதனால் கண்ணீர் விடுகிறாள். ஆனால் இறுதியில், ஒரு மாற்றம் நடைபெறுவதாகக் கூறப்படுகிறது. அதாவது பேசாமல் தலையைக் குனிந்து கொண்டிருந்த ஒரு பெண், தனது வேலைத்தளத்தில் அதிகாரம் பெறுகிறார் என்று தெரிவிக்கப்படுகிறது. அவளின் வாழ்க்கை முறைகள் மாறுகின்றன, எண்ணங்கள் மாறுகின்றன. ஜோன் சட்வேர்த் – BBC செய்திகள், பெய்ஜிங் (John Sudworth, BBC News, Beijing) பங்குனி 3, 2021 தமிழாக்கம் – நிமிர்வு (மாசி - பங்குனி 2021 நிமிர்வு இதழ்) இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள... Related Posts சர்வதேசம் Post a Comment No comments கருத்துரையிடுக வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் : 1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள். 2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள். 3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம் நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி. Subscribe to: Post Comments ( Atom ) இறுதியாக வெளியான காணொளி நிமிர்வு இதழ்களின் தொகுப்பு நிமிர்வு காணொளிகள் பக்கம் முகநூலில் எங்கள் பக்கம் நிமிர்வு கார்த்திகை - 2022 இதழ் Twitter-Timeline Tweets by Nimirvu1 அதிகம் வாசிக்கபட்டவை கட்டிளமைப் பருவத்தினருக்கு சிறந்த முன்மாதிரிகளே தேவை “இந்தக் காலப் பிள்ளைகளிடம் நல்லொழுக்கம் இல்லை. பெரியோருக்கு மரியாதை தருவது இல்லை. எதுக்கெடுத்தாலும் வன்முறை” என்பது வளந்த... மண்ணும் மரபறிவும் தமிழ்நாட்டின் நெய்தல் நில மக்கள், குறிப்பாக கடலோடிகள் குறித்து ஆய்வு செய்து தொடர்ந்து எழுதியும், பேசியும் வருகின்றவர் கன்னியாகுமரியில் வாழ... வகுப்பறை மேம்பாடும், வகுப்பறை முகாமைத்துவமும் பல்வேறு வகையான பரந்து பட்ட திறன்கள் மற்றும் நுட்பங்களை ஆசிரியர்கள் கையாள்வதன் மூலம், வகுப்பறையை சுமுகமான முறையிலும், மாணவர்களின் தே... ஆபத்தான விளிம்பில் நிற்கும் தென்னமரவடி இலங்கையின் கிழக்கு மாகாணத்தின் திருக்கோணமலை மாவட்டத்தின் தொன்மையான கிராமங்களில் ஒன்று தென்னவன் மரபு அடி கிராமம். பாண்டியனின் மரபில் வந்தவர... தற்சார்பு உணவுப் பண்பாடு எம்மை வழிநடத்த வேண்டும் ஐப்பசி 14 உலக உணவு தினத்தை முன்னிட்டு இலங்கை விவசாயத் திணைக்கள பண்ணை ஒலிபரப்புச் சேவையின் விவசாய வானொலி சஞ்சிகை நிகழ்ச்சியான களமும் வளமும்... Powered by Blogger. பதிப்புரிமை | Copyright © 2017 - Nimirvu நிமிர்வு. SriLanka Tamil News Site. All Rights Reserved. | WeB Designed By :: Nimirvu
யாழ்ப்பாணம் அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வல்லைப் பாலத்தில் மீன் பிடித்துக் கொண்டிருந்த இளைஞரொருவர் நீரேரியில் தவறி விழுந்து காணாமல் போய... தாயகம் திரும்ப மறுப்பு தெரிவித்து உயிர்மாய்க்க முயற்சித்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு..!!! தாயகம் திரும்ப மறுப்பு தெரிவித்து வியட்நாமில் உயிர்மாய்க்க முயன்ற குடும்பஸ்தர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் சாவகச்சேரியை ... க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் இன்னும் சில மணித்தியாலங்களில்..!!! 2021ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சையின் பெறுபேறுகள் இன்னும் சில மணித்தியாலங்களில் வெளியாகவுள்ளன. பரீட்சைகள் ஆணையாளர் ... புத்தாண்டு 2023 ராசிபலன்! குறி வைக்கும் சனியால் 4 ராசிக்காரர்களுக்கு தொட்டதெல்லாம் துலங்கும்..!!! புதிய ஆண்டு பிறக்க இன்னும் சில நாட்கள் மாத்திரமே உள்ளது. பிறக்க போகும் புத்தாண்டு எப்படி இருக்கும் என்று தெரிந்து கொள்ள அனைவரும் ஆவலாக இருப்... வடமாகாணத்தில் 551 பேருக்கு 9ஏ – யாழ்ப்பாணக் கல்வி வலயம் முதலிடம்..!!! 2021ஆம் ஆண்டின் கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேற்றின் அடிப்படையில் 551 மாணவர்கள் 9 பாடங்களிலும் ஏ தர சித்தியை பெற்று சாதன...
இக்கற்கை நெறியானது எந்த வகையான அமைப்புகள் புதிய கொரோனா போன்ற வெளிப்பட்டு வரும் சுவாச வைரசுகள் தொடர்பாக செயற்படுவதற்கு முன் ஆயத்தப்படுத்தப்படல் வேண்டும் என்பது தொடர்பாகவும், நோய்த்தொற்று ஏற்பட்டதன் பின்னர் அதனை எவ்வாறு இனங்காண்பது மற்றும் சுகாதார ஊழியர்களிற்கு/ நோயாளிகளுக்கு அல்லது சுகாதாரத்துறையுடன் தொடர்புபட்ட ஏனையவர்களிற்கு நோய்த்தொற்று ஏற்படாமல் தடுப்பதற்கு எவ்வாறு IPC முறைகளினைப் பயன்படுத்துதல் வேண்டும் என்பன தொடர்பாகவும் விளக்கம் அளிக்கின்றது. இக் கற்கை நெறியானது கிருமித் தொற்றில் இருந்து முற்பாதுகாப்பு மற்றும் கட்டுப்பாடு என்பவற்றினை நோக்காகக் கொண்டிருப்பதனால், இக்கற்கை நெறியானது சுகாதார சேவை பணியாளர்களிற்காகவும், பொதுச் சுகாதார சேவையாளர்களிற்காகவும் தயாரிக்கப்பட்டுள்ளது. ஜூன் 2020 முதல் இந்தப் பாடநெறி புதுப்பிக்கப்படவில்லை. மிகச் சமீபத்திய வழிகாட்டுதலுக்கு, பாடத்தின் ஆங்கிலப் பதிப்பைப் பார்க்கவும். கவனிக்கவும்: இந்த பொருட்கள் கடைசியாக 18/01/2022 அன்று புதுப்பிக்கப்பட்டன. 自学 语言: தமிழ் COVID-19 注册该课程 课程信息 இந்த பாடநெறி பின்வரும் மொழிகளிலும் கிடைக்கிறது: English - русский - 日本語 - français - Bahasa Indonesia - Español - Português - Italiano - српски језик - 中文 - македонски јазик - Türkçe - język polski - Tiếng Việt - العربية - Nederlands - Tetun - বাংলা - فارسي - Soomaaliga - සිංහල - Казақ тілі - ภาษาไทย - ქართული ენა கண்ணோட்டம்: இக் கற்கை நெறியானது கிருமித் தொற்றிலிருந்து முற்காப்பு மற்றும் கட்டுப்பாடு என்னும் தொனிப்பொருளுடன் பின்வருவனவற்றை மேற்கொள்வதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.: தீவிர நோய் பரம்பலிற்க்கு முகம் கொடுப்பதற்கு ஏற்றவாறு ஆயத்த நிலையில் மற்றும் தயார் நிலையில் இருத்தல் - கொவிட் 19 போன்றவற்றிற்கு.. உலக சுகாதார நிறுவனத்தின் IPC தொடர்பான பரிந்துரைகளிற்கு ஏற்ப மனிதரில் இருந்து மனிதரிற்கு நோய் பரம்புதலினை மட்டுப்படுத்துதல். சந்தேகத்திற்கிடமான அல்லது உறுதிப்படுத்தப்பட்ட நோயாளர்களினை அடையாளம் கண்டு தனிமைப்படுத்தலும், அறிக்கையிடலும். உங்களுக்கு உதவும் முகமாக ஒவ்வொரு மொடியூலிலும் அவசியமான தகவல்கள் இணைக்கப்பட்டுள்ளன. அதன்மூலம் இத்தலைப்பில் மேலதிகமாக கற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்கும். கற்றலின் நோக்கங்கள்: இப் பாடநெறியின் இறுதியில் நீங்கள் பின்வரும் விடயங்களில் தேர்ச்சி பெற்று இருப்பீர்கள். கிருமித் தொற்றினை வருமுன் காத்தல் மற்றும் கட்டுப்படுத்துதல் (IPC) தொடர்பாக வரையறுத்தல் மற்றும் IPC தொடர்பாக முன் ஆயத்தப்படுத்துதல், தயார் நிலையில் இருத்தல் மற்றும் பதில் அளித்தல் நடவடிக்கைகள் தொடர்பாக வரையறுத்தல்; தற்போதைய கொவிட் 19 தொடர்பான தொற்றுநோயியல் நிலவரம் தொடர்பாக விவரிக்கக் கூடியதாக இருத்தலுடன் நோய் வரைவிலக்கணம் மற்றும் நோய் அறிகுறிகள் தொடர்பாகவும் விபரித்தல்; நிர்வாகக் கட்டுப்பாடு, நோய் ஊற்றினது கட்டுப்பாடு, சுற்றுச்சூழல் கட்டுப்பாடு மற்றும் பொறியியல் கட்டுப்பாடு என்பன தொடர்பாக விபரித்தல்; Covid-19 சந்தேகத்திற்கிடமான அல்லது உறுதிப்படுத்தப்பட்ட நோயாளி ஒருவரினைக் கையாளும் போது உலக சுகாதார நிறுவனத்தின் பரிந்துரைகளிற்கு ஏற்ப கிருமித் தொற்றிற்கான முற்பாதுகாப்பு மற்றும் கட்டுப்பாட்டு(IPC) நடவடிக்கைகள் தொடர்பாக சுகாதார நிறுவனம் ஒன்றிற்கு விபரித்தல்; பொதுவான ஆயத்த நிலையின் போது, எவ்வகையான மேலதிகமான கிருமித் தொற்றிற்கான முற்காப்பு மற்றும் கட்டுப்பாடு போன்ற நடவடிக்கைகளினை சுகாதார நிறுவனம் ஒன்றில் கடைப்பிடிக்க வேண்டும் என்பது தொடர்பாக விபரித்தல். கற்கை நெறிக்கான காலம்: ஏறத்தாழ ஒரு மணித்தியாலம். சான்றிதழ்கள்: இப்பயிற்சி நெறியினைப் பூர்த்தி செய்வதற்கு ஏறத்தாழ ஒரு மணித்தியாலம் எடுக்கும். இப்பயிற்சி நெறியில் பங்குபற்றியமையினை உறுதிப்படுத்தும் சான்றிதழ்கள் இப்பயிற்சி நெறியினை 100% பூர்த்தி செய்தவர்களுக்கு வழங்கப்படும். இக் கற்கை நெறியினைப் பூர்த்தி செய்ததன் பின்னர் COVID19 இன் போது எவ்வாறு தனிநபர் பாதுகாப்பு அணிகலன்களை அணிவது மற்றும் களைவது என்பன தொடர்பாக அறிவதற்கு ஆர்வமாய் இருப்பீர்கள். எனவே தயவுடன் Open WHO இன் COVID19: How to put on and remove Personal protective equipment (PPE) எனும் கற்கை நெறியினை பின்வரும் இணைப்பின் ஊடாக அணுகவும்; http://openwho.org?courses/COVID-19-IPC-EN நீங்கள் கரங்களின் சுகாதாரத்தினை எவ்வாறு மேற்கொள்வது என்பது தொடர்பாக அறிவதற்கு ஆர்வம் கொண்டிருந்தால் தயவுடன் Open WHO இன் பின்வரும் இணைப்பின் ஊடாக இக் கற்கை நெறியினைப் பெற்றுக்கொள்ளலாம் : http://openwho.org?courses/COVID-19-IPC-EN ஆங்கிலத்திலிருந்து இவ் ஆவணங்கள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டவையாகும்: Infection Prevention and Control (IPC) for COVID-19 Virus, 2020 . உலக சுகாதார நிறுவனம் இம்மொழிபெயர்ப்பில் உள்ள உள்ளடக்கப் பிழைகள் அல்லது துல்லியம் என்பவற்றிற்குப் பொறுப்புடையதற்றதாகும். மொழி பெயர்ப்பில் ஏதேனும் வித்தியாசங்கள் ஆங்கிலத்துடன் ஒப்பிடும் பொழுது தமிழில் காணப்பட்டால் ஆங்கில மூலப் பிரதியில் காணப்படுபவையே சரியானவையாக ஏற்றுக்கொள்ப்படும். 课程内容 மொடியூல் 1: ஆயத்த நிலையில் இருத்தல்இ தயார் படுத்துதல் மற்றும் கிருமித் தொற்றிற்கான முற்காப்பு மற்றும் கட்டுப்பாடு. : இப்பாட நெறியானது ஆயத்த நிலையில் இருத்தல், தயார் படுத்துதல் மற்றும் கிருமித் தொற்றிற்கான முற்காப்பு மற்றும் கட்டுப்பாடு நடவடிக்கைகள் தொடர்பாக விளக்குகின்றது. மொடியூல் 2: கொவிட் - 19 வைரசு.: இப்பாட நெறியானது கொவிட்-19 இற்கான அறிமுகத்தினை வழங்குகின்றது. மொடியூல் 3: கொவிட் -19 இன் போது கிருமித்தொற்றிற்கான முற்காப்பு மற்றும் கட்டுப்பாடு ஜIPCஸ: தரநிலைப்படுத்தப்பட்ட முற்காப்புஇ பரவும் முறையினை ஆதாரமாகக் கொண்ட முற்காப்பு முறைகள் மற்றும் கொவிட் - 19 இற்கு உரித்தான பரிந்துரைகள்;.
சென்னை மயிலாப்பூர் ஹாமில்டன் பாலம் அருகில் 05-12-2010 அன்று நடைபெற்ற டாக்டர் அம்பேத்கர் நினைவு நாள் பொதுக் கூட்டத்தில் பேசிய ப.சிதம்பரம் "இரட்டைக் குவளை முறை இன்னும் பல கடைகளில் இருக்கிறது. தலித்துகளுக்கு எதிரான தீண்டாமைக் கொடுமை ஒழிய தொடர்ந்து போராடிக்கொண்டே இருக்க வேண்டும்" என்று அறைகூவல் விடுத்தார். இப்படிக் கூறியவர் இந்த நாட்டின் மத்திய உள்துறை அமைச்சர் என்பதே நாம் கவனிக்க வேண்டிய விஷயம்! சுதந்திரம் பெற்றது முதல் ஆதிக்க சாதிகள் தவறாமல் செய்துவருவது தலித்துகளை தீண்டாமைக் கொடுமை மூலம் ஒடுக்குவதும், அவர்களது சமூக முன்னேற்றத்தை தடுப்பதும், அவர்களது அரசியல் வளர்ச்சியை எப்பாடு பட்டாவது கெடுப்பதுமே! இன்றும் கூட ஒரு சதவிகிதம் கூட தலித்துகளின் சமூக பாதிப்புகள் குறையவில்லை என்பதுதான் இந்த நாட்டின் தலையான பிரச்சினை. தலித் மக்கள் அனுபவித்து வரும் சமூக, அரசியல், பொருளாதாரக் கொடுமைகள் வெளிப்படையானவை! தீண்டாமைக் கொடுமைகள் நடக்காத பகுதி எதுவுமே இல்லை என்பதுதான் மறுக்க முடியாத உண்மை. இது 'ஜனநாயக நாடா' அல்லது 'சாதி வெறி நாடா' என்று தலித் இளைஞர்கள் கேட்கும் கேள்விக்கு நம்மிடம் எந்த பதிலும் இல்லை. "சமூக நீதி" பற்றி பேசும்போது "தலித் அல்லாதாருக்கான நீதி மட்டும்தான் இது" என்று வெளிப்படையாகவே சொல்லிவிட்டுப் போகலாம். அந்த அளவிற்கு தலித்துகள் அனைத்து வகைகளிலும் புறக்கணிக்கப் படுகின்றனர் அல்லது ஏமாற்றப் படுகின்றனர்! "உங்களை நசுக்கவும், அழிக்கவும் வருபவர்கள் என் பெயரையும், படத்தையும் கூட பயன்படுத்துவார்கள்! உஷார்!" என்று பாபாசாஹேப் அம்பேத்கர் தலித் இளைஞர்களை எச்சரித்தார். எப்படிப்பட்ட மாமேதை அவர்? இந்த நிலையை அன்றே உணர்ந்திருக்கிறார். நூறு ஆண்டுகள் ஆனாலும் ஆதிக்க சாதிகள் தலித்துகளை எள்ளளவும் வளர அனுமதிக்க மாட்டார்கள் என்பது அவருக்கு அன்றே தெரிந்திருக்கிறது! இன்றில்லாவிட்டாலும் நாளை, நாளை இல்லாவிட்டாலும் நாளை மறுநாள்...என்று எந்த ஒரு தெளிவான நிலையும் தலித் இளைஞர்களின் எதிர்காலத்தில் இல்லை என்பது நம்மை கவலை கொள்ள வைக்கிறது. ஆனால், தலித் இளைஞர்களின் நுண்ணறிவும், கடின உழைப்பும், பரந்த மனமும், சாதிக்கத் துடிக்கும் சிந்தனையும் சமூகத்தால் சரியாக மதிக்கப் படுவதில்லை. நானறிந்த வரையில், தலித் சமூகத்தைச் சார்ந்த வழக்கறிஞர்களும், அதிகாரிகளும், டாக்டர்களும், பேராசிரியர்களும் புரிந்துவரும் சாதனைகள் மிகவும் பாராட்டத்தக்கவை. இது ஆதிக்க சாதிகளை மேலும் கோபமடைய வைக்கிறது. எந்த ஒரு துறையிலும், தலித்துகளை நுழைய விடாமல் இருப்பது எப்படி என்று ஆராய்ச்சியே நடக்கிறது! தீண்டாமை அவர்களுக்கு சாதியில் மட்டுமில்லை; அரசியலில், கல்வியில், அறிவுசார் துறைகளில், இலக்கியத்தில் நிரந்தரமாக நிலவுகிறது. இந்த இழி நிலை மாற தலித் இளைஞர்கள் என்ன செய்யப் போகிறார்கள் என்று தெரியவில்லை. "நான் தலித்துகளுக்கு அதிக அளவில் நன்மைகள் செய்திருக்கிறேன்" என்று சொல்லாத அரசியல் தலைவர்கள் இல்லை. ஆனால் அவர்களது கட்சியில், அமைப்புகளில் ஒரு சாதி இறுக்கமும், தீண்டாமையும் நிரந்தரமாக நிலவும் என்பது தெளிவாகத்தெரியும். டாக்டர் திருமாவளவன், டாக்டர் கிருஷ்ணசாமி, சிவகாமி ஐ.ஏ.எஸ் போன்ற தலைவர்கள் அரசியலில் வளர்ந்தால், அவர்களை எப்படி தரம் தாழ்த்திப் பேசுவது, அவர்கள் பெயரை எப்படி கெடுப்பது, அவர்களை எப்படி மோசமாக சித்தரிப்பது என்பதெல்லாம் ஆதிக்க சாதியினருக்கு அத்துப்படியான விஷயம்!. நம்பிக்கையூட்டக்கூடிய தேசிய அளவிலான தலைவர் மாயாவதி. அவரை எதிர்க்க, பலவீனப் படுத்த "அனைத்து" கட்சியினரும் "இணைந்து" செயல்படுவது நம் தலித் தலைவர்களின் அரசியல் நிலையை படம் பிடித்துக் காட்டுகிறது. இன்றும் ஒரு தாழ்த்தப்பட்ட இளைஞனை ஒரு ஆதிக்க சாதிப் பெண் காதலித்து அவர்கள் திருமணம் செய்யப் போனால், அது கடுமையாக எதிர்க்கப்படுகிறது. பொதுவாகவே, தலித் இளைஞர்கள் நேரடியாகப் பேசுபவர்களாகவும், தைரியசாலிகளாகவும், அறிவோடு சிந்திக்கக் கூடியவர்களாகவும் இருக்கிறார்கள். எனவே, மற்ற சாதி பெண்கள் அவர்களை காதலிக்க வாய்ப்பு ஏற்படுகிறது. அதிலும், குறிப்பாக, பிள்ளைமார், முதலியார், அய்யர், அகமுடையார், செட்டியார், ரெட்டியார், நாயுடு போன்ற உயர் சாதிப் பெண்கள் அவர்களை விரும்பி, திருமணம் என்கிற நேரம் வரும்போது, தலித் இளைஞருக்கு பலத்த நெருக்கடிகள் ஏற்படுகின்றன. அந்த நேரங்களில், தலித் இளைஞர்கள் எந்த ஆதரவும் இல்லாத பரிதாப நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். "நம் வாய்ப்புகளை தட்டிப் பறிக்கவும், நம்மை மேலும் பலவீனப்படுத்தவும் ஆதிக்க சாதிகள் தயாராக இருக்கின்றன. தலித் அரசியல் இயக்கங்கள் அனைத்திலும் உள்ள சிந்தனையாளர்கள் இணைந்து கட்சி சார்பற்ற ஒரு சமூக பாதுகாப்பு அமைப்பை உருவாக்க முயற்சிகள் செய்து வருகிறேன். தலித்துகளின் இட ஒதுக்கீட்டை 25 சதவிகிதமாக உயர்த்த வேண்டும். அதுவே உண்மையான சமூக நீதி" என்கிறார் தொழிற்சங்க தலைவரும், பத்திரிக்கையாளரும், அரசியல் அறிஞருமான கவிஞர் தா.மனோகரன். "ஒவ்வொரு தனியார் மற்றும் பொது ஆலயத்திலும் கண்டிப்பாக ஒரு தலித் அர்ச்சகர் இருக்க வேண்டும் என்ற சட்டம் கொண்டுவரப்பட வேண்டும். ஆனால், இந்த கோரிக்கையை தலித்துகள் தீவிரமாக வலியுறுத்த வேண்டும். இதற்காக ஒரு கருத்தாக்கத்தை உருவாக்கிப் போராட வேண்டும்" என்கிறார் ஒரு மூத்த சமூக ஆர்வலர்! தலித்துகளுக்கு எதிரான ஜாதிய ஒடுக்குமுறையையும், வன் கொடுமையையும் கட்டுப்படுத்தவே வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் இருக்கிறது. ஆனால், அந்த சட்டம் தலித் மக்களின் பாதுகாப்பை உறுதிப் படுத்துவதாக இல்லை என்பது கவலைக்கு உரியது. வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை வலுப்படுத்துவதற்கான கூட்டமைப்பு ஒன்றை டெல்லியிலுள்ள தலித் சமூக நீதி இயக்கம் உருவாக்கியுள்ளது. "இந்த சட்டத்தின் கீழ் இரண்டு ஆண்டுகள் முதல் ஏழு ஆண்டுகள் சிறை தண்டனையும், அபராதமும் விதிக்கப்படக்கூடியதாக திருத்தம் செய்யப் பட வேண்டி உள்ளது" என்று அந்த இயக்கம் பரிந்துரைத்துள்ளது. "இச்சட்டத்தின்கீழ் பதியப்படும் வழக்குகளை ஒரு குறிப்பிட்ட காலத்துக்குள் நீதிமன்றத்துக்குச் எடுத்துச் செல்வதற்கு கண்காணிப்புக் குழு அமைக்கவும், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கொடுக்கப்படும் தண்டனைகள், இந்திய தண்டனை சட்டத்தில் அளிக்கப்படும் தண்டனைகளை விட அதிகமாக இருக்கும்விதமாக இச்சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வரவேண்டும்" என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பிருந்தா காரத் கூறுகிறார். மேலும், மதம் மாறியவர்களுக்கும் இச்சட்டம் செல்லும் விதமாகவும், இதுதொடர்பான வழக்குகளில் சாட்சியம் அளிப்போரைப் பாதுகாக்கும் வகையிலும் சட்டத் திருத்தங்கள் கொண்டு வரவேண்டும் என்று பிருந்தா காரத் வலியுறுத்துகிறார். ஒடுக்குமுறைகளை இனம் கண்டு கொண்டு போராடும் தலித் போராளிகளை "வன்முறையை கையாள்கிறார்கள்; சாதியைத் தவறாகப் பயன்படுத்துகிறார்கள்" என்று ஏசுவது ஒரு அயோக்கியத்தனமான குற்றச்சாட்டு. இந்த மாதிரி குற்றச்சாட்டுகள் ஆதிக்க சாதியினரின் சாதிப்பற்றை மறைப்பதற்கான தந்திரங்களே தவிர வேறல்ல. ஆராய்ச்சியாளராக, அறிஞராக, பேராசிரியராக, வழக்குரைஞராக, எழுத்தாளராக, உலகின் தலை சிறந்த கிளர்ச்சியாளராக, அரசியல் சட்ட மேதையாக, புத்தரின் அறிவார்ந்த சீடராக, தாழ்த்தப்பட்ட மக்களின் ஒப்பற்ற தலைவராக, சரித்திர நாயகனாக பல்வேறு பரிமாணங்களுடன் இந்த நாட்டிற்கே பெருமை சேர்த்துள்ள பாபாசாஹேப் அம்பேத்கர் அவர்கள் தோன்றி மறைந்த பின்னரும் இந்தியாவில் தலித்துகளின் நிலை மாறாமல் இருப்பது ஜனநாயாக சிந்தனையாளர்களுக்கு கவலை அளிக்கிறது!
அதானி, பிலாகவி: வடக்கு கர்நாடகாவின் பிலாகவி மாவட்டம் அதானி தாலுக்காவில் உள்ள பாண்டெகான் கிராமத்தை சேர்ந்த விவசாயி மற்றும் சமூக பணியாளரான தொண்டிரா துக்காரா, 68, தனது 2.5 ஏக்கர் விளை நிலத்தில் ஒவ்வொரு ஆண்டும் சோளம் (sorghum) சாகுபடி செய்வார். சோளம் ஒரு வறண்ட நிலப்பயிர் ஆகும்; இது ராபி (குளிர்காலம்) மற்றும் காரீஃப் (பருவமழை) இரண்டிலும் வளரும். கடந்த வருடம், சுதாரின் மொத்த பயிரும் மழை குறைவால் பொய்த்தது; அவரால் மற்றொரு பயிரையும் சாகுபடி செய்ய முடியவில்லை. பிலாகவி மாவட்டத்தின் ஒரு பகுதியான அதானி தாலுகா, கடும் வறட்சியை எதிர்கொண்டுள்ளது - அக்டோபர் 1 முதல் டிசம்பர் 31, 2018 வரை - சராசரியாக 135.70 மி.மீ. மழை பதிவாக வேண்டிய அதானியில், 40.38 மி.மீ மட்டுமே பதிவாகி உள்ளது; அதேபோல் மாவட்டத்தில், 152.50 மி.மீ.க்கு பதிலாக 50.60 மி.மீ. மழை மட்டுமே பெய்ததாக, கர்நாடகா அரசின் வருவாய்த்துறையின் கீழ் செயல்படும் தன்னாட்சி அமைப்பான, கர்நாடக மாநில இயற்கை பேரிடர் கண்காணிப்பு மையத்தின் (KSNDMC) தரவுகள் தெரிவிக்கின்றன. அதானி பகுதி, கடந்த 10 ஆண்டுகளாகவே படிப்படியாக மழைப்பொழிவு விகித சரிவை சந்தித்துக் கொண்டிருக்கிறது; இது, விவசாயத்தை தக்கவைக்க போதுமானதாக இல்லை. அதனால் இப்பகுதியில் உள்ள பெரும்பாலான விவசாயிகள் மாற்று வாழ்வாதாரமாக கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டுள்ளனர். சூதருக்கு மூன்று மாடுகள், ஐந்து ஆடுகள் உள்ளன. அவற்றின் பாலை லிட்டர் ஒன்று ரூ.30 என்று விற்பனை செய்கிறார். அவர் இறைச்சிக்காக ஆடுகளை வளர்ப்பதோடு ஒவ்வொரு 6 மாதங்களுக்கும் (ஒரு ஆட்டுக்குட்டி ரூ.4,000-7,000; ஆடு ஒன்று ரூ 10,000 என ) அவற்றை விற்கிறார். இப்போது, கால்நடைகளை நிர்வகிக்க போதுமான தண்ணீர் இல்லை.பயிர் விளைச்சல் இல்லாத நிலையில், தாலுகாவில் உள்ள பெரும்பாலான விவசாயிகளுக்கு, மத்திய அரசின் பயிர் காப்பீட்டு திட்டமான பிரதம மந்திரி பாசல் பீமா யோஜனாவின் (பி.எம்.எப்.பி.ஒய்.) கீழ் காப்பீடு தொகையும் கிடைக்கவில்லை. காந்திநகரில் உள்ள இந்திய இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியின் முன் கூட்டியே வறட்சி குறித்து எச்சரித்த நிலையில், மே மாதம் 30, 2019 வரை நாட்டில் குறைந்தபட்சம் 43.87% பகுதிகள் வறட்சியால் பாதிக்கப்பட்டிருந்தன. வறட்சி குறித்த எங்களது தொடரில் இது ஆறாவது மற்றும் கடைசி கட்டுரை. முந்தைய கட்டுரைகளை நீங்கள் இங்கே, இங்கே, இங்கே, இங்கே மற்றும் இங்கே படிக்க முடியும். Source: DEWS, IIT Gandhinagar; May 2019 வறட்சியால் வறண்டுள்ள மாவட்டங்கள் கர்நாடகா, அதன் 30 மாவட்டங்களில் 23ஐ வறட்சி பாதித்ததாக அறிவித்தது குறித்து, செப்டம்பர் 28, 2018இல் இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை குறிப்பிட்டு இருந்தது. இவற்றில் 16 நிரந்தர வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதாக, வறண்ட நில வேளாண்மை குறித்த மத்திய விவசாய ஆராய்ச்சி நிறுவனத்தின் பகுப்பாய்வு தெரிவிக்கிறது. இந்த மாவட்டங்கள் உள்பட நாட்டின் 24 மாவட்டங்கள் கடும் வறட்சியால் பாதிக்கப்பட்டதாக, 2018 டிசம்பரில் பேசிய சட்டசபையில் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.வி. தேஷ்பாண்டே கூறினார். நிரந்தர வறட்சி பிராந்தியமாக பிலாகவி அடையாளம் காணப்பட்டுள்ளது என, டிசம்பர் 19, 2018இல் வந்த தி இந்து செய்தி தெரிவித்தது. வட கர்நாடகாவின் பிலாகவி மாவட்டத்தின் அதானி தாலுகா கிராமங்களில் முக்கிய ஆதாரமாக உள்ள ஆழ்துளை கிணறுகள் வறண்டன. நீடிக்கும் வறட்சியால், கரும்பு போன்ற நீர்ப்பாசனங்களை நம்பி இருக்கும் பயிர்களின் சாகுபடி பொய்த்துப்போனது. கர்நாடகாவில் குறைந்தது ஏழு மாவட்டங்கள் ‘மிகக்குறைந்த வகை’ - மழை இயல்பு அளவு 99% மற்றும் 60% இடையில் என, பருவமழை குறைவு குறித்த (மார்ச் 1 முதல் மே 31, 2019) கே.எஸ்.என்.டி.எம்.சி. அடிப்படையாகக் கொண்ட தரவில் குறிக்கப்பட்டுள்ளது. Source: Karnataka State Natural Disaster Monitoring Centre Note: Data is between March 1 to May 31, 2019 இயல்பு அளவு 68% என்ற நிலையில் 31 மிமீ மழையை பதிவு செய்யும் ஆறு மாவட்டங்களில் பிலாகவியும் ஒன்றாகும். அதானியில் மழைக்காலத்திற்கு முந்தைய மழை அளவு 36 மி.மீ; சராசரி மழைப்பொழிவு 52% ஆகும். இந்த மோசமான சூழல், அண்டை தாலுகாக்களான சிக்கோடி (18 மி.மீ மழை, இயல்பு -80%), ரேபாக் (28 மி.மீ மழை, இயல்பு -63%) மற்றும் கோகாக் (16 மிமீ மழை, இயல்பு -85%). Source: Karnataka State Natural Disaster Monitoring Centre * Height above Local Ground Level அதானி பகுதியானது ஆண்டில் சராசரியாக 34 நாட்களுக்கு மட்டுமே - பிலாகவி மாவட்டத்தில் உள்ள 10 தாலுகாக்களில் மிகக் குறைவாக- மழை பதிவாகி இருப்பது, 1951 மற்றும் 2000 ஆம் ஆண்டுகளுக்கு இடையிலான பிலாகவி மாவட்ட புள்ளிவிவர அலுவலகத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன. இந்த மழை ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் பதிவாகி உள்ளது. இந்த 10 மழை அளவீடுகள், இந்த தாலுகா ஒவ்வொரு வருடமும் வறட்சி நிலையில் மோசமடைவதை காட்டுகின்றது. "தண்ணீர் இல்லை என்பதால், விவசாயிகள் தங்களது கால்நடைகளை விற்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்" என்று சூடர் கூறினார். வட கர்நாடகா மாவட்டங்களில் மழைப்பொழிவானது ஆண்டுதோறும் மாறுபடுகிறது என்று, இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலின் கீழ் செயல்படும் அகில இந்திய ஒருங்கிணைந்த ஆராய்ச்சி திட்டத்தில் (AIRCP) விண்வெளி சார்ந்த பணியில் ஈடுபட்டுள்ள எச். வெங்கடேஷ் தெரிவித்தார். ஒரு ஆண்டில் ஜூன் மாதம் நல்ல மழை பெய்யும் போது, அடுத்த ஆண்டு மழைக்காலம் ஜூலையில் தாமதமாக ஆரம்பிக்கலாம். "அக்டோபர் மாதத்தில் அறுவடை பருவத்தில் குறுகிய கால பயிர்களுக்கு இந்த மழை உதவுகிறது," என்று வெங்கடேஷ் கூறினார். "நாங்கள் குறுகிய மற்றும் நடுத்தர கால மழை முன்அறிவிப்புகளை வழங்குகிறோம். நீட்டிக்கப்பட்ட நீண்ட கால முன்அறிவிப்பு என்பது சோதனை கட்டத்தில் உள்ளது. இந்த கணிப்புகளை Havaamaana Krishi என்ற மொபைல் செயலி மூலம் விவசாயிகளை அடையலாம்" என்றார். கர்நாடகா முழுவதும் விவசாயிகளுக்கு வானிலை தொடர்பான தகவலை வழங்கும் வருணா மித்ரா என்றழைக்கப்படும் 24x7 செயல்படும் மூன்று-வரிசை கொண்ட உதவி மையத்தை கர்நாடக மாநில இயற்கை பேரிடர் கண்காணிப்பு மையத்தின் (KSNDMC) அமைத்துள்ளது. "2018இல் எங்களுக்கு ஏறத்தாழ 15,25,000 அழைப்புகள் வந்தன. அதில் 52,471 அழைப்புகள் பிலாகவி விவசாயிகளிடம் இருந்து வந்தன" என்று கே.எஸ்.என்.டி.எம்.சி. இயக்குனர் ஜி.எஸ். ஸ்ரீநிவாஸ் ரெட்டி கூறினார். இந்திய வானிலை ஆய்வு மையம், மாவட்ட வாரியாக வானிலை முன்னறிவிப்புகளை வழங்குகிறது, அதேநேரம் கே.எஸ்.என்.டி.எம்.சி. விவசாயிகளுக்கு கிராம அளவிலான வானிலை தகவலை அளிக்கிறது. அதானியில் உள்ள ஷிரூர் கிராமத்தை சேர்ந்த 70 வயது பாண்டுரங்க மேனே, தனது 2.5 ஏக்கர் நிலத்தில் மக்காச்சோளம் மற்றும் பஜ்ரா (தினை) சாகுபடி செய்தார். போதிய மழையின்றி, கடந்த இரு ஆண்டுகளில் மேனிற்கு நல்ல விளைச்சல் கிடைக்கவில்லை. "நான் கடந்த ஆண்டு விதைத்த விதைகள் முளைக்கவில்லை," என்று அவர் கூறினார். விவசாயத்தில் மூலம் மேனியின் ஆண்டு வருமானம் ரூ.20,000 ஆகும். அவர் ரூ. 5,000-6,000 பெறுகிறார். இதில் அவரது குழந்தைகள் அனுப்பும் பணமும் அடங்கும்."ஒவ்வொரு வருடமும் எனது வருவாய் கடுமையாக குறைந்து வருகிறது. எனது இந்த வயதில், இன்னமும் ஒரு வேலை கூட எனக்கு கிடைக்கவில்லை, "என்றார் அவர். தண்ணீருக்காக தோண்டும் பெரும் பணி அதானியில் வசிக்கும் ஏறத்தாழ 6,00,000 மக்கள், தங்களது குடிநீர் தேவைகளுக்கு - குடிப்பதில் இருந்து விவசாயம் வரை - ஆழ்துளை கிணறுகளையே பெரிதும் சார்ந்துள்ளனர்; ஆனால், நிலத்தடி நீர்மட்டம் குறைந்து பெரும்பாலன ஆழ்துளை கிணறுகளும் வறண்டுவிட்டன. சுமார் 120 அடி ஆழத்தில் உள்ள ஒருசில திறந்தவெளி கிணறுகள் மட்டுமே உள்ளன; ஆனால் தண்ணீரை எடுக்க, 700 முதல் 800 அடி ஆழம் செல்ல வேண்டும்; இதற்கு ஊராட்சியிடம் இருந்து அனுமதி பெற வேண்டும். Source: District Statistical Office, Belagavi "அவர்களின் நோக்கத்தின்படி ஆழ்துளை கிணறுகளின் சேவை இனி கிடைக்க வாய்ப்பில்லை” என்று, சமூக மற்றும் பொருளாதார மாற்றத்திற்கான நிறுவனத்தின் விவசாய நீர் மேலாண்மை நிபுணரும், உதவி பேராசிரியருமான ஏ.வி. மஞ்சுநாத் தெரிவித்தார். "மேலும், அதிக புளோரைடு காரணமாக ஆழ்துளை கிணறுகளின் தரமும் கூட மோசமாக உள்ளது” என்றார். நீரில் உள்ள புளூரைடு மற்றும் நைட்ரேட் அளவுகள், ஆரோக்கியமான வரம்புகளுக்கு அப்பாற்பட்டவை என, அதானி தாலுகா நீர் முகாமைத்துவ திட்டத்தின் அறிக்கையை 2017 மார்ச்சில் வெளியிட்ட மத்திய நிலத்தடி நீர் வாரியம் தெரிவிக்கிறது. மேலும், கோலார், சிக்கபல்லாபூர் போன்ற இப்பகுதிகளில் உள்ள அணைகளும் வறண்டுவிட்டன. எல்லையோர கிராமங்களின் நிலை கர்நாடகாவில் கிட்டத்தட்ட 88.6% - அதாவது 176 தாலுகாக்களில் 156- வறட்சியின் தாக்கத்தில் உள்ளன. ராபி பருவத்தில் ஏற்பட்ட இழப்பை மதிப்பிடுவதற்கான ஒரு கூட்டு ஆய்வு மாநில மற்றும் மத்திய அரசுகளால் நடத்தப்பட்டது. எனினும், அந்த குழுவினர் இதுவரை கிராமங்களில், குறிப்பாக மகாராஷ்டிர எல்லைப்பகுதிகளில் பார்வையிடவில்லை என்று, கிராமவாசிகள் தெரிவித்தனர். தீவனம், வங்கிகள் மற்றும் டேங்கர் லாரி தண்ணீர் வழங்கல் போன்ற சில முக்கிய வசதிகள் செய்து தரப்பட்டாலும், அவற்றின் கிடைக்கும் தன்மை போதுமானதல்ல என்று, பிலாகவி மாவட்ட நிர்வாகத்தின் கணக்கெடுப்பு அறிக்கைகளை, இந்தியா ஸ்பெண்ட் மதிப்பீடு செய்ததில் தெரிய வருகிறது. குடிநீர் இல்லாமல், கால்நடைகளுக்கு தீவனம், நீர்ப்பாசனத்திற்கான தண்ணீர் மற்றும் வாழ்வாதாரம் - மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாத திட்டத்தின் (MGNREGS) கீழ் வேலைவாய்ப்புகள் குறைவாகவே உள்ளன -எல்லையோர பகுதிகளில் வசிக்கும் கிராம மக்கள் மகாராஷ்டிராவின் காவத்தே - மஹெங்கால், துல்கான், சல்கரே மற்றும் சாங்லி மாவட்டத்தின் மஹாலூங் பகுதிகளுக்கு குடிபெயர்ந்து செல்கின்றனர். அண்டை மாநிலத்தில் உள்ள வயல்கள் "நன்கு பாசனம்" செய்யப்பட்டுள்ளன. மேலும் "வேலை தேடுவது எளிது" என்று கிராமவாசிகளுக்கு இந்தியா ஸ்பெண்டிடம் தெரிவித்தனர். பயிர் தோல்விக்கான இழப்பீடு "நான் கடந்த ஆண்டு விதைத்த விதைகள் முளைக்கவில்லை," என்று, வடக்கு கர்நாடகாவின் வறட்சி பாதிக்கப்பட்ட அதானி தாலுகாவை சேர்ந்த 70 வயது பாண்டுரங்க மேனே (இடது) கூறினார். வருமானம் ஒவ்வொரு ஆண்டும் குறைந்து வருவதாகவும், இந்த வயதில் இனி வயலில் வேலை பார்க்க இயலாது என்றும் அவர் தெரிவித்தார். தண்ணீர் அதிகம் தேவைப்படும் கரும்பு, அதானியின் பெரிய வணிக பயிராகும். ஒரு சுய அழிவு வடிவத்தில் - வறண்ட கர்நாடகா முழுவதும் நன்கு அறியப்பட்டும் விவசாயிகள் கரும்பு பயிர்களை அதிக லாபம், வருவாய்க்காக இன்னமு தொடர்ந்து பயிரிடுகின்றன; நாட்டின் சர்க்கரை உற்பத்தியில் மூன்றாவது பெரிய கரும்பு உற்பத்தியாளராகவும், இந்தியாவின் சர்க்கரை உற்பத்தியில் 16% எனவும் கர்நாடகா உள்ளது. தற்போது, இது கிருஷ்ணா நதி கரையில் அமைந்துள்ள பகுதிகளில் மட்டுமே பயிரிடப்படுகிறது. பருத்தி, மக்காச்சோளம், சோளம், கம்பு, ராகி, கோதுமை மற்றும் பருப்பு போன்ற பல உலர்ந்த பயிர்கள், தண்ணீர் எளிதில் கிடைக்காத பகுதிகளில் சாகுபடி செய்யப்படுகிறது. கிருஷ்ணா நதிக்கரையோரம் உள்ள அயின, ஷிர்ஹத்தி, சப்தசாகர், ஷங்கராட்டி, தாரூர் மற்றும் சாத்தி போன்ற கிராமங்கள், ஆற்றங்கரையில் இருந்து தொலைவில் உள்ள மற்றும் மழைப்பொழிவு குறைவாக பெறும் ஜம்பாகி, அஜூர், மடபவி, பாண்டெகவான், மாலாபாத், சிரூர், அனந்தபூர் மற்றும் சிவனூர் போன்ற கிராமங்கள் ஒப்பிடும்போது, தண்ணீர் அதிகம் தேவைப்படும் பயிர்கள் நன்கு வளர்கின்றன. ராபி பருவத்தில் (2018) போது தண்ணீர் இல்லாததால் அதானி பகுதியில் மொத்த பயிர் இழப்பு 34,604 ஹெக்டேர் (1,60,774 ஹெக்டேர் சாகுபடியில்). இதில், மத்தியக்குழுவின் அறிக்கை அடிப்படையில் தேசிய பேரிடர் நிவாரண நிதி மற்றும் மாநில பேரிடர் நிவாரண நிதியாக, 23,375 விவசாயிகள் ரூ .2,353.08 லட்சம் பயிர் இழப்பீடு வழங்க பரிந்துரைக்கப்பட்டது. எனினும், இந்த நிதி இன்னும் விடுவிக்கப்படவில்லை. பிரதம மந்திரி பாசல் பீமா யோஜனா (PMFBY) பயிர் காப்பீட்டு திட்டம், பெல்காம் மாவட்டத்தில் அதிக எண்ணிக்கையிலான பதிவுகளை கண்டது. 2016 இல் மட்டும் 140,089 விவசாயிகள் ராபி பருவத்தில் பதிவு செய்தனர்; காரீப் பருவத்தில் 31,538 விவசாயிகள் பதிவு செய்யப்பட்டனர். இந்த எண்ணிக்கை 2017 ஆம் ஆண்டில் சரிவு கண்டது; நல்ல மழை காரணமாக, ராபி பருவத்தில் 1,910 விவசாயிகள் மற்றும் காரீப் பருவத்தில் 151 விவசாயிகள் மட்டுமே பதிவு செய்தனர். கடந்த 2018 இல், ராபி பருவத்தில் 1,4749 விவசாயிகள், காரீப் பருவத்தில் 8,547 விவசாயிகள் பயிர்க்காப்பீடுக்கு பதிவு செய்தனர். இருப்பினும், விவசாயிகளுக்கு 2016ஆம் ஆண்டு வரை மட்டுமே இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. 2017 மற்றும் 2018 ஆண்டுக்கான பயிர் சாகுபடி பொய்த்துப்போன விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு தரப்படவில்லை.ஏனெனில் மத்திய அரசு அதற்கான நிதியை இன்னமும் விடுவிக்கவில்லை என்றும் மாவட்ட ஆட்சியர் எஸ்.பி. பொம்மன்ஹல்லி, இந்தியா ஸ்பெண்டிடம் தெரிவித்தார். கால்நடைகளுக்கு தீவனம் இல்லை கெயில்கான் கிராமத்தில், கால்நடைகளுக்கு தேவையான மேய்ச்சல் இல்லை. "எங்களுடைய கால்நடைகளை வளர்ப்பதற்கு முற்றிலும் தீவன வங்கிகளை நாங்கள் நம்பி இருக்கிறோம்," என்று, இதே கிரமத்தை சேர்ந்த 55 வயது அன்னப்பா நிம்பல் தெரிவித்தார். நான்கு பசுக்கள் சொந்தமான மானே, ஒருஒப்பந்தத்திற்கு சம்மதித்தார். பிப்ரவரி 2, 2019 ஆம் ஆண்டு திறக்கப்பட்ட ஷிரூர் கிராம தீவன வங்கி, ஷிருர், சம்பாரகி மற்றும் பண்டேகான் கிராமங்களுக்கு வழங்குகிறது. மோல், கில்காகான் மற்றும் அஜூர் பஞ்சாயத்துகளிலும் தீவன வங்கிகள் திறக்கப்பட்டுள்ளன. மழையின்மை மற்றும் தீவனம் இருப்பு இல்லாத வங்கிகளால் அதானி தாலுகா விவசாயிகள் தங்களது கால்நடைகளை தங்களது உறவினர் இடங்களுக்கு அனுப்பிவிடுகின்றனர்; அல்லது கால்நடைகளை பசுமை தேடி அதன் போக்கில் மேய விடுகின்றனர். தீவனம் பெறுவதற்கு, விவசாயிகள் அதார் அடையாள அட்டையை வழங்க வேண்டும் மற்றும் கணக்காளர் கையொப்பமிடப்பட்ட ஒரு புத்தகத்தில் கொள்முதல் பதிவு செய்ய வேண்டும். ஒவ்வொரு கிராமத்திலிருந்தும் விவசாயிகளின் பட்டியலையும் கால்நடை உரிமையாளர்களையும் கால்நடை அதிகாரிகள் வழங்குகின்றனர். "இது தீவனத்திற்கான உண்மையான தேவையை உறுதிப்படுத்துகிறது மற்றும் தீவன நிதிகளின் தவறான பயன்பாட்டை தடுக்கிறது" என்று ஷிரூர் தாலுகா அலுவலக வருவாய் துறை கணக்கர் (கிராம கணக்காளர்) எம்.பி. பட்டீல், 35, தெரிவித்தார். ஷிரூர் கிராமத்தில் மட்டும் 2,200 கால்நடைகள் உள்ளன. ஏறத்தாள 180 விவசாயிகள் தீவன வங்கியின் சேவைகளை தொடர்ந்து பயன்படுத்துகின்றனர். ஒவ்வொரு கால்நடைக்கும் ரூ.1 என்ற விலையில் 15 கிலோ தீவனம், ரூ.2 என்ற விலையில் உலர் தீவனம் வழங்கப்படுகிறது. இருப்பினும், ஆரோக்கியமான மாடு போதுமான பால் வழங்க, குறைந்தபட்சம் 20-25 கிலோ எடையுள்ள தீவனம் தேவையென கிராமவாசிகள் தெரிவித்தனர். சில நேரங்களில், மகாராஷ்டிரா விவசாயிகள் தங்கள் உறவினர்களின் இடங்களுக்கு கால்நடைகளை அனுப்பி வைக்கிறார்கள்; அங்கு போதுமான தண்ணீர் மற்றும் தீவனம் உள்ளது. சர்க்கரை ஆலைகளில் இருந்து கிடைக்கும் கரும்பு சக்கை, தீவனத்தில் முதன்மையானது; ஒவ்வொரு தீவன வங்கிக்கும் 1,518 டன் கரும்பு சக்கை கொண்டு வரப்படுகிறது. இருப்பினும், கோடையில் ஆலைகள் மூடும்போது, தீவன பற்றாக்குறை ஏற்படுகிறது. முன்பெல்லாம் கோசாலைகள் (மாடு தங்கும் இடம்) இருந்தன; ஆனால் இது கடந்த ஐந்து ஆண்டுகளாக நிறுத்தப்பட்டுள்ளது. "அதை மீண்டும் கொண்டு வர வேண்டும்," என்றார் சுதார். முன்பெல்லாம், விவசாயிகள் தங்கள் கால்நடைகளை கோசாலைகளில் விடுவர்; அவை பஞ்சாயத்து வளர்ச்சி மற்றும் வருவாய் அதிகாரிகளை உள்ளடக்கிய ஒரு பணிக்குழுவால் நடத்தப்படுகின்றன. இவையே ஐந்து ஆண்டுகளுக்கு முன் தீவன வங்கிகளால் மாற்றப்பட்டன. விவசாயிகள் அருகில் உள்ள தீவன வங்கிக்கு செல்ல மூன்று முதல் நான்கு கி.மீ. தூரம் நடக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். "வறட்சி நிலைமை தொடர்ந்து மோசமடைந்து வருவதால், சம்பராகி மற்றும் பிற கிராமங்களில் அதிகமான தீவன வங்கிகள் திறக்கப்படும்" என்று தலதி பாட்டீல் கூறினார். வறட்சியின் போது வேலை உருவாவது முக்கியம் "எங்களுக்கு விவசாய நிலங்கள் இருந்தாலும், அதை வைத்து இருக்க எங்களால் முடியவில்லை. நூறு நாள் வேலை உற்தி திட்டத்தின் (MGNREGA) கீழ் எங்களுக்கு எந்த வேலையும் கிடைக்கவில்லை. நாங்கள் ஒரு கொடுமையான வாழ்க்கையை வாழ்கிறோம்,"என்கிறார் கில்காகன் விவசாயியான நிம்பால். எந்த விருப்பமும் இல்லாமல், கிராமவாசிகள் அண்டை மாநிலமான மகாராஷ்டிராவுக்கு இடம் பெயர்ந்து விவசாய, கட்டுமான பணிகளை தேடுகின்றனர். ஷிரூரை சேர்ந்த மானேவுக்கு இரு மகன்கள்; அவர் தனது மனைவியுடன் மகாராஷ்டிராவின் மீராஜ் மற்றும் சாங்லியில் தனித்தனியே வேலை செய்கிறார்கள்."அவர்கள் ஒரு மாதத்திற்கு ஒருமுறை கிராமத்திற்கு வருகிறார்கள்," என்று மானே கூறினார். நூறு நாள் வேலை உறுதி திட்டத்தின் கீழ் புதிய பணிகள் மேற்கொள்வதை கிராம ஊராட்சிகள் நிறுத்திவிட்டன; மேலும் இத்திட்டத்தின் (MGNREGA) கீழ் முடிக்கப்பட்ட பணிகளின் சதவீதம் பல ஆண்டுகளாகவே குறைந்து வந்துள்ளது. இத்திட்டத்தில் புதிய பணி மேற்கொள்ள நிதி ஒதுக்கப்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். அதானியில் வழங்கப்பட்ட வேலை அட்டைகளின் எண்ணிக்கை 3,226; ஆனால் பதிவு செய்து செயல்பாட்டில் இருப்பவர்கள் 1,403 தொழிலாளர்கள் என்று, நூறு நாள் வேலை உறுதி திட்டத்தின் இணையதள தரவுகள் தெரிவிக்கின்றன. இருப்பினும், பதிவு செய்யப்பட்டு செயல்பாட்டில் உள்ள தொழிலாளர்களின் எண்ணிக்கை, நடப்பு ஆண்டில் 281 பேர் மட்டுமே. "ஜில்லா பஞ்சாயத்து கிராமங்களில் தடுப்பணைகளை கட்ட வேண்டும். இது வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மழைநீர் சேகரிப்புக்கு உதவும், மேலும் வேலை வாய்ப்புகளையும் உருவாக்கும்” என்று பிலகாவியை சேர்ந்த சமூக ஆர்வலர் சிவாஜி ககனிகர், 55, கூறினார். வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆண்டுக்கு 150 நாட்களுக்கு வேலை வாய்ப்பு உத்தரவாதம் அளிக்கப்படுவதால், கிராமப்புற மக்களுக்கு முக்கிய வாழ்வாதாரமாக நூறு நாள் வேலை உறுதித்திட்டம் உள்ளது. "இந்த திட்டம் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதி ஏழை மக்கள் நாளொன்றுக்கு இரு உணவை பெற உதவும் ஒரே திட்டமாகும்" என்று அரசுசாரா அமைப்பான ஜனஜகரனின் செயற்பாட்டாளரும், பிலகாவியில் உள்ள ஊழல் எதிர்ப்பு இயக்கமான பிரஷ்டாச்சர் நிர்முலன் சமிதியின் உறுப்பினருமான சிவாஜி ககனிகர், 55 தெரிவித்தார். இருப்பினும், இந்தியா ஸ்பெண்டிடம் பேசிய சில கிராமவாசிகள், கிராமப்புற பெண்கள் அதிகம் போராடும் வரை வேலைகள் வழங்கப்படுவதில்லை என்றனர். சரியான நேரத்தில் ஊதியம் வழங்கப்படுவதில்லை, ஊழல் பரவலாக உள்ளது என்று அவர்கள் கூறினர். சில பகுதிகளில், மக்கள் போலி வேலை அட்டைகள் மற்றும் வங்கிக் கணக்குகளை உருவாக்குகிறார்கள் என்று ககனிகர் கூறினார். வறட்சி பாதிக்கப்பட்ட பகுதிகளில் மழை நீரை சேகரிக்கும் வகையில் தடுப்பணைகளை நூறு நாள் வேலை உறுதி திட்டத்தில் கட்ட வேண்டும். இது வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்றார் அவர். அதிக வெளிப்படைத்தன்மை மற்றும் திட்டத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய தேவை உள்ளது. குறைபாடுள்ள நீர் திட்டங்கள் அரசின் தண்ணீர் லாரிகள் ஒவ்வொரு நாளும் ஒரு நபருக்கு 40 லிட்டர் தண்ணீரை வழங்க வேண்டும். ஆனால் 15-20 லிட்டர் (இரண்டு முதல் மூன்று குடங்கள்) மட்டுமே கிடைக்கும் என்கின்றனர் கிராமவாசிகள். வடக்கு கர்நாடகாவின் அதானி தாலுகா, மோல் கிராமத்தில் லாரியில் இருந்து தண்ணீர் பெற வரிசையில் காத்திருந்த மக்கள். அதானி, உகர் குர்த் நகரத்தை சேர்ந்த சாவித்ரி ரோகாடே, 45, அண்மையில் குடிநீர் பற்றாக்குறைக்கு எதிராக அனைத்து பெண்கள் எதிர்ப்பு ஊர்வலத்திற்கு தலைமை தாங்கினார். தண்ணீர் பிரச்சனைக்கு அரசியல்வாதிகளை அவர் குற்றம் சாட்டினார்: "இது சில ஆண்டுகளாக நடந்து வருகிறது, இப்பிரச்சினைக்கு அதிகாரிகளால் ஒரு நிரந்தர தீர்வை காண முடியவில்லை. வசதி உள்ளவர்கள் மட்டும் ரூ.20க்கு ஒரு குடம் தண்ணீர் வாங்க முடியும். ஏழைகள் எப்படி தங்களது தாகத்தைத் தணிப்பார்கள், தங்கள் கால்நடைகளுக்கு எப்படி வளர்ப்பார்கள்? தண்ணீர் பற்றாக்குறை தீரும் வரை கிராமங்களுக்கு போதியளவு அதிகாரிகள் தண்ணீர் டேங்கர்களை அனுப்ப வேண்டும்” என்றார். கிராமங்களுக்கு நதி நீரை வழங்கும் மாநில அரசின், பல்நோக்கு கிராம குடிநீர் திட்டம்- எம்.வி.எஸ் (MVS), கிருஷ்ணா ஆற்றில் இருந்து அதானி கிராமங்களுக்கு குடிநீரை கொண்டு வருகிறது. இருப்பினும், கோடையில் ஆறு வறண்டுவிட்டால், இத்திட்டம் செயல்படாது; அதானி மற்றும் காக்வாட் தாலுகாக்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இந்த "வடிவமைப்பு குறைபாடு" பல்வேறு நீர் திட்டங்களில் உள்ளது என என்ற அறிக்கையை, கிராமப்புற மேம்பாட்டு மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் கிருஷ்ணா பைரே கவுடா, மே 18, 2019இல் செய்தியாளர் சந்திப்பில் ஒப்புக் கொண்டார். தண்ணீர் பற்றாக்குறை மற்றும் காப்புப்பிரதி திட்டம் இல்லாததால் சுமார் 75 நீர் திட்டங்கள் செயல்படுவது நின்றுவிட்டதாக அவர் கூறினார். கடந்தாண்டு போல் இல்லாமல், மஹாராஷ்டிரா அரசு கொய்னா அணையில் இருந்து வட கர்நாடகாவின் வறட்சி நிறைந்த கிராமங்களுக்கான நீரை விடுவிக்காதது, நிலைமையை மோசமாக்கி உள்ளது. கர்நாடகாவின் 13 நீர்த்தேக்கங்களில் உள்ள நீர் அளவுகள் ஒட்டுமொத்த சேமிப்புத் தொகையில் 13.38% என்று, கே.எஸ்.என்.டி.எம்.சி. தரவுகள் கூறுகின்றன. பொது-தனியார் கூட்டாண்மை முறையில் ஒரு பசாவேஸ்வர-கெம்ப்வாட் லிப்ட் பாசன திட்டம் 1,363 கோடி ரூபாய் செலவில் (4 204.88 மில்லியன்) அதானியில் சுமார் 27,462 ஹெக்டேர் பாசன வசதி செய்ய இலக்காக கொண்டுள்ளது. இது கிருஷ்ணா நதியில் இடது கரையில் இருந்து சுமார் 20 கிராமங்களை பூர்த்தி செய்யும். இருப்பினும், இத்திட்டம் செயல்பட குறைந்தது மூன்றரை ஆண்டுகள் ஆகும் என்று, இத்திட்டத்துடன் தொடர்புடைய அதிகாரி எம்.ஸ்ரீனிவாஸ், இந்தியா ஸ்பெண்டிடம் கூறினார். கடந்த ஐந்து ஆண்டுகளில், தேசிய கிராமப்புற குடிநீர் திட்டத்தின் கீழ் கர்நாடகாவிற்கு 64% நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசின் பங்களிப்பு 2013-14 ஆம் ஆண்டில் ரூ .868.76 கோடியில் இருந்து, 2018-19 ஆம் ஆண்டில் ரூ. 312.33 கோடியாக குறைந்தது என, டெக்கான் ஹெரால்ட் பிப்ரவரி 2019 இல் செய்தி வெளியிட்டது. அனுபவித்து வருவதால், தடுப்பணைகள் (ஓடி வீணாகும் மழைநீரை சேமிக்க அமைக்கப்பட்ட கட்டுமானம்) மற்றும் ஏரிகள் வறண்டு போயுள்ளன. அரசு, சில ஏரிகளை தூர்வாரி வருகிறது. ஆனால் கிருஷ்ணா நதியில் இருந்து ஏரிகளுக்கு செல்லும் குழாய் பொருத்துவது மழைக்காலம் தொடங்கும் முன்பே முடிக்கப்படவில்லை. ஒவ்வொரு நாளும் ஒரு நபருக்கு குறைந்தபட்சம் 40 லிட்டர் தண்ணீரை நீர் விநியோகிக்க வேண்டும். இருப்பினும், கிராமவாசிகள் தங்களுக்கு 15-20 லிட்டர் (இரண்டு முதல் மூன்று குடங்கள்) மட்டுமே கிடைப்பதாக கூறுகின்றனர். - இது குளிக்க, துணி துவைக்க, வயல்களுக்கு அனுப்ப போதுமானதல்ல - எனவே இவற்றுக்கும் குடிநீரையே பயன்படுத்துகின்றனர். வறட்சி பிடியில் இருந்து காக்க வெற்றிகரமான உலர் நில விவசாய பயிர்கள் மண்ணில் ஈரப்பதத்தை பாதுகாக்க உதவுகின்றன, இது வறட்சி காலங்களில் ஓரளவிற்கு நீடிக்கும். "உற்பத்தித் திறனை அதிகரிக்க அல்லது நல்ல விளைச்சலைப் பெற, வறட்சியின் போது கூட, விவசாயிகள் தாழ்வான நிலத்தில் செங்குத்தாக உழவு செய்ய வேண்டும். இதனால் மழைக்காலங்களில் மழைக்காலம் வயல்களில் அறுவடை செய்யப்படுகிறது, இது மண்ணின் ஈரப்பதத்தை பராமரிக்க உதவுகிறது,” என்று, ஏ.ஐ.சி.ஆர்.பி. மூத்த வேளாண்மை விஞ்ஞானி சர்க்காட் வி எஸ் கூறினார். ராபி பருவத்தில், விதைகளை விதைக்கும்போது விவசாயிகள் சிறிய சதுர வடிவ முறைகளை பின்பற்றி நிலத்தில் பயிரிட வேண்டும்; இது தண்ணீரைத் தக்க வைத்துக் கொள்ளவும், மண்ணின் ஈரப்பதத்தை பராமரிக்கவும் உதவுகிறது என்ற சர்க்காட், அதனாலேயே அதானி அருகே விஜயபுராவில் உள்ள ஹனாவத் கிராம விவசாயிகள் வறட்சியில் கூட இந்த முறையை பின்பற்றுவதன் மூலம் நல்ல மகசூல் பெற்று வருகின்றனர் என்றார். சொட்டு நீர் பாசனம் மற்றும் தெளிப்பு நீர்ப்பாசனம் போன்ற நுண்ணிய நீர்ப்பாசன நுட்பங்கள் வறண்ட நிலங்களில் சாத்தியமான விவசாயத்தை எளிதாக்கும். “கால்வாய்கள் வழியாக எளிதாக, உடனடியாக தண்ணீர் கிடைப்பதால், சொட்டுநீர் பாசனத்தை ஏன் தேர்வு செய்ய வேண்டும் என்று மக்கள் நினைக்கிறார்கள். இருப்பினும், கால்வாய்களை நம்பி இருக்காமல் வாழும் மக்கள் எப்போதும் தண்ணீரை குறைந்தளவே பெறுகிறார்கள். நீரோட்டத்திற்கு எதிரான பகுதி வாழ் விவசாயிகள் சொட்டு நீர் பாசனத்தைப் பயன்படுத்தினால், நீரோட்ட போக்கில் வசிப்பவர்கள் கடும் நீர் அழுத்தத்தை அனுபவிக்க மாட்டார்கள்,” என்று மஞ்சுநாத் தெரிவித்தார். வேரை சுற்றி பாத்தி போன்ற பாரம்பரிய மற்றும் எளிதான நுட்பங்களும் மண்ணின் ஈரப்பதத்தைத் தக்க வைத்துக் கொள்ளவும், தண்ணீரைப் பாதுகாக்கவும் உதவும். தடுப்பணை அமைத்தல், மழைநீரை சேமிக்கவும், அது வீணாவதை தடுக்க உதவும் மற்றொரு நுட்பமாகும். கர்நாடகாவின் வறட்சி நிலைமையைத் தணிக்க மண் மற்றும் நீர் பாதுகாப்பு திட்டங்களில் தீவிரமான முதலீடுகள் அவசியம். வறட்சி குறித்த எங்களின் நிறைவு மற்றும் ஆறாவது பகுதி இதுவாகும். முந்தைய கட்டுரைகளை இங்கே, இங்கே, இங்கே, இங்கே மற்றும் இங்கே படிக்கலாம். (ஷங்கர், பெலகாவியை சேர்ந்த ப்ரீலான்ஸ் எழுத்தாளர் மற்றும் பான்-இந்தியா நெட்வொர்க் அமைப்பின், 101 ரிப்போர்ட்டர்ஸ்.காம் உறுப்பினர்). உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.
அமெரிக்காவின் நவீன கால வரலாற்றில் 1960-கள் மிகமுக்கியமான காலமாக பார்க்கப்படுகிறது. அமெரிக்க கறுப்பின மக்களின் வரலாற்றில் பல முக்கிய நிகழ்வுகள் இந்த காலகட்டத்தில் நடந்தேறியது. 1965-இல் அமெரிக்க நிறவெறிக்கு எதிரான போராட்டத்தில் சிம்மசொப்பனமாக விளங்கிய மால்கம் எக்ஸ் (Malcom X) சுட்டு கொல்லப்படுகிறார். 1968-இல் அமெரிக்க கறுப்பின மக்களின் உரிமைக்காக, அமைதி வழியில் போராடிய, அமைதிக்கான நோபல் பரிசினை பெற்ற மாட்டின் லூதர் கிங் (Martin Luther King Jr.) சுட்டு கொல்லப்படுகிறார். அதே காலகட்டத்தில், கறுப்பின மக்களின் மீது நடத்தப்படும் அரச வன்முறைக்கு எதிராக, தங்களை தற்காத்துக்கொள்ள ஆயுதம் தங்கிய, சோஷலிச மற்றும் கறுப்பின தேசிய கொள்கைகளை முன்வைத்து பிளாக் பாந்தர் கட்சி (Black Panther Party), 1966-இல் உருவாக்கப்படுகிறது. இதே 1960-களில் தான் அமெரிக்கா-வியட்நாம் போருக்கு எதிரான போராட்டங்களும் நடைபெறுகிறது. இந்த வரலாற்று பின்னணியில் தான், 1969 ஜூன் 9 முதல் ஆகஸ்ட் 24 வரை, 6 ஞாற்றுக்கிழமைகளில் நடைபெற்றது “ஹார்லெம் கலாச்சார திருவிழா (Harlem Cultural Festival)”. இலட்சக்கணக்கான கறுப்பினத்தவர்கள் கலந்துகொண்டு, கறுப்பினத்தவர்களின் இசையை, கலையை கொண்டாடிய இந்த மாபெரும் வரலாற்று நிகழ்வு, வரலாற்றில் மறைக்கப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியை பதிவு செய்த காணொளிகளின் மீது 50 வருடங்களாக யாரும் ஆர்வம் காட்டாமல் இருந்தனர். இந்த காணொளிகளை கொண்டு, வரலாற்றை மீள்பதிவு செய்ய 2021-ஆம் ஆண்டு, கியூஸ்ட்லவ் (Questlove) இயக்குநரால் என்ற உருவாக்கப்பட்டது தான் ‘சம்மர் ஆஃப் சோல்’ (Summer of Soul (…Or, When the Revolution Could Not Be Televised)) என்னும் ஆஸ்கர் விருது வென்ற ஆவணப்படம். அமெரிக்க கறுப்பின மக்களின் விடுதலைப் போராட்டத்தில் அவர்களின் இசை மிக முக்கிய பங்காற்றுகிறது. பல இசை வகைமைகளை அவர்கள் உருவாக்கினார்கள். முக்கியமா தங்களின் ஆப்பிரிக்க இசை தாளத்தையும், ஐரோப்பிய இசை முறையுடன் சேர்த்து உருவாக்கிய ஜாஸ் (Jazz) இசை வகைமை இன்றளவும் இசை உலகை ஆட்சி செய்து வருகிறது. இதில் முக்கியமாக அதுவரை இருந்த இசை முறைகளுக்கும் ஜாஸ் இசைக்கும் உள்ள முக்கிய வேறுபாடு, ஜாஸ் இசையில் அதனை இசையமைக்கும் அனைவருக்கும் அவர்களின் தனித்துவ இடத்தையும், தங்களை வளப்படுத்திக்கொள்ள வாய்ப்பையும் வழங்குகிறது. இதனாலயே ஜாஸ் இசை வகைமை, ஜனநாயகத்துடன் என்றும் ஒப்புமை படுத்தப்படுகிறது. அமெரிக்க கறுப்பின மக்கள் ராக் அண்ட் ரோல் (Rock and Roll), ராப் (Rap), ஹிப்-ஹாப் (Hip-Hop) என இன்னும் பல இசை வகைமைகளை உருவாக்கினார்கள். இவை இன்றும் இசை உலகத்தில் தங்களுக்கென வலுவான இடத்தை உருவாக்கி வைத்துள்ளது. அமெரிக்க கறுப்பின மக்கள் உருவாக்கிய மற்றுமொரு முக்கிய இசை வகைமை ப்ளூஸ் (Blues). ப்ளூஸ் என்ற சொல், ஆங்கிலத்தில் மனச்சோர்வு சோகத்தை குறிக்கிறது. ப்ளூஸ் இசை வகைமை அமெரிக்காவின் தென்பகுதி மாகாண மக்களால், அதும் விவசாய கூலிகளால் உருவாக்கப்பட்டதாக கருதப்படுகிறது. ப்ளூஸ் இசை வகைமையில் உள்ள பாடல் வரிகளும், இசையும், தங்களின் சோக உணர்வுகளை மற்றவர்களுக்கு கடத்துவதற்காக அமைக்கப்பட்ட வடிவமாக உள்ளது. இவ்வகை பாடல்களில் கதைகளையும், சம்பவங்களையும் கூறுவதை விட, தங்களின் உணர்வுகளை கூறுவதே பிரதானமாக கருதப்படுகிறது. 1969 ஹார்லெம் கலாச்சார திருவிழாவில், ப்ளூஸ் இசை வரலாற்றில் முக்கிய இசைக் கலைஞராக கருதப்படும் பி.பி.கிங் (B.B.King) பாடியுள்ளார். அவர் பாடிய Why I Sing blues பாடல், அமெரிக்க கறுப்பின மக்கள் வரலாற்றிலும், நிகழ்காலத்தில் அவர்கள் அனுபவிக்கும் ஒடுக்குமுறை பற்றியும் கூறுகிறது. “நான் ஏன் ப்ளூஸ் பாடுகிறேன் என்பதை அனைவரும் தெரிந்துகொள்ள விரும்புகிறார்கள்” என்று துவங்கும் இந்த பாடல், “சவுக்கில் அடிக்கப்பட்டு, நான் கப்பலில் இங்கு கொண்டு வரப்பட்ட பொழுதிலிருந்து எனது ப்ளூஸ் துவங்குகிறது” என்று கூறி அமெரிக்க கறுப்பின மக்களுக்கு நிகழ்காலத்தில் நடக்கும் நிற ஒடுக்குமுறைகளை கூறுகிறார், “நான் சேரி (Ghetto) குடியிருப்புகளில் வாழ்கிறேன், என் குழந்தைகளுக்கு பள்ளிகளில் இடம் மறுக்கப்படுகிறது, எனக்கு வேலை கொடுக்க மறுக்கிறார்கள்” என தான் ஏன் ப்ளூஸ் பாடுகிறேன் என்று கேட்பவர்களுக்கு, நிறவெறியினால் நடத்தப்படும் ஒடுக்குமுறைகளே எங்களின் ப்ளூஸுக்கு காரணம் என்கிறார். காஸ்பெல் (Gospel) என்ற இசை கிறித்துவ பக்தி பாடல்களில் ஒரு வகைமை. இதிலும் அமெரிக்க கறுப்பின மக்கள் தங்களுக்கான தனித்துவமான வகையான பிளாக் காஸ்பெல் (Black Gospel) என்ற ஒன்றை உருவாக்கிக்கொண்டனர். மஹாலியா ஜாக்சன் (Mahalia Jackson) பிளக் காஸ்பெல் பாடகரில் மிக முக்கியமான பாடகர். அதுமட்டுமின்றி அமெரிக்க கருப்பின மக்களின் உரிமைகளுக்காக போராடிய மார்ட்டின் லூதர் கிங் உடன் பயணித்தவர். ஹார்லெம் கலாச்சார திருவிழாவில் இவரும் பங்கு பெற்றுள்ளார். இவர் இந்த நிகழ்வில் பாடிய பாடல்களில் மிக முக்கியமான பாடல் “Take My Hand, Precious Lord”. இந்த பாடல் மார்ட்டின் லூதர் கிங் அவர்களுக்கு மிக பிடித்தமான பாடல். தனது பிரச்சார கூட்டங்களில் மக்களை திரட்டுவதற்காக மஹாலியா ஜாக்சனை பாட கூறுவார். அதுமட்டுமின்றி மார்ட்டின் லூதர் கிங் இறப்பதற்கு முன்பு அவர் கேட்க ஆசைப்பட்ட பாடலும் இந்த பாடல் தான். மார்ட்டின் லூதர் கிங் இறந்து ஒரு வருடம் ஆன நிலையில் நடைபெற்ற இந்த ஹார்லெம் கலாச்சாரத் திருவிழாவில் மீண்டும் அந்த பாடல் பாடப்பட்ட போது அங்கு இருந்தவர்களை நெகிழவைத்தது. அமெரிக்க கறுப்பின மக்கள் தமது கலாச்சார விடுதலைப் போராட்டத்தில் செய்த முக்கிய பணி, பொது கலாச்சாரமாக அமெரிக்காவில் நிர்மாணிக்கப்பட்டிருந்த, வெள்ளை நிற வெறி கலாச்சாரத்துக்கு எதிராக, ஒரு எதிர் கலாச்சாரத்தை வைத்தது. அமெரிக்கா கறுப்பின மக்களை அவமானப்படுத்துவதற்காக, அவர்கள் நோக்கி உச்சரிக்கப்பட்ட “கருப்பர் (Black)” என்னும் வார்த்தையை அவர்கள் “ஆம் நங்கள் கறுப்பர்கள் தான்” என்று, எந்த வார்த்தை அவர்களை இழிவு செய்ய பயன்படுத்தப்பட்டதோ அதனையே பெருமையுடன் தங்களின் இன அடையாளமாக முன் வைத்தார்கள். இவர்கள் தங்களுக்கு என்று ஒரு உடை, அலங்கார பாணியை எதிர் கலாச்சாரமாக முன்வைத்தனர். இதில் மிகமுக்கியமான ஒன்று, இவர்கள் தங்களுடைய கலாச்சாரத்துக்கான மூலத்தை, தங்கள் வேர்களில் இருந்து, ஆப்பிரிக்காவில் இருந்து எடுத்தனர். கடிகார வரிசையில் நினா சிமோன், ஸ்லி ஸ்டோன், பி.பி.கிங், மஹாலியா ஜாக்சன் இதே காலகட்டத்தில் நடந்த மற்றொரு முக்கியமான ஒரு சம்பவம், அமெரிக்க கறுப்பின மக்கள் அமெரிக்காவின் வெள்ளை நிறவெறிக்கு எதிராக தனித்து போராடாமல் அந்த மண்ணில் நிறவெறிக்கு உள்ளாகியிருந்த கியூபா, தென் அமெரிக்க மக்களையும் இணைத்து வெள்ளை நிறவெறிக்கு எதிரான ஒரு கூட்டணியை அமைத்தனர். இது அவர்களின் அரசியல், சமூகம் மட்டுமின்றி இசையிலும் வெளிப்பட்டது. இந்த ஹார்லெம் கலாச்சார திருவிழாவில் பாடப்பட்ட ரே பாரெட்டோவின் (Ray Barretto) அபிஜான் (Abidjan) , டுகெதர் (Together) மற்றும் நினா சிமோனின் (Nina Simone) To be young, Gifted and Black பாடல்களும் இந்த அரசியல் சமுக பின்புலத்தில் உருவானதே. “கருப்பர்” என்ற கலாச்சாரத்தை பெருமையாக முன்வைத்தாலும், நிறவெறிக்கு உள்ளாகியிருந்த கறுப்பினத்தவர்களையும் தாண்டி அமெரிக்க அரசால் ஒடுக்கப்பட்ட பல தேசிய இனமக்களை பெரும் கூட்டணியாக உருவாக்கியதிலும் பிளாக் பாந்தர் கட்சிக்கு (Black Panther Party) முக்கிய பங்குண்டு. கறுப்பின மக்களின் பாதுகாவலராக விளங்கிய இவர்கள் தான், நியூ யார்க் நகர காவல் துறை இந்த இசை திருவிழாவுக்கு பாதுகாப்பு அளிக்க மறுக்கப்பட்ட பொழுது, பாதுகாப்பு அளித்தனர். அந்த நாட்களில் 21 பிளாக் பாந்தர் பார்ட்டி நபர்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். அவர்களின் விடுதலைக்கான ஆதரவும் மக்களிடம் இருந்து இந்த நிகழ்ச்சியில் திரட்டப்பட்டது. அமெரிக்க கறுப்பின மக்களின் முக்கிய வரலாற்றை பேசிய இந்த ‘சம்மர் ஆஃப் சோல்’ ஆவணப்படம் 2022-ஆம் ஆண்டுக்கான சிறந்த ஆவணப்படத்துக்கான ஆஸ்கார் விருதை பெற்றது. இந்த விருதை பெரும் பொழுது, இந்த படத்தின் இயக்குனர் கியூஸ்ட்லவ் (Questlove) கூறுகையில், “விளிம்புநிலையில் உள்ள ஹார்லெம் மக்களின் வலிகள் ஆற்றப்படவேண்டும். இது வெறும் 1969-களின் கதை இல்லை.” என்கிறார். ஆம், இது வெறும் ஐம்பது ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மக்களின் நிலைமை இல்லை, இன்றும் அதே இனப்பாகுபடும், வெள்ளை இனவெறியர்களின் தாக்குதலும் நடந்து கொண்டே தான் இருக்கிறது. ஒடுக்குமுறைக்கும், அடக்குமுறைக்கும் எதிரான வரலாறு, இன்று நடக்கும் ஒடுக்குமுறைகளுக்கு எதிராக களம் காண நம்மளை தயார் செய்கிறது. கறுப்பின மக்கள் அவர்கள் மீது நடத்தப்பட்டும் ஒடுக்குமுறைக்கு எதிராக களம் காண தயாரா என்று கேட்கும், நினா சிமோனின் “Are you ready black people” பாடலுடன் இந்த திரைப்படம் நிறைவடைகிறது. Post navigation மோடி-அதானி: நாட்டை நாசமாக்கும் நட்பு சிறையில் அடைக்கப்பட்ட காஷ்மீரின் உரிமைக் குரல் One thought on “அமெரிக்க கறுப்பின வரலாற்றை படம்பிடித்த சம்மர் ஆஃப் சோல்” தமிழ் முதல்வன் says: September 5, 2022 at 3:12 pm அருமையான கட்டுரை. அப்படியே ஆவணப்பட இணைப்பு (அ) அதை எப்படி பார்ப்பது என்ற விவரங்களையும் தெரியப்படுத்தியிருக்கலாம்.
பெட்ரோல், டீசல் விலையை தினம் தோறும் நிர்ணயிக்கும் நடைமுறையை எண்ணெய் நிறுவனங்கள் கடைபிடித்து வருகின்றன. அதன்படி, பெட்ரோல், டீசல் விலை தினமும் ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. பல்வேறு மாநிலங்களில் பெட்ரோல் விலை நூறு ரூபாயைக் கடந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதற்கிடையில், தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் வெளீயிடப்பட்ட அறிவிப்பையடுத்து பெட்ரொல் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைப்பு அமல்படுத்தப்பட்டது. அதன்பின், 23 நாட்கள் விலை மாற்றமின்றி இருந்தது. இப்போது மீண்டும் நாள்தோறும் விலையேறத் தொடங்கியுள்ளது. சென்னையில் நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 21 காசுகள் உயர்ந்து 99.36 ரூபாய்க்கும், டீசல் விலை லிட்டருக்கு 28 காசுகள் அதிகரித்து 94.45 ரூபாய்க்கும் விற்பனையானது. இந்த நிலையில், தொடர்ந்து இன்றும் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது. அதன்படி சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரொல் விலை 22 காசுகள் உயர்ந்து ரூ.99.58-க்கு விற்பனையாகிறது. அதே சமயம் ஒரு லிட்டர் டீசலின் விலை 29 காசுகள் அதிகரித்து ரூ.94.74-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மு.க.ஸ்டாலின் மூன்று ரூபாய் குறைத்தார். மூன்று நாட்களில் அதில் 1.02 ரூபாய் உயர்த்திவிட்டார் மோடி என்று மக்கள் வருந்திக் கொண்டுள்ளனர்.
மேற்கு வங்க மாநிலத்தில் இந்தியாவுக்கும் வங்க தேசத்துக்கும் இடையே இந்திய எல்லை ஓரமாக இச்சா நதி பாயும் பகுதியில் தேங்காய்ப்பூ சம்பா என்ற பாரம்பரிய நெல் ரகம் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த நெல்லுக்கு வங்க மொழியில் வேறு பெயரும் உண்டு. Courtesy: Hindu தேங்காய்ப்பூ இந்த ரகம் பொரி தயாரிப்புக்காகவே பயன்படுத்தப்படுகிறது. காலை உணவாகத் தண்ணீரில் பொரியை ஊறவைத்து, அதில் தேவையான அளவு உப்பு சேர்த்துச் சாப்பிடுகின்றனர். மேற்கு வங்கத்தில் பிரபலமான இந்த நெல் ரகம், தமிழகத்திலும் சோதனை அடிப்படையில் சாகுபடி செய்யப்பட்டது. மணல், மணல் சார்ந்த பகுதிக்கும் கடலோரப் பகுதிக்கும் ஏற்ற ரகமாகவும் இருக்கிறது. நான்கு அடி வளரும் இப்பயிர் கொஞ்சம் சாயும் தன்மையுடன் இருந்தாலும், அறுவடையில் பாதிப்பு இருக்காது. தமிழகத்தில் பொரி பயன்பாடு அதிகம். அதற்கான புதுப்புது ரகங்களுக்கு ஆராய்ச்சி நிலையங் களையே நம்பியிருக்க வேண்டியுள்ளது. பாரம்பரிய நெல் ரகங்களில் பொரிக்கு ஏற்ற ரகமாக, தேங்காய்ப்பூ சம்பா இருக்கிறது. வித்தியாச நெல் ரகம் பாரம்பரிய நெல் ரகங்களிலேயே மிகவும் வித்தியாசமான நெல் ரகம் இது. நம்முடைய நெல் மணிகள் இதழ் இதழாக இருக்கும். ஆனால், தேங்காய்ப்பூ சம்பா கொத்துக் கொத்தாக இருக்கும். தமிழகக் கடலோர மாவட்டங்களில் இந்த நெல்லை சாகுபடி செய்து பொரி தயாரிப்புக்கும் உணவுக்கும் பயன்படுத்துகிறார்கள். மஞ்சள் நெல், வெள்ளை அரிசி, மோட்டா ரகம். நடவு செய்யவும், தெளிக்கவும் ஏற்றது. ஏக்கருக்கு இருபத்து ஐந்து கிலோ விதை போதுமானது. மகசூல் இருபத்தி இரண்டு மூட்டைவரை கிடைக்கும்.
ச அவர்கள் இயேசுவினிடத்திற் போய அவரை மிகவும வேண்டிக்கொண்டு பின்பு சொன்னது அவன் நம்முடைய தேசத்தாரில் அன்பாயிருந்து எங்களுக்காகவொரு செப் ஆலயத்தையுங்கட்டினான். ரு ஆகையால் உம்முடைய தயவுக்கு அவன் பாத்திரனா யிருக்கிறானென்றார்கள். ச இயேசுவானவர் அவர்களுடனே கூடச்சென்றார். வீட டுக்குச் சமீபமாய்ப்போனபொழுது அந்தத்தலைவன சிநே கிதரை நோக்கி (நீங்கள் அவரிடத்திற்போய்) ஆண்டவரே நீர் என் வீட்டுவாசலுக்குட்பிரவேசிக்கிறதற்கு நான்பாத ரனல்ல, எ அதினாலே நான் தானே யுமமிடத்தில் வருகிறதற்கும் என்னையபாத்திரனெனறெண்ணினேன். ஆகையால் நீர்வரு த்தப்படாதிரும். அ அல்லாமலும் நான் அதிகாரத்துக்குக் கீழ்ப்பட்டவ னாயிருந்தும் எனக்குக் கீழிருக்கிறசேவகரிலொருவனைப்போ வென்னப்போகிறான மற்றொருவனை வாவென்ன வருகிறான. என்வேலைக்காரனை நோக்கி இதைச்செய்யென்னச்செய்கிறா ன. ஆகையால் நீர் ஒருவார்த்தையைமாத்திரஞ் சொன்னால் என்வேலைக்காரன சொஸ்தம் அடைவானென் று சொல்லு ங்களென்று அனுப்பினான். கூ இயேசுவானவர் அதைக்கேட்டு அவனைக் குறித்து ஆச்சரியப்பட்டுத்திரும்பிக்கொண்டு தமக்குப் பின்செல்லு சனங்களைநோக்கி இப்படிப்பட்ட விசுவாசத்தை நான் ஸ்ரவேலருக்குள்ளுங்காணவில்லையெனறுங்களுக்குச்சொ கிறேனென்றார். ய அனுப்பப்பட்டவர்கள்திரும்ப வீட்டுக்குவருகிறபொ ழுது வியாதியாயிருந்த வேலைக்காரன் ஆரோக்கியம் அடை ந்திருக்கிறதைக்கண்டார்கள். யக மறுநாளிலே அவர் நாயீனெனனுமூருக்குப்போனார். அவருடையசீஷர் அநேகரும் மற்றநேகசனங்களும் அவரு டனே கூடப்போனார்கள். கைய யஉ அவர் ஊரின்வாசலுக்குச் சமீபமானபொழுது ஒரு பண்ணுடைய ஒரேகுமாரன இறந்துபோய் வெளி யேகொண்டுவரப்பட்டான். ஊராரில் அநேக சனங்களும அவளுடனே கூடவந்தார்கள். யங கர்த்தர் அவளைப்பார்த்து அவள்மேல் உருக்கமாய் இரங்கி நீ அழவேண்டாமென்றுசொல்லிக்கிட்டப்போகை யிற்பாடையைச்சுமக்கிறவர்கள் நின்றார்கள். யச உடனேயவர் அதைத்தொட்டு வாலிபனே எழுந்திரு 15 And he that was dead sat up, and began to speak. And he delivered him to his mother. 16 And there came a fear on all: and they glorified God, saying, That a great prophet is risen up among us; and, That God hath visited his people. 17 And this rumour of him went forth throughout all Judea, and throughout all the region round about. 18 And the disciples of John shewed him of all these things. 19 And John calling unto him two of his disciples sent them to Jesus, saying, Art thou he that should come? or look we for another? 20 When the men were come unto him, they said, John Baptist hath sent us unto thee, saying, Art thou he that should come? or look we for another? 21 And in the same hour he cured many of their infirmities and plagues, and of evil spirits; and unto many that were blind he gave sight. 22 Then Jesus answering said unto them, Go your way, and tell John what things ye have seen and heard; how that the blind see, the lame walk, the lepers are cleansed, the deaf hear, the dead are raised, to the poor the gospel is preached. 23 And blessed is he, whosoever shall not be offended in me. ness 24 And when the messengers of John were departed, he began to speak unto the people concerning John, What went ye out into the wilderor to see? A reed shaken with the wind? 25 But what went ye out for to see? A man clothed in soft raiment? Behold, they which are gorgeously apparelled, and live delicately, are in kings' courts. லரு அப்பொழுது மரித்தவன எழுந்து உளுக்கார்ந்து பேசத்தொடங்கினான். அவனையவர் தாய்க்கு ஒப்புக்கொ டுத்தார். யசு எல்லாரும் பயமடைந்து மகா தீர்க்கதரிசி நமக்குள் ளேதோன்றி யிருக்கிறாரென்றும் பராபரன தமமுடைய சனங்களைச் சந்தித்துப்பார்த்தாரென்றுஞ் சொல்லிப் பராப ரனைப்புகழ்ந்தார்கள். யஎ அல்லாமலும் இந்தச்சங்கதி யூதேயா நாடு முழுவதி லுஞ் சுற்றியிருக்கிற தேசங்கள் யாவற்றிலும் பிரசித்தமாயி றறு. யஅ இவை யெல்லாவற்றையும் யோவானுடைய சீஷர் அவனுக்கு அறிவித்தார்கள். யக அப்பொழுது யோவான தன் சீஷரிலிரண்டுபேரை யழைத்து நீங்கள் இயேசுவினிடத்திற்போய்வருவாரென றுசொல்லப்பட்டவர் நீரா அல்லதுவேறொருவர்வரக்காத திருக்கவேண்டுமாவென்று கேளுங்களென்று சொல்லியனுப் பினான். உய அந்தப்படியவர்கள் அவரிடத்திற்போய் வருவாரெ ன்று சொல்லப்பட்டவர் நீரா அல்லதுவேறொருவர்வரக்கா த்திருக்கவேண்டுமாவெனறுகேட்குமப உக்கு யோவானஸ் நான்ன் எங்களையுமமிடத்திற்கனுப்பினானென்றார்கள். உக அவ்வேளையிலே அவர் வியாதிகளையும்வேதனைகளை யும்பொல்லாத ஆவிகளையுமுடைய அநேகம் பேரைக்குண மாக்கிக்குருடர் அநேகருக்குப்பார்வையையருளினார். ம உஉ அப்பொழுது இயேசுவானவர் அவர்களுக்குச்சொ ன்னது. குருடர்பார்வையையடைகிறார்கள். சப்பாணிகள் நடக்கிறார்கள். குஷ்டரோகிகள் சுத்தமாகிறார்கள். செவி டர்கேட்கிறார்கள். மரித்தோர் எழுப்பப்படுகிறார்கள். தரித் திரருக்குச் சுவிசேஷம் அறிவிக்கப்பட்டுவருகின்றது. இப் படி நீங்கள் பார்க்கிறவைகளையுங்கேட்கிறவைகளையும யோ வானுக்குப்போய் அறிவியுங்கள். உக அல்லாமலும் என்னாலே இலச்சையடையாமலிருக் கிறவன்பாக்கியவானென்றார். க உச யோவானுடைய தூதர்கள் போனபின்பு அவர் யோ வானைக்குறித்துச் சனங்களுடனேசொன்னது. காற்றினால் அசைக்கப்படுகிற நாணலையா நோக்கிப்பார்க்கும்படிக் ந்தரத்திறகுப்போனீர்கள். உரு அல்லது மெல்லியவஸ்திரங்களைத் தரித்திருக்கிற மனிதனையா பார்க்கும்படிக்குப் புறப்பட்டீர்கள். மகிமை யான உடுப்போடுஞ் செல்வததோடுமிருக்கிறவர்கள் அரச 6 26 But what went ye out for to see? A prophet? Yea, I say unto you, and much more than a prophet. 27 This is he, of whom it is written, Behold, I send my messenger before thy face, which shall prepare thy way before thee. 28 For I say unto you, Among those that are born of women there is not a greater prophet than John the Baptist: but he that is least in the kingdom of God is greater than he. 29 And all the people that heard him, and the publicans, justified God, being baptized with the baptism of John. 30 But the Pharisees and lawyers rejected the counsel of God against themselves, being not baptized of him. 31 And the Lord said, Whereunto then shall I liken the men of this generation? and to what are they like? 32 They are like unto children sitting in the marketplace, and calling one to another, and saying, we have piped unto you, and ye have not danced; we have mourned to you, and ye have not wept. 33 For John the Baptist came neither eating bread nor drinking wine; and ye say, He hath a devil. 34 The Son of man is coming eating and drinking; and ye say, Behold a gluttonous man, and a wine-bibber, a friend of publicans and sinners! 35 But wisdom is justified of all her children. 36 And one of the Pharisees disired him that he would eat with him. And he went into the Pharisee's house, and sat down to meat. 37 And, behold, a woman in the city, which was உசா அல்லது ஒருதீர்க்க கரிசியையா பார்க்கும்படிக்கு அப்புறப்பட்டீர்கள். ஒருதீர்க்க ரிசியிலும் அதிகமானவனை யே (பார்த்தீர்களென்று) உங்க க்குச் சொல்லு தோ நான் என்னுடைய தூதனை உமக்குமுன்பா கஅனுப்புகிறேன். அவன் உமக்குமுன் நடந்து உமக்காக மார்க்கத்தைத்திருத்துவானென்று ஒருவனைக்குறித்து எழு தியிருக்கின்றதே அவன் வன்தான். உஅ ஆகையால் நான் உங்களுக் ச்சொல்லுகிறதாவது ஸ்திரிகளிடத்திற்பிறந்தவர்களில் யோவான ஸ்நான்னிலும் பெரியதீர்கக ரிசியொருவனுமில்லை. ஆனாலும் பராபரனு டைய ராச்சியத்திலே சிறியவனானவன் அவனிலும் பெரீ உஎ றன யவனாயிருக்கிறான். உகூ அன்றியும் (யோவானுடைய உபதேசத்தைக) கே டட சகலசனங்களும் ஆயக்காரரும் அவனாலே ஞானஸ் நானத்தைப்பெற்றுப் பராபரன நீதிப் ன்று அறிககை ம யிட்டார்கள். ஙய பரிசேயரும் நியாயசாஸ்திரிகளுமானவர்களமாத்தி ரம அவனாலே ஞானஸ்நானத்தைப்பெ த்துப் பராபரனுடைய ஆலோசனையைத் தள்ளினார்கள். மலதங்களைக்குறி ஙக அப்படியிருக்க இந்தத் தலைமுறையின் மனிதரை நா னயாருக்கு நிகர்சொல்வேன். இவர்களயாருக்கொப்பாயிரு கக றார்கள். கூஉ சந்தையிலுளுக்கார்ந்து ஒருவரையொருவர்நோக்கி உங்களுக்காக ஊள னோம் நீங்கள் கூத்தாடவில்லை. க்காகப்புலம்பினோம். நீங்கள் அழவில்லையென்று கூப்பிடுகிற பிள்ளைகளுக்கொப்பாயிருக்கிறார்கள். உஙக எதிர்க ஙங எப்படியெனில் யோவான்ஸ்நான்ன்வந்து அப்பம் பொசியாமலுந் திராட்ச ரசங்குடியாமலுமிருந்தான். அதினாலே யவனபேய்கொண்டவ ன்னகிறீர்கள். ஙச மனிதனுடையகுமாரனவந்து போசனபானம்பண ணுகிறான். அதினாலே இதோ போசனபபிரியன மதுபானப பிரியன் ஆயக்காரருக்கும் பாவிகளுக்குஞ் சிநேகிதன் என் கிறீர்கள். ஙரு ஆனாலும் ஞானமானது தன்னையடைந்தவர்களாலே நீதிய யாக்கப்படுகின்றதென்றார். ஙசு பரிசேயரிலொருவன த ன்னுட ன் போசனமபண ணும்படிக்கு அவரை வேண்டிக்கொண்டான். அந்தப்படி அவர்பரிசேயனுடைய வீட்டுக்குப்போயப்பநதியிருந்தார்.
இந்த மனுஷன் காசுகொடுத்து கொஞ்சம் வயித்துக்கு வாங்கிச் சாப்பிட்டான். எருமையப் புறக்கடைப் பக்கம் அந்த அம்மா கட்டச் சொல்லக் கட்டிட்டுப் படுத்துத் தூங்கினான். காலையிலே எந்திரிச்சுப் பாக்கையிலே எருமை ஈனி இருந்தது. பக்கத்தாலே கண்ணுக்குட்டியக்காணோம். அது அந்த அம்மாவோட எருமைக் கிடாப் பக்கம் கட்டியிருந்துச்சு. அதை அவுக்கப்போக , "அந்த அம்மா அது அந்தக் கிடா போட்ட கன்னுக்குட்டி.வேணும்னா பணம் குடு" அப்படின்னு சொல்லிச்சாம். என்ன கேட்டும் அந்த அம்மா முடியாதுன்னுட்டா! ஊருக்குள்ள நியாயம் கேக்க, எல்லோரும் அந்த அம்மாவுக்குப் பயந்துட்டு அவ சொன்னதுதான் சரின்னாங்களாம். கடைசியா ஒரு நரி வந்துச்சாம். அதுகிட்ட நாயம் சொல்ல, நான் தீத்து வைக்கிறேன் அப்படின்னு சொல்லிச்சாம். நரி எப்படி நாயம் தீர்க்கும் அப்படின்னு சொல்லி ஊரே கூடிட்டுதாம். உடனே நரி, எனக்கு அவசரவேலை இருக்கு ஒரு மணிநேரத்துல வந்துடறேன் அதுக்குள்ளே ஊர்மக்க பூராம் வந்துடனும் அப்படின்னு சொல்லி போயிடுச்சாம். நரி சொல்லுற நாயம் கேட்க அந்த ஊர்சனங்க மட்டுமல்லாம அடுத்த ஊர் சனம்கூட வந்துட்டாங்களாம். எல்லோரும் நரிக்காகப் பாத்துட்டு இருக்க, நரி, ஒருமணிநேரத்துல வர்றேன்னு சொல்லிட்டுப்போயி காட்டுக்குள்ளே தூங்கி எழுந்திரிச்சு நாலு மணிநேரம் லேட்டா வந்துச்சாம். எல்லோருக்கும் ஒரே கோபம்! உன்னையப் பாத்துகிட்டுப் பசியோட சோறுகூடத் திங்காம இருக்கோம்,நீ எப்படி லேட் பண்ணலாம்னு சண்டைக்கி வந்தாங்களாம்! அதுக்கு நரி, " அய்யய்யோ! நான் என்ன பண்ணட்டும்! நான் போன வுடனே வந்துட்டேன். ஆனா வர்ற வழிலே ஒரு சமுத்துரத்துல தீப்பிடிக்க, நான் வைக்கோலப்போட்டு அவிக்க, திரும்பவும் சமுத்திரத்துல தீப்பிடிக்க, நான் வைக்கோலப்போட்டு அவிக்க, ரொம்ப நேரம் ஆயிப்போச்சு!.... நான் என்ன பண்ணட்டும்!... "அப்படின்னு புலம்புச்சாம். எல்லோரும் ஒருமிக்க, "ஏப்பா நரி! எங்களையெல்லாம் கேனையங்க அப்படின்னு நெனைசிட்டியா? சமுத்திரத்துல தீப்பிடிக்குமா? வைக்கோலப்போட்டு அவிச்சா அவியுமா "அப்படின்னு எரிச்சலோட கேட்டாங்களாம்! அதுக்கு நரி, உங்க ஊர்ல எருமைக்கிடா கண்ணுப்போட்டுச்சாமே , அப்புறம் ஏப்பா சமுத்திரத்துல தீப்பிடிக்காது? வைக்கோலைப்போட்டா அவியாது" அப்படின்னு கேட்டுச்சாம்! அத்தனை சனமும் அப்படியே வாயடச்சுப்போக அப்பறமா அந்த மனுஷனோட எருமைக்கண்ணுக்குட்டிய அந்த ஆளுக்கே குடுத்து அனுப்புனாங்களாம்!....
இந்திய உணவுக் கழகத்தின் 12.05.2020 தேதியிட்ட அறிக்கையின்படி, அதன் கையிருப்பில் 271.27 இலட்சம் மெட்ரிக் டன் அரிசியும், 400.48 இலட்சம் மெட்ரிக் டன் கோதுமையும் உள்ளது. ஆகவே, மொத்தம் 671.75 இலட்சம் மெட்ரிக் டன் உணவு தானியம் இருப்பில் உள்ளது ( தற்போது கொள்முதல்செய்யப்பட்டு வரும் கோதுமையும், நெல்லும் கிடங்குகளுக்கு இன்னும் வந்து சேரவில்லை). தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் மற்றும் இதரத் திட்டங்களின் கீழ், ஒரு மாதத்திற்கு சுமார் 60 இலட்சம் டன் உணவு தானியங்கள் தேவைப்படும். ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதிலிருந்து, சுமார் 80.64 இலட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்கள் 2880 ரயில் ராக்குகள் மூலம் ஏற்றப்பட்டு கொண்டு செல்லப்பட்டுள்ளன. ரயில் தடம் தவிர, சாலைகள் மற்றும் நீர்வழிகள் மூலம் போக்குவரத்து நடந்து வருகிறது. மொத்தம் 159.36 இலட்சம் மெட்ரிக் டன் ஏற்றப்பட்டுள்ளது. 11 கப்பல்கள் மூலம் 15,031 மெட்ரிக் டன் தானியங்கள் கொண்டு செல்லப்பட்டுள்ளன. வடகிழக்கு மாநிலங்களுக்கு மொத்தம் 7.36 இலட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்கள் கொண்டு செல்லப்பட்டுள்ளன. தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் மற்றும் பிரதமர் ஏழைகள் மறுவாழ்வுத் திட்டங்களின் கீழ், அடுத்த மூன்று மாதங்களுக்கு இந்த மாநிலங்களுக்கு 11 இலட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்கள் தேவைப்படும். தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தில் சேராத, அதேசமயம் ரேசன் அட்டை வழங்கப்பட்ட குடும்பங்களுக்கு மாநில அரசுகளும் அரிசி, கோதுமை ஆகியவற்றை அடுத்த மூன்று மாதங்களுக்கு வழங்கலாம். வெளிச்சந்தை விற்பனைத் திட்டத்தின் கீழ், ஒரு கிலோ அரசி விலை ரூ.22 ஆகவும், கோதுமை விலை ரூ.21 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, இந்திய உணவுக்கழகம், ஊரடங்கின் போது, வெளிச்சந்தை விலைத் திட்டத்தின் கீழ், 4.68 இலட்சம் மெட்ரிக் டன் கோதுமையையும், 6.58 இலட்சம் மெட்ரிக் டன் அரிசியையும் விற்பனை செய்துள்ளது. பிரதமர் ஏழைகள் மறுவாழ்வுத் திட்டதின் கீழ், அடுத்த 3 மாதங்களுக்கு மொத்தம் 104.4 இலட்சம் மெட்ரிக் டன் அரிசி, 15.6 இலட்சம் மெட்ரிக் டன் கோதுமை தேவைப்படுகிறது. இதில், பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு 69.65 இலட்சம் மெட்ரிக் டன் அரிசி, 10.1 இலட்சம் மெட்ரிக் டன் கோதுமை ஏற்றி அனுப்பப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், ஏற்படும் சுமார் ரூ.46,000 கோடி நிதிச்சுமையின் 100 சதவீதத்தையும் மத்திய அரசே ஏற்றுக்கொண்டுள்ளது. பருப்பு வகைகளைப் பொறுத்தவரை, அடுத்த மூன்று மாதங்களுக்கு மொத்தம் 5.87 இலட்சம் மெட்ரிக் டன் தேவையாகும். இதுவரை, 3.15 இலட்சம் மெட்ரிக் டன் பருப்பு வகைகள் அனுப்பப்பட்டுள்ளன. 2.26 இலட்சம் மெட்ரிக் டன் பருப்பு வகைகள் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களைச் சென்றடைந்துள்ளன. அதில், 71,738 மெட்ரிக் டன் விநியோகிக்கப்பட்டுள்ளது.12.05.2020 வரை, மொத்தம் 268.9 இலட்சம் மெட்ரிக் டன் கோதுமை ( 2020-21 ராபி பருவம்), 666.9 இலட்சம் மெட்ரிக் டன் அரிசி ( 2019-20 கரீப் பருவம்) கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. Facebook Twitter WhatsApp முந்தய செய்தி ராணுவ கேண்டின்களில் வெளிநாட்டு பொருட்களுக்கு குட்பை..! இனிமேல் சுதேசி பொருட்களுக்கு மட்டுமே விற்பனை – வெளியானது அறிவிப்பு அடுத்த செய்தி ஜம்மு & காஷ்மீரில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் டிசம்பர்-2022க்குள் குடிநீர் இணைப்பு வசதி – மத்திய அரசு அறிவிப்பு
இயற்கை உரம் என்ற பெயரில் களிமண்ணை விற்று விவசாயிகளை ஏமாற்றியதாக கோவில்பட்டி பகுதியில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மற்றும் விளாத்திகுளம் சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள், புரட்டாசி ராபி பருவத்திற்கு தயாராகி வருகின்றனர். இந்த பருவத்தில் உளுந்து,வேர்க்கடலை, மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்கின்றனர். நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள் இந்நிலையில் பயிர்களுக்கு முதற்கட்டமாக இடப்படும் டிஏபி உரத்திற்கு இணையான இயற்கை கடற்பாசி உரம் இருப்பதாக ஒரு கும்பல் விவசாயிகளை அணுகியுள்ளது. இதை உண்மையென நம்பிய கோவில்பட்டி பகுதியைச் சேர்ந்த விவசாயிகள், தங்களுக்குத் தெரிந்தவர்களிடம் கடன் பெற்று, 50 கிலோ கொண்ட அந்த உர மூட்டையை 1300 ரூபாய்க்கு வாங்கி உள்ளனர். விவசாயிகள் ஆவலுடன் வாங்கிய அந்த மூட்டைகளை அவிழ்த்துப் பார்த்தபோது, உரத்திற்குப் பதிலாக வெறும் களிமண் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்பு தாங்கள் ஏமாற்றப்பட்டதை அறிந்த விவசாயிகள், போலி உரம் விற்ற நபர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். அரசு போதுமான உரங்களை கையிருப்பில் வைத்து தங்களுக்கு வழங்க வேண்டும். தட்டுப்பாடு நிலவும் சூழலில் கடைகளுக்கு சென்று வாங்கும் பொழுது கடை வியாபாரிகள் மருந்து வாங்கினால் தான் ஒரு மூட்டை தருவோம் என்று தங்களுக்கு நெருக்கடி கொடுப்பதாலும் பல்வேறு சூழலுக்கு ஆளாக வேண்டியுள்ளது. ஆதலால் தான் தாங்கள் இம்மாதிரியான உரங்களை வாங்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது எனவும் வேதனையுடன் தெரிவித்தனர். எனவே அரசு முன்கூட்டியே உரங்களை கையிருப்பு வைத்து விவசாயிகளுக்கு வழங்கினால் இம்மாதிரியான பிரச்சனை நிலவாது எனவும் தெரிவித்தனர். போலி உரம் விற்பனை தொடர்பாக விவசாயிகளிடம் புகார் பெறப்பட்டுள்ளதாகவும், விவசாயிகள் வாங்கிய உரம் பரிசோதனை கூடத்திற்கு ஆய்வுக்காக அனுப்பப்பட்டு உள்ளதாகவும் வேளாண் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.ஆய்வு முடிவில் போலியான உரம் என தெரியவந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் கூறியுள்ளனர். கடைகளில் உரம் வாங்கும்போது, மருந்துகளை வாங்கினால் தான் உரம் தருவோம் என கடைக்காரர்கள் நெருக்கடி ஏற்படுத்துவதாக வேதனை தெரிவிக்கும் விவசாயிகள், வெளிநபர்களிடம் உரம் வாங்கும் போது ஏமாற்றப்படும் நிலைக்குத் தள்ளப்படுவதாக கூறுகின்றனர். பருவக்காலங்களில் தட்டுப்பாடின்றி விவசாயிகளுக்கு உரம் கிடைப்பதை தமிழ்நாடு அரசு உறுதி செய்ய வேண்டும் என்பதே விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது. சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads By Category: எழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம் சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும் December 2017 Issue தென்றல் பேசுகிறது | நேர்காணல் | சாதனையாளர் | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | பொது | அன்புள்ள சிநேகிதியே | அஞ்சலி கதிரவனை கேளுங்கள் | மாயாபஜார் | சிறுகதை | Events Calendar | கவிதைப்பந்தல் | வாசகர் கடிதம் | சமயம் | மேலோர் வாழ்வில்
பத்தடிக்கு பத்தடி இடைவெளியில் இரண்டு முதல் இரண்டரை அடி விட்டமும், ஒன்பது அங்குலம் ஆழமுள்ள குழிகள் போடவேண்டும். மக்கிய தொழு உரம் குழிக்கு ஒரு கூடை வீதம் கொட்டி மண்ணோடு நன்றாக கலக்கும்படி கொத்திவிட வேண்டும். ஒரு ஏக்கரில் நட 3,200 முதல் 3500 விதைகள் தேவைப்படும். விதையை ஆழமாக ஊன்றக்கூடாது. ஆழம் முக்கால் அங்குலத்திற்கு அதிகமாக போகக்கூடாது. ஒரு குழியில் நான்கு அல்லது ஐந்து செடிகள் வளரும்படி பணிகளை செய்துகொள்ள வேண்டும். உயிர் தண்ணீர் விட வேண்டும். உயிர் தண்ணீர் விட்டு 15 நாட்கள் தொடர்ந்து தண்ணீர் விடவேண்டும். விதை நட்ட 25ம் நாளிலிருந்து 30 நாட்களுக்குள் முதல் உரம் வைக்க வேண்டும். கு ழியிலுள்ள களைச்செடிகளை நன்றாக கொத்தி எடுத்து உரம் வைத்து பாசனம் செய்ய வேண்டும். ஒரு ஏக்கருக்கு தேவைப்படும் உரம் 30 கிலோ 17:17:17 காம்ப்ளக்ஸ், 10 கிலோ யூரியா இவற்றை நன்கு கலந்து பின் 100 கிராம் அளவு கலவையை ஒரு குழிக்கு வைக்க வேண்டும். விதை நட்ட 45 அல்லது 50வது நாள் குழி ஒன்றுக்கு 200 கிராம் 17:17:17 காம்ப்ளக்ஸ் உரம் மட்டும் வைக்க வேண்டும். விதை நட்ட 35ம் நாள் செடி நன்றாக படர்ந்து கொடி ஓடும். இந்தக்கொடிகள் பூமியின் மீது ஓடும்போது கணுக்களிலிருந்து வெளிவரும் வேர்கள் பூமியில் இறங்கி நிலத்தை இறுகப்பிடித்துக்கொள்ளும். கொடிகள் வளமாக நிலத்தை தழுவி வளரும்போதுதான் செடி சீராக பூ, பிஞ்சுகள் விடும். நெல் வயலை உழாத சூழ்நிலையில் தரை கெட்டியாக இருக்கும். இதனால் கணுக்களிலிருந்து வேர் வெளிவந்தால் அவைகளால் நிலத்தினுள் இறங்க முடியாது. இதுசமயம் நிலத்தினை கொத்தி மிருதுவாக்கி கொடியின் கணுவை அதில் வைத்து மேலே மண் தள்ளி மூடி கைகளால் லேசாக அழுத்திவிட வேண்டும். இப்பணி பதியன் போடுதல் என்று அழைக்கப் படுகின்றது. செடி நட்ட 40 நாட்கள் கழித்து நஞ்சை வயல் முழுவதும் நன்கு நனையும்படி ஓர் உருட்டுத்தண்ணீர் பாசனம் செய்யலாம். இப்பணி செடியிலிருந்து பூ, பிஞ்சுகள் கொட்டிவிடுவதை தவிர்த்துவிடுகின்றது. வண்டுகள் விழக்கூடிய வாய்ப்பு உண்டு. இதைத்தடுக்க மெட்டாசிஸ்டாக்ஸ் அடிக்கலாம். அசரை விழுந்தால் ரோகர் 200 மில்லிஅடிக்கலாம்.
அலர் கூறுவதால் காமத்தை அடக்குவோம் என்று முயலுதல், நெய்யால் நெருப்பை அவிப்போம் என்று முயல்வதைப் போன்றது. சாலமன் பாப்பையா உரை: இந்த ஊரார் தங்கள் அலரால் எங்கள் காதலை அழித்து விடுவோம் என்று எண்ணுவது, நெய்யை ஊற்றியே நெருப்பை அணைப்போம் என்பது போலாம். கலைஞர் உரை: ஊரார் பழிச்சொல்லுக்குப் பயந்து காதல் உணர்வு அடங்குவது என்பது, எரிகின்ற தீயை நெய்யை ஊற்றி அணைப்பதற்கு முயற்சி செய்வதைப் போன்றதாகும்.