text
stringlengths
388
164k
இலங்கையின் உலர் வலயத்தில் பல்வேறு விவசாய முறைகளில் இயற்கை வளங்களின் நீடித்த பயன்பாடு மற்றும் உயிரிலித்தகைப்புக்களை திறன்பட நிர்வகிப்பதன் மூலம் அதிக உற்பத்தித்திறனை பெற்றுக்கொள்ள பொருத்தமான பயிர் முகாமைத்துவ நடைமுறைகள் மற்றும் பயிர்முறைகளை உருவாக்குதல். ஆராய்ச்சி மற்றும் வெளியீடுகள் சேவைகள் கீழ்வரும் அம்சங்களில் பயிற்சி விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடாத்துதல் வேறுபட்ட விவசாய சூழல்களில் மறு வயற்பயிர்களின் விவசாய நடைமுறைகள். மறு வயற்பயிர்ச்செய்கையில் காலநிலை மாற்றத்தின் தாக்கங்களும் அதற்கான தீர்வு முறைகளும். உலர்வலயத்தில் மறு வயற்பயிர்ச்செய்கையின் சாத்தியமான விளைச்சல். மறு வயற்பயிர்ச்செய்கையில் உற்பத்தித்திறனை எவ்வாறு மேம்படுத்துதல். பல்வேறு பயிர்முறைமைகளின் உற்பத்தித்திறனை மேம்படுத்துதல். விவசாயிகள் மற்றும் பங்குதாரர்களின் கோரிக்கையின் பேரில் வெவ்வேறு களப்பிரச்சனைகள் குறித்து பரிந்துரைகளை வழங்குவதற்கான கள ஆய்வுகள். ஊடகங்கள் மற்றும் கண்காட்சிகள் போன்ற பிற பிரச்சாரங்கள் மூலம் விவசாய தொழிநுட்பங்களை பரப்புதல். தொழிநுட்பங்கள் மிளகாய் பயிருக்கு மூடுபடையிடுதல், உழுதல் மற்றம் சேதனப்பசளையிடல் என்பன ஒருங்கிணைய ஆய்வு செய்யப்பட்டு அதன்விளைவு பரிசோதிக்கப்பட்டது. மிளகாய்க்கு இயக்கப்பட்டுக்கு தேவையான நைதரசன் பயன்பாட்டுமுறை பரிசோதிக்கப்பட்டது. நெல் சோயா மற்றும் சோளத்தின் மகரந்த மலட்டுத்தன்மையில் விதான நிலை வெப்பநிலையின் தாக்கம் சுற்றுப்புறச்சூழல் நிலமையின் கீழ் ஆய்வு செய்யப்பட்டது. BG 366 மற்றும் BG 358 என்பவற்றின் விதான வெப்பநிலை மற்றும் மகரந்த கருக்கட்டல், கருக்கட்டல் ஆகியவற்றின் போது அதிக காற்று வெப்பநிலை மற்றும் மிதமான ஈரப்பதத்தின் தாக்கம் என்பன ஆய்வு செய்யப்பட்டது. பெரிய வேங்காயச் செய்கையில் உமி, வைக்கோலை பகுதியாக எரிக்கச்செய்து வைக்கோல் மற்றும் கிளிசிரீடியா ஆகியவற்றை சேதன மூடுபடையாக பயன்படுத்தி ஆய்வு செய்யப்பட்டதில் வைக்கோல் மூடுபடையாக பயன்படுத்தியபோது அதிக விளைவு பதிவாகியது. இதன் விளைச்சல் 38t /ha மற்றும் கடுமையான நிறமுடைய குமிழ் பெறப்பட்டது. இலங்கையில் பயன்படுத்தப்படும்ட றைசோபியம் inculum மூலமாக சோயாபயிரில் வரட்சிக்குத் சகிப்புத்தன்மையானது மேம்படுத்துவது கண்டறியப்பட்டது. சிறப்பான ஆரம்பவிதை ஈரப்பதன், சேமிக்கப்பயன்படுத்தும் பொருள் மற்றும் சேமிக்கும் இடம் என்பன சோயாவின் சேகரிக்கும் காலத்தை அதிகரிப்பதற்கு அதன் இயலுமை குறையாமல் இனங்காணப்பட்டது. நீர்ப்பாசன நிலமையின் கீழ் புதிதாக சிபார்சு செய்யப்பட்ட பயிர் அடர்த்தி, பயிர் இடைவெளி 45cm x 30cm மற்றும் விகிதாசார நைதரசன் பயன்பாடு கலப்பினத்திற்கு வழங்கப்பட்டது. விளைச்சல் நன்மை 20 – 25 % கிடைக்கப்பெற்றது. பொருத்தப்பாடான மேடைவகை, பயிர் அடர்த்தி மற்றும் உகந்த பூக்கும் ஒத்திசைவு நுட்பங்கள் என்பவற்றை இனங்காண்பதன் மூலம் கலப்பின சோள விதை உற்பத்தி நுட்பங்கள் மேம்படுத்தப்பட்டது. இலங்கையில் உலர் வலய நிலைமைகளின் கீழ் அதிக விளைச்சல் திறன் கொண்ட டயோஸ்கோரியா இனங்கள் அடையாளம் காணப்பட்டன.
பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் குற்றச் செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகள், தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள்” என டிஜிபி எச்சரிக்கை விடுத்துள்ளார். Prem Kumar Updated on : 25 September 2022, 05:55 AM பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் குற்றச் செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகள், தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள்” என டிஜிபி எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக தமிழ்நாடு காவல்துறை தலைமையகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாடு முழுவதும் பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்குச் சொந்தமான அலுவலகங்கள் மற்றும் நிர்வாகிகளின் வீடுகளில் தேசிய புலனாய்வு முகமை (NIA) அதிகாரிகள் 22.09.2022 அன்று சோதனை மேற்கொண்டனர். தமிழகத்தில் இச்சோதனையின்போது 11 நபர்கள் கைது செய்யப்பட்டனர். இக்கைது நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து குறிப்பிட்ட அமைப்பைச் சேர்ந்தவர்கள் சில இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்ட 1410 பேர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர். வாகனங்கள் மீது கல்வீச்சு போன்ற வன்முறை சம்பவங்களில் ஈடுபட்ட 19 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதில் தஞ்சாவூரில் பஸ் மீது கல்வீசி சேதம் விளைவித்த அரித்திரி, சலீம், சிராஜீதின் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இரு சக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. அதனைத் தொடர்ந்து மண்ணெண்ணெய் நிரப்பிய பாட்டில்களை சில அமைப்பைச் சேர்ந்தவர்களின் வீடுகள், வாகனங்கள் மற்றும் வர்த்தக நிலையங்களை குறிவைத்து வீசிய சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. இச்சம்பவங்கள் தொடர்பாக குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டு புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இச்செயல்களில் ஈடுபட்ட குற்றவாளிகளை அடையாளம் கண்டு கைது செய்ய தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. இது வரை 250 சந்தேக நபர்களிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. நூறு நபர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. மண்ணெண்ணெய் பாட்டில் வீசிய சில உண்மை குற்றவாளிகள் கைது செய்யட்டுள்ளனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. அவர்களது இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யட்டுள்ளன. கோவை மாநகரில் RAF இரண்டு பிரிவுகள், மாநில கமாண்டோ படை இரண்டு பிரிவுகள், சிறப்பு அதிரடிப்படை இரண்டு பிரிவுகள் என கூடுதலாக 3500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சட்டம் ஒழுங்கு காவல்துறை கூடுதல் இயக்குநர், திரு.பி.தாமரைக்கண்ண ன், இ.கா.ப., அங்கு முகாமிட்டுள்ளார். பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் இது போன்ற குற்றச் செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகள், தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள் என்று இதன்மூலம் எச்சரிக்கப்படுகிறது.” எனத் தெரிவித்துள்ளனர். Also Read கோவை: அதிரடி காட்டும் தலைமைச் செயலாளர் - தவறான தகவல்களை பரப்புவோர் மீது நடவடிக்கை ; போலிஸ் எச்சரிக்கை! DGP DGP Sylendra Babu Trending சாவர்க்கர் பரம்பரையில் வந்த தேசமகா பக்தர்களின் ‘குறுகிய பாரதம்’: பாஜகவின் உண்மை முகத்தை தோலுரித்த முரசொலி “இந்தியா அளித்துள்ள உத்தரவாதங்களைக் காப்பாற்ற தமிழ்நாடு உறுதுணையாக இருக்கும்” : முதலமைச்சர் உரை! போட்டியின் நடுவே வந்த சேதி: தங்கப்பதக்கத்தை வைத்து தந்தைக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய வீராங்கனை! #FIFA2022 கால்பந்து போட்டிகளையும் முந்தும் தமிழ்நாடு : உலக அரங்கில் ஜொலிக்கும் ‘திராவிட மாடல்’ ! Latest Stories போட்டியின் நடுவே வந்த சேதி: தங்கப்பதக்கத்தை வைத்து தந்தைக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய வீராங்கனை! சாவர்க்கர் பரம்பரையில் வந்த தேசமகா பக்தர்களின் ‘குறுகிய பாரதம்’: பாஜகவின் உண்மை முகத்தை தோலுரித்த முரசொலி
ஸ்டீரியோ ஸ்பீக்கர்களைத் தேர்ந்தெடுப்பது நிச்சயமாக உங்கள் பணத்தை மிச்சப்படுத்தும், ஆனால் Altec Lansing VS2320 ஒரு தவறான பொருளாதாரம். ஒலிபெருக்கியின் உதவியின்றி, கச்சிதமான ஸ்பீக்கர் வடிவமைப்பு என்பது 100Hz க்குக் கீழே எந்த பேஸும் இல்லை, அதே சமயம் அது வெளியிடும் குறைந்த அதிர்வெண்கள் தெளிவற்றதாகவும் சற்று சிதைந்ததாகவும் இருக்கும். இந்த விலையில் நாம் எதிர்பார்ப்பதை விட அதிக அதிர்வெண் விவரங்களுடன் மீதமுள்ள அலைவரிசை ஸ்பெக்ட்ரம் மிகவும் சிறப்பாக உள்ளது. சரியான ஸ்பீக்கரில் ஹெட்ஃபோன் வெளியீடு மற்றும் துணை உள்ளீடு ஆகியவற்றுடன் வடிவமைப்பு எளிமையானது ஆனால் நன்கு வடிவமைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், ஒற்றை தொனி கட்டுப்பாடு ஒலி குறைபாடுகளை சமாளிக்க எதையும் செய்யாது. இரண்டு ஸ்பீக்கர்களை இணைக்கும் கேபிளும் சிறிது நீளமாக இருக்க விரும்புகிறோம். பாஸ் இல்லாததால், VS2320 ஒலி தரத்திற்காக போட்டியிட முடியாது, ஆனால் ஒலிபெருக்கிக்கு இடமில்லாத சூழ்நிலைகளில் அவை குறைந்த விலையில் இருக்கும். கிரியேட்டிவ் i-Trigue 3330 இல் பாஸுக்குப் பஞ்சமில்லை, மேலும் அதன் எதிர்கால வடிவமைப்பு மேசையை மேம்படுத்துகிறது. வயர்டு ரிமோட் பெரிய வால்யூம் நாப், ஹெட்ஃபோன் சாக்கெட் மற்றும் ஒலிபெருக்கி நிலைக் கட்டுப்பாட்டை வழங்குகிறது, இருப்பினும் விஷயங்களை நேர்த்தியாக வைத்திருக்க இந்த அம்சங்களை செயற்கைக்கோள் ஸ்பீக்கர்களில் ஒன்றில் கட்டமைக்க விரும்புகிறோம். ஒரு உள் மின்சாரம் கூட சிறப்பாக இருந்திருக்கும்; சங்கி அடாப்டர் அண்டை பவர் சாக்கெட்டுகளை மறைக்கும் அபாயம் உள்ளது. 3330 இன் ஒலி தரம் விமர்சனத்திற்கு குறைவான காரணத்தைக் கொடுத்தது. பாஸ் முழு உடல் மற்றும் அதிக அதிர்வெண்களில் ஏராளமான விவரங்கள் மற்றும் இருப்பு இருந்தது, இருப்பினும் பிரகாசமான தொனி சில நேரங்களில் ஆக்ரோஷமாக ஒலித்தது. நெருக்கமான ஆய்வு ஒலிபெருக்கியில் இருந்து ஒரு சமதளமான பதிலை வெளிப்படுத்தியது, இது குறைந்த அதிர்வெண்களை சிறிது சிரமப்படுத்தியது, ஆனால் ஒட்டுமொத்த ஒலி தரம் 2.1 செட்களில் சிறந்ததாக இருந்தது. இருப்பினும், £40 இல் இது சிறந்த மதிப்பைக் குறிக்கவில்லை. ஹெர்குலஸ் XPS 2.160 இல் உள்ள வடிவமைப்பில் நாங்கள் அவ்வளவு ஈர்க்கப்படவில்லை, ஆனால் குறைந்த பட்சம் வால்யூம் கட்டுப்பாடு, ஹெட்ஃபோன் அவுட் மற்றும் துணை உள்ளீடு ஆகியவை சரியான செயற்கைக்கோளில் நேர்த்தியாக இணைக்கப்பட்டுள்ளன. இருண்ட தொனி மற்றும் இருப்பு இல்லாததால், ஒலி தரம் ஏமாற்றமளித்தது. 20Hz முதல் 20kHz வரையிலான சைன் டோன் ஸ்வீப்பை விளையாடுவது (வழக்கமான மனித செவிப்புலன் வரம்பு) ஒரு சமதளமான சவாரியை வெளிப்படுத்தியது, சில அதிர்வெண்கள் மற்றவர்களை விட அதிக சத்தமாக இனப்பெருக்கம் செய்தன மற்றும் அதிக அதிர்வெண் இனப்பெருக்கத்தில் குறிப்பிடத்தக்க மெல்லிய தன்மையுடன். குறைந்த பட்சம் ஆழமான பாஸுக்குப் பஞ்சமில்லை, மேலும் அதிக விலகல் ஏற்படுவதற்கு முன்பு பேச்சாளர்கள் ஒரு நல்ல ஒலி அளவை வழங்கினர். எனவே, அவை விளையாட்டு ஒலி விளைவுகளுக்கு ஒரு மகிழ்ச்சியான மோசடியை உருவாக்குகின்றன. சைபர் ஒலியியல் CA3550 இதேபோன்ற விதியை சந்தித்தது. வடிவமைப்பு மிகவும் கவர்ச்சிகரமானதாக இல்லை - ஒவ்வொரு செயற்கைக்கோளிலும் உள்ள பெரிதாக்கப்பட்ட நீல விளக்குகள் பிசி மோடர்களை ஈர்க்கக்கூடும், ஆனால் வேறு யாருக்கும் இல்லை. செயற்கைக்கோள்களின் வடிவமைப்பு சுவாரஸ்யமாக மெல்லியதாக உள்ளது, ஆனால் இது வெறும் காட்சிக்காக மட்டுமே என்பதை வெளிப்படுத்துகிறது, உண்மையில், செயற்கைக்கோள்களின் கீழ் பாதி மட்டுமே எந்த ஒலியையும் வெளியிடுகிறது. குழுவின் மிகப்பெரிய ஒலிபெருக்கியைக் கொண்டிருந்தாலும், CA3550 ஆனது ஆழமான பாஸை மீண்டும் உருவாக்கத் தவறிவிட்டது, ஒட்டுமொத்தமாக அதன் ஒலி தரத்தில் இடம் மற்றும் ஆழம் பற்றிய எந்த உணர்வும் இல்லை. ஒலிபெருக்கி மற்றும் செயற்கைக்கோள்கள் சந்திக்கும் அதிர்வெண் பதிலில் கணிசமான இடைவெளி உள்ளது, இதன் விளைவாக பலவீனமான குறைந்த-நடு அதிர்வெண்கள் மற்றும் அதனால், வெப்பம் இல்லாதது. லாஜிடெக் X-230 அத்தகைய பிரச்சனைகள் எதுவும் காட்டப்படவில்லை, இங்குள்ள ஐந்து செட்களில் வெப்பமான தொனியை உருவாக்கியது. உயர் அதிர்வெண்கள் கிரியேட்டிவ் அமைப்பைப் போல உச்சரிக்கப்படவில்லை மற்றும் பாஸ் மிகவும் ஆழமாக இல்லை, ஆனால் ஒட்டுமொத்த தொனி மிகவும் சமமாகவும் சமநிலையாகவும் இருந்தது. நாங்கள் எதிர்கொண்ட ஒரே பிரச்சனை என்னவென்றால், எங்கள் சைன் டோன் ஸ்வீப் ஒலிபெருக்கியை ஒலிக்கச் செய்தது. அதிர்ஷ்டவசமாக, இசை கேட்கும் சோதனைகளின் போது இதே பிரச்சனையை நாங்கள் கவனிக்கவில்லை. மற்ற ஒலிபெருக்கி அடிப்படையிலான அமைப்புகளை விட கவர்ச்சிகரமான, அடக்கமற்ற வடிவமைப்பு, அதிக அளவு மற்றும் குறைந்த விலையுடன், இது இங்கே வெளிப்படையான வெற்றியாளர்.
ட்ரெண்டிங்கதை எழுதும் வல்லுனர்களால் ஒரு நாவல் எழுதப்பட்டால் எப்படியிருக்குமோ.. அப்படி இருந்தது. சாந்ததத் மொழிபெயர்த்ததில் எனக்கு ஆச்சரியம் எதுவுமில்லை. எய்ட்ஸ் பற்றியான விழிப்புணர்வு நாவலாக இதை கொள்ளாலாம்! கதையை போட்டிக்கென்று அந்த சமயத்தில் எழுதுபவர்கள்.. எழுதி பரிசு பெறுபவர்கள் அப்போதைய சமகால பிரச்சனையை எடுத்துக்கொண்டு பேப்பர் செய்திகளை வைத்து நாவலென ஒப்பேற்றிவிடுவார்கள்! கருமம் என்னான்னா தேர்ந்தெடுப்பாளர்களும் அதே மனநிலையில் இருக்க.. சிறப்பு நாவலென கருமத்தை அப்போதைக்கி பரிசுக்குரியதாக தேர்ந்தெடுத்து கொண்டாடி விடுவார்கள். இந்த மாதிரியான எழுத்தர்கள் காணாமல் போய்விடும் காலத்தில் வாழ்கிறோம்! எந்த தேர்ந்தெடுப்பாளர்களும் ஏமாளிகள் அல்ல.. என்பதை நிரூபணம் செய்த போட்டிகள் நடந்து எல்லாமும் அரங்கேறிவிட்டன! கொரனா என்றால்,, அதைப்பற்றி எழுதி பரிசு பெற எழுதிய எழுத்தாளன் சோர்ந்து போய்விட்டான்! அவன் பதறிக்கையில் இருக்கான்! (விடுவோம்) எரியும் பூந்தோட்டம்.. முதலாக தெலுங்கு நாவல்! தெலுங்கில் இலக்கியம் இப்படித்தான் வளரும்! வளரணும்! நாலு குத்தாட்ட பாடல், நாலு சண்டைக் காட்சிகள் இருந்தால் சினிமாவையே காப்பாற்ரும் உலகில் இப்படி ஒரு நாவல் அவர்களை எந்த துன்பத்தையும் படுத்தியிர வாய்ப்பிருக்காது! இந்த நாவல் துக்கங்களுக்கான வழிபாதை! ஆனால் கேனைத்தனமான நாயகனோடு சென்று இறுதியில் ரமணிச்சந்திரன் நாவல் முடிவு போல நடந்தேறுகிறது! எல்லாரும் நல்லா வாழுங்கப்பா!
வெள்ளியங்கிரி தெரியுமா? கோவைக்கு அருகில் இருக்கிற அருமையான அழகான மலைப்பகுதி. காட்டுயிர்களின் சொர்க்கம். சின்னதும் பெரியதுமாக சுனைகள், மிக அரிய பறவையினங்கள், விலங்குகள், பாசிகள், மூலிகை செடிகள் என பாதுகாக்கப்பட வேண்டிய மலைப்பகுதி . அந்த வனத்தின் காற்றை சுவாசித்தால்கூட தீராத நோயெல்லாம் தீரும் என்று சொல்வதுண்டு. இதன் அடிவாரத்தில் ஒரு சிவன் கோயில் உண்டு. வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில். இந்த கோவிலுக்கு ஆண்டுதோறும் வருகிற பக்தர்கள் கரடு முரடான வெள்ளியங்கிரி மலைமீது ஏறி ஏழு குன்றுகள் கடந்து சிவலிங்க வழிபாடு நடத்தி திருவருள் பெறுவது வழக்கம். பத்தாண்டுகள் முன்புவரை இப்படி மலை ஏறுகிறவர்கள் எண்ணிக்கை மிக மிகக் குறைவுதான். குறிப்பாக சித்ரா பௌர்ணமி நேரத்தில் மட்டும்தான் கூட்டம் அதிகமாக இருக்கும். அதனால் மலைப்பகுதியின் சுற்றுசூழலுக்கு பெரிய பாதிப்பின்றி இருந்தது. ஆனால் இன்று இந்த மலைக்கு வருகிற பக்தர்கள் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. மனிதர்கள் எங்கெல்லாம் அளவுக்கதிகமாக புழங்குகிறார்களோ அங்கே இயற்கை செத்துப்போகும். அதற்கேற்ப பாதுகாக்கப்பட வேண்டிய காட்டுயிர்களின் வீடு ‘’பக்தியின் பெயரால் + கடவுளின் பெயரால்’’ அழிந்துகொண்டிருக்கிறது. சில மாதங்களுக்கு முன்பு அங்கே சென்றிருந்தபோது, மலைப்பகுதி முழுக்கவே எங்குபார்த்தாலும் ப்ளாஸ்டிக் குப்பைகள், உணவுக்கழிவுகள் என மனிதர்கள் இயற்கையை வேட்டையாடிவிட்டு சென்றதை பார்க்க முடிந்தது. இது பக்தர்கள் இயற்கைக்கு செய்கிற சேவை. பாதிகாட்டை பக்தர்கள் அழித்துக்கொண்டிருக்க.. மீதி காடு சும்மாதானே கிடக்கிறது என்று இன்னும் சிலர் கிளம்பினர். இயேசுவை கூவிக் கூவி விற்கிற, ஒரு கிறித்தவ மாஃபியா சாமியார், சிறுவாணி பகுதியை சுற்றியிருந்த காடுகளை கபளீகரம் செய்து சர்ச்சும், கல்லூரிகளும் கட்டினார். இதில் ஏகப்பட்ட காட்டுப்பகுதிகள் அழிக்கப்பட்டன. அதோடு பல்லாயிரக்கணக்கான மக்களின் நடமாட்டத்தால் காட்டுயிர்களின் இயல்புவாழ்க்கையும் கேள்விக்குறியானது. காட்டுயிர்களின் வசிப்பிடங்களில் அபார்ட்மென்ட்களும் ஹாஸ்டல்களும் கட்டப்பட்டன. பின்னாலேயே சிவபெருமானோடு வந்தார், இன்னொரு இந்து சாமியார். ''அத்தனைக்கும் ஆசைப்படும்'' அவரோ தன்பங்குக்கு யானைகளின் வழித்தடம் (CORRIDOR) என்று அழைக்கப்படுகிற பகுதியில் மிக பிரமாண்டமாக பல கோடி ரூபாய் செலவில் சினிமா செட்டுபோல ஒரு கோயிலை கட்டினார். இதற்காக பல நூறு ஏக்கர் காடுகள் அழிக்கப்பட்டன! அதோடு ஒவ்வொரு மகாசிவாராத்திரியின் போதும் இலட்சக்கணக்கானவர்கள் இந்த வனப்பகுதியில் கூடி பிரார்த்தனை செய்கிறேன் பேர்வழி என காட்டுயிர்களை பாடாய்ப்படுத்தினார். இன்று வெள்ளியங்கிரி மலைப்பகுதியில் மனிதர்கள் மட்டும்தான் வாழ்கின்றனர். கிட்டத்தட்ட அப்பகுதியில் இன்னும் சில ஆண்டுகளில் ‘’இங்கே காடு இருந்தது’’ என்கிற போர்டு தொங்கலாம். அக்காட்டினை புகைப்படங்களில் பார்த்து அச்சுச்சோ என உச்சுக்கொட்டலாம். ஆனால் யாராலும் இதன் அழிவை தடுக்கமுடியாது. இங்கு மட்டுமல்ல, இன்று நம்முடைய காடுகளில் பலவும் இந்த கார்பரேட் சாமியார்களுக்கு தாரைவார்க்கப்படுகின்றன. தட்டிக்கேட்க நாதியில்லை. இன்று அதிகாரம் அந்த கடவுள் ஏஜென்டுகளின் கைகளில்தான் இருக்கிறது. நடக்கிற அத்துமீறல்கள் கடவுளின் பெயரால் நடக்கின்றன. இங்கு மட்டுமல்ல, குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருப்பான் என்று எத்தனையோ மலைகள் கடவுளுக்காக தாரைவார்க்கப்பட்டுள்ளன. பல ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்த கிழக்கு தொடர்ச்சி மலையை, திருப்பதிமலை ஏழுமலையானால் இன்று நாசமாகி கிடக்கிறது. புலிகள் ரிசர்வ் காடுகளுக்குள் இருக்கிற சபரிமலையில் புலிகளே இல்லை! பம்பா நதியில் கூவத்தைவிடவும் கேடுகெட்ட ஒரு சாக்கடையாக மாறியிருக்கிறது. என்ன காரணம். பக்தி! கடவுள் இருக்கிறாரா? இல்லையா? என்பதையெல்லாம் தாண்டி அவர் என்றுமே மார்க்கெட் குறையாத நல்ல வியாபார பண்டமாக இருக்கிறார் என்பதை நீங்களோ நானோ மறுக்கவே முடியாது. எப்போதும் விற்றுக்கொண்டேயிருக்கலாம். வாழை மரம் போல கடவுளிடம் சகலமும் விற்பனையாகும். விபூதி தொடங்கி அர்ச்சனை, பூ, பழம், மெழுகுவர்த்தி, ஆன்மீக சுற்றுலா, உண்டியல் என தொட்டதெல்லாம் தங்கம்தான்! உலகில் எப்படிப்பட்ட பொருளாதார சரிவு ஏற்பட்டாலும், பஞ்சம் பட்டினி வந்து மக்களெல்லாம் மாண்டாலும் கோவில் வருமானத்துக்கு மட்டும் குறையே இருக்காது! கடவுள் வெறும் பணம் மட்டுமேயல்ல அதிகாரமும் கூட! இன்று ஒவ்வொரு ஊரிலும் எத்தனை சாமியார்கள்.. அந்த ஏஜென்டுகளுக்கு எத்தனை கல்லூரிகள், எத்தனை ஆயிரம் கோடி சொத்துகள்.. அவர்களுக்குப் பின்னால் எத்தனை எத்தனை அரசியல் பெருந்தலைகள். பாலியல் வழக்குகளில் சிக்கி சிறைசென்ற சாமியார்கள் எந்த தண்டனையுமின்றி சிறையிலிருந்து மீண்டுவந்து வெற்றிநடைபோட்டு, தொடர்ந்து ஆன்மீக சேவை செய்வதை தினமும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். கொலை குற்றஞ்சாட்டப்பட்ட சாமியார்கள், இன்னமும் வெளியே சுதந்திரமாக ஆசி வழங்கிக் கொண்டுதானே இருக்கிறார்கள். சாமியாரின் காலடியில் விழுந்து கிடந்த ஜனாதிபதிகளையும் கூட நாம் பார்த்திருக்கிறோமே! இருந்தும் நம்மால் எதுவுமே செய்யமுடிவதில்லை. சொல்லப்போனால் நாம் அனைவருமே கடவுளுக்கு ‘அடிக்ட்’ ஆகிக்கிடக்கிறோம். மீளமுடியாத அடிக்சன். முழுக்க முழுக்க பயத்தினால் உண்டான அடிக்சன். ‘’சாமி கண்ணைக் குத்திடும்’ என்று முதன்முதலாக, உங்கள் தாய் தந்தையர் சொல்லிக்கொடுத்த போது, உண்டான அடிக்சன்! ஜாதகம் பார்த்து பெயர்வைத்தபோது உண்டான அடிக்சன். அதனால்தான் கடவுளின் பெயரால் நடக்கிற எந்த அநீதியையும் தட்டிக்கேட்க அல்லது கேள்வி கேட்கவும் மறுக்கிறோமோ என்னவோ?. போலியான பக்தர்களால் இயற்கை நாசமாக்கப்படுகிறது. கடவுளின் வீடுகளாக சொல்லப்படும் கோவில்களில் அப்பாவி மக்களின் பணம் பல்வேறு வழிகளில் பிடுங்கப்படுகிறது. நாத்திகர்களே ஆட்சி செய்தாலும், சாமியார்கள் குறைவதில்லை. இதற்கெல்லாம் யார் காரணம்..? கடவுள்! இதற்காக கடவுளை மட்டும்தான் குற்றம்சாட்ட முடியும். கடவுள் மீது கேஸ்போட்டு கோர்ட்டுக்கு இழுக்கலாம். ஆனால் அதெல்லாம் நடக்கிற கதையா? சில மாதங்களுக்கு முன்பு வெளியான ‘ஓ மை காட்’ திரைப்படத்தின் கதையே ஒரு சாதாரண மிடில்கிளாஸ் மனிதன்.. சர்வ வல்லமைகொண்ட கடவுளை கோர்ட்டுக்கு அழைப்பதுதான்! நாத்திகனான மிடில்கிளாஸ் நாயகனுக்கு எதிர்பாராமல் இயற்கைசீற்றத்தால் மிகப்பெரிய தொழில் நஷ்டம் ஏற்படுகிறது. அவன் வாழ்க்கையே சர்வநாசமாகும் நிலை. நஷ்ட ஈடு கேட்டு இன்சூரன்ஸ் கம்பெனிக்கு செல்கிறான். ஆனால் அந்த நிறுவனமோ ‘’ACT OF GOD” என்கிற புது விஷயத்தை காட்டி பணம் தர மறுக்கிறது. அதாவது கடவுளால் உண்டாகும் இயற்கைச் சீற்றங்களால் பாதிப்பு ஏற்பட்டால் பணம் கிடையாது, என்று சொல்லிவிடுகிறது! இன்சூரன்ஸ் நிறுவனத்தின் மோசடியை அம்பலப்படுத்த முடிவெடுக்கிறான் நாயகன். ஆக்ட் ஆஃப் காட்தானே பிரச்சனை.. கடவுளையே கோர்ட்டுக்கு இழுக்கிறான். கடவுள் மீது வழக்கு தொடுத்தால் எந்த வக்கீல் ஒப்புக்கொள்வான்.. அதனால் அவனே தன் வழக்கை வாதாட முடிவெடுக்கிறான். கடவுளின் பிரதிநிதிகளுக்கு (சாமியார்கள்) நோட்டீஸ் அனுப்புகிறான். அவர்களோடு வாதாடுகிறான். இவனைப்போலவே ஆக்ட் ஆஃப் காடால் பாதிக்கப்பட்ட பலரும் இவனோடு இணைந்துகொள்கிறார்கள். போலி சாமியார்கள் ஒன்றுகூடி இவனை ஒழித்துக்கட்ட முடிவெடுக்கிறார்கள். ஆள்வைத்து கொல்ல திட்டமிடுகிறார்கள். கடவுளே நேராக களத்தில் இறங்குகிறார். நாயகனுக்கு உதவ முடிவெடுக்கிறார். அவனை விரட்டும் அடியாட்களிடமிருந்து காப்பாற்றுகிறார். ஆனால் அவர் அவனுக்கு வேறு எந்த உதவியையும் செய்வதில்லை. அவரும் ஒரு பார்வையாளனாகவே இருக்கிறார். அவனுக்கு அருகிலேயே இருக்கிறார். மக்கள், நாயகனை எதிர்க்கிறார்கள். வெறுக்கிறார்கள். நாயகனின் குடும்பம் அவனைவிட்டு பிரிகிறது. தனியாக இருந்தாலும் தைரியமாக போராடுகிறான். கடவுளின் பெயரால் நடக்கிற வியாபாரத்தை அம்பலப்படுத்துகிறான். ஒரு டிவி பேட்டியில் அவன் கடவுள் குறித்து முன்வைக்கும் கேள்விகளுக்கு இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கிறது. மக்களும் அவனைப்போலவே கேள்விகள் கேட்க தொடங்குகிறார்கள். ‘’500 ரூபா வாங்குறல்ல.. மரியாதையா இப்ப சொன்ன மந்திரத்துக்கு அர்த்தம் சொல்லிட்டுப்போயா’’ என்று யாகம் வளர்க்க வந்த அய்யரைக் கேட்கிறான் ஒரு இளைஞன்! மக்களிடையே நாயகனுக்கு வரவேற்பு நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. கடவுள் ஏஜென்டுகளுக்கோ, என்னசெய்வதன்று புரியாமல் தவிக்கிறார்கள். ஆனால் கோர்ட் ஆதாரம் கேட்கிறது. எதிர் அணி வக்கீல் ‘’இந்த இயற்கைச் சீற்றங்கள் அனைத்தையும், கடவுள்தான் செய்தார் என்று நிரூபித்துக் காட்டு பார்க்கலாம், ஆதாரம் கொடு’’ என்று சொல்ல.. என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்து போகிறான் நாயகன். கடவுள் அவனுக்கு உதவ நினைக்கிறார். நாயகனிடம் பைபிள், குர்ஆன் மற்றும் கீதையை கொடுக்கிறார். அவன் ராப்பகலாக அதை வாசிக்கிறான். தீர்வு கிடைக்கிறது. கடவுள்தான் இயற்கை சீற்றத்துக்கு காரணம் என்று நிரூபிக்கிறான். பல ஆயிரக்கணக்கானோருக்கு இவனால் நஷ்ட ஈடு கிடைக்கிறது. மக்களிடையே நாயகனாக உயர்கிறான். அதே நேரத்தில் ஸ்ட்ரோக் வந்து கோமா நிலைக்கு செல்கிறான். போலி சாமியார்கள் இதையே சாக்காக வைத்து அவனை கடவுளாக்க தீர்மானிக்கின்றனர். அவனை மருத்துவமனையிலேயே கொன்றுவிட தீர்மானிக்கின்றனர்.. அவன் முக்தி அடைந்துவிட்டான். அவன்தான் விஷ்ணுவின் பதினோராவது அவதாரம். கல்கி பகவான்.. என்றெல்லாம் புரளியை கிளப்பி விடுகின்றனர். மீடியா உதவியோடு நாயகன் கடவுளாக்கப்படுகிறான். அவனுடைய கடை இருந்த இடத்தில் நாயகனுக்கு கோயிலும் சிலையும் வைக்க தீர்மானிக்கின்றனர். கோமாவில் இருக்கும் நாயகனிடம் இதையெல்லாம் கூறுகிறார் கடவுள். அவனை குணப்படுத்துகிறார். போ அவர்களோடு போராடு.. நான் எதையும் செய்யப்போவதில்லை என்கிறார் கடவுள். இறுதியில் நாயகன் கடவுளாக்கப்பட்டானா? அல்லது மக்களை திருத்தினானா? என்பது கிளைமாக்ஸ்! இந்தியில் வெளியான இத்திரைப்படம் ஒரு சூப்பர்ஹிட்! பல்வேறு சர்ச்சைகளையும் எதிர்ப்புகளையும் கிளப்பினாலும், இப்படம் மக்களிடையே, நல்ல வரவேற்பையே பெற்றது. எந்த இடத்திலும் எந்த மதத்தினரும், மனம் புண்படாத வகையில், ஒரு நாத்திக கருத்துகள் கொண்ட திரைப்படத்தை எப்படி எடுக்க முடியும்? அதை சாதித்து காட்டியிருக்கிறார் இப்படத்தின் இயக்குனர். படம் முழுக்க வருகிற கடவுள் எந்த மாயாஜால மந்திரங்களையும் செய்வதில்லை.. அன்பை மட்டுமே போதிக்கிறார்! படமும் கடவுள் உருவகத்தின் விஷயங்களை கிண்டல் செய்வதில் தன்னுடைய நேரத்தை வீணடிக்காமல் கடவுள் எப்படியெல்லாம் சந்தைப்படுத்தப்பட்டு நம்மிடையே விற்கப்படுகிறார் என்பதை நாசூக்காகவும் சுவாரஸ்யமாகவும் சொல்லியிருக்கிறார். அதோடு அன்பும் கருணையும்தான் கடவுள் என்பதையும் வலுவாக படம்பார்ப்பவரின் மனதில் பதியவைக்கிறார். படத்தின் நாயகனாக வருகிற பரேஷ் ராவல் மிகச்சிறந்த நடிகர். படம் முழுக்க அவருடைய ராஜ்யம்தான். காட்சிக்கு காட்சி விசில் பறக்கும் நடிப்பு! அவர்தான் இத்திரைப்படத்தின் தயாரிப்பாளரும்! ஆஸ்திரேலியாவில் எடுக்கப்பட்ட THE MAN WHO SUED GOD என்கிற படத்தினை தழுவி மராத்தியில் ஒரு நாடகம் உருவாக்கப்படுகிறது. அந்த நாடகம் பிறகு ‘’கிருஷ்ணா V/S கண்ணையா’’ என்ற இந்திநாடகமாக உருப்பெருகிறது. இந்த நாடகத்தில் நடித்த பரேஷ் ராவல் இதை திரைப்படமாக்கவும் முடிவெடுக்கிறார். ஏகப்பட்ட எதிர்ப்புகளுக்கு மத்தியில்தான் படம் தயாரானது. முதலில் இப்படி ஒரு படத்தை எடுக்க முடிவெடுத்த பரேஷ் ராவலை பாராட்டிவிடுவோம். இப்படத்தை இந்தி தெரியாதவர்கள் சப்டைட்டிலோடு பார்ப்பது நல்லது. படத்தின் ஒவ்வொரு வசனமும் மிக மிக அற்புதமானவை. முழுக்க முழுக்க நாத்திக கருத்துகள்தான் என்றாலும் ‘’இவன் சொல்றது கரெக்டுதானேப்பா’’ என்று நினைக்கிற அளவுக்கு கன்வீன்சிங்கானவை! படம் முழுக்க கருத்து குவியலாகவே இருந்தாலும், வாழைப்பழத்தில் விளக்கெண்ணெய் போல அந்த கசப்பே தெரியாமல், திரைக்கதை அமைத்திருக்கிறார்கள். படம் தொடக்கம் முதல் இறுதிவரை பரபரவென பறக்கிறது. கடவுள் நம்பிக்கை இருக்கிறதோ இல்லையோ, அனைவருமே இப்படத்தை ரசிக்க முடியும். கடவுள் நம்பிக்கையுள்ளவர்கள் கடவுளின் பெயரால் நடக்கிற அக்கிரமங்களை கண்டு ஒரு நிமிடாவது கோபம் கொள்வார்கள். நம்பிக்கையற்ற நாத்திகர்களுக்கு இப்படம் நிச்சயம் உற்சாகம் கொடுக்கும்! கடவுள் எப்படியெல்லாம், வியாபாரப் பண்டமாக மாற்றப்பட்டிருக்கிறார். எப்படியெல்லாம் இறைநம்பிக்கை அதிகார மையங்களுக்கு உதவுகிறது, மதநம்பிக்கைகள் எப்படி நம் மனங்களில் விதைக்கப்படுகின்றன.. என்பதுமாதிரி ஏகப்பட்ட விஷயங்களை படம் பேசுகிறது. ஆனால் எந்த இடத்திலும், எந்த மதத்தையும் தரக்குறைவாக பேசுவது இல்லை. எந்த கடவுளையும் ஆபாசமாக அர்ச்சிக்கவில்லை. அதேசமயம் காட்சிக்கு காட்சி நாத்திக கருத்துகள்தான்! மிகச்சிறந்த ஒளிப்பதிவு, எடிட்டிங், இசை என எல்லாமே கச்சிதம். அதோடு பரபரப்பான திரைக்கதை படத்தின் மிகப்பெரிய பலம். படத்தின் ஒரே குறை.. ஆரம்ப காட்சிகளில் ஆன்மீகத்தின் பெயரால் நாயகனும்கூட ஏமாற்றிதான் பிழைப்பு நடத்துவான்.. அதுதான் இடறல். படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் போலி சாமியாரான மிதுன் சக்ரவர்த்தி ஒரு வசனம் சொல்லுவார்.. ‘‘இவங்களையெல்லாம் திருத்திடலாம்னு நினைக்கறீயா? இவங்க அத்தனைபேரும் அன்பாலதான் கடவுள் நம்பிக்கையோட இருக்காங்கனு நினைக்கிறீயா.. அப்படி இருந்தா திருத்திடலாம்தான்.. ஆனா அவ்வளவுபேரும் பயத்தாலதான் நம்பிக்கையோட இருக்காங்க.. இவங்கள மாத்துறது அவ்வளவு சுலபமில்ல தம்பி’’ என்று சொல்லிவிட்டு போய்விடுவார்! அது எவ்வளவு உண்மை. பெரியார் தன் வாழ்நாளெல்லாம் போராடியது இதற்காகவும்தான். திராவிட இயக்கங்கள் ஐம்பதாண்டு காலமாக முயற்சிப்பதும் இதற்காகத்தான். ஆனால் ரிசல்ட் என்னவோ சொற்ப சொற்பம்தான்! சொல்லப்போனால் ஒரு சாரர் பெரியாரையே, கடவுளாக்கி நாத்திகத்தையே மதமாக்கி, அவரையும் ப்ராடக்டாக்கி காசுபார்க்கிற, பதவிபார்க்கிற கதைகளும் உண்டு என்பதை மறுப்பதற்கில்லை! சரி! தமிழில் கடைசியாக இதுபோல கடவுளையும் போலிச்சாமியார்களையும் விமர்சித்து வெளியான படங்கள் என்னென்ன என்று யோசித்துப்பார்த்தால்.. “வெங்காயம்” என்கிற படத்தைத்தவிர மிக அண்மையில் எதுவுமே தென்படவில்லை. முன்பு வேலுபிரபாகரன் இயக்கிய “கடவுள்” என்கிற படம் நினைவுக்கு வருகிறது. ஆனால் அதுவும் கூட மிக சுமாராக இயக்கப்பட்ட ஒரு லோபட்ஜெட் திரைப்படம்தான்! வெறும் கருத்துகள் மட்டுமே நல்ல சினிமா அனுபவத்தை கொடுத்துவிடாது. அது இரண்டரைமணிநேரம் ரசிக்கும்படியாகவும், அதே சமயம் கருத்துகள் ஒவ்வொன்றும் பார்வையாளனை கன்வீன்ஸ் செய்வதாகவும், தரமான திரைப்படமாகவும் காட்சி அனுபவமாகவும் இருக்க வேண்டியது அவசியம். அதனால்தான் பராசக்தி, ரத்தக்கண்ணீர் மாதிரியான படங்கள் வெற்றிபெற்றன! ஆனால் இன்று மக்களின் பொது புத்திக்கெதிராக, படமெடுக்க யாருக்கும் தைரியமிருப்பதாக தெரியவில்லை. திராவிட இயக்க பின்புலத்திலிருந்து வந்த தயாரிப்பாளர்களும் கூட இப்படிப்பட்ட படங்களை எடுக்க தயங்குகிறார்கள். ‘’ஓ மை காட்’’ திரைப்படம் தமிழில் ரீமேக் செய்யபடவிருப்பதாக முன்பு செய்திகள் வந்தன. அதில் ரஜினிகாந்த் கடவுளாக நடிப்பதாகவும் வதந்திகள் உலவின. ஆனால் அதற்குபிறகு அந்த ப்ராஜக்ட் என்னவானது என்பது அருள்மிகு பாபாவுக்கே வெளிச்சம்! ஐம்பது ஆண்டுகால திராவிட இயக்க ஆட்சியில், எத்தனை இறைமறுப்பு திரைப்படங்கள் வெளியாகியிருக்கும்? விரல் விட்டு எண்ணிவிடலாம். ஆனால் அதற்கான தேவை முன்பைவிட இப்போது அதிகமாக இருக்கிறது. வெள்ளியங்கிரியும் சபரிமலையும் திருப்பதியும் திருவண்ணாமலையும் ஒரு உதாரணம்தான். இதுபோல தமிழ்நாடு முழுக்கவே, ஏகப்பட்ட சாமியார்கள். எண்ணற்ற பக்தர்கள். தொடர்ந்து கடவுளின் பெயரால் மதங்களின் பெயரால் நம்முடைய இயற்கை வளங்களை ஆறுகளை காடுகளை சுற்றுச்சூழலை கபளீகரம் செய்தவண்ணம்தான் இருக்கிறார்கள். நாம் அதைப்பற்றி கேள்விகேட்கும் தைரியமின்றி கடவுள் பயத்தோடு வாய்பொத்தி வேடிக்கைபார்த்தபடியே இருக்கிறோம்!
Your browser is not supported. Please upgrade your browser to one of our supported browsers. You can try viewing the page, but expect functionality to be broken. மொழி العربية Azərbaycan dili български Bosanski Català Čeština Dansk Deutsch Ελληνικά English (UK) English Español (España) Español (LATAM) دريلو فارسی Pilipino Français עברית हिन्दी Hrvatski Magyar Bahasa Indonesia Íslenska Italiano 日本語 ქართული Қазақша ಕನ್ನಡ ភាសាខ្មែរ 한국어 Кыргызча Latviešu Māori (NZ) मराठी بهاس ملايو नेपाली Nederlands Norsk (Nynorsk) Norsk (Bokmål) Polski Português (Brasil) Português (Portugal) Română Pусский Davvisámegiella සිංහල Slovenčina Slovenščina Shqip Svenska தமிழ் తెలుగు Türkçe Українська اردو Tiếng Việt 简体字 繁體字 isiZulu நடவடிக்கைகள் எவ்வாறு இதைச் செய்யலாம் ஊக்குவிப்பு அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் ☰ பள்ளி அல்லது வகுப்பறையுடன் தன்னார்வத் தொண்டு செய்வது எப்படி ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் தங்கள் மாணவர்களை ஊக்குவிக்க தன்னார்வலர்களைத் தேடுகிறார்கள். இன்று ஒரு மாற்றத்தை ஏற்படுத்துங்கள்! தன்னார்வலராக பதிவு செய்க கணக்கீட்டு சிந்தனை சிக்கல் தீர்க்கும் திறன், தர்க்கம் மற்றும் படைப்பாற்றல் ஆகியவற்றை வளர்க்க உதவுகிறது. தொழில்நுட்பம் கிரகத்தின் ஒவ்வொரு தொழிற்துறையையும் மாற்றுகிறது. இன்றைய மாணவர்கள் தொழில்நுட்பத்தை எவ்வாறு உருவாக்குவது என்பதை கற்றுக் கொள்ள வேண்டும், அதை மட்டும் பயன்படுத்தக்கூடாது. "குறியீட்டை" மதிப்பிடுவதற்காக வடிவமைக்கப்பட்ட கணினி அறிவியலுக்கான ஒரு மணிநேர அறிமுகம் The Hour of Code ஆகும், மேலும் எவரும் அடிப்படைகளை கற்றுக்கொள்ள முடியும் என்பதையும் கணினி அறிவியல் துறையில் பங்கேற்பை விரிவுபடுத்துவதையும் காட்டுகிறது. கணினி அறிவியல் இயக்கம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், கணினி அறிவியலை முயற்சிக்க அதிக மாணவர்களை ஊக்குவிக்கவும், குறிப்பாக இளம் பெண்கள் மற்றும் வரலாற்று ரீதியாக ஓரங்கட்டப்பட்ட இன மற்றும் இனக்குழுக்களைச் சேர்ந்த மாணவர்களைத் தூண்டவும் உதவலாம். யார் தன்னார்வத் தொண்டு செய்யலாம்? ஏன் தன்னார்வலர்? தன்னார்வலர்கள் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுவார்கள்? நான் ஒரு குறிப்பிட்ட பள்ளியில் தன்னார்வத் தொண்டு செய்ய விரும்பினால் என்ன செய்வது? எப்படி தயாரிப்பது நீங்கள் ஒரு நிகழ்வை ஹோஸ்ட் செய்யும் போது குறியீட்டு நேரத்தைப் பற்றி பரப்புங்கள் Hour of Code ஐ ஆதரிக்க கூடுதல் வழிகள் தன்னார்வ கேள்விகள் நீங்கள் தன்னார்வத் தொண்டு செய்தாலும், நேரில் வந்தாலும் அல்லது உங்கள் நிறுவனத்துடன் இருந்தாலும், உங்கள் முயற்சிகள் மாணவர்கள் கணினி அறிவியலைப் பார்க்கும் விதத்திலும் அவர்களின் சொந்தத் திறனிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். உங்களிடம் இன்னும் கேள்விகள் இருந்தால் எங்கள் தன்னார்வ கருவித்தொகுப்பைப் பாருங்கள் . யார் தன்னார்வத் தொண்டு செய்யலாம்? கணினி அறிவியல் கல்வி மற்றும் தொழில்நுட்பத்தில் பன்முகத்தன்மையை அதிகரிப்பதில் ஆர்வமுள்ள எவரும் தன்னார்வலராக இருக்க முடியும்! எல்லா பின்னணியிலும் உள்ள தன்னார்வலர்கள் பங்கேற்பதைக் காண நாங்கள் விரும்புகிறோம். அனைத்து வயது மற்றும் திறன் நிலைகளுக்கான பல்வேறு வகையான செயல்பாடுகளை ஹவர் ஆஃப் கோட் கொண்டுள்ளது, எனவே நீங்கள் தன்னார்வத் தொண்டு செய்ய நிரலாக்க நிபுணராக இருக்க தேவையில்லை! நீங்கள் ஒரு வகுப்பறையில் விருந்தினர் பேச்சாளராக இருக்கலாம் அல்லது செயல்பாட்டை இயக்க ஆசிரியருக்கு உதவலாம்.இன்று பதிவுபெறுககணினி அறிவியலைக் கற்க மாணவர்களை ஊக்குவிக்க. ஏன் தன்னார்வத் தொண்டு? கணினி அறிவியல் என்பது 21 ஆம் நூற்றாண்டின் வரையறுக்கும் துறையாகும், ஆனால் பெரும்பாலான பள்ளிகள் இன்னும் அதைக் கற்பிக்கவில்லை. ஒரு குறிப்பிட்ட ஆண்டில் இந்த மாணவர்கள் பெறும் கணினி அறிவியலுக்கான ஒரு மணிநேர குறியீடாக இருக்கலாம். தன்னார்வத் தொண்டு செய்வதன் மூலம், ஆசிரியர்கள் CS ஸை தங்கள் வகுப்பறைக்குள் கொண்டு வருவதை நீங்கள் இன்னும் எளிதாக்கலாம். கடந்தகால தன்னார்வலர்களிடமிருந்து சில சான்றுகளைப் பாருங்கள்: "எனது அனுபவத்தின் சிறந்த பகுதி என்னவென்றால், முழு வகுப்பும் பெண்கள் மற்றும் வண்ண மக்கள். இந்த குழந்தைகளை அடையவும் உற்சாகப்படுத்தவும் ஒரு வாய்ப்பைப் பெறுவது எங்கள் தொழில்துறையின் எதிர்காலத்திற்கு நல்லது. ” "குறிப்பாக இளம் பெண்களை தொழில்நுட்பத்தில் ஊக்குவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். எனது உள்ளூர் பகுதியில் அடுத்த தலைமுறைக்கு நான் உதவுவது போல் உணர்ந்தேன். ” "குழந்தைகள் எவ்வளவு உற்சாகமாக இருந்தார்களோ அதை நான் விரும்பினேன். ஒரு ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், கல்வி ரீதியாகவும் செய்யாத சில மாணவர்கள் ஒரு டெவலப்பரைப் போல சிந்திப்பதிலும் மற்றவர்களுக்கு உதவுவதிலும் சிறந்து விளங்குவதை ஆசிரியர்கள் கவனித்தனர் - அவர்களுக்கு நம்பிக்கையை உணர ஒரு இடம் அளிக்கிறது. ” தன்னார்வலராக பதிவு செய்க தன்னார்வலர்கள் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுவார்கள்? ஆசிரியர்கள் தன்னார்வலர்களைத் தேடலாம்தன்னார்வ வரைபடம். நீங்கள் அவர்களின் வகுப்பறைக்கு அருகில் இருந்தால், ஆசிரியர்கள் வரைபடத்தில் உங்கள் சுயவிவரத்தை மதிப்பாய்வு செய்வார்கள், எனவே ஒரு ஆசிரியர் உங்களைத் தொடர்பு கொள்ளும் வாய்ப்பை அதிகரிக்க முடிந்தவரை முடிக்க முயற்சிக்கவும். தேர்ந்தெடுக்கப்பட்டால், ஒரு ஆசிரியர் தன்னார்வ தளத்தின் மூலம் உங்களைத் தொடர்புகொள்வார் (நாங்கள் உங்கள் மின்னஞ்சல் முகவரியை ஆசிரியருடன் ஒருபோதும் பகிர்ந்து கொள்ள மாட்டோம்). அவர்களின் நிகழ்வுக்கு நீங்கள் எவ்வாறு சிறந்த பங்களிப்பை வழங்க முடியும் என்பதைத் தீர்மானிக்க அவர்களுடன் இணைந்து பணியாற்றுங்கள், மேலும் நீங்கள் நேரில் சென்று வருகிறீர்கள் அல்லது தானாக முன்வந்தால். ஆசிரியர்களிடமிருந்து நீங்கள் அதிகமான கோரிக்கைகளைப் பெறுகிறீர்கள் என்றால், ஆசிரியரிடமிருந்து எந்தவொரு மின்னஞ்சல் கோரிக்கையின் கீழும் வழங்கப்பட்ட இணைப்பைக் கிளிக் செய்வதன் மூலம் உங்கள் விருப்பங்களை எப்போதும் புதுப்பிக்கலாம் அல்லது குழுவிலகலாம். நான் ஒரு குறிப்பிட்ட பள்ளியில் தன்னார்வத் தொண்டு செய்ய விரும்பினால் என்ன செய்வது? தன்னார்வத் தொண்டு செய்ய நீங்கள் எங்கள் தன்னார்வ வரைபடத்தைப் பயன்படுத்த வேண்டியதில்லை! உண்மையில், நீங்கள் தன்னார்வத் தொண்டு செய்ய விரும்பும் வகுப்பறை இருந்தால் நேரடியாக ஆசிரியர்களையும் நிர்வாகிகளையும் அணுக பரிந்துரைக்கிறோம். தொடங்குவதற்கு: நீங்கள் ஒரு பெற்றோர் அல்லது பாதுகாவலராக இருந்தால், உங்கள் குழந்தையின் ஆசிரியர் சலுகைக்கு இந்த மின்னஞ்சல் உங்கள் பிள்ளையின் ஆசிரியருக்கு ஒரு மணிநேரக் குறியீட்டை இயக்க உதவும். - உங்களிடம் வேறொரு பள்ளி இருந்தால், ஒரு முதன்மை அல்லது துணை முதல்வர், தொழில்நுட்பம் அல்லது கணினி அறிவியல் பயிற்றுநர்கள் அல்லது பள்ளியின் PTSA போன்றவர்களை அணுகுவதற்கு பொருத்தமான தொடர்புகளைக் கண்டறிய அவர்களின் வலைத்தளத்தைப் பார்வையிடவும். பாய்ஸ் & ஆம்ப்; கேர்ள்ஸ் கிளப்ஸ் ஆஃப் அமெரிக்கா, ஜூனியர் சாதனை, YMCA கிளை மற்றும் பலவற்றை ஒரு நிகழ்வை இணை ஹோஸ்ட் செய்ய. - Hour of Code வழங்கும் பள்ளியை நீங்கள் கண்டுபிடிக்க முடியவில்லை எனில், உங்கள் நிறுவனத்துடன் உங்கள் சொந்த நிகழ்வை இயக்க உதவ முன்வந்து கொள்ளலாம். மேலும் அறிய மற்றும் உத்வேகம் பெற எங்கள் நிறுவனங்களுக்கான வழிகாட்டல் ஐப் பாருங்கள். தயாரிப்பது எப்படி நீங்கள் தொலைதூரத்தில் அல்லது நேரில் ஒரு மணிநேர குறியீடு நிகழ்வில் கலந்துகொண்டாலும், இந்த தயாரிப்புகளை நீங்கள் முன்பே செய்தால் உங்களுக்கு மிகவும் மென்மையான அனுபவம் கிடைக்கும். அமைப்பாளரை சந்திக்கவும் நீங்கள் ஒரு வகுப்பறையுடன் தன்னார்வத் தொண்டு செய்கிறீர்கள் என்றால், இந்த தளவாடங்களை ஆசிரியருடன் நேரத்திற்கு முன்பே விவாதிக்கவும்: நிகழ்வில் உங்கள் பங்கு. நீங்கள் தொழில்நுட்பத்தில் பணிபுரிந்தால், உங்கள் தனிப்பட்ட அனுபவங்கள் அல்லது கதையைப் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்கப்படுவீர்கள்: தொழில்நுட்பத்தில் நீங்கள் எவ்வாறு ஈடுபட்டீர்கள்? கணினி அறிவியல் உங்களுக்கு ஏன் முக்கியமானது? உங்கள் வேலையின் ஒரு பகுதியாக நீங்கள் செய்யும் சில விஷயங்கள் என்ன, அது தொழில்நுட்பத்துடன் எவ்வாறு தொடர்புடையது? நீங்கள் நேரில் முன்வந்தால், உள்ளூர் மற்றும் பள்ளி சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு வழிகாட்டுதல்களை நீங்கள் புரிந்துகொள்வதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். அவற்றின் நடைமுறைகளைப் பொறுத்து நீங்கள் சற்று சீக்கிரம் வர வேண்டியிருக்கும். நீங்கள் தானாக முன்வந்து அல்லது நேரில் வந்தால், நீங்கள் எந்த நேரத்தில் இருக்க வேண்டும், எந்தத் திறனில் இருக்க வேண்டும் என்பதை இது தீர்மானிக்க முடியும். நீங்கள் கிட்டத்தட்ட தன்னார்வத் தொண்டு செய்கிறீர்கள் என்றால், பயன்படுத்த சிறந்த வீடியோ கான்பரன்சிங் தளத்தைத் தீர்மானிக்க ஆசிரியருடன் இணைந்து செயல்பட்டு, நிகழ்வின் சோதனை ஓட்டத்தை ஒன்றாக நடத்த முயற்சிக்கவும். நிகழ்விற்கான ஆசிரியர் மணிநேரங்களை முன்னரே தீர்மானித்திருந்தால், எச்சரிக்கையாக இருங்கள், இதன் மூலம் நீங்கள் அவற்றை ஆராயலாம் . உங்கள் பங்கேற்பாளர்களைப் பற்றி சிந்தியுங்கள் நீங்கள் பேசும் மாணவர்களையும் அவர்களுடன் எதிரொலிக்கும் விஷயங்களையும் கவனியுங்கள் ஒரு தன்னார்வலராக, கணினி எல்லா இடங்களிலும் உள்ளது என்பதை உணர அவர்களுக்கு நீங்கள் உதவலாம், அவர்களும் கணினி விஞ்ஞானிகளாக மாறலாம். அவர்களின் வயது, பின்னணி மற்றும் பாலின அடையாளங்களைக் கருத்தில் கொண்டு, அவர்களின் நலன்களைக் கவரும் தலைப்புகளுடன் தயாராகுங்கள். இளம் பெண்கள் பங்கேற்க ஊக்குவிப்பது குறித்த கூடுதல் வழிகாட்டுதல் இங்கே. மாணவர்களை உற்சாகப்படுத்துங்கள்! வகுப்பை மையப்படுத்தவும், ஒரு மணிநேரம் செய்ய அவர்களை உற்சாகப்படுத்த உதவும் உத்வேகம் தரும் வீடியோ வை எடுக்க ஆசிரியருடன் இணைந்து பணியாற்றுங்கள். நீங்கள் ஒரு மெய்நிகர் தன்னார்வலராக இருந்தால், மாணவர்களை ஈடுபட வைக்க உங்கள் விளக்கக்காட்சியின் ஒரு பகுதியாக சில ஸ்லைடுகளை உருவாக்குவதைக் கவனியுங்கள். அதிக வளங்கள் வேண்டுமா? இந்த பிற உதவிக்குறிப்புகளைப் பாருங்கள் . நீங்கள் ஒரு நிகழ்வை ஹோஸ்ட் செய்யும் போது நீங்கள் ஒரு வகுப்பறையுடன் ஒரு நிகழ்வின் தொகுப்பாளராக இருந்தால், உங்களுக்கு வழிகாட்ட மாதிரி நிகழ்ச்சி நிரலைப் பயன்படுத்தவும். அன்றைய தினம் ஒப்புக் கொள்ளப்பட்ட அட்டவணையை உறுதிசெய்து, பேசும் புள்ளிகளை ஆசிரியருடன் முன்பே விவாதிக்கவும். நீங்கள் உடல் ரீதியாக வகுப்பிற்கு வருகை தருகிறீர்கள் என்றால், நீங்கள் பள்ளியுடன் உள்நுழைந்திருப்பதை உறுதிசெய்து, உங்கள் நிகழ்வின் நாள் ஆசிரியரை வாழ்த்துங்கள். வீட்டிலோ அல்லது சமூகத்திலோ குறியீட்டு நேரத்தை ஹோஸ்ட் செய்ய நீங்கள் கருதுகிறீர்கள் என்றால், க்கான எங்கள் ஆழ்ந்த ஹவ்-டு வழிகாட்டிகளில் சிலவற்றைப் பார்க்க பரிந்துரைக்கிறோம். -to / பெற்றோர் "> பெற்றோர் மற்றும் நிறுவனங்கள் அல்லது நிறுவனங்கள் . 1. எப்படி செய்வது என்று காட்டும் காணொளியை பார்க்க 2. உங்கள் நிகழ்வுக்கான தேதி, வடிவம் மற்றும் இருப்பிடத்தை தீர்மானிக்கவும் மிகவும் அர்த்தமுள்ளவற்றை விவாதிக்க பள்ளி அல்லது ஆசிரியருடன் இணைந்து பணியாற்றுங்கள். மெய்நிகர் அல்லது நேரில், நிறுவன அலுவலகத்தில் அல்லது சமூகத்தில் நடைபெற்ற நிகழ்வுகளை நாங்கள் பார்த்துள்ளோம், எல்லா வயதினருக்கும் மாணவர்களுக்கு! நீங்கள் வேறு என்ன பார்க்க முடியும் கார்ப்பரேட் கூட்டாளர்கள்மற்றும்நன்கொடையாளர்கள்சில எழுச்சியூட்டும் யோசனைகளுக்காக கடந்த காலத்தில் செய்துள்ளன. மாதிரி நிகழ்ச்சி நிரல்: | நேரம் | நிகழ்ச்சி நிரல் | |------------------------------------------------- | ----------------- | 1-5 நிமிடங்கள் | ஒரு காட்டுஉத்வேகம் தரும் வீடியோ 5-10 நிமிடங்கள் | உங்களை அறிமுகப்படுத்துங்கள் மற்றும் மாணவர்களைப் பற்றி மேலும் அறிக: நீங்கள் எங்கு வேலை செய்கிறீர்கள், நீங்கள் என்ன செய்கிறீர்கள், உங்கள் வேலையைப் பற்றி நீங்கள் அதிகம் விரும்புகிறீர்கள்? என்ன அல்லது யார் உங்களை ஈர்க்கிறீர்கள்? எப்படி கணினி அறிவியல் ஆர்வமாக? உனக்கு ஒரு வழிகாட்டி இருக்கிறதா? மாணவர்கள் கேள்விகளைக் கேளுங்கள் மற்றும் கே & amp; A க்கான நேரத்தை விடுங்கள். |30-60 நிமிடங்கள் | குறியீடு! உங்கள் நிகழ்வு நேரில் இருந்தால், கேள்விகளுக்கு பதிலளிக்கவும், கடினமான புதிர்கள் மூலம் மாணவர்களுக்கு வழிகாட்டவும் இதுவே நேரம். அதற்கு தீர்வு காணாமல் இருக்க முயற்சி செய்யுங்கள், அதற்கு பதிலாக அவர்களிடம் கேள்விகளைக் கேட்க முயற்சிக்கவும், இதனால் அவர்கள் என்ன தவறு நடந்தது என்று தங்களுக்கு பதிலளிக்க முடியும், மேலும் மாணவர்கள் கேள்விகள் இருந்தால் ஒருவருக்கொருவர் கேட்க ஊக்குவிக்கவும். நீங்கள் கிட்டத்தட்ட தன்னார்வத் தொண்டு செய்கிறீர்கள் என்றால், சிறந்த அணுகுமுறை என்னவாக இருக்கும் என்று ஆசிரியருடன் இணைந்து பணியாற்றுங்கள். மாணவர்கள் என்ன முன்னேற்றம் கண்டார்கள் என்பதைக் காண அமர்வின் முடிவில் திரும்புவது கூடுதல் அர்த்தத்தைத் தரக்கூடும். | 1-3 நிமிடங்கள் அனைவருக்கும் நன்றி மற்றும் உத்வேகம் தரும் பிரிவினை வார்த்தைகளைப் பகிரவும். உங்கள் நிறுவனத்தின் எந்தவொரு மோசடியையும் ஒப்படைக்கவும் ஸ்டிக்கர்கள் அருமை)! | | உங்கள் நிகழ்வில் சேர்க்க பிற யோசனைகள் தொழில்நுட்பம் நம் வாழ்க்கையை பாதிக்கும் வழிகளை விளக்குங்கள், எல்லா பின்னணியிலும் மாணவர்கள் அக்கறை காட்டுவார்கள் - எடுத்துக்காட்டுகளை வைத்து - உயிர்களைக் காப்பாற்றும், மக்களுக்கு உதவுவது, மக்களை இணைப்பது போன்ற தொழில்நுட்பத்தைப் பற்றி பேசுங்கள். நீங்கள் ஒரு தொழில்நுட்ப நிறுவனம் என்றால், டெமோ வேடிக்கை, புதுமையான தயாரிப்புகள் உங்கள் நிறுவனம் செயல்படுகிறது. நீங்கள் ஒரு தொழில்நுட்ப நிறுவனம் இல்லையென்றால், சிக்கல்களைத் தீர்க்க மற்றும் இலக்குகளை அடைய உங்கள் நிறுவனம் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் வழிகளைப் பற்றி விவாதிக்கவும். உங்கள் நிறுவனத்தில் இருந்து மென்பொருள் பொறியாளர்களை அழைக்கவும், அவர்கள் கணினி அறிவியல் மற்றும் அவர்கள் வேலை செய்யும் திட்டங்களை ஆய்வு செய்ய முடிவுசெய்தது பற்றி பேசவும். உங்களுடைய நிகழ்வை எளிதாக்கும் அல்லது உள்ளூர் பள்ளியுடன் தன்னார்வத் தொண்டு செய்யும் ஒரு குழு உங்களிடம் இருந்தால், உங்கள் குழுவிற்கான -custom t-shirts . 3. உங்கள் தொழில்நுட்ப தேவைகளைத் திட்டமிடுங்கள் சாதனங்கள்: கோட் அனுபவத்தின் சிறந்த மணிநேர இணையம் இணைக்கப்பட்ட கணினிகள் அடங்கும். ஆனால் ஒவ்வொரு குழந்தைக்கும் உங்களுக்கு கணினி தேவையில்லை, மேலும் கணினி இல்லாமல் Hour of Code கூட செய்யலாம்! பிரிக்கப்படாத செயல்பாடுகளுக்கு, “கணினிகள் அல்லது சாதனங்கள் இல்லை” என்பதற்கான விருப்பங்களைக் காட்ட வகுப்பறை தொழில்நுட்ப பிரிவை வடிகட்டவும். கணினிகள் அல்லது சாதனங்களில் ** சோதனை நடவடிக்கைகள் **ஒலி மற்றும் வீடியோவுடன் உலாவிகளில் அவை சரியாக வேலை செய்கின்றன என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். போதுமான சாதனங்கள் இல்லையா?ஜோடி நிரலாக்கத்தைப் பயன்படுத்தவும். மாணவர்கள் பங்குதாரர் போது, அவர்கள் ஒருவருக்கொருவர் உதவி மற்றும் ஆசிரியர் குறைவாக நம்பியிருக்கிறார்கள். அவர்கள் கணினி அறிவியல் சமூக மற்றும் கூட்டு என்று பார்க்க வேண்டும். ஹெட்ஃபோன்களை வழங்கவும்உங்கள் பங்கேற்பாளர்களுக்காக அல்லது ஒலிகளுடன் சிறப்பாகச் செயல்படும் பயிற்சிகளை அவர்கள் முயற்சிக்கிறார்களானால் அவர்களுடையதைக் கொண்டு வரச் சொல்லுங்கள். குறைந்த அலைவரிசை வேண்டும்?நிகழ்வின் முன்புறத்தில் வீடியோக்களைக் காட்டத் திட்டமிடுங்கள், எனவே ஒவ்வொரு பங்கேற்பாளரும் தங்கள் சொந்த வீடியோக்களைப் பதிவிறக்குவதில்லை. அல்லது பிரிக்கப்படாத / ஆஃப்லைன் செயல்பாடுகளை முயற்சிக்கவும். மெய்நிகர் நிகழ்வுகள்: உங்கள் நிகழ்வு மெய்நிகர் ஆகப் போகிறது என்றால், உங்கள் நிகழ்வுக்கு முன்னர் உங்கள் மாநாட்டு தளத்தை நீங்கள் தீர்மானிக்க வேண்டும் (அதைச் சோதிக்கவும்). நீங்கள் ஈடுபட வசதியாக இருக்கும் மாணவர்களின் எண்ணிக்கையை இது பாதிக்கலாம், எனவே வகுப்பறையை அழைப்பதற்கு அல்லது உங்கள் நிகழ்வை விளம்பரப்படுத்துவதற்கு முன்பு இதைத் தீர்மானிப்பது நல்லது. தொலைநிலை Hour of Code எவ்வாறு இயக்குவது என்பது குறித்த யோசனைகளுக்கு, எங்கள் மெய்நிகர் Hour of Code நிகழ்விற்கான உதவிக்குறிப்புகளைப் படிக்கவும் . 4. ஒரு செயலைத் தேர்வுசெய்க எல்லா வயதினருக்கும் அனுபவ நிலைகளுக்கும் பலவிதமான வேடிக்கையான, மாணவர் வழிகாட்டும் பயிற்சிகளை நாங்கள் வழங்குகிறோம். உத்வேகம் தரும் வீடியோ உடன் நிகழ்வைத் தொடங்க நீங்கள் விரும்பினாலும், மாணவர்கள் சுய-தலைமையிலான பயிற்சிகளை முயற்சிப்பது பிரபலமானது. அனைவரும் ஒன்றாகக் காண வேண்டும். உங்கள் விருந்தினர்கள் அனைவருக்கும் ஒரு டுடோரியலைத் தேர்வுசெய்ய விரும்பினால், அல்லது ஒவ்வொரு குழந்தையும் தங்களது சொந்தத்தைத் தேர்வுசெய்ய விரும்பினால், நடவடிக்கைகளை ஆராய்ந்து, நேரத்திற்கு முன்பே முடிவு செய்யுங்கள். **அனைத்து Hour of Code செயல்பாடுகளும் </ strong> குறைந்தபட்ச தயாரிப்பு நேரம் தேவைப்படுகிறது, மேலும் அவை சுய வழிகாட்டுதலுடன் உள்ளன - பங்கேற்பாளர்கள் தங்கள் வேகத்திலும் திறன் மட்டத்திலும் செயல்பட அனுமதிக்கிறது. உங்கள் நிகழ்வுக்கான திடமான வரைபடத்தை நீங்கள் பெற்றவுடன், நீங்கள் மாணவர்கள், பள்ளி அல்லது பெரிய சமூகத்தை அழைக்க ஆரம்பிக்கலாம். நீங்கள் ஒரு உள்ளூர் பள்ளியுடன் தொடங்க பரிந்துரைக்கிறோம் அல்லது மணிநேர குறியீடு நிகழ்வுகளின் எங்கள் வரைபடத்தை உலாவ . 5. கொண்டாடுங்கள் மாணவர்கள் அல்லது விருந்தினர்கள் தங்கள் Hour of Code முடித்த பிறகு, அவர்களின் வெற்றியைக் கொண்டாட வேண்டிய நேரம் இது. உங்கள் நிகழ்வை இன்னும் வேடிக்கையாக மாற்றுவதற்கான சில யோசனைகள் இங்கே: சான்றிதழ்களைப் பகிரவும்பங்கேற்பாளர்கள் மற்றும் மாணவர்களுக்கு. "நான் Hour of Code செய்தேன்! ஸ்டிக்கர்கள்" அல்லது பிற பரிசுகளைக் கண்டுபிடித்து Code.org அமேசான் ஸ்டோர் இல் ஸ்வாக் செய்யுங்கள். சமூக மீடியாவில் உங்கள் நிகழ்வு நிகழ்வு நிகழ்வுகளின் வீடியோ மற்றும் வீடியோக்களைப் பகிரலாம். #HourOfCode மற்றும் @codeorg பயன்படுத்தவும், எனவே உங்கள் வெற்றியை முன்னிலைப்படுத்தலாம்! குறியீட்டு நேரத்தைப் பற்றி பரப்புங்கள் உதவி செய்வதற்கான சிறந்த வழிகளில் ஒன்று, வார்த்தையை பரப்புவதும், குறியீட்டு நேரத்தை ஊக்குவிப்பதும் ஆகும். 1. உங்கள் நிகழ்வை பதிவு செய்யுங்கள் நீங்கள் உங்கள் Hour of Code நிகழ்வைப் பதிவுசெய்யும்போது, வெற்றிகரமான Hour of Code ஐ ஹோஸ்ட் செய்வதற்கான செய்திகள் மற்றும் உதவிக்குறிப்புகளுடன் பயனுள்ள மின்னஞ்சல் தகவல்தொடர்புகளைப் பெறுவீர்கள். உள்ளூர் பள்ளிகளையோ அல்லது பெற்றோர்களையோ நீங்கள் அவர்களுக்கு அருகில் ஒரு நிகழ்வை நடத்துகிறீர்கள் என்பதை அவர்களுக்குத் தெரிவிக்க முடியும். 2. சமூக ஊடகங்களில் இடுகையிடவும் இந்த மாதிரி உள்ளடக்கத்துடன் கணினி அறிவியல் இயக்கம் குறித்த விழிப்புணர்வை சமூக ஊடகங்களில் இடுகையிடவும், உங்கள் ஊழியர்களுடன் பகிர்ந்து கொள்ளவும் உதவுங்கள். Code பொது அறிவிப்பின் நேரம் கணினி அறிவியல் நம் உலகத்தை மாற்றுகிறது. ஒரு #HourOfCode உடன் தொடங்கி இந்த மாற்றத்தின் ஒரு பகுதியாக மாணவர்களுக்கு உதவுங்கள். https://hourofcode.com/ தொழில்நுட்பத்தை மட்டும் பயன்படுத்த வேண்டாம் it அதை எவ்வாறு உருவாக்குவது என்பதை அறிக. #HourOfCode உடன் தொடங்க யாராவது உதவுங்கள். https://hourofcode.com/ புள்ளிவிவரங்கள் CS பள்ளிகளில் 45% மட்டுமே கணினி அறிவியலைக் கற்பிப்பது உங்களுக்குத் தெரியுமா? ஒவ்வொரு மாணவருக்கும் ஒரு #HourOfCode https://hourofcode.com/ கற்றுக்கொள்ள வாய்ப்பு கொடுங்கள். U.S இல், மென்பொருள் நிபுணர்களில் 26% மட்டுமே பெண்கள். #HourOfCode https://hourofcode.com/ மூலம் கணினி அறிவியலுக்கு அதிகமான இளம் பெண்களை அறிமுகப்படுத்துங்கள். U.S இல் 67% கணினி வேலைகள் தொழில்நுட்ப துறையில் இல்லை. கணினி அறிவியலை #HourOfCode https://hourofcode.com/ உடன் நிலையான பாடத்திட்டத்தில் வைக்க உதவுங்கள். நீங்கள் சொந்தமாக உருவாக்க ஒரு #HourOfCode [உங்கள் கதையை நிரப்ப] வழிவகுக்கும். https://hourofcode.com/ [உங்கள் எண்ணங்களை நிரப்புவதால்] நான் #HourOfCode ஐ ஆதரிக்கிறேன். எங்களுடன் சேருங்கள் https://hourofcode.com பொறியாளர்-குறிப்பிட்ட உங்கள் முதல் குறியீடு உங்கள் வாழ்க்கையை மாற்றியிருந்தால், உங்களுக்கு அருகிலுள்ள மாணவர்களுக்கு அவர்களின் முதல் #HourOfCode https://code.org/volunteer எழுத உதவுங்கள் நீங்கள் குறியீட்டைக் கற்றுக் கொண்டால் your உங்கள் கதை என்ன? உங்களுக்கு அருகிலுள்ள ஒரு மாணவரின் முதல் #HourOfCode https://code.org/volunteer மூலம் அவர்களை ஊக்குவிக்கவும் சுவரொட்டிகள், வீடியோக்கள், ஸ்டிக்கர்கள் மற்றும் உங்கள் நிகழ்வை உங்கள் சமூகத்திற்கு விளம்பரப்படுத்துவதற்கான பிற வழிகளைப் பற்றி மேலும் அறிக . Hour of Code ஐ ஆதரிக்க கூடுதல் வழிகள் Code.org swag அணிவதன் மூலம் விழிப்புணர்வைப் பரப்புங்கள் (எல்லா வருமானங்களும் அதிகமான மாணவர்கள் கணினி அறிவியல் கல்விக்கான அணுகலைப் பெறுவதற்கு உதவுகின்றன). நீங்கள் AmazonSmile இல் ஷாப்பிங் செய்யும்போது Code.org க்கு பயனளிக்கத் தேர்வுசெய்க. கணினி அறிவியலின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி நிறுவனம் முழுவதும் மின்னஞ்சல் அனுப்ப உங்கள் தலைமை நிர்வாக அதிகாரியிடம் கேளுங்கள் மற்றும் பணியாளர்களை பரப்ப ஊக்குவிக்கவும். <இல் சக ஊழியர்களுடன் சிறிது வேடிக்கையாக இருங்கள். "> பிரச்சாரம் கொடுப்பது . ஒவ்வொரு மாணவருக்கும் கணினி அறிவியல் கற்க வாய்ப்பு உள்ளது என்பதை உறுதிப்படுத்த இந்த மனுவில் கையெழுத்திடுங்கள் . Code.org க்கு நன்கொடை அளிப்பதன் மூலம் எங்கள் கல்வி வளங்களை இலவசமாகவும் அனைவருக்கும் அணுகக்கூடியதாகவும் வைத்திருக்க முடியும். Code.org மற்றும் குறியீட்டு நேரத்தை எவ்வாறு ஆதரிப்பது என்பது பற்றிய கூடுதல் பரிந்துரைகளுக்கு, Code.org/Help ஐப் பார்வையிடவும் தன்னார்வ கேள்விகள் என்னை இதுவரை ஒரு ஆசிரியர் தொடர்பு கொள்ளவில்லை. நான் இன்னும் தன்னார்வத் தொண்டு செய்வது எப்படி? உள்ளூர் பள்ளிகளைத் தேட முயற்சிக்கவும், முதல்வர் / ஆசிரியர் / முன் அலுவலகத்தை அழைத்து நீங்கள் எவ்வாறு உதவ முடியும் என்று கேளுங்கள். வகுப்பறை வருகைகள் எவ்வளவு காலம் நீடிக்கும்? ஒரு நபர் வகுப்பறை வருகை வழக்கமாக 60-90 நிமிடங்கள் நீடிக்கும், மெய்நிகர் வகுப்பறை வருகை பொதுவாக 20-30 நிமிடங்கள் நீடிக்கும். எந்த வயதினருக்கு குறியீடு செயல்பாடு பொருத்தமானது? அனைத்து பின்னணியிலிருந்தும் அனைத்து தர நிலைகளிலும் (K -12) மாணவர்களை ஈடுபடுத்த Code.org மற்றும் எங்கள் கூட்டாளர்கள் அனைத்து மணிநேர குறியீடு நடவடிக்கைகளையும் வடிவமைக்கின்றனர். எல்லோரும் - பெரியவர்கள் கூட - வேடிக்கையாக விளையாடுவார்கள்! தொழில்நுட்ப தன்னார்வலராக அல்லது விருந்தினர் பேச்சாளராக நான் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்டேன்? ஆசிரியர்கள் எங்கள் தன்னார்வ வரைபடத்தில் தன்னார்வலர்களைத் தேடுவார்கள். ஒரு ஆசிரியர் உங்களைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பை அதிகரிக்க உங்கள் சுயவிவரத்தை முடிந்தவரை முழுமையாக்க முயற்சிக்கவும். விருந்தினர் பேச்சாளர் அல்லது தொழில்நுட்ப ஆதரவு போன்ற நீங்கள் எவ்வாறு தன்னார்வத் தொண்டு செய்ய விரும்புகிறீர்கள் என்பதில் உங்களுக்கு விருப்பம் இருந்தால், உங்கள் சுயவிவரத்தின் விளக்கத்தில் அதைக் குறிப்பிடவும். தேர்ந்தெடுக்கப்பட்டால், ஒரு ஆசிரியர் தன்னார்வ தளத்தின் மூலம் உங்களைத் தொடர்புகொள்வார் (உங்கள் மின்னஞ்சல் முகவரி ஒருபோதும் ஆசிரியருடன் பகிரப்படாது). ஆசிரியர்களிடமிருந்து நீங்கள் அதிகமான கோரிக்கைகளைப் பெறுகிறீர்களானால், ஆசிரியரிடமிருந்து எந்தவொரு மின்னஞ்சலுக்கும் கீழே வழங்கப்பட்ட உங்கள் தகவலைத் திருத்த அல்லது குழுவிலகுவதற்கான இணைப்பைக் கிளிக் செய்வதன் மூலம் உங்கள் விருப்பங்களை எப்போதும் புதுப்பிக்கலாம்.
இந்திய அரசியலமைப்புச் சட்டம் தான் இந்தியாவின் உயிர் நாடி. சட்டம் தான் ஒரு நாட்டை இயக்கும் அச்சாணி. ஆனால் இந்தியாவில் இப்போது உருவாக்கப்படும் ஒவ்வொரு சட்டமும் இன்னொரு சட்டத்திற்கு விதி விலக்குகளைத் தருகிறது. தற்போதைய சட்ட உருவாக்கங்கள் இதே போல பல பிரிவுகளில் விதிவிலக்குகளையும், உட்பிரிவுகளையும் கவனிக்காமல் சட்டமாக்கப்படுகின்றன. அதன் காரணமாக சட்டத்தில் ஓட்டைகள் விழுகின்றன. தேச விரோதிகளும், தேசத் துரோகிகளும், விலை போகும் பராரி ஈனர்களும், அதிகார பிசாசுகளும் அவைகளைச் சரியாகப் பயன்படுத்தி பிழைக்கிறார்கள். அதற்கு நீதிமன்றங்கள் துணை போகும் அவலமும் ஏற்பட்டு விடுகின்றன. உதாரணம் ஜெ-சசி வழக்கில் முன்னாள் நீதிபதி சி.ஆர்.குமாரசாமி வழங்கிய தீர்ப்பு. பிறகு அதை ரத்துச் செய்த உச்ச நீதிமன்றம். நீதிபதிக்கு என்ன தண்டனை வழங்கப்பட்டது? ஒன்றுமில்லை. சட்டம் தன் கடமையைச் சரிவர செய்யாத நாள் அது. எவரும் அதைப் பற்றிப் பேசவே இல்லை. அந்த நீதிபதியைப் பற்றி ஒரு வார்த்தை? இதுதான் ஜன நாயகமா? இதையெல்லாம் கவனித்து சரி செய்ய வேண்டிய சட்டத்துறை அலுவலகமோ ஆட்டு ஆட்டு என தலையை ஆட்டிக் கொண்டிருக்கிறது. மொத்தத்தில் என்ன நடக்கின்றது என்றால் இந்திய அரசியலமைப்புச் சட்டம் கொஞ்சம் கொஞ்சமாக நாசமாக்கப்படுகிறது. இந்தியா எத்தனையோ கட்சிகளின் ஆட்சிகளையும், பிரதமர்களையும் கண்டு விட்டது. ஆனாலும் சட்டம் எப்போதும் கொஞ்சம் கொஞ்சமாக சீரழிக்கப்படுவதில்லை. ஆனால் தற்போதோ??? கேள்விக்குறியாய் நிற்கிறது. இந்தியாவை ஒரு தாய் என்றால் அவள் உடுத்தி இருக்கும் அரசியலமைப்புச் சட்டம் எனும் சேலையில் ஆங்காங்கே ஓட்டையைப் போட்டு, அவளின் ஆடையைச் சிதைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவையில்லை என்பதைப் போல. சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் பாப்ரி மசூதியை வேண்டுமென்றே இடிக்கப்படவில்லை என்கிறது. இதை வெகு எளிதாக சரி செய்து இருக்கலாம். பிற கட்சிகளை இணைக்க சிப்பிஜி ராஜ தந்திரம் பயன்படுத்துவதைப் போல எதிர்ப்பாளர்களை சரி செய்து, இராமர் கோவில் கட்டப்பட்டிருக்கலாம். ஆனால் உணர்ச்சியை தூண்டி விடுவதுதான் ஆகச் சிறந்த அரசியல் தர்மம் என்ற கொள்கை கொண்டவர்களுக்கு மக்களைப் பற்றிய சிந்தனை தேவையில்லை என்பது தெளிவு. அடுத்து, முன்பே இருக்கும் சட்டத்தை எப்படி ஒன்றுமில்லாதவாறு ஆக்குவது என்பதைப் பற்றிய உதாரணம். பி.எம்.கேர் ஃபண்ட் பற்றி நியூஸ் ஆர் சாய் எனும் பத்திரிக்கையில் வெளிவந்த கட்டுரையை கீழே படத்தினைக் கிளிக் செய்து படித்துப் பாருங்கள். செய்தி உதவி : NewsAurChai - Magazine (Thanks) இதைத் தெளிவு பெற செய்ய வேண்டியது மத்திய அரசின் கடமை. அரசே அரசியலமைப்புச் சட்டத்தை மீறுவது சரியல்ல. எதிர்வரும் ஆட்சியாளர்கள் பார்த்துக் கொண்டிருக்கமாட்டார்கள் என்பது திண்ணம். அறமும் வேடிக்கை பார்க்காது என்பதும் உண்மை. தமிழ் நாட்டில் சூதாட்டங்கள் தடை செய்யப்பட்டிருக்கிறது. லாட்டரி, ஆன்லைன் கிரிக்கெட் சூதாட்டங்கள் போன்றவை சட்ட விரோதமானது. ஆனால் ஆன்லைன் ரம்மி மட்டும் சட்டபூர்வமானது. அதற்கென தனி ஆர்டினன்ஸ் இருக்கிறது போலும். வரி வருமானம் மட்டுமே பிரதானம் என்கிறது அரசு. மக்கள் எப்படிப் போனால் நமக்கென்ன? இது தான் நடக்கிறது இப்போது இங்கே. ஜூவியில் ஒரு கட்டுரை. ஆன் லைன் ரம்மியில் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார் என்கிறது அது. நீங்கள் ஏன் விளையாடப் போகின்றீர்கள். அரசு ஒன்றும் அழைக்கவில்லையே என்பார்கள். பிள்ளைக்கறி விற்பனைக் கடைக்கு அனுமதி தருவது அரசு. பிள்ளைக்கறி தின்னாதே என்கிறது அரசு. நானா உங்களை அழைத்தேன் என்கிறது அரசு. கொடுமையிலும் கொடுமை. இதைத்தான் சொல்கிறேன் இந்தியத் தாயின் உடையில் ஆளும் அரசாலும், மத்திய அரசாலும் போடப்படும் ஓட்டைகள் இவைகள் என. சட்டங்கள் தங்களுக்குள்ளேயே வேறுபாடுகளைக் கொண்டிருப்பது மிகப் பெரும் ஆபத்து. இந்திய ஜன நாயகம் கொஞ்சம் கொஞ்சமாக குழப்பத்துக்கு உட்படுத்தப்படுகிறதோ எனத் தோன்றுகிறது. நீதிமன்றங்கள் தங்கள் வழங்கும் தீர்ப்புகள் பற்றிய சட்ட விளக்கங்கள் கொடுக்கின்றன. ஆனால் பெரும்பான்மையானவற்றில் அது பின்பற்றப் படுவதில்லை என்பது சரியாக இருக்காது. நீதிபதிகளின் வாழ்க்கையும் அறத்தின் முன்னால் விசாரணைக்கு உட்பட நேரிடும் என்பதை எவரும் மறந்து விடலாகாது.
#காரைதீவு_ஸ்ரீ_கண்ணகை_அம்மனாலய_திருக்குளிர்ச்சி_சடங்கு -2022 “நான்காம்நாள் இரவுப்பூசையும் ஊர்சுற்று காவியம் பாடுதலும்” 'மூன்றாம்நாள் இரவுப்பூசையும் ஊர்சுற்று காவியம் பாடுதலும்' #காரைதீவு_ஸ்ரீ_கண்ணகை_அம்மனாலய_திருக்குளிர்ச்சி_சடங்கு-2022 மூன்றாம்நாள் இரவுப்பூசையும் ஊர்சுற்று காவியம் பாடுதலும்" “இரண்டாம்நாள் இரவுப்பூசையும் ஊர்சுற்று காவியம் பாடுதலும்” #காரைதீவு_ஸ்ரீ_கண்ணகை_அம்மனாலய_திருக்குளிர்ச்சி_சடங்கு-2022 “இரண்டாம்நாள் இரவுப்பூசையும் ஊர்சுற்று காவியம் பாடுதலும்" “ஐந்தாம்நாள் இரவுப்பூசையும் ஊர்சுற்று காவியம் பாடுதலும்” #காரைதீவு_ஸ்ரீ_கண்ணகை_அம்மனாலய_திருக்குளிர்ச்சி_சடங்கு -2022 “ஐந்தாம்நாள் இரவுப்பூசையும் ஊர்சுற்று காவியம் பாடுதலும்” விபுலானந்தாவில் பிறந்த நாள் பொன் விழா !!! காரைதீவு விபுலானந்த மத்திய கல்லூரியில் 1988, 1991 காலப் பகுதியில் கபொத. சா.த மற்றும் உ.தரம் பயின்ற மாணவர்களின் பிறந்தநாள் பொன் விழா நிகழ்வ... தேடல் தேடல் நவம்பர் (13) செப்டம்பர் (12) ஆகஸ்ட் (11) ஜூலை (23) ஜூன் (20) மே (25) மார்ச் (1) பிப்ரவரி (5) ஜனவரி (26) நவம்பர் (3) அக்டோபர் (4) செப்டம்பர் (3) ஆகஸ்ட் (11) ஜூலை (24) மே (23) ஏப்ரல் (4) மார்ச் (14) பிப்ரவரி (17) ஜனவரி (10) டிசம்பர் (6) நவம்பர் (2) ஆகஸ்ட் (4) ஜூலை (17) ஜூன் (29) மே (24) ஏப்ரல் (49) மார்ச் (22) பிப்ரவரி (5) ஜனவரி (25) டிசம்பர் (17) நவம்பர் (10) அக்டோபர் (24) செப்டம்பர் (11) ஆகஸ்ட் (15) ஜூலை (19) ஜூன் (22) மே (13) ஏப்ரல் (24) மார்ச் (18) பிப்ரவரி (17) ஜனவரி (35) டிசம்பர் (46) நவம்பர் (34) அக்டோபர் (53) செப்டம்பர் (28) ஆகஸ்ட் (39) ஜூலை (50) ஜூன் (44) மே (81) Technology செய்தி வகை Akkaraipattu Ampara jaffna Kalmunai Karaitivu Kovil Lanka News Obituary Saantror Sports Sri Lanka weather Wishes World
யாழ்ப்பாணத்தில் 3 மாதங்களாக அலைபேசிகளைத் திருடிய கும்பலைச் சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர். சந்தேக நபர்களிடமிருந்து சுமார் 15 லட்சம் ரூபாய் பெறுமதியான 43 அலைபேசிகள் கைப்பற்றப்பட்டுள்ளன என்று பொலிஸார் குறிப்பிட்டனர். நாவற்குழி மற்றும் அரியாலையைச் சேர்ந்த 23,24 மற்றும் 27 வயதுடைய சந்தேக நபர்களே யாழ்ப்பாணம் தலைமையக பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவினரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். சுமார் 3 லட்சம் ரூபாய் பெறுமதியான ஐபோன் உள்பட 45 அலைபேசிகள் சந்தேக நபர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளன. போதைப்பொருளுக்கு அடிமையாகியதால் பேருந்துகளில் ஏறி பயணிகளிடம் அலைபேசியைத் திருடி தப்பிப்பதாக சந்தேக நபர்கள் வாக்குமூலம் வழங்கியுள்ளனர் என்று பொலிஸார் கூறினர். யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் இடம்பெற்ற அலைபேசித் திருட்டுகளிலும் இவர்களுக்கு தொடர்புண்டு என்று பொலிஸார் தெரிவித்தனர். அலைபேசி திருட்டு போயிருந்தால் உரியவர்கள் யாழ்ப்பாணம் தலைமையக பொலிஸ் நிலையத்தில் வந்து அடையாளம் காட்ட முடியும் எனறும் பொலிஸார் குறிப்பிட்டனர். Tags srilanka Newer Older Top Post Ad Below Post Ad உங்கள் பிரதேச செய்திகளை +94 751651409 என்ற இலக்கத்திற்கு வாட்ஸாப் செய்யுங்கள். செய்திகளை உடனுக்குடன் பெற எமது முகநூல் பக்கத்தினை லைக் செய்யுங்கள்.
வேலை தேடி சென்னைக்கு வந்து இதுவரை 4 நாட்கள் ஆகிவிட்டது ஆனால் வேலை கிடைக்க வில்லை தங்குவதற்கு இடம் இல்லாமல் ஒரு சேரியில் நுழைந்தேன் ,இரவு 11 மனி பசி வேறு தூக்கம் வேறு, என்ன செய்வது என்று தெரியாமல் ஒரு வீட்டின் கதவு முன்னாள் பெரிய படிக்கட்டில் மயக்கத்தில் அசந்தேன். 5 நிமிடம் உள்ளிருந்து ஏதோ சப்தம் கேட்டு திரும்பினேன் ,படிக்கட்டிர்க்கும் கதவுக்கும் இடயில் 3இஞ்ச் அளவில் ஒரு ஓட்டை இருப்பது அப்போது தான் பார்த்தேன் நான் படுத்த நிலையில் அப்படியே பார்த்தால் உள்ளே நடப்பது தெரியும் ,ஆம் இரண்டு கோபுரங்கள் தெரிந்தது நன்றாக உற்று நோக்கினால் அது இரண்டு முலைகல்,வானத்தை பார்த்து கொண்டிருந்தது சேலை இல்லை யாரோ ஒருவன் அவளின் மேல் விழுகிறான். அவன் வலுக்கட்டாயமாக அவளை ஓக்கிரான் ஐந்து நிமிடம் அவன் வேலை முடிந்து எழுந்து பின்பக்க வாசல் வழியாக வெளியே சென்று விட்டான் சேலை இல்லாமல் இடுப்புக்கு மேல் பாவாடை விலகி இருந்த நிலையில் கதவு பக்கமாக திரும்பினாள் ஒரு நிமிடம் கதவை உற்றுப் பார்த்துவிட்டு வேகமாக எழுந்து நேராக நான் இருந்த வாசல் கதவை திறந்து கொண்டு வெளியே வந்தாள். என்னைப் பார்த்து ஒரு நிமிடம் அதிர்ச்சியான அவள் என்னிடம் டேய் யார்ரா நீ படுத்துக் கிடக்கிறாய் இங்கு எல்லாம் படுத்துகிடக்க கூடாது உடனே இடத்தை காலி செய் என்றால், அக்கா சாரிக்கா நான் வெளியூர் வேலை தேடி வந்தேன் வேலை கிடைக்க வில்லை 4 நாள் ஆச்சு தங்குவதற்கு இடம் இல்லை. அதான் ,அதுக்கு இந்த இடம்தான் கிடைத்ததா வேறு இடத்தை பார் முதலில் கிளம்பு ,சரிக்கா நான் போரேன் என்று பசி மயக்க்த்திலும் தூக்க கலக்கத்திலும் எழுந்தேன், அக்கா ,என்னா ,கொஞ்சம் தண்ணீர் தாங்க சாப்பிட்டு ரெண்டு நாள் ஆச்சு,கொஞ்சம் நேரம் யோசித்து விட்டு சரி உள்ளே வா சாப்பிட்டு விட்டு வெளியே போயிடனும்,சரிக்கா,உள்ளே சென்றேன் ஒரு ரூம் ஒரு பாத் ரூம் சின்ன ஹால் அவ்வளவுதான். அந்த இடம், அவள் முன்னே நடந்தாள் ,பெரிய சூத்து தான் இருந்தாலும் அவளை தவறான பார்வை பார்க்க மனம் கேட்கவில்லை, இங்கே உக்காரு என்றால், கீழே அமர்ந்தேன் அவள் கிச்சனில் சாப்பாடு போட சென்று விட்டால், நான் கதவு ஓட்டை வழியாக பார்த்த இடம் எங்கே என்று பார்த்தேன் ஒரு பாய் விரித்து அது தாறுமாறாக கலைந்து. அதன் மேல் ஏதோ வெள்ளை திரவம்போல் இருப்பது தெரிந்தது தொட்டு பார்த்து விடலாம் என்று கையை கொண்டு சென்றேன் அவள் கனைக்கும் சத்தம் கேட்டது பார்த்து விட்டாள் சாப்பாடை வேகமாக என் முன்னே வைத்து விட்டு அவசர மாக பாயை எடுத்து மடித்து ஒருமூலையில் வைத்து விட்டு என்னை முரைத்து பார்த்து நீ எவ்வளவு நேரம் அந்த படியில் படுத்து கிடந்தாய் என்றாள் அவள், அது அதுவந்து அக்கா,அவளுக்கு புரிந்து விட்டது, உன் பெயர் என்ன, சரவனன்,சரி சாப்பிட்டு விட்டு சீக்கிரம் வெளியே போ என்றாள், சரிக்கா, அவள் கூறி முடிக்க மழை ஆரம்பித்து விட்டது, போச்சுடா இந்த பாலாபோன மழை மறுபடியும் வந்து விட்டது, என்று கூறி தன்னை அறியாமல் தன் சேலையுடன் அவளின் புனடையை துடைத்தாள் ஏற்கனவே நடந்த சம்பவத்தால். அவளின் புனடையில் தண்ணீர் கசிந்திருக்கும்,நான் இருப்பது மறந்துதன்னை அறியாமல் செய்த பின், சுதாரித்து கொண்டு என்ன என்பது போல பார்த்தால் நான் தலையை குனிந்து கொண்டேன், சரி சாப்பிட்டு விட்டு நீ மழை நின்றவுடன் போ நான் குளித்து விட்டு வருகிறேன் என்று கூறி விட்டு பாத் ரூம் சென்று தாழ்ப்பாள் போட்டுகொண்டாள். எனக்கு எதிர் புறம் பாத் ரூம் ,இங்கே யுமாடா,ஆமாம் வாசல் கதவின் ஓட்டையைவிட பெருசு இந்த கதவு ஓட்டை ,கூர்ந்து கவனித்தேன் அவள் அந்த பக்கம் திரும்பி இருக்கனும் காலில் இருந்து முட்டியின் கொஞ்சம் கீழ் வரை தெரிந்தது அந்த அளவு ஓட்டை, சேலை பின்பு பாவாடை அப்புறம் சட்டை ,என்ன அடுத்து என்ன என்று யோசிக்காதிங்க ஆமாம் நீங்கள் நினைப்பது எனக்கு தெரியும் ,அதான் இல்ல அவள் பாடி போடவில்லை. நானும் வெயிட்பன்னி பார்த்தேன் பாடி கீழே விழவே இல்லை, இப்போது இரண்டு கை தெரிந்தது ஆமாம் அவள் குனிந்து தன்னுடைய ஆடைகளை எடுத்து ஒரு பக்கத்தில் ஒதுக்கி வைத்து விட்டு உள்ளே யே ஒரு கல்லை ஓட்டை இருந்த பக்கம் இழுத்து வைத்து. இரண்டு மன்பானை அளவு சூத்தை அதன் மேல் வைத்தாள் எனக்கு தூக்கிவாரி போட்டது ,நிச்சயமாக அவளின் சூத்து அகலத்தைக் விட மிக மிக குறைவு அந்த கல்லு அவள் அதன் மேல் உட்கார்ந்ததும் அந்த கல்லை காண வில்லை ,என் கணிப்பின் படி அவளின் புண்டை மட்டும்தான் அதன் மேல் இருக்கும் 10நிமிடம் இருக்கும். அதே நிலையிலே குளித்து முடித்து விட்டு எழுந்து உடைகளை மாற்றி விட்டு வெளியே வந்தாள், நான் அதற்க்குள் சாப்பிட்டு விட்டு ஒன்றும் தெரியாதவன் போல இருந்தேன் அவள் என்னயே உற்று நோக்கினால் பிறகு தம்பி மழை விடாதுபோல நைட்டு இங்கே தங்கிட்டு மழை விட்டதும் போய்விடு ,அப்படி நைட்டுக்குள்ள மழை விடலன்னா நாளைக்கு நைட்டுதான் நீ வெளியே போகனும் ,ஏன்க்கா, நைட்டுமுழுக்க நீ இங்கு தங்குனது யாராவது பார்த்தா எனக்குதான் கெட்டபெயர் சரியா, சர்ரிக்கா, ஆனாலும் ஒரு சிந்தனை. அப்ப அந்த ஆளு யாரு ,ஒருவேளை இவ புருசனா இருக்குமோ, ஆனா அவன் எங்கே போனான் ,தம்பி என்னடா யோசிக்கிர, ஒன்னுமில்லக்கா,நானும் ஒருதடவை குளிக்கவாக்கா,3 நாளு ஆச்சு, போடா போய் குளி ,நானும் சாப்பிட வேண்டும். சரி என்று என் கைலியை எடுத்து கொண்டு உள்ளே சென்றேன், மண்டயில் மூளை வேலை செய்ய ஆரம்பித்தது அவள் சாப்பிடும் போது நாம் என்ன பார்த்தோமோ அதேதானே தெரியும் ,சரி ஒரு ட்ரயல் பார்ப்போமே, அவள் செய்தது போல என் ஆடைகளை கலைந்து விட்டு அந்த கல்லின் மேல் அவள் பார்க்கும் பக்கம் என் சுன்னி தெரியுமாறு அமர்ந்து சோப்பை கையில் தடவி அவளை நினைத்து மெதுவாக உருவிவிட்டேன் அது எப்போதும் இல்லாத வகையில் 8″ அளவு நீண்டு பருத்தது, அவள் நிச்சயம் பார்த்து இருப்பாள், ஆரிமன் நேரம் கை அடித்த பின் பாத் ரூம் முழுதும் கஞ்சியால் நிறைந்தது ,பின்பு நானும் குளித்து விட்டு அனைத்தயும் சுத்தம் செய்து விட்டு என் ஆடைகளை துவைத்துவிட்டு ஒன்றும் தெரியாததுபோல் வெளியே வந்தேன் அவள் சாப்பிட்டு விட்டு பாத்தரம் கழுவிக்கொண்டிருந்த்தாள்,. அடச்சே எல்லாம் வீனாகி விட்டதே என்று நொந்துகொண்டு சுவற்றில் சாய்ந்து அமர்ந்தேன் அவள் பாத்திரத்தை கழுவிவைத்து விட்டு ரூமிர்க்குள் சென்று ஆடைகளை மாற்றி விட்டு வெரும் நைட்டியுடன் வந்தாள் படுப்பதற்கு பாயை எடுத்தாள் என்ன நினைத்தாளோ தெரியவில்லை பாயை விரிக்காமல் ரூமுக்குள் போட்டுவிட்டு வேறு பாயை எனக்குத் தந்து படுக்கச்சொன்னாள் அவள் அருகில் இன்னொரு பாயில் படுத்தாள் சிறிது நேரத்தில் தூங்கிப் போனேன். அவலும்தான் ஒரு 3 மனிஇருக்கும் டேய் எழும்புடா நோத்தா என்றாள் பதரிப்போய் எழுந்து பார்த்தால் அவள் என் கைலியை முரைத்து பார்த்து கொண்டிருந்தால் ஆகா நம்ம தம்பி வாழப்ப்ழம் அளவு நீண்டு வானத்தை பார்த்து கொண்டிருந்தான். டேய் காமக்காட்டேரியே வெளியே போடா அப்ப என்னடான்னா பாத் ரூமுக்குள்ள கைமுட்டி அடிக்கிர இப்ப என்னடான்னா இப்படி எழும்பி நிக்கிது நான் ஒரு பொம்பள இருக்கிறது தெரிஞ்சும் இப்படி பன்னுற, நீ என்ன மனுசனா கழுதையாடா இடத்த காலி பன்னு என்றாள் கோபமாக, எனக்கு என்ன செய்வது என்று தெரியாமல் முழித்தேன் வெளியில் நல்ல மழை வேறு ,சடாரென அவளை பாய்ந்து கட்டிப்பிடித்தேன். அதிர்ந்து போனாள் கத்தினாலும் காது கேட்காது அவளை பிடித்து கீழே தள்ளினேன் முரண்டு பிடித்தால் இருந்தாலும் விடாமல் அவளின் புண்டையின் ஓட்டை யை தேடிப்பிடித்து என் சுன்னியை சொருகினேன் அவள் தினறிபோனாள் அவ்வளவு பெரிய சுன்னி அவளின் ஓடைக்குள் நுழைந்தது,எனக்கும் புதுசு இருந்தாலும் விடாமல் அவளை ஓத்தேன் ஐந்து நிமிட ஓலுக்குப் பிறகு தண்ணி முழுவதையும். அவளின் புண்டையில் பீச்சி அடித்து எழுந்தேன் அவளும் துள்ளிக் குதித்து எழுந்தாள் சிறிது நேரம் அவளும் நானும் எதுவும் பேசிக் கொள்ளவில்லை சிறிது நேரம் கழித்து அவள் எழுந்து பாத்ரூமுக்குள் சென்று புண்டையை கழுவிவிட்டு வெளியே வந்து எதுவும்சொல்லாமல் பாயை விரித்து படுத்து விட்டாள். நானும் ஒன்றும் புரியாமல் படுத்துவிட்டேன் விடிந்துவிட்டது அவள் ஒன்றும் நடக்காதது போல் அவள் வேலையை பார்த்துக்கொண்டே இருந்தாள் நான் எழுந்து முகத்தை கழுவி விட்டு வந்தேன் டீ போட்டு தந்தாள் குடித்துவிட்டு அவளிடம் நேத்து நடந்தது என்று கூறும்போது யாரோ அவளை அலைத்து உள்ளே வந்தாள். என்னைப் பார்த்து யார் இந்த பையன் புதிதாக இருக்கிறானே என்று அவள் கேட்டாள் இவள் தம்பி ஊரில் இருந்து வந்துள்ளான் இனிமேல் இங்கு தான் இருப்பான் என்றால் எனக்கு சந்தோசம் தாங்க முடியவில்லை அவள் வந்து விட்டு சென்றுவிட்டாள் பிறகு அவளிடம் அக்கா என்னை மன்னித்து விடு என்றேன். அவள் ஒன்றும் கூறாமல் அவள் வேலையை பார்த்தால், நாள் முழுவதும் கழிந்தது இரவு வந்தது அதுவரை அவள் என்னிடம் எதுவுமே பேசவில்லை சாப்பாடு தந்துவிட்டு தான் பாயை விரித்து படுத்தாள் நான் அவள் அருகில் சென்று ஏதாவது பேசு என்றேன் பேசு என்றால் என்ன பேச வேண்டும் என்றால் நேற்று நான் பார்த்தேனே. அந்த ஆள் யார் அக்கா, அதையும் பார்த்து விட்டாயா என்று தன் கதையைக் கூறினாள் அவள் கணவன் விஜய் நடிகை பானுப்பிரியா வீட்டில் வேலை செய்ததும் அவன் கடன் வாங்கி விட்டு இறந்து விட்டது. அந்த கடன்காரன் அவளை மிரட்டி நேற்று ஒத்துவிட்டு போயுள்ளான் அப்ப நீ எங்க வேலை பாக்குற நான் பானுப்பிரியாவின் வீட்டில் வேலை பாக்கிரேன் என்றால், எனக்கு ஞாபகம் வந்தது இவளை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே என்று யோசித்துப் பார்க்கும்போது தான் இவள் பானுப்பிரியா போலவே இருந்தாள் ஆமாம் முகம் அவ்வளவு அழகு வடிவான அழகு இடையும் பானுப்பிரியா இப்போதுதான் புரிந்தது. இரண்டு தொடையும் முட்டிவரை உள்பக்கமாக ஒட்டி உரசும் அப்படி என்றால் அவளின் சூத்து எப்படி இருந்திருக்கும் என்று கற்பனை பண்ணிப் பாருங்கள் அவளின் சூத்து பிளவில் ஒரு கப்பலை செலுத்தலாம் அந்தளவுக்கு பிளந்திருக்கும் அவளின் கதையைக் கேட்டுவிட்டு மெதுவாக அவளின் முலை மேல் கை வைத்தேன் தட்டி விட்டாள். இவளை இப்படியெல்லாம் கெஞ்சி வேலைக்கு ஆகாது என்று அவளின் மேல் வலுக்கட்டாயமாக பாய்ந்தேன் அவள் ஒன்றும் கூறவில்லை நைட்டியை இடுப்பு வரை தூக்கி கொண்டு இரண்டு காலையும் தூக்கி மடக்கி கொண்டு அவளின் புண்டையில் என் சுன்னி முழுதும் சொருகினேன் அது மிகவும் டைட்டாக இருந்தாள். அவள்கண்ணிலிருந்து கண்ணீர் மட்டும் வடிந்தது முலை இரண்டயும்பிடித்துக்கொண்டு என் எட்டு இன்ச் பூலை அவள் புண்டையில் விட்டு அரை மணி நேரம் ஓத்து எடுத்து விட்டு வந்து படுத்தேன். அவள் நைட்டியை கூட இரக்கவில்லை அப்படியே படுத்து கிடந்தாள் சிருது நேரம் கழித்து எழுந்து பார்த்தேன் அவள் அதே நிலையிலேயே வானத்தை பார்த்துக் கொண்டு படுத்துக் கிடந்தாள் மீண்டும் என் தம்பி எழுந்தான் அவள் மேல் படர்ந்தேன் காலை விரித்து என் சுன்னியை உருவினேன் அவள் பார்த்தால். ஏன்டா உனக்கு அடங்கவே அடங்காது ஏண்டா இப்படி பண்ற என்றால் நான் அவளின் புண்டையில் விட்டேன் சிறிது நேரம் போட்டுவிட்டு அவளை திருப்பிஅவளின் சூத்து ஓட்டைக்குள் என் சுன்னியே நுழைத்தேன் தினறிக்கொண்டு உள்ளே சென்றது ம்ம்ம்மமா என்ரு முனங்கினால் அவளுக்கு வலித்து விட்டது ,விடாமல் படுக்க வைத்து சூத்து ஓட்டைக்குள் என் சுன்னியை சொருகி சொருகி எடுத்தேன் அவள் மரக்கட்டை போல கிடந்தாள். ஆனால் அவள் புண்டையிலிருந்து தண்ணீர் வெள்ளம்போல் வழிந்து ஓடியது ,அவளுக்கு மதன நீர் வந்த உடன் அவள் சூத்து ஓட்டை யை சுருக்கினாள், மேலும் டைட்டாக எனக்கு வலித்துவிட்டது கோவத்தில் அவள் சூத்து மீது படார் என்று ஒரு அடி விட்டேன் அடித்தஅடியில் சூத்து ஓட்டை மேலும் விரிந்தது ஆஹா இதுக்குதான். எல்லா படத்துலயும் சூத்துல அடிக்கிரானுங்களா,அவளால் வேதனை கலந்த சசுகத்தை தாங்க முடியாமல் குப்ப்ற படுத்து கிடந்தவள் என்னை கீழே தள்ளி என் மேல் ஏறி தேங்காய் உரிக்க ஆரம்பித்துவிட்டாள்,ஆகா அக்கா வழிக்கு வந்து விட்டாள் என்று சந்த்தோசத்துடன் மேலும் என் இடுப்பை தூக்கிக்கொண்டு. அவள் இடுப்பை பிடித்து வேகமாக என் சுன்னி முழுதும் உள்ளே போகுமாரு ஒரு இடி இடித்தேன் நருச்சென்ரு முட்டியது அவளின் வயிற்றின் உள்ளே, துடித்து விட்டாள் ,நானும்தான்,அரைமனி நேர போராட்டத்திற்கு பின் என் தன்னி முழுதும் அவள் புண்டையில் பாய்ச்சி அடித்தேன் அது உள்ளே சென்ற வேகத்தில் மீண்டும் என் சுன்னி வழியாக வடிந்து. என் அடிவயிறு முழுதும் பரவியது அவள் அப்படியே என் மேல் சாய்ந்து ஓய்வு எடுத்தாள் ,ஒரு மனி நேர துக்கத்திற்கு பின் அவள் என் நெஞ்சு முடியை தன் விரலால் துலாவிக்கொண்டே டேய் ஏண்டா இந்த மாதிரி செஞ்ச நான் அந்த மாதிரி பொம்பள இல்லடா ,என் புருசன் செத்த பின் நான் யார் கூடயும் போனது இல்ல. இன்னக்கிதான் அந்த கடன் காரன் வந்து இப்படி நடந்துருச்சு,அவனும் சுன்னி இல்லாதவன் அதான் சம்மதிச்சேன் என் தொடயிலேயே வைத்து ஆட்டி விட்டு என்ன உசுப்பேத்திவிட்டுட்டு போயிட்டான் ,அதுக்கு தோதாதக நீ வந்த ,ஆனா என் மனம் உன்னை அந்த மாதிரி நினைக்க மருத்துருச்சு ,அதான் உன்னை நான் விரட்டினேன். சாரிடா,இனிமே யாராவது கேட்டா நான் அக்கா என்று சொல்லு எனக்கும் பாதுகாப்பாய் இருக்கும் ,தினமும் எவனாவ்து வந்து நைட்டுல கதவ தட்டி உசிர எடுப்பானுங்க, நல்ல வேலை நீ வந்துட்ட உனக்கு நான் பானுட்ட சொல்லி வீட்டுல தோட்ட வேலை ஏர்பாடு செய்ரேன்,அவ்வளவு தான் அவள் சொல்லி முடிக்க எனக்கு மீண்டும் சுன்னி எலும்பியது. அது அவ்வளவு நேரம் அவள் புண்டையில் தான் இருந்திருக்கிறது, டேய் என்னடா பானுப்பிரியானு சொன்னதும் சுன்னி உள்ளே கெளம்பிடுச்சு ,நான் நமட்டு சிருப்பு சிரித்தேன், டேய் அவள் பக்கா தேவுடியா ,ஆனா பனக்காரனா பாத்துதான் போவா,அதுனால உன் தப்பான என்னத்த கைவுட்டுட்டு என்ன ஓலு எனக்கு இடுப்பு வலிக்குது என்று கூறி கீழே புரண்டு எனக்கு புண்டய காட்டிக்கொண்டு என் கையை பிடித்து இலுத்தாள், இரண்டாம் பாகம் விரைவில் Tags: amma magan kamakathaikal, Erotic tamil adult stories, kamakathai, kamakathaikal, kamakathaikal new, kamaveri kathaikal, new kamakathaikal, pundai kathai, sex kathai, sex story, tamil aunty, tamil aunty stories, tamil kamakathai, tamil sex kathaigal
Bhaaratham Online Media: வசந்தபிரியா மரணம்; சிசிடிவி காட்சியின் உள்ளடக்கங்களை காண விரும்புகிறோம்- தந்தை முனியாண்டி Saturday, 24 February 2018 வசந்தபிரியா மரணம்; சிசிடிவி காட்சியின் உள்ளடக்கங்களை காண விரும்புகிறோம்- தந்தை முனியாண்டி நிபோங் தெபால் - மாணவி வசந்தபிரியா மரணம் தொடர்பில் பள்ளியில் பொருத்தப்பட்டுள்ள ரகசிய கண்காணிப்பு கேமராவில் (சிசிடிவி) பதிவு செய்யபட்டுள்ள காட்சியின் உள்ளடக்கங்களை அறிய விரும்புவதாக சிறுமியின் தந்தை ஆர்.முனியாண்டி தெரிவித்தார். ஆசிரியரின் கைப்பேசியை மாணவி வசந்தபிரியா திருடிய காட்சி சிசிடிவி கேமராவில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக இதற்கு முன்னர் உள்ளூர் நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது. அதனை மறுத்த முனியாண்டி, எங்கள் மகள் கைப்பேசியை திருடியதாக கூறப்படுவதில் உண்மை இருக்காது. ஏனெனில் அவள் அவ்வாறு செய்யமாட்டாள். ஆயினும் சிசிடிவி கேமராவில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படும் காட்சியை குடும்பத்தினர் காண விரும்புகின்றனர். அதன் உள்ளடக்கத்தை அறிய விரும்புகிறோம் என அவர் கூறினார். இதனிடையே, சிறுமி வசந்தபிரியா மரணம் தொடர்பில் நீதி விசாரணை நடத்துவதற்கு அட்டெர்னி ஜெனரல் அலுவலகம் அனுமதி வழங்கியுள்ளதை வரவேற்ற அவர், இதன் மூலம் உண்மை வெளிக்கொணரப்படும் என நம்புகிறேன் என்றார். வசந்தபிரியாவின் மரணம் வீட்டில் அனைவரிடத்திலும் கடினமாக சூழலையே உருவாக்கியுள்ளது. அவளை ஒருநாளும் நினைக்காமல் இருப்பதில்லை. இந்த மரண நீதி விசாரணையின் மூலம் உண்மையிலே என்ன நடந்தது என்பது தெரிய வெளிக்கொணரப்பட வேண்டும் என முனியாண்டி கூறினார். மாணவி வசந்தபிரியா மரணம் தொடர்பில் நீதி விசாரணை நடத்தப்பட அட்டெர்ஜி ஜெனரல் அலுவலகம் அனுமதி வழங்கியிருப்பதாகவும் விசாரணையை தொடங்குவதற்கான தேதிக்காக காத்திருப்பதாகவும் பினாங்கு போலீஸ் படைத் தலைவர் டத்தோ அ.தெய்வீகன் நேற்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. By myBhaaratham - February 24, 2018 Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest No comments: Post a Comment Newer Post Older Post Home Subscribe to: Post Comments (Atom) 'இயற்கையை காப்போம் இனியதோர் உலகை படைப்போம்' - சிறப்பு கட்டுரை பினாங்கு - இயற்கை என்பது இயல்பாக இருப்பது என்பது பொருள் கொண்டதாகும் . இயல்பாகவே தோன்றி மறையும் பொருட்கள் அவற்றின் இயக்கம் , அவை இயங... மரணத்திலும் பிரியாத தம்பதியர் பூச்சோங்- மாரடைப்பின் காரணமாக மனைவியும் அவரை தொடர்ந்து கணவனும் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியடையச் செய்துள்ளது. சிலாங்கூர்,பூச்சோங்கைச் ச... சோழன் ஆட்சியை இழந்ததைப்போல, மஇகாவை இழந்து விடாதீர்கள்!!! சேரன், சோழன், பாண்டியன் ஆட்சிகளை இழந்து 500 ஆண்டுகளைக் கடந்து விட்டோம். இங்கு வந்து 200 ஆண்டுகளாகக் கட்டமைத்த வாழ்க்கையைத்தான் இன்றும...
கோட்டகோகம மீதான தாக்குதல் தொடர்பிலான விசாரணைகளில் இருந்து தாங்கள் தப்பிசெல்லமாட்டோம் என தெரிவித்த முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, விசாரணைகளுக்கு பூரண ஆதரவை வழங்குவதாகவும் இன்று வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார். சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் பெயரிடப்பட்ட அனைவரும் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கோரப்பட்டவாறு சரணடைந்துள்ளனர் அல்லது வாக்குமூலங்களை வழங்கியுள்ளனர் என அவர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். - Advertisement - கொலை, ஆணவக் கொலைகளில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக கட்சி அரசியல் பாகுபாடின்றி சட்டத்தை அமுல்படுத்த வேண்டும் எனவும், அவ்வாறு செயற்படாவிட்டால் சட்டம் ஒழுங்கு மற்றும் சமூகம் சீர்குலைந்துவிடும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். வன்முறைச் சம்பவங்களுக்குப் பின்னால் அரசியல் நோக்கத்துடன் வன்முறைச் செயல்களை வழிநடத்தும் ஒழுங்கமைக்கப்பட்ட குழுக்கள் மற்றும் தாக்குதல் சம்பவங்களில் ஈடுபட்ட இளைஞர்கள் என இரண்டு குழுக்கள் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். “தாக்குதலை வழிநடத்தியவர்களுக்கு எதிராக சட்டம் அமுல்படுத்தப்பட வேண்டும், அதே நேரத்தில் தாக்குதலுக்கு உள்ளான இளைஞர்களுக்கு மறுவாழ்வு அளிக்கப்பட வேண்டும்,” என்று அவர் தெரிவித்துள்ளார்.
இன்றைய காலத்தின் கட்டாயமான சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சுத்தம், நீர் சேமிப்பு, மரம் வளர்ப்பு குறித்து ஆர்வமூட்டும், ஆர்வலர்களின் களமாக இத்தளம் விளங்கும் இன்ஷா அல்லாஹ். மீண்டும் பசுமையான அதிரை...க்கு அப்பாலும் .... அதிரை பசுமை அவன் தான், தன்னுடைய அருள் (மாரிக்)கு முன், நற்செய்தியாக (குளிர்ந்த) காற்றுகளை அனுப்பிவைக்கிறான்; அவை கனத்த மேகங்களைச் சுமக்கலானதும் நாம் அவற்றை இறந்து கிடக்கும் (வறண்ட) பூமியின் பக்கம் ஓட்டிச் சென்று, அதிலிருந்து மழையைப் பொழியச் செய்கின்றோம்; பின்னர் அதைக் கொண்டு எல்லாவிதமான கனிவகை (விளைச்சல்)களையும் வெளிப்படுத்துகின்றோம் - இவ்வாறே நாம் இறந்தவர்களையும் எழுப்புவோம். (எனவே இவற்றை யெல்லாம் சிந்தித்து) நீங்கள் நல்லுணர்வு பெறுவீர்களாக. (ஒரே விதமான மழையைக் கொண்டே) வளமான பூமி தன் இறைவன் கட்டளையைக் கொண்டு (செழுமையாகப்) பயிர் (பச்சை)களை வெளிப்படுத்துகிறது; ஆனால் கெட்ட களர் நிலம் சொற்பமான விளைச்சலையே வெளிப்படுத்துகிறது; நன்றி செலுத்தும் மக்களுக்கு இவ்வாறே நாம் வசனங்களை விவரிக்கின்றோம். ஸூரத்துல் அஃராஃப் (சிகரங்கள்) : 57,58 Tuesday, November 18, 2014 ஆறாவது பேரழிவு அல்குர்ஆன் கூறுகிறது 6:12 قُل لِّمَن مَّا فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ ۖ قُل لِّلَّهِ ۚ كَتَبَ عَلَىٰ نَفْسِهِ الرَّحْمَةَ ۚ لَيَجْمَعَنَّكُمْ إِلَىٰ يَوْمِ الْقِيَامَةِ لَا رَيْبَ فِيهِ ۚ الَّذِينَ خَسِرُوا أَنفُسَهُمْ فَهُمْ لَا يُؤْمِنُونَ 6:12. “வானங்கள் மற்றும் பூமியிலுள்ள அனைத்தும் யாருக்குரியவை?” என்று நீர் அவர்களிடம் கேளும். “அனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியவை” என்று கூறும். கருணை புரிவதை அவன் தன்மீது கடமையாக்கிக் கொண்டான். (எனவே உங்களில் இறைக்கட்டளைக்குக் கீழ்ப்படியாதவர்களையும், அதனை எதிர்த்துக் கிளர்ச்சி செய்பவர்களையும் உடனே அவன் பிடிப்பதில்லை) மறுமைநாளில் அவன் உங்கள் அனைவரையும் திண்ணமாக ஒன்று திரட்டுவான். இது சந்தேகத்திற்கிடமில்லாத ஓர் உண்மையாகும். ஆனால், எவர்கள் தம்மைத் தாமே அழிவுக்குள்ளாக்கிக் கொண்டார்களோ அவர்கள் இதனை ஏற்பதில்லை. 14:28 أَلَمْ تَرَ إِلَى الَّذِينَ بَدَّلُوا نِعْمَتَ اللَّهِ كُفْرًا وَأَحَلُّوا قَوْمَهُمْ دَارَ الْبَوَارِ 14:28. அல்லாஹ்வின் அருட்கொடையைப் பெற்று பின்பு அதனை நன்றிகொல்லும் போக்கைக் கொண்டு மாற்றி (தங்களுடன்) தம் சமூகத்தையும் அழிவுக் கிடங்கில் தள்ளியவர்களை நீர் கவனிக்கவில்லையா? 24:10 وَلَوْلَا فَضْلُ اللَّهِ عَلَيْكُمْ وَرَحْمَتُهُ وَأَنَّ اللَّهَ تَوَّابٌ حَكِيمٌ 24:10. இன்னும் உங்கள் மீது அல்லாஹ்வுடைய நல்லருளும், அவனுடைய ரஹ்மத்தும் இல்லாது போயிருப்பின், (உங்களுக்கு அழிவு உண்டாயிருக்கும்;) நிச்சயமாக அல்லாஹ் தவ்பாவை (பாவ மன்னிப்பை) ஏற்றுக் கொள்பவனாகவும் ஞானமுடையோனாகவும் இருக்கின்றான். -------------------------------------------------------------------------------------------------------------- இந்த உலகில் உயிரினங்களின் வாழ்க்கையைப் பற்றி ஆராய்ந்து வரும், அமெரிக்க நாட்டில் உள்ள ஸ்டாண்ட்ஃபோர்ட் பல்கலைக் கழகத்தில் (Stanford University) பணி புரியும், பேராசிரியர் ரொடோல்ஃபோ டிர்ஸோ (Rodolfo Dirzo) என்பவர் தனது ஆய்வின் முடிவை 26.7.2014 அன்று வாஷிங்டன் நகரில் வெளியிட்டார். உலகில் உயிரினங்கள் தோன்றிய பிறகு, நிலச் சரிவு (Land slide), ஆழிப் பேரலை (Tsunami), விண்கற்கள் (Asteroid) மோதல் போன்ற இயற்கைப் பேரிடர்கள் காரணமாக இது வரையில் ஐந்து முறை பேரழிவுகள் ஏற்பட்டு உள்ளன என்றும், இப்பேரிடர்களின் காரணமாக டினோசார், மாபெரும் யானைகள் (Mammoth) போன்ற 320 உயிரினங்கள் சுவடே இல்லாமல் அழிந்து போய் விட்டன என்றும் அவர் கூறினார். இப்பேரழிவுகளில் இருந்து அழியாமல் தாக்குப் பிடித்த மற்ற உயிரினங்களில் 25% காலப் போக்கில் இயற்கை மாற்றங்களுக்கு ஈடு கொடுக்க முடியாமல் மறைந்து விட்டன என்றும் அவர் கூறினார். இவை எல்லாம் மனித ஆற்றலுக்கு அப்பாற்பட்ட இயற்கைப் பேரிடர்களால் நிகழ்ந்த பேரழிவுகள் என்று கூறிய அவர், இப்பொழுது மனிதன் புவியின் இயற்கை வளங்களை அளவுக்கு மீறிப் பிழிவதன் காரணமாக, தடுத்து நிறுத்த முடியக் கூடிய, ஆறாவது பேரழிவு (Sixth Mass Extinction) ஒன்று நம்மை நெருங்கிக் கொண்டு இருக்கிறது என்று அவர் தெரிவித்தார். இதனால் யானைகள், காண்டா மிருகங்கள், துருவக் கரடிகள் மற்றும் மிகப் பல உயிரினங்களின் எண்ணிக்கை விரைவாகக் குறைந்து வருவதாக இவ் ஆய்வில் தெரிய வந்துள்ளது. இது மட்டும் அல்லாமல் இயற்கைச் சமநிலை பாதிக்கப்பட்டு அதன் விளைவாக (எலி, பெருச்சாளி, மூஞ்சுறு போன்ற) எலியினங்களின் (Rodents) எண்ணிக்கை இருமடங்காகப் பெருகி உள்ளது என்பதும் இவ் ஆய்வில் தெரிய வந்துள்ளது. எலியினங்கள் நோய் பரப்பும் புற ஒட்டுண்ணிகளைத் தாங்கி வளர்ப்பதால். மக்களை நோய்கள் தாக்கும் அபாயம் அதிகரித்துக் கொண்டு இருப்பதாகவும் இவ் ஆய்வில் தெரிய வந்துள்ளது. கடந்த 35 ஆண்டுகளில் மக்கள் தொகை இருமடங்காகி உள்ளது என்றும், மகரந்த சேர்க்கைக்கு உதவும் வண்டுகள், வண்ணத்துப் பூச்சிகள், கொசுக்களை உணவாகக் கொள்ளும் சிலந்திகள், குடியானவனின் நண்பன் எனக் கூறப்படும் மண் புழுக்கள் ஆகியவற்றின் எண்ணிக்கை 45% குறைந்த உள்ளது என்றும் கூறிய பேராசிரியர் ரொடோல்ஃபோ டிர்ஸோ, இப்பொழுது நேரிட்டுக் கொண்டு இருக்கும் அழிவுப் போக்கிற்கு இயற்கைப் பேரிடர்கள் காரணமல்ல என்றும், மனிதன் உருவாக்கி உள்ள புவி வெப்ப உயர்வு, சூழ்நிலைக் கேடுகள், பருவ நிலை மாற்றம் ஆகியவையே காரணம் என்றும் கூறினார்; இப்பேரழிவுகள் நம் வாழ்க்கையை மெது மெதுவாகப் பதம் பார்த்துக் கொண்டு இருப்பதைப் புரிந்து கொள்ள வேண்டும் என்றும், இது அனைத்து உயிரினங்களின் முழுமையான அழிவில் கொண்டு போய்விடும் என்றும்அவர் கூறினார். இறுதியாக, மக்கள் தொகையையும் இயற்கை மூலாதாரங்களைப் பிழியும் வேகத்தையும் வெகுவாகக் குறைப்பதன் மூலம் வரவிருக்கும் பேரழிவைத் தடுக்க முடியும் என்று அவர் கூறினார். வரவிருக்கும் பேரிடரைப் பற்றியும், அதனால் உலகில் உயிரினங்கள் முழுமையாக அழியவிருப்பது பற்றியும், அதிலிருந்து மீள்வதற்தான தீர்வைப் பற்றியும் அவர் தெளிவாகக் கூறி உள்ளார். அவர் கூறி உள்ள தீர்வை நடைமுறைப்படுத்த நாம் என்ன செய்ய வேண்டும்? தீர்வின் முதல் அம்சமான மக்கள் தொகைக் குறைப்பைப் பற்றிப் பார்ப்போம். மக்கள் தொகையை வெகுவாகக் குறைக்க முடியுமா? சீனா சமதர்மப் பாதையில் சென்று கொண்டு இருந்த பொழுது பெரு நகரங்களில் உள்ளவர்கள் ஒரு குடும்பத்திற்கு ஒரு குழந்தைக்கு மேல் பெறக் கூடாது என்ற விதியை மக்கள் முறையாகக் கடைப்பிடித்துக் கொண்டு இருந்தனர். அதனால் சீன நாட்டின் மக்கள் தொகை ஒரு கட்டுக்குள் இருந்தது. சமதர்மப் பாதையை விட்டு விலகி முதலாளித்துவப் பாதைக்குச் செல்ல ஆரம்பித்த பிறகு இக்கொள்கை வலுவில் தளர்த்தப்பட்டது. இதனால் சீனாவில் மக்கள் தொகைப் பெருக்கத்தின் வேகம் அதிகரித்து உள்ளது. சீனா குடும்பக் கட்டுப்பாட்டுக் கொள்கைளை ஏன் வலுவில் தளர்த்தியது? முதலாளித்துவப் பொருளாதாரத்திற்குப் பண்டங்களை வாங்கும் மக்கள் மிகவும் முக்கியம். ஆகவே மக்கள் தொகைப் பெருக்கத்தை இன்றைய சீன முதலாளித்துவ அரசு ஆதரிக்கத் தொடங்கி உள்ளது. தீர்வின் இரண்டாவது அம்சம் இயற்கை மூலாதாரங்களைப் பிழிவது வெகுவாகக் குறைக்கப்பட வேண்டும். இது முதலாளித்துவப் பொருளாதாரத்தில் முடியுமா? இன்று முதலாளித்துவப் பொருளாதாரம் பெரும் நெருக்கடியில் சிக்கி உள்ளது. முதலாளித்துவப் பொருளாதாரத்தில் நெருக்கடி என்றால் ஏதோ மக்களுக்குத் தேவையான பொருட்களை உற்பத்தி செய்ய முடியாத சூழ்நிலை அல்ல; முதலாளிகள் தங்களிடம் உள்ள மூலதனத்தை இலாபகரமாக முதலீடு செய்ய வழி கிடைக்காமல் தவிப்பது தான் பொருளாதார நெருக்கடி என்று கூறப்படுகிறது. இத்தகையை நெருக்கடி தலைவிரித்து ஆடும் பொழுது இயற்கை மூலாதாரங்களைப் பிழிவதை வெகுவாகக் குறைப்பது என்பது நெருக்கடியைப் பல மடங்கு அதிகரிப்பது ஆகும் என்பது மட்டும் அல்ல; முதலாளித்துவப் பொருளாதார முறையையே அடியோடு காவு கொடுப்பது ஆகும்; சமூகத்தைச் சமதர்மப் பாதைக்கு நகர்த்துவதும் ஆகும். இதை ஒரு முதலாளித்துவ அரசு ஒரு போதும் செய்யாது. அப்படி என்றால் அறிவியல் அறிஞர் பேராசிரியர் ரொடோல்ஃபோ டிர்ஸோ கூறியுள்ள தீர்வைச் செயல்படுத்தி உலகில் உயிரினங்கள் அழியாமல் காக்க வேண்டும் என்றால் முதலாளித்துவ முறையை அடியோடு காவு கொடுத்து, சமதர்ம முறையை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதைச் சராசரி அறிவிற்கும் குறைவான அறிவு உடையவர்களாலும் புரிந்து கொள்ள முடியும். நாம் என்ன செய்யப் போகிறோம்? உலகில் உயிரினங்கள் தொடர்ந்து வாழ வேண்டும் என்பதற்காக முதலாளித்துவத்தைக் காவு கொடுத்து விட்டு, சமதர்ம முறையை ஏற்றுக் கொள்ளப் போகிறோமா அல்லது நம் சந்ததிகள் எக்கேடும் கெட்டுப் போகட்டும்; நமக்கு நம் அயோக்கியத்தனமான மவுடீகம் (சோம்பேறித்தனம்) தான் முக்கியம் என்று இருக்கப் போகிறோமா?
மூங்கில் படப்புக்கு ஊணி, மரமாகிவிட்ட ரெண்டு பூவரச மரத்துக்கிடையில் மூங்கிலொன்றை கட்டி அதில் மாட்டியிருந்த இரும்பு கொக்கியில், தலைகீழா தரையை பார்த்துக் கொண்டிருந்தது தலையில்லா வெள்ளாட்டுக் கெடா. நடுவயிறை தாண்டி, முன்னங்காலை நோக்கி தோலை, பெரு வெற ரெண்டாலும் மழிச்சி மழிச்சி உரிச்சிக் கொண்டிருந்தார் குருசாமி. அஞ்சாறு மொற போட்டு துப்பிய வெத்தல எச்சி மண்ணோடு மண்ணா செவந்து கெடந்தது. "கழுத்து ரத்தம் கசிஞ்சி கசிஞ்சி தண்ணி செவந்து போச்சி, வந்து தண்ணிய மாத்திபுட்டு அப்புறம் போயி ஒன்னுத ஒராயி ன்னு" சின்னமுத்துவ கூப்புட்டார் குருசாமி. வெட்டுண்ட கழுத்துக்கு கீழ இரத்தமா செவந்திருந்த அன்னக்கூட தண்ணிய ஊத்திட்டு, வேறொரு கொடத்து தண்ணிய ஊத்திட்டு போனான் சின்னமுத்து. கவை போலிருக்கும் பூவரச கெளை சந்துல வைச்ச கெடா தலையை கண் சிமிட்டாமல் பாத்து எச்சி ஒழுகிக் கொண்டிருந்தது வாலறுந்த நாய்க்கு, மனுசனுக்கு மீசையும், நாய்க்கு வாலுமில்லைன்னா பாக்க சகிக்காது என்னவோ நெசம்தான் போல. சாஞ்சாப்புல இருக்கும் லைட்டுக் கம்பத்துல ஒராஞ்சி சூறிய பதம் தீட்டிக் கொண்டிருந்தான் சின்ன முத்து, எடது காதுல பீடியொன்னு இருந்தது. சுத்துப்பட்டு ரெண்டு மூணு ஊருக்கு சின்னமுத்தும், குருசாமியும் தான் கெடா வெட்டிகள். குறைஞ்சது மாசத்துக்கு பத்து அறுப்பிருக்கும். தேவையான அளவுக்கு கறி, நெஞ்சு முட்ட சாராயம் இருந்தா போதும், கூலின்னு தனியா கேட்டதுமில்லை, யாரும் கொடுத்ததுமில்லை இவர்களுக்கு. குலசாமி கோவிலுக்கு கெடா வெட்ட வந்திருந்த "பஞ்சன்" தண்ணிய போட்டு மல்லாந்துவிட, எளம்போதையில இருந்த குருசாமி வீசுன ஒரே வீச்சுல தல துண்டா விழுந்தது. அன்னைக்கு தொட்ட அருவா, ஆச்சு வருசம் முப்பது, இன்னும் நிறுத்துன பாடில்லை. நீயெல்லாம் நல்ல மனுசந்தானா, இருக்குற கொஞ்ச நஞ்ச காணியையும் நத்தக்குழியான் கிட்ட குத்தவைக்கு கொடுத்துட்டு, ஆடறுப்பு, ஆடறுப்பு ன்னு அலையுறியே நீயெல்லாம் என்ன சென்மமோ? ன்னு கெழவி கத்துவதும், நம்மாளு விடிஞ்சதும் சூறிய இடுப்புல சொருவிகிட்டு கெளம்புவதும் முப்பது வருசமா மாறாத ஒன்னு. சம்பந்தம் பண்ணி பேர புள்ள பார்த்தாச்சி, இனியா மாற போறாரு. தலைக்கேறிய போதையில பேரங்கிட்ட வந்து செவரொட்டி தின்னுடா, அப்பத்தான் உடம்பு கல்லு மாதிரி இருக்கும். ஆம்பள புள்ளை மாதிரியா இருக்கே, அடியே என்துரைக்கு ஈரலை அள்ளி வைடி ன்னு கெழவிகிட்ட சலம்புவதை பார்த்தா எப்பேர்பட்ட கோவக்காரனும் சிரிச்சிட்டு தான் போவான். நாய்க்கு எட்டாம, அந்த கெளையில சுருட்டி வை ன்னு சின்னமுத்துகிட்ட தோலை கொடுத்துட்டு, கல்லு உப்பு எத்தனை கிலோ வாங்கிருக்க மாமா ன்னு கொழுப்பை அறிஞ்சிட்டுருக்கும் வடிவேலிடம் கேட்டார். ரெண்டு மாகாணி உப்பு இருக்கும்னு நெனைக்கிறேன்யா னார் வடிவேலு. உப்புக்காரன் வர நேரந்தான், மேலும் ரெண்டு மாகாணி வாங்கி வை மாமா, இல்லன்னா தோலு பத்து ரூவாய்க்கு கூட போவாது. உரிச்ச தோலுக்குள்ள, உப்பை சதும்பர தடவி வைச்சா ரெண்டு மூணு மாசத்துக்கு தாங்கும், இல்லைன்னா தோலு நஞ்சி, வீணா போயிரும். "போன வாரம் செந்துறை சாய்ப்பு கிட்ட கறி வாங்கியாந்து வீட்டுல தொறந்து பார்த்தா, ஒரே மசுரா இருக்கு, அதை அலசி கொழம்பு வதக்குறதுக்குள்ள போதும் போதும்னு ஆயிருச்சி" ன்னு சொல்லிகிட்டே கொண்டு வந்த தூக்கு சட்டியை ஓரமா வைச்சிட்டு குத்துக்காலிட்டு உக்காந்தார் பரமசிவம். கறியிலையும் ஒத்த மசுரு இல்லாம, தோலும் கிழிபடாம எடுக்க நம்ம மாப்ள மாதிரி வேற எவன் இருக்கான் இந்த சுத்து பட்டுல ன்னு சொல்லிக்கொண்டே, டேய் சின்னமுத்து, வீட்டுல போயி எட கல்லு வாங்கியாடா ன்னார் வடிவேலு. உரிக்கிரதுக்குன்னு நேக்கு இருக்கு மாமா, எல்லாராலையும் உரிச்சிட முடியுமா ?ன்னார் கொஞ்சம் ஒசந்த கொரலில் குருசாமி. கர்வம் முகத்தில் தெரிந்தது. "எல்லா பங்குளையும் கொழுப்பை வைச்சிட்டேன், நெஞ்சாங்குத்து எலும்பை மட்டும் நீயே வைச்சிடு மாப்ள "நீ தான் வாட்டமா வைப்பன்னார் வடிவேலு. கறில்லாம் முடிஞ்சி, தலைய சுட்டு வடிவேலிடம் கொடுத்துட்டு, வடக்க ஏரில குளிச்சிட்டு வரும்போதே,கருவையில வித்த மருதூர் தண்ணிய ரெண்டு கிளாஸ் போட்டுட்டு தான் வந்தார் குருசாமி. சின்னமுத்து குடிச்சிட்டு அப்படியே மவ வூட்டுக்கு போறேன்னுட்டு போய்ட்டான் பெண்ணாடத்துக்கு. என்னய்யா, "என்னைக்கும் இல்லாத அளவுக்கு கறிய வேணும் வேணும்னு கேட்டு வாங்கி திங்கிற" ன்னு கெழவி கேட்டதுக்கு, ஒண்ணும் பேசாம சிரிச்சிகிட்டே போய் படுத்தவர் தான் எழுந்திரிக்கவே இல்ல. தூக்கத்துலயே உசுரு போயிருச்சி.
கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் சிறு குழந்தைகளுக்கு வழங்கப்படும் திரிபோஷா சத்துணவில் நச்சுத்தன்மையுடைய அதிகளவு அஃப்ளொடோக்சின்கள் இருப்பதாக தெரிவித்த குற்றச்சாட்டை நிராகரிப்பதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். திரிபோஷா உற்பத்தி நடவடிக்கையின்போது, அஃப்ளொடோக்சின் அடங்கிய சோளம் அகற்றப்படும் என்றும் எனவே, குறித்த குற்றச்சாட்டை தாம் நிராகரிப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். திரிபோஷா தொழிற்சாலையை நவீனமயப்படுத்துவதற்கு இரண்டு மில்லியன் டொலர்களை சுகாதார அமைச்சுக்கு வழங்குவதற்கு தனியார் துறை உறுதியளித்துள்ளதாகவும் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மேலும் தெரிவித்துள்ளார். கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் சிறு குழந்தைகளுக்கு வழங்கப்படும் திரிபோஷா சத்துணவில் அதிகளவு அஃப்ளொடோக்சின்கள் இருப்பதாக இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன குற்றச்சாட்டொன்றை முன்வைத்தார். இதனையடுத்து, இந்த கருத்து தொடர்பாக சுகாதார அமைச்சு விசாரணை நடத்த வேண்டும் என அரச குடும்ப நல சுகாதார சேவையாளர்கள் சங்கம் தெரிவித்திருந்தது. அத்தோடு, நாடு முழுவதிலும் உள்ள பல குடும்ப நலப் பணியாளர்களிடமும் இது தொடர்பில் வினவியதாக அதன் தலைவர் தேவிகா கொடித்துவக்கு தெரிவித்திருந்தார். எவ்வாறாயினும் திரிபோஷாவை வழங்க வேண்டாம் என எந்தவொரு தரப்பினரும் தமது அதிகாரிகளிடம் கோரவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. எனினும் புற்றுநோய்க் காரணியான அஃப்லடொக்சின் கொண்ட திரிபோஷ சில மாதங்களுக்கு முன்னர் இனங்காணப்பட்டதாகவும், ஆனால் உடனடியாக அவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் சுகாதார அமைச்சின் உணவுக் கட்டுப்பாட்டுப் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார். களுத்துறை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலத்தை அண்டிய பகுதிகளில் இந்த புற்றுநோய் காரணிகள் அடங்கிய திரிபோஷ மீட்கப்பட்டதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அலுத்கே தெரிவித்துள்ளார்
ஈரோடு:ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி அடுத்துள்ள கணபதிபாளையத்தில் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் ஆற்றல் அறக்கட்டளை சார்பில் 4 வகுப்பறை கொண்ட 2 கட்டிடம், சத்துணவு கூடம், கழிப்பறைகள் மற்றும் பள்ளியின் சுற்றுசுவர் சீரமைத்து மாணவர்கள் பயன்பாட்டிற்கு ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடந்தது.இந்நிகழ்ச்சிக்கு அறக்கட்டளை தலைவர் அசோக்குமார் முன்னிலை வகித்தார். புதிய வகுப்பறை கட்டிடங்களை பள்ளி மாணவ, மாணவிகள் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர். இவ்விழாவில் ஊராட்சி தலைவர் பத்மா வீரமணி, பள்ளியின் தலைமை ஆசிரியர் கிறிஸ்டி கீதா, வார்டு உறுப்பினர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.கிராமப்புற மக்களுக்கு மருத்துவ சேவையை வழங்கும் நோக்கில் ஆற்றல் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் அசோக்குமார் தலைமையில் தொடர் மருத்துவர் பரிசோதனை முகாம்கள் தொடங்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக, மொடக்குறிச்சி பகுதிக்குட்பட்ட கணபதிபாளையம், எழுமாத்தூர், புஞ்சை காளமங்கலம், நஞ்சை ஊத்துக்குளி, கண்டிகாட்டுவலசு, வேலம்பாளையம், காகம் மற்றும் குலவிளக்கு ஊராட்சிகளில் ஆற்றல் பவுண்டேஷன் மற்றும் வாசன் ஐ கேர் இணைந்து இலவச மருத்துவ முகாமை நடத்தி வருகின்றனர். மக்களின் பொது நலன் கருதி சிறந்த மருத்துவர்களை கொண்டு மருத்துவ ஆலோசனை, கண் பரிசோதனை மற்றும் இலவச மருந்துகள் வழங்கப்படுகிறது. இம்முகாமில் சிறந்த மருத்துவர்கள் மூலம் மருத்துவ ஆலோசனை, மற்றும் இலவச மருந்துகள் வழங்கப்படுகிறது. இம்முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெற்று வருகின்றனர். Tags: ஆற்றல் அறக்கட்டளை வகுப்பறை மேலும் செய்திகள் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 'வானவில் மன்றம்' திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!! தமிழகம் முழுவதும் ரூ.84 கோடியில் 3,808 ஊரக நூலகங்களின் கட்டிடங்கள் புதுப்பிப்பு; புதிய புத்தகங்கள், பர்னிச்சர்கள் வாங்க நடவடிக்கை ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.70 ஆயிரத்தை இழந்த ஒடிசா பெண் தற்கொலை; சங்கரன்கோவில் அருகே பரிதாபம் தமிழகத்தின் வரலாற்றை மீட்டுருவாக்கம் செய்ய மேலும் பல புதிய இடங்களில் தொல்லியல் ஆய்வுகள் தேவை; ஒன்றிய அரசுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு கோரிக்கை திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழா, கொடியேற்றத்துடன் தொடங்கியது; அதிகாலையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் புதுவையில் ரூ.900 கோடிக்கு விடப்பட்ட குப்பை; அள்ளும் டெண்டரில் ஊழல்: முன்னாள் முதல்வர் நாராயணசாமி குற்றச்சாட்டு தொடங்கிய இடத்தில் மீண்டும் ஆட்டம் காட்டும் கொரோனா!: சீனாவில் ஒரே நாளில் 31,000க்கும் அதிகமானோருக்கு பாதிப்பு..!! நாம் ஒன்றாக நடக்கும்போது அடிகள் வலுவாக இருக்கும்; இந்திய ஒற்றுமை பயணத்தில் இணைந்த அண்ணன் - தங்கை..!! இருளில் தவிக்கும் உக்ரைன் மக்கள்: மின் உற்பத்தி நிலையங்களை குறி வைத்து ரஷ்யா தாக்குதல்..! சென்னை கொளத்தூரில் 1.27 கோடியில் இறகுப்பந்து விளையாட்டு அரங்கை திறந்து வைத்து வீரர்களுடன் உற்சாகமாக விளையாடிய முதல்வர் மு.க.ஸ்டாலின்..!!
இந்திய தேசியத்தை மிகச் சரியாக 1930களில் அடையாளம் கண்டவர் பெரியார். இந்தியாவை ஒரு நேஷன் அல்ல என்றார் பெரியார். பெரியார் வழிவந்த அண்ணாவும் இந்தியாவை ஒரு துணைக்கண்டம் என்றும் டெல்லி ஏகாதிபத்தியம் என்று கூறியுள்ளார். 1970களில் இந்தியாவை தேசிய இனங்களின் சிறைக் கூடம் என அடையாளம் கண்ட இ.பொ.க (மா.லெ) இயக்கம் அதன் சமூகத்தன்மை பற்றி எவ்வித ஆய்வுகளும் செய்யவில்லை. இ.பொ.க (மா.லெ) அமைப்பின் வழிவந்த தோழர் கார்முகில் அவர்கள் இந்திய சமூகத்தில் நீடித்து வரும் சாதியச் சிக்கல், தேசிய ஒடுக்குமுறை சிக்கல் என்பது பார்ப்பனியத்தின் இரண்டாயிரமாண்டு கால வரலாற்றோடு இணைந்திருப்பதையும் இ.பொ. இயக்கத்தின் கட்சித்திட்டங்கள் அனைத்தும் முந்நூறாண்டு வரலாறு கொண்ட காலனியகால சமூக அமைப்பையே ஆய்வு செய்து வகுக்கப்பட்டுள்ளது என சுயவிமர்சனமாக உணர்கிறார். பார்ப்பனியத்தின் இரண்டாயிரமாண்டு வரலாற்றுத் தொடர்ச்சியில் உருவாக்கப்பட்டதே 'இந்திய தேசியம்' என்ற இந்த ஒடுக்குமுறைக் கட்டமைப்பு என்கிறார். இந்திய தேசிய இனம் என்று இல்லை அவ்வாறு இருக்க பார்ப்பனியத்தை அதன் இந்தி மொழியை அடிப்படையாகக் கொண்டதே இந்திய தேசியம். இது அரசியல், பொருளாதர, கலாச்சாரத்துறைகளில் தேசிய இனங்களின் வளர்ச்சியை முற்றாக நசுக்குவதன் மூலமே செயல்படுகிறது. இவ்வாறு சாதிய சமூக அமைப்பை பாதுகாப்பது, தேசிய இனங்களின் சுயமான பொருளியல் வளர்ச்சியைத் தடுப்பது, கலாச்சார. அரங்கில் மக்களின் மொழியும் அதுசார்ந்த கலாச்சாரத்தை இழிவானதாக்கி பார்ப்பனிய சமக்கிருத மொழி அது வழியான பண்பாட்டை உயர்வானது என ஆக்குவது - என்பதே இந்திய தேசியத்தின் இயல்பாகும். இதனால் இந்திய தேசியம் என்பது தரகு முதலாளிய பார்ப்பனிய ஏகாதிபத்தியமாக செயல்படுகிறது. இந்த ஆய்வு முடிவுகளை மிக விரிவாக இந்தியாவில் தேசியப் பிரச்சனையும் ஜனநாயகப் புரட்சியும் என்ற நூலில் முன்வைத்துள்ளார். சிக்கலான இந்திய சமூக அமைப்பை அதன் அரசியல், பொருளியல், பண்பாட்டு தளங்கில் ஆய்வு செய்து முன்வைக்கப்பட்டுள்ளன. இந்த முடிவுகள் திராவிட இயக்கத்தவர்களும், தமிழ்த் தேசிய இயக்கத்தவர்களும், கம்யூனிஸ்ட் இயக்கத்தவர்களும் என அனைவருக்கும் உதவியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. இன்றைய அரசியல், பொருளியல், பண்பாட்டியல் நெருக்கடிகளின் ஊற்றுக்கண் எது? அரசியல் தளத்தில் இன்று நாம் தமிழகத்திலும் இந்தியா முழுவதும் எதிர்கொண்டுள்ள நெருக்கடிகள் அனைத்தும் சற்றொப்ப ஒரே மாதிரியானவைகளேயாகும். 1) நாம் அரசியல் தளத்தில் முற்ற முழுக்க ஒரு பாசிச கொடுநெறி அடக்குமுறையை சந்திக்கின்றோம். பாராளுமன்றம் என்பது எந்த ஜனநாயக மாண்புகளையும காக்கத் தவறிய ஓர் அரட்டை மடம்போல் உள்ளது. நாட்டின் பிரதமர் மோடி எந்த விவாதங்களையும் பாராளுமன்றத்தில் எதிர்கொண்டு பதில் அளிப்பதில்லை. செய்தியாளர்களைக் கூட சந்திப்பதை தவிர்த்து விடுகிறார். உச்ச நீதிமன்ற நீதிபதிகளே மக்களிடம் நீதி கேட்டு வரும் நிலை உருவாகியுள்ளது. ஊழல்களைக் கட்டுப்படுத்தும் மிக உயர் அமைப்பான சி.பி.ஐ. தலைமை நிலையத்தில் வரலாறு காணாத மோதல். பிரதமரின் ஆசிபெற்ற அஸ்தானா அந்த அமைப்பை வீதிக்கு கொண்டு வந்துள்ளார். தமிழகத்தில் பேச்சுரிமை, கருத்துரிமை, இவைகளின் மீதான கொடூரத் தாக்குதல் நடைபெறுகிறது. பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஆதரவாக சொந்த நாட்டு மக்கள் சுட்டுப் பொசுக்கப்படுகிறார்கள். அரசின் திட்டங்களைப் பற்றி பேசினாலே தேசவிரோத முத்திரை குத்தப்பட்டு வெள்ளையன் காலச் சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கொடுஞ்சிறையில் அடைக்கப்படுகின்றனர். நாடாளுமன்ற ஜனநாயகம் வெளிப்படையான சந்தை ஜனநாயகமாக மாறி முடைநாற்றம் வீசுகிறது. மக்களின் வாக்குகள் ஏலத்தில் விடப்படுகிறது, இதை ஆளும் வர்க்க கட்சிகளே ஒப்புக்கொண்டு வாக்கின் விலையை சொல்லி வருகின்றனர். அரசியல் கட்சிகள் அனைத்தும் கொள்கையிழந்து கார்பரேட் கம்பெனிகள் போல மாறி வருகின்றன. ஒடுக்கப்பட்ட மக்களுக்கான இயக்கங்களும் தனது போர்க்குணத்தை இழந்து சீரழிந்த முதலாளிய விளம்பர பகட்டு நடவடிக்கைகளில் காலந் தள்ளுகின்றன. மொத்தத்தில் பெயரளவிற்கான நாடாளுமன்ற ஜனநாயக உரிமைகளையும் பறித்துவிட்டு ஒரு கொடூர பாசிசத்தை மத்திய, மாநில ஆட்சியாளர்கள் கையில் எடுத்துள்ளனர். அரசின் பயங்கரவாதத்தையும், அதன் பார்ப்பனிய. ஆதிக்கத்தையும் அறிவுத்தளத்தில் எதிர்த்துப் போராடும் அறிவுத்துறையினர் வெளிப்படையாக பார்ப்பனிய பயங்கரவாதிகளால் படுகொலை செய்யப்படுகின்றனர். சாரமாக முதலாளிய ஜனநாயகம் என்பது கூட மறுக்கப்பட்டு ஒரு பாசிசத் தன்மை கொண்டதாக அரசியல் களம் மாறிவிட்டது. இது பாஜக காலத்தில் அதிகரித்துள்ளது என்று வேண்டுமானால் கூறலாம். காங்கிரஸும் இதே கொடுநெறியோடுதான் செயல்பட்டது. இனியும் செயல் படும். பொருளியல் தளத்தில் இன்று நாம் சந்திக்கிற கடுமையான. பொருளியல் நெருக்கடி காரணமாகவே அரசியலில் பாசிச அடக்குமுறை நிலவுகிறது. பொருளியல் தளத்திலான நெருக்கடிகளை பட்டியலிடும் முன் இதன் தோற்றுவாய் பற்றி நாம் தெரிந்துகொள்வது மிக, மிக முக்கியமானது. ஏகாதிபத்தியங்களின் காலனி ஆதிக்கத்திற்காகவே முதல் மற்றும் இரண்டாம் உலகப்போர்கள் நடைபெற்றன. இரண்டாம் உலகப்போரின் பேரழிவிலிருந்து பாடம் கற்றுக்கொண்ட ஏகாதிபத்தியங்கள் தனது காலனிய சுரண்டல் முறையில் ஒரு பெரிய மாற்றத்தை செய்துகொண்டது. இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு பிரிட்டனின் வீழ்ச்சியும் அமெரிக்கா எழுச்சியும் முதலாளிய முகாமில் நடைபெற்றது. சோவியத்திலும், சீனத்திலும் சோசலிச முகாம் வலுப்பெற்றது. இவ்வாறு உலகம் இருவேறு துருவங்களாக இயங்கி வந்தது. தமது காலனிய சுரண்டல் முறையை புதிய உலக நிலைமைகளுக்கேற்ப மாற்றியமைத்தன ஏகாதிபத்தியங்கள். இதைப் புதுக்காலனிய காலகட்டம் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஒரு நாட்டின் அரசியல் சுதந்திரத்தைப் பெயரளவிற்கு ஒப்புக்கொள்வது. ஆனால் தனது தரகர்களாக அந்த நாட்டு முதலாளி வர்க்கத்தை மாற்றிக்கொண்டு சுரண்டலைத் தொடர்வது. இவ்வாறு அரசியல், பொருளியல் ஆதிக்கத்தை முழு அளவில் வேறுவடிவங்களில் தொடர்வதுதான் புதுக்காலனிய கொள்கையாகும். உலக வங்கி, பன்னாட்டு நிதியம் (IMF), வணிக ஒப்பந்தங்கள் என பொருளாதார சுரண்டலை வளரும் நாடுகள் மீது திணித்தன. ஐக்கிய நாடுகள் சபை எனும் தனது கைப்பாவை அமைப்பை வைத்து உலக நாடுகளை கட்டுப்படுத்தியது. சோசலிச முகாமின் வீழ்ச்சிற்குப் பிறகு உலகமயம், தாராளமயம், தனியார்மயம் என வெளிப்படையாக தனது புதுக்காலனிய ஆதிக்கத்தை விரிவுபடுத்தியது. இந்தியாவில் 1947 ல் நடைபெற்ற மாற்றம் காலனிய சுரண்டல் முறையை புதுக்கானிய சகாப்தத்திற்கேற்ப தகவமைத்துக் கொண்டதன்றி வேறல்ல. இந்திய முதலாளிகள் ஏகாதிபத்திய நலன்களைப் பேணிக் காப்பவர்களாகவே இருந்து வருகின்றனர். உள்நாட்டில் தாமே ஒரு ஏகாதிபத்தியமாகச் செயல்பட்டு அனைத்து தேசிய இனமக்களின் சுதந்திரமான பொருளியல் வளர்ச்சியை தமது ஏகாதிபத்திய சார்பு பொருளியல் கொள்கைகளால் தடுத்து விட்டனர். பன்னாட்டு நிறுவனங்களின் வேட்டைக்காடாக நமது தாயகமாம் தமிழகம் ஆக்கப்படடுள்ளது. சுற்றுச் சூழலை மாசுபடுத்தும் நச்சுத்தொழிற்சாலைகளை நம் தலையில் கட்டுகின்றனர். இதனால் ஏகாதிபத்தியங்களின் குப்பைத்தொட்டியாக மாற்றிவிட்டனர். இனி சந்தைப் பொருளாதாரம் தான் சமூகத்தை ஆளும் என' உலகமயம்' வெளிப்படையாக அறிவிக்கை செய்தது. கல்வி, குடிநீர், மருத்துவம், உணவுப்பாதுகாப்பு என்ற மக்களின் வாழ்க்கைக்குத் தேவையான அனைத்தும் தனியார் கார்பரேட் நிறுவனங்களிடம் தாரை வார்க்கப்பட்டு விட்டது. மக்களின் சமூகப் பாதுகாப்பை அரசு தனது பொறுப்பிலிருந்து நீக்கிவிட்டது. இயற்கை வளங்களை சூறையாடுவது வரம்பற்றுப் போய்க்கொண்டுள்ளது. மக்களின் தேவைக்கான உற்பத்தியை விட நுகர்விய வாழ்விற்கான உற்பத்தியில் மூலவளங்கள் செலவழிக்கப்படுகிறது. இதனால் பெருவாரியான. சாமானிய மக்களின் தேவைக்கான பொருட்கள் கடும் விலை ஏற்றத்தை சந்தித்து வருகிறது. வேளாண் பொருளியல் பன்னாட்டு நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் வந்துவிட்டது. இதனால் இடுபொருள்கள் வாங்கமுடியாத விலையில் உள்ளன. விளை பொருட்களை கார்பரேட் நிறுவனங்கள் அடிமாட்டு விலைக்கு கொள்முதல் செய்து கொள்ளையடிக்கிறது. உலக வர்த்தகக் கழகத்தின் நெருக்கடியால் வேளாண் மானியம் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு வருகிறது. விவசாயிகள் கடன் சுமையிலிருந்து மீள முடியாமல் தற்கொலை செய்து மடிவது அதிகரித்து வருகிறது. வேளாண்மையை நம்பி வாழும் 50% க்கும் மேலான மக்களின் வாழ்க்கை மிக மோசமடைந்த நிலையில் உள்ளது. தொழிற்துறையில் சிறு தொழில்கள் நாளுக்கு நாள் நசிவடைந்து வருகிறது. தமிழகத்தில் பல்லாயிரம் சிறுதொழில் நிறுவனங்கள் மூடப்பட்டு ஐந்து இலட்சம் தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளதாக அரசு அறிக்கை கூறுகிறது. தொழிலாளர் நலச்சட்டங்கள் அனைத்தும் செயலிழந்துவிட்டன. உழைப்புச் சுரண்டல் மிகக் கொடூரமாக நடந்துவருகிறது. ஒப்பந்தமுறை என்ற திட்டத்தை அரசே செயல்படுத்துகிறது. பணிப்பாதுகாப்பு, ஓய்வூதியம் போன்றவை பகல் கனவாகிவிட்டது.
Ilam Pengal Kamakathaikal – கிருபாவுக்கு காலா காலத்தில் கல்யாணம் நடந்தது. கல்யாணம் ஆனதின் அடையாளமாக, கிருபா தன் கணவனுடன் ஒரு சின்ன வீட்டை வாடகைக்கு எடுத்துகொண்டு, தன் கணவன் குமரனுடன் காலை மாலை இரவு பகல் என்று வித்யாசம் பாராமல், “கல்யாணத்தின் லட்சியம், கட்டிய கணவன் தினமும் தன் புண்டையை அகலமாகவும், ஆழமாகவும் உழுது தண்ணி பாச்சி விதை விதிப்பதுதான்..!!” என்று கருதி, அந்த கருத்துக்கு தினமும் செயல் வடிவம் கொடுத்து வந்தார்கள், அந்த இளம் தம்பதிகள். முதல் ஆறு மாதத்துக்குள் குறைந்தது முன்னூறு முறையாவது ஓத்து இருப்பார்கள். இருந்தாலும் கிருபாவுக்கு இன்னும் புண்டை வெறி அடங்கவில்லை..!! குமரனுக்கோ கேட்டகவே வேண்டாம்..!! மாலை ஆபிசில் நாலரை ஆனால் போதும், பூள் தானாகே எழுந்து கொண்டு, “சீக்கிரம் வீட்டுக்கு போகலாம்..!! கிளம்பு.. கிளம்பு..” என்று சொல்லி, அதுவும் கிளம்பி, வீட்டில் வந்து கிருபாவின் பொந்தில் புகுந்து கொண்டால்தான் சமாதானம் அடையும். குறைவில்லா “புண்டை – பூள்” உறவுக்காக குழந்தை பெத்து கொள்ளுவதை ரெண்டு வருடத்துக்கு தள்ளி போட முடிவு பண்ணினார்கள். அதனால் சில தற்காப்பு ஏற்பாட்டுடன் தினமும் “புண்டை பூள் உத்சவம்” தடை இன்றி நடைபெற்றுக்கொண்டு இருந்தது. மாதத்தில் அந்த மூனு நாலு நாட்களிலும் கூட பஞ்சம் இல்லாமல் மகிழ்ச்சி பீறிக்கொண்டு இருந்தது. யார் கண் கிருபாவின் புண்டையில் பட்டதோ தெரியவில்லை..!! கல்யாணத்துக்கு முன்னால் அப்பளை பண்ணி இருந்த ஒரு வேலைக்கு ஆர்டர் வந்தது குமரனுக்கு. அது தோகாவில் (மத்ய கிழக்கு நாடு). நல்ல சம்பளம். ஒரே வருடத்தில் பொண்டாட்டிக்கும் விசா கொடுப்பதாக உறுதி அளித்தார்கள். ஒரு சுபயோக சுபதினத்தில், பொண்டாட்டி கண்களில் கண்ணீரை வரவழித்து, புண்டையை காய வைத்துவிட்டு, அவன் வெளி நாட்டு பயணம் புறப்பட்டான். கணக்கிலாமல் ஓத்தது கட்டோடு நின்றது. கிருபாவின் மூடிய புண்டை இதழ்கள் திறக்கவே இல்லை. கேட்பார் இல்லாத புறம்போக்கு நிலத்தில் புல் மண்டுவதை போலவே, ஆளப்படாத கிருபாவின் விலை நிலத்திலும் கரும் புல்கள், காடாக வளர்ந்தன..!! நாட்கள் ஊர்ந்து ஊர்ந்து போவது போல கிருபாவுக்கு இருந்தது. “எப்போது ஒரு வருடம் முடியும்..? குமரன் எப்போது வருவான். நாமும் பாரின் போய், விட்ட ஓலை பிடிக்க வேண்டும்..!!” என்று எண்ணி, எண்ணி, நாட்களை கடத்தி வந்தாள். மனதுக்கு தெரியும் இன்னும் ஒரு வருடத்தில் அங்கு போய்விடுவோம், பின் ஓலை தொடர்வோம் என்று..!! ஆனால் பாழாப்போன புண்டைக்கு தெரியவில்லை..!! கணவன் தோகா போனால் என்ன, அல்லது கோவா போனால் என்ன..? எனக்கு வேண்டியது கிடைக்க வேண்டும்..!! என்று பிடிவாதம் பிடித்தது. ஆனாலும் கிருபா கழ்டபட்டு சமாளித்து வந்தாள். “அனுகூல சத்ருக்கள்” என்று சிலர் உண்டு. அவர்கள் நமக்கு நல்லது பண்ணுகிறோம், ஆறுதல் சொல்கிறோம் என்று எண்ணி, எதை எதையோ பண்ணி, இன்னும் வேதனையை கிளப்பி விட்டு போய் விடுவார்கள். அப்டியே தான் கிருபாவின் உறவினர் வனஜா அத்தை வந்தாள். ரெண்டு நாள் தங்கி இருந்தாள். “ஏன்டி இப்படி தனியாக தவித்த போறே..? நீயும் எப்படியோ போக வேண்டியது தானே..!! இல்லை. நம் ஊரில் இல்லாத வேலையா..? சரி.. சரி.. உனக்கு கையில் ஒரு குழந்தை இருந்தால் கூட தெரியாது. ராத்திரியில் உன்னால் எப்பிடி தனியாக இருக்க முடியும்..? இந்த வயசிலும் கூட நான் உங்க அத்திம்பேரை விட்டு பிரியவே மாட்டேன்..!!” என்று சொல்லி, தணிந்து இருந்த கிருபாவின் புண்டையை கிளப்பி விட்டு போய்விட்டாள். ஆனால் ஒன்று மட்டும் சூசகமாக சொல்லி விட்டு போனாள். “அந்த காலம் மாரி இல்லைடி. இப்பெல்லாம் என்ன என்னவோ வசதிகள் இருக்கு..!! இன்டர்நெட்டில் எல்லாம் கிடைக்கிறதாம். அதை பார்த்து சந்தோஷப்பட்டுக்கொள்..!!” என்று சொல்லி விட்டு போய் விட்டாள். அன்று முதல் கிருபா அன்லிமிடெட் இன்டர்நெட்டுக்கு அப்பளை பண்ணி, நெட்டில் பலான படங்களை தனியே வீட்டில் துணி இல்லாமல் பார்த்து, பார்க்கும் போதே கையை விட்டு குடைந்து காலத்தை ஒட்டி கொண்டு இருந்தாள். முன்பின் தெரியாத யாரோ இருவர் நெட்டில் ஓப்பதை பார்க்கா விட்டால், முடியாது என்ற நிலைக்கு வந்து விட்டாள். அப்போது இரு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஒரு முறை தன் உறவினர் வீட்டுக்கு போனாள். அவர்கள் இருந்தது மாடியில். கீழே வீட்டு ஓனர் இருந்தார். அப்போது உறவினர் அவசர வேலையாக வெளியூர் போக, கிருபாவை வீட்டில் வைத்து விட்டு, அவர்கள் ரெண்டு நாள் வெளியூர் போனார்கள். அன்று கீழே வீட்டு ஓனர் வீட்டிலும் யாரும் இல்லாதது போல இருந்தது. அப்போது ஏதோ சத்தம் கேட்க போக கீழ இறங்கினாள். வாசல் கதவு உள்பக்கம் சாத்தி இருந்தது. உள்ளே ஏதோ சத்தம் கேட்டது. இவளுக்கும் பருவ வயசு தானே..!! உள்ளே நடப்பதை மோப்பம் பிடித்தாள். இவளுக்கு வசதியாக வீட்டுக்கு உள்ளே இருக்கும் மாடிப்படி இடுக்கு வழியாக எட்டி பார்த்தாள். அங்கே வீட்டுக்கார மாமியின் மருமகள் நிர்வாணமாக படுத்து தன் புண்டையை குடைந்து கொண்டு, “ஆஹ்ஹ்ஹா..!!” என்று கத்தி கொண்டு இருந்தாள். கிருபாவின் சொந்தக்கார மாமி சொல்லி இருக்கிறாள். “அவளும் உன்னை மாதிரி கணவனை விட்டு பிரிந்து இருக்கிறாள். இன்னும் மூனே மாதத்தில் கணவன் ஊருக்கு போய்விடுவாள்..!!” என்று..!! காய்ந்து போய் இருக்கும் ஒருத்தி, இன்னொரு பெண் நிர்வாணமாக படுத்து புண்டையை விரல் விட்டு குடைவதை பார்த்தவுடன், பார்த்தவள் புண்டை என்ன பாடுபடும்..? கிருபாவின் புண்டையும் பூரித்தது. என்ன நடக்கிறது என்று பார்க்க வேண்டும் என்ற ஆவலும் கூடியது. அடுத்த ரெண்டு நிமிடத்தில் ஒருவன் அங்கே வந்தான். அவன் உடம்பிலும் துணி இல்லை. இன்று நமக்கு வேட்டைதான் என்று எண்ணிமகிழ்ந்து புண்டையில் கை வைத்துகொண்டு, மாடிப்படி கைப்பிடி சுவருடன் தன் கை புண்டையை அமுக்கி கொண்டு உள்ளே என்ன நடக்கிறது என்று பார்த்தாள். வந்தவன் உடனே காரியத்தில் இறங்கினான். அவன் வரும்போது, புழுத்தி கொண்டு இருக்கும் அவன் கருப்பு பூளை பார்த்தாள். அவன் தன் பெரிய பூளை அந்த பெண் புண்டையில் சொருகினான். அவள், “மெதுவா..!!” என்று முனகினாள். அவள் சொன்னதை காதில் வாங்கிய மாதிரி காட்டிகொள்ளாமல், குத்து குத்து என்று அவள் புண்டையில் குத்தி கொண்டு இருந்தான். அப்போது, “அம்மா..” என்றான். அப்புரம் தான் தெரிந்தது அவன் கஞ்சி அவுட் என்று..!! வீட்டுக்கார மாமியின் மருமகள், “இன்னும் கொஞ்சம் பண்ணு..!!” என்றாள். அவன் மீண்டும் ஒரு முறை அவளை ஏறினான். இந்த முறை அவனுக்கு விந்து வெளியேற நாழி ஆனது. கிருபா சத்தம் போடாமல் மாடிக்கு போனாள். வீட்டில் யாரும் இல்லை. புண்டையை அடக்க முடியவில்லை..!! துணிகளை தூக்கி போட்டு விட்டு, ஒரு முள்ளங்கியை எடுத்து தன் கூதியில் குத்தி சூட்டை ஒரு மாதிரி தனித்து கொண்டாள். உறவினர் வந்ததும் கோவை திரும்பி வந்தாள். ஆனால் அந்த காட்சி அவள் மனதைவிட்டு போகவே இல்லை. நெட்டில் படம் பார்க்கும் போது கூட, அந்த வீட்டுக்கார மாமியின் மருமகள் ஓத்ததும், அவனின் கரும் பூளுமே திரும்ப திரும்ப எண்ணத்தில் வந்து கொண்டு இருந்தது. நெட்டில் ஓப்பவர்களை பார்த்துகொண்டு, தான் பார்த்த நேர் ஓளை மீண்டும் நினைவுபடுத்தி, தன் புண்டையை குடைந்து கொள்ளுவாள். அதுவே நாள் தோறும் பண்ணும் வழக்கமாகி விட்டது. அப்போது கூட அந்த வீட்டுக்கார மாமியின் மருமகள் போல வேறு ஆள் மூலம் ஓத்து, தன் கூதியை தணிக்க வேண்டும் என்று கிருபா எண்ணியது இல்லை. ஒரு நாள் கிருபா தன் தோழி ஒருத்தியை பார்க்க போனாள். அவள் கணவன் ஒரு மாதம் ட்ரைனிங் போய் இருக்கிறான். ஒரு நாள் வீட்டுக்கு வா என்று அழைத்து இருந்தாள். கிருபா ஏனோ போன் பண்ணாமல் அவள் வீட்டுக்கு போய்விட்டாள். வாசல் காம்பவுண்ட் கேட்டை திறந்து உள்ளே போனாள். ஆனால் கதவு சாத்தி இருந்தது. காலிங் பெல்லை அடித்தாள். ரெஸ்பான்ஸ் ஒன்றும் இல்லை. “இன்னும் கொஞ்ச நேரம் இருக்கலாமா..? அல்லது வீட்டுக்கே திரும்ப போகலாமா..?” என்று யோதித்தாள். அப்போது உள்ளே ஏதோ பாத்திரம் விழும் சத்தம் கேட்டது. “சரி பின் பக்கமாக போய் பார்க்கலாம்..!!” என்று பின் பக்கம் கிணற்று பக்கம் போனாள். பின் பக்க கதவும் மூடி இருந்தது. பெட்ரூமின் மூணாவது ஜன்னல் மூடிய படி இருந்தது. ஆனால் கொஞ்சம் இடைவெளி தெரிந்தது. கிருபா அந்த ஜன்னல் அருகில் இருக்கும் ஒரு பெரிய செடியின் அடியில் ஒக்காந்து மெதுவாக ஜன்னல் வழியே உள்ளே பார்த்தாள். உடனே ஷாக் ஆனாள். தன் பிரென்ட் ஸ்ரீப்ரியா நின்று கொண்டு தன் புடவையை அவிழ்த்துக்கொண்டு இருந்தாள். கிருபா, “சரி, தன் பிரென்ட் புடவை மாற்றி கொள்கிறாள்..!!” என்று நினைத்தாள். ஆனால் ஸ்ரீப்ரியா அடுத்து ஜாக்கெட், பிராவையும் அவிழ்த்து தூக்கி போட்டாள். இவளுக்கு சந்தேகம் வந்தது. அடுத்து அந்த கருப்பு நிற பாவாடையை தலை வழியாக கழட்டி, இப்போது நிர்வாணமாக நின்று கொண்டு இருந்தாள். கிருபாவை விட பெரிய முளைகள் அவளுக்கு. கீழே புண்டை சுத்தமாக மழிக்க பட்டு பள பள என்று இருந்தது. ஒப்பியும் இருந்தது. அடுத்த நொடியே ஒருவன் வந்தான். அவனை எங்கேயோ பார்த்த மாதிரி இருந்தது. வந்தவன் லுங்கியுடன் இருந்தான். கிருபா அவனை உற்று பார்த்தாள். வந்தவன் ஸ்ரீப்ரியாவின் முன்னாள் காதலன் என்று புரிந்தது. “புண்டை அரிப்பு தாங்க முடியாமல், முன்னாள் காதலனை விட்டு ஓக்க சொல்லி இருக்கிறாள் போல இருக்கு..!!” என்று புரிந்து கொண்டாள். அவ்வளவு தான் ஸ்ரீப்ரியாவை கீழே படுக்க வைத்து அவள் முன்னாள் காதலன் ஸ்ரீப்ரியாவின் புண்டைக்குள் தன் பூளை இறக்கி ஓத்தான். அவள் முன்னாள் காதலனின் முதுகு மட்டும் கிளியராக தெரிந்தது. அப்போது ஸ்ரீப்ரியாவின் புண்டையும் தெரிந்தது. ஒருவாறு ஓத்து அவன் இறங்கினான். அப்போது ஸ்ரீப்ரியாவின் புண்டை நன்றாக தெரிந்தது. அவள் கசினின் கஞ்சி புண்டைக்கு வெளியே வழிந்து இருந்தது. புண்டையில் கொஞ்சம் கூட முடி இல்லாததால், அப்பட்டமாக அந்த வெள்ளை கஞ்சி தெரிந்தது. பின்னர் மீண்டும் ஒரு முறை ஓத்தார்கள். பின் கிருபா மெதுவா அந்த இடத்தை விட்டு கிளம்பி வீட்டுக்கு வந்து விட்டாள். தன் உறவினர் வீட்டில் அந்த வீட்டு ஓனர் மருமகள், புண்டை அரிப்பு தாங்க முடியாமல் ஒருவனை கூப்பிட்டு ஓக்க சொல்கிறாள். தன் பிரென்ட் ஸ்ரீ ப்ரியாவோ, தன் முன்னாள் காதலனை விட்டு புண்டையில் தூர் வார சொல்கிறாள். அப்படி இருந்தும், கிருபா பொறுமையாக தானும் வேறு ஒருவனை நாடாமல், கணவன் வரும் வரை, விரல்கள், காய்கறிகளை வைத்துக்கொண்டே, நெட்டில் பலான படங்கள் பார்த்துக்கொண்டே தன் புண்டையை அடக்கி ஆண்டாள். ஒரு வருடம் முடிந்து அவள் கணவன் வந்த அன்றே, அவர்கள் இரவு நாலு முறை ஓத்தார்கள். நாலாவது முறை ஓக்கும்போது கோழி கூவியது என்று சொல்லவும் வேண்டுமோ..? என்னதான் புண்டை அரித்தாலும், கிருபா மரம் நட்டவன் தண்ணி பாச்சுவான் என்ற அசராத நம்பிக்கையில் இருந்தாள். அவள் நம்பிக்கை வீண் போகவில்லை. அவர்கள் அடுத்த ஒரு வாரத்துக்கு, பகல் இரவு பார்க்காமல், ஒரு வருடம் ஓக்காமல் இருந்ததை பூர்த்தி பண்ணி கொண்டார்கள். Tags: Ilam Pengal Kamakathaikal, Kamaveri Pengal Kathai, Kamaveri Pengal Kathai Tamil, Kiramathau Pengal Kamakathaikal, Tamil Girls Sex Stories, Tamil Kamakathaikal, Tamil Pengal Koothi Kathaigal, Tamil Pengal Nirvana Padangal, Tamil Pengal Ool Kathaigal, Tamil Pengal Otha Kathai, Tamil Pengal Pundai Kathaigal, Tamil Pengal Pundai Otha Kathaigal, Tamil Thiruttu Ool Kathaigal, Tamil Village Girls Kamakathaikal, Tamil Village Pengal Kamakathai
தற்போது நடைபெற்று வருகின்ற க.பொ.த (உயர்தர) உயிரியல் பாட வினாத்தாளில் தமிழ்மொழி மூல மாணவருக்கு பாரிய அநீதி இழைக்கப்பட்டுள்ளது. பரீட்சைத் திணைக்களம் இதற்கான பரிகாரங்களைக் காண வேண்டும் என திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் கோரிக்கை விடுத்துள்ளார். இது விடயமாக அவர் மேலும் குறிப்பிடும் போது, உயிரியல் பாட முதலாம் பகுதி வினாத்தாளின் தமிழ் மொழி பெயர்ப்பில் பாரிய குறைபாடுகள் இருந்ததால் மாணவர்களால் சரியான விடையெழுத முடியாத நிலையேற்பட்டதாக முன்னாள் பிரதம பரீட்சகர் ஒருவரை மேற்கோள் காட்டி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உயர்தரப் பரீட்சையைப் பொருத்தவரை அது மாணவர்களின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கின்ற பரீட்சையாகும். எனவே, இப்பரீட்சை வினாத்தாள்கள் மயக்க நிலையிலன்றி தெளிவாக விளங்கிக் கொள்ள கூடியதாக இருக்க வேண்டும். அப்போது தான் மாணவர்களால் வினாவுக்கேற்ற விடைகளை எழுத முடியும். அவர்கள் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் கல்வி கற்றதற்கான பிரதிபலனை அடைய முடியும். இந்த வருட உயிரியல் வினாத்தாளின் பல வினாக்களின் மொழிபெயர்ப்பு பிழை காரணமாக மாணவர்களால் தெளிவாக விடையைத் தீர்மானிக்க முடியாத நிலையேற்பட்டதாகவும், இதனால் பல மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இது தமிழ் மொழி மூல மாணவருக்கு இழைக்கப்பட்ட பாரிய அநீதியாகும். இது அவர்களது பல்கலைக்கழகத் தெரிவில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த அநீதி கழையப்பட வேண்டும். பரீட்சைத் திணைக்களம் இந்த விடயத்தைக் கவனத்தில் கொண்டு உரிய பரிகாரம் காணப்படுவதை உறுதிப் படுத்த வேண்டும். அல்லது இந்தப் பரீட்சையை இரத்துச் செய்து மீள் பரீட்சை நடத்தப்பட வேண்டும். ஒரு பரீட்சையைக் கூட சரியாக நடத்த முயடியாத அளவுக்கு இந்த அரசு மிகவும். பலவீனமடைந்துள்ளது. பொருளாதார ரீதியாக மக்களை கஷ்டத்தில் தள்ளி அன்றாட உணவுக்கு அல்லல் படும் நிலையையேற்படுத்தியுள்ள இந்த அரசு இப்போது மாணவர்களின் எதிர்காலத்திலும் கைவைக்க ஆரம்பித்துள்ளது. ஜனநாயகத்தை நேசிப்போரால் இதனை அனுமதிக்க முடியாது. தமிழ் பேசும் மக்களுக்கு நன்மைகள் பல செய்வதாகக் கூறி அவர்களின் வாக்குகளைப் பெற்று பாராளுமன்றம் வந்து இந்த அரசோடு ஒட்டிக் கொண்டிருக்கின்ற தமிழ், முஸ்லிம் எம்.பிக்கள் தமிழ்மொழி மூல மாணவர்களுக்கு இழைக்கப்பட்டுள்ள இந்த அநீதி குறித்து வாய்மூடி மௌனமாக இருப்பது குறித்து நான் மிகவும் கவலையடைகின்றேன். தமிழ் மொழி மூல மாணவருக்கு இழைக்கப்பட்டுள்ள இந்தப் பாரிய அநீதி குறித்து அவர்கள் கவனம் செலுத்தாது இருப்பது குறித்து நான் ஆச்சரியமடைகின்றேன். இது போன்ற விடயங்களில் தீர்வு பெற்றுத்தராத இவர்கள் இந்த அரசிடம் இருந்து தமிழ் பேசும் மக்களுக்கு என்ன தீர்வைப் பெற்றுத் தரப்போகின்றார்கள் என்று கேட்க விரும்புகின்றேன். எனவே, மக்களுக்கும் மாணவர்களுக்கும் அநீதி இழைக்கும் இந்த அரசாங்கத்தையும், தமிழ் பேசும் மக்களின் வாக்குகளைப் பெற்று அவர்களது உரிமைசார்ந்த விடயத்தில் கவனம் செலுத்தாது மௌனமாக இருக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களையும் வீட்டுக்கு அனுப்ப வேண்டிய காலம் வந்து விட்டது. அதற்கு மக்கள் தயாராக வேண்டும். மக்களுக்காக அவர்களின் கஷ்டங்களுக்காக குரல் கொடுக்கும் எம்மோடு இணைய வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
உலகத்தில் உள்ள மக்கள் பரவலாக பயன்படுத்தப்படும் குறுந்தகவல் பகிரும் செயலியாக வாட்ஸ்அப் செயலி இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. குறித்த செயலியின் எளிமையான அம்சங்கள் வாட்ஸ்அப்பை அனைத்தும் விதமான மக்களும் விரும்பும் வகையில் மாற்றியுள்ளது. வாட்ஸ்அப் செயலியில் குறுந்தகவல் தவிர புகைப்படங்கள், வீடியோக்கள் ஆகியவற்றையும் அனுப்பும் வசதியும் உள்ளது. வாட்ஸ்அப் செயலில் இதுவரையில் நாம் அனுப்பும் புகைப்படங்கள், டேட்டாவை குறைப்பதற்காக குறித்த புகைப்பத்தின் தரத்தினை தானாகவே குறைந்த தரத்திற்கு கம்பரஸ் செய்தே அனுப்பப்படும். அதிக தரம் கொண்ட புகைப்படங்களை அனுப்ப வேண்டும் என்றால் அவற்றை நாம் வாட்ஸ்எப் டாக்குமெண்டாக அனுப்ப வேண்டும். அவ்வாறு நாம் புகைப்படத்தினை அனுப்பும் போது அவற்றில் பெயர் மட்டுமே காட்டப்படும். அதை தரவிறக்கம் செய்தால் மட்டுமே அது என்ன புகைப்படம் என நமக்கு தெரிய வரும். இதனை தவிர்ப்பதற்காக வாட்ஸ்அப் நிறுவனம் புதிய “ப்ரிவீவ்” என்ற அம்சத்தை அறிமுகம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த அம்சம் அறிமுகத்தின் மூலம் நாம் டாகுமெண்ட்டை அனுப்பும்போது அதன் குறைந்த தரத்திலான பிரிவீவ் படத்தையும் அனுப்ப இயலும், இதன்மூலம் குறித்த டாக்குமெண்ட் எதை பற்றியது என்பதை இலகுவாக தெரிந்து கொள்ள முடியும். குறித்த புதிய அம்சத்தை புகைப்படங்கள் மட்டுமின்றி அனைத்து டாக்குமெண்டுகளுக்கும் பயன்படுத்தலாம் என கூறப்பட்டுள்ளது. மேலும் வாட்ஸ் அப்பில் லிங்க்கை பகிரும் போதும் இந்த ப்ரிவீவ் அம்சம் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நம் தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் புது புது மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து கள்ளகுறிச்சி தனியாகப் பிரிந்து தனி மாவட்டமாக காணப்படுகிறது. இதுபோன்று தமிழ்நாட்டிலுள்ள பல மாவட்டங்கள் பிரிந்து புதிய மாவட்டங்களாக உதயம் ஆகின்றன. இந்நிலையில் தமிழ்நாட்டில் மொத்தம் மூன்று மண்டலங்கள் உள்ளன. இந்த மண்டலம் என்பது ஐந்துக்கும் மேற்பட்ட மாவட்டங்களை உள்ளடக்கியதாக காணப்படும். இந்த நிலையில் நம் தமிழகத்தில் தற்போது புதிதாக மேலும் ஒரு மண்டலம் உதயமாகி உள்ளது. இவை கோவையை மையமாகக் கொண்டு உருவாக்கியுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு அரசானை வெளியிட்டுள்ளது. அதன்படி பொதுப்பணித் துறையில் புதிதாக கோவை மண்டலம் இன்று உதயமாகி உள்ளதாக தமிழ்நாடு அரசு ஆணை வெளியிட்டுள்ளது. சென்னை, திருச்சி மண்டலங்களை சீரமைத்து கோவையை தலைமையிடமாக கொண்டு புதிய மண்டலம் உருவாகி உள்ளது. இவை கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம்,நாமக்கல் உள்ளிட்ட 9 மாவட்டங்களை உள்ளடக்கிய புதிய மண்டலம் ஆகும். கோவை பொதுப்பணித்துறை மண்டலத்தில் பணியாற்ற புதிய பணியிடங்களையும் உருவாக்கி அரசு ஆணை இன்று வெளியாகியுள்ளது. Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
கோதுமை மா உற்பத்தி மற்றும் இறக்குமதியாளர்கள் இந்த வாரம் நுகர்வோர் விவகார அதிகார சபைக்கு அழைக்கப்பட்டுள்ளனர். கோதுமை மா விலை தொடர்பில் கலந்துரையாடுவதற்காக அவர்கள் இவ்வாறு அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த முதலாம் திகதி முதல் சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரி அமுலுக்கு வந்துள்ளதால், கோதுமை மாவின் விலையை மேலும் அதிகரிப்பதற்கு கோதுமை மா நிறுவனங்கள் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் குறிப்பிடுகின்றன. கோதுமை மாவின் புதிய விலை தொடர்பான அறிவிப்பை இன்றைய தினம் வெளியிடவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. எவ்வாறாயினும், நுகர்வோர் விவகார அதிகார சபையுடனான இந்த வார கலந்துரையாடலில், கோதுமை மா விலை எவ்வாறு நிர்ணயிக்கப்படுகிறது என்பது குறித்த தகவல்கள், நிறுவனங்களிடம் இருந்து பெறப்படும் என வர்த்தக, மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இதேவேளை, கோதுமை விதைகளை இறக்குமதி செய்து இலங்கையில் பயிரிட அரசாங்கம் முன்;வந்தால், கோதுமை மாவை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியமில்லை என, சட்டத்தரணி டிஷான் தர்மசேன தெரிவித்துள்ளார். Videos play பிம்ஷானியை அவரது பதவியில் இருந்து நீக்க முயற்சிக்கும் பொலிஸ் மா அதிபரின் வெள்ளை மற்றும் கருப்பு மகன்கள்!
அனிமேஷன் திரைப்படங்களுக்கு வயது வித்தியாசம் இன்றி எல்லாத் தரப்பிலிருந்தும் ரசிகர்கள் உண்டு. முன்னணி ஹாலிவுட் இயக்குநர்களான ஸ்டீவன் ஸ்பீல்பெர்க், ஜேம்ஸ் கேமரோன் தொடங்கி பாலிவுட்டின் முக்கிய இயக்குநரான அனுராக் காஷ்யப் வரை பலரும் அனிமேஷன் திரைப்படங்களை இயக்கியிருக்கிறார்கள். மிக்கி மெளஸ், பாப் ஐ தொடங்கி மோட்டு - பத்லு வரை எண்ணற்ற அனிமேஷன் கதாபாத்திரங்கள் அந்தந்தக் காலகட்டத்தைச் சேர்ந்த சிறார்களின் வாழ்க்கையில் ரசனையையும் நகைச்சுவை உணர்வையும் விதைத்தவை. உண்மையில், வழக்கமான திரைப்படங்களின் வரலாறு தொடங்குவதற்கு முன்பே அனிமேஷன் வரலாறு தொடங்கிவிட்டது. ஆம்! 1895 டிசம்பர் 28-ல் லூமியர் சகோதரர்கள் காட்சிப்படுத்திய திரைப்படக் காட்சித் தொகுப்புகளுக்கு முன்னதாக, 1892-லேயே அனிமேஷன் படங்கள் ரசிகர்களை ஈர்க்கத் தொடங்கிவிட்டன. வரைகலை, வியக்கவைக்கும் தொழில்நுட்பம் ஆகியவற்றின் துணையுடன் அதைச் சாத்தியமாக்கியவர் சார்லஸ் எமிலி ரெனாட். 1844 டிசம்பர் 8-ல் பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் அருகில் உள்ள மோன்ட்ரயில் சோஸ் போய்ஸ் எனும் நகரில் பிறந்தவர் ரெனாட். அவரது தந்தை புரூட்டஸ் ரெனாட் ஓர் இன்ஜினியர். தாய் மேரி ஆசிரியையாகப் பணியாற்றிவந்தார். ரெனாடை வளர்ப்பதற்காகப் பணியிலிருந்து விலகிய மேரி, தனது மகனுக்கு ஓவியக் கலையைப் பயிற்றுவித்தார். தந்தை சின்னச் சின்ன நீராவி இன்ஜின்களை உருவாக்க கற்றுக்கொடுத்தார். இப்படி கலையையும் தொழில்நுட்பத்தையும் கற்றறிந்த ரெனாட், பின்னாட்களில் ஒரு புகைப்படக் கலைஞராக உருவெடுத்தார். அத்துடன், இயற்பியலறிஞரும் கத்தோலிக்கப் பாதிரியாருமான அப்பே மோய்க்னோவின் உதவியாளராகப் பணியாற்றிவந்தார். பாரிஸ் நகரில் மேஜிக் லேன்ட(ர்)ன் என அழைக்கப்பட்ட ப்ரொஜக்டரை வைத்து உரையாற்றும் வழக்கம் கொண்டிருந்த அப்பே மோய்க்னோ இரண்டு முக்கிய விஷயங்களைச் செய்தார். மதப் பின்னணி இல்லாமல் பெற்றோரால் வளர்க்கப்பட்ட ரெனாடை கத்தோலிக்கக் கிறித்துவராக மாற்றினார். ப்ரொஜெக்டர்கள் மூலம் புகைப்படங்களைத் திரையில் காட்டும் கலையையும் அவருக்குக் கற்றுத்தந்தார். சார்லஸ் எமிலி ரெனாட் பின்னாட்களில் ரெனாடும் அறிவியல் தொடர்பான உரைகளை மேஜிக் லேன்ட(ர்)ன் புரொஜக்டர்களின் துணையுடன் மாணவர்கள், பொதுமக்கள் மத்தியில் நிகழ்த்திவந்தார். அந்தக் காலகட்டத்தில் ’லா நேச்சர்’ எனும் அறிவியல் இதழில் ‘ஆப்டிக்கல் டாய்ஸ்’ (உருவங்களைத் திரையில் காட்ட பயன்படுத்தப்பட்ட சாதனம்) தொடர்பாக வெளியான கட்டுரைகள் அவரது கவனத்தை ஈர்த்தன. அவற்றை அடிப்படையாகக் கொண்டு, 1876-ல் பிராக்ஸினாஸ்கோப் எனும் கருவியை அவர் உருவாக்கினார். அதற்கான காப்புரிமையையும் பெற்றார். பின்னர் அந்தக் கருவியை மேம்படுத்தி ‘தியேட்டர் ஆப்டிக்’ எனும் சாதனத்தை 1888-ல் உருவாக்கினார். உண்மையில் அந்த சாதனத்தை விற்கவே ஆரம்பத்தில் அவர் விரும்பினார். எனினும், அந்த முயற்சி கைகூடாததால் அவரை அதை வைத்து திரையிடல்களை நடத்த முடிவெடுத்தார். அதுதான் உருவங்களைத் தொடர்ச்சியாகத் திரையில் விழவைத்து, அசைவுகளுடன் கூடிய சித்திரங்களாகக் காட்சிப்படுத்திய சாதனமாக அமைந்தது. இதற்கு முன்னரும் பலர் இதுபோன்ற முயற்சிகளைச் செய்திருந்தாலும் ரெனாடின் சாதனம், எந்தத் தடங்கலும் இல்லாத வகையில் அனிமேஷன் அசைவுகளை உருவாக்கியது. 1892 அக்டோபர் 28-ல் பாரிஸின் மியூஸி க்ரெவின் எனும் கலையரங்கில் முதன்முறையாகத் தனது அனிமேஷன் படங்களைத் திரையிட்டார். சொல்லப்போனால், அப்போது வசனம், பாடல்கள், பின்னணி இசை போன்ற அம்சங்களையும் அந்தப் படங்களில் அவர் சேர்த்து வழங்கினார். வெறுமனே கதாபாத்திரங்கள் மட்டும் அல்ல; கட்டிடங்கள், பூங்காக்கள் என கதை நடக்கும் இடங்கள் பின்னணியில் ஒரு லேயரில் இருக்கும். இதற்காக, இன்று ப்ளூ மேட், கிரீன் மேட் பயன்படுத்தப்படுவதுபோல, கறுப்பு காகிதத்தில் கதாபாத்திரங்களை வரைந்தார். கதாபாத்திரங்கள் முதன்மை லேயரில் அசைவுகளுடன் காட்டப்படும். காஸ்டன் பாலின் எனும் இசைக்கலைஞர் பியானோ வாசிக்க, ரெனாடின் உதவியாளர்கள் இருவர் அனிமேஷன் கதாபாத்திரங்களுக்கு ‘டப்பிங்’ கொடுத்தனர். வெறுமனே ப்ரொஜெக்ட் செய்யும் பணியல்ல இது. அந்த சாதனத்தை இயக்கும் முழுப் பொறுப்பும் ரெனாடைச் சார்ந்தது. எனவே, ஒவ்வொரு காட்சிக்கும் அவர் தனது உடல் உழைப்பையும் செலுத்த வேண்டியிருந்தது. அவரது இந்த அபார முயற்சிக்குப் பலன் கிடைக்கவே செய்தது. ரசிகர்கள் ஏராளமாகக் குவிந்தனர். சில வினாடிகளே ஓடும் அந்தக் குறும்படங்களை ரசித்தார்கள். தினமும் ஐந்து காட்சிகளாக அனிமேஷன் படங்கள் திரையிடப்பட்டன. எனினும், 1895-ல் லூமியர் சகோதரர்களின் திரைப்படங்களின் வருகை ‘தியேட்டர் ஆப்டிக்’ தொழில்நுட்பத்தை வழக்கொழிந்ததாக ஆக்கியது. ஏற்கெனவே, மியூஸி க்ரெவின் அரங்குடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தின் மூலம் ரெனாடுக்குக் கிடைத்துவந்த தொகை குறைவுதான். கேமராவைப் பயன்படுத்தி எடுக்கப்பட்ட, நிஜ மனிதர்கள் தோன்றும் திரைப்படங்களின் வருகையால், அவரது அனிமேஷன் படங்களுக்கான வரவேற்பு குறைந்தது. எல்லா முன்னோடிகளையும் போலவே வறுமையில் வாடிய ரெனாட், தனது கலை மக்களால் மறக்கப்பட்டுவிட்டதை எண்ணி வேதனையில் ஆழ்ந்தார். தன்னிடம் மிச்சம் இருந்த சில அனிமேஷன் படங்களை செய்ன் ஆற்றில் தூக்கி எறிந்தார். அந்த ஆற்றின் கரையில் அமைந்திருந்த மருத்துவப் பராமரிப்பு இல்லம் ஒன்றில் இறுதிநாட்களைக் கழித்த ரெனாட், 1917 மார்ச் மாதம் மரணமடைந்தார். அவரது தொழில்நுட்பத்தை சினிமா தொழில்நுட்பமாக அங்கீகரிக்க நவீனத் திரையுலகம் மறுத்துவிட்டது. எனினும், திரைப்படங்களுக்கான தொடக்கப்புள்ளியாக இருந்தது அவரது ‘தியேட்டர் ஆப்டிக்’ தான் எனப் பின்னாட்களில் பலரும் ஒப்புக்கொண்டனர். அவர் உருவாக்கிய சில அனிமேஷன் படங்கள் இன்றைக்கு யூடியூபிலும் பார்க்கக் கிடைக்கின்றன. ரெனாடின் அனிமேஷன் படங்கள் முதன்முதலில் திரையிடப்பட்ட அக்டோபர் 28-ம் தேதியை, சர்வதேச அனிமேஷன் தினமாக சர்வதேச அனிமேஷன் திரைப்பட சங்கம் கொண்டாடுகிறது. இந்நிகழ்வின்போது உலமெங்கும் தயாரிக்கப்பட்ட அனிமேஷன் திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன. அனிமேஷன் கலை குறித்த பயிலரங்குகளும் நடத்தப்படுகின்றன. இன்றைக்கு இருபரிமாணம் (2டி), முப்பரிமாணம் (3டி), ஸ்டாப் மோஷன் என ஏராளமான தொழில்நுட்பங்கள் புழக்கத்தில் இருக்கின்றன. ஆனால், 130 ஆண்டுகளுக்கு முன்னர் தனது அபாரக் கற்பனை வளத்தாலும், தொழில்நுட்பத் திறனாலும், அயராத உழைப்பாலும் அனிமேஷன் படங்களுக்குத் தொடக்கப் புள்ளி வைத்தார் ரெனாட். அற்புதங்கள் மனிதர்கள் மூலம்தானே நிகழ்கின்றன!
இறைவனைப் பற்றிய அறிவு அல்லது ஞானம் எங்கு கிடைக்கும், அதை எப்படி அடைவது என்ற கவலை ஒருவனுக்கு ஏற்படுமேயானால், அவன் கவலையின் அளவுக்கேற்ப தேட்டமும் அவனது தேட்டத்தின் அளவுக்கேற்ப அவனுக்கு ஞானமும் கிடைக்கிறது குழப்பவாதிகளே ! உங்களது குழப்பங்களை வெளியில் வைத்துவிட்டு என்னிடத்தில் வாருங்கள். மனிதர்களை புனிதர்களாக மாற்றும் ‘கீமியா’ என்னும் ரசவாத வித்தை என்னிடமுள்ளது. அல்லாஹ்வின் சன்னிதானத்தில் நீங்கள் ஜெயமடையும் பொருட்டு என் வார்த்தைகளை நம்புங்கள். இறைநேசம் என்பது ஆண்டவனைப் பற்றிய அறிவை ஆதாரமாகக் கொண்டதாகும். எனவேதான் எம்பெருமானார் (ஸல்) அவர்கள் ‘சீனாவில் இருப்பினும் அறிவைத் தேடி அடைந்து கொள்ளுங்கள்’ என்று கூறியிருக்கிறார்கள். அறிவைப் பொறுத்தது விசுவாசம். விசுவாசத்தைப் பொறுத்ததே நேசம். நல்லறிவாளர்களே! சிந்தித்துப் பாருங்கள்! உங்கள் அறிவைப் பயன்படுத்தி இறைவனை அணுகுங்கள். ஆண்டவனை அணுகுவதற்கு சுலபமான பாதை அவனை அடைந்தவர்களின் சகவாசத்தை நீங்கள் நாடித் தேடுவது கொண்டுதான்! மெய்யன்பர்களே ! அல்லாஹ்வின் நல்லடியார்களான இறைநேசர்களின் சகவாசத்தால் உங்களுக்கு ஏற்படும் பலன் இவ்வளவுதான் என்று வரையறுத்துக் கூறமுடியாது. ஹஜ்ரத் ஸாலிஹ் (அலை) அவர்கள் ‘ எவரொருவர் அல்லாஹ்வின் நல்லடியாரை நினைவு கூறுகிறாரோ அவர் மீது இறையருள் பொழியப்படுகிறது! உங்களுடைய முடிவு அவர்களுடைய முடிவைப்போல் ஆவதற்காக ஆண்டவனுடைய நல்லடியார்களை நினைவு கூர்ந்திடுங்கள்’
டேராடூன், மார்ச் 13 பாரதீய ஜனதா கட்சியைச் சேர்ந்தவரும், ருத் ராபூர் சட்டமன்ற தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமாகிய ராஜ்குமார் துக்ரால் என்பவர் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பெண்ணை ஜாதி ஆணவத்துடன் தாக்கியுள்ளார். தாழ்த்தப்பட்ட பெண்ணை பாஜக சட்டமன்ற உறுப்பினர் தாக்கிய காட்சிப் பதிவு சமூக ஊடகங்களில் பதிவேற்றப்பட்டு பரவியுள்ளது. காதலித்த பெண்ணுடன் இளைஞர் சென்றது தொடர் பான பிரச்சினையில் பாஜக சட்டமன்ற உறுப்பினர் துக் ரால் தன்னுடைய வீட்டில் இருதரப்பினரையும் அழைத்துப் பேசியுள்ளார். அப்போது, அவ் விளைஞரின் தாயை பாஜக சட்டமன்ற உறுப்பினர் துக்ரால் அடித்துள்ளார். அதனையடுத்து, அவ்விளைஞரின் தந்தை காவல் துறையில் பாஜக சட்டமன்ற உறுப்பினர் துக்ரால்மீது புகார் கொடுத்தார். அதனையடுத்து,வன்கொடு மைத் தடுப்புச் சட்டப் பிரிவு உள்படபல்வேறுபிரிவுகளின் கீழ் பாஜக சட்ட மன்ற உறுப்பி னர் ராஜ்குமார் துக்ரால் மற்றும் பாஜகவைச் சேர்ந்த மேலும் இருவர்மீதும் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். காவல் நிலையத்தில் புகார் அளித்தவர் தற்பொழுது, சில ரின் நெருக்குதலால் புகார் அளித்ததாகக்குறிப்பிட்டு அதைத் திரும்பப் பெறுவதாகக் கூறியுள்ளாராம். உத்தம்சிங் நகர் காவல்துறை மூத்த கண்காணிப்பாளர் சுதா னந்த் தத்தே கூறுகையில், Òபுகாரைத்திரும்பப்பெறு வதாகக்கூறினாலும்,வழக் குப் பதிவுசெய்யப்பட்டுள்ளதைய டுத்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்’’ என்றார். துக்ரால் இதுகுறித்து கூறு கையில், இது காங்கிரசு கட்சியின் சதிச்செயல் என்றும், தன்னு டைய வீட்டில் கண்காணிப்பு கேமரா பதிவைக் கொண்டு ஆராயலாம் என்றும் கூறினார். பாஜக சட்டமன்ற உறுப்பினர் துக்ரால்இப்பிரச்சினையில் 10 நாள்களுக்குள்ளாகவிளக்கம் அளிக்குமாறு கோரி மாநிலத் தலைவர் அஜய்பட் விளக் கம் கேட்டு நோட்டீஸ் அனுப் பியுள்ளார். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் ஓட்டுநர் ஒருவர் தன்னைத் தாக்கியதாக துக் ரால்மீது புகார் கொடுத்தார். தற்பொழுது தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பெண்ணைத் தாக்கியதாக அவர்மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது-.
பொழிப்பு (மு வரதராசன்): அருளை விரும்பி அறநெறியில் நின்றவன், பிறனுடைய பொருளை விரும்பிப் பொல்லாத குற்றங்களை எண்ணினால் கெடுவான். மணக்குடவர் உரை: அருளை விரும்பி யறனெறியிலே நின்றவனும் பொருளை விரும்பி அறனல்லாதவற்றைச் சூழக் கெடுவன், இஃது அருளுடையானுங் கெடுவனென்றது. பரிமேலழகர் உரை: அருள் வெஃகி ஆற்றின் கண் நின்றான் - அருளாகிய அறத்தை விரும்பி அதற்கு வழியாகிய இல்லறத்தின்கண் நின்றவன்; பொருள் வெஃகிப் பொல்லாத சூழக் கெடும் - பிறர் பொருளை அவாவி அதனை வருவிக்கும் குற்ற நெறிகளை எண்ணக் கெடும். (இல்லற நெறியில் அறிவு முதிர்ந்துழி அல்லது துறக்கப் படாமையின், அதனைத் துறவறத்திற்கு 'ஆறு' என்றார். கெடுதல்: இரண்டு அறமும் சேர இழத்தல். 'சூழ்ந்த துணையானே கெடும்' எனவே, செய்தால் கெடுதல் சொல்லாமையே பெறப்பட்டது.) சி இலக்குவனார் உரை: அருளை விரும்பி நல்வழியின்கண் நின்றவன், பிறர் பொருளை விரும்பி அதனை அடைய, பொல்லாத செயல்களை எண்ணிக் கெடுவான். பொருள்கோள் வரிஅமைப்பு: அருள்வெஃகி ஆற்றின்கண் நின்றான் பொருள்வெஃகிப் பொல்லாத சூழக் கெடும். பதவுரை: அருள்-அருள்; வெஃகி-விரும்பி, நாடி; ஆற்றின்கண்-நல்வழியில், அறநெறிக்கண்; நின்றான்-நின்றவன், நின்று வாழ்பவன்; பொருள்-(பிறர்)பொருள், சொத்து; வெஃகி-அவாவி, கவர விரும்பி; பொல்லாத-தீய, குற்றநெறிகள்; சூழ-நினைக்க, எண்ண; கெடும்-அழியும், கெட்டுப்போகும். அருள்வெஃகி ஆற்றின்கண் நின்றான்: இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்: மணக்குடவர்: அருளை விரும்பி யறனெறியிலே நின்றவனும்; பரிதி: முத்தியை விரும்பித் தன்மநெறியிலே நின்றார்; காலிங்கர்: தமது அறிவினால 'நமக்குவரும் இன்பம் துன்பம அனைவர்க்கும் ஒக்கும்' என்று அருளுவதோர் அருளினையே விரும்பி நூல் சொல்லுகின்ற வழிநின்றவர்; பரிமேலழகர்: அருளாகிய அறத்தை விரும்பி அதற்கு வழியாகிய இல்லறத்தின்கண் நின்றவன்; பரிமேலழகர் குறிப்புரை: இல்லற நெறியில் அறிவு முதிர்ந்துழி அல்லது துறக்கப் படாமையின், அதனைத் துறவறத்திற்கு 'ஆறு' என்றார். 'அருளை விரும்பி அறனெறியிலே/நூல் சொல்லுகின்ற வழி/இல்லறத்தின்கண் நின்றவன்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர். இன்றைய ஆசிரியர்கள் 'அருளை நாடி உரிய வழியில் நிற்பவன்', 'அருளை விரும்பி அதற்குரிய அறத்தில் நின்றவன்', 'கருணையை விரும்பி இல்லற ஒழுக்கத்தின் நெறி கடக்காமல் இருக்கவென்றே இல்வாழ்க்கை நடத்துகிறவன்', 'அருள் ஒழுக்கத்தை விரும்பி நன்னெறியில் நிற்கின்றவன்', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர். அருளை விரும்பி நல்வழியின்கண் நின்றவன் என்பது இப்பகுதியின் பொருள். பொருள்வெஃகி பொல்லாத சூழக் கெடும்: இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்: மணக்குடவர்: பொருளை விரும்பி அறனல்லாதவற்றைச் சூழக் கெடுவன். மணக்குடவர் குறிப்புரை: இஃது அருளுடையானுங் கெடுவனென்றது. பரிதி: பொன்னாசையை விரும்பி, மனத்தில் அழுக்குடையராகில் கெடுவார் என்றது. காலிங்கர்: முறைமையின்றிப் பிறனது பொருளை விரும்பி, மற்று அது காரணமாகப் பொல்லாதனவற்றை நினைப்பக் கெடுவர் என்றவாறு. பரிமேலழகர்: பிறர் பொருளை அவாவி அதனை வருவிக்கும் குற்ற நெறிகளை எண்ணக் கெடும். பரிமேலழகர் குறிப்புரை: கெடுதல்: இரண்டு அறமும் சேர இழத்தல். 'சூழ்ந்த துணையானே கெடும்' எனவே, செய்தால் கெடுதல் சொல்லாமையே பெறப்பட்டது. 'பொருளை விரும்பி குற்ற நெறிகளை எண்ணக் கெடும்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர். இன்றைய ஆசிரியர்கள் 'பிறர் பொருளைக் கவர நினைப்பின் கெடுவான்', 'பிறர் பொருளை விரும்பித் தீய நெறிகளை எண்ணுவானாயின் கெடுவான்', 'பொருளின் மேல் வைத்த ஆசையினால கெட்ட காரியங்களைச் செய்ய நினைப்பானாயின் இல்லறம் கெட்டுப் போகும்', 'பிறர் பொருளை விரும்பித் தீய வழிகளைப் பற்ற எண்ணுவானாயின், அவன் கெட்டு ஒழிவான்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர். பிறர் பொருளை விரும்பி அதைக் கவரப் பொல்லாத செயல்களை எண்ணக் கெடுவான் என்பது இப்பகுதியின் பொருள். நிறையுரை: அருள்வெஃகி நல்வழியின்கண் நின்றவன் பிறர் பொருளை விரும்பி அதைக் கவரப் பொல்லாத செயல்களை எண்ணக் கெடுவான் என்பது பாடலின் பொருள். 'அருள்வெஃகி ஆற்றின்கண் நின்றான்' யார்? பிறர்பொருளைக் கைக்கொள்ள விரும்புபவனுக்கு என்ன அருள்வாழ்வு கிடைக்கப்போகிறது? அருளை விரும்பி நன்னெறியில் ஒழுகுகின்றவன், பிறர் பொருளை விரும்பிக் குற்றமான செயல்களைச் செய்ய நினைத்தால், அவனது அருள்வாழ்வு பாழ்படும். முந்தைய குறளில் நுண்ணிய அறிவுடையவர்கள் பிறர்பொருளை நாடி அலையக் கூடாது என்று கூறப்பட்டது. இங்கு அருள் வேண்டி அறநெறியில் இருப்பவர்கள் பிறன்பொருள் வெஃகுதல் செய்யக் கூடாது எனச் சொல்லப்படுகிறது. பொருளில்லார்க்கு இவ்வுலகு இல்லை; அருளில்லார்க்கு அவ்வுலகு இல்லை. பொருள் அருள் என்னும் இரண்டும் நல்வாழ்வுக்குத் தேவையாகின்றன. அருளும் பொருளும் சேர்ந்த வாழ்வு இயலும்தான். ஆனால் அருள் தேடி நன்னெறியில் நிற்பவன், பிறர்பொருளைக் கவர விரும்பி, தீயன எண்ணினால் அழிவான். ஒழுக்க நெறியினை உலகிற்குணர்த்தும் அருளாளர்களும்கூடப் பிறர் பொருளை விரும்புதல் கூடும் என்பது உலகியல். பொதுவாக நன்னெறிக்கண் செல்ல விழைபவரும் பிற அறங்களைச் செய்பவருங்கூட ஓரோவழி பிறர் பொருள்மேல் விருப்பம் கொண்டு அதை அடையும் பொருட்டு பொல்லாதன செய்யக் கருதலும் கூடும். அப்படிப்பட்டவரை தீய நெறியிலிருந்து விலக்குவதற்காகக் கூறப்பட்ட அறிவுரை இது. பிறர்பொருள் கவர்தல் என்னும்போது பிறன்மனைவியை விரும்பி அடைய எண்ணுதலும் அடங்கும். அருட்செல்வனாகவும் அறியப்படுகிற இராவணன் பிறன்பொருளாளை விரும்பியது இப்பாடலுக்கு நல்ல எடுத்துக்காட்டாகும். ஒருவன் அருள்வழியில் செல்லும் அதே நேரத்தில் பிறர் பொருள்மேல் ஆசை கொண்டு அதைத் தவறான வழியில் பெற நினைப்பது அறமற்ற செயலாகிவிடுகிறது. வெஃகுதல் அருள் ஆற்றிற்கு எதிர் என்கிறார் வள்ளுவர். அருள் வாழ்க்கை மேற்கொண்டிருந்து பிறர்பொருளை விரும்பித் தீதான வழிமுறைகளை மேற்கொள்ள திட்டமிடுவாராயின், அவருடைய அருள் நோக்கமும், அறவழியும், நல்வாழ்க்கையும் கெடும். குறள் கூறும் அறவொழுக்கம் அன்பின் வளர்ச்சியினைப் பின்பற்றுவது; அவ்வொழுக்கங்கள் ஒன்றினொன்று பிரிந்து வளர்ந்து போகின்றன. அருள்என்னும் அன்பீன் குழவி... (பொருள் செயல்வகை 757 பொருள்; அருள் என்று சொல்லப்படும் அன்பு பெற்றெடுக்கும் குழந்தை..) அன்பு வளர்ந்து அருளாக மலரும் என்பது வள்ளுவம். இங்கு சொல்லப்பட்ட அருளாளன் அற நெறியிலே நின்றவன் ஆவன். அவ்வருளாளன் பிறன் பொருளைக் கவர விரும்பி தீயன செய்ய நினைத்தால் விரும்பும் பொருள் அருளொடும் அன்பொடும் வாராப் பொருளாக்கமாகுமாதலால் அவன் வாழ்க்கை கெடும். 'அருள் நெறியில் நிற்போரது அறச் சொத்துக்களையும் காணிக்கைகளையும் கையாடலாகாது' என்று இக்குறட்கருத்தை வேறொரு வகையாக விளக்குகிறது மு கோவிந்தசாமியின் உரை. 'அருள்வெஃகி ஆற்றின்கண் நின்றான்' யார்? 'அருள்வெஃகி ஆற்றின்கண் நின்றான்' என்றதற்கு அருளை விரும்பி யறனெறியிலே நின்றவன், முத்தியை விரும்பித் தன்மநெறியிலே நின்றார், இன்பமும் துன்பமுமெல்லார்க்கும் பொது என்ற அருளினையே அறிவால் விரும்பி நூல் சொல்லுகின்ற வழி நின்றவர், அருளாகிய அறத்தை விரும்பி அதற்கு வழியாகிய இல்லறத்தின்கண் நின்றவன், அருளை விரும்பி அறநெறியில் நின்றவன், அருளை விரும்பி அறநெறியில் வாழ்பவன், அருளை விரும்பி அதனை அடைதற்குரிய நெறியில் நின்றொழுகுகுபவர்கள், அருளை நாடி உரிய வழியில் நிற்பவன், அருளை விரும்பி அதற்குரிய அறத்தில் நின்றவன், கருணையை விரும்பி இல்லற ஒழுக்கத்தின் நெறி கடக்காமல் இருக்கவென்றே இல்வாழ்க்கை நடத்துகிறவன், எவ்வுயிரிடத்தும் அருளை விரும்பி அறவழியில் நின்றவன், அருள் ஒழுக்கத்தை விரும்பி நன்னெறியில் நிற்கின்றவன், அருளை விரும்பி நல்வழியின்கண் நின்றவன், கருணையை விரும்பி அதைப் பெறுதற்குரிய நன்னெறியில் ஒழுகுகின்றவன், அன்பை மட்டுமன்றி அருளையும் விரும்பி இல்லறத்தின்கண் நின்றவன், அருளை விரும்பி அதனைப் பெறக்கூடிய வழியாகிய தவ ஒழுக்கத்தில் நின்ற ஒருவன் என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர். அறவழியில் நிற்பவன் அல்லது கடவுளை நினைந்து வாழ்பவனும் ஏன் பிறன்பொருளைக் கவர விரும்பவேண்டும்? அறவழியில் நிற்பவன் என்று சொன்னபின் அவன் எப்படி தீய எண்னங்களுக்கு உள்ளாவான்? இவை இயல்பாக எழும் வினாக்கள். பிறன் பொருளைக் கவர்தல் இரப்போர்க்கு ஈவதற்கு என்று ஒரு விளக்கம் சொல்கிறது. அடுத்தவன் பொருளைக் கவர்வது பிறருக்கு உதவத்தான் என்பதால் அவர் செய்யும் தீய செயல் நன்றாகிவிடாது. ஊரார் சொத்தைத் திருடி ஏழைகளுக்கு உதவுகிறேன் என்பது எப்படி நல்லறமாகும்? 'உலகை உய்விக்க வந்த அருளாளர் ஒருபோதும் பிறர் பொருளை விரும்பார். விரும்பின் அவர்தம் அன்பு பொய்யன்பே; வாழ்வு-பொய் வாழ்வே; அவருடைய அருள் வாழ்வு-பிறரை அழிக்கும் வாழ்வே. பிறர்க்கு உதவுவாரே அருளாளர்; பிறர் பொருளை விரும்புவோர் அருளாளராக மாட்டார்கள்' என இக்குறட்கருத்தை விளக்குவார் இ சுந்தரமூர்த்தி. அருளை விரும்பி நல்வழியின்கண் நின்றவன் பிறர் பொருளை விரும்பி அதைக் கவரப் பொல்லாத செயல்களை எண்ணக் கெடுவான் என்பது இக்குறட்கருத்து.
நேற்று வெளியான ‘பொன்னியின் செல்வன்’ படத்திற்கு ப்ளூ சட்டை மாறன் கொடுத்துள்ள விமர்சனம் இணையத்தில் வைரலாகி வருகிறது. பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவான ’பொன்னியின் செல்வன்’ படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பினை பெற்று வருகிறது. படம் வெளியானதில் இருந்து பாசிட்டிவ் விமர்சனங்களை குவித்து வருகிறது ‘பொன்னியின் செல்வன்’. தென்னிந்திய சினிமாவே எதிர்பார்த்து கொண்டிருந்த ‘பொன்னியின் செல்வன்’ படம் இன்று பிரம்மாண்டமாக திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தி எழுதிய புகழ்பெற்ற நாவலான ‘பொன்னியின் செல்வன்’ கதை அதே பெயரில் மணிரத்னம் இயக்கத்தில் படமாக உருவானது. விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்ய லட்சுமி, த்ரிஷா, பிரபு, சரத்குமார், விக்ரம் பிரபு, கிஷோர், ஜெயராம், லால், ரகுமான் உள்ளிட்ட பல மொழிகளை சேர்ந்த பிரபல நட்சத்திரங்கள் நடிப்பில் நேற்றைய தினம் வெளியான இந்தப்படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பினை பெற்று வருகிறது. இந்நிலையில் இந்தப்படத்தின் ப்ளூ சட்டை மாறனின் விமர்சனம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்தப்படத்தின் விமர்சனத்தின் ஆரம்பத்தில் படத்தை ஆஹா ஓஹோவென பாராட்டி தள்ளும் மாறன் திடீர் ட்விஸ்ட்டாக இதுவரை வந்த விமர்சனம் படத்துக்கு முட்டு கொடுக்குறவங்களுக்கு, இனிமே வர்றது தான் உண்மையான விமர்சனம் என ஆரம்பித்து படத்தை கண்டமேனிக்கு கழுவி ஊற்றியுள்ளார் மாறன். படத்தின் எந்த கதாபாத்திரங்களும் அழுத்தமாக எழுதப்படவில்லை என தெரிவித்துள்ளார்.
தினசரி பேப்பரை பிரிண்ட் செய்து தலையில் தூக்கிச் சென்று விற்றவர் முதலாளியானார். ஊறுகாய் போட்டு கைகள் கடுக்க தெருத் தெருவாய் தூக்கிச் சென்று விற்றவர் முதலாளியானார். டேபிள் துடைத்தவரின் தொழில் சாம்ராஜ்ஜியம் இன்று இந்தியாவின் வளர்ச்சிக்கு உதவுகிறது. ஹோட்டலில் தங்க உனக்கு அனுமதி கிடையாது என்று கேவலப்படுத்தியதால் ஐந்து நட்சத்திர ஹோட்டல் இந்தியாவின் முகவரியானது. இப்படி கேலிக்கும், அவமானத்திற்கு உட்பட்ட எத்தனையோ உள்ளங்கள் தொழில் சாம்ராஜ்ஜியத்தின் அதிபதிகளாய் வலம் வருகிறார்கள். அவ்வாறு முன்னேறியவர்களின் வாழ்வில் சோர்வும், அசதியும் ஏற்பட்டிருக்கும். அந்தச் சமயத்தில் என்ன செய்திருப்பார்கள் ? இதோ கீழே சில வரிகள். குறிக்கோளை நோக்கிய பயணத்தில் இச்சில வரிகள் உத்வேகத்தை ஏற்படுத்தும் என்று நம்புகிறேன். உழைப்பு என்பது விழலுக்கு இறைத்த நீராய் செல்லாமல் வயற்காடுகளில் கிணற்றிலிருந்து இறைக்கப்படும் தண்ணீர் வாய்க்கால் வழியாக சிந்தாமல் சிதறாமல் எவ்வாறு பாத்திக்குள் சென்று சேர்கிறதோ அதைப் போல இருக்க வேண்டும். எதை நோக்கிய பயணம் என்ற முடிவு முதலில் எடுக்கப்படல் வேண்டும். பயணத்தில் ஆங்காங்கே தடங்கல்கள் ஏற்படும் போது மனம் துவண்டு சோர்வடையக்கூடாது. புறப்பட்டாகி விட்டது. இனி நிற்க முடியாது. இதோ இன்னும் கொஞ்சம் தூரம் தான் இருக்கிறது. எந்த இடத்தைச் சென்று சேர வேண்டுமோ அந்த இடம் இதோ இன்னும் சில அடிகளில் தான் இருக்கிறது. துவண்ட கால்களை உதறி எழ வேண்டும். மூச்சை உள்ளே ஆழமாக இழுத்து உடம்பை உதறி உத்வேகம் கொள்ள வேண்டும். ரத்தம் சூடாக உடலெங்கும் பாயும். நெஞ்சுக்குள் குறிக்கோள் தகிக்க தகிக்க, கண்களில் தீப்பொறி பறக்க பறக்க, விடாது முன்னேற வேண்டும். தங்கச் சுரங்கத்தை தேடி தோண்டியவர் சோர்வுற்று வெறுப்பாக சென்று விட்டார். அதைத் தொடர்ந்து அங்கு வந்த வேறொருவர் இரண்டு அடி தோண்டினார். கண்ணெதிரே தங்கப்பாளங்கள் பளபளத்தன என்ற உண்மைக் கதை சோர்வுக்கு துணையாக வரட்டும். இன்னும் இரண்டடி தோண்டியிருந்தால் தங்கப்புதையல் கிடைத்திருக்கும். சோர்வும், அசதியும் வெற்றியின் நேர் பகைவர்கள். அவர்களை விரட்டி அடி. தூர தூர... விரட்டி அடி.. வந்து விட்டது அதோ பார்... வெற்றி உன்னைத் தேடி வந்து விட்டது. அதற்கு நீ இன்னும் சில அடிகள் எடுத்து வைக்க வேண்டும். விடாதே... விடாதே... வெற்றி நிச்சயம். அடுத்ததாக தலைவன் என்பவனின் இயல்பு பற்றிய ஒரு சிறு விளக்கம் தருகிறேன். தலைவன் என்பவன் யார் தெரியுமா ? “ இலட்சியத்தை, குறிக்கோளை மேலாண்மை செய்கிறவன்” . குறிக்கோளை அடைந்து விட்ட பிறகு அதை மேலாண்மை செய்யப்பழகிக் கொண்டவர் நாளை உலகை ஆளப்போகும் தலைவன். மேலாண்மை என்ற சொல்லில் அனேக அர்த்தங்கள் புதைந்து கிடக்கின்றன. அது என்ன ? விரைவில்....
ஜூன் 22-ல் அதாவது வரும் வெள்ளியன்று வெளியாகும் ‘டிராஃபிக் ராமசாமி’ படத்தை கமல்ஹாசன் பாராட்டியுள்ளார். சமூகப் போராளியான டிராஃபிக் ராமசாமியின் வாழ்க்கையின் அடிப்படையில் உருவாகியிருக்கும் படம் ‘டிராஃபிக் ராமசாமி’. இப்படத்தில் டிராஃபிக் ராமசாமியாக எஸ்.ஏ. சந்திரசேகரன் நடித்துள்ளார். அவரிடம் உதவி இயக்குநராக இருந்த விக்கி படத்தை இயக்கியுள்ளார். பாலமுரளி பாலா இசையமைத்துள்ளார், குகன் ஒளிப்பதிவு செய்துள்ளார். க்ரீன் சிக்னல் நிறுவனம் தயாரித்துள்ளது, ‘டிராஃபிக் ராமசாமி’ படத்தின் முன்னோட்டம் பார்த்த கமல்ஹாசன் படத்தைப் பாராட்டிக் கூறியுள்ளார். அவர் பேசும் போது , “அஹிம்சைதான் சிறந்த வீரம் என்பதை உலகிற்கே உணர்த்திய நாடு இந்தியா.மகாவீரர் காலத்தில் தொடங்கி இது வெவ்வேறு வடிவங்களில் தோன்றி மறைந்திருக்கிறது. சாதாரண மனிதர்கள் அவர்களின் வீரத்தால் அசாதாரண வீரர்களாக இருந்திருப்பது புதிதல்ல. காந்தியைப் பார்த்திருக்கிறோம். நேருவைப் பார்த்திருக்கிறோம் .ராஜாஜி எவ்வளவு தைரியசாலி என்று தெரியும். அம்பேத்கார் பற்றியும் தெரியும். இப்படி சாமான்யர்கள் தங்கள் வீரத்தால் எவ்வளவு உயரம் சென்றவர்கள் என்பதை ஒவ்வொரு காலத்திலும் , ஒவ்வொரு படியிலும் பார்த்திருக்கிறோம். இவர்களால் தான் இந்தியச் சக்கரம் சுழல்வதாக நம்புகிறேன். மகாத்மா காந்தி மாதிரி ஆள் கிடைக்கும் என்று பாராளுமன்ற கிணற்றுக்குள் தேடினால் கிடைக்க மாட்டார்கள். மகாத்மா மாதிரியானவரை பாத சாரிகளுக்குள் தேடினால் கிடைப்பார்கள். அப்படித் தேடாமல் கிடைத்தவர் தான் டிராஃபிக் ராமசாமி. இவரை ஊடகங்கள் வெவ்வேறு விதமாய் சித்தரித்ததுண்டு. இவரை ஒரு எக்ஸென்ட்ரிக் என்பதைப் போல சித்தரித்ததுண்டு. ஆனால் டிராஃபிக் ராமசாமி . எல்லாருடைய மனதிலும் மனசாட்சியாக உறுத்திக் கொண்டிருக்கிறார் . அப்படி ஒரு தைரியத்தைச் செயல்படுத்திய வீரர் இவர். அப்படிப் பட்டவரை இருக்கும் போதே படமாக்கும் முயற்சி , அதுவும் அவரே பார்த்துப் பாராட்டி ரசிக்கும் படி படமாக எடுத்திருப்பது பாராட்டுக்குரியது. படக் குழுவுக்கு இதுவே முதல் வெற்றி . அடுத்து வணிக வெற்றியும் வந்து சேரும். எஸ்.ஏ.சி. அரசியல் வாடையில் படம் எடுப்பவரல்ல. முழு அரசியல் படமாக இறங்கி எடுப்பவர். அதுவும் அந்தக் காலத்திலேயே அவ்வளவு துணிச்சலாக அரசியல் படங்கள் எடுத்தவர். அவர் ஆரம்பித்து வைத்த அந்த மாதிரியான பாணி இன்றும் தொடர்கிறது . அவரே ஒரு இயக்குநராக இருந்தும் விக்கி என்கிற இன்னொரு இளம் இயக்குநருக்கு வாய்ப்பு கொடுத்து அவருக்கும் ஒரு தொடக்கம் அமைத்து இருப்பது பாராட்டுக்குரியது. நடந்து முடிந்த கதையை படமாக்கும் போது சிலவற்றை வளைக்கலாம். ஆனால் நடந்து கொண்டிருக்கும் கதையைப் படமாக எடுப்பது சிக்கலானது. நடந்த ஒரு கதையை `ஹேராம்` படமாக நான் எடுத்த போது எவ்வளவு சிக்கல்கள் வந்தன என்பதை நான் அனுபவித்திருக்கிறேன் ஒரு படத்தில் முதலில் பாத்திரப் பொருத்தம் அமைவது கடினம்.பெரிய நடிகர்களுக்கே சில நேரம் அமையாமல் போனதுண்டு. இந்தப் படத்தில் பாத்திரப் பொருத்தம் சிறப்பாக உள்ளது. எஸ்.ஏ.சியும்இந்த டிராஃபிக் ராமசாமியும் ஒன்றாக நடந்து போகும் போது சகோதர்கள் போல இருக்கிறார்கள். பிற்காலத்தில் அடுத்த தலைமுறை ஒரிஜினல் யார் என்று தெரியாமல் இவரையே டிராஃபிக் ராமசாமியாக ஞாபகம் வைத்திருக்கக் கூடும். அதில் தவறில்லை. அந்தப் பெயரும் உணர்வும் தான் ஞாபகத்தில் வைத்திருக்க வேண்டியவை. இப்படிப்பட்ட மனிதர்களின் வெற்றி தான் இந்தியாவின் வெற்றி . டிராஃபிக் ராமசாமி என்பவரை தமிழ்நாடு மட்டுமல்ல இந்தியாவே அறிய வேண்டும். இந்தியாவின் வெற்றி இந்த மாதிரி சாமான்ய வீரர்களால் தான். படத்தின் ட்ரெய்லர் பார்க்கும் போதே முழுப் படமும் பார்த்த மாதிரி உணர்ந்தேன் . முழுப்படத்தையும் பார்க்க வேண்டும் என ஆவல் வந்தது. `போராளி` என்று ஒரு பாடல் `கோமாளி `என்று ஒரு பாடல் பார்த்தோம். இவரை கோமாளியாக்க எத்தனையோ பேர் குறிப்பாக அரசியல்வாதிகள் முயன்று தோற்றுவிட்டனர் என்பது தான் உண்மை. அந்தத் தோல்வியை மேலும் பிரஸ்தாபிக்கும் வகையிலும் அழுத்தமாக அடிக்கோடிட்டுக் காட்டும் வகையிலும் இந்தப் படம் இருக்கும் . எஸ்.ஏ.சி. தேர்ச்சி பெற்ற இயக்குநராக இருப்பவர் நடிகராகவும் இருந்து இயக்குநருக்கு உறுதுணையாகவும் இருந்திருக்கிறார், எல்லாம் நன்றாக அமைந்துள்ளன. இப்படத்தை ஓட்டிக் காட்ட வேண்டிய கடமை ரசிகர்களுக்கு உள்ளது. மீண்டும் சொல்கிறேன் வீரத்தின் உச்சகட்டம்தான் அஹிம்சை ,அதற்கு உதாரணம் டிராபிக் ராமசாமி.” இவ்வாறு கமல்ஹாசன் பாராட்டிக் கூறியுள்ளார்.
இயக்குநர் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், காளிதாஸ் ஜெயராம், தான்யா ரவிச்சந்திரன் முதன்மை பாத்திரங்களில் நடித்திருக்கும், ஜீ5 ஒரிஜினல் வெப் சீரிஸ் ‘பேப்பர் ராக்கெட்’. 2022 ஜூலை 29 உலகமெங்கும் வெளியாகிறது. மனதை இலகுவாக்கும் உணர்வுபூர்வமான தொடராக இந்த தொடர் உருவாகியுள்ளது. இந்தத் தொடர் வாழ்வின் தருணங்களை ரசிப்பது மற்றும் மகிழ்ச்சியைக் கண்டறிவது என்ற கருத்தைச் சுற்றி வருகிறது. பாடல்களின் வெற்றியின் காரணமாக, பேப்பர் ராக்கெட் வெளியீட்டிற்கான எதிர்பார்ப்புகள் படிப்படியாக அதிகரித்துள்ளன. ரைஸ் ஈஸ்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் ஸ்ரீநிதி சாகர் இத்தொடரை தயாரித்துள்ளார். இத்தொடரின் டிரைலர் வெளியீட்டு படக்குழுவினர், பிரபலங்கள் கலந்து கொள்ளனர். இயக்குனர் கிருத்திகா உதயநிதி… “பேப்பர் ராக்கெட் என் இதயத்திற்கு நெருக்கமான தொடர். இது எனக்கு மகிழ்ச்சியான அனுபவத்தை அளித்துள்ளது. படக்குழுவில் இணைந்த சினிமாவின் பெரிய நட்சத்திரங்களுடன், இந்த பேப்பர் ராக்கெட் ஒரு அற்புதமான இடத்தை வந்தடைந்துள்ளது. பெரும்பாலும், திரில்லர் வகை அடிப்படையிலான தொடர்கள் தான் ஓடிடி இயங்குதளங்களின் விருப்பமான தேர்வாக இருக்கும். ஜீ5 இந்தத் தொடரில் ஆர்வம் காட்டியதில் மகிழ்ச்சி அடைகிறேன். இதுவரை நான் பணியாற்றிய தயாரிப்பாளர்களில், சிறந்த தயாரிப்பாளர் பெண்டெலா சாகர் தான். நடிகர்கள் தங்களது சிறப்பான நடிப்பால் இந்த தொடரை உயர்த்தியுள்ளனர். தொழில்நுட்ப வல்லுநர்கள் தங்கள் சிறந்த பங்களிப்புகளால் அதை அழகுபடுத்தியுள்ளனர். குறிப்பாக, பேப்பர் ராக்கெட்டில் ஒலி வடிவமைப்பு முக்கிய பங்கு வகித்துள்ளது. நடிகர் உதயநிதி ஸ்டாலின்… “படப்பிடிப்பு நடக்கும் போது, கிருத்திகாவின் தனிப்பட்ட வாழ்கையில் பல சிக்கல்கள் இருந்தாலும், அதை தாண்டி இந்த தொடரை முடித்துள்ளார். கிருத்திகா இந்த கதையுடன் மிகவும் ஒன்றிணைந்துவிட்டார், அதனால் தியேட்டரில் வெளியாகும் படங்களுடன் எதிரித்து போராடும் மனநிலையில் இருக்கிறார். OTT மற்றும் திரையரங்கு வெளியீடுகள் வேறுபட்டவை என்பதை அவர் அறிந்திருந்தாலும், தியேட்டர் பார்வையாளர்களின் கவனத்தையும் ஈர்க்க விரும்புகிறார். நடிகர் சிலம்பரசன் டிஆர் … அப்பாவிற்கு உடல்நலம் சரியில்லாமல் இருந்தபோது உதவிய தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினுக்கும், உதயநிதிக்கும் நன்றி. உதயநிதியை அணுகுவது வெகு இயல்பாக இருக்கிறது. அவர் உதவியதோடு நிற்காமல் தொடர்ந்து விசாரிப்பது பெரிய விசயம். கிருத்திகாவும் நானும் முன்பே ஒரு படம் செய்வதாக இருந்தோம். எனக்கு பெண் இயக்குநர் ஆண் இயக்குநர் என்ற பாகுபாடெல்லாம் இல்லை. ஆனால் இவர் ஹாபியாக செய்கிறாரோ என்ற சந்தேகம் இருந்தது ஆனால் அவரது உழைப்பு பிரமிப்பு தருகிறது. இருப்பினும், அவருடைய அலாதியான ஆர்வத்தையும், தீவிர உழைப்பையும் கண்டு நான் மகிழ்ச்சியும் ஆச்சரியமும் அடைகிறேன், அது இந்த வெளியீட்டில் தெளிவாகத் தெரிகிறது. ஜீ5 சார்பில் சிஜு பிரபாகரன்.., “ ஜீ5 உடைய தொடர்கள் தொடர்ந்து வரவேற்பை பெற்றுவருகிறது. கிருத்திகா உதயநிதி இயக்கியிருக்கும் இந்த தொடர், வாழ்வை பற்றிய புரிதல்களை கூறும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த தொடர் ஒரு பயணம் சம்பந்தப்பட்ட தொடர். மிகச் சிறப்பாக வந்துள்ளது. பத்திரிக்கையாளர்கள் இந்த தொடரை பார்த்து ஆதரவு தர வேண்டும். “ ஜீ5 சார்பில் கௌசிக்.. “இந்த தொடர் உணர்வுபூர்வமாகவும், கதையமைப்பில் அனைவரையும் ஈர்க்கும் ஒன்றாக இருக்கும்.” தயாரிப்பாளர் பென்டெலா சாகர்.., “ஒரு தயாரிப்பாளராக பேப்பர் ராக்கெட் எனக்கு மிகுந்த சந்தோசத்தை கொடுத்துள்ளது. நடிகர்கள் தொழில்நுட்ப கலைஞர்களுடைய உழைப்பால் தான் இந்த தொடர் இந்த அளவு சிறப்பாக வந்துள்ளது. இயக்குனர் மிஷ்கின் .., “இந்த படத்தில் பெரிய அனுபவம் இருக்கிறது. இப்போதெல்லாம் படத்தில் இருக்கும் நல்ல காட்சிகளை டிரெய்லரில் போட்டு படம் பார்க்க முடியாமல் செய்து விடுகிறார்கள். அது போல் இல்லாமல் இயக்குனர் கிருத்திகா திறமையான நபர், அவருடைய திறமையை நான் நேரில் பார்த்திருக்கிறேன். இந்த திரைப்படத்தில் பெரிய அனுபவங்களை கிருத்திகா பார்வையாளர்களுக்கு கொடுத்திருக்கிறார். தொடர் பார்க்க சிறப்பாக வந்துள்ளது. சிக்கலான திரைக்கதை அமைப்புடன் பார்வையாளர்களைக் குழப்புவதைத் தவிர்த்து, எளிமையான, நேர்த்தியான மற்றும் தெளிவான கதைகளைக் கொண்ட திரைப்படங்களையும் தொடர்களையும் அனைவரும் உருவாக்க தொடங்கினால் நன்றாக இருக்கும். இயக்குனர் மாரி செல்வராஜ்.., “இயக்குனர் கிருத்திகா, படத்தை கதையாக வித்தியாசமாகவும், தெளிவாகவும் புரிந்துகொள்கிறார். இந்த படத்தின் டிரெய்லரை பார்க்கும் போது எனக்கு பொறாமையாக இருக்கிறது. இந்த படத்தில் நடித்தவர்களுக்கு ஒரு புது அனுபவமாக இந்த தொடர் இருக்கும். ஒரு வெப் தொடர், நடிகர்களுக்கு முக்கியமான ஒன்றாக இருக்கும். இந்தத் தொடரில் பல நடிகர்களின் திறமை விரைவில் வெளிவரும் என்று நான் நம்புகிறேன். ஜீ5 உடைய விலங்கு தொடர் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. நடிகர் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி.., “கிருத்திகா ஒரு திறமையான இயக்குநர். இந்த படத்தில் அவர் செய்திருக்கும் விஷயத்தை டிரெய்லர் மூலமாக என்னால் உணர முடிகிறது. நடிகர் காளிதாஸ் ஜெயராம்.., Related Posts புதுப்பொலிவுடன் ரீ-ரிலீஸுக்கு தயாராகும் பாபா Nov 23, 2022 விஜயானந்த் திரைப்பட டிரெய்லர் வெளியீட்டு விழா Nov 23, 2022 “பேப்பர் ராக்கெட் டிரெய்லரை வெளியிட்ட கமல்ஹாசனுக்கு என் நன்றி. அவர் பாராட்டிய ஒவ்வொரு வார்த்தையும் மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது. இந்த தொடரில் மிகவும் ரசித்து நடித்தேன். நடிகை தான்யா ரவிசந்திரன்.., “இந்த தொடரில் பணிபுரிந்தது எனக்கு மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது. இந்த தொடர் ஒரு அர்த்தமுள்ள மற்றும் மதிப்புமிக்க பயணத்தை மேற்கொள்வது போல் இருந்தது. இயக்குநர் பாலாஜி தரணிதரன்.., “இந்த தொடரின் கதை எனக்கு முன்பே தெரியும். இது ஒரு பீல்குட் கதை. பேப்பரில் இருந்ததை அப்படியே திரைக்கு கொண்டு வந்துள்ளார் இயக்குநர் கிருத்திகா. இதில் சிறப்பான தருணங்கள் பல இருக்கிறது. நடிகர் மிர்ச்சி சிவா.., “ஒரு வெப் தொடர் எடுப்பது சாதாரண விஷயம் கிடையாது. கிருத்திகா ஒரு அற்புதமான படைப்பை உருவாக்கியுள்ளார்.” எடிட்டர் லாரன்ஸ் கிஷோர்.., “பேப்பர் ராக்கெட் எழுத்தாகவே சிறப்பான ஒன்றாக இருந்தது. உணர்வுபூர்வமாகவும், கதாபாத்திரங்களாகவும் சிறப்பாக இந்த தொடர் வந்துள்ளது.” இசையமைப்பாளர் சைமன்.. “நான் திரில்லர் படங்களுக்கு தான் வழக்கமாக இசையமைப்பேன், இது வாழ்கையை பற்றிய படம் என்பதால், எனக்கு புது அனுபவமாக இருந்தது. இசையமைப்பாளர் தரண் குமார்.., “இந்த தொடர் இசையால் நகரும்படி அமைக்கப்பட்டுள்ளது.” ஒளிப்பதிவாளர் ரிச்சர்ட் நாதன்.., “இந்த தொடர் பயணம் சம்பந்தபட்ட கதை என்பதால், அதை எடுக்கும் போதே நாங்கள் மிகுந்த சந்தோசத்துடன் பணிபுரிந்தோம். தொடரை பார்க்கும் போது உங்களுக்கும் அந்த உணர்வு வரும் என்று நினைக்கிறேன்.” கலை இயக்குநர் சக்தி வெங்கட் ராஜ்.., “இந்த தொடரை பொறுத்தவரை, வாழ்க்கையை பற்றிய அனுபவம் நிறைய கிடைத்தது. பயணம் எவ்வளவு முக்கியமான ஒன்று என்பது தெரிந்தது.“ இசையமைப்பாளர் வேத் சங்கர்… இந்த தொடரில் இரண்டு பாடல்களை நான் இசையமைத்துள்ளேன். இந்த தொடர் இப்படி உருவாகி வந்திருப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன், மேலும் இது உலகளாவிய மக்களால் விரும்பப்படும் என்பதை உங்களுக்குச் சொல்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். நடிகர் காளி வெங்கட்.., “இந்த தொடரில் ஒரு எபிசோட் தான் நான் நடித்திருக்கிறேன். ஆனால் அதுவே கவித்துவம் நிறைந்த எபிசோடாக இருந்தது. வட்டார வழக்கு, பயணம் என இந்த தொடரில் நடித்தது ஒரு புது அனுபவமாக இருந்தது. “ நடிகர் கருணாகரன்.., “ஒரு வித்தியாசமான சீரிஸில் நடித்தது மகிழ்ச்சி. இது வாழ்வின் மகிழ்ச்சியை பற்றி 7 எபிசோடுகளில் கூறும் தொடர், 6 கதாபாத்திரங்கள் பற்றிய கதை. இந்த தொடரில் பணிபுரிந்தது பெரிய அனுபவமாக இருந்தது.” நடிகை கௌரி கிஷன்.., “ஒரு நடிகராக ஒரு வெப் சீரிஸ் பண்ண வேண்டுமென்ற ஆசை எனக்கு அதிகம் இருந்தது. கதையை நான் கேட்கும் போது இந்த கதாபாத்திரம் எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாக மாறியது. இந்த தொடரில் பெண் கதாபாத்திரத்திற்கு சிறப்பான எழுத்தை கொடுத்துள்ளார் இயக்குநர். நடிகை பூர்ணிமா பாக்யராஜ்.., “வெப் தொடரில் நடிக்க வேண்டும் என்பதும், ஒரு பெண் இயக்குனர் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்பதும் எனது ஆசை. அது இந்த தொடரில் நிகழ்ந்தது. கிருத்திகா மிகச்சிறப்பாக பணியாற்றியுள்ளார். இயக்குநருக்கு என்ன எடுக்க போகிறோம் என்ற தெளிவு இருந்தது. இந்த தொடரில் பெரிய தொழில்நுட்ப கலைஞர்கள் வேலைபார்த்துள்ளனர். நடிகர் சின்னி ஜெயந்த்.., “எனது 38 வருட திரைப்பயணத்தில் நான் நடித்த முதல் தொடர் இது தான். முதலில் என்னிடம் நீச்சல் தெரியுமா என்று தான் கேட்டார்கள் நான் தெரியாது என்றேன் பரவாயில்லை இல்லை வாருங்கள் என கூட்டிப்போனார்கள். நான் நடித்த பல காட்சிகள் கடலில் தான் எடுக்கப்பட்டது. காளிதாஸ் உடன் இந்த தொடரில் நடித்தது எனக்கு சந்தோசம். அவரது அப்பா ஜெயராம் உடன் நடித்திருக்கிறேன் இப்போது காளிதாஸ் உடனும் நடிப்பது மகிழ்ச்சி.” ஜூலை 29 முதல் ஜீ5இல் திரையிடப்படும் பேப்பர் ராக்கெட் தொடரில் காளிதாஸ் ஜெயராம், தான்யா ரவிச்சந்திரன், கே.ரேணுகா, கருணாகரன், நிர்மல் பாலாழி, கௌரி ஜி.கிஷன், டாக்டர் தீரஜ், நாகிநீடு, வி.சின்னி ஜெயந்த், காளி வெங்கட், உள்ளிட்டோருடன் பூர்ணிமா பாக்யராஜ், ஜி.எம்.குமார், அபிஷேக், பிரியதர்ஷினி மற்றும் பல பெரிய நட்சத்திரப் பட்டாளம் இணைந்து பணியாற்றியுள்ளனர். 'Paper Rocket' trailer launch - Newspaper rocketஇயக்குனர் கிருத்திகா உதயநிதிஇயக்குனர் மாரி செல்வராஜ்இயக்குனர் மிஷ்கின்நடிகர் உதயநிதி ஸ்டாலின்பேப்பர் ராக்கெட்
சென்னை: அதிமுகவில் ஈபிஎஸ்- ஓபிஎஸ் இடையே மோதல் உச்சகட்டத்தை அடைந்திருக்கும் நிலையில், அதிமுகவின் அமைப்பு செயலாளராக பண்ருட்டி ராமசந்திரனை நியமித்து ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். அதிமுகவில் ஒற்றைத்தலைமை சர்ச்சை வெடித்ததற்கு பின்பாக, பொதுக்குழு, நீதிமன்றம் வழக்கு என தொடர்ந்து சர்ச்சை நீடித்த வண்ணம் இருந்து வந்தது. இதனைத்தொடர்ந்து அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக ஈபிஎஸ் அறிவிக்கப்பட்டாலும், ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் இதற்கு மறுப்பு தெரிவித்து தொடர்ந்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து வருகின்றனர். மேலும், மூத்த அரசியல் தலைவரும் முன்னாள் அமைச்சருமான பண்ருட்டி ராமசந்திரன், எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வந்த நிலையில், அது பெரும் சர்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஒருங்கிணைப்பாளரும், கழகப் பொருளாளரும், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சருமான திரு. ஓ. பன்னீர்செல்வம் அவர்களின் முக்கிய அறிவிப்பு - அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசியல் ஆலோசகராக மூத்த அரசியல் தலைவரும், முன்னாள் அமைச்சருமான திரு. பண்ருட்டி ச. இராமச்சந்திரன், B.E., (Hons) அவர்கள் கழக அமைப்புச் செயலாளர் இன்று முதல் நியமிக்கப்படுகிறார். அதிமுகவினர் அனைவரும் அரசியல் ஆலோசகருக்கு முழு ஒத்துழைப்பு நல்கிடக் கேட்டுக் கொள்கிறேன் என்று அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளார். Related Stories: தென்மேற்கு வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள மாண்டஸ் புயல் தீவிர புயலாக வலுப்பெற்றது: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் சபரிமலையில் கட்டுக்கடங்காத கூட்டம்: நாளை, 12ம் தேதி 1 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் முன்பதிவு தமிழகத்தில் 10 மாவட்டங்களுக்கு தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் விரைந்தனர் கோவை கார் சிலிண்டர் வெடித்த வழக்கில் கைதான மேலும் 3 பேருக்கு டிசம்பர் 22-ம் தேதி வரை நீதிமன்ற காவல்: பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவு மாண்டஸ் புயல் கரையை கடக்க உள்ள நிலையில் பொதுமக்கள் தேவையற்ற பயணத்தை தவிர்க்க வேண்டும்: தலைமை செயலர் இறையன்பு அறிவுறுத்தல் உலக செஸ் சாம்பியன் ஆகவேண்டும்: பிரக்ஞானந்தா பேட்டி மாண்டஸ் புயல் முன்னெச்சரிக்கை எச்சரிக்கை: சென்னை, காஞ்சி, திருப்பத்தூர் உள்பட 9 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு..!! ஆன்லைன் ரம்மி தடை மசோதா குறித்து விவாதிக்க அனுமதி மறுப்பு: மக்களவையில் இருந்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு..!! புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து தென்மண்டல வானிலை மைய இயக்குநருடன் தலைமைச் செயலர் ஆலோசனை கடற்கரைகளுக்கு மக்கள் செல்ல வேண்டாம்!: மாண்டஸ் புயலை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை தயார்..சென்னை மாநகராட்சி அறிவிப்பு..!! வரலாற்று வெற்றியுடன் குஜராத்தில் ஆட்சி அமைக்கிறது பாஜக: மாநில முதல்வராக டிச.12ம் தேதி பதவியேற்கிறார் பூபேந்திர படேல்..! மாண்டஸ் புயல் எச்சரிக்கை எதிரொலி: டிச. 10ல் நடக்கவிருந்த தமிழ்நாடு ஊரக திறனாய்வுத் தேர்வு டிச.17ல் நடைபெறும் என அறிவிப்பு..!! இமாச்சலில் ஆட்சியை கைப்பற்றுகிறது காங்கிரஸ்?... பாஜகவின் குதிரை பேரத்தை தடுக்க வெற்றி வேட்பாளர்களை சண்டிகர் அழைத்து செல்ல திட்டம்..! டெல்டா மாவட்டங்கள், கடலூர் மாவட்டத்தில் இன்று மிக கனமழை பெய்யக்கூடும்: சென்னை வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் தகவல் 5 மாநிலங்களில் இடைத்தேர்தல் நடைபெற்ற 6 சட்டமன்ற தொகுதிகளிலும் பாஜகவுக்கு பின்னடைவு..! புயல் எச்சரிக்கை காரணமாக வேலூரில் இன்று பிற்பகல் மற்றும் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு..! இயற்கை, ஆன்மீகம், வீரத்திற்கு புகழ்பெற்ற தென்காசிக்கு வந்ததில் பெருமை கொள்கிறேன்: நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதல்வர் ஸ்டாலின் உரை
பிளஸ் 2 முடித்துள்ள நான் அடுத்ததாக ஓட்டல் மேனேஜ்மென்ட் மற்றும் ரீடெயில் இவற்றில் எந்தத் துறையை தேர்வு செய்வது என்பதில் குழப்பமடைந்துள்ளேன். உதவும். அண்ணா பல்கலைக்கழகம் அஞ்சல் வழியில் நடத்தும் எம்.பி.ஏ. படிப்பில் என்னென்ன பிரிவுகள் உள்ளன? இதற்கு நுழைவுத் தேர்வு உண்டா? மேலும் ஆசிரியர்கள் தேவை Wanted: Faculty on contract basis for Marine Engineering. Apply on or before 16-... Posted On :05-12-2022 பேராசிரியர், இணை பேராசிரியர், உதவி பேராசிரியர் தேவை Wanted: Professors in Natural Products, Assistant Professors in Natural Products... Posted On :30-11-2022 பேராசிரியர், இணை பேராசிரியர், உதவி பேராசிரியர் தேவை Wanted: Professors, Associate & Assistant Professors in the department of Archit... Posted On :29-11-2022 பேராசிரியர், இணை பேராசிரியர், உதவி பேராசிரியர் தேவை Wanted: Professors, Associate & Assistant Professors in the Department of AI & D... Posted On :26-11-2022 ஆசிரியர்கள் தேவை Wanted: Faculty for Amity Institute of Hospital Administration, Amity University... Posted On :26-11-2022
இந்தியாவின் வட முனையான ஜம்மு காஷ்மீர் தொடங்கி தென் முனையான கன்னியாகுமரி வரை நீண்ட தேசிய நெடுஞ்சாலை காணப்பட்டுள்ளது. இந்த நெடுஞ்சாலை இந்தியாவிலுள்ள அனைத்து மாநிலங்களிலும் தொடர்பு உள்ளதாக காணப்படுகிறது. இந்தநிலையில் நெடுஞ்சாலை பற்றி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அதன்படி தமிழகத்தில் உள்ள எட்டு மாநில நெடுஞ்சாலைகளை தேசிய நெடுஞ்சாலையாக மாற்ற கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். 8 மாநில நெடுஞ்சாலைகளையும் ஏற்கனவே தேசிய நெடுஞ்சாலைகள் ஆக மாற்ற ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதனை நினைவுபடுத்தும் வண்ணமாக 8 சாலைகள் தொடர்பான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக கடிதத்தில் தமிழக முதல்வர் மு. .க.ஸ்டாலின் தகவல் அளித்துள்ளார். இந்த எட்டு மாநில நெடுஞ்சாலைகளும் தமிழகத்தின் முக்கிய சுற்றுலா மையங்கள், புனித தலங்களை இணைப்பவை ஆகும் என்று தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். குறிப்பிட்டுள்ள 8 மாநில நெடுஞ்சாலைகளிலும் மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ள வசதியாக அவற்றை தேசிய நெடுஞ்சாலையாக அறிவிக்க வேண்டும் என்று மோடிக்கு ஸ்டாலின் கடிதம் அனுப்பியுள்ளார். Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
மைக்ரோசாஃப்ட் எக்செல் 2010 இல் நீங்கள் செய்யும் பெரும்பாலானவை மானிட்டரில் பார்க்கப்பட வேண்டும் என்றாலும், நீங்கள் தவிர்க்க முடியாமல் அச்சிடப்பட்ட ஆவணத்தை உருவாக்க வேண்டும். அச்சிடுவதற்கு ஒரு ஆவணத்தை சரியாக உள்ளமைப்பது அதன் சொந்த சிக்கல்களை அளிக்கிறது ஆனால், நீங்கள் அதை போதுமான அளவு செய்து, விதிகள் மற்றும் அமைப்புகளுடன் உங்களை நன்கு அறிந்தவுடன், உங்கள் அச்சிடும் இலக்குகளை நீங்கள் அடைய முடியும். இருப்பினும், நீங்கள் ஒரு கட்டத்தில் வெற்று விரிதாளை அச்சிட வேண்டியிருக்கும், ஏனெனில் நீங்கள் தகவலை கைமுறையாக நிரப்புவீர்கள். ஆனால் அதற்கான தீர்வு எக்செல் 2010 இல் வெற்று செல்களை அச்சிடுவது எப்படி என்பது உடனடியாகத் தெரியவில்லை, நீங்கள் ஏற்கனவே கண்டுபிடித்திருக்கலாம். எக்செல் தரவைக் கொண்ட நெடுவரிசைகள் மற்றும் வரிசைகளை மட்டுமே அச்சிடும், எனவே வெற்று ஆவணத்தில் நீங்கள் சில மாற்றங்களைச் செய்ய வேண்டும். எக்செல் 2010 இல் வெற்று கலங்களின் தாளை அச்சிடவும் நீங்கள் உடல் ரீதியாக சரிபார்ப்புப் பட்டியலை எழுத வேண்டும் அல்லது சரக்குகளை எடுக்க வேண்டும் என்றால், வெற்று எக்செல் 2010 ஆவணத்தின் அமைப்பு ஈர்க்கக்கூடியதாக இருக்கும். இது உங்கள் எல்லாத் தகவல்களையும் ஒன்றாகச் செயல்படவிடாமல் தடுக்கும், அதே நேரத்தில் தரவை ஒழுங்கமைத்து வைத்திருப்பதற்கான வழிமுறையையும் வழங்குகிறது. ஆனால் நீங்கள் எக்செல் விரிதாளின் முதல் நெடுவரிசையில் தகவலை நிரப்பினாலும், மீதமுள்ள கலங்கள் அவற்றின் நெடுவரிசைகளில் தரவை உள்ளிடாத வரை அச்சிடாது. ஆனால் இந்த சிக்கலுக்கு ஒரு தீர்வு உள்ளது, இது உங்களுக்கு தேவையான எந்த அளவு அச்சிடப்பட்ட விரிதாளை உருவாக்க அனுமதிக்கும். படி 1: Microsoft Excel 2010ஐத் தொடங்கவும். படி 2: உங்கள் நெடுவரிசைகளின் அகலத்தையும் உயரத்தையும் தேவைக்கேற்ப சரிசெய்து, நீங்கள் விரும்பும் கலங்களில் எந்த தகவலையும் உள்ளிடவும். இதைச் செய்ய, நீங்கள் எந்த தகவலையும் உள்ளிட வேண்டியதில்லை, ஆனால் உங்களுக்குத் தேவைப்பட்டால் நீங்கள் செய்யலாம். படி 3: கிளிக் செய்யவும் பக்க வடிவமைப்பு சாளரத்தின் மேல் தாவல். படி 4: கிளிக் செய்யவும் பக்கம் அமைப்பு கீழே வலது மூலையில் உள்ள பொத்தான் பக்கம் அமைப்பு நாடாவின் பகுதி. படி 5: கிளிக் செய்யவும் தாள் சாளரத்தின் மேல் தாவல். படி 6: இடதுபுறத்தில் உள்ள பெட்டியை சரிபார்க்கவும் கிரிட்லைன்கள், பின்னர் உள்ளே கிளிக் செய்யவும் அச்சு பகுதி சாளரத்தின் மேல் உள்ள புலம். படி 7: நீங்கள் அச்சிட விரும்பும் வெற்று செல்கள் அனைத்தையும் தேர்ந்தெடுக்க உங்கள் சுட்டியைப் பயன்படுத்தவும். இது மக்கள்தொகையை அதிகரிக்கும் என்பதை நினைவில் கொள்க அச்சு பகுதி நீங்கள் தேர்ந்தெடுத்த கலங்களுடன் தொடர்புடைய மதிப்புகளைக் கொண்ட புலம். அச்சுப் பகுதியைத் தேர்ந்தெடுத்த பிறகு, கிளிக் செய்யவும் அச்சு முன்னோட்டம் அச்சிடப்பட்ட ஆவணம் எப்படி இருக்கும் என்பதைப் பார்க்க, பொத்தானைக் கிளிக் செய்யவும் அச்சிடுக எக்செல் 2010 தாளை உருவாக்க பொத்தான்.
அன்று விநாயக சதுர்த்தி. நான், பலசரக்குக் கடையிலிருந்து சாமான்கள் கட்டி வந்த சணல் நூல்களையெல்லாம் ஒன்றாகச் சேர்த்து முடித்து, வீட்டின் கூடத்தில் நாற்கோணமாகக் கட்டினேன். அப்புறம் மாவிலைகளை அதில் தோரணமாகக் கோத்துக் கொண்டிருந்தேன். ஆமாம், பட்டணத்திலே மாவிலை கூடக் காசு கொடுத்துத்தான் வாங்க வேண்டும். "என்ன, மாவிலைக்குமா விலை?" என்று பிரமித்துப் போகாதீர்கள்! மாவிலைக்கு விலையில்லையென்று வேண்டுமானால் வைத்துக் கொள்ளுங்கள். ஆனால், மரத்தில் ஏறிப்பறித்து, வீடு தேடிக் கொணர்ந்து கொடுப்பதற்குக் கூலி கொடுக்க வேண்டுமா, இல்லையா? நாங்கள் படித்த பொருளாதார சாஸ்திரப்படி இந்த 'உழைப்பின் மதிப்பை' அந்த இலையின்மேல் ஏற்றி வைத்துப் பார்க்க வேண்டும். இதுதான் 'விலை' என்பது! நீங்கள் கிராமாந்தரங்களில் இருந்தால், எவனுடைய மாமரத்திலேனும் வழியிற் போகும் எவனையாவது ஏறச் சொல்லி, "டேய், இரண்டு மாங்குழை பறித்துப் போடுடா!" என்று சொல்லிவிடுவீர்கள். சில பிள்ளைகள் தாங்களே மரத்திலேறிப் பறிப்பார்கள்; சிலர் மரத்தோடு கட்டி வைக்கப் படுவதும் உண்டு. இந்த 'ரிஸ்க்' எல்லாம் நினைத்துத்தான் பட்டணவாசிகள், மண் முதல் மாங்குழை வரை எல்லாப் பொருள்களையும் விலை கொடுத்து வாங்க முயற்சிக்கிறார்கள். இதுதான் அழகு, நாகரிகம்! பட்டணத்திலே, ஆந்தைகள் வசிக்கும் பொந்துகள் மாதிரியுள்ள வீடுகளில், கும்பல் கும்பலாய் வசிக்கும் நாங்களும் இந்த நாகரிகத்தின் சிறு சிறு துணுக்குகள் தானே!... நிற்க... நான் தோரணத்தைக் கட்டிக் கொண்டிருந்தேன். அதாவது, காசு கொடுத்து வாங்கின மாவிலைகளில் 'வேஸ்டேஜ்' (கழிவு) இல்லாமலிருக்க எல்லாவற்றையும் சேர்த்து வைத்துத் தொடுத்துக் கொண்டிருந்தேன். எனக்குப் பல் முளைத்த மாதிரி அவை கோணல் மாணலாகத் தொங்கின. நான் தோரணம் கோத்துக் கொண்டிருக்கிறேன்... பக்கத்திலே பிள்ளையார், பச்சைக் களிமண் ஈரமும் எண்ணெய்ப் பசையும் பளபளக்க, சர்க்கரைப் பொட்டலம், காகிதக் குடை, நாவற் பழம், புளி வகையராக்களுடன் அரங்கத்தில் பிரவேசிக்கக் காத்திருக்கும் ராஜபார்ட் போல, ஏன், "சிம்மாசனம் காலியாகட்டுமே, ஏறி உட்காருவோம்!" என்று காத்திருக்கும் பட்டத்திளவரசன் போல பரிதாபகரமாகக் காத்துக் கொண்டிருக்கிறார். என் மனம் ஒரு ரசமான பேர்வழி. இந்த மாதிரியான சோம்பேறி வேலை எனக்குக் கிடைத்துவிட்டால், அது கண்டபடி ஓட ஆரம்பித்துவிடும். "உனக்கு ஒரு ரசமான கதை சொல்லட்டுமா?" என்றது. "'பிரேக்' கழன்றுபோய்விட்டது. இனி வெறிதான்!" என்று திட்டப் படுத்திக் கொண்டேன். "ஆமாம்! வண்ணாரப் பேட்டையிலே சுப்பு வேளான் இருந்தானே, ஞாபகம் இருக்கிறதா?" என்றது. ஒரு வரிசைத் தோரணத்துக்கு இலைகளை வைத்துச் சரிக்கட்டி விட்டேன். "அவன் தான் ஆக்கு! கடைசியிலே வெள்ளைக் களிமண்ணையே தின்று செத்தானே, அந்த மருத வேளான் மகன்!" என்றது மறுபடியும். அப்படியே நான் எங்கள் ஊருக்குச் சென்றுவிட்டேன். அந்தத் தாமிரவருணி ஆற்றின் கரை, தூரத்திலே மேற்குத் தொடர்ச்சி மலை, சமீபத்தில் சுலோசன முதலியார் பாலம், சின்ன மண்டபம், சுப்பிரமணியசாமி கோவில், சாலைத் தெரு, பேராச்சி கோவில், மாந்தோப்பு, பனை விடலிகள், எங்கள் வீடு - எல்லாம் அப்படி அப்படியே என் கண் முன்பு தோன்றலாயின. "ஆமாம், எல்லாம் வாங்கிக் கொண்டு வந்தீர்களே! பிள்ளையாருக்கு விளாம்பழம் எங்கே?" என்று கேட்டுக் கொண்டே, சர்க்கரைப் பொட்டலத்தை எடுத்தாள் என் மனைவி. "கூடைக்காரி வருவாளே! வாங்கினாப் போகிறது!" என்று சொல்லி, ஒரு முரட்டு மாவிலையை எடுத்து, பத்து அங்குல இடத்தையும் அதொன்றினால் மறைத்து 'அலங்காரம்' செய்ய முயற்சித்தேன். "கூடைக்காரி வந்தால்தானே! நீங்கள் போய் எட்டிப் பாருங்களேன்!" என்றாள் சகதர்மிணி. "திட்டமாக வருவாள், நான் சொல்லுகிறேன் பார்!" என்றேன். என் வாழ்க்கையில் ஒரு நாளாவது தீர்க்கதரிசி அல்லது 'பலிக்காவிட்டால் பணம் வாபஸ்!' என்று விளம்பரம் செய்யும் ஜாமீன் ஜோஸியராக ஆகிவிடுவது என்று (சந்தர்ப்ப விசேஷத்தால்) என் சோம்பலை வியாக்கியானம் செய்தேன். பக்கத்திலே இருக்கும் பரிவாரங்களில் ஒன்றைப் பறிகொடுத்தார் விநாயகர். "சுப்பு வேளான் குடும்பத்துக்கே சாபம், தெரியுமா?" என்றது என் மனசு. "அதென்ன?" "கும்பினிக்காரன் வந்த புதுசு. அந்தக் காலத்திலே சுலோசன முதலியார் பாலம் கட்டலே. நம்ம சாலைத் தெருதான் செப்பரை வரைக்கும் செல்லும். அங்கேதான் ஆற்றைக் கடக்க வேண்டும். கொக்கிரகுளத்திலே இப்பொழுது கச்சேரிகள் இருக்கே, அங்கே தான்கும்பினியான் சரக்குகளைப் பிடித்துப்போடும் இடம். அந்த வட்டாரத்திலே நெசவும், பாய் முடைகிறதும் - இந்தப் பத்தமடைப் பாய் இருக்கே அது - ரொம்பப் பிரபலம். அப்பொழுது ஒரு இருநூறு முந்நூறு வண்ணான்களைக் குடியேற்றி வைத்தான் கும்பினிக்காரன். 'குஷ்டந் தீர்ந்த துறை, என்ற பேர் 'வண்ணாரப்பேட்டை' என்று ஆயிற்று!" "இதோ, இதைப் பாருங்கள். இந்த உப்புப் போதுமோ என்று பாருங்கள்!" என்று கையில் கொஞ்சம் உப்பைக் கொணர்ந்தாள் பத்தினி. "இதெல்லாம் உன் 'டிபார்ட்மெண்டு'. என்னைக் கேட்டால்...?" என்று சிரித்துக் கொண்டு அவளைப் பார்த்தேன். "என்னைக்குமா உங்களைக் கேக்கறேன்? ஏதோ கேட்டால்..." அவள் காலையில் ஸ்நானம் செய்து தலையில் ஈரங்காயாமல் எடுத்துக் கட்டியிருந்தாள். அவ்வளவு அவசரம்! நெற்றியில் விபூதி, அதற்குமேல் குங்குமம்... பறந்து பறந்து வேலை செய்வதால் முகத்தில் ஒரு களை... வேகத்திலும் ஓர் அழகு இருக்கத்தான் செய்கிறது என்று நினைத்தேன். "ஏடி, கமலா! கொஞ்சம் அந்தச் செல்லத்தை எடுத்து வை!" என்று கேட்டேன். "ஆமாம், அடுப்பிலே பாகு என்னமோ காய்கிறதோ! இந்தச் சமயத்தில்தான் உங்களுக்கு..." என்று சொல்லிக்கொண்டு வெற்றிலைப் பெட்டியை எடுத்து வைத்துவிட்டு உள்ளே சென்றாள். அப்பொழுது எங்கிருந்தோ மெல்லிய தளிர்க் காற்று வீட்டிற்குள் பிரவேசித்து உலாவியது. மாவிலைக் கும்பலில் உட்கார்ந்து கொண்டு வெற்றிலையை மடிக்க ஆரம்பித்தேன். எனக்கு வெற்றிலை போடுகிறதென்றால் ஒரு தனிப் பிரயோக முறை. அந்தச் சடங்கில் ஒரு சிறிதும் வழுவிவிட்டால் இலட்சியம் நிறைவேறிய மாதிரியே இருக்காது. வெளியே வெய்யில் ஏற ஏற, உள்ளே பிள்ளையார் காய ஆரம்பித்தார். எப்படியானாலும் சுய குணத்தைக் காண்பிக்காமல் இருக்க முடியுமா? "அப்பொ பாளையங்கோட்டையிலே இருந்த கோட்டை கூட இடியலே. மதுரை வரைக்குந்தான் ரயில் வந்திருக்கும். இந்தப் பக்கத்திலே எல்லாம் வண்டிப்பாதைதான். "இப்பொ மாதிரியா? சாயங்காலம் நாலு மணிக்கப்புறம் அந்தப் பக்கத்திலே போகிறதென்றால் யாருக்கும் பயந்தான். இப்பொழுது கட்டடமும் பங்களாவும் இருக்கிற இடமெல்லாம் அப்பொழுது உடன்காடு...(உடை மரம் - கருவேல மரம்) "அப்பா! அந்தக் காலத்திலே ஒரு மருத வேளார் இருந்தார். நல்ல மனுஷர். சோழியப் பிராமணன் மாதிரி உச்சிக் குடுமியும் பூணூலும் இருந்தாலும் முகத்திலே ஒரு களை இருக்கும். அவருக்கு ரொம்பக் காலமாக பிள்ளையில்லே. இப்போ சின்ன மண்டபத்துக்குப் போகிற பாதையில் இருக்கே ஒரு பிள்ளையார், அதை அந்தக் காலத்திலேதான் பேச்சியாபிள்ளை வைத்து ஒரு 'அரசுக் கல்யாணம்' நடத்தி வைத்தார். அந்தப் புதுப் பிள்ளையாரை இருபது வருஷம் சுற்றி வந்ததின் பயனாக ஒரு பிள்ளை பிறந்தது மருத வேளாருக்கு. ஆண் குழந்தைதான். அழகுன்னா, சொல்லி முடியாது! உன் மனைவிக்கு இருக்கே இப்படி அழகான கண்கள்! அவனுக்குச் சுப்பிரமணியன் என்று பெயரிட்டார். பிள்ளை வெகு துடி... ஆனால், நாலு காரியம் உருப்படியாகப் பண்ணத் தெரியாது... எப்பப் பார்த்தாலும் விளையாட்டுத்தான். என்ன செல்லம் கொடுத்தாலும் 'அடியாத மாடு படியாது' என்பது வேளாரின் கொள்கை. அதிலேயே அவர் நம்பிக்கை இழக்கும்படி நடந்து கொண்டான் என்றால் பயல் எவ்வளவு துடியாக இருந்திருக்க வேண்டும்! "சாயங்காலமும் வேளார் குளித்துவிட்டுப் பிள்ளையாரைச் சுற்ற வருவார். அப்பொழுது படித்துறைப் பக்கம் உட்கார்ந்திருக்கும் பிள்ளையாருடனும், சாயங்கால பூஜைக்கென்று கோவிலுக்குத் தண்ணீர் எடுக்க வரும் விசுவநாத தீட்சதரிடமும் அவர் தம் குறைகளைச் சொல்லி அழுவார். அன்று பேச்சியா பிள்ளையும் அங்கு வந்திருந்தார். அவர் வேளாரைக் கண்டதும் ஆவேசமாய்ப் பேச ஆரம்பித்தார். "'என்ன வே! இண்ணக்கி அந்தப் பய சுப்பு நம்ப தோட்டத்திலே இறங்கி நாலு மாங்கா களவாடிக்கிட்டு ஓடிட்டானாமே...!' 'ஓய்' என்ற விளியிடைச் சொல், 'வேய்' ஆகி, பின் வெறும் 'வே' என்று குறுகிவிட்டது; 'வே' போட்டுப் பேசுகிறவர் காசியிலிருந்தாலும் சரி, அவர் தென்பாண்டி நாட்டு ஆசாமி என்பதைத் தெரிந்து கொள்ளலாம். "என்ன எசமான் செய்ய! கண்டிச்சுப் பாத்தாச்சு. மண்ணெடுக்கப் போடான்னா போரதில்லே. சக்கரத்துக்கிட்டயே வரமாட்டான். படிக்கவாவது போட்டுப் பார்த்தேன்... வாத்யாரய்யா அவனுக்குக் குளிர் விட்டுப் போச்சு என்று சொல்லிக் கைவிட்டு விட்டார். என் விதி! பயலுக்குத் தொழில் தெரியாமலா இருக்கு?... வீடு முழுக்கவும் ஒரு நாளைக்குப் பார்த்தா, யானையும் குதிரையுமா பண்ணிப் போட்டுவிடுவான்... 'இதெல்லாம் சுட்டுக் கொண்டா. வர்ணம் பூசித்தாரேன். கொலுவுச் சாமானா விக்கலாண்டா!' இன்னா, 'அதெல்லாம் எனக்குத் தெரியாது!' என்று சொல்லி, மறுபடியும் வெறும் களிமண்ணாக்கிவிடுகிறான். 'அட! சும்மா வாவது வீட்டோ ட கெட!' என்றால் கேட்கிறானா?... எப்பப் பார்த்தாலும் சண்டை, சண்டை, சண்டை! எப்பப் பார்த்தாலும் போராட்டந்தான்! அதோ போகுது பாருங்க, அந்தக் களுதை! கூப்பிட்டு, எசமான் மின்ன வச்சுக் கேக்கரேன்... 'ஏலே அய்யா, சுப்பு!' என்று குரலெடுத்துக் கூப்பிட்டார் வேளார். "'பயல் கெடக்கிறான் வே! சவத்தெ தள்ளும்! நாலு காயிலே என்ன பெரமாதம்! இவன் எடுக்காட்டா அணில் கொத்தித் தள்ளுது... நான் சொல்றது என்னன்னா இந்த வயசிலேயே இது ஆகாது!' என்றார் பேச்சியாபிள்ளை. "'பிள்ளைவாள்! நீங்க சொல்றது நூத்துக்கொரு வார்த்தை' என்றார் விசுவநாத தீட்சதர். "'ஆமாம் எசமான்!' என்று ஏங்கினார் மருத வேளார்..." "நீங்கதான் ஏன் சும்மா இருக்கிறீர்கள்? பிள்ளையாரை எடுத்து வைத்தால் ஆகாதோ?" என்று சொல்லிக் கொண்டு வந்தாள் என் மனைவி. "அதெல்லாம் முடியாது. நான் நாஸ்திகன். அதெல்லாம் குடும்பவிளக்கு குலவிளக்கு 'டிபார்ட்மெண்ட்'!" என்றேன். நான். "மஹா 'டிபார்ட்மெண்'டைக் கண்டுவிட்டீர்களாக்கும்! சோம்பல் என்றால் அப்படிச் சொல்றதுதானே! எல்லா நாளுமா... கை வேலையா இருக்கே!" என்று பெருங்காய டின்னை எடுத்துக்கொண்டே அவள் சொன்னாள். அதற்குள் என் மன ராணி என்னை மடியைப் பிடித்திழுத்தாள். இரண்டு பொண்டாட்டிக்காரன் பாடுதான்... "சுப்பு வேளானுக்குப் பதினாறு வயது. அப்பொ மதத்திலே கிறுக்கு விழுந்தது. நாலு நாள் ஓயாது ஒழியாது அற்புதமாக விக்ரகங்கள் செய்வான்... அப்புறம் அது பழைய களிமண்தான்... வேளார் தள்ளாத வயசிலேயும் குடும்ப போஷணையைக் கவனிக்க வேண்டியதாச்சு. "அப்பொப் பார்த்து அந்தக் கசமுத்து வேளார் மகளிடம் தடித்தனமா நடந்து கொண்டானாம் சுப்பு. சாயங்காலம் அந்தப் பெண் இசக்கி அம்மை, தண்ணீர் எடுக்க ஆற்றங்கரைக்கு வந்தாளாம்... இவன் போய் அவள் எதிரில் நின்று கொண்டு, 'ஏட்டி! என்னைக் கலியாணம் பண்ணிக்கிறியா?' என்று கேட்டானாம். "உள்ளுக்குள் பூரிப்போ என்னவோ! பானையைக் கீழே போட்டு உடைத்து, 'ஓ, ராமா!' என்று அழுதுகொண்டு, 'இவன் என்னை இப்படிக் கேக்க ஆச்சா?' என்ற நினைப்பில் வீட்டுக்குச் சென்றாளாம். "ஊர்க்காரர்கள் இவனை அடிக்கக் கூடிவிட்டார்கள். இவன் தோழர்கள் எல்லாம் இவனுக்குப் பரிந்து பொய் சொல்லியும், 'விளையாட்டுக்குச் சொன்னான்' என்று சொல்லியும் பார்த்தார்கள். "இந்தப் பயல் ஒரே பிடிவாதமாக, 'நெசத்துக்குத்தான் கேட்டேன்!' என்றானாம். அன்றைக்கு நல்ல உதை. இந்த சமாசாரம் மருத வேளாருக்கு எட்டிற்று. கோயிலுக்கு 'நூறு தேங்காய் அபராதம்' கொடுப்பதாகச் சொல்லி பையனை மீட்டு வந்தார். "ஆனால், மறுநாளைக்கு கசமுத்து வேளார் மண் எடுக்கப் போன சமயம், இவன் அவர் வீட்டுக்குள் போய்ப் பெண்ணுக்கு அடுக்களைத் தாலி கட்டிவிட்டான். "ஊரில் ரகளைதான். 'கலியாணம் என்னவோ ஆச்சு!' என்று இரண்டு சம்பந்திகளும் கூடிக்கொண்டால்... கொஞ்ச நாள் ஊர்க்காரருக்கு நன்றாகப் பேசிக்கொண்டிருக்க விஷயம் கிடைத்ததுதான் மிச்சம்... "இரண்டு சிறுசுகளும் புதுக்குடித்தனம் செய்தன. "கொஞ்சநாள் வரைக்கும் சுப்பு ஒழுங்காக வீட்டுக் காரியங்களைக் கவனித்து வந்தான். பானை வனைகிறது, சுடுகிறது - இதிலெல்லாம் ரொம்ப ஜோர்... "அப்பத்தான் கும்பினியானும் கட்டபொம்முவும் முட்டிக்கிற சமயம் - கும்பினிக்காரன் 'துபாஷ்' யாரோ பட்டணத்து முதலியார். அந்த வட்டாரத்திலே அவருக்குக் கொஞ்சம் சொற் சக்தியுண்டு. அவரும் குட்டந்தீர்த்த துறையிலேதான் குடியிருந்தார். "ஒரு நாள் சுப்பு மண்வெட்டப் போனதிலிருந்து பிடித்தது வினை... "ஏதோ ஒரு இடத்திலே வெள்ளைக் களிமண் அகப்பட்டது. பயல் வண்டி நிறைய வாரிக்கொண்டு வந்தான். ஆனால் பழைய பொம்மை செய்கிற வெறி வந்துவிட்டது. அதற்கப்புறம் சக்கரத்தைச் சீந்துவதில்லை... அந்தச் சமயத்தில்தான் அவன் மனைவிக்கு நாலு மாசம் கர்ப்பம். வீட்டில் கிடைத்ததைச் சாப்பிடுகிறது. பொம்மை செய்கிறது, அழிக்கிறது, மறுபடியும் செய்கிறது, அழிக்கிறது, மறுபடியும் செய்கிறது, அழிக்கிறது - இப்படியே நாட்கள் கழிந்தன. பெண் எவ்வளவோ சொல்லிப் பார்த்தாள். அதெல்லாம் நடக்கிற காரியமா? 'போ! போ! என்று சொல்லிவிட்டான் சுப்பு. "அன்னிக்கி விநாயக சதுர்த்தி. சுப்பு விடியற்காலையிலே எழுந்து ஒரு விநாயகர் செய்து கொண்டிருந்தான். விநாயகர் என்றால் உம்முடன் பேசுவதுபோல் இருக்கும் - அவ்வளவு உயிருடன் இருந்தது அந்தக் களிமண் கண்கள்! மனைவியும் ரொம்ப ஜரூராகப் பூஜைக்கு வேண்டிய வேலைகளெல்லாம் செய்து கொண்டிருந்தாள். "'ஏட்டி, நான் குளிச்சிட்டு வாரேன்!' என்று வெளியே சென்றான் சுப்பு. "அன்றைக்குப் பார்த்து துபாஷ் வீட்டுச் சேவகர்கள் நல்ல பிள்ளையார் வேண்டித் தேடியலைந்தார்கள். சுப்பு செய்த பிள்ளையார் எசமானுக்குப் பிடித்திருக்கும் என்று நம்பினார்கள். அதிலும் வெள்ளைப் பிள்ளையார்; கேட்கவா வேண்டும்! "முதலில் இசக்கி அம்மைக்குக் கொடுக்க இஷ்டமில்லைதான். இருந்தாலும் நாலு பணம் அஞ்சு பணம் என்று ஆசை காட்டினால்! வில்லைச் சேவகன் (டவாலி போட்டவன்) சும்மா தூக்காமல், காசு கொடுப்பதாகச் சொன்னதிலேயே அவளுக்குப் பரம திருப்தி. அதைக் கொடுத்துவிட்டு மாமனார் செய்த குட்டிப் பிள்ளையார்களில் ஒன்றைக் கொண்டு வந்து அந்த இடத்தில் வைத்திருந்தாள். "சுப்பு குளித்துவிட்டு வந்தான். வீட்டில் நடந்த கதை தெரிந்தது... "'இந்தத் தேவடியாத் தொழில் உனக்கு எதுக்கு?' என்று அவளை எட்டி உதைத்துவிட்டு, ஈரத் துணியைக் கூடக் களையாமல் அவன் நேரே வெளியே சென்றான். "அப்பொ துபாஷ் முதலியார் வீட்டில் பூஜை சமயம். இந்தப் பயல் தடதடவென்று உள்ளே போய், பூஜைக்கு வைத்திருந்த பிள்ளையாரைத் தூக்கிக் கொண்டு வெளியே ஓடினானாம். முதலில் துபாஷ் திடுக்கிட்டார். ஆனால், சேவகர்கள் தொடர்ந்து ஓடினார்கள். இவன், பிள்ளையாரை இறுக மார்பில் கட்டிக்கொண்டு, மேல்மூச்சு, கீழ்மூச்சு வாங்க, தெருவழியாக ஓடினான். சேவகர்கள் நாலு பக்கமும் மறிக்கவே, அவன் வசந்த மண்டபத் தோப்புக்குள் குதித்து ஓடினான். சேவகர்கள் நாலைந்து பகுதியாகப் பிரிந்து மடக்க ஓடினதினால் பேச்சிக் கசத்தின் பக்கம்தான் அவன் ஓட முடிந்தது. அதைத் தாண்டினால் கும்பினிக் காவல்காரன் கையில் அகப்பட வேண்டியதுதான். சுப்புவுக்கு என்ன தோன்றியதோ - சட்டென்று கசத்தில் குதித்துவிட்டான். அவன் அப்புறம் வெளிவரவே இல்லை. "வலை கூடப் போட்டு அரித்துப் பார்த்தார்கள். உடம்புகூட அகப்படவில்லை!" அப்பொழுது சாம்பிராணிப் புகையும் வெண்கல மணிச் சப்தமும் என்னை அவள் பக்கம் இழுத்தன. என் மனைவி, நின்று, கண்ணை மூடிக்கொண்டு, கை கூப்பிய வண்ணம் அந்தக் களிமண்ணுக்கு அஞ்சலி செய்துகொண்டிருந்தாள். அவள் கண்களை எப்பொழுதும் 'மோட்டார் கார் ஹெட்லைட்' என்று கேலி செய்வேன். அவையும் மூடி ஒரு பரிதாபமான புன்சிரிப்புடன் ஒன்றுபட்டன. அவள் மனசில் என்ன கஷ்டம்! என்ன நம்பிக்கை! அவளையே பார்த்துக் கொண்டு நின்றேன். "அப்புறம் என்ன தெரியுமா? அவன் குடும்பத்தில் பிறக்கிற பிள்ளைகளுக்கு எல்லாம் அவன் செத்த வயசில் இந்தப் பிரமை ஏற்படும்... கடைசியில் வெள்ளைக் களிமண்ணைத் தின்று உயிரைவிடும்!..." என்றது மனசு! "இதையும் நம்ப வேண்டுமா?" என்றேன். "இது முழுப் பொய். கதை ரசமாக இருப்பதற்குச் சொன்னேன்...?" "ஆக்கு..!" "வெயிலாகிறதே. எழுந்திருங்கள்! சாப்பிடவாவது வேண்டாமா! என்ன பிரமாதமான யோஜனை?" என்றாள் மனைவி. "ஒரு கதை!" என்றேன் நான். "உங்களுக்குச் சொல்ல இஷ்டமில்லாவிட்டால் ஒரு கதையாக்கும்!" என்று சொல்லிக்கொண்டு இலைகளைப் போட்டாள். "நிஜமாக!" என்றேன். "நாங்கள் நம்புகிறதிலெல்லாம் Posted by சின்னக்குட்டி at 11:21 am No comments: Newer Posts Older Posts Home Subscribe to: Posts (Atom) ஒளியும் ஒலியும் Loading... Popular Posts ஊர் சென்ற போது கொழும்பில் தங்கிய நாட்கள் ஊருக்கு சென்று திரும்பி வரும்போது கொழும்பில் சில நாட்கள் தான் தங்கியிருந்தேன் .அந்த சில நாட்களில் உறவினர்களின் அழைப்பை ஏற்றுகொள்ளுவதில் அதிக... அரச குடும்ப திருமணம் -குதூகலத்தில் நம்மவர்கள் இன்று பிரிட்டனில் எல்லோரும் இந் நாட்டு மன்னர்கள் ஏனெனில் பொதுவிடுமுறை.பொதுவிடுமுறையின் காரணம் என்னவெனில் இன்று பிரிட்டன் அரச குடும்பத்தி... லண்டனில் திரையிடப்பட்ட 1999 என்ற கனடிய தமிழ்த் திரைபடம் லண்டனில் கனடாவில் புலம் பெயர்ந்த தமிழர்களால் உருவாக்கப்பட்டு பல விருதுகளை பெற்ற 1999 என்ற திரைபடம் 11.06.11 அன்று காண்பிக்கப்பட்டது.இத் திரை... எழுபதுகளில் தமிழ் சினிமா பெற்ற திருப்பு முனை 1973 இல் வெளியான அரங்கேற்றம் தொடர்ந்து இன்று வரை சினிமாவை பாதித்து இருப்பதை புரிந்து கொள்ள முடியும் sex பிரச்சனைகளை பயன் படுத்த முடியும் அ... வலித்தாலும் வாழ்க்கை அழகானது டிக் டிக் டிக் ஓயாமால் கேட்டபடி என்ன அது அதனருகே நான்,எத்தனையோ சத்தங்களை முன்பு கேட்டு கொண்டிருந்த பொழுதும் இப்பொழுது இந்த சத்தம் உறுத்தி... தனது ஊருடன் பெயரையும் இணைத்திருக்கும் இலங்கை பிரபலங்கள் தனது ஊருடன் தனது பெயரையும் இணைத்து இருந்த பிரபலங்களை பற்றிய பதிவு தான் இது.... இதை ஞாபகமூட்டலாகவும்.... தெரியாதவற்றை பலர் மூலம் தெரிஞ்சு கொ... நாடு காத்த சிறுவன் அந்நியன் படத்தில் விக்ரம் விவேக் சதா நடிகர்ள் நடித்து ஆடி பாடிய ஹாலந்து நாட்டு அந்த அழகிய பரந்த பூந்தோட்டங்களில் நடுவில் இருந்த கைவிடப... கொள்ளி வாய் பிசாசுடன் கொஞ்ச நேரம் இரவு பத்தரை இருக்கும் இங்கு வீ்ட்டின் பின் பக்கம் அவல குரலுடன் கீச்சிடும் சத்தம் கேட்டு தேய்ந்து .ஓய்ந்தது இந்த குரலை எங்கையோ கேட்டிருக்கிற... ஊருக்குள் புகுந்த கடல் இயற்கையின் சீற்றத்தினால் நிலம் அதிர்ந்தது, கடல் ஊருக்குள் புகுந்தது,.ஆயிரத்துக்கு மேற்பட்டோர் அழிவு, பெரும் சொத்து நாசம் இதுவெல்லாம் அண்மை... யாழ் தியேட்டரில் பார்த்த எந்திரன் ஊருக்கு போன காலகட்டத்திலை ஏதோ அலுவலாக யாழ் நகரம் வந்தம் இருந்தம் என்று இல்லாமால் ..ஒரு படம் இங்கு பார்த்தால் என்ன என்று தினவு எடுத்திச்சு .....
Author: நலன் விரும்பி Published Date: 21/11/2021 Leave a Comment on மாவீரர் நாள் நடத்த தடை – தமிழர்கள் கொதிப்பு இதனை SHARE பண்ணுங்க மாவீரர் நாள் நடத்த தடை – தமிழர்கள் கொதிப்பு யாழ்ப்பாணத்தில், மாவீரர் நாள் நிகழ்வுக்குத் தடை விதிக்கக் கோரி, பருத்தித்துறை மற்றும் மல்லாகம் நீதவான் நீதிமன்றங்களில், பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மீதான பரிசீலனை, நாளை (22) நடைபெறவுள்ளது. பருத்தித்துறை, நெல்லியடி, வல்வெட்டித்துறை ஆகிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளால், பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்திலும், சுன்னாகம், தெல்லிப்பழை மற்றும் காங்கேசன்துறை ஆகிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளால், மல்லாகம் நீதவான் நீதிமன்றத்திலும், வெள்ளிக்கிழமை (19), மாவீரர் நாள் நிகழ்வுகளுக்கு தடை கோரி, விண்ணப்பங்கள் தாக்கல் செய்யப்பட்டன. இன்று 21ஆம் திகதி தொடக்கம் வரும் நவம்பர் 28ஆம் திகதி வரை, இந்த தடை உத்தரவு வழங்குமாறு, பொலிஸாரால் கோரப்பட்டுள்ளது. குற்றவியல் சட்டக்கோவையின் 120ஆவது பிரிவுக்கு அமையவும், பயங்கரவாத தடைச் சட்டத்தின் படியும், இந்த நிகழ்வை நடத்துவது குற்றம் என்று தெரிவித்த பொலிஸார், இதனை தடை செய்யுமாறும் கோரியுள்ளனர். அத்துடன், நாட்டில் நடைமுறையில் உள்ள தனிமைப்படுத்தல் சட்டத்தின் பிரகாரமும் பொதுமக்களை ஒன்றுதிரட்டுவதற்கு தடை உள்ளதாக, பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர். இந்த விண்ணப்பங்கள், வெள்ளிக்கிழமை (19), இரண்டு நீதிமன்றங்களிலும் பரிசீலனைக்கு எடுக்கப்பட்ட போது, பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டோர் மன்றில் முன்னிலையாகவில்லை. இதனைத் தொடர்ந்து, அந்த விண்ணப்பங்கள் மீதான பரிசீலனை நாளை (22) நடைபெறும் எனவும் அதன் பின்னர் கட்டளை பிறப்பிப்பதாகவும் குறிப்பிட்ட நீதிமன்றங்கள், பிரதிவாதிகளுக்கு அழைப்பாணை சேர்ப்பிக்க உத்தரவிட்டன. இதேவேளை, யாழ்ப்பாணம் மற்றும் கோப்பாய் பொலிஸாரால் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பத்துக்கு அனுமதி அளித்த யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம்,
வயிற்றின் ஒரு பக்கமோ அல்லது இரு பக்கமோ இழுத்து பிடிப்பது போல தோன்றினால், அதற்கு, கர்ப்பப்பை சுளுக்கு என்று கூறப்படும். முதல் ட்ரைமெஸ்டேரில் கர்ப்பப்பை சுளுக்கு அடிக்கடி ஏற்படும். பல கர்ப்பிணிகளுக்கும் இந்த அறிகுறி தமது முதல் ட்ரைமெஸ்டேரில் காணப்படும். பொதுவாக கர்ப்பப்பை சுளுக்கு என்பது சாதாரணமான ஒரு அறிகுறிதான். ஆனால், சில பல நேரங்களில், அது கவனிக்கவேண்டிய அறிகுறியாக மாறும். ஏன் கர்ப்பப்பை சுளுக்கு ஏற்படுகிறது? கர்ப்பப்பை விரியும்போது, சுற்றியுள்ள தசைநார்களும், தசைகளும் கர்ப்பப்பை நன்றாக விரிய துணை புரிகிறது. பொதுவாக இருமல் வரும்போது அல்லது தும்மல் வரும்போது, கர்ப்பப்பை சுளுக்கு ஏற்படும். இரண்டாவது ட்ரைமெஸ்டேரில், சுற்று தசைநார் வலிதான் கர்ப்பப்பை சுளுக்கு ஏற்பட காரணமாகிறது. இந்த சுற்று தசைநார் என்பது கர்ப்பப்பையை சுற்றி நன்றாக தாங்கும். கர்ப்பப்பை விரியும்போது, கீழ் வயிற்றில் சுருக்கென்று , ஏதோ குத்துவது போன்ற வலி உண்டாகும்.
நமது அருகில் இருக்கும் சில மூலிகைகளின் பயன்கள் நமக்கு தெரியாமலே போய்விடுகிறது. நமது வீட்டு அருகிலே வளர்ந்திருக்கும் இந்த குப்பைமேனி செடி வளர்ந்திருக்கும் இந்த குப்பைமேனி செடிகள் ஏராளமான மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. இந்த குப்பைமேனி இலையை சருமத்தில் பயன்படுத்துவதால் சருமம் ஆரோக்கியமாக இருக்கும். மேலும் சருமத்தில் வளரும் தேவையற்ற முடிகள் பருக்கள் கரும்புள்ளிகள் போன்றவற்றிற்கும் பலவகையான சரும பிரச்சனைகளுக்கும் இந்த குப்பைமேனி இலை மருந்தாக பயன்படுகிறது. மேலும் சில சரும நோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது. குட்டி மீசை தொல்லையா? உதட்டின் மேல் மீசை முளைத்து அருவருப்பாக உள்ளதா? கவலை வேண்டாம். குப்பைமேனி இலை வேப்பம் பூ, விராலி மஞ்சள், இவற்றை சேகரித்துக் கொள்ளுங்கள், இவற்றை மாவு போல் நன்றாக அரைத்துக் கொண்டு படுக்கைக்குப் போகும் முன் உதட்டின் மேல் பூச வேண்டும். தொடர்ந்து இரு வாரங்கள் பூசி வந்தால் ரோமங்கள் உதிர்ந்து அருவருப்பான முடிகள் உதிர்ந்து பளிச்சென்று இருக்கும். கரும்புள்ளிகளுக்கு குப்பைமேனி இலை மஞ்சள் குப்பைமேனி இலை மஞ்சள் பூண்டு மை போல் அரைத்து கரும்புள்ளி பருக்கள் மீது தடவி வர முன்பு இருந்ததுபோல் இயல்பு நிலைக்கு மாறும். முடி வளர்ச்சி தடைபடும்……… மஞ்சளுடன் குப்பைமேனி இலையை அரைத்து பூசி வந்தால் பெண்களுக்கு முகத்தில் வரும் தேவையற்ற முடிகள் காணாமல் போகும் முகம் அழகு கூடும். சொறி சிரங்கு……….. குப்பைமேனி இலை உப்பு மஞ்சள் இவை மூன்றையும் ஒன்றாக அரைத்து உடலில் பூசி ஒரு மணிநேரம் கழித்து குளித்து வந்தால் சொரி சிறங்கு படை அனைத்தும் குணமாகும். எல்லா வகையான புண்களுக்கும் மஞ்சளுடன் சேர்த்து பூசி குளித்து வந்தால் குணமடையும் , சரும அழகும் கூடும். உடல் அழகிற்கு…….. பத்து குப்பைமேனி இலையை பசும்பாலுடன் அவித்து உண்டு வந்தால் உடல் அழகும் ஆரோக்யமும் கிடைக்கும். தீக்காயங்களுக்கு……….. குப்பை மேனி இலையுடன் மஞ்சள் சேர்த்து அரைத்து புண் நச்சுக்கடி இவைகளுக்கு பற்று போடலாம், தீக்காயம் பட்ட புண்களுக்கு பூசினால் விரைவில் குணமடையும். குப்பைமேனியின் மருத்துவப் பயன்கள்: குப்பைமேனி கசப்பு மற்றும் கார சுவை வெப்பத்தன்மை தன்மையை கொண்டது. மார்பு சளி சுவாச கோசம் கீல்வாதம் முதலியவைகளையும் போக்கும். குப்பைமேனி இலை வேர் ஆகியவை வாந்தியை உண்டாக்கும் பயன்படுகின்றன. குப்பைமேனி இலை தளிர்களை நீரில் கொதிக்கவைத்து குடிப்பதால் குடல் புழுக்கள் அழியும் பருமன் கொழுப்பை குறைக்கும் குப்பைமேனி தமிழகத்திலும் இந்தியாவின் பிற மாநிலங்களிலும் உள்ள சமவெளிப் பகுதிகளில் மிகவும் சாதாரணமாகவும் பரவிக் காணப்படுகின்றது ஒரு இரண்டரை அடி வரை உயரம் உள்ளது. குப்பை மேனி செடியின் இலையை ஒரு கைப்பிடி அளவு எடுத்து லேசாக நசுக்கி தண்ணீரில் விட்டு கொதிக்க வைத்து கஷாயமாக்கி வடிகட்டி குடித்தால் சளி இருமல் கட்டுப்படும்.
பாரசீக மன்னரான நஸிரிட்டின் ஷா, தாஹிரியைச் சந்தித்தபோது, அவர் தமது நம்பிக்கையைத் துறந்தால் அவரைத் திருமணம் செய்து கொள்ள முன்வந்ததை இந்தக் காட்சி சித்தரிக்கிறது. தஹிரி ஒரு கவிதையுடன் இந்த வாய்ப்பை நிராகரித்தார்: “உனக்கான ராஜ்யம், செல்வம் மற்றும் அதிகாரம் / பிச்சை, நாடுகடத்தல் மற்றும் எனக்கு இழப்பு / முந்தையது நன்றாக இருந்தால், அது உங்களுடையது / பிந்தையது கடினமாக இருந்தால், அது என்னுடையது.” பாக்கு – அஜர்பைஜான் – பாரசீக மன்னரின் போற்றும் பார்வையில் கதாநாயகி, அவருடைய முன்மொழிவைக் கேட்கிறார். உங்கள் சமய நம்பிக்கையை விட்டுவிட்டு, என்னைத் திருமணம் செய்து கொள்ளுங்கள், எனக்குப் பிடித்த ராணியாக ஆடம்பர வாழ்க்கையை வாழுங்கள், அதுவே மன்னனின் கோரிக்கையாகும். இந்தக் காட்சியை 450 பேர் கொண்ட பார்வையாளர்கள், என்ன நடக்கும் என்பதை அறிய ஆவலுடன் பார்க்கின்றனர். கிருபை, ஞானம் மற்றும் தைரியத்துடன், தஹிரி அந்த வாய்ப்பை நிராகரிக்கிறார். உலகை மாற்றியமைக்க வேண்டும் என்ற ஒரு காரணத்திற்காகத் தன் வாழ்க்கையை அர்ப்பணிக்க அவர் தேர்வு செய்கிறாள். அஜர்பைஜான் மாநில கல்வித்துறையின் தேசிய நாடக அரங்கத்தில் ஜூலை 8-ஆம் தேதி செல்வாக்கு மிக்க கவிஞர், அறிஞர் மற்றும் பெண் விடுதலைக்கான சாதனையாளராக விளங்கிய தஹிரியின் வாழ்க்கையைப் பற்றிய புதிய நாடகமான ‘சூரிய புத்திரி’ அரங்கேற்றப்பட்டது. அந்தத் தொடக்க இரவு கலைஞர்களையும் பார்வையாளர்களையும் ஒரே மாதிரியாகக் கவர்ந்தது. “தாஹிரி ஒரு மதத்திற்கு மட்டுமல்ல, மனிதகுல அனைவருக்கும் ஒரு வீராங்கனை” என அஜர்பைஜான் எழுத்தாளர்கள் சங்கத்தின் தென் அஜர்பைஜான் இலக்கியத் துறையின் தலைவரும் கவிஞருமான சைமன் அருஸ், நாடகத்திற்குப் பிறகு பார்வையாளர்களிடம் கூறினார். “அவர் முழு மனிதகுலத்திற்கும் தெய்வீக மற்றும் ஆன்மீக விழுமியங்களுக்காக வாழ்ந்து இறந்தார். கிழக்கின் வரலாற்றில் அவருக்கு யாருமே இணை இல்லை. லட்சக்கணக்கானோரின் சுதந்திரக் குரல் அவர்.” அஜர்பைஜான் சமூகத்தில் தாஹிரியின் வாழ்க்கை மீண்டும் கவனத்தை ஈர்த்து, ஆர்வத்தைத் தூண்டும் நேரத்தில் இந்த நாடகம் வருகிறது. தாஹிரியின் வாழ்க்கை மற்றும் படைப்புகள் பற்றிய புத்தகம் 2016-இல் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது, இஃது அஜர்பைஜான் மக்களிடையே பெண்களின் விடுதலை சின்னமான சாதனையாளரின் வாழ்க்கையைப் பற்றி வளர்ந்து வரும் ஆர்வத்தை ஊக்குவிக்கிறது. தாஹிரியைப் பற்றி அறிந்த பத்திரிகையாளர் கமலே செலிம் முஸ்லிம்கிஸி மிகவும் ஈர்க்கப்பட்டார்; அவர் ‘சூரிய புத்திரியின்’ தயாரிப்பில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். “தாஹிரி உண்மைக்காக வாழ்ந்து இறந்தார்” என திருமதி. முஸ்லீம்கிஸி கூறுகிறார். “இந்தத் திட்டம் என் வாழ்க்கையை மாற்றியது. முன்பு எனக்கு யோசனைகளும் கனவுகளும் மட்டுமே இருந்தன, ஆனால் இப்போது மாற்றங்களைச் செய்ய எனக்கு ஆன்மீக சக்தி உள்ளது. பொது நலனுக்காக செயல்பட தஹிரி எனக்கு தைரியத்தை அளித்தார்.” தாஹிரி 19-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஈரானில் உள்ள கஸ்வினில் ஒரு முக்கிய மதக் குடும்பத்தில் பிறந்தார். அந்த நேரத்தில், பெண்களின் திறனுக்கு அப்பாற்பட்டதாகவும், அவர்கள் பின்பற்றுவதற்குப் பொருத்தமற்றதாகவும் கருதப்பட்ட விஷயங்களில் அவர் மிகுந்த ஆர்வம் காட்டினார். அவருக்கு முன் தடைகள் இருந்தபோதிலும், தாஹிரி ஒரு புகழ்பெற்ற கவிஞராகவும் அறிஞராகவும் ஆனார்; அவருடைய காலத்தில் ஆழமாக உணரப்பட்ட அவரது செல்வாக்கு ஒன்றரை நூற்றாண்டு கடந்தும் குறையவில்லை. 1844-ஆம் ஆண்டில், பஹாவுல்லாவின் முன்னோடியான பாப் பெருமானாரின் போதனைகளை ஏற்றுக்கொண்ட முதல் பெண்மணியான தாஹிரி, பாரசீக மற்றும் அதற்கப்பால் சென்று, சில வருடங்களில் பல்லாயிரக்கணக்கான நம்பிக்கையாளர்களைக் கொண்டு வந்த முன்னணி நபர்களில் ஒருவரானார். “தாஹிரி” என்ற பட்டம் அவருக்கு பஹாவுல்லாவால் வழங்கப்பட்டது; அவரை 1848-இல் பதாஷ்ட்டின் வரலாற்று மாநாட்டில் அவர் சந்தித்தார். இந்தச் சொல் “புனிதமானது” என பொருள்படும். அந்த முக்கியமான மாநாட்டில்தான் தஹிரி தன் முக்காட்டைக் கழற்றினார். 19-ஆம் நூற்றாண்டில் பெர்சியாவில், பொதுத் துறையில் பெண்களுக்கு சிறிய பங்கு இருந்த, ஓர் ஆணாதிக்க சமூகத்தில் இந்தச் செயல் நினைத்துப் பார்க்க முடியாததாகக் கருதப்பட்டது. அந்த வரலாற்றை மாற்றும் தருணத்தில், பெண்களுக்கும் ஆணுக்கும் இடையே சமத்துவம் கொண்டுவரப்பட்டது என்றும், பாப்-இன் போதனைகள் கடந்த கால மரபுகளிலிருந்து முறிவைக் குறிக்கிறது என்றும் – ஷோகி எஃபெண்டி விவரித்தபடி, அது ஒரு “அதிர்ச்சியூட்டும் எக்காளச் சத்தம்”. நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, பாரசீக அரசாங்கம் பாப்-இன் ஆதரவாளர் மீது கொடூரமான துன்புறுத்தலை மேற்கொண்டதால், தாஹிரியும் தெஹ்ரானில் சிறைபிடிக்கப்பட்டார். அவருடைய நம்பிக்கையைக் கைவிட மறுத்ததால், அவர் தூக்கிலிடப்பட்டார்; அதைத் தொடர்ந்து நூற்றாண்டு முழுவதும் அவரது மரணத்திற்கு முன்பான வார்த்தைகள் ஒலித்தன: ” உங்கள் விருப்பப்படி என்னைக் கொல்லலாம், ஆனால் பெண்களின் விடுதலையை உங்களால் தடுக்க முடியாது.” சூரிய புத்திரி, தாஹிரியின் ஒப்பிடமுடியாத தைரியத்தை எடுத்துக்காட்டுகிறது; இது தலைமுறை தலைமுறையாக மக்களை ஆதிக்கம் செலுத்திய ஒரு குணம். தஹிரியாக நடிக்கும் முன்னணி நடிகரான நிகர் அலியேவா விளக்குகிறார்: தஹிரியின் உறவினராக நடிக்கும் ஒரு நடிகர், அவரைச் சமூகத்தில் உள்ள அறிவுசார் மற்றும் மத சிந்தனை இயக்கங்களுடன் இணைப்பதில் முக்கியப் பங்கு வகித்தவர், நாடகத்தின் ஒரு காட்சியில் தஹிரியின் மற்ற இரண்டு உறவினர்களுடன் பேசுகிறார். “நாடகத்தில் தஹிரி கூறினார், ‘நான் ஸார்ரின் தாஜ் ஆகப் பிறந்தேன், ஆனால் தாஹிரியாக வாழ்ந்தேன்.’ தாஹிரி கதாபாத்திரத்தில் நடிக்கும்போது நான் மாறிவிட்டதாக உணர்ந்தேன். நான் முன்பு போல் இல்லை. இப்போது என் வாழ்க்கையின் பல்லவி: ‘நான் நிகராகப் பிறந்தேன் ஆனால் தாஹிரியாக வாழ்வேன்.” இந்தப் படைப்பில், கதையின் பகுதிகளுக்கிடையே அவரது கவிதைகளிலிருந்து சிலவற்றை வாசித்தவாறு, தாஹிரியின் வாழ்க்கைக் காட்சிகள் நாடகமாக்கப்பட்டது. நிகழ்ச்சிக்குப் பிறகு பார்வையாளர் ஒருவர் கருத்துத் தெரிவித்தார்: “நாம் எவ்வளவு தைரியமாக இருக்க வேண்டும் என்பதையும், அடக்குமுறை மற்றும் கொடுங்கோன்மைக்கு எதிராக நாம் எப்படி குரல் எழுப்ப வேண்டும் என்பதையும் நான் இப்போது உணர்கிறேன்.” தாஹிரி நீண்ட காலமாக கற்றோர்களிடையே ஆர்வத்தை ஈர்த்துள்ளார். 19-ஆம் நூற்றாண்டின் மேற்கத்திய மொழிப்புலமையாளர் (Orientalists) இலக்கியம் மற்றும் பாலின சமத்துவத்தின் மீதான அவரது செல்வாக்கு பற்றி எழுதினார்கள். சமீபத்திய ஆண்டுகளில், அவரைப் பற்றிய ஏராளமான கல்விக் கட்டுரைகள், புத்தகங்கள் மற்றும் அவரது மூன்று கவிதைத் தொகுப்புகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளப்பட்டன. நாடக ஆசிரியர்கள், நாவலாசிரியர்கள், இசைக்கலைஞர்கள் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர்கள் அவரது வாழ்க்கை மற்றும் கதாபாத்திரத்தால் ஈர்க்கப்பட்ட படைப்புகளை உருவாக்குவதன் மூலம், கலைஞர்கள் மனிதகுலத்தின் மீதான அவரது முக்கிய செல்வாக்கைச் சித்தரிக்க முயன்றனர். தாஹிரி பாரசீக, அரபு மற்றும் அஸெரி ஆகிய மொழிகளில் எழுதினார், இது கஸ்வின் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பரவலாகப் பேசப்படும் மொழியாகும். அஜர்பைஜானின் முக்கிய மொழி அஸெரிதான். இந்த நாடகம் பாக்கு-வில் அதன் ஓட்டத்தைத் தொடரும் மற்றும் வரும் மாதங்களில் நாடு முழுவதும் உள்ள மற்ற நகரங்களில் மேடைக்குச் செல்லும். மூலாதாரம்: https://news.bahai.org/story/1276/ ஆசிரியர் prsamyபிரசுரிக்கப்பட்டது 3 ஜனவரி, 2022 பிரிவுகள் பொதுLeave a comment on பெண்கள் விடுதலை வீராங்கனை அஜர்பைஜானில் கொண்டாடப்படுகிறார்
உலகில் வெற்றிக்கு பல விதிகள் இருக்கும் ஆனால் வெற்றிபெற்றவன் கதை வேறு மாதிரி இருக்கும். உண்மையில் வெற்றி பெற்றவனின் வாழ்க்கை தான் வெற்றிக்கான வழிகாட்டி. கர்நாடகா மாநிலத்தின் ஒரு கிராமத்தில் ஒரு சிறு டிரக்கை வைத்து கொண்டு பிஸினஸ் ஆரம்பித்து 4300 வாகனங்களுக்கு சொந்தக்காரராக மாறிய ஒரு மிகப்பெரும் பிஸினஸ்மேனின் அசாதாரணமான வாழ்க்கை தான் “விஜயானந்த்” திரைப்படம். பிரமாண்ட பட்ஜெட்டில் பான் இந்திய திரைப்படமாக உருவாகியுள்ள இப்படம் டிசம்பர் மாதம் ஒன்பதாம் தேதியன்று தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம், இந்தி என‌ இந்திய மொழிகளில் வெளியாகிறது. வணிக ரீதியிலான சாலை போக்குவரத்து வாகனத்தை இயக்கும் தொழிலில், இந்திய அளவில் முன்னணி நிறுவனமான வி ஆர் எல் எனும் நிறுவனத்தின் உரிமையாளரும், தொழிலதிபருமான விஜய் சங்கேஸ்வரின் வாழ்க்கை வரலாற்றை தழுவி இத்திரைப்படம் உருவாகியுள்ளது. இயக்குநர் ரிஷிகா சர்மா இயக்கத்தில் தயாராகியிருக்கும் இந்த திரைப்படத்தில் கதையின் நாயகனான விஜய் சங்கேஸ்வர் கதாபாத்திரத்தில் நடிகர் நிஹால் நடித்திருக்கிறார். இவருடன் ஆனந்த் நாக், ரவிச்சந்திரன், பாரத் பொப்பண்ணா, பிரகாஷ் பெலவாடி, ஸ்ரீ பிரகலாத், வினயா பிரசாத், அர்ச்சனா, அனிஷ் குருவில்லா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கீர்த்தன் பூஜாரி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு கோபி சுந்தர் இசையமைத்திருக்கிறார். சுய சரிதையை தழுவி தயாராகும் இந்த திரைப்படத்தை வி ஆர் எல் ஃபிலிம்ஸ் நிறுவனம், பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறது. இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா படக்குழுவினருடன் கர்நாடக மாநில முதல்வர் பசவராஜ் பொம்மையா கலந்து கொள்ள பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் பிரமாண்டமாக நடைபெற்றது. இவ்விழாவினில்.. முதல்வர் பசவராஜ் பொம்மையா பேசியதாவது.. நான் விஜயை 1985-ல் சந்தித்தேன். ஒரு சாகசகாரராக தான் அவர் எனக்கு தெரிந்தார். எப்பொழுதும் அவரிடம் ஒரு தாகம் இருக்கும், எப்பொழுதும் கிரியேட்டிவாக யோசிக்க கூடியவர். அவர் இதுவரை நடத்திய அனைத்து தொழில்களுமே லாபகரமான ஒன்றாக இருந்து இருக்கிறது. முடியாததை முடிப்பது தான் அவரது பாணி. அவர் லோக்சபா எம் பி ஆக இருந்தார், அப்பொழுதும் நேரம் தவறாமை தான் அவரது பலம். அவரது கடின உழைப்பு அவருக்கு எல்லா துறைகளிலும் பலத்தை கொடுத்து இருக்கிறது. அவர் எதை தொட்டாலும் வெற்றி தான். இந்த சுயசரிதை படம் பல மொழிகளில் வெளியாவது எனக்கு மகிழ்ச்சியை கொடுக்கிறது. இந்த படம் மிகப்பெரிய வெற்றியடைய எனது வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன் வி ஆர் எல் எனும் நிறுவனத்தின் உரிமையாளரும், தொழிலதிபருமான விஜய் சங்கேஸ்வர் பேசியதாவது.., நடிகர் புனித் ராஜ் குமார் மரணம் என்னை துக்கத்தில் ஆழ்த்தியது. அவர் மக்கள் மத்தியில் நீங்காத இடத்தை பிடித்துள்ளார். அவரை இந்த நேரத்தில் நினைத்து பார்க்கிறேன். எனது 73 வருட வாழ்கையில் வாழ்கை எவ்வளவு அழகானது, ஆழமானது ஆச்சர்யமானது என்பதை கற்று கொண்டேன். இளைய தலைமுறைக்கு நான் கொடுக்கும் அறிவுரை என்னவென்றால் தயவு செய்து நேரத்தை வீணாக்காதீர்கள். எனக்கு நிறைய நேரம் இருந்து இருந்தால், நான் இன்னும் நிறைய விஷயங்களை செய்து இருப்பேன். அதனால் இளைய தலைமுறை உங்களது நேரத்தை ஆக்க பூர்வமாக செயல்படுத்துங்கள். இந்த திரைப்படம் உங்களுக்கு நம்பிக்கை தரும். படம் வெற்றி பெற வாழ்த்துக்கள். நடிகர் நிஹால் பேசியதாவது… ஒரு தலைமுறைக்கு நம்பிக்கை தரும் மிகப்பெரும் சாதனையாளராக நான் நடிப்பது பெருமை. நாம் எல்லாம் சாதாரண மனிதர்கள் லீவு நாளில் ஓய்வெடுப்போம் ஆனால் இவர் எத்தனையோ ஆண்டுகள் ஓய்வில்லாமல் உழைத்திருக்கிறார். அவரது சாதனைகள் வாழ்வில் வெற்றிபெற விரும்பும் அனைவருக்கும் பாடம். இதனை திரைப்படமாக எடுப்பதில் நாங்கள் பெருமை கொள்கிறோம். இப்படத்திற்காக அனைவரும் கடுமையாக உழைத்துள்ளனர். அனைத்து மொழிகளிலும் இப்படத்தை கொண்டாடுவார்கள் என நம்புகிறேன். விஜயானந்த் திரைப்படம் டிசம்பர் டிசம்பர் 9 ஆம் தேதி தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம், இந்தி என‌ இந்தியாவின் பல மொழிகளில் வெளியாகிறது.
பாலிவுட் நடிகை மற்றும் மாடலாக வலம் வருபவர் அடா சர்மா. இவர் மும்பையில் பிறந்து வளர்ந்தவர். பால் மேனியை காட்டி ரசிகர்களை வசியம் செய்து மில்க் பியூட்டியாக வலம் வருகிறார். ஹிந்தி படங்கள் மட்டுமில்லாமல் தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்துள்ளார். தமிழில் இது நம்ம ஆளு, சார்லி சாப்ளின் 2 ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார். சமூகவலைத்தளங்களில் இவர் பகிரும் புகைப்படங்கள் எல்லாமே தாறுமாறு கவர்ச்சிதான். இதையும் படிங்க: அந்த இடத்துல ஒரு ஜிப்பு வைக்கணும்!…திறந்துகாட்டி அடாவடி பண்ணும் ஸ்ரீமுகி…. இந்நிலையில், முன்னழகை ஓப்பனாக காட்டும் உடையில் போஸ் கொடுத்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை திக்குமுக்காட செய்துள்ளது. Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
எகிப்தியரின் சிறையிருப்பைத் திருப்பி, அவர்களை அவர்களுடைய ஜநநதேசமாகிய பத்ரோஸ் தேசத்திலே திரும்பிவரப்பண்ணுவேன்; அங்கே அவர்கள் அற்ப ராஜ்யமாயிருப்பார்கள். Zechariah 10:10 நான் அவர்களை எகிப்துதேசத்திலிருந்து திரும்பிவரப்பண்ணி அவர்களை அசீரியாவிலிருந்து கூட்டிக்கொண்டு அவர்களைக் கீலேயாத் தேசத்துக்கும் லீபனோனுக்கும் வரப்பண்ணுவேன்; அவர்களுக்கு இடம் போதாமற்போகும். Zechariah 14:17 அப்பொழுது பூமியின் வம்சங்களில் சேனைகளின் கர்த்தராகிய ராஜாவைத் தொழுதுகொள்ள எருசலேமுக்கு வராதவர்கள் எவர்களோ அவர்கள்மேல் மழை வருஷிப்பதில்லை. Revelation 11:8 அவர்களுடைய உடல்கள் மகாநகரத்தின் விசாலமான வீதியிலே கிடக்கும். அந்த நகரம் சோதோம் என்றும் எகிப்து என்றும் ஞானார்த்தமாய்ச் சொல்லப்படும்; அதிலே நம்முடைய கர்த்தரும் சிலுவையிலே அறையப்பட்டார்.
இன்றைய நீதி அமைப்பில் உரிமையியல் (சிவில்), குற்றவியல் (கிரிமினல்) என்ற இரு பெரும் பிரிவுகளின் கீழ் வழக்குகள் ஆராயப்பட்டுத் தீர்ப்புகள் வழங்கப்படுகின்றன. சொத்துரிமை, கடன்கோடல், மண உறவு, போன்றவை உரிமையியல் சட்டம் சார்ந்தும் களவு, கொள்ளை, வன்முறை, கொலை, பாலியல் என்பவை குற்றவியல் சட்டம் சார்ந்தும் ஆராயப்பட்டுத் தீர்ப்பு வழங்கப்படுகின்றது. மன்னர் ஆட்சிக்காலத்திலும் நீதிவழங்கல் என்ற பெயரில் இவை நடந்துள்ளன. குற்றவிசாரணையும் தீர்ப்பு வழங்கலும் தொன்மையான ஒன்றாக வரலாற்றில் இடம் பெற்றுள்ளன. இன்று நடைமுறையில் இருப்பது போன்று எழுத்துவடிவிலான சட்டங்கள் மன்னர் ஆட்சியிலும் இருந்துள்னன. பாபிலோனை ஆண்ட ஹேமுமுராபி என்ற மன்னன் (கி.மு1792-1750) தான் உருவாக்கிய சட்டங்களைக் கல்வெட்டுகளில் பொறித்து வைத்துள்ளான். இந்தியாவில் ஸ்மிருதிகள் என்ற பெயரிலான வடமொழி நூல்கள் பெரும்பாலும் சட்டநூல்களாகவே உள்ளன. வழக்குகளை ஆராயும் அவையத்தார், அவைக்களத்தார் என்போர் குறித்தும் அவை என்ற பெயரிலான நீதி வழங்கும் அமைப்பு குறித்தும் சங்க இலக்கியங்கள் பதிவிட்டுள்ளன. இருப்பினும் இன்றைய நீதி அமைப்பு கடந்தகால வரலாற்றில் இடம் பெற்றுள்ள நீதி முறையைவிட வளர்ச்சி பெற்ற ஒன்று. எழுத்து வடிவிலான சட்டங்களாக மட்டுமின்றி மனித மாண்பைச் சிதைக்காத தன்மைத்தாய் இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பை இவை இன்று கொண்டுள்ளன.(சில நேரங்களில் இவை பொய்த்துப் போவதும் உண்டு). ஆனால் மன்னர் ஆட்சிக்காலச் சட்டங்கள் மன்னர்களின் விருப்பு வெறுப்பைச் சார்ந்து அமைந்தன. அத்துடன் தனிமனிதனின் மாண்பைச் சிதைக்கும் தன்மையைக் கொண்டிருந்தன. இதில். சோதனை வழி (ordeal) ஓருவன் குற்றமிழைத்தவனா என்பதைக் கண்டறிதலும் குற்றம் இழைத்தவன் என்று உறுதி செய்யப்பட்டவனை சித்திரவதைக்கு (Torture) ஆளாக்குதலும் முக்கிய இடத்தைப் பெற்றிருந்தன. இவை இரண்டும் குற்றச்சாட்டிற்கு ஆளான மனிதனின் உடல் மீதான வன்முறையாக அமைந்ததுடன் அவனை உடல் ஊனமுற்றவனாக்கின. சில நேரங்களில் அவனது உயிரைப் போக்கவும் செய்தன. சோதனைவழி உண்மையறிதல்: குற்றச் செயல் ஒன்றைச் செய்ததாக ஐயப்பாட்டிற்கு ஆளாகும் ஒருவரோ ஒருத்தியோ கடுமையான துயரை விளைவிக்கும் உடல் வன்முறைக்கு ஆட்படுதலே சோதனைவழி உண்மையறிதலின் போது நிகழும். இது உலகளாவிய நடைமுறையாக இருந்துள்ளது.தர்மசாஸ்திரங்கள் என்ற பெயரில் வடமொழியில் இடம் பெற்றுள்ள அறநூல்கள் இதைக் குறிப்பிட்டுள்ளன. அர்த்தசாஸ்திரம், மனுதர்மசாஸ்திரம் என்பன இது குறித்த பதிவுகளைக் கொண்டுள்ளன. நெருப்பில் மூழ்கி சீதை தன் கற்பை உறுதிப்படுத்திய நிகழ்வு இராமாயணக் காவியத்தில் இடம் பெற்றுள்ளது. சிக்கலானதும் ஐயப்பாட்டிற்கு உரியதுமான வழக்குகளில் இம்முறை பயன்படுத்தப்பட்டுள்ளது. ஸ்மிருதி என்ற பெயரிலான வடமொழிச் சட்ட நூல்களிலும் இது குறிப்பிடப்பட்டுள்ளது. இவை எல்லாம் இதன் தொன்மையைக் குறிப்பிடுகின்றன. சோதனை முறைகள் பல திறத்தன. நெருப்பு, நீர், துலாக்கோல், நஞ்சு, கடவுளரின் படிமத்தை நீராட்டிய நீர், தீட்டாத அரிசி, சூடாக்கப்பட்ட துண்டு நாணயம், மற்றும் ஏரின் கொழு, தர்ம அதர்மத்தின் படிமங்கள் என்பனவற்றில் ஒன்றின் துணையுடன் சோதித்தறிதல் நிகழ்த்தப்படும். இது நிகழும் முறை குறித்து நூலசிரியர் விளக்கமாக எழுதியுள்ளார்.இதையடுத்து எத்தகைய சூழல்களில் நீதியைக் கண்டறிய சோதித்தறிதல் முறை பின்பற்றப்படும் என்பதனையும், இதைப் பின்பற்றுவது தொடர்பான வரையறைகளையும் நாரதர், பிரகஸ்பதி,விஷ்ணு பிதாமகர் என்போரின் வடமொழி நூல்களின் துணையுடன் குறிப்பிட்டுள்ளார். தமிழகத்தில் இம்முறை வழக்கில் இருந்தமை குறித்து கல்வெட்டுக்கள், அய்ரோப்பிய நாடுகளில் இருந்து இங்கு வந்த கிறித்தவ சமயப் பணியாளர்களின் பதிவுகளின் துணையுடன் சில நிகழ்வுகளை எடுத்துக் காட்டியுள்ளார். இறுதியாக சோதனைவழி உண்மையறிதல் தொடர்பான சில நடைமுறைகளையும் தொகுத்து வழங்கியுள்ளார். இவரது மதிப்பீட்டின்படி, கடவுள் ஆற்றல் குறித்த நம்பிக்கையும், சாதிவேறுபாடும் சோதனை முறையில் நீதி வழங்குவதில் முக்கிய பங்கு வகித்துள்ளன. உண்மையைக் கண்டறிவதற்கான ஓரு வகையான சித்திரவதை முறையாகவே சோதனை முறை இருந்துள்ளது. சித்திரவதை: குற்றச்சாட்டிற்கு ஆளானவர் குற்றவாளி என்று முடிவு செய்யப்பட்டால் அவருக்கு விதிக்கப்படும் தண்டனை முறைகளில் ஒன்றே சித்திரவதை. இது அவரது உடல்மீது நிகழ்த்தப்படும் வன்முறை ஆகும். பணத் தண்டம் விதித்தல், சொத்துப் பறிமுதல், சிறைத் தண்டனை என்பன உடலை வருத்தாத நிலையில் உடலை வருத்தும் தண்டனையாக சித்திரவதை அமைந்தது. இது குறித்த பதிவுகள் வடமொழி தர்ம சாஸ்திரங்களிலும் அர்த்த சாஸ்திரத்திலும் இடம் பெற்றுள்ளன. சங்க இலக்கியங்களிலும் சில பதிவுகள் காணப்படுகின்றன. உடல் உறுப்பைத் துண்டித்தல், சாட்டையால் அடித்தல், காய்ச்சிய ஈயம், எண்ணெய் ஆகியனவற்றைக் காதில் அல்லது வாயில் ஊற்றுதல், கல்லைக் கட்டி நீரில் போடுதல், நெருப்பில் போடுதல் என்பன சித்திரவதை சார்ந்த தண்டனை முறைகளாக இருந்துள்ளன. இத் தண்டனை வழங்குவதற்குக் காரணமாக அமைந்த குற்றச் செயல்கள் சில, சாதியை அடிப்படையாகக் கொண்டிருந்தன என்பதையும், மூக்கு, காது, கைவிரல்கள், கை என்பன துண்டிக்கப்படும் உறுப்புகளாக அமைந்தன என்பதையும் வெளிப்படுத்தி உள்ளார். நூலும் நூலாசிரியரும்: சோதனை முறையில் குற்றச் செயலை உறுதிப் படுத்துதல், தண்டனையாக சித்திரவதைக்கு ஆளாக்குதல் என்பன பத்தொன்பதாம் நூற்றாண்டுக் காலத் தமிழகத்தில் ஆங்கிலக் காலனிய ஆட்சியின் போது எவ்வாறு செயற்பட்டன என்பதை இந்நூல் எடுத்துரைக்கிறது, தம் முனைவர் பட்டத்திற்காக இந்நூலாசிரியர் மேற்கொண்ட ஆய்வே தற்போது இந் நூலாக வெளிவந்துள்ளது. இந் நூலின் ஆய்வுக் காலத்தை ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனி ஆட்சிபுரிந்த காலம் (1801-1857) இங்கிலாந்து பாராளுமன்றத்தின் நேரடிக் கண்காணிப்பில் இருந்த காலம் (1858-1900) என ஆசிரியர் இரண்டாகப் பகுத்துக் கொண்டுள்ளார். உண்மையான வரலாற்றின் மீது ஆர்வம் கொண்டோர் வருத்தத்துடன் குறிப்பிடுவதற்கேற்ப நமது வரலாற்று வரைவுகள் அரசியல் வரலாறாகவே பெரும்பாலும் அமைகின்றன. இருப்பினும் குற்றச் செயல்கள் மற்றும் காவல்துறை சார்ந்த சமூக வரலாற்று நூல்கள் அவ்வப்போது வெளிவருவதும் நிகழ்கிறது. ஆனந்தி எழுதிய பண்டையத் தமிழ்ச் சமூகத்தில் குற்றமும் தண்டனையும், டேவிட் ஆர்னால்டின் காவல்துறையும் காலனிய ஆட்சியும், ஜெகதீசனின் சென்னை மாநிலத்தில் சட்டமும் ஒழுங்கும் (1850-1880) என்ற நூல்கள் இவ் வகையில் குறிப்பிடத் தக்கவை. இவ்வரிசையில் இந்நூலும் இணைந்துள்ளது. மதுரை நகரில் செயல்படும் டோக் பெருமாட்டி மகளிர் கல்லூரியின் வரலாற்றுத் துறையில் உதவிப் பேராசிரியராக இந்நூலாசிரியர் பணியாற்றி வருகிறார். இச் சுருக்கமான அறிமுகத்துடன் நூல் நுவலும் செய்திகளைக் காண்போம். சென்னை மாநிலம்: பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் தொடங்கி பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கம் வரையிலான காலத்தில் அன்றைய சென்னை மாநிலத்தை ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனி உருவாக்கியது. தமிழ் நாட்டின் முன்னாள் பாளையக்காரர்களும் திப்பு சுல்தான், ஹைதராபாத் நிஜாம் ஆகிய மன்னர்களும் ஆட்சி புரிந்த நிலப்பகுதிகள் படிப்படியாக ஒன்றிணைக்கப் பட்டு இம்மாநிலம் உருவானது. இதன் பின்னர் வட்டார ஆட்சியாளர்களாக விளங்கியோரிடமிருந்து காவல் உரிமை, நீதிவழங்கும் உரிமை என்பனவற்றைப் பறித்தது. நிலவரி வாங்குதல், காவல், நீதிவழங்கல் என்பனவற்றை மையமாகக் கொண்ட தனித் தனி துறைகளை உருவக்கியது. இவ்வாறு உருவாக்கப்பட்ட இத்துறைகளில் வருவாய்த் துறையும் காவல்துறையும் ஆ.கி. கம்பெனி அரசின் இன்றியமையாத் துறைகளாக விளங்கின. நிலவுடைமையளர்களிடம் இருந்தும் கைவினைஞர்களிடமிருந்தும் வரி வாங்கும் பணியில் வருவாய்த்துறை ஈடுபட்டது. இப்பணியில் சித்திரவதை முறைகளை வெளிப்படையாக மேற்கொள்ளும் உரிமை அதற்கு வழங்கப்பட்டிருந்தது (நிலவரி செலுத்தாமைக்காக ஒரு குடியானவர் மீதான இத்தகைய சித்திரவதை நிகழ்வை காரல் மார்க்ஸ் On India என்ற தமது நூலில் மேற்கோளாகக் காட்டியுள்ளார்). காவல்துறை சட்ட ஒழுங்கைப் பராமரிக்கும் பணியில் ஈடுபடும் போது குற்றம் சாட்டப்பட்டவரிடம் இருந்து ஒப்புதல் வாக்குமூலம் பெற சோதனை முறைகளைப் பயன்படுத்தியது. குற்றவாளிகள் என்று முடிவு செய்யப்பட்டவர் மீது வன்முறையான சித்திரவதைகளைப் பயன்படுத்தியது. நீதி மன்றங்களும் சித்திரவதை சார்ந்த உடலை வருத்தும் தண்டனைகளை வழங்கின. அசைய முடியாது கட்டிவைத்து முதுகில் சவுக்கால் அடித்தல், குனியவைத்து முதுகில் கல்லைச் சுமக்கும்படிச் செய்தல், நீண்டநேரம் வெயிலில் நிற்கும்படிச் செய்தல், தனிமைச் சிறையில் அடைத்தல், நாடு கடத்துதல் என்பன பரவலாக அறியப்பட்ட சித்திரவதை சார்ந்த தண்டனைகளாக இருந்தன. இவை தவிர பல்வேறு சித்திரவதை முறைகள் வழக்கில் இருந்தன. தனிப்பட்ட பகை உணர்வைத் தீர்க்கும் வழிமுறையாகவும் இவை பயன்படுத்தப் பட்டன. இத்தகைய சோதித்தறிதல் முறைகளும் சித்திரவதை முறைகளும் கி.கம்பெனி ஆட்சியின் மீது மக்களிடையே வெறுப்பை உருவாக்கின. இது இங்கிலாந்து பாராளுமன்றத்தின் பார்வைக்கும் சென்றது. இதன் விளைவாக அரசு ஊழியர்களால் நிகழ்த்தப்படும் சித்திரவதைகள் குறித்து ஆராய விசாரணை ஆணையம் ஒன்று நிறுவப்பட்டது. 1854 செப்டம்பர் 19 இல் நிறுவப்பட்ட இந்த ஆணையம் (Torture Commission) சென்னை மாநிலத்தில் வருவாய்த்துறையும் காவல் துறையும் மேற்கொண்ட சித்திரவதைகள் குறித்து ஆராய்வதைத் தன் நோக்கமாகக் கொண்டிருந்தது. ஆணையத்தின் பணி: ஆணையத்தின் உறுப்பினர்களாகப் பின்வருவோர் நியமிக்கப்பட்டனர்.(1)எட்வர்ட் எஃப் எலியட். இவர் இங்கிலாந்து இராணுவத்தில் அதிகாரியாகவும், சென்னையில் செயல்பட்ட சிறு வழக்கு நீதிமன்றத்தில் (Small-Cause Court) நீதிபதியாகவும் பணியாற்றியவர்.(2)ஜெ.பி.நாரட்டன். இவர் இங்கிலாந்தில் சட்டம் பயின்ற வழக்கறிஞர்(பாரிஸ்டர்). சென்னை உயர்நீதி மன்ற வழக்கறிஞராகவும், உள்ளூர்ப் பத்திரிகைகளின் கட்டுப்பாட்டு அதிகாரியாகவும் செயல்பட்டு வந்தார்.(3)எச்.ஸடோக்ஸ். சென்னை மாநிலத்தில் அறிமுகமான இரயத்துவஈரி நில உரிமை முறையின் தீவிர ஆதரவாளர்.சித்திரவதை தொடர்பான நிகழ்வுகளை ஆராய்வது இவர்களின் பணியாக அமைந்தது.சென்னையில் தற்காலிகமாக அமைந்த இதன் அலுவலகத்தில் வாரம் ஒருநாள் சித்திரவதைக்கு ஆளானோரிடம் இருந்து மனுக்களைப் பெற்றுக் கொண்டதுடன் விசாரணையும் நடத்தியது. விசாரணையின் போது சித்திரவதைகளுக்கு ஆளான ஆண்களும் பெண்களும் தாம் அடைந்த கொடுமைகளை சாட்சியமாக ஆணையத்திடம், வழங்கினர். இதனால் எத்தகைய கொடூரமான தண்டனை முறைகளுக்கு மக்கள் ஆளாகி வந்துள்ளார்கள் என்ற உண்மை தெரியவந்தது. சித்திரவதை ஆணையம் இவற்றை எல்லாம் 1855 இல் வெளியிட்ட தன் அறிக்கையில் பதிவு செய்துள்ளது. அவற்றுள் சில வருமாறு: செம்மிளகு அல்லது மிளகாயை கண்ணில்,மூக்கில் அல்லது பிறப்புறுப்பில் தேய்த்தல். தொப்புளில் பூச்சி ஒன்றை துணி அல்லது தேங்காய்ச் சிரட்டையால் மூடிக் கட்டிவைத்தல். கழுத்தளவு சேற்றில் புதைத்து வைத்தல். கிணற்றில் நீர் இறைக்கப் பயன்படும் துலாவின் முன்பகுதியில் கட்டி மூக்கிற்கு ஒரு அங்குல இடைவெளி இருக்கும்படி கிணற்றில் முக்குதல். தலை மயிரை அல்லது மீசையில் உள்ள மயிரைக் கையால் பிடுங்கி எடுத்தல். சூடு போடுதல். அமிலத் தன்மை கொண்ட முந்திரிப் பழச்சாறை கண்ணில் ஊற்றுதல். மணல் அல்லது புழுதியின் மீது வெயிலில் நிறுத்திவைத்தல். உணவும் தண்ணீரும் வழங்காமை என்பன வரி செலுத்தாதவர் மீதான தண்டனைகளாக இருந்தன. இவை தவிர தமிழகத்தில் நிலவிய சாதிவேறுபாட்டையும் உளவியல் சார்ந்த துன்புறுத்தலுக்கு பயன்படுத்தியுள்ளார்கள். இதன்படி உயர்சாதியாகக் கருதப்படும் மனிதனைக் குனியவைத்து அவன் முதுகில் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவராகக் கருதப்பட்ட ஒருவரை அமரச்செய்வது, அல்லது ஒரே அறையில் அடைத்து வைப்பது என்பதைக் கடைப்பிடித்துள்ளார்கள். கிட்டியும் அண்ணாந்தாளும்: கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆட்சியில் பரவலாக நடைமுறையில் இருந்த சித்திரவதை முறைகள் கிட்டி(கிட்டி போடுதல்) அண்ணாந்தாள் (அண்ணாந்தாள் போடுதல்) என்பனவாகும். கிட்டி போடும் தண்டனைக்கு ஒருவரை ஆட்படுத்துவது துணைக் குற்றவியல் நீதிபதியின் ஆணைக்கு உட்பட்டே நிகழும். அவர் ஆணை பிறப்பித்த பின்னர் பணியாற்றும் குற்றவியல் நீதிபதியால் அது உறுதி செய்யப்படவேண்டும். ஏன் எனில் வருவாய்த்துறையில் பணிபுரியும் கீழ்நிலை அதிகாரிகள் முன் அனுமதி பெறாது கிட்டிபோடுதல் வாயிலாக வரி வாங்குதலை மேற்கொள்வதுண்டு. எனவே குரூரமான, மனிதத் தன்மையற்ற இத் தண்டனையை குற்றவியல் நீதிபதிகள் ஆராயவேண்டிய அவசியம் இருந்தது. கிட்டி என்பது மரத்தால் செய்யப்பட்ட இடுக்கி போன்ற ஒரு தண்டனைக் கருவி. எலுமிச்சையில் இருந்து சாறு பிழியப் பயன்படுத்தும் கருவியை ஒத்தது. முறுக்குக்கோல் என்றும் சென்னைப் பல்கலைக் கழகத்தின் தமிழ் லெக்சிகன் ((volume ll part l)) குறிப்பிடுகிறது. ‘Clamps used to press hands feet , etc in torture’ என்றும் விளக்கம் தருகிறது. அத்துடன் ‘கையுந் தாள்களும் கிட்டியார்த்தார்' என்ற திருவிளையாடல் புராண வரிகளையும் மேற்கோளாகச் (நரிபரியாக்கிய படலம் செய்யுள்: 9) சுட்டுகிறது. எனவே ஆங்கிலேயர் வருகைக்கு முன்பே வழக்கில் இருந்த கருவி என்று கருதமுடியும். இத்தண்டனை முறையானது தஞ்சை, திருச்சி, மதுரை, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் பெரிதும் வழக்கில் இருந்ததாக இவ் ஆணையத்தின் அறிக்கை குறிப்பிட்டுள்ளது. இதை வருவாய்த்துறையின் கடைநிலை ஊழியர்கள் கையாள்வர். இக் கருவியின் துணையால் கைவிரல்கள் பின்னோக்கி வளைக்கப்படும். காவிரிச் சமவெளியின் பெருநிலக்கிழார்கள் தம்மிடம் பணிபுரியும் பெண் பண்ணையாட்களின் மார்பகங்களை இக் கருவியால் நசுக்கும் தண்டனையை வழங்கியுள்ளார்கள். தமிழ்நாட்டின் பாரம்பரியச் சித்திரவதைகளில் ஓன்று அண்ணாந்தாள். இதை ஆங்கிலேயர்களும் பின்பற்றியுள்ளனர். இத் தண்டனை வழங்க கயிறு மட்டும் போதும். மேலே குறிப்பிட்ட சென்னைப் பல்கலைக் கழகத்தின் தமிழ் லெக்சிகனில் இது குறித்தக் குறிப்பு இடம் பெற்றுள்ளது. தண்டனைக்கு ஆட்படுபவரைக் குனியவைத்து அவரது கழுத்தைக் கயிறால் தளர்ச்சியாகச் சுற்றி கயிறின் இரு முனைகளில் ஒரு முனையை ஒருகாலின் கட்டை விரலிலும் மற்றொரு முனையை மற்றொரு காலின் கட்டைவிரலிலும் கட்டிவிடுவர். இதனால் அவரால் நிமிரமுடியாது. குனிந்த நிலையிலேயே இருக்க வேண்டும். நிமிர முயன்றால் கழுத்தைச் சுற்றியுள்ள கயிறு கழுத்தை இறுக்கும். குனிந்த நிலையில் இருக்கும் அவரது முதுகில் ஒரு கல் வைக்கப்படும் என்று உ.வே.சாமிநாதையர்(1991:146) தமது கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார். இவ்விரு தண்டனை முறைகளையும் குறிப்பிடும் நூலாசிரியர் மரத்தால் செய்யப்பட்ட சட்டகத்திற்குள் கால், கை ஆகிய உறுப்புக்களை வைத்து சட்டகத்தை இறுக்குதல் என்ற தண்டனை முறை இருந்ததையும் குறிப்பிட்டுள்ளார் (மதுரை நாயக்கர் ஆட்சிக் காலத்தில் இது ‘குட்டையில் போடுதல்’ என்ற பெயரில் வழக்கில் இருந்துள்ளதை முக்கூடற் பள்ளு என்ற சிற்றிலக்கியம் குறிப்பிடுகிறது). அத்துடன் பல்வேறு வகையான சித்திரவதைகளுக்கு ஆளானவர்கள் அளித்த வாக்குமூலங்களையும் எடுத்துக் காட்டியுள்ளார். 1855 செப்டம்பரில் வெளியான இந்த அறிக்கை சித்திரவதைகளைக் குறிப்பிட்டாலும் இதற்குக் காரணமான வரிக் கொடுமை குறித்தும் அதைத் தடுப்பது குறித்தும் குறிப்பிடவில்லை. சென்னை மாநிலத்தின் ஆளுநராக இருந்த ஹாரிஸ் சித்திரவதைகள் குறித்த கவலையை வெளிப்படுத்தினார். வருவாய்த் துறையின் அதிகாரத்தையும் காவல் துறையின் அதிகாரத்தையும் தனித் தனியாகப் பிரிக்கவேண்டும் என்ற ஆணையத்தின் பரிந்துரையை மாநில அரசு ஏற்றுக் கொண்டது. வேலைப்பளு போதுமான கண்காணிப்பு இல்லாமை என்பன இதற்குக் காரணம் என்ற முடிவுக்கு கம்பெனியின் இயக்குநர் குழு வந்தது. கிளர்ச்சிகளை அடக்குதலும், வரி செலுத்துதலை முறைப்படுத்தலும் கம்பெனியின் நோக்கமாக இருந்தமையால் சோதித்தறிதல் வழிக் குற்றங்களைக் கண்டறிதல், சித்திரவதைகள் என்பனவற்றின் துணையுடன் அதை நிறைவேற்றிக் கொண்டார்கள் என்பது நூலாசிரியரின் கருத்தாக உள்ளது. இவற்றை நடைமுறைப்படுத்துவதில் சாதி ஒரு தடையாக இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். அதே நேரத்தில் அப்பாவிகள் மீதான துன்புறுத்தலில் கீழ் நிலை மக்களுடன் ஒப்பிடும் போது மேல்நிலை சாதியினர் மீதான பாதிப்பு குறைவானது என்றும் குறிப்பிடுகிறார்.வரி வாங்குதல் அவர்கள் கையில் இருந்ததே இதற்குக் காரணம் என்பது அவரது கருத்தாக உள்ளது.அத்துடன் கல்வியறிவு பெற்றவர்களாகவும் சமூகத்தில் முக்கிய இடத்தைப் பெற்றவர்களாக இருந்ததையும் அவர் சுட்டிக் காட்டுகிறார். இங்கிலாந்தின் நேரடி ஆட்சி: 1857 இல் வட இந்தியாவில் நிகழ்ந்த சிப்பாய் எழுச்சியை அடுத்து கிழக்கிந்தியக் கம்பெனியின் பொறுப்பில் இருந்த இந்திய ஆட்சி உரிமை பறிக்கப்பட்டு இங்கிலாந்து பாராளுமன்றத்தின் கட்டுப்பாட்டிற்குள் சென்றது. 1858 நவம்பர் ஒன்றாம் நாளன்று அப்போதைய இங்கிலாந்தின் பேரரசியாக இருந்த விக்டோரியா ராணி அறிக்கை ஒன்றின் வழி இதை வெளிப்படுத்தினார். இந்திய அரசுச் சட்டம் என்ற பெயரில் சட்டம் ஒன்று இங்கிலாந்தின் பாராளுமன்றத்தில் இதன் பொருட்டு நிறைவேற்றப்பட்டது. இந் நிகழ்வில் இருந்து தொடங்கி இந் நூற்றாண்டு முடிவு வரையிலான காலத்தில்(1858-1900) சோதித்தறிதல் முறையில் குற்றம் கண்டறிதலும், சித்திரவதை முறையும் இந்தியாவில் எவ்வாறு செயல்பட்டன என்பதையும் அடுத்து ஆராய்ந்துள்ளார். புதிய ஆட்சியில் குற்றத்தடுப்பை நோக்கமாகக் கொண்டு சில சட்டங்கள் அறிமுகமாயின. இவற்றை உருவாக்கும் போது சித்திரவதை தொடர்பான முந்தைய ஆணையத்தின் கருத்துக்கள் உள்வாங்கிக் கொள்ளப்பட்டன. இந்திய காவல் துறைச் சட்டம் ஒன்றும் 1861 இல் உருவானது. இதன்படி நிர்வாகப் பொறுப்புகளில் இருந்து இந்தியர்கள் விடுவிக்கப்பட்டு ஐரோப்பிய அதிகாரிகளின் மேற்பார்வை வலுப்பெற்றது. குற்றப்பரம்பரையினர் பட்டியல் உருவாக்கம் குற்றச் செயல்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் நோக்கில் ஆங்கிலேயர்கள் மேற்கொண்ட முயற்சியில் ஒன்றாக குற்றப்பரம்பரையினர் பட்டியல் ஒன்றை உருவாக்கி அதில் மக்கள் பிரிவினர் சிலரை இணைத்தமை அமைந்தது. அரசின் புள்ளிவிவரக்கணக்கின் அடிப்படையில் அப்போதைய தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, மதுரை, திருநெல்வேலி, சேலம், கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்கள் குற்றச் செயல்கள் அதிகமாக நிகழும் மாவட்டங்களாகக் கருதப்பட்டன. காட்டுப் பகுதியில் வாழும் சில சாதியினர், வீடுகளை உடைத்தல், கொள்ளை, கால்நடைகளைக் கவர்தல், திருட்டு, வழிப்பறி அகிய குற்றச் செயல்களில் தொடர்ச்சியாக ஈடுபடுவோராக இருந்தனர். இவர்கள் மீது தவறான எண்ணம் கொண்டிருந்த ஆதிக்கசாதி நிலக்கிழார்களும் ஆங்கிலேயர்களும் குற்றச் செயல்களில் ஈடுபடுதலே இவர்களின் தொழில் என்ற தவறான முடிவுக்கு வந்தனர். இச்செயல்களில் இவர்கள் ஈடுபடுவதற்கான சமூகக்காரணங்களைக் கண்டறிவதில் அவர்கள் அக்கறை காட்டவில்லை. இச் சமூகங்களின் பின்னடைவுக்கான உண்மையான சமூக வரலாற்றுக் காரணங்களை இந்நூலாசிரியர் விரிவாகப் பதிவு செய்துள்ளமை குறிப்பிடத் தக்கது. ஆனால் ஆங்கில அரசோ இவற்றைப் பற்றியெல்லாம் ஆராயாது குற்றச்செயல் இவர்களது பிறவிக்குணம் என்று அடையாளப்படுத்தியதுடன் கடுமையாக நடத்தியது. பிற தண்டனைகள் ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆட்சி மறைந்தாலும் அவர்கள் ஆட்சியில் நிலவிய தண்டனை முறைகள் புதிய ஆட்சியிலும் தொடர்ந்தன. சான்றாக பிரம்படி அல்லது சவுக்கடி எத்தகைய சூழல்களில் ஒருவருக்குத் தரப்பட வேண்டும் என்ற விதிமுறைகள் நடைமுறையில் இருந்தன. காவல் துறையின் உயர் அதிகாரிகள் சவுக்கடியை ஆதரிப்பவர்களாகவே விளங்கினர். இத்தண்டனை வழங்கப்பட்டது தொடர்பான பத்திரிகைச் செய்திகளையும் ஆவணப் பதிவுகளையும் நூலாசிரியர் எடுத்துக்காட்டாகத் தந்துள்ளார். சிறைச் சாலைகளில் கடின உழைப்பிற்கு ஆளாகும் தண்டனைகள் கைதிகளுக்கு வழங்கப்பட்டன. இதன்படி மரம் அறுத்தல், தேங்காய் நார் உரித்தல், கேழ்வரகு, கோதுமை மாவு திரித்தல், சிறிய அளவிலான கொத்து வேலைகள் செய்தல், தண்ணீர் இறைத்தல், சமையல் செய்தல் போன்ற வேலைகளைச் சிறைக்குள் செய்யவேண்டும். சிறைக்கு வெளியே கல்லுடைத்தல், மண்தோண்டுதல். எண்ணெய் பிழிதல் போன்ற கடின வேலைகளை மேற்கொள்ளவேண்டும். இவை எல்லாம் ஆண்களுக்குரியன. பெண் கைதிகளுக்கென்றும் சில தண்டனைகள் உண்டு. அவற்றையும் இந்நூலாசிரியர் குறிப்பிட்டுள்ளார். மொத்தத்தில் சிறைவாசிகள் மேற்கொள்ளவேண்டிய வேலைகள் அனைத்தையும் விரிவாகப் பட்டியலிட்டுள்ளார். இவற்றின் தொடர்ச்சியாக காவல் துறையின் ஒடுக்குமுறைகள் குறித்த விரிவான செய்திகள் இடம் பெற்றுள்ளன. வழிப்போக்கர்களிடம் கொள்ளையடித்தல். அவர்களுடன் வரும் பெண் பயணிகள் மீது நடத்தும் பாலியல் வல்லுறவு, கொலை, ஆட்கடத்தல், கையூட்டு, உடல் மீதான வன்முறை, பொய்வழக்குப் போடுதல் எனப் பல்வேறு குற்றச் செயல்களுடன் காவல் துறையினரைத் தொடர்பு படுத்தும் செய்திகளை அரசு ஆவணங்களில் இருந்தும் அக்காலத்தியப் பத்திரிகைச் செய்திகளில் இருந்தும் நூலாசிரியர் சேகரித்துள்ளார்(பக்:135-139).இச் செய்திகளின் அடிப்படையில் ஆங்கில மன்னராட்சியில் காவல் நிலையக் கொடுமைகளும் சிறை வாழ்வும் கடினமானவையாக இருந்துள்ளன என்ற முடிவுக்கு வந்துள்ளார். மொத்தத்தில் கி.கம்பெனியிடம் இருந்து இங்கிலாந்துப் பேரரசுக்கு ஆட்சி மாறினாலும் தமிழ்நாட்டில் நிகழ்ந்துவந்த உடல் மீதான தண்டனைகளில் மாற்றம் எதையும் அது ஏற்படுத்தவில்லை என்பதே நூலாசிரியரின் கருத்தாகவுள்ளது. நம்மவர்களின் மீதான இழிவான எண்ணமும் கூட ஆங்கிலேயர்களின் வன்முறைச் செயல்களுக்குக் காரணமாக இருந்துள்ளது என்ற கருத்து இந் நூலில் இடம்பெற்றுள்ளது. ஓர் ஆட்டை விடக் கீழானவர்களாகவே அவர்கள் நம்மவர்களைக் கருதி உள்ளார்கள். பிரிட்டிஷ் படைவீர்களால் தமிழர்கள் கொல்லப்படுவதென்பது இயல்பான ஒன்றாகத் தமிழ்நாட்டில் இருந்துள்ளது.தமிழ்நாட்டின் குடிமக்கள் குரூரமானவர்கள் என்றும் எனவே குரூரமான தண்டனைகளால் அவர்களை ஒடுக்கவேண்டும் என்றும் அவர்கள் கருதியுள்ளார்கள். சமூகத்தில் கண்ணியமான மனிதனாக வாழும் எந்த ஒரு மனிதனின் நெஞ்சைப் பிளக்கச் செய்யும் சித்திரவதைத் தண்டனைகளை அவர்கள் தமிழர்களுக்கு வழங்கினார்கள். இதற்குச் சான்றாக எடுத்துக்காட்டுகள் சிலவும் நூலில் இடம் பெற்றுள்ளன. அவை வருமாறு: ‘சல்யூட்’ அடிக்காமைக்காக ஆங்கில அதிகாரிகள் ஒருவரை அடித்துக் கொன்று விட்டார்கள். இச் செயலுக்காக சிறிதளவு பணத் தண்டம் மட்டுமே விதிக்கப்பட்டது. (8 மாரச்1900) கிருஷ்ணரின் லீலைகளைப் படமாக வரைந்த ஒரு ஓவியருக்குக் குரூரமான தண்டனை ஆங்கில நீதிபதியால் வழங்கப்பட்டது. (15 ஏப்ரல் 1892). இறுதியாக இத்தகைய தண்டனை முறைகளுக்கு ஆளானவர்கள் தமிழ்ச் சமூகத்தின் எப்பிரிவைச் சார்ந்தவர்கள் என்று அடையாளம் காண முயற்சி செய்துள்ளார். பக்கம் 110 இல் சாதிப் பாகுபாடு இன்றி அனைத்துச் சாதியினரும் கி.கம்பெனியின் உடல் சார்ந்த துன்புறுத்தலுக்கு ஆளாயினர் என்று கூறியுள்ளார் (Caste was not a barrier for infliction of Ordeal and Torture under the rule of the English East India Company,Without discrimination, members of all Caste suffered at the hands of the Company rule in Tamilnadu’.) நூலின் இறுதிப் பகுதியில் (பக்கம்162) சாதியப் படிநிலையில் அல்லது பொருளியல் நிலையில் கீழ் நிலையில் இருப்போர் மீதே இது நிகழ்த்தப்பட்டது என்கிறார். அவர் பயன்படுத்தியுள்ள சான்றுகளின் அடிப்படையில் பார்க்கும்போது கையூட்டும் இதில் பங்கு வகித்துள்ளது என்பதை அறிய முடிகிறது. இதைக் கணக்கில் எடுத்துக்கொண்டால் சாதி. பொருளாதாரம் என்ற இரண்டின் தாக்கமும் இதில் இருந்துள்ளமை வெளிப்படுகிறது. எந்த சாதியினர் என்றாலும் கையூட்டு வழங்கி தப்பித்துள்னனர் அல்லது வழங்க இயலாமையால் சித்திரவதைக்கு ஆட்பட்டுள்ளனர் என்ற முடிவுக்கு வர இயலும். இந்நூலில் இடம்பெற்றுள்ள சித்திரவதை முறைகள் ஆ.கி. கம்பெனி புதிதாக அறிமுகம் செய்தவை அல்ல. இங்கு அவர்களின் வருகைக்கு முன்னர் ஆட்சி புரிந்தோரால் நடைமுறைப்படுத்தப்பட்டவை என்பதை ஆசிரியர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.
1995 களில் “ஜூனியர் போஸ்டில்” நான் எழுதிய 102 கட்டுரைகளில் இருந்து கவிதை,புதுக்கவிதை தொடர்பான கட்டுரைகளை மட்டும் இதில் தொகுத்திருக்கிறேன். சங்க இலக்கியத்திலேயே புதுக்கவிதை கூறுகள் தோன்றிவிட்டன என்பதை முதலிரண்டு கட்டுரைகள் விளக்குகின்றன. பழங்கவிஞர்க்கும் புதுக்கவிஞர்க்கும் கருப்பையாக இருந்துவரும் பைபிளின் சிறப்பை ஒரு கட்டுரை உணர்த்துகிறது. இந்திய, மேனாட்டுக் கவிஞர்களின் கவிதைகளை ஆதாரமாக வைத்துக் கொண்டு புதுக்கவிதையின் பண்புகளைச் சில கட்டுரைகள் விவரிக்கின்றன. தமிழுக்கு இதுவரை அறிமுகம் ஆகாத கடுமுனைப்பியம் (ultraism), படைப்பியம் (creationism) ஆகியவற்றை இரு கட்டுரைகள் அறிமுகப்படுத்துகின்றன. இந்தக் கட்டுரைகள் புதுக்கவிதையின் சில பண்புகளையும், பரிமாணங்களையும் காட்ட முயல்கின்றன. இவ்வாறு நூலின் ஆசிரியர் கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்கள் தனது முன்னுரையில் கூறியுள்ளார்.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் குஜ்ரன்வாலாவில் நடைபெற்ற பேரணியில் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் அவருக்கு காலில் காயம் ஏற்பட்டது. இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியின் அதிகாரியான அசார் மஷ்வானி, அரசியல்வாதியின் காலில் சுடப்பட்டதாகவும் ஆனால் அவர் ஆபத்தில் இல்லை என்றும் உறுதிப்படுத்தியுள்ளார் மேலும் அவர் லாகூரில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். Hizam A Bawa See author's posts Tags: bbc news bbc tamil BBC Tamil Sri Lanka guru news guru tamil news guru tamil news in sri lanka guru tv guru tv news gurutv.lk gurutv.lk 2022 jvp tamil news sri lanka sri lanka news sri lanka news tamil sri lanka tamil news tamil news in sri lanka
பண மோசடி செய்ததாக, பாடலாசிரியர் சினேகன் மற்றும் பா.ஜ.க நிர்வாகியும் நடிகையுமான ஜெயலட்சுமி ஆகிய இருவர் மீதும் காவல்துறையினர் வழக்குபதிவு செய்துள்ளனர். KL Reshma Updated on : 27 October 2022, 01:28 PM பண மோசடி செய்ததாக, பாடலாசிரியர் சினேகன் மற்றும் பா.ஜ.க நிர்வாகியும் நடிகையுமான ஜெயலட்சுமி ஆகிய இருவர் மீதும் காவல்துறையினர் வழக்குபதிவு செய்துள்ளனர். தமிழ் திரைப்பட பிரபல பாடலாசிரியராக இருப்பவர் சினேகன். இந்த நிலையில் பாஜக நிர்வாகியும், நடிகையுமான ஜெயலட்சுமி தனது 'சினேகம் அறக்கட்டளை' பெயரை தவறாக பயன்படுத்தி பொதுமக்களிடம் பல கோடி ரூபாய் வசூலித்ததாக கடந்த ஆகஸ்ட் மாதம் சென்னை மாநகர கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அவரளித்த புகாரில், "‘சினேகம் பவுன்டேசன்’ என்ற பெயரில் பதிவு செய்யப்பட்ட எனது அறக்கட்டளை 23.12.2015 முதல் நடத்தி வருகிறேன். இந்த அறக்கட்டளையை ஒன்றிய அரசின் வருமான வரித்துறை அங்கீகரித்துள்ளது. சினேகம் பவுன்டேஷன் என்ற பெயரில் பேன்கார்டும் உள்ளது. ஆனால் எனது அறக்கட்டளை பெயரை தவறாக பயன்படுத்தி நடிகையும், வழக்கறிஞருமான ஜெயலட்சுமி இணையதளம் மூலம் பொதுமக்களிடம் நிதி வசூலித்து வருகிறார்.எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து சினேகன் தன் மீது அவதூறு பரப்புவதாக நடிகையும் பாஜக நிர்வாகியுமான ஜெயலட்சுமி புகார் அளித்தார். இந்த இரண்டு புகார்களின் படி போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையே நடிகை ஜெயலட்சுமி மீது கொடுக்கப்பட்ட புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாடலாசிரியர் சினேகன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் சினேகன் புகாரின் மீது வழக்கு பதிவு செய்ய முகாந்திரம் இருப்பதால் நடிகை ஜெயலட்சுமி மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உத்தரவிட்டது. அதைதொடர்ந்து உயர் நீதிமன்றம் உத்தரவுப்படி பாடலாசிரியர் சினேகன் அறக்கட்டளை பெயரில் பொதுமக்களிடம் நிதி வலுத்தித்து மோசடி செய்ததாக ஜெயலட்சுமி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. Also Read கோவை கார் வெடிப்பு சம்பவம்: அண்ணாமலையிடம் தான் முதலில் NIA விசாரிக்க வேண்டும் - அமைச்சர் செந்தில் பாலாஜி! lyricist Snegan actress Jayalakshmi Trending மும்பை: சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து பிளேடால் அறுத்து கொன்ற சிறுவன் -காரணத்தை கேட்டு அதிர்ந்த போலிஸ் கச்சா எண்ணெய் விலை 25% குறைந்தும் பெட்ரோல் விலை ஏன் குறையவில்லை ? மோடிக்கு ராகுல் காந்தி சரமாரி கேள்வி ! இடைத்தேர்தலில் ரிஷி சுனக் கட்சி படுதோல்வி.. புதிய பிரதமரை நிராகரித்துள்ள பிரிட்டன் பொதுமக்கள் ! வெற்றிமாறனின் 'விடுதலை' படப்பிடிப்பில் ரோப் கயிறு அறுந்து விபத்து.. படுகாயமடைந்த சண்டை பயிற்சியாளர் பலி ! Latest Stories "இப்படி செய்தால் இந்தியா அல்ல, உலகமே நம்மை கேலிதான் செய்யும்" - பாக். அணியை விமர்சித்த முன்னாள் வீரர் ! வெற்றிமாறனின் 'விடுதலை' படப்பிடிப்பில் ரோப் கயிறு அறுந்து விபத்து.. படுகாயமடைந்த சண்டை பயிற்சியாளர் பலி ! மனித மூளைக்குள் சிப்.. எலான் மஸ்க்-ன் அடுத்த அதிரடி.. விலங்குகளுக்கு பொருத்தி சாதனை படைத்ததாக அறிவிப்பு ! கச்சா எண்ணெய் விலை 25% குறைந்தும் பெட்ரோல் விலை ஏன் குறையவில்லை ? மோடிக்கு ராகுல் காந்தி சரமாரி கேள்வி !
#BigBreaking: பிக் பாஸ் போட்டியில் இருந்து எலிமினேட் செய்யப்பட்ட பிரபலம்.. சோகத்தில் கதறும் ரசிகர்கள்..! சிம்புவின் அசத்தலான வாய்ஸில் வெறித்தனமாக வெளிவந்த தீ தளபதி பாடல்... வைரலாகும் வீடியோ!! ஹன்சிகா திருமணத்தில் இப்படியொரு ட்விஸ்ட்.. அடடே.. யாருமே எதிர்பார்க்கலையே.. உண்மையான கருணை உள்ளம் இதுதான்.! வெற்றிமாறன் - சூரி கூட்டணியில் உருவாகும் படத்தின் படப்பிடிப்பில் விபத்து; ஒருவர் பரிதாப பலி.! இயக்குனர் வெற்றிமாறனின் படப்பிடிப்பில் விபத்து!.. சண்டை பயிற்சியாளர் பரிதாப பலி..! நடிகர் கௌதம் கார்த்திக் அம்மாவை பார்த்துள்ளீர்களா... வைரலாகும் புகைப்படம்!! தளபதி விஜய் படத்தில் நடிக்க மறுத்த நவரச நாயகன் கார்த்திக்... என்ன காரணம் தெரியுமா.? #Breaking: வெண்ணிலா கபடிக்குழு நடிகர் ஹரி வைரவன் உடல்நலக்குறைவால் மரணம்... கண்ணீரில் ரசிகர்கள்., சோகத்தில் திரையுலகம்.! ஐயோ சிரிப்ப அடக்க முடியலப்பா... மேடையில் மா.கா.பா ஆனந்த் செய்த செயல்... விழுவிழுந்து சிரிக்கும் நடுவர்கள்... வைரலாகும் வீடியோ!! அட அட... இரண்டாம் திருமணம் குறித்து நடிகை மீனா என்ன கூறியுள்ளார் பாருங்கள்... தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து அதிகபட்ச ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டவர் நடிகை ஜோதிகா. இவர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வரும் நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த அழகிய தம்பதியினருக்கு ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தை உள்ளது. திருமணத்திற்கு பிறகும் நாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளில் நடித்து வருகிறார் ஜோதிகா. மேலும் நடிகை ஜோதிகா கணவருடன் இணந்து 2 டி எண்டர்டெயின்மெண்ட் என்னும் தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்நிலையில் தற்போது சூர்யா - ஜோதிகா இருவரும் இணைந்து 2D தயாரிப்பு நிறுவனம் மூலம் பாலிவுட் படங்களை அதிக அளவில் தயாரிப்பதற்கு திட்டமிட்டுள்ளார்களாம்.இதன் காரணமாக இருவரும் மும்பையிலேயே செட்டிலாகும் முடிவை எடுத்திருப்பதாக தகவல் பரவி வருகின்றது. ஆனால் இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை சூர்யா ஜோதிகா தம்பதியினர் வெளியிடவில்லை. ஆனால் நடிகை ஜோதிகா மும்பை பொதுவெளியில் காணப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி இந்த தகவல் உண்மை என்பது போலவே நினைக்க வைக்கின்றது. Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here Tags: #Jyothika #Mumbai #Viral photo Copy Link தற்போதைய செய்திகள் #EarthQuakeAlert: இலங்கையை அடுத்த வங்கக்கடலில் நிலநடுக்கம்.. ரிக்டரில் 4.2 ஆக பதிவு.! #IndVsBan: இந்தியாவிற்கு எதிராக வேற லெவலில் புதிய சாதனை படைத்த ஷாஹிப் அல் ஹசன்.. மாஸ் சம்பவம் இதுதான்.! #BigBreaking: பிக் பாஸ் போட்டியில் இருந்து எலிமினேட் செய்யப்பட்ட பிரபலம்.. சோகத்தில் கதறும் ரசிகர்கள்..! JustIN: அடுத்த 3 மணிநேரத்தில் 16 மாவட்டங்கள் ஓரிரு இடங்களில் கனமழை - சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!
அரியலூரில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தலைமை ஆசிரியர் உட்பட இரண்டு பேர், போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். அரியலூர் அருகே பள்ளி மாணவியிடம் ஆசிரியர் ஒருவர் மாணவியிடம் பாலியல் தொந்தரவு செய்துள்ளார். மேலும், பல மாணவிகளிடமும், பயிற்சி ஆசிரியைகளிடமும் இதுபோன்ற செயலில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து பெற்றோர்கள் பள்ளி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்காததால் நேற்று (நவ.24) பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆசிரியர் மீது பாய்ந்த போக்சோ தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற அரியலூர் காவல்துறையினர் பள்ளி ஆசிரியரை காவல்நிலையம் அழைத்து சென்று பள்ளியில் யார், யாரிடம் பாலியல் ரீதியான தொந்தரவில் ஈடுபட்டார் என்பதனை விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், ஆசிரியரின் பாலியல் துன்புறுத்தல் சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட மாணவிகளிடம் வெளியே சொல்லக்கூடாது எனவும், ஆசியருக்கு உடந்தையாக மாணவியை சமாதான படுத்தும் விதமாக செயல்பட்டதாக கூறி பள்ளி தலைமை ஆசிரியையும் காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், பாலியலில் ஈடுபட்ட ஆசிரியர் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த ஆசிரியர் மற்றும் மாணவிகளின் புகாரை மறைக்க முயற்சி செய்த பள்ளி தலைமை ஆசிரியை உள்ளிட்ட இருவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் அரியலூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
எங்கள் இணையதளத்தில் உள்ள இணைப்பு மூலம் நீங்கள் சுயாதீனமாக மதிப்பாய்வு செய்யப்பட்ட தயாரிப்பு அல்லது சேவையை வாங்கினால், ரோலிங் ஸ்டோன் ஒரு துணை கமிஷனைப் பெறலாம். உங்கள் ஆரம்பகாலத்தை கருத்தில் கொள்ளுங்கள் கருப்பு வெள்ளி மற்றும் சைபர் திங்கட்கிழமை ஷாப்பிங் முடிந்தது – அதாவது, இந்த சீசனில் உயர்தர வயர்லெஸ் இயர்பட்களில் அதிக தள்ளுபடியை நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள். நீங்கள் ஒர்க்அவுட் பட்களுக்கான சந்தையில் இருந்தாலும் சரி, சத்தத்தை குறைக்கும் ஜோடியாக இருந்தாலும் சரி, இந்த ஆண்டின் மிகப்பெரிய ஷாப்பிங் சீசனுக்கு முன்னதாக ஜாப்ரா அதன் சிறந்த இயர்பட்களில் சிலவற்றை அவற்றின் குறைந்த விலையில் தள்ளுபடி செய்துள்ளது. சிறந்த பகுதி? ஒவ்வொரு பட்ஜெட்டிற்கும் பொருந்தக்கூடிய ஒரு ஒப்பந்தம் உள்ளது. பேக்கின் உச்சியில், வரையறுக்கப்பட்ட நேர விற்பனையின் ஒரு பகுதியாக ஜாப்ரா அதன் எலைட் 7 ஆக்டிவ் ட்ரூ வயர்லெஸ் பட்களின் விலையை 44 சதவீதம் குறைத்துள்ளது. பொதுவாக $179.99, நீங்கள் $99.99 வரை குறைந்த விலையில் வயர்லெஸ் இயர்பட்களைப் பறிக்கலாம், Amazon மற்றும் Best Buy ஆகிய இரண்டிலும் $80 சேமிக்கலாம். அமேசான் ஜாப்ரா எலைட் 7 ஆக்டிவ் $99.99ஐ வாங்கவும் எலைட் 7 ஆக்டிவ்ஸ் உறுதியான, வியர்வை-எதிர்ப்பு வடிவமைப்புடன் வருகிறது, இது அவர்களின் IP57 நீர்-எதிர்ப்பு மதிப்பீட்டிற்கு நன்றி. அலெக்சா உள்ளமைந்த நிலையில் வருகிறது, மேலும் கூகுள் அசிஸ்டண்ட்டைப் பயன்படுத்தும் போது, ​​நீங்கள் ஒரு பாடலைக் கேட்க விரும்பினாலும் அல்லது அழைப்பிற்குப் பதிலளிக்க விரும்பினாலும் கூட, அவற்றை இயக்கலாம். ஸ்வெட் ப்ரூஃப் இயர்பட்கள், இசைக்கான செயலில் இரைச்சல் ரத்து செய்வதையும் ஆதரிக்கிறது, அவற்றை உங்கள் காதுகளில் வைத்திருக்கும் ஒரு நிலையான பொருத்தம், அத்துடன் அவற்றின் கேஸுடன் 30 மணிநேர இயக்க நேரமும். இதற்கிடையில், ஜாப்ரா எலைட் 7 ப்ரோ அவர்களின் பெயருக்கு ஏற்றாற்போல் உள்ளது மற்றும் நம்பமுடியாத அம்சங்களுடன் போட்டியை மிஞ்சுகிறது – மேலும் இந்த வார விற்பனையின் போது அவற்றின் மிகக் குறைந்த விலையில் $119.99 க்கு நீங்கள் அவற்றைப் பெறலாம். அமேசான் Jabra Elite 7 Pro ஐ $119.99 வாங்கவும் சார்ஜிங் கேஸுடன் கூடிய 30 மணிநேர பேட்டரி ஆயுளுடன் கூடுதலாக, புளூடூத் இயர்பட்கள், நீங்கள் எங்கு உங்கள் ட்யூன்களைக் கேட்டாலும், செழுமையான, தெளிவான ஒலி தரத்தை உருவாக்கும் நட்சத்திர செயலில் ஒலி-ரத்துசெய்யும் தொழில்நுட்பத்தைப் பெருமைப்படுத்துகின்றன. நீங்கள் இப்போது அமேசான் மற்றும் பெஸ்ட் பையில் அவற்றை தள்ளுபடி விலையில் வாங்கலாம். நீங்கள் “மோனோ” பயன்முறையில் ஒரே நேரத்தில் ஒரு மொட்டைப் பயன்படுத்தலாம், மேலும் மொட்டுகளின் HearThrough தொழில்நுட்பத்தின் மூலம் அருகில் என்ன நடக்கிறது என்பதைக் கேட்கலாம். நான்கு உள்ளமைக்கப்பட்ட மைக்குகள், 6 மிமீ ஸ்பீக்கர்கள் மற்றும் ஜோடியின் மல்டிசென்சர் குரல் தொழில்நுட்பம், நீங்கள் பயணம் செய்யும் போது உங்களுக்கு தெளிவான அழைப்புகள் இருப்பதை உறுதிசெய்க. அவை பல வண்ணங்களில் வருகின்றன, இவை அனைத்தும் ஜாப்ராவின் சொந்த பயன்பாட்டைப் பயன்படுத்தி ஒலியைத் தனிப்பயனாக்கலாம். நீங்கள் தவறவிட விரும்பாத மற்றொரு ஜாப்ரா இயர்பட்ஸ் டீல், பிராண்டின் எலைட் 4 ஆக்டிவ் பட்களுக்கு 33 சதவிகிதம் தள்ளுபடியாகும், இதன் விலை மாதங்களில் முதல் முறையாக $79.99 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. செயலில் உள்ள இரைச்சல்-ரத்துசெய்யும் ஒலி, அழைப்புகளுக்கான உள்ளமைக்கப்பட்ட மைக்குகள் மற்றும் HearThrough தொழில்நுட்பம் ஆகியவற்றின் கலவையுடன், நம்பகமான, மலிவு விலையில் வயர்லெஸ் இயர்பட்களுக்கான அனைத்து பெட்டிகளையும் சரிபார்க்கிறார்கள். இன்னும் சிறப்பாக, அவை ஜிம்மிற்காக கட்டமைக்கப்பட்டுள்ளன, வியர்வை-எதிர்ப்பு அமைப்பு மற்றும் நீண்ட கால 28 மணிநேர பேட்டரி. ஜாப்ரா இயர்பட்ஸ் டீலை அமேசான் மற்றும் பெஸ்ட் பையில் இப்போது $40 தள்ளுபடியில் வாங்குங்கள். ஜாப்ரா எலைட் 4 ஆக்டிவ் $79.99ஐ வாங்கவும் $50க்கு கீழ், Amazon மற்றும் Best Buy இல் 38 சதவீத தள்ளுபடியில் Jabra இன் சிறந்த தரமதிப்பீடு பெற்ற Elite 3 இயர்பட்களைப் பெறலாம். வழக்கமாக சுமார் $80, குறைந்த பட்சம் அடுத்த சில நாட்களுக்கு $49.99 க்கு மிகக் குறைந்த விலையில் அவற்றைப் பெறலாம். ட்ரூ வயர்லெஸ் இயர்பட்கள் தெளிவான அழைப்புகளுக்கான உள்ளமைக்கப்பட்ட மைக்குகளுடன் வருகின்றன, சிறந்த இரைச்சல்-தனிமைப்படுத்தப்பட்ட ஒலி மற்றும் நீங்கள் சேர்க்கப்பட்ட, ரிச்சார்ஜபிள் கேஸைப் பயன்படுத்தும்போது மொத்தம் 28 மணிநேர சாறு. ஜாப்ரா எலைட் 3 ஐ $49.99க்கு வாங்கவும் அக்டோபர் 30, 2022 அன்று விற்பனை முடிவடைவதற்குள், தள்ளுபடி செய்யப்பட்ட ஜோடிகளை விரைவாகப் பெற விரும்பினாலும், ஜாப்ராவின் இயர்பட்ஸில் ஆரம்பகால Black Friday விற்பனையை நீங்கள் இப்போது Amazon மற்றும் Best Buy இல் ஷாப்பிங் செய்யலாம்.
1, இது மேலே லேபிளுக்கு கிடைக்கிறது, சரியான வடிவமைப்பு மற்றும் மேம்பட்ட கட்டுப்பாட்டு மற்றும் சரிபார்ப்பு அமைப்பு உத்தரவாதம் இது விரைவாகவும் துல்லியமாகவும் பெயரிடப்பட்டுள்ளது. மேம்பட்ட மற்றும் வகையான மனித இடைமுகம், இடைமுகம் சுதந்திரமாக மற்றும் ஆன்-லைன் உதவி அமைப்பு செயல்படுவதை எளிதாக்குகிறது. 2, பிரபலமான உயர் துல்லியமான சர்வர் மோட்டார் லேபிளிங் தலையை இயக்குகிறது மற்றும் லேபிள்களை வெளிப்படுத்த கட்டுப்படுத்துகிறது பிரிக்கப்பட்ட கிளட்ச் திரிபு மிகவும் சீரானதாகிறது.இது துல்லியமான லேபிளிங்கை உறுதி செய்கிறது 3, கட்டுப்பாட்டு அமைப்பு SIMEMS மற்றும் பிரபலமான குழுவை ஏற்றுக்கொள்கிறது, மனித இடைமுகத்தை சீன மற்றும் ஆங்கிலத்தில் இயக்க முடியும் 4, லேபிளிங் தலையை சரிசெய்வது வசதியானது, துல்லியமாக லேபிளிங்கை உறுதிப்படுத்த லேபிளிங் வேகம் தானாகவே கன்வேயர் வேகத்துடன் ஒத்திசைக்கப்படுகிறது. 5, லேபிளிங் துல்லியத்தை மேம்படுத்த கன்வேயரில் வைத்திருப்பவரை உருவாக்குதல் விண்ணப்பம் தினசரி வேதியியல் மற்றும் உணவுத் தொழிலுக்கு தீமசின் பொருந்தும், லேபிளிங் அதிகபட்ச அகலம் 130 மி.மீ, லேபிள் உள் விட்டம் 76.2 மி.மீ, அதிகபட்ச வெளி விட்டம் 330 மி.மீ. அடாntages 1. இயந்திர மின்னழுத்தம் கிளையன்ட் நாட்டின் மின்னழுத்தமாக செய்யப்படும்; 2. கன்வேயர் நீளம் மற்றும் உயரம் வாடிக்கையாளர் சிறப்புத் தேவையாகத் தனிப்பயனாக்கலாம்; 3. இயந்திர பிரதான சாதனம் அனைத்தையும் சரிசெய்யக்கூடியது கிளையன்ட் லேபிளிங் பொருள்களின் வெவ்வேறு வடிவம் மற்றும் அளவைப் பொறுத்தது.
காசிக்கு போகிறோம் வருகிறீர்களா?’ என்று மனைவியின் சகோதரி ஜெயந்தியும் அவர் கணவர் பாலமுகுந்தனும் கேட்டவுடன் கொஞ்சமே கொஞ்சம் யோசித்து ‘சரி’ என்று சொல்லிவிட்டோம். சென்னை – டில்லி – வாராணசி -டில்லி – சென்னை ரவுண்டு ட்ரிப் ஏர் டிக்கெட் புக் பண்ணச் சொன்னார்கள் (ஆகஸ்ட் மூன்றாவது வாரம்). அதை செய்து முடித்ததும், ‘இந்த யாத்திரையின் பஸ்ட் லெக் ராமேஸ்வரம், நாங்கள் இந்த மாதம் (ஜூலை) ஆடி அமாவாசைக்கு முன்பு அங்கு செல்வதாக இருக்கிறோம், நீங்களும் வந்தால் தீர்த்த ஸ்ராத்தம் முடித்து, தனுஷ் கோடியில் இருந்து திரிவேணி சங்கமத்தில் கரைக்க வேணி மாதவரை (மண்) எடுத்துக்கொண்டும் – இந்த மண்ணைக் கொண்டு சேது, பிந்து மாதவர்களையும் கூட சிவ லிங்கங்களாக பிடித்து பூஜை செய்து அதன் பின் பிந்து மாதவரை காசி யாத்திரை நல்ல படியாக முடிய பிரார்த்தித்துக் கொண்டு தானமாகவும், சேது மாதவரை தற்போது அவர் சன்னதியில் சமர்ப்பிக்க முடியாது என்பதால் (செய்தால் காசி யாத்திரை சென்ற புண்ணியம் கிடைக்கும்) கடலில் கரைப்பதற்கும் பூஜை செய்த இடத்திலேயே வைத்து விடுவோம் – வந்து விடலாம்’ என்றார்கள். அதற்கும் ‘சரி’ சொல்லி (ப்ளைட் புக் பண்ணிய பிறகு வேறு என்ன சொல்வது?) அவர்கள் குறிப்பிட்ட தேதிக்கு ஒரு நாள் முன்பு காரில் கிளம்பினோம். மேற்கில் (தென் மேற்கு, மேற்கு, வடமேற்கு) இருந்து ராமேஸ்வரம் செல்பவர்களுக்கு மையப்புள்ளி மதுரை (தெற்கு திசையில் இருந்து வருபவர்களுக்கு திருச்செந்தூர், தூத்துக்குடி. வடக்கில் இருந்து (சென்னை) பயணிப்பவர்கள் திருச்சி – புதுக்கோட்டை – தேவகோட்டை வழியாக ராமேஸ்வரம் அடையலாம்). எப்படி வந்தாலும் காமன் மீட்டிங் பாயிண்ட் ராமநாதபுரம். மதுரையில் இருந்து ராமேஸ்வரம் சுமார் 175 கிலோமீட்டர். சிலைமான்-திருப்புவனம்-திருப்பாச்சேத்தி-மானாமதுரை-பார்த்திபனூர்-பரமக்குடி-ராமநாத……வெயிட். கொஞ்சம் வேகத்தை குறைத்து ராம்நாடுக்கு (இங்கிலீஷ்யா) சுமார் எட்டு கிலோமீட்டருக்கு முன் வலதில் ‘உத்தர கோச மங்கை’ – உத்திரம் என்றால் உபதேசம், கோசம் – ரகசியம், மங்கை என்பது உமையை குறிக்கும். மீனவப் பெண்ணாக பிறந்து வளர்ந்த அம்பிகையை மணந்து அவளுக்கு ஞான உபதேசம் செய்த தலம் – என்று பலகை காட்டும் திசையில் எட்டு கிலோமீட்டர் பயணித்தால் மங்கலேஸ்வரர், மங்களேஸ்வரி, சந்தனக்காப்பு நடராஜர், சஹஸ்ரலிங்கம், மாணிக்க வாசகர் (இருவருக்கும் தொடர்பு உண்டு. ஆயிரம் முனி புங்கவர்கள் சிவ தரிசனம் பெற வேள்வி நடத்த, அவர் மண்டோதரிக்கு குழந்தையாய் காட்சி கொடுக்கப் போக, அக்னியில் இருந்து ஜோதி எழுந்தது. தொள்ளாயிரத்து தொண்ணூற்று ஒன்பது முனிவர்கள் அதில் மூழ்கி மறைய – அவர்கள் ஈசனோடு ஐக்கியமாகி சஹஸ்ரலிங்கமாயினர் . சிவன் கொடுத்துச் சென்றிருந்த மறையை காக்கும் பொருட்டு ஒருவர் மட்டும் தங்கிவிட, அதனால் மகிழ்ச்சியுற்ற ஈசன் அவர் பெருமையை உலகத்திற்கு பறை சாற்ற மாணிக்க வாசகனாய் பிறப்பித்தான். திருவாசகத்தானும் இதுவே இறைவனின் வீடு என போற்றுகின்றான். ஆவுடையார் கோவில் எனப்படும் திருப்பெருந்துறையைக் காட்டிலும் புகழுடைய தலம்) ஆகியோரை தரிசிக்கலாம். பொய் சொல்லி சாபம் பெற்ற பிரம்மன் தவமியற்றி விமோசனம் பெற்ற தலம். ஆகவே, இக்கோவிலில் மட்டுமே சிவனுக்கு தாழம்பூ சார்த்தப்படுகிறது.ஸ்தல வ்ரிக்ஷம் இலந்தை. மூவாயிரம் வருடங்களுக்கு முற்பட்டது. இன்றும் காணக் கிடைக்கிறது. மீண்டும் மெயின் ரோடை அடைந்து கிழக்கு நோக்கி பயணித்து ராமநாதபுரத்திலிருந்து தெற்கே போனால் சேதுக்கரையில் திருப்புல்லாணி (தூத்துக்குடி, திருச்செந்தூர், திருநெல்வேலி வழி) வடக்கில் சென்றால் நவபாஷாணம் (திருச்சி, சென்னை மார்கம்). சீதையை தேடி வந்த ராமன் முதலில் வேதாரண்யம் சென்றடைந்தான். அங்கு கடலுக்கு குறுக்கே அணையோ, பாலமோ கட்டமுடியாது என்று தெரிந்த உடனே கோடிக்கரை பக்கம் வந்தான். அங்கிருந்து ராமேஸ்வரம் (த்ரேத யுகத்தில் இந்திய துணைக் கண்டத்துடன் சேர்ந்தே இருந்தது), தனுஷ் கோடி (அன்று பிரிந்து இன்று சேர்ந்து விட்டது) வந்த ராமன் தன் முன் விரிந்து கிடந்த இரு மாபெரும் கடல்களை பார்த்தான். வலப்பக்கம் ரத்னாகரம் (ராவணன், இந்தியப் பெருங்கடல், ஆர்ப்பாட்டம், ஆபத்தில்லை) இடதில் மகோததி (மண்டோதரி, வங்காள விரிகுடா, அமைதி,ஆபத்தானது). இவ்விரண்டும் இணையும் வில் முனை போன்ற இடம் (ஆகவே, தனுஷ் கோடி). சரி, இதுவே இலங்கையை அடையும் வழி என்று முடிவு செய்து அங்கு பாலம் கட்ட இடம் தேடி அலைந்த ராமன் அருகில் உள்ள உப்பூரை (லவணபுரி) சென்றடைந்து தான் வந்த கார்யம் தடை இல்லாமல் நடக்க விக்னேஸ்வரனை வழிபட்டான். இந்த மூஷிக வாகனர் தன் தலை மீது கூரையின்றி இருப்பதால் ‘ வெய்யில் உகந்த விநாயகர்’ என்று நாமகரணம் கொண்டுள்ளார். காரணம் சூர்யன். தட்சன் நடத்திய யாகத்திற்கு சென்றதால் சிவனின் சாபம் பெற்று அது நீங்க நாரதன் சொற்படி ஆனை வயிற்றானை நோக்கி தவிமிருந்து விமோசனம் அடைந்து, தான் ஒவ்வொரு நாளும் அவரை பூஜிக்க வேண்டுமென வேண்ட, வினை களைபவன் வேய்கூரை இன்றிப் போனார். அங்கிருந்து தேவி பட்டணம் வந்த ராமனுக்கு மகிஷாசுர மர்த்தினியாக தேவி காட்சி தர அவளிடம் சக்தியை வேண்டிப் பெற்றிருக்கிறான். அங்கு நவக்ரஹ வழிபாடும் செய்திருக்கிறான். அதுவே நவ பாஷாணம். மகோததியில் உள்ளது. ஐந்து வெளியே தெரிய, மீதம் நான்கும் தண்ணீருக்குள்ளே. கடல் அலைகள் அவன் பிரதிஷ்டை செய்த க்ரஹங்களை புரட்டிப்போட நினைக்க ராமன் ஜகன்னாத பெருமாளை வேண்டி இருக்கிறான். அவர் அக்கடலில் அலையே இல்லாதபடி செய்து விட்டார். அதனால், கடலடைத்த பெருமாள் என்கிற நாமமும் பெற்றார். அதற்கருகில் திலகேஸ்வரர் கோவில். எள் கொண்டு ராமன் ஈசனை பூஜிக்க இவ்விடம் நீத்தார் புகழ் கூறும் தலமாகி விட்டது. ராமன் பாலம் கட்ட தேர்ந்தெடுத்த சேதுக்கரையில் இருந்து சுமார் நான்கு கிலோமீட்டர் தூரத்தில் திருமங்கை மன்னன் மங்களா சாசனம் செய்த திருப்புல்லாணி திவ்ய தேசம். இங்குள்ள பெருமாளின் நாமம் ஆதி ஜகன்னாதர். ராமன் அஸ்திரங்கள் பெற்ற க்ஷேத்ரம். விபீஷணன் சரணாகதி அடைந்த தலம். ராவணனின் தூதுவர்களை ராமன் சந்தித்த இடம். இங்கு, தசரதன் பிள்ளைப்பேறு வேண்டி ஜகன்னாத பெருமாளை வணங்கி புத்திர காமேஷ்டி யாகம் செய்திருக்கிறார். ஆகவே, இராமாயண காலத்துக்கு முற்பட்ட தலம். கிழக்கு நோக்கிய ஆலயம். கோவில் எதிரில் பிரம்மாண்ட சக்கர தீர்த்தக் குளம் (நீர் தெளிவாக இருந்தால் நன்மை, பொன்னிறமானால் விளைச்சல் குறையும், பாசி படிந்தால் கால் நடைகள் மடியும்). கருவறையில் ஆதி ஜகன்னாதர், ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன். பிராகாரத்தில் தாயார் சன்னதி. சுற்றி வந்தால், ராமன் இளைப்பாறியதன் அடையாளமாக தர்பசயன பெருமாள். மழலைப்பேறு வேண்டுவோர் இங்குள்ள சந்தான கோபால கிருஷ்ணனிடம் பிரார்த்தித்துக் கொள்ளலாம். அடுத்தது, பட்டாபிஷேக ராமன். இந்த தரிசனங்கள் எல்லாம் முடிந்து மீண்டும் ராமநாத புரத்தை அடைந்து மண்டபத்தில் பாலம் ஏறி பாம்பனில் இறங்கி சற்று தூரம் சென்றால் தங்கச்சி மடம், வில்லுறுணி தீர்த்தம். ராமன் தனது வில்லின் நுனியால் நிலத்தை கீறி நீர் எடுத்ததால் இப்பெயர். அது சரி, அதென்ன தங்கச்சி மடம்? மறுநாள் காலை ஸ்நான சங்கல்பம், நாங்கள் டைம் டேபிளில் மாற்றம் செய்து தில ஹோமம் (பித்ரு, அகால, துர் மரண, சர்ப்ப, இதர தோஷ நிவர்த்திக்கென செய்யப்படுவது) பண்ண உத்தேசித்திருந்தோம். அது முடிந்தவுடன் ஜீப்பில் ஏறி தனுஷ்கோடி. செல்லும் பாதை பின் பார்க்கப்போவதை முன்னமே எடுத்துக் காட்டும் வகையில் சற்று சூன்யமாகத்தான் இருந்தது. ஜன, கால் நடைகள் நடமாட்டம் அதிகம் இல்லை. இரு பக்கங்களிலும் கருவேலம், பனை (அ) தென்னை. அங்கொன்றும் இங்கொன்றுமாக சிதறிக் கிடக்கும் சில கிராமங்கள். எப்போதோ, எதிர் திசையில் இருந்து கடந்து செல்லும் மினி பஸ்கள், ஜீப்புகள். எங்கள் ஜீப் முகுந்த ராயர் சத்திரத்தை அடைந்ததும் டிரைவர் கீழிறங்கி வண்டியை போர் வீல் டிரைவ் ஆக மாற்றினார். இல்லையேல் கடற்கரை மணலில் ஜீப்பை நினைத்தபடி வளைத்து செலுத்த முடியாது. போகும் வழியெங்கும் 1964 ஆண்டில் அடித்த புயலின் சேதாரங்கள் நினைவுச் சின்னங்களாக தென்படுகிறது. துருப்பிடித்த படகுகள்,உருக்குலைந்த ரயில் நிலையம்….அந்த ரயில்….சட்டென்று மின்விளக்குகள் அணைய, என்ன செய்வது என்று புரியாமல் என்ஜின் டிரைவர் ரயிலை மேற்கொண்டு செலுத்த, கடல் எனும் பகாசுரன் மொத்த பயணிகளுடன் அதை அப்படியே விழுங்கி விடுகிறது. நினைக்கும் போதே மனசு படபடக்கிறது. ஓரத்தில் கொஞ்சம் பயமும் எட்டிப் பார்க்கிறது. என்றாலும் இது மாதிரியான அட்வென்ச்சர் எளிதில் கிடைக்கக் கூடியது அல்ல. இப்படியே சுமார் எட்டு கிலோமீட்டர் பயணம். சில இடங்களில் கடல் நீர், சகதி. ஒரு வழியாக கரையை அடைந்து, முன்னோர்களுக்கான பிண்டங்களை கடலில் இட்டு, முப்பத்தி ஆறு முறை மூழ்கிக் குளித்து, கரையில் இருந்து சிவலிங்கங்கள் பிடிக்க மண் எடுத்துக்கொண்டு மீண்டும் ஜீப்புக்கு திரும்பினோம். முகுந்த ராயர் சத்திரம் வந்ததும் டிரைவர் மீண்டும் டூ வீல் டிரைவுக்கு மாற்றினார் (மைலேஜ் கிடைக்க வேண்டுமே). இந்த வாகனங்கள் வெகு சீக்கிரத்தில் பழுதாகி விடுகின்றன. நாங்கள் பார்க்கும் போதே ஒரு ஜீப் ப்ரேக் டௌன் ஆகி வேலை பார்த்துக் கொண்டிருந்தார்கள். எங்கள் டிரைவர் இதற்கு முன்னால் கேரளாவுக்கு லாரி ஒட்டிக் கொண்டிருந்தாராம். அதற்கு இது எவ்வளவோ பரவாயில்லை, ஆனால் ஓனர்ஷிப் ஆகாது, வருகிற பணத்தில் பாதிக்கு மேல் பராமரிப்பு, இத்யாதி (!) செலவுகளுக்கே போய்விடும் என்றார். வரும் வழியில் கோதண்ட ராமர் கோவிலில் ஜீப்பை நிறுத்தினார். இங்குதான் ஸ்ரீராமர் விபீஷணனுக்கு பட்டாபிஷேகம் செய்து வைத்திருக்கிறார். இக்கோவிலும் புயலின் கோரப்பிடியில் சிக்கி சீரழிந்திருக்கிறது. அதன் மீதமாக வாசலில் இரு தூண்கள் மட்டுமே. சுவாமி தரிசனத்திற்கு ஈரத்தை உடுத்திக் கொண்டு போகக்கூடாதே என்று கேட்டேன். எல்லோரும் அப்படிதான் செல்கிறார்கள் என்றார் (இதற்கு ஒரு உபாயம் உண்டு. வேஷ்டியை 6/7 முறை உதறி கட்டிக்கொண்டால் அது உலர்ந்ததை கட்டிக் கொண்டதற்கு சமம்). இன்னும் கொஞ்ச தூரம் வந்ததும் ஜடா மகுட தீர்த்தம். ராவண சம்ஹாரம் முடிந்து ராமன் தன் ஜடையை களைந்து இங்கு நீராடி இருக்கிறார். பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை குரு சிம்ம ராசிக்கு வரும் போது மாசி மகமும், பௌர்ணமி திதியும் கூடிய சுப தினத்தில் இத்தீர்த்தத்தில் குளிப்பது விசேஷமாம். மற்ற நாட்களில் யாரும் இங்கு போவது இல்லை. அட்லீஸ்ட், டிரைவர் அப்படித்தான் சொன்னார். மீண்டும் சிருங்கேரி மடத்தை அடைந்து, கொண்டு வந்த மண்ணை மூன்று சிவலிங்களாக (சேது, பிந்து, வேணி மாதவர்) பிடித்து பூஜை செய்தோம். பிறகு, வேணி மாதவரை ஒரு பெரிய துண்டில் கட்டி எடுத்துக் கொண்டோம் (மூடி போட்ட தாமிர (அ ) பித்தளை பாத்திரத்தில் எடுத்துக் கொள்வது உசிதம்).இது இனி திரிவேணி சங்கமத்தில் கரைக்கும் வரை நம் பூஜை அறையில். சேது மாதவரை அவர் சன்னதியில் சேர்க்க வேண்டும். ஆனால், அது இப்போது சாத்தியம் இல்லை. எனவே, அவரை கடலில் கரைப்பதற்கு அங்கேயே வைத்து விட வேண்டும். பிந்து மாதவரை காசி யாத்திரையில் நம் கூட வருமாறு வேண்டிக்கொண்டு அந்தணருக்கு தானமாக தர வேண்டும் (அவர் பஞ்ச கங்கா காட் டில் (காசி) இருக்கும் போது ஏன் இங்கேயே தானம் கொடுக்க வேண்டும் என்று புரியவில்லை). அது சரி, எதற்காக இங்கிருந்து சிவலிங்கம் பிடித்துக் கொண்டு போய் அங்கு கரைத்து, அங்கிருந்து கங்கை நீர் எடுத்து வந்து இங்கு சிவனுக்கு அபிஷேகம் செய்ய வேண்டும்? கங்கையைக் கொண்டு சிவனுக்கு அபிஷேகம் செய்ய நினைத்த ஸ்ரீராமர் தன் வில்லைக்கொண்டு நிலத்தை கீற அவளும் பீறிட்டு வெளிப்பட்டாள் (கோடி தீர்த்தம்). ஆனால், நாம் கீறினால் கங்கை வருவாளா? அதனால், சிவன் மனம் குளிர இங்கிருந்து பிரயாகை கொண்டு போய் கங்கையில் சேர்க்கிறோம். அங்கிருந்து கங்கையை கொண்டு வந்து இங்கு ஸ்ரீசீதை பிடித்த சிவனுக்கு அபிஷேகம் செய்கிறோம். மேலும், இங்கிருந்து சிவன் நமக்கு துணையாகவும், அங்கிருந்து கங்கை நம் கூடவும் வருகிறார்கள். கிட்டத் தட்ட (இல்லை, ரொம்ப ரொம்ப தூரத் தட்ட) நாமும் பகீரதன் போலத்தான். பகீரதன் என்று சொன்னவுடன், அவன் சகர மன்னனின் புதல்வர்களான தன் பாட்டனார்கள் அறுபதினாயிரம் பேரை கரை சேர்க்கத் (சத் கதி அடைய) தானே கங்கையை பூமிக்கு கொண்டு வந்தான், ஆகவே அந்த கங்கையின் கரைகளில் காசியிலும், அவள் யமுனை, சரஸ்வதியுடன் சங்கமிக்கும் பிரயாகையிலும் நம் மூதாதையர்களுக்கு பித்ரு கார்யங்கள் செய்வது தானே விசேஷம். நம் பாக்கியம். நம் வம்சத்திற்கு அனுக்ரஹமும் கூட எனத் தோன்றுகிறது. தில ஹோமம் செய்த அன்று மதியம் ராமேஸ்வர கோவில்களை சுற்றிப் பார்க்க கிளம்பினோம். ரூபாய் இருநூறுக்கு கண்டக்டட் டூர். அந்த லிஸ்டில் சர்வரோகஹர தீர்த்தத்தக் கரையில் தென் திசை காவல் தெய்வமாக கோவில் கொண்டுள்ள மிகவும் சக்திவாய்ந்த நம்பு நாயகி அம்மன் இல்லை. ஆட்டோக் காரரை கேட்டதில் அக்கோவில் அதிக தூரம் எனவும் அதையும் சேர்த்தால் நானூற்று ஐம்பது ருபாய் கொடுக்க வேண்டும் என்றும் கூறினார். கொஞ்சம் பேரம் பேசியதில் நானூறுக்கு ஒப்புக்கொண்டார். நாங்கள் முதலில் போனது கந்த மாதன பர்வதத்திற்கு. ஸ்ரீராமர் இந்த மலை ஏறித்தான் இலங்கைக்கு பாலம் கட்ட உகந்த இடத்தை தேடியிருக்கிறார். அவர் இம்மணர்குன்றின் மீது தன் பாதம் பதித்ததின் அடையாளம் இன்றும் காணக்கிடைக்கிறது. இதன் காரணமாக இவ்விடம் ‘ராமர் பாதம்’ என்றும் வழங்கப்படுகிறது. இருட்டிவிட்டால் போக முடியாது, கோவிலையும் மூடிவிடுவார்கள் என்று ஆட்டோ டிரைவர் சொன்னதன் காரணமாக நாங்கள் அடுத்து சென்றது நம்பு நாயகி கோவிலுக்குத் தான். சுயம்பு அம்மன். அருகிலேயே பூஜைக்குரிய விக்ரஹம். வயதான பூசாரி மிகவும் மெல்லிய குரலில் பேசினார். குனிந்து, சுயம்பு நம்பு நாயகியிடம் நம்மைப் பற்றி விவரம் கூறினார். நம்மிடம், அவள் அளப்பரிய சக்தி உடையவள், நம் கூடவே இருந்து காப்பாள் என்றும் சொன்னார். தன் தந்தை, பாட்டன் பரம்பரை வழி வந்த நம்பு நாயகியின் பிரசித்தத்தை கூறும் பல கதைகளை எடுத்துரைத்தார். அங்கிருந்து பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில். பிரம்மாண்ட சிலா ரூபம். இங்குதான், ஸ்ரீராமர் பாலம் அமைக்க உபயோகப்படுத்திய மிதக்கும் கற்களைக் கண்டோம். அங்கிருந்தவர் ஏதாவது ஒரு கல்லை தூக்கச் சொன்னார். தண்ணீரை விட்டு வெளியே எடுத்ததும் கனம் கூடிற்று. இங்கு, இக்கற்கள் விலைக்கு கிடைக்கிறது. (இப்போதே கருமை படர்ந்து விட்டதாலும், மின் வெட்டு காரணமாகவும், ஆடி அமாவாசை அடுத்த சில நாட்களில் என்பதாலும் இனி பார்த்த தீர்த்தங்கள், கோவில்களில் போட்டோ எடுக்க முடியவில்லை) அடுத்தது, லக்ஷ்மண தீர்த்தம். சேது மகாத்மியம் இத்தீர்த்தத்தின் மஹிமையை விஸ்தாரமாக எடுத்துரைக்கிறது. இத்தலத்தில் தீர்த்த ஸ்ராத்தம் செய்வது விசேஷமானது. சங்கல்பம் செய்து, முடி கொடுத்து, இக்குளத்தில் நீராடி பிண்டப்ரதானம் செய்து பித்ருக் கடனை நிறைவேற்ற வேண்டும். ‘அஸ்வத்தாமா ஹத : குஞ்ஜர :’ என்று தர்ம புத்திரனை சொல்ல வைத்து ‘குஞ்ஜர :’ என்பது துரோணாச்சாரியர் காதில் விழாமல் துந்துபி முழக்கி அவரை வீழ்த்திய ஸ்ரீகிருஷ்ணனின் தந்திரம் தெரிந்ததும் யுதிஷ்டிரர் மனக்கிலேசமுற்று இங்கு அமைந்துள்ள ராம தீர்த்தத்தில் நீராடி அருகிலேயே கோவில் கொண்டுள்ள ஸ்ரீராமரை தரிசித்திருக்கிறார். எதிர் திசையில் சீதா தீர்த்தம். குளத்தில் தண்ணீர் இல்லை. தூர்வாரி ஊற்றுக் கண்களை திறக்கும் வேலை நடந்து கொண்டிருக்கிறது. அதிர்ஷ்டம் இருந்தால் நீங்கள் போகும் போது நீர் நிரம்பி காட்சி அளிக்கலாம். ராமேஸ்வரத்தின் மற்ற திசைகளுக்கும் காவல் தெய்வங்கள் உண்டு. வடக்கில் பத்ரகாளி. கிழக்கில் உஜ்ஜயினி காளி (அக்னி தீர்த்தம், சங்கர மடம் அருகில்),மேற்கில் துர்க்கை அம்மன். இவர்களையும் தரிசித்து விட்டு சிருங்கேரி மடம் திரும்பினோம். உங்கள் கவனத்திற்கு : ‘காசி யாத்திரை’ என்பது எல்லோருக்குமானது, எந்த வட்டத்திற்குள்ளும் அடக்க முடியாதது. நம் குலம் தழைக்க, செழிக்க ஒவ்வொருவரும் அத்யாவஸ்யமாக செய்ய வேண்டியது பித்ரு கார்யம் (ஸ்ராத்தம், தர்ப்பணம்), இதற்கு அடுத்ததுதான் மற்ற எல்லாமே (நித்யகர்மா, குல தெய்வம், குல குரு, இஷ்ட தெய்வம், கோவில், குளம், மந்த்ரம், ஜபம், தியானம், ஹோமம், யாகம், இத்யாதிகள்). பித்ரு கர்மா செய்யாமல் கோவில் போவதனால் எந்த பிரயோசனமும் இல்லை. கோவிலில் இருக்கும் தெய்வம் எல்லோருக்கும் பொதுவானது. ஆனால், நம் முன்னோர்கள் நமக்கானவர்கள் மட்டுமே. அவர்கள் வாழ்த்தினால் நம் வம்சம் செழித்தோங்கும். வருந்தினால் கஷ்டப்படும். அது எப்படி, நம் பித்ருக்கள் நம்மை சபிப்பார்களா என்றால், இல்லை. ஆனால், பித்ரு தேவதைகள் அப்படி சும்மா விட்டு விட மாட்டார்கள். இது ஏதடா, பயமுறுத்துகிறானே, நாம் இதுவரை ஒன்றும் செய்யவில்லையே என்றால், கவலைப்படவேண்டாம் அதற்குத்தான் இந்த ராமேஸ்வர, பிரயாக, காசி, கயா ஸ்ராத்தங்கள் (முக்கியமாக, கயாவில் பிண்டம் அளிப்பது நம் முன்னோர்களுக்கு மட்டுமல்ல, இறந்து போன நம் அடுத்த வட்ட உறவினர்கள், நண்பர்கள், எதிரிகள், எதிர், பக்கத்து வீட்டார்கள், ஏன் நாம் வளர்த்த மாடு, ஆடு, குதிரை, நாய், பூனைகள் போன்ற பிராணிகளுக்காகவும் கூட). இதை எல்லாம் செய்து முடித்துவிட்டு ஸ்ராத்தம், தர்ப்பணம் (ஆண்டுக்கு குறைந்த பட்சம் 15) இவற்றை தொடர்ந்து செய்து வந்தாலே போதுமானது நம் வம்சம் சுபிக்ஷம் அடைய. இதில் மாளய பக்ஷ ஸ்ராத்தங்களும் அடங்கும். ஆனால், இந்த யாத்திரை அவ்வளவு சுலபமானது அல்ல. ராமேஸ்வரம் வேண்டுமானால் தனித்து இருப்பதனால் கொஞ்சம் எளிதாக இருக்கும். ஊரும் நம்ம ஊர். கர்மாக்களும் குறைவு. ஆனால், காசி போய் சேர்ந்து விட்டால் காலில் சக்கரம்தான் கட்டிக் கொள்ளவேண்டும். பித்ரு கர்மாக்கள் அதிகம். எல்லாமே ஜெட் வேகத்தில் நடக்கும். ஒவ்வொருநாளும் அதிகாலையிலேயே எழுந்து ஒவ்வொரு திசையில் 3 – 5 மணி நேர பயணம். போய் சேர்ந்த உடனே கார்யங்களை ஆரம்பிக்க வேண்டி இருக்கும். நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்று புரிவதற்கு முன்பே முடிந்தும் விடும். சரியாக செய்தோமா என்று சந்தேகமாகவே இருக்கும். இப்படியெல்லாம் மன வருத்தங்கள் ஏற்படாமல் பித்ரு கர்மாக்களை முடிந்த அளவு சரியாக செய்வதற்காக நம்மை ஓரளவு தயார் செய்து கொள்வதற்காகவே இந்தத் தொடர். ஆகவே, காசி யாத்திரை சென்று பித்ரு கர்மா செய்ய இருப்பவர்கள் இத்தொடரை கவனமாக படிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். பொதுவாக, எல்லோருமே படித்து எல்லா விஷயங்களையும் தெரிந்து கொள்வது நல்லது. மறு நாள் காலை, அறையிலேயே குளித்து கோவிலுக்குச் சென்று ஸ்படிக லிங்க தரிசனம் (ஐந்து முதல் ஆறு மணி வரை). பின் மடம் திரும்பி ஸ்நான சங்கல்பம் செய்து அக்னி தீர்த்தத்தில் (இந்திய பெருங்கடல்) முதல் குளியல். அதென்ன அக்னி தீர்த்தம்? ஸ்ரீசீதையை மீட்டு வந்த ஸ்ரீராமன் அவளை அக்னிப் ப்ரவேசம் செய்யச் சொன்னான். இதைகேட்டு அக்னி பயந்தான். ஸ்ரீ சீதை அவனை சமாதானப் படுத்தினாள் ‘உன்னால் எனக்கு ஒரு தீங்கும் நேராது. உன் வெப்பம் என்னை தாக்காது. நான் இக்குளியல் செய்வதனால் உனக்கு எந்த வித அபகீர்த்தியையும் உண்டாகாது. என் பதிவ்ரதத்தீ உனக்கு புகழே சேர்க்கும்’ என்று. அவள் தீ புகுந்த இடமே இன்று ‘அக்னி தீர்த்தக் கரை’யாக விளங்குகிறது. அக்னியும் அவளை சுடாமல் குளிர்ந்தான். தன் பாவம் நீங்க இங்கு நீராடியிருக்கிறான். ஆகவே, ‘அக்னி தீர்த்தம்’. (இங்குதான் ஸ்ரீசீதை இதை சொல்லி இருப்பாள், அக்னி பிரவேசம் செய்திருப்பாள் என்று நினைக்கும் போதே சிலிர்க்கிறது. இப்படிப்பட்ட ஸ்தலங்களை நாம் காண்பதற்கே பல ஜன்மாக்களில் புண்ணியம் செய்திருக்க வேண்டும்). அக்னி தீர்த்தத்தில் இருந்து ராமநாத ஸ்வாமி கோவிலை நோக்கி வரும் போது வளைவில், இடதில் உஜ்ஜயினி காளி கோவில். திறந்திருந்தது. ஒருவரும் இல்லை. தூரத்தில் இருந்தே வணங்கி விட்டு திரும்பினால் வலதில் ஸ்ரீசங்கர மண்டபம் (பிரயாகை பாலத்தில் செல்லும் போது (காசியில் இருந்து) கங்கை, யமுனை, சங்கமத்தில் படகுகள் இவற்றைத் தவிர தூரத்தில் தென்படுவது ஸ்ரீசங்கர விமானமே. இதற்கெல்லாம் காரணம் யார்? வேறு யார்? நம் ஸ்ரீ மஹா பெரியவா தான். காசியிலும் பஞ்சாயதன முறையில் ஒரு கோவில் கட்டி இருக்கிறார்). இந்த சங்கர மண்டபத்தில் நுழைந்தால் தாமதாகி விடும் என்பதால் (தவிர ஈர உடையில் இருப்பதும் ஞாபகத்துக்கு வந்தது) பின்னால் பார்த்துக் கொள்ளலாம் என்று நினைத்துக் கொண்டே அதைத் தாண்டி விரைகிறோம் (அவசியம் பாருங்கள்). ஆலயத்தில் நுழைந்து தீர்த்தப் பிரகாரத்தை சுற்றி வந்தால் இருபத்தி இரண்டு புண்ணிய தீர்த்தங்கள். இவற்றில், ஸ்ரீமஹாலக்ஷ்மி, சேது மாதவ தீர்த்தங்கள் மட்டும் குளங்கள். மற்றவை கிணறுகள். அனைத்துமே விசேஷம். எனினும் சர்வ, சேது மாதவ, கோடி தீர்த்தங்கள் மிகவும் ஸ்ரேஷ்டமானவை. ஸ்ரீராமன் தன் வில்லினால் சிவ அபிஷேகத்திற்கென உண்டாக்கியதே கோடி தீர்த்தம். தன் மாமன் கம்சனை கொன்ற தோஷ நிவர்த்திக்காக ஸ்ரீக்ருஷ்ணனே இதில் நீராடி இருக்கிறான். ஆனால், ஸ்வாமி அபிஷேக்கதிற்கு இந்த தீர்த்தம் பயன்படுத்தப் படுவதால் இதில் நாம் நேரடியாக ஸ்நானம் செய்ய முடியாது. உள்ளிருந்து கொட்டும் நீர் கோமுகம் வழியாக நம்மை நனைக்கும். காசி யாத்திரை முடிந்து மீண்டும் இங்கு வந்து கங்கையினால் ஸ்வாமிக்கு அபிஷேகம் செய்துவிட்டு ஊர் திரும்பும் போது ஒரு பிளாஸ்டிக் பாட்டில் கோடி தீர்த்தமும் வாங்கிக் கொண்டு போய் அதையும் கங்கை சொம்புகளுடன் சேர்த்து வைத்தே சமாராதனை பூஜை செய்ய வேண்டும். தீர்த்தக் குளியல்கள் முடிந்ததும் இருப்பிடம் அடைந்து (சிருங்கேரி மடம்) உடை மாற்றி பார்வண (அ) ஹிரண்ய ஸ்ராத்தம் செய்து, பின் சுவாமி தரிசனம் (பித்ருக்களை காக்க வைத்து விட்டு கோவிலுக்கு செல்லக் கூடாது). அக்னி மற்றும் கோவிலுக்குள் இருக்கும் 22 தீர்த்தங்களில் ஸ்நானம் பண்ணி சிருங்கேரி மடம் அடைந்து உடை மாற்றி உடனே தீர்த்த ஸ்ராத்தத்தை ஹிரண்யமாக செய்தோம். அதற்குப்பின் ஸ்வாமி தரிசனம்… செக்யூரிட்டி (செல், கேமரா, வாலட் மற்ற காபின் லக்கேஜில் தடை செய்யப்பட்ட பொருட்களுக்கு இங்கும் அனுமதி கிடையாது) செக் முடிந்ததும் நேரே கோவிலுக்குள்ளே சென்று விடுவோம். வலப்பக்கம் திரும்பிப் பார்த்திருந்தால் வித்யாசமான செந்தூர ஹனுமனை தரிசித்திருக்கலாம். ஆனால், நாம் முதலில் பிள்ளயாரைத்தானே நாடுவோம். ராமநாத ஸ்வாமி கருவறை நுழை வாசலில் எப்போதும் போல் இடப்புறத்தில் சற்றே பிரம்மாண்டமான கணபதி. அவருக்கு தோர்பிகரணம் போட்டுக் கொண்டிருக்கும் போதே வாயிலின் வலப்பக்கம் நிலை கொண்டிருக்கும் முருகப்பெருமானை கை காட்டி விடுகிறான் நவக்ரஹங்களின் அருகில் கடை போட்டிருப்பவரிடம் வேலை செய்யும் பையன். இவர்களை சுற்றி வந்தால் மிக பிரம்மாண்டமான சுதை நந்தி கண்ணில் படாமல் போகாது. அவரையும், கொடி மரத்தையும் வலம் வந்து ஸ்வாமி சன்னதிக்குள் பிரவேசிக்கும் போது, முதலில் காசி விஸ்வநாதரை தரிசித்து விட்டுத்தான் ராம நாதரை பார்க்க வேண்டும் என்பது மறந்து விடுகிறது. ஏன் அப்படி? ராவணனை கொன்றதால் ஸ்ரீராமனை பிரம்மஹத்தி பிடித்துக் கொண்டது. தோஷம் நீங்க சிவ பூஜை செய்ய வேண்டுமென கூறினர் ரிஷிகள். ராமன் ஹனுமனை அழைத்து உடனே விஸ்வநாத க்ஷேத்ரமான காசி சென்று நர்மதா லிங்கத்தை கொண்டு வர பணித்தார். காசியில் சிவன் எல்லோருடைய காதுகளிலும் தாரக மந்திரமான ராம நாமத்தை ஓதிக்கொண்டிருக்க, அதில் லயித்துப் போன அஞ்சனை மைந்தன் தான் வந்த கார்யத்தை மறந்தார் (இதற்கு வேறொரு கதையும் உண்டு. காசியின் காவல் தெய்வமான காலபைரவரின் அனுமதி பெறாமல் லிங்கத்தை கொண்டு வந்ததனால் அவர் ஹனுமனை வழியிலேயே அதை வைத்து விடுமாறு செய்து விட்டார். அந்த இடம் நாகலாபுரம். ஆகவே, மாருதி மீண்டும் காசி சென்று கால பைரவரிடம் பிரார்த்தித்து எதற்கும் இருக்கட்டும் என்று ஒன்றுக்கு இரண்டாக லிங்கங்களை கொண்டு வரும்படி ஆயிற்று. அதனால் கால தாமதம்). இங்கே முகூர்த்த நேரம் கடந்து விடும் என்பதால் ஸ்ரீசீதை மண்ணைக் கொண்டு சிவலிங்கம் பிடிக்க ராமன் அதற்கே பூஜையை செய்து விட்டார். கைக்கு ஒன்றாக இரு லிங்கங்களை கொணர்ந்த வாயு புத்திரனுக்கு வந்ததே கோபம். சீதை பிடித்த சிவலிங்கத்தை தன் வாலினால் கட்டி இழுத்தார். அது அசையக்கூட இல்லை. ஹனுமன் தன் தவறை உணர்ந்து ராமனிடம் சரணடைய அவரும் ஆறுதல் கூறி வானர வீரன் கொண்டு வந்த இரு லிங்கங்களில் ஒன்றை அருகேயே பிரதிஷ்டை செய்து அதற்கே முதலில் பூஜை, தரிசனம் என்று பிரச்சனைக்கு நல்ல தீர்ப்பு வழங்கி விட்டார். ஆகவே, ராமனின் கூற்றுப்படி நாம் காசி விஸ்வநாதரை பார்த்துவிட்டுத்தான் ராமநாத தரிசனம் செய்ய வேண்டும். காசிநாதருக்கு அருகிலேயே பிராகாரத்தில் விசாலாக்ஷி. தொட்டடுத்து ஜோதிர் லிங்கம், சஹஸ்ரலிங்கம்….சரி, ஆஞ்சநேயர் கொண்டு வந்த மற்றொரு லிங்கம்? அவர்தான் ஆத்ம லிங்கமாக கோவில் வாசலில் நாம் தரிசிக்காமல் விட்ட செந்தூரனின் சன்னதியின் பின்புறம் குடி கொண்டுள்ளார். இவர்களை பார்க்காமல் நீங்கள் கோவிலை விட்டு வெளியே வந்து விட வாய்ப்பு உண்டு. அவசியம் தரிசனம் செய்யுங்கள்…..எங்கிருந்து எங்கு வந்து விட்டோம்? திரும்பிப் போய் சுவாமியைக் காண வரிசையில் சேர்ந்து கொள்வோமா? ராமநாதர்! அற்புத தரிசனம்! நாம் பார்த்துக் கொண்டிருக்கும் போதே யார் யாரோ கொண்டு வந்திருந்த கங்கை தீர்த்தம், பூக்கள், பால் சேர்ந்த கலவையால் ராமேஸ்வரனுக்கு அபிஷேகம். இதே போல் நாமும் ஒரு நாள் அந்த புண்ணிய தீர்த்தத்தை எடுத்து வந்து அபிஷேகம் செய்வோம் என்று நினைக்கும் போதே சிலிர்க்கிறது. ஆரத்தியை கண்களில் ஒற்றிக்கொண்டு கீழே இறங்கி பிராகாரத்தை சுற்றி வந்தால் கோஷ்டத்தில் மஞ்சள் வஸ்த்திரம் அணிந்து தக்ஷிணாமூர்த்தி. நடராஜர், சஹஸ்ரலிங்கம், வஜ்ரேஸ்வரர், துர்க்கை, மகாலட்சுமி….ஸ்வாமி சன்னதியில் இருந்து உமையை (பர்வதவர்த்தினி) காணப் போகும் வழியில் சுக்ரவார மண்டபத்தில் அஷ்ட லக்ஷ்மிகள். மண்டபத் தூண்களில் மனோன்மணி, மாஹேந்திரி,கௌமாரி, ராஜ ராஜேஸ்வரி……புவனேஸ்வரி, அன்னபூரணி என்று அம்பாளின் பதினாறு வடிவங்கள். பர்வத ராஜனின் புத்ரியை கண், மனம் குளிர தரிசித்து வலம் வந்தால் மேற்கு பிராகாரத்தில் சப்த மாதர்கள். அட இதென்ன, இங்கே பள்ளி கொண்ட பெருமாள்? சடாரி வைத்துக் கொண்டு, தீர்த்தம் பெற்று வெளியே வந்து கோடி மரம் முன்பு வீழ்ந்து வணங்கி எழுந்து இரண்டாம் பிராகாரம் வலம் வரலாம் என்று நினைத்தால், தரை முழுவதும் தண்ணீர். ஓஹோ, இதுதான் தீர்த்தங்களுக்கு செல்லும் பிராகாரம், நாம் தான் காலையில் இருந்த அவசரத்தில் கவனிக்காமல் விட்டு விட்டோம் போலும், அப்படியானால் அந்த உலகப் பிரசித்த பிராகாரம்? அது மூன்றாவது. கிழக்கு மேற்காக 640 அடி. கிழக்கும், மேற்கும் 400 அடி. ஐந்தடி உயரமுள்ள மேடையின் மீது வரிசையாக தூண்கள். கண் கொள்ளா காட்சி. பிரமிப்பின் உச்சத்துக்கே போய்விடுகிறோம்! (அடச்சே, போட்டோ எடுக்க முடியாமல் போய்விட்டதே என்கிற நினைப்பை தவிர்க்க முடியவில்லை. ஆனால், செக்யூரிட்டி தானே மிக முக்கியம் என்று நம்மை நாமே சமாதனம் செய்து கொள்கிறோம்). வந்த கார்யம் முடிந்து விட்டது. தீர்த்த ஸ்ராத்தம் செய்து, பிரயாகையில் கரைக்க வேணி மாதவரை பத்திரப்படுத்திக் கொண்டாகி விட்டது. ராமேஸ்வரத்துக்கு வெளியே, உள்ளே உள்ள இதிகாச, புராண, சரித்திர புகழ் பெற்ற கோவில்களில் உறையும் தெய்வங்களையும் ஆலயத்திற்குள்ளே அனைத்து சன்னதிகளையும் தரிசனம் செய்தாகி….வெயிட். இன்னுமொரு மூர்த்தத்தை பார்க்க வேண்டியுள்ளது. ராமநாத ஸ்வாமியின் பின்புறம் இரண்டு, மூன்றாவது ப்ராகாரங்களுக்கு இடையே வெள்ளை சலவைக்கல்லால் (ஆகவே, ஸ்வேத மாதவர்) ஆன சேது மாதவர் ‘என்னை பார்க்காமல் போகிறீர்களே, என்னாலும் உங்களை சந்திக்க வர முடியாமல் கால்களில் சங்கிலி போட்டு கட்டி இருக்கிறார்களே’ என்று வருத்தத்துடன் சொல்கிறார். வாருங்கள், ஏன் அவரை அவ்வாறு பிணைத்திருக்கிறார்கள் என்பதை அறிந்து, நம் அனுதாபத்தை தெரிவித்து, தரிசனமும் செய்து விட்டு வருவோம். பாண்டிய மன்னன் யாகம் செய்ததன் பொருட்டு தன் மனையாளோடு கடலாடி திரும்பும் போது அழுதுக்கொண்டிருந்த சிறுமி ஒருத்தி எதிர்ப்பட்டிருக்கிறாள். அரசன் தன்னோடு வருமாறு அழைக்க, அவள் ஒரு நிபந்தனை விதித்தாள் ‘என் விருப்பமின்றி என்னை யாராவது தொட்டால் அவரை தண்டிக்க வேண்டும்’ என்று. வேந்தன் அதிர்ந்தான். என்றாலும் சம்மதித்தான். பின்னொரு நாள் எவனோ ஒருவன் அவளை கைப்பிடிக்க அவள் கூச்சலிட்டாள்.கோன் ஓடோடி வந்தான். கை பிடித்தவன் கால்களை சங்கிலியால் பிணைத்து விட்டான். அன்றிரவு கனவு. வந்த கள்வன் ஸ்ரீமன் நாராயணனே, அவன் பிடித்த கைகள் ஸ்ரீமஹாலக்ஷ்மியுடயதே என்பதையும், அவள் தன் பக்தியை சோதிக்கவே செய்தாள் என்றும் புரிந்து கொள்கிறான். உருகி உருகி சேது மாதவ லக்ஷ்மி ஸ்துதி பாடுகிறான். இதை சேது மகாத்மியம் சிறப்பித்துக் கூறுகிறது. ஸ்ரீமஹா லக்ஷ்மி இப்படி என்றால், பர்வத வர்த்தினி அப்படி. எப்படி?அவள் ராமர் பாதம் பதிந்த கந்தமாதன பர்வதத்தையே தன் பிறந்த வீடாகக் கொண்டு ஆடி மாதத்தில் அங்கு போய்விடுகிறாள். ஸ்ரீராமனாதர் திருக்கல்யாண உற்சவத்தின் போது மாமனார் வீடு சென்று தங்குகிறார் (அங்கேயும் இதே கதை தானா?). இந்த சமயத்தில் ராமேஸ்வர ஆலயம் அடைக்கப் பட்டிருக்கும். ஆகவே, ஆடி மாதம் ராமேஸ்வரம் போகிறீர்கள் என்றால் விசாரித்துக் கொண்டு செல்லவும். சொல்வதற்கு இன்னும் ஓரிரு விஷயங்கள் உள்ளது. ஸ்ரீசீதை இம்மண்ணை எடுத்து சிவலிங்கம் பிடித்ததால் ராமேஸ்வரத்தில் ஏர் கட்டி உழவில்லை, சூளையிட்டு சட்டிப்பானை சுட்டெடுப்பதும் இல்லை, சிவலிங்க வடிவமாக இருப்பதால் செக்கு ஆடுவதும் கிடையாது. சரி, இப்படியே போய்க்கொண்டிருந்தால் எப்போது காசி சென்று சேர்வது? ஆகவே, ராமேஸ்வர பார்ட்டை இத்துடன் முடித்துக் கொள்வோமா? இப்போது நாம் வடக்கு நோக்கி வாயு புத்திரனைப் போல பறந்து சென்று வாராணசி அடைகிறோம்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி ஏற்கெனவே ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தொடுத்த வழக்கு இறுதித் தீர்ப்புக்காக உச்ச நீதிமன்றத்தில் இருக்கிறது. இந்த நிலையில் தூத்துக்குடியில் இருந்து அச்சமூட்டும் வகையில் ஒரு செய்தி... கடந்த 24-ம் தேதி அதிகாலை அந்த ஆலையில் இருந்து விஷ வாயு வெளியாகி பலரையும் மயக்கமடையச்செய்து பரபரப்பை ஏற்படுத்தியது. ''காலையில் அந்த வழியா வாக்கிங் போய்ட்டிருந்தேன். ஏதோ பிளாஸ்டிக் எரியுற வாடை அடிச்சுது. கொஞ்ச நேரத்தில அந்தக் காற்றை சுவாசிக்க முடியாம, மயங்கி விழுந்துட்டேன். அந்த ஏரியாவுல உள்ள செடி, மரங்கள் எல்லாம் கருகிப்போச்சு'' என்றார் பாதிக்கப்பட்டவர்களுள் ஒருவரான முருகேசன். தூத்துக்குடி வ.உ.சி காய்கனி மார்க்கெட் வியா​பாரிகள், ''அதிகாலை மூணு மணிக்கு காற்றில் ஏதோ ரப்பர் கருகிறமாதிரி வாசனை வீசியது. அஞ்சு, ஆறு மணிக்கு அதிக நெடியுடன் காற்று வீசியது. கண் எரிச்சல், படபடப்பு, மூச்சுத் திணறல் ஏற்பட்டுச்சு. மூக்கில் துணியைக் கட்டிக்கிட்டுத் தப்பிச்சோம். அப்புறம்தான் ஸ்டெர்லைட் ஆலையில இருந்து விஷ வாயு கசியுதுன்னு சொன்னாங்க. விஷயம் கேள்விப்பட்டதும் வியாபாரிங்க கடைகளை மூடிட்டுப் போயிட்டாங்க. பகல் பத்து மணி வரைக்கும் மார்க்கெட் பக்கம் யாரும் வரலீங்க'' என்றார். விஷயம் அறிந்து ம.தி.மு.க., பா.ம.க., இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், தூத்துக்குடி மத்திய வியாபாரிகள் சங்கம், மீனவர்கள் அமைப்புகள், மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சியினர்கள் திரண்டுவிட்டார்கள். இவர்களுடன் வைகோ வந்துசேர அவர் தலைமையில் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் இறங்கினர். விஷ வாயு வெளியானது குறித்து ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோவிடம் பேசினோம். ''ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து வெளியான விஷ வாயுவால் ஆலையைச் சுற்றியுள்ள சுமார் 40 கி.மீ. தொலைவுக்குக் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வாயுக் கசிவால் குழந்தைகள் மக்கள் பெருமளவு பாதிக்கப்பட்டு உள்ளனர். இரண்டு மணி நேர வாயுக் கசிவுக்கே இவ்வளவு பெரிய பாதிப்பு என்றால் ஆலையில் முழுவதுமாக கந்தகம் கசிந்தால், தூத்துக்குடியே சுடுகாடாகிவிடும். ஸ்டெர்லைட் ஆலை தொடங்கப்பட்டு இன்று வரை நூற்றுக்கும் மேற்பட்ட ஊழியர்கள் விபத்தில் பலியாகியுள்ளனர். கடந்த வாரம்கூட சுவாமிநாதன் என்ற வெல்டிங் தொழிலாளி பலியானார். அது மறைக்கப்பட்டுவிட்டது. இதே நிலை நீடித்தால் இந்த ஆலை இன்னும் எத்தனை பேரின் உயிரைக் காவு வாங்கக் காத்திருக்கிறதோ தெரியவில்லை. அந்த ஆலையில் பணிபுரியும் ஊழியர்கள் பலர் புற்றுநோயில் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன. ஆலையால் தூத்துக்குடி மக்கள் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள். ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வாதாடி​வருகிறேன். இன்னும் சில மாதங்களில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்க இருக்கிறது. இருப்பினும் வரும் 28-ம் தேதி எனது தலைமையில் பல்வேறு கட்சிகளும், சமூக அமைப்புகளும் சேர்ந்து ராஜாஜி பூங்காவில் இருந்து பேரணியாக ஸ்டெர்லைட் ஆலையை முற்றுகையிடுவோம்'' என்றார் உறுதியுடன். விவகாரம் குறித்து மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ்குமாரிடம் பேசினோம். ''வாயு கசிந்த விவகாரத்தைக் கேள்விப்பட்டதும் சிப்காட் வளாகத்தில் உள்ள ஆலைகளில் மாசுக் கட்டுப்பாடு வாரியம் மேற்கொண்ட ஆய்வில் ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையில் இருந்துதான் கந்தக டை ஆக்ஸைடு கசிந்துள்ளது என்பதை உறுதி செய்தனர். வாயு அதிகம் பரவிய ஆலையின் சுற்றுப்பகுதிகளான மீளவிட்டான், மடத்தூர், தெற்கு வீரபாண்டிய புரம் ஆகிய ஊர்களுக்கு மருத்துவக் குழு அனுப்பப்பட்டு மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. '' என்றார். மாவட்ட சுற்றுச் சூழல் பொறியாளரான கோகுல்தாஸ், ''பராமரிப்பு வேலை முடிஞ்சு மீண்டும் இயக்கும்போது அதிகமான அளவு கந்தக டை ஆக்ஸைடு வெளியேறி இருக்கிறது. அது நகர் முழுவதும் பரவினால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டிருப்பார்கள். விபத்து சம்பந்தமாக அந்த ஆலைக்கு நோட்டீஸ் கொடுத்திருக்கிறோம்'' என்றார் சுருக்கமாக. இதுகுறித்து ஸ்டெர்லைட் ஆலை தரப்பில் மக்கள் தொடர்பு மேலாளரான இசக்கியப்​பனிடம் பேசினோம். ''எங்கள் ஆலைக்கும் அந்த விபத்துக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. இரண்டு மூன்று நாட்களாக ஆலை நிறுத்திவைக்கப்பட்டு அன்றைக்கு 10 மணிக்குத்தான் இயங்க ஆரம்பித்தது. இங்கிருந்து எந்த வாயுவும் வெளியில் செல்லவில்லை. முழுக்க முழுக்க லேட்டஸ்ட் டெக்னாலஜியால் இயங்கும் தொழிற்சாலை இது. ஆரம்பத்தில் இருந்தே எதிர்க்கிறவர்கள் எங்கோ நடந்த விபத்தைக் காரணம் காட்டி ஸ்டெர்லைட் பெயரையே இழுக்கிறார்கள்'' என்று ஒரே போடாகப் போட்டார்.
இதற்காக RR அணி உரிமையாளர் என் கன்னத்தில் அறைந்தார் : முன்னணி வீரரின் குற்றச்சாட்டால் IPL-க்கு சிக்கல் ! ஐபிஎல் தொடரின்போது ராஜஸ்தான் அணி உரிமையாளர்கள் கோவத்தில் என் கன்னத்தில் அறைந்தார் என ஓய்வு பெற்ற நியூஸிலாந்து கிரிக்கெட் வீரர் ராஸ் டெய்லர் குற்றம் சாட்டியுள்ளார். Praveen Updated on : 15 August 2022, 06:49 AM உலக அளவில் பிரபலமான கிரிக்கெட் தொடர் என்றால் அது இந்தியாவில் நடக்கும் ஐ.பி.எல் தொடர்தான். ஐ.பி.எல் தொடர் ஆரம்பிக்கும் வரை சாதாரண கிரிக்கெட் அமைப்பாக இருந்த பி.சி.சிஐ இதன்பின்னர் பெரும் வலிமை வாய்ந்த பணக்கார கிரிக்கெட் அமைப்பாக மாறியது. அதில் பணம் கொழிப்பதால் அதில் பங்கேற்கும் வீரர்களுக்கு அதிக ஊதியம் கொடுக்கப்படுகிறது. இதனால் இதில் பங்கேற்க சர்வதேச வீரர்கள் அதிகம் காட்டி வருகின்றனர். அதேநேரம் ஐபிஎல் மேல் ஏராளமான குற்றச்சாட்டுகளும் வைக்கப்படுகிறது. இந்த நிலையில், சமீபத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற நியூஸிலாந்து கிரிக்கெட் வீரர் ராஸ் டெய்லர் ஐபிஎல் உரிமையாளர் மீது குற்றசாட்டு ஒன்றை வைத்துள்ளார். ஓய்வுக்கு பின்னர் தனது சுயசரிதை புத்தகம் ஒன்றை எழுதியுள்ள அவர், அதில் நியூஸிலாந்து அணியில் நடக்கும் நிறவெறி குறித்து பேசியிருந்தார். அது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து ஐபிஎல் அணி உரிமையாளர் ஒருவர் தன்னை கன்னத்தில் அறைந்ததாக ராஸ் டெய்லர் கூறியுள்ளார். இது தொடர்பாக கூறியுள்ள அவர், ராஜஸ்தான் அணியில் நான் விளையாடிய போது, ஒருமுறை பஞ்சாப் அணி 195 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது. அந்த போட்டியில் நான் ஒரு ரன் கூட அடிக்காமல் அவுட் ஆனேன். அதில் ராஜஸ்தான் அணி தோல்வியை சந்தித்தது. அதன் பின்னர் அன்றைய இரவு ஷேன் வார்னே உள்ளிட்ட வீரர்கள் ஹோட்டலில் மது அருந்த சென்றோம். அப்போது ராஜஸ்தான் அணி உரிமையாளர்கள் என்னிடம், " டக் அவுட் ஆவதற்காக உங்களை பல கோடி கொடுத்து வாங்கவில்லை ராஸ்" எனக்கூறி தொடர்ந்து 3 -4 முறை எனது கன்னத்தில் அறைந்தார். மிகவும் ஓங்கி அறையவில்லை என்றாலும் அவர்கள் வேண்டுமென்றே கோபத்தில் அடிக்கிறார்கள் என்பது எனக்கு தெரியும். மற்றவர்கள் முன்பு சிரித்து சமாளித்துவிட்டனர். இது போன்ற சம்பவம் நிறைய நடந்துள்ளது" எனக் கூறியுள்ளார். இது இந்திய கிரிக்கெட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Also Read "இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கு இருக்கும் வித்தியாசம் இவர்தான்"- இந்திய வீரரை புகழ்ந்த பாகிஸ்தான் வீரர்! ipl rajasthan royals Ross Taylor ipl owner Trending சாவர்க்கர் பரம்பரையில் வந்த தேசமகா பக்தர்களின் ‘குறுகிய பாரதம்’: பாஜகவின் உண்மை முகத்தை தோலுரித்த முரசொலி “இந்தியா அளித்துள்ள உத்தரவாதங்களைக் காப்பாற்ற தமிழ்நாடு உறுதுணையாக இருக்கும்” : முதலமைச்சர் உரை! போட்டியின் நடுவே வந்த சேதி: தங்கப்பதக்கத்தை வைத்து தந்தைக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய வீராங்கனை! #FIFA2022 கால்பந்து போட்டிகளையும் முந்தும் தமிழ்நாடு : உலக அரங்கில் ஜொலிக்கும் ‘திராவிட மாடல்’ ! Latest Stories போட்டியின் நடுவே வந்த சேதி: தங்கப்பதக்கத்தை வைத்து தந்தைக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய வீராங்கனை! சாவர்க்கர் பரம்பரையில் வந்த தேசமகா பக்தர்களின் ‘குறுகிய பாரதம்’: பாஜகவின் உண்மை முகத்தை தோலுரித்த முரசொலி
கனடாவுக்கு சட்டவிரோதமாக அழைத்து செல்லப்பட்டு வியாட்நாம் கடலில் மீட்கப்பட்ட 303 இலங்கை அகதிகளை அடையாளம் காணும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது. மீட்கப்பட்ட இலங்கையர்களுக்கு உள்ளூர் அதிகாரிகளால் உணவு, தங்குமிடம் வழங்கப்படுகிறது என வியாட்நாமிலுள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது. யாழ்.மாவட்டத்தை சேர்ந்த 76 பேர் மீட்கப்பட்ட இலங்கையர்களில் 76 பேர் யாழ்.மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது. இவர்கள் மலேசியாவிற்கு விமானம் மூலம் சென்று, படகு மூலம் வேறொரு நாட்டுக்கு செல்வதற்காக பயணித்துள்ளதாக கூறப்படுகின்றது. அத்துடன் , படகில் ஏறுவதற்கு முன் சட்டவிரோத பயணத்திற்காக ஆட்கடத்தல்காரர்களுக்கு பல இலட்சம் ரூபாய் பணம் அவர்கள் கொடுத்துள்ளதாகவும் தெரியவருகின்றது. சம்பவத்தின் பின்னனி மியன்மார் (பர்மா) நாட்டுக் கொடியுடன் காணப்பட்ட அந்தக் கப்பல் கடந்த 6 ஆம் திகதி தென் சீனக் கடலில் வியட்நாமின் தெற்கு கடலோர வுங் தோ முனையில் (Vung Tau Cape) இருந்து 258 கடல் மைல்கள் தொலைவில் சேதமடைந்த நிலையில் கடலில் சிக்குண்டது. கப்பலின் இயந்திர அறைக்குள் நீர் புகுந்ததால் அதிலிருந்தோர் அவலக் குரல் எழுப்பிக் கொண்டிருந்தனர். தகவவலறிந்து சிங்கப்பூரில் இருந்து அதேகடல் வழியாகச் சென்றுகொண்டிருந்த ஜப்பான் நாட்டின்’ஹெலியோஸ் லீடர்’ (Helios Leader) என்ற சரக்குக் கப்பல் உடனடியாக இலங்கை அகதிகள் கப்பலை நோக்கித் திருப்பப்பட்டு 40 நிமிட நேரத்தில் அகதிகள் கப்பலை நெருங்கிய ஜப்பானியக் கப்பல் அதிலிருந்த 303 பேரையும் மீட்டு வியட்நாமிற்கு கொண்டு செல்லப்பட்டனர். இதேவேளை, அகதிகள் அனைவரையும் நாட்டுக்கு அழைத்துவருவதற்கான ஏற்பாடுகளைக் கொழும்பில் வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர். வியட்நாம் ராஜதந்திரிகளுடன் தொடர்பு கொண்டு அதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாக இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி (Ali Sabry) கூறியுள்ளார். முதலில் அவர்கள் அனைவரும் குடியேறிகள் தொடர்பான சர்வதேச நிறுவனம் ஒன்றிடமே (International Organization for Migration) கையளிக்கப்படுவர் என்று தெரிவிக்கப்படுகிறது. அதன் பிறகே அவர்கள் கொழும்புக்கு அழைத்துவரப்படுகள் என வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்தன.
ஈராக் போருக்கு முன்பு அந்த ஆக்கிரமிப்பை நியாயப்படுத்துவதற்காக அமெரிக்க அரசு பொய் மூட்டைகளை அவிழ்த்து விட்டது. மேற்குநாடுகளின் ஊடகங்களில் அமெரிக்க மந்திரிகள் உலக சமாதானத்திற்கான போர் ஜனநாயகத்தை காப்பாற்றுவதற்கான போர் பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்று ஊளையிட்டார்கள். பிரித்தானியாவின் தொலைக்காட்சியான சனல் 4இல் அப்போது அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருந்த கொண்டோலீசா ரைஸ் அப்படியான நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். பொதுநலவாய நாடுகளின் மாநாட்டின் போது யாழ்ப்பாணம் சென்று வந்த ஜோன் சிநோ (John Snow) தான் நிகழ்ச்சியை தொகுத்து நடத்தினார். கேள்வி நேரத்தின் போது ஒரு சோமாலியப்பெண் சொன்னார். "நான் பெரிதாகப் படிக்கவில்லை உலகத்து அரசியலும் தெரியாது. ஆனால் ஒன்று மட்டும் தெரியும் உலகத்தின் முதலாவது பெரிய பயங்கரவாதி அமெரிக்கா தான். நீங்கள் தான் வேறு எந்த நாட்டையும் விட அதிகமாக மற்ற நாடுகளுடன் போர் செய்திருக்கிறீர்கள். அதிகமான மக்களை கொன்றிருக்கிறீர்கள். மற்ற எல்லா நாடுகளையும் விட அதிகமான பயங்கரமான ஆயுதங்களை வைத்திருக்கிறீர்கள். ஈராக்கின் எண்ணெயை கொள்ளையடிப்பதற்காக தான் இந்த போர். உங்களது பொய்களை மனச்சாட்சியுள்ள மனிதர்கள் எவரும் நம்பப்போவதில்லை". தொலைக்காட்சி அரங்கத்தில் கைதட்டல் அலை போல எழுந்தது. அரங்கத்தில் இருந்த பெரும்பான்மையான மனிதர்களின் மனச்சாட்சி உள்ள மனிதர்களின் போருக்கு எதிரான வெளிப்பாடு அது. படிப்பறிவில்லாத உலக அரசியல் தெரியாத பெண் என்று தன்னைச் சொல்லிக் கொண்ட அந்த சோமாலியப் பெண்ணிற்கு தெரிந்தது நமது புலம்பெயர் கைப்பிள்ளைகளான பிழைப்பு வாத தமிழர்கள் அமைப்புகள் நாடு கடந்த தமிழீழம் தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்பவற்றிற்கு தெரியவில்லை. ஏனெனில் அந்தப் பெண்ணிடம் மனச்சாட்சி இருந்தது. நேர்மை இருந்தது. இவர்களிற்கு மனச்சாட்சி நேர்மை என்று எதுவும் இல்லாததால் அமெரிக்காக்காரன் ஜெனீவாவில் புடுங்குவான் மற்றவர்கள் எவரும் ஆணியே புடுங்கத் தேவையில்லை என்று மக்களை நம்ப சொல்கிறார்கள். உக்கிரேனில் ஐரோப்பிய ஒன்றிய ஆதரவாளர்களிற்கும் ரஷ்ய ஆதரவாளர்களிற்கும் மோதல் ஏற்பட்டபோது அமெரிக்காவும் மேற்குநாடுகளும் நாக்கைச் சப்புக் கொட்டிக் கொண்டு காத்திருந்தார்கள். தானியக் களஞ்சியமான உக்கிரேனைக் கொள்ளையடிக்கவும் ரஷ்யாவை பலவீனப்படுத்தவும் சந்தர்ப்பம் வந்ததென சந்தோசப்பட்டு நாட்டாமை வேலை பார்க்க ஓடித்திரிந்தார்கள். புலிகளையும் இலங்கை அரசையும் போர்க்குற்றவாளிகள் என்று சமப்படுத்தும் இவர்கள் உக்கிரேனிய போராட்டங்களின் போது முன்னிலை வகித்த நாசிகளைப் பற்றி வாயே திறக்கவில்லை. ரஷ்ய மாபியா விளாடிமிர் புட்டின் “மயிரை விட்டான் சிங்கன்" என்று சண்டித்தனம் செய்த போது ரஷ்ய உக்கிரேனை ஆக்கிரமிப்பு செய்வது உக்கிரேனின் இறையாண்மையை மதியாத செயல் என்று அமெரிக்கா சொன்னதைக் கேட்டு பலருக்கு மாரடைப்பே வந்திருக்கும். உக்கிரேனில் நடந்த மோதல்களின் போது மக்கள் இறந்த போது அமெரிக்காவும் மேற்குநாடுகளும் அழுத அழுகை கல்நெஞ்சையும் கரைத்து விடும். இவர்கள் தான் முள்ளிவாய்க்காலில் மக்கள் துடிக்க துடிக்க இறந்த போது இலங்கை அரசிற்கு ஆலோசனைகளையும் உதவிகளையும் வழங்கியவர்கள். போர் முடிந்த பிறகும் மக்களை முகாம்களிலும் சிறைகளிலும் அடைத்து வைத்திருக்கும் இலங்கை அரசுடன் வியாபார ஒப்பந்தம் செய்பவர்கள். இவர்கள் தான் ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கைக்கு தவணை முறையில் விசாரணை நடத்தி தண்டனை வாங்கி தருவார்கள் என்று கைப்பிள்ளைகள் கதை விடுகிறார்கள். இதே மார்ச் மாதம் பதினாறாம் திகதி அறுபத்தெட்டாம் ஆண்டு வியட்நாமின் மை லாய் என்னும் சின்னஞ்சிறு கிராமத்தில் 347கிராம மக்கள் அமெரிக்கப் படையினரால் கொல்லப்பட்டார்கள். இது அமெரிக்க இராணுவத்தின் கணக்கு. மக்களின் கணக்குப்படி 500பேருக்கு மேல் கொல்லப்பட்டார்கள். தங்களிற்கு எந்தவிதத்திலும் சம்பந்தமில்லாத வியட்நாமிலே அமெரிக்கா ஒரு நாளிலே கொன்ற மக்களின் எண்ணிக்கை இது. பற்றி எரிந்து கொண்டிருந்த கிராமத்திலே இருந்து ஆடைகள் எரிந்தபடி தோல் கருகியபடி சின்னஞ்சிறு பெண்குழந்தை ஒன்று கைகளை விரித்தபடி கதறிக் கொண்டு வந்த காட்சி புகைப்படமாக அமெரிக்காவின் கொலைகளின் சாட்சியமாக இன்றும் இருக்கிறது. முள்ளிவாய்க்காலில் தமிழ் மக்களை இலங்கை அரசுடன் சேர்ந்து கொன்ற இந்திய அரசின் எஜமானியையே சந்தித்து தமிழ்மக்களின் பிரச்சினைகளை தீர்த்து வைக்க வேண்டுமென்று கேட்ட அரசியல் விஞ்ஞானிகள் இவர்கள். பாரத மாதா கண்ணீரும் கம்பலையுமாக இலங்கைத் தமிழர்களிற்கு பிரச்சினைகள் இருக்கின்றன. நாங்கள் இலங்கை அரசிடம் தமிழ் மக்களிற்காக பேசுகிறோம் என்றாராம். தமிழ் மக்களைப் பற்றி பேசும் போது சோனியாவின் கண்களில் ஈரம் கசிந்தது என்று கண்டுபிடித்தவர்கள் இவர்கள். எந்த ஒரு பிரச்சனைக்கும் மக்கள் போராடும் போதே தீர்வு கிடைக்கும். ஏகாதிபத்தியங்கள் மூலம் தீர்வு கிடைக்கும் என்பவர்கள் தங்களின் நலன்களிற்காகவே ஏகாதிபத்தியங்களின் கால்களிலே விழுகிறார்கள். மக்கள் எதிரிகளை இனம் காண்பது போல் எதிரிகளின் ஏஜெண்டுகளையும் இனம் கண்டு கொள்ள வேண்டும்.
பொதுமக்கள் குறித்த இணையதளத்தினை நேரடியாகவோஇ இணைக்கப்பட்டுள்ள QR CODE இனை பயன்படுத்தியோ தங்களது ஸ்மாட் தொலைபேசி, கணணி மூலம் எரிபொருளுக்கான கோரிக்கையினை முன்வைக்கமுடியும். எரிபொருள் கிடைக்கப்பெறும்போது பொதுமக்களுக்கு எரிபொருள் பெறுவதற்கான திகதி, நேரம் என்பன பதிவுசெய்யப்பட்ட தொலைபேசி இலக்கத்திற்கு குறுஞ்செய்தி மூலமாக அறிவிக்கப்படும். - Advertisement - பொதுமக்கள் குறித்த நேரத்தில் தங்களுக்குரிய எரிபொருளை பெற்றுக்கொள்ள முடியும். குறித்த எரிபொருள் கோரிக்கைக்கான இணையதளத்தினை மாவட்ட செயலக இணையதளத்தின் ஊடாகவும் அணுகமுடியும். இவ்வாறு QR CODE இனை பயன்படுத்தமுடியாதவர்கள் கிராம உத்தியோகத்தர், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களை தொடர்புகொண்டு இவ் இணையதளத்தினை அணுகமுடியும்.
கிளைகளில் மலர்ந்த மலர்களைச் சூடினாலும், நீர் இந்த அழகை யாரோ ஒருத்திக்கு காட்டுவதற்காகச் சூடினீர் என்று சினம் கொள்வாள். சாலமன் பாப்பையா உரை: ஒரு மாற்றம் கருதி, ஒருமுறை, மரத்திலே மலர்ந்த பூவை மாலையாக்கிச் சூடினேன். அதற்கு அவள், நீர் விரும்பும் எவளுக்கோ அடையாளம் காட்டிச் சூடினீர் என்று சினந்து நின்றாள். கலைஞர் உரை: கிளையில் மலர்ந்த பூக்களைக் கட்டி நான் அணிந்து கொண்டிருந்தாலும், வேறொருத்திக்குக் காட்டுவதற்காகவே அணிந்திருக்கிறீர் எனக்கூறி சினம் கொள்வாள்.
ஆடி மாதம் அந்த காலத்திலிருந்தே மிக முக்கியமான மாதமாகக் கருதப்படுகிறது. ஏனென்றால் மக்கள் விவசாயத்தை நம்பித்தான் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். ஆடியில் விதை விதைத்து, கார்த்திகை மற்றும் தை மாதங்களில் அறுவடை செய்வார்கள். ‘ஆடிப்பட்டம் தேடி விதை‘ என்று பழமொழியே உண்டு. ஆடியில் விதை விதைத்தல், பயிரிடுதல், குடிசைத் தொழில் செய்தல், துணி நெய்தல் போன்ற வருமானத்திற்கு வழி ஏற்படுத்த கூடிய முக்கியமான ஆதார வேலைகளில் ஈடுபடுவார்கள். ஆடியில் மாதத்தில் பூர்வாங்க வேலைகளைச் செய்தால் தான் கார்த்திகை மற்றும் தை மாதங்களில் பயிர் அறுவடை செய்ய முடியும். பயிர் அறுவடை செய்யும் போது கைக்கு பணம் வர வாய்ப்பு இருக்கும். இந்த சமயத்தில் இந்துக்களின் முக்கிய பண்டிகைகளான தீபாவளி, பொங்கல் மற்றும் திருமண வைபவங்களுக்குப் பணப் பற்றாக்குறை இல்லாமல் இருக்கும். ஆடி மாதத்தில் விவசாயத்திற்கு செலவு செய்ய வேண்டி இருப்பதால், கல்யாணம், விருந்து போன்ற விசேஷங்களுக்கு செலவு செய்யப் பணம் இருக்காது. அதனால் தான் வீட்டில் நல்ல காரியங்கள் நடைபெறாமல் இருந்ததே தவிர, ஆடியில் திருமணங்கள் செய்யக் கூடாது என்று எந்த சாஸ்திரத்திலும் சொல்லப்படவில்லை. அதேபோல் ஆடி மாதம் முழுவதும் இறைவனை நினைத்து தினமும் வணங்கி வழிபடுவதற்காகவும், அவரை தவிர வேறு எண்ணங்கள் வரக்கூடாது என்பதற்காகவும் திருமணம் உள்ளிட்ட பல்வேறு சுப காரியங்கள் இந்த மாதத்தில் நாம் செய்வதில்லை. ஆனால் ஆடி மாதத்தில் எல்லாநாட்களும் விசேஷமான நாட்களாக தான் கருதப்படுகிறது. ஒரு வருஷத்தை போக சம்பிரதாயம், யோக சம்பிரதாயம் என இரண்டாகப் பிரித்து இருப்பார். இதில் தை மாதம் முதல் ஆனி மாதம் வரை உள்ள காலத்தை போக சம்பிரதாய காலம் என்றும், ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் வரை உள்ள காலத்தை யோக சம்பிரதாய காலம் என்றும் குறிப்பிட்டனர். போக சம்பிரதாய காலத்தில் திருமணம், விருந்து என்று சந்தோஷமான விசேஷங்களை செய்வார்கள். யோக சம்பிரதாய காலத்தில் பூஜைகள், பிரார்த்தனைகள், தபஸ், யாகம், யக்ஞம் போன்ற தெய்வீக விசேஷங்களை செய்வார்கள். யோக சம்பிரதாய காலத்தில் ஆடி மாதம் முதலில் வருவதால், அந்த மாதத்தில் தெய்வீக விசேஷங்கள் அதிகம் இருக்கும். ஆடி பிறப்பு, ஆடிச் செவ்வாய், ஆடி வெள்ளி, ஆடிப் பெருக்கு, ஆடித்தபசு, ஆடிப்பூரம், ஆடி அமாவாசை, ஆடிப் பவுர்ணமி என்று ஆடி மாதம் முழுவதுமே விசேஷமான நாளாக இருக்கும். ஆடி மாதத்தில் சந்திரன் சொந்த வீட்டில் இருக்கிறார். சொந்த க்ஷேத்திரத்தில் சூரியனுடன் சந்திரனுக்கு சம்பந்தம் உண்டாகும் பொழுது, அந்த மாதத்தில் பூஜைகள், பிரார்த்தனைகள் அதிகம் இருக்கும். ஆடி மாதத்தில் பகவத் தியானம் செய்வது மிகவும் நல்லது. Share Article: Tags: Aadi Birth Aadi Cattle Aadi Friday Aadi month aadi month functions Aadi New Moon Aadi Pavurnami Aadi Tuesday Adi Flood Adippuram cinema news tamil farmer latest news in tamil latest tamil news live news tamil news in tamil news live tamil news tamil news tamil live news tamil today tamil cinema news tamil news Tamil news live tamil news paper tamil news today tamil video temple thai matham thai month today news in tamil today news tamil today tamil news todays news in tamil why does not do auspicious things in the Aadi month?
ஐ.டி.எப்.சி. (Infrastructure Development Finance Company) குழுமத்தின் ஒரு அங்கமான ஐ.டி.எப்.சி. வங்கி கடந்த 2015 ம் ஆண்டு அக்டோபர் மாதம் ஆரம்பிக்கப்பட்டது. மும்பையை தலைமையிடமாக கொண்ட இந்த வங்கி நூற்றுக்கும் மேற்பட்ட கிளைகளையும், 1,12,160 கோடி ரூபாய் சொத்து மதிப்பையும் கொண்டுள்ளது. உள்கட்டமைப்பு சார்ந்த துறையில் உள்ள நிறுவனங்களுக்கும், தனியார் வாடிக்கையாளர்களுக்கும் கடன்களை வழங்கி வருகின்றன. ஐ.டி.எப்.சி. வங்கி அதிகபட்ச கடனாக பிளிப்கார்ட் (Flipkart) நிறுவனத்திற்கு கடந்த வருடத்தில் 300 கோடி ரூபாயை வழங்கியுள்ளது. இந்த வங்கியுடன் கேப்பிடல் பர்ஸ்ட் (Capital First) நிறுவனத்தை இணைப்பது சம்மந்தமான கோரிக்கை வருடத்தின் தொடக்கத்தில் துவங்கப்பட்டது. கேப்பிடல் பர்ஸ்ட் நிறுவனம் சிறு தொழில்களுக்கான கடனை வழங்கி வரும் நிதி சேவை நிறுவனமாகும். 10,000 ரூபாயிலிருந்து 2 கோடி ரூபாய் வரை கடன் அளிக்கும் நிறுவனமான இதற்கு 225 க்கும் மேற்பட்ட கிளைகள் உள்ளன. நிதி சேவை (Financial Services) சார்ந்த இந்த இரு நிறுவனங்களின் இணைப்பு நேற்று (18-12-2018) தேசிய கம்பெனி சட்டம் தீர்ப்பாயம் (NCLT) மூலம் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதன் மூலம் இனி ஐ.டி.எப்.சி. வங்கி, IDFC First Bank என அழைக்கப்படும். வரும் ஜனவரி 2019 முதல் இதன் புதிய பெயரிலான சேவை தொடங்கப்படலாம். ஐ.டி.எப்.சி. வங்கி 14,000 கோடி ரூபாய் மதிப்பிலான சந்தை மதிப்பையும், ஒரு பங்குக்கு 44 ரூபாய் புத்தக மதிப்பையும் (Book Value) கொண்டுள்ளது. ( Read this post after the advertisement… ) //pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js  (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); கேப்பிடல் பர்ஸ்ட் நிறுவனம் 5,600 கோடி ரூபாய் சந்தை மதிப்பு (Market Capitalization) மற்றும் ஒரு பங்குக்கு 295 ரூபாய் புத்தக மதிப்பையும் கொண்டு இயங்கி வருகிறது. இணைப்பிற்கு பின் (Merger), ஐ.டி.எப்.சி. பர்ஸ்ட் வங்கியின் மொத்த வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 72 லட்சமாக இருக்கும். வங்கிகளின் கிளை 203 என்ற அளவிலும், அதன் கடன் சொத்துக்கள் ரூ. 1 லட்சம் கோடியாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது. கேப்பிடல் பர்ஸ்ட் நிறுவனத்தின் நிறுவனர் திரு. வைத்தியநாதன், ஐ.டி.எப்.சி. பர்ஸ்ட் வங்கியின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக செயல்படுவார். ஐ.டி.எப்.சி. வங்கியின் தலைவர் திரு. ராஜிவ் லால் இனி IDFC First வங்கியின் நிர்வாகம் அல்லாத தலைவராக (Non Executive Chairman) இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பிறந்த திரு. வைத்தியநாதன் தனது பள்ளிக்காலத்தை சென்னையில் தொடங்கி, மேற்படிப்பை ராஞ்சியில் உள்ள பிர்லா கல்வி நிறுவனத்தில் (BIT Mesra) முடித்தார். Citibank மற்றும் ICICI வங்கியில் பணிபுரிந்த இவர் 2012 ம் ஆண்டு தனது கேப்பிடல் பர்ஸ்ட் நிதி சேவையை துவக்கினார். இந்த நிறுவனம் கடந்த ஐந்து வருடங்களில் 40 % தொடர்ச்சியான லாப வளர்ச்சியை கொண்டுள்ளது. நிறுவனத்தின் லாபம் கடந்த நிதி ஆண்டில் 327 கோடி ரூபாயாகும்.
2012 ஆம் ஆண்டு, இந்து தர்ம ஆச்சார்ய சபா தலைவர் தயானந்த சரஸ்வதி சாமிகள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், தமிழகம், புதுச்சேரி, ஆந்திரா மற்றும் கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இந்து கோவில்கள் நிர்வகிக்கப்படுகின்றன. அறநிலையத்துறை நிர்வாகத்தின்கீழ் செயல்படும் ஆலயங்களில் வழிபாடு, சொத்துகள், நிலம் உள்ளிட்டவற்றில் அறநிலையத்துறை அதிகம் தலையிடுகிறது. ஆலயங்களில் வசூலிக்கப்படும் நிதிகள் பல்வேறு துறைகளுக்கு செலவழிக்கப்படுகின்றன. தமிழகம் உள்ளிட்ட 4 மாநிலங்களில் செயல்படும் அறநிலையத்துறை, இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது. எனவே ஆலயங்களுக்கு சொந்தமான நிலங்கள் மற்றும் நிர்வாகத்தை அந்தந்த ஆலய நிர்வாகத்திடமே ஒப்படைக்க உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். 2015 செப்டெம்பரில் தயானந்த சரஸ்வதி காலமானார். இதனால், அவர் தொடர்ந்த வழக்கைத் தொடர்ந்து நடத்த சுப்பிரமணியசாமி முன்வந்தார். அவருக்கு எதிராகவும் தமிழக அரசுக்கு ஆதரவாகவும் சீமான் தலைமையில் இயங்கும் வீரத்தமிழர் முன்னணி வழக்கில் இனாஇந்திருக்கிறது. இதற்கு சுப்பிரமணிய சாமி கடும் எதிர்ப்பு தெரிவித்தும் அதை ஏற்றுக்கொள்ளாமல், வீரத்தமிழர் முன்னணியை இணை வழக்க்ராக உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. இது தொடர்பாக வீரத்தமிழர் முன்னணி விடுத்துள்ள அறிக்கையில்…. தமிழகத்தில் உள்ள அனைத்துக் கோவில்களையும், அந்தக் கோவில்களுக்கு சொந்தமான சொத்துக்களையும், நிலங்களையும் இந்துசமய அறநிலையத்துறை என்ற துறையின் கீழ் கொண்டுவந்தது அரசு. இது தவறானது என்றபோதும் பெரும்வாரியான சொத்துக்கள் தனித்த பார்ப்பன குருமார்களிடமிருந்தும், இந்துத்துவா சாமியார்களிடம் இருந்தும் பொதுமைப்படுத்தப்பட்டது ஒருவகையில் சிறு ஆறுதல். இன்றைய சூழலிலும் சில சொத்துக்கள் பொதுமைப்படுத்தப்படாமல் தமிழர்களின் தொன்ம அடையாளங்களை அழித்தும், பெறுமதியான தமிழர் சொத்துக்களை ஆரிய பார்ப்பனர்களும், அவர்களோடு கைகோர்த்த வகையில் திராவிடர்களும் அனுபவித்து வருகின்றனர். இந்துசமய அறநிலையத்துறை என்ற பெயரை மாற்றி தமிழர் மெய்யியல் துறை என்ற தனித்த துறை ஒன்றை உருவாக்க வீரத்தமிழர் முன்னணி போராடி வருகிறது. இந்நிலையில், கோவையைச் சேர்ந்த தயானந்த சரஸ்வதி சாமி, “கோவில் மற்றும் ஆசிரம நிர்வாகத்தில் ஊழல் இருப்பதாகச் சந்தேகிக்கும் பட்சத்தில் அந்த நிர்வாகத்தையும், கோயிலின் சொத்துக்களையும் இந்துசமய அறநிலைய துறையின் நேரடி கண்காணிப்பில் எடுத்துக்கொள்ள வழிவகை செய்யும் சட்டப்பிரிவு மூன்றை” நீக்கவேண்டும் என்று உச்சநீதி மன்றத்தில் வழக்குத் தொடுத்து இருந்தார். அதாவது இந்த சட்டப்பிரிவை நீக்குவதன் மூலம் அந்தந்த கோவில்களில் பணிபுரியும் பார்ப்பனர்களுக்கும், ஆசிரமங்களின் சொத்தை அந்தந்த இந்துத்துவா சாமியார்களுக்கும் பட்டுமே உரிமையாக அறிவிக்கவேண்டும் என்று 2012 உச்சநீதி மன்றத்தில் இந்த வழக்கு தொடரப்பட்டு இருந்தது. இந்த வழக்கைப் பொறுத்தவரை, எந்தக் கோயில்களும் அதன் சொத்துக்களும், பொதுவானது இல்லை, அந்தத்தந்த கோவில்களும் ஆகம விதிகளை வைத்து வேதம் ஓதுகின்ற பிராமணர்களுக்கும், தலைமைக்குருமார்களுக்கும் சொந்தமானது என்றும் அதேபோல ஆசிரமங்கள் சொத்துக்கள் அனைத்தும் அந்தந்த சாமியார்களின் கீழ் இருக்கவேண்டும் என்றும் அவற்றைப் பொதுமைப்படுத்தி கூடாது என்றும் வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது. வழக்குத் தொடுக்கப்பட்ட தயானந்தசரஸ்வதி இறந்துவிட்ட நிலையில், வழக்கு இப்போது உச்சநீதி மன்றத்தில் நடைமுறைக்கு வர, இந்த வழக்கின் தயானந்த சரஸ்வதி தரப்பு இணைவழக்கராக சுப்ரமணியசுவாமி தனது மனுவின் மூலம் இணைந்துள்ளார் இந்தச் சூழலில் கோவில் மற்றும் ஆசிரம சொத்துக்களை தனிநபருக்குச் சொந்தமானதாக அறிவிக்கக் கோரிய தானந்தசரஸ்வதி அவர்களின் வழக்கு எதிராக வீரத்தமிழர் முன்னணி தமிழக அரசு வழக்கோடு தன்னையும் இணைவழக்கராக இணைத்துக்கொண்டுள்ளது. இதற்காக வீரத்தமிழர் முன்னணி 12 நியாயமான காரணங்களை முன்வைத்து இணைவழக்கராக இணைத்துள்ளது. இந்த வழக்கு 20-07-2016 விசாரணைக்கு வந்தது. அப்போது இரண்டு இணைவழக்குகள் பதிவானதால் வழக்கு விசாரணை 08-07-2016 அன்று விசாரிக்கப்படும் என்று அன்று ஒத்திவைக்கப்பட்டது. எனவே 08.07.16 அன்று அந்த வழக்கு விசாரணைக்கு வந்தது, தயானந்த சரஸ்வதிக்கு ஆதரவாகத் தன்னை இணைத்துக்கொள்ளத் துடித்த சுபராமணிய சாமி அவர்கள் எதிர்தரப்பில் வீரத்தமிழர் முன்னணி இணைவழக்கராக இணைய கடும் எதிர்ப்பை உச்சநீதிமன்றத்தில் பதிவு செய்தார். `’வீரத்தமிழர் முன்னணி, இந்துத்துவாவிற்கு எதிரானது, சீமான் இந்துக்களை விமர்சிப்பவர், வீரத்தமிழர் முன்னணி அமைப்பு பிரபலமான அமைப்பு இல்லை” என படபடத்தனர் சுப்ரமணிய சாமி மற்றும் தயானந்த சரஸ்வதி தரப்பு வழக்கறிஞர்கள். சுப்ரமணியசாமியின் விண்ணப்பம் போலவே வீரத்தமிழர் முன்னணியின் இணைவழக்கு விண்ணப்பமும் உச்சநீதி மன்றத்தினால் ஏற்றுக்கொள்ளப் பட்டுள்ளது. இந்த வழக்கில் இந்துத்துவாவின் வேண்டுகோளிற்கு இணங்கத் தமிழக அரசு தனது மெத்தனப்போக்கைக் கடைப்பிடித்தாலும் வீரத்தமிழர் முன்னணி விடாது. காலத்தில் நேரடியாக இந்துத்துவா சக்திகளை எதிர்த்து சட்டப்போராட்டத்தில் வீரத்தமிழர் முன்னணி காலத்தில் இறங்கியுள்ளது. கட்டாயம் சட்டப்போராட்டத்தில் வீரத்தமிழர் முன்னணி வெல்லும். இந்த வழக்கு தொடர்பாக எமக்கு ஆதரவாகக் கைகோர்க்கும் கரங்களை வீரத்தமிழர் முன்னணி வரவேற்கிறது
, ஜகார்த்தா – வெள்ளைச் சர்க்கரை என்பது ஒரு வகை சர்க்கரையாகும், இது அன்றாட உணவுகள் மற்றும் பானங்களில் இனிப்புச் சுவையை அளிக்கப் பயன்படுகிறது. இருப்பினும், அதிகப்படியான வெள்ளை சர்க்கரையை உட்கொள்வது நீரிழிவு மற்றும் எடை அதிகரிப்பதற்கும் அறியப்படுகிறது. இறுதியாக, பலர் வெள்ளை சர்க்கரைக்கு மாற்றாக வேறு மாற்றுகளைத் தேடத் தொடங்கினர். ஆரோக்கியமானதாக நம்பப்படும் சர்க்கரை வகைகளில் ஒன்று பழுப்பு சர்க்கரை . ஆனால் அது உண்மையா? அடிப்படையில், பழுப்பு சர்க்கரை அல்லது பழுப்பு சர்க்கரை என்பது கிரானுலேட்டட் சர்க்கரை ஆகும், இது வெல்லப்பாகு அல்லது வெல்லப்பாகு சர்க்கரை வழங்கப்படுகிறது. எனவே, சர்க்கரை தயாரிக்கும் பணியில், கரும்பு சாறு ஆவியாகி படிகங்கள் அல்லது தூய சர்க்கரையை உருவாக்குகிறது. இந்த கட்டத்தில், ஆவியாக்கப்பட்ட பிறகு, சர்க்கரை தொழில்நுட்ப ரீதியாக இன்னும் பச்சையாக உள்ளது, ஏனெனில் அது சுத்திகரிப்பு செயல்முறைக்கு செல்லவில்லை. பழுப்பு சர்க்கரை சர்க்கரை என்பது ஒருமுறை மட்டுமே சுத்திகரிப்பு அல்லது சுத்திகரிப்பு செயல்முறையின் மூலம் செல்கிறது, இதனால் கரும்பு சாற்றின் கூறுகள் இன்னும் பின்தங்கியுள்ளன. இந்த வகை சர்க்கரை இனிப்பு சுவையுடன் இருக்க, வெல்லப்பாகு அல்லது வெல்லப்பாகு சேர்க்கப்படுகிறது. இதற்கிடையில், வெள்ளை கிரானுலேட்டட் சர்க்கரை பழுப்பு சர்க்கரை ஆகும், இது பல முறை சுத்திகரிக்கப்படுகிறது, இதனால் சர்க்கரையின் நிறம், வாசனை மற்றும் சுவை மாறுகிறது. பழுப்பு சர்க்கரை கிரானுலேட்டட் சர்க்கரையை விட அதிக மணம் கொண்ட நறுமணத்தைக் கொண்டுள்ளது, எனவே இந்த வகை சர்க்கரை பெரும்பாலும் கேக் அல்லது மிட்டாய்கள் தயாரிக்கப் பயன்படுகிறது. கூடுதலாக, பழுப்பு சர்க்கரையின் ஈரமான மற்றும் கரடுமுரடான அமைப்பு அதை கரிமமாக தோற்றமளிக்கிறது, எனவே சிலர் நினைக்கிறார்கள் பழுப்பு சர்க்கரை வெள்ளை சர்க்கரையை விட ஆரோக்கியமானது. கூட பழுப்பு சர்க்கரை கால்சியம், பொட்டாசியம், இரும்பு மற்றும் மெக்னீசியம் ஆகியவற்றைக் கொண்டிருக்கின்றன, ஆனால் உடலுக்கு ஆரோக்கிய நன்மைகளை வழங்குவதற்கான அளவு மிகவும் சிறியதாகக் கருதப்படுகிறது. ஒரு டீஸ்பூன் பழுப்பு சர்க்கரையில் 0.02 மில்லிகிராம் இரும்புச்சத்து மட்டுமே உள்ளது. அதேசமயம் பெரியவர்களுக்கு குறைந்தது 8 மில்லிகிராம் இரும்புச்சத்து தேவைப்படுகிறது. பழுப்பு சர்க்கரை இது வெள்ளை சர்க்கரையை விட குறைவான கலோரிகளைக் கொண்டிருப்பதாகக் கருதப்படுகிறது, எனவே இது உங்கள் எடையை பாதிக்காது. ஆனால் உண்மையில், எலிகள் பற்றிய ஆய்வில் கொடுக்கப்பட்டுள்ளது பழுப்பு சர்க்கரை , உடல் அமைப்பு மற்றும் ஆற்றல் வளர்சிதை மாற்றத்தில் எந்த வித்தியாசமும் இல்லை, எனவே பழுப்பு சர்க்கரை வெள்ளை சர்க்கரையை விட குறைந்த கலோரி உட்கொள்ளலை வழங்குகிறது என்று நிரூபிக்கப்படவில்லை. அதிக சர்க்கரை உட்கொள்வதால் ஏற்படும் பாதிப்பு அனைத்து வகையான சர்க்கரையும், இயற்கை சர்க்கரை மற்றும் சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை இரண்டும் கார்போஹைட்ரேட்டுகள் ஆகும், அவை உடல் ஆற்றலாகப் பயன்படுத்துகின்றன. ஆனால் அதிகமாக உட்கொண்டால், உடலில் அதிகப்படியான கலோரிகள் இருக்கும் மற்றும் ஆரோக்கியத்தில் பின்வரும் விளைவுகள் ஏற்படலாம்: உடல் பருமன் இனிப்பு உணவுகள் மற்றும் பானங்கள் மிக அதிக கலோரிகளைக் கொண்டிருக்கின்றன, எனவே அதிகமாக உட்கொண்டால், அது உடலில் கலோரிகளை உருவாக்கும். இதன் விளைவாக, உங்கள் எடை கடுமையாக அதிகரித்து உடல் பருமனுக்கு வழிவகுக்கும். ஊட்டச்சத்து குறைபாடு இனிப்பு உணவுகள் அல்லது பானங்களை உட்கொள்வது மூளையில் மகிழ்ச்சியை ஏற்படுத்தும், எனவே பலர் இனிப்பு உணவுகளை விரும்புவதில் ஆச்சரியமில்லை. இருப்பினும், அதிகப்படியான சர்க்கரையை உட்கொள்வது மற்ற ஆரோக்கியமான உணவுகளை உண்ணும் ஆர்வத்தை குறைக்கும், எனவே நீங்கள் ஊட்டச்சத்து குறைபாட்டிற்கு ஆளாக நேரிடும். பல் சேதம் குழந்தை பருவத்திலிருந்தே, "அதிக இனிப்பு உணவை சாப்பிட வேண்டாம், உங்கள் பற்களை சேதப்படுத்தும்" என்ற அறிவுரையை நீங்கள் அடிக்கடி கேட்கலாம். உண்மையில், சர்க்கரை என்பது பற்களின் முக்கிய எதிரி. ஏனென்றால், சர்க்கரையானது பாக்டீரியாவை உருவாக்குகிறது, இது குழிவுகளின் அபாயத்தை அதிகரிக்கிறது, குறிப்பாக நீங்கள் பல் ஆரோக்கியத்தை பராமரிக்க சோம்பேறியாக இருந்தால். ( மேலும் படிக்க: குழிவுகள் பிரச்சனையை சமாளிக்க 4 பயனுள்ள வழிகள்) இதயத்திற்கு ஆபத்து அதிக சர்க்கரை சாப்பிடுவது இரத்த நாளங்கள் மற்றும் கொழுப்பு திசுக்களில் ட்ரைகிளிசரைடு அளவை அதிகரிக்கலாம், எனவே நீங்கள் இதய நோய்க்கான அதிக ஆபத்தில் உள்ளீர்கள். சரி, உங்கள் வாழ்க்கை ஆரோக்கியமாகவும், உங்கள் எடை சிறந்ததாகவும் இருக்க, அது மாற்றப்படும் சர்க்கரை வகை அல்ல, ஆனால் இனிப்பு உணவுகள் மற்றும் பானங்களின் நுகர்வு குறைக்க அறிவுறுத்தப்படுகிறது. நீங்கள் உடலில் சர்க்கரை அளவை சரிபார்க்க விரும்பினால், அம்சத்தைப் பயன்படுத்தவும் சேவை ஆய்வகம் பயன்பாட்டில் . வா, பதிவிறக்க Tamil இப்போது App Store மற்றும் Google Play இல் உள்ளது.
ஐயத்துக்கு இடமில்லா ஓர் உண்மை, பொன்னியின் செல்வன்தான் தமிழிலேயே அதிகமாக வாசிக்கப்பட்ட நாவல். சரி, உங்களைச் சுற்றி இருப்பவர்களிடம் விசாரித்துப் பாருங்கள் இதுவரை பொன்னியின் செல்வன் வாசித்தவர்கள் எவரெவர் என. கதையாவது கேட்டவர்கள் எத்தனை பேர் என? திகைப்படைவீர்கள். மிகமிகக்குறைவாகவே அதை வாசித்திருப்பார்கள். இளைய தலைமுறை கேள்விப்பட்டே இருக்காது பொன்னியின் செல்வன் இதுவரை ஐந்து லட்சம் பிரதிகள் விற்றிருக்கும். பத்துலட்சம் பேர் படித்திருப்பார்கள். தமிழக மக்கள் தொகை பத்துகோடிக்கும் மேல். உலகளவில் பன்னிரண்டு கோடி. ஆகவே அந்நாவலை படித்தவர்கள் தமிழ்மக்களிலேயே மிகமிகச்சிறுபான்மையினர்தான். இது தமிழகத்தின் கதை. தமிழகத்துக்கு வெளியே ராஜராஜ சோழன் என்ற பெயர், சோழ அரசகுடி என்ற பெயர் பெரும்பாலும் எவருக்குமே தெரியாது. அது மிக இயல்பானது. ஏனென்றால் இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்துக்கும் அவர்களுக்குரிய பல பேரரசுகள் உள்ளன. ராஷ்டிரகூடப் பேரரசு அல்லது கீழைச்சாளுக்கியப் பேரரசு பற்றி நமக்கு என்ன தெரியும்? பள்ளி,கல்லூரிகளில் பெயர்கள் மட்டும் அறிமுகமாகின்றன. அவ்வாறு பிற அரசுகள் பற்றிச் சொல்வதில் நமக்கு துணைத்தேசியம் சார்ந்த உளத்தடைகள் பல உண்டு. சோழர்கள் இருநூற்றைம்பது ஆண்டுக்காலம் ஆட்சி செய்த நிலம் கேரளம்.கேரளத்தில் பின்னாளில் உருவான ஐம்பத்தாறு அரசுகள் (நாடுகள்) என்னும் அமைப்பு சோழர்காலத்தில் உருவானது. அதன் சிற்றரசர்கள் நாடுவாழிகள். அவர்களின் கூட்டமைப்பே சோழர்களுக்குப் பின் திருவிதாங்கூர், கொல்லம், கொச்சி ,கோழிக்கோடு அரசுகளாகியது. சோழர் காலகட்டத்தில் கட்டப்பட்ட ஆலயங்கள், வெட்டப்பட்ட ஏரிகள் பலநூறு கேரளத்தில் உள்ளன ஆனால் கேரளத்தில் பொதுவாக வர்லாறு பற்றிப் பேசுபவர்களுக்குக்கூட சோழர்கள் பற்றி தெரியாது. கேரள பாடநூல்களில் சோழர்கள் பற்றி பெரிதாக ஏதுமில்லை. கேரள வரலாற்றையே பதினைந்தாம் நூற்றாண்டில் இருந்து ஆரம்பிப்பார்கள். ஏனென்றால் அவர்கள் சோழர்களின் வரலாற்றை தவிர்க்க நினைக்கிறார்கள். நாம் தமிழகத்தை ஆட்சி செய்த நாயக்க மன்னர்களின் வரலாற்றை பொதுப்போக்காகத்தானே அறிந்து வைத்திருக்கிறோம். நாயக்க மன்னர்கள் வெட்டிய ஏரிகளும், உருவாக்கிய சாலைகளும் சந்தைகளும்தான் இன்றைய தமிழ்நாடு. ஆனால் நாம் கண்டுகொள்வதில்லை. நான் தமிழகத்துக்கு வெளியே எவரிடம் பேசினாலும், அறிஞர்களிடமும் இலக்கியவாதிகளிடமும் பேசும்போதுகூட, சோழர்கள் என்று சொன்னால் மேலும் கூடுதலாக ஒரு ஐந்து நிமிடம் அவர்கள் எவர் என விளக்கவேண்டியிருக்கிறது. இச்சூழலில் வருகிறது பொன்னியின் செல்வன்.ஒரு மாபெரும் வெற்றிப்படமாக அமையும் என்றால் தேசிய அளவில் மட்டுமல்ல, உலகளவிலேயே கூட பலகோடி பேருக்கு சோழர்களை, தமிழ்வரலாற்றின் ஒளிமிக்க பகுதியைக் கொண்டுசென்று சேர்த்துவிடும். நாம் அதன்பின் விளக்கவேண்டிய தேவையே இருக்காது. பொன்னியின் செல்வனின் சொல்லப்பட்ட சோழநாடு என ஒரு வரி சொன்னாலே போதும். ஆகவேதான் பொன்னியின் செல்வன் சினிமாவாக எடுக்கப்பட்டாகவேண்டும். ஆங்கிலம் வழியாக கல்விகற்று, உலகமெங்கும் சிதறிக் குடியேறிக்கொண்டிருக்கும் நம் அடுத்த தலைமுறைக்கு பொன்னியின் செல்வன் என்னும் ஒரு படம் ஒட்டுமொத்த சோழர் வரலாற்றையும் அறிமுகம் செய்துவிடும். தேவை என்றால் அவர்கள் நாவலை படிக்கலாம். மேலும் வரலாற்று நூல்களை வாசிக்கலாம். நீங்களே கவனியுங்கள், நம் அடுத்த தலைமுறை இன்று தமிழுடன் கொண்டிருக்கும் ஒரே தொடர்பு சினிமாதான். புலம்பெயர்ந்தோர் குழந்தைகள் தமிழ்ப்பேச்சை காதில் வாங்குவதே சினிமா வழியாகத்தான். ஆகவேதான் பொன்னியின் செல்வன் சினிமாவாக எடுக்கப்பட்டாகவேண்டும். ஏன் திரைப்படமாக எடுக்கவேண்டும்? தொலைத்தொடராக எடுக்கலாமே? சினிமாவாக எடுத்தால், எப்படி எடுத்தாலும் அத்தனை பெரிய நாவலை சுருக்காமலிருக்க முடியாது.தொலைத்தொடராக எடுக்கலாம். ஆனால் அதற்கு முதலீடு கிடைக்காது. வெறும் ‘காஸ்ட்யூம் டிராமா’வாகவே எடுக்க முடியும். சினிமா தவிர எந்த ஊடகத்திற்கும் சோழர்காலத்தை சித்தரித்துக் காட்டும் அளவுக்கு முதலீடு அமையாது. மேலும், ஏற்கனவே பொன்னியின் செல்வன் பற்றி அறிந்தவர்களுக்குத்தான் தொலைத்தொடரோ, காமிக்ஸ் வடிவமோ ஈர்ப்பை அளிக்கும். இன்னமும் பொன்னியின் செல்வன் அல்லது சோழர்கள் பற்றி எதுவுமே தெரியாதவர்களை சினிமா மட்டுமே ஈர்க்க முடியும். பிற ஊடகங்கள் பொன்னியின் செல்வன் என்னும் நாவலின் புகழை தங்களுக்கு பயன்படுத்திக் கொள்பவை. சினிமா மட்டுமே பொன்னியின் செல்வன் என்னும் நாவலுக்கு தன் புகழை அளிப்பது. எண்ணிப்பாருங்கள், பொன்னியின் செல்வன் நாவலின் புகழ் என்பது தமிழகத்துக்குள் மட்டுமே. அதிலும்கூட தமிழகத்தில் பெரும்பான்மையினருக்கு அந்நாவலை பற்றி ஒன்றுமே தெரியாது. பொன்னியின் செல்வன் சினிமா பலகோடி ரூபாயை விளம்பரத்துக்காகச் செலவிடுகிறது, இன்னும் பலகோடி செலவிடப்படவிருக்கிறது. உலகம் முழுக்க. அது நாவலை ஆயிரம் மடங்கு மக்களிடையே கொண்டுசெல்கிறது. அது சினிமாவால்தான் இன்றைய சூழலில் முடியும். சோழர்காலப் பெருமையைச் சொல்கிறோம், ராஜராஜனின் புகழைச் சொல்கிறோம் என்றால் தமிழகத்திலேயே அடுத்த தலைமுறையினர் பொருட்படுத்த மாட்டார்கள். தமிழகத்துக்கு வெளியே உள்ளவர்களிடம் அப்படி ஒரு பேச்சையே எடுக்க முடியாது. அகன்ற காட்சிகள், நாடகீயத்தன்மை, சாகசங்கள் ஆகியவை கொண்ட ஒரு பொழுதுபோக்கு சினிமா என்ற அளவிலேயே பொன்னியின் செல்வன் மக்களிடையே தன்னை முன்வைக்க முடியும். அதன்பொருட்டு வந்து அமர்பவர்களிடமே அது சோழர்களின் உலகை விரித்துக் காட்டமுடியும். ஏன் சினிமா தேவைப்படுகிறது? இது காட்சியூடகத்தின் உலகம்.நாம் இளமையில் பார்த்ததை விட பத்து இருபது மடங்கு இன்றைய தலைமுறை காட்சியூடகங்களை பார்க்கிறது. நாம் மாதம் ஒருமுறை திரையரங்கு சென்று சினிமா பார்த்தோம். கைபேசியில் சினிமா ஓடும் காலம் இது. இன்று எந்த ஒன்றும் காட்சியூடகமாக ஆகவில்லை என்றால் பொதுப்பிரக்ஞையில் நீடிக்காது. நேற்றைய தலைமுறையில் அச்சு ஊடகமே முதன்மையானது. தொடர்கதைகளை முண்டியடித்து வாசித்த காலம் அது. அது போய்விட்டது. ‘எதுவானாலும் காட்டு’ என்பதே இன்றைய தலைமுறையின் கோரிக்கை. ஆகவே பொன்னியின் செல்வன் சினிமாவாக ஆகியே தீரவேண்டும். ஒவ்வொரு சமூகத்துக்கும் அதன் இறந்தகாலம் பற்றிய கனவு தேவைப்படுகிறது. அந்தக்கனவு மிக இளமையிலேயே அச்சமூக உறுப்பினர்களுக்கு அளிக்கப்படுகிறது. அது அவர்களின் ஆழத்தில் வளர்கிறது. அந்தக் கனவையே இலக்கியங்கள் உருவாக்குகின்றன. அவை அக்கனவின் வழியாகவே தலைமுறைகளை இணைத்து பண்பாட்டுத் தொடர்ச்சியை உருவாக்குகின்றன. பண்பாடு என நாம் சொல்வதே நம் முந்தைய தலைமுறையிடமிருந்து நாம் பெற்றுக்கொண்டு நம் அடுத்த தலைமுறைக்குக் கடத்தும் நினைவுகளையும் கனவுகளையும்தான். வரலாறு, தொன்மம் ஆகியவை இதன்பொருட்டே உருவாக்கப்படுகின்றன. ஐரோப்பிய, அமெரிக்கச் சமூகங்களையே பாருங்கள். அவர்கள் அதிநவீனச் சமூகம். ஆனால் தங்கள் கிரேக்க, கெல்டிக், நார்ஸ் பாரம்பரியத்தை குழந்தைக்கதைகளாக, சினிமாக்களாக, காமிக்ஸ்களாக அடுத்த தலைமுறைக்கு அளித்தபடியே இருக்கிறார்கள். தோர் ( Thor ) என தேடிப்பாருங்கள். அது ஒரு நார்ஸ் தொன்மம். இடிமின்னலின் கடவுள். நம்முடைய இந்திரன் போல. உங்கள் குழந்தைகளிடம் அவர் யார் என்று கேளுங்கள். அவர்களிடமே பொம்மை இருக்கும். அவ்வளவு சினிமாக்கள், அத்தனை காமிக்ஸ் படங்கள். ஐரோப்பாவின் தொல்காலகட்டம் முழுக்க சினிமாக்களாக அந்த மக்களிடையே சென்றுகொண்டே இருக்கிறது. அவர்களுக்கு இருக்கும் செல்வ வளத்தால், ஊடக வல்லமையால் உலகம் முழுக்க கொண்டுசெல்கிறார்கள். இந்திரன் எவர் என்று தெரியாத நம் குழந்தைக்கு தோர் வைத்திருக்கும் சுத்தியலின் பெயர் என்ன என்று தெரிந்திருக்கும். உலகம் முழுக்க உள்ள குழந்தைகள் ஐரோப்பியப் பண்பாடு நோக்கி அந்தச் சினிமாக்களால் ஈர்க்கப்படுகிறார்கள். கொஞ்சம் கல்வி கற்றதும் அங்கே சென்றுவிடத் துடிக்கிறார்கள்.அச்சமூகத்துடன் மிக எளிதாக இணையவும் அவர்களால் முடிகிறது. ஐரோப்பியச் சமூகத்தை, அமெரிக்கச் சமூகத்தை இன்று ஒருங்கிணைத்து வைத்திருப்பது, உலகமெங்குமிருந்து மக்களை அதைநோக்கி ஈர்த்து அதை மேலும் வல்லமையானவையாக ஆக்குவது அவர்களின் இந்த வரலாறும் தொன்மமும் உருவாக்கும் கனவுதான். இன்று உலகவல்லமையாக எழுந்து வரும் சீனா முதலில் செய்வது அவர்களின் வரலாற்றையும் தொன்மங்களையும் மாபெரும் சினிமாக்களாக எடுத்து அவர்களின் குழந்தைகளுக்கும், உலகம் முழுக்கவும் கொண்டுசெல்வதுதான்.கோடிக்கணக்கான செல்வத்தை அதன்பொருட்டு சீனா செலவிடுகிறது. உலகம் முழுக்க படையெடுப்பாளனாக, பேரழிவாளனாக அறியப்பட்ட ஜெங்கிஸ்கானை ஒரே சினிமா வழியாக சீனா கதாநாயகனாக ஆக்கிவிட்டது. ஜெங்கிஸ்கானின் வரலாற்றைச் சொல்லும் சீனப்படமான மங்கோல் Mongol (film) உலகமெங்கும் பெருவெற்றி அடைந்த மாபெரும் சினிமா. சீனா தன்னுடைய வரலாற்றையும் தொன்மங்களையும் சினிமா வழியாக உலகமெங்கும் கொண்டு செல்கிறது. அதற்காக ஹாலிவுட் இயக்குநர்களை கொண்டுவந்து, கோடிக்கணக்கான முதலீட்டை இறக்கி, சினிமா எடுக்கிறது. மிகச்சிறந்த உதாரணம் ரெட் கிளிஃப் Red Cliff (film) ஹாலிவுட் இயக்குநர் ஜான் வூ வை கொண்டுசென்று அப்படத்தை இயக்கிநர். அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும், உலகமெங்கும் கொண்டுசென்றனர். அந்த படம் உலக சினிமாவின் மாபெரும் திரைநிகழ்வுகளில் ஒன்று. அதன் நோக்கம் மூன்று. ஒன்று சீனமக்களிடையே, அவர்களின் அடுத்த தலைமுறையில், சீனா பற்றிய பெருமிதத்தை உருவாக்குவது. சீனா பெரும்பேரரசாக இருந்தது என ஆழமாக அவர்களின் உள்ளத்தில் நிறுவுவது. அந்த பொதுக்கனவே சீனாவை ஒருங்கிணைக்கும் ஆற்றல். இரண்டாவது, சீனா பற்றிய ஒரு மதிப்பை ஐரோப்பிய, அமெரிக்கச் சூழலில் உருவாக்குதல். எப்படி ஹாலிவுட் படம் பார்த்து நாம் ஐரோப்பியப் பண்பாடுமேல் பிரமிப்பு கொள்கிறோமோ அதே பிரமிப்பை அவர்களிடம் சீனா பற்றி உருவாக்குதல். அனைத்தையும் விட முக்கியமானது, கிழக்கு முழுக்க பரவியிருக்கும் மஞ்சளின மக்களிடம் சீனப்பெருமிதத்தை நிறுவுதல். அவர்களுக்கு ஏற்கனவே ஐரோப்பியப் பண்பாடு பற்றி பிரமிப்பும் தாழ்வுணர்ச்சியும் உண்டு. இந்த படங்கள் அதற்கு மாற்றாக அமைகின்றன. நாமும் குறைந்தவர்கள் அல்ல என எண்ணச் செய்கின்றன.சீனாவை தங்கள் இனத்தின் மையமாக எண்ண செய்கின்றன. உண்மையில் கிழக்கு ஆசிய நாடுகளுக்கு பலநூறு ஆண்டுகளாக சீனா மேல் இளக்காரமோ வெறுப்போதான் இருந்தது. அங்கு வாழும் பல லட்சம் பேர் சீனாவில் அரசியல் காரணங்களுக்காக தப்பி வந்தவர்கள். பல நாடுகள் சீன ஆக்ரமிப்பில் இருந்த வரலாறு கொண்டவை. ஆனால் இன்று அந்த இளக்காரம் அகன்றுவிட்டிருக்கிறது. இன்று சீனா அவர்கள் அனைவருக்கும் தலைமைப்பொறுப்பு ஏற்கக்கூடியதாக ஆகிவிட்டிருக்கிறது. அடுத்த தலைமுறை உள்ளத்தில் அந்த எண்ணத்தை உருவாக்கியதுல் பெரும்பங்கு சீன சினிமாவுக்கு உண்டு. இந்தப்போட்டியில் எங்கும் நாம் இல்லை. நமக்கு அந்த அளவுக்கு பணம் இல்லை. அந்த அளவுக்குச் செல்வாக்கும் இல்லை. ஆனால் நமக்கும் ஒரு பொற்கால வரலாறு இருந்தது, நாமும் வெற்றிபெற்ற சமூகமாக இருந்தோம் என நம் இளையதலைமுறைக்கும், இந்தியாவுக்கும், உலகுக்கும் சொல்வதற்கான ஒரு முயற்சி பொன்னியின் செல்வன். இதை நாம் சொல்லித்தான் ஆகவேண்டும். ஒரு சமூகமாக நீடிக்க, ஒரு பொதுக் கனவை நம் அடுத்த தலைமுறைக்குக் கையளிக்க.நம் முன் உள்ள பெரும் சவால் அது. ஆகவேதான் பொன்னியின் செல்வன் சினிமாவாக ஆக்கப்படவேண்டும். உலகமெங்கும் கொண்டுசெல்லப்பட்டாகவேண்டும் நன்றி – https://www.jeyamohan.in/166897/ பொன்னியின் செல்வன் பற்றிய அடுத்த வினாவே பொன்னியின் செல்வன் சினிமா எப்படி இருக்கும் என்பது. பொன்னியின் செல்வன் நாவல் ஒரு பெரிய சினிமாவாக எடுக்கப்பட்டு இந்தியாவெங்கும், உலகமெங்கும் கொண்டுசெல்லப்படவேண்டும் என்பதை ஏற்றுக்கொண்டவர்களுக்காகவே மேலே பேசமுடியும். பொன்னியின் செல்வன் ஒரு தூய கிளாஸிக், அதை தொடவே கூடாது, அது எவருக்கும் தெரியாமலேயே இருந்தால்கூட பரவாயில்லை, தமிழர்களின் ஒரு பொற்காலகட்டம் எவர் கவனத்துக்கும் வராமலிருந்தாலும் பரவாயில்லை எனச் சொல்பவர்கள் சிலர் உண்டு. அவர்களைப் பொறுத்தவரை பொன்னியின் செல்வனோ, ராஜராஜ சோழனோ, தமிழர் பண்பாடோ முக்கியமே இல்லை. அவர்கள் தங்கள் இளமையில் வாசித்து அடைந்த ஒரு கனவு அந்நாவல். அக்கனவை அப்படியே பொத்தி வைத்துக் கொள்வது மட்டுமே அவர்களின் நோக்கம். அது ஒரு தனிப்பட்ட உளநிலை. ஒரு பெரிய சமூகச் செயல்பாடு அந்த தனிப்பட்ட உளநிலையை கருத்தில்கொள்ள முடியாது. மேலும் இப்படிச் சொல்பவர்களில் மிகப்பெரும்பான்மையினர் இளமையில் பொன்னியின் செல்வன் வாசித்தபின் வேறெந்த நூலையும் வாசிக்காதவர்கள் என்பதையும் கவனித்திருக்கிறேன். பொன்னியின் செல்வன் சினிமாவாக ஆக்கப்படும்போது உருவாகும் பிரச்சினைகள் என்ன? எந்த ஒரு நாவலை சினிமாவாக ஆக்கினாலும் சில இழப்புகள், சில பெறுதல்கள் நிகழும். அவற்றைப் பற்றிய புரிதல் நம் சூழலில் விமர்சகர்களுக்குக் கூட இல்லை. அந்தப் புரிதல் இருந்தால் நாவலைப்போல சினிமா இல்லை என்பதுபோன்ற மேலோட்டமான விமர்சனங்கள் எழ வாய்ப்பில்லை. உலகமெங்கும் சினிமாவாக ஆக்கப்பட்ட பல இலக்கியப் பெரும்படைப்புகள் உள்ளன. அவற்றிலும் இரண்டு வகை உண்டு. ஒன்று பொதுரசிகர்களுக்குரிய பிரபல சினிமாவாக எடுக்கப்பட்டவை. இன்னொன்று, கலைப்படமாக எடுக்கப்பட்டவை. சினிமா நிபுணர்களுக்காக அல்ல, என்னைப்போன்ற ஆரம்ப சினிமா ரசிகர்களுக்காக சில உதாரணங்களைச் சுட்டிக்காட்டுகிறேன். பிரபல சினிமாக்களில் நாவல்கள் மிக வெற்றிகரமாகப் படமாக்கப்பட்டவை சில உண்டு. என் பார்வையில் சிறந்த உதாரணங்கள் டாக்டர் ஷிவாகோ(Doctor Zhivago), கான் வித் த விண்ட் (Gone with the Wind), இங்க்லீஷ் பேஷண்ட் The English Patient) போன்றவை. இலக்கியங்கள் கலைப்படங்களாக ஆவதன் சிறந்த உதாரணங்கள் அகிரா குரசோவாவின் ரான் (Ran) (ஷேக்ஸ்பியரின் கிங் லியர் ) சத்யஜித் ரேயின் பாதேர் பாஞ்சாலி. இரண்டாவது வகை கலைப்படங்களில் இயக்குநருக்கு பெரிய சுதந்திரம் உண்டு. அவர் தன்னுடைய படைப்பை எடுக்க மூலநூலை பயன்படுத்திக் கொள்கிறார். மூலநூலுக்கு அவர் மறுவிளக்கம் அளிக்கிறார். மூலநூலில் தனக்குத்தேவையான பகுதிகளை மட்டும் எடுத்துக்கொள்கிறார். மொத்த கதையின் களத்தையே மாற்றி எடுக்கப்பட்ட சிறந்த சினிமாக்களும் உண்டு. அந்தக் களத்தில் மூலநூலாசிரியர் முக்கியமல்ல, இயக்குநரே முக்கியமானவர். அவை நூலின் சினிமாச் சித்தரிப்புகள் அல்ல, அவை நூலில் இருந்து உருவான தனிக் கலைப்படைப்புகள். பொதுரசிகர்களுக்காக எடுக்கப்படும் முதல்வகை சினிமாக்கள் என்ன செய்கின்றன என்று பாருங்கள். அவை ஏதேனும் ஒரு திரைக்கதை உத்தி வழியாக மிகப்பெரிய நாவலை சுருக்கமான அடர்த்தியான ஒரு வடிவத்துக்குள் கொண்டுவருகின்றன. டாக்டர் ஷிவாகோ சிறந்த உதாரணம். அப்படித்தான் நாவலை சினிமாவாக எடுக்கமுடியும். ஏனென்றால் சினிமா நாவலைச் சுருக்கியே ஆகவேண்டும். அவ்வாறு சுருக்கியபின் அந்நாவலின் மிக உச்ச தருணங்களை மட்டும் வைத்துக்கொண்டு அந்நாவலின் கதையோட்டத்தையும், உணர்வுநிலையையும் சொல்ல சினிமாக்கள் முயல்கின்றன. அப்போது காட்சிகள்கூட சுருங்கும். ஏனென்றால் நாவலில் ஒரு காட்சி பத்துபக்கம் இருக்கும். வர்ணனைகள், உணர்ச்சிநிலைகள், உரையாடல்கள் என அது நீளும். வாசித்து முடிக்கவே அரைமணிநேரம் ஆகும். சினிமாவில் ஒரு காட்சி அதிகம்போனால் நான்கு ஐந்து நிமிடங்களே ஓடமுடியும். ஒரு நல்ல சினிமா இயல்பாக வெறும் அறுபது காட்சிகளாலானது. ஆகவே காட்சிகளும் சுருங்கும். நாவலில் விரிந்து விரிந்து செல்லும் நிகழ்ச்சி சினிமாவில் காட்சிவடிவில் சுருக்கமாக சில நிமிடங்களில் நிகழ்ந்து மறையும். ஆகவே, சினிமா நாவலின் காட்சியை குறைக்கிறதா? ஆழமற்றதாக ஆக்குகிறதா? இல்லை. சினிமாவின் அழகியலே வேறு. அது வெறும்காட்சி வழியாக ஓர் ஆழத்தை உருவாக்குகிறது. நான் எழுதிய நான் கடவுள் சினிமாவுக்கு தாண்டவன் அறிமுகக் காட்சிக்கு திரைக்கதையில் இரண்டே இரண்டு பக்கம்தான் எழுதியிருந்தேன். அது சினிமாவில் ஆறு நிமிடம் ஓடியது. ஒரு பயிற்சிக்காக அந்தக் காட்சியை திரும்ப நாவல் வடிவுக்கு எழுதிப்பார்த்தேன். நம்ப மாட்டீர்கள், ஏறத்தாழ நாற்பத்தைந்து பக்கம் வந்தது. தாண்டவனின் அந்த வருகை, கெத்து, அவன் அந்த பாதாளக்கோயிலுக்குள் நுழைய நுழைய அவனுடைய மனநிலை மாறிக்கொண்டே இருப்பது, உள்ளே இருக்கும் சிதைந்த மனிதர்கள், அவர்கள் ஒவ்வொருவருக்கும் இன்னொருவருடன் உள்ள உறவு, அவர்கள் தாண்டவனை கண்டதும் அடையும் விதவிதமான மனநிலைகள்… அதை வாசிக்க ஒரு மணிநேரம் ஆகும். சினிமா அளிப்பது அந்த காட்சியின் விரிவையும் ஆழத்தையும்தான். சுந்தரசோழர் படுத்திருக்கும் படுக்கையறையை கல்கி மிகச்சில சொற்களில் வர்ணித்துச் செல்கிறார். தரவுகளே அளிப்பதில்லை. நாம் நமக்குத் தெரிந்த வகையில் அதை கற்பனைசெய்து கொள்கிறோம். ஆனால் சினிமா ஒரு பெரிய சித்திரத்தை அளிக்கிறது. அந்த கட்டில், அந்த அறை, அதற்குள் இருக்கும் ஏவலர்கள், அவர்களின் ஆடைகள், அவர்களின் உடல்மொழி என அது அளிக்கும் நுணுக்கமான செய்திகளுக்கு அளவே இல்லை. சினிமாவில் அந்த ஒரு நிகழ்வை, 3 நிமிடம் மின்னிப்போகும் ஒரு காட்சியை அமைப்பதற்கு பல லட்சம் ரூபாய் செலவாகும். பல நிபுணர்கள் கூடி, ஆராய்ந்து, வரைந்து, செட் போட்டு, வரைகலையில் விரிவாக்கம் செய்து, ஒவ்வொரு முகத்துக்கும் நடிகர்கள் தெரிவுசெய்து, அவர்களுக்கு ஒப்பனை செய்து, உடையலங்காரங்கள் செய்து, நடிக்கச்செய்து, வண்ணம் சரிபார்த்து, வெட்டி ஒட்டி, ஒலி சேர்த்து முழுமை செய்யவேண்டும். ஒரு முழுநாவல் எழுதும் உழைப்பு அந்த ஒரு காட்சிக்கே தேவைப்படும். ஒருவர் கல்கியின் நாலைந்து வரிகளில் இருந்து, அவருடைய கற்பனைக்கேற்ப உருவாக்கி வைத்திருக்கும் சுந்தர சோழனின் படுக்கையறையையே சினிமாவிலும் எதிர்பார்ப்பார் என்றால் அவர் சினிமா ரசிகரே அல்ல. சினிமா காட்டும் அந்தப் படுக்கையறையை மிக நுட்பமாக பார்த்து, அது காட்டும் அக்காட்சியில் இருந்து மிக விரிவாக மேலும் கற்பனை செய்பவரே சினிமாவுக்கு ரசிகர். அவருக்காகவே சினிமா எடுக்கப்படுகிறது. குழந்தைகள் அப்படித்தான் சினிமாவைப் பார்க்கின்றன. அந்தக் குழந்தைகள் சோழர்காலம் பற்றி, நம் கடந்தகாலம் பற்றி ஒரு கனவை அடைவதற்காகவே பொன்னியின் செல்வன் எடுக்கப்படுகிறது. எண்ணிப்பாருங்கள், நாமும் நம் சின்னவயசில் பார்த்த சினிமாக்களில் இருந்தே நமது மனச்சித்திரங்களை அடைந்திருக்கிறோம். சினிமாவை ‘குறைத்தலின் கலை’ (Art of minimalism) என்பார்கள். நாவல் என்பது ‘விரித்துரைத்தலின் கலை’ (Art of elaboration) என்பார்கள். இரண்டும் முற்றிலும் வேறுவேறு திசைகளில் செல்லும் கலைகள். நாவல் அனைத்தையும் விரித்து விரித்துச் சொல்லிச் செல்கிறது. ஒவ்வொன்றையும் வரலாறு, தத்துவம், நினைவுகள் எல்லாவற்றுடனும் இணைக்கிறது. நாவல் வாசிக்கும் அனுபவம் என்பது நாம் நமக்குள் விரிந்துகொண்டே செல்வதுதான். இன்றைய யுகத்தின் முதன்மைக்கலை நாவல் என்பது என் எண்ணம் – ஆகவே நான் நாவல் எழுதுகிறேன். நாம் வாழ்ந்துகொண்டிருப்பது துளித்துளியாக உடைக்கப்பட்ட உலகில். அலுவலகம், வீடு, தெரு, அரசியல் எல்லாமே நமக்கு தனித்தனி அனுபவ உலகங்கள். நாவல் அனைத்தையும் ஒன்றாக இணைப்பது. நாவல் மிகப்பெரிய ஒரு வலைபோல நம்முள் உள்ள சிந்தனைகள், கற்பனைகள், நினைவுகள் எல்லாவற்றையும் ஒன்றாக தொகுக்கிறது. சினிமா நாவல் அல்ல. அது ஓர் அளவுக்குமேல் விரிந்தால் உடனே நாம் சலிப்படைவோம். யோசித்துப்பாருங்கள், அரைமணிநேரம் ஒருவர் பேசினால் கேட்டுக்கொண்டிருக்கிறோம். பத்துநிமிடம் சினிமா சரியாக நம்மை ஈர்க்கவில்லை என்றால் நெளிகிறோம். அதை சினிமாவில் Filmi time என்பார்கள். அது வெளியே உள்ள அதே காலம் அல்ல. அது மிகமிகச் செறிவூட்டப்பட்ட காலம். அதன் அடர்த்தி மிக அதிகம். சினிமாவில் பத்து நிமிடம் என்பது மிக மிக நீளம். ஏனெனில், சினிமா கனவுகளின் தர்க்கமுறை கொண்டது. கனவு சில கணங்களே நீடிக்கக்கூடியது. நீங்கள் பத்தாண்டுகளுக்கு முன் பார்த்து இன்றும் நினைவில் நீடிக்கும் சினிமாக்காட்சி ஒன்றை நினைவுகூருங்கள். மீண்டும் சென்று அந்தக்காட்சியைப் பாருங்கள். அது மிகமிகச் சிறிதாக, சில நிமிடங்களே மின்னி மறைவதாக இருப்பதைக் காண்பீர்கள். அந்தக் காட்சி உங்கள் நினைவில்தான் அவ்வளவு பெரியதாக ஆகியிருக்கும். அதுவே சினிமாவின் கலை. நீங்கள் அந்தக் காட்சியை எந்த முன் எதிர்பார்ப்பும் இல்லாமல் பார்த்தால் அது அந்த சிறிய பொழுதிலேயே உங்களுக்குள் ஆழமாக பதிந்துவிட்டிருக்கும். ஆனால் அதை ஒரு நாவலில் அல்லது நாடகத்தில் அந்தக்காட்சியை ஏற்கனவே நீளமாக பார்த்து, அது அப்படித்தான் என்று உறுதிசெய்துவிட்டு, அந்த சினிமாக்காட்சியை பார்த்தால் அது மிகச் சுருக்கமாக மின்னி மின்னி சென்றுவிட்டது என்றும், விரிவாக இல்லையே என்றும் தோன்றும். நாவல்களை சினிமாவாகப் பார்க்கும்போதுள்ள பெரிய சிக்கல் இதுவே. நாவலை வாசித்தவர்கள் பலர் அந்நாவலின் சினிமா வடிவைப் பார்த்து ‘சட் சட்னு முடிச்சிட்டான். நாவல்ல இன்னும் டீடெயிலா இருக்கும்’ என்பார்கள். அது சினிமா என்னும் கலைவடிவை அறியாததனால் சொல்வது. சினிமாவை அறிந்தவர்கள் நாவலின் அந்த காட்சி சினிமாவில் எந்த அளவுக்கு காட்சிவடிவ செய்திகளை செறிவாகக் காட்டுகிறது என்பதையே கவனிப்பார்கள். வந்தியத்தேவன் கடம்பூர் கடைவீதி வழியாக குதிரையில் சென்றான் என்பது நாவலில் ஒரு வரி. ஆனால் சினிமாக்காட்சியில் அந்த கட்டிடங்கள், அந்த தெருவின் வியாபாரிகள், அந்த குதிரை என பலநூறு நுண் செய்திகள் உள்ளன. நல்ல சினிமா ரசிகன் முடிவே இல்லாமல் அவற்றை பார்க்கமுடியும். ஆகவே ஒரு நாவல் சினிமா ஆகும்போது அதன் நாவல் தன்மையை இழக்கிறது. அது இழப்பு. சினிமாத்தன்மையை அடைகிறது. அது பெறுமானம். நாவல் சினிமாவடிவில் விரிவையும் நீளத்தையும் இழக்கும். விவாதத்தன்மை இருக்காது. நீண்ட உரையாடல்கள் இருக்காது. மன ஓட்டம் இருக்காது. ஆனால் காட்சிவடிவ செய்திகளை பலமடங்கு கூடியிருக்கும். அவற்றிலிருந்து மேலும் கற்பனை செய்ய ஆரம்பித்தால் நாம் ஏற்கனவே வாசித்த நாவலே பலமடங்கு வளர்ந்திருப்பதை உணர்வோம்
கொழும்பு சாஹிரா கல்லூரியால் ஏற்பாடு செய்யப்பட்ட சுபர் 16 பாடசாலை அணிகளுக்கு இடையிலான உதைபந்தாட்ட போட்டித் தொடர் 17வது தடவையாக அண்மையில் இடம்பெற்றது. இந்தத் தொடரில் முதல் தடவையாக களம் இறங்கிய கொழும்பு மாளிகாவத்தை தாருஸ்ஸலாம் கல்லூரி பிரபலமான பாடசாலைகள் பலவற்றை தோற்கடித்து இறுதிப் போட்டி வரை முன்னேறி இரண்டாம் இடத்தைப் பிடித்து சாதனைப் படைத்துள்ளது. பாடசாலைகள் உதைபந்தாட்ட அணிகளில் மிகவும் பிரபலமான கொழும்பு சாஹிராக் கல்லூரியை இறுதிப் போட்டியில் சந்தித்த தாருஸ்ஸலாம் அணி மிகத் தீவிரமாகப் போராடி போட்டியை சம நிலையில் முடித்துக் கொண்டது. அதனை அடுத்து இறுதிப் போட்டியை ஏற்பாட்டாளர்களின் முடிவின் படி பெனால்டி முறையில் முடிவுக்கு கொண்டு வர முடிவு செய்யப்பட்டது. பெனால்டிக்கான வாய்ப்பின் போது 3 க்கு 2 என்ற ரீதியில் சாஹிராக் கல்லூரி அணி வெற்றி வாய்ப்பை தனதாக்கி கொண்டது. இந்தத் தொடரில் முதல் தடவையாகப் போட்டியிட்டு பிரபலமான பாடசாலை அணிகளுக்கு எல்லாம் சவால் விடுக்கும் வகையில் விளையாடி இரண்டாம் இடத்தை தக்க வைத்துக் கொண்ட மாளிகாவத்தை தாருஸ்ஸலாம் அணி அனைவரதும் பாராட்டைப் பெற்றதோடு பாடசாலை உதைபந்தாட்ட ரசிகர்களின் கவனத்தையும் பெரிதும் ஈர்த்துள்ளது. கொழும்பு டி.எஸ்.சேனநாயக்க அணி, கந்தானை டி. மெஸ்னாஸ்ட் அணி, இந்தப் போட்டித் தொடரின் நடப்பு சாம்பியன் மருதானை சென் ஜோஸப் கல்லூரி ஆகிய பிரபல அணிகளை இந்தத் தொடரில் எதிர்கொண்ட தாருஸ்ஸலாம் அணி அவற்றை வீழ்த்தி இறுதிவரை முன்னேறியமை பலரையும் ஆச்சரியத்தில் மூழ்க வைத்துள்ளது. அதுமட்டுமன்றி இறுதிப் போட்டியில் இன்னொரு பிரபல அணியான கொட்டாஞ்சேனை சென்.பெனடிக்ட் அணியை 4க்கு பூச்சியம் என்ற ரீதியில் தோல்வி அடையச் செய்தமை பாடசாலை உதைபந்தாட்ட ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளது. இத்தொடரின் ஆட்ட நாயகன் விருதாக தங்கக் காலணி (புழடனநn டீழழவ) 20 வயதுக்கு கீழ்பட்ட இலங்கை தேசிய அணியை பிரதிநிதித்தவம் செய்யும் மொஹமட் சுஹைபுக்கு வழங்கப்பட்டது. அத்தோடு மிகவும் நியாயமாக விளையாடிய அணிக்கான குயசை Pடயல யுறயசன உம் தாருஸ்ஸலாம் அணிக்கே வழங்கப்பட்டது. பாடசாலைகளுக்கு இடையிலான உதைபந்தாட்டப் போட்டிகளில் அண்மைக்காலமாக கொழும்பு மாளிகாவத்தை தாருஸ்ஸலாம் அணி ஒரு நட்சத்திர அணியாக மிளிரத் தொடங்கி உள்ளமை அவதானிக்கத் தக்கதாகும். தாருஸ்ஸலாம் கல்லூரியின்; சிரேஷ்ட அணியின் பயிற்றுவிப்பாளராக தேசிய அணியின் வீரர் மொஹமட் இஸ்ஸதீன் கடமையாற்றுகின்றார். கனிஷ்ட அணியின் பயிற்றுவிப்பாளராக கல்லூரியின் பழைய மாணவர் மொஹமட் இப்றாஹிம் பணியாற்றுகின்றார். சிறப்பு பந்து தடுப்பு (புழயட முநநிநச) பயிற்சியாளராக மொஹமட் றியாஸ் பணிபுரிகின்றார். தாருஸ்ஸலாம் உதைபந்தாட்ட அணியின் வளர்ச்சிக்காக கல்லூரியின் பழைய மாணவர்கள் விளையாட்டுக் குழு அர்ப்பணத்தோடு பல உதவிகளை புரிந்து வருகின்ற நிலையில் பிரதேச மக்களும் இந்த அணியின் வளர்ச்சிக்கான பூரண ஒத்துழைப்பை வழங்கி வருகின்றனர். படங்கள்: பாடசாலை அணி: இடமிருந்து வலம் பர்ஹான் எம் காலித், எம்.ஹனான், எம். அப்துல்லாஹ், எம்.எம்.றைஹான், எம்.எம். சக்கி (அணித் தலைவர்) எம்.சியான் (கோல் காப்பாளர்), எம்.அயாஸ், எம்.ஷமீர் (அணி உப தலைவர்), எம். சுஹைப் தொடரின் ஆட்ட நாயகனாகத் தெரிவாகி தங்கக் காலணியை தனதாக்கிக் கொண்ட 20 வயதுக்கு கீழ்பட்ட இலங்கை தேசிய அணியை பிரதிநிதித்துவம் செய்யும் மொஹமட் சுஹைப் SHARE THIS Share it Tweet Share it Share it Pin it Related Posts செய்திகள் Post a Comment No comments Subscribe to: Post Comments ( Atom ) டிப்ளோமா பாடநெறி - 6 மாத இணையவழி ஆங்கில வகுப்பு Facebook Random Posts Popular Posts வேறு ஒரு நாடு இலங்கைக்காக பிணையாக வேண்டிய அளவிற்கு வீழ்ந்து விட்டோம், நிதியமைச்சர் பதவியை ஏற்க நான் தயார் இலங்கைக்கு ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் அடுத்த சில மாதங்களுக்கு தேவையான நிதி உதவிகளை பெறுவதற்கென்றால், வேறு ஒரு நாடு இலங்கை... சிங்களத் தாய்மார்களிடம் பால் குடித்த, முஸ்லிம்கள் மீது நான் அன்பு செலுத்துகிறேன் - ஏ.ஆர்.ஏ.பரீல் - உயிர்த்த ஞாயிறு தற்­கொலை குண்டு தாக்­கு­தல்­தாரி சஹ்ரான் மூன்று தட­வைகள் நெல்­லி­க­லைக்கு வந்து என்னைச் சந்­தித்­துள்ளார்... தடைகளை உடைத்து Dr ஷாபியின் மகள் நிலைநாட்டிய மகத்தான சாதனையும், ஒரு சிங்கள சமூக ஆர்வலரின் பதிவும் - Keerthi Tennakoon - ‘සනීපාරක්ෂක තුවා නොමිලේ බෙදූ‘ සාෆිගේ කෙල්ල ගැනයි මෙවර සාමාන්‍ය පෙළ ලියූ දරුවන් අතර වැඩිම ජනමාධ්‍ය අවධානය දිනූ දරුවා... நாட்டைவிட்டு வெளியேறும் பெரும் தொகை இலங்கையர்கள் - விமான நிலையமும் பரபரப்பு கட்டுநாயக்க விமான நிலையத்தின் புறப்பாடு முனையம் இந்த நாட்களில் பரபரப்பாக காணப்படுவதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். பாரிய அளவிலான இலங... இலங்கை மீது, கட்டார் கோபமடைந்தது ஏன்..? தான் வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சராக செயற்பட்ட போது , கட்டார் நிதியத்தின் கிளையொன்றை இலங்கையில் திறப்பதற்கு தனக்கு அழைப்பு விடுக... Sponsor Categories - =சர்வதேசம் www.jaffnamuslim.com அறிவித்தல் ஆரோக்கியம் இஸ்லாம் உதவி கட்டுரை சர்வதேசம் செய்திகள செய்திகள் நேர்காணல் புகைப்படங்கள் முஸாபகத்து ரமழான் வினோதம் வீடியோ Blog Archive Blog Archive December 2022 (34) November 2022 (530) October 2022 (615) September 2022 (425) August 2022 (517) July 2022 (628) June 2022 (608) May 2022 (675) April 2022 (140) February 2022 (2) December 2021 (1) October 2021 (2) July 2021 (2) June 2021 (1) March 2021 (3) February 2021 (10) January 2021 (3) December 2020 (3) November 2020 (10) October 2020 (1) September 2020 (1) August 2020 (25) July 2020 (1) June 2020 (2) May 2020 (3) April 2020 (8) March 2020 (13) August 2015 (1)
கொரோனா வைரஸ் தாக்கத்தால் நாடே ஊரங்கில் இருக்கிறது. இந்த சமயத்தில் மக்களுக்கு விழிப்புணர்வுடன் எழுச்சியூட்டும் வகையில் கமல்ஹாசன் வரிகளில் ஜிப்ரான் இசையில் "அறிவும் அன்பும்" என்ற தலைப்பில் பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளனர். "அறிவும், அன்பும்" @RKFI @GhibranOfficial @anirudhofficial @Bombay_Jayashri @thisisysr #Siddharth @sidsriram @Shankar_Live @shrutihaasan @ThisIsDSP @themugenrao @andrea_jeremiah @lydian_official @thinkmusicindia #MaheshNarayanan #ArivumAnbum pic.twitter.com/hhTDU8QD0m — Kamal Haasan (@ikamalhaasan) April 22, 2020 "பொதுநலமென்பது தனி மனிதன் செய்வதே" என துவங்கும் இந்த பாடல் வரிகளை நடிகரும் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் எழுதியுள்ளார். இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்து பாடகர்களின் குரல்களை இணைத்து பாடலாக்கியுள்ளார். Launching-Arivum Anbum https://t.co/9NEMTc5R57@RKFI @GhibranOfficial @anirudhofficial @Bombay_Jayashri @thisisysr #Siddharth @sidsriram @Shankar_Live @shrutihaasan @ThisIsDSP @themugenrao @andrea_jeremiah @lydian_official @thinkmusicindia #MaheshNarayanan #ArivumAnbum — Kamal Haasan (@ikamalhaasan) April 23, 2020 இந்த பாடலினை கமல், பாம்பே ஜெயஸ்ரீ, யுவன் சங்கர் ராஜா, சித்தார்த், சித்ஸ்ரீராம், சங்கர் மகா தேவன், ஸ்ருதிஹாசன், தேவி ஸ்ரீ பிரசாத், முகின் ராவ், ஆண்ட்ரியா போன்றோர் பாடியுள்ளனர். இந்த ஊரடங்கு சமயத்தில் கமல்ஹாசன் எடுத்துள்ள இத்தகைய முயற்சி பலரையும் வெகுவாக கவர்ந்துள்ளது.
அசாத்திய திறமையால் தனது தாய்நாட்டை, உலகக் கோப்பையை தொட்டு ருசிபார்க்க வைத்த பிரான்ஸ் கால்பந்து வீரர் ஜினெடின் ஜிடேன் பற்றி விரிவாகக் காணலாம். 1998ஆம் ஆண்டு உலகக்கோப்பை இறுதிப்போட்டி. அசுர பலத்துடன் இருந்த நடப்பு சாம்பியன் பிரேசிலை 3-க்கு 0 என்ற கோல் கணக்கில் எளிதில் வீழ்த்தி முதன்முறையாக கோப்பையை வென்றது பிரான்ஸ் அணி. பாரிஸில் நடந்த வெற்றி கொண்டாட்டத்தில் திரண்ட 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர், இறுதிப்போட்டியில் ஜொலித்த நாயகனின் பெயரை இடியென முழங்கினர். பெரும் புகழுக்கும், சர்ச்சைகளுக்கும் சொந்தக்காரரான அவர் தான் ஜினெடின் ஜிடேன்(zinedine zidane). நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள் உலகின் தலைசிறந்த வீரர்களில் ஒருவராக கருதப்படும் ஜிடேன், தனது அசாத்திய Technique மற்றும் தலைமைப் பண்பால் புகழ்பெற்றிருந்தார். கண நேரத்தில் ஆட்டத்தின் போக்கையே மாற்றும் திறனும் அவரிடம் இருந்தது. ஜிடேனின் இந்த தனித்தன்மையே பிரேசிலின் கனவை தகர்த்தது. இறுதிப்போட்டியில், 2 கோல்கள் அடித்து பிரான்ஸுக்கு மகுடம் சூட உதவிய ஜிடேன் அன்றைய ஆண்டின் சிறந்த வீரருக்கான பலோன் டோர் விருதால் அலங்கரிக்கப்பட்டார். அந்த ஒரு போட்டி அவரை தேசத்தின் நாயகனாக மாற்றியது. 2004ம் ஆண்டு யூரோ கோப்பையில் பிரான்ஸ் அணி கிரீஸிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறியது. தோல்விக்கு பொறுப்பேற்றுக் கொண்ட ஜிடேன், உடனடியாக ஓய்வை அறிவித்து கால்பந்து உலகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கினார். ஜிடேனின் ஓய்வுக்குப் பிறகு பிரான்ஸ் அணி தடுமாற்றம் கண்டது. லில்லியன் துராம், மெக்கெலெலே போன்ற வீரர்களும் ஓய்வு பெற்றதால், அடுத்த உலகக்கோப்பைக்கு பிரான்ஸ் அணி தகுதிபெறுமா என்பதே கேள்வியாக இருந்தது. அப்போது பிரான்ஸ் அணியின் பயிற்சியாளராக இருந்த ரேமண்ட் டாமினிக், ஓய்வு முடிவை மாற்றிக்கொண்டு அணிக்கு திரும்புமாறு ஜிடேனை கேட்டுக்கொண்டார். தனது தேவையை உணர்ந்த ஜிடேன், மீண்டும் அணிக்கு திரும்பினார். அவரை கேப்டன் பொறுப்பு கொடுத்து வரவேற்றார் டாமினிக். ஜெர்மனியில் நடந்த உலகக்கோப்பையில் புது உத்வேகத்துடன் விளையாடினார் ஜிடேன். அணியை மீண்டும் ஒரு உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கும் அழைத்துச் சென்றார். இத்தாலிக்கு எதிரான அந்த இறுதிப்போட்டியில் 7வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை கோலாக மாற்றினார் ஜிடேன். அடுத்த சில நிமிடங்களில் இத்தாலி வீரர் மட்டெரெட்சி கோல் அடிக்க ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிக்கொண்டது. ஒரு கட்டத்தில் மட்டெரட்சிக்கும் ஜிடேனுக்கும் இடையே வார்த்தைப் போர் வெடிக்க, ஆவேசமடைந்த ஜிடேன், மட்டெரட்சியை திடீரென தனது தலையால் முட்டி கீழே தள்ளினார். அதோடு ஆட்டத்தில் இருந்தும் வெளியேற்றப்பட்டார். பெனால்டி ஷூட் அவுட்டில் பிரான்சை விழ்த்திய இத்தாலி, கோப்பையை தனதாக்கியது. ஜிடேனின் கால்பந்து பயணமும் கருப்புப் பக்கத்துடன் முடிவடைந்தது. இருப்பினும் அந்த உலக்கோப்பையின் சிறந்த வீராக தேர்ந்தெடுக்கப்பட்டார் ஜிடேன். பிரான்ஸ் சென்ற அவரை வரவேற்க பாரிஸில் லட்சக்கணக்கானோர் திரண்டிருந்தனர். வீதியெங்கும் ஜிடேனின் பெயர் ஒலித்தது. சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
சென்னை ஆவடி அடுத்த திருமுல்லைவாயல் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் கணவரை பிரிந்து 16 மற்றும் 14 வயதுடைய இரண்டு மகள்கள் மற்றும் மகனுடன் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இவரது வீட்டின் அருகில் வீட்டின் உரிமையாளரான வெங்கடேசன் அவரது தாயார் விஜயா அக்கா லலிதா ஆகியோர் வசித்து வருகின்றனர். வெங்கடேசனுக்கு ஏற்கனவே இரண்டு திருமணம் ஆகி மனைவிகள் பிரிந்து சென்றுவிட்ட நிலையில் மகன், தாய்,அக்கா ஆகியோர் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர். இந்தநிலையில் வீட்டின் உரிமையாளரான வெங்கடேசனின் அக்கா லலிதா, வாடகை வீட்டில் வசித்து வரும் பெண்ணின் 16 வயது மகளை தனது தம்பிக்கு திருமணம் செய்துவைக்க பெண் கேட்டுள்ளார். இதற்கு பெண்ணின் தாயார் மறுப்பு தெரிவித்துள்ளார். இந்த நிலையில் சிறுமியின் தாயார் வேலைக்கு சென்றபோது வீட்டில் தனியாக இருந்த சிறுமியை மிரட்டி வெங்கடேசன் பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இதுபோல் பலமுறை வெங்கடேசன் சிறுமையை மிரட்டிப் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து சிறுமியின் வீட்டில் யாரும் இல்லாதபோது வெங்கடேசனின் அக்கா லலிதா தனது ஆண் நண்பர்கள் வெங்கப்பன், கிரி, பாலாஜி ஆகிய முவரிடம் 3,500 ரூபாய் பணம் பெற்றுக்கொண்டு சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட சிறுமி வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்ததை தாயிடம் கூறியுள்ளார். தாய் சிறுமியை அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதித்து பரிசோதனை மேற்கொண்டுள்ளார். அதில் சிறுமி 4 மாதம் கர்பமாக இருப்பதாக கூறியதையடுத்து சிறுமியின் தாயார் அதிர்ச்சிஅடைந்துள்ளார் . பின்னர் தனக்கு நடந்த கொடூரத்தை சிறுமி தாயாரிடம் கூறி கதாஹரி அழுதுள்ளார் . இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் ஆவடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் குற்றவாளிகளான வீட்டின் உரிமையாளர் வெங்கடேசன்,அவரது தாய் விஜயா,அக்கா லலிதா,லலிதாவின் ஆண் நண்பர் வெங்கப்பா ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.மேலும் தலைமறைவாக உள்ள கிரி, பாலாஜி ஆகிய இரண்டு பேரை போலீசார் தேடி வருகின்றனர்.கைது செய்யப்பட்ட தாய்,மகன்,அக்கா உள்பட 4 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். 16வயது சிறுமியை தாய்,மகன்,அக்கா ஆகியோர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் திருமுல்லைவாயல் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மற்றவற்றை போல இலங்கையர்களின் ஓர் அங்கமாக கையடக்க தொலைபேசிகள் தேவையாகிவிட்டது. நீங்கள் இலங்கையில் ஒரு நல்ல தொலைபேசியைத் தேடுகிறீர்களானால், ikman.lk ஐத் தவிர வேறு எங்கும் கிடைக்காது. ஒவ்வொரு வாங்குபவரும் பார்க்கும் பல்வேறு பிராண்டுகள் மற்றும் மாடல்களில் எங்களிடம் பரந்த அளவிலான தேர்வுகளாக உள்ளன. உங்கள் வருவாய்க்கு ஏற்ற ஸ்மார்ட்போனை கண்டுபிடிப்பது எளிதான பணி அல்ல, ஆனால் நீங்கள் ikman.lk பக்கத்திற்கு சென்றால் நீங்கள் அதனை மிக எளிதாக கண்டறியமுடியும். உங்கள் தேடலை இன்னும் எளிதாக்க குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச விலை வரம்புகளைச் சேர்க்க உங்களுக்கு தெரிவு உள்ளது. ikman.lk விற்பனையாளர்களிடமிருந்தும், சரிபார்க்கப்பட்ட உறுப்பினர்களிடமிருந்தும் இலங்கையில் உள்ள Samsung கையடக்க தொலைபேசிகளை கண்டறியவும். இலங்கையில் சிறந்த விலையில் Samsung Galaxy Note-1 கையடக்க தொலைபேசிகள் களை வாங்கவும் Samsung கையடக்க தொலைபேசிகளை இலங்கையின் சிறந்த வர்த்தக சந்தையான ikman.lk இல் மட்டுமே கண்டறிந்து தேர்ந்தெடுக்கவும். நீங்கள் குறிப்பிட்ட Samsung கையடக்க தொலைபேசி மாடலில் ஆர்வமாக இருந்தால், நீங்கள் எங்கள் வலைதள பக்கத்திற்கு சென்று எங்கள் நம்பகமான உறுப்பினர்கள், தனியார் விற்பனையாளர்கள் மற்றும் இலங்கை முழுவதிலும் உள்ள அங்கீகரிக்கப்பட்ட முகவர்களிடமிருந்து வாங்கலாம். Galaxy A03s, Galaxy M01 Core, Galaxy J2, Galaxy M31, Galaxy A20s போன்ற சிறந்த கையடக்க தொலைபேசி மாடல்களும் நியாயமான விலையில் எங்களிடம் உள்ளன. Samsung Galaxy Note-1 கையடக்க தொலைபேசிகளை விலை, பாவனைக்குரிய தன்மை, மாடல் மூலம் பட்டியலிடவும் இலங்கையில் சிறந்த Samsung கையடக்க தொலைபேசி விலையினை கண்டறியவும். விலை, பிராண்ட், பாவனைக்குரிய தன்மை, மாதிரி மற்றும் பிற விவரக்குறிப்புகள் போன்ற வடிப்பான்களைப் பயன்படுத்தி உங்கள் தேடல்களை ikman.lk எளிதாக்குகிறது. உங்களுடைய வருவாய்க்கு ஏற்ப உங்கள் கோரிக்கைகளை எங்களுடன் வரிசைப்படுத்தலாம். நீங்கள் துள்ளியமாக பட்டியலிட்டால் சிறந்த தொலைபேசியை சிறந்த விகிதத்தில் தேர்ந்தெடுப்பது ஒரு இலகுவான செயலாகும். ikman.lk இல் Samsung Galaxy Note-1 கையடக்க தொலைபேசிகளை எளிதாக விற்பனை செய்யவும் ஸ்மார்ட்போனை விற்பனை செய்வது என்பது சவாலானது. ஆனால் ikman.lk தளத்துடன் அச்சவாலை எளிதாக முறியடிக்க முடியும். எனவே, எங்கள் தளத்தினூடாக விற்பனை செய்ய ஏன் முயற்சி செய்யக்கூடாது? ikman.lk இல் உங்கள் ஸ்மார்ட்போனை மிக எளிதாகவும் பாதுகாப்பாகவும் விற்கலாம். ஆனால் உங்கள் தொலைபேசியை resetting செய்வதன் மூலம் உங்கள் தனியுரிமையைப் பாதுகாப்பதை உறுதி செய்யுங்கள்.
"உங்ககிட்ட ஆதார் அட்டை இருக்கா'ன்னு கேக்குற அளவுக்கு, "உங்களுக்கு சக்கரை வியாதி இருக்கா"ன்னு கேக்குறது ரொம்ப சாதாரணமா போயிடுச்சு... ஆகஸ்ட் 10, 2013 அன்னைக்கு எனக்கும் அது வந்திருந்ததை கண்டுபுடிச்சு அதுக்கப்புறம் அலோபதி, சித்தா-ன்னு மாறி மாறி ஓடிட்டு இருந்தேன். அப்புறமா வரக்கொத்துமல்லி காபி, பாகற்காய், கடுக்காய் என நேச்சுரோபதி கொஞ்ச நாள்... "சீ போ..."ன்னு உதறிட்டு இஷ்டம் போல நடுவுல கொஞ்ச நாள்... ஆறு மாசம் முந்தி டெஸ்ட் எடுத்தா 476 இருந்துச்சு. டாக்டர் இன்சுலின் போட சொல்லிட்டாரு, காலையில 16, ராத்திரி 16ன்னு மாத்தி மாத்தி சின்சியரா குத்திட்டு இருந்ததுல மறுபடி டெஸ்ட் பண்ண மறந்து போயி ஒரு நாள் sugar low levelக்கு போயி குத்திக்கிறத நிப்பாட்டிட்டேன்... அப்படியே கொஞ்ச நாள் ஓடுச்சு... ரெண்டு மாசம் முந்தி எடுத்து பாத்தா 458. உடம்புல சக்கரை அளவு அளவுக்கு அதிகமா இருந்தா அதனோட அறிகுறிகள் பலருக்கும் பல மாதிரி இருக்கும்... அதீத பசி மற்றும் தாகம், தலைசுற்றல், அடிக்கடி சிறுநீர் கழித்தல், தலைவலி, கண் மங்கலாக தெரிதல், களைப்பு, உடல் எடை குறைதல், உடலில் கரும்புள்ளிகள் தோன்றுதல், etc. இதில் எனக்கு உடலில் கரும்புள்ளிகள் லேசாக தோன்ற ஆரம்பித்தன, எடை இரு வருடங்களில் 72லிருந்து 62ஆக குறைந்தது. வேறேதும் அறிகுறிகள் சுத்தமா இல்ல... ஏதாவது செய்யணுமேன்ற திரிசங்கு நிலையில facebook மூலம் paleo அறிமுகமானது. அதையும் பார்த்துடுவோம்ன்னு அவங்க சொன்ன டெஸ்ட் எடுத்து upload பண்ணி நாலு நாள் வெயிட் பண்ணேன்... நீரிழிவு நோய்க்காரர்களுக்குன்னு தனி குரூப் இருக்கு அங்க போங்கன்னு டைவர்ட் பண்ணி விட்டாங்க..., அங்க போய் மேலும் நாலு நாள் வெயிட் பண்ணதுல, நீங்க முதல்ல போயி டாக்டர பாத்துட்டு உங்க சக்கரையை ஓரளவாவது குறைசிச்சுட்டு உள்ள வாங்கன்னு .சொல்லிட்டாங்க... ஆல்ரெடி அங்க இருந்து தான வர்றோம்னு நெனச்சுக்கிட்டே இந்த தடவ வித்தியாசமா ட்ரை பண்ணலாம்னு ஹோமியோபதி போனேன்... ஓரளவு திருப்திகரமா இருந்தாலும் ரெண்டு மாசம் ஆகியும் ரிசல்ட் ஒன்னும் இல்ல... பார்த்தேன்... நமக்கு நாமேன்னு தளபதி கணக்கா எறங்கி paleoல நமக்கு தெரிஞ்ச சர்வே ரிஸர்ச் எல்லாம் பண்ணி எனக்கான உணவை முடிவு செய்து, வீட்ல அம்மணியோட கலந்துரையாடி Feb 20 திங்களன்று ஆரம்பித்தேன்... நீரிழிவின் மூலம் அவதிப்படும் பலரும் வெளியே சொல்லத் தயங்கும் ஓர் விஷயம் அவ்வப்போது genitals ஏற்படும் itching... நாலு பேர் கூட பேசிட்டிருக்கும் போது தான் சொல்லி வெச்சா மாதிரி நம்மள நெளிய விட்டுடும். உள்ளாடையைக் கழற்றி தரையில் போட்டால் அடுத்த சில மணிநேரங்களில் அதுல எறும்புகள் மொய்க்கும்... Feb 22ஆம் தேதி அதாவது 3ஆம் நாள் ஆறு மாசமா இருந்த அந்த "அரிமா அரிமா..." பிரச்சனை முடிவுக்கு வந்தது... .அடடா, மாற்றம் முன்னேற்றம்ன்னு சின்னையா மேல பாரத்தை போட்டுட்டு அதிக ஈடுபாட்டோட தொடர ஆரம்பிச்சேன்... ரொம்ப சிம்பிள், அரிசி, கோதுமை, மைதா, ரவை, பருப்பு வகைகள், எண்ணெய் வகைகள், பழங்கள் அனைத்தையும் ஒதுக்கி விட்டு வெண்ணெய், நெய், பன்னீர், முட்டை, கோழி, ஆடு, இவற்றை மட்டும் பெருவாரியாக எடுத்துக் கொன்டேன்... காய்கறிகளில் வெங்காயம், முருங்கை, கேரட், முட்டைகோஸ், லெட்டூஸ், ப்ரோகோலி, குடைமிளகாய், தேங்காய் துண்டுகள்... மற்றும் தினமும் ரெண்டு கொய்யாக்காய், ரெண்டு நெல்லிக்காய்... இன்னும் சிலபல March 9, சரியாக 18ஆம் நாள் காலை fasting-ல் டெஸ்ட் எடுத்துப் பார்த்தேன்... 158 !!! Paleo நல்லதா, அங்கீகரிக்கப் பட்டதா, பக்க விளைவுகள் உண்டா என்பதையெல்லாம் வல்லுநர்கள் தீர்மானிக்கட்டும்... ஒரே விஷயம் தான், நீரிழிவு நோயால் பாதிக்கப் பட்டு பலவகையான மருத்துவங்களை பார்த்த யாராவது "எனக்கு diabetes இருந்தது, இப்போ குணமாகி விட்டது..." என சொல்லக் கேட்டதுண்டா? "sugar இப்போ கொஞ்சம் controlல இருக்கு.."ன்னு சொல்றதுதான் அதிகபட்ச நலம். எனக்கு diabetes இருந்தது, அதுவும் 476..., இப்போ இல்ல... இனியும் வராது... Inspirationஆக இருந்த நண்பர்கள் தங்கராஜ், பிரபு, பாலா, சஜி & கண்ணன் அனைவருக்கும் நன்றிகள் பல... இவனுக்கு ருசி இல்லாம எறங்காதே என்பதனை கருதி தினமும் மூணு வேளையும் மூணு விதமாக சலிக்காமல் உணவைத் தயாரித்து அளித்த, அளிக்கும் அம்மணிக்கு அநேக ஸ்தோத்திரங்கள்...!! புத்தகக் கண்காட்சியில் நான் வாங்கிய பல புத்தகங்களில் இன்னும் ஒன்றைக் கூட முழுதாக முடிக்கவில்லை. அம்மணி வாங்கிய ஒரே புத்தகம் நியாண்டர் செல்வன் எழுதிய "பேலியோ டயட்", அதையும் பலமுறை படித்து விட்டார், எனக்காக...!!
காஞ்சிபுரத்தில் மகனின் ஆசைக்காக இரண்டே கால் லட்ச ரூபாய் கொடுத்து வாங்கிய கேடிஎம் பைக், வெறும் 8 மாதங்களில் அடிக்கடி பழுதானதால் தாய் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளார். இந்த பழுதை எல்லாம் சரிசெய்து தர முடியாது என வாகன நிறுவனம் அலட்சியமாக பதில் கூறியதால், பணம் சம்பாதிப்பதற்காக வீணாய் போன வண்டியை தங்கள் தலையில் கட்டி விட்டதாக அந்த தாய் கண்ணீர் மல்க குற்றம் சாட்டியுள்ளார். ஆசை ஆசையாய் மகனுக்காக வாங்கி கொடுத்த பைக் வெறும் எட்டே மாதங்களில் பழுதானதால், ஷோ ரூம் வாசலில் நின்று தாய் ஆதங்கத்தை வெளிப்படுத்திய காட்சிகள் தான் இவை.... இளைஞர்களுக்கு மோட்டார் சைக்கிள் மீதான மோகம் இன்றும் குறையவில்லை. அப்படி மகனின் ஆசைக்காக கடன வாங்கி உயர்தர பைக் வாங்க, அந்த பைக் கொஞ்ச காலத்திலேயே ரிப்பேர் ஆக, ஷோ ரூமும் கைய விரிச்ச சம்பவம் தான், காஞ்சிபுரம் மாவட்டத்தில் அரங்கேறி உள்ளது. பஞ்சுபேட்டை பெரிய தெருவை சேர்ந்த மகேஸ்வரி, அப்பளம் உற்பத்தி செய்யும் நிறுவனத்தில் கூலி வேலை செய்து வருகிறார். மற்ற இளைஞர்களை போலவே இவரது மகன் ஜெகனும் பைக் வேண்டும் என அடம் பிடித்துள்ளார். ஆகவே மகன் ஆசைப்பட்டபடி இரண்டே கால் லட்ச ரூபாய்க்கு கே.டி.எம். பைக்கை வாங்கி கொடுத்து உள்ளார். சுசீ பஜாஜ் நிதி நிறுவனத்தில் வாகன கடன் வாங்கி, அதன் மூலம் பொன்னேரி கரைக்கு செல்லும் வழியில் அமைந்துள்ள ஷோ ரூமில் உயர்தர பைக்கை வாங்கி மகனுக்கு கொடுத்தார். ஆனால் மூன்றே மாதங்களிலேயே பைக்கில் குறிப்பிட்ட இயந்திரம் பழுதாக, வாக்குவாதத்திற்கு பிறகு அதனை ஷோ ரூம் மாற்றி கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து 6 மாதங்களுக்கு பிறகு ஜெகனும், அவரது தாய் மகேஸ்வரியும் மருத்துவமனைக்கு செல்லும்போது, வழியில் ஒரு சிறிய மேடு பள்ளத்தில் ஏறி இறங்கியதில், கே.டி.எம். பைக்கின் இரண்டு வீல்களிலும் ரிம் உடைந்துள்ளது. இதனால் மறுபடியும் ஷோ ரூம் சென்றபோது, இந்த பழுதையெல்லாம் தங்களால் சரிசெய்ய முடியாது என ஊழியர்கள் அலட்சியதாக பதில் கூறியதாக கூறப்படுகிறது. மேலும் சாலையை தவிர வேறு இடத்தில் வேகமாக ஓட்டியதால் தான் பழுது ஏற்பட்டதாகவும், இது எல்லாமே உங்கள் தப்புதான் எனவும் தெரிவித்துள்ளனர். இதனால் கொந்தளித்து போன தாய் மகேஸ்வரி, ரோட்ல ஓட்டாம வீட்ல வச்சுக்கவா? பைக் வாங்கியிருக்கோம், பிறகு எதுக்கு வேகமா செல்லும் வண்டின்னு விளம்பரம் பண்றீங்கன்னு, கே.எடி.எம். ஷோ ரூம் ஊழியர்களை கேள்விகளால் கிழித்து தொங்க விட்டுள்ளார். இதனையடுத்து இன்சூரன்ஸ் பணம் வாங்கிய பின்னர் தான் பழுதை சரிசெய்வோம் என ஊழியர்கள் திட்டவட்டமாக கூற, பைக் ஏதாவது விபத்தில் சிக்கினால் தானே இன்சூரன்ஸ் பணம் பெற முடியும் என தாய் புலம்பி உள்ளார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான தாய் மகேஸ்வரி, ஆரம்பத்திலேயே நல்ல பைக்கை கொடுக்காமல் டெமோவுக்காக வைக்கப்பட்டிருந்த பைக்கை தங்கள் தலையில் வாகன நிறுவனம் கட்டி விட்டதாகவும், இதனால் தான் அடிக்கடி பழுதாவதாகவும், இதற்கு வாகன நிறுவனம் கண்டிப்பாக பதில் சொல்லியே ஆக வேண்டும் எனவும் கூறியுள்ளார். மேலும், ஏழை என்பதால் தானே ஏமாற்றி விட்டார்கள் என அந்த தாய் கண்ணீர் மல்க வேதனை தெரிவித்தார். வெறும் எட்டே மாதங்களில் பழுதான இந்த கேடிஎம் பைக்கில் அனைத்தையும் இலவசமாக மாற்றி தர வேண்டும் என்பதே, வாகன நிறுவனத்திடம் இந்த ஏழை தாய் வைக்கும் கோரிக்கையாக உள்ளது. News tamil 24x7 News Tamil news Newstamil tv News today NewsTamil live Tamilnews News in TamilTamil News Online Tamil news today Tamil News live Newstamil24x7 நியூஸ்தமிழ்24x7நியூஸ்தமிழ் செய்திகள் today news tamil Tamilheadlines Tamilheadlinenews Tamilheadlinesnewstoday TamilheadlinestodayKtmBikeKtmshowRoom
Singi used to say that the riverbed of butterflies could be found on the slopes of Pandrimalai, beyond the Pechipparai dam and the lake. On lonely nights, I can still hear his low-pitched voice and his tone-deaf singing, interrupted by spits and ‘hrumph’s and liquor-reeking belches. His body was like leather; he credited its robust fitness even at the age of eighty to liquor. Those were nights when the only discernable sound was the rustling of palm leaves when they caressed one another. The shadows of leaves swayed on the moonlight streaming down on the threshing floor. On such nights, Singi would tuck his legs underneath his body and sit in that curious way that any mention of his name immediately brought to my mind. Rocking back and forth, he would start tapping a three-fingered beat on the hourglass-shaped udukku’s lizard-hide membrane, and begin to sing our town’s tales from seventy years ago. His voice kept going even after Venus rose in the eastern sky in the wee hours of the morning, a single silver spangle between the heads of the palm trees. We would rest our backs on beds fashioned out of hay and listen to him, barely awake, flitting in and out of dreams, wandering around in strange trances with Singi’s voice trailing in the background. When we came back to our senses with a start, his voice would still be emerging from the darkness, a solid truth anchoring us in the real world. There would be a glimmer in his eyes. Just before dawn, his head would loll and his voice would break, but never has he actually finished a story. He would simply slump on the ground where he sat. He showed signs of life again only when the sun was high in the sky. Till then, he lay there, surrounded by flecks of spit. Muthamma would come in with a broom in her hand and raise her voice. “What a fine sight! The young masters from good caste getting together with this Paraiyan fellow and lying here like this, heads and feet everywhere! Master, young master…” she would wake us up. “Why do they have to come here, I ask? They could catch a cold, or something worse, and whose loss would that be? No more, I say, not my circus any more. Singi, Singi…look at the way this Parai fellow sleeps! Singi…” she would holler. Singi would lie there, spread-eagled on the bare floor. Next to him lay the udukku, echoing and evoking the sounds it made through the night in our heads. In the light of day, the memories of the night would be very far, almost a dream. During the daytime, Singi would not look like someone who had anything to do with the events of the night. His dark, emancipated body, dew-laden and dusty, would shudder softly with every breath. Rain or shine, it did not matter to him; he was like the sturdy palm tree that stood at the corner of the threshing floor. Singi used to say that he was born when they were surveying the land to build the Pechipparai dam – all his stories began with his own birth. Slowly, there would emerge a beat in the story, a length in his lyric, and it would turn into a song. The udukku would join in spontaneously. One of the tales that he never tired of telling was the history of Semban Durai. In those days, if you travelled past Kulasekharam, it was dark enough to mask an elephant even at the height of the noonday sun. And beyond that, like Mooli Alangari’s tears, it rained thirty days a month. It was a forest where jackals feasted on the leftovers of tigers. You couldn’t see the ground for the lush undergrowth. You couldn’t see the sky for the close leafcover. And snaking through, like the dirty white thread worn across the body of an old Brahmin priest, was a one-horse track. It wound its way past Pechi’s bosom, past the Perunchani hill, past the wilderness of Nedumangkadu, and landed at the feet of the deity Ananta Padmanabhan, in Thiruvananthapuram. That was Pechi’s empire. Save for the nails of wild creatures and the feet of the Kani tribes, nothing, not even the scent of the townspeople, could set foot in there. Pechi was the daughter of Brahma; she was the queen of the hills. She was headstrong and no one could subdue her; it was Semban Durai who finally brought her under his thumb. At first, he lured the Kani people by giving them gifts of palm-sugar and weed. He roamed the forests at his will and pleasure, fearing neither the draughty winds nor death itself. Under his heavy tread, the green of the forest withered brown and wasted away. When the forest animals took sight of him, they tucked their tails between their legs, lowered their snouts and scattered in panic. The birds in the sky beat their wings madly, flailing in agony. If he raised a finger and made a gesture, “Stop!”, even a tiger would stiffen its tail, squirm its body, lower its face and stop in its tracks. Semban Durai was not a man. He was a black demon, a bhootham, who had formerly stood guard at Indrani’s palace in the kingdom of Indran, king of the gods. As a punishment for his misdeeds, he was cursed to take the form of a man. Bound by the power of word and sound, he descended to earth. The kumpiniyan – Company fellow – controlled the bhootham with more mantras. He made the bhootham lift unliftable loads, perform unspeakable deeds. With boons, with gifts; with mandates, with decrees; came Semban Durai, to subdue Pechi; came Semban Durai; to lord over Valli – so went Singi’s song. Even when we were children, the Valli river had dwindled to a blue ribbon. In the rainy season, very rarely, you could see it spanning both banks, soil-scented and swirling along. “You should have seen her then! The way she lay, the way she walked… ‘twas Semban Durai who tamed her and put her in place! He got the better of that cunning aruvani’s arrogance!” He pointed to the entrance of the Sivan temple and said that the floodwaters would rise all the way up there in those days. “What do you think you have seen, young master? Do you know how many women that daughter of a widow-whore has herself widowed? The bitch would rush out, sweeping everything in her wake – uprooting banana trees full of fruit clusters and coconut trees with flower-laden heads. See the way the troublemaking moodhi lies now, like a wounded rat-snake, but don’t believe her. She is full of poison. If Semban Durai had not arrived in time, this daughter of a blind whore would have swallowed alive the whole of these parts.” When Singi opened his mouth, Valli was always subjected to a volley of abuse. One rainy season, she had flung her hair open like a banshee and roared down here, and Singi’s father and mother and house and garden had all been washed away to the shores of Thengaipattnam. As Singi used to say, “She’s a blind mooli, a harbinger of misfortune,a blight on the clans.” It was an evening when the skies were like wet glass. We had gone to see the big dam at Pechipparai. The fierce Valli was left unfettered there; she lay there like a good girl, coyly swirling blue, confined to the bounds of her cement walls. A little water trickled down the sluice like a tear. The bran-coloured mud on the banks carried impressions of a thousand footprints. Radhakrishnan pointed to a distant hill and said, that’s where you can find Singi’s riverbed of butterflies. The hill that he was pointing to looked like it was made of blue smoke. Just above that, a cloud, softly lit, seemed to have frozen in place like a smooth sculpture of crystal. There was an artificial garden on this side of the dam. A croton plant, gloriously red, looked like a child from the city who had lost her way and wandered into the forest. The few massive trees planted there had gone to sleep. There was the sound of swirling water, the ruckus of homecoming birds. At the western edge, under a teak tree, lay Semban Durai’s grave. For no apparent reason, they had painted his grave in a blinding shade of yellow. They could have painted it green, Durai’s favourite colour. Or even red. “Look here, little master, you will not believe me. We will never see such a man again, yes? Has the little master ever seen a man who was ruddy white, a semban? Ruddy hair, ruddy eyes, ruddy nose…from head to toe, that man was ruddy white. Don’t know what he ate, but if he opened his mouth in a grin, it looked just like a tiger’s. There was no need for him to say a word; it was enough for him to just look; and just like that, you would wet your pants. He was a bhootham, yes he was. A ruddy white bhootham!” Semban Durai, the Ruddy-White Master who had conquered Pechi, now lay under a tree reeking of bird droppings, in a lush green thicket, all alone. It was not possible to read the name on the grave. The people who managed the site had recklessly whitewashed over it many times. If only he was able to walk, he would not even be in the area, I said. How did he bear to stay under the shade of croton plants? Why him, even Pechi would have run away from that place, said Radhakrishnan, pointing me to the small form in the place of worship dedicated to her. On a large square-shaped stone platform, there stood a gnarled, knobbled, mighty, old tree. It was teeming with large, thick leaves. Its branches were low on all four sides and hung over them like a tent. Inside, it was half-dark. The ground was damp and slippery with rotting leaves. The bronze face of the goddess was nailed on to the tree. Under it, there was a dark sacrificial stone. The flowers from a week ago lay scattered there. There were flecks of vermilion smeared everywhere. I felt like I could hear Singi’s voice in the air. “’Twas Pechi’s blood That rained down the hills ’Twas Pechi’s hair That Semban Durai plucked away…” The Kani folks leading the way, hunting hounds at his heels, and riding a red steed, Semban Durai went to see Valli, his prospective bride, whom he would conquer and tame. On seeing the virgin girl who rushed past him, curling and swirling, he laughed in amusement. “You like to run? Run on. Let’s see how long you run,” he said. “Semban Durai is not going to turn his back on this place without putting you in your place.” Valli, frightened by his threats, ran to Pechi and poured her heart out. An enraged Pechi confronted Semban Durai in the forest. Elephants hanging down her lobes, a python girdling her breasts; her feet on the hills and her head in the clouds, baring fearsome teeth and poisonous fangs; eyes spitting fire and a thunder-like laugh, she manifested before him, in all her glory. All living creatures stopped in their tracks: a sparrow in flight froze in the sky, a falling cascade hung halfway down the hill. The forests shivered; the skies echoed her thunderous voice. Pechi bared her lightning-teeth and demanded, “Have you come to shear my hair, son? Have you come to restrain my daughter, son?” Durai did not flinch. “Pechi, if you are a demon, I am a fiend. Do you think your little games will scare me? Get out of my way and stand aside, you moodhi!” he said. Pechi realized then that he was not an ordinary man, there was some mischief afoot. She made herself as small as she could, and took the form of a petite kurathi, ahill tribe-woman, decked in pearls and sandal paste; and with honey-sweet words and froth-like laughter, she stood coyly before him. She summoned up all her coquetries and smiled at him with meaning. She summoned up a hundred enchantments and argued with conviction. Pechi had the authority ordained by the creator Brahma himself. She had given her daughter, Valli, a boon. To restrain Valli is to restrain Pechi herself. The curse of Brahma would destroy the whole world. Pechi, the queen of the hills, is the goddess who protects the lands. She bestows on them medicines to cure their maladies; offers them fragrances to keep their fasts. She protects them. The wild creatures and the Kani people are her children. No stranger should walk around after having betrayed Pechi. It’s not right to harm her children; Pechi will not stand by and watch it. The anger of a mother will destroy whole clans. End civilizations. Don’t test me, run while you can, she said. Durai would not yield. “Do your best to stop me. I came to marry Valli, subdue here pride, restrain her. I will leave only when she is restrained. Do what you can!” he said. Pechi was trembling with fury. Banging her fists on her chest, screaming with rage, she turned herself into a hurricane and whirled into the forest, dancing like a dervish in a paroxysm of frenzy. Her dance of fury sent deer flying into the air; the mighty jungle trees shuddered like reeds. She whistled down the mountains and entered the town, sacking it clean. Roofs and eaves took to the skies like kites. Cows and goats were flung into the air and died when they crashed to the ground. On the fourth day, there was a downpour of demoniac rain. Floodwaters barraged the town, melding homes with their gardens, fusing fields with their borders. On the fifth day, came Valli. Her hair flying in the wind like palm fronds, howling, beating her breasts, her red saree cascading like waves, she entered the town. She grabbed everything from the stacks of hay to the pots in the kitchen. At the dawn of the tenth day, the whole town was filled with red mud as if it had been swept clean and smeared with cowdung. No one knew where they had come from, but wherever you turned, there were birds. Crows and eagles and storks and sparrows flapped their wings over the muddy tracts. They quarreled and scraped raucously. All through the night, they sat on the roofs and cried, “Pechiyammo, Pechiyammo! Pechi, my mother! Pechi, my mother!” The townspeople were filled with fear. Was it Brahman’s fury? Indra’s curse? They shuddered. What god had they displeased? They appealed to the goddesses at Malaikkavil and Mudippurai and promised them tributes if they relieved their agony. To quench the fire in their bellies, they foraged for lily tubers and mudfish in the slush. Pechi would not be appeased. There was no melting her heart of stone. Wearing a leaf-skirt, with a coir-box at her waist, with flaming eyes and bellowing breaths, she walked through the town. “Spare my children, Pechi!” wailed the goddess at Mudippurai, falling at her feet. Pechi grabbed her hair and flung her aside. The sword-and-trident wielding goddess from Malaikkavil came to battle with her; Pechi simply kicked her away. I will not spare you even if Brahma himself orders me to, she cackled. Grabbing a handful of poisonous seeds, she flung them all over the town. Where the poison landed, like a patch of forest land struck by lightning, the place blackened and wasted away. The stench of burning corpses followed at her footsteps. The goddesses at Malaikkavil and Mudippurai stayed in their temples and shed tears of sorrow. There was no one who could restrain Pechi. Indeed, the only one who saw her go about town was the shaman-priest Muthan. “Pechi has descended; now she will not rest till she levels this town,” he announced, running from street to street. Semban Durai had touched Pechi and defiled her; that was the reason for her anger, and that was why their town would be destroyed, he said. He said that to pacify Pechi and cool her down, it was necessary to sacrifice a billy goat and offer her worship on the banks of the Valli. “But where will we go for a goat now, O priest?” pleaded the townspeople. Muthan peered at them through his bloodshot eyes, “It’s enough that you dare to make such excuses to Muthan. Don’t take them to Pechi’s ears. She is a devil,” he warned. Everybody cursed Durai. They expected the priest Muthan who had accused Durai to perform some black magic against him. That’s not as easy as you think, said Muthan. He told them that he had perceived with his magic that Durai was not a man, but a bhootham. However, the townspeople, faint with hunger, would not agree to an expensive sacrificial ritual. Singi would narrate emotionally: it was right at that moment that Durai rode in. Mounted on his red horse, with a hat, boots and a fine coat on, and a double-barreled gun in one hand; with the chendai drummer announcing him, the town’s dogs surrounding him, with a couple of Kani men for guard, he entered town. Upon seeing the fine entry of this stranger, the women and children ran and hid away in their houses. When the chendai drummer announced that all the townspeople should gather around, only a few brave men came forward. The drummer said that they needed wage labour to work in the Pechipparai hills. The workers would be given two annas a day and their stomach’s full of cooked seeraga samba rice, three times a day. The townspeople hesitated. No way he was going to give them so much food and money, he’s just pulling our leg, they said. Immediately, Durai increased the wage to three annas. The head of the Pulayans clarified the amount a few times and made sure that he was hearing right. Then, “The people from our caste will come, master,” he said, falling at the chendai drummer’s feet. The golden words of three annas and three full meals a day spread like wildfire from town to town. Some elderly Paraiyans were astonished. Is this really happening in Pechi’s empire, they wondered. This signals the end of times; the town will be destroyed, cautioned the upper-caste Nairs. The youngsters spat on the ground, “Tell Pechi to go fuck herself.” There were waves of hungry masses ready to leave. The priest Muthan went into a trance and pronounced oracles at street corners. “Do you want to see all of Pechi’s power? Should she reveal her whole self to you? Is it not enough, what we have just seen?” he leaped around in frenzy. Till the first lot left the town, there was confusion all around. “Rather than stay here and stink, it’s better to go there and die. Durai has promised to provide our gruel. As if Pechi allows us to stay here, that moodhi,” said Kandan Pulayan, and left with a group. And from the next day, the whole town started migrating to the hills. Hordes of people and their cattle herds travelled up the Valli river, foraging, eating, shitting, hooting and shrieking, stopping their journey only by night. The sound of their hooves echoed through the muddy towns they passed by. The riverine waterhens, displaced and restless, entered the town and raised their voices plaintively, foreshadowing bad omens. There was panic and deathly silence all through the town. When Muthan saw even the most faithful of the townspeople leave, he couldn’t bear it any longer and jumped in front of them, blocking their way. A teenager called Gnanamani threw him into the river. Later, he kept saying that he thought the man was capable of swimming and surfacing. However, the priest Muthan was never seen again. A strange excitement had taken root somewhere in their midst and spread through the horde, overtaking them. A group went around, singing merrily at the top of their voices. They danced madly to drumbeats. When the skies turned pink, when they had lit fires beneath the trees to cook their dinners, men and women danced in circles. All eighteen clans forgot all notions of kinship and coupled with each other. Bawdy songs floated through the silent night, piercing the ears of the townspeople who lay in bed, unable to sleep. Singi said that in the riverbed of butterflies, there are no trees. It is a marshy slope, never completely dry. There, the sun has just light, no heat. The land there becomes moist when touched by the wind. It’s lush, full of green. “You cannot see a green like that anywhere else, young master! When the sun rises up high in the sky, what a scent it kicks up! The fragrance of the green turns your head. And what flowers! The shrubs are full of flowers…sometimes you can’t see the leaves for the petals…red and yellow and blue…what shall I say? Is there any colour that you can’t find there? Is there any flower that you can’t find there? That is Pechi’s womb! And who is she? She is our mother!” he used to say. His eyes would widen. He would stumble over his words. The udukku would be rattling hard. Suddenly, he would lower his head, take a deep breath and start singing. Semban Durai first planned to imprison Valli at the northern bend of the Koratti hill. It is a place where Valli bashfully bends and gives way as she passes downhill. Ants started to feast on Pechi’s body. They bored through her right breast, and her left breast gorged up. In pain, Pechi turned over and rubbed herself to relieve her agony – just a rub – and the ants and their homes were flattened to dust. Valli, freed of her restraint, cackled and leaped downhill. Where there had been a mountain, there was a pass now. Durai did not lose heart. When he had rice in hand, were ants going to be scarce to find? He tried building again, a short distance away. Pechi’s army of elephants came teeming in the sky above thir heads. With their ivory tusks flashing silver, they attacked. Water rained down, bridging land and sky. Valli ran with all the energy of the charging elephants. Like a mighty snake, she wound her body around the various malais, slithering and twitching around the hills. Iluppamalai crumbled down. Kadambamalai had deep cracks in it. Ten days later, when the sky brightened, the footprints had been washed away and the forests were pristine once again. Clusters of green leaves cried, Pechi! Pechi! Valli lay like a satiated python with its stomach bulged full, curled and languid on the hills. Durai could also not take it any longer. He fell at Pechi’s feet. “Forgive me Pechi,” he cried, weeping. In the middle of the thickest, darkest jungle, he built a flame pit and subjected himself to a regimen of rigorous, torturous penances. He sacrificed goats and billies. Along with all his brothers – ghosts and goblins and devils and demons- he offered sacrifices to Pechi. Pechi would not yield. He pleaded, he wept. When nothing else worked, he drew the sword at his waist and pressed the blade to his neck. He bellowed, “Here, take the head of a bhootham. I say this with Brahma himself as witness. Here, take my head and be satisfied.” Whe he raised the sword, Pechi relented. She took form in the sacrificial fire and danced frenziedly. She came as the wind and cackled with glee, causing all eight directions to shake and tremble. “My offering, give me my offering!” she demanded. “I want a human sacrifice, and I want it now!” she bayed, dancing in fury. “How many men? Just say how many,” said Durai. “A thousand and one,” said Pechi. “That’s all? I’ll give it,” said Durai, unperturbedly. “Where? Where?” demanded Pechi, hopping around impatiently. “On the slopes of Panrimalai, there are a thousand houses. Take them, Pechi. Not a thousand, you moodhi. Five thousand. Take it and be satisfied,” said Durai. She cackled; the forest quaked and trembled. “Promise me, promise me that you will be grateful for the blood you drink!” Durai urged. Pechi danced in fury. She whipped her hair out and slapped it on the ground, in solemn promise. The next day, even before dawn, Pechi had had her fill. A thousand huts had settled in her belly. For ten days after that, she continued her frenzied dance, and spent all her fury. On the tenth day, as she had promised, she came in front of Durai. Durai sequestered her spirit in an iron nail, and nailed it to the broad trunk of a Vengai tree. He ordained a yearly sacrifice and a monthly worship on the full-moon day every month for the goddess Pechi. He made her an offering of turmeric and a sacrifice of a mature black goat and started his work. Valli’s dark days had begun. After Pechi had been subdued, there was no one for her. Semban Durai grabbed her long hair and curled it around his fist, and finally tamed her arrogance. Bathed in soft sunlight, the riverbed of butterflies on the slopes of Pandrimalai brought back the memories of Singi like an old, familiar ache. There were lush thickets of green as far as the eye could see. Flowers, masses of colours that filled the eyes made it yearn for something. A slight breeze was enough to set up curves on the carpet of flowers. Butterflies everywhere, like flowers in flight. They were unbelievably huge. “Never catch those blasted butterflies, young master,” Singi would say. “Each one of them is the eye of a dead man. Twitching, twitching, they eternally twitch and wander around here, poor souls.” Eyes, flying here, flying there, their eyelashes fluttering urgently. Their gazes everywhere, all around. I caught hold of Radhakrishnan’s hand. “Let’s go,” I said. The butterflies from the riverbed had taken over the slopes and the valley as well. They withered into the water and swirled with it. They fell into the drinking water and twitched in agony. They sat on the large implements that had bored holes through Pechi’s body, on the rails that sucked her lifeblood and took it to far-off cities, and they trembled. Like bits of coloured paper, they were all over the mud. They were stuck to the dark, wet roofs. Their bodies kept hitting the glass fronts of the buses; they kept slumping down. From within the dewy green of the forest, the butterflies kept coming with no end in sight. Posted in Short Story, Tamil, Translation | Tagged Jeyamohan சம்ஸ்காரம் [சிறுகதை] Posted on April 15, 2021 by Suchitra வராகமங்கலம் என்ற ஊர் இன்று இல்லை. முண்டையான கூரையற்ற வீடுகளும், இடுப்பளவு வளர்ந்த நாணல் புதரும் மட்டுமே ஊர் என்ற ஒன்று அங்கே நின்றதற்கான சான்றாக இன்று எஞ்சியிருக்கிறது. பதினாறாம் நூற்றாண்டில் நாயக்க மன்னன் வேதமங்கலமாக அதை ஸ்தாபித்தார் என்று கூறும் செப்பேடுகள் கிடைத்துள்ளன. ஆனால் இன்று அரசின் பதிவேடுகளில் வராகமங்கலம் என்ற பெயரே கிடையாது. நடுக்காலத்தில் எப்போதோ அந்த ஊருக்கு பாப்பனேரி என்று பெயர் மாற்றப்பட்டது. அக்ரகாரத்து மனிதர்கள் மட்டும் தங்கள் ஊரை விடாப்பிடியாக வராகமங்கலம் என்றே சொன்னார்கள். இன்று ஏரி வற்றிவிட்டது. ஊரின் கடைசி வாசியும் 1991-ல் இறந்துபோனார். இப்போது இந்தியப் பெருநிலத்தில் திக்குக்கொருவராக வாழும் சில முதியவர்களின் பெயரின் முதல் எழுத்தில் மட்டுமே அது ஊராக எஞ்சியிருக்கிறது. காற்றில் எங்கோ, கண்ணுக்குத்தெரியாத வலைப்பின்னலாக. ஒவ்வொரு பெயரும் பூமியிலிருந்து மறையும்போது அதுவும் மறைந்துபோகும். [மேலும் வாசிக்க] நன்றி – கனலி இணைய இதழ் Posted in Uncategorized ஆஷாபூர்ணாதேவியின் சிறுகதைகளைப் பற்றி Posted on January 9, 2021 by Suchitra [1] சமீபத்தில் மறைந்த வங்க எழுத்தாளர் ஆஷாபூர்ணாதேவி அவர்களின் சிறுகதைகள் சிலவற்றை வாசித்தேன். ‘Shake the bottle and other stories’ என்ற தலைப்பில் பெங்குயின் வெளியீடாக அருணவா சின்ஹா மொழியாக்கத்தில் ஆங்கிலத்தில் வெளிவந்துள்ள கிண்டில் நூல். 21 கதைகளை கொண்டது. சர்மிளா தாகூரில் முன்னுரையுடன், எழுத்தாளரின் கட்டுரை ஒன்றுடன், இந்த நூல் அழகாக தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.* ஆஷாபூர்ணாதேவி அவருடைய மூன்றடுக்கு நாவல் தொடர் வழியாகவே அதிகமும் அறியப்பட்டவர். பிரதம் பிரதிஸ்ருதி (முதல் சபதம், தமிழில் புவனா நடராஜன்), சுபர்ணலதா, பாகுல் கதா என்ற அந்த நாவல்கள் மூன்று தலைமுறை வங்காளப்பெண்களின் கதைகள். அவை நமக்கு நூறு வருட வங்க வறலாற்றை கடந்து வந்த உணர்வை அளிக்க வல்லது. ஆனால் ஆஷாபூர்ணாதேவியின் கைத்தேர்ச்சி தெரியும் இடம் எப்போதுமே அவர் மனித மனத்தை, ஒரு மனம் இன்னொரு மனத்துடன் உறவாடுகையில் கொள்ளும் மாற்றங்களை, திரிபுகளை எழுதும்போது தான். அவர் கண் மனிதர்களுக்குள்ளே பார்க்கும் ஃபோக்கசுடன் எப்போதும் கூர்மைபடுத்தப்பட்டுள்ளது. முதல் சபதத்தில் சத்தியவதியின் வளர்ச்சியும் மாற்றத்தையும் அவள் குடும்பத்துடனும் ஊருடன் கொள்ளும் உறவையுமே முதன்மையாகக் காட்சிப்படுத்துகிறார். படிப்புக்கான வேட்கையுள்ள எட்டு வயது சிறுமி, பழமைவாதியான கொடுமைக்கார மாமியாருடன் சேர்ந்து வாழ்வதன் வழியாகவே தன் உரிமைகளை தக்கவைத்துக்கொள்ளமுடியும் என்று உணர்ந்து வைராக்கியமாக வாழ்ந்து வளர்கிறாள். ஒரு கட்டத்தில் தன் பிள்ளைகள் படிக்கவேண்டும் என்ற உறுதிப்பாட்டின் அலையில் எழுகிறாள். கணவனை கல்கத்தாவில் வேலைத்தேடத் தூண்டுகிறாள். நகருக்குக் குடிபுகுகிறாள். நகரில் அவள் எல்லைகள் விரியத்தொடங்குகின்றன. கணவன் எதிர்ப்பை மீறி சிறு பள்ளியில் மாலை நேர ஆசிரியை ஆகிறாள். இந்த மனிதக் கதையாடலுக்குப் பின்னணியில், மங்கலாக, வங்காள மறுமலர்ச்சியும் இந்தியச் சுதந்திர போராட்டத்தின் உதயமும் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. ஆனால் வரலாற்றின் கதையை நேரடியாகச் சொல்வதில் ஆஷாபூர்ணா தேவி மெனக்கெடுவதில்லை. வரலாறென்பது தனிமனிதர்களின் விருப்புவெறுப்புஉறவுபிரிவுகளின் அலை என்ற அளவிலேயே வரலாறு அவர் கதைகளில் இடம்பெறுகிறது. இந்தக்கதை நிகழும் அதே தருவாயில் இந்தியா முழுவதும் எழுந்த சத்தியவதிகளை பற்றி நாம் நினைக்கையிலேயே அந்தக்கதையின் வரலாற்றுப் பரிணாமம் துலக்கம் பெறுகிறது. தன்னுடைய சிறுகதைகளிலும் ஆஷாபூர்ணாதேவி மனித மனத்தின் வெவ்வேறு முகங்களை காட்சிப்படுத்துகிறார். நாவல் நமக்களிக்கும் வரலாற்றுச் சித்திரத்தைப்போலவே, சிறுகதைகள் வழியாக, இருபதாம் நூற்றாண்டு வங்கச் சமூகத்தில் நிகழ்ந்த மாற்றங்களின் ஒரு குறுக்குவெட்டுத் தோற்றத்தை அவரால் நமக்கு அளிக்க முடிகிறது. ஆனால் இதுவும் பின்னணித் தோற்றம் தான். ஆஷாபூர்ணாதேவியின் கதைகளின் களன் பெரும்பாலும் நடுத்தர வர்க்க வீடும் மனையும் அங்கே வாழும் மனிதர்களும் தான். இந்தக்களத்தில் வைத்து மனித மனத்தையே அவர் எழுதுகிறார். அவர் கதைகளை வாசிக்கையில் ஓர் இறுக்கப்பட்ட உணர்வை தடுக்கமுடியவில்லை. ஏனென்றால் கதைகள் பெரும்பாலும் நிகழ்வது நான்கு சுவற்றிற்குள். வங்காள கூட்டுக்குடும்பத்தின் வேவுபார்க்கும் கண்களுக்கடியில். காட்சி நகரத்திற்கு மாறினாலும் இந்த அமைப்பு மாறுவதில்லை. ஒரு ஃபிளாட்டின் சுவர்கள் இன்னும் இறுக்கமாக மனிதர்களை பொத்திவைக்கிறது. வேலைக்காரிகள் கண்வாங்காமல் எல்லாவற்றையும் பார்க்கிறார்கள். ஏகாந்தம் என்பதே இல்லை. எப்போதாவது கதை நகருக்குள் நகர்ந்தாலும் பேருந்துகள், டாக்சிகள், கட்டடங்கள் என்று அதே நெரிசல் உணர்வு ஏற்படுகிறது. ஒரு விதத்தில் இவர் கட்டும் களம் காஃப்காவையும் அசோகமித்திரனையும் நினைவு படுத்துகிறது. நவீனத்துவ யுகத்தில் மனிதன் அன்னியப்படும் சிக்கல் இக்கதைகள் சிலவற்றில் ஒரு சாயலாகக் காணமுடிகிறது (நீலக்குருதி, கதாநாயகன் போன்ற கதைகளில் வரும் வேலையில்லாத இளைஞர்கள்). கதைமாந்தர் பலரும் வெவ்வேறு காரணங்களுக்காக தனிமைப்பட்டிருக்கிறார்கள். ஆனால் ஒரு மாதிரி (template) நவீனத்துவப் படைப்பில் வருவதுபோல் நிறம், குணம் இல்லாத மனிதன் நவீன யுகத்தின், அபத்தத்தின் சுழற்சியில் மாட்டிக்கொள்ளும் கதையை ஆசிரியர் சொல்வதில்லை. இக்கதைகளின் பாத்திரங்கள் ஒவ்வொருவரும் வெவ்வேறு நிறங்கள் கொண்டவர்கள். ஒரு பண்பாட்டுப்புலத்திலிருந்து வந்து காலமாற்றத்தில் சிக்கிக்கொண்டவர்கள். அவர்களுடைய சிக்கலான மன அமைப்புகளை ஆசிரியர் மீண்டும் மீண்டும் நமக்கு காட்சியாக்குகிறார். இந்தக் கதாபாத்திரங்களின் இறுக்கம் அவர்களுடைய சூழலிலிருந்து வருகிறதா, அல்லது அவர்களுடைய சொந்த மன அமைப்புகளிலிருந்தும், எண்ணச்சுழல்களிலிருந்தும் வருகிறதா என்று நம்மை எண்ண வைக்கிறது. நவீனத்துவப் படைப்பு மனிதன் என்ற தனியனை உலகு என்ற ஒற்றைப்படையான, புரிந்துகொள்ளமுடியாத சுழற்சியில் வைத்து ஆறாய்கிறது. ஆனால் இந்தக்கதைகளில் ஆசிரியர் மனிதனை தன்னைப்போன்ற மற்ற மனிதர்களுக்கிடையே வைக்கிறார். ஒவ்வொரு மனிதனுக்கும் மற்றவர்களின் அளவுக்கே ‘தான்’ என்ற உணர்வும், தனக்கான நியாயங்களும், ஆசைகளும் ஆத்திரங்களும் இருக்கின்றன. அவை ஒன்றுடன் ஒன்று மோதும்போது புரிந்துகொள்ளவேமுடியாத இறுக்கமும் தனிமைப்படுத்தலும் உருவாகிறது. ஜனசமுத்திரத்தில் அன்னியப்படுகிறான் மனிதன். எங்கும் தண்ணீர், எங்கும் தண்ணீர், குடிக்க மட்டும் ஒரு துளி இல்லையே என்ற கவிஞனின் வரி நினைவுக்கு வருகிறது. சிறந்த உதாரணம் ‘கழைக்கூத்து’ என்ற கதை (A Balancing Act). ஒரு குடும்பம். வேலைக்குப்போகும் குடும்பத்தலைவி, அவள் கணவர். அவர்களுக்கு நான்கு வயது மகள். மகளை ஒவ்வொருநாளும் வேலைக்காரியிடம் விட்டுச்செல்ல வேண்டும். வேலைக்காரிக்கும் வீட்டுக்காரிக்கும் ஒத்துப்போகாது. குழந்தைக்கும் வேலைக்காரியை பிடிக்காது. ஆனால் சகித்துக்கொண்டு வாழ்வதைத்தவிர வேறு வழி இல்லை. ஏனென்றால் வேலைக்காரிக்கு இந்த வேலை தேவை. வீட்டுக்காரிக்கு வேறு ஆள் கிடைக்கமாட்டாள். மாமியார் ஊரில் இருக்கிறாள். அவர்கள் வாழும் பழையபாணி வீட்டுக்கு அவள் தான் சொந்தக்காரி. அவள் ஒத்துக்கொண்டால் வீட்டை விற்றுவிட்டு, ஒரு ஃபிளாட் வாங்கி, ஒரு வண்டியும் வாங்கி வாழ்க்கையை மேம்படுத்திக்கொள்ளலாம். ஆனால் மாமியார் பழையகாலத்து மனுஷி. கணவர் கட்டிய வீட்டை விற்கமாட்டேன் என்று அடம்பிடிக்கிறார். அதே நேரத்தில் மகன், மருமகளுடன் வந்து வாழவும் அவளால் முடியவில்லை. இந்தக்கதையில், ஒவ்வொரு மனிதரும் மற்றவர்களுக்கிடையே விடப்பட்டிருக்கிறார்கள். உணர்வுரீதியான நெரிசலில் வாழ்கிறார்கள். ஒருவர் தன் சுயவிருப்பை நிறைவேற்றிக்கொள்ளும் அளவு மற்றவர்களை சார்ந்தே தீர்மானிக்கப்படுகிறது. சமரசம் ஒன்றே சாத்தியம். மகன் அம்மாவுக்கும் மனைவிக்கும் இடையே சமரசம் செய்ய வேண்டும். மனைவி வேலைக்காரிக்கும் குழந்தைக்கும் இடையே சமரசம் செய்யவேண்டும். வேலைக்காரி பிடிக்காத வேலைக்கும், தன் பிழைப்புக்கும் இடையே சமரசம் செய்தாக வேண்டும். குழந்தை தன் வயதை மீறி பெற்றோருக்கும் வேலைக்காரிக்குமிடையே சமரசத்தை அடையவேண்டும். மாபெரும் கழைக்கூத்தாட்டம். ஆனால் இத்தனை சமரசங்களை நிகழ்த்தும் போக்கில் அவர்கள் ஒவ்வொருவரும் மற்றொருவரை தோற்கடிக்க நினைக்கிறார்கள். ஏமாற்றப்பார்க்கிறார்கள். கள்ளத்தனம் செய்கிறார்கள். பொய் சொல்கிரார்கள். குரூரமான உண்மைகளையும் சொல்கிறார்கள். இந்தப்பின்னலில் தங்களை நிலைநாட்டிக்கொள்வதன் மூலம் தொடர்ந்து இறுக்கமடைகிறார்கள். ஆஷாபூர்ணாதேவியின் கதைமாந்தர்கள் அனைவருமே சாதாரண குடும்ப உருப்பினர்கள். ஓய்வுபெற்ற மாமனார்கள், வீட்டில் அன்னியப்படும் கணவர்கள், மனைவியர், மகள்கள், விதவையான அத்தைமார்கள், குழந்தைகள். ஆனால் ஒவ்வொரு பாத்திரத்திற்கும் அதன் interest உள்ளது. கதைக்குள் ஆசிரியர் அதை தெளிவாகவே வரையருக்கிறார். வெவ்வேறு கதாபாத்திரங்களின் interest-கள் மோதுவதைத்தான் ஆசிரியர் கதையாக்குகிறார். கதாபாத்திரங்கள் தங்களுடைய interest-ஐ பாதுகாக்கக் கிட்டத்தட்ட போரே புரிகிறார்கள். உணர்வுரீதியாக, சமூகரீதியாக, அவர்கள் கையில் கிடைக்கும் அத்தனை ஆயுதங்களையும் பிரயோகிக்கிறார்கள். சில சமயங்களில் அத்துமீறி தரம் தாழ்ந்தும் கூட போகிறார்கள். அத்தனையும் மீறி திருப்தியுறாமல் இருக்கிறார்கள். கணவன் பணிவாழ்க்கையில் முன்னேர நாட்டியமாடும் மனைவியை பகடைக்காயாய் பயன்படுத்துகிறார் (‘நறுமணத்தின் சாரம்’) . பணவெறி பிடித்த கணவனுக்கு பாடம் புகுட்ட வருமானத்துறை அதிகாரியான முன்னாள் காதலனை வீட்டுக்குள் அழைக்கிறாள் மனைவி (‘ஓரினப்பறவை’). விதவையான பிறகு வீட்டில் தன் இடத்தைத் தக்கவைத்துக்கொள்ள கணவரின் தம்பியை முப்பது வருட நீதிமன்ற வழக்கில் கட்டிவைக்கிறார் அண்ணி (‘ஆயுதம்’). வீட்டில் வருமானமில்லாமல் வெகுநாள் தங்கிக்கொண்டிருக்கும் கணவரின் நண்பனை அப்புறப்படுத்த அவனைப்பற்றி பொல்லாப்புகளை பறப்புகிறாள் மனைவி (‘கதாநாயகன்’). அதே சமயம் கதைமாந்தர் அனைவருக்கும் அவரவர் நியாங்கள் இருக்கின்றன. ஒவ்வொருவரும் கையறு நிலையில் இருக்கிறார்கள். அவர்கள் உலகம் காலுக்கடியில் வழுக்கிச்செல்கையில் கையில் கிடைப்பதையெல்லாம் உடும்புப்பிடியுடன் பிடித்துக்கொள்ளும் வேகமே அவர்களில் செயல்படுகிறது. ஒவ்வொருவரும் தங்கள் இயலாமையை சமாளிக்கத்தான் இத்தனை நாடகமாடுகிறார்களா என்று எண்ண வைக்கிறது. மகளின் கணவர் இறந்துபோகிறார். செய்தி வரும் தருணத்தில் மகள் அமர்க்களமாக அலங்காரம் செய்துகொண்டு அத்தை மகள் கல்யாணத்திற்கு புறப்பட்டுக்கொண்டிருக்கிறாள். அவளுடைய தாய் செய்தியை அவள் விழாவிலிருந்து திரும்பிய பிறகே சொல்கிறாள். சமூகமே கொந்தளிக்கிறது. மகள் தன் வாழ்வில் அனுபவிக்கவிருக்கும் கடைசி உற்சாகத் தருணம் அது. அதை முடிந்த அளவு நீட்டிக்க நினைப்பதில் என்ன தவறு என்று அம்மாக்காரி தருக்கி நிற்கிராள். அதில் உள்ளது அன்னையின் இயலாமை. கூடவே, ஒரு விதமான அறவுணர்வு. தன் வட்டத்திற்குள் அவள் செயல்படுத்தக்கூடிய ஒரு எதிர்ப்புவெறி. (‘ஏமாற்றுக்காரி’) ஆக ஆஷாபூர்ணாதேவி சொல்லும் கதைகளின் களன் வேண்டுமென்றால் அடுக்களையும் மனையுமாக இருக்கலாம். ஆனால் அவர் சொல்லும் கதைகள் மனிதனின் இயலாமையைப் பற்றியவை. அதிகாரத்தை, அதிகார மோதல்களைப் பற்றியவை. அடுக்களையானாலும் சரி, நாடாளுமன்றம் ஆனாலும் சரி, போர்க்களம் ஆனாலும் சரி. மனித மனம் ஒன்று தான். மனிதன் தன்னைப்போன்ற மற்ற மனிதர்களுக்கு இடையில் தான் வாழ்ந்தாகவேண்டும். அவனுக்குச் சுய பாதுக்காப்புணர்வு இருக்கும் வரையில், அவன் இயலாமையை உணரும் வரையில், அவன் தன் இடத்தைத் தக்கவைத்துக்கொள்ள முயற்சிப்பான். அது நியாயமாக அமையும் போது போறாட்டமாகும். அத்துமீறும்போது சுரண்டலாகும். அதிகார வேட்கையாகும். இந்தப்போக்கை நாம் தொடர்ந்து வரலாற்றில் பார்க்கிறோம். ஆனால் இதற்கு ஆதாரமான அமையும் மனித மனத்தின் பரிணாமங்களை ஆஷாபூர்ணாதேவியின் எழுத்து துல்லியமாக, கருணையில்லாமல் அம்பலமாக்குகிறது. வேடங்கள் இல்லாமல் நம்மை நாமே பார்த்துக்கொள்ளும் ஒரு தருணத்தை இந்தக் கதைகள் நமக்கு அளிப்பதே இவற்றின் முதன்மைக் கொடை. ஆக, அவர் களத்தை வைத்துக்கொண்டு அவரை ‘சாதாரண அடுக்களை எழுத்தாளர்’ என்று குறைத்துவிடுவது அவருக்கு நீதி செய்வதல்ல. ஒரு கதையின் களத்தை மட்டுமே வைத்து அதை ‘நல்ல கதை’ அல்லது ‘சாதாரணக் கதை’ என்று தீர்மானித்துவிடமுடியாது. வெவ்வேறு சாதி,மதப்பின்னணிகளின் அடுக்களைகள், நகரங்களின் அலங்கோலங்கள், பயங்கரமான வன்முறைக் காட்சிகள், பாலியல் நாடகங்கள் என்று பல களங்களைக்கொண்டு எழுத்தாளர்கள் எழுதுகிறார்கள். ஆனால் அந்த களத்தில் ஆசிரியரின் ஃபோக்கஸ் எதில் உள்ளது என்பது தான் கேள்வி. களன் ஒன்றே கலையை ஆக்குவதில்லை. ஃபோக்கஸ், அது வெளிப்படும் விதம், இவையே கலையை தீர்மானிக்கிறது. ஆஷாபூர்ணாதேவி பள்ளிப்படிப்பு இல்லாதவர். இளம்பிராயத்திலேயே மணமாகி, ஆசாரமான குடும்பவாழ்க்கைக்குள் வாழ்ந்தபடி 3000 சிறுகதைகளும் 150க்கு மேற்பட்ட நாவல்களும் எழுதியிருக்கிறார். அவர் எழுதியதெல்லாம் அவர் கண்ட ‘அடுக்களைக் கதைகள்’ தாம். ஆனால் அவர் ஃபோக்கஸில் சிக்கியது மானுட மனங்கள். அவை போடும் நாடகங்கள். ஒன்றுடன் ஒன்று தொடுக்கும் சமர். நான் அவர் கதைகளை வாசிக்கையில் என் குடும்பத்தின் மனிதர்களை நினைத்துக்கொள்கிறேன். ஆனால் அதே அளவுக்கு நான் பணிபுரிந்த ஆராய்ச்சித்துறையின் முகங்களையும் நினைத்துக்கொள்கிறேன். பல மில்லியன் டாலர்களும் உலகப்புகழும் அறிவதிகாரமும் புழங்கும் நடைக்கூடங்களும் ஆஷாபூர்ணாதேவியின் அடுக்களை மனிதர்களால் தான் நிரம்பிவழிகிறது. *அதென்ன ஆங்கிலத்தில் மட்டும் தான் படிப்பீர்களா? ‘எலீட்’ எழுத்தாளரா நீங்கள்? என்று கேள்வியோடு எழும்பும் வாசக நண்பருக்கு – வெளிநாட்டில் வாழும் எலீட் எழுத்தாளர் ஆகிவிட்டதால் வேறு வழி இல்லை. கிண்டிலில் புத்தகங்கள் உடனுக்குடன் கிடைக்கின்றன. அவை பெரும்பாலும் ஆங்கிலத்தில் இருக்கின்றன. ஆஷாபூர்ணாதேவியின் கதைகள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன – வங்காளச் சிறுகதைகள் என்ற பெயரில். மொழிபெயர்ப்பாளர் புவனா நடராஜன். ஆனால் இந்தப்புத்தகம் கிண்டிலில் கிடைக்கவில்லை. ஆகவே அருணவா சின்ஹாவின் சமீபத்தைய ஆங்கில மொழியாக்கத்தையே நாடவேண்டியிருந்தது. அருணவா சின்ஹா இன்று இயங்கிவரும் ஆங்கில மொழிபெயர்ப்பார்ளர்களில் தனக்கென்று ஒரு இடத்தை உருவாக்கிக்கொண்டிருக்கிறார். மொழிபெயர்ப்பு ஈடுபாடு உள்ளதால் அவருடைய மொழிபெயர்ப்பு உத்திகளை கவனிப்பதிலும் எனக்கு ஆர்வம் இருக்கிறது. ஆகவே ஆங்கிலத்தில் வாசித்தாலும் தமிழில் அதைப்பற்றி எழுதி என்னுடைய ‘எலீட்’த்தனத்தை இரண்டு மடங்காக்கிக்கொள்வது தான் இப்போதைக்கான பிரதிக்ஞை. தோற்கடிக்கப்பட்டவர் – ஆஷாபூர்ணாதேவி Posted in கட்டுரை தோற்கடிக்கப்பட்டவர் (மொழியாக்கச் சிறுகதை) Posted on January 8, 2021 by Suchitra வங்க மூலம்: ஆஷாபூர்ணாதேவி (அருணவா சின்ஹாவின் ஆங்கில மொழியாக்கம் வழியாக தமிழில்) ஏனென்றால் இந்நாட்களில் யார் மனமும் புண்படுவதில்லை. புண்படுதல் என்ற வார்த்தையை தங்கள் அகராதியிலிருந்தே நீக்கிவிட்டார்கள். மிஞ்சியது தன்மானமும் சுயமரியாதையும் மட்டுமே. பிரபாத்மோகன் என்றுமே ஆஸ்றிச் பறவையைப்போல் வாழ்ந்தவரல்ல. மாறாக எப்போதுமே தன்னுடைய கண்களைத் திறந்தே வைத்துக்கொண்டே உலகினில் நடமாடியவர். இதுவரை அவர் ஏமாற்றப்பட்டதே இல்லை. இப்போது வரை. சுயமாக முன்னுக்கு வந்தவர். உலகம் அறிந்தது தான். பரம ஏழ்மையிலிருந்து தன் நிலையை ஏற்றி எழுந்துவந்தவர். ஒரு மனிதனுக்கு உயர்குடி வாழ்வில் வாழ என்னவெல்லாம் தேவையோ அதையெல்லாம் தனக்கென்று சம்பாதித்துக்கொண்டிருந்தார். தன்னுடைய மனைவின் இறப்பின் துக்கம் தன்னை அடித்துச்செல்ல விடாமல் வாழ்ந்தார். ஆனால் புதிய வாழ்வுக்கான நாட்டமும் இல்லை. அவர் மனைவி இறந்தபோது மூன்று வயதுக் குழந்தையை விட்டுச்சென்றிருந்தார். இதனாலும் அவர் உடைந்து போகவில்லை. தன்னுடைய விதவைத்தங்கையான அமலாவின் உதவியுடன் அந்தச்சிறுவனை வளர்த்தெடுத்தார். அவனை ஆளாக்கினார். ஜாதிக்கொள்கைகளின் அளவீடுகளின்படி தன்னுடைய மகனுக்கு திரிகோலசுந்தரியான ஒரு மணப்பெண்ணை பார்த்தமைத்தார். அதே சமயம் அவளுடைய அப்பா தேவனோ மன்னனோ அல்ல. வெறும் கிளார்க். ஆனால் பிரபாத்மோகனுக்கு அவ்வளவுதான் தேவையாக இருந்தது. தன்னுடைய ஒரே மகனை வீட்டோடு மாப்பிளையாக அனுப்பிவிடுவதற்கு எந்த எண்ணமும் இல்லை அவர்க்கு. இதுவரை பிரபாத்மோகன் மிகச்சூதானமான மனிதர் என்று கருத எல்லாவிதமான சான்றுகளும் இருந்தன. ஆனால் அவர் எதிர்பார்க்காத விதமாக ஒரு தாக்குதல் அவரை நோக்கி வந்துகொண்டிருந்தது. இப்படி ஒரு தாக்குதலை அவர் தன் மிக மோசமான கனவில் கூட எதிர்கொண்டதில்லை. இதனால் தான் அவர் அதற்கு முன்னால் கல்லாகவே மாறிப்போனார். சரியாகத்தான் கேட்டோமா என்று நிலைகுலைந்தார். ஆனால் கெட்ட செய்தி எப்போதுமே தவறாகப் புரிந்துகொள்ளப்படுவதில்லை. என்ன சொல்வதென்றுதெரியாமல் பிரபாத்மோகன் தன்னுடைய கண்ணாடியைக் கழற்றி திரும்ப மாட்டிக்கொண்டார். “என்னது”, என்றார். “என்ன பார்த்திருகிறாய்?” “நான் கொல்ஃப் கிளப் ரோட்டில் ஒரு ஃபிளாட் பார்த்திருக்கிறேன்”, என்று பிரபால்பூஷன் அமைதியாகச் சொன்னான். “கோல்ஃப் கிளப் ரோட்டில் ஃபிளாட்டா? என்ன சொல்கிறாய்? ஃபிளாட்டா?” அர்த்தம் தெளிவாகவே இருந்தது. “ஆம், ஒரு ஃப்ளாட் பார்த்திருக்கிறேன்”, என்று பிரபால் சொன்னான். “எல்லாம் பேசி முடித்துவிட்டேன். நாளை மறுநாள் காலை பால் காய்ச்சுவதாக இருக்கிறோம்”. நாளை மறுநாள் காலை. இப்போது மாலை. தன்னுடைய மகன் தனக்குத்தரக்கூடிய நோட்டீஸ் காலமே இந்த லட்சணத்தில். இதற்கு மேல் சொல்ல என்ன இருந்தது? பிரபாத் மோகன் அமலா அல்ல. என்ன செய்துவிட்டாய் என் கண்ணே என்று அழுது கதற. ஆம், பிரபாத் மோகன் அமலா அல்ல. “சரி”, என்றார். ஒற்றை வார்த்தை மேலே சொல்லவில்லை.சரி. அவ்வளவுதான். இந்த உலகத்தில் எல்லாமே தலைகீழாகப் போகும்போது மனிதன் சொல்லக்கூடிய மிகச் சூட்சுமமான வார்த்தையைத்தான் அவரும் சொன்னார். சரி. அவருடைய மொத்த உலகமும் தன்னுடைய வட்டத்திலிருந்து வெளியேறிச் சுழலத்தொடங்கிய போது, அவர் தன் வாழ்க்கை முழுவதும் சேமித்து வைத்திருந்த நம்பிக்கை, உறுதிப்பாடு, ஞானம் எல்லாமே கலைந்து அறை முழுக்க சிதறிப் பறந்துக் கொண்டிருந்தபோது அவர் சொன்ன வார்த்தை இது. பிரபால் அங்கே ஒரு நொடி நின்றான். அவன் அப்பா மேலே ஏதாவது சொல்வார் என்று எதிர்பார்த்திருக்கலாம். அல்லது இந்தச் செய்தியைச் சொன்ன உடனேயே கிளம்புவது கோழைத்தனம் என்று நினைத்திருக்கலாம். யாருக்குத் தெரியும்? ஆனால் அவன் அதற்கு மேல் எதுவும் சொல்லாமல் சற்று நேரத்திலேயே அறையிலிருந்து வெளியேறினான். அவன் செல்வதை பிரபாத் மோகன் பார்த்துக்கொண்டிருந்தார். அவர் கண்கள் ஒளி இழந்திருந்தன. “கோக்கா நிஜமாகத்தான் சொல்கிறாயா? இது நீ சும்மா என்னிடம் விளையாடுவதற்காகச் சொல்லும் பேச்சு இல்லையே?” என்றெல்லாம் அவர் சொல்லவில்லை. தன்னுடைய மகன் தன்னுடன் விளையாடக்கூடும் என்ற சாத்தியமே அவர் மனதில் எழவில்லை. ஆனால் அவர் இப்படியாவது கேட்டிருக்க முடியும். “பிளாட்டை விலைக்கே வாங்கிவிட்டாயா? அல்லது வாடகைக்குத்தான் எடுக்கிறாயா? வாடகை என்றால் அதை இப்போதே வேண்டாமென்று சொல்லிவிடு. வாங்கிவிட்டாய் என்றால் ஒரு நல்ல வாடகையாய்ப் பார். நஷ்டம் என்றாலும் பரவாயில்லை, மிச்சத்தை நான் ஈடு செய்கிறேன்.” இப்படிச் சொல்லியிருக்கலாம். அல்லது, “இங்கே வாழ்வதில் உனக்கு ஏதும் பிரச்சனை இருந்தால் முன்னமே என்னிடம் சொல்லியிருக்கலாமே”, என்றாவது கேட்டிருக்கலாம். எதுவுமே இல்லை. சரி. அவ்வளவுதான். இப்படிச் சொன்ன பிறகு தன் மகன் என்று தன்னைக் கூறிக்கொள்ளும் மனிதன் எத்தனை நேரம் தான் அந்த அறையிலேயே நின்றுகொண்டிருக்க முடியும்? வெற்றுநோக்குடன் விழித்துக்கொண்டிருந்த பிரபாத் மோகனுக்கு அப்போது ஒரு எண்ணம் ஏற்பட்டது. விசித்திரமானது, என்று நினைத்தார். கோக்கா என்னிடமே வந்து நேருக்கு நேராக இதையெல்லாம் சொல்வது எல்லாம். அவன் அமலாவிடமே சொல்லியிருக்கலாமே? எப்போதும் போல? இல்லை, என்னிடம் நேரடியாகச் சொல்வதில் அவன் ஏதோ பெரிய குரூரமான திருப்தியை அடைந்திருக்கவேண்டும். ஒரு வேட்டை மிருகத்துக்கு அதனுடைய இரை மரணத்தின் தறுவாயில் அடையும் வேதனையைப் பார்க்கும் போது ஏற்படும் திருப்தி. கொலையாளி நெஞ்சில் குத்தத்தான் பிரியப்படுவான். முதுகில் குத்துவதில் என்ன வீரம்? ஆனால் பிரபாத்மோகன் தன்னுடைய மகனுக்குச் சற்றே அநீதி இழைத்துவிட்டார். மகன் முதுகில் குத்தவேண்டும் என்று தான் முதலில் திட்டமிட்டிருந்தான். உன்னிடம் சொல்லிவிட்டேன், என்று அத்தையிடம் சொல்ல நினைத்தான். நீயே அப்பாவிடம் சொல்லிவிடு. ஆனால் அவள் இந்த விளையாட்டுக்கு ஒப்புக்கொள்ள மாட்டாள் என்றால் என்ன செய்வது? தன்னுடைய அழகான முகத்தில் சற்றே கடுமையான புன்னகையை வரவழைத்துக்கொண்டு பரோமா, “நீ மிகவும் விசித்திரமாக நடந்துகொள்கிறாய். ஒன்றுமே விளங்கவில்லை. வேண்டுமென்றால் நான் அவரிடம் பேசுகிறேன். இந்த பூனைக்கு மணிகட்டியதும் என் கணக்கிலேயே சேரட்டுமே”, என்றாள். “தேவையில்லை”, என்று பிரபால் சொன்னான். “அது அத்தனைப்பெரிய வேலை ஒன்றும் இல்லை”. அது அத்தனைப்பெரிய வேலையாக இருக்கக்கூடாது என்பதற்காக அந்த சந்தர்ப்பத்தை அவன் மீண்டும் மீண்டும் ஒத்திகை பார்த்தான். பிரபாத்மோகனுக்கோ அப்படி ஒத்திகை பார்க்கச் சந்தர்ப்பம் அமையவில்லை. வேஷம் இல்லாமல், முகச்சாயம் இல்லாமல், நாடகத்தின் பிரதியைக்கூடப் படிக்க வாய்ப்பளிக்கப்படாமல் அவர் மேடையேற்றப்பட்டிருந்தார். இருந்தாலும் அவர் அந்த கட்டத்தை வெற்றிகரமாகவே தாண்டிவிட்டார். சரி, என்று குரலில் நடுக்கமில்லாமல் சொல்லிவிட்டார். எதற்கு நான் இதையெல்லாம் நினைத்துக் கவலைப்பட வேண்டும், என்று பின்னால் தனக்குத்தானே சொல்லிக்கொண்டார். கோக்காவுக்கு பணிமாற்றம் ஏற்பட்டிருக்கலாம். அப்போதும் கூட அவனும் சந்தனும் இல்லாமல் தான் நான் வாழ்ந்திருக்க வேண்டும். பரோமா இல்லாமலும் தான் வாழவேண்டுமே என்ற நினைப்பு அவருக்கு வரவில்லை. வேண்டுமென்றேவா, அல்லது அவர் மறந்துவிட்டிருந்தாரா? ஆனால் உண்மையைச் சொல்லவேண்டுமென்றால், அவர்களுக்குத் திருமணமாகியிருந்த அந்த மூன்று-நான்கு வருடங்களில் பரோமா பிரபாத்மோகனை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ளவேண்டும் என்றே பிரயத்தனப்பட்டாள். அது நடக்கவில்லை. எண்ண்னக்கள் மேலும் மேலும் வந்துகொண்டிருந்தன. எத்தனை மட்டமான எண்ணம்! கோக்காவுக்கு பணி மாற்றம் நடந்திருந்தால் நான் மட்டுமே துக்கப்பட்டுக்கொண்டிருந்திருப்பேன். ஆனால் இப்போது என்னுடைய நண்பர்கள் சொந்தங்கள் சுற்றார் உறவினர் இந்த மொத்தச் சமூகமும் என்னைப்பார்த்து என்னை ஒரு மாதிரியாகப் பார்க்கும். நான் இந்த வட்டத்தில் தான் வாழ்ந்தாகவேண்டும். இந்த வீட்டில் தான் வாழ்ந்தாகவேண்டும். ஏனென்றால் இது என்னுடைய சொந்த வீடு. தனக்கென்று ஒரு வீட்டைக் கட்டிக்கொள்வதை விட மனிதன் ஒரு முட்டாள்தனமான வேலையை செய்ய முடியுமா என்ன? அதைச் செய்தவுடன் ஒரு மனிதன் தன்னை மண்ணின் மிகச்சிறிய வட்டத்திற்குள் கட்டிப்போட்டுக் கொள்கிறான். பிரபாத் மோகன் யோசித்தார். தான் வாடகை வீட்டில் வாழ்ந்திருந்தாலாவது இது நடந்தவுடன் அந்த வீட்டை காலி செய்துவிட்டு வேறு எங்கேயாவது சென்று விட்டிருக்கலாம். இத்தனைப்பெரிய வீட்டை வைத்துக்கொண்டு ஒரு மகனை வீட்டோடு கட்டி வைக்க இவரால் முடியாமற் போனதே! மகனுக்கு அத்தனை தன்மானம். இரண்டு மாடிகள் இந்த வீட்டில் அவர்கள் தங்களுக்கென்று வைத்திருந்தார்கள். மேலும் கீழ்த்தளத்தை 700-800 ரூபாய் என்று வாடகைக்கும் விட்டிருந்தார்கள். இந்த வீட்டைத் துறந்து தான் கோக்கா தனிக்குடித்தனமாக ஃப்ளாட்டுக்கு செல்லப்போகிறானாம். எத்தனை விசித்திரமானது! இந்த மொத்த வீட்டுக்கும் ஒரே வாரிசு இவன். இதில் ஏதோ சரியாகப் படவில்லை. யார்யாருக்கு முன்னாலோ முகத்தில் கரியைப் பூசிக்கொண்டு நிற்கவேண்டாம் என்பதற்காக இப்போது பிரதாத்மோகன் தன் மகனிடத்தில் சென்று, “மகனே! மருமகளே! இப்போது என்ன ஆகிவிட்டதென்று நீங்கள் கிளம்பிச் செல்கிறீர்கள். இப்படி ஒரு முடிவை எடுப்பதற்கு முன்னால் ஒரு நிமிடமாவது நீங்கள் சிந்திக்க வேண்டாமா? இத்தனைப்பெரிய வீட்டில் தன்னந்தனியாக நான் எப்படித்தான் வாழ்வது?” என்று கேட்க வேண்டுமா? பிரபாத்மோகனுக்கு அருவருப்பாக இருந்தது. தன்மானம் என்பது இந்தத் தலைமுறையின் ஏகோபித்த உரிமை ஒன்றும் இல்லை. அமலா உள்ளே வந்தாள். “நான் கோக்காவைப் பார்த்தேன், என்றாள். அவன் என்ன சொல்லிக்கொண்டிருந்தான்?” “உனக்குத் தெரியாதா?” என்று பிரபாத்மோகன் முறைத்தார். “தெரியும், அதான் கேட்கிறேன். நீங்கள் அவனைப் போகவேண்டாம் என்று சொல்லவில்லையா?” அமலாவின் கேள்வி அவளுக்குள்ளிருந்து, அவளை மீறிய கதறலாக வந்தது. “ஒருமுறைகூட இத்தனைப்பெரிய தவறைச் செய்யாதே முட்டாளே, என்று உங்களால் சொல்ல முடியவில்லையா?” அவளுடைய வேதனையால் சிறிதுகூட கலங்காதவர்போல் பிரபாத்மோகன் சொன்னார். “நான் ஏன் அவர்களை நிறுத்தவேண்டும்? அவன் ஒரு தவறு செய்வானென்றால் அவனே அதற்கான விலையைக் கொடுக்கட்டுமே?” தரையில் சடாரென்று அமர்ந்து அமலா சொன்னாள், “அண்ணா, அப்படிப் பேசாதே. அவனுக்கு அறிவு இருந்தால் இப்படி ஏதாவதுச் செய்வானா?” “அவனுக்கு அறிவில்லை என்று யார் சொன்னார்”, என்றார் பிரபாத் மோகன். “அவனுக்கு நிறையவே அறிவிருக்கிறது. இல்லையென்றாலும் என்ன? அவனுக்கு அறிவை புகட்டுவதற்குத்தான் ஓர் ஆசிரியையையும் கூடவே வைத்திருக்கிறானே”. அமலா உடைந்துபோன குரலில் சொன்னாள். “ஆம், அப்படியாகிவிட்டது. ஆயினும் நீங்கள் அன்று பேசிய விதத்தில் பேசியிருக்கக்கூடாது அண்ணா. இப்போது போய், அய்யய்யோ, அன்று ஏதோ கோபத்தில் சொல்லிவிட்டேன் இதை நீங்கள் இன்னுமா மனதில் வைத்துக்கொண்டிருக்கிறீர்கள் என்று சொன்னால்?” அப்போது அவர்கள் யாரும் வீட்டில் இல்லை. அமலா அவர்கள் வெளியே போவதைப் பார்த்திருந்தாள். ஆகையினால்தான் இந்த விஷயத்தைப் பேசவே வந்திருந்தாள். பிரபாத்மோகன் அவர்கள் இல்லையென்றால் மனம் விட்டுப்பேசுவார் என்று எதிர்பார்த்தாள். அவர்கள் போய்வரச் சற்று நேரமாகும். இரண்டு நாட்களுக்குள் எல்லா வேலைகளையும் முடித்தாகவேண்டும். பிரபாத்மோகன் மனம் விட்டுப்பேசத் தொடங்கிவிட்டிருந்தார். “நான் அப்படித்தான் செய்யவேண்டும் என்று சொல்கிறாயல்லவா”, என்று கத்தினார். “அவர்கள் காலில் சென்று விழவேண்டும் அல்லவா?” “அண்ணா அப்படி நான் சொல்லவில்லை”, என்று அமலா சொன்னாள். “அவன் அம்மா இல்லாத பையன். அவன் மூன்று மாதத்திலிருந்து நான் தான்…” அவள் நிறுத்தினாள். “ஆமாம். நீதான் அவனை வளர்த்தாய்,” என்று பிரதபாத்மோகன் கசப்பாகச் சொன்னார். “ஒரு விதவை தெய்வங்களை நோக்கிச் செய்யவேண்டிய சிரத்தைகளையெல்லாம் நீ குழந்தையை நோக்கிச் செய்தாய். ஆனால் தன்னுடைய வாழ்க்கையில் உன்னுடைய பங்கை அவன் என்றாவது மதித்துப் பேசியிருக்கிறானா? அறியாத வயதிலேயே என் தலையில் பல கடன்களைக் கட்டிவிட்டீர்களே என்று அவன் சொன்னானே, அதை நீ கேட்கவில்லையா?” அமலா மேசையின் காலை ஒரு கையால் கெட்டியாகப் பிடித்திருந்தாள். இப்போது மறுகையாலும் பிடித்துக்கொண்டாள். “அவன் அப்படிச் சொல்லவில்லை,” என்று குரல் உடைந்ததுபோல் சொன்னாள். “அவன் சொல்லவில்லை, அவன் ஆசிரியை சொன்னாள்”, என்று பிரபாத்மோகன் குத்தலாகச் சொன்னார். “அமலா நிறுத்து, அவன் பலவீனங்களை மறைக்க முயற்சி செய்யாதே. சிறுவயது முதலாகவே நீ அவனைப் பொத்திப் பொத்தி வளர்க்காமல் இருந்திருந்தால்…” அமலாவின் இதயம் கொந்தளித்திருந்தது. ஆமாம். அண்ணா இது எப்போதும் பேசும் பேச்சு தான். ஆனால் இதுவரை அது பெரிய விஷயமென்ற தொனியில் சொன்னதில்லை. சும்மா, ஒரு பேச்சுக்குச் சொன்னது தான். “நீ அவனுக்கு ரொம்பவும் செல்லம் கொடுக்கிறாய் அமலா, இதனால் பார் ஒருநாள் அவனுக்கு என்னாகப்போகிறதென்று”. ஆனால் இன்றோ, அவளுக்குத் தன்னுடைய நாளங்கள் வெடித்துவிடும் என்பதுபோல் இருந்த சமயத்தில் அவளுடைய அண்ணன் இப்படிக் குத்திக்காட்டிப் பேசியது மிகக் குரூரமானதாக இருந்தது. கம்மிய குரலில், “நீ தான் என்னை எப்போதும் குத்தியே பேசுகிறாய் அண்ணா. இதற்கு நான் என்ன சொல்வது? ஆனால் கோக்காவைப் பற்றித் தவறாக யாராவது ஒரு வார்த்தைப் பேசி நீ கேட்டிருக்கிறாயா? அவனுடைய வளர்ப்பைப் பற்றி, அவனுடைய வளர்ப்புத் தவறு என்று யாராவது சொல்லி நீ கேட்டிருக்கிறாயா? நீ தான் விடாப்பிடியாக இருக்கிறாய் அண்ணா. உன்னுடைய மகனுக்குத் திருமணம் ஆனப் பிறகு அவனுடன் எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்ற தெளிவு இல்லாமல் இருக்கிறாய்…” கசப்பும் அமிலமுமாகத் தெரித்தது பிரபாத்மோகனின் குரல். “ஆமாம். இந்த வயதிற்கு மேல் நான் அது ஒன்றைத் தான் கற்றுக்கொள்ளவேண்டும். திருமணத்திற்குப் பிறகு மகன் மருமகன் ஆகிவிடுவானாம். மருமகள் அவனுக்கு ஆசிரியையும் வழிகாட்டியுமாக இருப்பாளாம். எங்களுக்கெல்லாம் திருமணமே ஆகவில்லையா? உன்னுடைய நாத்தனார் எப்படி வாழ்ந்தாள் என்று உனக்கு ஞாபகமில்லையா என்ன?” “அண்ணா அதை மறந்துவிடு. அந்த நாட்களெல்லாம் மலையேறிச் சென்றுவிட்டது. இன்றைய இளைஞர்களுக்குச் சுயமரியாதை உணர்வு நிறைய இருக்கிறது”. “அப்படியா? மூத்தவர்களுக்குக் கொடுக்கவேண்டிய மரியாதையையும் அவர்கள் எடுத்துக்கொண்டுவிட்டார்களா?” அமலாவின் இதயத்திலிருந்த கொந்தளிப்பு மேலும் கூடியது. கடந்த வருடங்களின் நினைவுகள் பலவும் அவளுடைய மனதில் புகைப்படங்களைப்போல் மின்னி மின்னி மறைந்தன. ஒவ்வொரு நினைவும் அவளுடைய உடம்பில் முள்ளாகக் குத்தியது. எல்லாத்தை விடவும் வலிமிக்கது சந்தனை ஒவ்வொரு நாள் மாலையும் பரோமாவின் பெற்றோர் வீட்டுக்கு இழுத்துப்போய் விடுவது. அமலாவால் ஒரு வார்த்தைக்கூடச் சொல்ல முடியவில்லை. எல்லாமே அவளுடைய தவறுதான். தானே தன் தலை மீது கொட்டிக்கொண்டது. ஆனால் அமலா அவர்களிடம் சொன்னதில் என்ன தவறு இருந்தது? சிரித்துக்கொண்டு தான் அதையும் சொன்னாள். “ஒவ்வொரு நாளும் வெளியே போகும் சமயத்தில் குழந்தையை என்னிடம் விட்டுச்செல்கிறீர்கள். எனக்குப் பூஜைக்கு நேரமே இருப்பதில்லை.” அவ்வளவுதான். அந்த வார்த்தைகளை சொன்னவுடன் அவளுடைய இதயம் கடகடவென்று அடிக்கத்தொடங்கியது. ஏன் இதை நான் சொல்லியிருக்கவேண்டும்? இதனால் இவர்கள் வெளியே போவதையே மொத்தமாக நிறுத்திக்கொண்டுவிட்டால்? அப்புறம் நானே என் கர்வத்தை விழுங்கி அவர்களை சமாதானப் படுத்தவேண்டும். அமலா அந்த சமாதானப்பேச்சைக்கூட மனதில் வடிவமைத்து வைத்திருந்தாள். ஆனால் அதைச்சொல்லத் தேவை ஏற்படவில்லை. கோக்கா மனைவியுடன் வெளியே போவதை நிறுத்தவில்லை. ஆனால் மகனை அத்தையிடம் விடாமல் தன்னுடைய மனைவியின் பெற்றோர் வீட்டில் சென்று விட்டான். ஏனென்றால் இந்நாட்களில் யார் மனமும் புண்படுவதில்லை. புண்படுதல் என்ற வார்த்தையை தங்கள் அகராதியிலிருந்தே நீக்கிவிட்டார்கள். மிஞ்சியது தன்மானமும் சுயமரியாதையும் மட்டுமே. பெரியவர்களும் அவர்களுடைய பேச்சைக் கவனிக்க வேண்டியதாகியிருந்தது. ஆஷாபூர்ணா தேவி அதிலிருந்து அமலாவும் அவளுடைய வார்த்தைகளை எண்ணியவாறே பேசினாள். அதிகமாகவும் பேசக்கூடாது. குறைவாகவும் பேசக்கூடாது. சரியான விகிதத்தில் பேசப் பழகியிருந்தாள். ஆனால் தன்னுடைய அண்ணனை இந்த கட்டுக்குள் கொண்டுவருவதெல்லாம் செய்யக்கூடிய வேலையல்ல. தன்னுடைய மகனுக்குத் திருமணமானால் மருமகள் தன்னுடைய மகள் அல்ல, மகன் அவளுடைய சொத்து, என்று பிரபாத்மோகனால் ஒத்துக்கொள்ளவே முடியவில்லை. “உனக்கொரு மகள் இருந்து அவளுக்குத் திருமணம் ஆனால் அவள் மாப்பிளைக்குத்தானே சொந்தம்? அவருடைய அனுமதி இல்லாமல் அவளை நீ உன் வீட்டுக்குக் கூட கூட்டிவர முடியாதல்லவா? இப்படித்தானே இருந்திருக்கிறது காலம் காலமாக? அதைப்போல நினைத்துக்கொள்ளேன்?” என்று அமலா அவளுடைய அண்ணனிடம் சொல்லிப் புரியவைக்க முயன்றாள். “ஆமாம், ஆமாம், நியாயமெல்லாம் சரியாக்கத்தான் இருக்கிறது”, என்று பிரபாத்மோகன் கிண்டலாகச் சொன்னார். “நெருப்பைச்சுற்றி என் மகனும் தானே ஏழு வலம் வந்தான்”. “கோக்காவுக்கு உன்னைப் பார்த்தாலே பயம் அண்ணா” “நல்லது தான். என்னுடைய ராஜகுமாரனுக்கு தன்னுடைய தந்தை மேல் பயம். அன்பு இல்லை. ஏன்? ஏன் ஒவ்வொரு நாளும் ஊர் சுற்றக் காலில் சக்கரம் கட்டிப் பறக்கிறான்? ஒரு நாளாவது சாவகாசமாக வயதான அப்பாவிடம் அமர்ந்து பேசலாமே என்ற எண்ணமே இல்லை அவனுக்கு.” அமலா அந்தப்பேச்சின் தீவிரத்தைக் குறைத்து அனுசரணையாக்க முயன்றாள். “நீங்களா? வயதானவரா? நீங்கள் தானே அவனை விட இளமையாக இருக்கிறீர்கள்?” என்றாள். ஆனால் இது எதுவுமே அவர் மனதை மாற்றவில்லை. பிறகு ஒருநாள். அந்த நாள். அன்று அவர்கள் இருவரும் மிகப்பிந்தி வீட்டுக்கு வந்தார்கள். இரவுணவை பரோமாவின் வீட்டிலேயே முடித்திருந்தார்கள். மகன் அவர்கள் கைகளில் இருந்தான். தூங்கிவிட்டிருந்தான். எங்கே போகிறோம், எப்போது வருவோம் என்று எந்த செய்தியும் சொல்லாமலே போயிருந்தார்கள். அவர்கள் வீட்டுக்குள் நுழைந்ததும் பிரபாத்மோகனுக்கு எரிச்சல் மேலோங்கியது. கோபம் தழலாடியது. “உங்களுக்குப் பிடித்த மாதிரியெல்லாம் இந்த வீட்டில் நீங்கள் வாழ முடியாது”, என்றார். மனவருத்தில் தான் அவர் அப்படிப் பேசினார் என்று அமலாவுக்குத் தெரியும். பல நாட்களுக்குப் பிறகு அன்று தான் அவர் கடல்நண்டு வாங்கிக்கொண்டு வந்திருந்தார். “சமையல்காரனிடம் கொடுக்காதே. நீயே தயார் செய்,” என்று அமலாவிடம் சொல்லியிருந்தார். அதனுடன் பிரியாணியும் சாப்பிடவேண்டும் என்று விருப்பப்பட்டார். பிரபாத்மோகனுக்கும் பிரபாலுக்கும் பிடித்த உணவு அது. அவர்கள் வருவார்கள் வருவார்கள் என்று பிரபாத்மோகன் சாப்பிடக் காத்துக்கொண்டிருந்தார். அவருக்குப் பசி பொறுக்காது. சாப்பிடப் பிந்தினால் அவர் உடம்புக்கு ஒத்துக்கொள்ளாது. “படம் ஏதாவது பார்க்கப்போயிருப்பார்கள். நீங்கள் சாப்பிடுங்களேன்”, என்று அமலா அவரை மீண்டும் மீண்டும் சாப்பிட அழைத்தாள். பிரபாத்மோகனுக்கோ ஆவேசம் ஏறிக்கொண்டே சென்றது. கவலையும் ஏறியது. நேரம் செல்லச்செல்லக் கவலை ஏறத்தானே செய்யும்? அமலாவுக்கும் கவலை இல்லாமல் இல்லை. ஒவ்வொரு நாளும் சாலையில் விபத்துக்கள் நடந்துகொண்டுதான் இருந்தன. ஆனால் கவலைப்படாததுபோல் காட்டிக்கொண்டாள். பிரபாத்மோகன் அவள் பேச்சைக் காதுகொடுத்துக்கூடக் கேட்கவில்லை. அவர் கோபம் ஏறிக்கொண்டே போனது. மகனின் மாமியார் மாமனாரிடம் டெலிஃபோன் இல்லை. அழைத்து ஒன்றும் கேட்க முடியாது. அவர்கள் எப்போது கிளம்பினார்கள். கிளம்பினார்களா. ஏதாவது பிரச்சனையா. குழந்தைக்கு ஏதாவது ஆகிவிட்டதா… சமையல்காரனை அனுப்பி என்ன செய்தி என்று கேட்கலாம் என்று யோசித்துக்கொண்டிருந்தபோது அவர்களே திரும்பி வந்தார்கள். படம் பார்க்கப் போயிருந்தார்கள். சாப்பாடும் முடிந்திருந்தது. அமலாவால் அண்ணனைக் குறை சொல்ல முடியவில்லை. பொறுமை இரும்பில் செய்யப்படுவதில்லை. அதிலும் ஆணின் பொறுமை, கண்டிப்பாக. ஆனால் அந்த ஒரு வார்த்தைக்கு மேல் பிரபாத்மோகனும் ஏதும் சொல்லவில்லை. ஆனால் அந்த வார்த்தையைச் சொன்னதற்காகவா அவர்கள் இருவரும் இத்தனைப்பெரிய முடிவை எடுத்தார்கள்? விசித்திரமானதுதான். ஆனால் இப்போது அமலா தான் சொன்னாள். “அண்ணா, தவறு உன்னுடையதுதான். நீ அதை ஒத்துக்கொண்டுத்தான் ஆகவேண்டும்”. “இன்று உனக்குச் செய்ய வேறு வேலை ஒன்றும் இல்லையா?” என்றார் பிரபாத்மோகன். “போ. போய் உன் தெய்வங்களுடன் உட்கார். இப்படி வந்து வந்து என்னிடம் புலம்பாதே.” அமலாவால் வேரென்ன செய்ய முடியும்? அவள் எழுந்துச்சென்றாள். கொஞ்சம் முயற்சித்தால் இந்த அகழ் விரிவதைத் தடுத்துவிடலாம் என்று நினைத்தாள். ஆனால் அவளுக்குப் புத்தி கொஞ்சம் மந்தம் தான். அப்படித்தான் யோசிக்கும் அது. அமலா சென்ற பிறகு பிரபாத்மோகனின் மனம் இங்கேயும் அங்கேயும் அலைபாய ஆரம்பித்தது. இன்று இரவு ஏதாவது விபரீதமாக நடந்து நாளை அவர்கள் கிளம்பிப் போவதைத் தடுத்துவிட்டால்? அப்படி என்ன கொடூரமாக நடக்கமுடியும்? பிரபாத்மோகனுக்கு இதய அடைப்பு வந்தால்? ஆனால் அது தன்னுடைய வீழ்ச்சியை மட்டுமே குறிப்பதாக அமைந்துவிடும். அப்படி தான் வீழ்ச்சியடைவதை அவரால் நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை. அல்லது இரவு கடப்பதற்குள் பரோமாவின் அப்பாவுக்கோ அம்மாவுக்கோ ஏதாவது நடந்தால்? ஆனால் இவர்கள் இந்த வீட்டிலிருந்து கிளம்பிச்செல்வதை அது எப்படித் தடுக்கும்? மிஞ்சியவரோடு புதுவீட்டில் குடிபுகுவது அவர்களுக்கு வசதியாகவே இருக்கும். கோக்காவுக்கு எதுவும் நடந்துவிடக் கூடாது. ஆனால் பரோமாவுக்கு? இல்லை. அதுவும் வேலைக்காகாது. தன்னுடைய மனைவிக்கு ஏதாவது நடந்தால் மகன் தன்னை மன்னிக்கவே மாட்டான். இல்லை. இது எதுவுமே வேலைக்காகாது. கோக்காவுக்கு நாளை பணிமாற்றம் நிகழ்ந்தால்? முன்பு பிரபாத்மோகன் இந்த சாத்தியத்தை யோசிக்கும்போதெல்லாம் அந்த கசப்பான எண்ணத்தை மனதிலிருந்து தள்ளித்தள்ளி வைப்பார். ஆனால் இப்போது இந்த சிக்கலுக்கு அதுவே சரியாக முடிவாகப் பட்டது. ஆம். ஒவ்வொரு நாளும் கோக்காவையும் தாதுபாயையும் பார்க்கமுடியாது. ஆனால் பரவாயில்லை. இங்கே சுற்றியிருப்பவர்களின் ஏளனப்பேச்சையாவது தவிர்த்துவிடலாம். ஆனால் பணிமாற்றம் வருவதற்கும் இவர்கள் நாளை மறுநாள் கிளம்புவதற்கும் என்ன சம்பந்தம்? இல்லை. ஒரே வழி தான். ஏதாவது பேரிடர் நிகழவேண்டும். இயற்கைப் பேரிடர். பிரபாத் மோகன் நிமிர்ந்து வானத்தைப் பார்த்தார். தெளிவாக இருந்தது. ஒரு பொட்டு மேகம் இல்லை. இன்றிரவு புயல் ஏதாவது வர வாய்ப்பிருக்கிறதா? அல்லது ஒரு பூகம்பம்? நடக்காததைப் பற்றி யோசிப்பதில் எந்தப்பயனும் இல்லை. ஏதாவது செய்தாகவேண்டும். அவர்களுக்கு ஒரு பாடம் புகட்டும் வகையில் ஏதாவது. ஆனால் இந்த சிந்தனைகளுக்கிடையில் மற்றொரு சிந்தனையும் இருந்தது. செல்லட்டுமே? அவர்கள் சென்று தான் பார்க்கட்டுமே? அவர்களுக்கு வாழ்க்கை இங்கே எத்தனை சொகுசாக இருந்தது என்று பட்டுத் தெரிந்துகொள்ளட்டுமே? தனக்கென்று வீடு என்ற ஆசையெல்லாம் ஒரே நாளில் பறந்து போய் விடும். ஒரு பைசா கூட செலவழிக்காமல் அப்பா சொத்தில் வாழ்வதென்பது வேறு, தனிக் குடித்தனமாக வாழ்வதென்பது வேறு. அதுவும் இரண்டரை பேர். சரி வாழ்ந்துப்பார்! இப்படி வக்கிரமான, விஷத்தனமான எண்ணங்களால் பீடிக்கப்பட்டு பிரபாத்மோகன் அன்றிரவு ஒரு சொட்டுக்கூடத் தூங்கவில்லை. ஆனால் அவருடைய எண்ணங்களுக்கு எந்தப்பயனுமில்லை. மறுநாள் காலை எல்லா நாட்களைப்போலவும் சூரியன் வெட்கமே இல்லாமல் தெளிந்த வானிலிருந்து ஒளி பொழிந்துகொண்டுதான் இருந்தது. இன்னும் ஒரே நாள் தான். பிரபாத்மோகன் ஏதாவது செய்தாகவேண்டும். நாளை இதே நேரம் ஒரு வண்டி சாமான்சட்டிகளோடு அவர்கள் வீட்டிலிருந்து கிளம்பிச்செல்லும். சாமான்சட்டிகளென்றால், அவர் வீட்டிலிருந்து எதுவும் எடுத்துச்செல்ல மாட்டார்கள். அது சரி தான். அவர்களுடைய தனிப்பட்ட உடைமைகள் மட்டும் தான் செல்லும். பரோமாவின் அப்பாவால் வரதட்சிணை ஏதும் கொடுக்கமுடியவில்லை. அவர்களுடைய மேசை, நாற்காலி, கட்டில், எல்லாமே பிரபாத்மோகன் வாங்கிப்போட்டது தான். எதையும் எடுத்துச்செல்ல மாட்டார்கள். இரண்டாம் மாடியின் பெரிய அறையில் ஒரு மூலையில் அவர்களுடைய மகனின் தொட்டில் தன்னந்தனியாக நின்றுகொண்டிருக்கும். பிரபாத்மோகனின் கண்களில் தூசு விழுந்ததா? தண்ணீரை வாரி வாரி அவர் முகத்தில் எரிந்துகொண்டிருந்தார். காலம் அமைதியாக ஒழுகிச்சென்றது. வீடு இப்போதே நிசப்தமாகத் தொடங்கியிருந்தது. அமலா சமையல்காரனை சத்தமாகக் கண்டிப்பதை நிறுத்தியிருந்தாள். பிரபாத்மோகனுக்கும் குரலை உயர்த்திப் பேசுவதற்கு அவசியம் இருக்கவில்லை. வீட்டு வேலை எப்போதும் போலச் சென்றுகொண்டிருந்தது. ஆனால் எப்போதையும் விட வீடு நிசப்தமாக இருந்தது. கோக்கா சவரம் செய்துகொண்டான். குளித்தான். வேலைக்குப்போனான். பரோமா குளித்துத் தன் மகனுக்கு உணவூட்டினாள். அவனைப் படுக்கப்போட்டாள். மதிய உணவைச் சாப்பிட்டாள். அதற்குப் பிறகு அவள் என்ன செய்வாள் என்று யாருக்கும் தெரியாது. முன்பெல்லாம் அவள் பிரபாத்மோகனுடன் சாப்பிட்டுக்கொண்டிருந்தாள். ஆனால் இப்போதெல்லாம் அவளுடைய நாள்பொழுது மாறிவிட்டது. மதிய உணவுக்கு முன்னால் எங்காவது போவாள். இல்லை சீக்கிரம் சாப்பிட்டுவிட்டு எங்காவது கிளம்பிச் செல்வாள். அன்று அவள் என்ன செய்தாள் என்று தெரியவில்லை. ஆனால் ஏதாவது நடக்கும் என்று பிரபாத்மோகன் எதிர்பார்த்தார். எதுவும் நடக்கவில்லை. அன்று மாலை பிரபால் எப்போதும் போல அலுவலகத்திலிருந்து திரும்ப வந்தான். குளித்தான். ஈரத்துண்டை பால்கணி கம்பிமேல் விரித்துப்போட்டான். ஒரு கோப்பை டீ குடித்து மாலை வேளையில் எப்போதும் மனைவியுடன் வெளியே செல்வதுபோலச் சென்றான். இந்த முறை பைகளை கையோடு எடுத்துச்சென்றார்கள். ஆனால் சிறுவன்? அவனை தங்களுடன் அழைத்துப்போகவில்லை. கொஞ்ச நேரத்திற்குப் பிறகு அமலாவைப் பார்க்க பிரதாப்மோகன் சென்றான் “இன்று என்ன குழந்தையை பையில் போட்டுக்கொண்டு செல்லவில்லையா”, என்றார். அமலா பதில் சொல்லவில்லை. அவளால் பதில் சொல்ல முடியவில்லை என்பது தெளிவாகவே தெரிந்தது. குழந்தையை மடியில் வைத்துக்கொண்டு அவனை வருடிக்கொண்டிருந்தாள். “குழந்தையை ஏன் இப்போதே தூங்கவைக்கப்பார்க்கிறாய்?” “அவர்கள் சொல்லிவிட்டுப் போனார்கள்”, என்றாள் அமலா. அவளால் பேசக்கூட முடியவில்லை. “சரிதான். அல்லது இந்த முதியவன் குழந்தையோடு விளையாட ஆசைப்படுவான் அல்லவா”, என்றார் பிரபாத்மோகன். அமலா அமைதியாக இருந்தாள். பேச ஒரு சந்தர்பத்தைக்கூடத் தவறவிடாத அமலா. ஒரு வார்த்தை பேச வேண்டிய இடத்தில் நூறு வார்த்தை பேசும் அமலா. “அவனைப் படுக்க வைக்காதே”, என்று பிரதாத்மோகன் கடுமையாகச் சொன்னார். “தேவையில்லை. நீ அவனைப் படுக்க வைத்தாலும் அவனை நான் எழுப்பிவிடுவேன்”. அவர் குரலில் வஞ்சம் இருந்தது. “என்ன சொல்கிறாய்”, என்றாள் அமலா. “அவன் தூங்கவில்லை என்றால் அழத்தொடங்குவான்.” “அழட்டும். அவனை நான் சமாதானப்படுத்துகிறேன்.” “உன்னால் அவனைச் சமாதானப்படுத்த முடியாது.” “என்னால் சமாதானப்படுத்த முடிகிறதா முடியவில்லையா என்று நான் பார்த்துக்கொள்கிறேன்.” குழந்தையை அத்தையின் கையிலிருந்து பிடுங்கி பிரபாத்மோகன் அவனை எழுப்ப முயன்றார். குழந்தை மிரண்டு எழுந்தது. அவரைப் புரியாமல் பார்த்தது. தாத்தாவைப்பார்த்து அவன் சிரிக்கவில்லை. அப்படியென்றால் அவன் பாதி தூக்கத்திலிருந்தான். இதுவே சரியான நேரம். பிரபாத்னோகனிடம் கடைசியாக ஒரு திட்டம் இருந்தது. தன்னுடைய ஹோமியோபதி மருந்துகளின் ஒரு பெட்டியை எடுத்து அதிலிருந்து ஒரு சிறு புட்டியை எடுத்தார். சிறிய உருண்ட மணிகளைப்போல் வெள்ளை நிற மாத்திரைகள் கொண்ட புட்டி. ஒரு சில மணிகளைக் குழந்தை வாயில் போட்டால் என்ன செய்துவிடப் போகிறது? அவர் நினைத்தபடிதான் அது சென்று முடியும். வேறெதுவும் நடக்காது. குழந்தைக்கு வயிற்றுவலி ஏற்படலாம். குழந்தைக்கு இரவில் வயிறு வலித்தால் பகலில் அப்பா வீட்டை மாற்றப் புறப்படுவாரா அல்லது மகனுக்கு மருத்துவரைப் பார்க்க ஓடுவாரா? நாளை எப்படியும் அவர்கள் கிளம்பிச்செல்ல மாட்டார்கள். கோக்காவுக்கு இதனால் மனமாற்றம் ஏற்படலாம் அல்லவா? கடவுளே வந்து, நீ வீட்டை விட்டு வெளியேறக்கூடாது என்று சொல்வதாக நினைக்கலாம் அல்லவா? இல்லையென்றால், சாதாரணமாக இருக்கும் குழந்தைக்கு ஏன் திடீரென்று உடல்நலம் சரியில்லாமல் போகவேண்டும்? ஒரு சில மணிகள் போதுமானதாக இல்லாமலும் இருக்கலாம். பிரதாத்மோகனின் மாமாவின் கடைசி மகன் ஒரு முறை அரை புட்டி ஹோமியோபதி மருந்தை விழுங்கியிருந்தான். என்ன நடந்தது? கடுமையான வயிற்றுவலி. ஆம். அளவுக்கதிகமாக போய்விடவும் கூடாது. பிரபாத்மோகன் பார்த்துக்கொள்ள வேண்டும். பிரபாத்மோகன் மருந்தின் ஒரு மணியைக் குழந்தையின் வாயினுள் வலுக்கட்டாயமாகச் செலுத்தினார். “தாது? மருந்து சாப்பிடுகிறாயா? மருந்து?” என்றார். அது இனிப்பாக இருந்தது. குழந்தை கையை நீட்டி அந்த புட்டியைப் பிடுங்கிக்கொண்டது. முகத்தில் வெற்றித்திகழ் சிரிப்பு. புட்டியை தன் நெஞ்சோடு அணைத்துக்கொண்டது. ஈதென்றுப் புரியாத அச்சம் பிரபாத்மோகனின் நெஞ்சைக் கவ்வியது. புட்டியைக் குழந்தையின் பிஞ்சு கைகளிலிருந்து பிடுங்கித் திருகி எடுத்தார். குழந்தை வீலென்று கதற ஆரம்பித்தது. அழட்டும். அவர் புட்டியை ஜன்னல் வழியாக வெளியே தூரத் தூக்கிப்போட்டுவிடவேண்டும் என்று கை ஓங்கினார். ஆனால் தன்னை கட்டுப்படுத்திக்கொண்டார். யாரும் பார்த்துவிட்டால்? இந்த புட்டியை இந்த நேரத்தில் யார் எரிகிறார்கள் என்று யாரேனும் வேவுபார்த்தால்? இல்லை, அதை வெளியே போடக்கூடாது. பிரபாத்மோகன் வெளியே போனார். பாட்டிலை நீர்த்தொட்டிக்குழாயின் அடியில் காட்டி அதில் தண்ணீரை நிரப்பி நிரப்பிக் கொட்டினார். கடைசி மணி மருந்தும் கரைந்து போகிற வரையில் கழுவி எடுத்தார். கொலை செய்த ஆதாரங்களை கடைசித்துண்டு வரை அழித்துவிடுவதுபோல மருந்தின் கடைசித்துளியும் கரைந்து செல்வதுவரை அங்கேயே நின்றார். வழித்தெடுக்கப்பட்ட புட்டியை மீண்டும் மருந்து டப்பாவுக்குள்ளேயே வைத்தார். தோற்கடிக்கப்பட்டவர் போல் அமலாவின் திசையில் குரல் கொடுத்தார். “அவனைக்கூட்டிப்போ. எழுந்துகொள்ள மாட்டேன் என்கிறான். அழுதுகொண்டிருக்கிறான்”, என்றார். * Posted in Uncategorized வாசகசாலை சிறந்த அறிமுக எழுத்தாளர் விருது Posted on December 26, 2020 by Suchitra வாசகசாலை விருது அறிவிப்பு இன்று வாசகசாலை அமைப்பின் சார்பாக கடந்த வருடம் யாவரும்/பதாகை வெளியீடாக வந்த “ஒளி” புத்தகத்திற்கு சிறந்த அறிமுக எழுத்தாளர் விருது வழங்கப்படுகிறது. விருதை நேரில் வாங்குவது சாத்தியமாகவில்லை. அதை ஒட்டி ஒரு சிறிய ஏற்புரை மட்டும் அரங்கில் வாசிக்கப்படுவதற்காக எழுதிக்கொடுத்தேன். ஏற்புரை வணக்கம். வாசகசாலை அமைப்பின் சிறந்த அறிமுக எழுத்தாளர் விருதை பெறுவதில் மகிழ்ச்சியை தெரிவித்துக்கொள்கிறேன். வாசகரின் உள்ளோத்தோடு உரையாட முடியும் என்பதுதான் எழுத்தாளருக்கு ஆகப்பெரிய மகிழ்ச்சி. அவருடைய ஆற்றல் வெளிப்படுவதும் தர்மம் நிறைவேறுவதும் அவ்வாறுதான். என் ஆரம்ப நூல் ஒன்று வாசகர் மத்தியில் கவனம் பெற்றதும் இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டதிலும் ஓர் எழுத்தாளராக என் இலக்குகள் சார்ந்து நம்பிக்கையும் பிடிப்பும் கூடுகிறது. இந்த நூலில் பலவிதமான கதைகள் இருப்பதாக வாசகர்கள் கூறுகிறார்கள். என் வரையில், இந்த நூலின் ஒவ்வொரு கதையும் என் தேடல் களத்தில் ஒரு முனையாக பாவிக்கிறேன். என் தேடல்களை எழுத்தாக்க சரியான வெளிப்பாடு முறைகளை கண்டரிந்து அவற்றை எழுத்தில் நிகழ்த்துவதே இனிவரும் காலத்தில் நான் செய்யும் பணியாக இருக்கப்போகிறது. இந்தப்பயணத்தில் வாசகர்கள் என்னுடன் வரவேண்டும் என்று விரும்பிக் கேட்டுக் கொள்கிறேன். விருது பெற்ற அனைவருக்கும் என் வாழ்த்துக்கள். வாசகசாலை அமைப்புக்கு நன்றி. Posted in Uncategorized Some notes on Venmurasu Posted on August 19, 2020 by Suchitra (Some notes, originally written on Twitter (Jul 16, 2020), here. Republished (Aug 13, 2020), here) Tamil writer Jeyamohan, whom I’ve translated in the past, has finished writing his novel series titled “Venmurasu” (The White Drum). The scope of the work is breathtaking. 26 separate standard fiction length novels, over 25000 pages in print, written over roughly 6.5 years. The author serialised the novels, a chapter a day, since 2014. The last chapter of the last novel was published last night. Venmurasu is written entirely in Tamil, a classical language of antiquity like Latin or Sanskrit, with a rich literary tradition, but still spoken today. It is based on the Indian epic, the Vyasa-Mahabharatha. For non-Indian readers, it’s a living story still narrated in oral and art forms, that’s centres on an Iron-age civil war in the Indo-gangetic plain. It depicts a time of great social, political and moral transition. In India, a period that held the seeds for the subsequent emergence of the Nandas and Mauryas and the rise of Buddhism. But it’s also a family saga, an internecine bloodbath between cousins; an investigation of dharma, righteousness; a philosophical text; a devotional text. It includes genealogies, mythologies, moral texts. Needless to say, it has all the inherent complexity that’s just ripe material for a novel. And indeed, narratives in the Mahabharatha (Mbh) have been novelised in literary form in many Indian languages over the past century. Off the top of my head – Mahasasmar (Narendra Kohli, Hindi), Parva (SL Bhyrappa, Kannada), Randamoozham (MT Vasudevan Nair, Malayalam), Yagnaseni (Pratibha Ray, Hindi), Yuganta (Iravati Karve, Marathi), Yayati (VS Khandekar, Marathi), Nithyakanni (MV Venkatram,Tamil) and additionally numerous serialisations and novelisations in English – Ashok Banker, Ramesh Menon, Chitra Banerjee Divakaruni, Kamala Subramaniam, Meenakshi Reddy Madhavan etc. Shashi Tharoor’s The Great Indian Novel sets the characters in the context of India’s freedom struggle .However, most of the stand-alone novels in this list present the epic from the view of one character (Randamoozham, Yagnaseni) or one sub-story (Yayati) or one perspective (Yuganta). They sacrifice breadth in favour of depth. Or they are serials with a mostly flat narrative structure, that adheres to the plot of the original epic. Or they are subversions of the original tales, but mostly again limited to one character or perspective, without sufficient space to allow the reader to live and dream. Venmurasu is different from all these previous attempts in multiple ways. In its scope, its formal aesthetics, and its vision. The grandeur and artistic merit that sets this work apart stems from these aspects. Broadly, what Venmurasu does to the Mbh is what Shakespeare did with the story of Donwald to create Macbeth, or what Wagner did with the Norse myths to create the Ring cycle. It refashions the original with artistic purpose to create a greater whole, a parallel, modern epic. Venmurasu is a modern literary text, a novel series or roman fleuve like Romain Rolland’s Jean Cristophe or Emilie Zola’s Les Rougon-Macquart. However Venmurasu differs in that each novel in the series has its own aesthetic, narrative form and vision. There are Tolstoyan multigenerational epics, romantic comedies, poetic novels in versified prose, philosophical novels, fantasies, travel and war novels The entire series traverses a whole gamut of characters, major, minor, mythical and invented, running into several hundreds. They abound with all the delight of novelistic detail – landscapes, histories, mythologies and genealogies, recipes and rituals, technical descriptions of iron-age ships, war implements and Chinese telescopes, forays into various philosophical, religious and artistic schools. Familiar tales are told and retold and subverted in a variety of voices, juxtaposed against each other to create new readings. Folk and subaltern tales, orthodox narratives, modern and ancient myths, women’s stories, children’s stories and animal stories in a single tapestry. They are layered with the main narrative, resulting in astonishing interpretations and insights into the original epic, that’s still living fabric in India. Then, this insight swings the reader’s gaze back into contemporary society, where much of the same tensions still exist. Arguably, the greatest thing about the novel series however is its vision. It is perhaps the vision at the heart of all Indian thought : the nature of suffering, and the possibility of liberation. That alone makes this work a uniquely Indian text. Venmurasu’s vision was perhaps first captured by Jeyamohan in a short story he wrote in the 90s, called Padma Vyuham (The Lotus Maze), written in almost the same aesthetic style. The story is about Subhadra’s grief over the death of her 16 year old son Abhimanyu in the Mbh war. Abhimanyu’s death came about because he did not know how to find his way out of the lotus maze. Subhadra is convinced that that is his fate. So she reasons that if she could somehow teach him that secret before he’s reborn, he’d be protected from such a fate in his next birth. She finds a rishi who can see through time, who tells her that Abhimanyu is already ready to be reborn in another womb. He shows her a lotus, rapidly closing even as he speaks, with two wriggling worms inside. She can talk to him before the petals close forever, he says. She looks at the two worms wriggling around each other, and asks the rishi, who is the other one. “That’s Brihatkayan, the former Kosala king,” he says. He had been killed by Abhimanyu in the war, but they would be twins in their next birth. Subhadra is horrified. “You brother is your mortal enemy, beware of him,” she cries out, even as the rishi reminds her of the lotus maze. But before she can get to the secret of the lotus maze, the petals close tight over the worms. Subhadra tries frantically to prise them apart, to no avail. Doubly thwarted, Subhadra laments her own fate, when her brother Krishna quietly asks her if she knew how to escape from her own maze. She is stopped short by the question and in a flash, the chain of events that she has set into motion unwittingly dawns upon her. The Lotus Maze’ encapsulates the themes that are played out to grand effect in Venmurasu – deterministic fate that links human lives, suffering that cycles over generations and births, and for most part, the utter incomprehensibility that baffles man in the face of such madness. The aesthetic lynchpin that holds the tale together is the symbol of the lotus maze, a tightly circular war formation, always in flux, that is easy to penetrate but highly difficult to escape from. In the story, the lotus maze becomes a symbol for fate itself. Thus a minor tale in the epic expands into a much grander theme. Venmurasu uses the same technique to much greater effect – over a 26-novel cycle, the canvas is much broader. The novel thus becomes a simulacra of life itself, but one that stretches our perceptions out Thus, this is not a novel about the Mbh, or a retelling, or even an alternative narrative. It is, like every great literary text, a parallel life, but one that uses imagery and archetypes from the Mbh to deepen and broaden the scope of its inquiry. Book lovers often have periodic obsessions – often discovering an author and reading all their works one after the other – or getting hooked onto a series and getting into fandom mode for years. People my age can relate to our obsession over Harry Potter in our teen years. With the books releasing every couple of years or so, there was pre-booking, braving long lines and often finishing the whole thing in two or three days only to call a friend and discuss all the highlights, open questions (and ‘ships). HP was no classic, but now I realise its ppeal was due to its faux classicism. Its archetypes and narrative tropes help to tell a compelling, eternal story, even as the milieu is utterly fresh. Venmurasu is literary fiction, but I’m amazed by how popular it is for such a niche work. I think it’s fundamentally because it just tells an amazing story. I started reading it in 2018, four years after it started coming out, and I have read 18 out of the 26 novels published so far. There are a few dozen people who followed along, reading a chapter a day, and have finished all of it. The fandom is thus fundamentally different, immersive, almost meditative in quality. The basic frame tale of the Mbh is also well-known, so the reading and discussions would often not be about what had/would happen, but how the tale was told. Like rasikas in a Carnatic concert discovering something new in the rendition well-heard kriti, or a connoisseur finding a nuance in a master batsman’s classic shot, the reading was often about the manodharma, creative interpretation. But the whole effect is rather surreal. One one hand we are immersed in the colours of individual tales and their interpretations. For example, the mythological tale of the competition between Kadru and Vinata is layered with the stories of Gandhari and Kunti. Such treatment deepens our feeling of the conflict at play, pulling our emotions in, keeping us invested in the play. On the other, even as we read, we are subliminally aware of the inexorable pull of fate that we are powerless to do anything about. In the grand picture, we are confronted with the immense bleakness of war, death, destruction and endless eternal suffering, in the face of which all former whims and rivalries pale. All this adds up to a sense that on one level, everything matters, all our passions and conflicts, truly and deeply, for they chase us through genealogical and mythical time – and we have no choice but to act through life soaking up all their colours, with all the intensity of children absorbed in play. But on the other hand we are fundamentally helpless handmaidens of these selfsame wills, and fate itself, so none of this can matter at all in any essential sense. We are left with a simultaneous sense of grandeur and emptiness, illusion and rude awakening, meaning and the lack of it, in the face of historical, social, political, moral and personal upheavals. The conundrum of life itself is evoked thus. (Venmurasu can be read in full, here) Posted in Uncategorized வைரமுத்துவும் தமிழ் இந்துவும் Posted on August 18, 2020 by Suchitra ஆசிரியர் குறிப்பு – அக்டோபர் 2018-ல் மீ டூ என்ற இயக்கத்தின் வாயிலாக, கலைத்துறை உள்ளிட்ட பல பொதுத்துறைகளில் இயங்கும் பெண் உறுப்பினர்கள், தங்கள் பணி நிமித்தமாக தங்களுக்கு நிகழ்ந்த பாலியல் தொந்தரவுகளை பகிர்ந்துகொண்டார்கள். இவ்வகை தொந்தரவுகளும் சிக்கல்களும் பெரும்பாலும் தனிமையில், சாட்சிகளில்லாமல் நடைபெறுபவை. நாசூக்காக நிகழ்த்தப்படுபவை. சட்டத்தின் முன்னால் நிறூபணம் செய்யக் கடினமானவை. ஆனால் பெண் ஊழியர்களின் வேலைச் சுதந்திரத்தை ஆழமாக குறிவைத்து முறியடிக்கும் வல்லமை கொண்டவை. இந்த அலையின் பகுதியாக பல பெயர்கள் வெளிவந்தன. கவிஞர் வைரமுத்து அவர்களின் பெயர் கிட்டத்தட்ட 13 வெவ்வேறு நபர்களால் சுட்டப்பட்டது. தன்னை விட வயதிலும் வாழ்வனுபவத்திலும் புரஃபெஷனலாகவும் இளைய இடத்தில் இருக்கும் பெண்களை இவர் குறிவைத்து வேட்டையாடியதாக குற்றச்சாட்டுகள் வெளிவந்தன. அதிகாரப்பூர்வமாக எந்தப் புகாரும் அளிக்கப்படவில்லை, ஆகவே எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. அதே நேரம், பெரும்பாலும், அவருடைய சக ஊழியர்களும் நண்பர்களும் பொதுவாக அவர் பணிப்புரியும் தமிழ்ச் சினிமா சூழலும் அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகளை பெரிதாக எடுத்துக்கொண்டதாகவோ, கேள்விக்கு உட்படுத்தியதாகவோ தெரியவில்லை. அப்படி செய்ய வேண்டிய நிர்பந்தமோ தார்மீகக் கடமையோ தங்களுக்கு உள்ளதா என்ற பரிசீலனையும் நடந்ததாகத் தெரியவில்லை. அதைப் பற்றிய விவாதங்களை நாசூக்காக தவிர்த்ததாகவே தோன்றுகிறது. ஆகவே இது ஒரு சிக்கலான பிரச்சனை. நமக்கு முன்னால் தனித்தனியாக இத்தனை பெண்களின் வாக்குமூலங்கள் இருக்கின்றன. அவை நம் சட்டத்துடன் உரையாடும் இடத்தில் இல்லை, நம் மனசாட்சியுடன் உரையாடும் வகையில் மட்டுமே உள்ளன. இந்த பிரச்சனையில் செய்யக்கூடியது, இது மறக்கப்படாமல் மீண்டும் மீண்டும் நம் கூட்டு மனசாட்சி முன்னால் திறந்து வைக்கப்படவேண்டும் என்பது மட்டும் தான். ஒரு வகையில் இவ்வகை சிக்கல்களை பொறுத்தவரை தீர்வுகள் இல்லாத இந்த நிர்பந்தமே நம் கையறு நிலையின் அத்தாட்சி. “நியாயமார்களே நியாயமார்களே” என்று பொது மனசாட்சி முன்னால் கைநீட்டி நியாயம் கோர வேண்டியதிருக்கிறது. போன மாதம் தமிழ் இந்துவில் வைரமுத்து அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு ஒரு சிறப்புப்பக்கம் வெளியிடப்பட்டது (இப்பொழுது நீக்கப்பட்டுள்ளது). அதன் கட்டுரைகள் அவர் பணி சார்ந்த புகழ்ச்சிக்கோவைகளாகவே இருந்தன. இந்த குற்றச்சாட்டுகளை பெயருக்காகக்கூட அந்த இதழ் குறிப்பிடவில்லை. இது சார்ந்த விவாதம் எந்தத் தமிழ் mainstream media விலும் நிகழ்ந்ததாகத் தெரியவில்லை. ஆகவே இந்த சிறப்புப்பக்கம் குறித்துத் தொடங்கிய விவாதம் பிரதானமாக இதை சுட்டிக்காட்டி, மீண்டும் இந்த குற்றச்சாட்டுகள் மீது வெளிச்சமும் விவாதமும் கொண்டுவர எத்தனித்தன. அதன் பகுதியாக எழுதப்பட்ட குறிப்புகள் இவை. முகநூலில் பகிர்ந்துகொள்ளப்பட்டன. இந்த வலைத்தளத்தை இலக்கியம், கலை, தத்துவம் குறித்த என் பகிர்வுகளை மட்டுமே வெளியிடும் இடமாக பேணவேண்டும் என்று நினைத்திருந்தேன். பொதுசமூக நிகழ்வுகளை, அரசியல் சார்ந்த கருத்துகள் வேண்டாம் என்றும். ஆனால் இந்த விவாதத்தை பொறுத்தவரை என்னை உந்துவது ஒன்று, ஒரு தார்மீகப் பொறுப்புணர்வு, அதைத் தட்ட முடியவில்லை. இரண்டு, குறிப்பாக கலைத்துறையில் இந்நிகழ்வுகள் தொடர்வதை பற்றிய என் தனிப்பட்ட ஆர்வம். கலைத்துறையைக் குறித்து ஒரு நாவல் எழுத வேண்டும் என்ற விருப்பம் எனக்கு உள்ளது. இந்நிகழ்வுகள் இத்துறையில் நிகழும் இன்றியமையாத ஆணவமோதல்களின் ஒரு வெளிப்பாடு. ஆகவே இதைக் கடந்துபோக முடியவில்லை. இந்தக் குறிப்புகளையும் இங்கே பதிவிட்டு வைக்கிறேன். பொதுவாழ்வில் இயங்கும் எல்லா ஆளுமைகளையும் ஒற்றைப்படையாக அணுகாமல் முழுமையாக தொகுத்தே பார்க்கவேண்டும் தான். வைரமுத்து அவர்களை ஒரு எடுத்துக்காட்டாக எடுத்தால் அவர் சினிமாப்பணிகளை, இலக்கிய இடத்தை, மேடைப்பேச்சை, தமிழ்க்கவிஞர் என்ற பொது அடையாளத்தை கருத்தில் கொள்ளாமல் அவர் மொத்த இடத்தை வகுக்க முடியாது. ஆனால் இந்த ஒட்டுமொத்தத்தில் அந்த பதிமூன்று நபர்களின் குற்றச்சாட்டு எங்கே நிற்கிறது, அதன் இடம் என்ன, அந்த வெளிச்சத்தில் அவர் பணிகளின் அர்த்தம் என்னவாகிறது, என்பது முக்கியமான கேள்வி. நம்முடைய ஊடகங்களை பார்த்தால், “அதனால் எதுவுமே ஆகவில்லை” என்று சொல்வதாகத்தான் புரிந்துகொள்ள முடிகிறது. அப்படித்தானா என்று கேள்விகேட்கும் முயற்சியாக எழுப்பப்பட்ட கேள்விகள், தர்க்கங்கள் இவை. – சுசித்ரா, 18.8.2020 வைரமுத்துவும் தமிழ் இந்துவும் – 1 இது வைரமுத்துவின் இலக்கியத் தகைமை சார்ந்த விவாதமா? வைரமுத்துவும் தமிழ் இந்துவும் – 2 கலைஞர்களும் ஒழுக்கமும் வைரமுத்துவும் தமிழ் இந்துவும் – 3 வைரமுத்து மீதான குற்றச்சாட்டு என்ன? சில்வர்ஸ்க்ரீன் இந்தியா இதழில் வெளியான கட்டுரை (ஆங்கிலத்தில், ஆசிரியர்: கிருபா கே) Posted in Uncategorized வைரமுத்துவும் தமிழ் இந்துவும் – 3. Posted on July 15, 2020 by Suchitra வைரமுத்து மீதான குற்றச்சாட்டு என்ன? — தன்னுடைய துறையில் வேலை பார்க்கும் ஒரு ஊழியரை, வேலை நேரத்தில், அவருடைய விருப்பமின்றி, பாலியல் தொந்தரவு செய்து வற்புறுத்தி, அது பலிக்காதபோது மிரட்டியும் இருக்கிறார். இதுதான் அவர் பெயரில் உள்ள குற்றச்சாட்டு. இதை ஒன்றல்ல, இரண்டல்ல, பதிமூன்று நபர்கள் வாக்குமூலமாகச் சொல்லியிருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் ஒரே ஜாதியை சேர்ந்தவர்கள் இல்லை. வெவ்வேறு பின்புலங்களைச் சேர்ந்தவர்கள். ஒருவருக்கொருவர் முன் தொடர்பு இல்லாதவர்கள். சிலர் பாடகிகள். சிலர் அவருக்கு சொந்தமான பெண்கள் விடுதியில் தங்கிப் படித்த நபர்கள். ஒவ்வொருவராகக் குறி பார்த்து நேரம் பார்த்து காத்து அணுகியிருப்பதாகத் தோன்றுகிறது. இது எந்தக் கலைச்செயல்பாட்டில் அடக்கம்? கவிதைக்கும் இந்தச்செயலுக்கும் என்ன தொடர்பு? பொய் சொல்கிறார்கள், இது சதிவேலை என்கிறார்கள் அவருக்கு வரிந்து கட்டி வருபவர்கள். சரி தான், அவர் மானத்தைக் காத்தாகவேண்டுமே, அப்படித்தான் சொல்வார்கள். ஆனால் சந்தேகம் என்று வந்துவிட்டதே? அதுவும் இத்தனை பல்குரல்தன்மையோடு? பெண் என்றால், இந்நேரத்திற்கு, ‘அப்படிப் பேச்சு எழாத விதமாக நீ நடந்திருக்க வேண்டும்’ என்று யாராவது அறிவுரை கூறியிருப்பார்கள். இவருக்கும் இதையே தான் சொல்லத் தோன்றுகிறது. ஒழுக்கக்கேடு, வெட்கக்கேடு. இப்படிப் பேச்சு வரும்படியாகவா உங்கள் நடத்தை இருந்திருக்கவேண்டும்? 🙂 சரி, குற்றம்சாட்டப்பட்டவரின் தரப்பில் இது வெறும் ஒழுக்கப்பிரச்சனையா? ஒழுக்கப்பிரச்சனை என்றால் அது அவர், மிஞ்சிப்போனால் அவர் குடும்பம் மட்டுமே சார்ந்தது. பாடகி சின்மயி முதலியோர் இந்தப்பிரச்சனைகளை வெளியிட்ட மீடூ இயக்கம் நடந்து இந்த அக்டோபர் வந்தால் இரண்டு வருடம் ஆகப்போகிறது. இவ்விரண்டு வருடங்களில் தனக்குத் தமிழ்ப்படங்களில் பாடும் வாய்ப்புகள் குன்றிவிட்டதாகவும், இப்பிரச்சனையைத் தொடர்ந்து டப்பிங் யூனியனிலிருந்து வெளியேற்றப்பட்டதால், தமிழ்ப்படங்களுக்கு டப்பிங் பேச வாய்ப்புகள் அரவே இல்லையென்றும் அவர் பதிவுசெய்திருக்கிறார். ஆக இது யாரோ தனியொரு ஆளின் ஒழுக்கம் சார்ந்தது அல்ல. அது அவன் பாடு. ஒரு கலைஞனின் காம ஈடுபாடோ, கட்டற்ற வாழ்க்கையமைப்போ அல்ல. அதுவும் அவன் பாடு. இது இன்னொருவரின் உரிமைகளை, வாய்ப்புகளைப் பரிப்பது. தன்னுடைய வெறியை தீர்த்துக்கொள்ளும் வேட்கையில், முன்னால் யார் இருக்கிறார், நம் செயலின் விளைவுகள் சம்பந்தப்பட்டவரை எந்தளவு பாதிக்கும் என்று சற்றும் அக்கறையில்லாது கூர்கெட்டத்தனமாகச் செயல்பட்டது தான் குற்றம். சின்மயியையோ, வேறெந்த பெண்ணையோ அடைய முயற்சித்ததால், மிரட்டியதால், வைரமுத்துவின் பணிகளுக்கோ கலைச்சயல்பாடுகளுக்கோ பெரிதாக எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை. ஆனால் ஒரு பெண்ணுக்கு, குறிப்பாகக் கலைத்துறையில் ஈடுபட எண்ணமுள்ள பெண்ணுக்கு, தன்னுடைய ஆரம்பகட்டத்தில் இப்படிப்பட்ட அனுபவங்கள் அவளை அந்தத்துறையிலிருந்தே துரத்தி அடிக்க வல்லது. ஒருவன் தொடர்ந்து தொந்தரவு கொடுக்கிறான் என்றால், அவனுடன் வேலை பார்க்க முடியாது. அல்லது சகித்துக்கொண்டு வேலை பார்த்தாகவேண்டிய கட்டாயம் இருந்தால் அது உருவாக்கும் மன உளைச்சல் சாதாரணமானதல்ல. ஒரு கலைஞன் தன் மனதின் இடைவெளிகளுக்குள் காற்றாய் உலவாமல் அசலாக எதனை வெளியே கொண்டுவருவது? கலை வெளிப்பாடு என்பதே கட்டற்றதாக இருக்கவேண்டும், அப்போதுதான் நிஜமானவை, ஆத்மார்த்தமானவை வெளிவரும் என்று எத்தனை பேச்சுக்கள் எழுகின்றன இங்கே! கலைஞன் என்பவன் வடிகட்டிகளில்லாமல் வெளிப்படையாகப் பேசுவான், கோபப்படுவான், ஆவேசமடைவான், இங்கிதமற்றவனாக இருப்பான், தன் இச்சைகளில் திளைப்பான் என்றெல்லாம் லட்சணம் கூறப்படுகிறதே. அப்போதுதான் அவன் கட்டற்ற படைப்பு மனநிலையில் இருப்பான் என்று நியாயங்கள் பேசப்படுகிறதே. இந்த அளவுகோல்கள் அத்தனை புனிதமானவையென்றால் அவை பெண் கலைஞர்களுக்கும் செல்லுபடியாக வேண்டும்தானே? மாறாக நம் சூழலில் பெண் கலைஞர்கள் ஒவ்வொரு நொடியும் இந்தக் காரணத்தால், தங்களை மனதார ஒடுக்கிக்கொள்ளவேண்டியுள்ளது. யாரிடம், எதை, எவ்வளவு, எப்படிப் பேசவேண்டும், எந்த உடையை எங்கு எப்படி அணிய வேண்டும், கொஞ்சம் பேதையாக நடந்துகொள்வதே இந்தச் சூழ்நிலையில் பாதுகாப்பானதா, குரலை சற்று உயர்த்தினால் அவன் கோபித்துக்கொள்வானா, அப்போதே இன்னும் கடுமையாக ‘நோ’ சொல்லியிருக்க வேண்டுமா, ‘நோ’ சொன்னாலும் ‘யெஸ்’ என்று எடுத்துக்கொள்கிறானே, நான் தான் இன்னும் நிதானமாக இருந்திருக்கவேண்டுமோ என்றெல்லாம் கணக்கு வைத்துக்கொண்டே இருந்தால் – கலை எங்ஙனம்? எழுதவோ பாடவோ படம் பிடிக்கவோ வரும் பெண்கள் ஆக்கப்பூர்வமாக எதையாவது செய்ய அத்துறையில் நிலைபெற்றவர்களுடன் உரையாடாமல் அது சாத்தியமாவதில்லை – இளம் ஆண்களைப்போலத்தான். ஆனால் என்னேரமும் தன் பாதுகாப்பை நோக்கிய கவனம் இருந்துகொண்டே இருந்தால் அவர்களால் இயல்பாக இருக்க முடியாது. இளமையும் கனவும் வேகமும் கொண்டு வருபவர்கள் ஆளும் பெயரும் தெரியாமல் காணாமற்போவதற்கு இவ்வகை அனுபவங்கள் பெரிய காரணம். நம்முடைய அரதப்பழைய கண்ணகி மாதவி டெம்பிளேட்டில் கலை ஈடுபாடு கொண்ட பெண்கள் எப்போதும் மாதவிகளாகவே பார்க்கப்படுகிறார்கள். இங்கு நிகழும் மொத்த உரையாடலும் இந்த ஊகத்தின் அடிப்படையிலேயே நடைபெறுகிறது. கலைஞனின் உரிமைகள், அவன் கலையை அளவிட எது அளவுகோல் என்று பொங்கி வரும் கவிஞர்கள், சின்மயி போன்ற ஒரு இசைக்கலைஞர் ஒரு குற்றச்சாட்டை முன்வைத்ததற்காக, ஒவ்வொரு நாளும் “நீ மட்டும் ஒழுக்கமா?” என்று கேட்கப்படுவதை என்றாவது எதிர்த்திருக்கிறார்களா? கலைஞர்களின் ஒழுக்க நிர்ணயங்களைப் பற்றி நீட்டி முழக்கும் ஆசாமிகள், கலைஞர்களின் அராஜக வாழ்வுகளைக் கொண்டாடும் குடிமைந்தர்கள், ஒவ்வொரு முறையும் ஒரு பாடகியின், நடிகையின், எழுத்தாளரின் ஒழுக்கம் கேள்விக்குள்ளாக்கப்படும்போது எங்கே போகிறது உங்கள் தர்க்கநியாயங்கள்? ஆண் கலைஞன் ஒழுக்கம்கெட்டவன், அயோக்கியன், காமவெறியன் என்று எப்படியும் இருக்கட்டும், அவன் கலைஞன், அவன் கலையைப்பார் என்கிறீர். பெண் கலைஞரோ முதலில் பெண். தன் கலைச்செயல்பாடு நிமித்தமாகச் சந்தித்த ஒருவர் தன்னைத் தொந்தரவுபடுத்தினாலும், அங்கே தான் கற்புடையவள் என்று தன்னை முதலில் நிறுபித்துக்கொள்ளும்படி நிர்பந்திக்கப்படுகிறாள். கலை கொண்டவருக்குக் கலை ஒன்றே கற்பு, காப்பு எல்லாம். ஆனால் நம் சமூகமோ ஒரு பெண் கலைஞர் ஒவ்வொரு நொடியும் தன் முந்தானையை விரித்து ‘நான் கற்புள்ளவள்! நான் கற்புள்ளவள்!’ என்று மடிப்பிச்சை கோரவேண்டும் என்று எதிர்பார்க்கிறது. எத்தனைப்பெரிய அவலம் அது. ஆகவேதான் கலைஞர், பாடகி சின்மயி ஒரு குற்றச்சாட்டைப் பொதுவில் கூறியதற்க்காக தனக்குக் கிடைக்கவேண்டிய வாய்ப்புகள் பறிக்கப்பட்டு ஒதுக்கிவைக்கப்படுகிறார். வைரமுத்துவின் பிறந்த நாள் வாழ்த்துக்களில் ஒரு கிளுகிளுப்புக்காக அவர் ‘டாக்’ செய்யப் படுகிறார். “ஏன் அப்போதே சொல்லவில்லை? உங்கள் இருவருக்கு நடுவே என்ன நடந்தது” என்று சமூக ஊடகங்களில் சரமாரியாகக் கேள்விக்கு உள்ளாக்கப்படுகிறார். மாறாக சின்மயி உட்படப் பலரால் குற்றம்சுமத்தப்பட்டவர் எந்தப் பாதிப்பும் அடையாமல் சகல அதிகாரங்களுடன் வலம் வருகிறார். பழைய ஆதரவுகள், தொடர்புகள், செல்வாக்குகள் அப்படியே நீடிக்கின்றன. பிரபல நாளிதழ் அவருக்கு முழுப்பக்க சிறப்பப்பகுதிகளை வெளியிட்டு அவர் மேம்பாட்டுக்கும் புகழுக்கும் உதவுகின்றன. அவருக்கு வக்காலத்து வாங்க சமூக ஊடகப் பிரபலங்கள், பின்னால் கட்சி ஆதரவு. இதில் உள்ள அதிகாரச் சமநிலையின்மை உங்களுக்குப் புரியவில்லை என்றால் கண்ணை மூடிக்கொண்டே தூங்குகிறீர்கள் என்று பொருள். கவனிக்க – இது அவர் ‘இலக்கிய இடம்’ சார்ந்த விவாதமே அல்ல. முழுக்க முழுக்க இப்படிப்பட்ட அயோக்கியத்தனத்தைச் சகித்து, வருடிக்கொடுத்து, circlejerk செய்யும் அதிகார ஆணவ வட்டங்கள் – தமிழ் இந்து, அவரை ஆதரிக்கும் கட்சிப்பின்னணிக்கொண்டவர்கள், ஃபேஸ்புக் அறிவுஜீவிகள் – சார்ந்த விமர்சனம். Posted in Uncategorized வைரமுத்துவும் தமிழ் இந்துவும் – 2. Posted on July 15, 2020 by Suchitra கலைஞர்களும் ஒழுக்கமும் — இந்த விவகாரத்தை ஒட்டி ஒரு கேள்வி மீண்டும் மீண்டும் எழுப்பப்படுகிறது. அவர் ஒரு புகழ்பெற்ற பாடலாசிரியர். கவிஞர். அவர் பங்களிப்பை கொண்டாடும் முகமாக ஒரு சிறப்புப்பக்கம் வெளியானால் என்ன? அவர் தனி வாழ்க்கை, ஒழுக்க நியமக்குறைகள், எப்படிப் பட்டதாகவென்றாலும் இருக்கட்டுமே? கலைஞர்கள் தாம் அராஜக வாழ்க்கைமுறை கொண்டவர்களாயிற்றே? அது அவருடைய கலைசார் பங்களிப்பை குறைப்பதில்லையே? பாப்லோ நெரூதா உள்ளிட்ட எத்தனையோ பெருங்கலைஞர்கள் செய்யாததையா வைரமுத்து செய்துவிட்டார்? அதற்காக அவர் கலைப்பங்களிப்பு இல்லாமல் ஆகிவிடுமா? – இவ்வாறு கேட்கிறார்கள். அதாவது – கலைஞன் என்பவன் சற்று காமவெறியனாகத்தான் இருப்பான். அதற்காக அவர் கலைப்பங்களிப்பை நிராகரிப்பாயா? – என்பதுதான் கேள்வி. இது இலக்கியத் தகைமை பற்றிய விவாதம் அல்ல என்று முன்பே சொல்லியாகிவிட்டது. இருந்தாலும், இங்குத் தெளிவுபடுத்த மற்றொரு அம்சம் இருக்கிறது. அது ஒரு கலைஞரின் தனிமனித ஒழுக்கத்துக்கும், அவர் கலை ஆகிருதிக்குமான உறவு. அந்தப்புள்ளியில் முன்னெடுத்து சில சொற்கள். * முதலில் ஒருவரின் தனிவாழ்க்கை ஒழுக்கத்தை முன்னிட்டு அவருடைய படைப்புகள் அளவிடப்படவேண்டும் என்று யாரும் சொல்லவரவில்லை. ஒருவர் எத்தனை அராஜகமான அலங்கோலமான தனிவாழ்வை மேற்கொண்டாலும், அதை வைத்துக்கொண்டு என்னதான் பாவலா செய்து போலிகெத்துக் காட்டி சுழல் வந்தாலும், அதனால் மட்டும் அவர் படைப்பாற்றல் மேம்பட்டுவிடுமா என்ன? மது, போதை, பாலியல் சுதந்திரம், யோகம், தாந்திரீகம், தியானம், அரசியல் எதுவாக வேண்டுமென்றாலும் இருக்கட்டும். அதில் ஈடுபடுவது அவரவர் தனி விருப்பம் சார்ந்தது. வினோதமான வாழ்க்கையமைப்புக்கும், அது சார்ந்த பாவனைகளுக்கும், படைப்பாற்றலுக்கும் நேரடியான சம்பந்தம் இல்லை. அளவுகோல் என்றால் அங்கு படைப்பு மட்டுமே செல்லுபடியாகும். இதை யாரும் மறுக்கவில்லை. * அப்படியென்றால் கலைஞனின் ஆளுமையும், பண்புக்குறைகளும் மாண்புக்குறைச்சல்களும் ரசிகனுக்கு ஒரு பொருட்டே கிடையாதா? பொருட்டுதான். நுண்ணுணர்வு கொண்ட ரசிகர்கள் தங்களைப் பாதித்த கலைக்கும், அதைப் படைத்த கலைஞனின் தனிப்பட்ட வாழ்வுக்குமான உறவை எப்போதும் பரிசீலிக்கக்கூடியவர்கள். ஒரு வகையில் இது மேலதிகமான வாசிப்பு. கலைஞனின் வாழ்வு படைப்பின் இலட்சியங்களுடன் முறண்படுவதனாலேயே ரசிகனுக்குள் பெரிய நகர்வுகள் அமைய வாய்ப்புள்ளது. போன வருடம் மீடூ விவகாரம் உலகெங்கும் சூடுபிடித்த சமயத்தில், The Paris Review சிற்றிதழில் ஒரு கட்டுரை வெளிவந்தது. “What do we do with the art of monstrous men?” என்ற அந்தக் கட்டுரை, எழுத்தாளர் கிளேர் டிடேரோவால் (Claire Diderot) எழுதப்பட்டது. அதில் அவர் கலையையும் கலைஞனையும் நம்மால் பிரித்தறிய முடியுமா என்ற கேள்வியை எழுப்புகிறார். நாம் ரசிக்கும், வழிபடும் மேன்மை பொருந்திய கலையாளுமைகள் பலரும் மோசமான, அருவருக்கத்தக்க மனிதர்களாக இருந்திருக்கிறார்கள். அவர்கள் கலையில் பேரழகு வெளிப்படும் அதே நேரத்தில் தனி வாழ்வில் கீழ்த்தனமாக வெளிபட்டிருக்கிறார்கள். இந்தச் சகதியிலிருந்தா அந்தத் தூய்மையான உண்மையான ஒன்று வெளியாகிறது என்று நுண்ணுணர்வுள்ள ரசிகன் அல்லல்படுகிறான். அந்தக் கலை நிகழ்வை இனி எவ்வாறு உள்வாங்கிக்கொள்வது, தனதாக்கிக்கொள்வது என்று துடிக்கிறான். “A man must be a very great genius to make up for being such a loathsome human being.” ஹெமிங்வேயின் காதலி மார்த்தா கெல்ஹார்ன் அங்கதமாகச் சொன்னது இது. மேதமை ஒருபக்கம். தனிமனிதனின் அருவருக்கத்தக்க நிலைப்பாடுகள், செயல்பாடுகள், மறுப்பக்கம். எப்படி ஒரு மேதையின் பங்களிப்பை அவர் தனிவாழ்வை வைத்து மதிப்பிடக்கூடாது என்று சொல்கிறார்களோ, அதே போல் அவர் தனிமனித அருவருப்புகளை அவர் மேதமையை வைத்துக் கழித்துவிடவேண்டும் என்று கோறுவதும் சரியாகப் படவில்லை. கலைப்பிரியர்களுக்கு இது சிக்கலான உணர்ச்சிதான். * என் பிரிய தால்ஸ்தாயே சிறந்த உதாரணம். அன்றைய, இன்றைய ஒழுக்கவியலில் வைத்து பார்க்கும் போது ஒழுங்கற்ற வாழ்வுகளை மேற்கொண்டவர் தான் அவர். தால்ஸ்தாயின் ஆக்கங்களிலேயே அது பதிவாகியிருக்கிறது. திருமணத்திற்கு முன் தன் நிலத்தில் வேலைசெய்த பெண்ணுக்கு பிள்ளையைக் கொடுத்து விலகிவிடுகிறார். மார்பில் சீழ்கட்டி வலியில் துடிப்பதால் பால் கொடுக்க முடியாமற்போன தன் மனைவியை நல்ல குடும்பத்துப்பெண்ணா நீ என்று ஏசுகிறார். பழமைவாதியாக, காமாந்தகராக, சகமனிதருடன் என்னேரமும் உரச்சலிடுபவராகவே அவர் இருக்கிறார். ஒரு மனிதனாக ஐந்து நிமிடம் அவரைச் சகித்துக்கொள்ளமுடியுமா என்று தெரியவில்லை. ஆனால் அவர் என்னுடைய எழுத்தாளர். என் ஆழத்தில், என் கற்பனையில் அவர் வகிக்கும் இடம் என்ன என்று நான் அறிவேன். அவர் ஆக்கங்களை அவர் தனிவாழ்வையோ, ஆளுமையையோ கொண்டு எவராலும் நிராகரிக்க முடியாது. அதே நேரம், அவருடைய தனிமனித நிலைப்பாடுகளை ஏற்றுக்கொள்வதோ, அக்கலைஞனின் மேதமைக்குக் கொடுக்கப்படும் ‘சின்ன விலை’ என்று நியாயப்படுத்துவதோ, ஏற்கத்தக்கதாகத் தோன்றவில்லை. பாதிக்கப்பட்ட ஒருவரிடம், ‘அவர் மேதை, ஆகவே அவர் கோணல்களைச் சகித்துக்கொள்’ என்று நான் ஒருநாளும் அறிவுறுத்த மாட்டேன். அந்த எண்ணத்தில் உள்ள அநீதியை அசிங்கமானதாக உணர்கிறேன். தல்ஸ்தாயின் குழந்தைக்குத் தாயான பெண் ஒரு நவீன வழக்குமன்றத்தில் தோன்றி அவர் செய்த செயலுக்கு நியாயம் கோரினால், அதை அவள் பெற வேண்டும் தானே? அவன் கலை ஆளுமை எப்படிபட்டதாக இருந்தாலும், அவன் செய்த செயல்களின் பலனை அனுபவிக்காமல் போனால் என்ன நியாயம் அது? இதனால் தால்ஸ்தாய் கலங்கமாட்டார் என்பது இதன் மறுபக்கம். எல்லா மகத்தான கலைஞர்களுக்கும், தங்கள் மீறல்களையும் சரிவுகளையும் நேருக்கு நேராக நோக்கிப் பரிசலிக்கும் மன அமைப்பு உள்ளது என்பது வரலாறு. தால்ஸ்தாயின் எழுத்தே அதற்குச் சான்று. அவர் எழுத்தில் உண்மை நிற்பதற்கும் அதுவே அடிப்படை விசை. * வைரமுத்து தல்ஸ்தோய் போன்ற மேதையல்ல. அவருக்கு ஆதரவாக வரும் குரல்களே அதை ஏற்றுக்கொள்வார்கள். தல்ஸ்தாய் போன்று தன் தனிவாழ்க்கையை மறுசிந்தனையில்லாமல் திறந்து வைக்கும் பேராண்மையும் அவரிடத்தில் இல்லை என்பது அடுத்தது. ஆனால் தால்ஸ்தாயாக இருந்தாலும் சரி, வைரமுத்துவாக இருந்தாலும் சரி. அவர்களுடைய தனிமனித ஒழுக்கத்தரத்தால் – அது வாசகருள் என்ன வகையான உணர்வுகளை உருவாக்கினாலும் – அவர்களுடைய படைப்புத்தரம் மேம்படவில்லை, குறையவுமில்லை. * இறுதியாக, வைரமுத்துவுக்கு எதிரான குற்றச்சாட்டு, அவர் ‘ஒழுக்கம்கெட்டவர்’ என்பதல்ல. அதெல்லாம் அவருக்கும் அவர் மனசாட்சிக்கும் இடையிலானது.. அவர் இலக்கியத்தகைமை அல்லது மேதமையும் இங்கே விவாதப்பொருள் அல்ல. அதற்கும் அவர் மீதுள்ள குற்றச்சாட்டுக்கும் சம்பந்தம் இல்லை. Posted in Uncategorized வைரமுத்துவும் தமிழ் இந்துவும் – 1. Posted on July 15, 2020 by Suchitra இது வைரமுத்துவின் இலக்கியத் தகைமை சார்ந்த விவாதமா? வைரமுத்து மீது பாலியல் தொந்தரவு சார்ந்த குற்றச்சாட்டுகள் சக கலைஞர்களால் முன்வைக்கப்பட்டுள்ள வேளையில், அவரைப் பற்றித் தமிழ் இந்துவில் அவர் பிறந்தநாளை முன்னிட்டு இரண்டு சிறப்புப் பக்கங்கள் வெளியிடப்பட்டன. அது அவரை கௌரவிக்கும், புகழும் விதமாக அமைந்திருந்தன. இதை பற்றி கவிஞர் பெருந்தேவியின் பதிவு வாயிலாக என் பார்வைக்கு வந்தது. எதிர்ப்பு எழுந்ததன் பெயரில் தற்போது அவை பின்வாங்கப்பட்டுள்ளன. தமிழ் இந்து ஒரு வெகுஜன பத்திரிக்கை. பல லட்சப்பிரதிகள் விற்பது. எல்லா தளத்து மக்களால் படிக்கப்படுவது. ஐந்து நிமிடம் பத்திரிக்கையைப் புரட்டிப்பார்க்கும் ஒருவருக்குள் ஓர் ஆளுமையின் இடம், மாண்பு, ஆதிக்கம் குறித்த ஒரு விரைவுச்சித்திரத்தை உருவாக்க வல்லது. வைரமுத்து அவர்களின் புலமையைப் பற்றிய சார்புகளற்ற ஆழமான திறனாய்வு விவாதம் ஒன்றும் இந்து தமிழில் நடைபெறவில்லை. அவரைக் கௌரவிப்பதே, பொதுச்சமூகத்தின் முன் அவர் இடத்தை மேலும் அடிக்கோடிட்டு சுட்டுவதே அந்தச் சிறப்புப்பகுதியால் செய்யக்கூடியது, அதுதான் செய்யப்பட்டது. புகழாரம், encomium தான் அது. இந்து தமிழ் சிறப்புப்பகுதியில் இடம்பெருவதொன்றும் இலக்கியத் தகைமைக்கான சான்றல்ல. வாழும் நவீனக் கவிஞர்கள் யாருக்காகவாவது (ஏன், கடந்த மார்ச் 15 மனுஷ்யபுத்திரன் பிறந்தநாள் கூடத் தாண்டிப்போனதே?) வருடா வருடம் சிறப்புப்பக்கம் வெளியிடுகிறதா என்ன? அல்லது தமிழ் இந்துவில் சிறப்பிக்கப்பட்டதனால் வைரமுத்துவின் இடம் தன் இடத்தை விடப் பெரியது என்று எந்த நவீனக்கவிஞரும் சொல்ல முன்வருவாரா? ஆகவே இது இலக்கியத் தகைமை சார்ந்த விவாதம் அல்ல. அப்படி ஆக்கப்படுவது இதன் மையப்பேச்சுப்பொருளிலிருந்து திசைநகர்வையே உருவாக்குகிறது என்று நினைக்கிறேன். மற்ற அஜெண்டாக்களை இதன்மூலம் விவாதமாக்கி தீர்த்துக்கொள்ளும் சந்தர்ப்பமல்ல இது. அவர் பாலியல் குற்றம் புரிந்ததாகக் குற்றம்சாட்டப்பட்டார் என்பதைவைத்து ஒரு கவிஞராக அவர் இலக்கியத்தகைமை தீர்மானமாகிறது என்பதல்ல இங்கே சங்கதி. அவர் பாலியல் குற்றம் புரிந்ததாகக் பதிமூன்று தனித்தனி நபர்களால் குற்றம்சாட்டப்பட்டார் என்பதைவைத்து ஒரு மனிதனாக, ஓர் ஆணாக அவர் சமூக மாண்பும் அந்தஸ்தும் மதிப்பிடப்படவேண்டும் என்பதே இங்கே கோரிக்கை. அவரைப்போன்றோருடைய அதிகார அராஜகங்கள் கேள்விக்குள்ளாக்கப்படவேண்டும். இதற்கும், அவருடைய இலக்கிய இடம் மற்றும் மேதமை (அல்லது அதன் இன்மை)க்கும் நேரடியாக எந்தத் தொடர்பும் இல்லை. Posted in Uncategorized Post navigation ← Older posts Newer posts → Search Recent Posts The conflict of values in Ponniyin Selvan – 1 [Film appreciation] October 9, 2022 மேலங்கி – ஐசக் தினேசன் (மொழியாக்க சிறுகதை) June 10, 2022 எழுத்தாளர் அருண்மொழிநங்கை – வல்லினம் நேர்காணல் January 1, 2022 Goat Milk Puttu – A.Muttulingam [Translation] November 30, 2021 டேவிட் அட்டன்பரோவின் ‘Dynasties’ தொடர் – ஒரு ரசனைக்குறிப்பு September 30, 2021 இறுதி யாத்திரை [சிறுகதை] May 10, 2021 படைப்பில் ஒருமை – ரவீந்திரநாத் தாகூர் [மொழியாக்கம்] – 2 May 1, 2021 படைப்பில் ஒருமை – ரவீந்திரனாத் தாகூர் [மொழியாக்கம்] – 1 April 28, 2021 Vanangaan [Translation] April 28, 2021 The creation of taste (or) Why I translate – an Indian writer’s translation manifesto April 25, 2021 Archives Archives Select Month October 2022 (1) June 2022 (1) January 2022 (1) November 2021 (1) September 2021 (1) May 2021 (2) April 2021 (5) January 2021 (2) December 2020 (1) August 2020 (2) July 2020 (3) November 2019 (2) October 2019 (2) May 2019 (1) April 2019 (3) March 2019 (1) December 2018 (2) June 2018 (1) May 2018 (1) April 2018 (1) December 2017 (2) October 2017 (1) July 2017 (1) October 2016 (2) June 2016 (2) March 2016 (1) February 2016 (1) February 2010 (1) November 2008 (1) September 2008 (1) August 2008 (1) June 2008 (1) May 2008 (1) January 2008 (1) December 2007 (2) September 2007 (1) Categories Categories Select Category கட்டுரை (6) கவிதை (2) சிறுகதை (12) சொந்த சரக்கு (1) மொழிபெயர்ப்பு (2) மொழியாக்கம் (3) Classic Essays (2) English (10) Fiction (14) Film (1) Fun (1) Interview (1) Literature (13) Music (1) Poetry (5) Prose (5) Short Story (5) Tamil (23) Translation (13) Uncategorized (17)
தெற்கில் உள்ள வட கொரியாவில் இருந்து வெளியேறியவர்கள், எல்லையில் பலூன்கள் மிதப்பதாகவும், மருந்துகள், பணம் மற்றும் பிரச்சார செய்திகளை எடுத்துச் செல்வதே வடக்கில் கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கான காரணம் என்றும் பியோங்யாங்கின் குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ளனர். இலவச வட கொரியாவுக்கான போராளிகளின் நிறுவனர் DW இடம் பேசுகையில், பியோங்யாங்கின் கூற்றுக்கள் “முட்டாள்தனம்” என்றும், தொற்றுநோயைக் கையாள்வதில் ஆட்சியின் திறமையின்மை மற்றும் குடிமக்களுக்கான மருந்துகளின் முக்கியமான பற்றாக்குறை ஆகியவற்றிலிருந்து பழியைத் திசைதிருப்பும் முயற்சி என்றும் கூறினார். வீரியம் மிக்க காய்ச்சல்’ வட கொரிய சுகாதார அதிகாரிகள் தங்கள் முதல் கொரோனா வைரஸை மே 12 அன்று ஒப்புக்கொண்டனர், இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி நாட்டின் எல்லைகளை சீல் வைத்த பிறகு, வைரஸ் நாட்டில் காலூன்றுவதைத் தடுக்கும் முயற்சி என்று கூறியது. அப்போதிருந்து, கிட்டத்தட்ட 25 மில்லியன் வழக்குகள் பதிவாகியுள்ளன, இருப்பினும் சில நோயாளிகள் மட்டுமே அதிகாரப்பூர்வமாக வைரஸுக்கு சாதகமாக சோதனை செய்துள்ளனர். மே 19 அன்று, அரசு ஊடகம் 262,270 புதிய அடையாளம் தெரியாத “காய்ச்சல்” மற்றும் ஒரு இறப்பு எண்ணிக்கையை அறிவித்தது, அதிகாரப்பூர்வ இறப்பு எண்ணிக்கையை 63 ஆகக் கொண்டு வந்தது. மே 15 நிலவரப்படி, பியாங்யாங்கில் 240,459 நோயாளிகள் “வீரியம் மிக்க வைரஸுக்கு” சிகிச்சை பெற்றுள்ளனர் – நகரத்தின் மக்கள்தொகையில் சுமார் 7%, கொரிய மத்திய தொலைக்காட்சி தெரிவித்துள்ளது. ஏப்ரல் பிற்பகுதியில் இருந்து அதன் 4.77 மில்லியன் காய்ச்சல் நோயாளிகளில் 99.98% பேர் முழுமையாக குணமடைந்துள்ளனர், ஆனால் வெளிப்படையான சோதனை இல்லாததால், நேர்மறை சோதனை செய்தவர்களுக்கான எந்த தரவையும் வெளியிடவில்லை என்று பியோங்யாங் கூறுகிறது. ஜூலை 1 ஆம் தேதி, வட கொரிய அதிகாரிகள் வடக்கில் தொற்றுநோய்க்கான மூலத்தைக் கண்டுபிடித்ததாக அறிவித்தனர், நோய்த்தொற்றின் வழியை இராணுவமயமாக்கப்பட்ட மண்டலத்திற்கு வடக்கே சுமார் 10 கிலோமீட்டர் (6 மைல்) தொலைவில் உள்ள சிறிய கிராமமான இபோ-ரி வரை கண்டறிந்தனர். கொரிய தீபகற்பத்தை பிரிக்கிறது. காற்றினால் வரும் அன்னிய பொருட்கள் வட கொரிய அரசு ஊடகம் நாட்டில் COVID-19 வெடித்ததற்கு “காற்றால் வரும் அன்னிய விஷயங்கள்” மற்றும் தெற்கின் எல்லைக்கு அருகில் தரையிறங்கியது. கொரிய மத்திய செய்தி நிறுவனம், எல்லைக்கு அருகில் உள்ள பொருட்களுடன் தொடர்பு கொண்ட 18 வயது சிப்பாய் மற்றும் ஐந்து வயது குழந்தை ஆகியவை வெடித்ததற்கான ஆதாரம் என்று கூறியது. அரசு நடத்தும் ரோடாங் சின்முன் செய்தித்தாள், சிப்பாய் மற்றும் குழந்தை “ஏப்ரல் மாதம் Ipho-ri இல் ஒரு முகாம் மற்றும் குடியிருப்பு குடியிருப்புகளுக்கு அருகில் உள்ள மலையில் அன்னிய விஷயங்களுடன் தொடர்பு கொண்டனர்” என்று எழுதியது. “அன்னிய விஷயங்கள்” மற்றும் “பிற காலநிலை நிகழ்வுகள் மற்றும் பலூன்கள்” ஆகியவற்றுடன் “விழிப்புடன்” கையாளுமாறு குடிமக்களை பத்திரிகை வலியுறுத்தியது. “அன்னிய விஷயங்கள்” என்பது தெற்கிலிருந்து எல்லைக்கு அனுப்பப்பட்ட பலூன்களைக் குறிக்கிறது. பலூன்கள் கொரோனா வைரஸை மாற்றும் திறன் கொண்டவை என்ற கூற்றை மருத்துவ நிபுணர்கள் நிராகரித்துள்ளனர். தென் கொரியாவில் இருந்து வரும் பலூன்களுக்கு பியாங்யாங் ஏன் பயப்படுகிறது 54 வயதான பார்க் சாங்-ஹாக், 2000 ஆம் ஆண்டில் வடக்கில் இருந்து தப்பி ஓடியவர் மற்றும் இலவச வட கொரியாவுக்கான போராளிகளின் நிறுவனர் ஆவார், காற்று தவறான திசையில் வீசியதால், ஏப்ரல் தொடக்கத்தில் தனது குழு எல்லையில் பலூன்களை அனுப்பவில்லை என்று கூறுகிறார். “நாங்கள் இந்த ஆண்டு இதுவரை ஏழு முறை பலூன்களை அனுப்பியுள்ளோம், மேலும் எதிர்காலத்தில் மேலும் ஏவுதல்களை நாங்கள் திட்டமிட்டுள்ளோம்” என்று பார்க் DW இடம் கூறினார். கடைசியாக ஜூலை 6 ஆம் தேதி, ஹீலியம் நிரப்பப்பட்ட 20 பெரிய பலூன்கள் சியோலுக்கு மேற்கே ஒரு தளத்தில் இருந்து 30,000 வைட்டமின் சி மாத்திரைகள், காய்ச்சலைக் குறைக்க 70,000 மாத்திரைகள் மற்றும் 20,000 முகமூடிகளை எடுத்துச் சென்றன. பலூன்கள் பலூன்களால் வைரஸ் பரவுகிறது என்ற பியோங்யாங்கின் கூற்றை மறுத்து, தாங்கள் எடுத்துச் செல்லும் மருந்துகளுக்கு தங்களை உதவுமாறு மக்களை ஊக்குவிக்கும் துண்டுப் பிரசுரங்கள் மற்றும் பதாகைகள் அவற்றின் கீழே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. பதாகைகளில், “சீனாவில் இருந்து கொடிய தொற்று நோயை பரப்பி, வட நாட்டுக்கு எதிரான துண்டுப் பிரசுரங்கள் மீது பழியைப் போட்ட பாசாங்குக்காரரான கிம் ஜாங் உன்னைக் கண்டித்தோம்” என்று எழுதப்பட்டிருந்தது. “அவர்கள் பலூன்கள் ஆபத்தானவை என்று மக்களுக்குச் சொல்கிறார்கள், ஏனெனில் மக்கள் அவற்றை எடுத்து பிரச்சார துண்டுப் பிரசுரங்களைப் படிப்பதை அவர்கள் விரும்பவில்லை” என்று பார்க் கூறினார். “போதுமான மருந்து அல்லது சுகாதாரப் பாதுகாப்பு இல்லாததால், வைரஸ் எவ்வாறு பரவியது என்பது பற்றிய உண்மையை மக்கள் சிந்திக்கவும் மறைக்கவும் விரும்புவதை அவர்கள் கட்டுப்படுத்த விரும்புகிறார்கள்.” பழிவாங்கும் கவலைகள் பலூன்கள் பியோங்யாங்கின் கவனத்தை ஈர்த்துள்ளன, வாராந்திர டோங்கில் ஷின்போ ஏவுதலைக் கண்டித்து, ஜூன் 2020 இல் எல்லை நகரமான கேசோங்கில் நடந்த வடக்கு-தெற்கு தொடர்பு அலுவலகத்தின் “அழிவைத் தாண்டிவிடும்” என்று எச்சரித்தது. முன்னதாக, கிம் ஜாங் உன் ஆட்சி, எல்லையைக் கடக்க பலூன்களை ஏவுவதைக் கண்டறிந்தால், எல்லையைத் தாண்டி துப்பாக்கிச் சூடு நடத்தப்படும் என்று எச்சரித்தது. சியோலில் உள்ள கொரியா பல்கலைக்கழகத்தின் சர்வதேச உறவுகளின் பேராசிரியரான அஹ்ன் யின்ஹே கூறுகையில், “கிம் ஜாங் உன்னை துண்டுப் பிரசுரங்கள் எப்போதும் விமர்சிப்பதால் அவர்கள் இதை மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்கிறார்கள், மேலும் இது வட கொரியாவில் ஏற்றுக்கொள்ளப்படாது. “அவர்கள் மிகவும் உணர்திறன் உடையவர்கள் மற்றும் அவர்களின் ஆளும் குடும்பத்தின் மீதான எந்தவொரு தாக்குதலும் தேசத்துரோகமாகக் கருதப்படுகிறது. “கடந்த காலங்களில் அவர்கள் பல சந்தர்ப்பங்களில் அச்சுறுத்தல்களை விடுத்துள்ளனர், ஆனால் அவர்கள் உண்மையில் எல்லையிலும் தெற்கிலும் துப்பாக்கிச் சூடு நடத்தவில்லை, எனவே அந்த நிலைமை தொடரும் என்று நம்புவோம்,” என்று அவர் கூறினார். “பிரச்சனை என்னவென்றால், அவை மிகவும் கணிக்க முடியாதவை, மேலும் அவை நிச்சயமாக ஏவுதளங்களில் சுடாது என்று சொல்ல முடியாது. நாம் தான் நம்ப வேண்டும்.” பார்க், “தொடர்ந்து பலூன்களை அனுப்பவும், வடக்கில் உள்ள மக்களுக்கு உண்மையைச் சொல்வதாகவும்” கூறினார். “நான் நிறுத்துவேன், ஆனால் வட கொரியா மக்கள் கிம் ஜாங்-உன் மற்றும் அவரது குடும்பத்தினரிடமிருந்து விடுவிக்கப்பட்டால் மட்டுமே.”
எஸ்சிஓ என்பது இணைய மார்க்கெட்டிங் ஒரு முக்கிய அம்சமாகும், மேலும் இது ஒவ்வொரு நாளும் பெரியதாகவும் சிக்கலானதாகவும் வருகிறது. எஸ்சிஓ பற்றி எல்லாவற்றையும் அறிந்திருப்பதாக யாரும் கூற முடியாது, எனவே நீங்கள் தொடங்கினால் அதைப் பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்வதைப் பற்றி கவலைப்பட வேண்டாம். உங்கள் வலைத்தளத்தை நீங்கள் சிறப்பாக மேம்படுத்தினால், தேடுபொறிகளால் அதிக மதிப்பெண் பெற வேண்டும், மேலும் உங்கள் வணிகத்தின் ஆன்லைன் இருப்பின் அதிக நன்மைகளும் ஒரு விஷயம் நிச்சயம். எனவே, மிகவும் அடிப்படை எஸ்சிஓ நடைமுறைகள் யாவை? மெட்டா குறிச்சொற்கள் உங்கள் பக்கங்களைத் தேடுபவர்களுக்கு விவரிக்கின்றன என்று செமால்ட் எஸ்சிஓ நிபுணர் நடாலியா விளக்குகிறார். அவர்கள் சிறந்த சொற்களையும் விளக்கத்தையும் கொண்டிருக்க வேண்டும். விளக்கமான மற்றும் உகந்த மெட்டா குறிச்சொற்கள் உங்கள் தளத்தை தேடுபொறி முடிவு பக்கங்களில் (SERP கள்) பட்டியலிடப்படுவது மட்டுமல்லாமல், உங்கள் பழைய தளங்கள் எவை என்பதை நினைவில் கொள்வதையும் எளிதாக்கும். இருப்பினும், கூகிள் போன்ற தேடுபொறிகள் குறியீட்டுக்கு மெட்டா குறிச்சொற்களைப் பயன்படுத்துவதில்லை என்பதைக் கவனத்தில் கொள்வது நல்லது. தேடுபொறிகளுக்காக அல்லாமல் மனிதர்களுக்கான சிறந்த மெட்டா குறிச்சொற்களை எழுதுங்கள். வாசகர்கள் கிளிக் செய்யும் குறிச்சொற்களை உருவாக்கவும், ஏனெனில் அவர்கள் தேடுவதோடு இது தொடர்புடையது. "உள்ளடக்கம் ராஜா." இந்த பிரபலமான எஸ்சிஓ தொடர்பான சொற்றொடரை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். உங்கள் பார்வையாளர்களுக்கு சிறந்த உள்ளடக்கத்தை உருவாக்குவதற்கான ஆரம்ப வழிகாட்டுதல்களில் இதுவும் ஒன்றாகும். மனிதர்களுக்கும் தேடுபொறிகளுக்கும் சிறந்த உள்ளடக்கம் உயர் தரமானதாகவும் தனித்துவமாகவும் இருக்க வேண்டும். இது உங்களுடன் இணைக்க பிற தளங்களை ஈர்க்கிறது, எனவே பல பின்னிணைப்பு வாய்ப்புகளை உங்களுக்கு வழங்குகிறது. உங்கள் வாசகர்களுக்கு அவர்கள் விரும்புவதை துல்லியமான, தெளிவான மற்றும் துல்லியமான வழியில் வழங்குங்கள். உங்கள் தளத்திற்கு ஓடுவதையும், அவர்களது நண்பர்களைக் குறிப்பிடுவதையும் தடுக்கும் எதுவும் இல்லை. நீங்கள் தயாரிப்புகள் அல்லது சேவைகளை விற்கிறீர்கள் என்றால், உங்கள் தளத்திற்கு அதிகமானவர்களைப் பெறுவது ஒரு முக்கியமான இடைநிலை குறிக்கோள். உங்கள் தளம் எப்போதும் உள்ளடக்கத்தில் நிறைந்ததாக இருக்கும்போது, அந்த நோக்கம் ஒருபோதும் உங்கள் மிக முக்கியமான பிரச்சினைகளில் ஒன்றாக இருக்கப்போவதில்லை. உங்கள் உள்ளடக்கத்தை உருவாக்கும்போது, முக்கிய வார்த்தைகளை நன்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள். உங்கள் தலைப்புகள், தலைப்பு குறிச்சொற்கள், நங்கூரங்கள் மற்றும் பிற பகுதிகளில் முக்கிய வார்த்தைகளை எழுதுதல் முழுவதும் பரப்பவும். உயர்தரத்தை எவ்வாறு உருவாக்குவது என்பதைக் கற்றுக்கொள்வதில் நீங்கள் அதிக முயற்சிகளை முதலீடு செய்யலாம், மேலும் அந்த முயற்சிகளிலிருந்து நீங்கள் நிச்சயமாக பெரிதும் அறுவடை செய்வீர்கள். .htaccess சரியாக அமைக்கப்பட வேண்டும். அமைப்பை நீங்களே செய்யலாம் அல்லது உங்களுக்காக அதைச் செய்ய ஒரு நிபுணரைப் பெறலாம். உங்கள் URL எப்படி இருக்க வேண்டும் என்று நீங்கள் முடிவு செய்தவுடன், அந்த வடிவமைப்பில் ஒட்டவும். உங்களிடம் www அல்லது www அல்லாத URL கள் மட்டுமே இருக்க முடியும், இதனால் Google உங்கள் பக்கங்களை நகல்களைக் கொண்டிருக்கவில்லை. உங்களிடம் இரண்டு URL வடிவங்களும் இருந்தால், கூகிள் உங்களுக்கு அபராதம் விதிக்காது, ஆனால் நீங்கள் www URL களில் இருந்து www அல்லாத URL களுக்கு திருப்பி விட வேண்டும் (இது எளிதானது). "Www அல்லாத URL களுக்கு கோரிக்கைகளை திருப்பி விடுதல்" போன்ற ஒன்றை நீங்கள் தேடலாம் மற்றும் நீங்கள் செய்ய வேண்டிய அனைத்தையும் கற்றுக்கொள்ளலாம். உங்கள் robots.txt கோப்பை சரியாக உள்ளமைக்க வேண்டும். இந்த சிறிய உரை கோப்பு உங்கள் தளத்தின் வீழ்ச்சியை ஏற்படுத்தக்கூடும் என்பதைக் கேட்க ஆச்சரியமாக இருக்கும். நீங்கள் 'வலம்' வர விரும்பாத பக்கங்களில் கூகிளின் கிராலர் மற்றும் பிற ரோபோக்களை ஒரு robots.txt கோப்பு வழிகாட்டுகிறது. தேடுபொறிகளால் படங்களை பட்டியலிட விரும்பவில்லை என்றால், அவற்றைத் தடுக்க உங்கள் robots.txt கோப்பைப் பயன்படுத்துகிறீர்கள். உங்கள் robots.txt கோப்பை உள்ளமைக்கும் போது பிழை செய்ய விரும்பவில்லை என்பது தெளிவாகிறது. ஒரு எளிய தவறு உங்கள் மிக முக்கியமான வலைப்பக்கத்தைத் தடுத்து வலையிலிருந்து விலக்கி வைக்கக்கூடும். இவை மிகவும் அவசியமான எஸ்சிஓ நடைமுறைகள் மற்றும் அவை அனைத்தும் ஆன்-சைட் எஸ்சிஓ நடைமுறைகள் என வகைப்படுத்தப்படுகின்றன, மேலும் பதவி உயர்வு மற்றும் பின்னிணைப்புகளை உருவாக்குதல் போன்ற பிற ஆஃப்-சைட் நடைமுறைகள் உள்ளன. பொதுவாக, நீங்கள் ஆன்-சைட் எஸ்சிஓ உடன் தொடங்கி பின்னர் முழுமையாக உகந்த வலைத்தளத்தை உருவாக்க ஆஃப்-சைட் நடைமுறைகளை உருவாக்கலாம்.
சி.ஆர்.பி.எப்.,ல் 10ம் வகுப்பு முடித்தவருக்கு வாய்ப்புகள் உள்ளனவா? இதில் தேர்வு செய்யப்படும் முறை எப்படி? பிளஸ் 2 முடித்துள்ள நான் அடுத்ததாக ஓட்டல் மேனேஜ்மென்ட் மற்றும் ரீடெயில் இவற்றில் எந்தத் துறையை தேர்வு செய்வது என்பதில் குழப்பமடைந்துள்ளேன். உதவும். ஸ்பெஷல் கிளாஸ் அப்ரென்டிசஸ் தேர்வு பற்றிக் கூறுங்கள்? இ-காமர்ஸ் பிரிவில் பட்டப்படிப்பு நடத்தப்படுகிறதா? எங்கு படிக்கலாம்? கேம்டிஸ்சைனிங் படிப்புகளை எங்கு படிக்கலாம்? மேலும் ஆசிரியர்கள் தேவை Wanted: Faculty on contract basis for Marine Engineering. Apply on or before 16-... Posted On :05-12-2022 பேராசிரியர், இணை பேராசிரியர், உதவி பேராசிரியர் தேவை Wanted: Professors in Natural Products, Assistant Professors in Natural Products... Posted On :30-11-2022 பேராசிரியர், இணை பேராசிரியர், உதவி பேராசிரியர் தேவை Wanted: Professors, Associate & Assistant Professors in the department of Archit... Posted On :29-11-2022 பேராசிரியர், இணை பேராசிரியர், உதவி பேராசிரியர் தேவை Wanted: Professors, Associate & Assistant Professors in the Department of AI & D... Posted On :26-11-2022 ஆசிரியர்கள் தேவை Wanted: Faculty for Amity Institute of Hospital Administration, Amity University... Posted On :26-11-2022
மன்னார் மறைமாவட்ட ஆயர் பிடெல்ஸ் லயனல் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை உள்ளிட்டகுழுவினர் இன்று (16) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்தனர். மன்னார் காணிப் பிரச்சினைகள் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதியிடம் விளக்கமளிக்கப்பட்டதுடன், அது தொடர்பில் கவனம் செலுத்திய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அப்பிரச்சினைகளுக்கு தீர்வுகாண உடனடியாக நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தார். மடு யாத்திரைக்கு வரும் பக்தர்களுக்கு தேவையான வசதிகளை செய்து தருவது தொடர்பிலும் விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது. இந்நிகழ்ச்சியில் அருட்தந்தை ஜொய்ஸ் பெப்பி சொசாய் (Joyce Peppi Sosai Santia) அருட்தந்தை ஆண்டனி சொசாய் (Antony Sosai) உள்ளிட்ட அருட்தந்தையர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜெயவர்தன ஆகியோரும் கலந்து கொண்டனர். Tags Local News 0 Comments வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் : 1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். 2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
sex stories in tamil அந்த சம்பவத்திற்கு பின் என்னால் நிம்மதியாக வேலை பார்க்கவும் முடியவில்லை. எல்லாம் என்னுடைய பலவீனம் எண்டு தெரிந்தாலும் எப்படி பெண்டாட்டியை தன் சொந்த தகப்பனுடன் ஓக்க அனுமதிக்க முடியும். ஆனால் அவர்களின் ஓழ் விளையாட்டுக்கள் எல்லை மீறி போயிருந்தாலும் அவள் நான் தொட்டு தாலி கட்டிய பொண்டாட்டி அவளை நேரடியாக கண்டிக்கவும் முடியாது அதைப்போல் அப்பாவுடனும் நேரடியாக கண்டிக்க முடியாது. இப்படியேயும் விடவும் முடியாது .இது மிகவும் நெருக்கடியான நிலை . அடுத்த நாள் மதிய உணவில் கூட மாலினி அப்பாவை விழுந்து விழுந்து கவனித்தாள் நான் எதிரில் இருப்பதால் கண்களால் பேசிக்கொண்டனர். ஓழ் சுகத்துக்காக பெண்கள் ஒரேயடியாக இப்படி மாறி விடுகின்றனரே என்று நினைக்கும் போது வெறுப்பாக இருந்தது. அன்று இரவு உணவை எடுத்து விட்டு உறக்கத்துக்கு தயாரானோம். இன்று எப்படியாச்சும் இருவரையும் கையும் களவுமாக பிடிக்க வேண்டும் எண்டே தூங்குவது போல் நடித்தேன். இரவு 10.45 இருக்கும் மாலினி படுக்கையால் எழுந்தால் என்னை தூங்க்கி விட்டேனா என்று பார்த்தாள். தாலியை கழட்டி டிராயரின் மேல் வைத்து விட்டு , என்னை மன்னிச்சிருங்க எண்டு மெதுவான குரலில் சொல்லி விட்டு மெதுவாக ரூம் கதவை திறந்தால் அவள் மெதுமெதுவாக சென்றால் நான் மெதுவாக எழுந்து பூனை போல் பின் தொடர்ந்தேன். மாலினி பாத்துரூமுக்கு சென்றாள். ஓழ்க்கும் முன் அனேகமான பெண்கள் புண்டை குண்டியை நல்லா கழுவி விட்டு தான் ஓக்க போவார்கள். மாலினி வரும் முன் அப்பாவின் ரூமுக்குள் போனேன் ஆனால் அங்கே அவர் நல்லா தூங்க்கிட்டு இருந்தார். மாலினி பாத்துரூமில் இருந்து வெளியே வரும் சத்தம் கேக்க , என்ன செய்வதெண்டு புரியவில்லை உடனடியாக கட்டிலின் அடியில் ஒழிந்து கொண்டேன் .என் அப்பாவின் அறை முன் சென்ற மாலினி அக்கம் பக்கம் தயக்கத்தோடு பார்த்து விட்டு உள்ளே வந்தாள். உள்ளே வந்த மாலினி கட்டிலருகில் வந்து நிண்ட போது அவளின் கால்கள் தான் தெரிந்தது. வந்து நிண்ட அடுத்த நொடியே மாலினி நைட்டிய கழட்டி கீழே போட்டாள் நைட்டி என் கைக்கெட்டும் தூரத்தில் இருந்தது. மாலினி கட்டிலின் மேல் ஏறிக்கொண்டால் அருகே இருந்த முகம்பார்க்கும் பெரியகண்ணாடியில் அவள் சிவப்பு நிற பாண்டீஸ் சிவப்பு பிரா அணிந்திருப்பது தெரிந்தது. படுத்து தூங்கிக்கொண்டிருக்கும் மாமானாரை டிஸ்ரொப் பண்ணாமல் அவர் சுன்னி உடன் விளையாட தயாரானால் மாலினி மெதுவாக இரண்டு காலுக்கிடையில் மண்டியிட்டு லுங்கியை தூக்கிவிட்டு மெதுவாக சுன்னியை ஏக்கத்துடன் தடவி கொடுத்தாள் பின் முகத்தை சுன்னி வைத்து முகர்ந்தால் ஒரு கையால் புண்டைய தேய்க்க ஆரம்பித்தாள். மெதுவாக தன்னுடைய மாமனாரின் கொட்டையை நாக்கால் நக்கி கொடுத்தாள். அப்பா பூழ் சற்றே விறைத்து எழும்ப ஆரம்பித்தது என்னுடையதும் தான். மெதுவாக ஒரு கையால் சுன்னியை பிடித்து உருவி கொடுத்தாள். அப்படியே புன் தோலை இழுத்து பிடித்து கொண்டு தன் மாமனாரின் சிவந்த ஆண்மை தண்டின் மொட்டில் தன்னுடைய மென்மையான உதட்டால் முத்தம் கொடுத்தாள் , எனக்கு கிடைக்க வேண்டிய சுகங்கள் என்னுடைய பலவீனத்தால் இப்போது அப்பாவுக்கு கிடைத்து கொண்டிருக்கின்றதே என்று கவலைப்பட்டுக்கொண்டேன். மாலினியே அடுத்த கட்டத்துக்கு போனால் தன்னுடைய நுனி நக்கால் பூலின் ஓட்டையை நக்கினால் அப்படியே பூலின் மொட்டை ஒரு சுத்து சுத்தி நக்கி எடுத்தாள் .கண்ணை மூடி முளிப்பதற்குள் கபக்கு எண்டென்று பூழை வாய்க்குள்ளே நுழைத்தாள். அந்த நொடியே தூங்க்கிக்கொண்டிருந்த அப்பா திடுக்கிட்டு எழுந்தார். ஆனால் மாலினியோ எதையும் கண்டுக்காமல் 5 வயசு புள்ள கையில கிடைச்ச லாலி பப்பு மாரி ரசிச்சு ஊம்ப ஆரம்பித்தாள்.தூக்க கலக்கத்தில் இருந்த மாமனாரை பார்த்து ஜமட்டு சிரிப்பு சிரித்தாள். பூலில் இருந்து வாய எடுத்து விட்டு , இரண்டு கிழமையா என்னை தூங்க விடாமல் பண்ணீட்டு சாருக்கு 11.00 மணிக்கே தூக்கம் கேக்குதோ என்றாள். அப்போது தான் எனக்கு பொறி தட்டியது நான் கொரெண்டனில் இருந்தப்போ மாலினி சாப்பிட்ட வாழப்பழம் பற்றி, அப்போ மாலினி மாமானார் பூழை ஊம்பிக்கிட்டே எங்கிட்ட போன் பேசியிருக்கானு புரிஞ்சுது. என்னுடைய மனசு பட படத்தது. மாலினி தன்னுடைய கையால் அழகாக கையட்டித்துக்கொண்டே அப்பாவை பார்த்து சிரித்தாள். அப்பாவோ மாலினி தோழின் மேல் கைய வைச்சு எனிமே வேனாம்மா ! மகனுக்கு துரோகம் பண்ண ஒரு மாரி இருக்கு எண்டார். மாலினி முகம் சிவத்தது மாலினி கோவத்தோடு ஏம்மாமா அவர் இல்லாத முதல் நாள் என்னை கட்டாயப்படுத்தி செய்ஞ்சீங்களே அப்ப தோனலயா மகனுக்கு துரோகம் பண்ணுறமொண்டு எண்டு ஒரே கேள்வியில் மாமானாரை குளோஸ் பண்ணாள் மாலினி. இல்லம்மா அது வந்து எண்டு அப்பா ஏதோ சொல்ல வர. மாலினி ஒன்னும் சொல்ல வேணாம் படுங்க எண்டு தள்ளி விட்டாள். ஏறி பூலின் மேல் சாய்ந்து கொண்டு மாமானாரை லிப் லொக் பண்ணாள். அப்பாவின் கைகளுடன் தன் கைகளை கோர்த்து கொண்டாள். காமம் தலைக்கேறிய பெண்கள் எப்படி நடப்பார்களோ அதை விட மோசமாக இருந்தது . மாலினி தன்னுடையை பாண்டீஸை கழட்டாமலேயே புண்டை மேட்டை பூழுடன் தேய்து கிழப்பி விட்டு கொண்டிருந்தாள் . மாலு பையன் எழுந்திட போறான் எண்டு அப்பா சொல்ல. மாலினியோ உங்க பையனுக்கு சரியா எழும்பினா நான் ஏன் உங்க கிட்ட வரப்போறன் எண்டு இரட்டை அர்த்ததில் பேசினால். பேசிக்கொண்டே அவளுடை பிராவை கழட்டி போட்டாள் அது நிலைத்தில் விழுந்தது எனக்கு பகீரெண்டு இருந்தது. அவளின் மாம்பழங்கள் மாமனாரின் பசி தீர்க்க தயாரானது .தன்னுடை முலையை ஒவ்வொன்றாக சாப்பிட கொடுத்தாள் அவளின் முகம் காமத்தில் கலங்க்கியது ஆ ஆ என்ற முனகலுடன் தன் உதட்டை கடித்தாள். திடீரென்று மாமானார் லுங்கியை உருவினாள். தன்னுடைய பாண்டீஸையும் கழட்டி வீசினால் அது என் கைக்கு எட்டிய தூரத்தில் விழுந்தது. என்னையறியாமல் என்னையால் அதை எடுத்தேன். அது முழுவதும் புண்டையில் சுரக்கும் காமரசத்தால் நனைந்திருந்தது. ஆனால் மாலினியோ தன்னுடைய புண்டைக்குள் அந்த பெரிய மாமனாரின் பூழை உள்ளே திணித்தே ஆக வேண்டும் என்பது போல ஏறி அமர தயாரானாள். அப்பாவோ வேணாம்மா அவன் எழுந்திட போறான் எண்டு சொல்லி முடிப்பத்ற்குள் மாலினி ஒரே அடியாக பூளை புண்டைக்குள் இறக்கி விட்டாள். இறக்கிய சுகத்தில் வானத்தை பார்த்த படி கண்களை மூடினால். அப்படியே குதித்து குதித்து ஓக்க ஆரம்பித்தாள் . கட்டில் ஆட ஆரம்பித்தது .எனக்கு கை அடிக்காமலேயே யட்டிக்குள் லீக் ஆகி விட்டது. தன்னால் முடிந்த வரை தேய்ங்காய் உரித்தாள். ஓக்கும் போது அவள் குண்டி மாமனார் துடைகளில் பட்டி டப்டப் என்று சத்தம் வந்தது. அசந்து அப்படியே சாய்ந்து லிப்லொக் கொடுத்தாள். அப்பாவோ அவளை புரட்டி போட்டு அவளின் காலை விரித்து புண்டை இதழ்களை விரித்து அவளின் பெண்மை ரசத்தை ருசி பார்த்தார். நான் இதுவரைக்கும் அவளுக்கு இந்த மாரி பண்ணதே இல்லயே எண்டு நொந்து கொண்டேண். மாலினியோ மாமானாரின் தலை முடியை சுகவேதனையால் பிசைந்து விட்டாள். அவளின் ஜி ஸ்பார்ட்டில் நாக்கு போட்டு கொடுத்துக்கொண்டே இருந்தார். இடையிடையே மாலினி ஓட பருப்பை கவ்வி இழுந்தார். மாலினியின் கால்களின் விரல்கள் குரண்டியது .மாலினி ஏதோ கரண்டு சாக்கு குடுத்த மாரி உச்ச கட்ட இன்பத்தில் துடித்தால் இறுதியில் துடிப்படங்க அப்பா தரையில் இறங்கி டிராயரில் வைத்த காண்டத்தை எடுத்தார். கட்டிலில் மேல் ஏறி அமர்ந்து காண்டத்தை பூலில் மாட்டினார். மாலினி அரை போதையில் இருப்பவள் போல காண்டம் வேனாம் மாமா என்று முனகினாள், அப்போது அப்பா சொன்னார் எக்கு தப்பா ஏதாச்சும் ஆகிடப்போதும்மா எண்டார். இல்ல மாமா என்னும் இரண்டு நாள்ள பீறியட்ஸ் எத்தினை தடை பண்ணாலும் ஒன்னும் ஆகாது என்று சொல்லி கொண்டே காண்டத்தை உரிவி எறிந்து விட்டு காலை விரித்து தன் சொர்க்க புரியை மாமானாருக்கு காட்டியபடி உதட்டை கடித்து அப்பாவுக்கு சிக்னல் காட்டினாள் . அப்பாவோ அவளுடைய முழுமையான கட்டுப்பாட்டுக்குள் போய்விட்டார். தன்னுடைய பூழை விடுக்கென்று உள்ளே நுழைத்தார். ஆரம்பத்தில் மெதுவாக ஓத்தார். படிப்படியாக வேகம் கூடியது மாளினியோ புண்டையை தூக்கி கொடுத்து கொடுத்து ஓழ் வாங்க்கினாள் கட்டில் வேறு கிறீச் கிறிச் என்று சத்தம் போட்டது. மாலினியோ இன்பத்தில் முனகினால் ஆ அம்மா…… ஸ் ஆ எண்டு கத்திக்கொண்டிருந்தாள். அப்பாவோ கம்பீரமான குரலில் ஆ ஆ எண்டு கர்ச்சித்தார்.தீடீரென மாலதியின் புண்டையில் இருந்து காமரசம் வடிந்தது. இப்படி ஓத்தால் யாருக்கு தான் வடியாது .மாலதி டாகி ஸ்டைலில் வைத்து தன் பூலை திணித்து விட்டு அவள் தலைமுடியை பிடித்து இழுத்தவாறே முரட்டு ஓழ் ஓத்தார். ஓத்த படியே மாலினியை இடுப்பில் தூக்கி வைத்து ஓத்து தன் ஆண்மையை நிரூபித்தார். அப்பொழுது தான் பூளும் புண்டையும் கண்ணருகில் சேர்வதை பார்த்தேன். உண்மையில் பெரிய பூழ் தான் இப்படி பூழ் கிடைத்தாள் புண்டை நமச்சலோடு இருக்கும் எவளும் படி தாண்டி விடுவாள். மாலினியை அப்படியே பெட்டில் போட்டு லிப்லொக் அடித்தார். அப்போ மாலினி நான் இல்லாம உன்னால இருக்க முடியுமா எண்டார். மாலினியோ சத்தியமா முடியாது எண்டாள் . அப்படியே கண்ணீர் மல்க உதட்டு முத்தம் பொங்கியது. காம தேவனின் கணக்கை யாராலும் மாற்ற ஏலாது. அப்படியே மிசினரியில் ஓத்து ஆண்மை திரவத்தை தன்னுடைய மருகள் மாலினியின் கர்ப்ப பைக்குள் நேராக செலுத்திக்கொண்டிருந்தார். அடுத்த 10 நிமிடத்தில் அடுத்த ரவுண்டை போட்டு மாலினியின் வாயில் ஆண்மை ரசத்தை ஊற்றி விட்டு பூழை வாய்க்குள் தினித்தார் மாலினி சுத்தமாக ஊம்பி விட்டாள். மாலினி எதையும் துப்பவில்லை அப்படி என்றால் காம ஆசையில் ஒரு துழி கூட சிந்தாமல் விழுங்கியிருக்கிறாள் என புரிந்தது. முதலாவது ரவுண்டில் அடித்த விந்து நீர் அவளின் புண்டை வழியாக ஒழுகியது. இருவரும் கட்டியணைத்த படி சரசமாக பேசிக்கொண்டனர் . உங்களால மட்டும் தான் மாமா என்னை திருப்தி படுத்த முடியும் எண்டு மாலினி சொன்னாள். ஏன்டி இப்படி சொல்லுற எண்ட , உங்க புள்ளைக்கு தான் என்னை அம்மணக்கட்டாயா பார்த்ததும் வடிஞ்சிடுமே என்றாள் சிரித்து கொண்டே அடுத்த கிழமை தன்னுடைய கல்லூரித்தோழியின் மகனின் புறந்த நாள் மாமா அந்த வீக்கு உங்க புள்ள கூட ஊருக்கு போகலாம்னு இருக்கன் எண்டாள். அப்படியே பேசிக்கொண்டே இருவரும் அம்மணக்கட்டையா தூங்கி விட்டனர் . நான் கட்டிலடியில் இருந்து எழுந்து போய் என் ரூமில் அவமானத்துடன் படுத்து கொண்டேண். அடுத்த நாளே மாலினியின் ஊருக்கு போணோம் நடந்ததை எல்லாம் மறந்து மகிழ்ச்சியாக இருந்தோம். மாலினியின் தோழி எமக்கு பிறகு கலியாணம் பண்ணியவள் ஆனால் ஒரு குழந்தைக்கு தாயாகி விட்டாள் . அந்த குழந்தையின் பிறந்த நாளுக்கு வந்த மாலினியின் உறவுகள் இவளுக்கு இன்னும் ஒன்னும் கிடைக்கலேயே எண்டு குத்தலும் கிண்டலுமாக பேசினர். மாலினியின் தூரத்து சொந்த காரி ஒருத்தியும் மாலினிக்கு உடம்புல குறை இருக்கதா காதுல பட பேசிக்கிட்டா. மாலினி கண் கலங்கி விட்டாள் அதனால் பாதியில் மாமியார் வீட்டுக்கு வந்து விட்டோம். மாலினிக்கு பீறியட்ஸ் முடிந்தது. மாலினி என்னங்க பேபிக்கு ரை பண்ணலாமா எண்டாள் . அதனால் இரண்டு மூன்று முறை மாமியார் வீட்டில் ஓல் போட்டுக்கொண்டோம். ஏதோ எல்லாம் திருப்பி கிடச்ச மகிழ்ச்சி இருந்திச்சு. மாலினி பழய படி என்னோட செல்ல மாலினி ஆகி விட்டாள். வீடு வந்தும் என்னை நன்றாக பார்த்துக்கொண்டாள். அப்பாவின் மீது கவனம் போகாமல் நல்லபடியாக வாழ்க்கை போனது 1 மாதத்திற்கு மறுபடியும் மாலினிக்கு பீறியட்ஸ் ஆனது கர்ப்பம் தங்கவில்லை. ஆனாலும் திரும்ப ரை பண்ணலாம்ங்க என்டைக்கு சீக்கிரமா ஆபிஸ் ஆல வாங்க எண்டு மாலினி என்னை தேற்றினால் காரணம் இண்டு மாலினிக்கு சினைப்புடிக்க வைக்க சிறந்த நாள். அன்று ஆபிஸ் மட்டரை பென்ரைவில் போட்டு வீட்டில் மறந்து விட்டேண் அதனால் ரீ ரைமுக்கே சப்பிறசா வீடு வந்தேன் மாலினிக்கு புடிக்குமெண்டு அல்வா வாங்கி வந்தேன். என்னுடம் இரண்டாவது சாவி இருப்பதால் கதவை சத்தமில்லாமல் போட்டு திறந்து மாலினியை தேடினேன் மாலினியை காணவில்லை வாசலில் அப்பாவின் சப்பாத்து இருந்தது அவர் இன்று அக்கடமிக்கு போகல எண்டு புரிந்தது. உள்ள போய் எங்கு பார்த்தும் இருவரும் இல்லை அதனால் என்னுடைய ரூமருகில் சென்ற போது முக்கல் முனகல் சத்தம் கேட்டது இருவரும் ஒட்டுத்துனியில்லாமல் பட்ட பகலில் ஓத்துக்கொண்டிருந்தனர். அப்பா சுன்னியில் காண்டம் இல்லை . மிக வேகமாக ஓத்துக்கொண்டிருந்தனர். மாலினி அ ஆ …….. எண்டு கத்தினாள். ஜ லவ் யு மாமா என்றாள். அப்பாவோ ஆ மாலு எனக்கு வந்திடும் போல இருக்கு எண்டார். ஆ அ மாமா எண்டு மாலினி ஏதோ சொல்ல வந்தாள். ஆ மாமா உங்க மூலமா ஒரு புள்ள வேணும் எண்டு அலறினாள். ஓழ்ப்பதை அப்பா நிறுத்தி விட்டு தெரிஞ்ச்சு தான் பேசிறியாம்மா எண்டார் . மாலினியோ உங்க புள்ளயால 4 வருசமா உண்டாக்க முடியல, நீங்களும் உங்க புள்ளயும் ஒரே ரத்தம் தான் எண்டாள். சீரியஸாவா எண்டார் சீரியஸா தான் மாமா, ஓத்து என் மூலமா புள்ளைகளை பெத்து உங்க சந்ததியை பெருக்கீக்குங்க என்றார். பாவம்னு நினைச்சா பாவம் பரிகாரம்னு நினைச்சா பரிகாரம் எண்டாள். அப்பாவோ மாலினியை உச்சி முகர்ந்தார். ஓத்து மாலினியின் கர்ப்பப்பை வாசல் வரை செல்லுமளவுக்கு சுன்னியை நுழைத்து சூடான விந்து நீரை பாச்சியடித்தார்.மாலினி கையால் புண்டையை பொத்திக்கொண்டாள். விந்து வழியாமல் இருக்க . கவலப்படாதம்மா உன்ன அடுத்த கொரோணா அலைக்கு முதல் கர்ப்பமாக்கிறேன் எண்டு உச்சி முகர்ந்தார்.நான் மாலினி எடுத்த முடிவை கண்டு அதிர்ச்சி அடைந்தேன். ஆணால் இப்போது என்ன பண்ண முடியும் எல்லாம் கை மீறிபோய்விட்டது. என்மனசு சந்தேக பட கூட என்று மாலினி அந்த இரவு மட்டும் ஒரு முறை என் கஞ்சியை உள்ளே விட விட்டாள், நடப்பது தெரிந்தும் அவள் சதிக்கு பலியானேன். இரவு நான் தூங்கிய பின் என் பொண்டாட்டி அப்பா ரூமுக்கு போயிடுறாள். இப்பொழுதெல்லாம் அவளை சந்தேகப்படுவதில்லை ஏனென்றால் அவள் தூக்கத்தில் நடக்கின்ற வியாதி இருக்கிறத நாடகம் ஆடுறாள். அதால தான் மாமனார் ரூமுக்கு போறதா சொல்லுறா. மாலினிக்கு பீறியட்ஸ் தள்ளி போனது டாக்டரும் கன்போர்ம் பண்ணீட்டாங்க. ஆனால் மாலினி வயித்திலிருப்பது ஊரிலிருப்போருக்கு என் புள்ளை ஆனால் எனக்குதான் தெரியும் அது என் தங்கச்சியோ தம்பியோ என்று , மாலினி மிகவும் சந்தோசமாக இருந்தாள். மாலினி தாயருக்கு தான் உண்டாகியிருக்கத போனில சொன்னால் , மாமியாரோ ஒன்னோட நிறுத்திக்காதம்மா எண்டார். மாலினியோ உடற்பயிற்சி செய்து கொண்டிருக்கும் மாமானாரை பார்த்தவாறே இன்னும் மூனு பெத்துக்க போறன் எண்டாள். இப்பொழுது மாலினி பெத்துக்க போறத என்புள்ளயா நினைச்சு வளர்க்கிறத தவிர வேற வழியே இல்ல . இல்லன்ன குடும்ப கெளரவம் போயிடும்.
உலகம் முழுவதும் தொடர்ந்து பல சேவைகளை புதிது புதிதாக அறிமுகப்படுத்திக்கொண்டே இருக்கும் கூகுள், மக்கள் தொகை அதிகம் கொண்ட ஒரு நாட்டிற்கான மொழிபெயர்ப்பு சேவையை நிறுத்தியிருக்கிறது. சீனத்தில் தற்போது மொழிபெயர்ப்பு சேவையை நிறுத்தியிருப்பது பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது. கூகுள் சேவைகளை Hack செய்வது, சீனத்தில் இருக்கும் தொழில்நுட்ப வல்லுநர்கள் கூகுள் அளிக்கும் சேவைகளை விட மிகச் சிறப்பான சேவையை வழங்குவது உள்ளிட்ட காரணங்களால் சீனாவில் கூகுள் சிறப்பான இயக்கத்தை வெளிப்படுத்த முடியாமல் போனதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், 2017ஆம் ஆண்டு சீனத்தில் தொடங்கப்பட்ட கூகுள் மொழிபெயர்ப்பு சேவையை நிறுத்திக்கொள்வதாக அறிவித்துள்ளது. குறைவான பயன்பாட்டினால் கூகுள் தனது சேவையை நிறுத்திக்கொண்டுள்ளது. சீன மொழியை மொழிபெயர்ப்பதில் கூகுளை விடவும் உள்நாட்டு செயலிகள் சிறப்பாக செயற்படுவது இதற்கு காரணமாகவும் இருக்கலாம்.
வாசுவின் தலைமுதல் கால்வரை மின்னல் பாய்ந்தது போலிருந்தது. அக்கா பிராவை அவிழ்த்து, தனது முலைகளை விடுவிக்கப்போகிற கண்கொள்ளாக்காட்சியைப் பார்க்க அவனது மனம் துடித்தது. அவனது பூல் இப்போது லுங்கியைக் கிழித்து வெளியேறிவிடும் போலிருந்தது. சகுந்தலா பிராவை அவிழ்த்ததும், அவளது முலைகள் இரண்டும் குலுங்கி அதிர்ந்து சிலிர்த்து நின்றன. தான் எதிர்பார்த்ததை விடவும் தனது முலைக்காம்புகள் விடைத்திருப்பதைப் பார்த்த சகுந்தலாவுக்கு சற்றே கூச்சமும் ஏற்படத்தான் செய்தது. ”அழகு அக்கா நீ!” என்றவாறே வாசு தனது பூலின் எழுச்சியை ஒருகையால் பற்றித் தடவ ஆரம்பித்தான். ”புடிச்சிருக்காடா?” என்று கேட்டவாறே, சகுந்தலா தனது முலைகளை தானே பிதுக்கிப் பிதுக்கி, தம்பியின் கண்களுக்கு விருந்தளித்தாள். வாசுவின் திறந்த வாயிலிருந்து எச்சில் ஒழுகுவதை அவள் கவனித்தாள். தம்பியின் ஆர்வம் பொங்கும் விழிகளைப் பார்வையால் விழுங்கியவாறே, பெட்டிக்கோட் நாடாவை அவிழ்த்தாள். பளிங்கில் செதுக்கியவை போலிருந்த அவளது வழவழப்பான தொடைகளில் வழுக்கியபடி அவளது பெட்டிக்கோட் சட்டென்று அவளது காலடியில் விழுந்து குவிந்து கொண்டது. இப்போது வாசு தனது எழுச்சியை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டிருந்தான். அவனது முகத்தில் கொப்பளித்த காமவேட்கையை ரசித்தவாறே, அவனுக்கு முதுகைக் காட்டியபடி நின்ற சகுந்தலா, தனது வாளிப்பான குண்டிக்கோளங்களை தம்பியின் முகத்திற்கு மிக அருகில் காட்டியவாறு குனிந்தபடி, தனது பேண்ட்டீஸையும் மெதுவாக இறக்கினாள். ”சூப்பர்!” வாசுவின் குரல் கிணற்றிலிருந்து ஒலிப்பதுபோலக் கேட்டது. சட்டென்று திரும்பிய சகுந்தலா, இடுப்பில் கைகளை வைத்துக்கொண்டு, தலையைச் சாய்த்தவாறு அவனை நோக்கி வினவினாள். ”எல்லாத்தையும் பார்த்தேயில்லே? எப்படி இருக்கேன்?” வாசு எச்சில்கூட்டி விழுங்கினான். தம்பியின் முகத்தைப் பார்த்து, குறும்புடன் புன்னகைத்தவாறு சகுந்தலா அவனுக்கு மிக அருகில் அமர்ந்தாள். ”வேணும்னா தொட்டுப்பார்க்கலாம் வாசு!” கிசுகிசுத்தாள் சகுந்தலா. வாசு திகைத்தான். சகுந்தலா தம்பியின் இரண்டு கைகளின் மீதும் தனது இரண்டு கைகளையும் வைத்தபோது அவனது உடல் அதிர்ந்தது. சகுந்தலாவுக்கும் தொடைகளுக்கு நடுவில் ஒரு சிறிய உறுத்தல் ஏற்பட்டது. பிடித்த தம்பியின் கைகளை எடுத்து தனது முலைகளின் மீது வைத்துக்கொண்டாள்.
பாகிஸ்தான் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டி மற்றும் 3 டி20 போட்டி கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரில் இங்கிலாந்து அணி 3-0 என பாகிஸ்தானை ஒயிட்வாஷ் செய்து அசத்தியது. இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 232 ரன்கள் குவித்தது. தொடக்க ஆட்டக்காரர்களான ரிஸ்வான், பாபர் அசாம் அரை சதமடித்து அசத்தினர். ரிஸ்வான் 63 ரன்களும், பாபர் அசாம் 85 ரன்களும் எடுத்தனர். பகர் சமான் 8 பந்தில் 3 சிக்சர், ஒரு பவுண்டரி உள்பட 26 ரன்கள் எடுத்து அவுட்டானார். ஹபீஸ் 10 பந்தில் 3 சிக்சர், ஒரு பவுண்டரி என 24 ரன்கள் எடுத்தார். இதையடுத்து, 233 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது. முன்னணி வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை. இதனால் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் வீழ்ந்தது. அந்த அணியின் லிவிங்ஸ்டோன் தன்னந்தனி ஆளாக போராடினார். 17 பந்தில் அரை சதமடித்த அவர் 43 பந்தில் 9 சிக்சர், 6 பவுண்டரி உள்பட 103 ரன்கள் குவித்து அவுட்டானார். ஜேசன் ராய் 32 ரன்னில் வெளியேறினார். இறுதியில், இங்கிலாந்து அணி 201 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 31 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது. 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-0 என பாகிஸ்தான் முன்னிலை வகிக்கிறது. ஆட்ட நாயகன் விருது ஷஹீன் அப்ரிதிக்கு அளிக்கப்பட்டது. இரு அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டி நாளை நடைபெறுகிறது.
சின்ன வயதில் சூட்டுக் கொட்டையை தரையில் உரசிவிட்டு உடலில் வைத்தால் கொப்பளித்துவிடும் விளையாட்டை விளையாடியிருக்கிறேன். நல்ல சூடு இருக்கும் . அது போல் கொரானா செய்திகள் சூட்டுக் கொட்டை சூட்டைப் போல் வலிதருகின்றன. ஒரு கோப்பையில் இருக்கும் வெந்நீர் 80 பாகை செல்சியஸ் என்றால், ஒரு பெரிய பாத்திரத்தில் இருக்கும் நீரும் 80 பாகை செல்சியஸ் வெப்பநிலையில் இருக்கலாம். ஆனால், கப்பில் இருக்கும் நீரின் வெப்பசக்தியை விட, பெரிய பாத்திரத்தில் இருக்கும் நீரில் அதிக வெப்பசக்தி இருக்கும். காரணம் பெரிய பாத்திரத்தில் அதிகளவான நீர் மூலக்கூறுகள் இருக்கும். பெரிய பாத்திரமாய் பூமி சூட்டில் தவிக்கிறது. சீன இனக்குழு ஒன்றின் திருமணச் சடங்கொன்றில் தீமிதியில் மனைவியை கணவன் கையில் ஏந்தி எடுத்துச் செல்லும் வைபம் ஒன்று உள்ளது. தீ எரியும் சூழல் என்றாலும் மனைவியைக் கையிலேந்திக் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் அப்படியொரு சடங்கு இருக்கிறதாம். கொரானா என்ற தீ மிதி குண்டத்தையே தாண்டி வந்திருக்கிற நாடு சீனா. சீனர்கள் திமிதி குண்டங்களைத் தாண்டி வந்திருக்கிறார்கள். நாம் தீ மிதி போன்ற அதிகமாகும் வெப்பம் – ஏப்ரல், மே காலங்களில்-கொரானாவிலிருந்து நம்மைக்காப்பாற்றும் என்பதை கடவுள் நம்பிக்கை போல் நம்பிக்கொண்டிருக்கிறோம். தமிழகத்தின் பத்து நகரங்களில் ஏப்ரல் முதல் வாரத்திலேயே வெயில் சதம் அடித்து சிலருக்கு அப்படியெல்லாம் நம்பிக்கை தந்திருக்கிறது. ஆனால் கொரானா கட்டுப்படாமல் எகிறிக் கொண்டிருக்கிறது . அமெரிக்க அதிபர் டிரம்ப் மெக்சிகோ தடுப்புச்சுவர் மூலம் இடம்பெயர்வு சம்பந்தமான – மாபெரும் தடை ஒன்றுக்கு முயற்சித்து வருகிறார், வெப்பமயமாதலைக் கட்டுப்படுத்துவது சம்பந்தமான ஒரு தடுப்புச்சுவர் ஒன்றை அவர் வந்த போதே கட்டி முடித்து விட்டார் என்றார்கள் கிண்டலாக. டிரம்ப் இந்தியா வந்த போது ஏழை மக்களின் வெப்பப்பார்வை படாமல் இருக்க சுவர் கட்டினார்கள் சாலையில். வெப்பமயமாதலைக் கட்டுப்படுத்துவது சம்பந்தமாக பல ஆண்டுகளாக நடந்து வரும் சர்வதேச முயற்சிக்கு இப்போதைய அமெரிக்க அதிபர் டிரம்பின் ஆதரவு இல்லாததால் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது என்பது சென்றாண்டின் செய்திதான்.முந்திய அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கொண்டுவந்த நடவடிக்கைகள் அனைத்தையும் ரத்து செய்ய உத்தரவு பிறப்பித்து நடவடிக்கைகளைத் தொடர்ந்தார் . இந்த முயற்சிக்கு முன் மாதிரியாக இருந்து முன்னர் அமெரிக்கா தலைமை தாங்கியது. இனி தலைமை தாங்குமா என்பது கேள்விக்குறியாகி விட்டது . இன்றைக்கு கூட உலக சுகாதார நிறுவனத்துக்கு அமெரிக்க தரும் நிதியுதவியை ரத்து செய்து ஒரு உத்தரவு போட்டுள்ளார்.அவர்கள் மேல் பழி போடும் முயற்சியாக ரு வெப்ப குண்டைப் போட்டிருக்கிறார். அவர் ஆட்சிக்கு வந்த பின் சிறுபான்மையினர் நலன், இந்தியர்களின் வேலை வாய்ப்பில் பல கெடுபிடிகளைப் செலுத்தியுள்ளார் டிரம்ப். இப்போது பெரிதாய் கை வைத்திருப்பது புவிவெப்பம் மக்களுக்கு ஆதரவான முயற்சிகளில் பெரிய முட்டுக்கட்டைகளை அவர் வைத்துள்ளார் இதில் தொழில் துறையில் ஏற்பட்டுள்ள பின்னடைவுகளைப் போக்க நடவடிக்கை எடுத்திருப்பது நல்லது .தொடர்ச்சியாக இதிலும் முனைந்துள்ளார் உலக அளவில் பருவநிலை மாற்றம் என்பது வெப்ப சலனக் காற்று, பனிப்பகுதிகள் உருகுதல், வெள்ளம் அல்லது வறட்சி மற்றும் கடல் மட்டங்கள் உயர்தல் போன்றவை விளைவுகளாக இருக்கும் என்று சொல்லப்பட்டது.அதன் அடையாளங்களை சமீப மாதங்களில் கண்கூடாகப் பார்க்கிறோம். இந்தியாவைப் பொறுத்தவரை கடந்த 50 ஆண்டுகளில் பருவகால மழை என்பது பெரும் மாற்றம் இல்லாமல் ஏமாற்றத்தையே தருகிறது வங்காள விரிகுடாவிலும் புயல்கள் என்தில் 2000 க்கு முன் பெரிய மாற்றம் இல்லை இமாலயப் பனி உருகி வருகிறது. 21ம் நூற்றாண்டில் 15 முதல் 30 சதவீதம் வரை மழையளவு அதிகரித்த போது இதே சீதோஷ்ண நிலை வெப்பம் 5 சதவீத சென்டிகிரேட் அளவு உயர்ந்தது . ஆல்ப்ஸ் பகுதியில் சில செடிகள் அபூர்வமாக வளர்கின்றன பல செடிகள் மறைந்துவிட்டன இங்கிலாந்தில் பறவைகளின் சுபாவத்தில் பல மாற்றங்கள் தென்படுகின்றன முட்டையிடும் 65 பறவை இனங்கள் ( பறந்து செல்பவை அவை ) முட்டை போடும் காலத்தை முன்னதாக்கிக் கொண்டிருக்கின்றன மூன்றில் ஒரு பங்கு மக்கள் தொகையில் 17 பில்லியன் மக்கள் தண்ணீருக்காக சிரமப்படுகிறார்கள். இது 2025இல் 25 மில்லியனாக உயரும் . இந்த காலத்தில் 480 மில்லியன் ஆப்பிரிக்கர்கள் தண்ணீருக்காக அலைவர். லத்தீன் அமெரிக்க நாடுகளில் உணவுப் பொருட்களின் விளைச்சல் இந்த காலத்தில் வெகுவாக குறையும். அதிக வெப்ப நாட்களில் வயதானவர்களின் நோய்கள் அதிகரிக்கும் மரணமும் அதிகரிக்கும் என்ற விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளும் உள்ளன. கால்நடைகளை மிகவும் பாதிக்கும் பயிர்களை நாசம் விளைவிக்கும் சுற்றுலாத்தலங்கள் வெகுவாகப் பாதிக்கப்படும் நிலச்சரிவு வெள்ளம் அதிகரிக்கும் . உலக நிலப்பரப்பில் 2.4% இந்தியாவை சாரும் 17% மக்களும் 15% கால்நடைகளும் இதில் அடக்கம். இந்தியாவில் சிறு விவசாயிகள் அதிகம் இருக்கிறார்கள் பங்களாதேசிற்கு அடுத்தபடியாக சிறு விவசாயிகள் இங்கு அதிகம். இந்தியா வறட்சியின் பிடியில் அதிகம் சிக்கும் இந்தியாவின் பருவ நிலைகள் பாதிக்கப்படும் இந்தியாவின் பருவ நிலைகளை ஒட்டி இந்திய விவசாயம் பாதிக்கப்படும் . தமிழ்நாடு ஏழில் மூன்று பகுதி மழையை நம்பி இருப்பது பருவமழை தவறியதால் உணவு உற்பத்தியும் கால்நடைகள் வாழ்வும் பாதிப்புக்குள்ளாகும் பருவநிலை மாற்றத்தில் ராகி போன்றவை பொதுவாக பாதிக்கப்படும் ராகி பயிர் விளைச்சல் மிகவும் குறைந்துவிட்டது உணவுப் பாதுகாப்பு என்பது சில பகுதிகளுக்கு அச்சுறுத்தலாக அமையும் . 1979 உலக அளவில் பருவநிலை மாற்றம் சிக்கலாக மாறும் என்று கண்டறியப்பட்டது . அப்போது கரியமிலவாயுவின் தன்மை உயர்ந்திருப்பது உணரப்பட்டது .இது தொடர்ந்து கொண்டே இருக்கிறது இது மின் உற்பத்தியை பாதிக்கும் . சூரிய ஒளியைப் பயன்படுத்தும் உணர்வு அதிகரித்திருக்கிறது அதேசமயம் காடுகளை அழிப்பதும் அதிகரித்து வருகிறது . மனித குல பாதுகாப்பிற்கு பெரும் அச்சுறுத்தலாக பருவநிலை பரிமாற்றம் என்பது அமைந்திருக்கிறது . இன்னும் 15 ஆண்டுகளில் மிகவும் குறைந்த மழை பொழிவு என்பது பெரும் கொடூரக்கனவாக இருக்கிறது. தண்ணீர் பற்றாக்குறையை உருவாக்கும் போர்வெல்களால் அதிகம் சுரண்டப்பட்டு விடும் .விவசாயத்தில் நீரின் பயன்பாடு குறையும் அதிக வெப்ப சூழல் பயிர் வளர்ச்சியைக் குறைக்கும் விவசாயிகளின் வருமானத்தை குறைக்கும் விவசாயிகளை வேறு தொழில்கள் மற்றும் நகரங்களை நோக்கி நகர செய்யும் மற்றும் வறுமை அவர்களை சூழவும் செய்யும். ஈரமற்ற காற்று பயிர்களைப் பாதிக்கும். அதிக வேகத்தில் காற்று வீசுவது பயிர்களைப் பாதிக்கும். விளைச்சலைக் குறைக்கும். மண்ணரிப்பு அதிகமாகவும் மரங்களும் காய்கறி செடிகளும் இல்லாது குறையும். பஞ்சம் தலைவிரித்து ஆடி சொட்டுநீர் பாசனம், பயிர்களுக்கு இன்சூரன்ஸ் என்பதை சாதார மக்களை அவற்றுள் தள்ளும் மாற்றுப்பயிர்களை நாட வேண்டியிருக்கும். உரங்களின் தன்மையை மாற்ற வேண்டியிருக்கும் அதிக வெள்ளம் மண்ணரிப்பைக் கொண்டு வரும் விவசாய நிலங்களீன் பல குறைகளின் மத்தியில் மக்கள் தங்கள் வாழ்க்கை காரணங்களையும் எதிர்நோக்குவது சிறந்தது மறுபடியும் முன் இடத்திற்கு வருவோம் முன்னாள் அதிபர் கொண்டு வந்த திட்டங்களை இப்போதைய அதிபர் குழுவினர் மறுத்து ரத்து செய்திருக்கிறார்கள். இப்போது டிரம்பின் கை பருவநிலை மாறுபாட்டுக்கொள்கையிலும் விழுந்திருக்கிறது.. பருவ நிலை மாற்றத்தைக்கட்டுப்படுத்துவது தொடர்பான ” 2015 பாரிஸ் உடன்படிக்கை பற்றி ” டிரம்ப் அதிக அக்கறை எடுத்துக் கொள்ளவில்லை ஆனால் பல ஒப்பந்தங்களை ரத்து செய்திருக்கிறார். பொருளாதார வளர்ச்சி, வேலைவாய்ப்பு உருவாக்கம் செய்யாமல் தூய்மையான காற்று, சுத்தமான தண்ணீர் கிடைப்பதை உறுதி செய்வேன் என்கிறார். புவி வெப்பமயமாதலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை அவரின் அரசு உறுதி அளிப்பதை சூழலியலாளர்கள் எதிர்பார்க்கிறார்கள் விரைவாய் சூடாகும் பூமியை யாரால் தடுக்க முடியும்.
Colombo (News 1st) அடிக்கட்டு பசளை எனப்படும் MOP உரத்தை ஏற்றிய கப்பல் டிசம்பர் மாத முதல் வாரத்தில் நாட்டை வந்தடையவுள்ளதாக தேசிய உர செயலகம் தெரிவித்துள்ளது. கனடாவில் இருந்து நாட்டிற்கு வரும் குறித்த கப்பலில் 42,000 மெட்ரிக் தொன் அடிக்கட்டு பசளை கொண்டு வரப்படவுள்ளதாக தேசிய உர செயலகத்தின் பணிப்பாளர் சந்தன லொகுலியன குறிப்பிட்டுள்ளார். இந்த பசளை பெரும்போகத்தில் நெற்செய்கையில் ஈடுபடும் விவசாயிகளுக்கு பகிர்ந்தளிக்கப்படவுள்ளதாக அவர் கூறியுள்ளார். நெற்செய்கை ஆரம்பிக்கப்பட்டு 6 மாதங்களுக்குள் அடிக்கட்டு பசளை பயன்படுத்தப்படுகிறது இதனிடையே, இறக்குமதி செய்யப்பட்ட 32,000 மெட்ரிக் தொன் சேதன பசளை விவசாயிகளுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதாக தேசிய உர செயலகம் குறிப்பிட்டுள்ளது.
மன்ஸிகர்த் யுத்தத்தில் அல்ப் அர்ஸலான் வெற்றியடைந்தார், பைஸாந்தியப் பேரரசர் ரோமானஸ் IV தோல்வியடைந்தார், உதவிப்படை கோரி ஐரோப்பாவில் உள்ள போப்புக்குத் தகவல் அனுப்பப்பட்டது என்று ஆரம்பித்து, ஐரோப்பாவிற்குள் நுழைந்த நாம் மேற்குலகிலேயே சில அத்தியாயங்கள் சுற்றிக்கொண்டிருக்கும்படி ஆகிவிட்டது. அச்சமயம் கிழக்கே இஸ்லாமிய அரசில் என்ன நடந்தது என்பதை ஓரளவிற்கு விரிவாகவே பார்த்துவிடுவோம். பிற்காலத்தில் ஸலாஹுத்தீன் ஐயூபி வகுக்கப்போகும் வியூகத்தைப் புரிந்துகொள்ள அந்நிகழ்வுகளை அறிவது வெகு முக்கியம். தவிர, காலம் நெடுக முஸ்லிம்களுக்குப் பாடம் புகட்டும் வரலாறு அவற்றில் புதைந்துள்ளதால் அவை அவசியம். மன்ஸிகர்த் யுத்தத்திற்குப் பிறகு அடுத்த ஆண்டிலேயே (ஹி. 464/கி.பி 1072) அல்ப் அர்ஸலானின் ஆயுள் முடிவுற்று விட்டது. அவருக்கு ஏழு மகன்கள். அவர்களுள் பதினேழு வயது நிரம்பியிருந்த மாலிக்-ஷா அடுத்து சுல்தான் ஆனார். நீளமான இயற்பெயர் கொண்டிருந்த இவர் வரலாற்றில் குறிப்பிடப்படுவது மாலிக்-ஷா I. அடுத்து சுல்தானாக அவர் பதவியேற்றார் என்று சொல்லிவிட்டாலும் அப்படியொன்றும் ஏகோபித்த முடிவாக அவர் தலையில் கிரீடம் ஏறவில்லை. அல்ப் அர்ஸலானின் சகோதரர் காவுர்த், “நான்தான் வயதில் மூத்தவன். அவருடைய சகோதரன். நீயோ சின்னப்பயல். அதனால் ஆட்சி எனக்கே” என்று முழக்கம் எழுப்பினார். “மகன் உயிருடன் இருக்கும்போது சகோதரனுக்கு வாரிசுரிமை இல்லை ” என்று எதிர்க்குரல் எழுப்பினார் மாலிக்-ஷா. இது என்ன சொத்துத் தகராறா மரத்தடியில் பஞ்சாயத்து நடத்த? இருவரும் போர்க்களத்தில் படைகளுடன் மோதிக்கொண்டார்கள். மூன்று நாள் நடத்த யுத்தத்தில் தம் பெரிய தந்தையைத் தோற்கடித்தார் மாலிக்-ஷா. தோல்வியை ஏற்றுக்கொண்ட காவுர்த், “சரி என்னை விட்டுவிடு, நான் ஒமன் பகுதிக்குச் சென்று விடுகிறேன்” என்று மன்றாட, அதை மாலிக்-ஷா ஏற்றுக்கொண்டார். ஆனால் அவருடைய அமைச்சராக இருந்த நிஸாம் அல்-முல்க், “அப்படியெல்லாம் விட்டுவிட்டால் அது பலவீனத்தின் அடையாளம். பின்னர் மீண்டும் பிரச்சினை ஏற்படலாம்” என்று அறிவுறுத்தியதில், காவுர்த் கழுத்தில் சுருக்கு மாட்டிக் கொல்லப்பட்டார். போரில் அவருக்கு உதவிய அவருடைய இரண்டு மகன்களின் கண்கள் பிடுங்கப்பட்டன. அதன் பிறகுதான் மாலிக்-ஷா, சுல்தான் மாலிக்-ஷா ஆனார். oOo அல்ப் அர்ஸலானின் பாட்டனார் மீக்காயிலுக்கு மூஸா என்றொரு சகோதரர் இருந்தார். அவருடைய பேரன் சுலைமான். மாலிக்-ஷா அந்த சுலைமானின் தலைமையில் படையணி ஒன்றைத் திரட்டினார். ஸெல்ஜுக் துருக்கியர்களைப் போலவே மற்றும் பல துருக்கியப் பழங்குடியினர்கள் அணியணியாகப் புலம்பெயர்ந்து வந்து கொண்டிருந்தனர். அவர்களைப் படைவீரர்களாகக் கொண்டு உருவானது அந்தப் படை. பைஸாந்தியப் பகுதிகளை நோக்கி சுலைமானை அந்தப் படையுடன் அனுப்பி வைக்க, கடகடவென்று அவர்கள் அங்கு வெற்றிபெற ஆரம்பித்தனர். பகுதிகள் பலவும் தமது கட்டுப்பாட்டுக்குள் வர, வர, சுலைமானுக்கு அந்த யோசனை உதித்தது. ‘நானும் சுல்தான் ஆனால் என்ன?’ என்ன தப்பு என்று தோன்றியிருக்க வேண்டும். வெகு திறமையாகத் தமக்கென ஓர் ஆட்சியெல்லையை வடிவமைத்துக்கொண்டு, தாம் கைப்பற்றிய பைஸாந்தியத்தின் நைஸியா நகரை அதன் தலைநகராக ஆக்கிக்கொண்டு, சுல்தானாகிவிட்டார் சுலைமான். கி.பி. 1077 ஆம் ஆண்டு அவரது ஆட்சிப் பகுதி ரோம ஸல்தனத் ஆக உருவானது. பாக்தாதில் உள்ள கலீஃபாவின் ஆணைகளையும் விதிமுறைகளையும் பொதுப்படையாக ஏற்றுக்கொண்டாலும் தனிப்பட்ட சுதந்திரமான சுல்தானாகத் தம்மை ஆக்கிக்கொண்டார் சுலைமான். அன்று உருவான ரோம ஸல்தனத்தின் பகுதிகளே இன்றைய துருக்கி. இதற்கிடையே ஹி. 468 / கி.பி. 1076 ஆம் ஆண்டு, சுல்தான் மாலிக்-ஷாவின் தளபதி அத்ஸாஸ் கவாரிஸ்மி, சிரியாவுக்குச் சென்று டமாஸ்கஸைக் கைப்பற்றினார். மாலிக்-ஷாவின் ஆளுகைக்குள் அந் நகரம் வந்ததும் சிரியாவின் இதர பகுதிகளைக் கைப்பற்றும் பொறுப்பைத் தம் சகோதரரான தாஜுத்தவ்லா துதுஷ் என்பவரிடம் அளித்தார் சுல்தான். படை, பரிவாரங்களுடன் அங்குப் புறப்பட்டுச் சென்றார் துதுஷ். சிரியாவின் அலெப்போ (ஹலப்) நகரம் அச்சமயம் எகிப்தியர்கள் வசமிருந்தது. முதலில் அந் நகரை முற்றுகையிட்டார் துதுஷ். உடனே எகிப்தியப் படை என்ன செய்தது என்றால் தளபதி அத்ஸாஸ் கைப்பற்றி வைத்திருந்தாரே டமாஸ்கஸ், அதை முற்றுகையிட்டது. அந்த முற்றுகையைத் தளபதி அத்ஸாஸால் வெகுநாள் தாக்குப்பிடிக்க முடியவில்லை. உதவி வேண்டி துதுஷுக்குத் தகவல் அனுப்பினார். வேறுவழியின்றி துதுஷ் அலெப்போ முற்றுகையைக் கைவிட்டு டமாஸ்கஸைக் காப்பாற்ற விரையும்படி ஆனது. அதைத்தான் எகிப்தியர்களும் விரும்பியிருக்க வேண்டும். முற்றுகையைத் தளர்த்தி அவர்களது படை பின்வாங்கிச் சென்றுவிட்டது. அலெப்போவையும் பிடிக்க முடியவில்லை; இங்கு வந்து எகிப்தியர்களையும் போரில் நொறுக்க முடியவில்லை என்றானதும் ஆத்திரமா, ஆட்சி மோகமா, அல்லது இரண்டும் சேர்ந்தா என்பது தெரியாது, வந்த வேகத்துக்கு, இந்தப் பின்னடைவுக்குக் காரணமான தளபதி அத்ஸாஸை துதுஷ் கொன்றார். இங்குச் சற்று மூச்சை இழுத்து விட்டுக்கொண்டு, முந்தைய சில அத்தியாயங்களில் உள் நுழையாமல் கடந்து வந்துவிட்ட எகிப்திய அரசு, அதன் அரசியல் பற்றிய சிறு குறிப்பை மட்டும் பார்த்துவிடுவோம். ஃபாத்திமிய ஷீஆ வம்சத்தின் தலைமையகமாக எகிப்து இருந்தது. ஸன்னி முஸ்லிம்களின் அப்பாஸிய கலீஃபாக்கள் இராக்கின் பாக்தாதைத் தலைநகரமாகக் கொண்டு ஆட்சி செலுத்திக்கொண்டிருக்க எகிப்தின் கெய்ரோவில் ஃபாத்திமி வம்ச ஷீஆ கலீஃபாக்களின் ஆட்சி. இஸ்லாத்தின் அடிப்படைக் கோட்பாட்டிலிருந்தே தொடங்கிவிடும் ஸன்னி-ஷீஆ பிளவானது ஆன்மீக அளவில் மட்டும் தங்கிவிடாமல், எக்காலமும் தொடரும் இரு துருவ அரசியல். ஷீஆக்களின் ஃபாத்திமி வம்சத்தை எப்படியாவது ஒழித்துக் கட்டவேண்டும் என்பதே ஸன்னி அப்பாஸிய கிலாஃபத்தின் முக்கிய நோக்கமாக இருந்தது. அதைத்தான் ஒவ்வொரு ஸெல்ஜுக் சுல்தானும் அப்பாஸிய கலீஃபாவின் சார்பாக முன்னெடுத்தார். ஃபாத்திமி வம்சத் தோற்றத்தையும் இந்த வரலாற்றுக் காலம் வரையிலான நிகழ்வுகளையும் விரிவாகப் பிறகு பார்ப்போம். இப்பொழுது துதுஷ்ஷைப் பின் தொடர்வோம். இதை வாசித்தீர்களா? : சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் -7 சிரியாவில் பெருமளவு வளர்ந்து முக்கியத்துவம் பெற்றுவிட்ட ஃபாத்திமி ஷீஆக்களுடன் மும்முரமாக மோதி எகிப்துவரை அவர்களை நெட்டித்தள்ளினார் துதுஷ். ஒருவழியாக சிரியாவைத் தம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து டமாஸ்கஸ் நகருக்கு அவர் தம் இருப்பிடத்தை நகர்த்தினார். கடலோர நகரங்கள் சில ஃபாத்திமி ஆதரவாளர்களின் வசம் இருந்தாலும் சிரியாவின் நிர்வாகம் கி.பி. 1080களில் ஸெல்ஜுக்கியர்களின் கைகளுக்குத் திடமாக வந்து சேர்ந்தது. சிரியாவின் பகுதிகள் பிராந்தியங்களாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொன்றுக்கும் ஸெல்ஜுக் வம்சத்தைச் சேர்ந்தவர் அரசராக ஆக்கப்பட்டார். அப்படி அரசராகும் நபர் மிகவும் சிறுவராகவோ, இள வயதினராகவோ இருப்பின் அவருக்குப் பொறுப்பாளராக அத்தாபேக் ஒருவர் அமர்த்தப்பட்டார். அத்தாபேக் எனப்படும் துருக்கிய வார்த்தைக்கு நெருக்கமான தமிழ்ப் பதம் ‘தந்தையின் பிரதிநிதி’. அத்தாபேக்குகளை உருவாக்கியவர்கள் ஸெல்ஜுக் துருக்கியர்கள். சுல்தான்கள் தங்களுடைய துருக்கிய அடிமைகளுள் திறமையான ஒருவரைத் தேர்ந்தெடுத்து, குட்டி அரசருக்கு ஆசானாகவும் பாதுகாவலராகவும் வாழ்க்கைக்கும் ஆட்சிக்குமான அனைத்துப் பாடங்களையும் கற்றுத் தருபவராகவும் இராணுவப் பயிற்சி, நிர்வாகப் பயிற்சி அளிப்பவராகவும் நியமித்தார்கள். அவர்களும் குட்டி சுல்தானை சுல்தானாக உருவாக்குவார்கள்; அவரது சார்பாக ஆட்சி நிர்வாகம் புரிவார்கள். ஆனால் – பிற்காலத்தில் ஆங்காங்கே அந்த அத்தாபேக்குகள் தாங்களும் அரசர்களாகவும் அல்லது ஆட்சியைத் தீர்மானிக்கும் சூத்திரதாரிகளாகவும் மாறி, சில சமயங்களில் வரலாற்றின் போக்கையே மாற்றி அமைத்ததெல்லாம் வியப்பைத் தூண்டும் நிகழ்வுகள். சுல்தான் மாலிக்-ஷாவுக்கு, காஸிம் அத்-தவ்லா அக் சுன்குர் என்றொரு பால்ய நண்பர் இருந்தார். ஒத்த வயதுடைய இருவரும் ஒன்றாக ஓடி, விளையாடி வளர்ந்தவர்கள். தாம் சுல்தானாக உயர்ந்ததும் தம்முடைய ஆத்மார்த்தத் தோழரைத் தமது பணிகளுக்கு நம்பகமானவராகவும் தமக்கு நெருக்கமானவராகவும் மாலிக்-ஷா ஆக்கிக்கொண்டார். ஆட்சி அரசியலில் அப்படி ஒருவர் செல்வாக்குப் பெற்று உயர்வது மற்றவர்களுக்குப் பிடிக்குமோ? கட்டுப்படுத்த ஏதேதோ செய்திருக்கிறார்கள். ஆனால் அவையெல்லாம் ஏதும் பலனளிக்கவில்லை. இறுதியில் அவரை சுல்தானுக்கு அண்மையில் இல்லாமல் ஆக்கினால் போதும் என்று முடிவு செய்து முயற்சிகள் மேற்கொண்டதில், அது வேலை செய்தது. சுல்தான் மாலிக்-ஷா சிரியாவிலுள்ள அலெப்போ, ஹமாஹ், மன்பிஜ், அல்-லாதிகிய்யா நகரங்களை, காஸிம் அத்-தவ்லாவுக்கு நிலவுரிமைகளுடன் பரிசாக அளித்து அந் நகரங்களை ஆளும் ஆளுநராகவும் ஆக்கி அனுப்பி வைத்தார். அங்குப் புலம்பெயர்ந்த காஸிம் அத்-தவ்லா ஷைஸார், ஹிம்ஸ் நகரங்களையும் ஃபம்யாஹ் அர்-ரஹ்பாஹ் என்ற படையரண் நகர்களையும் தம் ஆட்சிக்குட்பட்ட நிலங்களுடன் இணைத்துத் திறமையாக ஆட்சி புரிய ஆரம்பித்தார். அவரது ஆட்சிச் சிறப்புக்கு உதாரணமாய் ஹிஜ்ரீ ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்த வரலாற்று ஆசிரியர் இமாம் அபூஷமாஹ் ஒரு நிகழ்வைக் குறிப்பிடுகிறார். வணிகர் கூட்டம் அவரது ஆட்சிக்கு உட்பட்ட ஓர் ஊரைக் கடக்க நேர்ந்தால் அதன் உடைமைகளுக்கு அவ்வூர் மக்களே பொறுப்பு என்று அவர் நியதி ஏற்படுத்தியிருந்தார். வணிகர்களின் பொருள், பணம் என்று ஏதேனும் களவு போனால் அவ்வூர் மக்கள்தாம் பொறுப்பு. அவர்கள்தாம் அவற்றைத் திருப்பித் தர வேண்டும் என்பது உத்தரவு. எனவே, வணிகர் கூட்டம் தங்களது உடைமைகளை இறக்கி வைத்துவிட்டு, கால் நீட்டி உடல் நீட்டி ஏகாந்தமாக உறங்க, அவர்கள் கிளம்பிச் செல்லும் வரை அவ்வூர் மக்கள் முறைபோட்டுக் காவல் காத்திருக்கிறார்கள். சாலைகள் கள்வர்கள் தொல்லையின்றிப் பாதுகாவலுடன் திகழ்ந்திருக்கிறது. சிரியாவின் ஒரு பகுதி நகரங்களைத் தம் தோழருக்கு அளித்த சுல்தான் மாலிக்-ஷா ஃபாத்திமிகளை விரட்டிய தம் சகோதரர் தாஜுத் தவ்லா துதுஷுக்கு டமாஸ்கஸ், அதன் அண்டைய நகரங்கள், ஜெருசலம் ஆகியனவற்றின் நிலவுரிமையை அளித்தார். சிரியாவின் முக்கியமான நகரங்களான (திமிஷ்க்) டமாஸ்கஸும் (ஹலப்) அலெப்போவும் சகோதரருக்கும் தோழருக்கும் முறையே பங்களிக்கப்பட்டு, அவரவர் ஆளுகையில் அரசியல் நிலவரம் நிதானத்தை எட்டியது; அமைதி அடைந்தது – சுல்தான் மாலிக்-ஷா உயிருடன் இருந்தவரை. அதன் பிறகு? பிறகென்ன? ஓயாத போர், ஒழியாத ரகளை! ஹி. 485 / கி.பி. 1092 ஆம் ஆண்டு சுல்தான் மாலிக் ஷா மரணமடைந்தார். அவருடைய இருபதாண்டு கால ஆட்சி முடிவுக்கு வந்தது. உருவானது வாரிசுப் போர். சகோதரர் இறந்ததும் தாம் சுல்தான் ஆகிவிட வேண்டும் என்ற ஆசை தாஜுத் தவ்லா துதுஷுக்கு ஏற்பட்டது. எளிதில் நிறைவேறக் கூடிய ஆசையா அது? டமாஸ்கஸ் அதற்குத் தெற்கே உள்ள பகுதிகள் அவர் வசம். ஹும்ஸ் நகரிலிருந்து வடக்கே நீண்டிருந்த பகுதிகளோ காஸிம் அத்-தவ்லா அக் சுன்குரின் கையில். அங்கு அவரது ஆட்சி. எனவே, அவர்கள் இருவருக்கும் இடையே முதலில் முட்டிக்கொண்டது; போராக உருவானது. அடுத்த இரண்டு ஆண்டுகள் அது வரிசையாகத் தொடர்ந்தது. இறுதியில் ஹி. 487/கி.பி. 1094ஆம் ஆண்டு துதுஷ், காஸிம் அத்-தவ்லாவைக் கொன்றார். பத்து வயது நிரம்பியிருந்த அவருடைய ஒரே மகன் அனாதரவானார். அந்த மகன் இவ் வரலாற்றில் முக்கியப் புள்ளி. இரண்டாம் அத்தியாயத்தில் அறிமுகமான இமாதுத்தீன் ஸன்கி. oOo மறைந்த சுல்தானின் சகோதரருக்குத் தாம் அடுத்த சுல்தான் ஆக வேண்டும் என்ற ஆசை எழும்போது சுல்தானின் மகன்களுக்கு எழாமல் இருக்குமா? எழுந்தது. சுல்தான் மாலிக்-ஷாவின் மகன்களான ருக்னுத்தீன் பர்க்யாருக், முஹம்மது எனும் இருவருக்கு இடையே எழுந்தது. அவர்களுக்கு இடையேயான மும்முரப் போட்டி மும்முனைப் போட்டியாகிவிடக் கூடாது என்பதற்காக முதலில் மாலிக்-ஷாவின் சகோதரர் துதுஷ் போட்டியிலிருந்து துடைத்து எறியப்பட்டார். அவர் காஸிம் அத்-தவ்லாவைக் கொன்ற அடுத்தச் சில மாதங்களிலேயே மாலிக்-ஷாவின் மகன் ருக்னுத்தீன் பர்க்யாரை போர்க் களத்தில் சந்திக்கும்படி ஆனது. ஆட்சி, அதிகாரம் என்று வந்தபின் அண்ணன் என்ன, தம்பி என்ன, பெரியப்பா, சித்தப்பா பாசமென்ன? தம் தந்தையின் சகோதரரின் தலையைக் கொய்தார் ருக்னுத்தீன். அத்துடன் துதுஷின் ஆசையும் ஆயுளும் முடிவுற்றது. இதை வாசித்தீர்களா? : சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-31 அதன்பின் ‘வா! நீயா நானா என்று பார்த்துவிடுவோம்’ என்று சகோதரர்கள் பர்க்யாரும் முஹம்மதும் வாரிசுப்போட்டியில் இறங்கிப் போரிட்டார்கள், போரிட்டார்கள், பன்னிரெண்டு ஆண்டுகள் வரை போரிட்டார்கள். ஒருமுறை ஒருவர் வெல்வார். தோற்றவர் ஓடுவார். அவர் அடுத்துச் சில மாதங்களில் மீண்டும் படையைத் திரட்டிக் கொண்டு வருவார். இம்முறை அவர் வெல்வார். இவர் ஓடுவார். பிறகு இவர் படை திரட்டிக்கொண்டு வருவார். இப்படியாக இருவரும் மாறி மாறிப் போரிட்டுக்கொண்டால் மக்களின் கதி என்னாகும்? ‘அட என்ன இது சண்டை ஒரு முடிவுக்கு வரமாட்டேன் என்கிறது’ என்று ஒரு கட்டத்தில் படையினருக்கே சோர்வு ஏற்பட்டிருக்கும் போலும். இரு தரப்புப் படைத்தலைவர்களும் ஒன்று சேர்ந்து ஒப்பந்தம் வரைந்து அச் சகோதரர்கள் இருவர் மத்தியிலும் பகுதிகளைப் பிரித்து அளித்தனர். ஒருவழியாக சமாதானம் சாத்தியம் ஆனது. இராக்கில் மாலிக் ஷாவின் பிள்ளைகளின் கதை இப்படியென்றால், அங்கு துதுஷ் கொல்லப்பட்டாரே, அவர் வசம் சிரியாவின் ஆட்சி அதிகாரம் இருந்ததல்லவா? அதுவும் முக்கியமான நகரங்களைத் தம்மிடம் வைத்திருந்தார் இல்லையா? அவற்றின் கதி? துதுஷும் மகன்களைப் பெற்று வைத்திருந்தார். அவர்களுள் இருவர் ரித்வான், துகக். அந்த மகன்கள் ஆளுக்கொரு வாளையும் படையையும் திரட்டிக்கொண்டு ஒருவருக்கொருவர் வாரிசுப் போரில் களம் இறங்கினார்கள். துண்டானது சிரியா. ரித்வான் அலெப்போ நகரையும் துகக் டமாஸ்கஸ் நகரையும் கைப்பற்றி இரண்டும் இரு தனி அரசுகளாக ஆயின. அதுநாள் வரை அலெப்போவிற்குக் கட்டுப்பட்டிருந்த அந்தாக்கியா தனது விசுவாசப் பிரமாணத்தைத் தூக்கியெறிந்தது. ஜெருசலம் நகர், ஃபாத்திமி ஷீஆக்களான எகிப்தியர்கள் வசம் சென்றது. இவ்விதம் சிரியா பிளவுண்டு தனி ஆட்சியாக ஆகிவிட்டாலும், அதன் பிரச்சினை அத்துடன் தீர்ந்துவிடவில்லை. மறைந்த சுல்தான் மாலிக்-ஷாவின் தோழர் காஸிம் அத்-தவ்லாவுக்கு மற்றுமொரு நெருங்கிய நண்பர் இருந்தார். அவர் பெயர் கெர்போகா. துதுஷ் அவரைச் சிறையில் அடைத்து வைத்திருந்தார். துதுஷ் கொல்லப்பட்டதும் விடுதலையான கெர்போகா, ருக்னுத்தீன் பர்க்யாருக் அணிக்கு ஆதரவாக இராக்கில் உள்ள ஹர்ரான், நுஸைபின், மோஸுல் பகுதிகளைக் கைப்பற்றி வலிமை பெற ஆரம்பித்தார். அதையடுத்து அதாபேக் ஆக மோஸுலை ஆளும் வாய்ப்பு அவருக்கு அளிக்கப்பட்டது. அவரது பார்வை துதுஷின் பிரிவடைந்த சிரியா பகுதிகளின்மீது விழுந்தது. அலெப்போவைக் கைப்பற்றத் திட்டங்கள் தீட்டி அதற்கான காரியங்களில் இறங்க ஆரம்பித்தார் அவர். இப்படி அவரவரும் பேட்டைக்கு ஒருவராய் அடித்துக்கொண்டிருக்க கலீஃபா என்ன செய்து கொண்டிருந்தார்? ஷீஆக்களின் புவைஹித் வம்சத்திடமிருந்து அப்பாஸிய கிலாஃபத்தை மீட்டுத் தந்ததே ஸெல்ஜுக் சுல்தான் துக்ரில்பேக்தான் என்று பார்த்தோம். அந்தளவு பலவீனப்பட்டுக் கிடந்த அந்த கிலாஃபத் அதன் பின்னரும் தன்னளவில் பலம் பொருந்திய, ஆளுமை மிக்க சக்தியாக மீளவில்லை. கலீஃபா இருந்தார். பாக்தாத் நகரம் அவருடைய வசிப்பிடமாகவும் அவரது ஆட்சிக்குரிய நகரமாகவும் இருக்கும். சுல்தான்கள் அவருக்குப் பிரமாணம் அளிப்பார்கள். அவர்மீது மதிப்பும் மரியாதையும் வைத்திருப்பார்கள். இஸ்லாமியக் கொள்கையளவில் அவருக்கு அடிபணிவார்கள். ஆனால் தாங்கள் கைப்பற்றி வைத்திருக்கும் நாடுகளுக்கு, பகுதிகளுக்கு அவர்கள்தாம் ராஜா. அவர்களுடையதுதான் ஆட்சி. அவர்களுக்குள் போரிட்டு யாருடைய கை ஓங்குகிறதோ, அவர் சம்பிரதாயமாக கலீஃபாவைச் சந்திப்பார். மறுப்பின்றி கலீஃபா அவரை அங்கீகரித்து, அரச அங்கியும் ராஜ மரியாதையும் அளிப்பார். நாடெங்கும் வெள்ளிக்கிழமை குத்பாக்களில் கலீஃபாவின் பெயரும் அந்த சுல்தானின் பெயரும் இடம்பெறும். சில மாதங்களில் மற்றொரு சுல்தான் வெற்றிபெற்றால் அவையனைத்தும் அவருக்கு அளிக்கப்பட்டு குத்பாவில் பழைய சுல்தானின் பெயர் நீக்கப்பட்டு இந்தப் புதிய சுல்தானின் பெயர் கலீஃபாவின் பெயருடன் இடம்பெறும். அந்தளவில்தான் அப்பாஸிய கலீஃபாவின் அதிகாரம் இருந்து வந்தது. முதலாம் சிலுவைப் போர்ப் படையினர் வந்து நுழையும் போது, இஸ்லாமிய ஸல்தனத் இவ்விதம் துண்டுதுண்டாகச் சிதறிக் கிடந்தது. பலவீனமடைந்திருந்தது. பேராபத்து ஒன்று வந்து நுழைகிறது; அதை எதிர்கொள்ள வேண்டும் என்பதைக் கூட உணரமுடியாத நிலையில் அவர்களுக்குள் உட்பூசலும் அதிகாரப் போரும் அவர்களது கவனத்தை முற்றிலுமாய்த் திசை திருப்பி வைத்திருந்தன. அவலக்கேடே! சிலுவைப் படையினருக்கு எதிராக எந்த ஒரு சுல்தானும் படை திரட்டவில்லையா, போரிடவில்லையா என்ற கேள்வி எழுந்தால், இருந்தார். ஒருவர் இருந்தார் – கிலிஜ் அர்ஸலான் I. அல்ப் அர்ஸலானின் பெரிய பாட்டனாரின் பேரன் சுல்தான் ரோம ஸல்தனத்தை உருவாக்கினார் என்று மேலே பார்த்தோமே, அவர் மரணமடைந்து அவருடைய மகன் கிலிஜ் அர்ஸலான் அங்கு சுல்தான் ஆகியிருந்தார். அவர்தாம், முதலாம் சிலுவைப் போர்ப் படைக்கு முன்னோட்டமாய் வந்த ‘மக்களின் சிலுவைப்போர்’ என்ற பெருங்கூட்டத்தைத் தோற்கடித்து விரட்டியடித்தார். ஆனால், அந்த வெற்றிக் களிப்புத் தொடரவில்லை. அதைப் பார்க்கத்தான் போகிறோம்.
சென்னை அண்ணா சாலையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில், பருவ மழை காலத்தில் மின் விநியோகத்தில் எந்த வித இடையூறும் இல்லாமல் இருக்க மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து மின் வாரிய தலைவர் ராஜேஷ் லக்கானி உள்ளிட்ட உயர் அதிகாரிகளுடன் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆலோசனை நடத்தினார். அதில் மின் விநியோகம் குறித்த புகார்களை பொறுத்தவரை 99% உடனுக்குடன் சரி செய்யப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள புகார்கள் விரைவில் சரி செய்யப்படும் எனவும் , பருவமழை காலங்களில் சீரான மின் விநியோகம் வழங்கப்பட்டு வருவதாகவும் அதற்காக 11 ஆயிரம் பணியாளர்கள் கூடுதலாக பணி அமர்த்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார். மின்சார விநியோகம் எந்த இடங்களிலும் மின் தளவாடங்களுக்கான பற்றாக்குறைகள் இல்லை , மழை காலத்தில் தொடர்ந்து அயராது பணியாற்றி வரும் மின் பணியாளர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு மனமார நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துக் கொள்வதாகவும் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார். மேலும் இது குறித்து பேசிய அவர் வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ள எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் படி இதுவரை 14,69,000 பராமரிப்பு சிறப்பு பணிகள் நடைபெற்றுள்ளன. 40,000 மின் கம்பங்கள் மாற்றப்பட்டுள்ளன. 32,685 சாய்ந்த மின் கம்பங்கள் சரி செய்யப்பட்டுள்ளன. 1,800 கி.மீ தொலைவுக்கு மின் கம்பிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. 18,380 மின் மாற்றிகள் கையிருப்பு உள்ளன. 2 லட்சம் மின் கம்பங்கள் கையிருப்பு உள்ளன” என்று தெரிவித்தார்
செய்முறை: கை முறுக்கு சுற்ற பிசுக்குள்ள அரிசியாக இருந்-தால் நல்லது. அரிசியை தண்ணீரில் அரை மணி நேரம் ஊற வைத்து கொள்ளவும். செய்முறை: ஊறிய பிறகு வெள்ளைத் துணியில் முடிந்து வைத்து அதில் தண்ணீர் வடிந்து விடும். செய்முறை: பிறகு அதை மிக்ஸியில் போட்டு மாவாக்கி நைஸாக சலிக்கவும். உளுத்தம்பருப்பை பொன்னிறமாக வறுத்து, அரைத்து சலித்துக் கொள்ளவும். செய்முறை: ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு, உளுந்து மாவு, எள், பெருங்காயத்தூள், உப்பு, வெண்ணெய் சேர்த்து பிசையவும். செய்முறை: மாவு பதம் நன்றாக இருந்தால்தான் நன்றாக முறுக்கு சுற்ற முடியும். வெள்ளைத் துணி மேல் ஒரு பாட்டில் மூடியை வைத்து, அதைச் சுற்றி முறுக்கு சுற்றவும்.
புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம் - 6 ஜூன், 2020 இலங்கையில் கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரான நடவடிக்கைகள் அதிகரிப்பு - ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் அறிவிப்பு கொரோனா உயிர்க்கொல்லிக் கிருமியின் நெருக்கடி காணப்படுகின்ற நிலையில் இலங்கை உட்பட பல ஆசிய நாடுகளில் கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரான நடவடிக்கைகள் அதிகரிப்பது குறித்து ஐக்கிய
பிக்பாஸ் நிகழ்ச்சியில் வயசுப் பொண்ணுகளை ரூட்டு விட்டுக் கொண்டு திரிவதாக சொல்லிக்கொள்கிற மகத் ராகவேந்திராவின் தற்போதைய கேர்ள் ஃபிரண்ட் முன்னாள் மிஸ் இந்தியா பிராச்சி மிஸ்ரா.கடந்த ஓராண்டாக காதலித்து வருகிறார்கள்.இதற்கு முன்னர் இவருடன் டேட்டிங் பொண்ணு நடிகை டாப்சி .இருவரும் ஒன்றாக சுற்றி இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் பிரிந்தனர். தற்போது பிக்பாஸ் வீட்டில் மஹத் யாஷிகாவை பற்றி நிறைய வதந்திகள் வரும் நிலையில் இந்நிலையில் மகத்தின் காதலி பிராச்சி மிஸ்ரா தனது காதலருக்காக ஸ்பெஷலாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.தனக்கும், யாஷிகாவுக்கும் இடையேயான உறவு நட்பையும் தாண்டியது என்று மகத் ஒப்புக் கொண்டுள்ளார். ஒரு கட்டத்தில் மகத் மீது காதல் ஏற்பட்டதாக யாஷிகா கமல் ஹாஸனிடம் தெரிவித்தார். பிக் பாஸ் 2 வீட்டில் இத்தனை நடந்தும் மகத் மீது இன்னும் நம்பிக்கை வைத்துள்ளார் அவரது காதலியான பிராச்சி மிஸ்ரா. எதுவாக இருந்தாலும் நேரில் பேசிக் கொள்ளலாம் என்று உள்ளார் அவர். இந்நிலையில் அவர் மகத்தை பிரிந்து இருப்பதால் ரொம்ப ஃபீல் பண்ணி வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.இதேவேளை, அதனை பார்த்த பார்வையாளர்கள் மகத் மீது இன்னும் நம்பிக்கை உள்ளதா என்று அதிர்ச்சியுடன் கேள்வி எழுப்பியுள்ளனர். Almost 60days! Come and and say sorry properly for leaving me alone to get tortured ?? #missyou @mahatofficial and so happy and proud that you are still in the house and holding that smile ? Miss you monkey ?? #mahat #prachimahat #love #trust #friendsforever ? A post shared by Prachi Mishra (@mishraprachi) on Aug 13, 2018 at 1:57pm PDT Previous வெளிநாட்டிற்கு சென்ற பிரபல தொகுப்பாளினியுடன் நெருக்கமாக இருக்கும் இளைஞர் யார்? சர்ச்சைக்குரிய புகைப்படம் உள்ளே
இந்தியா மற்றும் சீனா இடையே சர்ச்சையை ஏற்படுத்திய சீன ஆராய்ச்சிக் கப்பல் யுவான் வாங்-5 ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. வெளிவிவகார அமைச்சின் அனுமதியின் பேரில் இந்தக் கப்பல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. இந்தக் கப்பலின் வருகை குறித்து இந்தியா கடும் அதிருப்தி தெரிவித்ததுடன், சர்ச்சைக்குரிய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, சீனக் கப்பலின் வருகையை எதிர்வரும் 10ஆம் திகதி ஒத்திவைக்குமாறு சீன அதிகாரிகளிடம் வெளிவிவகார அமைச்சு கோரிக்கை விடுத்திருந்தது. எவ்வாறாயினும், இந்த கப்பல் இன்று ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வருவதற்கு வெளிவிவகார அமைச்சு உத்தியோகபூர்வ அனுமதி வழங்கியுள்ளதுடன், உணவு மற்றும் எரிபொருள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேற்கொள்வதற்காக எதிர்வரும் 22ஆம் திகதி வரை கப்பல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நங்கூரமிடப்பட உள்ளது. (யாழ் நியூஸ்) Share Previous News Next News யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.
Thennakam Admin 13th April 2017 நடப்பு நிகழ்வுகள் – 13 ஏப்ரல் 20172017-04-13T10:53:31+05:30 நடப்பு நிகழ்வுகள் இந்தியா 1.மும்பை மாநகராட்சியின் எதிர்க்கட்சி தலைவராக தமிழர் ரவிராஜா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இவரது சொந்த ஊர் ராஜபாளையம் ஆகும். 2.தொலைத்தொடர்பு தகராறுகள் தீர்வு மற்றும் மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் தலைவராக ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி ஷிவா கீர்த்தி சிங் நியமிக்கப்பட்டுள்ளார். 3.கேரள பள்ளிகளில் மலையாளம் மொழி கற்பிப்பதை கட்டாயமாக்கும் வகையில் அம்மாநில அரசு கொண்டு வந்துள்ள அவசர சட்டத்திற்கு ஆளுநர் சதாசிவம் கையெழுத்திட்டுள்ளார். 4.காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மத்திய மந்திரி அகிலேஷ் தாஸ் குப்தா உடல்நலக் குறைவால் நேற்று காலமானர். 5.மத்திய பிரதேசத்தில் மே 1-ந்தேதி முதல் பிளாஸ்டிக் மற்றும் பாலித்தீன் பைகளுக்கு முழுமையான தடை விதிப்பதாக மாநில மந்திரி நரோத்தம் மிஸ்ரா தெரிவித்துள்ளார். 6.அம்பேத்கரின் 125-வது ஜெயந்தி விழாவையொட்டி விசாகப்பட்டினத்தில் கின்னஸ் சாதனைக்காக 7 ஆயிரம் சிறுமிகள் பங்கேற்ற குச்சிபுடி நடன நிகழ்ச்சி நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியை முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு தொடங்கி வைத்தார். உலகம் 1.ஐ.நா. சபையின் இளம் அமைதித் தூதராக பாகிஸ்தானைச் சேர்ந்த மலாலா யூசப்சாய் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.ஐ.நா. பொதுச் செயலாளர் அண்டோனியோ கட்ரஸ் அவருக்கு பட்டத்தை வழங்கி பெருமைப்படுத்தியுள்ளார். இன்றைய தினம் 1.இன்று தமிழகத் திரைப்படப் பாடலாசிரியர், கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பிறந்த தினம்.இவர் பிறந்த தேதி 13 ஏப்ரல் 1930.
ராசியில் ராகு - தைரிய வீர்ய ஸ்தானத்தில் செவ்வாய் (வ) - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சந்திரன் - சப்தம ஸ்தானத்தில் கேது - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் சூர்யன், புதன், சுக்கிரன் - தொழில் ஸ்தானத்தில் சனி - விரைய ஸ்தானத்தில் குரு என கிரகநிலை இருக்கிறது. கிரகமாற்றங்கள்: 28-11-2022 அன்று புதன் பகவான் அஷ்டம ஸ்தானத்தில் இருந்து பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார். 29-11-2022 அன்று செவ்வாய் பகவான் தைரிய வீரிய ஸ்தானத்தில் இருந்து தன வாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார். 06-12-2022 அன்று சுக்ர பகவான் அஷ்டம ஸ்தானத்தில் இருந்து பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்: செவ்வாயை ராசிநாதனாக கொண்ட மேஷராசியினரே, நீங்கள் பயமின்றி பேசக்கூடியவர். இந்த மாதம் துணிச்சலுடன் எதிலும் ஈடுபடுவீர்கள். சாமர்த்தியமான பேச்சின் மூலம் எல்லா அனுகூலமும் கிடைக்க பெறும். ஏற்ற தாழ்வு பார்க்காமல் எல்லோரிடமும் சமமாக பழகுவீர்கள். கொடுத்த வாக்கை காப்பாற்றி, நன்மதிப்பு பெறுவீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். மனதில் ஏதேனும் டென்ஷன் உண்டாகலாம். உடற் சோர்வுகள் வரலாம். முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் திட்டமிட்டு செயலாற்றுவது வளர்ச்சிக்கு உதவும். வாடிக்கையாளர்களிடம் சாதூர்யமாக பேச வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு துணிச்சல் அதிகரிக்கும். எதை பற்றியும் கவலைப்படாமல் வேலையில் வேகம் காட்டுவீர்கள். முக்கிய முடிவுகள் எடுக்கும் போது அவசரப்படாமல் இருப்பது நல்லது. தொழில் வியாபாரம் தொடர்பான பணிகளில் இருந்த தடங்கல்கள் நீங்கும். சாதூரியமான பேச்சு வியாபார விருத்திக்கு கைகொடுக்கும். அலுவலக பணி தொடர்பாக அலைய நேரிடலாம். குடும்பத்தில் இருப்பவர்களுடன் தன்மையாக பேசுவது நல்லது. கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை குறைவு ஏற்படலாம் குடும்பத்தில் இருந்த சிறுசிறு பிரச்சனைகள் சரியாகும். கணவன் மனைவிக்கிடையே விட்டுக்கொடுத்து செல்வதன் மூலம் நன்மை உண்டாகும். பிள்ளைகளின் தேவையை பூர்த்தி செய்ய முற்படுவீர்கள். உறவினர்கள் வருகை இருக்கும். பிள்ளைகளுக்காக செய்யும் வேலைகளில் தடை ஏற்படலாம். பெண்களுக்கு எந்த காரியத்திலும் அவசரம் காட்ட தோன்றும். நிதானமாக செய்தால் வெற்றி நிச்சயம். பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். சாதூரியமான பேச்சு வெற்றிக்கு உதவும். அரசியல்வாதிகள், தாங்கள் சார்ந்துள்ள கட்சியின் தொண்டர்களுக்கும், நெருங்கியவர்களுக்கும் மிகப் பெரிய உதவிகளைச் செய்து பாராட்டுகளைப் பெறுவீர்கள். மேலிடத்திலிருந்து உங்களுக்கு சந்தோஷமான செய்திகள் வந்து சேரும். கலைத்துறையினர் படிப்படியான வளர்ச்சியைக் காண்பீர்கள். வருமானம் நன்றாக இருப்பதால் ரசிகர்களுக்காகச் செலவு செய்வீர்கள். சக கலைஞர்களால் நன்மை அடைவீர்கள். மாணவர்கள் எதிர்கால கல்வி தொடர்பாக அவசர முடிவுகள் எடுப்பதை தவிர்த்து தீர ஆலோசித்து எதிலும் ஈடுபடவும், மற்றவர்களிடம் நிதானமாக பேசுவது நல்லது. பாடங்களை நன்கு படித்து மற்றவர்களின் மதிப்புக்கு ஆளாவீர்கள். திறமையான செயல்பாடுகள் வெற்றிக்கு உதவும். அஸ்வினி: இந்த மாதம் உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சலும், டென்ஷனும் ஏற்பட்டு நீங்கும். வீண் வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது. கணவன், மனைவிக்கிடையே தேவையில்லாத ஒரு விஷயத்தால் கருத்து வேற்றுமை உண்டாகலாம். எனவே கவனமாக இருப்பது நல்லது. பிள்ளைகளால் திடீர் செலவு உண்டாகலாம். பரணி: இந்த மாதம் யாரையும் எதிர்த்துக் கொள்ளாமல் அனுசரித்து செல்வது நன்மை தரும். வீண் மனக்கவலை, காரிய தாமதம் உண்டாகலாம் கவனம் தேவை. பணவரத்து அதிகரிக்கும். வாக்கு வன்மை ஏற்படும். உங்கள் பேச்சுக்கு மற்றவர்கள் செவிசாய்ப்பார்கள். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். தொலைதூரத்தில் இருந்து நல்ல தகவல்கள் வந்துசேரும். கார்த்திகை 1ம் பாதம்: இந்த மாதம் தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் காணப்படும். லாபம் கூடும். பழைய பாக்கிகள் வசூலாகும். வியாபாரம், தொழில் தொடர்பான கடிதபோக்கு சாதகமான பலன் தரும். புதிய ஆர்டர்கள் கிடைக்க பெறுவீர்கள். பணியாளர்கள் மூலம் நன்மை உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையாக எதையும் செய்து முடித்து பாராட்டு பெறுவார்கள். கவுரவம் கூடும். நிலுவை தொகை வந்து சேரும். பதவி உயர்வு கிடைக்கலாம். பரிகாரம்: முருகனுக்கு பால் பாயாசம் நிவேதனம் செய்து வணங்கி வர பல நாட்களாக இழுபறியான காரியம் வெற்றிகரமாக முடியும். மனகவலை நீங்கும். சந்திராஷ்டம தினங்கள்: நவ 24, 25 அதிர்ஷ்ட தினங்கள்: நவ 17, 18; டிச 14, 15 ரிஷபம் (கார்த்திகை 2, 3, 4 பாதம், ரோகிணி, மிருக சிரீஷம் 1, 2, பாதம்) கிரகநிலை: தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய் (வ) - சுக ஸ்தானத்தில் சந்திரன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் கேது - சப்தம ஸ்தானத்தில் சூர்யன், புதன், சுக்கிரன் - பாக்கிய ஸ்தானத்தில் சனி - லாப ஸ்தானத்தில் குரு - விரைய ஸ்தானத்தில் ராகு என கிரகநிலை இருக்கிறது. கிரகமாற்றங்கள்: 28-11-2022 அன்று புதன் பகவான் களத்திர ஸ்தானத்தில் இருந்து அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார். 29-11-2022 அன்று செவ்வாய் பகவான் தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் இருந்து ராசிக்கு மாறுகிறார். 06-12-2022 அன்று சுக்ர பகவான் களத்திர ஸ்தானத்தில் இருந்து அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்: சுக்கிரனை ராசிநாதனாகக் கொண்ட ரிஷப ராசியினரே நீங்கள் அவசரமாக செயல்படுவதை தவிர்ப்பது நன்மை தரும். இந்த மாதம் வீண் செலவும், அலைச்சலும் உண்டாகலாம். தேவையற்ற குற்றச்சாட்டுக்கு ஆளாகலாம். அடுத்தவர்களை அனுசரித்து போய் காரியங்களை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். எதிர்பாராத சுபச்செலவு ஏற்படும். சிந்தித்து செயல்படுவது நன்மை தரும். பணவரவு இருக்கும். அடுத்தவர் நலனுக்காக பாடுபட வேண்டி இருக்கும். பெரியோர் உதவி கிடைக்கும். தொழில் வியாபாரம் தொடர்பான பணிகளில் தாமதம் ஏற்படும். வியாபாரம் தொடர்பான கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் அடுத்தவர்களுக்கான பொறுப்புகளை ஏற்கும் போது எச்சரிக்கை தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களுடன் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. வீண் அலைச்சல் உண்டாகும். குடும்பத்தில் கணவன், மனைவி ஒருவருக்கொருவர் அனுசரித்து செல்வது நல்லது. வாழ்க்கை துணையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பிள்ளைகள் மூலம் மனகவலை ஏற்படலாம். குடும்பத்தில் இருப்பவர்களுடன் அவ்வப்போது வாக்கு வாதங்கள் உண்டாகலாம். பிள்ளைகள் நீங்கள் சொல்வதை கேட்டு நடப்பது மனதுக்கு திருப்தியை தரும். உறவினர்களுடன் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. பெண்கள் மற்றவர்களுக்கு உதவி செய்யப் போய் தேவையற்ற குற்றச்சாட்டுக்கு ஆளாக நேரலாம். வரவுக்கு ஏற்ற செலவு இருக்கும். மற்றவர்கள் பிரச்சனை தீர பாடுபடுவீர்கள். அரசியல்வாதிகள் உடனிருப்பவர்களுடன் எச்சரிக்கையாகப் பழகுவது நல்லது. ரகசியங்களை கையாளுவதில் கவனம் தேவை. அதீத கவனத்துடன் செயல்படுவது உங்களுக்கு பதவி உயர்வு மற்றும் வெற்றியைத் தேடித்தரும் கலைத்துறையில் உள்ளவர்களுக்கு நன்மையான காலகட்டமாக இருக்கும். எதிர்பார்த்த வாய்ப்புகள் வந்து சேரும். சிலருக்கு நெடுநாளைய ஆசைகள் நிறைவேறும். லட்சியங்கள் கைகூடும். மனதிற்கு நெகிழ்ச்சியன சம்பவங்கள் நடக்கும். நிதானம் தேவை. முன்னேற்றம் ஏற்படப்போவது உறுதி. நல்ல அறிமுகம் கிடைக்கப் பெற்று முன்னேற்றம் உண்டு. கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்ள வேண்டும். மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பாராத தடை, தாமதம் உண்டாகலாம். சிறிய வேலையும் செய்து முடிக்க கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். கல்வியில் நாட்டம் அதிகரிக்கும். உயர்கல்வி பற்றிய சிந்தனை மேலோங்கும். கார்த்திகை 2, 3, 4 பாதம்: இந்த மாதம் கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் குதூகலம் உண்டாகும். வாகனம் வாங்கும் அல்லது புதுப்பிக்கும் பணியில் ஈடுபடுவீர்கள். பயணம் மூலம் சாதகமான பலன் கிடைக்கும். குடும்பத்தில் சுப காரியங்கள் நடைபெறும். ரோகிணி: இந்த மாதம் உங்களது வார்த்தைகளுக்கு மதிப்பு கூடும். தொலை தூர தகவல்கள் நல்ல தகவல்களாக வரும். எதிர்பார்த்த பணம் வரும் வாய்ப்பு உள்ளது. திறமை அதிகரிக்கும். உங்களது செயல்களுக்கு பாராட்டு கிடைக்கும். மனதில் தைரியம் கூடும். மிருகசிரீஷம் 1, 2, பாதம்: இந்த மாதம் செல்வ சேர்க்கை உண்டாகும். எந்த ஒரு வேலையும் மன திருப்தியுடன் செய்வீர்கள். புத்தி சாதுரியமும், வாக்குவன்மையும் அதிகரிக்கும். முக்கிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். பண வரவு அதிகரிக்கும். பரிகாரம்: பவுர்ணமியில் பூஜை செய்து அம்மனை வணங்க எல்லா காரியங்களும் நல்லபடியாக நடக்கும் மனகவலை நீங்கும். சந்திராஷ்டம தினங்கள்: நவ 26, 27 அதிர்ஷ்ட தினங்கள்: நவ 19, 20, 21 மிதுனம் (மிருகசிரீஷம் 3, 4 பாதங்கள் திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதம்) கிரகநிலை: ராசியில் செவ்வாய் (வ) - தைரிய வீர்ய ஸ்தானத்தில் சந்திரன் - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் கேது - ரண ருண ரோக ஸ்தானத்தில் சூர்யன், புதன், சுக்கிரன் - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் சனி - தொழில் ஸ்தானத்தில் குரு - லாப ஸ்தானத்தில் ராகு என கிரகநிலை இருக்கிறது. கிரகமாற்றங்கள்: 28-11-2022 அன்று புதன் பகவான் ரண ருண ஸ்தானத்தில் இருந்து களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார். 29-11-2022 அன்று செவ்வாய் பகவான் ராசியில் இருந்து அயன சயன போக ஸ்தானத்திற்கு மாறுகிறார். 06-12-2022 அன்று சுக்ர பகவான் ரண ருண ஸ்தானத்தில் இருந்து களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்: புதனை ராசிநாதனாகக் கொண்ட மிதுனராசியினரே, இந்த மாதம் பணவரத்து அதிகரிக்கும். மனதில் இருந்த குழப்பம் நீங்கும். புதிய நண்பர்களின் நட்பு கிடைக்கும். நீண்ட தூரத்தில் இருந்து வரும் தகவல்கள் நல்ல தகவல்களாக இருக்கும். உங்களை விட உங்களை சுற்றி இருக்கும் மற்றவர்கள் பயன்படும் விதமாக திறமையை பயன்படுத்துவீர்கள். காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்து சேர்வார்கள். தொழில் வியாபாரம் முன்னேற்றம் அடையும். புதிய தொழில் அல்லது வியாபாரம் தொடர்பான முயற்சிகள் சாதகமான பலன் தரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு செயல்திறன் அதிகரிக்கும். கடன் பாக்கிகள் வசூலாகும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேற்கொள்ளும் கடுமையான பணிகள் கூட எளிமையாக நடந்து முடியும். குடும்பத்தில் இருப்பவர்களின் நடவடிக்கை டென்ஷனை ஏற்படுத்தலாம். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை உண்டாகலாம். பிள்ளைகளின் நலனில் அக்கறை காட்டுவீர்கள். உறவினர்கள் மத்தியில் மதிப்பு கூடும். சுப காரியம் நடக்கும். திருமணம் தொடர்பான விஷயங்களில் முன்னேற்றம் காணப்படும். குடும்ப உறுப்பினர்கள் மத்தியில் மகிழ்ச்சி நிலவும், பெண்களுக்கு மனக்குழப்பம் நீங்கி தைரியம் உண்டாகும். தொலைதூர தகவல்கள் நல்ல தகவல்களாக வரும். எடுத்த காரியத்தை சாதகமாக செய்து முடிப்பீர்கள். திடீர் மன தடுமாற்றம் உண்டாகலாம். அரசியல்வாதிகள் வீட்டைவிட்டு வெளியே தங்க நேரிடலாம். பதவிகளில் முன்னேற்றம் உண்டாகும் காலமிது. கடின உழைப்பும், புத்தி சாதுர்யமும் பதவி முன்னேற்றத்திற்கு வழி வகுக்கும். பணவரவு உண்டாகும். எதிர்பார்த்த நற்செய்திகள் தேடி வரும். பதவி உயர்வு கிடைக்கும். கலைத்துறையினருக்கு பகீரதப் பிரயத்தனம் செய்வதன் மூலமாகவே நல்ல முன்னேற்றம் ஏற்படும். சிறிது முயற்சி செய்வதன் மூலம் சிறந்த வாய்ப்புகள் கைகூடும். மேலும் உங்கள் கௌரவம் அதிகரிக்கும். நற்பெயரும் கீர்த்தியும் வந்து சேரும். பொருளாதார வசதிகள் பெருகவும் வாய்ப்பான காலமிது. மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் காண்பீர்கள். கடினமான காரியங்களையும் எளிதாக செய்து முடிப்பீர்கள். கல்வி பற்றிய கவலை அதிகரிக்கும். கவனமாக பாடங்களை படிப்பது வெற்றிக்கு உதவும். மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள்: இந்த மாதம் தொழில், வியாபாரத்தை மாற்றலாமா என்ற எண்ணம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இடமாற்றம் பதவி உயர்வு கிடைக்க பெறுவார்கள். தொழில், வியாபாரத்தில் வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். வாகனங்கள் மூலம் லாபம் கிடைக்கும். சரக்குகளை வெளியூர்களுக்கு அனுப்பும் போது கவனம் தேவை. திருவாதிரை: இந்த மாதம் குடும்ப உறுப்பினர்களுக்கு தேவையான துணி போன்றவைகளை வாங்குவீர்கள். கணவன், மனைவிக்கிடையே இருந்து வந்த கருத்து வேற்றுமை குறையும். உங்களை பற்றி யாராவது வீண் அவதூறு பேசினால் கண்டுகொள்ளாமல் ஒதுங்கி விடுவது நல்லது. விருந்து, கேளிக்கை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு ருசியான உணவை உண்பீர்கள். புனர்பூசம் 1, 2, 3 பாதம்: இந்த மாதம் எந்த ஒரு வேலையையும் மனதிருப்தியுடன் செய்வீர்கள். சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரிய வெற்றி உண்டாகும். பணவரத்து கூடும். கடுமையான முயற்சிகள் மேற்கொள்வது குறையும். வீண் வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது. எதிர்பாராத செலவு உண்டாகும். பரிகாரம்: பானகம் அர்ப்பணித்து பெருமாளை வணங்க முன் ஜென்ம பாவம் நீங்கும். குடும்பம் சுபிட்சமடையும். சந்திராஷ்டம தினங்கள்: நவ 28, 29 அதிர்ஷ்ட தினங்கள்: நவ 22, 23 கடகம் (புனர் பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்) கிரகநிலை: தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் சந்திரன் - சுக ஸ்தானத்தில் கேது - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சூர்யன், புதன், சுக்கிரன் - சப்தம ஸ்தானத்தில் சனி - பாக்கிய ஸ்தானத்தில் குரு - தொழில் கர்ம ஜீவன ஸ்தானத்தில் ராகு - விரைய ஸ்தானத்தில் செவ்வாய் (வ) என கிரகநிலை இருக்கிறது. கிரகமாற்றங்கள்: 28-11-2022 அன்று புதன் பகவான் பஞ்சம ஸ்தானத்தில் இருந்து ரண ருண ஸ்தானத்திற்கு மாறுகிறார். 29-11-2022 அன்று செவ்வாய் பகவான் அயன சயன போக ஸ்தானத்தில் இருந்து லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார். 06-12-2022 அன்று சுக்ர பகவான் பஞ்சம ஸ்தானத்தில் இருந்து ரண ருண ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்: சந்திரனை ராசிநாதனாகக் கொண்ட கடக ராசி அன்பர்களே இந்த மாதம் மனதில் இருந்த குழப்பம் நீங்கி திருப்தி நிலவும். பணவரவு எதிர்பார்த்தபடி வந்து சேரும். பயணங்கள் செல்ல நேரிடலாம். வாக்கு வன்மையால் எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். புத்தி சாதூரியத்துடன் காரியங்களை செய்து மற்றவர்களின் பாராட்டை பெறுவீர்கள். எதிர்பார்த்த பணம் வரலாம். எதிர்ப்புகள் விலகும். புதியநபர்களின் நட்பு உண்டாகும். வீடு வாகனம் தொடர்பான விஷயங்களில் கூடுதல் கவனம் தேவை. தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் விலகும். பணியாட்கள் மூலம் காரிய அனுகூலம் உண்டாகும். சரக்குகளை பாதுகாப்பாக வைப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உழைப்பு அதிகரிக்கும். எந்திரங்களை இயக்குபவர்கள் கவனமாக இருப்பது நல்லது. எவ்வளவு திறமையாக செயல்பட்டாலும் மெத்தனமான போக்கு காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அலுவலக வேலைகளால் டென்ஷன் உண்டாகலாம். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், குதூகலமும் ஏற்படும். குடும்ப உறுப்பினர்கள் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். கணவன், மனைவிக்கிடையே இருந்த மனவருத்தம் நீங்கும். குழந்தைகள் உங்கள் சொல்படி நடப்பது மனதுக்கு மகிழ்ச்சி தரும். கணவன், மனைவிக்கிடையே மனம் விட்டு பேசுவதன் மூலம் முக்கியமான காரியங்களில் நல்ல முடிவு எடுக்க முடியும். பிள்ளைகளின் நலனுக்காக பாடுபட வேண்டி இருக்கும். பெண்கள் சாமர்த்தியமான பேச்சின் மூலம் எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். வாக்குவாதங்கள் அடுத்தவர் பற்றிய விமர்சனங்களை தவிர்ப்பது நல்லது. அரசியல்வாதிகள், மேலிடத்தின் ஆதரவைப் பெறுவீர்கள். ஆனால் அதன் முழுப் பலன்களையும் அனுபவிக்க இயலாத அளவிற்கு மற்றவர்களால் சிறு குறுக்கீடுகளும் தோன்றும். எனினும் மனம் தளராமல் எதிரிகளைச் சமாளிப்பீர்கள். கலைத்துறையினருக்கு நன்மைகள் நடக்கும் காலமிது. வேலை நிமித்தமாக வெளிநாட்டிற்கு பயணம் செல்ல வேண்டி வரலாம். உங்கள் திறமைகளுக்கு அங்கீகாரம் கிடைக்கும். நண்பர்கள் அனுகூலம் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வி, விளையாட்டில் இருக்கும் போட்டிகள் நீங்கும். கல்வி பற்றிய கவலை அதிகரிக்கும். திடமான மனதுடன் படிப்பது வெற்றியை தரும் புனர்பூசம் 4ம் பாதம்: இந்த மாதம் உடற்சோர்வு உண்டாகலாம். பூர்வீக சொத்துக்கள் மூலம் வரும் வருமானம் தாமதப்படும். திருமணம் தொடர்பான முயற்சிகளில் சாதகமான நிலை இருக்கும். தொழில், வியாபாரம் தொடர்பான காரியங்களில் எதிர்பாராத தடை ஏற்பட்டு நீங்கும். பணவரத்து அதிகரிக்கும். எதிர்பார்த்த பண உதவி வந்து சேரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது. பூசம்: இந்த மாதம் அலுவலகம் தொடர்பான பணிகள் தாமதப்படும். எதிலும் கவனம் தேவை. குடும்பத்தில் இருப்பவர்களுடன் வீண் வாக்குவாதங்களை தவிர்த்து சாதாரணமாக பேசுவது நல்லது. வாழ்க்கை துணையுடன் இருந்த மனஸ்தாபங்கள் விலகும். நண்பர்கள், உறவினர்கள் வருகை இருக்கும். பிள்ளைகள் நலனில் அக்கறை காட்டுவீர்கள். ஆயில்யம்: இந்த மாதம் வீண் வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது. கடும் முயற்சிகள் பலன் தரும். செலவு அதிகரிக்கும். சாதகமான சூழ்நிலை காணப்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். மற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் உண்டாகும். விட்டு சென்ற நண்பர் மீண்டும் வந்து சேர்வார். அதனால் மகிழ்ச்சி உண்டாகும். பரிகாரம்: அங்காள பரமேஸ்வரியை வேப்பிலை கொடுத்து வணங்க பிரச்சனைகள் சுமுகமாக முடியும். மனக்குறை நீங்கும். சந்திராஷ்டம தினங்கள்: நவ 30; டிச 01 அதிர்ஷ்ட தினங்கள்: நவ 24, 25 சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்) கிரகநிலை: ராசியில் சந்திரன் - தைரிய வீர்ய ஸ்தானத்தில் கேது - சுக ஸ்தானத்தில் சூர்யன், புதன், சுக்கிரன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் சனி - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் குரு - பாக்கிய ஸ்தானத்தில் ராகு - லாப ஸ்தானத்தில் செவ்வாய் (வ) என கிரகநிலை இருக்கிறது. கிரகமாற்றங்கள்: 28-11-2022அன்று புதன் பகவான் சுக ஸ்தானத்தில் இருந்து பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார். 29-11-2022 அன்று செவ்வாய் பகவான் லாப ஸ்தானத்தில் இருந்து தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார். 06-12-2022 அன்று சுக்ர பகவான் சுக ஸ்தானத்தில் இருந்து பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்: சூரியனை ராசிநாதனாகக் கொண்ட சிம்ம ராசி அன்பர்களே இந்த மாதம் காரியங்கள் தடை நீங்கி சாதகமாக நடந்து முடியும். முக்கிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். அதனால் நன்மை உண்டாகும். பணம் சம்பாதிக்கும் திறமையை அதிகப்படுத்தும். உடல் நலம் சீரடையும். மற்றவர்களுடன் இருந்த மனவருத்தம் நீங்கும். சமூகத்தில் எல்லோராலும் மதிக்கப்படும் உயர்ந்த குணம் மேலோங்கும். எதையும் ஆராய்ந்து அதன் பிறகே அதில் ஈடுபடும் மனநிலை உண்டாகும். ஆன்மிக பணிகளில் நாட்டம் அதிகரிக்கும். பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். தொழில் வியாபாரத்தில் இருந்த தடைகள் நீங்கும். அரசாங்கம் மூலம் நடக்க வேண்டிய காரியங்கள் சாதகமாக நடக்கும். ஆர்டர்கள் பெறுவதில் இருந்த சிக்கல்கள் தீரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் குறையும். மற்றவர்கள் மூலம் உதவி கிடைக்கும். காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும். புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். லாபம் கூடும். குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கணவன், மனைவிக்கிடையில் இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். இதனால் வாழ்க்கையில் சந்தோஷம் அதிகரிக்கும். துக்கமும், துன்பமும் நீங்கும். சில்லறை சண்டைகளும், பூசல்களும் இருக்கும். உறவினர்களுடன் சிறு சிறு கருத்து வேற்றுமை வரலாம். பிள்ளைகளை அவர்கள் போக்கில் விட்டு பிடிப்பது நல்லது. பெண்களுக்கு தடைபட்ட காரியங்களில் இருந்த தடைகள் நீங்கி சாதகமாக நடந்து முடியும். எந்த ஒரு வேலையில் ஈடுபட்டாலும் அதுபற்றி ஒருமுறைக்கு பலமுறை யோசித்தபின் ஈடுபடுவது நல்லது. அரசியலில் உள்ளவர்களுக்கு பொறுப்புகள் மாறும். அதிக கவனத்துடன் பொறுப்புகளை கையாள வேண்டும். மேலிடத்திலிருந்து நல்ல செய்திகள் வந்து சேரும். நீங்கள் செய்த வேலைகளை மற்றவர்கள் செய்ததாகக் கூறி நற்பெயர் எடுத்துக் கொள்வார்கள். கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். எதிர்நோக்கியிருக்கும் சவால்களையும் முடிப்பீர்கள். சுவாரசியமான நபர்களை சந்திக்கும் வாய்ப்புகளைப் பெறுவீர்கள். உங்கள் திறமைகளை அவர்களிடம் எடுத்துக் காட்டுவதன் மூலம் நல்ல வாய்ப்புகள் உங்களுக்குக் கிடைக்கும். விருதுகள் கிடைக்கும். புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பணத்தேவைகள் பூர்த்தியாகும். மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் உண்டாகும். எதிர்கால கல்வி தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். திறமை வெளிப்படும். தன்னம்பிக்கையுடன் பாடங்களை படித்து கூடுதல் மதிப்பெண் பெற முயற்சி மேற்கொள்வீர்கள். மகம்: இந்த மாதம் வீண் மனக்கவலையை உண்டாக்கும். எதிர்பாராத செலவு ஏற்படும். அலைச்சலால் சரியான நேரத்திற்கு உணவு உண்ண முடியாத நிலை ஏற்படலாம். பணவரவு இருக்கும். வாக்கு வன்மையால் காரிய அனுகூலம் ஏற்படும். பூரம்: இந்த மாதம் தொழில், வியாபாரத்தில் எதிர்பாராத போட்டிகள் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் அதிக முதலீடு செய்யும் முன் யோசிப்பது நல்லது. கடன் விஷயங்களில் கவனம் தேவை. பழைய பாக்கிகள் சிறிது தாமதத்திற்கு பின் வந்து சேரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சலை சந்திக்க வேண்டி இருக்கும். உத்திரம் 1ம் பாதம்: இந்த மாதம் குடும்பத்தில் திடீர் கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும். விருந்தினர்கள் வருகையால் செலவு கூடும். அக்கம் பக்கத்தினரை அனுசரித்து செல்வது நல்லது. வாகனங்களல் செல்லும் போதும், நெடுந்தூர பயணங்களின் போதும் கவனமாக இருப்பது நல்லது. பரிகாரம்: பிரதோஷ காலத்தில் நந்தீஸ்வரரையும், சிவபெருமானையும் வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும். எதிர்பார்த்த காரியங்கள் திருப்திகரமாக நடக்கும். சந்திராஷ்டம தினங்கள்: டிச 02, 03 அதிர்ஷ்ட தினங்கள்: நவ 26, 27 கன்னி (உத்திரம் 2, 3, 4 பாதம், அஸ்தம், சித்திரை 1, 2, பாதம்) கிரகநிலை: தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் கேது - தைரிய வீர்ய ஸ்தானத்தில் சூர்யன், புதன், சுக்கிரன் - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சனி - சப்தம ஸ்தானத்தில் குரு - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் ராகு - தொழில் கர்ம ஜீவன ஸ்தானத்தில் செவ்வாய் (வ) - விரைய ஸ்தானத்தில் சந்திரன் என கிரகநிலை இருக்கிறது. கிரகமாற்றங்கள்: 28-11-2022 அன்று புதன் பகவான் தைரிய, வீரிய ஸ்தானத்தில் இருந்து சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார். 29-11-2022 அன்று செவ்வாய் பகவான் தொழில் ஸ்தானத்தில் இருந்து பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார். 06-12-2022 அன்று சுக்ர பகவான் தைரிய, வீரிய ஸ்தானத்தில் இருந்து சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்: புதனை ராசிநாதனாகக் கொண்ட கன்னி ராசி அன்பர்களே இந்த மாதம் புண்ணிய தலங்களுக்கு யாத்திரை செல்ல வேண்டி வரலாம். பணவரத்து திருப்திகரமாக இருக்கும். பலவகையிலும் பிறர் உதவி கிடைக்க பெறுவீர்கள். புத்திசாதூர்யம் அதிகரிக்கும். யாருக்கும் வாக்குறுதிகள் கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. மனதில் இருக்கும் கவலைகளை வெளிக்காட்டாமல் சிரித்த முகத்துடன் அனைவரிடமும் பழகுவீர்கள். காரிய தடங்கல்கள் உண்டாகி நீங்கும். நற்பலன்கள் உண்டாகும். ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். பயணங்கள் சாதகமான பலன் தரும். தொழில் வியாபாரம் நிதானமாக நடக்கும். புதிய ஆர்டர்கள் பெறவும், வாடிக்கையாளர்களை திருப்தி செய்யவும் அலைய வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மற்றவர்களுக்காக பொறுப்புகள் ஏற்கும் போது மிகவும் கவனமாக இருப்பது வீண்பழி ஏற்படாமல் தடுக்கப்படும். அனுபவபூர்வமான அறிவுதிறன் கூடும். முன்னேற்றம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலக பணிகளை சிறப்பாக செய்து முடித்து மேல் அதிகாரிகளின் பாராட்டு பெறுவார்கள். குடும்பத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்து செல்வது நன்மை தரும். கணவன், மனைவிக்கிடையே திடீர் கருத்து வேற்றுமை ஏற்படலாம். பிள்ளைகளுக்காக செலவு செய்ய நேரிடும். பிள்ளைகளின் முன்னேற்றத்தில் அக்கறை காட்டுவீர்கள். உறவினர்கள் மூலம் அலுகூலம் உண்டாகும்.உறவினர்கள் வருகை மகிழ்ச்சி தரும். குடும்பத்தில் இருப்பவர்களால் நன்மை உண்டாகும். சந்தோஷமான நிலை காணப்படும். பெண்களுக்கு மற்றவர்கள் உதவி கிடைப்பதன் மூலம் காரிய அனுகூலம் உண்டாகும். மனக்குழப்பம் நீங்கி தெளிவான சிந்தனை உண்டாகும். இழுபறியாக இருந்த காரியங்கள் சாதகமாக முடியும். அரசியல்வாதிகள், கட்சியின் மேலிடத்தில், கணிசமான ஆதரவைப் பெறுவீர்கள். அதேசமயம் தொண்டர்கள் உங்களிடம் சற்று பாராமுகமாகவே நடந்து கொள்வார்கள். மேலிடத்தின் ஆதரவைப் பெறுவீர்கள். ஆனால் அதன் முழுப்பலன்களையும் அனுபவிக்க இயலாத அளவிற்கு மற்றவர்களால் சிறு குறுக்கீடுகளும் தோன்றும். கலைத்துறையினருக்கு அனைத்து வேலைகளும் சுமுகமாக முடியும். உங்களைத் தேடிப் புதிய வாய்ப்புகள் வரும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சந்தர்ப்பங்கள் தாமாகவே அமையும். பொருளாதார வசதிகளில் முன்னேற்றம் ஏற்படும். புதிய வாகனங்களை வாங்குவீர்கள். ஆக்கபூர்வமான முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காண அனுபவ பூர்வமான அறிவு கைகொடுக்கும். தேர்வில் கூடுதல் மதிப்பெண் பெற நன்கு படிக்க வேண்டி இருக்கும். ஆசிரியர்கள் சக மாணவர்களின் ஆதரவும் கிடைக்கும். உத்திரம் 2, 3, 4 பாதம்: இந்த மாதம் வீண் அலைச்சல் உண்டாகும். மற்றவர்களுக்கு உதவி செய்வதில் ஆர்வம் ஏற்படும். வாக்குவன்மையால் அனுகூலம் உண்டாகும். எந்த காரியத்தையும் யோசித்து செய்வது நல்லது. பணம் சார்ந்த கஷ்டங்கள் குறையும். காரிய வெற்றியும், நன்மையும் உண்டாகும். அஸ்தம்: இந்த மாதம் காரிய அனுகூலம் உண்டாகும். எடுத்த காரியத்தை திறமையாக செய்து முடிக்க தேவையான உதவிகள் கிடைக்கும். சுய நம்பிக்கை அதிகரிக்கும். புத்தி தெளிவு உண்டாகும். எந்த பிரச்சனையும் எதிர்கொள்ளும் தைரியம் உண்டாகும். சித்திரை 1, 2, பாதம்: இந்த மாதம் மனதை கவலை கொள்ளச் செய்த பிரச்சனைகளில் எதிர்பாராத திருப்பங்கள் ஏற்பட்டு சாதகமான பலன் கிடைக்க பெறலாம். தொழில், வியாபாரம் முன்னேற்றப் பாதையில் செல்லும், சிறப்பாக செயல்பட முடியும் என்ற நம்பிக்கை ஏற்படும். எதிர்பார்த்த பண உதவியும் கிடைக்க பெறும். வேலை தேடி கொண்டு இருப்பவர்களுக்கு உத்தியோக வாய்ப்புகள் வரும். முக்கிய நபர்களின் உதவியும் கிடைக்கும். பரிகாரம்: ஐயப்பனுக்கு அபிஷேகத்திற்கு நெய் வாங்கிக் கொடுத்து வணங்கி வர சகல தோஷங்களும் நீங்கும். இழந்த சொத்து மீண்டும் கைக்கு வந்து சேரும். சந்திராஷ்டம தினங்கள்: டிச 04, 05, 06 அதிர்ஷ்ட தினங்கள்: நவ 28, 29 துலாம் (சித்திரை 3, 4 பாதம், சுவாதி, விசாகம் 1, 2, 3ம் பாதம்) கிரகநிலை: ராசியில் கேது - தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் சூர்யன், புதன், சுக்கிரன் - சுக ஸ்தானத்தில் சனி - ரண ருண ரோக ஸ்தானத்தில் குரு - சப்தம ஸ்தானத்தில் ராகு - பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய் (வ) - லாப ஸ்தானத்தில் சந்திரன் என கிரகநிலை இருக்கிறது. கிரகமாற்றங்கள்: 28-11-2022 அன்று புதன் பகவான் தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் இருந்து தைரிய, வீரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார். 29-11-2022 அன்று செவ்வாய் பகவான் பாக்கிய ஸ்தானத்தில் இருந்து அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார். 06-12-2022 அன்று சுக்ர பகவான் தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் இருந்து தைரிய, வீரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்: சுக்கிரனை ராசிநாதனாகக் கொண்ட துலா ராசி அன்பர்களே இந்த மாதம் எதிலும் மிகவும் எச்சரிக்கையாகவும், கவனமாகவும் இருப்பது நல்லது. திடீர் உடல்நல பாதிப்பு உண்டாகலாம். மனம் நிலை கொள்ளாமல் தவிக்கும் நிலை வரலாம். பணவரத்து இருக்கும். கவுரவம், அந்தஸ்து உயரும். எதிர்பார்த்த உதவிகள் மற்றவர்கள் மூலம் கிடைக்கும். வெற்றி என்ற இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். மனக்கவலை நீங்கி எதிலும் தெளிவான முடிவு எடுப்பீர்கள். பணவரத்து கூடும். தாமதமான போக்கு காணப்பட்டாலும் மனம் மகிழும் சம்பவங்கள் நடக்கலாம். வெளியூர் பயணங்கள் மனதுக்கு சந்தோஷத்தை தருவதாக இருக்கும். தொழில் வியாபாரத்தில் மந்தமான போக்கு காணப்பட்டாலும் பணவரத்து குறைவு இருக்காது. தொழில் கூட்டாளிகளுடன் அனுசரித்து செல்வது நன்மை தரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கவனமாக பணிகளை கவனிப்பது நல்லது. வீண் அலைச்சலும் கூடுதல் உழைப்பும் இருக்கும். சாதூரியமான பேச்சின் மூலம் முன்னேற்றம் காண்பார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலான பணிகளை கவனிக்க வேண்டி இருக்கும். பொறுப்புகள் அதிகரிக்கும். குடும்பத்தில் வீண் குழப்பம் ஏற்பட்டு அதனால் நிம்மதி குறையலாம். வாழ்க்கை துணையின் பேச்சை கேட்டு நடக்க வேண்டி இருக்கும். மற்றவர்கள் மூலம் டென்ஷன் உண்டாகலாம். கணவன் மனைவிக்கிடையே கோபத்தை விட்டுவிட்டு இதமாக பேசுவதன் மூலம் நன்மை உண்டாகும். பிள்ளைகள் மூலம் பெருமை கிடைக்கும். பெண்களுக்கு கவுரவம் அந்தஸ்து உயரும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். எடுத்த காரியங்களை செய்து முடிப்பதில் காரிய தாமதம் உண்டாகும். பணபுழக்கம் அதிகரிக்கும். அரசியலில் உள்ளவர்களுக்கு மனதில் நிலையான எண்ணம் இருக்காது. பணநெருக்கடி குறையும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தொண்டர்களின் ஒத்துழைப்பால் பணிகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். நெருக்கடியான நேரத்தில் எதிர்பார்த்த உதவி கிடைப்பதில் தாமதம் ஏற்படும். கலைத்துறையினருக்கு மற்றவர்களுடன் பகை ஏற்படலாம். கெட்டகனவுகள் தோன்றும். நெருக்கடியான நேரத்தில் உறவினர்கள், நண்பர்கள் உங்களை விட்டு விலகி செல்லலாம். கலைத்துறையினருக்கு தொழில் வியாபாரம் சீராக நடக்கும். பழைய பாக்கிகள் வசூல் செய்வதில் வேகம் இருக்கும். புதிய ஆர்டர்கள் கிடைப்பதில் ஏற்பட்ட சிக்கல்கள் தீரும். மாணவர்களுக்கு கவனமாக படிப்பது வெற்றிக்கு உறுதுணையாக இருக்கும். வீண் அலைச்சலை தவிர்ப்பது நல்லது. மாணவர்களுக்கு: உயர்கல்வி கற்க தேவையான பணவசதி கிடைக்கும். கூடுதலாக கவனம் செலுத்தி படிப்பது வெற்றிக்கு உதவும். சித்திரை 3, 4 பாதம்: இந்த மாதம் குடும்பத்தில் தேவையற்ற பிரச்சனைகளை தலை தூக்கச் செய்யும். எனவே சாதுரியமாக பேசி எதையும் சமாளிப்பது நல்லது. பொதுவான காரியங்களில் ஈடுபடும் போது கவனமாக இருப்பது நல்லது. வாகனங்களை பயன்படுத்தும் போது எச்சரிக்கையாக இருப்பது நல்லது. சுவாதி: இந்த மாதம் எந்த ஒரு விவகாரத்தையும் எதிர் கொள்ளும் மன வலிமை உண்டாகும். எதிலும் கூடுதல் கவனத்துடன் இருப்பது நல்லது. எதிர்பாராத சம்பவங்களால் இழுபறியாக நின்ற காரியங்கள் நல்ல முடிவுக்கு வரும். வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடலாம். சந்திரன் சஞ்சாரம் உடல் ஆரோக்கியம் மனதில் உற்சாகத்தை தரும். விசாகம் 1, 2, 3ம் பாதம்: இந்த மாதம் அவ்வப்போது ஏதாவது தடங்கல் ஏற்பட்டு நீங்கும். தொழில், வியாபாரத்தில் இருப்பவர்கள் சற்று கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். கடன் பிரச்சனைகள் குறையும். போட்டிகள் நீங்கும். வரவேண்டிய பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகஸ்தர்களுக்கு மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். திறமையான செயல்கள் மூலம் பாராட்டு கிடைக்கும். பரிகாரம்: கனகதாரா ஸ்தோத்திரம் சொல்லி மகாலட்சுமியை வணங்க கடன் பிரச்சனை தீரும். பணவரத்து அதிகரிக்கும். சந்திராஷ்டம தினங்கள்: டிச 07, 08 அதிர்ஷ்ட தினங்கள்: நவ 30; டிச 01 விருச்சிகம் (விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை) கிரகநிலை: ராசியில் சூர்யன், புதன், சுக்கிரன் - தைரிய வீர்ய ஸ்தானத்தில் சனி - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் குரு - ரண ருண ரோக ஸ்தானத்தில் ராகு - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் செவ்வாய் (வ) - தொழில் கர்ம ஜீவன ஸ்தானத்தில் சந்திரன் - விரைய ஸ்தானத்தில் கேது என கிரகநிலை இருக்கிறது. கிரகமாற்றங்கள்: 28-11-2022 அன்று புதன் பகவான் ராசியில் இருந்து தன வாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார். B2 29-11-2022 அன்று செவ்வாய் பகவான் அஷ்டம ஸ்தானத்தில் இருந்து களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார். 06-12-2022 அன்று சுக்ர பகவான் ராசியில் இருந்து தன வாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்: செவ்வாயை ராசிநாதனாகக் கொண்ட விருச்சிக ராசி அன்பர்களே இந்த மாதம் மனோதைரியம் அதிகரிக்கும். எல்லா காரியங்களும் சாதகமாக நடந்து முடியும். எல்லா இடங்களிலும் மரியாதையும், கவுரவமும் அதிகரிக்கும். எல்லாதரப்பினரிடம் இருந்தும் ஆதரவு கிடைக்கும். நன்மை தீமைகளை பற்றி கவலைப் படாமல் தலை நிமிர்ந்து நடப்பார்கள். எப்போதும் பரபரப்பாக காணப்படுவீர்கள். எதிர்ப்புகள் விலகும். பணவரத்து அதிகரிக்கும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். ஆடை ஆபரண சேர்க்கை இருக்கும். காரிய தடை, வீண் அலைச்சல் ஏற்படலாம். கெட்ட கனவுகள் வரலாம். திடீர் கோபம் ஏற்படும். எதிர்பாலினத்தாரிடம் கவனமாக பழகுவது அவசியம். தொழில் வியாபாரம் முன்னேற்றமடையும். போட்டிகள் குறையும். தொழில் தொடர்பான தகராறுகள் நீங்கும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கப்பெறுவீர்கள். கடன் பிரச்சனை தீரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நிர்வாக திறமை வெளிப்படும். மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். எழுத்து தொழிலில் இருப்பவர்கள் முன்னேற்றம் அடைவார்கள். அலைச்சல் அதிகரிக்கும். கூடுதல் பணிசுமையால் டென்ஷனுடன் காணப்படுவார்கள். நிலுவையில் உள்ள தொகைகள் வந்து சேரலாம். குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். சுபகாரிய நிகழ்ச்சிகள் நடக்கும். திருமணம் தொடர்பான பேச்சு வார்த்தை சாதகமான பலன் தரும். கணவன், மனைவிக்கிடையே சந்தோஷம் நிலவும். பிள்ளைகளுக்காக செய்யும் பணிகள் திருப்தி தரும். அக்கம் பக்கத்தில் இருப்பவர்களுடன் இருந்த தகராறுகள் நீங்கும். பிள்ளைகளின் செயல்பாடுகள் ஆறுதலை தரும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். பெண்களுக்கு நீங்கள் செய்யும் காரியங்களுக்கு எல்லா தரப்பினரிடம் இருந்தும் ஆதரவு கிடைக்கும். நன்மை தீமைகளை பற்றி கவலைப்படாமல் செயலாற்றுவீர்கள். அடுத்தவர்களின் செயல்களால் கோபம் உண்டாகலாம். கலைத்துறையினர் எந்த ஒரு காரியத்திலும் சரியான முடிவுக்கு வர முடியாமல் தடுமாற்றம் உண்டாகும். மற்றவர்களின் கருத்துக்களை ஏற்றுக் கொள்ள முடியாத நிலை உண்டாகி அவர்களுடன் பகை ஏற்படலாம். பண வரத்து அதிகரிக்கும். காரியங்கள் தாமதமாக நடந்தாலும் வெற்றிகரமாக நடக்கும். தொழில் வியாபாரம் தொடர்பாக அலைய வேண்டி இருந்தாலும் முடிவில் லாபம் கிடைக்கும். அரசியலில் உள்ளவர்களுக்கு சாமர்த்தியமாக எதையும் சமாளிக்கும் துணிச்சல் வரும். பணவரத்து திருப்தி தரும். எதிர்ப்புகள் குறையும். எதிர்பார்த்த கடன் வசதி கிடைக்கும். புதிய ஆர்டர்கள் வரும். உழைப்புக்கு ஏற்ற பலனை அடைவார்கள். நிலுவையில் உள்ள பணம் வரும். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான பிரச்சனைகள் நீங்கும். திறமை வெளிப்படும். சக மாணவர்களிடம் இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். கவனத்தை சிதற விடாமல் வகுப்பை கவனிப்பது அவசியம். கூடுதலாக பாடங்களை படிக்க வேண்டி இருக்கும். விசாகம் 4ம் பாதம்: இந்த மாதம் குடும்பத்தில் இருந்து வந்த குழப்பங்கள் தீரும் எதை பற்றியும் கவலைப்படாமல் நினைத்த காரியத்தை செய்வதில் கண்ணும் கருத்துமாக இருப்பீர்கள். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். கணவன், மனைவிக்கிடையே இருந்து வந்த கருத்து வேற்றுமை நீங்கும். பிள்ளைகளுக்காக பாடுபடுவீர்கள். நண்பர்கள், உறவினர்கள் மத்தியில் கவுரவம் கூடும். அனுஷம்: இந்த மாதம் இழுபறியாக இருந்த பிரச்சனைகள் சாதகமான முடிவு பெறும். மனதில் உற்சாகம் அதிகரிக்கும். உத்தியோகம் தொடர்பான பிரச்சனைகள் குறையும். தேவையான உதவி கிடைக்கும். கடன் பிரச்சனை குறையும். முன்னேற தேவையான உதவிகள் கிடைக்கும். கேட்டை: இந்த மாதம் வீண் பகைகள் ஏற்பட்டு விலகும். எவ்வளவு திறமையாக செயல்பட்டாலும் பாராட்டுக்கு பதில் விமர்சனம் கிடைக்கும். திடீர் கோபம் ஏற்படும். வீண் செலவும் இருக்கும். பிடிவாதத்தை தவிர்ப்பது நன்மை தரும். பரிகாரம்: முருகனுக்கு பரிகார பூஜை செய்வதும் சனி பகவானுக்கு நல்லெண்ணை தீபம் ஏற்றி வழிபடுவதும் கஷ்டங்களை போக்கி மனதில் நிம்மதியை தரும். சந்திராஷ்டம தினங்கள்: டிச 09, 10, 11 அதிர்ஷ்ட தினங்கள்: டிச 02, 03 தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்) கிரகநிலை: தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் சனி - சுக ஸ்தானத்தில் குரு - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் ராகு - சப்தம ஸ்தானத்தில் செவ்வாய் (வ) - பாக்கிய ஸ்தானத்தில் சந்திரன் - லாப ஸ்தானத்தில் கேது - விரைய ஸ்தானத்தில் சூர்யன், புதன், சுக்கிரன் என கிரகநிலை இருக்கிறது. கிரகமாற்றங்கள்: 28-11-2022 அன்று புதன் பகவான் அயன சயன போக ஸ்தானத்தில் இருந்து ராசிக்கு ஸ்தானத்திற்கு மாறுகிறார். 29-11-2022 அன்று செவ்வாய் பகவான் களத்திர ஸ்தானத்தில் இருந்து ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார். 06-12-2022 அன்று சுக்ர பகவான் அயன சயன போக ஸ்தானத்தில் இருந்து ராசிக்கு ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்: தேவகுரு குருபகவானை ராசிநாதனாகக் கொண்ட தனுசு ராசி அன்பர்களே இந்த மாதம் எதிர்ப்புகள் நீங்கும். பகைகள் விலகும். அடுத்தவர்களால் இருந்த பிரச்சனைகள் சரியாகும். பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். எல்லாவசதிகளும் கிடைக்கும். தர்மசிந்தனை அதிகரிக்கும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்க பெறுவீர்கள். எங்கும் நல்லது நடக்க வேண்டும் என்ற குறிக்கோள் உடையவர்கள். நீங்கள் நன்மைக்காக போராட தயங்காதவர். மனகலக்கம் உண்டாகும். எவ்வளவு திறமையாக செயல்பட்டாலும் மற்றவர்களின் விமர்சனத்திற்கு ஆளாக வேண்டி வரும். எதிர்த்து செயல்பட்டவர்கள் அடங்கி விடுவார்கள். பணவரத்தும், எதிர்பார்த்த படி இருக்கும். எதிர்பாலினத்தாரின் நட்பும், அதனால் மகிழ்ச்சியும் உண்டாகும். விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நேரிடலாம். வீண்செலவு உடல்நல பாதிப்பு ஏற்படலாம். கவனம் தேவை. தொழில் வியாபாரம் சிறப்படையும். புதிய ஆர்டர்கள் கிடைக்க பெறுவீர்கள். வியாபார வளர்ச்சிக்கு இருந்த தடைகள் நீங்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். அரசாங்கம் தொடர்பான விஷயங்கள் சாதகமாக முடியும். உத்தியோகத்தில் பதவி உயர்வு உண்டாகும். நீண்ட தூர பயணங்களால் காரிய அனுகூலம் உண்டாகும். சக பணியாளர்கள் மூலம் உதவியும் கிடைக்க பெறுவீர்கள். எதிர்பார்த்த முன்னேற்றம் காண கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். வாடிக்கையாளர்களின் ஆதரவு நீடிக்கும். தொழில் விரிவாக்கம் பற்றிய எண்ணம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் புதிய பதவி அல்லது கூடுதல் பொறுப்புகள் கிடைக்க பெறுவார்கள். குடும்பத்தில் உற்சாகம் இருக்கும். மற்றவர்கள் உங்களை அனுசரித்து செல்வார்கள். கணவன், மனைவிக் கிடையே மகிழ்ச்சியான நிலை காணப்படும். அன்பு அதிகரிக்கும். மருத்துவ செலவு ஏற்படலாம். பேச்சின் இனிமை சாதூரியத்தால் எளிதில் காரியங்கள் கைகூடும். குடும்பத்தில் இருப்பவர்களின் நலனுக்காக செலவு செய்ய வேண்டி இருக்கும். பிள்ளைகளின் தேவையை பூர்த்தி செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். அவர்கள் உங்களை மதிப்பது மனதுக்கு இதமளிக்கும். பெண்களுக்கு எதிர்காலத்துக்கு உதவக்கூடிய விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். ஆன்மீக சிந்தனை அதிகரிக்கும். மனதில் வீண்குழப்பம் உண்டாகும். உங்களிடம் ஆலோசனை கேட்டு உங்களை நாடி சிலர் வரக்கூடும். கலைத்துறையினர் கோபத்தை குறைத்து நிதானமாக பேசுவது பிரச்சனை ஏற்படாமல் தடுக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. செலவுகள் கூடும். அதிக நேரம் உழைக்க வேண்டி இருக்கும். உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைக்கும். குடும்பத்தில் இருப்பவர்கள் சொல்வதை சாதாரணமாக எடுத்துக் கொள்வது நல்லது. அரசியலில் உள்ளவர்களுக்கு வீட்டைவிட்டு வெளியே தங்க நேரிடும். தேவையில்லாத வீண் செலவுகள் உண்டாகும். தொண்டர்களின் தேவைகளை அறிந்து பூர்த்தி செய்வது நன்மை தரும். எதிர்காலம் பற்றிய சிந்தனை எழும். உழைப்புக்கு ஏற்ற பலனை அடைவார்கள். பொறுப்புகள் அதிகரிக்கும். மாணவர்களுக்கு கல்வியில் உயர்வு உண்டாகும். மனதில் இருந்த குழப்பம் நீங்கி தைரியம் ஏற்படும். போட்டிகளில் பங்கு பெற ஆர்வம் உண்டாகும். கல்வியில் வெற்றி பெற எடுக்கும் முயற்சிகள் நல்ல பலன் தரும். சக மாணவர்களின் நட்பும் கிடைக்கும். மூலம்: இந்த மாதம் மனதில் தன்னம்பிக்கை கூடும். துணிச்சலாக எதிலும் ஈடுபடுவீர்கள். சந்திரன் சஞ்சாரம் உங்களது எண்ணப்படியே எதையும் செய்து முடிக்கும் சூழ்நிலை ஏற்படும். மற்றவர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதில் நாட்டம் செல்லும். கவுரவம் அந்தஸ்து உயரும். வீண் செலவுகள் உண்டாகும். பூராடம்: இந்த மாதம் தொழில், வியாபாரத்தில் இருப்பவர்கள் தங்களது தொழில் விரிவாக்கம் செய்யும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். அதற்கு தேவையான பண உதவியும் கிடைக்க பெறுவீர்கள். ஆனால் போட்டிகள் பற்றிய கவலைகள் தோன்றும். சமாளிக்க முயல்வீர்கள். உத்திராடம் 1ம் பாதம்: இந்த மாதம் உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்களது திறமையால் அலுவலக பணியை சிறப்பாக செய்வார்கள். புதிய தொடர்புகள் மகிழ்ச்சியை தருவதாக இருக்கும். குடும்பத்தில் சுபகாரியம் நடைபெறும். மனைவி குழந்தைகளுடன் சந்தோஷமாக பொழுதை கழிப்பீர்கள். ஆன்மீக பணிகளில் நாட்டம் அதிகரிக்கும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். பரிகாரம்: ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் சாற்றி அர்ச்சனை செய்து வணங்க வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். மனதில் தைரியம் அதிகரிக்கும். சந்திராஷ்டம தினங்கள்: டிச 12, 13 அதிர்ஷ்ட தினங்கள்: டிச 04, 05, 06 மகரம் (உத்திராடம் 2, 3, 4 பாதம், திருவோணம், அவிட்டம் 1,2 பாதம்) கிரகநிலை: ராசியில் சனி - தைரிய வீர்ய ஸ்தானத்தில் குரு - சுக ஸ்தானத்தில் ராகு - ரண ருண ரோக ஸ்தானத்தில் செவ்வாய் (வ) - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் சந்திரன் - தொழில் கர்ம ஜீவன ஸ்தானத்தில் கேது - லாப ஸ்தானத்தில் சூர்யன், புதன், சுக்கிரன் என கிரகநிலை இருக்கிறது. கிரகமாற்றங்கள்: 28-11-2022 அன்று புதன் பகவான் லாப ஸ்தானத்தில் இருந்து அயன சயன போக ஸ்தானத்திற்கு மாறுகிறார். 29-11-2022 அன்று செவ்வாய் பகவான் ரண ருண ரோக ஸ்தானத்தில் இருந்து பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார். 06-12-2022 அன்று சுக்ர பகவான் லாப ஸ்தானத்தில் இருந்து அயன சயன போக ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்: சனிபகவானை ராசிநாதனாக கொண்ட மகர ராசி அன்பர்களே இந்த மாதம் மனகுழப்பம் நீங்கி தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். ஆக்கபூர்வமான யோசனைகள் தோன்றும். ஆனால் மற்றவர்களிடம் பழகும் போது கவனமாக இருப்பது நல்லது. சமூகத்தில் கவுரவம் அந்தஸ்து அதிகரிக்கும். மற்றவர்களின் நலனுக்காக தன் நலனை பாராமல் உழைப்பீர்கள். எதிர்பார்த்த படி காரியங்கள் நடந்து முடியாமல் காரிய தாமதம் உண்டாகலாம். உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம். வீண் வாக்குவாதத்தால் பகை உண்டாகலாம். பயணத்தில் தடங்கல், வீண் செலவு போன்றவை ஏற்படும். எனினும் நன்மைகள் உண்டாகும். பணவரத்து இருக்கும். வாகன யோகம் உண்டு. பெரியோர்களின் உதவி கிடைக்கும். மனதில் தைரியம் உண்டாகும். எதிலும் தயக்கமோ, பயமோ ஏற்படாது. தொழில் வியாபாரம் தொடர்பான பணிகளில் கூடுதல் கவனம் செலுத்தி அவற்றை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். வியாபாரம் தொடர்பான பயணங்கள் லாபம் தருவதாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகள் கொடுத்த வேலைகளை கவனமாக செய்து முடித்து பாராட்டு பெறுவார்கள். செயல் திறமை அதிகரிக்கும். வாக்குவன்மையால் லாபம் அதிகரிக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். அரசாங்கம் தொடர்பான காரியங்கள் சாதகமான பலன்தரும். புதிய பதவிகள் கூடுதல் பொறுப்பு கிடைக்கப்பெறுவார்கள். அலுவலக பணிகளை வெற்றிகரமாக செய்து முடிக்கும் சாமர்த்தியம் உண்டாகும். குடும்பத்தில் சுகமும், நிம்மதியும் இருக்கும். குடும்பத்திற்கு அதிகப்படியான வருமானமும் கிடைக்கும். மகிழ்ச்சி இருக்கும். நீண்ட நாட்களாக இருந்த குடும்பம் தொடர்பான பிரச்சனைகள் சாதகமாக முடியும். கணவன், மனைவிக்கிடையே சகஜ நிலை காணப்படும். கருத்து வேற்றுமை நீங்கும். குழந்தைகள் கல்விக்காக பாடுபட வேண்டி இருக்கும். குழந்தைகள் திறமையை கண்டு அவர்களை பாராட்டுவீர்கள். உறவினர் வருகை இருக்கும். யாரிடம் பேசும் போதும் நிதானமாக பேசுவது நன்மை தரும். பெண்கள் எதிலும் மிகவும் கவனமாக ஈடுபடுவது நன்மை தரும். திட்டமிட்டு செயல்படுவது வெற்றிக்கு உதவும். பயணங்களால் செலவு ஏற்படும். துணிச்சலுடன் எதிலும் ஈடுபட்டு காரிய வெற்றி காண்பீர்கள். கலைத்துறையினருக்கு செலவுகள் ஏற்படும். பயண சுகம் கிடைக்கும். புதிய வாய்ப்புகள் கிடைப்பது தாமதப்படும். வாகன வசதி உண்டாகும். அடுத்தவர்களிடம் வாக்கு வாதத்தை தவிர்ப்பது நன்மை தரும். கவனம் தேவை. கிடைக்கும் வாய்ப்புகளுக்காக அயராது உழைத்தால் வெற்றி நிச்சயம். அரசியலில் உள்ளவர்களுக்கு தேவையான பணஉதவி கிடைக்கலாம். நீண்ட தூர தகவல்கள் நல்லவையாக இருக்கும். எதிலும் நிதானம் தேவை. அதிக கோபத்தால் வீண்பகை உண்டாகலாம். மேலிடத்தில் வரும் உத்தரவுகளை தாமதிக்காமல் செய்து முடிப்பது உங்களுக்கு நன்மை தரும். மாணவர்கள் உயர்கல்வி தொடர்பான சந்தேகங்களை மற்றவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்வீர்கள். கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். விளையாட்டில் கவனம் செலுத்துவீர்கள். உத்திராடம் 2, 3, 4 பாதம்: இந்த மாதம் நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். வாகன லாபம் ஏற்படும். தகப்பனாருடன் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. வெளி தொடர்புகளில் எச்சரிக்கை தேவை. எண்ணப்படி காரியங்களை செய்து முடிக்க சூழ்நிலை ஏற்படும். செலவுகளை குறைக்க திட்டமிடுவது நல்லது. கவுரவம் உயரும். திருவோணம்: இந்த மாதம் எடுத்துக் கொண்ட காரியங்களில் ஏற்படும் சந்தேகங்களை அவ்வப்போது போக்கிக் கொள்வது நல்லது. திட்டமிட்டு செயலாற்றுவது முனனேற்றத்திற்கு உதவும். சிக்கலான பிரச்சனைகளையும் எளிதாக தீர்ப்பீர்கள். பணவரத்து இருக்கும். திறமையான செயல்களால் புகழும், அந்தஸ்தும் உயரும். அவிட்டம் 1,2 பாதம்: இந்த மாதம் பேச்சின் இனிமை சாதுரியம் இவற்றால் எடுத்த காரியங்கள் எல்லாம் கை கூடும் பயணங்கள் ஏற்படலாம். ஆன்மீக பணிகளில் நாட்டம் செல்லும். உங்களது பொருட்களை கவனமாக பாதுகாத்துக் கொள்வது நல்லது. வாகனங்களில் செல்லும் போதும், ஆயுதம், நெருப்பு இவற்றை கையாளும் போதும் கவனம் தேவை. பரிகாரம்: விநாயக பெருமானை தீபம் ஏற்றி அருகம்புல்லால் அர்ச்சனை செய்து வணங்க எல்லா துன்பங்களும் நீங்கும். உடல் ஆரோக்யம் உண்டாகும். சந்திராஷ்டம தினங்கள்: நவ 17, 18; டிச 14, 15 அதிர்ஷ்ட தினங்கள்: டிச 07, 08 கும்பம் (அவிட்டம் 3, 4 பாதம், சதயம், பூரட்டாதி 1, 2, 3 பாதம்) கிரகநிலை: தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் குரு - தைரிய வீர்ய ஸ்தானத்தில் ராகு - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் செவ்வாய் (வ) - சப்தம ஸ்தானத்தில் சந்திரன் - பாக்கிய ஸ்தானத்தில் கேது - தொழில் கர்ம ஜீவன ஸ்தானத்தில் சூர்யன், புதன், சுக்கிரன் - விரைய ஸ்தானத்தில் சனி என கிரகநிலை இருக்கிறது. கிரகமாற்றங்கள்: 28-11-2022 அன்று புதன் பகவான் தொழில் ஸ்தானத்தில் இருந்து லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார். 29-11-2022 அன்று செவ்வாய் பகவான் பஞ்சம ஸ்தானத்தில் இருந்து சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார். 06-12-2022 அன்று சுக்ர பகவான் தொழில் ஸ்தானத்தில் இருந்து லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்: ஆயுள்காரகன் சனி பகவானை ராசிநாதனாகக் கொண்ட கும்ப ராசி அன்பர்களே இந்த மாதம் பணவரத்து அதிகரிக்கும். அதே நேரத்தில் செலவும் கூடும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். துணிச்சல் உண்டாகும். அதனால் எதை பற்றியும் முன்பின் யோசிக்காமல் செயல்களில் இறங்கி விடுவீர்கள். தேவையற்ற இடமாற்றம் உண்டாகலாம். தன்னைத்தானே உயர்த்தி கொள்வதுடன் பிறரும் உயர பாடுபடுவீர்கள். மனோதைரியம் கூடும். எல்லா வகையிலும் சுகம் உண்டாகும். முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு கீழ்நிலையில் உள்ளவர்களால் லாபம் கிடைக்க பெறுவீர்கள். சரக்குகளை பாதுகாப்பாக வைத்துக் கொள்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் எந்த ஒரு வேலையையும் செய்து முடிப்பதில் வேகம் காட்டுவார்கள். சக ஊழியர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். தொழிலில் இருந்த மெத்தன போக்கு மாறும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் சுமாரான பலன் தரும். திட்டமிட்டபடி பணிகளை முடிக்க முடியாமல் தாமதம் ஏற்படலாம். சக ஊழியர்களுடன் கவனமாக பழகுவது நல்லது. குடும்பத்திற்கு தேவையான பொருட்கள் வாங்குவதன் மூலம் செலவு உண்டாகும். சகோதரர்கள் மூலம் உதவி கிடைக்கும். உறவினர்கள் வருகை இருக்கும் அதே நேரத்தில் அவர்களுடன் வாக்குவாதம் செய்வதை தவிர்ப்பது நல்லது. கணவன், மனைவிக்கிடையே மனம்விட்டு பேசுவதன் மூலம் கருத்து வேற்றுமை வருவதை தவிர்க்கலாம். பிள்ளைகளிம் அனுசரணையாக நடந்து கொள்வது நன்மைதரும். குடும்பத்தில் இருப்பவர்களால் சிறுசிறு பிரச்சனைகள் ஏற்பட்டாலும் அதை வளரவிடாமல் சமாளித்து விடுவீர்கள். பெண்கள் துணிச்சலுடன் ஈடுபட்டு காரிய வெற்றி காண்பீர்கள். பணவரத்து திருப்தி தரும். வாக்கு வாதத்தை தவிர்ப்பது நன்மைதரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கலைத்துறையினருக்கு எதிர்ப்புகள் நீங்கும். பணவரத்து மனமகிழ்ச்சியை தரும். நீண்ட நாட்களாக இருந்த பிரச்சனை குறையும். வாக்கு வன்மையால் நன்மை உண்டாகும். நீங்கள் திட்டமிட்டபடி உங்கள் வாழ்க்கைத் தரம் உயரும். அரசியலில் உள்ளவர்களுக்கு எந்த ஒரு காரியமும் சாதகமாக முடியும். விருப்பமானவர்களுடன் சந்திப்பு ஏற்படும். எதிர்பார்த்த நிதி உதவி கிடைக்கும். அரசாங்கம் மூலம் நடக்க வேண்டிய காரியங்களில் சாதகமான நிலை காணப்படும். மாணவர்கள் மிகவும் கவனமாக எதிலும் ஈடுபடுவது நல்லது. கல்வியை பற்றிய கவலை நீங்கும். திட்டமிட்டபடி பாடங்களை படித்து கூடுதல் மதிப்பெண் பெறுவீர்கள். உயர்கல்விக்காக எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன்தரும். அவிட்டம் 3, 4 பாதம்: இந்த மாதம் தொழில், வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் கூடுதலாக பணியாற்ற வேண்டும். ஆர்டர்கள் கிடைக்க அலைய வேண்டி இருக்கும். பணவரத்து இருந்தாலும் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் கவனமாக செயல்படுவது நல்லது. புதிய பதவிகள் தொடர்பான விஷயங்கள் தாமதப்பட்டாலும் பொறுப்புகள் அதிகரிக்கும். சதயம்: இந்த மாதம் குடும்பத்தில் இருப்பவர்களை அனுசரித்து செல்வது நன்மை தரும். வாழ்க்கை துணையின் உடல் நலனில் அக்கறை தேவை. சிறிய விஷயங்களுக்கு கூட கோபம் வரலாம். அதனால் உறவினர்கள், நண்பர்களிடம் கவனமாக பேசுவது நல்லது. விபரீத ஆசைகள் ஏற்படலாம். கவனம் தேவை. பூரட்டாதி 1, 2, 3 பாதம்: இந்த மாதம் பேச்சின் இனிமை சாதுரியம் இவற்றால் எடுத்த காரியங்களில் சாதகமான பலன் பெறுவீர்கள். உங்களது பொருட்களை கவனமாக பாதுகாத்துக் கொள்வது நல்லது. உங்கள் பொருட்களை கவனமாக வைத்துக் கொள்வது நல்லது. பரிகாரம்: முருகனை வணங்க எதிர்பார்த்த காரிய வெற்றி உண்டாகும். கடன் பிரச்சனை தீரும். சந்திராஷ்டம தினங்கள்: நவ 19, 20, 21 அதிர்ஷ்ட தினங்கள்: டிச 09, 10, ௧௧ மீனம் (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி) கிரகநிலை: ராசியில் குரு - தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் ராகு - சுக ஸ்தானத்தில் செவ்வாய் (வ) - ரண ருண ரோக ஸ்தானத்தில் சந்திரன் - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் கேது - பாக்கிய ஸ்தானத்தில் சூர்யன், புதன், சுக்கிரன் - லாப ஸ்தானத்தில் சனி என கிரகநிலை இருக்கிறது. கிரகமாற்றங்கள்: 28-11-2022 அன்று புதன் பகவான் பாக்கிய ஸ்தானத்தில் இருந்து தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார். 29-11-2022 அன்று செவ்வாய் பகவான் சுக ஸ்தானத்தில் இருந்து தைரிய வீரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார். 06-12-2022 அன்று சுக்ர பகவான் பாக்கிய ஸ்தானத்தில் இருந்து தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்: குரு பகவானை ராசிநாதனாகக் கொண்ட மீன ராசி அன்பர்களே இந்த மாதம் வீண் மனகுழப்பம் ஏற்பட்டு நீங்கும். மற்றவர்களுக்கு உதவபோய் வீண் பிரச்சனையில் சிக்கி கொள்ளலாம். கவனமாக இருப்பது நல்லது. திடீர் கோபம் ஏற்படும். தேவையற்ற வீண் செலவுகளும் உண்டாகும். ஆன்மிக எண்ணம் ஏற்படும். விருப்பமான நபரை சந்திப்பதன் மூலம் மனதுக்கு மகிழ்ச்சி ஏற்படலாம். ரகசியங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதால் பல காரிய தடைகளை சந்திப்பீர்கள். கவனம் தேவை. வீண் வாக்குவாதங்கள், அதன்மூலம் பிறரிடத்தில் பகை போன்றவை உண்டாகலாம். தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் இழுபறியான நிலை காணப்படும். திட்டமிட்டு செயல்படுவதன் மூலம் வியாபாரத்தில் கூடுதல் லாபம் பெற முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் பணிச்சுமையும், வீண் அலைச்சலும் உண்டாகும். கவனமாக வேலைகளை செய்யாவிட்டால் மேல் அதிகாரிகளின் அதிருப்திக்கு ஆளாக நேரிடலாம். லாபம் கிடைப்பது குறையலாம். சரக்குகளை விற்பதில் மிகவும் வேகம் காட்டுவீர்கள். தொழில், வியாபாரம் விரிவாக்கம் செய்வது தொடர்பாக முக்கிய முடிவு எடுப்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலகம் தொடர்பான பயணம் செல்ல வேண்டி வரலாம். சக ஊழியர்களின் உதவியும் கிடைக்கும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் சில்லறை சண்டைகள் உண்டாகலாம் கவனம் தேவை. கணவன், மனைவிக் கிடையே மனவருத்தம் ஏற்படும் நிலை உருவாகலாம். பின் நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளுடன் பேசும் போது நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. பிள்ளைகளின் செயல்பாடுகளில் கவனம் தேவை. அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. குடும்பத்தில் சுப காரியம் நடக்கும். உறவினர்கள் மூலம் நன்மை உண்டாகும். வீட்டிற்கு தேவையான பொருட்கள் சேரும். பெண்களுக்கு மனதுக்கு மகிழ்ச்சி அளிக்கும் சந்திப்பு உண்டாகும். வீண் செலவும் ஏற்படலாம். கோபத்தை குறைப்பது நல்லது. நம்பிக்கையுடன் காரியங்களில் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். மற்றவர்களை நம்பி பொறுப்புகளை ஒப்படைப்பதில் கவனம் தேவை. கலைத்துறையினருக்கு வாகனங்களில் செல்லும் போதும் பயணங்களின் போதும் கூடுதல் கவனம் தேவை. நீண்ட நாட்களாக இருந்த பிரச்சனை குறையும். எந்த ஒரு காரியமும் சாதகமாக முடியும். உங்களுக்கு இருந்த போட்டிகள் குறையும். புதிய வாய்ப்புகள் பெறுவதில் தடுமாற்றம் உண்டாகும். எந்த வேலையை முதலில் கவனிப்பது என்று குழப்பம் வரும். அரசியலில் உள்ளவர்களுக்கு எந்த இக்கட்டான சூழ்நிலையையும் மனஉறுதியுடன் சமாளித்து வெற்றி காண்பீர்கள். எதிர்ப்புகள் நீங்கும். பணவரத்து மனமகிழ்ச்சியை தரும். எதிர்பார்த்த இடங்களில் வெற்றியை அடைய முடியும். எடுத்தகாரியத்தை எளிதில் முடிக்கக் கூடிய சந்தர்ப்பம் வாய்க்கும். மாணவர்களுக்கு விளையாட்டுகளில் ஆர்வம் உண்டாகும். அதே நேரத்தில் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்துவது வெற்றிக்கு உதவும். கல்வி தொடர்பான பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும். சக மாணவர்கள் ஒத்துழைப்பு கிடைக்கும். பூரட்டாதி 4ம் பாதம்: இந்த மாதம் விரும்பியது கிடைக்க கூடுதல் முயற்சி தேவை. சந்திரன் சஞ்சாரத்தால் பணவரத்து அதிகரிக்கும். பயணம் மூலம் லாபம் கிடைக்க பெறுவீர்கள். புதிய நபர்கள் நட்பு உண்டாகும். வாகன மூலம் லாபம் வரும். அரசாங்கம் தொடர்பான காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும். உத்திரட்டாதி: இந்த மாதம் பல விதத்திலும் புகழ் கூடும். மற்றவர்கள் பிரச்சனைகளில் வாதாடி வெற்றி பெறுவீர்கள். தொழில், வியாபாரத்தில் இருந்த போட்டிகள் விலகும். பழைய பாக்கிகள் வசூலாகும். வியாபாரம் விரிவாக்கம் செய்ய தேவையான பண உதவியும் கிடைக்க பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நிலுவையில் இருந்த பணம் வந்து சேரும். மேல் அதிகாரிகள் உதவி கிடைக்கும். சக ஊழியர் மத்தியில் இருந்து எதிர்ப்புகள் விலகும். ரேவதி: இந்த மாதம் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உறவினர்கள் வருகை இருக்கும். திருமணம் போன்ற சுப காரியம் நடக்கும். நிலம், வீடு மூலம் லாபம் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். சுவையான உணவு கிடைக்கும். மனோ பலம் கூடும்.
1979-ம் ஆண்டு சோவியத் ஒன்றியப் படைகள் ஆப்கானிஸ்த்தானை ஆக்கிரமித்தன. அங்கு சோவியத் ஒன்றியப் படையினருக்கு எதிராகப் போராட ஐக்கிய அமெரிக்கா, சவுதி அரேபியா, பாக்கிஸ்த்தான் ஆகியவை இணைந்து இஸ்லாமியத் தீவிரவாதிகளை உருவாக்கி அவர்களுக்கு எதிராகப் போராட வைத்தனர். சோவியத்தின் படைத்துறைச் செலவு ஒரு புறம் அதிகரிக்க வைக்கப்பட்டது. மறுபுறம் அதன் எரிபொருள் ஏற்றுமதி வருமானத்தை வீழ்ச்சியடையச் செய்ய சவுதி அரேபியா எரிபொருள் உற்பத்தியைப் பெருமளவில் அதிகரித்தது. புதிதாகஎரிபொருள் உற்பத்தி செய்யும் நாடுகளில் உற்பத்திச் செலவிலும் குறைந்த விலை உலகச்சந்தையில் எரிபொருள் விற்கப்படும் போது அந்தப் புதிய உற்பத்தி நிலையங்கள் மூடப்படும் பின்னர் எரிபொருள் விலை அதிகரிக்கும் என சவுதி அரேபியா அப்போது தெரிவித்தது. ஆனால்ஆப்கானிஸ்த்தான் போரும் எரிபொருள் விலைவீழ்ச்சியும் சோவியத் ஒன்றியத்தை 1991-ம் ஆண்டு வீழ்ச்சியடைய வைத்தது. அப்பன் காட்டிய வழி 2014-ம் ஆண்டு மார்ச் மாதம் ஊடகம் ஒன்றில்வெளி-ஆசிரியத் தலையங்கம் எழுதிய றோனால்ட் றீகனின் மகன் மைக்கேல் றீகன் தனது தந்தைஎப்படி சவுதி அரேபியாவை உலகச் சந்தையில் எரிபொருளைக் கொட்டிக் குவிக்கும் படி சொன்னார் என்பதை அம்பலப் படுத்தினார். இதன் நோக்கம் சோவியத் ஒன்றியத்தின் வருமானத்தைச் சிதைத்து அதன் நாணயமான ரூபிளை வீழ்ச்சியடையச் செய்வதுமாகும். மைக்கேல் றீகன் தனது கட்டுரையில் அப்போது சோவியத் ஒன்றியத்திடம் இருந்த உலகில் விற்கக் கூடிய ஒரே பொருள் எரிபொருள் மட்டுமே எனத் தெரிவித்ததுடன் பராக் ஒபாமா தனது தந்தையின் வழியைக் கடைப்பிடிக்க வேண்டும் எனத் தெரிவித்திருந்தார். ஆனால் மைக்கேல் அந்த ஆலோசனையைச் சொல்ல முன்னரே ஒபாமா அதைப் பின்பற்றத் தொடங்கிவிட்டார். செயல் மீளியக்கம் – Action Replay தற்போது1980களில் நடந்தவையின் செயல்மீளியக்கம் இப்போது அரங்கேறிக் கொண்டிருக்கின்றது. எரிபொருள் விலை கண்டபடி வீழ்ச்சியடைகின்றது. உக்ரேனின் கிழக்குப் பிராந்தியத்தில் இரசியப் படைகள் இரகசியமாக நிலைகொண்டிருக்கின்றன. அது இரசியாவிற்கு ஒரு செலவு. அது போதாது என்று சிரியாவில் இரசியப் படை நிபுணர்களும் சிறுபடைப்பிரிவும் நிலைகொண்டுள்ளது. இந்த நிலையில் 20,000 போர்த்தாங்கிகள், 2,450 போர் விமானங்கள், 460 உழங்கு வானூர்திகள், சகிதம் சவுதி அரேபியா தலைமையில் துருக்கி உட்பட 25 நாடுகளைச் சேர்ந்த 350,000 படையினர் சிரியா மீதுபடையெடுக்கத் தயாராகி உள்ளனர். சிரியாவில் தனது ஆதிக்கத்தைத் தொடர்ந்து நிலை நிறுத்தவேண்டுமாயின் இரசியா தனது பல படைப்பிரிவுகளை சிரியாவிற்கு அனுப்ப வேண்டியிருக்கும். இரசியா கடல்வழியாக சிரியாவிற்குப் படையினரை அனுப்புவதற்கு தனது வோல்கா நதியில் ஆரம்பித்து கருங் கடலூடாகவும் துருக்கிக்கும் கிரேக்கத்திற்கும் இடையில் உள்ளதுருக்கி நீரிணையூடாகவும் ஏகன் கடலூடாகவும்சென்று மத்தியதரைக் கடலை அடையவேண்டும். துருக்கியால் இரசியாவை இலகுவாக துருக்கிநீரிணையில் வைத்து இரசியக் கடற் போக்கு வரத்தைத் தடுக்க இயலும். இரண்டாம் உலகப் போரின் போதும் துருக்கி அப்படிச் செய்தது. இரசியாவின் மேற்கு கறுக்கின்றது அமெரிக்கப் பாரளமன்றத்திற்கு அனுப்பிய 2017-ம் ஆண்டிற்கான பாதுகாப்புச் செலவுக் கோரிக்கையில் அதிபர் பராக் ஒபாமா ஐரோப்பாவிற்கான பாதுகாப்புச் செலவாக 3.4 பில்லியன் டொலராக ஒதுக்கியிருந்தார். இது 2016-ம் ஆண்டிற்கான ஒதுக்கிட்டிலும் பார்க்க நான்கு மடங்காகும். இரசியாவின் விரிவாக்கத்தைத் தடுப்பதற்கான அதன் எல்லையில் உள்ள கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் நேட்டோப் படைகளையும் படைக்கலன்களையும் குவிப்பது ஐக்கிய அமெரிக்காவின் தற்போதைய தந்திரோபாயமாக இருக்கின்றது. கிழக்கு ஐரோப்பிய நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த அமெரிக்கப் பாதுகாப்புத் துறைச் செயலர்அஸ்டன் கார்ட்டர் 2015- ஜுன் மாதம் 22-ம் திகதி நேட்டோவின் ஐயாயிரம் படையினரைக் கொண்ட அதி உயர் தயார் நிலை இணை அதிரடிப்படைப் (Very High Readiness Joint Task Force) பிரிவுகள் கிழக்கு ஐரோப்பாவில் நிலை கொள்ளச் செய்யப் படும் என்றார். அத்துடன் மறு நாள் எஸ்த்தோனியத் தலைநகருக்குச் சென்ற அஸ்டன் கார்டர் எஸ்தோனியா, லத்வியா,லித்துவேனியா, பல்கேரியா, ருமேனியா ஆகிய நாடுகள் உட்படப் பல மைய மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் முன் கூட்டியே பல படைத்துறைப் பார ஊர்திகளும் உபகரணங்களும் நிலை கொள்ளச் செய்யப்படும் என்றார். அந்த நாடுகளில் தேவை ஏற்படும் போது நேட்டோப்படையினர் ஒரு 48 மணித்தியால அவகாசத்தில் சென்று தரை இறங்கக் கூடியவகையில் முன்னேற்பாடுகள் செய்யப்படும்என்றார். இந்த நகர்வுகளும் நடவடிக்கைகளும் இரசியா உக்ரேனில் செய்யும் அத்துமீறல் நடவடிக்கைகளினால் அச்ச மடைந்த நாடுகளுக்குநம்பிக்கை ஊட்டுவனவாக அமைந்தது. ஜுன்16-ம் திகதி இரசிய அதிபர் விளடிமீர் புட்டீன்இரசியா நாற்பது அணுக்குண்டுகளைத் தாங்கிச் செல்லக் கூடிய கண்டம் விட்டுக் கண்டம் பாயும்ஏவுகணைகளை இந்த ஆண்டு தனது படையில்சேர்த்துக் கொள்ளும் என அறிவித் திருந்தார். இந்த அறிவிப்பும் அஸ்டன் கார்ட்டரின் அறிவிப்பும் ஐரோப்பாவில் ஒரு பனிப்போரை ஆரம்பித்து விடவில்லை என்றார் கார்ட்டர். இரண்டாம் பனிப்போர் 2016 பெப்ரவரி 12-ம் திகதி ஆரம்பமான மூன்று நாள் மியூனிச் பாதுகாப்பு மாநாட்டில் உரையாற்றிய இரசியத் தலைமை அமைச்சர்டிமிட்ரி மெட்வெடேவ் தற்போது இரசியாவிற்கும்மேற்கு நாடுகளுக்கும் இடையில் உள்ள உறவைபுதிய பனிப்போர் என விபரிக்கலாம் என்றார். கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் படைவலுவைஅதிகரிப்பதன் மூலம் ஐரோப்பாவின் உறுதிப்பாட்டை அமெரிக்கா குலைக்கின்றது. ஐக்கிய அமெரிக்காவும் நேட்டோப் படையினரும் செய்யும் நகர்வுகளை அடிப்படையாகக் கொண்டே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். நேட்டோப் படைத்துறைக் கூட்டமைப்பின் உச்சத் தளபதிஜெனரல் பிலிப் பிரீட்லவ் அப்படி ஒரு பனிப்போர் இல்லை என்றார். ஜேர்மனியில் நடந்த மியூனிச் பாதுகாப்பு மாநாட்டில் உரையாற்றிய அமெரிக்க வெளியுறவுத் துறைச் செயலர் ஜோன் கெரி இரசியப் படைகள் சட்டபூர்வமான அமைப்புக்களுக்கு எதிராகத் தாக்குதல்கள் செய்வதாகக் குற்றம் சாட்டினார். கருங்கடலில் நெருங்கும் எதிரிகள் கிறிமியாவை 2014-ம் ஆண்டு மார்ச் மாதம் தன்னுடன் இணைத்த இரசியா மிகவும் துரிதமாக அங்கு தனது போர் விமானங்களையும் கடற்படைக் கப்பல்களையும் ஏவுகணை எதிர்ப்பு முறைமைகளையும் குவித்தது. அத்துடன் கருங்கடலில் தனது கடற்படை வலுவையும் பெருக்கியது. எஸ்த்தோனியா, லித்துவேனியா, லத்வியாஆகிய நாடுகளின் வான்பரப்பை நேட்டோப் படைகள் 24 மணித்தியாலமும் கண்காணிப்பது போல் கருங்கடலையும் கண்காணிக்கும் திட்டத்தை நேட்டோப் படையினர் செயற்படுத்தலாம். இதுவரை கருங்கடலை ஒட்டி துருக்கியில்ஒரு நேட்டோ கடற்படைத் தளம் அமைப்பதைஅனுமதிக்காத துருக்கி இனி ஒரு கடற்படைத்தளம் அமைக்க ஒத்துக்கொள்வதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது. நேட்டோவின் பிரச்சனை விளடிமீர் புட்டீன் ஆட்சிக்கு வந்ததில் இருந்துஐரோப்பிய நாடுகள் தமது பாதுகாப்பையிட்டு கவலையடைந்தன. உக்ரேனில் இரசியா செய்தஆக்கிரமிப்பிற்குப் பின்னர் பல ஐரோப்பியநாடுகள் அச்சமடையவும் தொடங்கின. போதாக் குறைக்கு இரசிய அரசுறவியலாளர்கள் அடிக்கடி அணுப் படைக்கலப் போர் என்றும் மிரட்டிக்கொண்டுருக்கின்றனர். ஐரோப்பாவில் உள்ளநேட்டோவின் அணுப்படைகலன்கள் பழமையானவை. அதன் செயற்திறன்களையிட்டு ஐக்கியஅமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் கரிசனை கொண்டுள்ளன. அடுத்த பத்து ஆண்டுகளில் ஐக்கிய அமெரிக்கா ஐரோப்பவில் உள்ளஅணுப் படைக்கலன்களை மேம்படுத்துவதற்காக பல பில்லியன் டொலர்களை செலவழிக்க எண்ணியுள்ளது. இரு திருச்சபைகளின் தலைகளின் சந்திப்பு 2016-ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 13-ம் திகதி சனிக்கிழமை கியூபாத் தலைநகர் ஹவானாவில்இரசிய மரபுவழித் திருச்சபையின் உயர் போதகர் பட்ரியாக் கிரில்லும் கத்தோலிக்கத் திருச்சபையின் போப் ஆண்டவர் பிரான்சிஸ் அவர்களும் சந்தித்து உரையாடியதுடன் இருவரும் இணைந்து ஒரு பிரகடனத்திலும் கைச்சாத்திட்டனர். இருவரினதும் சந்திப்பில் ஐரோப்பிய ஒருமைப்பாட்டுக்கும் கிருத்தவர்களுக்கு எதிரான வன்முறைகளுக்கும், பயங்கரவாத எதிர்ப்பிற்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. அவர்கள் கைச்சாத்திட்ட பிரகடனத்தில் நாம் உடன்பிறப்புக்கள் பகைவர்கள் அல்லர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. புட்டீனின் உதவியாளராகக் கடவுள் ஐ எஸ் அமைப்பின் வளர்ச்சி வெற்றியில் முடிந்தால் வட ஆபிரிக்கா, மேற்காசியா, மத்தியஆசியா ஆகிய பெரு நிலப்பரப்பு இஸ்லாமியஅரசாக உருவெடுக்கும். இதில் அணுப்படைக்கலனகளைக் கொண்ட பாக்கிஸ்த்தானும் அடக்கம். அதனால் ஒரு பெரு வல்லரசாக உருவெடுக்கலாம். இதையிட்டி திருச்சபைகள் கரிசனை கொண்டுள்ளன போல் தெரிகின்றது. அமெரிக்காவையும் மேற்கு ஐரோப்பாவையும் கிறிஸ்த்தவம் இணைத்து வைத்திருக்கின்றது என்பதுஉண்மையாகும். அதுதான் நேட்டோக் கூட்டமைப்பு. கடந்த இருபது ஆண்டுகளாக இரசியாதம்முடன் இணையும் என எதிர்பார்த்திருந்த இந்தக் கூட்டமைப்பு உக்ரேன் விவகாரத்துடன்அந்த எதிர்பார்ப்பு தவிடு பொடியானது. இப்போது வேறு விதமாக அணுகப்படுகின்றது. இரசியாவிற்கு எதிரான பொருளாதாரத் தடை,எரிபொருள் விலை திட்டமிட்டு விழச்செய்தமை,இரசியாவை சிரியாவில் ஒரு போரில் மாட்டவைத்தமை ஆகியன புட்டீனின் செல்வாக்கை அடுத்த சில ஆண்டுகளில் தவிடு பொடியாக்கும் நோக்கதிலேயே செய்யப்படுகின்றது. சோவியத் ஒன்றியத்தை ஒரு துப்பாக்கி குண்டு கூடவெடிக்க வைக்காமல் 11 ஆண்டுகளில் சிதைத்தது போல புட்டீனின் பிடியில் இருந்து இரசியாவை மீட்டெடுக்கும் போது ஏற்படும் அதிகார இடைவெளியால் இரசியாவில் பெரும் குழப்பம் ஏற்படாமல் தடுக்க இரசிய மரபுவழித் திருச்சபையின் தலையீடு அவசியம். சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர் இரசியாவில் மரபு வழித்திருச்சபையின் செல்வாக்கு அதிகரித்துள்ளது. ஈரானிற்கு எதிரான பொருளாதாரத் தடை கொண்டுவந்த போது அதை ஐநா பாதுகாப்புச் சபையில் இரசியா தனது வீட்டோ அதிகாரத்தைப் பாவித்து இரத்துச் செய்யாமல் இருக்க இரசியத் திருச்சபை உதவியாக இருந்தது. இரசியாவில் திருச்சபைக்கும் புட்டீனிற்கும்இடையில் நல்லுறவு இருந்தாலும் திருச்சபையைபுட்டீன் தனக்கு அடங்கி நடக்கும் ஒன்றாகவே வைத் திருக்கின்றார். ஒரு அமெரிக்க ஊடகம்இஸ்லாமிய நாடுகளில் கடவுளே அரசர் சீனாவிலும் ஜப்பானிலும் அரசரே கடவுள் இரசியாவில் கடவுள் புட்டீனின் உதவியாளர் எனநகைச் சுவையாக புட்டீனிற்கும் திருச்சபைக்கும் உள்ள தொடர்பை விபரித்தது. புட்டீனுடன் திருச்சபை ஒத்துழைத்தாலும் அவர் தம்மீது காட்டும் மேலாண்மையை திருச்சபை விரும்பும் எனச் சொல்ல முடியாது. உலகத்தை ஒரே ஒழுங்கில் கொண்டு வருதல் என்னும் போர்வையில் அமெரிக்க ஐரோப்பியப் பெருமுதலாளிகளின் கட்டுப்பாட்டில் உலகத்தைக் கொண்டு வர திருச்சபைகளின் கியூபச் சந்திப்பு வழிவகுக்குமா ?
பாதாம் பருப்பு ஆரோக்கியமான நட்ஸ் வகை என்பது எல்லோருக்கும் தெரியும். அதனால் இதை உலகளவில் மக்கள் விரும்பி உண்ணுகின்றனர். ஆபிஸ் நேரங்களில் ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் தேவை என்றால் கூட அதில் பாதாம் தான் முதலிடம் பிடிக்கும். பாதாம் பருப்பில் புரதம், நார்ச்சத்து, பொட்டாசியம், பாஸ்பரஸ், மக்னீசியம் மற்றும் விட்டமின் ஈ போன்ற ஏராளமான ஊட்டச்சத்துக்கள் காணப்படுகிறது. இவை உங்க சருமத்தை ஆரோக்கியமாக வைக்கவும், இதய நோய்களின் வீரியத்தை குறைக்கவும், புற்றுநோய்களின் அபாயத்தை குறைக்கவும் மற்றும் இரத்த அழுத்த அளவை கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்கும் உதவுகிறது. இருப்பினும் இந்த பாதாம் பருப்புகள் சிலருக்கு பிடிக்காத ஒன்றாக உள்ளது. அவர்களுக்கு வேறுபட்ட சுகாதார பிரச்சனைகளை உண்டு பண்ணுகிறது. எனவே யார் யாரெல்லாம் பாதாம் பருப்பை சாப்பிடக் கூடாது என்பதை தெரிந்து கொள்வோம். ​ பாதாம் பருப்பு மற்றும் சுகாதார பிரச்சினைகள் மற்ற ஆரோக்கியமான உணவைப் போல பாதாமை உட்கொள்வதும் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. ஏனெனில் இது இரைப்பை மற்றும் குடல் பிரச்சனைகளுக்கு வழி வகுக்கும். எனவே பாதாமை யாரெல்லாம் தவிர்க்க வேண்டும் என்பதை மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர். மருந்துகளை எடுத்துக் கொள்பவர்கள் மலமிளக்கிகள், இரத்த அழுத்தம் மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பிகள் போன்ற மருந்துகளை உட்கொள்பவர்கள் பாதாமை எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும். மேலும் உணவில் பாதாமை சேர்ப்பதற்கு முன்பு உணவியல் நிபுணருடன் கலந்துரையாட வேண்டும் என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறிகிறார்கள். பாதாமில் இயற்கையாகவே மாங்கனீசு அதிகளவில் உள்ளது. இது உங்களுக்கு 0.6 மி. கி கனிமத்தை வழங்குகிறது. இது தினசரி மதிப்பில் 27 சதவீதம் ஆகும். நிறைய பாதாம் பருப்பை உண்பது இதில் மாங்கனீஸ் இருப்பதால் போதைப்பொருள் உணர்வைத் தூண்டும். ​நட்ஸ் அழற்சி நட்ஸ் அழற்சி இருப்பவர்கள் பாதாம் பருப்பை சாப்பிட்ட பிறகு படை நோய், வீக்கம் மற்றும் சுவாசிப்பதில் சிரமம் போன்றவற்றை பெறுகின்றனர். அந்த மாதிரியான அழற்சி ஏற்படுபவர்கள் பாதாம் பருப்பை தவிர்ப்பது நல்லது. நட்ஸ் சாப்பிடுவது அனாபிலாக்ஸிஸுக்கு வழிவகுக்கும், இது உயிருக்கு ஆபத்தானது. உடனடியாக உங்கள் மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுவது நல்லது. விழுங்குவதில் சிரமம் உள்ளவர்கள் சிறு குழந்தைகள் மற்றும் சில வயதானவர்கள் விழுங்குவதில் சிரமம் உள்ளவர்கள் பாதாம் பருப்புகளை தவிர்க்க வேண்டும். ஏனெனில் இது மூச்சுத் திணறல் போன்ற அபாயத்தை அதிகரிக்கிறது. டிமென்ஷியா, பார்கின்சன் நோய் மற்றும் குறைக்கப்பட்டடிமென்ஷியா, பார்கின்சன் நோய் மற்றும் குறைக்கப்பட்ட இயக்கம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மூச்சுத் திணறல் அதிக ஆபத்தை ஏற்படுத்தக் கூடும். விட்டமின் ஈ பாதாமில் அதிகளவு விட்டமின் ஈ உள்ளது. 28 கிராம் பாதாமில் 7.4 மி. கி விட்டமின் ஈ காணப்படுகிறது. இது அன்றாட தேவையில் 15 மி. கி அளவை பூர்த்தி செய்கிறது. இது சோம்பல், மங்கலான பார்வை, தலைவலி, வயிற்றுப்போக்கு மற்றும் வாய்வு ஆகியவற்றை போக்கும்.
WELCOME TO OUR HOME PAGE அப்பாக்குட்டி மருத்துவம் <>தற்போதைய செய்திகள்:........சூடாக ஒரு கப் டீ<><>கருசிதைவு சில அறிகுறிகள்<><>இயற்கை வயாகரா முருங்கை பற்றி உங்களுக்கு தெரிந்ததும்... தெரியாததும்.<><>கர்ப்பப் பை பலம் அடைய உழுத்தங்களி சாப்பிடுங்க..!<><>பெண்கள் பயன்படுத்தும் “நாப்கின்” ஆல் உடல் நலத்திற்கு கேடு! ஆய்வில் அதிர்ச்சி தகவல்! »<><>குளிர் நீரை விட சுடு நீர் தான் பெஸ்ட்! லேட்டஸ்ட் தகவல்!<><>அதுல கிரேட்டா இருக்கணுமா? சில உணவுகளை சாப்பிடாதீங்க!<><>தூக்கம் குறைந்தால் கேன்சர் தாக்கும் : டாக்டர்கள் எச்சரிக்கை<><>மன உளைச்சலா, மாரடைப்பா? தலைமுடியை ஆராய்ந்தால் உடல்கண்டிஷன்தெரியும்<><>ஆஸ்டியோபொரோசிஸ் எனும் அசுரப் பிரச்னை<><>பக்கவாதம் என்றும் பாhpசவாயு என்றும் கூறப்படும் கை, கால், முகம், வாய் போன்றவற்றின் செயலிழப்பு எல்லா வயதினரையும்...;குட்டீஸ்க்கு மூக்கில் ஒழுகுதா? வீட்டு மருந்து கொடுங்க!<><>பெண்களுக்குத் தேவையான அத்தியாவசிய சத்துணவுகள்!<><>பட்டினி கிடந்தா உடல் மெலியாதா?<><>வெங்காயத்தின் 50 மருத்துவ குணங்கள்<><>;ஊட்டச்சத்துக்கள் நிறைந்த சர்க்கரைவள்ளி கிழங்கு <><>இதயத்துக்கு ஏற்ற ஆலிவ் எண்ணெய்‏<><>தொண்டையில் கழலை இல்லை, தைரொயிட் நோயா ?<><>நீரிழிவு நோயாளிகளே உங்கள் சிறுநீரகச் செயற்பாட்டை பரிசோதிப்பது அவசியம்<><>ஹாய் நலமா-2 மூட்டு வலிகளா?‏<><>முட்டையின் மகத்துவம் - ஆய்வில் புதிய கண்டுபிடிப்பு<><>தூக்கம் இல்லாத பிரச்சனைக்கு சிறந்த மருந்து சப்போட்டா பழம்! <><>17 குணங்கள் கொண்ட‌ வெற்றிலை<><>குழந்தை மருத்துவம்: 3 முதல் 8 வயது வரை..<><>உடற்பயிற்சியின்றி அதிகரிக்கும் மரணங்கள்.<><>அல்சரை குறைக்க மன அமைதி தேவை.<><>புற்றுநோய் என்ன செய்யும்?, மாரடைப்பு ஏன் ஏற்படுகிறது? : 3டி அனிமேஷனின் பதில் <><>பசுவின் பால், குழந்தைகளுக்கு நல்லதல்ல - அதிர்ச்சி தகவல்<><>தூக்கம் இன்றி 15 கோடி இளைஞர்கள் தவிப்பு<><>முகப்பரு மறைய<><>தூங்கும் போது பழம், சாக்லேட் சாப்பிடாதீங்க!<><>சிறுநீரகக்கல் இருக்கா? கவலையை விடுங்க...<><>ஏலக்காய்’ல இவ்வளவு மருத்துவ குணம் இருக்கா!! <><>ஹீமோகுளோபின் அதிகரிக்க வழிகள்<><>மருத்துவ குணங்கள் நிறைந்த துளசி!<><>தைராய்டு பற்றிய விழிப்புணர்வும் அவற்றுக்கான தீர்வும்!<><>வயாக்கிராவுக்கு பதில் மாதுளம்பழம்!<><> உடலுக்கு குளிர்ச்சியைத் தரும் வெள்ளரிக்காய்<><>தைரியமாக சொல்லுங்க: ”தொட்டுக்க ஒரு டபுள் ஆம்லெட் போடுங்க.. மனையாளே!”<><>புற்று நோய் பற்றிய விழிப்புணர்வும் விரிவான தகவல்களும்!<><>விஷ ஜந்துக்கள் கடித்து விட்ட‌தா? என்ன முதலுதவி செய்யலாம்? தெரிந்து கொள்ளுங்கள்…<><>மாரடைப்பைத் தடுக்கும் ரத்தப் பரிசோதனை <><>பகலில் தூங்காதீங்க மன அழுத்தம் வரும் – ஆய்வில் தகவல் <><>சிறு தானியங்களின் மருத்துவக் குணங்கள்!<><>சீரகத்தின் குணங்களை தெரிந்துக் கொள்ளுங்கள்.<><>மன அழுத்தத்தை போக்கும் வாழை இலை! <><>ரத்த சோகையை தடுக்கும் வழிகள்<><>தூங்காமல அவதிப் படுகிறீர்களா! <><>இரவுப் பணியில் இருப்பவர்களுக்கு மாரடைப்பு அபாயம் அதிகம்! ஆய்வு தகவல்!<><>குழந்தை பெற்ற பின்னும் உடல் சிக்கென்று இருக்க<><>மார்பகப் புற்றுநோயில் இருந்து பாதுகாப்பு தரும் வைட்டமின் C! <><>கிராம்பின் மருத்துவ குணங்கள்! <><> இருதய நோய்களிலிருந்து பாதுகாப்பு தருகிறது வேர்க்கடலை<><>அல்சர் இருக்கா கவனம் புற்று நோய் வருவதற்கான சாத்தியங்கள் அதிகம்! <><>புகைப்பழக்கத்துக்கு அடிமையானவர்களா நீங்கள்? நிறுத்த 7 வழிகள்!<><>அதிகாலையில் தண்ணீர் பருகுங்கள் பல வியாதிகளைக் குணப்படுத்த முடியும்.<><>நீரிழிவை ஏற்படுத்தும் அழகு சாதனப் பொருட்கள்!!<><>பெண்களுக்கு இதெல்லாம் பிடிக்குமாம்... உங்களுக்குத் தெரியுமா?<><>குழந்தை வேண்டுமா? மணல்தக்காளி சாப்பிடுங்கள்!<><>சில நோய்களுக்கான அறிகுறிகளும் தப்பிக்கும் வழிகளும்.. <><>நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் செக்ஸ் : ஆய்வில் நிரூபணம்<><>செக்ஸ் வாழ்க்கையில ஈடுபட முடியலையே!<><>மாரடைப்பு <> சனி, 23 மார்ச், 2013 தயிர் அருமருந்து சிலருக்கு தயிரை கண்டாலே பிடிக்காது. சிலருக்கு தயிர் இல்லாமல் சாப்பாடு இறங்காது. தயிர் ஒரு அருமருந்து. உடலுக்கு குளிர்ச்சி தருவதோடு நல்ல ஜீரண சக்தியையும் தருகிறது. பால் , சாப்பிட்ட ஒரு மணி நேரத்தில 32 சதவீதம் ஜீரணமாகியிருக்கும். தயிர், சாப்பிட்ட ஒரு மணி நேரத்தில 91 சதவீதம் ஜீரணப்பட்டிருக்கும். தயிரில் உள்ள லாக்டோபேசில் என்ற என்சைம் ஜீரண சக்தியை தூண்டி வயிற்றுக் கோளாறுகளை சரி செய்கிறது. வயிறு சரியில்லாதபோது தயிர் சோற்றை சாப்பிட டாக்டர்கள் சொல்வது இதனால்தான். அதிகமாக வயிற்றுப் போக்கு ஏற்படும் போது வெந்தயத்துடன் தயிர் ஒரு பக் சேர்த்து சாப்பிட்டால் வயிற்றுப் பொறுமல் அடங்கும். பிரியாணி போன்ற உடலுக்கு சூடுதரும் உணவு வகைகளை சாப்பிடும் போது வயிற்றுக்கு அதிகம் கேடு விளைவிக்காமல் இருக்கத்தான் தயிர் வெங்காயம் சாப்பிடுகிறோம். மெனோபாஸ் எட்டப் போகும பெண்களுக்கு தயிர் மிகவும் தேவையானது உடலுக்கு தேவையான அதிக கால்சியத்தை தயிர் வழங்குகிறது. தயிரில் முக்கியமான வைட்டமின் சத்துக்களும், புரதச்சத்துகளும் அடங்கியுள்ளன. கால்சியமும், ரிபோபிளேவின் என்ற வைட்டமின் பி-யும் தயிரிலிருந்தே பெறப்படுகின்றன. தயிரில் இருக்கும் பாக்டீரியா ஜீரண சக்தியை அதிகரிக்கும். நன்மை செய்யும் பாக்டீரியாவை உருவாக்கும். சூரிய ஒளியால் பாதிக்கப்டும் நரம்புகளையும், தோல்பகுதிகளையும் தயிர் தனது ஆரோக்கியமான கலவைகளால் பாதுகாக்கிறது. மலச்சிக்கல், வயிற்றுப் போக்கு போன்றவற்றுக்கு தயிர்தான் சிறந்த மருந்து. குடல்வால் மற்றும் வயிற்றுப்போக்குக்கு காரணமான கிருமிகள் தயிர், மோரில் உள்ள லாக்டிக் அமிலத்தால் விரட்டியடிக்கப்படும். மஞ்சள் காமாலையின் போது தயிரிலோ மோரிலோ சிறிதளவு தேனை கலந்து உட்கொள்வது சிறந்த உணவாகும். மலம் கழித்த பிறகு சிலருக்கு மலக்குடல் எரிச்சல் ஏற்படும். தயிர் மற்றும் எலுமிச்சை சாறு அருந்தி இதை குணப்படுத்தலாம். சில தோல்வியாதிகளுக்கு மோரில் நனைத்த துணியை பாதிக்கப்பட்ட இடத்தில் கட்டி வருவது சிறந்த மருந்தாகும். தோல் வீக்க நோய்க்கும் மோர்க்கட்டு சிறந்த மருந்தாகும். தயிரை சோற்றுடன் கலந்து சாப்பிடபிடிக்காதவர்கள் தயிரில் சர்க்கரை கலந்து லஸ்ஸியாக குடிக்கலாம். பன்னீர் கட்டிகளாக உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இதனை அதிகம் சேர்த்துக கொண்டால் கொழுப்பு சத்தை அதிகப்படுத்தும். மோராக கடைந்து உப்பு, கொத்தமல்லி, கறிவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து நீர் மோராக சாப்பிடும் போது தயிரை தவர விட்டுவிடாதீர்கள்.
3rdEyeReports | ThirdEyeReports creates Brands & Branding of Celebrities, Products, Services in different fields Stay tuned for latest blogs & video updates on latest happenings... Featured post தனுஷின் “கேப்டன் மில்லர்” படத்தில் கன்னட சூப்பர் ஸ்டார் Dr. சிவராஜ்குமார் தனுஷின் “கேப்டன் மில்லர்” படத்தில் கன்னட சூப்பர் ஸ்டார் Dr. சிவராஜ்குமார் !! கன்னட சூப்பர் ஸ்டார் Dr. சிவராஜ்குமார் தனுஷ் நடிக்கும் “கேப்டன... Monday, 24 May 2021 ஜே.எப்.எல். புரொடக்ஷன் தயாரிப்பில் ஜே.கே. வழங்கும் திரைப்படம் *ஜே.எப்.எல். புரொடக்ஷன் தயாரிப்பில் ஜே.கே. வழங்கும் திரைப்படம் லாகின்* *பிரவீன், வினோத் கிஷன், ப்ரீத்தி நடிப்பில் உருவாகியிருக்கும் லாகின்* *லாகின் செய்வதால் ஏற்படும் விளைவை பற்றி சொல்லும் படம்* ஜே.எப்.எல். புரொடக்ஷன் தயாரிப்பில் ஜே.கே. வழங்கும் திரைப்படம் 'லாகின்'. இப்படத்தில் நாயகர்களாக அப்புச்சி கிராமம் படத்தில் நடித்த பிரவீனும், அந்தகாரம் படத்தில் நடித்த வினோத் கிஷனும் நடிக்கிறார்கள். நாயகியாக ப்ரீத்தி நடிக்கிறார். ராஜ்குமார் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு விபின் இசையமைக்கிறார். ராம் கிஷன் கதைக்கு, திரைக்கதை, வசனம் எழுதி ராஜேஷ் வீரமணி இயக்கி இருக்கிறார். சாப்ட்வேரில் வேலை பார்க்கும் நண்பர்கள் இரண்டு பேர், தங்களுக்கு தெரிந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மற்றவர்கள் வாழ்க்கையில் விளையாடுகிறார்கள். ஒரு கட்டத்தில் அந்த தொழில்நுட்பம் அவர்கள் வாழ்க்கையில் விளையாட ஆரம்பிக்கிறது. அந்த விளையாட்டின் விளைவை விறுவிறுப்பான திரைக்கதை மூலம் உருவாக்கி இருக்கிறார் இயக்குனர். இன்றைய சூழ்நிலையில் ஏதேதோ தேவைகளுக்காக லாகின் பண்ணிகிட்டே இருக்கிறோம், லாகின் செய்து உள்ளே சென்று தெரியாத விஷயங்களையும் தவறான விஷயங்களையும் செய்தோமேயானால் ஏற்படும் விளைவை பற்றியே லாகின் படம் சொல்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது பின்னணி வேலைகள் மும்முரமாக நடை பெற்று வருகிறது. சமீபத்தில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் நோ மட்டும் சொல்லாத என்ற பாடல் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து சமூக வலைத்தளத்தில் வைரலானது. டெக்னாலஜியை மையமாக வைத்து உருவாகி இருக்கும் இப்படத்தின் டீசர் மற்றும் டிரெய்லரை விரைவில் வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.
குமரேசன் துரைசாமி என்னும் நெப்போலியன், 1991 ஆம் ஆண்டு புது நெல்லு புது நாத்து என்னும் திரைப்படத்தில் தன்னுடைய 28 வயதிலேயே கதாநாயகிக்கு தந்தையாக வித்தியாசமான வில்லன் கேரக்டரில் நடித்திருந்தார். அதன் பின்னர் வந்த சின்ன தாயி, பரதன், ஊர் மரியாதை படங்களிலும் வில்லனாகவே நடித்தார். புது நெல்லு புது நாத்து திரைப்படத்தை இயக்குனர் பாரதிராஜா இயக்கியிருந்தார். இந்த படத்தில் ராகுல், சுகன்யா, நெப்போலியன், பொன்வண்ணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இயக்குனர் பாரதிராஜா இந்த திரைப்படத்தில் அறிமுகமான குமரேசனுக்கு நெப்போலியன் என்னும் பெயரை வைத்திருக்கிறார். Also Read : அமெரிக்காவில் தீபாவளி கொண்டாடிய நெப்போலியனின் குடும்ப புகைப்படம்.. மூத்த மகனுக்காக அவர் செய்த நெகிழ்ச்சியான சம்பவம்! அப்போது நெப்போலியன் தன்னுடைய நண்பர்களிடம் பாரதிராஜா தனக்கு வைத்த பெயரை கூறியிருக்கிறார். அப்போது அவருடைய நண்பர்கள் அவரை பயங்கரமாக கேலி செய்து இருக்கின்றனர். சரக்கு பாட்டில் பெயரை வைத்திருப்பதாக கூறி அவரிடம் வீண் பேச்சு பேசி வம்பிழுத்து இருக்கிறார்கள். பயங்கர கோபமான நெப்போலியன் உங்கள மாதிரி அருண், விஜய், ஷங்கர்னு பேர் வச்சா என்னால தமிழ் படத்துல மட்டும் தான் நடிக்க முடியும். இப்போ நெப்போலியன்னு பேர் வச்சதால ஒரு நாள் நா ஹாலிவுட் படம் நடிப்பன்னு சொல்லியிருக்கிறார். சொல்லியதை நெப்போலியன் செய்தும் காட்டியிருக்கிறார். Also Read : விஜய் வேணும்னே அப்படி செய்தது எனக்கு புடிக்கல.. நேரடியாகவே சொன்ன நெப்போலியன் 1994 ஆம் ஆண்டு இவர் நடித்த சீவலப்பேரி பாண்டி, 1997 ஆம் ஆண்டு நடித்த எட்டுப்பட்டி ராசா படங்களுக்கு பிறகு நெப்போலியனுக்கு ஹீரோ இமேஜ் வந்துவிட்டது. அதன் பிறகு நெப்போலியன் ஹீரோ, வில்லன், குணச்சித்திர கதாபாத்திரங்கள் ஏற்று நடித்தார். பின்னர் நெப்போலியன் அவர் நண்பர்களிடம் சொன்னபடியே ஹாலிவுட் படங்களில் நடித்தார். 2019 ஆம் ஆண்டு வெளியான கிறிஸ்துமஸ் கூப்பன் என்னும் ஹாலிவுட் திரைப்படத்தில் நடித்தார். அதன் பிறகு டெவில்ஸ் நைட், டிராப் சிட்டி, ஒன் மோர் டிரீம் என அடுத்தடுத்து ஹாலிவுட் படங்களில் நடித்திருக்கிறார். Also Read : நெப்போலியனின் கண்ணீர் கதை.. இந்த மனுசனுக்குள்ள இவ்வளவு கஷ்டங்களா? Continue Reading Related Topics:சினிமா செய்திகள், தமிழ் சினிமா, தமிழ் படங்கள், நடிகர்கள், நடிகைகள், நெப்போலியன், பாரதிராஜா
“கொணர்வி” மற்றும் “டாமிட்” போன்ற கிளாசிக் ட்யூன்களில் செய்ததைப் போல டிலோங்கே மற்றும் மார்க் ஹோப்பஸ் முன்னணி குரல்களை இந்த பாடலில் கொண்டுள்ளது. “நரகத்தில் ஒரு சிறப்பு இடம் இருக்கிறது என்று எனக்குத் தெரியும்,” ஹோப்பஸ் பாடுகிறார். “எனக்கும் எனது நண்பர்களுக்கும் நன்றாகத் தெரியும்/செல்ல ஒரு சரியான இடம் இருக்கிறது/கட்டுப்பாட்டை இழக்க வேண்டிய நேரம் வரும்போது.” 2015 இல் டெலோஞ்ச் குழுவிலிருந்து வெளியேறியபோது, ​​அவருக்கு பதிலாக அல்கலைன் ட்ரையோவின் மாட் ஸ்கிபா நியமிக்கப்பட்டார். அந்த புதிய வரிசை 2016 ஐ பதிவு செய்தது கலிபோர்னியா மற்றும் 2019 ஒன்பது மற்றும் அதிக அளவில் சுற்றுப்பயணம் செய்தார், ஆனால் பல சந்தைகளில் டிக்கெட் விற்பனை பலவீனமாக இருந்தது, மேலும் கிளாசிக் வரிசை மீண்டும் ஒன்றாக வரும் என்று ரசிகர்கள் தொடர்ந்து நம்பினர். பல மாத வதந்திகளுக்குப் பிறகு, குழு இந்த வாரம் DeLonge ஒரு புதிய ஆல்பம் மற்றும் விரிவான உலக சுற்றுப்பயணத்திற்காக திரும்புவதாக அறிவித்தது. வியாழன் அன்று, DeLonge இன்ஸ்டாகிராமில் ஸ்கிபாவுக்கு ஒரு கடிதத்தை வெளியிட்டார். “நான் இல்லாத நேரத்தில் இசைக்குழுவை உயிர்ப்புடன் வைத்திருக்க நீங்கள் செய்த அனைத்திற்கும் நான் ஒரு நிமிடம் ஒதுக்க விரும்புகிறேன்,” என்று அவர் எழுதினார். “நீங்கள் மிகவும் திறமையானவர் என்று நான் நினைக்கிறேன் (உங்கள் இசைக்குழுவை நான் இன்றுவரை கேட்க விரும்புகிறேன்). பத்திரிக்கையில் மட்டுமல்ல, மற்றவர்களிடமும் நீங்கள் எப்போதும் என்னிடம் மிகவும் அன்பாக இருந்திருக்கிறீர்கள். நான் உண்மையில் கவனித்தேன்… குதித்து அந்த நாளைக் காப்பாற்றும் உங்கள் திறமை இல்லாவிட்டால் இசைக்குழு இன்று கூட இங்கு இருக்காது.” Blink-182 அவர்கள் மீண்டும் இணைவதற்கான பயணத்தை மார்ச் 11, 2023 அன்று மெக்சிகோவில் உள்ள டிஜுவானாவில் தொடங்குகிறது. அவர்கள் பிப்ரவரி 26, 2024 வரை நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச்சில் முன்பதிவு செய்த தேதிகள் உள்ளன. எங்கோ வழியில், அவர்கள் ஒரு புதிய ஆல்பத்தை கைவிட திட்டமிட்டுள்ளனர். மார்க் ஹாப்பஸ் புற்றுநோயுடன் சமீபத்திய போரைப் பற்றி ஒரு நினைவுக் குறிப்பையும் உருவாக்கி வருகிறார். அவர் ஆரம்பத்தில் தனது நோய் பற்றிய செய்தியை ரகசியமாக வைத்திருந்தார், ஆனால் அவர் தற்செயலாக அதை Instagram இல் தனது மூன்றாவது கீமோ அமர்வுக்கு உட்படுத்தினார். “இது வெளிவந்தவுடன், உலகம் முழுவதும் இருந்தும், இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் மற்றும் டிஸ்கார்ட் ஆகியவற்றில் உள்ளவர்களிடமிருந்தும் மட்டுமல்லாமல், 20 ஆண்டுகளுக்கு முன்பு நான் பழகிய பழைய நண்பர்களிடமிருந்தும் இவ்வளவு பெரிய ஆதரவும் அன்பும் வெளிப்பட்டது.” அவன் சொன்னான். “அவர்கள் மீண்டும் என் வாழ்க்கையில் வந்தார்கள், அந்த நேரத்தில், நான் ஒரு மூலையில் திரும்பியதைப் போல உணர்ந்தேன். நான் மிகவும் பயப்படுவதை நிறுத்திவிட்டேன், சரி, என் கதையைப் பகிர்ந்துகொள்வதன் மூலம் இதை எப்படி சமாளிக்க முடியும் என்பதைப் பார்ப்போம்.
பாலியல் கிளர்ச்சியையும் உச்சத்தையும் அடைவதற்காக, ஒருவர் தனது இனப்பெருக்க உறுப்பைத் தூண்டும் செயலே சுயஇன்பம் எனப்படுகிறது. ஆண்கள் பொதுவாக, புணர்ச்சிப்பரவசநிலை வரும் வரை அல்லது விந்து வெளியேறும் வரை ஆணுறுப்பைத் தட்டி, முன்னும் பின்னும் இழுத்துக் குலுக்குவதன் மூலம் சுயஇன்பம் செய்வார்கள். சிலர் ஏதேனும் ஒரு பொருளின் மீது ஆணுறுப்பைத் தேய்ப்பது, அழுத்துவது போன்ற முறைகளிலும் சுயஇன்பம் செய்வார்கள். பலர் பல வழிகளில் சுயஇன்பம் செய்வார்கள். அது எப்படிச் செய்வது அவர்களுக்கு நன்றாக இருக்கிறது என்பதைப் பொறுத்தது. பாலியல் கிளர்ச்சியின் உச்சத்தில் ஆணுறுப்பிலிருந்து விந்து வெளியேறுகிறது. விந்து என்பது, வளர்ந்து வரும் விந்தணுக்களைக் கொண்டிருக்கும் திரவமாகும். சில ஆண்கள் பாலியல் கிளர்ச்சிக்காக ஆணுறுப்பைத் தூண்டி, ஆட்டி அசைத்து இன்பம் காண்பார்கள். ஆனால் சுயஇன்பம் செய்யும் ஒவ்வொரு முறையும் அவர்கள் விந்தை வெளியிடாமல் இருக்கலாம். சுயஇன்பம் என்பது பதின்பருவ ஆண் பிள்ளைகளும் வயதுவந்த ஆண்களும் செய்யும் பொதுவான செயல்தான். பெரும்பாலான சிறுவர்கள், பதின்பருவத்தில் அதாவது சுமார் 16 வயதுவாக்கில் சுயஇன்பம் செய்வது பற்றித் தெரிந்துகொள்கின்றனர். இந்த வயதிற்குள் பெரும்பாலான சிறுவர்கள் சுயஇன்பம் செய்துபார்த்திருப்பார்கள். இந்தியாவில் நடத்தப்பட்ட பாலியல் கருத்துக்கணிப்பு (இந்தியா டுடே செக்ஸ் சர்வே 2012) ஒன்றில், பங்கேற்ற ஆண்களில் சுமார் 71% பேர் சுயஇன்பம் செய்திருப்பதாகத் தெரிவித்திருந்தனர். ஆண்கள் ஏன் சுயஇன்பம் செய்கிறார்கள்? (Why do men masturbate?) ஆண்கள் சுயஇன்பம் செய்ய முக்கியக் காரணம் அதில் அவர்களுக்குக் கிடைக்கும் பாலியல் இன்பம் தான். பலருக்கு பாலியல் கற்பனைகள் பலவிதமாக இருக்கும், சுயஇன்பம் செய்வது அவர்களின் கற்பனைகளைத் தட்டித் தூண்டி இன்பம் பெறவும், பாலியல் அழுத்தத்தை வெளியிட்டு அமைதிநிலை அடையவும் உதவுகிறது. உடலில் விந்து சேரும்போது, அது உடலிலிருந்து வெளியேற சுயஇன்பம் உதவுகிறது. சுயஇன்பம் செய்வதால் உடலுக்கு ஏதேனும் கெடுதல் ஏற்படுமா? (Are there any ill effects caused to the body by masturbation?) சுயஇன்பம் உடலுக்கு எவ்விதக் கெடுதலையும் ஏற்படுத்துவதில்லை. ஆணுறுப்பு மிக மென்மையான உறுப்பு, ஆகவே எந்தப் பொருளுக்குள்ளும் அதனை நுழைப்பதை அல்லது ஆணுறுப்பின் திறப்புக்குள் ஏதேனும் பொருள்களைச் செருகுவதைத் தவிர்க்க வேண்டும். சுயஇன்பம் செய்வதால் பால்வினை நோய்த் தொற்றுகள் ஏற்படுமா? (Can I get a sexually transmitted disease from masturbation?) சுயஇன்பம் என்பது யாருடனும் இல்லாமல், உங்களுக்கு நீங்களே செய்துகொள்வது என்பதால், இதனால் பால்வினை நோய்கள் வராது. பால்வினை நோய்கள் பொதுவாக பாலியல் தொடர்பில் ஈடுபடும்போது, கிருமி பாதிப்புள்ள நபரிடமிருந்து மற்றொருவருக்குப் பரவுகிறது. பாதிப்புள்ள நபரின் உடலும் (விந்து, யோனித் திரவம் அல்லது இரத்தம் போன்றவை) உங்கள் திறந்திருக்கும் தோல் பகுதியும் நேரடியாகப் பட்டுக்கொண்டால் நோய்த்தொற்று பரவ வாய்ப்புள்ளது. இது போன்ற சூழ்நிலைகள் சுயஇன்பத்தின்போது ஏற்படக்கூடும். சுயஇன்பத்திற்கு நான் அடிமையாகிவிடுவேனா? (Can I get addicted to masturbation?) இன்பம் கொடுக்கும் எந்த ஒன்றும் ஒருவரை அடிமையாக்க வாய்ப்பு அதிகமாகவே உள்ளது. இது சுயஇன்பத்திற்கும் பொருந்தும்! இந்த அடிமைத்தனத்தால் உடலுக்குத் தீங்கு எதுவும் இல்லை. ஆனால் சிலருக்கு உளவியல் மற்றும் சமூகப் பிரச்சனைகளை எதிர்கொள்ளலாம். மீண்டும் மீண்டும் சுயஇன்பம் செய்வதால் சிலருக்கு குற்றவுணர்ச்சி ஏற்படலாம். பெரும்பாலான சமயப் புத்தகங்களும் பண்பாட்டு விதிமுறைகளும் சுயஇன்பம் என்பதை தீய பழக்கம் என்றே கூறுவதால், இத்தகைய நம்பிக்கைகளைக் கொண்டிருக்கும் ஒருவர், சுயஇன்பம் செய்வதால் குற்றவுணர்ச்சி அடையலாம். சுயஇன்பம் கொடுக்கும் இன்ப உணர்வுக்கும் சுய நம்பிக்கைகளால் உண்டாகும் குற்றவுணர்ச்சிக்கும் இடையே ஏற்படும் போராட்டத்தால் சிலருக்கு வெட்கம், குற்றவுணர்ச்சி, மன அழுத்தம் போன்ற உளவியல் பிரச்சனைகள் ஏற்படலாம்.
Oliver__jenifer இன் இலவச ஆபாச அரட்டையைப் பார்ப்பது கிட்டத்தட்ட சாத்தியமற்றது மற்றும் உடனடியாக உற்சாகமடையாது. இந்த அழகான ஆபாச நட்சத்திரம் நம்பமுடியாத அளவிற்கு சூடான உடலையும், இன்னும் சூடான அணுகுமுறையையும் கொண்டுள்ளது, அது உங்களை மூச்சுத்திணற வைக்கும். அவள் நேரடி நிகழ்ச்சியை நடத்த விரும்புகிறாள், குறிப்பாக அவளது வைப்ரேட்டர்கள் மற்றும் டில்டோக்களின் தொகுப்பின் மூலம் உங்களை உற்சாகப்படுத்தும் மனநிலையில் இருக்கும் போது, ​​அவள் ஈரமான புண்டை மற்றும் இறுக்கமான ஆசனத்தில் பயன்படுத்துவாள். வெப்பமான XXX வெப்கேம் நிகழ்ச்சியை நீங்கள் பார்க்க விரும்பினால், இந்த ஹாட்டியைத் தவிர வேறு எதையும் பார்க்க வேண்டாம்! அவள் வயது வந்தோருக்கான நிகழ்ச்சிகளில் என்ன செய்கிறாள்? கேமில், stripchat நீங்கள் அனைத்து வகையான இலவச XXX நிகழ்ச்சிகளையும் பார்க்கிறீர்கள். ஆனால் அவர் தனது தனிப்பட்ட வயதுவந்த நிகழ்ச்சிகளில் என்ன செய்கிறார்? Oliver__jenifer Livecam ஸ்ட்ரீமிங் மற்றும் ஆபாச அரட்டை ஸ்ட்ரீம்கள் இலவச XXX நிகழ்ச்சிகள். மக்கள் கேம்2கேம் ஆபாசத்தைப் பார்த்து மகிழ்கிறார்கள், ஏனெனில் அவர்கள் அவளைப் போன்ற கேம் பெண்களுடன் இணைந்திருப்பதை உணர்கிறார்கள், மேலும் அவர்களின் தனிப்பட்ட நிகழ்ச்சிகளின் போது அவர்களுடன் உண்மையான தொடர்பு இருப்பதாக அவர்கள் உணர்கிறார்கள். வெப்கேம் நிகழ்ச்சிகளில் அவரது நடிப்பு, மக்கள் அவருடன் இணைந்திருப்பதாகவும், மகிழ்ச்சியாகவும், கொம்பு மிக்கதாகவும், திருப்தியாகவும் உணர வைக்கிறது. இதனால்தான் நீங்கள் கேமராவில் இருந்து ஆபாச நிகழ்ச்சியைப் பார்க்கும்போது, stripchat திரைப்படங்கள் மற்றும் பத்திரிகைகளில் நிர்வாணக் குஞ்சுகளைப் பார்ப்பதை விட நீங்கள் அதை ரசிக்கிறீர்கள். மக்கள் ஏன் அவளை நேசிக்கிறார்கள்? ஆலிவர்__ஜெனிஃபரின் முக்கிய அம்சங்களில் ஒன்று, நடிப்பில் அவரது பல்துறைத்திறன். அவள் கேம் கேர்ளாக இருந்து சில நொடிகளில் ஆபாச நட்சத்திரமாக மாறலாம், இரண்டையும் குறையில்லாமல் செய்கிறாள். அவளது திறந்த மனப்பான்மை, நீங்கள் பார்க்க விரும்பும் எதையும் செய்யும் பெண்களில் ஒருவராக அவளை ஆக்குகிறது. stripchat, அல்லது உங்களுக்கு முன்னால் வேறொரு பெண்ணுடன் உடலுறவு கொள்வதும் கூட. அவரது சிறப்பான நடிப்புக்கு உங்கள் பாராட்டுக்களைக் காண்பிப்பது, மேலும் சிறப்பாகச் செயல்படுவதற்கு அவளை உற்சாகப்படுத்துவதோடு, அனைவருக்கும் நல்ல நேரம் இருப்பதை உறுதிசெய்யும். இந்த அழகான பெண்மணிக்கு உண்மையில் எப்படி ஒரு நிகழ்ச்சியை நடத்துவது என்று தெரியும். நீங்கள் ஒவ்வொரு நொடியும் காதலிக்கப் போகிறீர்கள்! சமூக ஊடகங்களில் நான் அவளை எங்கே சந்திக்க முடியும்? அவரது Instagram (@oliver__jenifer) மற்றும் Twitter (@oliver_jen) சுயவிவரங்களைப் பாருங்கள்! அவளுடைய குறும்புத்தனமான வெப்கேம் நிகழ்ச்சிகள் அனைத்தையும் நீங்கள் பார்க்கலாம்.
சிறந்த படைப்புகள், முதல் வரியில் தொடங்கிக் கடைசி வரியில் முடிந்துவிடுகின்றன. வெ.இறையன்புவின் ‘சாகாவரம்’ நாவலும் அப்படித்தான். ‘முடிந்துவிட்டது. இனியொன்றுமில்லை’ என்பதுதான், ‘சாகாவரம்’ நாவலின் முதல் வரி. ‘அது மரணமற்ற மரணத்தின் சாயல். பார்வையற்ற வாழ்வின் ஆரம்பம்’ என்பதுதான், நாவலின் கடைசி வரி. ‘முடிந்துவிட்டது’ எனத் தொடங்கி ‘ஆரம்பம்’ என்ற கடைசிச் சொல்லுடன், ‘சாகாவரம்’ முடிகின்றது. முடிவு என்பது யாது? முடிவற்றதாக மனித வாழ்வு எப்போதும் உயிர்த்துடிப்புடன் இயங்கவியலாதா? ஆரம்பம் என்பது யாது? இயக்கமற்றுத் தேங்குவது ‘சிரஞ்சீவி’ என்ற பெயருக்கு உரிமையுடையதாகுமா? இவ்வினாக்களுக்கெல்லாம் விடைகளைத் தேடும் ஓர் அறிவுப் பயணமாகத்தான், ‘சாகாவரம்’ நாவலின் வாசிப்பனுவத்தைக் கூர்மையான விழிப்புணர்வுடன் தகவமைத்துக்கொள்ளவேண்டும். இந்நாவலின் தொடக்கத்துக்கும் முன்பாக, ‘கீதாசாரம்’போல ‘முன்னொட்டு’ ஒன்று காணப்படுகிறது. “அவன் அந்தச் சாஸ்திரத்தை வாசித்தான்” எனத் தொடங்குகிறது, அந்த முன்னொட்டு. எந்தச் சாஸ்திரம் அது? “மரணத்தைக் கண்டு எல்லோருக்கும் பயம். எல்லா பயங்களும் மரணத்தில் முடிகின்றன. ஒவ்வொரு மரணமும் நமக்கு எச்சரிக்கை. நாமே சாகும் அவலத்தில் ஒவ்வொரு சாவிலும் அவதி. அப்போதைய அழுகை நமக்காகவே… பிரார்த்தனைகள், கோயில்கள், மதங்கள் அனைத்துமே மரணம் மட்டும் இல்லையெனில் மறைந்துபோகும். மரணத்தைப் புரிந்தவன் வென்றவனாகிறான்….. வென்றவன் எவனும் பயம் கொள்வதில்லை. பயம் கொள்ளாதவனுக்கு மரணமுமில்லை” (ப.1) என்கிறார் வெ.இறையன்பு. செறிவான கவிதை போல விரியும் இந்தச் ‘சாஸ்திரத்துடன்தான்’, சாகாவரத்தை வெ.இறையன்பு தொடங்குகிறார். இத்தொடக்கம், ‘மரணம்’ பற்றிய கேள்வியாகவும் தேடலாகவுமே இந்நாவல் விரியப்போவதைக் குறிப்புணர்த்திவிடுகின்றது. அனைத்துக்கும் மூல விதையான இந்த மறைபொருளைப் படிப்போர் மனத்தில் குவித்து, அதைத் தேடி அவர்கள் உள்வாங்கும் விதத்தில், ‘உள்ளுணர்வுப் பயிற்சியாக’ இந்நாவலை ஆசிரியர் புனைந்துள்ளார். “இன்று யார்? என்ற கேள்வியுடன் உதயமாகும் ஒவ்வொரு நாளும் நரகம்தான்” (ப.3) என்கிறார் வெ.இறையன்பு. ஆனால், இந்தக் கேள்வியுடன் உதயமாகாத நாள் என்று ஒன்று இவ்வுலகில் இல்லை என்பதுதான், மகத்தான மானுடச் சோகமாகும். ‘புனரபி ஜனனம், புனரபி மரணம்’ – அதாவது, மீண்டும் மீண்டும் பிறப்பதும் இறப்பதும்தானே, நமது மானுட வாழ்வாயுள்ளது! ‘Can you define death?’ எனக் கேட்கப்பட்டபோது, ‘Can you define birth?’ எனக் கன்ஃபூசியஸ் எதிர்க்கேள்வி வீசிச் சமாளித்ததுதான் நினைவுக்கு வருகிறது! இறப்பும் பிறப்பும் ஒருவகையில் புதிர்களே என்றாலும், வேதாந்தங்களும் உபநிடதங்களும் சார்வாகமும் பௌத்தமும் ஒளிவீசும் மண்ணில் பிறந்திறந்து இளைத்துச் சலித்துப் பாழ்வெளியில் திளைத்துக் கடந்தோருக்கு, வாழ்வும் சாவும் புரிந்துகொள்ளவே முடியாத இரட்டைச்சாபங்கள் அன்று. மரணத்தின் அர்த்தத்தை அல்லது வெறுமையை மானுடன் புரிந்துகொள்ளும்போது, அதைக் கண்டு பதுங்காமல் அதை நேருக்கு நேர் எதிர்கொள்ளும் நெஞ்சுரம் அவனுக்கு வாய்த்துவிடுகிறது என்கிறார் வெ.இறையன்பு. ஆனால், இந்த முடிவு, நாவலின் இறுதியில்தான், நசிகேதனால் அடையப்படுகின்றது. அதுவரைக்கும் மரணத்தைப் பற்றிய பல்வேறு குழப்பங்களும் தடுமாற்றங்களும் அதிவூட்டல்களும் ஆசுவாசப்படுத்தல்களுமே நாவலை ஆக்கிரமித்திருக்கின்றன. இவ்வகையில், ‘மரணம் பற்றிய விரிவான ஒரு விசாரணயாக’, இப்புனைவை ஆசிரியர் ஒருமுகப்படுத்தியுள்ளார். “தனிமையைக் காட்டிலும் மிகப்பெரிய துன்பம் எதுவுமில்லை. அதனால்தான் தனிமைப்படுத்துவது தண்டனை ஆக்கப்பட்டிருக்கிறது. மனிதனைத் தனிமைப்படுத்தும் கடைசி முயற்சி மரணம்” (ப.9) எனத் ‘தனிமைப்படுத்தும் தண்டனையாக’ மரணத்தை நசிகேதன் பார்க்கிறான். என்றாலும், உண்மையில் அது ‘தண்டனையா, இல்லை விடுதலையா?’ என்ற குழப்பமும் அவனுக்கிருக்கிறது. மரணமடைந்தவர்களுக்கும், மரணமடையக் காத்திருக்கும் மனிதர்களுக்குமான வேறுபாடுதான் யாது? ‘நேற்று யாரோ, இன்று நீ, நாளை நான்’ என்பதுதானே மெய்ம்மை! அப்படியானால் துயரம் யாருக்கு? மரணமடைந்தவருக்கா? இன்னும் மரணமடையாது உடன்வாழ்வோரின் மரணம் ‘கண்டும் காணாமல்’ காத்திருப்போருக்கா? “சாவைக் காட்டிலும் துயரமானது, சாவு வீட்டின் சூழல். மயான அமைதி கப்பிக்கொண்டிருக்கும் அந்த இடத்தில், மரணமடைந்தவர்களின் உறவினர்கள் பரிதாபமானவர்கள். யதார்த்தத்தை நோக்கிய பயணத்தில் அவர்கள் சந்திக்கும் நெருடல்கள் கொடுமையானவை” (ப.11) என்கிறார் வெ.இறையன்பு. இந்நெருடல்கள் ஏன் ஏற்படுகின்றன? நாள்தோறும் நம்மைச் சுற்றிச் சாவுகளைத் தொடர்ச்சியாகச் சந்தித்தாலும், ‘நாம் மட்டும் சாகவே மாட்டோம்’ என்ற நினைப்புறுதி நம்முள் நங்கூரமிடுவது எவ்வாறு சாத்தியமாகின்றது? அழிவைப் புரிந்துகொள்ள மறுக்கும் அறியாமைதான் காரணம். நிறைவாழ்வு வாழ்ந்துவிட்டுச் சுக போகங்கள் அனைத்தையும் அனுபவித்துவிட்டுப் புலன்கள் வற்றியொடுங்கித் தேய்மானமுற்றுச் சாவு மெல்ல மெல்லப் பழுத்து உதிர்கிற இலையாகத் தவிர்க்கவியலாத இயற்கையின் அழிவாக வந்து தழுவிக்கொள்வது வெகு சிலரைத்தான்! பெரும்பாலும் திடீர்ச் சாவுகளும், அற்பாயுள்களும், விபத்து மரணங்களும், விபரீத மரணங்களும், தற்கொலைகளும், பட்டினிச்சாவுகளும், பரிதாபச்சாவுகளும், நோய்ச்சாவுகளுமே உலகெங்கும் மிகுதியாக நேர்கின்றன. இவ்வளவு சாவுகளுக்குப் பின்னும் வாழ்தலுக்காகத்தான் மானுடன் ஏங்குகின்றான். இதையே நசிகேதனும் உணர்கின்றான். “நாம் நிரந்தரமாக இங்கேயே இருக்கப்போகிறோம் என ஒவ்வொருவரும் நினைத்துவிடுகிறோம். மரணத்திற்கான தயாரிப்பு எதுவும் நிகழ்த்துவதில்லை… குடும்பமற்ற வாழ்வு பாதுகாப்பானது. பாதுகாப்புக்காக ஏற்படுத்திக் கொள்கிற தயாரிப்புகள் மூலம் வருகின்ற பாதுகாப்பின்மைகளே அதிகம்….. இப்படித் தெரிந்த ஒவ்வொருவராய்க் காணாமல் போவதும், அதை நினைத்துத் தேம்பித் தேம்பியழுவதும்தான் வாழ்க்கையா? அகல வாய்த்திறந்திருக்கும் சவக்குழியின்முன் நிற்கும் வரிசையில் என் இடம் எங்கே? கண்முன் நிகழும் எல்லா மரணங்களிலும் சிறிது சிறிதாகச் செத்துப்போகும் நான், என் மரணத்திற்கு எதைப் பாக்கி வைத்திருப்பது? மரணமற்ற இடம் எதுவும் கிடையாதா? சாவுகளைச் சந்திக்காத மைதானம் ஒன்று இருக்காதா? அங்குச் சென்று வாழ முடியாதா?” (பக்.13-14) என்றெல்லாம் நசிகேதன் கதறிப் புலம்புவதற்கு, நாவலில் வலுவான காரணங்கள் காட்டப்பட்டுள்ளன. முப்பது வயது வரையில் நெருக்கமான மனிதர்களின் மரணம் எதையும் எதிர்கொள்ளாமல், இயல்பாக வாழ்வை எதிர்கொண்டுவந்த நசிகேதனுக்கு, அதன் பிறகு அடுத்தடுத்துக் குறிப்பாக மூன்றே மாதங்களுக்குள் உற்ற நண்பர்கள் பலரின் எதிர்பாரா மரணங்களைப் பார்க்க நேர்கிறது. ‘கபீர் அலி, பார்த்திபன், கோபி, ரூப் குமார், குணா, கொல்லிமலை ஞானி, நல்லம்மாக் கிழவி’ எனப் பல மரணங்களைச் சந்திக்கிறான் நசிகேதன். இதனால், ‘மரணமிலாப் பெருவாழ்வு’ என்ற ஒன்றுண்டா எனத் தேடத் தொடங்குகிறான். நசிகேதனைச் சுற்றி நிகழும் ஒவ்வொரு மரணமும் அகால மரணமாக இருப்பதும், இயற்கைச் சாவிலிருந்து வேறுபட்டுத் துன்புறுத்தும் பல கொடிய நினைவுகளாய் மரணம் அவனைத் தொடர்ந்து துரத்துவதும் நசிகேதனின் தேடலை மேலும் விரைவுபடுத்துகின்றன. “மரணத்தின் தாக்கம் என்பது, வெறுமையின் தாக்கம். இழப்பின் நீட்சி. முதல் கடிதம், முதல் குழந்தை, முதல் பணி, முதல் பள்ளியைப்போல முதல் மரணமும் மறக்கமுடியாதது. வேண்டியவர்களின் மரணம் நமக்கும் ஆழமான காயத்தை ஏற்படுத்திவிடுகிறது. ஞாபகங்கள் நம்மைத் தடவும்போதெல்லாம், அது தழும்பாகத் தட்டுப்படுகிறது. மரணம் வருகிற வயதில் வந்தால் யார் கவலைப்படப்போகிறார்கள்? சாகிறவர்களெல்லாம் நல்லவர்களாகவும் அப்பாவிகளாகவும் இருக்கிறார்களே! அநியாயம் பண்ணுபவர்களெல்லாம் சௌக்கியமாக இருக்கிறார்களே, என்ன செய்வது? மரணம் தர்க்கங்களை மீறியதாகவும், தர்மங்களைத் தாண்டியதாகவும் அல்லவா இருந்து தொலைக்கிறது!” (ப.14-15) என்கிறார் ஆசிரியர். தற்கொலைச் சாவு, மாரடைப்புச் சாவு, விபத்துச் சாவு, ரத்தக்குழாய் வெடித்துச் சாவு, நோய்ச் சாவு, முதுமைச் சாவு, இயற்கைச் சாவு, அகால மரணம் எனப் பற்பல வகைகளில் மரணம் நசிகேதனுக்கு வேண்டியவர்களைக் காவு கொள்கிறது. இவர்களுள், ‘கொல்லிமலை ஞானி’ மட்டுமே, ‘சாவை’ மகிழ்ச்சிகரமாக ஏற்றுக்கொள்கிறார். பிற மரணங்கள் யாவும் துன்புறுத்தும் அவலச் சாவுகளே! இச்சாவுகள், நசிகேதனுக்குச் சொந்த மரணத்தை நினைவூட்டி விடுகின்றன. அவனுக்குத் திருமணம், குடும்பம், வீடு, சொத்து, சுக போகங்கள் என நீளும் சாதாரண வாழ்வில் பிடிப்பற்றுப் போகிறது. ரத்தமும் சதையும் வெகு விரைவில் சாம்பலாவதுதான் வாழ்வின் சாரம் என்பதை, அவனால் ஏற்றுக்கொள்ளவியலவில்லை. எனவே, துன்புறுத்தும் சாவை வெல்வதே, அவனுக்கு வாழ்வின் குறிக்கோளாகிறது. “என்னப்பா! வரவர உன்னோட போக்கே சரியில்லை. இப்படி எதுக்கெடுத்தாலும் இடிஞ்சி போனா, என்ன பண்ண முடியும்? நம்ப கையிலே என்ன இருக்கு? நாளைக்கு நாங்க போனாலும் ஆச்சரியப்படறதுக்கு ஒன்னுமில்லை. நீ திடமா வாழப் பழகிக்கணும். கடலுல மீன் பிடிக்கிறவங்க எப்ப வேணுமின்னா செத்துப் போவமுண்ணு தெரிஞ்சி தானப் போறாங்க. நம்ம வாழ்க்கையும் அந்த மாதிரிதான். யாருக்கு வேண்ணா எப்ப வேண்ணா சாவு வரலாம்” (பக்.32-33) எனப் பெற்ற தகப்பனே அறிவு கொளுத்தியும்கூடத் துக்கக்கடலில் மூழ்கிக்கிடக்கும் நசிகேதனைச் சுலபமாகத் தணிவிக்க முடிவதில்லை. மரணத்தைக் காட்டிலும் கொடிய ‘மரண பயம்’, நசிகேதனைச் சுற்றிலும் முற்றுகையிடுகிறது. எப்போது மரணம் வந்துவிடுமோ என்ற பிரக்ஞையுடன், எப்போதும் மரணத்தைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருக்கிறான் நசிகேதன். இப்பெயரைக் காரணப்பெயராக ஆசிரியர் இப்பாத்திரத்திற்குச் சூட்டிப் பார்த்துள்ளார். இந்த ‘உபநிஷத்’ பெயர், அப்பெயருக்குரியவனின் தேடல், இந்த நசிகேதனுக்கும் உண்டு என்பதைக் குறிப்புணர்த்துகிறது. நாள்கள் செல்லச் செல்ல நசிகேதனின் சிந்தனை முழுவதும் ஒரே ஒரு விஷயத்தைப் பற்றியே ஒருமையுற்றுக் குவிந்துவிடுகிறது. மரணம்! மரணம்! மரணம்! அதைப் பற்றியே நசிகேதன் சிந்திக்கின்றான். இத்தேடலே, அவனுக்கு வாழ்வின் அகமும் புறமுமாகிறது. “எப்படியிருக்கும் மரணம்! சட்டென்று உடல் முழுவதும் பொறுக்க முடியாதபடி வலி தோன்றுமோ! அதைத்தான் மரணவலி என்கிறார்களா! இதயம், மூளை, நுரையீரல் எல்லாம் ஒரே நேரத்தில் நின்றுபோகுமோ! நிரந்தரமான இருட்டுக்குள் உருட்டிவிடும் அனுபவம் ஏற்படுமோ! இந்த அழகிய பூமி, ஊர், மண், நேசமான மனிதர்கள், அழகான பறவைகள், பிரியமான மலர்கள் அனைத்தையும் விட்டு விட்டுப் போய்விடுவோமா? அம்மா, அப்பா, நான் நேசிக்கும் பள்ளி, எளிமையான மாணவர்கள் எல்லோரையும் ஒட்டுமொத்தமாக இழக்க நேரிடுமோ? இனி காலை நடையும், மாலையில் நிகழ்த்தும் தியானமும் நிகழாதா? எப்படியிருக்கும் மரண வேதனை? யாரைக் கேட்பது? மரணமடைந்தவர்களைத் தவிர வேறு யாரிடம் விசாரிக்க முடியும்? மரணத்தைப் பற்றி அறிய மரணமடைவதைத் தவிர வேறென்ன வழி…. மரணத்தை மரணத்தால் துழாவ வேண்டுமா?” (பக்.39 – 40) என்று அடுக்கடுக்காகத் தனக்குத் தானே கேள்விகள் கேட்டுக்கொள்கிறான் நசிகேதன். இந்த எண்ணங்களின் ‘ஓயாத துரத்தல்கள்’ காரணமாக, அன்றாட வாழ்வைச் சகஜமாக எதிர்கொள்ள முடியாமல் நசிகேதன் இடர்ப்படுகின்றான். மலரைப் பார்த்தால் – எப்படியும் இது உதிர்ந்துவிடப் போவதுதானே என்றும், தளிரைப் பார்த்தால் – எப்படியும் இது சருகாகிவிடப் போவதுதானே என்றும் நினைப்பதைச் சிறிதும் அவனால் தவிர்க்க முடிவதில்லை. இதனால் ரசனையும் மகிழ்ச்சியும் அவனிடம் குறைந்துவிடுகின்றன. ‘எல்லையற்ற துக்கம்’தான், எப்போதும் நசிகேதனைச் சூழ்ந்துகொண்டுள்ளது. மரணத்தை அவன் தியானிக்கிறான். அதனால், அவனைச் சுற்றிலும் எப்போதும் ‘மரணமே’ தெரிகின்றது. அவன் மனம், மேன்மேலும் தோண்டிக் கொண்டே போவதால், இயல்பான வாழ்வின் இனிமையை ஒரு நொடியும் நுகரமுடியாத பெருஞ்சோகம், அவனைப் பற்றிப் படரும் அவலக்கொடியாகிறது. “வயதுக்கும் மரணத்துக்கும் சம்பந்தமில்லை என்றாகிவிட்டது. ஆயுளை வெறுமனே ஜவ்வாக நீட்டிக்க மருந்துகளும் சிகிச்சைகளும் பெருகிவிட்டாலும், அதேநேரத்தில் முன்னறிவிப்பின்றி அகால மரணங்களும் அதிகரித்துக்கொண்டேதான் இருக்கின்றன. வாழ்க்கையைவிட்டு விலகிவிட வேண்டும் என்றால், ஒரு கார்ப்பரேட் மருத்துவமனைக்குப் போனால் போதும் என்கிற நிலையே நீடிக்கிறது” (ப.55) எனச் சுற்றிலும் நிகழும் ‘வயதுக்கும் முடிவுக்கும்’ தொடர்பில்லாத ‘அகாலச் சாவுகள்’ பற்றிக் கவலைப்படுகின்றான் நசிகேதன். ‘எனக்கும் ஒருநாள் மரணம் உறுதியாக வரும்’ எனத் தெளிவாகத் தெரிந்தபிறகும், அதை வெல்லக் கருதாமல், அற்ப ஆசைகளில் உழன்றுகொண்டிருப்பது மனிதனுக்கு எவ்வாறு சாத்தியமாகிறது என்றும் நசிகேதன் வியப்படைகிறான். மரணத்தை வெல்லமுடியாத விஞ்ஞானம் என்பது வீண்தானே என்றும் அவன் நினைக்கிறான். “மரணம் ‘என்று நிகழும்?’ எனத் தெரியாமலிருப்பதுதான் வாழ்வின் ரகசியம். அதைத்தானே தீர்மானித்துக் கொள்வதால்தான் தற்கொலை பரிதாபம். அடுத்தவர்களுக்கு வருத்தப்பட எனக்கென்ன அதிகாரமிருக்கிறது? எனது மரணமும் எப்போது வேண்டுமானாலும் நிகழலாம். மூளையில் எந்த நரம்பு பலகீனமாக ஓடிக்கொண்டிருக்கிறதோ? இதயத்தில் எந்தக் குழாய் சேதாரமடைந்துள்ளதோ? ஏந்த உடம்பை எப்போது பரிசோதித்தாலும் அதில் பத்துக் குறைகளை அறிய முடியும். மருந்து கண்டுபிடிக்க முடியாவிட்டாலும், நோயின் பெயர்களைக் கட்டாயம் அறிந்து கொள்வோம். அதுதானே விஞ்ஞான வளர்ச்சி!” (பக். 55 – 56) என, ‘மரணத்தை வெல்ல முடியாத’ விஞ்ஞானத்தைக் ‘கேலி’செய்கிறான் நசிகேதன். தாவரவியல் ஆசிரியனாகப் பணியாற்றும் அவனுக்குப் பள்ளிக்கூடம் போவதும், பாடமெடுப்பதும் ஒவ்வாமையாகிவிடுகின்றன! இந்த வீணான ‘அன்றாட உலகியல் சடங்குகளிலிருந்து’ தப்பித்து வெளியேறிக் கடைசிக் கேள்வியான ‘மரணம் என்பது யாது? என்பதை நோக்கியே நசிகேதன் பயணப்படத் தொடங்குகிறான். இப்பயணத்தைத்தான், அணுவணுவாகச் சிறப்பாகச் ‘சாகாவரம்’ விவரிக்கிறது. ‘மரணத்தைச் சாகாமலேயே வாழ்ந்துகொண்டே நான் உணரப்போகிறேன்’ என்கிறான் நசிகேதன். இந்த ‘வைராக்கிய இலக்கை’ அவன் எப்படியடைகிறான் என்பதுதான், ‘சாகாவரம்’ நாவலாகியுள்ளது. மு.வ.வின் நடை எளிமையையும், ஜெயகாந்தனின் கருத்தாழத்தையும், இந்தியத் தத்துவ சாரமான விழுமியங்களின் மெய்ம்மைச் சாயலையும் இறையன்புவின் புனைவெழுத்தில் பரவலாகக் காண்கிறோம். உபநிடத் தத்துவங்களும், ஜென் பௌத்தமும், சித்தர்களின் விழிப்புணர்வும் ‘சாகாவரம்’ நாவலில் ஒருசேரப் பின்னிப் பிணைந்துள்ளன. ஒரு நாவல் என்பது, வெறும் உணர்வுகளின் தொகுப்பான பதிவு மட்டுமன்று; அது ஓர் அறிவுத் தேடலின் வெளிப்பாடும் ஆகும் என்பதற்குச் ‘சாகாவரம்’ சாட்சியமாகிறது. “ஓர் உயிர் பிரிவதை முதன்முதலாக நசிகேதன் அருகில் இருந்து பார்த்தான்.அவ்வளவுதான்! வாழ்க்கை, மகிழ்ச்சி, சாதனை, சம்பளம், ஜாலி எல்லாம்! ஒரே நிமிடத்தில் அத்தனையும் அழிந்துபோய்விட்டன. கனவுகள், ஆசைகள், அபிலாஷைகள், இலட்சியங்கள் எல்லாம் இனி ஏதும் அந்த உயிருக்கு இல்லை. இப்போது நசிகேதன் இதயம் இன்னும் இரும்பானது. அவன் கண்களில் நீர் வரவில்லை. நெஞ்சு வலிக்கவில்லை. அழ வேண்டும் என்ற உந்துதல் ஏற்படவில்லை. இந்த மரணம் அவனுக்கு எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது. இனி எந்த மரணமுமே, எந்தப் பாதிப்பையுமே ஏற்படுத்தாது என்பதுதான் உண்மை” (ப.81) என, ‘மரண பயம்’ என்ற நிலையிலிருந்து விலகி, ‘மரணம் என்ற யதார்த்த உண்மையை’ நேருக்குநேர் எதிர்கொள்ளும் விழிப்பு நிலைக்கு நசிகேதன் நகர்வதாக ஆசிரியர் காட்டுகிறார். ஆனால், ‘மரணத்தை வென்றாக வேண்டும்’ என்ற இலட்சியத்தைச் சிறிதும் நசிகேதன் மனம் நெகிழவிடுவதாயில்லை. மரணத்தை வெல்லும் அவன் பயணம், ‘வேலை – குடும்பம் – பாதுகாப்பு’ யாவற்றையும் உதறிவிட்டுத் தொடர்கிறது! ‘ப்ரக்ஞா’ என்ற ஒரு சான்றோர் வழிகாட்டக் கொல்லிமலைக்குப் பயணமாகிறான் நசிகேதன். அங்கு ‘ஆனந்தமே இயல்பாயுள்ள’ ஞானி ஒருவரைச் சந்தித்துத் தன் பதிலற்ற கேள்விக்குப் பதில் காண முனைகின்றான். அவர் தரும் ‘ஓலைச்சுவடி மூட்டையில்’, நசிகேதனின் ‘மரணமிலாப் பெருவாழ்வு’ பற்றிய கேள்விக்கும் பதில் கிடைக்கிறது. இதற்கு முன்பே, கொல்லிமலை ஞானியிடம் நசிகேதனை ஆற்றுப்படுத்தும் ‘ப்ரக்ஞா’ கூறும் பின்வரும் வாசகமும், நசிகேதனின் ‘ஆத்ம விழிப்பிற்கு’ப் பெருந் துணையாகிறது. “மரணம் என்பது வாழ்வுக்கான எதிர்மறையல்ல. ஆனால், அதற்குள் பழத்தின் கொட்டைபோலத் தங்கும் அது அவசியம். பழம் சாப்பிடுகையில் கொட்டை தட்டுப்படும்போது, நாம் கொட்டையைச் சபிக்கிறோம். அந்த விதையால்தான் பழம் கிடைத்தது என்பதை உணராமல்…. மரணமில்லாப் பெருவாழ்வு சாத்தியம். அதை அடைய முடியும். அடைந்தவர்கள் உண்டு. உடல் நீத்தும், உடல் நீக்காமலும்…. அதைக் கண்டு அறிவதற்கு மிகப் பெரிய வேள்விக்கும், சோதனைகளுக்கும் நீங்கள் உங்களை உட்படுத்த வேண்டும்” (பக். 93 – 94) எனக் கூறிக் ‘கொல்லிமலை ஞானி’யைத் தேடிப்போகச் சொல்லி, நசிகேதனை ஆற்றுப்படுத்துகின்றார் ‘ப்ரக்ஞா’. ‘சந்யாசம்’ என்பதற்குத் ‘திரும்பிப் பார்க்காமலிருத்தல்’ என்ற பொருளும் இருப்பதைச் சான்றோர் ‘ப்ரக்ஞா’ மூலம் அறிந்து கொள்ளும் நசிகேதன், தன் பெற்றோரையும் வாழ்விடத்தையும் பணியிடத்தையும் திரும்பியே பாராமல், ஒரே இலக்காய்ப் பயணப்பட்டுக் ‘கொல்லிமலை ஞானி’யைச் சென்றடைகிறான். ‘குப்பைகளை மூளையில் திணிப்போருக்குக் குளிப்பதற்குக்கூட ஒழுங்காக நேரம் கிடைக்காது’ என்றும், ‘எதையும் ஆழ்ந்து உற்று நோக்கு’ என்றும், ‘வாழ்க்கை என்பது நினைவுகளின் தொகுப்பு’ என்றும், ‘முறையாகவும் சந்தோஷமாகவும் வாழ்வதுதான் ஆன்மீகம்’ என்றும், ‘எதுவுமே உடனே கிடைச்சுடாது. தேடணும். நிறைய தேடணும்’ என்றும், ‘கருணை என்பது இருத்தலின் இயல்பான நிகழ்வுகளில் தலையிடாமல், அனைத்தின் மீதும் சமமாக இருத்தல்’ என்றும் நசிகேதனுக்குக் ‘கொல்லிமலை ஞானி’ கற்றுத்தருகிறார். மேலும், தானாகவே அவன் கற்றுக்கொள்வதற்காகப் ‘பழம் ஓலைச்சுவடி மூட்டை’ ஒன்றையும் அவனுக்களிக்கிறார். அதிலுள்ள சுவடி ஒன்றைப் படித்துக் கொல்லிமலை ஞானிக்கும் மரணம் விரைவில் நிகழப்போவதை நசிகேதன் அறிந்துகொள்கிறான். “வெகு நாள்களுக்குப் பிறகு அவன் மனம் அடித்துக்கொண்டது. எந்த மரணத்தைக் கண்டு ஓடி ஒளிந்தானோ, எதை அறிந்து கொள்ள வந்தானோ, அந்த இடத்தில் இதுநாள்வரை குருவாக, தோழனாக, சகவழிப்போக்கனாக இருந்தவருக்குமா மரணம்! இந்த சுவடிகள் எவ்வளவு உண்மை…. உடல் பெரிதில்லை என்றால் ஞானிகளின் மரணம் என்பது உடல் வேண்டாம் என்று ஒதுங்குதல்தானா? ஊடலின் சமீபம், ஸ்பரிசம் இதெல்லாம் இழக்கப்போகும் வேதனைதான் மரண சோகமா? ஏன் இன்னும் உடல் என்பது பெரிதில்லை என்பது எனக்குப் புரியவில்லை? என் அத்தனை வேதனையும், சோகமும் உடலே வாழ்வு என்று குழப்பிக்கொண்டதால்தானா? (பக். 133 – 134) எனச் ‘சாவை வெல்வதற்கு’ உடலை வெல்வதுதான் இன்றியமையாதது என்ற நினைப்புடன் கிடந்து நசிகேதன் அல்லாடுகிறான். மரணம் மட்டும் வலியில்லாமல் வந்தால், அதை அனைவரும் ஏற்றுக்கொள்வார்கள் என்பதே, அவனது புரிதலாகும். மரணம் என்பது இனம் புரியாத வலியோடு தொடர்புகொண்டதாக இருப்பதுதான் மரண பயத்திற்குக் காரணம் என்றும் நசிகேதன் புரிந்துகொள்கிறான். இப்புரிதலுணர்வின் வெறுமையால்தான், ‘கொல்லிமலை ஞானி’ சாவைக் கொண்டாட்டமாகப் பார்க்கவும், அவனால் முடிகிறதெனலாம். “ஞானி உடலை ஒதுக்கிவிட்டு உள்ளுணர்வாய் மாறிவிட்டார். அசிங்கங்கள் போர்த்திய உடலைத் தாண்டி, அழகான உள்ளுணர்வின் சாரமாக ஆகிவிட்டார். இது மரணமல்ல – முக்தி; சாவல்ல – மோட்சம்; அம்மணமல்ல – நிர்வாணம் ; தப்பித்தலல்ல – விடுதலை. ஒருவகையில் இது துக்கமல்ல, கொண்டாட்டம். இந்த நிகழ்வுக்காக அழவேண்டியதில்லை. ஆனந்தமடைய வேண்டும். உடலைச் சுற்றி நடனமாட வேண்டும். இதைவிட அழகான வாழ்க்கையை யாரும் வாழ்ந்துவிட முடியாது. நல்ல வாழ்வின் நிறைவு அழகான கவிதையின் கடைசி வரியைப்போல அபூர்வமானது. வரவேண்டிய வடிவத்தில் வரவேண்டிய நேரத்தில் வருகிறபோது, மரணம் திருவிழாபோல” (பக். 140 – 141) எனக் கொல்லிமலை ஞானியின் மரணத்தைக் கொண்டாட்டமாகவும் திருவிழாவாகவுமே காண்கின்றான் நசிகேதன். முக்தி, மோட்சம், நிர்வாணம், விடுதலை, ஆனந்தம் என ஆழமான சொற்களால் ஞானியின் மரணம் கொண்டாடப்படுகின்றது. மரணம், சாவு, அம்மணம், தப்பித்தல், துக்கம் என்பன போன்ற சொற்களுக்கு இங்கிடமில்லை. இது மிகவும் அபூர்வமானதும், அழகானதும், நிறைவானதுமாகும்! இக்கருத்தோட்டத்தின் அடிப்படையில்தான், உடலை வென்று உள்ளுணர்வாக நிலைத்துவிட்ட கொல்லிமலை ஞானியின் ‘உயிர் நீங்கிய பிறகும்’ காற்றில் அது கலந்துள்ள ‘சாகாத பெருவாழ்வை’ப் புரிந்துகொள்ள வேண்டுமெனலாம். நசிகேதனுக்குக் கொல்லிமலை ஞானி அளித்த பழம்சுவடியில், ‘சிரஞ்சீவி வெளி’ என்ற தலைப்பின்கீழ்ப் பின்வரும் பாடல் காணப்படுகிறது. இப்பாடலில், ‘மரணமிலாப் பெருவாழ்வு’ பற்றிய மறைபொருள் குறிப்புள்ளதாக, நசிகேதன் கருதுகின்றான். “கடல் போன்ற வாழ்வு உடல் நீங்கா உபாயம், கண்டு உயர்ந்திடும் மார்க்கம் ஒன்று உண்டு, தமிழ்வளர் மலையடி ஆழ்வார் தலைவர் தலையடி, அமிழ்ந்திடும் பகுதியில் தவழ்ந்திடும் பொழுதிலே, படமெடுக்கும் பகுதி பாங்குடன் பாறைமீது, கருவளை தன்னில் கைவைக்கும்பொழுது விரிந்திடும்…, வெளியிலே கொதிநீர்ப் புல்வெளி முள்வெளித் தாண்டி, வறமணல்சூழப் பழமும் முள்ளும் தலைகீழ்வனம், புதைகுழி மீறிக் கடக்கும் வேளை, கொடும்பறவை கொத்தும் பயங்களின் அப்பால், நதிவழிச் செல்ல அகப்படும் வெளியே, வாலிபம் நிற்கும் ஆயுளும் நிற்கும், அனைத்துமே நிற்கும் அழிவிலாப் பகுதி” (ப.137) என்ற இப்பாடலில், ‘தமிழ்வளர் மலை’ எனக் கூறப்பட்டிருக்கும் ‘பொதிகை மலை’ ‘குற்றால மலை’தான் எனத் தீர்மானித்து, அங்குப் போய் ‘ஆழ்வார் தலைவர் ’ ஆகிய திருமாலைப் போற்றும் ‘ஆழ்வார் குன்றம்’ என்ற பகுதியைச் சென்றடைகிறான் நசிகேதன். அங்குப் பல நாள் சுற்றிப் ‘படமெடுக்கும் பாம்புப் பாறை’ கல்குன்றைக் கண்டு, அதன் மீது கைவைப்பதால், இருட்பாதை ஒன்று திறந்துவிரிகிறது. அப்பாதையில் முதலில் பிணவாடையடித்தாலும், பிறகு சுகந்தமான நறுமணம் வீசுகிறது. அடுத்து வெந்நீர் ஏரி, ஓங்கி வளர்ந்த புல்வெளி, முள்வெளி, வறமணல் பரப்பு, ‘பாறை’ ஓடை, கற்பூங்கா, கசக்கும் பழமும் இனிக்கும் முள்ளுமான தலைகீழ் வனம், கடப்பதற்கரிய புதைகுழி, மேலே வட்டமிடும் பிணந்தின்னிக் கழுகுகள், வெடிப்பு நிலம், சுழித்து ஓடும் நதி ஆகிய சவால்கள் யாவற்றையும் ‘ஒருமுகச் சிந்தனையுடன்’ நசிகேதன் கடக்கின்றான். இறுதியாகச் ‘சிரஞ்சீவி வெளி’ அவனுக்கு வசப்பட்டுவிடுகிறது. ஆனால், ‘சிரஞ்சீவி வெளி’ என்பதுதான் யாது? எந்த இயக்கமும் அற்ற, எந்த வளர்ச்சியுமற்ற, எப்போதும் உறைந்திருக்கிற, எந்தச் சலனமும் ஒருபோதும் நிகழாத, படைப்பின் புதுமையின் வியப்பற்ற, பசியும் செரிமானமும் தேவையில்லாத, உதிராத, பூக்காத, சிரிக்காத, அழாத, பரபரப்பே இல்லாத, சுவாரசியமில்லாத, கிட்டத்தட்ட ‘பிணவறை’ போன்ற இடம்தானே அது! “ஒரே மாதிரி வெளிச்சம், ஒரே மாதிரி காற்று, நிர்வாணக் குடிமகன்கள், ஒரே மாதிரி தாவரம், ஒன்றுபோலப் பழங்கள், பாடாத பறவைகள்…, இயங்காத இயற்கை… இவையே சிரஞ்சீவி வெளி” (பக். 200 – 201) என்கிறார் இறையன்பு. இதை அடையத்தானா நசிகேதன், இவ்வளவு பாடுபட்டான்? இயக்கத்தின் அதாவது வளர்ச்சியின் இன்னொரு பரிமாணம் மரணம் என்றால், இயக்கமோ வளர்ச்சியோ முதுமையோ சாவோ நேரவே நேராத ‘சிரஞ்சீவி வெளி’ என்பது, வெறும் ஒரு வெறுமையல்லவா? இந்த வெறுமை வெளியைத் தேடியா நசிகேதன் தன் முழு வாழ்வையும் தொலைத்துவிட்டான்! எவ்வளவு பெரிய ‘தத்துவ வெறுமை’ இது? ஒன்றுமில்லாத சூன்யம்தான் வாழ்வு என்பதைப் புரிந்துகொண்டு, அப்படியே வளர்தலும் தேய்தலுமற்று உறைந்துபோய்விடுவதற்குப் பதிலாகப் பிறந்து, புசித்து, உறங்கி, புணர்ந்து, மக்களைப் பெற்று, சோர்ந்து தளர்ந்து அல்லது எதிர்பாராமல் செத்துவிடுவது என்பது ‘எவ்வளவோ மேலல்லவா’? இந்த அதிர்ச்சியைத்தான், இறுதியில் நசிகேதன் அடைகின்றான். இது ஹெமிங்வேயின் ‘கடலும் கிழவனும்’ என்ற நாவலில் வரும் அந்தக் கிழவனான மீனவன், பல்வேறு ‘கடல்’ போராட்டங்களுக்குப் பின்னும் கரைக்குக் கொண்டுவந்த திமிங்கலத்தின் எலும்புக்கூட்டைக் கண்டு, ‘கிழவனின் மகனைப் போன்ற அந்தச் சிறுவன்’ அடைந்த அதிர்ச்சிக்கும் துக்கத்திற்கும் இணையான ஒரு பெருஞ்சோகமாகும்! ஹெமிங்வே காட்டும் கிழவனுக்காவது, கடலையும் திமிங்கலத்தையும் வெற்றிகொள்ளும் ‘இயற்கையின் மீதான மனிதனின் ஆக்கிரமிப்பு வெறி’ ஒரு வலிய செயலூக்கியாகத் தொழிற்பட்டளிக்கும் ‘செயற்கைப் பெருமிதமாவது’ மிச்சமிருந்தது! ஆனால், வெ.இறையன்பு புனைந்துள்ள நசிகேதனுக்குச் ‘சாவை வெல்லும் தன்முனைப்பு’ என்பது, ‘வாழ்வைப் பறிகொடுக்கும் வெற்றுத்தேடல்’ என்பதாக அல்லவா நீர்த்துவிட்டது! மரணமிலாப் பெருவெளியைத் தேடிய நசிகேதன் அடைந்தது, மரணம் உறைந்த பெருவெளியைத்தான் என்பது எவ்வளவு பெரிய ஒரு நகைமுரண்! ‘மகிழ்ச்சி தராத எந்தப் பிரதேசமும் மரணப்பிரதேசமே’ என்றும், ‘நிரந்தரம் எப்போதும் அழகாக முடியாது!’ என்றும், ‘மரணத்தைத் தவிரப் பெரும் விடுதலையில்லை” என்றும், ‘தேடுதலில்லாத வாழ்க்கை சாவிலும் மோசமானது” என்றும் புதிய புரிதல்களை நசிகேதன் அடைகின்றபோது, ஒருகணம் ‘காலம்’ அங்கே நின்றுவிடுகின்றதல்லவா! “அவனுடைய பிரக்ஞையற்ற வாழ்வின் நீட்சி, இனி ஆக்கிரமிக்கப் போகிறது. நினைவுகளில் வாழ்பவர்களையும் தொலைத்துவிட்டான். அவனுடைய நெடிய தேடல் சூன்யத்தில் முடிந்துவிட்டது. இனி உறைந்துபோன வாழ்க்கை, கிரேக்க மம்மிகளைப்போல வாழ்பவர்களில் அவனும் ஒருவன்…… எல்லோருடைய மரணத்திலும் அவன் மரணமும் சின்னதாக ஒட்டிக்கொண்டிருக்கப்போகிறது.பாறையைப்போல் அவன் அங்கே ஐக்கியமானான். இனி அவனுக்குப் பெயரில்லை. மனமில்லை….. அடையாளம் என்று எதுவுமில்லை. உள்ளுணர்வும் இல்லை. அது மரணமற்ற மரணத்தின் சாயல். பார்வையற்ற வாழ்வின் ஆரம்பம்” (பக். 223 – 224) என, ‘மரணமிலாப் பெருவாழ்வு’ என்பது, ‘மரணமற்ற மரணத்தின் சாயலாகிவிட்ட’ வெறுமையின் உச்சத்தைச் செறிவான சொற்களில் விவரிக்கின்றார் வெ.இறையன்பு. இந்த வெறுமையின் உச்சம், இந்நாவலின் ஒவ்வொரு பக்கத்திலும், மிகவும் அழுத்தமாகப் பதிவு பெற்றுள்ளது. தொகுத்துக்கூறின், ‘சாவது வரம்’ என்றும், ‘சாகாமை சாபம்’ என்றும் பொருள்படும் வகையில், இந்தச் ‘சாகாவரம்’ நாவலைப் புனைந்துள்ளார் வெ.இறையன்பு எனலாம். Tags: உயிர்மை, uyirmmai, Literature, Novel, article, கட்டுரை, இலக்கியம், Iraiyanbu, இறையன்பு, saagaavaram, sirisha raman, சிரிஷா ராமன், சாகாவரம்
மனநலப் பிரச்னையானது தம்பதியருக்குப் பெரிய சவாலாக இருக்கலாம். மனநலப் பிரச்னை கொண்ட ஒருவருடன் உறவில் இருக்கும் ஒருவர் தன்னுடைய அன்றாட வேலைகளைக் கையாண்டபடி அவர்களைக் கவனித்துக்கொள்ளவேண்டியிருக்கலாம்; இந்தச் செயல்முறையில் அவர்கள் களைத்துப்போய்ச் சோந்துவிடாமல் பார்த்துக்கொள்வதும் முக்கியம். ஓர் உறவில் இருக்கும் இருவரில் ஒருவருக்கு மனநலப் பிரச்னை வரும்போது அந்த உறவை எப்படிக் கையாள்வது என்பதைப் புரிந்துகொள்வதற்காக, மருத்துவ உளவியலாளர் பல்லவி டோமாரிடம் பேசுகிறார் ரித்திகா தலிவால். அந்தப் பேட்டியிலிருந்து சில சுருக்கக் குறிப்புகள்: தன்னுடைய துணைவர் மனச்சோர்வு/பதற்றத்தை அனுபவிக்கிறார் என்பதை ஒருவர் எப்படித் தெரிந்துகொள்வது? மருத்துவ மனச்சோர்வைப் பொறுத்தவரை, பொதுவாக அவர்களுடைய மனநிலையில் கீழ்நோக்கிய ஒரு போக்கைக் காணலாம். முன்பைவிட அடிக்கடி அவர்கள் சோகமாக உணர்வார்கள், அந்தச் சோக உணர்வு நெடுநேரத்துக்குத் தொடரும். மற்ற நேரங்களில் அவர்கள் மகிழ்ந்து அனுபவித்துச் செய்த விஷயங்களில் அவர்கள் ஆர்வமிழப்பதையும் காணலாம். அவர்கள் மிக விரைவில் களைப்படையக்கூடும், அவர்களுடைய ஒட்டுமொத்த உளவியல் சமூகவியல் செயல்பாடுகள் பாதிக்கப்படலாம்; எடுத்துக்காட்டாக, பணியில் அவர்கள் செயல்படும் நிலை, மக்களுடன் உண்மையில் சமூகரீதியில் கலந்து பழக விரும்பாமலிருத்தல்போன்ற அவர்களுடைய வாழ்க்கை அம்சங்கள் அனைத்திலும் குறைபாடு அல்லது சிரமம் இருக்கலாம். ஒருவேளை அவர்கள் செயல்பட்டாலும், அதில் அதிகச் சிரமங்களை அனுபவிக்கலாம், அதற்கு அதிக முனைப்பு தேவைப்படலாம். இத்துடன், மனச்சோர்வினால் அவர்களுடைய தூக்கம் மற்றும் பசியிலும் குறிப்பிடத்தக்க மாற்றங்களைக் காணலாம். அவர்கள் அதிக மந்தமாக, நம்பிக்கையில்லாமல் உணரலாம், ஒருவிதமான மதிப்பின்மையுணர்வை அனுபவிக்கலாம். இதுபோன்ற விஷயங்கள் உரையாடல்களிலும் வரலாம். சில குறிப்பிட்ட சூழ்நிலைகளில், பாதிக்கப்பட்டவர் தன்னைத்தானே காயப்படுத்திக்கொள்வதுபற்றியும் பேசலாம், தான் இனி வாழ விரும்பவில்லை என்றும் சொல்லலாம். பதற்றக் குறைபாடுகள் பல வேறுபட்ட வழிகளில் வெளிப்படலாம். ஒன்று, பொதுவான பதற்றக் குறைபாடு, இந்தப் பிரச்னை கொண்டோருக்குப் பொதுவாக எல்லாவற்றிலும் பதற்றம் ஏற்படலாம்; அதாவது, எதுவும் எல்லாமும் அவருக்குப் பதற்றம் தரலாம். இத்துடன் சில குறிப்பிட்ட உடல்சார்ந்த அறிகுறிகளும் வரலாம்: படபடப்பு, வியர்வை மற்றும் நடுக்கங்கள். அச்சக் குறைபாட்டின் வேறு வெளிப்பாடுகளில், தீவிரமான பதற்ற அனுபவங்கள் நிகழ்கின்றன; இவை குறுகிய காலகட்டத்துக்கே நீடித்தாலும், பாதிக்கப்பட்டவரை மிகவும் சோர்வாக்கிவிடுகின்றன. உண்மையில், அச்சக் குறைபாட்டில் உடல்சார்ந்த வெளிப்பாடானது அதிகம் தெரிகிறது, பீதியுணர்வுகளுக்கு வழிவகுக்கிறது. துணைவர் இதற்காக உதவியை நாட விரும்பாவிட்டால் என்ன செய்வது? பிறர் புரிந்துகொள்ளவேண்டிய ஒரு விஷயம், உதவியை நாடுவதே அவர்களுக்கு மிகவும் சோர்வைத்தரலாம், அதாவது, தங்களுக்கு ஒரு பிரச்னை இருக்கிறது, அதற்கு ஒரு குறிப்பிட்ட வகைச் சிகிச்சை தேவை என்பதை ஏற்றுக்கொள்வது. ஆகவே, ஒருவர் முதலில் தன்னுடைய துணைவருடைய பீதிகளைப் புரிந்துகொள்ள முயலவேண்டும். அதாவது, அவர்கள் எந்தமாதிரியான உணர்வுகளை அனுபவிக்கிறார்கள், எதைப்பற்றிக் கவலைப்படுகிறார்கள் என்று தெரிந்துகொள்ளவேண்டும். அவர்கள் உதவியை நாடவேண்டும், யாரிடமாவது பேச முயலவேண்டும் என்று இவர்கள் நிச்சயம் ஊக்கப்படுத்தவேண்டும். ஒருவர் இதைப்பற்றிக் கவலைகொண்டால், முதல்முறை ஓர் இணை நிகழ்வை அமைப்பது உண்மையில் உதவலாம்; இதன்மூலம் அவருக்குப்பதில் அவருடைய துணைவர் மருத்துவரிடம் அதிகம் பேசலாம். அவர்கள் நேரில் செல்ல விரும்பாவிட்டால், உதவித் தொலைபேசி எண்களை அல்லது இணையம் சார்ந்த ஆலோசனை நிகழ்வுகளைப் பயன்படுத்தும்படி இவர்கள் ஊக்குவிக்கலாம். இவற்றில் எதுவும் சரிப்படாவிட்டால், அவர்களுடைய துணைவர்கள்மட்டும் சென்று மருத்துவரைச் சந்திக்கலாம், சூழ்நிலையை விவரிக்கலாம்; அதன்பிறகு, அவர்களுடைய தனித்துவமான சூழ்நிலை அல்லது அவர்கள் சந்திக்கும் பிரச்னைகளைப் பொறுத்து, மருத்துவர் அவர்களுடைய துணைவர்களுக்கு இன்னும் சிறப்பாக வழிகாட்டலாம்; அவர்களுக்கு எதைத் தெரிவிப்பது, அவர்கள் வெளியில் வந்து உதவியை நாடுவதற்கு அவர்களை எப்படி ஊக்குவிப்பது என்பதுபோன்றவற்றை விவரிக்கலாம். நான் மிக முக்கியமாகக் கருதும் இன்னொரு விஷயம், அன்பையும் ஆதரவையும் வழங்க இயலுவது. மன நலப் பிரச்னை கொண்ட ஒருவருக்குத் தன்னுடைய நெருங்கியவர்கள், அன்பானவர்களிடமிருந்து வரும் ஏற்றுக்கொள்ளல் மிக மிக முக்கியமானது. ஆகவே, சில நேரங்களில், அவர்களுக்காக அருகில் இருப்பதுதான் மிக முக்கியமான விஷயம். ஒருவர் பாதுகாப்பாகவும், தான் நேசிக்கப்படுகிறோம் என்றும் உணர்வதற்கு அவருடைய துணைவர் என்ன செய்யலாம்? தன்னுடைய துணைவருக்கு ஒரு மன நலப் பிரச்னை வந்திருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்கிறவர்கள், அதைப்பற்றித் தங்களுக்குத் தாங்களே அறிவூட்டிக்கொள்வது மிகவும் முக்கியம். அதாவது, அவருக்கு வந்திருக்கும் பிரச்னை என்ன, அது எப்படிப்பட்டது, அதனால் என்னென்ன நடக்கும் என்பதெல்லாம் தெரியாமல் இவரால் எதையும் செய்ய இயலாது. ஆகவே, அறிகுறிகளைப் புரிந்துகொள்ள முயலலாம்; காரணங்களை, இதற்குக் கிடைக்கும் சிகிச்சைகளைப் புரிந்துகொள்ள முயலலாம். மருத்துவர்களைச் சந்திக்கலாம்; தன்னுடைய துணைவருக்குச் சிகிச்சை வழங்கும் குழுவைச் சந்திக்கலாம் - இது மிக அவசியமான ஒன்று. இத்துடன், அந்தப் பிரச்னையைத் தன்னுடைய துணைவர் எப்படி அனுபவிக்கிறார் என்பதைப் புரிந்துகொள்வதும் மிக முக்கியம். ஏனெனில், அறிகுறிகள் ஒரேமாதிரி இருந்தாலும், எது அவர்களை மிகவும் அச்சுறுத்துகிறது, எது அவர்களுக்கு மிகவும் சிரமமாக இருக்கிறது என்பதை இவர் புரிந்துகொள்ள முயல்வது மிகவும் முக்கியம். துணைவரைக் கவனித்துக்கொள்வதிலேயே ஒருவருடைய பெரும்பகுதி நேரம் சென்றுவிட்டால், அவர் தன்னைக் கவனித்துக்கொள்வது எப்படி? நோயாளி இன்னும் நன்றாக உணர்வதற்கு உதவவேண்டும் என்பதில்தான் எல்லாரும் கவனம்செலுத்துவார்கள்; இதனால், அவர்களை முதன்மையாகக் கவனித்துக்கொள்கிறவர்கள், இந்தச் சூழ்நிலையில் அவர்களுடைய துணைவர்கள், பல சவால்களைச் சந்திக்கவேண்டியிருக்கிறது. இவற்றையெல்லாம் கையாள்வதற்குத் தாங்கள் தயாராக இல்லை என்று அவர்கள் உணரலாம். பாதிக்கப்பட்டவருடைய துணைவர் புரிந்துகொள்ளவேண்டிய முதல் விஷயமாக நான் நினைப்பது, இந்தப் பிரச்னையின் தீர்வு வெறுமனே அவர்கள் கையில் இல்லை; தன்னந்தனியாக அவர்களால் தங்களுடைய துணைவரைக் குணப்படுத்திவிட இயலாது. தன்னைக் கவனித்துக்கொள்வதற்காக அவர்கள் சில குறிப்பிட்ட இடங்களை உருவாக்கவேண்டும். தாங்கள் உண்மையில் உரையாடக்கூடிய நண்பர்கள், குடும்பத்தினரிடம் அவர்கள் இதுபற்றிப் பேசலாம். ஏனெனில், அன்றாடச் செயல்பாடுகளைச் செய்யச் சிரமப்படக்கூடிய, சமூகரீதியில் பிறருடன் கலந்து பழக விரும்பாமலிருக்கக்கூடிய, அல்லது, வேலை இல்லாமலிருக்கக்கூடிய ஒரு துணைவருடன் வாழ்வது மிகுந்த அழுத்தத்தை உருவாக்கலாம்; இது அவர்களுக்கிடையிலான உறவிலும் வெளிப்படலாம். ஆகவே, தாங்கள் அணுகிப் பேசக்கூடிய நண்பர்கள், குடும்பத்தினர் இருப்பதை அவர்கள் உறுதிசெய்துகொள்ளவேண்டும். தாங்கள் விரும்பும் விஷயங்களைச் செய்வதற்கு நேரம் எடுத்துக்கொள்ளவேண்டும். பிரச்னை தங்களால் கையாள இயலாத அளவுக்குப் பெரிதாகிறது என்று அவர்கள் நினைத்தால், தயங்காமல் நிபுணர் உதவியை நாடவேண்டும்.
அம்பாறை திருக்கோவில் பிரதேசத்திற்குட்பட்ட தாண்டியடி பகுதியில் அமைந்துள்ள திருச்சிலூவை மலைக்கு சிலூவை யாத்திரை முன்னெடுக்கப்பட்டது இன் நிகழ்வானது இன்று காலை தாண்டியடி பகுதியில் இடம்பெற்றது.. இன் நிகழ்வு மறைவாவட்ட ஆயர் பேரரூட் திரு கலாநிதி யோசப்பொன்னையா ஆண்டகை அவர்களின் தலைமையில் இடம்பெற்றது..... இன் நிகழ்வில் மலையை நோக்கி திருக்சிலுவை ஏந்தி பாத யாத்திரை இடம்பெற்றதுடன் பூசை நிகழ்வுகளும் திருப்பலீ ஒப்புக்கொடுத்தலும் இடம்பெற்றது... மேலும் இந் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திரு.இராசமாணிக்கம்.சாணக்கியன் அவர்களும் கலந்து கொண்டு உரைநிகழ்த்தியது குறிப்பிடத்தக்கது... மேலும் இந் சிலுவை யாத்திரையில் கலந்து கொள்வதற்காக நாட்டில் பல பாகங்களில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வருகை தந்த வண்ணம் இருந்தனர்
Tamil Kamakathaikal Athai Akka Ol – எங்க ஊருல நூறு நாள் வேலை திட்ட பொறுப்பாளராக என்னை நியமித்தார்கள். ஊர்ல நான் தான் கொஞ்சம் காலேஜ் வரைக்கும் போயி படிச்சவன். தமிழை தாராளமா படிக்க தெரியும். ஆங்கிலத்தை எழுத்து கூட்டி வாசிக்க தெரியும். அவ்ளோ தான். அர்த்தம் கூட தெரியாது. அது ஒண்ணும் அவ்ளோ ஈஸியா நடந்திடல. அதுக்கே ஏகப்பட்ட போட்டி. ஆனா ஊர்ல ஒரு பெரிய பஞ்சாயத்து தேர்தல் மாதிரி நடத்தி தான் என்னை தேர்ந்தெடுத்தாங்க. ஆனா ஒரு ஒரு வித்தியாசம் நூறு நாள் வேலை திட்டத்தில் 18 வயசு நிரம்பிய ஆண், பெண் அனைவரும் வேலை பார்க்க முடியும் என்றாலும் எங்க ஊரு தீர்மானத்தின் படி பெண்கள் மட்டுமே வேலை செய்ய வேண்டும் என்பதால் பெண்கள் மட்டுமே ஓட்டு போட்டு பொறுப்பாளர்களை தேர்ந்தெடுக்க வேண்டும். எங்க ஊரு அம்மா, சித்தி, பெரியம்மா, அக்கா, தங்கச்சி, பாட்டிமார்கள் ஒன்று கூடி ஒரு ஞாயிற்றுக்கிழமை அன்று என்னை ஓட்டு போட்டு பெருவாரியாக தேர்ந்தெடுத்தார்கள். வெற்றி பெற்ற அன்னைக்கு நைட் நானும் ஊர் விருந்து வைத்து அனைவருக்கும் நன்றி கூறினேன். பெண்கள் ஓட்டு போடலேனா நான் ஜெயிச்சிருக்க முடியாது. காரணம் நான் படிக்கிற வயசுல இருந்தே ஊர் பொண்ணுங்க கிட்டே பேசி, பழகுவேன். பசங்க கூட அவ்வளவா நெருங்கி பழக மாட்டேன். பொண்ணுங்களும் என்கிட்டே ரொம்ப குளோஸா பேசி பழகுவாங்க. ஊர்ல கல்யாணம் பேசும் போது பையனோட நல்லது கெட்டதை தெரிஞ்சுக்க பெண்கள் வீட்ல என்னைத்தான் கூப்பிட்டு கேட்பாங்க. அப்போ அந்த பையனை பத்தி தகவலை திரட்டி கொடுப்பேன். நிறைய கல்யாணம் நடந்திருக்கு. சில கல்யாணம் நான் பையனை பத்தி சொன்னதுனால பேச்சோட நின்னு போயிருக்கு. பொதுவா நான் ஊர் பெண்களுக்கு ஓடி ஓடி வேலை செய்வேன். அதுவே ஆம்பளைங்க கேட்டா செய்ய மாட்டேன். பெரும்பாலும் எங்க கிராமத்தில் கோபியர்கள் சூழத்தான் இருப்பேன். அவங்களோட தாயம், பாண்டி விளையாடுறது. பொண்ணுங்களுக்கு மாதவிடாய் டைம்ல டவுனுக்கு போய் துணிவாங்கி கொடுக்கிறதுல இருந்து சில பெண்களுக்கு புருஷனை விட நான் தான் குளோஸ். அதனால நூறூ நாள் மேஸ்திரி பொறுப்பை கைப்பற்ற பல தில்லாலங்கடி வேலையெல்லாம் பண்ணி தான் ஜெயிச்சேன். அந்த மேஸ்திரி வேலைல பெருசா லாபம் கிடையாது. எனக்கு டெய்லி சம்பளம் கூடுதலா வேலைக்கு பெண்களை திரட்டி, என்ன வேலைனு பிளான் பண்ணி அன்னிக்கு பொழுதை ஓட்டணம் அவ்ளோ தான். அப்புறம் வர்ற பணத்துல கொஞ்சம் கமிஷனை எடுத்துகிட்டு கரெக்டா பெண்கள் கையில ஒப்படைக்கணும். நூறு நாள் வேலை திட்டத்தில பொறுப்பாளரா ஆகணும்னு பிளான் போட்டப்பவே முதல்ல என்னோட குளோஸ் கோபியர்கள் படையை ரகசியமா தாயார் பண்ணி வீடு வீடா ஓட்டை கேன்வாஸ் பண்ண ஆரம்பிச்சுட்டேன். பொதுவா ஊர்ல அத்தனை குடும்பமும் எனக்கு ஏதோ வகையில சொந்தம் தான். அதனால யாரா இருந்தாலும் அக்கா, சித்தி, பெரியம்மா, தங்கச்சி, அத்தைனு நானே ஒரு உறவு வச்சு கூப்பிடுவேன். சில நேரம் உறவு மாறும் போது “டே நான் உனக்கு முறை பொண்ணுல தங்கச்சின கூப்பிட்டு என் தாலிய அறுக்காத” என்று சிலர் சரியான உறவு முறைய சொல்லும் போது மாற்றி கொள்வேன். என்னோட குளோஸ் கோபியர் கேங்க்ல கோகிலா அக்கா, காமாட்சி அண்ணி, கோமதி அத்தை, சுந்தரி தங்கச்சி என்று நாலு பேர் தான். இவங்க நான் என்ன சொன்னாலும் செய்வாங்க. நான் ரெடி பண்ணி வச்சிருக்கிற பெண்கள் தற்கொலை படைனு கூட சொல்லலாம், வெடிகுண்டை குண்டியில கட்டிகிட்டு நான் சொல்ற வீட்டுக்குள்ள குதினா கூட குதிப்பாங்க. அப்படி ரெடி பண்ணி வச்சிருந்தேன். எல்லாம் ஓழ் மேஜிக் தான். இதுல கோமதி அத்தைய தவிர மத்த அத்தனை பேரையும் நான் தான் ஃப்ர்ஸ்ட் ஓத்து கன்னி கழிச்சேன். அப்புறம் இப்போ சுந்தரியை தவிர அத்தனை பேருக்கும் கல்யாணம் ஆகிடுச்சு. சுந்தரிக்கு இப்போ 15 வயசு தான் இருக்கும். பருவ சிட்டு ஆனா டெய்லி நான் தொட்டு ருசிக்கு தேன் மொட்டு. இந்த ஓழுக்கு ஹெல்ப் பண்றது கோமதி அத்தை தான். கோமதி அத்தைய தான் என்னை முதல்ல ஓத்து கன்னி கழிச்ச பொம்பளைனு சொல்லலாம். கோமதி அத்தை வீட்ல தான் அத்தனை பெரும் கூடி பேசி டைம்பாஸ் பண்ணுவோம். எங்க ஓழ் விளையாட்டு எல்லாமே கோமதி அத்தை வீட்ல தான் ரகசியமா நடக்கும். கோமதி அத்தையோட புருஷன் இறந்து போய் பல வருஷம் ஆச்சு. ஆம்பளை துணை இல்லாத கோமதி அத்தைக்கு நான் தான் ஆறுதலா இருப்பேன். அவ குடும்பத்து வரவு செலவை நான் தான் பாத்துப்பேன். அதுபோல என்னோட வரவு செலவு முழுசும் அத்தைக்கு தெரியும். 15 வயசுல அத்தை தனியா இருக்காளேனு துணைக்கு படுக்க போனபோது தான் அத்தை அப்போவே என் சுன்னிய தடவி, ஊம்பி விட்டு ஓக்க சொல்லி கொடுத்தா. அதுக்கப்புறம் அத்தை வீடு தான் கதினு கிடந்தேன். அத்தையும் என்னை மகனா சுவிகாரம் எடுத்த மாதிரி எங்க வீட்ல “சங்கரை பத்தி கவலைபடாதீங்க. இனிமே எனக்கு யாரு இருக்கா. பிள்ளையா குட்டியா? அவனை என் வாரிசாவே வளர்த்துகிறேன். என் சொத்து, சுகமெல்லாம் இனிமே அவனுக்கு தான். அவன் என் கூடவே இருக்கட்டும்”னு சொல்லிட்டா. அதுக்கப்புறம் அத்தை வீட்ல தான் இருப்பேன். அத்தை நல்ல வாட்டசாட்டமா ஆஜானுபாகுவா இருப்பா. அவளை ஓத்து திருப்தி படுத்த 3 ஆம்பளையாவது வேணும். அப்படியொரு காமவெறிபிடிச்ச மங்கை. ஆனா அத்தையோட செக்ஸ் வெறி எனக்கு மட்டும் தான் தெரியும். வெளியே அவ பக்தி பழமா தான் தெரிவா. புருஷன் இறந்த பிறகு அவ வீட்டை விட்டு வெளியே போறது கிடையாது. அதிக பட்சம் என் பாட்டியை பார்க்க புறவாசல் வழியா அடுத்த தெருவுல இருக்கிற எங்க வீட்டுக்கு மட்டும் போயிட்டு வருவா. அது கூட நைட் ஊரு அடங்கின பிறகு தான். சின்ன வயசுல அத்தை ஊம்பி விட்டு பழக்கினதால ஸ்கூல் விட்டு வந்தா கூட அத்தை கூட வெட்கமில்லாம மேலும் செய்திகள் சின்ன பையன் கண்ணி “அத்தை கீழ குஞ்சு பொச்சு பொச்சுனு அரிக்குது. கொஞ்சம் சொறிஞ்சி விடுனு” சொல்வேனாம். அதாவது ஊம்புறதுக்க சொரிஞ்சு விடுறதுனு தான் எனக்கு சொல்லி கொடுத்து வளர்த்திருக்கா. உடனே அத்தை வாய்விட்டு சிரிச்சு ஆசையோடு என்னை ஸ்கூல் யூனிஃபார்மோட கிச்சன் ஸ்லாப்ல தூக்கி வச்சு டவுசரை கழற்றி விட்டு என் சுன்னி குஞ்சை நல்ல சுப்பி ஊம்பி விட்ட பிறகு தான் விடுவேனாம். இதை இப்போ அத்தை சொல்லும்போது நானே வெட்கப்பட்டாலும் அதே போல ஊம்புறதுக்கு “சுன்னிய சொறிஞ்சு விடு” அத்தைனு தான் சொல்லுறேன். மெதுவா வாலிபம் வளர, விவரம் தெரிய அத்தை அவ முலை சப்பவிட்டு மார்ல போட்டு அணைச்சு முத்தம் கொடுப்பாள். நானும் அவள் முலைகாம்பை மணி கணக்கா சப்புவேன். அப்போ எனக்கு நல்ல ஞாபகம் இருக்கு நான் அத்தையோட முலைகாம்பை சப்பும்போது அத்தை தயிர் கடையிற மத்தை தலைகீழா பிடிச்சு கைப்பிடிய அவ புண்டை சாமானுக்குள்ள விட்டு குடைய ஆரம்பிச்சிடுவா. அப்போ ஒரு நாள் அதை பத்தி நான் கேட்டபோது, “அதுவாட மருமகனே. அத்தை புண்டையில இப்படி கடைஞ்சா தான் நெய் வடியும். நெய் வடிஞ்சா தான் அத்தைக்கு சுகமா இருக்கும். இந்த இப்போ நீ இதை பிடிச்சு அத்தை ஆட்டுற மாதிரி ஆட்டுடா” என்று முதல்முறையாக அவள் புண்டையில் தயிர் மத்தை ஆட்டவிட்டாள். அப்போது அதை வெளியே எடுக்கும்போது மத்து கைப்பிடி நனைத்து புண்டையில் வழிவதை தேனாக நினைத்து பார்த்தபோது, “அத்தை நக்கி விடு டா செல்லம். அத்தை புண்டை தேன் தித்திப்பா இருக்கும். இதெல்லாம இப்போவே பழகிக்கோ நாளைக்கு உன் பெண்டாட்டி புண்டை தேனையும் நக்க வேண்டியது இருக்கும். நக்குடா செல்லம்” என்று சொல்லி முதல்முறையாக அத்தை புண்டையை நக்கவிட்டாள். Tags: Adult Stories, amma magan kamakathaikal, Anni Tamil kamakathaikal, kamakathai, kamakathaikal, kamaveri kathaigal, Mom Tamil Sex Stories, pundai kathai, saxy story, sec stories, Sex Stories, tamil aunty kamakathaikal, tamil aunty stories, Tamil Kamakathaikal, tamil kamakathi, Tamil Kamaveri kathai, tamil kudumba, tamil new kamakathaikal, Tamil okkum kathal, tamil pundai kathai, Tamil sex, Tamil Sex Storie, Tamil Sex Stories, Tamil Sex Stories 2016, tamil Sex story, tamil sex story 2015, tamil sex video, tamil x story, TamilKamakathaikal, tamilkamaveri, tamilsex, tamilsex.com, tamilsexs, tamilsexstory, teacher kamakathaikal, wife, wife kamakathaikal