text
stringlengths
388
164k
அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீதான நில அபகரிப்பு வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. சென்னை துரைப்பாக்கத்தில் மீன் வலை உற்பத்தி நிறுவனம் அமைந்துள்ள 8 கிரவுண்ட் நிலம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மருமகனான நவீன்குமாருக்கும், அவரது சகோதரர் மகேஷ் என்பவருக்கும் பிரச்சினை இருந்து வந்தது. இதில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தனது செல்வாக்கை பயன்படுத்தி அடியாட்கள் மூலம் மிரட்டி நிலத்தை அபகரித்து கொண்டதாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் ஜெயகுமாருக்கு எதிராக மகேஷ் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் ஜெயக்குமார், மகள் ஜெயபிரியா மற்றும் அவரது மருமகன் நவீன்குமார் ஆகியோர் மீது கொலை மிரட்டல், சதித்திட்டம் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். மத்திய குற்றப்பிரிவு போலீசார் பதிவு செய்த இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜெயக்குமார் மற்றும் அவருடைய மகள் ஜெயபிரியா, மருமகன் நவீன்குமாரும் மனு தாக்கல் செய்தனர். மனுவில் தனது மருமகனின் சகோதரர் மகேஷ் அளித்த பொய் புகாரில் வழக்கு பதிவு செய்யப்பட்டதாகவும், 2016ல் நடந்ததாக கூறப்படும் சம்பவத்திற்கு 2021ஆம் ஆண்டு தான் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. ஆனால் 2016ஆம் ஆண்டு ஜெயக்குமார் அமைச்சராக இருந்ததால் புகார் அளிக்க இயலவில்லை என்று மகேஷ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஜெயக்குமார் மீதான நிலஅபகரிப்பு வழக்கில் இரண்டு தரப்பு வாதங்களும் நிறைவடைந்து தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் நீதிபதி இளந்திரையன் இன்று(செப்டம்பர் 30)அந்த வழக்கில் தீர்ப்பு வழங்கினார். முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீதான புகாரில் குற்றம் நிரூபிக்கப்படவில்லை என்று கூறி அந்த வழக்கை நீதிபதி ரத்து செய்தார். மேலும் அவரது மகள் ஜெயபிரியா, மருமகன் நவீன் குமார் மீது பதியப்பட்ட வழக்குகளையும் ரத்து செய்து உத்தரவிட்டார்.
நடிகரும் மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன், உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விக்ரம் படத்தை தொடர்ந்து இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2ம் பாகத்தில் கமல் நடித்து வருகிறார். கடந்த ஞாயிறன்று ஐதராபாத் சென்ற கமல்ஹாசன், மூத்த இயக்குநர் கே.விஸ்வநாதன் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டு சென்னை திரும்பும்போது, உடல் சோர்வாக இருப்பதாக கூறியுள்ளார். இதனை தொடர்ந்து, போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் நேற்று இரவு அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் இது குறித்து அறிக்கை ஒன்றை மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதில், லேசான காய்ச்சல் காரணமாக போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று இரவு நடிகர் கமல்ஹாசன் அனுமதிக்கப்பட்டார் எனவும் தற்போது அவர் நலமாக உள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சிகிச்சைக்குப் பிறகு கமல்ஹாசன் இன்று காலை வீடு திரும்பியுள்ளார். தற்போது இந்தியன் 2 படத்தில் நடித்து வரும் இவர், சிவகார்த்திகேயன் நடிக்கும் படம், உதயநிதி நடிக்கும் படம் என இரண்டு படங்களை தயாரித்து வருகிறார்.
கொரோனா தொற்றின் அதிகரிப்பு காரணமாக மியான்மார் அதிகாரிகள் யாங்கோனில் ஒரு கள மருத்துவமனையை கட்டி வருகின்றனர். சமீபத்திய வாரங்களில் யாங்கோன் பகுதிகளில் அதிகளவிலான நோயாளிகள் அடையாளம் காணப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் கடந்த வாரம், யாங்கோனிலில் பயண கட்டுப்பாடுகளை அரசாங்கம் வித்திருந்ததுடன் இந்த நடவடிக்கைகள் ஓக்டோபர் 1 வரை இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று செவ்வாய்க்கிழமை மியான்மரில் 307 புதிய நோயாளிகளும் இன்று புதன்கிழமை 134 நோயாளிகளும் பதிவாகியுள்ளது. அதன்படி நாட்டில் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 3,636 ஆக பதிவாகியுள்ளன அதேவேளை 39 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் கால்பந்து ஆடுகளத்தில் கட்டப்பட்ட புதிய மருத்துவமனை, 500 படுக்கைகளுக்கு இடமளிக்கும், ஒரு பெரிய பரவலுக்கு இடமளிக்க எங்களுக்கு இடமில்லை. நோயாளிகளை ஏற்றுக்கொள்ள முடியாவிட்டால் நிலைமை மோசமடையும், அதனால்தான் நாங்கள் அவசரமாக தங்குமிடங்களை உருவாக்குகிறோம் என புதிய தற்காலிக மருத்துவமனையின் தலைவர் ஒருவர் கூறியுள்ளார்.
குழந்தைகளுக்கான பீட்ரூட் கம்பு கஞ்சி Beetroot Kambu Kanji for babies 8 மாத குழந்தைக்கான சிறந்த உணவு கம்பு ஐந்து நிமிடங்களில் செய்யக்கூடிய ஆரோக்கிய உணவு. நீண்ட நேரம் பசியைத் தாங்கும். எனர்ஜி கொடுக்கும். அதேசமயம் ஊட்டச்சத்துகள் நிறைந்தது. Beetroot Kambu Kanji for babies / Beetroot Pearl Millet Porridge for Babies: தேவையான பொருட்கள்: கம்பு – 2 தேக்கரண்டி தண்ணீர் – 2 கப் பீட்ரூட் சாறு – 1/4…Read More Filed Under: கஞ்சி, சிறு தானியம் Tagged With: 8 month baby recipes in tamil, beetroot kambu kanji for babies, how to make kambu kanji for babies in tamil?, kambu koozh for babies, kambu koozh health benefits, kambu recipe in tamil பயணத்துக்கு சிறந்த கம்பு பவுடர் மிக்ஸ் ரெசிபி January 24, 2018 Leave a Comment Kambu Kanji குழந்தைகளுக்கான கம்பு பவுடர் மிக்ஸ் ரெசிபி 8 மாத குழந்தைக்கான சிறந்த உணவு கம்பு பவுடர் மிக்ஸ். ஐந்து நிமிடங்களில் செய்யக்கூடிய ஆரோக்கிய உணவு. நீண்ட நேரம் பசியைத் தாங்கும். எனர்ஜி கொடுக்கும். அதேசமயம் ஊட்டச்சத்துகள் நிறைந்தது. இதை நீங்கள் இன்ஸ்டன்ட் மிக்ஸாகவும் பயன்படுத்தலாம். பயணத்துக்கு செல்வோர்கூட தங்கள் குழந்தைக்காக எடுத்துச் செல்லலாம். ஈஸி, ஹெல்தி.. ‘கம்பு தரும் தெம்பு’ என்று பலரும் சொல்லக் கேட்டிருப்போம். உண்மையில், கம்பு தெம்பை அள்ளித் தரும். கம்பு,…Read More Filed Under: கஞ்சி Tagged With: bajra in tamil, how to make kambu kanji for babies in tamil?, kambu koozh for babies, kambu koozh health benefits, kambu recipe in tamil, குழந்தைகளுக்கான கம்பு கூழ், குழந்தைக்கான கம்பு கஞ்சி ஈ-ஸ்டோருக்கு வாங்க நான் Dr.ஹேமா, அல்லது டாக்டர் மம்மி. இப்போ ஆக்டிவா மருத்துவம் பார்ப்பதில்லை. என் இரு சுட்டிப் பிள்ளைகள் என்னை பிசியா வைத்திருக்கிறார்கள்.புதிய பெற்றோர்களுக்கு எப்படி குழந்தை வளர்ப்பதென்று எளிய முறையில் உதவ இந்த வலைதளத்தை ஆரம்பித்துள்ளேன்... மேலும் படிக்க...
ஆசிய கிண்ணம் டி 20 போட்டிகளில் இலங்கை பெண்கள் கிரிக்கெட் அணி நிச்சயம் நன்றாக விளையாடி சாதிக்கும் என அந்த அணியின் தலைவி ஹாசினி பெரேரா நம்பிக்கை தெரிவிவித்துள்ளார். தாய்லாந்து நாட்டின் பாங்காக் நகரில் நாளை பெண்களுக்கான் ஆசிய கிண்ணப் போட்டிகள் தொடங்கவிருக்கிறது.இதற்காக இலங்கை அணியின் வீராங்கனைகள் இன்று காலை பாங்காக்குக்கு புறப்பட்டு சென்றார்கள். அதற்கு முன்னர் நிருபர்களுக்கு பேட்டியளித்த இலங்கை அணியின் தலைவி ஹாசினி கூறியதாவது, நடக்கவிருக்கும் ஆசிய கிண்ண போட்டிகளுக்கு நாங்கள் முழு வீச்சில் தயாராகி உள்ளோம். மிக சிறந்த அணியை தேர்வு செய்த தேர்வு குழுவுக்கு நன்றி தெரிப்பதாகவும், எங்கள் அணி நிச்சயம் நன்றாக விளையாடி ஆசிய போட்டிகளில் சாதிக்கும் எனவும் கூறியுள்ளார். இலங்கை அணியின் பயிற்சியாளர் ஹேமாந்தா தேவிபிரியா கூறுகையில், எங்கள் அணியின் திறமையை நிருபிக்க இந்த போட்டிகள் நல்ல வாய்ப்பாக இருக்கும் என தான் கருதுவதாகவும், சமீபத்தில் நடந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டிகளில் தங்கள் நிறை, குறைகளை கண்டறிந்துள்ளதாகவும் கூறியுள்ளார். காயம் காரணமாக இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டிகளில் பங்கேற்காத உதிஷிகா, யசோதா மெண்டீஸ், இஷாமி லோகுசூர்யா ஆகிய மூவரும் ஆசிய கிண்ண தொடரில் பங்கேற்க அழைக்கப்பட்டுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மீதான நிரந்தரத் தடையை ட்விட்டர் நீக்க வேண்டும் என்று தான் விரும்பினாலும், 2024 ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் அதிபர் தேர்தல் பிரச்சாரத்தில் டிரம்ப்பை ஆதரிப்பதாக அர்த்தமில்லை என்று கோடீஸ்வரர் எலோன் மஸ்க் வியாழக்கிழமை தெளிவுபடுத்தினார். உலகின் மிகப் பெரிய பணக்காரரும், டெஸ்லாவின் (TSLA.O) தலைமை நிர்வாக அதிகாரியுமான மஸ்க், Twitter (TWTR.N)ஐப் பெறுவதற்கான ஒப்பந்தத்தை முடிக்க முயற்சிக்கிறார். செவ்வாயன்று பைனான்சியல் டைம்ஸ் மாநாட்டில் மஸ்க், டிரம்பை தடை செய்வதற்கான ட்விட்டரின் முடிவு “தார்மீக ரீதியாக மோசமானது” என்று கூறினார். அவர் வியாழன் மாலை ஒரு ட்வீட்டில் அந்தக் கருத்துக்களைப் பின்தொடர்ந்தார், ஜனாதிபதி வேட்பாளராக டிரம்பை ஆதரிக்கவில்லை என்பதை வலியுறுத்தினார். “2024 இல் குறைவான பிளவுபடுத்தும் வேட்பாளர் சிறப்பாக இருப்பார் என்று நான் நினைத்தாலும், டிரம்ப் மீண்டும் ட்விட்டருக்கு திரும்ப வேண்டும் என்று நான் நினைக்கிறேன்,” என்று அவர் கூறினார். டிரம்ப் ட்விட்டருக்குத் திரும்ப விரும்பவில்லை, மாறாக தனது சொந்த உண்மை சமூக தளத்தை உருவாக்க விரும்புவதாகக் கூறியுள்ளார். 2021 ஜனவரியில் அவர் ட்விட்டரில் இருந்து நிரந்தரமாக தடை செய்யப்பட்டார், ஏனெனில் அமெரிக்க கேபிடல் புயலைத் தொடர்ந்து “மேலும் வன்முறையைத் தூண்டும் ஆபத்து” என்று நிறுவனம் அப்போது கூறியது. டிரம்ப் 2020 இல் தனது மறுதேர்தல் முயற்சியில் தோல்வியடைந்த பின்னர் 2024 இல் ஜனாதிபதி பதவிக்கு மற்றொரு போட்டியை பரிசீலித்து வருகிறார்.
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம். மகுல் உயன இலங்கையின் பண்டைக்காலத் தலைநகரமான அனுராதபுரத்தில் இசுருமுனிய விகாரை, திஸ்ஸ வாவி ஆகியவற்றுக்கு அண்மையில் அமைந்திருந்த ஒரு பூங்கா. இது தற்போது அழிபாடாக உள்ளது. இப்பூங்காவில் பல குளங்களும், சிறிய கட்டிடங்களும் இருந்தன. மரபுக் கதைகளின்படி இளவரசன் சாலியவும், அசோகமாலாவும் இந்தப் பூங்காவிலேயே சந்தித்துக்கொண்டதாக நம்பப்படுகிறது. மகுல் உயனவின் இன்றைய நிலை வரலாறுதொகு மகுல் உயன, திஸ்ஸ மன்னனின் காலத்தில் (கி.மு 3 ஆம் நூற்றாண்டு) திஸ்ஸ வாவி கட்டப்பட்டபோதே உருவாக்கப்பட்டது. எனினும் தற்காலத்தில் இப்பூங்காவில் காணப்படும் களியாட்ட மண்டபமும், பிற அமைப்புக்களும் 8 - 9ஆம் நூற்றாண்டுக் காலப்பகுதிக்கு உரியவை.
உடைக்கவே முடியாத ஆஸ்திரேலிய அணியின் சாதனையை உடைக்கபோகும் இந்திய அணி..வெளிவந்த தகவலால் ரசிகர்கள் உற்சாகம்! ஒரு ஆண்டில் அதிக வெற்றிகள் பெற்ற அணி என்ற ஆஸ்திரேலிய அணியின் சாதனையை இந்திய அணி சமன்செய்துள்ளது. Praveen Updated on : 12 October 2022, 09:36 AM தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 9 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது இந்திய அணி. மழையால் பாதிக்கப்பட்ட இந்தப் போட்டி 40 ஓவர்களாகக் குறைக்கப்பட, 250 என்ற பெரிய இலக்கை சேஸ் செய்தது இந்திய அணி. அணியின் டாப் ஆர்டர் வேகமாக சரிந்த நிலையில் சஞ்சு சாம்சன் (86 நாட் அவுட்), ஷ்ரேயாஸ் ஐயர் (50) ஆகியோர் தங்களுடைய சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இருந்தாலும் அவர்களால் இந்தியாவை வெற்றிக்கு அழைத்துச் செல்ல முடியவில்லை. கடைசி ஓவரில் இந்திய அணி வெற்றி பெற 30 ரன்கள் தேவை என்றிருந்தபோது, தப்ராய்ஸ் ஷம்ஸி வீசிய அந்த ஓவரில் 20 ரன்கள் விளாசினார் சஞ்சு சாம்சன். இறுதியில் தென்னாப்பிரிக்க அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதைத் தொடர்ந்து ராஞ்சியில் நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில், இந்தியா 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் முதலில் ஆடிய தென்னாபிரிக்க அணி 50 ஓவர்கள் முடிவில் 278 ரன்கள் குவித்தது. பின்னர் ஆடிய இந்திய அணியில், இஷான் கிஷன் 84 பந்துகளில் 4 பவுண்டரி, 7 சிக்ஸர்களுடன் 93 ரன்களும், ஷ்ரேயஸ் ஐயர் 111 பந்துகளில் 15 பவுண்டரிகள் உட்பட 113 ரன்களை விளாசி அசத்தினர். அதைத் தொடர்ந்து நேற்று நடைபெற்ற மூன்றாவது போட்டியில் முதலில் ஆடிய தென்னாப்பிரிக்க அணி 99 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதன் பின்னர் ஆடிய இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்த போட்டியில் வென்றதன் மூலம் இந்த ஆண்டில் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என அனைத்து வகையான போட்டியிலும் சேர்ந்து இந்திய அணியின் 38-வது வெற்றியாக அமைந்தது. இந்த நிலையில், இதன்மூலம் 19 ஆண்டுகால ஆஸ்திரேலிய அணியின் சாதனையை சமன் செய்துள்ளது. கடந்த 2003ம் ஆண்டு உலகக்கோப்பையை வென்று அசுரபலத்தில் இருந்த ஆஸ்திரேலிய அணி அந்த அதில் மட்டும் மொத்தம் 38 போட்டிகளில் வெற்றி பெற்று இருந்தது. ஒரு ஆண்டில் ஒரு அணி வெற்றி அதிக வெற்றிகள் அதுவே. இந்த சாதனையை இந்திய அணி தற்போது சமன் செய்துள்ளது. 20 ஓவர் உலகக்கோப்பை சில நாட்களில் நடைபெறவுள்ள நிலையில், அதில் ஒரு வெற்றியை பெற்றாலே இந்திய அணி ஆஸ்திரேலிய அணியின் உடைக்கமுடியாத சாதனையை உடைக்கும் என்பதால் உலகக்கோப்பை பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. Also Read ”பும்ராவின் காயத்துக்கு காரணமே ரோகித், டிராவிட்தான்” - முன்னாள் இந்திய அணி பேட்டிங் பயிற்சியாளர் தாக்கு ! Indian team T20 World Cup australian team Trending “சாப்பாட்டுக்கு கூட வயிற்றில் இடமில்லை..” -உணவு குழாயை அடைத்த 3 கிலோ முடி: சிறுமிக்கு ஏற்பட்ட விநோத நோய்! கந்தாரா படம்.. இந்திய பார்ப்பன ஆதிக்க அரசின் திட்டத்தை மென்மையாக வெளிப்படுத்துகிறதா? இனி இவர்களுக்கு T20 போட்டியில் இடம் இல்லை.. BCCI-யின் புதிய திட்டத்தால் மூத்த வீரர்கள் அதிர்ச்சி! “I LOVE YOU அன்பே..” -ஆசிரியரிடம் அத்துமீறிய மாணவர்கள் : VIDEO வெளியானதையடுத்து தட்டி தூக்கிய உபி போலிஸ்! Latest Stories அரியவகை 'மோயா மோயா' நோய்.. ஆசியாவில் முதல்முறையாக அறுவை சிகிச்சை செய்து சென்னை மருத்துவமனை சாதனை ! உ.பி: சரியாக வாய்ப்பாடு சொல்லவில்லை.. சிறுவனின் கையில் டிரில்லிங் மிஷின் மூலம் துளை போட்ட கொடூர ஆசிரியர்! “சாப்பாட்டுக்கு கூட வயிற்றில் இடமில்லை..” -உணவு குழாயை அடைத்த 3 கிலோ முடி: சிறுமிக்கு ஏற்பட்ட விநோத நோய்! “உன்ன நம்பினதுக்கு..” - Google Map பார்த்தவாறு கார் ஓட்டி, கழிவுநீர் வாய்க்காலில் இறக்கிய சென்னை நபர் !
தனி சினிமாவில் சித்திரம் பேசுதடி படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை பாவனா. இவர் சினிமாவில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே கொண்டவர். தமிழில் தீபாவளி, வெயில், கிழக்கு கடற்கரை சாலை போன்ற படங்களில் நடித்துள்ளார். கடைசியாக அசல் படத்தில் நடித்த பிறகு இவருக்கு தமிழில் அவ்வளவாக வாய்ப்புகள் வரவில்லை. நடிகை பாவனா மலையாள சினிமா உலகில் தான் அறிமுகமானார். இவர் கேரளாவில் உள்ள திருச்சூரில் பிறந்தவர். இவர் தமிழை விட மலையாளத்தில் நிறைய படங்கள் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தவர். இவருக்கு பிப்ரவரி மாதம் 2017 ஆம் ஆண்டு தம் வாழ்நாளில் மறக்க முடியாத ஒரு துயர நாளாக அமைந்துள்ளது. பாவனா திருச்சூரில் இருந்து கொல்லம் செல்லும் வழியில் தன் காரில் கடத்தப்பட்டு இரண்டரை மணி நேரம் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி உள்ளார். மலையாள திரையுலகில் மிகவும் பிரபலமானவர் சுனில் என்கிற பன்சர் சுனில். இவர் மலையாள சினிமாவில் உள்ள நட்சத்திரங்களுக்கு வேண்டிய வேலைகளை செய்து கொடுக்கும் ஒரு ஏஜென்ட். இவர் பாவனாவுக்கு நன்கு பழக்கமானவர். அது மட்டுமின்றி அவரை காரில் கடத்தி பாலியல் துன்புறுத்தலை செய்ததும் இவர்தான். தனக்கு நடந்த அநியாயத்தை தட்டிக் கேட்கும் விதமாக காவல் நிலையம் சென்றார் நடிகை பாவனா. அந்த கேவலமான செயலை பல்சர் சுனில் செய்ததற்கு முக்கிய காரணம் நடிகர் திலீப். அவர்தான் தன்னை இவ்வாறு செய்யச் சொன்னதாக சுனில் போலீசாரிடம் வாக்குமூலம் கொடுத்தார். Dilip-Bavana-Cinemapettai.jpg திலீப் இவ்வாறு செய்ய சொன்னதற்கு முக்கிய காரணம், அவர் காவியா மாதவனுடன் நெருங்கியிருக்கும் போட்டோக்களை தன் முதல் மனைவியான மஞ்சு வாரியாருக்கு, நடிகை பாவனா அனுப்பியதாகவும். அதனால்தான் மஞ்சுவாரியருக்கும் நடிகர் திலிப்பிற்கும் பிரச்சனை வந்து விவாகரத்து ஏற்பட்டதாகவும் செய்திகள் வெளிவந்தன. இதனை மனதில் வைத்துதான் நடிகர் திலீப் பாவனாவிற்கு இப்பேர்ப்பட்ட ஒரு படுபாதக செயலை செய்துள்ளார். அதன்பின் குற்றம் நிரூபிக்கப்பட்டு இவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். Continue Reading Related Topics:காவியா, கேரளா, சினிமா செய்திகள், செய்திகள், தமிழ் செய்திகள், தமிழ் நடிகைகள், தமிழ் படங்கள், திலீப், தீபாவளி, நடிகர்கள், நடிகைகள், பாவனா, மஞ்சு வாரியார்
சாப்ட்வேர் குவாலிடி டெஸ்டிங் மற்றும் லினக்ஸ் ஆகிய படிப்புகளில் எதற்கு வேலை வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன? மேலும் ஆசிரியர்கள் தேவை Wanted: Faculty on contract basis for Marine Engineering. Apply on or before 16-... Posted On :05-12-2022 பேராசிரியர், இணை பேராசிரியர், உதவி பேராசிரியர் தேவை Wanted: Professors in Natural Products, Assistant Professors in Natural Products... Posted On :30-11-2022 பேராசிரியர், இணை பேராசிரியர், உதவி பேராசிரியர் தேவை Wanted: Professors, Associate & Assistant Professors in the department of Archit... Posted On :29-11-2022 பேராசிரியர், இணை பேராசிரியர், உதவி பேராசிரியர் தேவை Wanted: Professors, Associate & Assistant Professors in the Department of AI & D... Posted On :26-11-2022 ஆசிரியர்கள் தேவை Wanted: Faculty for Amity Institute of Hospital Administration, Amity University... Posted On :26-11-2022
சென்னை: இந்தியா கோவிட் -19 வழக்குகளின் எண்ணிக்கை 50 லட்சத்தை கடந்ததுடன் 83,000 க்கும் அதிகமான இறப்புகளைப் பதிவு செய்துள்ளது. தேசிய மற்றும் மாநில அளவில் சில மாவட்டங்களுக்கான தரவு கிடைத்தாலும், மற்ற இடங்களில், குறிப்பாக நகரங்கள் மற்றும் கிராமங்களில் நிலைமை பெரும்பாலும் கிடைக்காத வண்ணமே உள்ளது. கிழக்கு மகாராஷ்டிராவின் கிராமப்புற மற்றும் பின்தங்கிய வர்தா மாவட்டத்தில், சேவாகிராமில் உள்ள கஸ்தூர்பா காந்தி மருத்துவமனையில் மருத்துவ கண்காணிப்பாளராக எஸ்.பி. காலந்திரி, அத்துடன் இணைக்கப்பட்ட மகாத்மா காந்தி மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக பேராசிரியராக பணியாற்றி வருகிறார். வார்தாவில் கோவிட்-19 ஏற்படுத்தும் கொரோனா வைரஸ் நாவலின் தாக்கம் குறித்து, எஸ். ருக்மிணியுடன் அவர் உரையாடுகிறார். கிராமப்புறங்களில் இருந்து கோவிட் வழக்குகள் வரத் தொடங்கிவிட்டதாக அவர் கூறுகிறார். ஆர்டி-பி.சி.ஆர் சோதனைகளை நடத்தக்கூடிய இரண்டு ஆய்வகங்கள் வர்தா மாவட்டத்தில் உள்ளன, ஒன்றாக ஒருநாளைக்கு 400-500 சோதனைகளைச் செய்கின்றன. "திடீரென்று, நேர்மறையை சோதிக்கும் நபர்களின் விகிதம் இப்போது ஒவ்வொரு நாளும் 40% ஆக உயர்ந்துள்ளதை கண்டறிந்துள்ளோம்," என்று அவர் கூறினார். அனைத்து நோயாளிகளும் கோவிட் பராமரிப்பு மையங்கள் அல்லது மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லப்படுகிறார்கள், ஏனெனில் “நமது சமூக அமைப்பு மற்றும் தனி படுக்கையறைகள், குளியலறை இல்லாத சிறிய வீடு கொடுக்கப்பட்டால், மக்கள் தங்கள் வீடுகளில் அடைத்து வைக்கப்பட்டு ஆடம்பரத்தை வழங்க முடியாது” என்றார். திருத்தப்பட்ட பகுதிகள்: ஆண்டின் தொடக்கத்தில் நாம் பேசியபோது, காத்திருந்து கவனிப்பது போன்ற உணர்வை வெளிப்படுத்தினீர்கள். இப்போது வர்தா ஒவ்வொரு நாளும் 150-க்கும் மேற்பட்ட வழக்குகளை கண்டு வருகிறது. வர்தாவுக்கான நேரம் இப்போது வந்துவிட்டது போல் தெரிகிறதே? கிழக்கு மகாராஷ்டிராவில் உள்ள எங்களது வர்தா மாவட்டம், மே 10 அன்று முதல் வழக்கை பதிவு செய்தது. மே மற்றும் ஜூன் மாதங்களில் ஒப்பீட்டளவில் சரியாகவே இருந்தன - குறைந்த எண்ணிக்கையிலான நோயாளிகளே வந்ததால், அவர்களை எங்களால் சமாளிக்க முடிந்தது. ஆனால் கடந்த பல வாரங்களில், கோவிட் நேர்மறை நபர்களின் எண்ணிக்கையில் திடீர் அதிகரிப்பு காணப்பட்டது. இப்போது சேவாகிராம் என்ற இடத்தில் உள்ள எனது மருத்துவமனையில், 175 கோவிட் நேர்மறை நோயாளிகள் உள்ளனர்; அவர்களில் 27 பேர் ஐ.சி.யு.வில் உள்ளனர், அவர்களில் 12 பேருக்கு செயற்கை சுவாசக்கருவி பொருத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாளும், எங்களது வர்தா மாவட்டம் 150 முதல் 175 வரை புதிய வழக்குகளை பதிவு செய்து வருகிறது, மேலும் இந்த வழக்குகள் இப்போது சிறிய கிராமங்களில் இருந்தும் வருவது போல் தெரிகிறது. உங்களிடம் வரும் நோயாளிகளுக்கு எங்கிருந்து நோய்த்தொற்று ஏற்படுகிறது என்பதைப் பற்றி உங்களுக்கு ஏதேனும் தோன்றுகிறதா? இது நிச்சயமாக சமூகப்பரவல் என்று நினைக்கிறேன். சமூக பரவல் மூலம், இந்த தொற்று எங்கிருந்து வருகிறது, யாரிடம் இருந்து வருகிறது என்பது நமக்கு தெரியாது என்று அர்த்தம். சிறிய கிராமங்களில் இருந்து, சிறிய நகரங்களில் இருந்தும், ஒருபோதும் பயணம் செய்யாதவர்கள் என பலதரப்பு மக்கள் வருகிறார்கள். சேவகிராமிற்கு அருகில் அமைந்துள்ள சிறிய கிராமங்கள் முழுவதும், இப்போது திடீரென ஆண்கள், பெண்கள், குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள், வயதானவர்கள், இணை நோய் உள்ளவர்கள் என பலரும் வருவதை காண்கிறோம். சிறிய கிராமங்களில் இருந்து வரும் மக்கள் இந்நோயைத் தாக்கும் முன்பு அதுபற்றி அறிந்திருக்கிறார்களா? ஆமாம், விழிப்புணர்வு ஒரு நியாயமான அளவு இருந்தது, அநேகமாக இப்போது அனைவருக்கும் ஸ்மார்ட்போன் இருப்பதற்கு நன்றி சொல்ல வேண்டும். எங்களது சிறிய கிராமங்களில் இருந்து வரும் மக்களுடன் நான் பேசும்போது, ஒரு புதிய வைரஸ் இருப்பது கிட்டத்தட்ட அனைவருக்கும் தெரியும் என்பதை கண்டேன். இது ஒரு ஆபத்தானதாக இருக்கக்கூடும், இது சாதாரண ஜலதோஷம் போன்றதல்ல தீங்கானது, இது மலேரியா அல்லது டெங்குவில் இருந்து வேறுபட்டது என்பதை அறிந்துள்ளனர். இந்த வைரஸுக்கு மருந்து இல்லை என்பதையும் அவர்கள் அறிவார்கள். வழக்குகள் பொதுவாக எவ்வாறு கண்டறியப்படுகின்றன? மருத்துவமனைக்கு வரும் கோவிட்19 அறிகுறி உள்ளவர்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகிறார்கள். அதேபோல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு நுரையீரல் பிரச்சனை உள்ளவர்களும் பரிசோதிக்கப்படுகிறார்கள். பிரசவ காலம் நெருங்கும் அனைத்து கர்ப்பிணி பெண்களும் பரிசோதிக்கப்படுகிறார்கள். வழக்கமான அறுவை சிகிச்சைகளுக்கு திட்டமிடப்பட்ட நபர்கள் அறிகுறிகள் இருந்தால் அல்லது கோவிட் 19 ஆபத்தில் இருந்தால் பரிசோதிக்கப்படுவார்கள். மாவட்ட மருத்துவமனையில் தொடர்பு-தடமறிதல், சோதனை மற்றும் தனிமைப்படுத்தும் நெறிமுறை உள்ளது. மாவட்ட நிர்வாகமும் சில நிகழ்வுகளைக் கண்டறிந்துள்ளது. இப்போது, வர்தா மாவட்டத்தில் ஆர்டி-பி.சி.ஆர் சோதனைகளைச் செய்யக்கூடிய இரண்டு ஆய்வகங்கள் உள்ளன, இவை இரண்டும் சேர்ந்து ஒரு நாளைக்கு 400-500 சோதனைகளைச் செய்கின்றன. நேர்மறையை சோதிக்கும் நபர்களின் விகிதம் இப்போது ஒவ்வொரு நாளும் திடீரென 40% ஆக அதிகரித்துள்ளது என்பதை கண்டறிந்துள்ளோம். ஒவ்வொரு இரவும் 9.30 க்குள், எங்கள் ஆய்வகங்கள் சோதனை முடிவுகளை தெரிவிக்கின்றன, அவை விரைவாக மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது. சுகாதார அதிகாரிகள் நோயாளிகளின் தொலைபேசி எண்கள் மற்றும் முகவரிகளை வைத்து அவர்களை எடுத்துக்கொள்கிறார்கள். அவர்கள் அறிகுறியற்றதாக இருந்தால் கோவிட்19 பராமரிப்பு மையங்களிலும், அறிகுறிகள் இருந்தால், வயதானவர்கள் அல்லது இணை நோய் இருந்தால், அவர்கள் ஒரு பிரத்யேக கோவிட் 19 பராமரிப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவார்கள். எங்கள் மருத்துவக்கல்லூரியில் மேலும் 1,000 படுக்கைகள் கொண்ட இன்னொன்று உள்ளது, எங்களுக்கிடையில் ஒவ்வொரு நாளும் 60-80 புதிய வழக்குகளை அனுமதிக்கிறோம். இப்போது வீட்டு தனிமைப்படுத்தல் இல்லை; நமது சமூக அமைப்பு மற்றும் தனி படுக்கை அறை, குளியலறை இல்லாத சிறிய வீடுகள், மக்கள் தங்கள் வீடுகளில் அடைத்து வைக்கப்பட்டு ஆடம்பரத்தை வழங்க முடியாது. இரண்டு மருத்துவமனைகளிலும், உள்கட்டமைப்பு மற்றும் மனித வளம் போதுமானதா? அதிர்ஷ்டவசமாக, இப்போது வரை, நாங்கள் சிக்கல்களை எதிர்கொள்ளவில்லை. ஆனால் தொற்றுநோய்க்கு ஆறு மாதங்கள் ஆகிவிட்டதால், சுகாதாரப்பணியாளர்கள் மத்தியில் சோர்வு ஏற்படத் தொடங்கிவிட்டது. எரிச்சிதைவு நோய்க்குறியும் உள்ளது. ஒரு சில சுகாதாரப் பணியாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளதால், இப்போது சுகாதாரப் பணியாளர்களிடமும் ஒருவித அச்சம் மற்றும் பீதி நியாயமான அளவில் உள்ளது. அவர்களின் அச்சங்களைத் தீர்ப்பதற்கும், அவர்களை ஊக்குவிப்பதற்கும், அவர்களின் பிரச்சினைகளை அடையாளம் காண்பதற்கும், நோய் இனப்பெருக்கம் செய்யும் புதிய சவால்களைச் சமாளிக்க அவர்களுக்கு உதவுவதற்கும், நாங்கள் நிறைய நேரம் செலவிடுகிறோம். அநேகமாக அதிகமான வழக்குகள் வரும்போது -- மற்றும் மோசமானவை இன்னும் வரவில்லை என்று நாம் அனைவரும் உணர்கிறோம் -- நம்மிடம் போதுமான மனித வளங்கள் இருப்பதை உறுதி செய்வது நம் அனைவருக்கும் மிகப்பெரிய சவாலான பணியாக இருக்கும். கோவிட் வார்டில் பணிபுரிவது மிகவும் கடினம், ஒவ்வொரு நாளும் நமது சுகாதாரப்பணியாளர்கள் உந்துதலாக இருப்பதை உறுதிசெய்ய புதுமையான தீர்வுகளை ஏற்படுத்த வேண்டும், அவர்களின் பங்களிப்பு சரியாக ஒப்புக் கொள்ளப்படுகிறது, அவர்கள் வீட்டிற்குச் செல்லும்போது, அது திருப்தி தருவதாக இருக்க வேண்டும். கோவிட் 19-க்கான இணை நோய்களான தொற்றுநோயற்ற நோய்கள் உள்ள கிராமப்புற மக்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது என்பதை நமது தேசிய சுகாதார தகவல்கள் காட்டுகின்றன. பெரிய நகரங்களில் உள்ள உங்கள் சகாக்களுடன் ஒப்பிடும்போது வழக்குகள் உங்களுக்கு முன்வைக்கப்படுவதில் ஏதேனும் வித்தியாசத்தை நீங்கள் காண்கிறீர்களா? ஆமாம், நகர்ப்புற மக்களுடன் ஒப்பிடும்போது, நீரிழிவு நோய், உயர் இரத்த அழுத்தம், இதய பிரச்சினைகள் போன்ற வாழ்க்கை முறை நோய்களின் பாதிப்பு நிச்சயமாக கிராமப்புற மக்களிடம் குறைந்தளவில் தான் உள்ளது. ஆனால் பிரச்சினை என்னவென்றால், கடந்த தசாப்தத்தில் கிராமப்புறங்களிலும் இந்த வாழ்க்கை முறை சிக்கல்களில் திடீரென எழுச்சி இருப்பதைக் கண்டோம். ஒரு நகரத்தில் வசிக்கும் மற்றும் 40 வயதிற்கு மேற்பட்ட ஒவ்வொரு நான்காவது இந்தியருக்கும் உயர் இரத்த அழுத்தம் இருந்தால், கிராமப்புறங்களைப் பொருத்தவரை இது ஆறில் ஒருவராக இருக்கலாம். இதுவரை நாங்கள் பெற்ற மொத்த 760 சேர்க்கைகளில், 40% க்கும் அதிகமானவர்கள் இணை நோய்கள் - உயர் இரத்த அழுத்தம் அல்லது நீரிழிவு நோய், அல்லது இதய நோய்கள் அல்லது சிறுநீரக பிரச்சினைகள் என்ற நிலைமைகளைக் கொண்டிருந்தனர். நாம் முன்பு பேசியபோது, ​​மழைக்காலங்களில் கிராமப்புறங்களில் உருவாகும் காய்ச்சல் தொற்று பற்றி நீங்கள் கவலை தெரிவித்தீர்கள். அது எப்படி ஆட்டம் காட்டுகிறது - குறிப்பாக சோதனை அடிப்படையில் சவால்களை உருவாக்குகிறதா? ஆமாம், இது மற்றொரு சவால். இதைத்தான் நாம் பருவமழை காய்ச்சல் என்று அழைக்கிறோம், ஒவ்வொரு ஆண்டும் மலேரியா, டெங்கு, சிக்குன்குனியா, லெப்டோஸ்பிரோசிஸ் மற்றும் ஸ்க்ரப் டைபஸ் போன்ற முதல் ஐந்து கோளாறுகளில் நாம் பங்கை கொண்டிருக்கிறோம், மேலும் கதை மீண்டும் மீண்டும் வருகிறது. அது மிகப்பெரிய சவால். உங்களுக்கு சில எண்ணிக்கை கொடுப்பதானால், ஒவ்வொரு நாளும் 1,600 நோயாளிகளை எங்கள் வெளிநோயாளிகள் பிரிவில் காண்கிறோம், அவர்களில் 20-30% பேர் காய்ச்சல் அல்லது காய்ச்சல் போன்ற அறிகுறிகளுடன் வருகிறார்கள். சரியான மற்றும் நம்பகமான நோயறிதல் சோதனைகள் இல்லாததால், பெரிய பொது மருத்துவமனைகளில், கோவிட் அல்லாத நோயாளிகளை, கோவிட் நோயாளிகளிடம் இருந்து பிரிப்பது கிட்டத்தட்ட சாத்தியமற்றது என்ற உண்மையின் அடிப்படையில், சுத்தமான எண்ணிக்கையை கொள்வது என்பது மிகவும் கடினமானது மற்றும் சவாலானது. ஒவ்வொரு நாளும், இந்த பிரச்சினையை எதிர்கொள்கிறோம், டெங்கு அல்லது மலேரியா என்ற சந்தேகத்துடன் ஒரு பொது வார்டில் அனுமதிக்கப்பட்டவர்கள் கோவிட் நேர்மறையாளராக மாறினர். அல்லது பக்கவாதம் அல்லது மாரடைப்பு ஏற்பட்ட ஒருவர், அல்லது அறுவை சிகிச்சைக்கு திட்டமிடப்பட்டவர் மற்றும் எந்த அறிகுறிகளும் இல்லாதவர் முன்-மதிப்பீட்டின் ஒரு பகுதியாக சோதிக்கப்படும்போது கோவிட் நேர்மறை என்று மாறிவிடும். வேறுவகையில் நிரூபிக்கப்படாதவரை ஒவ்வொரு நபரும் கோவிட் நேர்மறையாளர் என்று கருதப்பட வேண்டும் என்று நாங்கள் அவர்களுக்கு கற்பித்தாலும், இது வேறுவிதமாக அவர்களுக்கு சிகிச்சையளிக்கும் சுகாதார ஊழியர்கள் இடையே ஒரு பெரிய அளவிலான குழப்பத்தையும் பீதியையும் உருவாக்குகிறது. எங்கள் மையங்களில் -- பழைய கட்டிடங்கள், பழைய உள்கட்டமைப்பு-- கொடுக்கப்பட்டால், அவர்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்வது மற்றும் கோவிட் அல்லாத நோய்களை கோவிட்டில் இருந்து நம்பத்தகுந்த முறையில் வேறுபடுத்துவது மிகவும் கடினம். கடைசியாக, மீண்டும் நாம் முன்பு பேசியபோது, கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டபோது, நாட்பட்ட நோய் கொண்டவர்கள் தங்கள் நோய் மிகவும் மோசமான நிலையில் வரக்கூடும் என்று நீங்கள் கவலை தெரிவித்தீர்கள். உங்கள் ஓ.பி.டி-களில் இப்போது அவ்வாறு நடப்பதை காண்கிறீர்களா? துரதிர்ஷ்டவசமாக, என் தீர்க்கதரிசனம் உண்மையாகிவிட்டது. ஒரு தீவிரமடைந்த இதய நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை காண்கிறோம். மூன்று அல்லது நான்கு மாதங்களுக்கு முன்னர் ஆஞ்சியோபிளாஸ்டி அல்லது பைபாஸ் அறுவை சிகிச்சையால் நோய் பிரச்சினைகளை நாங்கள் நிவர்த்தி செய்திருந்தால், இப்போது அவர்களுக்கு அறுவை சிகிச்சை செய்ய முடியாத சூழ்நிலை இருந்திருக்காது. புற்றுநோய் நோயாளிகளை நிலை 1 அல்லது 2 ஆம் கட்டத்தில் இருந்ததை நாங்கள் கண்டோம். ஆனால் இப்போது அவர்களின் புற்றுநோய்கள் மேலும் தீவிரமடைந்துள்ளது அல்லது அவற்றின் நோயெதிர்ப்பு அமைப்புகள் பலவீனமாகிவிட்டது, அல்லது அவர்கள் புற்றுநோய்களுக்கு அறுவை சிகிச்சை செய்யவோ அல்லது கீமோதெரபிக்கு உட்படுத்தவோ போதுமானவர்களாக இல்லை. நாங்கள் வழங்கும் சுகாதாரப் பாதுகாப்பு முழுவதிலும் இது நிகழ்கிறது. இந்த நபர்களுக்கு முறையான சுகாதார சேவை வழங்கப்பட்டிருக்கலாம், இந்த சிக்கல்கள் பல தவிர்க்கப்பட்டிருக்கலாம், மேலும் அவர்களை மிகவும் மகிழ்ச்சியான மனநிலையுடன் வீட்டிற்கு அனுப்பியிருக்கலாம் என்று பெரும்பாலும் நாங்கள் மிகவும் வருத்தமாகவும், கோபமாகவும், ஏமாற்றமாகவும் உணர்கிறோம். ஆனால் துரதிர்ஷ்டவசமாக கடந்த இரு மாதங்களில் பல காரணங்களால் அந்த வாய்ப்பை இழந்தோம். மருத்துவமனைகள் துணை உகந்த திறனில் இயங்குகின்றன, ஊரடங்குகல் இருந்தன, மக்கள் சுகாதார சேவைகளை அணுக முடியவில்லை மற்றும் மக்கள் மருத்துவமனைகளுக்கு வருவதற்கு பயந்தனர். இப்போது அவர்களின் நோய்களை இன்னும் மோசமான மற்றும் மேம்பட்ட வடிவங்களில் நமக்குக் காண்கிறோம். (எஸ். ருக்மிணி, சென்னையை சேர்ந்த சுதந்திர தரவு பத்திரிகையாளர்). உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.
அஞ்சலி 16 ஜூன் 1986 அன்று ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள ரசோலில் பிறந்தார். அவர் ஒரு இந்திய நடிகை மற்றும் மாடல் ஆவார், அவர் முக்கியமாக தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். 2006 ஆம் ஆண்டு தெலுங்கில் ‘ஃபோட்டோ’ என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். அடுத்த ஆண்டு தனது இரண்டாவது தெலுங்குப் படமான ‘பிரேமலேகா ராசா’ மற்றும் தமிழில் அறிமுக இயக்குநர் ராமின் கற்றது தமிழ் படத்தில் ஜீவாவுடன் இணைந்து நடித்தார். 2008ல் ‘ஹொங்கனாசு’ படத்தின் மூலம் கன்னட சினிமாவில் அறிமுகமானார். 2011ல் ஜெயசூர்யாவுடன் மலையாளத்தில் அறிமுகமான படம் ‘பய்யன்ஸ்’. அஞ்சலி நடித்த தெலுங்குப் படங்கள் வெங்கடேஷின் சீதம்மா வக்கிட்லோ சிரிமல்லே செட்டு மற்றும் மசாலா, ரவிதேஜாவின் பலுபு, ஸ்ரீனிவாச ரெட்டியின் கீதாஞ்சலி, நந்தமுரி பாலகிருஷ்ணாவின் டிக்டேட்டர், சித்ராங்கதா, மாதவனின் நிசப்தம் மற்றும் பவன் கல்யாணின் வக்கீல் சாப் போன்றவையாகும். கன்னட சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமாரின் ராணா விக்ரமா மற்றும் பிஜு மேனனின் ரோசாபூ ஆகியவை அவரது பிற மொழித் திரைப் படங்கள். அஞ்சலி பல தமிழ் படங்களிலும் நடித்துள்ளார். அங்காடி தெரு, எங்கேயும் எப்போதும், கலகலப்பு, வத்திக்குச்சி, சேட்டை, சகலகலா வல்லவன், இறைவி, பலூன், காளி, பேரன்பு மற்றும் நாடோடிகள் 2 ஆகியவை குறிப்பிடத்தக்க சில திரைப்படங்கள். இவரது வெளிவர இருக்கும் திரைப்படங்கள் மம்முட்டியின் பீஷ்ம பர்வம் (மலையாளம்), வெங்கடேஷின் F3(தெலுங்கு) பைராகி (கன்னடம்), பூச்சாண்டி (தமிழ்) மற்றும் இந்தி அறிமுக படமான RC15 (இந்தி, தமிழ், தெலுங்கு) ஆகியவை . View this post on Instagram A post shared by Anjali (@yours_anjali) Tags: Actress Anjali Celebrity Model RC15 Share on Share on Facebook Share on Twitter Share on Pinterest Share on WhatsApp Share on WhatsApp Share on Linkedin Share on Tumblr Share on Reddit
antharanga kelvi, antharangam, tamil kama sutra, Tamilsex.com, tamilsex.com, www. tamil sex.com, tamil doctor, tamil kama kathaikal, tamil sex, tamil sex kathaikal, tamil sex padangal. tamil sex videosசெக்ஸ் பொசிஷன்களுக்கு ஒரு எல்லையே இல்லை. ஏகப்பட்ட பொசிஷன்கள் கொட்டிக் கிடக்கிறது. அத்தனையையும் டிரை செய்தவர்கள் என்று யாரையுமே கூற முடியாது. காரணம் பெரும்பாலானவர்களும் அதில்சிலவற்றோடு நின்று விடுகிறார்கள். சிலர் மட்டுமே ஒவ்வொரு முறையும் புதிது புதிதாக முயற்சிக்கிறார்கள். அதுதான் நல்லதும் கூட. இல்லாவிட்டால் செக்ஸ் சீக்கிரமே போரடித்துப் போய் விடக் கூடும். எத்தனையோ பொசிஷன்கள் இருந்தாலும் அனை வராலும் விரும்பப்படும் பொசிஷன்கள் எது என்று பார்த்தால் இந்த கெளபாய் பொசிஷும், மிஷனரியும்தான். கெளபாய் என்றால் ஆண்கள் மீது பெண்கள் ஏறி உறவில் ஈடுபடுவது. மிஷனரி என்பது இயல்பானது, அதாவது பெண்கள் மீது ஆண்கள் ஏறி உறவில் ஈடுபடுவது. மிஷனரிதான் பெரும்பாலும் அனைவரும் தவறாமல் செய்யும் ஒரு உறவு பொசிஷன். இதில் கெளபாய் பொசிஷன் என்பது பெண்களுக்கு மிகவும் பிடித்தமானது. ஒருமுறை இந்த பொசிஷனை அவர்கள் அனுபவித்து விட்டால் அதன் பிறகு விட மாட்டார்கள், அடிக்கி அந்த பொசிஷனை அவர்கள் அனுபவிக்க விரும்புவார்கள். அப்படி ஒரு ஜில்லாக்கியான பொசிஷன்தான் இந்த கெளபாய். கெளபாய் பொசிஷனில் உறவு கொள்ளும்போது ஆணின் வேலையை பெண் செய்கிறார். ஆண் மீது ஏறி அமர்ந்து கொண்டு அவர் ஒரு ஆண் செய்வது போன்று உறவி்ல் ஈடுபடுவார். ஆண்கள் கீழே படுத்தபடி உறவை அனுபவிப்பார்கள். அத்தோடு அவர்களது வேலை முடிந்து விடும். ஆனால் பெண்கள்தான் இந்த உறவின் போக்கை கையில் எடுத்துக் கொண்டு செயல்படுவார்கள். கெளபாய் பொசிஷினில் இரண்டு வகை உண்டு. ஒன்று ஆண் மீது ஏறி அமர்ந்து கொண்டு அவரது முகத்தை பார்த்தபடி உறவு கொள்வது. இன்னொன்று ரிவர்ஸ்… அதாவது ஆணின் முகத்திற்கு முதுகைக் காட்டிக் கொண்டு திரும்பி உட்கார்ந்து கொண்டு உறவு கொள்வது. இரண்டிலும் சம அளவிலான இன்பம் பெண்ணுக்குக் கிடைக்கும். இன்னும் சொல்வதானால், மிஷனரியில் ஆண்களுக்கு அதிகம் இன்பம் கிடைக்கும் என்றால் கெளபாயில் ஆணை விட பெண்ணுக்குத்தான் அதிக இன்பம் கிடைக்கும். கெளபாய் பொசிஷனை பெண்கள் விரும்புவதற்குக் காரணம், அவர்களுக்குத் தேவையான இன்பத்தை அவர்களே இதில் முடிவு செய்ய முடியும். எந்த அளவுக்கு ஆழமாக உறவு கொள்ள வேண்டும் என்பதையும் அவர்களே முடிவு செய்யலாம். தங்களது தேவைக்கேற்ப வேகத்தைக் கூட்டவும், குறைக்கவும் அவர்களே தீர்மானிக்கலாம். மேலும் தனது துணையை தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக ஒரு கர்வமும் அவர்களுக்குக் கிடைக்கும். மேலும் கஷ்டப்படாமல் ஆர்கஸத்தை அடையவும் இந்த கெளபாய் பொசிஷன் உதவுகிறது என்பதாலும், கூடுதல் இன்பம் தருகிறது என்பதாலும் பெண்களுக்கு இந்த பொசிஷன் மிகவும் பி்டிக்கும். அதிலும் ரிவர்ஸ் பொசிஷன் பெண்களின் தேவைகளை முழுமையாக நிறைவேற்றுவதாக அமைகிறதாம். காரணம், இதில் பெண்கள் மிகவும் ஆழமாக உறவில் ஈடுபட முடியுமாம். இருப்பினும் பல பெண்கள் இந்த கெளபாய் பொசிஷனில் ஈடுபட வெட்கப்படுவார்கள். என்னங்க இது உங்க மேல போய் நானா, போங்க என்று விலகி ஓடுவார்கள். ஆனால் வெட்கப்பட்டால் வேலைக்கு ஆகாது என்பதை அவர்களுக்கு ஆண்கள்தான் புரிய வைத்து தெளிய வைத்து ஈடுபடுத்த வேண்டும்…!
சீனிவாசன் வேகமாக போலீஸ் குடியிருப்புக்குள் நுழைந்தான். “சி” பிரிவு கட்டடத்திற்குள் நுழைந்து மூன்றாவது மாடிக்கு ஏறி “பி” என்று போட்டிருந்த வீட்டிற்கு முன் வந்து நின்றான். அழைப்பு மணியை அழுத்துவதா வேண்டாமா என்று யோசித்தாலும் அழைப்பு மணியை அழுத்தவே செய்தான். கதவைத் திறந்த பெண் “என்ன?” என்று கேட்டாள். “ஏட்டய்யாவப் பாக்கணும்.” “நீங்க யாரு?” “சீனிவாசன்” “போலீசா?” “ஆமாங்க” “எந்த ஸ்டேசன்” “இந்த ஸ்டேசன்தான். ஐயாவோடதான் வேலபாக்கிறன்”. “இருங்க.” என்று சொல்லிவிட்டுக் கதவைச் சாத்திக்கொண்டாள் ஏட்டு ராஜேந்திரனின் மனைவி மல்லிகா. சீனிவாசன் முன்றாவது மாடியிலிருந்து தரையைப் பார்த்தான். ஆய்வாளருக்கு உரிய, எஸ்.ஐ.க்கு உரிய தனித்தனி வீடுகளைப் பார்த்தான். பக்கத்திலிருந்த ‘டி‘ பிரிவு கட்டடத்தையும் பார்த்தான். முதன்முறையாக இன்றுதான் போலீஸ் குடியிருப்புக்குள் வந்திருக்கிறான். சீக்கிரமாக ஏட்டு ராஜேந்திரனை பார்த்துவிட்டால் போதும் என்பது மட்டும்தான் அவனுடைய மனதில் இருந்தது. கதவு திறக்கப்படுகிறதா என்று பார்த்தான். கதவைத் திறந்த மல்லிகா “உள்ளார வாங்க” என்று கூப்பிட்டாள். பிளாஸ்டிக் நாற்காலியைக் காட்டி “ஒக்காருங்க” என்று சொல்லிவிட்டு ஒரு அறைக்குள் போய்விட்டாள். சீனிவாசன் ஒரு நாற்காலியில் ஒடுங்கிப்போய் உட்கார்ந்திருந்தான். எதையும் பார்க்க விரும்பாதவன் மாதிரி தரையை மட்டுமே பார்த்தவாறு உட்கார்ந்திருந்தான். வீடு பெரியதாக இருக்கிறதா, ஹால் பெரியதாக இருக்கிறதா என்றுகூடப் பார்க்கவில்லை. எதையும் பார்க்கிற மனநிலையில் அவன் இல்லை. மல்லிகா சென்ற அறையைப் பார்த்தான். ராஜேந்திரன் எப்போது வெளியே வருவார்? காத்துக்கொண்டிருந்தான். அப்போது சுவரில் மாட்டப்பட்டிருந்த போட்டோக்கள் அவனுடைய கண்களில் பட்டன. ஒரு போட்டோ ராஜேந்திரன் போலீஸில் சேர்ந்தபோது எடுக்கப்பட்டதுபோல் இருந்தது. அதற்கடுத்து அவருடைய கல்யாண போட்டோ. இரண்டு குழந்தைகளுடைய போட்டோ இருந்தது. ஒரு வயதானவருடைய போட்டோவுக்கு மாலை போட்டிருந்தது. அதற்கடுத்து, ராஜேந்திரனுடைய யூனிபார்ம் தொங்கவிடப்பட்டிருந்தது. எதைப் பார்த்தாலும் எதைப் பார்க்கிறோம் என்ற உணர்வு அவனிடம் இல்லை. ஆனாலும் ஹாலையும், சுவரில் மாட்டியிருந்த போட்டோக்களையும் மாறிமாறிப் பார்த்துக்கொண்டிருந்தான். அதோடு கையில் வைத்திருந்த செய்தித்தாள்களையும் அவ்வப்போது பார்த்தான். கால் மணி நேரம் கழிந்திருக்கும், அறையின் கதவைத் திறந்துகொண்டு ராஜேந்திரன் வெளியே வந்தார். சீனிவாசன் சட்டென்று எழுந்து சல்யூட் அடித்தான். ராஜேந்திரன் ஒரு பிளாஸ்டிக் நாற்காலியை எடுத்து மின் விசிறியின் காற்று நன்றாக வருகிற இடமாகப் போட்டு உட்கார்ந்தார். நின்றுகொண்டிருந்த சீனிவாசனிடம் “என்ன புதுசா வீட்டுக்கு வந்திருக்கிற?” என்று கேட்டார். “ஐயாவப் பாக்கணும் தான் வந்தன்.” ரொம்பப் பணிவாகச் சொன்னான். “ஒக்காரு.” “வேண்டாங்க ஐயா.” “இது ஸ்டேசனில்ல. வீடு, ஒக்காரு.” என்று சொல்லி கட்டாயப்படுத்திய பிறகுதான் சீனிவாசன் அடக்க ஒடுக்கமாக உட்கார்ந்தான். “சொல்லு” என்று ராஜேந்திரன் கேட்டதும் கையில் மடித்து வைத்திருந்த ஐந்து செய்தித்தாள்களையும் ராஜேந்திரனிடம் கொடுத்தான். செய்தித்தாள்களை வாங்கி அவற்றைப் புரட்டிக்கூடப் பார்க்காமல் அப்படியே தரையில் வைத்துவிட்டு “ஏதாவது விஷயமா” என்று கேட்டார். “பேப்பரப் பாருங்கய்யா?” என்று சொன்னதோடு நிற்காமல் எழுந்து சென்று ராஜேந்திரன் தரையில் போட்டிருந்த செய்தித்தாள்களில் ஒன்றை எடுத்து அவன் காட்ட விரும்பிய பக்கத்தைப் பிரித்துக் கொடுத்துவிட்டு வந்து உட்கார்ந்தான். “ஸ்டேஷனைப் பத்தி ஏதாச்சும் செய்தி வந்திருக்கா?” என்று கேட்டுக்கொண்டே செய்தித்தாளை வாங்கி ராஜேந்திரன் பார்த்தார். சிறப்பு அதிரடிப்படை முன்னே செல்ல, போலீஸ்காரர்கள் ஒரு பாடையைத் தூக்கிக்கொண்டு போகிற ஒரு போட்டோ வண்ணத்தில் அச்சிடப்பட்டிருந்தது. போட்டோவைப் பார்த்ததோடு செய்தியை முழுமையாகப் படித்துவிட்டுக் கொட்டாவிவிட்டார். பிறகு செய்தித்தாளை மடித்துத் தரையில் வைத்தார். பட்டென்று எழுந்த சீனிவாசன் ராஜேந்திரனுக்குப் பக்கத்தில் கிடந்த மற்ற நான்கு செய்தித்தாள்களையும் எடுத்து, ஒவ்வொரு செய்தித்தாளிலும் குறிப்பிட்ட ஒரு பக்கத்தை எடுத்து காட்டினான். முன்பு பார்த்த போட்டோவும், செய்தியும் மற்ற நான்கு செய்தித்தாள்களிலும் விரிவாக அரைப் பக்கத்திற்கு வந்திருந்ததைப் பார்த்த ராஜேந்திரன் “இந்த பேப்பர்காரனுங்களுக்கு வேற வேல இல்லெ?” என்று சொல்லிவிட்டு செய்தித்தாள்களை தரையில் வைத்தார். கொட்டாவி விட்டுக்கொண்டே “ஒனக்குத்தான் ரெண்டு நாள் லீவ் கொடுத்தாங்களே ஊருக்குப் போகலியா?” என்று கேட்டார். “இல்லிங்கய்யா” என்று சொன்ன சீனிவாசன் அக்கறையுடன் “போட்டோவப் பாத்திங்களா?” என்று கேட்டான். “பாத்தன் பாத்தன்” என்று சொல்லும்போதே ராஜேந்திரனுக்குக் கொட்டாவி வந்தது. “போட்டோவுல நானும் இருக்கங்கய்யா.” “அப்படியா?” என்று கேட்டுவிட்டு தரையில் கிடந்த செய்தித்தாளை எடுத்து சீனிவாசனுடைய படம் இருக்கிறதா என்று பார்த்தார். அவனுடைய படம் இருப்பது மாதிரி தெரியாததால் “எங்க இருக்க?” என்று கேட்டார். “பாடய தூக்கிக்கிட்டுப் போறதில மொத ஆளா இருக்கன் பாருங்க” என்று சீனிவாசன் சொன்ன பிறகுதான் போட்டோவைக் கவனமாகப் பார்த்துவிட்டு “நல்லாத்தான் போட்டிருக்கான்” என்று சொன்னார். “எல்லா பேப்பர்லயும் ஒரே போட்டோவத்தான் போட்டிருக்கானுங்க. மத்தவங்க மொகத்தவிட என்னோட முகம்தான் தெளிவா, பெருசா பளிச்சின்னு தெரியுது” என்று கோபத்துடன் சொன்னான் சீனிவாசன். “ஆமாம்” என்பதுபோல ராஜேந்திரன் தலையை மட்டும் ஆட்டினார். திடீரென்று நினைவுக்கு வந்த மாதிரி “ஒம் பக்கத்திலிருந்து போட்டோவ எடுத்திருக்கணும்” என்று சொன்னார். சிறிது நேரம் ராஜேந்திரனும் பேசவில்லை. சீனிவாசனும் பேசவில்லை. அப்போது அறைக்குள்ளிருந்து வெளியே வந்த மல்லிகா “டீ போடணுமா?” என்று கேட்டாள். “போடு” என்று ராஜேந்திரன் சொன்னதும், மல்லிகா சமையற்கட்டிற்குள் சென்றாள். கொட்டாவிவிட்ட ராஜேந்திரன் “பத்து நாளா அலஞ்ச அலச்ச ஒரே களைப்பா இருக்கு” என்று சொன்னார். சோம்பல் முறிப்பதுபோல நெட்டி முறித்தார். “வேலய ராஜினாமா செய்யப்போறன். எப்படி எழுதணும், யாருக்கு அனுப்பனும்னு கேக்கறதுக்கு வந்தன் ஏட்டய்யா” படப்படபுடன் சீனிவாசன் சொன்னதும், ராஜேந்திரன் அவனைக் கூர்ந்துப் பார்த்தார். பிறகு நிதானமான குரலில் “நீ லூசா?” என்று கேட்டார். சீனிவாசன் பதில் சொல்லவில்லை. ராஜேந்திரனை நேருக்கு நேராகப் பார்க்கவில்லை. தலையைத் தாழ்த்திக்கொண்டு கைகளைப் பிசைந்தவாறு உட்கார்ந்திருந்தான். “எஸ்.பி.கிட்ட கொடுக்கணுமா, டி.எஸ்.பி.கிட்ட கொடுக்கணுமா ஏட்டய்யா?” “எதுக்காக வேலய வுடப்போற?” லேசான கோபத்துடன் கேட்டார் ராஜேந்திரன். “நம்ப சாதியில பொறந்ததில யாருமே இந்த காரியத்த செஞ்சிருக்க மாட்டாங்க. போலீசா இருந்ததாலதான் கீழ்ச்சாதி பொணத்த தூக்கிக்கிட்டுப்போயி பொதச்சன். வெட்டியான் வேல பாத்தன். நம்ப சாதிக்கே அசிங்கமாயிடிச்சி. செத்திடலாமின்னு இருக்கு ஏட்டய்யா” சொல்லும்போதே சீனிவாசனுக்குக் கண்கள் கலங்கிவிட்டன. “இந்த விஷயத்த இவ்வளவு சீரியஸா நீ எடுத்துக்க வேண்டியதில்ல.“ “உயிர் போற விஷயம் ஏட்டய்யா” என்று சொன்ன சீனிவாசன் கைகளால் முகத்தை மூடிக்கொண்டு லேசாக அழுதான். சீனிவாசனைப் பார்த்து ராஜேந்திரனுக்கு வியப்பாக இருந்தது. எதனால் இப்படி யோசிக்கிறான்? போலீசாக இருக்கிறவன் இவ்வளவு உணர்ச்சிவசப்படுகிறானே என்று ஆச்சரியப்பட்டார். அவனுடைய அழுகையை எப்படி நிறுத்துவது என்று யோசித்தவர் “தண்ணி குடிக்கிறியா?” என்று கேட்டார். அதற்கு அவன் எந்தப் பதிலும் சொல்லாமல் மூக்கை உறிஞ்சினான். கண்களைத் துடைத்துக்கொண்டான். ராஜேந்திரனுக்கு சீனிவாசன் புது ஆளாகத் தெரிந்தான். ராஜேந்திரனுக்கு என்ன தோன்றியதோ தரையில் கிடந்த செய்தித்தாளை எடுத்து அச்சிடப்பட்டிருந்த போட்டோவைப் பார்த்தார். மற்ற செய்தித்தாள்களையும் எடுத்துப் போட்டோவை மட்டுமே பார்த்தார். பிறகு சீனிவாசனைப் பார்த்தார். அலுப்புடன் செய்தித்தாள்களைத் தூக்கி அடிப்பது மாதிரி தரையில் போட்டார். “எதுக்காக அழுவுற? சின்னப் புள்ளையா நீ? போலீசு. தெரியுதா?” ‘எங்க ஊர்ல மாட்டு வண்டியிலகூட ஒக்காந்துக்கிட்டு அவனுங்கள போவவிட மாட்டம். சைக்கிள்ள, மோட்டார் பைக்கில ஒக்காந்துகிட்டுப் போவவிட மாட்டம். மீறி வந்தாலும் மறிச்சிவச்சி, டயர்ல இருக்கிற காத்தப் புடுங்கிவுட்டுடுவம். அப்படிப்பட்ட ஊர்ல பொறந்த என்னெ கீழ்ச்சாதி பொணத்தத் தூக்கிப் பாடயில வைக்கவும், பொணத்தத் தூக்கிக்கிட்டு சுடுகாட்டுக்குப் போகவும், குழியில எறக்கி மண்ணத் தள்ளி மூடவும் வச்சிட்டாங்க. இந்த வேலயாலதான இந்த அசிங்கம்?. எனக்கு மட்டும் அசிங்கம்னா வுட்டுடுவன். நம்ம சாதிக்கில்ல அசிங்கமாப் போயிடிச்சி. அதத்தான் என்னால தாங்கிக்க முடியல. ஏட்டய்யா” சீனிவாசனுக்கு கண்கள் கலங்கின. “அதுக்காகவா வேலய வுடப்போற?” “ஆமாங்க ஏட்டய்யா.” “முட்டாப் பயலா நீ?” என்று ஆத்திரம் பொங்கக் கேட்டார் ராஜேந்திரன். அப்போது மல்லிகா இரண்டு தம்ளர்களில் டீ கொண்டுவந்து இருவருக்கும் கொடுத்தாள். ராஜேந்திரன் மட்டும்தான் டீயைக் குடித்தார். சீனிவாசன் டீயைக் குடிக்காமல் அப்படியே வைத்திருப்பதைப் பார்த்த ராஜேந்திரன் “டீயக் குடி” என்று சொன்னார். அப்போதும் அவன் டீயைக் குடிக்கவில்லை. “பொணத்துக்குப் பாரா போட்டப்பவே நீ லீவ் போட்டுட்டுப் போவ வேண்டியதுதான?” கடுமையான குரலில் கேட்டார் ராஜேந்திரன். “பதினோரு நாளா கலவரமா இருந்திச்சி. பரபரப்பா இருந்துச்சி. அந்த நேரத்திலப் போயி யாருகிட்ட லீவு கேக்குறது? மீறிக் கேட்டாலும் திட்டித் துரத்திடுவாங்கன்னு கேக்கல. பாராதானன்னு இருந்திட்டன். பொணத்தத் தூக்கவும், பொதைக்கவும் சொல்லுவாங்கன்னு தெரியாது.” “சரிதான்” என்று ராஜேந்திரன் சொன்னார். “எனக்கு இந்த வேல வேணாம் ஏட்டய்யா” என்று சொல்லும்போதே சீனிவாசனுடைய கண்கள் கலங்கியதைப் பார்த்த ராஜேந்திரன் அவனை, சமாதானப்படுத்துவது மாதிரி “நேரம் வரும்போது கணக்குத் தீர்த்துக்கலாம்” என்று அழுத்தமான குரலில் சொன்னார். “விஷயம் தெரிஞ்சா எங்கப்பா என்னெ கொன்னே போட்டுடுவாரு. எங்கப்பா வுட்டாலும் எங்கம்மா வுடாது. வெஷத்த வச்சிக் கொன்னுட்டுத்தான் ஒக்காரும். ஒருத்தனும் எனக்குப் பொண்ணு தர மாட்டான்.” என்று சொல்லிவிட்டுக் கண்களை அழுத்தித் துடைத்துக்கொண்டான். பிறகு அப்போதுதான் நினைவுக்கு வந்த மாதிரி “ரெண்டு தங்கச்சிங்க இருக்கு. அதுகளுக்கு கல்யாணம் ஆவணும் ஏட்டய்யா.” “நீ வேலயில இருந்தாத்தான கல்யாணத்த நல்லா நடத்த முடியும்?” “விஷயம் தெரிஞ்சா ஒரு பய பொண்ணு கேட்டு வர மாட்டான் ஏட்டய்யா?” “அப்பிடியெல்லாம் ஒண்ணும் நடக்காது. எந்தக் காலத்தில இருக்குற நீ? இது ரெண்டாயிரத்து பதினேழு. புரியுதா? டவுனுக்கு வந்திடு. எந்தப் பிரச்சனயும் இருக்காது.” என்று சொல்லிவிட்டு ராஜேந்திரன் லேசாகச் சிரித்தார். “எங்க வீடு மட்டுமில்ல. எங்க ஊரே ஒரு மாதிரியானது ஏட்டய்யா. விஷயம் தெரிஞ்சா ஊர வுட்டே ஒதுக்கி வச்சிடுவானுங்க. இந்த விஷயத்தில மட்டும் அப்பிடியொரு ஒத்துமயா இருப்பானுங்க.” “நீயா எதுக்குசொல்லப் போற?” “முதல்ல எனக்கு விஷயமே தெரியாது ஏட்டய்யா. காலயிலியே எங்க ஊருப் பையன் ஒருத்தன் பேப்பரப் பாத்திருக்கான். அவன்தான் எனக்குப் போன் போட்டு சொன்னான். அப்புறம்தான் நானே பேப்பர வாங்கிப் பாத்தன்.” “பேப்பர் நியூசுக்கெல்லாம் ஒரு நாள்தான் உசுரு. மறுநாளு செத்துப்போயிடும். பேப்பர்க்காரன் எழுதுறதுக்கெல்லாம் போலீசு பயப்படாது. நீ போலீசுங்கிறத மறக்கக் கூடாது. பேப்பர்க்காரனும், டி விக்காரனும் பண்ற அட்டகாசம்தான் இப்பப் பெருசா இருக்கு. இப்ப அவனுவோதான் கலவரத்தப் பெருசாக்குறணுவோ. உண்டாக்குறாணுவோ.” என்று சொல்லிவிட்டு டீ தம்ளரை மல்லிகாவிடம் கொடுத்தார். தம்ளரை எடுத்துக்கொண்டுபோய் சமையல்கட்டில் வைத்துவிட்டு வந்து ராஜேந்திரனுக்குப் பக்கத்தில் நின்றாள். “என் கைய்யப் பாக்க எனக்கே அசிங்கமா இருக்கு ஏட்டய்யா. நெருப்ப வச்சி எரிச்சிடலாம்ன்னு இருக்கு” என்று சொன்ன வேகத்திலேயே திரும்பி சுவரில் இரண்டு கைகளாலும் ’பட்பட்’ என்று சினம் தீரும் மட்டும் அடித்தான். லேசாக அழுதுகொண்டே ராஜேந்திரனைப் பார்த்து “இந்த சனியன் புடிச்ச கையாலதான். அந்தப் பொணத்தத் தூக்கிப் பாடயில வச்சன், பாடயத் தூக்குனன். பாடயிலிருந்து பொணத்த எறக்கிக் குழியில வச்சன். மண்ணத் தள்ளி மூடுனன். எனக்கு இந்த கை வேணுமா ஏட்டய்யா?” என்று சத்தமாகக் கேட்டுவிட்டு முன்புபோல திரும்பி சுவரில் ‘பட்பட்’ என்று இரண்டு கைகளாலும் வேகவேகமாக அடித்ததைப் பார்த்ததும் என்ன இந்தப் பையன் இப்படி இருக்கிறான் என்று ஆச்சரியப்பட்டார் ராஜேந்திரன். சீனிவாசனை வினோதமாகப் பார்த்தார். அவருடைய இருபது வருஷ சர்வீஸீல் இப்படி ஒரு ஆளை அவர் பார்த்ததில்லை. மின் விசிறி வேகமாகத்தான் ஓடிக்கொண்டிருந்தது. காற்றும் நன்றாகத்தான் வந்துகொண்டிருந்தது. ஆனாலும் சீனிவாசனுக்கு வியர்த்து ஒழுகிக்கொண்டிருந்தது. சீனிவாசன் அழுததைதைப் பார்த்துப் பதறிப்போனாள் மல்லிகா. போலீசாக இருந்துகொண்டு இப்படி இருக்கிறானே என்று அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது. பாவம் என்றும் தோன்றியது. “நீ சர்வீசுக்கு வந்து ஆறு மாசம்கூட ஆவல. அதனாலதான் இப்பிடி இருக்கிற. போலீசில நீ பாக்க வேண்டியது நெறயா இருக்கு.” “நான் பாக்க மாட்டன். எப்படி எழுதணும், யார்கிட்ட கொடுக்கணும்ன்னு மட்டும் சொல்லுங்க ஏட்டய்யா. நான் கிளம்புறன்” என்று வேகமாகச் சொல்லிவிட்டு எழுந்து நின்றான். “ஒக்காரு. போவலாம்” என்று ராஜேந்திரன் சொன்னார். மல்லிகாவுக்கு என்ன தோன்றியதோ “ஒக்காருங்க தம்பி” என்று சொன்னாள். சீனிவாசன் உட்கார்ந்தான். ஆனால் ராஜேந்திரனையோ, மல்லிகாவையோ அவன் பார்க்கவில்லை. “அவசரப்படாத.” “பொணத்தத் தூக்குங்கன்னு சொன்னதுமே ஓடியாந்திருப்பன். ஒரு எஸ்.பி., நாலு டி.எஸ்.பி. எட்டு இன்ஸ்பெக்ட்டர், பன்னண்டு எஸ்.ஐ., ஏட்டு, போலீசு அதிரடிப்படன்னு இருநூறு பேருக்கு மேல இருக்கும்போது எப்பிடி ஓடியாறது ஏட்டய்யா.” “நேத்து நானும் அங்கதான இருந்தன்.” “நீங்க அதிகாரி. ’அதச் செய், இதச் செய்’னு சொல்லிட்டு எட்டதான நின்னீங்க? பொணத்துக்கிட்டியா வந்தீங்க?” கோபமாகக் கேட்டான் சீனிவாசன். “எல்லா சாதி போலீசும்தான அங்க இருந்தாங்க. எல்லாரும்தான செஞ்சாங்க? ஒனக்கு மட்டும் என்னா?” என்று கடுமையான குரலில் ராஜேந்திரன் கேட்டதற்குப் பதில் சொல்லாமல் “ராத்திரி நான் சாப்புடல. காலயிலயும் சாப்புடல. கீழ்ச் சாதி பொணத்தத் தூக்குன இந்தக் கையால எப்பிடி சாப்புடுறது ஏட்டய்யா?” என்று கேட்டுவிட்டு தலையைக் குனிந்துகொண்டு அழுதான் சீனிவாசன். சீனிவாசன் எப்போது படுத்தாலும் உடனே தூங்கிவிடுவான். ஆனால் நேற்றிரவு அவனால் தூங்க முடியவில்லை. விடியும்வரை விழித்துக்கொண்டே இருந்தான். மூன்று மணிக்கு வேலையை விட்டுவிடலாம் என்று முடிவெடுத்தான். அதிலிருந்து எப்போது விடியும் என்று காத்திருந்தான். ராஜினாமாக் கடிதத்தை எப்படி எழுதுவது, எழுதியதை யாரிடம் கொடுப்பது, தபாலில் அனுப்பிவிடலாமா என்று யோசித்தான். ஒரு முடிவும் கிடைக்காததால் ராஜேந்திரனிடம் கேட்டுவிட்டுச் செய்யலாம் என்று நினைத்தான். அவரிடம் கேட்கலாம் என்று நினைத்ததற்குக் காரணம் இருந்தது. காவலருக்கான பயிற்சி முடிந்ததும் மாயவரத்திற்கு அருகில் இருக்கிற திருநாள்கொண்டான் என்ற ஊரிலுள்ள காவல் நிலையத்தில் பணியில் சேர அவனுக்கு ஆணை தந்தார்கள். ஒரு ஆய்வாளர், மூன்று உதவி ஆய்வாளர்கள், நான்கு ஏட்டுக்கள், பன்னிரெண்டு கான்ஸ்டபிள்கள் என்று வேலை செய்த அந்தக் காவல் நிலையத்தில் சீனிவாசனுடைய சாதியைச் சேர்ந்தவர் என்று ராஜேந்திரன் மட்டும்தான் இருந்தார். அடாவடியான ஆள் இல்லை. கூச்சப்படாமல் லஞ்சம் வாங்குவார். ஆனால் இவ்வளவு தந்தால்தான் வாங்குவேன் என்று கட்டாயப்படுத்தி வாங்க மாட்டார். பெண் போலீசிடம் அளவோடுதான் பல்லைக் காட்டுவார். புதிதாக வேலைக்கு வந்த பையன்களை மட்டரகமாக திட்டவோ, நடத்தவோ மாட்டார். எல்லாவற்றுக்கும் மேலாக, சாதிக்காரர். அதனால் ஸ்டேஷனில் அவர் சொல்கிற வேலை எதுவாக இருந்தாலும் செய்வான். அவரும் விஷயம் தெரிந்த மாதிரி அவனுக்கு ஓரளவு முன்னுரிமை கொடுத்தார். அந்த உரிமையில்தான் ராஜேந்திரனுடைய வீட்டிற்கு வந்தான். “நான் கிளம்புறன் ஏட்டய்யா.” “என்ன செய்யப்போற?” “இனிமே என்னால இந்த யூனிபார்மப் போட முடியாது ஏட்டய்யா.” கறாரான குரலில் சொன்னதைக் கேட்டதும் ராஜேத்திரனுக்குக் கோபம் வந்துவிட்டது. “ஒன்னிஷ்டத்துக்குச் செய்யுறதுக்கு எதுக்கு எங்கிட்ட வந்த?” என்று சத்தமாகக் கேட்டார். அதற்கு அவன் எந்த பதிலும் சொல்லாததால் மேலும் கோபமாகி “சாதி சோறு போடுமா?” என்று கேட்டார். அதற்கும் அவன் வாயைத் திறக்கவில்லை. முறைப்பது மாதிரி சீனிவாசனையே பார்த்துவிட்டு அலுப்பும் சலிப்புமாக கேட்டார். “நம்ப சாதிப் பசங்க எல்லாம் ஏண்டா இப்பிடி இருக்கிங்க? எதுக்கெடுத்தாலும் கோபப்படுறது, ஆத்திரப்படுறது? எப்படா திருந்துவீங்க? கிரமத்தவிட்டு வெளிய வாங்கடா.” சீனிவாசனையும், ராஜேந்திரனையும் மாறிமாறிப் பார்த்துக்கொண்டிருந்த மல்லிகாவுக்கு அவர்கள் இருவரும் என்ன பேசிக்கொள்கிறார்கள் என்பது புரியவில்லை. அதனால் “ஏதாவது பிரச்சனயா?” என்று கேட்டாள். “மாயவரத்துக்குப் பக்கத்தில பதினோரு நாளக்கி முன்னால ஒருத்தன் செத்துப் போனானில்ல. அந்த பிரச்சன.” “அதான் நேத்தோட முடிஞ்சிப் போச்சின்னு சொன்னிங்களே” என்று மல்லிகா கேட்டாள். “இவரு புது பிரச்சனய கொண்டாறாரு?” என்று சொல்லிவிட்டு கிண்டலாகச் சிரித்தார். “போலீசா இருந்துகிட்டா பிரச்சனய கொண்டாறாரு?” என்று மல்லிகா கேட்டாள். “செத்துப்போனது காலனிக்காரன். மழயா இருக்கு. வயல்ல தண்ணி நிக்குது. வயல் வழியா பொணத்தத் தூக்கிக்கிட்டுப் போவ முடியாது. இந்த ஒரு முற பொணத்த ஊர்ப் பொதுப் பாத வழியா தூக்கிக்கிட்டுப் போவவுடுங்கனுன்னு கேட்டிருக்காங்க. நம்ப சாதிக்காரப் பயலுவோ ஒரு முற வுட்டா அதுவே பழக்கமாயிடும்ங்கிற எண்ணத்தில் ’முடியாது’ன்னு சொன்னதால வந்த பிரச்சனதான் அது.” என்று ராஜேந்திரன் சொன்னார். அவர் சொன்னதைப் புரிந்துகொள்ளாத மல்லிகா “அதுக்கு இவரால எப்பிடி பிரச்சன வரும்?” என்று கேட்டாள். “இவன் இல்ல பிரச்சன. காலனியில செத்தவன ஊர்ப் பொதுப் பாத வழியா எடுத்துக்கிட்டுப் போவவிடாததால மறுநாளு ஹைக்கோர்ட்டுல கேச போட்டுட்டான் ஒருத்தன். கிராமத்து நடமுற தெரியாம ‘பொணத்த ஊர்ப் பொதுப் பாத வழியா எடுத்துக்கிட்டு போவ அனுமதி கொடுக்கணும்’னு சொல்லி கோர்ட்டு கலெக்ட்டருக்கும், எஸ்.பி.க்கும் உத்தரவு போட்டுடுச்சி. கலெக்ட்டரும், எஸ்.பி.யும் வந்து ஊர்க்காரங்ககிட்ட பேசினாங்க. நாலு நாள் பேச்சு வாத்த நடந்துச்சி. விஷயம் முடியல. ’கோர்ட்டு ஆர்டற நடமுறப் படுத்து’ன்னு சொல்லி ஒரு குரூப்பு சாலை மறியல் செய்யுது. எங்க தெரு வழியா பொணத்த எடுத்துக்கிட்டுப் போனா, சாமிக்குக் குத்தமாயிடும், மீறிப் பொணத்தத் தூக்கிக்கிட்டுப் போனா ரேஷன் கார்ட, ஓட்டர் ஐடியத் திரும்ப தந்திடுறம்ன்னு சொல்லி ஒரு குரூப்பு உண்ணாவிரதம் இருக்கு. சாலை மறியல் செஞ்சவங்களக் கலைக்கிறதுக்கு லத்தி சார்ஜ் செய்யுங்கன்னு கலெக்ட்டர் உத்தரவு போட்டாரு. லத்தி சார்ச் செஞ்சி நெறயா பேர உள்ளாரப் புடிச்சிப் போட்டு கூட்டத்த கொறச்சாச்சி. வேணுமின்னே ஃப்ரீசர்ல பொணத்த வச்சிக்கிட்டுத்தான தகராறு வளத்துறானுவோன்னு கலெக்ட்டர் சொல்லி கரண்டயும் நிறுத்தியாச்சி.” “நாறுன பொணத்த வச்சிக்கிட்டா தகராறு செஞ்சாங்க?” என்று கேட்ட மல்லிகாவின் முகம் ஒரு விதமாகக் கோணிற்று. “ஒவ்வொருத்தனும் தான் செய்றதுதான் சரின்னு நெனைக்கிறானுவோ. அதுக்குச் சட்டம் எடம் தரணுமில்ல. போலீசுன்னா சும்மாவா? நாறுற பொணத்த வச்சிருக்கிறது குற்றம்னு சட்டத்தில இருக்கும்போல இருக்கு. அதயே காரணமா வச்சி ‘ஒடனே பொணத்த எடுக்கணும். இல்லன்னா நாறுன பொணத்த வச்சிருக்கிறதுக்காக ஒங்கள அரஸ்ட் பண்ணிடுவோம். அதுவும் இல்லன்னா போலீசே பொணத்த எடுத்திடும்’ன்னு சொல்லி மிரட்டுச்சி. அவனுங்க தந்திரமா ‘நாங்க பொணத்த எடுக்க மாட்டம். போலீசு வேணுமின்னா தூக்கிப் பாக்கட்டும்’ன்னு சொல்லிட்டானுங்க. அதயே சாக்கா வச்சி கலெக்ட்டர் ‘பாடிய அர மணி நேரத்தில க்ளியர் பண்ணுங்க. மறிக்க வந்தா தேசப் பாதுகாப்பு சட்டத்தில அரஸ்ட் பண்ணுங்க. மீறீனா ஃபயர் பண்ணுங்க’ன்னு உத்தரவு போட்டாரு. போலீசு பொணத்த எடுத்து பொதச்சிடிச்சி.” “யாராச்சும் மறிச்சாங்களா?” என்று அக்கறையுடன் கேட்டாள் மல்லிகா. “ஒரு ஐம்பதுப் பேரு வந்தானுங்க. புடிச்சி உள்ளாரப் போட்டாச்சி.” “போலீசு பொணத்த எந்த வழியா எடுத்துக்கிட்டுப் போச்சி?” என்று மல்லிகா கேட்டாள். “வயல் வழியாத்தான்.“ “எவ்வளவு தூரம்?” “மூணு மைல் தூரம்.” “எப்பவும் பொணம் வயல்வழியாதான் மூணு மைல் தூரம் போவுமா?’ “அவுங்க பொணம் மட்டும் அப்பிடிதான் போவும். அவுங்க சுடுகாடு அங்கதான் இருக்கு.“ “ஊர்ப்பட்ட போலீசு இருந்தும் பொதுப் பாத வழியா பொணத்த தூக்கிக்கிட்டுப் போயிப் பொதைக்க முடியாதா?” “முடியாதுன்னு சொல்ல முடியாது. ’கலவரம் பெருசாயிடும். மாவட்டம் பூராவும் கலவரம் பரவிடும்ன்னு எப்பவும் போலவே பொணத்த எடுங்க’ன்னு எஸ்.பி. சொல்லிட்டாரு.” “அந்தப் பிரச்சனைக்கும் இவருக்கும் என்ன சம்பந்தம்?” “பாடயத் தூக்கிக்கிட்டுப் போனதில இவனும் ஒருத்தன்.” “அதுக்கு ஏன் அழுவுறாரு?” “கீழ்ச்சாதி பொணத்தத் தூக்கிக்கிட்டுப் போனத பேப்பர்ல போட்டோ எடுத்துப் போட்டுட்டான். போட்டோவுல இவனும் இருக்கான். அதுக்குத்தான் அழுவுறான். வேலய வுட்டுப் போறன்னு சொல்றான்.” என்று சொல்லிவிட்டுக் கீழே கிடந்த செய்தித்தாள்களை எடுத்து மல்லிகாவிடம் கொடுத்தார் ராஜேந்திரன். போட்டோவைப் பார்த்ததும் “இந்தப் பாடய போலீசு தூக்கிக்கிட்டுப் போறத நேத்து ராத்திரி டி.வி. நியூசில காட்டுனாங்களே” என்று மல்லிகா சொன்னதும் “டி.வியில வேற காட்டுனாங்களா?” என்று கேட்டான் சீனிவாசன். “ஆமாம்.” “எல்லா டி.வி.யிலயுமா?” “ஆமாம்.” “அப்பிடின்னா எல்லாம் போச்சி.” என்று சொன்ன சீனிவாசன் முகத்திலிலேயே அடித்துக்கொண்டு அழுதான். “இந்தமுற மட்டும் விடுங்கன்னு கேட்டதுமே விட்டிருந்தா அவனுவோ பாட்டுக்கு பொணத்தத் தூக்கிட்டுப் போயி பொதச்சிருப்பானுங்க. வீம்புப் புடிக்கப்போயி பொணத்த போலீச தூக்க வச்சிட்டானுவ” என்று கடுமையான கோபத்துடன் சொன்னார் ராஜேந்திரன். “எல்லாச் சாதி ஆளும்தான போலீசா இருக்கும்?” ‘ஆமாம்” என்று சொன்ன ராஜேந்திரன் சீனிவாசனைத் திட்டுவது மாதிரி “நம்ப சாதிப் பயலுங்க அறிவு உள்ளவனுங்களாடா?” என்று கேட்டார். “இவரு நம்ப ஆளா?” “ஆமாம் ஆமாம். அதனாலதான் வேலைய வுட்டுப் போறங்கிறான். கிராமத்து முட்டாப் பய.” என்று கடுப்புடன் சொன்னார். “போலீசில அவங்க சாதி ஆளுங்க இருப்பாங்கள்ள. அவங்கள வச்சிப் பொணத்த எடுக்கச் சொன்னா என்ன?” என்று மல்லிகா கேட்டதும், ராஜேந்திரனுக்கு எங்கிருந்துதான் அவ்வளவு கோபம் வந்ததோ, காட்டுக்கத்தலாக ”நீ சொல்றபடி செஞ்சா நாட்டுல பெரிய கலவரம் ஆயிடும்டி லூசு. போ உள்ளார. சட்டம் பேச வந்திட்ட” என்று சொல்லி முறைத்ததும் “எந்த சனியனோ எப்படியோ போவுது. எனக்கென்ன? பையன் நம்ப ஆளா இருக்காரு. பாத்து செய்யுங்க.” என்று சொல்லிவிட்டு மல்லிகா கோபத்துடன் அறைக்குள் போனாள். சீனிவாசனை நிதானமாகப் பார்த்தார் ராஜேந்திரன். பெரிய உதவி செய்வது மாதிரி சொன்னார் “தண்ணி போடுற பழக்கமிருந்தா ஒரு குவார்ட்டரு போட்டுட்டுப் போயி படு. தூங்கி எழுந்திரிச்சா எல்லாம் சரியாப் போயிடும்.” “எத்தன குவார்ட்டரு போட்டாலும் என்னால தூங்க முடியாது ஏட்டய்யா.” ‘‘ஆக்சிடண்டுல செத்த பொணத்துக்கு பாரா இருக்கல? தீக்குளிச்ச பொணத்த வாங்கப் போவல? வெட்டுக்குத்துல செத்துப்போன பொணத்துக்கு, கொல ஆன பொணத்துக்கு பாரா இருந்திருக்க இல்லியா? அப்புறமென்ன புதுசா பேசுற? என் சர்வீசுல எம்மாம் பொணத்துக்கு நான் பாரா இருந்திருக்கன். எத்தினியோ பொணத்தத் தூக்கியிருக்கன். சாதி பாத்தா வாழ முடியாது தம்பி.” சீனிவாசன் பேசவில்லை. ராஜேந்திரன் பக்கம் பார்க்கவுமில்லை. அவனுடைய முகம் கடுகடுவென்று இருந்தது. கோபத்தில் பல்லைக்கடித்தான். முகத்தில் வழிந்த வியர்வையைக்கூடத் துடைக்காமல் உட்கார்ந்திருந்தான். “லஞ்சப் பணம் வாங்குறப்ப எந்தச் சாதிக்காரன் கொடுக்கிறான்னு பாக்குறமா?” சீனிவாசனுக்குக் கோபம் வந்துவிட்டது. “நான் கிளம்புறன் ஏட்டய்யா” என்று சொல்லிவிட்டு எழுந்தான். உடனே அதிகாரத்துடன் “ஒக்காரு” என்று ராஜேந்திரன் சொன்னார். அவன் உட்காரவில்லை. அந்த இடத்தில் இருப்பதற்குப் பிடிக்காத மாதிரியும், ராஜேந்திரனைப் பார்க்கப் பிடிக்காத மாதிரியும் நின்றுகொண்டிருந்தான். அவனை ஏறஇறங்க பார்த்தவாறு மீண்டும் “ஒக்காரு” என்று சொன்னதும் விருப்பமில்லாமல் அரைகுறை மனதுடன் உட்கார்ந்தான். அவனுடைய முகம் கோபத்தில் சிவந்து போய் இருந்தது. “தப்பான முடிவெடுத்து அழிஞ்சிப்போவாத.” “பரவாயில்ல ஏட்டய்யா.” “எல்லா வேலயிலயும் அசிங்கம், சங்கடம் இருக்கும். அதுக்காக வேலய வுட்டுட்டுப் போவமுடியுமா?” “முடியணும் ஏட்டய்யா.” ஒரே தீர்மானமாகச் சொன்னான் சீனிவாசன். அவன் பேசிய விதமே அவன் எவ்வளவு கோபத்தில் இருக்கிறான் என்பதைக் காட்டியது. “ஒரு நாள் அசிங்கத்துக்காக ரிட்டயர் ஆவுறவரைக்கும் கெடைக்குற மரியாதய வுடப்போறியா?” சீனிவாசனுக்கு சங்கடமாகவும் எரிச்சலாகவும் இருந்தது. ராஜேந்திரனைப் பார்க்க வந்தது தவறு என்று நினைத்தான். உடனே ராஜேந்திரன் வீட்டைவிட்டு வெளியே போக வேண்டும். பஸ் பிடித்து எஸ்.பி. அலுவலகத்திற்குப்போய் ராஜினாமாக் கடிதத்தைக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டும்தான் அவனுடைய மனதில் இருந்தது. அறையில் இருந்து வெளியே வந்த மல்லிகா “மாவட்ட நியூஸுலகூட போடல. ஸ்டேட் நியூஸுல போட்டுருக்கான்” என்று சொன்னதோடு செய்தித்தாள்களைப் பாருங்கள் என்பதுபோல் ராஜேந்திரனிடம் கொடுத்தாள். ஆனால் அவர் செய்தித்தாள்களை வாங்கிப் பார்க்கவில்லை. “அப்படியா?” என்று கேட்ட சீனிவாசன் “ஸ்டேட் பூராவும் எம் மூஞ்சிய பாப்பாங்களே.” என்று சொல்லிவிட்டு முகத்தில் அடித்துக்கொண்டு அழ ஆரம்பித்தான். “சின்னப் புள்ளை மாதிரி அழுவாதப்பா.” என்று மல்லிகா சொன்னாள். “உள்ளப் போ. வந்துவந்து எதயாவது சொல்லிச் சீண்டிவுட்டுக்கிட்டு.” என்று ராஜேந்திரன் மல்லிகாவிடம் சொன்னதும், அவள் செய்தித்தாள்களை எடுத்துக்கொண்டு வேகமாக அறைக்குள் சென்றாள். சீனிவாசன் அழுதுகொண்டு உட்கார்ந்திருப்பதைப் பார்த்த ராஜேந்திரன் ரொம்பவும் அக்கறையுடன் “அவசரப்படாத. வேல கெடைக்காம ஒவ்வொருத்தனும் எப்பிடி சாவுறான்னு தெரியுமா? வீட்டுக்குப் போயி கலந்துக்கிட்டு செய்.” என்று சொன்னார். “ஒரே முடிவுதான் ஏட்டய்யா.” “ஒரு மாசம் ரெண்டு மாசம் லீவ் போடு. லீவ் முடிஞ்சி வா. அப்பறம் பேசிக்கலாம்.“ “எல்லா பேப்பர்க்காரனும் ஸ்டேட் நியூஸா போட்டுட்டான். எல்லா டி.வி.க்காரனும் ஒலகம் பூராவும் காட்டிப்புட்டான். ஊர்க்கார ஆளுங்க எல்லாம் பாத்திருப்பானுவ. ரொம்ப அசிங்கமாயிடிச்சி ஏட்டய்யா” சொல்லும்போதே சீனிவாசனுடைய கண்கள் கலங்கின. அழுதுகொண்டே சொன்னான் “ஊர்க்காரப் பயலுவ போன் போடுவானுவோங்குற பயத்திலியே நான் போன ஆஃப் பண்ணி வச்சிருக்கன்.” “ஒரு பேப்பர்ல கையெழுத்துப் போட்டுக் கொடுத்திட்டுப் போ. நான் மெடிக்கல் லீவ்ன்னு இன்ஸ்பெக்ட்டர்கிட்ட சொல்லிடுறன்.” “நம்ப சாதிக்கே அசிங்கமாயிடிச்சி. அதனால இனி செத்தாலும் போலீஸ் யூனிஃபார்ம் போட மாட்டன் ஏட்டய்யா.” அழுத்தம் திருத்தமாக சொன்னன். “நீ லீவ் போடாமக்கூடப் போ. அத சமாளிச்சிக்கலாம். ஆனா ராஜினாமான்னு ஒரு கையெழுத்துப் போட்டு பேப்பர கொடுத்திட்டா அத திரும்ப வாங்க முடியாது. இது மத்த டிபார்ட்மண்டு மாதிரி இல்லன்னு ஒனக்கே தெரியும். சொன்னா புரிஞ்சிக்க.” “எனக்கு வேல வேண்டாம் ஏட்டய்யா.” என்று சீனிவாசன் கறாராகச் சொன்னதும் ராஜேந்திரனுக்கு கட்டுப்படுத்த முடியாத அளவுக்குக் கோபம் வந்துவிட்டது. “என்னடா பேசுற? சாதிக்காரப் பயலாச்சேன்னு கிட்ட சேத்தா நீ என்னமோ பெரிய இது மாதிரி எகிறிஎகிறிப் பேசுற? நான் போலீசுல பாக்காததயா நீ பாத்துட்ட?” என்று கேட்டுக் கத்தினார். சிறிது நேரம் பேசாமல் இருந்தார். கோபம் குறைந்தது மாதிரி மீண்டும் சொன்னார் “இன்னும் மூணு மாசம் முடிஞ்சா எனக்கு இருவது வருசம் சர்வீஸ் ஆவப்போவுது. ஒண்ணு ரெண்டு மாசத்தில சிறப்பு எஸ்.ஐ. ஆயிடுவன். ஸ்டார் வச்ச சட்ட போடணுமின்னு எத்தன வருசமா காத்திருக்கன் தெரியுமா?” சீனிவாசன் பேசவில்லை. அவரைப் பார்க்கவில்லை. ஆனால் ராஜேந்திரன் அவனைப் பார்த்துதான் பேசினார். “நேரடியா எஸ்.ஐ.யா, டி.எஸ்.பி.யா, எஸ்.பி.யா வர்றவங்க எல்லாம் சின்னச்சின்ன பசங்களாத்தான் இருப்பாங்க. அவுங்க சொல்ற வேலய செய்ய கஷ்டமாத்தான் இருக்கும். அதுக்காக வேலய வுட்டா ஓட முடியும்? இந்த வேலய வச்சித்தான் ரெண்டு தங்கச்சிக்குக் கல்யாணத்த முடிச்சன். பொண்ண டாக்ட்டராக்குனன். பையன இஞ்சினியர் ஆக்குனன். டவுன்ல ஒரு வீடு கட்டுனன். கையில நாலு காசோட இருக்கன். ஒன்னெ மாதிரி சாதிப் பெருமய பேசிக்கிட்டிருந்தா நான் இப்ப ஊர்ல ஆடு மாடுதான் மேய்ச்சிக்கிட்டு இருக்கணும்.” “நான் ஆடுமாடே மேய்க்கிறன்.” ஸ்டேசனுக்குள் ஆள் இருக்கிற இடமே தெரியாது. யார் எது சொன்னாலும் ‘ஐயா, ஐயா’ என்று பணிவாகவும், மரியாதையாகவும் பேசுகிற, சொல்கிற வேலையை முகம் சுளிக்காமல் செய்கிற சீனிவாசனா இவன் என்று ஆச்சரியப்பட்டார் ராஜேந்திரன். கோபத்தில் இருப்பதால்தான் இப்படி பேசுகிறான். சாதாரணமாக நல்ல பையன்தான் என்ற எண்ணம் அவருடைய மனதில் இருந்ததால் தன்மையான குரலில் சொன்னார். “டேய் தம்பி, நீ வெவரம் புரியாம பேசுற. சர்வீசுக்கு வந்து ஆறு மாசம்கூட முடியல. அதனாலதான் ஒனக்கு விஷயம் புரியல. காசு வாங்கப் பழகிட்டா, அதிகாரத்துக்குப் பழகிட்டா நெட்டித் தள்ளினாலும் நீ வேலய வுட்டுப் போவ மாட்ட.” என்று சொல்லிவிட்டு ராஜேந்திரன் லேசாக சிரித்தார். “நான் போவன் ஏட்டய்யா” என்று சீனிவாசன் திமிர்த்தனமாக சொன்னதும் ராஜேந்திரனுக்குக் கோபம் வந்துவிட்டது. “யூனிஃபார்ம்ல தமிழ்நாடு முழுக்க போவலாம். எவன் மரியாத தரலங்கிறான்? எவனயும் நிக்க வச்சிக் கேள்வி கேக்குற, எடுத்த ஒடனே அடிக்கிற அதிகாரம் போலீஸ் யூனிஃபார்ம்க்கு இருக்கு. இந்த அதிகாரம் கலெக்ட்டருகுக்கூடக் கெடையாது. ஒன்னோட வயசுக்கு டி.எஸ்.பி. அளவுக்குக்கூட நீ வரலாம். புரிஞ்சிக்க. நீ வேலய வுடல. அதிகாரத்த வுடுற. காசுக்கு காசு. அதிகாரத்துக்கு அதிகாரம். அதான் போலீசு. புரியுதா?” “எனக்கு எதுவும் புரிய வாணாம் ஏட்டய்யா.” “இப்ப நீ குழப்பத்தில இருக்கிற. வீட்டுக்குப் போ. ரெண்டு நாள் கழிச்சி வா. ஸ்டேசனில பேசிக்கலாம். இத நான் ஏட்டா சொல்லல. சாதிக்காரனா சொல்றன்.” “நேராப் போயி ராஜினாமா லெட்டர எஸ்.பி.கிட்ட கொடுத்தாதான் என்னால உசுரோட இருக்க முடியும் ஏட்டய்யா.” என்று சொன்ன சீனிவாசன் பட்டென்று எழுந்து வெறிகொண்ட மிருகம் மாதிரி வெளியே சென்றான். “டேய் தம்பி, நில்லுடா, நில்லுடா. டேய் மெண்டல் பயலே.” என்று ராஜேந்திரன் கத்தியது சீனிவாசனுடைய காதில் விழவில்லை.
நாட்டின் சுகாதார சேவைகள் வழங்கல் அமைப்பில் ஆயுஷை ஒருங்கிணைப்பதற்காக சுகாதாரம் மற்றும் ஆயுஷ் அமைச்சகங்கள் இணைந்து பணியாற்றவுள்ளன Posted On: 12 AUG 2021 6:08PM by PIB Chennai பொது சுகாதார அமைப்பில் ஆயுஷ் முறையை ஒருங்கிணைப்பதற்கான பணிகளை வலுப்படுத்துவதற்காக ஆயுஷ் அமைச்சகம் மற்றும் சுகாதாரம் மற்றும் குடும்ப நலன் அமைச்சகங்களின் அமைச்சர்கள், செயலாளர்கள் மற்றும் இதர மூத்த அதிகாரிகளுக்கிடையேயான உயர்மட்ட கூட்டம் ஒன்று நிர்மான் பவனில் இன்று நடைபெற்றது. சுகாதாரம் மற்றும் குடும்ப நலன் அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா மற்றும் ஆயுஷ் அமைச்சர் திரு சர்பானந்த் சோனோவால் தலைமையில், பிரதமர் திரு நரேந்திர மோடி எதிர்பார்த்தவாறு நாட்டின் சுகாதார சேவைகள் வழங்கல் அமைப்பில் ஆயுஷை ஒருங்கிணைப்பதற்கான விரிவான அணுகலை முறைப்படுத்தி செயல்படுத்த இரு அமைச்சகங்களும் உறுதியேற்றன. நவீன மருத்துவம் மற்றும் நாட்டின் பாரம்பரிய சுகாதார அமைப்புகளை ஒருங்கிணைப்பதற்காக சிறப்பான செயல்முறை நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது. கூட்டத்தில் பேசிய திரு மன்சுக் மாண்டவியா, ஒன்றுபட்ட செயல்பாட்டை முன்னெடுத்து செல்லவும், இரு அமைச்சகங்களின் முழு ஒருங்கிணைப்பை அனைத்து மட்டங்களில் செயல்படுத்தவும் மாதமொரு முறை ஆய்வு செய்யப்படும் என்று கூறினார். இந்த முன்னெடுப்பின் முக்கியத்துவம் குறித்து பேசிய திரு சோனோவால், இரு அமைச்சகங்களும் கைக்கோர்த்து ஒன்றிணைந்து பணியாற்றி பிரதமர் கூறியுள்ளபடி மக்களுக்கு சிறப்பான சுகாதார சேவைகளை வழங்கும் என்றார். “இது தொடர்பாக அனைத்து மாநிலங்களின் சுகாதார அமைச்சர்களுடனும் ஆலோசிக்கப்படும்,” என்று அவர் கூறினார். சுகாதார இணை அமைச்சர் டாக்டர் பாரதி பிரவீன் பவார் மற்றும் ஆயுஷ் இணை அமைச்சர் டாக்டர் முஞ்சப்பாரா மகேந்திரபாயும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கினர். மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1745204 ----- (Release ID: 1745249) Visitor Counter : 133 Read this release in: English , Urdu , Hindi , Punjabi ஆயுஷ் நாட்டின் சுகாதார சேவைகள் வழங்கல் அமைப்பில் ஆயுஷை ஒருங்கிணைப்பதற்காக சுகாதாரம் மற்றும் ஆயுஷ் அமைச்சகங்கள் இணைந்து பணியாற்றவுள்ளன Posted On: 12 AUG 2021 6:08PM by PIB Chennai பொது சுகாதார அமைப்பில் ஆயுஷ் முறையை ஒருங்கிணைப்பதற்கான பணிகளை வலுப்படுத்துவதற்காக ஆயுஷ் அமைச்சகம் மற்றும் சுகாதாரம் மற்றும் குடும்ப நலன் அமைச்சகங்களின் அமைச்சர்கள், செயலாளர்கள் மற்றும் இதர மூத்த அதிகாரிகளுக்கிடையேயான உயர்மட்ட கூட்டம் ஒன்று நிர்மான் பவனில் இன்று நடைபெற்றது. சுகாதாரம் மற்றும் குடும்ப நலன் அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா மற்றும் ஆயுஷ் அமைச்சர் திரு சர்பானந்த் சோனோவால் தலைமையில், பிரதமர் திரு நரேந்திர மோடி எதிர்பார்த்தவாறு நாட்டின் சுகாதார சேவைகள் வழங்கல் அமைப்பில் ஆயுஷை ஒருங்கிணைப்பதற்கான விரிவான அணுகலை முறைப்படுத்தி செயல்படுத்த இரு அமைச்சகங்களும் உறுதியேற்றன. நவீன மருத்துவம் மற்றும் நாட்டின் பாரம்பரிய சுகாதார அமைப்புகளை ஒருங்கிணைப்பதற்காக சிறப்பான செயல்முறை நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது. கூட்டத்தில் பேசிய திரு மன்சுக் மாண்டவியா, ஒன்றுபட்ட செயல்பாட்டை முன்னெடுத்து செல்லவும், இரு அமைச்சகங்களின் முழு ஒருங்கிணைப்பை அனைத்து மட்டங்களில் செயல்படுத்தவும் மாதமொரு முறை ஆய்வு செய்யப்படும் என்று கூறினார். இந்த முன்னெடுப்பின் முக்கியத்துவம் குறித்து பேசிய திரு சோனோவால், இரு அமைச்சகங்களும் கைக்கோர்த்து ஒன்றிணைந்து பணியாற்றி பிரதமர் கூறியுள்ளபடி மக்களுக்கு சிறப்பான சுகாதார சேவைகளை வழங்கும் என்றார். “இது தொடர்பாக அனைத்து மாநிலங்களின் சுகாதார அமைச்சர்களுடனும் ஆலோசிக்கப்படும்,” என்று அவர் கூறினார். சுகாதார இணை அமைச்சர் டாக்டர் பாரதி பிரவீன் பவார் மற்றும் ஆயுஷ் இணை அமைச்சர் டாக்டர் முஞ்சப்பாரா மகேந்திரபாயும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கினர்.
வியாசருக்கு திருப்தி உண்டாகும் படி தனது பூர்வ சரிதத்தை கூற தொடங்கினார். ஞானிகள் தான் தமது முந்தைய பிறவியை பற்றி அறிகிறார்கள். "மஹாமுனிவரே என்னுடைய வரலாற்றினை கூறுகிறேன் கேளுங்கள். முன் ஜென்மத்தில் நான் ஒரு தபோவனத்தில் முனிவர்களுக்கு வேலை செய்யும் ஒரு வேலைக்காரிக்கு மகனாக இருந்தேன். என் தாயுடன் சேர்ந்து குரு குலத்தில் தவம் செய்யும் முனிவர்கள் ஆசிரமத்தில் அவர்கள் இட்ட பணிகளை பணிவுடன் செய்து வந்தேன். ஒரு சமயம் மழைகாலத்தில் தீர்த்த யாத்திரை செய்யும் தவசி மகாத்மாக்கள் அந்த தபோ வனத்தில் தங்க வந்தார்கள். நான் அவர்களுக்கு எந்த குறையும் இல்லாமல் பணிவிடை செய்தேன். வேலை நேரம் போக அவர்கள் மற்ற சிஷ்யர்களுக்கு உபதேசித்த சொற்பொழிவை கேட்டேன். அச்சமயம் இறைவன் பால் ஈர்க்கப்பட்டேன். அவர்கள் எனது பணிவான சேவைகளையும் அமைதியான குணத்தையும் விளையாடும் அந்த வயதில் இறைவனிடம் இருக்கும் பக்தியையும் கண்டு மகிழ்ந்தனர். மழைக்காலம் முடிந்து அங்கிருந்து செல்லும் போது என்னை அன்புடன் அழைத்து எனக்கு ஞான உபதேசம் செய்தனர். அவர்கள் சென்றவுடன் என்னுள் பெரிய மாற்றம் ஏற்பட்டது. பரமனை நினைத்து அவன் அன்பில் கரைந்தேன். முனிவர்களுக்கு சேவை செய்யும் பணிகளை தொடர்ந்தேன். ஒரு நாள் விடியலில் என் தாய், பசு மடியிலிருந்து பால் கறந்து கொண்டு இருந்தபோது ஒரு கருநாகம் அவளை தீண்டி விட்டது. என் மீது மிகுந்த அன்பும் பாசமும் கொண்டிருந்த எனது தாய் இறந்து விட்டாள். எனக்கு அது துக்கத்தை தரவில்லை. இது என் தவ செயலுக்கு பகவான் தந்த அனுக்ரஹமாக கொண்டேன். தாயை இழந்த நான் அந்த தபோவனத்தை விட்டு வடதிசை நோக்கி கால் போன போக்கில் நடந்தேன். ஓர் அடந்த காட்டை அடைந்தேன். ஒரு காட்டாற்றில் தாகத்தை தீர்த்துக்கொண்டு அங்கேயே ஒரு அரச மரத்தடியில் அமர்ந்து அந்த மகான்கள் கூறியது போல தியானம் செய்தேன். உடனே என் மனம் ஒருநிலைபட்டது. பக்தியுடன் இறைவன் பாத கமலங்களை நினைத்தேன்.அந்த தியான நிலையில் ஸ்ரீ ஹரியின் பிரேமை மிகுதியால் கசிந்துருகி கண்களில் இருந்து நீர் பெருக்கெடுத்து ஒரு பரவச நிலை கிட்டியது. என் மனக்கண் முன் பேரொளியுடன் பிரகாசித்து மனதை கொள்ளைகொள்ளும் திருமேனி அழகுடன் பாவங்களை போக்கும் ஸ்ரீ ஹரி தோன்றினார். அதை கண்டு அந்த பரமானந்த அமுத வெள்ளத்தில் மூழ்கிவிட்டேன். அதை தாங்காமல் மனம் பதற்றமடைந்து நடுங்கி விழுந்து தன்னையே மறந்தேன். அந்த அற்புத காட்சியால் சகல தேகமும் புல்லரித்து சொல்லிலடங்காத ஒரு பேரின்ப நிலையை அடைந்தேன். திடீரென மின்னல் போல அந்த காட்சி மறைந்தது. நான் மீண்டும் மீண்டும் தியானத்தில் ஈடுபட்டு வேட்கை தனியாதவன் போல அந்த காட்சியை காண யத்தனித்தேன். அச்சமயம் என் துக்கத்தையும் ஏக்கத்தையும் தணிக்கும் வகையில் கம்பீரமான குரலில் ஒரு அசரீரி கேட்டது. "அப்பனே இந்த ஜென்மத்தில் என் தரிசனம் உனக்கு கிட்டாது. பக்தியால் பக்குவம் அடையாதவர்கள் என்னை காண முடியாது. என்னை காணும் ஆசையை தூண்டுவதற்காகவே உனக்கு சிறிதளவு தெய்வீக உருவத்தை காண்பித்தேன். என் மீது கொண்ட ஆசையே எல்லா பற்றுகளையும் அறுக்க வல்லது. மகான்களின் சேவையினால் உன் மதி தூய்மை அடைந்து என் பால் ஈர்க்கப்பட்டது. இந்த பிறவியை துறந்து நீ பக்தியோகத்தில் தேர்ந்து பக்தர்களில் பிரதானமாக கருதப்படுவாய்" என்றது. இதை கேட்டதும் நான் சமாதனம் அடைத்தேன். எப்படியாயினும் இப்பிறவியில் முடியாது என்பது உறுதியாகி விட்டது. அடுத்த பிறவியில் நிச்சயம் என்பதும் தெளிவாகி விட்டது. ஆகையால் நான் ஸ்ரீஹரியிடமே என் உள்ளத்தை இருத்தி, பற்றின்றி இருந்தேன். அதனால் சித்த சுத்தி ஏற்பட்டது. பஞ்சபூத சரீரம் விழுந்துவிட புண்ணிய பார்ஷத சரீரம் கிடைத்தது என்றார். பல யுகங்கள் கழிந்த பிறகு உலக சிருஷ்டி ஏற்பட அப்போது பிரம்ம புத்திரனாகப் பிறந்தேன். ஆகையால் பக்தியோகமே அனைத்திலும் சிறந்தது" என்று பக்தியை பற்றி கூறத் தொடங்கினார்.
எங்கள் Hebei Spring Zhinan இன்டர்நேஷனல் டிரேடிங் கோ., லிமிடெட் வட சீனாவில் ஃபீல்ட் உற்பத்தியில் நிறுவனர் ஆகும், பல பெரிய ஆர்டர்களை ஆதரிக்கக்கூடிய இரண்டு பெரிய ஃபீல்ட் பட்டறைகள் எங்களிடம் உள்ளன; விசாரணைவிவரம் 2021 அமேசான் சிறப்பாக விற்பனையாகும் 100% நியூசிலாந்து கம்பளி பந்துகள் உலர்த்தி மீண்டும் பயன்படுத்தக்கூடிய கம்பளி பந்துகள் உலர்த்தி கம்பளி உலர்த்தி பந்துகள் உலர்த்தியில் காற்று ஓட்டத்தை மேம்படுத்த உதவுகின்றன, இது உலர் நேரத்தை குறைக்கிறது.(குறுகிய உலர்த்தும் நேரம் என்றால் குறைக்கப்பட்ட மின் பயன்பாட்டு பில்) விசாரணைவிவரம் சலவைக்கான மொத்த சுற்றுச்சூழல் நட்பு 100% நியூசிலாந்து கம்பளி உலர்த்தி பந்துகள் கம்பளி உலர்த்தி பந்துகள் உலர்த்தியில் காற்று ஓட்டத்தை மேம்படுத்த உதவுகின்றன, இது உலர் நேரத்தை குறைக்கிறது.(குறுகிய உலர்த்தும் நேரம் என்றால் குறைக்கப்பட்ட மின் பயன்பாட்டு பில்) விசாரணைவிவரம் 6PCS மீண்டும் பயன்படுத்தக்கூடிய கம்பளி உலர்த்தி பந்துகள் இயற்கை சலவை மென்மைப்படுத்தி துணி சலவை பந்துகள் - உங்கள் உலர்த்தியில் உங்கள் துணிகளை மிக விரைவாக உலர்த்த உதவுகிறது, உங்கள் நேரத்தையும் பணத்தையும் மிச்சப்படுத்துகிறது. - கம்பளி உலர்த்தி பந்துகள் உலர்த்தியில் காற்று ஓட்டத்தை மேம்படுத்த உதவுகின்றன, இது உலர் நேரத்தை குறைக்கிறது.(குறுகிய உலர்த்தும் நேரம் என்றால் குறைக்கப்பட்ட மின் பயன்பாட்டு பில்) விசாரணைவிவரம் 6 பேக் மீண்டும் பயன்படுத்தக்கூடிய ஆர்கானிக் 100% நியூசிலாந்து கம்பளி உலர்த்தி பந்துகள், உங்கள் நேரத்தை சேமிக்கவும் கம்பளி உலர்த்தி பந்துகள் உலர்த்தியில் காற்று ஓட்டத்தை மேம்படுத்த உதவுகின்றன, இது உலர் நேரத்தை குறைக்கிறது.(குறுகிய உலர்த்தும் நேரம் என்றால் குறைக்கப்பட்ட மின் பயன்பாட்டு பில்) விசாரணைவிவரம் சலவைக்கான இயற்கை ஆர்கானிக் 100% நியூசிலாந்து கம்பளி உலர்த்தி பந்துகள் ஒவ்வொரு பந்தும் மீண்டும் பயன்படுத்தக்கூடியது மற்றும் 1,000 அல்லது அதற்கு மேற்பட்ட சுமைகள், பொதுவாக 2-4 ஆண்டுகள் நீடிக்கும் - உங்கள் ஆடைகளின் ஆயுளை நீடிக்க உதவுகிறது. விசாரணைவிவரம் சலவைக்கான மொத்த சுற்றுச்சூழல் நட்பு 100% நியூசிலாந்து கம்பளி உலர்த்தி பந்துகள் கம்பளி உலர்த்தி பந்துகள் உலர்த்தியில் காற்று ஓட்டத்தை மேம்படுத்த உதவுகின்றன, இது உலர் நேரத்தை குறைக்கிறது.(குறுகிய உலர்த்தும் நேரம் என்றால் குறைக்கப்பட்ட மின் பயன்பாட்டு பில்) விசாரணைவிவரம் 2021 அமேசான் பெஸ்ட்செல்லர் 6 பேக் சுற்றுச்சூழல் நட்பு மொத்த விற்பனை 100% நியூசிலாந்து கம்பளி உலர்த்தி பந்துகள் குழந்தைகள் மற்றும் உணர்திறன் வாய்ந்த சருமம் உள்ளவர்களுக்கு சிறந்தது.ஒவ்வொரு பந்தும் இயற்கையானது, ஹைபோஅலர்கெனி மற்றும் கலப்படங்கள், இரசாயனங்கள் அல்லது செயற்கை பொருட்கள் இல்லை.மேலும், இந்த பந்துகள் நிலையான ஒட்டுதலைத் தடுக்க உதவுகின்றன! விசாரணைவிவரம் புதிய டிரெண்ட்ஸ் தயாரிப்புகள் 2021 அமேசான் புதிய வருகைகள் தூய ஆர்கானிக் நியூசிலாந்து கம்பளி உலர்த்தி சலவைக்கான பந்துகள் குழந்தைகள் மற்றும் உணர்திறன் வாய்ந்த சருமம் உள்ளவர்களுக்கு சிறந்தது.ஒவ்வொரு பந்தும் இயற்கையானது, ஹைபோஅலர்கெனி மற்றும் கலப்படங்கள், இரசாயனங்கள் அல்லது செயற்கை பொருட்கள் இல்லை.மேலும், இந்த பந்துகள் நிலையான ஒட்டுதலைத் தடுக்க உதவுகின்றன! விசாரணைவிவரம் தொடர்பில் இருங்கள் இலவச ஆலோசனை +86-13932944106 முகவரி அறை 2514, பிளாக் B, நியூ செஞ்சுரி டயமண்ட் பிசினஸ் பிளாசா, சாங்'ஆன் மாவட்டம், ஷிஜியாஜுவாங், ஹெபே, சீனா, 050000
அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தினால் மூச்சு திணறியும் உடல் கருகியும் 21 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பாலஸ்தீனத்தில் காசாவின் வடக்கே ஜபாலியா என்கிற பகுதியில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் இன்று திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்து அடுக்குமாடி முழுவதும் பரவி கொளுந்து விட்டு எரிந்தது. அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து கரும்புகை வெளியேறி அப்பகுதியே புகைமண்டலமாக மாறியது. இந்த விபத்தில் மூச்சு திணறியும் உடல் கருகியும் 21 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். உயிரிழந்த 21 பேரில் 7 குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது . பாதிக்கப்பட்டோரை தீயணைப்பு படையினரே மீட்டு உள்ளனர். உயிரிழந்தவர்களின் முழுமையான விவரங்கள் தெரியவில்லை. காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதித்து வருகின்றனர். ஒரு மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர் தீயணைப்பு படை வீரர்கள். இந்த தீ விபத்து குறித்து அறிந்த பாலஸ்தீன அதிபர் இரங்கல் தெரிவித்துள்ளார். தேசிய அளவில் துக்கம் மனசரிக்கப்படும் , கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்க விடப்படும் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.
நம்மோடு நெருங்கிப் பழகியவர்கள், நமக்கு பிடித்தவர்கள், போன்றோர் இறந்தால், சில நேரங்களில் நமது கனவில் அவர்களின் உருவம் வரக்கூடும். அவ்வாறு அவர்கள் வந்தால் வீண் பயம் நம்மைத் தொற்றிக் கொள்வதும் அதுகுறித்த சிந்தனையும் அடிக்கடி தோன்றி நம்மை படாத பாடு படுத்திவிடும். இதுகுறித்து ஜோதிடம் என்ன கூறுகிறது என்று பார்ப்போம். இயற்கையாக மரணமடைந்தவர்கள் கனவில் வந்தால் நல்ல பலன்கள் கிடைக்கும் என்று கனவுகள் தொடர்பான நூல்களில் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக, பேரன், பேத்தி எடுத்து நன்றாக வாழ்ந்து மரணமடைந்த முன்னோர்கள் கனவில் வந்தால் அதனை ஆசி எனக் கருத வேண்டும். ஆனால் துர்மரணம் அடைந்தவர்கள் கனவில் வந்தால் சில இடர்பாடுகள் ஏற்படும். உடல் நலம் குறையலாம். விபத்து, குடும்பத்தில் வாக்குவாதம், பிரிவு உள்ளிட்டவை ஏற்படக் கூடும். இதுபோன்ற பிரச்சனைகளைத் தவிர்க்க குலதெய்வக் கோயில் வழிபாட்டை மேற்கொள்ளலாம். பொங்கல் வைத்து அன்னதானம் வழங்கலாம். வஸ்திர தானம் செய்யலாம். வயதானவர்கள், பெரியவர்கள், வாழ்க்கை முழுவதும் சிறப்பாக வாழ்ந்து இயற்கை எய்தியவர்கள் கனவில் வந்தால் கவலை கொள்ளத் தேவையில்லை. இறந்தவர்கள் உங்களுடன் சாப்பிடுவது போல கனவு கண்டால் நற்புகழும் அதன் காரணமாக செல்வ செழிப்பும் ஏற்படும். இறந்தவர்கள் உங்களிடம் பேசுவது போல கனவு வந்தால் இக்கட்டான நிலையில் உங்களுக்கு உதவ சிலர் வருவார்கள் என்று பொருள். நாமே இறந்து விட்டது போல் கனவு வந்தால் நம்முடைய ஆயுள் கூடும். இறந்து போன உங்கள் தாய் உங்கள் கனவில் வந்தால் உங்களுக்குகோ அல்லது உங்கள் குடும்பத்தில் உள்ளவர்களுக்கோ ஒரு பெண் குழந்தை பிறக்க போகிறது என்று பொருள். நமக்கு வேண்டப்பட்ட யாராவது இறந்துவிட்டது போல கனவு வந்தால் துன்பங்கள் விலக போகிறது என்று அர்த்தம். இறந்து போனவர்களை (யாராக இருந்தாலும்) தூக்கி செல்வது போல கனவு வந்தால் நன்மை உண்டு. உறவினர் ஒருவர் இறந்து விட்டது போல் கனவு கண்டால், அவரின் துன்பங்கள் நீங்கும் என்று பொருள். நண்பன் இறந்து போனது போல் கனவு கண்டால், கூடிய விரைவில் நற்செய்தி ஒன்று வரும்.
உண்மையான ஒரு கம்யூனிஸ்ட்டாக உலகில் வலம் வருவது ஓர் அரிய தவத்துக்கு ஒப்பானது. அடையாள அட்டைகள் வைத்திருப்பவர் எல்லாம் கம்யூனிஸ்ட் ஆகிவிடுவது இல்லை. மக்கள் நலனுக்காக வாழ்வை முற்றாக அர்ப்பணித்து, எள் மூக்கின் முனை அளவும் சுயநலமின்றி, தனிச்சொத்துடைமை துறந்து, எளிமை சார்ந்த வாழ்க்கையை மேற்கொண்டு, வர்க்க பேதமற்ற சுரண்டலற்ற சமுதாயத்தைச் சமைப்​பதற்குப் போர்க் குணத்துடன் புரட்சிக்கான களம் அமைப்பவரே ஓர் உண்மையான கம்யூனிஸ்ட்டாக உருப்பெற முடியும். இன்று, கம்யூனிஸ்ட் கட்சிகளிலேயே கலப்படம் நிகழ்ந்து விட்டது. நல்லகண்ணு, சங்கரய்யா போன்ற ஒரு சிலர் மட்டுமே தமிழகத்தில் மார்க்சியத்தின் எச்சமாக நம் முன் நடமாடுகின்றனர். இத்தகைய சூழலில்தான், 'நானும் ஒரு கம்யூனிஸ்ட்’ என்கிறார் கலைஞர் கருணாநிதி. கவியரசர் ஷெல்லியின் படைப்பான 'புரோமித்​தியஸ்’ போன்று எவ்வளவு கடுமையான தண்டனைகளுக்கு உட்படுத்தப்பட்டாலும், சமரசமே இல்லாமல் தீரத்துடன் தியாக வாழ்வை விரும்பி ஏற்பவரே மார்க்ஸின் பாதையில் மாற்றமின்றிப் பயணிக்க முடியும். சமரசங்களையே தன்னு​டைய அரசியல் வாழ்வின் அணிகலன்களாகப் பூண்டு அழகு பார்க்கும் கலைஞர், எந்த விதத்தில் கம்யூனிஸ்ட்டாக முடியும் என்பது புரிந்துகொள்ள முடியாத ஒரு புதிராக இருக்கிறது. தான் எதை வாய் மலர்ந்தாலும், அதைப் பரிசீலனைக்கு உட்படுத்தாமல் மக்கள் சமுதாயம் வணங்கி ஏற்று வழிபட வேண்டும் என்று கலைஞர் எதிர்பார்ப்பது கருத்துலகத்தின் தர்மத்துக்கு ஒருபோதும் தகாது. 'நான் சிறுவயதில் இருந்தே கம்யூனிஸக் கொள்கைகளில் ஈர்க்கப்​பட்டவன். நான் கம்யூனிஸ்ட் கொள்கைகளால் ஈர்க்கப்​பட்டவனா, இல்லையா என்பதைக் கம்யூனிஸ்ட் தோழர்களே நன்றாக அறிவார்கள்’ என்று முரசொலித்து முழங்கி​யிருக்கிறார் கலைஞர். 'ஏழை மக்களுக்குத் தொடர்ந்து தொண்டாற்றி வருகிறேன். எனக்கு இருக்கும் ஒரே சொத்தான வீட்டையும் மக்களுக்காக எழுதிக் கொடுத்து விட்டேன். கழக நிகழ்ச்சிகளில் வழங்கப்பட்ட பொருட்களை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் கருவூலத்துக்கு அளித்து விட்டேன். பாளை யங்​கோட்டையில் தனிமைச் சிறையில் வாடி னேன். ஆடம்பர வாழ்க்கை என்னிடம் இல்லை. 75 திரைப்படங்களுக்குக் கதை வசனம் எழுதிய பிறகும், 'தெரு வீட்டில் (street house) வசித்து வருகிறேன். என் மகனுக்கு 60 ஆண்டுகளுக்கு முன்பே 'ஸ்டாலின்’ என்று பெய​ரிட்டேன். மக்சிம் கார்க்கியின் 'தாய்’ நாவலைக் கவிதையில் காவியமாக்கினேன். இவ்வளவு செய்த நான் கம்யூனிஸ்ட் இல்லையா?’ என்று கலைஞர் உருக்கமாகக் கேட்கிறார். இந்தக் காரியங்களால் ஒருவர் கம்யூனிஸ்ட் ஆக முடியாது என்பதுதான் மறுக்க முடியாத உண்மை. 'பாவமன்னிப்பு’ திரைப்படத்தில் வஞ்சக நெஞ்சம்கொண்ட பாத்திரத்தை ஏற்று நடித்த 'நடிகவேள்’ எம்.ஆர்.ராதா தன் ஊழியரிடம், 'நேற்று எறும்புப் புற்றுக்கு அரிசி போட்டேன். சென்ற வாரம் அரச மரத்​துக்கும் வேப்ப மரத்துக்கும் திருமணம் செய்து வைத்தேன். என்னை வள்ளல் என்று எவனும் பாராட் டவில்லையே’ என்று மனம் புழுங்குவார். நம் கலைஞர் தன்னை யாரும் கம்யூனிஸ்ட்டாக ஏற்க மறுப்பவர்களின் மீது விமர்சனக் கணைகளை வேகமாக வீசும்போது, தவிர்க்க முடியாமல் 'பாவ மன்னிப்பு’ எம்.ஆர்.ராதா நம் மனக்கண்ணில் தரிசனம் தருகிறார். காணும் உலகம் வேறு; கண்டறியப்படும் உலகம் வேறு. காணும் உலகில் யாரும் எளிதில் கம்யூனிஸ்ட் ஆகிவிட முடியும். ஆனால், கண்டறியப்​படும் உலகில் அதற்கான சாத்தியம் எளிதில்லை என்பதுதான் சத்தியம். நீச்சல் கற்பதற்கு நீந்து வதுபோல் கற்பனை செய்வது போதாது. சுதந்திரம் பெறுவதற்குச் சுதந்திரமாக இருப்பதுபோன்று பாவனை செய்வது போதாது. கம்யூனிஸ்ட் ஆவதற்கு சொத்து​டைமையின் மீது நாட்டமில்லாதவராக நடிப்பது மட்டும் போதவே போதாது. 'பிளேட்டோவை நான் மதிக்கிறேன். ஆனால், உண்மையை அவரைவிட அதிகமாக நான் மதிக்கிறேன்’ என்பதுதான் அறிவுலக சுதர்மம். பழுத்த அரசியல்வாதி கலைஞரை நாம் மதிக்கிறோம். அதற்காக, உண்மையை மதிக்காமல் புறம்தள்ளக்கூடுமா? எந்த வகையில் கலைஞரை ஒரு கம்யூனிஸ்ட்டாக ஏற்க முடியும்? 'சமுதாயத்தில் பத்தில் ஒன்பது பங்கு மக்களுக்குத் தனிச் சொத்து இல்லாமல் பறிக்கப்பட்டு விட்டது. ஒரு சிலரிடம் தனிச் சொத்து குவிந்து இருப்பதற்குக் காரணமே, இந்தப் பத்தில் ஒன்பது பங்கு மக்களிட​மிருந்து அது பறிக்கப்பட்டதுதான். அதனால்தான், சொத்து வடிவத்தை ஒழிக்க விரும்புகிறோம்’ என்று கம்யூனிஸ்ட் அறிக்கையில் மார்க்ஸும் ஏங்கல்ஸும் பிரகடனம் செய்திருப்பதை நம் கலைஞர் வாசித்தது இல்லையா? பொருள் சார்ந்த சமூக அமைப்பில் அனைத்து உடைமைகளும், வளங்களும் வர்க்கங்கள் அற்ற சமுதாயத்தின் அங் கங்களான அனைத்து மக்களுக்கும் பொதுவானவை. தனிச் சொத்துடைமைக்கு அங்கு இடம் இல்லை என்பதுதானே கம்யூனிஸத்தின் உயிர். இந்த இலட்சியம் நோக்கி நம் கலைஞரும், கழகத் தள பதிகளும் இதுவரை ஓர் அடியாவது அழுத்தமாக எடுத்து வைத்தது உண்டா? ''ஐந்து முறை முதலமைச்சராக இருந்த எனக்கு ஒரேயரு 'தெரு வீடு’ தவிர வேறெந்த வீடும் இல்லை. அதையும் மக்களுக்குத் தானமாக எழுதிவைத்து விட்டேன்'' என்று கலைஞர் வழங்கி​யிருக்கும் வாக்குமூலத்தில் உண்மை சிலுவையில் அறையப்பட்டு விட்டதை அறியாத தமிழர் யாராவது உண்டா? ஆலமரத்தின் விழுதுகள் போன்று பரவிப் படர்ந்திருக்கும் கலைஞரின் குடும்ப உறவுகளின் சொத்துப் பட்டியலை விரிவாக எழுத முயன்றால், விரல்கள் வலிக்குமே. அவ்வளவு சொத்தும் அறம் சார்ந்த வழிகளிலா வந்து சேர்ந்தது? கலைஞரைப் போல் 90 வயதைத் தொட்டவர்கள், 70 ஆண்டுகளுக்கு மேல் பொது வாழ்வை வேள்வியாக நடத்தியவர்கள், ஆயிரம் இன்னல்களைத் தலைமறைவு வாழ்க்கையில் சந்தித்தவர்கள், மாநில முதல்வராக இருந்தவர்கள். செப்புக் காசும் தமக்கென்று சேர்க்காமல் இறுதி வரை வாழ்ந்து செத்தவர்கள், 'தெரு வீடு’கூட இல்லாதவர்கள் இருவரைப் பற்றி இன்றைய இளைய தலைமுறை அறிவதன் மூலம் 'கலைஞர் ஒரு கம்யூனிஸ்ட்டா?’ என்ற கேள்விக்கு எளிதில் விடை காணக்கூடும். மகாத்மா காந்தி காண விரும்பிய பொது வாழ்க்கைப் பேரேட்டில் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டிய புனிதப் பெயர்கள் இரண்டு 1. நிருபன் சக்ரபர்த்தி 2. ஈ.எம்.எஸ்.நம்பூதிரிபாட். இருவருமே காந்தியால் கவரப்பட்டு, தேச விடுதலைப் போரில் தியாகம் புரிந்து, மார்க்ஸியப் பொருளாதாரத்தில் மனம் ஒன்றிக் கலந்து கம்யூனிஸ்ட்களாக மாறியவர்கள்; தாங்கள் பிறந்த மண்ணில் தவ வாழ்க்கை நடத்தி, மார்க்ஸியத்திடம் மக்களைத் திருப்பி, கம்யூனிஸ ஆட்சியை அரங்கேற்றிய பெருமைக்கு உரியவர்கள்; அகத்திலும் புறத்திலும் பொய்யின் நிழல் படாமலும், ஊழலின் மாசு படியாமலும் நம்மால் நம்ப முடி யாதபடி வாழ்ந்து மறைந்தவர்கள். நிருபன் சக்ரபர்த்தி, தன் கல்லூரிப் படிப்பைத் துறந்து, காந்தியின் சட்ட மறுப்பு இயக்கத்தில் ஈடுபட்டவர், கற்றறிந்த நடுத்தரக் குடும்பத்தில் பிறந்த போதும், ஏழைகளின் தோழனாய் தன் னைச் செதுக்கிக்கொண்டவர்; சணல் ஆலைத் தொழிலாளியாய், கூலியாளாய், ரிக்ஷா இழுப்​பவராய், மலைவாழ் மக்களின் ஆசிரியராய், கல் கத்தாவின் புகழ் பூத்த இதழான 'அமிர்தபஜார்’ பத்திரிகையாளராய் பல்துறை அனுபவங்களை அடைந்தவர். 1978 முதல் 1988 வரை கம்யூனிஸ்ட் முதல்வராக 10 ஆண்டுகள் திரிபுரா மாநிலத்தில் பணியாற்றிய நிருபன் ஓர் அதிசய மனிதர். முதல் வராகப் பொறுப்பேற்றதும் ஒரு தகரப் பெட்டியுடன் அரசு வீட்டில் அடியெடுத்து வைத்தவர், 10 ஆண்டுகள் முதல்வராக ஆட்சி நடத்தி முடித்த பிறகு, அதே தகரப் பெட்டியுடன் ஒரு ரிக்ஷாவில் அமர்ந்து சட்டமன்ற உறுப்பினர் விடுதிக்கு வந்து சேர்ந்தார் நிருபன். அவருடைய தகரப் பெட்டியில் சில ஆடைகளும் சிந்தனைக்கு விருந்தளிக்கும் புத்தகங்களும் மட்டும்தான் இருந்தன. 'தெரு வீடு’கூட இல்லாத துறவி நிருபன் ஏழ்மையும் எளி மையும் அழகு தரும் அணிகலன்களாய்ப் பூண்டு ஓர் உன்னதமான மார்க்ஸியராய் வாழ்ந்தார். இரண்டாவது முறை தொடர்ந்து நிருபன் திரிபுரா முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது வாழ்த்த வந்தவர்களிடம் தன் வருத்தத்தைப் பகிர்ந்து கொண்டார். 'இன்னமும் 60 சதவிகித மக்களுக்குச் சுத்தமான குடிநீர் கிடைக்கவில்லை. நூற்றுக்கணக்கான கிராமங்களுக்கு மின்சாரம் சென்று சேரவில்லை. ஆயிரக்கணக்கான மக்களுக்கு இன்றுவரை ஊட்டச்சத்து மிக்க உணவு கிடைக் கவில்லை. இவற்றுக்காக என் மக்களிடம் நான் மன்னிப்பு கேட்க வேண்டியவன். எனக்கு வாழ்த்தும் பாராட்டும் பெறும் தகுதி இல்லை’ என்றவர் நிருபன். ஆனால், நம் கலைஞர் புகழுரைக்கும் விளம்பரத்துக்கும் வரவேற்பு வாழ்த்தொலிக்கும் ஏங்கி நிற்கும் இயல்பு கொண்டவர். 'என்னிடம் பற்றும் அன்பும் கொண்ட தோழர்கள் எனக்கு விழா எடுக்கிறார்கள். அதுகண்டு வக்கற்றோர் வயிற்றெரிச்சல் படுவதா?’ என்று பொங்கும் கலை ஞர் எப்படி ஒரு கம்யூனிஸ்ட்டாக முடியும்? 'எங்களில் எவரும் வெகுஜனப் புகழைத் தூசியளவுகூட மதித்ததில்லை. பல நாடுகளில் இருந்து எண்ணற்ற பாராட்டுகள் எனக்கு வந்ததுண்டு. நான் தனிநபர் வழிபாட்டை வெறுத்த காரணத்தால், அந்தப் பாராட்டுகளில் ஒன்றைக்கூட விளம்பரமாகப் பயன்படுவதற்கு நான் அனுமதித்தது இல்லை’ என்று, மார்க்ஸ் தனது எழுத்தில் பதிவுசெய்திருப்பதை நிருபன் அறிந்து​ வைத்திருந்தார். ஆனால், கலைஞர் அதை அறிந்திருக்க நியாயமில்லை. காரணம், அவர் எந்த வகையிலும் கம்யூனிஸ்ட் இல்லை. இந்தியாவில் முதல் காங்கிரஸ் அல்லாத அரசை அமைத்த, ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்​பட்ட முதல் கம்யூனிஸ்ட் ஆட்சியை நிர்வகித்த அரிய வரலாற்று மனிதர் ஈ.எம்.எஸ். நம்பூதிரிபாட். தன்னுடைய சிந்தனையாலும் செயல்திறனாலும் கேரள மக்களின் சமூக வாழ்வியலை மடைமாற்றம் செய்த மகாபுருஷர். இளமையில் காந்தியோடு இணைந்து, காங்கிரஸில் கலந்து, சோஷலிஸ்ட்டாக மலர்ந்து, இறுதிநாள் வரை மார்க்ஸியராக மணம் பரப்பியவர் ஈ.எம்.எஸ். ஒரு கம்யூனிஸ்ட்டாக நீண்ட நாள் தலைமறைவு வாழ்க்கை நடத்தி 1947-ல் வெளிப்பட்ட நம்பூதிரிபாட் தன் குடும்பத்தின் திரண்ட சொத்துக்களை விற்று அதைக் கம்யூனிஸ்ட் இயக்கத்துக்குக் காணிக்கையாக்கினார். பிரிட்டிஷ் அரசால் தடைசெய்யப்பட்ட 'தேசாபிமானி’ வார இதழ், அந்தப் பணத்தில்தான் நாளிதழ் ஆனது. அந்த இதழின் ஆசிரியராகப் பொறுப் பேற்ற நம்பூதிரிபாட் தன்னுடைய 89-வது வயதில் மரணத்தைத் தழுவிய நாளில்கூட மதச்சார்பின்மையின் அவசியம் குறித்து அந்த இதழுக்காக உதவியாளர் துணையுடன் கட்டுரை வடித்தார். ஏராளமாக எழுதிக் குவித்த அவர் தன் எழுத்தின் மூலம் கிடைத்த பணத்தையும் இயக்கத்துக்கே அர்ப்பணித்தார். தான் பிறந்த மண்ணை 26 ஆண்டுகள் திரும்பிப் பார்க்க நேரமின்றி ஏழைக்கும் பாழைக்கும் ஓயாமல் உழைத்த அந்த மனிதர், தள்ளாத வயதிலும் தன் ஆடையைத் தன் கையால் துவைத்து அணிந்தவர். தோழர் நல்லகண்ணு இன்றும் தன் துணியைத் தானே துவைப்பவர். அவர்கள் உண்மையான கம்யூ னிஸ்ட்கள். நம் கலைஞரோ கழகத் தளபதிகளின் கறை படிந்த அரசியல் பயணத்தில் தலைமை ஏற்று வழி நடத்துபவர். மாணிக்கங்களையும் கூழாங்கற்களையும் ஒரே கூடையில் அடுக்குவது அழகாகுமா? சர்க்காரியா கமிஷனைச் சந்தித்தவர், கழகத் தைக் குடும்பச் சொத்தாகக் கூறுபோட்டவர், அலைக்கற்றை ஊழலில் ஈடுபட்டவர்களை அர வணைத்து அவர்களுக்கு விமான நிலையத்தில் வீர வரவேற்பு வழங்கியவர், அடுத்தவர் நிலங்களை ஆக்கிரமித்தவர்களைத் தானைத் தளபதிகளாகத் தழுவிக்கொண்டவர், ஈழத் தமிழர் அழிந்தபோதும் பதவியைப் பாதுகாக்க பாராமுகமாய் இருந்தவர், கழக முன்னணியினர் குபேரர்களாகப் பவனி வருவதைப் பார்த்து மகிழ்பவர், ஊழல் மலிந்த மத்திய அரசை விழுந்துவிடாமல் தாங்கிப் பிடிப் பவர், சில்லறை வணிகத்தில் அந்நிய வர்த்தக முதலைகளுக்கு இந்தியச் சந்தையின் வாசலைத் திறந்து வைக்க ஆதரவுக் கரம் நீட்டியவர், ஏழைப் பங்காளர் காமராஜரை வீழ்த்துவதற்கு ரப்பர் தோட்ட முதலாளி மத்தியாசை நாகர்கோவில் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் ஆதரித்துக் கடு மையாகக் களப்பணி ஆற்றியவர், 'நானும் ஒரு கம்யூனிஸ்ட்’ என்கிறார். கேழ்வரகில் நெய் என்றால் கேட்பவர்க்கா புத்தியில்லை? நம்பூதிரிபாட் ஒரு முறை சொன்னார்: 'நாட்டு மக்களின் நல்வாழ்வுக்காக ஒரு தனி மனிதன் தன்னை முழுவதுமாக அர்ப்பணித்துக்கொள்ளும் தருணத்தில் தலைவனாக உயர்ந்து விடுகிறான். தன் சுகங்களுக்காகவும் தேவைகளுக்காகவும், கொள்கையில், லட்சியத்தில் சமரசம் கொள்ளும் தருணத்தில் தலைவன் என்ற தகுதியை இழந்து விடுகிறான். ஓ... அதுதான் எவ்வளவு ஆழ்ந்த அர்த்தமுள்ள பொதுவாழ்க்கைப் பிரகடனம்! readers views 1. Dr.Mrs.MeenakshiPrabhakar18 Hours ago கம்யூனிசம் என்பது உலகளாவிய பொதுவுடமையேயன்றி, எனக்கு எதுவும் வேண்டாமென சொல்லும் நிலையல்ல.அன்றைய கால கட்டத்தில் மக்களுக்கு நம்பிக்கையேற்படுத்த தனக்கு எதுவும் வேண்டாமென சொன்னார்களே தவிர, எள் முனையளவும் சுயனலமில்லாத உயிரினம் எங்கும் கிடையாது.அங்கு தலைவர் உண்டு.இருப்பது எல்லோருக்கும் பகிரப்படவேண்டும் என வலியுறுத்தும் பொறுப்பு உண்டு.னான் பகிர்ந்து தருகிறேன், அல்லது பகிர்வதற்கான கொள்கை வகுத்து தருகிறேன், எனக்கு எதுவும் வேண்டாம் என்பது உளவியல் ரீதியாக தன்னைத்தானே வருத்திக் கொள்ளும் வினோத செயல்தளம்.பிறர் வாழப்பொறுக்காத மனனிலை, கம்யூனிசம் என அறியப்படுவது தவறு.விதிகள் சுட்டி என்ன விதி மீறல் நடந்திருக்கிறது, என்ன சமூக நலம் குறையாக இருக்கிறது, அதற்கான காரணம் களையப்பட வேண்டும் என சொல்லலாமே தவிர, இல்லாதவனை உயர்த்த முயலாது, நிரந்தர உதாரணமாக்கி , உயர்பவனை தேக்க முடியாது. கம்யூனிசத்தினற்கு தன்னிலை க்றித்த கலைஞரின் கருத்துக்கள் வேண்டுமானால் ஏற்க முடியாதவையாக இருக்கலாம்.ஆனால் கம்யூனிஸ்ட் சிந்தனை ஒவ்வொரு மனிதருக்கு இயல்பு.கலைஞருக்கும் கூட.பராசக்தி பட வசனங்கள் தெளிவாக அவரது சமூக நீதியின் பால்பட்ட அக்கறையை குறிப்பவை. பரம்பரைக்கு நிதி சேர்த்ததும், சர்வாதிகாரம் எப்ற்றதும் நடப்பு அரசியல் தந்த துணிவு.எம்.ஜி.ஆரும், ஜயலலிதாவும் தந்த பாதை.சசிகலா காட்டிய வழி.மக்களின் விழிப்புணர்வு இல்லாத சினிமா மோகம். தனி மனிதர்களாக இவர்கள் அனைவரும் நல்லவர்களே.விதி தன்னியல்பானது.குழு நிலையிலேயே கண்காணிப்பு அவசியமாகிறது.வாழுதல் அவரவர் உரிமையெனில், பொறுப்பும் அவருடையதாகவே மாறிப்போகும்.சாடல்கள் இல்லாத உலகம் சாதனை படைக்கும். நம்பூதிரிபாட் சோஷலிச தலைவராக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டவர்.சோஷலிசம் தலைவர் இல்லாத குழு நிலைப்பாடு.ஆலோசனைகளின் ஒருங்கினைத்த கொலள்கை வரைவு பொது பயனுக்கு எடுத்துக் கொள்வது. நம்பூதிரி பாடின் தலைவர் குறித்த கருத்து சோஷலிச கொள்கையில்லை.அந்த கால கட்டத்தில் நடப்பு நிலையில் குறித்த நம்பூதிரிபாட் என்பவரின் தனி மனித கருத்து. விமரிசனங்கள் இடையூறு செய்பவை.எனக்கென எதுவும் எடுத்துக் கொள்ளவில்லை என காந்தியும் கூற முடியாது என்பதே நிதரிசனம்.ஒரு விரல் விமரிசனமாக நீண்டால் மூன்று விரல் விமரிசனமாக நம்மை நோக்கி நீளும்.ஒரு விரல் ஆலோசனையாக நீண்டால் மூன்று விரமல் நம்மை நோக்கி ஆலோசனையாக நீளும்.னம்மை உயர்த்தும்.பிறரையும் உயர்த்தும். கட்சிகள் மக்கள் நல இயக்கங்களாக மாற வேண்டிய கட்டாய சூழல் இன்று.கட்சி நிதியாவும் மக்களுக்கு பகிர்ந்தளிக்கக்கூடிய கட்டாயமும் இன்று.எப்படி ஊழல் வந்ததோ அப்படியே அதிர்வுகள் இன்றி செல்லும் தளம் எங்கும் விதி நிறுவுதல்.மனிதம் என்பது பண்பு.மனித பண்புல்ள விலங்குகளும் உண்டு.விலங்கு குணமுல்ல மனிதர்களும் உண்டென்றாலும் இவை சூழல் தரும் கற்றல் மட்டுமே .இயல்பு இல்லை.எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்னில் பிறக்கையிலே, பின் நல்லவராவதும், தீயவராவதும் அன்னை வளர்ப்பதிலே என்றொரு பாடல் உண்டு.அன்னை என்பதும் சமூகமே. சூழல் ஒரு மனிதரை மாணிக்கமாகவும், கூழாங்கல்லாகவும் மாற்றுகிறது என்பதை மறுக்க முடியுமா?.கூழாங்கள்ளும் மாணிக்கமாக மாறும் சூழல் உண்டு.தக்க அங்கீகாரம் கிடைக்காவிட்டால், மாணிக்கமும் கூழாங்கல்லாக மாறும் நிலை உண்டு.பயன் படவே இயற்கையின் படைப்பு..கூடையில் அடுக்குவதற்கோ? தக்க விதத்தில், அந்தந்த நிலைப்பாட்டில், அவரவர் திறன் படி , சட்ட மன்றம் எனும் உலோகத்தில் பதித்தால், ஜனனாயகம் எனும் அழகிய ஆபரணம் உருவாகக்கூடும். 2. Balasubramanian19 Hours ago நம் ஊர்களில் ஒரு பழமொழி சொல்வார்கள்......'சிலருக்கு, கல்யாண வீடுகளில் மணமகனாக இருக்க வேண்டும். சாவு வீடுகளில் பிணமாக இருக்க வேண்டும் '. திரு கருணாநிதி அந்த ரகம். எங்கு சென்றாலும், அர்த்தம் இருந்தாலும், இல்லா விட்டாலும், தன்னை முன்னிலை படுத்திக் கொள்ள வேண்டும். 3. கம்யூனிஸ்ட் அல்லாத இரு கம்யூனிஸ்ட் உண்டு தமிழகத்தில்.... 1. கர்மவீரர் காமராஜர் 2. மாண்புமிகு கக்கன் 4. திருச்சிக்காரன்2 Days ago விமர்சனம் யார் வேண்டுமானாலும் பண்ணலாம். என்னை விமர்சித்தே தன்னை வளர்த்துக்கொண்டவன் தம்பி தமிழருவி மணியன் என்று கலைஞர் சொல்லவேண்டும் என்று நினைக்கிறாரோ... 5. RADHAKRISHNAN2 Days ago சர்க்காரியா கமிஷனைச் சந்தித்தவர், கழகத் தைக் குடும்பச் சொத்தாகக் கூறுபோட்டவர், அலைக்கற்றை ஊழலில் ஈடுபட்டவர்களை அர வணைத்து அவர்களுக்கு விமான நிலையத்தில் வீர வரவேற்பு வழங்கியவர், அடுத்தவர் நிலங்களை ஆக்கிரமித்தவர்களைத் தானைத் தளபதிகளாகத் தழுவிக்கொண்டவர், ஈழத் தமிழர் அழிந்தபோதும் பதவியைப் பாதுகாக்க பாராமுகமாய் இருந்தவர், கழக முன்னணியினர் குபேரர்களாகப் பவனி வருவதைப் பார்த்து மகிழ்பவர், ஊழல் மலிந்த மத்திய அரசை விழுந்துவிடாமல் தாங்கிப் பிடிப் பவர், சில்லறை வணிகத்தில் அந்நிய வர்த்தக முதலைகளுக்கு இந்தியச் சந்தையின் வாசலைத் திறந்து வைக்க ஆதரவுக் கரம் நீட்டியவர், ஏழைப் பங்காளர் காமராஜரை வீழ்த்துவதற்கு ரப்பர் தோட்ட முதலாளி மத்தியாசை நாகர்கோவில் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் ஆதரித்துக் கடு மையாகக் களப்பணி ஆற்றியவர், 'நானும் ஒரு கம்யூனிஸ்ட்’ என்கிறார். .... யாராவது பதில் சொல்லுங்களேன்.... 6. அறந்தை அபுதாகிர்2 Days ago அலை கற்றையில் "அடித்து பிடித்து" அனைவருக்கும் அலை பேசி பேசும் வாய்ப்பை அளித்த நாங்கள் கம்யூனிஸ்ட் இல்லையா? பெரும் செல்வந்தர்கள் மட்டும் கண்டு களித்த காபரா ஆட்டங்களை "மானாட மயிலாட " மூலம் பாமரனின் வீட்டுக்கே கொண்டு வந்த நாங்கள் கம்யூனிஸ்ட் இல்லையா? இந்த காட்சிகளையெல்லாம் தவற விடக்கூடாது என்பதற்க்காக வண்ணத்தொலை காட்சி பெட்டியை இலவசமாக அளித்தோமே நாங்கள் கம்யூனிஸ்ட் இல்லையா? இது போன்ற நல்ல செயல்களை பாராட்டி யார் விழா எடுத்தாலும் , எவ்வளவு பணி இருந்தாலும் அவர்கள் மனம் கோணக்கூடாது என்பதற்க்காக விழாவிற்க்கு சென்று அவர்களை மனம் குளிர வைத்த நாங்கள் கம்யூனிஸ்ட் இல்லையா? இதையெல்லாம் கண்டு கொள்ளாத தமிழருவி மனியன் அவர்களை வண்மையாக கண்டிக்கிறோம்... 7. கம்யூனிஸ்ட்களை பற்றி பேசும் போது நாம் சமீபத்திய திரு.ஹர்கிஷன்சிங் சுர்ஜீத் அவர்களையும் நினைவில் கொள்ள வேண்டும்.பஞ்சாபில் பெரும் நில சுவாந்தார் குடும்பத்தில் பிறந்து 100 வருடங்கள் வாழ்ந்து தன் பங்காக கிட்டிய குடும்ப சொத்த்தை (கிட்டதட்ட 200 ஏக்கர்கள்) கட்சிக்காக தானம் செய்து கடைசி வரை எளிமையாக வாழ்ந்த ஒரு கம்யூனிஸ்ட் அவர் thanx - ju vi Tweet Read More Wednesday, August 29, 2012 BSNL நிறுவனத்தின் கணிணி மோசடி , பொது மக்கள் அதிர்ச்சி சி.பி.செந்தில்குமார் 9:58:00 AM BSNL, JU VI, அனுபவம், கொடைக்கானல், திண்டுக்கல், பி எஸ் என் எல், மோசடி 2 comments பி.எஸ்.என்.எல். நடத்திய கம்ப்யூட்டர் சீட்டிங்!'' மாட்டிக்கொண்ட திண்டுக்கல் மக்கள் 'ஒன்பதாயிரம் ரூபாய் பணம் செலுத்தினால் இன்டர்நெட் இணைப்புடன் கம்ப்யூட்டர் தருவதாக விளம்பரம் செய்தனர். அதை நம்பிப் பணம் செலுத்திய எங்களுக்குப் பட்டை நாமம் சாத்திவிட்டனர்’ என்று, வாயிலும் வயிற் றிலும் அடித்துக்கொள்கின்றனர், திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மலைக் கிராம மக்கள். அவர்களை ஏமாற்றியது ஏதோ ஒரு தனியார் நிறுவனம் அல்ல... பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல். என்பதுதான் அதிர்ச்சி! பாதிக்கப்பட்டவர்களில் ஒருவரான வல்லரசு விடம் பேசினோம். இவர், கொடைக்கானலில் இருந்து 40 கி.மீ. தூரத்தில் உள்ள மண்ணவனூரில் செல்போன் சர்வீஸ் சென்டர் நடத்தி வருகிறார். ''நான் செய்யும் தொழிலுக்கு கம்ப்யூட்டருடன் நெட் கனெக்ஷன் இருந்தால்தான் தொழில் போட்டியைச் சமாளிக்க முடியும். அதனால், கம்ப்யூட்டர் வாங்க ஆசைப்பட்டேன். அப்போது, கொடைக்கானல் டெலிபோன் ஆபீஸில் (பி.எஸ்.என்.எல். அலுவலகம்) 'ஒன்பதாயிரம் ரூபாய் செலுத்தினால், கம்ப்யூட்டருடன் நெட் கனெக்ஷன் கொடுக்கப்படும். இந்தச் சேவையை பி.எஸ்.என்.எல். மற்றும் அமரன் அசோசியேட் நிறுவனம் இணைந்து தருகிறது. தேவைக்கு பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் இருக்கும் அமரன் அசோசியேட் நிறுவனத்தாரைத் தொடர்பு கொள்ளவும்’ என்று விளம்பரம் செய்து இருந்தனர். குறைந்த பணத்தில் கம்ப்யூட்டரும் நெட் இணைப்பும் கிடைக்கிறது என்ற ஆசையில் என்னைப் போல பலர் பணம் கட்டினோம். வில்போன் இணைப்புக்கு 500 ரூபாய் தனியாகக் கட்ட வேண்டும் என்று சொன்னார்கள். அதையும் கட்டினோம். மூன்று நாட்களில் போன் இணைப்பு வந்தது. இரண்டு நாட்கள் கழித்து போனில் பேசிய அமரன் நிறுவனத்தைச் சேர்ந்த ராஜேஷ் என்பவர், 'ஒரு வாரத்தில் உங்கள் வீடு தேடி கம்ப்யூட்டர், மோடம் வந்து சேரும்’ என்றார். ஒரு வாரம் கழித்தும் யாரும் வரவில்லை. மலைப் பகுதி என்பதால் தாமதம் ஆகலாம் என்று எதிர்பார்த்துக் கொண்டே இருந்தேன். அடுத்த ஒரு வாரத்துக்குப் பிறகும் வராததால், அமரன் அசோசியேட் நிறுவனத்தாரின் மொபைல் நம்பர்களில் தொடர்புகொண்டேன். அனைவரது போன்களும் சுவிட்ச்ஆஃப் செய்யப்பட்டு இருந்தன. அப்போது. வில்போன் நம்பரில் பேசிய தேவி என்பவர் 'அமரன் அசோசியேட் மதுரைக் கிளையில் இருந்து பேசுகிறோம். நிர்வாகம் மாறிவிட்டது. நாங்கள்தான் உங்களுக்கு கம்ப்யூட்டர் கொடுக்கப்போகிறோம். இரண்டு நாட்களில் உங்களைச் சந்திக்கிறோம்’ என்றார். அவரும் பேசியதோடு சரி... ஆறு மாதங்களாகியும் கம்ப்யூட்டர் வரவில்லை. 'உங்களை நம்பித்தானே பணம் கட்டினோம்’ என்று கொடைக்கானல் பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் கேட்டோம். 'எங்களுக்கு எதுவும் தெரியாது. வத்தலக்குண்டு டி.இ-யை சந்தியுங்கள்’ என்றனர். அவரைச் சந்தித்துக் கேட்டால், 'இது மத்திய அரசின் திட் டம். எங்களுக்கு எதுவும் தெரியாது. உங்களைப்போல நூற்றுக்கணக்கானோர் எங்களிடம் வந்து பணம் கேட் கிறார்கள். உங்கள் புகாரைக் கொடுங்கள். நாங்கள் சென்னை அலுவலகத்துக்கு அனுப்புகிறோம்’ என்று பொறுப்பே இல்லாமல் பதில் சொன்னார். மதுரையில் தெற்கு ஆவணி மூல வீதியில் இயங்கிய அமரன் அசோசியேட் அலுவலகத்தைக் கண்டுபிடித் தோம். 'இங்கு ஆபீஸ் இருந்தது உண்மைதான். அதைக் காலிசெய்து ஆறு மாசமாச்சு’ என அருகில் உள்ளவர்கள் சொன்னார்கள். வேறு வழி இல்லாமல் முதல்வர் முதல் பிரதமர் வரை அனைவருக்கும் புகார் அனுப்பிவிட்டுக் காத்திருக் கிறோம். எந்த நடவடிக்கையும் இல்லை'' என வருத்தத்தைக் கொட்டினார். பி.எஸ்.என்.எல். தொழிற்சங்க பிரதிநிதிகளிடம் பேசினோம். ''ஆறு வருடங்களுக்கு முன் தனியார் ஒத்துழைப்புடன் அந்தத் திட்டத்தை அறிமுகப் படுத்தினர். தொழில்நுட்பக் குறைபாடுகளால் அந்தத் திட்டம் வெற்றி பெறவில்லை. அந்தத் திட்டத்தில் பணம் கட்டிப் பலரும் ஏமாந்தனர். இந்தத் திட்டத்தில் அதிக அளவுக்கு மோசடி வடகிழக்கு மாநிலங்களில்தான் நடந்துள்ளது. தமிழகத்தில் திண்டுக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களில் இந்த மோசடி அதிகம் நடந்துள்ளது. அரசியல்வாதிகளுக்கு வேண்டப்பட்டவர்கள் ஏதாவது ஒரு திட்டத்தைப் போட்டு இப்படி மோசடிக்கு வழிவகுக்கிறார்கள். அலுவலர்களான எங்களால் இதைத் தடுக்கவோ, பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவவோ முடியவில்லை. ஏன், ஒழுங்கான பதிலைக்கூட சொல்ல முடியவில்லை'' என்று வருத்தப்பட்டனர். வத்தலக்குண்டு டி.இ.விசாலாட்சியிடம் பேசினோம். ''இந்தத் திட்டம் மத்திய அரசின் திட்டம். பாதிக்கப்பட்டவர்களின் புகார் குறித்து சென்னைக்குத் தகவல் கொடுத்துள்ளோம். அமரன் அசோசியேட் நிறுவனத்தார் சிலருக்கு செக் கொடுத்தும், அது பணம் இல்லாமல் திரும்ப வந்துள்ளதால், பாதிக்கப்பட்டவர்கள் பி.எஸ்.என்.எல். மீதும் வழக்கு தொடுத்துள்ளனர்'' என்றார். இதுகுறித்து தொலைத் தொடர்புத் துறை ஊழல் தடுப்புப் பிரிவு தலைமை பொது மேலாளர் ஜெயராமனிடம் பேசினோம் ''இப்படி ஒரு மோசடி நீங்கள் சொல்லித்தான் என் கவனத்துக்கு வந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் என்னிடம் புகார் செய்தால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார். இதுவரை அரசு நிர்வாகம் மீது நம்பிக்கையுடன் இருந்தவர்கள் இப்போதுதான் போலீஸில் புகார் கொடுக்க தயாராக இருக்கிறார்கள். இனியாவது இவர்களுக்கு விடியட்டும்! நன்றி - ஜூ வி Tweet Read More Saturday, August 11, 2012 35,000 கோடி ஊழல்!!! அடேங்கப்பா சி டி ரெடி சி.பி.செந்தில்குமார் 9:35:00 AM JU VI, அரசியல், அனுபவம், ஈமு, கிரானைட், மோசடி, ஜூ வி 2 comments 35 ஆயிரம் கோடி மாமூல் வாங்கியோர் சி.டி.! இந்தியாவின் தேசிய ஒருமைப்பாட்டை அடையாளப்படுத்தும் முக்கிய அம்சமாக இருப்பது கனிமக் கொள்ளைதான் போலும்! ஆந்திராவில் நடந்தது மாபெரும் கொள்ளை. கர்நாடகாவில் ஆட்சியையும் முதலமைச்சர் களையுமே ஆட்டுவிப்பதும் இதுதான். வடகிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளில் பசுமை வேட்டைக்குத் தூண்டுதலாய் அமைந்ததும் கனிம வளங்கள்தான். அரசாங்கத்தின் சொத்தை தனியார் கொள்ளை அடித்துப் பதுக்கிக்கொள்வது பல ஆண்டுகளாகத் தொடர்கிறது. தமிழகத்தில் இப்போதுதான் முதன்முதலாக இந்த முதலைகள் சிக்க ஆரம்பித்து உள்ளனர்! கனிம வளங்கள் குவிந்துகிடக்கும் நிலப் பகுதி மலையாக, காடாக, மூன்று போகம் விளையும் நிலமாக இருந்தாலும் அவை உடனடியாக தேசியச் சொத்தாக மாற்றப்படும். அதன் பின் அவை அடிமாட்டு விலைக்கு தனியார் முதலாளிகளுக்குக் குத்தகை என்ற பெயரில் தாரைவார்க்கப்படும். இப்படித்தான் இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் உள்ள கனிம வளங்கள் சுரண்டப்படுகின்றன. இதற்கு ஆப்பு வைப்பதுபோல் ஒரு முடிவு எடுத்து கனிமக் கொள்ளையர்களைக் கதிகலங்க வைத்துள்ளது ஜார்கண்ட் மாநில அரசு. ஜார்கண்ட் மாநிலத்தின் காத்குரி மற்றும் மேற்கு சிங்பும் பகுதிகள் இரும்புத் தாது நிரம்பிய மாவட்டங்கள். இங்கு இரும்புத் தயாரிப்புத் தொழிற்சாலை அமைக்கப்போகிறோம் என்று கூறி ஆறு தனியார் நிறுவனங்கள் மாநில அரசிடம் அனுமதி பெற்றன. பிறகுதான் அவை அனைத் துமே, இரும்புத் தாதுக்களை வெட்டி எடுக்கும் நிறுவனங்கள் என்பது தெரியவந்தது. உடனே அவர் களுக்கு வழங்கப்பட்ட அனுமதியை ஜார்கண்ட் அரசு ரத்து செய்தது. ஜார்கண்ட் அரசின் இந்த அதிரடி நடவடிக்கையை எதிர்த்து, தனியார் நிறுவனங்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தன. வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.எம்.லோத்தா, ஹெச்.எல்.கோகலே ஆகியோர், 'கனிம வளங்கள் தேசிய சொத்து. தேசிய சொத்தைக் குத்தகைக்கு விடுவது, விடப்பட்ட குத்தகையை ரத்துசெய்வது போன்ற நடவடிக்கைகள் சுரங்கம் மற்றும் கனிம சட்டங்களுக்கு உட்பட்டது. இந்த விவகாரத்தில் முடிவு எடுக்க மாநில அரசுக்கு முழு அதிகாரம் உள்ளது. கனிம வளங்கள் உள்ள நிலம் தனியாருக்குச் சொந்தமானதாக இருந்தாலும், அவர்கள் அதை குத்தகைக்குப் பெற்றிருந்தாலும் நிலத்தில் கிடைக்கும் கனிமங்கள் அரசுக்குச் சொந்தமானவைதான். கனிம வளங்களை அரசு பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் மாநில அரசின் கூட்டு நடவடிக்கைகளுக்கு மட்டுமே பயன்படுத்த முடியும். மற்றபடி வேறு யாரும் அதற்கு உரிமை கோர முடியாது’ என்று கூறி தனியார் நிறுவனங்களின் மனுக்களைத் தள்ளுபடி செய்துவிட்டனர். ஜார்கண்ட் அரசின் நடவடிக்கையையும், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பையும் கவனத்தில்கொண்டால், மதுரை கிரானைட் குவாரிகளுக்கும் இந்தத் தீர்ப்பு அப்படியே பொருந்தும். இந்த நிலையில், ''கிரானைட் குவாரி மோசடி வழக்கில் சிலதனியார் முதலாளிகள் மீது மட்டும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களுடைய கொள்ளைக்கு உடந்தையாக இருந்த அரசு அதிகாரிகளின் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களின் சொத்துக்களைப் பறிமுதல் செய்ய வேண்டும்'' என்று தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்குக் கடிதம் எழுதி உள்ளது தமிழ்நாடு கனிம வள நிறுவன ஊழியர் சங்கம். அதன் செயலாளர் விஜயனைச் சந்தித்தோம். ''அதிகாரிகளின் தில்லுமுல்லுகளைத் தெரிந்து கொள்ள வேண்டுமானால், டாமின் நிறுவனம் பற்றி முதலில் தெரிந்துகொள்ள வேண்டும். தமிழ்நாடு கனிமவள நிறுவனத்தை 1979-ம் ஆண்டு, அப்போது முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ஆர். தொடங்கி வைத்தார். இதன் பிரதான நோக்கம், கிராமப்புற வேலைவாய்ப்பை அதிகரிக்க வேண்டும் என்பதும், மண்ணுக்கு அடியில் வீணாகப் புதைந்துகிடக்கும் கனிமங்களைக் கண்டுபிடித்து, அவற்றை வெட்டி எடுப்பதன் மூலம் நாட்டின் வருவாயை உயர்த்துவதும்தான். டாமின் தொடங்கப்பட்டபோது, அதன் முதலீடு 100 கோடி ரூபாய். கனிம வளங்களைக் கண்டுபிடிப்பதும், அவற்றை வெட்டி எடுத்து விற்பனை செய்வதும் முழுக்க முழுக்க டாமின் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது. அதேபோல், கனிம வளங்கள் அரசு புறம்போக்கு நிலத்தில் இருந்தாலும், தனியாருக்குச் சொந்தமான பட்டா நிலத்தில் இருந்தாலும், அவை அரசுக்குத்தான் சொந்தம் என்ற நிலை இருந்தது. 10 ஆண்டுகளுக்கு முன்பு டாமின் நிறுவனத்தின் கொள்கையில் சில மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன. அதன்படி, அரசுக்குச் சொந்தமான குவாரிகளில் உள்ள கனிமங்களை வெட்டி எடுக்கும் பொறுப்பு தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும், தனியார் பட்டா நிலங்களில் உள்ள கனிமங்களை நிலத்தின் சொந்தக்காரர்களே வெட்டி எடுத்து விற்பனையும் செய்யலாம் என்று விதிமுறைகள் மாற்றப்பட்டன. இவற்றைக் கண்காணிக்கும் பொறுப்பை மட்டும் டாமின் அதிகாரிகள் தங்கள் வசம் வைத்திருந்தனர். இதுபோன்ற வாய்ப்புக்காக காத்திருந்ததைப்போல், தனியார் முதலாளிகள் தங்கள் தகிடுதத்தங்களை அரங்கேற்ற ஆரம்பித்தனர். டாமின் நிறுவனத்தில் கனிமங்கள் வெட்டி எடுக்கும் தனியார் நிறுவனங்கள், அதற்கு அருகிலேயே ஒரு பட்டா இடத்தை வாங்குவார்கள். அங்கு கிரானைட் கிடைக்கிறதோ இல்லையோ... அங்கும் கற்கள் வெட்டும் பணி நடைபெறும். அரசு குவாரியில் வெட்டி எடுக்கப்பட்ட கற்கள் அனைத்தும் தனியார் குவாரிக்குக் கடத்தப்படும். பின், அந்தக் கற்கள் தனியார் குவாரியிலேயே வெட்டி எடுக்கப் பட்டதாகக் கணக்கு காண்பிக்கப்படும். இதை கண்காணித்துப் பதிவுசெய்ய வேண்டிய உதவி இயக்குனர் (சுரங்கம்), வருவாய்த் துறை கோட்ட மேலாளர் போன்றவர்களை தனியார் முதலாளிகள் கவனித்துவிடுவார்கள். இதனால் அரசுக்கு வர வேண்டிய பல ஆயிரம் கோடி ரூபாய் தனியார் முதலாளிகளுக்குப் போய்ச்சேரும். உதாரணமாக மதுரையில் உள்ள அரசு டாமின் குவாரிக்கு 30 அடி தூரத்தில், அரசியல் செல்வாக்குள்ள மனிதரின் மகனுக்குச் சொந்தமான கிரானைட் குவாரி உள்ளது. அரசு குவாரியில் வெட்டி எடுக்கப்பட்ட கிரானைட் கற்கள் எல்லாம், இந்தக் குவாரியில் வெட்டி எடுக்கப்பட்டதாகக் கணக்கு காண்பிக்கப் பட்டு உள்ளது . இதேபோல், வேலூர் மாவட்டம் மகிமண்டலம் என்ற ஊரில் வெட்டி எடுக்கப்பட்ட 45 கன மீட்டர் அளவுள்ள கற்களை 3 க.மீ அளவுள்ள கற்கள் என்று போலியாகக் கணக்கு காட்டி உள்ளனர். ஒரு க.மீ. கறுப்பு கிரானைட் கல்லின் விலை 70 ஆயிரம் ரூபாய். அப்படியானால் அரசுக்கு எவ்வளவு இழப்பு என்று கணக்குப் போட்டுக்கொள்ளுங்கள். அதேபோல், மேலூரில் பி.ஆர்.பி. நிறுவனம் 100 அடி ஆழத்துக்குக் கற்களை வெட்டி எடுத்துள்ளது. இதைப் பொதுப் பணித் துறை அதிகாரிகள் கண்டும் காணாமல் இருந்துள்ளனர். இந்தத் தொழிலில், தனியார் நிறுவனங்கள் லாபம் மட்டும் ஆண்டுக்கு 45 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் சம்பாதிக்கும்போது, தமிழக அரசின் கனிம வள நிறுவனம், கடந்த ஆறு ஆண்டுகளாக 100 கோடி ரூபாய்க்கும் குறைவாகவே லாபம் ஈட்டியுள்ளது. தனியார் முதலாளிகளின் கைக்கூலிகளாக அவர்கள் செயல் பட்ட காரணத்தால்தான், இத்தனை முறைகேடுகளும் நடந்தன. தற்போது, விதிமுறைகளை மீறி கொள்ளை லாபம் சம்பாதித்த சில தனியார் முதலாளிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேநேரத்தில், அந்த முதலாளிகளின் கூட்டுக் கொள்ளைக்கு உடந்தையாக இருந்த அதிகாரிகளையும் தண்டிக்க வேண்டும். அதோடு முழுக்க முழுக்க கனிம வளத்தைத் தோண்டி எடுக்கும் பணிகளை முன்பு போல் அரசே செய்ய வேண்டும்'' என்றார் விரிவாக. ''மதுரை கலெக்டராக இருந்த சகாயம் ஒரு கணக்குப் போட்டு சுமார் 16 ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளது என்று சொல்லி இருக்கிறார். ஆனால் மதுரை வட்டாரத்தில் இருக்கும் கனிம வளங்களைக் கணக்கிட்டு சுமார் 35 ஆயிரம் கோடி ரூபாய் வரைக்கும் முறைகேடு நடந்துள்ளதாக முடிவுக்கு வந்துள்ளோம்'' என்று இப்போது சொல்லும் சில உயர் அதிகாரிகள், ''வருவாய்த் துறை, கனிமவளத் துறை, காவல் துறை, மாவட்ட நிர்வாகம் உள்ளிட்ட அரசு அதிகாரிகளுக்கு இதுவரை இந்த நிறுவனங்கள் எவ்வளவு செலவு செய்துள்ளன என்பதற்கான பட்டியலை சி.டி.யாக தயாரித்து வைத்துள்ளார்கள். டைரியில் எழுதியும் வைத்துள்ளார்கள். அதன் விவரங்கள் எங்களுக்குக் கிடைத்துவிட்டன. கடந்த 15 ஆண்டுகளாக இப்படி மாமூல் வாங்கிய மந்திரிகள், ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், மாவட்ட கலெக்டர்கள் பட்டியல் பெரியது!'' என்கிறார்கள். இதனைத் தெரிந்துகொண்ட குவாரி அதிபர் ஒருவர், ஆட்சியை மிரட்டும் தொனியில் அதிகாரி ஒருவருக்கு போன் செய்து பேசியதாகவும் அவர் அதனை டேப் செய்து கோட்டைப் பிரமுகர் ஒருவருக்குக் கொடுத்துவிட்டதாகவும் சொல்லப்படுகிறது. இது அரசு நடவடிக்கையின் வேகத்தை இன்னும் தீவிரப்படுத்தி உள்ளது. அதிரடி தொடரட்டும்! 'சத்யராஜ், சரத்குமார் சொன்னதால பணம் போட்டோம்!'' ஈமு ஓட்டம்... பதறும் முதலீட்டாளர்கள்! எத்தனையோ முறை சொன்னோம். ஆனால், பட்டால்தான் திருந்துவோம் என்ற முடிவோடு ஏமாந்தவர்களை என்னவென்று சொல்வது! ஈமு கோழியில் முதலீடு செய்பவர்களைத் தொடர்ந்து எச்சரித்து வந்தோம். கடந்த சில வாரங்களுக்கு முன், கோபிசெட்டிபாளையத்தில் கே.ஜி. பிரைட் லைவ் ஸ்டாக் இந்தியா (பி) லிமிடெட் என்ற நிறுவனத்தின் மீது புகார் கிளம்பியது. இப்போது, பெருந்துறையைச் சேர்ந்த சுசி ஈமு ஃபார்ம்ஸ் காவல்துறையின் பிடிக்குள் சிக்கி இருக்கிறது. ஏமாற்றப்பட்டு நொந்துபோய் இருக்கும் விவசாயிகள் அந்த நிறுவனத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் குதித்துள்ளனர். கூடவே, இந்த நிறுவனத்தின் விளம்பரப் படங்களில் நடித்த நடிகர்கள் சத்யராஜ், சரத்குமார் ஆகியோர் மீதும் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்றும் புகார் செய்யவே ஏரியா கலகலக்கிறது. ஈமு வளர்ப்பு மோசடிக்கு எதிராக பல வருடங்களாகப் போராடி வரும் வழக்கறிஞர் தளபதியைச் சந்தித்தோம். ''சுசி ஈமு நிறுவனத்தின் அதிபர் குரு என்ற குருசாமி. இவர், பெருந்துறை நகர பா.ம.க. செயலாளராக இருந்தவர். இத னால் அவருக்கு ஒரு அறிமுகம் இருந்தது. மேலும், ஈமுவுக்காக விளம்பரம் செய்த நடிகர்கள் சத்யராஜ் மற்றும் சரத்குமார் மீது மக்களுக்கு நிறைய மரியாதை இருக் கிறது. அதனால்தான், பாமர கிராம விவ சாயிகள் உட்பட 25,000 பேருக்கும் மேல் முதலீடு செய்தனர். மொத்த முதலீடு 600 கோடி ரூபாயைத் தாண்டி இருக்கலாம். இந்த மோசடிக்கு மாவட்ட நிர்வாகம், கால்நடைத் துறையும் உடந்தையாக இருந்துள்ளன. இவர்கள் அனைவரின் மீதும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றார் ஆவேசமாக. சுசி ஈமு ஃபார்ம்ஸ் நிறுவனத்தின் சார்பில் பேசியவர்கள், ''எங்க நிறுவனத்தின் உரிமையாளர் குரு தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர். இங்கே உள்ள ஆதிக்க சமுதாயத்தினரும், காவல்துறையைச் சேர்ந்த சில அதிகாரிகளும் மாமூல் கேட்டு தொடர்ந்து அவரை மிரட்டி வந்தனர். ஆனால், மாமூல் கொடுக்க குரு மறுத்து விட்டார். அதனால், ஆட்களைத் தயார் செய்து, ஒரே சமயத்தில் எங்கள் நிறுவனத்தை முற்றுகையிட வைத்து பிரச்னை ஆக்கி விட்டனர். முதலீட்டாளர்களுக்கு நாங்கள் பணம் கொடுக்கத் தயாராகவே இருக்கிறோம்'' என்றனர். விளம்பரத்தில் நடித்த நடிகர் சத்யராஜிடம் பேசினோம். ''ஈமு கோழி விளம்பரம்னு சொன்னாங்க. நடிச்சுக் கொடுத்தேன். மத்தபடி அதுல இருக்கும் நல்லது கெட்டது எல்லாம் எனக்குத் தெரியாதுங்க'' என்று சொன்னார். சரத்குமார் தரப்பிலோ, ''சுசி ஈமு நிறுவனத்தினர் ஒரு ரெஸ்டாரன்ட் நடத்தி வருகின்றனர். அதற்கான விளம்பரத்தில், ஈமு கோழியின் கறி உடலுக்கு நல்லது. ஈமு கோழி சாப்பிடுங்க என்பது மட்டும்தான் சரத்குமார் சொல்வதைப் போல வரும். மற்றபடி எந்த இடத்திலும் ஈமு வளர்த்தால் லாபம் சம்பாதிக்கலாம் என்று அவர் சொல்லவில்லை. அதுவும் இல்லாமல் விளம்பரத்தின் நம்பகத் தன்மைக்கு அதில் நடித்தவர்கள் எப்படி பொறுப்பாக முடியும். இதை சட்டரீதியாக சந்திக்க சரத்குமார் தயாராக இருக்கிறார்'' என்றார்கள். ஆனால், மாமூல் ஈமு தொடர்பாக விசாரணை நடத்திவரும் ஈரோடு மாவட்ட வருவாய் அலுவலர் கணேஷிடம் பேசினோம். ''ஆயிரக்கணக்கான புகார்கள் வந்துள்ளன. 200 கோடி ரூபாய்க்கு மேல் முதலீடு செய்யப்பட்டு உள்ளது. புகார் தருபவர்கள் சத்யராஜ், சரத்குமார் போன்ற நடிகர்கள் சொன்னதனால்தான் முதலீடு செய்தோம் என்கின்றனர். இந்த விஷயத்தில் நடிகர்களும் பொறுப்பு உணர்வோடு நடந்து கொள்ள வேண்டும். இவை ஒரு பக்கம் இருக்க... அந்தப் பண் ணைகளில் இருக்கும் ஈமுவுக்கு உணவு கொடுக்க யாரும் இல்லை. அதன் பசியைப் போக்க நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகிறோம்'' என்றார். ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்களும் இருப்பார்கள்! நன்றி - ஜூ வி Tweet Read More Wednesday, June 27, 2012 ஜூவிக்கு சுளுக்கு, ஜெ கையில் சவுக்கு - பின்னணி என்ன? சி.பி.செந்தில்குமார் 12:22:00 PM JE, JU VI, அரசியல், அவதூறு வழக்கு, அனுபவம், நக்கீரன், யாகம், ஜூவி, ஜெ 1 comment சென்னை: முதல்வர் ஜெயலலிதா பற்றி அவதூறாக செய்தி வெளியிட்டதற்காக ஜூனியர் விகடன் இதழ் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. இது குறித்து தமிழக அரசு வழக்கறிஞர் எம்.எல்.ஜெகன் சென்னை முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது, கடந்த 24 ம் தேதி வெளியான ஜூனியர் விகடன் இதழில் முதல்வருக்கு எதிராக "யாக பூஜையில் போயஸ் கார்டன், அதிகார பயம், பரிகார நிஜம்" என்ற தலைப்பில் செய்தி வெளியாகியுள்ளது. இந்த செய்தி உண்மைக்குப் புறம்பானது. முதல்வர் ஜெயலலிதாவின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் உள் நோக்கத்துடன் வெளியிடப்பட்டுள்ளது. அவரது நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பது. எனவே இந்த செய்தியை வெளியிட்ட ஜூனியர் விகடன் ஆசிரியர் கண்ணன், வெளியீட்டாளர் அசோகன், மாதவன் ஆகியோர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது. ஏற்கனவே, முதல்வர் ஜெயலலிதா குறித்து அவதூறு செய்தி வெளியிட்டதாகக் கூறி நக்கீரன் இதழ் மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வரிசையில் தற்போது ஜூனியர் விகடன் இதழும் சேர்ந்துள்ளது. சர்ச்சைக்கு உள்ளான அந்த கட்டுரை மிஸ்டர் கழுகு: யாகப் புகையில் போயஸ் கார்டன்! கழுகாருக்கு மேளதாளம் வைக்காத குறையாக வரவேற்பு கொடுத்தோம்! புரியாதவர் போலவே நம்முடைய அலுவலகத்துக்குள் நுழைந்தார். லட்டைக் கிள்ளி கொஞ்சமாய் வாயில் போட்டுக்​கொண்டவரிடம், ''பிரணாப் பராக்... என்று நீர் சொன்னீர். அதுதான் நடந்தது!'' என்றோம். ''அதிகாரப் பட்சிகளுக்குள் அடிக்கடி பிரணாப் முகர்ஜி பெயர்​தான் இடம் பெற்றது. அதை வைத்துத்தான் சொன்னேன். பிரணாப்தான் ஜனாதிபதி வேட்பாளர் என்று, வெள்ளிக்​கிழமை மதியம்தான் சோனியா முடிவு எடுத்தார். இடைப்பட்ட நேரத்தில் அவருக்கு எத்தனையோ யோசனைகள். ஆனால், அத்தனையையும் மத்தியப் புலனாய்வுத் துறை கொடுத்த ஒற்றை வரி லாஜிக் அறிக்கை தகர்த்து விட்டதாம்!'' ''அது என்ன?'' ''ஜனாதிபதி பதவிக்கு யார் தகுதிஆனவர் என்று சோனியா கேட்ட அறிக்கைக்கு, எப்போதோ மத்திய உளவுத்துறை அறிக்கை கொடுத்து விட்டது. ஆனால், வெள்ளிக்கிழமை மாலை ஒரு தகவல் தந்தார்களாம். 'பிரணாப் வேட்பாளராக நியமிக்கப்​பட்டால், காங்கிரஸ் வலுவான போட்டியை எதிர்கொள்ளத் தேவை இல்லை. அவரை ஆதரிக்க எதிர்க்கூட்டணியிலேயே பல கட்சிகள் தயாராக இருக்கின்றன’ என்றதாம் அறிக்கை. 'வெற்றி பெறுவதற்கான பலம் இருந்தாலும் வேட்பாளர் ஸ்ட்ராங் ஆக இருக்க வேண்டும்’ என்பதில் உறுதியாக இருந்த சோனியா, இறுதியாக பிரணாப் முகர்ஜியை ஓகே செய்தார். இந்தத் தகவல் கிடைத்ததும், 'ஆண்டவனின் ஆசீர்வாதம்’ என்றாராம் பிரணாப்!'' ''சோனியாவின் ஆசீர்வாதம் என்றுதானே சொல்ல வேண்டும்?'' ''கடந்த மூன்று மாதங்களாக கோயில் கோயிலாக வலம் வந்தார்கள் பிரணாபின் ஆட்கள். 'எதிர்ப்புகளை உடைக்க காளி பூஜை’ என்று உமது டெல்லி நிருபர் எழுதி கடந்த மாதமே ஒரு கட்டுரை நீர் வெளியிட்டு இருந்​தீர் . 'இப்போது ஜோதிடருடன் சேர்ந்து மகாகாளியையும் நம்பத் தொடங்கி விட்டார் பிரணாப். எதிர்ப்புகளை நசுக்குவதற்காக தன்​னுடைய வீட்டிலேயே காளி பூஜையைத் தொடர்ந்து நடத்தி வருகிறார் என்றும் சொல்லப்படுகிறது. நள்ளிரவில் நடக்கும் இந்தக் காளி பூஜை, எதிர்ப்புகளை எல்லாம் உடைத்துத் தள்ளுமாம்’ என்று உமது நிருபர் எழுதி இருந்தார். அந்த அளவுக்கு பூஜையில் மூழ்கினார் பிரணாப். கும்பகோணம் வந்து சூரியனார் கோயிலுக்கு ஒன்பது பசு மாடுகளைத் தானம் செய்து, அதற்கான சிறப்பு பூஜைகள் செய்து உள்ளார்கள் பிரணாபின் ஆட்கள். பூரி ஜெகந்நாதர் ஆலயத்திலும் பிரணாபின் வெற்றிக்காக சிறப்பு பூஜை நடந்துள்ளது. அவருடைய குடும்பத்தின் ஆஸ்தான புரோகிதர் என்று சொல்லப்​படும் ராஜேஸ் தைதபதி என்பவர்தான் இதற்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்துள்ளார். மூன்று மாதங்களுக்கு முன்பே அந்த ஆலயத்தில் பூஜை செய்யப்பட்ட வஸ்திரங்கள், பிரணாப் வீட்டு பூஜை அறையையும் அலங்கரித்து உள்ளன. இதையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது, தன்னுடைய நம்பிக்கை​யின் அடிப்படையில் ஆண்டவனுக்கு நன்றி சொல்லிக்​கொண்டாராம் பிரணாப்!'' ''அடுத்த நிதி அமைச்சர்?'' ''பலர் குறி வைக்கிறார்கள். ப.சிதம்பரம், ஜெய்ராம் ரமேஷ் பெயர்கள் பலமாக அடிபடுகின்றன. ஊரகத் தொழில் துறை அமைச்சராக இருக்கும் ஜெய்ராம் ரமேஷ், பொருளாதாரம் படித்தவர். பிரணாப் முகர்ஜியோடு பணியாற்றி இருக்கிறார். திட்டக் குழு உறுப்பினர்போன்ற தகுதிகள் உண்டு. அதனால் அடுத்த நிதிஅமைச்சர் ஜெய்ராம் ரமேஷ்தான் என்பது சோனியாவின் சாய்ஸ்.'' ''தி.மு.க-வுக்குப் பிடிக்காத ஆள் ஆச்சே?'' ''ஆமாம். 2009-ல் ஜெய்ராம் ரமேஷ் மத்தியச் சுற்றுச்சூழல் துறை அமைச்சராக இருந்தபோது, கேரளா புதிய அணை கட்டுவது தொடர்பான ஆய்வுக்கு அனுமதி அளித்தார். இதைக் கருணாநிதி கடுமையாக எதிர்த்தார். 'ஜெய்ராம் ரமேஷ§க்குக் கண்டனம் தெரிவித்து மதுரையில் நவம்பர் 1-ம் தேதி பொதுக்கூட்டம் நடைபெறும்’ என அப்போது தி.மு.க. அறிவித்தது. கேரள அணை தொடர்பாக அப்போது முதல்வராக இருந்த கருணாநிதி எழுதிய கடிதத்துக்கு ஜெய்ராம் ரமேஷ் பதில் அனுப்பாததையும் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் புகாராகத் தெரிவித்தார் கருணாநிதி. ஜெய்ராம் ரமேஷ§க்கு எதிரான போராட்டத்துக்கு காங்கிரஸ் கட்சியில் இருந்து கடுமையான எதிர்ப்பு கிளம்பியதால், போராட்டத்தைக் கைவிட்டார். அப்படிப்பட்டவரை நிதி அமைச்சராக்க தி.மு.க. நிச்சயம் எதிர்க்கும்!'' ''ப.சிதம்பரம் நிதிஅமைச்சர் ஆவதை தி.மு.க. விரும்புமே?'' ''ஆமாம்! பிரணாப் முகர்ஜியை வேட்​பாளராக அறிவிக்கும் காங்கிரஸ் கூட்டணிக் கட்சிகளின் கூட்டத்தில், தி.மு.க. சார்பில் டி.ஆர். பாலுவும் விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் திருமா வளவனும் கலந்துகொண்டார்கள். வேட்பாளர் பெயர் அறிவிப்புக்கே பொக்கே, சால்வைகளை சோனியாவுக்கு இவர்கள் வழங்கியதைப் பார்த்து வட இந்தியத் தலைவர்கள் முகம் சுளித்தார்கள். 'பிரணாப் முகர்ஜி நாடாளுமன்ற அவை முன்னவராகவும் இருக்கிறார். காலியாகும் அந்தப் பதவியை சோனியாவுக்கு வழங்க வேண்டும்’ என்று காங்கிரஸ்காரர்களே சொல்லாதபோது, அவர்கள் கட்சியின் செய்தித் தொடர்பாளராக மாறி டி.ஆர். பாலு பேட்டி கொடுத்ததையும் டெல்லிப் பத்திரிகையாளர்கள் மௌனச் சிரிப்புடன் குறித்துக்கொண்டார்கள்!'' 'இப்படி பாலு ஐஸ் வைப்பதற்குக் காரணம் கேபினெட் மீது அவருக்கு இருக்கும் கண்தான்.’ என்கிறார்கள்!'' என்றவர், டெல்லிச் செய்திகளில் இருந்து தமிழக அரசியலுக்குள் புகுந்தார். ''புதுக்கோட்டை இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்கு முன்னதாகவே, அ.தி.மு.க-வுக்கு வெற்றி கிடைக்கும். விஜயகாந்த்தும் நிறைய வாக்குகள் வாங்குவார். இது தொடர்பாக தமிழக உளவுத் துறை போலீஸார், முதல்வருக்கு அனுப்பி உள்ள ரிப்போர்ட்டையும் கடந்த இதழில் சொல்லி இருந்தேன். 'நாமதான் ஜெயிப்போம். அப்புறமா எதுக்கு செலவு செய்யணும்?’ என்ற மிதப்பில் பலரும் பணத்தைப் பதுக்கி​ விட்டதையும் சொன்னேன். தேர்தல் முடிவு வெளியான வெள்ளிக்கிழமை, அப்செட் ஆனார் முதல்வர். தலைமைச் செயலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனையில் இருந்தவர், அதைப் பாதியில் முடித்துவிட்டு, கார்டன் கிளம்​பினார். வழக்கம்போல அம்மாவை வழி அனுப்ப போர்டிகோவில் காத்திருந்தார்கள் அமைச்சர்கள். சீரியஸான முகத்துடன் அவர்களைப் பார்த்து விட்டுக் கிளம்பினார். மறுநாள் காலை கார்டனில் இருந்து அமைச்சர்களுக்கு அழைப்பு போனது!'' ''அனல் பறந்ததா?'' ''11.30-க்கு வரச்சொல்லிவிட்டு, 1.30-க்குத்தான் அவர்களைச் சந்தித்தார். மொத்தம் 14 அமைச்சர்கள் போனார்களாம். பத்தே நிமிடங்கள்தான் பேசினாராம் முதல்வர்... அத்தனையும் அனலான வார்த்தைகள். தே.மு.தி.க. டெபாசிட் வாங்கியது எப்படி என்பதுதான் ஜெயலலிதாவின் கேள்வி. 'ஜெயிச்சிடுவோம்கிற மிதப்பிலேயே இருந்திருக்கீங்க’ என்றாராம் முதல்வர். ' நகர்ப் புறங்களில் நமக்கு ஓட்டு விழவில்லை. முஸ்லிம் வேட்பாளர் என்பதால் முஸ்லிம் வாக்குகள் அவருக்கு முழுமையாகச் சென்றுவிட்டன’ என்று மந்திரிகள் சில சமாதானங்களைச் சொல்லி இருக்கிறார்கள். ஆனால் எதையும் முதல்வர் ஏற்கவில்லை!'' ''ஆனாலும், 1006 திருமணங்களை சந்தோஷமாகத்​தானே முதல்வர் நடத்தி வைத்தார்?'' 'திருவேற்காடு கருமாரியம்மன் கோயிலில் நடக்கும் திருமண விழாவை தனது முக்கியமான பரிகாரமாகவே ஜெயலலிதா செய்து முடித்துள்ளார். இதற்கான ஏற்பாடுகளைச் செய்யும்போது, சிலர் இதற்குத் தடை போடும் காரியத்தையும் பார்த்தார்கள். 'திருமணம் நடப்பதற்காகக் குறிக்கப்பட்டுள்ள திருமண நாள் முழுஅமாவாசை நாள். எனவே இந்தத் தேதியில் திருமணம் செய்வது கெடுதல்’ என்று சிலர் கடிதம் எழுதி அனுப்பவும் ஆரம்பித்தார்கள். இந்து அறநிலையத் துறையில் இருக்கும் அதிகாரி ஒருவரைக் குறிவைத்து, அவருக்குப் பிடிக்காத கோஷ்டியினர் செய்த வேலைபோல அது இருந்தது. 19-ம் தேதி செவ்வாய்க்கிழமைதான் அமாவாசை. அதன்படி பார்த்தால் 18-ம் தேதி இரவு 7 மணியில் இருந்துதான் போதாயன அமாவாசை தொடங்கும். ஆனால், முதல்வர் ஏற்பாடு செய்த திருமணங்கள், காலை 9.30-க்கு நடந்து விட்டன. எனவே, கடிதத்தில் சொல்லப்பட்டுள்ள பீதி இதற்குப் பொருந்தாது. 6, 9, 15, 18, 24, 27 ஆகிய தேதிகளில்தான் முக்கியமான தனது நடவடிக்கைகளை முதல்வர் வைத்துக்கொள்வார் என்பதால் இந்தத் தேதி குறிக்கப்பட்டதாம்!'' ''அப்படியா?'' ''19-ம் தேதி அன்று போயஸ் கார்டன் முழுக்க யாகப் புகை வீச இருக்கிறது. அதே நேரத்தில் பையனூரிலும் யாகம் நடக்க இருக்கிறது. சுமார் 11 மணி நேரம் நடக்கு​மாம் இந்த யாகம். 'ஆட்சிக்கு எந்த ஆபத்தும் வரக்கூடாது, உடல் நலமும் சிறப்பாக இருக்க வேண்டும், எதிரிகளின் பலம் குறைய வேண்டும்... என்பதற்காக இந்த யாகம் நடத்தப்பட உள்ளது’ என்கிறார்கள். இதற்கென மாயவரத்தில் இருந்து பிரத்யேகமான புரோகிதர்கள் சென்னை வந்து நான்கைந்து நாட்களாக டேரா போட்டு உள்ளனர். இவை முடிந்த பிறகுதான் கொடநாடு பயணம் குறித்த திட்டங்களை வகுக்க இருக்கிறார்.'' ''கொடநாடு பயணம் இருக்காது என்றும் சொன்னார்களே?'' ''இறுதி முடிவுக்கு இன்னும் முதல்வர் வரவில்லை. அப்படிச் சென்றால், குறைந்தது இரண்டு மாதங்கள் வரை அவர் அங்கு இருக்கலாம் என்றும் சொல்​கிறார்கள்!'' ''சசிகலாவை அழைத்துச் செல்வாரா?'' ''கேட்பீர் என்று நினைத்தேன். இவர் செல்லும்போது அவர் செல்ல மாட்டார். அப்புறம் தனியாகப் போகலாம்!'' ''ஓ!'' பெங்களூரு கோர்ட் மேட்டரை ஓப்பன் செய்தார் கழுகார்... ''சசிகலாவுக்கு தனி நீதிமன்றம் மீண்டும் கிடுக்கிப்பிடி போட்டு உள்ளது. கடந்த 6-ம் தேதி சசிகலா கோர்ட்டுக்கு வரவில்லை. கண்டித்தார் நீதிபதி. '18-ம் தேதி நிச்சயம் வருவோம்’ என்றார்கள். அன்றும் வராவிட்டால் நீதிபதிக்கு கோபம் பொங்கத்தானே செய்யும்!'' ''தைரியம்தான்!'' ''18-ம் தேதி காலை 11 மணிக்கு, 'சசிகலாவிடம் மிச்சம் இருக்கும் கேள்விகளுக்குப் பதில்களைப் பிடுங்க வேண்டும்’ என்ற வேகத்தில் வந்தார் நீதிபதி மல்லிகார்ஜுனையா. வந்ததும் குற்றவாளிக் கூண்டை நோட்டமிட்டவருக்கு ஷாக். சசிகலா, சுதாகரன், இளவரசி மூவரையும் காணவில்லை . கடிகாரத்தைப் பார்த்தவர், 'ஒருவேளை தாமதமாக வருவார்கள்’ என்று நினைத்தார். ஆனால், வழக்கம்போல மூவரின் வக்கீல்களும் மனுவை நீட்டினார்கள். 'என்ன இது? கொஞ்சம்கூட சட்டத்தை மதிக்காமல் நடந்து கொள்கிறீர்கள். ஒவ்வொரு முறையும் ஏதாவது காரணம் காட்டி இழுத்தடிக்கிறீர்கள்?’ என்று சீறினார் நீதிபதி. முதலில் எழுந்த சசிகலாவின் வக்கீல் மணிசங்கர், 16 பக்க அறிக்கையை ஏற்ற இறக்கங்களோடு வாசித்தார். அதில் ஆறு பக்க மருத்துவச் சான்றிதழும் இருந்தது. '63 வயதான சசிகலா சட்டத்தை எப்படி எல்லாம் மதித்து இருக்கிறார். மதிக்கப்போகிறார்’ என்பதை 10 நிமிடங்கள் விலாவாரியாக‌ எடுத்துச் சொன்னவர், '1991-ம் ஆண்டு சசிகலா கார் விபத்தில் சிக்கினார்.அப்போது இருந்து அவரது இடது கண்ணில் பிரச்னை இருக்கிறது. கடந்த 22 வருடங்களாக கண்ணில் 'குளுக்கோமா’ கோளாறு இருப்பதால் கடும் அவதிப்பட்டு வருகிறார். கண் புரையும் இருக்கிறது. இதைத் தொடர்ந்தே கடந்த மே 26-ம் தேதி ஆழ்வார்பேட்டையில் உள்ள உதி மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நடைபெற்றது. நீண்ட தூரம் பயணம் செய்யக் கூடாது.. . நீண்ட ஓய்வு எடுக்க வேண்டும் என மருத்துவர் அறிவுறுத்தி இருக்கிறார்’ என்று சொன்னார் வக்கீல். இவர் வாதாடிக்கொண்டு இருக்கும்போது, வக்கீல் செந்திலும் ஜெயலலிதா வக்கீல் பி.குமாரும் அவருக்கு பாயின்ட்ஸ் எடுத்துக் கொடுத்தனர். அதனால் டென்ஷன் ஆன‌ நீதிபதி மல்லிகார்ஜுனைய்யா, 'இது கோர்ட்டா? இல்லை மார்க்கெட்டா?’ என்று சத்தம் போட, செந்தில் எழுந்து மன்னிப்பு கோரினார். மேலும் டென்ஷனான நீதிபதி மல்லிகார்ஜுனையா, 'தமிழ்நாடு சி.எம். ஆக இருக்கிற ஜெயலலிதாவே கோர்ட்டின் கேள்விகளுக்குப் பதில் சொல்லி விட்டார். சசிகலா கோர்ட்டில் ஆஜராகி விளக்கம் அளிக்காமல் இழுத்தடிக்கிறார். உலகில் வியாதி இல்லாத மனிதர்க‌ளே இல்லை. அதேபோன்று எல்லா குற்றவாளிகளுக்கும் எதாவது ஒரு வியாதி இருக்கத்தான் செய்கிறது. அதற்காக கோர்ட்டில் ஆஜராகாமலா இருக்கிறார்கள்? பிடிவாரன்ட் பிறப்பித்தால் கோர்ட்டைத் தேடி வருவீர்கள்தானே?’ என சீறிவிட்டு, சுதாகரன் வராத காரணத்தைக் கேட்டார். அப்போது எழுந்த வக்கீல் சரவணகுமார், 'சுதாகரனுக்கு கடுமையான முதுகுவலி. அதனால் பயணம் செய்ய முடிய​வில்லை’ என்றார். அதன் பிறகு இளவரசியின் வக்கீல் அசோகன் எழுந்து, 'இளவரசிக்கு சர்க்கரை நோய் அதிகமாக இருக்கிறது. தொடர் வாந்தி வேறு. அதனால் பயணம் செய்ய முடியவில்லை’ எனப் பள்ளிக்கூடத்துக்கு வராத பிள்ளைகள்போல் வரிசையாகக் காரணங்களை அடுக் கினார்கள்!'' ''ஓஹோ!'' ''நீதிபதி மல்லிகார்ஜுனையா கோபத்தின் உச்சிக்கே போய்விட்டார். 'அதெப்படி மூன்று பேரும் ஒரே காரணத்தை மாறிமாறிச் சொல்லி கோர்ட்டின் நேரத்தை வீணாக்குகிறீர்கள். ஒவ்​வொரு முறை தேதி கேட்பதும், ஆஜராகாமல் இழுத்தடிப்பதுமே வாடிக்கையாகி விட்டது. உலகில் குற்றவாளிகளுக்கு நோய் இருக்கிறது என்பதால், சட்டத்தையும் கோர்ட்டையும் மூடி விட முடியுமா? இவ்வளவு சொன்ன பிறகும் உங்கள் இழுத்தடிப்பு இன்னும் ஓயவில்லையே? இனி சசிகலா ஆஜராகத் தவறினால், சுதாகரனிடமும் இளவரசியிடமும் கேள்விகள் கேட்கப்படும். அதற்குத் தயாராக வந்து விடுங்கள். அடுத்த முறை கட்டாயம் ஆஜராக வேண்டும். இல்லாவிட்டால், என்னிடமிருந்து நீங்கள் எதிர்பார்க்காத ஆர்டர் வரும்’ என்று கடுமை​யாக எச்சரித்தார். இதைத் தொடர்ந்து வழக்கு 25-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. அன்றும் வராவிட்டால், வாரன்ட் பிறப்பிக்கப்படுமாம்!'' ''இதுவரை ஒழுங்காக ஆஜராகி வந்தாரே சசிகலா?'' ''திருவான்மியூரில் உள்ள பாம்பன் சுவாமி சமாதிக்கு அமாவாசை தோறும் வருவதாக சசிகலா வேண்டி இருக்கிறாராம். இங்கு வந்தால் செவ்வாய்க்கிழமை அங்கு போக முடியாது என்று நினைத்தாராம். அதனால் வரவில்லையாம்!'' என்ற கழுகாரிடம்... ''இன்று சொன்ன பாதி மேட்டர்கள் பூஜை, புனஸ் காரங்களாகவே இருக்கின்றனவே!'' என்று கேட்டோம். பதில் சொல்லாமல் சிரித்தார், பறந்தார்! குண்டாஸ்..! சேலம், அங்கம்மாள் காலனியில் இருந்த குடிசைகளுக்குத் தீ வைத்த விவகாரத்தில் இரண்டு வாரங்களுக்கு முன் கைது செய்யப்பட்டார் முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம். அங்கம்மாள் காலனியில் இருந்த ஜெயலலிதா ஃப்ளெக்ஸுக்குத் தீ வைத்தது, கடந்த முறை அவர் கைது செய்யப்பட்ட நேரத்தில் தி.மு.க-வினர் ஜெயலலிதா போன்று சேலை அணிந்து அசிங்கப்படுத்தியது என ஆறுமுகத்தின் மீது தீராத கோபத்திலேயே இருந்தது மேலிடம். அதனால்தான், சென்னையில் கைது செய்யப்பட்டவரை சேலம், புழல், வேலூர் என்று அலைக்கழித்தது போலீஸ். இன்னும் சில நாட்களில் ஜாமீன் கிடைத்து விடும் என்ற நிலையில், இப்போது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்திருக்கிறது. இப்போதைக்கு, ஆறுமுகம் வெளியில் வருவது கஷ்டம்தான்! நன்றி - தட்ஸ் தமிழ் , ஜூ வி , தகவல் சொன்ன ட்விட்டர் நண்பர்கள்,தினமணி, கார்ட்டூனிஸ்ட் மதி Tweet Read More Wednesday, May 30, 2012 ஃபேஸ்புக் மூலம் ஏமாற்றப்பட்டு கற்பை இழந்த சேலம் பெண்கள்-ஜூ வி கட்டுரை சி.பி.செந்தில்குமார் 8:57:00 AM FACEBOOK, JU VI, SELAM, ஃபேஸ்புக், சேலம், பெண்கள் விழிப்புணர்வு, மோசடி 4 comments நட்பு வட்டங்களுக்குத் தளமாக இருக்கும் ஃபேஸ்புக், சில நேரங்களில் தப்பு வட்டங்களுக் கான களமாகி விடுகிறது. இதற்கு சமீபத்திய உதாரணம் சேலத்தைச் சேர்ந்த லலிதாவும் கன்னியாகுமரியை சேர்ந்த மேரியும் (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன). பேஸ்புக் மூலமாக அறிமுகம் ஆன நண்பர்களிடம் தங்களையே இழந்து நிற்கிறார்கள் இருவரும்! கடந்த 24-ம் தேதி வேலூர் மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் வந்து புகார் கொடுத்தவர்கள் சார்பில் பேசினார் வழக்கறிஞர் மணிகண்டன். ''லலிதா, மேரி இருவரும் தோழிகள், சென்னையில் ஒரு நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்கள். இருவரும் ஃபேஸ்புக்கில் இருக்கின்றனர். ஃபேஸ்புக் மூலமாக லலிதாவுக்கு வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டையைச் சேர்ந்த சதீஷ் பழக்கமானார். சதீஷின் நண்பர் ஆனந்தபாபுவும் லலிதாவிடம் அறிமுகமாக, மேரியும் அவர்களின் நட்பு வட்டத்தில் சேர்ந்துள்ளார். சிவப்புச்சட்டை போட்டு நான் டேஞ்சரான ஆள்னு சொல்லாம சொல்றாரு போல அண்ணன் பார்க்க பாரதிராஜா பையன் மனோஜ் மாதிரி இருக்காரு அடுத்து செல்போன் பேச்சாக இவர் கள் நட்பு வளர்ந்துள்ளது. அதைத் தொடர்ந்து, ஜனவரி மாதத்தில் ஒரு நாள் லலிதாவையும் மேரியையும் பார்க்க ராணிப்பேட்டை நண்பர்கள் காரில் சென்னைக்கு வந்தனர். இருவரையும் வேலூர் மாவட்டத்தில் இருக்கும் தங்கக் கோயிலுக்குக் கூட்டிச் செல்வதாக அழைத்துப் போனார்கள். சி.பி - ஹா ஹா >>வேலூர் மாவட்டத்தில் இருக்கும் தங்கக் கோயிலுக்குக் கூட்டிச் செல்வதாக>>> தங்கக்கோயிலா? அங்கே போய் தங்கறதுக்கு கோயிலா? ஆனால் அவர்கள், ராணிப்பேட்டையில் இருக்கும் ஒரு ஹோட்டலுக்கு அழைத்துப் போயி ருக்கிறார்கள். அங்கே ஆனந்த பாபு - மேரி ஓர் அறையிலும், லலிதா - சதீஷ் ஓர் அறையிலும் தங்கி இருக்கின்றனர். காதலிப்பதாகவும் உருக்கமான வார்த்தைகளால் சொல்லி இருக்கிறார்கள். தங்களை நிச்சயமாகத் திருமணம் செய்து கொள்வார்கள் என்று எண்ணி, இருவரும் அவர்களிடம் ஏமாந்து போய் இருக்கின்றனர். பிறகு, 'எப்போது திருமணம்?’ என்று பெண்கள் இருவரும் நச்சரித்திருக்கிறார்கள். சி.பி - ஏம்மா, அப்பாவிப்பெண்களே! அந்த நச்சரிப்பை மேட்டர்க்கு முன்னாலயே பண்ணி இருந்தா தக்காளிங்க 2ம் ஓடி இருக்குமே? ஆள் எஸ் ஜே சூர்யா மாதிரியே இருக்காரு. அப்பவாவது பொண்ணுங்க ஜாக்கிரதையா இருந்திருக்கலாம் 'உங்களிடம் நாங்கள் டைம் பாஸ்க்குத்தான் பழகினோம். உங்களை எங்களால் திருமணம் செய்ய முடியாது. மீறி ஏதாவது பிரச்னை செய்ய நினைத்தால், உங்களின் அந்தரங்கப் புகைப்படங்கள் எங்களிடம் இருக்கிறது, அதை ஃபேஸ்புக்கில் போட்டுவிடுவோம்’ என்று மிரட்டி இருக்கிறார்கள். சி.பி - உடனே பொண்ணுங்களும் மிரட்டி இருக்கனும்.. தம்பி.. உன் ஆபாச ஃபோட்டோவும் இருக்கு அதை நாங்க நெட்ல போட எவ்ளவ் நேரம் ஆகும்? எங்க முகத்தை மறைச்சு உன் முகம் தெரியற மாதிரி போட்டுடுவோம்னு மிரட்டி இருக்கலாம் , பய புள்ளங்க பயந்து தெறிச்சிருக்கும் அவர்களின் நண்பர்களான திலீப், லூயிஸ், ஆனந்த நித்தியானந்தம் ஆகியோரும் இந்தப் பெண் களை மிரட்டவே, தாங்கள் ஏமாற்றப்பட்டதாக வேலூர் எஸ்.பி. அலுவலகத்தில் புகார் கொடுத்துள் ளார்கள். இப்போது ஆனந்த், சதீஷ் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்கள்'' என்றார் கொந்தளிப்பாக. வேலூர் காவல் துறையினரிடம் விசாரித் தோம். ''சதீஷ் மிகவும் டிப்டாப்பாக இருப்பான். பெண்களை ஏமாற்றுவது சதீஷ§க்கும் அவனது நண்பன் ஆனந்த பாபுவுக்கும் கை வந்த கலை. ஏற்கெனவே சென்னையைச் சேர்ந்த விஜயலட்சுமியை ஃபேஸ்புக் மூலம் தொடர்புகொண்டு, சதீஷ் ஏமாற்றி உள்ளான். 'உன்னுடைய ஆபாசப் படம் என்னிடம் இருக்கிறது. இரண்டு லட்சம் தர வேண்டும்’ என்று மிரட்டி, 50,000 ரூபாய் வாங்கியுள்ளான். மேலும் மிரட்டவே, விழுப்புரம் மாவட்டத்தில் அந்தப் பெண் புகார் கொடுத்துள்ளார். இதுபோன்று நிறையப் பெண்களை ஏமாற்றி இருக்கிறார்கள். எங்களின் கணிப்புப்படி 15-க்கும் மேற்பட்ட பெண்கள் ஏமாந்திருப்பதாகத் தெரிகிறது'' என்று சொன்னார்கள். இந்த விவகாரம் குறித்துப் பேசும் வேலூர் மாவட்டத்தில் யாஸ்காம் இன்டர்நெட் சென்டர் நடத்திவரும் ஆஸாம் இர்பான், ''பெண்கள் ஃபேஸ்புக்கில் எந்தக் காரணம்கொண்டும் யாருக்கும் தொலைபேசி எண்ணைத் தரக்கூடாது. நன்கு அறிமுகமான நபர்களை மட்டுமே தங்களுடைய நண்பர்கள் பட்டியலில் சேர்த்துக்கொள்ள வேண்டும். தனது புகைப்படங்களையோ அல்லது குடும்பத்தாரின் புகைப்படங்களையோ ஃபேஸ்புக்கில் வெளியிடக்கூடாது. அறிமுகம் இல்லாத நபர்களிடம் சாட் செய்யாதீர்கள்'' என்று ஆலோசனைகள் சொன்னார். பெண்களே உஷார்! Tweet Read More Wednesday, May 16, 2012 ஜெயேந்திரர் ரஞ்சிதாவிடம் பம்முவது ஏன்? கோர்ட் காட்சிகள் சி.பி.செந்தில்குமார் 5:10:00 PM COMEDY, JU VI, RANJITHA, அனுபவம், நகைச்சுவை, ரஞ்சிதா, ஜூவி, ஜெயேந்திரர் 1 comment எதிலும் கருத்துச் சொல்​லாமல் ஒதுங்கிச் செல்​லும் ஜெயேந்திரர், நித்தியானந்​தா விவகாரத்தில் ரஞ்சிதா குறித்துப் பேச... நீதிமன்றத்தில் நிற்கிறது சிக்கல். கடந்த 9-ம் தேதி, ஆன்மிகசுற்றுப்​பயணத்தில் இருந்த ஜெயேந்​திரர், கிருஷ்ணகிரியில் பத்திரிகையாளர்​களைச் சந்தித்​தார். சி.பி - சாமியார், ஆதீனம் இந்த மாதிரி துறவிகள் எதுக்கு சுற்றுப்பயணம்கற பேர்ல ஊர் சுத்தறாங்க? மனசுக்குள்ள ஜனாதிபதின்னு நினப்பா? ''மதுரை ஆதீனமாக நித்தியானந்தர் நியமிக்கப்பட்டது சரி​யானது அல்ல. நாங்கள் அதை ஆதரிக்கவும் இல்லை. ஆதீனமாக வருபவர் மொட்டை அடித்து ருத்ராட்சம் அணிந்து மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும். ஆனால், நித்தியானந்தர் அப்படிச் செய்யவில்லை. சி.பி - இதெல்லாம் ஒரு பிரச்சனையா? அவர் தான் இந்துக்கள் அனைவர்க்கும் காது குத்தி மொட்டை போட்டுட்டாரே.. போதாதா? அதோடு, நித்தியானந்​தாவோடு எப்போதும் ரஞ்சிதா என்ற பெண் உடன் இருக்கிறார். இது, ஆன்மிகத்துக்கு எதிரானது. ஆன்மிகவாதிகள் இந்த விஷயத்தை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்'' என்று ஒரு வெடியைக் கொளுத்திப் போட்டார். அதுதான் இப்போது பற்றி எரிகிறது. சி.பி - ஐ அப்ஜெக்ட் யுவர் ஆனர்.. நித்தி எப்போதும் ஜிஞ்ஜிதா வுடன் தான் இருக்கிறார் என்பதை நான் கடுமையாக கண்டிக்கிறேன். அவர் பலருடன் இருப்பார். 10 ஓடு 11 தான் அவர் ஹி ஹி ''10 நாட்களுக்குள் ஜெயேந்திரர் இந்தக் கருத்தை வாபஸ் வாங்கிக்கொள்ள வேண்டும். இல்லை என்றால், நாங்கள் சட்டரீதியாக எதிர்கொள்வோம்'' என்று, நித்தியானந்தர் எச்சரித்தார். '10 நாட்கள் எதற்குப் பொறுக்க வேண்டும்?’ என்று நீதிமன்றப் படி ஏறிவிட்டார் ரஞ்சிதா. எழும்பூர், தலைமை மாநகரக் குற்றவியல் நீதிமன்றத்​துக்குக் கடந்த 11-ம் தேதி வந்தார் ரஞ்சிதா. போக்குவரத்து நெரிசலில் சிக்கி ரஞ்சிதா வந்து சேருவதற்குத் தாமதமாகிப்போனது. நீதிமன்றத்தில் அழைத்தபோது ரஞ்சிதா வராத காரணத்தால், அவரது மனு ஏற்றுக்கொள்ளப்படவில்லை. மீண்டும் 14-ம் தேதி காலை கோர்ட்டுக்கு வேகமாகவே வந்து சேர்ந்தார். 'என் பெயருக்கும் புகழுக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் பேசிய ஜெயேந்திரர் மீது, இ.பி.கோ. 499, 500 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும்’ என்று மனுத்தாக்கல் செய்தார். மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதி ரவீந்திரன், மனு மீதான விசாரணையை வரும் 16-ம் தேதிக்கு ஒத்திவைப்பதாக உத்தரவு போட்டார். ரஞ்சிதாவிடம் பேசினோம். ''நான் உண்டு என் வேலை உண்டுன்னு இருக்கேன். ஜெயேந்திரர் தேவை இல்லாமல் என்னை வம்புக்கு இழுத்திருக்கிறார். நடிகைதானே... என்ன சொன்னாலும் கேட்டுக்கிட்டு அமைதியா போயிடுவானு நினைச்​சிட்டார். கண்டிப்பா இந்த விஷயத்தை நான் சும்மா விட மாட்டேன். எப்படி ஊரைக் கூப்பிட்டு என்னைப் பத்தி அவதூறாகப் பேசினாரோ, அதைப் போன்று, 'நான் பேசியது தப்பு’ என்று, அவர் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்க வேண்டும். அதுவரை நான் ஓய மாட்டேன்'' என்றார். ரஞ்சிதா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், முருகைய்யன்​ பாபு, அப்ரார் அஹமது ஆகியோரிடம் பேசினோம். ''ரஞ்சிதாவின் பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் ஜெயேந்திரர் பேசி இருக் கிறார். அந்தப் பேச்சு ரஞ்சிதாவின் மனதை ரொம்பவே பாதித்து விட்டது. அதனால் எந்தச் சூழ்நிலையிலும் வழக்கை வாபஸ் வாங்க மாட்டோம்'' என்று அழுத்தமாகச் சொன்னார்கள். ஜெயேந்திரரின் கருத்தை அறிய, காஞ்சி மடத்தைப் பல முறை நாம் தொடர்பு​கொண்​டோம். இது பற்றி அவர் பேச விரும்பவில்லை என்றதும், மடத்துக்கு நெருக்கமான சிலரிடம் பேசினோம். ''ரஞ்சிதாவைப் பற்றி தேவை இல்லாமல் பேசிவிட்டோமோ என்று, ஜெயேந்திரர் இப்போது வருத்தத்தில் இருக்கிறார். மடத்துக்கு வேண்டப்பட்ட டெல்லியைச் சேர்ந்த ஒரு முக்கியப் பிரமுகர் ஒருவரும் இந்தப் பேச்சை ரசிக்கவில்லை. அதனால், ஜெயேந்திரருக்குப் போன் செய்து அந்த முக்கியப் பிரமுகர் கோபத்தோடு பேசி இருக்கிறார். அதில் ஜெயேந்திரர் ரொம்பவே அப்செட். அதனால்தான் யாரையும் சந்திப்பதைத் தவிர்க்கிறார். ஆனால், இந்த விஷயத்தில் ஜெயேந்திரரை முடக்கிவிடலாம் என்று சிலர் திட்டம் போட்டு பல்வேறு காரியங்களைச் செய்கிறார்கள். இந்த சலசலப்புக்கு எல்லாம் காஞ்சி மடம் அஞ்சாது. எல்லாப் பிரச்னைகளையும் சட்ட ரீதியாக எதிர்கொள்வோம்'' என்றனர். இதற்கிடையில், ரஞ்சிதாவைத் தொடர்புகொண்ட காஞ்சி மடத்து நிர்வாகி ஒருவர், 'பேசியது தவறு என்பதை ஜெயேந்திரர் உணர்ந்து கொண்டார். உங் களிடம் போன்ல வருத்தம் தெரிவிக்கத் தயாராக இருக் கிறார்.அதனால் நீங்க வழக்கை வாபஸ் வாங்கிடுங்க..’ என்று கேட்டுக்கொண்டாராம். ஆனால் ரஞ்சிதாவோ, 'பிரஸ் மீட் வெச்சு என்னை அசிங்கப்படுத்திட்டு, போன்ல மன்னிப்பு கேட்பாரா..? பிரஸ் மீட் நடத்தி மன்னிப்பு கேட்கச் சொல்லுங்க, பிறகு பார்க்கலாம்’ என்று போனை கட் செய்து விட்டாராம். சி.பி - விடம்மா விடம்மா.. இதெல்லாம் பெரிய மேட்டரா? டைம் லைன்ல ஏடாகூடமா பேசிட்டு டி எம் ல கால்ல விழறது தமிழர்களூக்குபுதுசா என்ன? அட்ஜஸ் பண்ணிக்குங்க.. மக்கள் கருத்து 1.ஜெயந்திரர் பகிரங்கமாகவே மன்னிப்பு கேட்க வேண்டும். மடாதிபதி என்பதால் யாரை வேண்டுமானாலும் நிந்திக்கலாம் என்ற அகங்காரம் இந்த விஷயத்தில் மட்டுமல்ல மற்ற எல்லா விஷயத்திலும் பின்பற்றலாம். இனி "பேச்சுரிமை" என்று அசிங்கமாக (தேர்தல் மேடைகளில் ஜெஜெ-வை திட்டியது ஒரு உதாரணம் - இதில் எல்லா கட்சிகளும் அடக்கம், ஜெஜெ ஒரு உதாரணமே), ஆபாசமாக, பூடகமாக பேசுவது குறைந்தால் மக்கள் குறைகளை, தேவைகளை பற்றி பேசுவார்களோ என்னமோ? காஞ்சி மடாதிபதி என்றால் என்ன? இன்னமும் எச்சரிக்கையுடன் அல்லவா இருக்க வேண்டும் ஏனெனில் தெரிந்தோ தெரியாமலோ இந்த மனிதரை தங்கள் தலைவராக அல்லவா ஒரு கூட்டமே (அல்லது சமுதாயமே) ஏற்று கொண்டிருக்கிறது. அவர்கள் எல்லோரும் இது போல கீழ்தரமாக பேசுபவர்கள் என்ற எண்ணத்தை அல்லவா இது தோற்றுவிக்கிறது. பகிங்கரமாக மன்னிப்பு கேட்டால் இவரின் மதிப்பு கூடுமே தவிர குறையாது (குறைவது போல தோன்றினாலும்). தன் தவறை உணர்ந்து அதற்காக தைரியமாக மன்னிப்பு கேட்கும் அளவிற்கு தெளிவானவர் என்று. இதனை மூடி மறைத்தால் அது இவருக்குதான் இன்னமும் அசிங்கம் - ஏற்கனவே கொலை வழக்கில் சிக்கி அவமானப்பட்டவர்.. 2.Cavitha3 ரஞ்சிதா இந்தியாவின் பலம் மிக்க பெண்களில் ஒருவர் ஆகிவிடுவார் போல இருக்கிறதே. ஒரு பெண்ணின் உடலுக்கு இவ்வளவு சக்தியா 3. Senthilnathan3 இந்த சாமியார்கள் சண்டை மாமியார்கள் சண்டைய மிஞ்சிடும் போலிருக்கே! 4. Thiyagarajan4 Hours ago எதற்காக ஜயேந்திரர் மன்னிப்புக் கேட்க வேண்டும் ! நித்தி மொட்டையா போட்டுக் கொண்டு ஆதீனகர்த்தா ஆகியுள்ளார்? ரஞ்சிதா நித்தி கூடவே இல்லையா? உண்மையைத்தானே கூறியுள்ளார் ! உண்மை சுடும் ! சுடட்டுமே ! 5. Suresh6 Hours ago ஒரு பிராடிற்கு உன்னொரு பிராடு மேல் இருக்கும் வயிற்றெரிச்சல். வேறென்ன சொல்ல. 1.சச்சின் டெண்டுல்கருக்கு 'பாரத ரத்னா’ பட்டம் கொடுக்க எதிர்ப்பு தெரிவித்த முன்னாள் நீதிபதியும் இப்போதைய 'பிரஸ் கவுன்சில்’ தலைவருமான மார்கண்டேய கட்ஜு, பாரதிக்கு அந்த விருது தரப்பட வேண்டும் என்கிறாரே? பாரதி அதைவிடப் பெரிய விருது பெற்றவன். 'மக்கள் கவிஞன்’ என்ற மகத்தான விருதுக்குப் பிறகு மற்றது எதற்கு? பாப்லோ நெருடா சொன்னது பாரதிக்கும் பொருந்தும். ''நான் கத்தையாக இலக்கியப் பரிசு​களை அள்ளிக் குவித்திருக்கிறேன். வண்ணத்துப் பூச்சிகளைப் போல அற்பாயுசுப் பரிசுகள் அவை. ஆனால், நானே ஈட்டிய பரிசுகள் மகத்​தானவை. பலர் அதைக் குறை கூறினாலும் எவருக்கும் எட்டாத ஒன்று. கலோபாசனையாலும், சுய தேடலாலும் எழுத்துக் கோர்வைகளால் மாய்மாலம் செய்வதற்கு மாறாக, நான் மக்கள் கவிஞனானேன். அதுதான் எனக்குக் கிடைத்த மகத்தான விருது'' என்றான் நெருடா. இது, மகா கவி பாரதிக்கும் பொருந்தும். 'பாரத ரத்னா’ பட்டத்தைவிட பாரதிக்கு அவசரமாய்ச் செய்ய வேண்டிய ஒன்று உண்டு. புதுச்சேரியில் அவர் வாழ்ந்த வீட்டை மராமத்து செய்கிறோம் என்று, இரண்டு ஆண்டு​களாக அந்த வீட்டைப் பூட்டி வைத்து இருக்கிறது ரங்கசாமியின் அரசு. அந்தப் பூட்டை உடைக்க பாரதி பக்தர்கள் புறப்படட்டும். புண்ணியம் வாய்க்கும்! 2. நாடாளுமன்றம் 60 ஆண்டுகளைப் பூர்த்தி செய்துள்ளதே? கடந்த 10-ம் தேதி, மாநிலங்கள் அவையில் காலை 11 மணிக்கு ஒரு எம்.பி. எழுந்தாராம். ''ஏதோ நாற்றம் வீசுகிறது'' என்றாராம். சபைத் தலைவராக துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரி இருந்துள்ளார். அவர் உடனே, அனைவரையும் அமைதியாக இருக்கச் சொல்லி இருக்கிறார். அப்போது, அதே அவையில்தான் பிரதமரும் இருந்துள்ளார். அனைவருமே அந்த கெட்ட நாற்றத்தை உணர்ந்துள்ளார்கள். சபை, அரை மணி நேரம் ஒத்திவைக்கப்பட்டது. ஏ.சி. இயந்திரத்தில் பழுது ஏற்பட்டு கேஸ் கசிந்ததால் ஏற்பட்ட நாற்றம் என்று கண்டுபிடித்துச் சரிசெய்துள்ளார்கள். நாடாளுமன்றத்தின் இருஅவைகளிலும் 'ஊழல்’ என்ற துர்நாற்றம், அதிகமாக விவாதப் பொருளாகி வீசுகிறது. இதைக் கட்டுப்படுத்துவது பற்றி நம்முடைய தலைவர்கள் யோசிக்க வேண்டும். ஆண்டொன்று போனால் வயதொன்று போகும். ஆனால், நாம் அந்த ஓர் ஆண்டில் எவ்வளவு பக்குவப்பட்டுள்ளோம் என்பதே மரியாதையைத் தரும்! 3. நீண்ட இடைவெளிக்குப் பிறகு, ஆ.ராசா ஜாமீன் கேட்டு விட்டாரே? இப்படி ஒரு ஆள் உள்ளே இருக்கிறார் என்பதே தி.மு.க. தலைமைக்கு மறக்க ஆரம்பித்து விட்டது. எனவே, அவர் வெளியே வந்துதானே ஆக வேண்டும். கடந்த மே 10-ம் தேதி, தனது 49-வது பிறந்த நாளை ஆ.ராசா, திஹாரில் கொண்டாடினார். பொன்விழா நேரத்திலாவது வெளியில் இருக்க அவர் நினைக் கலாம்தானே? ஆனால், 'நான் நிரபராதி என்று தீர்ப்பு பெற்ற பிறகுதான் வெளியில் வருவேன்’ என்று, அவர் செய்த அறிவிப்பு இன்னும் அப்படியேதான் இருக்கிறது! 4. புதுக்கோட்டையில் பரபரப்பையே காணோமே? காற்றில் கத்தியைச் சுழற்றினால் எப்படிச் சத்தம் வரும்? எதிரிகளே இல்லாத களம், ஆளும் கட்சிக்குத்தான் அவமானம்! 5. 2ஜி விவகாரத்தில் 122 உரிமங்களை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம். இதை, மறுஆய்வு செய்ய வேண்டும் என்று முதலில் மனு போட்ட மத்திய அரசு, திடீரென வாபஸ் வாங்கிக் கொண்டது ஏன்? உச்சி மண்டையில் மீண்டும் உச்ச நீதிமன்றம் கொட்டிவிட்டால் என்ன செய்வது என்ற பயம்தான் மறுஆய்வு மனுவை வாபஸ் பெற வைத்துள்ளது. 122 உரிமங்கள் முறையாகத்தான் வழங்கப்பட்டன என்று வாதிடத் துப்பு இருக்குமானால், ஏன் மனுவை வாபஸ் பெற வேண்டும்? இதில், தன்பலம் இல்லாததால், குடியரசுத் தலைவர் மூலமாக நெருக்கடி கொடுக்கும் காரியத்தையும் காங்கிரஸ் அரசு பார்த்தது. மொத்தத்தில் முறைகேடுகள் நடந்திருப்பதையே அப்பட்டமாக உணர்த்து​கின்றன இந்தக் காட்சிகள்! 6.மூவருக்கும் ஜாமீன் கிடைத்து விட்டதே? உள்ளே ஒழுங்காக இருந்தார்கள். வெளியில்தான் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். கொம்பு சீவி விடுபவர்கள், கொள்ளை நோக்கம் கொண்டவர்கள், கொடுக்கல் - வாங்கல் பேர்வழிகள் ஆகிய மூன்று தரப்பிடம் இருந்தும் இவர்கள் விலகி இருந்தால் எதிர்காலமாவது நிம்மதியாய் அமையும்! 7. கூடங்குளம், இடிந்தகரையில் மீண்டும் போராட்டம் தொடங்கி விட்டதே? அணுஉலை குறித்த அச்சம் அந்தப் பகுதி மக்களுக்கு அப்படியே இருக்கிறது. இந்த அச்சத்தை நீக்க வேண்டிய பொறுப்பு, தமிழக முதல்வருக்கு இருக்கிறது. கூடங்குளம், இடிந்தகரை பகுதிக்குச் சென்று அந்த மக்களிடம் முதல்வர் நேரடியாகப் பேசினால் மட்டுமே, அரசு எதிர்பார்க்கும் முடிவை எட்ட முடியும்! அந்தப் பகுதி மக்களின் உண்மையான எதிர்பார்ப்புகளை, முதல்வரிடம் அதி காரிகள் சொல்லவில்லை. பத்து மாதங்களைக் கடந்து நடக்கும் ஒரு போராட்டப் பகுதிக்கு ஒரு மாநிலத்தின் தலைமைச் செயலாளரும், டி.ஜி.பி.-யுமே இதுவரை போகவில்லை என்பது நிர்வாகக் கோளாறு. அக்கறை இன்மையின் வெளிப்பாடு! 8. ஜெயேந்திரருக்கு இது தேவையில்லாத வேலை’ என்கிறாரே மதுரை ஆதீனம்? தேவையில்லாத 'வேலைகள்’ பார்ப்பது​தானே பல மடாதிபதிகளின் முழு நேர வேலையாக ஆகிவிட்டது. 'என்றும், எப்போதும் தூங்காத கண் ஒன்று நமது இதயங்களைப் படித்துக்கொண்டு இருக்கிறது. நமது எண்ணங்களைப் பதிவு செய்துகொண்டு இருக்கிறது’ என்பார்கள். இதை, சாமான்ய மக்கள் உணர்ந்து திருந்தி வருகிறார்கள். ஆனால், சில மடாதிபதிகள் உணரத் தவறுகிறார்கள்! 9. லோக் பால் மசோதா அவ்வளவுதானா? இந்தக் கூட்டத் தொடரில் நிறைவேறுவதற்கு சாத்தியம் இருப்பதாகத் தெரியவில்லை. கூட்டத் தொடர் முடிவதற்கு இன்னும் ஒரு வாரம்தான் இருக்கிறது. கிடப்பில் போட்டு​விடுவார்கள் என்றே நினைக்கிறேன். Tweet Read More Wednesday, May 02, 2012 ஆஃபீஸ் ரூமிலேயே கில்மா.. அலப்பறை அபிசேக் மாட்டினாரு - சி டி ரிலீஸ். ஜூ வி கட்டுரை சி.பி.செந்தில்குமார் 7:50:00 PM CD, CONGRESS, JU VI, அனுபவம், காங்கிரஸ், கில்மா, சி டி, ஜூனியர் விகடன் 4 comments காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் என்ற உயர்ந்த அந்தஸ்தில் இருந்த அபிஷேக் சிங்வி, இப்போது தலைப்புச் செய்தி ஆகிவிட்டார். அதுவும் கிளுகிளு செய்தி​யாக! சி.பி - அப்போ அவர் பேரு இனிமே ஜிஞ்சனுக்கு சிங்க்வீ? உச்ச நீதிமன்றத்திலும், டெல்லி உயர் நீதிமன்றத்​திலும் முக்கிய வழக்கறிஞர்களில் ஒருவர். காங்கிரஸ் கட்சியின் பேச்சாளர் என்கிற முறையில் தினமும் மீடியாக்களில் இவரது முகத்தைப் பார்க்கலாம். மாநிலங்கள் அவையின் உறுப்பினர் என்கிற வகையில் சட்டம் மற்றும் நீதித்துறையின் நாடா​ளுமன்ற நிலைக் குழுவின் தலைவர். முதன்முதலில், ஊழலுக்கு எதிரான சட்டத்தைக் கொண்டுவர வேண்டும் என்று பேசியதோடு, 'லோக்பால்’ என்ற வார்த்தையைக் கொடுத்தவர் இவருடைய அப்பா. அதனால்தான், லோக்பால் மசோதாவைத் தயாரிக்கும் குழுவில் இவர் இடம் பிடித்தார். இவரைத்தான் சீண்டிப் பார்த்துள்ளது ஒரு சி.டி. அபிஷேக் சிங்விக்கு டெல்லி உயர் நீதிமன்றத்தில் ஒரு சேம்பர் உள்ளது. இங்கு ஒரு மொபைல் (போன்) கேமராவைப் பொருத்தி சிங்வியின் நடவடிக்​கைகளைப் படம் பிடித்து இருக்கிறார், அவரது டிரைவர் முகேஷ்குமார். சிலரது உதவியுடன் கம்ப்யூட்டரில் அந்தக் காட்சிகளைப் பதிவிறக்​கம் செய்து சி.டி-யாக​வும் தயாரித்து உள்ளார். அதைக் காட்டி சிங்வியை மிரட்டவும் செய்திருக்கிறார். சிங்வி ஒரு பெண்ணோடு உரையாடுவது மட்டுமின்றி உற​வாடும் காட்சிகளும் பதிவாகி இருக்கிறது. அந்தக் காட்சிகள் மிகத்தெளிவாக இல்லை என்​றாலும், சில அங்க அசைவுகளும் ஆடையைக் களையும் காட்சிகளும் இருக்கிறது. இந்த வீடியோ தன்னிடம் இருப்பது குறித்து, கடந்த மார்ச் மாதமே எஸ்.எம்.எஸ். மூலம் முகேஷ்குமார் தகவல் கொடுத்திருக்கிறார். தனக்குக் குறைவான ஊதியம் கொடுத்தது மட்டுமின்றி, தன்னுடைய குழந்தைக்கு ஏற்பட்ட ஊனத்துக்கு சிங்வியின் நாய்தான் காரணம் என்ற கோபத்தில் இருந்துள்ளார் முகேஷ். அதனாலேயே, கேமராவைப் பொருத்தி அவரது நடவடிக்கைகளைக் கண்காணித்து சி.டி-யாக தயாரித்து உள்ளார். அபிஷேக் சிங்வி இந்த விவகாரத்தில் போலீ​ஸுக்குப் போகவே, பத்திரிகைகளுக்கும் சில அரசியல்வாதிகள் கைக்கும் சி.டி. போய்ச் சேர்ந்தது. உடனே, சிங்வி டெல்லி உயர் நீதிமன்றத்தில், 'இந்த சி.டி. காட்சிகளை பத்திரிகைகள் வெளியிடவோ... ஒளிபரப்பு செய்யவோ கூடாது’ என்று வழக்கு தொடர்ந்தார். கூடுதலாக, தன்னுடைய டிரைவர் பிளாக்மெயில் செய்ததையும், இது சம்பந்தமாக டெல்லி போலீஸில் புகார் கொடுத்து இருப்பதையும் மனுவில் குறிப்பிட்டார். இதையட்டி, இந்த சி.டி-யை ஒளிப்பரப்பத் தடை விதித்ததோடு, சி.டி-க்களை நீதிமன்றத்தில் ஒப்படைக்கவும் பத்திரிகை நிறுவனங்களுக்கு கோர்ட் உத்தரவு போட்டது. இந்த சி.டி குறித்து புலன் விசாரணை செய்ய உத்தரவிடக் கோரி ஒருசில பொதுநல மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டன. ஆனால், அனைத்தையும் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதன்படி, பத்திரிகை நிறுவனங்கள் ஏப்ரல் 17-ம் தேதி சி.டி-யை நீதிமன்றத்தில் ஒப்படைத்தன. ஆனால், அடுத்த சில நாட்களில் இந்த சி.டி-யில் இருந்த காட் சிகள் யுடியூப் மூலமாக ஒளி பரப்பானது. இதனை சிங்வி தரப்பு எத்தனையோ முயற்சி செய்து ரிமூவ் செய்தாலும், மீண்டும் மீண்டும் அப்லோடு செய்யப்பட்டது. அதனால், உலகம் முழுவதும் லட்சக்​கணக்​கான பார்வை​யாளர்கள் இந்த ஆபாசத்தைக் கண்டு களித்தனர். ஆனாலும், இந்த விவகாரத்தை எந்த பத்திரி​கையும், தொலைக்காட்சியும் தொடவே இல்லை. ஏனென்றால், நீதிமன்றத் தடை இருந்தது​தான். நிலைமை அளவுக்கு மீறிப்போகவே, அபிஷேக் சிங்வி தனது நாடாளுமன்ற நிலைக் குழுத் தலைவர் பதவியை ராஜினாமா செய்த கையோடு, சி.டி குறித்து அவரே அறிக்கையும் கொடுத்தார். இதன்பிறகுதான் இந்த சி.டி விவகாரம் அச்சுக்கு வந்தது. மறுநாள் தொடங்க இருந்த நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் இந்த விவகாரம் வெடிக்கலாம் என்று கருதியே, சிங்வி முன்னெச்சரிக்கையாக ராஜினாமா செய்தார் என்று சொல்லப்பட்டது. ''இந்த வீடியோ என்னுடைய தனிப்பட்ட விவகாரம். இதில் உள்ள காட்சிகள் ஜோடிக்கப்பட் டுள்ளது. எனது டிரைவர் பிளாக்மெயில் செய்தது குறித்து காவல்துறையில் ஏற்கெனவே புகார் கொடுத்து இருக்கிறேன்'' என்று விளக்கம் சொல்கிறார் சிங்வி. ''மத்தியத் தடய அறிவியல் துறைக்கு இந்த சி.டி.யை அனுப்பி, உண்மையைக் கண்டறிய​வேண்டும். அப்​போது​தான் சி.டி-யில் இருப்பது உண்மையா அல்லது ஜோடிக்கப்​பட்டதா என்பது தெரியும். அதை ஏன் செய்யவில்லை?'' என்று கேட்கிறார் பி.ஜே.பி. தலைவர் அருண்ஜெட்லி. ஆனால், ஏனோ இந்த விவகாரம் குறித்து பி.ஜே.பி. இரண்டு அவைகளிலும் கேள்வி எழுப்பவே இல்லை. சிங்வியின் தந்தை எல்.எம். சிங்வியும் பிரபலமான வழக்கறிஞர், அரசியல்வாதி. அவர் முதல் முறையாக பி.ஜே.பி. சார்பில்தான் மாநிலங்கள் அவைக்குத் தேர்வு செய்யப்பட்டார். அந்த அபிமானம்தான் சிங்வியை எதிர்க்கட்சிகளிடம் இருந்து காப்பாற்றி உள்ளது என்று பேசிக்கொள்கிறார்கள். மகனுக்குத் தந்தை ஆற்றும் உதவி! Tweet Read More Wednesday, March 14, 2012 ஜெ-வின் ஆஸ்தான முன்னாள் ஜோதிடர் சசிகலா மீது பரபரப்பு குற்றச்சாட்டு சி.பி.செந்தில்குமார் 1:07:00 PM JEYALALITHA, JU VI, tamilnadu, அரசியல், அனுபவம், சசிகலா, தமிழ்நாடு, ராவணன், வழக்கு, ஜெ 1 comment ஜெயலலிதாவின் ஆஸ்தான ஜோதிடர்களில் ஒருவராக இருந்தவர் என்று சொல்லப்பட்டவர் வெற்றிவேல். சி.பி - ஆஹா VETRIVAEL கூட்டுத்தொகை 9 வருது.. அம்மாவோட செண்ட்டிமெண்ட்டே செண்ட்டிமெண்ட் அவ்வ்வ்வ் இவர் கடந்த தி.மு.க. ஆட்சியிலேயே ராவணன் மீது ஒரு புகார் கொடுத்தார். அந்த வழக்கு இப்போது சி.பி.சி.ஐ.டி. விசாரணையில் இருக்கிறது. இதுகுறித்து, 20.2.2008 தேதியிட்ட ஜூ.வி. இதழில், 'கோடிகளுக்காக என்னைக் கடத்தினார்கள்! உயிர் பயத்தில் ஜெ. ஜோதிடர்!’ என்ற தலைப்பில் செய்தி வந்தது. அந்தப் புகார் என்ன ஆனது என்றே தெரியாத நிலையில், இப்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளார் வெற்றிவேல். ''எனது புகார் மீதான வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும்'' என்று தனது வழக்கறிஞர் குமாரதேவனுடன் கடந்த 12-ம் தேதி வந்து சென்னை போலீஸ் கமிஷனரிடம் வெற்றிவேல் மனு கொடுத்துள்ளார். வெற்றிவேலை சந்தித்துப் பேசியதில் ''எனக்கு சொந்த ஊர் திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி. 98-ம் வருஷம் பெரியம்மாகிட்ட (ஜெயலலிதா) அறிமுகம் ஆனேன். பெரியம்மா அப்போது வழக்கு விவகாரங்களுக்காக அலைஞ்சுட்டு இருந்த நேரம். நான் அவரோட அரசியல் எதிர்காலம், வழக்குகளின் நிலை சம்பந்தமாகத் தெளிவா கணிச்சுச் சொன்னேன். அதனால, அவங்களோட நம்பிக்கைக்கு உரிய ஆஸ்தான ஜோதிடர்களில் நான் முன்னணியில் இருந்தேன். சி.பி - அண்ணே, சாரி ஃபார் த குறுக்கீடு , அமைதிப்படை அமாவாசை மாதிரி ஒரு கேள்வி, யார் யாருக்கோ ஜாதகம் கணிச்ச நீங்க உங்க ஜாதகத்துல போலீஸ் கேஸ் வரும், சின்னம்மாவை பகைச்சுக்குவோம் அதெல்லாம் கணீக்கலையா? அப்படி இல்லைன்னா நீங்க என்ன ஜோசியர்? ஹி ஹி பெரியம்மா, சின்னம்மா (சசிகலா) மற்றும் அவரோட குடும்பத்தினர் அத்தனை பேருக்கும் நான்தான் ஜோதிடம் பார்த்தேன். 2004-ம் வருஷம், சின்னம்மா என்கிட்ட, 'பெரியம்மாவுக்கு அடுத்து அ.தி.மு.க-வில் முதல்வர் ஆகும் யோகம் யாருக்கு இருக்கு?’னு கணிச்சுத் தரச் சொன்னாங்க. அதுக்காக அவங்க குடும்பத்துல இருக்கிற அத்தனை பேர் ஜாதகமும் கொடுத்தாங்க. அத்தனை பேர் ஜாதகத்தையும் பார்த்த நான், 'உங்க குடும்பத்துல ஒருத்தருக்குக்கூட கட்சியில் பொதுச்செயலாளர் ஆகும் யோகமோ, தமிழகத்தின் முதல்வர் ஆகும் யோகமோ கிடையாது. இது மாற்ற முடியாத உண்மை’னு கணிச்சு சொன்னேன். சி.பி - உடனே பெரியம்மா டென்சன் ஆகி “ முதல்ல எதுக்காக அத்தனை பேர் ஜாதகத்தையும் பார்த்தீங்க, என் கிட்டே அதுக்கு அனுமதி வாங்குனீங்களா?ன்னு கேட்கலை?” ஹி ஹி இந்த விஷயத்தை நான் பெரியம்மாகிட்டேயும் அப்படி​யே சொல்லிட்டேன். இதுதான் கார்டனுக்கும் எனக்கும் விரிசல் விழக் காரணமான சம்பவம். அன்றுமுதல், சின்னம்மா என்னை எதிரியா நினைச்சிட்டார். உண்மையைச் சொல்லப்போனால், சின்னம்மாவை என் அம்மா மாதிரி நினைச்சு இருந்தேன். சி.பி - அண்ணே, எகெயின் ஒரு ஸ்மால் டவுட்டு, சின்னம்மாவை உங்கம்மா மாதிரி நினைச்சா உங்கம்மாவை என்னவா நினைச்சீங்க? ஜெ அம்மாவை என்னவா நினைச்சீங்க? உபயம் - வெற்றிக்கொடு கட்டு ஆர் பார்த்திபன் - வடிவேல் காமெடி எங்க அம்மா இறந்தப்​பகூட நான் அழுதது இல்லை. ஆனா, சின்னம்மா கஷ்டப்பட்டப்ப எல்லாம் அழுதேன். கிராமத்துல செம்மறி ஆடு மேய்ச்சுக்கிட்டு இருந்த என்னை கார்டனுக்குக் கூட்டிவந்து பெரிய ஆள் ஆக்கினதே சின்னம்மாதான். ஆனா, அவங்களே எனக்கு எதிரியா மாறிட்டாங்க. சி.பி - நாடு ஏன் நாசமாப்போய்ட்டிருக்குன்னு இப்போ தெரியுது. செம்மறி ஆடு மேய்ச்சுட்டு இருந்தவங்க எல்லாம் அரசியல் ஆலோசகரா ஆனா நாடு எப்படிய்யா உருப்படும்?படிச்சவன் வேலை இல்லாம அலைஞ்சுட்டு இருக்கான் அப்ப இருந்து என்னை விரட்ட ஆரம்பிச்சவங்க... இப்ப வரைக்கும் விடாம விரட்டிக்கிட்டு இருக்காங்க. உண்மையில் நான் சாதாரண ஆளுங்க. கார்டன்ல ஜோதிடத்தைத் தாண்டி எதையும் எப்பவும் பேசியது இல்லை. அரசியல்னா என்னன்னு எனக்கு எதுவுமே தெரியாது. நான் சொன்ன ஜோதிடக் கணிப்புகளை வைச்சு, சின்னம்மாவும் ராவணனும் என்னை அவங்களுக்குப் போட்டியா, எதிரியா நினைச்சுப் பழிவாங்க ஆரம்பிச்சிட்டாங்க. சி.பி - நீங்க ஒரு தப்பு பண்ணீட்டிங்க, சசிகலாட்ட எதுவும் சொல்லாம ஆமாம் சாமி போட்டு நைசா ஜெ கிட்டே அவங்களை பற்றி போட்டுக்குடுத்திருக்கனும்.. 2007-ம் வருஷம் ராவணன் என்கிட்ட என் சொத்து விவரங்களை கேட்டு, ஈரோட்டில் இருந்து கோவைக்கு கார்லயும் கோவையில் இருந்து சென்னைக்கு விமானத்துலயும் கடத்​திட்டுப் போனார். சி.பி - ஆமா, ஈரோட்ல உங்களுக்கு என்ன வேலை? பர்சனல் மேட்டர்ஸா? ஹி ஹி அங்கே தகாத வார்த் தைகளில் பேசி வெற்றுப் பேப்பர் களிலும் பத்திரங்களிலும் கையெழுத்து வாங்கினார். அதுதொடர்பா தேனாம்பேட்டை போலீஸில் புகார் கொடுத்து, பிறகு அந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றப்பட்டது. ஆனால், கடந்த தி.மு.க. ஆட்சியிலேயே அளவுக்கு அதிகமான செல்வாக்குடன் இருந்தார் ராவணன். அதனால், அந்த வழக்கில் ஒரு துரும்பைக்கூட போலீஸார் கிள்ளிப் போடலை. கடந்த தி.மு.க. ஆட்சியில் ராவணன் எனக்குக் கொடுத்த துன்பங்களுக்கு அளவே இல்லை. 2007-ம் ஆண்டு ஆகஸ்ட் 23-ம் தேதி என் அம்மாவின் நான்காம் ஆண்டு நினைவு நாளுக்காக வீட்டில் ஹோமம் வளர்த்துட்டு இருந்தேன். அப்போது ராவணனுக்கு நெருக்கமான வருமானவரித்துறை அதிகாரியை வைச்சு என் வீட்டில் ரெய்டு நடத்தினார். அதே வருஷம் திருப்பூர் செங்கப்பள்ளியில் ஒரு சொத்தை வாங்க, 1 கோடியே 1 லட்சம் ரூபாய் முன் பணத்தை செங்கப்பள்ளி தி.மு.க. ஒன்றியச் செயலாளராக இருந்த ராவணனின் நண்பர் சண்முகத்திடம் கொடுத்து, அவரது மனைவி ஈஸ்வரி பெயரில் ஒப்பந்தம் போட்டேன். ராவணன்கூட பிரச்னை ஏற்பட்ட பிறகு, அந்த இடத்தை அவங்க தரலை. கொடுத்த பணத்தைத் திருப்பிக் கேட்டா, 'ராவணன்கிட்ட போய் வாங்கிக்​கோ’னு மிரட்டுறாங்க. இதுசம்பந்தமா, கடந்த தி.மு.க. ஆட்சியில் முக்கியமான நான்கு அமைச்சர்களை நேரில் சந்தித்து உதவி செய்யும்​படி கேட்டேன். ஆனா, அமைச்சர்கிட்ட போன ரெண்டு மணி நேரத்துல எனக்கு போன் வரும். 'அமைச்சர்கிட்ட போனா உன் பணம் கிடைச் சிடுமா? டேய், நீ எங்க போனாலும் என்னை ஒண்ணும் செய்ய முடி யாது’னு ராவணனும் அவரோட ஆட்களும் மிரட்டுவாங்க. சென்னை கிழக்குக் கடற்கரை சாலையில் எனக்கு இடம் இருந்துச்சு. 2009-ம் வருஷம் அந்த இடத்தை வைச்சு, ஒரு தேசிய வங்கியில் 35 லட்சம் ரூபாய் கடன் வாங்கினேன். அந்தக் கடனைக் கட்ட முடியாம வட்டியோடு சேர்த்து 65 லட்சம் ரூபாய் பாக்கி இருந்தது. ஆனா, எனக்கு எந்தத் தகவலும் தெரிவிக்​காமல் சுமார் மூணு கோடி ரூபாய் மதிப்புள்ள அந்தச் சொத்தை, ஒரு கோடி ரூபாய்க்கு வங்கி ஏலம் விட்டுருச்சு. இது எப்படி சாத்தியம்? சி.பி - ஆடு மேய்ச்சிட்டு இருந்தவருக்கு எப்படி இந்த மாதிரி கோடிக்கணக்குல சொத்து வந்துச்சு.. ஜாதகம் பார்க்க அம்புட்டு வருமா? நல்ல நேரம் சதீஷ்.. நோட் பண்ணப்பா.. முதல் தவறு எனக்குத் தகவல் தெரிவிக்காமல் ஏலம்விட்டது. அடுத்தது, மூணு கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்தை ஒரு கோடிக்கு விற்று வங்கிக்கு நஷ்டம் ஏற்படுத்தியது. எனக்குத் தகவல் தெரிவிச்சதுக்கு ஆதாரம், அந்த சொத்தை யாருக்கு வித்தாங்க? அந்த ஏலத்தில் யார் எல்லாம் கலந்துக்கிட்டாங்க?ன்னு பல கேள்விகளைக் கேட்டு தகவல் அறியும் உரிமை சட்டத்தில் மனு போட்டேன். இப்ப வரை சரியான தகவல் கொடுக்கலை. இதன் பின்னணியிலும் ராவணன்தான் இருக்கார். சி.பி - அடடா.. ஒரு வங்கிக்கு நஷ்டம்னு சொன்னதும் அண்ணன் கண்ணு கலங்குதே.. நாட்டுப்பற்று!!! இதுமாதிரி ஒண்ணு, ரெண்டு இல்லை. இப்படி சுமார் எட்டு கோடி ரூபாய் அளவுக்கு என் பணம், சொத்துகளை ராவணன் மோசடி செய்து இருக்கார். 2007-ம் ஆண்டு என்னைக் கடத்திட்டுப் போன சம்பவத்துக்குப் பிறகு ராவணனுக்குப் பயந்து, டெல்லிக்குப் போய் செட்டில் ஆகிட்டேன். அங்கேயும் ராவணன் என்னை விடலை. டெல்லியில் ஒரு அ.தி.மு.க. வக்கீல் என் மீது பொய்ப் புகார் கொடுத்து, ஒரு உதவி கமிஷனர்கிட்டேயே, 'சார், இது தமிழ்நாடு டெபுடி சி.எம். ராவணனின் ஆர்டர். உடனே அரெஸ்ட் பண்ணுங்க’னு டார்ச்சர் பண்ணினார். நான் அந்த போலீஸ் அதிகாரிகிட்ட, 'தமிழ்நாட்டுல டெபுடி சி.எம்-னு போஸ்ட்டிங்கே இல்லை’ன்னு ஆதாரபூர்வமாப் புரிய வைச்சுத்தான் தப்பிச்சேன். இப்ப ராவணன் மீது படிப்படியா நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட பின்னாலதான், சென்னை வந்து இருக்கேன். ஜோதிடர்களைக் கடவுளின் தூதர்கள்னு சொல்லுவாங்க. நான் கடவுள்கிட்ட கேட்டு, அங்க இருந்து எனக்கு என்ன தகவல் கிடைச்சதோ, அதைத்தான் ஜோதிடக் கணிப்புகளாகச் சொல்லிட்டு இருக்கேன். சி.பி - அப்படியே கடவுளுக்கு ஒரு ஐ எஸ் டி கால் போட்டு உங்களுக்கு ஒரு விடிவு காலம் எப்போ வரும்னு கேட்டு சொல்லுங்கோ.. 2011-ம் வருஷத்துக்குப் பிறகு ராவணன் அரசியல்ல இருக்க மாட்டார். அவரோட அழிவுகாலம் தொடங்கிடும்னு நாலு வருஷத்துக்கு முன்னாடியே கட்சிக்காரங்க, என் நண்பர்கள், ராவணன் நண்பர்கள்னு சுமார் 100 பேர்கிட்ட சொல்லி இருக்கேன். சி.பி - ஓஹோ, அந்த 100 பேர்ட்டயும் ஃபீஸ் வாங்கியாச்சா? இப்பவும் சொல்றேன். ராவணனுக்கு அழிவு நிச்சயம். இத்தனை நாள் அவர் மீது கொடுக்கப் பட்ட புகார்களைவிட, ஆணித்தரமான ஆதாரங்கள் கொண்ட புகார்கள் நிறைய என்கிட்ட இருக்கு. ஒவ்வொரு புகாரா போலீஸில் கொடுத்து, ராவணன் அழியறதை என் கண்ணால பார்க்கப்போறேன். இது என் ஆசை எல்லாம் கிடையாது. இதுதான் ராவணனின் ஜாதகம்!'' - ஆவேசமாக முடிக்கிறார் ஜோதிடர் வெற்றிவேல்! சி.பி - அட போங்கண்ணே, இப்படித்தான் குணச்சித்திர நடிகை சோனா கூட சொன்னாங்க. என் கிட்டே வீடியோ ஆதாரம் இருக்கு, எஸ் பி பி சரணை கூண்டில் ஏத்துவேன், சட்டத்தின் பிடியில் சிக்க வைப்பேன்னு சபதம் போட்டாங்க.. ஆனா அப்புறம் டகார்னு பல்டி அடிச்சு இப்போ சரண் ஹீரோவா நடிக்க சோனா கவுரவ கதாநாயகியா “ ஓ பார்ட்டி நல்ல பார்ட்டிதான்” அப்படின்னு ஒரு படம் நடிக்கராங்களாம்.. அவ்வ்வ்வ் வெற்றிவேல் பணம் கொடுத்ததாகக் கூறும் செங்கப்பள்ளியை சேர்ந்த தி.மு.க. பிரமுகர் சண்முகத்திடம் பேசினோம். ''வெற்றிவேலிடம் சொத்தை விற்க முன் பணம் வாங்கியது உண்மைதான். ஆனால், அதன் பிறகு சொத்தைக் கிரையம் செய்ய பலமுறை அழைத்தும் அவர் வரவில்லை. அவர் மீதான வருமான வரித்துறை நடவடிக்கைக்குப் பிறகு, அவர் வருமான வரித்துறைக்கு கட்ட வேண்டிய பாக்கித் தொகைக்காக இந்த நிலத்தையும் பணத்தையும் வழக்கில் சேர்த்து விட்டார்கள். ராவணன் என் நண்பர் இல்லை. அவரை நான் பார்த்ததுகூட கிடையாது...'' என்றார். சி.பி - பார்க்காமயே நட்பா? விட்டா எனக்கு ராமர், ராவணன், ராமாயணம் எதுவுமே தெரியாது, கேள்விப்பட்டதே இல்லைன்னு சொல்லிடுவார் போல.. ராவணன் மீதான பிடி இறுகுவதற்கு வெற்றிவேல் புகார் கூடுதல் வலையாக மாறிக்கொண்டு இருக்கிறது! Tweet Read More Older Posts Home Follow @CpsWriter Followers Featured Post மின்னல் சமையல் -30 வகை ஸ்பெஷல் குறிப்புகள் வே லைக்குப் போகிறவர்களானாலும் சரி, இல்லத்தரசிகளானாலும் சரி... காலையில் கண் விழித்த உடனேயே, 'சாப்பிடுவதற்கும், கையில் எடுத்துச் செல்வ...
Thennakam Admin 10th June 2017 நடப்பு நிகழ்வுகள் – 12 ஜூன் 20172017-06-10T21:11:07+05:30 நடப்பு நிகழ்வுகள் தமிழகம் 1.தமிழ் நாட்டில் நிலங்களுக்கான வழிகாட்டி மதிப்பு 33 % குறைக்கப்பட்டுள்ளது.பதிவுக்கட்டணம் 1% லிருந்து 4% மாக உயர்த்தப்பட்டுள்ளது.முத்திரை கட்டணம் 7 % என்பதில் மாற்றம் செய்யப்படவில்லை. இந்தியா 1.பாலின இடைவெளியை குறைக்கவும், பெண் குழந்தைகளுக்கு உரிய பங்களிப்பை வழங்குவதை உறுதிப்படுத்த Selfie with daughter என்ற செயலியை ஜனாதிபதி அறிமுகம் செய்துள்ளார். 2.நாடு முழுவதும் இறைச்சிக்காக மாடு, ஒட்டகம் போன்ற கால்நடைகளை விற்க தடை விதித்து மத்திய அரசு பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக கேரள சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. உலகம் 1.ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் (Shanghai Cooperation Organization – SCO) , இந்தியா மற்றும் பாகிஸ்தான் உறுப்பு நாடுகளாக இணைந்துள்ளன.1996ல் துவங்கப்பட்ட இந்த அமைப்பில் சீனா, ரஷ்யா, கஜகிஸ்தான், கிர்கிஷ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகியவை ஏற்கெனவே உறுப்பு நாடுகளாக உள்ளன. 2.வளைகுடா நாடான கத்தாருடன் சவூதி, பக்ரைன், எகிப்து, UAE, உள்ளிட்ட 4 நாடுகள் தூதரக உறவை முறித்துக்கொண்ட நிலையில், தற்போது இதில் ஏமன், லிபியா, மாலத்தீவுகளும் இணைந்துள்ளது. 3.மகாத்மா காந்தியின் பேத்தி எலா காந்திக்கு தென்னாப்பிரிக்க நாட்டின் வாழ்நாள் சாதனையாளர் என்னும் கவுரவ விருது வழங்கப்பட்டுள்ளது. விளையாட்டு 1.கியூபாவில் நடைபெற்ற கபாபிளான்கா நினைவு செஸ் போட்டியில் , இந்திய வீரர் சசிகிரண் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். 2.கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் , கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, கனடா வீராங்கனை கேப்ரியலா டாப்ரோவ்ஸ்கி கூட்டணி, ராபர்ட் பாரா (கொலம்பியா), அன்னலெனா குரோனிபெல்டு (ஜெர்மனி) இணையை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.போபண்ணா வென்ற முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டம் இதுவாகும். இன்றைய தினம் 1.இன்று உலகக் குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு தினம் (World Day Against Child Labour). உலகக் குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு தினம் 2002ஆம் ஆண்டு முதல் கொண்டாடப்படுகிறது. உலகம் முழுவதும் குழந்தைத் தொழிலாளர்கள் இருந்துகொண்டுதான் இருக்கின்றனர். சட்டங்கள் இருந்தாலும் இதனை முற்றிலும் ஒழிக்க முடியவில்லை. உலகம் முழுவதும் மில்லியன் கணக்கான குழந்தைகள் மிகவும் ஆபத்தான வேலைகளை செய்து வருகின்றனர். குழந்தைத் தொழிலாளர்களை அதிகம் கொண்ட நாடாக இந்தியா உள்ளது.
இந்தியாவில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றிலிருந்து குணமடைவோர் விகிதம் 63.20% உயர்ந்திருப்பதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுபற்றி அமைச்சகம் இன்று (புதன்கிழமை) வெளியிட்ட செய்திக் குறிப்பில்: நாட்டில் கரோனா பாதித்து குணமடைவோர் மற்றும் மரணம் அடைவோரின் விகிதம் 96.05% : 3.95% ஆக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கரோனா பாதித்து குணமடைவோர் விகிதம் புதன்கிழமை காலை நிலவரப்படி 63.20% ஆ உயர்ந்திருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. நாட்டில் கரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பு குறித்து மத்திய சுகாதாரத் துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், புதன்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக 29,429 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது; அதே கால அளவில் 582 போ் உயிரிழந்தனா். இதனால், ஒட்டுமொத்தமாக கரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 24,309 -ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த நோய்த்தொற்றுக்காக 3,19,840 பேர் தற்போது மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 5,92,032 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. நாட்டில் ஒட்டுமொத்தமாக கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 9,36,181 ஆக உயர்ந்துள்ளது. தேசிய அளவில் கரோனா உறுதி செய்யப்பட்டோா் எண்ணிக்கையில் தொடா்ந்து மகாராஷ்டிரம் முதலிடத்தில் உள்ளது. அங்கு இதுவரை 2,67,665 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது; உயிரிழந்தோர் எண்ணிக்கை 10,695 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் 1,47,324 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,099 ஆக உயர்ந்துள்ளது. தலைநகர் தில்லியில் 1,15,346 பேருக்கு தொற்று உறுதி் செய்யப்பட்டுள்ளது. மேலும் அங்கு இதுவரை 3,446 பேர் பலியாகியுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உணவைச் சமைக்கும் பொழுது பொரித்தல், வதக்குதல், வறுத்தல் போன்ற வேலைகளுக்கு சமையல் எண்ணெய் முக்கிய பங்காற்றுகிறது. சமையலுக்குப் பயன்படும் எண்ணெய்கள் பல வகைகள் உள்ளன. கடலை எண்ணெய், சூரிய காந்தி எண்ணெய், ஆலிவ் எண்ணெய், கடுகு எண்ணெய், தேங்காய் எண்ணெய், பாமாயில் எண்ணெய், கனோலா எண்ணெய், சோயா பீன் எண்ணெய், பசுவின் நெய் என்று இவை அத்தனையும் சமையல் அறையில் ஆதிக்கம் செலுத்தும் எண்ணெய்கள் ஆகும். மீன் மற்றும் ஒரு சில பறவைகளிலிருந்தும் எண்ணெய் பிரித்தெடுக்கப்படுகிறது. சமையல் எண்ணெயில் தாவர எண்ணெய்கள் அறை வெப்ப நிலையில் திரவ நிலையில் இருப்பதால் ஹைட்ரஜனேற்றம் செய்யப்பட்டு சற்றே திட நிலைக்கு கொண்டு வரப்படுகிறது. மேலும் தாவர எண்ணெய்கள் அல்லது பருப்பு, விதைகள் மூலம் பிரித்தெடுக்கப்படும் எண்ணெய் பதப்படுத்தப்பட்டு, வேதியியல் வினைகளுக்கு உட்படுத்தப்பட்டு சுத்திகரிக்கப்பட்ட சமையல் எண்ணெயாக பயன்பாடுகளுக்கு வருகிறது. ஆலிவ் எண்ணெய் சாதாரண வகை மற்றும் சுத்தகரிக்கப்பட்ட ஆலிவ் எண்ணெய் என்று இரண்டு வகையில் சந்தைப்படுத்தப்படுகிறது. சாதாரண ஆலிவ் எஎண்ணெயில் அதிக அளவு அமிலத் தன்மை உள்ளது. இது நல்ல சுவை கொண்ட விரிஜின் எண்ணெய் ஆகும். 3.3 சதவீதத்திற்குக் கீழே உள்ள அமிலத் தன்மை அளவு கொண்டது. 3.3 சதவீதத்திற்கு மேல் அமிலத் தன்மை அளவு கொண்ட எண்ணெய் மாதர்களின் பயன்பாட்டுக்கு ஏற்றதல்ல என்பதுடன் அத்தகைய அமிலத் தன்மையை சரிக்கட்ட எண்ணெயை சுத்திகரிப்பு செய்வது அவசியமாகும். விர்ஜின் ஆயிலின் மணம், நிறம் மற்றும் இதர பண்புகள் இரசாயன சுத்திகரிப்பின் மூலம் சரி செய்யப்பட வேண்டும். ஆலிவ் எண்ணெய் சுமார் 6000 ஆண்டுகளாக பயன்பாட்டில் இருந்து வருகிறது. கி.மு.2000 ஆண்டில் சிரியா மற்றும் கிரேக்கத்திலிருந்து எகிப்து போன்ற நாடுகளுக்கு அதிக அளவில் இறக்குமதி செய்யப்பட்டது. கிருஸ்துவ தேவாலயங்களில் புனிதப்படுத்துதல், Ordainty Priest, ஆலய சுத்தம் மற்றும் பல வித சமய சடங்குகளுக்கு ஆலிவ் எண்ணெயைத் தான் தேவாலயங்கள் நம்பி இருந்தன. இஸ்லாம் சமயமும் ஆலிவ் மரத்தை புனிதமானதாவும், மரியாதை தரும் மரமாகவும் மதிப்பு தந்து வந்துள்ளனர். உணவில் சேர்த்துக் கொள்வதற்கும் உடலில் வெளிப் பூச்சுக்கும் அவர்கள் ஆலிவ் எண்ணெயை பயன்படுத்தினர். பண்டைய கிரேக்கர்கள் ஆலிவ் எண்ணெயை மிகவும் மதித்துப் போற்றினர். அதிகாரத்திற்கும் செல்வச் செழிப்புக்கும் உரிய ஒன்றாக ஆலிவ் மரத்தை கருதினர் என்பதுடன் இதனுடைய மருத்துவ குணங்களிலும் பெருமளவு நம்பிக்கை வைத்திருந்தனர். 2500 ஆண்டுகளுக்கு முன்னரே சமையலுக்கு பயன்படுத்தியதோடு மட்டுமன்றி சருமம் மற்றும் முடி ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும் பயனபடுத்தத் துவங்கினர். அத்லட்டிக் மற்றும் ஜிம்னாஸ்டிக் வீரர்கள் தங்கள் நிகழ்ச்சிகளை ஆரம்பிக்கும் பொழுது தங்கள் உடல் வனப்பிற்கு உடலில் அப்போதைய நேரத்தில் ஆலிவ் எண்ணெயை பூசிக் கொண்டனர். எண்ணெய்களில் கொழுப்பு அமிலங்கள் உள்ளன என்று நீங்கள் அறிந்திருப்பீர்கள். நிறைவுற்ற கொழுப்பு, நிறைவுறா கொழுப்பு என்றும் அதிலும் ஒற்றை மற்றும் பன்மை நிறைவுறா கொழுப்பு அமிலங்கள் என்றும் உட்பிரிவு உள்ளன. உடல் நலத்திற்கு ஒமேகா 3 மற்றும் ஒமேகா 6 கொழுப்பு அமிலங்கள் உள்ளன. ஒமேகா 3 மற்றும் ஒமேகா 6 கொழுப்பு அமிலங்கள் மனிதனுக்கு சம அளவில் இருந்தால் தான் உடல் ஆரோக்கியமாக இருக்கும். ஒமேகா 6 கொழுப்பு அமிலங்கள் உள்ள எண்ணெய்களைத் தான் குறிப்பாக நல்லெண்ணெய், கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெய், சூரிய காந்தி எண்ணெய், கார்ன் ஆயில் எனப்படும் சோள எண்ணெய், பாமாயில் போன்றவைகளைத் தான் சமையலில் அதிகளவு பயன்படுத்துகிறோம். இதன் மூலம் ஒமேகா 6 கொழுப்பு அமிலங்கள் அதிக அளவில் மனிதனின் உடலில் சுமார் 30 மடங்கு வரை அதிகமாக இருப்பதாக மருத்துவ ஆராய்ச்சி தெரிவிக்கிறது.
[ 27/11/2022 ] 8ம் அதிபதி எப்போது நன்மை? மகரம் – TRAILER – 442#astrologeradityaguruji GURUJI'S ANDROID APP [ 25/11/2022 ] ASPECTS OF SUBATHUVA SATURN – சனியின் திருக்பல(பார்வை) சூட்சுமங்கள்.#astrologeradityaguruji#saturn PREMIUM VIDEOS [ 24/11/2022 ] முடக்கு ராசி, நட்சத்திரம், பரிகாரம். ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி விளக்கம்.#astrologeradityaguruji YOUTUBE [ 24/11/2022 ] 8ம் அதிபதி எப்போது நன்மை? தனுசு – TRAILER – 441#astrologeradityaguruji GURUJI'S ANDROID APP Search for: HomeUncategorizedதுலாம்: 2021 செப்டம்பர் மாத ராசி பலன்கள் துலாம்: 2021 செப்டம்பர் மாத ராசி பலன்கள் 27/08/2021 admin123 Uncategorized 0 ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி கைப்பேசி : +91 8286 99 8888 துலாம்: துலா நாதன் சுக்கிரன் மாத ஆரம்பத்தில் தனது நீச்ச ஸ்தானத்திலும், பிறகு ராசியில் ஆட்சி நிலையிலும் இருக்கப் போவதால் இது துலாமிற்கு நன்மைகள் தரும் மாதமாக இருக்கும். ஒரு சிறப்புபலனாக இனிமேல் கிடைக்காது என்று கை விட்ட ஒரு தொகையோ, ஒரு பொருளோ இன்ப அதிர்ச்சியாக துலாமுக்கு இப்போது கிடைக்கும். பிரிந்து போன ஒருவர் இப்போது சேருவார். ராசிநாதனின் ஆட்சி வலுவால் உங்கள் தைரியம் பளிச்சிடும். உங்களில் சிலர் ஏதேனும் ஒரு விஷயத்தில் புகழடைவீர்கள். நான்கு பேர் கூடும் இடத்தில் தனித்துத் தெரிவீர்கள். மனம் உற்சாகமாக இருக்கும். உல்லாச பயணம் செல்ல முடியும். ஆரோக்கியக் குறைவு இருந்தவர்கள் குணமடைவீர்கள். மந்தமாக இருந்துவந்த தொழில், வியாபாரம் போன்றவைகள் இனி விறுவிறுப்புடன் நடக்க ஆரம்பிக்கும். தாயார் வழியில் நல்ல விஷயங்களும் அம்மாவின் மூலம் ஆதாயங்களும் வரும். நண்பர்கள் உதவுவார்கள். இளைய சகோதரத்தால் செலவுகள் உண்டு. சிலருக்கு ஆன்மிக அனுபவங்களும் தெய்வ தரிசனங்களும் வரும். பணவரவும் உண்டு. அலுவலகங்களில் இருந்து வந்த சிக்கல்கள் தீரும். உங்களை புரிந்து கொள்ளாமல் வாட்டி எடுத்துக் கொண்டிருந்த மேலதிகாரி டிரான்ஸ்பர் ஆகி உங்களுக்கு அனுசரணையானவர் வருவார். வேலை மாற்றம் செய்யப்பட்டவர்கள் மீண்டும் பழைய இடத்திற்கு திரும்பி வருவீர்கள். எதிர்ப்புகளும், போட்டியாளர்களும் விலகுவார்கள். பெண்களுக்கு இது நல்ல மாதமாக இருக்கும். இளைஞர்களுக்கு பிடித்தமான வேலை கிடைக்கும். கலைஞர்களுக்கு சிறந்த மாதம் என்பதில் சந்தேகம் இல்லை. யோகக்கிரகங்கள் வலுவாக இருப்பதால் வீட்டில் சுபகாரியங்கள் உண்டு. நீண்ட நாட்களாக திருமண ஏற்பாடுகள் தள்ளிப் போயிருந்தவர்களுக்கு திருமணம் உறுதியாகும். இளைய பருவத்தினரை பெற்றோர்கள் அக்கறை எடுத்து கண்காணிக்க வேண்டியது அவசியம். அவர்கள் ஏதாவது வீண் வம்பை இழுத்து கொண்டு வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. முக்கியமாக காதல் விவகாரத்தில் பெற்றோர்களின் மனம் வருந்தும்படியான நிகழ்வுகளை இளையோர் செய்வார்கள். தந்தை வழி உறவினருடன் உரசல்கள் வருவதற்கு வாய்ப்புகள் இருப்பதால் வார்த்தைகளில் கவனமாக இருப்பது நல்லது. தேவையற்ற விஷயத்திற்கு கடன் வாங்கக் கூடிய சூழல்கள் உருவாகலாம்.2,4,6,8,9,10,17,19,20,21,22 ஆகிய நாட்களில் பணம் வரும். 25-ந்தேதி மாலை 6.16 மணி முதல் 28-ந்தேதி காலை 7.14 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்றாலும் கெடுதல்கள் எதுவும் நிச்சயமாக நடைபெறாது. ஆயினும் புதிய முயற்சிகள் எதுவும் இந்த நாட்களில் வேண்டாம். அலுவலக நேரம்: 10:00 AM – 6:00 PM தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888, 8286 99 8888, 8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888 குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற +91 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.
யாழ்ப்பாணத்தின் கடற்பிராந்தியத்தில் படைத்தரப்பு மேலதிகமாக மீன்பிடித் தடையை விதித்துள்ளது. இதன் காரணமாக தமது அன்றாட தொழிலில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மற்றும் மன்னார் மீனவ சங்க தரப்புகள் தெரிவித்துள்ளன. காங்கேசன்துறை மற்றும் புங்குடுதீவு ஆகிய இடங்களுக்கு இடையிலான படையினரின் போக்குவரத்துக்கு ஏதுவாகவே இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக மீனவ சங்கங்கள் குற்றம் சுமத்தியுள்ளன. யாழ்ப்பாண கடல்ஏரியில் பாசையூர், குருநகர், கொழும்புத்துறை மற்றும் அரியாலை ஆகிய இடங்களில் உள்ள மீனவர்கள் வெளியிணைப்பு இயந்திர படகுகளை பயன்படுத்த படைத்தரப்பு தடை விதித்துள்ளது. இதேவேளை காங்கேசன்துறைக்கும் மன்னாருக்கும் இடையிலான படையினரின் போக்குவரத்துக்கு கடற்படையினர் பாதுகாப்பு வழங்குவதை முன்னிட்டு பாலைதீவு, கல்முனை மற்றும் மாதவன்முனை ஆகிய கடல்பகுதிகளிலும் வெளியிணைப்பு இயந்திர படகுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இடம்பெயர் மக்களை அவசரமாக மீள்குடியேற்றினால் அவர்களுடன் புலி உறுப்பினர்களும் ஊடுருவக் கூடும்: அரசாங்கம் வெளியிணைப்பு இயந்திரங்கள் இல்லாத படகுகள் மூலம் மீனவர்கள்,ஆழ்கடலுக்கு சென்று மீன்பிடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மன்னார் மீனவர்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர். Source & Thanks : tamilwin அரசாங்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்குவதானால் அரச சார்பற்ற நிறுவனங்கள் இடம்பெயர்ந்தவர்களுக்கு உதவ அனுமதி: ஜனாதிபதி
இன்று சூரிய கிரகணமானது மாலை 5.11 மணிக்குத் துவங்கி மாலை 6. 27 மணிவரை நீடிக்கவுள்ள நிலையில், இன்று முழு நாளும் திருப்பதி ஏழுமலையான கோயில் நடை திறக்கப்படாது என்று திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: இன்று சூரிய கிரகணத்தை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோவில் உட்பட திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு சொந்தமான அனைத்து கோவில்களிலும் காலை 8.11 மணி முதல் மாலை 7.40 மணி வரை நடை அடைக்கப்பட்டு இருக்கும். சூரிய கிரகணம் முடிந்த பின் சம்பிரதாய முறையில் கோவில் சுத்தம் செய்யப்படும். அதனை தொடர்ந்து பக்தர்கள் சாமி கும்பிட அனுமதி அளிக்கப்படும். திருப்பதி ஏழுமலையான் கோவிலை பொறுத்த வரை இன்று இரவு முதல் நாளை காலை வரை இலவச தரிசனம் மட்டுமே நடைமுறையில் இருக்கும். கிரகணம் காரணமாக இன்று ஏழுமலையான் கோவிலில் கட்டண சேவைகள் நடைபெறாது. அதேபோல் திருப்பதி மலையில் இன்று காலை தொடங்கி கிரகண முடியும் வரை அன்னதான கூடம், விடுதி ஆகியவையும் மூடப்பட்டிருக்கும்.
ஏலக்காய் என்றதுமே நமக்கு நினைவில் வருவது அம்மா உணவின் நறுஞ்சுவைக்கும் நறுமணத்துக்கும்பயன் படுத்தினார்என்பதே . ஆனால் உங்களுக்கு தெரியாத ஒரு விடயம் அதில் உள்ளது ஏலக்காய் கார்ப்புச் சுவையும் வெப்பத் தன்மையும் கொண்டது. சிறுநீரைப் பெருக்கும். தாகம், வியர்வையுடன் கூடிய தலைவலி, வறட்சி, கபம் முதலியவற்றைக் கட்டுப் படுத்தும். நாம் குறைந்தபட்சம் தேநீர் பாயசம் முதலியவற்றில் சேர்த்தால் கூட நல்ல சுறுசுறுப்பைப் பெற முடியும். அதோடு ஜீரணக்கோளாறு இல்லாமல் ஆரோக்கியமான உடலையும் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளலாம். பசியே ஏற்படுவதில்லை, சாப்பிட பிடிக்கவில்லை என்று கூறுபவர்கள், தினமும் ஒரு ஏலக்காயை வாயில் போட்டு மென்றால், பசி எடுக்கும். ஜீரண உறுப்புகள் சீராக இயங்கும். ஏலக்காய் விந்துவைப் பெருக்கும்; காமத்தைத் தூண்டும். வயிற்று உப்புசத்தை நீக்கி செரிமானத்தை எளிதாக்குகின்றது. பாலில் சுடவைத்து இத்துடன் ஒரு தேக்கரண்டித் தேனும் சேர்த்து அருந்தி வந்தால் இருபாலருக்கும் குறைபாடுகள் குணமாகும். அதே நேரத்தில் பாலில் அதிகமாக ஏலக்காய்த்தூளைச் சேர்த்தால் மலட்டுத்தன்மை ஆண்மைக்குறைவு அதிகரிக்கும். எனவே ஒரு சிட்டிகை ஏலக்காய்த் தூளையே பயன்படுத்தினால் போதும். ஜீரணமாகாதபோது வரும் தலைவலியை ஏலக்காய் சேர்ந்த ஒரு கப் தேநீர் விடுவிக்கும்.சில சமயம் வெங்காயம் வெள்ளைப்பூண்டு சேர்த்துக் கொள்பவர்களுக்கு நெஞ்செரிச்சலும் வாய்வுத் தொந்தரவும் இருக்கும். இவர்கள் சாப்பாட்டிற்குப் பிறகு ஏலக்காய் மெல்லுவது நல்லது.
உயிரணு பெறும் சரீரத்தின் தோற்றமான விதத்தையும் “எண்ணங்களின் தோற்றத்தையும்” அதனின் இயக்கங்களை நமக்கு உணர்த்துவதற்காக அன்று ஞானிகள் இராமன் என்னும் கதாபாத்திரத்தைப் படைத்து இதிகாசம் மற்றும் புராணங்களை உருவாக்கினார்கள். இராமன் – எண்ணம் சூரியனிலிருந்து வெளிப்படும் வெப்பம் விஷம் காந்தம் புவியின் ஈர்ப்புக்குள் வரப்படும் பொழுது ஒரு செடியிலிருந்து வெளிப்படக்கூடிய சுவையான சத்தினைக் கவரப்படும்பொழுது அது “சீதாலக்ஷ்மியாக” மாறுகின்றது. சீதா என்றால் சுவை. அதே உணர்வை ஒரு உயிரணு நுகர்ந்தால் அந்த உணர்வின் சத்து உடலாக மாறுகின்றது. “சீதா” என்ற இந்தச் சுவை உயிருடன் ஒன்றி அதன் உணர்வின் உடலாக சிவமாக மாறுகின்றது. சிவத்துக்குள் சக்தியாக இயங்குகின்றது. இதைத்தான், “திரேதாயுகத்தில்” நாராயணன் சீதாராமனாக அவதரித்தார் என்று தெளிவாக அன்று காவியங்களில் கூறப்பட்டது. அதில் “திரேதா.., என்பது சரீரம்.., உயிரணு உடல் பெறும் நிலை”. இதற்குள் “சீதாராமன்” தான் எடுத்துக் கொண்ட சுவை எதுவோ.., “அந்த எண்ணமாக” இயக்குகின்றது. ஒரு உயிரணு கடலைச் செடியின் மணத்தை நுகர்ந்து புழுவின் உடலைப் பெற்றபின் “கடலைச் செடியைச் சாப்பிடவேண்டும்” என்ற “எண்ணம்” அந்தப் புழுவிற்கு வருகின்றது. அதாவது எந்தச் செடியின் சத்தைப் புழு நுகர்ந்ததோ அந்தச் சத்தின் தன்மைக்கொப்பத்தான் எண்ணம் வருகின்றது. உயிரணு ஒரு செடியிலிருந்து சத்தினை நுகர்ந்து தன்னுள் இணைத்து உடலாக மாறும் பொழுது “சீதாராமா” எண்ணங்கள் தோன்றி.., இதைச் சாப்பிட வேண்டும்.., என்ற எண்ணம் உண்டாகின்றது. “உணர்ச்சியை வைத்து.., உணர்வை இயக்கி” அதற்கு வேண்டிய உறுப்புகளை இயக்கத் தொடங்குகின்றது. “எண்ணம்” இல்லை என்றால் “இயங்காமல்தான்” இருக்கும். எந்த நினைவினை எண்ணுகின்றோமோ அது இராமனின் “அம்பு போன்று பாய்ந்து..,” உணர்வின் அணுக்கள் ஒவ்வொன்றையும் இயக்கி அதன் தொடர் கொண்டு நமது உடலை இயக்கும். எண்ணம் உருவாகவில்லை என்றால் உடலை இயக்காது. இதைத்தான் நாராயணன் திரேதாயுகத்தில் சீதாராமனாகத் தோன்றுகின்றான் என்று தெளிவாக அன்று காவியங்களில் கூறப்பட்டுள்ளது. கல்யாணராமன் மனிதரிடத்திலும், உணர்வின் எண்ணங்களின் இயக்கத்தை உணர்ந்த இராமாயணத்தில், “கல்யாணராமா” என்று பாடினார்கள். கல்யாணராமனாக எப்பொழுது ஆகின்றான்? சீதையை மணக்க வேண்டுமென்றால் அரசன் வைத்திருக்கும் வில்லைத் தூக்கி நிறுத்தி வளைத்து முறிக்க வேண்டும். அவ்வாறு வில்லை வளைத்து முறிப்பவர் எவரோ அவரே சீதையை மணக்கும் தகுதியுடையவர் என்ற நிலையைக் காண்பித்தனர். ஏனெனில், வில்லிலே பொருத்தி எய்யப்படும் அம்பு “பிறரைத் துன்புறுத்தும்” தன்மை கொண்டது. துன்புறுத்தும் உணர்வை வென்றவர் எவரோ அவரே சீதாவைத் திருமணம் செய்து கொள்ளும் தகுதி உடையவர் எனும் நிலையைக் காண்பித்தனர். வீர தீரம் காட்டிய பலரும் வில்லின் வலிமையை உணர்ந்தனரே தவிர வில்லைத் தூக்கக்கூட அவர்களால் முடியவில்லை. ஆனால் இராமனோ.., “தீமை விளைவிக்கும் நிலைகளிலிருந்து.., தீமையில்லாத நிலையை உருவாக்குகின்றான்” என்பதை உணர்த்தும் பொருட்டு இராமன் வில்லைத் தூக்கி நிறுத்தி வளைத்து முறித்துவிடுகின்றான். அதன்பின் சீதையை மணந்து கொள்கின்றான் என்று காண்பித்து “தீமையை அடக்கும் சக்தியினை” தன்னுடன் இணைத்துக் கொண்ட நிலையைத்தான் “கல்யாணராமன்” என்று எடுத்துரைத்தனர். மனித வாழ்க்கையில் தீமையை அகற்றி அந்தத் தீமையைச் செயல்படவிடாது தம்முடன் அரவணைத்து ஒளியின் சுடராக மாற்றிக் கொண்டவர்கள் தான் “மகரிஷிகள்”. துருவ மகரிஷியைப் பின்பற்றிச் சென்றவர்கள் சப்தரிஷிகள் என்னும் நிலையை அடைந்தார்கள். பல கோடித் தீமைகளைக் கேட்டுப் பார்த்து உணர்ந்தாலும் மகரிஷிகள் அதனைத் தமது அரவணைப்பாக தமக்குள் சுவையாக ஒளியாக மாற்றிக்கொண்டவர்கள். துருவ மகரிஷியும் சப்தரிஷிகளும் தங்களுடைய உயர்ந்த எண்ணங்களின் துணை கொண்டு மற்றவர்களுடைய எண்ணங்களை தம்முள் வளர்த்திடாது ஒளி பெறும் உணர்வினை தம்முடன் இணைத்து “ஒளியின் சரீரமாக மாறியவர்கள்”.
புதுடெல்லி: மனித வளர்ச்சிக் குறியீட்டின் (HDI) இந்தியா பல்வேறு ஏற்றத்தாழ்வுகளுடன் தனது தெற்காசிய அண்டை நாடுகளுடன் பின்தங்கி இருப்பதாக ஐக்கிய நாடுகள் மேம்பாட்டு நிதியத்தின் சமீபத்திய அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது. இந்த ஏற்றத்தாழ்வுகள், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியைத் தடுக்கின்றன. இந்தியா, 2018 ஆம் ஆண்டின் மனித வளர்ச்சி குறியீட்டில், 189 நாடுகளில் 0.640 மதிப்பெண்களுடன் 130வது இடத்தை பிடித்து, "நடுத்தர" வகையான வளர்ச்சி பிரிவில் உள்ளது. இது இலங்கை (மனித வளர்ச்சி குறியீடு 0.77, 76வது இடம்), சீனா (0.75 மற்றும் 86) ஆகிவற்றுடன் மோசமானது; ஆனால் பாகிஸ்தான் (0.56 மற்றும் 150), நேபாளம் (0.57 மற்றும் 149), வங்கதேசம் (0.68 மற்றும் 136) நாடுகளைவிட மேம்பட்டதாக உள்ளது. Source: 2018 Statistical Update, Human Development Indices and Indicators ஏற்றத்தாழ்வுகள் காரணமாக, மனித வளர்ச்சி குறியீட்டில் இந்தியா 26.8 புள்ளிகளை இழந்தது. அதன் தெற்காசிய சராசரி 26.1 புள்ளிகள் ஆகும். மனித வளர்ச்சி குறியீடானது உடல்நலம், கல்வி மற்றும் வருமானத்தை சார்ந்துள்ள நிலையில், இவ்வழிகளில் பொருளாதாரத்தை முன்னேற்ற, சமத்துவமின்மையை குறைக்க, இந்தியா கவனம் செலுத்த வேண்டும். பிரதமர் நரேந்திர மோடி, 2018 ஆகஸ்டில் தெரிவித்தவாறு, 2022 ஆம் ஆண்டில் இந்தியா தனது பொருளாதாரத்தை 5 டிரில்லியன் டாலர் (ரூ. 350 லட்சம் கோடி) என்று இரட்டிப்பாக திட்டமிட்டுள்ளது. அவர் கணிப்பின்படி ஆண்டுக்கு 8% என்ற வளர்ச்சியை எட்ட, இந்தியா சுகாதாரம், கல்வியில் மேலும் முதலீடுகளை செய்ய வேண்டும். இதை கவனியுங்கள்: மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜி.டி.பி.) $ 2.59 டிரில்லியன் (ரூ. 180 லட்சம் கோடி) மதிப்புடன், உலகில் ஆறாவது மிகப்பெரிய பொருளாதார நாடாக இந்தியா இருந்த போதும், உலகில் வளர்ச்சி குறைபாடு குழந்தைகளில் 30.8% பேர் இங்கு தான் உள்ளனர்.அவர்களது வயதுடன் ஒப்பிடும் வளர்ச்சியுடன் இல்லை; இந்தியாவில் ஐந்து குழந்தைகளில் ஒருவர், உடல் மெலிந்து எடை குறைவாகவும் உள்ளார். ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகள் ஆரோக்கியமாக இருக்க போராடுகிறார்கள். வகுப்பறை, பணியிடங்களில் நண்பர்களை தேடிக்கொள்வது கடினமாக உள்ளது. இந்தியாவுக்கு, ஊட்டச்சத்து குறைபாட்டிற்கான செலவால் 46 பில்லியன் டாலர் வரை (ரூ.3.2 லட்சம் கோடி) வரை இழப்பு ஏற்படலாம். இது, 2018-19 மத்திய பட்ஜெட்டில் சுகாதார, கல்வி மற்றும் சமூக பாதுகாப்பு திட்டங்களுக்கு செலவிட்டதை (21.6 பில்லியன் டாலர் அல்லது ரூ.1.38 லட்சம் கோடி) விட இரு மடங்கு அதிகம். இந்தியாவில் இந்த உச்சகட்ட உற்பத்தியானது 6.5 ஆண்டுகளில் (சீனாவில் இது 20 ஆண்டு, பிரேசிலில் 16, இலங்கையில் 13) எட்டப்பட்டுள்ளது. மருத்துவ இதழான தி லான்செட் வெளியிட்ட மனித மூலதனத்திற்கான சர்வதேச தரவரிசையில், 195 நாடுகளில் இந்தியா 158வது இடத்தில் இருப்பதாக, 2018 செப்டம்பரில் இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை வெளியிட்டு இருந்தது. "கல்வி, சுகாதாரம், மேம்பட்ட மனித மூலதனம் மற்றும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் முதலீடு ஆகியவற்றிற்கு இடையேயான தொடர்புகளை எங்களின் கண்டுபிடிப்புகள் காட்டுகின்றன” என்று, வாஷிங்டன் பல்கலைக்கழக சுகாதார அளவீடு மற்றும் மதிப்பீட்டு நிறுவனத்தின் (IHME) இயக்குனரும், ஆய்வு ஆசிரியருமான கிறிஸ்டோபர் முர்ரே தெரிவித்தார். பாலினம் மற்றும் வருமான ஏற்றத்தாழ்வுகளை இந்தியா ஸ்பெண்ட் பகுப்பாய்வு செய்து அதற்கான தீர்வுகளையும் வழங்குகிறது: பாலின ஏற்றத்தாழ்வு கடந்த 5 ஆண்டுகளில் 1000 ஆண்களுக்கு 919 பெண்களே பிறந்துள்ளனர். இது, நகரப்புறங்களை (925) விட, கிராமப்பகுதிகளில் மிக மோசமாக (899) உள்ளதாக, தேசிய குடும்ப சுகாதார ஆய்வு (NFHS-4) 2015-16 தெரிவிக்கிறது. எழுத்தறிவை எடுத்துக் கொண்டால், ஆண்களை (85.7%) விட, பெண்களின் விகிதம் (68.4%) பின்தங்கியே உள்ளது; 35.7% பெண்கள் மட்டுமே 10ஆம் வகுப்பை கடந்துள்ளதாக, ஆய்வு கூறுகிறது. பள்ளிகளில் சிறுவர்களும், சிறுமியரும் 16 வயது வரை, ஏறத்தாழ ஒரே பதிவு விகிதத்தை வைத்திருந்தாலும், 18 வயதை கடக்கும் போது அதில் பெரிய வேறுபாடு தெரிகிறது. பெண்கள் மற்றும் பையன்கள் எண்ணுதல், நேரம் பார்த்தல், எடை கூட்டுதல் போன்ற எளிய பணிகளை கூட செய்ய போராடுகின்றனர்; குறிப்பாக பெண்களின் நிலை மிக மோசமாகும் என, 2017ஆம் ஆண்டு கல்வி நிலை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. வீட்டு வேலைகளில் கவனம் செலுத்த ஏதுவாக, இந்தியாவில் நான்கில் ஒரு பெண் 18வயதுக்கு முன் (26.8%) திருமணம் செய்து வைக்கப்படுகிறார். திருமணத்திற்கு பிறகும் அவரது நிலை மோசமாகவே உள்ளது. கர்ப்பம் அடையாத இரு பெண்களில் ஒருவருக்கு ரத்தச்சோகை (53.2%), நான்கில் ஒருவருக்கு எடை குறைபாடு (22.9%), திருமணமான மூன்றில் ஒரு பெண் குடும்ப வன்முறையை (31.1%) சந்திப்பதாக, தேசிய குடும்ப சுகாதார ஆய்வு தெரிவிக்கிறது. முன்பை விட அதிக கல்வியறிவு பெற்றிருந்தாலும், இந்திய பெண்களில் அதிகம் பேர் வேலை செய்யவில்லை. 2013 ஆம் ஆண்டில், இந்தியாவில் 15 வயதிற்கு மேலான தொழிலாளர்களில் பெண்களின் எண்ணிக்கை 27.2%; இது ஆண்களில் 78.8% என்று உள்ளது. இது பத்து ஆண்டுகளுக்கு முன்பிருந்ததுடன் ஒப்பிடும் போது 34.8% குறைவு என்று, 2017 ஆகஸ்டில் இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை தெரிவித்திருந்தது. பாலின குறிகாட்டிகள் மீது இந்தியாவின் செயல்பாடு அதன் அண்டை நாடுகளைவிட மோசமாக உள்ளது - ஐ.நா. பாலின சமத்துவமின்மை குறியீட்டில் இந்தியா, 189 நாடுகளில் 127வது இடத்தைப் பிடித்தது. இதில் குறைந்த இடங்களை நேபாளம் (118), சீனா (36), இலங்கை (80) நாடுகள், வங்கதேசம் (134), பாகிஸ்தான் (133) ஆகியன அதிகமாக உள்ளன. பரவலாக சமத்துவமின்மை கடந்த 1980ஆம் ஆண்டுகளில், 31%-க்கும் மேலாக மொத்த சொத்துக்களில் 55%-ஐ கட்டுப்படுத்துவதன் மூலம்,10%க்கும் மேல் கட்டுப்படுத்தும், உலகின் மிக சமத்துவமற்ற நாடுகளில் ஒன்றாக இந்தியா இருந்தது என, 2018 உலக சமத்துவமின்மை அறிக்கை கூறுகிறது. மொத்த சொத்துக்களில் கீழ் 50 சதவீதத்தில் 15.3% மட்டுமே கட்டுப்படுத்துகிறது. 1980-களில் இருந்து மேல் சொத்துக்களில் 1% பெருகிய நிலையில், கீழே 50 சதவீதம் சரிந்துள்ளது. சில ஜாதிகள் மற்றும் சமூகங்கள் மற்றவர்களை விட மோசமாக உள்ளன. முஸ்லீம்கள், பெளவுத்தர்களில் சொத்து பங்கு என்பது குறைந்த பட்சமாக இருந்தது; 2002-ல் இருந்து 2012ல் இது குறைந்திருந்ததாக, 2018 ஆக்ஸ்பாம் இந்தியா அறிக்கை தெரிவிக்கிறது. இந்திய மக்கள் தொகையில் 8% உள்ள பட்டியலின பழங்குடியின மக்கள், குறைந்த சொத்துக்கள் பிரிவில் 45.9% பங்குடன் இடம் பெற்றுள்ளதாக, 2018 பிப்ரவரியில் இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை தெரிவித்திருந்தது. இந்த சொத்தில் பெரும்பகுதிக்கு குறைவாக, விரைவில் வழங்கப்படலாம். பிரேசில், சீனா, எகிப்து, இந்தோனேசியா மற்றும் நைஜீரியா - ஐந்து பெரிய வளரும் நாடுகளின் குடிமக்களைவிட பெற்றோர்களின் வருமானம், கல்வி அடைப்புக்களில் இருந்து பிரிந்து வாழும் இந்தியர் எண்ணிக்கை குறைவு என, உலக வங்கி அறிக்கையை மேற்கோள்காட்டி 2018 ஜூனில் இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை வெளியிட்டிருந்தது. குறைந்த செல்வமானது, குறைவான வாழ்க்கை எதிர்பார்ப்புகளை, மோசமான சுகாதார விளைவுகள், மோசமான கல்வி விளைவுகளை கொண்டிருந்ததாக பல்வேறு ஆய்வுகள் தெரிவித்தன. அடிக்கடி ஏற்படும் அவசர சுகாதார தேவைகள், பெரும்பாலும் மக்களை அதாவது 2011-12ஆம் ஆண்டில் 5.5 கோடி பேரை வறுமையில் தள்ளியது. மக்களிடம் முதலீடு செய்தல் என்பதன் முக்கியம் ஏன் பெருகி வருகிறது சமூக செலவினங்களில் முதலீடு ஒரு அவசியம் என்பதை இந்த காரணிகள் காட்டுகின்றன. "முக்கியமாக உள்கட்டமைப்பில் இருப்பதை விட மக்களிடம் முதலீடு செய்வது நிலையான வளர்ச்சியை அடைய சிறந்த வழி; மற்றும் மனித மூலதனத்தில் சுகாதார மற்றும் கல்வி மூலம் முதலீடுகள் நிர்ப்பந்திக்கப்பட்ட வருமானத்தை வழங்குகின்றன " என்று உலக சுகாதார அமைப்பு இயக்குனர் ஜெனரல் டெட்ரோஸ் அதனொம் கேபிரேயஸ் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார். பெண்களின் நல்வாழ்வை உறுதிப்படுத்துதல்: பெண்களின் நல்வாழ்வு அவர்களின் உடல்நிறை குறியீட்டில் இருந்து (பிஎம்ஐ) மதிப்பிடப்படுகிறது; கல்வி, முன்கூட்டியே திருமண, மகப்பேறு பராமரிப்புக்கான அணுகல் (ANC) ஆகியன, இந்தியாவில் உயர்ந்த மற்றும் குறைவான துருப்பு விகிதங்களுக்கிடையேயான வேறுபாடுகள் என, சர்வதேச உணவு கொள்கை ஆராய்ச்சி நிறுவனத்தின் 2018 ஆய்வை சுட்டிக்காட்டி, 2018 ஜூலையில் இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை வெளியிட்டிருந்தது. பெண்கள் உடல் நிறை குறியீட்டை (19%) விட அதிகம் குழந்தைகளின் போதுமான உணவு (9%) என்பது, அவர்கள் முதிர்ச்சியடையாததால் என ஆய்வில் தெரிய வந்தது. பெண்கள் உடல்நலம் மற்றும் அதிகாரம் நேரடியாக, பல முந்தைய ஆய்வுகள் (இங்கே மற்றும் இங்கே) குழந்தை உடல்நலம் மற்றும் ஊட்டச்சத்தை பாதிக்கின்றன. நல்ல ஆரோக்கியத்தையும், பெண்களுக்கு பொருளாதார வளர்ச்சிக்கான பல வாய்ப்புகளையும் உறுதிப்படுத்துவது, உற்பத்தித்திறன் மற்றும் பொருளாதார வருவாயை மட்டுமல்லாமல் ஆரோக்கியமான வருங்கால மக்கள் அதிகரிக்க காரணமாகிறது. பண பரிமாற்றங்கள்: லத்தீன் அமெரிக்கா, ஆபிரிக்கா மற்றும் ஆசிய நாடுகளில் வறுமையை குறைக்க பண பரிவர்த்தனைகள் பயன்படுத்தப்படுகின்றன; இவை பொருளாதார கொள்கைகளின் "தந்திரமான" விளைவுகளில் இருந்து எதிர்பார்த்ததை விட விரைவான முடிவுகளை வழங்கியுள்ளதாக, 2017 சர்வதேச தொழிலாளர் அமைப்பு அறிக்கை தெரிவிக்கிறது. பண பரிமாற்றம் பிரேசிலில் சமத்துவமின்மையை, 28% ஜி.ஐ.என்.ஐ. குறியீட்டால் அதாவது சமத்துவமின்மை அளவு - 1995 மற்றும் 2004 க்கும் இடையே குறைக்க உதவியது. குழந்தை வளர்ச்சி குறைபாட்டை 13.6% இருந்து 2006ஆம் ஆண்டில் 7% ஆக குறைக்க உதவியது. ஒரு உலகளாவிய அடிப்படை வருவாய்-யுபிஐ (UBI) -- ஒரு கால இடைவெளியில் தொடர்ச்சியான, நிபந்தனையற்ற பணம் செலுத்துதல் -- 2016-17 இந்திய பொருளாதார ஆய்வறிக்கையில் நீண்ட விவாதமாக இருந்தது. தற்போதைய நலத்திட்ட அமைப்புகளில் இருந்து கசிவுகளை குறைக்க உதவுவதோடு, ஏழைகளின் வாழ்க்கை தரத்தை உயர்த்தவும் யு.பி.ஐ. உதவ முடியும் என அந்த அறிக்கை தெரிவித்ததாக, 2017 ஜூனில் இந்தியா ஸ்பெண்ட் கட்டுரைதெரிவித்திருந்தது. "மக்கள் தொகையில் 75% பேரின் தனிநபர் வருமானம் ரூ .6,450 ஆக ஓராண்டுக்கு இருந்தால், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் யி.பி.ஐ.யின் மதிப்பு 4.2% ஆகும்” என்று நாங்கள் தெரிவித்திருந்தோம். எனினும், இது அரசியல் ரீதியாகவோ பொருளாதார ரீதியாகவோ சாத்தியமற்றதாக இருக்கலாம் என்று அரசு கூறியது. ஒரு உண்மையான 'உலகளாவிய' சுகாதார பாதுகாப்பு: இந்தியாவின் பொது சுகாதார செலவினம் உலகில் மிகக் குறைவாகவும், அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (2015) 1.02% ஆகவும் உள்ளது. நிபுணர்களால் பரிந்துரைக்கப்படுவதை விட 5%; குறைந்த வருவாய் உடைய மற்ற நாடுகளின் 1.4% என்பதை விட குறைவாகும். 2025ம் ஆண்டுக்குள் தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5% வரை செலவழிக்க இந்தியா உறுதியளித்துள்ளதாக,அதன் தேசிய சுகாதார கொள்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகமான முதலீடு மற்றும் பொது மக்களை வலுப்படுத்துதல் - குறிப்பாக முதன்மை - சுகாதார அமைப்பு அணுகல் மற்றும் சுகாதார வசதிகளை மேம்படுத்துவதற்கான வழியாகும். 10 கோடி இந்திய குடும்பங்களுக்கு ரூ.5,00,000 காப்பீடு வழங்குவதற்காக ஆயுஷ்மன் பாரத் யோஜனா (தேசிய சுகாதார பாதுகாப்புத் திட்டம்) திட்டத்தை இந்தியா செயல்படுத்துகிறது. வெளிநோயாளிகளோ, மருந்து செலவினங்கள் என்ற பெரும் செலவினங்கள் காப்பீடு திட்டத்தின் கீழ் வரவில்லை என்ற முந்தைய காப்பீடு மாதிரியானது வறுமையில் குறைக்கவில்லை என்ற அனுபவத்தை தந்துள்ளது. "நிதி பாதுகாப்பு, பொருத்தமான பாதுகாப்பு மற்றும் உலகளாவிய அணுகல் ஆகியவற்றை உண்மையில் வழங்கும் ஒரு [சுகாதார] அமைப்பு நமக்குத் தேவை. காப்பீட்டு திட்டங்கள் நன்கு திட்டமிடப்பட்டுள்ளன, ஆனால் இந்த நோக்கங்களை அவை நிறைவேற்றவில்லை” என்று இந்தியாவின் பொது சுகாதார அறக்கட்டளையின் இயக்குனர் ஸ்ரீநாத் ரெட்டி, இந்தியா ஸ்பெண்டிடம் 2018 ஜனவரியில் தெரிவித்திருந்தார். முதன்மை, இரண்டாம்நிலை மற்றும் மூன்றாம் சேவைகளை ஒருங்கிணைத்தல் மற்றும் பல சுகாதார-நிதி ஆதாரங்களை இணைப்பதன் மூலம், உலகளாவிய சுகாதார திட்டம் என்ற ஒற்றை அமைப்பு உருவாக்குதலே உண்மையான பாதுகாப்பு திட்டமாகும் என்று ரெட்டி தெரிவித்தார். திருத்தம்: இக்கட்டுரையில் $ 5 டிரில்லியன் என்பது 350 லட்சம் கோடி ரூபாய் என்று திருத்தப்பட்டுள்ளது; முன்பு குறிப்பிட்டது போல் 35 லட்சம் கோடி அல்ல. தவறுக்கு வருந்துகிறோம். (யாதவர், இந்தியா ஸ்பெண்ட் முதன்மை செய்தியாளர்) உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு. Swagata Yadavar ஸ்வாகதா, மும்பையை சேர்ந்த சுகாதாரம் தொடர்பான செய்தியாளர். சுகாதார பராமரிப்பு மற்றும் பொது சுகாதாரக் கொள்கை இடையே உள்ள இடைவெளிகளை கண்டறிந்து எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். சுகாதாரம் தொடர்பான கட்டுரைக்காக, 2014ஆம் ஆண்டில் மும்பை பிரஸ் கிளப்பின் ரெட் இங்க் விருதை பெற்றார். பாலினம் தொடர்பான கட்டுரைக்காக 2013-ல் லாட்லி மீடியா விருது, ஐரோப்பிய ஆன்காலஜி கல்வி நிறுவனத்தின் 2018ஆம் ஆண்டுக்கான புற்றுநோய் பத்திரிகை விருது, புற்றுநோய் ஆராய்ச்சிக்கான அமெரிக்க கூட்டமைப்பின் பெல்டர் பரிசை 2918ஆம் ஆண்டு ஜூனில் பெற்றுள்ளார்.இதற்கு முன் தேசிய வார இதழான தி வீக்கில் பணியாற்றியவர்.
கேரட் மிகவும் மலிவாக எளிதில் கிடைக்கும் காய்களில் ஒன்றாகும். அதிக நன்மைகள் நிறைந்த கேரட் அனைவராலும் விரும்பி உண்ணும் சுவை நிறைந்த காயாகும். நாம் அனுதினமும் பயன்படுத்தும் … Read more நெல்லி பொடி நெல்லி பொடி பயன்கள் நெல்லியில் இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ் போன்ற தாதுக்கள் அதிக அளவில் நிறைந்துள்ளதால் இது இரத்த சோகைக்கு நல்ல மருந்தாகும். நெல்லியில் அறுசுவையில் உப்பு … Read more முடக்கத்தான் பொடி முடக்கத்தான் பொடி பயன்கள் முடக்கத்தான் முடக்கு அறுத்தான் என்பது நாளடைவில் முடக்கற்றான் என்றானது. கசப்புத் தன்மையுடைய முடக்கத்தான் முடக்கு வாத நோய்களை குணமாக்குவதால் முடக்கத்தான் என்று பெயர் … Read more கரிசலாங்கண்ணி பொடி கரிசலாங்கண்ணி பொடி பயன்கள் கரிசலாங்கண்ணி அதிக அளவில் மருத்துவ குணங்கள் நிறைந்த மூலிகையாகும். இதில் எக்லிப்டால், டெஸ்மீத்தைல், அக்கோண்டனால், ஹென்ட்ரை, ஸ்டிக்மாஸ்டீரால், தங்கச்சத்து, இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் … Read more ஆவாரம் பூ பொடி ஆவாரம்பூ பொடி பயன்கள் ஆவாரம்பூ துவர்ப்புத் தன்மை உடையது. இதில் தங்கச்சத்து நிறைந்துள்ளது. ஆவாரம் பூ பொடியை தினமும் ஒரு டீஸ்பூன் அளவு சாப்பிட்டு வர சர்க்கரை … Read more கஸ்தூரி மஞ்சள் பொடி கஸ்தூரி மஞ்சள் பொடி பயன்கள் கஸ்தூரி மஞ்சள் முக அழகு சாதன பொருட்களில் ஒன்றாகும். இது அனைத்து வகை சருமத்திற்கும் கேடு விளைவிக்காத அலர்ஜி எதிர்ப்பு தன்மை … Read more எலுமிச்சை தோல் பொடி பயன்கள் எலுமிச்சை தோல் பொடியினைக் கொண்டு ஃபேஸ் பேக் முதல் பாதத்திற்கு அழகு தரும் பெடிக்யூர் வரை பயன்படுத்தலாம். எலுமிச்சை தோலில் அதிக அளவு கலோரிகள், கார்ப்ஸ், நார்ச்சத்து, … Read more ஆரஞ்சு தோல் பொடி ஆரஞ்சு தோல் பொடியின் பயன்கள் ஆரஞ்சு தோலில் அதிகளவு ஆன்டி ஆக்ஸிடன்டுகள் நிறைந்துள்ளது. இது இயற்கை அழகை விரும்பும் பெண்களுக்கு மிகச் சிறந்த அழகு சாதன பொருளாகும். … Read more முருங்கை இலை பொடி முருங்கை இலை பொடி பயன்கள் முருங்கையில் விட்டமின்கள், மினரல், அமீனோ ஆசிட்கள், வைட்டமின் சி, கால்சியம், பொட்டாசியம் மற்றும் புரோட்டின் போன்ற ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளது. 10 கிராம் … Read more மருதாணி பொடி மருதாணி பொடி பயன்கள் மருதாணி பொடியானது இளநரையை தடுக்க அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். இதனுடன் அவுரி பொடியை சேர்த்து பயன்படுத்தும் போது நம் கூந்தலுக்கு ஏராளமான நன்மைகள் … Read more ரோஸ் பொடி ரோஸ் பொடியின் பயன்கள் ரோஜாவிற்கு இயற்கையாகவே சருமத்தின் நிறத்தை கட்டுப்படுத்தும் தன்மை உள்ளது. ரோஜாவில் அதிகளவு வைட்டமின் சி நிறைந்துள்ளது. இது நல்ல ஆன்டி-ஆக்ஸிடன்ட் ஆகும். ரோஜா … Read more மண் சிகிச்சை மண்ணின் மகத்துவத்தை அறிந்து அதில் உள்ள மருத்துவ குணங்களை கொண்டு மண் சிகிச்சை முறைகளை சித்த மருத்துவர்கள் கூறியுள்ளனர். பழங்காலங்களில் அனைத்து கிராமங்களிலும் மண் சிகிச்சை முறைகளை … Read more முகத்தில் உள்ள கருமை நீங்க வேண்டுமா? முக அழகு என்பது அனைவரும் விரும்பும் ஒன்றாகும். அதிலும் பெண்கள் முகத்தில் ஏதேனும் ஒரு சிறு பரு வந்தாலும் மிகவும் வேதனைப்படுவர். அநேக பெண்கள் வெள்ளை நிறத்தில் … Read more சர்க்கரை நோயில் இருந்து ஆரம்பத்திலேயே தப்பித்துக்கொள்ள… சர்க்கரைக்கேற்ற முருங்கை சர்க்கரை நோய் சர்க்கரை நோய் இன்றைய காலத்தில் அதிகளவில் காணப்படும் நோயாகும். நம் உடலில் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ … Read more உடலுக்குத் தேவையான வைட்டமின்கள் புழுக்கமான சீதோஷ்ண நிலை பெரும்பாலும் மே, ஜுனில் காணப்படுகிறது. வறட்சியான ஈரப்பதம் ஃபுளூ காய்ச்சலுக்கு ஈடான உடல் நலக் கோளாறுகளை ஏற்படுத்துகிறது. மூக்கடைப்பு, டான்சில், குரல் வளை … Read more
அன்னூர் தொழிற்பேட்டைக்கு விவசாய நிலங்களை கையகப்படுத்த கடும் எதிர்ப்பு : விவசாயிகளுக்கு ஆதரவாக அன்னூரில் அண்ணாமலை தலைமையில் பா.ஜ.க. ஆர்ப்பாட்டம் சென்னை ரிச்சி தெருவில் 90 கடைகளுக்‍கு மாநகராட்சி அதிகாரிகள் சீல்... நீண்ட காலமாக தொழில்வரி செலுத்தாமல் நிலுவையில் வைத்ததால் நடவடிக்கை வங்கக் கடலில் மாண்டஸ் புயல் - சென்னை பெசன்ட் நகர், பட்டினப்பாக்‍கம் பகுதிகளில் கடல்சீற்றம் மாண்டஸ் புயல் எச்சரிக்‍கை - வேலூர் மாவட்டத்தில் இன்று மதியம் மற்றும் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு சென்னைக்‍கு தென்கிழக்‍கே 580 கிலோமீட்டர் தொலைவில் மாண்டஸ் புயல் மையம் - 6 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வருவதாக வானிலை மையம் தகவல் ஹிமாச்சல் தேர்தல்... முன்னாள் முதலமைச்சர் வீர்பத்ரசிங்கின் மகன் விக்‍ரமாதித்ய சிங் சிம்லா புறநகர் தொகுதியில், 7 ஆயிரத்து 233 வாக்‍குகள் முன்னிலை இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் - பா.ஜ.க. இடையே இழுபறி.... வெற்றி அறிவிப்பு வந்தவுடன் எம்.எல்.ஏ.க்‍களை ராஜஸ்தான், சத்தீஸ்கருக்‍கு அழைத்துச் செல்ல பிரியங்கா காந்தி திட்டம் குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல்.. கிரிக்‍கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா மனைவி ரிவாபா முன்னிலை குஜராத்தில் இம்முறையும் காங்கிரசுக்‍கு பெரும் பின்னடைவு... 20க்‍கும் மேற்பட்ட தொகுதிகளில் மட்டுமே அக்‍கட்சி வேட்பாளர்கள் முன்னிலை குஜராத்தில் 140க்‍கும் மேற்பட்ட சட்டமன்றத் தொகுதிகளில் பா.ஜ.க. முன்னிலை... விறுவிறுப்பாக நடைபெற்று வரும் வாக்‍கு எண்ணிக்‍கை
பாப்-அப் சாளரங்களை கட்டுக்குள் வைத்திருப்பதில் கூகிள் ஒரு பெரிய வேலை செய்கிறது. அதனால்தான் எங்கள் உலாவல் அனுபவத்தை ஆக்கிரமிக்கும் பாப்-அப் சாளரங்களின் கடல்கள் சில பெரிய சிக்கல்களைக் குறிக்கின்றன. அதிர்ஷ்டவசமாக, இந்த எரிச்சலூட்டும் மற்றும் எரிச்சலூட்டும் விளம்பரங்களை சமாளிக்க நிறைய வழிகள் உள்ளன. தேவையற்ற மற்றும் ஒற்றைப்படை பாப்-அப்கள் மற்றும் பேனர் விளம்பரத்திலிருந்து விடுபடுவது இரு வழி நடைமுறை. முதலில், உங்கள் கணினியிலிருந்து எந்த ஆட்வேர் அல்லது தீம்பொருளையும் அகற்ற வேண்டும். இரண்டாவதாக, பாப்-அப்கள் மற்றும் பேனர் விளம்பரங்களைத் தடுக்க உலாவி நீட்டிப்பைப் பயன்படுத்த வேண்டும். நீங்கள் மனதில் கொள்ள வேண்டிய வேறு சில விஷயங்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன. உங்கள் ஜன்னல்களை சுத்தம் செய்தல்: ஏ.வி.ஜி வைரஸ் தடுப்பு நிரலை நீங்கள் இயக்கினால், அது சரியாக வேலை செய்வதை நிறுத்திவிட்டால், நீங்கள் மற்றொரு ஆட்வேர் அல்லது தீம்பொருள் எதிர்ப்பு கருவியைத் தேட வேண்டும் என்று செமால்ட் நிபுணர் லிசா மிட்செல் விளக்குகிறார். பெரும்பாலான வல்லுநர்கள் தீம்பொருளை எதிர்த்துப் போராடுவதிலும், உங்கள் கணினியிலிருந்து எரிச்சலூட்டும் பாப்-அப் விளம்பரங்களை அகற்றுவதிலும் உள்ள மால்வேர்பைட்ஸ் எதிர்ப்பு தீம்பொருளைப் பரிந்துரைக்கின்றனர். விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8 ஆகிய இரண்டிற்கும் நீங்கள் முயற்சிக்கக்கூடிய மற்றொரு ஒத்த நிரல் எக்ஸ்ப்ளோடின் AdwCleaner ஆகும், இது அந்த கருவிப்பட்டிகள், உலாவி படையெடுப்பாளர்கள் மற்றும் பெரிய எண்ணிக்கையில் பாப்-அப்களை உருவாக்கும் ஆட்வேர் அனைத்தையும் குறிவைக்கிறது. AdwCleaner இன் தவறான மற்றும் சட்டவிரோத பதிப்பு உள்ளது, அது பாப்-அப்கள் மற்றும் ஆட்வேர்களை அகற்ற ஏதாவது செலுத்துமாறு கேட்கும். நீங்கள் அதைத் தேர்வுசெய்து இந்த கருவியின் உண்மையான பதிப்பை மட்டும் பதிவிறக்கக்கூடாது. உலாவி துணை நிரல்கள்: விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8 இல் நீட்டிப்புகள் மற்றும் துணை நிரல்களைச் சரிபார்க்க, நீங்கள் மேல் பக்கத்தில் உள்ள ஐகானைக் கிளிக் செய்து அதன் கீழ்தோன்றும் மெனுவிலிருந்து துணை நிரல்கள் விருப்பத்தைக் கிளிக் செய்ய வேண்டும். அனைத்து துணை நிரல்களும் முடக்கு, அகற்று மற்றும் விருப்பங்கள் பகுதிகளுக்கு தனி பொத்தான்களைக் கொண்டுள்ளன. முடக்கு பொத்தானைக் கிளிக் செய்து தீம்பொருள் மற்றும் எரிச்சலூட்டும் பாப்-அப் விளம்பரங்களை உங்கள் இயக்க முறைமையில் காண்பிப்பதை நிறுத்த வேண்டும். விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8 இல் பாப்-அப் விளம்பரங்களின் எண்ணிக்கையைக் குறைப்பதற்கான மற்றொரு முறை, யூப்லாக் ஆரிஜின் மென்பொருளை நிறுவுவதன் மூலம். இந்த திட்டத்தை ரேமண்ட் ஹில் வழங்கியுள்ளார், மேலும் பாப்-அப்களை ஏற்படுத்தும் வெவ்வேறு தீம்பொருள் மற்றும் ஆட்வேர்களை உட்கொள்ளலாம். இது ஈஸி பிரிவசி மற்றும் ஈஸிலிஸ்ட் போன்ற ஒரு சில வடிப்பான்களுடன் வருகிறது. பாப்-அப் விளம்பரங்களைத் தடுப்பதற்கான சிறந்த மற்றும் அற்புதமான கருவியாக இருக்கும் கோஸ்டரியையும் நீங்கள் தேர்வு செய்யலாம். இது பேஸ்புக் விளம்பரங்கள், டபுள் கிளிக் விளம்பரங்கள் மற்றும் கூகிள் மொழிபெயர்ப்பு விளம்பரங்களையும் தடுக்கலாம். ஃபோஸ்ட்வேரை நிறுத்து: ஆன்லைனில் பல தயாரிப்புகளை விளம்பரப்படுத்தவும் பணம் சம்பாதிக்கவும் நீங்கள் பயன்படுத்தும் வலைத்தளங்கள் மற்றும் இயக்க முறைமைகளை பாப்-அப்கள் எளிதில் தாக்குகின்றன. இது ஃபோயிஸ்ட்வேர் என்று அழைக்கப்படுகிறது, இதில் கூகிள், மைக்ரோசாப்ட் பிங், கேளுங்கள், பி.யு.பி கள் மற்றும் கூகிள் குரோம் போன்ற தளங்கள் உள்ளன. ஒரு எளிதான தீர்வு என்னவென்றால், நீங்கள் Unchecky எனப்படும் ஒரு நிரலை நிறுவ வேண்டும். இது நியாயமானதாகத் தோன்றும் மற்றும் பாப்-அப்களின் வடிவத்தில் தோன்றும் சலுகைகளின் மூட்டைகளைத் தடுக்கிறது அல்லது நீக்குகிறது. விண்டோஸ் 10 மேம்படுத்தல்களை நிறுத்து: மைக்ரோசாப்ட் புதிய விண்டோஸ் 10 இயக்க முறைமையை பல சாதனங்களில் பெற முயற்சிக்கிறது மற்றும் விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8 இல் ஒரு சிறிய ஜி.டபிள்யூ.எக்ஸ் (விண்டோஸ் 10 ஐப் பெறுக) பயன்பாட்டை நிறுவியுள்ளது. இது இலவசமாக மேம்படுத்தும்படி கேட்கிறது, அதை நீங்கள் செய்யக்கூடாது. மைக்ரோசாப்டின் விளம்பர அறிவிப்புகள் மற்றும் எரிச்சலூட்டும் பாப்-அப்களை நீங்கள் தடுக்க விரும்பினால், அல்டிமேட் அவுட்சைடரின் ஜி.டபிள்யூ.எக்ஸ் கண்ட்ரோல் பேனலை நாங்கள் பரிந்துரைக்கிறோம். மாற்றாக, நீங்கள் எட் பாட் விளம்பர தடுப்பானை முயற்சி செய்து இணையத்தில் உங்களுக்கு குழப்பத்தை உருவாக்கும் பாப்-அப்கள் மற்றும் பேனர் விளம்பரங்களில் இருந்து விடுபடலாம்.
ஒட்டுமொத்த உலகத்திலையும் பெரும் அழிவை ஏற்படுத்தும் கொரோனா வைரஸ், மனித குலத்திற்கு எதிரியாக பார்க்கப்படுகிறது. இதனால் இந்த வைரஸ் நம்மை தாக்கியுள்ளதா என பலர் அச்ச உணர்வுடனே சுற்றுகின்றனர். இந்த நோய் உங்களை தாக்கி இருப்பதற்கான அறிகுறி என்ன.? இந்த அறிகுறிகளை எந்தவித மருத்துவமனைக்கும் போகாமல் நாமே அறிந்து கொள்வது எப்படி.? நீங்கள் கொரோனாவால் பாதிக்கப்படவில்லை என்பதை அறிய விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. கொரோனா அறிகுறிகள்: உங்களுக்கு இந்த நோய் தாக்கம் வந்துருச்சு அப்படின்னா இதை அறிந்து கொள்வதற்கு குறைந்தபட்சம் இரண்டு நாட்களில் இருந்து அதிகபட்சம் 14 நாட்கள் ஆகலாம். இந்த அறிகுறியை தெரிந்து கொள்வதற்கு அவங்க அவங்களோட நோய் எதிர்ப்பு சக்தியை பொறுத்து. சில பேருக்கு அறிகுறியே இருக்காது. முக்கிய முதல் அறிகுறி காய்ச்சல் : எல்லாக் காய்ச்சலுக்கும் கொரோனா வைரஸ் தான் என்று கூற முடியாது. அப்படி உங்களுக்கு சந்தேகம் ஏற்பட்டால், வீட்டில் இருக்கும் தெர்மா மீட்டர் மூலம் பரிசோதனை செய்யலாம். அப்படி செக் பண்ணும் பொழுது 100 பாரன்ஹீட்டுக்கு அது சாதாரண காய்ச்சல் என்று கணக்கிட முடியாது, உதாரணத்திற்கு 96- 97 , 100 இருந்தால் அது சாதாரண மனித உடம்பில் உள்ள சூடு. ஒருவேளை 100 பாரன்ஹீட்டுக்கு மேல் இருந்தால் அது சாதாரண காய்ச்சலாக கருதப்படுகிறது. அப்படியே ஒவ்வொரு மனிதருக்கும் இந்த உடல் சூடு மாறுபடும். அதை காய்ச்சல் என்றும் சொல்ல முடியாது. உடல் சூடு என்றும் சொல்ல முடியாது. ஆனால் 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் இருந்தால் இந்த நோய் தொற்றுக்கான முதல் அறிகுறி என்று உறுதி படுத்தலாம். இந்த காய்ச்சல் சோதனையை மதிய நேரத்திற்கும் மாலை நேரத்திற்கும் இடைப்பட்ட நேரத்தில் சோதித்தால் உடம்போடு சரியான நிலையில் இருக்கும். அந்த நேரங்களில் சரியான வழிகாட்டுதலும் கிடைக்கும். இரண்டு மூன்று நாளைக்கு மேல் காய்ச்சல் இருந்தால் முதல் அறிகுறி நீங்களே முடிவு செய்துவிட்டு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நீங்க உங்கள பரிசோதனை செய்துக்கொள்ள வேண்டும். இரண்டாவது முக்கிய அறிகுறி வறட்டு இருமல் : நாம் சாதாரணமாக இருமும் பொழுது இந்த நோய்க்கான அறிகுறி கிடையாது. உங்களுக்கு காய்ச்சல், இருமலை இருந்தாலும் அதற்கான அறிகுறி அப்படின்னு உறுதிப்படுத்த முடியாது. இந்த நோய்க்கான அறிகுறியை சாதாரண இருமல் போல இருக்காது. சாதாரண இருமல் தொண்டை குழாயிலிருந்து வரும். இந்த மாதிரியான வறட்டுஇருமலை இதுவரைக்கும் நீங்கள் வாழ்க்கையில் அனுபவிக்காத இருமலாக இருக்கும். இந்த இருமல் உங்களுடைய இதயத்தில் இருந்து வருவதை நீங்கள் உணரலாம். அப்படி இருந்தால் நிச்சயம் இந்த நோய்க்கான முக்கிய அறிகுறியாக உணரலாம். மூன்றாவது முக்கிய அறிகுறி மூச்சு திணறல் : மூன்றாவது முக்கிய அறிகுறிகள் இருந்துச்சுன்னா நிச்சயம் உங்களுக்கு இந்த நோய் தொற்று இருக்கலாம் என்று முடிவு செய்துக்கொள்ளலாம். காய்ச்சல் மற்றும் இருமல் ஏற்படும் பொழுது மூச்சு உள்ளே இழுக்கப்பட்டு இதயம் அடைக்கும் அப்பொழுது உயிர் போகும் ஆபத்து ஏற்படும். சாதாரண மூச்சு திணறலுக்கும் வைரஸ் மூச்சி திணறலுக்கும் இதுவே வித்தியாசம். அது நிச்சயம் இந்த நோய்க்கான அறிகுறி. இந்த மூன்று அறிகுறிகளும் வெறும் சாதாரண அறிகுறியாக இருந்தால் நீங்கள் பயப்பட தேவையில்லை. இதில் இரண்டு அறிகுறிகள் வந்துவிட்டாலே நீங்கள் உடனே மருத்துவரை அணுகுவது மிக மிக முக்கியமானது. அதுமட்டுமில்லாமல் மருத்துவர்கள் உங்களுக்கு இந்த தொற்று நோய் இருக்கிறது என்பதை கண்டறிந்த பின்னர் உங்களை நீங்கள் தனிமைப் படுத்துவது அதை விட முக்கியம்.
பொழிப்பு (மு வரதராசன்): ஐயுற முடியாத உருவத்தோடு, பார்த்தவருடைய கண்பார்வைக்கு அஞ்சாமல் எவ்விடத்திலும் மனத்திலுள்ளதை வெளிப்படுத்தாமல், இருக்கவல்லவனே ஒற்றன் ஆவன். மணக்குடவர் உரை: வினாவப்படாத வடிவோடேகூடி கண்ணஞ்சுதலும் இன்றி, அறிந்தபொருளை எவ்விடத்தினும் சோர்வின்றியே அடக்கவல்லவன் ஒற்றனாவன். பரிமேலழகர் உரை: கடாஅ உருவொடு - ஒற்றப்பட்டார் கண்டால் ஐயுறாத வடிவோடு பொருந்தி; கண் அஞ்சாது - அவர் ஐயுற்று அறியலுறின் செயிர்த்து நோக்கிய அவர் கண்ணிற்கு அஞ்சாது நின்று; யாண்டும் உகாஅமைவல்லதே ஒற்று - நான்கு உபாயமும் செய்தாலும் மனத்துக் கொண்டவற்றை உமிழாமை வல்லனே ஒற்றனாவான். ('கடா' என்பது 'கடுக்கும்' என்னும் பெயரெச்சத்து எதிர்மறை. ஐயுறாத வடிவாவன பார்ப்பார், வணிகர் முதலாயினார் வடிவு.) சி இலக்குவனார் உரை: பிறர் கண்டால் ஐயப்படாத வடிவத்தோடு எவர் பார்வைக்கும் அஞ்சாது, எப்பொழுதும் உள்ளத்துள் உள்ளவற்றைப் பிறர்க்கு அறிவிக்காமல் இருக்கும் திறமையே ஒற்றுக்குரியது. பொருள்கோள் வரிஅமைப்பு: கடாஅ உருவொடு கண்ணஞ்சாது யாண்டும் உகாஅமை வல்லதே ஒற்று. பதவுரை: கடாஅ-ஐயுறாத; உருவொடு-வடிவுடன்; கண்ணஞ்சாது-கண்களுக்கு அஞ்சமாட்டாது; யாண்டும்-எக்காலத்தும்; உகாஅமை-வெளிப்படுத்தாமை; வல்லதே-வல்லமையே; ஒற்று-உளவு. கடாஅ உருவொடு கண்ணஞ்சாது: இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்: மணக்குடவர்: வினாவப்படாத வடிவோடேகூடி கண்ணஞ்சுதலும் இன்றி; பரிப்பெருமாள்: வினாவப்படாத வடிவோடேகூடி கண்ணஞ்சுதலும் இன்றி; பரிப்பெருமாள் குறிப்புரை: வினாவப்படாத வடிவானது வணிகரும் பார்ப்பாரும் ஆகிய (வடிவு) ஒற்றற்குத் தக எவ்விடத்துஞ் சோர்வு இன்றியே நடக்க வல்லவன் என்றவாறு. பரிதி: கடவுதலையுடைய வடிவோடு நின்று மனத்தில் கலக்கமின்றி; காலிங்கர்: அறவோர் வேடமும் துறவோர் வேடமும் வறியோர் வேடமும் பிறவுமாகிய நல்லுருவு கொண்டு ஒற்றாடுமிடத்து அமைச்சரும் பிறரும் ஆகிய அறிவுடையாளருள் யாவரேனும் தன்னைக் கண்டு ஐயுற்று, 'இவ்விடை வந்து எய்திய நீ யாரோதான்' என்று வினாவுதல் செய்யாதபடி உறுவேடத்தோடு திரிதலும், மற்று இங்ஙனம் திரியுமிடத்தும் ஐயுற்றுக் கைப்பற்றியும் சிறைப்படுத்தியும் வருத்தம் செய்யுமிடத்துச் சிறிது நெஞ்சு அஞ்சாது நிறையுரம் செய்தலும்; காலிங்கர் குறிப்புரை: மற்றும் தனது தந்தை தாயர் நட்டோர் சுற்றம் என்னும் இவர்மாட்டும் சோர விடாமை ஒற்று என அறிக. பரிமேலழகர்: ஒற்றப்பட்டார் கண்டால் ஐயுறாத வடிவோடு பொருந்தி, அவர் ஐயுற்று அறியலுறின் செயிர்த்து நோக்கிய அவர் கண்ணிற்கு அஞ்சாது நின்று; பரிமேலழகர் குறிப்புரை: 'கடா' என்பது 'கடுக்கும்' என்னும் பெயரெச்சத்து எதிர்மறை. ஐயுறாத வடிவாவன பார்ப்பார், வணிகர் முதலாயினார் வடிவு. 'வினாவப்படாத/கடவுதலையுடைய/ஐயுறாத வடிவோடு கண்ணிற்கு அஞ்சாது நின்று' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர். இன்றைய ஆசிரியர்கள் 'ஐயப்படாத வடிவோடு அஞ்சாது பார்த்து', 'ஐயப்படாத வடிவம் தாங்கிப் பிறரது சினப்பார்வைக்கு அஞ்சாது', 'தன்னை யாரும் சந்தேகிக்க முடியாதபடி மாறுவேடத்துடன் பயமில்லாமல் எங்கும் சென்று', 'பிறர் ஐயப்படாத வடிவோடு பொருந்தி அவர் கண்ணிற்கு அஞ்சாது நின்று', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர். ஐயப்படாத வடிவோடு அஞ்சாது பார்த்து என்பது இப்பகுதியின் பொருள். யாண்டும் உகாஅமை வல்லதே ஒற்று: இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்: மணக்குடவர்: அறிந்தபொருளை எவ்விடத்தினும் சோர்வின்றியே அடக்கவல்லவன் ஒற்றனாவன். பரிப்பெருமாள்: அறிந்தபொருளை எவ்விடத்தினும் சோர்வின்றியே அடக்கவல்லவன் ஒற்றனாவன். பரிதி: எவ்விடத்தும் சோராமை வல்லது ஒற்று என்றவாறு. காலிங்கர்: மற்றுந்தான் வகைந்து உட்கொண்ட மறை பொருளினை வேறு ஓரிடத்தும் சோரவிடாமையும் வல்லது யாது? மற்று அதுவே அரசர்க்கு ஒற்றாவது என்றவாறு. பரிமேலழகர்: நான்கு உபாயமும் செய்தாலும் மனத்துக் கொண்டவற்றை உமிழாமை வல்லனே ஒற்றனாவான். 'எவ்விடத்தினும் மனத்துக் கொண்டவற்றை உமிழாமை வல்லனே ஒற்றனாவன்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர். இன்றைய ஆசிரியர்கள் 'எவ்விடத்தும் வெளியிடாதவனே ஒற்றன்', 'எவ்விடத்தும் மனத்திலுள்ள செய்திகளை வெளிப்படுத்தாததில் வல்லவனே ஒற்றனாவான்', '(தான் இன்னான் என்பதையும் தான் வந்த காரியம் இன்னதென்பதையும் வெளிப்படுத்தி விடாமல் (உளவறிந்து) வரக்கூடியவனே ஒற்றனாவான்', 'அரசர் ஒழியப் பிறர் யார்க்குந் தன் மனத்துட் கொண்டவற்றை வெளிப்படுத்தாமல் இருக்க வல்லவனே ஒற்றனாவான்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர். எச்சூழலிலும் மனத்திலுள்ள செய்திகளை வெளிப்படுத்தாத திறமே ஒற்றாகும் என்பது இப்பகுதியின் பொருள். நிறையுரை: கடாஅ உருவோடு அஞ்சாது பார்த்து எச்சூழலிலும் மனத்திலுள்ள செய்திகளை வெளிப்படுத்தாத திறமே ஒற்றாகும் என்பது பாடலின் பொருள். 'கடாஅ உரு' என்பது என்ன? கேள்விக்குரியதாகாத தோற்றத்தோடு, அஞ்சாத நோக்குடன் உழன்று எச்சூழலிலும் தன்னகத்தே உள்ள உளவுச் செய்திகளை யாரிடமும் தெரிவித்துவிடாமல் இருக்க வல்லது ஒற்று ஆகும். ஒற்றிற்கு செல்பவன் யார்? ஒற்றுவிக்கப்படும் மாந்தர் ஐயப்படாத உருவில் சென்று, அவர்கள் ஐயுறுவதுபோல் தோன்றினாலும் அஞ்சாது அவரை எதிர்ப்பார்வை கொண்டு, தான் திரட்டிய மறைச் செய்திகளை எச்சூழலிலும் யாரிடமும் ஒருக்காலும் வெளியிடாது வந்து உரைப்பவனே ஒற்றனாவான். தான் யார் என்று தெரியப்படுத்தாமல் ஆனால் ஒற்றியவர் பற்றி அறிந்துவருவான் இவன். யாரும் ஐயப்படாத தோற்றத்துடன் செல்வான், கண்ணஞ்சாது இருப்பான், யாண்டும் உளக்கருத்தை உமிழ மாட்டான். இவ்வாறு மூன்று ஒற்றாளும் கூறுகள் இக்குறளில்கூறப்பட்டன. ஒற்றரது உடல் அசைவதையும் முகம்மாறுவதையும் வைத்தே அவர்மேல் ஐயம் உண்டாகிவிடும். தன்மீது ஐயம் ஏற்பட்டுவிட்டது என்று தெரிந்தபின்னும் தான் அச்சமில்லாமல் இருப்பதாகக் காட்டிக்கொள்வான். திருடனுக்குத் தேள் கொட்டினால் என்ன செய்வான்? தன் வலியை வெளியே காட்டினால் பிடிபட்டுவிடுவான் என்பதால் தான்படும் கடும் வலியுணர்ச்சியை வெளிக் காட்டாமல் இருப்பான். அதுபோல் தன் முகத்தில் எந்தவித உணர்ச்சி மற்றங்களையும் காட்டாமல் 'கண்ணஞ்சாது' நேர்கொண்ட பார்வையால் தன் செயல்களைத் தொடர்வான் ஒற்றன். எக்காலத்தும் தான் வந்த நோக்கத்தையோ இதுகாறும் சேகரித்த செய்திகளையோ தன் வாயிலிருந்து வெளிவராமல் காப்பவனே ஒற்றன். தனது தாய் தந்தை இவர்களிடம் கூட தன் மனத்திலிலுள்ள மறைச்செய்திகளை நழுவவிடமாட்டான் இவன். யாரும் எளிதில் இனம் கண்டுகொள்ளாத உருவில் சென்று, தன் உயிரைத் துச்சமென எண்ணி பகைவருக்கு நடுவே உலவி வந்து, அவர்களை உய்த்தறியும் ஒற்றன் எந்தச் சூழ்நிலையிலும் தன் வாய் தடுமாற விடமாட்டான். இவ்வாறு ஒற்றுக்குச் செல்பவன் எத்தகையவனாக இருக்க வேண்டும் என்பதை இக்குறள் எடுத்துக் கூறுகிறது. உகாமை என்றது உமிழாமை எனப்பொருள்படும் தன் வாயிலிருந்து உமிழ்ந்து உண்மை சிதறாமல் காப்பான் என்பது பொருள். 'கடாஅ உரு' என்பது என்ன? 'கடாஅ உரு' என்ற தொடர்க்கு வினாவப்படாத வடிவு, கடவுதலையுடைய வடிவு, நல்லுருவு, ஐயுறாத வடிவு, ஐயுற முடியாத உருவம், ஐயுறுதலுக்குரியதல்லாது உருவம், ஐயப்படாத வடிவு, ஐயப்பட முடியாத மாறுவேடம், ஐயப்படாத உருவம், ஐயம் ஏற்படுத்தா வண்ணம் தோன்றுதல், அயிர்க்கப்படாத வடிவு, சந்தேகமில்லாத உருவம் என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர். 'கடாஅ உருவொடு' என்பதற்கு மணக்குடவரும் பரிப்பெருமாளும் 'வினவப்படாத வடிவொடு கூடி' என்று பொருள் கண்டனர். பரிமேலழகர் 'ஐயுறாத வடிவோடு பொருந்தி' என்று உரை கண்டார். கடுக்கும் -ஐயுறும்; கடா-ஐயுறப்படாத எனக் கடுக்கும் என்பதன் எதிர்மறை கடா என்பார் பரிமேலழகர். கடா என்ற சொல்லுக்கு வினா என்பதும் பொருள். ஐயுற்றவழியே வினா நிகழுமாதலின் கடாஅ உரு என்பது கேள்விக்குரியதாகாத வடிவம் எனவும் பொருள்படும். ஒற்றனானவன் இடத்துக்கும் காலத்துக்கும் தக்கபடி வெவ்வேறு தோற்றம் காட்டி அங்கங்கே அச்சமின்றிச் சென்று ஊடாடி உளவறியக் கூடியவனாக இருக்க வேண்டும். 'அறவோர் வேடமும் துறவோர் வேடமும் வறியோர் வேடமும் பிறவுமாகிய நல்லுருவு கொண்டு' என வேடங்களுக்குக் காட்டுகள் கூறுவார் காலிங்கர். ஐயுறாத வடிவான பார்ப்பார், வணிகர் முதலாயினார் வடிவென்பார் பரிமேலழகர். ஒற்றர்கள் என்ன வேடங்களில் எல்லாம் சென்றனர் என்பதைப் பழம் இலக்கியங்கள் கூறுகின்றன. இராவணனின் ஒற்றர்கள் வேவுபார்க்க வானரவடிவினராகி வந்த செய்தியை, இற்றிது காலமாக இலங்கை வேந்தன் ஏவ ஒற்றர் வந்தளவு நோக்கிக் குரங்கென உழல்கின்றாரை (கம்ப இராமாயாணம், யுத்த காண்டம், ஒற்றுக் கேள்விப் படலம், பொருள்: காலம் இத்தன்மையது ஆக இலங்கை மக்களின் தலைவனான இராவணனது ஏவலினால் (வேவு பார்க்கும்) ஒற்றர்கள் (அங்கு) வந்து (வானரப் படையின் திறம், எண்ணிக்கை முதலிய) அளவுகளைப் பார்த்து குரங்குகள் போல வேடமிட்டுப் (பாடி வீடுகட்கிடையே) திரிகின்றவர்களை) என்பார் கம்பர். அணிவகுப்புப் படலத்தில் சார்த்தூலன் என்னும் ஒற்றனை இராவணன் ஏவியறிந்த ஒற்றுச் செய்தி பற்றிக் காண்கிறோம். அவன் தாயைப் போல் உடன் பழகியவர்களும் கண்டு கொள்ள முடியாத வேடத்துடன் இருந்தானாம். இராவணனுடைய ஒற்றர்கள் வானர வடிவமுடன் வானரப் படைகளிடையே மறைந்து திரிந்து ஒற்றறிய முயன்றமையை விபீடணன் கண்டு பிடிக்கிறான். பெருங்கதையுள் யூகி என்னும் அமைச்சர் உண்மையான பித்தன் என்று துணியும்படி நடந்துகொண்டான். தீர்த்தயாத்திரை செய்வார், தவஞ் செய்வார், முற்றந் துறந்தார் என்ற வேடங்களையும் ஒற்றர்கள் அணிந்தனர். கேள்விக்குரியதாகாத தோற்றத்தோடு, அஞ்சாது பார்த்து, எச்சூழலிலும் மனத்திலுள்ள செய்திகளை வெளிப்படுத்தாத திறமே ஒற்றாகும் என்பது இக்குறட்கருத்து.
கருத்துருவை முழுமையாக தயார் செய்வதற்கு ஏதுவாகவும் விடுபாடுகளை தவிர்க்கவும் சாரிபார்ப்புப் படிவம் ஒன்றும் வடிவமைக்கப்பட்டுள்ளது. கருத்துருக்கள் தயாரிப்பதற்காகவும் குழுவில் பின்பற்றத் தக்கதுமான வழிமுறைகள்: 18.10.1993 நாளிட்ட பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறையின் அரசாணை (நிலை) எண்.368-இல் வெளியிடப்பட்டு அவ்வப்போது வெளியிடப்பட்டுவரும் திருத்தங்ளுக்கிணங்க வழிமுறைகள் பின்பற்றப்படுகின்றன. வாராந்திர அட்டவணை ஒவ்வொரு வாரமும் அந்த வாரத்தில் நடத்தப்படவிருக்கும் துறை பதவி உயர்வுக் கூட்டங்களின் விவரங்கள் தேர்வாணையத்தின் இணையதளத்தில் தனியான அட்டவணையில் திஙகட்கிழமைதோறும் வெளியிடப்படும்.
மைக்ரோ பயலாஜிகல் ரிசர்ச் ஸ்காலரான ஸ்வப்னா காணாமல் போய் ஒரு வாரம் முடிந்திருந்த நிலையில், அன்றைய தினம் அவளுடைய பிணத்தைப் போலீசார் கைப்பற்றியிருந்தனர். ஸ்வப்னா கடைசியாக விவேக்கிற்கு எழுதிய முற்றுப்பெறாத அந்தக் கடிதம் போலீசிற்கு தடயமாகக் கிடைக்கிறது. அதில் அவள் “இந்த லெட்டருடன் நான் அனுப்பியுள்ள ஆ..” என்று ஆரம்பிப்பதற்குள் அவள் எழுதியிருப்பது தடைப்பட்டிருந்தது. இதன் மூலம் அவள் லெட்டருடன் வேறு எதையோ சேர்த்து அனுப்ப திட்டமிட்டிருப்பதை உணர்ந்த விவேக், விஷ்ணுவிடம் அந்த விசாரணையை மேற்கொள்ள சொல்லிவிட்டு ஸ்வப்னாவின் அண்ணன் சுபாகரை விசாரிக்க செல்கிறான். ஸ்வப்னா வேலை பார்த்த ரிசர்ச் இன்ஸ்டிட்யூட்டில் விசாரிக்கச் சென்ற விவேக்கிற்கு ஸ்வப்னாவின் தோழி புனிதவதி மூலமாக ஸ்வப்னா ஒரு கால் கேர்ள் என்ற திடுக்கிடும் தகவல் தெரிய வருகிறது. மேலும் அவளை விசாரித்ததில் ரிஷிமைந்தன் என்ற நபரைப் பற்றிய தகவல்கள் விவேக்கிற்கு கிடைக்க அடுத்த மூவ்வை விவேக் எடுத்து வைக்கிறான். அடுத்த அத்தியாயம்.. காலைநேர வாக்கிங்கை முடித்து விட்டு ஈஸ்வருடன் (கணவனாகப் போகிறவன்) கோபமாகப் பேசிக்கொண்டிருந்த நித்யா, திடீரென கடைவாயில் இருந்து ரத்தம் வழிய ஒரு பக்கமாக சரிந்து விழுகிறாள். ஹாஸ்பிடலில் ஒரு திடுக்கிடும் செய்தி நித்யாவின் குடும்பத்திற்கு காத்திருந்தது. கிளாஸ்டீரியா என்ற ரேர் பாக்டீரியா நோயினால் நித்யா பாதிக்கப்பட்டிருப்பதாகவும், அதை குணப்படுத்த கோடிகளில் பணம் செலவாகும் என்பதையும் டாக்டர் விளக்க கலக்கமடைகிறார் நித்யாவின் அப்பா. முக்கியமாக கிளாஸ்டீரியா நோய் குணமாகும் வாய்ப்பு சதவிகிதமும் குறைவு என்பதை அறிந்த அவர்கள் செய்வதறியாது திகைத்தனர். லண்டனில் உள்ள ஆர்தர் ஹெட்டிக்கின் ஹாஸ்பிடலில் அட்மிட் செய்யப்பட நித்யா, அவளுக்கான சிகிச்சை முறைகள் மறைமுகமாக நடக்கிறது. மேற்கொண்டு டாக்டர்கள் சிகிச்சையை ஆரம்பிக்கும் முன், நித்யா அந்த ஹாஸ்பிடலின் சுயரூபத்தை வெளியே கொண்டு வருகிறாள். உண்மையைக் கண்டுபிடிக்க நித்யாவும் அவள் குடும்பமும் நடத்திய நாடகம் லண்டனில் வெளிப்பட, இந்தியாவில் இதற்கு உடந்தையாக இருந்தவர்களின் நிலை என்ன..? மைக்ரோ பயாலாஜி லேபில் மட்டுமே உருவாக்க முடிந்த கிளாஸ்டீரியா பாக்டீரியாக்களுக்கும் லண்டனில் உள்ள ஆர்தர் ஹெட்டிகின் மருத்துவமனைக்கும் உள்ள தொடர்பை கண்டுபிடித்த விவேக்கிற்கு என்றுமே வெற்றி தான்.
Toronto Blue Jays baseball அணி சுமார் இரண்டு வருடங்களின் பின்னர் வெள்ளிக்கிழமை கனடாவில் ஒரு தொடரை ஆடவுள்ளது. Blue Jays அணி கனடா திரும்புவதைக் குறிக்கும் வகையில் நயாகரா நீர்வீழ்ச்சி, C.N. கோபுரம் உள்ளிட்ட கனடா முழுவதும் உள்ள அடையாளங்கள் வியாழன் இரவு நீல மற்றும் வெள்ளை நிறத்தில் ஒளியூட்டப்பட்டன. தவிரவும் கனடா முழுவதும் உள்ள நகரங்கள் பலவும் Blue Jays அணியின் வருகையை கொண்டாடுகின்றன. வெள்ளிக்கிழமை ஆரம்பமாகும் தொடர், Torontoவில் அமைந்துள்ள Rogers மைதானத்தில் நடைபெறுகின்றது. COVID தொற்றின் விளைவாக நடைமுறையில் உள்ள எல்லைக் கட்டுப்பாடுகள் காரணமாக, Blue Jays அணி 2020 மற்றும் 2021 ஆண்டு ஆட்டங்களை Buffaloவில் விளையாடியது குறிப்பிடத்தக்கது.
கேரட் மிகவும் மலிவாக எளிதில் கிடைக்கும் காய்களில் ஒன்றாகும். அதிக நன்மைகள் நிறைந்த கேரட் அனைவராலும் விரும்பி உண்ணும் சுவை நிறைந்த காயாகும். நாம் அனுதினமும் பயன்படுத்தும் … Read more நெல்லி பொடி நெல்லி பொடி பயன்கள் நெல்லியில் இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ் போன்ற தாதுக்கள் அதிக அளவில் நிறைந்துள்ளதால் இது இரத்த சோகைக்கு நல்ல மருந்தாகும். நெல்லியில் அறுசுவையில் உப்பு … Read more முடக்கத்தான் பொடி முடக்கத்தான் பொடி பயன்கள் முடக்கத்தான் முடக்கு அறுத்தான் என்பது நாளடைவில் முடக்கற்றான் என்றானது. கசப்புத் தன்மையுடைய முடக்கத்தான் முடக்கு வாத நோய்களை குணமாக்குவதால் முடக்கத்தான் என்று பெயர் … Read more கரிசலாங்கண்ணி பொடி கரிசலாங்கண்ணி பொடி பயன்கள் கரிசலாங்கண்ணி அதிக அளவில் மருத்துவ குணங்கள் நிறைந்த மூலிகையாகும். இதில் எக்லிப்டால், டெஸ்மீத்தைல், அக்கோண்டனால், ஹென்ட்ரை, ஸ்டிக்மாஸ்டீரால், தங்கச்சத்து, இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் … Read more ஆவாரம் பூ பொடி ஆவாரம்பூ பொடி பயன்கள் ஆவாரம்பூ துவர்ப்புத் தன்மை உடையது. இதில் தங்கச்சத்து நிறைந்துள்ளது. ஆவாரம் பூ பொடியை தினமும் ஒரு டீஸ்பூன் அளவு சாப்பிட்டு வர சர்க்கரை … Read more கஸ்தூரி மஞ்சள் பொடி கஸ்தூரி மஞ்சள் பொடி பயன்கள் கஸ்தூரி மஞ்சள் முக அழகு சாதன பொருட்களில் ஒன்றாகும். இது அனைத்து வகை சருமத்திற்கும் கேடு விளைவிக்காத அலர்ஜி எதிர்ப்பு தன்மை … Read more எலுமிச்சை தோல் பொடி பயன்கள் எலுமிச்சை தோல் பொடியினைக் கொண்டு ஃபேஸ் பேக் முதல் பாதத்திற்கு அழகு தரும் பெடிக்யூர் வரை பயன்படுத்தலாம். எலுமிச்சை தோலில் அதிக அளவு கலோரிகள், கார்ப்ஸ், நார்ச்சத்து, … Read more ஆரஞ்சு தோல் பொடி ஆரஞ்சு தோல் பொடியின் பயன்கள் ஆரஞ்சு தோலில் அதிகளவு ஆன்டி ஆக்ஸிடன்டுகள் நிறைந்துள்ளது. இது இயற்கை அழகை விரும்பும் பெண்களுக்கு மிகச் சிறந்த அழகு சாதன பொருளாகும். … Read more முருங்கை இலை பொடி முருங்கை இலை பொடி பயன்கள் முருங்கையில் விட்டமின்கள், மினரல், அமீனோ ஆசிட்கள், வைட்டமின் சி, கால்சியம், பொட்டாசியம் மற்றும் புரோட்டின் போன்ற ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளது. 10 கிராம் … Read more மருதாணி பொடி மருதாணி பொடி பயன்கள் மருதாணி பொடியானது இளநரையை தடுக்க அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். இதனுடன் அவுரி பொடியை சேர்த்து பயன்படுத்தும் போது நம் கூந்தலுக்கு ஏராளமான நன்மைகள் … Read more ரோஸ் பொடி ரோஸ் பொடியின் பயன்கள் ரோஜாவிற்கு இயற்கையாகவே சருமத்தின் நிறத்தை கட்டுப்படுத்தும் தன்மை உள்ளது. ரோஜாவில் அதிகளவு வைட்டமின் சி நிறைந்துள்ளது. இது நல்ல ஆன்டி-ஆக்ஸிடன்ட் ஆகும். ரோஜா … Read more மண் சிகிச்சை மண்ணின் மகத்துவத்தை அறிந்து அதில் உள்ள மருத்துவ குணங்களை கொண்டு மண் சிகிச்சை முறைகளை சித்த மருத்துவர்கள் கூறியுள்ளனர். பழங்காலங்களில் அனைத்து கிராமங்களிலும் மண் சிகிச்சை முறைகளை … Read more முகத்தில் உள்ள கருமை நீங்க வேண்டுமா? முக அழகு என்பது அனைவரும் விரும்பும் ஒன்றாகும். அதிலும் பெண்கள் முகத்தில் ஏதேனும் ஒரு சிறு பரு வந்தாலும் மிகவும் வேதனைப்படுவர். அநேக பெண்கள் வெள்ளை நிறத்தில் … Read more சர்க்கரை நோயில் இருந்து ஆரம்பத்திலேயே தப்பித்துக்கொள்ள… சர்க்கரைக்கேற்ற முருங்கை சர்க்கரை நோய் சர்க்கரை நோய் இன்றைய காலத்தில் அதிகளவில் காணப்படும் நோயாகும். நம் உடலில் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ … Read more உடலுக்குத் தேவையான வைட்டமின்கள் புழுக்கமான சீதோஷ்ண நிலை பெரும்பாலும் மே, ஜுனில் காணப்படுகிறது. வறட்சியான ஈரப்பதம் ஃபுளூ காய்ச்சலுக்கு ஈடான உடல் நலக் கோளாறுகளை ஏற்படுத்துகிறது. மூக்கடைப்பு, டான்சில், குரல் வளை … Read more
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عَفَّانُ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ ثَابِتٍ، عَنْ أَنَسٍ:‏ ‏ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم شَاوَرَ حِينَ بَلَغَهُ إِقْبَالُ أَبِي سُفْيَانَ قَالَ فَتَكَلَّمَ أَبُو بَكْرٍ فَأَعْرَضَ عَنْهُ ثُمَّ تَكَلَّمَ عُمَرُ فَأَعْرَضَ عَنْهُ فَقَامَ سَعْدُ بْنُ عُبَادَةَ فَقَالَ إِيَّانَا تُرِيدُ يَا رَسُولَ اللَّهِ وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَوْ أَمَرْتَنَا أَنْ نُخِيضَهَا الْبَحْرَ لأَخَضْنَاهَا وَلَوْ أَمَرْتَنَا أَنْ نَضْرِبَ أَكْبَادَهَا إِلَى بَرْكِ الْغِمَادِ لَفَعَلْنَا – قَالَ – فَنَدَبَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم النَّاسَ فَانْطَلَقُوا حَتَّى نَزَلُوا بَدْرًا وَوَرَدَتْ عَلَيْهِمْ رَوَايَا قُرَيْشٍ وَفِيهِمْ غُلاَمٌ أَسْوَدُ لِبَنِي الْحَجَّاجِ فَأَخَذُوهُ فَكَانَ أَصْحَابُ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم يَسْأَلُونَهُ عَنْ أَبِي سُفْيَانَ وَأَصْحَابِهِ ‏.‏ فَيَقُولُ مَا لِي عِلْمٌ بِأَبِي سُفْيَانَ وَلَكِنْ هَذَا أَبُو جَهْلٍ وَعُتْبَةُ وَشَيْبَةُ وَأُمَيَّةُ بْنُ خَلَفٍ ‏.‏ فَإِذَا قَالَ ذَلِكَ ضَرَبُوهُ فَقَالَ نَعَمْ أَنَا أُخْبِرُكُمْ هَذَا أَبُو سُفْيَانَ ‏.‏ فَإِذَا تَرَكُوهُ فَسَأَلُوهُ فَقَالَ مَا لِي بِأَبِي سُفْيَانَ عِلْمٌ وَلَكِنْ هَذَا أَبُو جَهْلٍ وَعُتْبَةُ وَأُمَيَّةُ بْنُ خَلَفٍ فِي النَّاسِ ‏.‏ فَإِذَا قَالَ هَذَا أَيْضًا ضَرَبُوهُ وَرَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم قَائِمٌ يُصَلِّي فَلَمَّا رَأَى ذَلِكَ انْصَرَفَ قَالَ ‏”‏ وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَتَضْرِبُوهُ إِذَا صَدَقَكُمْ وَتَتْرُكُوهُ إِذَا كَذَبَكُمْ ‏”‏ ‏.‏ قَالَ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏”‏ هَذَا مَصْرَعُ فُلاَنٍ ‏”‏ ‏.‏ قَالَ وَيَضَعُ يَدَهُ عَلَى الأَرْضِ هَا هُنَا وَهَا هُنَا قَالَ فَمَا مَاطَ أَحَدُهُمْ عَنْ مَوْضِعِ يَدِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم ‏.‏ அபூஸுஃப்யான் (தலைமையில் வணிகக் குழு) வரும் தகவல் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு எட்டியபோது (தம் தோழர்களிடம்) ஆலோசனை கேட்டார்கள். அபூபக்ரு (ரலி) (தமது கருத்தைச்) சொன்னபோது, அதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கண்டுகொள்ளவில்லை. பின்னர் உமர் (ரலி) (தமது கருத்தைச்) சொன்னபோதும் கண்டுகொள்ளவில்லை. அப்போது (அன்ஸாரிகளில் கஸ்ரஜ் கூட்டத்தாரின்) தலைவர் ஸஅத் பின் உபாதா (ரலி) எழுந்து, “எங்(கள் அன்ஸாரிகளின் கருத்து)களையா நீங்கள் எதிர்பார்க்கின்றீர்கள், அல்லாஹ்வின் தூதரே? என் உயிர் கையிலுள்ளவன் மீதாணையாக! எங்கள் குதிரைகளைக் கடலுக்குள் செலுத்துமாறு நீங்கள் உத்தரவிட்டாலும் நிச்சயமாக நாங்கள் செலுத்துவோம். எங்கள் குதிரைகளின் பிடரிகளில் அடித்து (தொலைவில் உள்ள) ‘பர்குல் ஃகிமாத்’ நோக்கி (விரட்டிச்) செல்லுமாறு நீங்கள் உத்தரவிட்டாலும் நாங்கள் அவ்வாறே செய்வோம்” என்று கூறினார்கள். பின்னர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) மக்களைப் புறப்படச் சொன்னார்கள். மக்கள் புறப்பட்டுச் சென்று ‘பத்ரு’ எனும் இடத்தில் தங்கினர். அப்போது அவர்களிடம் குறைஷியரின் தண்ணீர் சுமக்கும் ஒட்டகக் குழாம் ஒன்று வந்தது. அவர்களில் பனுல் ஹஜ்ஜாஜ் குலத்தாரின் கறுப்பு அடிமை ஒருவனும் இருந்தான். நபித்தோழர்கள், அவனைப் பிடித்துக்கொண்டனர். அவனிடம் அபூஸுஃப்யானைப் பற்றியும் அவருடைய சக பயணிகள் பற்றியும் விசாரித்தனர். அவன் “அபூஸுஃப்யானைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. ஆனால், இதோ அபூஜஹ்லு, உத்பா, ஷைபா, உமய்யா பின் கலஃப் (ஆகியோர் உங்களை நோக்கிப் படை திரட்டி வந்துகொண்டிருக்கின்றனர்)” என்று சொன்னான். அவன் இவ்வாறு சொன்னதும் (அவன் பொய் சொல்வதாக எண்ணிக்கொண்டு) அவனை நபித் தோழர்களை அடித்தனர். அப்போது அவன் “ஆம் (எனக்குத் தெரியும்); நான் சொல்கிறேன். இதோ அபூஸுஃப்யான் வந்துகொண்டிருக்கிறார்” என்று (பொய்) சொன்னான். அடிப்பதை நிறுத்திவிட்டு அவனிடம் கேட்டால், “அபூஸுஃப்யான் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. ஆனால், இதோ அபூஜஹ்லு, உத்பா, ஷைபா, உமய்யா பின் கலஃப் மக்களுடன் (வந்துகொண்டிருக்கின்றனர்)” என்று சொன்னான். மீண்டும் அவன் இவ்வாறு சொன்னதும் அவனை நபித்தோழர்கள் அடித்தனர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (அங்கு) நின்று தொழுதுகொண்டிருந்தார்கள். இ(வ்வாறு அவர்கள் நடந்து கொள்வ)தை அவர்கள் கண்டதும் தொழுகையை (சுருக்கமாக) முடித்துத் திரும்பினார்கள். மேலும், “என் உயிர் கையிலுள்ளவன் மீதாணையாக! அவன் உண்மையைச் சொல்லும்போது அடிக்கின்றீர்கள். பொய் சொல்லும்போது அடிப்பதை நிறுத்து விடுகிறீர்களே!” என்று கூறினார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) “இது இன்னவர் மாண்டு விழும் இடம்” என்று கூறி, பூமியில் தமது கையை வைத்து “இவ்விடத்தில் … இவ்விடத்தில்” என்று காட்டினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கை வைத்துக் காட்டிய இடத்தைவிட்டு அவர்களில் எவரும் தள்ளி விழவில்லை. (சரியாக அதே இடத்தில் போரில் மாண்டு கிடந்தனர்). அறிவிப்பாளர் : அனஸ் (ரலி) மேலும் காண்பி... ↓ விரும்பும் பாடம் செல்ல… ↓ விரும்பும் பாடம் செல்ல… Select Category 43.37 நபி (ஸல்) அவர்களைக் கண்ணியப்படுத்துவதும் … (8) 43.36 நபி (ஸல்) அவர்களைப் பின்பற்ற வேண்டியது (முஸ்லிம்களின்) கட்டாயக் கடமையாகும் (1) 43.35 நபி (ஸல்) அவர்களின் அல்லாஹ்வைப் பற்றிய அறிவும் அவனைப் பற்றிய கடுமையான அச்சமும் (2) 43.34 நபி (ஸல்) அவர்களின் பெயர்கள் (3) 43.33 நபி (ஸல்) மக்காவிலும் மதீனாவிலும் எத்தனை ஆண்டுகள் வாழ்ந்தார்கள்? (8) 43.32 நபி (ஸல்) இறந்தபோது அவர்களுக்கு வயது எத்தனை? (2) 43.31 நபி (ஸல்) அவர்களின் உடலமைப்பு; நபியாக அனுப்பப்பெற்றது; அவர்களின் வயது (1) 43.30 நபி (ஸல்) உடலில் நபித்துவ முத்திரை … (3) 43.29 நபி (ஸல்) அவர்களின் தலைநரைமுடி (10) 43.28 நபி (ஸல்) அவர்களின் வெண்ணிறமும் களையான முகமும் (2) 43.27 நபி (ஸல்) அவர்களின் வாய், கண்கள், குதிகால்கள் ஆகியவை (1) 43.26 நபி (ஸல்) அவர்களது தலைமுடியின் தன்மை (3) 43.25 நபி (ஸல்) அவர்களின் உருவத் தோற்றம் … (3) 43.24 நபி (ஸல்) தமது தலைமுடியை … (1) 43.23 நபி (ஸல்) அவர்களுக்கு வேத அறிவிப்பு வரும்போது … (4) 43.22 நபி (ஸல்) அவர்களது வியர்வையின் நறுமணமும் அதன்மூலம் வளம் ஏற்பட்டதும் (3) 43.21 நபி (ஸல்) அவர்களின் மேனியில் கமழ்ந்த நறுமணம் … (3) 43.20 நபி (ஸல்) பாவங்களை விட்டு வெகு தொலைவில் விலகியிருந்தது … (3) 43.19 நபி (ஸல்), மக்களுடன் நெருங்கிப் பழகியதும் அவர்களிடமிருந்து மக்கள் வளம் பெற்றதும் (3) 43.18 மனைவியர்மீது நபி (ஸல்) காட்டிய அன்பும் … (4) 43.17 நபி (ஸல்) அவர்களின் புன்னகையும் அழகிய உறவாடலும் (1) 43.16 நபி (ஸல்) அவர்களின் நாண மிகுதி (2) 43.15 நபி (ஸல்) குழந்தைகள் மீதும் குடும்பத்தார் மீதும் காட்டிய அன்பு … (5) 43.14 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வேண்டப்பட்ட எந்த ஒன்றுக்கும் அவர்கள் “இல்லை” என்று சொன்னதேயில்லை … (5) 43.13 அல்லாஹ்வின் தூதர் (ஸல்), மக்களிலேயே மிகவும் அழகான … (5) 43.12 மக்களிலேயே நபி (ஸல்), தொடர்ந்து வீசும் (மழைக்) காற்றைவிட … (1) 43.11 நபி (ஸல்) அவர்களின் வீரமும் அறப்போருக்காக அவர்கள் முன்னே சென்றதும் (2) 43.10 உஹுதுப் போர் நாளில் நபி (ஸல்) … (2) 43.9 நம் நபி (ஸல்) அவர்களுக்கு (மறுமையில் ‘அல்கவ்ஸர்’) தடாகம் உண்டு … (20) 43.8 உயர்ந்தோன் அல்லாஹ் ஒரு சமுதாயத்தின்மீது அருள் புரிய நாடினால் … (1) 43.7 நபி (ஸல்), இறுதி இறைத் தூதர் என்பது பற்றிய குறிப்பு (4) 43.6 நபி (ஸல்), தம் சமுதாயத்தார் மீது கொண்டிருந்த பரிவும் … (4) 43.5 நபி (ஸல்), நேர்வழியுடனும் ஞானத்துடனும் அனுப்பப் பெற்றதற்கான உவமை (1) 43.4 அல்லாஹ்வையே முழுமையாக நபி (ஸல்) சார்ந்திருந்ததும் … (1) 43.3 நபி (ஸல்) அவர்களின் அற்புதங்கள் (7) 43.2 எல்லாப் படைப்புகளையும்விட நம் நபி (ஸல்) அவர்களின் சிறப்பு (1) 43.1 நபி (ஸல்) அவர்களின் தலைமுறையின் சிறப்பும் … (2) 42.4 நபி (ஸல்) கண்ட கனவு (6) 42.3 கனவுக்கு விளக்கமளித்தல் (1) 42.2 ஷைத்தான் கனவில் விளையாடியது குறித்து … (3) 42.1 கனவில் என்னைக் கண்டவர் … (4) 42.01 கனவுகள் (11) 41.2 பகடை விளையாட்டு, தடை செய்யப்பட்டதாகும் (1) 41.1 கவிதைகள் (9) 40.5 நறுமணப் பொருட்களில் மிகவும் சிறந்த கஸ்தூரியைப் பயன்படுத்துவது … (4) 40.4 ஒருவர், ‘கபுஸத் நஃப்ஸீ’ (என் மனம் அசுத்தமாகிவிட்டது) எனும் சொல்லை … (2) 40.3 ‘அப்து’ (அடிமை ஆண்), ‘அமத்து’ (அடிமைப் பெண்), ‘மவ்லா’/’ஸய்யித்’ (அடிமையின் உரிமையாளர்) ஆகிய சொற்களின் சட்டம் (3) 40.2 திராட்சையை, “கர்மு / கண்ணியம்” என்று பெயரிட்டழைப்பது … (7) 40.1 காலத்தை ஏசுவதற்குத் தடை (5) 39.41 விலங்குகளுக்கு நீர் புகட்டுவதின், உணவளிப்பதின் சிறப்பு (3) 39.40 பூனைகளைக் கொல்வதற்குத் தடை (2) 39.39 எறும்புகளைக் கொல்லத் தடை (3) 39.38 பல்லியைக் கொல்வது நல்லது (5) 39.37 பாம்பு போன்ற விஷ ஜந்துகளைக் கொல்வது (13) 39.36 தொழுநோயாளிகள் போன்றோரிடம் நெருக்கம் தவிர்ப்பது (1) 39.35 சோதிடர்களிடம் செல்வதும் சோதிடம் பார்ப்பதும் (5) 39.34 பறவை சகுனம், நற்குறி, துர்குறி பற்றிய பாடம் (11) 39.33 இல்லாத சகுனங்களும் தொற்றுநோய்களும் (6) 39.32 கொள்ளைநோய், பறவை சகுனம், சோதிடம் போன்றவை (8) 39.31 தேனூட்டு மருத்துவம் (1) 39.30 ‘தல்பீனா‘, நோயாளியின் மனத்துக்கு(ம் உடலுக்கும்) தெம்பு அளிக்கக்கூடியதாகும் (1) 39.29 கருஞ்சீரக மருத்துவம் (2) 39.28 இந்தியக் கோஷ்டக் குச்சியால் சிகிச்சையளிப்பது (2) 39.27 நோயாளிக்கு வற்புறுத்தி சிகிச்சையளிப்பது … (1) 39.26 ஒவ்வொரு நோய்க்கும் மருந்து உண்டு; (நோய்க்கு) மருத்துவம் செய்துகொள்வது விரும்பத் தக்கது (17) 39.25 தொழுகையில் மனம் அலைபாயச் செய்யும் ஷைத்தானிடமிருந்து பாதுகாப்புக் கோரல் (1) 39.24 பிரார்த்திக்கும்போது வலியுள்ள இடத்தில் கையை வைப்பது (1) 39.23 குர்ஆன் வசனங்கள் மற்றும் அல்லாஹ்வைத் துதிக்கும் சொற்களால் ஓதிப்பார்ப்பதற்கு ஊதியம் பெறலாம் (2) 39.22 இறைவனுக்கு இணை கற்பிதம் இல்லாத சொற்களால் ஓதிப்பார்பது தவறில்லை (1) 39.21 கண்ணேறு, சின்னம்மை, விஷக்கடி, (தீய)பார்வை ஆகியவற்றுக்காக ஓதிப்பார்ப்பது விரும்பத் தக்கதாகும் (12) 39.20 பாதுகாப்புக் கோரும் அத்தியாயங்களால் நோயாளிக்கு ஓதிப்பார்ப்பது … (2) 39.19 நோயாளிக்கு ஓதிப்பார்ப்பது விரும்பத் தக்கதாகும் (4) 39.18 விஷம் (1) 39.17 சூனியம் (1) 39.16 நோயும் மருத்துவமும் ஓதிப்பார்த்தலும் (4) 39.15 மூன்றாமவரின் ஒப்புதலின்றி இருவர் மட்டும் இரகசியம் பேசிக்கொள்வது தடை செய்யப்பட்டதாகும் (3) 39.14 … அந்நியப் பெண்ணை, வழிசெல்லும் ஒருவர் வாகனத்தில் அமர்த்திக்கொள்ளலாம் (2) 39.13 பெண்கள் இருக்கும் இடத்திற்கு அலிகள் செல்லத் தடை (2) 39.12 அமர்ந்திருந்த இடத்திற்கு உரியவர் (1) 39.11 அமர்ந்திருக்கும் ஒருவரை எழுப்பிவிடுவது தடை செய்யப்பட்டதாகும் (4) 39.10 அவைக்கு வருபவர், அமரும் ஒழுங்கு (1) 39.9 … கெட்ட எண்ணத்தை அகற்றுவது விரும்பத் தக்கதாகும் (2) 39.8 அந்நியப் பெண்ணிடம் … தனிமையில் இருப்பது தடை செய்யப்பட்டதாகும் (3) 39.7 … பெண்கள் வெளியே செல்லலாம் (2) 39.6 உள்ளே செல்ல அனுமதியாகக் கருதுவதற்கு … (1) 39.5 சிறாருக்கு(ப் பெரியவர்கள்) முகமன் கூறுவது விரும்பத் தக்கதாகும் (2) 39.4 வேதக்காரர்களுக்கு முந்திக்கொண்டு ஸலாம் கூறுவதற்குத் தடை (7) 39.3 ஸலாத்துக்குப் பதிலுரைப்பது முஸ்லிமுக்குக் கடமை (2) 39.2 நடைபாதைகளில் அமர்வதன் ஒழுங்குகளில் … (2) 39.1 முந்தி ஸலாம் சொல்ல வேண்டியவர்கள் (1) 38.10 இயல்பான பார்வை (1) 38.9 பிறர் வீட்டில் எட்டிப் பார்ப்பது தடை செய்யப்பட்டதாகும் (5) 38.8 “யார்?“ என்று கேட்டால் … (2) 38.7 அனுமதி கோருதல் (5) 38.6 “என் அருமை மகனே!“ (2) 38.5 குழந்தை பிறந்தவுடன் இனிப்பான பொருளை மென்று அதன் வாயிலிடுவதும் … (9) 38.4 மன்னாதி மன்னன் எனப் பெயர் சூட்டிக்கொள்வது தடை செய்யப்பட்டதாகும் (2) 38.3 அருவருப்பான பெயரை அழகான பெயராக மாற்றியமைப்பது … (6) 38.2 அருவருப்பான பெயர்கள் … (4) 38.1 … விரும்பத் தகுந்த பெயர்கள் (8) 37.35 வெறும் பெருமை (2) 37.34 மெல்லிய உடையணிந்து, பிறரைத் தன்பால் ஈர்க்கும் வண்ணம் தோள்களைச் சாய்த்து ஒயிலாக நடக்கும் பெண்கள் (1) 37.33 பெண்களின் பொய் அலங்காரங்காரங்களுக்குத் தடை (10) 37.32 நடைபாதைகளில் அமர்வதற்குத் தடையும் பாதைகளுக்குரிய உரிமைகளைப் பேணுவதும் (1) 37.31 தலை முடியில் பகுதி மழித்துவிட்டு, பகுதி மழிக்காமல் விட்டுவிடுவது வெறுக்கத் தக்கதாகும் (1) 37.30 ஸகாத் / ஜிஸ்யாவுக்கான கால்நடைகளில் சூடிட்டு அடை யாளமிடலாம் (4) 37.29 விலங்குகளின் முகத்தில் அடிப்பதும் அடையாளச் சூடிடுவதும் தடை செய்யப்பட்டவை ஆகும் (3) 37.28 ஒட்டகத்தின் கழுத்தில் (திருஷ்டிக்) கயிற்று மாலை அணிவிப்பது வெறுக்கத் தக்கதாகும் (1) 37.27 பயணத்தின்போது நாயும் (ஒலியெழுப்பும்) மணியும் வெறுக்கத் தக்கவை (2) 37.26 உயிரினங்களின் உருவப் படங்களை வரைவதும் … தடை செய்யப்பட்டவை ஆகும் (21) 37.25 (நரைமுடிக்கு) சாயமிட்டுக்கொள்வது யூதர்களுக்கு மாறு செய்வதாகும் (1) 37.24 நரைமுடியில் கருப்பு நிறச் சாயமிடுவது தடை செய்யப்பட்டதாகும் (2) 37.23 ஆண்கள் (மேனியில்) குங்குமப்பூச் சாயமிட்டுக்கொள்வதற்குத் தடை (1) 37.22 மல்லாந்து படுத்துக்கொண்டு கால்மீது காலைப் போட்டுக் கொள்வதற்கு அனுமதி (1) 37.21 மல்லாந்து படுத்துக்கொண்டு கால்மீது காலைப் போட்டுக் கொள்வதற்குத் தடை (3) 37.20 தடை செய்யப்பட்ட இரு நிலைகள் (2) 37.19 காலணிகளை அணிந்து கழற்றும் முறைகள் (3) 37.18 காலணி அல்லது அது போன்றதை அணிந்துகொள்வது விரும்பத் தக்கதாகும் (1) 37.17 மோதிரம் அணிவதற்குத் தடை செய்யப்பட்ட விரல்கள் (2) 37.16 கைச் சுண்டுவிரலில் மோதிரம் அணிவது (1) 37.15 அபிசீனியக் வெள்ளிக் குமிழ் மோதிரம் (2) 37.14 மோதிரங்களை(க் கழற்றி) எறிந்த நிகழ்வு (2) 37.13 நபி (ஸல்) அவர்களின் (முத்திரை) மோதிரம் (3) 37.12 ‘முஹம்மதுர் ரசூலுல்லாஹ்’ எனும் இலச்சினை பொறிக்கப்பட்ட வெள்ளி மோதிரம் (2) 37.11 ஆண்கள் தங்க மோதிரம் அணிவதற்குத் தடை (3) 37.10 ஆடைகளை எண்ணிப் பெருமை கொண்டு, கர்வத்தோடு நடப்பதற்குத் தடை (2) 37.9 பெருமைக்காக ஆடையைத் தரையில் படும்படி இழுத்துச் செல்வதற்குத் தடை (7) 37.8 தேவைக்கு அதிகமான விரிப்புகளும் ஆடைகளும் இருப்பது விரும்பத் தக்கதன்று (1) 37.7 படுக்கை விரிப்புகளைப் பயன்படுத்த அனுமதி (2) 37.6 ஆடையில் (எளிமை,) பணிவு காட்டுவது … (5) 37.5 பருத்தி ஆடை அணிவதன் சிறப்பு (2) 37.4 ஆண்கள் செம்மஞ்சள் நிறச் சாயமிடப்பட்ட ஆடை அணிவதற்குத் தடை (5) 37.3 தோல் உபாதைகள் இருந்தால் ஆண்கள் பட்டாடை அணியலாம் (3) 37.2 பொன் மோதிரம் மற்றும் பட்டாடை அணிவது ஆண்களுக்குத் தடை; பெண்களுக்கு அனுமதி (20) 37.1 பொன் / வெள்ளிப் பாத்திரங்களைப் பயன்படுத்துவது ஆண்களுக்கும் பெண்களுக்கும் தடை (2) 36.35 உணவைக் குறை சொல்லவேண்டாம் (2) 36.34 இறைநம்பிக்கையாளர் ஒரே குடலில் உண்பார்; இறைமறுப்பாளன் ஏழு குடல்களில் உண்பான் (5) 36.33 உணவு குறைவாக இருக்கும்போது … (4) 36.32 விருந்தினரை உபசரிப்பதும் முன்னுரிமை வழங்குவதன் சிறப்பும் (6) 36.31 வெள்ளைப் பூண்டு சாப்பிடக்கூடியதே … (2) 36.30 உணவுக் காடியின் சிறப்பும் … (4) 36.29 ‘அல்கபாஸ்’ பழங்களில் கருப்பு நிறப் பழத்தின் சிறப்பு (1) 36.28 உணவுக் காளானின் சிறப்பும் … (6) 36.27 மதீனத்துப் பேரீச்சம் பழங்களின் சிறப்பு (3) 36.26 குடும்பத்தாருக்காக … உணவுகளைச் சேமித்துவைத்தல் (2) 36.25 பலருடன் சேர்ந்து உண்பவர் … (2) 36.24 உணவு உண்பவர் அமரும் முறை; பணிவோடு அமர்வது விரும்பத் தக்கது (2) 36.23 பேரீச்சை செங்காய்களுடன் வெள்ளரிக்காயையும் சேர்த்து உண்பது (1) 36.22 விருந்தளிப்பவருக்காக விருந்தாளி பிரார்த்திப்பது … (1) 36.21 சுரைக் குழம்பு உண்ண அனுமதி … (2) 36.20 வீட்டு உரிமையாளரின் சம்மதம் கிடைக்கும் என்ற நம்பிக்கை இருந்தால் … (4) 36.19 விருந்துக்கு அழைக்கப்பட்டவரைத் தொடர்ந்து அழைக்கப்படாதவரும் வந்துவிட்டால் … (2) 36.18 உண்டு முடித்ததும் விரல்களைச் சூப்புவதும் உணவுத் தட்டை வழித்து உண்பதும் … (9) 36.17 வலப் பக்கத்திலிருந்து பரிமாறுதல் விரும்பத் தக்கதாகும் (4) 36.16 பாத்திரத்தினுள் (பருகும்போது) வெளியே மூன்று முறை மூச்சு விட்டுப் பருகுவது விரும்பத் தக்கதாகும் (3) 36.15 ஸம்ஸம் நீரை நின்றுகொண்டு அருந்துவது (4) 36.14 நின்றுகொண்டு அருந்துவது வெறுக்கத் தக்கதாகும் (4) 36.13 உண்பது, அருந்துவது ஆகியவற்றின் ஒழுங்குகளும் விதிமுறைகளும் (10) 36.12 இரவு நேர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் (6) 36.11 பழச்சாறுகளைப் பருகுவதும் பாத்திரங்களை மூடிவைப்பதும் (3) 36.10 (ஆட்டுப்) பால் அருந்த அனுமதி (3) 36.9 பழச்சாறுகள் (புளித்துக்) கெட்டியாகி, போதையேறாதவரை அனுமதிக்கப்பட்டவையாகும் (10) 36.8 குடிகாரன் பாவமன்னிப்புக் கோரி திருந்தாவிட்டால் … (3) 36.7 போதை தரும் ஒவ்வொரு பானமும் தடை செய்யப்பட்ட மதுவாகும் (9) 36.6 பானங்கள்-பாத்திரங்கள், தடை-தடை நீக்கம் (36) 36.5 பேரீச்சம் பழம், உலர் திராட்சைக் கலவை ஊறல் வெறுக்கத் தக்கதாகும் (14) 36.4 ‘மதுபானம்’ என்று சொல்லப்படுபவை (4) 36.3 மதுவை மருந்தாகப் பயன்படுத்துவதற்குத் தடை (1) 36.2 மதுபானத்தை (சமையல்) காடியாக மாற்றிப் பயன்படுத்துவதற்குத் தடை (1) 36.1 போதையூட்டும் ஒவ்வொன்றும் மதுவாகும் (9) 35.8 அல்லாஹ் அல்லாதவரின் பெயர் கூறிப் பிராணிகளை அறுப்பதற்குத் தடை (3) 35.7 தலைமுடியை, நகங்களைக் களைவதற்குத் தடை (5) 35.6 அல் ஃபரஉ வல் அத்தீரா (1) 35.5 பலி இறைச்சியை எவ்வளவு காலம் சேமித்து வைக்கலாம்? (14) 35.4 பல், நகம், எலும்பு ஆகியவை தவிர எந்தப் பொருளாலும் பிராணியை அறுக்க அனுமதி (1) 35.3 தாமே அறுப்பதும் அல்லாஹ்வின் பெயரோடு தக்பீர் கூறுவதும் விரும்பத் தக்கவை ஆகும் (3) 35.2 பலிப் பிராணியின் வயது (4) 35.1 பலி கொடுக்கப்படும் நேரம் (10) 34.12 விலங்குகளைக் கட்டிவைத்து அம்பெய்து கொல்வதற்குத் தடை (5) 34.11 … கத்தியைக் கூர்மையாகத் தீட்டிக் கொண்டு வதையற்ற முறையைக் கையாளக் கட்டளை (1) 34.10 … பயிற்சிகளை மேற்கொள்வது அனுமதிக்கப் பட்டதாகும். கல்சுண்டு விளையாட்டு வெறுக்கப்பட்டதாகும் (2) 34.9 முயல் கறி உண்ணத் தக்கது (1) 34.8 வெட்டுக்கிளி உண்ணத் தக்கது (1) 34.7 உடும்புக் கறி உண்ணத் தக்கது (13) 34.6 குதிரைகளின் இறைச்சியை உண்பது கூடுமா? (3) 34.5 நாட்டுக் கழுதைகளின் இறைச்சியை உண்பதற்குத் தடை (14) 34.4 கடல்வாழ் உயிரினங்களில் செத்தவற்றை உண்பதற்கு அனுமதி (5) 34.3 உண்பதற்குத் தடை செய்யப்பட்ட விலங்குகளும் பறவைகளும் (6) 34.2 வேட்டையாடிய பிராணி மறைந்து, பிறகு கிடைத்தால் … (2) 34.1 பயிற்சியளிக்கப்பட்ட நாய்கள் மூலம் வேட்டையாடுதல் (8) 33.56 பயணத்திலிருந்து திரும்புகின்றவர் … (5) 33.55 பயணம் என்பது துன்பத்தின் ஒரு பகுதியாகும் … (1) 33.54 பயணத்தில் கால்நடைகளின் நலன் காப்பதும் … (2) 33.53 “என் சமுதாயத்தாரில் ஒரு குழுவினர் எப்போதுமே உண்மைக்கு ஆதரவாளர்களாக இருப்பார்கள் … (8) 33.52 அம்பெய்வதன் சிறப்பும் … (3) 33.51 உயிர்த் தியாகிகள் பற்றிய விளக்கம் (3) 33.50 அல்லாஹ்வின் பாதையில் எல்லைக் காவல் புரிவதன் சிறப்பு (1) 33.49 கடல்வழிப் போரின் சிறப்பு (2) 33.48 போரில் கலந்துகொள்ள முடியாமல் போனவருக்கும் நன்மை … (1) 33.47 அறப்போரில் கலந்துகொள்ளாமல் இறந்துபோனவர் … (1) 33.46 அல்லாஹ்வின் பாதையில் வீரமரணத்தை வேண்டுவது விரும்பத் தக்கதாகும் (2) 33.45 “எண்ணங்களைப் பொருத்தே செயல்கள் அமைகின்றன” எனும் நபிமொழி … (1) 33.44 … போர்ச் செல்வங்களைப் பெற்றோரும் பெறாதோரும் … (2) 33.43 பிறர் பார்ப்பதற்காகவும் விளம்பரத்திற்காகவும் போரிட்டவர் … (1) 33.42 அல்லாஹ்வின் பாதையில் போரிட்டவர் … (3) 33.41 உயிர்த் தியாகிக்குச் சொர்க்கம் நிச்சயம் (6) 33.40 தகுந்த காரணம் உள்ளவர்களுக்கு அறப்போரில் கலந்து கொள்வது கடமை இல்லை (2) 33.39 அறப்போர் வீரர்களின் துணைவியருடைய கண்ணியம் … (1) 33.38 அறப்போர் வீரருக்கு வாகனம் மற்றும் பிற உதவிகள் … (6) 33.37 அல்லாஹ்வின் பாதையில் தர்மம் செய்வதன் சிறப்பும் அதற்குக் கிடைக்கும் பன்மடங்கு நன்மைகளும் (1) 33.36 இறைமறுப்பாளனை (போரில்) கொன்ற பின்னர் (மார்க்கத்தில்) உறுதியோடு இருத்தல் (2) 33.35 இரு போராளிகளில் ஒருவர் மற்றவரைக் கொன்று, பின் அவ்விருவருமே சொர்க்கத்தில் … (2) 33.34 அறப்போர் மற்றும் எல்லைக் காவலின் சிறப்பு (3) 33.33 வீரமணம் அடைந்தவர்களின் உயிர்கள் … (1) 33.32 அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டவரின் கடனைத் தவிர அனைத்துப் பாவங்களும் மன்னிக்கப்படுகின்றன (3) 33.31 அல்லாஹ் (தனது பாதையில்) அறப்போர் புரிந்தவர்களுக்காகச் சொர்க்கத்தில் வைத்துள்ள உயர்நிலைகள் (1) 33.30 அல்லாஹ்வின் பாதையில் காலையாயினும் மாலையாயினும் (போரிடச்) செல்வதன் சிறப்பு (5) 33.29 அல்லாஹ்வின் பாதையில் வீரமரணம் அடைவதன் சிறப்பு (4) 33.28 அல்லாஹ்வின் பாதையில் புறப்படுதலின், அறப்போரில் ஈடுபடுதலின் சிறப்பு (4) 33.27 குதிரையின் தன்மைகளில் விரும்பத் தகாதவை (1) 33.26 மறுமை நாள்வரை நெற்றிகளில் நன்மை பிணைக்கப்பட்டிருக்கும் குதிரைகள் (5) 33.25 குதிரைப் பந்தயமும் அதற்காகக் குதிரையை மெலிய வைப்பதும் (1) 33.24 குர்ஆன் பிரதிகளை இறைமறுப்பாளர்களின் நாட்டுக்கு எடுத்துச் செல்வது … (3) 33.23 பருவ வயது பற்றிய விளக்கம் (1) 33.22 இயன்றவரை கட்டுப்பட்டு நடப்பதாக உறுதிமொழி அளித்தல் (1) 33.21 பெண்களிடம் உறுதிப் பிரமாணம் (பைஅத்) வாங்கும் முறை (2) 33.20 மக்கா வெற்றிக்குப் பின் ஹிஜ்ரத் கிடையாது (5) 33.19 நாடு துறந்து (ஹிஜ்ரத்) சென்றவர் மீண்டும் தமது தாயகத்தில் குடியேறுவதற்குத் தடை (1) 33.18 ஆட்சித் தலைவர் படையினரிடம் உறுதி மொழி பெற்றுக்கொள்வது … (13) 33.17 ஆட்சித் தலைவர்களில் நல்லவர்களும் தீயவர்களும் (2) 33.16 ஆட்சித் தலைவர்கள் மார்க்கத்திற்கு முரணாகச் செயல்படும்போது … (2) 33.15 இரு ஆட்சியாளர்களுக்கு வாக்களிப்புப் பிரமாண நெருக்கடி ஏற்பட்டால் … (1) 33.14 முஸ்லிம்கள் (ஒரே தலைமையின் கீழ்) ஒன்றுபட்டிருக்கும்போது … (2) 33.13 குழப்பங்கள் தோன்றும்போது கூட்டமைப்போடு சேர்ந்திருப்பது கடமையாகும் … (8) 33.12 உரிமைகள் மறுக்கப்பட்டாலும் தலைமைக்குக் கட்டுப்படுதல் (1) 33.11 அதிகாரத்திலிருப்போர் அநீதியிழைக்கும்போதும் தகுதியற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கும்போதும் … (1) 33.10 கலீஃபாக்களில் முதலாமவருக்கு உறுதிப் பிரமாணம் (பைஅத்) அளிப்பது கடமையாகும் (3) 33.9 ஆட்சித் தலைவர் கேடயம் போன்றவர் … (1) 33.8 பாவமற்றவற்றில் தலைவர்களுக்குக் கட்டுப்படுவது கடமையாகும். பாவமானவற்றில் கட்டுப்படுவதற்குத் தடை (11) 33.7 அதிகாரிகளுக்கு அன்பளிப்புகள் வழங்குவதற்குத் தடை (3) 33.6 பொதுச் சொத்துகளில் மோசடி செய்வது வன்மையாகத் தடை செய்யப்பட்டது (1) 33.5 நேர்மையான ஆட்சியாளரின் சிறப்பும் … (6) 33.4 தேவையின்றி ஆட்சிப் பொறுப்பை ஏற்பது விரும்பத் தக்கதன்று (2) 33.3 ஆட்சியதிகாரத்தைத் தேடி அலைவதற்கும் அதன் மீது ஆசை கொள்வதற்கும் தடை (3) 33.2 ஆட்சித் தலைவரை நியமிக்கலாம்; நியமிக்காமல் விடலாம் (2) 33.1 ஆட்சியதிகாரம் குறைஷியரிடையேதான் இருக்கும் (10) 32.51 அறப்போர்களில் இறைமறுப்பாளரிடம் உதவி கோருவது … (1) 32.50 ‘தாத்துர் ரிக்காஉ’ (ஒட்டுத் துணிப்) போர் (1) 32.49 நபி (ஸல்) கலந்துகொண்ட அறப்போர்களின் எண்ணிக்கை (6) 32.48 அறப்போரில் கலந்துகொண்ட பெண்களுக்கு … (4) 32.47 அறப்போரில் ஆண்களுடன் பெண்களும் கலந்துகொள்வது (2) 32.46 “அவனே உங்களைத் தாக்காமல் அவர்கள் கைகளை தடுத்(து வைத்)தான்” எனும் (48:24) வசனம் (2) 32.45 ‘தூ கரத்’ போரும் பிற போர்களும் (2) 32.44 அஹ்ஸாப் போர் (அ) அகழ்ப் போர் (6) 32.43 கைபர் போர் (5) 32.42 கஅப் பின் அல்அஷ்ரஃப் கொல்லப்படுதல் (1) 32.41 அபூஜஹ்லு கொல்லப்படுதல் (1) 32.40 நபி (ஸல்) (மக்களை) இறைவன்பால் அழைத்து, துன்பங்களைப் பொறுத்துக் கொண்டது (2) 32.39 நபி (ஸல்) எதிர்கொண்ட துன்பங்கள் (7) 32.38 இறைதூதரால் கொல்லப்பட்டவன் மீது இறைவனின் கோபம் (1) 32.37 உஹுதுப் போர் (3) 32.36 கூட்டுப் படையினருக்கு எதிரான அகழ்ப் போர் (2) 32.35 வாக்குறுதியை(ப் போரிலும்) நிறைவேற்றுவது (1) 32.34 ஹுதைபிய்யா சமாதான உடன்படிக்கை’ (7) 32.33 மக்கா வெற்றிக்குப் பின் … (1) 32.32 கஅபாவைச் சுற்றிலும் இருந்த சிலைகளை அப்புறப்படுத்தியது (1) 32.31 மக்கா வெற்றி (2) 32.30 பத்ருப் போர் (1) 32.29 தாயிஃப் போர் (1) 32.28 ஹுனைன் போரில் … (5) 32.27 இறைமறுப்பு அரசர்களுக்கு நபி (ஸல்) எழுதிய கடிதங்கள் (1) 32.26 அழைப்பு விடுத்து ஹெராக்ளியஸ் மன்னருக்கு நபி (ஸல்) எழுதிய கடிதம் (1) 32.25 போரில் கிடைத்த உணவை, பகை நாட்டில் இருக்கும் போதே உண்ணலாம் (2) 32.24 முஹாஜிர்கள் தன்னிறைவு அடைந்தபோது … (2) 32.23 செயல்களுள் முன்னுரிமை அளிக்கத் தக்கது (1) 32.22 ஒப்பந்தத்தை முறித்துவிட்ட (பகை)வர்களுடன் போர் செய்யலாம் (3) 32.21 யூத கிறித்தவர்கள் அரபிய தீபகற்பத்திலிருந்து வெளியேற்றப்படுவது (1) 32.20 யூதர்களை ஹிஜாஸ் பகுதியிலிருந்து நாடு கடத்தியது (2) 32.19 கைதியை என்னென்னவெல்லாம் செய்யலாம் (1) 32.18 பத்ருப் போரில் வானவர்களின் உதவியும் … (1) 32.17 போர் வெற்றிச் செல்வத்தைப் பங்கிடும் முறை (1) 32.16 இறைத்தூதர்களுக்கு யாரும் (சொத்தில்) வாரிசாக முடியாது (5) 32.15 போர் செய்யாமல் கிடைத்த செல்வங்களின் சட்டம் (3) 32.14 … போர்க் கைதிகளைப் பரிமாறிக்கொள்வது (1) 32.13 போரில் கொல்லப்பட்ட எதிரியின் உடைமைகள் (4) 32.12 போர் வெற்றிச் செல்வங்கள் (7) 32.11 போர் வெற்றிச் செல்வங்கள் யாருக்குச் சொந்தம்? (1) 32.10 போரில் மரங்களை வெட்டுவதும் எரிப்பதும் அனுமதிக்கப்பட்டதாகும் (3) 32.9 பெண்களையும் குழந்தைகளையும் அறியாமல் கொன்றுவிட்டால் … (3) 32.8 போரில் பெண்களையும் குழந்தைகளையும் கொல்வதற்குத் தடை (2) 32.7 எதிரிகளை(ப் போரில்) எதிர்கொள்ளும்போது பிரார்த்திப்பது (2) 32.6 எதிரியை(ப் போர்க் களத்தில்) சந்திக்க ஆசைப்படுவது வெறுக்கத் தக்கது … (2) 32.5 போரில் தந்திரம் அனுமதிக்கப்பட்டது (2) 32.4 மோசடி செய்வது தடை செய்யப்பட்டதாகும் (8) 32.3 மக்களிடம் இலகுவாக நடந்துகொள்ள வேண்டும்; வெறுப்பைக் கைவிட வேண்டும் (3) 32.2 படைத் தலைவர், போர் நெறிகள் குறித்து அறிவுறுத்துவது (1) 32.1 முன்னறிவிப்பின்றித் தாக்குதல் தொடுக்கலாமா? (1) 31.5 பயணத்தில் உணவைப் பகிர்ந்துண்ணல் (1) 31.4 செல்வத்தால் பிறருக்கு உதவுவது விரும்பத் தக்கது (1) 31.3 விருந்தோம்பல் சார்ந்தவை (3) 31.2 உரிமையாளரின் அனுமதியின்றி கால் நடையில் பால் கறப்பதற்குத் தடை (1) 31.1 ஹாஜிகள் தவறவிட்டவை (2) 31.0 கண்டெடுக்கப்பட்டவை (5) 30.11 நீதிபதி சமரசம் செய்துவைப்பது விரும்பத் தக்கதாகும் (1) 30.10 ஆய்வாளர்களிடையே கருத்து வேறுபாடு (1) 30.9 சாட்சிகளில் சிறந்தவர் (1) 30.8 தவறான தீர்ப்புகளைத் தள்ளுபடி செய்வதும் (மார்க்கத்தில் இல்லாத) புதுமைகளை நிராகரிப்பதும் (2) 30.7 கோபமாக இருக்கும் நீதிபதி, தீர்ப்பளிப்பது விரும்பத் தக்கதன்று (1) 30.6 நீதிபதியின் ஆய்வுக்கு நன்மை உண்டு (1) 30.5 தடைகள் மூன்று (4) 30.4 ஹிந்த் (ரலி) வழக்கு (3) 30.3 வாதங்களின் அடிப்படையில் தீர்ப்பு அமைந்துவிடுதல் (2) 30.2 சத்தியத்தின் / சாட்சியத்தின் அடிப்படையில் தீர்ப்பளித்தல் (1) 30.1 சத்தியம் செய்து நிரூபிப்பது பிரதிவாதிமீது கடமையாகும் (2) 29.11 இழப்பீடு இல்லாத விபத்துகள் (2) 29.10 தண்டனைகள், குற்றங்களுக்கான பரிகாரமாகும் (3) 29.9 சீர்திருத்திற்காக வழங்கப்படும் சாட்டையடிகளின் (அதிகபட்ச) அளவு (1) 29.8 மது அருந்திய குற்றத்திற்கான தண்டனை (4) 29.7 மகப்பேறான பெண்ணின் தண்டனையைத் தள்ளிவைத்தல் (1) 29.6 இஸ்லாமிய அரசின் கீழ் வாழும் யூதர்கள் விபச்சாரத்தில் ஈடுபட்டாலும் கல்லெறி தண்டனை (6) 29.5 விபச்சாரம் செய்தவரின் ஒப்புதல் வாக்குமூலம் (9) 29.4 மணமானவர்கள் விபச்சாரம் செய்தால் கல்லெறி தண்டனை (1) 29.3 விபச்சாரக் குற்றத்திற்கான தண்டனை (2) 29.2 தண்டனையிலிருந்து விலக்கு அளிக்குமாறு பரிந்துரைப்பதற்குத் தடை (3) 29.1 தண்டனைக்குரிய திருட்டின் அளவுகோலும் தண்டனையும் (7) 28.11 சிசுக் கொலைக்கான இழப்பீடும் … (6) 28.10 கொலையாளி, தன் குற்றத்தை ஒப்புக்கொள்வதும் … (2) 28.9 மனிதர்களின் உயிர், தன்மானம், செல்வம் ஆகியவற்றுக்கு ஊறு விளைவிப்பது … (2) 28.8 மறுமையில் வழங்கப்படும் தீர்ப்பும் தண்டனையும் … (1) 28.7 கொலையை (உலகுக்கு) அறிமுகப்படுத்தியவர் மீதான பாவம் (1) 28.6 முஸ்லிமின் மரண தண்டனைக்கான காரணங்கள் (2) 28.5 பற்கள் போன்ற(உறுப்புகளான)வற்றில் பழிக்குப்பழி உண்டு (1) 28.4 தாக்க வந்தவனிடமிருந்து தற்காத்துக் கொள்வதற்காக … (6) 28.3 கல் மற்றும் கூராயுதங்களால் கொலை செய்தால், பழிக்குப்பழி உண்டு … (3) 28.2 வன்முறையாளர்களுக்கும் மதம் மாறியோருக்குமான தண்டனை (4) 28.1 அல்கஸாமா (4) 27.13 விடுதலைக்கு வாக்களிக்கப்பட்ட அடிமையை விற்கலாம் (2) 27.12 அடிமையில் தமது பங்கை மட்டும் விடுதலை செய்தல் (8) 27.11 ‏தன் உரிமையாளருக்கு விசுவாசமாகவும் … (4) 27.10 அடிமைக்கு எஜமானர் உண்பதிலிருந்து உணவளிப்பதும் … (4) 27.9 விபசாரம் செய்துவிட்டதாக அவதூறு கூறுவதற்கான கண்டனம் (1) 27.8 அடிமைகளுடனான நல்லுறவும் கன்னத்தில் அறைந்ததற்கான பரிகாரமும் (8) 27.7 இறைமறுப்பாளராக இருந்தபோது செய்த நேர்ச்சை… (2) 27.6 ஆகுமாக்கப்பட்டதற்கான சத்தியமாக இருந்தாலும் … (1) 27.5 இன்ஷா அல்லாஹ் என்பதை (சத்தியத்தின்போது) சேர்த்துக் கூறுதல் (4) 27.4 சொல்பவரின் எண்ணப்படியே ஒருவருடைய சத்தியம் அமையும் (2) 27.3 சத்தியம் செய்தவர், அதைவிடச் சிறந்ததாக மற்றொன்றைக் காணும்போது … (12) 27.2 ‘லாத்’ மற்றும் ‘உஸ்ஸா’வின் மீது சத்தியம் செய்துவிட்டவர் … (2) 27.1 அல்லாஹ்வைத் தவிர எவர்/எதன் மீதும் சத்தியம் செய்யத் தடை (3) 26.5 நேர்ச்சை முறிவுக்கான பரிகாரம் (1) 26.4 கஅபாவரை நடைப்பயணம் செல்வதாக நேர்ந்துகொண்டவர் (3) 26.3 இறைவனுக்கு மாறு செய்வதிலோ உரிமை இல்லாததிலோ நேர்ச்சை. (1) 26.2 நேர்ச்சை செய்வதற்குத் தடை; அது (விதியில்) எதையும் மாற்றிவிடாது (6) 26.1 நேர்ச்சையை நிறைவேற்றக் கட்டளை (1) 25.5 வசதியற்றவர் மரண சாஸனம் செய்ய முடியாது (6) 25.4 அறக்கொடை (1) 25.3 மனிதன் இறந்த பின்பும் தொடரும் நன்மைகள் (1) 25.2 இறந்துவிட்டவருக்காகச் செய்யப்படும் தர்மங்களின் நன்மை … (3) 25.1 மரண சாஸனம் 1/3 மட்டுமே (5) 25.0 மரண சாஸனம் (2) 24.4 ஆயுட்கால அன்பளிப்பு (11) 24.3 அன்பளிப்பு வழங்குவதில் பிள்ளைகளிடையே பாகுபாடு காட்டுவது … (10) 24.2 தானமும் அன்பளிப்பும் வழங்கப்பட்ட பின், திரும்பப் பெறுவதற்குத் தடை … (4) 24.1 தானமாகக் கொடுத்ததை விலைக்கு வாங்குவது விரும்பத் தக்கதல்ல (4) 23.4 ஒருவர் விட்டுச்செல்லும் செல்வம் அவருடைய வாரிசுகளுக்கு உரியதாகும் (4) 23.3 இறுதியாக அருளப்பெற்றது கலாலா வசனமாகும் (4) 23.2 ‘கலாலா’ சொத்துரிமை (5) 23.1 உரியவர்களுக்கும் உறவினருக்கும் பிரிக்கப்பட்ட பாகங்கள் (3) 23.0 ஒரு முஸ்லிம், இறைமறுப்பாளருக்கு வாரிசாகமாட்டார் (1) 22.31 பாதைக்கு நிலம் ஒதுக்குவதில் கருத்து வேறுபாடு ஏற்பட்டால் அதற்கான தீர்வு (1) 22.30 பிறர் நிலத்தை அபகரித்தல் போன்ற அநீதி இழைத்தல்களுக்குத் தடை (6) 22.29 அண்டை வீட்டாரின் சுவரில் (சாரம் கட்டுவதற்கு) மரக்கட்டை பதிப்பது (1) 22.28 பங்காளியின் இசைவு (3) 22.27 வியாபாரத்தில் (வீண்)சத்தியம் செய்வது விலக்கப்பட்டுள்ளது (2) 22.26 உணவுப் பொருட்களைப் பதுக்குவதற்குத் தடை (2) 22.25 முன்பணம் செலுத்தும் வணிகம் (2) 22.24 அடமானம் உள்ளூரிலும் பயணத்திலும் செல்லும் (3) 22.23 ஓர் உயிரினத்தை அதே இனத்திற்குப் பதிலாக ஏற்றத்தாழ்வோடு விற்கலாம் (1) 22.22 உங்களில் சிறந்தவர் கடனை அழகிய முறையில் திருப்பிச் செலுத்துபவரே (4) 22.21 ஒட்டகத்தை விற்றவர் அதில் பயணிக்க நிபந்தனை விதிப்பது (5) 22.20 அனுமதிக்கப்பட்டவற்றையும் ஐயத்திற்குரியவற்றையும் கையாளுதல் (1) 22.19 வட்டி வாங்குபவருக்கும் வட்டி கொடுப்பவருக்கும் சாபம் (2) 22.18 உணவுப் பொருளை, சரிக்குச் சரியாக விற்றல் (12) 22.17 பொன்னும் மணியும் பதித்த மாலையை விற்பது (4) 22.16 தங்கத்திற்கு வெள்ளியைக் கடனாக விற்பதற்குத் தடை (3) 22.15 நாணயமாற்று வியாபாரம்; வெள்ளிக்குத் தங்கத்தை ரொக்கத்துக்கு விற்பது (7) 22.14 வட்டி (4) 22.13 மது, செத்தவை, பன்றி, சிலைகள் ஆகியவற்றை விற்பதற்குத் தடை (4) 22.12 மதுபான வியாபாரத்திற்குத் தடை (4) 22.11 குருதி உறிஞ்சி எடுப்பதற்காகக் கூலி பெறுவது கூடும் (4) 22.10 வேட்டை, காவல், பாதுகாப்புக்காக நாய் வளர்க்கலாம் (18) 22.9 நாய் விற்ற காசு, சோதிடரின் தட்சணை, விபச்சாரியின் வருமானம் (4) 22.8 தேவைக்குப் போக மீதம் உள்ள நீரை விற்பதற்குத் தடை (5) 22.7 வசதியுள்ளவர் கடனைச் செலுத்த தாமதம் செய்யக் கூடாது (1) 22.6 கடனை அடைக்க சிரமப்படுபவருக்கு அவகாசம் அளிப்பதன் சிறப்பு (7) 22.5 திவாலானவரிடம் திரும்பப் பெற்றுக்கொள்ளும் உரிமை (4) 22.4 கடனில் தள்ளுபடி செய்வது விரும்பத் தக்கதாகும் (3) 22.3 சேதமடைந்த பழங்களுக்கான தொகைக்குத் தள்ளுபடி (5) 22.2 மரம் நடுதலின், பயிர் செய்தலின் சிறப்பு (5) 22.1 நிபந்தனையின் பேரில் தோப்பைக் குத்தகைக்கு விடுவது (4) 21.21 நிலத்தை (விளைவித்துக்கொள்ள) இரவலாக வழங்குவது (4) 21.20 ‘முஸார’ஆவும் ‘முஆஜரா’வும் (2) 21.19 பொன், வெள்ளி(நாயணங்களு)க்கு நிலத்தைக் குத்தகைக்கு விடுவது (3) 21.18 தானியத்திற்கு நிலத்தைக் குத்தகைக்கு விடுவது (2) 21.17 நிலக் குத்தகை (24) 21.16 தடை செய்யப்பட்ட வியாபார வகைகள் (6) 21.15 கனிகள் நிறைந்த பேரீச்ச மரத்தை விற்பது (4) 21.14 (மரத்திலுள்ள) செங்கனிகளை மாற்றிக் கொள்வதற்குத் தடை (14) 21.13 மரத்திலுள்ள பழங்களை முற்றுவதற்கு முன் விற்பதற்குத் தடை (10) 21.12 வியாபாரத்தில் ஏமாற்றப்படுபவர் (1) 21.11 வியாபாரத்தில் உண்மை பேசுவதும் குறைகளைத் தெளிவுபடுத்துவதும் (1) 21.10 விற்பவருக்கும் வாங்குபவருக்கும் வியாபாரத்தை முறித்துக்கொள்ளும் உரிமை (4) 21.9 அளவு தெரியாத பேரீச்சம் பழக் குவியலை விற்பதற்குத் தடை (1) 21.8 வாங்கப்பட்ட பொருள் கைக்கு வருமுன் (பிறருக்கு) விற்பது கூடாது (13) 21.7 மடி கனக்கச் செய்யப்பட்ட கால்நடைகளை விற்பனை செய்வது பற்றிய சட்டம் (5) 21.6: கிராமவாசிக்காக, நகரவாசி விற்றுக் கொடுக்கத் தடை (5) 21.5: விற்பனைக்கு வரும் சரக்குகளை இடைமறித்து வாங்கத் தடை (4) 21.4: வியாபாரத்தில் தடை செய்யப்பட்டவை (7) 21.3: ஒட்டகக் கன்று (அது பிறக்குமுன்) விற்பதற்கு தடை! (2) 21.2: கல்லெறி வியாபாரம் மற்றும் மோசடி வியாபாரம் ஆகியவை செல்லாது (1) 21.1: ‘முலாமஸா’ மற்றும் ‘முனாபதா’ ஆகிய வியாபாரங்கள் செல்லாது (3) 20.7: அடிமையான தந்தையை விடுதலை செய்வதன் சிறப்பு (1) 20.6: அடிமைகளை விடுதலை செய்வதன் சிறப்பு (4) 20.5: விடுதலை செய்த உரிமையாளரை மாற்றிக் கூறத் தடை (4) 20.4: வாரிசாகும் உரிமையை விற்பதற்கும் அன்பளிப்பாக வழங்குவதற்கும் தடை (1) 20.3: விடுதலை செய்தவருக்கே வாரிசுரிமை உரியது (9) 20.2: அடிமை (தனது முழு விடுதலைக்காக) உழைத்துப் பொருளீட்டுவது (2) 20.1: ஓர் அடிமையி(ன் விலையி)ல், ஒருவர் தமக்கான பங்கை விடுவிப்பது (1) 19.1: சுய சாபம் வேண்டுதல் (17) 18.9: கணவன் இறந்து ‘இத்தா’விலிருக்கும் பெண் துக்கம் கடைப்பிடிப்பது (11) 18.8: கர்ப்பமுற்றிருக்கும் பெண்ணின் ‘இத்தா’க் காலம், பிரசவத்துடன் முடிந்துவிடும் (2) 18.7: ‘இத்தா’விலிருக்கும் பெண் தன் தேவைக்காக வெளியே செல்லலாம் (1) 18.6: மூன்று தலாக் சொல்லப்பட்ட பெண்ணுக்கு ஜீவனாம்சம் பற்றி… (18) 18.5: ஈலாச் செய்வது, மனைவியிடமிருந்து விலகுவது, விருப்ப உரிமை அளிப்பது (5) 18.4: மனைவிக்கு (த் தம்மைப் பிரிந்துவிட) உரிமை அளிப்பது மணவிலக்கு ஆகாது (8) 18.3: மணவிலக்குச் செய்யும் நோக்கமின்றி கூறினால், அது மணவிலக்கு ஆகாது (4) 18.2: மூன்று தலாக்குகள் (3) 18.1: மாதவிடாயான மனைவியை அவளது சம்மதமின்றி மணவிலக்குச் செய்வதற்குத் தடை (14) 17.19: ஹவ்வா-வும், பெண்கள் கணவரை ஏமாற்றுதலும் (2) 17.18: மனைவியரின் நலம் நாடுதல் (4) 17.17: பயன் தரும் இவ்வுலகச் செல்வங்களுள் மிகச் சிறந்த செல்வம், நற்குணமுள்ள மனைவியே (1) 17.16: கன்னிப் பெண்ணை மணப்பது விரும்பத் தக்கதாகும் (5) 17.15: மார்க்கப் பற்றுள்ள பெண்ணை மணப்பது விரும்பத் தக்கதாகும் (2) 17.14: மனைவியருள் ஒருவர், தனது முறைநாளை மற்றவருக்கு விட்டுக்கொடுக்கலாம் (4) 17.13: மனைவியருக்கு (இரவுகளை) ஒதுக்கீடு செய்வது (1) 17.12: கன்னி கழிந்த பெண்ணுக்கும், கன்னிப் பெண்ணுக்கும் கணவன் ஒதுக்க வேண்டிய நாட்கள் (6) 17.11: சாயல் அறியும் நிபுணரின் கூற்றுப்படி, குழந்தைக்கு உரியவரைக் கண்டறிவது (3) 17.10: எஜமானரின் கீழ் வாழும் பெண்ணின் குழந்தை, அவருக்கே உரியது (2) 17.9: பெண் போர்க் கைதியுடன் உடலுறவு கொள்ளலாம் (2) 17.8: பசிக்காகத் தாய்ப்பால் அருந்தினால்தான் பால்குடி உறவு ஏற்படும் (1) 17.7: பருவ வயதை அடைந்தவருக்குப் பாலூட்டுவது (6) 17.6: ஐந்து தடவை அருந்தினால்தான் பால்குடி உறவு உண்டாகும் (2) 17.5: ஓரிரு தடவை (பெண்ணின் மார்பில்) பால் குடிப்பது பற்றிய சட்டம் (6) 17.4: மனைவியின் மகளையும் மனைவியின் சகோதரியையும் மணப்பதற்குத் தடை (2) 17.3: பால்குடிச் சகோதரரின் மகளை மணப்பது தடை செய்யப்பட்டுள்ளது (3) 17.2: பால்குடித் தந்தையின் (இரத்த பந்த) உறவினரும் மணமுடிக்கத் தகாதவரே! (6) 17.1: பிறப்பால் ஏற்படும் உறவும் பால்குடி உறவும் (2) 16.24: பாலூட்டும் மனைவியுடன் உடலுறவு கொள்ளும்போது அஸ்லுச் செய்வது வெறுக்கத் தக்கது (3) 16.23: கருவுற்றிருக்கும் பெண் போர்க் கைதியுடன் உடலுறவு கொள்வது தடை செய்யப்பட்டுள்ளது (1) 16.22: உடலுறவின்போது இடைமுறிப்பு – ‘அஸ்லு’ச் சட்டம் (12) 16.21: மனைவியுடன் நடைபெறும் உடலுறவு இரகசியங்களை வெளியே சொல்வது தடுக்கப்பட்டது (2) 16.20: ஒரு பெண், தன் கணவனின் படுக்கைக்குச் செல்ல மறுப்பதற்குத் தடை (3) 16.19: உடலுறவின் ஒழுங்குகள் (2) 16.18: உடலுறவின்போது ஓத வேண்டிய விரும்பத் தகுந்த பிரார்த்தனை (1) 16.17: மூன்று முறை மணவிலக்கு அளிக்கப்பட்ட பெண்ணின் மறுவிருப்பம் (4) 16.16: விருந்துக்கான அழைப்பை ஏற்பது பற்றிய கட்டளை (13) 16.15: ஸைனப் பின்த்து ஜஹ்ஷு (ரலி) திருமணம்; ஹிஜாப் பற்றிய வசனம்; மணவிருந்து (7) 16.14: அடிமைப் பெண்ணை விடுதலை செய்து, பின்னர் அவளை மணமுடித்துக்கொள்வதன் சிறப்பு (6) 16.13: மணக்கொடை (மஹ்ரு) என்பது … (7) 16.12: ஒருவர் தாம் மணமுடிக்க விரும்பும் பெண்ணின் முகத்தையும் இரு முன் கைகளையும் பார்ப்பது (2) 16.11 ஷவ்வால் மாதத்தில் மணமும் தாம்பத்திய உறவும் (1) 16.10: இளவயதுக் கன்னிக்கு அவளுடைய தந்தை மணமுடித்துவைத்தல் (4) 16.9: மணப் பெண்ணின் வாய் வழிச் சம்மதமும் மௌனச் சம்மதமும் (4) 16.8: திருமண (முன்) நிபந்தனைகளை நிறைவேற்றல் (1) 16.7: மணக்கொடையில்லா திருமணம் செல்லாது (5) 16.6: தம் (முஸ்லிம்) சகோதரன் கேட்டுக்கொண்டிருக்கும் ஒரு பெண்ணை, மற்றவர் கேட்கலாகாது (7) 16.5: இஹ்ராம் புனைந்தவர் திருமணம் செய்வதற்குத் தடை; அவர் பெண் கேட்பது வெறுக்கத் தக்கது (8) 16.4: மனைவியின் அத்தையை, சின்னம்மாவை மணக்கத் தடை (8) 16.3: இடைக்காலத் திருமணம், (முத்ஆ) காலாவதியானது (21) 16.2: இச்சை தூண்டப்பட்டவர், தமது இச்சையைத் தணித்துக் கொள்ளட்டும் (2) 16.1: வசதி இருந்தால் மணமுடிப்பதும் இல்லாதவர் நோன்பு நோற்பதும் (6) 15.97: குபாப் பள்ளிவாசல், அதில் தொழுவது, அதைத் தரிசிப்பது ஆகிய சிறப்புகள் (7) 15.96: இறையச்சத்தின் மீது நிறுவப்பட்ட பள்ளிவாசல் (1) 15.95: மூன்று பள்ளிவாசல்களைத் தவிர வேறெதற்கும் (புனிதப்) பயணம் கிடையாது (2) 15.94: மக்கா, மதீனாப் பள்ளிவாசல்களில் தொழுவதன் சிறப்பு (6) 15.93: ‘உஹுத்’ மலை நம்மை நேசிக்கிறது; நாமும் அதை நேசிக்கின்றோம் (3) 15.92: சொர்க்கப் பூஞ்சோலைகளுள் ஒன்று (3) 15.91: மதீனாவாசிகள் மதீனாவை விட்டு அகலும்போது அதன் நிலை (2) 15.90: மதீனாவிலேயே தங்கியிருப்பதற்கு ஆர்வமூட்டல் (2) 15.89: மதீனாவாசிகளுக்குக் கேடு நினைப்பவர்களை, அல்லாஹ் உருக்குலைத்துவிடுவான் (3) 15.88: தன்னிலுள்ள தீயவர்களை மதீனா அகற்றிவிடும் (5) 15.87: கொள்ளை நோயும் தஜ்ஜாலும் நுழைய முடியாமல் மதீனா பாதுகாக்கப்பட்டுள்ளது (2) 15.86: மதீனாவில் ஏற்படும் நெருக்கடிகளைச் சகித்துக்கொண்டு, அங்குக் குடியிருக்க ஆர்வ மூட்டல் (10) 15.85: மதீனாவின் சிறப்பு; பிரார்த்தித்ததும் புனிதமானவையும் (17) 15.84: இஹ்ராமின்றி மக்காவிற்குள் நுழைய அனுமதி (5) 15.83: அவசியத் தேவையின்றி மக்காவிற்குள் ஆயுதம் எடுததுச் செல்வதற்குத் தடை (1) 15.82: மக்காவும், அதன் புனிதமானவைகளும் (4) 15.81: முஹாஜிருக்கு மக்காவில் தக்குவதற்கு அனுமதிக்கப்பட்ட நாட்கள் (4) 15.80: ஹாஜிகள் மக்காவில் தங்குவதும் அங்குள்ள வீடுகளை வாரிசுரிமையாகப் பெறுவதும் (3) 15.79: ஹஜ், உம்ரா, அரஃபா நாள் ஆகியவற்றின் சிறப்பு (3) 15.78: இணைவைப்பவருக்கான ஹஜ் சட்டங்கள் (1) 15-77: ஹஜ் அல்லது உம்ராவிலிருந்து திரும்பும்போது துல்ஹுலைஃபாவில் தங்கித் தொழுவது (5) 15.76: பயணத்திலிருந்து திரும்பி வரும்போது ஓத வேண்டியவை (2) 15.75: பயணங்களில் வாகனத்தில் ஏறியதும் ஓத வேண்டிய துஆ (2) 15.74: மஹ்ரமான ஆணுடன் மட்டுமே பெண்ணின் ஹஜ் முதலான பயணம் (11) 15.73: ஹஜ் கடமை, ஆயுளில் ஒரு முறைதான் (1) 15.72: குழந்தையின் ஹஜ் செல்லும்; அதை ஹஜ்ஜுக்கு அழைத்துச் சென்றவருக்கும் நற்பலன் உண்டு (3) 15.71: இயலாதவருக்காகவோ, இறந்தவருக்காகவோ பிறர் ஹஜ் செய்தல் (2) 15.70: கஅபாவின் வளைந்த சுவரும் அதன் தலைவாயிலும் (1) 15.69: இறையில்லம் கஅபாவை இடித்துக் கட்டுதல் (7) 15.68: கஅபாவின் உள்ளே நுழைவதும் அதனுள் தொழுவதும் (9) 15.67: விடைபெறும் தவாஃப் மாதவிடாய் ஏற்பட்ட பெண்ணுக்குக் கடமையில்லை (8) 15.66: செல்லும் வழியில் பலிப் பிராணி பாதிப்புக்குள்ளாகிவிட்டால் … (2) 15.65: பலியிடக் கொண்டுசெல்லும் ஒட்டகத்தில், பயணம் செய்ய அனுமதி (6) 15-64: ஹரம் எல்லைக்குச் செல்லாதவர், பலிப் பிராணியை அனுப்பிவைக்கும் முறை (11) 15.63: ஒட்டகத்தை அறுக்கும் முறை (1) 15.62: பலிப் பிராணிகளுள் மாட்டிலும் ஒட்டகத்திலும் கூட்டுச் சேர்வது (8) 15.61: பலிப் பிராணிகளின் இறைச்சி, தோல், சேணம் ஆகியவை தர்மத்துக்குரியன (2) 15.60: ‘தஷ்ரீக்’ நாட்களின் இரவுகளில் மினாவில் தங்குவது கட்டாயமாகும் (2) 15.59: ‘நஃப்ரு’டைய நாளில் ‘அல்முஹஸ்ஸபி’ல் தங்குவதும் அங்குத் தொழுவதும் (9) 15.58: துல்ஹஜ் பத்தாவது நாளில் ‘தவாஃபுல் இஃபாளா’ செய்வது (2) 15.57: ஹஜ் சடங்குகளில் முன் – பின் ஆகிவிட்டால் … (6) 15.56: துல்ஹஜ் பத்தாம் நாளின் சடங்குகள் (3) 15.55: தலைமுடியை மழிப்பதும் குறைப்பதும் (6) 15.54: கற்களின் எண்ணிக்கை (1) 15.53: கல்லெறியும் நேரம் (1) 15.52: பொடிக் கற்கள் போதும் (1) 15.51: துல்ஹஜ் பிறை பத்தில் ஜம்ரத்துல் அகபாவுக்குக் கல்லெறிதல் (3) 15.50: ‘ஜம்ரத்துல் அகபா’வின் மீது கல் எறியும்போது தக்பீர் கூறுவது (4) 15.49: முஸ்தலிஃபாவிலிருந்து மினாவிற்குப் புறப்படச் செய்வது (11) 15.48: முஸ்தலிஃபாவில் ஸுப்ஹுத் தொழுகையை ஆரம்ப நேரத்தில் தொழுவது (1) 15.47: மஃக்ரிப், இஷா வை அடுத்தடுத்துத் தொழுவது (14) 15.46: அரஃபா நாளில் மினாவிலிருந்து அரஃபாவிற்குப் போகும்போது தல்பியாவும் தக்பீரும் கூறுதல் (4) 15.45: துல்ஹஜ் பத்தாவது நாளன்று கல்லெறியத் துவங்கும்வரை தல்பியாச் சொல்லிக்கொண்டிருப்பது (7) 15.44: ஸஃபா-மர்வாவுக்கிடையே ஸயீ (ஓட்டம்) ஒரே தடவைதான் (1) 15.43: ஸஃபா-மர்வாவுக்கிடையே ஸயீச் செய்வது முக்கியக் கடமையாகும் (5) 15.42: வாகனங்கள் மீதமர்ந்து தவாஃப் செய்யலாம் (6) 15.41: தவாஃபின்போது ஹஜருல் அஸ்வதை முத்தமிடுவது (5) 15.40: இறையில்லத்தில் முத்தமிடப்படும் இரு மூலைகள் (6) 15.39: தவாஃபில் விரைந்து நடப்பது விரும்பத்தக்கது (12) 15.38: மக்காவினுள் நுழையும் முன்… (4) 15.37 மக்காவினுள் நுழைவதும் வெளியேறுவதும் (3) 15.36 ரமளான் மாதத்தில் உம்ராச் செய்வதன் சிறப்பு (2) 15.35: நபியவர்களின் உம்ரா எண்ணிக்கையும் காலமும் (4) 15.34 நபியவர்களின் தல்பியாவும் பலியும் (4) 15.33: உம்ராவில் தலைமுடி குறைத்தல் (5) 15.32: இஹ்ராமின்போது பலிப் பிராணி (4) 15.31: ஹஜ்ஜுப் பருவங்களில் உம்ராச் செய்ய அனுமதி (6) 15.30: தமத்துஉ ஹஜ் (2) 15.29: இஹ்ராம் ஹாஜிக்குக் கட்டாயம் (3) 15.28: தவாஃபும் ஸயீயும் கட்டாயம் (3) 15.27: ஹஜ் உம்ரா சேர்த்தும் தனித்தும் செய்வது (3) 15.26: ஒரே இஹ்ராமில் உம்ரா ஹஜ் (3) 15.25: இஹ்ராமிலிருந்து விடுபடுதல் (3) 15.24: பலிப் பிராணியும் ஹஜ் கடமையும் (2) 15.23: தமத்துஉ ஹஜ் அனுமதிக்கப்பட்ட ஒன்றாகும் (13) 15.22: ஒருவர் வேறொருவரின் இஹ்ராமை அச்சொட்டி பூணுதல் (3) 15.21: அரஃபா பெருவெளியில் தங்கி திரும்புதல் தொடர்பான இறை கூற்று (3) 15.20: அரஃபாப் பெருவெளி முழுவதும் தங்குமிடம் (2) 15.19: நபி (ஸல்) அவர்களின் ஹஜ் (1) 15.18: உம்ராவையும் ஹஜ்ஜையும் தனித் தனியாக நிறைவேற்றி பயனடைதல் (2) 15.17: இஹ்ராமின் முறைகள் (27) 15.16: இரத்தப்போக்குடைய பெண் இஹ்ராமில் குளித்தல் (2) 15.15: இஹ்ராமிலிருந்து விடுபட முன் நிபந்தனையிட அனுமதி (5) 15.14: முஹ்ரிம் இறந்துவிட்டால் செய்ய வேண்டியவை (9) 15.13: இஹ்ராம் பூண்ட முஹ்ரிம், தம் உடலைக் கழுவிக்கொள்ள அனுமதி (1) 15.12: இஹ்ராம் பூண்ட முஹ்ரிம், தம் கண்களுக்கு மருந்திட அனுமதி (2) 15.11: இஹ்ராம் பூண்ட முஹ்ரிம், ஹிஜாமா செய்ய அனுமதி (2) 15.10: முஹ்ரிமுக்குத் தலைமுடி மழிக்க அனுமதியும் பரிகாரமும் (7) 15.09: ஹரம் எல்லைக்குள் கொல்ல அனுமதிக்கப்பட்டவைகள் (12) 15.08: இஹ்ராம் பூண்ட முஹ்ரிம் வேட்டையாடுவது குறித்து.. (9) 15.07: இஹ்ராமின்போது நறுமணம் பூசுதல் (19) 15.06: துல்ஹுலைஃபா பள்ளியில் தொழுதல் (1) 15.05: வாகனம் புறப்படுவதற்கு ஆயத்தமானவுடன் தல்பியா கூறுவது (4) 15.04: மதீனாவாசிகள் இஹ்ராம் பூண வேண்டிய இடம் (2) 15.03: தல்பியாவின் பண்பும் அதன் நேரமும் (4) 15.02: ஹஜ்/உம்ராவிற்கான இஹ்ராம் எல்லைகள் (7) 15.01: ஹஜ்/உம்ராவில் அனுமதிக்கப்பட்டவை.. (10) 14.04: துல்ஹஜ் மாதத்தின் பத்து நோன்புகள் (2) 14.02: இஃதிகாஃப் இருக்குமிடத்தினுள் நுழையும் நேரம் (1) 14.03: இறுதிப் பத்தில் வழிபாடுகளில் ஈடுபடுவது (2) 14.01: இறுதிப் பத்து நாட்களில் இஃதிகாஃப் இருத்தல் (5) 13.40: லைலத்துல் கத்ர் இரவு குறித்து.. (17) 13.39: ஷவ்வால் ஆறு நோன்பு (1) 13.37: ஷஅபான் மாத இறுதியில் நோன்பு நோற்றல் (3) 13.38: முஹர்ரம் நோன்பின் சிறப்பு (2) 13.36: சுன்னத்தான நோன்புகள் (5) 13.35: ஒரு நாள் விட்டு ஒரு நாள் நோன்பு (12) 13.34: நோன்பில்லாமல் எந்த மாதத்தையும் கடக்க விடாமலிருப்பது விரும்பத் தக்கது (9) 13.33: மறதியால் (நோன்பாளி) நோன்பு முறியாது (1) 13.32: கூடுதலான நோன்பு முடிவு செய்வதற்கும் விடுவதற்கும் அனுமதி (2) 13.31: அல்லாஹ்வின் பாதையில் செல்லும்போது சக்தி பெற்றிருப்பவர் நோன்பு நோற்பதன் சிறப்பு (2) 13.30: நோன்பின் மாண்பு (6) 13.29: நோன்பாளி, நாவைக் காப்பது (1) 13.28: நோன்பாளி விருந்துக்கு அழைக்கப்பட்டால் “நான் நோன்பாளி” என்று சொல்லிவிட வேண்டும் (1) 13.27: இறந்துபோனவரின் விடுபட்ட நோன்பை நோற்பது (5) 13.26: ரமளானில் விடுபட்ட நோன்பை ஷஅபான் மாதத்தில் ‘களா’ச் செய்தல் (2) 13.25: இறைவசனம் வேறொரு வசனத்தின் மூலம் மாற்றம் (2) 13.24: வெள்ளிக்கிழமை மட்டும் நோன்பு நோற்பது விரும்பத் தக்கதன்று (3) 13.23: அய்யாமுத் தஷ்ரீக் நாட்களில் நோன்பு நோற்பதற்குத் தடை (2) 13.22: நோன்புப் பெருநாளிலும் ஹஜ்ஜுப் பெருநாளிலும் நோன்பு நோற்பதற்குத் தடை (6) 13.20: ஆஷூரா நோன்பை எந்த நாளில் நோற்க வேண்டும்? (4) 13.19: ஆஷூரா நாளில் நோன்பு நோற்றல் (17) 13.18: அரஃபா நாளில் அரஃபாவில் தங்கும் ஹாஜிகளின் நோன்பு (4) 13.17: பயணத்தில் நோன்பு நோற்பதையோ விட்டுவிடுவதையோ தேர்ந்துகொள்ளலாம் (5) 13.16: பயணத்தில் நோன்பைக் கைவிட்டவர், பொதுப் பணியாற்றினால் கிடைக்கும் நன்மை (3) 13.15: பயணத்தில் இருப்பவர் மீதான கடமையான ரமளான் நோன்பு (11) 13.14: ரமளான் பகலில் உடலுறவில் ஈடுபடுவதற்குத் தடையும் அதன் பரிகாரமும் (5) 13.13: பெருந்துடக்குடன் வைகறைப் பொழுதை அடைந்தவரின் நோன்பு செல்லும் (6) 13.12: கட்டுப்படுத்தும் நோன்பாளிக்கு (தம் மனைவியை) முத்தமிடத் தடையில்லை (13) 13.11: தொடர்நோன்பு நோற்பதற்குத் தடை (7) 13.10: பகற் பொழுது வெளியேறி நோன்பு நிறைவடையும் நேரம் (3) 13.09: ஸஹரைத் தாமதிப்பதும் நோன்பு துறப்பதை விரைந்து செய்வதும் (6) 13.08: ஃபஜ்ரு நேரம் வந்தவுடன் நோன்பு ஆரம்பமாகிவிடும் (11) 13.07: ‘இரு பெருநாட்களின் இரு மாதங்களும் குறைவுபடாது’ நபிகளாரின் விளக்கம் (2) 13.06: (வானை) மேகம் மூடிக்கொண்டால் (மாதத்தின் நாட்கள்) முப்பதாக முழுமையாக்கப்படும் (2) 13.05: ஒவ்வோர் ஊர்க்காரர்களுக்கும் அவரவர் பார்க்கும் பிறையே பொருந்தும் (1) 13.04: மாதம் என்பது இருபத்தொன்பது நாட்களாகவும் இருக்கும் (6) 13.03: ரமளானுக்கு முந்தைய இரு நாள்களில் நோன்பு நோற்கக் கூடாது (1) 13.02: ரமளான் நோன்பு தொடக்கமும் முடிவும் (17) 13.01: ரமளான் மாதத்தின் சிறப்பு (2) 12.55: ஸகாத் வசூலிப்பவர், தடை செய்யப்பட்டதைக் கோராதவரை அவரைத் திருப்திபடுத்த வேண்டும் (1) 12.54: தர்மப் பொருள் கொண்டுவந்தவருக்காகப் பிரார்த்தித்தல் (1) 12.53: நபி (ஸல்) அன்பளிப்பை ஏற்றதும் தர்மத்தை மறுத்ததும் (1) 12.52: தர்மப் பொருள், அதன் பண்பு நீங்கி விடுதல் (5) 2.27: நாய் நக்கிய பாத்திரம் பற்றிய சட்டம் (6) 2.28: தேங்கிக் கிடக்கும் தண்ணீரில் சிறுநீர் கழிப்பதற்குத் தடை (3) 2.29: பெருந்துடக்குடையவர் தேங்கிய நீரில் இறங்கிக் குளிக்கத் தடை (1) 2.30: பள்ளிவாசலில் சிறுநீர் கழித்தால்… (3) 2.31: தாய்பால் குடிக்கும் குழந்தையின் சிறுநீரைக் கழுவும் சட்டம் (4) 2.32: விந்து பற்றிய சட்டம் (4) 2.33: மாதவிடாய் இரத்தம் கழுவும் முறை (1) 2.34: சிறுநீரைச் சுத்தம் செய்வது கட்டாயம் (1) 3.01: மாதவிடாயான மனைவியைக் கீழாடைக்கு மேல் அணைத்துக் கொள்வது. (3) 3.02: மாதவிடாயான மனைவியுடன் ஒரே போர்வைக்குள் படுத்துக் கொள்வது. (2) 3.03: மாதவிடாயான பெண் செய்ய அனுமதிக்கப்பட்டவை (11) 3.04: இச்சை நீர் (3) 3.05: உறங்கி எழுந்ததும் முகத்தையும் கையையும் கழுவுதல் (1) 3.06: பெருந்துடக்காளி செய்ய வேண்டியவை (8) 3.07: மதன நீர் வெளிப்பட்ட பெண்ணுக்குக் குளியல் கடமை. (5) 3.08: ஆண்/பெண் (விந்து-மதன)நீரிலிருந்துதான் குழந்தை உருவாகிறது. (1) 3.09: பெருந்துடக்கிற்கான குளியல் முறை (5) 3.10: பெருந்துடக்கு குளியல் தொடர்பானவை (14) 3.11: குளிக்கும் போது மூன்றுமுறை தண்ணீர் ஊற்றுதல் (4) 3.12: குளிக்கும் பெண்களின் சடைமுடி பற்றிய சட்டம் (2) 3.13: மாதவிடாய் குளியலின் போது கஸ்தூரி பயன்படுத்துதல் (2) 3.14: தொடர் உதிரப் போக்குடைய பெண்களின் தொழுகை மற்றும் குளியல் (5) 3.15: மாதவிடாய் நாட்களில் விடுபட்ட கடமைகள் (3) 3.16: குளிப்பவர் திரையிட்டுக் கொள்தல் (3) 3.17: பிறரின் மறையுறுப்பைப் பார்த்தல் (1) 3.18: தனித்துக் குளிக்கும் போது ஆடையின்றி குளித்தல் (1) 3.19: மறையுறுப்பை மறைத்துக் கொள்வதில் கவனம் (3) 3.21: (விந்து)நீர் வெளிப்பட்டாலே (குளியல்)நீர் கடமையாகும் (9) 3.22: ஆண்-பெண் குறிகள் இணைந்து விட்டால் குளியல் கடமையாகும் (3) 3.23: சமைக்கப்படவற்றை உண்டால் மீண்டும் உளூ செய்தல் (3) 3.24: சமைக்கப் பட்டவற்றை உண்டால் உளூச் செய்யும் கட்டாயம் மாற்றப் பட்டது (8) 3.25: ஒட்டக இறைச்சி உண்டால் உளூச் செய்ய வேண்டும் (1) 3.26: வாயு பிரிந்த சந்தேகம் ஏற்பட்டாலும் தொழலாம் (2) 3.27: பதனிடப்படுவதால் செத்த பிராணியின் தோல் தூய்மை ஆகும் (7) 3.28: தயம்மும் (6) 3.29: ஒரு முஸ்லிம் (பெருந்துடக்கு ஏற்பட்டதால்) அசுத்தமாகிவிட மாட்டார். (2) 3.30: பெருந்துடக்கு போன்ற நிலைகளிலும் அல்லாஹ்வைத் துதித்தல். (1) 3.31: சிறுதுடக்காளி (உளூச் செய்யாமல்) உண்ணலாம் (4) 3.32: கழிப்பிடத்திற்குச் செல்லும்போதான பிரார்த்தனை (1) 3.33: உட்கார்ந்து கொண்டு உறங்குவது உளூவை முறிக்காது. (4) 4.01: தொழுகை அழைப்பின் தொடக்கம் (1) 4.02: தொழுகை அறிவிப்பு தொடர் அமையும் விதம் (3) 4.03: தொழுகை அழைப்பு முறை (1) 4.04: ஒரு பள்ளிவாசலுக்கு இரு தொழுகை அழைப்பாளர்கள் (1) 4.05: பார்வையற்றவர் தொழுகை அழைப்பு விட நிபந்தனை (1) 4.06: போரின் போது இணைவைப்பாளர் நாட்டில் தொழுகை அழைப்பு விடுக்கப்பட்டால் (1) 4.07: தொழுகை அழைப்பைச் செவியுறுபவர் செய்ய வேண்டியவை (4) 4.08: தொழுகை அழைப்பின் சிறப்பும் ஷைத்தான் வெருண்டோடுவதும் (6) 4.09: இரு கைகளையும் தோள் புஜத்துக்கு உயர்த்துதல் (4) 4.10: அல்லாஹு அக்பர், ஸமி அல்லாஹு லிமன் ஹமிதஹ் கூறும் இடங்கள் (5) 4.11: தொழுகையில் அல்ஃபாத்திஹா அத்தியாயம் ஓதுதல் (8) 4.12: இமாமைப் பின்பற்றித் தொழுபவர் உரத்து ஓதலாகாது (2) 4.13: பிஸ்மில்லாஹ்வை(த் தொழுகையில்) உரத்து ஓதாலாகாது என்போரின் வாதம் (2) 4.14: அத்தியாயங்களின் துவக்கம் “பிஸ்மில்லாஹ்” குறித்த வாதம் (1) 4.15: தக்பீருக்குப் பின்னும் சஜ்தாவிலும் கைகளை வைக்கும் முறை (1) 4.16: தொழுகையில் அத்தஹிய்யாத் ஓதுவது (4) 4.17: இறுதி அத்தஹியாத்திற்குப் பின் ஸலவாத் கூறுதல் (4) 4.18: ஸமி அல்லாஹு லிமன் ஹமிதஹ், ரப்பனா ல(க்)கல் ஹம்து, ஆமீன் ஆகியவை கூறுவது (5) 4.19: இமாமை மஃமூம் பின்தொடர்வது (5) 4.20: இமாமை முந்துவதற்குத் தடை (4) 4.21: இமாமைப் பின்பற்றுவதில் சட்ட மாற்றம் (10) 4.22: இமாம் வருவதற்குத் தாமதமானால்… (2) 4.23: தொழுகையில் இமாமுக்கு ஏதாவது உணர்த்த விரும்பினால்… (1) 4.24: தொழுகையை முழுமையாக உள்ளச்சத்துடன் தொழல் (4) 4.25: தொழுகையில் இமாமை முந்தாமல் இருத்தல் (7) 4.26: தொழும்போது வானத்தை அண்ணாந்து பார்ப்பதற்குத் தடை (2) 4.27: தொழுகையில் ஒழுங்குகள் (3) 4.28: தொழுகையில் வரிசைகளைப் பேணுதல் (11) 4.29: ஆண்களுக்குப் பின்னால் தொழும் பெண்கள் தலை உயர்த்தும் முறை (1) 4.30: பெண்கள் பள்ளிவாசலுக்குச் செல்தல், நறுமணம் பூசுதல் (11) 4.31: தொழுகையில் அச்சநிலையில் குர்ஆன் ஓதும் முறை (2) 4.32: குர்ஆன் ஓதப்படும்போது செவிதாழ்த்திக் கேட்க வேண்டும். (2) 4.33: ஸுப்ஹுத் தொழுகையில் உரத்துக் குர்ஆன் ஓதுதல் (4) 4.34: லுஹ்ரு, அஸ்ருத் தொழுகைகளில் குர்ஆன் ஓதுதல் (8) 4.35: ஸுப்ஹுத் தொழுகையில் குர்ஆன் ஓதுதல் (13) 4.36: இஷாத் தொழுகையில் குர்ஆன் ஓதுவது (8) 4.37: தொழுகையைச் சுருக்கி, நிறைவுறத் தொழுவிப்பதற்கான கட்டளை (11) 4.38: தொழுகையின் நிலைகளை நிதானமாக, சுருக்கி, நிறைவாகச் செய்வது (4) 4.39: தொழுகையில் இமாமை முந்தி விடாமலிருத்தல் (5) 4.40: ருகூஉவிலிருந்து தலையை உயர்த்திய பின் ஓத வேண்டியவை (5) 4.41: ருகூஉவிலும் ஸஜ்தாவிலும் குர்ஆன் ஓதுவதற்குத் தடை (6) 4.42: ருகூஉவிலும் ஸஜ்தாவிலும் ஓத வேண்டியவை (9) 4.44: ஸஜ்தாவின் போது தரையில் படவேண்டிய உறுப்புகள் (7) 4.45: சீராக ஸஜ்தா செய்தல் (2) 4.46: தொழுகை முறைத் தொகுப்பு (5) 4.47: தனித்துத் தொழுபவர் தடுப்பு ஒன்றை வைத்துக் கொள்வது (13) 4.48: தொழுகையில் குறுக்கே செல்பவரைத் தடுப்பது (4) 4.49: தொழுபவர், தடுப்புக்கு நெருக்கமாக நிற்க வேண்டும் (3) 4.50: தொழுபவருக்கான குறுக்குத் தடுப்பின் அளவு (2) 4.51: தொழுபவருக்குக் குறுக்கே படுத்திருப்பது (8) 4.52: ஒரே ஆடை அணிந்து தொழும் முறை (9) 5.01: பூமியில் எழுப்பப்பட்ட முதலாவது இறையாலயம் (8) 5.02: மஸ்ஜிதுந் நபவீ கட்டப்பட்ட வரலாறு (2) 5.03: தொழுகைத் திசை(கிப்லா) கஅபாப் பள்ளிக்கு மாற்றம் (4) 5.04: மண்ணறைகளில் செய்யக்கூடாதவை (6) 5.05: மஸ்ஜிதுகள் கட்டுவதன் சிறப்பும் அதற்கான ஆர்வமூட்டலும் (2) 5.06: ருகூஉவில் உள்ளங்கைகளை வைப்பதற்கான சட்டத் திருத்தம் (5) 5.07: இரு குதிகால்கள்மீது (தொழுகை அமர்வில்) அமர அனுமதி (1) 5.08: தொழுகையில் பேசிக் கொள்ள இருந்த அனுமதி நீக்கம் (6) 5.09: தொழுகைக்கு இடையில் செய்ய அனுமதிக்கப்பட்டவை (2) 5.10: குழந்தைகளைச் சுமந்துகொண்டு தொழுவதற்கு அனுமதி (3) 5.11: தொழுகையின்போது ஓரிரு அடிகள் நடக்க அனுமதி (1) 5.12: இடுப்பில் கையூன்றிக் கொண்டு தொழுவது வெறுக்கத் தக்கது (1) 5.13: தொழும்போது மண்ணைச் சமப்படுத்துதல் வெறுக்கத் தக்கது (3) 5.14: பள்ளிவாசலில் எச்சில் துப்பத் தடை (10) 5.15: காலணி அணிந்து கொண்டு தொழுவதற்கு அனுமதி (1) 5.16: கவனத்தை ஈர்க்கும் ஆடை அணிந்து தொழுதல் வெறுக்கப்பட்டது (3) 5.17: சிறுநீர்/மலம் அடக்குதல், உணவு காக்க வைத்தல் நிலையில் தொழுதல் (4) 5.18: துர்நாற்றத்துடன் பள்ளிச்செல்லுதலும் அவரை வெளியேற்றலும் (10) 5.19: பள்ளிவாசலினுள் காணாமற்போன பொருளைத் தேடத் தடை (3) 5.20: தொழுகையில் ஏற்படும் மறதிக்குப் பரிகாரம் (17) 5.21: ஸஜ்தா திலாவத் (9) 5.22: அத்தஹிய்யாத்தில் அமரும் முறை (5) 5.23: தொழுகையை நிறைவு செய்யும்போது ஸலாம் கூறும் முறை (3) 5.24: தொழுத பின்னர் திக்ரு (3) 5.25: மண்ணறை வேதனையிலிருந்து பாதுகாப்புக் கோருதல் (3) 5.26: தொழுகையில் பாதுகாப்புக் கோரப்பட வேண்டியவை (8) 5.27: தொழுகைக்குப்பின் திக்ரு செய்தல் (9) 5.28: தொடக்கத் தக்பீருக்குப் பின் கூறவேண்டியவை (4) 5.29: தொழுகையில் கலந்துகொள்ள செல்லும் முறை (5) 5.30: தொழுகைக்காக மக்கள் எப்போது எழுந்து நிற்க வேண்டும்? (5) 5.31: கூட்டுத்தொழுகையை அடைந்துகொள்ள நிபந்தனை (5) 5.32: ஐவேளைத் தொழுகை நேரங்கள் (13) 5.33: கடுங்கோடையில் ஜமாஅத் தொழுகை (8) 5.34: கடுங்கோடையில்லா சமயத்தில் ஜமாஅத் தொழுகை (4) 5.35: அஸ்ருத் தொழுகையின் நேரம் (7) 5.36: அஸ்ருத் தொழுகையைத் தவறவிட்டால்.. (3) 5.37: அஸ்ரு நடுத்தொழுகை என்போரின் சான்று (6) 5.38: ஸுப்ஹு, அஸ்ருத் தொழுகைகளின் சிறப்புகள் (6) 5.39: மஃக்ரிபுத் தொழுகையின் ஆரம்ப நேரம் (2) 5.40: இஷாத் தொழுகையின் நேரமும் அதைத் தாமதமாகத் தொழுவதும் (12) 5.41: ஸுப்ஹுத் தொழுகையின் நேரம் மற்றும் ஓதப்படும் (குர்ஆன் வசனங்களின்) அளவு (7) 5.42: தொழுகைக்கு உரிய நேரத்தைத் தாமதப்படுத்துதல் (7) 5.43: கூட்டுத் தொழுகையின் சிறப்பும் அதைத் தவற விடுவது பற்றிய கண்டனமும் (10) 5.44: தொழுகை அழைப்பைச் செவியுறுபவர் பள்ளிவாசலுக்குச் செல்வது கட்டாயமாகும் (1) 5.45: கூட்டுத் தொழுகை என்பது நேர்வழியைச் சார்ந்தது (2) 5.46: பாங்கு கூறிய பின்னர் பள்ளிவாசலிலிருந்து வெளியேறத் தடை (2) 5.47: இஷா மற்றும் ஸுப்ஹு கூட்டாகத் தொழுவதன் சிறப்பு (4) 5.48: கூட்டுத் தொழுகையைத் தவிர்ப்பதற்கான அனுமதி (1) 5.49: நஃபில் தொழுகைகளை ஜமாஅத்தாகத் தொழுதல் (6) 5.50: கூட்டுத் தொழுகைக்காகக் காத்திருப்பதன் சிறப்பு (5) 5.51: பள்ளிவாசலுக்கு நடந்து செல்வதன் சிறப்பு (6) 5.52: தொழுகைக்கு நடந்து செல்பவருக்குக் கிடைக்கும் பலன்கள் (4) 5.53: உதயம்வரை தொழுத இடத்தில் அமர்ந்திருப்பதன் சிறப்பு (3) 5.54: தொழுகைக்குத் தலைமையேற்க அதிகத் தகுதியுடையவர் (5) 5.55: எல்லாத் தொழுகைகளிலும் குனூத் ஓதும் காலகட்டம் (15) 5.56: விட்டுப்போனத் தொழுகைகளைத் தொழுதல் (8) 6.01: பயணிகளின் தொழுகை; சுருக்கித் தொழுதல் (20) 6.02: மழையின்போது இருப்பிடங்களில் தொழுதுகொள்ளலாம் (4) 6.03: நஃபில் தொழுகைகளை வாகனத்தில் செல்பவர் தொழலாம் (10) 6.04: பயணத்தில் இரு தொழுகைகளைச் சேர்த்து தொழலாம் (7) 6.05: உள்ளூரில் இருக்கும்போது இரு தொழுகைகளை இணைத்து தொழுதல் (10) 6.06: தொழுது முடித்தபின் வலம், இடம் திரும்பி அமர்தல் (3) 6.07: இமாமுக்கு வலப்பக்க வரிசையில் நிற்பது விரும்பத்தக்கது (1) 6.08: இகாமத் கூறத் தொடங்கி விட்டால் நஃபில் தொழுவது வெறுக்கத்தக்கது (5) 6.09: பள்ளிவாசலுக்குள் நுழையும்போது கூறவேண்டிய துஆ (1) 6.10: பள்ளிக் காணிக்கை தொழுகை தொடர்பாக (4) 6.11: பயணத்திலிருந்து திரும்பியவர் இரண்டு ரக்அத் தொழுதல் (3) 6.12: முற்பகல் (ளுஹா) தொழுகை எண்ணிக்கை (11) 6.13: ஃபஜ்ருடைய இரு ரக்அத் சுன்னத் தொழுகை (15) 6.14: சுன்னத் தொழுகைகளின் சிறப்பும் எண்ணிக்கைகளும்! (3) 6.15: நஃபில் தொழுகைகளைத் தொழும் முறைகள் (14) 6.16: இரவுத் தொழுகை (18) 6.17: இரவுத் தொழுகையின் ஒருங்கிணைந்த விபரங்கள் (4) 6.18: அவ்வாபீன் தொழுகை (2) 6.19: இரவுத் தொழுகை, வித்ருத் தொழுகை ரக்அத்கள் (16) 6.20: வித்ருத் தொழுகை நேரம் (2) 6.21: தொழுகையில் மிகச் சிறந்தது (2) 6.22: இரவில் பிரார்த்தனை ஏற்கப்படும் நேரம் (2) 6.23: இரவின் இறுதி நேரத்தில் பிரார்த்தனை (5) 6.24: ‘கியாமு ரமளான்(தராவீஹ்) தொழ ஆர்வமூட்டல் (8) 6.25: இரவுத் தொழுகையில் பிரார்த்திப்பதும் நின்று வணங்குவதும் (17) 6.26: இரவுத் தொழுகையில் நீண்ட நேரம் (நின்று) குர்ஆன் ஓதுவது (2) 6.27: தொழாமல் விடியும்வரை உறங்குபவர் (3) 6.28: கூடுதலான நஃபில் தொழுகைகள் (6) 6.29: நற்செயல்களை வழக்கமாகச் செய்வதன் சிறப்பு. (4) 6.30: இபாதத் தூக்கத்தால் தடைப்பட்டால்… (5) 6.31: குர்ஆனின் தொடர்பைப் பற்றிப் பிடித்துக்கொள்ளக் கட்டளை (7) 6.32: குர்ஆனை இனிய குரலில் ஓதுவது விரும்பத் தக்கதாகும் (5) 6.33: மக்கத்து வெற்றி நாளில்… (2) 6.34: குர்ஆனை ஓதுவதால் இறங்கும் அமைதி (3) 6.35: குர்ஆனை மனனமிட்டவரின் சிறப்பு (1) 6.36: குர்ஆனை ஓதுகின்ற இருவகையினரின் தனிச் சிறப்புகள் (1) 6.37: குர்ஆனில் தேர்ந்த மேன்மக்கள் முன்னிலையில் குர்ஆன் ஓதுவது (2) 6.38: குர்ஆனைச் செவியேற்பதன் சிறப்பு (3) 6.39: குர்ஆனைக் கற்பது மற்றும் ஓதுவதன் சிறப்பு (2) 6.40: குர்ஆன் ஓதுவதன் சிறப்பும் அல்பகரா அத்தியாயத்தின் சிறப்பும் (2) 6.41: ஸூரத்துல் ஃபாத்திஹா, அல்பகரா அத்தியாயத்தின் இறுதி வசனங்களின் சிறப்பு (2) 6.42: ஸூரத்துல் கஹ்ஃப் மற்றும் ஆயத்துல் குர்ஸீ ஆகியவற்றின் சிறப்பு (3) 6.43: குல் ஹுவல்லாஹு அஹது (அத்தியாயத்தை) ஓதுவதன் சிறப்பு (4) 6.44: அல்முஅவ்விதத்தைன் (பாதுகாவல்) அத்தியாயங்களை ஓதுவதன் சிறப்பு (2) 6.45: குர்ஆனின்படி தாமும் செயல்பட்டுப் பிறருக்கும் அதைக் கற்பிப்பவரின் சிறப்பு (4) 6.46: குர்ஆன் ஏழு (வட்டார) மொழிநடையில் அருளப்பெற்றுள்ளது என்பதன் விளக்கம் (4) 6.47: குர்ஆனை வேகமாக ஓதுவதைத் தவிர்த்தல் (4) 6.48: குர்ஆன் ஓதும் முறைகளுள் சில (4) 6.49: தொழத் தடுக்கப்பட்ட நேரங்கள். (8) 6.50: அம்ரு பின் அபஸா (ரலி) இஸ்லாத்தை ஏற்றமை (1) 6.51: சூரியன் உதிக்கும் நேரத்தையும் மறையும் நேரத்தையும் தேர்ந்தெடுத்துத் தொழாதீர்கள்! (2) 6.52: நபி (ஸல்) அஸ்ருக்குப் பிறகு தொழுதுவந்த இரண்டு ரக்அத்கள் எவை? (5) 6.53: மஃக்ரிப் தொழுகைக்கு முன் இரண்டு ரக்அத்கள் தொழுவது விரும்பத் தக்கது (2) 6.54: பாங்குக்கும் இகாமத்துக்கும் இடையிலுள்ள தொழுகை (1) 6.55: அச்சச் சூழல் தொழுகை (8) 7.01: வெள்ளிக்கிழமையில் குளிப்பது வயதுவந்த ஒவ்வோர் ஆண் மீதும் கடமை (7) 7.02: வெள்ளிக்கிழமையில் பல் துலக்குவதும் நறுமணம் பூசுவதும் (4) 7.03: வெள்ளிக்கிழமை சொற்பொழிவின்போது அமைதி காத்தல் (2) 7.04: வெள்ளிக்கிழமையில் (பிரார்த்தனை ஏற்கப்படுவதற்கு) உள்ள ஒரு நேரம் (4) 7.05: வெள்ளிக்கிழமையின் சிறப்பு (2) 7.06: இந்தச் சமுதாயத்தின் (சிறப்பு வழிபாட்டு) நாள் வெள்ளிக்கிழமை (4) 7.07: வெள்ளிக்கிழமை (தொழுகைக்கு) முன்னதாகச் செல்வதன் சிறப்பு (2) 7.08: மௌனமாக (வெள்ளிக்கிழமை) உரையைச் செவியேற்பவரின் சிறப்பு (2) 7.09: சூரியன் (உச்சியிலிருந்து) சாயும்போது ஜும்ஆத் தொழுவது (5) 7.10: தொழுகையின் உரைகளும் இடையே (இமாம்) அமர்வதும் (3) 7.11: வியாபாரத்தையோ வேடிக்கையையோ கண்டால் (62:11ஆவது) இறைவசனம் (4) 7.12: ஜும்ஆத் தொழுகையை(த் தொழாமல்) கைவிடுவதற்குக் கண்டனம் (1) 7.13: (ஜும்ஆத்) தொழுகையையும் (குத்பா) உரையையும் சுருக்கமாக அமைத்தல் (11) 7.14: இமாம் (ஜும்ஆ) உரை நிகழ்த்தும்போது காணிக்கை தொழுகை (6) 7.15: பொது போதனைக்கு நடுவில் தனி போதனை (1) 7.16: ஜும்ஆத் தொழுகையில் ஓத வேண்டியவை (3) 7.17: வெள்ளிக்கிழமை (ஃபஜ்ருத் தொழுகையில்) ஓத வேண்டியவை (3) 7.18: ஜும்ஆவுக்குப் பின் தொழ வேண்டியவை (16) 8.01: பெருநாள் திடலில் பெண்கள் பங்கேற்பது (3) 8.02: பெருநாள் திடலில் தொழுகைக்கு முன்போ பின்போ தொழக் கூடாது (1) 8.03: இரு பெருநாள் தொழுகைகளில் ஓதக் கூடியவை (2) 8.04: பெருநாட்களில் பாவமில்லா விளையாட்டுகளில் ஈடுபட அனுமதி (7) 9.00: இமாம் (மழைத் தொழுகையில்) மேல்துண்டை மாற்றிப் போட்டுக் கொள்வது (4) 9.01: மழைவேண்டிப் பிரார்த்திக்கும்போது இருகைகளை உயர்த்துதல் (3) 9.02: மழைவேண்டிப் பிரார்த்தித்தல் (2) 9.03: கடும் காற்றையும் மேகத்தையும் காணும்போதும்.. மழை பெய்யும்போதும்.. (3) 9.04: கீழைக் காற்று (’ஸபா’) மற்றும் மேலைக் காற்று (’தபூர்’) பற்றிய குறிப்புகள் (1) 10.01: சூரிய கிரகணத் தொழுகை (7) 10.02: கிரகணத் தொழுகையின்போது மண்ணறை வேதனை பற்றி நினைவு கூர்வது (1) 10.03: கிரகணத் தொழுகையின்போது சொர்க்கமும் நரகமும் (6) 10.04: கிரகணத் தொழுகையில் எட்டு ருகூஉகளும் நான்கு ஸஜ்தாக்களும்.. (2) 10.05: கிரகணத் தொழுகைக்காக, “அஸ்ஸலாத்து ஜாமிஆ” அறிவிப்பு.. (8) 11.01: மரணத் தருவாயில் ‘லா இலாஹ இல்லல்லாஹ்’ (எனும் கலிமா)வை நினைவூட்டுதல் (2) 11.02: துன்பம் நேரும்போது வேண்டக்கூடிய பிரார்த்தனை (2) 11.03: நோயாளியிடமும் மரணத் தருவாயில் இருப்பவரிடமும் சொல்ல வேண்டியவை (1) 11.04: உயிர் பிரிந்தவுடன் இறந்தவருக்குச் செய்ய வேண்டியவை (1) 11.05: இறப்பவரின் பார்வை தனது உயிரை நோக்கி நிலைகுத்தி நிற்றல் (1) 11.06: இறந்தவருக்காக அழுவது (3) 11.07: நோயாளிகளைச் சந்தித்து உடல்நலம் விசாரித்தல் (1) 11.08: பொறுமை என்பது துன்பத்தின் முதல் நிலையில் கடைப்பிடிப்பதாகும் (2) 11.09: இறந்தவருக்காக ஒப்பாரி வைத்து அழுதால்.. (14) 11.10: ஒப்பாரிக்குக் கடுமையான கண்டனம் (5) 11.11: ஜனாஸாவின் இறுதி ஊர்வலத்தைப் பின்தொடர்ந்து செல்வதற்குப் பெண்களுக்குத் தடை (2) 11.12: மையித்தைக் குளிப்பாட்டுதல் (4) 11.13: மய்யித்திற்கு ‘கஃபன்’ உடை அணிவித்தல் (4) 11.14: மய்யித்தை மூடிவைத்தல் (1) 11.15: மய்யித்திற்கு அழகிய முறையில் கஃபன் அணிவித்தல் (1) 11.16: இறந்தவர் உடலைத் துரிதமாக அடக்கம் செய்தல் (2) 11.17: ஜனாஸாத் தொழுகையின் மற்றும் ஜனாஸாவைப் பின்தொடர்வதன் சிறப்பு (6) 11.18: மய்யித்துக்காக நூறு பேர் தொழுது செய்யும் பரிந்துரை ஏற்கப்படும் (1) 11.19: மய்யித்துக்காக நாற்பது பேர் பரிந்துரை (1) 11.20: இறந்தவர் குறித்துப் புகழ்ந்து, அல்லது இகழ்ந்து பேசப்படுதல் (1) 11.21: ஓய்வு பெற்றவரும் ஓய்வளித்தவரும் (1) 11.22: ஜனாஸாத் தொழுகையில் சொல்ல வேண்டிய தக்பீர்கள் (6) 11.23: மண்ணறை அருகில் (ஜனாஸாத் தொழுகை) தொழுவது (4) 11.24: ஜனாஸாவுக்காக எழுந்து நிற்பது (7) 11.25: ஜனாஸாவுக்காக எழுந்து நிற்கும் வழக்கம் மாற்றப்பட்டது (3) 11.26: இறந்தவருக்காக ஜனாஸாத் தொழுகையில் செய்யும் பிரார்த்தனை (2) 11.27: ஜனாஸாத் தொழுகையின்போது இமாம் எந்த இடத்தில் நிற்க வேண்டும்? (2) 11.28: ஜனாஸாத் தொழுகை தொழுதுவிட்டு வாகனத்தில் ஏறித் திரும்பிச் செல்லலாம் (2) 11.29: உட்குழியும் மையித்தின் மேல் செங்கற்களை அடுக்குவதும் (1) 11.30: கப்றுக் குழியினுள் போர்வையை விரித்து (மையித்தை) வைப்பது (1) 11.31: கப்றைத் தரை மட்டமாக்க உத்தரவு (2) 11.32: கப்றுகளைக் காரையால் பூசுவதோ அதன் மீது கட்டடம் எழுப்புவதோ கூடாது (2) 11.33: கப்றின்மீது அமர்வதும் அதன் மீது தொழுவதும் தடுக்கப்பட்டவை (3) 11.34: பள்ளிவாசலில் ஜனாஸாத் தொழுகை நடத்துவது (3) 11.35: மையவாடிக்குள் கூற வேண்டியதும் பிரார்த்திப்பதும் (3) 11.36: நபி (ஸல்), தம் தாயாரின் கப்றைக் காண்பதற்கு இறைவனிடம் அனுமதி கோரியது (3) 11.37: தற்கொலை செய்தவருக்கு, (ஜனாஸா) தொழுகையைக் கைவிட்டது (1) 12.00: பல வகை வள வரிகள் (5) 12.01: பத்து சதவீத ஸகாத்; அல்லது ஐந்து சதவீத ஸகாத் (1) 12.02: ஒரு முஸ்லிம் மீது அவர்தம் அடிமைக்காகவும் குதிரைக்காகவும் ஸகாத் கடமை இல்லை (3) 12.03: ஸகாத்தைச் சமர்ப்பிப்பதும் ஸகாத் கொடுக்க மறுப்பதும் (1) 12.04: பெருநாள் தர்மமாகப் பேரீச்சம் பழம், பார்லி (10) 12.05: பெருநாள் தொழுகைக்கு முன்பே பெருநாள் தர்மத்தை வழங்க கட்டளை (2) 12.06: ஸகாத் வழங்க மறுப்பது குற்றமாகும் (4) 12.07: ஸகாத் வசூலிப்பவர்களிடம் கனிவுடன் நடந்துகொள்வது (1) 12.08: ஸகாத் வழங்காதவருக்கான கடும் தண்டனை (2) 12.09: தர்மம் செய்வதற்கு ஆர்வமூட்டல் (2) 12.10: செல்வத்தைச் சேமித்தோர் பற்றிய கண்டனம் (2) 12.11: தர்மம்: ஆர்வமூட்டலும் நற்கூலி உண்டு என்ற நற்செய்தியும் (2) 12.12: செலவழிப்பதன் சிறப்பும் வழங்காதவனின் பாவமும் (4) 12.13: தமக்கும், குடும்பத்தாருக்கும், உறவினர்களுக்குமாக செலவிடுதல் (1) 12.14: இணை வைக்கும் உறவுகளுக்குச் செலவழிப்பதன் சிறப்பு (8) 12.15: இறந்தவருக்காகத் தர்மம் செய்தல் (1) 12.16: எல்லா நல்லறமும் ஸதகா எனப்படும் (5) 12.17: அறவழியில் செலவு செய்பவரும் செய்யாதவரும் (1) 12.18: தர்மம் செய்வதற்கு ஆர்வமூட்டல் (5) 12.19: தர்மம் (இறைவனிடம்) ஏற்கப்படுவதும் வளர்வதும் (3) 12.20: இன் சொல்லையேனும் தர்மம் செய்து நரகத்திலிருந்து பாதுகாப்பு பெறல் (5) 12.21: தர்மத்தின் அளவில் குறை காண தடை (1) 12.22: பாலுக்காக இரவல் வழங்கப்படும் கால்நடைகளின் சிறப்பு (2) 12.23: வள்ளலுக்கும் கஞ்சனுக்குமான உதாரணம் (3) 12.24: உரியவருக்குத் தர்மம் சேரவில்லையேனும் பலன் (1) 12.25: உரிமையாளரின் அனுமதியுடன் தர்மம் செய்தவருக்கும் பலன் (3) 12.26: ஓர் அடிமை தன் உரிமையாளரின் செல்வத்திலிருந்து (அறவழியில்) செலவழித்தல் (3) 12.27: தர்மத்தையும் இதர நற்செயல்களையும் இணைத்துச் செய்தவர் (3) 12.28: அறவழியில் தாராளமாக செலவிடலும் கணக்கு பார்ப்பது விரும்பத்தக்கதல்ல என்பதும் (3) 12.29: சிறிய அளவு தர்மம் (1) 12.30: இரகசியமாகத் தர்மம் செய்வதன் சிறப்பு (1) 12.31: மிகச் சிறந்த தர்மம் (2) 12.32: சிறந்த கை (4) 12.33: யாசிப்பதற்குத் தடை (3) 12.34: ஏழை என்பவன், அடிப்படைத் தேவைகளுக்குப் போதிய பொருளாதாரம் இல்லாதவன் (2) 12.35: மக்களிடம் யாசிப்பது வெறுக்கப்பட்டதாகும் (6) 12.36: யாருக்கு யாசிக்க அனுமதி? (1) 12.37: எதிர்பார்ப்பு இல்லாமல், யாசிக்காமல் வாழ்பவருக்கு வழங்கப்பட்டால் பெற்றுக்கொள்ளலாம் (4) 12.38: உலகாதாயத்தின் மீது பேராசை கொள்வது விரும்பத் தக்கதன்று (2) 12.39: இரு ஓடைகள் இருந்தாலும் மூன்றாவது ஓடையை எதிர்பார்த்தல் (4) 12.40: வாழ்க்கை வசதிகள் அதிகமாக இருப்பது செல்வமன்று (1) 12.41: இவ்வுலகத்தின் கவர்ச்சி குறித்து அஞ்சுதல் (3) 12.42: சுயமரியாதை மற்றும் பொறுமையின் சிறப்பு (1) 12.43: போதுமான வாழ்வாதாரமும் போதுமென்ற மனமும் (4) 12.44: அருவருப்பாகப் பேசி, கடுஞ் சொற்களால் கேட்டவருக்கும் தானம் வழங்குவது (4) 12.45: இறைநம்பிக்கை, (வறுமையால்) கேள்விக்குள்ளாக்கப்படுபவருக்கு உதவுதல் (1) 12.46: இஸ்லாத்தை ஏற்றவர்களுக்கு வழங்கலும் இறை நம்பிக்கை வலுவானவர் பொறுமை கொள்ளலும் (8) 12.47: காரிஜிய்யாக்களும் அவர்களின் தன்மைகளும் (10) 12.48: காரிஜிய்யாக்களைக் கொல்லுவதற்கு ஊக்கப்படுத்துதல் (4) 12.49: காரிஜிய்யாக்கள் படைப்பினங்களிலேயே தீயவர்கள் ஆவர் (3) 12.50: தூதரின் குடும்பத்தார் ஸகாத் பெறுவதற்குத் தடை (6) 12.51: நபி (ஸல்) குடும்பத்தாரைத் தர்மப் பொருட்கள் வசூலிக்கப் பயன்படுத்தலாகாது (1) 2.26: அசுத்தமான கையைப் பாத்திரத்தில் நுழைத்தல் (2) 2.25: ஒருநாள் தொழுகைகளை ஒரு உளூவில் தொழ அனுமதி (1) 2.24: காலுறையில் மஸஹு செய்து தொழுவதற்கான வரம்பு (1) 2.23: முன் தலை மற்றும் தலைப்பாகை மீது மஸஹு செய்தல் (4) 2.22: காலுறையில் மஸஹு செய்தல் (9) 2.21: தண்ணீரால் கழுவித் துப்புரவு செய்தல் (3) 2.20: மலம் கழிப்பதற்குத் தடையுள்ள இடங்கள் (1) 2.19: செயல்களை வலப் புறமிருந்து தொடங்குதல். (2) 2.18: வலக் கரத்தால் கழுவத் தடையானவை (3) 2.17: கழிப்பிடத்தில் துப்புரவு செய்தல் (7) 2.16: இயற்கை மரபுகள் (8) 2.15: பல் துலக்குதல் (7) 2.14: சிரமகாலங்களிலும் முழுமையாக ஒளு செய்வதன் சிறப்பு (1) 2.13: உளூவில் தண்ணீர் படும் இடங்களில் ஒளி படர்தல் (1) 2.12: உளூவில் உறுப்புகளை அதிகப்படுத்திக் கழுவுதல் (6) 2.11: உளூ செய்த நீரோடு வெளியேறும் பாவங்கள் (2) 2.10: உளூவில் உறுப்புகள் முழுவதும் கழுவுதல் (1) 2.09: இரு கால்களையும் முழுமையாகக் கழுவுதல் கட்டாயம் (6) 2.08: சுத்தம் செய்யும் போது ஒற்றைப்படையாக செய்தல் (5) 2.07: நபி (ஸல்) அவர்கள் செய்த அங்கத் தூய்மை (உளூ) (2) 2.06: அங்கத் தூய்மை (உளூ) செய்தபிறகு ஓதப்படும் பிரார்த்தனை (1) 2.05: சிறு பாவங்களுக்கான பரிகாரங்கள் (3) 2.04: அங்கத்தூய்மையின் சிறப்பும் அதன் பின் தொழுவதன் சிறப்பும் (9) 2.03: அங்கத் தூய்மை (உளூ) செய்முறையும் அதை நிறைவாகச் செய்வதும் (2) 2.02: தொழுகைக்குக் கட்டாயமான (அங்கத்) தூய்மை (2) 2.01: அங்கத்தூய்மை(உளூ)யின் சிறப்பு (1) 1.96: மறுமையில் ஆதம்(அலை) அவர்களுக்கு இடப்படும் கட்டளை (1) 1.95: சொர்க்கவாசிகளில் பாதிபேர் (3) 1.94: விசாரணையோ வேதனையோ இன்றி சொர்க்கம் செல்வோர் (7) 1.93: நட்பு கொள்ளத் தக்கவர்களும் தகாதவர்களும் (1) 1.92: இறைமறுப்பாளரின் நற்செயல்கள் பலனளிக்காது (1) 1.91: நரகவாசிகளிலேயே மிகக்குறைவான வேதனை அனுபவிப்பவர். (4) 1.90: அபூதாலிபுக்காக நபி(ஸல்) அவர்களின் பரிந்துரை (3) 1.89: நெருங்கிய உறவினருக்கு எச்சரிக்கை செய்தல் (5) 1.88: இறைமறுப்பாளருக்கு எந்தப் பரிந்துரையும் பலனளிக்காது (1) 1.87: தம் சமுதாயத்தார் மீது நபி(ஸல்) அவர்களுக்குள்ள பரிவு (1) 1.86: நபி(ஸல்) அவர்களின் பரிந்துரைப் பிரார்த்தனை! (8) 1.85: சொர்க்கத்திற்காகப் பரிந்துரைக்கும் முதல் மனிதர் (4) 1.84: சொர்க்கவாசிகளுள் ஆகக் குறைந்த பதவி (14) 1.83: இறுதியானவராக வெளியேறும் நரகவாசி. (3) 1.82: ஷஃபாஅத்(பரிந்துரை) செய்யப்படுபவர்கள் (2) 1.81: இறைவனைக் காணும் வழிமுறை (3) 1.80: இறைவனைக் காண்பதற்கான சான்று (2) 1.79: அல்லாஹ்வின் பார்வை பற்றிய விளக்கம் (2) 1.78: மிஃராஜின் போது நபி(ஸல்) கண்டது பற்றிய விளக்கம் (2) 1.77: நபி(ஸல்) அவர்கள் இறைவனைப் பார்த்தார்களா? என்பது பற்றிய விளக்கம் (5) 1.76: சித்ரத்துல் முந்தஹா(இலந்தை மரம்) பற்றிய குறிப்பு! (4) 1.75: ஈஸா(அலை) மற்றும் தஜ்ஜால் பற்றிய குறிப்புகள் (6) 1.74: விண்ணுலகப் பயணமும் தொழுகை கடமையாக்கப்படலும் (12) 1.73: வேத வெளிப்பாடு (வஹீ) தொடங்குதல் (3) 1.72: இறை நம்பிக்கை ஏற்கப்படாத காலகட்டம் (5) 1.71: ஈசா(அலை) இஸ்லாமிய நெறிப்படி நீதி வழங்குதல் (6) 1.70: தூதுத்துவம் உலக மக்கள் அனைவருக்கும் பொதுவானது (3) 1.69: இறைச்சான்றுகள் மூலம் மன அமைதி (1) 1.68: ஒருவரை இறைநம்பிக்கையாளர் என்று முடிவு செய்தல் (2) 1.67: அச்சநேரத்தில் இறைநம்பிக்கையாளர் நிலை (1) 1.66: இறுதிக் காலத்தில் இறை நம்பிக்கை (அற்றுப்) போய் விடுவது. (2) 1.65: இஸ்லாத்தின் மீளெழுச்சி. (3) 1.64: உள்ளங்களில் குழப்பங்கள் தோன்றுவது. (2) 1.63: குடிமக்களைச் சுரண்டும் ஆட்சியாளன் நரகத்திற்குரியவன் ஆவான். (3) 1.62: செல்வத்தைக் காக்கப் போராடியவர் மற்றும் பிறர் செல்வத்தைப் பறிக்க முனைந்தவர் (2) 1.61: மாற்றாரின் பொருளைக் கைப்பற்றுபவர் நிலை. (5) 1.60: இறைநம்பிக்கையில் தடுமாற்றம் ஏற்பட்டால்.. (8) 1.59: நல்ல-தீய எண்ணங்களுக்கான கூலி (5) 1.58: தீய எண்ணங்களைச் செயல்படுத்தாமல் இருத்தல் (2) 1.57: தாங்க முடியாத சுமை? (2) 1.56: இறை நம்பிக்கையின் வாய்மையும் தூய்மையும் (1) 1.55: இறைமறுப்பாளராக இருந்தபோது செய்த நல்லறங்கள் (3) 1.54: முன் செய்த பாவங்கள் (2) 1.53: அறியாமை காலத்தில் செய்த தீமைகள் (2) 1.52: இறைநம்பிக்கையாளரின் அச்சம் (1) 1.51: குழப்பங்கள் தோன்றுவதற்கு முன் நற்செயல் புரிய விரைதல் (1) 1.50: மறுமை நெருங்கும் வேளையில் வீசும் காற்று (1) 1.49: ஹிஜ்ரத்தில் தற்கொலை செய்து கொண்டவரின் நிலை (1) 1.48: கையாடல் செய்பவரும் இறைநம்பிக்கையாளரும் (2) 1.47: தற்கொலை செய்பவரும் கட்டுப்பட்டு வாழ்பவரும் (7) 1.46: மூன்று பெரும் தவறான செயல்கள் (4) 1.45: புறங்கூறுவது வன்மையாகத் தடை செய்யப் பட்டது (3) 1.44: துக்க வேளைகளில் தடை செய்யப்பட்ட செய்கைகள்! (3) 1.43: முஸ்லிம்களை வஞ்சித்தவர் நிலை! (2) 1.42: முஸ்லிம்களுக்கு எதிராக ஆயுதம் ஏந்தியவர் நிலை! (3) 1.41: “லா இலாஹ இல்லல்லாஹ்” கூறியவரைக் கொல்லத்தடை! (4) 1.40: இணைவைத்தலின் விளைவுகள் (5) 1.39: தற்பெருமை (3) 1.38: பெரும் பாவங்கள் (5) 1.37: பாவங்களில் மிகவும் அருவருப்பானது (2) 1.36: நற்செயல்களில் சிறந்தது (6) 1.35: தொழுகையை விடுதலும் குஃப்ரும் (3) 1.34: இறைநம்பிக்கை குறைவும் குஃப்ர் எனும் சொல்லும் (1) 1.33: அன்ஸாரிகளையும் அலி(ரலி)யையும் நேசித்தல் (6) 1.32: மழையும் இறைமறுப்பும் (4) 1.31: ஓடிப்போன அடிமை (3) 1.30: இறைமறுப்பின் அடையாளங்கள் (1) 1.29: இறைமறுப்பாளர்களாய் மாறுதல் (2) 1.28: முஸ்லிமோடு போரிடுதல் (1) 1.27: தந்தையை வெறுப்பவன் நிலை (4) 1.26: முஸ்லிமை நோக்கி காஃபிர் என அழைத்தல் (2) 1.25: நயவஞ்சகனின் குணங்கள். (3) 1.24: இறைநம்பிக்கையில் குறைவு ஏற்படல் (2) 1.23: மார்க்கம் என்பதே நலன் நாடுவதுதான். (4) 1.22: இறைநம்பிக்கையாளர்களை நேசித்தல் (1) 1.21: இறைநம்பிக்கையில் ஏற்படும் ஏற்றத் தாழ்வு (9) 1.20: நன்மையை ஏவுதல், தீமையைத் தடுத்தல் (2) 1.19: நல்லவற்றிற்கு ஆர்வமூட்டுதல் (3) 1.18: அண்டை வீட்டாருக்குத் தொல்லை தரக் கூடாது (1) 1.17: தமக்கு விரும்வுவதைச் சகோதரனுக்கும் விரும்புதல் (2) 1.16: தூதரை நேசிப்பது கடமை (2) 1.15: இறைநம்பிக்கையின் இனிமை (2) 1.14: இஸ்லாம் கூறும் நல்லறங்களில் சிறந்தது (4) 1.13: இஸ்லாத்தின் அனைத்துப் பண்புகளின் கலவை (1) 1.12: இறைநம்பிக்கையின் கிளைகள் (5) 1.11: இறைநம்பிக்கையைச் சுவைப்பவர் (1) 1.10: ஓரிறை கோட்பாட்டில் மரணித்தவர் நிலை (11) 1.09: இணை வைத்த நிலையில் மரணித்தவர் நிலை (3) 1.08: ஜிஸ்யா செலுத்தாதவர் மீது போர் புரிதல் (6) 1.07: இஸ்லாத்தை ஏற்க அழைப்பு விடுத்தல் (2) 1.06: அறியாதவர்களுக்கு அறிவித்தல் (4) 1.05: இஸ்லாமியக் கடமைகள் (4) 1.04: சொர்க்கம் செல்பவர் (7) 1.03: இஸ்லாத்தின் தூண்கள் (2) 1.02: தொழுகை பற்றிய விளக்கம் (2) 1.01: இறைநம்பிக்கை குறித்த விளக்கம் (7)
கணணியைப் பாதிக்கும் பல வைரஸ்கள் புதிது புதிதாக வந்து கொண்டே உள்ளன. நமது கணணியைப் பாதுகாப்பாக வைரஸ்களிடமிருந்து வைத்துக் கொள்ள ஆண்டிவைரஸ் மென்பொருள்கள் தேவைப்படுகின்றன.சிலர் ஆண்டிவைரஸ் மென்பொருள்களை கட்டணம் செலுத்தியும் சிலர் இலவசமாகவும் பயன்படுத்தி வருகின்றனர். கணணியில் நல்ல ஆண்டிவைரஸ் போட்டிருப்பினும் சில நேரங்களில் மால்வேர்கள் போன்ற வகையிலான வைரஸ்களை கோட்டை விட்டு விடுகின்றன. இதனால் மால்வேர் மற்றும் ஸ்பைவேர் போன்ற நச்சுநிரல்களுக்கு எதிராகத் திறமையாக செயல்படுகிற கூடுதலான மென்பொருள்களைப் பயன்படுத்துவது கணணிக்குப் பாதுகாப்பாக இருக்கும். விண்டோஸ் இயங்குதள நிறுவனமான மைக்ரோசாப்ட் தற்போது மால்வேர் தொல்லைகளைத் தடுக்க புதிய மென்பொருளை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் பெயர் System Sweeper. இதன் மூலம் மால்வேர் பாதிக்கப்பட்டுள்ள கணணியில் இணைய இணைப்பில்லாத நேரத்திலும் சோதனை செய்து மால்வேர்களை அழிக்கலாம். இதனை இலவசமாகப் பயன்படுத்திக் கொள்ளுமாறு மைக்ரோசாப்ட் வெளியிட்டுள்ளது. இதன் மூலம் உங்கள் கணணியில் ஆண்டிவைரஸ் மென்பொருள் போட்டிருந்தாலும் இல்லாவிட்டாலும் இந்த மென்பொருளைப் பயன்படுத்திக் கொள்ள முடியும். இதனைத் தரவிறக்கி கணணியில் நிறுவிப் பயன்படுத்துமாறு வழிசெய்யவில்லை. சீடி/டிவிடி அல்லது பென் டிரைவில் மட்டுமே வைத்து பயன்படுத்த முடியும். தரவிறக்கம் செய்யும் போது சீடியிலோ அல்லது பென் டிரைவிலோ என்று தேர்வு செய்தால் அதில் தரவிறக்கம் செய்யப்படும். பின்னர் அந்த சீடியை கணணியில் போட்டு கணணியைச் சோதிக்கலாம். பின்னாளில் கணணி வைரஸ் பிரச்சினை காரணமாக பூட் ஆகவில்லை என்றால் நீங்கள் இந்த மென்பொருளைப் பதிந்துள்ள சீடியைப் போட்டு பூட் செய்து கொள்ள முடியும். உடனே கணணியில் என்னென்ன மால்வேர் வைரஸ் உள்ளனவோ அவற்றைக் கண்டறிந்து அழித்து விடும். இந்த மென்பொருள் ஒரு ஆண்டிவைரஸ் மென்பொருளுக்கு நிகரானது அல்ல. கணணியின் பாதுகாப்புக்கு கூடுதலாக வைத்துக் கொள்ளலாம். எதாவது வைரஸ் பிரச்சினை காரணமாக கணணி இயங்கவில்லை என்றால் அப்போது பயன்படுத்திக் கொள்ளலாம்.
ஏகாதசி விரதத்தை மேற்கொள்ள நினைப்பவர்கள், ஏகாதசிக்கு முதல் நாளான தசமியன்று பகலில் ஒருவேளை மட்டுமே உணவு எடுத்துக்கொள்ள வேண்டும். ஏகாதசி அன்று அதிகாலையிலேயே குளித்து விட்டு, விரதத்தை தொடங்க வேண்டும். ஏகாதசி விரதத்தை மூன்று நாட்கள் என்னும் முறையில் அனுசரித்தால் பலன் நிச்சயம். தசமி அன்று ஒரு வேளை உணவு உண்டு மறுநாள் ஏகாதசி அன்று முழு பட்டினி இருந்து, அதற்கு மறுநாள் துவாதசி அன்று காலையிலேயே உணவு உண்டு விரதத்தை முடிக்க வேண்டும். ஏகாதசி திதி முழுவதும் முடிந்தவர்கள் பூரண உபவாசம் இருத்தல் பலன் தரும். ஏழு முறை துளசி இலையை பகவான் நாமம் சொல்லி சாப்பிடலாம். உடல்நிலை மற்றும் வயோதிகம் காரணமாக பூரண உபவாசம் இருக்க முடியாதவர்கள் பழங்கள், பால், தயிர் போன்றவற்றை பூஜையில் வைத்து இறைவனுக்கு படைத்து பின் பிரசாதமாக உண்ணலாம். ஏகாதசிக்கு அடுத்த நாளான துவாதசி அன்று அதிகாலையில் உணவு அருந்துவதை தான் நாம் பாரணை என அழைக்கிறோம். சர்வ ஏகாதசி. இந்த நாளில், பெருமாளை ஆராதனை செய்யலாம். விஷ்ணு சகஸ்ர நாமம் பாராயணம் செய்யலாம். முடிந்தவர்கள் விரதம் இருக்கலாம். நாராயண நாமம் சொல்லி, துளசி தீர்த்தம் பருகலாம். அருகில் உள்ள கோயிலுக்குச் சென்று, பெருமாளை வழிபடலாம். துளசி மாலை சார்த்தி பிரார்த்தனை செய்யுங்கள்.
وَحَدَّثَنَا يَحْيَى بْنُ أَيُّوبَ، وَقُتَيْبَةُ، وَابْنُ حُجْرٍ قَالُوا حَدَّثَنَا إِسْمَاعِيلُ، – يَعْنُونَ ابْنَ جَعْفَرٍ – عَنْ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ، عَنْ أَبِي صَالِحٍ السَّمَّانِ، عَنْ أَبِي هُرَيْرَةَ :‏ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏ “‏ مَثَلِي وَمَثَلُ الأَنْبِيَاءِ مِنْ قَبْلِي كَمَثَلِ رَجُلٍ بَنَى بُنْيَانًا فَأَحْسَنَهُ وَأَجْمَلَهُ إِلاَّ مَوْضِعَ لَبِنَةٍ مِنْ زَاوِيَةٍ مِنْ زَوَايَاهُ فَجَعَلَ النَّاسُ يَطُوفُونَ بِهِ وَيَعْجَبُونَ لَهُ وَيَقُولُونَ هَلاَّ وُضِعَتْ هَذِهِ اللَّبِنَةُ – قَالَ – فَأَنَا اللَّبِنَةُ وَأَنَا خَاتَمُ النَّبِيِّينَ ‏”‏ حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَأَبُو كُرَيْبٍ قَالاَ حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي سَعِيدٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ “‏ مَثَلِي وَمَثَلُ النَّبِيِّينَ ‏”‏ ‏.‏ فَذَكَرَ نَحْوَهُ ‏.‏ “எனது நிலையும் எனக்கு முன்பிருந்த நபிமார்களின் நிலையும் ஒரு கட்டடத்தை அழகாகவும் எழிலாகவும் கட்டிய ஒருவரின் நிலையை ஒத்திருக்கிறது. அவர் அதன் ஒரு மூலையில் ஒரு செங்கல் வைக்குமளவுக்கான இடத்தை மட்டும் விட்டு வைத்தார். மக்கள் வந்து அதைச் சுற்றிப் பார்த்து விட்டு அவரிடம் (அதன் அழகு குறித்து) வியப்புத் தெரிவித்தனர்: ‘(இந்த இடத்தில்) இந்தச் செங்கல் வைக்கப்பட்டிருந்தால் நன்றாயிருக்குமே!’ என்று கூறினர். நானே அந்தச் செங்கல். நானே இறுதி நபி” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள். அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி) குறிப்பு : அபூசயீத் அல்குத்ரீ (ரலி) வழி அறிவிப்பு, “எனது நிலையும் இதர நபிமார்களின் நிலையும்…” என்று ஆரம்பமாகிறது. மற்ற தகவல்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன. ← முந்தைய ஹதீஸ்அத்தியாயம்: 43, பாடம்: 7, ஹதீஸ் எண்: 4227 அடுத்த ஹதீஸ் →அத்தியாயம்: 43, பாடம்: 7, ஹதீஸ் எண்: 4229 SatyaMargam ↓ விரும்பும் பாடம் செல்ல… ↓ விரும்பும் பாடம் செல்ல… Select Category 43.37 நபி (ஸல்) அவர்களைக் கண்ணியப்படுத்துவதும் … (8) 43.36 நபி (ஸல்) அவர்களைப் பின்பற்ற வேண்டியது (முஸ்லிம்களின்) கட்டாயக் கடமையாகும் (1) 43.35 நபி (ஸல்) அவர்களின் அல்லாஹ்வைப் பற்றிய அறிவும் அவனைப் பற்றிய கடுமையான அச்சமும் (2) 43.34 நபி (ஸல்) அவர்களின் பெயர்கள் (3) 43.33 நபி (ஸல்) மக்காவிலும் மதீனாவிலும் எத்தனை ஆண்டுகள் வாழ்ந்தார்கள்? (8) 43.32 நபி (ஸல்) இறந்தபோது அவர்களுக்கு வயது எத்தனை? (2) 43.31 நபி (ஸல்) அவர்களின் உடலமைப்பு; நபியாக அனுப்பப்பெற்றது; அவர்களின் வயது (1) 43.30 நபி (ஸல்) உடலில் நபித்துவ முத்திரை … (3) 43.29 நபி (ஸல்) அவர்களின் தலைநரைமுடி (10) 43.28 நபி (ஸல்) அவர்களின் வெண்ணிறமும் களையான முகமும் (2) 43.27 நபி (ஸல்) அவர்களின் வாய், கண்கள், குதிகால்கள் ஆகியவை (1) 43.26 நபி (ஸல்) அவர்களது தலைமுடியின் தன்மை (3) 43.25 நபி (ஸல்) அவர்களின் உருவத் தோற்றம் … (3) 43.24 நபி (ஸல்) தமது தலைமுடியை … (1) 43.23 நபி (ஸல்) அவர்களுக்கு வேத அறிவிப்பு வரும்போது … (4) 43.22 நபி (ஸல்) அவர்களது வியர்வையின் நறுமணமும் அதன்மூலம் வளம் ஏற்பட்டதும் (3) 43.21 நபி (ஸல்) அவர்களின் மேனியில் கமழ்ந்த நறுமணம் … (3) 43.20 நபி (ஸல்) பாவங்களை விட்டு வெகு தொலைவில் விலகியிருந்தது … (3) 43.19 நபி (ஸல்), மக்களுடன் நெருங்கிப் பழகியதும் அவர்களிடமிருந்து மக்கள் வளம் பெற்றதும் (3) 43.18 மனைவியர்மீது நபி (ஸல்) காட்டிய அன்பும் … (4) 43.17 நபி (ஸல்) அவர்களின் புன்னகையும் அழகிய உறவாடலும் (1) 43.16 நபி (ஸல்) அவர்களின் நாண மிகுதி (2) 43.15 நபி (ஸல்) குழந்தைகள் மீதும் குடும்பத்தார் மீதும் காட்டிய அன்பு … (5) 43.14 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வேண்டப்பட்ட எந்த ஒன்றுக்கும் அவர்கள் “இல்லை” என்று சொன்னதேயில்லை … (5) 43.13 அல்லாஹ்வின் தூதர் (ஸல்), மக்களிலேயே மிகவும் அழகான … (5) 43.12 மக்களிலேயே நபி (ஸல்), தொடர்ந்து வீசும் (மழைக்) காற்றைவிட … (1) 43.11 நபி (ஸல்) அவர்களின் வீரமும் அறப்போருக்காக அவர்கள் முன்னே சென்றதும் (2) 43.10 உஹுதுப் போர் நாளில் நபி (ஸல்) … (2) 43.9 நம் நபி (ஸல்) அவர்களுக்கு (மறுமையில் ‘அல்கவ்ஸர்’) தடாகம் உண்டு … (20) 43.8 உயர்ந்தோன் அல்லாஹ் ஒரு சமுதாயத்தின்மீது அருள் புரிய நாடினால் … (1) 43.7 நபி (ஸல்), இறுதி இறைத் தூதர் என்பது பற்றிய குறிப்பு (4) 43.6 நபி (ஸல்), தம் சமுதாயத்தார் மீது கொண்டிருந்த பரிவும் … (4) 43.5 நபி (ஸல்), நேர்வழியுடனும் ஞானத்துடனும் அனுப்பப் பெற்றதற்கான உவமை (1) 43.4 அல்லாஹ்வையே முழுமையாக நபி (ஸல்) சார்ந்திருந்ததும் … (1) 43.3 நபி (ஸல்) அவர்களின் அற்புதங்கள் (7) 43.2 எல்லாப் படைப்புகளையும்விட நம் நபி (ஸல்) அவர்களின் சிறப்பு (1) 43.1 நபி (ஸல்) அவர்களின் தலைமுறையின் சிறப்பும் … (2) 42.4 நபி (ஸல்) கண்ட கனவு (6) 42.3 கனவுக்கு விளக்கமளித்தல் (1) 42.2 ஷைத்தான் கனவில் விளையாடியது குறித்து … (3) 42.1 கனவில் என்னைக் கண்டவர் … (4) 42.01 கனவுகள் (11) 41.2 பகடை விளையாட்டு, தடை செய்யப்பட்டதாகும் (1) 41.1 கவிதைகள் (9) 40.5 நறுமணப் பொருட்களில் மிகவும் சிறந்த கஸ்தூரியைப் பயன்படுத்துவது … (4) 40.4 ஒருவர், ‘கபுஸத் நஃப்ஸீ’ (என் மனம் அசுத்தமாகிவிட்டது) எனும் சொல்லை … (2) 40.3 ‘அப்து’ (அடிமை ஆண்), ‘அமத்து’ (அடிமைப் பெண்), ‘மவ்லா’/’ஸய்யித்’ (அடிமையின் உரிமையாளர்) ஆகிய சொற்களின் சட்டம் (3) 40.2 திராட்சையை, “கர்மு / கண்ணியம்” என்று பெயரிட்டழைப்பது … (7) 40.1 காலத்தை ஏசுவதற்குத் தடை (5) 39.41 விலங்குகளுக்கு நீர் புகட்டுவதின், உணவளிப்பதின் சிறப்பு (3) 39.40 பூனைகளைக் கொல்வதற்குத் தடை (2) 39.39 எறும்புகளைக் கொல்லத் தடை (3) 39.38 பல்லியைக் கொல்வது நல்லது (5) 39.37 பாம்பு போன்ற விஷ ஜந்துகளைக் கொல்வது (13) 39.36 தொழுநோயாளிகள் போன்றோரிடம் நெருக்கம் தவிர்ப்பது (1) 39.35 சோதிடர்களிடம் செல்வதும் சோதிடம் பார்ப்பதும் (5) 39.34 பறவை சகுனம், நற்குறி, துர்குறி பற்றிய பாடம் (11) 39.33 இல்லாத சகுனங்களும் தொற்றுநோய்களும் (6) 39.32 கொள்ளைநோய், பறவை சகுனம், சோதிடம் போன்றவை (8) 39.31 தேனூட்டு மருத்துவம் (1) 39.30 ‘தல்பீனா‘, நோயாளியின் மனத்துக்கு(ம் உடலுக்கும்) தெம்பு அளிக்கக்கூடியதாகும் (1) 39.29 கருஞ்சீரக மருத்துவம் (2) 39.28 இந்தியக் கோஷ்டக் குச்சியால் சிகிச்சையளிப்பது (2) 39.27 நோயாளிக்கு வற்புறுத்தி சிகிச்சையளிப்பது … (1) 39.26 ஒவ்வொரு நோய்க்கும் மருந்து உண்டு; (நோய்க்கு) மருத்துவம் செய்துகொள்வது விரும்பத் தக்கது (17) 39.25 தொழுகையில் மனம் அலைபாயச் செய்யும் ஷைத்தானிடமிருந்து பாதுகாப்புக் கோரல் (1) 39.24 பிரார்த்திக்கும்போது வலியுள்ள இடத்தில் கையை வைப்பது (1) 39.23 குர்ஆன் வசனங்கள் மற்றும் அல்லாஹ்வைத் துதிக்கும் சொற்களால் ஓதிப்பார்ப்பதற்கு ஊதியம் பெறலாம் (2) 39.22 இறைவனுக்கு இணை கற்பிதம் இல்லாத சொற்களால் ஓதிப்பார்பது தவறில்லை (1) 39.21 கண்ணேறு, சின்னம்மை, விஷக்கடி, (தீய)பார்வை ஆகியவற்றுக்காக ஓதிப்பார்ப்பது விரும்பத் தக்கதாகும் (12) 39.20 பாதுகாப்புக் கோரும் அத்தியாயங்களால் நோயாளிக்கு ஓதிப்பார்ப்பது … (2) 39.19 நோயாளிக்கு ஓதிப்பார்ப்பது விரும்பத் தக்கதாகும் (4) 39.18 விஷம் (1) 39.17 சூனியம் (1) 39.16 நோயும் மருத்துவமும் ஓதிப்பார்த்தலும் (4) 39.15 மூன்றாமவரின் ஒப்புதலின்றி இருவர் மட்டும் இரகசியம் பேசிக்கொள்வது தடை செய்யப்பட்டதாகும் (3) 39.14 … அந்நியப் பெண்ணை, வழிசெல்லும் ஒருவர் வாகனத்தில் அமர்த்திக்கொள்ளலாம் (2) 39.13 பெண்கள் இருக்கும் இடத்திற்கு அலிகள் செல்லத் தடை (2) 39.12 அமர்ந்திருந்த இடத்திற்கு உரியவர் (1) 39.11 அமர்ந்திருக்கும் ஒருவரை எழுப்பிவிடுவது தடை செய்யப்பட்டதாகும் (4) 39.10 அவைக்கு வருபவர், அமரும் ஒழுங்கு (1) 39.9 … கெட்ட எண்ணத்தை அகற்றுவது விரும்பத் தக்கதாகும் (2) 39.8 அந்நியப் பெண்ணிடம் … தனிமையில் இருப்பது தடை செய்யப்பட்டதாகும் (3) 39.7 … பெண்கள் வெளியே செல்லலாம் (2) 39.6 உள்ளே செல்ல அனுமதியாகக் கருதுவதற்கு … (1) 39.5 சிறாருக்கு(ப் பெரியவர்கள்) முகமன் கூறுவது விரும்பத் தக்கதாகும் (2) 39.4 வேதக்காரர்களுக்கு முந்திக்கொண்டு ஸலாம் கூறுவதற்குத் தடை (7) 39.3 ஸலாத்துக்குப் பதிலுரைப்பது முஸ்லிமுக்குக் கடமை (2) 39.2 நடைபாதைகளில் அமர்வதன் ஒழுங்குகளில் … (2) 39.1 முந்தி ஸலாம் சொல்ல வேண்டியவர்கள் (1) 38.10 இயல்பான பார்வை (1) 38.9 பிறர் வீட்டில் எட்டிப் பார்ப்பது தடை செய்யப்பட்டதாகும் (5) 38.8 “யார்?“ என்று கேட்டால் … (2) 38.7 அனுமதி கோருதல் (5) 38.6 “என் அருமை மகனே!“ (2) 38.5 குழந்தை பிறந்தவுடன் இனிப்பான பொருளை மென்று அதன் வாயிலிடுவதும் … (9) 38.4 மன்னாதி மன்னன் எனப் பெயர் சூட்டிக்கொள்வது தடை செய்யப்பட்டதாகும் (2) 38.3 அருவருப்பான பெயரை அழகான பெயராக மாற்றியமைப்பது … (6) 38.2 அருவருப்பான பெயர்கள் … (4) 38.1 … விரும்பத் தகுந்த பெயர்கள் (8) 37.35 வெறும் பெருமை (2) 37.34 மெல்லிய உடையணிந்து, பிறரைத் தன்பால் ஈர்க்கும் வண்ணம் தோள்களைச் சாய்த்து ஒயிலாக நடக்கும் பெண்கள் (1) 37.33 பெண்களின் பொய் அலங்காரங்காரங்களுக்குத் தடை (10) 37.32 நடைபாதைகளில் அமர்வதற்குத் தடையும் பாதைகளுக்குரிய உரிமைகளைப் பேணுவதும் (1) 37.31 தலை முடியில் பகுதி மழித்துவிட்டு, பகுதி மழிக்காமல் விட்டுவிடுவது வெறுக்கத் தக்கதாகும் (1) 37.30 ஸகாத் / ஜிஸ்யாவுக்கான கால்நடைகளில் சூடிட்டு அடை யாளமிடலாம் (4) 37.29 விலங்குகளின் முகத்தில் அடிப்பதும் அடையாளச் சூடிடுவதும் தடை செய்யப்பட்டவை ஆகும் (3) 37.28 ஒட்டகத்தின் கழுத்தில் (திருஷ்டிக்) கயிற்று மாலை அணிவிப்பது வெறுக்கத் தக்கதாகும் (1) 37.27 பயணத்தின்போது நாயும் (ஒலியெழுப்பும்) மணியும் வெறுக்கத் தக்கவை (2) 37.26 உயிரினங்களின் உருவப் படங்களை வரைவதும் … தடை செய்யப்பட்டவை ஆகும் (21) 37.25 (நரைமுடிக்கு) சாயமிட்டுக்கொள்வது யூதர்களுக்கு மாறு செய்வதாகும் (1) 37.24 நரைமுடியில் கருப்பு நிறச் சாயமிடுவது தடை செய்யப்பட்டதாகும் (2) 37.23 ஆண்கள் (மேனியில்) குங்குமப்பூச் சாயமிட்டுக்கொள்வதற்குத் தடை (1) 37.22 மல்லாந்து படுத்துக்கொண்டு கால்மீது காலைப் போட்டுக் கொள்வதற்கு அனுமதி (1) 37.21 மல்லாந்து படுத்துக்கொண்டு கால்மீது காலைப் போட்டுக் கொள்வதற்குத் தடை (3) 37.20 தடை செய்யப்பட்ட இரு நிலைகள் (2) 37.19 காலணிகளை அணிந்து கழற்றும் முறைகள் (3) 37.18 காலணி அல்லது அது போன்றதை அணிந்துகொள்வது விரும்பத் தக்கதாகும் (1) 37.17 மோதிரம் அணிவதற்குத் தடை செய்யப்பட்ட விரல்கள் (2) 37.16 கைச் சுண்டுவிரலில் மோதிரம் அணிவது (1) 37.15 அபிசீனியக் வெள்ளிக் குமிழ் மோதிரம் (2) 37.14 மோதிரங்களை(க் கழற்றி) எறிந்த நிகழ்வு (2) 37.13 நபி (ஸல்) அவர்களின் (முத்திரை) மோதிரம் (3) 37.12 ‘முஹம்மதுர் ரசூலுல்லாஹ்’ எனும் இலச்சினை பொறிக்கப்பட்ட வெள்ளி மோதிரம் (2) 37.11 ஆண்கள் தங்க மோதிரம் அணிவதற்குத் தடை (3) 37.10 ஆடைகளை எண்ணிப் பெருமை கொண்டு, கர்வத்தோடு நடப்பதற்குத் தடை (2) 37.9 பெருமைக்காக ஆடையைத் தரையில் படும்படி இழுத்துச் செல்வதற்குத் தடை (7) 37.8 தேவைக்கு அதிகமான விரிப்புகளும் ஆடைகளும் இருப்பது விரும்பத் தக்கதன்று (1) 37.7 படுக்கை விரிப்புகளைப் பயன்படுத்த அனுமதி (2) 37.6 ஆடையில் (எளிமை,) பணிவு காட்டுவது … (5) 37.5 பருத்தி ஆடை அணிவதன் சிறப்பு (2) 37.4 ஆண்கள் செம்மஞ்சள் நிறச் சாயமிடப்பட்ட ஆடை அணிவதற்குத் தடை (5) 37.3 தோல் உபாதைகள் இருந்தால் ஆண்கள் பட்டாடை அணியலாம் (3) 37.2 பொன் மோதிரம் மற்றும் பட்டாடை அணிவது ஆண்களுக்குத் தடை; பெண்களுக்கு அனுமதி (20) 37.1 பொன் / வெள்ளிப் பாத்திரங்களைப் பயன்படுத்துவது ஆண்களுக்கும் பெண்களுக்கும் தடை (2) 36.35 உணவைக் குறை சொல்லவேண்டாம் (2) 36.34 இறைநம்பிக்கையாளர் ஒரே குடலில் உண்பார்; இறைமறுப்பாளன் ஏழு குடல்களில் உண்பான் (5) 36.33 உணவு குறைவாக இருக்கும்போது … (4) 36.32 விருந்தினரை உபசரிப்பதும் முன்னுரிமை வழங்குவதன் சிறப்பும் (6) 36.31 வெள்ளைப் பூண்டு சாப்பிடக்கூடியதே … (2) 36.30 உணவுக் காடியின் சிறப்பும் … (4) 36.29 ‘அல்கபாஸ்’ பழங்களில் கருப்பு நிறப் பழத்தின் சிறப்பு (1) 36.28 உணவுக் காளானின் சிறப்பும் … (6) 36.27 மதீனத்துப் பேரீச்சம் பழங்களின் சிறப்பு (3) 36.26 குடும்பத்தாருக்காக … உணவுகளைச் சேமித்துவைத்தல் (2) 36.25 பலருடன் சேர்ந்து உண்பவர் … (2) 36.24 உணவு உண்பவர் அமரும் முறை; பணிவோடு அமர்வது விரும்பத் தக்கது (2) 36.23 பேரீச்சை செங்காய்களுடன் வெள்ளரிக்காயையும் சேர்த்து உண்பது (1) 36.22 விருந்தளிப்பவருக்காக விருந்தாளி பிரார்த்திப்பது … (1) 36.21 சுரைக் குழம்பு உண்ண அனுமதி … (2) 36.20 வீட்டு உரிமையாளரின் சம்மதம் கிடைக்கும் என்ற நம்பிக்கை இருந்தால் … (4) 36.19 விருந்துக்கு அழைக்கப்பட்டவரைத் தொடர்ந்து அழைக்கப்படாதவரும் வந்துவிட்டால் … (2) 36.18 உண்டு முடித்ததும் விரல்களைச் சூப்புவதும் உணவுத் தட்டை வழித்து உண்பதும் … (9) 36.17 வலப் பக்கத்திலிருந்து பரிமாறுதல் விரும்பத் தக்கதாகும் (4) 36.16 பாத்திரத்தினுள் (பருகும்போது) வெளியே மூன்று முறை மூச்சு விட்டுப் பருகுவது விரும்பத் தக்கதாகும் (3) 36.15 ஸம்ஸம் நீரை நின்றுகொண்டு அருந்துவது (4) 36.14 நின்றுகொண்டு அருந்துவது வெறுக்கத் தக்கதாகும் (4) 36.13 உண்பது, அருந்துவது ஆகியவற்றின் ஒழுங்குகளும் விதிமுறைகளும் (10) 36.12 இரவு நேர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் (6) 36.11 பழச்சாறுகளைப் பருகுவதும் பாத்திரங்களை மூடிவைப்பதும் (3) 36.10 (ஆட்டுப்) பால் அருந்த அனுமதி (3) 36.9 பழச்சாறுகள் (புளித்துக்) கெட்டியாகி, போதையேறாதவரை அனுமதிக்கப்பட்டவையாகும் (10) 36.8 குடிகாரன் பாவமன்னிப்புக் கோரி திருந்தாவிட்டால் … (3) 36.7 போதை தரும் ஒவ்வொரு பானமும் தடை செய்யப்பட்ட மதுவாகும் (9) 36.6 பானங்கள்-பாத்திரங்கள், தடை-தடை நீக்கம் (36) 36.5 பேரீச்சம் பழம், உலர் திராட்சைக் கலவை ஊறல் வெறுக்கத் தக்கதாகும் (14) 36.4 ‘மதுபானம்’ என்று சொல்லப்படுபவை (4) 36.3 மதுவை மருந்தாகப் பயன்படுத்துவதற்குத் தடை (1) 36.2 மதுபானத்தை (சமையல்) காடியாக மாற்றிப் பயன்படுத்துவதற்குத் தடை (1) 36.1 போதையூட்டும் ஒவ்வொன்றும் மதுவாகும் (9) 35.8 அல்லாஹ் அல்லாதவரின் பெயர் கூறிப் பிராணிகளை அறுப்பதற்குத் தடை (3) 35.7 தலைமுடியை, நகங்களைக் களைவதற்குத் தடை (5) 35.6 அல் ஃபரஉ வல் அத்தீரா (1) 35.5 பலி இறைச்சியை எவ்வளவு காலம் சேமித்து வைக்கலாம்? (14) 35.4 பல், நகம், எலும்பு ஆகியவை தவிர எந்தப் பொருளாலும் பிராணியை அறுக்க அனுமதி (1) 35.3 தாமே அறுப்பதும் அல்லாஹ்வின் பெயரோடு தக்பீர் கூறுவதும் விரும்பத் தக்கவை ஆகும் (3) 35.2 பலிப் பிராணியின் வயது (4) 35.1 பலி கொடுக்கப்படும் நேரம் (10) 34.12 விலங்குகளைக் கட்டிவைத்து அம்பெய்து கொல்வதற்குத் தடை (5) 34.11 … கத்தியைக் கூர்மையாகத் தீட்டிக் கொண்டு வதையற்ற முறையைக் கையாளக் கட்டளை (1) 34.10 … பயிற்சிகளை மேற்கொள்வது அனுமதிக்கப் பட்டதாகும். கல்சுண்டு விளையாட்டு வெறுக்கப்பட்டதாகும் (2) 34.9 முயல் கறி உண்ணத் தக்கது (1) 34.8 வெட்டுக்கிளி உண்ணத் தக்கது (1) 34.7 உடும்புக் கறி உண்ணத் தக்கது (13) 34.6 குதிரைகளின் இறைச்சியை உண்பது கூடுமா? (3) 34.5 நாட்டுக் கழுதைகளின் இறைச்சியை உண்பதற்குத் தடை (14) 34.4 கடல்வாழ் உயிரினங்களில் செத்தவற்றை உண்பதற்கு அனுமதி (5) 34.3 உண்பதற்குத் தடை செய்யப்பட்ட விலங்குகளும் பறவைகளும் (6) 34.2 வேட்டையாடிய பிராணி மறைந்து, பிறகு கிடைத்தால் … (2) 34.1 பயிற்சியளிக்கப்பட்ட நாய்கள் மூலம் வேட்டையாடுதல் (8) 33.56 பயணத்திலிருந்து திரும்புகின்றவர் … (5) 33.55 பயணம் என்பது துன்பத்தின் ஒரு பகுதியாகும் … (1) 33.54 பயணத்தில் கால்நடைகளின் நலன் காப்பதும் … (2) 33.53 “என் சமுதாயத்தாரில் ஒரு குழுவினர் எப்போதுமே உண்மைக்கு ஆதரவாளர்களாக இருப்பார்கள் … (8) 33.52 அம்பெய்வதன் சிறப்பும் … (3) 33.51 உயிர்த் தியாகிகள் பற்றிய விளக்கம் (3) 33.50 அல்லாஹ்வின் பாதையில் எல்லைக் காவல் புரிவதன் சிறப்பு (1) 33.49 கடல்வழிப் போரின் சிறப்பு (2) 33.48 போரில் கலந்துகொள்ள முடியாமல் போனவருக்கும் நன்மை … (1) 33.47 அறப்போரில் கலந்துகொள்ளாமல் இறந்துபோனவர் … (1) 33.46 அல்லாஹ்வின் பாதையில் வீரமரணத்தை வேண்டுவது விரும்பத் தக்கதாகும் (2) 33.45 “எண்ணங்களைப் பொருத்தே செயல்கள் அமைகின்றன” எனும் நபிமொழி … (1) 33.44 … போர்ச் செல்வங்களைப் பெற்றோரும் பெறாதோரும் … (2) 33.43 பிறர் பார்ப்பதற்காகவும் விளம்பரத்திற்காகவும் போரிட்டவர் … (1) 33.42 அல்லாஹ்வின் பாதையில் போரிட்டவர் … (3) 33.41 உயிர்த் தியாகிக்குச் சொர்க்கம் நிச்சயம் (6) 33.40 தகுந்த காரணம் உள்ளவர்களுக்கு அறப்போரில் கலந்து கொள்வது கடமை இல்லை (2) 33.39 அறப்போர் வீரர்களின் துணைவியருடைய கண்ணியம் … (1) 33.38 அறப்போர் வீரருக்கு வாகனம் மற்றும் பிற உதவிகள் … (6) 33.37 அல்லாஹ்வின் பாதையில் தர்மம் செய்வதன் சிறப்பும் அதற்குக் கிடைக்கும் பன்மடங்கு நன்மைகளும் (1) 33.36 இறைமறுப்பாளனை (போரில்) கொன்ற பின்னர் (மார்க்கத்தில்) உறுதியோடு இருத்தல் (2) 33.35 இரு போராளிகளில் ஒருவர் மற்றவரைக் கொன்று, பின் அவ்விருவருமே சொர்க்கத்தில் … (2) 33.34 அறப்போர் மற்றும் எல்லைக் காவலின் சிறப்பு (3) 33.33 வீரமணம் அடைந்தவர்களின் உயிர்கள் … (1) 33.32 அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டவரின் கடனைத் தவிர அனைத்துப் பாவங்களும் மன்னிக்கப்படுகின்றன (3) 33.31 அல்லாஹ் (தனது பாதையில்) அறப்போர் புரிந்தவர்களுக்காகச் சொர்க்கத்தில் வைத்துள்ள உயர்நிலைகள் (1) 33.30 அல்லாஹ்வின் பாதையில் காலையாயினும் மாலையாயினும் (போரிடச்) செல்வதன் சிறப்பு (5) 33.29 அல்லாஹ்வின் பாதையில் வீரமரணம் அடைவதன் சிறப்பு (4) 33.28 அல்லாஹ்வின் பாதையில் புறப்படுதலின், அறப்போரில் ஈடுபடுதலின் சிறப்பு (4) 33.27 குதிரையின் தன்மைகளில் விரும்பத் தகாதவை (1) 33.26 மறுமை நாள்வரை நெற்றிகளில் நன்மை பிணைக்கப்பட்டிருக்கும் குதிரைகள் (5) 33.25 குதிரைப் பந்தயமும் அதற்காகக் குதிரையை மெலிய வைப்பதும் (1) 33.24 குர்ஆன் பிரதிகளை இறைமறுப்பாளர்களின் நாட்டுக்கு எடுத்துச் செல்வது … (3) 33.23 பருவ வயது பற்றிய விளக்கம் (1) 33.22 இயன்றவரை கட்டுப்பட்டு நடப்பதாக உறுதிமொழி அளித்தல் (1) 33.21 பெண்களிடம் உறுதிப் பிரமாணம் (பைஅத்) வாங்கும் முறை (2) 33.20 மக்கா வெற்றிக்குப் பின் ஹிஜ்ரத் கிடையாது (5) 33.19 நாடு துறந்து (ஹிஜ்ரத்) சென்றவர் மீண்டும் தமது தாயகத்தில் குடியேறுவதற்குத் தடை (1) 33.18 ஆட்சித் தலைவர் படையினரிடம் உறுதி மொழி பெற்றுக்கொள்வது … (13) 33.17 ஆட்சித் தலைவர்களில் நல்லவர்களும் தீயவர்களும் (2) 33.16 ஆட்சித் தலைவர்கள் மார்க்கத்திற்கு முரணாகச் செயல்படும்போது … (2) 33.15 இரு ஆட்சியாளர்களுக்கு வாக்களிப்புப் பிரமாண நெருக்கடி ஏற்பட்டால் … (1) 33.14 முஸ்லிம்கள் (ஒரே தலைமையின் கீழ்) ஒன்றுபட்டிருக்கும்போது … (2) 33.13 குழப்பங்கள் தோன்றும்போது கூட்டமைப்போடு சேர்ந்திருப்பது கடமையாகும் … (8) 33.12 உரிமைகள் மறுக்கப்பட்டாலும் தலைமைக்குக் கட்டுப்படுதல் (1) 33.11 அதிகாரத்திலிருப்போர் அநீதியிழைக்கும்போதும் தகுதியற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கும்போதும் … (1) 33.10 கலீஃபாக்களில் முதலாமவருக்கு உறுதிப் பிரமாணம் (பைஅத்) அளிப்பது கடமையாகும் (3) 33.9 ஆட்சித் தலைவர் கேடயம் போன்றவர் … (1) 33.8 பாவமற்றவற்றில் தலைவர்களுக்குக் கட்டுப்படுவது கடமையாகும். பாவமானவற்றில் கட்டுப்படுவதற்குத் தடை (11) 33.7 அதிகாரிகளுக்கு அன்பளிப்புகள் வழங்குவதற்குத் தடை (3) 33.6 பொதுச் சொத்துகளில் மோசடி செய்வது வன்மையாகத் தடை செய்யப்பட்டது (1) 33.5 நேர்மையான ஆட்சியாளரின் சிறப்பும் … (6) 33.4 தேவையின்றி ஆட்சிப் பொறுப்பை ஏற்பது விரும்பத் தக்கதன்று (2) 33.3 ஆட்சியதிகாரத்தைத் தேடி அலைவதற்கும் அதன் மீது ஆசை கொள்வதற்கும் தடை (3) 33.2 ஆட்சித் தலைவரை நியமிக்கலாம்; நியமிக்காமல் விடலாம் (2) 33.1 ஆட்சியதிகாரம் குறைஷியரிடையேதான் இருக்கும் (10) 32.51 அறப்போர்களில் இறைமறுப்பாளரிடம் உதவி கோருவது … (1) 32.50 ‘தாத்துர் ரிக்காஉ’ (ஒட்டுத் துணிப்) போர் (1) 32.49 நபி (ஸல்) கலந்துகொண்ட அறப்போர்களின் எண்ணிக்கை (6) 32.48 அறப்போரில் கலந்துகொண்ட பெண்களுக்கு … (4) 32.47 அறப்போரில் ஆண்களுடன் பெண்களும் கலந்துகொள்வது (2) 32.46 “அவனே உங்களைத் தாக்காமல் அவர்கள் கைகளை தடுத்(து வைத்)தான்” எனும் (48:24) வசனம் (2) 32.45 ‘தூ கரத்’ போரும் பிற போர்களும் (2) 32.44 அஹ்ஸாப் போர் (அ) அகழ்ப் போர் (6) 32.43 கைபர் போர் (5) 32.42 கஅப் பின் அல்அஷ்ரஃப் கொல்லப்படுதல் (1) 32.41 அபூஜஹ்லு கொல்லப்படுதல் (1) 32.40 நபி (ஸல்) (மக்களை) இறைவன்பால் அழைத்து, துன்பங்களைப் பொறுத்துக் கொண்டது (2) 32.39 நபி (ஸல்) எதிர்கொண்ட துன்பங்கள் (7) 32.38 இறைதூதரால் கொல்லப்பட்டவன் மீது இறைவனின் கோபம் (1) 32.37 உஹுதுப் போர் (3) 32.36 கூட்டுப் படையினருக்கு எதிரான அகழ்ப் போர் (2) 32.35 வாக்குறுதியை(ப் போரிலும்) நிறைவேற்றுவது (1) 32.34 ஹுதைபிய்யா சமாதான உடன்படிக்கை’ (7) 32.33 மக்கா வெற்றிக்குப் பின் … (1) 32.32 கஅபாவைச் சுற்றிலும் இருந்த சிலைகளை அப்புறப்படுத்தியது (1) 32.31 மக்கா வெற்றி (2) 32.30 பத்ருப் போர் (1) 32.29 தாயிஃப் போர் (1) 32.28 ஹுனைன் போரில் … (5) 32.27 இறைமறுப்பு அரசர்களுக்கு நபி (ஸல்) எழுதிய கடிதங்கள் (1) 32.26 அழைப்பு விடுத்து ஹெராக்ளியஸ் மன்னருக்கு நபி (ஸல்) எழுதிய கடிதம் (1) 32.25 போரில் கிடைத்த உணவை, பகை நாட்டில் இருக்கும் போதே உண்ணலாம் (2) 32.24 முஹாஜிர்கள் தன்னிறைவு அடைந்தபோது … (2) 32.23 செயல்களுள் முன்னுரிமை அளிக்கத் தக்கது (1) 32.22 ஒப்பந்தத்தை முறித்துவிட்ட (பகை)வர்களுடன் போர் செய்யலாம் (3) 32.21 யூத கிறித்தவர்கள் அரபிய தீபகற்பத்திலிருந்து வெளியேற்றப்படுவது (1) 32.20 யூதர்களை ஹிஜாஸ் பகுதியிலிருந்து நாடு கடத்தியது (2) 32.19 கைதியை என்னென்னவெல்லாம் செய்யலாம் (1) 32.18 பத்ருப் போரில் வானவர்களின் உதவியும் … (1) 32.17 போர் வெற்றிச் செல்வத்தைப் பங்கிடும் முறை (1) 32.16 இறைத்தூதர்களுக்கு யாரும் (சொத்தில்) வாரிசாக முடியாது (5) 32.15 போர் செய்யாமல் கிடைத்த செல்வங்களின் சட்டம் (3) 32.14 … போர்க் கைதிகளைப் பரிமாறிக்கொள்வது (1) 32.13 போரில் கொல்லப்பட்ட எதிரியின் உடைமைகள் (4) 32.12 போர் வெற்றிச் செல்வங்கள் (7) 32.11 போர் வெற்றிச் செல்வங்கள் யாருக்குச் சொந்தம்? (1) 32.10 போரில் மரங்களை வெட்டுவதும் எரிப்பதும் அனுமதிக்கப்பட்டதாகும் (3) 32.9 பெண்களையும் குழந்தைகளையும் அறியாமல் கொன்றுவிட்டால் … (3) 32.8 போரில் பெண்களையும் குழந்தைகளையும் கொல்வதற்குத் தடை (2) 32.7 எதிரிகளை(ப் போரில்) எதிர்கொள்ளும்போது பிரார்த்திப்பது (2) 32.6 எதிரியை(ப் போர்க் களத்தில்) சந்திக்க ஆசைப்படுவது வெறுக்கத் தக்கது … (2) 32.5 போரில் தந்திரம் அனுமதிக்கப்பட்டது (2) 32.4 மோசடி செய்வது தடை செய்யப்பட்டதாகும் (8) 32.3 மக்களிடம் இலகுவாக நடந்துகொள்ள வேண்டும்; வெறுப்பைக் கைவிட வேண்டும் (3) 32.2 படைத் தலைவர், போர் நெறிகள் குறித்து அறிவுறுத்துவது (1) 32.1 முன்னறிவிப்பின்றித் தாக்குதல் தொடுக்கலாமா? (1) 31.5 பயணத்தில் உணவைப் பகிர்ந்துண்ணல் (1) 31.4 செல்வத்தால் பிறருக்கு உதவுவது விரும்பத் தக்கது (1) 31.3 விருந்தோம்பல் சார்ந்தவை (3) 31.2 உரிமையாளரின் அனுமதியின்றி கால் நடையில் பால் கறப்பதற்குத் தடை (1) 31.1 ஹாஜிகள் தவறவிட்டவை (2) 31.0 கண்டெடுக்கப்பட்டவை (5) 30.11 நீதிபதி சமரசம் செய்துவைப்பது விரும்பத் தக்கதாகும் (1) 30.10 ஆய்வாளர்களிடையே கருத்து வேறுபாடு (1) 30.9 சாட்சிகளில் சிறந்தவர் (1) 30.8 தவறான தீர்ப்புகளைத் தள்ளுபடி செய்வதும் (மார்க்கத்தில் இல்லாத) புதுமைகளை நிராகரிப்பதும் (2) 30.7 கோபமாக இருக்கும் நீதிபதி, தீர்ப்பளிப்பது விரும்பத் தக்கதன்று (1) 30.6 நீதிபதியின் ஆய்வுக்கு நன்மை உண்டு (1) 30.5 தடைகள் மூன்று (4) 30.4 ஹிந்த் (ரலி) வழக்கு (3) 30.3 வாதங்களின் அடிப்படையில் தீர்ப்பு அமைந்துவிடுதல் (2) 30.2 சத்தியத்தின் / சாட்சியத்தின் அடிப்படையில் தீர்ப்பளித்தல் (1) 30.1 சத்தியம் செய்து நிரூபிப்பது பிரதிவாதிமீது கடமையாகும் (2) 29.11 இழப்பீடு இல்லாத விபத்துகள் (2) 29.10 தண்டனைகள், குற்றங்களுக்கான பரிகாரமாகும் (3) 29.9 சீர்திருத்திற்காக வழங்கப்படும் சாட்டையடிகளின் (அதிகபட்ச) அளவு (1) 29.8 மது அருந்திய குற்றத்திற்கான தண்டனை (4) 29.7 மகப்பேறான பெண்ணின் தண்டனையைத் தள்ளிவைத்தல் (1) 29.6 இஸ்லாமிய அரசின் கீழ் வாழும் யூதர்கள் விபச்சாரத்தில் ஈடுபட்டாலும் கல்லெறி தண்டனை (6) 29.5 விபச்சாரம் செய்தவரின் ஒப்புதல் வாக்குமூலம் (9) 29.4 மணமானவர்கள் விபச்சாரம் செய்தால் கல்லெறி தண்டனை (1) 29.3 விபச்சாரக் குற்றத்திற்கான தண்டனை (2) 29.2 தண்டனையிலிருந்து விலக்கு அளிக்குமாறு பரிந்துரைப்பதற்குத் தடை (3) 29.1 தண்டனைக்குரிய திருட்டின் அளவுகோலும் தண்டனையும் (7) 28.11 சிசுக் கொலைக்கான இழப்பீடும் … (6) 28.10 கொலையாளி, தன் குற்றத்தை ஒப்புக்கொள்வதும் … (2) 28.9 மனிதர்களின் உயிர், தன்மானம், செல்வம் ஆகியவற்றுக்கு ஊறு விளைவிப்பது … (2) 28.8 மறுமையில் வழங்கப்படும் தீர்ப்பும் தண்டனையும் … (1) 28.7 கொலையை (உலகுக்கு) அறிமுகப்படுத்தியவர் மீதான பாவம் (1) 28.6 முஸ்லிமின் மரண தண்டனைக்கான காரணங்கள் (2) 28.5 பற்கள் போன்ற(உறுப்புகளான)வற்றில் பழிக்குப்பழி உண்டு (1) 28.4 தாக்க வந்தவனிடமிருந்து தற்காத்துக் கொள்வதற்காக … (6) 28.3 கல் மற்றும் கூராயுதங்களால் கொலை செய்தால், பழிக்குப்பழி உண்டு … (3) 28.2 வன்முறையாளர்களுக்கும் மதம் மாறியோருக்குமான தண்டனை (4) 28.1 அல்கஸாமா (4) 27.13 விடுதலைக்கு வாக்களிக்கப்பட்ட அடிமையை விற்கலாம் (2) 27.12 அடிமையில் தமது பங்கை மட்டும் விடுதலை செய்தல் (8) 27.11 ‏தன் உரிமையாளருக்கு விசுவாசமாகவும் … (4) 27.10 அடிமைக்கு எஜமானர் உண்பதிலிருந்து உணவளிப்பதும் … (4) 27.9 விபசாரம் செய்துவிட்டதாக அவதூறு கூறுவதற்கான கண்டனம் (1) 27.8 அடிமைகளுடனான நல்லுறவும் கன்னத்தில் அறைந்ததற்கான பரிகாரமும் (8) 27.7 இறைமறுப்பாளராக இருந்தபோது செய்த நேர்ச்சை… (2) 27.6 ஆகுமாக்கப்பட்டதற்கான சத்தியமாக இருந்தாலும் … (1) 27.5 இன்ஷா அல்லாஹ் என்பதை (சத்தியத்தின்போது) சேர்த்துக் கூறுதல் (4) 27.4 சொல்பவரின் எண்ணப்படியே ஒருவருடைய சத்தியம் அமையும் (2) 27.3 சத்தியம் செய்தவர், அதைவிடச் சிறந்ததாக மற்றொன்றைக் காணும்போது … (12) 27.2 ‘லாத்’ மற்றும் ‘உஸ்ஸா’வின் மீது சத்தியம் செய்துவிட்டவர் … (2) 27.1 அல்லாஹ்வைத் தவிர எவர்/எதன் மீதும் சத்தியம் செய்யத் தடை (3) 26.5 நேர்ச்சை முறிவுக்கான பரிகாரம் (1) 26.4 கஅபாவரை நடைப்பயணம் செல்வதாக நேர்ந்துகொண்டவர் (3) 26.3 இறைவனுக்கு மாறு செய்வதிலோ உரிமை இல்லாததிலோ நேர்ச்சை. (1) 26.2 நேர்ச்சை செய்வதற்குத் தடை; அது (விதியில்) எதையும் மாற்றிவிடாது (6) 26.1 நேர்ச்சையை நிறைவேற்றக் கட்டளை (1) 25.5 வசதியற்றவர் மரண சாஸனம் செய்ய முடியாது (6) 25.4 அறக்கொடை (1) 25.3 மனிதன் இறந்த பின்பும் தொடரும் நன்மைகள் (1) 25.2 இறந்துவிட்டவருக்காகச் செய்யப்படும் தர்மங்களின் நன்மை … (3) 25.1 மரண சாஸனம் 1/3 மட்டுமே (5) 25.0 மரண சாஸனம் (2) 24.4 ஆயுட்கால அன்பளிப்பு (11) 24.3 அன்பளிப்பு வழங்குவதில் பிள்ளைகளிடையே பாகுபாடு காட்டுவது … (10) 24.2 தானமும் அன்பளிப்பும் வழங்கப்பட்ட பின், திரும்பப் பெறுவதற்குத் தடை … (4) 24.1 தானமாகக் கொடுத்ததை விலைக்கு வாங்குவது விரும்பத் தக்கதல்ல (4) 23.4 ஒருவர் விட்டுச்செல்லும் செல்வம் அவருடைய வாரிசுகளுக்கு உரியதாகும் (4) 23.3 இறுதியாக அருளப்பெற்றது கலாலா வசனமாகும் (4) 23.2 ‘கலாலா’ சொத்துரிமை (5) 23.1 உரியவர்களுக்கும் உறவினருக்கும் பிரிக்கப்பட்ட பாகங்கள் (3) 23.0 ஒரு முஸ்லிம், இறைமறுப்பாளருக்கு வாரிசாகமாட்டார் (1) 22.31 பாதைக்கு நிலம் ஒதுக்குவதில் கருத்து வேறுபாடு ஏற்பட்டால் அதற்கான தீர்வு (1) 22.30 பிறர் நிலத்தை அபகரித்தல் போன்ற அநீதி இழைத்தல்களுக்குத் தடை (6) 22.29 அண்டை வீட்டாரின் சுவரில் (சாரம் கட்டுவதற்கு) மரக்கட்டை பதிப்பது (1) 22.28 பங்காளியின் இசைவு (3) 22.27 வியாபாரத்தில் (வீண்)சத்தியம் செய்வது விலக்கப்பட்டுள்ளது (2) 22.26 உணவுப் பொருட்களைப் பதுக்குவதற்குத் தடை (2) 22.25 முன்பணம் செலுத்தும் வணிகம் (2) 22.24 அடமானம் உள்ளூரிலும் பயணத்திலும் செல்லும் (3) 22.23 ஓர் உயிரினத்தை அதே இனத்திற்குப் பதிலாக ஏற்றத்தாழ்வோடு விற்கலாம் (1) 22.22 உங்களில் சிறந்தவர் கடனை அழகிய முறையில் திருப்பிச் செலுத்துபவரே (4) 22.21 ஒட்டகத்தை விற்றவர் அதில் பயணிக்க நிபந்தனை விதிப்பது (5) 22.20 அனுமதிக்கப்பட்டவற்றையும் ஐயத்திற்குரியவற்றையும் கையாளுதல் (1) 22.19 வட்டி வாங்குபவருக்கும் வட்டி கொடுப்பவருக்கும் சாபம் (2) 22.18 உணவுப் பொருளை, சரிக்குச் சரியாக விற்றல் (12) 22.17 பொன்னும் மணியும் பதித்த மாலையை விற்பது (4) 22.16 தங்கத்திற்கு வெள்ளியைக் கடனாக விற்பதற்குத் தடை (3) 22.15 நாணயமாற்று வியாபாரம்; வெள்ளிக்குத் தங்கத்தை ரொக்கத்துக்கு விற்பது (7) 22.14 வட்டி (4) 22.13 மது, செத்தவை, பன்றி, சிலைகள் ஆகியவற்றை விற்பதற்குத் தடை (4) 22.12 மதுபான வியாபாரத்திற்குத் தடை (4) 22.11 குருதி உறிஞ்சி எடுப்பதற்காகக் கூலி பெறுவது கூடும் (4) 22.10 வேட்டை, காவல், பாதுகாப்புக்காக நாய் வளர்க்கலாம் (18) 22.9 நாய் விற்ற காசு, சோதிடரின் தட்சணை, விபச்சாரியின் வருமானம் (4) 22.8 தேவைக்குப் போக மீதம் உள்ள நீரை விற்பதற்குத் தடை (5) 22.7 வசதியுள்ளவர் கடனைச் செலுத்த தாமதம் செய்யக் கூடாது (1) 22.6 கடனை அடைக்க சிரமப்படுபவருக்கு அவகாசம் அளிப்பதன் சிறப்பு (7) 22.5 திவாலானவரிடம் திரும்பப் பெற்றுக்கொள்ளும் உரிமை (4) 22.4 கடனில் தள்ளுபடி செய்வது விரும்பத் தக்கதாகும் (3) 22.3 சேதமடைந்த பழங்களுக்கான தொகைக்குத் தள்ளுபடி (5) 22.2 மரம் நடுதலின், பயிர் செய்தலின் சிறப்பு (5) 22.1 நிபந்தனையின் பேரில் தோப்பைக் குத்தகைக்கு விடுவது (4) 21.21 நிலத்தை (விளைவித்துக்கொள்ள) இரவலாக வழங்குவது (4) 21.20 ‘முஸார’ஆவும் ‘முஆஜரா’வும் (2) 21.19 பொன், வெள்ளி(நாயணங்களு)க்கு நிலத்தைக் குத்தகைக்கு விடுவது (3) 21.18 தானியத்திற்கு நிலத்தைக் குத்தகைக்கு விடுவது (2) 21.17 நிலக் குத்தகை (24) 21.16 தடை செய்யப்பட்ட வியாபார வகைகள் (6) 21.15 கனிகள் நிறைந்த பேரீச்ச மரத்தை விற்பது (4) 21.14 (மரத்திலுள்ள) செங்கனிகளை மாற்றிக் கொள்வதற்குத் தடை (14) 21.13 மரத்திலுள்ள பழங்களை முற்றுவதற்கு முன் விற்பதற்குத் தடை (10) 21.12 வியாபாரத்தில் ஏமாற்றப்படுபவர் (1) 21.11 வியாபாரத்தில் உண்மை பேசுவதும் குறைகளைத் தெளிவுபடுத்துவதும் (1) 21.10 விற்பவருக்கும் வாங்குபவருக்கும் வியாபாரத்தை முறித்துக்கொள்ளும் உரிமை (4) 21.9 அளவு தெரியாத பேரீச்சம் பழக் குவியலை விற்பதற்குத் தடை (1) 21.8 வாங்கப்பட்ட பொருள் கைக்கு வருமுன் (பிறருக்கு) விற்பது கூடாது (13) 21.7 மடி கனக்கச் செய்யப்பட்ட கால்நடைகளை விற்பனை செய்வது பற்றிய சட்டம் (5) 21.6: கிராமவாசிக்காக, நகரவாசி விற்றுக் கொடுக்கத் தடை (5) 21.5: விற்பனைக்கு வரும் சரக்குகளை இடைமறித்து வாங்கத் தடை (4) 21.4: வியாபாரத்தில் தடை செய்யப்பட்டவை (7) 21.3: ஒட்டகக் கன்று (அது பிறக்குமுன்) விற்பதற்கு தடை! (2) 21.2: கல்லெறி வியாபாரம் மற்றும் மோசடி வியாபாரம் ஆகியவை செல்லாது (1) 21.1: ‘முலாமஸா’ மற்றும் ‘முனாபதா’ ஆகிய வியாபாரங்கள் செல்லாது (3) 20.7: அடிமையான தந்தையை விடுதலை செய்வதன் சிறப்பு (1) 20.6: அடிமைகளை விடுதலை செய்வதன் சிறப்பு (4) 20.5: விடுதலை செய்த உரிமையாளரை மாற்றிக் கூறத் தடை (4) 20.4: வாரிசாகும் உரிமையை விற்பதற்கும் அன்பளிப்பாக வழங்குவதற்கும் தடை (1) 20.3: விடுதலை செய்தவருக்கே வாரிசுரிமை உரியது (9) 20.2: அடிமை (தனது முழு விடுதலைக்காக) உழைத்துப் பொருளீட்டுவது (2) 20.1: ஓர் அடிமையி(ன் விலையி)ல், ஒருவர் தமக்கான பங்கை விடுவிப்பது (1) 19.1: சுய சாபம் வேண்டுதல் (17) 18.9: கணவன் இறந்து ‘இத்தா’விலிருக்கும் பெண் துக்கம் கடைப்பிடிப்பது (11) 18.8: கர்ப்பமுற்றிருக்கும் பெண்ணின் ‘இத்தா’க் காலம், பிரசவத்துடன் முடிந்துவிடும் (2) 18.7: ‘இத்தா’விலிருக்கும் பெண் தன் தேவைக்காக வெளியே செல்லலாம் (1) 18.6: மூன்று தலாக் சொல்லப்பட்ட பெண்ணுக்கு ஜீவனாம்சம் பற்றி… (18) 18.5: ஈலாச் செய்வது, மனைவியிடமிருந்து விலகுவது, விருப்ப உரிமை அளிப்பது (5) 18.4: மனைவிக்கு (த் தம்மைப் பிரிந்துவிட) உரிமை அளிப்பது மணவிலக்கு ஆகாது (8) 18.3: மணவிலக்குச் செய்யும் நோக்கமின்றி கூறினால், அது மணவிலக்கு ஆகாது (4) 18.2: மூன்று தலாக்குகள் (3) 18.1: மாதவிடாயான மனைவியை அவளது சம்மதமின்றி மணவிலக்குச் செய்வதற்குத் தடை (14) 17.19: ஹவ்வா-வும், பெண்கள் கணவரை ஏமாற்றுதலும் (2) 17.18: மனைவியரின் நலம் நாடுதல் (4) 17.17: பயன் தரும் இவ்வுலகச் செல்வங்களுள் மிகச் சிறந்த செல்வம், நற்குணமுள்ள மனைவியே (1) 17.16: கன்னிப் பெண்ணை மணப்பது விரும்பத் தக்கதாகும் (5) 17.15: மார்க்கப் பற்றுள்ள பெண்ணை மணப்பது விரும்பத் தக்கதாகும் (2) 17.14: மனைவியருள் ஒருவர், தனது முறைநாளை மற்றவருக்கு விட்டுக்கொடுக்கலாம் (4) 17.13: மனைவியருக்கு (இரவுகளை) ஒதுக்கீடு செய்வது (1) 17.12: கன்னி கழிந்த பெண்ணுக்கும், கன்னிப் பெண்ணுக்கும் கணவன் ஒதுக்க வேண்டிய நாட்கள் (6) 17.11: சாயல் அறியும் நிபுணரின் கூற்றுப்படி, குழந்தைக்கு உரியவரைக் கண்டறிவது (3) 17.10: எஜமானரின் கீழ் வாழும் பெண்ணின் குழந்தை, அவருக்கே உரியது (2) 17.9: பெண் போர்க் கைதியுடன் உடலுறவு கொள்ளலாம் (2) 17.8: பசிக்காகத் தாய்ப்பால் அருந்தினால்தான் பால்குடி உறவு ஏற்படும் (1) 17.7: பருவ வயதை அடைந்தவருக்குப் பாலூட்டுவது (6) 17.6: ஐந்து தடவை அருந்தினால்தான் பால்குடி உறவு உண்டாகும் (2) 17.5: ஓரிரு தடவை (பெண்ணின் மார்பில்) பால் குடிப்பது பற்றிய சட்டம் (6) 17.4: மனைவியின் மகளையும் மனைவியின் சகோதரியையும் மணப்பதற்குத் தடை (2) 17.3: பால்குடிச் சகோதரரின் மகளை மணப்பது தடை செய்யப்பட்டுள்ளது (3) 17.2: பால்குடித் தந்தையின் (இரத்த பந்த) உறவினரும் மணமுடிக்கத் தகாதவரே! (6) 17.1: பிறப்பால் ஏற்படும் உறவும் பால்குடி உறவும் (2) 16.24: பாலூட்டும் மனைவியுடன் உடலுறவு கொள்ளும்போது அஸ்லுச் செய்வது வெறுக்கத் தக்கது (3) 16.23: கருவுற்றிருக்கும் பெண் போர்க் கைதியுடன் உடலுறவு கொள்வது தடை செய்யப்பட்டுள்ளது (1) 16.22: உடலுறவின்போது இடைமுறிப்பு – ‘அஸ்லு’ச் சட்டம் (12) 16.21: மனைவியுடன் நடைபெறும் உடலுறவு இரகசியங்களை வெளியே சொல்வது தடுக்கப்பட்டது (2) 16.20: ஒரு பெண், தன் கணவனின் படுக்கைக்குச் செல்ல மறுப்பதற்குத் தடை (3) 16.19: உடலுறவின் ஒழுங்குகள் (2) 16.18: உடலுறவின்போது ஓத வேண்டிய விரும்பத் தகுந்த பிரார்த்தனை (1) 16.17: மூன்று முறை மணவிலக்கு அளிக்கப்பட்ட பெண்ணின் மறுவிருப்பம் (4) 16.16: விருந்துக்கான அழைப்பை ஏற்பது பற்றிய கட்டளை (13) 16.15: ஸைனப் பின்த்து ஜஹ்ஷு (ரலி) திருமணம்; ஹிஜாப் பற்றிய வசனம்; மணவிருந்து (7) 16.14: அடிமைப் பெண்ணை விடுதலை செய்து, பின்னர் அவளை மணமுடித்துக்கொள்வதன் சிறப்பு (6) 16.13: மணக்கொடை (மஹ்ரு) என்பது … (7) 16.12: ஒருவர் தாம் மணமுடிக்க விரும்பும் பெண்ணின் முகத்தையும் இரு முன் கைகளையும் பார்ப்பது (2) 16.11 ஷவ்வால் மாதத்தில் மணமும் தாம்பத்திய உறவும் (1) 16.10: இளவயதுக் கன்னிக்கு அவளுடைய தந்தை மணமுடித்துவைத்தல் (4) 16.9: மணப் பெண்ணின் வாய் வழிச் சம்மதமும் மௌனச் சம்மதமும் (4) 16.8: திருமண (முன்) நிபந்தனைகளை நிறைவேற்றல் (1) 16.7: மணக்கொடையில்லா திருமணம் செல்லாது (5) 16.6: தம் (முஸ்லிம்) சகோதரன் கேட்டுக்கொண்டிருக்கும் ஒரு பெண்ணை, மற்றவர் கேட்கலாகாது (7) 16.5: இஹ்ராம் புனைந்தவர் திருமணம் செய்வதற்குத் தடை; அவர் பெண் கேட்பது வெறுக்கத் தக்கது (8) 16.4: மனைவியின் அத்தையை, சின்னம்மாவை மணக்கத் தடை (8) 16.3: இடைக்காலத் திருமணம், (முத்ஆ) காலாவதியானது (21) 16.2: இச்சை தூண்டப்பட்டவர், தமது இச்சையைத் தணித்துக் கொள்ளட்டும் (2) 16.1: வசதி இருந்தால் மணமுடிப்பதும் இல்லாதவர் நோன்பு நோற்பதும் (6) 15.97: குபாப் பள்ளிவாசல், அதில் தொழுவது, அதைத் தரிசிப்பது ஆகிய சிறப்புகள் (7) 15.96: இறையச்சத்தின் மீது நிறுவப்பட்ட பள்ளிவாசல் (1) 15.95: மூன்று பள்ளிவாசல்களைத் தவிர வேறெதற்கும் (புனிதப்) பயணம் கிடையாது (2) 15.94: மக்கா, மதீனாப் பள்ளிவாசல்களில் தொழுவதன் சிறப்பு (6) 15.93: ‘உஹுத்’ மலை நம்மை நேசிக்கிறது; நாமும் அதை நேசிக்கின்றோம் (3) 15.92: சொர்க்கப் பூஞ்சோலைகளுள் ஒன்று (3) 15.91: மதீனாவாசிகள் மதீனாவை விட்டு அகலும்போது அதன் நிலை (2) 15.90: மதீனாவிலேயே தங்கியிருப்பதற்கு ஆர்வமூட்டல் (2) 15.89: மதீனாவாசிகளுக்குக் கேடு நினைப்பவர்களை, அல்லாஹ் உருக்குலைத்துவிடுவான் (3) 15.88: தன்னிலுள்ள தீயவர்களை மதீனா அகற்றிவிடும் (5) 15.87: கொள்ளை நோயும் தஜ்ஜாலும் நுழைய முடியாமல் மதீனா பாதுகாக்கப்பட்டுள்ளது (2) 15.86: மதீனாவில் ஏற்படும் நெருக்கடிகளைச் சகித்துக்கொண்டு, அங்குக் குடியிருக்க ஆர்வ மூட்டல் (10) 15.85: மதீனாவின் சிறப்பு; பிரார்த்தித்ததும் புனிதமானவையும் (17) 15.84: இஹ்ராமின்றி மக்காவிற்குள் நுழைய அனுமதி (5) 15.83: அவசியத் தேவையின்றி மக்காவிற்குள் ஆயுதம் எடுததுச் செல்வதற்குத் தடை (1) 15.82: மக்காவும், அதன் புனிதமானவைகளும் (4) 15.81: முஹாஜிருக்கு மக்காவில் தக்குவதற்கு அனுமதிக்கப்பட்ட நாட்கள் (4) 15.80: ஹாஜிகள் மக்காவில் தங்குவதும் அங்குள்ள வீடுகளை வாரிசுரிமையாகப் பெறுவதும் (3) 15.79: ஹஜ், உம்ரா, அரஃபா நாள் ஆகியவற்றின் சிறப்பு (3) 15.78: இணைவைப்பவருக்கான ஹஜ் சட்டங்கள் (1) 15-77: ஹஜ் அல்லது உம்ராவிலிருந்து திரும்பும்போது துல்ஹுலைஃபாவில் தங்கித் தொழுவது (5) 15.76: பயணத்திலிருந்து திரும்பி வரும்போது ஓத வேண்டியவை (2) 15.75: பயணங்களில் வாகனத்தில் ஏறியதும் ஓத வேண்டிய துஆ (2) 15.74: மஹ்ரமான ஆணுடன் மட்டுமே பெண்ணின் ஹஜ் முதலான பயணம் (11) 15.73: ஹஜ் கடமை, ஆயுளில் ஒரு முறைதான் (1) 15.72: குழந்தையின் ஹஜ் செல்லும்; அதை ஹஜ்ஜுக்கு அழைத்துச் சென்றவருக்கும் நற்பலன் உண்டு (3) 15.71: இயலாதவருக்காகவோ, இறந்தவருக்காகவோ பிறர் ஹஜ் செய்தல் (2) 15.70: கஅபாவின் வளைந்த சுவரும் அதன் தலைவாயிலும் (1) 15.69: இறையில்லம் கஅபாவை இடித்துக் கட்டுதல் (7) 15.68: கஅபாவின் உள்ளே நுழைவதும் அதனுள் தொழுவதும் (9) 15.67: விடைபெறும் தவாஃப் மாதவிடாய் ஏற்பட்ட பெண்ணுக்குக் கடமையில்லை (8) 15.66: செல்லும் வழியில் பலிப் பிராணி பாதிப்புக்குள்ளாகிவிட்டால் … (2) 15.65: பலியிடக் கொண்டுசெல்லும் ஒட்டகத்தில், பயணம் செய்ய அனுமதி (6) 15-64: ஹரம் எல்லைக்குச் செல்லாதவர், பலிப் பிராணியை அனுப்பிவைக்கும் முறை (11) 15.63: ஒட்டகத்தை அறுக்கும் முறை (1) 15.62: பலிப் பிராணிகளுள் மாட்டிலும் ஒட்டகத்திலும் கூட்டுச் சேர்வது (8) 15.61: பலிப் பிராணிகளின் இறைச்சி, தோல், சேணம் ஆகியவை தர்மத்துக்குரியன (2) 15.60: ‘தஷ்ரீக்’ நாட்களின் இரவுகளில் மினாவில் தங்குவது கட்டாயமாகும் (2) 15.59: ‘நஃப்ரு’டைய நாளில் ‘அல்முஹஸ்ஸபி’ல் தங்குவதும் அங்குத் தொழுவதும் (9) 15.58: துல்ஹஜ் பத்தாவது நாளில் ‘தவாஃபுல் இஃபாளா’ செய்வது (2) 15.57: ஹஜ் சடங்குகளில் முன் – பின் ஆகிவிட்டால் … (6) 15.56: துல்ஹஜ் பத்தாம் நாளின் சடங்குகள் (3) 15.55: தலைமுடியை மழிப்பதும் குறைப்பதும் (6) 15.54: கற்களின் எண்ணிக்கை (1) 15.53: கல்லெறியும் நேரம் (1) 15.52: பொடிக் கற்கள் போதும் (1) 15.51: துல்ஹஜ் பிறை பத்தில் ஜம்ரத்துல் அகபாவுக்குக் கல்லெறிதல் (3) 15.50: ‘ஜம்ரத்துல் அகபா’வின் மீது கல் எறியும்போது தக்பீர் கூறுவது (4) 15.49: முஸ்தலிஃபாவிலிருந்து மினாவிற்குப் புறப்படச் செய்வது (11) 15.48: முஸ்தலிஃபாவில் ஸுப்ஹுத் தொழுகையை ஆரம்ப நேரத்தில் தொழுவது (1) 15.47: மஃக்ரிப், இஷா வை அடுத்தடுத்துத் தொழுவது (14) 15.46: அரஃபா நாளில் மினாவிலிருந்து அரஃபாவிற்குப் போகும்போது தல்பியாவும் தக்பீரும் கூறுதல் (4) 15.45: துல்ஹஜ் பத்தாவது நாளன்று கல்லெறியத் துவங்கும்வரை தல்பியாச் சொல்லிக்கொண்டிருப்பது (7) 15.44: ஸஃபா-மர்வாவுக்கிடையே ஸயீ (ஓட்டம்) ஒரே தடவைதான் (1) 15.43: ஸஃபா-மர்வாவுக்கிடையே ஸயீச் செய்வது முக்கியக் கடமையாகும் (5) 15.42: வாகனங்கள் மீதமர்ந்து தவாஃப் செய்யலாம் (6) 15.41: தவாஃபின்போது ஹஜருல் அஸ்வதை முத்தமிடுவது (5) 15.40: இறையில்லத்தில் முத்தமிடப்படும் இரு மூலைகள் (6) 15.39: தவாஃபில் விரைந்து நடப்பது விரும்பத்தக்கது (12) 15.38: மக்காவினுள் நுழையும் முன்… (4) 15.37 மக்காவினுள் நுழைவதும் வெளியேறுவதும் (3) 15.36 ரமளான் மாதத்தில் உம்ராச் செய்வதன் சிறப்பு (2) 15.35: நபியவர்களின் உம்ரா எண்ணிக்கையும் காலமும் (4) 15.34 நபியவர்களின் தல்பியாவும் பலியும் (4) 15.33: உம்ராவில் தலைமுடி குறைத்தல் (5) 15.32: இஹ்ராமின்போது பலிப் பிராணி (4) 15.31: ஹஜ்ஜுப் பருவங்களில் உம்ராச் செய்ய அனுமதி (6) 15.30: தமத்துஉ ஹஜ் (2) 15.29: இஹ்ராம் ஹாஜிக்குக் கட்டாயம் (3) 15.28: தவாஃபும் ஸயீயும் கட்டாயம் (3) 15.27: ஹஜ் உம்ரா சேர்த்தும் தனித்தும் செய்வது (3) 15.26: ஒரே இஹ்ராமில் உம்ரா ஹஜ் (3) 15.25: இஹ்ராமிலிருந்து விடுபடுதல் (3) 15.24: பலிப் பிராணியும் ஹஜ் கடமையும் (2) 15.23: தமத்துஉ ஹஜ் அனுமதிக்கப்பட்ட ஒன்றாகும் (13) 15.22: ஒருவர் வேறொருவரின் இஹ்ராமை அச்சொட்டி பூணுதல் (3) 15.21: அரஃபா பெருவெளியில் தங்கி திரும்புதல் தொடர்பான இறை கூற்று (3) 15.20: அரஃபாப் பெருவெளி முழுவதும் தங்குமிடம் (2) 15.19: நபி (ஸல்) அவர்களின் ஹஜ் (1) 15.18: உம்ராவையும் ஹஜ்ஜையும் தனித் தனியாக நிறைவேற்றி பயனடைதல் (2) 15.17: இஹ்ராமின் முறைகள் (27) 15.16: இரத்தப்போக்குடைய பெண் இஹ்ராமில் குளித்தல் (2) 15.15: இஹ்ராமிலிருந்து விடுபட முன் நிபந்தனையிட அனுமதி (5) 15.14: முஹ்ரிம் இறந்துவிட்டால் செய்ய வேண்டியவை (9) 15.13: இஹ்ராம் பூண்ட முஹ்ரிம், தம் உடலைக் கழுவிக்கொள்ள அனுமதி (1) 15.12: இஹ்ராம் பூண்ட முஹ்ரிம், தம் கண்களுக்கு மருந்திட அனுமதி (2) 15.11: இஹ்ராம் பூண்ட முஹ்ரிம், ஹிஜாமா செய்ய அனுமதி (2) 15.10: முஹ்ரிமுக்குத் தலைமுடி மழிக்க அனுமதியும் பரிகாரமும் (7) 15.09: ஹரம் எல்லைக்குள் கொல்ல அனுமதிக்கப்பட்டவைகள் (12) 15.08: இஹ்ராம் பூண்ட முஹ்ரிம் வேட்டையாடுவது குறித்து.. (9) 15.07: இஹ்ராமின்போது நறுமணம் பூசுதல் (19) 15.06: துல்ஹுலைஃபா பள்ளியில் தொழுதல் (1) 15.05: வாகனம் புறப்படுவதற்கு ஆயத்தமானவுடன் தல்பியா கூறுவது (4) 15.04: மதீனாவாசிகள் இஹ்ராம் பூண வேண்டிய இடம் (2) 15.03: தல்பியாவின் பண்பும் அதன் நேரமும் (4) 15.02: ஹஜ்/உம்ராவிற்கான இஹ்ராம் எல்லைகள் (7) 15.01: ஹஜ்/உம்ராவில் அனுமதிக்கப்பட்டவை.. (10) 14.04: துல்ஹஜ் மாதத்தின் பத்து நோன்புகள் (2) 14.02: இஃதிகாஃப் இருக்குமிடத்தினுள் நுழையும் நேரம் (1) 14.03: இறுதிப் பத்தில் வழிபாடுகளில் ஈடுபடுவது (2) 14.01: இறுதிப் பத்து நாட்களில் இஃதிகாஃப் இருத்தல் (5) 13.40: லைலத்துல் கத்ர் இரவு குறித்து.. (17) 13.39: ஷவ்வால் ஆறு நோன்பு (1) 13.37: ஷஅபான் மாத இறுதியில் நோன்பு நோற்றல் (3) 13.38: முஹர்ரம் நோன்பின் சிறப்பு (2) 13.36: சுன்னத்தான நோன்புகள் (5) 13.35: ஒரு நாள் விட்டு ஒரு நாள் நோன்பு (12) 13.34: நோன்பில்லாமல் எந்த மாதத்தையும் கடக்க விடாமலிருப்பது விரும்பத் தக்கது (9) 13.33: மறதியால் (நோன்பாளி) நோன்பு முறியாது (1) 13.32: கூடுதலான நோன்பு முடிவு செய்வதற்கும் விடுவதற்கும் அனுமதி (2) 13.31: அல்லாஹ்வின் பாதையில் செல்லும்போது சக்தி பெற்றிருப்பவர் நோன்பு நோற்பதன் சிறப்பு (2) 13.30: நோன்பின் மாண்பு (6) 13.29: நோன்பாளி, நாவைக் காப்பது (1) 13.28: நோன்பாளி விருந்துக்கு அழைக்கப்பட்டால் “நான் நோன்பாளி” என்று சொல்லிவிட வேண்டும் (1) 13.27: இறந்துபோனவரின் விடுபட்ட நோன்பை நோற்பது (5) 13.26: ரமளானில் விடுபட்ட நோன்பை ஷஅபான் மாதத்தில் ‘களா’ச் செய்தல் (2) 13.25: இறைவசனம் வேறொரு வசனத்தின் மூலம் மாற்றம் (2) 13.24: வெள்ளிக்கிழமை மட்டும் நோன்பு நோற்பது விரும்பத் தக்கதன்று (3) 13.23: அய்யாமுத் தஷ்ரீக் நாட்களில் நோன்பு நோற்பதற்குத் தடை (2) 13.22: நோன்புப் பெருநாளிலும் ஹஜ்ஜுப் பெருநாளிலும் நோன்பு நோற்பதற்குத் தடை (6) 13.20: ஆஷூரா நோன்பை எந்த நாளில் நோற்க வேண்டும்? (4) 13.19: ஆஷூரா நாளில் நோன்பு நோற்றல் (17) 13.18: அரஃபா நாளில் அரஃபாவில் தங்கும் ஹாஜிகளின் நோன்பு (4) 13.17: பயணத்தில் நோன்பு நோற்பதையோ விட்டுவிடுவதையோ தேர்ந்துகொள்ளலாம் (5) 13.16: பயணத்தில் நோன்பைக் கைவிட்டவர், பொதுப் பணியாற்றினால் கிடைக்கும் நன்மை (3) 13.15: பயணத்தில் இருப்பவர் மீதான கடமையான ரமளான் நோன்பு (11) 13.14: ரமளான் பகலில் உடலுறவில் ஈடுபடுவதற்குத் தடையும் அதன் பரிகாரமும் (5) 13.13: பெருந்துடக்குடன் வைகறைப் பொழுதை அடைந்தவரின் நோன்பு செல்லும் (6) 13.12: கட்டுப்படுத்தும் நோன்பாளிக்கு (தம் மனைவியை) முத்தமிடத் தடையில்லை (13) 13.11: தொடர்நோன்பு நோற்பதற்குத் தடை (7) 13.10: பகற் பொழுது வெளியேறி நோன்பு நிறைவடையும் நேரம் (3) 13.09: ஸஹரைத் தாமதிப்பதும் நோன்பு துறப்பதை விரைந்து செய்வதும் (6) 13.08: ஃபஜ்ரு நேரம் வந்தவுடன் நோன்பு ஆரம்பமாகிவிடும் (11) 13.07: ‘இரு பெருநாட்களின் இரு மாதங்களும் குறைவுபடாது’ நபிகளாரின் விளக்கம் (2) 13.06: (வானை) மேகம் மூடிக்கொண்டால் (மாதத்தின் நாட்கள்) முப்பதாக முழுமையாக்கப்படும் (2) 13.05: ஒவ்வோர் ஊர்க்காரர்களுக்கும் அவரவர் பார்க்கும் பிறையே பொருந்தும் (1) 13.04: மாதம் என்பது இருபத்தொன்பது நாட்களாகவும் இருக்கும் (6) 13.03: ரமளானுக்கு முந்தைய இரு நாள்களில் நோன்பு நோற்கக் கூடாது (1) 13.02: ரமளான் நோன்பு தொடக்கமும் முடிவும் (17) 13.01: ரமளான் மாதத்தின் சிறப்பு (2) 12.55: ஸகாத் வசூலிப்பவர், தடை செய்யப்பட்டதைக் கோராதவரை அவரைத் திருப்திபடுத்த வேண்டும் (1) 12.54: தர்மப் பொருள் கொண்டுவந்தவருக்காகப் பிரார்த்தித்தல் (1) 12.53: நபி (ஸல்) அன்பளிப்பை ஏற்றதும் தர்மத்தை மறுத்ததும் (1) 12.52: தர்மப் பொருள், அதன் பண்பு நீங்கி விடுதல் (5) 2.27: நாய் நக்கிய பாத்திரம் பற்றிய சட்டம் (6) 2.28: தேங்கிக் கிடக்கும் தண்ணீரில் சிறுநீர் கழிப்பதற்குத் தடை (3) 2.29: பெருந்துடக்குடையவர் தேங்கிய நீரில் இறங்கிக் குளிக்கத் தடை (1) 2.30: பள்ளிவாசலில் சிறுநீர் கழித்தால்… (3) 2.31: தாய்பால் குடிக்கும் குழந்தையின் சிறுநீரைக் கழுவும் சட்டம் (4) 2.32: விந்து பற்றிய சட்டம் (4) 2.33: மாதவிடாய் இரத்தம் கழுவும் முறை (1) 2.34: சிறுநீரைச் சுத்தம் செய்வது கட்டாயம் (1) 3.01: மாதவிடாயான மனைவியைக் கீழாடைக்கு மேல் அணைத்துக் கொள்வது. (3) 3.02: மாதவிடாயான மனைவியுடன் ஒரே போர்வைக்குள் படுத்துக் கொள்வது. (2) 3.03: மாதவிடாயான பெண் செய்ய அனுமதிக்கப்பட்டவை (11) 3.04: இச்சை நீர் (3) 3.05: உறங்கி எழுந்ததும் முகத்தையும் கையையும் கழுவுதல் (1) 3.06: பெருந்துடக்காளி செய்ய வேண்டியவை (8) 3.07: மதன நீர் வெளிப்பட்ட பெண்ணுக்குக் குளியல் கடமை. (5) 3.08: ஆண்/பெண் (விந்து-மதன)நீரிலிருந்துதான் குழந்தை உருவாகிறது. (1) 3.09: பெருந்துடக்கிற்கான குளியல் முறை (5) 3.10: பெருந்துடக்கு குளியல் தொடர்பானவை (14) 3.11: குளிக்கும் போது மூன்றுமுறை தண்ணீர் ஊற்றுதல் (4) 3.12: குளிக்கும் பெண்களின் சடைமுடி பற்றிய சட்டம் (2) 3.13: மாதவிடாய் குளியலின் போது கஸ்தூரி பயன்படுத்துதல் (2) 3.14: தொடர் உதிரப் போக்குடைய பெண்களின் தொழுகை மற்றும் குளியல் (5) 3.15: மாதவிடாய் நாட்களில் விடுபட்ட கடமைகள் (3) 3.16: குளிப்பவர் திரையிட்டுக் கொள்தல் (3) 3.17: பிறரின் மறையுறுப்பைப் பார்த்தல் (1) 3.18: தனித்துக் குளிக்கும் போது ஆடையின்றி குளித்தல் (1) 3.19: மறையுறுப்பை மறைத்துக் கொள்வதில் கவனம் (3) 3.21: (விந்து)நீர் வெளிப்பட்டாலே (குளியல்)நீர் கடமையாகும் (9) 3.22: ஆண்-பெண் குறிகள் இணைந்து விட்டால் குளியல் கடமையாகும் (3) 3.23: சமைக்கப்படவற்றை உண்டால் மீண்டும் உளூ செய்தல் (3) 3.24: சமைக்கப் பட்டவற்றை உண்டால் உளூச் செய்யும் கட்டாயம் மாற்றப் பட்டது (8) 3.25: ஒட்டக இறைச்சி உண்டால் உளூச் செய்ய வேண்டும் (1) 3.26: வாயு பிரிந்த சந்தேகம் ஏற்பட்டாலும் தொழலாம் (2) 3.27: பதனிடப்படுவதால் செத்த பிராணியின் தோல் தூய்மை ஆகும் (7) 3.28: தயம்மும் (6) 3.29: ஒரு முஸ்லிம் (பெருந்துடக்கு ஏற்பட்டதால்) அசுத்தமாகிவிட மாட்டார். (2) 3.30: பெருந்துடக்கு போன்ற நிலைகளிலும் அல்லாஹ்வைத் துதித்தல். (1) 3.31: சிறுதுடக்காளி (உளூச் செய்யாமல்) உண்ணலாம் (4) 3.32: கழிப்பிடத்திற்குச் செல்லும்போதான பிரார்த்தனை (1) 3.33: உட்கார்ந்து கொண்டு உறங்குவது உளூவை முறிக்காது. (4) 4.01: தொழுகை அழைப்பின் தொடக்கம் (1) 4.02: தொழுகை அறிவிப்பு தொடர் அமையும் விதம் (3) 4.03: தொழுகை அழைப்பு முறை (1) 4.04: ஒரு பள்ளிவாசலுக்கு இரு தொழுகை அழைப்பாளர்கள் (1) 4.05: பார்வையற்றவர் தொழுகை அழைப்பு விட நிபந்தனை (1) 4.06: போரின் போது இணைவைப்பாளர் நாட்டில் தொழுகை அழைப்பு விடுக்கப்பட்டால் (1) 4.07: தொழுகை அழைப்பைச் செவியுறுபவர் செய்ய வேண்டியவை (4) 4.08: தொழுகை அழைப்பின் சிறப்பும் ஷைத்தான் வெருண்டோடுவதும் (6) 4.09: இரு கைகளையும் தோள் புஜத்துக்கு உயர்த்துதல் (4) 4.10: அல்லாஹு அக்பர், ஸமி அல்லாஹு லிமன் ஹமிதஹ் கூறும் இடங்கள் (5) 4.11: தொழுகையில் அல்ஃபாத்திஹா அத்தியாயம் ஓதுதல் (8) 4.12: இமாமைப் பின்பற்றித் தொழுபவர் உரத்து ஓதலாகாது (2) 4.13: பிஸ்மில்லாஹ்வை(த் தொழுகையில்) உரத்து ஓதாலாகாது என்போரின் வாதம் (2) 4.14: அத்தியாயங்களின் துவக்கம் “பிஸ்மில்லாஹ்” குறித்த வாதம் (1) 4.15: தக்பீருக்குப் பின்னும் சஜ்தாவிலும் கைகளை வைக்கும் முறை (1) 4.16: தொழுகையில் அத்தஹிய்யாத் ஓதுவது (4) 4.17: இறுதி அத்தஹியாத்திற்குப் பின் ஸலவாத் கூறுதல் (4) 4.18: ஸமி அல்லாஹு லிமன் ஹமிதஹ், ரப்பனா ல(க்)கல் ஹம்து, ஆமீன் ஆகியவை கூறுவது (5) 4.19: இமாமை மஃமூம் பின்தொடர்வது (5) 4.20: இமாமை முந்துவதற்குத் தடை (4) 4.21: இமாமைப் பின்பற்றுவதில் சட்ட மாற்றம் (10) 4.22: இமாம் வருவதற்குத் தாமதமானால்… (2) 4.23: தொழுகையில் இமாமுக்கு ஏதாவது உணர்த்த விரும்பினால்… (1) 4.24: தொழுகையை முழுமையாக உள்ளச்சத்துடன் தொழல் (4) 4.25: தொழுகையில் இமாமை முந்தாமல் இருத்தல் (7) 4.26: தொழும்போது வானத்தை அண்ணாந்து பார்ப்பதற்குத் தடை (2) 4.27: தொழுகையில் ஒழுங்குகள் (3) 4.28: தொழுகையில் வரிசைகளைப் பேணுதல் (11) 4.29: ஆண்களுக்குப் பின்னால் தொழும் பெண்கள் தலை உயர்த்தும் முறை (1) 4.30: பெண்கள் பள்ளிவாசலுக்குச் செல்தல், நறுமணம் பூசுதல் (11) 4.31: தொழுகையில் அச்சநிலையில் குர்ஆன் ஓதும் முறை (2) 4.32: குர்ஆன் ஓதப்படும்போது செவிதாழ்த்திக் கேட்க வேண்டும். (2) 4.33: ஸுப்ஹுத் தொழுகையில் உரத்துக் குர்ஆன் ஓதுதல் (4) 4.34: லுஹ்ரு, அஸ்ருத் தொழுகைகளில் குர்ஆன் ஓதுதல் (8) 4.35: ஸுப்ஹுத் தொழுகையில் குர்ஆன் ஓதுதல் (13) 4.36: இஷாத் தொழுகையில் குர்ஆன் ஓதுவது (8) 4.37: தொழுகையைச் சுருக்கி, நிறைவுறத் தொழுவிப்பதற்கான கட்டளை (11) 4.38: தொழுகையின் நிலைகளை நிதானமாக, சுருக்கி, நிறைவாகச் செய்வது (4) 4.39: தொழுகையில் இமாமை முந்தி விடாமலிருத்தல் (5) 4.40: ருகூஉவிலிருந்து தலையை உயர்த்திய பின் ஓத வேண்டியவை (5) 4.41: ருகூஉவிலும் ஸஜ்தாவிலும் குர்ஆன் ஓதுவதற்குத் தடை (6) 4.42: ருகூஉவிலும் ஸஜ்தாவிலும் ஓத வேண்டியவை (9) 4.44: ஸஜ்தாவின் போது தரையில் படவேண்டிய உறுப்புகள் (7) 4.45: சீராக ஸஜ்தா செய்தல் (2) 4.46: தொழுகை முறைத் தொகுப்பு (5) 4.47: தனித்துத் தொழுபவர் தடுப்பு ஒன்றை வைத்துக் கொள்வது (13) 4.48: தொழுகையில் குறுக்கே செல்பவரைத் தடுப்பது (4) 4.49: தொழுபவர், தடுப்புக்கு நெருக்கமாக நிற்க வேண்டும் (3) 4.50: தொழுபவருக்கான குறுக்குத் தடுப்பின் அளவு (2) 4.51: தொழுபவருக்குக் குறுக்கே படுத்திருப்பது (8) 4.52: ஒரே ஆடை அணிந்து தொழும் முறை (9) 5.01: பூமியில் எழுப்பப்பட்ட முதலாவது இறையாலயம் (8) 5.02: மஸ்ஜிதுந் நபவீ கட்டப்பட்ட வரலாறு (2) 5.03: தொழுகைத் திசை(கிப்லா) கஅபாப் பள்ளிக்கு மாற்றம் (4) 5.04: மண்ணறைகளில் செய்யக்கூடாதவை (6) 5.05: மஸ்ஜிதுகள் கட்டுவதன் சிறப்பும் அதற்கான ஆர்வமூட்டலும் (2) 5.06: ருகூஉவில் உள்ளங்கைகளை வைப்பதற்கான சட்டத் திருத்தம் (5) 5.07: இரு குதிகால்கள்மீது (தொழுகை அமர்வில்) அமர அனுமதி (1) 5.08: தொழுகையில் பேசிக் கொள்ள இருந்த அனுமதி நீக்கம் (6) 5.09: தொழுகைக்கு இடையில் செய்ய அனுமதிக்கப்பட்டவை (2) 5.10: குழந்தைகளைச் சுமந்துகொண்டு தொழுவதற்கு அனுமதி (3) 5.11: தொழுகையின்போது ஓரிரு அடிகள் நடக்க அனுமதி (1) 5.12: இடுப்பில் கையூன்றிக் கொண்டு தொழுவது வெறுக்கத் தக்கது (1) 5.13: தொழும்போது மண்ணைச் சமப்படுத்துதல் வெறுக்கத் தக்கது (3) 5.14: பள்ளிவாசலில் எச்சில் துப்பத் தடை (10) 5.15: காலணி அணிந்து கொண்டு தொழுவதற்கு அனுமதி (1) 5.16: கவனத்தை ஈர்க்கும் ஆடை அணிந்து தொழுதல் வெறுக்கப்பட்டது (3) 5.17: சிறுநீர்/மலம் அடக்குதல், உணவு காக்க வைத்தல் நிலையில் தொழுதல் (4) 5.18: துர்நாற்றத்துடன் பள்ளிச்செல்லுதலும் அவரை வெளியேற்றலும் (10) 5.19: பள்ளிவாசலினுள் காணாமற்போன பொருளைத் தேடத் தடை (3) 5.20: தொழுகையில் ஏற்படும் மறதிக்குப் பரிகாரம் (17) 5.21: ஸஜ்தா திலாவத் (9) 5.22: அத்தஹிய்யாத்தில் அமரும் முறை (5) 5.23: தொழுகையை நிறைவு செய்யும்போது ஸலாம் கூறும் முறை (3) 5.24: தொழுத பின்னர் திக்ரு (3) 5.25: மண்ணறை வேதனையிலிருந்து பாதுகாப்புக் கோருதல் (3) 5.26: தொழுகையில் பாதுகாப்புக் கோரப்பட வேண்டியவை (8) 5.27: தொழுகைக்குப்பின் திக்ரு செய்தல் (9) 5.28: தொடக்கத் தக்பீருக்குப் பின் கூறவேண்டியவை (4) 5.29: தொழுகையில் கலந்துகொள்ள செல்லும் முறை (5) 5.30: தொழுகைக்காக மக்கள் எப்போது எழுந்து நிற்க வேண்டும்? (5) 5.31: கூட்டுத்தொழுகையை அடைந்துகொள்ள நிபந்தனை (5) 5.32: ஐவேளைத் தொழுகை நேரங்கள் (13) 5.33: கடுங்கோடையில் ஜமாஅத் தொழுகை (8) 5.34: கடுங்கோடையில்லா சமயத்தில் ஜமாஅத் தொழுகை (4) 5.35: அஸ்ருத் தொழுகையின் நேரம் (7) 5.36: அஸ்ருத் தொழுகையைத் தவறவிட்டால்.. (3) 5.37: அஸ்ரு நடுத்தொழுகை என்போரின் சான்று (6) 5.38: ஸுப்ஹு, அஸ்ருத் தொழுகைகளின் சிறப்புகள் (6) 5.39: மஃக்ரிபுத் தொழுகையின் ஆரம்ப நேரம் (2) 5.40: இஷாத் தொழுகையின் நேரமும் அதைத் தாமதமாகத் தொழுவதும் (12) 5.41: ஸுப்ஹுத் தொழுகையின் நேரம் மற்றும் ஓதப்படும் (குர்ஆன் வசனங்களின்) அளவு (7) 5.42: தொழுகைக்கு உரிய நேரத்தைத் தாமதப்படுத்துதல் (7) 5.43: கூட்டுத் தொழுகையின் சிறப்பும் அதைத் தவற விடுவது பற்றிய கண்டனமும் (10) 5.44: தொழுகை அழைப்பைச் செவியுறுபவர் பள்ளிவாசலுக்குச் செல்வது கட்டாயமாகும் (1) 5.45: கூட்டுத் தொழுகை என்பது நேர்வழியைச் சார்ந்தது (2) 5.46: பாங்கு கூறிய பின்னர் பள்ளிவாசலிலிருந்து வெளியேறத் தடை (2) 5.47: இஷா மற்றும் ஸுப்ஹு கூட்டாகத் தொழுவதன் சிறப்பு (4) 5.48: கூட்டுத் தொழுகையைத் தவிர்ப்பதற்கான அனுமதி (1) 5.49: நஃபில் தொழுகைகளை ஜமாஅத்தாகத் தொழுதல் (6) 5.50: கூட்டுத் தொழுகைக்காகக் காத்திருப்பதன் சிறப்பு (5) 5.51: பள்ளிவாசலுக்கு நடந்து செல்வதன் சிறப்பு (6) 5.52: தொழுகைக்கு நடந்து செல்பவருக்குக் கிடைக்கும் பலன்கள் (4) 5.53: உதயம்வரை தொழுத இடத்தில் அமர்ந்திருப்பதன் சிறப்பு (3) 5.54: தொழுகைக்குத் தலைமையேற்க அதிகத் தகுதியுடையவர் (5) 5.55: எல்லாத் தொழுகைகளிலும் குனூத் ஓதும் காலகட்டம் (15) 5.56: விட்டுப்போனத் தொழுகைகளைத் தொழுதல் (8) 6.01: பயணிகளின் தொழுகை; சுருக்கித் தொழுதல் (20) 6.02: மழையின்போது இருப்பிடங்களில் தொழுதுகொள்ளலாம் (4) 6.03: நஃபில் தொழுகைகளை வாகனத்தில் செல்பவர் தொழலாம் (10) 6.04: பயணத்தில் இரு தொழுகைகளைச் சேர்த்து தொழலாம் (7) 6.05: உள்ளூரில் இருக்கும்போது இரு தொழுகைகளை இணைத்து தொழுதல் (10) 6.06: தொழுது முடித்தபின் வலம், இடம் திரும்பி அமர்தல் (3) 6.07: இமாமுக்கு வலப்பக்க வரிசையில் நிற்பது விரும்பத்தக்கது (1) 6.08: இகாமத் கூறத் தொடங்கி விட்டால் நஃபில் தொழுவது வெறுக்கத்தக்கது (5) 6.09: பள்ளிவாசலுக்குள் நுழையும்போது கூறவேண்டிய துஆ (1) 6.10: பள்ளிக் காணிக்கை தொழுகை தொடர்பாக (4) 6.11: பயணத்திலிருந்து திரும்பியவர் இரண்டு ரக்அத் தொழுதல் (3) 6.12: முற்பகல் (ளுஹா) தொழுகை எண்ணிக்கை (11) 6.13: ஃபஜ்ருடைய இரு ரக்அத் சுன்னத் தொழுகை (15) 6.14: சுன்னத் தொழுகைகளின் சிறப்பும் எண்ணிக்கைகளும்! (3) 6.15: நஃபில் தொழுகைகளைத் தொழும் முறைகள் (14) 6.16: இரவுத் தொழுகை (18) 6.17: இரவுத் தொழுகையின் ஒருங்கிணைந்த விபரங்கள் (4) 6.18: அவ்வாபீன் தொழுகை (2) 6.19: இரவுத் தொழுகை, வித்ருத் தொழுகை ரக்அத்கள் (16) 6.20: வித்ருத் தொழுகை நேரம் (2) 6.21: தொழுகையில் மிகச் சிறந்தது (2) 6.22: இரவில் பிரார்த்தனை ஏற்கப்படும் நேரம் (2) 6.23: இரவின் இறுதி நேரத்தில் பிரார்த்தனை (5) 6.24: ‘கியாமு ரமளான்(தராவீஹ்) தொழ ஆர்வமூட்டல் (8) 6.25: இரவுத் தொழுகையில் பிரார்த்திப்பதும் நின்று வணங்குவதும் (17) 6.26: இரவுத் தொழுகையில் நீண்ட நேரம் (நின்று) குர்ஆன் ஓதுவது (2) 6.27: தொழாமல் விடியும்வரை உறங்குபவர் (3) 6.28: கூடுதலான நஃபில் தொழுகைகள் (6) 6.29: நற்செயல்களை வழக்கமாகச் செய்வதன் சிறப்பு. (4) 6.30: இபாதத் தூக்கத்தால் தடைப்பட்டால்… (5) 6.31: குர்ஆனின் தொடர்பைப் பற்றிப் பிடித்துக்கொள்ளக் கட்டளை (7) 6.32: குர்ஆனை இனிய குரலில் ஓதுவது விரும்பத் தக்கதாகும் (5) 6.33: மக்கத்து வெற்றி நாளில்… (2) 6.34: குர்ஆனை ஓதுவதால் இறங்கும் அமைதி (3) 6.35: குர்ஆனை மனனமிட்டவரின் சிறப்பு (1) 6.36: குர்ஆனை ஓதுகின்ற இருவகையினரின் தனிச் சிறப்புகள் (1) 6.37: குர்ஆனில் தேர்ந்த மேன்மக்கள் முன்னிலையில் குர்ஆன் ஓதுவது (2) 6.38: குர்ஆனைச் செவியேற்பதன் சிறப்பு (3) 6.39: குர்ஆனைக் கற்பது மற்றும் ஓதுவதன் சிறப்பு (2) 6.40: குர்ஆன் ஓதுவதன் சிறப்பும் அல்பகரா அத்தியாயத்தின் சிறப்பும் (2) 6.41: ஸூரத்துல் ஃபாத்திஹா, அல்பகரா அத்தியாயத்தின் இறுதி வசனங்களின் சிறப்பு (2) 6.42: ஸூரத்துல் கஹ்ஃப் மற்றும் ஆயத்துல் குர்ஸீ ஆகியவற்றின் சிறப்பு (3) 6.43: குல் ஹுவல்லாஹு அஹது (அத்தியாயத்தை) ஓதுவதன் சிறப்பு (4) 6.44: அல்முஅவ்விதத்தைன் (பாதுகாவல்) அத்தியாயங்களை ஓதுவதன் சிறப்பு (2) 6.45: குர்ஆனின்படி தாமும் செயல்பட்டுப் பிறருக்கும் அதைக் கற்பிப்பவரின் சிறப்பு (4) 6.46: குர்ஆன் ஏழு (வட்டார) மொழிநடையில் அருளப்பெற்றுள்ளது என்பதன் விளக்கம் (4) 6.47: குர்ஆனை வேகமாக ஓதுவதைத் தவிர்த்தல் (4) 6.48: குர்ஆன் ஓதும் முறைகளுள் சில (4) 6.49: தொழத் தடுக்கப்பட்ட நேரங்கள். (8) 6.50: அம்ரு பின் அபஸா (ரலி) இஸ்லாத்தை ஏற்றமை (1) 6.51: சூரியன் உதிக்கும் நேரத்தையும் மறையும் நேரத்தையும் தேர்ந்தெடுத்துத் தொழாதீர்கள்! (2) 6.52: நபி (ஸல்) அஸ்ருக்குப் பிறகு தொழுதுவந்த இரண்டு ரக்அத்கள் எவை? (5) 6.53: மஃக்ரிப் தொழுகைக்கு முன் இரண்டு ரக்அத்கள் தொழுவது விரும்பத் தக்கது (2) 6.54: பாங்குக்கும் இகாமத்துக்கும் இடையிலுள்ள தொழுகை (1) 6.55: அச்சச் சூழல் தொழுகை (8) 7.01: வெள்ளிக்கிழமையில் குளிப்பது வயதுவந்த ஒவ்வோர் ஆண் மீதும் கடமை (7) 7.02: வெள்ளிக்கிழமையில் பல் துலக்குவதும் நறுமணம் பூசுவதும் (4) 7.03: வெள்ளிக்கிழமை சொற்பொழிவின்போது அமைதி காத்தல் (2) 7.04: வெள்ளிக்கிழமையில் (பிரார்த்தனை ஏற்கப்படுவதற்கு) உள்ள ஒரு நேரம் (4) 7.05: வெள்ளிக்கிழமையின் சிறப்பு (2) 7.06: இந்தச் சமுதாயத்தின் (சிறப்பு வழிபாட்டு) நாள் வெள்ளிக்கிழமை (4) 7.07: வெள்ளிக்கிழமை (தொழுகைக்கு) முன்னதாகச் செல்வதன் சிறப்பு (2) 7.08: மௌனமாக (வெள்ளிக்கிழமை) உரையைச் செவியேற்பவரின் சிறப்பு (2) 7.09: சூரியன் (உச்சியிலிருந்து) சாயும்போது ஜும்ஆத் தொழுவது (5) 7.10: தொழுகையின் உரைகளும் இடையே (இமாம்) அமர்வதும் (3) 7.11: வியாபாரத்தையோ வேடிக்கையையோ கண்டால் (62:11ஆவது) இறைவசனம் (4) 7.12: ஜும்ஆத் தொழுகையை(த் தொழாமல்) கைவிடுவதற்குக் கண்டனம் (1) 7.13: (ஜும்ஆத்) தொழுகையையும் (குத்பா) உரையையும் சுருக்கமாக அமைத்தல் (11) 7.14: இமாம் (ஜும்ஆ) உரை நிகழ்த்தும்போது காணிக்கை தொழுகை (6) 7.15: பொது போதனைக்கு நடுவில் தனி போதனை (1) 7.16: ஜும்ஆத் தொழுகையில் ஓத வேண்டியவை (3) 7.17: வெள்ளிக்கிழமை (ஃபஜ்ருத் தொழுகையில்) ஓத வேண்டியவை (3) 7.18: ஜும்ஆவுக்குப் பின் தொழ வேண்டியவை (16) 8.01: பெருநாள் திடலில் பெண்கள் பங்கேற்பது (3) 8.02: பெருநாள் திடலில் தொழுகைக்கு முன்போ பின்போ தொழக் கூடாது (1) 8.03: இரு பெருநாள் தொழுகைகளில் ஓதக் கூடியவை (2) 8.04: பெருநாட்களில் பாவமில்லா விளையாட்டுகளில் ஈடுபட அனுமதி (7) 9.00: இமாம் (மழைத் தொழுகையில்) மேல்துண்டை மாற்றிப் போட்டுக் கொள்வது (4) 9.01: மழைவேண்டிப் பிரார்த்திக்கும்போது இருகைகளை உயர்த்துதல் (3) 9.02: மழைவேண்டிப் பிரார்த்தித்தல் (2) 9.03: கடும் காற்றையும் மேகத்தையும் காணும்போதும்.. மழை பெய்யும்போதும்.. (3) 9.04: கீழைக் காற்று (’ஸபா’) மற்றும் மேலைக் காற்று (’தபூர்’) பற்றிய குறிப்புகள் (1) 10.01: சூரிய கிரகணத் தொழுகை (7) 10.02: கிரகணத் தொழுகையின்போது மண்ணறை வேதனை பற்றி நினைவு கூர்வது (1) 10.03: கிரகணத் தொழுகையின்போது சொர்க்கமும் நரகமும் (6) 10.04: கிரகணத் தொழுகையில் எட்டு ருகூஉகளும் நான்கு ஸஜ்தாக்களும்.. (2) 10.05: கிரகணத் தொழுகைக்காக, “அஸ்ஸலாத்து ஜாமிஆ” அறிவிப்பு.. (8) 11.01: மரணத் தருவாயில் ‘லா இலாஹ இல்லல்லாஹ்’ (எனும் கலிமா)வை நினைவூட்டுதல் (2) 11.02: துன்பம் நேரும்போது வேண்டக்கூடிய பிரார்த்தனை (2) 11.03: நோயாளியிடமும் மரணத் தருவாயில் இருப்பவரிடமும் சொல்ல வேண்டியவை (1) 11.04: உயிர் பிரிந்தவுடன் இறந்தவருக்குச் செய்ய வேண்டியவை (1) 11.05: இறப்பவரின் பார்வை தனது உயிரை நோக்கி நிலைகுத்தி நிற்றல் (1) 11.06: இறந்தவருக்காக அழுவது (3) 11.07: நோயாளிகளைச் சந்தித்து உடல்நலம் விசாரித்தல் (1) 11.08: பொறுமை என்பது துன்பத்தின் முதல் நிலையில் கடைப்பிடிப்பதாகும் (2) 11.09: இறந்தவருக்காக ஒப்பாரி வைத்து அழுதால்.. (14) 11.10: ஒப்பாரிக்குக் கடுமையான கண்டனம் (5) 11.11: ஜனாஸாவின் இறுதி ஊர்வலத்தைப் பின்தொடர்ந்து செல்வதற்குப் பெண்களுக்குத் தடை (2) 11.12: மையித்தைக் குளிப்பாட்டுதல் (4) 11.13: மய்யித்திற்கு ‘கஃபன்’ உடை அணிவித்தல் (4) 11.14: மய்யித்தை மூடிவைத்தல் (1) 11.15: மய்யித்திற்கு அழகிய முறையில் கஃபன் அணிவித்தல் (1) 11.16: இறந்தவர் உடலைத் துரிதமாக அடக்கம் செய்தல் (2) 11.17: ஜனாஸாத் தொழுகையின் மற்றும் ஜனாஸாவைப் பின்தொடர்வதன் சிறப்பு (6) 11.18: மய்யித்துக்காக நூறு பேர் தொழுது செய்யும் பரிந்துரை ஏற்கப்படும் (1) 11.19: மய்யித்துக்காக நாற்பது பேர் பரிந்துரை (1) 11.20: இறந்தவர் குறித்துப் புகழ்ந்து, அல்லது இகழ்ந்து பேசப்படுதல் (1) 11.21: ஓய்வு பெற்றவரும் ஓய்வளித்தவரும் (1) 11.22: ஜனாஸாத் தொழுகையில் சொல்ல வேண்டிய தக்பீர்கள் (6) 11.23: மண்ணறை அருகில் (ஜனாஸாத் தொழுகை) தொழுவது (4) 11.24: ஜனாஸாவுக்காக எழுந்து நிற்பது (7) 11.25: ஜனாஸாவுக்காக எழுந்து நிற்கும் வழக்கம் மாற்றப்பட்டது (3) 11.26: இறந்தவருக்காக ஜனாஸாத் தொழுகையில் செய்யும் பிரார்த்தனை (2) 11.27: ஜனாஸாத் தொழுகையின்போது இமாம் எந்த இடத்தில் நிற்க வேண்டும்? (2) 11.28: ஜனாஸாத் தொழுகை தொழுதுவிட்டு வாகனத்தில் ஏறித் திரும்பிச் செல்லலாம் (2) 11.29: உட்குழியும் மையித்தின் மேல் செங்கற்களை அடுக்குவதும் (1) 11.30: கப்றுக் குழியினுள் போர்வையை விரித்து (மையித்தை) வைப்பது (1) 11.31: கப்றைத் தரை மட்டமாக்க உத்தரவு (2) 11.32: கப்றுகளைக் காரையால் பூசுவதோ அதன் மீது கட்டடம் எழுப்புவதோ கூடாது (2) 11.33: கப்றின்மீது அமர்வதும் அதன் மீது தொழுவதும் தடுக்கப்பட்டவை (3) 11.34: பள்ளிவாசலில் ஜனாஸாத் தொழுகை நடத்துவது (3) 11.35: மையவாடிக்குள் கூற வேண்டியதும் பிரார்த்திப்பதும் (3) 11.36: நபி (ஸல்), தம் தாயாரின் கப்றைக் காண்பதற்கு இறைவனிடம் அனுமதி கோரியது (3) 11.37: தற்கொலை செய்தவருக்கு, (ஜனாஸா) தொழுகையைக் கைவிட்டது (1) 12.00: பல வகை வள வரிகள் (5) 12.01: பத்து சதவீத ஸகாத்; அல்லது ஐந்து சதவீத ஸகாத் (1) 12.02: ஒரு முஸ்லிம் மீது அவர்தம் அடிமைக்காகவும் குதிரைக்காகவும் ஸகாத் கடமை இல்லை (3) 12.03: ஸகாத்தைச் சமர்ப்பிப்பதும் ஸகாத் கொடுக்க மறுப்பதும் (1) 12.04: பெருநாள் தர்மமாகப் பேரீச்சம் பழம், பார்லி (10) 12.05: பெருநாள் தொழுகைக்கு முன்பே பெருநாள் தர்மத்தை வழங்க கட்டளை (2) 12.06: ஸகாத் வழங்க மறுப்பது குற்றமாகும் (4) 12.07: ஸகாத் வசூலிப்பவர்களிடம் கனிவுடன் நடந்துகொள்வது (1) 12.08: ஸகாத் வழங்காதவருக்கான கடும் தண்டனை (2) 12.09: தர்மம் செய்வதற்கு ஆர்வமூட்டல் (2) 12.10: செல்வத்தைச் சேமித்தோர் பற்றிய கண்டனம் (2) 12.11: தர்மம்: ஆர்வமூட்டலும் நற்கூலி உண்டு என்ற நற்செய்தியும் (2) 12.12: செலவழிப்பதன் சிறப்பும் வழங்காதவனின் பாவமும் (4) 12.13: தமக்கும், குடும்பத்தாருக்கும், உறவினர்களுக்குமாக செலவிடுதல் (1) 12.14: இணை வைக்கும் உறவுகளுக்குச் செலவழிப்பதன் சிறப்பு (8) 12.15: இறந்தவருக்காகத் தர்மம் செய்தல் (1) 12.16: எல்லா நல்லறமும் ஸதகா எனப்படும் (5) 12.17: அறவழியில் செலவு செய்பவரும் செய்யாதவரும் (1) 12.18: தர்மம் செய்வதற்கு ஆர்வமூட்டல் (5) 12.19: தர்மம் (இறைவனிடம்) ஏற்கப்படுவதும் வளர்வதும் (3) 12.20: இன் சொல்லையேனும் தர்மம் செய்து நரகத்திலிருந்து பாதுகாப்பு பெறல் (5) 12.21: தர்மத்தின் அளவில் குறை காண தடை (1) 12.22: பாலுக்காக இரவல் வழங்கப்படும் கால்நடைகளின் சிறப்பு (2) 12.23: வள்ளலுக்கும் கஞ்சனுக்குமான உதாரணம் (3) 12.24: உரியவருக்குத் தர்மம் சேரவில்லையேனும் பலன் (1) 12.25: உரிமையாளரின் அனுமதியுடன் தர்மம் செய்தவருக்கும் பலன் (3) 12.26: ஓர் அடிமை தன் உரிமையாளரின் செல்வத்திலிருந்து (அறவழியில்) செலவழித்தல் (3) 12.27: தர்மத்தையும் இதர நற்செயல்களையும் இணைத்துச் செய்தவர் (3) 12.28: அறவழியில் தாராளமாக செலவிடலும் கணக்கு பார்ப்பது விரும்பத்தக்கதல்ல என்பதும் (3) 12.29: சிறிய அளவு தர்மம் (1) 12.30: இரகசியமாகத் தர்மம் செய்வதன் சிறப்பு (1) 12.31: மிகச் சிறந்த தர்மம் (2) 12.32: சிறந்த கை (4) 12.33: யாசிப்பதற்குத் தடை (3) 12.34: ஏழை என்பவன், அடிப்படைத் தேவைகளுக்குப் போதிய பொருளாதாரம் இல்லாதவன் (2) 12.35: மக்களிடம் யாசிப்பது வெறுக்கப்பட்டதாகும் (6) 12.36: யாருக்கு யாசிக்க அனுமதி? (1) 12.37: எதிர்பார்ப்பு இல்லாமல், யாசிக்காமல் வாழ்பவருக்கு வழங்கப்பட்டால் பெற்றுக்கொள்ளலாம் (4) 12.38: உலகாதாயத்தின் மீது பேராசை கொள்வது விரும்பத் தக்கதன்று (2) 12.39: இரு ஓடைகள் இருந்தாலும் மூன்றாவது ஓடையை எதிர்பார்த்தல் (4) 12.40: வாழ்க்கை வசதிகள் அதிகமாக இருப்பது செல்வமன்று (1) 12.41: இவ்வுலகத்தின் கவர்ச்சி குறித்து அஞ்சுதல் (3) 12.42: சுயமரியாதை மற்றும் பொறுமையின் சிறப்பு (1) 12.43: போதுமான வாழ்வாதாரமும் போதுமென்ற மனமும் (4) 12.44: அருவருப்பாகப் பேசி, கடுஞ் சொற்களால் கேட்டவருக்கும் தானம் வழங்குவது (4) 12.45: இறைநம்பிக்கை, (வறுமையால்) கேள்விக்குள்ளாக்கப்படுபவருக்கு உதவுதல் (1) 12.46: இஸ்லாத்தை ஏற்றவர்களுக்கு வழங்கலும் இறை நம்பிக்கை வலுவானவர் பொறுமை கொள்ளலும் (8) 12.47: காரிஜிய்யாக்களும் அவர்களின் தன்மைகளும் (10) 12.48: காரிஜிய்யாக்களைக் கொல்லுவதற்கு ஊக்கப்படுத்துதல் (4) 12.49: காரிஜிய்யாக்கள் படைப்பினங்களிலேயே தீயவர்கள் ஆவர் (3) 12.50: தூதரின் குடும்பத்தார் ஸகாத் பெறுவதற்குத் தடை (6) 12.51: நபி (ஸல்) குடும்பத்தாரைத் தர்மப் பொருட்கள் வசூலிக்கப் பயன்படுத்தலாகாது (1) 2.26: அசுத்தமான கையைப் பாத்திரத்தில் நுழைத்தல் (2) 2.25: ஒருநாள் தொழுகைகளை ஒரு உளூவில் தொழ அனுமதி (1) 2.24: காலுறையில் மஸஹு செய்து தொழுவதற்கான வரம்பு (1) 2.23: முன் தலை மற்றும் தலைப்பாகை மீது மஸஹு செய்தல் (4) 2.22: காலுறையில் மஸஹு செய்தல் (9) 2.21: தண்ணீரால் கழுவித் துப்புரவு செய்தல் (3) 2.20: மலம் கழிப்பதற்குத் தடையுள்ள இடங்கள் (1) 2.19: செயல்களை வலப் புறமிருந்து தொடங்குதல். (2) 2.18: வலக் கரத்தால் கழுவத் தடையானவை (3) 2.17: கழிப்பிடத்தில் துப்புரவு செய்தல் (7) 2.16: இயற்கை மரபுகள் (8) 2.15: பல் துலக்குதல் (7) 2.14: சிரமகாலங்களிலும் முழுமையாக ஒளு செய்வதன் சிறப்பு (1) 2.13: உளூவில் தண்ணீர் படும் இடங்களில் ஒளி படர்தல் (1) 2.12: உளூவில் உறுப்புகளை அதிகப்படுத்திக் கழுவுதல் (6) 2.11: உளூ செய்த நீரோடு வெளியேறும் பாவங்கள் (2) 2.10: உளூவில் உறுப்புகள் முழுவதும் கழுவுதல் (1) 2.09: இரு கால்களையும் முழுமையாகக் கழுவுதல் கட்டாயம் (6) 2.08: சுத்தம் செய்யும் போது ஒற்றைப்படையாக செய்தல் (5) 2.07: நபி (ஸல்) அவர்கள் செய்த அங்கத் தூய்மை (உளூ) (2) 2.06: அங்கத் தூய்மை (உளூ) செய்தபிறகு ஓதப்படும் பிரார்த்தனை (1) 2.05: சிறு பாவங்களுக்கான பரிகாரங்கள் (3) 2.04: அங்கத்தூய்மையின் சிறப்பும் அதன் பின் தொழுவதன் சிறப்பும் (9) 2.03: அங்கத் தூய்மை (உளூ) செய்முறையும் அதை நிறைவாகச் செய்வதும் (2) 2.02: தொழுகைக்குக் கட்டாயமான (அங்கத்) தூய்மை (2) 2.01: அங்கத்தூய்மை(உளூ)யின் சிறப்பு (1) 1.96: மறுமையில் ஆதம்(அலை) அவர்களுக்கு இடப்படும் கட்டளை (1) 1.95: சொர்க்கவாசிகளில் பாதிபேர் (3) 1.94: விசாரணையோ வேதனையோ இன்றி சொர்க்கம் செல்வோர் (7) 1.93: நட்பு கொள்ளத் தக்கவர்களும் தகாதவர்களும் (1) 1.92: இறைமறுப்பாளரின் நற்செயல்கள் பலனளிக்காது (1) 1.91: நரகவாசிகளிலேயே மிகக்குறைவான வேதனை அனுபவிப்பவர். (4) 1.90: அபூதாலிபுக்காக நபி(ஸல்) அவர்களின் பரிந்துரை (3) 1.89: நெருங்கிய உறவினருக்கு எச்சரிக்கை செய்தல் (5) 1.88: இறைமறுப்பாளருக்கு எந்தப் பரிந்துரையும் பலனளிக்காது (1) 1.87: தம் சமுதாயத்தார் மீது நபி(ஸல்) அவர்களுக்குள்ள பரிவு (1) 1.86: நபி(ஸல்) அவர்களின் பரிந்துரைப் பிரார்த்தனை! (8) 1.85: சொர்க்கத்திற்காகப் பரிந்துரைக்கும் முதல் மனிதர் (4) 1.84: சொர்க்கவாசிகளுள் ஆகக் குறைந்த பதவி (14) 1.83: இறுதியானவராக வெளியேறும் நரகவாசி. (3) 1.82: ஷஃபாஅத்(பரிந்துரை) செய்யப்படுபவர்கள் (2) 1.81: இறைவனைக் காணும் வழிமுறை (3) 1.80: இறைவனைக் காண்பதற்கான சான்று (2) 1.79: அல்லாஹ்வின் பார்வை பற்றிய விளக்கம் (2) 1.78: மிஃராஜின் போது நபி(ஸல்) கண்டது பற்றிய விளக்கம் (2) 1.77: நபி(ஸல்) அவர்கள் இறைவனைப் பார்த்தார்களா? என்பது பற்றிய விளக்கம் (5) 1.76: சித்ரத்துல் முந்தஹா(இலந்தை மரம்) பற்றிய குறிப்பு! (4) 1.75: ஈஸா(அலை) மற்றும் தஜ்ஜால் பற்றிய குறிப்புகள் (6) 1.74: விண்ணுலகப் பயணமும் தொழுகை கடமையாக்கப்படலும் (12) 1.73: வேத வெளிப்பாடு (வஹீ) தொடங்குதல் (3) 1.72: இறை நம்பிக்கை ஏற்கப்படாத காலகட்டம் (5) 1.71: ஈசா(அலை) இஸ்லாமிய நெறிப்படி நீதி வழங்குதல் (6) 1.70: தூதுத்துவம் உலக மக்கள் அனைவருக்கும் பொதுவானது (3) 1.69: இறைச்சான்றுகள் மூலம் மன அமைதி (1) 1.68: ஒருவரை இறைநம்பிக்கையாளர் என்று முடிவு செய்தல் (2) 1.67: அச்சநேரத்தில் இறைநம்பிக்கையாளர் நிலை (1) 1.66: இறுதிக் காலத்தில் இறை நம்பிக்கை (அற்றுப்) போய் விடுவது. (2) 1.65: இஸ்லாத்தின் மீளெழுச்சி. (3) 1.64: உள்ளங்களில் குழப்பங்கள் தோன்றுவது. (2) 1.63: குடிமக்களைச் சுரண்டும் ஆட்சியாளன் நரகத்திற்குரியவன் ஆவான். (3) 1.62: செல்வத்தைக் காக்கப் போராடியவர் மற்றும் பிறர் செல்வத்தைப் பறிக்க முனைந்தவர் (2) 1.61: மாற்றாரின் பொருளைக் கைப்பற்றுபவர் நிலை. (5) 1.60: இறைநம்பிக்கையில் தடுமாற்றம் ஏற்பட்டால்.. (8) 1.59: நல்ல-தீய எண்ணங்களுக்கான கூலி (5) 1.58: தீய எண்ணங்களைச் செயல்படுத்தாமல் இருத்தல் (2) 1.57: தாங்க முடியாத சுமை? (2) 1.56: இறை நம்பிக்கையின் வாய்மையும் தூய்மையும் (1) 1.55: இறைமறுப்பாளராக இருந்தபோது செய்த நல்லறங்கள் (3) 1.54: முன் செய்த பாவங்கள் (2) 1.53: அறியாமை காலத்தில் செய்த தீமைகள் (2) 1.52: இறைநம்பிக்கையாளரின் அச்சம் (1) 1.51: குழப்பங்கள் தோன்றுவதற்கு முன் நற்செயல் புரிய விரைதல் (1) 1.50: மறுமை நெருங்கும் வேளையில் வீசும் காற்று (1) 1.49: ஹிஜ்ரத்தில் தற்கொலை செய்து கொண்டவரின் நிலை (1) 1.48: கையாடல் செய்பவரும் இறைநம்பிக்கையாளரும் (2) 1.47: தற்கொலை செய்பவரும் கட்டுப்பட்டு வாழ்பவரும் (7) 1.46: மூன்று பெரும் தவறான செயல்கள் (4) 1.45: புறங்கூறுவது வன்மையாகத் தடை செய்யப் பட்டது (3) 1.44: துக்க வேளைகளில் தடை செய்யப்பட்ட செய்கைகள்! (3) 1.43: முஸ்லிம்களை வஞ்சித்தவர் நிலை! (2) 1.42: முஸ்லிம்களுக்கு எதிராக ஆயுதம் ஏந்தியவர் நிலை! (3) 1.41: “லா இலாஹ இல்லல்லாஹ்” கூறியவரைக் கொல்லத்தடை! (4) 1.40: இணைவைத்தலின் விளைவுகள் (5) 1.39: தற்பெருமை (3) 1.38: பெரும் பாவங்கள் (5) 1.37: பாவங்களில் மிகவும் அருவருப்பானது (2) 1.36: நற்செயல்களில் சிறந்தது (6) 1.35: தொழுகையை விடுதலும் குஃப்ரும் (3) 1.34: இறைநம்பிக்கை குறைவும் குஃப்ர் எனும் சொல்லும் (1) 1.33: அன்ஸாரிகளையும் அலி(ரலி)யையும் நேசித்தல் (6) 1.32: மழையும் இறைமறுப்பும் (4) 1.31: ஓடிப்போன அடிமை (3) 1.30: இறைமறுப்பின் அடையாளங்கள் (1) 1.29: இறைமறுப்பாளர்களாய் மாறுதல் (2) 1.28: முஸ்லிமோடு போரிடுதல் (1) 1.27: தந்தையை வெறுப்பவன் நிலை (4) 1.26: முஸ்லிமை நோக்கி காஃபிர் என அழைத்தல் (2) 1.25: நயவஞ்சகனின் குணங்கள். (3) 1.24: இறைநம்பிக்கையில் குறைவு ஏற்படல் (2) 1.23: மார்க்கம் என்பதே நலன் நாடுவதுதான். (4) 1.22: இறைநம்பிக்கையாளர்களை நேசித்தல் (1) 1.21: இறைநம்பிக்கையில் ஏற்படும் ஏற்றத் தாழ்வு (9) 1.20: நன்மையை ஏவுதல், தீமையைத் தடுத்தல் (2) 1.19: நல்லவற்றிற்கு ஆர்வமூட்டுதல் (3) 1.18: அண்டை வீட்டாருக்குத் தொல்லை தரக் கூடாது (1) 1.17: தமக்கு விரும்வுவதைச் சகோதரனுக்கும் விரும்புதல் (2) 1.16: தூதரை நேசிப்பது கடமை (2) 1.15: இறைநம்பிக்கையின் இனிமை (2) 1.14: இஸ்லாம் கூறும் நல்லறங்களில் சிறந்தது (4) 1.13: இஸ்லாத்தின் அனைத்துப் பண்புகளின் கலவை (1) 1.12: இறைநம்பிக்கையின் கிளைகள் (5) 1.11: இறைநம்பிக்கையைச் சுவைப்பவர் (1) 1.10: ஓரிறை கோட்பாட்டில் மரணித்தவர் நிலை (11) 1.09: இணை வைத்த நிலையில் மரணித்தவர் நிலை (3) 1.08: ஜிஸ்யா செலுத்தாதவர் மீது போர் புரிதல் (6) 1.07: இஸ்லாத்தை ஏற்க அழைப்பு விடுத்தல் (2) 1.06: அறியாதவர்களுக்கு அறிவித்தல் (4) 1.05: இஸ்லாமியக் கடமைகள் (4) 1.04: சொர்க்கம் செல்பவர் (7) 1.03: இஸ்லாத்தின் தூண்கள் (2) 1.02: தொழுகை பற்றிய விளக்கம் (2) 1.01: இறைநம்பிக்கை குறித்த விளக்கம் (7)
தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் முன்னனி நடிகையாக இருந்தவர் நடிகை அபிராமி. இவர் தமிழில் ஏகப்பட்ட படங்களில் நடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவெற்பை பெற்றவர். மேலும் குடும்பபாங்கான முகம், நல்ல உயரம், எதார்த்தமான தோற்றம் இவைகளால் பெரிதும் ஈர்க்கப்பட்டார். வானவில். மிடில் கிளாஸ் மாதவன், தோஸ்த், சமுத்திரம், சார்லி சாப்ளின், விருமாண்டி போன்ற படங்களில் ஹீரோயினாக நடித்தார். நடித்தது சில படங்கள் என்றாலும் நட்சத்திர அந்தஸ்தை மக்கள் மனதில் பதிய வைத்தார். நடித்த எல்லா படங்களுமே நல்ல அளவில் பேசப்பட்டன. குறிப்பாக விருமாண்டி படத்தில் இவரின் நடிப்பு பெருமளவில் பேசப்பட்டது. அதன் பிறகு திருமணமாகி அமெரிக்காவில் செட்டில் ஆகி விட்டார். மேலும் விஸ்வரூபம் படத்திற்கு இவர் தான் டப்பிங் பேசினார் என கமல் கூட ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார். இவருக்கு பல மொழிகள் தெரியும் எனவும் கூறியிருந்தார். இதையும் படிங்கள் : சிக்குன்னு உடையில் நச்சின்னு இருக்க!…அசத்தல் லுக்கில் அம்மு அபிராமி!… இதையும் படிங்கள் : மாஸ்டர் படத்தில் பூனை… தளபதி 67 இல்.? மலையாளத்தில் வெளியான சூப்பர் அப்டேட்.! இந்த நிலையில் உங்களோட ஃபர்ஸ்ட் கிஸ் யாருனு கேட்டதற்குகொஞ்சம் கூட யோசிக்காமல் என் அம்மாதான் என கூற கேட்ட ஆங்கர் ஷாக் ஆகிவிட்டார். இதை நாங்க கொஞ்சம் கூட எதிர்பார்க்கல மேடம் என ஆங்கர் கூறினார். ஆனால் ஃபர்ஸ்ட் கிஸ் நடந்திருக்கு. அதுவும் 15, 16 வயதில் பண்ணியிருக்கேன். இதை என் பெற்றோர்கள் பார்த்தால் ஷாக் ஆகிடுவாங்க. ஆனால் யாருனு சொல்ல மாட்டேனு கூறினார். Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
கொரோனா வைரஸ் இனி வெவ்வேறு வடிவங்களில் நம்மோடு வாழவுள்ளது! அதன் நகர்வுகளை, இயல்புகளை கவனித்து வரும் மருத்துவ நிபுணர்கள் அதன் கடந்த காலத் தன்மைகள், நிகழ்கால உருமாற்றங்களை அவதானித்து நாம் எப்படி வாழ வேண்டும் என அறிவுறுத்துகிறார்கள்..! 1980களில் ஒரு பிரித்தானிய வைத்தியசாலையில், மருத்துவ ஆய்வுக்காக அங்குள்ள மருத்துவர்கள் கொரோனா வைரஸை ஏற்றினர். அக்காலத்தில் கோவிட்- 19 உருவாகவில்லை. அந்த மருத்துவ ஆய்வின் கருப்பொருள், கோவிட்-19 இன் குடும்பத்தைச் சேர்ந்த 229 E என்னும் சாதாரண சலதோசத்தை உருவாக்கும் வைரஸ். 229E நம்மிடையே பொதுவாகவுள்ள ஒரு வைரஸ். ஆனாலும், அதைபற்றிய தகவல் நம்மிடம் முழுமையாக இல்லை. நாம் அனைவருக்கும் இந்த வைரஸின் தாக்குதல் வாழ்வில் நடந்துள்ளது. குறிப்பாக சிறுவயதில் ஏற்பட்டுள்ளது. ஆனால் இது சாதாரணமாக இருந்ததனால் பெரிதாக கவனம் செலுத்த வில்லை. 229E ஏற்றப்பட்ட அந்த 15 நபர்களுள் 10 நபர்களுக்கு மட்டுமே சலதோசம் வந்தது. அதிலும் 8 பேருக்கு மட்டுமே சலதோசத்தின் அறிகுறிகள் தெரிந்தன. அடுத்த வருடம் மீண்டும் ஆய்வு செய்தனர். அதே 15 நபர்களுள் 14 பேரை திரும்ப வரவைத்து மீண்டும் அவர்களுக்கு 229 E இனை ஏற்றினர். இம்முறை ஆறு பேருக்கு மீண்டும் சலதோசம் வந்தது. இம்முறை அவர்களுக்கு நோய் அறிகுறிகள் தென்படவில்லை. இதிலிருந்து மருத்துவர்கள் உணர்ந்தது,கொரோனா வைரஸால் நம் உடலின் எதிர்ப்பு சக்தி குன்றுகிறது என்றும், மீண்டும் அதன் தாக்கம் வரக்கூடிய சாத்தியப்பாடு அதிகம் என்றும், அப்படி வரும் மீள்தாக்கம் வேகமாகவும், அதே சமயம் பெரிதாக எந்த அறிகுறிகளும் இல்லாமல் வந்து போய்விடும் என்பதாகும். 229E நம் அனைவரையும் நம் வாழ்வில் பல முறை தாக்கியுள்ளது. இந்தச் சிறிய ஆய்வு அந்த காலத்தில் பெரிதாக கவனம் பெறவில்லை. வைரஸ் சார் ஆய்வுகளுள் கொரோனா பற்றிய ஆய்வு 80களிலும் 90 களிலும் முக்கியத்துவமாக இல்லை. இதற்கு முக்கியக் காரணம், இது சாதாரண ஜலதோசமாக பார்க்கப்பட்டது. 2020ஆம் ஆண்டு தொடக்கத்தில் ‘புதிய’ கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி உருவாக்கும் ஆய்வினை மிக அவசரமாக மேற்கொண்ட அறிஞர்கள் இந்த ஆய்வினை மீண்டும் கண்டெடுத்தனர். சார்ஸ்-கோவ்-2 என்னும் கொரோனாவை உருவாக்கும் வைரஸின் வருகைக்கு முன் 229E உட்பட நான்கு கொரோனா வைரஸ்கள் நம்மிடையே இருந்தன. இவை நான்கும் சாதாரணசலதோசம் உருவாக்கும் வைரஸாகவே இருந்தன. நான் அறிந்த சில அறிவியல் அறிஞர்களின் கூற்றின்படி இந்த கொரோனா வைரஸும் மற்றவை போலவே சாதாரண ஜலதோசம் உருவாக்கும் வைரஸாகவே காலப்போக்கில் மாறும். இந்த கூற்றின் படி கோவிட்-19ம் 229 E போலவே மீண்டும், மீண்டும் தாக்கினாலும் சிறிய தாக்கம் மட்டுமே விளைவிக்கும் ! டெல்டா வைரஸ் பரவித் தீவிர சிகிச்சை மையங்கள் நிரம்பி வழியும் இச்சூழலில் இந்த எதிர்கால காட்சியைக் கற்பனை செய்வது சிறிது கடினமானது தான். ஆனால், இந்த பெருந்தொற்று ஒரு கட்டத்தில் ஏதோ ஒரு வழியாக முடியும். இக்காலத்தில் கொரோனாவினால் ஏற்படும் இறப்புகளுக்கு மூல காரணம், இது எதிர்ப்பு சக்தி இல்லாத உடல்களை பாதிப்பதே ஆகும். பெருந்தொற்றின் விரைவுப் பரவலினாலும் , தடுப்பூசிகளினாலும் இந்த நோயிலிருந்து பாதுகாக்கும் எதிர்ப்பு சக்தியுடைய உடல்களின் என்ணிக்கை கூடக்கூட, இந்த கொரொனா வைரஸ் நோய் பரவும் எல்லை குறுகும்.நோய் அறவே இல்லாமல் போகாது. ஆனால் நமது வாழ்வில் பெரிய அளவில் இடையூறுகள் ஏற்படுத்தாது.நோய்த் தொற்றுள்ளோரின் எண்ணிக்கை அவ்வப்போது அதிகரித்தும், குன்றியும் காணப்படும். ஆனால் மிகக் கொடுமையான விளைவுகள் தவிர்க்கப்படும். முந்தைய காலத்தில் இருந்த 4 வகை கொரோனா வைரஸ் எப்படி தொடங்கின என்பது பற்றிய தகவல் நம்மிடம் முழுமையாகவும், நம்பகமாகவும் இல்லை. ஆனால், இவற்றில் ஒன்று பெருந்தொற்றாகியது என்று கூறப்படுகிறது. பிற கொரோனா வைரஸ் போலவே இந்த வைரஸும் இருக்குமேயானால், இதனால் பரவும் நோய் மீண்டும், மீண்டும் உருவாகி, அதிலிருந்து பாதுகாக்கும் எதிர்ப்பு சக்தியும் கூடிக்கொண்டே வரும். அடுத்தடுத்த தொற்றுகள் பெரிதும் பாதிப்பு உருவாக்காதவையாக அமையும். அதனால் நாம் பிற கோவிட் வைரஸை போலவே, கோவிட்- 19ஐ கருத வேண்டும். ஒரு கொரோனா வைரஸானது நிரந்தரமாக தவிர்க்ககூடியது அல்ல. ஏதோ ஒரு கட்டத்தில் எல்லோருக்கும் தொற்றும் என்பதே யதார்த்தம். தொற்றும் நோய்கள் குறித்து சேயின்ட் ஜூட் நிறுவனத்தில் ஆய்வு செய்யும் ரிச்சர்ட் வெபி கூறியதாவது, “தொற்றுடன் நாம் வாழப் பழக வேண்டும். பொதுச்சுகாதார கட்டுமானத்தை முழுமையாக பாதிக்காத வரைக்கும், நம்மால் இதனுடன் வாழ முடியும்.” கொரோனா வைரஸ் நமது உடலின் எதிர்ப்பு சக்திக்கும், நமது சமூகத்துக்கும் புதியதொரு வைரஸாக தொடர்ந்து நிலைத்திருக்காது. பரவலாகும் பெருந் தொற்று என்பதிலிருந்து, குறும்பகுதியில் பரவும் தொற்று நோயாக கோவிட்-19 வைரஸ் மாறுவதே நமது இலக்கு. ஆனால், அந்த இலக்கினை அடைவதற்கான வழி தெளிவாக இல்லை. இந்த வழியானது தெளிவாக இல்லாததற்கு ஒரு காரணம், இந்த பாதை நம் கையில் உள்ளது என்பதுதான். எட் யொங் கூறியுள்ளது போல, எதோ ஒரு கட்டத்தில் இந்த கொரோனா வைரஸ் சிறிய தாக்கம் தரும் தொற்று நோயாக மாறும் என்பதற்காக, நாம் பாதுகாப்பு சார் செயற்பாடுகளை உதாசீனமாக கருதக் கூடாது. எந்த அளவு இப்பொழுது தொற்றினை குறைக்கின்றோமோ அந்த அளவு பொது சுகாதாரக் கட்டமைப்பின் பாரம் குறையும். அதோடு இதுவரை தடுப்பூசி பெறாதோருக்கு தடுப்பூசி இடுவதற்கான காலம் நமக்கு கூடுதலாக கிடைக்கும். தொற்றினை தவிர்க்காமல், பலரும் தொற்றிற்குள்ளாவதனால் நாம் இந்த இலக்கினை அடையக் கூடும். ஆனால், இந்த பாதையில் மிகுந்த உயிரிழப்பு ஏற்படும். குறும்பகுதி பரப்பு நோயாக கோவிட்-19 மாறுவதில் வைரஸினுள் ஏற்படும் வடிவ மாற்றங்களும் தாக்கம் செலுத்தும். ஆனால், இந்த வைரஸ் எவ்வளவுதான் மாறினாலும் நமது எதிர்ப்புசக்தியை முழுமையாக இல்லாமல் செய்யும் அளவிற்கு அது வளராது. இது ஒரு நற்செய்தி. சிகாகோ பல்கலைகழகத்தில் உள்ள பரிணாம உயிரியல் ஆய்வாளரான சாரா கோபி, “நமது எதிர்ப்பு சக்தி சார் செயற்பாடுகள் மிகவும் நுணுக்கமானவை. அதில் இருந்து முழுமையாக தப்புவது வைரஸுக்கு சாத்தியமல்ல” உதாரணத்திற்கு சார்ஸ் கோவ்-2விற்கு எதிரான பிறபொருள் எதிரி (antibodies) காலப்போக்கில் குறைவடைந்தாலும், அந்த வைரஸினை அடையாளங்காணக்கூடிய B மற்றும் T உயிரணுக்கள் நமது உடலில் தங்கி எதிர்ப்பினை உருவாக்கும். எதிர்ப்பு சக்தி குறைந்தாலும், தீவிர நோயோ, மரணமோ ஏற்படாமல் காக்கும்! இப்படியான நோயின் தீவிரம் மற்றும் மரணத்திலிருந்து பாதுகாப்பதே தடுப்பூசிகளின் ஆரம்ப கால இலக்காக இருந்தது. சென்ற வருடம் தடுப்பூசி ஆய்வு செய்த விஞ்ஞானிகள் அனைவரும், ”பெரிய எதிர்பார்ப்புகள் ஏற்படுத்திக் கொள்ளாதீர்கள்” என்று கூறினர். ”மூச்சு உறுப்புக்களை பாதிக்கும் வைரஸ்களுக்கான தடுப்பூசிகள் தொற்றிலிருந்து முழுமையான பாதுகாப்பு அளிக்காது’‘ என அவர்கள் தெளிவாகக் கூறினர். இவ்வாறான தடுப்பூசிகள் நுரையீரலுக்குப் பாதுகாப்பு அளிக்குமே ஒழிய, மூக்கு பகுதியில்அளிக்காது. ஆனால், ஜான்ஹாப்கின்ஸ்பல்கலைக்கழகத்தின் நோய் எதிர்ப்பு சார் ஆய்வு மையத்தை சேர்ந்த ரூத் கார்ரோனின் கருத்தின்படி, தொடக்க காலத்தில் ‘அதிகப்பயன் தரும் தன்மை உடையது’ என்று சித்தரிக்கப்பட்டதனால், இந்தத் தடுப்பூசிகள் பற்றிய எதிர்பார்ப்புக்கள் வளர்ந்தன. ஃபைஸர் மற்றும் மொடெர்னா தடுப்பூசிகள் 95% பலன் தருபவை என்று கூறப்பட்டன! ஆனால், கூடிய சீக்கிரமே மாற்றமடைந்த வைரஸால் – பீடா, காமா, மற்றும் இப்பொழுதுள்ள டெல்டாஆகியவை புதிதாக கிளம்பின. இவை, அனைத்தும் தடுப்பூசிகளின் பாதுகாப்பினை குறைத்தன. ஒரு வருடத்திற்கு முன் வரும் எனஎதிர்பார்த்த நிலைமையை நாம் இப்பொழுது தான் அடைந்துள்ளோம். தடுப்பூசிகள் தீவிர நோயிலிருந்து பாதுகாக்கின்றன. ஆனால், ஒட்டுமொத்த சமூகத்திற்கான தடுப்பு சக்தி இன்னும் சவாலாகவே உள்ளது. வைரஸ் நம்மிடையே இருந்தாலும், அதனால் தீவிர நோயிற்குள்ளாக்கப்படுவோர் மற்றும் இறப்போரின் எண்ணிக்கை குறையும். தடுப்பூசிக்கு பிறகும் தொற்றுக்குள்ளான அமெரிக்காவின் மாசசூசெட்சில் உள்ள ப்ரொவின்ஸ் டவுனில் இத்தகைய நிலைமையே தென்படுகின்றது. அதேபோல, அதிக தடுப்பூசிகள் பெற்றுள்ள சமூகங்களான இங்கிலாந்து, ஐஸ்லாந்து மற்றும் இஸ்ரேல் போன்ற நாடுகளில் நோய் தொற்றுக் கூடினாலும், தடுப்பூசிக்கு முன் ஏற்பட்ட மரணங்களுடன் ஒப்பிடுகையில் குறைந்த அளவே இப்பொழுது ஏற்பட்டு வருகின்றது. குறும்பகுதி பரவல் நோயாக கோவிட்-19 மாறிய பிறகு, தொற்றின் தீவிரமும், குறிப்பிட்ட பகுதியில் புதுவடிவ வைரஸின் தாக்கமும் நமது எதிர்ப்பு சக்தியின் பாதுகாப்புதன்மை குன்றுவதற்கு எடுக்கும் காலத்தை பொறுத்துள்ளது. அது ஸார்ஸ் கோவ்-2 அடிப்படை வைரஸுக்கு எதிரான நமது எதிர்ப்பு சக்தி குன்றும் காலத்தை பொருத்தும், வைரஸ் தன்னை மாற்றி அமைக்க எடுக்கும் காலம் பொறுத்தும் அமையும். பழைய எதிரியிடம் போரிட நமது உடலின் எதிர்ப்பு சக்தியை ஊக்குவிப்பது கடினம். ஆனால், புது எதிரியினால் நிகழும் தாக்குதல்களுக்கு எதிராக உடலின் எதிர்ப்பு சக்தி இலகுவாக ஊக்குவிக்கப்படும். பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தை சேர்ந்த எதிர்ப்பு சக்தி நிபுணர் லோரா சூ கூறியது, “புது வடிவ வைரஸின் முதல் தாக்கமானது தடுப்பூசிக்கு கொடுக்கும் ஊக்க ஊசி (Booster) போன்ற தன்மையை உடலுக்கு அளிக்கும்.” உதாரணமாக, சலதோசம் உருவாக்கும் 22Eஉ வைரஸ் தொடர்பாக செய்த ஆய்வினில், முதலாண்டில் தொற்றுக்குள்ளாகாதோர், அடுத்த வருட ஆய்வினில் தொற்றுக்குள்ளாகிய வீதம் அதிகமாக அமைந்தது. கடந்த வருடம் உருவான எதிர்ப்புசக்தியே முதல் ஆண்டில் தொற்றுக்குள்ளானவரை பாதுகாத்தது. அதிகளவு மக்கள்தொகை தடுப்பூசி மற்றும் நோய்தொற்றின் காரணமாக எதிர்ப்பு சக்தியை வளர்க்க வளர்க்க, வைரஸ் தன்னைத்தானே மாற்றியமைத்து, இந்த எதிர்ப்புசக்தியினிடையே ஊடுருவி தாக்கமுயற்சி செய்யும். இது வைரஸுடன் வாழ்தலின் இயல்பான விளைவாகும்.வருடாவருடம் வரும் தாக்கம் உருவாக்கும் வைரஸும், முந்தைய வருடம் உருவான, உடலின் எதிர்ப்புசக்தியை தாண்டி தொற்று உருவாக்கத் தன்னைத் தானே மாற்றியமைக்கும். ஆனால், பலருக்கு எதிர்ப்புசக்தி இருப்பதனால் அதிக அளவிலான மக்களை இந்த வைரஸ் தாக்காது. அதோடு, தாக்கப்பட்டவர் உடலில் இருந்துகொண்டு தம் உருவத்தை மாற்றியமைக்கவும் முடியாது. கோபி கூறுகிறார், “எந்தளவு ஸார்ஸ் கோவ்.-2 எனப்படும் அடிப்படை வைரஸ் உலகில் உள்ளதோ, அந்தளவு அதன் உருமாற்றத் தன்மைக்கான காலம் குறையும்”. அதாவது வைரஸின் உருமாற்றம் என்பதனை லாட்டரி டிக்கெட் போல கற்பனை செய்வோம். பல மாற்றங்கள் நடந்தாலும், அதில் ஒரு சில மட்டுமே தொற்றினை பெரிதாக்கும். இருக்கும் லாட்டரி டிக்கெட் எண்ணிக்கையை குறைத்தால், தொற்று பெரிதடைய செய்யும் சாத்தியப்பாடு குறையும். உயிர் மற்றும் உடல் சேதம் உருவாக்கும் வைரஸின் புதிய வடிவங்கள் உருவாகும் நேரம் அதிகரிக்கும். இதனால் அதிலிருந்து நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ள நமக்கு நேரம் கிடைக்கும். இதுவரை நாம் அறிந்தவற்றை ஒன்றிணைத்துப் பார்த்தால், ஒரு தெளிவு உருவாகிறது. நான்கு வகை கொரோனா வைரஸும் நமது எதிர்ப்புசக்தி குன்றல் மற்றும் வைரஸ் உருமாற்றம் ஆகியவற்றால் தொடர்ந்து நம்மை தாக்குகின்றன. இதிலிருந்து நாம் அறிவதாவது: இந்த 4 வைரஸில் ஒன்றேனும் நமக்கு சிறுவயதிலேயே தொற்றியிருக்கும். ஆனால், அதிக தாக்கம் செலுத்தியிருக்காது. இந்த தொற்றினால் உருவான எதிர்ப்புச் சக்தி நம்முள் காலப்போக்கில் குன்றும். வைரஸும் காலப்போக்கில் உருமாறும். மீண்டும் தொற்று உண்டாகும். மீண்டும் நமது எதிர்ப்புச் சக்தி குன்றும். மீண்டும் நோய் நம்மை தாக்கும். இப்படியே இந்த சுழற்சி தொடரும். வைரஸ் இந்த படிவத்தின்படியே நகரும் என்று அறிஞர்கள் நம்புகிறார்கள். கொலம்பியா பல்கலைகழக நோய்க்கிருமி ஆய்வுவிஞ்ஞானி ஸ்டீபன் மோர்ஸ் கூறுவதாவது: “நோயின் தாக்கம் பெரிதாக இல்லையென்றால், நாம் அதனை பெரிதாக பொருட்படுத்துவதில்லை.” சாதாரண சலதோசம்கூட சிலரை மரணிக்கச் செய்யும். தடுமன் வைரைஸ் தொற்று,முதியோர் விடுதிகளில் வந்துள்ளது. வருடாவருடம் அமெரிக்காவில் 12,000-61,000 மக்களை கொல்லும் ஃப்ளு நோய் போலவும் கோவிட்-19 மாறலாம். ஆனால், கோவிட் தாக்கத்தை இறப்பினால் மட்டும் கணக்கிடக் கூடாது. நீண்ட கோவிட் நோயிலிருந்து தடுப்பூசிகள் எந்தளவு பாதுகாப்பு அளிக்கின்றன என்பது பற்றி நமக்கு போதிய அளவு ஆய்வுசார் தகவல் இல்லை. ஆனால், பெரும்பாலான விஞ்ஞானிகளின் கூற்றின்படி உடலில் எதிர்ப்பு சக்தி இருந்தால் பாதிப்புகள் தவிர்த்து வைரஸை எதிர்க்க முடியும். குறும் பகுதி தொற்று நோயாக கோவிட்-19 மாறுவது ஒரு உளவியல் ரீதியான மாற்றத்தையும் அவசியப்படுத்தும். அனைவருக்கும் ஓரளவு எதிர்ப்புசக்தியுள்ளசூழலில், ஒருவருக்கு கோவிட்-19 நோய் உள்ளது என்பது ஒரு சாதாரண விடயமாக மாறும். அது நற்செய்தி அல்ல. ஆனால், அதே சமயம் அளவிற்கதிகமான அச்சுறுத்தலோ அல்லது சமூக அளவிலான அவமானத்தையோ உண்டாக்க கூடியதாக இதை கருத வேண்டியதில்லை. இந்த பயமும், சமூக அளவில் ஒருவரையொருவர் உளரீதியாக ஒதுக்கும் பழக்கங்கள் இல்லாமல் செய்ய வேண்டும். ”இது சாதாரண நோய் அல்ல” என்னும் அச்சுறுத்தலை மாற்ற வேண்டும். அமெரிக்காவில் போன வருடம், ”முகக்கவசம் தேவையில்லை’’ என்று சொல்லபட்ட பொழுது மக்கள்மத்தியில் பீதி உண்டானது. ஆக,, இந்த உளவியல் மாற்றம் சிக்கலான ஒன்றே என்பது தெளிவானது. சிலருக்கு இந்த தெளிவு வேகமாக உருவாகிறது. மற்றவர்களுக்கு இது மிகத் தாமதமாக உருவாகிறது. “நோயின் தாக்கத்தை எதிர்கொள்ளும் மனப்பான்மையில் ஒருவருக்கொருவர் வேறுபட்டுள்ள சூழலில், பரஸ்பர புரிதல் சிக்கலானதாகவே உள்ளது” என்று கார்னெகி மெலன் பல்கலைகழகத்தில் உளவியல் அறிஞரான ஜூலீ டவுன்ஸ் கூறுகிறார். Also read மனம் கவர்ந்த நூல்கள்! ஒன்றிய அரசோடு மோதத் துணிந்தது உச்ச நீதிமன்றம்! ஃப்ளு நோயின் அபாயத்தை எதிர்கொள்ளும் வழி பற்றி, ஒரு பொதுவான புரிதலுக்கு நாம் அனைவரும் வந்துள்ளோம். ஆனால் கோவிட்-19ஐ பொருத்த வரை அந்த பொதுப் புரிதலோ, ஒத்த கருத்தோ இன்னும் நம்மிடையே உருவாக வில்லை. இப்பொழுது உள்ளதைவிட, காலப்போக்கில், டெல்டா நம்மிடையே இருந்தாலும், தொற்றிற்கான அபாயம் குறைந்து கொண்டு வரும். ஆனால், வைரஸ் முழுமையாக போகாது. டவுன்ஸ் கூறுகிறார், “முழுமையாக போகாதென்றாலும், நாம் சமூகமாக, இலகுவாகத் தாங்கக் கூடிய அளவிற்கு இந்த வைரஸின் தாக்கம் மாறும் என்பதை மக்களுக்கு வலியுறுத்துதல் அவசியம்”. இன்னும் நல்ல தடுப்பூசிகளும், வைத்திய முறைகளும் கோவிட்டின் பாதிப்பை மேலும் குறைக்கும். இந்த அனுபவத்தின் விளைவாக எந்தவொரு மூச்சுறுப்பு சார் வைரஸ் தொற்றினையும் நாம் சற்று எச்சரிக்கையாக அணுக பழகுவோம் . முகக்கவசம் அவசியம்! மூச்சுப் பயிற்சிகளில் அதிக கவனம் செலுத்துவோம். குறும் பகுதி தொற்றாக கோவிட் 19 மாறியதும், அதனுடன் நாம் வாழ்வதற்கு புதிய வழிமுறைகளை கண்டுபிடிப்பது அவசியம். முதலில், அது சற்று வினோதமாகத்தான் இருக்கும். காலப்போக்கில் அதுவே யதார்த்தமாக மாறும்.
பூக்கடைக்கு விளம்பரம் எதுக்கு ? நல்ல சரக்கு எப்படியும் விலை போகும் என்பதெல்லாம் அந்தக்காலம் . குஷ்பூவை சீஃப் கெஸ்ட்டா வர வெச்சு குஷ் பூக்கடை என விளம்பரம் பண்ணி கல்லா கட்டுவது இந்தக்காலம் , இதை ஏன் இப்போ சொல்றேன்னா படம் நல்லா இருந்தா மட்டும் போதாது ப்ரமோஷன் பக்காவா இருக்கனும். இது இன்னவகைப்படம்னு தெளிவா ரசிகர்கள் கிட்டே சேர்த்தனும், கோர்ட் ரூம் டிராமா அல்லது க்ரைம் த்ரில்லர் அல்லது சஸ்பென்ஸ் த்ரில்லர் என ஏதோ கேட்டகிரில இது வ்ருதுனு அடையாளப்படுத்தனும், போஸ்டர் டிசைன் ல ஹீரோயின் முகம் மடும் க்ளோசப்ல சோகமா இருக்கு . எப்படி ஆடியன்ஸ் தியேட்டருக்கு வருவாங்க ? கேரளா கோட்டயம் சங்கணாச்சேரி அப்சரா வில் ஷோவுக்கு போய் ஆடியன்ஸ் 6 பேர் தான் வந்ததால் ஷோ கேன்சல்., அட்லீஸ்ட் 12 பேராவது வேணுமாம். அப்றம் அடுத்த நாள் கோட்டயம் போய் பார்த்தேன் ஸ்பாய்லர் அலெர்ட் ஹீரோயின் ஒரு ஸ்கூல் டீச்சர் . அம்மா வீட்ல மாவு தயாரிச்சு பாக்கெட் போட்டு விக்கறாங்க ., அப்பா அபார்ட்மெண்ட் வாட்ச்மேன் ? செக்யூரிட்டி. ஹீரோயினுக்கு 10 வயசுல ஒரு தங்கச்சி வேற இருக்கு ஹீரோயினோட அப்பா வேலை செய்யற அப்பார்ட்மெண்ட்ல ஒரு 9 வயசுப்பெண்ணை கேங்க் ரேப் செய்ததா வட மாநிலத்தைச்சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டதா நியூஸ் வருது. அடுத்து இன்னொரு ஷாக் நியூஸ் அந்த நாலு பேரோட அஞ்சாவது ஆளா ஹீரோயினோட அப்பாவும் குற்றவாளியா சேர்க்கப்படறாரு. ஹீரோயின் அப்பாவைக்காப்பாற்றக்களம் இறங்கறாரு. போலீசால் ஃபிரேம் பண்ணப்பட்ட கேஸ் இது அப்டினு அவர் நம்பறார். எந்த வித பின் புலமோ அரசியல் செல்வாக்கோ இல்லாத சாதா நபரான ஹீரோயின் இந்த கேசை எப்படி டீல் பண்ணினார் தன் முயற்சியில் வெற்றி பெற்றாரா? இல்லையா? என்பதே கதை ஹீரோயினா சாய் பல்லவி . அபாரமான நடிப்பு .இவரது கேரக்டர் ஸ்கெட்ச் டிசைன் ப்ண்ணப்பட்ட விதம் அருமை .படம் பார்க்கும்போது இவருக்கு நேரும் பதைபதைப்பு ஆடியன்சுக்கும் நேருது அதுதான் கேரக்டர் ஸ்கெட்ச் க்குகிடைத்த வெற்றி ஹீரோயினுக்கு உதவும் வக்கீலாக காளி வெங்கட். இவர் ஒரு திக்கு வாய் கேரக்டர் சைடு இன்கம்க்காக மெடிக்கால் ஷாப் ல பார்ட் டைமா வேலை பார்க்கிரார் என்ப்தெல்லாம் கதைக்கு தேவை இல்லாத திணிப்பு . ஆனா அவர் நடிப்பு கனகச்சிதம் . கோர்ட்டில் அவர் வாதிடும் லா பாயிண்ட்ஸ் அபாரம் தமிழ் சினிமாவில் திருநங்கை கேரக்டர் என்றாலே முகம் சுளிக்கும்படிதான் அமைக்கப்படும். பருத்தி வீரன் மெகாஹிட் படம் உட்பட பல படங்களில் அவங்களை வேஸ்ட் பண்ணி இருப்பாங்க, இதில் ஜட்ஜாக ஒரு திருநங்கை. அதகளம் பண்ணி இருக்கார் கேரளாவில் ஆடியன்ஸ் எப்போதும் படம் முடிஞ்ச க்ளைமாக்சில் த எண்ட் போட்ட பின் எழுந்து நின்று கை தட்டுவாங்க . இந்தப்படத்தில் ஜட்ஜ் ஒரு பஞ்ச் டயலாக் பேசும்போது ஆரவாரமாக கை தட்டுனாங்க . சபாஷ் டைரக்டர் பாதிக்கப்ப்ட்ட சிறுமியின் அப்பாவாக சரவணன், ஒரு சாயலில் இவருக்கு விஜயகாந்த்தை நினைவுபடுத்தும் முகம். நல்ல நடிப்பு ஹீரோய்னின் அப்பாவாக அபூர்வ சகோதரர்கள் புகழ் எங்கேயோ போய்ட்டீங்க சிவாஜி . பரிதாபமான தோற்றம் இன்னொரு வாட்ச்மேனாக கதைல ட்விஸ்ட் ஏற்படுத்தும் கேரக்டரில் லிவிங்க்ஸ்டன் . க்ச்சிதமான பங்களிப்பு இந்த மாதிரி த்ரில்லர் படங்களின் உயிர் நாடி பிஜிஎம் தான் . பாடல்கள் ல ஸ்கோர் பண்ண முடியாத கதைக்களத்தில் பின்னணி இசையில் அமர்க்களப்படுத்தி இருக்கிறார் 96 பட புகழ் கோவிந்த் வசந்தா . ஒளிப்பதிவும் கச்சிதம் ரசித்த வசனங்கள் 1 எதுவுமே இல்லாம இந்த ஊருக்கு வந்தவன் நீ , கெட்ட பேரே சம்பாதிச்சாலும் அது உனக்கு லாபம் தான் 2 அய்யா மீடியாக்காரங்களே? நீங்க சொல்ல விரும்புவ்து நியூஸ் இல்லை நடந்ததை சொல்வதான் நியூஸ் 3 வேலைக்காரிக்குத்தெரியாத ரகசியம் இந்த உலகத்தில் உண்டா? 4 நேரம் . காலம் விதி எல்லாத்தையும் நம்பு ஆனா பெத்த பொண்ணு என்னை நம்பாத 5 மங்கயராகப்பிறப்பதற்கே மாதவம் செய்திடல் வேண்டும் அம்மானு சொல்வாங்க எதையும் நம்பிடாத. ஏகபப்ட்ட பிரச்சனைகளை டெய்லி ஃபேஸ் பண்ணனும் சபாஷ் டைரக்டர் 1 கோர்ட்டில் ஒரு சமயத்தில் அரசுத்தரப்பு வக்கீல் நீதிபதியை கமெண்ட் அடிப்பார் , இதுவே நார்மல் ஜட்ஜா ( ஆணாகவோ பெண்ணாகவோ) இருந்தா இந்நேரம் டக்னு தீர்ப்பு வந்திருக்கும். அப்டினு முனகுவாரு அப்போ ஜட்ஜ் பொங்கி எனக்கு ஆணோட பலாத்காரம் பற்றியும் தெரியும் , ஒரு பெண்ணோட வலியும் தெரியும் என பதிலடி கொடுக்கும் காட்சி ஆஹா அபாரம் உயிரோட்டமான சீன் அது 2 பலர் இப்பட விமர்சனங்களில் ஹீரோயின் சின்னப்பொண்ணா இருந்தப்ப அவருக்கு நடந்த பாலியல் சீண்டல்கள் ஃபளாஸ்பேக்காக ஆங்காங்கே வருது . மெயின் கதைக்கும் அந்த காட்சிக்கும் என்ன சம்பந்தம் ? என கேட்டிருந்தாங்க . அது நிச்சயம் வேண்டும், ஹீரோயின் சிறுமியா இருக்கும்போது ஸ்கூல் வாத்தியார் பாலியல் சீண்டல் செய்ய முற்படும்போது அப்பா வந்து ஹீரோயினை காப்பாத்தறார். அப்படிப்பட்ட சிறுமிகளின் வலி தெரிந்த அப்பா அந்த தப்பைப்பண்ணி இருக்க மாட்டார் என உறுதியாக அவர் நம்பறார் என்பதற்கு அந்தக்காட்சி அவசியம் 3 க்ளைமாக்ஸ் ட்விஸ்ட் எதிர்பாராத ஒன்று . சிறுமியின் சித்தப்பா அல்லது ட்யூட்டி மாற்றி விட வரும் லிவிங்க்ஸ்டன் இருவரில் ஒருவர் தான் குற்றவாளி என நான் யூகித்திருந்தேன் ( சுழல் எஃபக்ட்) லாஜிக் மிஸ்டேக்ஸ் . திரைக்கதையில் சில நெருடல்கள் 1 பல வீடுகள் இருக்கும் அபார்ட்மெண்ட்டில் மாலை 5.30 மணிக்கு சம்பவம் நடக்குது. 4 பேர் மாடிப்படிக்கட்டுல வெச்சு பாலியல் வன்முறை நிகழ்த்துவது நம்ப முடியாத இடம், ஏன்னா அவங்க தங்கி இருக்கும் வீட்டுக்கு கூட்டிட்டுப்போய் இருக்கலாம், ஆள் நடமாட்டம் உள்ள பகுதியில் அது ரிஸ்க் ஆச்சே? ( எல்லாரும் லிஃப்ட்ல போய்டுவாங்க ஸ்டெப்ஸ் யாரும் யூஸ் ப்ண்றதில்லை என்ற சால்ஜாப் சொல்லப்பட்டாலும் ஏத்துக்க முடியல ) 2 இப்போ சொல்லப்போற விஷய்ம் கொஞ்சம் சங்கடமா இருக்கும், ஆனாலும் சொல்றேன். ம்னோவியல் நிபுணர்கள் கூற்றுப்படி சிறுமியை வன்கொடுமை செய்பவர்கள் பெண் வாசமே படாமல் காய்ந்து கிடப்பவர்கள் அல்லது பெண் துணையே இல்லாமல் ரிமோட் ஏரியாவில் இருப்பவர்கள் தான் சைக்கோ போல அப்படி நடந்துக்குவாங்க ., ஆல்ரெடி மனைவி உள்ள குடும்பத்தில் உள்ள ஆண் அப்படி செய்ய மாட்டான். அதுவும் ஆல்ரெடி 4 பேர் பலாத்காரம் பண்ணி ரத்த வெள்ளத்தில் அப்டியே போட்டுட்டுப்போய் இருக்கும்போது அந்த உடம்பைப்பார்க்கும்போது பரிதாபமும் அசூயை ஆகவும் தான் இருக்கும் கிளுகிளுப்பு மூட் எப்படி வ்ரும்? 3 சிறுமிக்கு டேப்லெட் கொடுக்கும் போலீஸ் ஆஃபீசர் பெரியவங்களுக்குக்கொடுக்கும் அதிக டோஸ் கொடுத்துட்டார்னு லா பாயிண்ட்ல பிடிக்கறாங்க அப்போ அப்பா கூடதானே இருந்தார்? அவர் கிட்டே போலீஸ் ஏன் கலந்தாலோசிக்கலை ? 4 சபாஷ் டைரக்டர் போர்சன்ல நான் சொன்ன ஜட்ஜ் - வக்கீல் வாதம் கை தட்ற மாதிர் இருந்தாலும் லாஜிக்கலா கோர்ட் வளாகத்தில் ஒரு வக்கீல் ஜட்ஜை அப்படி எல்லாம் கமெண்ட் பண்ணவே முடியாது . நீதிம்ன்ற அவமதிப்பு வ்ழக்கில் லாடம் கட்டிடுவாங்க 5 பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் முகத்தில் முகமூடி அல்லது முகத்திரை போட்டு கோர்ட்டுக்கு கூட்டிட்டு வரும் போலீஸ் பாதிக்கப்பட்ட பெண்ணை அப்படியே ஓப்பனாக கூட்டி வருவது எப்படி ? அவர் முகம் வெளில தேரிஞ்சா பரவாயில்லையா? 6 லிவிங்க்ஸ்டன் மகளை பெண் பார்க்க மாப்ளை வீட்டுக்காரங்க வருவதால் அன்றைக்கு லீவ் என்பதால் ஷிஃப்ட் மாற்ற வரவில்லை சரி ஆனா ஆல்ரெடி பிளான் செய்யப்ப்ட்ட நிகழ்வு என்பதால் அவர் லீவ் என்பதை முன் கூட்டியே சொல்லி இருப்பாரே? திடீர்னு ட்யூட்டி டபுள் டியூட்டி பார்க்க வேண்டியதாகிடுச்சு என்பது எப்படி ? 7 பாதிக்கப்ப்ட்ட பெண் அலல்து சிறுமி வீட்டுக்கு ஹீரோயின் போய் விசாரிப்பது எந்த விதத்திலும் நியாயமே இல்லை ரிஸ்க் வேற சட்டப்படியும் தப்பு 8 லிவிங்க்ஸ்டன் பொண்ணு மாப்ளை வீட்டுக்காரங்க வரும் சமயத்தில் லவ்வரோட ஓடிப்போய்டுச்சு என செய்தி வரும்போது பதைபதைத்து பெண்ணைத்தேடும் வேலை போலீசில் புகார் தரும்வேலை யில் இறங்குவாரா? அல்லது ட்யூட்டிக்கு வர்லை என சொல்லிய அபார்ட்மெண்ட்டில் செக்யூரிட்டி ரூமில் போய் தண்ணி அடிச்ட்டு படுத்து இருப்பாரா? 9 மாலை 7 மணிக்கு அபார்ட்மெண்ட்க்கு லிவிங்க்ஸ்டன் போலீசில் அதை மறைப்பது என்ன தைரியத்தில் . சிசிடிவி ஃபுட்டேஜ் காட்டிக்கொடுக்கும் என்பது தெரியாதா? அல்லது யாராவது பார்த்தவங்க சாட்சி சொன்னா மாட்டிக்குவோம்னு தெரியாதா? 10 சம்பவம் நடந்து 30 நாட்களுக்கு மேல் தான் குற்றவாளிகள் பிடிக்கப்படறாங்க. வடக்கே இருக்கறவங்க கெட்டப் மாத்திக்கலை ஓக்கே , ஆனா உள்ளூர் ஆளான ஐந்தாவது குற்றவாளி சிறுமி தன்னை அடையாளம் காட்டிட்டா வம்பு என கெட்டப் மாற்றாமல் அதே பழைய தோற்றத்தில் இருப்பது எப்படி ? சி பிஎஸ் ஃபைனல் கமெண்ட் - பெண் குழந்தைகள் வைத்திருக்கும் பெற்றோர் அவசியம் பார்க்க வேண்டிய விழிப்புணர்வுப்படம். கமர்ஷியல் அம்சங்கள் இல்லை . ஆனந்த விகடன் எதிர்பார்ப்பு யூக மதிப்பெண் , குமுதம் ரேட்டிங் யூகம் நன்று 43 அட்ரா சக்க ரேட்டிங் 3 / 5 Tweet Newer Post Older Post Home 0 comments: Post a Comment Follow @CpsWriter Followers Featured Post மின்னல் சமையல் -30 வகை ஸ்பெஷல் குறிப்புகள் வே லைக்குப் போகிறவர்களானாலும் சரி, இல்லத்தரசிகளானாலும் சரி... காலையில் கண் விழித்த உடனேயே, 'சாப்பிடுவதற்கும், கையில் எடுத்துச் செல்வ... This Week Popular கிளு கிளு கார்னர் - ராத்திரியில் ரதி தேவி சொன்ன ஜோக்ஸ் - பாகம் 1 யுத்த காண்டம் (2022) - சினிமா விமர்சனம் ( த்ரில்லர்) @மூவிவுட் ஓடிடி லவ் டுடே (2022) - சினிமா விமர்சனம் ( ரொமாண்டிக் காமெடி டிராமா) @ நெட் ஃபிளிக்ஸ் 2/12/22 முதல் varane avashyamund (2020)=வாரனே அவஷ்யமுண்ட்(மலையாளம்) -சினிமா விமர்சனம் ( மெலோ டிராமா) @ நெட் ஃபிளிக்ஸ்
New Indian-Chennai News & More -> பைபிள் ஒளியில் இயேசு? கிறிஸ்து? தேவப்ரியாஜி -> ஆக்ராவிலிருந்து சத்ரபதி சிவாஜி தப்பிய வரலாறு Start A New Topic Reply Printer Friendly Post Info TOPIC: ஆக்ராவிலிருந்து சத்ரபதி சிவாஜி தப்பிய வரலாறு Admin Guru Status: Offline Posts: 23907 Date: Jun 5, 2019 ஆக்ராவிலிருந்து சத்ரபதி சிவாஜி தப்பிய வரலாறு Permalink Printer Friendly ஆக்ராவிலிருந்து சத்ரபதி சிவாஜி தப்பிய வரலாறு – 1 March 1, 2018 - பி.எஸ். நரேந்திரன் நன்றி : ராவ் சாகிப் தேஷ்பாண்டே குறிப்பு: ஔரங்க்ஸிப்பைச் சந்திக்க ஆக்ரா சென்று, பின்னர் அவரால் அவமானப்படுத்தப்பட்டுச்சிறையில் அடைக்கப்பட்ட சத்ரபதிபதியும் அவரது மகன் சாபாஜியும் அங்கிருந்து தப்பிய வரலாற்றுப்பின்னனித் தகவல்களை, ராவ் சாகிப் தேஷ்பாண்டே அவர்கள் ஆராய்ந்து The Deliverance or the Escape of Shivaji the Great from Agra என்னும் புத்தகத்தை எழுதியிருக்கிறார். அதிலிருந்து சில பகுதிகள் இங்குமொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ஆக்ராவில் சிவாஜி மகராஜாவுக்கு நிகழ்ந்த அவமானங்கள் என்னவென்பதனைப் பற்றி ஆளாளுக்கு எழுதி வைத்திருக்கிறார்கள் (இந்தியர்கள், ஐரோப்பியகர்கள் இருநாட்டவரும்). சிறிது சலிப்பும், குழப்பமும் ஊட்டக்கூடிய அந்தக் குறிப்புகளிலிருந்து உண்மையில் நடந்தவற்றை ராவ் சாகிப் நமக்குப் படிக்க அளிக்கிறார். வரலாற்று ஆர்வலர்களுக்கு இது நிச்சயம் துணைபுரியும் என்று நம்புகிறேன். *** “ஒரு அரசாங்கம் நன்றாகச் செயல்படவேண்டுமானால், அந்த அரசை ஆளுகிறவன் தனது ராஜ்ஜியத்திற்குள் நடக்கும் எல்லாச் சிறிய, பெரிய நிகழ்வுகளையும் உடனுக்குடன் அறிந்தவனாக, அதன்படி எதிர் நடவடிக்கை எடுக்கிறவனாக இருக்கவேண்டும். அதில் நிகழும் ஒரே ஒரு சிறிய சுணக்கம்கூட அந்த அரசாங்கத்திற்கு வருடக்கணக்கில் அவமானத்தை வரவழைப்பதாக இருக்கும். உதாரணமாக என்னுடைய சிறிய கவனமின்மை காரணமாகத் தப்பியோடிய மராட்டிய ஈனன் சிவாவுடன் போர்புரிய என் வாழ்நாளின் கடைசி நாள்களைச் செலவிடவேண்டியதாயிற்று.” எனக் கசப்புடன் தன்னுடைய உயிலில் எழுதினார், இந்தியாவின் இறுதிப் பேரரசனான ஔரங்கஸிப். தன்னிடமிருந்த ஏராளமான படையணிகளைக்கொண்டும், பணத்தைக்கொண்டும் சிவாஜியைக் கொன்று, தக்காணத்தைத் தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள்கொண்டுவர இயலாமல்போன இயலாமையும், வருத்தமும் அந்த வார்த்தைகளில் தெறிப்பதனை நாம் காணவியலும். 1683-ஆம் வருடம் துவங்கி 1707-ஆம் வருடம் வரைக்குமான ஏறக்குறைய 24 நீண்ட வருடங்களில் ‘சபிக்கப்பட்ட’ மராத்தாக்களைத் தோற்கடிக்க இயலாமல் மனமுடைந்து இறந்தார் ஔரங்கஸிப். தொடர்ந்த போர்களினால் அவரது படையணிகள் நிலைகுலைந்து, களைத்துப்போயிருந்தார்கள். முக்கியமான படைத்தலைவர்கள் பலர் கொல்லப்பட்டிருந்தார்கள். அதனையும்விட முகலாய கஜானா காலியாகியிருந்தது. இது அத்தனையும், “கேடுகெட்ட” சிவாஜியைத் தான் தப்பவிட்ட ஒரு சிறிய தவறால் மட்டுமே நிகழ்ந்தது என்கிற உண்மை, ஔரங்கஸிப்பை அரித்துத் தின்றது. மராட்டாக்களை அழிக்கவந்த அசைக்கமுடியாத வலிமையுடைய முகலாய சாம்ராஜ்யம் இறுதியில் மராட்டாக்களை அழிக்க இயலாமல் தன்னுடைய சாம்ராஜ்யம் சிதறிப் போய்க்கொண்டிருப்பதனையும் கண்ணால் பார்த்துவிட்டே மறைந்தார் ஔரங்கஸிப். இரவு நேரங்களில் சாலைகளில் சென்றுகொண்டிருக்கும் முகலாயப்படைகளைத் திடீரெனத் தாக்கியழிப்பதிலிருந்து, முக்கியமான மலைப்பாதைகளில் ஒளிந்திருந்து தாக்கி, ஏராளமான படைவீரர்களையும், விலங்குகளையும் கொன்றும், காயப்படுத்தியும், கொள்ளையடித்தும் செல்லும் ‘சபிக்கப்பட்ட குள்ளர்களான‘ மராத்தாக்கள் ஔரங்கஸிப்பின் மனதில் பெரும் துயரத்தை விதைத்தார்கள். சந்தேகமில்லாமல் ஔரங்கஸிப் தைமூர் குடும்பத்து Chagtai பரம்பரையில் வந்த இந்தியாவின் பேரரசன். அவர் இந்தியாவை அவரது முன்னோர்களிடமிருந்து ஸ்வீகரித்தார். சிவாஜியோ, அவரது மூதாதையர்கள் இழந்ததைப் பெறப் போர்புரிந்தார். இந்திய ஹிந்துக்களை “நாய்கள்” எனக் கேவலமாகப் பேசிய, நடத்திய ஔரங்கஸிப்பினை வெறுத்த பூர்வகுடிகளான ஹிந்துக்கள், சிவாஜியை தங்களை விடுதலைசெய்ய வந்தவராக நோக்கினார்கள். ஔரங்கஸிப்பிற்கு எதிரான போரில் வெற்றிபெற ஒவ்வொரு இந்துஸ்தானத்து ஹிந்துவும் மனப்பூர்வமாக இறைவனை வேண்டிக்கொண்டிருந்தான். இந்தச் சூழ்நிலையில், ஆக்ராவுக்கு சமாதானம்பேசச் சென்று, அங்கு சிறைவைக்கப்பட்ட சிவாஜி, ஔரங்கஸிப்பின் பிடியிலிருந்து தப்பிவந்தது ஒரு பெரும் சரித்திர நிகழ்வேயன்றி வேறில்லை (ஆகஸ்ட்17, 1666). ஏனென்றால் ஔரங்கஸிப்பிடம் சிக்கிய எவரும் உயிருடன் திரும்பியதில்லை — அவரது சொந்த சகோதரர்கள் உட்பட. ஒருவேளை சிவாஜி அந்தச் சிறையிலேயே இறந்திருந்தால் இந்திய வரலாறே முற்றிலும் மாறியிருக்கும். முகலாய ஆட்சியேகூட இன்றுவரை தொடர்ந்து நடந்துகொண்டிருக்கவும் வாய்ப்பிருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. எனவே, முதலில் சிவாஜி ஆக்ராவுக்குச் செல்ல வேண்டிய சூழல் எப்படி உருவாகியது, அதற்குமுன்னர் நிகழ்ந்த முக்கியமான நிகழ்வுகளை சுருக்கமாகப் பார்க்கலாம். தனது தந்தை ஷாஜஹானைப் பதவியிலிருந்து இறக்கி, ஹிந்துஸ்தானத்து பாதுஷாவாக முடிசூட்டிக்கொள்ளும் வரைக்கும் (ஜுலை 23, 1658) ஔரங்கஸிப் சிவாஜியைக் குறித்து கவலை எதுவும்கொண்டதாகத் தெரியவில்லை. அதற்கு ஒருவருடம் கழித்து (நவம்பர் 10, 1659), சிவாஜி பிஜப்பூரைச் சேர்ந்த தளபதி அப்துல்லாகான் என்கிற அஃப்சல்கானை தற்காப்பிற்காகக் கொன்றுவிட்ட செய்தி ஔரங்கஸிப்பை எட்டுகிறது. பிஜப்பூரையும், கோல்கொண்டாவையும் அழிக்க நினைத்து மனதிற்குள் கறுவிக்கொண்டிருந்த ஔரங்கஸிப்பிற்கு அந்தச் செய்தி தேனாக இனிக்கிறது. அஃப்சல்கானைக் கொன்ற சிவாஜி பிஜப்பூர் படைகளைத் தாக்கி அவர்களைத் தோல்வியுறச் செய்து விரட்டியடிக்கிறார். ஆப்பிரிக்க சித்திக்களின் (Siddis) எளிதில் தப்பமுடியாத முற்றுகையை பன்ஹலா கோட்டையிலிருந்து வீரத்துடன் முறியடிக்கும் சிவாஜி, அங்கிருந்து தப்பிச் செல்கிறார் (1660). சிவாஜியால் கொல்லப்பட்ட அஃப்சல்கானின் மகனான ஃபசல்கான், சித்திக்களுடன் கூட்டணி அமைத்துச் செய்த முற்றுகை அது. சிவாஜியின் வீரம்செறிந்த வாழ்வின் ஒரு பெரும் மைல்கல்லாகக் கருதப்பட்ட ஒன்று. இதனைக் கேள்விப்படும் ஔரங்கஸிப் இதற்குமேலும் சிவாஜியை விட்டுவைப்பது ஆபத்து என்கிற முடிவுக்குவந்து, அவரது தாய்மாமனான சைஸ்டாகானின் (அமிர்-உல்-உம்ரோ சைஸ்டாகான்) தலைமையில் ஒரு பெரும்படையை தக்காணத்தைநோக்கி அனுப்பிவைக்கிறார். சைஸ்டாகான் பல போர்களின் அனுபவமும், பெரும் வீரர் எனவும் பெயரெடுத்தவர். அவருடன் ஜஸ்வத்சிங்கின் படைகளும் வருகின்றன. ஜஸ்வந்த்சிங், ஷாஜஹான் காலத்திலிருந்தே அவருக்கு விசுவாசமாகப் பணிபுரிந்தவர். அவரும் வீரத்தில் குறைந்தவரில்லை. இருவரும் ஜனவரி 1660-ஆம் வருடம் தங்கள் படைகளுடன் ஔரங்காபாத்தில் முகாமிட்டு, சிவாஜிக்கு எதிரான நடவடிக்கைகளைத் துவக்குகின்றனர். ஆனால், சிவாஜியின் படைகள் சைஸ்டாகானுக்கு எண்ணவே இயலாத அளவிற்குத் தொல்லைகள் தருகின்றன. இரவுநேரத்தில் திடீரென குதிரைகளில்வரும் மராட்டாக்கள், சைஸ்டாகானின் முகாமைத் தாக்கி கைக்குக் கிடைத்ததையெல்லாம் தூக்கிக்கொண்டு செல்கிறார்கள். குதிரைகள், மனிதர்கள் என எதுகிடைத்தாலும் விடுவதில்லை. எனவே வேற வழியில்லாமல் சைஸ்டாகான் கூடாரத்தைக் காலிசெய்துகொண்டு பூனாவுக்குச் செல்கிறார். பின்னர் அங்கிருந்து சங்க்ராம் துர்க்கிற்குச் சென்று, அங்கிருக்கும் கோட்டையை முற்றுகையிடுகிறார். இரண்டுமாதகால முற்றுகைக்குப் பிறகு, சங்க்ராம் துர்க் வீழ்கிறது. தீரத்துடன் போரிட்ட சிவாஜியின் படைத்தலைவரான பிரங்கோஜி நார்சலே பிடிபடுகிறார். அவரது வீரத்தை முகலாயர்கள் அறிவார்களாதாலால், சிவாஜியை நிராகரித்துத் தங்களுடன் சேர்ந்துகொள்ளக் கோருகிறார் சைஸ்டாகான். பிரங்கோஜி அதனை மறுத்து, தான் சிவாஜியின்கீழ் மட்டுமே பணிபுரிய விருப்பமுடையவனாக இருப்பதனைத் தெரிவிக்கிறார். பிரங்கோஜி என்னவானார் என்கிற விபரம் தெரியவில்லை. பின்னர் சைஸ்டாகான் பூனாவுக்குத் திரும்புகிறார். 1663-ஆம் வருடம் வரைக்கும் மராட்டாக்களுக்கு எதிராக அவர் எடுத்த அத்தனை முயற்சிகளும் தோல்வியில் முடிவடைகின்றன. ராஜா ஜஸ்வந்த்சிங்கின் படைகளும் அவரருகே முகாமிட்டிருக்கின்றன. மராட்டாக்களைப் பற்றித் தெளிவாக அறிந்திருந்த சைஸ்டாகான், தன்னுடைய, மற்றும் தன்னுடைய படைகளின் பாதுகாப்பிற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வைக்கிறார். இருப்பினும், தன்னுடைய நம்பிக்கைக்குப் பாத்திரமான மராட்டாக்கள் சிலருடன் திடீரென ஒருநாள் நடுஇரவில் (ஏப்ரல் 5, 1663), சைஸ்டாகானின் முகாமுக்குள் நுழையும் சிவாஜி, பெரும் கலவரத்தை மூட்டுகிறார். அன்றைக்கு நிகழ்ந்த பயங்கரங்களை சைஸ்டாகான் அவர் வாழ்நாளின் இறுதிவரை மறக்கவில்லை. முகலாயப் பேரரசரின் தாய்மாமனும், பெரும்போர்களில் வெற்றிகண்டவருமான சைஸ்டாகான் அசந்து உறக்கத்தில் இருக்கையில், அவரது இருப்பிடத்திற்குள் நுழையும் சிவாஜியால் சைஸ்டாகானின் மகனும், வேறு சிலரும் கொல்லப்படுகிறார்கள். இறுதிநேரத்தில் தப்பியோடும் சைஸ்டாகான், ஜன்னல் வழியே குதிக்கும் நேரத்தில் சிவாஜியின் வாள்வீச்சில் விரல்களை இழந்து தப்பியோடுகிறார். சைஸ்டாகான் தப்பிவிட்ட செய்தி எக்காளத்தின் (trumpet) வழியே தொலைவில் நின்றுகொண்டிருந்த மராத்தாக்களுக்கு அறிவிக்கப்படுகிறது. மாடுகளின் கொம்புகளில் பொருத்தப்பட்ட தீப்பந்தங்களுடன் மலைச் சரிவுகளில் நின்றுகொண்டிருக்கும் சிவாஜியின் ஆட்கள், அந்தத் தீப்பந்தங்களைக் கொளுத்தி மாடுகளை மலைகளைநோக்கி விரட்டுகிறார்கள். சிவாஜி மலையின்மீது தப்பிச்செல்வதாக எண்ணும் சைஸ்டாகானின் ஆட்கள் அந்தத் தீப்பந்தங்களைத் துரத்திக்கொண்டு வேகமாகச் செல்ல, சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்ட சிவாஜியும், அவரது ஆட்களும் வேறொரு பாதை வழியாக தப்பிச்சென்றுவிடுகிறார்கள். நடந்ததை அறிந்த ஔரங்கஸிப் அவமானத்தால் துடித்தார். மொகலாயப்படைகளுக்கு இதுபோன்றதொரு அவமானம், சபிக்கப்பட்ட ஹிந்து சிவாஜியால் நிகழ்த்தப்பட்டதை அவரால் பொறுத்துக் கொள்ளமுடியாமல் உடனடியாக சைஸ்டாகானை அந்தப் பொறுப்பிலிருந்து நீக்குகிறார். பழிக்குப்பழி வாங்கவேண்டும் என்று சைஸ்டாகான் கெஞ்சியும், ஔரங்கஸிப் அசைந்துகொடுக்கவில்லை. சிவாஜியின் தாக்குதல்கள் அத்துடன் நின்றுவிடவில்லை. மராட்டாக்கள் அவர் தலைமையில் முகலாயப்பகுதிகளிலும் தாக்குதல்கள் நடத்த ஆரம்பித்தார்கள். அன்றைக்குப் பெரும் வணிக நகரமாக, முகலாயப் பேரரசிற்கு ஏராளமான வருமானம் அள்ளித்தந்த சூரத் நகரம் தாக்கப்பட்டுக் கொள்ளையடிக்கப்பட்டது. அடுத்து அகமத்நகர் சூறையாடப்பட்டது. அவுரங்காபாதைச் சுற்றியிருந்த பகுதிகளும் தாக்குதலுக்கு உள்ளாயின. திடீரென கொங்கன் பகுதிக்கு வந்த சிவாஜியின் படைகள், அங்கிருந்த பீஜப்பூர் படைகளை துவம்சம் செய்தன. ஔரங்கஸிப் கோபத்துடன் தன் மகன் முகமது முவ்வாஸத்தை சிவாஜிக்கு எதிராகப் போரிடப் பெரும்படையுடன் அனுப்பிவைத்தார். அனுபவமற்ற முவ்வாஸத்தின் படைகள் மராட்டாக்களால் அலைக்கழிக்கப்பட்டு பட்டினியாலும், குடிக்க நீரில்லாமலும் செத்து வீழ்ந்தார்கள். ஏறக்குறைய இறக்கும் தருவாயில் முவ்வாஸம் மீட்கப்பட்டார். ஔரங்கஸிப், ஜெய்ப்பூர் அரசர் ராஜா ஜெய்சிங் தலைமையில் இன்னொரு பெரும்படையை சிவாஜிக்கு எதிராக அனுப்பிவைத்தார். ராஜா ஜெய்சிங் சாதாரணமானவரில்லை. சைஸ்டாகானைப் போலவே மிகப் பெரும் வீரர். அவருடன் இன்னொரு பெரும் திறமைசாலியெனப் பெயர்பெற்ற தில்தார்கானையும் ராஜா ஜெய்சிங்குடன் அனுப்பி வைத்தார், ஔரங்கஸிப். ஜெய்சிங் போர்வீரர் மட்டுமல்லாமல் சாணக்கிய தந்திரங்கள் தெரிந்தவர் என்கிற காரணமும் அவரை தக்காணத்திற்கு அனுப்பி வைக்க முக்கிய காரணம். அதையும்விட அவரரொரு ஹிந்து. இன்னொரு ஹிந்துவான சிவாஜியின் மனோபாவம் அவர் நன்றாக அறிந்திருக்க வாய்ப்பிருக்கிறது. ஜெய்சிங் மெல்லமெல்ல சிவாஜியின் மராட்டாக்களை வெல்ல ஆரம்பித்தார். அவருக்குப் பணிய மறுத்தவர்கள் விலைகொடுத்து வாங்கப்பட்டார்கள். கோட்டைகள் ஒவ்வொன்றாக ஜெய்சிங்வசம் செல்ல ஆரம்பித்தன. மராட்டாக்கள் பேரதிர்ச்சிக்கும், அச்சத்திற்கும் உள்ளானார்கள். அதையும்விட, சிவாஜியின் மனைவியும், பிள்ளைகளும் ஜெய்சிங்கின் பிடியில் சிக்கினார்கள். புரந்தர் கோட்டைக்கு எதிரான போரில் தான் தோற்பது உறுதி என்கிற நிலையில், அதற்கு மேலும் தனது படையினர்கள் உயிர் இழப்பதனைச் சகிக்க முடியாத சிவாஜி, ஜெய்சிங்குடன் சமாதானம் பேச கடிதம் எழுதினார். ஜெய்சிங் பிஜப்பூரின் மீது படையெடுத்தால் அதற்கு உதவத் தான் தயாராக இருப்பதாகவும், அப்படி ஒருவேளை ஜெய்சிங் தன்னுடன் சமாதானமாகப் போக மறுத்தால் தானும், தன்னுடைய மராட்டாக்களும், அடில்ஷாவுடன் சேர்ந்துகொண்டு முகலாயப்படைகளுக்கு எதிராகப் போராடுவோம் எனவும் சிவாஜி எழுதிய கடிதத்தைப் படிக்கும் ராஜா ஜெய்சிங், சிவாஜியுடன் சமாதானம் பேச சம்மதம் தெரிவித்தார். ஆனால் தில்தார்கான் அதனை எதிர்த்துக் கூறினாலும், ஜெய்சிங் அதனைப் பொருட்படுத்தாமல் ஔரங்கஸிப்பிற்குத் தகவல் தெரிவித்தார். சமாதானத்தின் ஒரு பகுதியாகத் தான் வென்றெடுத்த அத்தனை பகுதிகளையும் தன்னிடமே விட்டுக் கொடுக்கவேண்டும் எனவும், அத்துடன் தக்காணத்தின் முழுப் பொறுப்பையும் தன்னிடமே ஒப்படைக்கவேண்டும் என்றும் கூறினார், சிவாஜி. ஜெய்சிங் அதனையெல்லாம் ஔரங்கஸிப்பிற்குத் தெரிவித்துவிட்டதாகவும், சிவாஜியை ஆக்ராவுக்குச் சென்று ஔரங்கஸிப்பிடம் நேரடி அறிமுகம்செய்துகொள்ளவும் வேண்டினார். தனது குடும்பம், மற்றும் படைவீரர்களது மரியாதையைக் காப்பாற்றியே தீரவேண்டிய கட்டாயத்திலிருந்த சிவாஜி, சிறிது தயக்கத்திற்குப் பிறகு அதற்கு ஒப்புக் கொண்டார். அதேசமயம், இந்தியாவைநோக்கிப் படையெடுத்துவரும் பாரசீக இரண்டாம் ஷா-அப்பாஸை எதிர் கொள்ள வேண்டிய கட்டாயம் ஔரங்கஸிப்பிற்கு ஏற்பட்டது. தக்காணத்திலும், காபூலிலும் இரண்டு போர்களை எதிர்கொள்ளத் தயாராக இல்லாத காரணத்தால், சிவாஜியைச் சந்திக்க சம்மதித்தார் ஔரங்கஸிப். ராஜா ஜெய்சிங்கும், சிவாஜியும் ஜுன் 12, 1665-ஆம் வருடம், சிவாஜி ஜெய்சிங்கிடம் முறைப்படி சரணடைய ஒப்புக் கொண்டார். அதன்படி, பன்னிரண்டு கோட்டைகளை சிவாஜி வைத்துக் கொள்வதாகவும், தக்காணத்தின் ஆட்சிப்பொறுப்பு அவருக்கு அளிக்கப்படுவதாகவும், முகலாய அரசவையில் சிவாஜியின் மகனான சாம்பாஜி (8 வயது) மராட்டாக்களின் பிரதிநிதியாக இருப்பார் எனவும், அவருக்கு ஐயாயிரம் குதிரைப்படைகளின் தலைமை அளிக்கப்படவேண்டும் எனவும் கோரிக்கைவைக்கப்பட்டு, அந்த கோரிக்கை ஏற்கப்பட்டது. ஆக்ராவிற்குப் புறப்படுவதற்குமுன்னர், சிவாஜி தனது முக்கியஸ்தர்களுடன் ராய்காட்டில் ஆலோசனை நடத்தி, பொறுப்புகளைப் பிரித்து ஒப்படைத்தார். தான் திரும்பி வருவதற்கான உறுதி எதுவும் இல்லாத காரணத்தால், நடப்பதனை விதியின் கையில் விட்டுவிட்டு, தன்னுடைய தாயான ஜீஜாபாயிடம் உத்தரவுபெற்று, ஆக்ராவுக்குப் பயணமாகிறார். அதன்படி, மார்ச் 5, 1666 அன்று ராய்கட்டிலிருந்து ஆக்ராவுக்குப் பயணத்தைத் துவக்குகிறார் சிவாஜி. __________________ Admin Guru Status: Offline Posts: 23907 Date: Jun 5, 2019 RE: ஆக்ராவிலிருந்து சத்ரபதி சிவாஜி தப்பிய வரலாறு Permalink Printer Friendly ஆக்ராவிலிருந்து சத்ரபதி சிவாஜி தப்பிய வரலாறு – 2 March 3, 2018 - பி.எஸ். நரேந்திரன் நன்றி : ராவ் சாகிப் தேஷ்பாண்டே இத்தொடரின் மற்ற பகுதிகளை இங்கு வாசிக்கலாம். மார்ச் 5, 1666-ஆம் வருடம் ராய்காட்டிலிருந்து புறப்பட்டு ஔரங்காபாத்தை வந்தடையும் சிவாஜிக்கு, ஐந்நூறு முகலாய குதிரைப்படையினரும், அதே அளவிலான காலாட்படையினரும் அணிவகுத்து மரியாதை செய்கிறார்கள். சிவாஜியின் படையணியில் அவரது மிகச் சிறந்த மந்திரிகளும், படைத்தலைவர்களும் இருந்தார்கள். ஔரங்காபாத் நகரம் முழுவதும் திரண்டுவந்து ஊர்வலத்தை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது. சிவாஜியை மிகச் சிறிய ஜமீந்தாராக எண்ணிக்கொண்ட ஔரங்காபாத் கவர்னர் சஃபி ஷிகான் கான், சிவாஜியை நேரடியாக வரவேற்க வரவில்லை. தன்னைவந்து சிவாஜி பார்க்கவேண்டும் என எண்ணிக் கொண்டிருந்த சஃபி ஷிகானை உதாசீனப்படுத்திய சிவாஜி நேராக ராஜா ஜெய்சிங்கின் அரண்மனைக்குப்போய்த் தங்குகிறார். கவர்னர் சஃபி ஷிகான் கானும் அவரது பிரதானிகளும் சிவாஜியை எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாக கேள்விப்பட்டவுடன் கோபமடைந்த சிவாஜி, “யாரிந்த சஃபி ஷிகான் கான்? என்ன மாதிரியான பதவியிலிருக்கிறார், அந்த ஆள்? என்னை எதற்காக வந்துபார்த்து மரியாதைசெய்யவில்லை?” எனச் சீறுகிறார். அதேநாள் மாலையில் சஃபி ஷிகானும், அவரது பிரதானிகளும் சிவாஜியின் தங்குமிடத்திற்கு வந்து அவருக்கு மரியாதைசெய்கின்றனர். சிவாஜி மறுநாள் கவர்னரின் இருப்பிடத்திற்குச் சென்று அந்த மரியாதையைத் திரும்பச் செலுத்துகிறார். சிவாஜியின் ஆக்ரா பயணத்திற்காக முகலாய அரசு கொடுக்கவேண்டிய ஒரு இலட்சம் ரூபாய்கள் வந்துசேரும்வரை ஔரங்காபாத்தில் தங்கியிருக்கும் சிவாஜி, அது கைக்கு வந்துசேர்ந்ததும், ஆக்ரா நோக்கிப் பயணத்தைத் தொடர்கிறார். ஔரங்காபாதிலிருந்து ஆக்ராவரைக்கும் சிவாஜியும் அவரது படையணிகளும் மிக மரியாதையுடன் நடத்தப்படுகின்றனர். அவ்வாறு நடத்தப்படவேண்டும் என்பது ஔரங்கஸிப்பின் உத்தரவு. அரசகுலத்தில் பிறந்த ஒருவருக்குத் தரப்படவேண்டிய அத்தனை மரியாதைகளும் சிவாஜிக்கு அளிக்கப்பட்டன. மே மாதம், ஒன்பதாம் தேதி, 1666-ஆம் வருடம் ஆக்ராவை வந்தடைகிறார், சிவாஜி. அதே வருடம் ஜனவரி 22-ஆம் தேதி ஷாஜஹான் ஆக்ராவில் காலமானார். முகலாய அரசின் முழு அதிகாரமும் ஔரங்கஸிப்பின் கைக்கு வந்து சேருகிறது. அரியணைக்குப் போட்டியிட யாரும் இல்லாத நிலைமையில் மிக மகிழ்ச்சியான மனோநிலையில் இருந்த ஔரங்கஸிப் தனது ஐம்பதாவது பிறந்த தினத்தை மிகக் கோலாகலமாகக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார். ‘சபிக்கப்பட்ட‘ மராட்டாக்களின் தலைவரன ‘மலை எலி‘ சிவாஜிக்கு ராஜ்ஜியத்தின் செல்வச் சிறப்பையும், வலிமையையும் காட்டுவதற்காக ஆக்ரா அரண்மனை மிக அழகாக அலங்காரங்கள் செய்யப்பட்டிருக்கிறது. சிவாஜி தனது படைகளுக்கெதிராகச் செய்த அட்டூழியங்களைச் சொல்லி, இனியும் அதுபோலச் செய்துதால், தான் பொறுத்துக் கொள்ளமாட்டேன் என அவருக்கு உறுதியாக எடுத்துச் சொல்ல ஔரங்கஸிப் எண்ணிக்கொண்டிருக்கிறார். முடிந்த அளவிற்கு சிவாஜியைக் குறைவாக நம்பி, அவர்மீதான தனது பிடியை இறுக்குவது — தனக்கு அடிபணிய மறுத்தால் கடுமையாக தண்டிப்பது என்கிற முடிவுக்கு வந்திருக்கிறார் ஔரங்கஸிப். ஆக்ராவை மே 9, 1666 அன்று வந்தடையும் சிவாஜியை ராஜா ஜெய்சிங்கின் மகனான ராம்சிங் வரவேற்கிறார். முகலாய அரசின் சார்பாக யாரோ ஒரு சாதாரண அதிகாரி தன்னை வரவேற்க வந்திருப்பதனை அறிந்த சிவாஜி கோபம் கொள்கிறார். ராஜா ஜெய்சிங்கின் அரண்மனைக்கும் தாஜ்மஹாலுக்கும் இடைப்பட்ட பகுதியில் சிவாஜி குடியமர்த்தப்படுகிறார். அந்தப் பகுதிக்கு ‘ஷிவ்புரா‘எனத் தற்காலிகமாகப் பெயரிடுகிறார்கள். சிவாஜியைக் குஷிப்படுத்துவதற்காக. பின்னர் அந்த வரலாற்றுப் புகழ்பெற்ற நாளும் வந்தடைகிறது. மே 12, 1666ம் நாளன்று சிவாஜி ஔரங்கஸிப்பைச் சந்திக்கப் புறப்படுகிறார். இந்தியாவில் அன்றைய தினம் வாழ்ந்த இரு மாபெரும் மனிதர்கள் — ஒருவருக்கெதிராக ஒருவர் வெறுப்புடன் கடும் போர்புரிந்தவர்களான அவர்களிருவரும் உலகின் மூலை, முடுக்குகளில் அறியப்பட்ட முகலாய ராஜதர்பாரான திவான்-இ-ஆமில் சந்திக்கவிருந்தார்கள். திவான்-இ-ஆம் மிக அழகாக அலங்கரிக்கப்பட்டிருக்கிறது. முகலாய அரசப்பிரதானிகள், ராணுவத்தினர் அவரவரின் தகுதிக்கேற்ப தர்பாரின் உள்ளே அமைந்த தங்க வளையத்தடுப்புகளுக்கும், வெள்ளி வளையத்தடுப்புகளுக்கும் உள்ளேயோ அல்லது வெளியேயோ அமர்ந்திருக்கிறார்கள். முகலாய அரசு அதன் உச்சத்தில் இருந்த காலம் அது. விலைமதிப்பில்லாத மயிலாசனத்தில் ஔரங்கஸிப் அமர்ந்திருக்கிறார். அவரைச் சுற்றிலும் அவரின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவர்கள் நின்றிருக்கிறார்கள். சிவாஜி ஒரு மந்திரவாதி என ஔரங்கஸிப்பின் மாமனான சைஸ்டாகான் எச்சரித்திருந்ததால், ஔரங்கஸிப் அதற்கு எதிராக எடுக்கவேண்டிய அத்தனை பாதுகாப்பு நடவடிக்கைகளையும் எடுத்திருக்கிறார். ஆனால் சைஸ்டாகான் அன்றைக்கு அரசவைக்கு வரவில்லை. அவரது மனைவி, ஔரங்கஸிப்பின் மனைவி, மகள்கள் ஆகியோர், அரண்மனைப் பெண்களுடன் திரைக்குப்பின் அமர்ந்து, அரசவை நடவடிக்கைககளைக் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். சிவாஜியால் கொல்லப்பட்ட அவளது மகனின் நினவுடன், சைஸ்டாகானின் மனைவி சிவாஜியை எதிர்நோக்கிக் கோபத்துடன் காத்திருக்கிறாள். நிராயுதபாணியான சிவாஜியுடன், அவரது சொந்த அலுவலர்கள் பத்துபேர்கள் மட்டுமே அழைத்துவர அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். ராஜா ஜெயசிங்கின் மகனான ராம்சிங் சிவாஜியையும், அவரது மகனான சாம்பாஜியையும் (9 வயது) அரசவைக்கு அழைத்து வந்திருக்கிறார். ராம்சிங்கால் அறிமுகப்படுத்தப்படும் சிவாஜியை “ஆயியே சிவாஜி…(வாருங்கள் சிவாஜி)” என்கிறார் ஔரங்கஸிப். ஔரங்கஸிப்பின் முன்னர் நிறுத்தப்பட்ட சிவாஜி அவருக்கு மூன்றுமுறை பணிந்து சலாமிடுகிறார். அவ்வாறு சலாம் செய்ய மறுத்து ராம்சிங்குடன் வாதிட்டு இறுதியில் அரசவை விதிகளை மீறாமல் இருக்க முடிவுசெய்யப்பட்டிருக்கிறது. முதலாவது சலாம் மகாதேவுக்கு (சிவன்); இரண்டாவது சலாம் பவானிக்கு; மூன்றாவது சலாம் அவருடைய தந்தைக்கு என்பது சலாம்களுக்கு சிவாஜியின் கொடுத்த அர்த்தம். மூன்றாவது சலாமிற்குப் பிறகு ஔரங்கஸிப்பினுடன் பார்வையைப் பகிர்ந்து கொள்கிறார் சிவாஜி. அரசவை விதிகளின்படி யாரும் பாதுஷாவை ஏறிட்டு நோக்கக்கூடாது. பாதுஷாவே அழைத்தாலன்றி வரக்கூடாது அல்லது பதிலளிக்கக்கூடாது என்பது விதி. சிவாஜியை இரண்டாம்தர அரசவைப்பிரதானிகள் இருக்கும் பகுதிக்கு அழைத்துச்செல்லும்படி ராம்சிங்கிடம் கூறுகிறார் ஔரங்கஸிப். மரியாதை நீரூற்று இருக்கும் பகுதிக்கு அழைத்துச்செல்லப்படுவதற்கு முன்னர் பெண்கள் பகுதியிலிருந்து சைஸ்டாகானின் மனைவி தன் மகனைக் கொன்ற சிவாஜியை உடனே கொல்ல வேண்டும் எனக் கூச்சலிடுகிறாள். ஔரங்கஸிப்பால் அவளை உடனடியாக அடக்க இயலவில்லை. ஒருவேளை அது சிவாஜியை அவமானப்படுத்த ஔரங்கஸிப்பே செய்ததாக இருக்கலாம் என்றாலும், உறுதியாகத் தெரியவில்லை. இதனால் சிறிது எரிச்சலடையும் சிவாஜி, தான் நின்றிருக்கும் பகுதியில் தனக்கு முன்னால் நின்றிருப்பது யார் என ராம்சிங்கிடம் கேட்கிறார். அவர் ராஜா ஜஸ்வந்த்சிங் எனப் பதில்கூறுகிறார் ராம்சிங். ஜஸ்வந்த்சிங் சிவாஜியை போர்களில் தோற்கடித்தவர் என்றாலும் அவரை உடனடியாக சிவாஜிக்கு அடையாளம் தெரியவில்லை. மேலும் அவரைத் தனக்கு இணையாக நினைக்கவில்லை. தன்னை இப்படி இரண்டாம் நிலை ஆசாமிகள் இருக்கும் பகுதிக்கு அழைத்துவந்து ஔரங்கஸிப் அவமானப்படுத்தி விட்டதாக சிவாஜி பல்லைக் கடித்துக் கொண்டிருக்கையில், சிவாஜிக்கு வழங்கப்படவிருக்கும் பதவி, பட்டம் குறித்து வாசிக்கப்படுகிறது. அதன்படி சிவாஜிக்கு வருடம் 30,000 ரூபாய்கள் நஸ்ர் (பரிசு) வழங்கப்படுவதுடன், ஐயாயிரம் (பாஞ்ச் ஹஸாரி) குதிரைகள் அடங்கிய படையின் தலைமையாளராக ஆக்கப்படுவார். அதே பாஞ்ச் ஹஸாரித் தலைமை பதவி அவரது மகனான ஒன்பது வயது சாம்பாஜிக்கும் வழங்கப்படுவதாக வாசிக்கப்படுவதனைக் கேட்ட சிவாஜி அறிவிப்பைக்கேட்டுக் கோபத்தின் உச்சத்திற்குச் செல்கிறார். ஆக்ராவிற்கு வருவதற்குமுன்னர் ராஜா ஜெய்சிங்குடன் செய்துகொண்ட உடன்படிக்கையின்படி சிவாஜி பிற அரசர்களுக்கு இணையாக நடத்தப்படுவதுடன், தக்காணப்பகுதி அவருடைய பொறுப்பில் விடப்படுவதாகவும் முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால் ராஜா ஜெய்சிங் அதனையெல்லாம் ஔரங்கஸிப்பிடம் எடுத்துச் சொல்லவில்லை. சொல்லியிருந்தால் ஔரங்கஸிப் இந்த சந்திப்பிற்கே தடைவிதித்திருக்கலாம். அல்லது ஜெய்சிங் சொன்னதை ஔரங்கஸிப் ஏற்றுக்கொள்ள மறுத்து, வேண்டுமென்றே அவரை அவமானம் செய்வதற்காக அவருக்கும் அவரது மகனுக்கும் ஒரே பதவியைத் தருவதற்கு நினைத்திருக்கலாம். இதனைக் கொண்டு சிவாஜியை எளிதாகக் கட்டுப்படுத்தவும் அவர் நினைத்திருக்கக் கூடும். ஔரங்கஸிப் அவ்வாறு செய்யக்கூடிய இயல்புடையவர்தான். ஆனால் இந்தச் சந்திப்பிற்கு இருவருமே தயாராக இல்லை என்பதுதான் அடிப்படை உண்மை. சிவாஜி இதுபோன்ற சிறுமைகளைத் தாங்கிக்கொள்கிற ஆளில்லை. கோபத்துடன் ராம்சிங்கிடம் தனது உடைவாளைத் தரும்படி கர்ஜிக்கிறார். எனக்கும் என் மகனுக்கும் ஒரே பதவியா? இந்த அவமானம் எனது மக்களைச் சென்றடையுமுன் நான் தற்கொலை செய்துகொள்ளப்போகிறேன் எனக் கோபத்துடன் கூறி ஔரங்கஸிப்பை நோக்கிச் செல்லமுயன்றவரின் தோள்களில் அழுத்திப் பிடித்துக் கொண்டார்கள். சிவாஜி மயங்கிவிழுகிறார். ஔரங்கஸிப் அரசாங்க நடவடிக்கைகளில் மிக உறுதியாக இருக்கும் ஒரு மனிதர். அரசவை சடங்குகளை மீற அவர் ஒருபோதும் அனுமதித்தது இல்லை. சிவாஜி இருக்கும் பகுதியில் நிகழும் குழப்ப நிலையைக் குறித்து அவருக்குச் சொல்லப்படுகிறது. சிவாஜியை மறைத்துநிற்கும் ராம்சிங்கிடம் காரணத்தைக் கேட்கிறார் ஔரங்கஸிப். “காட்டில் கட்டற்று வாழ்ந்த புலிக்கு தர்பாரின் அடைபட்ட சூழ்நிலை பிடிக்கவில்லை” எனப் பதிலளிக்கிறார் ராம்சிங். படுக்கையில் படுத்துக் கிடக்கும் சிவாஜியை நோக்கிக் கைகாட்டும் ஔரங்கஸிப் “இந்த ஆளை எப்படிச் சிக்க வைக்க வேண்டும் என்பது எனக்குத் தெரியும்” என்கிறார், கோபத்துடன். ஜெபுன்னிஸ்ஸா பேகம் பெண்கள் பகுதியிலிருந்து நடப்பதனைக் கவனித்துக் கொண்டிருக்கும் ஔரங்கஸிப்பின் பிரியத்திற்குரிய மகள் ஜெபுன்னிஸா பேகம், உடனடியாக சிவாஜிக்கு முதலுதவி செய்யவேண்டும் என ஔரங்கஸிப்பை நோக்கிச் சைகை செய்கிறாள். அதனை ஏற்கும் ஔரங்கஸிப், உடனடியாக சிவாஜிக்கு மயக்கம் தெளிவித்து, அவருடைய இருப்பிடத்தில் கொண்டு விட்டுவிடும்படி ராம்சிங்கிற்கு உத்தரவிடுகிறார். ஆக்ராவின் கொத்வாலை (புலந்த்கான், தலைமை போலிஸ் அதிகாரி) அழைக்கும் ஔரங்கஸிப், சிவாஜியின் வசிப்பிடத்தைச் சுற்றிக் கடுமையான கண்காணிப்புசெய்ய ஆணையிடுகிறார். அத்துடன் சிவாஜி அரண்மனைக்குள் நுழைவதற்கும் தடைவிதிக்கிறார். சிவாஜி சிறைபிடிக்கப்பட்டார். அவருடைய வாழ்வும், சாவும் ஔரங்கஸிப்பின் கைக்குச் சென்றுவிட்டது. அதனைக் குறித்து ஔரங்கஸிப் மிகவும் மகிழ்ந்திருப்பார் என்றாலும் சிறிது காலத்திலேயே அவ்வாறு செய்ததற்காக பெரிதும் வருந்தியிருப்பார் என்பதில் சந்தேகமில்லை. தன்னுடைய அடிமைகளாக சேவகம்புரிகிற ஹிந்து ராஜாக்களைப் போல சிவாஜியையும் சாதாரணமாக எடைபோட்டார் ஔரங்கஸிப். ஒரு ஹிந்து அரசனுக்குத் தான் மரியாதை தருவதா என்கிற அடிப்படைவாத மனோபாவமே அவரது அழிவுக்கும், முகலாய சாம்ராஜ்யத்தின் வீழ்ச்சிக்கும் அச்சாரம் போட்டது என்பதனை அந்த நேரத்தில் அவர் உணர்ந்திருக்க வாய்ப்பில்லை. சிவாஜிக்கு உரிய மரியாதைதந்து அவரைக் கவுரவித்திருந்தால் ஔரங்கஸிப்பிற்குத் தென்னிந்தியாவில் ஒரு பெரும் சக்தி துணையாகக் கிட்டியிருக்கும். ஔரங்கஸிப் தனது குறுகிய பார்வையால் அதனை இழந்தார். [தொடரும்] __________________ Admin Guru Status: Offline Posts: 23907 Date: Jun 5, 2019 Permalink Printer Friendly ஆக்ராவிலிருந்து சத்ரபதி சிவாஜி தப்பிய வரலாறு – 3 March 5, 2018 - பி.எஸ். நரேந்திரன் நன்றி : ராவ் சாகிப் தேஷ்பாண்டே இத்தொடரின் மற்ற பகுதிகளை இங்கு வாசிக்கலாம். அவமானப்படுத்தப்பட்ட சினத்துடன் தனது அரசவையிலிருந்து வெளியேறிய சிவாஜியை மீண்டும் ஔரங்கஸிப் பார்க்க விரும்பினாரா இல்லையா என்பதை வரலாறு எங்கும் பதிவுசெய்து வைத்திருக்கவில்லை. ஆனால், பறவை எங்கும் தப்பமுடியாத வகையில் தன்னுடைய வலையில் சிக்கியிருப்பதனை அவர் அறிந்திருந்தார் என்பதில் சந்தேகமில்லை. புலந்த்கானின் சிப்பாய்கள் இரவும், பகலும் சிவாஜியின் இருப்பிடத்தைச் சுற்றிக் கண்காணிப்பு செய்துகொண்டிருந்தார்கள். ஔரங்கஸிப்பின் அரண்மனையில் மருத்துவராகப் பணிபுரிந்த நிகாலோ மானூச்சியின் குறிப்பின்படி சிவாஜி ஒரு கூடாரத்தில் தங்கவைக்கப்பட்டிருந்ததாகத் தெரிகிறது. அதனையே பெர்னியர்போன்ற பிறரும் உறுதிசெய்கிறார்கள். சிவாஜி தங்குவதற்குத் தகுதியான வீடொன்றைக் கட்டும்படி ஔரங்கஸிப் ஃபிதா-இ-கான் என்பவருக்கு உத்தரவிடுகிறார். வீடு கட்டிமுடிக்கப்பட்டதும் சிவாஜி கூடாரத்திலிருந்து அங்கு மாறிவிடுவதாக ஏற்பாடு. ஒன்றுமட்டும் உறுதி. சிவாஜி அந்த வீட்டிற்குக் குடியேறியதும் வெளியுலகம் தெரியாதபடி மறைந்துபோவார். ஔரங்கஸிப்பின் பிடியில் சிக்கிய எவரும் — அது அவருடைய தகப்பனாகவோ, அல்லது சகோதரர்களாகவோ, அல்லது வேறெந்த எதிரிகளாகவோ இருந்தாலும் — அவரால் கோட்டைகளிலும், பாதாளச் சிறைகளிலும் அடைக்கப்பட்ட பின்னர் வெளியே வந்ததாகச் சரித்திரமே இல்லை. சிவாஜியை அந்த வீட்டிற்குக் குடியேற்றியவுடன் அவரைக் கொன்றுபுதைக்கும் திட்டத்துடன் ஔரங்கஸிப் இருந்திருக்கலாமெனக் கூறுகிறார் மானூச்சி. சிவாஜி மிகத் துணிச்சல்காரர் என்றாலும், நிலைமையின் தீவிரத்தை உடனடியாக உணர்ந்து கொள்கிறார். இதுபோன்ற இக்கட்டுகளிலிருந்து பலமுறை தப்பிய அனுபவம் அவருக்கு இருப்பதால் இந்தச் சூழ்நிலையையும் துணிவுடனே எதிர்க்க முடிவுசெய்கிறார். எது நடக்கக் கூடாததோ அது நடந்துவிட்டது; நடந்ததை இனிமாற்றுவது கடினம். தனக்கு இருக்கும் காலமும் மிகக் குறைவானது, எனவே தானும், தன்னுடன் வந்தவர்களும் ஆக்ராவிலிருந்து பாதுகாப்பாக எவ்வாறு தப்புவது என அவரது முக்கியஸ்தர்களுடன் ஆலோசனைகளைத் தொடர்ந்து நடத்திக் கொண்டிருந்தார். ஏராளமான திட்டங்கள் தீட்டப்பட்டுப் பின்னர் கைவிடப்பறன. உடனடியாக ஔரங்கஸிப் சிவாஜியின்மீது கொண்டுள்ள கோபத்தினைக் குறைக்கும்வண்ணம் மீண்டுமொருமுறை ஔரங்கஸிப்பைத் தான் சந்திக்க விரும்புவதாக சிவாஜியின் வக்கீலான ராகோ பலால் கோர்டே மூலமாக வேண்டுகோள்விடுக்கிறார். அத்துடன், தானும், தன்னுடன் வந்தவர்களும் தக்காணம் திரும்ப அனுமதிக்க வேண்டும் என்கிற கோரிக்கையும் முன் வைக்கப்படுகிறது. பாதுஷாவை நேரில் சந்தித்து நடந்தவற்றைக் குறித்து விளக்கமளிக்கத் தான் விரும்புவதாகவும், அதற்கான அனுமதியைப் பெறும்படியும் கோர்டேயிடம் சொல்கிறார் சிவாஜி. அதன்படி ஒரு மனுவை ஔரங்கஸிப்பிடம் அளிக்கிறார் கோர்டே. ஆனால் ஔரங்கஸிப் அதற்குச் சரியான பதிலைச் சொல்லாமல், “நீங்கள் சொல்கிறபடி செய்கிறேன். பொறுமையாக இருக்கவும்.” என்கிற பதிலை அதே மனுவின் பின்புறம் அவருடைய கைப்பட எழுதி அனுப்புகிறார். சிவாஜியை என்னசெய்வது என்கிற இறுதி முடிவிற்கு ஔரங்கஸிப் இன்னும் வந்திருக்கவில்லை. இருவரின் சந்திப்பிற்கும் உதவிய ராஜா ஜெய்சிங், சிவாஜி ஆக்ராவிலிருந்து தக்காணத்திற்குப் பாதுகாப்பாகத் திருப்பி அனுப்பப்படுவார் என சத்தியம்செய்திருந்தார். இன்னொருபுறம் சைஸ்டாகானின் மனைவி சிவாஜியைக் கொல்லவேண்டும் என மீண்டும் மீண்டும் வற்புறுத்திக்கொண்டிருந்தாள். இந்தச் சூழ்நிலையில் ஔரங்கஸிப் தக்காணத்திலிருந்த ஜெய்சிங்குடன் தொடர்ந்து கடிதத் தொடர்புகொண்டு விவாதித்துக் கொண்டிருந்தார். தக்காணத்தை சிவாஜியிடம் ஒப்படைத்தால் பீஜப்பூர் படையெடுப்பு என்ன மாதிரியாக முடியும், சிவாஜிக்கு வேறேன்ன பதவிகள் தருவதாக ஜெய்சிங் உறுதியளித்தார் போன்ற தகவல்களைப்பெற ஔரங்கஸிப் முனைந்துகொண்டிருந்தார். சிவாஜியை விடுவித்தால் தக்காணத்தில் முகலாய அரசுக்கு நன்மைகள் எதுவும் உண்டா — அல்லது சிவாஜியைக் கொன்றால் அதனால் ஏதேனும் பிரச்சினைகள் தோன்றுமா என்பதுபோன்ற கவலைகள் ஔரங்கஸிப்பை வறுத்துக்கொண்டிருந்தன. அரசவையில் சிவாஜி நடந்துகொண்ட விதம் ஔரங்கஸிப்பைப் பெறும் சினம்கொள்ளச் செய்திருந்தது. தனக்கு அடிபணிய மறுப்பவர்களை ஔரங்கஸிப் விரும்பியதாகச் சரித்திரமில்லை. இருந்தாலும் அவரை உடனடியாகக் கொல்வதனை ஔரங்கஸிப் விரும்பவில்லை. அதற்கு பதிலாக, பாரசீகத்திலிருந்து படையெடுத்துவரும் இரண்டாம் ஷா-அப்பாஸுக்கு எதிராகச் சிவாஜியை காபூலுக்கு அனுப்பி வைக்கலாமா என்கிற யோசனையும் அவருக்கு இருந்தது. அவ்வாறு செய்தால் நாட்டின் தென்பகுதியில் தனக்கு இருக்கும் ஒரு பிரச்சினை குறையும் என்பது முக்கிய காரணம். சிவாஜி தக்காணத்தை விட்டுச் சென்றதிலிருந்து நிலமை வேறுவிதமாக மாறிவிட்டதால் சிவாஜியை ஆக்ராவிலிருந்து உடனடியாக விடுதலைசெய்ய வேண்டாம், அவரை அங்கேயே வைத்திருக்கச் சொல்லி ஜெய்சிங்கிடமிருந்து பதில்வருகிறது. தக்காணத்தில் உடனடியாகக் கோல்கொண்டா, பீஜப்பூர் ராஜ்ஜியங்களுக்கு எதிரான போர் முடிவுக்குவருவது சாத்தியமில்லை என்பதால் சிவாஜியினால் ஒரு பயனும் இல்லை என்பது ஜெய்சிங்கின் எண்ணம். எனவே சிவாஜியைக் குறித்தான நடவடிக்கைகளை சிறிது ஒத்திப்போட முடிவுசெய்கிறார் ஔரங்கஸிப். ஔரங்கஸிப்பிடமிருந்து தனது மனுவிற்குச் சாதகமான பதில் கிடைக்காததால் ஔரங்கஸிப்பின் முதல் அமைச்சரான ஜஃபார்கானின் உதவியை நாடத் தீர்மானிக்கிறார் சிவாஜி. பாதுஷாவுடன் நேரடி பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யவேண்டும் என்கிற கோரிக்கையுடன் ராகோ பலால் கோர்டே, ஜஃபார்கானிடம் அனுப்பிவைக்கப்படுகிறார். கோர்டேயும் ஜஃபார்கானைச் சந்தித்துக் கோரிக்கையை விளக்குகிறார். ஆனால் ஜஃபார்கானின் மனைவியும் சைஸ்டாகானின் மனைவியும் (சைஸ்டாகான் ஔரங்கஸிப்பின் தாய்மாமன். அவரது மகனான அப்துல் ஃபதேகானை சிவாஜி கொன்றுவிட்டார்) சகோதரிகளாதாலால், ஜஃபார்கானின் மனைவி சிவாஜி பாதுஷாவைச் சந்திக்க உதவக்கூடாது எனத் தன் கணவனிடம் தடைபோடுகிறாள். எனவே ஜஃபார்கான் ஔரங்கஸிப்பிடம், சிவாஜியுடன் நேரடியாகச் சந்திப்பதைத் தவிர்க்கச் சொல்லுகிறார். சிவாஜி ஆபத்தானவர், அவரை ஒருபோதும் நம்பக்கூடாது என ஜஃபார்கான் சொல்வதனை ஏற்கிறார் ஔரங்கஸிப். வேறுவழியின்றி, ஜஃபார்கானைத் தானே நேரில் சென்று சந்திக்கும் சிவாஜியை வரவேற்று உபசரிக்கும் ஜஃபார்கான், பாதுஷாவுடன் சந்திப்புநிகழ உதவுவதாக வெறும் வாய்வார்த்தைகளைச் சொல்லி அனுப்பிவைக்கிறார். பின்னர் சிவாஜி முகலாய அரசின் ஒவ்வொரு முக்கியஸ்தரையும் நேரில் சந்தித்து பாதுஷா தன்னை மீண்டும் தக்காணத்திற்கு அனுப்பி வைக்க உதவுமாறு கோரிக்கைவைக்கிறார். ஆனால் பாதுஷா தன்னைச் சந்திப்பதற்கு விருப்பமில்லாமல் இருக்கிறார் என்றறியும் சிவாஜி, அதனை விடுத்து வேறு விதமான உபாயங்களை எடுக்க முடிவுசெய்கிறார். அதன்படி, தன்னுடன் வந்த ஏராளமான அலுவலகர்கள், பணியாளர்கள் காரணமாக முகலாய அரசிற்கு அனாவசியச் செலவுகள் ஏற்படுவதாகவும், ஆகவே அவர்களை உடனடியாக தக்காணத்திற்கு அனுப்பிவைக்க ஏற்பாடு செய்யவேண்டும் என ஒரு மனுவை ஔரங்கஸிப்பிற்கு அனுப்பிவைக்கிறார் சிவாஜி. பாதுஷா விரும்பும்வரைக்கும் அவரது “மரியாதைக்குரிய விருந்தினராக” தான் ஆக்ராவில் இருக்கத் தயாராக இருப்பதாகவும் அந்த மனுவில் குறிப்பிடுகிறார். அதையும்விட தக்காணத்திலிருக்கும் தனது குடும்பத்தாரையும் ஆக்ராவுக்கு அழைத்துவந்து அவர்களை நிரந்தரமாக ஆக்ராவிலேயே குடியமர்த்தும் எண்ணம் இருப்பதாகவும் கூறும் சிவாஜியின் மனுவைப் படிக்கும் ஔரங்கஸிப் மனம்மகிழ்கிறார். சிவாஜி முழுமையாகத் தன்னிடம் சரணடைந்துவிட்டதாக நம்பும் ஔரங்கஸிப், சிவாஜியின் அலுவலர்களைத் திருப்பி அனுப்பினால் தனக்குச் செலவும் மிச்சமாகும், சிவாஜியை முழுமையாகத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிடலாம் என்ற எண்ணத்துடன் சிவாஜியின் விண்ணப்பத்திற்குச் சம்மதமளிக்கிறார். அதன்படி சிவாஜியுடன் வந்த அவரது பெரும்பாலானா அலுவலர்கள், பணியாளர்கள், படைகள் மீண்டும் தக்காணத்திற்குத் திரும்பிச் சென்றுவிடுகிறார்கள். சிவாஜி உடனடியாக ஆக்ராவிலிருந்து தப்புவதற்கான வேறு உபாயங்களைத் தேட ஆரம்பித்தார். அதன் ஒரு பகுதியாக, தான் முகலாய அரசின் உயர்பதவி வகிக்கும் அலுவலகர்களையும், அமைச்சர்களையும் சந்தித்து, அவர்களுடன் அறிமுகம் செய்துகொள்ள விரும்புவதாகவும், அரசவையில் அது தனக்கு உதவியாக இருக்கும் என்பதால், அவர்களுடன் உரையாடத் தனக்கு அனுமதி வழங்குமாறு ஔரங்கஸிப்பிடம் கோரிக்கை வைக்கிறார். அப்படிச் செய்வதில் தவறொன்றும் இல்லை என்பதால் ஔரங்கஸிப் அதற்கு அனுமதியளிக்கிறார். எனவே சிவாஜி முகலாய அரசின் முக்கியஸ்தர்களை ஒவ்வொருவராகச் சந்தித்துப் பேசுகிறார். அவர்கள் மத்தியில் பெரும் நல்லெண்ணத்தை விதைக்கிறார். சந்தித்த ஒவ்வொருவரிடமும் பாதுஷாவுக்கு அடிபணிந்து அவருக்குச் சேவைசெய்ய தான் முடிவு செய்திருப்பதாகச் சொல்லுகிறார். அது உடனடியாக புலந்த்கான்போன்ற உளவாளிகள்மூலம் ஔரங்கஸிப்பிற்குச் தெரிவிக்கப்படுகிறது. சிவாஜி தன் மனதை மாற்றிக கொண்டு சரியான திசையில் அடியெடுத்துவைக்க ஆரம்பித்திருப்பதாக அனைவரும் நம்ப ஆரம்பிக்கிறார்கள். சிவாஜி, ஒருசிலர் தவிர தன்னுடன் மீதமிருந்த தனது அனைத்து முக்கியஸ்தர்களையும் ஆக்ராவிலிருந்து தக்காணத்திற்கு அனுப்பிவைத்து, வட இந்தியத் தட்பவெப்பம் தனது முக்கியஸ்தர்களுக்கு ஒப்புக்கொள்ளவில்லை என ஔரங்கஸிப்பிற்குத் தெரிவித்தார். ஔரங்கஸிப் அதற்கு ஆட்சேபனைகள் எதுவும் செய்யவில்லை. இருப்பினும் பிரதாப்ராவ் குஜ்ஜார் போன்றவர்கள் சிவாஜியை எதிரி நாட்டில் அனாதரவாக விட்டுச்செல்ல மறுத்து, அவருடனேயே ஆக்ராவில் தங்கியிருக்கிறார்கள். சிவாஜி அவர்களுடன் ரகசிய சந்திப்புகள் நடத்தித் தனது திட்டத்தை அவர்களிடம் விளக்குகிறார். அதனைத் தொடர்ந்து முக்கிஸ்தர்கள் ஆக்ராவைவிட்டுக் கிளம்புகிறார்கள். ஆனால் அவர்கள் தக்காணத்திற்குச் செல்வதுபோல போக்குக் காட்டிவிட்டு மாறுவேடங்களில் ஆக்ராவெங்கும் சுற்றித் திரிகிறார்கள். சிவாஜிக்கு ஏதேனும் ஆபத்து நிகழுமென்றால் உடனடியாக நடவடிக்கை எடுப்பதற்கான அத்தனை முன்னேற்பாடுகளுடனும் அவர்கள் இருக்கிறார்கள். சிவாஜி ஆக்ராவைச் சேர்ந்தவர்களைத் தன்னுடைய வேலைகளுக்குப் பணியமர்த்திக் கொள்கிறார். அவருடன் மிகமிக நெருக்கமான மராட்டாக்களும், சாம்பாஜியும் மட்டுமே உடனிருக்கிறார்கள். வெளிப்பார்வைக்கு சிவாஜி தனது தலையெழுத்தை ஏற்று ஔரங்கஸிப்பிற்குப் பணி செய்ய மனதைத் தேற்றிக்கொண்டதுபோன்ற தோற்றம் ஏற்படுத்தப்படுகிறது. சிவாஜி ஒவ்வொரு வியாழக் கிழமையையும் ஒரு திருவிழாவாக நடத்தி, மதக் கொண்டாட்டங்களைக் கொண்டாட ஆரம்பித்தார். ராஜா ஜெயசிங்கின் மகனான ராம்சிங்கும், மராட்டாவான பாலாஜி ஆவோஜி சிட்னிஸ் போன்றவர்களும் இந்தக் கொண்டாட்டங்கள் மிகச் சிறப்பான முறையில் இருக்கும்படி பார்த்துக்கொண்டார்கள். கூடை, கூடையாகப் பழங்களும், பலகாரங்களும் ஆக்ராவின் முஸ்லிம் ஹக்கீம்கள் மற்றும் மருத்துவர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டன. இவர்களின் கவனிப்பில் தன்னுடைய உடல்நிலை சிறப்பாக இருப்பதாக அவர்களிடம் தெரிவிக்கிறார் சிவாஜி. சில வாரங்கள் கழித்து, தனது கடவுளர்களும், ஆக்ரா மருத்துவர்களும் தன்னுடைய உடல்நிலை சரியில்லாத காலத்தில் தன்னை வியாதியிலிருந்து குணப்படுத்திவிட்டார்கள் என்றுகூறி, முன்பைவிடவும் இரண்டுமடங்கு பழங்களும், பலகாரங்களும் உள்ளூர் முக்கியஸ்தர்களுக்கு அனுப்பிவைக்கப்படுகிறது. இது இவ்வாறு நடந்து கொண்டிருக்கையில், தான் வாழ்வதெற்கென ஃபிதா-இ-கான் கட்டிக் கொண்டிருக்கும் வீடு கட்டிமுடிக்கப்பட்டுவிட்டதாகவும், இன்னும் ஒண்றிரண்டு நாட்களில் தன்னை அங்கு அனுப்பிவைக்கப் போவதாகவும் உலவும் வதந்திகளைக் கேள்விப்படுகிறார் சிவாஜி. அந்த வீட்டிற்குப் போனால் தனது கதி என்னவாகும் என்பதினை முழுவதும் உணர்ந்திருந்த சிவாஜி, உடனடியாக அங்கிருந்து தப்பத் தீர்மானிக்கிறார். சிவாஜியுடன் மிகவும் நட்பு பாராட்டும் ஜெய்சிங்கின் மகன் ராம்சிங், முகலாய அரசு முக்கிஸ்தர்களுக்கு ஏராளமான லஞ்சம் கொடுத்து சிவாஜிக்கெதிரான ஔரங்கஸிப்பின் மனோபாவத்தை அறிய முயல்கிறார். ஔரங்கஸிப் சிவாஜிக்குக் கெடுதல் செய்யத் தயாராகிவிட்டதாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் அவரை எட்டுகின்றன. எனவே அதனை மறைமுகமாக சிவாஜிக்குத் தெரியப்படுத்துகிறார் ராம்சிங். __________________ Admin Guru Status: Offline Posts: 23907 Date: Jun 5, 2019 Permalink Printer Friendly ஆக்ராவிலிருந்து சத்ரபதி சிவாஜி தப்பிய வரலாறு – 4 March 7, 2018 - பி.எஸ். நரேந்திரன் நன்றி : ராவ் சாகிப் தேஷ்பாண்டே இத்தொடரின் மற்ற பகுதிகளை இங்கு வாசிக்கலாம். எந்த நேரத்திலும் தான் ஔரங்கஸிப்பினால் கொல்லப்படலாம் என்கிற அசாதரண சூழ்நிலை உருவாகியிருப்பதனை ராம்சிங்கின் மூலம் அறியும் சிவாஜி, இனியும் தாமதிக்கக்கூடாது முடியாது என்கிற முடிவுக்கு வருகிறார். தன்னுடனிருக்கும் தனது முக்கிய அலுவலர்களை உடனடியாக வெளி வேலகளுக்குச் செல்வதுபோன்ற பாவனையுடன் வெளியேற்றுகிறார். சிவாஜியைப்போலவே தோற்றமளிக்கும் அவரது சகோதரரான ஹிரோஜி ஃபர்ஜானந்த் மட்டுமே உடனிருக்கிறார். ஆகஸ்ட் 17, 1666யன்று சிவாஜியும் அவரது மகனான சாம்பாஜியும் பழக்கூடைகளில் அமர்ந்து கொள்கிறார்கள். மாலைமயங்கியதும், அந்தக் கூடைகள் சிவாஜியைக் காவல்காத்துக்கொண்டிருந்த படையணிகளின் வழியாக வெளியே கொண்டுசெல்லப்படுகின்றன. சிவாஜியைக் கண்கொத்திப் பாம்பாகக் கண்காணித்துக் கொண்டிருந்த படைவீரர்களில் ஒருவர்கூட அந்தக் கூடைகளில் சிவாஜியும், சாம்பாஜியும் இருப்பதனைப் பற்றிய சந்தேகம்கொள்ளவில்லை. ஒரு குறிப்பிட்ட இடம்வரை கொண்டுசெல்லப்பட்ட பழக்கூடைகள் ஓரிடத்தில் வைக்கப்பட்டவுடன், அதனைச் சுமந்துவந்தவர்கள் திரும்ப அனுப்பிவைக்கப்படுகிறார்கள். அந்தக் கூடைகள் வைக்கப்பட்டிருந்த இடத்தில் சிவாஜியின் மிக நம்பகமான அலுவலர்களான மற்றும் தானாஜி மலுஸ்ரே ஆகிய மூவர் மட்டுமே இருக்கிறார்கள். கூடையிலிருந்து வெளியேவரும் சிவாஜியையும், சாம்பாஜியையும் குதிரைகளில் ஏற்றி, வடக்கே மதுராவை நோக்கி (தெற்கிலிருக்கும் தக்காணத்திற்கு பதிலாக) தப்பிச் செல்லவைக்கிறார்கள். இதே நேரத்தில் சிவாஜியின் கூடாரத்தில் இருக்கும் சிவாஜியின் சகோதரர் ஹிரோஜி ஃபர்ஜானந்த் அங்கிருக்கும் காவலர்களிடம் சிவாஜி மிகவும் உடல்நிலை சரியில்லாமல் படுத்துக்கிடப்பதாகவும், அவரைத் தொந்திரவுசெய்ய வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்கிறார். ஆட்கள் பரபரப்பாக சிவாஜியின் கூடாரத்திற்குள் மருந்துக் குப்பிகளை எடுத்துச் செல்வதும், வெளியே வருவதுமாக இருக்கிறார்கள். சிவாஜி ஆக்ராவைவிட்டுத் தொலைதூரம் செல்லும்வகயில் நேரத்தைக் கடத்துவதே அதன் முக்கிய நோக்கம். சிவாஜியின் படுக்கையில் நிலைகுலைந்த நிலையில் படுத்திருக்கிறார் ஹிரோஜி. அவரது ஒரு கை மட்டும் போர்வையிலிருந்து வெளியே தெரிகின்றது. அந்தக் கையின் ஒரு விரலில் சிவாஜியின் முத்திரை-மோதிரம் இருக்கிறது. சிவாஜியைக் கண்காணித்துக் கொண்டிருக்கும் முகலாய சிப்பாய்கள் அவ்வப்போது கூடாரத்திற்குள் எட்டிப்பார்த்து, சிவாஜி படுத்துக்கிடக்கிறார் என்று உறுதி செய்துகொள்கிறார்கள். சிவாஜிபோலப் படுத்திருக்கும் ஹிரோஜியின் காலடியில், சாம்பாஜியின் வயதையொத்த ஒரு சிறுவன் அமர்ந்து, அவரது கால்களை அமுக்கிவிட்டுக் கொண்டிருக்கிறான். இப்படியாக இரவு கழிந்து, பகலும் வருகிறது. ஆனால் யாருக்கும் எந்த சமாச்சாரமும் தெரியவில்லை என்றாலும் சிவாஜியைக் காக்கும் காவலர்களிடையே அமைதியின்மை ஏற்பட ஆரம்பித்திருக்கிறது. இதற்கிடையே கூடாரத்திலிருந்து வெளியே வந்த ஹிரோஜியும், சிறுவனும் தாங்கள் மருந்து வாங்குவதற்காக மருத்துவரிடம் போவதாகச் சொல்லுகிறார்கள். சிவாஜியின் நிலைமை மிகமோசமாகிவிட்டதாகவும் காவலர்களிடம் சொல்கிறார்கள். எனவே மாலை மூன்று மணியளவில் இருவரும் சிவாஜியின் கூடாரத்தைவிட்டுச் சென்றுவிடுகிறார்கள். அவர்கள் சென்ற சிறிதுநேரத்தில் சிவாஜியின் கூடாரத்தை எட்டிப்பார்த்த காவலனொருவன் அங்கு எவரும் இல்லாததைக் கண்டு கூச்சலிடுகிறான். உடனடியாக எச்சரிக்கை விடுக்கப்பட்டு காவலர்கள் சிவாஜியையும் அவரது மகனையும் தேட ஆரம்பிக்கிறார்கள். சிவாஜி தப்பிவிட்ட செய்திகேட்டு புலந்த்கான் அந்த இடத்திற்கு விரைந்து வருகிறான். சிவாஜி உண்மையிலேயே தப்பிவிட்டதை உணர்ந்த புலந்த்கானின் தலையில் இடிவிழுந்தது போலாகிறது. சிவாஜியின் படுக்கையில் யாரோ படுத்திருப்பதனை உணர்ந்த புலந்த்கான் அவனை எழுப்புகிறான். “என்னைப் படுக்கையில் படுக்கச் செய்த சிவாஜி எங்கேயோ போய்விட்டார். எனக்கு அதற்குமேல் ஒன்றும் தெரியாது,” எனச் சொல்லும் அந்த ஆசாமியையும், வேறு சில வேலைக்காரர்களையும் கட்டி இழுத்துச் செல்லும் புலந்த்கான், சிவாஜி தப்பிய செய்தியை ஔரங்கஸிப்பிற்குத் தெரிவிக்கிறான். தக்காணத்து சிவாஜி தப்பிய செய்தியைக் கேட்ட ஆக்ராவாசிகள் அதிர்ச்சியும், ஆச்சரியமும் அடைகிறார்கள். ஔரங்கஸிப் கோபத்துடன் அந்தப் பகுதியைச் சுற்றிக் கடுமையாகத் தேடச் சொல்கிறார். முகலாய அரசின் கவர்னர்கள் அனைவருக்கும் தப்பிச் சென்ற ‘சிவா’வைப் பிடிக்க உத்தரவுகளை அனுப்பிவைக்கிறார். சிவாஜி தப்பிய பதினைந்து மணி நேரம் கழித்து, சிவாஜியின் அலுவலர்களிடையே ஔரங்கஸிப்பினால் அமர்த்தப்பட்ட உளவாளி ஒருவன் சிவாஜி தப்பிவிட்டதாகவும், தக்காணத்தை நோக்கிச் சென்றுகொண்டிருப்பதாகவும் தெரிவிக்கிறான். அதாகப்பட்டது, சிவாஜியின் கூடாரங்களைச் சூழ்ந்து நின்றுகொண்டிருந்த காவலர்களுக்குத் தெரிவதற்குமுன்பே ஔரங்கஸிப்பிற்கு விஷயம் தெரிந்துவிட்டது. இருந்தாலும், அவர் அதனை நம்பாமல் ஒரு கொத்வாலை (போலிஸ்காரன்) அனுப்பி, சோதித்துவரச் சொல்லுகிறார். அதன்படி சிவாஜியின் கூடாரத்திற்குள் எட்டிப் பார்க்கும் கொத்வால், சிவாஜியின் கையில் இருக்கும் முத்திரை மோதிரத்தைப் பார்த்துவிட்டு உளவாளி சொல்லும் செய்தி பொய்யென்று ஔரங்கஸிப்பிடம் சொல்கிறான். மூன்றாவது முறையாக அதையே சொல்லும் உளவாளி, “இன்னேரம் சிவாஜி முப்பது மைல்களைக் கடந்திருக்காவிட்டால் என்னை வெட்டிக் கொல்லுங்கள்” என்கிறான். அதனைத் தொடர்ந்தே சிவாஜியின் கூடாரத்தை முழுமையாகச் சோதிக்கச் சொல்கிறார், ஔரங்கஸிப். அப்பொழுதுதான் கூடாரத்தைக் காவல் காத்துக்கொண்டிருந்த காவலர்கள் உண்மையை அறிந்து அதிர்ச்சிகொள்கிறார்கள். ஔரங்கஸிப் ஜெய்சிங்கின் மகனான ராம்சிங்மீது சந்தேகம்கொள்கிறார். ராம்சிங் முகலாய அரசவைக்குள் நுழைவது தடைசெய்யப்படுகிறது. ஆக்ராவின் உளவாளிகளும், புலந்த்கான் போன்றவர்களும் ஔரங்கஸிப்பினால் வறுத்தெடுக்கப்படுகிறார்கள். பலரின் பதவி பறிக்கப்படுகிறது. தனது மாமனான சைஸ்டாகான், நரக ஹிந்து நாய் சிவாஜியின் மந்திரவித்தைகளைக் குறித்துத் தனக்கு ஏற்கனவே அறிவித்திருந்தும், தான் கவனமாக இல்லாமல் போய்விட்டதை எண்ணி மனம்குமைகிறார் ஔரங்கஸிப். ஔரங்கஸிப்பிடம் சிவாஜியின் மனுக்களைக் கொண்டுவந்த அவரது வலதுகரமான ரகுநாத் பல்லால் கோர்டே கைது செய்யப்பட்டுப் பின்னர் விடுதலை செய்யப்படுகிறார். சிவாஜியைப் போல நடித்துப் படுக்கையில் படுத்திருந்த அவரது சொந்த சகோதரரான ஹிரோஜியும், அவருடனிருந்த சிறுவனும் பிடிக்கப்பட்டு ஔரங்கஸிப்பின் முன்னர் ஆஜர்படுத்தப்படுகிறார்கள். ஔரங்கஸிப் ஹிரோஜியை வாய்க்கு வந்தபடி ஏசி, சிவாஜியைக் குறித்த விபரங்களைத் தருவதற்கு நிர்பந்திக்கிறார் ஔரங்கஸிப். ஹிரோஜி தனக்கு ஒன்றும் தெரியாதென்றும், முந்தியநாள் மாலை தன்னுடைய படுக்கையில் படுத்துக்கொள்ளச் சொன்ன சிவாஜி, எங்கே போனாரென்று தனக்குத் தெரியாதென்றும் மீண்டும் மீண்டும் சாதிக்கிறார். ஹிரோஜியுடன் இருந்த சிறுவனும் அதனையே திரும்பத் திரும்பச் சொல்கிறான். அந்தச் சிறுவன் ஒரு முஸ்லிம். அவனது பெயர் மதாரி மெஹ்தார் — கூடாரங்களில் விரிக்கப்பட்டுள்ள கம்பளங்களை சுத்தம் செய்பவன். ஔரங்கஸிப், “முஸல்மானான நீ எனக்கு உண்மையைச் சொல்ல வேண்டும்; இல்லாவிட்டால் உன்னைக் கொன்றுவிடுவேன்!” என மிரட்டுகிறார். மதாரி மீண்டும் அதே கதையைச் சொல்கிறான். ஔரங்கஸிப்பிற்குக் கோபம் உண்டானாலும் அவர்களின் விஸ்வாசத்தை மெச்சிக்கொள்கிறார். பின்னர் அவர்கள் இருவரையும் விடுதலைசெய்கிறார். ஹிராஜியும், மதாரி மெஹ்தாரும் பின்னர் பாதுகாப்பாகத் தக்காணத்தை வந்தடைகிறார்கள். சிவாஜி, ஹிரோஜிக்கு ராய்காட் கோட்டையின் ஹவில்தார் பதவியைக் கொடுத்து கவுரவிக்கிறார். மதாரி மெஹ்தாருக்கும், அவனது குடும்பத்திற்கும் சிறப்புச் சலுகை ஒன்று வழங்கப்படுகிறது. அதன்படி ஒவ்வொரு மராட்டா அரசரும் முடிசூடும் சமயத்தில் வழங்கப்படும் பெரும் பரிசுகளின் அளவு பரிசுகள் மதாரி மெஹ்தாரின் குடும்பத்தினருக்கும் வழங்கப்பட்டது. மதாரி ஔரங்கஸிப்பிடம் உண்மையைச் சொல்லியிருந்தால் ஏராளமான பதவியும், பரிசுகளும் அவனுக்குக் கிடைத்திருக்கும். இருந்தாலும் சிவாஜியின் மீது கொண்ட விசுவாசம் காரணமாக அவன் அதனைச் செய்யவில்லை. மதாரியின் சந்ததியினர் இன்றைக்கும் சதாராவில் வாழ்ந்து வருகிறார்கள்). ஔரங்கஸிப் தனது நெற்றியில் கைவைத்து தனது தலைவிதியை நொந்துகொள்கிறார். சிவாஜி தப்பியது முற்றிலும் தனது கவனக்குறைவாலே வந்தது; சிவாஜி சந்தேகப்படும்வகையில் அவரது கூடாரத்தைச் சுற்றி ஏராளமான படைகளைத் தான் நியமித்திருக்கக் கூடாது எனக் கூறிக்கொள்கிறார். முகலாய அரசின் அத்தனை பகுதிகளுக்கும் சிப்பாய்களையும், உளவாளிகளையும் அனுப்பி வைக்கும் ஔரங்கஸிப், சிவாஜி மாறுவேடமிடுவதில் விற்பன்னர் என்பதால் சிப்பாய்களும், உளவாளிகளும் தங்களின் கண்முன் தெரியும் அத்தனை சன்னியாசிகளையும் (Jangam, Jogi, Joshi, Sanyasi, Bairagee, Nanak Panthi, Gorakh Panthi, Kangal….), பிச்சைக்காரர்களையும், பைத்தியக்காரர்களையும் நன்கு விசாரணை செய்யவேண்டும் என உத்தரவிடுகிறார். தன்னைச் சுற்றிலும் பாதுகாப்பையும் பலப்படுத்துகிறார், ஔரங்கஸிப். இத்தனை பாதுகாப்புகளுக்கு மத்தியிலிருந்து தப்பிய ஒருவன், நிச்சயமாக தனக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் ஆக்ராவுக்குள் எங்கேனும் ஒளிந்து கொண்டிருப்பான் என நம்புகிறார். கோபமும், வருத்தமும் தோய்ந்த மனிதராக மாறும் ஔரங்கஸிப், சிவாஜியைக் கண்டதும் கைதுசெய்து தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என ராஜா ஜெய்சிங்குக்குக் கடிதம் எழுதுகிறார். __________________ Admin Guru Status: Offline Posts: 23907 Date: Jun 5, 2019 Permalink Printer Friendly ஆக்ராவிலிருந்து சத்ரபதி சிவாஜி தப்பிய வரலாறு – 5 March 9, 2018 - பி.எஸ். நரேந்திரன் நன்றி : ராவ் சாகிப் தேஷ்பாண்டே இத்தொடரின் மற்ற பகுதிகளை இங்கு வாசிக்கலாம். ஔரங்கஸிப்பின் இரும்புப் பிடியிலிருந்து மராட்டிய சிவாஜி தப்பிய செய்தி மொத்த ஹிந்துஸ்தானத்தையும் சென்றடைகிறது. ஒவ்வொரு ஹிந்துவும் இது கடவுளின் அருட்செயல்தான் என்று எண்ணியதுடன், சிவாஜி பாதுகாப்பாக தக்காணம் சென்று சேரவேண்டுமென பிரார்த்தித்துக் கொண்டான். சிவாஜியை விரும்பியவர் மட்டுமன்றி, அவரது எதிரிகளும் இந்தத் தீரச் செயலை மெச்சிக் கொண்டனர். சிவாஜியும், சாம்பாஜியும் ஆறு மணி நேரம் பயணித்துப் பின்னிரவில் மதுராவை அடைகிறார்கள். ஆக்ராவில் அன்றைய தினம் பெருமழை பெய்துகொண்டிருந்ததால் யமுனையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருக்கிறது. சிவாஜி ஒரு படகோட்டியின் துணையோடு அக்கரைக்குச் செல்கிறார். ஔரங்கஸிப்பிடம் உடனடியாக இதனைக் குறித்துச் சொல்லவேண்டும் எனப் படகோட்டியிடம் சொல்கிறார், சிவாஜி. சிறிது தூரம் பயணிக்கும் சிவாஜியும், சாம்பாஜியும் வேறொரு படகில் ஏறி மீண்டும் இக்கரைக்குத் திரும்புகிறார்கள். பின்னர் சிவாஜி, சாம்பாஜி பின்தொடர குதிரையில் மதுராவை வேகமாக வந்தடைகிறார். சிவாஜியைத் தேடிவந்த மொகலாயப் படைவீரர்களிடம் நடந்ததைச் சொல்கிறான், படகோட்டி. மொகலாயப் படைவீரர்கள் சிவாஜி தெற்குநோக்கித் தப்பிச்செல்வதாக முடிவுக்குவருகிறார்கள். இதனை எதிர்பார்த்திருந்த சிவாஜி, அவர்கள் எதிர்பார்த்ததுபோல தென்திசையில் செல்லாமல், வடதிசையில் சென்றுகொண்டிருகிறார். மதுராவை அடையும் சிவாஜி தன்னை முற்றிலும் உருமாற்றிக்கொண்டிருகிறார். தனது அரச உடைகள் முழுவதனையும் துறந்து, புனித யாத்திரை செல்லும் ஒரு சாமியாரைப் (Gossain) போல உடைகளை அணிந்து கொள்கிறார். தாடியிலும், கன்னத்திலும் இருந்த மயிரைச் சுத்தமாக மழித்துவிட்டு, உடல் முழுவதும் சாம்பலைத் தடவிக்கொள்கிறார். அவர் மதுராவை அடைவதற்குமுன்னர் அங்கு சென்ற சிவாஜியின் அலுவலகர்களான நிராஜி ராவ்ஜியும், பாலாஜி ஆவோஜி சிட்னிசும், மதுராவெங்கும் தேடி பேஷ்வா மோராபாண்ட் பிங்கலேயின் மூன்று பிராமணர்களைக் கண்டுபிடிக்கிறார்கள். கிருஷ்ணாஜி, காஷிராவ், மற்றும் விசாஜி என்கிற மூன்று பிராமண சகோதரர்களும் அந்த நேரத்தில் மதுராவில் இருந்திருக்க நியாயமில்லை. அனேகமாக சிவாஜி ராய்காட்டைவிட்டுப் புறப்படுமுன் அவர்களை மதுராவிற்கு வரச் சொல்லியிருக்க வேண்டும். அல்லது மதுராவிலிருந்த சிவாஜியின் குருவான ராம்தாஸி ஆஸ்ரமத்திற்கு பயணமாக அவர்கள் வந்திருக்கலாம். அந்த மூன்று பிராமணர்களும் சிவாஜியின் முன் அழைத்துவரப்படுகிறார்கள். சிவாஜி ஏராளமான பணத்தை அவர்களிடம் கொடுத்து, சாம்பாஜியையும் அவர்களிடம் ஒப்படைக்கிறார். சாம்பாஜியைக் கவனமாகப் பார்த்துக்கொள்ளவேண்டும் எனவும், சிறிது காலத்திற்குப் பிறகு, ராய்காட்டிலிருந்து தன்னுடைய சொந்தக் கையெழுத்தில் (சிவாஜியின்) கடிதம் வந்தபிறகு சாம்பாஜியை தக்காணத்திற்கு ரகசியமாக அழைத்துவரவேண்டும் எனக் கூறுகிறார். ஒருவேளை தான் நிச்சயமாக இறந்துவிட்டதாகத் தெரியவந்தால், அவர்களுக்குத் தெரிந்த பாதுகாப்பான முறையில் சாம்பாஜியை ராய்காட்டில் சேர்த்துவிடவேண்டும் எனவும் ஆணையிடுகிறார். அந்த மூவரும் சிவாஜிக்கு நிச்சயம் நம்பிக்கைக்குப் பாத்தியமானவர்களாக இருந்திருக்க வேண்டும் என்பதில் சந்தேகமில்லை. பிற கோஸாயிகளைப் போல ஊதாநிற உடை தரித்த சிவாஜி, கோஸாயிகளுடன் சேர்ந்து பொழுதைக்கழிக்க ஆரம்பிக்கிறார். யமுனையில் ஒரு நாள் குளிக்கச் செல்லும் சிவாஜி, யமுனைப் படித்துறையின் அலங்கோலத்தைப் பார்த்து, “இதனை ஏன் இப்படி வைத்திருக்கிறார்கள்? நானாக இருந்தால் அத்தனை உடைபாடுகளையும் சரி செய்திருப்பேன்!” என்று பொதுவாகச் சொல்கிறார். அதனைக் கேட்கிற கோஸாயிப் பூசாரி சிவாஜியின் மீது சந்தேகம்கொள்கிறார். நிராஜி அந்தப் பூசாரியை அணுகி எச்சரிக்கவே, அவரும் மன்னிப்புக் கோருகிறார். அவர் அமைதியாக இருப்பதற்குத் தேவையான அனைத்தும் செய்யப்படுகின்றன. பின்னர், அலஹாபாத்தை நோக்கிச் செல்லும் கோஸாயிகளுடன் சேர்ந்து பயணிக்க ஆரம்பிக்கிறார், சிவாஜி. தக்காணத்திற்குச் செல்லும் வழிகளறிந்த கிருஷ்ணாஜியும் அந்தக் கூட்டத்தில் கலந்து சிவாஜியுடன் பயணிக்கிறார். மேலும் சில முக்கியஸ்தர்களும் கோஸாயிவேடத்தில் அந்தக் கூட்டத்தில் கலந்து கொள்கின்றனர். அவர்களிடம் செலவுக்குத் தேவையான ஏராளமான நகைகளும், தங்கக் காசுகளும் இருக்கின்றன. மூங்கில்கோல்களிலும், துந்துபிகளிலும் வைரக்கற்கள் ஒளித்துவைத்து, அவைகளைச் சிவாஜியின் ஆட்கள் சுமந்து வந்துகொண்டிருகிறார்கள். பனாரஸ் [காசி] நகரை வந்தடையும் சிவாஜியின் கூட்டம் தேவையான மதச்சடங்குகளைச் செய்துமுடிக்குமுன் ஆக்ராவிலிருந்து சிவாஜி தப்பிவிட்ட செய்தி பனாரஸை வந்தடைகிறது. அவரசரகதியில் மதச்சடங்குகளை கங்கைக் கரையில் செய்துகொண்டிருக்கையில் சிவாஜி கங்கைக் கரையில் இருப்பதாகத் தகவலறிந்த மொகலாயப்படையினர், ஈட்டிகளுடன் அங்கு வந்துசேருகிறார்கள். இருள் விலகாத காலைநேரமாதலால், சிவாஜியும் அவரது ஆட்களும் அங்கிருந்து தப்பிச்செல்கிறார்கள். பனாரஸில் இருக்கையில் சிவாஜி காகபட்டரைச் சந்திக்கத் தவறவில்லை. காகபட்டர் சிவாஜி பாதுகாப்பாக தக்காணத்தை வந்தடைய எல்லா உதவிகளையும் செய்தார் எனத் தெரியவருகிறது. பிற்காலத்தில் சிவாஜி ராய்காட்டில் சத்ரபதியாகப் பதவியேற்ற காலத்தில் காகபட்டரே தலைமைக் குருவாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பனாரஸிலிருந்து சிவாஜியின் குழு பாட்னா வழியாக்க கயாவை அடைகிறது. கயாவில் சிவாஜியின் முக்கியஸ்தர்கள் பலர் அவருக்காகக் காத்துக்கொண்டிருகிறார்கள். அவர்களுடன் புறப்பட்டு ஒரிஸ்ஸாவின் கரையிலிருக்கும் ஜகன்னாத்திற்கு வந்து சேர்கிறார். வேகமாகச் செல்லும் வழக்கமுடைய சிவாஜிக்கு இந்தப் பயணம் களைப்பைத் தரவில்லை. மேலும் அவருக்கு அன்றைக்கு 39 வயது மட்டும்தான். கட்டக்கை அடையும் சிவாஜி ஒரு தவறைச் செய்கிறார். ஒரு சிறிய குதிரையை விலைக்கு வாங்கும்போது, அதற்குச் சேரவேண்டிய விலையை விடவும் அதிகமாகப் பணத்தை குதிரைக்காரனுக்குக் கொடுக்கிறார். ஆச்சரியமடையும் குதிரைக்காரன், இதுபோலப் பணம்கொடுக்க முகலாயர்களிடமிருந்து தப்பிய சிவாஜியால் மட்டும்தான் முடியும் எனச் சொல்லவே, சிவாஜி தன் கையிலிருந்த மொத்தப் பணத்தையும் அவனிடம் கொடுத்துவிட்டு அங்கிருந்து தப்புகிறார். சிவாஜி ஒரிஸ்ஸா பகுதியில் நடமாடுவதாக தெரியவே, படைத்தலைவர் அலி குலிகான் சந்தேகத்தின்பேரில் சிவாஜியை மடக்குகிறார். சிவாஜி நேரடியாக அவரிடம் பேரம்பேசி பல இலட்சம் மதிப்புள்ள வைரக்கற்களை அவருக்கு லஞ்சமாகக் கொடுத்து அங்கிருந்து தப்புகிறார். அவருடனிருந்த கோஸாயிகளும் விடுவிக்கப்படுகிறார்கள். பின்னர் அங்கிருந்து காட்டுவழியாக கோண்டாவன், சந்தா, தியோகட் மற்றும் கோதாவரி மாவட்டம் வழியாக ஹைதராபாத்தை வந்தடைகிறார். அங்கிருந்து இந்தூர் நகரப்பகுதி வழியாகk கோடோல் என்னுமிடத்தை அடைகிறார். இப்படியாக மயிரிழையில் பல இடங்களில் தப்பும் சிவாஜி, பிஜப்பூர் பகுதியில் கோர்கான மகாபலேஷ்வர் போன்ற பகுதிகளைக் கடந்து, நவம்பர் 20, 1666 அன்று, ஏறக்குறைய 1500 மைல்கள் பயணம் செய்து, ராய்காட்டை வந்தடைகிறார். தன்முன் கோஸாயி வேடத்தில் நிற்கும் சிவாஜியை ஜீஜாபாய்க்கு அடையாளம் தெரியவில்லை. நிராஜி ராவ்ஜி “அம்மா, இது உங்களின் மகன் சிவாஜி,” எனச் சொல்லவும், ஜீஜாபாய் மிகவும் மகிழ்கிறார். சிவாஜி மஹாராஷ்டிராவை வந்தடைந்த செய்தி காட்டுத் தீ போல எங்கும் பரவுகிறது. மஹாராஷ்ட்ரா விழாக்கோலம் பூணுகிறது. [முற்றும்] __________________ Page 1 of 1 sorted by Oldest FirstNewest First Quick Reply Please log in to post quick replies. New Indian-Chennai News & More -> பைபிள் ஒளியில் இயேசு? கிறிஸ்து? தேவப்ரியாஜி -> ஆக்ராவிலிருந்து சத்ரபதி சிவாஜி தப்பிய வரலாறு Subscribe Jump To:--- Main ---திருக்குறள் சங்க இலக்கியத்தில் -விஷ்ணுரசிக்கும் நல்ல கட்டுரைகள் - தமி...அரவிந்தன் நீலகண்டன் புதிய ஏற்பாடு நம்பகத் தன்மை வாய...SCAMS & SCANDALSProf.James Tabor Articlesபைபிள் ஒளியில் இயேசு? கிறிஸ்து?...Thelogy Research Umar- Answering Islam TamilisedSenkodiChennai Economy Real EstateNEWS OF WORLD IN 2015Acta Indica- On Thomas MythPATTANAM IS NOT MUZURIS- KCHRஜோதிஜி திருப்பூர் Catholic acts of CriminalityProtestant criminal acts Silapathikaram - சிலப்பதிகாரம்Communist frauds St.Thomas MythManusmirithi in EnglishSASTHA WORSHIP ஈவேரா மறுபக்கம் - ம வெங்கடேசன்நீதிக்கட்சியின் மறுபக்கம் - ம ...EVR Tamil desiyamபண்டைத் தமிழரின் வழிபாடுCaatholic schooll atrocitiesதிருக்குறள் யாப்பியல் ஆய்வுகள்Zealot: The Life and Times of J...சைவ சித்தாந்தம் SaivamJesus never existedS.Kothandaramanகீழடி அகழாய்வும் மோசமான கூத்துக...Brahmi scriptசங்க இலக்கியம்- மூலமும் உரையும்புறநானூறுஅகநானூறுகுறுந்தொகைபரிபாடல்ஐங்குறு நூறு02. இல்லறவியல்05. அரசியல்10. நட்பியல்திருக்குறள் கடவுள் வணக்கமும் ச...Goa Inquisition - The Epitome o...Thirukkuralஇஸ்லாம்-இந்தியா- திராவிடநாத்திகம்Indian secularsimஇந்தியாவில் கிருத்துவம்சினிமாவின் சீரழவுகள்ஆரியன் தான் தமிழனாProf.Larry Hurtado ArticlesIndian Antiqity Bart D. Ehrmanதமிழர் சமயம்ஈவெரா நாயக்கர் திராவிடக் கழகத்த...ISLAMIC WORLDKalvai Venkat ஏசுவை - கிறிஸ்துவத்தை அறிவோம்தொல் காப்பியம்Andal Controversy -Vairamuthu - previous character 2004 Thirukural Confernece Anna...Brahmins and Sanskrit மணிமேகலை - Thanks முத்துக்கமலம்சங்க இலக்கியங்கள்திருக்குறள் தமிழர் மெய்யியல் சம...Tamilnadu Temple News மனுதரும சாத்திரம்நீதி இலக்கியம்ஈ.வெ.ரா யுனஸ்கோ விருது கதையும் ...தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-...DID Md EXIST? An Inquiry into I...இஸ்ரேலின் பழங்காலம் -விவிலிய பு...ANCIENT COINSIndus Saraswathiமுனைவர் கோ.ந. முத்துக்குமாரசுவாமிCSI Church Tamilnadu atrocities கலித்தொகைநற்றிணை 01. பாயிரவியல்03. துறவறவியல்06. அமைச்சியல்09. படையியல்11. குடியியல்12. களவியல்திருக்குறள் ஆய்வுBuddhism studiesNEWS -Indian-Chennai Real Estat... இஸ்லாம், முஹம்மது நபி, குர்ஆன்...ontogeny-phylogeny-epigeneticsஇலவசம்- Free- இணையத்திலுள்ள பயன...பழைய ஏற்பாடு நம்பிக்கைகுரியதா? ...Chennai Industrial Accidentsஎஸ். இராமச்சந்திரன் தென்னிந்திய...சங்க காலம் தொல்லியல் பண்பாடு - ...Pagadu - Historic Quranic resea...Prof.Thomas L Thompson Articlesபலான பாதிரியார்கள் Criminal Bis...Christian WorldArchaeology - Ancient India- Te...ஜெயமோகன் Justice Niyogi Commission Repor...Kural and VedasNuns AbusesThoma in India Fictions Devapriya போகப் போகத் தெரியும்- சுப்பு கல்வெட்டு The Myth of Saint Thomas and t...MINORITY RIGHTS CASESமுஹம்மது உண்மையில் இருந்தாரா? -...பெரோசஸ் மற்றும் ஆதியாகமம், மானெ...இயேசு கிறிஸ்து ஆக்கிரமிப்புக்கா...ஆய்வு:பதிற்றுப் பத்துதிருக்குறள் உரைகளோடு04. ஊழியல்07. அரணியல்08. கூழியல்13. கற்பியல்Nivedita Louisதிருக்குறள் ஆய்வு
டிஜிட்டல் தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டதன் பின்னர், அனைத்து பிரஜைகளுக்கும் டிஜிட்டல் வலட் (டிஜிட்டல் பை) அறிமுகப்படுத்தப்படும் என இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். கடவுச்சீட்டு, பிறப்புச் சான்றிதழ்கள், திருமணச் சான்றிதழ்கள் மற்றும் பரீட்சைச் சான்றிதழ்கள் உள்ளிட்ட அத்தியாவசிய தனிப்பட்ட ஆவணங்களை தங்கள் திறன்பேசியிலுள்ள டிஜிட்டல் வலட்டில் வைத்து எந்த நேரத்திலும் சமர்ப்பிக்க அனைத்து குடிமக்களுக்கும் அனுமதியளிக்கப்படும் என்று கூறினார். இத்திட்டம் 30 மாதங்களுக்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார். திறன்பேசி மூலம் பணம் செலுத்துவதற்காக மத்திய வங்கியினால் அறிமுகப்படுத்தப்பட்ட லங்கா கியூஆர் குறியீட்டை, அறிமுகப்படுத்தும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்ட விடயத்தை அவர் தெரிவித்தார். தற்போது, லங்கா கியூஆர் குறியீடு செலுத்தும் திட்டம் நாட்டின் 13 முக்கிய நகரங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. சுற்றுலாத்துறைக்கும் லங்கா கியூஆர் குறியீட்டை அறிமுகப்படுத்த கவனம் செலுத்தப்பட்டு வருவதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, நிகழ்வில் உரையாற்றிபோது தெரிவித்தார்.
ஆண்ட்டி குளிக்க போனதால நான் அப்படியே பெட்ல படுத்துட்டேன். அப்போ திடீர்னு மெயின் டோர் ஓபன் பன்ற சத்தம் கேட்டது நான் ஒடனே பெட்டுக்கு கீழ போய் ஒழுஞ்சுகிட்டேன். அப்போ அங்கிள் வந்தாரு ஆண்ட்டி பாத்ரூம்ல குளிக்கிற சத்தம் கேட்டு பெட் ரூமுக்கு வந்தாரு அப்போ அவர் கைல இருந்த சாவி கீழ விழுந்தது அதை எடுக்க கீழ குனிஞ்சார். அப்போ நான் கீழ இருக்குறது பாத்துட்டு ஷாக் ஆயிட்டாறு. அப்போ அங்க பாத்ரூம் ல இருந்து ஆண்ட்டி nude ஆக வெளியே வந்தா, புருஷனை பாத்ததும் ஒடனே உள்ள ஓட பாத்தா அவர் அவளோட கைய புடுச்சு பெட்ல nude அஹ்வே உக்கார வச்சாறு என்னையும் அவ பக்கத்துல உக்கார வச்சு என் இடுப்பு அப்றம் தொடையை தடவுனாறு. அப்போ தான் எனக்கும் புருஞ்சது அவங்களுக்கு ஏன் குழந்தை இல்லன்னு. ஏன்னா அவரு ஆண்ட்டி கூட இவ்ளோ வருஷம் sex வச்சுகத்துக்கு reason அவரு ஒரு gay அதாவது homo sex பன்னதான் பிடிக்கும். அவரு என்கிட்ட ஒன்னு கேட்டாரு. Uncle : நீ என் பொண்டாட்டிய ஓக்குரே அப்போ நான் என்ன பன்ன? Me : நான் உன் பொண்டாட்டிய ஓக்குறேன் நீ எனக்கு நாக்கு போட்டுட்டு என் குண்டில சொருகு. Aunty : டேய் என்ன டா நடக்குது இங்க? ஆண்ட்டி இப்படி சொல்லும்போதே அவளை அப்படியே பிடிச்சு என்னோட கிஸ் பன்னவச்சான் அவ புருஷன். அவளும் அப்படியே கிஸ் பனிட்டே அவ புருஷன் அஹ பாத்தா, அவன் என் சுன்னியை ஊம்பிட்டு இருந்ததை பாத்துட்டு இன்னும் வேகமா கிஸ் பன்னா. அப்போ எனக்கு ஒரு யோசனை தோணுச்சு ஒடனே நான் கிஸ் பண்றது நிறுத்திட்டு அவளை பார்த்து நீயும் ஊம்புடினு சொன்னேன் ஒடனே அவளும் அவ புருஷன் கூட சேர்ந்து என் சுண்ணியை ஊம்ப போய்ட்டா. அங்கிள் அவளுக்கு வழிவிட்டு என் சுன்னிய ஊம்ப சொன்னாரு. அவ ஊம்பும்போது அவளோட தாலியை பாத்தேன். அழகா தொங்கிட்டு இருந்தது அதை பாத்துட்டு இருக்கும் போது எனக்கு கஞ்சி வர மாரி இருந்தது ஒடனே அவளை அப்படியே தலைய தூக்குனேன். என்னோட கஞ்சி அவளோட தாலில கொஞ்சம் தெருச்சு ஆண்ட்டி ஓட உதடு, முகம், மொல வயிறுல எல்லாம் பட்டுச்சு ஒடனே அங்கிள் அவளோட உதட்டுல இருந்த கஞ்சிய சப்பி குடுச்சாறு, அப்போ ஆண்ட்டி இவ்ளோ வருஷம் புருஷன் நம்மள தொடமாட்டானானானு ஏங்கி இருந்த கனவு இப்போ நெறைவேறுச்சு. அங்கிள் அதோட நிறுத்தமா அவளோட உடம்புல எங்க எல்லாம் காஞ்சி ஒட்டி இருந்துச்சோ அங்க எல்லாம் நக்கி எடுத்தரு. அவளோட மோல இடுப்பு வயிறு கடைசியா ஆண்ட்டியோட புண்டையை நக்குனார். ஆனா அப்போ வர அவளோட தாலில இருந்த கஞ்சிய பாக்கல. அப்போ நான் உடனே அவளோட தாலியை புடுச்சு என்னோட சுன்னில சுத்தி வச்சேன் ஆண்ட்டி அங்க இருந்து நகர முடியல நான் ஆண்ட்டி அங்கிள் நீங்க ரெண்டு பேரஜம் ஊம்புங்கனு சொன்னேன். அவங்க ரெண்டு பேரும் மாரி மாரி ஊம்பி எனக்கு திரும்ப கஞ்சி வந்தது. அது இப்போ கொஞ்சம் தான் கஞ்சி வந்தது. அது தாலில மட்டும் பட்டுச்சு அது அப்பிடியே அங்கிள் நக்கி சாப்டரு. ஆனா அந்த பீல் இருக்கே புருஷன் கட்டுன தாலியை இனொருத்தேன் சுன்னில சுத்தி வச்சு பொண்டாட்டி ய ஊம்ப விட்டு வேடிக்கை பகுறது இருக்கே செம்ம எண்ஜோய்மெண்ட். எனக்கே இது தான் 1st தடவை sex. ஆண்ட்டிகும் அப்படிதான். ஆனா அங்கிள்கு ஹோமோ sex பன்னி இருப்பார் போல. அப்போ நான் சொன்னே ஆண்ட்டி நீங்க என் இப்படியே உங்க புருஷன் கூட கொழந்த பெத்துக்கூடாது? ஆண்ட்டி : எனக்கு ஓகே டா. அங்கிள் : என்னால முடியாது நான் பொண்ணுங்க கூட பன்ன மாட்டேன் எனக்கு பிடிக்காது. ஆண்ட்டிக்கு அப்பிடியே அழுக வந்துச்சி, நான் அப்போ கடைசி வர கொழந்த இல்லாம மலடினு பேர் வாங்கணும் ஆஹ்னு அழுதா. அப்போ நான் சொன்னே, ஆண்ட்டி நீங்க என் அழுகுறீங்க இப்போதான் டெஸ்ட் டியூப் பேபி லாம் இருக்குல்ல அதுல பத்துக்கொங்க. ஆண்ட்டி : அதுக்கு நெறய பணம் செலவாகும் அது மட்டும் இல்லாமல் என் புருஷன் வெஸ்ட்னு சொல்லிடுவாங்க. அங்கிள் : ஏன்டா சுபாஸ் நீயே என்னோட பொண்டாட்டி கு கொழந்த குடுக்க கூடாது? நான் : ஐயோ அங்கிள் என்ன சொல்ரீங்க! ஆண்ட்டி : அவரு சொல்றதுல என்னடா தப்பு நீ எனக்கு புள்ள குடு இவ்ளோ தூரம் வந்துடுச்சு இதுக்கு மேலே என்னடா? நான் நெனச்சது நடக்க போர சந்தோசத்துல மனசுல அப்டீயே சந்தோசமா இருந்தேன். நான் : உங்க ரெண்டு பேருக்கும் ஓகேனா எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. (மனசுக்குள்ள இனொருதன் பொண்டாட்டிக்கு கொழந்த குடுக்க போறது நெனச்சு அவ்ளோ சந்தோசமா இருந்துச்சு) அங்கிள் என்ந்துருச்சு பாத்ரூம் போய்ட்டு வந்தாரு அப்போ ஆண்ட்டி என் காதுல வந்து ,டேய் சுபாஸ் எனக்கு நீ குழந்தை குடுக்குறதுல எந்த பிரச்சினையும் இல்ல டா ஆனா என் புருஷன் கஞ்சி ஒரு தடவயச்சும் குடிக்கணும் டா பிளீஸ் டா ஏதாச்சும் ஐடியா குடுடா. அப்போ எனக்கு இன்னோரு ஐடியா மனசுல தோணுச்சு நான் அவளை அப்படியே பெட்ல படுக்க போட்டு புண்டைல குதிக்கிட்டு இருந்தேன் அவ டேய் என்ன டா அதுக்கு ஐடியா குடுடானா இப்படி என் புண்டையை குத்துரனு கேட்டா. நான் : ஆண்ட்டி நான் உனக்கு கொழந்த மட்டும் இல்லாம உன் புருஷன் கஞ்சியும் சேர்த்து தரேன் ஆண்ட்டி ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் ஆஹாஹ்ஹ னு மொனங்கிகிட்டே என்னை பாத்தா. அப்போ அங்க அங்கிள் வந்து என்னோட குண்டி ஆடிட்டு இருக்குறது பாத்து அவருக்கு சொருக ஆசை வந்தது போல வந்து அவரோட ட்ரெஸ் எல்லாம் கழட்டி சுன்னிய எடுத்து என்னோட குண்டி ஓட்டையில் விட்டாரு. அப்போ எனக்கு பயங்கரமா வழிச்சது. ஆஆஆஆ ஆஆஆ ஆஆஆஆ னு கத்தினேன் ஒடனே ஆண்ட்டி என்னோட வாய்ல அவளோட வாய்ய வச்சு சப்ப அரம்பிச்சுடா. எனக்கு என் குண்டி ஓட்டையில் சுண்ணி போற சுகம் , ஆண்ட்டி புண்டையை என் சுண்ணி போர சுகம் அது மட்டும் இல்லாமல் புருஷன் கண்னு முன்னாடியே அவன் பொண்டாட்டி ய ஓக்குறோம் னு இன்னும் கிக் எரிச்சு. அந்த முதல் sex அனுபவம் எனக்கு சொர்க்கம் அஹ தெருஞ்சது. அதுக்கு அப்புறம் என்னோட சுன்னி சீக்கிரமா ஆண்ட்டி புண்டைல கஞ்சியை கொட்ட, அங்கிள் என் குண்டில அவரோட கஞ்சி கொட்டுனரு. அப்போ ஆண்ட்டியும் உச்சம் அடைஞ்சா. ஒடனே நான் என்னோட சுன்னிய வெளியே எடுக்கலானு பாத்தேன் அதுக்குள்ள ஆண்ட்டி இன்னும் கொஞ்ஜம் நேரம் உள்ளேயே இருக்கட்டும் னு சொல்லிட்டா. அங்கிள் அவரோட சுன்னிய எடுத்தார். என் குண்டில இருந்து அவரோட கஞ்சி ஒழுகுச்சு. அப்போ ஆண்ட்டி நீங்க ஆசை பட்டது என்னோட குண்டி ஓட்டைல இருக்கு னு சொன்னேன் ஒடனே என்னையும் அங்கிள் அஹயும் தள்ளி விட்டுட்டு என்ன படுகபோட்டு என் குண்டியை நக்கினா. அப்போ ஆண்ட்டி பொறுமை நீங்க படுங்க நான் உங்களுக்கு என் குண்டியை குடுக்குறேன்னு சொல்லி அவளை மல்லாக்க படுக்க வச்சு அவளோட வாய் மேல நான் என் குண்டியை தூக்கி வைச்சு இப்போ நக்குடினு சொன்னேன். அவளும் நல்லா நக்கினா. அப்போ ஆண்ட்டி புண்டைல வலுஞ்ச என்னோட கஞ்சிய பாத்துட்டு அங்கிள் அதை நல்லா நாக்கினார். ஆழமா நாக்கை உள்ளே விட்டு விட்டு நக்குநாரு. அதை பாத்து எனக்கு அவ்ளோ happy ya இருந்துச்சு. அதுக்கு அப்ரம் நான் லீவு நாளில் கீழ அவங்க வீட்டில் தங்குனேன். அங்கேயே இருந்து ஆண்ட்டிய கர்பம் ஆக்கி விட்டேன். அதுக்கு அப்புறம் அவளுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. அதுக்கு அப்றம் கொஞ்சம் நாள் நாங்க மூணு பேரும் 3some வச்சுகிட்டது கம்மிதான். ஆனாலும் அவள் திரும்ப கர்பம் ஆனா. அதுக்குள்ள எனக்கு வேற திருச்சிக்கு மாதிடங்க நான் அங்கே போய் அடுத்த ஆண்ட்டி கெடைக்குமானு பாத்துட்டு இருக்கேன்.
ஈஸ்டர் தின தற்கொலை தாக்குதல்கலின் பிரதான குண்டுதாரியான சஹ்ரான் ஹாஷிமின் மனைவிக்கு எதிராக வழக்கு விசாரணையின் போது, குற்ற ஒப்புதல் வாக்குமூலம் தொடர்பில் வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றதை தொடர்ந்து, எதிர்வரும் நவம்பர் மாதம் 18 திகதி வரை வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இது குறித்த வழக்கு, கல்முனை மேல் நீதிமன்ற நீதிவான் ஜயராம் ட்ரொக்ஸி முன்னிலையில் நேற்று (30) விசாரணைக்கு வந்தபோதே, இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதன்படி வழக்கானது விசாரணைக்காக எடுக்கப்பட்ட வேளை, பிரதிவாதி சஹ்ரானின் மனைவி சார்பாக சிரேஸ்ட சட்டத்தரணி ரூஸ்தி ஹபீப் முஹமட் அக்ரம் உட்பட சட்டத்தரணிகள் குழுவினர் ஆஜராகி இருந்தனர். விசாரணையின் போது மன்றில் அரச சட்டவாதி நெறிப்படுத்தலுடன் சஹ்ரானின் மனைவியினால் ஏற்கனவே வழங்கப்பட்ட குற்ற ஒப்புதல்வாக்குமூலம் தொடர்பில் ஆட்சேபனை எழுப்பப்பட்டு, பிரதிவாதியின் சட்டத்தரணிகளினால் நீண்ட நேர சமர்ப்பணங்கள் விண்ணப்பங்கள் முன்வைக்கப்பட்டன. மேலும் சஹ்ரானின் மனைவிற்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள், அது தொடர்பில் எடுக்கப்பட்ட வாக்குமூலங்களும் எவ்வாறு எடுக்கப்பட்டது தொடர்பில் கேள்விகள் எழுப்பப்பட்டதுடன் வாதப்பிரதிவாதங்களும் இடம்பெற்றன. இதனை அடுத்து, மீண்டும் நீதிபதி ஜயராம் ட்ரொக்ஸினால் எதிர்வரும் நவம்பர் மாதம் 18 திகதிக்கு குறித்த வழக்கு மறுதவணை இடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. சஹ்ரான் ஹாஷிமின் மனைவி அப்துல் காதர் பாத்திமா ஹாதியா இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது பலத்த பாதுகாப்புடன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தார்.
சமையல் சுவையாகவும், தரமாகவும் இருக்க வேண்டும் என்பதில் கண்ணும் கருத்துமாக இருப்பதுதான சமையலில் அனைவரும் கடைபிடிக்கும் நடைமுறை. தரமான பொருட்கள் கொண்டு சமைத்தால் தானே தரமான உணவு நமக்கு கிடைக்கும். அதிலும் குறிப்பாக காய்கறி விஷயத்ததில் கவனம் செலுத்த வேண்டும். உண்மையில் நம்மில் பலருக்கு காய்கறி எப்படி பார்த்து வாங்குவது என்பது தெரிந்திருக்கவில்லை. யாரோ சொல்லக் கேட்டும், ஏதோ ஒரு புத்தகத்தில் படித்திருந்தும் காய்கறி கடையில் நிற்கும் போது மட்டும் மறந்தே போய்விடுகிறது. அதனால் சொத்தைக் கத்தரிக்காய் முதற்கொண்டு பல காய்கறிகளில் நாம் ஏமாந்து போகிறோம். இனிமேலும் அந்த நிலை உங்களுக்கு வராதிருக்க இதோ சில யோசனைகள். வாழைத்தண்டு என்றதும் அதன் பளபளப்பை பார்த்து வங்கும் பழக்கம் பல பேருக்கு உண்டு. அவ்வாறு வாங்குவது சரியான முறையல்ல. வாழைத்தண்டின் மேல் பகுதி நார் அதிகம் இல்லாமலும் உள்ளிருக்கும் தண்டு பகுதி சிறுத்தும் இருப்பதாக பார்த்து வாங்க வேண்டும். வெள்ளை வெங்காயம் வாங்கும்போது நசுக்கினால் சாறு வருகிறதா என்று பார்ப்பது அவசியம். அப்படி சாறு வந்தால் அந்த வெள்ளை வெங்காயம் நல்ல காய்தான். முருங்கைக் காய் பச்சை நிறத்தில் இருந்தால் மட்டுமே போதுமென்கிற சிந்தனை பலருக்கு உண்டு. முருங்கைக்காயை கட்டை விரல் மற்றும் ஆட்காட்டி விரல்களைப் பயன்படுத்தி சிறிது முனுக்கினால், எளிதாக வலைந்தால் அது நல்ல முங்கைகாய். சர்க்கரை வள்ளிக் கிழங்கு உறுதியானதாக இருந்தால் இனிக்கும். அடிபட்டு கருப்பாக இருந்தால் கசக்கும் வாங்கும் போது அதை மனதில் வைத்து கொள்ளுங்கள் மக்கா சோளம் இளசாகவும் இல்லாமல் ரொம்பவும் முற்றாமல் மணிகளை அழுத்தி பார்த்தால் உள்ளே இறங்காமல் இருந்தால் அது நல்ல மக்காச் சோளம். தக்காளி வாங்கும் போது, நல்ல சிவப்பில் இருக்கிறதா என்று பார்த்து வாங்குங்கள். கோவைக்காயைப் பொறுத்தவரையில் முழுவதும் பச்சையாக இருப்பதுதான் நல்லது. அதில் சிவப்பு லேசாக இருந்தாலும் வாங்க வேண்டாம். பழுத்து ருசி இல்லாமல் இருக்கும். சின்ன வெங்காயம் வாங்க வேண்டுமெனில் பழைய வெங்காயம் வாங்குவதே நல்லது. இரண்டு பல் இருப்பதாக முத்து முத்தாக தெளிவாக இருப்பதை வாங்கவும். குடை மிளகாய் வாங்கும் போது தோல் சுருக்கமாக இருக்கிறதா என்று பார்த்து வாங்குங்கள். கரும்பச்சையில் இருந்தால் வாங்க வேண்டாம். அடிபட்டிருக்கும் எல்லா நிற குடை மிளகாய்களும் ஒரே சுவையில் தான் இருக்கும். பூக்களுக்கிடையே இடைவெளி இல்லாமல் அடர்த்தியாக காம்பு தடிமனாக இல்லாமல் பார்த்து வாங்குங்கள். இது காலி ஃபிளவர் வாங்குவதற்கான ஆலோசனை. மாங்காய், தேங்காய் காதருகே வைத்து தட்டி பார்ப்பது போல மாங்காயும் தட்டிப் பார்க்கவும். சத்தம் வரும். அத்தகைய மாங்காயில் கொட்டை சிறியதாக இருக்கும். பீர்க்கங்காய் வாங்கும் போது கவனிக்க வேண்டிய விஷயம், அடிப்பகுதி குண்டாக இல்லாமல் காய் முழுவதும் ஒரேயளவு பருமனானதாக இருக்குமாறு பார்த்து வாங்குவது நல்லது. புடலங்காய் வாங்கும்போது கெட்டியாக இருக்கிறதா என பார்த்து வாங்குங்கள். அப்போது தான் விதைப்பகுதி குறைவாக சதை பகுதி அதிகமாக இருக்கும். முளை விடாமல் பச்சை நரம்பு ஓடாமல் கீறினால் தோல் உதிர்ந்து பெயர்ந்து வர வேண்டும். அப்படி இருந்தால் கரணைக் கிழங்கு தாராளமாக வாங்கலாம் சேப்பங்கிழங்கு முளை விட்டது போல் ஒருமுனை நீண்டிருக்கும் கிழங்கு சமயலுக்கு சுவை சேர்க்காது உருண்டையாக பார்த்து வாங்கவும். பெரிய வெங்காயம் வாங்கும்போது அதன் மேல் குடுமி பகுதியில் தண்டு பெரியதாக இல்லாமல் பார்த்து வாங்கவும். இஞ்சி விஷயத்தில் லேசாக கீறி பார்க்கும்போது தோல் பெயர்ந்து வருவது நல்லது. நார் பகுதி குறைவாக இருக்கும். கத்தரிக்காய் தோல் மெல்லியதாக இருப்பது போல் பார்த்து வாங்கவும். சுரைக்காய் நகத்தால் அழுத்தினால் நகம் உள்ளே இறங்க வேண்டும். அப்போதுதான் இளசு என்று அர்த்தம். அவரைக்காயைத் தொட்டுப் பார்த்து விதைகள் பெரிதாக இருக்குமானால், அதை தவிர்த்து விடுவது நல்லது இளசாக வாங்கினால் நார் அதிகம் இருக்காது. வாழைப் பூ வாங்கும் போது அதன் மேல் இதழை விரித்து பூக்கள் கருப்பாகாமல் வெளிர் நிறத்தில் இருக்கிறதா என பார்த்து வாங்கவும். அப்படி இருந்தால் பிரஷ்காய் என்று அர்த்தம். பச்சை மிளகாய் நீளமாக இருந்தால் காரம் குறைவாக இருக்கும். சற்றே குண்டாணது தான் காரமாகவும் வாசனையாகவும் பிரமாதமாக இருக்கும்.
இயக்குநர் பா.இரஞ்சித்தின் படத்தயாரிப்பு நிறுவனமான “நீலம் புரொடக்‌சன்ஸ்” தயாரித்திருக்கும் படம் “பரியேறும் பெருமாள். இயக்குநர் ராம்-ன் இணை இயக்குநரான மாரிசெல்வராஜ், இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். ”தாமிரபரணியில் கொல்லப்படாதவர்கள்” என்ற சிறுகதை தொகுப்பின் மூலமாகவும் “மறக்கவே நினைக்கிறேன்”தொடரின் மூலமாகவும் இலக்கிய உலகத்திலும் பரவலாக அறியப்பட்ட எழுத்தாளரான மாரி செல்வராஜ் இயக்கும் முதல் திரைப்படம் “பரியேறும் பெருமாள்”. முழுக்க முழுக்க தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் எடுக்கப்பட்ட இத்திரைப்படத்தில் தென் தமிழக கிராமங்களிலும் நகரங்களிலும் பள்ளி, கல்லூரிகளிலும் எளிய மக்களிடமும் நுணுக்கமாக பரவிக் கொண்டிருக்கும் பிரிவினை படிநிலைகளையும் அது உருவாக்கும் பெரும் தாக்கத்தையும் பற்றி உண்மைக்கு மிக அருகில் சென்று பேசுகிற படமாக இப்படம் உருவாக்கப்பட்டிருக்கிறது. காதலையும் வாழ்வியலையும் அதனைச் சுற்றி நடைபெறும் உளவியல் அரசியலையும் பேசும் படமாக பரியேறும் பெருமாள் இருக்கும். பரியேறும் பெருமாளாக, சட்டக்கல்லூரி மாணவர் கதாபாத்திரத்தில் கதிர் நடிக்க அவருடன் கயல் ஆனந்தி, யோகிபாபு, லிஜீஷ், மாரிமுத்து தவிர திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த மக்களையே பெரும்பான்மையான கதாபாத்திரங்களில் நடிக்க வைத்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, விவேக் மற்றும் மாரி செல்வராஜ் இருவரும் பாடல்களை எழுதியிருக்கிறார்கள். ஸ்ரீதர் ஒளிப்பதிவாளராகவும், ஆர்.கே.செல்வா எடிட்டராகவும் பணியாற்றியிருக்கிறார்கள். சான்டி நடனம் அமைக்க, சண்டைப்பயிற்சியை ஸ்டன்னர் சாம் அமைத்திருக்கிறார். சி.வேலன் மற்றும் ஆர்.ராகேஷ் இணைந்து தயாரித்துள்ளனர். நிர்வாகத் தயாரிப்பு லிஜீஷ்.
என்றைக்குக் கவிதைகள் தோன்றினவோ அன்றைக்கே கவிதைகள் குறித்த ரசனையும் தோன்றிவிட்டது எனலாம். படைப்பவன் ரசனையும் படிப்பவன் ரசனையும் ஒன்றுபடுவதுதான் கவிதை ரசனை என்பதில்லை, வேறுபடவும் செய்யும். கவிதைகளை ரசிப்பதில் பல சமயங்களில் படைப்பாளியை விஞ்சி விடுகிறான் படிப்பவன், அதாவது சுவைஞன். படைப்பவனை விட, சுவைஞனுக்கு இருக்கும் சுதந்திரம் மிகப்பெரிது. சுவைஞனுக்குள்ளே படிக்கும் குறிப்பிட்ட அந்த ஒரு கவிதை மட்டுமல்ல, அதன் முன்னர் பல நூறு ஆண்டுகளாய்த் தோன்றிய கவிதைகளும் அதன் ரசனைகளும் பொதிந்து கிடக்கின்றன. தமிழ் போன்ற மூவாயிரம் ஆண்டு மூத்த இலக்கிய இலக்கண வளங்கள் மிகுந்த செம்மொழியில் எழுதப்படும் கவிதைகளை வாசிக்கும் ஒரு சுவைஞனுக்கு அம்மொழியின் நீண்ட கவிதைப் பாரம்பரியமே ஒரு பெரும் பலமாகவும் சில சமயங்களில் பலவீனமாகவும் மாறிவிடுவது இயற்கை. சிங்கைக் கவிஞர் அன்புத் தோழர் ந.வீ. விசயபாரதியின் புலமைக்கு மரியாதை என்ற இந்நூலும் அப்படியொரு சுவைஞனின் ரசனை சார்ந்ததொரு படைப்புதான். இந்நூலில் அமைந்துள்ள எட்டுக் கட்டுரைகளும் கிட்டத்தட்ட ஒரே தொனியில் படைப்பாளியின் படைப்பாற்றலைச் சிலாகித்து உச்சிமோர்ந்து கொள்கின்றன. சங்க இலக்கியங்கள் தொடங்கிக் காப்பியங்கள், சிற்றிலக்கியங்கள், இக்கால இலக்கியங்கள் எனக் கவிஞர் வைரமுத்துவின் படைப்புகள் வரை நூலின் கட்டுரைகள் தமிழிலக்கிய நெடும்பரப்பின் அடி முதல் நுனிவரை தொட்டுத் தடவிச் செல்வது நூலின் சிறப்பு. நூலின் எட்டுக் கட்டுரைகளும் பெருவழுதி (நற்றிணை), பிசிராந்தையார் (புறநானூறு), இளங்கோவடிகள் (சிலப்பதிகாரம்), கம்பர் (இராமகாதை), முக்கூடற் பள்ளு ஆசிரியர், பாரதியார், பாரதிதாசன், வைரமுத்து என்னும் எட்டுக் கவிஞர்களின் புலமைக்கு மரியாதை செலுத்தும் விதத்தில் அமைக்கப்பட்டிருப்பதை நோக்கி நூலுக்குப் பெயராக, புலமைக்கு மரியாதை என்று ஆசிரியர் பெயரிட்டிருப்பது சாலப் பொருத்தமாகிறது. ஓர் இலக்கியப்பாடல், அதன் பின்னணி, பாடலின் கருத்து, பாடல் சொற்பொருள் நுட்பம், பின்னர் அந்தக் கவிதையின் நயம் என்று ஒவ்வொரு கட்டுரையும் இலக்கியக் கட்டுரைகளாக விரிந்து செல்லும் இந்நூலின் ஊடாக ஆசிரியர், ஒரு கதைசொல்லி போல் இலக்கியக் காட்சிகளைக் கதைகளாகவும் விவரித்துச் சொல்லும் பாங்கு இந்நூலின் தனியழகு என்றே குறிப்பிட வேண்டும். சான்றாக நற்றிணை குறித்த முதல் கட்டுரையில் இடம்பெறும் பின்வரும் பகுதியைக் குறிப்பிடலாம். மறுநாள் விடிகிறது, முதல் நாள் தலைவனைச் சந்தித்த ஆனந்த நினைவுகளில் மூழ்கியபடி தலைவி வீட்டில் இருக்கும்போது அவளது அன்னை யதார்த்தமாக அவளைப் பார்க்கிறாள்;. ஏதோ அவளிடம் மாற்றம் தெரிவதாக உணர்கிறாள்;, உற்றுற்றுப் பார்த்தபின் அவளது கூந்தலில் வண்டுகள் மொய்ப்பதைப் பார்த்து விடுகிறாள். மிக நெருங்கிப்போய்க் கவனித்தபோது அவளிடமிருந்து மலரின் நறுமணம் வீசுவதையும் உணர்கிறாள். 'இப்படிப்பட்ட மணம் இதற்குமுன் உன்னிடம் இருந்ததில்லையே” என்று தலைவியிடம் சந்தேகத்துடன் தாய் கேட்க, தலைவி சில கணம் தடுமாறிப் போகிறாள்;, குற்றமுள்ள நெஞ்சின் குறுகுறுப்புடன் தாயின் முகம் பார்க்கத் தைரியம் இல்லாமல் ‘தோள்கொடுப்பாள் தோழி’ என்ற நம்பிக்கையுடன் தோழியைப் பார்க்கிறாள். (நற்றிணையில் மொழிநயம்) இப்படி ஒவ்வொரு கட்டுரையும் ஒரு கதையைச் சுவைபட விரித்துச் சொல்கிறது. கட்டுரைகளின் நடுவே கதைகள் எனப் புதியநடைபோடும் விசயபாரதியின் படைப்புக்கு மேலும் ஒரு தனிச்சிறப்பு உண்டு. அது அவரின் கவிதை மயப்பட்ட மொழிநடை. ஆசிரியர் இயல்பாகவே ஒரு கவிஞர் என்பதாலும் சொல்லப்படும் உள்ளடக்கத்தின் சார்பாலும் அவரின் உரைநடை அப்படியே கவிதையாக நெகிழ்ந்து குழைந்து வெளிப்படுகின்றது. மணம் வீசும் பூக்களின் சாறுபிழிந்து பக்குவப்படுத்தப்பட்ட வாசனை திரவியங்கள், சந்தனச் சிற்பத்துக்கு சதை பொதித்து உயிரூட்டி உலவ விட்டதைப்போல பேரழகுப் பெண்கள் வல்லமை மிக்க சொல்லாற்றல் கொண்ட அறிஞர்கள், இசையும் இலக்கியமும் இசைந்து இசைக்கக்கூடிய பாடகர்கள், மலரினும் மென்மையான மார்புடைய அழகிகள் மேலே சான்று காட்டப்பட்ட பகுதி அமளியில் அனிச்சமலர் என்ற இரண்டாம் கட்டுரையில் இடம்பெற்றுள்ள உரைநடைப் பகுதி. உரைநடையை உடைத்துப் போட்டது நான். படித்துப்பாருங்கள் உரைநடையே கவிதையாய், கவிதையே உரைநடையாய் நம்மை மயக்கும். விசயபாரதியின் சொல்லாற்றல் அப்படிப்பட்டது. இலக்கியத்தின் மூன்று பரிமாணங்களாகிய கவிதை, கதை, கட்டுரை என்ற மூன்றையும் தன்னகத்து அடக்கிய புலமைக்கு மரியாதை எனும் இத்தொகுப்பு ஒரு முப்பரிமாண இலக்கியம் என்பதில் வியப்புக்கு இடமேது. நூலாசிரியரின் மொழியாளுமை வியப்பளிக்க வைக்கிறது. மகாகவி பாரதி சொன்னது போல் ‘சொல் புதிது சுவை புதிது’ என அனைத்திலும் புதுமைநலம் விளைந்ததொரு மொழியாளுமை கொண்டு தம் படைப்பால் படைப்பின் உத்தியால் பண்டைய இலக்கியங்களுக்குப் புதுமெருகு ஏற்றியுள்ளார் கவிஞர் விசயபாரதி. சான்றுக்கு ஒன்றிரண்டு. ஒன்று: உச்சக் காட்சியில் கண்ணகியின் கோபத்தைக் காடுகொள்ளாத சாதுவின் மிரட்சியாய்க் காட்டியது இன்னொரு புரட்சி (அமளியில் அனிச்சமலர்) கண்ணகி ஒரு சாது! அமைதியே வடிவானவள், சிலம்பின் வழக்குரை காதையில் அவள் கொள்ளும் சத்திய ஆவேசம், அதனால் மதுரையம்பதிக்கும் மன்னனுக்கும் மக்களுக்கும் நேர்ந்த கதி என்ற காப்பியக் கதையோட்டங்கள் அனைத்தையும் உள்வாங்கும் போக்கில், ‘சாது மிரண்டால் காடு கொள்ளாது’ என்ற பழமொழியை ஆசிரியர் தம் மொழிநடையின் இடையில் பிசைந்து தந்துள்ள செய்நேர்த்தியைக் கவனிக்க வேண்டும். இரண்டு: தமிழ் மொழியின் சிறப்பே அம்மொழி காலத்திற்கு ஏற்பத் தன் கட்டுப்பாடுகளைத் தளர்த்திக் கொண்டும், காலச் சூரியனின் கதகதப்பில் தன்னை உலர்த்திக் கொண்டும் இயைந்து கொடுத்து வளர்ந்த எளிமைதான். (இலக்கியம் இனிக்கிறது) ‘காலச் சூரியனின் கதகதப்பில் தன்னை உலர்த்திக் கொண்டும்’ என்ற சொல்லாட்சியில் வெளிப்படும் படிமத் தன்மை நூலாசிரியரின் கவித்துவ வெளிப்பாடு என்பதில் ஐயமில்லை. செத்தொழிந்த சில செம்மொழிகளைப் போலில்லாமல் தமிழ் இன்றும் சீரிளமைத் திறத்தோடு இருப்பதற்குக் காரணம் என்ன? என்ற உலக வியப்புக்கு ஓர் உண்மைக் காரணத்தை உரத்துச் சொல்கிறார். தமிழ், காலச் சூரியனின் கதகதப்பில் தன்னை உலர்த்திக் கொண்டது என்று. உரைநடையிலும் படிமங்களை உலவவிட்ட ஆசிரியரின் நுட்பம் பாராட்டத்தக்கது. தமிழ் இலக்கியங்களின் மீது அதிலும் குறிப்பாக நம்முடைய பழந்தமிழ் இலக்கியங்களின் மீது நூலாசிரியருக்கு இருக்கும் நாட்டம் அளப்பரிது. ‘தமிழ் வாழ்க!’ என்று மேடைகளில் முழங்கிவிட்டுச் செயலற்ற வாய்ப்பேச்சு வீரர்களாகத் தமிழர்கள் முடங்கிப் போய்விடக் கூடாது. “தமிழிலக்கியத்தின் மீதான நம் தேடல் தீவிரமாகும் போதுதான் தமிழின் தேக்கநிலை மாறி ஊக்கநிலை உருவாகும் அந்த நிலை உருவாக நம் அறிவுப்பசி விரிவாகத் தமிழிலக்கிய வாசிப்பு ஒன்றே சரியான தீர்வாகும்” (கண்ணின் கடைப்பார்வை) என்று தமிழ்வளர்ச்சிக்கு ஆக்கபூர்வமான அறிவுரைகளை வழங்குவதோடு தமிழர்களுக்கு ஒரு வேண்டுகோளும் வைக்கின்றார் நூலாசிரியர். ‘தமிழ் வாழ்க’ என்ற மேடை முழக்க வரிகள் இன்றைய தேவையில்லை. உண்மையில் தமிழை வாழ வைக்க எண்ணுபவர்கள் செய்ய வேண்டிய அவசரத்தேவை ஒன்று இப்போது இருக்கிறது. புத்தகக் கடைகளின் அலமாரிகளில் அழுக்குப்படாமல் அடுக்கி வைக்கப்பட்டிருக்கிற பழந்தமிழ் அறிஞர்களின் நூல்களைக் காசுகொடுத்து வாங்காவிட்டால்கூடப் பரவாயில்லை; அதே நிலையில் அரசாங்க நூலகங்களின் அலமாரிகளில் ஆய்வு மாணவர்களால் மட்டுமே அதுவும் தேர்வுக்கான தேவையின்போது மட்டுமே எடுத்துப் படிக்கப்படுகிற நிலைமை மாற்றப்பட வேண்டும்; அதற்குத் தமிழர்கள் பழந்தமிழ் நூல்களை நூலகங்களிலிருந்து இரவல் வாங்கியாவது படிக்கவேண்டும் என்பது நம் பணிவான வேண்டுகோள். (கண்ணின் கடைப்பார்வை) சிங்கைக் கவிஞர் விசயபாரதியின் இவ்வேண்டுகோள். தாய்த்தமிழகத்தின் சூழலுக்கும் பொருந்திய வேண்டுகோளே என்பதை நாம் மறுக்க முடியாது. மொத்தத்தில் புலமைக்கு மரியாதை எனும் இக்கட்டுரைத் தொகுப்பு தமிழுக்குப் புது வரவு என்பதோடு புதுமையான வரவு. நூலாசிரியர் விசயபாரதியின் நோக்கம் தெளிவாய் உள்ளது. இது படைப்பிலக்கியமில்லை. இலக்கிய ஆராய்ச்சியுமில்லை. ரசனை, இலக்கிய ரசனை, ஒரு சுவைஞன் சுவைத்த தமிழ் அமுதின் சில துளிகள் இவை. உங்கள் முன் படைக்கப்பட்டதன் நோக்கம், “தமிழிலக்கியத்தின் மீதான நம் தேடல் தீவிரமாகும்போதுதான் தமிழின் தேக்கநிலை மாறி ஊக்கநிலை உருவாகும் அந்த நிலை உருவாக நம் அறிவுப்பசி விரிவாக தமிழிலக்கிய வாசிப்பு ஒன்றே சரியான தீர்வாகும்.” என்று ஆசிரியர் சொன்னதுபோல் தமிழின் தேக்க நிலை மாற வேண்டும் ஊக்க நிலை உருவாக வேண்டும் என்பதுதான். இந்நூல் நிச்சயம் அதற்குத் துணைபுரியும். நூலாசிரியர் ந.வீ.விசயபாரதிக்குப் பாராட்டுக்கள், வாழ்த்துக்கள். - செப்டம்பர் 16, 2010 கருத்துகள் இல்லை: இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Twitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர் லேபிள்கள்: அணிந்துரை, கட்டுரை இலக்கியம், சிங்கப்பூர் இலக்கியம் புதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு இதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom) புதுச்சேரியில் பல்லவச் சிற்பங்கள் நூல் அணிந்துரை -முனைவர் நா.இளங்கோ முனைவர் நா . இளங்கோ “ செங்கல் இல்லாமலும் , மர ம் இ ல்லாமலும் , உலோகம் இல்லாமலும் , சுண்ணாம்பு இல்லாமலும் பிரம்மா , சிவன் மற்றும் விஷ்ணுவ... திருக்குறள் பேச்சுப் போட்டி - பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் திருக்குறள் பேச்சுப் போட்டி பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் முனைவர் நா.இளங்கோ புதுச்சேரி-8 அவையோர்கள் அனைவருக்கும் என் அன்பான வணக்... ஆய்வு நோக்கில் குறுந்தொகை - பதிப்பு வரலாறு ஆய்வு நோக்கில் குறுந்தொகை - பதிப்பு வரலாறு முனைவர் நா.இளங்கோ, இணைப் பேராசிரியர், பட்ட மேற்படிப்பு மையம், புதுச்சேரி - 8. குறுந்த... உலகம் உண்ண உண்… புதிய பார்வையில் பாவேந்தர் உலகம் உண்ண உண்… முனைவர் நா.இளங்கோ, இணைப் பேராசிரியர், பட்ட மேற்படிப்பு மையம், புதுச்சேரி - 8. உலகம் உண்ண உண், உடுக்க உடுப்பாய் என்று...
தமிழ் ரசிகர்களுக்கு சிம்மசொப்பனமாக இருந்து வந்தவர் தான் பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியம். தமிழ் திரையுலகில் மட்டுமல்லாமல் தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் மொழிகளில் முன்னணி பாடகராக வலம் வந்தவர்தான் எஸ்.பி. பாலசுப்ரமணியம். இவர் 40 ஆயிரம் பாடல்களுக்கு மேலான பாடல்களை 16 மொழிகளில் பாடியுள்ளார். இவர் ஒரு டப்பிங் ஆர்ட்டிஸ்டாகவும் வெற்றி பெற்றவர். 6 நேஷனல் பிலிம் விருதுகளை பெற்றுள்ளார். அவர் வயதை கணக்கு போட்டு பார்த்தால் பிறந்ததிலிருந்து ஒரு நாளைக்கு இரண்டு பாடல்கள் பாடியுள்ளாராம். என்ன ஒரு ஆச்சரியம், வாழ்க்கை முழுவதும் இசைக்காகவே அர்ப்பணித்தவர். கடந்த செப்டம்பர் மாதம் 2020ஆம் ஆண்டு கொரோனா பாதிப்பால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் எஸ்பிபி. இதற்காக பல சினிமா பிரபலங்கள், ரசிகர்களுக்கு துடி துடித்துப் போனார்கள். எஸ்பிபியின் இளம் வயதில் அதாவது 15 வயது இருக்கும் போது எடுத்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. spbb Continue Reading Related Topics:இந்தியா, இன்றைய சினிமா செய்திகள், இன்றைய செய்திகள், எஸ் பி பாலசுப்ரமணியம், சினிமா செய்திகள், தமிழ் சினிமா, தமிழ் செய்திகள், தமிழ் நடிகைகள், தமிழ் படங்கள், தமிழ்நாடு, நடிகர்கள், நடிகைகள்
ஆசிரியர் தேர்வு வாரியத்தால் 3,236 பணியிடங்களுக்கு சான்றிதழ் சரி பார்ப்புக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கான பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 2020-2021ஆம் ஆண்டு முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் / உடற்கல்வி இயக்குநர் நிலை 1/ கணினிப் பயிற்றுநர் நிலை-1 நேரடி நியமனத்திற்கான அறிவிக்கை (Notification) எண். 01/2021 ஆசிரியர் தேர்வு வாரியத்தால் 09.09.2021 அன்று வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து 12.02.2022 முதல் 20.02.2022 வரை கணினி வழித்தேர்வுகள் (Computer Based Examination) நடத்தப்பட்டு தேர்வு முடிவுகள் 04.07.2022 அன்று இவ்வாரியத்தால் வெளியிடப்பட்டன. 25.08.2022 நாளிட்ட ஆசிரியர் தேர்வு வாரிய பத்திரிகைச் செய்தியில் பணிநாடுநர்கள் தங்களது தமிழ் வழியில் பயின்றதற்கான சான்றிதழ்களை ஆசிரியர் தேர்வு வாரிய இணைய தளம் வழியாக 26.08.2022 முதல் 30.08.2022 வரை பதிவேற்றம் செய்யுமாறு தெரிவிக்கப்பட்டது. பணிநாடுநர்கள் விண்ணப்பத்துடன் பதிவேற்றம் செய்யப்பட்ட சான்றிதழ்கள்/ஆவணங்கள் மற்றும் கூடுதலாக பதிவேற்றம் செய்யப்பட்ட தமிழ் வழியில் பயின்றதற்கான சான்றிதழ்களின் அடிப்படையில் பணி நாடுநர்கள் விவரங்கள் சரிபார்க்கப்பட்டு, அறிவிக்கையில் குறிப்பிட்டுள்ள கீழ்கண்ட பாடங்களுக்கு 12 என்ற விகிதாச்சாரப்படி சான்றிதழ் சரிபார்ப்பிற்கான பட்டியல் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியலில் இடம்பெற்றுள்ள பணிநாடுநர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்புக்கான அழைப்புக் கடிதம், ஆளறிச் சான்றிதழ் படிவம் மற்றும் பிற இணைப்பில் கண்டுள்ள படிவங்கள் ஆகியவை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் விரைவில் பதிவேற்றம் செய்யப்படும். தங்களது அழைப்புக் கடிதம், ஆளறிச் சான்றிதழ் மற்றும் பிற இணைப்பில் கண்டுள்ள படிவங்கள் ஆகியவை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது. அழைப்புக் கடிதம் பிற வழிகளில் அனுப்பி வைக்கப்படமாட்டாது என திட்டவட்டமாக பணி நாடுநர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. பட்டியலிடப்பட்ட விண்ணப்பத்தாரர்கள் சான்றிதழ் சரிபார்ப்பு அழைப்புக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டவாறு தங்களது அனைத்து அசல் சான்றிதழ்கள், ஆதார் ஆகியவற்றுடன் அதனுடைய Self Attested copies மற்றும் ஆளறிச் சான்றிதழ் ஆகியவற்றினை சான்றிதழ் சரிபார்ப்பின்போது கொண்டு வருமாறு தெரிவிக்கப்படுகிறது. சான்றிதழ் சரிபார்ப்பிற்கு குறிப்பிட்ட தேதியில் நேரில் வருகை புரியாத விண்ணப்பத்தாரர்கள் அவர்கள் தகுதியான மதிப்பெண் பெற்றிருப்பினும், பரிசீலிக்கப்படமாட்டார்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது. விண்ணப்பத்தாரர்கள் 1:2 என்ற விகிதத்தில் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்படுவதாலும், அவர்களின் சான்றிதழ்கள்/ ஆவணங்கள் சரிபார்க்கப்படுவதாலும் மட்டுமே அன்னாரது இறுதித் தற்காலிக தெரிவுக்கு உத்தரவாதம் இல்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. மேற்கண்ட பாடங்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்புக்கான இடம் மற்றும் தேதி பின்னர் அறிவிக்கப்படும். சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியல் சார்ந்த கோரிக்கைகளை ஆசிரியர் தேர்வு வாரிய https://forms.qle/ZUYC2Ud5wxcapDku6 வழியாக இப்பட்டியல் வெளியிடப்பட்ட நாள் முதல் மூன்று தினங்களுக்குள் அனுப்புமாறு தெரிவிக்கப்படுகிறது. ஆட்சேபனை/மனு பிற வழியில் அனுப்பினால் பரிசீலிக்கப்படமாட்டாது எனத் தெரிவிக்கப்படுகிறது. மேலும் முதுகலை ஆசிரியர் பணியிடத்திற்கான பணிநாடுநர்கள் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளம் மற்றும் பத்திரிக்கைச் செய்தியினை தொடர்ந்து கவனித்து வருமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள் இவ்விதம் ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏனெனில், மருந்துகளால் சில பக்கவிளைவுகள் ஏற்படுவதால், மீண்டும் நீங்கள் கருத்தரிக்க முயலும் போது அதற்கான வாய்ப்புகள் குறைவாக இருக்கும். எனவே, சில இயற்கையான வழிமுறைகளை பின்பற்றி கருவை கலைக்கலாம். பட்டை வைட்டமின் சி அதிகம் நிறைந்துள்ள உணவுப் பொருட்களில் ஒன்று தான் பட்டை. இந்த பட்டை கூட கருச்சிதைவை ஏற்படுத்தும். ஆகவே கருவை கலைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள், உணவில் பட்டையை அதிகம் சேர்த்து வரலாம். பப்பாளி பப்பாளியில் வைட்டமின் சி வளமாக நிறைந்திருப்பதால், இதனை சாப்பிட்டால் கரு கலைந்துவிடும். அதிலும் இதன் விதையை சாப்பிட்டால், நான்கே வாரங்களில் கரு கலைந்துவிடும். வெல்லம் வெல்லம் உடலின் வெப்பத்தை தூண்டும் பொருள். இதிலும் வைட்டமின் சி அதிகம் உள்ளது. ஆகவே இதனை உணவில் அதிகம் சேர்த்தாலும் கரு அழிந்துவிடும். கரும்பு கரும்பில் வைட்டமின் சி மட்டுமின்றி, உடலின் வெப்பத்தை அதிகரிக்கும் தன்மை கொண்டவை. எனவே இதனை உட்கொண்டால், கருப்பையானது சுருங்கி, கருவானது கலைந்துவிடும். வேர்க்கடலை வேர்க்கடலை சாப்பிட்டால், கரு கலையும் என்பதை பெரும்பாலானோருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் இதனை தினமும் ஒரு கையளவு பச்சையாக சாப்பிட்டு வந்தால், கரு கலைந்துவிடும். எள் எள்ளானது கருப்பையை சுருக்கும் தன்மை கொண்டவை. அதனால் தான் கர்ப்பிணிகளை எள் சாப்பிட வேண்டாம் என்று சொல்வார்கள். மேலும் இதில் வைட்டமின் சி சத்தும் வளமாக உள்ளது.
போதைப் பழக்கத்தை பெருமிதமாக முன்வைக்கும் பாடல்களை ஒலிபரப்பக் கூடாது... FM ரேடியோக்‍களுக்‍கு மத்திய அரசு எச்சரிக்‍கை வாகன எண் பலகையில் அரசியல் தலைவர்களின் படங்களை ஒட்டுவதை போக்குவரத்து அலுவலர்கள் எவ்வாறு அனுமதிக்கின்றனர்? உயர்நீதிமன்ற மதுரைக்‍கிளை கேள்வி நாடு முழுவதும் ஒரே சீரான மின்கட்டணம் இருக்க வேண்டும்... பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் வலியுறுத்தல் சென்னை கொளத்தூரில் கோயிலுக்கு நடந்து சென்ற பெண்ணிடம் 6 சவரன் தாலி செயின் பறிப்பு... சி.சி.டி.வி. காட்சிகள் வெளியீடு சென்னை அண்ணா நகரில் பட்டாக்‍கத்தியுடன் வாகன ஓட்டிகளை மிரட்டும் ரவுடிக்‍ கும்பல் - தேநீர் கடையில் செல்போன் பறித்த சி.சி.டி.வி காட்சிகள் வெளியீடு கோவை சிலிண்டர் கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக உரக்கடைகளில் போலீசார் சோதனை... வெடிமருந்துகள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின்பேரில் சோதனை குஜராத்தில் அமைதியாக நடந்து முடிந்தது முதல் கட்டத் தேர்தல் : 89 சட்டமன்றத் தொகுதிகளில் 60.20% வாக்குப்பதிவு தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்‍கு சில மாவட்டங்களில் இடி-மின்னலுடன் லேசானது முதல் கனமழை பெய்யக்‍கூடும்... இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் கன்னியாகுமரியில் இருந்து டாரஸ் லாரிகளில் கனிம வளங்கள் கேரளாவுக்‍கு கடத்தல்... நெல்லையிலிருந்து குமரி வழியாக கடத்த முயன்ற 5 லாரிகள் பறிமுதல் குறிப்பிட்ட காலத்துக்‍குப் பின் நோயாளிகள் உட்கொள்ளும் மாத்திரைகளின் வீரியம் குறைவதாக அதிர்ச்சித் தகவல் - கிருமிகள் மருந்துகளுக்‍கு எதிரான ஆற்றலை அதிகரித்துக் ‍கொள்வதாக விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு
வியாழன் அன்று ஃபுல்ஹாமிடம் 3-0 என்ற கணக்கில் தோல்வியடைந்த பிறகு இரண்டு மணி நேரத்திற்குள் ஸ்டீவன் ஜெரார்டை ஆஸ்டன் வில்லா நீக்கியது. 11 ஆட்டங்களுக்குப் பிறகு 17 வது இடத்தில் அவரது அணியை விட்டு வெளியேறிய ஒரு மோசமான காட்சிக்குப் பிறகு ஜெரார்டுக்கு எழுத்து சுவரில் இருந்தது மற்றும் கோல்கள் அடித்ததில் மட்டுமே வெளியேற்ற மண்டலத்திற்கு வெளியே இருந்தது. ஆஸ்டன் வில்லா கால்பந்து கிளப் தலைமை பயிற்சியாளர் ஸ்டீவன் ஜெரார்ட் உடனடியாக கிளப்பை விட்டு வெளியேறினார் என்பதை உறுதிப்படுத்த முடியும். – ஆஸ்டன் வில்லா (@AVFCOfficial) அக்டோபர் 20, 2022 “தலைமை பயிற்சியாளர் ஸ்டீவன் ஜெரார்ட் கிளப்பை விட்டு உடனடியாக அமலுக்கு வந்துள்ளார். ஸ்டீவனின் கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்புக்காக நாங்கள் நன்றி தெரிவிக்க விரும்புகிறோம், மேலும் அவர் எதிர்காலத்திற்கு நல்வாழ்த்துக்களைத் தெரிவிக்க விரும்புகிறோம், ”என்று ஆஸ்டன் வில்லா அவர்களின் இணையதளத்தில் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. லிவர்பூல் கிரேட் கடந்த நவம்பரில் பிரீமியர் லீக் ரிட்டர்னில் பணியமர்த்தப்பட்டார், இது இறுதியில் லிவர்பூலில் மேலாளரின் பங்கிற்கு திரும்ப வழிவகுக்கும் என்று பலர் எதிர்பார்க்கிறார்கள், அங்கு அவர் 710 போட்டிகளில் விளையாடினார் – பல கேப்டனாக – மற்றும் பரவலாக அதன் சிறந்த வீரர்களில் ஒருவராக கருதப்படுகிறார். 42 வயதான ஜெரார்ட் ஸ்காட்டிஷ் கால்பந்தில் 3½ வருட காலத்துக்குப் பிறகு வில்லாவில் சேர்ந்தார், அங்கு முதல் முறையாக தலைமைப் பயிற்சியாளராக அவர் ரேஞ்சர்ஸின் அதிர்ஷ்டத்தை மாற்றினார் மற்றும் கிளாஸ்கோ போட்டியாளரான செல்டிக்கின் நீண்ட கால ஆதிக்கத்தை முடிவுக்குக் கொண்டு வந்தார். கடந்த சீசனில் வில்லா 14வது இடத்தில் இருந்தது. அறிக்கைகளின்படி, முன்னாள் சவுத்தாம்ப்டன், டோட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் மற்றும் பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் மேலாளர் மொரிசியோ போச்செட்டினோ ஜெரார்டிடம் இருந்து பொறுப்பேற்க ஆரம்ப விருப்பமாக உருவெடுத்துள்ளார்.
‘வானமழை நீ எனக்கு’ நாவலில் அழகும் அறிவும் ஐஸ்வர்யமும் நிறைந்த ரஞ்சனியை பின்தொடர்ந்த ஆசிரியர், நான்கு வார சந்திப்பின் மூலம் அவளை நிரந்தர மாக பிரியும் நிலைக்கு தள்ளப்படுவார். அவள் அளித்த அன்புப் பரிசாக கைக்கடிகாரத்தை பார்த்து காலத்தை ஓட்டும் போது, திடீரென அவள் மீண்டும் வருகிறாள். மதுரை மீனாட்சி கோவிலில் ஒயிலாக நடந்து எழிலாக வளைய வந்து தன்னை ஆட்கொண்ட அந்த பேரழகு, இந்த நாவலில் நடை பயிலாமல் சக்கர நாற்காலியில் புன்னகையுடன் எதிர்கொள்வாள். ஆசிரியருடன் சேர்ந்து ஐயோ இந்த தேவதைக்கா இந்த நிலை என்று நம் மனமும் கதறும். அறுவை சிகிச்சைக்கு பின் இறைவன் ஆயுளைத் தந்தானே என்று ஆறுதலும் சொல்லிக் கொள்ளும். காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி… என்று இறைவனை நினைத்து கசிந்துருகுவது போல அன்பு கொண்ட மனமும் கண்ணீர் மல்கும். இதற்கென்று காதல், காமச்சாயம் தேவையில்லை. அப்படி பூசி கொச்சைப்படுத்தவும் முடியாது. எழுத்துக்களால் ஈர்க்கப்பட்ட தேவதையும், அறிவால் ஈர்க்கப்பட்ட ஆசிரியரும் சந்திப்பது அழகு… பேரழகு. அவர்கள் பகிர்ந்து கொள்ளும் அன்புக் கதைகளை, கர்ம கணக்குகளை தெரிந்து கொள்ள வேண்டாமா… ‘அல்லல்படுவோர் நெஞ்சமெல்லாம் அன்பால் என்றும் நிறையட்டும்’ என்று ஆசிரியர் பிரார்த்தனை செய்வதன் அர்த்தத்தை, ‘நெஞ்சினில் ரஞ்சனி’ நாவல் மூலம் தெரிந்து கொள்வதே சிறந்தது.
விஜய்சேதுபதியோடு எப்போதுமே நல்ல நட்பில் இருப்பவர் நயன்தாரா. அவருடைய படங்களை முதல்நாளே தியேட்டரில் பார்ப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார். `96’ படத்தை விக்னேஷ்சிவன், டிடி மற்றும் நண்பர்கள் குழுவோடு தியேட்டருக்குப் போய்ப் பார்த்து, கொண்டாடியிருக்கிறார் நயன். உடனடியாக நண்பர் விசேவுக்குப் போன் போட்டுப் பாராட்டவும் தவறவில்லை. யாருக்காவும் எடுத்திடாத தன்னுடைய `அடையாள தாடி’யை நண்பர் மிஷ்கினுக்காக எடுத்திருக்கிறார் இயக்குநர் ராம். `பேரன்பு’ படத்தை முடித்துவிட்டு அடுத்த பட வேலைகளில் இருந்தவரைத் தன்னுடைய `சைக்கோ’ படத்தில் முக்கிய வேடம் கொடுத்து நடிக்கவைத்திருக்கிறார் மிஷ்கின். படம்: அருண் டைட்டன் படம்: அருண் டைட்டன் வேகன் (Vegan) உணவுமுறைக்கு மாறியிருக்கிறார் தமன்னா. அவருடைய நாய்க்குட்டி பெப்பிள்ஸ், உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட ஃபீல் ஆன தமன்னா, ‘இனி வாழ்க்கையில் இறைச்சி உணவுகளையே தொடமாட்டேன்’ என சபதம் போட, குடும்பமே ஷாக் ஆகி இருக்கிறது. இப்போது ஊரையே ‘வேகனுக்கு மாறுங்கோ’ எனப் பிரசாரமும் ஆரம்பித்திருக்கிறாராம்.
சுதேச சமஸ்தானங்களில் முற்போக்கான காரியங்களை முதன்மையாகச் செய்து வரும் சமஸ் தானம் பரோடா சமஸ்தானம் ஒன்றே யென்பதை நாம் கூற வேண்டியதில்லை. அதிலும் தாழ்த்தப் பட்டவர்கள் விஷயத்தில், பரோடா அரசாங்கம் மிகவும் அனு தாபங் கொண்டு அவர்களுக்குப் பல நன்மைகள் செய்து கொண்டு வருகின்றது. தாழ்த்தப்பட்ட வகுப்புப் பிள்ளைகளை எல்லாப் பள்ளிக் கூடங்களிலும் ஆட்சேபணையின்றிச் சேர்த்துக் கொள்ள வேண்டுமெனச் சென்ற வருஷத்தில் பரோடா அரசாங்கத்தார் உத்தரவு பிறப்பித்தனர். இவ்வுத்தரவை அகங்காரம் பிடித்த உயர் ஜாதி இந்துக்கள் எவ்வளவோ எதிர்த்தனர். பள்ளிக் கூடங்களில் சேரவந்த தாழ்த்தப்பட்ட வகுப்புப் பிள்ளைகளுக்கு எவ்வளவோ கஷ்டங்களை உண்டாக்கினார்கள், தங்கள் பிள்ளைகளை ஜாதி இந்துக்களின் பிள்ளைகள் வாசிக்கும் பள்ளிக் கூடங்களுக்கு அனுப்பிய தாழ்த்தப்பட்ட வகுப்புக் குடும்பத்தினரின் குடிசைகளை நெருப்புக்கிரை யாக்கினர். அவர்கள் தண்ணீர் எடுக்கும் கிணறுகளில் மண்எண்ணெய் ஊற்றி, குடிதண்ணீருக்குத் திண்டாட விட்டனர். இவ்வாறு உயர் ஜாதி இந்துக்கள் தாழ்த்தப்பட்டவர்களுக்கு சகிக்க முடியாத கொடுமைகளைச் செய்தாலும், அவர்கள் அரசாங் கத்தார் தமக்குக் கொடுத்த சுதந்திரத்தை உபயோகிக் காமல் விட்டு விட வில்லை. அரசாங்கத்தாரும், தாம் பிறப்பித்த உத்தரவை மாற்றாமல், பிடிவாதமாகவே நிறைவேற்றினார்கள். இவ்வகையில் அரசாங்கம் கொண்டிருந்த உறுதியைத் தாழ்த்தப்பட்ட சமுகத்தினர்பால் அனுதாபம் உள்ள எவரும் பாராட்டாம லிருக்க முடியாது. இப்பொழுது இன்னும் சிறந்த துணிகரமான காரியமாக, தாழ்த்தப்பட்டார் அனைவரும் கோயிலுக்குள் செல்ல உரிமையுண்டு என்றும் உத்தரவு பிறப்பித்ததை நாம் பாராட்டுகிறோம். இதற்கு முன் போர் சமதானத்திலும் இவ்வாறே தாழ்த்தப்பட்ட சமுகத் தார்க்கும் கோயில் பிரவேசம் அளித்தி ருக்கின்றனர். அதைப்பின்பற்றி பரோடாவும் தைரியத்தோடு வைதிகர்களின் எதிர்ப்பைச் சிறிதும் பொருட்படுத் தாமல் இக்காரியத்தைச் செய்ததைப் பாராட்டு கிறோம். இப்பொழுது தான் சென்னைச் சட்ட சபையில், தாழ்த்தப் பட்டவர்களுக்குக் கோயில் பிரவேசம் அளிக்கத்தக்க சட்டத்தை ஏற்படுத்துமாறு அரசாங்கத்திற்கு சிபாரிசு செய்வதாக தீர்மானம் நிறைவேறியிருக்கின்றது. சென்னை அரசாங்கத்தார் இத்தீர்மானத்தை அனுசரித்தும் பரோடா, போர் பந்தர் முதலிய சமதானங்கள் செய்திருக்கும் உத்தரவு களைப் பார்த்தும் தாமதமில்லாமல் தாழ்த்தப் பட்டவர்களுக்குக் கோயில் பிரவேசம் அளிக்கத் தகுந்த சட்டத்தை நிறைவேற்ற முன்வருமா? என்று கேட்கிறோம். சுதேச சமஸ்தானங்கள் இக்காரியத்தைச் செய்த பின்னும் சென்னை மாகாண பொது ஜனங்களின் பிரதிநிதியாகிய சட்டசபை இக்காரியத்தை நிறை வேற்ற வேண்டுமென்று சிபாரிசு செய்த பிறகும் சென்னை அரசாங்கம் மௌனஞ் சாதித்துக் கொண்டு வாளாவிருக்குமாயின் அது நேர்மையும் ஒழுங்கும் ஆகாது என்பதைச் சொல்ல விரும்பு கிறோம். அரசாங்கத்தின் நோக்கம் எல்லா வகுப்பின ருக்கும் சமத்துவமளிப்பதும், எல்லா வகுப்பின ருக்கும் நீதி புரிவதும் அல்ல வென்று பொது ஜனங்கள் நினைக்கும் படி இருக்கும். ஆகையால் சென்னை அரசாங்கம் சிறிதும் தாமதம் இல்லாமல் பரோடா போர்பந்தர் முதலிய சமஸ்தானங்கள் செய்தது போலத் தாழ்த்தப்பட்ட வகுப்பினர்க்கு ஆலயங் களில் சம உரிமை வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கூறுகின்றோம். - விடுதலை நாளேடு, 13.10.18 இடுகையிட்டது parthasarathy r நேரம் பிற்பகல் 10:32 கருத்துகள் இல்லை: இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Twitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர் லேபிள்கள்: கோயில் நுழைவு, பரோடா பிற்படுத்தப்பட்டவருக்குப் பேரிடி! கிரீமிலேயரில் மாத சம்பளத்தைக் கணக்கில் எடுக்கக்கூடாது என்ற ஆணையை மாற்றியது திட்டமிட்ட சதியே! பிற்படுத்தப்பட்டவர்மீது திணிக்கப்பட்ட கிரீமிலேயரில் மாத சம்பளம், விவசாயம் ஆகியவற்றின் வருமானம் கணக்கில் எடுத்துக்கொள்ளக்கூடாது என்ற மத்திய அரசாணையை மாற்றியது - பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இழைக்கப்படும் மாபெரும் அநீதி - ஆணை மாற்றப்படவேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: மத்திய அரசின் பணியாளர் நல அமைச்சகம் 6.10.2017 அன்று வெளியிட்டுள்ள ஆணையின்மூலம், வங்கி உள்ளிட்ட பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் "அனைவரும்'' முன்னேறியவர்கள் (கிரீமிலேயர்) என வரையறை செய்யப்பட்டுள்ளார்கள். இதன் காரணமாக பல்லாயிரக்கணக்கில் பிற்படுத்தப்பட் டோர் தங்களது பிள்ளைகளுக்கு 27 விழுக்காடு இட ஒதுக்கீடு பெற முடியாத இக்கட்டான நிலையை மத்திய அரசு உருவாக்கியுள்ளது. குடிமைப் பணி தேர்வில் அநீதி கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் குடிமைப்பணி தேர்வில் (அய்.ஏ.எஸ்.) வெற்றி பெற்ற பிற்படுத்தப்பட்ட சமுதாய மாணவர்களுக்கு, பதவி ஒதுக்கீடு அளிப்பதில், மத்திய பணியாளர் நலத் துறை, மிகப்பெரிய அநீதியை இழைத்து வருகிறது. தொடர்ந்து 2016, 2017 மற்றும் நடப்பு ஆண்டிலும், இதேபோல், யு.பி.எஸ்.சி. தேர்வில் தேர்ச்சி பெற்ற, பிற் படுத்தப்பட்ட சமுதாய மாணவர்கள் சிலருக்கு, அவர்களது பெற்றோர் பொதுத் துறையில் பணியில் உள்ளார்கள் என்றும், அவர்களது ஆண்டு சம்பள வருமானம் அதிகம் உள்ளதால், அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ். போன்ற பதவிகளுக்கான ஒதுக்கீடு மறுக்கப்பட்டுள்ளது. 2015 முதல் நடப்பு ஆண்டு 2018 வரை சற்றேறக்குறைய நூறு பிற்படுத்தப்பட்ட சமுதாய மாணவர்கள் பதவி ஒதுக்கீடு அளிக்கப்படாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். மாத சம்பளத்தை கிரீமிலேயரில் இணைக்கக் கூடாது. 1. 8.9.1993 ஆம் ஆண்டு மத்திய பணியாளர் நல அமைச்சகம் வெளியிட்ட ஆணையில், ஓ.பி.சி. சான்றிதழ் பெறுவதற்கான தகுதியுள்ளோரை, வரையறைப்படுத்தும் ஆணையில், வருமான கணக்கீட்டில், மாதச் சம்பளம் மற்றும் விவசாய வருமானம் சேர்க்கக் கூடாது என்று கூறப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், மேற்கு வங்க சட்டமன்ற உறுப்பினருக்கு சமூகநீதி அமைச்சகத்தின் இணை செயலாளர் 25.4.2002 அன்று எழுதிய கடிதத்தில் கிரீமிலேயர் முறையை நிர்ணயிக்க மாத சம்பளம் மற்றும் விவசாய வருமானத்தை கணக்கில் எடுத்துக்கொள்ளக் கூடாது என்று தெரிவித்துள்ளார். 2. மத்திய பணியாளர் நல அமைச்சர் 15.11.1993 அன்று வெளியிட்ட ஓ.பி.சி. சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்பப் படிவத்தை இணைத்துள்ளது. இப்படிவத்தில் பிரிவு ஜி-1 இல் ஆண்டு வருமானம் பற்றிய குறிப்பில், சம்பள வருமானம் மற்றும் விவசாய வருமானம் தவிர்த்து, ஏனைய வருமானம் கணக்கில் கொள்ளப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தி.மு.க. ஆட்சியில் சரியான ஆணை 3. டாக்டர் கலைஞர் தலைமையில் நடைபெற்ற தி.மு.க. ஆட்சியில் 24.4.2000 தேதியிட்ட ஆணையில், மத்திய அரசின் பணிகளுக்காக ஓ.பி.சி. சான்றிதழ் பெறுவதற்கு, வருமான வரம்பு கணக்கிடும்போது, மாதச் சம்பளம் மற்றும் விவசாய வருமானத்தை கணக்கில் எடுத்துக்கொள்ளக் கூடாது என்று தெளிவாக ஆணை பிறப்பிக்கப்பட்டது. மீண்டும் இதே கருத்தை வெளியிட்டு 20.7.2011 அன்று தி.மு.க. ஆட்சியில் ஆணை பிறப்பிக்கப்பட்டது. 4. ஆந்திர அரசும், மேற்கு வங்க அரசும், தமிழகத்தைப் பின்பற்றி, கிரீமிலேயர் தொடர்பாக மாத சம்பளத்தைக் கணக்கில் எடுத்துக் கொள்ளக்கூடாது என்று ஆணை பிறப்பித்துள்ளது. மேற்குறிப்பிட்ட தெளிவான ஆணைகள், விளக்கங் களின் அடிப்படையில் ஓ.பி.சி. சான்றிதழை அந்தந்த மாநில அதிகாரிகள் வழங்கி வருகின்றனர். தற்போது பதவி ஒதுக்கப்படாமல் உள்ள அத்தனை மாணவர்களின் ஓ.பி.சி. சான்றிதழையும், நேர்முகத் தேர்வில் சரிபார்க்கப்பட்டு, அவர்கள் தேர்வு செய்யப்படாததாகமத்திய பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. நீதிமன்றம் உத்தரவிட்டும்... பாதிக்கப்பட்ட மாணவர்கள் சென்னை உயர்நீதி மன்றத்திலும், டில்லி உயர்நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்து வெற்றி பெற்றனர். பாதிக்கப்பட்ட மாண வர்கள் அனைவருக்கும் பதவி ஒதுக்கீடு வழங்கிட உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும், இன்று வரை பாதிக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட சமுதாய மாண வர்களுக்குப் பதவி ஒதுக்கீடு செய்திடாமல் அநீதியை இழைத்து வருகிறது மத்திய அரசு. சமூக அநீதியை மேலும் வலுப்படுத்தும் வகையில், தற்போது மத்திய பணியாளர் நல அமைச்சகம் 6.10.2017 தேதியிட்ட ஆணையின்மூலம் அனைத்து மத்திய அரசு மற்றும் பொதுத் துறை நிறுவனங்களுக்கு விரிவுபடுத்தியுள்ளது. இதன் காரணமாக, நாடு முழுவதும், பொதுத் துறை மற்றும் தனியார் நிறுவனங்களில் மாத சம்பளம் பெறும் பல்லாயிரக்கணக்கான பிற்படுத்தப்பட்டோருக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது. இத்துறைகளில் பணியாற்றும் கடைநிலை ஊழியர்கள்கூட இட ஒதுக்கீட்டின் பலனை அனுபவிக்க முடியாது. கல்வி ரீதியாகவும், சமூக ரீதியாகவும் பிற்படுத்தப் பட்டோருக்கு இட ஒதுக்கீடு அளித்திட அரசியல் அமைப்புச் சட்டம் தெளிவாக குறிப்பிட்டுள்ளது. ஆனால், கிரீமிலேயர் எனும் முறையை அமல்படுத்தி, பிற்படுத்தப்பட்டோருக்குத் தொடர்ந்து மத்திய அரசால் அநீதி இழைக்கப்பட்டு வருவது போதாதென்று, தற்போது மத்திய பணியாளர் நல அமைச்சகத்தின் 6.10.2017 தேதியிட்ட ஆணை மேலும் எரிகிற நெருப்பில் எண்ணெய்யை ஊற்றும் அபாய நிலையை உருவாக்கி உள்ளது. இம்மாதம் 31 ஆம் தேதி சென்னையில் மாநாடு இட ஒதுக்கீட்டை ஒழிப்பதே மத்திய பி.ஜே.பி. அரசின் நோக்கமாக இருப்பதைத் தாழ்த்தப்பட்டவர்களும், பிற்படுத்தப்பட்டவர்களும், சிறுபான்மையினரும் புரிந்து கொண்டு கிளர்ந்தெழ வேண்டும். இதுகுறித்து வரும் 31 ஆம் தேதி மாலை சென்னை பெரியார் திடலில் "கிரீமிலேயர் ஒழிப்பு மாநாடு'' நடைபெற உள்ளது - பிற்படுத்தப்பட்டோர் அனைவரும் ஆதரவு தர வேண்டுகிறோம். கி.வீரமணி, தலைவர் திராவிடர் கழகம். சென்னை 19.10.2018 இடுகையிட்டது parthasarathy r நேரம் பிற்பகல் 10:18 கருத்துகள் இல்லை: இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Twitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர் லேபிள்கள்: அறிக்கை, கிரிமிலேயர் ஞாயிறு, 14 அக்டோபர், 2018 அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் - முதல் வெற்றி! நுண்ணோக்கி காலம் வீணாய்ப் போய்க் கொண்டிருக்கிறது. அய்ப்பசி மாத வாக்கில் ‘சூத்திரன்’ என்கின்ற இழிவு நீக்கக் கிளர்ச்சி துவக்கப்படும். அதில் ஈடுபட விருப்பமுள்ளவர்கள் தெரிவியுங்கள்’’ என்று தந்தை பெரியார் அவர்கள் விடுத்த அறிக்கைக்கிணங்க தமிழகமெங்குமிருந்து கருஞ்சட்டைப்படை திரள ஆரம்பித்தது. 18_10_69 முதல் தொடர்ந்து நாள்தோறும் நூற்றுக்கணக்கில் பட்டியல் வர ஆரம்பித்தது. சுமார் 2000_க்கு மேற்பட்ட வீரர்களை கர்ப்பக்கிரகப் போர்ப்படையில் அணிவகுத்து நின்று தங்கள் பெயர்களை நுழைவுக் கிளர்ச்சிப் பட்டியலில் பதிவு செய்து கொண்டார்கள். தஞ்சை மாவட்டம், மன்னார்குடி கழகக் கட்டடத்தில் 20_10_69 அன்று தஞ்சை மாவட்ட திராவிடர் கழகக் கமிட்டிக் கூட்டம் தந்தை பெரியார் அவர்கள் தலைமையில் கூடி, சூத்திரன் என்னும் இழிவு நீக்கக் கிளர்ச்சியான, கர்ப்பக்கிருக நுழைவுக் கிளர்ச்சியினை மன்னார்குடி இராஜகோபால சாமி கோயிலில் தொடங்குவது என்று தீர்மானிக்கப்பட்டு, கிளர்ச்சிக் கமிட்டியும் அமைக்கப்பட்டது. 1970 ஜனவரி 26ஆம் நாள் கர்ப்பக்கிருக நுழைவுக் கிளர்ச்சி தமிழகமெங்கும் தொடங்கப் பெறும் என்று தந்தை பெரியார் போர்க்கொடி உயர்த்தினார். 16_11_69 அன்று மாலை 3.30 மணியளவில் திருச்சி பெரியார் மாளிகையில் தந்தை பெரியார் தலைமையில் திராவிடர் கழக மத்திய நிர்வாகக் கமிட்டி கூடியது. தந்தை பெரியார் அவர்கள் கர்ப்பக்கிருக நுழைவுக் கிளர்ச்சியின் அவசியம் பற்றி விளக்கினார். அவர்களால் பிரேரேபிக்கப்பட்ட 8 தீர்மானங்கள் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டன. “கர்ப்பக்கிருக நுழைவுப் போராட்டத்தில் ஈடுபடும் கழகத் தொண்டர்களுக்கு நீதித்துறை சம்பந்தப்பட்ட எல்லாவித உதவிகளையும் இலவசமாக நடத்தித் தர நாங்கள் இதன் மூலம் ஒப்புதல் அளிக்கிறோம்’’ என்று நிலக்கோட்டை வழக்கறிஞர்கள் அறிக்கை வெளியிட்டு போராட்ட அணியில் சேர்ந்தார்கள். 17-1-1970 - முதல்வர் கலைஞர் அறிக்கை ஆலயங்களில் கர்ப்பக்கிரகம் வரையில் சாதி பாகுபாடின்றி அனைவரும் சென்று ஆண்டவனைத் தொழுதிட வேண்டுமென்றும், அர்ச்சகர்களுக்கென சில தகுதிகள் இருக்க வேண்டும். புனிதத் தன்மைகளை அவர்கள் கடைப்பிடித்தாக வேண்டும். அதற்குரிய பயிற்சிகளை அவர்கள் பெற்றாக வேண்டும். அதில் எனக்கு கருத்து வேறுபாடு இல்லை. அப்படிப் பயிற்சி பெறுகிறவர்கள் எந்த வகுப்பினராயிருந்தாலும் அவர்கள் அதில் தேர்வு பெற்று அர்ச்சகராக இருக்கலாம். அதற்கு விதிமுறைகள் வகுக்க அரசு யோசித்துக் கொண்டிருக்கிறது. அதே சமயம் பரம்பரை அர்ச்சகர் வீட்டுப் பிள்ளைகள் அர்ச்சகராக விரும்பினால், அவர்களுக்கு முதல் சலுகை அளிப்பதுபற்றியும் அரசு யோசித்துக் கொண்டிருக்கிறது. இந்த விதிமுறைகள் உருவாக்கப்பட்டு, அதன்படி அர்ச்சகர் பதவிகளை பிறப்பினால் கணக்கிடாமல், தகுதியொன்றினால் கணக்கிடப்படக் கூடிய நாள் வந்துவிடுமானால், ஆண்டவனைத் தொழ ஆலயம் செல்வோர், ஜாதி வேறுபாடின்றி கர்ப்பக்கிரகம் வரையில் செல்வதற்கு தடையில்லையென்பதும் கொள்கை ரீதியாக ஒப்புக் கொண்டதாக ஆகிவிடும். கர்ப்பக்கிரகத்தில் இருக்கின்ற பொருள்களின் பாதுகாப்புக்காக மட்டுமே அந்த இடம் ஒருவர் பாதுகாப்பில் விடப்பட வேண்டுமே தவிர, அதற்கு ஜாதி வர்ணம் பூசப்படக்கூடாது. ஆண்டவன் திருமுன்னே ஜாதியின் பெயரால் மற்றவர்களுக்கு இழைக்கப்படும் இழிவான அநீதி அகன்றிட, விதிமுறைகள் செய்திட அரசு முன் வருகிறது என்ற உறுதிமொழியினை ஏற்று, பெரியார் அவர்கள், தான் திட்டமிட்டிருக்கிற கிளர்ச்சியினை நிறுத்தி வைக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். - மு.கருணாநிதி, தமிழக முதலமைச்சர் (17.1.1970) 19-1-1970 - போரின் வெற்றி! “தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞர் திரு. கருணாநிதியவர்கள், ஜாதி அடிப்படையில் கோயில் அர்ச்சகர்கள் நியமனம் செய்யப்படாமல் அனைவருக்கும் சமவாய்ப்பு அளிக்கும் வகையில் சட்ட விதிமுறைகள் ஏற்படுத்தப்படும் என்று அறிவித்துள்ளதால், கிளர்ச்சியின் தத்துவத்தை நல்லவண்ணம் புரிந்து செயல்பட முனைந்துள்ள அவர்களுக்கு நன்றி தெரிவிப்பதுடன், 26_1_70 அன்று நடைபெறவிருந்த கிளர்ச்சி (கர்ப்பக்கிரக நுழைவுக் கிளர்ச்சி) ஒத்தி வைக்கப்படுகிறது என்று தந்தை பெரியார் அவர்கள் கழகத் தோழர்களுக்கு அறிவித்தார்கள். 12-3-1970 - கர்ப்பக்கிரகக் கிளர்ச்சி வெற்றி “தந்தை பெரியார் அவர்கள் கர்ப்பக் கிரக நுழைவுப் போராட்டத்தை ஒத்தி வைத்திருப்பதாக அறிவித்துள்ளார்கள். குறிப்பிட்ட இனத்தைச் சேர்ந்தவர்கள் அல்லாத பிற எல்லா இனத்தவரும் கோவில் கர்ப்பக்கிரகத்தினுள் போகவும் தகுதி அடிப்படையில் அர்ச்சகராகவும் அனுமதிக்கும் வண்ணம் சட்டத்திருத்தம் ஒன்றை அரசு கொண்டு வரும்’’ என்று தமிழ்நாடு சட்டப் பேரவையில் 12_3_70 அன்று முதல்வர் கலைஞர் அறிவித்தார். 30-11-1970 - பார்ப்பனர்களுக்குள்ள ஏகபோக அர்ச்சகர் உரிமை ஒழிந்தது அர்ச்சகர் தொழிலுரிமையைப் பார்ப்பனர் மட்டுமே பரம்பரை பரம்பரையாக அனுபவித்து வருவதை ஒழிக்க வேண்டும் என்று தந்தை பெரியார் அவர்கள் வலியுறுத்தி வந்த கொள்கையைப் பின்பற்றி, அர்ச்சகர் தொழிலுக்கு பார்ப்பனரல்லாத பிற வகுப்பினரும் பயிற்சி பெற்று நியமனம் பெறலாம் என்பதற்கு வழி செய்யும் மசோதா ஒன்றை தமிழக சட்டமன்றத்தில் 30_11_70 அன்று அறநிலைய அமைச்சர் தாக்கல் செய்தார். 2-12-1970 தந்தை பெரியார் அவர்கள் அறிவித்த கர்ப்பகிரக நுழைவுக் கிளர்ச்சியின் மாபெரும் வெற்றியாக அர்ச்சகர் நியமன மசோதா தமிழக சட்டமன்றத்தில் எந்தவித எதிர்ப்புமின்றி 2_12_70 அன்று ஒருமனதாக நிறைவேற்றப் பட்டது. எல்லாக் கட்சி உறுப்பினர்களும் ஒருமனதாக ஆதரித்தனர். திரு. எல்.இளையபெருமாள் அவர்கள் தலைமையில் அமைக்கப்பட்ட குழு (The committee on untouchability, economic and educational development of the Scheduled Castes and connected documents - 1969) மத்திய அரசுக்கு அளித்த அறிக்கையில் தீண்டாமை ஒழிப்புக்கு _ கோயில்களில் தாழ்த்தப்பட்டோர் அர்ச்சகராக உரிமை வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தது. தமிழகச் சட்டப் பேரவையில் நிறைவேற்றப் பட்ட சட்டம் இந்தப் பரிந்துரையின் அடிப்படையில் நிறைவேற்றப் பட்டதாகக் கூறப்பட்டது. சட்டம் செயல்படாமைக்கு என்ன காரணம்? தமிழ்நாடு சட்டப் பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட சட்டத்தினை எதிர்த்து சிறீபெரும்புதூர் கோயில் மட எதிராஜ் ஜீயரும், தஞ்சாவூரில் காஞ்சிபுரம் சங்கராச்சாரியார் ஆதிக்கத்தின் கீழ் உள்ள பங்காரு காமாட்சியம்மன் கோயில், திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள அல்லூர் கோயில் ஆகியவைகளில் உள்ளோர் உள்ளிட்ட பலர் 12 ரிட் மனுக்களை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். பரம்பரை அர்ச்சகர் முறை செல்லாது என்றும், ஆகம விதிகள் பாதிக்கப்படும் பட்சத்தில் மீண்டும் நீதிமன்றம் வரலாம் என்றும் சொல்லி உச்ச நிதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. 10-6-1972 சென்னை மாவட்ட திராவிடர் கழக கமிட்டிக் கூட்டம் 10_6_72 இரவு 7.30 மணி அளவில் பெரியார் திடலில் நடைபெற்றது. திராவிடர் கழக பொதுச் செயலாளரும், ‘விடுதலை’ ஆசிரியருமான கி.வீரமணி எம்.ஏ., பி.எல்., தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் 16_6_72 மாலை 5.30 மணி முதல் தந்தை பெரியார் கட்டளைப்படி சென்னை மைலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் முன்னால் கோயில் பகிஷ்காரக் கிளர்ச்சியைத் தொடர்ந்து நாள்தோறும் நடத்துவதென்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பெரியாருக்குப் பிறகு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் என்ன? திராவிடர் கழகத்தின் தலைவராக அன்னை மணியம்மையார் அவர்கள் பொறுப்பேற்று பல்வேறு போராட்டங்களை நடத்தினார்கள். அவர்களின் மறைவிற்குப் பிறகும் திராவிடர் கழகத்தின் சார்பில் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. 3.4.1974 தமிழகமெங்கும் அஞ்சலகங்கள் முன் வேண்டுகோள் அறப்போராட்டம் நடத்தப்பட்டது. அன்னை மணியம்மையார் தலைமை தாங்கினார். 6.5.1974 மத்திய அமைச்சர் ரகுராமய்யாவுக்குச் சென்னையில் கருப்புக் கொடி காட்டப்பட்டது. 31.5.1974 மத்திய நிதி அமைச்சர் ஒய்.பி.சவானுக்கு சென்னையில் கருப்புக் கொடி காட்டப்பட்டது. 24.8.1982 வேண்டுகோள் அறப்போர் 35 கோயில்களின் முன் நடத்தப்பட்டது. 10.5.2000 வேண்டுகோள் அறப்போர் 28 கோயில்களின் முன் நடத்தப்பட்டது. 5.7.2004 மாவட்டத் தலைநகரங்களில் அரசு அலுவலகங்கள் முன் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. மாநாடுகள் பல நடத்தப்பட்டு வேண்டுகோள்கள் - தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. திமுக ஆட்சியின் செயல்முறைகள் யாவை? 19.3.2005 அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகும் வகையில் இந்தச் சட்டமன்றத் தொடரிலேயே இதற்குச் செயல் வடிவம் கொடுக்க ஆணை பிறப்பித்து வரலாறு படைக்கட்டும் முதலமைச்சர் ஜெயலலிதா. - திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அறிக்கை 1.2.2006 அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை கோரி திராவிடர் கழகத்தின் சார்பில் மாவட்டத் தலைநகரங்களில் மாவட்ட ஆட்சியர் அலுவலக முன் மறியல் - 10 ஆயிரம் கழகத் தோழர்கள் கைது. 21.8.2006 அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமைச் சட்டம் உச்சநீதிமன்ற இடைக்காலத் தீர்ப்பின் காரணமாக ஒரு திருத்தத்துடன் தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப் பட்டது. (21.8.2006) மாற்றுப் பாலம் அமைப்பதாலேயே பாலம் கட்டப்படாது என்று யாரும் சந்தேகப்படவோ அச்சப்படவோ தேவையில்லை - இறுதியில் யார் சிரிப்பார்கள் என்பதே முக்கியம் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அறிக்கை. (22.8.2006) 23.11.2006 நீதியரசர் ஏ.கே.ராஜன் தலைமையிலான குழு அறிக்கையை தமிழக முதல் அமைச்சர் மாண்புமிகு கலைஞரிடம் அளித்தது. 28.2.2007 அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் பயிற்சிக்கு விண்ணப்பம் தந்தை பெரியாரின் இறுதி முழக்கமான அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகும் பயிற்சிக்கு விண்ணப்பங்களை வரவேற்று அரசு அறிவிப்பினை வெளியிட்டது. வைணவ, சைவ பயிற்சி நிலையங்கள் அமைக்கப்பட்டன. 22.10.2012 அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமையை வலியுறுத்தி திராவிடர் கழகத்தின் சார்பில் மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. 4.5.2013 04.05.2013 அன்று இராஜபாளையத்தில் நடைபெற்ற மாநில திராவிடர் கழக இளைஞரணி மாநாட்டில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம். (ஆகஸ்டு 1 (2013) சிறை நிரப்பும் போராட்டம் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் அறிவித்தார். அடுத்த கணமே 1081 பேர் கையொப்பமிட்டுப் போராட்டக் களத்திற்குத் வர எழுந்தனர். இதில் பலரும் ரத்தக் கையொப்பமிட்டிருந்தனர்.) 16.12.2015இல் உச்சநீதிமன்ற அமர்வு தீர்ப்பு வழங்கியது. அதன்படி அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராவதற்கான தடை நீங்கியது. திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகராக நியமித்து தமிழக அரசு ஆணையிட வேண்டும் என்று வலியுறுத்தினார். அதன்பின் பல அழுத்தங்கள் தந்தார். இறுதியில் தமிழக அரசின் அர்ச்கர் பயிற்சி முடித்த 206 பேரில் ஒருவரான பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த அர்ச்சகர் மதுரை எஸ்.ஆலங்குளத்தைச் சேர்ந்த மாரிச்சாமி என்பவரை பிப்ரவரி 26, 2018 அன்று மதுரை தல்லாகுளம் அய்யப்பன் கோவில் அர்ச்சகராக முதன் முறையாக தமிழக அரசு நியமித்துள்ளது. அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் போராட்டத்திற்கு முதல் வெற்றி. பெரியாருக்கும் கலைஞருக்கும் பெரு வெற்றி!
சீனாவின் 55 சிறுப்பான்மை தேசிய இனங்களில் ஒன்றான தேய் இனம், தென்மேற்கு சீனாவின் யுன்னான் மாநிலத்தில் முக்கியமாக குழுமி வாழ்கின்றனர். இன்றைய நிகழ்ச்சியில், தேய் இன நாள் காட்டியின் புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சிகளைப் பற்றி, அறிமுகப்படுத்துகின்றோம். சீனாவின் பாரம்பரிய வசந்த விழா தவிர, தேய் இன மக்களைப் பொறுத்தவரை, தேய் இன நாள் காட்டியின் புத்தாண்டு, மிகவும் விமரிசையாகக் கொண்டாடப்படும் விழாவாகும். தேய் இன நாள் காட்டி என்பது, தேய் இனத்தின் பாரம்பரிய நாள் காட்டியாகும். சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன் தொடங்கியது. தேய் இன நாள் காட்டியின் படி, இவ்வாண்டு, 1369ம் ஆண்டாகும். தேய் இனத்தவரின் பழக்க வழக்கங்களின் படி, தேய் இன புத்தாண்டு, ஆண்டு தோறும் ஏப்ரல் திங்கள் 13ம் நாள் முதல் 15ம் நாள் வரையில் கொண்டாடப்படுகிறது. இவ்வாண்டின் ஏப்ரல் திங்கள் 13ம் நாள், தேய் இனப் புத்தாண்டின் முதல் நாள். காலையில், பல்வேறு வடிவமான மலர் வாகனங்கள், JING HONG நகரத்தின் சாலைகளில், தோன்றியுள்ளன. இந்த வாகனங்களில் வண்ண வண்ண மலர்கள், சிவப்பு, மஞ்சள் பட்டு நாடாக்களுடன் தொங்கவிடப்பட்டுள்ளன. தேசிய இன பாரம்பரிய சீரூடை அணிந்த தேய் இன மங்கையர்கள் வாகனங்களில் நின்றவாறு, மலர்களையும், இன்பம், மங்களத்தைக் குறிக்கும் சிறிய பைக்களையும் சுற்றுப்புறத்திலுள்ள மக்களிடம் வீசி எறிந்தனர். இஸ்ரேலிய பயணியர் ORY COHEN சிசுவாங்பேன்னாவில் பயணம் மேற்கொள்வது இதுவே முதல் முறை. மலர் வாகனங்களுக்கு அருகில் நின்று நிழற்படத்தை எடுத்த பிறகு அவர் கூறியதாவது: நான், குவாங் சோ, யாங் சுவோ, குவே லின் ஆகிய இடங்களுக்குப் போனேன். சிசுவாங்பேன்னா தான், மிகவும் நல்ல இடம் என்று எனக்குத் தோன்றுகிறது. இங்குள்ள மக்கள் மிகவும் அன்பாக இருக்கின்றனர். அவர்கள், மகிழ்ச்சியுடன் எங்களுக்கு, நிழற்படம் எடுக்க உதவுகின்றனர் என்றார் அவர். ஏப்ரல் 14ம் நாள், தேய் இன புத்தாண்டின் இரண்டாம் நாளாகும். தேய் இனத்தவர்கள் சந்தைக்குப் போவது வழக்கம். அன்று, JING HONG நகரத்துக்கு ஊடாக ஓடும் LAN CANG ஆற்றுக்கரையில், பல்வேறு வகை சிற்றுண்டிகள், தேசிய இன கைவினைப்பொருட்கள், வேறு சில்லறை வணிக பொருட்கள் முதலியவற்றை விற்பனை செய்யும் வணிகர்களும், நாட்டுப்புற கலைஞர்களும், நடைபாதை அங்காடி நிறுவியுள்ளனர். இந்த அங்காடிகள், ஆற்றுக்கரை நெடுகிலும், சுமார் 2 கிலோமீட்டர் தொலைவு வரை நீண்டு கிடந்தன. ஒரு சிற்றுண்டி அங்காடியில், உரிமையாளர், புத்தம் புதிய மீனைக் கழுவிச் சுத்தம் செய்து, தாளிப்பு ரசத்தில் எடுத்துவைத்தப் பிறகு, ஒருவகை நறுமண இலையால் கட்டிப்போட்டு, அதைத் தீயிலிட்டு வறுத்தார். இந்த மீன் வறுவல், தனிச்சிறப்பியல்புடைய தேய் இன சிற்றுண்டிகளில் ஒன்றாகும். மீனைச் சுவைத்துக் கொண்டிருந்த திரு லீ மிங், குழந்தைக் காலம் தொட்டு, JING HONG நகரத்தில் வாழ்ந்து வருகின்றார். ஒவ்வொரு தேய் இனப் புத்தாண்டிலும், அவர் இச்சந்தைக்கு வருவார். அவர் கூறியதாவது: நான் இங்கே வாழ்ந்து 30 ஆண்டுகள் ஆகிவிட்டன. இப்பொழுது, சந்தை மேலும் விறுவிறுப்பாக இருக்கிறது. இங்கு வந்துள்ள பயணிகள், வண்ண வண்ண தேசிய இனச் சீரூடைகளை அணிந்து, எமது சிசுவாங்பேன்னாவின் சிறப்பு காட்சிக்கு மெருகூட்டியுள்ளனர். குடும்பத்தினர்களுடன் இணைந்து இந்தச் சந்தைக்குச் சென்று, டிரெகன் படகு போட்டியைப் பார்த்து, தேசிய இனத் தனிச்சிறப்பான சிற்றுண்டிகளைச் சுவைத்து மகிழ்கின்றோம் என்றார் அவர். அவர் கூறிய டிரெகன் படகு போட்டி என்பது, இந்தச் சந்தையில் சிறப்பு நிகழ்ச்சியாகும். JING HONG புறநகரத்திலுள்ள மக்கள், கிராம வாரியாக, சில அணிகளை உருவாக்கி, LAN CANG ஆற்றில் டிரெகன் படகு போட்டியில் பங்கேற்றனர். டிரெகன் படகு போட்டிக்குப் பிறகு, அதாவது, தேய் இனப் புத்தாண்டின் 3வது நாள், பாரம்பரிய நீர் தெளிப்பு விழாவாகும்.
இந்தியா, கடலூர் மாவட்டத்தில் காதலி இறந்த துக்கம் தாங்காமல் காதலன் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சோக சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. 23 வயதான வைத்தீஸ்வரன் என்பவர் கணணி அறிவியல் படித்துவிட்டு வெளிநாட்டில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில், ரத்தினபிரியா என்பவருடன் காதல் மலர்ந்துள்ளது. ஆரம்பத்தில் தொலைபேசியில் மட்டும், பேசிவந்த இவர்கள், நாளடைவில் வெளியில் ஒன்றாக சேர்ந்து சென்றுள்ளனர். இந்நிலையில் கடந்த மாதம் வெளிநாட்டில் இருந்து காதலன் வந்துள்ளான். கடந்த 9ஆம் திகதி ரத்தினபிரியா தொலைபேசியில், நீண்ட நேரமாக வைத்தீஸ்வரனுடன் பேசிக் கொண்டிருந்துள்ளார். இதனை பார்த்த ரத்தினபிரியாவின் தாய் கடுமையாக கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த ரத்தினபிரியா தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி அறிந்த வைத்தீஸ்வரன் ரத்தினபிரியாவின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டுள்ளார். இதையடுத்து காதலி இறந்த வேதனையில் வைத்தீஸ்வரன் இரவு வீட்டுக்கு சென்று தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார். வைத்தீஸ்வரனை பார்ப்பதற்காக அவரது நண்பர்கள் வீட்டுக்கு வந்தனர். அப்போது அவர்கள் வைத்தீஸ்வரன் தூக்கில் தொங்கி கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்து, உடனே வைத்தீஸ்வரனை மீட்டு மோட்டார் சைக்கிளில் சிதம்பரம் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த வைத்தியர்கள் வைத்தீஸ்வரன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடல் சிதம்பரம் அரசு வைத்தியசாலையில் உள்ள பிணவறையில் வைக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று காலை உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வைத்தீஸ்வரனின் உடலை பார்க்க வைத்தியசாலைக்கு சென்றுள்ளனர். அப்போது அவரது உடலின் பல இடங்களில் எலிகள் கடித்து குதறி இருந்தது. இதை பார்த்து ஆத்திரமடைந்த உறவினர்கள் வைத்தியசாலையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டிந்தைமையும் குறிப்பிடதக்கது. * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Filed under: India Tags: காதலி, தற்கொலை, ரத்தினபிரியா Related Posts ஆன்லைன் சூதாட்ட விவகாரம்: கூகுள் நிறுவனத்திற்கு மத்திய அரசு கடிதம்! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… நாட்டிலேயே முதல்முறையாக தங்க நாணயம் வாங்க ஏடிஎம் திறப்பு! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… கல்லூரியில் மாணவிகள் நெற்றியில் பொட்டு வைக்க தடை: இந்திய மாநிலம் அதிரடி! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… ← ஆட்டோ டிரைவரின் பணத்தாசையால் 4 ஆண்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பெண்! கழிவறை கேட்டு போராட்டம் நடத்திய சிறுமி – உடனடியாக கட்டிக்கொடுக்க கலெக்டர் உத்தரவு. →
க.பொ.த சாதாரண தரப் பரீட்சை நடைபெறும் நாட்களில் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ள போதிலும் மாணவர்களுக்கான போக்குவரத்து வசதிகளை எவ்வித இடையூறும் இன்றி வழங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி. தர்மசேன தெரிவித்துள்ளார். இதன்படி, “சிசு செரிய” மற்றும் மேலதிக பஸ்களை இதற்காக ஈடுபடுத்த இலங்கை போக்குவரத்து சபை தீர்மானித்துள்ளது. இதேவேளை, க.பொ.த சாதாரண தரப் பரீட்சையை எவ்வித இடையூறும் இன்றி பாதுகாப்பாக நடத்துவதற்கு அனர்த்த முகாமைத்துவ நிலையம், பொலிஸார் மற்றும் ஆயுதப்படையினரின் உதவிகள் பெறப்பட உள்ளன. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கை வருமாறு, Share Previous News Next News யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.
சத்தியமங்கலம்: திம்பம் மலைப்பாதையில் லாரி பழுதால் அவ்வழியாக 5 மணி நேரம் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. தமிழகம், கர்நாடக மாநிலங்களை இணைக்கும் சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் பண்ணாரியம்மன் கோயில் அடுத்த அடர்ந்த வனப்பகுதியில் 27 கொண்டை ஊசி வளைவுகளுடன் கூடிய திம்பம் மலைப்பாதை அமைந்துள்ளது. இந்த மலைப்பாதை வழியாக 2 மாநிலங்களுக்கு இடையே வாகன போக்குவரத்து நடந்து வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு கோவையிலிருந்து பாக்கு பாரம் ஏற்றிய லாரி கர்நாடக மாநிலம் சிமோகா செல்வதற்காக திம்பம் மலைப்பாதை வழியாக சென்று கொண்டிருந்தது. 15வது கொண்டை ஊசி வளைவில் லாரி திரும்பும்போது எதிர்பாராத வகையில் லாரி பழுது ஏற்பட்டு நகர முடியாமல் நின்றது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. திம்பம் மலைப்பாதையில் இரவு 9 மணி வரை காலை 6 மணி வரை இரவு நேர வாகன போக்குவரத்து தடை விதிக்கப்பட்டதால் இரவில் பெரும்பாலும் வாகன போக்குவரத்து பாதிக்கப்படவில்லை. இந்நிலையில் நேற்று காலை 6 மணி முதல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பழுதடைந்த லாரி நேற்று காலை 11 மணியளவில் பழுது நீக்கம் செய்து நகர்த்தி நிறுத்தப்பட்டது. இதைதொடர்ந்து போக்குவரத்து சீரானது. இதனால், தமிழக-கர்நாடக மாநிலங்களுக்கு இடையே 5 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் பரபரப்பு நிலவியது. Related Stories: தமிழகம் முழுவதும் ரூ.84 கோடியில் 3,808 ஊரக நூலகங்களின் கட்டிடங்கள் புதுப்பிப்பு; புதிய புத்தகங்கள், பர்னிச்சர்கள் வாங்க நடவடிக்கை ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.70 ஆயிரத்தை இழந்த ஒடிசா பெண் தற்கொலை; சங்கரன்கோவில் அருகே பரிதாபம் தமிழகத்தின் வரலாற்றை மீட்டுருவாக்கம் செய்ய மேலும் பல புதிய இடங்களில் தொல்லியல் ஆய்வுகள் தேவை; ஒன்றிய அரசுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு கோரிக்கை திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழா, கொடியேற்றத்துடன் தொடங்கியது; அதிகாலையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் புதுவையில் ரூ.900 கோடிக்கு விடப்பட்ட குப்பை; அள்ளும் டெண்டரில் ஊழல்: முன்னாள் முதல்வர் நாராயணசாமி குற்றச்சாட்டு திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே சுற்றுப்புற கிராமங்களில் கனமழை திருச்சி மலைக்கோட்டை கோயிலில் கார்த்திகை தீபம் ஏற்ற மெகா திரி தயாரிக்கும் பணி காரைக்காலில் 5 ஏக்கரில் 500 வகையான மருத்துவ குணம் கொண்ட பயிர்களை பயிரிட்டு அசத்தும் இயற்கை விவசாயி முகநூல் மூலம் பழகி ரூ.பல லட்சம் மோசடி வழக்கில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்: எஸ்பிக்கு ஐகோர்ட் கிளை உத்தரவு நிலக்கோட்டை அருகே கிணற்றில் பெண் குழந்தை மர்ம சாவு: போலீசார் தீவிர விசாரணை திண்டுக்கல் ரயில் நிலையத்தில் வெடிகுண்டு போல் கிடந்த மர்ம பொருளால் பரபரப்பு வேடசந்தூர் அருகே ஆண், பெண் உடலமைப்புடன் 6 காலுடன் பிறந்த அதிசய கன்று: ஊர் மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழையில்லை: வைகை அணை நீர்மட்டம் சரிவு மகள் கொடுமை தாங்க முடியலை கருணை கொலை செய்ய உதவுங்கள்: தேனி கலெக்டரிடம் மூதாட்டி மனு திருக்குறளை மொழி பெயர்த்த எல்லீசுக்கு மணிமண்டபம் அமைக்க கோரி வழக்கு: முதன்மை செயலர்கள் பதிலளிக்க உத்தரவு விருதுநகர்- சிவகாசி சாலையில் விபத்தை ஏற்படுத்தும் ஆபத்தான பாலத்தின் தடுப்பு சுவர் சீரமைப்பு: வாகனஓட்டிகள் மகிழ்ச்சி
அலுவலகத்திலிருந்து புறப்பட்ட நண்பர்கள், வீட்டின் அருகே இருந்த பல்பொருள் அங்காடி ஒன்றை வந்தடைந்தனர். மாலை நேரம் என்பதால், கூட்டம் சற்று அதிகமாகவே இருந்தது. வந்த வேலையை சீக்கிரம் முடிக்கும் பொருட்டு, ஆளுக்கொரு திசையில் நடந்தார்கள். ஹரி கடைக்குள் சென்று, காலை உணவுக்கு தேவையான பிரட், ஜாம், மற்றும் சில பழ வகைகளை வாங்கி வர, அரவிந்தன், கடை வாசலில் இருந்த தள்ளுவண்டி உணவகத்திலிருந்து வாங்கிய சப்பாத்தி, சன்னா மசாலா பார்சலோடு அவனுக்காக காத்திருந்தான். விடுமுறை நாட்களில் மட்டும் தான் தடபுடல் சமையல் எல்லாம். மற்றபடி, மதியம் கேண்டீனிலும், இரவு உணவகத்திலும் அருந்தினர். அரவிந்தன் பைக்கை உயிர்ப்பிக்க, அவன் கைப்பேசி ஒலித்தது. அழைத்தது தன் அம்மா என்றதும், உடனே எடுத்து பேசினான். இரண்டு நிமிடத்திற்கும் குறைவாக பேசி அழைப்பை துண்டித்தான் அரவிந்தன். ஒரு பக்கம் பேச்சை மட்டுமே கேட்ட ஹரிக்கு கொஞ்சம் வருத்தமாக இருந்தது. “அம்மா கிட்ட பேச எதுக்கு டா கணக்கு பாக்குற?” கடிந்தான் ஹரி, இரவு உணவுக்கு பின், காற்று வாங்க மொட்டை மாடிக்கு வந்தவுடன். ‘என்ன கணக்கு….’ என்று யோசிக்க, தான் அம்மாவிடம், இரவு ஒன்பது மணிக்கு மேல் அன்லிமிடெட் டாக் டைம்மில் (Unlimited Talk Time) பேசும் படி வலியுறுத்தியது நினைவுக்கு வர, அதை எண்ணி சிரித்தான். “அட…. கணக்கு எல்லாம் இல்ல டா. அந்த நேரத்துல பேசினா தான், சீரியல் பாக்குற ஜோருல சீக்கிரம் பேசிட்டு வெப்பாங்க. இல்லேன்னா, வீடு பாரு…. நாங்களும் உன்னோட வந்து இருக்கோம்னு கதையளக்க ஆரம்பிச்சிடுவாங்க.” “அவங்க கேட்கறதுல என்ன தப்பு? அவங்கள அழைச்சிட்டு வர வேண்டியது தானே.” அக்கறையாய் ஹரி சொல்ல, “அதெல்லாம், உனக்கும் மீராவுக்கும் கல்யாணமான அப்புறம் பார்த்துக்கலாம்…. அதுவரைக்கும், பேச்சுலர் லைஃப் என்ஜாய் பண்ணலாம்.” எதார்த்தமாக பதிலளித்தான் அரவிந்தன். “அது…. அது…. நாங்க ஒரு வருஷத்துக்கு பிறகு கல்யாணம் செஞ்சிக்கலாம்னு இருக்கோம்.” தயக்கதுடன் சொல்லி, அவனை அது வரை காத்திருக்க வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டான் ஹரி. ஏன் எதற்கு என்று காரணம் கேட்காமல், “சரி! பார்க்கலாம்” என்று மட்டும் அரவிந்தன் பதில் சொல்ல, அதுவே ஹரிக்கு வேதனையாக இருந்தது. “நீயும் சீக்கிரம் லைஃப்ல செட்டில் ஆகணும் டா,” வாடிய குரலில் வருந்தினான் ஹரி. “அதெல்லாம் செட்டில் ஆயிடலாம்.” நண்பனின் தோளை தட்டி, “ஒரு வருஷம் இருக்குல்ல…. கல்யாணமே செஞ்சிக்கலாம்….” என்று சொல்லி கண்சிமிட்டினான். “அதவிட வேறென்ன எனக்கு பெருசா சந்தோஷம் கொடுத்திட முடியும்.” உள்ளப்பூர்வமாக சொல்லி, நண்பனை தோளோடு சேர்த்து அணைத்தான் ஹரி. தன் பெற்றோரை சென்னைக்கு அழைத்து வருவதை, அரவிந்தன் ஒத்திப்போட்டதற்கு காரணமே ஹரி தான். அவனை விட்டு சென்றால், வீட்டு வாடகை, மற்றும் இதர செலவுகளை எல்லாம், ஹரி தனியாக சமாளிக்க வேண்டியிருக்கும் என்று எண்ணினான். செலவுகளை கட்டுப்படுத்த, அவன் பேச்சுலர்கள் வாழும் விடுதியில் (Bachelor Accommodation) போய் தங்க கூட தயங்க மாட்டான் என்றும் அறிந்தான். அங்கு தங்குவதில் உள்ள சிரமங்கள் ஒரு பக்கம் இருந்தாலும், இப்போது, வேறு சில காரணங்களும் அவன் மனதில் ஓடியது. அன்னியர்களோடு தங்கும் போது, புத்தகம் பதிப்பிக்க தேவையான சுற்றுசூழல்களும், வசதி வாய்ப்புகளும் குறைவாக இருக்கும் என்று நம்பினான். அதைவிட முக்கியமாக, மீரா, அவனை எப்படி ஒரு ஆண்கள் தங்கும் விடுதியில் போய் சந்திக்க முடியும் என்றும் கவலை கொண்டான். அவர்கள் திருமணம் நல்ல படியாக நடக்கும் வரை, ஹரியுடன் தான் இருக்க வேண்டும் என்று மனதில் இரகசிய தீர்மானம் செய்து கொண்டான். “சரி! அப்போ முதல்ல இந்த மாதிரி விளம்பர பலகைகள் வெச்சு, வங்கிக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு விழிப்புணர்வு கொடுப்போம். நீங்களும், உங்க குழு உறுப்பினர்கள் கிட்ட, என்ன பேசணும், எப்படி பேசணும் எல்லாம் விளக்கி சொல்லுங்க.” மீட்டிங்குக்கு வந்த துறை தலைவர்களுக்கு விளக்கி முடித்தான் அரவிந்தன். அன்று சொற்பொழிவில் பேசிய ‘கோர் பாங்கிங்க்’ விழிப்புணர்வு திட்டங்களை, செயலில் கொண்டு வர, தன் கிளையில் இருந்து தொடங்கலாம் என்று எண்ணி, சம்பந்தப்பட்ட ஊழியர்களை சந்தித்து பேசினான். அவர்களும், உடன்பாடு பதிலுடன், கைக்குலுக்கிவிட்டு, ஒவ்வொருவராய், நகர்ந்தனர். கதவு வரை சென்ற மீரா, மீண்டும் அவன் எதிரே வந்து நின்றாள். “அரவிந்த்! நீயும் சீக்கிரம் ஒரு நல்ல பொண்ணா பார்த்து கல்யாணம் செஞ்சி, லைஃப்ல செட்டில் ஆகணும் டா.” மெல்லிய குரலில் சொல்ல, பார்த்து கொண்டிருந்த ஃபைலை ஒரே திருப்பில் மூடி, “அது எப்படி, புருஷனும் பொண்டாட்டியும் ஒரே மாதிரி பேசுறீங்க?” நண்பர்கள் திருமணமே செய்து கொண்டது போல பாவித்து, நமுட்டு சிரிப்புடன் அவளை கேட்டான் அரவிந்தன். ஒரு கணம் குழம்பினாலும், அவன் ஜாடை பேச்சை புரிந்து கொண்டாள் மீரா. ஹரியும், அவனிடம் இதை பற்றி பேசி இருக்க வேண்டும் என்று நினைத்தாள். இரண்டு நாட்களாக மதிய உணவு இடைவேளை போது, மற்றவர்கள் எல்லாம் கலகலப்பாய் இருக்க, இவன் மட்டும் தனியாக இருந்தது போல் தோன்றியது அவளுக்கு. “உன்னோட இந்த நிலமைக்கு நான் தானே காரணம்…. உன் காதல்ல….” அவள் முடிக்கும் முன், “நீ உன் விருப்பத்த சொன்ன; அவ்வளவுதான் மீரா; நான் அப்போவே அத மறந்துட்டேன்!” எதிர்பார்ப்புகள் இல்லை, அதனால் ஏமாற்றமும் இல்லை என்று உணர்த்தினான். “அப்படின்னா அத செயல்ல காட்டு;” வேறொருவரை திருமணம் செய்துக்கொள் என்று சொல்லாமல் சொல்ல, “காட்டாம…. உன் நெனப்புல தாடி வளத்துட்டு, சோக பாட்டு பாடுவேன் நெனச்சையா?” கிண்டலாக பேசி, வாடிய அவள் முகத்தில் சிரிப்பை வர வைக்க முயன்றான். அவன் வேடிக்கை பேச்செல்லாம் அவள் முன் செல்லாக் காசானது. “உங்க கல்யாணத்துக்கு நான் என் மனைவியோட தான் வருவேன்! போதுமா?” திடமாய் அவன் சொல்ல, “அது மட்டும் நடந்தா, நான் ரொம்ப சந்தோஷ படுவேன் டா!” நிம்மதி முகத்தில் மலர, அங்கிருந்து நகர்ந்தாள். “வேணும்னா, உங்க அப்பாகிட்ட, எனக்கு ஒரு நல்ல பொண்ணா பார்க்க சொல்லு….” உரக்கச் சொல்லி, அவளை வம்பிழுத்தான். பாதி திறந்த கதவின் இடுக்கில் நின்றவள், கேள்வியாய் அவனை பார்க்க, “உனக்கு மாப்பிள்ளை தேடுற வேலை தான் அவருக்கு இப்போ மிச்சமே” என்று சீண்ட, அவள் ஒருவழியாக சிரித்தாள். இருக்கைக்கு வந்தவளுக்கு, ‘அப்பா’ என்றுதும், ஹரியை பற்றி இன்னும் வீட்டில் சொல்லாதது தான் நினைவுக்கு வந்தது. இரண்டு நாட்களாக பேசலாம் என்று கிளம்பியவளுக்கு ஒரு வித தயக்கம். நினைத்த அளவுக்கு சுலபமாய் இல்லை. இன்று மாலை, ஏழு மணிக்கு ஹரி வருவதற்குள் எப்படியாவது சொல்லிவிட வேண்டும் என்று கவலையாய் இருந்தாள். “என்னம்மா! இன்னைக்கு இவ்வளவு சீக்கிரம் வந்துட்ட?” கடிகாரம் சரியாக தான் ஓடுகிறதா என்று சரிபார்த்து கொண்டே மகளிடம் கேட்டாள் நிர்மலா. “உங்க ரெண்டு பேர்கிட்டயும் முக்கியமான ஒரு விஷயம் பேசணும்.” மீரா மெல்லமாய் தொடங்கினாள். “சரி மா! முதல்ல கை கால் அலம்பிட்டு வந்து ஏதாவது சாப்பிடு; அப்புறம் பேசலாம்.” தாய்க்கே உரிய பாசத்தில் சொன்னாள் நிர்மலா. மீராவும் இயல்பாய் இருப்பது போல் காட்டிக்கொள்ள, அவள் சொற்படி நடந்தாள். வரதன், வியாபார விஷயமாக, அதிகாலையிலேயே செங்கல்பட்டு வரை சென்றதால், அவரும் வழக்கத்துக்கு மாறாக, சீக்கிரமே வீடு திரும்பியிருந்தார். பங்கு சந்தை நிலவரம், பெட்ரோல் விலை உயர்வு என்று தொலைக்காட்சியில் மூழ்கியிருந்தவரின், அருகில் வந்து அமர்ந்தாள் மீரா. அதற்குள் மணி ஆறாகி விட்டது என்று உணர்ந்து, நேராக விஷயத்திற்கு வந்தாள். “அப்பா! நான் ஒருத்தர கல்யாணம் செஞ்சிக்க விரும்பறேன்!” சொல்லிவிட்டு, பதற்றத்துடன் அவர் முகத்தை பார்த்தாள். வீட்டுப் பிரச்சனை, நாட்டுப் பிரச்சனையை விட பெரியதாக இருக்கும் என்று எண்ணி, தொலைக்காட்சியை அணைத்தவர், அவள் பக்கம் திரும்பி, “நல்லது மா! யார் அந்த பையன்? எவ்வளவு நாளா பழக்கம்?” வழக்கமான கேள்விகளை அடுக்கினார், எந்தவித எதிர்ப்போ, அதிர்ச்சியோ காட்டாமல். “என்னடி சொல்லற?” என்று நிர்மலா தான் கொஞ்சம் பதறினாள். “அவள பேசவிடு நிர்மலா!” மனைவியை கடிந்துகொண்டவர், “அவளுக்கும் வயசாயிடுச்சு…. பக்குவமா முடிவெடுப்பா.” என்று மகள் மீதுள்ள நம்பிக்கையை எடுத்துரைத்தார். அப்பாவின் நம்பிக்கை அவளுக்கு தெம்பூட்டியது, “உங்களுக்கு நல்லா தெரிஞ்ச…. பழகினவன் தான் பா….” மெல்ல மெல்ல அவள் துப்பு கொடுக்க, “யாரு அரவிந்தனா?” நிர்மலா மீண்டும் படபடவென்று கேட்டு குறுக்கிட்டாள். “இல்லம்மா! ஹரி!” ஒரு வழியாக மர்மத்தை உடைத்து, அருகில் இருந்த தந்தையையும், எதிரே நின்ற தாயையும் மாறி மாறி பதற்றத்துடன் பார்த்தாள். “அவனா?” என்று முகம் சுளித்த தந்தை, “அவன் உனக்கு கீழே வேலை பாக்குற பையன் இல்ல?” கேட்க, ‘ஆம்’ என்பது போல் தலையை மட்டும் அசைத்தாள் மீரா. “பதவி, ஊதியம், இப்படி எந்த விதத்திலும் உனக்கு சரிசமமா கூட இல்லாத ஒருத்தன எப்படிமா உன்னால காதலிக்க முடிஞ்சிது.” மகள் முடிவில் திருப்தி இல்லாதவராய், பேசி, “இந்த காலத்து காதலெல்லாம் புரிஞ்சிக்கவே முடியல.” என்று பெருமூச்சுவிட்டார். குறைகளை மட்டுமே சுட்டிக்காட்டி பேசும் தந்தையிடம், “பணம், பதவி மட்டும் இருந்தா போதுமா பா?” எதிர்கேள்வி கேட்டு, “நல்ல குணம் வேண்டாமா….” அவன் அருமை பெருமைகளை எடுத்துச் சொல்ல முயன்றாள். அவள் வாதத்தில் எரிச்சலடைந்தவர், “முதல்ல ஒரு விஷயம் நல்லா புரிஞ்சிக்கோ மீரா! நாங்க காதல் திருமணத்துக்கு எதிர்ப்பு சொல்லற பெற்றோர் இல்ல. உனக்கு சரியான வாழ்க்கைத்துணைய தேர்ந்தெடுன்னு தான் சொல்லறோம்.” மனைவிக்கும் சேர்த்து பன்மையில் திடமாய் விளக்கினார். “அப்பா சொல்றது சரிதானேடி?” நிர்மலா அவள் பங்குக்கு ஒத்தூத, அன்னை முகத்தை பார்த்தவள், “அவன் இப்ப வேணும்னா சுமாரான வேலையில் இருக்கலாம். ஆனா ஒரு நாள், கண்டிப்பா என்னவிட உயர்ந்த நிலைக்கு வருவான் மா.” தர்க்கம் செய்தாள் மீரா. மனைவி பேசும் முன், “அது எப்படி, இத்தன நாளா வராத முன்னேற்றம், திடீர்னு வந்துடும்? குறுக்கிட்டார் வரதன். “ஏனா இதுவர, கட்டாயத்துனால பிடிக்காத வேலைய செஞ்சிட்டியிருந்தான்…. இனி அவனுக்கு பிடிச்ச வேலைய செய்யப்போறான்…. “தந்தையின் கண்களை பார்த்து அழுத்தமாய் சொல்ல, “அது என்ன பிடிச்ச வேலை?” வங்கி வேலையை விட சிறந்தது வேறென்ன இருந்திட முடியும் என்பது போல் வினவினார். ஹரியை பற்றி உயர்வாய் எடுத்து கூற தக்க சந்தர்ப்பம் கிடைத்தது போல் தோன்றியது அவளுக்கு. இருக்கும் குறுகிய நேரத்தில், அவர் மனதை கவரும்படி நச்சுனு நாலு விஷயம் உயர்வாக சொன்னால் போதும் என்று நினைத்தாள் மீரா. “அவன் ஒரு சிறந்த எழுத்தாளன் பா….” என்று தொடங்கி பெருமூச்சுவிட்டவள், “அவன் இதுவர பதினெட்டு கதைகள் எழுதியிருக்கான் பா…. ஆனா எதையும் பதிப்பிக்க முடியாத சூழ்நிலைனால, அவன் ஆசைகளை அப்படியே புதச்சிட்டான் பா.” மென்மையாக அவன் திறமையை எடுத்துச் சொல்ல, ஏளனமாக சிரித்து, மறுப்பாய் தலையசைத்தவர், “இந்த காலத்துல யார் தான் எழுதறது இல்ல, தெருவுக்கு ஒருத்தன் கதை எழுதறான், அதையும் ஒருத்தன் சினிமா படமா வேற எடுக்கறான்.” கலை உலகத்தில் கடுகளவு கூட நாட்டம் இல்லாதவர் கொச்சையாய் விமர்சிக்க, “ஹரி ஒண்ணும் ஏனோதானோன்னு எழுதறவன் இல்ல…. ஒவ்வொரு கதையும் கருத்தூன்றி எழுதியிருக்கான் தெரியுமா…. ” குரலை உசத்தி வாதாடினாள் மீரா. மகள் எதிர்த்து பேசுவதில், கோபமடைந்தவர், “அவ்வளவு நல்லா எழுதியிருந்தா, இத்தனை நாளா ஏன் ஒரு கதையகூட வெளியிடல்ல?” காரணம் கேட்டு அவரும் குரலை உயர்த்த, கடிகாரத்தை பார்த்தாள் மீரா. அவன் எந்த நேரமும் வந்துவிடுவான் என்று உணர்ந்து, தழைந்து போனாள் மீரா. “அவன் குடும்ப சூழ்நிலை தான் காரணம் பா; அதான், நான் அவனுக்கு பணம் கொடுத்து உதவலாமேன்னு….” பேச்சோடு பேச்சாக சொல்ல வர, “ஹா…. ஹா…. “பெருங்குரலில் சிரித்தவர், “அதானே பார்த்தேன்…. ஆதாயம் இல்லாம உன்ன அவன் காதலிக்கல….” அவர் சொல்லவும் காலிங்க் பெல் அடிக்கவும் சரியாக இருந்தது. சரியாக ஏழு மணி; ஹரி தான் வந்திருப்பான் என்று அறிந்தாள் மீரா. கடைசி நிமிடம் வரை வீட்டில் சொல்லாதது அவள் தவறு. அதை உணர்ந்தவள், அப்பாவிடம் கைக்கூப்பி, தாழ்ந்த குரலில் கெஞ்சினாள். “அப்பா! ஹரி உங்ககிட்ட பணம் விஷயம் பேசத்தான் வந்திருக்கான். உங்களுக்கு இதுல உடன்பாடு இல்லேனாலும் பரவாயில்ல…. அவன்கிட்ட சாதரணமா பேசுங்க…. அவன் மனச காயப்படுத்துறா மாதிரி எதையும் சொல்லிடாதீங்க…. நம்ம அவன் கிளம்பினத்துக்கு அப்புறம் திரும்ப பேசலாம்…. ப்ளீஸ் பா!” அவர் முகத்தில் கோபம் குறையவில்லை என்றாலும், மௌனமாக இருந்தார். தந்தை தன் வேண்டுக்கோளுக்கு இணங்கி நடப்பார் என்று நம்பியவள், கதவை நோக்கி நடந்தாள். “வா ஹரி! உள்ள வா!” சிரமப்பட்டு முகத்தில் சிரிப்பை வரவழைத்து அழைத்தாள் மீரா. “எல்லாம் ஓ. கே தானே?” தனியே பேச கிடைத்த ஒரு நிமிடத்தில் உறுதி செய்துகொண்டான் ஹரி. “பார்த்து பொறுமையா பேசு டா!” அவன் கைகளை இறுக பிடித்து, மீரா துப்பு கொடுக்க, இருவரும் உள்ளே சென்றனர். அப்பாவிடம், அவன் வந்திருப்பதை தெரிவித்ததும், அவர் கண்டுகொள்ளாமல் இருந்தார். நிர்மலாவும், கணவன் வழி நடந்தாள். அதை எல்லாம் கவனித்தாலும், கவனிக்காதவன் போல ஹரி சகஜமாக வணக்கம் சொல்ல, மீராவே முன் வந்து, அவனை உட்கார்ந்து பேச சொன்னாள். வரதனுக்கு வலதுபுறம் இருந்த சோஃபாவில் அமர்ந்தவன், சுற்றி வளைக்காமல், “மீரா சொல்லியிருப்பான்னு நினைக்கறேன்….” என்றதும், “உம்…. உம்…. எல்லாம் தெரியும், நீ எதுக்கு வந்தன்னு சொல்லு….” சிடுசிடுத்தார் வரதன். எதிர்பார்த்தது தான் என்று மனசுக்குள் எண்ணி, எதிரே நின்றுகொண்டிருந்த மீராவிடம் கவலைபட வேண்டாம் என்று கண் ஜாடை காட்டி, வரதன் பக்கம் திரும்பி பேசினான். தன் வாழ்க்கையில் இனி நடக்கவே நடக்காது என்று தள்ளி வைத்த கனவுக்கு மீரா தந்த ஊக்கத்தை பற்றியும், இருவரும் திருமணம் செய்துகொள்ள நினைத்ததை பற்றியும், சொல்லி, “பதிப்பிக்க தேவையான முதலீட்டு பணத்தை மீரா தரேன்னு சொல்லியிருக்கா…. நீங்க அனுமதி தந்தா….” அவன் முழுவதையும் சொல்லி முடிப்பதற்குள், வரதன், கோபத்தின் உச்சியை அடைந்தார். “பணம் பறிக்க எவ்வளவோ வழியிருக்கறப்ப, ஏன் பா இப்படி காதல், அது இதுன்னு சொல்லி பெண்கள் மனச கலைக்குறீங்க…. வரதட்சணை கொடுக்கல் வாங்கல் கூட குற்றமா பாக்குற இந்த காலத்துல, காதலிக்கிறேன்னு சொல்லி, பணம் பிடுங்க உனக்கு அசிங்கமா இல்ல?” எடுத்த எடுப்பிலே அவனை அவமானப்படுத்தி பேசினார் வரதன். “அப்பா….” என்று மீரா பதற, “பரவாயில்ல அங்கிள்! உங்க ஆதங்கம் நியாயம் தான்;” அமைதியாக தொடங்கி, “எனக்கும் அவள ஏமாத்தணும்னு எல்லாம் எண்ணம் இல்ல; அப்படி இருந்தா உங்ககிட்ட வந்து அனுமதி கேட்டிருப்பேனா, சொல்லுங்க?” பொறுமையாய் கேட்டு அவரை ஆழ்ந்து பார்த்தான். அவன் சொன்னது உண்மையே என்றாலும், அதை ஏற்க, அவர் மனம் இடம் கொடுக்கவில்லை. அதற்கு ஏளனமாக சிரித்தவர், “ஆஹா…. அதானே உன் தந்திரம்…. அப்படி வந்து கேட்டாதானே, மீரா கண்ணுக்கு நீ நல்லவனா தெரியுவ; உண்மைய எடுத்து சொல்ற நான் அவளுக்கு கெட்டவனா தெரியுவேன்.” குதர்க்கமாய் சொன்னார். தன்மானத்தை சீண்டிய அவர் பேச்சில், “ப்ளீஸ் அங்கிள்! கொடுக்க இஷ்டம் இல்லேன்னா விட்டுடுங்க; தந்திரம் செய்யறேன்னு எல்லாம் சொல்லாதீங்க.” என்று அவனும் திடமாக பேச, அவன் குரலில் உள்ள ஏற்றத்தை, திமிரு பேச்சு என்று எடுத்துக்கொண்டவர், “உன்ன மாதிரி எதையும் சாதிக்காதவனுக்கு தான் கோபம், ரோஷம் எல்லாம் அதிகமா இருக்கும்.” அவனையே குறை கூறினார். அதற்கு விரக்தியில் சிரித்தவன், “குடும்ப பொறுப்புகளுக்காக, லட்சிய கனவை மூட்டை கட்டி வெச்ச, என் நிலமை, உங்கள மாதிரி பணக்காரர்களுக்கு தெரிய வாய்ப்பு இல்ல தான்.” என்று மனம்னொந்து சொல்லி, எழுந்தான் ஹரி. “ஹரி…. ப்ளீஸ்!” என்று மீரா தடுக்க, அதை பார்த்த வரதன், “பணக்கார பொண்ணா பார்த்து லவ் பண்ணுன்னு உங்க வீட்டுல சொல்லி அனுப்பினாங்களா?” மேலும் அவனை அவமானப்படுத்த, “ப்ளீஸ் போதும்…. நான் சொல்ல வர எதுவும் உங்களுக்கு தப்பா தான் தெரியும். என் எண்ணம் உண்மையானது; நான் பார்த்துக்கறேன்.” முடிந்த அளவுக்கு பணிவாக சொல்லி, கதவை நோக்கி நடந்தான். கையேந்தி இருக்கும் நிலமையிலும் இவனுக்கு இவ்வளவு வீம்பா என்று தோன்றியது வரதனுக்கு. கண்டிப்பாக, மகளிடம் வேறு ஏதாவது சொல்லி அவள் மனதை கலைப்பான் என்று நினைத்து, “டிமாண்டிங் இஸ் பிலோ யுவர் டிக்னிட்டி.” தொழிலதிபருக்கே உள்ள கெத்தில், கம்பீரமாய் அழுத்திச் சொன்னார் வரதன். குத்திப் பேசும் தந்தையை பார்த்து முறைத்தவள், “ஹரி! மனசுல எதுவும் வெச்சுகாதே டா! நான் அவர் கிட்ட திரும்பவும் பேசுறேன்.” கெஞ்சலாய் அவனை பின்தொடர, அவனோ திரும்பி கூட பார்க்காமல் வெளியேறினான். நடப்பதை எல்லாம் வேடிக்கை பார்ப்பதை தவிர வேறெதுவும் செய்ய முடியாமல், நின்றாள் நிர்மலா. வீட்டிற்குள் விரைந்து ஓடி வந்தவள், “நான் அவ்வளவு சொல்லியும், அவன தப்பான கண்ணோட்டத்திலேயே பாக்குறீங்களே…. ஏன் பா?” கண்ணீர் மல்க நொந்து கொண்டாள். “முதல் சந்திப்பிலேயே பணம் கேட்டு வரவன, வேற எப்படி பார்க்க சொல்ற?” கேள்வியை மகளிடமே திருப்பினார் வரதன். “பணம் தரேன்னு நான் தானே பா அவன்கிட்ட சொல்லி கட்டாயப்படுத்தினேன்.” தந்தைக்கு நினைவூட்ட, அதை ஏற்காதவர், “கொடுக்கறேன்னு நீ சொன்னாலும், அதை அவன் மறுத்திருக்கணும்…. அதுதான் புருஷ லட்சணம்.” மகளுக்கு கடைசியாக ஒரு முறை புரிய வைக்க முயன்றார். மேலும் பேச விருப்பமில்லாதவர், தன் அறையை நோக்கி நடக்க, அவரை வழிமறித்தாள் மீரா. ‘ஒண்ணு சொல்லுங்க பா! வியாபாரத்துல, வெற்றி தோல்வி தெரியாமத்தான முதலீடு செய்யறீங்க. ஆனா இவனுக்கு சந்தர்ப்பமே கொடுக்காம பழி சுமத்தினா, அது எந்த விதத்துல நியாயம்?” அவர் வழியிலேயே தர்க்கம் செய்தாள். அவள் முகத்தை கண்சிமிட்டாமல் பார்த்தவர், “வியாபாரமும், வாழ்க்கையும் ஒண்ணா உனக்கு?” திடமாய் கேட்டு, “இது இல்லேன்னா அதுன்னு வியாபரம் மாதிரி வாழ்க்கைய பார்க்க முடியுமா சொல்லு?” மனம் வருந்தி கேட்டார். தான் சொன்ன உதாரணம் தவறு என்று உணர்ந்தவள், “நம்புங்க பா! இது நான் நிதானமா எடுத்த முடிவுதான்.” என்று மன்றாடினாள். எவ்வளவு சொல்லியும் புரிந்து கொள்ளாத மகளை பார்த்து, “இங்க பாரு மீரா! நீ என்கிட்ட அனுமதி கேட்டு வரல்ல. முடிவெடுத்துட்டு, தகவல் சொல்லற; அவ்வளவுதான். உன் இஷ்டம் போல செஞ்சிக்கோ. இனி நான் உன் விஷயத்துல தலையிடமாட்டேன்.” வெறுத்து பேசி, தன் அறைக்குள் புகுந்து, கோபத்தை, கதவடைப்பதில் காட்டினார். தந்தைக்கு புரியவைப்பதில் தோற்றுப்போனவள், ஹரியிடமாவது நடந்ததுக்கெல்லாம் மன்னிப்பு கேட்கலாம் என்று நினைத்து, அவள் அறைக்குள் புகுந்து தாளிட்டாள். இருதுருவமாய் போகும் கணவனையும், மகளையும் அமைதியாய் கவனித்து கொண்டிருந்த நிர்மலா, பேசுவதை காட்டிலும் ஆறப்போடுவதே நல்லது என்று நிதானம் கடைப்பிடித்தாள். அப்பாவிடம் பேசி புரிய வைக்க முடியாது; செயலில் தான் காட்ட வேண்டும் என்று முடிவுசெய்தாள் மீரா. ஹரியிடம் மன்னிப்பு கேட்டு, அவனை, எதை பற்றியும் கவலைப்படாமல், தன் குறிக்கோளில் மட்டும் கவனம் செலுத்த சொல்ல வேண்டும் என்றும் எண்ணினாள். அவன் நல்ல நிலமைக்கு வந்தால், அப்பா தானாக மனம் மாறுவார் என்று உறுதியாக நம்பினாள். ஹரியிடம் பேச, கைப்பேசியை எடுத்தவளுக்கு, வாழ்க்கையே சூன்யமானது போன்று தோன்றியது…. ஹரி அவளுக்கு அனுப்பிய மூன்று வார்த்தை குறுஞ்செய்தியை பார்த்து. “சரி” என்று பதில் அனுப்பி, கைப்பேசியை ஸ்விட்ச் ஆஃப் செய்தாள். அக்கறை என்ற பெயரில், தன் காதலை அலட்சியம் செய்த தந்தைக்காகவும், அவமதிக்கப்பட்டேன் என்று புலம்பும் காதலனுக்காகவும் அழக்கூட மறுத்தாள் மீரா. புயலிலும் சூறாவளி காற்றிலும், மூழ்கியே தீருவேன் என்று அடம்பிடிப்பவளை, முதலில் கரம் கொடுத்து மீட்க போவது யார்?
ஊட்டி : ஊட்டி தமிழகம் மாளிகையில் உள்ள பூங்காவில் பல வண்ண சைக்ளமென் பூத்து குலுங்குவது பார்வையாளர்களை கவர்ந்து வருகிறது.ஊட்டி பிங்கர்போஸ்ட் பகுதியில் தமிழகம் அரசு ஆய்வு மாளிகை உள்ளது. இம்மாளிகையில் உள்ள பூங்கா தோட்டக்கலைத்துறை மூலம் பராமரிக்கப்பட்டு வருகிறது. இங்கு ஒவ்வொரு முறையும் சீசனின் போது பல்வேறு வண்ண வண்ண மலர் செடிகள் நடவு செய்யப்பட்டு பராமரிக்கப்படுவது வாடிக்கை. இங்குள்ள கண்ணாடி மாளிகையில் பல வகை கள்ளி செடிகள், மலர் செடிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தற்போது இரண்டாவது சீசனை முன்னிட்டு நடவு செய்யப்பட்டிருந்த சைக்ளமென் மலர்கள் பூத்து குலுங்குகின்றன. இவற்றை அங்கு வர கூடிய பார்வையாளர்கள் பார்த்து ரசித்து செல்கின்றனர். Tags: ஊட்டி தமிழகம் மாளிகை பூங்கா வண்ண மலர்கள் மேலும் செய்திகள் முதல்கட்டமாக 5 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் தூய்மைப் பணியாளர்கள் மேம்பாட்டு திட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் மதுரையில் துவக்கினார் குமரியில் கடல் உள்வாங்கியது கிருஷ்ணகிரியில் பரபரப்பு; பைனான்ஸ் அதிபர் வீட்டில் பெட்ரோல் குண்டுகள் வீச்சு ஆன்லைன் ரம்மியால் ஊழியர், டிரைவர் தற்கொலை: கோவை, சேலத்தில் சோகம் இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிக மருத்துவ மாணவர்கள் பயில்கின்றனர்: சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தகவல் அரசு ஆஸ்பத்திரியில் வாக்குமூலம் பெறச்சென்ற போது பெட்ரோமாக்ஸ் லைட்டேதான் வேணுமா...மாஜிஸ்திரேட்டிடம் கிண்டலடித்த நர்சுகள்: டீன் விசாரணை சாதனை படைக்க வயசு தடை இல்லை: எவரெஸ்ட் அடிவாரத்துக்கு நடந்தே சென்று சாதித்த 6 வயது சிறுவனின் சாகச பயணம்..! கொலம்பியாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 33 அதிகரிப்பு..! திருப்பதி ஏழுமலையான் கோவிலில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு சுவாமி தரிசனம்..!! தொடர் மழையால் அதிரும் பிரேசில்!: நீரில் அடித்து செல்லப்பட்ட வாகனங்கள்.. நிலச்சரிவில் சிக்கி 2 பேர் பலி..!! குஜராத் மாநிலம் சட்டசபை தேர்தலில் வாக்களிக்க ஆப்பிரிக்க மக்களுக்கென பிரத்யேக பூத்: உணவு, ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடிய மக்கள்..!
இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் அண்மையில் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய, எரிபொருள் விநியோகத்தில் இடம்பெறும் முறைகேடுகள் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பிக்க தீர்மானித்துள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. குறித்த முறைப்பாடு தொடர்பில் ஆரம்பக்கட்ட உண்மைகளை சேகரிக்கத் தொடங்கியுள்ளதாக தெரிவித்துள்ள மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணைகளை மேற்கொள்ளவும் தீர்மானித்துள்ளது. எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இடம்பெறுவதாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பில் 200க்கும் அதிகமான நுகர்வோர் முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. எரிபொருள் நிரப்பு நிலைய முறைகேடுகள் குறித்து நுகர்வோரால் அதிக எண்ணிக்கையான முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டு வருவதாகவும் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. மேலும், அனைத்து மாவட்டங்களிலும் காணப்படும் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் மாதிரிகளை பரிசோதிக்கும் வேலைத்திட்டமும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இலங்கை அரசு தொடர்ச்சியாக பயங்கரவாத சட்டத்தினை பயன்படுத்தி தமிழ் செயற்பாட்டாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்களை அச்சுறுத்துவதையும் கைது செய்வதையும் வன்மையாக கண்டிக்கின்றோம் என்று பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான மக்கள் பேரழுச்சி இயக்கம் தெரிவித்துள்ளது. நேற்று (23.05.2021) மனித உரிமைகள் சிவில் சமூக செயற்பாட்டாளரும், பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் இணைப்பாளர்களில் ஒருவருமான திரு.சபாரட்ணம் சிவயோகநாதன் (சீலன்) திராய்மடு மட்டக்களப்பில் அமைந்துள்ள இல்லத்திற்கு வருகைதந்த பயங்கரவாத தடுப்பு பிரிவைச்சேர்ந்த இரு புலனாய்வு உத்தியோகஸ்தர்கள் அவர்மீது ஒன்றரை மணித்தியாலங்கள் கடுமையான விசாரணையினை மேற்கொண்டனர். இதன்போது தமிழீழ விடுதலை புலிகளை மீளுருவாக்கம் செய்ய முயற்சிக்கின்றீர்களா என்ற கோணத்திலும், சிறிலங்கா அரசினால் தடை செய்யப்பட்ட அமைப்புக்களுடன் தொடர்புகளை பேணுகின்றீர்களா என்ற கோணத்திலும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன. அத்துடன் அவருடன் தொடர்புடைய ஊடகவியலாளர்கள் தொடர்பாகவும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன. வெளிப்படையாக ஜனநாயக வெளியில் செயற்படும் ஒருவருக்கு வழமை போலவே பயங்கரவாத முத்திரை குத்துவதற்கு அரசினால் மேற்கொள்ளப்படும் முயற்சியாகவும், மனித உரிமைகள் சிவில் சமுக செயற்பாட்டாளர்களை அச்சுறுத்தி அவர்களின் செயற்பாடுகளை முடக்கி தமது சர்வாதிகார அராஜக ஜனநாயக விரோத ஆட்சியினை முன்னெடுக்க அரசு நடத்தும் கபடநாடகமாகவுமே பார்க்கவேண்டியுள்ளது. மேற்குறிப்பிடப்படும் விசாரணைகள் அனைத்தும் விசாரணைகள் எனும் பெயரில் மனித உரிமைகள் சிவில் செயற்பாட்டாளர்களை அச்சுறுத்துவதுடன் அவர்கள் தொடர்ந்து செயற்படாதவாறு உளவியல் ரீதியான அச்சுறுத்தலையும் நெருக்கடிகளையும் கொடுப்பது ஆகும். குறிப்பாக தமிழர் தாயகத்தின் ஒரு பகுதியான கிழக்கு மாகாணத்தில் அண்மைக்காலத்தில் ஊடகவியலாளர்கள் உட்பட சிவில் செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுவெளியில் செயற்படும் இளைஞர்களை சிறிலங்கா ஆயுத படைகளினால் கொல்லப்பட்ட தமது உறவுகளுக்கு நினைவேந்தலை நடத்தியமை, முகநூலில் புகைப்படங்களை வெளியிட்டமை, முகப்புத்தகத்தில் அஞ்சலி செலுத்தியமை போன்ற காரணங்களை முன்வைத்து பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்நடவடிக்கையானது தமிழர் தாயகத்திலுள்ள அனைத்து தமிழ் மனித உரிமைகள் சிவில் செயற்பாட்டாளர்களுக்குமான மறைமுக மிரட்டலையும் அச்சுறுத்தலையும் நெருக்கடிகளையும் கொடுத்து அவர்களின் செயற்பாடுகளை ஒட்டுமொத்தமாக முடக்குவதாகும். இவ் அரசின் கடந்தகால மற்றும் தற்கால செயற்பாடுகளும் முன்னெடுப்புக்களும் இவற்றுக்கு சிறந்த எடுத்துக்காட்டுக்களாகும். நாட்டில் தற்போது கொரோனா வைரஸின் தாக்கம் மிகவேகமாக பரவி பல உயிர்களை பலியெடுத்து வரும் அவலம் நிறைந்த சூழலில் முழு மக்களினமுமே தம் வாழ்வைக்குறித்து கலங்கி நிற்கும் இவ்வேளையில் அரசு தனது அராஜகத்தையும் ஒடுக்குமுறையினையும் எவ்வித மாற்றமோ மனச்சாட்சியோ இன்றி தொடர்கின்றது. எனவே இவ்வரசு நாட்டிலுள்ள குறிப்பாக வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் செயற்பட்டு வரும் தமிழ் மனித உரிமை செற்பாட்டாளர்களை இலக்குவைத்து நடாத்திவரும் அச்சுறுத்தல் அடக்குமுறை செயற்பாடுகளை உற்றுநோக்குகின்றபோது மனித உரிமைகள் செயற்பாட்டாளர்களுக்கு எவ்வித பாதுகாப்பு உத்தரவாதங்கள் இல்லாத நிலையும் இதன் அடுத்த கட்டம் என்னவாக அமையும் என்பதே ஓர் அச்சம் நிறைந்த ஒன்றாகவே உள்ளது. குறிப்பாக பங்குனி (மார்ச்) மாதத்தில் ஐ.நா சபையில் நிறைவேற்றப்பட்ட 46/1 தீர்மானத்தில் சுட்டிக்காட்டப்பட்டவாறு ஊடகவியலாளர் மற்றும் சிவில் செயற்பாட்டாளர்களுக்கான ஜனநாயக வெளிகள் மேலும் சுருங்கி வருவதுடன் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு ஆளாகி வருவதினையும் இங்கு கோடிட்டு காட்ட விரும்புகின்றோம். எனவே அரசின் இவ் அராஜக ஜனநாயக விரோத செயற்பாட்டை, குறிப்பாக தொடர்ந்தும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தமிழர்களை கைது செய்வதையும், விசாரணைகள் செய்வதையும் மிக வன்மையாக கண்டிப்பதுடன் இச்செயற்பாட்டை தடுத்து நிறுத்தி மனித உரிமைகள் சிவில் செயற்பாட்டாளர்களின் செயற்பாடுகளுக்கு உத்தரவாதமளிக்குமாறு அனைத்துலக மனித உரிமைகள் சிவில் செயற்பாடுகள் நீதிக்குமான அமையங்கள், மற்றும் ஐ.நா. மன்றத்தினையும் மிக அவசரமாகவும் அவசியத்துடனும் கோரி நிற்கின்றோம். அத்துடன் இலங்கையில் இடம்பெறும் மனித உரிமைகள் மீறல் தொடர்பான சாட்சிய சேகரிப்பில் இவ்விடயங்களில் கூடிய கவனம் செலுத்தி சேர்த்துக்கொள்வதுடன், ஆறுமாத அறிக்கையிடலில் தமிழ் பேசும் மக்கள் மீதான பயங்கரவாத தடைச்சட்ட பிரயோகம் தொடர்பான விடயங்களை சேர்த்துக் கொள்ளுமாறு ஐ.நா. ஆணையாளரிடம் வேண்டி நிற்கின்றோம்.
27.10.2017 அன்று நடைபெற்ற எனது மகள் செல்வி. G. சுகந்தி திருமணத்திற்கு நேரில் வந்து வாழ்த்திய அனைத்து நல் உள்ளங்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி. பல்வேறு பணிகளுக்கு மத்தியில், நேரில் வந்து வாழ்த்திய, BSNLEU அகில இந்திய பொது செயலர் தோழர் P . அபிமன்யூ, உதவி பொது செயலர் தோழர் S . செல்லப்பா, தமிழ் மாநில செயலர் தோழர் A . பாபுராதாகிருஷ்ணன், ஆகியோருக்கு நெஞ்சு நிறை நன்றிகள். சேலம் மாவட்ட முதன்மை பொது மேலாளர் திரு. S . சபீஷ் உள்ளிட்ட BSNL உயர் அதிகாரிகள், ஊழியர்கள், BSNLEU கோவை மாவட்ட செயலர் தோழர் C . ராஜேந்திரன், ஈரோடு மாவட்ட செயலர் தோழர் L . பரமேஸ்வரன், தர்மபுரி மாவட்ட செயலர் தோழர் P . கிருஷ்ணன், BSNLEU தமிழ் மாநில சங்க நிர்வாகிகள் தோழர்கள் S . சுப்ரமணியம் (திருப்பூர்), S . தமிழ்மணி (திருச்செங்கோடு), M . பாபு (கிருஷ்ணகிரி) ஆகியோருக்கும் நன்றி. BSNLEU முன்னாள் தமிழ் மாநில செயலர் தோழர் D. கோபாலகிருஷ்ணன், முன்னாள் தமிழ் மாநில உதவி செயலர் தோழர் M . நாராயணசாமி, E 3 முன்னாள் தமிழ் மாநில செயலர் தோழர் N . கோபாலகிருஷ்ணன், BSNLEU தர்மபுரி மாவட்ட முன்னாள் செயலர் தோழர் S . அழகிரிசாமி, BSNLEU முன்னாள் தமிழ் மாநில உதவி தலைவர் தோழர் ஜான் போர்ஜியா ஆகியோருக்கு நெஞ்சு நிறை நன்றிகள். அதைபோல், SNEA மாநில நிர்வாகி தோழர் M . R. தியாகராஜன், தலைமையில் வந்து வாழ்த்திய மாவட்ட செயலர், மாவட்ட சங்க நிர்வாகிகள், AIBSNLEA அகில இந்திய நிர்வாகி தோழர் கோவிந்தராஜூ தலைமையில் வந்து வாழ்த்திய மாவட்ட செயலர், மாவட்ட சங்க நிர்வாகிகள், NFTEBSNL சேலம் மாவட்ட செயலர் தலைமையில் வந்து வாழ்த்திய மாவட்ட, மாநில சங்க நிர்வாகிகள், NUBSNLW FNTO சேலம் மாவட்ட செயலர் தலைமையில் வந்து வாழ்த்திய மாவட்ட சங்க நிர்வாகிகள், SEWABSNL மாவட்ட செயலர் தலைமையில் வந்து வாழ்த்திய மாவட்ட சங்க நிர்வாகிகள், ஓய்வூதிய சங்க தோழர்கள், பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் ஆகியோர் வருகைக்கும் நெஞ்சு நிறை நன்றிகள். BSNLEU சேலம் மாவட்ட சங்க நிர்வாகிகள், கிளை செயலர்கள், முன்னணி தோழர்கள் நிகழ்வில் கலந்து கொண்டதோடு மட்டுமல்லாமல், தங்கள் இல்ல திருமணம் போல், முன்னின்று அனைத்து பணிகளையும் செய்ததை நன்றியுடன் நினைவு கூர்கிறேன். BSNLEU, TNTCWU இரண்டு சங்க தோழர்கள், தோழியர்கள், பணி நிறைவு செய்த தோழர்கள், ஒப்பந்த ஊழியர்கள் அனைவருக்கும் எனது நன்றியை உரித்தாக்குகிறேன். நேரில் வர முயன்றும், பல்வேறு சூழல் காரணமாக, வர இயலாத காரணத்தால் அலைபேசி, தொலைபேசி, அஞ்சல் மூலம் வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
Share on Facebook Follow on Facebook Add to Google+ Connect on Linked in Subscribe by Email Print This Post இந்தியா, Hong Kong, ஆஸ்திரேலியா, பிரான்ஸ், ஜெர்மனி, இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா, டுபாய் போன்ற இடங்களில் எல்லாம் தனது கிளைகளை இயக்கிவரும் சரவணபவான் உணவகம் தமிழ்நாட்டை பிறப்பிடமாக கொண்ட, 1947 இல் பிறந்த ராஜகோபால் என்பவரால் 1981 இல் ஆரம்பிக்கப்பட்டது. அதற்கு முன் இவர் ஓர் பலசரக்கு கடையை நடாத்தி வந்தார். 1972 இல் இவர் முதலாவது திருமணத்தை செய்திருந்தார். பினர் 1994 இல் தனது வேலையாள் ஒருவரின் மனைவியை தனது இரண்டாவது மனைவியாக திருமணம் செய்திருந்தார். பின் 1999 இல் தனது மேற்பார்வையாளர் ஒருவரின் இளைய மகள் ஜீவஜோதியை 3வது திருமணம் செய்ய முனைந்தார். அம்முயற்சி ஒரு கொலைக்கு காரணமாகியது. ராஜகோபாலின் விருப்பத்தை வெறுத்த ஜீவஜோதி சாந்தகுமார் என்பரை திருமணம் செய்ய விரும்பினார். 2001-09-28 அன்று ஜீவஜோதி வீடு வந்த ராஜகோபால், அவர்களுக்கு 2 நாள் காலக்கெடு விதித்தார். இருவரும் தப்பி ஓட முனைந்தபோது இருவரையும் கடத்திய ராஜகோபாலன் சாந்தகுமாரை தாக்கியுள்ளார். சாந்தகுமார் பொலிசாரிடம் முறைப்பாடு செய்தார். ஆறு நாட்களில் இருவரும் மீண்டும் கடத்தப்பட்டனர். ராஜகோபாலன் சாந்தகுமாரை கொலை செய்ய அமர்த்திய கையாள் டேனியல் சாந்தகுமாரை தப்பி ஓட வைத்துவிடு, கொலை செய்துவிட்டதாக ராஜகோபாலனிடம் தெரிவித்தார். ஆனால் சாந்தகுமார் குடும்பம் மீண்டும் ராஜகோபாலனை அணுகி சமரசம் பேச முன்வந்தனர். இறுதியில் சாந்தகுமார் கொடைக்கானலில் பிணமாக மீட்க்கப்பட்டார். 2002 இல் ராஜகோபால் மீது கொலை வழக்கு தொடரப்பட்டது. 2004 இல் 10 வருட சிறை தண்டனை பெற்றார். ஆனால் 9 மாதத்துள் இன்னொரு நீதிமன்று சுகவீனம் காரணம்காட்டி அவரை சிறை தண்டனையை இரத்து செய்தது. 2009 இல் சென்னை நீதிமன்றம் மீண்டும் அவரது தண்டனையை நடைமுறைப்படுத்தியது. ஆனால் 3 மாதத்துள் அவர் மீண்டும் பிணையில் வெளியேறினார். அவரது வழக்கு இழுத்தடிப்பால் அவர் சுதந்திரமாக வாழ்க்கையை நடாத்தி வருகிறார். 2008 இல் அவரது மகன் சிவகுமார் போலி பத்திரங்கள் தயாரித்து அமெரிக்காவுக்கு ஆட்கடத்தில் செய்வதாக குற்றம்சாட்டி கைது செய்யப்பட்டிருந்தார். மசாலா தோசை, கொலை, சரவணாபவான் added by admin on May 8, 2014 View all posts by admin → © 2022, ↑ Truth is knowledge © www.navakudil.com 2020. All materials on this Web site are the property of www.navakudil.com. Unauthorized use and/or duplication of these material without express and written permission is strictly prohibited. Links with small excerpts may be used, provided that clear credit is given to this Web site. Powered by WordPress - Gabfire Themes
தமக்கெதிராக மக்கள் கிளர்ந்தெழ ஆயத்தமாகின்றார்கள் என்பதை அறிந்து கொண்டு அவர்களை அடக்கி ஆள்வதற்காகவே ஜனாதிபதி அவசரகாலச் சட்டத்தை உபயோகித்துள்ளார். இது சர்வாதிகாரத்திற்கு முக்கிய படி என்பதில் எந்தவித ஐயமும் இருக்க முடியாது. இராணுவம் என்றால் என்ன என்பதை இனி சிங்கள மக்கள் அறிந்து கொள்வார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், 2243/1 அதி விசேட வர்த்தமானி மூலம் கொவிட்19ஐக் காரணம் காட்டி அவசரகால நிலையை அறிவித்துள்ளார் ஜனாதிபதி. உண்மையில் இவ்வாறான சந்தர்ப்பத்தில் நடைமுறைப்படுத்த வேண்டிய சட்டம் அனர்த்த முகாமைத்துவச் சட்டம். அதன் கீழ் ஒரு செயலணியை நிறுவி மருத்துவ ஆலோசனைகளுக்கேற்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். இதிலிருந்து ஜனாதிபதி ஆரம்பத்திலேயே தவறிவிட்டார். பல குற்றங்களை அவர் புரிந்துள்ளார். 1. இவ்வாறான அனர்த்த முகாமைத்துவ செயலணியை இதுவரையில் நியமிக்காமை. 2. கொவிட் 19க் கெதிரான நடவடிக்கைகளை துறைசார் நிபுணர்களை வைத்து இதுவரையில் கட்டுப்படுத்தாதது. 3. ஆயுதமேந்தி மக்களைக் கொல்லும் இராணுவத்தை கொரோனா கட்டுப்படுத்த நியமித்தமை. 4. கொரோனாவைக் காரணம் காட்டி அவசரகால நிலையை ஏற்படுத்தி சர்வதிகாரத்திற்கு வித்திட்டமை. ஏற்கனவே பயங்கரவாத் தடைச்சட்டம் அமுலில் உள்ளது. அடுத்து கொரோனாவைக் கட்டுப்படுத்த இராணுவத்தை அழைத்து அவர்கள் எங்கும் வியாபித்திருக்கின்றார்கள். மூன்றாவதாக அவசரகாலச் சட்டத்தை அமுலுக்குக் கொண்டு வந்துள்ளார். தமக்கெதிராக மக்கள் கிளர்ந்தெழ ஆயத்தமாகின்றார்கள் என்பதை அறிந்து கொண்டு அவர்களை அடக்கி ஆள அவசரகாலச் சட்டத்தை உபயோகித்துள்ளார். இது சர்வாதிகாரத்திற்கு முக்கிய படி என்பதில் எந்தவித ஐயமும் இருக்க முடியாது. இராணுவம் என்றால் என்ன என்பதை இனி சிங்கள மக்கள் அறிந்து கொள்வார்கள்.
‘நினைக்காத நாளில்லை’, ‘தீக்குச்சி’, ‘அக்கி ரவ்வா’ (தெலுங்கு) உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய ஏ எல் ராஜா, தனது நண்பர்களுக்காக ‘ஓரு வினா, ஓரு விடை’ என்ற ஆல்பத்தை தற்போது இயக்கியுள்ளார். ‘சின்ன மாப்பிள்ளை’, ‘மகாநதி’, ‘வியட்நாம் காலனி’, ‘செங்கோட்டை’ மற்றும் ‘கண்ணுபட போகுதயா’ போன்ற திரைப்படங்களில் உதவி மற்றும் இணை இயக்குநராக பணியாற்றிய அனுபவம் பெற்றவர் இயக்குநர் ஏ எல் ராஜா. இந்த ஆல்பத்தைப் பற்றி இயக்குநர் ஏ எல் ராஜா பேசுகையில், “இசை அமைப்பாளர் ஆர் எஸ் ரவிப்பிரியன் மற்றும் பாடலாசிரியர் செந்தமிழ் ஆகியோர் ஒரு பாடலை பதிவு செய்தனர். ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையை அடிப்படையாகக் கொண்டு பாடலை இயற்றி அதற்கான காட்சிகளை அமைக்க என்னை அவர்கள் அணுகினர். அவர்கள் என்னுடைய சிறந்த நண்பர்கள் என்பதால், நான் அந்த பணியை மேற்கொண்டு நிறைவு செய்துள்ளேன்,” என்றார். இயக்குநர் ஏ எல் ராஜா மேலும் கூறுகையில், “பாடலின் தனித்தன்மை என்னவென்றால், பாடலின் நாயகன் ஸ்ரீஹரி பேசவும் கேட்கவும் முடியாதவர் ஆவார். ஆனால் அவர் மிகவும் திறமையானவர். Related Posts புதுப்பொலிவுடன் ரீ-ரிலீஸுக்கு தயாராகும் பாபா Nov 23, 2022 விஜயானந்த் திரைப்பட டிரெய்லர் வெளியீட்டு விழா Nov 23, 2022 ஏற்கனவே ஒரு மலையாளம் படத்தில் கதாநாயகனாக அவர் நடித்துள்ளார். அவர் நடனமாடுவதிலும் வல்லவர். ஸ்ரீஹரி இந்தப் பாடலில் நன்றாகப் பொருந்துவார் என்பதில் நான் உறுதியாக இருந்தேன், அவரும் எனது கணிப்பை உண்மையாக்கியுள்ளார். தற்போது நான் இயக்கி வரும் ‘சூரியனும் சூரியகாந்தியும்’ படத்திற்குப் பிறகு இயக்கவிருக்கும் படத்தில் ஸ்ரீஹரியை கதாநாயகனாக நடிக்க வைக்க எண்ணியுள்ளேன். ‘சூரியனும் சூரியகாந்தியும்’ படத்தில் வித்தார்த், அப்பு குட்டி, விக்ரம் சுந்தர், பிளாக் பாண்டி மற்றும் சந்தானபாரதி முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்தப் படத்திற்கும் ஆர் எஸ் ரவிப்பிரியன் தான் இசையமைக்கிறார்’, என்றார். காதல் தான் பாடலின் மையக் கரு என்று இயக்குநர் ஏ எல் ராஜா மேலும் கூறினார். “காதலை மறைக்க முடியும், ஆனால் ஒருபோதும் மறக்க முடியாது என்பதை தான் இந்த ஆல்பத்தின் மூலம் நாம் தெரிவிக்க முயற்சித்தோம். பாடலைப் பார்த்தவர்கள் அதைப் பாராட்டி, கவுதம் வாசுதேவ் மேனனின் பாடல்களுடன் ஒப்பிட்டுள்ளனர்” என்று அவர் தெரிவித்தார். 'ஓரு வினாOru VidaiOru VinaOru Vina Oru VidaiOru Vina Oru Vidai movie newsSriHariஓரு விடை'காதல் ததும்பும் ஆல்பம்
கிரகங்களின் அரசனான சூரியனின் ராசி மாற்றம் அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றாலும் ஆவணியில் சூரிய பகவானின் மாற்றத்தால் மகிழ்ச்சியில் திளைக்கவிருக்கும் ராசிகள் இவை. கடகம் சூரியன் தற்போது கடக ராசியில் இருக்கிறார். ஆகஸ்ட் 17 வரை கடகத்தில் இருக்கும் சூரிய்ன், சிம்ம ராசிக்குக் நுழைவது கடக ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்கும். பெரியவர்களை உபசரிப்பது பல வழிகளில் பலன் தரும். வேலை மாற்றம் ஏற்பட வாய்ப்பு உண்டு. புதிய வேலை வாய்ப்பு அமையும். நிலுவையில் இருக்கும் பணம் வந்து சேரும். துலாம் - Advertisement - ஆகஸ்ட் மாதத்தில் சூரியனின் சஞ்சாரம் துலாம் ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களைத் தரும். வருமானம் அதிகரிக்கும். வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு லாபம் கிடைக்கும். முதலீட்டில் லாபம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. விருச்சிகம் விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு ஆவணியில் சூரிய பரிவர்த்தனை சாதகமானதாக இருக்கும். வியாபார விஷயங்களில் பெரிய வெற்றி கிடைக்கும். பதவி உயர்வு கிடைக்கும். புதிய வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும்.
எழுத்தாளர் அம்பையின் பெண் கதாபாத்திரங்கள் மனசுக்கு வலிக்கும் வகையில் உண்மை பேசுபவை. சமையல் கட்டில் முடங்கிக்கிடக்கும் பெண் கதாபாத்திரம் பேசுவதாக ஒரு காட்சி வரும். ‘’பத்து வயசு தொடங்கி தோசை சுடறேன். நாப்பது வருஷத்துல ஒரு நாளைக்கு இருபது மேனிக்கு எவ்வளவு தோசை… ஒரு வருடத்துக்கு ஏழாயிரத்து முந்நூறு தோசைகள். நாற்பது வருடங்களில் இரண்டு லட்சத்துத் தொண்ணூற்றிரண்டாயிரம் தோசைகள். இது தவிர இட்லிகள், வடைகள், அப்பங்கள், பொரியல்கள், குழம்புகள். இரவில் அவளுடைய கையை எடுத்து முகத்தில் வைத்துக் கொண்டாள். சோற்றுமணம் அடித்தது. புல யுகங்களின் சோற்று மணம்’’ என்று எழுதியிருப்பார் அம்பை. இன்றைய பெண்ணின் வரலாறு மட்டுமல்ல, இது காலகாலமாக பெண்ணுக்குப் பூட்டப்பட்டிருக்கும் விலங்கு. சமையல்கட்டை கைக்குள் போட்டுக்கொள்வதில்தான் வெற்றி இருப்பதாக நம்பினாள். ருசி மூலம் ஆணை மயக்கி, குடும்பத்தை ஜெயிக்கலாம் என்று ஆண்கள் சொன்னதை நம்பியே சமையல் கட்டுக்குள் முடங்கிக்கிடந்தாள். ஆனால் இப்போது பெண் மாறுகிறாள். ஆணைப் போலவே வேலைக்குப் போகிறாள். ஆணை மட்டுமே நம்பியிருந்த சூழல் மாறுவதால் சமையல் கட்டில் இருந்தும் வெளியேறுகிறாள். இதன் அர்த்தம், இனி வீடுகளில் சமையல் நடக்காது, எல்லோருமே ஹோட்டலில் சாப்பிடும் நிலைமை ஏற்பட்டுவிடும் என்பது அல்ல. ஏனென்றால் உணவின்றி அமையாது வாழ்வு. ஆரோக்கியமும் சுவையும் கொண்ட உணவுதான் மனித குலத்தை உயிர்ப்புடனும் உவப்புடனும் வாழவைக்கும். அதனால் வீடுகளில் சமையலறை இருக்கத்தான் செய்யும். ஆனால் அது இனி பெண்களுக்கான பிரத்யேக இடமாக இருக்காது. பெண் வேலைக்குச் செல்வது எப்படி அவசியமாகிவிட்டதோ, அப்படியே ஆண் சமைப்பதும் அவசியமாகிவிடும். அதேநேரம் சமையலறை இன்னமும் மாடர்ன் ஆகிவிடும். அதாவது சமைப்பதற்கு நிறைய நேரம் மற்றும் உழைப்பு சிந்த அவசியம் இருக்காது. ரெடிமேட் உணவுகள் பெருகிவிடும். ஒவ்வொரு உணவிலும் எவ்வளவு கலோரி இருக்கிறது என்பதை அறிந்துகொண்டு, அவற்றை மட்டும் உட்கொண்டால் போதும் என்ற நிலைமை உண்டாகிவிடும். இந்த நிலை உடனே நிகழப்போகிறது என்று அர்த்தம் இல்லை. ஆனால் கண்டிப்பாக நடக்கும். இருபது ஆண்டுகளுக்கு முன்பு பெண் நைட் ஷிப்ட் வேலைக்குச் செல்வாள் என்பதை யாரும் கற்பனைகூட செய்திருக்க மாட்டார்கள். ஆனால் அப்படித்தான் நிகழ்ந்தது. அதனால் அடுத்த பத்து ஆண்டுகளுக்குள் ஆண் சமைப்பது கட்டாயம் என்ற நிலைமை நிச்சயம் வரலாம். அதற்கு பெண்கள் செய்யவேண்டியது ஒன்றே ஒன்றுதான். அது, பெண் குழந்தைகளுக்குப் போலவே ஆண் குழந்தைக்கும் சமையல் கலையை கற்றுத்தர வேண்டும். தனியே வாழும் சூழல் ஏற்படும்போது யாரையும் நம்பாமல் தானே சமைத்து சாப்பிடும் நம்பிக்கையும் துணிச்சலும் ஆணுக்கும் ஏற்படவேண்டும். இந்த நம்பிக்கையை வளர்ப்பதில்தான் பெண்ணின் வெற்றி இருக்கிறது. குழந்தையில் இருந்தே சமையலைக் கற்றுக்கொண்டால் நிச்சயம் அது சுமையாகத் தெரியாது. அடுத்ததாக ஆணுக்கு சொல்லித்தரவேண்டிய ஒரு கலையும் பெண்ணிடம் இருக்கிறது. அது, குழந்தை வளர்ப்பு. குழந்தை வளர்ப்பில் ஆணுக்கும் பங்கு இருக்கவேண்டும் என்பதற்காகத்தான் இப்போது மேலை நாடுகளில் ஆணுக்கும் பிரசவகால விடுப்பு கொடுக்கிறார்கள். கருவை வயிற்றில் சுமப்பதை ஆண் செய்யமுடியாது என்றாலும் அடுத்தடுத்த காலங்களில் பெண்ணிடம் இருந்து சுமையை ஆண் ஏற்றுக்கொள்ள முடியும். குழந்தை பிறந்த முதல் இரண்டு ஆண்டுகள் பெண் சரியாக சாப்பிட முடியாமல், தூங்கமுடியாமல், தன்னை பராமரித்துக்கொள்ள முடியாமல் அவதிப்படுகிறாள். இந்த நேரங்களில் அவளுக்கு நிச்சயம் ஆணின் தோள்கள் ஆதரவாகத் தேவை. இதனால் தாயிடம் குழந்தைகளுக்கு இருக்கும் பாசம் போய்விடும் என்று அஞ்சத் தேவை இல்லை. ஏனென்றால் தாயின் மனப்பூர்வமான அன்புக்கு ஈடாக இந்த உலகில் எதுவும் கிடையாது. இதுதவிர, இன்றும் நிறைய துறைகள் ஆண்கள் வசமே இருக்கிறது. அங்கொன்றும் இங்கொன்றுமாக பெண்கள் அனைத்துத்துறைகளிலும் இருக்கிறார்கள் என்றாலும், அனைத்துத் துறையிலும் அறிவு பெற்றுக்கொள்ள விரும்புவதில்லை. தனக்குத் தேவையில்லாத எதையும் தெரிந்துகொள்வதில் பெண் ஆர்வம் காட்டுவதே இல்லை. இந்த நிலையும் நிச்சயம் மாறவேண்டும். அதனால் அடுத்து பெண்கள் கைப்பற்றவேண்டிய முக்கியமான துறை குடும்ப பட்ஜெட். இரண்டு பேர் சம்பாதித்தாலும் குடும்ப பட்ஜெட் போடுவதும், வரவு செலவு குறித்த முக்கிய முடிவுகளை எடுப்பதும் கணவனாகத்தான் இருக்கிறான். இதற்கு முக்கியமான காரணம், பட்ஜெட் பற்றியும் பண மேலாண்மை பற்றியும் பெண்ணுக்கு எதுவும் தெரியாது என்ற அலட்சியம்தான். இது ஒரு வகையில் உண்மையும்கூட. சமையல் புத்தகங்கள் வாங்குவதற்குக் காட்டும் ஆர்வத்தில் சிறுபங்குகூட, நிதி மேலாண்மை குறித்து தெரிந்துகொள்ள பெண்கள் விரும்புவது இல்லை. ஆனால் நடைமுறை வாழ்க்கையில் சிக்கனமாக நடந்துகொள்பவர்களும், ஆடம்பர செலவுகளைக் குறைப்பதும் பெண்கள்தான். இத்தனை திறமை படைத்த பெண் இன்னும் கொஞ்சம் முயற்சியெடுத்து நிதி மேலாண்மை குறித்தும், வங்கிக் கணக்கு, தபால்துறை கணக்குகள், இன்வெஸ்ட்மெண்ட், வருமானவரி பிடித்தம் போன்ற தகவல்களை அறிந்துகொள்ளத் தொடங்கினால் வீட்டு பட்ஜெட்டை கணவனைவிட மனைவியால் மிகச்சிறப்பாக போடமுடியும். அவள் பட்ஜெட் போடும்போது முதல் விஷயமே சேமிப்பாகத்தான் இருக்கும். அந்த சேமிப்பு என்பது ஆரோக்கியத்துக்காகவும் ஆனந்தம் தரும் சுற்றுலா போன்ற விஷயங்களுக்காகவும்தான் இருக்கும். ஆனால் ஆண் பட்ஜெட் போடும்போது, அவனது முதல் செலவு ஆடம்பரப் பொருளை வாங்குவதாகத்தான் இருக்கும். அதனால்தான் ஆண் போடும் பட்ஜெட் துண்டுவிழுகிறது. வீட்டில் மட்டுமின்றி நாட்டிலும் நிதி அமைச்சராக ஆண் இருப்பதுதான் பிரச்னைகளுக்குக் காரணமாக இருக்கிறது. எதிர்காலத் தேவைகளை திட்டமிடுவதிலும் பெண்ணே சிறப்பாக செயல்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மகன் படிப்புக்கு எவ்வளவு தேவைப்படும், மகளுக்கு படிப்பு மற்றும் திருமணச் செலவு, எதிர்காலத்தில் ஓய்வுகாலத் தொகை, வயதானபிறகு மருத்துவச்செலவு என்று ஆணின் கண்களுக்குத் தட்டுப்படாத விஷயங்கள் எல்லாமே பெண்களுக்குத் தெரிகிறது. அதனால்தான் இப்போது உலகெங்கும் நிதிநிர்வாக மேலாண்மையில் பெண் தலைமை அதிகாரிகள் எண்ணிக்கை பெருகிவருகிறது. தனக்குத் தேவை இருக்கிறதோ இல்லையோ ஆண் அன்றாட அரசியல் நிலவரங்கள் குறித்து தெரிந்துகொள்கிறான். எந்தக் கட்சியிலும் உறுப்பினராக இல்லை என்றாலும் எந்தக் கட்சி சிறந்த கட்சி, எந்தத் தலைவன் உயர்ந்தவன் என்று வாக்குவாதம் செய்வதற்குத் தயாராக இருக்கிறான். உள்ளூர் முதல் உலக அரசியல் வரையிலும் தெரிந்தவர்களுடன் பேசி, தன்னுடைய மேதமையைக் காட்டிக்கொள்கிறான். ஆனால் இந்த விஷயங்களிலும் பூஜ்ஜியமாகத்தான் பெண்கள் இருக்கிறார்கள். அரசியல் மட்டுமின்றி தோட்டக்கலை, சுற்றுலா, செல்போன் ஆராய்ச்சி, கணிணி என்று பெண்கள் அன்றாடம் அறிந்துகொள்ள வேண்டியவை நிறையவே இருக்கிறது. வருங்காலப் பெண்கள் இவற்றை நிச்சயம் கடந்து செல்வார்கள், வெல்வார்கள்.
மிகச் சமீப காலம் வரை கர்நாடக குடகு மாவட்ட காபி தோட்ட விவசாயிகள் காப்பிச் செடிகளை காலம் காலமாக அவர்களுக்கு வாய்த்திருந்த பசுமை காட்டு போர்வையில் தான் வளர்த்து வந்தனர். இப்போதோ, வெட்ட வெளியில் சூரிய வெளிச்சத்தில் வளர்க்க விழைகின்றனர். இது காவிரி நதியையும் மேற்குத் தொடர்ச்சி மலையையும் கடுமையான தாக்கத்துக்கு உள்ளாக்கியிருக்கிறது. வர வர இன்னும் அதிக விவசாயிகள் டாடுப் (Dadup – Erythrina subumbrans), அரிகானட், , (Arecanut – Areca catechu), பாலான்ஜி (Balanji – Acrocarpus fraxnifolius) மற்றும் பலா மரம் (Jackfruit – Acrocarpus heterophyllus) போன்ற மரங்களை இறக்க விடுகின்றனர். இதன் மூலம் பசுமைக் காடுகளின் அடர்த்தியைக் குறைத்து, வெளிச்சத்தை விரும்பும் காப்பி வகைகளை வளர்க்கலாம் என்று எண்ணுகின்றனர். விளைவாக, அதிக காப்பி உற்பத்தி செய்து அதிக இலாபம் ஈட்டலாம் என எத்தனிக்கன்றனர். மேற்குறிப்பிட்ட பெரிய மரங்களுக்கு பதிலாக, வெளிநாட்டு இறக்குமதியான சில்வர் ஓக்ஸ்-ஐ (Silver Oaks (Grevillea robusta) வளர்க்கின்றனர். சில்வர் ஓக்கின் கம்பம் போன்றிருக்கும் தண்டு மிளகுக் கொடி வளர்ந்து இலாபம் பெருக்க உதவியாக இருக்கிறது. சில்வர் ஓக்கின் அதீத பெருக்கத்தால் அங்கிருக்கும் சில பகுதிகளில் அதுவே பிரதான மரமாகவும் மாறி இருக்கிறது. இந்த மாற்றம் சுற்றுச்சூழலிடமிருந்து அதிக விலை கோரி இருக்கிறது. கூர்க் என்று அறியப்பட்ட குடகு, மைசூரின் மேற்கு விளிம்பில் இருக்கும் பீடபூமி ஆகும். கடல் மட்டத்திலிருந்து சராசரியாக 800 மீட்டர் உயரத்தில் உள்ளது. அங்கிருந்து மேற்குத் தொடர்ச்சி மலைக்கு உயர்ந்து கொண்டே சென்று 1500 மீட்டராக உள்ளது. அதிலிருந்து கேரளத்தின் மேற்கு பக்கத்தில் குறுகலாக சரிகிறது. இந்த பீடபூமி கிழக்கு நோக்கியே பிரதானமாக சரிகிறது. அப்படி சரியும் நிலப்பரப்பில் பல கிளை நதிகள் இணைந்து காவிரி ஆறாக உருபெற்று, பல இலட்சம் கர்நாடக, தமிழக மற்றும் புதுச்சேரி மக்களுக்கு வாழ்வாதாரமாக உள்ளது. காப்பிதான் குடகு பகுதியில் மிக அதிகமாக பயிரிடப்படும் வேளாண் பொருள். 33% மாவட்ட நிலப்பரப்பில் காபி பயிரிடப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 38% இந்தியாவிற்கான காபி இந்த மாவட்டத்தில் இருந்துதான் வருகிறது. சூழலியல் ரீதியாக, குடகு மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளிலேயே பல்லுயிரியலுக்கான நுண்ணிய ஹாட் ஸ்பாட்டாக கண்டறியப்பட்டுள்ளது. கருமேகம் மற்றும் கடும் மழை இந்த மாவட்டத்தின் மீது அதிகப்படியான நீரைக் கொட்டுகிறது. மாவட்டத்தின் மேற்கு முணை சராசரியாக 5000 மில்லி மீட்டர் மழைப்பொழிவைப் பெறுகிறது என்றால், கிழக்கில் 1200 மில்லி மீட்டராகக் குறைகிறது. பெய்யும் அதிகப்படியான மழை நீர் காவிரிக்கு ஆதாரமாக உள்ளது. குடகு, பொன்னம்பெட், வனவியல் கல்லூரியின் அறிக்கைபடி, இயற்கையான வனச்சூழல் மாவட்டத்தின் மொத்த பரப்பில் 46% இருக்கிறது. இவை பசுமை காடுகள், semi evergreen, moist deciduous, dry deciduous and scrub forest types மற்றும் மிக உயரத்தில் வளரும் புல்வெளி சூழல்களையும் உள்ளடக்கியது. பாரம்பரியமாக, காப்பி இந்த மரங்களின் நிழலில் தான் பயிரிடப்பட்டது. குடகில் உள்ள காபி எஸ்டேட்களில் ஒரு ஹெக்டேருக்கு குறைந்தபட்சம் 270 மரங்களும், சராசரியாக 350 மரங்களும் இருக்கின்றன. பிராககிரி வனவிலங்கு சரணாலயம் அருகாமையில் ஹெக்டேருக்கு 640 மரங்கள் வரை வளர்கின்றன. இது இந்த எஸ்டேட்களை உலகிலேயே மிக அடர்த்தியான வேளாண்-வனவியல் அமைப்பாக ஆக்கியுள்ளது. குடகு, பொன்னம்பட்டியில் உள்ள வனவியல் கல்லூரியின் வனவியல் மற்றும் சுற்றுச்சூழல் அறிவியல் பல்கலைக்கழகத் தலைவர், சி.ஜி.குஷாலப்பா, “உலகில் மிகக் குறைந்த நிலப்பரப்பே குடகில் உள்ளது போல காபியை விளைவிக்கின்றன.” என்று கூறினார். அவர் மேலும், “நாங்கள் அரேபிக்கா மற்றும் ரொபஸ்டா காபி வகை மரங்களின் நிழலுக்குக் கீழே விளைவிக்கின்றோம். எங்கள் நிழல்-வளர்ப்பு ரொபஸ்டா அதிக விலைக்கு விற்கப்படுகிறது. நிழலுக்குக் கீழே விளைவிக்கப்படும்போது, காபி மெதுவாகவும் முழுவதாகவும் வளர்கிறது. இதனால் அவை நல்ல சுவையைத் தருகிறது.” என்றார். மேற்கு தொடர்ச்சி மலைகளில் இந்த வருடம் தென்மேற்கு பருவக்காற்றால் போதிய மழைப்பொழிவு இல்லை. இதனால் கர்நாடக காவிரி நீர்த் தேக்கங்களில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்ப்பட்டது. இது தமிழக காவிரி கரையோரங்களில் உள்ள பகுதிகளுக்குத் தண்ணீர் தருவதில் பிரச்சினை ஏற்பட காரணமாக உள்ளது. இந்த விவாதம் நடந்து கொண்டிருக்கையில், சுற்றுச்சூழலை சீர்படுத்தும் பணிகள் குடகு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் மூலம் காப்பி தோட்ட விவசாயிகள் எந்த வனத்தின் கீழ் பயிரிடுகிறார்களோ அதைக் காத்து காவிரியில் நீரோட்டத்தை தொடரும்படி செய்கின்றனர். இந்த செயல்கள் நீர்பிடிப்புப் பகுதிகளில் பருவநிலை மாறுதல்களை தடுக்கவும் உதவிகரமாக இருக்கும். பல்வேறு வகையான மரங்களாலான வனப் போர்வை காப்பித் தோட்டங்களில் காணாமல் போய்க் கொண்டிருக்க, தென்மேற்கு பருவக் காற்றின் பெருமழை வேகமாக புரண்டோடி, மேற்ப்பரப்பில் இருக்கும் மதிப்புடைய மணலை அடித்து செல்கின்றது. இது வெள்ளத்தை உருவாக்கி பின்பு நீண்ட கால வறட்சிக்கும் வித்திடுகிறது. வானிலை மாற்றம் ‘காப்பி’ மழையின் மூலம் அளவிடுதல் கர்நாடக குடகு மாவட்ட காபி தோட்டக் காரர்கள், மிக கவனமாக மழைப்பொழிவைப் பதிவு செய்து வருகின்றனர். சிலர், பல பத்தாண்டுகளுக்கு முன்பு வரை விபரம் வைத்துள்ளனர். அவை மாறிவரும் மழைப்பொழிவு அளவின் கதையைச் சொல்கின்றன. இந்த மாறி வரும் பாங்கு காப்பி வளர்ப்பதிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இது மேலும் மலைகளிலும் சமவெளிகளிலும் மாறிவரும் பருவநிலை மாற்றத்தைப் பற்றியும் சுட்டுகிறது. இந்த மழையளவை கணக்கிடும் மையங்கள் இருப்பதால், இந்தியாவின் மற்ற இடங்களை விட குடகு பகுதியில் மழைப்பொழிவு போக்குகளை மிகத் துல்லியமாக அறிய முடிகிறது. மழையின் சராசரி அளவு மேற்கு மூனையில் 5000 மில்லி மீட்டராகவும் கிழக்கு முனையில் 1200 மில்லி மீட்டராகவும் வேறுபட்டுள்ளது. இந்தத் தரவுகள் ஒரு சர்வதேசக் கூட்டுத் திட்டத்தின் அடிப்படை கணக்கீட்டின் ஒரு பகுதியாக எடுத்துக் கொள்ளப்பட்டது. அந்த திட்டம் குடகு மாவட்டத்திலுள்ள தனித்துவமான வேளாண்-வனவியல் காபிபிணையம் திட்டத்தில் (CAFNET – Coffe Agro-Forestry Network) பங்கேற்பாளராக உள்ளது. கடந்த 60 வருடங்களில் 118 காபி தோட்டங்களில் மழைப்பொழிவின் அளவை இந்தத் திட்டம் பகுப்பாய்ந்துள்ளது. காஃப்நெட் கடந்த 35 வருடங்களில் மழைப் பருவம் 14 நாட்கள் குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளது. அது மேலும், கடந்த 12 முதல் 14 அண்டு கால சுழற்ச்சியிலேயே மழைப்பொழிவுகளில் அதீத ஏற்றத்தாழ்வுகள் ஏற்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளது. காப்பி நிலபரப்பில் குறைவான மழைப்பொழிவு மேற்குறிப்பிட்ட கால சுழற்சியின் குறைவான புள்ளியாக இருப்பதாலோ அல்லது எல்நினோவின் மாறும் மழைப்பொழிவின் பாங்கோ, 2015 மற்றும் 2016தான் குடகு பகுதியில் மிகக் குறைவாக மழைபெய்துள்ள ஆண்டுகள். தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக மழைப் பொய்த்துள்ளது. 2015 இல் 19% மழைப்பொழிவு குறைந்துள்ளது. இதன் காரணமாக, குடகு மாவட்டத்தையடுத்து காவிரியின் குறுக்கே அமைந்துள்ள கிருஷ்ண ராஜ சாகர அணையில் இந்த வருடம் நீர் இருப்பளவு 31 % குறைந்துள்ளது. பொன்னம்பெட், குண்டா கிராமத்தின் காப்பி வளர்ப்பர் கே.கே.நரேனின் கள அளவீடுகள் இதை உறுதிபடுத்துகின்றன. “எங்களின் சாதாரண மழையளவு 90 முதல் 100 இன்ச்கள் (2200 முதல் 2500 மில்லி மீட்டர்). இந்த வருடம் 38 இன்ச்கள் தான் பெய்துள்ளது. பொதுவாக வருடத்தின் இந்த நேரத்திற்குள் 70 % மழை பெய்துவிடும்.” என்கிறார். காப்பி தோட்டக்காரர்கள் கடந்த சில வருடங்களின் ஒழுங்கற்ற மழைப்பொழிவால் குழம்பியுள்ளனர். டாடா காபி நிறுவனத்தின் தலைவர் எம்.பி.கணபதி, “மழை மற்றும் வானிலை பாங்குகள் கடந்த சில வருடங்களாக அதிகம் எதிர்பாராத வகையில் உள்ளது.” என்றார். அவர் மேலும், “மழையளவு மாறவில்லை என்றாலும், மழைப்பொழிவு நன்றாக பகிர்ந்து இருப்பதில்லை எனவும் மிக அதிக வறட்சி காலத்தைத் தொடர்ந்து மிக கன மழை பெய்கிறது. அதைத் தொடர்ந்து அதிக திசை வேகக்காற்றும் வீசுகிறது. இது எங்களின் விவசாய மேலாண்மையைக் கடினப்படுத்தியுள்ளது.” என்று எடுத்துரைத்தார். அரும்பு மழைச்சாரல் (Blossom showers) பாதிக்கப்பட்டுள்ளது கொலங்காடு கிராமத்தைச் சார்ந்த காப்பி விவசாயியான பி.பி.தம்மையாவைப் பொறுத்த வரை, இந்த ஒழுங்கற்ற மழைப்பொழிவு பிப்ரவரி ஏப்ரல் மாதங்களில் ஏற்படும் அரும்பு மழைச்சாரலை சில வருடங்களாக பாதித்துள்ளது. காப்பி மலர்களை அரும்பச் செய்தலிலும், ஆண்டின் பிற்பகுதியில் நல்ல விளைச்சலைக் கொடுப்பதிலும் பெரும் பங்கு வகிப்பதால், இது காபி உற்பத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்று கூறுகிறார். குஷாலப்பா, இதனால் சுற்றுச்சூழலும் தாக்கத்துக்கு உள்ளாகி இருப்பதாக சொல்கிறார். அரும்புச் சாரல் ஒழுங்கற்றுப் போனதால், காபி விவசாயிகள் இந்த மாதங்களில் நிலத்தடி நீரை பயன்படுத்தத் தொடங்கினர். பாரம்பரியமாக காப்பி பயிரிடுதலுக்கு, கலப்பு-மரங்களில் நிழலும் அரும்புச் சாரலும் சேர்ந்து தான் நல்ல மகசூலைத் தந்தன. எப்போது அரும்புச் சாரல் நிலத்தடி நீரால் ஈடுசெய்யப்பட்டதோ, மரங்களின் நிழல் பெரிய பயன் தராமல் போனது. விவசாயிகளுக்கு மண்ணின் மரங்கள் மீது சார்பு குறைந்தது. இந்த பொதுவான போக்கால் மண்ணின் சொந்த மரங்கள் இறந்தன. இந்த மரங்களுக்கு பதிலாக சில்வர் ஓக் மரங்கள் நடப்பட்டது. யார் நிலத்தை வைத்திருக்கிறார்கள் என்பதைப் பொறுத்து வனங்கள் முற்றிலுமாக அழிக்கப்படும் சாத்தியக்கூறுகளும் இருக்கிறது. தம்மையாவின் தோட்டம் கொலகாடுலு கிராமத்தில் உள்ளது. மேற்கு முனையின் பீடபூமியிலிருந்து அருகாமையிலுள்ள வனம்சூழ் பள்ளத்தாக்கில் இருக்கிறது அவரது தோட்டம். அவர் தோட்டத்தில் ஒரு வருடத்திற்கு 5000 மி.மீக்கும் மேல் மழை பொழிகிறது. அவர், பள்ளத்தாக்குத் தளத்தில் அவர் முன்னோர் செய்தது போல் அரிசியைப் பயிரிடுகிறார். அந்த வனம் அவரது தாத்தா காலத்தில் இருந்தது போல அடர்த்தியாக இல்லை என்றாலும், மிச்சம் இருப்பதைக் காக்கவே அவர் விரும்புகிறார். தம்மையாவின் நிலப்பரப்பு குடகு மக்களுக்கு மரபு ரீதியாக வாய்த்திருந்த நிலத்தை ஒத்துள்ளது. காலங்காலமாக, கூட்டுக்குடும்பங்கள் எங்கெங்கு நிலம் வைத்திருந்தார்களோ அங்கெல்லாம் அரிசியைப் பயிரிட்டார்கள். காட்டிலிருந்து வைக்கோலையும் சுள்ளிகளையும் பொறுக்கி கால்நடைகளுக்குத் தீவனம் வைத்தனர். மரங்கள் அரசுடமை ஆதலால், அந்த குடும்பங்களுக்கு அவற்றின் மீது உரிமை கிடையாது. சில்வர் ஓக்கின் பொருளாதாரம் சில்வர் மரங்களை நடவோ, வெட்டவோ, விற்கவோ முடியும். சித்தாபுராவைச் சேர்ந்த காபி விவசாயியான எம்.சி.குஷலப்பா, கூறுகையில், ‘சில்வர் ஓக் மரம் காப்பி விவசாயிகளுக்கு இரண்டு வகையான இலாபத்தை ஈட்டித் தருகின்றன. ஒன்று, தேவைப்படும் நேரங்களில் குடும்பத்திற்கு வருமானம் அளிக்கும். இரண்டு, அதன் செங்குத்தான தண்டு, மிளகு கொடிகள் வளர்வதற்கு துணையாக இருக்கும். இது கூடுதல் வருவாயைக் கொடுக்கிறது. சொத்துரிமையும் இல்லாத பொருளாதார உந்துதலும் இல்லாத மண்ணின் சொந்த மரங்களை உயிரோடு வைத்திருப்பதற்கு விவசாயிகளுக்கு எந்தவித ஊக்கமும் இல்லை என்று விரிவுபடுத்தினார். இந்த வேளாண்-வனவியல் காப்பி முறை, சுற்றுச்சூழலுக்கு மிகவும் முக்கியமானது. இது மலைவாழ்வினருக்கான பருவநிலை மாற்றத்தை மட்டும் சமாளிக்கவில்லை, கூடவே பல இலட்சம் காவிரி நீரோடைகளுக்கு தண்ணீர் ஆதாரமாகவும் உள்ளது. இந்த வனங்களைப் பொறுத்தவரை ஒரு பிரச்சனை உள்ளது. நாட்டின் மற்ற பகுதிகளில் உள்ளது போல குடகு பகுதியில் வனங்கள் வனத்துறையிடம் மட்டும் இல்லை. இந்த பகுதியில் காடுகள் வனத்துறை மற்றும் விவசாயிகளின் கூட்டுக் கட்டுப்பாட்டில் உள்ளது. இதனால், அதைப் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிப்பதில் சிரமம் இருக்கிறது. இதை கூறுவதால், வனத்துறையினர் தான் காடுகளை முழுவதுமாக பாதுகாப்பவர்கள் என்று சொல்வதற்கில்லை. ஆனால், கட்டுப்பாடுகள் சீராக இருந்தால் பாதுகாப்பு நடவடிக்கைகளின் நடைமுறையை அதிகப்படுத்துவது உறுதியாக இருக்கும். பெயர் குறிப்பிட விரும்பாத வனத்துறை அதிகாரி ஒருவர், “குடகில் இருக்கும் பெரும்பான்மையான காடுகள் கட்டுபாட்டில் இல்லாதவை. எனவே, அதை உயிர்ப்புடன் வைத்திருக்க காபி விவசாயிகளுக்கு ஊக்கம் அளிக்க வேண்டும்.” என்றார். அவர் மேலும், “கிருஷ்ணராஜ சாகர அணைக்கு முன்னால் பாயும் காவிரியில் 90 % நீர்பிடிப்புப் பகுதி குடகில் தான் இருக்கிறது. விவசாயிகளிடம், அக ரீதியில் மாற்றத்தை ஏற்படுத்தி அதன் மூலம் மண்ணின் மரங்களையும் பல்லுயிரையும் காப்பாற்ற வேண்டும்.” என்று தெளிவுபடுத்தினார். காஃப்நெட் ஆய்வின் மூலம், சுற்றுச்சூழல் சேவைகளைப் பற்றி அளவிட முடியும். “நாங்கள் முறையே மண்ணின் மரங்கள் மற்றும் சில்வர் ஓக் மரங்கள் நீரியில் நிலையில் ஏற்படுத்தும் தாக்கத்தை ஆராய்ந்தோம். எங்கள் குழு, எவ்வளவு மழை ஊடுருவியது, தண்டுகள் வழியாக எவ்வளவு நீர் வந்தது, எவ்வளவு நீர் நிற்காமல் சென்றது மற்றும் எவ்வளவு நீர் மீள்நிரப்பு (recharged) செய்யப்பட்டது என ஆராய்ந்தோம்.” என்று விளக்கினார் குஷாலப்பா. சொந்த மரங்களின் மாயாஜாலம் இந்த ஆய்வு, வெளிநாட்டுத் தாவரமான சில்வர் ஓக்கின் நிழற்ப்போர்வையை அதிகரிப்பதால் மழை இடைமறிப்பின் மீது சிறிதளவே தாக்கத்தை ஏற்படுத்த முடிந்தது என்கிறது. ஏனென்றால், காபி செடிகளின் இடைமறிப்பைவிட (9% முதல் 22%) மரங்கள் இடைமறிப்பு குறைவானது (1% முதல் 6%). மண்ணின் சொந்த மரங்களிலிருந்து வெளியேறுவதை விட வெளிநாட்டு மரங்களிலிருந்து வெளியேறும் நீர் அதிகம். இருந்தாலும் சொந்த மரங்களின் நீராவி மற்றும் சொட்டுநீர் வெளியேற்றமும் நுண்ணிய பருவநிலை மாற்றத்தில் நேர்மறை தாக்கத்தை ஏற்படுத்துகிறது. மேலும், பெரும் நிழற்போர்வை மற்றும் ஆழமான வேர்கள் கொண்ட அமைப்பினால் மண்ணின் சொந்த மரங்கள் மிக ஆழத்தில் இருக்கும் நீர் தேக்கங்களுக்கு, குறிப்பாக பருவ காலங்களில் தண்ணீரை எடுத்துச் செல்ல உதவும். எனவே, நன்றாக மழை பொழியும் போது மண்ணின் மரங்கள் நீரைத் தேக்கி வைத்தும், அதை மெதுவாக ஆறுகளில் வெளியிடவும் செய்தது. அதே நேரத்தில் தோட்டங்களில் பருவநிலை மாற்றத்தைத் தாங்கும் சுற்றுச்சூழலையும் உருவாக்கியது. வேளாண்-வனவியல் கலப்பு அமைப்பு கார்பனையும் சமன்பாட்டில் வைத்திருக்க உதவியது. காஃப்நெட் ஆய்வு, அரேபிகா காபி வகை, உருவாக்கப்பட்ட வனத்தை விட கலப்பு தாவர போர்வையின் கீழ் நன்றாக வளர்ந்தது என்கிறது. சில்வர் ஓக்கின் கீழ் வளர்க்கப்படும் அரேபிகா, மண்ணின் சொந்த மரங்களின் கீழ் வளர்க்கப்படும் ரொபஸ்டா காபி வகையைவிட குறைவாகவே இருக்கிறது என்றது. சில்வர் ஓக்கின் கீழ் வளர்க்கப்படும் ரொபஸ்டா மற்ற எல்லா கலவையையும் விட குறைவு தான் என்றும் கூறியது. அரும்புச் சாரலின் மறைவு கூட காபி விவசாயிகள், அவர்களின் பசுமை போர்வையை அகற்றுவதற்குக் காரணமாக இருக்கலாம். எதிர் மறையாக, விவசாயிகளின் இந்த நடவடிக்கை சுற்றுப்புறத்தில் கார்பன் அளவை மேலும் அதிகரித்து குடகு பகுதியில் மழைப் பொழிவை பாதிக்கும். செறிவான உள்ளூர் அறிவு இந்த ஆய்வு, விவசாயிகள் அவர்களின் உள்ளூர் அறிவைப் பிரதானமாகக் கொண்டு உருவாக்கி பின்பற்றி வரும் பன்-தள வேளாண்-வனவியல் அமைப்பு உலகிலுள்ள பன்மைத்துவ அமைப்புகளில் ஒன்று என்கிறது. பாரம்பரியமிக்க வேளாண்-வனவியல் காபி அமைப்பு, பலதரப்பட்ட விலங்குகள், பறவைகள், செடிகள் மற்றும் நுண்ணியிர்களைக் காத்து பல்லுயிரையும் காக்கிறது. மேலும் கார்பனை கட்டுக்குள் வைத்து நீர் சார் சுற்றுச்சூழல் சேவைகளையும் காக்கிறது. மிளகு, மான்டரின் ஆரஞ்சுகள், வெண்ணிலா மற்றும் தேக்கு போன்ற பல்வேறு பயிர்கள் இந்த அமைப்பில் வளர்க்கப்படுவதால், காபி விலை சரியும் போது விவசாயிகளுக்கு உதவியாகவும் இருக்கும். காஃப்நெட் அறிக்கை, மர நிழலுக்குக் கீழே அரேபிக்கா மற்றும் ரொபஸ்டாவை வளர்க்கும் காபி விவசாயிகளுக்கு, அவர்களின் சுற்றுச்சூழல் சேவைகளுக்கான சன்மானம் வழங்கப்பட வேண்டுமெனக் கூறுகிறது. இதனால், பல்லுயிர் சமநிலையையும் அதன்மூலம் காவிரிக்கான நீரையும் காக்க முடியும் என்கிறது. PES இரண்டு வகைமைகளை சிபாரிசு செய்கிறது. ஒன்று சுற்றுச்சூழல்-சான்றிதழ் மற்றும் குடகு காபிக்கென்று நிலம் சார் பாதுகாப்பு குறிப்பிடுதல் ஆகும். சுற்றுச்சூழல் சேவைக்கான சன்மானம் சுற்றுச்சூழல் சேவைக்கு சன்மானம் (Paying for ecosystem serivice – POS) மூலம் விவசாயிகளுக்கு உற்சாகம் ஊட்டப்படுகிறது. இதன் மூலம், கலப்பு தாவர மரங்களின் போர்வைக்குக் கீழ் பாரம்பரியமிக்க காபி பயிரிடுதலை தொடர் வோருக்கு சுற்றுச்சூழல் – சான்றிதழ் (ecocertification) வழங்கப்படுகிறது. இந்த செயல், குடகு நிலபரப்பிற்கே உரித்தான சுற்றுச்சூழல் சேவைகளை உறுதிபடுத்த உதவும். மேலும் இதைப் போன்ற பிற சேவைகளையும் மற்றும் காவிரி நோக்கி பாயும் பருவநிலை சமன்பாட்டையும் உறுதி செய்யும். கலப்பு-தாவர மரங்களின் கீழ் வளர்க்கப்படும் காபி வகைகளுக்குக் கொடுக்கப்படும் சுற்றுச்சூழல்-சான்றிதழ் நடைமுறை, கடந்த ஐந்தாண்டுகளில் குடகு மாவடத்தில் பிரபலமடைந்துள்ளது. கிட்டத்தட்ட 900 காபி விவசாயிகள் சுற்றுச்சூழல்சான்றிதழ் அளித்த காபிக்கு மாறியுள்ளனர். ஒரு ஏக்கருக்கு பத்து விவசாயிகளே என்று வைத்துக் கொண்டாலும், மொத்தம் 10,000 ஏக்கர் அளவிற்கு சுற்றுச்சூழல்-சான்றிதழ் பெற்ற காபிக்கு இது வித்துடுகிறது. கூடுதலாக, டாடா காபி அதன் 13 எஸ்டேட்களுக்கும் சுற்றுச்சூழல்-சான்றிதழ் வாங்கியதை சேர்த்துக் கொண்டால், குடகு மாவட்டத்தில் 20,000 ஏக்கர் காபி பயிரிடுதல் சுற்றுச்சூழல் பாதிப்படைவதை குறைக்கும் நோக்கில் இருக்கிறது. சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்கான ஊக்கமாக, காபி விவசாயிகள் அவர்களின் காபி கொட்டைகளுக்கு சந்தை விலையை விட அதிகமாக பெறுகிறார்கள். மண்ணின் சொந்த மரங்களின் முக்கியத்துவம் சுற்றுச்சூழல்-சான்றிதழ் சார்ந்த இந்த பயிற்சியின் பிரதான பாடம், சொந்த மரங்களின் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்வது தான், என்கிறார் நரேன். அவர் மேலும், “எங்களுக்கு சொந்த மரங்களைப் பற்றி தெரியாமல் இல்லை, அதை தொடர்ச்சியாக பாதுகாப்பதில் ஆர்வமில்லாமல் இருந்தோம். சொந்த மரங்கள் எங்களுக்குப் பொருளாதார இலாபத்தை தரவில்லை. எனவே சில்வர் ஓக்கின் மீது கவனம் செலுத்தினோம்.” நரேனைப் பொறுத்தவரையில், மழை காடுகள் சார்ந்த சுற்றுச்சூழல்-சான்றிதழ் முறை, மண்ணின் சொந்த நிழல் மரங்கள் இருக்கிறதா என்று பார்க்கிறது. மேலும் சான்றிதழ் வழங்குபவர்கள், பணியாளர் மேலாண்மை, பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் வழங்கப்படுகிறதா என்றும், பணியாளர்கள் தங்குமிடம் சுத்தமாக இருக்கிறதா போன்ற வற்றைப் பார்த்துதான் வழங்குகிறார்கள். அவர்கள், குழந்தை தொழிலாளர்களைப் பயன்படுத்தக் கூடாது என்பதில் கறாராக இருப்பர். “அவர்கள் வேதியல் பொருட்கள் எப்படி பயன்படுத்தப்படுகிறது என்பதையும் கண்காணிக்கிறார்கள். அவர்கள் வேதியல் பொருட்களுக்கு தடை விதிப்பதில்லை. ஆனால், சிலவற்றுக்கு கட்டுப்பாடும், மற்றவைக்கு எப்படி பயன்படுத்தப்படுகிறது என்பதையும் நோக்குகிறார்கள். நாங்கள் நதிகள் அல்லது தொட்டிகள் பக்கத்தில் பூச்சிக்கொல்லி வேதியல் பொருட்களை பயன்படுத்தக் கூடாது என்பதில் அவர்கள் உன்னிப்பாக உள்ளனர். உள்ளூர் சுற்றுச்சூழலை சீராக வைத்திருப்பதில் அவர்கள் கவனம் செலுத்துகின்றனர் என்று விரிவாகக் கூறினார் காத்திருக்கும் சவால்கள் மேற்குறிப்பிட்டவைகள் இருப்பினும், சுற்றுச்சூழல்-சான்றிதழ் நடைமுறை எவ்வளவு வேகமாக பரப்பப்பட்டாலும், சில பிரச்சினைகளையும் கடக்கவேண்டி இருக்கிறது என்கிறார் இயற்கை பாதுகாப்பு நிறுவனத்தின் (National Condervation Foundation-NCS) விஞ் ஞானிடி.ஆர்.சங்கர் ராமன். இந்த நிறுவனம் தான் ஆரம்ப வருடங்களில் மழைக்காடுகள் சான்றிதழ் வழங்குவதில் ஈடுபட்டிருந்தது. அவர் மூன்று புள்ளிகளில் கவனம் வேண்டுமென சொல்கிறார். மிக அதி வேகத்தில் சான்றிதழ் வழங்குவது, நிர்ணய குழுவில் உயிரியிலாளர்கள் மற்றும் சமூக விஞ்ஞானிகள் கிட்டத்தட்ட இல்லாமல் இருப்பது, மற்றும் பாதுகாப்பு வழிமுறைகளில் (பசுமை போர்வை மற்றும் சொந்த மண் சார்ந்த உயிரினங்களைக் குறைப்பது போன்றன) சான்றிதழ் வழங்குவதை நீர்த்துப் போகச் செய்வது. “அதிவேக சான்றிதழ் வழங்குவதால் மேலும் மேலும் விவசாயிகளின் நிலம் சுற்றுச்சூழல்-சான்றிதழ் கிழ் கொண்டுவரப்படுகிறது. இருப்பினும், சான்றிதழ் வழங்கும் நடைமுறை களிலும் கறார் தன்மை தொடர்ச்சியாக பின்பற்றப் படும் என நம்புவோம். அப்படிச் செய்வதால், மண் சார்ந்த பசுமையைப் பாதுகாக்கும் இறுதி நோக்கத்தில் சமரசமில்லாமல் இருக்கும்.” என்று கவனப்படுத்துகிறார். அதிக விவசாயிகள் சுற்றுச்சூழல்சான்றிதழுக்கு விண்ணப்பிப்பதால், கலப்பு-மர நிழலில் விளைவிக்கப்படும் காபி முறைகளை பாதுகாப்பதற்கான இயக்கம் தோன்றியுள்ளது. இந்த விளைவிக்கும் முறை தொடர்ந்து உறுதியடைவதற்கு, விவசாயிகள் அவர்களின் சுற்றுச்சூழல்-சான்றிதழ் உற்பத்திக்கு தொடர்ச்சியாக நல்ல பொருளாதார பலன்கள் இருக்க வேண்டும். காபி விவசாயிகளுக்கு சுற்றுச்சூழல்சான்றிதழ் மூலம் வரும் இந்த கூடுதல் இலாபம், குடகின் தனித்துவமிக்க வேளாண்-வனவியல் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க உதவும், மேலும் காவிரியில் பாயும் நீரையும் இது பாதுகாக்கும். பெங்களூரூ மற்றும் பிற கரையோரங்களில் வசிக்கும் பல இலட்சம் கீழ்க்கரை மக்கள் மேற்கு கரையின் காபி விவசாயிகளை, அவர்களின் குடிநீருக்காகவும் பருவ சமனிலைக்காகவும் நன்றி கூறுவர். இந்தியாவின் முன்னணி சுற்றுசூழல் பத்திரிக்கையாளர்களில் ஒருவர். பேனோஸ் சவுத் ஆசியா அமைப்பின் பிராந்திய சுற்றுச் சூழல் மேலாளராக இருக்கிறார். இந்திய சுற்றுச் சூழல் பத்திரிக்கையாளர்களுக்கான அமைப்பில் செயலாளராக இருக்கிறார்.
உலக அளவில் கார் தொழிற்சாலைகளில் முன்னணி நிறுவனங்களான அமெரிக்காவின் போர்டு நிறுவனமும், ஜப்பானைச் சேர்ந்த டொயாட்டாவும் மின்சாரத்தில் இயங்கும் காரை அறிமுகப்படுத்த உள்ளன. மின்சாரத்தை பேட்டரியில் சேமித்து ஓடும் கார்கள், அடுத்த இரண்டு ஆண்டுகளில் விற்பனைக்கு வரும் என போர்டு தெரிவித்துள்ளது. இந்த காரை ஒரு முறை சார்ஜ் செய்தால் 160 கி.மீ. தூரம் ஓடும். இதன் செயல் தலைவர் பில் ஃபோர்டு ஜூனியர், அடுத்த ஆண்டு, எரிவாயு (கேஸ்), மின்சாரத்தில் இயங்கும் இரட்டை எரிபொருள் கார்களை விற்பனைக்கு அறிமுகப்படுத்த உள்ளதாக தெரிவித்தார். மின்சாரத்தில் ஓடக்கூடிய வேன்கள் அடுத்த ஆண்டு சந்தைக்கு வரும் என்றும் அவர் கூறினார். ஜப்பானைச் சேர்ந்த முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான டொயோட்டாவும், பேட்டரியில் ஓடக்கூடிய கார்களைத் தயாரிக்கத் திட்டமிட்டுள்ளது. இதன் கார்கள் 2012 ஆம் ஆண்டு வாக்கில் விற்பனைக்கு வரும் என்று தெரிகிறது. இதில் இருவர் பயணம் செய்யலாம். இவை முதல் கட்டமாக அமெரிக்காவில் அறிமுகப்படுத்தப்படும் என டொயோட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது. சூரியனில் “திடீர்” வெடிப்பு: பூமியை பெரிய அளவில் வெப்பம் தாக்கும் அபாயம்- மக்களுக்கு ஆபத்து ஏற்படுமா?
எமது அமைச்சர்கள் மத்தியில் ஒழுக்கம் இல்லாமல் நாட்டு மக்களுக்கு ஒழுக்கத்தைக் கட்டியெழுப்ப முடியாது என நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதி அமைச்சர் சுசில் பிரேம் ஜெயந்தை நீக்கியுள்ளார். அவர் அரசையும் அரசின் திட்டங்களைப் போன்றே கொள்கைகளையும் பல சந்தர்ப்பங்களில் விமர்சித்துள்ளார். இதன் காரணமாக ஜனாதிபதி அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கியுள்ளார். அரசாங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர் என்ற வகையில் அரசாங்கத்தின் கொள்கைகளைப் பாதுகாக்கும் பொறுப்பு எமக்கு உள்ளது. கொள்கைகளில் தவறு இருந்தால், அதைப் பற்றிப் பேச உரிய இடங்கள் உள்ளன. அது பற்றி அமைச்சரவையில் பேசலாம். மேலும், ராஜாங்க அமைச்சர்கள் ஜனாதிபதியைச் சந்திக்கின்றனர். அந்த சமயங்களில் அதைப் பற்றிப் பேசலாம். அவர்கள் ஒரு குழுவுக்காக விளையாடினால், அந்த குழுவுக்குள் பேச வேண்டும். அவர்கள் வெளியில் பேசக்கூடாது. மூத்த அமைச்சர்கள் என்ற முறையில் மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும். முதுகெலும்பு நேராக இருக்க வேண்டும். ஜனாதிபதி அவர்கள் சரியான முடிவை எடுத்துள்ளார். இது முன்னரே எடுத்திருக்க வேண்டிய முடிவு. அமைச்சரவையின் கூட்டுப் பொறுப்பைப் புரிந்து கொள்ளாமல் அமைச்சுப் பதவியை வகிப்பது ஏற்புடையதல்ல. வெளியில் செய்யும் அரசியலை அமைச்சரவையில் செய்ய முடியாது. அமைச்சரவைக்குள் எதனையும் பேசி தீர்த்துக்கொள்ள ஜனாதிபதி பூரண சுதந்திரம் வழங்கியுள்ளார்.மேலும் குழுக் கூட்டங்களில் பேசலாம். இராஜாங்க அமைச்சர்கள் ஜனாதிபதியைச் சந்திக்கும் போது பேச முடியும். ஆனால் வெளியில் சென்று விமர்சிப்பது தவறு. ஜனாதிபதியை நம்பி இந்த நாட்டின் பெரும்பான்மையான மக்கள் அவருக்கு வழங்கிய ஆணையைப் பாதுகாக்க வேண்டும். எமது அமைச்சர்கள் மத்தியில் ஒழுக்கம் இல்லாமல் நாட்டு மக்களுக்கு ஒழுக்கத்தைக் கட்டியெழுப்ப முடியாது. அமைச்சரவை கூட்டத்தில் பேசப்படும் விஷயங்கள் வெளியில் பேசப்படுவதில்லை. பயமுறுத்துவதற்காக நாம் யாரும் இவற்றைச் செய்வதில்லை. அரசியல் செய்யத் தெரிந்திருக்க வேண்டும். அரசியல் செய்யும்போது கடைப்பிடிக்க வேண்டிய விடயங்கள் குறித்து விழிப்பாக இருக்க வேண்டும். அரசாங்கத்தை விமர்சிப்பதுதான் எதிர்க்கட்சிகளின் பணி. அரசாங்கத்துக்குள்ளேயே அமர்ந்து எதிர்க்கட்சி வேடம் போட வேண்டிய அவசியம் இல்லை. இந்த சம்பவத்தை விளம்பரப்படுத்துவதில் எதிர்க்கட்சிகள் இப்போது முட்டாள்தனமான மகிழ்ச்சியை அனுபவிக்கின்றன. அரசாங்க ஊழியர்களுக்கு ரூ. 5000 வழங்கப்படுவது மிகவும் திட்டமிட்டு முன்னெடுக்கப்பட்டதாகும். இவை பற்றி முன்கூட்டி தம்பட்டம் அடிக்க மாட்டோம். அந்த விடயங்களைச் சரியான நேரத்தில் செய்வோம். எதிர்க்கட்சிகள் எப்போதும் இந்த நாட்டு மக்களைத் தவறாக வழிநடத்த முயற்சிக்கின்றன. அவை இதுவரை சொன்னது, செய்தது எல்லாம் பொய்யாகிவிட்டன. நாட்டில் உள்ள அரச ஊழியர்கள் மற்றும் சமுர்த்தி பயனாளர்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. வீட்டுத்தோட்டம் அமைக்கப் பணம் ஒதுக்கப்பட்டுள்ளது. தோட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டது. ஒவ்வொரு துறையையும் பாதுகாக்கும் வகையில் இந்த முடிவுகளை எடுத்துள்ளோம். இவை தேர்தலை இலக்காகக் கொண்ட நடவடிக்கைகள் அல்ல. நாட்டு மக்களுக்கு உரிய நேரத்தில் கிடைத்த நிவாரணங்கள் இவை. மக்களுக்கு என்ன நிவாரணம் வழங்கப்பட்டது என்று எதிர்க்கட்சியினர் எங்களிடம் கேட்டனர். இவை மக்களுக்குக் கொடுக்கப்பட்ட நிவாரணங்கள் என்கிறோம். ஜனவரி 15 இல் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி அடையும் என்றார்கள். ஆனால் ஜனவரி 15 ஆம் திகதி மீரிகமவிலிருந்து குருநாகல் வரையிலான மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் இரண்டாவது பகுதியைத் திறந்து வைப்போம். அமைச்சர் பசில் நாடு திரும்பியதும் நாடு அழியும் என்றார்கள். பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து வருகிறது என்றார். இந்த சலுகைகளை வழங்குவது நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடையவில்லை என்பதை நிரூபிக்கிறது என தெரிவித்துள்ளார்.
3rdEyeReports | ThirdEyeReports creates Brands & Branding of Celebrities, Products, Services in different fields Stay tuned for latest blogs & video updates on latest happenings... Featured post 10 ரூபாய் சாப்பாடு! இன்று 400-வது நாள் 10 ரூபாய் சாப்பாடு! இன்று 400-வது நாள். நடிகர் கார்த்தியின் மக்கள் நல மன்றம் கொண்டாட்டம். கார்த்தி மக்கள் நல மன்றம் சார்பாக வளசரவாக்கம் தல... Wednesday, 24 August 2022 லார்ட் ஆஃப் தி ரிங்ஸ்: தி ரிங்க்ஸ் ஆஃப் பவர் லார்ட் ஆஃப் தி ரிங்ஸ்: தி ரிங்க்ஸ் ஆஃப் பவர் தொடரின் பிரீமியருக்கு முன் இறுதி ட்ரெய்லர் வெளியீடு மும்பை, இந்தியா —ஆகஸ்ட் 24, 2022 — பிரைம் வீடியோ வழங்கும் லார்ட் ஆஃப் தி ரிங்க்ஸ்: தி ரிங்க்ஸ் ஆஃப் பவரின் இறுதி டிரெய்லர் இன்று வெளியிடப்பட்டது. இரண்டாம் காலத்தில் மத்திய பூமியின் விரிவாக்கத்தையும் டோல்கீனின் புகழ்பெற்ற மற்றும் அனைவராலும் விரும்பப்படும் கதாபாத்திரங்கள் எப்படி முரண்பாடுகளைக் கடந்து அதிக தூரம் பயணித்து மத்திய பூமிக்கு வரும் தீங்குகளுக்கு எதிராக பாதுகாப்பு அளிப்பதை இந்த இரண்டு நிமிடம் மற்றும் 36 வினாடிகள் கொண்ட இந்தப் புதிய டிரெய்லர் வெளிப்படுத்துகிறது. நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட இப்புதிய தொடரில் தீங்குக்கு எதிராக விதியின் சோதனைக்கு எப்படி பல்வேறு கதாபாத்திரங்கள் உள்ளாகின்றன என்பது காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. முக்கிய கதாபாத்திரங்களான கலாட்ரியல் (மார்ஃபிட் கிளார்க்), எல்ராண்ட் (ராபர்ட் அராமயோ), ஹை கிங் கில்-கலாட் (பெஞ்சமின் வாக்கர்) மற்றும் செலிபிரிம்பர் (சார்லஸ் எட்வர்ட்ஸ்); ஹார்ஃபூட்ஸ் எலனோர் "நோரி" பிராண்டிஃபுட் (மார்கெல்லா கவெனாக்) மற்றும் லார்கோ பிராண்டிஃபுட் (டிலான் ஸ்மித்); தி ஸ்ட்ரேஞ்சர் (டேனியல் வெய்மன்); நியூமெனோரியன்ஸ் இசில்டுர் (மாக்சிம் பால்ட்ரி), ஈரியன் (எமா ஹார்வத்), எலெண்டில் (லாயிட் ஓவன்), பாராசன் (டிரிஸ்டன் கிராவெல்), மற்றும் குயின் ரீஜண்ட் மிரியல் (சிந்தியா அடாய்-ராபின்சன்); ட்வார்ப்ஸ் கிங் டுரின் III (பீட்டர் முல்லன்), பிரின்ஸ் டுரின் IV (ஓவைன் ஆர்தர்), மற்றும் பிரின்சஸ் திசா (சோபியா நோம்வெட்); சவுத்லேண்டர்ஸ் ஹால்பிரண்ட் (சார்லி விக்கர்ஸ்); ப்ரோன்வின் (நசானின் போனியாடி); மற்றும் சில்வன்-எல்ஃப் அரோண்டிர் (இஸ்மாயில் குரூஸ் கோர்டோவா). ஆகியோர் இந்த ட்ரெய்லரில் இடம்பெற்றுள்ளனர் இந்த பல சீசன் சித்திரத்தின் முதல் இரண்டு எபிசோடுகள் பிரைம் வீடியோவில் 240-க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் உலகம் முழுவதும் செப்டம்பர் 1-2 வெள்ளியன்று (நேர மண்டலம் சார்ந்தது) வெளியாகும் மற்றும் வாரந்தோறும் புதிய எபிசோடுகள் கிடைக்கும்.
Tamil Kamakathaikal வணக்கம் நண்பர்களே, இந்த கதையில் வீட்டில் வேலை செய்து கொண்டு இருந்த வேலைக்காரி மற்றும் அவளின் மகளை,நானும் தந்தையும் மாற்றி மாற்றி ரகசியமாக ஒத்த சம்பவத்தைப் பகிர்ந்து கொள்கிறேன். இதைப் படித்து விட்டு நீங்களும் முயன்று பாருங்கள் ! இது என் வாழ்வில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக எழுதியது. மதுரை மாவட்டத்தின் அருகில் உள்ள ஒரு பூங்காவனம் என்ற அழகிய கிராமத்தில் நடந்த சுவாரசியமான கதை. அந்த ஊரில் மிகவும் பணக்கார மற்றும் பெரிய குடும்பமாக இருந்தோம். எங்களின் வீடு ஊருக்குச் சற்று ஒதுக்குப் புறமாக இருக்கும், வயல் வேலி நடுவில் அமைத்து இருக்கும். வெளியிலிருந்து பார்க்கப் பங்களா வீடு போன்று பெரியதாக இருக்கும். வீட்டில் மொத்தம் பத்து பேர் இருப்பார்கள். பெற்றோர்கள், அண்ணன், அண்ணி, தாத்தா, பாட்டி, குழந்தைகள் என்று பெரியதாக இருக்கும். என் பெயர் வெற்றிவேல், வயது 24. கல்லூரியில் இறுதி ஆண்டு படிப்பு முடித்து விட்டு விடுமுறையில் வீட்டில் வெட்டியாக இருந்து வந்தேன். அண்ணன் மற்றும் தந்தை வெளியூரில் சொந்த தோழி செய்து கொண்டு இருக்கிறார்கள். அம்மா மற்றும் அண்ணி சொந்த ஊரில் டீச்சராக வேலை செய்து கொண்டு இருந்தார்கள். தாத்தா மற்றும் பாட்டி வீட்டில் ஒரு அறையில் இருப்பார்கள். பெரிய குடும்பம் என்பதால் வீட்டுக்கு இரண்டு முதல் நான்கு வேலை ஆட்கள் தேவைப்பட்டார்கள். தொட்டது வேலைக்கு ஆண்களும், வீட்டுச் சமையல் வேலைகளுக்கு இரண்டு பெண்களும் இருந்தார்கள். நான் வீட்டில் தினமும் மொபைல் நொண்டிக் கொண்டு மற்றும் ஆபாசப் படத்தைப் பார்த்துக் கொண்டு நாட்களைக் கழித்துக் கொண்டு இருப்பேன். இரண்டு மாடி இருப்பதால் மேலே சென்று அறையை மூடிக்கொண்டு ஜன்னல் வழியாக இயற்கையை ரசித்துக் கையடித்துக் கொண்டு இருப்பேன். அப்பொழுது என் நண்பன் தினமும் ஆபாச வீடியோ அனுப்பி விடுவேன். அதைப் பார்த்து அந்த கதாபாத்திரத்தைப் போன்று நினைத்துக் கையடித்துக் கொண்டு இருப்பேன். அதுபோன்று ஒரு நாள் வேலைக்காரியுடன் வீட்டின் சொந்தக்காரன் மேட்டர் அடிப்பது போன்று வீடியோ வந்தது. பின்னர் என் நண்பன் போன் செய்தான், ” டேய் ! மச்சான் வேலைக்காரி படம் எப்படி இருந்தது ?” என்று கேட்டான். “டேய்! எப்படி டா உனக்கு மட்டும் இப்படியாலம் படம் கிடைக்குது ? சூப்பரா இருக்கு டா ! அதைப் பார்த்துக் கையடிக்கப் போகிறேன் ” என்று கூறினேன். “வீட்டில் வேலைக்காரியை வைத்துக்கொண்டு , என் கையடிக்க போற ? வீட்டில் இருக்கும் வேலைக்காரியை முயன்று பார் !” என்று கூறினான். எனக்கு ஒரு நிமிடம் ஒன்றும் புரியவில்லை பின்னர் போன் வைத்து விட்டு யோசிக்க ஆரம்பித்தேன். வீட்டில் அதிக நேரம் நான் மட்டும் தனியாக இருக்கிறேன், எதற்கு வேலைக்காரியை முயன்று பார்க்கக் கூடாது ? யோசித்தேன். பின்னர் எனக்கு ஒரு காபி வேண்டும் என்று இரண்டாவது மாடியிலிருந்து சத்தமாகக் கேட்டேன். ஐந்து நிமிடத்துக்குப் பிறகு வேலைக்காரி குமுதா கதவைத் தட்டினால், உள்ளே வரச் சொன்னேன். ” இந்தாங்க ஐயா ! காபி ! ” என்று கீழே குனிந்து கொடுத்தாள். அந்த நிமிடம் உறைந்து நின்றேன், அவளின் இரண்டு முலைக் காம்புகளும் சுமார் 42 அளவில் மிகவும் பெரியதாகக் கீழே தொங்கியது. ப்ளௌஸ் உள்ளே ப்ரா அணியாமல் காம்புகளின் நுனியைத் தெளிவாகக் கட்டிக்கொண்டு இருந்தாள். நான் ஷார்ட்ஸ் போட்டுக்கொண்டு ஜட்டி அணியாமல் இருந்தேன். சுன்னி ஷார்ட்ஸ் உள்ளே 90 டிகிரி கோணத்தில் எழுந்து நின்று கொண்டு இருந்தது. அதைப் பார்த்தும் பார்க்காத மாதிரி பார்த்துச் சிரித்தால், குமுதாவின் இடுப்பு வளைவுகள் மேலும் கவர்ச்சியை ஏற்றியது. இடுப்பின் நடுவிலிருந்த தொப்புள் ஓட்டை அழகாக இருந்தது, ” நான் குமுதாவின் கையை தடவிக்கொண்டு காபியை வாங்கினேன் !”. அவள் எந்த ஒரு எதிர்ப்பும் காட்டிக்கொள்ளாமல் சிரித்துக்கொண்டு நடந்து சென்றால், பின் அழகைப் பார்க்கும்போது சூத்து மேலும் கீழுமாகத் தளதள வென்று ஆடிக்கொண்டு இருந்தது. சூத்தை விரித்து சுன்னியை விட்டு ஆட்டிவிட வேண்டும் என்று நினைத்தேன். பின்பு மீண்டும் நண்பனுக்கு போன் செய்து,” டேய் ! மச்சான் என் வீட்டின் வேலைக்காரி கவர்ச்சியாக இருக்கிறாள், என்னைப் பார்த்துச் சிரித்துவிட்டுப் போகிறாள் ” என்று கூறினேன். “அடுத்த ஒரு வாரத்துக்குள் உஷார் செய்து மேட்டர் அடித்து விடு ” என்று கூறினான். நான் அவளின் ப்ரா அணியாத முலையைக் கண்களை மூடி கனவு கண்டு கையடிக்க ஆரம்பித்தேன். இதற்கு முன்பு எல்லாம் ஆபாசப் படத்தைப் பார்த்துக்கொண்டு மட்டுமே கையடிப்பேன் ஆனால் தற்பொழுது வேலைக்காரியின் முலையை நினைவில் வைத்துக் கொண்டு கையடிக்கும் அளவுக்கு முன்னேறினேன். அவளின் இரண்டு காம்புகளும் சுன்னியின் நடுவில் இருப்பது போன்று நினைத்துக் கொண்டு சுன்னியை நன்றாக ஆட்டிக் கொண்டு இருந்தேன். சுமார் 30 நிமிடம் விடாமல் பூளுக்கு எண்ணெய் மற்றும் எச்சு எல்லாம் விட்டு வேகமாகக் கையடித்து விந்தை வெளியில் கக்கினேன். பின்பு ஆடைகளை அணிந்து கொண்டு கீழே சென்றேன். சமையல் அறையில் இரண்டு வேலைக்காரிக்கு வேலை செய்து கொண்டு இருந்தார்கள். குமுதா மற்றும் வயதான மாற்று ஒரு பாட்டி, நான் அடிக்கடி மாற்று ஒரு பாட்டிக்குத் தெரியாமல் குமுதாவை சைட் அடித்தேன். குமுதாவுக்கு மாற்று ஒரு வேலைக்காரியை விட அதிக சம்பளம் பெற்றுக்கொண்டு இருந்தால், நானும் காரணம் தெரியாமல் தவித்துக் கொண்டு இருந்தேன். இரண்டு நாட்கள் கழித்து, வீட்டில் அனைவரும் ஒரு விழாவுக்குப் புறப்பட்டுக்கொண்டு இருந்தார்கள். என் தந்தை மட்டும் வீட்டுக்கு வந்துவிடு விழாவுக்குச் செல்வதாக இருந்தார்கள். மற்ற அனைவரும் புறப்பட்டுச் சென்று விட்டார்கள், அன்றைய தினத்தில் எனக்கு அதிகமாக காச்சல் இருந்ததால் விழவுக்குச் செல்லமுடியவில்லை. அன்று இரவு சரியாக 8 மணி இருக்கும், என் தந்தையுடன் ஒரு நண்பர் வந்து இருந்தார். வீட்டில் நான் கச்சல் காரணமாக மொட்டை மாடியில் இருப்பது யாருக்கும் தெரியாது. கீழே தந்தை, அவரின் நண்பர் சேகர் மற்றும் சமையல் அறையில் குமுதா மட்டும் இருந்தார்கள். எனக்குச் சுடத் தண்ணீர் தேவைப்பட்டது, கச்சல் இருந்ததால் சத்தமாக அழைக்கமுடியவில்லை. ஆகையால் பொறுமையாக பின் வாசல் படிக்கட்டு வழியாக இறங்கிக்கொண்டு இருந்தேன். அப்பொழுது “குமுதா இங்க வா டி !” என்று சத்தம் கேட்டது. “வீட்டில் எல்லோரும் போய்ட்டாங்களா ?” என்று தந்தை கேட்டார். “எல்லோரும் போய்ட்டாங்க டா ! ” என்று கூறிவிட்டு தந்தை மற்றும் தந்தையின் நண்பர் சேகர் இருவர் நடுவில் சென்று அமர்ந்தாள். எனக்கு ஒரு நிமிடம் தூக்கிவாரி போட்டது, நான் சத்தம் காண்பிக்காமல் அமைதியாகத் தொடர்ந்து பார்த்துக் கொண்டு இருந்தேன். ” நீங்க வேறு செம மூடில் வந்து இருக்கீங்க ! இருவரையும் சமாளிக்க வேண்டும். பணம் அதிகமாகக் கொடுங்கள் !” என்று குமுதா கூறிக்கொண்டு இருந்தார். இருவரும் சிரித்துக்கொண்டு ஆளுக்கு ஒரு முலையைப் பிடித்துப் பிசைந்து கொண்டு இருந்தார்கள். அவளின் முந்தானையை உருவி முலையை மேலும் அழுத்தமாகப் பிசைந்து கொண்டு இருந்தார்கள். சேகர் கன்னத்தைப் பிடித்து உதட்டில் அழுத்தமாக முத்தம் கொடுத்துக் கொண்டு இருந்தார் அந்த நேரத்தில் என் தந்தை கீழே குனிந்து தொப்புள் ஓட்டையில் முத்தம் கொடுத்துக் கொடுத்தார். இருவரும் ஒன்றாக ஒரே நேரத்தில் செய்வதைப் பார்ப்பது தான் மேலும் அதிர்ச்சியாக இருந்தது. அவளின் ப்ளௌஸ் ஹூக்கை சேகர் பற்களால் கடித்துக் கழட்டினார். ப்ளௌஸ் உள்ளே ப்ரா அணியாமல் இருந்ததால் இரண்டு முலைகளும் தளதள வென்று ஆடிக்கொண்டு இருந்தது. அதை கையால் பிடித்து மாவு பிசைவது போன்று பிசைந்து கொண்டு இருந்தார்கள். ஒரு முலையின் காம்பைத் தந்தை வாயில் வைத்துக் கடித்துக் கொண்டு இருந்தார் மாற்று ஒரு முலையின் காம்பை சேகர் மென்மையாகக் கடித்துக் கொண்டு இருந்தார். “உங்களை போன்று அழகாக யாராலும் செக்ஸ் செய்ய முடியாது ” என்று குமுதா முனறிக்கொண்டு இருந்தாள். எங்களின் மனைவியை விட நூறு மடங்கு அதிகமான சுகத்தைக் கொடுத்துக் கொண்டு இருக்கிறாள் என்று இருவரும் காமக்குரலில் குமுறிக் கொண்டு இருந்தார்கள். கச்சல் நேரத்திலும் அந்த காம நிகழ்ச்சியைப் பார்த்ததில் சுன்னி தூக்கிக்கொண்டு எழுந்தது. தொடர்ந்து பார்த்துக் கொண்டு இருந்தேன், இருவரும் அந்த முலையில் எச்சு விட்டு ரசித்து ருசித்துச் சப்பிக் கொண்டு இருந்தார்கள். அதன்பின் என் தந்தை மற்றும் சேகரை நிற்க வைத்து விட்டு இருவரின் பேண்ட் மற்றும் ஜட்டியைக் கழட்டி எறிந்தாள். இருவரின் சுன்னிகளும் சுமார் 8 இன்ச் அளவுக்கு பெரியதாக இருந்தது. முதலில் என் தந்தையின் சுன்னியை வாயில் வைத்துக் கொண்டு, சேகரின் சுன்னியைக் கையை ஆட்டிக்கொண்டு இருந்தாள். ஒரே நேரத்தில் வாயில் ஒன்று, கையில் ஒன்று வைத்து செய்கை செய்து கொண்டு இருந்தாள். குமுதாவின் திறமையைப் பார்த்து வியந்தேன். சற்று நேரத்துக்குப் பிறகு சேகர் சுன்னியை வாயில் வைத்துக் கொண்டு தந்தையின் சுன்னியை ஆட்டிக்கொண்டு இருந்தாள், இரண்டு ஆண்களுக்கும் ஒரே நேரத்தில் சிறந்த சுகத்தைக் கொடுத்துக் கொண்டு இருந்தார். பின்னர் இரண்டு பூளையும் ஒரே நேரத்தில் வாயில் வைத்து மெதுவாக மேலும் கீழுமாக ஊம்பினாள். சுமார் ஒரு மணி நேரமாக இரண்டு சுன்னிகளையும் ஊம்பி சுகத்தைக் கொடுத்துக் கொண்டு இருந்தால், ” ஆஹா ஆஹா நல்ல சப்பு டி தேவிடியா முண்ட ! ஆஹா ஹா ஆஹா எ ஆஹா ஆஹா ஹ்ம்ம் ம் ம் ம் ம் ம் ம் ம் ம் ம் ம் ம் ஆஹா ஆஹா ஆஹா ஆஹா இன்னும் வேகமாக இன்னும் வேகமாக ஆஹா ம் ம் ம்ம் ம் ம் !” என்று தந்தையும் சேகரும் சுகத்தில் கத்திக்கொண்டு இருந்தார்கள். பின்பு சேகர் சுன்னியை வெளியில் எடுத்து விட்டு வேகமாகக் குலுக்கி குமுதாவின் முகத்தில் அடித்தார் அதே நேரத்தில் தந்தை வேகமாக இடுப்பை ஆட்டி குமுதாவின் வாயில் முழு விந்தையும் இறக்கி விட்டார். இரண்டு சுன்னிகளின் விந்தையும் முகத்தில் மற்றும் வாயில் வாங்கி நன்றாகக் குடித்தால், பிறகு மூவரும் சற்று சோர்வாகத் தரையில் படுத்துக் கொண்டார்கள். “இதுபோன்று சிறந்து ஊம்புவதற்குத் தான் டி உனக்கு அதிக சம்பளம் கொடுத்து வைத்து இருக்கிறேன் ” என்று தந்தை கூறினாள். அவர்களின் இருவர் சுன்னிகளில் வழிந்து விந்தை நக்கிக்கொண்டு இருந்த நேரத்தில் என்னை குமுதா பார்த்து விட்டால், அப்பொழுது . . . . . .
ஐதராபாத்தில் உள்ள தெலங்கானா தொழில்துறை அமைச்சர் மல்லா ரெட்டி தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறையினர் இரண்டாவது நாளாக சோதனை நடத்தி வருகின்றனர். தெலங்கானா மாநிலத்தில் ஒருபுறம் வருமான வரித்துறை தேடுதல் வேட்டை நடைபெறுகிறது. மறுபுறம் எம்.எல்.ஏ.,க்களை தாக்கிய வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை, கேசினோ, டில்லி மதுபான ஊழல் வழக்குகளில் அமலாக்கத்துறை விசாரணை என, பல்வேறு சோதனைகளால் மாநில அரசியல் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில் தெலங்கானா தொழிலாளர் நலத்துறை அமைச்சர் மல்லாரெட்டியின் வீடு, கல்லூரி மற்றும் அவருக்கு சொந்தமான இடங்கள், அவரது குடும்பத்தினர், உறவினர்கள், பார்ட்னர்கள் என வருமான வரித்துறை அதிகாரிகள் இரண்டாவது நாளாக சோதனை நடத்தி வருகின்றனர். நூற்றுக்கணக்கான அதிகாரிகள் பல குழுக்களாகப் பிரிந்து ஒரே நேரத்தில் தேடத் தொடங்கினர். ரூ.5 கோடி ரொக்கம், ஆவணங்கள், சொத்து விவரங்கள், ஹார்டு டிஸ்க்குகள் பறிமுதல் செய்யப்பட்டன. அமைச்சரின் நெருங்கிய உறவினர் ஒருவர் கதவை திறக்க மறுத்ததால், அதிகாரிகள் ஒரு கட்டத்தில் பூட்டை உடைக்கும் பணியில் ஈடுபட்டனர். மற்றொரு இடத்தில் லாக்கரை திறக்க மறுத்ததால், நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அதை திறந்துள்ளனர். மல்லாரெட்டி வீட்டில் அதிகாரிகளுக்கு எதிராக அவரது ஆதரவாளர்கள் முழக்கங்களை எழுப்பினர். பிரதமர் மோடியின் உருவ பொம்மை எரிக்கப்பட்டது. ED மற்றும் IT தாக்குதல்கள் போன்ற பாஜகவின் அறைகூவல்களுக்கு பயப்பட மாட்டோம் என்று அமைச்சர்கள் தலசானி, மகமூத் அலி, ஸ்ரீனிவாஸ் கவுட், கொப்புல ஈஸ்வர் ஆகியோர் கூறியுள்ளனர். இந்த சோதனை நடவடிக்கைக்கு பல எம்எல்ஏக்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். அதிகாலை முதல் ஐடி சோதனை: நியூ போயின்பள்ளி ஜெயநகர் காலனியில் உள்ள மல்லாரெட்டியின் வீட்டில் செவ்வாய்க்கிழமை காலை 6 மணி முதல் ஐடி அதிகாரிகள் சோதனை நடத்தினர். அவரது சகோதரர் கோபால் ரெட்டி, அருகில் உள்ள சௌஜன்யா காலனியில் வசிக்கும் அமைச்சர் மர்ரி ராஜசேகர் ரெட்டியின் மருமகன், சீதராமபுரத்தில் வசிக்கும் தொழில் பங்குதாரர் நரசிம்மயாதவ், சின்னத்தோட்டத்தில் வசிக்கும் சிட்பண்ட் வர்த்தகர் கங்காதர் யாதவ் ஆகியோர் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது. வெளிநாட்டு பயணத்தில் இருந்த மர்ரி ராஜசேகர் ரெட்டியை தவிர மற்ற அனைவரும் சோதனையின் போது வீட்டில் இருந்தனர். அமைச்சரின் அலுவலக பால்கனியில் கண்டெடுக்கப்பட்ட பையில் செல்போன் இருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்து அது யாருடையது என விசாரித்ததாக தெரிகிறது. அமைச்சர் வீட்டுக்குப் பக்கத்தில் உள்ள அவரது சகோதரர் கோபால் ரெட்டியின் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. குப்பைத் தொட்டிகளைக் கூட விட்டு வைக்காமல் தேடினார்கள். அமைச்சர் மற்றும் அவரது சகோதரர் வீடுகளில் இருந்த லாக்கர், அலமாரிகளில் சாவி இல்லாததை அறிந்த அதிகாரிகள், செகந்திராபாத்தில் இருந்து பூட்டு திறக்கும் தொழிலாளியை வரவழைத்து திறந்து பார்த்தனர். 2 கோடி ரூபாய் பறிமுதல்: கொம்பள்ளி நகராட்சி பகுதியில் வசிக்கும் மல்லாரெட்டி மகன் மகேந்தர் ரெட்டி, அருகில் வசிக்கும் மற்றொரு மகன் பத்ரா ரெட்டி ஆகியோர் வீடுகளிலும் சோதனை நடத்தியுள்ளனர். மல்லாரெட்டி மருத்துவக் கல்லூரியின் இயக்குநராக பத்ரா ரெட்டியும், பொறியியல் கல்லூரியின் இயக்குநராக மகேந்திர ரெட்டியும் உள்ளனர். மல்லாரெட்டியின் உறவினரும், மைசம்மகுடாவில் உள்ள நரசிம்ம ரெட்டி பொறியியல் கல்லூரியின் இயக்குநருமான திரிசூல் ரெட்டி, ஜீடிமெட்லாவில் உள்ள பீமா பிரைட் சமூகத்தில் வசிக்கிறார். அவரது வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. நம்பகமான தகவலின்படி இங்கு ரூ.2 கோடி ரொக்கம் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிகிறது. கதவை உடைக்க முயற்சி: அமைச்சரின் நெருங்கிய உறவினரான சந்தோஷ் ரெட்டி, கொம்பள்ளியில் உள்ள பொப்பிலி எம்பயர் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார். காலையில் சோதனைக்கு வந்த அதிகாரிகளை அடையாளம் கண்டுகொண்ட சந்தோஷ் ரெட்டியின் குடும்பத்தினர், மதியம் 1 மணி வரை வீட்டை உள்ளே இருந்து பூட்டிவிட்டு வெளியே வரவில்லை. அதிகாரிகள் கதவை உடைப்பதற்கான முயற்சியில் இறங்கிய பின் கதவை திறந்தனர். இதையடுத்து அதிகாரிகள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். செவ்வாய்கிழமை மாலை மல்லாரெட்டியின் அக்கா மகன் பிரவீன் ரெட்டி வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. அவர் துலாப்பள்ளியில் உள்ள அசோகா ஆலா மைசன் கேட்டட் குடியிருப்பில் வில்லா எண். 135 இல் வசிக்கிறார். தற்போது அவர் மல்லாரெட்டி கல்லூரி விவகாரங்களை நிர்வகித்து வருகிறார். இந்த வில்லா மல்லாரெட்டியின் மகன் பத்ரா ரெட்டியின் பெயரில் இருப்பதாக கூறப்படுகிறது. கல்லூரி, மருத்துவமனையில் சோதனை: மல்லாரெட்டிக்கு சொந்தமான 2 மருத்துவக் கல்லூரிகள் மற்றும் 2 பல் மருத்துவக் கல்லூரிகள், மல்லாரெட்டி மற்றும் நாராயண மல்லாரெட்டி மருத்துவமனைகளில் காலை முதல் இரவு வரை ஐடி அதிகாரிகள் சோதனை நடத்தினர். நிர்வாகத் துறையின் வருமான வரி விவகாரங்கள் மற்றும் மருத்துவ இடங்கள் குறித்த விவரங்கள் விசாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இரண்டாவது நாளாக தொடரும் சோதனை: கல்லூரி இயக்குனர் பத்ரா ரெட்டி அலுவலகங்களில் பத்து அதிகாரிகள் கொண்ட குழு சோதனையில் ஈடுபட்டது. குண்டலபோச்சம்பள்ளி பேரூராட்சிக்கு உட்பட்ட மைசம்மகுடாவில் உள்ள மல்லாரெட்டி பல்கலைக்கழகத்துடன், மல்லாரெட்டி சிஎம்ஆர் கல்லூரியில் காலை மாணவர்கள் வருவதற்கு முன்பே வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையைத் தொடங்கினர். கல்லூரிகளின் கணக்குகள், நிர்வாகத் துறை மற்றும் ஆய்வகங்களில் முக்கிய ஆவணங்களுடன் கணினி ஹார்டு டிஸ்க்குகள் ஆய்வு செய்யப்பட்டன. கிராந்தி கூட்டுறவு அர்பன் வங்கியின் தலைவர் பி.ராஜேஸ்வர ராவ் குப்தா வீட்டிலும் ஐடி அதிகாரிகள் சோதனை நடத்தினர். பாலாநகர் ராஜு காலனியில் உள்ள அவரது இல்லத்துக்கு அதிகாலையில் அதிகாரிகள் குழுவினர் வந்து ஆவணங்களை ஆய்வு செய்தனர். கிராந்தி வங்கியில் இருந்து ரியல் எஸ்டேட் தொழிலுக்கு பணம் திருப்பி விடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். ராஜேஷ்வர் ராவ் குப்தா மல்லாரெட்டிக்கு சொந்தமான பல வணிக நிறுவனங்களில் பங்குதாரராக உள்ளார். துண்டிக்கலில் உள்ள ஏரோநாட்டிக்கல் இன்ஜினியரிங் கல்லூரியின் இயக்குனராகவும் உள்ளார். இந்தச் சோதனையின் போது சம்பவ இடத்திற்கு வந்த அமைச்சரின் ஆதரவாளர்கள் சிலர் மல்லாரெட்டிக்கு ஆதரவாக கோஷம் எழுப்பினர். அமைச்சர் வீட்டில் இருந்து வெளியே வந்து அவர்களுக்கு வெற்றிச் சின்னம் காட்டியது குறிப்பிடத்தக்கது. அமைச்சர் மல்லாரெட்டியின் மகளும், மர்ரி லக்ஷ்மர் ரெட்டியின் கல்வி நிறுவனங்களின் இயக்குநருமான ஸ்ரேயா ரெட்டியிடமும் அதிகாரிகள் விசாரணை நடத்தியதாக தெரிகிறது.
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE ....... Thursday, April 8, 2021 6:43 AM No comments அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே ! வணக்கம் . முக்கிய செய்திகள் *இன்று மதுரையில் GDS/MTS TO POSTMAN பதவி உயர்வுக்கான கமிட்டி கூடுகிறது .தேர்ச்சியாளர்களுக்கு NELLAI NFPE யின் அட்வான்ஸ் வாழ்த்துக்கள் .. *கடந்த20.12.2020 அன்று நடைபெற்ற LDCE தேர்வில் PAPER -1 யில் ஒரு வினாவிற்கு கொடுக்கப்பட்ட ANSEWR KEY தவறானது என தோழியர் சுந்தரி போஸ்ட்மேன் அம்பாசமுத்திரம் அவர்களால் விண்ணப்பிக்கப்பட்ட மனு சென்னையில் கூடிய கமிட்டியால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்று நமது மாநிலசெயலர் அவர்கள் மூலம் தகவல் கிடைக்கப்பெற்றது ஒரு வருத்தமான செய்தியே ! இருந்தாலும் மனம் தளராமல் முயற்சிகளை மேற்கொண்ட தோழியர் சுந்தரி அவர்களுக்கு வாழ்த்துக்கள் ..உங்கள் முயற்சிகள் தொடரட்டும் . *.புதிய உறுப்பினர்களை நாம் வரவேற்கிறோம் .நமது கோட்டத்தில் PA ஆக பணியாற்றிய தோழர் சேதுராமன் இன்று HSG II -பதவியுயர்வு பெற்று மீண்டும் பாளையம்கோட்டை தலைமை அஞ்சலகத்திற்கு APM ஆக வருகிறார்கள் .தோழர் சேதுராமன் அவர்களை NELLAI -NFPE வாழ்த்தி வரவேற்கிறது .. *இந்தமாத மாதாந்திர பேட்டிக்காக இதுவரை 10 சுப்ஜெக்ட்ஸ் வந்துள்ளது .SUBJECTS இருந்தால் இன்று மதியத்திற்குள் தெரிவிக்கவும்
காலம் காலமாக, யுகம் யுகமாக எழும்பிக் கொண்டிருக்கும் கேள்வி இது.. பிறப்பும், இறப்பும் என்ற சுழலில் சிக்கி, துன்பத்தில் அல்லலுறும் ஜீவன்கள் அதிலிருந்து மீள, பிறவியே வேண்டாம் என்றுதான் வேண்டுகிறார்கள். ஆனால் ஜீவன்கள் செய்த நன்மை, தீமைகளுக்கு ஏற்ப, அவர்கள் மீண்டும், மீண்டும் பிறவி எடுத்து, அதற்குரிய பலன்களை அனுபவிக்க வேண்டும் என்பது நமது வேதங்கள் சொல்லும் விஷயம். ஏழேழு ஜென்மங்கள் என்பது உண்மையா என்ற ஆராய்ச்சி எல்லாப் பகுதிகளிலும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால் இந்து மதத்தைப் பொறுத்தவரை இவை அனைத்தும் உண்மை என்றே நம்பப்படுகிறது. உன்னத நிலையில் வாழும் ஒரு மனிதன் முக்தி அடைந்து, பிறவி இல்லாத நிலையை அடைந்து இறைவன் திருவடிகளை அடைகிறான். “ஏழேழு பிறவிகளிலும் எந்தையே என்னை நீ காத்தருள்” என்கிறது ஒரு பாடல். மறுபிறவி வேண்டாம் என்றே வேண்டுகிறார் பட்டினத்தார். மாதா உடல் சலித்தாள் வல்வினையேன் கால் சலித்தேன் வேதாவோ கை சலித்து விட்டானே –தாதா இருப்பையூர் வாழ் சிவனே இன்னுமோர் அன்னை கருப்பையூர் வாராமற் கா” என்கிறார். மனிதர்கள் தங்கள் கர்மவினைகளின் படியே பிறவி எடுக்கிறார்கள். இதையே “இத்தாவர சங்கமத்துள் எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமானே”- என்று கூறுகிறார் மாணிக்கவாசகர். நம் கர்மவினைகளுக்கு ஏற்பவே மறுபிறவி ஏற்படுகிறது. மரணத்துடன் மனித வாழ்வு முடிந்து விடுவதில்லை. அதன் பிறகும் தொடர்கிறது. தொடரும் நம் கர்மவினைகளை நீக்கி, மறுபிறவி இல்லாமல் காக்கவே சிவபெருமான் கோவில் கொண்டிருக்கும் இடம் தேப்பெருமாநல்லூர். மறுபிறவி இல்லாதவர்களே அங்கு செல்ல முடியும் என்பது தல வரலாறு கூறும் செய்தி. தஞ்சாவூர் மாவட்டம் தேப்பெருமாநல்லூர் என்ற இடமே அத்தகைய சிறப்பு வாய்ந்த இடம். இங்குள்ள ஸ்ரீ வேதாந்த நாயகி சமேத ஸ்ரீ விஸ்வநாத சுவாமி நமக்கு மறுபிறவி இல்லாத நிலையை அருள்கிறார். மீண்டும் பிறவாத நிலையை அடைவதே உயிர்களின் குறிக்கோளாக இருக்க வேண்டும் என்பார்கள். அத்தகைய பேரின்ப நிலையை அருள்கிறது இத்தலம். இங்கு யார் வேண்டுமானாலும் செல்ல முடியாது. அப்படிச் சென்றாலும் இறைவனை மனமுருகி வேண்டினால் மட்டுமே அவரின் அருளைப் பெற முடியும். இன்னும் இந்தக் கலியுகத்தில் நம்ப முடியாத பல விஷயங்கள் நடந்து கொண்டுதான் இருக்கிறது. இறைவன் தன் அற்புதச் செயல்கள் மூலம் தன் இருப்பை நிரூபித்துக் கொண்டிருக்கிறார். சிலிர்ப்பும், ஆச்சரியமும் ஏற்படுத்தும் பல விஷயங்கள் ஈசனின் திருவருளால் நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஈசனின் தலங்கள் ஒவ்வொன்றும் பல அதிசயங்கள் நிறைந்ததாக இருக்கின்றது. அதில் தேப்பெருமாநல்லூரும் ஒன்று. இங்கு ஒவ்வொரு ஆண்டும் சூரிய கிரகணத்தன்று ஒரு நாகம் ஈசனை தரிசிக்க வந்து, அங்குள்ள வில்வ மரத்தின் இலைகளைப் பறித்து வந்து இறைவனுக்கு அர்சித்து, தன் தோலினை ஈசனுக்கு மாலையாக அணிவித்துப் பூஜை செய்கிறது. அதேபோல் இங்குள்ள தீபம் காலை நான்கு மணி முதல் ஒன்பது மணிவரை தானாக அணைந்து, மற்ற நேரங்களில் தானாக எரிகிறது. இது தவிர அவ்வப்போது பல அற்புதங்கள் நிகழும் இக்கோவில் தனிச் சிறப்பு பெறும் விளங்குகிறது மற்ற விஷயங்களில். இங்குள்ள வேதாந்த நாயகி வலது காலை முன் வைத்து, உதட்டைக் குவித்து நம்மிடம் பேசுவது போல் உள்ளது. வேதங்களின் பொருளைத் தன் பக்தர்களுக்கு எடுத்துக் கூறுகிறாள் என்கிறார்கள். அன்னைக்கு வெள்ளிக்கிழமைகளில் குங்கும அர்ச்சனை செய்து வழிபட்டால் திருமணத் தடைகள் நீங்கும் என்பது ஐதீகம். சாந்த பைரவர் என்று சிறிய வடிவிலும், மகா பைரவர் என்று பெரிய உருவத்திலும் இரண்டு பைரவர்கள் ஒன்றாகச் சேர்ந்து ஒரே ஆலயத்தில் இருப்பது இங்குள்ள சிறப்பு. ஈசனைப் பிடிப்பதற்கு முன் சனி பகவான் அம்பாளை வேண்டி அவரின் அருளைப் பெற்ற தலம் என்பதால் சனி காக்கை வாகனத்தில், ஆனந்தமாக, ஒய்யாரமாக மேற்கு நோக்கிக் காட்சி அளிக்கிறார். இவரின் தோஷத்திலிருந்து நிவர்த்தி பெற ஈசன் பன்னிரண்டு ஜோதிர் லிங்கங்களை ஒன்றாக இக்கோவிலுக்குள் வரவழைத்தார். அவர்களில் ஒருவரான ஸ்ரீ விஸ்வநாத சுவாமி இங்கேயே நிரந்தரமாக வாசம் செய்கிறார். பன்னிரண்டு ஜோதிர் லிங்கங்கள் உள்ள இடம் என்பதால் ஏழேழு ஜென்ம பாவங்களும் இங்கு வந்தால் நீங்கி, மறுபிறவி அமையாது என்பது தல வரலாறு. மிகவும் பழமையான இக்கோயில் ஆகம விதிகளுக்கு முற்றிலும் மாறாக அமைக்கப்பட்டுள்ளது. இங்கு அருள் புரியும் தெய்வங்கள் அனைத்தும் மாறுபட்ட கோலத்தில் காட்சி தருகிறார்கள். இதனைப் பேதம் என்பார்கள். ஒருமுறை அகத்திய முனிவர் இறைவனைத் தரிசிக்க வந்தார். அவருக்கு மறுபிறவி உண்டு என்பதால் ஈசன் அவரைத் தடுக்க எண்ணி, மகரந்த மகரிஷியை அழைத்து அகத்தியரின் வருகையைத் தடுக்கச் சொல்கிறார். அந்தக் கட்டளையை ஏற்று மகரிஷி, அகத்தியரின் வழி நெடுக, மகரந்தப் பூக்களாக மாறி வழியை அடைத்து விட்டார். இதை ஞான திருஷ்டி மூலம் அறிந்த அகத்தியர் மகரிஷியைச் சபித்து விட்டார். மகரந்தப் பூ போன்ற உன் முகம் யாழி முகமாக மாறட்டும் என்று சாபம் அளிக்கிறார். மகரிஷி, இறைவன் கட்டளையைக் கூற, அகத்தியர் உலகத்தில் யாருமே பூஜை செய்யாத பொருளைக் கொண்டு இறைவனைப் பூஜை செய்தால் உன் யாழி முகம் மாறும் என்கிறார். அதன்படி தேப்பெருமாநல்லூர் வந்த மகரிஷி யாழி முகத்துடன் ஒருமுகம் முதல் பதினான்கு முகம் கொண்ட ருத்ராட்சம் வரை சமர்பித்து ஈசனைப் பூஜை செய்தார். அவருக்குக் காட்சி தந்து ஈசன் அவரின் சாபத்தை நீக்குகிறார். எனவேதான் இங்கு ஈசனுக்கு ருத்ராட்ச கவசம் சாற்றப் பட்டிருக்கிறது. இருபத்தி இரண்டாயிரம் ருத்ராட்ச மணிகளைக் கொண்டு, ஆவுடை பாணம், நாக படம் அமைத்து கவசம் இடுகிறார்கள். ஒவ்வொரு பிரதோஷம், சிவராத்திரி, மற்றும் ஈசனுக்கு உரிய சிறப்பு தினங்களில் இக்கவசம் இடப் படுகிறது. தெற்குப் பகுதியில் தட்சிணாமூர்த்தி, சுற்றி சீடர்கள் இன்றி காளை வாகனத்தில் அமர்ந்து நிருதி திசை நோக்கிக் காட்சி அளிக்கிறார். இவருக்கு தினமும் பழைய சோறு படைக்கப்படுகிறது. இவரை அன்னதான தட்சிணாமூர்த்தி என்கிறார்கள். இவரைத் தரிசித்தால் பசித்த நேரத்தில் உணவு கிடைக்கும் என்கிறார்கள். இங்கு இரண்டு சண்டிகேஸ்வரர்கள் உள்ளனர். இவர் சன்னதிக்கு அருகில் நான்கு கரங்கள் கொண்ட துர்க்கையும், அம்பாள் சன்னதியின் பின்புறம் எட்டுக் கரங்கள் கொண்ட துர்க்கையும் காட்சி அளிப்பது இக்கோயிலின் சிறப்பாகும். அனைவரையும் கண்காணிக்கும் இறைவனே அனைத்தையும் அருள்கிறார். “எழுதும் கீழ்க்கணக்கு இன்னம்பர் ஈசன்” என்கிறார் அப்பர் பெருமான். இந்த உலகில் நாம் செய்யும் ஒவ்வொரு செயலையும் கவனித்து அதற்குரிய பலன்களை, மறுபிறவியை அளிக்கிறார் ஈசன். எனவே மேலிருந்து ஒருவன் அனைத்தையும் கவனிக்கிறான் என்ற உணர்வுடன் நம் செயல்கள் அமைய வேண்டும் என்கிறார் திருமூலர். “கண்காணி இல்லையென்று கள்ளம் பல செய்வார் கண்காணி இல்லா இடமில்லை காணுங்கால்” என்கிறது தமிழ் வேதம். இறைவன் இல்லாத இடம்தான் எது? நமது கணக்கை மிகச் சரியாக எழுதுபவர் ஈசன். நன்மை செய்தவர்களுக்கு நன்மையே செய்ய வேண்டும். தீமை செய்தவர்களுக்கு இன்னும் அதிக நன்மை செய்ய வேண்டும். மண்ணில் பிறந்து விட்டோம். இதில் மறுபிறவி இல்லாத நிலையை அடைய முயல வேண்டும். “பிறந்தோர் உறுவது பெருகிய துன்பம் பிறவார் பெறுவது பெரும் பேரின்பம்” என்கிறது நம் வேதங்கள். பிறருக்குத் துன்பங்கள் தராமல் வாழும் மனிதர்களின் இதயமே இறை குடியிருக்கும் கோயிலாகும். இதையே திருஞானசம்பந்தர் மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும் என்னில் நல்ல கதிக்கு யாதுமோர் குறைவிலைக் கண்ணில் நல்லஃதுறும் கழுமல வளநகர்ப் பெண்ணில் நல்லாளொடும் பெருந்தகை இருந்ததே” என்கிறார். நம்மை ஆட்கொள்ளவே இறைவன் தலங்கள் தோறும் காட்சி அருள்கிறார். “பந்தமறுத்து ஆளாக்கிப் பணி கொண்டு ஆங்கே பண்ணிய நூல் தமிழ்மாலை பாடுவித்து என் சிந்தை மயக்கமறுத்த திருவருளினானை” என்கிறார் அப்பர்.
நடப்பது ஆரோக்கியத்திற்கும் அத்தியாவசியமான விஷயம் தான். இந்த நடையில் ஆண் பெண் பாகுபாடு இருக்கிறதா என்ன? பிறகேன் இந்தத் தலைப்பு என்று நீங்கள் நினைக்கலாம். ஆண்கள் நடைபயிற்சி செய்யும் போது கவனிக்க வேண்டிய விஷயங்களும் பெண்கள் நடைபயிற்சி செய்யும்போது கவனிக்க வேண்டிய விஷயங்களும் பெண்கள் நடைபயிற்சி செய்யும்போது கவனிக்க வேண்டிய விஷயங்களும் சிலவற்றில் வேறுபடத்தான் செல்கின்றன. பெண்கள் தளர்ந்த ஆடைகளை அணிவதாக நினைத்துக் கொண்டு உள்ளடைகள் ஏதுமில்லாமல் வேகவேகுமாக நடந்தால் அது பிறருடைய கண்களை உறுத்தும். கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாக்கும். ஆகவே நாகரிகமாக உடையணிந்து செல்ல வேண்டும். குண்டாக இருக்கும் பெண்கள் வேகமாக நடக்க முடியாது. அதற்காக வேகமாக நடக்க வேண்டும் என்ற அவசியமில்லை மெதுவாகக் கூட நடக்கலாம். வீட்டுக் கவலைகளை நினைத்துக் கொண்டே நடைபயிற்சி செல்வதை அறவே தவிர்த்து விடுங்கள். பெண்களின் அழகைக் கெடுப்பது இடுப்பைச் சுற்றியுள்ள தேவையில்லாத தசைதான். கொடியிடை என்று பெண்களின் இடை குறித்து கூறுவதும் இதனால் தான். ஆகையால் இடுப்பை சுற்றியுள்ள தேவையற்ற தசைகள் கரைய நடைபயிற்சி மேற்கொள்வதே சிறந்தது. தொப்பை வயிறும் சேர்ந்தே குறையும். கருப்பை பிரச்சனை உள்ள பெண்கள் மருத்துவரின் ஆலோசனை கேட்ட பிறகே நடக்க வேண்டும். இல்லையெனில் கருப்பை கீழிறங்கி வரக்கூடிய ஆபத்து உண்டு. கருவுற்றிருக்கும் பெண்கள் முதல் நான்கு மாதங்கள் கண்டிப்பாக எந்தப் பயிற்சியையும் மேற்கொள்ளக் கூடாது. ஓய்வு எடுக்க வேண்டும். ஐந்தாறு மாதங்களுக்குப் பிறகு மென்யான நடைபயிற்சியை மேற்கொள்ள வேண்டும். அதற்கு முன்பாக நடைபயிற்சி செய்தால் கரு சிதைவிற்கான வாய்ப்புகள் ஏற்பட்டு விடும். மருத்துவரின் கண்காணிப்பில் இருக்கும் கருவுற்ற பெண்கள் நடக்கவே சுடாது. நடப்பதால் கருவுற்ற காலத்தில் ஏற்படும் சர்க்கரை நோய், உயர் அழுத்தம் போன்ற நோய்கள் வராமல் தடுக்கப்படுகிறது. தூய்மையான காற்று இதயத்துக்கு கிடைக்கிறது. குழந்தையும் சுத்தமான காற்றை சுவாசிக்கிறது. நடப்பதைத் தவிர வேறு எந்த பயிற்சியும் இக்காலக்கட்டத்தில் செய்ய முடியாது. நடக்காமல் இருந்தால் கை, கால்களில் வீக்கம் வரும். சுகப்பிரசவம் நிகழ குனிந்து நிமிந்து கடுமையான வேலை செய்ய வேண்டும் என்ற அவசியமில்லை, நடந்தாலே போதும். பிரசவம் ஆனதற்குப்பின் பெண்களின் உடலில் பல்வேறு மாற்றங்கள் நிகழும். வயிறு பெறுத்து காணப்படும். சுகப்பிரசவம் நிகழ்ந்தவர்கள் வயிற்றில் பெல்ட் கட்டி குறைத்து விடுவார்கள். நாற்பது வயதிற்கு மேற்பட்ட பெண்கள் மாதவிடாய்ப் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் உடலில் உள்ள ஹார்மோன் சுரப்பிகள் காரணமாகவே பெண்கள் பூப்பெய்வதும், மாதவிடாய் நின்றுபோவதும் நடைபெறுகிறது. மாதவிடாய் நின்ற பெண்களுக்கு கால்சியம் சத்து மிகவும் அவசியம். அதற்கு பால்அருந்துவதோடு கால்சியம் மாத்திரைகளை மருத்துவர்களின் ஆலோசனையுடன் உட்கொள்ள வேண்டும். மெனோபாஸ் அடைந்த பெண்களுக்கு மன அழுத்தம் ஏற்படும். காரணமின்றி எரிச்சலும் கோபமும் ஏற்படும். தனக்கு யாருமே இல்லை என்பது போன்ற கற்பனைகள் தோன்றும்.வாழ்க்கையே வெறுமையாகி விட்டது போன்ற மனநிலையை ஏற்படுத்தும். இத்தகைய மனநிலையிலிருந்து விடுபட பெண்கள் நடைபயிற்சி செய்வதால் எலும்பு தேய்மானத்திலிருந்தும் மன அழுத்தத்திலிருந்தும் தங்களை பாதுகாத்துக் கொள்ளலாம். நோயற்ற வாழ்வு குறைவற்ற செல்வம் என்பதை பெண்கள் புரிந்து கொள்ள வெண்டும். பெண்களைச் சுற்றி எப்போதும் பிரச்சனைகளும் வேலைகளும் இருந்து கொண்டே இருக்கும். அவற்றிலிருந்து மீண்டு உடலைக் காப்பது பெண்களின் கையில் தான் இருக்கிறது. தினமும் 45 நிமிடம் நடை பயிற்சியை மேற்கொண்டால் மெனோபாஸ் உள்ளிட்ட பல பிரச்சனைகளிலிருந்து மீண்டுவிட முடியும்.
குழந்தைளுக்கு எதிரான வன்முறையைப் பேசும் படமென பா.விஜயே, இசை வெளியீட்டில் படத்தின் ஒரு வரிக் கதையைச் சொல்லிவிட்டார். குழந்தைகளுக்கு, இல்லையில்லை பெண் குழந்தைகளுக்குப் பெற்றோர்களே போலீஸாக இருந்து பாதுகாக்கவேண்டும் என்பது தான் படம் முன் வைக்கும் அழுத்தமான கருத்து. படம் ஆகாயவதத்தில் தொடங்கி, நிலசதுக்கத்தில் முடிகிறது. அதாவது பஞ்சபூதங்களைக் கொண்டு, பாலியல் வன்புணர்வில் ஈடுபட்டவர்களைப் பழிவாங்குகிறார் படத்தின் நாயகனான சிவமலை. ஜல சமாதி, அக்னி சாபம், காற்றுப்படலம் என இந்தியாவின் ஒவ்வொரு மூலையில் வைத்துக் கொல்கிறார். ஆனால், படத்தின் முதற்பாதியில் பா.விஜய் மிகவும் இம்சிக்கிறார். நான் கடவுள் இராஜேந்திரனையும் கே.பாக்யராஜையும் கொண்டு மிக அசட்டுத்தனமான மலிவான நகைச்சுவை, திணிக்கப்பட்ட கவர்ச்சி, ஐட்டம் சாங் என அநியாயத்திற்கு ஒப்பேத்தி நெளிய வைத்துவிடுகிறார். எதிர் வீட்டுப் பெண்ணை நான் கடவுள் இராஜேந்திரன் சைட்டடிப்பது, டிடெக்டிவான பாக்யராஜின் அசிஸ்டென்ட்டாக வரும் அவரது மைண்ட்-வாய்ஸ் என ஒருவழி செய்துவிடுகிறது படத்தின் முதற்பாதி. இரண்டாம் பாதியில் வரும் ஃப்ளாஷ்-பேக் தான் வயிற்றில் பாலை வார்க்கிறது. அதிகம் பேசாத எஸ்.ஏ.சந்திரசேகர்க்கு அந்தக் கதாபாத்திரம் மிக அழகாய்ப் பொருந்தியுள்ளது. நாயகனின் தங்கை ஆருத்ராவாக அம்மா கணக்கு யுவலட்சுமி நடித்துள்ளார். விக்னேஷ் மாறுபட்ட தோற்றத்தில் தோன்றிக் கிலியை ஏற்படுத்துகிறார். பா.விஜய் செய்யும் பிரம்மாண்டமான ருத்ராமூர்த்தி சிலை கம்பீரமாய் அழகாய் உள்ளது. கலை இயக்குநர் ராம் பிரசாதின் உழைப்பு, படத்தின் முதல் ஃப்ரேம் முதலே அட்டகாசமாய் வெளிப்படுகிறது. பா.விஜய், இன்னும் பொறுப்பாய்த் திரைக்கதையை அமைத்திருக்கலாம். எத்தனை பேர் வந்தாலும் வெட்டும் ஹீரோயிசம் தான் பிரதானமாக இருக்கிறதே தவிர, எடுத்துக் கொண்ட கருவிற்கு நியாயம் கற்பிக்க மிக மோசமாகத் தவறியுள்ளார் பா.விஜய். TAGAarudra vimarsanam Aaruthra movie Aaruthra thirai vimarsanam ஆருத்ரா திரைப்படம் இயக்குநர் கே.பாக்யராஜ் நான் கடவுள் இராஜேந்திரன் பா.விஜய் யுவராஜ் விக்னேஷ்
2013 இல் பெஞ்சமின் என்பவர் ரெட் புல் என்ற நிறுவனத்தை எதிர்த்து வழக்குப் போடுகின்றார். வழக்கின் சாரம் ரெட் புல் நிறுவனம் தன்னுடைய பானங்களை விற்பதற்காக பொது மக்களை தன் விளம்பர வாசகங்களால் ஏமாற்றுகிறது என்பதாகும். இன்றைக்கும் பல பொருட்களை நாம் வாங்குகிறோம். அவர்களின் விளம்பர வாசகங்கள் பல நேரங்களில் மக்களை ஏமாற்றுவதாகவே அமைகிறது. இதைத் தின்றால் சக்தி பிறக்கும், உயரமாய் வளரலாம், இந்த பற்பசையைப் பயன்படுத்தினால் பற்கள் உடனே வெண்மையாகிடும் எனப் பல விளம்பர வாசகங்களைக் கேட்டிருப்போம். ஆனால் அதை ஒருநாளும் உண்மையா என எண்ணிப் பார்ப்போர் வெகு சிலர். அத்தகைய வாசகங்களை எதிர்த்து நீதிமன்றம் செல்வோரும் குறைவு. ஆனால் பெஞ்சமின் ரெட் புல்லின் இதுபோன்ற விளம்பர வாசகம் ஒன்றை எதிர்த்து நீதிமன்றம் சென்றார். 2002 முதல் அவர் அந்த குளிர்பானத்தைப் பருகி வருகின்றார். அதைப் பருகினால் சிறகுகள் முளைக்கும் என்று விளம்பரம் சொல்கிறது ஆனால் அது பொய், ஒரு கோப்பை காபியில் உள்ள caffeine தான் இதிலும் உள்ளது எனத் தொடர்ந்து ஆராய்ந்து சொன்னபோதும் ரெட் புல் நிறுவனம் இந்த வாசகங்களை நீக்க மறுக்கிறது என வழக்குத் தொடுத்தார். ரெட் புல் நிறுவனம் தாங்கள் மக்களை ஏமாற்றவில்லை என வாதாடிக் கொண்டே அவர்கள் இணையத்திலிருந்த இந்த வாசகங்களை நீக்குகின்றனர். இறுதியில் வழக்கு பெஞ்சமினுக்கு சாதகமாகத் தீர்ப்பாகின்றது. இது பொது அறிவு சார்ந்தது என்றாலும் மக்களைப் பொய்யான வாசகங்களை நம்பி வாங்கத் தூண்டுவது தவறு என்பதே நீதிமன்றம் கருதியது. அதனால் 13$ பில்லியன் இழப்பீடு கடந்த பத்தாண்டுகளாக ரெட் புல் பானம் வாங்கியவர்கள் அனைவருக்கும் பிரித்துத் தர வேண்டும் எனத் தீர்ப்பு வழங்கியது. அதே நேரத்தில் இந்த பானத்தைக் குடித்தால் கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஏற்படப்போகும் பக்க விளைவுகள் பற்றியும் எச்சரிக்கை தர வேண்டும் என்றும் நீதிமன்றம் கூறியது. இன்றைக்கும் இதன் நிறுவனர் உலக பணக்காரர்கள் வரிசையில் 40வது இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. வழக்கறிஞர். ம. வீ. கனிமொழி இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள். கருத்துக்கள் பதிவாகவில்லை- “விசித்திர வழக்குகள் பகுதி 7” கட்டுரை,கவிதை,நகைச்சுவை,புகைப்படம் போன்ற படைப்புகளை சிறகு பரிசீலனைக்கு அனுப்ப முகவரி editor@siragu.com
தமிழகத்தில் ஓமிக்ரான் மாறுபாட்டால் பாதிக்கப்பட்ட covid-19 நோயாளிகளுக்கு வீட்டுத்தனிமைப்படுத்தல் மூலம் மெய்நிகர் சிகிச்சை அளிக்கப்படும் என்று மாநில சுகாதார அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார். “ஓமிக்ரானால் பாதிக்கப்பட்ட வழக்குகள் அதிகரிக்கும்போது, ஓமிக்ரானால் பாதிக்கப்பட்ட தடுப்பூசி நோயாளிகளுக்கு வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்படும். மேலும் தடுப்பூசி போடப்படாத மற்றும் அறிகுறியற்றவர்கள் ஒரு குழுவால் தொடர்ந்து கண்காணிப்பில் வைக்கப்படுவார்கள். மாநிலத்தில் விரைவில் மெய்நிகர் சிகிச்சை தொடங்கப்படும்” என்று சுப்பிரமணியன் கூறினார். மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்கள் மட்டுமே சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவார்கள் என்றார். மாநிலம் முழுவதும் 50,000 தடுப்பூசி முகாம்கள் மூலம் நடைபெற்று வரும் 17வது மெகா தடுப்பூசி முகாமின் ஒரு பகுதியாக சென்னையில் மருத்துவ முகாமை ஆய்வு செய்த பின்னர் அமைச்சர் செய்தியாளர்களிடம் பேசினார். ஓமிக்ரான் மாறுபாட்டால் பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் மூன்று நாட்களுக்குப் பிறகு எதிர்மறையாக இருப்பதாகவும், மேலும் ஐந்து நாட்கள் மட்டுமே சிகிச்சை தேவைப்படும் என்றும் சுப்பிரமணியன் கூறினார். மாநில சுகாதாரத் துறையின் கூற்றுப்படி, தமிழ்நாட்டின் சனிக்கிழமை நிலவரப்படி 121 ஓமிக்ரான் வழக்குகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன. Categories Entertainment News Tags Covid 19, Lockdown, Minister tells corona virus to stay at home ...!, Omicron, கொரோனா வைரஸ் வந்தா வீட்டில் இருங்க என்று சொல்லும் அமைச்சர்...! 2020-21 இந்தியா ர‌யி‌ல்வே துறையின் வருமானம் இத்தனை கோடி -யா..? CM ஸ்டாலினுடன் AK சந்திப்பு என்ன பேசினார்..! Recent Posts Why is Crypto the biggest solution For our problems? United States Dollar மதிப்பு என்ன ? புஷ்பா தி ரூல் நாளை பூஜை விழாவுடன் தொடங்குகிறது:- படத்தின் இணை தயாரிப்பாளராக ரெட் ஜெயண்ட் மூவிஸ் கைகோர்த்து வரும் நிலையில், துருவ நட்சத்திரம் விரைவில் வெளிவரவுள்ளது.
வயது 50 க்கு மேல் சென்றால் மட்டுமே நரைமுடி ஏற்படும் என்ற காலம் நிலை மாறி இப்பொழுது இருக்கும் உணவு முறைகளால் இளம் வயதில் நரை முடிகள் வளர ஆரம்பித்துவிடுகிறது. நம்மில் பலரும் இந்த நரைமுடியை மறைப்பதற்கான செயற்கையான ரசாயனங்களை கலந்த ஹேர் டை பயன்படுத்தி வருகிறோம். இது போன்ற வேதிப்பொருட்கள் கலந்த ஹேர் டை பயன்படுத்துவதால் சில பக்க விளைவுகள் மற்றும் கடுமையான பக்க விளைவுகளையும் உடலில் ஏற்படுகிறது. குறிப்பாக முடி உதிர்தல், முடி உடைதல், முடி வளராமல் போவது ஏற்படும், அதுமட்டுமில்லாமல் சில நேரங்களில் அதிக அளவில் ஹேர் டை பயன்படுத்தும் நபர்களுக்கு மயக்கம் சார்ந்த பிரச்சனைகள் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது. இயற்கை முறையில் ஹேர் டை செய்து அதனை பயன்படுத்தினால் எந்த ஒரு பக்க விளைவுகளும் ஏற்படாது மற்றும் உங்களுக்கு பணமும் செலவாகாது. இதனை பற்றி முழுமையாக இந்த கட்டுரையில் தெரிந்து கொள்ளுங்கள். ஹேர் டை செய்வதற்கு தேவையான பொருட்கள் மருதாணி இலை பவுடர்- தேவையான அளவு உப்பு – ஒரு டீஸ்பூன் சோளமாவு – இரண்டு டீஸ்பூன் எலுமிச்சை சாறு- தேவையான அளவு இண்டிகோ பவுடர் (அவுரி இலை) -தேவையான அளவு உங்கள் முடியின் அளவுக்கு தகுந்தார்போல் இண்டிகோ பவுடர், மருதாணி இலை பவுடரை, எடுத்துக் கொள்ள வேண்டும். முதலில் மருதாணி இலை பவுடர், எலுமிச்சை சாறு மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து ஒரு பேஸ்ட் போல் செய்து காற்று புகாதவாறு இரவு முழுவதும் மூடி வைத்து ஊற வைக்க வேண்டும். ஊறவைத்த மருதாணி பேஸ்ட் சிறிதளவு தண்ணீர் ஊற்றி கலந்து பின் பிரஷ் மூலம் தலைமுடி முழுவதும் தடவிக் கொள்ள வேண்டும். இதனை ஒரு மூன்று மணி நேரம் அல்லது நான்கு மணி நேரம் ஊற வைக்க வேண்டும். மூன்று மணி நேரம் கழித்து தலையை குளிர்ந்த நீரால் நன்கு அலசிக் கொள்ளவும்,அப்பொழுது ஷாம்பு, சீயக்காய், போன்றவற்றை பயன்படுத்தக் கூடாது என்பதை நீங்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். ஒருவேளை நீங்கள் ஷாம்பு சீயக்காய் பயன்படுத்தினால் தலைமுடியில் சாயம் இறங்காது ஆதலால் உபயோகிக்க வேண்டாம். எந்த ஹேர் டை பயன்படுத்தினாலும் அதை பயன்படுத்துவதற்கு முன்னர் தலையில் அழுக்கு இல்லாதவாறு முடியை நன்கு அலசிக் கொள்ள வேண்டும். மற்றொரு முறை தலைமுடி காய்ந்த பிறகு ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு இண்டிகோ பவுடர் எடுத்து கொள்ளவும் பின் அதில் சிறிதளவு உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும். பின்பு அதில் 2 டேபிள் ஸ்பூன் அளவு சோள மாவு சேர்த்து தண்ணீர் ஊற்றி பேஸ்ட் போல் செய்து இதையும் தலையில் தடவி இரண்டு மணி நேரம் ஊற வைக்க வேண்டும். வீடு கட்ட சிறந்தது எது மணல் அல்லது எம்சாண்ட் இரண்டு அல்லது மூன்று மணி நேரம் கழித்து தலைமுடியை நீரில் அலசிக் கொள்ளவும். Kerpotta nivarthi meaning in tamil 2022 மறு நாள் அல்லது 2 நாள் கழித்து நல்லண்ணை தேய்த்து குளிக்கவும் இப்பொழுது முடி இயற்கையாகவே கருப்பாக மாறிவிடும்.
தற்போது நிலவும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு, மேலும் இரண்டு வாரங்களின் பின்னர் நிவர்த்தியாகும் என லிட்ரோவைப் பாதுகாக்கும் அமைப்பு தெரிவித்துள்ளது. எரிவாயுவைத் தாங்கிவந்த கப்பலொன்று, மீளத் திருப்பி அனுப்பப்பட்டமையால், எரிவாயுவுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அதன் செயலாளர் டெரன்ஸ் அப்புஹாமி தெரிவித்துள்ளார். நேற்றையதினம், மட்டுப்படுத்தப்பட்ட அளவில் சில பிரதேசங்களுக்கு சமையல் எரிவாயு விநியோகம் இடம்பெற்றதுடன், சில பகுதிகளுக்கு போதுமான அளவு எரிவாயு கிடைக்கவில்லையெனவும் தெரிவிக்கப்படுகிறது. இதற்கிணங்க தங்களுக்கு போதுமான அளவு சமையல் எரிவாயு கிடைக்கவில்லை நுகர்வோரும், எரிவாயு விற்பனையாளர்களும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. Related posts: வேலைவாய்ப்பு பணியகத்தை தொடர்பு கொள்ளுமாறு கோரிக்கை! பாம்புக்கடிக்கு இலக்காகி குடும்பஸ்தர் பலி! ஏப்ரல் 1 முதல் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அடங்கிய பொதிகளை வழங்க தீர்மானம் - அமைச்சர் பந்துல குணவர்...
19.6.2014 அன்று குரு பகவான் உங்கள் இராசிக்கு சப்தம ஸ்தானமான 7-ம் இடத்திற்கு குடிபுக போகிறார். இதுவரையில் சப்தமே இல்லாமல் அடங்கி அமைதியாக இருந்த நீங்கள், சப்த நாடியும் புத்துணர்ச்சி பெற்று மகிழ்ச்சியோடு இருக்கப்போகிறீர்கள். 7-ம் இடத்தில் உச்சமாக இருக்கும் குரு பகவான், உங்கள் இராசிக்கு 12-ம் இடம், 3-ம் இடம் ஆகியவற்றின் அதிபதி ஆவர். அதாவது விரயாதிபதி, கீர்த்தி ஸ்தானாதிபதி ஆவார். அவர் சப்தமத்தில் அமர்ந்து உங்கள் இராசிக்கு கீர்த்தி ஸ்தானத்தையும், லாப ஸ்தானத்தையும் பார்வை செய்வதோடு மட்டுமல்லாமல், உங்கள் ஜென்ம இராசியையும் பார்வை செய்வதால், இந்த இடங்கள் எல்லாம் ரீசார்ஜ் ஆகிவிட்டது. இதுவரை இருட்டறையில் அடைப்பட்டிருந்த வண்டு, ஜன்னலை திறந்ததும் வெளியே பறந்தோடியது போல், பிரச்னைகள் எல்லாம் பஞ்சு போல் பறந்து விடும். உறவினர்களிடம் வாங்கிய கடன் சுமை தீரும். உறவினர் மனகசப்பு அகலும். திருமண வாய்ப்பு சிலருக்கு அமையும். பிள்ளைகளுக்கு வேலை வாய்ப்பும், திருமணம் அமையவில்லையே என்று கவலைப்பட்ட பெற்றோர் மனதில் சுபச்செய்தி சங்கீதமாக இசைக்கும். வேலை வேலை என்று தேடி திரிந்து அலைந்து கொண்டு இருந்தவர்கள் நல்ல இடத்தில் வேலையில் அமர்வீர்கள். அலைச்சல் குறையும். புதிய சொத்துக்கள் வாங்குவீர்கள். கடன் தொல்லை சற்று குறைந்துவிடும். பெற்றோர் உதவி சிலருக்கு கிட்டும். சிலருக்கு நண்பர்களிடத்தில் விரோதம் ஏற்படலாம், எல்லாம் பணத்தால்தான் என்று சப்தம குரு சொல்லுகிறார். ஜென்மத்தை குருபார்வை செய்வதால், முக்கியமான திட்டங்கள் நிறைவேறும். சரி. 7-ம் வீட்டில் இருக்கும் குரு பகவான் சொல்லும் ஆலோசனை என்னவெனில், “திருமணமானவர்கள் கருத்து வேறுபாடு இல்லாமல் இருங்கள். நண்பர்களோடும் பகை வேண்டாம். படிக்காமல் எந்த ஒப்பந்தத்திலும் கையெழுத்து போட வேண்டாம்“ என்கிறார். கணபதியையும், தட்சிணாமூர்த்தியையும், குருபகவானையும் வணங்குங்கள். அஷ்டலஷ்மிகளின் அருட்பார்வை பெறுவீர்கள். குரு பெயர்ச்சி வாழ்த்துக்கள். Comments Copyright 2010-2014 © veeramunai.com All rights reserved. This site best viewed at a screen resolution of 1024 x 768 pixels or higher with most recent versions of browsers. You will need the most recent versions of Adobe Flash Player & etc in order to view some multimedia content.
வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அடுத்த வேப்பங்கனேரி பகுதியை சேர்ந்த ஜெகன்நாதன் இவரின் மகன் கௌதம் (21) என்பவருக்கும் காமாட்சி அம்மன் பேட்டை பகுதியை சேர்ந்த கண்ணியப்பன் என்பவரின் மகள் கலைவாணி (20) என்பவருக்கும் கடந்த 6 மாதத்திற்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இதனிடையே தற்போது கலைவாணி தனது கணவர் வீடான வேப்பங்கனேரியிவ் வாழ்ந்து வந்தார்.இந்நிலையில் கலைவாணி நேற்று முன்தினம் திடீரென வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனை கண்ட அவரது குடும்பத்தினர் கே.வி.குப்பம் போலிசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் கலைவாணிஉடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு மருத்து வமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்துபெண்ணின் தந்தை கண்ணியப்பன் கொடுத்த புகாரின் பேரில் கே.வி.குப்பம் போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் திருமணமாகி 6 மாதங்களே ஆகியுள்ளதால் குடியாத்தம் ஆர்.டி.ஓ தனஞ்செழியன் விசாரணை செய்து வருகின்றார். கலைவாணியின் பெற்றோர் தன் மகளை அடித்து கொலை செய்து விட்டதாகவும் வரதட்சணை கேட்டு துன்புறுத்தியதாக போலீசாரிடம் நடந்த விசாரணையில் கூறியதாக தெரியவருகிறது. திட்டமிட்டு தனது மகளை மணமகன் வீட்டார் கொலை செய்து விட்டனர் என்கிற குற்றச்சாட்டை வைத்துள்ளனர். கலைவாணியின் பெற்றோர்.பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களும் வரதட்சனை கொடுமைகளும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது.
1948-ம் ஆண்டு இங்கிலாந்திடம் இருந்து இலங்கை விடுதலை பெற்றது. அங்குள்ள சிங்களர்கள், தமிழர்கள் சுதந்திரக் காற்றை அனுபவிக்கத் தொடங்கினார்கள். ஆனால் பெரும்பான்மை இனமான சிங்களர்களுக்கு மட்டும் தமிழர்கள் மீது எரிச்சல் ஏற்பட தொடங்கியது. ஆட்சி அதிகாரத்தில் தமிழர்கள் ஆதிக்கம் செலுத்துவதை அவர்கள் விரும்பவில்லை. இலங்கை பாராளுமன்றத்தில் சட்டம் கொண்டு வந்து தமிழர்களுக்கு கிடைக்க வேண்டிய நியமான உரிமைகளை பறித்தனர். கல்வி, வேலை வாய்ப்பு உள்பட பல விஷயங்களில் ஈழத்தமிழர்கள் ஓரம் கட்டப்பட்டனர். இது என்ன அநிநாயம் என்று ஈழத் தமிழர்களின் தலைவர்கள் கேள்வி கேட்டனர். அதை சிங்களர்கள் கண்டுகொள்ளவில்லை. நம்ம ஊரில் மகாத்மா காந்தி சத்தியாகிரக வழியில் போராடி சுதந்திரம் பெற்று தந்தது போல, அங்கு ஈழத்து காந்தி என்று அழைக்கப்படும் செல்வா உள்பட பல தமிழ் தலைவர்கள் தமிழர்களின் உரிமைக்காக அமைதி வழியில் போராடினார்கள். கல்வி, வேலை வாய்ப்பில் புறக்கணிக்கப்படும் பட்சத்தில் சொந்த நாட்டில் ஈழத்தமிழர்கள் எப்படி வாழ முடியும் என்று குரல் எழுப்பினார்கள். ஆனால் தமிழ் இனம் ஒரு அடிமை இனம்போல இருக்க வேண்டியதுதான் என்று சொல்லாமல், சொல்லி சிங்கள தலைவர்கள் தொடர்ந்து தமிழர்களை புறக்கணித்தனர். இதையடுத்து தமிழர் பகுதிகளில் போராட்டங்கள் வெடித்தன. ஆர்ப்பாட்டம் ஊர்வலங்கள் நடந்தன. தமிழர்கள் அடித்து நொறுக்கப்பட்டனர். 1954-ம் ஆண்டு பிறந்த பிரபாகரன் சிறு பையனாக இருந்தபோது, ஈழத்தமிழர்கள் மீது போலீசார் நடத்திய வெறியாட்டங்கள் அதிகரித்திருந்தன. அப்போது பிரபாகரன் கேட்ட கேள்வி, ஏன் அடிக்கிறார்கள்? நாம் ஏன் திருப்பி அடிக்கவில்லை? இந்த சிந்தனை பிரபாகரன் போலவே பெரும்பாலான சிறுவர்கள் மனதில் ஏற்பட்டிருந்தது. அவர்கள் வளர்ந்து வாலிப வயதை தொட்டபோது, குட்ட குட்ட குனிவதா? உரிமைக்காக இனி ஆயுதம் ஏந்துவோம் என்றனர். பிரபாகரன் ஒருபடி மேலே சென்று, இலங்கையில் தமிழர்கள் அதிகம் வாழும் வடக்கு, கிழக்கு பகுதியை எங்களுக்கு தனியாக பிரித்து கொடுத்து விடுங்கள். நாங்கள் தமிழ் ஈழம் பெயரில் தனி சுதந்திர நாட்டை உருவாக்கிக் கொள்கிறோம் என்று ஆவேசமானார். இலங்கை மொத்த மக்கள் தொகையில் 73.8 சதவீதம் பேர் சிங்களர்கள். 13.9 சதவீதம் பேர் ஈழ தமிழர்கள். 4.6 சதவீதம் பேர் இந்திய வம்சா வழி தமிழர்கள். சுமார் 2 கோடி பேர் கொண்ட மக்கள் தொகையில் சுமார் 50 லட்சம் பேர் ஈழத் தமிழர்கள். இவர்களுக்காக தனி நாட்டை உருவாக்க போவதாக 1972-ம் ஆண்டு பிரபாகரன் அறிவித்தார். விடுதலைப்புலிகள் இயக்கம் பிறந்தது. இலங்கையை வென்ற தமிழ் அரசன் சோழனின் கொடி புலிக்கொடி. அதையே பிரபாகரன் தன் கொடியிலும் பதித்தார். புலி தலையை சுற்றி 33 துப்பாக்கிக் குண்டு வளையம் அமைத்தார். அப்போது ஆட்சியில் இருந்த இந்திரா காந்தியும், எம்.ஜி.ஆரும், ஈழப் போராளிகளுக்கு உதவினார்கள். எதிரி நாடுகள் இலங்கை மண்ணில் தளம் அமைத்து விடக்கூடாது என்ற தொலைநோக்கு பார்வையில் இந்திரா காந்தி ஈழப் போராளிகளுக்கு ஆயுதம் கொடுத்து பயிற்சியும் அளித்தார். ஏராளமான இளைஞர்கள் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் சேர்ந்தனர். 1983-ம் ஆண்டு முதல் ஈழம் போர் தொடங்கியது. விடுதலைப்புலிகள் நடத்திய முதல் கண்ணிவெடி தாக்குதலில் 13 சிங்கள வீரர்கள் கொல்லப்பட்டனர். இதனால் சிங்கள மக்கள் வெறியர்களாக மாறினார்கள். கொழும்பில் அரசு பணியில் இருந்த, கடை வைத்திருந்த தமிழர்கள் ஓட, ஓட அடித்து விரட்டப்பட்டனர். 600 தமிழர்கள் கொல்லப்பட்டனர். கொழும்பில் ரத்த ஆறு ஓடியது. 1985-ம் ஆண்டு சிங்கள அரசு முதன் முதலாக ஈழப் போராளிகளிடம் பேச முன் வந்தது. ஆனால் அதை விடுதலைப்புலிகள் ஏற்கவில்லை. இந்த சமயத்தில் டெலோ, ஈராஸ், இ.பி.ஆர்.எல்.எப்., டி.யூ.எல்.எப் என்று பல போராளிக் குழுக்கள் இருந்தன. இவர்களால் விடுதலைப்போராட்டம் திசை திரும்புவதாக கருதிய புலிகள் ஸ்ரீசபாரத்தினம், அமிர்தலிங்கம், பத்மநாபா ஆகியோரை சுட்டுக் கொன்றனர். இந்த நிலையில் இந்தியாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருந்தது. பிரதமர் பதவிக்கு வந்த ராஜீவ் காந்தி இலங்கை கொள்கையில் புதிய அணுகுமுறையை ஏற்படுத்தினார். ஒரு கட்டத்தில் புலிகளை ஒடுக்க இந்திய அமைதிப்படையை அனுப்பி வைத்தார். 1990 வரை 3 ஆண்டுகள் இலங்கையில் தங்கியிருந்த இந்திய அமைதிப்படை விடுதலைப்புலிகளிடம் இருந்த ஆயுதங்களில் 90 சதவீதத்தை பறித்தது. பிறகு சுமார் 1000 ராணுவ வீரர்களை இழந்து விட்டு இந்தியா திரும்பியது. இது ஈழப்போரின் 2-வது கட்டமாக கருதப்படுகிறது. இலங்கை பிரச்சினையை தீர்க்க ஜெயவர்த்தனேவுடன் ராஜீவ் காந்தி ஒரு ஒப்பந்தம் செய்தார். இது விடுதலைப்புலிகளிடம் அதிருப்தியை உருவாக்கியது. 1991-ம் ஆண்டு ராஜீவ் காந்தி மனித வெடிகுண்டால் கொல்லப்பட்டார். அதன் பிறகு விடுதலைப்புலிகள் மீதான இந்தியாவின் பார்வை முழுமையாக மாறியது. விடுதலைப்புலிகள் இயக்கம் மீது சர்வதேச பார்வை மாறவும் இது வழி வகுத்தது. என்றாலும் விடுதலைப்புலிகள் ஈழம் ஒன்றே குறிக்கோள் என்று போராட்டத்தை தீவிரப் படுத்தினார்கள். 1993-ம் ஆண்டு விடுதலைப்புலிகளின் மனித வெடிகுண்டு மூலம் அதிபர் பிரேமதாசா கொல்லப்பட்டார். இந்த நிலையில் சிங்கள ராணுவமும் தன்னை நவீனப்படுத்தி வலுவாக்கிக் கொண்டது. இதன் காரணமாக 1995-ல் யாழ்ப்பாணம் முழுவதையும் சிங்கள ராணுவம் கைப்பற்றியது. அதற்கு பதிலடியாக 1996-ல் முல்லைத் தீவில் இருந்த ராணுவ முகாமை விடுதலைப்புலிகள் பிடித்தனர். அங்கு இருந்த 1200 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். விடுதலைப்புலிகளின் அதிரடி நடவடிக்கைகளை உன்னிப்பாக கவனித்து வந்த அமெரிக்கா உள்பட பல்வேறு நாடுகள் 1997ல் விடுதலைப்புலிகள் இயக்கத்தை தீவிரவாத இயக்கமாக அறிவித்தன. ஆனால் எதை பற்றியும் கவலைப்படாத புலிகள் தங்கள் லட்சியப் பயணத்தில் உறுதியுடன் இருந்தனர். 1998-ல் கிளிநொச்சி ராணுவ முகாமை கைப்பற்றினார்கள். அங்கு இருந்த சுமார் 1000 சிங்கள ராணுவ வீரர்களை கொன்றனர். இதனால் வன்னிப் பகுதியில் புலிகள் வசம் பெரிய அளவில் நிலப்பரப்பு கட்டுப்பாட்டுக்குள் வந்தது. சுமார் 5 ஆண்டுகளில் தன் ஆயுத பலத்தை பெருக்கி புலிகள் இந்த அதிரடிகளை நடத்தியதை பார்த்து உலக நாடுகள் ஆச்சரியப்பட்டன. புலிகள் வேகத்தை பார்த்த இங்கிலாந்து 2001-ல் புலிகளை தீவிரவாதிகள் என்று அறிவித்தது. இதை காதில் வாங்கிக் கொள்ளாத விடுதலைப்புலிகள் அதே ஆண்டு கொழும்பு சர்வதேச விமான நிலையத்தில் அதிரடி தாக்குதலை நடத்தினார்கள். 6 விமானங்கள் குண்டு வைத்து தகர்க்கப்பட்டன. உலகமே விடுதலைப்புலிகளை திரும்பிப்பார்த்தது. இதையடுத்து உலகின் பல நாடுகள் சிங்கள அரசுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே சமரசம் செய்து வைக்க முன் வந்தது. ஆனால் விடுதலைப்புலிகள் இந்தியாவின் சமரசத்தை எதிர்பார்த்தது. இந்தியா தலைமையில் ஒரு சமரச தீர்வு ஏற்பட வேண்டும் என்று பிரபாகரன் விருப்பம் தெரிவித்தார். ஆனால் சமரசத்தில் ஈடுபட இந்தியா விரும்பவில்லை. வெளியுறவு கொள்கை மாற்றம் காரணமாக இந்தியா அமைதி காத்தது. இதையடுத்து நார்வே நாடு புலிகளிடம் பேச முன் வந்தது. அதை புலிகளும் ஏற்றுக்கொண்டனர். நார்வே நாட்டின் சமரச முயற்சி காரணமாக சிங்கள ராணுவத்தினரும் விடுதலைப்புலிகளும் போர் நிறுத்தம் செய்தனர். 2002-ம் ஆண்டு நார்வே நாட்டில் வைத்து சமரச பேச்சு நடந்தது. இலங்கை வடக்கு- கிழக்கில் தமிழர்களுக்கு சுயாட்சி வழங்க தீர்மானிக்கப்பட்டது. இந்த அதிகார பகிர்வு திட்டத்துக்கு இரு தரப்பிலும் சம்மதம் தெரிவிக்கப்பட்டது. 2003-ம் ஆண்டு இந்த சமரச திட்டத்தை ஏற்பதில் விடுதலைப் புலிகளின் மூத்த தலைவர்களிடம் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. சொத்து, பணம் சேர்த்து சொகுசாக வாழ ஆசைப்பட்ட கருணா என்ற முரளீதரன் 2004-ம் ஆண்டு புலிகள் இயக்கத்தில் இருந்து விலகினார். அவருடன் கிழக்கு மாகாணப் பகுதியில் இருந்த சுமார் 3 ஆயிரம் இளைஞர்கள் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இருந்து பிரிந்தனர். புலிகள் இயக்கத்துக்கு ஏற்பட்ட மிகப்பெரிய இழப்பாக இது கருதப்பட்டது. அடுத்தடுத்து கருணா துரோக செயல்களில் ஈடுபட்டார். விடுதலைப்புலிகளின் பலம் எது பலவீனம் எது என்பதை சிங்கள ராணுவத்திடம் முழுமையாக சொல்லி கொடுத்தார். விடுதலைப்புலிகளை எங்கிருந்து, எப்படி தாக்கினால் வேரோடு அழிக்கலாம் என்றும் சொல்லிக் கொடுத்தார். இதையடுத்து இந்தியா, சீனா, பாகிஸ்தான் நாடுகளிடம் இலங்கை போர் கருவிகளை வாங்கியது. சர்வதேச கொள்கை மாற்றங்களும் சிங்கள அரசுக்கு சாதகமாக மாறின. புதிதாக 2007-ல் ஆட்சிக்கு வந்த மகிந்த ராஜபக்சேவுக்கு சீனா அதிகமான ஆயுத உதவி செய்தது. உடனடியாக ராஜபக்சே போரைத் தொடங்கினார். 2007-ம் ஆண்டு நவம்பர் மாதம் தமிழ்ச்செல்வன் கொல்லப்பட்டார். 2008ல் போர் நிறுத்தம் முறிக்கப்பட்டது. விமானங்கள் மூலம் குண்டுகள் வீசப்பட்டன. கிழக்கு பகுதி முழுவதையும் விடுதலைப்புலிகள் இழந்தனர். 4-வது ஈழப்போரை தொடங்குவதாக புலிகள் அறிவித்தனர். கடந்த ஜனவரி மாதம் போரில் கிளிநொச்சி, ராணுவத்திடம் வீழ்ந்தது. அதன் பிறகு முல்லைத் தீவு வீழ்ந்தது. பிறகு மூன்றே மாதத்தில் வடக்கு பகுதி முழுவதையும் சிங்கள ராணுவம் ஆக்கிரமித்து விட்டது. நேற்று முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள முள்ளி வாய்க்காலில் ராணுவம் தன் போரை நிறைவு செய்து விட்டது. விடுதலைப்புலிகளின் கொடி சின்னத்தில் புலி தலையை சுற்றி 33 குண்டு வைத்ததன் மூலம் 33 ஆண்டுகளில் ஈழம் மலர்ந்து விடும் என்று கூறுவதற்காகத்தான் என்று சொல்வார்கள். நேற்று போர் முடிந்த 17-05-2009 ன் கூட்டுத் தொகையும் 33 என்பது குறிப்பிடத்தக்கது. https://eelam.tv/watch/hon-v-prabhakaran-press-conference-at-killinochi-2002-part-1_vdYozyyRWNkrQjd.html https://eelam.tv/watch/hon-v-prabhakaran-press-conference-at-killinochi-2002-part-1_vdYozyyRWNkrQjd.html இலங்கையில் தமிழர்கள் வகுக்க வேண்டிய மாற்று வியூகம்! தமிழ் பௌத்தம் பற்றிய விழிப்புணர்வைத் தமிழர்கள் விரைவாகப் பெறவேண்டிய சூழல் வந்திருக்கின்றது. குருந்தூர் மலையைச் சுற்றி எழும் சிங்கள பௌத்த ஆக்கிரமிப்பைத் தடுக்க தமிழர்கள் தமிழ் பௌத்தம் என்கிற ஆயுதத்தையும்சமநேரத்தில் கையிலெடுக்க வேண்டும். பௌத்தம் சிங்களவர்களுக்குரிய மதம் என்ற விசமம் பரப்புரை பல நூற்றாண்டுகளாக முன்னெடுக்கப்பட்டு வந்திருக்கின்றது. அதில் வெற்றியும் பெற்றிருக்கிறது. ஆனால் உண்மை அதுவல்ல. பௌத்தின் பெரும் பங்கு தமிழர்களுக்குரியது பௌத்தின் பெரும் பங்கு தமிழர்களுக்குரியது. முதன்முதலாக பௌத்த அறக் கருத்துக்களை பேரிலக்கியங்களிலும், சிற்றிலக்கியங்களிலும் வெளிப்படுத்தியவர்களே தமிழர்கள்தான். ஆனால் இன்று தமிழையும், தமிழர்களையும் ஆக்கிரமித்து அழிக்கும் நிலைக்கு இலங்கையில் பௌத்தம் மாற்றம் பெற்றிருக்கிறது. அந்த நிலையை அது எப்படி அடைந்தது? பௌத்த ஒரு மதம் என்றே பலரும் நம்புகிறார்கள். உண்மையில் அதுவொரு வாழ்வியல் தத்துவம். போரழிவுகளாலும், சாதி, சமய சண்டைகளாலும், போட்டி பொறாமைகளாலும் பிளவுண்ட சமூகங்களுக்கு வாழ்வின் நிலையாமையைப் போதித்து நல்வழிப்படுத்துவதே பௌத்தம். அந்தத் தத்துவத்தினுள் அரசியல் கலக்கையில் அது மதமாகியது என்பதே யதார்த்தம். என்றைக்கு இந்தியா கடந்து பௌதத்தைப் பரப்புவது என்ற பயணம் தொடங்கியதோ, அன்றைக்கே அது அரசியலாகியது. அந்தந்த நாடுகளது இனங்களது அரசியலைக் கையிலெடுத்துக்கொண்டு பௌத்தம் தன்னை வளர்த்தது. அந்தப் பின்னணியில்தான் இலங்கையில் பௌத்தம் துப்பாக்கியைத் தூக்க, மியான்மர் பௌத்த வாள்களைத் தூக்கியது. இந்தப் பின்னணியில்தான் இலங்கையின் பௌத்தத்தையும் புரிந்துகொள்ளவேண்டிய தேவை இருக்கிறது. பௌத்தத்தின் தொடக்க மொழி பாலியாக இருந்த போதிலும், தான் பரவும் இடங்களில் பிராந்திய மொழிகளுக்குள் தன்னை உள்ளடக்கிக்கொண்டது. அந்த வகையில் வட இந்தியாவிலிருந்து பௌத்தம் தென்னிந்தியாவிற்குப் பரவும் போது தென்னகத்தில் நன்கு வளர்ச்சியடைந்த நிலையில் தமிழ் காணப்பட்டது. அதனால் பௌத்தம் தமிழுக்குள்ளால் தன்னை இங்கே அறிமுகம் செய்தது. தமிழுக்குள்ளால் தத்துவார்த்தத்தை வளர்த்த பௌத்தம் தமிழுக்குள்ளாலேயே தன் தத்துவார்த்தத்தை வளர்த்தது. பெரும் அழிவுகளிலிருந்து தளிர்த்த செழுமைமிகு காலமாக அடையாளப்படுத்தப் படும் களப்பிரர் காலத்தில் பௌத்தத் தத்துவத்தை பின்னணியாகக் கொண்டு பல இலக்கியங்கள் தமிழச் சூழலில் எழுந்தன. மணிமேகலை, சீவகசிந்தாமணி போன்றன இதற்கு சிறந்த எடுத்துக்காட்டுக்கள். இவ்வாறு பௌத்தம் தென்னிந்தியாவில் தமிழால் எழுச்சி பெற்றுக்கொண்டிருக்க, இந்து என்கிற அமைப்புசார்ந்த சமய எழுச்சி பல்லவர்களால் ஏற்படுத்தப்பட்டது. தமிழகத்தில் இருந்த ஏனைய சமய மரபுகளையும் (முருக, கொற்றவை, ஐயானார் வழிபாடுகள்) தனக்குள் ஈர்த்து இந்து மதமாக எழுச்சிபெற்றது. இந்த எழுச்சிக்கு பௌத்த – அசீவக தத்துவங்களைப் பின்னணியாகக் கொண்ட அமைப்புக்கள் தடையாக இருந்தன. எனவே அந்தத் தத்துவப் பின்னணி கொண்ட அமைப்புக்களை இல்லாதொழிக்கும் வேலையை இந்து மதம் மேற்கொண்டது. அரசவைகளை கைப்பற்றிக்கொண்ட பிராமணர்கள் அரசர்களுக்கு (புரோகிதர்கள்) ஆலோசகர்கள் ஆனார்கள். அவர்கள் சொன்னபடி மன்னர் செயற்பட்டார். எனவே தான் அரசவைகளில் இந்து மதத்திற்கு மாற்றான அமைப்புகள் அனல் – புனல் வாதங்களுக்கு அழைக்கப்பட்டன. அதாவது கடவுள் பற்றிய விவாதங்கள் இந்து மதவாதிகளுக்கும் ஏனைய நம்பிக்கையாளர்களுக்கும் இடையில் நடைபெறும். தம் கருத்தை நிரூபிக்கத் தவறுபவர்கள் அனலிலும், தனலிலும் இட்டு எரிக்கப்பட்டார்கள். இவ்வாறு பல்லாயிரம் பௌத்த – அசீவகத் துறவிகள் படுகொலையானார்கள். இந்தப் படுகொலைகளுக்கு அஞ்சியும், விரக்தியுற்றும் பெருந்தொகையான பௌத்த – அசீவகத் துறவிகள் புலம்பெயர்ந்தார்கள். அப்படி புறப்பட்டவர்களில் ஒருவர்தான் இலங்கையில் பௌத்தத் தத்துவத்தை வக்கிரமிக்க மதமாக மாற்றிய மகாநாம தேரர். இவரே இலங்கை பௌத்தத்தினதும், வரலாற்றினதும் அடிப்படையாகக் கொள்ளப்படும் மகாவம்சத்தைப் படைத்தவராவார். பௌத்தம் சாராத எத்தனை உயிர்களையும் கொல்லலாம். அதற்குப் புத்த பெருமானின் மோட்சமும், ஆசீர்வதிப்பும் உண்டென போதிப்பதே இந்நூல் ஆகும். ஆக, மகாநாம தேரரின் பிரதான நோக்கமாக இருந்தது, தம்மைப் படுகொலை செய்த தமிழையும், தமிழரையும் பலியெடுப்பதுதான். அந்தக் கொள்கையின் அடிப்படையிலேயே இலங்கையில் பௌத்தம் வளர்ந்து நிற்கிறது. இலங்கைக்குள் நுழைந்த பௌத்தம் பௌத்தம் இத்தீவில் பரவும்போது அதன் பரவுகை மொழியாக சிங்களம் இருக்கவில்லை. சிங்களம் என்கிற மொழி கி.பி 7 ஆம் நூற்றாண்டுக்குப் பின்னரே வழக்கிற்கு வந்தது. அப்படியாயின் இலங்கைக்குப் பௌத்தம் அறிமுகப்பட்ட மொழி, தமிழகத் தொடர்போடு பார்க்கையில் தமிழாகவே இருத்தல்வேண்டும். இலங்கைக்குப் பௌத்தம் உள்நுழைந்ததும் மகாவம்சத்தில் உத்தர எனவும், அந்நியர் தேசம் எனவும் குறிப்பிடப்படும் வடக்கு பகுதி ஊடாகத்தான். அதற்குப் பிரதான காரணம் தென்னகத்தில் பௌத்தம் எழுச்சியுற்ற பல்கலைக்கழகமாக இருந்த காஞ்சிபுரத்திலிருந்து மிக எட்டிய தூரத்தில் மாதோட்டம் (மன்னார்) மாதகல், நெடுந்தீவு, போன்ற இடங்கள் அமைந்திருக்கின்றமைதான். இந்த இயற்கை துறைகள் வாயிலாகவே இலங்கைத் தீவுக்குள் பௌத்தம் நுழைந்தது. பௌத்த துறவிகள் பேசிய மொழிக்கும், வடக்கில் இந்தக் கரைகளில் வாழ்ந்த மக்கள் பேசிய மொழிக்கும் வித்தியாசங்களற்று இருந்தமையினால் இங்கு தரிப்பதிலும் அவர்களுக்குப் பெரிய சிக்கல்கள் இருக்கவில்லை. ஆனால் இயற்கை அதற்கு இடம்கொடுக்கவில்லை. பௌத்தம் போதிக்கும் இயற்கை வாழ்வு முறையான குகைகள், காட்டு காய் கறி பழங்கள் என்பன வடக்கின் அநேக பாகங்களில் இருக்கவில்லை. அத்துடன் சைவ மதத்தில் அதீத நம்பிக்கை கொண்டிருந்த இப்பிராந்திய மக்கள் பிற தத்துவங்களைக் கேட்கத் தயாராக இருக்கவில்லை. தென்பகுதிக்கு நகர்ந்த பௌத்தம் எனவே பௌத்தம் வடக்கில் செழித்தோங்க முடியாத நிலை உருவாக, அங்கிருந்து புறப்பட்ட பௌத்த துறவிகள் நாட்டின் தென் பக்கமாக நகர்ந்தனர். வன்னியில் அடர் வனங்கள் அமையப்பெற்ற இடங்களில் எங்கெல்லாம் குன்றுகள், மலைகள் காணப்படுகின்றனவோ அங்கெல்லாம் பௌத்த துறவிகள் தங்கிச் சென்றனர். அதற்கு அப்பகுதியில் எழுச்சிபெற்றிருந்த தமிழ் வணிகர்கள், குறுநில மன்னர்கள் குகைகளை செதுக்கி, பாதுகாப்பரண்களை அமைத்துக்கொடுத்தமைக்கான கல்வெட்டுச்சான்றுகள் வவுனியாவின் புளியங்குளம், வெடுக்குநாறிமலை ஆகியவற்றில் இன்றும் கிடைக்கின்றன. அவை ஆதித் தமிழ் பிராமியில் எழுதப்பட்டிருப்பதும், அவற்றில் தமிழர்களைக் குறிக்கும் பெயர்கள் இடம்பெற்றிருப்பதும், தமிழக குகைக் கல்வெட்டுக்களில் இருந்து துளியளவும் வித்தியாசப் பட்டிருப்பதும் பௌத்தம் தமிழுக்கு ஊடாகவே இத்தீவில் அறிமுகமாகியமைக்கு பெரும் எடுத்துக்காட்டாக இன்றும் இருக்கின்றன. இந்தப் பிண்ணனியிலேயே, வட மாகாணத்தில் உள்ள மலைகளில், தொன்மையான அரசிருக்கைகளில் பௌத்தம்சார் தொல்லியல் எச்சங்கள் கிடைத்துவருகின்றன. உருத்திரபுரத்திலும், குருந்தூர் மலையிலும், வெடுக்குநாறி மலையிலும், செட்டிகுளத்திலும் கிடைப்பதெல்லாம் இவ்வகையில்தான் பௌத்த எச்சங்கள் இன்றும் கிடைக்கின்றன. எனவே அவற்றை சிங்கள பௌத்தத்தின் தொல்லியல் எச்சங்கள் எனப் பார்ப்பதும், அந்த நோக்கில் அவற்றை ஆய்வுக்குட்படுத்துவதும், மீளவும் சிங்கள பௌத்த நிலையமாக அவ்விடங்களைப் பிரகடனப்படுத்துவதும் புத்திசாலித்தனமான காரியங்கள் அல்ல. பௌத்தம் தன்னை சிங்கள பௌத்தமாக எப்போது பிரகடனப்படுத்திக் கொண்டதெனில், அது அனுராதபுத்தில் அரசவை மதமாகத் தன்னை நிலைகொண்டபோதுதான். அரசனின் ஆலோசகர்களாகப் பௌத்த பிக்குகள் நியமனம் பெற்ற பின்னர், பெரும் இனத்துவேசத்துடன், சிங்களம் தவிர்ந்த ஏனையோரைப் பார்த்தது. சிங்கள பௌத்தர்கள் தவிர ஏனையோரைக் கொலை செய்பவர்களுக்குப் பரலோகத்தில் புண்ணியமே கிடைக்கும் எனப் போதித்தது. இலங்கையில் இன ரீதியான பாகுபாட்டை ஆரம்பத்திலிருந்தே போதித்து வந்த பௌத்தம் அரசியல், பண்பாட்டுத் தளத்தில் ஏகவுரிமையைக் கோரி வந்திருக்கிறது. அதன் பரிணாம வளர்ச்சியே சிங்கள பௌத்த பெரும்பான்மைவாதமாக வளர்ந்திருக்கிறது. அந்த வளர்ச்சியே குருந்தூர் மலைவரைக்கும் வந்து நிற்கிறது. இந்த அசுரத்தனமான வளர்ச்சியே வரலாற்றை, தொல்லியலை பல்பரிணாமப் பார்வை கொண்டு பார்ப்பதைத் தடுக்கிறது. பௌத்த எச்சங்கள் எங்கு கிடைத்தாலும் அவை சிங்கள பௌத்தத்திற்கு மட்டும் உரியன என்ற முடிவுக்கு வரச்செய்கிறது.
KineMaster என்று சொல்லக்கூடிய இந்த செயலியை KineMaster Corporation என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. இந்த செயலி 2013 டிசம்பர் 26 ஆம் நாள் கூகுள் ப்ளே ஸ்டோரில் KineMaster Corporation நிறுவனம் வெளியிட்டது. இதுவரை இந்த செயலியை 10,00,00,000 க்கும் மேற்பட்ட நபர்கள் பதிவிறக்கம் செய்துள்ளனர். தற்போது இந்த செயலியை நீங்கள் கூகுள் ப்ளே ஸ்டோரில் 75.78 எம்பிக்கு பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த செயலிக்கு ப்ளே ஸ்டோரில் இதுவரை 5 க்கு 4.4 ரேட்டிங் பெற்றுள்ளது. இந்த செயலியின் பயன்கள் கீழே பார்க்கலாம். COMPARED TO PC SOFTWARES கணினியில் உங்களது வீடியோக்களை எடிட் செய்வதற்கு Adobe premiere Pro மிகப்பெரிய மென்பொருளாக உள்ளது. அதைப்போன்று மொபைலில் வீடியோக்களை எடிட் செய்வதற்கு முதலிடத்தில் உள்ள செயலி Kinemaster. இதை யாராலும் மறுக்க முடியாது. பிரீமியர் புரோவிலுள்ள அனைத்து அம்சங்களும் இந்த Kinemaster உள்ளது. எனவே மொபைலில் வீடியோக்களை எடிட் செய்வதற்கு இந்த செயலி மிக சிறந்த ஒன்றாக உள்ளது. HOW TO USE THIS BLACK SCREEN EFFECT இந்த வீடியோ விளைவைக் கொண்டு உங்கள் வீடியோ அல்லது புகைப்படங்களை மேலும் அழகாக வடிவமைக்க இந்த விளைவு உதவுகிறது. இதை எப்படி பயன்படுத்துவது என்று கூறுகிறேன். உங்களது புகைப்படங்கள் அல்லது வீடியோவில் மேல் இந்த விளைவை வைத்துவிட்டு வீடியோவை தேர்வு செய்த பின்னர் பிலண்டிங் என்ற ஒரு ஆப்ஷன் இருக்கும். அதில் ஸ்கிரீன் என்ற ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும் பின்னர் உங்களது வீடியோ அந்த விளைவுடன் சேர்ந்து விடும். HOW TO USE THIS GREEN SCREEN EFFECT இந்த விளைவை கொண்டு உங்களது புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை அழகாக மாற்ற முடியும். இந்த விளைவில் பல வகையான வடிவங்கள் உள்ளது. இதை எப்படி பயன்படுத்துவது என்று கூறுகிறேன். உங்களது புகைப்படத்தின் மேல் விளைவு வீடியோவை வைத்துவிட்டு குரோமோ கீ என்ற ஒரு ஆப்சன் இருக்கும் அதை தேர்வு செய்ய வேண்டும். பின்னர் விளைவில் உள்ள அனைத்தும் உங்களது புகைப்படத்தின் மேல் சேர்ந்துவிடும். HOW TO USE THIS INTRO TEMPLATE இந்த டெம்ப்ளேட்டை பயன்படுத்தி உங்களது இன்ட்ரோ வீடியோ உருவாக்க முடியும். இதில் உங்களது லோகோ மற்றும் டெக்ஸ்ட் மட்டும் சேர்த்து ஒரு இன்ட்ரோ வீடியோ உருவாக்கிக்கொள்ள முடியும். இதை மொபைல் மூலம் உருவாக்க முடியும் என்பது தனிச்சிறப்பு எனலாம். இந்த டெம்ப்ளேட்டை கையாள்வது மிகவும் எளிமையான ஒன்று. எனவே அனைவரும் இதை பயன்படுத்தி உங்களது யூட்யூப் சேனலுக்கான இன்ட்ரோ வீடியோ உருவாக்கிக்கொள்ள முடியும். KINEMASTER PREMIUM FEATURES MULTIPLE LAYERS KineMaster அப்ளிகேஷனில் உங்களது விருப்பமான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை ஒன்றன் பின் ஒன்றாக add செய்து உங்களால் எடிட் செய்ய முடியும். பல செயலிகள் இருந்தாலும் இந்த சிறப்பம்சம் Kinemaster அப்ளிகேஷனில் மட்டுமே உள்ளது. இதனால் உங்களது விருப்பமான வீடியோக்களை சரியாக எடிட் செய்துகொள்ள முடியும். BLENDING MODE கூகுள் ப்ளே ஸ்டோரில் வீடியோ எடிட் செய்வதற்காக பல செயலிகள் உள்ளது. ஆனால் அவற்றை எதிலுமே இந்த ப்லண்டிங் ஆப்ஷன் கிடையாது. இந்த செயலில் மட்டுமே உள்ளது. இந்த ப்லண்டிங் ஆப்ஷனை பயன்படுத்தி உங்களது விருப்பமான வீடியோ மற்றும் புகைப்படங்களை ஒன்றாக இணைக்க முடியும். CHROMA KEY வீடியோவின் பேக்ரவுண்ட் ஐ அளிக்க இந்த chroma key ஆப்ஷன் பயன்படுகிறது. வீடியோவின் பேக்ரவுண்ட் ஒரே கலராக இருந்தாள் சுலபமாக அளிக்கமுடியும். உதாரணமாக வீடியோவின் பேக்ரவுண்ட் பச்சை நிறத்தில் இருந்தால் ரிமூவ் செய்வதற்கு எளிதாக இருக்கும். வீடியோவில் கலர் எது என்று தெரிந்து கொண்டு ரிமூவ் செய்யும்போது கீ கலர் அதே கலராக செலக்ட் செய்ய வேண்டும். அப்போதுதான் வீடியோவின் பின்புற பேக்ரவுண்ட் ரிமூவ் செய்ய முடியும். VOICE RECORDING வீடியோவை எடிட் செய்யும்போது தேவையான இடத்தில் உங்களது குரலை பதிவு செய்ய இந்த செயலியில் அதற்கான அம்சமும் உள்ளது. குரலைப் பதிவு செய்வதற்கு கூகுள் ப்ளே ஸ்டோரில் பல செயலிகள் உள்ளது இருப்பினும் உங்களது வீடியோக்களை நீங்கள் எடிட் செய்யும்போதே வாய்ஸ் ரெக்கார்ட் செய்வதற்கு இந்த செயலியில் அம்சம் உள்ளது. HANDWRITING இந்த அம்சம் மூலம் உங்களது வீடியோக்களில் தேவையான இடத்தில் சில குறியீடுகளை அமைக்க முடியும். இதனால் உங்களது வீடியோக்களை பார்க்கும் பார்வையாளர்களுக்கு நீங்கள் கூற விரும்புவது குறியீடு மூலம் காட்டும்போது அவர்களுக்கு எளிதாக புரியும். VOICE CHANGER உங்களது உண்மையான குரலை மாற்றவும் அல்லது வீடியோவில் உள்ள பிற குரலை வேறு குரலாக மாற்ற இந்த ஆப்ஷன் பயன்படுகிறது. உதாரணமாக உங்களது குரலை ரோபோட் பேசினால் எப்படி இருக்கும் அதுபோன்று மாற்றவும் இந்த செயலியில் அம்சங்கள் உள்ளது. EQ MODES ஆடியோவில் பல விளைவுகளை ஏற்படுத்த இந்த ஆப்ஷன் பயன்படுகிறது. இதன் மூலம் உங்களது ஆடியோ கேட்பதற்கு தெளிவாகவும் அந்த ஆடியோவை கேட்டுக்கொண்டே இருக்க செய்ய பல ஆப்ஷன்ஸ் இதற்குள் உள்ளது. உதாரணமாக கூறினால் ராக் கிளாசிக் போக் இதுபோன்ற ஆடியோ பில்டர்ஸ் இதில் உள்ளது. இதை பயன்படுத்தும் போது உங்களது ஆடியோ கேட்க இனிமையாக இருக்கும். PREMIUM COLOUR FILTER வீடியோ மற்றும் புகைப்படங்களில் கலரை பிடித்த மாறி மாற்றிக்கொள்ள இந்த கலர் பில்டர் ஆப்ஷன் பயன்படுகிறது. இதன் மூலம் உங்களது வீடியோ மற்றும் புகைப்படத்தின் கலரை மாற்றுவதன் மூலம் அதன் தோற்றம் அழகாக இருக்கும். இதை பயன்படுத்திப் பார்த்தால் மட்டுமே அதன் அனுபவம் உங்களுக்கு தெரியும். EXPORT QUALITY இந்த செயலியை பயன்படுத்தி நீங்கள் எடிட் செய்யும் வீடியோக்களை 4K 60fps வரை அவுட்புட் எடுத்துக்கொள்ள முடியும். இதன் மூலம் உங்களது வீடியோக்களை பார்க்க தெளிவாக இருக்கும். பார்ப்பவர்களுக்கு வீடியோவில் உள்ள தகவல்களை எளிதாக புரிந்து கொள்ள முடியும். இதில் உங்களுக்குப் பிடித்த பார்மட்டில் வீடியோக்களை மாற்றிக் கொள்ளவும் முடியும். உதாரணமாக உங்களுக்கு 720p 30fps வரை போதும் என்றால் அந்த அளவுக்கு உங்களது வீடியோக்களை அவுட்புட் எடுத்துக்கொள்ளலாம். SPEED CONTROL உங்களது வீடியோக்களை வேகமாக மற்றும் மெதுவாக இயக்க இந்த ஸ்பீட் கண்ட்ரோல் ஆப்சன் பயன்படுகிறது. இதன் மூலம் உங்களது வீடியோவை தேவையான இடத்தில் வேகமாக இயக்கவும் அல்லது மெதுவாக இயக்கவும் முடியும். இதை பயன்படுத்தி எடிட் செய்யும்போது பார்வையாளர்களை கவர்ந்து இழுக்க முடியும். ஏனென்றால் வேகமாக நடக்கும் நிகழ்ச்சியை மெதுவாக பார்க்கும் அனுபவம் புதிதாக இருக்கும். இதை நீங்கள் பயன்படுத்தி பார்த்தால் மட்டுமே இந்த அம்சத்தின் சிறப்பை நீங்கள் உணர முடியும். VIDEO REVERSE MODE ஒரு நிகழ்வை தொடக்கத்திலிருந்து பார்க்காமல் கடைசியிலிருந்து முதல் பகுதிக்கு மாற்றி பார்க்க இந்த ரிவர்ஸ் ஆப்சன் பயன்படுகிறது. உதாரணமாக உங்களுக்குப் புரியும் படி கூறினாள் ஒரு மிதிவண்டி சென்றுகொண்டிருக்கிறது அதை அப்படியே பின்புறமாக வரச்செய்யுவும் மற்றும் பழையபடியே அதை செயல்படுத்தவும் பயன்படும் ஆப்ஷன் வீடியோ ரிவர்ஸ் மூடு ஆகும். THREE TYPE OF VIDEO RATIO உங்களது வீடியோக்களை உங்களுக்கு பிடித்த பார்மெட்டில் எடிட் செய்ய இந்த செயலியில் அம்சங்கள் உள்ளது. உதாரணமாக கூறினால் வாட்ஸ்அப் ஃபுல் ஸ்க்ரீன் வீடியோ சைஸில் எடிட் செய்யவும் யூடியூப் வீடியோ சைஸில் எடிட் செய்யவும் இன்ஸ்டாகிராம் போஸ்ட் சைஸில் வீடியோ எடிட் செய்யவும் இதில் ஆப்ஷன்ஸ் உள்ளது. இதை பயன்படுத்தி உங்களுக்கு பிடித்த வடிவத்தில் உங்களது வீடியோக்களை எடிட் செய்ய முடியும். CLIP GRAPHICS இந்த ஆப்ஷனை பயன்படுத்தி உங்களது வீடியோக்களில் நடுவில் புதிய விளைவுகளை ஏற்படுத்த முடியும். உதாரணமாக கூறினால் ஒரு வீடியோவை நடுவில் இரண்டாக கட் செய்திருந்தால் அந்த இடத்தில் ஒரு புதிய எபெக்ட்ஸ் கொடுக்க முடியும். இதன் மூலம் ஒரு வீடியோவில் இருந்து மற்றொரு வீடியோவிற்கு மாறும்பொழுது நீங்கள் ஏற்படுத்திய எபெக்ட்ஸ் நடுவில் இருக்கும். அப்பொழுது அந்த வீடியோவை பார்க்க அழகாக இருக்கும். ஏனெனில் ஒரு வீடியோவில் இருந்து மற்றொரு வீடியோ மாறும்போது நீங்கள் ஏற்படுத்திய விளைவு அந்த வீடியோவை அழகாக்கும். ROTATE AND MIRRORING OPTION வீடியோ மற்றும் புகைப்படங்களை உங்களுக்கு ஏற்றார்போல் ஏற்ற திசைக்கு மாற்றிக்கொள்ள இந்த ரோட்டைட் அண்ட் மிரர் ஆப்சன் பயன்படுகிறது. உதாரணமாக கூறினால் உங்களது வீடியோ கிழக்கு திசையை பார்த்து இருந்தால் அதை மேற்கு மற்றும் உங்களுக்கு பிடித்த திசையில் மாற்றிக்கொள்ள இந்த ஆப்ஷன் பயன்படுகிறது. இதை உங்கள் பிச்சர் மற்றும் வீடியோவில் பயன்படுத்திக் கொள்ளலாம். COLOUR ADJUSTMENT உங்களது வீடியோ மற்றும் புகைப்படங்களில் கலர் வெளிச்சம் கம்மியாக இருந்தால் உங்களது வீடியோ மற்றும் புகைப்படங்களை பார்க்கும்போது ஒரு தெளிவு இருக்காது. அப்படி இருக்கும் உங்களது வீடியோ மற்றும் புகைப்படங்களை இந்த கலர் அட்ஜஸ்ட்மெண்ட் ஆப்ஷனை பயன்படுத்தி தேவையான இடத்தில் காண்ட்ராஸ்ட் லெவல் பிரைட்னஸ் அட்ஜஸ்ட் செய்யும் போது பார்க்க ஒரு அளவுக்கு தெளிவாகவும் அழகாகவும் மாற்ற இந்த ஆப்ஷன் பயன்படுகிறது. எனவே தெளிவில்லாத மற்றும் மங்கலாக இருக்கும் பிச்சர் மற்றும் வீடியோக்களில் இந்த ஆப்ஷனை பயன்படுத்தினால் பார்க்க ஓரளவு நன்றாக இருக்கும். VOLUME ENVELOPE இந்த ஆப்ஷன் Kinemaster அப்ளிகேஷன் அடுத்த லெவலுக்கு கொண்டு செல்ல உதவியது எனலாம். ஏனெனில் இந்த ஆப்சன் கணினியில் எடிட் செய்வதற்கு மட்டுமே உள்ளது. ஆண்ட்ராய்டு செயலியில் அரிதாக காணலாம். அது இந்த இந்த செயலிலும் உள்ளது. இதன்மூலம் உங்களது வீடியோ மற்றும் ஆடியோவில் தேவையான இடத்தில் வால்யூம் அதிகப்படுத்தவும் தேவையற்ற இடத்தில் வால்யூம் முழுமையாக குறைக்கவும் முடியும். VIGNETTE MODE இதைப் பயன்படுத்தி வீடியோ மற்றும் பிச்சர் இன் கரையில் கருநீல ஷேடோ ஏற்படுத்தமுடியும். இதனால் நடுவிலுள்ள அனைத்தும் தெளிவாக பார்க்க முடியும். இதற்காக இந்த ஆப்ஷன் பயன்படுத்துகிறோம். இது வீடியோவை தனித்துவமாக காட்ட உதவுகிறது. நீங்கள் எடிட் செய்ய விரும்பும் போது இதை ஒரு முறை பயன்படுத்தி பாருங்கள் இதன் சிறப்பம்சம் உங்களுக்கு புரியும். EXTRACT AUDIO இதுவும் ஒரு சிறந்த அம்சம் எனக் கூறலாம் இந்த செயலியில் ஏனெனில் வீடியோ எடிட் செய்யும் போது அந்த வீடியோவுக்காண பாடல் உங்களிடம் இல்லை என்றாலும் அந்த ஆடியோ விற்கான வீடியோ உங்களிடம் இருந்தால் அந்த வீடியோவில் இருந்து ஆடியோவை தனியாக பிரித்தெடுக்க முடியும் எடுத்துவிட்டு நமக்குத் தேவையில்லாத வீடியோவை டெலிட் செய்து கொள்ளலாம். நீங்கள் பாடல் டவுன்லோட் செய்யாமலே உங்களுக்கு தேவையான பாடலை தனியாக எடுத்துக்கொள்ள இந்த ஆப்ஷன் பயன்படுகிறது. TRIM AND SPLIT OPTION வீடியோ ஆடியோ மற்றும் புகைப்படங்களை தேவையில்லாத இடத்தை வெட்ட இந்த ட்ரிப் அண்ட் ஸ்பிளிட் ஆப்ஷன் பயன்படுகிறது. இந்த ஆப்ஷன்ஸ் சிறப்பாக செயல்படுகிறது. ஏனெனில் கூகுள் ப்ளே ஸ்டோரில் வீடியோ எடிட் செய்வதற்கான செயலிகள் பல உள்ளது. அவற்றை ஒப்பிடும்போது இந்த செயலியில் நாம் விரும்பும் இடத்தை சரியான இடத்தில் வெட்டி மற்றொரு இடத்தை சேர்க்கவும் முடியும். PAN AND ZOOM இந்த ஆப்ஷன் மூலம் உங்களது வீடியோக்களை பார்வையாளர்களுக்கு மிக அருகாமையில் காட்ட இந்த ஆப்ஷன் பயன்படுகிறது. உதாரணமாக கூறினால் மிக பின்புறத்தில் உள்ள ஒரு சப்ஜெக்ட்டை மிக அருகாமையில் அதாவது திரைக்கு முன்பாக மிக அருகே கொண்டுவர இந்த ஆப்ஷன் பயன்படுகிறது. PREMIUM TEXT இந்தச் செயலியில் அளவுக்கு அதிகமான அகராதிகள் உள்ளது. உங்களுக்கு பிடித்த மொழியை பதிவிறக்கம் செய்து கொள்ளவும் முடியும். Kinemaster asset Store ல் உங்களுக்கு தமிழ்மொழி தேவை என்றால் தமிழ் மொழியை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இந்த செயலியில் டிபால்ட் ஆக ஆங்கில அகராதிகள் உள்ளது. இதை நீங்கள் இலவசமாக பயன்படுத்திக்கொள்ளலாம். OVERLAY AND STICKERS வீடியோ மற்றும் புகைப்படங்களை மேலும் அழகாக்க இந்த ஓவர்லே அண்ட் ஸ்டிக்கர்ஸ் ஆப்ஷன்ஸ் பயன்படுகிறது. உதாரணமாக கூறினால் உங்களது வீடியோவில் தீப்பொறி பறப்பதுபோல் விளைவை ஏற்படுத்தலாம் மற்றும் உங்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறுவதுபோல் விளைவும் ஏற்படுத்த முடியும். இதுவே ஓவர்லே அண்ட் ஸ்டிகர்ஸ் ஆப்ஷன் ஆகும். SPECIAL EFFECTS இதிலும் ஓவர்லே அண்ட் ஸ்டிக்கர்ஸ் ஆப்ஷனை போன்று உங்களுக்குப் பிடித்த விளைவுகளை உங்களது வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களில் பயன்படுத்திக் கொள்ள முடியும். இந்த ஆப்ஷனை வீடியோ மற்றும் புகைப்படங்களில் குறிப்பிட்ட இடத்தில் சரியாக பயன்படுத்த முடியும் தேவையில்லாத இடத்தில் அதை நிறுத்திக் கொள்ளவும் முடியும். இதன் மூலம் உங்களது வீடியோ மற்றவர்கள் வீடியோவிலிருந்து தனித்துவமாக தெரியும். ANIMATION AND TRANSITION EFFECTS எழுத்துக்களில் விளைவுகளை ஏற்படுத்த அனிமேஷன் எபெக்ட்ஸ் பயன்படுகிறது. Transition புகைப்படங்கள் மற்றும் வீடியோவில் விளைவுகளை ஏற்படுத்த உதவுகிறது. இதில் தொடக்கத்தில் ஒரு அனிமேஷன் ஆப்ஷனை பயன்படுத்த முடியும் முடிவில் ஒரு ஆப்ஷனை பயன்படுத்த முடியும். தெளிவாகக் கூறினால் ஒரு எழுத்துக்களின் தொடக்கத்தில் ஒரு விளைவையும் அந்த எழுத்து மறையும் பொழுது ஒரு விளைவையும் கொடுக்க முடியும். KINEMASTER TIPS: WHY DO I HAVE IMAGE INSERT OF MEDIA ? இந்த செயலியில் லேயர் ஆப்ஷனில் மீடியாவிற்கு பதிலாக இமேஜ் என்று இருந்தால் வீடியோக்களை பயன்படுத்த முடியாது. அதை எப்படி மீடியா என மாற்றுவது என்று கூறுகிறேன். Kinemaster அப்ளிகேஷனை ஓபன் செய்ததும் ரேஷியோ செலக்ட் செய்வதற்கு கீழ் ஒரு கியர் ஐகான் இருக்கும். அதை கிளிக் செய்த பிறகு பல ஆப்ஷன்ஸ் அதில் வரும் அவற்றில் மூன்றாவதாக DEVICE CAPABILITY INFORMATION என்று ஒரு ஆப்ஷன் இருக்கும் அதை கிளிக் செய்த பிறகு உங்கள் மொபைலை பற்றிய விவரங்கள் அதில் கூறப்பட்டிருக்கும். அதன்பிறகு மேலே மூன்று புள்ளிகள் இருக்கும் அதை கிளிக் செய்யுங்கள் செய்தபிறகு RUN ANALYSIS NOW என்று வரும் அதை கிளிக் செய்யுங்கள் செய்தபிறகு இரண்டிலிருந்து மூன்று நிமிடங்கள் அது பிராசசிங் ஆகும். அதுவரை வேறு எந்த ஒரு செயலிக்கும் நீங்கள் செல்லக்கூடாது. இது நீங்கள் செய்தபிறகு அப்ளிகேஷனை ஓபன் செய்து பாருங்கள் லேயரில் இமேஜ் என்று இருந்தால் அது மீடியாவாக மாற வாய்ப்பு உள்ளது. இந்த முறையைப் பயன்படுத்தி அனைவருக்கும் மாறும் என்றால் அது கிடையாது உங்களது மொபைலின் process ஐ பொருத்து மாறக்கூடும்.
கம்ப்யூட்டர் வாங்கிப் பயன்படுத்தத் தொடங்கி சில மாதங்கள் அல்லது வருடங்கள் ஆன பின், சில சின்ன சின்ன விஷயங்கள் உடைந்து செயல்படாமல் போகலாம். கீ போர்டில் சில இயங்காமல் இருக்கலாம்;மானிட்டரின் பவர் ஸ்விட்ச் உள்ளாக உடைந்து செயல்படாமல் தொல்லை கொடுக்கலாம். இது போன்ற பிரச்னைகளில் நமக்கு சில சாப்ட்வேர் தொகுப்புகள் கை கொடுக்கின்றன. அவற்றை இங்கு பார்க்கலாம். 1. மானிட்டர் ஸ்விட்ச்: மானிட்டரை நாம் நேரடியாக பவர் பிளக் அல்லது யு.பி.எஸ். ப்ளக்கில் இணைத்திருப் போம். கம்ப்யூட்டரில் வேலை முடியும்போது, மானிட்டருக்கு வரும் மின்சாரத்தை நிறுத்த, மானிட்டரை ஸ்விட்ச் ஆப் செய்திடுவோம். இதற்கான புஷ் பட்டன் ஸ்விட்ச் அனைத்து மானிட்டர்களிலும் அதன் முன்புறத்தில் இருக்கும். இதன் தொடர் பயன்பாட்டால், இந்த ஸ்விட்ச் நாளடைவில் இயங்காமல் போய்விடும். அதற்காக நாம் வேறு மானிட்டரை வாங்குவது வீண் செலவு. இந்த செயல்பாட்டினை மேற்கொள்ள ஒரு சாப்ட்வேர் Monitor Off என்ற பெயரில் கிடைக்கிறது. இதன் மூலம் மவுஸ் கர்சரை நகர்த்தியோ, அல்லது கீ போர்டில் ஒரு கீயை அழுத்தியோ மானிட்டருக்கு வரும் மின்சக்தியை நிறுத்தலாம். கூடுதலாக இன்னும் பல வசதிகளையும் இது தருகிறது. இதனை சோதித்துப் பார்க்க இலவசமாய் டவுண்லோட் செய்திடலாம். இணைய தள முகவரி:http://www.rtsoftwares.com/Utilities/TurnOffMonitor/setup.exe 2. சிடி ராம் டிரைவ் பட்டன்: அடுத்ததாக நமக்குத் தொல்லை தருவது சிடி ராம் டிரைவின் பட்டன். பெரும்பாலான டிரைவ்களில் நமக்கு முதல் தொல்லை தருவது, சிடி ட்ரேயினை வெளியே, உள்ளே கொண்டு வரும் பட்டன் தான். பலர் இந்த ட்ரேயினை மூடுகையில் தங்கள் கைகளாலேயே தள்ளி மூடுவார்கள். திறக்க மட்டுமே பட்டனைப் பயன்படுத்துவார்கள். இது நாளடைவில் பட்டனை முடக்கிவிடும். அப்போது கம்ப்யூட்டரில் சிடி டிரைவ் ப்ராப்பர்ட்டீஸ் சென்று அந்த மெனுவில் எஜக்ட் பிரிவில் கிளிக் செய்து இதனைத் திறக்கலாம். ஆனால் மூடுவதற்கு பட்டன் வேலை செய்யவில்லை என்றால், கைகளால் தான் மூடுகிறோம். இதற்கான ஒரு சாப்ட்வேர் ட்ரே 2.5 (Optical Drive Tray)என்ற பெயரில் கிடைக்கிறது. இந்த பைலின் அளவு 713 கேபி. இதனைப் பயன்படுத்தி ஒன்றுக்கு மேற்பட்ட டிரைவ்களின் கதவுகளை இயக்கலாம். இதனைப் பெற அணுக வேண்டிய இணைய முகவரி: http://www.softpedia.com/prog Download/ 3. ஆன் ஸ்கிரீன் கீ போர்டு : இப்போது பல சாப்ட்வேர் APPLICATION களில் ஆன் ஸ்கிரீன் கீ போர்டு கிடைக்கிறது. இதில் மவுஸின் கர்சரைக் கொண்டு சென்று கீ போர்டுக்குப் பதிலாகப் பயன்படுத்தலாம். இந்த வகையில் இன்னும் சில முன்னேற்றங்களுடன் TouchIt 4.3.03 (On Screen Keyboard) என்னும் சாப்ட்வேர் கிடைக்கிறது. இதன் மூலம் கீ போர்டுக்கான பல வசதிகளைப் பெறலாம். இதனைப் பெற இணையத்தில் http://www.softpedia.com/get என்ற முகவரிக்குச் செல்லவும். 4. கீ போர்டு விளக்குகள்: கீ போர்டில் நம் லாக், ஸ்குரோல் லாக், முக்கியமாக கேப்ஸ் லாக் அழுத்தப் பட்டிருக்கிறதா என்று அறிய, இந்த கீகளுக்கான சிறிய எல்.இ.டி. ஒளி கிடைக்கும்படி கீ போர்டில் தனி இடம் இருக்கும். நாளடைவில் இவை தங்கள் செயல்பாட்டை இழக்கும். இந்த விளக்குகளை மானிட்டர் திரையிலேயே காட்டும்படி சாப்ட்வேர் ஒன்று கிடைக்கிறது. இதன் பெயர் டி.கே. கீ போர்டு(DK:Keyboard) இதனை இயக்கிவிட்டால், திரையில் சிறிய பாப் அப் பலூன் குமிழ் விளக்காக, இந்த கீகள் அழுத்தப்படும் போது ஒளிரும். இதனைப் பார்த்த பலரும், கீ போர்டு நன்றாக இயங்கினாலும் இதனைப் பயன்படுத்தி வருகின்றனர். இதனைப் பெற http://www.softpedia என்ற முகவரியைப் பயன்படுத்தவும். 5.மவுஸ்: உங்கள் மவுஸ் திடீரென உடைந்து போய்விட்டதா? கீழே விழுவதனால் அல்லது தரையில் இருக்கையில் அதனை அறியாமல் மிதித்துவிடுவதனால் உடையும் வாய்ப்புகள் உண்டு. இதனை இன்னொரு மவுஸ் தான் ஈடு கட்ட முடியும். இருப்பினும் அவசரத் தேவைக்கு, உங்களிடம் பழைய ஜாய் ஸ்டிக் அல்லது கேம் பேட் (Game Pad) இருந்தால் அதனைப் பயன்படுத்தலாம். இதற்கான சாப்ட்வேர் பெயர் JMouse 1.0. இதனை இயக்கினால் அது இணைக்கப்பட்ட ஜாய் ஸ்டிக் அல்லது கேம் பேடினைப் புரிந்து கொண்டு மவுஸ் இயக்கத்தினைத் தருகிறது. இந்த சாப்ட்வேர் http://www.softpedia.com/progDownload/JMouseDownload என்ற இணைய முகவரியில் இலவசமாகக் கிடைக்கிறது.
சந்திரமுகியாக தமிழ் சினிமா ரசிகர்களை கலக்கவரும் கங்கனா ரனாவத்.. அதிகாரப்பூர்வ தகவலால் எதிர்பார்ப்பின் உச்சக்கட்டத்தில் ரசிகர்கள்.! நடிகர் விஷ்ணு விஷாலின் முதல் மனைவியை பார்த்துள்ளீர்களா... வைரலாகும் புகைப்படம்!! நீங்களே இப்படி செய்யலாமா... ஓடும் ரயிலில் படியில் நின்று செல்பி எடுத்த கல்லூரி மாணவிகள்!! விஜய் காலடி நாகமாக சுற்றும் சிலுவை சர்ச்சை.. சவுக்கு சங்கர் பரபரப்பு விமர்சனம்.. ஷாக் ரியாக்சனில் விஜய் ரசிகர்கள்.! மறைவுக்கு முன் கடைசியாக வெண்ணிலா கபடிக்குழு ஹரி வைரவன் அனுப்பிய மெசேஜ்.! நடிகர் விஷ்ணு விஷால் உருக்கம்!! நல்ல நாட்களுக்கு நடுவில் சில கெட்ட நாட்களும் வந்தே தீரும்!.. போராடி மீண்டு வருவேன்: நடிகை சமந்தா உருக்கம்..! வெண்ணிற உடையில் தேவதையாய் ஜொலிக்கும் ஹன்சிகா தனது காதல் கணவருடன் போட்டுள்ள குத்தாட்டத்தை பாருங்கள்... வைரலாகும் வீடியோ!! இயக்குனர் சங்கர் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி பிரமாண்டமாக ஓடிக்கொண்டிருக்கிறது 2.0 திரைப்படம். தான் ஒரு பிரமாண்ட இயக்குனர் என்பதை மீண்டும் உறுதி செய்துள்ளார் இயக்குனர் ஷங்கர். படத்தில் வில்லனாக பாலிவுட் நடிகர் அக்ஷய்குமார் நடித்துள்ளார். முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை எமிஜாக்ஸன் நடித்துள்ளார். திரைக்கதை, வசனம், பின்னணி இசை, 3D தொழிநுட்பம் என அனைத்தும் பிரம்மாண்டமாக உள்ளது. 2.0 படத்தை பார்த்த பிரபலங்கள் பலரும் படக்குழுவினரை வாழ்த்தியும், பிரமித்தும் பார்த்து வருகின்றனர். 2.0 படம் தமிழ் சினிமாவின் அசைக்க முடியாத மைல்கல். படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிகர் அக்ஷய்குமார் அசத்தியுள்ளார். பறவையியல் வல்லுனராக வரும் அக்சய்குமார் தொலைத்தொடர்பு நிறுவனங்களால் பறவைகளுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து விளக்கியும் யாரும் கண்டுகொள்ளாத நிலையில் தற்கொலை செய்துகொள்கிறார். தொலைபேசி கோபுரங்களில் இருந்து வெளிவரும் கதிர்வீச்சால் ஏற்படும் பாதிப்பு குறித்து தெளிவாக விளக்கியுள்ளது 2.0 படம். தனது நியாமான கோரிக்கை நிறைவேறாத விரகிதியில் தற்கொலை செய்துகொள்ளும் அக்ஷய்குமார் பின்னர் ஆவியாக வந்து பழிவாங்குகிறார். உண்மைலயே படத்தின் வில்லன் அக்ஷய் குமார் இல்லை. சொல்லப்போனால் அவர்தான் படத்தின் கதாநாயகன். நாம் நன்கு யோசித்துப்பார்த்தால் உண்மையான வில்லன் யார் என்பது நமக்கே தோன்றும். Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here Tags: #2.0 #2.0 review #Akshaikumar #rajinikanth Copy Link தற்போதைய செய்திகள் சிகிச்சைக்கு வந்த வெளிநாட்டு பெண்ணை கடத்தி கற்பழித்து கொலை செய்த 2 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை... நீதிபதியின் அதிரடி தீர்ப்பு!! பழம்பெரும் வில்லன் நடிகர் ஜெய்சங்கரின் மகனை பார்த்துள்ளீர்களா... வைரலாகும் புகைப்படம்!! நெஞ்சை நடு நடுங்கச் செய்யும் கொடூர செயல்... பெண்ணின் மார்பகத்தை வெட்டி துடிக்க துடிக்க கொன்ற கொடூர வெறியன்..!
நாக சைதன்யா நடித்த தெலுங்கு படம் ஒன்று தமிழில் டப் செய்யப்பட்டு வெளிவருகிறது. அது என்ன படம்? என்பதை கீழே பார்ப்போம்… தெலுங்கில் நாக சைதன்யா நடிப்பில் வெளிவந்த ‘ஒக்க லைலா கோசம்’ தெலுங்கு சினிமாவில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. தற்போது தெலுங்கில் வெற்றிபெற்ற படங்கள் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளிவந்துகொண்டிருப்பதால் இந்த படத்தை மொழிமாற்றம் செய்து வெளியிடவுள்ளனர். அதன்படி தமிழில் டப் செய்யப்பட்டு வெளிவரவிருக்கும் இப்படத்திற்கு ‘லைலா ஓ லைலா’ என்று பெயர் வைத்துள்ளனர். இப்படத்தின் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். பிரபு, சுமன், ஷியாஜி ஷிண்டே, நாசர், பிரம்மானந்தம், ஆலி, ஆசிஷ் வித்யார்த்தி, சுப்ரீத் ஆகியோர் நடித்துள்ளனர். கே.விஜயகுமார் இயக்கியுள்ள இப்படத்தை தமிழில் ஸ்ரீலட்சுமி ஜோதி கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் ஏ.என்.பாலாஜி தயாரிக்கிறார். பணக்கார வாலிபனான நாகசைதன்யா ஒரு பெண்ணை காதலிக்கிறார். காதலை ஏற்காத அந்த பெண் விலகி நிற்கிறாள். இதற்கிடையே அந்த பெண்ணிற்கும், நாகசைதையாவிற்கும் திருமண ஏற்பாடு செய்யப்படுகிறது. ஆனால் நாகசைதன்யா அந்த திருமணத்தை தடுத்து நிறுத்தி விடுகிறார். விருப்பப்பட்ட பெண்ணே கிடைக்கும்போது நாகசைதன்யா மறுக்க என்ன காரணம்? என்பதுதான் இந்த படத்தின் சுவாரஸ்யம். இப்படம் விரைவில் வெளியாகவிருக்கிறது.மேலும் படிக்க
கொரோனா அவசர விமானம் விபத்து : விமானிக்கு ரூ.85 கோடி அபராதம் விதித்து ம.பி அரசு அராஜகம் - நடந்தது என்ன? விமானத்தை சேதப்படுத்தியதாக கூறி, விமானிக்கு மத்தியப் பிரதேச அரசு ரூ.85 கோடி அபராதம் விதித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Lenin Updated on : 9 February 2022, 10:40 AM கொரோனா தொற்று பரவியதை அடுத்து, உலக நாடுகளில் சிக்கியவர்களை மீட்டு அழைத்து வருவதற்காக மாநில அரசுகள் தங்களுக்கு என்று தனியாக விமானங்களை ஏற்படுத்திக் கொண்டுள்ளன. மேலும் தடுப்பூசி, கொரோனா மருத்துவ உபகரணங்களை எடுத்து வருவதற்கும் இந்த விமானங்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதன்படி, மத்திய பிரதேச அரசும் கொரோனா பரிசோதனை கருவிகள் மற்றும் மருந்துகள் உள்ளிட்டவற்றை எடுத்துச் செல்ல பீச் கிராஃப்ட் கிங் ஏர் பி250 ஜிடி என்ற விமானத்தைப் பயன்படுத்தி வந்தது. இந்த விமானத்தை கேப்டன் மஜித் அக்தர் என்பவர் இயக்கிவந்தார். துணை விமானியாக ஷிவ் ஜெய்ஸ்வால் மற்றும் நைப் தெசில்தார் திலீப் திவேதி ஆகியோர் இருந்தனர். இந்நிலையில், இந்த விமானம் கடந்த ஆண்டு மே மாதம் அகமதாபாத்தில் இருந்து குவாலியருக்கு சென்றது. பின்னர் குவாலியர் விமான நிலையத்தில் தரையிறங்கும் போது விமான ஓடுதளத்தில் இருந்த தடுப்பின் மீது விமானம் மோதியதில் பெரிய விபத்து ஏற்பட்டது. இதில் கேப்டன் மஜித் அக்தர் உட்பட துணை விமானிகள் படுகாயமடைந்தது. இதையடுத்து இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில், விமானத்தை சேதப்படுத்தியதாகக் கூறி விமானி மஜித் அக்தருக்கு ரூ. 85 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதைக்கேட்டு அவர் அதிர்ச்சியடைந்துள்ளார். மேலும், அபராத தொகை செலுத்த முடியாது எனவும், அந்த விமான நிலையத்தின் ஓடுபாதையில் தடுப்பு இருப்பது குறித்து எனக்குத் தெரிவிக்கப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து அபராத தொகையைச் செலுத்த மறுத்தால் மஜித் அக்தரின் விமானம் இயக்கும் உரிமத்தை ஓராண்டுக்கு ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது இந்திய சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம். கொரோனா தொற்று காலத்தில் அரசுக்காக வேலை செய்து வருபவருக்கு எப்படி அபராதம் விதிக்கலாம் என மத்திய பிரதேச அரசுக்கு கேள்வி எழுப்பி கண்டனம் தெரிவித்துள்ளனர். Also Read பெண்களுக்கு எதிரான குற்றங்கள்: பாதுகாக்கவும் ஏற்பாடில்லை; பரிசீலிக்க வழியுமில்லை -சு.வெங்கடேசன் அதிர்ச்சி
Aishwarya Dutta, Fashion, Celebrity, Model, Bigg Boss Tamil 6th Apr 2022 : பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும், கமல் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மிக பிரபலமானவர் நடிகை ஐஸ்வர்யா தத்தா. சமூகவலைத்தள பக்கங்களில் ஹாட்டான போட்டோஷூட் படங்களை ரசிகர்களுடன் பகிர்ந்து வரும் ஐஸ்வர்யா தத்தா, சமூகவலைத்தள பக்கங்களில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான ரசிகர்களை கொண்டுள்ளார். இவர் நடித்த படங்கள் தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், பாயும் புலி, ஆறாது சினம், சத்திரியன், மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன. ஐஸ்வர்யா தத்தாவின் வெளிவர இருக்கும் படங்கள் கெட்டவன்னு பேர் எடுத்த நல்லவன்டா, அலேகா, கன்னி தீவு. இது சமீபத்தில் ஐஸ்வர்யா தத்தா பகிர்ந்து, வைரலான படங்களின் தொகுப்பு. View this post on Instagram A post shared by Aishwarya Dutta (@aishwarya4547) Tags: Aishwarya Dutta Share on Share on Facebook Share on Twitter Share on Pinterest Share on WhatsApp Share on WhatsApp Share on Linkedin Share on Tumblr Share on Reddit
பொழிப்பு (மு வரதராசன்): மனைவியின் நற்பண்பே இல்வாழ்க்கைக்கு மங்கலம் என்று கூறுவர்; நல்ல மக்களைப் பெறுதலே அதற்கு நல்லணிகலம் என்றும் கூறுவர். மணக்குடவர் உரை: ஒருவனுக்கு அழகென்று சொல்லுப, மனையாள் ஒழுக்கமுடையாளாதலை: அவ்வழகின்மேலே நல்ல அணிகலனென்று சொல்லுப, நல்ல புதல்வரைப் பெறுதலை. பரிமேலழகர் உரை: மங்கலம் என்ப மனை மாட்சி - ஒருவர்க்கு நன்மை என்று சொல்லுவர் அறிந்தோர், மனையாளது நற்குண நற்செய்கைகளை; அதன் நன்கலன் (என்ப) நன்மக்கட்பேறு - அவை தமக்கு நல்ல அணிகலம் என்று சொல்லுவர் நல்ல புதல்வரைப் பெறுதலை. ('அறிந்தோர்' என்பது எஞ்சி நின்றது. 'மற்று' அசை நிலை. இதனான் வாழ்க்கைத் துணைக்கு ஆவதோர் அணிகலம் கூறி, வருகின்ற அதிகாரத்திற்குத் தோற்றுவாய் செய்யப்பட்டது.) சி இலக்குவனார் உரை: இல்லறத்தின் பெருமையே ஒருவனுக்கு நன்மை தருவது. அவ்வில்லறத்தின் அணிகலன் போன்றது நல்ல மக்களைப் பெறுதல். பொருள்கோள் வரிஅமைப்பு: மங்கலம் என்ப மனைமாட்சி மற்று அதன் நன்கலம் நன்மக்கட் பேறு. பதவுரை: மங்கலம்-பொலிவு, அழகு, நன்மை, நல்வாழ்வு, மங்கல அணி (தாலி); என்ப-என்று சொல்லுவர்; மனை-இல்லறம், மனையாள், இல்லம்; மாட்சி-மாண்பு, பெருமை, சிறப்பு; மற்று-(அசைநிலை); அதன்-அதனுடைய; நன்-நல்ல; கலம்-அணி; நன்-நல்ல; மக்கள்-மக்கள்; பேறு-பெறுதல். மங்கலம் என்ப மனைமாட்சி: இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்: மணக்குடவர்: ஒருவனுக்கு அழகென்று சொல்லுப, மனையாள் ஒழுக்கமுடையாளாதலை; பரிதி: பதிவிரதைக்கு அழகாவது இல்லறம் நடத்தல்; காலிங்கர்: வாழ்க்கைத்துணைக்கு நன்மையாவது, கற்பினால் மாட்சிமை பெறுதல்; பரிமேலழகர்: ஒருவர்க்கு நன்மை என்று சொல்லுவர் அறிந்தோர், மனையாளது நற்குண நற்செய்கைகளை; பரிமேலழகர் குறிப்புரை: 'அறிந்தோர்' என்பது எஞ்சி நின்றது. [எஞ்சி நிற்றல்-குறைந்து நிற்றல்] 'மனைவி ஒழுக்கமுடையளாதல் கணவனுக்கு அழகு என்பர்' என்று மணக்குடவரும், 'கற்புடைய மனைவிக்கு அழகாவது இல்லறம் நடத்தல்' என்று பரிதியும், 'கற்பினால் மாட்சிமை பெறுதல் வாழ்க்கைத் துணைக்கு நன்மை' என்று காலிங்கரும் 'மனையாளது நற்குண நற்செய்கை கணவனுக்கு நன்மை என்று சொல்வர்' என்று பரிமேலழகரும் இத்தொடர்க்கு உரை நல்கினர். யாருக்கு மங்கலம் என்பதிலும் மனைமாட்சி என்பதை விளக்குவதிலும் அனைவரும் வேறுபடுகின்றனர். இன்றைய ஆசிரியர்கள் 'மனைவியின் பண்பே குடும்பத்துக்கு மங்கலம்', 'இல்லறப் பண்பினை மங்கல அணி (தாலி) என்பர்', 'மனைவியின் மாண்பே வீட்டிற்கு மங்கலமெனப் படுவது என்றும்', 'குடும்பத்துக்கு எல்லா நன்மைகளையும் உண்டாக்கக்கூடிய மங்கலப் பொருள் மனனயாளின் பெருமைதான்' என்ற பொருளில் உரை தந்தனர். இல்லறத்திற்கேற்ற மாண்பு குடும்பத்துக்குப் பொலிவு தருவது என்று சொல்வர் என்பது இப்பகுதியின் பொருள். மற்றுஅதன் நன்கலம் நன்மக்கட் பேறு: இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்: மணக்குடவர்: அவ்வழகின்மேலே நல்ல அணிகலனென்று சொல்லுப, நல்ல புதல்வரைப் பெறுதலை. பரிதி: அதுவன்றியே அவளுக்கு ஆபரணம் நல்லபுதல்வரைப் பெறுதல் என்றவாறு. காலிங்கர்: அவர்க்கு அணிகலமாவது, சான்றோரால் மதிக்கப்பட்ட அறிவினையுடைய புதல்வரைப் பெறுதல் என்றவாறு. பரிமேலழகர்: அவை தமக்கு நல்ல அணிகலம் என்று சொல்லுவர் நல்ல புதல்வரைப் பெறுதலை. பரிமேலழகர் குறிப்புரை: 'மற்று' அசை நிலை. இதனான் வாழ்க்கைத் துணைக்கு ஆவதோர் அணிகலம் கூறி, வருகின்ற அதிகாரத்திற்குத் தோற்றுவாய் செய்யப்பட்டது. 'நல்ல மக்களைப் பெறுதல் அதற்கு அணிகலன் ஆகும்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர். இன்றைய ஆசிரியர்கள் 'குழந்தைப் பேறே குடும்பத்தின் நல்லணி', 'அதற்கு நல்ல அணிகலம் நன்மக்களைப் பெறுதல் என்பர்', 'அதன் சிறந்த அணிகலன் நல்ல மக்களைப் பெறுவதென்றும் அறிஞர் சொல்லுவார்கள்', 'அந்தப் பெருமைக்கு அழகு தரும் ஆபரணம் நல்ல மக்களைப் பெறுவதுதான்' என்றபடி பொருள் உரைத்தனர். மேலும் அதற்கு அழகு சேர்ப்பது நல்ல மக்களை உருவாக்குவது என்பது இப்பகுதியின் பொருள். நிறையுரை: இல்லத்து மாண்பு மங்கலம் என்பர்; மேலும் அப்பெருமைக்கு அழகு சேர்ப்பது நல்ல மக்களை உருவாக்குவது என்பது பாடலின் பொருள். 'மங்கலம்' என்பது என்ன? மனைவி, கணவன் இருவரும் ஒருவர்க்கொருவர் வாழ்க்கைத் துணையாய் அமைந்து இல்லத்திற்கு பொலிவூட்டி மக்களைப் பெறுவர். இல்லற மாண்பு பொலிவு தருவது; மேலும் அதற்கு அழகூட்டுவது நன்மக்களைப் பெறுதல். 'மனைமாட்சி' என்ற தொடர்க்கு மனையாள் ஒழுக்கமுடையாளாதல், இல்லறம் நடத்தல், கற்பினால் மாட்சிமை பெறுதல், மனையாளது நற்குண நற்செய்கைகள், நல்ல குணங்களை உடைய பெண்சாதி, நற்குண நற்செய்கை உடைய மனையாள், மனைவியின் நற்பண்பு, இல்லாளுடைய (நற்குண. நற்செய்கைகளாகய) சிறப்பு, மனையறமாட்சி, மனைவியின் பண்பு, இல்லறப் பண்பு, மனையாளின் பெருமை, மனைவியின் மாண்பு, இல்லறத்தின் பெருமை, மனைவியின் மாட்சிமைப் பண்பு, மனைவியின் நல்லொழுக்கம், நல்ல மாண்புகளைக் கொண்ட மனைவி என்றபடி உரையாசிரியர்கள் பொருள் கூறினர். அதிகாரப் பெயர் வாழ்க்கைத்துணை நலம் என்பதாலும் இத்தொகுப்பில் உள்ள மற்ற ஒன்பது குறள்களும் மனையாளைப் பற்றியே பேசுகின்றன என்பதாலும் பெரும்பான்மையான உரையாளர்கள் மனைமாட்சி என்றதற்கு மனையாளின் மாண்பு என்று பொருள் உரைத்தனர். நலம், வளம், புகழ், தொடர்ச்சி என்னும் குடிமைச் சிறப்பு எல்லாம் நிகழ்வது மனையில்தான். மனையின் அதாவது இல்லத்தின் மாண்பே மனைமாட்சி. ஒழுக்கமுடைய தலைவனும் தலைவியும் இணைந்து கருத்தொருமித்து இன்புற நடத்தும் வாழ்க்கை இல்லத்திற்குப் பெருமை ஆகும்; இது மங்கலமானது. அவர்கள் அளவில் நின்றுவிடாமல், மக்கட் பேறு பெற்று குடும்பத்துக்கு இன்னும் ஒளி சேர்ப்பர். நன்மக்களே தலைமுறை தொடர்வதற்கான இணைப்பாகி, மனித குலம் தொடர்ந்து உயிர்ப்புடன் இயங்கிக் கொண்டிருக்கவும் அதை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லவும் காரணமாகின்றனர். மனமாட்சி என்ற பொலிவுக்கு அவர்கள் நல்ல அணிகலனாக அமைகின்றனர். 'மனைமாட்சி' என்பது 'மனைத்தக்க மாண்பு' என முந்தைய குறள் ஒன்றில் (51) குறிக்கப்பெற்றது. 'மனைமாட்சி' என்ற சொல்லே இதே அதிகாரத்து 52ஆம் பாடலில் மனையறத்திற்குத் தக்க நற்குண நற்செய்கைகள் அல்லது வீட்டுப் பண்பு என்ற பொருளில் ஆளப்பட்டது. அதே பொருள் இப்பாடலுக்கும் பொருந்தும். மனை மாட்சி உண்டாதற்குக் காரணமானவர்கள் கணவன் மனைவி இருவருமே ஆகும். அதாவது இல்லத்திற்குப் பெருமைதரும் வகையில் இல்வாழ்வானும், இல்லாளும் இணைந்து இனிதே நடத்தும் வாழ்க்கையே குடும்பத்துக்கு மங்கலம் தருகிறது. எனவே மனைமாட்சி என்றதற்கு மனையாளின் மாண்பு என்பதினும் இல்லத்தின் அல்லது இல்லறத்தின் பெருமை என்ற பொருள் சிறக்கும். இல்லத்தின் மாண்பு பேணப்படுவது மங்கலம்; நல்ல மக்களைப்பெறுதல் இல்லறத்திற்கு அணிகலனாக அமையும் என்பது கூறப்பட்டது. 'மங்கலம்' என்பது என்ன? மங்கலம் என்ற சொல்லுக்கு அழகு, நன்மை, இல்வாழ்க்கைக்கு மங்கலம், மங்கலமான வாழ்வு, மங்கல அணி (தாலி), குடும்பத்துக்கு நல்வாழ்வு, வீட்டிற்கு மங்கலம், பொலிவு, நெடுநன்மை, இல்லற வாழ்வுக்கு நல்ல மங்கலப் பொருள், புனிதம், மங்கல நாண் என்று உரையாளர்கள் பொருள் கூறினர். வ உ சிதம்பரம் பிள்ளை இக்குறளுக்கான உரையில் மங்கலம் என்பது மங்கல நாணைக் குறிக்கும் என்று எழுதினார். மங்கலநாண் தாலி என்றும் அறியப்படும். தண்டபாணி தேசிகர் 'மங்கலம் என்பது மகளிர் கழுத்தில் அணியும் மங்கல நாணைக் குறிக்கும்' என்று கூறி 'தாலி மங்கலப் பொருளாக மதிக்கப் பெற்று மங்கலம் என்றே வழங்கப்பட்டது; மனையாளது மாட்சி தாலியாய் உருவகிக்கப்பட்டுள்ளது; இளங்கோ அடிகளும் கம்பரும் தாலியை மங்கலம் என்றே உணர்த்திப் பாடினர்; மங்கல நாண் கணவன் உள்ளவரை கழற்றக் கூடாத அணி; என்றும் பிரியாத நலம் பயக்கும் குணங்கட்குத் தாலியை ஒப்பிட்டதிலிருந்து மகளிர்க்கு அணிக்கெல்லாம் அணியாக இருப்பது தாலியே என்பது கருத்தாதல் தெளியலாம்; மங்கலநாண் போன்றவை மனையாளது நற்குண நற்செய்கைகள்; நன்கலம் போன்றவர் நன்மக்கள் என்று உரை கொள்ளலாம்' என்று விளக்கினார். இரா சாரங்கபாணியும் இதே கருத்துடையவர்தாம். அவர் 'மங்கலம் என்பதற்கு உண்டான பல பொருள்களினும், மங்கல அணியாகிய தாலி எனும் பொருள் பொருந்துவதாகும் என்று சொல்லி, 'பண்புடைமையை அணியாகக் கூறுதல் வள்ளுவர் நெறி. அவ்வகையில் மனைமாட்சியை மங்கல அணியாகக் கொள்ளுதல் பொருந்துவதே. பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு அணி... (இனியவைகூறல் 95) ...நெஞ்சத்துக் கோடாமை சான்றோர்க்கு அணி (நடுவுநிலைமை 115) எனப் பிற இடங்களிலும் பண்பினை அணிகலன்களாகக் கூறுதல் நோக்குக' என்றும் கூறுகிறார். மனையாளது மாட்சி தாலியாய் அதாவது மங்கல நாணாய் உருவகிக்கப்பட்டுள்ளது என்பது இயல்பாகப்படவில்லை. மங்கலம் என்பதற்கு நன்மை எனப் பொருள் கண்டவர்கள் அது கிடைக்கப்பெறுவது கணவனுக்கு என்று ஒரு சாராரும், இல்லாளுக்கு என்று மற்றொரு சாராரும், இல்லத்திற்கு என்று பிறரும் உரைத்தனர். மங்கலம் என்ற சொல்லுக்குப் 'பொலிவு' அல்லது 'என்றும் நீங்காத அழகு' என்பது பொருத்தமான பொருளாகப்படுகிறது. 'மங்கலம் என்ப மனைமாட்சி' என்ற தொடர் இல்லறத்து மாண்பு நிலைக்கச் செய்தல் குடும்பத்துக்கு என்றும் நீங்காத பொலிவு என்று சொல்வர் எனப் பொருள்படும். மங்கலம் என்பது பொலிவு என்ற பொருளது. இல்லறத்தின் பெருமையே குடும்பத்துக்குப் பொலிவு தருவது என்று சொல்வர்; மேலும் அப்பெருமைக்கு அழகு சேர்ப்பது நல்ல மக்களை உருவாக்குவது என்பது இக்குறட்கருத்து. ஒருவருக்கொருவர் வாழ்க்கைத் துணைநலமாய் அமைந்து மனையறம் பேணி மக்களைப் பெறுவது மனைமாட்சி. இல்லறத்தின் பெருமையே குடும்பத்துக்குப் பொலிவு தருவது என்று சொல்வர்; மேலும் அதற்கு அழகு சேர்ப்பது நல்ல மக்களை உருவாக்கித் தருவது.
மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா... தோழா சார் சார் சார் எனக்கூப்பிடாதே சார் என்பது அடிமைசாசனம் சார் என்பது நிறங்களின் பேதத்தால் எழுதப்பட்டது சார் என்பது அடியோடு குனிந்த சார்பு என்றெல்ல... வாழ்ந்தா.... மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா... அப்பா இல்லாத வாழ்க்கை அப்பா இல்லாத தீபாவளி அப்பா இல்லாத புத்தாண்டு அப்பா இல்லாத பொங்கல் இப்படித்தான் ஒவ்வொன்றாக வருகிறது அப்பா என்று மகன்களைக் குறிப்பிட்...
தமிழகத்தில் திமுக திறமையற்ற அரசாக இருப்பதாகவும் அனைத்துத் துறைகளிலும் பாரிய ஊழல் நடைபெறுவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். கோவையில் இடம்பெற்ற குண்டுவெடிப்பை தடுக்க தவறியமை மற்றும் மாணவர்களிடையே போதைப்பொருள் பழக்கம் அதிகரிப்பை கட்டுப்படுத்த முடியாமை குறித்தும் விமர்சித்துள்ளார். மேலும் தி.மு.க ஆட்சியில் மருந்து கொள்முதலில் ஊழல் நடந்து வருகிறது என்றும் காலாவதியாகிய மருந்தும் பயன்பாட்டில் காணப்படுவதாக எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். ஊழலுக்கு உதாரணம் திமுகவே என குறிப்பிட்ட எடப்பாடி பழனிசாமி, தமிழக ஆளுநர் இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார். அண்மைய செய்திகள் சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் – தரிசன நேரம் அதிகரிப்பு டென்னிஸில் ஆர்வம் காட்டும் தோனி – வைரலாகும் புகைப்படம் ஐக்கிய நாடுகள் சபையின் போதைப் பொருள் மற்றும் குற்றங்களை தடுப்பதற்கான செயலமர்வு!! விவசாயிகளின் பயிர் காப்பீடு கால வரம்பை நீடிக்க வேண்டும் – முதலமைச்சர் கடிதம். ஐபிஎல் போட்டியில் இருந்து ஓய்வை அறிவித்த பொல்லார்ட்.. மும்பை அணிக்காக புது ரூட்டில் கொடுக்க போகும் என்ட்ரி!!