வெளியிட்ட தேதி
stringclasses 67
values | தலைப்பு
stringlengths 9
141
| செய்தி-வகை
stringclasses 30
values | எழுத்தாளர்
stringclasses 1
value | இணைப்பு
stringlengths 61
178
| மொழி
stringclasses 1
value | குறிமுறைத் தரநிலை
stringclasses 1
value | உள்ளடக்கம்
stringlengths 0
14.7k
⌀ | சேகரிக்கப்பட்ட தேதி
stringlengths 26
26
|
---|---|---|---|---|---|---|---|---|
ஜனவரி 1, 2025 | தமிழகத்தில் உள்கட்டமைப்பு திட்டங்கள் உருவானதில் கம்யூனிஸ்ட் கட்சியின் பங்கு - அ.அன்வர் உசேன் | கட்டுரை | நமது நிருபர் | https://theekkathir.in/News/articles/world/infrastructure-projects-in-tamil-nadu--the-communist-party's-role-in-formation | தமிழ் | UTF-8 | தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு தொழில்களை உருவாக்கிட வலுவான முயற்சிகள் செய்தது போலவே பல உள்கட்டமைப்பு திட்டங்களை உருவாக்குவதிலும் கம்யூனிஸ்ட் கட்சியும் கம்யூனிஸ்ட் தலைவர்களும் ஈடுபட்டனர். மின் திட்டங்கள், அணைகள், நீர் நிலைகள், புதிய மாவட்டங்கள், மருத்துவக் கல்லூரிகள், ரயில்கள் என பல திட்டங்கள் உருவாக கம்யூனிஸ்ட் கட்சி மக்களை திரட்டி இயக்கங்களை நடத்தியது. சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களின் முயற்சியும் மக்கள் இயக்கங்களும் ஒன்றிணைந்ததன் மூலம் இந்த திட்டங்கள் சாத்தியமாயின. அவற்றில் சில முக்கிய திட்டங்கள் கீழே பட்டியலிடப்படுகின்றன.முல்லை பெரியாறு மின் திட்டம்முல்லை பெரியாறு அணையின் தனித்துவம் என்பது அதன் பாசன பகுதிகள் தமிழகத்தில் இருந்தாலும் அணை கேரளாவில் இருக்கிறது. பாசன நீர் தேவைக்கான ஒப்பந்தம் ஏற்கெனவே அமலில் உள்ள நிலையில் அணையின் நீரை பயன்படுத்தி ஒரு புனல் மின் நிலையம் உருவாக்க தமிழ்நாடு விரும்பியது. அதற்கு கேரளா அரசாங்கத்தின் உதவி தேவைப்பட்டது. அப்பொழுது கேரளாவின் திருவாங்கூர் - கொச்சி பகுதிக்கு பிரஜா சோசலிஸ்ட் கட்சி- காங்கிரஸ் கூட்டணி மந்திரி சபையின் முதல்வராக பட்டம் ஏ. தாணுப் பிள்ளையும் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியின் முதல்வராக இராஜாஜியும் ஆட்சியில் இருந்தனர். எனினும் உடன்பாடு எட்ட முடியவில்லை. இந்த சூழலில் தோழர் பி.ராமமூர்த்தி தமிழ்நாட்டுக்கு தேவையான புனல் மின்சாரம் குறித்து தாணுப்பிள்ளையிடம் பேசினார். ஆனால் தாணுப்பிள்ளை மறுத்தார். மறுப்புக்கு காரணம் கூறும்படி பி.ஆர். வற்புறுத்தினார். முல்லை பெரியாறு அணையிலிருந்து நீரும் தமிழகத்திற்கு செல்கிறது. ஒரு ஏக்கருக்கு ஒரு அணா மட்டுமே கேரளா பெறுகிறது. இப்பொழுது மின்சாரமும் தமிழகத்திற்கு எனில் எப்படி ஏற்றுக் கொள்ள முடியும் என தாணுப்பிள்ளை கேட்டார். அப்படியானால் மின்சாரத்திற்கு நியாயமான விலை கொடுத்தால் நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களா என பி.ஆர். கேட்டார். அதற்கு அவர் பதில் சொல்லவில்லை. பி.ஆர். தமிழக முதல்வர் ராஜாஜியிடம் இந்த விவாதங்களை கூறினார். ஒரு யூனிட் மின்சாரத்திற்கு 2 பைசா எனில் ஏற்றுக் கொள்ளலாம் என ராஜாஜி கூறினார். அதன் அடிப்படையில் பி.ஆர். அவர்கள் மீண்டும் தாணுப்பிள்ளையிடம் பேசினார். அவர் 4 பைசா என்று கூற பி.ஆர். ஒரு பைசா என முன்வைக்க இறுதியில் இரண்டு பைசா என தாணுப்பிள்ளை ஏற்றுக்கொண்டார். அதனை பி.ஆர். அவர்கள் ராஜாஜியிடம் தெரிவிக்க பின்னர் இரண்டு அரசாங்கங்களுக்கும் ஒப்பந்தம் உருவானது. இப்படித்தான் 140 மெ.வா. மின்சாரம் தமிழ்நாடு பெறுவதற்கு வழி உருவானது. இதன் மூலம் தென் மாவட்டங்கள் இன்றும் பலன் அடைகின்றன. இந்த திட்டத்திற்கு பி.ஆர். அவர்களின் பங்கு இன்றியமையாதது.பரம்பிக் குளம்- ஆழியாறு திட்டம்1947 முதல் 1957 வரை கேரளா மற்றும் தமிழ்நாட்டில் காங்கிரஸ் அரசாங்கங்கள் இருந்தாலும் இந்த முக்கியமான திட்டம் உருவாகவில்லை. இதற்கு முக்கிய காரணம் கேரளாவில் உள்ள காங்கிரஸ் தலைவர்கள் இந்த திட்டத்திற்கு எதிராக கேரளா மக்களிடம் செய்த பிரச்சாரம்தான். இந்த சூழலில்தான் 1957ம் ஆண்டு தோழர் இ.எம்.எஸ். நம்பூதிரிபாட் தலைமையில் முதல் கம்யூனிஸ்ட் ஆட்சி அமைந்தது. அப்பொழுது கேரளா கட்சி பணிகளுக்கு தோழர் பி.ஆர். பொறுப்பாளராக இருந்தார். தமிழகத்தில் மேற்கு மாவட்டங்களின் பாசன தேவை குறித்து பி.ஆர். அவர்கள் இ.எம்.எஸ். அவர்களிடமும் பாசனத்துறை அமைச்சர் வி.ஆர். கிருஷ்ணய்யர் அவர்களிடமும் பேசினார். கேரளா கம்யூனிஸ்ட் அரசாங்கம் இதனை கொள்கை அளவில் ஏற்றுக் கொண்டது. அப்பொழுது தமிழகத்திற்கு காமராஜர் முதல்வராகவும் சி. சுப்பிரமணியம் நிதி அமைச்சராகவும் இருந்தனர். எனினும் ஒரு பிரச்சனை இருந்தது. இ.எம்.எஸ். ஆட்சியை கலைக்க காங்கிரஸ் நேரம் பார்த்துக் கொண்டிருந்தது. பரம்பிகுளம் - ஆழியாறு திட்டத்தை தனது அரசியலுக்கு காங்கிரஸ் பயன்படுத்தாமல் இருக்க உத்தரவாதம் தேவைப்பட்டது. பி.ஆர். அவர்கள் காமராஜரிடமும் சி. சுப்பிரமணியம் அவர்களுடனும் இது குறித்து பேசினார். அவர்களும் காங்கிரசின் அகில இந்திய தலைமையிடம் பேசுவதாகக் கூறினர். அப்பொழுது உள்துறை அமைச்சராக கோவிந்த வல்லபபந்த் இருந்தார். அவரிடம் பி.ஆர். அவர்களும் பேசினார். ஆனால் கேரளாவில் உள்ள காங்கிரசாரை எதிர்ப்பு தெரிவிக்காமல் இருக்குமாறு கூற முடியாது என அவர் கை விரித்துவிட்டார். இந்த நிலையில் மீண்டும் இந்த திட்டம் குறித்து இ.எம்.எஸ். அவர்களிடம் பி.ஆர். பேசினார். அப்பொழுது கேரளா மற்றும் தமிழகம் இரண்டும் பயன்பெறும் வகையில் ஒரு திட்ட வரைவு அறிக்கை தயார்படுத்தப்பட்டது. இதன் மூலம் காங்கிரஸ் எதிர்ப்பு எடுபடாமல் போனது. இந்த திட்டம் குறித்து காமராஜரும் இ.எம்.எஸ். அவர்களும் நேரடியாக பேசினர். இந்த தொடர் முயற்சிகள் காரணமாக இரு மாநிலங்களுக்கும் ஒப்பந்தம் உருவானது. இப்படித்தான் பரம்பிகுளம் ஆழியாறு நீர் பாசனத் திட்டம் உருவானது. இந்த திட்டத்திற்கான பணி தொடங்கிய சில மாதங்களில் இ.எம்.எஸ். ஆட்சி கலைக்கப்பட்டது. ஒரு வேளை இ.எம்.எஸ். ஆட்சியில் இந்த ஒப்பந்தம் உருவாகாமல் இருந்திருந்தால் பின்னர் இந்த திட்டம் தமிழகத்திற்கு கிடைத்திருக்குமா என்பது மிகப்பெரிய கேள்விக்குறிதான். மேற்கு மாவட்டங்களுக்கு பலனளிக்கும் இந்த திட்டத்திற்கு பி.ஆர். அவர்களின் தொடர் முயற்சியும் இ.எம்.எஸ். தலைமையிலான கம்யூனிஸ்ட் அரசாங்கம் கேரளாவில் இருந்ததும் மிக முக்கிய காரணங்கள் ஆகும்.நிறைவேறாத திட்டங்கள்அவினாசி மற்றும் பல்லடம் பகுதிகள் பலன் அடையும் வகையில் குந்தா நீர்ப்பாசன திட்டத்தை அமலாக்க கோவை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த தோழர் கே. ரமணி பல முயற்சிகள் எடுத்தார். அதற்காக அவரும் தோழர் அனந்தன் நம்பியார் அவர்களும் அன்றைய பாசன அமைச்சர் திரு. கே.எல்.ராவ் அவர்களை சந்தித்து பேசினர். கே.எல்.ராவ் ஒரு சிறந்த இஞ்ஜினியரும் ஆவார். பில்லூர் அணையின் கொள்ளளவை அதிகப்படுத்துவதன் மூலம் இது சாத்தியம் என ராவ் கூறியது மட்டுமல்லாது கே.ரமணியின் வேண்டுகோளுக்கிணங்க அதனை எழுத்துப்பூர்வமாகவும் தந்தார். அவரது கடிதத்தை ரமணி அவர்கள் முதல்வர் அண்ணாவிடம் சமர்ப்பித்தார். சிபிஐ(எம்) சட்டமன்ற உறுப்பினர்களும் இதனை வலியுறுத்தினர். தமிழக அரசாங்கம் இதனை ஏற்றுக்கொண்டு திட்ட ஆய்வுக்காக காரமடையில் அலுவலகம் திறந்தது. இந்த திட்டம் தேவை என கோவில்பாளையத்தில் விவசாயிகள் மாநாடு நடந்தது. எனினும் சுமார் இரு வருட ஆய்வுகளுக்கு பின்னர் சில சுயநல சக்திகள் காரணமாக இந்த திட்டம் நிறைவேறவில்லை. இதே போல பாண்டியாறு-புன்னம்புழா நீர் மின்திட்டம் மூலம் 100 மெ.வா. நீர் மின்நிலையத்தை உருவாக்க தோழர் ரமணி முன்முயற்சி எடுத்தார். இந்த திட்டம் ஐந்தாண்டு திட்டத்திலும் இணைக்கப்பட்டது. எனினும் இந்த திட்டம் அடுத்த கட்டத்துக்கு நகரவில்லை. இந்த இரண்டு திட்டங்களும் நிறைவேறியிருந்தால் மேற்கு மாவட்டங்கள் கூடுதலாக பலன் அடைந்திருக்கும்.புதுக்கோட்டை, திருவாரூர், நாகை மாவட்டங்கள் உதயம்திருச்சி மாவட்டத்தின் ஒருங்கிணைந்த பகுதியாக இருந்த புதுக்கோட்டை சமூக பொருளாதார அம்சங்களில் திருச்சியின் இதர பகுதிகளை ஒப்பிடும்பொழுது பின் தங்கியிருந்தது. 1962ஆம் ஆண்டு புதுக்கோட்டை நாடாளுமன்ற உறுப்பினராக தோழர் உமாநாத் தேர்வாகியிருந்தார். புதுக்கோட்டை முன்னேற்றத்திற்காக உமாநாத் அவர்களும் அனந்தன் நம்பியார் அவர்களும் விவாதித்து ஒரு நீண்ட மனுவை தயாரித்து அன்றைய பிரதமர் நேருவிடம் நேரில் தந்தனர். இந்த மனுவின் மீது எவ்வித நடவடிக்கையும் இல்லாத அதே நேரத்தில் கிழக்கு உத்தரப்பிரதேசத்தின் முன்னேற்றத்திற்காக ஒரு கமிட்டியை நேரு நாடாளுமன்றத்தில் அறிவித்தார். இந்த அறிவிப்பை வரவேற்ற உமாநாத் புதுக்கோட்டைக்கு மட்டும் ஏன் வஞ்சனை என நேருவை கேள்வி கேட்டார். “நேருஜி பிறந்த மாநிலத்தில் புதுக்கோட்டை மக்கள் பிறக்காததுதான் அவர்கள் குற்றமா?” என கர்ஜித்தார். இதன் பின்னர் புதுக்கோட்டையில் மக்களை திரட்டி தனி மாவட்டமாக அறிவிக்க கோரி நடந்த மறியல் போராட்டங்களில் உமாநாத் உட்பட பலர் கைதாகினர். இத்தகைய நீண்ட போராட்டங்களின் விளைவாகவே 1974ஆம் ஆண்டு புதுக்கோட்டை மாவட்டம் உருவானது. எனினும் ஆட்சியாளர்களால் இந்த நிகழ்ச்சிக்கு உமாநாத் அழைக்கப்படவுமில்லை; சிபிஐ(எம்)மின் பங்கு அங்கீகரிக்கப்படவுமில்லை. பெரிய மாவட்டமாக இருந்த தஞ்சை மாவட்டத்தை இரண்டாக பிரிக்க வேண்டும் எனும் மக்களின் கோரிக்கையை நாகை சட்டமன்ற உறுப்பினராக இருந்த தோழர் உமாநாத் முதல்வர் எம்.ஜி.ஆரிடம் வலியுறுத்தினார். தஞ்சை மாவட்டத்திலிருந்து நாகை மாவட்டத்தை பிரித்து திருவாரூர் தலைநகரம் என அறிவிக்கப்பட்டது. இதனால் நாகை மக்கள் அதிருப்தியுற்றனர். இது இரண்டு மாவட்டங்களிலும் போராட்டங்கள் வெடிக்கும் சூழலை உருவாக்கியது. நாகை, திருவாரூர் இரு தொகுதிகளிலும் சிபி(ஐ)எம் சட்டமன்ற உறுப்பினர்கள். இரு மாவட்ட மக்களிடையே மோதலை உருவாக்காமல் இந்த பிரச்சனையை தீர்க்க கட்சி முயன்றது. இதன் விளைவாக தஞ்சை, திருவாரூர், நாகை என மூன்று மாவட்டங்கள் என எம்.ஜி.ஆர். அறிவித்தார். எனினும் நாகை மாவட்டம் 1991ஆம் ஆண்டும் திருவாரூர் மாவட்டம் 1997ஆம் ஆண்டில்தான் உருவாயின.கம்யூனிஸ்ட் கட்சியால் உருவான கிராமம்திண்டுக்கல் மாவட்டத்தில் வடகாடு மலைப்பகுதியில் உள்ள புறம்போக்கு நிலத்தை வனத்துறையினர் தமது நிலம் எனக் கூறி சாதாரண மக்களை துன்புறுத்தி வந்தனர். இந்த நிலம் வனத்துறைக்கு சொந்தமானது அல்ல என ஆதாரங்களுடன் கம்யூனிஸ்ட் கட்சி நிரூபித்தது. தோழர் வி.கே. கருப்பசாமி, எம்.ஏ. வெங்கடாசலம் போன்ற தலைவர்கள் மக்களை திரட்டி போராடினர். கைது, சிறை, மறியல், பாதயாத்திரை என பல போராட்டங்கள் நடத்தியதன் பலனாக தமிழ்நாடு அரசாங்கம் சர்வே நடத்தி 600 குடும்பங்களுக்கு பட்டா தரப்பட்டது. இன்று வடகாடு 7000 மக்களை கொண்ட ஒரு ஊராட்சியாக திகழ்கிறது. வடகாடு கிராமம் முற்றிலும் மக்கள் இயக்கம் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியின் முயற்சியால் உருவானது ஆகும். திருவாரூர், கீழ்வேளூர், நாகை பகுதிகளில் மக்கள் இயக்கம் மூலமும் நம் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் எம்.செல்லமுத்து, வே.மாரிமுத்து, நாகை மாலி ஆகியோரின் முயற்சிகள் மூலம் புதிய பேருந்து நிலையங்கள், ஏராளமான ஆரம்ப சுகாதார நிலையங்கள், கிராம மாணவர்கள் பயில பள்ளிகள், நெல் கொள்முதல் நிலையங்கள் உருவாயின. கன்னியாகுமரி மாவட்டத்தில் ஜி.எஸ்.மணி, டி.மணி, லீமா றோஸ் ஆகியோரின் முயற்சியால் 15க்கும் அதிகமான முக்கிய பாலங்கள் கட்டப்பட்டுள்ளன.மருத்துவக் கல்லூரிகள், ரயில்கள், நீர் நிலைகள்:கீழ்கண்ட மருத்துவக் கல்லூரிகளுக்கு நமது தோழர்கள் முன்முயற்சி கொடுத்தனர்:
• மதுரை எய்ம்ஸ் - பி.மோகன், சு.வெங்கடேசன்
• நாகர்கோவில் - ஏ.வி.பெல்லார்மின்
• திண்டுக்கல் - கே.பாலபாரதி
• கோவை இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரி-
பி.ஆர்.நடராஜன்
• குமரி மாவட்ட சித்த மருத்துவமனை -
ஜான் ஜோசப்
• திருவட்டார் அரசு மருத்துவமனை -
ஜே. ஹேமச்சந்திரன்
• குழித்துறை அரசு மருத்துவமனை - டி.மணிரயில்கள்:• கோவை எக்ஸ்பிரஸ் – கே. ரமணி
• மதுரை-பெங்களூர் வந்தேபாரத்- எக்ஸ்பிரஸ் சு.வெங்கடேசன்
• கோவை-மேட்டுப்பாளையம் பயணிகள் ரயில் நிரந்தரம் மற்றும் 11 ரயில்கள் கோவை வந்து செல்வது, மோனோ ரயில் திட்டம் முதல் கட்ட ஆய்வு - பி.ஆர்.நடராஜன்.பேருந்து நிலையங்கள்:• நாகை, நாகூர் - ஆர்.உமாநாத்
• குலசேகரம்- ஜே.ஹேமச்சந்திரன்
• தக்கலை - எஸ்.நூர் முகமதுகுடிநீர் திட்டங்கள்:• சின்னவேடம்பட்டி நீர் நிலை- கே. ரமணி
• கொள்ளிடம் திட்டம்- கே.பாலகிருஷ்ணன்
• திண்டுக்கல் கூட்டு குடிநீர் திட்டம் - கே.பாலபாரதி
• பத்மநாபபுரம் கூட்டு குடிநீர் திட்டம் -
எஸ்.நூர் முகம்மது
• திருவெறும்பூர் கூட்டு நீர் திட்டம் - பாப்பா உமாநாத்இவ்வாறாக ஏராளமான உள்கட்டமைப்பு திட்டங்கள் உருவாவதற்கு கம்யூனிஸ்ட் கட்சி காரணமாக இருந்துள்ளது. சில பதிவு செய்யப்பட்டுள்ளன. பல பதிவு செய்யப்படாமலேயே உள்ளன. தற்பொழுது ஒவ்வொரு இடைக்குழு,மாவட்ட குழு மாநாட்டிலும் பல திட்டங்கள் குறித்து தீர்மானங்கள் இயற்றப்பட்டுள்ளன. எதிர்காலத்தில் அந்த திட்டங்களுக்காக கட்சி வலுவான மக்கள் இயக்கங்களை நடத்தும். | 2025-01-02 02:02:04.578769 |
ஜனவரி 1, 2025 | வன்மத்தின் உச்சம்! | தலையங்கம் | நமது நிருபர் | https://theekkathir.in/News/headlines/bjp/senior-bjp-leader-and-maharashtra-minister-nitesh-rane | தமிழ் | UTF-8 | பாஜக மூத்த தலைவரும், மகாராஷ்டிரா அமைச்சருமான நிதேஷ் ரானே கேரளாவை ஒரு ‘மினி பாகிஸ்தான்’ எனக் கூறியிருக்கிறார். இது கடும் கண்டனத்திற்கு உரியது.“கேரளாவில் இந்துக்களின் மக்கள்தொகை குறைந்து கொண்டே வருகிறது. இந்துக்கள் மத மாற்றம் செய்யப்படுகின்றனர். இந்து பெண்கள் லவ் ஜிகாத் என்ற பெயரில் குறிவைக்கப்படுகின்ற னர். பாகிஸ்தானில் இந்துக்கள் நடத்தப்படுவதை போலத்தான் கேரளாவிலும் நடத்தப்படுகின்றனர். தீவிரவாத அமைப்புகளிடம் இருந்து ஆதரவு கிடைப்பதால்தான் ராகுல் காந்தியும், பிரியங்கா காந்தியும் வயநாடு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். கேரளா என்பது ஒரு மினி பாகிஸ்தான் போன்றது. அதனால்தான் ராகுல் காந்தியும், பிரியங்காவும் அங்கு வெற்றிபெற்ற னர். தீவிரவாத அமைப்புக்கு ஆதரவு தெரி விப்பவர்கள் அனைவரும் அவர்களுக்கு வாக்க ளித்துள்ளனர்” என நிதேஷ் ரானே வாய் கூசாமல் விஷத்தைக் கக்கியிருக்கிறார்.கேரளம் மீது சங்பரிவார் அமைப்புகளுக்கு இருக்கும் வன்மத்தின் உச்சம்தான் அமைச்சர் ரானே பேச்சின் வெளிப்பாடு. அதனால்தான் தற்போது வரை இதுகுறித்து பிரதமர் மோடி வாய் திறக்க வில்லை. இது நிதேஷ் ரானேவின் பேச்சா அல்லது கேரளம் மீதான பாஜகவின் கொள்கை நிலையா என்பதை அக்கட்சி தெளிவுபடுத்த வேண்டும். இது கேரள மாநிலத்தை இழிவுபடுத்துவது மட்டு மல்ல, இந்தியாவையே அவமானப்படுத்தும் செயல் ஆகும். பாஜக மற்ற மாநிலங்களைப்போல் கேரளத்திலும் மதத்தின் அடிப்படையில் மக்களைப் பிளவுபடுத்திட நீண்ட காலமாக முயன்று வருகிறது. ஆனால் கேரள மக்கள் அதனை முறியடித்து வருகின்றனர்.இதனால் விரக்தியின் உச்சத்திற்குச் சென்றி ருக்கும் சங்பரிவார் கூட்டம் கேரள மக்கள் மீதும் அவதூறுச் சேற்றை அள்ளி வீசுகிறது. ராகுல் காந்திக்கும், பிரியங்காவிற்கும் வாக்களிப்பவர்கள் அனைவரையும் தீவிரவாத அமைப்புக்கு ஆதரவு தெரிவிப்பவர்கள் என நிதேஷ் ரானே கூறியிருக் கிறார். அப்படியென்றால் அயோத்தி தொகுதியில் கூட பாஜகவை மக்கள் தோற்கடித்துள்ளனர். அங்கிருப்பவர்கள் அனைவரும் தீவிரவாத ஆதர வாளர்களா? கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக 36 சதவிகித வாக்குகளை மட்டுமே பெற்றது. பாஜகவை நிராகரித்து 64 சதவிகிதம் பேர் வாக்க ளித்துள்ளனர். அப்படியென்றால் அந்த 64 சதவிகி தம் பேரும் தீவிரவாதத்தை ஆதரிப்பவர்களா?கேரளம் இன்றளவும் மதநல்லிணக்கத் திற்கு மகுடமாக விளங்குகிறது. இந்திய அரசியல் சாசனத்தின் மீது உறுதிமொழி எடுத்துக் கொண்ட ஒரு அமைச்சர்தான் நிதேஷ் ரானே. ஆனால் அதற்கு நேர்மாறாக ஒரு மாநிலத்திற்கு எதிராக வெறுப்பை உமிழ்வது எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல. கடும் கண்டனத்திற்குரி யது. இனியும் நிதேஷ் ரானே அமைச்சர் பதவியில் நீட்டிக்க எந்த தார்மீக உரிமையும் தகுதியும் இல்லை. உடனே அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும். | 2025-01-02 02:02:07.185380 |
ஜனவரி 1, 2025 | தீக்கதிர் உலக செய்திகள் | உலகம் | நமது நிருபர் | https://theekkathir.in/News/world/india/cyril-ramaphosa-calls-for-an-end-to-the-war-in-gaza | தமிழ் | UTF-8 | காசாவில் போரை நிறுத்த சிரில் ரமபோசா அழைப்புதென்னாப்பிரிக்க ஜனாதிபதி சிரில் ரமபோசா வெளியிட்ட புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில், காசாவில் போர் நிறுத்தப்பட வேண்டும் எனவும் பணயக்கைதிகளை விடுவிக்கவும் அழைப்பு விடுத்துள்ளார். உலகம் முழுவதும் பல நாடுகள் மற்றும் கோடிக்கணக்கான மக்களின் ஆதரவு மற்றும் ஒற்றுமையின் மூலம் நாங்கள் எங்கள் சுதந்திரத்தை அடைந்தோம். அது போல் உலகின் பிற பகுதிகளில் அநீதியால் பாதிக்கப்பட்டவர்களுடன் நாங்கள் தொடர்ந்து ஒற்றுமையுடன் நிற்கிறோம் எனவும் ரமபோசா தெரிவித்துள்ளார்.இஸ்ரேலுக்கு 50,000 டன் ஆயுதங்கள்2023 அக்டோபர் 7 முதல் காசா, லெபனான், சிரியா ஆகிய நாடுகளின் மீது தாக்குதல் நடத்த இஸ்ரேல் ராணுவத்திற்கு சுமார் 22 பில்லியன் டாலர்களுக்கு மேல் அமெரிக்கா செலவிட்டுள்ளது. ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனத்தின் தகவலின்படி 2019 முதல் 2023 வரை இஸ்ரேலுக்கு அமெரிக்கா கொடுத்து வந்த ஆயுதங்களின் அளவு போருக்குப் பிறகு 78 சதவீதமாக உயர்ந்துள்ளது. 2024 ஆகஸ்ட் மாதம் வரை 50,000 டன்களுக்கும் அதிகமான ஆயுதங்களை கொடுத்துள்ளது.மக்கள் தொகை 7.1 கோடி உயர்வுஉலக மக்கள் தொகை உயர்வு குறித்து அமெரிக்க மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியகம் மதிப்பீடு செய்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. 2025 ஜனவரி 1 அன்று உலக மக்கள் தொகை சுமார் 809 கோடியாக (8,092,034,511) உள்ளது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 2024 இல் மட்டும் உலகம் முழுவதும் உள்ள மக்கள் தொகை எண்ணிக்கை 7.1 கோடி உயர்ந்துள்ளது.2023 இல் உயர்ந்த 7.5 கோடி யை விட குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.பாதுகாப்புக் கவுன்சில் உறுப்பினரானது பாகிஸ்தான்ஐ.நா பாதுகாப்புக் கவுன்சிலில் (UNSC) இரண்டு ஆண்டுகால தற்காலிக உறுப்பின ராக 2025 ஜனவரி 1 அன்று பாகிஸ்தான் பதவியேற்றுள்ளது. இந்த பதவி 2027 ஜனவரி 1 வரை நீடிக்கும். இந்நிலையில் இது குறித்து பேட்டியளித்த ஐ.நா., அவைக்கான பாகிஸ்தான் தூதர் முனிர் அக்ரம், மிக முக்கியமான பிரச்சனைகளில் பாகிஸ்தானின் பிரதிநிதிகள் ஆக்கப்பூர்வமான பங்களிப்பு செய்வார்கள். பாது காப்பு கவுன்சிலில் எங்கள் இருப்பு உணரப்படும் வகையில் எங்கள் செயல்பாடு அமையும் என்றார்.உக்ரைன் தலைநகரில் ரஷ்யா தாக்குதல்உக்ரைன் நாட்டு தலைநகர் மீது ஜனவரி 1 புத்தாண்டன்று அதிகாலை ரஷ்யா டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் 3 பேர் உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தலைநகர் மட்டுமின்றி அதன் அருகிலுள்ள ஒரு மாவட்டத்திலும் தாக்குதல் நடந்துள்ளது. உக்ரைன் ராணுவம் அமெரிக்கா கொடுத்த ‘தாட்’ என்ற ஏவுகணை தடுப்பு அமைப்பை பயன்படுத்த துவங்கியுள்ளது. எனினும் ரஷ்யா அந்நாட்டு தலைநகரில் துல்லிமயமான தாக்குதலை நடத்தியுள்ளது.புத்தாண்டன்றும் தொடர்ந்த இஸ்ரேல் குண்டுவீச்சு : குளிரில் விறைத்து பலியாகும் காசா குழந்தைகள்காசா,ஜன.1- 2025 வருடத்தின் முதல் நாளான ஜனவரி 1 அன்றும் இஸ்ரேல் ராணுவம் காசாவில் குண்டு வீசியும் துப்பாக்கிச் சூடு நடத்தியும் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் சுமார் 17 பாலஸ்தீனர்கள் படுகொலை செய்யப்பட்டனர். 2025 இல் இஸ்ரேல் தாக்குதலால் முதலில் படுகொலை செய்யப்பட்டது 8 வயதுள்ள ஒரு சிறுவன் ஆகும். காசாவில் டிசம்பர் மாதம் முதல் குளிர்காலம் துவங்கி விட்டது. மிக அதிகளவிலான குளிரை தாக்குப்பிடிக்க போதிய பாதுகாப்பான தங்குமிடங்கள் காசாவில் இல்லை. ஐ.நா., வின் அகதிகள்முகாம், மருத்துவமனைகள், பள்ளிகள் என அனைத்தையும் இஸ்ரேல் ராணுவம் குண்டு வீசி அழித்து விட்டது. குளிர்காலத்தில் தங்கள் உடலையோ, இருப்பிடத்தையோ வெதுவெதுப்பாக வைத்துக்கொள்ள போதிய எரிபொருட்களோ மின்சாரமோ இல்லாமல் பாலஸ்தீனர்கள் தவித்து வருகின்றனர். மேலும் உடலை சுத்தம் செய்வதற்கு போதிய தண்ணீரும் இல்லை உடைகளும் இல்லை. அதனால் சுகாதாரமற்ற நிலைக்கு பாலஸ்தீனர்களை இஸ்ரேல் ராணுவம் தள்ளி யுள்ளது. இதனால் காசாவில் கொடிய சுகாதாரச் சீர்கேடுகள் உருவாகி ஆயிரக்கணக்கான மக்கள் தொற்று நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே கடுமையான குளிரை எதிர் கொள்ள போதிய பாதுகாப்பு வசதிகள் இல்லாததால் குழந்தைகள் பலியாகிவரும் கொடுமையும் நடத்துள்ளது. கடுங்குளிரால் உடைகள் ஈரப்பதமாகி உடல் வெப்பநிலை வேகமாக குறைந்து ஹைப்போதெர்மியாவால் குழந்தைகள் பாதிக்கப்படுகின்றன. குளிர் தாங்கும் உடைகள் இல்லாததால் லேசான தோல் கொண்ட குழந்தைகளின் இதயம், நுரையீரல் உள்ளிட்ட முக்கியமான உடல் பாகங்கள் 2-4 டிகிரி செல்சியஸ் என்ற குறைந்த வெப்பநிலையில் 10-20 நிமிடங்களில் செயல் இழந்து மரணித்து விடுகின்றன. இவ்வாறு 10க்கும் மேற்பட்ட குழந்தைகள் காசாவில் பலியாகியுள்ளன. | 2025-01-02 02:02:07.691856 |
ஜனவரி 1, 2025 | 2024ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ரூ.1.77 கோடி ஜிஎஸ்டி வசூல்! | தேசியம் | நமது நிருபர் | https://theekkathir.in/News/india/delhi/gst-collection-of-rs-1.77-crore-in-december-2024 | தமிழ் | UTF-8 | 2024 ஆண்டில் டிசம்பர் மாதம் ஜிஎஸ்டி வருவாய் ரூ. 1.77 லட்சம் கோடி என ஒன்றிய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.இதுகுறித்து வெளியிட்டுள்ள தகவலில், 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஈட்டப்பட்ட ஜிஎஸ்டி வசூலில் ஒன்றிய ஜிஎஸ்டி ரூ. 32,836 கோடி, மாநில ஜிஎஸ்டி ரூ.40,499 கோடி, ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி ரூ.47,783 கோடி, செஸ் வரி ரூ.11,471 கோடியாகும்.கடந்த 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ரூ. 1.65 லட்சம் கோடி வசூலிக்கப்பட்ட நிலையில், 2024 ஆம் ஆண்டு ரூ. 1.77 லட்சம் கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2024 ஆம் ஆண்டின் வருவாய் 7.3 சதவீதம் அதிகரித்துள்ளது.கடந்த நவம்பர் மாதம் ஜிஎஸ்டி வருவாய் ரூ. 1.82 லட்சம் கோடியாக (8.5% உயர்வு) இருந்தது குறிப்பிடத்தக்கது. அதிகபட்சமாக 2024 ஏப்ரலில் ரூ. 2.10 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூலாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. | 2025-01-02 02:02:08.241788 |
ஜனவரி 1, 2025 | தீக்கதிர் முக்கிய செய்திகள் | மாநிலம் - தமிழ்நாடு | நமது நிருபர் | https://theekkathir.in/News/states/tamil-nadu/bjp-minister-we-are-not-a-small-pakistan | தமிழ் | UTF-8 | பாஜக அமைச்சரே நாங்கள் ஒன்றும் குட்டி பாகிஸ்தான் அல்ல. கேரளா படித்த மதச்சார்பற்ற, தீண்டாமைகளை கட்டுப்படுத்தியுள்ள மற்றும் ஆரோக்கியமான மாநிலம் என்பதை பெருமையுடன் சொல்கிறேன். எங்கள் தனிநபர் வருமானம் தேசிய வருமானத்தை விட 60 சதவீதம் அதிகம். இந்தியாவை இந்துத்துவா நாடாக மாற்றி பாகிஸ்தானை போல பிரதிபலிக்க வைக்க விரும்புவது நீங்கள் தான்.தேசிய ஊரக வளர்ச்சி வேலைத் திட்டத்தில் மக்கள் இணைவதை கடினமாக்குவதற்காக இந்த அரசு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தவில்லை என்றால் அந்தத் திட்டத்தின் கீழ் கொடுக்கப்படும் ஊதியத்தை பணவீக்கத்துடன் ஒப்பிட்டு பார்க்கும் போது அது உண்மையான பாதிப்பைக் காட்டியிருக்கும்.பைரேன் சிங் மன்னிப்பு கேட்டால் போதாது, பதவி விலக வேண்டும். அவரது மன்னிப்பு சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்ததை ஒப்புக்கொள்ளும் செயல். நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான அர்த்தமுள்ள நடவடிக்கைகளை எடுக்க மாநில அரசு தவறிவிட்டது.பிரதமர் ஏன் மணிப்பூர் செல்லவில்லை? பிரதமர் மணிப்பூருக்குச் சென்று பைரேன் சிங் சொன்னதை ஏன் சொல்ல முடியாது? அவர் உலகம் முழுவதும் சென்றுள்ளார்.ஆனால் மணிப்பூருக்கு செல்வதை அவர் வேண்டுமென்றே தவிர்த்துவிட்டார்.டிசம்பர் மாதம் ஜிஎஸ்டி மூலம் 1.77 லட்சம் கோடி ரூபாய் வசூல் ஆகியுள்ளதாக ஒன்றிய அரசின் தரவுகள் மூலம் தெரிய வந்துள்ளது. இந்த தொகை யானது நவம்பர் மாதம் வசூல் செய்யப்பட்டதை விட 7.3 சதவீதம் அதிகமாகும்.மத்தியப்பிரதேசத்தில் மூளைச்சாவு அடைந்த 28 வயதான வியாபாரி சுரேந்திர பார்வல் என்ற இளைஞரின் உடல் உறுப்புகள் அவரது விருப்பத்தின்படி தானம் செய்யப்பட்டது. சிறப்பு விமானத்தில் அவரது உடல் உறுப்புகள் மும்பை கொண்டு செல்லப்பட்டு உறுப்பு தேவைப்படும் நபர்களுக்கு பொருத்தப்பட்டன.ஆன்லைன் மோசடிகளை தடுப்பதற்காக செயல்பாட்டில் இல்லாத வங்கிக்கணக்கு கள் உள்ளிட்ட 3 வகையான கணக்குகளை மூட ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுத்துள்ளது. 2 ஆண்டு களுக்கு மேலாக பணப் பரிமாற்றம் நடக்காத வங்கிக் கணக்குகள், நீண்ட காலமாக பூஜ்ஜிய தொகையை மட்டும் வைத்திருக்கும் வங்கிக் கணக்குகள் மூடப்படுவதாக அறிவித்துள்ளது.சிபிஐ அமைப்பின் ஆய்வாளர் ரகுல் ராஜ் சிறப்பாக பணியாற்றியதற்காக கடந்த 2023 இல் சிறப்பு புலனாய்வு பிரிவில் பதக்கம் பெற்றார். இந்நிலையில், மலாய் செவிலியர் கல்லூரியின் உரிமையாளரிடம் இருந்து ரூ.10 லட்சத்தை லஞ்சமாக பெற்றபோது அவர் பிடிபட்டார். இத னைத் தொடர்ந்து அவர் சஸ்பெண்ட் செய்யப் பட்டு அவருக்கு வழங்கப்பட்ட பதக்கமும் திரும்பப் பெறப்பட்டுள்ளது. பதக்கத்தை ரத்து செய்யுயக் கோரும் சிபிஐ இயக்குநர் பிரவீன் சூத் பரிந்துரை யினை உள்துறை அமைச்சகம் ஏற்றுக்கொண் டுள்ளது. | 2025-01-02 02:02:11.880940 |
ஜனவரி 1, 2025 | மன்னிப்பு கேட்க தகுதியற்றவர் பைரேன் சிங் | மாநிலம் - தில்லி | நமது நிருபர் | https://theekkathir.in/News/states/delhi/biren-singh-does-not-deserve-an-apology | தமிழ் | UTF-8 | மணிப்பூர் பாஜக அரசாங்கத்தின் முதல்வர் பைரேன் சிங் மன்னிப்பு கேட்க தகுதியற்றவர் என அசோக் கெலாட் கடுமையாக விமர்சித்துள்ளார். மணிப்பூர் மாநிலத்தில் பாஜக அரசின் பெரும்பான்மைவாத / பிரிவினைவாத அரசியலால் 2023 மே மாதம் இனக்கல வரம் வெடித்தது. இந்த இனக்கலவரத்தால் 200 க்கும் அதிகமான மக்கள் படுகொலை செய் யப்பட்டனர். சுமார் 60 ஆயிரத்துக்கும் அதி கமான மக்கள் வீடுகளையும், விவசாய நிலங்களையும் இழந்து அகதிகள் முகா மில் அடைக்கலம் புகுந்துள்ளனர். 60 ஆயி ரத்துக்கும் அதிகமான ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டும் பாஜக அரசால் அம்மாநி லத்தில் அமைதியை நிலைநாட்ட முடிய வில்லை. இத்தகைய கொடூரத்திற்குப் பிறகும் பைரேன் சிங் எப்படி முதல்வராக நீடிக்கி றார்? அவர் பதவி விலக வேண்டும் என்ற விமர்சனங்களும் எழுந்து வருகின்றன. இந்நிலையில் டிசம்பர் 31 அன்று மணிப்பூ ரில் நடந்து வரும் வன்முறைகளுக்கு மக்க ளிடம் முதல்வர் பைரேன் சிங் மன்னிப்புக் கேட்கும் நாடகத்தை அரங்கேற்றினார்.இரண்டு சமூக மக்களும் ஒருவரை ஒரு வர் மன்னித்து கடந்தகால தவறுகளை மறந்து புதிய வாழ்க்கையை துவங்க வேண்டும் என பேசினார். இந்நிலையில் பைரேன் சிங் மன்னிப்பு கேட்பதற்கே தகுதியற்றவர் என ராஜஸ் தான் மாநில முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான அசோக் கெலாட் கடுமையாக விமர்சித்துள்ளார். | 2025-01-02 02:02:11.881892 |
ஜனவரி 1, 2025 | நிதிப்பற்றாக்குறையை காரணம் காட்டி கொலோன் பல்கலைக்கழக தமிழ்த்துறை மூடல் | மாநிலம் - தில்லி | நமது நிருபர் | https://theekkathir.in/News/states/delhi/university-of-cologne-tamil-department-closure | தமிழ் | UTF-8 | பெர்லின்/புதுதில்லி ஜெர்மன் நாட்டின் கொலோன் நகரில் அமைந்துள்ள கொலோன் பல்கலைக் கழகத்தில் நிதி பற்றாக்குறையை காரணம் காட்டி தமிழ்த்துறை மூடப் பட்டுள்ளது. கொலோன் பல்கலைக்கழ கத்தில் கலை மற்றும் சமூகவியல் கல்விப் பிரிவின் கீழ் இந்தியவியல் மற்றும் தமிழ்க் கல்வி துறை செயல்பட்டது. 1963 முதல் இயங் கிய இந்த தமிழ்த்துறை கடந்த அக்டோபர் மாதம் 30 க்குப் பிறகு மூடப்பட்டதாகத் தகவல் வெளி யாகி உள்ளது. கொலோன் பல்கலைக்கழகம் 2014 முதல் நிதிப் பற்றாக்குறையை சந் தித்து வந்ததாகவும் இதன் விளை வாக தற்போது தமிழ்த் துறை மூடப்பட்டதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே இந்த நிதிப் பற்றாக் குறையின் காரணமாக அப்பல்க லைக்கழகத்தில் தமிழ்த் துறை 2 முறை மூடப்படும் நிலைக்கு தள்ளப் பட்டது. இத்தகைய சூழலில் தமிழ்நாடு அரசு 1.25 கோடிரூபாயும், அமெ ரிக்க வாழ் இந்தியர்கள் 1.5 கோடி ரூபாயும், ஐரோப்பிய தமிழர் கூட்ட மைப்பின் சார்பில் 23 லட்சம் ரூபா யும் நன்கொடையாக வழங்கப்பட் டது. இதனால் 2021 இல் அத்துறை மூடப்படுவதில் இருந்து பாதுகாக் கப்பட்டது. இந்த நிதி உதவியை வைத்து தமிழ், ஆங்கிலம், ஜெர்மனி, சமஸ்கிருதம், இந்தி, பாலி உள் ளிட்ட மொழிகளை கற்றிருந்த ஸ்வென் வொர்ட்மான் உதவிப் பேராசிரியராக ஒப்பந்த முறை யில் நியமிக்கப்பட்டார்.அவரு டைய பணிக்காலம் 2024 அக்டோப ருடன் முடிவடைந்தது. அதன்பிறகு நிதிப்பற்றாக் குறையை காரணம் காட்டி வேறு பேராசிரியர்களை அத்துறைக்கு நியமிக்கவில்லை. இதனை காரண மாக வைத்து 60 ஆண்டுகளாக இயங்கி வந்த தமிழ் துறையை கொலோன் பல்கலைக்கழகம் மூடியுள்ளது. கொலோன் பல்கலைக்கழக தமிழ்த் துறைக்கு நிரந்தரப் பேராசி ரியராக இருந்த உல்ரிக் நிக்லாஸ் 2022 இல் ஓய்வு பெறுவதற்கு சில மாதங்கள் முன்பாகத்தான் ஸ்வெ ர்ன் வொர்ட்மான் ஒப்பந்த முறை யில் உதவிப் பேராசிரியராக நிய மிக்கப்பட்டார். அவரை நியமித்த பிறகும் பல்கலைக்கழகம் அத்துறையில் புதிய மாணவர் சேர்க்கையை நடத்தவில்லை என கூறப்படு கிறது. மாணவர் சேர்க்கை நடை பெறாதது குறித்தும், பேராசிரியர் நியமனம் குறித்தும் நிதி உதவி செய்தவர்கள் தரப்பு உட்பட யாரும் பல்கலைக்கழகத்தை நோக்கி முறையான கேள்விகளை முன் வைக்கவில்லை. இந்திய அரசு சிங்கப்பூரில் திருவள்ளுவர் மையத்தை அமைக்கவுள்ளதாக அறிவித் துள்ளது. இது போன்று கொலோன் பல்கலைக்கழகத்தில் ஒரு தமிழ் இருக்கை அமைத்திருந்தால் கூட அப்பல்கலைக்கழகத்தில் தமிழ்த் துறை மூடப்படாமல் தப்பியிருக் கும் என கூறப்படுகிறது. இப்பல்கலைக்கழக நூலகத் தில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பழம்பெரும் தமிழ் நூல்கள், தமிழ் இதழ்கள், ஓலைச் சுவடிகள் உள் ளன எனவும் இந்த முக்கியமான வர லாற்று ஆவணங்களை காப்பாற்ற வேண்டும். எனவும் இவற்றை யாரா வது பாதுகாத்து ஆய்வுகள் செய்ய முன்வந்தால் அவர்களிடம் அவற் றைக் கொடுக்க அப்பல்கலைக்கழ கம் முன்வரலாம் என கூறப்படுகிறது. | 2025-01-02 02:02:11.882545 |
ஜனவரி 1, 2025 | சிபிஎம் அந்தமான் - நிகோபர் மாநிலச் செயலாளராக டி.அய்யப்பன் தேர்வு! | மாநிலம் - தில்லி | நமது நிருபர் | https://theekkathir.in/News/states/delhi/port-blair-marxist-communist-party | தமிழ் | UTF-8 | போர்ட் பிளேர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அந்தமான் நிகோபர் மாநில 12-ஆவது மாநாடு 2024 டிசம்பர் 28, 29 ஆகிய தேதிகளில் போர்ட் பிளே ரில் மிகுந்த உற்சாகத்து டன் நடைபெற் றது. செந்தொண்டர் பேரணி மாநாட்டின் துவக்கமாக மாநி லச் செயலாளர் டி. அய்யப்பன் மற்றும் செயலக உறுப்பினர்கள் தலைமையில் மாபெரும் ஊர்வலம் நடைபெற்றது. இதில், நூற்றுக்க ணக்கான கட்சித் தோழர்கள் - ஆத ரவாளர்கள் கலந்து கொண்டனர். குறிப்பாக சிவப்புப் புடவை அணி ந்த பெண் தோழர்கள், சிவப்பு நிற டி-ஷர்ட் அணிந்த இளந்தோழர்கள் பெருந்திரளாக ஊர்வலத்தில் கலந்து கொண்டது போர்ட் பிளேர் மக்களின் கவனத்தை ஈர்த்தது.மாபெரும் பொதுக்கூட்டம்இந்த மக்கள் திரள் ஊர்வலம் திரங்கா பூங்காவில் மாலை 5 மணிக்கு பொதுக்கூட்டமாக மாறி யது. கட்சியின் அரசியல் தலை மைக்குழு உறுப்பினர் ஜி. ராம கிருஷ்ணன் துவக்கவுரையாற்றி னார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மட்டுமே கிளை அளவில் துவங்கி மத்தியக்குழு வரை ஜன நாயக முறையில் மாநாடுகளை நடத்தி புதிய குழுக்களைத் தேர்ந் தெடுக்கிறது என்று அவர் தெரி வித்தார். மோடி அரசின் கொள்கை கள் மேலும் மேலும் மக்களை வறு மையின் விளிம்புக்குத் தள்ளிக் கொண்டிருக்கும் அதேவேளை யில், அதானி, அம்பானி போன்ற கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு லட்சக்கணக்கான ரூபாய் வரிச் சலுகைகள் வழங்கப்படுவதை ஜி. ராமகிருஷ்ணன் சுட்டிக்காட்டினார். நாடாளுமன்ற முன்னாள் உறுப் பினரும், கட்சியின் மத்தியக் குழு உறுப்பினருமான டாக்டர் சுஜன் சக்கரவர்த்தி, ஆங்கிலேயர் களுக்கு எதிராகப் போராடிய நூற் றுக்கணக்கான புரட்சியாளர்கள் அந்தமான் நிகோபர் தீவுகளுக்கு நாடு கடத்தப்பட்டு, செல்லுலார் சிறையில் அடைக்கப்பட்டு, பலர் ஆங்கிலேயர்களால் கொல்லப் பட்டதை நினைவுகூர்ந்தார். இன்றைய மோடி அரசோ, நாட்டு மக்களை மறந்து விட்டு, கார்ப்ப ரேட் முதலாளிகளின் நலன்களுக் காக மட்டுமே செயல்படுவதாக குறிப்பிட்டார். மாநிலச் செயலாளர் தோழர் டி.அய்யப்பனும் சிறப் பான உரையை வழங்கினார். பிரதிநிதிகள் மாநாடு டிசம்பர் 29 அன்று, போர்ட் பிளே ரில் உள்ள அதுல் ஸ்மிருதி சமிதி மண்டபத்தில் (வங்காளி கிளப்) பிரதிநிதிகள் மாநாடு நடைபெற் றது. 6 பெண்கள் உட்பட 73 பிரதி நிதிகளும் பார்வையாளர்களும் கலந்து கொண்டனர். மூத்த தலை வர் பி.சந்திரசூடன் கட்சிக் கொடி யை ஏற்றினார். அந்தமான் தீவுகளில் கட்சியின் நோக்கங்களையும், அதனை செயல்படுத்துவதற்கான வழி முறைகளையும், கட்சியையும் வெகுஜன அமைப்புகளையும் வலுப்படுத்துவதற்கான நடவடிக் கைகளை உள்ளடக்கிய “அடுத்த மூன்று ஆண்டுகளுக்கான பணி கள்” என்ற ஆவணத்தை மாநிலச் செயலாளர் தோழர் டி. அய்யப்பன் சமர்ப்பித்தார். இந்த ஆவணம் மாநாட்டில் ஏற்றுக்கொள்ளப் பட்டது.ஜி. ராமகிருஷ்ணன் சிறப்புரைபிரதிநிதிகள் மாநாட்டில் உரை யாற்றிய அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன், அந்தமான் தீவுகளில் கட்சியின் செயல்பாடு குறித்து திருப்தி தெரி வித்தார். கடந்த மூன்று ஆண்டு களில் கட்சி நடத்திய போராட்டங் கள், தீவு மக்களிடையே நல்ல தாக் கத்தை ஏற்படுத்தியிருப்பதாக கூறி னார். 2022 ஏப்ரலில் கேரள மாநிலம் கண்ணூரில் நடைபெற்ற அகில இந்திய 23-ஆவது மாநாடு வகுத்த ளித்த கட்சியின் சுயபலத்தை அதி கரிக்கும் பணியின் ஒருபகுதியாக இது அமைந்திருப்பதாக கூறிய ஜி. ராமகிருஷ்ணன், யூனியன் பிர தேசத்தில் கட்சியின் தளத்தை விரிவுபடுத்த தொடர்ந்து கடினமாக உழைக்குமாறு கட்சித் தலைவர் களையும் தொண்டர்களையும் கேட்டுக்கொண்டார். தீவுகளில் அனைத்து மட்டங்களிலும் கட்சிக் குழுக்களை வலுப்படுத்த வேண்டி யதன் அவசியத்தை அவர் வலியு றுத்தினார். புதிய மாநிலக்குழு தேர்வு இம்மாநாட்டில் 19 பேர் கொண்ட மாநில அமைப்புக்குழு தேர்ந்தெ டுக்கப்பட்டது. டி. அய்யப்பனை மீண்டும் செயலாளராகத் தேர்ந்தெ டுக்கப்பட்டார். இந்த மாநாடு, அந்தமான் நிகோ பர் தீவுகளில் கட்சியின் வளர்ச்சி யையும், ஜனநாயக செயல்பாட்டை யும் எடுத்துக்காட்டுவதாக அமைந் தது. | 2025-01-02 02:02:11.883173 |
ஜனவரி 1, 2025 | தூய்மைக்காவலர்களை கசக்கி பிழியும் மகாராஷ்டிரா அரசு | மாநிலம் - தில்லி | நமது நிருபர் | https://theekkathir.in/News/states/delhi/maharashtra-govt-is-squeezing-the-cleaners | தமிழ் | UTF-8 | மும்பை புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள சதாப்தி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கும் நோயாளி ஒருவருக்கு தூய்மைப் பணியாளர்கள் இசிஜி எடுக்கும் காணொலி ஒன்று வெளி யானது. மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு இசிஜி, எக்ஸ்ரே உள்ளிட்டவை எடுப்பதற்காக பிரத் யேக துறையில் படித்து பயிற்சி பெற்ற நபர்களே எடுக்க வேண்டும். ஆனால் மகா ராஷ்டிர மாநிலத்தை ஆளும் பாஜக கூட்டணி அரசு சுகாதாரத்துறையில் உள்ள காலிப்பணியிடங்களை குறைந்த அளவிற்கு கூட நிரப்பவில்லை. பாஜக ஆட்சியில் பல்வேறு அரசுத் துறைகளில் உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாமல் கைவிடப்பட்டுள்ளன. குறிப்பாக மாநில மற்றும் ஒன்றிய அரசுத் துறைகளில் உள்ள சேவைத் துறை களை பாஜக கைவிட்டுவிட்டது. இதனால் தான் மருத்துவர்கள் மற்றும் தொழில்நுட்ப உதவியாளர்கள் செய்யவேண்டிய பணிகளை சுகாதாரப் பணியாளர்கள் செய்ய வேண்டிய நிலை உருவாகியுள்ளது. அவர்கள் மருத்துவ மனைப் பணிகளில் வைத்து கசக்கிப் பிழியப்படுகின்றனர். இதற்கு அர சாங்கமே முழு பொறுப்பேற்கவேண்டும் என சமூக ஆர்வலர்கள் கண்டித்துள்ள னர். சதாப்தி மருத்துவமனையின் மூத்த மருத்துவர்களே மருத்துவத்துறையில் புதிதாக ஆட்சேர்ப்பு நடைபெறவில்லை என்று கூறுகின்றனர். இசிஜி உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள தொழில்நுட்ப உதவியாளர்களை பணியமர்த்துமாறு பலமுறை முறையிட்டு விட்டோம். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தொழில்நுட்பம் போதுமான அளவு முன்னேறியுள்ளது. எனவே, சிறிய பயிற்சி யுடன் யார் வேண்டுமானாலும் அதனை இயக்க முடியும். எங்களிடம் உள்ள மனித வளங்களைக் கொண்டு முடிந்த வரை யில் வேலை செய்கிறோம். அனைத்து பிரிவுகளிலும் 35 சதவீத பணியிடங்கள் காலியாக உள்ளன என கருத்து தெரி வித்துள்ளனர். | 2025-01-02 02:02:11.883786 |
ஜனவரி 1, 2025 | ராணுவ மேம்பாட்டிற்கான சீர்திருத்த ஆண்டு பாதுகாப்பு அமைச்சர் அறிவிப்பு | மாநிலம் - தில்லி | நமது நிருபர் | https://theekkathir.in/News/states/delhi/defense-minister's-announcement-of-reform-year-for-military-development | தமிழ் | UTF-8 | இந்திய ராணுவத்தை தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட போருக்குத் தயாராக உள்ள ராணுவமாக மற் றும் நோக்கத்துடன் 2025 ஐ சீர்திருத்த ஆண்டாக அறிவித்துள்ளது பாதுகாப்புத் துறை அமைச்சகம். இந்த அறிவிப்பை ஜனவரி 1 அன்று ஒன்றிய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அறி வித்துள்ளார். ஜனவரி 1 அன்று அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் பாதுகாப்பு அமைச் சகத்தின் அனைத்து செயலாளர்களும் பங்கேற்ற கூட்டம் நடைபெற்றது. இக் கூட்டத்தில் ராணுவத்தின் தொழில்நுட்ப மேம்பாட்டிற்கான பல்வேறு திட்டங்கள், சீர்திருத்தங்கள், வழிமுறைகள் உள்ளிட் டவை குறித்து ஆய்வு செய்ததாக கூறப் பட்டது. இக்கூட்டத்தின் முடிவில் 2025 வரு டத்தை பாதுகாப்பு அமைச்சகத்தில் ‘சீர் திருத்த ஆண்டாக’ கடைப்பிடிக்க ஒருமன தாக முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்திய ராணுவத்தின் பிரிவுகளாய் நவீனமயமாக்கும் பயணத்தில் இந்த சீர்திருத்தங்களுக்கான ஆண்டு ஒரு முக்கியமான படியாக இருக்கும் என்று ராஜ்நாத் சிங் குறிப்பிட்டுள்ளார். | 2025-01-02 02:02:11.884378 |
ஜனவரி 1, 2025 | தீக்கதிர் விரைவு செய்திகள் | மாநிலம் - தமிழ்நாடு | நமது நிருபர் | https://theekkathir.in/News/states/tamil-nadu/students-union-urges-school-education-minister-to-withdraw-his-opinion | தமிழ் | UTF-8 | எடப்பாடி பழனிசாமியின் கட்சி அதிகாரங்களை திரும்பப்பெறுக! தேர்தல் ஆணையத்திடம் ஓ.பன்னீர் செல்வம் மனுசென்னை,ஜன.1- அதிமுக கட்சியின் இரட்டை இலை சின்னத்தின் உரிமை தனக்கானது எடப்பாடி பழனிசாமியின் கட்சி அதிகாரங்களை திரும்பப்பெற வேண்டும் என்றும் ஓ.பன்னீர் செல்வம் தேர்தல் ஆணையத்திடம் பதில் மனு தாக்கல் செய்துள்ளார். அவர் தாக்கல் செய்த பதில் மனுவில், உரிமையியல் வழக்கின் தீர்ப்பு வரும் வரை எடப்பாடி பழனிசாமியின் கட்சி அதிகாரங்களை திரும்பப்பெற வேண்டும். அதிமுக முதன்மை உறுப்பினர்கள் மூலம் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்ந்தெடுத்ததே சட்டப்பூர்வமானது. எடப்பாடி தலைமையில் தற்போதுள்ள கட்சி நிர்வாகம் சட்டவிரோதமானது. சட்டவிரோதமாக செயல்படும் தலைமை இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்த அதிகாரமில்லை. அ.தி.மு.க. கட்சியின் இரட்டை இலை சின்னத்தின் உரிமை தனக்கானது. தன்னிடம் கட்சியையும் இரட்டை இலை சின்னத்தையும் ஒப்படைக்க வேண்டும். தற்போதைய அதிமுக கட்சி மற்றும் ஈபிஎஸ் இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும், அந்த அதிகாரத்தை தேர்தல் ஆணையம் திரும்பப்பெற வேண்டும். அதிமுக தொடர்பாக உரிமை வழக்குகள் தற்போது நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது, எனவே அதில் முடிவு வரும் வரை எடப்பாடி பழனிசாமி வசம் உள்ள கட்சி தொடர்பான அதிகாரங்கள், உரிமைகளை தேர்தல் ஆணையம் திரும்பப்பெற வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.நாளொன்றுக்கு 30 லட்சம் லிட்டர் ஆவின் பால் விற்பனை : அமைச்சர்சென்னை,ஜன.1- தமிழ்நாடு முழுவதும் நாளொன்றுக்கு 30 லட்சம் லிட்டர் ஆவின் பால் விற்பனை செய்யப்படுவதாக தமிழக பால்வளத்துறை அமைச்சர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அமைச்சர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு முழுவதும் கடந்த 2019-2020 ஆம் ஆண்டில் சுமார் 23 லட்சம் லிட்டராக இருந்த ஆவின் பால் விற்பனையை, அரசு எடுத்த பல்வேறு நடவடிக்கையின் காரணமாக 2024-2025-இல் சுமார் 7 லட்சம் லிட்டருக்கு மேல் அதிகரித்து தற்போது நாளொன்றுக்கு 30 லட்சம் லிட்டர் விற்பனை செய்து வருகிறது. பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கையின்படி நலச்சங்கத்தின் கோரிக்கையின் படியும், மாவட்ட ஒன்றியத்தில் இருந்து பால் உற்பத்தியாளர்களின் வங்கி கணக்கிற்கு நேரடியாக அரசு அறிவித்த லிட்டருக்கு ரூ.3 ஊக்கத்தொகை வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக நாமக்கல் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தின் மூலம் இந்த பணி ஜனவரி 2025 முதல் வாரத்தில் செயல்படுத்தப்பட உள்ளது.பள்ளிக்கல்வித்துறை அமைச்சரின் கருத்தை திரும்பப்பெற மாணவர் சங்கம் வலியுறுத்தல்சென்னை,ஜன.1- தமிழ்நாட்டில் 500 அரசுப் பள்ளி களை தனியார் பள்ளிகள் தத்தெடுக்கும் தீர்மானத்திற்கு வர வேற்று நன்றி தெரிவித்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தனது கருத்தை திரும்பப்பெற வேண்டும் என்று இந்திய மாணவர் சங்கத்தின் தமிழ்நாடு மாநிலக்குழு வலியுறுத்தி யுள்ளது. இதுகுறித்து சங்கத்தின் மாநிலத் தலைவர் தௌ.சம்சீர் அக மது, மாநிலச் செயலாளர் கோ.அர விந்தசாமி ஆகியோர் வெளி யிட்டுள்ள அறிக்கை வருமாறு: தமிழ்நாட்டில் பல தனியார் பள்ளி சங்கம் இயங்கி வந்த நிலை யில் அது அனைத்தையும் ஒருங்கி ணைத்து தமிழ்நாடு தனியார் பள்ளி கள் சங்கம் என உருவாக்கப்பட்டு மாநாடு நடைபெற்றது, இந்த மாநாட்டில் தமிழ்நாட்டின் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பங்கேற்றார். இந்த மாநாட்டில் தமிழ்நாட்டில் 500 அரசுப் பள்ளிகளை தத்தெடுத்து அதற்குத் தேவையான கட்டமைப்பு கள் அருகில் உள்ள தனியார் பள்ளி களின் பங்களிப்புடன் நிறைவேற்றித் தரப்படும் என தனியார் பள்ளிகள் சங்கம் நிறைவேற்றிய தீர்மா னத்துக்கு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் வரவேற்று பாராட்டுத் தெரிவித்தார். தனியார் பள்ளிகள் முழுவதும் பணம் வசூலிக்கும் நோக்கில் செயல் படும் திட்டத்தை முதன்மையாக வைத்து செயல்படுகின்றன.மேலும் தனியார் பள்ளிகளின் உள்கட்ட மைப்பு என்ன சிறந்ததா? அடிப்படை யான விளையாட்டு மைதானமே இன்றி தான் 90 சதவீத தனியார் பள்ளிகள் இயங்குகின்றன. அரசு பள்ளிகளை தனியார் பள்ளிகளோடு இணைக்கும் முயற்சி யை அரசு கைவிட வேண்டும். அரசு பள்ளிகளை மேம்படுத்த அரசே முன்னின்று அதற்கான கூடுதல் நிதியை ஒதுக்க வேண்டும். கல்வி யை தனியார்மயமாக்கும் தேசிய கல்விக் கொள்கைய மறைமுகமாக திணிப்பதை நிறுத்த வேண்டும். மாநில கல்வி கொள்கையை முழு மையாக பொது வெளியில் தமிழில் வெளியிட்டு நடைமுறைப்படுத்த வேண்டும். அடுத்த கல்வியாண்டில் (2025-2026) 500 அரசுப்பள்ளிகளை தத்தெ டுத்து அந்தப் பள்ளிகளுக்குத் தேவையான கட்டமைப்பு வசதி களை அருகில் உள்ள தனியார் பள்ளிகளின் பங்களிப்புடன் நிறை வேற்றித்தர நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தனியார் பள்ளிகள் சங்கம் நிறைவேற்றிய தீர்மானத்துக்கு நன்றி தெரிவித்து வரவேற்றுப் பேசியதை அமைச்சர் அன்பில் மகேஷ் தனது கருத்தை திரும்பப்பெற வேண்டும், கல்வி உரிமைச் சட்டத்தை பாதுகாத்திட வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது. | 2025-01-02 02:02:11.885004 |
ஜனவரி 1, 2025 | உரக்கப் பேசிய சப்தர் ஹஷ்மி! | மாநிலம் - தமிழ்நாடு | நமது நிருபர் | https://theekkathir.in/News/states/tamil-nadu/sabdar-hashmi-was-born-in-april-1954 | தமிழ் | UTF-8 | சப்தர் ஹஷ்மி 1954ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பிறந்தார். அவரது தந்தை இடதுசாரி சிந்தனைகள் கொண்டவர். சப்தர் ஹஷ்மி தில்லி தூய ஸ்டீபன் கல்லூரியில் ஆங்கில இலக்கியம் படித்து பட்டம் பெற்று முதுகலைக் கல்வியைத் தில்லிப் பல்கலைக் கழகத்தில் படித்தார். கல்லூரியில் படிக்கும்போதே இந்திய மாணவர் சங்கத்தில் முனைப்பாக ஈடுபட்டார். மாணவப் பருவத்தில் நாடகக் கலையின் மீது ஆர்வம் கொண்டார். கல்வியை முடித்ததும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்து முழு நேரம் கட்சிப் பிரச்சாரம் செய்தார். சப்தர் ஹஷ்மி தில்லி, ஸ்ரீநகர், கார்வால் போன்ற ஊர்களில் உள்ள கல்லூரிகளில் ஆசிரியர் பணி செய்தார். இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது அமல்படுத்தப்பட்ட நெருக்கடி நிலை காலத்தில் அரசுக்கு எதிராகப் பரப்புரை செய்ய நாடகத்தைப் பயன்படுத்திக் கொண்டார். நெருக்கடி காலம் முடிந்ததும் அரசுப் பணியிலிருந்து விலகி வீதி நாடகங்கள் அரங்கேற்றுவதில் ஈடுபட்டார். அந்தக் காலத்தில் நிலவிய மக்கள் பிரச்சனைகளை நாடகங்கள் மூலம் பேசிய சப்தர் ஹஷ்மி ஜன நாட்டிய மஞ்ச் என்னும் வீதி நாடகக் குழுவைத் தோற்றுவித்தார். குறுகிய காலத்தில் 24 நாடகங்களை 4000 முறை தொழிலாளர்கள் வாழும் பகுதிகளில் வீதி நாடகங்களாக அரங்கேற்றி மக்களின் பிரச்சனைகளை எடுத்துக்காட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். 1989 ஜனவரி முதல் நாளில் உத்தரப்பிரதேசம் சந்தாபூரில் ‘ஹல்லா போல்’ (உரக்கப் பேசு) என்ற பெயரில் வீதி நாடகத்தை நடத்தினார் சப்தர் ஹஷ்மி. அந்நாடகத்தை விரும்பாத குண்டர்கள் அங்கு நடித்துக் கொண்டு இருந்த கலைஞர்களைத் தாக்கினர். சப்தர் ஹஷ்மிக்குத் தலையில் பலத்த அடி விழுந்தது. படுகாயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் மறுநாள் இறந்து போனார். சப்தரின் படுகொலை இந்தியா முழுவதும் பெரிய அதிர்வையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது. சப்தர் ஹஷ்மியின் படுகொலையை நினைவு கூர்ந்து புகழ் பெற்ற ஓவியர் எம்.எப் உசேன் தம்முடைய ஓர் ஓவியத்தை சப்தருக்குக் காணிக்கை ஆக்கினார். சப்தர் ஹஷ்மி மறைந்த சில நாட்களிலேயே அவர் மனைவி மாலா ஸ்ரீ அதே ஜனநாட்டிய மன்ச் நாடகக் குழுவின் மூலம் மீண்டும் ‘ஹல்லாபோல்’ எனும் வீதிநாடகத்தை சப்தர் ஹஷ்மி படுகொலை செய்யப்பட்ட அதே இடத்தில் பல்லாயிரக் கணக்கான மக்கள் மத்தியில் நடத்திக் காட்டினார். நாடு முழுவதும் சப்தர் ஹஷ்மி பெயரில் வீதி நாடகக் குழுக்கள் மற்றும் கலைக்குழுக்கள் பல ஏற்படுத்தப்பட்டு மக்கள் பிரச்சனைகளை முன்னிறுத்தி இன்றளவும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. - பெரணமல்லூர் சேகரன் | 2025-01-02 02:02:11.885601 |
ஜனவரி 1, 2025 | பாஜக அமைச்சர் நிதேஷ் ரானேவுக்கு முதலமைச்சர் பினராயி விஜயன் கண்டனம்! | மாநிலம் - கேரளா | நமது நிருபர் | https://theekkathir.in/News/states/kerala/kerala-cm-condemns-bjp-minister-nitesh-rane | தமிழ் | UTF-8 | கேரளாவை “மினி பாகிஸ்தான்” என இழிவுபடுத்தும் வகையில் பேசிய மகாராஷ்டிர பாஜக அமைச்சர் நிதேஷ் ரானேவுக்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் மகாராஷ்டிர அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான நிதேஷ் ரானே பேசுகையில், “கேரளா ஒரு மினி பாகிஸ்தான் ஆகும். மக்களவைத் தேர்த லில் தீவிரவாதிகளின் வாக்குகளால்தான் ராகுல் காந்தியும், பிரி யங்காவும் அங்கு வெற்றி பெற்றனர்” என சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். நிதேஷின் பேச்சிற்கு நாடு முழுவதும் கண்டனங்கள் குவிந்து வருகின்றன. இதனையடுத்து அவர் அளித்த விளக்கமும் கேரளாவை மீண்டும் அவமதிப்பதாகவே உள்ளது. இந்த நிலையில், நிதேஷ் ரானேவுக்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து முதலமைச்சர் பினராயி விஜயன் தனது எக்ஸ் பதிவில் கூறியதாவது:
"மகாராஷ்டிர பாஜக அமைச்சர் நிதேஷ் ரானே, கேரளாவை “மினி பாகிஸ்தான்” என இழிவுபடுத்தும் வகையில் பேசியது வன்மையாக கண்டிக்கத்தக்கது. தீய நோக்கம் கொண்டது.
மதச்சார்பின்மை, மத ஒற்றுமையின் வலுவான தளமாக விளங்கும் கேரளாவுக்கு எதிராக இத்தகைய வாய்ச்சவடால்கள் சங் பரிவாரத்தின் கேடுகெட்ட பிரச்சாரத்தைப் பிரதிபலிக்கிறது. அனைத்து ஜனநாயக மதச்சார்பின்மை சக்திகளும் சங் பரிவாரத்தின் வெறுப்பு பிரச்சாரத்துக்கு எதிராக ஒன்றுபட வேண்டும் என வலியுறுத்துகிறோம்." இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். | 2025-01-02 02:02:11.886204 |
ஜனவரி 2, 2025 | சாவித்திரிபாய் பூலே ஒடுக்கப்பட்டோர்களின் வழிகாட்டி - சுடர் ஒளி, புதுச்சேரி | கட்டுரை | நமது நிருபர் | https://theekkathir.in/News/articles/world/savitribai-phule-is-the-guide-of-the-oppressed | தமிழ் | UTF-8 | நடுநிசியில், கும்மிருட்டில், போகும் பாதை தெரியாமல் தட்டுத் தடுமாறி நடப்பவருக்குத் தொலைதூரத்தில் சிறு ஒளி ஒன்று தோன்றியது. கல்வியின்மை, சாதிக் கொடுமை, பெண் அடிமை, கடன் சுமை, சமூகச் சீர்கேடுகள் என திரும்பும் பக்கம் எல்லாம் தென்பட்ட இருளை விரட்டிய ஒளி அது. இந்தியாவின் முதல் பெண் ஆசிரியராக கல்விப் பணியாற்றி, கணவரால் கைவிடப்பட்ட பெண்க ளுக்கும், விதவைத் தாய்மார்களுக்கும் தங்கும் விடுதி அமைத்து, தீண்டாமைக்கு எதிராக குரல் கொடுத்து, வட்டிக்கு வட்டி போடும் கந்துவட்டிக்காரர்களைச் சாடி, போய் கல்வி கல் என்று பெண் குழந்தைகளை கல்வியின் பக்கம் திருப்பி, சமூகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு வழிகாட்டியாக விளங்கியவர் சாவித்திரிபாய். 13 வயதான ஜோதிராவ் பூலே தான் பெற்ற கல்வியை தனது 9 வயது மனைவி சாவித்திரிபாய் பெற வேண்டும் என்று விரும்பினார். படிப்பித்தார்.முதல் பெண்கள் பள்ளிபூலே தம்பதியினர், பெண் குழந்தைகளுக்கு என்று 1848 ஆம் ஆண்டில், பிதேவாடா என்னும் இடத்தில் பெண்களுக்கான தனிப் பள்ளி துவங்கினர். ஊராரின் எதிர்ப்புகளைத் தாண்டி அப்பள்ளியின் ஆசிரியராக களம் இறங்கினார் சாவித்திரிபாய். சும்மா விடுமா சமூகம்! சாணம், சேறு, மலம் என நாற்றமெடுக்கும் அத்தனையும் வாரி சாவித்திரியின் மீது வீசினர். சேறால் அடி வாங்கிய பின், பள்ளிக்குச் சென்று குளித்துவிட்டு, உடைமாற்றி குழந்தைகளுக்கு பாடம் எடுத்தார். பள்ளியில் சாவித்திரியோடு சேர்ந்து பயணித்தவர் பாத்திமா ஷேக். இவர் இந்தியாவின் முதல் முஸ்லிம் பெண் ஆசிரியர் என்ற பெருமைக்கு உரியவர் ஆவார்.பெண்கள் அடிமைத்தனமும் பார்ப்பனிய ஆணாதிக்கமும்இந்தியாவில் பார்ப்பனிய பண்பாட்டிற்கும் பார்ப்ப னிய மதத்திற்கும் எதிராக முதன்முதலில் போர் தொ டுத்தவர்கள் பூலே தம்பதியினர். பெண்கள், சூத்திரர் கள், ஆதி சூத்திரர்கள், பழங்குடிகள், முஸ்லிம்கள் என அனைவரையும் ஒடுக்கப்பட்டோர் என்றே பேசினர். இந்தியாவில் தோன்றிய அனைத்து சமூக இயக்கங்களின் கண்ணோட்டங்களோடு ஒப்பிடுகை யில் ஆணாதிக்கத்தை சாதியோடு இணைத்துப் பார்த்த வர் இவர் ஒருவர் மட்டுமே என்று கூறுகின்றனர் பிரஜ் ரஞ்சன் மணி மற்றும் பமிலா சர்தார். (மறக்கப்பட்ட விடுதலைப் போராளி நூல் தொகுப்பு ஆசிரியர்கள்) 1852 ஆம் ஆண்டிலேயே ‘மகிளா சேவா மண்டல்’ என்ற பெண்கள் சங்கத்தையும் சாவித்திரிபாய் தொடங்கினார். பெண்களின் பிரச்சனைகளையும் அவர்களின் மீது செலுத்தப்பட்ட மனித உரிமை மீறல்களையும் பற்றி இச்சங்கம் பேசி விழிப்புணர்வு ஏற்படுத்தியது. பெண்கள் அப்போது இரட்டை அடக்குமுறைக்கு ஆளாகி இருந்தனர். ஒன்று பாலின அடக்குமுறை; மற்றொன்று பார்ப்பனிய ஆணாதிக்க அடக்குமுறை. இதை எளிதாக அடையாளம் கண்டவர் சாவித்திரிபாய். கணவனை இழந்த பெண்களின் தலையை மொட்டை போடும் வழக்கத்தை எதிர்த்து நாவீதர்க ளை ஒன்று திரட்டி 1860 இல் பெரும் பேரணி நடத்தி ‘இனி விதவைப் பெண்களுக்கு நாங்கள் மொட்டை போட மாட்டோம்’ என்று உறுதிமொழி எடுக்கச் செய் தார். திருமணம் ஆகாமல் கருவுற்ற பெண்கள், திருமண உறவை தாண்டி கருவுற்ற விதவைகள் போன்றோர் கௌரவமான வாழ்க்கை கிடைக்கப்பெறா மல் தற்கொலைக்கு முயலும் அவலத்தை தடுக்கும் விதமாக அவர்கள் கௌரவமாக குழந்தைகளை பெற் றெடுக்கத் ‘தாய் சேய் நலவிடுதி’ அமைத்து தந்தார். அவர்களை தற்கொலைகளில் இருந்து காப்பாற்றி னார். தனது சொந்த வீட்டையே கைவிடப்பட்டப் பெண் கள் மற்றும் குழந்தைகளின் புகலிடமாக மாற்றினார்.முன்னோடிக் கவிஞராக...நவீன மராத்தியில் முன்னோடி கவிஞராக சாவித்திரி பாய் திகழ்ந்தார். அவரது கவிதைகள் சாதி எதிர்ப்பு, பார்ப்பன எதிர்ப்பு, மனுதர்ம எதிர்ப்பு, கல்வியின் முக்கி யத்துவம், ஆங்கிலக் கல்வியின் மகத்துவம் ஆகிய வற்றை கருப்பொருளாகக் கொண்டிருந்தன. பார்ப்பனம் தான் அடிமைத்தனத்தின் வேர் என்று அவர் நம்பினார். எனவே தான் ‘பார்ப்பன வேதங்களை தூர வீசு’ என்று கவிதை முழக்கம் செய்தார். ‘மனு காட்டிய வழியில் தீமைகளும் இழிவுகளும் நிறைந்தி ருந்தன’, ‘நம்மை கல்வி கற்காமல் தடுத்தவர் மனு’ என்று மனுவின் விஷத்தன்மையை மக்களுக்கு எடுத்தி யம்பினார். ஒடுக்கப்பட்ட மக்களிடம் சுயமரியாதை, சுதந்திரம், சமத்துவம் குறித்து விழிப்புணர்ச்சி ஏற்படுத் தும் விதமாக அவரது கவிதைகள் அமைந்தன. 1854 ஆம் ஆண்டில் ‘காவிய பூலே’ என்ற தலைப்பில் வெளி யிடப்பட்ட இவரது கவிதை தொகுப்பே அனேகமாக பிரிட்டிஷ் இந்தியாவில் வெளியான முதல் இந்திய கவிஞரின் நூலாக இருக்கும்.சீர்திருத்தப் பணிகள்1873 ஆம் ஆண்டு ஜோதிபா ‘சத்திய சோதக் சமாஜம்’ எனும் அமைப்பை தோற்றுவித்தார். அதன் பெண்கள் பிரிவு தலைவராக சாவித்திரிபாய் விளங்கினார். பார்ப்ப னிய ஆதிக்கத்தில் இருந்து சூத்திரர்களையும், ஆதி சூத்திரர்களையும் விடுவிப்பதும்; மனித உரிமைகளை அவர்களுக்கு கற்றுத் தருவதும்; மத அடிப்படைவா தத்தில் இருந்து மக்களை விடுவிப்பதுமே இச்சங்கத் தின் நோக்கங்களாகும். சாதி மறுப்பு திருமணங்கள், காதல் திருமணங்கள், புரோகிதர்களை புறந்தள்ளு கின்ற திருமணங்களை சாவித்திரியும் அவரது கண வரும் முன் நின்று நடத்தி வைத்தனர். சமாஜத்தின் வேலைகள் புரோகிதர் மறுப்பு திரு மணங்களோடு நின்றுவிடவில்லை. 1877 கடுமையான பஞ்சம் நிலவியது. இப்பஞ்சத்தின்போது உண்ண உணவின்றி, குடிக்க நீர் இன்றி மக்கள் மடிந்தனர். இதையடுத்து சுமார் 52 உறைவிடப் பள்ளிகள் தொ டங்கப்பட்டன. இவ்விடங்களில் தாழ்த்தப்பட்ட மாண வர்கள் பெருமளவு சேர்க்கப்பட்டனர். 25 முதல் 30 மாணவர்களுக்காக சிறிய அளவில் ஆரம்பிக்கப்பட்ட விடுதி பின் தேவைக்கு ஏற்ப 52 இடங்களில் துவங்கப் பட்டது. இவ்விடத்தில் தங்கி இருந்த மாணவர்களை சாவித்திரிபாய் கனிவோடு பார்த்துக் கொண்டார். மேலும் பஞ்சத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ முகாம் அமைத்தார்கள். ஒவ்வொரு நாளும் சுமார் 2000 குழந்தைகளுக்கு உணவு அளிக்கும் மகத்தான சேவையை செய்தார் சாவித்திரிபாய்.கடனுக்கு எதிரான பிரச்சாரம்கர்ஸ் (கடன்) என்ற தன்னுடைய கட்டுரையில் பணத்தை கடன் வாங்கி பண்டிகை கொண்டாடுவதை யும், அதன் மூலமாக கடன் சுமையை அதிகரித்துக் கொள்வதையும் அவர் கண்டனம் செய்தார். மதுப்பழக் கம் குடிகாரர்களையும் அவர்களுடைய குடும்பங்களை யும் எப்படி அழிக்கின்றன என்பது குறித்தும் அவர் கட்டுரையை எழுதினார். பஞ்சத்தால் இன்னலுறும் மக்களின் நிலையை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட சில கந்துவட்டிக்காரர்கள் இப்பஞ்சத்தை பயன்படுத்தி பணம் பார்ப்பதோடு மட்டுமல்லாமல் நேர்மைக் கேடா கவும் நடந்து கொண்டனர். சமாஜத்தின் ஊழியர்க ளின் துணையோடு கந்துவட்டிக்காரர்களின் கொட் டத்தை அடக்கினார் சாவித்திரிபாய். அதோடு மட்டு மல்லாமல் பஞ்ச நிவாரண பணிகள் குறித்தும், எடுக்கப் பட வேண்டிய அவசரகால நடவடிக்கைகள் குறித்தும் மாவட்ட ஆட்சியரிடம் பேசினார் சாவித்திரிபாய். இவ்வாறாக சமாஜப் பணிகள் முற்றிலும் தாழ்த்தப் பட்டவர்களின் நலனுக்காகவும் சமத்துவத்தை நிறுவுவ தற்காகவும் நடந்து கொண்டிருந்தது. 15 நாட்களுக்கு ஒரு முறை சமாஜின் கூட்டம் நடைபெறும். கிருஷ்ணா ராவ் பாலேக்கர் என்பவரால் துவங்கப்பட்ட தீனபந்து சத்திய சோதக் சமாஜின் பணிகளை வெளிச்சம் போட்டு சமூகத்திற்கு காட்டியது. சாவித்திரிபாய் ஜோதிராவின் மறைவுக்கு பின் சத்திய சோதக் சமாஜத்தின் தலைமை பொறுப்பை தானே ஏற்றார். 1890களின் மத்தியில் பிளேக் நோயால் பாதிக்கப் பட்ட ஏழைக் குழந்தைகளுக்காக முகாம்களை ஏற்பாடு செய்தார். ஊருக்கு வெளியே ஒரு மருத்துவமனையை நிறுவி நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தன் வளர்ப்பு மகனான யஷ்வந்தைக் கொண்டு மருத்துவ உதவி வழங்கினார். அந்தத் தொற்று நோயின் போது தினந்தோறும் 2000 குழந்தைகளுக்கு அவர் உணவ ளித்தார். நோயால் பாதிக்கப்பட்ட ஒரு குழந்தைக்குப் பராமரிப்புப் பணிகள் செய்த போது சாவித்திரிபாயை யும் பிளேக் நோய் தாக்கியது. அதனால் 1897 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 10ஆம் நாள் அவர் மரணமடைந்தார்.என்றும் மறையாத புகழ்!‘கிரந்தி ஜோதி’ அதாவது ‘புரட்சி விளக்கு’ என்று புகழ்பெற்றார் சாவித்திரிபாய் பூலே. பூலே தம்பதி யினர் ஆற்றிய கல்விப் பணிகளுக்காக 1852 ஆம் ஆண்டு சாவித்திரி பாயும் ஜோதிராவும், பிரிட்டிஷ் அர சாங்கத்தால் கௌரவிக்கப்பட்டனர். இந்திய அரசு 1998 ஆம் ஆண்டு சாவித்திரிபாய் பூலேவின் தபால் தலையை வெளியிட்டது. 2014 ஆம் ஆண்டு புனே பல் கலைக்கழகம் சாவித்திரிபாய் பல்கலைக்கழகமாக பெயர் மாற்றப்பட்டது. தம் வாழ்நாள் முழுவதும் ஒடுக்கப்பட்டோர்களின் முன்னேற்றத்திற்காகவும் விடுதலைக்காகவும் தனது கணவரோடு தோளோடு தோள் நின்று பாரங்களை சுமந்தவர் சாவித்திரிபாய் பூலே. தன்னலமற்ற போராளி சாவித்திரிபாய் ஒடுக்கப்பட்டோரின் வழிகாட்டியாக இன்றும் மக்கள் மனதில் நிலைத்திருக்கிறார். | 2025-01-03 02:04:19.194803 |
ஜனவரி 2, 2025 | விளையாட்டு... | விளையாட்டு | நமது நிருபர் | https://theekkathir.in/News/games/cricket/khel-ratna-for-gukesh,-manu-bhakar,-arjuna-award-for-32-people | தமிழ் | UTF-8 | தொடரை சமன் செய்யுமா இந்தியா? இன்று கடைசி டெஸ்ட் போட்டி5 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்தி ரேலிய நாட்டிற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. பார்டர் - கவாஸ்கர் என்ற பெயரில் நடைபெற்று வரும் இந்த டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டத்தில் (பெர்த்) இந்திய அணியும், இரண்டாவது ஆட்டத்தில் (அடிலெய்டு) ஆஸ்தி ரேலிய அணியும் வெற்றி பெற்ற நிலை யில், மூன்றாவது டெஸ்ட் போட்டி (பிரிஸ்பேன்) டிராவில் நிறை வடைந்தது. தொடர்ந்து மெல்போர்ன் நகரில் நடைபெற்ற 4ஆவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 184 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்நிலையில், 5ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னி நகரில் இந்திய நேரப்படி வெள்ளிக்கிழமை அதிகாலை 5:00 மணிக்கு தொடங்கு கிறது. இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்று தொடரை 3-1 என்ற கணக்கில் கைப்பற் றும் முனைப்பில் ஆஸ்திரேலிய அணி களமிறங்குகிறது. அதே போல பதிலடி வெற்றியுடன் தொடரை 2-2 என்ற கணக்கில் சமன் செய்யும் முனைப்பில் இந்திய அணியும் களமிறங்குகிறது. இரு அணிகளும் வெற்றியின் மீது குறியாக களமிறங்குவதால் சிட்னி டெஸ்ட் போட்டி பரபரப்பாக நடை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரோகித் நீக்கம்? ; பும்ரா கேப்டன் சிட்னி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி சார்பில் இரு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஒன்று இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், அவ ருக்கு பதிலாக சப்மன் கில் சேர்க்கப் பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதே போல இந்திய அணியின் கேப்டனாக பும்ரா நியமிக்கப்பட்டுள்ளதாக செய்தி கள் வெளியாகியுள்ளன. எனினும் ஆடும் லெவன் தொடர்பாக வியாழக் கிழமை மாலை வரை உறுதியான தகவல் எதுவும் வெளியாகவில்லை.குகேஷ், மனு பாக்கருக்கு கேல் ரத்னா 32 பேருக்கு அர்ஜுனா விருதுஆண்டுதோறும் விளை யாட்டுத் துறையில் சிறந்து விளங்கும் வீரர், வீராங்கனைகளுக்கு ஒன்றிய அரசு கேல் ரத்னா விருது வழங்கி கவுரவிப்பது வழக்கம். அதன்படி நடப்பு ஆண்டிற்கான கேல் ரத்னா விருதின் முழுப்பட்டியலை ஒன்றிய விளையாட்டுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த குகேஷ், பாரீஸ் ஒலிம்பிக்கில் 2 வெண்கலம் வென்ற துப்பாக்கிச் சுடுதல் வீராங் கனை மனு பாக்கர், பாரா ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற தடகள வீரர் பிரவீன் குமார், இந்திய ஹாக்கி அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் உள்ளிட்ட 4 பேரும் கேல் ரத்னா விருது பெறும் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். அர்ஜுனா இதே போல 17 பாரா தடகள வீரர்- வீராங்கனைகள் உட்பட 32 வீரர்-வீராங் கனைகள் அர்ஜுனா விருது பெறு கின்றனர். துளசிமதி முருகேசன், நித்ய ஸ்ரீ, சுமதி சிவன் உட்பட தமிழ்நாட்டை சேர்ந்த 3 பாரா பேட்மிண்டன் வீராங் கனைகளுக்கு அர்ஜூனா விருது அறி விக்கப்பட்டுள்ளது. தில்லியில் ஜன வரி 17ஆம் தேதி நடைபெறும் விழாவில் வீரர், வீராங்கனைகளுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு விருதுகளை வழங்குகிறார்.எதிர்ப்பிற்கு பணிந்த மோடி அரசுகடந்த வாரமே கேல் ரத்னா விருது பட்டியல் வெளியானது. அதில் பிரவீன்குமார், ஹர்மன்பிரீத் சிங் பெயர் மட்டுமே இருந்தது. மனுபாக்கர் பெயர் இல்லை. ஒலிம்பிக்கில் 2 பதக்கம் வென்றும் அவர் பெயர் இல்லாதது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. விண்ணப்பிக்காததால் மனுபாக்கர் பெயரை சேர்க்கவில்லை என ஒன்றிய அரசு கூறியது. விண்ணப்பித்தும் விருது பட்டியலில் இருந்து புறக்கணித்ததாக மனுபாக்கரின் தந்தை கிஷான் பாக்கர் குற்றம் சாட்டினார். மேலும் ஒன்றிய அரசின் செயல்பாடு சரியில்லை ; உங்கள் குழந்தைகளை விளையாட்டிற்கு அனுப்ப வேண்டாம் என கிஷான் அறிக்கை வெளியிட்டார். மனு பாக்கருக்கு கேல் ரத்னா வழங்காமல் புறக்கணித்ததற்கு நாடு முழுவதும் கண்டனம் குவிந்தது. இத்தகைய சூழலில் கடும் எதிர்ப்பால் பின்வாங்கிய மோடி அரசு மனு பாக்கருக்கு கேல் ரத்னா விருது வழங்குவதாக அறிவித்துள்ளது. | 2025-01-03 02:04:21.227402 |
ஜனவரி 2, 2025 | தமிழ்நாட்டு வீராங்கனைகளுக்கு அர்ஜுனா விருது அறிவிப்பு! | விளையாட்டு | நமது நிருபர் | https://theekkathir.in/News/games/arjuna-award/arjuna-award-announcement-for-tamil-nadu-female-players | தமிழ் | UTF-8 | புதுதில்லி,ஜனவரி.02- தமிழ்நாட்டைச் சேர்ந்த பேட்மிட்டன் வீராங்கனைகள் துளசி மதி முருகேசன், நித்யஸ்ரீக்கு அர்ஜுனா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2024ஆம் ஆண்டு பாரா ஒலிம்பிக் போட்டியில் பேட்மிண்டன் பிரிவில் துளசி மதி முருகேசன் வெள்ளி பதக்கமும், நித்யஸ்ரீ சுமதி வெண்கலப்பதக்கமும் பெற்றுள்ளனர்.
இவர்கள் இருவர் உட்பட மொத்தம் 34 பேருக்கு ஆர்ஜுனா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. வருகின்ற 17ஆம் தேதி தில்லியில் நடைபெறும் விழாவில் வீரர், வீராங்கனைகளுக்குக் குடியரசுத் தலைவர் விருதுகளை வழங்குகிறார். | 2025-01-03 02:04:21.227972 |
ஜனவரி 2, 2025 | குகேஷ், மனுபாகருக்கு ‘கேல் ரத்னா’ விருது அறிவிப்பு! | விளையாட்டு | நமது நிருபர் | https://theekkathir.in/News/games/arjuna-award/manu-bhaker-gukesh-among-4-athletes-to-receive-khel-ratna-award | தமிழ் | UTF-8 | செஸ் வீரர் குகேஷ், ஹாக்கி வீரர் ஹர்மன்ப்ரீத் சிங், பாரா தடகள வீரர் ப்ரவீன் குமார், துப்பாக்கி சுடுதல் வீராங்கனை மனுபாகர் ஆகியோருக்கு ‘கேல் ரத்னா’ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்கும் வீரர், வீராங்கனைகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஒன்றிய அரசு கேல் ரத்னா விருது வழங்கி கவுரவிக்கிறது. அதன்படி, இந்த ஆண்டுக்கான ‘கேல் ரத்னா’ விருது 4 விளையாட்டு வீரர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவில் நடந்த செஸ் உலகக் கோப்பை போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்ற குகேஷ், பாரீஸ் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற இந்திய ஹாக்கி அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் சிங், பாரீஸ் பாரா-ஒலிம்பிக்கில் உயரம் தாண்டுதல் டி64 பிரிவில் தங்கம் வென்ற ப்ரவீன் குமார் மற்றும் பாரீஸ் ஒலிம்பிக்கில் இரட்டை வெண்கலம் வென்ற துப்பாக்கி சுடுதல் வீராங்கனை மனுபாகர் ஆகிய நான்கு பேருக்கு ‘கேல் ரத்னா’ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தவிர 17 பாரா தடகள வீரர்கள் உட்பட 32 வீரர்கள் அர்ஜுனா விருது பெறுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. | 2025-01-03 02:04:21.228566 |
ஜனவரி 2, 2025 | மன்னிக்க முடியாது | தலையங்கம் | நமது நிருபர் | https://theekkathir.in/News/headlines/bjp/some-people-have-a-sudden-epiphany-in-the-last-days-of-the-year | தமிழ் | UTF-8 | ஆண்டின் இறுதி நாட்களில் சிலருக்கு திடீர் ஞானோதயம் உருவாவது உண்டு. அதுபோல மணிப்பூர் மாநில முதல்வர் பைரேன் சிங் அந்த மாநிலத்தில் நிகழ்ந்து வரும் தொடர் வன்முறை க்கு மன்னிப்புக் கேட்பதாகக் கூறியுள்ளார்.மணிப்பூரில் கடந்த ஒன்றரை ஆண்டுகளு க்கு மேலாக வன்முறை நடந்து வருகிறது. இரட்டை இன்ஜின் ஆட்சி நடந்தால்தான் மாநில வளர்ச்சிக்கு ஏதுவாக இருக்கும் என பிரதமர் மோடி அவ்வப்போது தேர்தல் பிரச்சாரத் தின் போது கூறுவார். ஆனால் மத்தியிலும் மணிப் பூரிலும் நடந்து வரும் பாஜகவின் இரட்டை இன்ஜின் ஆட்சி வன்முறையை முடிவுக்கு கொண்டுவர எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்பதைவிட இவர்களுடைய அதிகார ஆதிக்க வெறியின் காரணமாகவே மணிப்பூரில் பற்றிய தீ விடாமல் மக்களை கொன்று குவித்துக் கொண்டி ருக்கிறது.உலக நாடுகளுக்கெல்லாம் உலா செல்லும் பிரதமர் நரேந்திர மோடி மணிப்பூர் மாநிலத்தில் காலடி கூட எடுத்து வைக்கவில்லை. ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஒருமுறை எட்டிப்பார்த்ததோடு தன்னுடைய கடமை முடிந்துவிட்டதாகக் கருதிவிட்டார்.மணிப்பூரில் கலவரத் தீயை பற்ற வைத்ததே பாஜகவின் பிளவுவாத அரசியல்தான். அனைத் தையுமே மதவாத கண்ணோட்டத்துடன் அணு கும் அந்தக் கட்சி திட்டமிட்டு இரு பிரிவு மக்களி டையே பகைத் தீயை பற்ற வைத்தது. எரியும் வரை லாபமென்று அமைதியை திரும்பச் செய்வதற்கு உருப்படியான முயற்சி எதுவும் எடுக்காமல் வேடிக்கை பார்த்தது.பொறுப்புணர்ச்சியோ, நாண உணர்ச்சியோ சற்றும் இல்லாத மணிப்பூர் முதல்வர் பைரேன் சிங் ஒருவரையொருவர் மன்னித்து கடந்த கால தவறுகளை மறந்து புதிய வாழ்க்கையை துவங்க வேண்டும் என இலவச ஆலோசனை வழங்கி யுள்ளார். இருபிரிவு மக்களிடையே அன்பும், சமா தானமும் நிலவ வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் ஓராயிரம் முறை மன்னிப்புக் கேட்டாலும் மன்னிக்கப்படக் கூடாதவர் மணிப்பூர் முதல்வர். அவர் தமது பதவியை ராஜினாமா செய்திருக்க வேண்டும். ஆனால் பதவிக்காக எதையும் செய்யும் பாஜக பரிவாரத்தை சேர்ந்தவரிடம் அத்தகைய தார் மீக உணர்வு எதையும் எதிர்பார்க்க முடியாது.மணிப்பூர் மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கை யை தொலைத்து இன்னலில் உழல்கின்றனர். வன்முறையால் பெரிதும் பாதிக்கப்படுபவர்கள் பெண்களும், குழந்தைகளும்தான். வாழ்க்கைக் காக போராடுவதைவிட உயிர்பிழைக்க ஓடி ஒளி வதே மணிப்பூர் மக்களின் அன்றாட அலுவலாகி விட்டது. புத்தாண்டு வாழ்த்து கூறுவது போல ஒவ்வொரு ஆண்டும் மன்னிப்புக் கேட்பதால் மட்டும் தனது கரங்களின் ரத்தக் கறையை பாஜக முதல்வரால் கழுவிக்கொள்ள முடியாது. மணிப்பூர் மக்கள் மட்டுமல்ல, இந்திய மக்கள் முழுமையும் உங்களை மன்னிக்க மாட்டார்கள். | 2025-01-03 02:04:21.322446 |
ஜனவரி 2, 2025 | வெளிநாட்டு நிறுவனங்கள் ஹாங்காங்கில் முதலீடு சீனா வரவேற்பு | உலகம் | நமது நிருபர் | https://theekkathir.in/News/world/india/china-welcomes-foreign-companies-to-invest-in-hong-kong | தமிழ் | UTF-8 | சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மாவ்நிங் ஜனவரி 2ஆம் நாள் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், 2024ஆம் ஆண்டு இறுதி வரை, ஹாங்காங்கிலுள்ள பெருநிலப்பகுதி மற்றும் வெளிநாட்டு நிறுவனங்க ளின் மொத்த எண்ணிக் கையும், புதிதாக நிறுவப் பட்ட ஹாங்காங் உள்ளூர் நிறுவனங்களின் எண் ணிக்கையும் புதிய சாதனையைப் பெற்றன. பல்வேறு நாடுகளின் நிறுவனங்கள் ஹாங்காங்கில் முதலீடு செய்து தொழில் புரிவதையும், ஹாங்காங் வளர்ச்சி மற்றும் “ஒரு நாட்டில் 2 அமைப்பு முறைகள்” என்ற கொள்கை விளைவிக்கும் நலன்களைக் கூட்டாகப் பகிர்ந்து கொள்வதையும் வரவேற்கிறோம் என்றார். 2024ஆம் ஆண்டு, ஒன்றிய அரசின் பெரும் ஆதரவுடன், ஹாங்காங் சிறப்பு நிர்வாக அரசு பயன் தரும் முறையில் முயற்சிகளை மேற்கொண்டு, பொருளாதார வளர்ச்சியை நாடி, வெளிநாட்டுப் பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்புகளை அதிகரித்து, ஹாங்காங்கின் நிதானமான வளர்ச்சியை வலுப்படுத்தி வருகிறது. ஆண்டு முழுவதிலும் ஹாங்காங்கில் பயணம் மேற்கொண்டவர்களின் எண்ணிக்கை 4 கோடியே 40 லட்சத்தை எட்டியது. இது 2023ஆம் ஆண்டில் இருந்ததை விட 30 விழுக்காடு அதிகமாகும் என்றும் அவர் தெரிவித்தார். | 2025-01-03 02:04:21.750373 |
ஜனவரி 2, 2025 | இந்தியாவில் பள்ளி மாணவர் சேர்க்கையில் சரிவு! | தேசியம் | நமது நிருபர் | https://theekkathir.in/News/india/new-delhi/decline-in-school-enrollment-in-india | தமிழ் | UTF-8 | புதுதில்லி,ஜனவரி.02- இந்தியாவில் கடந்த ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பள்ளி மாணவர்களின் சேர்க்கை விகிதம் 1.55 கோடி வரை குறைந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
2018-19 ஆண்டில் 26.03 கோடி மாணவர்கள் சேர்ந்த நிலையில், 2023-24 ஆண்டில் இது 24.80 கோடியாக குறைந்துள்ளது. பீகாரில் 35.65 லட்சம், உத்தரப் பிரதேசத்தில் 28.26 லட்சம், மகாராஷ்டிராவில் 18.55 லட்சம் மாணவர்கள் குறைந்துள்ளனர்.
2023-24 ஆண்டில் தமிழ்நாட்டில் 1 முதல் 8ம் வகுப்பு வரை மாணவர்கள் இடைநிற்றல் விகிதம் 0 மற்றும் 9-10 வகுப்புகளில் இடைநிற்றல் விகிதம் 7.68 ஆக உள்ளது என ஒன்றிய கல்வி அமைச்சகத்தின் ஆண்டு ஆய்வு அறிக்கையில் தகவல். | 2025-01-03 02:04:21.849704 |
ஜனவரி 2, 2025 | தீக்கதிர் முக்கிய செய்திகள் | மாநிலம் - தமிழ்நாடு | நமது நிருபர் | https://theekkathir.in/News/states/tamil-nadu/supreme-court-union-govt-to-expedite-statehood-to-jammu-and-kashmir | தமிழ் | UTF-8 | உச்சநீதிமன்றம் ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்தை விரைந்து வழங்க ஒன்றிய அரசுக்கு உத்தரவிட்டு ஓராண்டு ஆகிவிட்டது. இந்த ஒரு ஆண்டு போதுமானது. மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அவர்களின் விருப்பங்கள் நிறைவேற்றப்பட வேண்டும்.நான் மகாராஷ்டிராவில் இருந்து வெளியேறி தென் மாநிலங்களுக்கு செல்ல இருக்கிறேன். பாலிவுட்டை (இந்தி திரையுலகம்) சேர்ந்தவர்களால் நான் மிகவும் ஏமாற்றத்தையும் வெறுப்பையும் அடைந்துள்ளேன். அவர்களின் மனநிலை என்னை வெறுப்படையச் செய்துள்ளது.மோடியின் ஆட்சியில் பட்டியலினத்தவர்கள் அதிக எண்ணிக்கையில் வாக்காளர் பட்டியலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். அரசியல் சாசனத்தை பலவீனப்படுத்தும் முயற்சியில் பாஜக இறங்கியுள்ளது.தனது அமைச்சரவையின் சக பணியாளரை அமெரிக்காவுக்கு அனுப்பி, தனக்கான அழைப்பிதழை (அமெரிக்க ஜனாதிபதி பதவி ஏற்கும் விழா) கொண்டு வரவேண்டும்; இல்லையேல் வேலையை இழக்க நேரிடும் என மிரட்டியுள்ளார் மோடி. ஆனால் மோடியை தற்போது அழைக்கும் மனநிலையில் டொனால்டு டிரம்ப் இல்லை என்பதால் அவர் ஏமாற்றத்துடன் திரும்பி உள்ளார்.திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 2024ஆம் ஆண்டில் 2.55 கோடி பக்தர்கள் தரிசனம் செய்துள்ள னர். உண்டியலில் 1,365 கோடி ரூபாய் காணிக்கை யாக செலுத்தியுள்ளனர்.தெலுங்கானா மாநிலத்தில் டிசம்பர் மாதத்தில் 3,805 கோடி ரூபாய் அளவிற்கு மது விற்பனை நிகழ்ந்துள்ளது. குறிப்பாக டிசம்பர் 23 முதல் 31 வரை 1,700 கோடி ரூபாய்க்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு கூறியுள்ளது.ஜார்க்கண்ட் மாநிலம் ஹசாரிபாகில் குடும்பப் பிரச்சனை காரணமாக சுந்தர் கர்மாலி (27) என்ற இளைஞர் கிணற்றில் விழுந்து தற்கொலை க்கு முயன்றார். சுந்தர் மற்றும் அவரைக் காப்பாற்றச் சென்ற 4 பேரும் கிணற்றில் மூழ்கி உயிரிழந்தனர். | 2025-01-03 02:04:26.099167 |
ஜனவரி 2, 2025 | மக்களை பிரிக்கும் சாதியமைப்பே சனாதனதர்மம் எம்.வி.கோவிந்தன் தாக்கு | மாநிலம் - தில்லி | நமது நிருபர் | https://theekkathir.in/News/states/delhi/sanatanadharma-mv-govindan-attacks-casteism-which-divides-people | தமிழ் | UTF-8 | மனுஸ்மிருதியை அடிப்படையாகக் கொண்ட நால்வர்ண அமைப்பின் இந்துத்துவ பெயர்தான் சனா தனதர்மம் என்று மார் க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் எம்.வி. கோவிந்தன் தெரி வித்துள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மலப்புரம் மாவட்ட மாநாட்டின் ஒரு பகுதியாக தானூரில் செய்தியாளர்களிடம் அவர் மேலும் கூறிய தாவது: முதல்வர் பினராயி விஜயனின் சிவகிரி உரையை கேரளாவும் இந்தியா வும் ஏற்றுக்கொண்டுள்ளது. எதிர்க் கட்சித் தலைவர் வி.டி.சதீசன் இந்துத்துவ மயமாக்கலை மூடிமறைக்கப் பார்க்கி றார். எதிர்க்கட்சித் தலைவர் சொல்வது போல், சனாதனதர்மம் என்பது வேதம், உபநிடதங்கள், தத்வமசி ஆகியவற்றின் கலவை அல்ல. இதெல்லாம் வெறும் தூசு. சங்பரிவாரம் நால்வர்ண அமைப் பின் அடிப்படையிலான அரசியல மைப்பை விரும்புகிறது. இதற்காக அரசியல் சட்டத்தில் திருத்தம் செய்ய 430 தொகுதிகளையா வது வெல்ல வேண்டும் என்று பாஜக விரும்புகிறது. சனாதனதர்மம் என்ற பெயரில் இந்தியாவை மதவாத நாடாக ஆக்க வேண்டும் என்பது ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவின் முயற்சி. இதற்கு எதிராக நாடு தழுவிய அளவில் எதிர்ப்பு கிளம்ப வேண்டும். வகுப்புவாதம் தங்க ளுக்குள் நடத்தும் மோதல்களில் யாரும் வெற்றி பெறுவதும் இல்லை அல்லது தோற்பதும் இல்லை. இரு தரப்பும் வலு வடையவே செய்யும். இரண்டு வகுப்பு வாதமும் மக்களை பிரிக்க முயல்கின் றன. ஜமாத்-இ-இஸ்லாமி, எஸ்.டி.பி.ஐ-யை எதிர்க்காமல் சங் பரிவாரை எதிர்த்துப் போராடுவதும், சங் பரிவா ரை எதிர்க்காமல் சிறுபான்மை வகுப்பு வாதத்தை எதிர்ப்பதும் பலனளிக்காது. சூரல்மலை பேரழிவு (நிலச்சரிவு) மிகவும் கடுமையானது என்பதை ஒன்றிய அரசு வாய்மொழியாக ஏற்றுக்கொண்டா லும், உதவிகள் ஏதும் வழங்கவில்லை. கேரள அரசு அந்த மக்களின் முழு வாழ்க்கையையும் கைதூக்கிவிடத் தேவையான மறுவாழ்வு அளிக்க முயற்சிக்கிறது. இதற்காக அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள் அடங்கிய கண்காணிப்புக் குழு உள்ளது என்றார் எம்.வி.கோவிந்தன். | 2025-01-03 02:04:26.100297 |
ஜனவரி 2, 2025 | உ.பி.,யில் இந்துத்துவா குண்டர்கள் அட்டூழியம் | மாநிலம் - தில்லி | நமது நிருபர் | https://theekkathir.in/News/states/delhi/atrocity-by-hindutva-thugs-in-u.p | தமிழ் | UTF-8 | லக்னோ பாஜக ஆளும் உத்தரப்பிரதேச மாநிலம் மொராதாபாத் அருகே அஸ்லத்புரா வைச் சேர்ந்தவர் ஷாஹிதீன் குரேஷி (37). வேலைக்குச் சென்று வீடு திரும்பும் பொழுது 4 பேர் கொண்ட பஜ்ரங் தளம் அமைப்பைச் சேர்ந்த இந்துத்துவா குண்டர்கள் குரேஷியை வழிமறித்து விசாரித்துள்ளனர். குரேஷி முஸ்லிம் என்பது தெரிந்தவுடன்,”பசுவை கடத்தி விற்பனை செய்வது நீ தானா?” என கேள்வி எழுப்பி கற்கள் மற்றும் கூரிய ஆயுதங்களுடன் தாக்குதல் நடத்தி யுள்ளனர். இந்த தாக்குதலில் குரேஷி பலத்த காயம டைந்தார். தகவலறிந்த காவல்துறை குரேஷியை மருத்துவமனையில் அனுமதித்தது. ஆனால் அவர் ஏற்கெனவே உயிரிழந்ததாக மருத்துவர்கள் கூறினர். குரேஷியின் சகோதரர் ஷாஜாத்தின் புகாரில் காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசா ரித்து வருகின்றது. இந்துத்துவா குண்டர்களின் தாக்குதலில் உயிரிழந்த ஷாஹிதீன் குரேஷிக்கு மனைவி மற்றும் மூன்று குழந்தைகள் உள்ளன. குரேஷியை படுகொலை செய்த இந்துத்துவா குண்டர்கள் அஸ்லத்புராவைச் சேர்ந்தவர்கள் என் றாலும், இன்னும் ஒருவர் கூட கைது செய்யப்பட வில்லை. காவல்துறையினர் இந்துத்துவா குண் டர்களுக்கு ஆதரவாகச் செயல்படுவதாக மொரா தாபாத் முஸ்லிம் அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளனர். | 2025-01-03 02:04:26.100944 |
ஜனவரி 2, 2025 | கேரளம், பீகார் ஆளுநர்கள் பதவியேற்பு | மாநிலம் - தில்லி | நமது நிருபர் | https://theekkathir.in/News/states/delhi/governors-of-kerala-and-bihar-sworn-in | தமிழ் | UTF-8 | திருவனந்தபுரம் கேரளம் மற்றும் பீகார் மாநிலங்களுக்கு புதிதாக நியமிக்கப் பட்ட ஆளுநர்கள் வியாழக் கிழமை அன்று பதவியேற்றுக் கொண்டனர். கேரளம், மணிப்பூர், பீகார், மிசோரம், ஒடிசா உள்பட 5 மாநி லங்களின் ஆளுநர்களை மாற்றம் செய்து குடியரசுத் தலைவர் திரவு பதி முர்மு கடந்த டிச., 24ஆம் தேதி உத்தரவு பிறப்பித்தார். அதன்படி கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் பீகார் ஆளுநராக வும், பீகார் ஆளுநராக இருந்த ராஜேந்திர விஸ்வநாத் அர்லே கர் கேரள மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டனர். அதே போல அசாம் ஆளுநர் லஷ்மண் பிரசாத் ஆச்சாரியா மணிப்பூர் ஆளுநராக கூடுதல் பொறுப்பு வகித்து வந்த நிலை யில், மணிப்பூர் மாநில ஆளுந ராக அஜய் பல்லா நியமிக்கப் பட்டார். மிசோரம் ஆளுநராக இருந்த ஹரி பாபு கம்பம்பாடி, ஒடிசா மாநில ஆளுநராகவும், மிசோரம் ஆளுநராக முன்னாள் ராணுவ தலைமைத் தளபதி வி.கே.சிங்கும் நியமிக்கப் பட்டனர். கேரளம் இந்நிலையில், கேரள மாநில ஆளுநராக ராஜேந்திர விஸ்வ நாத் அர்லேகர் வியாழக்கிழமை காலை பதவியேற்றுக் கொண் டார். திருவனந்தபுரத்தில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடை பெற்ற விழாவில் கேரள உயர்நீதி மன்ற தலைமை நீதிபதி நிதின் மதுகர் ஜம்தார் அவருக்கு பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். கேரள முதல்வர் பினராயி விஜயன், மாநில அமைச்சர்கள் விழாவில் பங்கேற்றனர். பீகார் பீகார் மாநில ஆளுநராக ஆரிப் முகமது கான் ஆளுநர் மாளிகையில் வியாழக்கிழமை அன்று பதவியேற்றார். பாட்னா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கே.வினோத் சந்திரன், ஆரிப் கானுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். விழாவில் முதல்வர் நிதிஷ் குமார், எதிர்க் கட்சித் தலைவர் தேஜஸ்வி உள்ளிட்டோர் பங்கேற்றனர். | 2025-01-03 02:04:26.101569 |
ஜனவரி 2, 2025 | அமித் ஷாவுக்கு நெருக்கமான அஜய் பல்லா ஆளுநராக நியமனம் | மாநிலம் - தில்லி | நமது நிருபர் | https://theekkathir.in/News/states/delhi/conflict-likely-to-intensify-in-manipur | தமிழ் | UTF-8 | இம்பால் குக்கி - மெய்டெய் இனக் குழுவுக்கு இடையேயான மோதல் சம்பவங்கள் கார ணமாக வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூர் கடந்த 20 மாதங்களாக வன்முறை சம்பவங்க ளால் பற்றி எரிந்து வருகிறது. இந்த வன்முறைக்கு 260 பேர் பலியாகி யுள்ளனர். பல லட்சம் மக்கள் சொந்த மாநிலத்திலேயே அகதி களாக வாழ்ந்து உள்ளனர். குக்கி, நாகா, ஸோ உள்ளிட்ட பழங்குடி மக்களை மலைப் பகுதி யில் இருந்து துரத்த, அவர்கள் மீது பாதுகாப்பு படையினர் தாக்கு தல் நடத்தும் பணி தீவிரமடைந்துள் ளது. இத்தகைய சூழலில் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள அஜய் பல்லா மூலம் மணிப்பூர் மாநி லத்தின் வன்முறை சம்பவங்கள் மிக மோசமான நிலைக்குச் செல் லும் என அரசியல் வல்லுநர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர். அமித் ஷா - அஜய் பல்லா அசாம் ஆளுநர் லஷ்மண் பிர சாத் ஆச்சாரியா மணிப்பூர் ஆளு நராகவும் (கூடுதல் பொறுப்பாக) பணியாற்றி வந்தார். இந்நிலையில் மணிப்பூர் மாநிலத்தின் புதிய ஆளுநராக அஜய் பல்லா நிய மிக்கப்படுவதாக குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு டிசம்பர் 24ஆம் தேதி அறிவித்தார். 1984 ஐஏஎஸ் பேட்ச் அதிகாரி யான அஜய் பல்லா 2019 முதல் 2024ஆம் ஆண்டு வரை ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் துறை செயலாளராக பணியாற்றி வந்தார். அதாவது இந்திய நாட்டின் சட்டம்-ஒழுங்கு உள்ளிட்ட முக்கிய பொறுப்புக ளை அமித் ஷாவின் உத்தரவின் பேரில் அஜய் பல்லா செயல்படுத்தி வந்தவர். துறை சார்ந்த பணிகளை தாண்டி அமித் ஷாவிற்கு அஜய் பல்லா மிக நெருக்கமானவர் என்ற நிலையில், 2024ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அஜய் பல்லா தனது பணியில் இருந்து ஓய்வு பெற்றார். ஓய்வு பெற்ற 5 மாதங்களிலேயே மணிப்பூர் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார் அஜய் பல்லா. அமித் ஷாவிற்கு மிக நெருக்க மானவர் என்பதால் இனி மணிப்பூ ரில் வன்முறைச் சம்பவங்கள் மிக மோசமான அளவில் அதிகரிக்கும் என்றும், மலைப் பகுதியில் வாழும் குக்கி, நாகா, ஸோ உள் ளிட்ட பழங்குடி மக்கள் மீது பாதுகாப்புப் படையினர் கொடூரத் தாக்குதல் நடத்த வாய்ப் புள்ளது என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.பைரேன் சிங்கிற்கும் அஜய் பல்லாவிற்கும் மோதல் வெடிக்க வாய்ப்புமணிப்பூரில் உள்ள மலைப் பகுதிகள் வளமிக்கவை. நிலக்கரி சுரங்கத்திற்காக மலைப்பகுதியை அதானிக்கு தாரை வார்க்க மோடி அரசு குறியாக உள்ளது. ஆனால் மலைப்பகுதிகளில் பழங்குடி யின மக்கள் தவிர வேறு யாரும் நிலங்கள் வாங்க முடியாது என்ற பாரம்பரியம் உள்ளது. பழங்குடி மக்களை துரத்திவிட்டால் மலைப் பகுதி நிலத்தை அதானிக்கு கொடுத்து விடலாம் என கணக்குப் போட்டு மோடி மற்றும் மணிப்பூர் பாஜக அரசுகள் மணிப்பூரில் வன்முறைச் சம்பவங்களை தூண்டி வருகின்றன. மலைப்பகுதிகளில் பழங்குடி யின மக்களை விரட்டும் பணியை சரியாக மேற்கொள்ளாததால் மணிப்பூர் பாஜக முதல்வர் பைரேன் சிங்கை ஓரங்கட்டவே தனக்கு நெருக்கமான அஜய் பல்லாவை ஆளுநராக கள மிறக்கியுள்ளார் அமித் ஷா. பாது காப்புப் படையினருக்கு வியூக மான உத்தரவுகளை பிறப்பித்து மலைப்பகுதியில் பழங்குடி மக்கள் மீதான தாக்குதலை தீவிரப் படுத்தி, அவர்களை அங்கு இருந்து துரத்துவது தான் அஜய் பல்லா வின் வேலை. மிக முக்கியமான விஷயம் என்னவென்றால் அஜய் பல்லா பொறுப்பேற்றவுடன் முதல்வர் பைரேன் சிங்கின் அதி காரங்கள் குறைக்கப்படும் என செய்திகள் வெளியாகியுள்ளன. இதனால் பைரேன் சிங்கிற்கும் அஜய் பல்லாவிற்கும் மோதல் வெடிக்க வாய்ப்பு உள்ளது என வடகிழக்கு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.பழங்குடியின மக்களை தீவிரவாதிகளாக சித்தரிக்கும் “கோடி மீடியா”மணிப்பூரில் குக்கி - மெய்டெய் இனக்குழுவுக்கு இடையே மோதல் சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன. இதில் குக்கி மக்கள் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்கள். பாஜகவின் கைப்பாவை யான “கோடி மீடியா” ஊடகங்கள் டிசம்பர் மாத இறுதியில் இருந்து குக்கி பழங்குடியின மக்கள் எனக் கூறுவதை தவிர்த்து, மலைப்பகுதி தீவிரவாதி கள் என செய்தி வெளியிட்டு வருகின்றன. பழங்குடியின மக்களை தீவிரவா திகளாக சித்தரிக்கும் “கோடி மீடியாக்களின்” செயல்பாட்டிற்கு நாடு முழு வதும் கடும் கண்டனங்கள் குவிந்து வருகின்றன. | 2025-01-03 02:04:26.102186 |
ஜனவரி 2, 2025 | பீகாரில் இடதுசாரிக் கட்சிகள் போராட்டம் | மாநிலம் - தில்லி | நமது நிருபர் | https://theekkathir.in/News/states/delhi/left-parties-struggle-in-bihar | தமிழ் | UTF-8 | அண்ணல் அம்பேத்கரை அவமதித்த ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் இழிவான கருத்துக்களை கண்டித்தும், அவரை பதவி நீக்கம் செய்யக் கோரியும் பீகார் மாநிலத்தில் இடதுசாரிக் கட்சிகள் போராட்டம் நடத்தின. 38 மாவட்டத் தலைமையகங்கள் உட்பட 57 க்கும் மேற்பட்ட இடங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்), பார்வர்டு பிளாக், புரட்சிகர சோசலிஸ்ட் உள்ளிட்ட இடதுசாரிக் கட்சிகளின் ஊழியர்கள், பொதுமக்கள் என 24,000க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் பங்கேற்றனர். | 2025-01-03 02:04:26.102793 |
ஜனவரி 2, 2025 | 2026-க்கு பிறகு மோடி அரசு நீடிக்காது சஞ்சய் ராவத் | மாநிலம் - தில்லி | நமது நிருபர் | https://theekkathir.in/News/states/delhi/modi-government-won't-last-after-2026 | தமிழ் | UTF-8 | 2026ஆம் ஆண்டுக்குப் பிறகு மோடி அரசு நீடிக்க வாய்ப் பில்லை என சிவசேனா (உத்தவ்) கட்சி கூறி யுள்ளது. இதுதொ டர்பாக அக்கட்சி யின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் கூறு கையில், “ஒன்றிய அரசு 2026ஆம் ஆண்டுக்குப் பிறகு நீடிக்குமா என்ற சந் தேகம் உள்ளது. தனது ஆட்சிக் காலத்தை மோடி ஒருபோதும் நிறைவு செய்யமாட்டார். மத்தியில் ஆட்சி கலைந்தால், அது மகாராஷ்டிர அரசியலிலும் பாதிப்பை ஏற்படுத்தும். பீட் மாவட்டத்தில் நடைபெற்ற கொலை சம்பவத்தில் (சந் தோஷ்) மாநில அமைச்சருக்கு தொடர் புண்டு. சிறப்பு புலனாய்வு விசாரணை க்கு குழு அமைக்கப்பட வேண்டும். முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் இந்த விவகாரத்துக்கு பொறுப்பேற்க வேண்டும்” என அவர் கூறினார். | 2025-01-03 02:04:26.103408 |
ஜனவரி 2, 2025 | கெஜ்ரிவாலுக்கு ஆர்எஸ்எஸ் அமைப்புடன் தொடர்பு காங்கிரஸ் விமர்சனம் | மாநிலம் - தில்லி | நமது நிருபர் | https://theekkathir.in/News/states/delhi/congress-criticizes-kejriwal's-connection-with-rss-organization | தமிழ் | UTF-8 | ஆம்ஆத்மி கட்சியின் ஒருங்கிணை ப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்துக்கு கடிதம் எழுதியுள்ளார். அக் கடிதத்தில் பாஜக செய்யும் தவறான செயல்களுக்கு ஆர் எஸ்எஸ் அமைப்பும் உடந்தையாக இருக் கிறதா? என கேள்வி எழுப்பி உள்ளார். இந்நிலையில், கெஜ்ரிவாலுக்கு ஆர்எஸ்எஸ் அமைப்புடன் தொடர்பு உள்ளது என காங்கிரஸ் மூத்த தலை வர் சந்தீப் தீட்சித் குற்றம் சாட்டி யுள்ளார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில், காங்கிரஸ் ஆர்எஸ்எஸ் தலைவருக்கு கடிதம் எழுதுவது கெஜ்ரி வாலுக்கும் சங்பரிவாருக்கும் உள்ள தொடர்பைக் காட்டுகிறது. இப்போது மட்டுமல்ல கெஜ்ரிவாலுக்கு ஆர்எஸ்எஸ் அமைப்புடன் தொடர்பு, நாங்கள் காலங் காலமாக கூறி வருகிறோம். அதனால் தான் கெஜ்ரிவாலை “சங்கி” என்று அழைக்கிறோம். எந்தவொரு காங்கிரஸ் தலைவரும் ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தை எதிர்க்கும் எந்த அரசியல்வாதியும் இதுபோன்ற கடிதம் எழுத மாட்டார்கள். கெஜ்ரி வாலுக்கு பாஜகவுடன் பிரச்சனைகள் இருந்தால் அவர் நேரடியாக பாஜக விடம் பேச வேண்டும். ஆனால் ஆர்எஸ் எஸ் அமைப்புடன் பேசுவது தவறானது. ஆர்எஸ்எஸ்-க்கு கெஜ்ரிவால் கடிதம் எழுதியது, அவர் அவர்களை கூட்டாளி களாக பார்க்கிறார் என்பதைக் குறிக்கி றது. ஊழலுக்கு எதிரான இயக்கத்தின் போது, ஆர்எஸ்எஸ் அவருக்கு ஆதர வளித்தது. அவரது உண்மையான விசு வாசம் தெளிவாக உள்ளது” என அவர் கூறினார். | 2025-01-03 02:04:26.104057 |
End of preview. Expand
in Dataset Viewer.
theekkathir-text-dataset <-> தீக்கதிர் தரவுத்தொகுப்பு
Click above button to view GitHub Repository
இலக்கு:
இந்த திட்டத்தின் இலக்கு தீக்கதிர் இதழின் செய்தி கட்டுரைகளை தரவுத்தொகுப்பாக மாற்றுவதாகும், இது இயற்கை மொழி பதிவு (NLP) மற்றும் LLM ஆராய்ச்சி நோக்கங்களுக்கு பயன்படுத்தப்படலாம்.
Goal:
The goal of the project is to convert news articles from theekkathir magazine into dataset, which can be used for Natural Language Processing (NLP) and LLM research purposes
Columns in .parquet
- வெளியிட்ட தேதி (Released Date)
- தலைப்பு (Title)
- செய்தி வகை (Categories)
- எழுத்தாளர் (Author)
- மொழி (Language)
- குறிமுறைத் தரநிலை (Character Encoding)
- உள்ளடக்கம் (Content)
- சேகரிக்கப்பட்ட தேதி (Scraped Date)
You can also get texts apart from parquet files.
How to Contribute
If you want to contribute to this project, Contact me via LinkedIn
- If possible, write CONTRIBUTING.md and make Pull Request here.
- Able to Read and Write Tamil.
- Follow Medium, For detailed documentation and I will update on any contribution.
- Raise issues and PR, if possible.
எவ்வாறு பங்களிக்கலாம்
இந்த திட்டத்திற்கு பங்களிக்க விரும்பினால், LinkedIn மூலம் என்னை தொடர்பு கொள்ளவும்.
- தமிழ் மொழியை படிக்க, எழுத தெரிய வேண்டும்.
- சாத்தியமானால், CONTRIBUTING.md எழுதி இங்கு Pull Request செய்யவும்.
- விரிவான ஆவணங்களுக்காக Medium பின்தொடரவும். நான் எந்தவொரு பங்களிப்பையும் புதுப்பிக்கிறேன்.
- சாத்தியமானால், பிரச்சினைகளையும் PR (Pull Request) யையும் உயர்த்தவும்.
- Downloads last month
- 95