text
stringlengths
377
161k
வணக்கம் நண்பர்களே, சில மாதங்களுக்கு முன்பு தம்பியின் காதலியை செக்ஸ் செய்த சம்பவத்தைப் பற்றி முழுமையாகப் பகிர்ந்து கொள்கிறேன். இதைப் படித்து விட்டு நீங்களும் சுய இன்பம் அல்லது செக்ஸ் செய்து மகிழ்ச்சியாக இருங்கள் ! படித்து முடித்த பின்பு கீழே உங்களின் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன். வாருங்கள் கதைக்குப் போகலாம் ! என் பெயர் சிவா, வயது 28. விழுப்புரத்தில் சொந்தமாகத் தொழில் செய்து வருகிறேன். என் குடும்பத்தில் மொத்தம் நான்கு பேர். தம்பி மட்டும் கோயம்புத்தூரில் ஒரு பெரிய கல்லூரியில் படித்து வருகிறான். மற்ற குடும்பத்தினர்கள் தொழிலைப் பார்த்துக் கொண்டு ஒன்றாக இருந்து வந்தோம். எனக்கு 28 ஆகியும் இன்றும் திருமணம் முடியாமல் இருக்கிறது. நான் பார்ப்பதற்கு மாநிறத்தில் 5.2 அடி உயரத்தில் ஒரு அளவுக்கு அழகாக இருப்பேன். மற்ற ஆண்களை விட அழகில் சற்று குறைவாக இருப்பேன். ஆகையால் என்னைப் பார்க்கும் பெண்களுக்குப் பிடிக்காமலிருந்தது, அதன்காரணமாக திருமணம் நடைபெறுவதற்குத் தாமதம் ஆகிக்கொண்டு சென்றது. மனதுக்குக் கஷ்டமாக இருந்தாலும் பொறுத்துக்கொண்டு நாட்களைக் கடத்தி சென்றேன். சுன்னியில் அரிப்பு எடுத்துக்கொள்ளும் நேரம் மட்டும் தனிமையில் ஆபாசப் படம் பார்த்துக் கையடிக்கச் சென்று விடுவேன். சிறுவயதில் பலமுறை சுய இன்பம் செய்ததால் சுன்னியின் வளர்ச்சி சற்று அதிகமாக இருந்தது. 8 இன்ச் நீண்டதாகவும், 3 இன்ச் தடிமலாகவும் பார்ப்பதற்கு மலைப்பாம்பு போன்று பெரியதாக ஆடிக்கொண்டு இருக்கும். நான் தினமும் பல்வேறு கல்லூரி பெண்களை சைட் அடிப்பேன் ஒரு பெண்ணும் திரும்பிப் பார்க்க மாட்டார்கள். ஆகையால் மிகவும் மன உளைச்சலுடன் இருந்தேன். தினமும் சோர்வின்றி அயராமல் உழைப்பதால் இயற்கையாகவே கட்டுமஸ்தான உடம்பு அமைந்தது. ஒரு நாள் தம்பி கோயம்புத்தூரில் இருந்து போன் செய்து “கல்லூரியில் விழா நடக்கிறது. வீட்டிலிருந்து பெற்றோர்கள் வர வேண்டும் ” என்று கூறினான். “பெற்றோர்களுக்கு வேலை இருப்பதால் நான் வருகிறேன் ” என்று கூறினேன். ஒரு வாரத்துக்குப் பிறகு தம்பியின் கல்லூரிக்குப் புறப்பட்டுச் சென்றேன். அன்று மாலை 6 மணிக்கு விழா ஆரம்பித்தது. நான் கீழே இருக்கையில் அமர்ந்து கொண்டு வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தேன். அப்பொழுது தான் அந்த அழகான தேவதையை முதல் முறையாகப் பார்த்தேன். அந்த பெண்ணின் கண்களும், உதடும் உச்சக்கட்ட கவர்ச்சியில் தெரிந்தது. பிங்க் நிறத்தில் உதட்டில் சாயம் பூசிக்கொண்டு அழகாக இருந்தாள். கண்களில் கண் மை வைத்துக் கொண்டு தனி விதமாகத் தெரிந்தால், சேலை அணிந்து கொண்டு நடந்து வந்தாள். அப்பொழுது கூந்தல் சூத்து வரை நீண்டதாக இருந்தது. பக்கவாட்டிலிருந்து பார்ப்பதால் இரண்டு முலைகளும் ப்ளௌஸ் உள்ளே கோபுரம் போன்று அருமையாகத் தெரிந்து கொண்டு இருந்தது. எழுந்து சென்று முலையைப் பிடித்துப் பிசைந்து விடலாம் என்று காம எண்ணம் தலைக்கு ஏறியது. மேலும் நடந்து வரும்போது சூத்தின் அழகு தனியாகத் தெரிந்தது. சூத்து மேலும் கீழுமாக ஆடிக்கொண்டு இருந்தது, குப்புறப் படுக்க வைத்து ஆபாசப் படத்தில் ஓப்பது போன்று அழகாக மேட்டர் அடிக்கலாம் என்று தோன்றியது. முன்னால் இருந்து பார்க்கும்போது இரண்டு தொடைகளும் வாழைத் தண்டு போன்று இருந்தது. இடுப்பு அழகாக வளைந்து நெளிந்து இருந்தது, தொப்புள் ஓட்டை தெள்ளத்தெளிவாகத் தெரிந்தது. அந்த பெண் மட்டும் கிடைத்தால் ஒரு நாள் இரவு முழுவதும் தூக்கி வைத்து ஒத்துக் கொண்டு இருப்பேன் அந்த அளவுக்குக் கவர்ச்சி மிகுந்த அழகாகத் தெரிந்தாள். அவள் பொறுமையாக நடந்து கொண்டு அருகில் வந்தால் அப்பொழுது கால் தடுமாறி கீழே விழப்பார்த்தால், நான் இடுப்பைப் பிடித்து கீழே விழாத மாதிரி பிடித்து விட்டேன். அவளின் மென்மையான இடுப்பு அழகாக இருந்தது. “என்னை ஒரு நிமிடம் பார்த்து விட்டு, ரொம்ப நன்றி !” என்று கூறிவிட்டுச் சென்று விட்டாள். அன்று நிகழ்ச்சி முடியும் வரை அந்த பெண்ணை நினைத்து மனக்கோட்டை கட்டிக்கொண்டு இருந்தேன். பின்பு இரவு 10 மணிக்கு கல்லூரியில் விழா முடிந்தது. என் தம்பி காதலியை அறிமுகம் செய்து வைப்பதாகத் தனியாக அழைத்துச் சென்றான். அப்பொழுது ஒரு மிகப் பெரிய அதிர்ச்சி காத்துக்கொண்டு இருந்தது. நான் விழாவில் கவர்ச்சியாகப் பார்த்த பெண்ணை காதலி என்று அறிமுகம் செய்து வைத்தான். அவளும் என்னைப் பார்த்தவுடன் சற்று அதிர்ச்சியாக இருந்தது. அவளின் பெரியார் பிரியதர்ஷினி, சொந்த ஊர் ஊட்டி என்று கூறினான். நானும் மரியாதையாக வணக்கம் சொல்லிவிட்டு பிறகு ஊருக்கு புறப்பட்டு வந்து விட்டேன். அன்று இரவு முழுவதும் மன வேதனையாக இருந்தது, இருப்பினும் தம்பிக்கு அந்த அழகான பெண் கிடைப்பதை நினைத்து சந்தோசப்பட்டுக் கொண்டேன். பின்பு அவளை நினைத்து ஒரு முறை கையடித்து விட்டேன். அதன்பின் நன்றாக உறங்கி விட்டேன். மறுநாள் முதல் வழக்கம்போல் மற்ற வேலைகளைப் பார்த்துக் கொண்டு இருந்தேன். இரண்டு மாதங்களுக்குப் பிறகு தொழில் விஷயமாக ஊட்டி செல்லவேண்டியதாக இருந்தது. அன்று வேலைகளை முடித்து விட்டு பேருந்து நிலையத்தில் இரவு பேருந்துக்கு காத்துக்கொண்டு இருந்தேன். அப்பொழுது ஒரு வண்டியில் வேகமாக ஒரு அருகில் வந்து “ஹாய் ! எப்படி இருக்கீங்க ? நான் தான் பிரியதர்ஷினி. உங்களின் தம்பியின் தோழி ” என்று கூறினாள். நீண்ட நாட்களுக்குப் பிறகு அவளைப் பார்த்தவுடன் மனதில் இனம்புரியாத சந்தோஷம். பின்பு சற்று நேரம் இருவரும் பேசிக்கொண்டு இருந்தோம். “இரவு 9 மணிக்கு மேல் பேருந்து வராது. இன்று இரவு என் வீட்டில் தங்கிவிட்டு, காலையில் சென்று விடுங்கள் !” என்று கூறினாள். நான் சற்று தயக்கத்துடன் நின்று கொண்டு இருந்தேன். என்னை வற்புறுத்தி வண்டியில் அமரவைத்து வீட்டுக்கு அழைத்துச் சென்றால், செல்லும் வழியில் பயங்கரமான குளிர் எடுத்துக் கொண்டது. அவளின் தோள்பட்டையை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டேன். அந்த குளிர்க்கு இதமாக இருந்தது, பின்பு 15 நிமிடத்துக்குப் பிறகு வீட்டுக்கு வந்து விட்டோம். உள்ளே சென்றோம், வீட்டில் யாருமே இல்லை. “என் பெற்றோர்கள் வெளியூருக்குச் சென்று இருக்கிறார்கள், நான் மட்டும் தனியாக இருக்கிறேன் ” என்று கூறினாள். ஒரு நிமிடம் மனம் வேறு மாதிரி சிந்திக்க ஆரம்பித்தது. அதன்பின் இருவரும் ஒன்றாகச் சாப்பிட்டு முடித்து விட்டு டிவி பார்த்துக் கொண்டு இருந்தோம். ஊட்டியில் அந்த நேரத்தில் அதிகப்படியான குளிர் நிலவிக் கொண்டு இருந்தது. சோபாவில் சற்று தள்ளி அமர்ந்து கொண்டு இருந்தோம், பின்பு பொறுமையாக இருவரும் குளிர் தாங்கமுடியாமல் அருகில் அமர்ந்து கொண்டோம். இருவரின் உடம்புகளும் சூடாக உரசிக் கொண்டு இருந்தது. பின்பு டிவியில் ஆபாசமாகப் பாடல்கள் ஓடிக்கொண்டு இருந்தது. அதைப் பார்த்துக் கொண்டு ஒருவருக்கு ஒருவர் நேருக்கு நேர் கண்களால் பார்த்து கொண்டோம். இருவரின் கண்களிலும் காம தீ பற்றி எரிந்து கொண்டு இருந்தது. தம்பியின் காதலி என்று மறந்து விட்டு நெருக்கமாகச் சென்றேன். அவளும் கண்களை முடி உதட்டை அருகில் எடுத்துக் கொண்டு வந்தால், கன்னத்தை கையால் பிடித்துக் கொண்டு உதட்டில் அழுத்தமாக முத்தம் கொடுத்தேன். அவளும் என்னை இறுக்கமாகக் கட்டிப்பிடித்துக் கொண்டாள். இருவரும் ஒரு நிமிடம் சோபாவில் கட்டிப்பிடித்துப் புரண்டு கொண்டு இருந்தோம். அவளின் உதட்டில் நாக்கை உள்ளே விட்டு ஆழமாக லிப்லாக் கிஸ் செய்தேன். இருவரின் எச்சுகளும் சூடாகப் பரிமாறிக் கொண்டு இருந்தது, விடாமல் சுமார் 15 நிமிடம் கிஸ் அடித்துக் கொண்டு இருந்தேன். அதன்பின் அவளின் டாப்ஸை கழட்டினேன். உள்ளே வெள்ளை நிற ப்ரா அணிந்து கொண்டு இருந்தால், இரண்டு வெள்ளை நிற பெருத்த முலைகளையும் கையால் பிடித்து அழுத்தமாகப் பிசைந்து கொண்டு இருந்தேன். அவளைக் காம்புகள் குளிர் மற்றும் மூடில் விறைத்துக் கூம்பு போன்று தூக்கிக்கொண்டு இருந்தது. அவளும் என் பேண்ட் மற்றும் ஜட்டியைக் கழட்டி சுன்னியைத் தடவிக் கொண்டு இருந்தாள். பின்பு ஒரு முலையை கையால் பிடித்துப் பிசைந்து கொண்டு மாற்று ஒரு முலையின் காம்பை வாயில் வைத்து அழுத்தமாக சப்பிக்கொண்டு இருந்தேன். அவளின் காம்புகள் பிங்க் நிறத்தில் கூர்மையாக இருந்தது. இரண்டு முலைகளின் நடுவில் முகத்தை வைத்து அழுத்தமாகப் பதித்துக் கொண்டேன். அதன்பின் நக்கிக்கொண்டு தொப்புள் ஓட்டை அருகில் வந்தேன். அதே நேரத்தில் அவளும் கீழே இறங்கி வந்து சுன்னியை நன்றாக மேலும் கீழுமாகக் குலுக்கி விட்டு பிங்க் நிற மொட்டு போன்று சுன்னியை மாற்றினாள். பின்பு சுன்னியை வாயில் வைத்துக் கொண்டு நீண்ட நேரமாக சப்பிக்கொண்டு இருந்தால், அவளின் தலையைப் பிடித்துக் கொண்டு வேகமாகத் தொண்டைக் குழி வரை இறக்கி அடித்துக் கொண்டு இருந்தேன். சுமார் 45 நிமிடத்துக்கு பிறகு சுன்னியிலிருந்து கஞ்சி பீறிக்கொண்டு ப்ரியாவின் உதட்டில் இறங்கியது. ஒரு சொட்டை கூட வெளியில் விடாமல் முழுமையாகக் குடித்து விட்டால், பின்னர் சற்று நேரம் ஓய்வு எடுத்தோம். அதன்பின் நான் எழுந்து சென்று இருகால்களையும் விரித்து வைத்து மூன்று விரல்களை உள்ளே நுழைத்து வேகமாக ஆட்டிக்கொண்டு இருந்தேன். விரலால் ஆட்டிக்கொண்டு இருந்த நேரத்தில் நாக்கினால் புண்டையின் பருப்பைச் சீண்டிக் கொண்டு சப்பினேன். அவளுக்குச் சுகம் தலைக்கு ஏறியது, சற்று நேரத்தில் புண்டையிலிருந்து கஞ்சி வழிந்து கொண்டு முகத்தில் வேகமாக அடித்தது. அதை நக்கி குடித்து விட்டு சுன்னியை எடுத்து புண்டையின் மேற்புறத்தில் வைத்து வேகமாகச் சூடு பறக்கத் தேய்த்தேன். பின்பு அவளின் இரண்டு முலைகளையும் உதவிக்குப் பிடித்துக் கொண்டு மேலே சாய்ந்து உதட்டில் முத்தம் கொடுத்துக் கொண்டு சுன்னியை எடுத்து புண்டையின் நுழைவு பகுதியில் வைத்து மென்மையாக விட்டு அழுத்தினேன். ஆரம்பத்தில் சற்று இறுக்கமாக இருந்தாலும் பின்பு சுலபமாகச் சென்று வந்தது. கொஞ்சக் கொஞ்சமாக வேகத்தை ஏற்றி அடித்தேன். அவள் சுகத்தில் கண்களை முடி, உதட்டைக் கடித்துக் கொண்டு சுகத்தில் துடித்துக் கொண்டு இருந்தாள். நான் அசுர வேகத்தில் புண்டையை ஒத்துக் கொண்டு இருந்தேன். சுகத்தில் ப்ரியாவின் உடம்பு நடுங்கிக் கொண்டு இருந்தது. “ஆஹா ஆஹா ஆஹா ஆஹா ஆஹா ஆஹா ஆஹா ஸ் ஸ் ஸ் ஸ் ஸ் ஸ் ஆஹா இன்னும் வேகமாக அடி டா ! ஆஹா ஆஹா ஓ யா ஓ யா ஓ யா எஸ் எஸ் எஸ் ! ஆஹா ஹ்ம்ம் ஹ்ம்ம் ம் ம் ம் ம் ம் ம் ம் சூப்பரா பண்ற டா ! ஆஹா ஹ்ம்ம் !” என்று சுகத்தில் கதறிக் கொண்டு இருந்தாள். சுமார் ஒரு மணி நேரம் புண்டையில் விட்டு அடித்துக் கொண்டு இருந்தேன். இறுதியில் சுன்னியை வெளியில் எடுத்து முழு கஞ்சியும் முகம் மற்றும் முலையில் அடித்து விட்டேன். பின்பு அன்று இரவு முழுவதும் பல்வேறு கோணத்தில் செக்ஸ் செய்து சந்தோஷமாக இருந்தோம். அதன்பின் என் தம்பிக்குத் தெரியாமல் காமலீலைகளைத் தொடர்ந்தோம்.
"லஞ்சம் கொடுப்பதோ பெறுவதோ சட்ட விரோதமானது. லஞ்சம் தொடர்பான புகார்களை நேரிலோ அல்லது தொலைபேசி வாயிலாகவோ தெரிவிக்க வேண்டிய முகவரி: இயக்குனர், விழிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை, எண். 293, M.K.N சாலை, ஆலந்தூர், சென்னை - 16 அல்லது உள்ளூர் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலர் இணையதளம்: www.dvac.tn.gov.in தொலைபேசி எண்கள்:(044) 22310989/22321090/22321085/22342142;தொலை நகலி: 044-22321005. இத்தளத்தில் தவறான தகவல்கள் இடம்பெற்றிருந்தால் அது குறித்த விவரங்கள் மற்றும் உங்களது கருத்துக்களை dtpwebportal@gmail.com என்ற EmailIDக்கு அனுப்பவும்) Terms and Conditions இவ்வலைத்தளம் சென்னை பேரூராட்சிகளின் இயக்குநரகம் மூலம் பராமரிக்கபட்டு வருகிறது. இத்தளத்தின் உள்ளடக்கமானது, துல்லியமாகவும், நம்பத்தகுந்த வகையிலும் இருப்பதற்கு, அனைத்து வகை முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இருப்பினும், இவற்றை, சட்டம் சார்ந்த அறிக்கையாக அமைக்கவோ அல்லது எந்த ஒரு சட்டம் சார்ந்த நோக்கங்களுக்கோ பயன்படுத்தக்கூடாது. இத்தளம் குறித்து, தெளிவின்மை அல்லது ஐயம் இருப்பின், பயனாளர்கள் தொடர்புள்ள துறை(கள்)/இதர மூலங்கள் வழியாக சரிபார்க்கவும் மற்றும் தேவையான ஆலோசனைகள் பெறவும் அறிவுறுத்தப்படுகிறது. எந்த சூழ்நிலையிலும் இத்தளத்திலுள்ள தரவுகளைப் பயன்படுத்துவதால் எழும் எந்தவொரு செலவு, அளவற்ற இழப்பு அல்லது சிதைவு, மறைமுகமான அல்லது அதன் காரணமாக ஏற்படும் இழப்பு அல்லது சிதைவுகள் ஆகியவற்றுக்கு இத்துறை கட்டுப்பட்டதல்ல. This website is maintained by Directorate of Town Panchayat. Though all efforts have been made to ensure the accuracy and currency of the content on this website, the same should not be construed as a statement of law or used for any legal purposes. In case of any ambiguity or doubts, users are advised to verify/check with the Department(s) and/or other source(s), and to obtain appropriate professional advice. Under no circumstances will this Department be liable for any expense, loss or damage including, without limitation, indirect or consequential loss or damage, or any expense, loss or damage whatsoever arising from use, or loss of use, of data, arising out of or in connection with the use of this website.
''விளம்பரத் துறையில சேர்ந்து 'காப்பி ரைட்டரா’ ஜொலிக்கணும்கிற கனவோட சென்னைக்கு பஸ் ஏறினேன். இங்க வந்து இஸ்பஹானி சென்டர்ல இருக்கிற 'லேண்ட்மார்க்’ கடையில் இசைத் தட்டுகள் பிரிவில் விற்பனையாளரா இருந்தேன். அப்புறம், ரிலையன்ஸ் மொபைல்பற்றி தெருத் தெருவா போஸ்டர் ஒட்டுற வேலை. அப்புறம் கோயமுத்தூர்ல டுபாக்கூர் கால் சென்டர்ல கொஞ்ச நாள்னு போனப்ப... நண்பர்கள் என்னையே எனக்கு அடையாளம் காட்டினாங்க. மீண்டும் சென்னைக்கு வந்து ஆர்.ஜே. அவதாரம். அப்புறம், விஜய் டி.வி. ஷோனு இதோ இப்ப சினிமாவுக்கு வந்தாச்சு. ஃப்ளாஷ்பேக்ல ஓடிப் போய்ப் பார்த்தா... புதுச்சேரியில பிள்ளைத்தோட்டம் ஏரியாவுல கிரிக்கெட் விளையாடிக்கிட்டு இருக்கான் இந்த ஆனந்த்...'' என்று ரகளையாகப் பேசத் தொடங்கினார் சென்னை 'ரேடியோ மிர்ச்சி’ ஆர்.ஜே. மா.கா.பா.ஆனந்த்! ''நிஜமாலுமே நான் ஸ்கூல்ல நல்லாப் படிச்சேன். அப்படிப் படிச்சதால, தாகூர் கலைக் கல்லூரியில் பி.காம். சீட் கிடைச்சது. ஒரு வகுப்புல 30 பசங்க இருந்தாங்கனா ரெண்டு, மூணு பொண்ணுங்கதான் இருப்பாங்க. அப்படின்னா, நாங்க எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்போம்னு கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க. அப்புறம் புதுவைப் பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ. சேர்ந்தேன். வகுப்பறை தவிர எல்லா இடமும் எங்களுக்கு ஃபேவரைட் ஸ்பாட்தான். அதிலும் அந்தக் காவேரி லேடீஸ் ஹாஸ்டல் வாசல்... அந்தப் பெயரை இப்பக் கேட்டாலும் நினைவு அறையில் ஏதோ ஒரு ஜன்னல் திறந்துக்குது. எங்க வீட்டுக்கு எதிரில் ஒரு பிள்ளையார் கோயில் இருக்கும். அதுக்கு எதிர்த்தாப்ல கைத்தடியோட பெரியார் நின்னுக்கிட்டு இருப்பார். இதுல என்ன விசேஷம்னா, கோயில் தொடர்பான விஷயங்களுக்கும் அரசியல் சார்ந்த விஷயங்களுக்கும் ஒரே இடத்தில்தான் மேடை போடுவாங்க. பக்கத்துல இருக்கிற ஆனந்த முத்துமாரியம்மன் கோயில்ல விசேஷம்னா, எல்லார் வீட்டுச் சமையலையும் மிக்ஸ் பண்ணி அதைப் பிரசாதமாத் தருவாங்க. இந்தக் கோயில்கள் ஒருபுறம்னா, இன்னொருபுறம் பாலாஜி தியேட்டர், ரத்னா தியேட்டர் போன்றவை எங்க செட் பசங்களுக்கு இன்னொரு கோயிலா இருந்துச்சு. பாலாஜி தியேட்டர்ல நிறையப் படங்கள் பார்த்து இருக்கேன். அப்புறம் ரத்னா தியேட்டர்ல, 'கில்மா’ படங்களாப் போட்டுத் தாக்குவாங்க. கூலிங் கிளாஸ், தொப்பி, வாயில கர்சீஃப் கட்டிக்கிட்டுனு ஒரு தீவிரவாதி கணக்கா அந்த அரையிருட்டுல படம் பார்க்குறதில் ஏக குஷி. பாலாஜி தியேட்டருக்குப் பின்னாடி பெரிய தோட்டம் ஒண்ணு இருக்கும். ஒவ்வொரு சனிக்கிழமையும் கிரிக்கெட் பேட்டோட, மண்வெட்டியையும் சேர்த்து எடுத்துக்கிட்டுப் போயிடுவோம். நாங்களே அந்த இடத்தைச் சுத்தம் பண்ணிட்டு, விளையாடுவோம். நாங்க விளையாண்ட ஏரியாவுல நிறைய சேட்டுக் குடும்பங்கள் இருந்துச்சு. அங்க யாராவது இறந்துட்டாங்கன்னா எங்க ஏரியா வழியாத்தான் எடுத்துக்கிட்டுப் போவாங்க. அப்ப சில்லறைக் காசுகளை எல்லாம் இறைச்சுக்கிட்டே போவாங்க. அந்த ஊர்வலத்துக்குப் பின்னாடியே போய் அந்தச் சில்லறைக் காசுகளை கலெக்ட் பண்ணுவோம். அந்தக் காசுகளை அப்படியே எங்க ஸ்கூல் பக்கத்துல இருந்த 'கேசினோ பேக்கரி’க்குக் கொண்டுபோவோம். அங்க 'பெப்ஸி, கோலா’னு கூல்டிரிங்க்ஸ் வெச்சிருப்பாங்க. அவ்ளோ அருமையா இருக்கும். யுனிவர்சிட்டியில படிக்கும்போது அந்த கூல்டிரிங்க்ஸ் மேல இருந்த விருப்பம் காணாமப் போனதுக்கு, அதைத் தயாரிக்கிற கம்பெனியின் ஓனரோட பொண்ணு என் கிளாஸ்மேட்ங்கிறது மட்டும் காரணம் கிடையாது. இந்த இரண்டையும் விட்டா, முத்தியால்பேட்டை மணிக்கூண்டு பக்கத்துல ஒரு புரோட்டாக் கடை இருந்துச்சு. மத்த இடங்கள்ல புரோட்டா மூணு ரூபாய்ன்னா, இங்க மட்டும் ஒரு ரூபாய்க்கு புரோட்டா போடுவாங்க. 10 ரூபா எடுத்துக்கிட்டுப் போயி, 10 புரோட்டாவை ஈக்குவல் பண்ணிட்டு வருவோம். பொதுவா, பாண்டிச்சேரின்னா, எல்லோருக்கும் ஞாபகத் துக்கு வர்றது சரக்குதான். ஆனா, அதையும் தாண்டி அங்க, 'ரோமன் ரோலந்த்’னு புகழ்பெற்ற லைப்ரரி ஒண்ணு இருக்கு. அங்கயும் போய்ப் பாருங்க சார்... வாழ்க்கை கொஞ்சம் மாறும்!''
கோவிட் தொற்று சமூகத்தில் பல மாற்றங்களை ஏற்படுத்திவருகிறது. சமூக, கலாச்சார, பொருளாதார தளங்களில் பல விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. அரசியல் அரங்கிலும் அது அதிர்வுகளை ஏற்படுத்தியிருக்கிறது. இப்படிப்பட்ட பேரிடர்கள் வந்தால் அரசு எப்படி அதனை எதிர் கொள்வது என்று விக்டோரிய அரசு ஒரு சட்ட முன்வடிவை உருவாக்கியிருக்கிறது. அந்த சட்ட முன்வடிவு இன்றைக்கு பேசு பொருளாக ஆகியிருக்கிறது. எதிர்ப்புகளையும் எதிர்கொள்கிறது. விக்டோரிய மாநிலம் கடந்த இரண்டு ஆண்டுகளாக சந்தித்த அனுபவங்களைக் கொண்டு இந்த சட்ட முன்வடிவு உருவாக்கப்பட்டிருக்கிறது என்கிறது அரசு. ஆனால் அதிகார குவிப்பை எதேச்சாதிகார அரசு செய்கிறது என்று இந்த சட்ட முன்வடிவை எதிர்ப்பவர்கள் கூறுகின்றனர். இந்த சட்ட முன்வடிவில் பல மாற்றங்கள் தேவை என்கின்றனர் சிலர். சட்ட முன்வடிவு என்ன சொல்கிறது? கோவிட் தொற்றுநோய் வந்த பொழுது, ஏற்கனவே நடைமுறையில் இருந்த அவசரநிலை சட்டத்திற்கு உட்பட்டு, விக்டோரிய அரசு செயல்பட்டது. தொற்று நோயின் அபாய நிலைக்கிணங்க, ஒவ்வொரு நான்கு வாரங்களுக்கும் ஒருமுறை அதில் மாற்றங்களை செய்து வந்தது. அதன் அடிப்படையில்தான், ஊரடங்கு உத்தரவுகளைப் பிறப்பித்தது. முகக்கவசங்களை போடும் உத்தரவோ தடுப்பூசி போடும் உத்தரவோ, அவை எல்லாமே அந்த சட்டத்தின் அடிப்படையில்தான் போடப்பட்டது. அது போதுமானதாக இல்லையென்றும் காலத்திற்கேற்ற மாற்றம் வேண்டும் என்றும் இந்த புதிய சட்ட முன் வடிவை தாம் கொண்டுவந்திருப்பதாக விக்டோரிய மாநில அரசு கூறுகிறது. புதிய சட்ட முன்வடிவில் உள்ளடக்கப்படிருக்கும் அம்சங்கள்: • இதுவரை பேரிடர் கால அறிவிப்பை மாநிலத்தின் முதன்மை சுகாதார அதிகாரியே அறிவிப்பார். இனி அந்த அதிகாரம் மாநில Premierக்கு தரப்படும். • ஊரடங்கு உத்தரவை, மூன்று மாதங்கள் தொடங்கி, காலவரையற்ற அளவில் நீடிக்கலாம். • பொது ஆணைகளை வெளியிட சுகாதார அமைச்சருக்கு அதிக அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. • சுகாதார அமைப்புகளிலிருந்தும், மனித உரிமைக் குழுக்களிலிருந்தும் மற்றும் சமூகக் குழுக்களிலிருந்தும் பிரதிநிதிகள் தெரிவுசெய்யப்பட்டு, தொற்றுநோய் மேலாண்மைக் குழு அமைக்கப்படும். • அரசின் ஆணைகளுக்கு கட்டுப்படாமல் மீறுகிற தனிநபர்களுக்கு 90,500 டாலர்களும், வணிக நிறுவனங்களுக்கு 452,500 டாலர்களும் அபராதம் விதிக்கப்படும். கொரோனா தொற்று வந்ததிலிருந்து, இரண்டு வருடங்களாக, அரசு எடுத்த நடவடிக்கைகளின் அனுபவத்திலிருந்து இந்த மாற்றங்களை சட்டமுன்வடிவில் கொண்டு வந்திருப்பதாக அரசு கூறுகிறது. வருங்காலங்களில் அரசு சிறப்பாக செயல்பட இது உறுதுணையாக இருக்கும் என்று நம்புகிறோம் என்று விக்டோரிய சுகாதார அமைச்சர் Martin Foley கூறியுள்ளார். ஏன் எதிர்ப்பு? புதிய சட்டம், ஜனநாயகத்தின் மேலான தாக்குதல் என்று எதிர்கட்சி கூறுகிறது. மாநில Premier-இன் கையில் அதிகார குவிப்பை இந்த சட்டம் கொடுக்கிறது என்றும், இது போல் இதுவரை நடந்தது இல்லை என்றும் இந்த சட்ட முன்வடிவு சட்டமாக நிறைவேற்றப்பட்டால் அது பெரும் ஆபத்தைக் கொடுக்கும் என்றும் எதிர்க்கட்சி தலைவர் Mathew Guy குறிப்பிட்டுள்ளார். தன்னிச்சையாக ஆணையிடும் அதிகாரம் அளவுக்கதிகமாக சுகாதார அமைச்சரிடம் வழங்கப்பட்டிருப்பதாகவும், ஊரடங்கு உத்தரவின் அதிகபட்ச காலம் வரையறுக்கப்படாமல் இருப்பது கவலையை அளிப்பதாகவும் விக்டோரிய மாநில வழக்ககறிஞர்களின் சங்கம் கருத்து வெளியிட்டுள்ளது. சட்ட முன்வடிவில் திருத்தங்கள் விக்டோரிய நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்காக முன்வைக்கப்படும் சட்டத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியிருப்பதையடுத்து, இந்த சட்ட முன்வடிவில் பின்வரும் திருத்தங்களைக் கொண்டு வர அரசு ஒத்துக்கொண்டுள்ளது: • பொது சுகாதார ஆணைகளை மீறுகிறவர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள அபராதக் கட்டணம் குறைக்கப்படும். • தொற்றுநோய் ஒரு பேரிடராக மாறிவிட்டது என்கிற அறிவிப்பை வெளியிட ஓர் அழுத்தமான அடிப்படையை அரசு பின்பற்றும். • அடிப்படை மனித உரிமைகள் பாதுகாக்கப்படும். • போராட்டம் செய்யும் உரிமை வழங்கப்படும். • பதினான்கு நாட்களுக்குள் பொது சுகாதார ஆலோசனைகளை வெளியிடுவது என்பதை மாற்றி, தொற்று நோய் உத்தரவு பிறப்பிக்கப்பட்ட ஏழு நாட்களுக்குள் ஆலோசனைகளை வெளியிடப்படும். சட்ட முன்வடிவில் கொண்டுவரப்படும் திருத்தங்களுக்கு வரவேற்பும் எதிர்ப்பும் சட்ட முன்வடிவில் அரசு கொண்டு வந்த இந்த மாற்றங்களைச் சிலர் ஆதரித்துள்ளனர். எடுத்துக்காட்டாக, Animal Justice கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் Andy Meddick வரவேற்றுள்ளார். வெளிப்படையான மற்றும் பொறுப்பான தொற்றுநோய் மேலாண்மை வடிவமைப்பை இந்த மாற்றங்கள் உறுதி செய்கிறது என அவர் கருத்து தெரிவித்துள்ளார். மனித உரிமைகள் சட்ட மையத்தின் இயக்குநர் Daniel Webb இந்த திருத்தங்களை ஆதரித்துள்ளார். மாற்றப்பட்டுள்ள சட்ட முன்வடிவு, பாதுகாப்பான சிறந்த முடிவுகளை அரசாங்கம் எடுக்கவும், பொதுமக்கள் மத்தியில் நம்பிக்கையை வளர்க்கவும் உதவும் என்று அவர் கூறியுள்ளார். சுயமாக மேற்பார்வையிடும் அமைப்பு பற்றிய விளக்கம் இந்த சட்ட முன்வடிவில் தெளிவாக இல்லையென்றும், சுகாதார அமைச்சரே முடிவுகளை எடுக்கும் பட்சத்தில், மாநில முதன்மை சுகாதார அதிகாரிக்கு போதுமான அதிகாரம் இருக்காது என்றும், தொற்றுநோய் குறித்த முடிவுகளை மேற்பார்வையிட நீதித்துறை சார்ந்த ஒரு அமைப்பு இருக்கவேண்டும் என்றும் Victoria’s Ombudsman Deborah Glass கூறியுள்ளார். ஒரு தனிநபரிடம் அதிகாரம் குவிந்திருப்பதாக கவலைப்படுவோருக்கு நீதித்துறை சார்ந்த ஒரு அமைப்பு ஏற்படுத்தப்படுவது ஆறுதலைக் கொடுக்கும் என்றும் அவர் வாதிடுகிறார். சில திருத்தங்களைச் செய்ய அரசு ஒத்துக்கொண்டுள்ளது. ஆனால் முக்கியமான அம்சங்கள் அப்படியே உள்ளன என்றும், அவைகளில் திருத்தம் தேவை என்றும் விக்டோரிய மாநில வழக்ககறிஞர்களின் சங்க Roisin Annesley கூறினார். சுகாதார அமைச்சர் பிறப்பிக்கும் உத்தரவுகளின் மீது நாடாளுமன்றத்திற்கு எவ்வித கட்டுப்பாடு இல்லாமல் இருப்பது மிகப்பெரிய குறை என அவர் கூறுகிறார். Business community எனப்படும் வர்த்தக அமைப்புகளும் இந்த சட்ட முன்வடிவிற்கு எதிர்ப்பை தெரிவித்துள்ளன. அதிகாரம் பரவலாக்கப்படாமல், ஒரு சிலரிடம் குவிக்கப்படுகிறது ஆபத்தானது என்கிற பார்வையை ஆஸ்திரேலிய தொழில் குழுமத்தின் Tim Piper-உம் வெளிப்படுத்தியுள்ளார். வலுக்கும் எதிர்ப்பு இந்த சட்ட முன்வடிவுக்கு எதிராக ஆயிரக்கணக்கில் மக்கள் கூடி விக்டோரிய மாநில Premier க்கு எதிராக கோஷங்களை முன்வைத்தார்கள். வன்முறை படங்களை ஏந்தி அதிபருக்கு மரண அச்சுறுத்தலை விடுத்துள்ளனர். கட்டாய தடுப்பூசிக்கு எதிரானவர்கள் இந்த சட்ட முன்வடிவு எதிர்ப்பு கொள்கையை கையிலெடுத்துள்ளனர். இந்த நிலையில், விக்டோரிய நாடாளுமன்ற கடைசிக் கூட்டத் தொடர் நவம்பர் மாதம் 30ம் தேதி தொடங்கி டிசம்பர் 2ம் தேதி முடிவடைகிறது. நாடாளுமன்றத்தின் கீழ்சபையில் லேபர் கட்சி அரசு இந்த சட்டத்தை எளிதாக நிறைவேற்றக்கூடும். ஆனால் மேலவையில் உள்ள மொத்தமுள்ள 40 உறுப்பினர்களில், 18 உறுப்பினர்கள் ஆளும் கட்சியான லேபர் கட்சியை சார்ந்தவர்கள். Greens கட்சி, Reason கட்சி மற்றும் Animal Justice கட்சிக்கு தலா ஒரு உறுப்பினர் உள்ளனர். எனவே இந்த கட்சிகளுடன் இணைந்து இந்த சட்ட முன்வடிவை சட்டமாக்க லேபர் அரசுக்கு பெரும்பான்மை 21 உறுப்பினர்களின் ஆதரவு கிடைத்துவிடும். எனவே இந்த சட்ட முன்வடிவு சட்டமாக்கப்படலாம். ஆனால் அதில் ஒரு சிக்கல் என்னவெனில், ஆளும் லேபர் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட Adem Somyurek சட்ட முன்வடிவை எதிர்த்து வக்களிக்கப்போவதாக அறிவித்துள்ளார். விக்டோரிய மாநில அரசிடம் பேரிடர் தொடர்பான அதிகாரம் டிசம்பர் 16 வரையே உள்ளது. எனவே இந்த காலக்கெடு முடிவதற்குள் புதிய சட்டம் நிறைவேற்றப்படவேண்டும் என்ற நெருக்கடியில் ஆளும் லேபர் கட்சி உள்ளது.
இறைவனின் பெயரில் எந்த ஒரு பொருளையும் வீணடிப்பது, அதுவும் குறிப்பாக ஹோமத்தில் நெய், பட்டுப்புடவைகளை போடுவது எனக்கு அறவேபிடிப்பதில்லை. எனவே, முன்னோர்களின் பசியைத் தீர்க்கவே இப்படி செய்கிறேன் என்ற ஆனந்தனை கண்டுகொள்ளாமல் கோபத்துடன் எழுந்தேன். ’’சாமி, கோபப் படாதீங்க… நீங்க எங்கே போகணும்னு சொல்லுங்க கார்ல இறக்கிவிடச் சொல்றேன். நீங்க தப்பா எடுத்துக்கக் கூடாது, இது என்னோட காணிக்கை…’’ என்று கொஞ்சம் பணத்தை எடுத்து கையில் கொடுத்தார். நான் எதுவும் பேசாமல் வாங்கி பையில் வைத்துக் கொண்டேன். ’’நான் குற்றாலம் போகவேண்டும், அதனால் ஏதாவது பஸ் நிலையத்தில் என்னை இறக்கிவிடச் சொல்…’’ என்றேன். ’’குற்றாலம் இங்கிருந்து மூணு மணி நேரம்தான் சாமி… காரிலேயே போய் இறங்கிக்கோங்க…’’ என்று டிரைவரை அழைத்து தகவல் சொன்னார். வீட்டில் மனைவி, பிள்ளைகளை கூப்பிட்டு ஆசிர்வாதம் வழங்கச் சொன்னார். அவரது மகன் பட்டும்படாமலும் காலைத் தொட்டு எழுந்ததும் காணாமல் போனான். அவன் வீட்டிற்குள் போனதும் ராஜரத்னம் என்னை சமாதானப் படுத்தினார். ‘‘சாமி… காலேஜ் படிக்கிற பையன், அதனால் பக்குவம் வராம இருக்கான். தப்பா நினைச்சு கோபப்படாதீங்க’’ என்றார். ‘‘இந்த வயதில் அசட்டுத் துணிச்சல் இல்லையென்றால்தான் தவறு’’ என்று கிளம்பும் போது ராஜரத்னம் கண்களில் ஒரு கேள்வி தெரிந்தது. கண்களாலே என்னவென்று கேட்டேன். ‘‘சாமி… என் பையன் மேல அன்பா இருக்கேன். அவன் ஆசைப்பட்டதை எல்லாம் வாங்கிக் கொடுக்கிறேன், ஆனால், கொஞ்சம்கூட மதிக்க மாட்டேங்கிறான். அதுமட்டுமில்லாம இவ்வளவு சம்பாதிக்கிற எனக்கே விவரம் பத்தாதுங்கிற மாதிரி எடுத்தெறிஞ்சு பேசுறான்’’ என்று தயங்கியபடி சொன்னார். ‘‘உன்னையும் உன் தந்தையையும் எடுத்துக் கொண்டால் யார் அறிவாளி?’’ கொஞ்சநேரம் யோசித்த ராஜரத்னம், ‘‘எங்கப்பா சம்பாதிக்கத் தெரியாதவர், ஆனா ரொம்பவும் நல்லவர். நாங்க அவர் முன்னால நின்னு பேசவே பயப்படுவோம்’’ என்றார். ‘‘கண்டிப்பாக உன்னைப் போலத்தான் உன் மகன் இருப்பான். ஆம், உன்னைவிட புத்திசாலியாக இருப்பான். அவன் வேகத்திற்கு உன்னால் சிந்திக்க முடியாது என்பதால் உன்னை குறைவாக மதிப்பிடுகிறான். உன் தந்தையிடம் பயம் இருந்ததால் அவரை நீ விமர்சனம் செய்யவில்லை. ஆனால் உன் மகனுக்கு இப்போது சுதந்திரம் இருக்கிறது, உண்மையை நேருக்கு நேராகச் சொல்கிறான். உன் குழந்தை உன் மூலம் வந்தவன் என்றாலும் நீ சொன்னபடி கேட்கும் நாய் போன்று அவனும் வாலாட்டிக் கொண்டே இருக்கவேண்டும் என எதிர்பார்க்காதே. அவனுக்கு சொந்தமாக நிற்கும் சக்தி கொடு, பாதுகாப்பு கொடு ஆனால் வழிகாட்டாதே. உன் வழியை நீ தேடியதைப் போன்று அவன் வழியை அவன் தேடிக் கொள்வான். ஓவ்வொரு இளைஞனும் அடுத்தகட்டத்துக்கு நகரும்போது தந்தையை மதிக்கத் தொடங்குவான், அதுவரை காத்திரு’’ என்றபடி தயாராக நின்ற கார் அருகே சென்றேன். கார் தயாராக கிளம்பத் தயாராக நின்றது. அறுபது வயதைத் தாண்டிய, மெல்லிய தேகத்துடன் இருந்த டிரைவர் கதவைத் திறந்து விட்டார். இந்த வயதில் ஒரு டிரைவரா என்று ஆச்சர்யமாக ராஜரத்னத்தைப் பார்க்க, ‘‘சுந்தரம் எங்க குடும்பத்துல ஒருத்தர் மாதிரி… பதினைஞ்சு வருஷத்துக்கு மேல எங்கிட்ட இருக்கார். நிதானமா டிரைவிங் செய்வார்… தங்கமான மனுசர்’’ என்றார். முன்னிருக்கையில் ஏறி அமர்ந்தேன். திடீர் என்று வெளியூர் செல்லவேண்டி வந்ததில் சுந்தரம் மனம் சுருண்டு போயிருக்கிறார் என்பது அப்பட்டமாகத் தெரிந்தது. எதுவுமே பேசாமல் வேகமாக காரை ஓட்டத் தொடங்கினார். திருமங்கலம் பைபாஸ் சாலையைத் தொட்டதும் இன்னும் வேகம் கூட்டினார். அவர் மனதில் கோபம் இருப்பதும், அதனால் நிதானம் இழந்ததையும் பார்க்கும்போது ஆபத்தை அழைப்பதாகத் தெரிந்தது. ஆபத்தை எதிர்கொள்ளத் தயாரானேன்.
தடை செய்யப்பட்ட 6 இஸ்லாமிய அமைப்புகளின் தலைவர்களுக்கும், பாதுகாப்பு உயர் அதிகரிகளுக்கும் இடையில் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் பேச்சுவார்த்தைகள் இடம்பெறவுள்ளதாக அநுராதபுர மாவட்டத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மான் தெரிவித்தார். ஜனாதிபதியின் பாதுகாப்பு விசேட ஆலோசகர் சாகல ரத்நாயக்க மற்றும் பாதுகாப்பு உயர் அதிகாரிகளுடன், நாடாளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மான் மற்றும் எச்.எம்.எம் ஹாரிஸ் ஆகியோர் நேற்று சந்தித்து கலந்துரையாடியிருந்தனர். இதன்போது 6 இஸ்லாமிய அமைப்புகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையினை தளர்த்துவது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மான் குறிப்பிட்டார். எனவே, ஜனாதிபதியுடன் இடம்பெற்ற சந்திப்பில் இந்த விடயம் குறித்து வலியுறுத்திய நிலையில், அது தொடர்பாக ஆராயுமாறு ஜனாதிபதி, சாகல ரத்நாயக்கவுக்கு ஆலோசனை வழங்கியிருந்தார். இதனடிப்படையில் நேற்று இடம்பெற்ற சந்திப்பில் பல முக்கிய விடயங்கள் குறித்து அவதானம் செலுத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் குறித்த 6 தடை செய்யப்பட்ட இஸ்லாமிய அமைப்புகளின் தலைவர்களுக்கும் பாதுகாப்பு தரப்பின் உயர் அதிகாரிகளுக்கும் இடையில் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் சந்திப்பு இடம்பெறவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மான் தெரிவித்தார். Share Previous News Next News யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.
மனித வாழ்வில் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் தெளிவான தீர்வை அளிக்கும் வாழ்க்கை நெறியே இஸ்லாம். இதனை உணராத காரணத்தினால் தான் இன்று முஸ்லிம் சமுதாயம் தடம் புரண்டு சென்று கொண்டிருக்கிறது. வணக்க வழிபாடுகளை மாத்திரம் சொல்லித் தருவதே இஸ்லாம் என்று சிலர் கருதுகின்றனர். மற்றும் சிலர் அரசியல், பொருளாதாரம் ஆகியவற்றை மாத்திரமே இஸ்லாம் சொல்லித் தருகிறது என்ற தோற்றத்தை ஏற்படுத்துகின்றனர். புறச்செயல்களை மாத்திரம் ஒழுங்கு படுத்தும் மார்க்கம் என்பர் வேறு சிலர். புறச்செயல்களைப் புறம் தள்ளிவிட்டு அகத்தை மட்டும் சுத்தம் செய்வதே இஸ்லாம் என்பர் இன்னும் சிலர். வெளிப்படையாக இவ்வாறு இவர்கள் கூறாவிடினும் தங்கள் நடவடிக்கைகள் மூலம் இவ்வாறு பிரகடனப்படுத்தி வருகின்றனர். பலரும் பலவிதமாக இஸ்லாத்திற்கு வடிவம் கொடுக்க முயன்றாலும், மனித வாழ்வின் அனைத்துப் பிரச்சனைகளிலும் தலையிட்டு தக்க தீர்வை வழங்குவதே இஸ்லாம். மனிதனது செயல்களில் மட்டுமன்றி அவனது நம்பிக்கையிலும் எண்ணத்திலும் கூட இஸ்லாம் தலையிடுகிறது. எவற்றைச் செய்யலாம் எவற்றைச் செய்யலாகாது என்பதை இஸ்லாம் விளக்குவது போலவே, எவற்றை நம்பலாம் எவற்றை நம்பலாகாது என்பதையும் இஸ்லாம் விளக்கமாக எடுத்துரைக்கின்றது. செயல்களுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை விட சற்று அதிகமாகவே எண்ணத்திற்கு முக்கியத்துவம் தருகின்றது. செய்ய வேண்டியவைகளைச் செய்யாமலிருப்பதும், செய்யக் கூடாதவைகளைச் செய்வதும் எப்படிக் குற்றமோ அது போலவே நம்ப வேண்டியவைகளை நம்பாமலிருப்பதும் நம்பக் கூடாதவற்றை நம்புவதும் குற்றமே. இதன் காரணமாகவே ‘பேய் பிசாசுகள் என்று மக்களால் நம்பப்படும் விசித்திரமான படைப்பைப் பற்றி இஸ்லாமிய அடிப்படையில் நாம் ஆராயும் அவசியம் ஏற்படுகிறது. ‘பேய் அரசாண்டால் பிணம் தின்னும் சாத்திரங்கள் ‘பெண் என்றால் பேயும் இரங்கும் ‘நோய்க்கும் பார்க்க வேண்டும்; பேய்க்கும் பார்க்க வேண்டும் என்றெல்லாம் தமிழகத்தில் வழங்கும் பழமொழிகள், தமிழர்களின் உள்ளங்களில் பேய்களுக்கு இருக்கும் இடத்தைப் படம் பிடித்துக் காட்டுகின்றன. உலகின் பல பகுதிகளில் பேய்களின் நடமாட்டம் உண்டு எனினும் தமிழகத்தில் இவற்றின் நடமாட்டம் மிக அதிகம். எண்ணிலடங்காத பேய்கள் உலா வருவதால் அவற்றின் பெயர்களும் தன்மைகளும் மிகத்துல்லியமாக வித்தியாசப்பட்டுள்ளதை தமிழகத்தில் காண முடியும். நள்ளிரவில் கதவைத் தட்டும் பேய்களும் உள்ளன. வீடுகளில் கல்லெறிந்து விட்டு மாயமாய் மறைந்திடும் பேய்களும் உள்ளன. பழிவாங்கும் பேய்கள்; இரத்தம் குடிக்கும் பேய்கள்; இளைஞர்களை மாத்திரமே ‘தப்பு செய்வதற்காக அழைக்கும் மோகினிப் பேய்கள், வேண்டியவர்களுக்கு உதவி செய்யும் பேய்கள் என்றெல்லாம் பேய்களில் பல வகைகள் உள்ளன. இல்லறத்தில் தோல்வியடைந்து இலக்கின்றி அலையும் பேய்களும் உள்ளன. எல்லாவற்றிற்கும் மேலாக மனிதன் மீது மேலாடுகின்ற மகாசக்தி படைத்த பேய்களும் உள்ளன. பிசாசுகள், மோகினி, இரத்தக் காட்டேரி, கொள்ளிவாய்ப் பிசாசு என்பது போன்ற செல்லப் பெயர்களும் பேய்களுக்கு உள்ளன. பேய்களுக்கு தமிழகத்தில் இருக்கும் வெல்வாக்குக்கு இவை சான்றுகள். பேய் வீடு, பேய் மாளிகை என்றெல்லாம் பேய்களைக் கதாநாயகர்களாக்கி பி.டி. சாமி போன்றவர்கள் தமிழகத்தில் பிழைப்பு நடத்த முடிகின்றதென்றால் பேய் சமாச்சாரங்களை வெளியிட்டு தமிழகப் பத்திரிகைகள் பல சமூகத் தொண்டாற்ற (?) முடிகிறது என்றால் பேய்களின் ஆதிக்கத்தை அளவிட வேறு அளவுகோல் எதுவும் தேவையில்லை. “அஞ்சி அஞ்சிச் சாவார் இவர் அஞ்சாத பொருளில்லை அவனியிலே வஞ்சனைப் பேய்களென்பர்; துஞ்சுது முகட்டிலென்பார்; அந்த மரத்திலென்பார்; இந்தக் குளத்திலென்பார் என்று நெஞ்சு பொறுக்காமல் சில பேர் குமுறினாலும் சில சுயமரியாதையுள்ள பெரியார்கள் பேய்களுக்கெதிராக கடும் பிரச்சாரம் செய்தாலும் பேய் விசுவாசிகளின் நம்பிக்கையை அசைக்க முடியவில்லை. மற்றவர்கள் பேய்களைப் பற்றி எப்படி வேண்டுமானாலும் நம்பிவிட்டுப் போகட்டும்! முஸ்லிம்கள் இது பற்றி எத்தகைய முடிவுக்கு வரவேண்டும் என்பதையும் பேய்களை நம்புவதனால் ஏற்படும் சாதக பாதகங்களையும் அவற்றை மறுப்பதால் ஏற்படும் சாதக பாதகங்களையும் திருக்குர்ஆன் வெளிச்சத்தில், திருநபி (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலின் துணையுடன் ஆராய்வோம். மனிதன் மரணித்த பிறகு அவனது உயிர் (ஆவி) எங்கே செல்கிறது? என்ன செய்கிறது? என்ற வினாக்களுக்கு விடை கண்டால் “பேய்கள் உண்டா? என்ற வினாவுக்கும் விடை கிடைக்கும். ஏனெனில் ‘இறந்தவர்களின் ஆவிகள் இவ்வுலகுக்குத் திரும்பி வந்து சுற்றிக் கொண்டிருக்கின்றன என்ற நம்பிக்கை தான் பேய்களைப் பற்றிய நம்பிக்கையின் அடிப்படை. இறந்தவர்களது ஆவிகளின் நிலை என்ன? என்பதை முதலில் காண்போம். அதன் பிறகு பேய்களின் ஆதரவாளர்கள் எழுப்பும் வினாக்களையும் ஆராய்வோம். உயிர்களை அவை மரணிக்கும் நேரத்திலும், மரணிக்காதவற்றை அவற்றின் உறக்கத்திலும் அல்லாஹ் கைப்பற்றுகிறான். எதற்கு மரணத்தை விதித்து விட்டானோ அதைத் தனது கைவசத்தில் வைத்துக் கொண்டு மற்றதை குறிப்பிட்ட காலம் வரை விட்டு விடுகிறான். சிந்திக்கின்ற மக்களுக்கு இதில் பல சான்றுகள் உள்ளன. (அல்குர்ஆன் 39:42) பேய்-பிசாசுகள் கிடையாது என்பதற்கு திருக்குர்ஆனின் இந்த ஒரு வசனமே போதிய சான்றாக அமைந்துள்ளதை சிந்திப்பவர்களால் அறிய முடியும். இறந்து விட்ட மனிதர்களின் ஆவிகளைத் தனது கட்டுப்பாட்டுக்குள் (தனது கைவசத்தில்) வைத்திருப்பதாக தெளிவாகவே இங்கே இறைவன் குறிப்பிடுகிறான். இறைவனது கைவசத்திலேயே ஆவிகள் இருப்பதாக இறைவன் தெளிவாக அறிவித்த பின்னர் அவனது கட்டுப்பாட்டை உடைத்தெறிந்து விட்டு ஆவிகள் தப்பித்து வந்து விடுகின்றன என்று ஒரு முஸ்லிம் நம்ப முடியாது. பேய்கள் இருப்பதாக நம்புபவர்கள் இறைவனது இந்த வசனத்தை மறுத்தவர்களாவார்கள்; அல்லது இறைவனது கட்டுப்பாடு வலுவற்றது என்பதைச் சொல்லாமல் சொல்கிறார்கள். இரண்டில் எதை ஏற்றாலும் அவர்கள் இஸ்லாமிய வட்டத்திலிருந்து தாங்களாகவே வெளியேறி விடுகின்றனர். நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தந்த ஒரு பிரார்த்தனை இந்த வசனத்திற்கு விளக்கமாக அமைந்துள்ளதைக் காணுங்கள். உங்களில் யாரேனும் படுக்கைக்குச் சென்றால், ‘என் இறைவா! உன் திருப்பெயராலேயே திரும்பவும் எழுவேன் (உறக்கத்தில்) எனது உயிரை நீ கைப்பற்றிக் கொண்டால் அற்கு நீ அருள் புரிந்திடு! அதை நீ திரும்ப அனுப்பினால் உனது நல்லடியார்களை நீ பாதுகாப்பது போல் எனது உயிரையும் நீ பாதுகாத்து விடு என்று கூறட்டும். நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறியதாக அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கும் ஹதீஸ் புகாரி, முஸ்லிம் ஆகிய நூற்களில் இடம் பெற்றுள்ளது. திருக்குர்ஆனின் 39:42 வசனம் கூறும் அதே கருத்தை இந்த நபிமொழியும் கூறுகின்றது. உறக்க நிலையிலும், மரணித்த பின்னரும் மனிதர்களின் ஆவிகள் இறைவனது கட்டுப்பாட்டிலேயே இருக்கின்றன என்று அல்லாஹ்வும் அவனது திருத்தூதரும் இரண்டாவது கருத்துக்கு இடமில்லாத வகையில் அறிவித்து விட்ட பின் பேய்களிருப்பதாக ஒரு முஸ்லிம் எப்படி நம்ப முடியும்? பேய்களை நம்புபவன், எப்படி இறைவனையும் இறைத் தூதரையும் நம்பியவனாக முடியும்? இந்த இரண்டு சான்றுகளே பேய்களை மறுக்கப் போதுமானவை என்றாலும் அதிக விளக்கத்துக்காக மேலும் பல சான்றுகளையும் காண்போம். முடிவில் அவர்களில் யாருக்கேனும் மரணம் வரும் போது “என் இறைவா! நான் விட்டு வந்ததில் நல்லறம் செய்வதற்காக என்னைத் திருப்பி அனுப்புங்கள்!” என்று கூறுவான். அவ்வாறில்லை! இது (வாய்) வார்த்தை தான். அவன் அதைக் கூறுகிறான். அவர்கள் உயிர்ப்பிக்கப்படும் நாள் வரை அவர்களுக்குப் பின்னால் திரை உள்ளது. (அர்குர்ஆன் 23:99,100) பேய்களைப் பற்றி நிலவும் எல்லா நம்பிக்கைகளையும் இந்த வசனம் தகர்த்தெறிகின்றது. இறைவா என்னைத் திரும்ப உலகுக்கு அனுப்பி வை என்று மனிதன் கேட்டுக் கொண்டாலும் கூட திரும்ப அனுப்புவதாக இல்லை என இறைவன் இங்கே தெரிவிக்கிறான். இதன் மூலம் இவ்வுலகுக்குத் திரும்பி வருவதற்கு மனிதன் ஆசைப்பட்டால் கூட அது நடக்கப் போவதில்லை என்பது தெளிவாகின்றது. இவ்வுலகுக்கு திரும்பி வந்து தவறான காரியங்களில் ஈடுபடுவதற்கு இல்லாமல் நல்லறங்களைச் செய்ய வேண்டும் என்ற நல்ல எண்ணத்திலேயே இவ்வாறு மனிதன் கேட்கிறான். நல்லறங்கள் செய்வதற்காகக் கூட உலகுக்குத் திரும்ப அனுப்புவது இயலாது என்று இறைவன் இங்கே அறிவிக்கின்றான். நல்லறங்கள் செய்வதற்காகக் கூட மனிதன் திரும்ப அனுப்பப்படுவதில்லை என்றால் பிறரைப் பயமுறுத்தவும், பிறருக்குத் தொல்லை தரவும், பிறர் மீது மேலாடி அமைதியின்மையை ஏற்படுத்தவும் இறந்தவர்களின் உயிர்கள் எப்படி உலகுக்குத் திரும்ப இயலும்? இந்த வசனத்தின் இறுதிப் பகுதி முக்கியமான பகுதியாகும். மனிதன் மரணித்த பின்பு அவனுக்கும் உலகுக்கும் இடையே திரை இருப்பதாக இறைவன் குறிப்பிடுகிறான். திரை என்று நாம் மொழியாக்கம் செய்த இடத்தில் பர்ஸஹ் எனும் அரபிச் சொல் இடம் பெற்றுள்ளது. பர்ஸஹ் என்றால் கண்களுக்குப் புலப்படாத, உடைக்க முடியாத திரை என்பது பொருள். இதற்குச் சான்றாக இதே வார்த்தை இடம் பெற்றுள்ள மற்றொரு வசனத்தை இங்கே குறிப்பிடுவது பொருத்தமாக அமையும். இரண்டு கடல்கள் சந்திக்குமாறு அவன் ஏற்படுத்தியுள்ளான். . இரண்டுக்குமிடையே ஒரு திரை உள்ளது. ஒன்றையொன்று கடக்காது. என்ற கருத்தை 55வது அத்தியாயம் 19,20 வசனங்களில் இறைவன் குறிப்பிடுகிறான். விஞ்ஞானிகளும் இதனை ஆராய்ந்து இரு கடல்களும் நமது பார்வைக்கு இணைந்திருப்பதாகத் தோன்றினாலும், ஒன்றுடன் மற்றொன்று கலந்து விடுவதில்லை என்று உறுதி செய்கின்றனர். அதே வார்த்தையைத் தான் மேலே நாம் எடுத்துக் காட்டிய வசனத்திலும் இறைவன் பயன்படுத்தியுள்ளான். மனிதன் இறந்த பின் அவனுக்கும் இவ்வுலகுக்கும் இடையே “பர்ஸஹ் எனும் திரை போடப்படுவதாக வல்ல இறைவன் குறிப்பிடுகின்றான். இறந்த மனிதன் எவ்வகையிலும் இவ்வுலகுடன் தொடர்பு வைத்திருக்க முடியாது என்பதை இதன் மூலம் அறிவிக்கின்றான். இறைவனின் இவ்வசனத்தை நம்பக் கூடிய ஒரு முஸ்லிம், ஆவிகள் வந்து நடமாடுவதை எப்படி நம்ப முடியும்? ஒன்றுக்கொன்று முரணான இரண்டு நம்பிக்கைகள், ஒரு உள்ளத்தில் எப்படி இருக்க முடியும்? “பர்ஸஹ் எனும் மகத்தான திரை குறிப்பிட்ட சில தினங்களுக்கு மட்டும் போடப்படுவதில்லை. மாறாக, மனிதர்கள் திரும்பவும் உடலுடன் எழுப்பப்படும் காலம் வரையிலும் இந்த மகத்தான திரை இருந்து கொண்டிருக்கும் என்றும் இறைவன் அதே வசனத்தில் தெரிவிக்கின்றான். இறந்தது முதல் எழுப்பப்படும் வரை மகத்தான திரைக்குப் பின்னே இருக்கும் ஆவிகள் – நல்லறங்கள் செய்வதற்காக உலகுக்கு வர அனுமதி கேட்கும் போது அனுமதி மறுக்கப்பட்ட ஆவிகள் – எப்படி இந்த உலகுக்கு வர இயலும்? பேய்களுக்கு இஸ்லாத்தில் அறவே இடமில்லை என்பதை இவ்வசனத்தில் இருந்தும் உறுதி செய்து கொள்ளலாம். மரணித்தவரின் ஆவி ஒரு போதும் இவ்வுலகுக்கு வருவது சாத்தியமே இல்லை என்பதை அல்லாஹ்வின் திருத்தூதர் (ஸல்) அவர்கள் இரண்டாவது கருத்துக்கு இடமின்றி தெளிவாக எடுத்துரைக்கின்றார்கள். உங்களில் எவரேனும் மரணித்து விட்டால் காலையிலும் மாலையிலும் அவருக்குரிய இடம் எடுத்துக் காட்டப்படும். சொர்க்கவாசியாக இருந்தால் சொர்க்கத்தில் உள்ள அவரது இடம் அவருக்குக் காட்டப்படும். நரகவாசியாக அவர் இருப்பின் நரகத்திலுள்ள அவரது இடம் அவருக்கு எடுத்துக் காண்பிக்கப்படும். கியாமத் நாளில் அல்லாஹ் உன்னை எழுப்பும் வரை இது தான் உனது தங்குமிடமாகும் என்றும் அவரிடம் கூறப்படும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) நூற்கள் : புகாரி, முஸ்லிம்) மரணித்த மனிதன் கியாம நாள் வரை (திரும்பவும் உடலுடன் எழுப்பப்படும் வரை) மண்ணறையிலேயே இருந்தாக வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறிய பிறகு இறந்தவரின் ஆவிகள் இவ்வுலகுக்குத் திரும்பவும் வருகின்றன என்று எப்படி நம்ப முடியும்? அப்படி நம்புபவன் நபி (ஸல்) அவர்களின் போதனையை பகிரங்கமாக மறத்தவனாக ஆவான் என்பதை முஸ்லிம்கள் உணர வேண்டும். மரணித்தவர் அடக்கம் செய்யப்பட்டதும் கருநிறமும் நீலநிறக் கண்களும் ​உடைய இரண்டு மலக்குகள் அவரிடம் வருவர். ஒருவர் “முன்கர் மற்றொருவர் “நகீர். இந்த மனிதர் பற்றி (முஹம்மத் (ஸல்) அவர்களைப் பற்றி) நீ என்ன கருதியிருந்தாய்? என்று அவ்விருவரும் கேட்பர். “அவர் அல்லாஹ்வின் தூதராகவும், அவனது அடியாராகவும் இருக்கின்றார். வணக்கத்துக்குரியவன் அல்லாஹ்வைத் தவிர எவரும் இல்லை; நிச்சயமாக முஹம்மத் (ஸல்) அவர்கள் அவனது அடியாரும் தூதரும் ஆவார்கள் என்றும் உறுதியாக நம்புகிறேன் என்று அந்த மனிதர் கூறுவார். “உலகில் வாழும் போது இவ்வாறே நீ நம்பியிருந்தாய் என்பதை நாங்களும் அறிவோம் எனறு அம்மலக்குகள் பதிலளிப்பர். பின்னர் அவரது மண்ணறை விசாலமான அளவுக்கு விரிவாக்கம் செய்யப்பட்டு ஒளிமயமாக்கப்படும், பின்பு அவரை நோக்கி “உறங்குவீராக! என்று கூறப்படும். “நான் எனது குடும்பத்தாரிடம் சென்று இந்த விபரங்களைக் கூறிவிட்டுத் திரும்பி வருகிறேன் என்று அம்மனிதர் கூறுவார். அதற்கு அவ்வானவர்கள் “நெருக்கமானவரைத் தவிர வேறு எவரும் எழுப்ப முடியாதவாறு புது மணமகன் உறங்குவதைப் போல் நீர் உறங்குவீராக! இந்த இடத்திலிருந்து இறைவன் எழுப்பும் வரை உறங்குவீராக! என்று கூறுவார்கள். இறந்த மனிதன் முனாபிக்காக (சந்தர்ப்பவாதியாக) இருந்தால் அவனிடம் இக்கேள்வியைக் கேட்கும் போது அம்மனிதன் “இந்த முஹம்மத் பற்றி மனிதர்கள் பலவிதமாகக் கூறுவதைச் செவிமடுத்தேன். மற்றபடி இவரைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது என்பான். அதற்கு அவ்வானவர்கள் “நீ இப்படித்தான் உலகிலும் கூறிக் கொண்டிருந்தாய் என்பதை நாம் அறிவோம் எனக் கூறுவர். அதன் பின் பூமியை நோக்கி “இவரை நெருக்கு எனக் கூறப்படும். அவரது விலா எழும்புகள் நொருங்கும் அளவுக்கு பூமி அவரை நெருக்க ஆரம்பிக்கும். அவனது இடத்திலிருந்து அவனை இறைவன் எழுப்பும் வரை அவன் வேதனை செய்யப்பட்டுக் கொண்டே இருப்பான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) நூல் : திர்மிதீ) நல்ல மனிதர்களது உயிர்களானாலும் கெட்ட மனிதர்களது உயிர்களானாலும் இவ்வுலகுக்குத் திரும்பி வர வழியே இல்லை என்பதற்கு இதுவும் பலமான சான்றாக உள்ளது. நபி (ஸல்) அவர்கள் இங்கே பயன்படுத்தியுள்ள ஒவ்வொரு வார்த்தையும் பேய்களுக்குச் சம்மட்டி அடியாக அமைந்துள்ளதை நாம் சிந்திக்க வேண்டும். உலகில் நல்லவனாக வாழ்ந்த மனிதன், வானவர்களின் விசாரணைக்கு சரியான பதிலைக் கூறுகிறான். அதன் பிறகு அவனுக்கு சொர்க்கத்தில் கிடைக்கவிருக்கும் பாக்கியங்கள் எடுத்துக் காட்டப்படுகின்றன. இதனைக் கண்ட அம்மனிதன் தன்னில்லம் சென்று இதனைத் தெரிவித்துவிட்டு வருவதற்கு அனுமதி கோருகிறான். அந்தக்கட்டத்தில் தான் “புது மாப்பிள்ளை போல் உறங்குமாறு இறைவனால் கூறப்படுகின்றது. தற்காலிகமாக சிறிது நேரம் இவ்வுலகுக்கு வந்து விட்டு மீண்டும் திரும்பி வருவதற்குக் கூட நல்ல உயிர்களுக்கு அனுமதி மறுக்கப்படுகின்றது. கியாமத் நாள் வரையிலும் இறைவன் எழுப்பும் காலம் வரையிலும் ஆழ்ந்த உறக்க நிலையிலேயே நல்ல உயிர்கள் இருந்து வருகின்றன என்பதை இந்த ஹதீஸ் விளக்குகின்றது. இந்த உறக்கத்தினிடையே காலையிலும் மாலையிலும் அவனுக்கு சொர்க்கம் எடுத்துக் காட்டப்படுகின்றது என்பதை முந்தைய ஹதீஸ் கூறுகின்றது. இது நல்லடியார்களது உயிர்களின் நிலைமை. மரணித்த மனிதன் கெட்டவனாக வாழ்ந்து மறைந்திருந்தால் அவன் திரும்பவும் உயிர் கொடுத்து எழுப்பப்படும் வரை பூமியால் நெருக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறான் என்பதையும் இந்த ஹதீஸ் கூறுகின்றது. கியாமத் நாள் வரை உறக்க நிலையில் இருந்து வரும் நல்ல ஆவிகளும் முன்கர் நகீருடைய கட்டுப்பாட்டில் பூமியால் நெருக்கப்படும் கெட்ட ஆவிகளும் இவ்வுலகுக்கு வர முடியாது என்பதற்கு இந்த ஹதீஸ் தெளிவான சான்றாக அமைந்துள்ளது. இதன் பின்னரும் பேய்கள் என்றொரு படைப்பு உள்ளதாக நம்புபவர்கள் முன்னர் நாம் குறிப்பிட்ட குர்ஆன் வசனங்களை நம்ப மறுக்கிறார்கள். மேலே கூறிய நபிமொழிகளையும் நம்ப மறுக்கிறார்கள். இந்த நபிமொழியில் கூறப்படும் முன்கர் நகீர் எனும் மலக்குகளை நம்ப மறுக்கின்றார்கள் என்பதே பொருளாகும். “ஆமன்து பில்லாஹி, வமலாயிகதிஹி வகுதுபிஹி வருஸுலிஹி…….. என்று கூறி அல்லாஹ்வையும் அவனது வானவர்களையும் அவனது வேதங்களையும் அவனது தூதர்களையும் நம்புவதாக உறுதியளிக்கும் முஸ்லிம் பேய் இருப்பதாக நம்பும் போது இந்த நான்கையும் ஒரே நேரத்தில் மறுத்தவனாக ஆகிவிடுகின்றான். இங்கே எடுத்துக் காட்டப்பட்ட விஷயங்களே இந்த விஷயத்தில் சரியான முடிவுக்கு வரப் போதுமானவை என்றாலும் எஞ்சியுள்ள இன்னும் சில ஐயங்களையும் நீக்கும் விதமாக நபி (ஸல்) அவர்கள் கூறிய மற்றும் சில ஹதீஸ்களையும் காண்போம். மனிதன் மரணித்த பின்னர் திரும்பவும் இவ்வுலகுக்கு அவனது உயிர் வருவதற்கு அனுமதிக்கப்பட்டிருக்குமானால் மனிதர்களிலேயே மிகவும் உயிர்ந்த நிலையைப் பெற்ற நபி (ஸல்) அவர்களுக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கும். அல்லாஹ்வின் திருத்தூதருக்குக் கூட இந்த வாய்ப்பு வழங்கப்படவில்லை என்பதை அல்லாஹ்வின் தூதரே தெரிவித்து விடுகின்றார்கள். “பூமியில் சுற்றிக் கொண்டிருக்கக் கூடிய சில வானவர்கள் உள்ளனர். என் சமுதாயத்தினரின் ஸலாமை அவர்கள் என்னிடம் சேர்ப்பிக்கிறார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இப்னு மஸ்வூத் (ரலி) அறிவிக்கிறார்கள். நஸயீ, தாரிமி ஆகிய நூல்களில் இது இடம் பெற்றுள்ளது. இந்த ஹதீஸின் ஒவ்வொரு வார்த்தையும் பொறுக்கியெடுத்து பயன்படுத்தியது போல் ஆழமான அர்த்தங்களை உள்ளடக்கியுள்ளது. நபி (ஸல்) அவர்கள் மரணித்த பிறகு அவர்களுக்காக அவர்களது உம்மத்தினர் ஸலாம் கூறினால் அந்த ஸலாமைக் கொண்டு போய்ச் சேர்ப்பிப்பதற்காகவென்றே இறைவன் வானவர்களை நியமனம் செய்திருக்கிறான். நபி (ஸல்) அவர்கள் “இருந்த இடத்திலிருந்தே நாம் கூறும் ஸலாமை கேட்கக் கூட இயலாது. மாறாக மலக்குகள் தான் அதைச் சேர்ப்பிக்க வேண்டும் என்பதை இந்த ஹதீஸ் தெளிவுபடுத்துகின்றது. இறந்தவருக்கும் (அது அல்லாஹ்வின் தூதரேயானாலும்) இந்த உலகுக்கும் நேரடியாக யாதொரு தொடர்பும் கிடையாது என்பதையும் இது தெளிவாகக் கூறுகின்றது. நேரடித் தொடர்பு இருக்கின்றது என்றால் இதற்கென்றே இறைவன் சில வானவர்களை நியமிக்க வேண்டியதில்லை. “உங்களின் இல்லங்களைக் கப்ருகளாக ஆக்காதீர்கள்! எனது கப்ரை விழாத் தலமாக ஆக்காதீர்கள். என் மீது ஸலவாத் கூறுங்கள்! நீங்கள் எங்கிருந்து ஸலவாத் கூறினாலும் என்னிடம் அது சேர்ப்பிக்கப்படும் என்று நபி (ஸல்) கூறியதாக அபூஹுரைரா (ரலி) அறிவிக்கிறார்கள். இது நஸயீயில் இடம் பெற்றுள்ளது. முந்தைய ஹதீஸ் நபி (ஸல்) அவர்கள் மீது சொல்லப்படும் ஸலாம் பற்றிக் குறிப்பிடுகின்றது. இந்த ஹதீஸ் நபி (ஸல்) அவர்களுக்காக நாம் கூறும் ஸலவாத் பற்றிக் குறிப்பிடுகின்றது. ஸலவாத்தை நான் செவியுறுகிறேன் என்றோ, ஸலவாத் கூறும் இடத்திற்கு விஜயம் செய்கிறேன் என்றோ நபி (ஸல்) அவர்கள் கூறவில்லை. “என்னிடம் அது சேர்ப்பிக்கப்படும் என்கிறார்கள். நபி (ஸல்) அவர்களுக்குக் கூட மரணத்திற்குப் பின் இவ்வுலகத்துடன் – இவ்வுலகத்து மாந்தருடன் – நேரடியாக யாதொரு உறவும் கிடையாது என்பது இதன் மூலம் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்படுகின்றது. நபி (ஸல்) அவர்களின் புனித ஆத்மாவின் நிலையே இதுவென்றால் மற்றவர்களின் ஆத்மாக்கள் எப்படி இவ்வுலகுக்கு விஜயம் செய்ய முடியும்? பேய்களாக எப்படி உலா வர முடியும்? பேய்களுக்கு இஸ்லாத்தில் எள்ளளவும் இடமில்லை என்பதற்கு இதுவும் தெளிவான சான்றாக அமைந்துள்ளது. மனிதர்களில் நபிமார்கள் மிகவும் உயர்வானவர்கள் என்றால் அதற்கு அடுத்த நிலையை உடையவர்கள் ஷஹீத்கள் எனும் உயிர்த்தியாகிகளாவர். சத்தியத்தை நிலைநாட்டும் அறப்போரில் தங்கள் இன்னுயிரை ஈந்த அடியார்களின் கடன் தவிர அனைத்துப் பாவங்களும் மன்னிக்கப்பட்டுவிடும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியிருப்பதிலிருந்து இவர்களின் உயர்வான நிலையை அறிந்து கொள்ளலாம். இந்த உயிர்த் தியாகிகளின் ஆத்மாக்களின் நிலையை நபி (ஸல்) அவர்கள் பின்வருமாறு விளக்குகின்றார்கள். ஷஹீத்களின் உயிர்கள் பச்சை நிறத்து பறவைகளின் கூட்டுக்குள் (வைக்கப்பட்டு) சுவனத்தில் விரும்பியவாறு அவை சுற்றித் திரியும். பின்னர் அர்ஷின் அடியில் தொங்கிக் கொண்டிருக்கும் விளக்குகளின் அருகில் அவை நெருங்கும். இறைவன் அவர்களுக்குக் காட்சி தந்து “நீங்கள் விரும்புவது என்ன? என்று கேட்பான். “எங்கள் இறைவா நாங்கள் எதை விரும்புவது? நீ உனது படைப்பினங்களில் எவருக்கும் வழங்காதவற்றை எங்களுக்கு வழங்கியிருக்கிறாயே என்பார்கள். மீண்டும் அதே கேள்வியை இறைவன் கேட்பான். ஏதேனும் கேட்காவிட்டால் இறைவன் விடமாட்டான் என்று அவர்கள் அறிந்து கொண்டபின் “எங்கள் இறைவா! எங்களை மண்ணுலகுக்கு மீண்டும் நீ திருப்பி அனுப்ப வேண்டும். நாங்கள் உனது பாதையில் மீண்டும் போர் புரிய வேண்டும். மீண்டும் ஒரு முறை உன் பாதையில் நாங்கள் கொல்லப்பட வேண்டும் என விரும்புகிறோம் என்பார்கள். உயிர் தியாகத்திற்குக் கிடைக்கும் பரிசுகளைக் கண்டதனால் இவ்வாறு விரும்புவர். அப்போது “திரும்பச் செல்ல இயலாது என்று நான் விதித்துவிட்டேன் என்று இறைவன் கூறி விடுவான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர் : இப்னு மஸ்வூத் (ரலி) நூல் : முஸ்லிம்) இறைவனுக்காகத் தங்கள் உயிரை அர்ப்பணித்தவர்கள் மிகவும் உயர்வான ஒரு காரியத்திற்காக உலகுக்குத் திரும்பி வர அனுமதி கேட்கின்றார்கள். உயர்வான பதவியைப் பெற்றவர்கள் உயர்வான பணிக்காக உலகுக்கு வருவதற்கு அனுமதி கேட்டும் இறைவன் மறுத்து விடுகின்றான். “இறந்தவர்கள் மண்ணுலகுக்கு வர முடியாது என்று விதியாக்கி விட்டேன் என இறைவன் திட்டவட்டமாக அறிவித்து விடுகிறான். இதற்குப் பிறகும் இறந்தவர்களின் ஆவிகள் இவ்வுலகுக்கு வரமுடியும் என்று நம்புகிறீர்களா? அப்படி நம்புவது இஸ்லாமாக இருக்க முடியுமா? மிகவும் உயர்ந்த நிலையை அடைந்துள்ள நபிமார்களின் ஆத்மாக்களும், உயிர்த்தியாகிகளின் ஆத்மாக்களும் கூட திரும்ப வர இயலாது என்பது நிரூபனமான பின் மற்ற ஆத்மாக்கள் எப்படிப் பேய்களாக உலா வர முடியும்? தங்களின் உள்ளங்களில் ஊறிப்போன பேய்கள் பற்றிய நம்பிக்கையை இஸ்லாம் மறுக்கின்றது என்று தெளிவாகத் தெரிந்தவுடன் பேய்களை விரட்டியடித்து விடும் அளவுக்கு உறுதியான ஈமான் உள்ளவர்களும் முஸ்லிம்களில் உள்ளனர். இவர்களுக்கு இதுவரை நாம் எடுத்து வைத்த சான்றுகளே போதுமானதாகும். இதற்கு மேல் இவர்களுக்கு விளக்கம் தேவையில்லை. திருக்குர்ஆனே கூறினாலும், திருத்தூதரே சொன்னாலும் தங்களின் பாரம்பர்யமான ஒரு நம்பிக்கையை விட்டுவிடத் தயங்குபவர்களும் நம்மில் உள்ளனர். அல்லாஹ்வை விடவும் அவனது தூதரை விடவும் இத்தகையவர்களுக்கு இன்னும் ஆயிரம் சான்றுகளைச் சமர்ப்பித்தாலும் இவர்கள் பேய்களின் பிடியிலிருந்து விடுபடப் போவதில்லை. இவர்களை நாம் விட்டு விட வேண்டியது தான். இன்னும் சிலர் இருக்கின்றார்கள். இவர்கள் தங்களின் பாரம்பர்ய நம்பிக்கையையும் விடமுடியாமல், அதே நேரத்தில் நாம் எடுத்துக் காட்டிய பேய்களுக்கு எதிரான சான்றுகளை மறுக்கவும் முடியாமல் தடுமாறிக் கொண்டிருப்பவர்கள். “இரண்டும் கெட்டான் நிலையில் இருக்கும் இத்தகையவர்கள் இரண்டையும் மறுக்காமல் புதிய விளக்கம் அளித்துக் கொண்டிருக்கிறார்கள். பேய்களுக்குப் புதியதொரு இலக்கணத்தை உருவாக்கி வித்தியாசமான கோணத்தில் பேய்களை அறிமுகப்படுத்துகின்றார்கள். பேய்களுக்கு இவர்கள் கூறும் புதிய இலக்கணத்தையும் அலசி ஆராய்ந்து அவர்களுக்கு விளக்கமளிப்பது நமக்கு அவசியமாகி விடுகின்றது. இறந்தவர்களின் ஆவிகள் இவ்வுலகுக்குத் திரும்பவும் வர முடியாது என்பதை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். திருக்குர்ஆனும் நபிமொழிகளும் அவ்வாறு கூறுவதால் அதை நாங்கள் மறுக்க மாட்டோம். ஆயினும் இறந்தவர்களின் ஆவிகள் தான் பேய்கள் என்று நாங்கள் சொல்லவில்லை. ஒவ்வொரு மனிதனிடமும் ஒரு வானவரும், ஒரு ஷைத்தானும் உள்ளனர். மனிதன் இறந்த பின் அவனுடன் இருந்த ஷைத்தான் அவனை விட்டு வெளியேறி சுற்றிக் கொண்டிருக்கிறான். அந்த ஷைத்தான் தான் உயிருடன் உள்ளவன் மேல் ஏறி அமர்ந்து கொண்டு ஆதிக்கம் செலுத்துகின்றான். இதைத்தான் “பேய் என்கிறோம். இது தான் இவர்கள் பேய்களுக்கு அளிக்கும் புதிய இலக்கணம். தங்களின் நம்பிக்கைக்குச் சான்றாக இவர்கள் குர்ஆன் ஹதீஸையே முன்வைக்கிறார்கள். “ஆதமுடைய மக்களிடம் ஷைத்தானுக்கு ஒரு ஆதிக்கம் உண்டு. அது போலவே வானவருக்கும் ஒரு ஆதிக்கம் உண்டு என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி) அறிவிக்கும் இந்த ஹதீஸ் திர்மிதீயில் இடம்பெற்றுள்ளது. இந்தக் கருத்தில் இன்னும் அநேக ஹதீஸ்கள் உள்ளன. இவை மனிதனுக்குள் ஷைத்தானின் ஆதிக்கம் இருந்து கொண்டிருக்கிறது என்பதற்குச் சான்றாகும். வட்டியை உண்போர் (மறுமை நாளில்) ஷைத்தான் தீண்டியவனைப் போல் பைத்தியமாகவே எழுவார்கள். (அல்குர்ஆன் 2:275) இந்த வசனமும், மேற்கண்ட நபிமொழிகளும் மனிதனிடமும் ஷைத்தான்கள் ஊடுருவியுள்ளனர் என்பதற்கும், அந்த ஷைத்தான்கள் இறந்தவனிடமிருந்து வெளிப்பட்டு உயிருடன் உள்ளவனைப் பிடித்துக் கொள்கின்றன என்பதற்கும் சான்றுகளாக உள்ளன என்று இவர்கள் கூறுகின்றனர். இப்படிக் கூறுவதால் இறந்தவர்களின் ஆவிகள் இவ்வுலகுக்கு வரமுடியாது என்பதையும் நாங்கள் மறுக்கவில்லை என்கின்றனர். இவர்களின் வாதங்களும் அந்த வாதங்களை நிலைநாட்டுவதற்காக அவர்கள் எடுத்து வைக்கும் சான்றுகளும் சரியானவை தாமா? இதனை நாம் ஆராயக் கடமைப்பட்டுள்ளோம். “ஒவ்வொரு மனிதனிடமும் ஒரு ஷைத்தானும் ஒரு வானவரும் இருக்கின்றார்கள் என்று இவர்கள் எடுத்து வைத்த நபிமொழி நம்பகமானது தான். ஆனால் இந்த நபிமொழியிலிருந்து அவர்கள் எடுத்து வைக்கும் வாதம் சரியானதல்ல. ஒவ்வொரு மனிதனிலும் ஒரு ஷைத்தானும், ஒரு வானவரும் இருப்பதை மட்டுமே இந்த நபிமொழி கூறுகிறது. ஒருவரிடம் இருந்த ஷைத்தான், அவரது மரணத்திற்குப் பிறகு இன்னொருவரிடமும் சென்று விடுவான் என்பதற்கு இதில் நேரடியாகவோ, மறைமுகமாகவோ எந்த ஆதாரமும் இல்லை. இவர்கள் எடுத்துக் காட்டுகின்ற இந்த நபிமொழியைச் சிந்திக்கும் போது இவர்களது நம்பிக்கைக்கே இது எதிராக அமைந்துள்ளதையும் நாம் உணர முடியும். ஒவ்வொரு மனிதனிடமும் ஒரு ஷைத்தான் இருக்கிறான் என்று அந்த நபிமொழி கூறுகிறது. பேய்கள் பிடித்துவிட்டதாக இவர்களால் நம்பப்படுகின்றவர்களிடம் மட்டும் (இவர்களது வாதத்தின் படி) இரண்டு ஷைத்தான்கள் இருக்கின்றனர் என்று ஆகின்றது. இறக்கும் போதே அவனுடன் இருந்த ஷைத்தானுடன் புதிதாகக் குடியேறிவிட்ட ஷைத்தானையும் சேர்த்து இவனிடம் இரண்டு ஷைத்தான்கள் இருப்பதாக நம்புவது, ஒவ்வொருவரிடமும் ஒரு ஷைத்தான் இருப்பதாகக் கூறுகின்ற நபிமொழிக்கு முரண்படுகின்றது. “பேய்கள் என்பது ஷைத்தான் தான் என்று இவர்கள் கண்டுபிடித்த புதிய இலக்கணமும் சரியானது அல்ல என்பது தெளிவாகின்றது. ஷைத்தான் என்றொரு படைப்பு இருப்பதாகக் கூறும் இஸ்லாம் ஷைத்தானுடைய அலுவல்கள் யாவை? என்பதையும் சொல்லித் தருகின்றது. ஷைத்தானுடைய அலுவல்கள் யாவை? என இறைவனும் அவனது தூதரும் சொன்னார்களோ அந்த அலுவல்களையே அவன் செய்து வர முடியும். ஒரு மனிதனது அறிவை முற்றாக நீக்கி அவன் மீது முழு ஆதிக்கம் செய்வது அவனது அலுவல்களில் ஒன்றல்ல. இவர்கள் தங்கள் கருத்துக்குச் சான்றாக எடுத்து வைத்த நபிமொழியே ஷைத்தானுடைய அலுவலை விளக்கிடப் போதுமானதாக அமைந்துள்ளது. நம் அனைவரிடமும் ஷைத்தான் இருக்கின்ற காரணத்தினால் நாம் நமது அறிவை முற்றிலும் இழந்து விடுவது கிடையாது. நாம் செய்கின்ற காரியம் யாவை? என்பது நமக்கே தெரியாமல் போவது கிடையாது. நம்மோடு ஒரு ஷைத்தான் இருந்தாலும் நாம் நாமாகவே இருக்கின்றோம். நாம் ஷைத்தானாகவே ஆகிவிடுவதுமில்லை. அப்படியானால் நம்முடன் ஷைத்தானும் மலக்கும் இருக்கின்றார்கள் என்பதன் அர்த்தம் என்ன? ஷைத்தான் தீய காரியம் செய்யுமாறு தூண்டுகிறான். அந்த மனிதன் சுய சிந்தனையுடன், தன்னுணர்வுடன் அவனுக்குக் கட்டுப்படுகின்றான். வானவர் நன்மைகளைச் செய்யுமாறு தூண்டுகிறார். அந்த மனிதன் சுய சிந்தனையிடனும் விருப்பத்திடனும் தான் அதனைச் செய்கிறான். இதிலிருந்து ஷைத்தானுடைய அதிகபட்ச ஆதிக்கம் என்னவென்பது தெளிவாகவே தெரிகின்றது. நம்மைத் தவறான பாதையில் நடக்கத் தூண்டி அதைச் சரியானது என நம்ப வைப்பது தான் ஷைத்தானுடைய அதிகபட்சமான ஆதிக்கமாகும். ஒரு மனிதன் நன்மையான எந்தக் காரியமும் செய்யாமல் முழுக்க முழுக்க தீமைகளையே செய்கிறான் என்று வைத்துக் கொள்வோம். இத்தகைய மனிதன் அவனுடனிருக்கின்ற வானவருக்குக் கட்டுப்படாது முற்றிலும் ஷைத்தானுக்கு கட்டுப்பட்டு விட்டான் என்று கூறலாம். ஷைத்தானுக்குக் கட்டுப்பட்டு விட்ட இந்த மனிதன் தன் அறிவையும் சிந்திக்கும் ஆற்றலையும் இழந்து விடுவதில்லை. பைத்தியமாகி விடுவதில்லை. இந்த அடிப்படையைப் புரிந்து கொண்டு இவர்கள் எடுத்து வைக்கும் வாதத்தை நாம் அலசுவோம். இவர்களின் நம்பிக்கைப் பிரகாரம் இரண்டு ஷைத்தான்களைத் தன்னகத்தே கொண்டவன் இரண்டு மடங்கு தீமைகளைச் செய்ய வேண்டும். ஆனால் பேய்ப் பிடித்தவர்கள் (?) இரண்டு மடங்கு தவறுகள் செய்வது கிடையாது. இன்னும் சொல்லப்போனால் பேய் பிடித்தவன் (?) விபச்சாரம் செய்வதில்லை; திருடுவதில்லை; எத்தனையோ தீமைகளை அவன் செய்வதில்லை. உலகத்தில் இருக்கின்ற எல்லாத் தீமைகளையும் அவன் செய்தாலும் கூட இஸ்லாமியப் பார்வையில் அவன் குற்றவாளி அல்ல. சுயசிந்தனையுடன் வேண்டுமென்றே செய்யும் தவறுகளுக்காக மட்டுமே மனிதன் விசாரிக்கப்படுவான். என்ன செய்கிறான் என்றே தெரியாமல் செய்யும் காரியங்கள் நமது பார்வைக்கு தவறு என்று தென்பட்டாலும் அதைச் செய்தவன் குற்றவாளி இல்லை. பைத்தியக்காரன் ஒருவன் தொழாவிட்டாலோ, நோன்பு நோற்காவிட்டாலோ இன்ன பிற கடமைகளிலிருந்து தவறி விட்டாலோ அதற்காக அவன் தண்டிக்கப்பட மாட்டான். “ஒருவனிடம் இருந்த ஷைத்தான் இன்னொருவனிடம் மேலாடுவதே பேய் என்கிற இலக்கணம் சரியானதல்ல என்பதற்கு இதுவும் சான்றாக அமைந்துள்ளது. பேய் பிடிக்காமல் ஒருவன் தவறு செய்தால் அவன் நரகை அடைவான். பேய் பிடித்த பின் அதைச் செய்தால் அவன் நரகை அடைய மாட்டான் எனும் போது ஷைத்தான் அந்த மனிதனுக்கு நன்மையே செய்துள்ளான் என்பது தெளிவு. அனைவரையும் நரகவாசிகளாக ஆக்கும் ஷைத்தான் பேய் பிடித்தவனை மட்டும் சொர்க்கவாசியாக அல்லவா ஆக்கிவிடுகிறான். இது ஷைத்தானுடைய அலுவலுக்கே மாற்றமில்லையா? இது ஷைத்தானுக்கு நஷ்டமில்லையா? இறந்தவர்களின் ஆவியே பேய் என்று சொன்னாலும் அதுவும் சரியானதல்ல. இறந்தவர்களிடம் இருக்கும் ஷைத்தான் வந்து மேலாடுகிறான் என்றாலும் அதுவும் சரியானதல்ல. இரண்டு விளக்கங்களுமே குர்ஆன் ஹதீஸுக்கு மாற்றமானதாகும். பேய் என்பது இறந்தவர்களுடைய ஆவிகளின் ஆதிக்கமன்று. மாறாக இறந்தவர்களிடம் குடிகொண்டிருந்த சாத்தான்கள் உயிருடனுள்ளவர்கள் மீது செலுத்தும் ஆதிக்கமே என்ற கருத்துடையவர்கள் தங்களின் வலுவான ஆதாரமாக 2:275 வது வசனத்தை முன்வைக்கின்றனர். முன்னரே நாம் குறிப்பிட்டபடி அவ்வசனம் “வட்டி உண்போர் ஷைத்தான் பீடிக்கப்பட்டவன் எழுவது போலவே மறுமையில் எழுவார்கள் எனக் கூறுவது இவ்வசனத்திலிருந்து ஷைத்தானால் பீடிக்கப்படுவது என்பது உறுதிப்படுத்தப்படுகிறது என்று இவர்கள் வாதிக்கின்றனர். இவர்களின் இந்த வாதம் பல காரணங்களால் நிராகரிக்கப்பட வேண்டியதாகும். ஷைத்தானால் பீடிக்கப்படுவதாக இவ்வசனம் கூறுவது உண்மை தான். ஷைத்தான்களால் மனிதர்கள் பீடிக்கப்படுகிறார்கள் என்பதும் நிச்சயமான ஒன்று தான். இதில் நமக்கு மாற்றுக் கருத்து எதுவும் கிடையாது. ஷைத்தானால் பீடிக்கப்படுவது என்பதற்கு இவர்கள் வழங்கும் அர்த்தத்திலேயே நமக்கு மாற்றுக் கருத்து உள்ளது. ஷைத்தானால் பீடிக்கப்படுவது என்பதன் பொருளை அறிந்து கொள்ள திருக்குர்ஆனின் ஏனைய வசனங்களையும் நாம் ஆராயும் போது அதன் சரியான பொருள் தெரிய வருகின்றது. ஷைத்தானால் தீண்டப்படுவது என்ற வாசகம் இந்த வசனத்தையும் சேர்த்து மொத்தம் மூன்று இடங்களில் திருக்குர்ஆனில் கையாளப்பட்டுள்ளது. நமது அடியார் அய்யூபை நினைவூட்டுவீராக! “ஷைத்தான் வேதனை யாலும், துன்புறுத்தலாலும் என்னைத் தீண்டி விட்டான்” என்று தமது இறைவனிடம் அவர் பிரார்த்தித்த போது, “உமது காலால் மிதிப்பீராக! இதோ குளிர்ந்த குளிக்குமிடம்! பானம்!” (எனக் கூறினோம்). (அல்குர்ஆன் 38:41,42) 2:575 வசனத்தில் இடம் பெற்ற மஸ் என்ற சொல்லே மேற்கண்ட வசனத்திலும் இடம் பெற்றுள்ளது. அய்யூப் நபியவர்கள் பேய் பிடிக்கப்பட்டிருந்தார்கள் என்று எவரும் இந்த இடத்தில் பொருள் கொண்டதில்லை. (இறைவனை) அஞ்சுவோருக்கு ஷைத்தானின் தாக்கம் ஏற்பட்டால் உடனே சுதாரித்துக் கொள்வார்கள்! அப்போது இவர்கள் விழித்துக் கொள்வார்கள். (அல்குர்ஆன் 8:201) இந்த இடத்திலும் அதே ‘மஸ் என்ற பதமே பயன்படுத்தப்பட்டுள்ளது. இங்கேயும் இறையச்சமுடையோருக்குப் பேய் பிடிக்கும் என்று எவரும் பொருள் கொண்டதில்லை. நம்மை தீமை அனைத்துமே இறைவனால் தான் ஏற்படுகின்றன என்றாலும் தீய மோசமான விளைவுகள் பற்றிக் கூறும் போது ஷைத்தான் தீண்டி விட்டான் எனக் கூறுவதுண்டு. அந்த அடிப்படையிலேயே அய்யூப் நபியவர்கள் தமக்கு ஏற்பட்ட பல சிரமங்களைக் குறிப்பிடும் போது ஷைத்தான் தீண்டி விட்டான் எனக் கூறியுள்ளார்கள். நல்லடியார்களுக்கு ஏதாவது தீய எண்ணம் தோன்றிவிடுவதை ஷைத்தான் தீண்டுவது என இறைவன் குறிப்பிடுவதும் அந்த அடிப்படையிலேயே. ஆக தீமைகளையும் கேடுகளையும் துன்பங்களையும் குறிப்பிடும் போது ஷைத்தானுடைய தீண்டுதல் எனக் கூறப்படுவதுண்டு என்பதை இதிலிருந்து அறியலாம். கஷ்டத்தில் உழல்பவன், தீய காரியங்களில் ஈடுபடுபவன், பைத்தியம் பிடிப்பவன், பரட்டைத் தலையுடன் காட்சி தருபவன், மோசமான கவிதைகளை இயற்றுபவன் இவர்களைப் பற்றியெல்லாம் ஷைத்தான் எனவும் ஷைத்தானால் தீண்டப்பட்டவன் எனவும் கூறப்படும். குர்ஆனிலும் ஹதீஸிலும் இதற்கு ஆதாரம் உண்டு. அந்த அடிப்படையிலேயே 2:275 வசனத்திற்கும் பொருள் கொள்ள வேண்டும். ஒருவனிடம் இருந்த ஷைத்தான் இன்னொருவனிடம் இடம் பெயர்கிறான் என்று பொருள் கொள்ள முடியாது. அப்படி பொருள் கொண்டால் இது வரை நாம் எடுத்துரைத்த குர்ஆன் வசனங்களுடனும், ஹதீஸ்களுடனும் அது முரண்படும் நிலை உருவாகும். எந்த வசனத்தைத் தங்களின் வலுவான ஆதாரமாக இவர்கள் எடுத்து வைக்கின்றார்களோ அந்த வசனத்தில் இவர்களின் கூற்றுக்கு எந்த ஆதாரமும் இல்லை. ஒருவனிடமிருந்த ஷைத்தான் இன்னொருவனுக்குள் புகுந்து கொள்கிறான் என்று இந்த வசனமும் கூறவில்லை. வேறு எந்த வசனமும் கூறவில்லை. மனிதர்களுக்குப் பைத்தியம் பிடிக்க முடியும் என்பதைத் தான் இவ்வசனம் கூறுகின்றது. பைத்தியம் பிடிக்கும் என்பதை நாம் மறுக்கவில்லை. மாறாக பேய் பிடித்தவர்கள் என்று சொல்லப்படுபவர்களில் சில பேர் பைத்தியங்களாக உள்ளனர். பல பேர் நடிப்பவர்களாகவே உள்ளனர் என்றே நாமும் கூறுகிறோம். பேய் இருப்பதாக ஈமான் கொள்பவர்கள், குர்ஆனையும் ஹதீஸையும் ஈமான் கொண்டவர்களாக ஆக முடியாது. குர்ஆனையும் ஹதீஸையும் மறுத்து விட்டுத்தான் பேய்களை நம்ப முடியும். இரண்டில் எதை நம்புவது? என்று சிந்தியுங்கள். “பேய்கள் பற்றிய உண்மையான நிலையை இனி காண்போம். பேய்கள் என்றொரு படைப்பினம் இல்லை. இறந்தவர்களின் ஆவி உயிருள்ளவர் மேல் வந்து ஆதிக்கம் செலுத்துவதும் இல்லை. ஒரு மனிதனிடம் இருந்த ஷைத்தான் அவனது மரணத்திற்குப் பின் இன்னொருவரிடம் வந்து குடியேறுவதுமில்லை என்பதை திருக்குர்ஆன் மற்றும் நபிமொழிகளின் அடிப்படையில் நாம் நிரூபித்தாலும் அதை நம்பாத உள்ளங்களும் இருக்கின்றன. இதற்கு நியாயமான காரணங்களும் அவர்களிடம் உள்ளன. எனவே அந்தத் தரப்பினரின் நியாயமான ஐயங்களை அகற்றினால் மட்டுமே பேய்களை மனித உள்ளங்களிலிருந்து முழுமையாக நீக்க முடியும். நேற்று வரை சாதாரணமாக இருந்த மனிதன் திடீரென்று அசாதாரணமானவனாக மாறி விடுகிறான். அவனது பழக்கவழக்கங்கள் விசித்திரமாக மாறிப் போய் விடுகின்றன; முன்பிருந்ததை விட அவனது பலம் அதிகமாகி விடுகின்றது; இத்தகைய நிலைக்கு ஆளான சிலர் மறைவான சில விஷயங்களைக் கூட அறிவிக்கின்றனர். இதற்கு முன் அறிந்திராத மொழிகளைக் கூட சில பேர் பேசி விடுகின்றனர்; பயந்த சுபாவம் கொண்ட இத்தகையோர் அடியோடு அச்ச உணர்வு நீங்கியவர்களாகி விடுகின்றனர். இன்னும் பல வியப்பூட்டும் மாறுதல்கள் அவர்களிடம் ஏற்பட்டு விடுகின்றன. இவையெல்லாம் மனித சக்தியை மிஞ்சக் கூடிய ஒரு சக்தியால் மட்டுமே சாத்தியம். அதனையே பேய்கள் என்கிறோம் என்பது இவர்களது நியாயமான சந்தேகம். மற்றொரு சந்தேகமும் கூட உண்டு. பேய் பிடித்ததாக நம்பப்படுவோருக்கு எவ்வளவோ உயர்வான மருத்துவ சிகிச்சையளித்தும் நிவாரணம் கிடைக்காமல் ஒரு சாமியாரிடம், ஒரு மந்திரவாதியிடம், ஒரு பூசாரியிடம், ஒரு மௌலவியிடம் மந்திர சிகிச்சைப் பெற்றதும் உடனடி நிவாரணம் கிடைக்கின்றது. மேலும் அந்தப் பேய்களே தாங்கள் ஓடி விடுவதாகக் கூறி விட்டு ஓடிப் போகின்றன. மருத்துவத்தால் ஆகாதது மந்திரத்தால் ஆகிறது என்பது பேய்கள் இருப்பதை உறுதிப்படுத்துகின்றது. தர்காக்கள் மற்றும் கோயில்களில் அதிசயமான முறையில் அவர்கள் குணப்படுத்தப்படுகின்றார்கள். “ஆபரேஷன் உட்பட பலவித முறைகளால் தர்காக்களில் குணப்படுத்தப்படுகின்றனர். இதுவும் பேய்கள் இருப்பதை மேலும் உறுதி செய்கின்றது என்று இத்தகையோர் கூறுகின்றனர். இந்த அதிசயங்களின் புதிரை விடுவிக்காமல் எடுத்து வைக்கப்படும் சான்றுகள் முழுமையான பலனையளிக்காது. எனவே இந்த அதிசயங்கள் பற்றிய புதிரை நாம் முதலில் விடுவிக்க வேண்டும். இது பற்றிக் கடுகளவு கூட சந்தேகம் இராத அளவுக்கு இது பற்றி நாம் ஆராய்வோம். சமூக விரோதிகளும் குற்றங்களில் ஈடுபடுவோரும் தங்களைக் காத்துக் கொள்வதற்குப் பேய்களைப் பற்றி மக்கள் நம்புவது வசதியாக இருக்கிறது. இத்தகையோர் பேய்களைப் பற்றி கதைகளைக் கட்டிவிட்டு தாங்கள் நினைத்ததைச் சாதித்துக் கொள்கின்றனர். உதாரணமாக ஒரு இடத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சினாலோ அல்லது கடத்தலில் ஈடுபட்டாலோ அது பிறரால் கண்டு கொள்ளப்படக் கூடாது என்பதற்காக அந்த இடங்களில் பேய்கள் நடமாடுவதாக கதை கட்டும் அவசியம் இவர்களுக்கு ஏற்படுகின்றது. வேறு எந்த வகையான பாதுகாப்பு நடவடிக்கைகளையும் விட இது செலவு குறைந்ததாகவும் முழுப் பயனளிக்கக் கூடியதாகவும் அமைந்துள்ளது. ஒரு இடத்தில் பேய்கள் நடமாடுவதாக செய்திகள் பரவும் போது அந்த இடத்திற்கு காவல் துறையினர் கூட செல்வதற்கு அச்சப்படுவர். எவராலும் நெருங்க முடியாத பாதுகாப்பு வளையத்தை பேய்கள் ஏற்படுத்துகின்றன. தங்களின் ஏஜன்டுகள் மூலம் இப்படி வதந்திகளைப் பரப்புவதுடன் கூட இவர்கள் நின்று விடுவதில்லை. வதந்திகளை உண்மைப்படுத்தும் விதமாக சில ஏற்பாடுகளையும் செய்கின்றனர். இரவு நேரங்களில் சலங்கையொலியை ஏற்படுத்துதல், நள்ளிரவில் கற்களையும் மற்ற பொருட்களையும் வீடுகளின் மேல் வீசுதல், தீப்பந்தங்களைக கொளுத்தி பயமுறுத்துதல் இன்னும் பலவாறான ஏற்பாடுகளைச் செய்து அரைகுறை தைரியசாலிகளையும் அதைரியப்படுத்தி வீடுகளில் முடங்கச் செய்வர். இத்தகைய ஏற்பாடுகளால் உண்மையிலேயே பேய்கள் இருப்பது போன்ற தோற்றத்தை இந்தச் சமூக விரோதிகள் ஏற்படுத்தி விடுகின்றனர். எங்கெல்லாம் பேய்கள் நடமாட்டம் பற்றிப் பேசப்படுகின்றதோ அங்கெல்லாம் துணிவுடன் சென்று ஆராய்ந்தால் அங்கே சமூக விரோதக் காரியங்கள் நடப்பதைக் கண்டு கொள்ளலாம். அற்பமான நோக்கங்களுக்காகக் கூட பேய்கள் பற்றிய வதந்திகள் கிளப்பப்படுவதுண்டு. ஒருவருக்குச் சொந்தமான இடத்தைக் குறைவான விலைக்கு வாங்க வேண்டும் என்று விரும்பினால் அல்லது வாடகைக்கு குடியிருப்பவரைக் காலி செய்ய விரும்பினால் பேய்களை விட எளிய வழி எதுவும் இல்லை. அந்த இடத்தில் பேய்கள் நடமாடுவதாக வதந்திகளைப் பரப்பி விட்டு, அதை உறுதிப்படுத்தும் விதமாக சில காரியங்களைச் செய்தால் விரும்பிய விலைக்கு அந்த இடத்தை வாங்கலாம். வாடகைக்கு இருப்பவரை உடனேயே காலி செய்து விடலாம். இது போன்ற அற்பமான நோக்கங்களைக் கருத்தில் கொண்டும் பேய்கள் நடமாட விடப்படுகின்றன. இவையெல்லாம் சில உதாரணங்களே. இது போன்ற இன்னும் அநேக காரணங்கள் பேய்களுக்குப் பின்னணியாக இருக்கின்றன. இனி.. பேய் பிடித்ததாகச் சொல்லப்படுபவரிடம் அதிசயங்கள் நிகழ்வது எப்படி? என்ற புதிரை விடுவிப்போம். நேற்று வரை சாதாரமானவனாக இருந்த ஒருவன் பேய் பிடித்ததாக நம்பப்படும் போது அசாதாரணமானவனாக எப்படி மாறி விடுகின்றான்? இந்தப் புதிரை நாம் விடுவித்தாக வேண்டும். நாய் வேஷம் போட்டால் குறைத்துத் தான் தீர வேண்டும். இந்த ஒரு வரியில் விளங்க முடியாதவர்கள் மட்டும் இனிவரும் விளக்கத்தை படிக்கலாம். மற்றவர்களைப் பயமுறுத்துவதற்காகவும் அதன் மூலம் சில காரியங்களைச் சாதித்துக் கொள்வதற்காகவும் பேய்க் கதைகள் கட்டி விடப்படுவது போலவே வேறு சில காரியங்களைச் சாதித்துக் கொள்வதற்காக தங்களுக்கே பேய் பிடித்து விட்டதாக நடிப்பவர்களும் உண்டு. அவ்வாறு நடிப்பதால் சில காரியங்களை அவர்கள் சாதித்துக் கொள்வதும் உண்டு. இப்படி பேய் பிடித்து விட்டதாக நடிப்பவர்கள் அசாதாரணமானவராகவும் நடித்து தீர வேண்டியுள்ளது. இல்லாவிட்டால் பேய் வேஷத்தினால் அவர்கள் முழுப்பயனை அடைய முடியாது. இதைச் சில உதாரணங்கள் மூலம் உணர முடியும். ஒரு பெண் நீண்ட நாட்களாகத் திருமணம் ஆகாமல் இருப்பதாக (நீண்ட நாட்கள் கணவனைப் பிரிந்தவளாக இருப்பதாக) வைத்துக் கொள்வோம். இவள் இறைவனை அஞ்சி தன் உணர்வுகளைக் கட்டுப்படுத்திக் கொள்ளக் கூடியவள் என்றால் பிரச்சனையில்லை. அவ்வாறின்றி, அன்னிய ஆடவனை விரும்பி விட்டால் என்றால் – அவனை அவள் அடைவதற்கு குடும்பத்தினர்களின் கட்டுப்பாடு தடையாக இருந்தால் அதை எவ்வாறேனும் உடைக்கவே முயற்சிப்பாள். அத்தகைய பெண் சாதாரண நிலையில் நள்ளிரவில் வீட்டை விட்டுப் போய் விரும்பிய ஆடவனைச் சந்தித்து வீட்டிற்கு திரும்பினால் சமூகம் அவளைச் சும்மா விடாது. இந்தத் தடையை உடைப்பதற்கு அவள் பேயாக மாற வேண்டும். பானை சட்டிகளை உடைக்க வேண்டும். வாயில் வந்ததை உளற வேண்டும். நமக்குத் தெரியாத விஷயங்களைக் கற்பனை செய்து மறைவான செய்திகளைக் கூறுவதாக அவிழ்த்து விட வேண்டும். வேறு மொழி பேசுகிறாளோ என்று மற்றவர்கள் கருதும் அளவுக்கு வாயில் வந்தவாறு உளற வேண்டும். இதையெல்லாம் செய்துவிட்டு அவள் நள்ளிரவில் எழுந்து வெளியே சென்று விரும்பிய ஆடவனைச் சந்தித்து விட்டுத் திரும்பினால் சமூகம் அவளது நிலைக்காகப் பரிதாபப்படும். இதனால் தான் அசாதாரணமானவளாக அவள் ஆகி விடுகின்றாள். இது ஒரு உதாரணமே, வேறு பல நோக்கங்களுக்காகவும் இது போல் வேஷம் கட்ட வேண்டிய நிலையில் பலர் இருக்கின்றனர். பெருமளவு கடன்பட்டவன் கடன் கொடுத்தவர்களிடமிருந்து தப்பிக்கவும், விரைவிலேயே தனக்குத் திருமணம் செய்யும் முடிவுக்குப் பெற்றோர்களைக் கொண்டு வரவும், இன்ன பிற நோக்கங்களுக்காகவும் இப்படி நாடகமாடுவதுண்டு. அவர்கள் அசாதாரணமானவர்களாகக் காட்சி தருவது நடிப்புத் தான் என்பதில் ஐயம் தேவையில்லை. இதற்குச் சில சான்றுகளையும் அறிந்து கொள்வோம். இலங்கையில் ஒருவர் – மலையாள மொழி அறியாத ஒருவர் – பேய் பிடித்தவுடன் மலையாளம் பேசுவதாக மக்கள் பரவலாகப் பேசிக் கொண்டனர். அவரைச் சோதிப்பதற்காக டாக்டர் கோவூர் என்பவர் செல்கிறார். இவரது தாய்மொழி மலையாளம். இவர் சென்று அவர் பேசும் மலையாள மொழியைக் கேட்ட போது அதில் ஒரு வார்த்தையும் மலையாளச் சொல்லாக இருக்கவில்லை. வெறும் உளறலைத் தவிர வேறு இல்லை. (பார்க்க: டாக்டர் கோவூரின் மனக்கோலம்) பேய் பிடித்ததாக நம்பப்படுபவன் மலையாளம் பேசுகிறான். அரபியில் பேசுகிறான் என்றெல்லாம் முடிவு செய்கின்ற மக்களுக்கு அந்த மொழிகள் தெரியாது. தாங்கள் மொழி அல்லாத வேறு எந்த மொழியிலும் சேராத உளறல்களைக் கேட்டு அதற்கு ஒரு பெயரைச் சூட்டி விடுகிறார்கள் இது தான் உண்மை. ‘மாயம்மா என்றொரு பெண். இளம் விதவையான அவளுக்குப் பேய் பிடித்துள்ளது என்று ஊரே அனுதாபம் காட்டுகின்றது. சில இளைஞர்கள் நள்ளிரவில் அவள் பேயாக (?) வெளியே வரும் போது பின்தொடர்ந்து சென்றால் ஊருக்கு ஒதுக்குப் புறமாக மற்றொரு ஆடவனுடன் அவள்! (ஜுனியர் விகடனில் கி. ராஜ் நாராயணனின் கரிசல் காட்டுக் கடுதாசி) ஒரு பெண்ணுக்குப் பேய் பிடிக்க அவளுக்கு மொட்டை அடிக்க முற்பட்ட போது பேய் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டது. (சில மாதங்களுக்கு முந்தைய மறுமலர்ச்சி) எந்த நோக்கத்திற்காக பேய் வேஷம் போடுகிறாளோ அதற்கு அழகிய கூந்தல் வேண்டும். மொட்டை அடித்தால் எவரும் சீண்ட மாட்டார்கள். அதனால் தான் பேய் ஓடிவிடுகின்றது. இது நடிப்புத் தான் என்பதற்கும் – பேய்கள் கிடையாது என்பதற்கும் மேலும் சில அறிவுப்பூர்வமான சான்றுகளையும் அறிந்து கொள்வோம். இறந்தவர்களின் ஆவிகள் தான் பேய்கள் என்பது உண்மையானால் பேய்கள் உலகளாவிய ஒரு பிரச்சனையாக இருக்க வேண்டும். எங்கெல்லாம் மனிதர்கள் மரணிக்கின்றார்களோ – எங்கெல்லாம் அடக்கம் செய்யப்படுகின்றார்களோ – எங்கெல்லாம் எரிக்கப்படுகின்றார்களோ அங்கெல்லாம் பேய்கள் நடமாட்டம் இருந்தாக வேண்டும். ஆனால் மூடநம்பிக்கை மலிந்துள்ள இந்தியா போன்ற நாடுகளைத் தவிர உலகின் பல பகுதிகளில் பேய்களுக்கு அறவே இடமில்லை. கம்யூனிஸத்தின் பிடி இருக்கமாக உள்ள நாடுகளில் பட்டிதொட்டிகள் முதல் பெருநகரம் வரை எவருக்கும் பேய் பிடிப்பது கிடையாது. சவூதி அரேபியா போன்ற பகுதிகளிலும் பேய்களைக் காண முடிவதில்லை. இந்தியாவில் கூட மிகப்பெரும் நகரங்களில் பேய்களின் அதிகாரம் செல்லுபடியாவதில்லை. அங்கெல்லாம் மனிதர்கள் மரணிக்கத் தான் செய்கின்றனர். பேய்களின் உற்பத்தித் தலங்களாகக் கருதப்படும் சுடுகாடுகளும், கல்லறைகளும் இருக்கத் தான் செய்கின்றன. பேய்களுக்குரிய எல்லா வசதிகளும் செய்யப்பட்டிருந்தும் அங்கெல்லாம் பேய்கள் இல்லாமலிருப்பதை நாம் சிந்திக்க வேண்டும். அங்குள்ள மக்களுக்கு பேய்கள் பற்றிய நம்பிக்கை இல்லாததால் பேய் வேஷம் அங்கே எடுபடுவதில்லை. பேய் வேஷம் போட்டு எதையும் அங்கே சாதிக்க முடிவதில்லை என்பதைத் தவிர இதற்கு வேறு காரணம் எதுவுமில்லை. சட்டதிட்டங்களோ, கட்டுப்பாடுகளோ இல்லாத ஐரோப்பிய நாடுகளிலும் பேய்களுக்கு அவ்வளவு இடமில்லை. காரணம் அங்குள்ளவர்கள் எத்தகைய தகாத உறவிலும் பேய் வேஷம் போடாமலேயே ஈடுபட முடியும். ஒரு பெண் விரும்பிய ஆடவனும் விரும்பிய நேரத்திலும் சுற்ற முடியும். அதை அந்தச் சமூகம் தவறாக எடுத்துக் கொள்வதில்லை. பேய் வேஷம் போடாமலேயே காரியத்தைச் சாதித்துக் கொள்ள வழியிருப்பதால் அங்குள்ளவர்கள் பேய்களின் துணையை நாடுவதில்லை; அதற்கு அவசியமும் இல்லை. இறந்தவர்களின் ஆவிகளைப் பேய்கள் எனும் அடிப்படையில் பார்க்கும் போது பேய்கள் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டிருக்க வேண்டும். நூறு ஆண்டுகளுக்கு முன்னால் இறந்தவர்களின் எண்ணிக்கை மொத்தம் 500 கோடி என்றால் இன்று மேலும் 100 கோடி அதிகமாகியிருக்க வேண்டும். ஒவ்வொரு நாளும் பலநூறு பேய்கள் அதிகமாகும் போது அவற்றின் அட்டகாசங்களும் அதிகமாகி இருக்க வேண்டும். அவ்வாறு பேய்களின் அட்டகாசங்கள் அதிகமாகியுள்ளனவா? என்றால் நிச்சயமாக இல்லை. ஐம்பது ஆண்டுகளுக்கு முன் பேய் பிடித்தவர்களின் எண்ணிக்கையை விட இன்று பேய் பிடித்தவர்களின் எண்ணிக்கை எவ்வளவோ குறைந்துள்ளது. இதுவும் பேய்கள் இல்லை என்பதற்குச் சான்றாக உள்ளது. பேய்கள் மனிதனை விட அதிக வல்லமை கொண்டவை. ஒரே அடியில் அவை மனிதனை வீழ்த்தி விடக்கூடிய ஆற்றல் கொண்டவை என்றெல்லாம் பேய் நம்பிக்கையாளர்கள் எண்ணுகிறார்கள். இவ்வளவு வல்லமை மிக்க பேய்கள் ஒரு மனிதன் தனியாகச் செல்லும் போது பிடித்துக் கொண்டதாகத் தான் பேசப்படுகின்றதே அன்றி கூட்டமாக இருப்பவர்களைப் பிடித்ததாக எங்கேயும் பேசப்படுவதில்லை. ஐந்தாறு பேர் ஒரு சுடுகாட்டை அல்லது கல்லறையைக் கடந்து சென்றாலும் அங்குள்ள பல்லாயிரக்கணக்கான பேய்கள் இவர்களை அண்டுவதில்லை என்பதையும் நாம் கேள்விப்படுகிறோம். பேய்கள் உண்மையிலே இருக்குமானால் இவர்களை ஏன் தாக்குவதில்லை? இருட்டில் மாத்திரம் ஆதிக்கம் செலுத்தும் பேய்கள் வெளிச்சத்தில் வருவதில்லையே அது ஏன்? இந்தக் கேள்விக்கெல்லாம் பதில் ஏதும் கிடையாது. இருட்டாக இருக்கும் போது எதையாவது பார்த்து விட்டு பேய் என்று மனிதன் நினைத்துக் கொள்கின்றான். நல்ல வெளிச்சத்தில் ஒவ்வொரு பொருளும் அதன் உண்மையான வடிவத்தில் காட்சி அளிப்பதால் வெளிச்சத்தில் பேய்களை யாரும் பார்க்க முடியவில்லை. இது போலவே தனியாக ஒரு பெண் செல்லும் போது தைரியம் குறைந்த நிலையில் இருக்கிறாள். அப்போது அவள் கண்களுக்குக் கற்பனைத் தோற்றம் தெரிகிறது. ஐந்தாறு பேருடன் செல்லும் போது ஒருவளுக்கு மட்டும் கற்பனையாக ஏதும் தோன்றினாலும் மற்றவர்கள் அப்படி எதுவும் தோன்றவில்லையே என்று கூறி விடுகிறார்கள். உண்மையாக இருந்தால் ஐந்து பேருக்கும் தென்பட வேண்டும். பொய்யாக இருப்பதால் தான் ஒருத்திக்கு மட்டும் அப்படித் தோன்றுகிறது என்பதை இதிலிருந்து தெளிவாக அறிந்து கொள்ள இயலும். பேய்கள் என்று ஆட்டம் போடுபவர்களில் 90 சதவிகிதம் பேர் நடிப்பவர்களே, அதன் மூலம் எதையோ சாதித்துக் கொள்ள விரும்புபவர்களே என்பதை இதன் மூலம் அறியலாம். இந்த இடத்தில் நியாயமான ஒரு சந்தேகம் பலருக்கும் உண்டு. எவ்வளவோ மருத்துவம் செய்தும் குணமடையாத இத்தகையோர் ஒரு சாமியாரின் விபூதியைக் கண்டவுடன் – வேப்பிலையைக் கண்டவுடன் ஓம் ரீம் என்ற மந்திரத்தைக் (?) கேட்டவுடன் எவ்வாறு அடங்கி விடுகின்றனர்? மவ்லவிகள், தங்கள்மார்கள் ஆகியோர் மந்திரித்தவுடன் – தண்ணீர் ஓதி முகத்தில் தெளித்தவுடன் அல்லது துணியில் எதையாவது எழுதி அதை எரித்து அந்தப் புகையை முகரச் செய்தவுடன் ‘விட்டுவிடு இனி வரமாட்டேன் என்று கூறிக் கொண்டு பேய்கள் ஓடுகின்றனவே, இது எப்படி? ஒரு பாதிரியாரின் தாயத்தை அணிந்தவுடன் அலறிக் கொண்டு பேய்கள் ஓட்டமெடுப்பது எவ்வாறு? இது தான் அந்த நியாயமான சந்தேகம். பேய்கள் பிடித்துள்ளதாக நடிப்பவர்கள் இந்தச் சந்தர்ப்பத்தில் அலறிக் கொண்டு ஓடுவதாகவும் நடித்தாக வேண்டும். மந்திரத்துக்கு அடங்காவிட்டால் பேய் பிடித்ததை மற்றவர்கள் நம்ப மாட்டார்கள். இந்தச் சாமியார்களோ, பாதிரிகளோ அல்லது தங்கள்மார்களோ ஜபிக்கும் போது பேய் பிடித்தவர்களிடம் எந்த விளைவும் ஏற்படவில்லையென்றால் பிடித்திருப்பது பேயல்ல என்று மக்கள் நினைப்பதுடன் பேயோட்டிகளே “பேயில்லை நோய்தான் என்று சான்று வழங்கி விடுவார்கள். அதன் பிறகு பேய் வேஷம் போட்டதனால் எதிர்பார்த்த பலனை அடைய முடியாது. பேயோட்டிகளே ‘பேய் பிடித்துள்ளது என்று சர்டிபிகேட் வழங்குபவர்களாக உள்ளதால் அவர்களது ஜபத்திற்கு ஏதேனும் எதிர் விளைவைக் காட்டியாக வேண்டும். இதனால் தான் எல்லா மந்திரவாதிகளுக்கும் (?) பேய்கள் அடிபணிகின்றன. இதை யார் வேண்டுமானாலும் சோதித்து அறிய முடியும். பேய் பிடித்ததாக நம்பப்படுபவனின் முன்னால் பேயோட்டி போல் சென்று அமர்ந்து கொண்டு பேயோட்டும் திறமை உங்களுக்கு இருப்பதாக நம்பச் செய்யுங்கள். அதன் பிறகு உங்கள் வாய்க்குள்ளாக ‘அறிவு கெட்ட மடையா! யாரை ஏமாற்றுகிறாய்….! என்பது போல் எதையாவது கூறி ஓதுவது போல் பாவனை செய்து தண்ணீரில் ஊதித் தெளித்தால் அப்போதும் அந்தப் பேயிடம் எதிர் விளைவைக் காணலாம். பேய் பிடித்ததாகக் கூறுவது எப்படி நடிப்பாக உள்ளதோ, மந்திரத்தைக் கேட்டதும் அது விலகுவதாக அலறுவதும் நடிப்புத் தான். இது வரை நாம் எடுத்து வைத்த சான்றுகள் பேய்கள் கிடையாது என்பதையும் பேய் பிடிப்பதும் அவற்றின் நடமாட்டமும் திட்டமிட்ட நாடகமே என்பதையும் நிரூபிக்கப் போதுமானவையாக உள்ளன. ஆயினும் பேய்கள் இருக்குமோ என்ற தடுமாற்றத்தை ஏற்படுத்தும் இன்னும் சில ஐயங்களும் உள்ளன. அவற்றையும் அப்புறப்படுத்தாத வரை பேய் நம்பிக்கையை ஒழிக்க முடியாது. அத்தகைய ஐயங்களையும் அது பற்றிய தெளிவையும் காண்போம். பேய் பிடித்ததாக நம்பப்படுபவர் அதற்கு முன்னால் அவர் அறிந்திராத மறைவான செய்திகளையெல்லாம் அறிவிக்கக்கூடிய நிலையை நாம் காண்கிறோம். உதாரணமாக இருபத்தி ஐந்து வயதுடைய இளைஞனுக்கு பேய் பிடித்ததாக வைத்துக் கொள்வோம். அதாவது ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால் மரணித்தவரின் ஆவி வந்து இவனைப் பிடிப்பதாக வைத்துக் கொள்வோம். இவனுக்குப் பேய் பிடிப்பதற்கு முன்னால் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு நடந்தவை தெரியாமலிருந்து இப்போது ஐம்பது ஆண்டுகளுக்கு முந்தைய பேய் பிடித்துக் கொண்டவுடன் மளமளவென்று ஐம்பது ஆண்டுகளுக்கு முன் நடந்தவைகளை அவன் கூற ஆரம்பித்து விடுவதைக் காண்கிறோம். இது போலவே மதுரையில் உள்ள ஒருவனை நாகர்கோவிலில் உள்ள பேய் பிடிப்பதாக வைத்துக் கொள்வோம். இப்போது இந்தப் பேய் பிடித்தவன் நாகர்கோவிலில் நடந்த விபரங்களைக் கூறுகிறான். பேய் பிடிப்பது என்பது ஒரு நாடகம் என்றால் இந்த அதிசய வல்லமை எப்படி அவனுக்கு ஏற்படுகின்றது? என்று பேய் நம்பிக்கையாளர்கள் வினா எழுப்புகின்றனர். இப்படி ஒரு நம்பிக்கை அவர்களின் உள்ளத்தில் ஆழமாக வேரூன்றியிருக்கும் போது எந்த ஆதாரங்களும் அவர்களை அசைத்து விட முடியாது. எனவே இதன் உண்மை நிலையை நாம் வெளிச்சம் போட்டுக் காட்டுவோம். பேய் பிடித்தவரிடம் இத்தகைய ஆற்றல் ஏற்பட்டு விடுவது போல தோன்றுவது பொய்த் தோற்றமே தவிர உண்மை அல்ல. இதைப் பலரும் உணர்வதில்லை. 25 வயதுடைய இளைஞன் பேய் பிடித்ததும் ஐம்பது ஆண்டுகளுக்கு முந்தைய செய்திகளைக் கூறுவதும் நடிப்புத் தான். அவன் கூறுவது போல் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால் ஏதும் நடந்தே இராது. ஐம்பது ஆண்டுகளுக்கு முன் நடந்ததை விசாரித்தறிய பின்னோக்கிச் செல்ல முடியாது என்பதாலும் தனது சாயம் வெளுக்காது என்ற தைரியத்தாலும் இவன் உளறிக் கொட்டுகிறான். அவன் மறைவான சங்கதிகளைக் கூறுகிறான் என்று பேய் ஆதரவாளர்கள் முடிவு செய்து விடுகின்றனர். கடந்த காலம் பற்றி இப்படி கண்டதையும் கூறும் வசதியை பேய் பிடித்தவர்கள் மட்டுமே பயன்படுத்த முடியும். அவர்கள் உளறும் போது மட்டுமே மக்கள் அதை நம்புவார்கள். பேய் பிடிக்காதவர்கள் கடந்த காலம் பற்றி கூறினால் எவருமே நம்ப மாட்டார்கள். பேய் பிடித்தவர்களிடம் வந்துள்ள பேய்கள் கடந்த காலத்தை அறிந்துள்ளன; பேய்கள் அவற்றை நமக்கு அறிவிக்கின்றன என்ற நம்பிக்கை சமூகத்தில் ஆழமாகப் பதிந்துள்ளதால் கடந்த காலம் பற்றி எதை வேண்டுமானாலும் கூற முடிகின்றது. அதை நம்புவதற்கும் ஆட்கள் உள்ளனர். கடந்த காலம் பற்றியெல்லாம் அறியும் ஆற்றல் பேய் பிடித்தவர்களுக்கு எற்படுவது உண்மையானால் நிகழ் காலத்தை அறிவது அதை விட எளிதானதாக இருக்க வேண்டுமல்லவா? நிகழ்காலம் பற்றி எதையேனும் கேட்டுப் பாருங்கள்! அவர்கள் விடையளிக்க மாட்டார்கள். உங்கள் கைகளில் எதையாவது மறைத்து வைத்துக் கொண்டு இதில் என்ன உள்ளது? என்று கேட்டால் அவர்களால் அதைக் கூற முடியாமல் போவது ஏன்? இதைத் தான் நாம் சிந்திக்கத் தவறி விடுகிறோம். நமது கையில் மறைந்திருப்பதைப் பற்றி அவர் வாயில் வந்தவாறு விட்டு அடிக்க முடியாது. ஏனெனில் உடனேயே நாம் அவரது கூற்று உண்மையா? பொய்யா? என்பதைக் கண்டுபிடித்து விடுவோம். அது போல் பத்து நிமிடத்துக்குப் பின்னால் என்ன ஏற்படும்? என்ற விஷயத்தைப் பற்றி பேய் பிடித்தவனிடம் கேளுங்கள். அதற்கும் விடை வராது. ஒரு நாளைக்கு முன் அல்லது ஐந்தாறு நாட்களுக்கு முன் அல்லது சில மாதங்களுக்கு முன் நடந்தவை பற்றி மூச்சு விடுவதில்லை. எனெனில் இதைப் பற்றி விசாரித்தறிந்து பேய் பொய் கூறுகிறது என்பதை நாம் கண்டுபிடித்து விடுவோம். சென்ற காலத்தில் (எந்தச் சென்ற காலம் பற்றி விசாரித்தறிய முடியாதோ) எது நடக்கும் போது பலரும் சம்பந்தப்பட்டிருக்கவில்லையோ அது போன்ற காலம் பற்றியும் – அது போன்ற சம்பவம் பற்றியும் மட்டுமே பேய்கள் கூறுவது ஏன்? இதைச் சிந்தித்தால் உண்மை விளங்கும். பேய் பிடித்ததாக நடிப்பவர்கள் திட்டமிட்டு திறமையாக நடிப்பதால் ஆற்றல் மறைந்து கிடப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி விடுகின்றனர். இது தான் உண்மையாகும். இதை இன்னும் விரிவாக அறிந்து கொள்ள இன்னொரு விதத்தில் நாம் சோதித்துப் பார்க்கலாம். அதாவது ஒரு மனிதன் தன் கண் முன்னே நடப்பதை மட்டுமே அறிய முடியும். அவனது முதுகுக்குப் பின்னால் நடக்கும் எதையும் அவனால் அறிய முடியாது. இது மனிதனின் நிலை. ஆனால் பேய்கள் உருவமற்றவை. அவற்றுக்கு முதுகுப்புறம் முன்புறம் பின்புறம் எல்லாம் கிடையாது. இவ்வாறிருக்க பேய் பிடித்தவரின் முதுகுக்குப் பின்னால் இரண்டு விரல்களைக் காட்டி இது எத்தனை விரல்கள்? என்று கேட்டால் கூட சொல்ல முடிவதில்லை. பேய் பிடித்தவரின் கண்களையும் கட்டி விட்டு அருகில் நடப்பதைக் கேட்டால் அதையும் சொல்ல முடிவதில்லை. பார்ப்பதற்கு மனிதனுக்குத் தான் கண்கள் வேண்டுமே தவிர பேய்களுக்குக் கண்கள் தேவையில்லையே. அப்படியானால் ஏன் பேய்களால் இதைச் சொல்ல முடிவதில்லை? இந்த இடத்தல் தான் இதுவொரு நாடகம் என்பது தெளிவாகின்றது. பேய் பிடித்த மனிதனது கண்களும் அவனது காதுகளும் கட்டப்பட்டதும் பேய்களுக்கு பார்க்கவோ கேட்கவோ முடியாமல் போவதிலிருந்து பார்ப்பதும் கேட்பதும் பேசுவதும் இந்த மனிதன் தான்; பேய் கிடையாது என்பதை நிரூபிக்கின்றது. பேய் பிடித்ததாகக் கூறுவது நடிப்பின் ஒரு காட்சி என்றால் மறைவான கடந்த கால நிகழ்ச்சி பற்றிக் கூறுவது நடிப்பின் மற்றொரு காட்சி என்பதைத் தவிர வேறில்லை. இது திட்டமிட்ட நடிப்புத் தான் என்பதில் இன்னும் சந்தேகம் இருந்தால் இன்னொரு சோதனையின் மூலம் அதை நீக்கிக் கொள்ள முடியும். உயிரோடு இருக்கும் மனிதனிடம் பேய்கள் வந்து விடுமானால் ஏற்கனவே பெற்றிருந்த வல்லமையை விட கூடுதல் வல்லமை பெறுகின்றான் என்பது பேய் நம்பிக்கையாளரின் முடிவு. பேய் பிடித்ததாக நம்பப்படும் நிராயுதபாணியான ஒருவனிடம் ஒரு கத்தியை அல்லது கழியைக் காட்டி அவனை அடிக்க முயன்றால் அவன் அலறுவதைக் காண்கிறோம். சாதாரண மனிதனை விட சக்தி வாய்ந்த பேய் அவனிடம் குடி கொண்டிருப்பது உண்மையானால் அவன் என்ன செய்ய வேண்டும்? இந்த ஆயுதங்களைக் கண்ட பின்பும் அஞ்சாமல் எதிர்க்க வேண்டும். நம்மை வெற்றி கொள்ள வேண்டும். அது தான் முடியாவிட்டாலும் அந்த மனிதனிடமே உள்ள பேய் அவனிடமிருந்து பாய்ந்து நம்மீது ஆதிக்கம் செலுத்த வேண்டும். இப்படியெல்லாம் எங்கேயும் நடந்ததில்லை. அப்படியானால் மிரள்வதும் அரள்வதும் அந்த மனிதன் தானே தவிர பேயில்லை என்பது தெளிவாகின்றது அல்லவா! சில பேர் மிரளாமலும் இருப்பார்கள். எனெனில் மிரட்டுபவர் தன்னை அடிக்க மாட்டார் என்று திட்டவட்டமாகத் தெரியும் போது தான் இந்த நிலை. மிரட்டக் கூடியவர் நிச்சயம் அடிப்பார் என்று தெரிந்தால் அப்போது நிச்சயம் மிரள்வார். சிலர் மிரட்டும் போது மிரளாமல் இருப்பதும், வேறு சிலர் மிரட்டும் போது மிரள்வதும் அதனால் தான். பேய் நம்பிக்கையாளரின் இந்தச் சந்தேகம் அடிப்படையில்லாததாக இருப்பதும் உறுதியாகின்றது அல்லவா! இவர்களின் மற்றொரு ஐயத்தையும் காண்போம். நல்லடியார்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ள தர்ஹாக்களில் பேய் பிடித்த எத்தனையோ நபர்கள் தங்க வைக்கப்படுகின்றனர். சங்கிலியால் பூட்டப்படுகின்றனர். இவ்வாறு தர்ஹாக்களைத் தஞ்சமடைந்தவர்களிடம் உள்ள பேய்களை அந்த மகான்கள் வியக்கத்தக்க விதத்தில் விரட்டியடிக்கின்றனர். ஏர்வாடி, நாகூர் போன்ற ஊர்களில் இதை நாம் காண முடிகின்றதே என்பது சிலரது ஐயம். இதுவும் ஒரு நாடகம் தான். ஏனைய ஐயங்களைப் போலவே இதுவும் அடிப்படையில்லாததாகும். இது பற்றி நாம் விரிவாகவே அலசுவோம். தர்ஹாக்களில் நிரப்பப்படும் பேய் பிடித்தவர்களை மூன்று வகையினராகப் பிரிக்கலாம். ஒரு சாரார் உண்மையாகவே பைத்தியம் பிடித்தவர்கள். மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட வேண்டிய இவர்கள் இவர்களது உறவினர்களின் அறியாமையினால் பேய்கள் என்று நம்ப வைக்கப்பட்டு தர்ஹாக்களுக்குக் கொண்டு வரப்பட்டவர்கள். உண்மையாகவே இவர்களுக்குப் பைத்தியம் பிடித்துள்ளதால் தர்ஹாக்களில் இவர்கள் நிவாரணம் பெற முடிவதில்லை. ஒரு தர்ஹாவிலிருந்து மறு தர்ஹா என்று டிரான்ஸ்ஃபர் வாங்கிக் கொண்டு தமிழகத்தின் அனைத்து தர்ஹாக்களுக்கும் விசிட் செய்வார்கள். முடிவில் நம்பிக்கையிழந்து விதியை நொந்து கொண்டு பைத்தியங்களாகவே விடப்படுவர். பாவம் இவர்கள் பரிதாபத்திற்குரியவர்கள்! ஆரம்பத்திலேயே முறையாக மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு இருந்தால் இவர்கள் முழு அளவில் ஆரோக்கியம் பெறும் அளவுக்கு மருத்துவத் துறையில் இன்று முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. மூடநம்பிக்கை இவர்களது எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கி விட்டது. ஏர்வாடி தர்ஹாவைச் சுற்றியுள்ள காப்பகங்களில் தங்க வைக்கப்பட்ட பல மனநோயாளிகள் தமிழக அரசால் மீட்கப்பட்டு உரிய சிகிச்சையின் மூலம் குணமடைந்ததை சமீபத்தில் நாம் கண்டோம். இரண்டாம் சாரார் நாம் முன்னரே விளக்கிய பிரகாரம் எதேனும் ஒரு காரியத்தைச் சாதித்துக் கொள்வதற்காக பேய்களாக நடிப்பவர்கள். இவர்கள் தங்களின் காரியத்தைச் சாதித்துக் கொள்ளும் காலம் வரை நடித்து விட்டு காரியம் கை கூடிய பிறகு பேய் வேஷத்தைக் களைப்பவர்கள். இவ்வாறு இவர்கள் தங்களுக்கு வசதியான ஒரு காலகட்டத்தில் வேஷத்தைக் களையும் போது அதன் பெருமை தர்ஹாவுக்குச் சேர்ந்து விடுகின்றது. உண்மையில் பைத்தியம் பிடித்தவர்களும் பேய் பிடித்ததாக நடிப்பவர்களும் ஆகிய இந்த இரு சாராரும் பாதிக்கும் குறைவானவர்களே. மக்களை தர்ஹாவின் பால் ஈர்ப்பதற்காக செட்டப் செய்யப்பட்டவர்கள் மறுபாதியினர். ஏறத்தாழ கூலிக்கு மாறடிக்கும் கூட்டம் போன்றவர்கள் இவர்கள். இப்படி வெள்ளி, திங்கள் இரவுகளில் பேய்கள் பிடித்ததாக நடிப்பதற்கும் தலையை விரித்துப் போட்டு ஆடுவதற்கும் நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் உண்டு. சுவையான உணவும் உண்டு. “பேய் பிடித்தவர்கள் எல்லாம் இங்கே தான் வந்து குழுமுகின்றனர் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தி ஏனையோரை வரவழைக்கவும் உண்டியலை நிரப்பிக் கொள்ளவும் தர்ஹா பூசாரிகள் நடத்தும் நாடகம் இது. இது வெறும் அனுமானம் இல்லை, நிரூபிக்கப்பட்ட உண்மையாகும். ஒவ்வொரு வெள்ளி இரவிலும் ஏனைய நாட்களை விட பேயாட்டம் போடுவோர் அதிக அளவில் காணப்படுவர். வெள்ளிக்கிழமை அவர்களில் பெரும் பகுதியினர் காணாமல் போய் விடுவர். சொல்லி வைத்தாற் போல் வெள்ளி இரவுகளில் மட்டும் இப்படி பேயாடிகள் பெருகி ஏனைய நாட்களில் குறைவதிலிருந்து இது திட்டமிட்ட ஏற்பாடு என்பதை உணரலாம். தொடர்ந்து சில நாட்கள் தர்ஹாக்களை நோட்டமிட்டால் இதை எவரும் அறியலாம். வெள்ளி இரவுகளில் தான் மக்கள் அதிக அளவில் வருவார்கள். அவர்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக வெள்ளியன்று மட்டும் இந்த விசேஷ ஏற்பாடு செய்யப்படுகின்றது. வெள்ளிக்கிழமையில் கூட எல்லா நேரங்களிலும் பேய்களின் ஆட்டங்கள் இருப்பதில்லை. எந்த நேரத்தில் மக்கள் திரளாகக் குழுமுகின்றார்களோ அந்த மாலை நேரங்களில் மட்டுமே இந்த ஆட்டம் உச்சக் கட்டத்தில் உள்ளது. மக்கள் கூட்டம் குறைய ஆரம்பித்ததும் பேயாட்டம் போடுவோரும் குறைய ஆரம்பித்து விடுகின்றனர். உண்மையிலேயே பேய் பிடித்து இயல்பாகவே அவர்கள் ஆட்டம் போடுகிறார்கள் என்றால் எல்லா நாட்களிலும் எல்லா நேரங்களிலும் தர்ஹாக்கள் பேயாட்டம் போடுவோரால் நிரம்பி வழிய வேண்டும். குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் கணிசமாக பேயாடிகள் அதிகரிப்பது செட்டப் என்பதை நிரூபிக்கப் போதுமாகும். மேலும் தொடர்ந்து சில வாரங்கள் இவர்களை நாம் கண்காணித்து வந்தால் குறிப்பிட்ட அதே முகங்கள் அதே கோலத்தில் தென்படுவார்கள். இதுவும் செட்டப் என்பதற்கு சான்றாக உள்ளது. எவ்வாறெனில் வெள்ளி இரவு பேயாடி விட்டு அன்று காலையிலேயே குணம் பெற்று (?) வீடு திரும்பியவர்கள் ஒவ்வொரு வெள்ளி இரவும் (வெள்ளி இரவு மட்டும்) பேய் பிடித்தவர்களாகக் காட்சி தருகின்றார்கள். ஏனைய நாட்களில் அவர்கள் காணப்படுவது கிடையாது. இது தர்ஹா பூசாரிகளின் திட்டமிட்ட ஏற்பாடே என்பது ஐயமில்லை. இது போன்ற ஏற்பாடுகளின் அடிப்படையிலேயே தர்ஹாக்களில் பேய்கள் நடமாடுகின்றன, விலகி ஓடுகின்றன. ஏற்கனவே நாம் எடுத்துக்காட்டியுள்ள குர்ஆன் ஹதீஸ்களிலிருந்து இறந்தவர்களால் எதுவும் செய்ய முடியாது என்பதைக் கண்டோம். மனிதன் இறந்து விட்டால் இவ்வுலகத்துடன் அவனுக்கு இருந்த எல்லா உறவுகளும் முடிவுக்கு விடுகின்றன என்பதையும் கண்டோம். தர்ஹாக்களில் அடக்கம் செய்யப்பட்டவர்கள் பேய்களை விரட்டுவார்கள் என்ற நம்பிக்கை இந்தச் சான்றுகளுக்கு முரணானவை என்பதையும் நாம் கவனிக்கும் போது தர்ஹாக்களில் பேய் பிடித்தவர்கள் குழுமுகிறார்கள் என்பதும் அதை அங்கே அடக்கம் செய்யப்பட்டவர்கள் விரட்டுகிறார்கள் என்பதும் ஆதாரம் அற்றவை என்பது மேலும் உறுதியாகின்றது. பைத்தியமாகி விட்டவர்கள் பைத்தியமாக நடிப்பவர்கள் தவிர மற்றொரு வகையினரையும் மக்கள் பேய் பிடித்தவர்கள் என எண்ணுகின்றனர். குடும்பத்தில் – சமுதாயத்தில் முற்றிலுமாகப் புறக்கணிக்கப்பட்டவர்கள் அதை எண்ணியே ஹிஸ்டீரியா எனும் மனநோய்க்கு ஆளாகி விடுவர். இதன் மூலம் பிறரைத் தங்கள் பால் ஈர்க்க முயல்வர். தன்னை இன்னொருவராகப் பாவனை செய்ய முற்படுவர். அளவுக்கதிகமான கற்பனைகளில் பலவாறான விளைவுகளுக்கு ஆளாகின்றனர். ஒரு கட்டத்தில் இன்னொருவராக தன்னைப் பார்க்கத் தொடங்குவர். தன்னை யாரும் கவனிப்பதில்லையே என்ற விரக்தியில் எதை எதையோ செய்ய ஆரம்பிப்பார்கள். தனக்கு சாமி வந்து விட்டது, அவ்லியா இறங்கி விட்டார், பேய் பிடித்து விட்டது என்றெல்லாம் இவர்கள் கருதத் துவங்கும் போது பிறரால் இவர்கள் கவனிக்கப்படுகிறார்கள். அக்கறை செலுத்தப்படுகிறார்கள். இவர்கள் வேண்டும் என இப்படிச் செய்யாவிட்டாலும் அவர்களையுமறியாமல் இப்படியெல்லாம் நடக்கத் துவங்கி விடுகின்றனர். இவர்களுக்கு ஹிஸ்டீரியா எனும் மனநோய் தான் ஏற்பட்டுள்ளது என்று தெரிய வந்தால் இவர்களை எளிதில் குணப்படுத்தி விடலாம். இவர்கள் பேயாட்டம் போடும் போதும் சாமி வந்துவிட்டதாக கூறும் போதும் அவ்லியா மேலாடுவதாக்க் கூறும் போதும் எவருமே அதைக் கண்டு கொள்ளக் கூடாது. அந்தச் சமயத்தில் அதிகமாக அவர்களைக் கவனிக்கக் கூடாது. இப்படி நடந்து கொண்டால் இரண்டொரு நாளில் இந்த நோய் குணமாகி விடும். பிறரது கவனத்தையும் கவனிப்பையும் பெறுவதற்காக ஏற்பட்ட மனநோய் தானா? என்பதை முதலில் மனநோய் மருத்துவரிடம் காட்டி உறுதி செய்து கொண்ட பின், மேற்கூறிய முறையில் அவர்களிடம் நாம் நடந்து கொள்ள வேண்டும். முற்றிப் போன பைத்தியம் என்றால் அதற்கான முகாம்களில் வைத்து சிறப்பு வைத்தியம் செய்ய வேண்டும். நடிக்கிறார்கள் என்றால் அதற்கான காரணத்தைக் களைய முயல்வதுடன் உரிய பரிகாரமும் செய்ய வேண்டும். இப்படிச் செய்துவிட்டால் பேய்களுக்கு அறவே இடம் இராது. ஒருவனுக்கு வந்துள்ள பேய் எந்த வகையானது (?) என்பதை தக்கவர்களிடம் சென்று உறுதி செய்வது மிகவும் அவசியம். அதன் பின்னர் சிகிச்சையில் இறங்க வேண்டும். பேய் – பிசாசுகள் என்று நம்பி ஈமானையும் நிம்மதியையும் பகுத்தறிவையும் பழி கொடுப்பதிலிருந்து வல்ல இறைவன் நம் அனைவரையும் காப்பாற்றுவானாக. source: http://onlinepj.com/books/pey_pisasu_unda/ Leave a Reply Cancel reply Your email address will not be published. Required fields are marked * Comment * Name * Email * Website Save my name, email, and website in this browser for the next time I comment. Math Captcha 60 + = 67 Categories Categories Select Category English (319) Convert to Islam (13) Education (14) Essays (85) Family (11) Hadith (8) Haj (5) History (20) India News (20) Muslim World (34) News (9) Politics (4) QnA (19) Quran (3) Ramadhan (15) Science (7) Society (16) World News (36) Multimedia (6) Audio (2) Video (4) Uncategorized (13) இஸ்லாம் (3,761) ஆய்வுக்கட்டுரைகள் (200) இமாம் கஸ்ஸாலி (ரஹ்) (9) இம்மை மறுமை (111) இஸ்லாத்தை தழுவியோர் (90) கட்டுரைகள் (1,708) குர்ஆனும் விஞ்ஞானமும் (30) குர்ஆன் (191) கேள்வி பதில் (201) சொற்பொழிவுகள் (17) ஜகாத் (44) தொழுகை (151) நூல்கள் (40) நோன்பு (136) வரலாறு (380) ஹஜ் (58) ஹதீஸ் (215) ஹஸீனா அம்மா பக்கங்கள் (19) ‘துஆ’க்கள் (43) ‘ஷிர்க்’ – இணை வைப்பு (118) கட்டுரைகள் (3,087) Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd) (154) அப்துர் ரஹ்மான் உமரி (53) அரசியல் (311) உடல் நலம் (449) எச்சரிக்கை! (103) கதைகள் (63) கதையல்ல நிஜம் (108) கல்வி (84) கவிதைகள் (161) குண நலன்கள் (303) சட்டங்கள் (55) சமூக அக்கரை (677) நாட்டு நடப்பு (82) பொது (352) பொருளாதாரம் (27) விஞ்ஞானம் (105) குடும்பம் (1,525) M.A. முஹம்மது அலீ (48) ஆண்-பெண் பாலியல் (83) ஆண்கள் (73) இல்லறம் (486) குழந்தைகள் (183) செய்திகள் (2) பெண்கள் (585) பெற்றோர்-உறவினர் (65) செய்திகள் (328) இந்தியா (142) உலகம் (130) ஒரு வரி (10) கல்வி (32) தமிழ் நாடு (1) முக்கிய நிகழ்வுகள் (13) Archives Archives Select Month July 2022 (1) June 2022 (1) March 2022 (2) February 2022 (2) January 2022 (6) December 2021 (9) November 2021 (14) October 2021 (17) September 2021 (8) May 2021 (2) April 2021 (15) March 2021 (17) February 2021 (17) January 2021 (17) December 2020 (20) November 2020 (17) October 2020 (18) September 2020 (20) August 2020 (31) July 2020 (30) June 2020 (21) May 2020 (27) April 2020 (22) March 2020 (30) February 2020 (19) January 2020 (22) December 2019 (25) November 2019 (14) October 2019 (15) September 2019 (16) August 2019 (18) July 2019 (16) June 2019 (15) May 2019 (12) April 2019 (12) March 2019 (17) February 2019 (17) January 2019 (27) December 2018 (35) November 2018 (18) October 2018 (22) September 2018 (31) August 2018 (27) July 2018 (16) June 2018 (12) May 2018 (14) April 2018 (22) March 2018 (29) February 2018 (30) January 2018 (35) December 2017 (23) November 2017 (30) October 2017 (33) September 2017 (28) August 2017 (30) July 2017 (30) June 2017 (19) May 2017 (34) April 2017 (31) March 2017 (35) February 2017 (36) January 2017 (27) December 2016 (59) November 2016 (48) October 2016 (44) September 2016 (41) August 2016 (27) July 2016 (33) June 2016 (42) May 2016 (52) April 2016 (53) March 2016 (37) February 2016 (42) January 2016 (64) December 2015 (47) November 2015 (40) October 2015 (36) September 2015 (65) August 2015 (56) July 2015 (35) June 2015 (42) May 2015 (58) April 2015 (79) March 2015 (40) February 2015 (29) January 2015 (54) December 2014 (79) November 2014 (66) October 2014 (78) September 2014 (67) August 2014 (62) July 2014 (84) June 2014 (82) May 2014 (100) April 2014 (84) March 2014 (92) February 2014 (80) January 2014 (85) December 2013 (69) November 2013 (91) October 2013 (89) September 2013 (68) August 2013 (76) July 2013 (101) June 2013 (84) May 2013 (94) April 2013 (13) March 2013 (84) February 2013 (64) January 2013 (85) December 2012 (93) November 2012 (106) October 2012 (82) September 2012 (92) June 2012 (50) May 2012 (103) April 2012 (145) March 2012 (103) February 2012 (168) January 2012 (44) December 2011 (125) November 2011 (99) October 2011 (112) September 2011 (90) August 2011 (130) July 2011 (150) June 2011 (86) May 2011 (138) April 2011 (30) March 2011 (148) February 2011 (97) January 2011 (61) December 2010 (103) November 2010 (87) October 2010 (129) September 2010 (145) August 2010 (114) July 2010 (70) June 2010 (130) May 2010 (131) April 2010 (116) March 2010 (134) February 2010 (99) January 2010 (154) December 2009 (136) November 2009 (106) October 2009 (61) September 2009 (66) August 2009 (61) July 2009 (55) June 2009 (53) May 2009 (81) April 2009 (43) March 2009 (70) February 2009 (43) January 2009 (64) December 2008 (29) November 2008 (35) October 2008 (31) September 2008 (63) August 2008 (114)
பிளாஸ்டிக் வடிகால் பலகை பாலிஸ்டிரீன் (HIPS) அல்லது பாலிஎதிலீன் (HDPE) மூலப்பொருட்களாக தயாரிக்கப்படுகிறது.உற்பத்தி செயல்பாட்டில், பிளாஸ்டிக் தாள் ஒரு வெற்று தளத்தை உருவாக்க முத்திரையிடப்படுகிறது.இந்த வழியில், ஒரு வடிகால் பலகை செய்யப்படுகிறது. இது குழிவான-குழிவான வடிகால் தட்டு, வடிகால் பாதுகாப்பு தகடு, கேரேஜ் கூரை வடிகால் தட்டு, வடிகால் தட்டு, முதலியன அழைக்கப்படுகிறது. இது முக்கியமாக கேரேஜ் கூரையில் கான்கிரீட் பாதுகாப்பு அடுக்கு வடிகால் மற்றும் சேமிப்புக்காக பயன்படுத்தப்படுகிறது.கேரேஜின் கூரையில் உள்ள அதிகப்படியான தண்ணீரை மீண்டும் நிரப்பிய பிறகு வெளியேற்ற முடியும் என்பதை உறுதிசெய்யும் வகையில்.இது சுரங்கப்பாதை வடிகால்களுக்கும் பயன்படுத்தப்படலாம். விசாரணைவிவரம் சுரங்கப்பாதை வடிகால் பிளாஸ்டிக் குருட்டு பள்ளம் பிளாஸ்டிக் குருட்டு பள்ளம் வடிகட்டி துணியால் மூடப்பட்ட ஒரு பிளாஸ்டிக் கோர் உடலால் ஆனது.பிளாஸ்டிக் கோர் தெர்மோபிளாஸ்டிக் செயற்கை பிசின் முக்கிய மூலப்பொருளாக செய்யப்படுகிறது விசாரணைவிவரம் அரிப்பு எதிர்ப்பு உயர் அடர்த்தி கூட்டு வடிகால் வாரியம் ஜியோகாம்போசிட் மூன்று-அடுக்கு, இரண்டு அல்லது முப்பரிமாண வடிகால் ஜியோசிந்தெடிக் தயாரிப்புகளில் உள்ளது, இருபுறமும் வெப்ப-பிணைக்கப்பட்ட நெய்த ஜியோடெக்ஸ்டைலுடன் ஒரு ஜியோனெட் கோர் கொண்டது. ஜியோனெட் அதிக அடர்த்தி கொண்ட பாலிஎதிலீன் பிசினில் இருந்து தயாரிக்கப்படுகிறது. பாலியஸ்டர் ஸ்டேபிள் ஃபைபர் அல்லது லாங் ஃபைபர் அல்லாத நெய்த ஜியோடெக்ஸ்டைல் ​​அல்லது பாலிப்ரோபிலின் ஸ்டேபிள் ஃபைபர் nonwoven geotextile.
حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ سَلاَّمٍ الْجُمَحِيُّ، حَدَّثَنَا الرَّبِيعُ، – يَعْنِي ابْنَ مُسْلِمٍ – عَنْ مُحَمَّدِ بْنِ زِيَادٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ :‏ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ ‏ “‏ لأَذُودَنَّ عَنْ حَوْضِي رِجَالاً كَمَا تُذَادُ الْغَرِيبَةُ مِنَ الإِبِلِ ‏”‏ ‏ وَحَدَّثَنِيهِ عُبَيْدُ اللَّهِ بْنُ مُعَاذٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ مُحَمَّدِ بْنِ زِيَادٍ، سَمِعَ أَبَا هُرَيْرَةَ يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بِمِثْلِهِ ‏ “நான் (‘அல்கவ்ஸர்’ எனும்) எனது தடாகத்தைவிட்டு, எனது ஒட்டகங்களிடமிருந்து அந்நிய ஒட்டகங்களை விரட்டுவதைப் போன்று சிலரை விரட்டுவேன்” என்று நபி (ஸல்) கூறினார்கள். அபூஹுரைரா : அபூஹுரைரா (ரலி) ← முந்தைய ஹதீஸ்அத்தியாயம்: 43, பாடம்: 9, ஹதீஸ் எண்: 4243 அடுத்த ஹதீஸ் →அத்தியாயம்: 43, பாடம்: 9, ஹதீஸ் எண்: 4245 SatyaMargam ↓ விரும்பும் பாடம் செல்ல… ↓ விரும்பும் பாடம் செல்ல… Select Category 43.37 நபி (ஸல்) அவர்களைக் கண்ணியப்படுத்துவதும் … (8) 43.36 நபி (ஸல்) அவர்களைப் பின்பற்ற வேண்டியது (முஸ்லிம்களின்) கட்டாயக் கடமையாகும் (1) 43.35 நபி (ஸல்) அவர்களின் அல்லாஹ்வைப் பற்றிய அறிவும் அவனைப் பற்றிய கடுமையான அச்சமும் (2) 43.34 நபி (ஸல்) அவர்களின் பெயர்கள் (3) 43.33 நபி (ஸல்) மக்காவிலும் மதீனாவிலும் எத்தனை ஆண்டுகள் வாழ்ந்தார்கள்? (8) 43.32 நபி (ஸல்) இறந்தபோது அவர்களுக்கு வயது எத்தனை? (2) 43.31 நபி (ஸல்) அவர்களின் உடலமைப்பு; நபியாக அனுப்பப்பெற்றது; அவர்களின் வயது (1) 43.30 நபி (ஸல்) உடலில் நபித்துவ முத்திரை … (3) 43.29 நபி (ஸல்) அவர்களின் தலைநரைமுடி (10) 43.28 நபி (ஸல்) அவர்களின் வெண்ணிறமும் களையான முகமும் (2) 43.27 நபி (ஸல்) அவர்களின் வாய், கண்கள், குதிகால்கள் ஆகியவை (1) 43.26 நபி (ஸல்) அவர்களது தலைமுடியின் தன்மை (3) 43.25 நபி (ஸல்) அவர்களின் உருவத் தோற்றம் … (3) 43.24 நபி (ஸல்) தமது தலைமுடியை … (1) 43.23 நபி (ஸல்) அவர்களுக்கு வேத அறிவிப்பு வரும்போது … (4) 43.22 நபி (ஸல்) அவர்களது வியர்வையின் நறுமணமும் அதன்மூலம் வளம் ஏற்பட்டதும் (3) 43.21 நபி (ஸல்) அவர்களின் மேனியில் கமழ்ந்த நறுமணம் … (3) 43.20 நபி (ஸல்) பாவங்களை விட்டு வெகு தொலைவில் விலகியிருந்தது … (3) 43.19 நபி (ஸல்), மக்களுடன் நெருங்கிப் பழகியதும் அவர்களிடமிருந்து மக்கள் வளம் பெற்றதும் (3) 43.18 மனைவியர்மீது நபி (ஸல்) காட்டிய அன்பும் … (4) 43.17 நபி (ஸல்) அவர்களின் புன்னகையும் அழகிய உறவாடலும் (1) 43.16 நபி (ஸல்) அவர்களின் நாண மிகுதி (2) 43.15 நபி (ஸல்) குழந்தைகள் மீதும் குடும்பத்தார் மீதும் காட்டிய அன்பு … (5) 43.14 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வேண்டப்பட்ட எந்த ஒன்றுக்கும் அவர்கள் “இல்லை” என்று சொன்னதேயில்லை … (5) 43.13 அல்லாஹ்வின் தூதர் (ஸல்), மக்களிலேயே மிகவும் அழகான … (5) 43.12 மக்களிலேயே நபி (ஸல்), தொடர்ந்து வீசும் (மழைக்) காற்றைவிட … (1) 43.11 நபி (ஸல்) அவர்களின் வீரமும் அறப்போருக்காக அவர்கள் முன்னே சென்றதும் (2) 43.10 உஹுதுப் போர் நாளில் நபி (ஸல்) … (2) 43.9 நம் நபி (ஸல்) அவர்களுக்கு (மறுமையில் ‘அல்கவ்ஸர்’) தடாகம் உண்டு … (20) 43.8 உயர்ந்தோன் அல்லாஹ் ஒரு சமுதாயத்தின்மீது அருள் புரிய நாடினால் … (1) 43.7 நபி (ஸல்), இறுதி இறைத் தூதர் என்பது பற்றிய குறிப்பு (4) 43.6 நபி (ஸல்), தம் சமுதாயத்தார் மீது கொண்டிருந்த பரிவும் … (4) 43.5 நபி (ஸல்), நேர்வழியுடனும் ஞானத்துடனும் அனுப்பப் பெற்றதற்கான உவமை (1) 43.4 அல்லாஹ்வையே முழுமையாக நபி (ஸல்) சார்ந்திருந்ததும் … (1) 43.3 நபி (ஸல்) அவர்களின் அற்புதங்கள் (7) 43.2 எல்லாப் படைப்புகளையும்விட நம் நபி (ஸல்) அவர்களின் சிறப்பு (1) 43.1 நபி (ஸல்) அவர்களின் தலைமுறையின் சிறப்பும் … (2) 42.4 நபி (ஸல்) கண்ட கனவு (6) 42.3 கனவுக்கு விளக்கமளித்தல் (1) 42.2 ஷைத்தான் கனவில் விளையாடியது குறித்து … (3) 42.1 கனவில் என்னைக் கண்டவர் … (4) 42.01 கனவுகள் (11) 41.2 பகடை விளையாட்டு, தடை செய்யப்பட்டதாகும் (1) 41.1 கவிதைகள் (9) 40.5 நறுமணப் பொருட்களில் மிகவும் சிறந்த கஸ்தூரியைப் பயன்படுத்துவது … (4) 40.4 ஒருவர், ‘கபுஸத் நஃப்ஸீ’ (என் மனம் அசுத்தமாகிவிட்டது) எனும் சொல்லை … (2) 40.3 ‘அப்து’ (அடிமை ஆண்), ‘அமத்து’ (அடிமைப் பெண்), ‘மவ்லா’/’ஸய்யித்’ (அடிமையின் உரிமையாளர்) ஆகிய சொற்களின் சட்டம் (3) 40.2 திராட்சையை, “கர்மு / கண்ணியம்” என்று பெயரிட்டழைப்பது … (7) 40.1 காலத்தை ஏசுவதற்குத் தடை (5) 39.41 விலங்குகளுக்கு நீர் புகட்டுவதின், உணவளிப்பதின் சிறப்பு (3) 39.40 பூனைகளைக் கொல்வதற்குத் தடை (2) 39.39 எறும்புகளைக் கொல்லத் தடை (3) 39.38 பல்லியைக் கொல்வது நல்லது (5) 39.37 பாம்பு போன்ற விஷ ஜந்துகளைக் கொல்வது (13) 39.36 தொழுநோயாளிகள் போன்றோரிடம் நெருக்கம் தவிர்ப்பது (1) 39.35 சோதிடர்களிடம் செல்வதும் சோதிடம் பார்ப்பதும் (5) 39.34 பறவை சகுனம், நற்குறி, துர்குறி பற்றிய பாடம் (11) 39.33 இல்லாத சகுனங்களும் தொற்றுநோய்களும் (6) 39.32 கொள்ளைநோய், பறவை சகுனம், சோதிடம் போன்றவை (8) 39.31 தேனூட்டு மருத்துவம் (1) 39.30 ‘தல்பீனா‘, நோயாளியின் மனத்துக்கு(ம் உடலுக்கும்) தெம்பு அளிக்கக்கூடியதாகும் (1) 39.29 கருஞ்சீரக மருத்துவம் (2) 39.28 இந்தியக் கோஷ்டக் குச்சியால் சிகிச்சையளிப்பது (2) 39.27 நோயாளிக்கு வற்புறுத்தி சிகிச்சையளிப்பது … (1) 39.26 ஒவ்வொரு நோய்க்கும் மருந்து உண்டு; (நோய்க்கு) மருத்துவம் செய்துகொள்வது விரும்பத் தக்கது (17) 39.25 தொழுகையில் மனம் அலைபாயச் செய்யும் ஷைத்தானிடமிருந்து பாதுகாப்புக் கோரல் (1) 39.24 பிரார்த்திக்கும்போது வலியுள்ள இடத்தில் கையை வைப்பது (1) 39.23 குர்ஆன் வசனங்கள் மற்றும் அல்லாஹ்வைத் துதிக்கும் சொற்களால் ஓதிப்பார்ப்பதற்கு ஊதியம் பெறலாம் (2) 39.22 இறைவனுக்கு இணை கற்பிதம் இல்லாத சொற்களால் ஓதிப்பார்பது தவறில்லை (1) 39.21 கண்ணேறு, சின்னம்மை, விஷக்கடி, (தீய)பார்வை ஆகியவற்றுக்காக ஓதிப்பார்ப்பது விரும்பத் தக்கதாகும் (12) 39.20 பாதுகாப்புக் கோரும் அத்தியாயங்களால் நோயாளிக்கு ஓதிப்பார்ப்பது … (2) 39.19 நோயாளிக்கு ஓதிப்பார்ப்பது விரும்பத் தக்கதாகும் (4) 39.18 விஷம் (1) 39.17 சூனியம் (1) 39.16 நோயும் மருத்துவமும் ஓதிப்பார்த்தலும் (4) 39.15 மூன்றாமவரின் ஒப்புதலின்றி இருவர் மட்டும் இரகசியம் பேசிக்கொள்வது தடை செய்யப்பட்டதாகும் (3) 39.14 … அந்நியப் பெண்ணை, வழிசெல்லும் ஒருவர் வாகனத்தில் அமர்த்திக்கொள்ளலாம் (2) 39.13 பெண்கள் இருக்கும் இடத்திற்கு அலிகள் செல்லத் தடை (2) 39.12 அமர்ந்திருந்த இடத்திற்கு உரியவர் (1) 39.11 அமர்ந்திருக்கும் ஒருவரை எழுப்பிவிடுவது தடை செய்யப்பட்டதாகும் (4) 39.10 அவைக்கு வருபவர், அமரும் ஒழுங்கு (1) 39.9 … கெட்ட எண்ணத்தை அகற்றுவது விரும்பத் தக்கதாகும் (2) 39.8 அந்நியப் பெண்ணிடம் … தனிமையில் இருப்பது தடை செய்யப்பட்டதாகும் (3) 39.7 … பெண்கள் வெளியே செல்லலாம் (2) 39.6 உள்ளே செல்ல அனுமதியாகக் கருதுவதற்கு … (1) 39.5 சிறாருக்கு(ப் பெரியவர்கள்) முகமன் கூறுவது விரும்பத் தக்கதாகும் (2) 39.4 வேதக்காரர்களுக்கு முந்திக்கொண்டு ஸலாம் கூறுவதற்குத் தடை (7) 39.3 ஸலாத்துக்குப் பதிலுரைப்பது முஸ்லிமுக்குக் கடமை (2) 39.2 நடைபாதைகளில் அமர்வதன் ஒழுங்குகளில் … (2) 39.1 முந்தி ஸலாம் சொல்ல வேண்டியவர்கள் (1) 38.10 இயல்பான பார்வை (1) 38.9 பிறர் வீட்டில் எட்டிப் பார்ப்பது தடை செய்யப்பட்டதாகும் (5) 38.8 “யார்?“ என்று கேட்டால் … (2) 38.7 அனுமதி கோருதல் (5) 38.6 “என் அருமை மகனே!“ (2) 38.5 குழந்தை பிறந்தவுடன் இனிப்பான பொருளை மென்று அதன் வாயிலிடுவதும் … (9) 38.4 மன்னாதி மன்னன் எனப் பெயர் சூட்டிக்கொள்வது தடை செய்யப்பட்டதாகும் (2) 38.3 அருவருப்பான பெயரை அழகான பெயராக மாற்றியமைப்பது … (6) 38.2 அருவருப்பான பெயர்கள் … (4) 38.1 … விரும்பத் தகுந்த பெயர்கள் (8) 37.35 வெறும் பெருமை (2) 37.34 மெல்லிய உடையணிந்து, பிறரைத் தன்பால் ஈர்க்கும் வண்ணம் தோள்களைச் சாய்த்து ஒயிலாக நடக்கும் பெண்கள் (1) 37.33 பெண்களின் பொய் அலங்காரங்காரங்களுக்குத் தடை (10) 37.32 நடைபாதைகளில் அமர்வதற்குத் தடையும் பாதைகளுக்குரிய உரிமைகளைப் பேணுவதும் (1) 37.31 தலை முடியில் பகுதி மழித்துவிட்டு, பகுதி மழிக்காமல் விட்டுவிடுவது வெறுக்கத் தக்கதாகும் (1) 37.30 ஸகாத் / ஜிஸ்யாவுக்கான கால்நடைகளில் சூடிட்டு அடை யாளமிடலாம் (4) 37.29 விலங்குகளின் முகத்தில் அடிப்பதும் அடையாளச் சூடிடுவதும் தடை செய்யப்பட்டவை ஆகும் (3) 37.28 ஒட்டகத்தின் கழுத்தில் (திருஷ்டிக்) கயிற்று மாலை அணிவிப்பது வெறுக்கத் தக்கதாகும் (1) 37.27 பயணத்தின்போது நாயும் (ஒலியெழுப்பும்) மணியும் வெறுக்கத் தக்கவை (2) 37.26 உயிரினங்களின் உருவப் படங்களை வரைவதும் … தடை செய்யப்பட்டவை ஆகும் (21) 37.25 (நரைமுடிக்கு) சாயமிட்டுக்கொள்வது யூதர்களுக்கு மாறு செய்வதாகும் (1) 37.24 நரைமுடியில் கருப்பு நிறச் சாயமிடுவது தடை செய்யப்பட்டதாகும் (2) 37.23 ஆண்கள் (மேனியில்) குங்குமப்பூச் சாயமிட்டுக்கொள்வதற்குத் தடை (1) 37.22 மல்லாந்து படுத்துக்கொண்டு கால்மீது காலைப் போட்டுக் கொள்வதற்கு அனுமதி (1) 37.21 மல்லாந்து படுத்துக்கொண்டு கால்மீது காலைப் போட்டுக் கொள்வதற்குத் தடை (3) 37.20 தடை செய்யப்பட்ட இரு நிலைகள் (2) 37.19 காலணிகளை அணிந்து கழற்றும் முறைகள் (3) 37.18 காலணி அல்லது அது போன்றதை அணிந்துகொள்வது விரும்பத் தக்கதாகும் (1) 37.17 மோதிரம் அணிவதற்குத் தடை செய்யப்பட்ட விரல்கள் (2) 37.16 கைச் சுண்டுவிரலில் மோதிரம் அணிவது (1) 37.15 அபிசீனியக் வெள்ளிக் குமிழ் மோதிரம் (2) 37.14 மோதிரங்களை(க் கழற்றி) எறிந்த நிகழ்வு (2) 37.13 நபி (ஸல்) அவர்களின் (முத்திரை) மோதிரம் (3) 37.12 ‘முஹம்மதுர் ரசூலுல்லாஹ்’ எனும் இலச்சினை பொறிக்கப்பட்ட வெள்ளி மோதிரம் (2) 37.11 ஆண்கள் தங்க மோதிரம் அணிவதற்குத் தடை (3) 37.10 ஆடைகளை எண்ணிப் பெருமை கொண்டு, கர்வத்தோடு நடப்பதற்குத் தடை (2) 37.9 பெருமைக்காக ஆடையைத் தரையில் படும்படி இழுத்துச் செல்வதற்குத் தடை (7) 37.8 தேவைக்கு அதிகமான விரிப்புகளும் ஆடைகளும் இருப்பது விரும்பத் தக்கதன்று (1) 37.7 படுக்கை விரிப்புகளைப் பயன்படுத்த அனுமதி (2) 37.6 ஆடையில் (எளிமை,) பணிவு காட்டுவது … (5) 37.5 பருத்தி ஆடை அணிவதன் சிறப்பு (2) 37.4 ஆண்கள் செம்மஞ்சள் நிறச் சாயமிடப்பட்ட ஆடை அணிவதற்குத் தடை (5) 37.3 தோல் உபாதைகள் இருந்தால் ஆண்கள் பட்டாடை அணியலாம் (3) 37.2 பொன் மோதிரம் மற்றும் பட்டாடை அணிவது ஆண்களுக்குத் தடை; பெண்களுக்கு அனுமதி (20) 37.1 பொன் / வெள்ளிப் பாத்திரங்களைப் பயன்படுத்துவது ஆண்களுக்கும் பெண்களுக்கும் தடை (2) 36.35 உணவைக் குறை சொல்லவேண்டாம் (2) 36.34 இறைநம்பிக்கையாளர் ஒரே குடலில் உண்பார்; இறைமறுப்பாளன் ஏழு குடல்களில் உண்பான் (5) 36.33 உணவு குறைவாக இருக்கும்போது … (4) 36.32 விருந்தினரை உபசரிப்பதும் முன்னுரிமை வழங்குவதன் சிறப்பும் (6) 36.31 வெள்ளைப் பூண்டு சாப்பிடக்கூடியதே … (2) 36.30 உணவுக் காடியின் சிறப்பும் … (4) 36.29 ‘அல்கபாஸ்’ பழங்களில் கருப்பு நிறப் பழத்தின் சிறப்பு (1) 36.28 உணவுக் காளானின் சிறப்பும் … (6) 36.27 மதீனத்துப் பேரீச்சம் பழங்களின் சிறப்பு (3) 36.26 குடும்பத்தாருக்காக … உணவுகளைச் சேமித்துவைத்தல் (2) 36.25 பலருடன் சேர்ந்து உண்பவர் … (2) 36.24 உணவு உண்பவர் அமரும் முறை; பணிவோடு அமர்வது விரும்பத் தக்கது (2) 36.23 பேரீச்சை செங்காய்களுடன் வெள்ளரிக்காயையும் சேர்த்து உண்பது (1) 36.22 விருந்தளிப்பவருக்காக விருந்தாளி பிரார்த்திப்பது … (1) 36.21 சுரைக் குழம்பு உண்ண அனுமதி … (2) 36.20 வீட்டு உரிமையாளரின் சம்மதம் கிடைக்கும் என்ற நம்பிக்கை இருந்தால் … (4) 36.19 விருந்துக்கு அழைக்கப்பட்டவரைத் தொடர்ந்து அழைக்கப்படாதவரும் வந்துவிட்டால் … (2) 36.18 உண்டு முடித்ததும் விரல்களைச் சூப்புவதும் உணவுத் தட்டை வழித்து உண்பதும் … (9) 36.17 வலப் பக்கத்திலிருந்து பரிமாறுதல் விரும்பத் தக்கதாகும் (4) 36.16 பாத்திரத்தினுள் (பருகும்போது) வெளியே மூன்று முறை மூச்சு விட்டுப் பருகுவது விரும்பத் தக்கதாகும் (3) 36.15 ஸம்ஸம் நீரை நின்றுகொண்டு அருந்துவது (4) 36.14 நின்றுகொண்டு அருந்துவது வெறுக்கத் தக்கதாகும் (4) 36.13 உண்பது, அருந்துவது ஆகியவற்றின் ஒழுங்குகளும் விதிமுறைகளும் (10) 36.12 இரவு நேர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் (6) 36.11 பழச்சாறுகளைப் பருகுவதும் பாத்திரங்களை மூடிவைப்பதும் (3) 36.10 (ஆட்டுப்) பால் அருந்த அனுமதி (3) 36.9 பழச்சாறுகள் (புளித்துக்) கெட்டியாகி, போதையேறாதவரை அனுமதிக்கப்பட்டவையாகும் (10) 36.8 குடிகாரன் பாவமன்னிப்புக் கோரி திருந்தாவிட்டால் … (3) 36.7 போதை தரும் ஒவ்வொரு பானமும் தடை செய்யப்பட்ட மதுவாகும் (9) 36.6 பானங்கள்-பாத்திரங்கள், தடை-தடை நீக்கம் (36) 36.5 பேரீச்சம் பழம், உலர் திராட்சைக் கலவை ஊறல் வெறுக்கத் தக்கதாகும் (14) 36.4 ‘மதுபானம்’ என்று சொல்லப்படுபவை (4) 36.3 மதுவை மருந்தாகப் பயன்படுத்துவதற்குத் தடை (1) 36.2 மதுபானத்தை (சமையல்) காடியாக மாற்றிப் பயன்படுத்துவதற்குத் தடை (1) 36.1 போதையூட்டும் ஒவ்வொன்றும் மதுவாகும் (9) 35.8 அல்லாஹ் அல்லாதவரின் பெயர் கூறிப் பிராணிகளை அறுப்பதற்குத் தடை (3) 35.7 தலைமுடியை, நகங்களைக் களைவதற்குத் தடை (5) 35.6 அல் ஃபரஉ வல் அத்தீரா (1) 35.5 பலி இறைச்சியை எவ்வளவு காலம் சேமித்து வைக்கலாம்? (14) 35.4 பல், நகம், எலும்பு ஆகியவை தவிர எந்தப் பொருளாலும் பிராணியை அறுக்க அனுமதி (1) 35.3 தாமே அறுப்பதும் அல்லாஹ்வின் பெயரோடு தக்பீர் கூறுவதும் விரும்பத் தக்கவை ஆகும் (3) 35.2 பலிப் பிராணியின் வயது (4) 35.1 பலி கொடுக்கப்படும் நேரம் (10) 34.12 விலங்குகளைக் கட்டிவைத்து அம்பெய்து கொல்வதற்குத் தடை (5) 34.11 … கத்தியைக் கூர்மையாகத் தீட்டிக் கொண்டு வதையற்ற முறையைக் கையாளக் கட்டளை (1) 34.10 … பயிற்சிகளை மேற்கொள்வது அனுமதிக்கப் பட்டதாகும். கல்சுண்டு விளையாட்டு வெறுக்கப்பட்டதாகும் (2) 34.9 முயல் கறி உண்ணத் தக்கது (1) 34.8 வெட்டுக்கிளி உண்ணத் தக்கது (1) 34.7 உடும்புக் கறி உண்ணத் தக்கது (13) 34.6 குதிரைகளின் இறைச்சியை உண்பது கூடுமா? (3) 34.5 நாட்டுக் கழுதைகளின் இறைச்சியை உண்பதற்குத் தடை (14) 34.4 கடல்வாழ் உயிரினங்களில் செத்தவற்றை உண்பதற்கு அனுமதி (5) 34.3 உண்பதற்குத் தடை செய்யப்பட்ட விலங்குகளும் பறவைகளும் (6) 34.2 வேட்டையாடிய பிராணி மறைந்து, பிறகு கிடைத்தால் … (2) 34.1 பயிற்சியளிக்கப்பட்ட நாய்கள் மூலம் வேட்டையாடுதல் (8) 33.56 பயணத்திலிருந்து திரும்புகின்றவர் … (5) 33.55 பயணம் என்பது துன்பத்தின் ஒரு பகுதியாகும் … (1) 33.54 பயணத்தில் கால்நடைகளின் நலன் காப்பதும் … (2) 33.53 “என் சமுதாயத்தாரில் ஒரு குழுவினர் எப்போதுமே உண்மைக்கு ஆதரவாளர்களாக இருப்பார்கள் … (8) 33.52 அம்பெய்வதன் சிறப்பும் … (3) 33.51 உயிர்த் தியாகிகள் பற்றிய விளக்கம் (3) 33.50 அல்லாஹ்வின் பாதையில் எல்லைக் காவல் புரிவதன் சிறப்பு (1) 33.49 கடல்வழிப் போரின் சிறப்பு (2) 33.48 போரில் கலந்துகொள்ள முடியாமல் போனவருக்கும் நன்மை … (1) 33.47 அறப்போரில் கலந்துகொள்ளாமல் இறந்துபோனவர் … (1) 33.46 அல்லாஹ்வின் பாதையில் வீரமரணத்தை வேண்டுவது விரும்பத் தக்கதாகும் (2) 33.45 “எண்ணங்களைப் பொருத்தே செயல்கள் அமைகின்றன” எனும் நபிமொழி … (1) 33.44 … போர்ச் செல்வங்களைப் பெற்றோரும் பெறாதோரும் … (2) 33.43 பிறர் பார்ப்பதற்காகவும் விளம்பரத்திற்காகவும் போரிட்டவர் … (1) 33.42 அல்லாஹ்வின் பாதையில் போரிட்டவர் … (3) 33.41 உயிர்த் தியாகிக்குச் சொர்க்கம் நிச்சயம் (6) 33.40 தகுந்த காரணம் உள்ளவர்களுக்கு அறப்போரில் கலந்து கொள்வது கடமை இல்லை (2) 33.39 அறப்போர் வீரர்களின் துணைவியருடைய கண்ணியம் … (1) 33.38 அறப்போர் வீரருக்கு வாகனம் மற்றும் பிற உதவிகள் … (6) 33.37 அல்லாஹ்வின் பாதையில் தர்மம் செய்வதன் சிறப்பும் அதற்குக் கிடைக்கும் பன்மடங்கு நன்மைகளும் (1) 33.36 இறைமறுப்பாளனை (போரில்) கொன்ற பின்னர் (மார்க்கத்தில்) உறுதியோடு இருத்தல் (2) 33.35 இரு போராளிகளில் ஒருவர் மற்றவரைக் கொன்று, பின் அவ்விருவருமே சொர்க்கத்தில் … (2) 33.34 அறப்போர் மற்றும் எல்லைக் காவலின் சிறப்பு (3) 33.33 வீரமணம் அடைந்தவர்களின் உயிர்கள் … (1) 33.32 அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டவரின் கடனைத் தவிர அனைத்துப் பாவங்களும் மன்னிக்கப்படுகின்றன (3) 33.31 அல்லாஹ் (தனது பாதையில்) அறப்போர் புரிந்தவர்களுக்காகச் சொர்க்கத்தில் வைத்துள்ள உயர்நிலைகள் (1) 33.30 அல்லாஹ்வின் பாதையில் காலையாயினும் மாலையாயினும் (போரிடச்) செல்வதன் சிறப்பு (5) 33.29 அல்லாஹ்வின் பாதையில் வீரமரணம் அடைவதன் சிறப்பு (4) 33.28 அல்லாஹ்வின் பாதையில் புறப்படுதலின், அறப்போரில் ஈடுபடுதலின் சிறப்பு (4) 33.27 குதிரையின் தன்மைகளில் விரும்பத் தகாதவை (1) 33.26 மறுமை நாள்வரை நெற்றிகளில் நன்மை பிணைக்கப்பட்டிருக்கும் குதிரைகள் (5) 33.25 குதிரைப் பந்தயமும் அதற்காகக் குதிரையை மெலிய வைப்பதும் (1) 33.24 குர்ஆன் பிரதிகளை இறைமறுப்பாளர்களின் நாட்டுக்கு எடுத்துச் செல்வது … (3) 33.23 பருவ வயது பற்றிய விளக்கம் (1) 33.22 இயன்றவரை கட்டுப்பட்டு நடப்பதாக உறுதிமொழி அளித்தல் (1) 33.21 பெண்களிடம் உறுதிப் பிரமாணம் (பைஅத்) வாங்கும் முறை (2) 33.20 மக்கா வெற்றிக்குப் பின் ஹிஜ்ரத் கிடையாது (5) 33.19 நாடு துறந்து (ஹிஜ்ரத்) சென்றவர் மீண்டும் தமது தாயகத்தில் குடியேறுவதற்குத் தடை (1) 33.18 ஆட்சித் தலைவர் படையினரிடம் உறுதி மொழி பெற்றுக்கொள்வது … (13) 33.17 ஆட்சித் தலைவர்களில் நல்லவர்களும் தீயவர்களும் (2) 33.16 ஆட்சித் தலைவர்கள் மார்க்கத்திற்கு முரணாகச் செயல்படும்போது … (2) 33.15 இரு ஆட்சியாளர்களுக்கு வாக்களிப்புப் பிரமாண நெருக்கடி ஏற்பட்டால் … (1) 33.14 முஸ்லிம்கள் (ஒரே தலைமையின் கீழ்) ஒன்றுபட்டிருக்கும்போது … (2) 33.13 குழப்பங்கள் தோன்றும்போது கூட்டமைப்போடு சேர்ந்திருப்பது கடமையாகும் … (8) 33.12 உரிமைகள் மறுக்கப்பட்டாலும் தலைமைக்குக் கட்டுப்படுதல் (1) 33.11 அதிகாரத்திலிருப்போர் அநீதியிழைக்கும்போதும் தகுதியற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கும்போதும் … (1) 33.10 கலீஃபாக்களில் முதலாமவருக்கு உறுதிப் பிரமாணம் (பைஅத்) அளிப்பது கடமையாகும் (3) 33.9 ஆட்சித் தலைவர் கேடயம் போன்றவர் … (1) 33.8 பாவமற்றவற்றில் தலைவர்களுக்குக் கட்டுப்படுவது கடமையாகும். பாவமானவற்றில் கட்டுப்படுவதற்குத் தடை (11) 33.7 அதிகாரிகளுக்கு அன்பளிப்புகள் வழங்குவதற்குத் தடை (3) 33.6 பொதுச் சொத்துகளில் மோசடி செய்வது வன்மையாகத் தடை செய்யப்பட்டது (1) 33.5 நேர்மையான ஆட்சியாளரின் சிறப்பும் … (6) 33.4 தேவையின்றி ஆட்சிப் பொறுப்பை ஏற்பது விரும்பத் தக்கதன்று (2) 33.3 ஆட்சியதிகாரத்தைத் தேடி அலைவதற்கும் அதன் மீது ஆசை கொள்வதற்கும் தடை (3) 33.2 ஆட்சித் தலைவரை நியமிக்கலாம்; நியமிக்காமல் விடலாம் (2) 33.1 ஆட்சியதிகாரம் குறைஷியரிடையேதான் இருக்கும் (10) 32.51 அறப்போர்களில் இறைமறுப்பாளரிடம் உதவி கோருவது … (1) 32.50 ‘தாத்துர் ரிக்காஉ’ (ஒட்டுத் துணிப்) போர் (1) 32.49 நபி (ஸல்) கலந்துகொண்ட அறப்போர்களின் எண்ணிக்கை (6) 32.48 அறப்போரில் கலந்துகொண்ட பெண்களுக்கு … (4) 32.47 அறப்போரில் ஆண்களுடன் பெண்களும் கலந்துகொள்வது (2) 32.46 “அவனே உங்களைத் தாக்காமல் அவர்கள் கைகளை தடுத்(து வைத்)தான்” எனும் (48:24) வசனம் (2) 32.45 ‘தூ கரத்’ போரும் பிற போர்களும் (2) 32.44 அஹ்ஸாப் போர் (அ) அகழ்ப் போர் (6) 32.43 கைபர் போர் (5) 32.42 கஅப் பின் அல்அஷ்ரஃப் கொல்லப்படுதல் (1) 32.41 அபூஜஹ்லு கொல்லப்படுதல் (1) 32.40 நபி (ஸல்) (மக்களை) இறைவன்பால் அழைத்து, துன்பங்களைப் பொறுத்துக் கொண்டது (2) 32.39 நபி (ஸல்) எதிர்கொண்ட துன்பங்கள் (7) 32.38 இறைதூதரால் கொல்லப்பட்டவன் மீது இறைவனின் கோபம் (1) 32.37 உஹுதுப் போர் (3) 32.36 கூட்டுப் படையினருக்கு எதிரான அகழ்ப் போர் (2) 32.35 வாக்குறுதியை(ப் போரிலும்) நிறைவேற்றுவது (1) 32.34 ஹுதைபிய்யா சமாதான உடன்படிக்கை’ (7) 32.33 மக்கா வெற்றிக்குப் பின் … (1) 32.32 கஅபாவைச் சுற்றிலும் இருந்த சிலைகளை அப்புறப்படுத்தியது (1) 32.31 மக்கா வெற்றி (2) 32.30 பத்ருப் போர் (1) 32.29 தாயிஃப் போர் (1) 32.28 ஹுனைன் போரில் … (5) 32.27 இறைமறுப்பு அரசர்களுக்கு நபி (ஸல்) எழுதிய கடிதங்கள் (1) 32.26 அழைப்பு விடுத்து ஹெராக்ளியஸ் மன்னருக்கு நபி (ஸல்) எழுதிய கடிதம் (1) 32.25 போரில் கிடைத்த உணவை, பகை நாட்டில் இருக்கும் போதே உண்ணலாம் (2) 32.24 முஹாஜிர்கள் தன்னிறைவு அடைந்தபோது … (2) 32.23 செயல்களுள் முன்னுரிமை அளிக்கத் தக்கது (1) 32.22 ஒப்பந்தத்தை முறித்துவிட்ட (பகை)வர்களுடன் போர் செய்யலாம் (3) 32.21 யூத கிறித்தவர்கள் அரபிய தீபகற்பத்திலிருந்து வெளியேற்றப்படுவது (1) 32.20 யூதர்களை ஹிஜாஸ் பகுதியிலிருந்து நாடு கடத்தியது (2) 32.19 கைதியை என்னென்னவெல்லாம் செய்யலாம் (1) 32.18 பத்ருப் போரில் வானவர்களின் உதவியும் … (1) 32.17 போர் வெற்றிச் செல்வத்தைப் பங்கிடும் முறை (1) 32.16 இறைத்தூதர்களுக்கு யாரும் (சொத்தில்) வாரிசாக முடியாது (5) 32.15 போர் செய்யாமல் கிடைத்த செல்வங்களின் சட்டம் (3) 32.14 … போர்க் கைதிகளைப் பரிமாறிக்கொள்வது (1) 32.13 போரில் கொல்லப்பட்ட எதிரியின் உடைமைகள் (4) 32.12 போர் வெற்றிச் செல்வங்கள் (7) 32.11 போர் வெற்றிச் செல்வங்கள் யாருக்குச் சொந்தம்? (1) 32.10 போரில் மரங்களை வெட்டுவதும் எரிப்பதும் அனுமதிக்கப்பட்டதாகும் (3) 32.9 பெண்களையும் குழந்தைகளையும் அறியாமல் கொன்றுவிட்டால் … (3) 32.8 போரில் பெண்களையும் குழந்தைகளையும் கொல்வதற்குத் தடை (2) 32.7 எதிரிகளை(ப் போரில்) எதிர்கொள்ளும்போது பிரார்த்திப்பது (2) 32.6 எதிரியை(ப் போர்க் களத்தில்) சந்திக்க ஆசைப்படுவது வெறுக்கத் தக்கது … (2) 32.5 போரில் தந்திரம் அனுமதிக்கப்பட்டது (2) 32.4 மோசடி செய்வது தடை செய்யப்பட்டதாகும் (8) 32.3 மக்களிடம் இலகுவாக நடந்துகொள்ள வேண்டும்; வெறுப்பைக் கைவிட வேண்டும் (3) 32.2 படைத் தலைவர், போர் நெறிகள் குறித்து அறிவுறுத்துவது (1) 32.1 முன்னறிவிப்பின்றித் தாக்குதல் தொடுக்கலாமா? (1) 31.5 பயணத்தில் உணவைப் பகிர்ந்துண்ணல் (1) 31.4 செல்வத்தால் பிறருக்கு உதவுவது விரும்பத் தக்கது (1) 31.3 விருந்தோம்பல் சார்ந்தவை (3) 31.2 உரிமையாளரின் அனுமதியின்றி கால் நடையில் பால் கறப்பதற்குத் தடை (1) 31.1 ஹாஜிகள் தவறவிட்டவை (2) 31.0 கண்டெடுக்கப்பட்டவை (5) 30.11 நீதிபதி சமரசம் செய்துவைப்பது விரும்பத் தக்கதாகும் (1) 30.10 ஆய்வாளர்களிடையே கருத்து வேறுபாடு (1) 30.9 சாட்சிகளில் சிறந்தவர் (1) 30.8 தவறான தீர்ப்புகளைத் தள்ளுபடி செய்வதும் (மார்க்கத்தில் இல்லாத) புதுமைகளை நிராகரிப்பதும் (2) 30.7 கோபமாக இருக்கும் நீதிபதி, தீர்ப்பளிப்பது விரும்பத் தக்கதன்று (1) 30.6 நீதிபதியின் ஆய்வுக்கு நன்மை உண்டு (1) 30.5 தடைகள் மூன்று (4) 30.4 ஹிந்த் (ரலி) வழக்கு (3) 30.3 வாதங்களின் அடிப்படையில் தீர்ப்பு அமைந்துவிடுதல் (2) 30.2 சத்தியத்தின் / சாட்சியத்தின் அடிப்படையில் தீர்ப்பளித்தல் (1) 30.1 சத்தியம் செய்து நிரூபிப்பது பிரதிவாதிமீது கடமையாகும் (2) 29.11 இழப்பீடு இல்லாத விபத்துகள் (2) 29.10 தண்டனைகள், குற்றங்களுக்கான பரிகாரமாகும் (3) 29.9 சீர்திருத்திற்காக வழங்கப்படும் சாட்டையடிகளின் (அதிகபட்ச) அளவு (1) 29.8 மது அருந்திய குற்றத்திற்கான தண்டனை (4) 29.7 மகப்பேறான பெண்ணின் தண்டனையைத் தள்ளிவைத்தல் (1) 29.6 இஸ்லாமிய அரசின் கீழ் வாழும் யூதர்கள் விபச்சாரத்தில் ஈடுபட்டாலும் கல்லெறி தண்டனை (6) 29.5 விபச்சாரம் செய்தவரின் ஒப்புதல் வாக்குமூலம் (9) 29.4 மணமானவர்கள் விபச்சாரம் செய்தால் கல்லெறி தண்டனை (1) 29.3 விபச்சாரக் குற்றத்திற்கான தண்டனை (2) 29.2 தண்டனையிலிருந்து விலக்கு அளிக்குமாறு பரிந்துரைப்பதற்குத் தடை (3) 29.1 தண்டனைக்குரிய திருட்டின் அளவுகோலும் தண்டனையும் (7) 28.11 சிசுக் கொலைக்கான இழப்பீடும் … (6) 28.10 கொலையாளி, தன் குற்றத்தை ஒப்புக்கொள்வதும் … (2) 28.9 மனிதர்களின் உயிர், தன்மானம், செல்வம் ஆகியவற்றுக்கு ஊறு விளைவிப்பது … (2) 28.8 மறுமையில் வழங்கப்படும் தீர்ப்பும் தண்டனையும் … (1) 28.7 கொலையை (உலகுக்கு) அறிமுகப்படுத்தியவர் மீதான பாவம் (1) 28.6 முஸ்லிமின் மரண தண்டனைக்கான காரணங்கள் (2) 28.5 பற்கள் போன்ற(உறுப்புகளான)வற்றில் பழிக்குப்பழி உண்டு (1) 28.4 தாக்க வந்தவனிடமிருந்து தற்காத்துக் கொள்வதற்காக … (6) 28.3 கல் மற்றும் கூராயுதங்களால் கொலை செய்தால், பழிக்குப்பழி உண்டு … (3) 28.2 வன்முறையாளர்களுக்கும் மதம் மாறியோருக்குமான தண்டனை (4) 28.1 அல்கஸாமா (4) 27.13 விடுதலைக்கு வாக்களிக்கப்பட்ட அடிமையை விற்கலாம் (2) 27.12 அடிமையில் தமது பங்கை மட்டும் விடுதலை செய்தல் (8) 27.11 ‏தன் உரிமையாளருக்கு விசுவாசமாகவும் … (4) 27.10 அடிமைக்கு எஜமானர் உண்பதிலிருந்து உணவளிப்பதும் … (4) 27.9 விபசாரம் செய்துவிட்டதாக அவதூறு கூறுவதற்கான கண்டனம் (1) 27.8 அடிமைகளுடனான நல்லுறவும் கன்னத்தில் அறைந்ததற்கான பரிகாரமும் (8) 27.7 இறைமறுப்பாளராக இருந்தபோது செய்த நேர்ச்சை… (2) 27.6 ஆகுமாக்கப்பட்டதற்கான சத்தியமாக இருந்தாலும் … (1) 27.5 இன்ஷா அல்லாஹ் என்பதை (சத்தியத்தின்போது) சேர்த்துக் கூறுதல் (4) 27.4 சொல்பவரின் எண்ணப்படியே ஒருவருடைய சத்தியம் அமையும் (2) 27.3 சத்தியம் செய்தவர், அதைவிடச் சிறந்ததாக மற்றொன்றைக் காணும்போது … (12) 27.2 ‘லாத்’ மற்றும் ‘உஸ்ஸா’வின் மீது சத்தியம் செய்துவிட்டவர் … (2) 27.1 அல்லாஹ்வைத் தவிர எவர்/எதன் மீதும் சத்தியம் செய்யத் தடை (3) 26.5 நேர்ச்சை முறிவுக்கான பரிகாரம் (1) 26.4 கஅபாவரை நடைப்பயணம் செல்வதாக நேர்ந்துகொண்டவர் (3) 26.3 இறைவனுக்கு மாறு செய்வதிலோ உரிமை இல்லாததிலோ நேர்ச்சை. (1) 26.2 நேர்ச்சை செய்வதற்குத் தடை; அது (விதியில்) எதையும் மாற்றிவிடாது (6) 26.1 நேர்ச்சையை நிறைவேற்றக் கட்டளை (1) 25.5 வசதியற்றவர் மரண சாஸனம் செய்ய முடியாது (6) 25.4 அறக்கொடை (1) 25.3 மனிதன் இறந்த பின்பும் தொடரும் நன்மைகள் (1) 25.2 இறந்துவிட்டவருக்காகச் செய்யப்படும் தர்மங்களின் நன்மை … (3) 25.1 மரண சாஸனம் 1/3 மட்டுமே (5) 25.0 மரண சாஸனம் (2) 24.4 ஆயுட்கால அன்பளிப்பு (11) 24.3 அன்பளிப்பு வழங்குவதில் பிள்ளைகளிடையே பாகுபாடு காட்டுவது … (10) 24.2 தானமும் அன்பளிப்பும் வழங்கப்பட்ட பின், திரும்பப் பெறுவதற்குத் தடை … (4) 24.1 தானமாகக் கொடுத்ததை விலைக்கு வாங்குவது விரும்பத் தக்கதல்ல (4) 23.4 ஒருவர் விட்டுச்செல்லும் செல்வம் அவருடைய வாரிசுகளுக்கு உரியதாகும் (4) 23.3 இறுதியாக அருளப்பெற்றது கலாலா வசனமாகும் (4) 23.2 ‘கலாலா’ சொத்துரிமை (5) 23.1 உரியவர்களுக்கும் உறவினருக்கும் பிரிக்கப்பட்ட பாகங்கள் (3) 23.0 ஒரு முஸ்லிம், இறைமறுப்பாளருக்கு வாரிசாகமாட்டார் (1) 22.31 பாதைக்கு நிலம் ஒதுக்குவதில் கருத்து வேறுபாடு ஏற்பட்டால் அதற்கான தீர்வு (1) 22.30 பிறர் நிலத்தை அபகரித்தல் போன்ற அநீதி இழைத்தல்களுக்குத் தடை (6) 22.29 அண்டை வீட்டாரின் சுவரில் (சாரம் கட்டுவதற்கு) மரக்கட்டை பதிப்பது (1) 22.28 பங்காளியின் இசைவு (3) 22.27 வியாபாரத்தில் (வீண்)சத்தியம் செய்வது விலக்கப்பட்டுள்ளது (2) 22.26 உணவுப் பொருட்களைப் பதுக்குவதற்குத் தடை (2) 22.25 முன்பணம் செலுத்தும் வணிகம் (2) 22.24 அடமானம் உள்ளூரிலும் பயணத்திலும் செல்லும் (3) 22.23 ஓர் உயிரினத்தை அதே இனத்திற்குப் பதிலாக ஏற்றத்தாழ்வோடு விற்கலாம் (1) 22.22 உங்களில் சிறந்தவர் கடனை அழகிய முறையில் திருப்பிச் செலுத்துபவரே (4) 22.21 ஒட்டகத்தை விற்றவர் அதில் பயணிக்க நிபந்தனை விதிப்பது (5) 22.20 அனுமதிக்கப்பட்டவற்றையும் ஐயத்திற்குரியவற்றையும் கையாளுதல் (1) 22.19 வட்டி வாங்குபவருக்கும் வட்டி கொடுப்பவருக்கும் சாபம் (2) 22.18 உணவுப் பொருளை, சரிக்குச் சரியாக விற்றல் (12) 22.17 பொன்னும் மணியும் பதித்த மாலையை விற்பது (4) 22.16 தங்கத்திற்கு வெள்ளியைக் கடனாக விற்பதற்குத் தடை (3) 22.15 நாணயமாற்று வியாபாரம்; வெள்ளிக்குத் தங்கத்தை ரொக்கத்துக்கு விற்பது (7) 22.14 வட்டி (4) 22.13 மது, செத்தவை, பன்றி, சிலைகள் ஆகியவற்றை விற்பதற்குத் தடை (4) 22.12 மதுபான வியாபாரத்திற்குத் தடை (4) 22.11 குருதி உறிஞ்சி எடுப்பதற்காகக் கூலி பெறுவது கூடும் (4) 22.10 வேட்டை, காவல், பாதுகாப்புக்காக நாய் வளர்க்கலாம் (18) 22.9 நாய் விற்ற காசு, சோதிடரின் தட்சணை, விபச்சாரியின் வருமானம் (4) 22.8 தேவைக்குப் போக மீதம் உள்ள நீரை விற்பதற்குத் தடை (5) 22.7 வசதியுள்ளவர் கடனைச் செலுத்த தாமதம் செய்யக் கூடாது (1) 22.6 கடனை அடைக்க சிரமப்படுபவருக்கு அவகாசம் அளிப்பதன் சிறப்பு (7) 22.5 திவாலானவரிடம் திரும்பப் பெற்றுக்கொள்ளும் உரிமை (4) 22.4 கடனில் தள்ளுபடி செய்வது விரும்பத் தக்கதாகும் (3) 22.3 சேதமடைந்த பழங்களுக்கான தொகைக்குத் தள்ளுபடி (5) 22.2 மரம் நடுதலின், பயிர் செய்தலின் சிறப்பு (5) 22.1 நிபந்தனையின் பேரில் தோப்பைக் குத்தகைக்கு விடுவது (4) 21.21 நிலத்தை (விளைவித்துக்கொள்ள) இரவலாக வழங்குவது (4) 21.20 ‘முஸார’ஆவும் ‘முஆஜரா’வும் (2) 21.19 பொன், வெள்ளி(நாயணங்களு)க்கு நிலத்தைக் குத்தகைக்கு விடுவது (3) 21.18 தானியத்திற்கு நிலத்தைக் குத்தகைக்கு விடுவது (2) 21.17 நிலக் குத்தகை (24) 21.16 தடை செய்யப்பட்ட வியாபார வகைகள் (6) 21.15 கனிகள் நிறைந்த பேரீச்ச மரத்தை விற்பது (4) 21.14 (மரத்திலுள்ள) செங்கனிகளை மாற்றிக் கொள்வதற்குத் தடை (14) 21.13 மரத்திலுள்ள பழங்களை முற்றுவதற்கு முன் விற்பதற்குத் தடை (10) 21.12 வியாபாரத்தில் ஏமாற்றப்படுபவர் (1) 21.11 வியாபாரத்தில் உண்மை பேசுவதும் குறைகளைத் தெளிவுபடுத்துவதும் (1) 21.10 விற்பவருக்கும் வாங்குபவருக்கும் வியாபாரத்தை முறித்துக்கொள்ளும் உரிமை (4) 21.9 அளவு தெரியாத பேரீச்சம் பழக் குவியலை விற்பதற்குத் தடை (1) 21.8 வாங்கப்பட்ட பொருள் கைக்கு வருமுன் (பிறருக்கு) விற்பது கூடாது (13) 21.7 மடி கனக்கச் செய்யப்பட்ட கால்நடைகளை விற்பனை செய்வது பற்றிய சட்டம் (5) 21.6: கிராமவாசிக்காக, நகரவாசி விற்றுக் கொடுக்கத் தடை (5) 21.5: விற்பனைக்கு வரும் சரக்குகளை இடைமறித்து வாங்கத் தடை (4) 21.4: வியாபாரத்தில் தடை செய்யப்பட்டவை (7) 21.3: ஒட்டகக் கன்று (அது பிறக்குமுன்) விற்பதற்கு தடை! (2) 21.2: கல்லெறி வியாபாரம் மற்றும் மோசடி வியாபாரம் ஆகியவை செல்லாது (1) 21.1: ‘முலாமஸா’ மற்றும் ‘முனாபதா’ ஆகிய வியாபாரங்கள் செல்லாது (3) 20.7: அடிமையான தந்தையை விடுதலை செய்வதன் சிறப்பு (1) 20.6: அடிமைகளை விடுதலை செய்வதன் சிறப்பு (4) 20.5: விடுதலை செய்த உரிமையாளரை மாற்றிக் கூறத் தடை (4) 20.4: வாரிசாகும் உரிமையை விற்பதற்கும் அன்பளிப்பாக வழங்குவதற்கும் தடை (1) 20.3: விடுதலை செய்தவருக்கே வாரிசுரிமை உரியது (9) 20.2: அடிமை (தனது முழு விடுதலைக்காக) உழைத்துப் பொருளீட்டுவது (2) 20.1: ஓர் அடிமையி(ன் விலையி)ல், ஒருவர் தமக்கான பங்கை விடுவிப்பது (1) 19.1: சுய சாபம் வேண்டுதல் (17) 18.9: கணவன் இறந்து ‘இத்தா’விலிருக்கும் பெண் துக்கம் கடைப்பிடிப்பது (11) 18.8: கர்ப்பமுற்றிருக்கும் பெண்ணின் ‘இத்தா’க் காலம், பிரசவத்துடன் முடிந்துவிடும் (2) 18.7: ‘இத்தா’விலிருக்கும் பெண் தன் தேவைக்காக வெளியே செல்லலாம் (1) 18.6: மூன்று தலாக் சொல்லப்பட்ட பெண்ணுக்கு ஜீவனாம்சம் பற்றி… (18) 18.5: ஈலாச் செய்வது, மனைவியிடமிருந்து விலகுவது, விருப்ப உரிமை அளிப்பது (5) 18.4: மனைவிக்கு (த் தம்மைப் பிரிந்துவிட) உரிமை அளிப்பது மணவிலக்கு ஆகாது (8) 18.3: மணவிலக்குச் செய்யும் நோக்கமின்றி கூறினால், அது மணவிலக்கு ஆகாது (4) 18.2: மூன்று தலாக்குகள் (3) 18.1: மாதவிடாயான மனைவியை அவளது சம்மதமின்றி மணவிலக்குச் செய்வதற்குத் தடை (14) 17.19: ஹவ்வா-வும், பெண்கள் கணவரை ஏமாற்றுதலும் (2) 17.18: மனைவியரின் நலம் நாடுதல் (4) 17.17: பயன் தரும் இவ்வுலகச் செல்வங்களுள் மிகச் சிறந்த செல்வம், நற்குணமுள்ள மனைவியே (1) 17.16: கன்னிப் பெண்ணை மணப்பது விரும்பத் தக்கதாகும் (5) 17.15: மார்க்கப் பற்றுள்ள பெண்ணை மணப்பது விரும்பத் தக்கதாகும் (2) 17.14: மனைவியருள் ஒருவர், தனது முறைநாளை மற்றவருக்கு விட்டுக்கொடுக்கலாம் (4) 17.13: மனைவியருக்கு (இரவுகளை) ஒதுக்கீடு செய்வது (1) 17.12: கன்னி கழிந்த பெண்ணுக்கும், கன்னிப் பெண்ணுக்கும் கணவன் ஒதுக்க வேண்டிய நாட்கள் (6) 17.11: சாயல் அறியும் நிபுணரின் கூற்றுப்படி, குழந்தைக்கு உரியவரைக் கண்டறிவது (3) 17.10: எஜமானரின் கீழ் வாழும் பெண்ணின் குழந்தை, அவருக்கே உரியது (2) 17.9: பெண் போர்க் கைதியுடன் உடலுறவு கொள்ளலாம் (2) 17.8: பசிக்காகத் தாய்ப்பால் அருந்தினால்தான் பால்குடி உறவு ஏற்படும் (1) 17.7: பருவ வயதை அடைந்தவருக்குப் பாலூட்டுவது (6) 17.6: ஐந்து தடவை அருந்தினால்தான் பால்குடி உறவு உண்டாகும் (2) 17.5: ஓரிரு தடவை (பெண்ணின் மார்பில்) பால் குடிப்பது பற்றிய சட்டம் (6) 17.4: மனைவியின் மகளையும் மனைவியின் சகோதரியையும் மணப்பதற்குத் தடை (2) 17.3: பால்குடிச் சகோதரரின் மகளை மணப்பது தடை செய்யப்பட்டுள்ளது (3) 17.2: பால்குடித் தந்தையின் (இரத்த பந்த) உறவினரும் மணமுடிக்கத் தகாதவரே! (6) 17.1: பிறப்பால் ஏற்படும் உறவும் பால்குடி உறவும் (2) 16.24: பாலூட்டும் மனைவியுடன் உடலுறவு கொள்ளும்போது அஸ்லுச் செய்வது வெறுக்கத் தக்கது (3) 16.23: கருவுற்றிருக்கும் பெண் போர்க் கைதியுடன் உடலுறவு கொள்வது தடை செய்யப்பட்டுள்ளது (1) 16.22: உடலுறவின்போது இடைமுறிப்பு – ‘அஸ்லு’ச் சட்டம் (12) 16.21: மனைவியுடன் நடைபெறும் உடலுறவு இரகசியங்களை வெளியே சொல்வது தடுக்கப்பட்டது (2) 16.20: ஒரு பெண், தன் கணவனின் படுக்கைக்குச் செல்ல மறுப்பதற்குத் தடை (3) 16.19: உடலுறவின் ஒழுங்குகள் (2) 16.18: உடலுறவின்போது ஓத வேண்டிய விரும்பத் தகுந்த பிரார்த்தனை (1) 16.17: மூன்று முறை மணவிலக்கு அளிக்கப்பட்ட பெண்ணின் மறுவிருப்பம் (4) 16.16: விருந்துக்கான அழைப்பை ஏற்பது பற்றிய கட்டளை (13) 16.15: ஸைனப் பின்த்து ஜஹ்ஷு (ரலி) திருமணம்; ஹிஜாப் பற்றிய வசனம்; மணவிருந்து (7) 16.14: அடிமைப் பெண்ணை விடுதலை செய்து, பின்னர் அவளை மணமுடித்துக்கொள்வதன் சிறப்பு (6) 16.13: மணக்கொடை (மஹ்ரு) என்பது … (7) 16.12: ஒருவர் தாம் மணமுடிக்க விரும்பும் பெண்ணின் முகத்தையும் இரு முன் கைகளையும் பார்ப்பது (2) 16.11 ஷவ்வால் மாதத்தில் மணமும் தாம்பத்திய உறவும் (1) 16.10: இளவயதுக் கன்னிக்கு அவளுடைய தந்தை மணமுடித்துவைத்தல் (4) 16.9: மணப் பெண்ணின் வாய் வழிச் சம்மதமும் மௌனச் சம்மதமும் (4) 16.8: திருமண (முன்) நிபந்தனைகளை நிறைவேற்றல் (1) 16.7: மணக்கொடையில்லா திருமணம் செல்லாது (5) 16.6: தம் (முஸ்லிம்) சகோதரன் கேட்டுக்கொண்டிருக்கும் ஒரு பெண்ணை, மற்றவர் கேட்கலாகாது (7) 16.5: இஹ்ராம் புனைந்தவர் திருமணம் செய்வதற்குத் தடை; அவர் பெண் கேட்பது வெறுக்கத் தக்கது (8) 16.4: மனைவியின் அத்தையை, சின்னம்மாவை மணக்கத் தடை (8) 16.3: இடைக்காலத் திருமணம், (முத்ஆ) காலாவதியானது (21) 16.2: இச்சை தூண்டப்பட்டவர், தமது இச்சையைத் தணித்துக் கொள்ளட்டும் (2) 16.1: வசதி இருந்தால் மணமுடிப்பதும் இல்லாதவர் நோன்பு நோற்பதும் (6) 15.97: குபாப் பள்ளிவாசல், அதில் தொழுவது, அதைத் தரிசிப்பது ஆகிய சிறப்புகள் (7) 15.96: இறையச்சத்தின் மீது நிறுவப்பட்ட பள்ளிவாசல் (1) 15.95: மூன்று பள்ளிவாசல்களைத் தவிர வேறெதற்கும் (புனிதப்) பயணம் கிடையாது (2) 15.94: மக்கா, மதீனாப் பள்ளிவாசல்களில் தொழுவதன் சிறப்பு (6) 15.93: ‘உஹுத்’ மலை நம்மை நேசிக்கிறது; நாமும் அதை நேசிக்கின்றோம் (3) 15.92: சொர்க்கப் பூஞ்சோலைகளுள் ஒன்று (3) 15.91: மதீனாவாசிகள் மதீனாவை விட்டு அகலும்போது அதன் நிலை (2) 15.90: மதீனாவிலேயே தங்கியிருப்பதற்கு ஆர்வமூட்டல் (2) 15.89: மதீனாவாசிகளுக்குக் கேடு நினைப்பவர்களை, அல்லாஹ் உருக்குலைத்துவிடுவான் (3) 15.88: தன்னிலுள்ள தீயவர்களை மதீனா அகற்றிவிடும் (5) 15.87: கொள்ளை நோயும் தஜ்ஜாலும் நுழைய முடியாமல் மதீனா பாதுகாக்கப்பட்டுள்ளது (2) 15.86: மதீனாவில் ஏற்படும் நெருக்கடிகளைச் சகித்துக்கொண்டு, அங்குக் குடியிருக்க ஆர்வ மூட்டல் (10) 15.85: மதீனாவின் சிறப்பு; பிரார்த்தித்ததும் புனிதமானவையும் (17) 15.84: இஹ்ராமின்றி மக்காவிற்குள் நுழைய அனுமதி (5) 15.83: அவசியத் தேவையின்றி மக்காவிற்குள் ஆயுதம் எடுததுச் செல்வதற்குத் தடை (1) 15.82: மக்காவும், அதன் புனிதமானவைகளும் (4) 15.81: முஹாஜிருக்கு மக்காவில் தக்குவதற்கு அனுமதிக்கப்பட்ட நாட்கள் (4) 15.80: ஹாஜிகள் மக்காவில் தங்குவதும் அங்குள்ள வீடுகளை வாரிசுரிமையாகப் பெறுவதும் (3) 15.79: ஹஜ், உம்ரா, அரஃபா நாள் ஆகியவற்றின் சிறப்பு (3) 15.78: இணைவைப்பவருக்கான ஹஜ் சட்டங்கள் (1) 15-77: ஹஜ் அல்லது உம்ராவிலிருந்து திரும்பும்போது துல்ஹுலைஃபாவில் தங்கித் தொழுவது (5) 15.76: பயணத்திலிருந்து திரும்பி வரும்போது ஓத வேண்டியவை (2) 15.75: பயணங்களில் வாகனத்தில் ஏறியதும் ஓத வேண்டிய துஆ (2) 15.74: மஹ்ரமான ஆணுடன் மட்டுமே பெண்ணின் ஹஜ் முதலான பயணம் (11) 15.73: ஹஜ் கடமை, ஆயுளில் ஒரு முறைதான் (1) 15.72: குழந்தையின் ஹஜ் செல்லும்; அதை ஹஜ்ஜுக்கு அழைத்துச் சென்றவருக்கும் நற்பலன் உண்டு (3) 15.71: இயலாதவருக்காகவோ, இறந்தவருக்காகவோ பிறர் ஹஜ் செய்தல் (2) 15.70: கஅபாவின் வளைந்த சுவரும் அதன் தலைவாயிலும் (1) 15.69: இறையில்லம் கஅபாவை இடித்துக் கட்டுதல் (7) 15.68: கஅபாவின் உள்ளே நுழைவதும் அதனுள் தொழுவதும் (9) 15.67: விடைபெறும் தவாஃப் மாதவிடாய் ஏற்பட்ட பெண்ணுக்குக் கடமையில்லை (8) 15.66: செல்லும் வழியில் பலிப் பிராணி பாதிப்புக்குள்ளாகிவிட்டால் … (2) 15.65: பலியிடக் கொண்டுசெல்லும் ஒட்டகத்தில், பயணம் செய்ய அனுமதி (6) 15-64: ஹரம் எல்லைக்குச் செல்லாதவர், பலிப் பிராணியை அனுப்பிவைக்கும் முறை (11) 15.63: ஒட்டகத்தை அறுக்கும் முறை (1) 15.62: பலிப் பிராணிகளுள் மாட்டிலும் ஒட்டகத்திலும் கூட்டுச் சேர்வது (8) 15.61: பலிப் பிராணிகளின் இறைச்சி, தோல், சேணம் ஆகியவை தர்மத்துக்குரியன (2) 15.60: ‘தஷ்ரீக்’ நாட்களின் இரவுகளில் மினாவில் தங்குவது கட்டாயமாகும் (2) 15.59: ‘நஃப்ரு’டைய நாளில் ‘அல்முஹஸ்ஸபி’ல் தங்குவதும் அங்குத் தொழுவதும் (9) 15.58: துல்ஹஜ் பத்தாவது நாளில் ‘தவாஃபுல் இஃபாளா’ செய்வது (2) 15.57: ஹஜ் சடங்குகளில் முன் – பின் ஆகிவிட்டால் … (6) 15.56: துல்ஹஜ் பத்தாம் நாளின் சடங்குகள் (3) 15.55: தலைமுடியை மழிப்பதும் குறைப்பதும் (6) 15.54: கற்களின் எண்ணிக்கை (1) 15.53: கல்லெறியும் நேரம் (1) 15.52: பொடிக் கற்கள் போதும் (1) 15.51: துல்ஹஜ் பிறை பத்தில் ஜம்ரத்துல் அகபாவுக்குக் கல்லெறிதல் (3) 15.50: ‘ஜம்ரத்துல் அகபா’வின் மீது கல் எறியும்போது தக்பீர் கூறுவது (4) 15.49: முஸ்தலிஃபாவிலிருந்து மினாவிற்குப் புறப்படச் செய்வது (11) 15.48: முஸ்தலிஃபாவில் ஸுப்ஹுத் தொழுகையை ஆரம்ப நேரத்தில் தொழுவது (1) 15.47: மஃக்ரிப், இஷா வை அடுத்தடுத்துத் தொழுவது (14) 15.46: அரஃபா நாளில் மினாவிலிருந்து அரஃபாவிற்குப் போகும்போது தல்பியாவும் தக்பீரும் கூறுதல் (4) 15.45: துல்ஹஜ் பத்தாவது நாளன்று கல்லெறியத் துவங்கும்வரை தல்பியாச் சொல்லிக்கொண்டிருப்பது (7) 15.44: ஸஃபா-மர்வாவுக்கிடையே ஸயீ (ஓட்டம்) ஒரே தடவைதான் (1) 15.43: ஸஃபா-மர்வாவுக்கிடையே ஸயீச் செய்வது முக்கியக் கடமையாகும் (5) 15.42: வாகனங்கள் மீதமர்ந்து தவாஃப் செய்யலாம் (6) 15.41: தவாஃபின்போது ஹஜருல் அஸ்வதை முத்தமிடுவது (5) 15.40: இறையில்லத்தில் முத்தமிடப்படும் இரு மூலைகள் (6) 15.39: தவாஃபில் விரைந்து நடப்பது விரும்பத்தக்கது (12) 15.38: மக்காவினுள் நுழையும் முன்… (4) 15.37 மக்காவினுள் நுழைவதும் வெளியேறுவதும் (3) 15.36 ரமளான் மாதத்தில் உம்ராச் செய்வதன் சிறப்பு (2) 15.35: நபியவர்களின் உம்ரா எண்ணிக்கையும் காலமும் (4) 15.34 நபியவர்களின் தல்பியாவும் பலியும் (4) 15.33: உம்ராவில் தலைமுடி குறைத்தல் (5) 15.32: இஹ்ராமின்போது பலிப் பிராணி (4) 15.31: ஹஜ்ஜுப் பருவங்களில் உம்ராச் செய்ய அனுமதி (6) 15.30: தமத்துஉ ஹஜ் (2) 15.29: இஹ்ராம் ஹாஜிக்குக் கட்டாயம் (3) 15.28: தவாஃபும் ஸயீயும் கட்டாயம் (3) 15.27: ஹஜ் உம்ரா சேர்த்தும் தனித்தும் செய்வது (3) 15.26: ஒரே இஹ்ராமில் உம்ரா ஹஜ் (3) 15.25: இஹ்ராமிலிருந்து விடுபடுதல் (3) 15.24: பலிப் பிராணியும் ஹஜ் கடமையும் (2) 15.23: தமத்துஉ ஹஜ் அனுமதிக்கப்பட்ட ஒன்றாகும் (13) 15.22: ஒருவர் வேறொருவரின் இஹ்ராமை அச்சொட்டி பூணுதல் (3) 15.21: அரஃபா பெருவெளியில் தங்கி திரும்புதல் தொடர்பான இறை கூற்று (3) 15.20: அரஃபாப் பெருவெளி முழுவதும் தங்குமிடம் (2) 15.19: நபி (ஸல்) அவர்களின் ஹஜ் (1) 15.18: உம்ராவையும் ஹஜ்ஜையும் தனித் தனியாக நிறைவேற்றி பயனடைதல் (2) 15.17: இஹ்ராமின் முறைகள் (27) 15.16: இரத்தப்போக்குடைய பெண் இஹ்ராமில் குளித்தல் (2) 15.15: இஹ்ராமிலிருந்து விடுபட முன் நிபந்தனையிட அனுமதி (5) 15.14: முஹ்ரிம் இறந்துவிட்டால் செய்ய வேண்டியவை (9) 15.13: இஹ்ராம் பூண்ட முஹ்ரிம், தம் உடலைக் கழுவிக்கொள்ள அனுமதி (1) 15.12: இஹ்ராம் பூண்ட முஹ்ரிம், தம் கண்களுக்கு மருந்திட அனுமதி (2) 15.11: இஹ்ராம் பூண்ட முஹ்ரிம், ஹிஜாமா செய்ய அனுமதி (2) 15.10: முஹ்ரிமுக்குத் தலைமுடி மழிக்க அனுமதியும் பரிகாரமும் (7) 15.09: ஹரம் எல்லைக்குள் கொல்ல அனுமதிக்கப்பட்டவைகள் (12) 15.08: இஹ்ராம் பூண்ட முஹ்ரிம் வேட்டையாடுவது குறித்து.. (9) 15.07: இஹ்ராமின்போது நறுமணம் பூசுதல் (19) 15.06: துல்ஹுலைஃபா பள்ளியில் தொழுதல் (1) 15.05: வாகனம் புறப்படுவதற்கு ஆயத்தமானவுடன் தல்பியா கூறுவது (4) 15.04: மதீனாவாசிகள் இஹ்ராம் பூண வேண்டிய இடம் (2) 15.03: தல்பியாவின் பண்பும் அதன் நேரமும் (4) 15.02: ஹஜ்/உம்ராவிற்கான இஹ்ராம் எல்லைகள் (7) 15.01: ஹஜ்/உம்ராவில் அனுமதிக்கப்பட்டவை.. (10) 14.04: துல்ஹஜ் மாதத்தின் பத்து நோன்புகள் (2) 14.02: இஃதிகாஃப் இருக்குமிடத்தினுள் நுழையும் நேரம் (1) 14.03: இறுதிப் பத்தில் வழிபாடுகளில் ஈடுபடுவது (2) 14.01: இறுதிப் பத்து நாட்களில் இஃதிகாஃப் இருத்தல் (5) 13.40: லைலத்துல் கத்ர் இரவு குறித்து.. (17) 13.39: ஷவ்வால் ஆறு நோன்பு (1) 13.37: ஷஅபான் மாத இறுதியில் நோன்பு நோற்றல் (3) 13.38: முஹர்ரம் நோன்பின் சிறப்பு (2) 13.36: சுன்னத்தான நோன்புகள் (5) 13.35: ஒரு நாள் விட்டு ஒரு நாள் நோன்பு (12) 13.34: நோன்பில்லாமல் எந்த மாதத்தையும் கடக்க விடாமலிருப்பது விரும்பத் தக்கது (9) 13.33: மறதியால் (நோன்பாளி) நோன்பு முறியாது (1) 13.32: கூடுதலான நோன்பு முடிவு செய்வதற்கும் விடுவதற்கும் அனுமதி (2) 13.31: அல்லாஹ்வின் பாதையில் செல்லும்போது சக்தி பெற்றிருப்பவர் நோன்பு நோற்பதன் சிறப்பு (2) 13.30: நோன்பின் மாண்பு (6) 13.29: நோன்பாளி, நாவைக் காப்பது (1) 13.28: நோன்பாளி விருந்துக்கு அழைக்கப்பட்டால் “நான் நோன்பாளி” என்று சொல்லிவிட வேண்டும் (1) 13.27: இறந்துபோனவரின் விடுபட்ட நோன்பை நோற்பது (5) 13.26: ரமளானில் விடுபட்ட நோன்பை ஷஅபான் மாதத்தில் ‘களா’ச் செய்தல் (2) 13.25: இறைவசனம் வேறொரு வசனத்தின் மூலம் மாற்றம் (2) 13.24: வெள்ளிக்கிழமை மட்டும் நோன்பு நோற்பது விரும்பத் தக்கதன்று (3) 13.23: அய்யாமுத் தஷ்ரீக் நாட்களில் நோன்பு நோற்பதற்குத் தடை (2) 13.22: நோன்புப் பெருநாளிலும் ஹஜ்ஜுப் பெருநாளிலும் நோன்பு நோற்பதற்குத் தடை (6) 13.20: ஆஷூரா நோன்பை எந்த நாளில் நோற்க வேண்டும்? (4) 13.19: ஆஷூரா நாளில் நோன்பு நோற்றல் (17) 13.18: அரஃபா நாளில் அரஃபாவில் தங்கும் ஹாஜிகளின் நோன்பு (4) 13.17: பயணத்தில் நோன்பு நோற்பதையோ விட்டுவிடுவதையோ தேர்ந்துகொள்ளலாம் (5) 13.16: பயணத்தில் நோன்பைக் கைவிட்டவர், பொதுப் பணியாற்றினால் கிடைக்கும் நன்மை (3) 13.15: பயணத்தில் இருப்பவர் மீதான கடமையான ரமளான் நோன்பு (11) 13.14: ரமளான் பகலில் உடலுறவில் ஈடுபடுவதற்குத் தடையும் அதன் பரிகாரமும் (5) 13.13: பெருந்துடக்குடன் வைகறைப் பொழுதை அடைந்தவரின் நோன்பு செல்லும் (6) 13.12: கட்டுப்படுத்தும் நோன்பாளிக்கு (தம் மனைவியை) முத்தமிடத் தடையில்லை (13) 13.11: தொடர்நோன்பு நோற்பதற்குத் தடை (7) 13.10: பகற் பொழுது வெளியேறி நோன்பு நிறைவடையும் நேரம் (3) 13.09: ஸஹரைத் தாமதிப்பதும் நோன்பு துறப்பதை விரைந்து செய்வதும் (6) 13.08: ஃபஜ்ரு நேரம் வந்தவுடன் நோன்பு ஆரம்பமாகிவிடும் (11) 13.07: ‘இரு பெருநாட்களின் இரு மாதங்களும் குறைவுபடாது’ நபிகளாரின் விளக்கம் (2) 13.06: (வானை) மேகம் மூடிக்கொண்டால் (மாதத்தின் நாட்கள்) முப்பதாக முழுமையாக்கப்படும் (2) 13.05: ஒவ்வோர் ஊர்க்காரர்களுக்கும் அவரவர் பார்க்கும் பிறையே பொருந்தும் (1) 13.04: மாதம் என்பது இருபத்தொன்பது நாட்களாகவும் இருக்கும் (6) 13.03: ரமளானுக்கு முந்தைய இரு நாள்களில் நோன்பு நோற்கக் கூடாது (1) 13.02: ரமளான் நோன்பு தொடக்கமும் முடிவும் (17) 13.01: ரமளான் மாதத்தின் சிறப்பு (2) 12.55: ஸகாத் வசூலிப்பவர், தடை செய்யப்பட்டதைக் கோராதவரை அவரைத் திருப்திபடுத்த வேண்டும் (1) 12.54: தர்மப் பொருள் கொண்டுவந்தவருக்காகப் பிரார்த்தித்தல் (1) 12.53: நபி (ஸல்) அன்பளிப்பை ஏற்றதும் தர்மத்தை மறுத்ததும் (1) 12.52: தர்மப் பொருள், அதன் பண்பு நீங்கி விடுதல் (5) 2.27: நாய் நக்கிய பாத்திரம் பற்றிய சட்டம் (6) 2.28: தேங்கிக் கிடக்கும் தண்ணீரில் சிறுநீர் கழிப்பதற்குத் தடை (3) 2.29: பெருந்துடக்குடையவர் தேங்கிய நீரில் இறங்கிக் குளிக்கத் தடை (1) 2.30: பள்ளிவாசலில் சிறுநீர் கழித்தால்… (3) 2.31: தாய்பால் குடிக்கும் குழந்தையின் சிறுநீரைக் கழுவும் சட்டம் (4) 2.32: விந்து பற்றிய சட்டம் (4) 2.33: மாதவிடாய் இரத்தம் கழுவும் முறை (1) 2.34: சிறுநீரைச் சுத்தம் செய்வது கட்டாயம் (1) 3.01: மாதவிடாயான மனைவியைக் கீழாடைக்கு மேல் அணைத்துக் கொள்வது. (3) 3.02: மாதவிடாயான மனைவியுடன் ஒரே போர்வைக்குள் படுத்துக் கொள்வது. (2) 3.03: மாதவிடாயான பெண் செய்ய அனுமதிக்கப்பட்டவை (11) 3.04: இச்சை நீர் (3) 3.05: உறங்கி எழுந்ததும் முகத்தையும் கையையும் கழுவுதல் (1) 3.06: பெருந்துடக்காளி செய்ய வேண்டியவை (8) 3.07: மதன நீர் வெளிப்பட்ட பெண்ணுக்குக் குளியல் கடமை. (5) 3.08: ஆண்/பெண் (விந்து-மதன)நீரிலிருந்துதான் குழந்தை உருவாகிறது. (1) 3.09: பெருந்துடக்கிற்கான குளியல் முறை (5) 3.10: பெருந்துடக்கு குளியல் தொடர்பானவை (14) 3.11: குளிக்கும் போது மூன்றுமுறை தண்ணீர் ஊற்றுதல் (4) 3.12: குளிக்கும் பெண்களின் சடைமுடி பற்றிய சட்டம் (2) 3.13: மாதவிடாய் குளியலின் போது கஸ்தூரி பயன்படுத்துதல் (2) 3.14: தொடர் உதிரப் போக்குடைய பெண்களின் தொழுகை மற்றும் குளியல் (5) 3.15: மாதவிடாய் நாட்களில் விடுபட்ட கடமைகள் (3) 3.16: குளிப்பவர் திரையிட்டுக் கொள்தல் (3) 3.17: பிறரின் மறையுறுப்பைப் பார்த்தல் (1) 3.18: தனித்துக் குளிக்கும் போது ஆடையின்றி குளித்தல் (1) 3.19: மறையுறுப்பை மறைத்துக் கொள்வதில் கவனம் (3) 3.21: (விந்து)நீர் வெளிப்பட்டாலே (குளியல்)நீர் கடமையாகும் (9) 3.22: ஆண்-பெண் குறிகள் இணைந்து விட்டால் குளியல் கடமையாகும் (3) 3.23: சமைக்கப்படவற்றை உண்டால் மீண்டும் உளூ செய்தல் (3) 3.24: சமைக்கப் பட்டவற்றை உண்டால் உளூச் செய்யும் கட்டாயம் மாற்றப் பட்டது (8) 3.25: ஒட்டக இறைச்சி உண்டால் உளூச் செய்ய வேண்டும் (1) 3.26: வாயு பிரிந்த சந்தேகம் ஏற்பட்டாலும் தொழலாம் (2) 3.27: பதனிடப்படுவதால் செத்த பிராணியின் தோல் தூய்மை ஆகும் (7) 3.28: தயம்மும் (6) 3.29: ஒரு முஸ்லிம் (பெருந்துடக்கு ஏற்பட்டதால்) அசுத்தமாகிவிட மாட்டார். (2) 3.30: பெருந்துடக்கு போன்ற நிலைகளிலும் அல்லாஹ்வைத் துதித்தல். (1) 3.31: சிறுதுடக்காளி (உளூச் செய்யாமல்) உண்ணலாம் (4) 3.32: கழிப்பிடத்திற்குச் செல்லும்போதான பிரார்த்தனை (1) 3.33: உட்கார்ந்து கொண்டு உறங்குவது உளூவை முறிக்காது. (4) 4.01: தொழுகை அழைப்பின் தொடக்கம் (1) 4.02: தொழுகை அறிவிப்பு தொடர் அமையும் விதம் (3) 4.03: தொழுகை அழைப்பு முறை (1) 4.04: ஒரு பள்ளிவாசலுக்கு இரு தொழுகை அழைப்பாளர்கள் (1) 4.05: பார்வையற்றவர் தொழுகை அழைப்பு விட நிபந்தனை (1) 4.06: போரின் போது இணைவைப்பாளர் நாட்டில் தொழுகை அழைப்பு விடுக்கப்பட்டால் (1) 4.07: தொழுகை அழைப்பைச் செவியுறுபவர் செய்ய வேண்டியவை (4) 4.08: தொழுகை அழைப்பின் சிறப்பும் ஷைத்தான் வெருண்டோடுவதும் (6) 4.09: இரு கைகளையும் தோள் புஜத்துக்கு உயர்த்துதல் (4) 4.10: அல்லாஹு அக்பர், ஸமி அல்லாஹு லிமன் ஹமிதஹ் கூறும் இடங்கள் (5) 4.11: தொழுகையில் அல்ஃபாத்திஹா அத்தியாயம் ஓதுதல் (8) 4.12: இமாமைப் பின்பற்றித் தொழுபவர் உரத்து ஓதலாகாது (2) 4.13: பிஸ்மில்லாஹ்வை(த் தொழுகையில்) உரத்து ஓதாலாகாது என்போரின் வாதம் (2) 4.14: அத்தியாயங்களின் துவக்கம் “பிஸ்மில்லாஹ்” குறித்த வாதம் (1) 4.15: தக்பீருக்குப் பின்னும் சஜ்தாவிலும் கைகளை வைக்கும் முறை (1) 4.16: தொழுகையில் அத்தஹிய்யாத் ஓதுவது (4) 4.17: இறுதி அத்தஹியாத்திற்குப் பின் ஸலவாத் கூறுதல் (4) 4.18: ஸமி அல்லாஹு லிமன் ஹமிதஹ், ரப்பனா ல(க்)கல் ஹம்து, ஆமீன் ஆகியவை கூறுவது (5) 4.19: இமாமை மஃமூம் பின்தொடர்வது (5) 4.20: இமாமை முந்துவதற்குத் தடை (4) 4.21: இமாமைப் பின்பற்றுவதில் சட்ட மாற்றம் (10) 4.22: இமாம் வருவதற்குத் தாமதமானால்… (2) 4.23: தொழுகையில் இமாமுக்கு ஏதாவது உணர்த்த விரும்பினால்… (1) 4.24: தொழுகையை முழுமையாக உள்ளச்சத்துடன் தொழல் (4) 4.25: தொழுகையில் இமாமை முந்தாமல் இருத்தல் (7) 4.26: தொழும்போது வானத்தை அண்ணாந்து பார்ப்பதற்குத் தடை (2) 4.27: தொழுகையில் ஒழுங்குகள் (3) 4.28: தொழுகையில் வரிசைகளைப் பேணுதல் (11) 4.29: ஆண்களுக்குப் பின்னால் தொழும் பெண்கள் தலை உயர்த்தும் முறை (1) 4.30: பெண்கள் பள்ளிவாசலுக்குச் செல்தல், நறுமணம் பூசுதல் (11) 4.31: தொழுகையில் அச்சநிலையில் குர்ஆன் ஓதும் முறை (2) 4.32: குர்ஆன் ஓதப்படும்போது செவிதாழ்த்திக் கேட்க வேண்டும். (2) 4.33: ஸுப்ஹுத் தொழுகையில் உரத்துக் குர்ஆன் ஓதுதல் (4) 4.34: லுஹ்ரு, அஸ்ருத் தொழுகைகளில் குர்ஆன் ஓதுதல் (8) 4.35: ஸுப்ஹுத் தொழுகையில் குர்ஆன் ஓதுதல் (13) 4.36: இஷாத் தொழுகையில் குர்ஆன் ஓதுவது (8) 4.37: தொழுகையைச் சுருக்கி, நிறைவுறத் தொழுவிப்பதற்கான கட்டளை (11) 4.38: தொழுகையின் நிலைகளை நிதானமாக, சுருக்கி, நிறைவாகச் செய்வது (4) 4.39: தொழுகையில் இமாமை முந்தி விடாமலிருத்தல் (5) 4.40: ருகூஉவிலிருந்து தலையை உயர்த்திய பின் ஓத வேண்டியவை (5) 4.41: ருகூஉவிலும் ஸஜ்தாவிலும் குர்ஆன் ஓதுவதற்குத் தடை (6) 4.42: ருகூஉவிலும் ஸஜ்தாவிலும் ஓத வேண்டியவை (9) 4.44: ஸஜ்தாவின் போது தரையில் படவேண்டிய உறுப்புகள் (7) 4.45: சீராக ஸஜ்தா செய்தல் (2) 4.46: தொழுகை முறைத் தொகுப்பு (5) 4.47: தனித்துத் தொழுபவர் தடுப்பு ஒன்றை வைத்துக் கொள்வது (13) 4.48: தொழுகையில் குறுக்கே செல்பவரைத் தடுப்பது (4) 4.49: தொழுபவர், தடுப்புக்கு நெருக்கமாக நிற்க வேண்டும் (3) 4.50: தொழுபவருக்கான குறுக்குத் தடுப்பின் அளவு (2) 4.51: தொழுபவருக்குக் குறுக்கே படுத்திருப்பது (8) 4.52: ஒரே ஆடை அணிந்து தொழும் முறை (9) 5.01: பூமியில் எழுப்பப்பட்ட முதலாவது இறையாலயம் (8) 5.02: மஸ்ஜிதுந் நபவீ கட்டப்பட்ட வரலாறு (2) 5.03: தொழுகைத் திசை(கிப்லா) கஅபாப் பள்ளிக்கு மாற்றம் (4) 5.04: மண்ணறைகளில் செய்யக்கூடாதவை (6) 5.05: மஸ்ஜிதுகள் கட்டுவதன் சிறப்பும் அதற்கான ஆர்வமூட்டலும் (2) 5.06: ருகூஉவில் உள்ளங்கைகளை வைப்பதற்கான சட்டத் திருத்தம் (5) 5.07: இரு குதிகால்கள்மீது (தொழுகை அமர்வில்) அமர அனுமதி (1) 5.08: தொழுகையில் பேசிக் கொள்ள இருந்த அனுமதி நீக்கம் (6) 5.09: தொழுகைக்கு இடையில் செய்ய அனுமதிக்கப்பட்டவை (2) 5.10: குழந்தைகளைச் சுமந்துகொண்டு தொழுவதற்கு அனுமதி (3) 5.11: தொழுகையின்போது ஓரிரு அடிகள் நடக்க அனுமதி (1) 5.12: இடுப்பில் கையூன்றிக் கொண்டு தொழுவது வெறுக்கத் தக்கது (1) 5.13: தொழும்போது மண்ணைச் சமப்படுத்துதல் வெறுக்கத் தக்கது (3) 5.14: பள்ளிவாசலில் எச்சில் துப்பத் தடை (10) 5.15: காலணி அணிந்து கொண்டு தொழுவதற்கு அனுமதி (1) 5.16: கவனத்தை ஈர்க்கும் ஆடை அணிந்து தொழுதல் வெறுக்கப்பட்டது (3) 5.17: சிறுநீர்/மலம் அடக்குதல், உணவு காக்க வைத்தல் நிலையில் தொழுதல் (4) 5.18: துர்நாற்றத்துடன் பள்ளிச்செல்லுதலும் அவரை வெளியேற்றலும் (10) 5.19: பள்ளிவாசலினுள் காணாமற்போன பொருளைத் தேடத் தடை (3) 5.20: தொழுகையில் ஏற்படும் மறதிக்குப் பரிகாரம் (17) 5.21: ஸஜ்தா திலாவத் (9) 5.22: அத்தஹிய்யாத்தில் அமரும் முறை (5) 5.23: தொழுகையை நிறைவு செய்யும்போது ஸலாம் கூறும் முறை (3) 5.24: தொழுத பின்னர் திக்ரு (3) 5.25: மண்ணறை வேதனையிலிருந்து பாதுகாப்புக் கோருதல் (3) 5.26: தொழுகையில் பாதுகாப்புக் கோரப்பட வேண்டியவை (8) 5.27: தொழுகைக்குப்பின் திக்ரு செய்தல் (9) 5.28: தொடக்கத் தக்பீருக்குப் பின் கூறவேண்டியவை (4) 5.29: தொழுகையில் கலந்துகொள்ள செல்லும் முறை (5) 5.30: தொழுகைக்காக மக்கள் எப்போது எழுந்து நிற்க வேண்டும்? (5) 5.31: கூட்டுத்தொழுகையை அடைந்துகொள்ள நிபந்தனை (5) 5.32: ஐவேளைத் தொழுகை நேரங்கள் (13) 5.33: கடுங்கோடையில் ஜமாஅத் தொழுகை (8) 5.34: கடுங்கோடையில்லா சமயத்தில் ஜமாஅத் தொழுகை (4) 5.35: அஸ்ருத் தொழுகையின் நேரம் (7) 5.36: அஸ்ருத் தொழுகையைத் தவறவிட்டால்.. (3) 5.37: அஸ்ரு நடுத்தொழுகை என்போரின் சான்று (6) 5.38: ஸுப்ஹு, அஸ்ருத் தொழுகைகளின் சிறப்புகள் (6) 5.39: மஃக்ரிபுத் தொழுகையின் ஆரம்ப நேரம் (2) 5.40: இஷாத் தொழுகையின் நேரமும் அதைத் தாமதமாகத் தொழுவதும் (12) 5.41: ஸுப்ஹுத் தொழுகையின் நேரம் மற்றும் ஓதப்படும் (குர்ஆன் வசனங்களின்) அளவு (7) 5.42: தொழுகைக்கு உரிய நேரத்தைத் தாமதப்படுத்துதல் (7) 5.43: கூட்டுத் தொழுகையின் சிறப்பும் அதைத் தவற விடுவது பற்றிய கண்டனமும் (10) 5.44: தொழுகை அழைப்பைச் செவியுறுபவர் பள்ளிவாசலுக்குச் செல்வது கட்டாயமாகும் (1) 5.45: கூட்டுத் தொழுகை என்பது நேர்வழியைச் சார்ந்தது (2) 5.46: பாங்கு கூறிய பின்னர் பள்ளிவாசலிலிருந்து வெளியேறத் தடை (2) 5.47: இஷா மற்றும் ஸுப்ஹு கூட்டாகத் தொழுவதன் சிறப்பு (4) 5.48: கூட்டுத் தொழுகையைத் தவிர்ப்பதற்கான அனுமதி (1) 5.49: நஃபில் தொழுகைகளை ஜமாஅத்தாகத் தொழுதல் (6) 5.50: கூட்டுத் தொழுகைக்காகக் காத்திருப்பதன் சிறப்பு (5) 5.51: பள்ளிவாசலுக்கு நடந்து செல்வதன் சிறப்பு (6) 5.52: தொழுகைக்கு நடந்து செல்பவருக்குக் கிடைக்கும் பலன்கள் (4) 5.53: உதயம்வரை தொழுத இடத்தில் அமர்ந்திருப்பதன் சிறப்பு (3) 5.54: தொழுகைக்குத் தலைமையேற்க அதிகத் தகுதியுடையவர் (5) 5.55: எல்லாத் தொழுகைகளிலும் குனூத் ஓதும் காலகட்டம் (15) 5.56: விட்டுப்போனத் தொழுகைகளைத் தொழுதல் (8) 6.01: பயணிகளின் தொழுகை; சுருக்கித் தொழுதல் (20) 6.02: மழையின்போது இருப்பிடங்களில் தொழுதுகொள்ளலாம் (4) 6.03: நஃபில் தொழுகைகளை வாகனத்தில் செல்பவர் தொழலாம் (10) 6.04: பயணத்தில் இரு தொழுகைகளைச் சேர்த்து தொழலாம் (7) 6.05: உள்ளூரில் இருக்கும்போது இரு தொழுகைகளை இணைத்து தொழுதல் (10) 6.06: தொழுது முடித்தபின் வலம், இடம் திரும்பி அமர்தல் (3) 6.07: இமாமுக்கு வலப்பக்க வரிசையில் நிற்பது விரும்பத்தக்கது (1) 6.08: இகாமத் கூறத் தொடங்கி விட்டால் நஃபில் தொழுவது வெறுக்கத்தக்கது (5) 6.09: பள்ளிவாசலுக்குள் நுழையும்போது கூறவேண்டிய துஆ (1) 6.10: பள்ளிக் காணிக்கை தொழுகை தொடர்பாக (4) 6.11: பயணத்திலிருந்து திரும்பியவர் இரண்டு ரக்அத் தொழுதல் (3) 6.12: முற்பகல் (ளுஹா) தொழுகை எண்ணிக்கை (11) 6.13: ஃபஜ்ருடைய இரு ரக்அத் சுன்னத் தொழுகை (15) 6.14: சுன்னத் தொழுகைகளின் சிறப்பும் எண்ணிக்கைகளும்! (3) 6.15: நஃபில் தொழுகைகளைத் தொழும் முறைகள் (14) 6.16: இரவுத் தொழுகை (18) 6.17: இரவுத் தொழுகையின் ஒருங்கிணைந்த விபரங்கள் (4) 6.18: அவ்வாபீன் தொழுகை (2) 6.19: இரவுத் தொழுகை, வித்ருத் தொழுகை ரக்அத்கள் (16) 6.20: வித்ருத் தொழுகை நேரம் (2) 6.21: தொழுகையில் மிகச் சிறந்தது (2) 6.22: இரவில் பிரார்த்தனை ஏற்கப்படும் நேரம் (2) 6.23: இரவின் இறுதி நேரத்தில் பிரார்த்தனை (5) 6.24: ‘கியாமு ரமளான்(தராவீஹ்) தொழ ஆர்வமூட்டல் (8) 6.25: இரவுத் தொழுகையில் பிரார்த்திப்பதும் நின்று வணங்குவதும் (17) 6.26: இரவுத் தொழுகையில் நீண்ட நேரம் (நின்று) குர்ஆன் ஓதுவது (2) 6.27: தொழாமல் விடியும்வரை உறங்குபவர் (3) 6.28: கூடுதலான நஃபில் தொழுகைகள் (6) 6.29: நற்செயல்களை வழக்கமாகச் செய்வதன் சிறப்பு. (4) 6.30: இபாதத் தூக்கத்தால் தடைப்பட்டால்… (5) 6.31: குர்ஆனின் தொடர்பைப் பற்றிப் பிடித்துக்கொள்ளக் கட்டளை (7) 6.32: குர்ஆனை இனிய குரலில் ஓதுவது விரும்பத் தக்கதாகும் (5) 6.33: மக்கத்து வெற்றி நாளில்… (2) 6.34: குர்ஆனை ஓதுவதால் இறங்கும் அமைதி (3) 6.35: குர்ஆனை மனனமிட்டவரின் சிறப்பு (1) 6.36: குர்ஆனை ஓதுகின்ற இருவகையினரின் தனிச் சிறப்புகள் (1) 6.37: குர்ஆனில் தேர்ந்த மேன்மக்கள் முன்னிலையில் குர்ஆன் ஓதுவது (2) 6.38: குர்ஆனைச் செவியேற்பதன் சிறப்பு (3) 6.39: குர்ஆனைக் கற்பது மற்றும் ஓதுவதன் சிறப்பு (2) 6.40: குர்ஆன் ஓதுவதன் சிறப்பும் அல்பகரா அத்தியாயத்தின் சிறப்பும் (2) 6.41: ஸூரத்துல் ஃபாத்திஹா, அல்பகரா அத்தியாயத்தின் இறுதி வசனங்களின் சிறப்பு (2) 6.42: ஸூரத்துல் கஹ்ஃப் மற்றும் ஆயத்துல் குர்ஸீ ஆகியவற்றின் சிறப்பு (3) 6.43: குல் ஹுவல்லாஹு அஹது (அத்தியாயத்தை) ஓதுவதன் சிறப்பு (4) 6.44: அல்முஅவ்விதத்தைன் (பாதுகாவல்) அத்தியாயங்களை ஓதுவதன் சிறப்பு (2) 6.45: குர்ஆனின்படி தாமும் செயல்பட்டுப் பிறருக்கும் அதைக் கற்பிப்பவரின் சிறப்பு (4) 6.46: குர்ஆன் ஏழு (வட்டார) மொழிநடையில் அருளப்பெற்றுள்ளது என்பதன் விளக்கம் (4) 6.47: குர்ஆனை வேகமாக ஓதுவதைத் தவிர்த்தல் (4) 6.48: குர்ஆன் ஓதும் முறைகளுள் சில (4) 6.49: தொழத் தடுக்கப்பட்ட நேரங்கள். (8) 6.50: அம்ரு பின் அபஸா (ரலி) இஸ்லாத்தை ஏற்றமை (1) 6.51: சூரியன் உதிக்கும் நேரத்தையும் மறையும் நேரத்தையும் தேர்ந்தெடுத்துத் தொழாதீர்கள்! (2) 6.52: நபி (ஸல்) அஸ்ருக்குப் பிறகு தொழுதுவந்த இரண்டு ரக்அத்கள் எவை? (5) 6.53: மஃக்ரிப் தொழுகைக்கு முன் இரண்டு ரக்அத்கள் தொழுவது விரும்பத் தக்கது (2) 6.54: பாங்குக்கும் இகாமத்துக்கும் இடையிலுள்ள தொழுகை (1) 6.55: அச்சச் சூழல் தொழுகை (8) 7.01: வெள்ளிக்கிழமையில் குளிப்பது வயதுவந்த ஒவ்வோர் ஆண் மீதும் கடமை (7) 7.02: வெள்ளிக்கிழமையில் பல் துலக்குவதும் நறுமணம் பூசுவதும் (4) 7.03: வெள்ளிக்கிழமை சொற்பொழிவின்போது அமைதி காத்தல் (2) 7.04: வெள்ளிக்கிழமையில் (பிரார்த்தனை ஏற்கப்படுவதற்கு) உள்ள ஒரு நேரம் (4) 7.05: வெள்ளிக்கிழமையின் சிறப்பு (2) 7.06: இந்தச் சமுதாயத்தின் (சிறப்பு வழிபாட்டு) நாள் வெள்ளிக்கிழமை (4) 7.07: வெள்ளிக்கிழமை (தொழுகைக்கு) முன்னதாகச் செல்வதன் சிறப்பு (2) 7.08: மௌனமாக (வெள்ளிக்கிழமை) உரையைச் செவியேற்பவரின் சிறப்பு (2) 7.09: சூரியன் (உச்சியிலிருந்து) சாயும்போது ஜும்ஆத் தொழுவது (5) 7.10: தொழுகையின் உரைகளும் இடையே (இமாம்) அமர்வதும் (3) 7.11: வியாபாரத்தையோ வேடிக்கையையோ கண்டால் (62:11ஆவது) இறைவசனம் (4) 7.12: ஜும்ஆத் தொழுகையை(த் தொழாமல்) கைவிடுவதற்குக் கண்டனம் (1) 7.13: (ஜும்ஆத்) தொழுகையையும் (குத்பா) உரையையும் சுருக்கமாக அமைத்தல் (11) 7.14: இமாம் (ஜும்ஆ) உரை நிகழ்த்தும்போது காணிக்கை தொழுகை (6) 7.15: பொது போதனைக்கு நடுவில் தனி போதனை (1) 7.16: ஜும்ஆத் தொழுகையில் ஓத வேண்டியவை (3) 7.17: வெள்ளிக்கிழமை (ஃபஜ்ருத் தொழுகையில்) ஓத வேண்டியவை (3) 7.18: ஜும்ஆவுக்குப் பின் தொழ வேண்டியவை (16) 8.01: பெருநாள் திடலில் பெண்கள் பங்கேற்பது (3) 8.02: பெருநாள் திடலில் தொழுகைக்கு முன்போ பின்போ தொழக் கூடாது (1) 8.03: இரு பெருநாள் தொழுகைகளில் ஓதக் கூடியவை (2) 8.04: பெருநாட்களில் பாவமில்லா விளையாட்டுகளில் ஈடுபட அனுமதி (7) 9.00: இமாம் (மழைத் தொழுகையில்) மேல்துண்டை மாற்றிப் போட்டுக் கொள்வது (4) 9.01: மழைவேண்டிப் பிரார்த்திக்கும்போது இருகைகளை உயர்த்துதல் (3) 9.02: மழைவேண்டிப் பிரார்த்தித்தல் (2) 9.03: கடும் காற்றையும் மேகத்தையும் காணும்போதும்.. மழை பெய்யும்போதும்.. (3) 9.04: கீழைக் காற்று (’ஸபா’) மற்றும் மேலைக் காற்று (’தபூர்’) பற்றிய குறிப்புகள் (1) 10.01: சூரிய கிரகணத் தொழுகை (7) 10.02: கிரகணத் தொழுகையின்போது மண்ணறை வேதனை பற்றி நினைவு கூர்வது (1) 10.03: கிரகணத் தொழுகையின்போது சொர்க்கமும் நரகமும் (6) 10.04: கிரகணத் தொழுகையில் எட்டு ருகூஉகளும் நான்கு ஸஜ்தாக்களும்.. (2) 10.05: கிரகணத் தொழுகைக்காக, “அஸ்ஸலாத்து ஜாமிஆ” அறிவிப்பு.. (8) 11.01: மரணத் தருவாயில் ‘லா இலாஹ இல்லல்லாஹ்’ (எனும் கலிமா)வை நினைவூட்டுதல் (2) 11.02: துன்பம் நேரும்போது வேண்டக்கூடிய பிரார்த்தனை (2) 11.03: நோயாளியிடமும் மரணத் தருவாயில் இருப்பவரிடமும் சொல்ல வேண்டியவை (1) 11.04: உயிர் பிரிந்தவுடன் இறந்தவருக்குச் செய்ய வேண்டியவை (1) 11.05: இறப்பவரின் பார்வை தனது உயிரை நோக்கி நிலைகுத்தி நிற்றல் (1) 11.06: இறந்தவருக்காக அழுவது (3) 11.07: நோயாளிகளைச் சந்தித்து உடல்நலம் விசாரித்தல் (1) 11.08: பொறுமை என்பது துன்பத்தின் முதல் நிலையில் கடைப்பிடிப்பதாகும் (2) 11.09: இறந்தவருக்காக ஒப்பாரி வைத்து அழுதால்.. (14) 11.10: ஒப்பாரிக்குக் கடுமையான கண்டனம் (5) 11.11: ஜனாஸாவின் இறுதி ஊர்வலத்தைப் பின்தொடர்ந்து செல்வதற்குப் பெண்களுக்குத் தடை (2) 11.12: மையித்தைக் குளிப்பாட்டுதல் (4) 11.13: மய்யித்திற்கு ‘கஃபன்’ உடை அணிவித்தல் (4) 11.14: மய்யித்தை மூடிவைத்தல் (1) 11.15: மய்யித்திற்கு அழகிய முறையில் கஃபன் அணிவித்தல் (1) 11.16: இறந்தவர் உடலைத் துரிதமாக அடக்கம் செய்தல் (2) 11.17: ஜனாஸாத் தொழுகையின் மற்றும் ஜனாஸாவைப் பின்தொடர்வதன் சிறப்பு (6) 11.18: மய்யித்துக்காக நூறு பேர் தொழுது செய்யும் பரிந்துரை ஏற்கப்படும் (1) 11.19: மய்யித்துக்காக நாற்பது பேர் பரிந்துரை (1) 11.20: இறந்தவர் குறித்துப் புகழ்ந்து, அல்லது இகழ்ந்து பேசப்படுதல் (1) 11.21: ஓய்வு பெற்றவரும் ஓய்வளித்தவரும் (1) 11.22: ஜனாஸாத் தொழுகையில் சொல்ல வேண்டிய தக்பீர்கள் (6) 11.23: மண்ணறை அருகில் (ஜனாஸாத் தொழுகை) தொழுவது (4) 11.24: ஜனாஸாவுக்காக எழுந்து நிற்பது (7) 11.25: ஜனாஸாவுக்காக எழுந்து நிற்கும் வழக்கம் மாற்றப்பட்டது (3) 11.26: இறந்தவருக்காக ஜனாஸாத் தொழுகையில் செய்யும் பிரார்த்தனை (2) 11.27: ஜனாஸாத் தொழுகையின்போது இமாம் எந்த இடத்தில் நிற்க வேண்டும்? (2) 11.28: ஜனாஸாத் தொழுகை தொழுதுவிட்டு வாகனத்தில் ஏறித் திரும்பிச் செல்லலாம் (2) 11.29: உட்குழியும் மையித்தின் மேல் செங்கற்களை அடுக்குவதும் (1) 11.30: கப்றுக் குழியினுள் போர்வையை விரித்து (மையித்தை) வைப்பது (1) 11.31: கப்றைத் தரை மட்டமாக்க உத்தரவு (2) 11.32: கப்றுகளைக் காரையால் பூசுவதோ அதன் மீது கட்டடம் எழுப்புவதோ கூடாது (2) 11.33: கப்றின்மீது அமர்வதும் அதன் மீது தொழுவதும் தடுக்கப்பட்டவை (3) 11.34: பள்ளிவாசலில் ஜனாஸாத் தொழுகை நடத்துவது (3) 11.35: மையவாடிக்குள் கூற வேண்டியதும் பிரார்த்திப்பதும் (3) 11.36: நபி (ஸல்), தம் தாயாரின் கப்றைக் காண்பதற்கு இறைவனிடம் அனுமதி கோரியது (3) 11.37: தற்கொலை செய்தவருக்கு, (ஜனாஸா) தொழுகையைக் கைவிட்டது (1) 12.00: பல வகை வள வரிகள் (5) 12.01: பத்து சதவீத ஸகாத்; அல்லது ஐந்து சதவீத ஸகாத் (1) 12.02: ஒரு முஸ்லிம் மீது அவர்தம் அடிமைக்காகவும் குதிரைக்காகவும் ஸகாத் கடமை இல்லை (3) 12.03: ஸகாத்தைச் சமர்ப்பிப்பதும் ஸகாத் கொடுக்க மறுப்பதும் (1) 12.04: பெருநாள் தர்மமாகப் பேரீச்சம் பழம், பார்லி (10) 12.05: பெருநாள் தொழுகைக்கு முன்பே பெருநாள் தர்மத்தை வழங்க கட்டளை (2) 12.06: ஸகாத் வழங்க மறுப்பது குற்றமாகும் (4) 12.07: ஸகாத் வசூலிப்பவர்களிடம் கனிவுடன் நடந்துகொள்வது (1) 12.08: ஸகாத் வழங்காதவருக்கான கடும் தண்டனை (2) 12.09: தர்மம் செய்வதற்கு ஆர்வமூட்டல் (2) 12.10: செல்வத்தைச் சேமித்தோர் பற்றிய கண்டனம் (2) 12.11: தர்மம்: ஆர்வமூட்டலும் நற்கூலி உண்டு என்ற நற்செய்தியும் (2) 12.12: செலவழிப்பதன் சிறப்பும் வழங்காதவனின் பாவமும் (4) 12.13: தமக்கும், குடும்பத்தாருக்கும், உறவினர்களுக்குமாக செலவிடுதல் (1) 12.14: இணை வைக்கும் உறவுகளுக்குச் செலவழிப்பதன் சிறப்பு (8) 12.15: இறந்தவருக்காகத் தர்மம் செய்தல் (1) 12.16: எல்லா நல்லறமும் ஸதகா எனப்படும் (5) 12.17: அறவழியில் செலவு செய்பவரும் செய்யாதவரும் (1) 12.18: தர்மம் செய்வதற்கு ஆர்வமூட்டல் (5) 12.19: தர்மம் (இறைவனிடம்) ஏற்கப்படுவதும் வளர்வதும் (3) 12.20: இன் சொல்லையேனும் தர்மம் செய்து நரகத்திலிருந்து பாதுகாப்பு பெறல் (5) 12.21: தர்மத்தின் அளவில் குறை காண தடை (1) 12.22: பாலுக்காக இரவல் வழங்கப்படும் கால்நடைகளின் சிறப்பு (2) 12.23: வள்ளலுக்கும் கஞ்சனுக்குமான உதாரணம் (3) 12.24: உரியவருக்குத் தர்மம் சேரவில்லையேனும் பலன் (1) 12.25: உரிமையாளரின் அனுமதியுடன் தர்மம் செய்தவருக்கும் பலன் (3) 12.26: ஓர் அடிமை தன் உரிமையாளரின் செல்வத்திலிருந்து (அறவழியில்) செலவழித்தல் (3) 12.27: தர்மத்தையும் இதர நற்செயல்களையும் இணைத்துச் செய்தவர் (3) 12.28: அறவழியில் தாராளமாக செலவிடலும் கணக்கு பார்ப்பது விரும்பத்தக்கதல்ல என்பதும் (3) 12.29: சிறிய அளவு தர்மம் (1) 12.30: இரகசியமாகத் தர்மம் செய்வதன் சிறப்பு (1) 12.31: மிகச் சிறந்த தர்மம் (2) 12.32: சிறந்த கை (4) 12.33: யாசிப்பதற்குத் தடை (3) 12.34: ஏழை என்பவன், அடிப்படைத் தேவைகளுக்குப் போதிய பொருளாதாரம் இல்லாதவன் (2) 12.35: மக்களிடம் யாசிப்பது வெறுக்கப்பட்டதாகும் (6) 12.36: யாருக்கு யாசிக்க அனுமதி? (1) 12.37: எதிர்பார்ப்பு இல்லாமல், யாசிக்காமல் வாழ்பவருக்கு வழங்கப்பட்டால் பெற்றுக்கொள்ளலாம் (4) 12.38: உலகாதாயத்தின் மீது பேராசை கொள்வது விரும்பத் தக்கதன்று (2) 12.39: இரு ஓடைகள் இருந்தாலும் மூன்றாவது ஓடையை எதிர்பார்த்தல் (4) 12.40: வாழ்க்கை வசதிகள் அதிகமாக இருப்பது செல்வமன்று (1) 12.41: இவ்வுலகத்தின் கவர்ச்சி குறித்து அஞ்சுதல் (3) 12.42: சுயமரியாதை மற்றும் பொறுமையின் சிறப்பு (1) 12.43: போதுமான வாழ்வாதாரமும் போதுமென்ற மனமும் (4) 12.44: அருவருப்பாகப் பேசி, கடுஞ் சொற்களால் கேட்டவருக்கும் தானம் வழங்குவது (4) 12.45: இறைநம்பிக்கை, (வறுமையால்) கேள்விக்குள்ளாக்கப்படுபவருக்கு உதவுதல் (1) 12.46: இஸ்லாத்தை ஏற்றவர்களுக்கு வழங்கலும் இறை நம்பிக்கை வலுவானவர் பொறுமை கொள்ளலும் (8) 12.47: காரிஜிய்யாக்களும் அவர்களின் தன்மைகளும் (10) 12.48: காரிஜிய்யாக்களைக் கொல்லுவதற்கு ஊக்கப்படுத்துதல் (4) 12.49: காரிஜிய்யாக்கள் படைப்பினங்களிலேயே தீயவர்கள் ஆவர் (3) 12.50: தூதரின் குடும்பத்தார் ஸகாத் பெறுவதற்குத் தடை (6) 12.51: நபி (ஸல்) குடும்பத்தாரைத் தர்மப் பொருட்கள் வசூலிக்கப் பயன்படுத்தலாகாது (1) 2.26: அசுத்தமான கையைப் பாத்திரத்தில் நுழைத்தல் (2) 2.25: ஒருநாள் தொழுகைகளை ஒரு உளூவில் தொழ அனுமதி (1) 2.24: காலுறையில் மஸஹு செய்து தொழுவதற்கான வரம்பு (1) 2.23: முன் தலை மற்றும் தலைப்பாகை மீது மஸஹு செய்தல் (4) 2.22: காலுறையில் மஸஹு செய்தல் (9) 2.21: தண்ணீரால் கழுவித் துப்புரவு செய்தல் (3) 2.20: மலம் கழிப்பதற்குத் தடையுள்ள இடங்கள் (1) 2.19: செயல்களை வலப் புறமிருந்து தொடங்குதல். (2) 2.18: வலக் கரத்தால் கழுவத் தடையானவை (3) 2.17: கழிப்பிடத்தில் துப்புரவு செய்தல் (7) 2.16: இயற்கை மரபுகள் (8) 2.15: பல் துலக்குதல் (7) 2.14: சிரமகாலங்களிலும் முழுமையாக ஒளு செய்வதன் சிறப்பு (1) 2.13: உளூவில் தண்ணீர் படும் இடங்களில் ஒளி படர்தல் (1) 2.12: உளூவில் உறுப்புகளை அதிகப்படுத்திக் கழுவுதல் (6) 2.11: உளூ செய்த நீரோடு வெளியேறும் பாவங்கள் (2) 2.10: உளூவில் உறுப்புகள் முழுவதும் கழுவுதல் (1) 2.09: இரு கால்களையும் முழுமையாகக் கழுவுதல் கட்டாயம் (6) 2.08: சுத்தம் செய்யும் போது ஒற்றைப்படையாக செய்தல் (5) 2.07: நபி (ஸல்) அவர்கள் செய்த அங்கத் தூய்மை (உளூ) (2) 2.06: அங்கத் தூய்மை (உளூ) செய்தபிறகு ஓதப்படும் பிரார்த்தனை (1) 2.05: சிறு பாவங்களுக்கான பரிகாரங்கள் (3) 2.04: அங்கத்தூய்மையின் சிறப்பும் அதன் பின் தொழுவதன் சிறப்பும் (9) 2.03: அங்கத் தூய்மை (உளூ) செய்முறையும் அதை நிறைவாகச் செய்வதும் (2) 2.02: தொழுகைக்குக் கட்டாயமான (அங்கத்) தூய்மை (2) 2.01: அங்கத்தூய்மை(உளூ)யின் சிறப்பு (1) 1.96: மறுமையில் ஆதம்(அலை) அவர்களுக்கு இடப்படும் கட்டளை (1) 1.95: சொர்க்கவாசிகளில் பாதிபேர் (3) 1.94: விசாரணையோ வேதனையோ இன்றி சொர்க்கம் செல்வோர் (7) 1.93: நட்பு கொள்ளத் தக்கவர்களும் தகாதவர்களும் (1) 1.92: இறைமறுப்பாளரின் நற்செயல்கள் பலனளிக்காது (1) 1.91: நரகவாசிகளிலேயே மிகக்குறைவான வேதனை அனுபவிப்பவர். (4) 1.90: அபூதாலிபுக்காக நபி(ஸல்) அவர்களின் பரிந்துரை (3) 1.89: நெருங்கிய உறவினருக்கு எச்சரிக்கை செய்தல் (5) 1.88: இறைமறுப்பாளருக்கு எந்தப் பரிந்துரையும் பலனளிக்காது (1) 1.87: தம் சமுதாயத்தார் மீது நபி(ஸல்) அவர்களுக்குள்ள பரிவு (1) 1.86: நபி(ஸல்) அவர்களின் பரிந்துரைப் பிரார்த்தனை! (8) 1.85: சொர்க்கத்திற்காகப் பரிந்துரைக்கும் முதல் மனிதர் (4) 1.84: சொர்க்கவாசிகளுள் ஆகக் குறைந்த பதவி (14) 1.83: இறுதியானவராக வெளியேறும் நரகவாசி. (3) 1.82: ஷஃபாஅத்(பரிந்துரை) செய்யப்படுபவர்கள் (2) 1.81: இறைவனைக் காணும் வழிமுறை (3) 1.80: இறைவனைக் காண்பதற்கான சான்று (2) 1.79: அல்லாஹ்வின் பார்வை பற்றிய விளக்கம் (2) 1.78: மிஃராஜின் போது நபி(ஸல்) கண்டது பற்றிய விளக்கம் (2) 1.77: நபி(ஸல்) அவர்கள் இறைவனைப் பார்த்தார்களா? என்பது பற்றிய விளக்கம் (5) 1.76: சித்ரத்துல் முந்தஹா(இலந்தை மரம்) பற்றிய குறிப்பு! (4) 1.75: ஈஸா(அலை) மற்றும் தஜ்ஜால் பற்றிய குறிப்புகள் (6) 1.74: விண்ணுலகப் பயணமும் தொழுகை கடமையாக்கப்படலும் (12) 1.73: வேத வெளிப்பாடு (வஹீ) தொடங்குதல் (3) 1.72: இறை நம்பிக்கை ஏற்கப்படாத காலகட்டம் (5) 1.71: ஈசா(அலை) இஸ்லாமிய நெறிப்படி நீதி வழங்குதல் (6) 1.70: தூதுத்துவம் உலக மக்கள் அனைவருக்கும் பொதுவானது (3) 1.69: இறைச்சான்றுகள் மூலம் மன அமைதி (1) 1.68: ஒருவரை இறைநம்பிக்கையாளர் என்று முடிவு செய்தல் (2) 1.67: அச்சநேரத்தில் இறைநம்பிக்கையாளர் நிலை (1) 1.66: இறுதிக் காலத்தில் இறை நம்பிக்கை (அற்றுப்) போய் விடுவது. (2) 1.65: இஸ்லாத்தின் மீளெழுச்சி. (3) 1.64: உள்ளங்களில் குழப்பங்கள் தோன்றுவது. (2) 1.63: குடிமக்களைச் சுரண்டும் ஆட்சியாளன் நரகத்திற்குரியவன் ஆவான். (3) 1.62: செல்வத்தைக் காக்கப் போராடியவர் மற்றும் பிறர் செல்வத்தைப் பறிக்க முனைந்தவர் (2) 1.61: மாற்றாரின் பொருளைக் கைப்பற்றுபவர் நிலை. (5) 1.60: இறைநம்பிக்கையில் தடுமாற்றம் ஏற்பட்டால்.. (8) 1.59: நல்ல-தீய எண்ணங்களுக்கான கூலி (5) 1.58: தீய எண்ணங்களைச் செயல்படுத்தாமல் இருத்தல் (2) 1.57: தாங்க முடியாத சுமை? (2) 1.56: இறை நம்பிக்கையின் வாய்மையும் தூய்மையும் (1) 1.55: இறைமறுப்பாளராக இருந்தபோது செய்த நல்லறங்கள் (3) 1.54: முன் செய்த பாவங்கள் (2) 1.53: அறியாமை காலத்தில் செய்த தீமைகள் (2) 1.52: இறைநம்பிக்கையாளரின் அச்சம் (1) 1.51: குழப்பங்கள் தோன்றுவதற்கு முன் நற்செயல் புரிய விரைதல் (1) 1.50: மறுமை நெருங்கும் வேளையில் வீசும் காற்று (1) 1.49: ஹிஜ்ரத்தில் தற்கொலை செய்து கொண்டவரின் நிலை (1) 1.48: கையாடல் செய்பவரும் இறைநம்பிக்கையாளரும் (2) 1.47: தற்கொலை செய்பவரும் கட்டுப்பட்டு வாழ்பவரும் (7) 1.46: மூன்று பெரும் தவறான செயல்கள் (4) 1.45: புறங்கூறுவது வன்மையாகத் தடை செய்யப் பட்டது (3) 1.44: துக்க வேளைகளில் தடை செய்யப்பட்ட செய்கைகள்! (3) 1.43: முஸ்லிம்களை வஞ்சித்தவர் நிலை! (2) 1.42: முஸ்லிம்களுக்கு எதிராக ஆயுதம் ஏந்தியவர் நிலை! (3) 1.41: “லா இலாஹ இல்லல்லாஹ்” கூறியவரைக் கொல்லத்தடை! (4) 1.40: இணைவைத்தலின் விளைவுகள் (5) 1.39: தற்பெருமை (3) 1.38: பெரும் பாவங்கள் (5) 1.37: பாவங்களில் மிகவும் அருவருப்பானது (2) 1.36: நற்செயல்களில் சிறந்தது (6) 1.35: தொழுகையை விடுதலும் குஃப்ரும் (3) 1.34: இறைநம்பிக்கை குறைவும் குஃப்ர் எனும் சொல்லும் (1) 1.33: அன்ஸாரிகளையும் அலி(ரலி)யையும் நேசித்தல் (6) 1.32: மழையும் இறைமறுப்பும் (4) 1.31: ஓடிப்போன அடிமை (3) 1.30: இறைமறுப்பின் அடையாளங்கள் (1) 1.29: இறைமறுப்பாளர்களாய் மாறுதல் (2) 1.28: முஸ்லிமோடு போரிடுதல் (1) 1.27: தந்தையை வெறுப்பவன் நிலை (4) 1.26: முஸ்லிமை நோக்கி காஃபிர் என அழைத்தல் (2) 1.25: நயவஞ்சகனின் குணங்கள். (3) 1.24: இறைநம்பிக்கையில் குறைவு ஏற்படல் (2) 1.23: மார்க்கம் என்பதே நலன் நாடுவதுதான். (4) 1.22: இறைநம்பிக்கையாளர்களை நேசித்தல் (1) 1.21: இறைநம்பிக்கையில் ஏற்படும் ஏற்றத் தாழ்வு (9) 1.20: நன்மையை ஏவுதல், தீமையைத் தடுத்தல் (2) 1.19: நல்லவற்றிற்கு ஆர்வமூட்டுதல் (3) 1.18: அண்டை வீட்டாருக்குத் தொல்லை தரக் கூடாது (1) 1.17: தமக்கு விரும்வுவதைச் சகோதரனுக்கும் விரும்புதல் (2) 1.16: தூதரை நேசிப்பது கடமை (2) 1.15: இறைநம்பிக்கையின் இனிமை (2) 1.14: இஸ்லாம் கூறும் நல்லறங்களில் சிறந்தது (4) 1.13: இஸ்லாத்தின் அனைத்துப் பண்புகளின் கலவை (1) 1.12: இறைநம்பிக்கையின் கிளைகள் (5) 1.11: இறைநம்பிக்கையைச் சுவைப்பவர் (1) 1.10: ஓரிறை கோட்பாட்டில் மரணித்தவர் நிலை (11) 1.09: இணை வைத்த நிலையில் மரணித்தவர் நிலை (3) 1.08: ஜிஸ்யா செலுத்தாதவர் மீது போர் புரிதல் (6) 1.07: இஸ்லாத்தை ஏற்க அழைப்பு விடுத்தல் (2) 1.06: அறியாதவர்களுக்கு அறிவித்தல் (4) 1.05: இஸ்லாமியக் கடமைகள் (4) 1.04: சொர்க்கம் செல்பவர் (7) 1.03: இஸ்லாத்தின் தூண்கள் (2) 1.02: தொழுகை பற்றிய விளக்கம் (2) 1.01: இறைநம்பிக்கை குறித்த விளக்கம் (7)
காண்பியக்கலையின் அடிப்படைகள் என்பது, காண்பியக்கலைப் படைப்பொன்றினை கட்டியெழுப்பு வதற்குத் தேவையான அடிப்படையான காரணிகளையே குறிக்கின்றது. அதற்கமைய, கோடு, வர்ணம், தளம், வெளி, இழைமம், வடிவம், ஒளியும்-நிழலும், கட்டமைப்பு ஆகிய காரணிகளை முதன்மையான கட்புலக்கலை அடிப்படைகளாகக் கருதலாம். ஒரு கலைஞர் இந்த அடிப்படைக் காரணிகளை ஒன்று சேர்ப்பதன் மூலம் ”பாணியை” உருவாக்குகிறார். அதற்கமைய ஒரு கலைப்பாணியில் கட்டமைப்பு இயல்புகளின் நடத்தை விவரிக்கப்படுகின்றது. கட்டமைப்பின் சகல பண்புகளையும் உள்ளடக்கிய ஒட்டுமொத்த அமைப்பைக் காணலாம். காண்பியக்கலைப்படைப்பின் வெளிப்பாட்டுத் தன்மைக்கேற்ப, அதில் பயன்படுத்தப்பட்டுள்ள அடிப்படை அம்சங்கள் வேறுபடலாம். உதாரணமாக, இயக்கக்கலைப் (kinetic art) படைப்பாக்கமொன்றினைக் கருதுகையில், இயக்கத்தை (motion) அதன் ஓர் அடிப்படை அம்சமாகக் கொள்ளலாம். தெரிவு செய்யப்பட்ட முதன்மையான கட்புலக்கலை அடிப்படைகள் பற்றிய விவரங்கள் கீழே தரப்பட்டுள்ளன. இரேகை / கோடு (Line) கோடு (இரேகை) என்பதை அசையும் புள்ளியொன்றின் சுவடு/பாதை என அல்லது யாதேனும் பொருளின் புற எல்லை என எளிமையாக வரையறுக்கலாம். கோடு என்பது தனியே ஓவியக்கலைக்கு மாத்திரம் வரையறைப்பட்டதல்ல. மாறாக அது சிற்பக்கலை கட்டடக்கலை, வரைகலை வடிவமைப்பு, ஒளிப்படக்கலை போன்ற அனைத்துக்கும் பெதுவான ஓர் அடிப்படை அம்சமாகும். கோட்டினால் காட்டப்படும் வெவ்வேறு தன்மைகளை இனங்காணமுடிவதோடு, அகன்ற (wide), துரித (Quick), மந்தமான (Slow), பதட்டமான (Nervous), விறைப்பான (Rigid) ஆகியன அவற்றுள் சிலவாகும். ஒழுங்கான/நேரான கோடுகள் (Regular lines) அசைவான/ ஒழுங்கற்ற கோடுகள் (Irregular lines) கோடுகளின் வெவ்வேறுபட்ட தன்மைகளுக்கமைய அக் கோட்டினால் ஏற்படுத்தப்படும் பாணி மற்றும் மனவெழுச்சி சார்ந்த வெளிப்பாடுகள் வெவ்வேறுபட்டவையாகும். உதாரணமாக ஜோர்ஜ் கீற் போன்ற ஒரு கலைஞரின் ஆக்கங்களைக் கருதுகையில், பாணி சார்ந்த வெளிப்பாட்டுக்களில் அகன்ற – தடித்த கோடுகள் பெரிதும் பயன்படுத்தப்பட்டிருப்பதைக் காணலாம். மேலும் வின்சன்ட் வங்கோ இனது முறிகோடுகளை உள்ளடக்கிய கோட்டுப் பயன்பாட்டை வெளிப்பாட்டு வாதத்துக்கு உணர்ச்சி மனப்பதிவு வாதத்துக்கு ஓர் உதாரணமாகக் குறிப்பிடலாம். கோட்டின் மூலம் யாதேனும் பொருளின் முப்பரிமாணத்தன்மை, தூரதரிசனத்தையும் காட்டலாம். கோடுகள் மூலம் கட்டியெழுப்பப்படும் தூரதரிசனம், கோடுசார்ந்த தூரதரிசனம் (Linear Perspective) எனப்படும். இதற்காக மறையும் புளி (vanishing point) வரையில் செல்லும் ஒரு தொகுதிக் கோடுகளைப் பயன்படுத்தி கட்புல அடிப்படைகள் கொண்டுவரப்படுகின்றன. பப்லோ பிக்காசோ வினால் வரையப்பட்ட புலம்பும் பெண் (weeping woman) எனும் ஓவியம் கருத்து வெளிப்பாட்டுக்காகக் கோடுகளை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதற்கான ஒரு நல்ல எடுத்துக்காட்டாகும். கறுப்பு, கடுங்கறுப்பு நிறமான புறக்கோடுகள், பெண்ணினது முகத்தில் தளவடிவங்களை வலியுறுத்திக்காட்டுவதற்காகப் பயன்படுத்தப்பட்டள்ளது. அழுதல் எனும் வெளிப்பாட்டைக் காத்திரமானவாறு பார்ப்போருக்கு உணர்த்துவதற்காக இக்கோடுகளின் பயன்பாடு துணையாகின்றது. சிற்பக்கலை தொடர்பாக நோக்குகையில், புத்தர்சிலைகளில் சந்தத்துக்கு (லயத்துக்கு ) அமைவான அலைமடிப்புக்களை கோடுகள் மூலம் வலியுறுத்திக் காட்டலுக்கான ஒரு நல்ல உதாரணமாகும். மேலும் அயோனிக் தூணின் போதிகை பகுதிகளில் காணப்படுகின்ற கோடுகள் கட்டடக்கலையின் ஓர் அங்கமாக கோடுகளின் பாவனைக் காட்டப்பட்டுள்ளது. பப்லோ பிகாசோ புலம்பும் பெண் Weeping Woman வின்சன்ட் வங்கொ நட்சத்திர இரவு எட்வாட் மஞ்சி அலறல் புத்தர் சிலை அயோனிக் தூண் வர்ணங்கள் / நிறங்கள் (Colours) வர்ணம் என்பது ஒளியை முதன்மையாகக் கொண்டு கட்டியெழுப்பப்படும் காண்பியக்கலை அடிப்படையாகும். படைக்கப்பட்ட கலைப்படைப்பின் மேற்பரப்பு மீது நிகழும் ஒளித்தெறிப்புக்கு ஒப்பான தன்மை கண்களால் உணரப்படுகின்றது. நீலம், மஞ்சள், சிவப்பு ஆகியன ஓவியக்கலையின் அடிப்படையான நிறங்களாகக் கருதப்படுகின்றன. இந்நிறங்களின் கலப்பினால் துணைவர்ணங்கள் அதாவது பச்சை, செம்மஞ்சள், ஊதா ஆகிய நிறங்கள் உருவாகும். இக்கோட்பாட்டை அடிப்படையாகக்கொண்டு. ஓவியக்கலையின் வர்ணச்சக்கரம் (Colour cirle/Colour wheel) கட்டியெழுப்பப் பட்டுள்ளது. இது RGB வர்ணச் சக்கரம் எனப்படுகின்றது. மூல வர்ணங்கள் துணை வர்ணங்கள் படிமக் கலையில் (Image art), உதாரணமாக ஒளிப்படக் கலையில் பயன்படும் வர்ணச் சக்கரமானது மேற்படி RGB வர்ணச் சக்கரத்தைவிட வேறுபட்டதாகும். இங்கு அதற்குப் பதிலாக CMYK அதாவது சயன், மஜன்டா, மஞ்சள், கறுப்பு ஆகிய நான்கு வர்ணங்களைக் கொண்ட வர்ணச் சக்கரம் பயன்படுத்தப்படுகின்றது. வர்ணங்கள் தொடர்பான மற்றுமொரு வகைப்பாடாக, வெப்ப வர்ணங்களையும் (Warm colour) குளிர் வர்ணங்களையும் (Cool colour) குறிப்பிடலாம். சிவப்பு, மஞ்சள், செம்மஞ்சள் போன்றவை வெப்ப வர்ணங்களாகவும் நீலம், பச்சை போன்றவை குளிர் வர்ணங்களாகவும் கொள்ளப்படும். யாதேனும் கட்புலக் கலைப்படைப்பில் வெள்ளை, கறுப்பு ஆகிய நிறங்களைப் பயன் படுத்தும்போது அவை மற்றைய நிறங்களுக்கு ஒப்பானவாறு குளிர் வர்ணமாகவோ வெப்ப வர்ணமாகவோ செயற்படும். உதாரணமாக, பிரகாசமான ஒரு தீச்சுவாலையில் செம்மஞ்சள், மஞ்சள் ஆகிய நிறங்களுடன் வெள்ளை நிறத்தைப் பயன்படும் போது அது ஓர் வெப்ப நிறமாகச் செயற்படும். பனிக்கட்டியொன்றினைக் காட்டுவதற்காக குளிர் வர்ணங்களுடன் வெள்ளை நிறத்தைப் பயன்படுத்தும் போது அது குளிர் நிறமாகச் செயற்படும். மனப்பதிவுவாதக் கலை இயக்கமானது கட்புலக் கலையில் வர்ணப் பயன்பாடு தொடர்பாக தீர்க்கமான ஒரு மாற்றத்தை ஏற்படுத்திய ஒரு திருப்புமுனையாகும். அவர்கள், ஒரு பொருளுக்குத் திட்டவட்டமான வர்ணம் கிடையாது எனக் கூறியதோடு, பொருளின் மீது விழும் ஒளிக்கு அமையவே அப்பொருளின் நிறம் தீர்மானிக்கப்படுகின்றது என வாதிட்டனர். அதற்கமைய வெவ்வேறு ஒளி நிலைமைகளின் கீழே பொருள் வெவ்வேறு தன்மையுடையதாக மாறுகின்றது என மனப்பதிவவாதிகள் எடுத்துக்காட்டினர். எனவே குளோட் மொனே (Clode Mone) போன்ற ஓவியர்கள் ஒரே காட்சியை மீண்டும் மீண்டும் வரைந்தனர். மேலும் நிழலைக் காட்டுவதற்காக அவர்கள் பல வர்ணங்களைப் பயன்படுத்தினர். ஹக்குசாய்’ இனால் வரையப்பட்ட சிவப்புப் பூஜி (Red Fuji) எனும் ஓவியம் வரணப் பயன்பாட்டின் வலிமை பற்றி விளங்கிக்கொள்வதற்குப் பொருத்தமான ஓர் உதாரணப் படைப்பாகும். வெப்ப மற்றும் குளிர் வர்ணங்களுக்கு இடையிலான ஒரு முரண்பாடு அதில் உள்ளடக்கியுள்ளது. வானமும் பூமியும் நீலம், பச்சை ஆகிய குளிர் வர்ணங்களினால் நிரப்பப்பட்டுள்ளது. மலையின் உடற்பகுதி தீச்சிவப்பு நிறத்தில் காட்டப்பட்டுள்ளது. மலையின் உச்சியில் வெண்ணிறப் பனித் தட்டுக்கள் காணப்பட்ட போதிலும் சிவப்பு நிறமான உடற்பகுதியின் மூலம் அம்மலையினுள் பொதிந்துள்ள பெருஞ்சக்தி பற்றிக் கோடிட்டுக் காட்டப்படுகின்றது. இருபரிமாண வடிவங்கள் (Two dimensional Shapes) எல்லையொன்றினால் வரையறுக்கப்பட்ட நீளமும் அகலமுமுள்ள ஒரு பரப்பை, ‘வடிவம்’ (shape) எனக் கருதலாம். இரு பரிமாணத் தன்மை தொடர்பான கட்புலப் பயன்பாடுகளுடனேயே வடிவம் எனும் பதம் பயன்பாட்டுக்குவந்தது. சில சந்தர்ப்பங்களில் வடிவத்தைக் கட்டியெழுப்புவதற்காக மேலே கலந்துரையாடிய சில வடிவங்கள் தொடர்புறுவதுண்டு. காண்பியக்கலையில் வடிவம் பல வகையாகப் பிரித்துக் காட்டப்படும். அவற்றுள் கேத்திரகணித வடிவங்களும் (Geometric Shapes) கேத்திரகணிதமல்லாத வடிவங்களும் (Non geometric Shapes) பெரிதும் பயன்படுத்தப்படுவதுண்டு. கணிதம் சார்ந்த சமனிலை காணப்படுதலானது கேத்திரகணித தளவடிவங்களின் சிறப்பியல்பாகும். கேத்திரகணித வடிவங்களைப் பொதுவாக இரண்டு பகுதிகளாகப் ராக்க முடிவதோடு, அவ்வாறான கேத்திரகணித வடிவங்கள் மூலம் காண்பியப் படைப்பாக்கத்தில் முறைமையான ஒழுங்கான பண்டைய விகிதசமனான அமைப்புக்கள் காணப்படமாட்டாது. மாறாக முறிந்த, உடைந்த , சிதறிய, அமைப்புக்களே காணப்படும். கட்புலக் கலைஞர்கள் இந்த இரண்டு வகையான வடிவங்களையும் தமது கலை வெளிப்பாட்டின்போது பொருள் வெளிப்பாட்டுக்காகப் பொருத்தமானவாறு பயன்படுத்துவர். கேத்திரகணித வடிவங்கள் (Geometric Shapes) கேத்திரகணிதமல்லாத வடிவங்கள் (Non geometric Shapes) பப்லோ பிக்காசோ இனது மூன்று இசைக்கலைஞர்கள் (Three musicias) எனும் ஓவியம், தளப்பயன்பாட்டின் வேறுபாட்டை இனங்காண்பதற்கு மிகப் பொருத்தமான ஒரு படைப்பாகும். இந்த ஓவியத்தில் அருகருகே அமர்ந்திருக்கும் மூன்று மனித உருவங்களும் அவர்களது வாத்தியக் கருவிகளும் ஆடையணிகளும் உடல்களும் அவ்வாத்தியத்தியக் கருவிகளினதும் சுரதாளக் குறிப்பீடுகளதும் அமைப்புக்கு ஏற்பவே கட்டியெழுப்பப்பட்டுள்ளன. இக்கலைஞர் கட்புலக் குறிக்கோள்கள் எல்லாவற்றையும் இசைசார்ந்த ஒரு தொகுதி தளவடிவங்களுள் உள்ளடங்கச் செய்துள்ளதோடு அதன் மூலம் மிகச் சிறப்பான ஒரு இசையையும் கட்டியெழுப்பியுள்ளார். வெளி (Space) காண்பியப் படைப்பாக்கங்கள் தொடர்பாக முக்கியத்துவம் பெறும் மற்றுமொரு முதன்மையான அம்சமாகிய வெளி, கலை ஊடகத்தின் தன்மைக்கேற்ப வேறுபடும். அதாவது ஓவியக்கலையின் வெளிப்பயன்பாடானது சிற்பக்கலையின் வெளிப்பயன்பாட்டைவிட வேறுபட்டது. ஓவியக்கலையில் ஓவியக்கலையில் வெளியைப் பிரதானமாக முன்னணி (foreground), இடையணி (middle ground), பின்னணி (back ground), ஆகியவற்றுக் கமைய இனங்காணலாம். பெரும்பாலும் ஓவியர்கள் யாதேனும் பொருளுக்கு வழங்கும் முன்னுரிமையை அதிகரிப்பதற்காக அதனை முன்னணியில் வைப்பர். உதாரணமாக டாவின்சியினால் வரையப்பட்ட “பாறைகள் மீது கன்னி மரியாள்” (Virgin of the Rocks) எனும் ஒவியத்தில் கன்னி மரியாளும் யேசு பாலனும் ஏனைய பாத்திரங்களும் முன்னணியிலேயே இடப்படுத்தப்பட்டுள்ளன. அதன் பின்னணியில் மலை முகடுகளைக் கொண்ட ஒரு சூழல் காட்டப் பட்டுள்ளது. டாவின்சி இந்த ஓவியத்தின் பின்னணியை அதன் முன்னணியில் உள்ள காண்பியக் கூறுகள் தெளிவாகப் புலப்படுத்துவதற்கு ஏற்ற வகையில் அமைத்துள்ளார். வர்ணம், ஒளி போன்ற காரணிகளைக் கொண்டு சில சந்தர்ப்பங்களில் பின்னணியில் உள்ள பொருள்களை வலியுறுத்திக் காட்டலாம். வெளியுடன் தொடர்புடைய மற்றுமோர் அம்சம் தூரதரிசனம் (perspective) ஆகும். நேர்கோட்டு (ஏகபரிமாண) தூரதரிசனம் (Linear perspective) மேலதிகமாக, சூழ்நிலைத் தூரதரிசனம் (Atmospheric perspective) யாதேனும் கட்புல உருவத்தின் ஆழம் தொடர்பாக உணர்த்துவதற்காகப் பயன்படுத்தப்படும். கோட்டுத் தூரக்காட்சியின்போது அண்மையில் உள்ள பொருள்கள் பெரியவையாகவும் தூரத்தில் உள்ள பொருள்கள் சிறியவையாகவும் காட்டப்படும். சூழ்நிலைத் தூரதரிசனம் அண்மையில் உள்ள பொருள்களின் வர்ணத்தெளிவும் செறிவும் தூரச் செல்லச் செல்லப் படிப்படியாகக் குறைந்துசென்று நலிவுறுவது கவனத்திற் கொள்ளப்படும். நேர்கோட்டு (ஏகபரிமாண) தூரதரிசனம் (Linear perspective) சூழ்நிலைத் தூரதரிசனம் (Atmospheric perspective) இழைமம் (Texture) இழைமம் எனும் சொல் யாதேனும் பொருளின் மேற்பரப்பின் தன்மையையே குறிக்கின்றது. இது காண்பியக் கலைப் படைப்பொன்றின் பொருள் சார்ந்த இன்றியமையாத ஓர் அடிப்படை அம்சமாகும். காண்பியக் கலையில் உண்மை இழைமம், மாய இழைமம் என இரண்டு இழையமைப்பு வகைகளை இனங்காணலாம். உண்மை இழைமம் என்பது குறித்த காண்பிய கலைப் படைப்பு அதன் இயல்பு நிலையில் கொண்டிருக்கும் இழைமமாகும். உதாரணமாக, மரம், கல் போன்ற ஊடகங்களால் ஆக்கப்பட்ட சிற்பப் படைப்புக்களைக் கருதுகையில் அந்த இரண்டு ஊடகங்களுக்கும் பொதுவான உண்மையான இழைமங்கள் உண்டு. தனியே ஓர் ஊடகத்தை மட்டும் கவனத்திற்கொள்ளும் போதும் ஒன்றுக்கொன்று வேறுபட்ட இழைமங்கள் மூலம் வெவ்வேறுபட்ட மனப் பதிவுகளை வெளிப்படுத்தலாம். உதாரணமாக கிரேக்க தொல்சீர் கால சிற்பக்கலைஞர் தமது ஆக்கங்களை ஒப்பமான இழைமத்தைக்கொண்டே நிறைவு செய்துள்ளனர். கிரேக்க, ஹேர்மீஸ் – டயோனிசியஸ் சிற்பம் இதற்கு ஒரு நல்ல உதாரணம் ஆகும். ரொடான் எனும் சிற்பகக் கலைஞர் படைத்த சிந்தனையாளர்” (The Thinker) போன்ற படைப்பாக்கங்களில் சொரசொரப்பான இழைமத்தைக் கொண்ட மேற்பரப்பே காணப்படுகின்றது. ஒன்றுக்கொன்று வேறுபட்ட இந்த இரண்டு வகை மேற்பரப்புக்கள் மூலம் ஒன்றுக்கொன்று வேறுபட்ட பாவ வெளிப்பாட்டு நிலைமைகளே காட்டப்பட்டுள்ளன. மாயையான இழைமத்தை ஓவியர்கள் பெரிதும் பயன்படுத்துவர். இதன் மலம் உண்மையில் காணப்படும் இழைமமன்றி, கட்புலனாகும் இழைமமே குறிக்கப்படுகின்றது. உதாரணமாக, ஓர் ஓவியர் கண்ணாடிக் குவளையொன்றினை. கன்வசு மீது வரையும்போது அவர் மாயையான இழைமத்தையே கட்டியெழுப்புவார். ஓவியர் சலவைக்கற் சிற்பமொன்றினை கன்வசு மீது வரையம்போது அச்சிற்பம் சலவைக்கல்லினாலானது என்பதைக் காட்டுவதற்காக அவர் மாயையான இமைமத்தையே காட்டுவார். உருவம் கட்டமைப்பு (Form/ Structure) உருவம் அதாவது கட்டமைப்பு என்பது பெரும்பாலும் முப்பரிமாணக் கலை ஊடகங்களுடன் தொடர்புடைய வகையிலேயே கலந்துரையாடப்படும். அதாவது, நீளம், அகலம், ஆழம் ஆகிய காரணிகளை அடிப்படையாகக் கொண்டே இது கலந்துரையாடப்படும். கட்டட நிர்மாணக்கலை, சிற்பக்கலை, நிறுவுதல் ஆகியவற்றில் மாதிரி எனும் அடிப்படை அம்சம் சிறப்பாக முக்கியத்துவத்தைப் பெறுகின்றது. உதாரணமாக, பொலனறுவை தாமரைக் குளம் (நெலும் பொக்குன – Nelum pokuna) எனும் படைப்பாக்கம் மலர்ந்த தாமரைப் பூ வடிவத்தை அடிப்படையாகக் கொண்டு அதாவது மலர்ந்து விரிந்த தாமரை இதழ்கள் போன்று கட்டியெழுப்பப்பட்டுள்ளது. அவை மேலிருந்து கீழாகச் செல்லும்போது படிப்படியாக அளவிற் சிறியதாகிச் செல்லும் படிக்கட்டுத் தொடர் போன்று திட்டமிடப்பட்டுள்ளது. நெலும் பொக்குன (தாமரை வடிவக் குளம்) பொலனறுவை ஓவியக்கலை பற்றி நோக்குகையில் யாதேனுமொரு பொருளின் மாதிரியானது இருபரிமாணத் தளமொன்றில் ஒளி-நிழல் மூலம் காட்டப்படுகின்றது. உதாரணமாமக, கனவடிவவாத ஓவியக் கலைஞர்களின் படைப்புக்களின் மாதிரிக்குரிய அடிப்படைகளாக கூம்பு, கனவுரு, சதுரமுகி, உருளை போன்றவை பயன்படுத்தப்பட்டுள்ளன. இதற்கமைய, வடிவமானது/மாதிரியானது கட்புலக் கலையின் முக்கிய மான ஓர் அடிப்படை அம்சமாகும். அது வெவ்வேறு தன்மைகளில் கட்புலக் கலைப்படைப்புக்களில் பயன்படுத்தப்படும்.
குறுகிய சுவர் 1.5 ″ (38.1 மிமீ) அகலம், ஒரு நீர் சுவரில் ஒற்றை குழாயை பெவலிங் செய்ய மூன்று பரிமாற்ற மோட்டார் தேர்வுகள், நியூமேடிக், எலக்ட்ரிக் மற்றும் பேட் ... TOA130 திறந்த வகை வெல்ட் தலை TOA திறந்த வெல்ட் தலைகள் நிரப்பு கம்பி அல்லது இல்லாமல் சுற்றுப்பாதை TIG வெல்டிங்கிற்கான கருவியாக கருதப்படுகின்றன. பற்றவைக்கப்பட வேண்டிய குழாய்களின் விட்டம் ஒரு ராவை உள்ளடக்கியது ... TC76 இணைக்கப்பட்ட வெல்ட் தலை இந்த தொடர்கள் மூடிய அறை சுற்றுப்பாதை TIG வெல்டிங் தலைகள் குழாய் இருந்து குழாய் பட் கூட்டு வெல்டிங் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒப்பீட்டளவில் உருவாக்க ... ETP60 குழாய் முதல் குழாய் தாள் வரை நாம் ... இந்த வெல்டிங் ஹெட் என்பது கார்பன் ஸ்டீல் மற்றும் ஸ்டெயின்லெஸ் ஸ்டீலுக்குப் பயன்படுத்தப்படும் குழாய்/டியூப்-ஷீட்டுக்காக வடிவமைக்கப்பட்ட டிஐஜி வெல்டிங் ஹெட் ஆகும். போய் விண்ணப்பம் ...
Today I have seen the lotus-dame on the frame of my ocean-hued Lord. He wields a fiery discus and a dextral conch in his hands. He has the radiance of the golden sun. ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய விளக்க உரை முதலாழ்வார் மூவரும் ஒருவரையொருவர் அறியாமல் தேசஸஞ்சாரம் செய்து கொண்டிருக்கையில், இம்மூவரையும் ஓரிடத்திலே சேர்த்து ஆட்கொண்டு இவர்கள் முகமாக உலகத்தை வாழ்விக்க வேணுமென்கிற குதூஹலங்கொண்ட எம்பெருமானுடைய திருவுள்ளம் நிறைவேறுவதற்காக, ஒருநாள் ஸூர்யன் அஸ்தமித்தபின்பு பொய்கையாழ்வார் திருக்கோவலூரையடைந்து அங்கு ம்ருகண்டு மஹர்ஷியின் திருமாளிகையிற்சென்று அதன் இடைகழியிற் பள்ளிகொண்டிருக்கையில் பிறகு பூதத்தாழ்வாரும் அங்கே வந்து சேர, “***“ என்கிற சாஸ்திரமுறைப்படி ஒருவரையொருவர் வந்தனை வழிபாடுகள் செய்தவுடன் ‘இவ்விடம் ஒருவர் படுக்கலாம், இருவர் உட்கார்ந்திருக்கலாம்‘ என்று பொய்கையார் விண்ணப்பஞ்செய்ய, அவ்விதமே இருவரும் அங்கு உட்கார்ந்திருக்கையில், பேயாழ்வாரும் அவ்விடத்திற்கே வந்துசேர, ஒருவரையொருவர் தண்டன்ஸமர்ப்பித்து உபசரித்துக்கொண்டபின் ‘இவ்விடம் ஒருவர்படுக்கலாம், இருவர் இருக்கலாம், மூவர் நிற்கலாம்‘ என்று பொய்கை பூதத்தாரிருவரும் சொல்ல, அவ்விதமே மூவரும் அவ்விடத்திலே நின்றுகொண்டு பரஸ்வரம் பகவத் குணங்களை சொல்லுதலும் கேட்டலுஞ் செய்து களித்திருக்கையில்- உலகளந்த மூர்த்தி அவர்கள் திறத்திலே திருவருள் செய்யும் பொருட்டுப் பெருத்த இருளையும் கனத்தமழையையு முண்டாக்கி, பெரிய வடிவத்தோடு அவர்களிடையே சென்றுநின்று பொறுக்க முடியாத மிக்க நெருக்கத்தைச் செய்தருள, அதன்மேல் இவர்கள் ‘இதுவரையிலும் இல்லாத நெருக்கம் இப்போது உண்டானதற்குக் காரணமென்கொல்? பிறரெவரேனும் இங்கு வந்து புகுந்தவருண்டோ?‘ என்று சங்கிக்கையில் –பொய்கையாழ்வார் பூமியாகியதகழியில் கடல்நீரையே நெய்யாகக்கொண்ட ஸூரியனை விளக்காக ஏற்ற, பூதத்தாழ்வார் அன்பாகிய தகழியில் ஆர்வத்தை நெய்யாகவும் சிந்தையைத் திரியாகவுங்கொண்டு ஞான தீபத்தை ஏற்ற, இவ்விரண்டி னொளியாலும் இருளற்றதனால் இப்பேய்யாழ்வார் எம்பெருமானைத் தாம் ஸேவிக்கப் பெற்றமைக்கு இப்பாசுரத்தாலே வெளியிடுகிறார். ‘எம்பெருமானைக் கண்டேன்‘ என்று சொல்லிவிட்டால் அவனிடத்திலுள்ளவையெல்லாம் கண்டமை சொல்லப்பட்டதாக ஆகுமாயிலும், தம்முடைய மகிழ்ச்சியின் மிகுதியினால் ‘அதுகண்டேன் இதுகண்டேன்‘ என்று சிலவற்றைப் பிரித்துப் பேசுகின்றார். புருஷகாரபூதையான பிராட்டியைக் கண்டேன், அவளுடைய சேர்க்கையினாலே நிறம்பெற்ற திருமேனியைக் கண்டேன், மரதக கிரியிலே உதித்து ஒளிவிட்டுக்கிளருகிற பாலஸூர்யனைப்போலே விளங்காநிற்பதாய் இருவருடைய ஒளியும் தன்னிலே கலசி விளங்காநின்றுள்ளதான அழகியநிறத்தையும் கண்டேன், இந்தச் சேர்த்திக்கு என்னதீங்கு வருகிறதோ வென்று அஸ்தாநே பயசங்கைப்பண்ணி யுத்தஸந்நத்தனாய் கண்டார்மேலே சீறிவிழாநின்றவனாய், ச்யாமளமான அவன்வடிவுக்குப் பரபாகமாம்படி பொற்கென்ற நிறத்தையுடையனான திருவாழியாழ்வாணையுங் கண்டேன் கைத்தலத்திலிருந்துகொண்டே பெருமுழக்கத்தாலே சத்துருக்களை உயிர்மாளப்பண்ணும் ஸ்ரீபாஞ்சஜந்யாழ்வானையும் கண்டேன் என்றாராயிற்று. நூல் இயற்றுவார் மங்கல மொழி முதலிலே வகுத்துக் கூறுவராதலால் ‘திரு‘ என்று தொடங்கினர். பொன்மேனிகண்டேன் –“ஹிரண்ய வர்ணாம் ஹரிணீம்“ என்கிற சுருதியின்படி பொன்னின் நிறம் போன்ற நிறமுடையளான பிராட்டியின் நித்யஸம் ச்லேஷத்தாலே அப்படியே பொன்னிறமாகப் பெற்றதாம் எம்பெருமானுடைய கரிய திருமேனியும். அன்றியே, பொன்போல் விரும்பத்தக்க மேனி என்றுமாம். “உருவுகரிதாய் முகம் செய்தாய் உதய பருப்பதத்தின் மேல், விரயுங்கதிரே போல்வானை விருந்தாவனத்தே கண்டோமே“ என்ற நாச்சியார் திருமொழிப்பாசுரம் இங்கு நினைக்கத்தகும். “புரிசங்கம் கை கண்டேன்“ என்றும் “புரிசங்கு அம் கை கண்டேன்“ என்றும் பிரிக்கலாம். புரி என்றது வலம்புரி என்றபடி. அன்றியே ஸ்புரிக்கின்ற – விளங்குகின்ற சங்கமென்றுமாம். புரி புரிந்துபார்க்கிற (எங்கே யெங்கேயென்று சுற்றுமுற்றும் சீறிப்பார்க்கிற) சங்கு என்றுமாம். சேஷத்வத்தாலே எப்போதும் வணக்கத்தையுடைய சங்கு என்றுமாம். ஈற்றடியில் எம்பெருமானை ஆழிவண்ணன் என்றது மிகப்பொருந்தும், பிராட்டி, சங்கு, கௌஸ்துபமணி முதலியவை கடலில் தோன்றினவாதலால், அப்படிப்பட்ட வஸ்துக்களை இன்று இக்கடலில் காணப்பெற்றே னென்கிறார் போலும்.
தங்க நகை அணிவதை ஆடம்பரமாகவும், கவுரவமாகவும் கருதுவதால், அதன் விலை எவ்வளவு ஏறினாலும் மவுசு மட்டும் குறைவது இல்லை. சர்வதேச பங்குச்சந்தை நிலவரத்துக்கு ஏற்ப தங்கம் விலையில் ஏற்றம்-இறக்கம் காணப்படுகிறது. தற்போது ரஷியா- உக்ரைன் இடையே போர் மூளும் அபாயம் உள்ளதால், பங்குச்சந்தையில் முதலீடு செய்துள்ள முதலீட்டாளர்களின் பார்வை தங்கத்தின் மீது திரும்பி உள்ளது. இதனால் பங்குச்சந்தையில் வீழ்ச்சி நிலவுகிறது. இதன் காரணமாக தங்கம் விலை மீண்டும் ஏறுமுகத்தில் செல்லக்கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதேபோன்று, சென்னையில் நேற்று முன்தினம் தங்கம் விலை கிராமுக்கு ரூ.43-ம், பவுனுக்கு ரூ.344-ம் விலை அதிகரித்து ஒரு கிராம் ரூ.4 ஆயிரத்து 653-க்கும், பவுன் ரூ.37 ஆயிரத்து 224-க்கும் விற்பனையானது. ஞாயிற்றுக்கிழமையான நேற்று பங்குச்சந்தை மார்க்கெட்டுக்கு விடுமுறை என்பதால் தங்கம் விலையில் நேற்று மாற்றம் ஏற்படவில்லை. ஆனால், வரும் நாட்களில் தங்கம் விலை ‘ராக்கெட்’ வேகத்தில் உயரக்கூடும் என்பது வியாபாரிகளின் கணிப்பாக உள்ளது. இதுகுறித்து சென்னை தங்கம், வைரம் வியாபாரிகள் சங்கத் தலைவர் ஜெயந்திலால் ஜலானியிடம் கேட்டபோது, ‘ரஷியா-உக்ரைன் இடையே போர் மூளும் அபாயத்தால், உலகச்சந்தையில் தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்த வண்ணம் இருக்கிறது. ஒரு வேளை இரு நாடுகள் இடையே போர் மூண்டால், பங்குச்சந்தை மேலும் வீழ்ச்சி அடையும் சூழல் உள்ளது. எனவே வரும் நாட்களில் தங்கம் விலை உச்சத்தை தொடக்கூடும். விரைவில் ஒரு பவுன் ரூ.40 ஆயிரத்தை கடந்து செல்வதற்கும் வாய்ப்பு உள்ளது.’ என்று தெரிவித்தார். தங்கம் விலையை பொறுத்த வரையில் ஒவ்வொரு ஆண்டும் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. நடுத்தர மக்கள் சிறுக, சிறுக சேமித்து தங்கம் வாங்கும் நிலை உள்ளது. தற்போது தங்கம் மேலும் விலையேறினால், நடுத்தர மக்களுக்கு எட்டாக்கனி போன்று ஆகிவிடும். காய்கறி விலை ஏறினாலும், தங்கம் விலை ஏறினாலும் அது இல்லத்தரசிகளுக்கு அதிர்ச்சி செய்தி ஆகும். ← அதிகம் பேர் வாக்களியுங்கள் – பிரதமர் மோடி மக்களுக்கு வேண்டுகோள் ‘கோப்ரா’ படக்குழுவின் புகைப்படங்களை வெளியிட்ட இயக்குநர் அஜய் ஞானமுத்து → Recent Posts Tamil விளையாட்டு முதல் போட்டியில் மெதுவான பந்து வீச்சு – இந்திய கிரிக்கெட் அணிக்கு 80 சதவீதம் அபராதம் December 6, 2022 Comments Off on முதல் போட்டியில் மெதுவான பந்து வீச்சு – இந்திய கிரிக்கெட் அணிக்கு 80 சதவீதம் அபராதம் வங்காளதேசத்துக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி பந்து வீச கூடுதல் நேரம் எடுத்துக் கொண்டது. குறிப்பிட்ட நேரத்தில் 4 ஓவர்கள் குறைவாக வீசி Tamil விளையாட்டு உலக கோப்பை கால்பந்து – தென் கொரியாவை வீழ்த்தி காலியிறுதிக்கு முன்னேறியது பிரேசில் December 6, 2022 Comments Off on உலக கோப்பை கால்பந்து – தென் கொரியாவை வீழ்த்தி காலியிறுதிக்கு முன்னேறியது பிரேசில்
#HenriTiphagne, #EncounterKilling, #AdvHenriTiphagne, #AdvChinnaraja, #People'sWatch, #ADSPVelladurai 31 Oct 2022 இரு நாள் அரசியல் பயிலரங்கம்! முன்னுதாரணங்களை ஏற்படுத்திய மஜக! People's Watch in Media Chennai மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் இரு நாள் அரசியல் பயிலரங்கு சென்னை அருகே கோவளத்தில் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி தலைமையில் கடந்த அக்டோபர் 29 மற்றும் 30 தேதிகளில் நடைபெற்று முடிந்திருக்கிறது. மக்கள் கண்காணிப்பகம் அமைப்பின் செயலாளர் ஆசிர்வாதம் மனித உரிமைகள் குறித்து எடுத்த வகுப்பில், அரச வன்முறைகள், எண்கவுண்டர், மனித உரிமை மீறல்களை சட்டப்படி எதிர்கொள்வது குறித்து குறிப்புகளை கொடுத்திருக்கிறார். #IAseer, #Aseervatham, #ManithaneyaJananayagaKatchi 31 Oct 2022 Press Meet - SHRC Order - Madurai Kallumandaiyan Encounter - 12 ஆண்டு - வெள்ளத்துரை உள்ளிட்ட காவலர்களுக்கு... People's Watch in Media Madurai 31.10.2022 மக்கள் கண்காணிப்பகத்தில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பு - கவியரசு மற்றும் கல்லுமண்டையன் என்ற முருகன் ஆகியோர் கடந்த 16.02.2010 அன்று அப்போதைய காவல் உதவி ஆணையாளர் திரு.வெள்ளதுரையால் என்கவுன்டரில் கொல்லப்பட்டது தொடர்பான தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணைய வழக்கில் ஆணையம் வழங்கியுள்ள 21.10.2022 தேதியிட்ட தீர்ப்பு தொடர்பாக.... தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் கடந்த 12 ஆண்டுகளாக திருமதி.குருவம்மாள் ஆஜராகி இவ்வழக்கை சிறப்புடன் நடத்திய மூத்த வழக்கறிஞர் திரு.சின்னராசா அவர்கள் தலைமையிலான வழக்கறிஞர்கள் திரு.க.சு.பாண்டியராஜன், திரு.சதீஷ் ராஜ்குமார், திரு.நாகேந்திரன், திரு. முத்துகிருஷ்ணன் ஆகியோர்களுக்கு மக்கள் கண்காணிப்பகம் தனது நன்றியையும் பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறது. இந்த தீர்ப்பை அடிப்படையாகக் கொண்டு இதுவரை திரு.வெள்ளத்துரை அவர்கள் செய்த என்கவுண்டர் கொலைகள் தொடர்பான வழக்குகளை மறுவிசாரணைக்கு உட்படுத்தி தமிழக அரசு ஆணையிட வேண்டும் என்று மக்கள் கண்காணிப்பகம் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறது. #SHRC, #Velladurai, #EncounterDeath, #Kallaumandayan, ##ExtraJudicialKilling, #Madurai, #Intervention, #LegalIntervention, #TNSHRC 26 Oct 2022 Sun News - அருணா ஜெகதீசன் அறிக்கை - கூட்டுச்சதிக்கு காரணம் எடப்பாடிபழனிசாமிதான்-ஹென்றி டிபேன் People's Watch in Media Madurai Sun News - தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு - அருணா ஜெகதீசன் அறிக்கை - கூட்டுச்சதிக்கு காரணம் எடப்பாடி பழனிசாமிதான் - ஹென்றி டிபேன் #SunNews, #SunTV, ##ThoothukudiPoliceFiring, #PoliceFiring, #JusticeArunaJegadeesanCommissionofInquiry, #JusticeArunaJegatheesan, #Thoothukudi 25 Oct 2022 அருணாஜெகதீசன் அறிக்கை அல்ல; மக்கள் அறிக்கை உண்மைகளை உடைக்கும் ஹென்றிதிபேன் - Arakalagam TV People's Watch in Media Madurai அருணாஜெகதீசன் அறிக்கை அல்ல; மக்கள் அறிக்கை உண்மைகளை உடைக்கும் ஹென்றிதிபேன் - 25.10.2022 அன்று Arakalaga TV Youtube Channel-க்கு வழக்கறிஞர் ஹென்றி திபேன் அளித்த பேட்டி #Arakalagam, ##ThoothukudiPoliceFiring, #JusticeArunaJegadeesanCommissionofInquiry, #JusticeArunaJegatheesan, #CommissionReport, #PoliceFiring, #Thoothukudi, #PoliceExcess, #HenriTiphagne 21 Oct 2022 TN DGP susp ends four cops indicted by Justice Aruna Jagadeesan Committee People's Watch in Media The report submitted by the Justice Aruna Jagadeesan Committee on Thoothukudi firing called for action against 17 police officers. The Tamil Nadu Director General of Police (DGP) has suspended four police officers indicted by the Justice Aruna Jagadeesan... #TUTFiring, #HenriTiphagne, #ArunaJagadeesanCommission, #EnquiryCommitteeReport 19 Oct 2022 அருணா ஜெகதீசன் அறிக்கையில் இப்படி சொல்லியிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது! ஹென்றி திபேன் - Sun News People's Watch in Media Madurai தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் - நீதிபதி அருணா ஜெகதீசன் அறிக்கை குறித்து மூத்த வழக்கறிஞர் ஹென்றி திபேன் அவர்கள் தொலைபேசி வாயிலாக Sun News சேனலுக்கு அளித்த பேட்டி #JusticeArunaJegadeesanCommissionofInquiry, #JusticeArunaJegatheesan, #PoliceTorture, #ThoothukudiPoliceFiring, #PoliceFiring, #SterlitePoliceFiring, #HenriTiphagne, #SunNews, #SunTV 19 Oct 2022 Thoothukudi Firing report : What next? - Adv. Henri Tiphagne's Interview - The News Minute People's Watch in Media Madurai The News Minute Shabbir Ahmed in conversation with Henri Tiphagne, Executive Director, People's Watch on the Justice Aruna Jagedeesan Commission of Inquiry report. #HenriTiphagne, #JusticeArunaJegadeesanCommissionofInquiry, #CommissionReport, #JusticeArunaJegatheesan, #TheNewsMinute, #NewsMinute, #Shabbir, #ShabbirAhmed, #ThoothukudiPoliceFiring, #PoliceFiring, #Thoothukudi 19 Oct 2022 Sun News - கேள்விக்களம் விவாத நிகழ்ச்சியில் திரு.ஹென்றி திபேன் துப்பாக்கிச்சூடு விசாரணை ஆணைய அறிக்கை People's Watch in Media Madurai 19.10.2022 - சன் நியூஸ் தொலைக்காட்சியில் மாலை 7.00 முதல் 8.00 மணி வரை நடைபெற்ற விவாதக் களம் நிகழ்ச்சி #SunNews, #SunTV, #HenriTiphagne, #JusticeArunaJegadeesanCommissionofInquiry, #JusticeArunaJegatheesan, ##ThoothukudiPoliceFiring, #PoliceFiring, #Thoothukudi, #ArunaJagatheesanCommissionReport, #CommissionReport
Albanian / Amharic / Arabic / Bengali / Bosnian / Chinese / Dutch / English / Finnish / French / German / Hindi / Indonesian / Malay / Persian / Oromo / Russian / Swedish / Somali / Tamil / Telugu / Thai / Turkish / Urdu தலாக் 4 – இஸ்லாமிய அன்னையர்களுக்கு இரண்டாம் (தலாக்) மிரட்டல் விடுத்த அல்லாஹ் தலைப்பைப் பார்த்தால், அல்லாஹ் மீது அவதூறு சொல்வதைப் போலத் தெரிகிறதே! என்ற சந்தேகம் வருகிறதா? இந்த விவரம் குர்-ஆனில் இருப்பதால் நாம் ஒன்றும் செய்வதற்கில்லை, அது வேதவாக்கு, அதாவது குர்-ஆன் இறைவாக்கு முஸ்லிம்களுக்கு. அதில் சொல்லப்பட்டதை அப்படியே நம்புவது தானே சரி. முந்தைய கட்டுரையில், முஹம்மதுவின் மனைவிமார்களுக்கு அல்லாஹ் விடுத்த முதல் மிரட்டலை ஆய்வு செய்தோம். அதாவது, வீட்டு செலவிற்கு கொஞ்சம் பணத்தை அதிகப்படுத்தி கொடுங்கள் என்று முஹம்மதுவிடம் கேட்டது பெரும்பாவமாகிவிட்டது. வானத்திலிருந்து புர்ரென்று ஜிப்ரீல் தூதன் இறங்கி, முதல் மிரட்டலை வஹியாக முஹம்மதுவின் செவிகளில் போட்டுவிட்டுச் சென்றார். இந்த தற்போதைய கட்டுரையில், அந்த பரிதாபமான அன்னையர்களுக்கு இரண்டாவது முறையாக அல்லாஹ் தலாக் மிரட்டல் விடுத்ததை ஆய்வு செய்வோம். இக்கட்டுரையின் ஆய்விற்காக நாம் குர்-ஆன், புகாரி, முஸ்லிம் ஹதீஸ்கள் மற்றும் மூன்று குர்-ஆன் விரிவுரையாளர்களின் விளக்கங்களை ஆதாரமாக பயன்படுத்தியுள்ளோம். 1) குர்-ஆனில் இரண்டாவது தலாக் மிரட்டல் – வசனம் 66:5 முஹம்மதுவின் மனைவிமார்கள் அப்படி என்ன பெரிய பிழையைச் செய்துவிட்டார்கள்? முஹம்மது உங்களை தலாக் சொல்லிவிட்டால், அவருக்கு எந்த நஷ்டமும் இல்லை, உங்களுக்குத்தான் நஷ்டம். அவருக்கு நான் பல மறுமணங்களை செய்விப்பேன். அவருக்கு கன்னிப்பெண்களையும், கன்னிமை கழிந்தவர்களையும் உங்களுக்கு பதிலாக முஹம்மதுவிற்கு மனைவிகளாக கொடுப்பேன் என்று அல்லஹ் இந்த வசனத்தில் அனல் கக்குகின்றான். குர்-ஆன் 66:5 அவர் உங்களை ´தலாக்´ சொல்லி விட்டால், உங்களை விடச் சிறந்த - முஸ்லிம்களான, முஃமினான, (இறைவனுக்கு) வழிபட்டு நடப்பவர்களான, தவ்பா செய்பவர்களான, வணங்குபவர்களான, நோன்பு நோற்பவர்களான - கன்னிமை கழிந்தவர், இன்னும் கன்னிப் பெண்டிர் - இத்தகையவரை அவருடைய இறைவன் அவருக்கு (உங்களுக்குப்) பகரமாக, மனைவியராய் கொடுக்கப் போதுமானவன். (முஹம்மது ஜான் தமிழாக்கம்) 2) அல்லாஹ்வின் இந்த கடுங்கோபத்துக்கு காரணம் என்ன? அல்லாஹ் ஏன் இப்படி கோபமாக இருக்கிறான் என்ற விவரத்தை மூன்றாம் வசனத்தில் கூறுகின்றான். குர்-ஆன் 66:3 மேலும், நபி தம் மனைவியர் ஒருவரிடம் ஒரு செய்தியை இரகசியமாக ஆக்கிவைத்த போது அவர் (மற்றொருவருக்கு) அதை அறிவித்ததும், அ(வ்விஷயத்)தை அல்லாஹ் அவருக்கு வெளியாக்கி வைத்தான், அவர் அதில் சிலதை தெரிவித்ததும், சிலதை(த் தெரிவிக்காது) புறக்கணித்தும் இருந்தார், (இவ்வாறு) அவர் அதைத் தெரிவித்த போது "உங்களுக்கு இதைத் தெரிவித்தவர் யார்?" என்று அப்பெண் கேட்டார். அதற்கு அவர் "(யாவற்றையும்) நன்கறிந்தோனும் உணர்ந்தோனும் (ஆகிய அல்லாஹ்) என்குத் தெரிவித்தான்" என்று (பதில்) கூறினார். முஹம்மதுவிற்கும் அவரது மனைவி ஒருவருக்கும் இடையே ஒரு இரகசியம் இருந்ததாம். அந்த இரகசியத்தை யாரிடமும் சொல்லவேண்டாம் என்று முஹம்மது சொல்லியுள்ளார் (சொன்னால் நபித்துவத்துக்கு என்ன கேடு வந்துவிடும்? ஏன் முஹம்மது பயப்பட்டார்?). அம்மனைவி முஹம்மதுவின் இன்னொரு மனைவியிடம் அதனைச் சொல்லிவிட்டார், இது தான் விஷயம். முஹம்மதுவின் ஒரு மனைவி ஒரு இரகசியத்தைக் கட்டிக்காக்கவில்லை. அல்லாஹ்விற்கு வந்தது பாருங்க கோபம், குர்-ஆன் அத்தியாயம் 66ன் முதல் ஐந்து வசனங்கள் முஹம்மதுவிற்கு கொரியர் ஆகிவிட்டன. அல்லாஹ் வஹி மூலமாக வசனங்களை இறக்கி திட்டவேண்டிய அளவிற்கு அது எப்படிப்பட்ட இரகசியமாக இருந்தது? அந்த இரகசியம் வெளியே தெரிந்தவுடன், ஏன் முஹம்மதுவும் அல்லாஹ்வும் கோபத்தின் சிகரத்திற்கே சென்றுவிட்டார்கள்? போன்ற கேள்விகள் நமக்குத் தோன்றும். 3) அது இரகசியம் மட்டுமல்ல, அது முஹம்மதுவின் சத்தியமாகும் ஏதோ ஒரு விஷயத்துக்காக, தம்முடைய மனைவியிடம் முஹம்மது ’இனி நான் இதை செய்யமாட்டேன்’ என்று சத்தியம் செய்தாராம். ”ஏன் நீர் நான் அனுமதித்த (ஹலால்) காரியத்தை, ஹராம் என்று கருதி செய்யமாட்டேன் என்று சத்தியம் செய்துவிட்டீர்? போனால் போகட்டும், ஒரு பரிகாரத்தோடு அந்த சத்தியத்தை முறித்துக்கொள்ளும்” என்று அல்லாஹ்வே முஹம்மதுவிற்கு கட்டளைத் தருகின்றார். கீழ்கண்ட இரண்டு வசனங்களில் அல்லாஹ் முஹம்மதுவை கடிந்துக்கொள்கிறார். 66:1. நபியே! நீங்கள் உங்களுடைய மனைவிகளின் திருப்தியைக் கருதி, அல்லாஹ் உங்களுக்கு ஆகுமாக்கி வைத்த பொருள்களை (உபயோகிப்பது இல்லை என்று) நீங்கள் ஏன் (சத்தியம் செய்து அதனை ஹராம் என்று) விலக்கிக்கொண்டீர்கள்? அல்லாஹ் மிக மன்னிப்பவனும் கிருபையுடையவனாகவும் இருக்கின்றான். 66:2. ஆகவே, உங்களுடைய அந்தச் சத்தியத்திற்கு (நீங்கள் பரிகாரம் கொடுத்து) அதனை நீக்கிவிடுமாறு நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கு கட்டளையிடுகின்றான். அல்லாஹ்தான் உங்களது எஜமானன். அவன் (அனைவரையும்) நன்கறிந்தவனும் ஞானமுடைய வனாகவும் இருக்கின்றான். (அப்துல் ஹமீது பாகவி தமிழாக்கம்) 4) அந்த என்ன இரகசியம்? அது எப்படிப்பட்ட சத்தியம்? அல்லாஹ்வே ஜிப்ரீல் தூதனை அனுப்பினார் என்று பார்க்கும் போது, அது மிகவும் முக்கியமான இரகசியமாகத் தோன்றுகிறது. முஹம்மது சத்தியம் செய்தாரென்றால் அது சாதாரண விஷயமாக இருக்குமா? நிச்சயமாக மிகப்பெரிய விஷயமாக இருக்கவேண்டும். மேலும், அந்த இரகசியத்தை வெளியிட்டதற்காக அல்லாஹ் ‘தலாக்’ நிலைக்கு இறங்கி, முஹம்மதுவின் மனைவிமார்களை மிரட்டுகின்றார் என்று பார்க்கும் போது, இதில் ஏதோ மிகப்பெரிய விஷயம் அடங்கியிருக்கிறது என்பதை புரிந்துக்கொள்ளலாம். குர்-ஆன் 66ம் அத்தியாயம், 1-5 வசனங்களை இதுவரை நாம் படித்தோம். விஷயம் புரிந்தது போல நமக்குத் தெரிகிறது ஆனால் முழுவதுமாக புரியவில்லை. இவ்வசனங்கள் போட்ட முடிச்சை அவிழ்ப்பது எப்படி? முஹம்மதுவிற்கும் அவரது மனைவிக்கும் இடையே இருந்த அந்த இரகசியம் என்ன? அந்த இரகசியத்தை அம்மனைவி காப்பதற்காக, முஹம்மது போட்ட சத்தியம் என்ன? அல்லாஹ் கோபம் கொண்டு, தலாக் பற்றிய மிரட்டல் விடும் அளவிற்கு எப்படிப்பட்ட நிகழ்ச்சி அவ்விருவருக்கும் இடையே நடந்தது? போன்ற கேள்விகளுக்கு பதில் சொல்ல அல்லாஹ்வின் வேதமாகிய குர்-ஆன் பயன்படாது. இதற்கான பதிலை அறிய நாம் ஹதிஸ்களையும், இஸ்லாமிய அறிஞர்களின் விளக்கவுரைகளையும் படிக்கவேண்டும். இதன் பின்னணியை புரிந்துக்கொள்ள உதவும் இரண்டு நிகழ்ச்சிகள் 4.1 கருவேலம் பிசினின் துர்வாடை: இந்த நிகழ்ச்சியின் பின்னணி ’இது தான்’ என்று புகாரி மற்றும் முஸ்லிம் ஹதீஸ்களில் ஆயிஷா அவர்களின் மூலமாக பதிவு செய்யப்பட்டுள்ளது (புகாரி எண்கள்: 4912, 5267, 5268, 6691, 6972; முஸ்லிம் எண்கள்: 2937, 2938). புகாரி ஹதீஸ் எண் 6972ஐ இங்கு படிப்போம். ஆயிஷா(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கு இனிப்பு தேனும் விருப்பமானவையாக இருந்தன. நபி(ஸல்) அவர்கள் அஸ்ர் தொழுகையை முடித்ததும் தம் துணைவியரிடம் வந்து பகல்பொழுதைக் கழிப்பார்கள்; அவர்களுடன் நெருக்கமாக இருப்பார்கள். இவ்வாறு (ஒரு நாள்) ஹஃப்ஸா(ரலி) அவர்களிடம் சென்ற நபியவர்கள் வழக்கத்திற்கு மாறாக அதிக நேரம் இருந்துவிட்டார்கள். அது குறித்து நான் விசாரித்தேன். அப்போது ஹஃப்ஸாவின் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண் அவருக்கு (தாயிஃப் நகர சுத்த)த் தேன் உள்ள ஒரு தோல்பையை அன்பளிப்பாக வழங்கினாள் என்றும், அதிலிருந்து தயாரித்த பானத்தை இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கு ஹஃப்ஸா புகட்டினார் என்றும் என்னிடம் கூறப்பட்டது. உடனே நான் 'அல்லாஹ்வின் மீதாணையாக! இதை நிறுத்துவதற்காக இதோ ஒரு தந்திரம் செய்வோம்' என்று கூறிக்கொண்டு, (நபியவர்களின் துணைவியரில் ஒருவரான) சவ்தா(ரலி) அவர்களிடம் அதைப் பற்றிக் கூறி, 'நபி(ஸல்) அவர்கள் உங்களிடம் வரும்போது உங்களை நெருங்குவார்கள். அப்போது, இறைத்தூதர் அவர்களே! கருவேலம் பிசின் சாப்பிட்டீர்களா? என்று கேளுங்கள். 'இல்லை' என்று நபியவர்கள் கூறுவார்கள். உடனே இது என்ன வாடை? என்று அவர்களிடம் கேளுங்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தம்மிடமிருந்து (துர்) வாடை வீசுவதைக் கடுமையாகக் கருதுவார்கள். எனவே, 'எனக்கு ஹஃப்ஸா தேன் பானம் புகட்டினார்' என்று கூறுவார்கள். உடனே நீங்கள் 'இதன் தேனீக்கள் கருவேல மரத்தில் அமர்ந்து (தேனை உறிஞ்சி)விட்டு வந்திருக்கலாம். (எனவே தான் வாடை வருகிறது)' என்று சொல்லுங்கள். நானும் இவ்வாறே சொல்வேன். ஸஃபிய்யாவே! நீங்களும் இவ்வாறே சொல்லுங்கள் என்று (மற்றொரு துணைவியாரான ஸஃபிய்யாவிடமும்) சொன்னேன். நபி(ஸல்) அவர்கள் சவ்தா(ரலி) அவர்களிடம் சென்றபோது (நான் சொன்னபடி செய்துவிட்டு) சவ்தா (என்னிடம்) கூறினார்கள்: எவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறெவனுமில்லையோ அத்தகைய (இறை)வன் மீதாணையாக! நபி(ஸல்) அவர்கள் என் வீட்டு வாசலில் இருந்தபோது உங்களுக்கு பயந்து நீங்கள் என்னிடம் சொன்னபடி நபியவர்களிடம் சொல்ல விரைந்தேன். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (என்னை) நெருங்கியதும் அவர்களிடம், 'இறைத்தூதர் அவர்களே! தாங்கள் கருவேலம் பிசினைச் சாப்பிட்டீர்களா?' என்று கேட்டேன். அவர்கள் 'இல்லை' என்று பதிலளித்தார்கள். 'அப்படியானால், (இது என்ன வாடை?' என்று கேட்டேன். நபி(ஸல்) அவர்கள், 'ஹஃப்ஸா எனக்குத் தேன் பானம் புகட்டினார்' என்றார்கள். நான், 'அதன் தேனீக்கள் கருவேல மரத்தில் அமர்ந்து (தேன் உறிஞ்சி)விட்டு வந்திருக்கலாம் (எனவேதான் தேனில் வாடை ஏற்பட்டுவிட்டது போலும்)' என்று சொன்னேன். (தொடர்ந்து ஆயிஷா(ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:) என்னிடம் நபி(ஸல்) அவர்கள் வந்தபோது அதைப் போன்றே நானும் சொன்னேன். ஸஃபிய்யாவிடம் நபி(ஸல்) அவர்கள் சென்றபோது அவரும் அதைப் போன்றே தெரிவித்தார். பிறகு (மறுநாள்) நபி(ஸல்) அவர்கள் ஹஃப்ஸாவிடம் சென்றபோது நபியவர்களிடம் அவர், 'இறைத்தூதர் அவர்களே! அருந்துவதற்கு தங்களுக்குச் சிறிது தேன் தரட்டுமா?' என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், 'அது எனக்குத் தேவையில்லை' என்று கூறினார்கள். (இது குறித்து) சவ்தா(ரலி) அவர்கள், 'அல்லாஹ் தூயவன்! நபி(ஸல்) அவர்களை அதை அருந்தவிடாமல் நாம் தடுத்து விட்டோமே!' என்று (வருத்தத்துடன்) கூறுவார்கள். நான் அவரிடம், 'சும்மா இருங்கள்! (விஷயம் பரவிவிடப்போகிறது)' என்று சொல்வேன். இதைப் பற்றி பி.ஜைனுல் ஆபீதின் அவர்கள் தம்முடைய குர்-ஆன் தமிழாக்கத்தின் விளக்கம் 272ல் குறிப்பிட்டுள்ளார் (“272. இறைவன் அனுமதித்ததைத் தடை செய்யக் கூடாது”). இந்த ஹதீஸில் சொல்லப்பட்ட இந்த பின்னணி சரியானதா இல்லையா என்பதை இன்னொரு கட்டுரையில் ஆய்வு செய்வோம். அடுத்தபடியாக, மேற்கண்ட பின்னணி தவறானது, இது சரியானதல்ல என்றுச் சொல்லும் இதர பின்னணி நிகழ்ச்சியை இப்போது பார்ப்போம். 4.2 ஹஃப்ஸாவின் படுக்கையில் மரியாளிடம் புரிந்த களியாட்டத்தின் துர்வாடை: குர்-ஆன் 66:1-5 வரையிலான வசனங்களின் பின்னணி ”இது தான் என்று” சில இஸ்லாமிய அறிஞர்கள் தங்கள் விளக்கவுரைகளில் கூறியுள்ளனர். இவர்களின் தஃப்ஸீர்கள் (குர்-ஆன் விளக்கவுரைகளை இந்த தொடுப்பில் படிக்கலாம் www.altafsir.com). நான் இங்கு இம்மூவர்களின் முதல் வசனத்தின் விளக்கவுரையைத் தருகிறேன் (முழூ விளக்கவுரையை மேற்கண்ட தளத்தில் படிக்கலாம், அல்லது 5 வசனங்களின் விளக்கவுரைகளை இக்கட்டுரையின் அடிக்குறிப்பில் படிக்கலாம்). தஃப்ஸீர் ஜலலைன்: வசனம் 66:1: O Prophet! Why do you prohibit what God has made lawful for you in terms of your Coptic handmaiden Māriya — when he lay with her in the house of Hafsa who had been away but who upon returning and finding out became upset by the fact that this had taken place in her own house and on her own bed — by saying ‘She is unlawful for me!’ seeking by making her unlawful for you to please your wives? And God is Forgiving Merciful having forgiven you this prohibition. தஃப்ஸீர் இப்னு அப்பாஸ்: வசனம் 66:1 And from his narration on the authority of Ibn 'Abbas that he said regarding the interpretation of Allah's saying (O Prophet!): '(O Prophet!) i.e. Muhammad (pbuh). (Why bannest thou that which Allah hath made lawful for thee) i.e. marrying Maria the Copt, the Mother of Ibrahim; that is because he had forbidden himself from marrying her, (seeking to please thy wives) seeking the pleasure of your wives 'A'ishah and Hafsah by forbidding yourself from marrying Maria the Copt? (And Allah is Forgiving) He forgives you, (Merciful) about that oath. தஃப்ஸீர் வஹிதி: வசனம் 66:1, 2 & 3 (O Prophet! Why bannest thou that which Allah hath made lawful for thee…) [66:1]. . . . . Ibn 'Abbas> 'Umar who said: “The Messenger of Allah, Allah bless him and give him peace, entered the house of Hafsah along with the mother of his son, Mariyah. When Hafsah found him with her [in an intimate moment], she said: 'Why did you bring her in my house? You did this to me, to the exception of all your wives, only because I am too insignificant to you'. He said to her: 'Do not mention this to 'A'ishah; she is forbidden for me [i.e. Mariyah] if I ever touch her'. Hafsah said: 'How could she be forbidden for you when she is your slave girl?' He swore to her that he will not touch her and then said: 'Do not mention this incident to anyone'. But she went ahead and informed 'A'ishah. The Prophet, Allah bless him and give him peace, decided not to go to his wives for a month. He stayed away from them twenty nine days when Allah, glorious and exalted is He, revealed . . . . . மேற்கண்ட விளக்கவுரைகளின் சுருக்கம் இது தான். முஹம்மதுவிற்கு மரியாள் என்ற பெயர் கொண்ட ஒரு காப்டிக் கிறிஸ்தவப்பெண் அடிமையாக இருந்தாள். (எகிப்தின் அரசன் கொடுத்திருந்தான்) அவள் மனைவியல்ல, அவள் முஹம்மதுவின் வைப்பாட்டி, குர்-ஆனின் படி ‘முஹம்மதுவின் வலக்கரத்துக்கு சொந்தமானவள்’. ஒரு முறை முஹம்மதுவின் மனைவி ஹஃப்ஸா தம் தந்தையாகிய உமரின் வீட்டிக்குச் சென்று திரும்பி தம் வீட்டிற்குள் நுழையும் போது, முஹம்மது ஹஃப்ஸாவின் படுக்கையில் மரியாளோடு நெருக்கமாக இருப்பதைக் கண்டுவிட்டார்கள். இது என் நாள் அல்லவா? என் வீடு அல்லவா? என் கட்டில் அல்லவா? அப்படியிருக்க, உம்முடைய அடிமைப்பெண்ணிடம் என் நாளில் உடலுறவு கொள்வது எப்படி என்று கேட்டுயிருக்கிறார் (முஹம்மது தம்முடைய ஒவ்வொரு மனைவிக்கும் ஒருநாள் ஒதுக்கியிருந்தார். ஆனால், தம்முடைய அடிமைப்பெண்களுக்கு அவர் நாட்கள் ஒதுக்கவில்லை, எனவே, மற்றவர்கள் அசைந்த நேரம் பார்த்து காரியத்தை நடத்தவேண்டியது தான்). ஹஃப்ஸா சீக்கிரமாக வீடு திரும்புவார் என்று எதிர்ப்பார்க்காத முஹம்மதுவிற்கு தர்ம சங்கடமாக ஆகிவிட்டது (என்ன தான் இறைத்தூதராக இருந்தாலும், மனைவியிடம் நீதி நியாயம் தவறும் போது, கொஞ்சம் அடக்கிவாசிக்கத்தான் வேண்டுமல்லவா?). நிலைமையை சமாளிக்க, ‘இனி மரியாளோடு நான் உடலுறவு கொள்வதில்லை’ என்று முஹம்மது சொன்னார். அது எப்படி, அல்லாஹ்வின் வார்த்தையின் படி, அடிமைப்பெண்களோடு உடலுறவு கொள்வது ஹலால் அல்லவா? என்று திருப்பிக்கேட்டார் ஹஃப்ஸா. இது என்னடா தலைவலியாகப் போச்சு என நினைத்த முஹம்மது ‘சத்தியம் செய்துவிட்டார், அல்லாஹ் குர்-ஆனில் அனுமதித்து இருந்தாலும் நான் மரியாளோடு (அடிமைப்பெண்ணோடு) உடலுறவு கொள்ளமாட்டேன், நீயும் இதை யாரிடம் சொல்லவேண்டாம், முக்கியமாக ஆயிஷாவிடம் சொல்லவேண்டாம் என்றுச் சொல்ல, ஹஃப்ஸா அப்போது அமைதியானார். ஆனால், ஹஃப்ஸாவினால் இதனை ஜீரணித்துக் கொள்ளமுடியவில்லை. முஹம்மதுவின் மனைவிகளுக்கு "என் புருஷன் தான் எனக்கு மட்டும் தான்" என்றுச் சொல்லும் பாக்கியம் இல்லையென்றாலும், "எனக்கு ஒதுக்கிய நாளில் என் புருஷன் எனக்கு மட்டும் தான்" என்று சொல்லிக்கொள்ளும் வாய்ப்பு கூட ஹப்ஸாவிற்கு கிடைக்கவில்லை என்பதால், அவர் மிகவும் நொந்துபோய்விட்டார். எனவே, யாரிடம் சொல்லக்கூடாது என்று முஹம்மது சொன்னாரோ, அதே நபரிடம் அதாவது ஆயிஷாவிடம் சொல்லிவிட்டார். இந்த குழப்பங்களுக்கெல்லாம் மூலகாரணம் தாம் தான் என்பதை உணர்ந்த முஹம்மது, எந்த மனைவியிடமும் நான் செல்வதில்லை என்றுச் சொல்லி, ஒரு மாதம் (29 நாட்கள்) தனியாக வாழ்ந்துக்கொண்டு இருந்தார். அல்லாஹ்வினால் தன் நபி இப்படி தனிமையில் வாழ்வது பிடிக்கவில்லை, எனவே அல்லாஹ் வசனங்களை இறக்கினார். அதாவது, குர்-ஆன் 66வது அத்தியாயத்தின் முதல் ஐந்து வசனங்கள் மற்றும் கடைசி மூன்று வசனங்களை (66:10-12) அல்லாஹ் இறக்கியுள்ளான். இவ்வசனங்களில் தான் அல்லாஹ் முஹம்மதுவின் மனைவிமார்களை தலாக் பற்றி மிரட்டியுள்ளான். 5) பின்னணி எதுவானாலும் – அன்னையர்களை தலாக் பற்றி மிரட்டுவது சரியா? குர்-ஆன் 66வது அத்தியாயத்திற்கு இரண்டு பின்னணிகளை முஸ்லிம் அறிஞர்கள் கூறுகிறார்கள் (இவைகளில் எது சரியாக இருக்கும் என்பதை இன்னொரு கட்டுரையில் பார்க்கலாம்). இந்த கட்டுரையைப் பொருத்தமட்டில், முஹம்மதுவின் அன்னையர்களிடம், முஹம்மது உங்களை தலாக் கொடுத்துவிட்டால், நான் அவருக்கு இன்னும் பல திருமணங்களை செய்விப்பேன் என்று அல்லாஹ் மிரட்டுவது ‘இறைவன் என்ற நிலையில் இருக்கும் ஒருவருக்கு ஏற்புடையதாக தெரியவில்லை’. மேலும், இப்படிப்பட்ட குர்-ஆன் வசனங்களும், ஹதீஸ்களும் முஸ்லிம் ஆண்களின் மனதில் எப்படிப்பட்ட தாக்கத்தை உண்டாக்கும்? பெண்களின் சின்னச்சின்ன பிழைகளுக்காக தலாக் வரைக்கும் செல்வது, அல்லது தலாக் கொடுத்துவிடுவேன் என்று மிரட்டுவது தவறு இல்லை என முஸ்லிம் ஆண்கள் தைரியம் கொள்வார்கள் அல்லவா? பெண்களை பயமுறுத்த இப்படிப்பட்ட குர்-ஆன் வசனங்களை முஸ்லிம் ஆண்கள் தங்களின் சுயலாபத்துக்காக பயன்படுத்துவார்கள் அல்லவா? தலாக் 4 – முடிவுரை: இந்த கட்டுரையில், முஸ்லிம்களின் அன்னைகள் என்று மரியாதையோடு போற்றப்படும் பெண்களுக்கு நடந்த கொடுமையைப் பார்த்தோம். ஒரு இரகசியத்தை காக்கவில்லையென்பதால் தலாக் கொடுத்துவிடுவேன் என்று மிரட்டுவது காட்டுமிராண்டித்தனமாகும். ஒருவேளை 7ம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த அரேபிய பாலைவன நாடோடி மக்களின் மத்தியில் இப்படிப்பட்ட தலாக் மிரட்டல்கள் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கலாம், ஆனால் நாகரீகம் வளர்ந்த இந்நாட்களிலும் மேற்கண்ட குர்-ஆன் வசனங்கள் சொன்னது தவறு இல்லை முஸ்லிம்கள் சொல்வது அறிவுடமையாக தெரியவில்லை. முஹம்மதுவின் மனைவிமார்களுக்கே இந்த நிலை என்றால், சாதாரண முஸ்லிம் குடும்ப பெண்களின் நிலை இன்னும் பரிதாபமாக இருக்கும். இதனால் தான் முஸ்லிம் சமுதாயங்களில் தலாக் (விவாகரத்துக்கள்) அதிகமாக நடைபெறுகின்றன, ஆனால் அவைகள் ஊடகம்வரைக்கும் வருவதில்லை, அந்தந்த பகுதி ஜாமாத்தின் பதிவேடுகளில் பதிக்கப்படுவதோடு நின்றுவிடுகின்றன. இதையும் தாண்டி வெளியே வருகின்ற ஓரிரு தலாக் கேஸுக்கள் இந்தியாவில் பிரேகிங் நியூஸ் ஆகிவிடுகின்றது. இதுவரை இத்தொடர்கள் மூலமாக அறிந்துக்கொண்டவை. முஸ்லிம் பெண்களை எக்காரணங்களைக் கொண்டு முஸ்லிம் ஆண்கள் தலாக் கொடுக்கலாம் என்பதை குர்-ஆன் தெளிவுபடுத்தவில்லை. ஆனால், குடும்ப செலவிற்கு பணத்தை அதிகப்படுத்திக் கொடுங்கள் என்று கேட்டதற்காக, முஸ்லிம் சமுதாயத்திலேயே உயர்ந்தவர்கள் என்று கருதப்படும் முஹம்மதுவின் மனைவிமார்களுக்கு அல்லாஹ்வால் முதல் ‘தலாக் மிரட்டல்’ விடுக்கப்பட்டது. இக்கட்டுரையில் கண்டது படி, ஒரு இரகசியத்தை காத்துக்கொள்ளவில்லை என்பதற்காக இரண்டாவது முறையாக அல்லாஹ் தலாக் மிரட்டல் அதே அன்னையர்களுக்கு விடுத்தார். அடுத்த கட்டுரையில், முஹம்மது தம்முடைய ஒரு மனைவிக்கு தலாக் கொடுக்க முடிவு செய்தார், ஆனால், கடைசியில் அதனை நிறைவேற்றவில்லை. என்ன காரணத்திற்காக முஹம்மது அப்பெண்மணியை விவாகரத்து செய்ய விரும்பினார்? அதன் பிறகு எந்த காரணங்களுக்காக தலாக் முடிவை வாபஸ் பெற்றுவிட்டார் என்பதை ஆய்வு செய்வோம். தலாக் தொடரின் அடுத்த கட்டுரையில் சந்திப்போம். அடிக்குறிப்புக்கள்: [1] Tafsir al-Jalalyn (தஃப்ஸீர் ஜலலைன்): வசனம் 1: O Prophet! Why do you prohibit what God has made lawful for you in terms of your Coptic handmaiden Māriya — when he lay with her in the house of Hafsa who had been away but who upon returning and finding out became upset by the fact that this had taken place in her own house and on her own bed — by saying ‘She is unlawful for me!’ seeking by making her unlawful for you to please your wives? And God is Forgiving Merciful having forgiven you this prohibition. வசனம் 2: Verily God has prescribed He has made lawful for you when necessary the absolution of your oaths to absolve them by expiation as mentioned in the sūrat al-Mā’ida Q. 589 and the forbidding of sexual relations with a handmaiden counts as an oath so did the Prophet s expiate? Muqātil b. Sulaymān said ‘He set free a slave in expiation for his prohibition of Māriya’; whereas al-Hasan al-Basrī said ‘He never expiated because the Prophet s has been forgiven all errors’. And God is your Protector your Helper and He is the Knower the Wise. வசனம் 3: And mention when the Prophet confided to one of his wives namely Hafsa a certain matter which was his prohibition of Māriya telling her ‘Do not reveal it!’; but when she divulged it to ‘Ā’isha reckoning there to be no blame in doing such a thing and God apprised him He informed him of it of what had been divulged he announced part of it to Hafsa and passed over part out of graciousness on his part. So when he told her about it she said ‘Who told you this?’ He said ‘I was told by the Knower the Aware’ namely God. வசனம் 4: If the two of you namely Hafsa and ‘Ā’isha repent to God … for your hearts were certainly inclined towards the prohibition of Māriya that is to say your keeping this secret despite knowing the Prophet’s s dislike of it which is itself a sin the response to the conditional ‘if the two of you repent to God’ has been omitted to be understood as ‘it will be accepted of both of you’; the use of the plural qulūb ‘hearts’ instead of the dual qalbayn ‘both your hearts’ is on account of the cumbersomeness of putting two duals together in what is effectively the same word; and if you support one another tazzāharā the original second tā’ of tatazāharā has been assimilated with the zā’; a variant reading has it without this assimilation tazāharā against him that is the Prophet in what he is averse to then know that God He huwa a pronoun for separation is indeed his Protector His supporter and Gabriel and the righteous among the believers Abū Bakr and ‘Umar may God be pleased with both of them wa-Jibrīlu wa-sālihu’l-mu’minīna is a supplement to the syntactical locus of the subject of inna sc. ‘God’ who will also be his supporters and the angels furthermore further to the support of God and those mentioned are his supporters assistants of his in supporting him to prevail over both of you. வசனம் 5 It may be that if he divorces you that is if the Prophet divorces his wives his Lord will give him in your stead read yubaddilahu or yubdilahu wives better than you azwājan khayran minkunna is the predicate of ‘asā ‘it may be’ the sentence being the response to the conditional — the replacement of his wives by God never took place because the condition of his divorcing them never arose — women submissive to God affirming Islam believing faithful obedient penitent devout given to fasting — or given to emigrating in God’s way — previously married and virgins. (Source) Tanwir al-Miqbas min Tafsir Ibn Abbas (தஃப்ஸீர் இப்னு அப்பாஸ்) வசனம் 1 And from his narration on the authority of Ibn 'Abbas that he said regarding the interpretation of Allah's saying (O Prophet!): '(O Prophet!) i.e. Muhammad (pbuh). (Why bannest thou that which Allah hath made lawful for thee) i.e. marrying Maria the Copt, the Mother of Ibrahim; that is because he had forbidden himself from marrying her, (seeking to please thy wives) seeking the pleasure of your wives 'A'ishah and Hafsah by forbidding yourself from marrying Maria the Copt? (And Allah is Forgiving) He forgives you, (Merciful) about that oath. வசனம் 2 (Allah hath made lawful for you (Muslims) absolution from your oaths (of such a kind)) and so the Prophet (pbuh) absolved himself from his oath and married Maria the Copt, (and Allah is your Protector) and Helper. (He is the Knower) He knows that you forbade yourself Maria the Copt, (the Wise) in that which He enjoined about the expiation of oaths. வசனம் 3 (When the Prophet confided a fact unto one of his wives) i.e. Hafsah (and when she afterward divulged it) Hafsah divulged to 'A'ishah what the Prophet (pbuh) told her in confidence (and Allah apprised him thereof) and Allah informed him that Hafsah informed 'A'ishah, (he made known (to her) part thereof) part of what she said to 'A'ishah regarding the leadership of Abu Bakr and 'Umar; and it is said: about seeing Maria the Copt on his own (and passed over part) he did not mention making forbidding Maria the Copt on himself nor what he told her concerning the leadership of Abu Bakr and 'Umar after him, for he did not reproach him for this. (And when he told it her) when the Prophet (pbuh) informed Hafsah about what she said to 'A'ishah (she said) Hafsah said: (Who hath told thee) that I informed 'A'ishah? (He said) the Prophet (pbuh) said: (The Knower, the Aware hath told me) what you divulged to 'A'ishah. வசனம் 4 (If ye twain turn unto Allah repentant) if you two, i.e. Hafsah and 'A'ishah, repent of hurting and disobeying the Prophet (pbuh) ((ye have cause to do so) for your hearts desired (the ban)) for your hearts have deviated from the Truth; (and if ye aid one another against him (Muhammad)) but if you help one another to harm and disobey him (then lo! Allah, even He, is his protecting Friend) then Allah is his Protector and Helper against you, (and Gabriel) will help him against you (and the righteous among the believers) all true believers are helpers to him against you: Abu Bakr, 'Umar, 'Uthman, 'Ali, may Allah be well pleased with, and all other true believers; (and furthermore the angels are his helpers) and the angels are with all these his helpers against you. வசனம் 5 (It may happen) and this will surely happen (that his Lord, if he divorce you, will give him in your stead wives better than you) in obedience, (submissive (to Allah)) by stating it openly, (believing) true in their faith both with their tongues and hearts, (pious) obedient to Allah and to their husband, (penitent) from their sins, (inclined to fasting, widows) like Asiyah Bint Muzahim, the wife of Pharaoh (and maids) like Mary daughter of Amran, the mother of Jesus. (Source) Asbab Al-Nuzul by Al-Wahidi (தஃப்ஸீர் வஹிதி:) வசனம் 1, 2 & 3 (O Prophet! Why bannest thou that which Allah hath made lawful for thee…) [66:1]. Muhammad ibn Mansur al-Tusi informed us> 'Ali ibn 'Umar ibn Mahdi> al-Husayn ibn Isma'il al-Mahamili> 'Abd Allah ibn Shabib> Ishaq ibn Muhammad> 'Abd Allah ibn 'Umar> Abu'l-Nadr, the client of 'Umar ibn 'Abd Allah> 'Ali ibn 'Abbas> Ibn 'Abbas> 'Umar who said: “The Messenger of Allah, Allah bless him and give him peace, entered the house of Hafsah along with the mother of his son, Mariyah. When Hafsah found him with her [in an intimate moment], she said: 'Why did you bring her in my house? You did this to me, to the exception of all your wives, only because I am too insignificant to you'. He said to her: 'Do not mention this to 'A'ishah; she is forbidden for me [i.e. Mariyah] if I ever touch her'. Hafsah said: 'How could she be forbidden for you when she is your slave girl?' He swore to her that he will not touch her and then said: 'Do not mention this incident to anyone'. But she went ahead and informed 'A'ishah. The Prophet, Allah bless him and give him peace, decided not to go to his wives for a month. He stayed away from them twenty nine days when Allah, glorious and exalted is He, revealed (O Prophet! Why bannest thou that which Allah hath made lawful for thee, seeking to please thy wives?)”. Abu Ibrahim Isma'il ibn Ibrahim al-Wa'iz informed us> Bishr ibn Ahmad ibn Bishr> Ja'far ibn al-Hasan al-Firyabi> Minjab ibn al-Harith> 'Ali ibn Mushir> Hisham ibn 'Urwah> his father> 'A'ishah who said: “The Messenger of Allah, Allah bless him and give him peace, used to like sweet and honey. It was also his habit to go to his wives after finishing the 'Asr prayer. In one occasion he went to Hafsah bint 'Umar and stayed with her more than he usually did. When I found out about this, I enquired about the reason and I was told that a woman from her clan gifted her with a pot of honey which she offered to the Prophet, Allah bless him and give him peace. I said to myself: by Allah I will spoil it for him. I said to Sawdah bint Zam'ah: 'When he comes to your apartment and draws closer to you, say: O Messenger of Allah, did you eat Maghafir?' When he says: 'Hafsah fed me some honey', say: 'The bees which produced it must have eaten the 'Urfut'. வசனம் 4 & 5 (If ye twain turn unto Allah repentant, (ye have cause to do so) for your hearts desired (the ban)…) [66:4]. Abu Mansur al-Mansuri informed us> Abu’l-Hasan al-Daraqutni> al-Husayn ibn Isma‘il> ‘Abd Allah ibn Shabib> Ahmad ibn Muhammad ibn ‘Abd al-‘Aziz> his father> al-Zuhri> ‘Ubayd Allah ibn ‘Abd Allah> Ibn ‘Abbas who said: “Hafsah found the Messenger of Allah, Allah bless him and give him peace, with Umm Ibrahim when it was ‘A’ishah’s turn. She said to him: ‘I will definitely inform her!’ The Messenger of Allah, Allah bless him and give him peace, said: ‘She is forbidden for me if I touch her again’. Hafsah went ahead and informed ‘A’ishah. Allah informed His Messenger of this and he let Hafsah know some of the things she said. She asked him: ‘Who informed you of this?’ He said: ‘(The Knower, the Aware hath told me) [66:3]’. The Messenger of Allah, Allah bless him and give him peace, stayed away from his wives for a month and then Allah, glorious and exalted is He, revealed: (If ye twain turn unto Allah repentant, (ye have cause to do so) for your hearts desired (the ban)…)”. (Source)
‘உள்ளம் கேட்குமே’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை அசின். கேரளாவைச் சேர்ந்த இவர் கமல், விஜய், அஜித், சூர்யா, விக்ரம், ஜெயம் ரவி உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். கோலிவுட்டில் முன்னணி நாயகியாக வலம் வந்த அசின், ‘கஜினி’ திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக்கில் அமீர்கானுடன் நடித்து பாலிவுட்டிலும் அதிக சம்பளம் வாங்கு நடிகையாக திகழ்ந்தார். இந்நிலையில், மைக்ரோமேக்ஸ் நிறுவனர் ராகுல் ஷர்மா மீது காதல் வயப்பட்ட அசின், கடந்த 2016ம் ஆண்டு ஜனவரி.19ம் தேதி ராகுலை திருமணம் செய்துக் கொண்டார்.கடந்த 2017 இவர்களுக்குப் பெண் குழந்தை பிறந்தது. ஆனால் குழந்தையின் புகைப்படத்தை வெளியிடாமல் ரகசியமாக வந்திருந்த இந்த தம்பதி அரினின் முதல் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போதுதான் அரினின் புகைப்படங்களை முதல்முறையாக வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.திருமணத்திற்கு பிறகு சினிமாவில் நடிக்காமல் இருக்கும் அசின் சமூக வலைத்தளங்களில் எப்போதாவது ஒரிரு பதிவுகளை பதிவிடுவார். இந்நிலையில் தனது மகள் அரின் கடற்கரை மணலில் தனது தோழிகளுடன் விளையாடும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவேற்றம் செய்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்று வருகின்றன. From Around the web Trending Featured About Us Ciniexpress is a multimedia organization created in 2020 with the aim to please its audience, comprising various forms of entertainment that include news, movie reviews, audio launches, cinema news, crime news, lifestyle, health, and much more!
தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் உருவாக்கப்பட்டுள்ள “தமிழ் நாடு காலநிலை மாற்ற நிர்வாகக் குழுவில்(Tamil Nadu Governing Council on Climate Change)” பூவுலகின் நண்பர்கள். தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கத்திற்கு கொள்கை வழிகாட்டுதலை வழங்கவும் காலநிலை மாற்றத்திற்கான தகவல் மற்றும் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளை தணிப்பது தொடர்பான ஆலோசனைகளை வழங்கவும் தமிழ்நாடு மாநில காலநிலை மாற்ற செயல் திட்டத்தினை உருவாக்கி அதனை செயல்படுத்துவதற்கான உரிய வழிகாட்டுதல்களை வழங்கும் பொறுத்து தமிழ்நாடு காலநிலை மாற்ற நிர்வாக குழுவினை அமைக்க அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களின் ஒப்புதலுடன் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை இதற்கான அரசாணையினை வெளியிட்டுள்ளது இக்குழுவில் பல்வேறு முக்கியத்துறைகளின் அனுபவிக்க மூத்த அரசு செயலாளர்கள் தவிர காலநிலை மாற்றம் தொடர்பான பல்வேறு பிரிவுகளின் வல்லுனர்கள் இடம்பெற்றுள்ளனர். இந்த நிர்வாக குழுவானது தமிழ்நாடு அரசின் முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் தலைமையில் செயல்படும். இக்குழுவில் பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த கோ.சுந்தர்ராஜன் அவர்களும் இடம் பெற்றுள்ளார். G O (D) No 242 Dt 21.10.2022 பூவுலகின் நண்பர்கள் அமைப்பைத் தொடங்கிய அமரர் நெடுஞ்செழியன் துவங்கிவைத்த மிகமுக்கிய பணி ‘அறிவுத்தேடலும், அறிவுப்பகிரலும்’ இந்த நோக்கத்தில் அவர் ஒருங்கிணைத்த குழு வெளிக்கொணர்ந்த சூழல் சார்ந்த வெளியீடுகள் தமிழ்நாட்டின் சுற்றுச்சூழல் அறிவியக்க வரலாற்றில் மிகமுக்கியத் தடம் பதித்தவை. அதுவும் சூழல்பாதுகாப்பில் ஆழமான புரிதலற்ற மேட்டிமைச் சிந்தனைகள் மேலோங்கியிருந்த காலத்தில் சூழலியல் அரசியலை மக்களுக்கு எடுத்துச் செல்லும் வகையில் அவர்கள் முன்னெடுத்தப் பணி மிகவும் குறிப்பிடத்தக்கது. மிகவும் தொலைநோக்குப் பார்வையுடன் அன்றைய பூவுலகின் நண்பர்கள் வெளியிட்ட நூல்களின் தாக்கம் இல்லாத சூழலியலாளர்களே தமிழ்நாட்டில் இல்லை என்று கூறலாம். பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் இரண்டாம் ஓட்டத்திலும் இந்த “அறிவுத் தேடல் – அறிவுப் பரவல்“” முயற்சியை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறோம். காலத்தின் கட்டாயம் எங்கள் செயல்பாடுகளை இன்னும் பல தளங்களில் விரிவுபடுத்தி வேகம் பெறச்செய்திருக்கிறது. இயற்கையை அறிவதே அறிவியல். ஆனால், இதைப் பிற்போக்குவாதமாகப் பார்க்கும் பலர் இயற்கையை வெற்றி கொள்வதே அறிவியல் என்று நம்பி முன்னெடுக்கும் செயல்கள் எந்த அறிவியல் தொழில்நுட்பங்களாலும்கூட மீட்க முடியாத நாசங்களை இங்கு நிகழ்த்தியுள்ளன இன்று, காலம் மாறும் வேகத்தைவிட அதிகமாகவே தொழில்நுட்பங்கள் வளர்ந்து வருகின்றன. இந்தத் தொழில்நுட்பங்கள் பல்வேறு விதத்தில் நமக்குப் பெரும் நன்மைகளைத் தந்திருந்தாலும் அவற்றைக் கையில் வைத்திருப்போரின் நோக்கம் வெறும் இலாப வேட்கையாய் இருப்பதால் இப்புவி மீள்புதுப்பிக்க முடியாத அளவுக்குப் பல்வேறு இழப்புகளைச் சந்தித்திருக்கிறது. அதன் உச்சகட்டமாகக் காலநிலைப் பேரழிவுகளை நாம் சந்திக்கத்தொடங்கியிருக்கிறோம். இது குறித்த ஆய்வுகள் உலகெங்கும் நடைபெற்று வருகின்றன. உலகமயமாக்கல் யுகத்தில் பல்வேறு நாடுகளின் தொழில்நுட்பங்கள் (குறிப்பாக மேலை நாடுகள் கைவிட்டத் தொழில்நுட்பங்கள்) இந்தியாவில் நடைமுறைக்கு வரும்போது, அந்தத் தொழில்நுட்பங்கள் ஏற்படுத்தும் எதிர்விளைவுகள் குறித்து உலக நாடுகளின் அனுபவங்களை நாம் புறக்கணிக்க முடியாது. எத்தனைப் புதியபுதிய நவீனத் தொழில் நுட்பங்கள் வந்தாலும்கூட நாம் உயிர்வாழ இந்த மண்ணையும் காற்றையும் நீரையுமே நம்பியிருக்க வேண்டியிருக்கிறது. இந்நிலையில் நம் ஒரே வாழ்வாதாரமான இப்புவியின் வளங்களைக் காக்க, இயற்கையைப் புரிந்து கொள்ளவும், இயற்கையின் புதுப்பிக்கத்தக்க வரம்புக்குள் நம் வாழ்வை அமைத்துக்கொள்ளும்படியாய் நம் செயல்பாடுகளை வடிவமைப்பதும், அதனை சிதைக்கும் தொழில்நுட்பங்களை விமர்சனம் செய்வதும் காலத்தின் கட்டாயமாகிறது. அந்த வகையில், இவை குறித்த ஆழ்ந்தப் புரிதலை ஏற்படுத்த சுற்றுச்சூழல் தொடர்பான புத்தகங்கள், மாத இதழ், குழந்தைகளுக்கான சூழலியல் இதழ் போன்ற பதிப்பகப் பணி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு கல்லூரிகள், பள்ளிகள், அமைப்புகள், இயக்கங்களிடையே கருத்தரங்குகள் நடத்துவது, தேவைப்படின் தமிழ்நாட்டின் முக்கியமான சுற்றுச்சூழல் பிரச்சினைகளில் நேரடியாகச் சட்டரீதியாக அணுகி வழக்குத் தொடுப்பது அல்லது போராடும் எளிய மக்களுக்கு சட்ட உதவிகள் வழங்குவது, சூழலியலுக்கு எதிரான திட்டங்கள் குறித்த பரப்புரையில் ஈடுபடுவது, அப்படியான திட்டங்களை ஆதரிப்பவர்களையும், எதிர்ப்பவர்களையும் ஒரே மேடையில் வைத்து ஆரோக்கியமான விவாதங்களை முன்னெடுப்பது, அரசின் புதிய சட்டங்கள், சட்டத் திருத்தங்கள், கொள்கைகள் குறித்து கருத்து தெரிவிப்பது, பல்வேறு சூழலியல் தொடர்பான விஷயங்களில் அரசுக்கு இயன்ற வகையில் கருத்துகளை வழங்குவது, தமிழ்நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்களிடையே சுற்றுச்சூழல் பாதுகாப்பு, காலநிலை மாற்ற விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலான கலந்துரையாடல் நடத்துவது, காலநிலை மாற்றம், சுற்றுச்சூழல் குறித்து உலக நாடுகள் பலவற்றிலும் வெளியாகும் ஆய்வறிக்கைகளை எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் தமிழ்ப்படுத்தி வழங்குவது, அச்சு மற்றும் காட்சி ஊடகங்கள் வழியே சூழல் குறித்தச் செய்திகளை பொதுவெளியில் முன்வைப்பது என பல்வேறு வடிவங்களில் சூழலியல் பாதுகாப்பு தொடர்பான செயல்பாடுகளை பூவுலகின் நண்பர்கள் அமைப்பு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. இந்த தொடர்ச்சியில் மரு. சிவராமன் அவர்களும் மாநில திட்டக்குழுவில் உறுப்பினராக நியமிக்கப்பட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேற்கூறிய பணிகளில் ஒன்றாகவும் அதன் நீட்சியாகவும்தான் தற்போது தமிழ்நாடு அரசு உருவாக்கியுள்ள ‘தமிழ்நாடு காலநிலை மாற்ற நிர்வாகக் குழுவில் குழுவில்’ (Tamil Nadu Governing Council on Climate Change) பூவுலகின் நண்பர்கள் சார்பில் பொறியாளர் கோ.சுந்தர்ராஜன் ஒரு உறுப்பினராக நியமிக்கப்பட்டிருப்பதைப் பார்க்கிறோம். இந்த வாய்ப்பின் மூலம் காலநிலை மாற்றத்தின் தாக்கத்தால் தமிழ்நாடு எதிர்கொள்ளவுள்ள பல்வேறு நெருக்கடிகளை சமாளிப்பதற்கு நேரடியாக இன்னும் அதிகமாக எங்களால் பங்களிக்க முடியும் என்று நம்புகிறோம். இந்த நம்பிக்கை எங்களுக்கு பெருமகிழ்ச்சியையும் உத்வேகத்தையும் கொடுத்திருக்கிறது. ஏனெனில் சுற்றுச்சூழலைக் காக்கும் செயல்பாடுகளில் கீழிருந்து மேலான மாற்றங்களைவிட மேலிருந்து கீழான மாற்றங்களே மிகமுக்கியமான நல்விளைவுகளை ஏற்படுத்துமென்று நம்புகிறோம். உலகமுழுதும் சமரசமற்ற சூழல் இயக்கங்கள் இத்தகைய மாற்றங்களுக்காகவே போராடி வருகின்றன. இந்தப் பின்னணியில் தமிழக அரசின் இந்த முன்னெடுப்பு கொடுத்திருக்கும் நம்பிக்கையும் உத்வேகமும் மக்கள் மீதான நம்பிக்கையும் இன்னும் தீவிரமாகவும் வேகமாகவும் சூழல் பிரச்சினைகளில் எந்த சமரசமுமின்றி சூழல் பாதுகாப்பில் சரியான திசை நோக்கி எங்களை வழிநடத்தும் என்று உறுதிகூறுகிறோம். இந்த தருணத்தில் மற்றொரு விஷயத்தையும் தெரிவிக்கிறோம், மக்களுடன் இணைந்து சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் அம்சங்களுக்கு எதிராக பூவுலகின் குரல் ஒலிப்பதில் எந்த சமரசமும் இருக்காது, வழக்கம்போல பூவுலகின் நண்பர்களின் செயல்பாடுகள் மக்களின் குரலாகவே ஒலிக்கும். தமிழ்நாடு அரசு உருவாக்கியுள்ள இக்குழுவானது வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் நீர்வழங்கல், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புர மேம்பாடு, நீர்வளம், பொதுப்பணி, ஆற்றல், போக்குவரத்து, வேளாண்மை, கிராமப்புற வளர்ச்சி, சுகாதாரம், மருத்துவம், குடும்பநலன், தொழிற்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளும் இணைந்து தமிழ்நாட்டிற்கான காலநிலை செயல்பாடுகளை மேற்கொள்வது குறித்த முடிவுகளை எடுக்கும் குழுவாக செயல்படவுள்ளது. இப்படி ஒரு குழுவை அமைத்து காலநிலை மாற்றத்தின் தாக்கத்தை மட்டுப்படுத்துதல், தடுத்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்பது பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் நீண்டகால கோரிக்கையாகும். அந்த கோரிக்கையை தமிழ்நாடு அரசு இன்று நிறைவேற்றியிருப்பதற்கும் அதில் பூவுலகின் நண்பர்கள் அமைப்பும் ஒரு பங்காற்ற வாய்ப்பளித்தற்கும் தமிழ்நாட்டின் முதலமைச்சருக்கும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மற்றும் செயலாளருக்கும் எங்கள் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
தவம் செய்தவற்கு ஒரு பற்றும் இல்லாதிருத்தல் இயல்பாகும், பற்று உடையவராக இருத்தல் மீண்டும் மயங்குவதற்கு வழியாகும். சாலமன் பாப்பையா உரை: உடைமை ஏதும் இல்லாதிருப்பது துறவின் இயல்பு. உடைமைகளை வைத்திருப்பதோ ஆசை என்னும் மயக்கத்தை மறுபடியும் தரும். கலைஞர் உரை: ஒரு பற்றும் இல்லாதிருத்தலே துறவுக்கு ஏற்றதாகும் ஓன்றன் மேல் பற்று வைப்பினும், அது மேன்மேலும் பற்றுகளைப் பெருக்கி மயங்கச் செய்துவிடும்.
அதிகாரங்கள்: 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 Numbers-20 ►❚❚ 1 இஸ்ரவேல் புத்திரரின் சபையார் எல்லாரும் முதலாம் மாதத்தில் சீன்வனாந்தரத்திலே சேர்ந்து, ஜனங்கள் காதேசிலே தங்கியிருக்கையில், மிரியாம் மரணமடைந்து, அங்கே அடக்கம்பண்ணப்பட்டாள். 2 ஜனங்களுக்குத் தண்ணீர் இல்லாதிருந்தது; அப்பொழுது அவர்கள் மோசேக்கும் ஆரோனுக்கும் விரோதமாகக் கூட்டங்கூடினார்கள். 3 ஜனங்கள் மோசேயோடே வாக்குவாதம் பண்ணி: எங்கள் சகோதரர் கர்த்தருடைய சந்நிதியில் மாண்டபோது நாங்களும் மாண்டுபோயிருந்தால் நலமாயிருக்கும். 4 நாங்களும் எங்கள் மிருகங்களும் இங்கே சாகும்படி, நீங்கள் கர்த்தரின் சபையை இந்த வனாந்தரத்திலே கொண்டு வந்தது என்ன; 5 விதைப்பும் அத்திமரமும், திராட்சச்செடியும், மாதளஞ்செடியும், குடிக்கத் தண்ணீரும் இல்லாத இந்த கெட்ட இடத்தில் எங்களைக் கொண்டுவரும்படி, நீங்கள் எங்களை எகிப்திலிருந்து புறப்படப்பண்ணினது என்ன என்றார்கள். 6 அப்பொழுது மோசேயும் ஆரோனும் சபையாரை விட்டு, ஆசரிப்புக் கூடாரவாசலில் போய், முகங்குப்புற விழுந்தார்கள்; கர்த்தருடைய மகிமை அவர்களுக்குக் காணப்பட்டது. 7 கர்த்தர் மோசேயை நோக்கி: 8 நீ கோலை எடுத்துக்கொண்டு, நீயும் உன் சகோதரனாகிய ஆரோனும் சபையாரைக் கூடிவரச்செய்து, அவர்கள் கண்களுக்குமுன்னே கன்மலையைப் பார்த்துப் பேசுங்கள்; அப்பொழுது அது தன்னிடத்திலுள்ள தண்ணீரைக் கொடுக்கும்; இப்படி நீ அவர்களுக்குக் கன்மலையிலிருந்து தண்ணீர் புறப்படப்பண்ணி, சபையாருக்கும் அவர்கள் மிருகங்களுக்கும் குடிக்கக் கொடுப்பாய் என்றார். 9 அப்பொழுது மோசே தனக்குக் கர்த்தர் கட்டளையிட்டபடியே கர்த்தருடைய சந்நிதியிலிருந்த கோலை எடுத்தான். 10 மோசேயும் ஆரோனும் சபையாரைக் கன்மலைக்கு முன்பாக கூடிவரச்செய்தார்கள்; அப்பொழுது மோசே அவர்களை நோக்கி: கலகக்காரரே, கேளுங்கள், உங்களுக்கு இந்தக் கன்மலையிலிருந்து நாங்கள் தண்ணீர் புறப்படப்பண்ணுவோமோ என்று சொல்லி, 11 தன் கையை ஓங்கி, கன்மலையைத் தன் கோலினால் இரண்டுதரம் அடித்தான்; உடனே தண்ணீர் ஏராளமாய்ப் புறப்பட்டது, சபையார் குடித்தார்கள்; அவர்கள் மிருகங்களும் குடித்தது. 12 பின்பு கர்த்தர் மோசேயையும் ஆரோனையும் நோக்கி: இஸ்ரவேல் புத்திரரின் கண்களுக்கு முன்பாக என்னைப் பரிசுத்தம் பண்ணும்படி, நீங்கள் என்னை விசுவாசியாமற் போனபடியினால், இந்தச் சபையாருக்கு நான் கொடுத்த தேசத்திற்குள் அவர்களைக் கொண்டுபோவதில்லை என்றார். 13 இங்கே இஸ்ரவேல் புத்திரர் கர்த்தரோடே வாக்குவாதம்பண்ணினதினாலும், அவர்களுக்குள்ளே அவருடைய பரிசுத்தம் விளங்கினதினாலும் இது மேரிபாவின் தண்ணீர் என்னப்பட்டது. 14 பின்பு மோசே காதேசிலிருந்து ஏதோமின் ராஜாவினிடத்துக்கு ஸ்தானாபதிகளை அனுப்பி: 15 எங்கள் பிதாக்கள் எகிப்துக்குப் போனதும், நாங்கள் எகிப்திலே நெடுநாள் வாசம்பண்ணினதும், எகிப்தியர் எங்களை எங்கள் பிதாக்களையும் உபத்திரவப்படுத்தினதும், இவைகளினால் எங்களுக்கு நேரிட்ட எல்லா வருத்தமும் உமக்குத் தெரிந்திருக்கிறது. 16 கர்த்தரை நோக்கி நாங்கள் மன்றாடினோம்; அவர் எங்களுக்குச் செவிகொடுத்து, ஒரு தூதனை அனுப்பி, எங்களை எகிப்திலிருந்து புறப்படப்பண்ணினார்; இப்பொழுது நாங்கள் உமது எல்லைக்கு உட்பட்ட காதேஸ் ஊரில் வந்திருக்கிறோம். 17 நாங்கள் உமது தேசத்தின் வழியாய்க் கடந்துபோகும்படி உத்தரவு கொடுக்கவேண்டும்; வயல்வெளிகள் வழியாகவும், திராட்சத்தோட்டங்கள் வழியாகவும் நாங்கள் போகாமலும், துரவுகளின் தண்ணீரை குடியாமலும், ராஜபாதையாகவே நடந்து, உமது எல்லையைக் கடந்துபோகுமட்டும், வலதுபுறமும் இடதுபுறமும் சாயாதிருப்போம் என்று, உமது சகோதரனாகிய இஸ்ரவேல் சொல்லி அனுப்புகிறான் என்று சொல்லச் சொன்னான். 18 அதற்கு ஏதோம்: நீ என் தேசத்தின் வழியாய்க் கடந்துபோகக் கூடாது; போனால் பட்டயத்தோடே உன்னை எதிர்க்கப் புறப்படுவேன் என்று அவனுக்குச் சொல்லச் சொன்னான். 19 அப்பொழுது இஸ்ரவேல் புத்திரர் அவனை நோக்கி: நடப்பான பாதையின் வழியாய் போவோம்; நாங்களும் எங்கள் மிருகங்களும் உன் தண்ணீரைக் குடித்தால் அதற்குக் கிரயங்கொடுப்போம்; வேறொன்றும் செய்யாமல், கால்நடையாய் மாத்திரம் கடந்துபோவோம் என்றார்கள். 20 அதற்கு அவன்: நீ கடந்துபோகக் கூடாது என்று சொல்லி, வெகு ஜனங்களோடும் பலத்த கையோடும் அவர்களை எதிர்க்கப் புறப்பட்டான். 21 இப்படி ஏதோம் தன் எல்லைவழியாய்க் கடந்துபோகும்படி இஸ்ரவேலருக்கு உத்தரவு கொடுக்கவில்லை; ஆகையால் இஸ்ரவேலர் அவனை விட்டு விலகிப்போனார்கள். 22 இஸ்ரவேல் புத்திரரான சபையார் எல்லாரும் காதேசை விட்டுப் பிரயாணப்பட்டு, ஓர் என்னும் மலைக்குப் போனார்கள். 23 ஏதோம் தேசத்தின் எல்லைக்கு அருகான ஓர் என்னும் மலையிலே கர்த்தர் மோசேயையும் ஆரோனையும் நோக்கி: 24 ஆரோன் தன் ஜனத்தாரோடே சேர்க்கப்படுவான். மேரிபாவின் தண்ணீரைப்பற்றிய காரியத்தில் நீங்கள் என் வாக்குக்குக் கீழ்ப்படியாமற்போனபடியினால், நான் இஸ்ரவேல் புத்திரருக்குக் கொடுக்கிற தேசத்தில் அவன் பிரவேசிப்பதில்லை. 25 நீ ஆரோனையும் அவன் குமாரனாகிய எலெயாசாரையும் கூட்டிக்கொண்டு, அவர்களை ஓர் என்னும் மலையில் ஏறப்பண்ணி, 26 ஆரோன் உடுத்திருக்கிற வஸ்திரங்களைக் கழற்றி, அவைகளை அவன் குமாரனாகிய எலெயாசாருக்கு உடுத்துவாயாக; ஆரோன் அங்கே மரித்து, தன் ஜனத்தாரோடே சேர்க்கப்படுவான் என்றார். 27 கர்த்தர் கட்டளையிட்டபடியே மோசே செய்தான்; சபையார் எல்லாரும் பார்க்க அவர்கள் ஓர் என்னும் மலையில் ஏறினார்கள். 28 அங்கே ஆரோன் உடுத்திருந்த வஸ்திரங்களை மோசே கழற்றி, அவைகளை அவன் குமாரனாகிய எலெயாசாருக்கு உடுத்தினான்; அப்பொழுது ஆரோன் அங்கே மலையின் உச்சியிலே மரித்தான்; பின்பு மோசேயும் எலெயாசாரும் மலையிலிருந்து இறங்கினார்கள். 29 ஆரோன் ஜீவித்துப்போனான் என்பதைச் சபையார் எல்லோரும் கண்டபோது, இஸ்ரவேல் வம்சத்தார் எல்லாரும் ஆரோனுக்காக முப்பது நாள் துக்கங்கொண்டாடினார்கள்.
புதுடெல்லி: கோவிட்-19 உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளை பராமரிக்கும் சுகாதாரப்பணியாளர்கள் மற்றும் பராமரிப்பாளர்களுக்கு, நோய் தடுப்பாக ஹைட்ராக்ஸி குளோரோகுயின் (HCQ) பரிந்துரைக்கலாம் என, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) பரிந்துரைத்துள்ளது. நிபுணர்கள் இந்தியா ஸ்பெண்டிடம் கூறியது போல், கோவிட்-19 நோய்த்தொற்றுகளை இந்த மருந்து தடுக்குமா என்பது இதுவரை நிரூபிக்கப்படவில்லை. அதே நேரத்தில், சுகாதாரப்பணியாளர்களை பாதுகாப்பாக வைத்திருப்பதில் உதவும் முகக்கவசங்கள் மற்றும் உடற்கவசங்கள் போன்ற பாதுகாப்பு உபகரணங்கள், மருத்துவமனைகளில் குறைந்து வருகின்றன என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். "சார்ஸ் கோவி-2 தடுப்புக்கு ஹைட்ராக்ஸி குளோரோகுயின் பயனுள்ளதாக இருப்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை [கொரோனா வைரஸ் நாவல் அறியப்பட்டதால்]; எனவே இது சுகாதாரப் பணியாளர்களுக்கான தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணமாக (PPE) மாற்ற முடியாது," என்று, அமெரிக்காவை சேர்ந்த கொலம்பியா பல்கலைக்கழகத்தில் உள்ள மெயில்மேன் ஸ்கூல் ஆஃப் பப்ளிக் ஹெல்த் நிறுவனத்தின் வைராலஜிஸ்ட், ஏஞ்சலா ராஸ்முசென் கூறினார். தற்போது, கோவிட்-19க்கு தடுப்பு மருந்தோ, சிகிச்சை அல்லது தடுப்பூசி எதுவும் இல்லை. கோவிட்-19 தொற்றுநோய், உலகளவில் 28,000-க்கும் அதிகமான உயிர்களைக் கொன்றுள்ளது மற்றும் 6,20,000-க்கும் அதிகமானவர்களை பாதித்துள்ளது என்று, ஜான்ஸ் ஹாப்கின்ஸ் கொரோனா வைரஸ் வள மையத்தின் (மார்ச் 28 அன்று இரவு 8.42 மணி) தரவு தெரிவிக்கிறது. இந்தியாவில், இந்நோய் 19 உயிர்களைக் கொன்றுள்ளது; குறைந்தது 918 பேரை பாதித்துள்ளது (இது, மார்ச் 28, 2020 மாலை 5.45 மணி வரை) என்று, ஹெல்த்செக் தரவுத்தளமான கொரோனா வைரஸ் மானிட்டர் தெரிவிக்கிறது. இந்தியாவின் முதலாவது கோவிட் -19 நோயாளி கேரளாவில் கண்டறியப்பட்ட கிட்டத்தட்ட இரண்டு மாதங்களில், மார்ச் 27, 2020 அன்று நடந்த செய்தியாளர் கூட்டத்தில், மருத்துவ நிபுணர்களுக்கான தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள்- பிபிஇ (PPE) போதிய அளவில் கிடைக்கச் செய்வது கடினம் என்று இந்திய அரசு கூறியது. சில பாதுகாப்பு உபகரணங்களை இறக்குமதி செயலாமெனில், “அது கிடைப்பதில் சில தடைகள், சில சிக்கல்கள் இருந்தன”, என்று செய்தியாளர் கூட்டத்தில் மத்திய சுகாதார அமைச்சகத்தின் மூத்த அதிகாரி லாவ் அகர்வால் கூறினார். "இறக்குமதி செய்யப்பட்டவை என்பதால், என்.95 முகக்கவசங்களிலும் சில சிக்கல்கள் இருந்தன. இந்த விவகாரம் குறித்து அரசு அறிந்திருக்கிறது” என்றார். ஹைட்ராக்ஸி குளோரோகுயின் (HCQ) சப்ளைக்கான அரசின் முடிவு "அரசியல் ரீதியாக பயனுள்ளது", ஆனால் அதற்கான ஆதாரங்கள் இல்லை என்று சத்தீஸ்கரில் உள்ள லாப நோக்கற்ற மருத்துவமனையான ஜான் ஸ்வஸ்தியா சஹயோக்-இன் யோகேஷ் ஜெயின் கூறினார். போதுமான தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் வாயிலாக தயார்படுத்தத் தவறியதால், சுகாதார ஊழியர்களை பாதுகாப்பது போல் அரசு காட்டிக் கொள்வதற்காக ஹைட்ராக்ஸி குளோரோகுயின் போன்ற ஒரு மருந்தை விநியோகிக்கிறது என்றார் அவர். "சுகாதாரத் தொழிலாளர்கள் இப்போதே மிகவும் பயப்படுகிறார்கள்," என்று கோவிட்-19 ஐ கையாள அரசால் நியமிக்கப்பட்ட பணிக்குழுவின் பெயர் வெளியிட விரும்பாத உறுப்பினர் ஒருவர் கூறினார். "அரசு, அவர்களுக்காக ஏதாவது செய்வதை, அவர்கள் பார்க்க வேண்டும். அவர்களுக்கு உத்தரவாதம் தேவை. இதுகுறித்து பிரெஞ்சு ஆய்வின் வரம்புகளை நாங்கள் புரிந்து கொண்டிருக்கிறோம். ஆம், ஹைட்ராக்ஸி குளோரோகுயின் ஒரு சிறந்த தடுப்பு என்று இன்னும் 100% நிரூபிக்கப்படவில்லை. ஆனால் சுகாதார ஊழியர்களின் மன உறுதியை அதிகரிக்க, நாம் ஏதாவது செய்ய வேண்டியிருந்தது” என்று அவர் கூறினார். தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களுக்கு மாற்றாக ஹைட்ராக்ஸி குளோரோகுயின் இருக்க முடியாது ஹைட்ராக்ஸி குளோரோகுயின் உட்கொள்வது சுகாதார ஊழியர்களுக்கு தொற்றுநோயில் இருந்து பாதுகாப்பாக இருக்கும் என்ற "தவறான உணர்வை" வழங்கக்கூடாது என்று ஐ.சி.எம்.ஆரின் பரிந்துரை எச்சரித்த போதிலும், அதன் விளைவு இதில் சரியாக இருக்கும் என்று வல்லுநர்கள் கூறினர். "இந்த [HCQ] பரிந்துரையில் இருந்து, மருத்துவப்பணிக்குழுவை இழக்கக்கூடாது என்பதில் அரசு கவலை கொண்டுள்ளது என்பது தெளிவாகிறது," என்று மணிப்பால் மருத்துவமனையின் நுரையீரல் மற்றும் தூக்க மருந்துத்துறையின் தலைவர் சத்யநாராயண மைசூர் கூறினார். "ஆனால் சுகாதார ஊழியர்கள் ஹைட்ராக்ஸி குளோரோகுயின்னை எடுத்துக்கொள்ள சொல்வதால், நாங்கள் மற்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்று அர்த்தமல்ல. ஹைட்ராக்ஸி குளோரோகுயின் பாதுகாப்பு தடுப்புக்கு ஒரு மாற்று அல்ல” என்றார் அவர். ஆதாரமின்மை ஹைட்ராக்ஸி குளோரோகுயின் பற்றிய ஐ.சி.எம்.ஆரின் ஆலோசனையானது, மருந்துகளின் செயல்திறன் குறித்து, குறிப்பாக ஒரு தடுப்பு பற்றி எந்த ஆதாரத்தையும் முன்வைக்கவில்லை. ஆய்வக பரிசோதனைகள், இன்-விவோ ஆய்வுகள் மற்றும் முன் மருத்துவ தரவுகளின் அடிப்படையில் “ஹைட்ராக்ஸி குளோரோகுயின் கொரோனா வைரஸுக்கு எதிராக செயல்படுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது” என்று மார்ச் 22, 2020 அன்று வெளியான ஆலோசனை தெரிவித்துள்ளது. ஆனால் இந்த முடிவுக்கு வரச் செய்த ஆய்வுகள் எவை என்ற விவரம் குறிப்பிடவில்லை. இந்த முடிவு எடுக்கப்பட்ட கூட்டங்களின் குறிப்போ, நிரல்களோ எதுவும் கிடைக்கவில்லை. "ஐ.சி.எம்.ஆர் பரிந்துரைகளை அடிப்படையாகக் கொண்ட தரவு என்னவென்று அறிய எனக்கு ஆர்வமாக உள்ளது," என்று அமெரிக்காவை சேர்ந்த ஜான்ஸ் ஹாப்கின்ஸ் சுகாதார பாதுகாப்பு மையத்தில் தொற்று நோய்கள் மருத்துவர் மற்றும் உயிரி பாதுகாப்பு சகா கிருத்திகா குப்பள்ளி கூறினார். "எனக்குத் தெரிந்தவரை, மருத்துவ பரிசோதனைகள் தொடர்ந்து நடந்து வருகின்றன; ஆனால் இதுவரை முடிவு எதுவும் கிடைக்கவில்லை" என்று அவர் கூறினார். கலந்து விவாதித்த விவரங்களை ஐ.சி.எம்.ஆர் உடனடியாக வெளியிட வேண்டும்; இதன்மூலம் “அவை எவ்வாறு இத்தகைய அளவுக்கோலுக்கு வந்தன, மற்ற மருந்துகளில் தனித்துவமாக இருப்பது என்ன, அல்லது அவை ஒன்றாகக் கருதப்பட்டிருக்கிறதா” என்பதைக் காணமுடியும் என்று, டெல்லியை சேர்ந்த மருத்துவரும், ஜார்ஜ் இன்ஸ்டிடியூட் ஃபார் குளோபல் ஹெல்த் நிறுவனத்தின் ஆராய்ச்சியாளருமான சவுமியாதீப் பூமிக் கூறினார். "தயவுசெய்து இம்மருந்தை ஒரு தடுப்பு நடவடிக்கையாக எடுத்துக் கொள்ள வேண்டாம்," என்று, டெல்லியை சேர்ந்த தொற்று நோய் இயல் துறை வல்லுனரும், உயிரியல் மருத்துவ ஆராய்ச்சிக்கு நிதியளிக்கும் தொண்டு நிறுவனமான ‘இந்தியா அலையன்ஸ்’ தலைமை நிர்வாக அதிகாரியுமான ஷாஹித் ஜமீல் கூறினார். "இந்த வழக்கில் இதுவொரு உறுதியான மருந்து என்பதற்கு போதுமான மருத்துவச்சான்றுகள் இல்லை - இதைத்தான் நான் வலியுறுத்துகிறேன்" என்றார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் இந்த மருந்துக்கு ஒப்புதல் அளித்த இரண்டு நாட்களுக்கு பிறகு, இந்தியாவின் பரிந்துரை வந்தது: “இது வேலை செய்யக்கூடும். இது வேலை செய்யாமலும் போகலாம். நான் இதை பற்றி நல்லதாகவே உணர்கிறேன். அவ்வளவுதான். இது ஒரு உணர்வு,” என்று டிரம்ப் கூறினார். “[கோவிட்-19 க்கு எதிராக ஹைட்ராக்ஸி குளோரோகுயின் ஒரு தடுப்பு மருந்தாக பயன்படுத்தப்படலாம் என்பதற்கான சான்றுகள் ஒரு நிகழ்வு மட்டுமே” என்று உலகின் முன்னணி நோயெதிர்ப்பு நிபுணர்களில் ஒருவரான அந்தோனி ஃபக்கி கூறினார்; இவர், வெள்ளை மாளிகையின் கொரோனா வைரஸ் பணிக்குழுவில் உள்ளவர்; அந்த செய்தியாளர் சந்திப்பில், டிரம்புடன் மேடையில் இருந்தவர். ஹைட்ராக்ஸி குளோரோகுயின் என்பது மலேரியா, கீழ்வாதம் போன்ற வாத பிரச்சினைகள் மற்றும் பல தசாப்தங்களாக லூபஸ் போன்ற நோய்களுக்கு சிகிச்சையளிக்க பயன்படுத்தப்படும் ஒரு பழைய மருந்து. "நீங்கள் அதை வேறொரு நோயின் பின்னணியில் வைத்து பார்க்கும் போது, அது பாதுகாப்பானதா என்பது எங்களுக்கு தெரியவில்லை" என்று ஃபக்கி செய்தியாளர் கூட்டத்தில் கூறினார். சிகிச்சையாக ஹெ.சி.க்யூ பற்றிய ஆராய்ச்சி மிகக்குறைவு, முடிவற்றது கோவிட் -19 இல் இருந்து குணமாக ஹைட்ராக்ஸி குளோரோகுயின் (ஹெ.சி.க்யூ) பற்றிய பெரும்பாலான சான்றுகள் ஒரு சிறிய பிரெஞ்சு ஆய்வில் இருந்து கிடைத்தவை. இந்த ஆய்வு அதன் வழிமுறை மற்றும் நெறிமுறைகளுக்காக விமர்சிக்கப்பட்டன என்று நிபுணர்கள் தெரிவித்தனர். இந்த ஆய்வு குறித்து பல கவலைகள் உள்ளன என்று ஜான் ஹாப்கின்ஸ் மையத்தின் குப்பள்ளி கூறினார்.இது மிகச் சிறிய மாதிரி அளவை - 20 நோயாளிகள் - கொண்டிருந்தது; மற்றும் நோயாளிகளுக்கு இருக்கும் நோய்கள் (அல்லது ‘கொமொர்பிடிட்டிகள்’) என்ன என்பதை தெளிவுபடுத்தவில்லை, அவை விளைவுகளை பாதிக்கக்கூடும் என்று அவர் விளக்கினார். நோயாளிகளுடன் பின்தொடர்வுகள் எதுவும் இல்லை; எனவே, நோய் மீண்டும் மீண்டும் வந்ததா என்பது எங்களுக்குத் தெரியாது, என்று அவர் மேலும் கூறினார். "வெளியாகி இருக்கும் வரம்புக்குட்பட்ட தரவுகளை பொறுத்தவரை, பயன்பாட்டைப் பற்றிய பரிந்துரைகளைச் செய்வதற்கு முன், சீரற்ற மருத்துவ பரிசோதனையில் மருந்துகளை மேலும் மதிப்பீடு செய்வது முக்கியம்" என்று குப்பாலி பரிந்துரைத்தார். "எவ்விதமான பாதகமான விளைவுகளும் இல்லை, உண்மையில் இது வைரஸைத் தடுப்பதற்கும் / அல்லது குணப்படுத்துவதற்கும் உதவுகிறது என்பதை, இது பாதுகாப்பானது என்பதை உறுதிப்படுத்த நாங்கள் விரும்புகிறோம்" என்றார். மருந்து பக்க விளைவுகளின் சாத்தியமும் நோய் எதிர்ப்பும் ஃபக்கி கூறியது போல், ஹைட்ராக்ஸி குளோரோகுயின் என்பது கோவிட்-19 ஐ தவிர பிற நோய்களுக்கு, நன்கு அறியப்பட்ட மற்றும் பரவலாகப் பயன்படுத்தப்படும் மருந்து. இருப்பினும், இது மருத்துவ கண்காணிப்புடன் எடுக்கப்பட வேண்டும் மற்றும் இதய அரித்மியா (ரத்தம் தடை படுதல்) மற்றும் விழித்திரை சேதம் போன்ற கடும் பக்க விளைவுகளும் இதில் உள்ளன. இந்தியாவில் இந்த மருந்து ஒரு மருத்துவரின் ஆலோசனையின் பேரில் தான் தரப்பட வேண்டும்; உதாரணமாக சத்தீஸ்கரில் தனது மருத்துவமனையில் இது கிடைப்பது கடினம் என்று ஜெயின் கூறுகிறார்; ஏனென்றால் மக்கள் பீதியில் இருந்து அதை வாங்கத் தொடங்கியுள்ளனர். இந்தியாவில் ஒரு "விஞ்ஞானமற்ற மனநிலை" இருப்பதாலும், தேவைப்படும் பல மருந்துகள் பெரும்பாலும் எப்படியும் எளிதில் விற்கப்படுவதாலும் தான் இந்தநிலை என்று அவர் கூறுகிறார். ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மற்றும் குளோரோகுயின் ஆகிய மலேரியா எதிர்ப்பு மருந்துகளின் அதிகப்படியான பயன்பாடு, நோய் எதிர்ப்பிற்கு வழிவகுக்கும் என்று உலக சுகாதார அமைப்பு (WHO) தெரிவிக்கிறது. அறிகுறியற்ற சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் உறுதிப்படுத்தப்பட்ட கோவிட்-19 நோயுடன் தொடர்பு கொண்டவர்கள் மட்டுமே, பரிந்துரைக்கப்பட்டவர்களின் ஆலோசனைப்படி இந்த மருந்தை பயன்படுத்த வேண்டும் என்று அரசின் பரிந்துரை கூறுகிறது. இந்த மருந்து ஒரு அட்டவணை ஹெச்.1 மருந்தாக பட்டியலிடப்பட்டுள்ளதாக ஒரு அறிவிப்பினையும் வெளியிட்டுள்ளனர்; அதாவது மருந்தாளுனர்கள் குறைந்தது மூன்று வருடங்களுக்காவது, யார் இதை வாங்குகிறார்கள் என்ற பதிவுகளை வைத்திருக்க வேண்டும். உலக சுகாதார அமைப்பின் ஹெ.சி.க்யூ. மருத்துவ பரிசோதனை ஹைட்ராக்ஸி குளோரோகுயின் உட்பட கோவிட்-19க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடிய சில மருந்துகளுக்கான உலகளாவிய மருத்துவ பரிசோதனையை ஒற்றுமை (SOLIDARITY) என்று, மார்ச் 18 அன்று உலக சுகாதார அமைப்பு அறிவித்தது. ஆனால், இச்சோதனை ஒரு நெருக்கடியான நேரத்தில் நடக்கிறது: போதிய ஆதாரங்கள் இல்லாத சூழலில், பிரான்ஸ், இத்தாலி மற்றும் பஹ்ரைன் ஆகியவை கோவிட் -19 சிகிச்சைக்கு ஹைட்ராக்ஸி குளோரோகுயின்-ஐ பயன்படுத்த அனுமதிக்கத் தொடங்கியுள்ளன. ஜோர்டான் நாடு, மார்ச் 23, 2020 அன்று, இம்மருந்தை பயன்படுத்த அனுமதித்துள்ளது. “உலக சுகாதார அமைப்பின் ஒற்றுமை என்ற இச்சோதனை மிகவும் நடைமுறையில் வடிவமைக்கப்பட்ட ஒன்றாகும். இது, அதன் ஒரு பகுதியாக இருப்பது கடினமாதல்ல, ” என்று, ஃபரிதாபாத்தை சேர்ந்த சுகாதார அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ககன்தீப் காங் கூறினார். "[இந்திய] அரசு உண்மையிலேயே ஹைட்ராக்ஸி குளோரோகுயின் வேலை செய்யும் என்று நம்பினால், பரிசோதனையின் ஒரு பகுதியாக பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு அதை பயன்படுத்த வேண்டும். நான் ஒரு ஆராய்ச்சியாளர், நான் ஆதாரங்களை நம்புகிறேன். இது போன்ற கொள்கை பரிந்துரைகள் ஆதாரமின்றி செய்யப்படக்கூடாது” என்றார். இந்த வாரத்தின் நிலவரப்படி, உலக சுகாதார அமைப்பின் பரிசோதனையில் இந்தியாவும் பங்கேற்கும் என்று, இந்திய அரசு சுட்டிக்காட்டியுள்ளது. "உலக சுகாதார அமைப்பின் ஒற்றுமை என்ற தலைப்பிலான சோதனையில் எங்கள் பங்கேற்பை விரைவில் தொடங்குவோம்," என்று, மார்ச் 27, 2020 அன்று செய்தியாளர் சந்திப்பில் ஐ.சி.எம்.ஆரின் ராமன் கங்ககேத்கர் கூறினார். "முன்பு நாம் இதை செய்யவில்லை; ஏனென்றால் நம் நாட்டில் பாதித்தோர் எண்ணிக்கை குறைவாக இருந்தது. நமது பங்களிப்பும் மிகக்குறைவாகவே இருந்திருக்கும்" என்றார். (அனூ பூயான், இந்தியா ஸ்பெண்ட் ஒரு சிறப்பு நிருபர்). உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு. Anoo Bhuyan அனு பூயான், இந்தியாஸ்பெண்டில் உடல்நலம் சார்ந்தவை குறித்து எழுகிறார். சட்டம் & நீதி, தொழில்நுட்பம், சமூகம் மற்றும் பாலினம் தொடர்பான பிரச்சினைகள் குறித்தும் அவர் எழுதி இருக்கிறார். இந்தியாஸ்பெண்டிற்கு முன்பு அவர், தி வயர், அவுட்லுக் இதழ், பிபிசி நியூஸ் மற்றும் நேஷனல் பப்ளிக் ரேடியோ ஆகியவற்றில் பணியாற்றியுள்ளார். மணிப்பூர் நீதித்துறை கூடுதல் கொலைகள் என்பது குறித்த அவரது செய்திக்காக, 2018 ஆம் ஆண்டில் போர்ன்மவுத் பல்கலைக்கழகத்தின் ‘மாற்றத்திற்கான பத்திரிகையாளர்’ விருதை வென்றார். லண்டன் பல்கலைக்கழகத்தின் ஸ்கூல் ஆப் ஓரியண்டல் அண்ட் ஆப்ரிக்கன் ஸ்டடீஸ் முதுகலை பட்டத்திற்கான உதவித்தொகையும் பெற்றார். டிவிட்டரில் அவரை www.twitter.com/AnooBhu என்ற முகவரியில் அணுகலாம்.
தெலுங்கு பாப்-கலாச்சார வெளியில் நகர்ப்புற இளைஞர்களின் அனுபவத்தைப் படம்பிடிக்க வேண்டிய அவசரத் தேவை உள்ளது. தெலுங்கு சினிமாவில் ஆண் நாயகனின் ஆணுக்கு அப்பால் எந்த இடமும் இல்லை. தெலுங்கு திரையுலகில் உள்ள பல வெளிப்படையான ஓட்டைகளில் ஒன்று, தெலுங்கு மாநிலங்களில் மென்பொருள் ஏற்றத்தால் தொடங்கப்பட்ட கலாச்சாரப் புரட்சியைப் படம்பிடிக்க தவறியது. 2000கள் மற்றும் 2010களின் முற்பகுதியில் உள்ள சினிமாவை திரும்பிப் பார்க்கையில், இவ்வளவு பெரிய அளவிலான கலாச்சார நிகழ்வின் பாப்-கலாச்சார முத்திரைகள் எதுவும் இல்லை. 2010களின் இறுதியில் சேகர் கம்முலா மற்றும் தருண் பாஸ்கர் ஆகியோரைத் தவிர, நகர்ப்புற இளைஞர்களின் அனுபவத்தைப் படம்பிடித்த எந்தத் திரைப்படத் தயாரிப்பாளர்களும் இல்லை. நகர்ப்புற இளம் ஆன்மாவின் செயல்திறன் மிக்க பிரதிநிதித்துவம் மற்றும் ஆய்வுகள் உள்ளன, ஆனால் கதாநாயகர்கள் “உண்மையானவை” என்று உணரவில்லை மற்றும் அன்றாட நகர்ப்புற வாழ்க்கையின் சாதாரணமான தன்மையில் ஈடுபடுவது அரிதாகவே காணப்படுகிறது. இங்குதான் புதிய தெலுங்கு OTT பிளேயர்களால் TVF, DICE போன்ற ஊடக நிறுவனங்கள் இந்தி பேசும் நகர்ப்புற இளைஞர்களை தங்கள் முதலாளியுடன் சிறு சிறு மோதல்களில் சிக்கவைத்து, வாடகைக்கு பணம் செலுத்தும் பொருளாதாரத்தில் நகர்ப்புற வீடுகளில் என்ன செய்தன என்பதைப் படம்பிடிக்க முடியும். சூதாட்டத்தில் ஈடுபட விரும்பும் ஒரு தலைமுறையினரின் அபிலாஷைகளுக்கு எதிராகவும், தங்கள் வாழ்க்கையில் இன்னும் சில அபாயங்களை எடுக்கவும் விரும்பும் பெற்றோர்களுக்கு இடையேயான தலைமுறை இழுபறி சண்டையையும் அவர்கள் கைப்பற்றுகிறார்கள். BFF ஆஹா வழங்கியது மற்றும் பார்கவ் மச்சார்லா இயக்கியது தெலுங்கு பாப் கலாச்சாரத்தில் அந்த இடைவெளியைக் குறைக்கும் நோக்கம் கொண்டது. இந்தத் தொடர் ரீமேக் வயதுவந்தோர் நான் அந்த நிகழ்ச்சியைப் பார்க்கவில்லை, அதனால் அசல் படத்தை ரீமேக்குடன் ஒப்பிடுவதற்கு எனக்கு எந்த அடிப்படையும் இல்லை. BFF நித்யா கோட்டாரி (சிரி ஹனுமந்த்) மற்றும் தாரா யாதவ் (ரம்யா பசுபுலேட்டி) ஆகியோரின் கதைகள், வேலைகள், வாடகைகள் மற்றும் பெற்றோரின் எதிர்பார்ப்புகளை தங்கள் சொந்த உறவுகளுடன் கையாள்கின்றன. தொடர்புபடுத்தக்கூடியதாகவும் இலகுவாகவும் இருக்கும் முயற்சியில், BFF அதன் சதித்திட்டத்தில் மிகவும் அற்பமாக இருப்பதன் மூலம் தடுமாறுகிறது. தோராயமாக 20 நிமிடங்கள் நீளமுள்ள அதன் ஐந்து அத்தியாயங்களில் ஒவ்வொன்றிலும், BFF சினிமா ரீதியாக பதட்டமாக இருந்திருக்கலாம் ஆனால் கதைக்களத்தின் குறிப்புகள் நிகழ்ச்சி அவற்றை ஆராய்வதற்கு மிகவும் பயப்படுகிறார், மாறாக நிச்சயமாக வேடிக்கையான மற்றும் மிதமான தொடர்புள்ள தருணங்களைத் தீர்த்துக் கொள்கிறார். முதல் எபிசோடில், அது ஒரு நகரத்தில் உடைந்திருப்பதைப் பற்றி பேச விரும்புகிறது மற்றும் ஒரு நகரத்தில் பெரிய அளவில் செலவழிக்க வேண்டும் என்ற உந்துதல் மற்றும் தேவையுடன் அதை இணைத்துக் காட்டுகிறது. நாம் உடைந்து பிறந்தநாளைக் கொண்டாடி நண்பர்களுடன் நினைவுகளை உருவாக்க முடியுமா? இரண்டு பெண்கள் மது அருந்திவிட்டு, புகைபிடிக்கலாமா மற்றும் மூக்கு ஒழுகும் பிற்போக்குத்தனமான அண்டை வீட்டாருக்கு பயப்படாமல் தங்கள் தாராளவாத விழுமியங்களைப் பறைசாற்ற முடியுமா? இவை அனைத்தும் சுவாரசியமான கேள்விகள் ஆனால் எழுத்து தைரியமாகவும், எடிட்டிங் மிருதுவாகவும் இருக்க வேண்டும். மிருதுவாகப் பேசினால், தெனாலி டபுள் ஹார்ஸ் தோசை மாவு செய்த தோசை உண்டா? நீங்கள் மிருதுவான தோசைகளை சாப்பிட விரும்பினால், அவை செல்ல வேண்டிய பிராண்டாகும். அந்த வாக்கியம் உங்களை வியப்பில் ஆழ்த்தியது என்றால், இந்தத் தொடரின் பிராண்ட் பிளேஸ்மென்ட் மிகக் கொடூரமான முறையில் மோசமாக உள்ளது. நகர்ப்புற இளைஞர்களுக்கு இது ஒரு பாடமாக இருக்கலாம்: உங்கள் கதையை நீங்கள் சொல்ல விரும்பினால், உங்களை கொஞ்சம் விற்க வேண்டும். சிறந்த அத்தியாயம் BFF நித்யாவின் அம்மா (iDream அஞ்சலி) வந்து இரண்டு பெண் குழந்தைகளைப் பார்க்கச் செல்வதை உள்ளடக்கிய இரண்டாவது ஒன்றாகும். இது மீண்டும் அற்பமானதாகவும், கிளுகிளுப்பாகவும் இருக்கிறது – அம்மா வருவதற்குள் வீட்டைச் சுத்தம் செய்தல், சிகரெட் மற்றும் மதுவின் அனைத்து அறிகுறிகளையும் மறைத்து வைப்பது, திருமணம் என்ற தலைப்பைத் தவிர்ப்பது போன்றவை. “கூல் அம்மா” டெம்ப்ளேட்டின் அதிக ஆற்றல் இல்லை. அவள் அதே பாத்திரத்தில் நடித்தாள் ராஜ ராஜ சோரா முழுமைக்கு மற்றும் அவரது அத்தியாயத்தில், மற்றபடி கடினமான வழிகள் பிரகாசிக்கின்றன மற்றும் அவள் முன்னிலையில் சிறப்பாக செயல்படுகின்றன. இந்த அத்தியாயத்திலும், ஒரு சுவாரஸ்யமான முன்மாதிரியின் குறிப்புகள் உள்ளன. தாரா கலகக்காரராகவும், கொந்தளிப்பாகவும் இருக்கிறார், ஆனால் நித்யா தனது தாயுடன் பகிர்ந்து கொள்ளும் பந்தத்தை உள்ளடக்கம் மற்றும் பொறாமை ஆகியவற்றின் கலவையுடன் பார்க்கிறார். தாரா தனது தாயுடன் மனக்கசப்பான உறவைக் கொண்டிருக்கிறாரா? அவள் தந்தையைப் பற்றி என்ன? அவள் இவ்வளவு கலகம் செய்ய காரணம் என்ன? அவள் தொடர்ந்து நொறுக்குத் தீனிகளையும், புகைபிடிப்பதையும், குடித்துவிட்டு தன் வாழ்வில் ஒரு ஓட்டையை நிரப்புகிறாளா? பதில் எதுவும் இருந்திருக்கலாம் – ஆழமாக எதுவும் இல்லை – ஆனால் அது BFF அந்தக் கேள்விகளை ஆராயத் துணிவதே அதன் மிகப்பெரிய அவமானம். கடைசி எபிசோடில் தான் அந்த நிகழ்ச்சியின் லட்சியத்திற்கு ஓரளவு பலம் இருக்கிறது. வலிமையைப் பற்றி பேசுகையில், மற்ற பற்பசைகளுடன் ஒப்பிடும் போது மெஸ்வாக் பற்பசை உங்கள் பற்களை வலிமையாக்குகிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? சரி, இப்போது நான் கசப்பாக இருக்கிறேன். நான் நிறுத்துகிறேன். இறுதி அத்தியாயம் நித்யா மற்றும் தாரா இருக்கும் வலுவான ஆளுமைகளின் உச்சக்கட்டம். நித்யா ஒழுங்கமைக்கப்பட்டவர், ஆனால் ஒரு கட்டுப்பாடற்றவர், தாரா லட்சியமாக இருந்தாலும் திசையில்லாமல் இருக்கிறார். இப்போது வரை, அவர்களின் ஆளுமைப் பண்புகள் வெளிப்படுத்தப்பட்ட டம்ப்களாக இருந்தன, அவை காட்டப்படவில்லை, ஆனால் இறுதி அத்தியாயத்தில் மட்டுமே நாம் அதை சதை மற்றும் இரத்தத்தில் காண்கிறோம். தாரா ஒரு வேலையை அவசரமாக ராஜினாமா செய்கிறாள், நித்யா தனது பாலினத்தின் காரணமாக வேலையில் பாகுபாட்டை எதிர்கொள்கிறாள். இங்கு மட்டும் சில சினிமா தசைகள் நெகிழ்கின்றன. நித்யாவும் தாராவும் சண்டையிடும்போது கண்ணாடி காட்சிகள் உள்ளன. நியாயமான மற்றும் சமமான பணியிடமாக உணர்ந்த இடத்தில், முதன்முறையாக, நித்யா ஆண்கள் நிறைந்த லிப்டில் நுழைந்து, தனது பாலினம் மற்றும் அதன் மூலம் வரும் பாகுபாடு பற்றி அறிந்திருப்பதை நீங்கள் பார்க்கிறீர்கள். இரண்டு முன்னணிகளும், திறமை அல்லது மோசமான உரையாடல் காரணமாக, முதல் நான்கு அத்தியாயங்களில் அவர்களின் நடிப்பில் விதிவிலக்காக பலவீனமாக இருந்தபோதிலும், இந்த எபிசோடில் அவர்கள் தங்கள் கதாபாத்திரங்களை விற்கிறார்கள். சிரி ஹனுமந்த் இன்னும் குறிப்பிட்ட கல்லூரி நாடகம் போன்ற உடல் மொழியைக் கொண்டுள்ளார், ஆனால் ரம்யா பசுபுலேட்டி இந்த எபிசோடில் பிடிவாதமும் முதிர்ச்சியும் இல்லாத சரியான கலவையைப் பெறுகிறார். ஆனால் அதற்குள் அது மிகவும் தாமதமானது மற்றும் அற்பமானது. தங்கள் உலகத்தை வழிநடத்தப் போராடும் இந்தப் பெண்களின் வாழ்க்கையைப் பற்றிய நுண்ணறிவுக்குப் பதிலாக, BFF என்ற திசையில் தொடர்ந்து செல்கிறது 2 உடைந்த பெண்கள் மற்றும் ஒற்றைப்படை ஜோடி நம்மை ஒருபோதும் ஆழத்தை உணர வைக்காத ட்ரோப்கள். இந்த பெண்கள் இனிமேல் எப்படி ஹைதராபாத் நகரத்தின் இடைவிடாத நகரத்தை ஒருவர் மற்றவரின் ஆதரவின்றி வழிசெலுத்துவார்கள் என்று நினைத்து நாம் கவலைப்பட வேண்டும். ஆனால் BFF ஒவ்வொரு மோதல் முடிச்சையும் மிக விரைவில் அவிழ்த்து விடுங்கள், எனவே அனைத்தும் நன்றாக இருக்கும் என்றும் அவர்கள் மீண்டும் BFF களாக இருப்பார்கள் என்றும் நாங்கள் அறிவோம். முடிவானது எங்களை உணர்ச்சிவசப்பட வைக்கவில்லை, சீசன் 2 க்கான காத்திருப்பு என் தலைமுடியை உதிர்க்கும் ஒன்றாகத் தெரியவில்லை. ஆனால் முடி உதிர்வதை நிறுத்த நான் என்ன பயன்படுத்தலாம் தெரியுமா? டாபர் வாடிகா முடி எண்ணெய்…
வேட்பாளர் வேட்புமனு தாக்கலின்போது படிவம் 3 (வேட்புமனு) மற்றும் படிவம் 3-A (உறுதிமொழி ஆவணம்) ஆகியவற்றுடன் சேர்த்து தாக்கல் செய்த வேட்பாளர்களின் தகவல் குறித்த சுருக்கம் (09.12.2019 முதல் 16.12.2019 வரை பெறப்பட்ட வேட்புமனுக்களை ஸ்கேன் செய்யப்பட்டு இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட மொத்த வேட்புமனுக்களின் எண்ணிக்கை) Captcha-வை தட்டச்சு செய்யவும் பார்வையாளர்களின் எண்ணிக்கை: 24684445 The information published through this website has been entered by the Returning Officer, and is subject to change.
'சீக்கிரமா பினிஷ் செய்யணும்'... 'இதுதான் நமக்கு கிடச்ச சான்ஸ்'... 'குட்டி யானைகள் செய்த காரியம்'... வைரலாகும் வீடியோ! முகப்பு > செய்திகள் > ஃபன் பேக்ட்ஸ் By Sangeetha | Feb 14, 2020 09:20 PM குட்டி யானைகள் இரண்டு வண்டியில் ஏற்றிச் செல்லும்போது சிக்னலில் நின்றுகொண்ட யானைகள் செய்த காரியம் வைரலாகி வருகிறது. இந்திய வனத்துறை அதிகாரியான சுஷாந்தா நந்தா அவ்வப்போது, சுவாரஸ்யம் நிறைந்த வன விலங்குகளின் வீடியோக்களை வெளியிடுவது வழக்கம். அப்படி இங்கே இரண்டு யானைகள் லாரியில் அழைத்துச் செல்லப்பட்டபோது, சிக்னலில் லாரி நின்றது. அதன் அருகே கரும்பு ஏற்றிவந்த லாரியும் நிற்க யானைகளுக்கு மிகவும் பிடித்த உணவான கரும்பை, இதுதான் நமக்கு கிடைத்த சந்தர்ப்பம் என்பதுபோல் யானைகள் கரும்பை ரசித்து சாப்பிட ஆரம்பித்தன. இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. Delicious lunch break 😊 Sugarcane is one of favourite food of elephants. In captivity sugarcane is an integral part of the diet plan. To provide energy. pic.twitter.com/IsjJDQCx2k — Susanta Nanda IFS (@susantananda3) February 13, 2020 Tags : #ELEPHANTS #VIRAL #VIDEO #SUGARCANE next தொடர்புடைய செய்திகள் VIDEO: பாய்ஸ் கொண்டாடுவது ‘லவ்வர்ஸ் டே’.. ‘ஆனா லெஜண்ட்..!’.. காதலர் தினத்தில் வைரலாகும் நித்யானந்தா வீடியோ..! VIDEO: நட்சத்திர விடுதியில் நடந்த ‘நைட்க்ளப்’ நடனம்.. கம்பியின் உச்சியில் இருந்து தவறி விழுந்த ‘இளம்பெண்’.. அதிர்ச்சி வீடியோ..! VIDEO: 'அடி பட்டிருக்குனு சொன்னாங்க... இங்க என்ன ஆடலும் பாடலும் நிகழ்ச்சி நடக்குது?!'... 'பாண்டியாவும், இஷாந்த் ஷர்மாவும் செம்ம ஜாலி மூட்ல இருப்பாங்க போல'... வைரல் வீடியோ! VIDEO: ‘நமக்கு மட்டும்தான் இப்டியெல்லாம் சோதனை வருமோ’.. ரன் அவுட்டில் இருந்து நூலிழையில் தப்பிய கேப்டன்..! VIDEO: பீட்சா டெலிவரி பாய் செய்ற வேலையா இது?.. காட்டிக்கொடுத்த சிசிடிவி கேமரா.. பகீர் வீடியோ..! Tip Goes Viral! TikTok Video on Jeans Hack Has More Than 9 Million Views VIDEO: ‘ஒருமுறை கை தட்டுனா 2 சொட்டு ரத்தம் ஊறும்’.. ‘உண்மையதான் சொல்றோம்’.. அமைச்சர் செல்லூர் ராஜூ..! VIDEO: நெசமாவே தோட்டத்துல இருந்து பால் வந்ததா..? ‘கூட்டம்கூட்டமாக படையெடுத்த மக்கள்’.. வைரலாகும் வீடியோ..! ‘மோதலில்’ முடிந்த வெற்றிக் கொண்டாட்டத்திற்கு பின்... வீரர்கள் செய்த காரியத்தால் ‘குவியும்’ பாராட்டுகள்!... ‘வைரல்’ வீடியோ... VIDEO: ‘ஒரு செகண்ட்ல உயிர் பயத்த காட்டிட்டியே தம்பி’.. புழுதி பறக்க விரட்டிய யானை..! இது என்ன ‘புதுசால்ல’ இருக்கு!... ‘பறக்க’ முடியாமல் ‘அவதிப்பட்ட’ ஆந்தை... பரிசோதனையில் தெரியவந்த ‘விநோத’ பிரச்சனை... ‘வைரலாகும்’ போட்டோ... சரியாக ‘மூடாத’ கதவால்... கண் ‘இமைக்கும்’ நேரத்தில்... பெண்ணிற்கு நேர்ந்த ‘பயங்கரம்’... ‘அதிர்ச்சி’ வீடியோ... ஹஸ்பண்டுனா ‘இப்படி’ இருக்கணும்... முகமெல்லாம் ‘சிரிப்பாய்’ மேகன்... என்ன செஞ்சாருனு நீங்களே பாருங்க... வைரல் வீடியோ...! ‘திருமணத்திற்கு’ சென்று திரும்பியவர்களுக்கு.. வீட்டு ‘வாசலில்’ நேர்ந்த ‘பயங்கரம்’... ‘பதறவைக்கும்’ சிசிடிவி காட்சிகள்... VIDEO: ஆஹா..! ‘இது வேறலெவல் என்ட்ரி’.. மாப்பிள்ளைக்கு ‘சர்ப்ரைஸ்’ கொடுத்த கல்யாண பொண்ணு..! ‘தேசிய கீதம்’ இசைக்கப்பட்டபோது... அமெரிக்க அதிபர் ‘ட்ரம்ப்’ செய்த காரியத்தால் ‘சர்ச்சை’... ‘வைரலாகும்’ வீடியோ... VIDEO: ‘கொரனோ வைரஸ்’ உருவாக காரணம் இதுதானா?.. இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ..! VIDEO: ‘நிறுத்த சொன்னா நிக்கமாட்டயா’!.. டிராஃபிக் போலீஸ் மீது மோதிய கார் டிரைவர்.. பரபரக்க வைத்த வீடியோ..! ‘அப்படி’ பண்ணியிருக்கக் கூடாது ஆனாலும்... ‘நியாயப்படுத்தும்’ கேப்டன்... ‘மீண்டும்’ கிளம்பியுள்ள ‘மன்கட்’ ரன் அவுட் ‘சர்ச்சை’... ‘திடீரென’ சரிந்த மைதான மேற்கூரை... ‘நொடிகளில்’ மொத்தமாக இடிந்து விழுந்து... ‘இளைஞருக்கு’ நேர்ந்த சோகம்... ‘பதறவைக்கும்’ வீடியோ... மேலும் செய்திகளுக்கு ABOUT THIS PAGE This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Two Elephants eats Sugarcane From Truck in Signal | Fun Facts News.
அன்னூர் தொழிற்பேட்டைக்கு விவசாய நிலங்களை கையகப்படுத்த கடும் எதிர்ப்பு : விவசாயிகளுக்கு ஆதரவாக அன்னூரில் அண்ணாமலை தலைமையில் பா.ஜ.க. ஆர்ப்பாட்டம் சென்னை ரிச்சி தெருவில் 90 கடைகளுக்‍கு மாநகராட்சி அதிகாரிகள் சீல்... நீண்ட காலமாக தொழில்வரி செலுத்தாமல் நிலுவையில் வைத்ததால் நடவடிக்கை வங்கக் கடலில் மாண்டஸ் புயல் - சென்னை பெசன்ட் நகர், பட்டினப்பாக்‍கம் பகுதிகளில் கடல்சீற்றம் மாண்டஸ் புயல் எச்சரிக்‍கை - வேலூர் மாவட்டத்தில் இன்று மதியம் மற்றும் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு சென்னைக்‍கு தென்கிழக்‍கே 580 கிலோமீட்டர் தொலைவில் மாண்டஸ் புயல் மையம் - 6 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வருவதாக வானிலை மையம் தகவல் ஹிமாச்சல் தேர்தல்... முன்னாள் முதலமைச்சர் வீர்பத்ரசிங்கின் மகன் விக்‍ரமாதித்ய சிங் சிம்லா புறநகர் தொகுதியில், 7 ஆயிரத்து 233 வாக்‍குகள் முன்னிலை இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் - பா.ஜ.க. இடையே இழுபறி.... வெற்றி அறிவிப்பு வந்தவுடன் எம்.எல்.ஏ.க்‍களை ராஜஸ்தான், சத்தீஸ்கருக்‍கு அழைத்துச் செல்ல பிரியங்கா காந்தி திட்டம் குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல்.. கிரிக்‍கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா மனைவி ரிவாபா முன்னிலை குஜராத்தில் இம்முறையும் காங்கிரசுக்‍கு பெரும் பின்னடைவு... 20க்‍கும் மேற்பட்ட தொகுதிகளில் மட்டுமே அக்‍கட்சி வேட்பாளர்கள் முன்னிலை குஜராத்தில் 140க்‍கும் மேற்பட்ட சட்டமன்றத் தொகுதிகளில் பா.ஜ.க. முன்னிலை... விறுவிறுப்பாக நடைபெற்று வரும் வாக்‍கு எண்ணிக்‍கை
இந்த டெம்ப்ளேட்டை எப்படி நாம் Kinemaster எடிட் செய்வது என்று இப்பொழுது நாம் பார்க்கலாம் முதலில் இதற்கு பயன்படுத்தக்கூடிய டெம்ப்ளேட்டை டவுன்லோட் செய்யவும் எப்படி டவுன்லோட் செய்ய வேண்டும் என்று மேலே கொடுக்கப்பட்டுள்ளது டவுன்லோட் செய்து முடித்த பிறகு Kinemaster App ஓபன் செய்யவும் பிறகு சென்டரில் உள்ள பிளஸ் ஐகானை கிளிக் செய்து எடிட்டிங்கை தொடங்கவும் முதலில் பக்கத்தில் மேலே மீடியா என்று ஒரு ஆப்ஷன் இணைப்பில் இருக்கும் அதை கிளிக் செய்து உங்களுக்கு தேவையான இமேஜ் அல்லது வீடியோவை உள்ளே இம்போட் செய்யவும் செய்து உடன் Cut ஆக்ஷன் பக்கத்தில் பிரேம் ஐகான் இருக்கும் அதை கிளிக் செய்து இமேஜை சென்டர் பொஸிஷனில் செட் செய்யவும் அதற்குப் பிறகு டிக் செய்து விடவும் அதற்குமேல் Layar கிளிக் செய்து Layer வரும் மீடியாவை கிளிக் செய்து நீங்கள் டவுன்லோட் செய்த டெம்ப்ளேட்டை வீடியோவை இம்போட் செய்யவும் அதை கிளிக் செய்து அதற்கான எடிட்டிங் டூல்ஸ் எல்லாம் ரைட் சைடில் வரும் அதில் கிளி ஸ்குரோல் செய்தால் அதில் பிலண்டிங் என்று ஒரு ஆப்ஷன் இருக்கும் அதை கிளிக் செய்து அதற்குள் Screen என்று ஒரு ஆப்ஷன் இருக்கும் அதை கிளிக் செய்து கொள்ளவும் அதற்கு பிறகு கொஞ்சம் மேலே ஸ்குரோல் செய்தால் அதில் அட்ஜஸ்ட்மெண்ட் என்று ஒரு ஆப்ஷன் இருக்கும் அதை கிளிக் செய்து அதில் இருக்கும் கடைசி பர்சன்டேஜ் கூட்டம் கூட்டி முடித்ததும் டிக் செய்யவும் அதற்குப் பிறகு அந்த வீடியோவிற்கு நீங்கள் என்ன பாடல் வைக்க வேண்டுமென்று விரும்புகிறீர்களோ அந்தப் பாடலை அதற்கு Add செய்யவும் இப்பொழுது பாடநுால் செய்யலாம் அதற்கு நீங்கள் இருக்கும் இடத்திலேயே ரவுண்ட் ஐகானில் ஆடியோ என்று ஒரு ஆப்ஷன் இருக்கும் அதை கிளிக் செய்து உங்களுக்கு பிடித்த பாடலை உள்ளே அட் செய்யலாம் அதற்கு பிறகு வீடியோவை எப்படி எக்ஸ்போர்ட் செய்வது என்று இப்பொழுது பார்க்கலாம் லெஃப்ட் சைடில் Share ஐகான் இருக்கும் அதை கிளிக் செய்து உங்களது வீடியோக்களை நீங்கள் எக்ஸ்போர்ட் செய்து கொள்ளலாம் அது உங்களது கேலரியில் சேவ் ஆகிவிடும் அதற்கு பிறகு உங்கள் சோசியல் மீடியாவில் நீங்கள் அதை பதிவிடலாம். How to Download Template நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் இந்த Page சில குறிப்புகள் கை மாஸ்டரைப் பற்றி இருக்கும் அதற்குக் கீழ் ஸ்குரோல் செய்து சென்றார் கீழே 30 Second Wait செய்து டவுன்லோட் செய்து கொள்ளலாம். How to Use KineMaster இந்தப் இனை பயன்படுத்தி WhatsApp Status Video, YouTube Intro Video,Text Animation, Picture Moving Animation and more இவை அனைத்தையும் கைன் மாஸ்டர் ஒன்றில் மிக சுலபமாக எடிட்டிங் செய்யலாம் இந்த ஆப்பை எப்படி நாம் பயன்படுத்தலாம் என்று இப்பொழுது பார்க்கலாம் Kinemaster எனப்படும் பெயரிலுள்ள ஆப் நாம் மொபைலில் இருந்து எடிட் செய்வதற்காக பயன்படுத்தக்கூடிய App இப்பொழுது ஒரு வீடியோவை எடிட் செய்ய வேண்டுமென்றால் சுலபமான முறையில் எடிட் செய்யலாம் அதற்கு இந்த Kinemaster எனப்படும் App நமக்கு உதவியாக இருக்கிறது நமக்குப் பிடித்த ஒரு புகைப்படத்தையோ அல்லது வீடியோவை வைத்து மிக சுலபமாக மொபைலில் இருந்து நாம் எடிட்டிங் செய்யலாம் இந்த App வைத்து வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வீடியோக்களை உருவாக்குவது எப்படி என்று யூடியுப் வீடியோக்களை அப்லோடு செய்யப்பட்டுள்ளது யூடியூப் சேனலில் பெயர் MV Creation Tamil இந்த யூடியூப் சேனலில் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வீடியோக்களை எப்படி உருவாக்குவது என்று தமிழில் வீடியோக்கள் அப்லோட் செய்யப்பட்டுள்ளது அந்த வீடியோக்களை நீங்கள் பார்க்க வேண்டுமென்றால் இந்த click here லிங்கை கிளிக் செய்து நீங்கள் யூடியூப் சேனலுக்கு செல்லமுடியும் அங்கு வீடியோக்கள் 200க்கும் மேற்பட்ட வீடியோக்கள் அப்லோட் செய்யப்பட்டுள்ளது அந்த வீடியோக்களை பார்த்து எப்படி Kinemaster ஐ வைத்து எடிட் செய்ய வேண்டுமென்று நீங்கள் தெரிந்து கொள்ளலாம் . How To Add Song இந்த வீடியோவை எடிட் செய்து முடித்த பிறகு அதில் எப்படி பாடலை இணைப்பது என்று இப்போது பார்ப்போம் உங்களது வீடியோவை எடிட் செய்து முடித்த பிறகு மீடியா லேயர்ஸ் என்று அந்த சர்க்கிள் இருக்கும் அதில் ரைட் சைடில் ஆடியோ என்று ஒரு ஐகான் இருக்கும் அதை கிளிக் செய்து உங்களது பாடலை ஹாய் செய்துகொள்ளலாம். How To Kinemaster Video Export வீடியோவை எப்படி எக்ஸ்போர்ட் செய்வது என்று இப்பொழுது பார்க்கலாம் லெஃப்ட் சைடில் Share ஐகான் இருக்கும் அதை கிளிக் செய்து உங்களது வீடியோக்களை நீங்கள் எக்ஸ்போர்ட் செய்து கொள்ளலாம் அது உங்களது கேலரியில் சேவ் ஆகிவிடும் அதற்கு பிறகு உங்கள் சோசியல் மீடியாவில் நீங்கள் அதை பதிவிடலாம். Start Download KineMaster About KineMaster என்பது இந்த ஒரு ஆப் வீடியோ எடிட்டிங் காக யூஸ் செய்யக்கூடிய ஒரு ஆப் இதனை பயன்படுத்தி வீடியோ எடிட்டிங் YouTube Intro Video, WhatsApp Status Video, YouTube Videos and more இந்த Appபிள் மிகவும் சுலபமாக எடிட் செய்யலாம் இதனை முதலில் Google Play Store வெளியிட்டதும் கைன் மாஸ்டர் ஆப்புக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் இருக்கிறது ஏனென்றால் லேப்டாப்பில் பயன்படுத்தும் சாப்ட்வேர் போல் அனைத்துக் கருவிகளையும் உள்ளடக்கி மொபைலுக்கு முதலில் வந்த ஆப் இது Google Play Store இதன் டவுன்லோடு எண்ணிக்கை நான் இந்த ஆர்டிகல் எழுதும்போது 100M+ டவுன்லோட்ஸ் ஆகியிருக்கிறது இதனை பிசியில் எடிட்டிங் செய்யும் நபர்கள் மொபைலில் எடிட்டிங் செய்வதற்கு கைன் மாஸ்டரை டவுன்லோட் செய்து கொள்வார்கள் மேலும் ஒரு வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வீடியோவை உருவாக்க வேண்டுமென்றால் MV Creation Tamil இந்த பெயரை கிளிக் செய்தால் அது உங்களை யூடியூப் விற்கு அழைத்துச் செல்லும் அங்கு வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வீடியோவை எப்படி கை மாஸ்டரின் உருவாக்க வேண்டுமென்று நிறைய வீடியோக்கள் அப்லோடு செய்யப்பட்டுள்ளது அதனை பார்த்து நீங்களும் உங்களுக்கு தேவையான வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வீடியோக்களை உருவாக்கி கொள்ளலாம்.
யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில், நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பின் ஏற்பாட்டில் அடையாள உண்ணாவிரதம் இன்று காலை 08 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்றது. தியாக தீபத்தின் நினைவேந்தல்கள் நடைபெற்று வரும் நிலையில் நாளை திங்கட்கிழமை இறுதி நாள் நிகழ்வுகள் இடம்பெறவுள்ள நிலையில் இன்றைய தினம் அடையாள உண்ணாவிரதத்தில் பலர் கலந்து கொண்டனர். அதேவேளை நாளை திங்கட்கிழமை பல பாகங்களில் இருந்தும் ஊர்திகள் பவனிவர இருக்கின்றன. அனைத்து ஊர்திகளும் காலை 10 மணிக்கு முன்பதாக நல்லூர் தியாக தீபம் திலீபனுடைய நினைவாலயத்தை வந்தடையும். தியாக தீபம் திலீபனின் உயிர் பிரிந்த 10.48 மணிக்கு மலரஞ்சலி இடம்பெறவிருக்கின்றது. இதன்போதும் மக்கள் பெரும் எழுச்சியாக வரவேண்டும். வாகன ஊர்திகள், தூக்குகாவடிகளை எங்கள் உறவுகள் காலையில் இருந்து அவற்றை கொண்டு வரலாம். தியாக தீபம் திலீபன் பிறந்த ஊரெழுவிலிருந்து ஊர்தி நல்லூர் நினைவாலயத்தை நோக்கி வந்தடைய இருக்கின்றது. இந்த ஊர்திகளுடன் இணைந்து பயணித்துக் கொண்டு பொதுமக்கள் வரவேண்டும் என நினைவேந்தல் பொதுக் கட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.
வாஷிங்டன்: வன்னிப் போர்க் களத்தில் சிக்கியுள்ள 2 லட்சம் தமிழர்களை மீட்க அமெரிக்காவின் பசிபிக் கமாண்ட் முயலக் கூடாது. அப்படி செய்தால் அது தமிழ் மக்கள் மீதான இலங்கையின் போரை ஊக்குவிப்பது போலாகும் என்று அமெரிக்காவைச் சேர்ந்த இலங்கையில் உள்ள மக்களுக்கான சமத்துவம் மற்றும் மறுவாழ்வுக்கான அமைப்பு (பியர்ல்) கூறியுள்ளது. வன்னி போர்க்களத்தில் மிகக் குறுகிய வனப்பரப்புக்குள் 2 லட்சம் தமிழர்கள் சிக்கியுள்ளனர். இவர்கள் வெளியேறுவதற்காக இலங்கை அரசும், ராணுவமும், பாதுகாப்பு வளையப் பகுதிகளை அறிவித்தது. ஆனால் அந்தப் பகுதிக்குள் வரும் மக்களை கூட்டம் கூட்டமாக கொன்று குவித்து வருகின்றன இலங்கைப் படைகள். இதனால் வனப் பகுதியிலிருந்து வெளியேற தமிழர்கள் தயக்கம் காட்டுகின்றனர். இந் நிலையில் வன்னி வனப்பகுதியில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க அமெரிக்காவின் பசிபிக் கமாண்ட் படையினரின் உதவியை இலங்கை கோரியுள்ளதாக தெரிகிறது. இப்படையினர் தமிழர்களை மீட்ட இலங்கை அரசிடம் ஒப்படைப்பார்கள் எனவும் கூறப்படுகிறது. இந்த முயற்சி்க்கு பியர்ல் அமைப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. தமிழர்களை மீட்டு இலங்கையிடம் ஒப்படைத்தால் அது அப்பாவித் தமிழர்கள் பெருமளவில் பலியாக வழி ஏற்படுத்தி விடும். மேலும், அப்பாவித் தமிழர்கள் மீதான இலங்கையின் போரை அமெரிக்கா ஆதரிப்பதாகி விடும் எனவும் பியர்ல் அமைப்பு கூறியுள்ளது. தமிழர்களை மீட்பதற்குப் பதில் பாதுகாப்பு வலையப் பகுதிகளை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அங்கு வரும் அப்பாவிகள் பலியாகாமல் கண்காணிக்க நடவடிக்கை எடுக்கலாம். மேலும், நிவாரணப் பணியாளர்கள், பத்திரிக்கையாளர்கள், மனித உரிமை கண்காணிப்பாளர்களை அப்பகுதிகளுக்குள் சுதந்திரமாக செல்ல வழி ஏற்படுத்த வேண்டும் என்று அது கோரியுள்ளது. இதுதொடர்பாக அமெரிக்காவிலிருந்தபடி செயல்படும் பியர்ல் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை: கொழும்பிலிருந்து எங்களுக்குக் கிடைத்துள்ள உறுதியான தகவலின்படி, அமெரிக்காவின் பசிபிக் கமாண்ட் படைகள், 2 லட்சம் தமிழர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப் போவதாக அறிகிறோம். இந்த திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும். அவ்வாறு செய்தால், இலங்கையில் நடந்து வரும் இன அழிப்புக்கு ஆதரவாக செயல்படுவது போலாகி விடும். தமிழர்களை வெளியேற்றுவதற்குப் பதில், பாதுகாப்பு வலையப் பகுதிகளை பலப்படுத்தலாம் விரிவுபடுத்தலாம். மேலும், அங்கு நிவாரணப் பணியாளர்கள், பத்திரிக்கையாளர்கள், மனித உரிமை கண்காணிப்பாளர்களை அதிக அளவில் அனுப்ப நடவடிக்கை எடுக்கலாம். வன்னி வனப்பகுதியில் சிக்கியுள்ள தமிழ் மக்கள், இலங்கைப் படையினரின் தாக்குதலில் சிக்கித் தவிக்கின்றனர். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் 2000க்கும் மேற்பட்ட தமிழர்களை இலங்கைப் படைகள் கொன்று குவித்துள்ளன. 7000க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். தமிழர்களை மீட்டு இலங்கை அரசிடம் ஒப்படைக்க பசிபிக் கமாண்ட் திட்டமிட்டிருப்பது அவர்களை முகாம்கள் என்ற பெயரில் சிறையி்ல் அடைக்கவே வழி செய்யும். தற்காலிக முகாம்களில் அகதிகளாக தங்கியிருக்கும் தமிழ் மக்களை இலங்கை அரசு மிகக் கொடூரமாகவும், மோசமாகவும் நடத்தி வருவதாக பல்வேறு மனித உரிமை அமைப்புகள், நிவாரண குழுக்கள் ஏற்கனவே ஆதாரத்துடன் தெளிவுபடுததியுள்ளன. நியூயார்க் விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் முகாம்களில் தங்க வைப்பதாக கூறி குடும்பத்தினரிடமிருந்து பிரித்தும், எந்தவித சர்வதேச நிவாரண உதவியும் கிடைக்காமல் செய்தும், சித்திரவதை செய்தும், கற்பழிப்பு, கொலை என்ற பாதகச் செயல்களிலும் இலங்கை அரசு ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில் லட்சக்கணக்கான தமிழர்களை மீட்டு இலங்கை அரசிடம் ஒப்படைப்பது என்பது ஆயிரக்கணக்கான தமிழர்களைக் கொல்ல மரண சாசனத்தை எழுதிக் கொடுப்பது போலாகி விடும். காரணம், அரசுப் பகுதிகளுக்கு இவர்கள் வந்தவுடன் பெரும்பாலானவர்கள் அரசின் கூற்றுப்படி காணாமல் போய் விடுவார்கள். உலக அளவில் அரசாங்கமே பெருமளவில் கடத்தல் மற்றும் கொலைச் செயல்களில் ஈடுபடுவது இலங்கையில்தான் அதிகம் நடைபெறுகிறது. இதை காணாமல் போவோர் தொடர்பான ஐ.நா. அமைப்பே கூறியுள்ளது. அப்பாவி மக்கள் மட்டுமல்லாமல், பத்திரிக்கையாளர்கள், நிவாரணப் பணியாளர்களையும் கூட சித்திரவதை செய்வதும், கடத்துவதும் இலங்கை அரசின் செயல்களாக உள்ளன. வன்னிப் பகுதியில் 70 ஆயிரம் பேர்தான் சிக்கியிருப்பதாக இலங்கை அரசு கூறுகிறது. ஆனால் 2 லட்சம் தமிழர்கள் சிக்கியிருப்பதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம், ஐ.நா, மனித உரிமை அமைப்புகள் கூறியுள்ளன. இதன் மூலம், பெருமளவிலான தமிழர்களை கொன்று இன அழிப்பை மேற்கொள்ள இலங்கை அரசு சதித் திட்டம் தீட்டியிருப்பது புலனாகும். மேலும், மீட்டு வரப்படும் தமிழர்கள் இதுவரை விடுதலைப் புலிகள் கட்டுப்பாட்டில் இருந்தவர்கள் என்பதால் பழிவாங்கும் நடவடிக்கையாக அவர்களைக் கொல்லவும் இலங்கை அரசு முயலும். சந்தேகத்தின் பேரில், விசாரணை என்ற பெயரில் அவர்கள் கொடும் சித்திரவதைக்கு ஆளாக நேரிடும். எனவே வன்னி தமிழ் மக்களை மீட்டு இலங்கை அரசிடம் ஒப்படைப்பது என்பதும் இனப்படுகொலைக்கு சமமான நடவடிக்கையே ஆகும். அமெரிக்க குடிமக்கள் என்ற முறையில், இந்த நடவடிக்கையில் பசிபிக் கமாண்ட் ஈடுபடக் கூடாது என்று கோரிக்கை வைக்கிறோம். அவர்களது ரத்தம் எங்களது கரங்களில் படிவதை நாங்கள் விரும்பவில்லை. இந்த நடவடிக்கைக்குப் பதில், போர் நிறுத்தத்திற்கு இலங்கை அரசை நிர்ப்பந்திக்க வேண்டும். முற்றுகைக்குள்ளான மக்கள் தங்களது பகுதிகளில் நிம்மதியாகவும், அமைதியாகவும் வாழ வழி செய்ய வேண்டும் என்று அந்த அமைப்பு கோரியுள்ளது.
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் கடைசியாக 2014 இல் G20 உச்சிமாநாட்டில் தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டார், அவர் கிரிமியாவைக் கைப்பற்றிய உடனேயே – அவர் மிகவும் புறக்கணிக்கப்பட்டார், அவர் முன்கூட்டியே வெளியேறினார். எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு, பிப்ரவரியில் உக்ரைனில் முழு அளவிலான தாக்குதலைத் தொடங்கி, மேற்கு நாடுகளை அணு ஆயுதங்களைக் கொண்டு அச்சுறுத்திய பின்னர், 70 வயதான ரஷ்யத் தலைவர், வெப்பமண்டலத் தீவான பாலியில் இந்த வார G20 கூட்டத்தைத் தவிர்க்கத் தேர்ந்தெடுத்தார். கிரெம்ளின் இந்தோனேசியாவில் கண்டனத்தின் புயலில் இருந்து ரஷ்ய தலைவரைக் காப்பாற்ற முயல்கிறது என்று பார்வையாளர்கள் கூறுகின்றனர் ஆனால் புடினின் நோ-ஷோ ஆபத்தை ஏற்கனவே முன்னோடியில்லாத மேற்கத்திய தடைகளால் பாதிக்கப்பட்டுள்ள ஒரு நாட்டை மேலும் தனிமைப்படுத்தும் அபாயம் உள்ளது. நாகரிகங்களின் உரையாடல் நிறுவனத்தின் தலைமை ஆய்வாளர் அலெக்ஸி மலாஷென்கோ, புடின் மீண்டும் பகிரங்கமாக அவமானப்படுத்தப்பட விரும்பவில்லை என்று கூறினார், 2014 இல் பிரிஸ்பேன் உச்சிமாநாட்டில் புடின் பாரம்பரிய குடும்ப புகைப்படத்தின் தொலைவில் வைக்கப்பட்டார் என்பதை நினைவு கூர்ந்தார். “உச்சிமாநாட்டில், நீங்கள் மக்களுடன் பேச வேண்டும் மற்றும் புகைப்படம் எடுக்க வேண்டும்,” என்று மலாஷென்கோ கூறினார். “அவர் யாருடன் பேசப் போகிறார், எப்படி சரியாக புகைப்படம் எடுப்பார்?” G20 கூட்டம் தவிர்க்க முடியாமல் உக்ரேனில் மாஸ்கோவின் தாக்குதலால் மறைக்கப்படும், இது உலக எரிசக்தி சந்தைகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியது மற்றும் உணவுப் பற்றாக்குறையை மோசமாக்கியுள்ளது. கிரெம்ளினுக்கு நெருக்கமான வெளியுறவுக் கொள்கை நிபுணரான ஃபியோடர் லுக்யானோவ், புட்டின் உக்ரைன் மீது அசையத் தயாராக இல்லை என்று குறிப்பிட்டார். “அவரது நிலைப்பாடு நன்கு தெரியும், அது மாறாது. மறுபக்கத்தின் நிலைப்பாடும் நன்கு அறியப்பட்டதாகும்” என்று ரஷ்யாவின் குளோபல் அஃபர்ஸ் ஜர்னலின் ஆசிரியர் லுக்யானோவ் கூறினார். “போய் என்ன பயன்?” மிக உயர்ந்த உலகளாவிய உச்சிமாநாடுகளில் ஒன்றைத் தவிர்க்க ரஷ்யத் தலைவரைத் தூண்டியது எது என்பதைக் குறிப்பிடாமல், மோதல்களைத் திட்டமிடுவதில் புட்டின் இல்லாததை கிரெம்ளின் குற்றம் சாட்டியது. ‘சொல்வதற்கு ஒன்றுமில்லை’ வீடியோ இணைப்பு மூலம் கூட புடின் உச்சிமாநாட்டில் உரையாற்ற மாட்டார் என்று கிரெம்ளின் கூறியது. ஒப்பிடுகையில், உக்ரேனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, கிட்டத்தட்ட கூட்டத்தில் கலந்துகொள்வார், ரஷ்யாவின் தாக்குதலுக்கு வலுவான பதிலுக்காக உலகளாவிய தலைவர்களை வலியுறுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரஷ்ய தூதுக்குழுவிற்கு மாஸ்கோவின் உயர்மட்ட தூதர் செர்ஜி லாவ்ரோவ் தலைமை தாங்குவார். உக்ரைனில் ரஷ்யாவின் தாக்குதல் கண்டிக்கப்பட்ட பின்னர், ஜூலை மாதம் பாலியில் நடந்த G20 கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்த வெளியுறவு மந்திரி வெளியேறினார், மேலும் அவர் மற்றொரு பனிக்கட்டி வரவேற்பை எதிர்பார்க்கலாம். பாலிக்கு பயணம் செய்ய புட்டின் மறுத்திருப்பது உக்ரைனின் “முட்டுச்சந்தையின் உணர்வை” பிரதிபலிப்பதாக அரசியல் ஆய்வாளர் கான்ஸ்டான்டின் கலாச்சேவ் கூறினார். “அவர் எதுவும் சொல்லவில்லை,” கலாச்சேவ் கூறினார். “உக்ரைனில் இரு தரப்பையும் திருப்திப்படுத்தக்கூடிய எந்த திட்டமும் அவரிடம் இல்லை.” செப்டம்பரில் நூறாயிரக்கணக்கான இடஒதுக்கீட்டாளர்களைத் திரட்டிய போதிலும், உக்ரைனில் பின்னடைவுக்குப் பிறகு ரஷ்ய ஆயுதப் படைகள் பின்னடைவைச் சந்தித்துள்ளன. செப்டம்பரில், ரஷ்ய இராணுவம் கார்கிவ் வடகிழக்கு பகுதியில் இருந்து வெளியேற வேண்டியிருந்தது. வெள்ளியன்று, ரஷ்யா கிரெம்ளினுக்கு ஒரு புதிய அவமானமாக மூலோபாய தெற்கு துறைமுக நகரமான கெர்சனில் இருந்து தனது படைகளை இழுப்பதாக அறிவித்தது. அமைதிப் பேச்சு வார்த்தை பனியில் போடப்பட்டுள்ளது. ‘மேற்கத்திய எதிர்ப்பு கூட்டணி’ பெரும்பாலான மேற்கத்திய தலைவர்களால் புறக்கணிக்கப்பட்ட புடின், பாரம்பரியமாக மாஸ்கோவுடன் நல்ல உறவுகளை அனுபவித்து வரும் நாடுகளுடனும் அல்லது உலகளாவிய விவகாரங்களில் அமெரிக்காவின் மேலாதிக்கத்திற்கு எதிராக போராடும் நாடுகளுடனும் உறவுகளை ஆழப்படுத்த முயல்கிறார். “புடினின் பார்வையில், அவர் G20 உச்சிமாநாட்டிற்கு செல்ல மறுப்பது ரஷ்யாவை நடுநிலை நாடுகளுடன் உறவுகளை கட்டியெழுப்புவதை தடுக்காது” என்று அரசியல் பகுப்பாய்வு நிறுவனமான R.Politik இன் நிறுவனர் Tatiana Stanovaya கூறினார். “ரஷ்யாவின் அமெரிக்க-விரோத வழிக்கு நிறைய ஆதரவு கிடைத்து வருகிறது என்று புடின் நம்புகிறார்.” ரஷ்யா தனிமைப்படுத்தப்படவில்லை என்று கிரெம்ளின் வலியுறுத்துகிறது, மேலும் புடின் ஆப்பிரிக்கா, ஆசியா மற்றும் மத்திய கிழக்கில் நட்பு நாடுகளை நாடுகிறார் என்று ஸ்டானோவயா சுட்டிக்காட்டினார். “அவர் மேற்கத்திய எதிர்ப்பு கூட்டணியை உருவாக்க முயற்சிக்கிறார்,” என்று அவர் கூறினார். கிரெம்ளின் தலைவர் வெற்றி பெறுவார் என்று பல அரசியல் பார்வையாளர்கள் சந்தேகம் கொண்டுள்ளனர். பிப்ரவரி 24 அன்று புடின் உக்ரைனுக்கு துருப்புக்களை அனுப்பிய பிறகு, சீனா உட்பட எந்த பெரிய நாடும் ரஷ்யாவின் பின்னால் அணிதிரளவில்லை. உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் மத்திய ஆசியாவில் உள்ள மாஸ்கோவின் அண்டை நாடுகளையும் பயமுறுத்தியது மற்றும் கஜகஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் போன்ற நாடுகளை வேறு இடங்களில் கூட்டணியைத் தேடத் தூண்டியது. மேற்கு நாடுகளுடனான ரஷ்யாவின் மோதலானது, உலக அரசியலின் விளிம்பு நிலைக்குத் தள்ளப்பட்டதாகவும், காலநிலை மாற்றம் போன்ற அழுத்தமான பிரச்சினைகளில் முடிவெடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டதாகவும் கலாச்சேவ் கூறினார். “இது வட கொரியா போன்ற ஒரு பாரிய நாடு அல்ல, ஆனால் மூன்றாம் உலகப் போரின் தலைப்புடன் தொடர்பில்லாத உலக நிகழ்ச்சி நிரலில் ரஷ்யா இனி ஒரு பகுதியாக இல்லை” என்று அவர் கூறினார்.
மொபைல் எக்ஸ்சேஞ்ச் ஆபர் போல் தற்போது லாவா நிறுவனத்தின் மொபைலை எக்ஸ்சேஞ்ச் மூலம் தந்துள்ளனர். இது ஒரு நல்ல முயற்சி என்றே கூறலாம். Realme 8s மொபைலை கொடுத்துவிட்டு Lava Agni 5G இலவசமாக பெற்றுக் கொள்ளலாம் என்று தகவல் இணையதளத்தில் வெளியாகியது. இதை முதலில் பெரிதாக யாரும் நம்பவில்லை ஆனால் தற்போது உண்மையாகவே இதை செய்து வருகின்றனர். இதை வாங்குவதற்கு இணையதளத்தில் அவர்கள் அளித்துள்ள Linkஐ கிளிக் செய்து Register செய்துகொண்டால் போதும் உங்களது Realme 8sஐ கொடுத்துவிட்டு Lava Agni மொபைலை பெற்றுக்கொள்ளலாம். இதற்காக எந்த Chargeம் அவர்கள் வாங்கவில்லை. நிறைய நபர்கள் Register செய்துள்ளனர் அதனால் அந்த நிறுவனம் மெதுவாகத்தான் Delivery செய்யப்படும் என்று கூறியுள்ளது. Categories Entertainment News Tags 2022 If you give an old phone, 2022 பழைய ஃபோன் கொடுத்தால் புதுசு கிடைக்கும்..?, Exchange Phones, Lava Agni 5G, will you get a new one ..? நமக்கே தெரியாமல் ஆப்பிள் நிறுவனம் செய்யும் நல்ல காரியங்கள்..? Googleல் இருக்கும் சூப்பர் டிரிக்ஸ் தெரியுமா..? Recent Posts Why is Crypto the biggest solution For our problems? United States Dollar மதிப்பு என்ன ? புஷ்பா தி ரூல் நாளை பூஜை விழாவுடன் தொடங்குகிறது:- படத்தின் இணை தயாரிப்பாளராக ரெட் ஜெயண்ட் மூவிஸ் கைகோர்த்து வரும் நிலையில், துருவ நட்சத்திரம் விரைவில் வெளிவரவுள்ளது.
Ad blocker detected: Our website is made possible by displaying online advertisements to our visitors. Please consider supporting us by disabling your ad blocker on our website. ஏலக்காயில் இவ்ளோ இருக்கா? ஏலக்காயில் இவ்ளோ இருக்கா? வாசனைப் பொருட்களின் அரசி என்று வர்ணிக்கப்படுவது ஏலக்காய். சமையலில் வாசனைக்காக சேர்க்கப்படும் ஏலக்காய் அசைவ உணவுகளுக்கு கூடுதல் சுவை சேர்க்கக்கூடியது. ஏலக்காயில் காணப்படும் எளிதில் ஆவியாகும் எண்ணெய்களான போர்னியோல், கேம்பர், பைனின், ஹீயமுலீன், கெரியோ பில்லென், கார்வோன், யூகேலிப்டோல், டெர்பினின், சேபினின் ஆகியவற்றின் காரணமாக அதில் அரிய மருத்துவ குணங்கள் நிரம்பி உள்ளன. அவை... * குழந்தைகளுக்கு வாந்தி ஏற்பட்டால் இரண்டு ஏலக்காய்களை பொடியாக்கி, அந்தப் பொடியை தேனில் குழைத்து குழந்தையின் நாக்கில் மூன்று வேளை தடவினாலே போதும். வாந்தி உடனே நின்று விடும். * ஜலதோஷத்தால் பாதிக்கப்பட்டு மூக்கடைப்பில் அவதிப்படும் குழந்தைகளுக்கும் ஏலக்காய் தகுந்த நிவாரணம் தருகிறது. நான்கைந்து ஏலக்காய்களை நெருப்பில் போட்டு, அந்தப் புகையை குழந்தைகள் சுவாசித்தாலே மூக்கடைப்பு உடனே திறந்து கொள்ளும். * மன அழுத்தப் பிரச்சினை உள்ளவர்கள், 'ஏலக்காய் டீ' குடித்தால் இயல்பு நிலைக்கு வருவார்கள். டீத் தூள் குறைவாகவும், ஏலக்காய் அதிகமாகவும் சேர்த்து டீ தயாரிக்கும்போது வெளிவரும் இனிமையான நறுமணத்தை நுகர்வதாலும், அந்த டீயைக் குடிப்பதால் ஏற்படும் புத்துணர்வை அனுபவிப்பதாலும் மன அழுத்தம் சட்டென்று குறைகிறது. * நா வறட்சி, வாயில் உமிழ்நீர் ஊறுதல், வெயிலில் அதிகம் வியர்ப்பதால் ஏற்படும் தலைவலி, வாந்தி, குமட்டல், நீர்ச்சுருக்கு, மார்புச்சளி, செரிமானக் கோளாறு ஆகிய பிரச்சினைகளுக்கு ஏலக்காயை வாயில் போட்டு மென்றாலே நிவாரணம் பெற முடியும். அதேநேரம், ஏலக்காயை அதிகமாக, அடிக்கடி வாயில் போட்டு மெல்லுவது நல்லதல்ல. * வெயிலில் அதிகம் அலைந்தால் தலைசுற்றல், மயக்கம் ஏற்படும். இதற்கு நான்கைந்து ஏலக்காய்களை நசுக்கி, அரை டம்ளர் தண்ணீரில் போட்டு, கஷாயமாகக் காய்ச்சி, அதில் சிறிது பனை வெல்லம் போட்டு குடித்தால் தலைசுற்றல் உடனே நீங்கும். மயக்கமும் மாயமாய் மறைந்துவிடும். * விக்கலால் அவதிப்படுவோர் இரண்டு ஏலக்காய்களை நசுக்கி, அத்துடன் நான்கைந்து புதினா இலைகளைப் போட்டு, அரை டம்ளர் தண்ணீரில் நன்கு காய்ச்சி வடிகட்டி, மிதமான சூட்டில் இந்தக் கஷாயத்தைக் குடித்தாலே போதும். * வாய்வுத் தொல்லையால் அவதிப்படுவோர் ஏலக்காயை நன்கு காய வைத்து பொடியாக்கி, அந்தப் பொடியில் அரை டீஸ்பூன் எடுத்து, அரை டம்ளர் தண்ணீரில் கொதிக்கவிட வேண்டும். உணவு உட்கொள்வதற்கு முன்பாக, இந்த ஏலக்காய் தண்ணீரைக் குடித்தால் வாய்வுத் தொல்லை உடனே நீங்கிவிடும்.
‘ஏய் எங்கப்பா துபாய்ல வேலை செய்றாறு... என் கணவன் பாரீன்ல இருக்காரு...’. இதேபோல், தங்களது உடன் பிறந்த சகோதரர், சகோதரிகள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் வெளிநாடுகளில் வேலை செய்வதை பெருமையாகவும், கெத்தாகவும் சொல்லி கொள்ளும் குடும்பத்தினர், அவர்கள் அங்கு அனுபவிக்கும் சித்ரவதையை அறிவதில்லை. இந்தியாவில் இருந்து புறப்படும் போது இருக்கும் உற்சாகம், வெகு காலம் நீடிப்பதில்லை. வெளிநாடுகளுக்கு சென்ற பின், அவர்கள் அனுபவிக்கும் கஷ்டங்கள், சித்ரவதைகளை குடும்பத்தினரிடம் சொன்னால், அவர்கள் கண்ணீர் விடுவார்கள் என்பதால் குடும்ப சூழலை கருதி, ‘சொல்லவும் முடியாமல், முழுங்கவும் முடியாமல்’ வாய்க்கு பூட்டு போட்டு, தலையாட்டி பொம்மை போல் வேலை செய்து வருகின்றனர். கவர்ச்சி விளம்பரங்கள் மூலம் போலி வேலைவாய்ப்பு நிறுவனங்களால் அனுப்பப்படும் இந்தியர்களை, தூதரகம் மூலமாக கூட மீட்க முடியவதில்லை என்பது வேதனையிலும் வேதனை. இதற்கு சிறந்த உதாரணம்தான் மியான்மர் நாட்டில் சிக்கி உள்ள இந்தியர்கள். இந்தியாவின் மொத்த மக்கள் தொகை 135 கோடி. நம் நாட்டில் உள்ள கல்வி தரத்தால் உலகம் முழுவதும் இன்று லட்சக்கணக்கான சாப்ட்வேர் இன்ஜினியர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், விஞ்ஞானிகள், டாக்டர்கள், ஆராய்ச்சியாளர்கள் என பல்வேறு துறைகளில் இந்தியர்கள் ஜொலித்து வருகின்றனர். இன்று உலகமே வியக்கும் வகையில் கூகுள் நிறுவனம் முதல் உலகின் முன்னணி நிறுவனங்கள் தலைமை பொறுப்பை அலங்கரித்துள்ளது இந்தியர்களே. ஆனால், இந்தியாவில் ஏற்பட்டுள்ள வேலையின்மை காரணமாக லட்சக்கணக்கான பட்டதாரிகள், கையில் சான்றிதழ்களுடன் ஏறாத நிறுவனங்களே இல்லை. போதாகுறைக்கு கொரோனா தொழில்துறையை சின்னாபின்னமாக்கிவிட்டது. இதனால், வேலையில் இருந்தவர்களும் வேலையில்லாமல் தவித்து வருகின்றனர். குடும்ப சூழல், வேலையின்மை, குறைந்த சம்பளம் போன்ற பல்வேறு நெருக்கடிகளால், வெளிநாடுகளில் வீட்டு வேலை, குழந்தை பராமரித்தல், டிரைவர், தூய்மை பணியாளர் முதல் ஐடி பணி வரை லட்சக்கணக்கான இந்தியர்கள் சென்றுள்ளனர். அவ்வாறு சென்று உள்ள இந்தியர்களுக்கு 20 மணி நேரம் பணி, சட்டவிரோத வேலை, பாலியல் தொழில், தீவிரவாத செயல் மற்றும் குற்றச்சம்பவங்களில் ஈடுபட வற்புறுத்தப்படுகின்றனர். இதை செய்ய மறுப்பவர்களை சுட்டுக்கொல்வதாக மிரட்டுகின்றனர். குறிப்பாக, போலி தனியார் நிறுவனங்கள், ‘வெளிநாடுகளில் வேலை, மாதம் ரூ50 ஆயிரத்திற்கு மேல் சம்பளம், இலவச விசா’ என்று கவர்ச்சிகரமாக விளம்பரம் செய்து ஆட்களை இழுக்கின்றனர். துபாய், குவைத் உள்பட வளைகுடா நாடுகளில் வேலை பார்க்கும் மலையாளிகளின் எண்ணிக்கை மிகவும் அதிகமாகும். இதன் காரணமாக கேரளா முழுவதும் தனியார் வேலை வாய்ப்பு நிறுவனங்கள் அதிக அளவில் உள்ளன. இதில் பாதிக்கு மேல் போலி நிறுவனங்களாகும். இவர்கள் துபாய், குவைத் உள்பட வெளிநாடுகளில் வேலை வாங்கித் தருவதாக கூறி ஏமாற்றி அடிமை வேலைக்கோ அல்லது தீவிரவாத இயக்கத்தினரிடமோ அவர்களை விற்பனை செய்து விடுகின்றனர். கொச்சியை சேர்ந்த ஒரு போலி வேலை வாய்ப்பு நிறுவனம் மட்டும் கடந்த இரண்டு ஆண்டுகளில் பெண்கள் உட்பட 200க்கும் மேற்பட்டோரை குவைத்துக்கு கடத்திச் சென்றுள்ளனர். கேரளாவிலிருந்து அழைத்து செல்லப்படும் ஏராளமான பெண்கள் பல நாடுகளில் பாலியல் தொழிலில் தள்ளப்பட்டுள்ளனர். கேரளாவில் செயல்பட்டு வரும் இந்த போலி ஏஜென்சிகளுக்கு குவைத் உள்பட வெளிநாடுகளில் உள்ள ஏஜென்சிகளுடன் தொடர்பு இருக்கிறது. இதேபோல், நாடு முழுவதும் உள்ள போலி நிறுவனங்கள், அவர்கள் அனுப்பும் நாடுகளில் உள்ள போலி ஏஜென்சிகளுடன் தொடர்பு வைத்து, வேலை தேடி வருபவர்களை ஆசைகாட்டி அழைத்து சென்று சித்ரவதை செய்து வருகின்றனர். கை நிறைய சம்பளம் என கூறி தாய்லாந்து, மலேசியா, சிங்கப்பூர், துபாய் உள்ளிட்ட வளைகுடா நாடுகளுக்கு செல்லும் இந்தியர்களுக்கு சொன்ன வேலை அங்கு வழங்கப்படுவதில்லை. மாறாக, குற்றச்சம்பவங்களில் ஈடுபட வைத்து சில கும்பல் பணம் சம்பாதிக்கின்றனர். கடந்த ஜூலை தாய்லாந்தில் ஐடி துறையில் நல்ல சம்பளத்துடன் கூடிய வேலை தருவதாக கூறி கடந்த ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் கொச்சி, ஐதராபாத்தில் இருந்து அழைத்து செல்லப்பட்ட 300 இந்திய ஐடி இன்ஜினியர்கள், பாங்காக் விமான நிலையத்தில் இறங்கியதும், அங்கிருந்து மியான்மருக்கு கடத்தப்பட்டனர். அங்கு அவர்கள், சைபர் குற்றச்செயல்களில் ஈடுபடும்படி கொடுமைப்படுத்தப்பட்டு வருவதாகவும், மீறினால், லேசர் துப்பாக்கி மூலம் மின்சார ஷாக் கொடுத்து, கடுமையாக தாக்கப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. தாய்லாந்துக்கு கடத்தப்பட்ட 300 இந்தியர்களில் 50 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். அவர்கள், சித்ரவதையை தாங்க முடியாமல் தங்களை தமிழக அரசு மீட்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இதையேற்று மியான்மரில் சிக்கி உள்ள தமிழர்கள் உட்பட 300 இந்தியர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். தமிழர்களை மீட்டு கொண்டு வருவதற்கான செலவுகளை அரசே ஏற்கும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். கடத்தப்பட்ட இந்தியர்கள் மியான்மரின் கயின் மாகாணத்தில் உள்ள மையவாடி பகுதியில் பினை கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டுள்ளனர். இந்த பகுதி மியான்மர் அரசின் கட்டுப்பாட்டில் இல்லை. சில இன ஆயுதக் குழுக்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. சமீபத்தில் 30 இந்தியர்களை மட்டும் இந்திய தூதரகம் மூலம் மீட்கப்பட்டுள்ளது. மையவாடி பகுதி அரசு கட்டுப்பாட்டில் இல்லாததால், இந்திய பொறியாளர்களை மீட்பது கடினம் என்று வெளியுறவு அமைச்சகம் மறைமுகமாக தெரிவித்து இருப்பதாக கருதப்படுகிறது. இதனால், மியான்மரில் சிக்கிய இந்தியர்கள் மீட்கப்படுவார்களா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. எல்லையில் நடந்தது என்ன? மியான்மரில் சிக்கி உள்ள இந்தியர்கள் கூறியதாவது: எங்களில் சிலர் வேலை தேடி முகவர்கள் மூலம் துபாய்க்கு சென்று இருந்தோம். அப்போது, துபாய் இன்வெஸ்ட்மென்ட் பார்க்’ என்ற இடத்தில் ஏராளமான நிறுவனங்கள் வேலைக்காக ஆட்களை தேர்வு செய்து கொண்டிருந்தார்கள். அங்கு சில நிறுவனங்கள் வித்தியாசமான முறையில் எங்களைப் போல விண்ணப்பித்தவர்களை தேர்வு செய்து கொண்டிருந்தது. எங்களை தேர்வு செய்த நிறுவனம், உங்களுக்கு தாய்லாந்தில் உள்ள நிறுவனத்தில்தான் வேலை என்று கூறியது. ஏற்கெனவே சொந்த ஊரில் மிகவும் கடுமையான பொருளாதார சூழலில் வேலைக்கு விண்ணப்பித்து வெளிநாடுவரை வந்து விட்டதால் கிடைத்த வேலையில் சேருவதென்று தீர்மானித்து தாய்லாந்து வேலைக்கு ஒப்புக் கொண்டோம். தாய்லாந்து சென்ற பிறகு அங்குள்ள உள்ளூர் முகவர்களிடம் நாங்கள் ஒப்படைக்கப்பட்டோம். இதேபோல், ஏராளமான இந்தியர்களும் அங்கு வந்திருந்தனர். அந்த முகவர்கள் குழுவுக்கு ஒரு பெண் தலைவர் இருந்தார். அவர் பாங்காக் விமான நிலையத்தில் இருந்து சுமார் 500 கி.மீ தூரமுள்ள எல்லை பகுதிக்கு எங்களை அழைத்துச் சென்றார். அங்கு வைத்து எங்களுடைய பாஸ்போர்ட், விசா ஆவணங்கள் அனைத்தையும் அந்த முகவர்கள் வாங்கிக் கொண்டனர். அந்த இடத்தில் ஒரு ஆறு ஓடிக்கொண்டிருந்தது. அதை கடந்துதான் அலுவலகம் செல்ல வேண்டும் என கூறினார். அதனால் எங்களுடைய செல்பேசி மற்றும் பிற ஆவணங்களை முகவர்கள் வாங்கிக் கொண்டனர். ஆற்றைக் கடந்து மறுநாள் காலையில் எங்களிடம் செல்பேசி ஒப்படைக்கப்பட்டபோது, எங்களுடைய நெட்வொர்க்கை ஆன் செய்தோம். அப்போது நாங்கள் உள்ள இருப்பிடத்தை பார்த்தபோதுதான் நாங்கள் இருப்பது தாய்லாந்து அல்ல, மியான்மர் என்றே தெரிய வந்தது. இவ்வாறு அவர்கள் கூறினர். அதிகம் கொடுமைபடுத்தப்படுபவர்கள் யார், யார் * குடும்பம் இல்லாதவர்கள் * குறைவாக படித்தவர்கள் * குறைந்த திறன் கொண்டவர்கள் * குறைந்த வருமானம் பெறுபவர்கள் சிக்கியது எப்படி? கால் சென்டர் மற்றும் கிரிப்டோ கரன்சி மோசடியில் ஈடுபடும் சர்வதேச குழு ஐடி நிறுவனங்கள் என்ற போர்வையில், இந்தியர்களை குறிவைத்து வெளிநாட்டு வேலை என்ற மோசடியில் ஈடுபட்டுள்ளது. தாய்லாந்தில் டிஜிட்டல் விற்பனை மற்றும் மார்க்கெட்டிங் துறையில் வேலை என்று இந்திய இளைஞர்களை ஏமாற்றியுள்ளது. இந்த நிறுவனங்கள், துபாய் மற்றும் இந்தியாவைச் சேர்ந்த ஏஜென்டுகள் மூலமாக சமூக வலைத்தளங்களில் கவர்ச்சிக்குரிய விளம்பரங்கள் வெளியிட்டு அதன் மூலம் இவர்கள் ஐடி வேலை தேடும் இளைஞர்களை குறிவைத்துள்ளனர். இதில் நம்பி ஏமாந்து போகும் இளைஞர்களை மியான்மர் நாட்டிற்கு கொண்டு சென்று மோசமான நிலையில் சிக்கி உள்ளனர். ரூ4 லட்சம் கொடுத்துதப்பினர் சித்ரவதை செய்தும் குற்றச்செயல்களில் ஈடுபட மறுப்பவர்களிடம், 5 ஆயிரம் அமெரிக்க டாலர் கொடுத்தால் விட்டுவிடுகிறோம் என்று மிரட்டி உள்ளனர். இதனால், 9 பேர் மட்டும் ஐதராபாத்தை சேர்ந்த அம்ஜத் உல்லா கான் என்ற சமூக ஆர்வலரின் உதவியுடன் கிரிப்டோ கரன்சி மூலம் ரூ4 லட்சத்தை கொடுத்து விட்டு இந்தியா தப்பி வந்துள்ளனர். அம்ஜத் உல்லா வெளியிட்ட டிவிட்டரை பார்த்த ஒன்றிய வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான உதவி மையம், பாதிக்கப்பட்டுள்ள ஐடி இளைஞர்கள் தொடர்பு கொள்ள அவசர உதவி எண் மற்றும் இ-மெயில் முகவரியை வெளியிட்டுள்ளது. மனிதவள ஏற்றுமதிஇந்தியா முதலிடம் * உலகளவில் என்ஆர்ஐகளின் மக்கள் தொகை 2.5 கோடி. * உலகிலேயே இந்தியாதான் மிகப்பெரிய மனிதவள ஏற்றுமதியாளராக உள்ளது. ஆனால், எந்த இடம்பெயர்வு கொள்கையும் இந்தியாவிடம் இல்லை. * இந்திய அரசு ஏழை தொழிலாளர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பி ஏற்றுமதி, இறக்குமதி தொழில் செய்து வருகிறது. * இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, 3.2 கோடி என்ஆர்ஐ, ஓசிஐக்கள் இந்தியாவிற்கு வெளியே வசிக்கின்றனர். * ஒவ்வொரு ஆண்டும் 25 லட்சம் இந்தியர்கள் வெளிநாடுகளுக்கு இடம்பெயர்கின்றனர். இது உலகிலேயே அதிக அளவிலான புலம்பெயர்ந்தோர் எண்ணிக்கையாகும். * ஒவ்வொரு ஆண்டும் கிட்டத்தட்ட 7-8 லட்சம் இந்தியர்கள் ‘குடியேற்ற சோதனை தேவை’ என்ற நாடுகளுக்கு புலம்பெயர்கின்றனர். * எந்தச் செலவும்/பூஜ்ஜிய முதலீடும் இல்லாமல் வெளிநாடுகளுக்கு மனித வளத்தை ஏற்றுமதி செய்யும் இந்திய அரசு, வெளிநாடுகளில் இருந்து வரும் பணத்தைக் கொண்டு இந்தியப் பொருளாதாரத்தை வலுப்படுத்துகிறது. * கடந்த ஆண்டு (2021-22), இந்தியா என்ஆர்ஐகளிடமிருந்து (வெளிநாடுவாழ் இந்தியர்கள்) ரூ7,25,350 கோடி அந்நிய செலாவணியை பெற்று உள்ளது. இது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3 சதவீதமாகும். * ஆறு அரபு வளைகுடா நாடுகளில் வசிக்கும் 88 லட்சம் இந்தியத் தொழிலாளர்களால் பெரும்பாலான பணம் அனுப்பப்பட்டது. கிரிப்டோ முதலீடுகளை பெற நிர்பந்தம் மியான்மருக்கு கடத்தப்பட்ட இந்தியர்கள், அங்கு கட்டுமான நிலையில் இருந்த பெரிய நிறுவனத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள். அங்கு நூற்றுக்கணக்கானோர் வேலை செய்து கொண்டிருந்தனர். லேட்டஸ்ட் ஐபோன்கள், கணிப்பொறிகள் என அனைத்து வசதிகளும் அங்கு இருந்தன. அங்கு இருந்த சில தனியார் நிறுவனத்தினர், சில வாடிக்கையாளர்களின் தகவல்களை வழங்கி, அவர்களிடம் இருந்து கிரிப்டோ முதலீடுகளை பெறுவதே உங்களுடைய பணி, சம்பளம் இந்திய ரூபாய் மதிப்பில் ஒரு லட்சம் முதல் ஒன்றரை லட்சம் ரூபாய் வரை இருக்கும். இதற்கான இலக்கும் எங்களுக்கும் நிர்ணயித்தனர் என்று அவர்கள் கூறியதாக பாதிக்கப்பட்ட இந்தியர்கள் தெரிவித்தனர். போலி நிறுவனங்களுக்கு கடிவாளம் போடப்படுமா? வேலை வாய்ப்பு இருப்பதாக கவர்ச்சியாக வெளியிட்டு ஆட்களை கடத்தி வரும் போலி நிறுவனங்களால் நாட்டின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. இந்த நிறுவனங்கள் மூலம் பல இந்தியர்கள் கடத்தப்பட்டு தீவிரவாத செயல்கள் உள்ளிட்ட குற்றச்செயல்களில் ஈடுபட வைக்கின்றனர். இதனால், இந்த நிறுவனங்கள் சர்வதேச தொடர்புகள், குற்ற பின்னணிகள் குறித்து ஆராய்ந்து ஒன்றிய புலனாய்வு அமைப்புகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசியல் கட்சிகள் வலியுறுத்தி உள்ளன. இனி ஏமாறாதீர்கள்... * வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்பவர்களாக இருந்தால், சம்பந்தப்பட்ட ஏஜென்சி பற்றி தீவிரமாக விசாரித்து அவர்கள் மூலம் செல்ல வேண்டும். * ஏஜென்சிகள் மீது சந்தேகம் ஏற்பட்டால், எந்த நாடுகளுக்கு செல்கிறீர்களோ, அந்த நாட்டில் உள்ள இந்திய தூதரகம் மூலம் விசாரித்து கொள்ள வேண்டும். * வெளிநாடுகளில் வேலை என்ற ஒரு நிறுவனத்தின் பேரில் வாய்ப்பு வந்தால், அந்த நிறுவனத்தின் இணையதளங்களை தீவிரமாக சரிபார்த்து கொள்ள வேண்டும். துப்பாக்கி முனையில் மிரட்டப்பட்ட ஊழியர்கள் மியான்மருக்கு கடத்தப்பட்ட இந்தியர்களுக்கு முதல் ஒரு வாரத்துக்கு தங்களுக்கு மூன்று வேலை உணவும், நல்ல வசதியும் கொடுத்து உபசரித்து உள்ளனர். ஆனால், நாட்கள் செல்லச் செல்ல உரிய இலக்கை எட்டாதவர்களுக்கு உணவு அளவை குறைத்தும் தரக்குறைவாக நடத்தியும், அடித்தும் துன்புறுத்தி உள்ளனர். பல நேரங்களில் துப்பாக்கி முனையில் இலக்குகளை எட்ட தாங்கள் மிரட்டப்பட்டதாக அங்கு சிக்கி உள்ள இந்தியர்கள் கண்ணீர் மல்க தெரிவித்தனர். தாய்லாந்து ராணுவத்திடம் சிக்கிய 13 தமிழர்கள் வெளிநாட்டு வேலைக்காக முகவர்கள் உதவியுடன் துபாய் சென்ற தமிழகத்தை சேர்ந்த 13 பேர் உட்பட 16 பேர், அங்கிருந்து தாய்லாந்து வழியாக மியான்மருக்கு சட்டவிரோதமாக அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்கள், மியான்மர் நாட்டு ராணுவம் மற்றும் எல்லை காவல் படையின் உதவியுடன் மீட்கப்பட்டு பிறகு மியான்மர் எல்லையில் உள்ள தாய்லாந்தை இணைக்கும் ஆற்றுப்பகுதியில் விடப்பட்டுள்ளனர். அப்படி எல்லை ஆற்றைக் கடந்து தாய்லாந்தின் பாங்காக் விமான நிலையத்துக்கு செல்வதற்காக 20 கி.மீ தூர பாதையை இரவில் கடக்கும் வேளையில்தான், தாய்லாந்தின் ராணுவத்திடம் 16 பேரும் பிடிபட்டுள்ளனர். தற்போது அவர்கள் பாங்காக்கில் உள்ள தடுப்பு முகாமில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். தடுப்பு முகாமில் உள்ள 16 இந்தியர்களில் கன்னியாகுமரியைச் சேர்ந்த மூன்று பேர் மற்றும் வேலூர், புதுக்கோட்டை, தென்காசி, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த தலா ஒருவர் உள்பட 10 பேர் உள்ளனர். Related Stories: மாநிலக் கல்லூரியில் மாற்றுத்திறனாளிகளுக்கு விடுதி கட்டும் பணி விரைவில் தொடங்கும்: அமைச்சர் பொன்முடி லேசான காய்ச்சலுக்கு ஆன்டிபயாட்டிக் மருந்தினை தரக்கூடாது: ஐ.சி.எம்.ஆர். வழிகாட்டும் நெறிமுறை ஒருவர் 5 இணைப்புகள் வைத்திருந்தாலும் 100 யூனிட் இலவச மின்சாரம் தொடரும்: அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அதிவேகமாக வாகனத்தை ஓட்டுபவர்களுக்கு எதிராக வழக்கு: 4 வாரங்களில் பதில் அளிக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு ஒருவர் 5 மின் இணைப்புகள் வைத்திருந்தாலும் 100 யூனிட் இலவச மின்சாரம் தொடரும்: அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி 33 உயிர்கள் பறிபோய்விட்டது!: ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்திற்கு இனியும் தாமதிக்காமல் ஒப்புதல் அளியுங்கள்.. ஆளுநர் ரவிக்கு அன்புமணி வேண்டுகோள்..!! சீனாவிலிருந்து வருவோருக்கு கொரோனா சோதனை செய்வது பற்றி ஒன்றிய அரசின் அறிவுறுத்தல் பின்பற்றப்படும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் கட்டுப்பாட்டை இழந்த அரசு பேருந்தால், 4 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்து சென்னையில் டெலிவரி பாயிடம் ரூ.2000 கொடுத்ததால் வீட்டில் கஞ்சா வைத்திருந்த 3 பேர் கைது கல்வி உதவித்தொகையை ரத்து செய்ததற்கு மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் கண்டனம் தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 13 மாவட்டத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல் மும்பை பங்குசந்தை சென்செக்ஸ் குறியிட்டு எண் 25 புள்ளிகள் அதிகரிப்பு அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள பொறியியல் கல்லூரிகளில் முதலாமாண்டு வகுப்பு தொடங்கியது.. தமிழகம் முழுவதும் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க சிறப்பு முகாம்கள் இன்று முதல் டிசம்பர் 31ம் தேதி வரை நடைபெறும்
மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் பெறப்பட்டுள்ள 2 கோடி கையொப்பங்களுடன் இன்று காலை இராகுல் காந்தி தலைமையில் காங்கிரசு நிர்வாகிகள் குடியரசுத் தலைவர் இராம்நாத் கோவிந்தைச் சந்தித்து மனு அளித்து விவசாயிகள் போராட்டத்தில் தலையிடுமாறு கோர உள்ளனர். குடியரசுத் தலைவர் மாளிகை அருகே இருக்கும் விஜய் சவுக் பகுதியிலிருந்து இராகுல் காந்தி தலைமையில் காங்கிரசு நிர்வாகிகள் பேரணியாகச் சென்று குடியரசுத் தலைவர் இராம்நாத் கோவிந்தைச் சந்திக்க உள்ளனர். மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களை எதிர்த்தும், அதை திரும்பப் பெறக் கோரியும் கடந்த 4 வாரங்களுக்கு மேலாக டெல்லி எல்லையில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதுவரை 5 கட்டப் பேச்சு விவசாயிகளுக்கும், மத்திய அரசுக்கும் இடையே நடந்தும் எந்த முடிவும் எட்டப்படவில்லை. வேளாண் சட்டங்கள் கொண்டுவந்த போதிருந்தே காங்கிரசுக் கட்சி தீவிரமாக எதிர்த்து வந்தது. வேளாண் சட்டங்களுக்கு எதிராக காங்கிரசுக் கட்சி நாடுமுழுவதும் போராட்டங்களை நடத்தி இந்தச் சட்டங்களுக்கு எதிராக 2 கோடி பேரிடம் கையொப்பம் பெற்றுள்ளது. இந்தக் கையொப்பங்களுடன் குடியரசுத் தலைவர் இராம்நாத் கோவிந்தைச் சந்திக்கும் காங்கிரசு நிர்வாகிகள், விவசாயிகள் போராட்டத்தில் உடனடியாகத் தலையிட்டு முடிவுக்குக் கொண்டுவரக் கோர உள்ளனர். இதுகுறித்து காங்கிரசு பாராளுமன்ற உறுப்பினர் கே.சுரேஷ் கூறியதாவது…. வேளாண் சட்டங்களுக்கு எதிராகக் கடந்த 4 வாரங்களுக்கும் மேலாக கடும் பனியில் விவசாயிகள் நடத்திவரும் போராட்டத்தில் தலையிட்டு தீரத்து வைக்குமாறு குடியரசுத் தலைவர் இராம்நாத் கோவிந்திடம் வலியுறுத்த உள்ளோம். இதற்காக நாடுமுழுவதும் 2 கோடி பேரிடம் கையொப்பம் வாங்கப்பட்டுள்ளது. இன்று காலை 10.45 மணிக்கு விஜய் சவுக் பகுதியில் இராகுல் காந்தி தலைமையில் போராட்டம் நடத்தப்படுகிறது. அதன்பின் அங்கிருந்து குடியரசுத் தலைவர் மாளிகை நோக்கி, இராகுல் காந்தி தலைமையில் காங்கிரசு நிர்வாகிகள் பேரணியாகச் சென்று குடியரசுத் தலைவரைச் சந்திப்பார்கள்
யாழ்ப்பாண மாநகர சபையில் சபை நடவடிக்கைகளில் சபை உறுப்பினர்களுக்குத் தெரியப்படுத்தாமல் நடந்த சம்பவங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மணிவண்ணன் அணி உறுப்பினர்களைத் தவிர ஏனைய சகல உறுப்பினர்களும் வெளிநடப்புச் செய்தனர். யாழ்ப்பாணம் மாநகர சபையின் மாதாந்த அமர்வு நேற்றைய தினம் மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் தலைமையில் இடம்பெற்றபோதே அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் வெளிநடப்புச் செய்தனர். இவ்வாறு உறுப்பினர்கள் வெளியேறியதையடுத்து போதிய கோரம் இல்லாத காரணத்தினால் சபை அமர்வும் ஒத்திவைக்கப்பட்டது. யாழ்ப்பாணம் மாநகர சபைக்கு ஜப்பானியத் தூதரகத்தினால் அன்பளிப்புச் செய்யப்படவிருந்த நவீன திண்மக் கழிவகற்றல் வாகனங்களைப் பெற்றுக் கொள்வதில் தாமதம் ஏற்பட்டதன் காரணமாக அவ் வாகனங்களின் தீர்வை மற்றும் இதர செலவுகளுக்காக ஜப்பானியத் தூதரகத்தினால் யாழ். மாநகர சபைக்கு வழங்கப்பட்ட ரூபா 14 மில்லியனைத் திரும்பச் செலுத்துவது தொடர்பில், மாநகர சபைக்குத் தெரியப்படுத்தாமல் “பணத்தைத் திரும்பச் செலுத்த முடிவு செய்துள்ளோம்” என சபை சார்பில் ஆணையாளர் அனுப்பிய கடிதம் தொடர்பான சர்ச்சையை அடுத்து உறுப்பினர்களுக்குத் தெரியப்படுத்தாமல் மூடுமந்திரமாக சபை நடாத்தப்படுவதைக் கண்டத்தே உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்துள்ளனர். யாழ்ப்பாணம் மாநகர சபைக்கு தெரியாது முதல்வரும் ஆணையாளரும் எதேச்சையாக ஒரு கோடியே 43 லட்சத்து 26 ஆயிரத்து 466 ரூபா தொடர்பில் முடிவெடுத்தமையை கண்டித்த உறுப்பினர்கள் இது தொடர்பில் சபையில் வருத்தம் தெரிவிக்க வேண்டும் எனப் பலமுறை கோரியும் முதல்வர் அதனை ஏறகாது ஏனைய விளக்கம் அளிக்கவே முற்பட்டார். இதனை ஏறக மறுத்தே உறுப்பினர்கள் சபையில் இருந்து வெளி நடப்புச் செய்தனர். இதன்போது பதிலளித்து வந்த முதல்வர் இந்த கடிதத்தை யப்பாணியத் தூதரகமே தட்டச்சு செய்து ஒப்பமிட்டு அனுப்புமாறு மெயிலில் அனுப்பியதாக பதிலளித்தபோது இது யப்பானிய மாநகர சபையா அல்லது யாழ்ப்பாணம் மாநகர சபையா எனக் கேள்வி எழுப்பப்பட்டது. இதனபோது முதல்வர் மற்றும் பிரதி முதல்வருக்கும் இடையில் கடும் வாய்த் தர்க்கமும் ஏறபட்டது. இதன்போது முதல்வர் தான. நாட்டில் இல்லாத காலத்தில் தன்னை தகுதியற்றவர் என்ற தொணியில் கடிதம. எழுதியுள்ளதாக குறிப்பிட்டபோது உங்களது இரண்டு வருட காலத்தில் இதறகு ஓர் அமைச்சரவை அங்கீகாரம் பெற்றுத் தாங்கோ என அமைச்சர. டக்ளஸ் தேவானந்தாவிற்கு கடிதம் எழுதியதைத் தவிர வேறு ஏதும் ஆதாரம் இருந்தால் காண்பியுங்கள் என பிரதி முதல்வர் சவால் விடுத்தார்.
1 ஐயோ! உஷ்ணகாலத்துக் கனிகளைச் சேர்த்து, திராட்சப்பழங்களை அறுத்தபின்பு வருகிறவனைப்போல் இருக்கிறேன்; புசிக்கிறதற்கு ஒரு திராட்சக்குலையும் என் ஆத்துமா இச்சித்த முதல் அறுப்பின் கனியும் இல்லை. 2 தேசத்தில் பக்தியுள்ளவன் அற்றுப்போனான்; மனுஷரில் செம்மையானவன் இல்லை; அவர்களெல்லாரும் இரத்தஞ்சிந்தப் பதிவிருக்கிறார்கள்; அவனவன் தன்தன் சகோதரனை வலையிலே பிடிக்க வேட்டையாடுகிறான். 3 பொல்லாப்புச் செய்ய அவர்கள் இரண்டு கைகளும் நன்றாய்க் கூடும்; அதிபதி கொடு என்கிறான்; நியாயாதிபதி கைக்கூலி கேட்கிறான்; பெரியவன் தன் துராசையைத் தெரிவிக்கிறான்; இவ்விதமாய்ப் புரட்டுகிறார்கள். 4 அவர்களில் நல்லவன் முட்செடிக் காத்தவன், செம்மையானவன் நெரிஞ்சிலைப்பார்க்கக் கடுங்கூர்மையானவன்; உன் காவற்காரர் அறிவித்த உன் தண்டனையின் நாள் வருகிறது; இப்பொழுதே அவர்களுக்குக் கலக்கம் உண்டு. 5 சிநேகிதனை விசுவாசிக்கவேண்டாம், வழிகாட்டியை நம்பவேண்டாம்; உன் மடியிலே படுத்துக்கொள்ளுகிறவளுக்கு முன்பாக உன் வாயைத் திறவாமல் எச்சரிக்கையாயிரு. 6 மகன் தகப்பனைக் கனவீனப்படுத்துகிறான்; மகள் தன் தாய்க்கு விரோதமாகவும், மருமகள் தன் மாமிக்கு விரோதமாகவும் எழும்புகிறார்கள்; மனுஷனுடைய சத்துருக்கள் அவன் வீட்டார்தானே. 7 நானோ கர்த்தரை நோக்கிக்கொண்டு, என் இரட்சிப்பின் தேவனுக்குக் காத்திருப்பேன்; என் தேவன் என்னைக் கேட்டருளுவார். 8 என் சத்துருவே, எனக்கு விரோதமாய்ச் சந்தோஷப்படாதே; நான் விழுந்தாலும் எழுந்திருப்பேன்; நான் இருளிலே உட்கார்ந்தால் கர்த்தர் எனக்கு வெளிச்சமாயிருப்பார். 9 நான் கர்த்தருக்கு விரோதமாகப் பாவஞ்செய்தேன்; அவர் எனக்காக வழக்காடி என் நியாயத்தை விசாரிக்குமட்டும் அவருடைய கோபத்தைச் சுமப்பேன்; அவர் என்னை வெளிச்சத்திலே கொண்டுவருவார், அவருடைய நீதியைப் பார்ப்பேன். 10 உன் தேவனாகிய கர்த்தர் எங்கே என்று என்னோடே சொல்லுகிற என் சத்துருவானவள் அதைப் பார்க்கும்போது வெட்கம் அவளை மூடும்; என் கண்கள் அவளைக் காணும்; இனி வீதிகளின் சேற்றைப்போல மிதிக்கப்படுவாள். 11 உன் மதில்களை எடுப்பிக்கும் நாள் வருகிறது; அந்நாளிலே பிரமாணம் வெகுதூரம் பரவிப்போம். 12 அந்நாளிலே அசீரியாமுதல் எகிப்தின் பட்டணங்கள் வரைக்கும், எகிப்துமுதல் நதிவரைக்கும், ஒரு சமுத்திரமுதல் மறு சமுத்திரம்வரைக்கும், ஒரு பர்வதமுதல் மறு பர்வதம்வரைக்குமுள்ள ஜனங்கள் உன்னிடத்திற்கு வருவார்கள். 13 ஆனாலும் தன் குடிகளினிமித்தமும் அவர்கள் கிரியைகளுடைய பலன்களினிமித்தமும் தேசம் பாழாயிருக்கும். 14 கர்மேலின் நடுவிலே தனித்து வனவாசமாயிருக்கிற உமது சுதந்தரமான மந்தையாகிய உம்முடைய ஜனத்தை உமது கோலினால் மேய்த்தருளும்; பூர்வநாட்களில் மேய்ந்ததுபோலவே அவர்கள் பாசானிலும் கீலேயாத்திலும் மேய்வார்களாக. 15 நீ எகிப்து தேசத்திலிருந்து புறப்பட்டநாளில் நடந்ததுபோலவே உன்னை அதிசயங்களைக் காணப்பண்ணுவேன். 16 புறஜாதிகள் கண்டு தங்களுடைய எல்லாப் பராக்கிரமத்தையுங்குறித்து வெட்கப்படுவார்கள்; கையை வாயின்மேல் வைத்துக்கொள்வார்கள்; அவர்கள் காதுகள் செவிடாய்ப் போகும். 17 பாம்பைப்போல மண்ணை நக்குவார்கள்; பூமியின் ஊர்வனவற்றைப்போலத் தங்கள் மறைவிடங்களிலிருந்து நடுநடுங்கிப் புறப்படுவார்கள்; நமது தேவனாகிய கர்த்தரிடத்திற்குத் திகிலோடே சேர்ந்து, உனக்குப் பயப்படுவார்கள். 18 தமது சுதந்தரத்தில் மீதியானவர்களுடைய அக்கிரமத்தைப் பொறுத்து, மீறுதலை மன்னிக்கிற தேவரீருக்கு ஒப்பான தேவன் யார்? அவர் கிருபைசெய்ய விரும்புகிறபடியால் அவர் என்றென்றைக்கும் கோபம் வையார். 19 அவர் திரும்ப நம்மேல் இரங்குவார்; நம்முடைய அக்கிரமங்களை அடக்கி நம்முடைய பாவங்களையெல்லாம் சமுத்தித்தின் ஆழங்களில் போட்டுவிடுவார். 20 தேவரீர் பூர்வநாட்கள்முதல் எங்கள் பிதாக்களுக்கு ஆணையிட்ட சத்தியத்தை யாக்கோபுக்கும் கிருபையை ஆபிரகாமுக்கும் கட்டளையிடுவீராக.
தமிழ் சினிமாவில் ஒளிப்பதிவாளர் நட்ராஜ் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற சதுரங்க வேட்டை படம் மூலமாக இயக்குனராக அறிமுகமானவர் தான் இயக்குனர் வினோத். இப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. அறிமுகமான முதல் படத்திலேயே தனது திறமையை நிரூபித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர் பட்டியலில் வினோத் இணைந்தார். இதைத் தொடர்ந்து இரண்டாவது படமாக தீரன் அதிகாரம் ஒன்று என்ற கதையை கையில் எடுத்தார். இப்படத்தில் முன்னணி நடிகரான கார்த்தி காவல்துறை அதிகாரியாக நடித்திருந்தார். பல்வேறு திருப்பங்களுடன், எதிர்பாராத காட்சிகளுடன் படமாக்கப்பட்டிருந்த இப்படம் மாபெரும் வெற்றியை பெற்றிருந்தது. இந்நிலையில் தீரன் அதிகாரம் ஒன்று படம் சிறந்த படம் மற்றும் சிறந்த இயக்குனர் ஆகிய பிரிவுகளில் விருதுகளுக்காக பிலிம்பேர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இப்படம் நிச்சயம் விருதுகளை வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை ரசிகர்கள் எதிர்பார்ப்பது போல் இப்படம் பிலிம்பேர் விருதை வென்றால் இயக்குனர் வினோத் மேலும் பிரபலமாகி விடுவார். ஏற்கனவே அவரது இயக்கத்தில் வெளியாகும் அனைத்து படங்களும் வெற்றி பெற்று வருவதால், வினோத் இயக்கத்தில் நடிக்க பல நடிகர்கள் ஆவலாக உள்ளனர். தற்போது விருது வென்றால் அவரது மார்க்கெட் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. theeran இயக்குனர் வினோத் தற்போது அஜித் நடித்து வரும் வலிமை படத்தை இயக்கி முடித்து உள்ளார். இப்படத்திற்காக அஜித் நடிகர்கள் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக காத்துக்கொண்டிருக்கின்றனர். வலிமை படம் எப்போது திரைக்கு வரும் என்பதே தற்போது ரசிகர்களின் ஒரே கேள்வியாக உள்ளது. வினோத் ஏற்கனவே அஜித்தை வைத்து நேர்கொண்ட பார்வை என்ற படத்தை இயக்கி உள்ள நிலையில் தற்போது வலிமை படத்தின் மூலம் இரண்டாவது முறையாக கூட்டணி வைத்துள்ளார். இந்நிலையில் மீண்டும் மூன்றாவதாக அஜித்துடன் புதிய படம் ஒன்றில் இணைய உள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. Continue Reading Related Topics:அஜித்குமார், இன்றைய சினிமா செய்திகள், இன்றைய செய்திகள், எச்.வினோத், கார்த்தி, சதுரங்க வேட்டை 2, சினிமா செய்திகள், தமிழ் சினிமா, தமிழ் செய்திகள், தமிழ் நடிகைகள், தமிழ் படங்கள், தல அஜித், தீரன் அதிகாரம் ஒன்று, நடிகர்கள், நடிகைகள், வலிமை
நிரூப்பை விட அதிக வாக்குகளை அள்ளி டாப் இடத்திற்கு சென்று விட்ட அபிநயை தேடி போய் எவிக்‌ஷனுக்கு முன்பாகவே இசைவாணி அந்த காயினை கொடுத்து விட்டார். ஐக்கி பெர்ரியும், நிரூப்பும் தான் பொம்மை டாஸ்க்கில் அப்படி விளையாடினார்கள். ஆனால், அவர்களுக்கு குறைவான ஓட்டுக்கள் எப்படி வந்தது என்கிற கேள்வியும் எழுந்துள்ளது. - Advertisement - கடைசி இடங்களில் இருக்கும் போட்டியாளர்கள் தான் பொதுவாக அடுத்த அடுத்த வாரங்களில் வெளியேறுவார்கள் என்கிற ஒரு கணிப்பு இருக்கும். ஆனால், இந்த சீசனில் கடைசி இடத்தில் இருப்பவர்கள் முதலில் சேவ் ஆகவும் டைட்டில் வின்னர் என நினைப்பவர்கள் கடைசி இடத்துக்கு செல்வதுமாக உள்ளது. நிரூப், இசைவாணி மற்றும் ஐக்கி பெர்ரி மூவரும் கடைசி இடங்களில் இடம்பிடித்தனர். - Advertisement - பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு என்றே அளவு எடுத்து செய்யப்பட்டதாக சக போட்டியாளர்களால் சொல்லப்படும் நிரூப்பை அதே சக போட்டியாளர்கள் தான் நாமினேஷன் செய்து இந்த இடத்துக்கு கொண்டு வந்துள்ளனர். மக்களும் நிரூப்புக்கு பெரியளவில் ஆதரவை அளிப்பதாக தெரியவில்லை. கடைசி மூவரில் இடம்பிடித்து சேவ் ஆனார் நிரூப். இசைவாணிக்கு தெரிஞ்சுடுச்சு இந்த வாரம் நாமினேஷனை மாற்ற அந்த காயினை பயன்படுத்தாமல் அசால்ட்டாக இருந்த இசைவாணிக்கு நிரூப் காப்பாற்றப்பட்ட போது கூட தான் தான் போவோம். ஐக்கி பெர்ரி நம்மை விட சூப்பராக விளையாடுகிறார் என நினைத்து விட்டு அபிநயிடம் தனது காயினை அதிபுத்திசாலி மாதிரி எடுத்துக் கொடுத்தார். விளம்பர இடைவேளைக்கு பிறகு மீண்டும் வந்த கமல்ஹாசன் தன்னிடம் இருக்கும் எவிக்‌ஷன் கார்டை காட்டுவதற்கு முன்பே இசையும் ஐக்கி பெர்ரியும் தங்களுக்குள் வெளியேறப் போவது தாங்கள் தான் என போட்டி போட்டுக் கொண்டனர். ஆனால், கடைசியில் ஏற்கனவே கசிந்தது போல இசைவாணியின் பெயரை கமல் காட்ட சந்தோஷத்துடன் வெளியேறினார் இசைவாணி. இசைவாணி கொடுத்த காயினை வைத்து ஒரு வாரம் கேப்டனாக மாறி தப்பித்து விடலாம். இன்னொரு வாரம் நாமினேஷனை மாற்றிவிடலாம் என மன கோட்டை எல்லாம் கட்டிக் கொண்டு இருந்த அபிநய்க்கு ஆப்பு வைப்பது போல காயின் வைத்திருக்கும் போட்டியாளர் வெளியேறினால் அவர்களுடனே அந்த காயினும் வெளியே போய்விடும் என சுருதி ஏன் காயினுடன் வெளியே போனார் என்பதை தற்போது தெளிவுபடுத்தி விட்டார். அபிநய் இசைவாணியிடம் இருந்து அந்த காயினை வாங்கி இருக்கவே கூடாது. அதுதான் மக்கள் முன்பாகவே சேவ் பண்றாங்களே என அபிநயை வெளுத்து வாங்கி வருகின்றனர் ரசிகர்கள். Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் மலைஒளி இணையதளத்தை இங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
டோக்கியோ: ஜப்பானைத் தாக்கிய கடும் பூகம்பம் மற்றும் சுனாமிக்கு 10,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. ஜப்பானில் சுனாமி தாக்கியதில் பெரும் சேதமடைந்த பகுதி மியாகி. இங்குதான் பெருமளவில் உயிரிழப்பு நடந்திருக்கலாம் என்று காவல்துறையினர் கூறுகின்றனர். கடும் சேதத்தை சந்தித்துள்ள மியாகி பகுதியின் கீழ் வரும் மினமிசான்ரிகு என்ற நகரம் சுனாமி தாக்குதலில் முழுமையாக மூழ்கிப் போய் விட்டது. இந்த நகரில் மட்டும் 10,000 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இங்கு மட்டும் இத்தனை பேர் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுவதால் ஜப்பான் பூகம்பம் மற்றும் சுனாமி தாக்குதல் உயிர் பலி பல ஆயிரமாக உயரும் அபாயமும் உருவாகியுள்ளது. இதற்கிடையே, பூகம்பம் மற்றும் சுனாமி தாக்குதலில் சிக்கி மீண்ட லட்சக்கணக்கான மக்கள் சரியான உணவு, குடிநீர், மின்சாரம் உள்ளிட்டவை கிடைக்காமல் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். ஜப்பான் பிரதமர் நவோட்டா கான் இதுகுறித்துக் கூறுகையில், 65 ஆண்டு காலத்தில் ஜப்பான் சந்தித்துள்ள மிகப் பெரிய நெருக்கடி இது. இதிலிருந்து மீண்டு வர மக்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றார். இதேபோல சென்டாய் நகரம் மிகப் பெரிய பேரழிவை சந்தித்துள்ளது. இந்த நகரின் ஒரு பகுதி முற்றிலும் அழிந்து போய் விட்டது. விமான நிலையம் முற்றிலும் சேதமடைந்துள்ளது. லட்சக்கணக்கான மக்கள் வீடுகள், உடமைகளை இழந்துள்ளனர். ஜப்பான் வரலாற்றிலேயே இல்லாத அளவு மிகப் பெரிய அளவில் மீட்பு மற்றும் நி்வாரணப் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. சுனாமி தாக்கிய பகுதிகளில் எங்கு பார்த்தாலும் சிதிலமடைந்த வீடுகள், அடித்துச் செல்லப்பட்ட கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் என சுடுகாடு போல காட்சி அளிக்கின்றன. ஜப்பான் அரசு மீட்பு நடவடிக்கைளை முழு வீச்சில் முடுக்கி விட்டிருக்கிறது. ஆயிரக்கணக்கானோர் இதில் ஈடுபட்டுள்ளனர். 2 அணு உலைகளில் கதிர்வீச்சுக் கசிவு இந்த நிலையில், ஜப்பானில் உள்ள 2 அணு உலைகள் வெடிக்கும் அபாயத்தில் இருப்பதால் அதைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த 2 லட்சம் பேர் பாதுகாப்பான பகுதிகளுக்கு இடம் பெயர்ந்துள்ளனர். இரண்டு அணு உலைகளையும் கட்டுக்குள் கொண்டு கடுமையாக போராடி வருகிறது ஜப்பான். இருப்பினும் இரண்டு அணு உலைகளிலிலும் வெப்பமும், அழுத்தமும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே போவதால் பேராபத்து நெருங்கி வருகிறது. ஜப்பானை உலுக்கிப் போட்ட மிகப் பெரிய பூகம்பமும், அதைத் தொடர்ந்து பெரும் சீரழிவை ஏற்படுத்திய சுனாமியும், ஜப்பானின் அணு உலைகளுக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தி விட்டன. பூகம்பம் ஏற்பட்டவுடனேயே 5 அணு உலைகளை மூடியது ஜப்பான். இருப்பினும் பூகம்பத்தின் அதிர்வு காரணமாக, அவற்றில் 2 அணு உலைகளில் குளிரூட்டும் சாதனங்கள் செயலிழந்தன. இதன் காரணமாக அணு உலைகளில் வெப்பம் அதிகரித்து அழுத்தம் பல ஆயிரம் மடங்கு அதிகரித்து விட்டது. சிறிய கிரகத்தை ஆய்வு செய்து 7 ஆண்டுகளுக்கு பின் திரும்பியது ஜப்பான் விண்கலம் இதன் காரணமாக அவை வெடித்துச்சிதறும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதைத் தவிர்க்க கடுமையாக போராடிக் கொண்டிருக்கிறது ஜப்பான். இதில் புகுஷிமோவில் உள்ள ஒரு அணு உலையில் நேற்று வெடிவிபத்து ஏற்பட்டது. அங்கிருந்து கதிர்வீச்சும் வெளியாகத் தொடங்கியுள்ளது. இந்தக் கதிர்வீச்சுக்கு 18 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் இன்னொரு அணு உலையிலும் லேசான கதிர்வீச்சு வரத் தொடங்கியிருப்பதாக ஜப்பான் உறுதிப்படுத்தியுள்ளது. அந்த அணு உலையிலும் வெடிவிபகத்து ஏர்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுவும் புகுஷிமோவில்தான் உள்ளது. அணு உலைகள் வெடித்துச் சிதறினால் மிகப் பெரிய மனித உயிர்ப் பலி ஏற்படும் என்பதால் ஜப்பான் மட்டுமல்லாமல் ஜப்பானுக்கு அருகே உள்ள நாடுகளும் பெரும் பீதியில் உள்ளன. இந்தியா உதவுகிறது ஜப்பானில் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ இந்தியா, கம்பளிப் போர்வைகளை அனுப்பி வைக்கிறது. பாதிக்கப்பட்ட செண்டாய் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு தரமான கம்பளிப் போர்வைகளுடன் இந்தியாவில் இருந்து முதல் விமானம் புறப்படத் தயாராக உள்ளது என வெளியுறவுச் செயலர் நிருபமா ராவ் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், டெல்லியில் உள்ள ஜப்பான் தூதருடன் இதுகுறித்து விவாதித்தோம். பாதிக்கப்பட்ட மக்களுக்கு குளிரைத் தாங்கக்கூடிய கம்பளிப்போர்வைகள் பயனுள்ளதாக இருக்கும் என்றார். ஹரியானா, பஞ்சாப் அரசுகள் கம்பளிப்போர்வைகளை அளித்து உதவி வருவதாகவும் வெளியுறவுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Share on Facebook Follow on Facebook Add to Google+ Connect on Linked in Subscribe by Email Print This Post துருக்கி ஓர் NATO அணி நாடு. ஆனால் துருக்கி NATOவின் மறுதரப்பு நாடான சீனாவிடம் இருந்து பாரிய ஏவுகணை கட்டமைப்பை (missile-defense சிஸ்டம்) கொள்வனவு செய்ய முன்வந்துள்ளது. வழமையாக அமெரிக்கா போன்ற NATO அணி நாடுகளிடம் இருந்து மட்டுமே பாரிய ஆயுதங்களை கொள்வனவு செய்யும் துருக்கி இம்முறை சீனாவை நாடியிருப்பதையிட்டு அமெரிக்கா உட்பட பல NATO நாடுகள் கவலை கொண்டுள்ளன. இந்த ஏவுகணை உடன்படிக்கை சுமார் U$ 3.5 பில்லியன் பெறுமதி கொண்டதாக இருக்கும். சீனாவின் China Precision Machinery Import and Export Corp (CPMIEC) என்ற நிறுவனமே இந்த ஏவுகணைகளை துருக்கிக்கு வழங்கவுள்ளது. அதேவேளை இந்த நிறுவனம் ஈரான், வடகொரிய போன்ற நாட்டு விடயங்கள் தொடர்பாக அமெரிக்காவின் தடைக்கு உட்பட்டதோர் நிறுவனமுமாகும். அத்துடன் பல NATO அதிகாரிகள் இந்த சீன ஏவுகணை கட்டமைப்பு ஏனைய NATO கட்டமைப்புகளுடன் ஒத்து இயங்காது எனவும் கவலை கூறியுள்ளனர். ஆனால் NATOவில் இணைந்த பல முன்னாள் சோவியத் நாடுகள் இன்னமும் ரஷ்சிய இராணுவ தளபாடங்களை பாவிக்கின்றனர். அண்மையில் Washington Post பத்திரிக்கை செய்தி ஒன்றின்படி இரானுக்குள் இயங்கிவந்த இஸ்ரேலி உளவு அமைப்பு ஒன்றை துருக்கி 2012 ஆம் ஆண்டில் அம்பலப்படுத்தியதாக கூறப்பட்டுள்ளது. சீனாவிடம் துருக்கி ஏவுகணை கொள்வனவு, NATO கவலை added by admin on October 25, 2013 View all posts by admin → © 2022, ↑ Truth is knowledge © www.navakudil.com 2020. All materials on this Web site are the property of www.navakudil.com. Unauthorized use and/or duplication of these material without express and written permission is strictly prohibited. Links with small excerpts may be used, provided that clear credit is given to this Web site. Powered by WordPress - Gabfire Themes
Albanian / Amharic / Arabic / Bengali / Bosnian / Chinese / Dutch / English / Finnish / French / German / Hindi / Indonesian / Malay / Persian / Oromo / Russian / Swedish / Somali / Tamil / Telugu / Thai / Turkish / Urdu குர்‍ஆனைப் போன்று ஏன் அல்லாஹ் முந்தைய வேதங்களை ஏழு வட்டாரமொழிகளில் (கிராத்துக்களில்) இறக்கவில்லை? குர்‍ஆன் ஏழு வட்டார மொழிகளில் முஹம்மதுவிற்கு இறக்கப்பட்டதென்று இஸ்லாம் சொல்கிறது. இதைப் பற்றி சன்னி முஸ்லிம் ஹதீஸ் தொகுப்புக்களில் அதிகார பூர்வமானதாக இருக்கும், புகாரி மற்றும் முஸ்லிம் ஹதீஸ்களிலிருந்து இரண்டு சான்றுகளைக் காண்போம். புகாரி எண் 3129: இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரேயொரு (வட்டார) மொழி வழக்குப்படி ஜிப்ரீல் (திருக்குர்ஆனை) எனக்கு ஓதக் கற்றுத் தந்தார். ஆனால், நான் அதை இன்னும் பல (வட்டார) மொழி வழக்குகளின் படி எனக்கு ஓதக் கற்றுத் தருமாறு அவர்களைக் கேட்டுக் கொண்டேயிருந்தேன். (நான் கேட்க, கேட்க அதிகப்படுத்தப்பட்டுக் கொண்டே வந்து,) இறுதியில் ஏழு (வட்டார) மொழி வழக்குகள் அளவிற்கு வந்து நின்றது. என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். முஸ்லிம் எண்: 1491 உபை பின் கஅப் (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒரு முறை) நான் பள்ளிவாசலில் அமர்ந்திருந்தேன். அப்போது ஒரு மனிதர் (பள்ளிவாசலுக்குள்) வந்து தொழலானார்; (தொழுகையில் குர்ஆன் வசனங்களை) ஒரு விதமாக ஓதினார். அதை நான் அறிந்திருக்கவில்லை. பிறகு மற்றொருவர் வந்து (அதே வசனங்களை) முதலாமவர் ஓதியதற்கு மாற்றமாக ஓதித் தொழலானார். தொழுகை முடிந்ததும் நாங்கள் அனைவரும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்றோம். நான் "இவர் குர்ஆனை நான் அறிந்திராத (ஓதல்) முறையில் ஓதினார். பின்னர் மற்றவர் வந்து முதலாமவர் ஓதியதற்கு மாறாக (அதையே) வேறு முறையில் ஓதினார்" என்றேன். நபி (ஸல்) அவர்கள் அவ்விருவரையும் ஓதிக் காட்டும்படி பணித்தார்கள். அவ்விருவரும் ஓதினர். நபி (ஸல்) அவர்கள் அவ்விருவரும் சரியாகவே ஓதினர் எனக் கூறினார்கள். (இதைக் கேட்டவுடன்) என் உள்ளத்தில் நபியவர்கள் பொய்யுரைக்கிறார்கள் என்ற எண்ணம் விழுந்தது. அறியாமைக் காலத்தில்கூட இத்தகைய எண்ணம் எனக்கு ஏற்பட்டதில்லை. என்னை ஆட்கொண்டிருந்த (அந்த எண்ணத்)தை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கண்டபோது என் நெஞ்சில் ஓர் அடி அடித்தார்கள். (அடி விழுந்ததும்) எனக்கு வியர்த்துக் கொட்டியது. அச்சத்தால் எனக்கு அல்லாஹ்வே காட்சியளிப்பதைப் போன்றிருந்தது. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம் "உபை, "குர்ஆனை ஓர் ஓதல் முறைப்படி ஓதுவீராக" என எனக்கு (இறைவனிடமிருந்து) செய்தியறிவிக்கப்பட்டது. உடனே நான் என் சமுதாயத்தாருக்கு இன்னும் சுலபமாக்கும்படி (இறைவனிடம்) கோரினேன். அப்போது "குர்ஆனை இரண்டு ஓதல் முறைப்படி ஓதுவீராக!" என எனக்கு இரண்டாவது முறையாக இறைவன் அறிவித்தான். உடனே நான் இன்னும் என் சமுதாயத்தாருக்கு சுலபமாக்கும்படி கோரினேன். மூன்றாவது முறையில் குர்ஆனை ஏழு ஓதல் முறைகளின் படி ஓதும்படி எனக்கு இறைவன் அறிவித்தான். . . . மேலும் பார்க்க: புகாரி எண்கள்: 4991, 4992, 2419 & முஸ்லிம் எண்:1490 அரபி முஸ்லிம்களுக்காக ஏழு வட்டார மொழி வகையில் குர்‍ஆனை வருந்தி கேட்டு வாங்கிய முஹம்மது: முஹம்மதுவிற்கு ஜிப்ரீல் தூதன் குர்‍ஆனின் வசனங்களை ஓதிக்காட்டினார். ஆனால், அல்லாஹ் இறக்கிய‌ வசனங்களை ஓதுவது முஸ்லிம்களுக்கு கடினமாக இருந்துள்ளது. எனவே முஹம்மது ஜிப்ரீல் தூதனிடம் வருந்தி கேட்டுக்கொண்டு, ஏழு வகையான வட்டார மொழி வழக்கத்தின் படி குர்‍ஆனை இறக்கும்படி கேட்டுக் கொண்டாராம். இதனால், அல்லாஹ்வும் அதன்படி செய்தானாம். இதன்படி மூல அரபிக் குர்‍ஆன்கள் ஏழு வகையாக இறக்கப்பட்டுள்ளது என்று முஹம்மது ஒப்புக்கொண்டுள்ளார். நாம் எழுப்பவிரும்பும் கேள்வி இதுவல்ல. நம்முடைய கேள்வி இது தான்: குர்‍ஆனைப் போன்று ஏன் அல்லாஹ் முந்தைய வேதங்களை ஏழு வட்டார மொழிகளில் கிராத்துக்களில் இறக்கவில்லை? குர்‍ஆனுக்கு முன்பு, அல்லாஹ் பல வேதங்களை இறக்கியுள்ளானாம். பைபிளையும் இறக்கியது அல்லாஹ் என்று இஸ்லாம் சொல்கிறது (ஆனால், பைபிள் இதனை மறுக்கிறது). ஒரு பேச்சுக்காக, பைபிளின் நபிகளையும் அல்லாஹ் தான் அனுப்பினான் என்று கருதிக்கொள்வோம், அடுத்து என்ன நடந்தது என்பதை கவனிப்போம். முஹம்மதுவிற்கு முன்பு பல நபிகளை அல்லாஹ் யூதர்களிடமும் இதர மக்களிடமும் அனுப்பியுள்ளான். அவர்களும் அல்லாஹ்விடமிருந்து வேதத்தைப் பெற்று மக்களுக்கு கொடுத்துள்ளார்கள். முக்கியமாக, பைபிளில் 66 புத்தகங்கள் உள்ளன, அவைகளை 40க்கும் அதிகமான நபிமார்கள், சீடர்கள், பரிசுத்தவான்கள் அல்லாஹ்விடமிருந்து பெற்று கொடுத்துள்ளார்கள். பழைய ஏற்பாட்டில் 39 புத்தகங்கள் உள்ளன, புதிய ஏற்பாட்டில் 27 புத்தகங்கள் உள்ளன. இப்றாஹீம், மூஸா, தாவீது, சாலொமோன், ஏசாயா, எரேமியா, போன்ற தீர்க்கதரிகள் ஒரு போதும் தங்களுக்கு இறக்கப்பட்ட வசனங்கள் மக்களால் ஓதமுடியவில்லை எனவே மாற்றிக் கொடுங்கள், அல்லது வேறு பல வட்டாரமொழி வழக்கத்தில் இறக்குங்கள் என்று ஒரு போதும் கேட்டதில்லை. பைபிளில் மொத்தம் 66 புத்தகங்கள், 31100க்கும் அதிகமான வசனங்கள், இப்படி இருந்தும் எந்த ஒரு தீர்க்கதரிசியும், "நீர் இறக்கிய வசனங்களை என் மக்கள் ஓதுவதற்கு கடினமாக உள்ளது, எனவே அவர்களுக்கு ஓதுவதற்கு சுலபமாக இருக்கும்வண்ணம், வேறு வகையில் இறக்குங்கள்" என்று இறைவனிடம் கேட்டதில்லை. வசனங்களை ஓதுவது முக்கியமா? அவைகளுக்கு கீழ்படிவது முக்கியமா? பைபிள் மிகவும் தெளிவாகச் சொல்கிறது, அதாவது வேத வசனங்களை வாசிக்கிறது மட்டுமல்ல, கேட்பது மட்டுமல்ல, அவைகளுக்கு கீழ்படிகிறவர்களே பாக்கியவான்கள். வெளி 1:3. இந்தத் தீர்க்கதரிசன வசனங்களை வாசிக்கிறவனும், கேட்கிறவர்களும், இதில் எழுதியிருக்கிறவைகளைக் கைக்கொள்ளுகிறவர்களும் பாக்கியவான்கள், காலம் சமீபமாயிருக்கிறது. ஆனால், இஸ்லாமில் மட்டும் என்னவோ, ஓதுவதற்கு மட்டுமே அதிகமுக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. அதுவும், அரபியில் படித்தால் தான் அதிக நன்மையை அல்லாஹ் தருவான் என்ற தவறான கோட்பாட்டை இஸ்லாம் முன்மொழிகின்றது. எனவே தான், கீழ்படிவதற்கு பதிலாக ஓதுவதற்கு முக்கியத்தும் கொடுத்து, மக்களுக்கு சுலபமாக ஒதுவதற்கு வழி உண்டாகும் படி முஹம்மது அல்லாஹ்விடம் ஏழு வட்டாரமுறைகளில் கேட்டார். ஏன் முஹம்மது இப்படி நடந்துக்கொண்டார்? மற்ற முந்தைய பைபிளின் நபிமார்கள் இப்படி செய்யவில்லை ஏன்? என்று நாம் சிந்திக்கும் போது கீழ்கண்ட தெரிவுகள் மட்டும் தான் நமக்கு கிடைக்கின்றது. 1) பைபிளின் முந்தைய நபிமார்கள் தெளிவாக முதல் முறையிலேயே வசனங்களை சொன்னதாலேயா? முஹம்மதுவினால் இப்படி செய்யமுடியவில்லை என்பதாலேயா? அல்லது குர்‍ஆனின் வசன‌ அமைப்பு, அரபியை தாய்மொழியாக கொண்ட மக்களால் சுலபமாக ஓதும்படி இல்லாமல் இருந்ததாலேயா? அல்லது 2) முந்தைய நபிமார்களின் மக்கள், முக்கியமாக யூதர்கள், முதல் முறையிலேயே வேத வசனங்களை தெளிவாக புரிந்துக்கொள்ளக்கூடிய அளவு அறிவு படைத்தவர்களாக இருந்தார்களா? அன்றைய அரபி பேசும் முஸ்லிம்க‌ள், அறிவில் குறைவுள்ளவர்களாக இருந்ததாலேயா? முஹம்மது அல்லாஹ்விடம் 7 வகையான மொழி வழக்கத்தில் கேட்டார்? அல்லது 3) ஓதுவதைக் காட்டிலும் படித்து புரிந்துக்கொண்டு கீழ்படிவது தான் முக்கியம் என்று முந்தைய நபிமார்களின் இறைவன் (யெகோவா தேவன்) சொன்னதால், ஏழு வட்டார மொழிகளில் தங்களுக்கு வேத வசனங்கள் தேவையில்லை என்று பைபிளின் நபிமார்கள் கருதியதால் தானா? அல்லது 4) குர்‍ஆனின் மூலமொழியாகிய‌ அரபியைப்போன்று அல்லாமல், பைபிளின் மூல மொழிகளாகிய எபிரேயம் கிரேக்க மொழிகளில் வேத வசனங்கள் ஒரே முறையில் தெளிவாக கருத்துக்களை சொன்னதால், ஏழுமுறை வேத வசனங்களை இறக்கவேண்டிய அவசியமில்லாமல் போய்விட்டதா? அல்லது 5) ஒலியின் வடிவில் தன் வேதத்தை மக்களின் மனதில் பாதுகாக்கவேண்டும் என்ற அல்லாஹ்வின் தவறான முடிவினால் உண்டான விளைவினால் தான், முஹம்மது ஏழு முறை கேட்டாரா? அல்லது 6) பைபிளின் தேவன் தன் வேதத்தை எழுத்துவடிவில் பாதுகாக்கவேண்டும் என்று எடுத்த ஞானமான முடிவினால், முந்தைய நபிமார்களுக்கு, மறுபடியும் இறைவனிடம் சென்று "ஒன்ஸ் மோர்(Once More)" என்று கேட்கவேண்டிய அவசியமில்லாமல் போய்விட்டதா? அல்லது 7) மேற்கண்ட ஹதீஸின் படி முஹம்மதுவோடு இருந்த சஹாபா கருதியது போன்று முஹம்மது பொய் சொன்னாரா? மக்கா மற்றும் மதினா என்ற இரண்டு ஊர்களில் இருந்த மக்கள் சுலபமாக குர்‍ஆன் ஓதவேண்டும் என்று விரும்பிய முஹம்மதுவிற்கு, அவருக்கு பிறகு அரபி தெரியாத கோடிக்கணக்கான மக்கள் புரியாமலேயே குர்‍ஆனை அரபியில் படிக்கவேண்டுமே, அவர்கள் புரியாமல் எப்படி கீழ்படிவார்கள் என்று சிந்திக்க தெரியாமல் போனதென்ன? முஹம்மதுவை விட்டு விடுங்கள் அவர் ஒரு மனிதர், ஆனால் அல்லாஹ்விற்கு எங்கே போனது ஞானம்? அரபி பேசும் முஸ்லிம்களுக்காக ஏழு வகையான வட்டார மொழியில் வசனங்களை இறக்கிய அல்லாஹ், அன்றிலிருந்து இன்றுவரை இதர மொழிகளை பேசும் கோடிக்கணக்கான உலக மக்களின் 'அரபியை புரிந்துக்கொள்ளக்கூடாத த‌ன்மையை' ஏன் புரிந்துக்கொள்ள முடியவில்லை? சிறிது சிந்திப்போமா? முடிவுரை: இதுவரை பார்த்த விவரங்களின் படி நமக்கு புரிவது என்னவென்றால், எழுத்துவடிவில் அல்லாமல், வெறும் ஓசை வடிவில் மனப்பாடம் செய்யும் போது, உண்டாகும் பிரச்சனையை சமாளிக்க 'முஹம்மது ஆடிய நாடகம் தான், ஏழு வகையான குர்‍ஆனை அல்லாஹ் இறக்கிய நிகழ்ச்சி'. ஒரு சாதாரண மனிதராக இருந்த முஹம்மது, எத்தனை வசனங்களைத் தான் மனப்பாடம் செய்யமுடியும்? அது மட்டுமல்லாமல், சில மாதங்களுக்கு முன்பு அல்லாஹ் இறக்கியதாக தாம் சொன்ன வசனங்களை, மறுபடியும் சிலர் வெவ்வேறு வகையாக ஓதிக்காட்டும் போது, அதனை சரி பார்க்க முடியாமல் தவித்தபோது அவர் சொன்ன பொய் தான் 'ஏழு வகையான குர்‍ஆன் ஓதுதல் முறை', காது உள்ளவன் கேட்கக்கடவன், அறிவு உள்ளவன் சிந்திக்கக்கடவன். இஸ்லாமையும் கிறிஸ்தவைத்தையும் ஆய்வு செய்யும் போது, அல்லாஹ்வும் யெகோவா தேவனும் வெவ்வேறானவர்கள் என்பதற்கு 'இவ்விருவர்கள் தங்கள் வார்த்தைகளை எப்படி பாதுகாக்கவேண்டும்' என்று அவர்கள் கருதிய விதம் கூட வித்தியாசமானதே என்பதை அறியமுடியும். பைபிளின் தேவன் தன் வேதத்தை எப்படி பாதுகாத்தார்? பைபிளின் தேவன் எத்தனை முறை தம் வசனங்களை எழுதும்படி (மனப்பாடம் செய்யும்படி அல்ல) கட்டளையிட்டுள்ளார் என்பதை கவனிக்கவும். மனப்பாடம் செய்வதற்கு பைபிள் எதிரியல்ல, ஆனால் வேதம் பாதுகாக்கப்படுவதற்கு மனப்பாடம் சிறந்த வழியல்ல‌ என்பதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன். உபாகமம் 31:19 19. இப்பொழுது நீங்கள் இந்தப் பாட்டை எழுதிக்கொண்டு, இதை இஸ்ரவேல் புத்திரருக்குப் படிப்பித்து, இந்தப் பாட்டு எனக்குச் சாட்சியாக இஸ்ரவேல் புத்திரருக்குள்ளே இருக்கும்படி இதை அவர்கள் வாயில் வழங்கப்பண்ணுங்கள். யாத்திராகமம் 34: 27 27. பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி: இந்த வார்த்தைகளை நீ எழுது; இந்த வார்த்தைகளின்படியே உன்னோடும் இஸ்ரவேலோடும் உடன்படிக்கைபண்ணினேன் என்றார். யாத்திராகமம் 17: 14 14. பின்பு கர்த்தர் மோசேயை நோக்கி: இதை நினைவுகூரும்பொருட்டு, நீ ஒரு புஸ்தகத்தில் எழுதி, யோசுவாவின் செவி கேட்கும்படி வாசி யாத்திராகமம் 24:4 4. மோசே கர்த்தருடைய வார்த்தைகளையெல்லாம் எழுதிவைத்து, அதிகாலமே எழுந்து, மலையின் அடியில் ஒரு பலிபீடத்தைக் கட்டி, இஸ்ரவேலுடைய பன்னிரண்டு கோத்திரங்களுடைய இலக்கத்தின்படியே பன்னிரண்டு தூண்களை நிறுத்தினான். 7. உடன்படிக்கையின் புஸ்தகத்தை எடுத்து, ஜனங்களின் காதுகேட்க வாசித்தான்; அவர்கள் கர்த்தர் சொன்னபடியெல்லாம் செய்து, கீழ்ப்படிந்து நடப்போம் என்றார்கள். யோசுவா 24:26 26. இந்த வார்த்தைகளை யோசுவா தேவனுடைய நியாயப்பிரமாண புஸ்தகத்தில் எழுதி, . . எரேமியா 26:2 2. நீ ஒரு புஸ்தகச்சுருளை எடுத்து, யோசியாவின் நாட்களிலே நான் உன்னுடனே பேசின நாள் முதற்கொண்டு இந்நாள்மட்டும் இஸ்ரவேலைக்குறித்தும், யூதாவைக்குறித்தும், சகல ஜாதிகளைக்குறித்தும் உன்னோடே சொன்ன எல்லா வார்த்தைகளையும் அதிலே எழுது. எபிரேய மொழியில் "கதப்" என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது, இதன் பொருள் "எழுதுதல், உளியால் கற்களில் எழுதுதல்" என்பதாகும். இது 227 முறை பயன்படுத்தப்பட்டுள்ளது. https://biblehub.com/hebrew/strongs_3789.htm Strong's Hebrew: 3789. כָּתַב (kathab) — 227 Occurrences முஹம்மதுவிற்கு 2000 ஆண்டுகளுக்கு முன்பே யெகொவா தேவன் எழுதுவதற்கு கொடுத்திருக்கின்ற முக்கியத்துவதைப் பார்த்தால், இவரும் அல்லாஹ்வும் வெவ்வேறானவர்கள் என்பதைத் தான் புரிந்துக் கொள்ள முடிகின்றது.
கா த்தான்குடி மீடியா போர த்தின் 16வது வருடாந்த மாநாடு இன்று (6.2.2016) சனிக்கிழமையன்று காத்தான்குடியில் நடைபெறுகிறது.காத்தான்குடி மீடியா போரம் கடந்த 16 வருடங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டது. ஊடகவியலாளர் மௌலவி எஸ்.எம்.எம்.முஸ்தபாவின் முயற்சியினாலும் அவர் எடுத்த நடவடிக்கையினாலும் இந்த போரம் ஆரம்பிக்கப்பட்டது.காத்தான்குடியிலுள்ள பல்வேறு ஊடகங்களிலும் கடமையாற்றும் ஊடகவியலாளர்கள் மற்றும் பிராந்திய செய்தியாளர்கள் ஆகியோரை உள்ளடக்கியதாக ஊடகவியலாளர்களின் நலன் கருதி காத்தான்குடி மீடியா போரம் உருவாக்கப்பட்டது.ஊடகவியலாளர்களின் நலன் மற்றும் ஐக்கியம் ஒற்றுமை என்பவற்றை இலக்காக கொண்டு இந்த அமைப்பு செயற்பட்டு வருகின்றது. இந்த அமைப்பின் ஆரம்ப கால உறுப்பினர்களாக ஊடகவியலாளர் மௌலவி எஸ்.எம்.எம்.முஸ்தபா, மற்றும் ஊடகவியலாளர் எம்.எஸ்.எம்.நூர்தீன், எம்.எஸ்.ஏ.மஜீத் (மதியன்பன்) ஆசிரியர்களான ஆர்.ரி.எம்.அனஸ், ஐ.ஆதம்லெவ்வை, எம்.ஐ.எம்.அன்சார் ஏ.எச்.மகம்மது ஆகியோர் இருந்து செயற்பட்டுள்ளனர். காத்தான்குடி மீடியா போரம் தனது செயற்பாட்டினை மிகவும் சிறப்பாக முன்னெடுத்து வந்த நிலையில் ஊடகவியலாளர் எம்.எஸ்.எம்.நூர்தீன் தலைவராகவும் ஊடகவியலாளர் மௌலவி எஸ.எம்.எம்.முஸ்தபா செயலாளராகவும் எஸ்.ஏ.கே.பலீலுர் ரஹ்மான் பொருளாளராகவும் மற்றும் எட்டு நிர்வாக உறுப்பினர்களைக் கொண்ட நிருவாக கட்டமைப்புடன் செயற்பட்டு வந்தது. பின்னர் 2014ம் ஆண்டு இதன் தலைவராக ஊடகவியலாளர் மௌலவி எஸ்.எம்.எம்.முஸ்தபா மற்றும் செயலாளராக ஊடகவியலாளர் எம்.ஏ.சி.எம்.ஜெலீஸ் பொருளாளராக எஸ்.ஏ.கே.பலீலுர் ரஹ்மான் ஆகியோருடன் நிருவாக உறுப்பினர்களாக சில ஊடகவியலாளர்கள் இருந்து இந்த அமைப்பை வழிநடாத்தினர். இதையடுத்து கடந்த 2015ம் ஆண்டு மே மாதம் இந்த போரத்தின் தலைவராக ஊடகவியலாளர் ஏ.எல்.டீன் பைறூஸ் மற்றும் செயலாளராக ஊடகவியலாளர் எம்.எச்.எம்.அன்வர், பொருளாளராக எஸ்.ஏ.கே.பலீலுர் ரஹ்மான், உப தலைவராக ஊடகவியலாளர் மௌலவி எஸ்.எம்.எம்.முஸ்தபா, உப செயலாளராக எம்.ஐ.எம்.நசார் , தகவல் பணிப்பாளராக எம்.ஐ.எம்.கமால்தீன் மற்றும் நிருவாக உறுப்பினர்களாக 11 பேர் தெரிவு செய்யப்பட்டதுடன் பொதுச் சபை உறுப்பினர்களாக 24 பேரும் உள்ளனர். காத்தான்குடி மீடியா போரத்திலுள்ள மேற்படி உறுப்பினர்கள் சுதந்திர ஊடகவியலாளர்களாகவும், பல்வேறு அச்சு இலத்திரனியல் ஊடகங்களின் பிராந்திய செய்தியாளர்களாகவும், குறுஞ்செய்திச்சேவை ஊடகவியலாளர்களாகவும், பிராந்திய செய்தி இணையத்தளங்களின் ஆசிரியர்களாகவும் அதன் செய்தியாளர்களாகவுமுள்ளனர். மேற்படி காத்தான்குடி மீடியா போரம் தனித்துவ மிக்க ஒரு அமைப்பாக காத்தான்குடியில் செயற்பட்டு வருகின்றது.தேசிய மட்டத்திலும் பிராந்திய மட்டத்திலும் உள்ள ஊடக அமைப்புக்களுடன் தொடர்பினை ஏற்படுத்தி அவர்களுடன் சிறந்த ஊடக உறவினை பேணி வருகின்றது. நமது நாட்டில் கடந்த காலத்தில் இடம் பெற்ற அசாதாரண சூழ்நிலையில் ஊடகவியலாளர்களும் ஊடகங்களும் பல்வேறு நெருக்கடிகளுக்கும் அச்சுறுத்தல்களுக்கும் முகம் கொடுத்தனர்.இந்த சூழ் நிலையிலும் கூட காத்தான்குடி மீடியா போரம் பல சவால்களையும் நெருக்கடிகளையும் சந்தித்து தனது ஊடகப் பயணத்தினை தொடர்ந்தே வந்துள்ளது. சுனாமி அனர்த்தம் போன்ற இயற்கை அனர்த்தங்கள் மற்றும் யுத்த அனர்த்தம் போன்ற காலங்களிலும் இந்த அமைப்பின் அங்கத்தவர்களின் ஊடகப் பணி என்பது மிகவும் காத்திரமாக இருந்து வந்துள்ளது.பிராந்திய மட்டத்தில் எதிர் நோக்கிய ஊடக ரீதியான சவால்களையும் காத்தான்குடி மீடியா போரம் காத்திரமாக எதிர் கொண்டதையும் இங்கு சுட்டிக்காட்டாமல் இருக்க முடியாது. கடந்த காலங்களில் ஊடகம் தொடர்பான பல் வேறு செயலமர்வுகளை காத்தான்குடி மீடியா போரம் மாணவர்கள் மற்றும் ஊடகத்துறையில் ஆர்வமுள்ள இளைஞர் ,யுவதிகளுக்கு நடாத்தியுள்ளது. அத்தோடு காலத்துக்குக் காலம் பல்வேறு விடயங்கள் தொடர்பாக பல செயலமர்வுகளையும் நடாத்தியுள்ளது. வறுமையினால் சவூதி அரேபியாவுக்கு வீட்டுப் பணிப்பெண்ணாகச் சென்று அங்கு கொலைக்குற்றச் சாட்டு ஒன்றில் மரணதண்டனைக்குள்ளாக்கப்பட்ட மூதூர் றிசானா நபீக் தொடர்பாக வெளிவந்த கட்டுரைகள் ஒன்றுசேர்க்கப்பட்டு தொகுத்து 'தேசத்தின் புதல்வி றிசானா நபீக்' எனும் புத்தக மொன்றும் காத்தான்குடி மீடியா போரத்தினால் வெளியிடப்பட்டு அந்த புத்தகத்தின் மூலம் கிடைக்கப் பெற்ற ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபா பணம் றிசானா நபீக்கின் குடும்பத்திற்கு வழங்கப்பட்டமை இங்கு குறிப்பிட்டுக் கூறவேண்டிய ஒன்றாகும். அதே போன்று சிகரம் மண்முனைப்பற்று மற்றும் புதிய காத்தான்குடி பிரசேதங்களிலுள்ள வருமானம் குறைந்த குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு தொடர்ந்து வருடாந்தம் காத்தான்குடி மீடியா போரத்தினால் பாடசாலை உபகரணங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. கடந்த 2014ம் ஆண்டு கிழக்கு மாகாணத்திலுள்ள முஸ்லிம் ஊடகவியலாளர்களின் ஹஜ் பெருநாள் ஒன்றுகூடலொன்றை காத்தான்குடி மீடியா போரம் நடாத்தியது. இவ்வாறு சிறப்பாக பிராந்திய மட்டத்தில் செயற்பட்டு வரும் காத்தான்குடி மீடியா போரம் தனது 16வது ஆண்டு வருடாந்த மாநாட்டினை இன்று காத்தான்குடி ஜுமைறா பெலஸில் நடாத்தவுள்ளது. போரத்தின் தலைவர் ஏ.எல்.டீன் பைறூஸ் தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டின் பிரதம விருந்தினராக மீள்குடியேற்ற புனர்வாழ்வு புனரமைப்பு பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் மற்றும் கௌரவ விருந்தினராக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாறூக், மற்றும் விசேட விருந்தினராக நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளர் பொறியியலாளர் எம்.எம்.அப்துர் ரஹ்மான் மற்றும் சிறப்பு விருந்தினர்களாக காத்தான்குடி காதி நீதிபதி மௌலவி எஸ்.எம்.அலியார் பலாஹி, காத்தான்குடி ஜம் இய்யத்துல் உலமா சபையின் தலைவர் மௌலவி ஏ.எம்.அப்துல் காதர் பலாஹி, காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத் தலைவர் றஊப் ஏ மஜீட் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளதுடன் காத்தான்குடியிலுள்ள முக்கியஸ்தர்கள் உலமாக்கள் பிரமுகர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். இந்த மாநாட்டில் நினைவு மலர் ஒன்று வெளியீட்டு வைக்கப்படவுள்ளதுடன் காத்தான்குடி மீடியா போரத்திலுள்ள உறுப்பினர்களின் பிள்ளைகளில் கடந்த ஆண்டுகளில் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த பிள்ளைகள் பாராட்டப்படவுள்ளதுடன் போரத்தின் நிருவாக உறுப்பினர்களுக்கும் நினைவுச்சின்னங்கள் வழங்கப்படவுள்ளதுடன் ஊடகவியலாளர்கள் கௌரவிக்கப்படவுமுள்ளனர். இந்த வைபவத்தில் தினகரன் பத்திரிகையின் ஆசிரியர் பீடத்தினைச் சேர்ந்த ஊடகவியலாளர் ஏ.ஜி.எம்.தௌபீக்கின் சிறப்புரையும் இடமபெறவுள்ளது இந்த மாநாட்டையொட்டி இன்று காலை தொடக்கம் மாலை வரை காத்தான்குடி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் 'இளம் செய்தியாளர்களை உருவாக்குவோம்' எனும் தலைப்பில் உயர்தரம் கற்கும் மாணவர்கள் மற்றும் ஊடகத்துறையில் ஆர்வமுள்ள இளைஞர்களுக்கான ஒருநாள் செயலமர்வும் நடைபெறவுள்ளது. இந்த செயலமர்வில்' விடிவெள்ளி' பத்திரிகையின் பிரதம ஆசியர் எம்.பி.எம்.பைறூஸ் சமூக ஊடகங்கள் பற்றியும், மற்றும் காத்தான்குடி பெண் எழுத்தாளர் ஜனாபா பாத்தும்மா முகம்மட் 'கட்டுரை, கவிதை ,சிறுகதை எழுதுவது எப்படி' என்பன பற்றியும் அருள் சஞ்சித் 'ஊடகத்துறையில் புகைப்படக்கலை' எனும் தலைப்பிலும் விரிவுரைகளை நடாத்தவுள்ளனர்.
இயக்குநரும், நடிகருமான ஆர். பார்த்திபன், கதிர், ஐஸ்வர்யா ராஜேஷ், ஸ்ரேயா ரெட்டி உள்ளிட்ட பலர் முதன்மையான கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் ‘சுழல்= தி வோர்டெக்ஸ்’ எனும் அமேசான் பிரைம் வீடியோவில் ஜூன் 17 ஆம் தேதி முதல் வெளியாகும் வலைதள தொடரின் முன்னோட்டம் வெளியானது. ‘விக்ரம் வேதா’ புகழ் இயக்குநர்கள் புஷ்கர் – காயத்ரி அவர்களின் சொந்த பட தயாரிப்பு நிறுவனமான வால் வாட்சர் பிலிம்ஸ் எனும் நிறுவனத்தின் சார்பில் தயாராகியிருக்கும் முதல் வலைதளத் தொடர் ‘ சுழல்- தி வோர்டெக்ஸ்’. இயக்குநர்கள் பிரம்மா மற்றும் எம். அனுசரண் இயக்கத்தில் தயாராகியிருக்கும் இந்த வலைதள தொடரில் நடிகர்கள் ஆர். பார்த்திபன், கதிர், சந்தானபாரதி, பிரேம், நடிகைகள் ஐஸ்வர்யா ராஜேஷ், ஸ்ரேயா ரெட்டி, நிவேதா சதீஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். மியூக்ஸ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த வலைதள தொடருக்கு, சாம் சி எஸ் இசையமைத்திருக்கிறார். அமேசான் பிரைம் வீடியோவில் ஜூன் 17 தேதி முதல் வெளியாகும் ‘சுழல்- தி வோர்டெக்ஸ்’ என்ற க்ரைம் இன்வெஸ்டிகேட் திரில்லர் தொடரின் முன்னோட்டம் வெளியிடப்பட்டது. இதற்காக சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் பிரம்மாண்டமுறையில் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் அமேசான் ஒரிஜினல்ஸ் தலைவர் அபர்ணா புரோகித், அமேசான் இந்திய தலைவர் சித்தானந்த் ஸ்ரீராம், புஷ்கர்= காயத்ரி, அனுசரண், பிரம்மா, ஆர். பார்த்திபன், கதிர், ஐஸ்வர்யா ராஜேஷ், ஸ்ரேயா ரெட்டி ஆகியோருடன் படக்குழுவினரும், படத்தில் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்களும் கலந்து கொண்டனர். இவ்விழாவில் அமேசான் இந்திய தலைவர் சித்தானந்த் ஸ்ரீராம் பேசுகையில், ” அமேசான் பிரைம் வீடியோவில் முதன்முதலாக இந்திய கதைகள், சர்வதேச மொழிகளில் வெளியாகிறது. தமிழ் மண்ணில் நடைபெறும் கதையொன்று, அதன் நிலவியல் எல்லைகளைக் கடந்து, மொழிகளைக் கடந்து, சர்வதேச அளவில் பார்வையாளர்களைச் சென்றடைவதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறோம். திறமையான படைப்பாளிகள் குழுவாக இணைந்து உருவாக்கியிருக்கும் ‘ சுழல்- தி வோர்டெக்ஸ்’ எனும் வெப் சீரிஸ் ஜூன் 17ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் வெளியாகிறது. அதற்கான முன்னோட்டத்தை வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறோம்.” என்றார். அமேசான் பிரைம் ஒரிஜினல்ஸ் தலைவர் அபர்ணா புரோகித் பேசுகையில், ” அமேசான் ஒரிஜினல்ஸ் வெளியிடும் முதல் தமிழ் வலைதள தொடர் ‘சுழல்= தி வோர்டெக்ஸ்’ . இயக்குநர்கள் புஷ்கர் & காயத்ரி இந்த தொடரின் கருவை எங்களிடம் சொன்னபோது உண்மையில் மிக்க மகிழ்ச்சி அடைந்தோம். அவர்களுடன் இணைந்து பணியாற்ற தொடங்கினோம். கதையும், கதை சம்பவங்களும் தமிழக மண்ணில் நடந்தாலும், கதையின் மையப்புள்ளி சர்வதேச அளவிலான பார்வையாளர்களுடன் எளிதாக தொடர்பு கொள்ள முடியும் என்பதால் ஒப்புக்கொண்டோம். மேலும் இந்த தொடரில் வரும் கதாபாத்திரங்கள், உறவுகள், உணர்வுகள் என அனைத்தும் உலகத்திலுள்ள அனைத்து மக்களுக்குமானது. இந்த தொடர் குறிப்பிட்ட புவியியல் எல்லைகளை கடந்து, பல மொழிகளில் முதன் முதலாக வெளியாகிறது. முப்பதுக்கும் மேற்பட்ட மொழிகளில், 240க்கும் மேற்பட்ட நாடுகளில் முதன் முதலாக தமிழில் தயாரான தொடர், அமேசான் ப்ரைமில் வெளியாகிறது. இதன் மூலம் நம்முடைய இயக்குநர்களின் படைப்பு, சர்வதேச அளவிலான பார்வையாளர்களை சென்றடையும். இந்த தொடரின் முன்னோட்டத்தை அபுதாபியில் நடைபெற்ற திரைப்பட விழாவில் வெளியிட்ட போதும் பெரும் வரவேற்பு கிடைத்தது’.’ என்றார். புஷ்கர் & காயத்ரி பேசுகையில், ” இந்த தொடரின் கருவை மட்டும் தான் நாங்கள் முதலில் மும்பையில் இருந்த அமேசான் ஒரிஜினல்ஸ் தலைவரான அபர்ணா புரோகித்திடம் தெரிவித்தோம். கேட்டு முடித்ததும், இதுதான் அமேசானின் முதல் தமிழ் ஒரிஜினல்ஸ் தொடர் என உறுதியளித்தார். அந்த தருணத்தில் எங்களிடம் ஏற்பட்ட நம்பிக்கை, தற்போது வரை பொறுப்புணர்வுடன் கூடிய தன்னம்பிக்கையாக வளர்ந்துகொண்டே இருக்கிறது. ‘விக்ரம் வேதா’விற்கு பிறகு எங்களை சந்திக்கும் பலரும், அடுத்து என்ன? என்ற வினாவை முன் வைப்பார்கள். அவர்களுக்கு இந்த தொடர் தான் சரியான பதிலாக இருக்கும். மூன்றாண்டு காலமாக இதன் திரைக்கதையை எழுதி, உருவாக்கியிருக்கிறோம். இந்த தொடர் முதலில் இந்திய மொழிகளில் வெளியாகும் என தெரிவித்தனர். தற்போது அதையும் கடந்து முப்பதுக்கும் மேற்பட்ட மொழிகளில் வெளியாகும் என அறிவித்து, எங்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளனர். இந்தத் தொடரை இயக்கிய இயக்குநர்கள் அனுசரண் மற்றும் பிரம்மா, நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரும் இணைந்து கடுமையாக உழைத்து இதனை உருவாக்கி இருக்கிறார்கள். தமிழ் திரை உலகில் பெரும்பாலும் கதாசிரியர்களே இயக்குனர்களாகவும் இருக்கிறார்கள். ஆனால் நாங்கள் இந்தத் தொடருக்காக கதை எழுதி, இயக்குவதற்காக இயக்குநர்கள் அனுசரண் மற்றும் பிரம்மாவை கேட்டுக் கொண்டபோது, உடனடியாக அவர்கள் ஒப்புக் கொண்டார்கள். இதற்காக அவர்களுக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இதுபோன்ற பாணி தமிழ்த்திரையுலகில் இல்லை. இதனை தொடங்கி வைத்த இயக்குநர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நடிகர்கள் கதிர், பார்த்திபன், ஐஸ்வர்யா ராஜேஷ், ஸ்ரேயா ரெட்டி என அனைவரும் தங்களுடைய ஒத்துழைப்பை முழுமையாக வழங்கினார்கள். இந்தத் தொடரின் கதையை திரைப்படத்திற்கு எழுதுவது போல் வில்லன், கதாநாயகன், கதாநாயகி என எழுதவில்லை. எழுத எழுத எழுதிக்கொண்டே இருக்கிறோம். ஒரு புள்ளியில் கதாபாத்திரங்களை கடந்து கதை நிகழும் நகரம் கூட கதாபாத்திரமாக மாறியது. இதை படமாக எடுக்க வேண்டுமென்றால்.. ஏழு எட்டு மணி நேரம் தேவைப்படும். அதனால் அதனை எழுதி தனியாக வைத்து விட்டோம். அதனை அமேசான் ‘சுழல்= தி வோர்டெக்ஸ்’ எனும் எட்டு அத்தியாயங்களைக் கொண்ட வலைத்தளத் தொடாராக உருவாக்கியிருக்கிறது.”என்றார். நடிகர் கதிர் பேசுகையில், ” இந்த தொடரில் நடிக்கும் போது, இந்த தொடர் உலகம் முழுவதும் 30 க்கும் மேற்பட்ட மொழிகளில் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பில் பணியாற்றவில்லை. நம்முடைய கதையை உலகத்தில் உள்ள பலரும், அவர்களுடைய இடத்தில்.. அவர்களுடைய மொழியில்.. பார்க்க முடியும் என்றால் அது பெருமகிழ்ச்சி. இந்த தொடரில் இடம்பெற்றிருக்கும் கதாபாத்திரங்கள், சம்பவங்கள்.. அனைத்தும் நம் மண் சார்ந்தவை. ஆனால் இவை சர்வதேச பார்வையாளர்களும் ஏற்றுக் கொள்ளும் வகையில் உருவாகி இருக்கிறது. இந்தப்படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறேன். ‘பரியேறும் பெருமாள்’ என் திரையுலக வாழ்க்கையில் முக்கிய திருப்புமுனையை ஏற்படுத்திய படம். அதனையடுத்து என் திரையுலக பயணத்தில் அடுத்த கட்டத்தை நோக்கிய வளர்ச்சியை ஏற்படுத்திய தொடர் ‘சுழல்’. இதற்காக தயாரிப்பாளர்கள் புஷ்கர் & காயத்ரி மற்றும் அமேசானுக்கு என்றென்றும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த தொடர் குறித்து அமேசான் குழுவினர் வெளிப்படுத்தும் தன்னம்பிக்கை, எங்களை மேலும் உற்சாகப்படுத்தி வருகிறது. ஜூன் 17ஆம் தேதி முதல் ‘ சுழல்’ தொடர் மூலம் நாங்கள் வெவ்வேறு மொழி பேசி பார்வையாளர்களை சென்றடைவதில் மகிழ்ச்சி அடைகிறோம்.” என்றார். இயக்குநர் பிரம்மா பேசுகையில், ” இந்த தொடரின் முதல் நான்கு அத்தியாயங்களை இயக்கியிருக்கிறேன். தொடரை இயக்குவதற்கு முன் தயாரிப்பாளர்களான புஷ்கர் & காயத்ரி, ஒளிப்பதிவாளர், கலை இயக்குனர் என தொழில்நுட்ப கலைஞர்களுடன் நீண்ட விவாதம் நடத்தி, தெளிவான திட்டமிடலையும் உருவாக்கிக் கொண்டோம். இந்த விவாதத்தின் ஊடாக கதாசிரியர்கள் எந்த புள்ளியை சர்வதேச அளவிலான பார்வையாளர்களுக்கு புரிய வைக்க வேண்டும் என்று எழுதினார்களோ.. அதனை நாங்கள் முதலில் தெளிவாக உட்கிரகித்தோம்.” என்றார். இயக்குநர் அனுசரண் பேசுகையில், ” இந்த தொடரின் இறுதி நான்கு அத்தியாயங்களை நான் இயக்கி இருக்கிறேன். நான் திரைப்படங்களை எழுதி, இயக்கியிருக்கிறேன். ஆனால் தொடர் இயக்குவது முதல் முறை என்பதால், இதுகுறித்த புரிதலுக்காக நீண்ட நேரம் பல விசயங்களை தேடி தெரிந்து கொண்டேன். ஏனெனில் இந்தத் தொடரை நேர்த்தியாக இயக்க வேண்டும் என்று விரும்பினேன். அத்துடன் தயாரிப்பாளர்களான புஷ்கர் & காயத்ரி என் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை காப்பாற்ற வேண்டும் என்ற கடமையும் எனக்கு இருந்தது. இந்தத் தொடரை இயக்கத் தொடங்கிய பிறகு மிகப்பெரிய பொறுப்புணர்வை உணர்ந்தேன். எதிர்காலத்தில் வேறு சில திறமையான இயக்குநர்களுக்கும் இது போன்ற வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என்றும் எண்ணினேன். ” என்றார். நடிகர் ஆர் பார்த்திபன் பேசுகையில், ” 32 ஆண்டு கால திரையுலக வாழ்க்கையில் சௌகரியமான முறையில் ஒரு படைப்பில் பணியாற்றி இருக்கிறேன் என்றால், அது இந்த சுழல் தொடரில் தான். நான் முதன் முதலில் நடிக்கும் வலைதள தொடர் இது. படப்பிடிப்பு நெருங்கும் தருணத்தில் என்னைத் தொடர்பு கொண்டு புஷ்கர் & காயத்ரி பேசினார்கள். அவர்களது இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்பது என்னுடைய விருப்பம். இந்தத் தொடரின் கதையை கேட்டவுடன் அதில் ஒரு ஜீவன் இருந்ததை உணர்ந்தேன். நம்முடைய கலாச்சாரத்தில் ஒரு புராணக்கதை உண்டு. ஞானப்பழம் யாருக்கு என்ற அநத கதையில், ஞான பழத்திற்காக முருகன் உலகமெல்லாம் சுற்ற சென்று விடுவார். விநாயகர் அருகிலிருக்கும் அப்பா, அம்மாவை சுற்றிவிட்டு, ஞானப்பழத்தைப் பெற்றுவிடுவார். அந்த விநாயகர் கதைதான் அமேசானின் கதை. அந்தக் காலத்தில் சிவாஜியை விட மிகச் சிறந்த நடிகர்கள் இருக்கிறார்கள். ஆனால் அவர்களுடைய நடிப்பு பெரும்பாலானவர்களுக்கு தெரியாது. ஏனெனில் ஒவ்வொரு ஊராகச் சென்று நடிக்க வேண்டும். சென்னையில் அழகாக நடிக்க வேண்டும். பிறகு கோயம்புத்தூருக்குச் சென்று மீண்டும் அதே போல் அழகாக நடிக்க வேண்டும். பிறகு மும்பைக்குச் சென்று அதே போல அழகாக நடிக்க வேண்டும். ஆனால் அமேசானில்.. ஒரே ஒரு தொடரில் நடித்தால், உலகத்தில் உள்ள 240 நாடுகளில் ஒரே நேரத்தில், இந்த தொடரைப் பார்க்க முடியுமென்றால், இதுதான் அமேசானின் ஞானப்பழம். நம்முடைய படைப்பை உலக அளவில் ஒரே தருணத்தில் பார்த்து ரசிக்கிறார்கள் என்றால் அது மட்டற்ற மகிழ்ச்சி தானே. ரெண்டு பொண்டாட்டியுடன் குடும்பம் நடத்துவது கடினம் என்பார்கள். ஆனால் இங்கு இரண்டு புருஷன்களுடன் குடும்பம் நடத்திய அனுபவம். ஆனால் வித்தியாசம் எதுவும் தெரியவில்லை. ஒரே ஆள் இரட்டை வேடம் போட்டது போல் இருந்தது. இந்த படத்தில் பணியாற்றிய இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர் உள்ளிட்ட தொழில்நுட்ப கலைஞர்களையும், சந்தானபாரதி போன்ற கலைஞர்களையும் மனதார பாராட்டுகிறேன். இந்தத் தொடரில் சண்முகம் என்ற கதாபாத்திரத்தில் தொழிற்சங்க தலைவராகவும், ஒரு பெண்ணின் தகப்பனாராகவும் நடித்திருக்கிறேன். என் மகள் மீது வைத்திருக்கும் அன்பையும், பாசத்தையும் வெளிப்படுத்த தெரியாது. எனக்கு நடிக்க தெரியாது அதனால் என்னுடைய நடிப்பு நன்றாக இருக்கும்.” என்றார். நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பேசுகையில், ” எனக்கு இயக்குநர்கள் புஷ்கர் & காயத்ரி மீது நல்ல மரியாதை உண்டு. ஏனெனில் அவர்கள் கலை மீது அளவற்ற பற்று கொண்டவர்கள். கொரோனா காலகட்டத்தின் போது என்னை அழைத்து வலைதள தொடரில் நடிக்க வேண்டும் என கேட்டார்கள். நான் உடனே ஒப்புக்கொண்டேன். ஆனால் அந்த தொடர் இவ்வளவு பிரம்மாண்டமாக வெளியாகும் என சற்றும் எதிர்பார்க்கவில்லை. இந்த தொடரில் நடிப்பதற்கு முன் என்னிடம் ஒரு புத்தகத்தை கொடுத்தார்கள். அதில் சில அத்தியாயங்களில் நான் இல்லை. அப்போது ஏன் இந்தத் தொடரில் என்னை தேர்வு செய்தார்கள்? என யோசித்தேன். ஆனால் கதை முழுவதும் படித்த பிறகு, என்னுடைய கதாபாத்திரத்தின் அழுத்தத்தை உணரமுடிந்தது. நந்தினி என்ற பிடிவாதம் கொண்ட பெண்ணாக அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். என் தங்கை காணாமல் சென்று விடுவாள். அவளை தேடி நான் பயணப்படுவேன். கதையில் பல இடங்களில் நந்தினி, என் நிஜத்தை பிரதிபலித்திருப்பாள். நான் இதுவரை 30-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து விட்டேன். ஆனால் இந்த தொடரில் நடிக்கும் போது எனக்கு கிடைத்த சௌகரியங்களும், வசதிகளும் வேறு எங்கும், எப்போதும் கிடைத்ததில்லை. அதனால் மிக சிறந்த அனுபவத்தை உணர்ந்தேன். படப்பிடிப்பு தளத்தில் பணியாற்றும்போது சக நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்களும் நேர்மறையான அதிர்வை வெளிப்படுத்தி, முழுமையான ஒத்துழைப்பு வழங்கினர். அமேசன் குழுவினர் எங்களை தாய்போல் அரவணைத்தனர். அபுதாபியில் நடைபெற்ற திரைப்பட விழாவில் எங்களையெல்லாம் அபர்ணா மேடம், மற்றவர்களிடம் பெருமிதத்துடன் அறிமுகப்படுத்தி, கொண்டாடினார்கள். அதுவும் என்னால் மறக்க இயலாது. ” என்றார். இசையமைப்பாளர் சாம் சி எஸ் பேசுகையில், ” புஷ்கர் & காயத்ரி அவர்களின் திரைக்கதையில் ஒரு இசையமைப்பாளர் எதிர்பார்க்கும் அனைத்து விதமான உணர்வுகளும் இடம்பெற்றிருக்கும். இந்த தொடரில் உள்ள எட்டு அத்தியாயங்களுக்கு இசை வடிவிலும் கதையை நகர்த்த இயலும் வகையில் திரைக்கதை அமைத்திருந்தார்கள். அது எனக்கு சவாலாக இருந்தது. ” என்றார். நடிகை ஸ்ரேயா ரெட்டி பேசுகையில், ” இயக்குநர்கள் புஷ்கர் & காயத்ரி தொடர்புகொண்டு ‘சுழல்’ பற்றி பேசி, என் கதாபாத்திரத்தைப் பற்றி விவரித்தார்கள். 16 ஆண்டுகாலத்திற்கு பிறகு இந்த தொடரில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறேன். இதற்கு ஒரு முக்கிய காரணம் புஷ்கர் &காயத்ரி, ‘இந்த தொடரில் எந்த இடத்திலும் ‘திமிரு’ படத்தினுடைய நடிப்பும் தோற்றமும் வந்து விடக் கூடாது’ என உறுதியாக கண்டிப்புடன் கூறி விட்டார்கள். ரெஜினா என்ற போலீஸ் அதிகாரி வேடம் என்றாலும், பல இடங்களில் நடிப்பதற்கு சவாலாக இருந்ததால் நடிக்க ஒப்புக்கொண்டேன். இயக்குநர்கள் பிரம்மா, அனுசரண் படப்பிடிப்பு தளத்தில் நேர்த்தியாக பணியாற்றி, நடிகர்களிடமிருந்து நடிப்பை பெற்றுக் கொண்டார்கள். ஒளிப்பதிவாளர் மியூக்ஸ் படப்பிடிப்புத் தளத்தில் சர்வதேச தரத்திலான பணியை வழங்கி எங்களையெல்லாம் ஆச்சரியப்படுத்தினார். படப்பிடிப்பு தளத்தில் என்னையும் சக நடிகர்களையும் தொழில் நுட்பக் கலைஞர்களையும் அமேசான் குழுவினர் சௌகரியமாக நடத்தினார்கள். அதிலும் குறிப்பாக அமேசான் குழுவில் இருக்கும் அபர்ணா புரோகித் அவர்கள் ஆச்சரியப்படும் தருணங்களைப் பற்றி புத்தகமே எழுதலாம். அவை அனைத்தும் தன்னம்பிக்கையின் வெளிப்பாடுகள் என்பதே அதன் சிறப்பு. ‘சுழல்’ தொடர் ஜூன் 17ஆம் தேதி, முப்பது மொழிகளில் உலகம் முழுவதும் வெளியாவதில் மிக்க மகிழ்ச்சி.” என்றார்.
இந்த டெம்ப்ளேட்டை எப்படி நாம் Kinemaster எடிட் செய்வது என்று இப்பொழுது நாம் பார்க்கலாம் முதலில் இதற்கு பயன்படுத்தக்கூடிய டெம்ப்ளேட்டை டவுன்லோட் செய்யவும் எப்படி டவுன்லோட் செய்ய வேண்டும் என்று மேலே கொடுக்கப்பட்டுள்ளது டவுன்லோட் செய்து முடித்த பிறகு Kinemaster App ஓபன் செய்யவும் பிறகு சென்டரில் உள்ள பிளஸ் ஐகானை கிளிக் செய்து எடிட்டிங்கை தொடங்கவும் முதலில் பக்கத்தில் மேலே மீடியா என்று ஒரு ஆப்ஷன் இணைப்பில் இருக்கும் அதை கிளிக் செய்து உங்களுக்கு தேவையான இமேஜ் அல்லது வீடியோவை உள்ளே இம்போட் செய்யவும் செய்து உடன் Cut ஆக்ஷன் பக்கத்தில் பிரேம் ஐகான் இருக்கும் அதை கிளிக் செய்து இமேஜை சென்டர் பொஸிஷனில் செட் செய்யவும் அதற்குப் பிறகு டிக் செய்து விடவும் அதற்குமேல் Layar கிளிக் செய்து Layer வரும் மீடியாவை கிளிக் செய்து நீங்கள் டவுன்லோட் செய்த டெம்ப்ளேட்டை வீடியோவை இம்போட் செய்யவும் அதை கிளிக் செய்து அதற்கான எடிட்டிங் டூல்ஸ் எல்லாம் ரைட் சைடில் வரும் அதில் கிளி ஸ்குரோல் செய்தால் அதில் பிலண்டிங் என்று ஒரு ஆப்ஷன் இருக்கும் அதை கிளிக் செய்து அதற்குள் Screen என்று ஒரு ஆப்ஷன் இருக்கும் அதை கிளிக் செய்து கொள்ளவும் அதற்கு பிறகு கொஞ்சம் மேலே ஸ்குரோல் செய்தால் அதில் அட்ஜஸ்ட்மெண்ட் என்று ஒரு ஆப்ஷன் இருக்கும் அதை கிளிக் செய்து அதில் இருக்கும் கடைசி பர்சன்டேஜ் கூட்டம் கூட்டி முடித்ததும் டிக் செய்யவும் அதற்குப் பிறகு அந்த வீடியோவிற்கு நீங்கள் என்ன பாடல் வைக்க வேண்டுமென்று விரும்புகிறீர்களோ அந்தப் பாடலை அதற்கு Add செய்யவும் இப்பொழுது பாடநுால் செய்யலாம் அதற்கு நீங்கள் இருக்கும் இடத்திலேயே ரவுண்ட் ஐகானில் ஆடியோ என்று ஒரு ஆப்ஷன் இருக்கும் அதை கிளிக் செய்து உங்களுக்கு பிடித்த பாடலை உள்ளே அட் செய்யலாம் அதற்கு பிறகு வீடியோவை எப்படி எக்ஸ்போர்ட் செய்வது என்று இப்பொழுது பார்க்கலாம் லெஃப்ட் சைடில் Share ஐகான் இருக்கும் அதை கிளிக் செய்து உங்களது வீடியோக்களை நீங்கள் எக்ஸ்போர்ட் செய்து கொள்ளலாம் அது உங்களது கேலரியில் சேவ் ஆகிவிடும் அதற்கு பிறகு உங்கள் சோசியல் மீடியாவில் நீங்கள் அதை பதிவிடலாம். How to Download Template நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் இந்த Page சில குறிப்புகள் கை மாஸ்டரைப் பற்றி இருக்கும் அதற்குக் கீழ் ஸ்குரோல் செய்து சென்றார் கீழே 30 Second Wait செய்து டவுன்லோட் செய்து கொள்ளலாம். How to Use KineMaster WhatsApp Status Video, YouTube Intro Video,Text Animation, Picture Moving Animation and more இவை அனைத்தையும் கைன் மாஸ்டர் ஒன்றில் மிக சுலபமாக எடிட்டிங் செய்யலாம் இந்த ஆப்பை எப்படி நாம் பயன்படுத்தலாம் என்று இப்பொழுது பார்க்கலாம் Kinemaster எனப்படும் பெயரிலுள்ள ஆப் நாம் மொபைலில் இருந்து எடிட் செய்வதற்காக பயன்படுத்தக்கூடிய App இப்பொழுது ஒரு வீடியோவை எடிட் செய்ய வேண்டுமென்றால் சுலபமான முறையில் எடிட் செய்யலாம் அதற்கு இந்த Kinemaster எனப்படும் App நமக்கு உதவியாக இருக்கிறது நமக்குப் பிடித்த ஒரு புகைப்படத்தையோ அல்லது வீடியோவை வைத்து மிக சுலபமாக மொபைலில் இருந்து நாம் எடிட்டிங் செய்யலாம் இந்த App வைத்து வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வீடியோக்களை உருவாக்குவது எப்படி என்று யூடியுப் வீடியோக்களை அப்லோடு செய்யப்பட்டுள்ளது யூடியூப் சேனலில் பெயர் MV Creation Tamil இந்த யூடியூப் சேனலில் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வீடியோக்களை எப்படி உருவாக்குவது என்று தமிழில் வீடியோக்கள் அப்லோட் செய்யப்பட்டுள்ளது அந்த வீடியோக்களை நீங்கள் பார்க்க வேண்டுமென்றால் இந்த click here லிங்கை கிளிக் செய்து நீங்கள் யூடியூப் சேனலுக்கு செல்லமுடியும் அங்கு வீடியோக்கள் 200க்கும் மேற்பட்ட வீடியோக்கள் அப்லோட் செய்யப்பட்டுள்ளது அந்த வீடியோக்களை பார்த்து எப்படி Kinemaster ஐ வைத்து எடிட் செய்ய வேண்டுமென்று நீங்கள் தெரிந்து கொள்ளலாம் . How To Add Song இந்த வீடியோவை எடிட் செய்து முடித்த பிறகு அதில் எப்படி பாடலை இணைப்பது என்று இப்போது பார்ப்போம் உங்களது வீடியோவை எடிட் செய்து முடித்த பிறகு மீடியா லேயர்ஸ் என்று அந்த சர்க்கிள் இருக்கும் அதில் ரைட் சைடில் ஆடியோ என்று ஒரு ஐகான் இருக்கும் அதை கிளிக் செய்து உங்களது பாடலை ஹாய் செய்துகொள்ளலாம். How To Kinemaster Video Export வீடியோவை எப்படி எக்ஸ்போர்ட் செய்வது என்று இப்பொழுது பார்க்கலாம் லெஃப்ட் சைடில் Share ஐகான் இருக்கும் அதை கிளிக் செய்து உங்களது வீடியோக்களை நீங்கள் எக்ஸ்போர்ட் செய்து கொள்ளலாம் அது உங்களது கேலரியில் சேவ் ஆகிவிடும் அதற்கு பிறகு உங்கள் சோசியல் மீடியாவில் நீங்கள் அதை பதிவிடலாம். KineMaster About KineMaster என்பது இந்த ஒரு ஆப் வீடியோ எடிட்டிங் காக யூஸ் செய்யக்கூடிய ஒரு ஆப் இதனை பயன்படுத்தி வீடியோ எடிட்டிங் YouTube Intro Video, WhatsApp Status Video, YouTube Videos and more இந்த Appபிள் மிகவும் சுலபமாக எடிட் செய்யலாம் இதனை முதலில் Google Play Store வெளியிட்டதும் கைன் மாஸ்டர் ஆப்புக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் இருக்கிறது ஏனென்றால் லேப்டாப்பில் பயன்படுத்தும் சாப்ட்வேர் போல் அனைத்துக் கருவிகளையும் உள்ளடக்கி மொபைலுக்கு முதலில் வந்த ஆப் இது Google Play Store இதன் டவுன்லோடு எண்ணிக்கை நான் இந்த ஆர்டிகல் எழுதும்போது 100M+ டவுன்லோட்ஸ் ஆகியிருக்கிறது இதனை பிசியில் எடிட்டிங் செய்யும் நபர்கள் மொபைலில் எடிட்டிங் செய்வதற்கு கைன் மாஸ்டரை டவுன்லோட் செய்து கொள்வார்கள் மேலும் ஒரு வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வீடியோவை உருவாக்க வேண்டுமென்றால் MV Creation Tamil இந்த பெயரை கிளிக் செய்தால் அது உங்களை யூடியூப் விற்கு அழைத்துச் செல்லும் அங்கு வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வீடியோவை எப்படி கை மாஸ்டரின் உருவாக்க வேண்டுமென்று நிறைய வீடியோக்கள் அப்லோடு செய்யப்பட்டுள்ளது அதனை பார்த்து நீங்களும் உங்களுக்கு தேவையான வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வீடியோக்களை உருவாக்கி கொள்ளலாம்.
وَحَدَّثَنِي أَبُو الطَّاهِرِ، أَحْمَدُ بْنُ عَمْرِو بْنِ سَرْحٍ حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، عَنْ يُونُسَ، ح وَحَدَّثَنِي حَرْمَلَةُ بْنُ يَحْيَى، أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ سَالِمِ بْنِ عَبْدِ اللَّهِ عَنْ أَبِيهِ قَالَ:‏ سَمِعْتُ عُمَرَ بْنَ الْخَطَّابِ، يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ “‏ إِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ يَنْهَاكُمْ أَنْ تَحْلِفُوا بِآبَائِكُمْ ‏”‏ ‏ قَالَ عُمَرُ فَوَاللَّهِ مَا حَلَفْتُ بِهَا مُنْذُ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم نَهَى عَنْهَا ذَاكِرًا وَلاَ آثِرًا ‏ وَحَدَّثَنِي عَبْدُ الْمَلِكِ بْنُ شُعَيْبِ بْنِ اللَّيْثِ، حَدَّثَنِي أَبِي، عَنْ جَدِّي، حَدَّثَنِي عُقَيْلُ بْنُ خَالِدٍ ح وَحَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، وَعَبْدُ بْنُ حُمَيْدٍ، قَالاَ حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، كِلاَهُمَا عَنِ الزُّهْرِيِّ، بِهَذَا الإِسْنَادِ ‏.‏ مِثْلَهُ غَيْرَ أَنَّ فِي حَدِيثِ عُقَيْلٍ مَا حَلَفْتُ بِهَا مُنْذُ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَنْهَى عَنْهَا وَلاَ تَكَلَّمْتُ بِهَا ‏.‏ وَلَمْ يَقُلْ ذَاكِرًا وَلاَ آثِرًا وَحَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَعَمْرٌو النَّاقِدُ، وَزُهَيْرُ بْنُ حَرْبٍ، قَالُوا حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَالِمٍ، عَنْ أَبِيهِ، قَالَ سَمِعَ النَّبِيُّ صلى الله عليه وسلم عُمَرَ وَهُوَ يَحْلِفُ بِأَبِيهِ ‏.‏ بِمِثْلِ رِوَايَةِ يُونُسَ وَمَعْمَرٍ ‏ அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “உங்களின் தந்தையர் பெயரால் நீங்கள் சத்தியம் செய்ய வேண்டாமென அல்லாஹ் உங்களுக்குத் தடை விதிக்கின்றான்” என்று சொன்னார்கள். இவ்வாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறக் கேட்டது முதல், நானாகப் பேசும்போதும், பிறர் பேச்சை எடுத்துரைக்கும்போதும் நான் தந்தை பெயரால் சத்தியம் செய்ததில்லை. அறிவிப்பாளர் : உமர் பின் அல்கத்தாப் (ரலி) குறிப்புகள் : உகைல் பின் காலித் (ரஹ்) வழி அறிவிப்பில், “இவ்வாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தடை செய்வதைக் கேட்டது முதல் நான் அவ்விதம் (தந்தையின் பெயரால்) சத்தியமிட்டுப் பேசியதில்லை” என்று இடம்பெற்றுள்ளது. “நானாகப் பேசும்போதும், பிறர் பேச்சை எடுத்துரைக்கும்போதும் …” எனும் குறிப்பு இடம்பெறவில்லை. ஸுஃப்யான் பின் உயய்னா (ரஹ்) வழி அறிவிப்பில், “உமர் (ரலி) தம் தந்தையின் பெயரால் சத்தியம் செய்வதை நபி (ஸல்) செவியுற்றார்கள். (அப்போது மேற்கண்ட ஹதீஸில் உள்ளபடி கூறினார்கள்)” என இப்னு உமர் (ரலி) கூறியதாக இடம்பெற்றுள்ளது. ← முந்தைய ஹதீஸ்அத்தியாயம்: 26, பாடம்: 5, ஹதீஸ் எண்: 3102 அடுத்த ஹதீஸ் →அத்தியாயம்: 27, பாடம்: 1, ஹதீஸ் எண்: 3104 SatyaMargam ↓ விரும்பும் பாடம் செல்ல… ↓ விரும்பும் பாடம் செல்ல… Select Category 43.37 நபி (ஸல்) அவர்களைக் கண்ணியப்படுத்துவதும் … (8) 43.36 நபி (ஸல்) அவர்களைப் பின்பற்ற வேண்டியது (முஸ்லிம்களின்) கட்டாயக் கடமையாகும் (1) 43.35 நபி (ஸல்) அவர்களின் அல்லாஹ்வைப் பற்றிய அறிவும் அவனைப் பற்றிய கடுமையான அச்சமும் (2) 43.34 நபி (ஸல்) அவர்களின் பெயர்கள் (3) 43.33 நபி (ஸல்) மக்காவிலும் மதீனாவிலும் எத்தனை ஆண்டுகள் வாழ்ந்தார்கள்? (8) 43.32 நபி (ஸல்) இறந்தபோது அவர்களுக்கு வயது எத்தனை? (2) 43.31 நபி (ஸல்) அவர்களின் உடலமைப்பு; நபியாக அனுப்பப்பெற்றது; அவர்களின் வயது (1) 43.30 நபி (ஸல்) உடலில் நபித்துவ முத்திரை … (3) 43.29 நபி (ஸல்) அவர்களின் தலைநரைமுடி (10) 43.28 நபி (ஸல்) அவர்களின் வெண்ணிறமும் களையான முகமும் (2) 43.27 நபி (ஸல்) அவர்களின் வாய், கண்கள், குதிகால்கள் ஆகியவை (1) 43.26 நபி (ஸல்) அவர்களது தலைமுடியின் தன்மை (3) 43.25 நபி (ஸல்) அவர்களின் உருவத் தோற்றம் … (3) 43.24 நபி (ஸல்) தமது தலைமுடியை … (1) 43.23 நபி (ஸல்) அவர்களுக்கு வேத அறிவிப்பு வரும்போது … (4) 43.22 நபி (ஸல்) அவர்களது வியர்வையின் நறுமணமும் அதன்மூலம் வளம் ஏற்பட்டதும் (3) 43.21 நபி (ஸல்) அவர்களின் மேனியில் கமழ்ந்த நறுமணம் … (3) 43.20 நபி (ஸல்) பாவங்களை விட்டு வெகு தொலைவில் விலகியிருந்தது … (3) 43.19 நபி (ஸல்), மக்களுடன் நெருங்கிப் பழகியதும் அவர்களிடமிருந்து மக்கள் வளம் பெற்றதும் (3) 43.18 மனைவியர்மீது நபி (ஸல்) காட்டிய அன்பும் … (4) 43.17 நபி (ஸல்) அவர்களின் புன்னகையும் அழகிய உறவாடலும் (1) 43.16 நபி (ஸல்) அவர்களின் நாண மிகுதி (2) 43.15 நபி (ஸல்) குழந்தைகள் மீதும் குடும்பத்தார் மீதும் காட்டிய அன்பு … (5) 43.14 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வேண்டப்பட்ட எந்த ஒன்றுக்கும் அவர்கள் “இல்லை” என்று சொன்னதேயில்லை … (5) 43.13 அல்லாஹ்வின் தூதர் (ஸல்), மக்களிலேயே மிகவும் அழகான … (5) 43.12 மக்களிலேயே நபி (ஸல்), தொடர்ந்து வீசும் (மழைக்) காற்றைவிட … (1) 43.11 நபி (ஸல்) அவர்களின் வீரமும் அறப்போருக்காக அவர்கள் முன்னே சென்றதும் (2) 43.10 உஹுதுப் போர் நாளில் நபி (ஸல்) … (2) 43.9 நம் நபி (ஸல்) அவர்களுக்கு (மறுமையில் ‘அல்கவ்ஸர்’) தடாகம் உண்டு … (20) 43.8 உயர்ந்தோன் அல்லாஹ் ஒரு சமுதாயத்தின்மீது அருள் புரிய நாடினால் … (1) 43.7 நபி (ஸல்), இறுதி இறைத் தூதர் என்பது பற்றிய குறிப்பு (4) 43.6 நபி (ஸல்), தம் சமுதாயத்தார் மீது கொண்டிருந்த பரிவும் … (4) 43.5 நபி (ஸல்), நேர்வழியுடனும் ஞானத்துடனும் அனுப்பப் பெற்றதற்கான உவமை (1) 43.4 அல்லாஹ்வையே முழுமையாக நபி (ஸல்) சார்ந்திருந்ததும் … (1) 43.3 நபி (ஸல்) அவர்களின் அற்புதங்கள் (7) 43.2 எல்லாப் படைப்புகளையும்விட நம் நபி (ஸல்) அவர்களின் சிறப்பு (1) 43.1 நபி (ஸல்) அவர்களின் தலைமுறையின் சிறப்பும் … (2) 42.4 நபி (ஸல்) கண்ட கனவு (6) 42.3 கனவுக்கு விளக்கமளித்தல் (1) 42.2 ஷைத்தான் கனவில் விளையாடியது குறித்து … (3) 42.1 கனவில் என்னைக் கண்டவர் … (4) 42.01 கனவுகள் (11) 41.2 பகடை விளையாட்டு, தடை செய்யப்பட்டதாகும் (1) 41.1 கவிதைகள் (9) 40.5 நறுமணப் பொருட்களில் மிகவும் சிறந்த கஸ்தூரியைப் பயன்படுத்துவது … (4) 40.4 ஒருவர், ‘கபுஸத் நஃப்ஸீ’ (என் மனம் அசுத்தமாகிவிட்டது) எனும் சொல்லை … (2) 40.3 ‘அப்து’ (அடிமை ஆண்), ‘அமத்து’ (அடிமைப் பெண்), ‘மவ்லா’/’ஸய்யித்’ (அடிமையின் உரிமையாளர்) ஆகிய சொற்களின் சட்டம் (3) 40.2 திராட்சையை, “கர்மு / கண்ணியம்” என்று பெயரிட்டழைப்பது … (7) 40.1 காலத்தை ஏசுவதற்குத் தடை (5) 39.41 விலங்குகளுக்கு நீர் புகட்டுவதின், உணவளிப்பதின் சிறப்பு (3) 39.40 பூனைகளைக் கொல்வதற்குத் தடை (2) 39.39 எறும்புகளைக் கொல்லத் தடை (3) 39.38 பல்லியைக் கொல்வது நல்லது (5) 39.37 பாம்பு போன்ற விஷ ஜந்துகளைக் கொல்வது (13) 39.36 தொழுநோயாளிகள் போன்றோரிடம் நெருக்கம் தவிர்ப்பது (1) 39.35 சோதிடர்களிடம் செல்வதும் சோதிடம் பார்ப்பதும் (5) 39.34 பறவை சகுனம், நற்குறி, துர்குறி பற்றிய பாடம் (11) 39.33 இல்லாத சகுனங்களும் தொற்றுநோய்களும் (6) 39.32 கொள்ளைநோய், பறவை சகுனம், சோதிடம் போன்றவை (8) 39.31 தேனூட்டு மருத்துவம் (1) 39.30 ‘தல்பீனா‘, நோயாளியின் மனத்துக்கு(ம் உடலுக்கும்) தெம்பு அளிக்கக்கூடியதாகும் (1) 39.29 கருஞ்சீரக மருத்துவம் (2) 39.28 இந்தியக் கோஷ்டக் குச்சியால் சிகிச்சையளிப்பது (2) 39.27 நோயாளிக்கு வற்புறுத்தி சிகிச்சையளிப்பது … (1) 39.26 ஒவ்வொரு நோய்க்கும் மருந்து உண்டு; (நோய்க்கு) மருத்துவம் செய்துகொள்வது விரும்பத் தக்கது (17) 39.25 தொழுகையில் மனம் அலைபாயச் செய்யும் ஷைத்தானிடமிருந்து பாதுகாப்புக் கோரல் (1) 39.24 பிரார்த்திக்கும்போது வலியுள்ள இடத்தில் கையை வைப்பது (1) 39.23 குர்ஆன் வசனங்கள் மற்றும் அல்லாஹ்வைத் துதிக்கும் சொற்களால் ஓதிப்பார்ப்பதற்கு ஊதியம் பெறலாம் (2) 39.22 இறைவனுக்கு இணை கற்பிதம் இல்லாத சொற்களால் ஓதிப்பார்பது தவறில்லை (1) 39.21 கண்ணேறு, சின்னம்மை, விஷக்கடி, (தீய)பார்வை ஆகியவற்றுக்காக ஓதிப்பார்ப்பது விரும்பத் தக்கதாகும் (12) 39.20 பாதுகாப்புக் கோரும் அத்தியாயங்களால் நோயாளிக்கு ஓதிப்பார்ப்பது … (2) 39.19 நோயாளிக்கு ஓதிப்பார்ப்பது விரும்பத் தக்கதாகும் (4) 39.18 விஷம் (1) 39.17 சூனியம் (1) 39.16 நோயும் மருத்துவமும் ஓதிப்பார்த்தலும் (4) 39.15 மூன்றாமவரின் ஒப்புதலின்றி இருவர் மட்டும் இரகசியம் பேசிக்கொள்வது தடை செய்யப்பட்டதாகும் (3) 39.14 … அந்நியப் பெண்ணை, வழிசெல்லும் ஒருவர் வாகனத்தில் அமர்த்திக்கொள்ளலாம் (2) 39.13 பெண்கள் இருக்கும் இடத்திற்கு அலிகள் செல்லத் தடை (2) 39.12 அமர்ந்திருந்த இடத்திற்கு உரியவர் (1) 39.11 அமர்ந்திருக்கும் ஒருவரை எழுப்பிவிடுவது தடை செய்யப்பட்டதாகும் (4) 39.10 அவைக்கு வருபவர், அமரும் ஒழுங்கு (1) 39.9 … கெட்ட எண்ணத்தை அகற்றுவது விரும்பத் தக்கதாகும் (2) 39.8 அந்நியப் பெண்ணிடம் … தனிமையில் இருப்பது தடை செய்யப்பட்டதாகும் (3) 39.7 … பெண்கள் வெளியே செல்லலாம் (2) 39.6 உள்ளே செல்ல அனுமதியாகக் கருதுவதற்கு … (1) 39.5 சிறாருக்கு(ப் பெரியவர்கள்) முகமன் கூறுவது விரும்பத் தக்கதாகும் (2) 39.4 வேதக்காரர்களுக்கு முந்திக்கொண்டு ஸலாம் கூறுவதற்குத் தடை (7) 39.3 ஸலாத்துக்குப் பதிலுரைப்பது முஸ்லிமுக்குக் கடமை (2) 39.2 நடைபாதைகளில் அமர்வதன் ஒழுங்குகளில் … (2) 39.1 முந்தி ஸலாம் சொல்ல வேண்டியவர்கள் (1) 38.10 இயல்பான பார்வை (1) 38.9 பிறர் வீட்டில் எட்டிப் பார்ப்பது தடை செய்யப்பட்டதாகும் (5) 38.8 “யார்?“ என்று கேட்டால் … (2) 38.7 அனுமதி கோருதல் (5) 38.6 “என் அருமை மகனே!“ (2) 38.5 குழந்தை பிறந்தவுடன் இனிப்பான பொருளை மென்று அதன் வாயிலிடுவதும் … (9) 38.4 மன்னாதி மன்னன் எனப் பெயர் சூட்டிக்கொள்வது தடை செய்யப்பட்டதாகும் (2) 38.3 அருவருப்பான பெயரை அழகான பெயராக மாற்றியமைப்பது … (6) 38.2 அருவருப்பான பெயர்கள் … (4) 38.1 … விரும்பத் தகுந்த பெயர்கள் (8) 37.35 வெறும் பெருமை (2) 37.34 மெல்லிய உடையணிந்து, பிறரைத் தன்பால் ஈர்க்கும் வண்ணம் தோள்களைச் சாய்த்து ஒயிலாக நடக்கும் பெண்கள் (1) 37.33 பெண்களின் பொய் அலங்காரங்காரங்களுக்குத் தடை (10) 37.32 நடைபாதைகளில் அமர்வதற்குத் தடையும் பாதைகளுக்குரிய உரிமைகளைப் பேணுவதும் (1) 37.31 தலை முடியில் பகுதி மழித்துவிட்டு, பகுதி மழிக்காமல் விட்டுவிடுவது வெறுக்கத் தக்கதாகும் (1) 37.30 ஸகாத் / ஜிஸ்யாவுக்கான கால்நடைகளில் சூடிட்டு அடை யாளமிடலாம் (4) 37.29 விலங்குகளின் முகத்தில் அடிப்பதும் அடையாளச் சூடிடுவதும் தடை செய்யப்பட்டவை ஆகும் (3) 37.28 ஒட்டகத்தின் கழுத்தில் (திருஷ்டிக்) கயிற்று மாலை அணிவிப்பது வெறுக்கத் தக்கதாகும் (1) 37.27 பயணத்தின்போது நாயும் (ஒலியெழுப்பும்) மணியும் வெறுக்கத் தக்கவை (2) 37.26 உயிரினங்களின் உருவப் படங்களை வரைவதும் … தடை செய்யப்பட்டவை ஆகும் (21) 37.25 (நரைமுடிக்கு) சாயமிட்டுக்கொள்வது யூதர்களுக்கு மாறு செய்வதாகும் (1) 37.24 நரைமுடியில் கருப்பு நிறச் சாயமிடுவது தடை செய்யப்பட்டதாகும் (2) 37.23 ஆண்கள் (மேனியில்) குங்குமப்பூச் சாயமிட்டுக்கொள்வதற்குத் தடை (1) 37.22 மல்லாந்து படுத்துக்கொண்டு கால்மீது காலைப் போட்டுக் கொள்வதற்கு அனுமதி (1) 37.21 மல்லாந்து படுத்துக்கொண்டு கால்மீது காலைப் போட்டுக் கொள்வதற்குத் தடை (3) 37.20 தடை செய்யப்பட்ட இரு நிலைகள் (2) 37.19 காலணிகளை அணிந்து கழற்றும் முறைகள் (3) 37.18 காலணி அல்லது அது போன்றதை அணிந்துகொள்வது விரும்பத் தக்கதாகும் (1) 37.17 மோதிரம் அணிவதற்குத் தடை செய்யப்பட்ட விரல்கள் (2) 37.16 கைச் சுண்டுவிரலில் மோதிரம் அணிவது (1) 37.15 அபிசீனியக் வெள்ளிக் குமிழ் மோதிரம் (2) 37.14 மோதிரங்களை(க் கழற்றி) எறிந்த நிகழ்வு (2) 37.13 நபி (ஸல்) அவர்களின் (முத்திரை) மோதிரம் (3) 37.12 ‘முஹம்மதுர் ரசூலுல்லாஹ்’ எனும் இலச்சினை பொறிக்கப்பட்ட வெள்ளி மோதிரம் (2) 37.11 ஆண்கள் தங்க மோதிரம் அணிவதற்குத் தடை (3) 37.10 ஆடைகளை எண்ணிப் பெருமை கொண்டு, கர்வத்தோடு நடப்பதற்குத் தடை (2) 37.9 பெருமைக்காக ஆடையைத் தரையில் படும்படி இழுத்துச் செல்வதற்குத் தடை (7) 37.8 தேவைக்கு அதிகமான விரிப்புகளும் ஆடைகளும் இருப்பது விரும்பத் தக்கதன்று (1) 37.7 படுக்கை விரிப்புகளைப் பயன்படுத்த அனுமதி (2) 37.6 ஆடையில் (எளிமை,) பணிவு காட்டுவது … (5) 37.5 பருத்தி ஆடை அணிவதன் சிறப்பு (2) 37.4 ஆண்கள் செம்மஞ்சள் நிறச் சாயமிடப்பட்ட ஆடை அணிவதற்குத் தடை (5) 37.3 தோல் உபாதைகள் இருந்தால் ஆண்கள் பட்டாடை அணியலாம் (3) 37.2 பொன் மோதிரம் மற்றும் பட்டாடை அணிவது ஆண்களுக்குத் தடை; பெண்களுக்கு அனுமதி (20) 37.1 பொன் / வெள்ளிப் பாத்திரங்களைப் பயன்படுத்துவது ஆண்களுக்கும் பெண்களுக்கும் தடை (2) 36.35 உணவைக் குறை சொல்லவேண்டாம் (2) 36.34 இறைநம்பிக்கையாளர் ஒரே குடலில் உண்பார்; இறைமறுப்பாளன் ஏழு குடல்களில் உண்பான் (5) 36.33 உணவு குறைவாக இருக்கும்போது … (4) 36.32 விருந்தினரை உபசரிப்பதும் முன்னுரிமை வழங்குவதன் சிறப்பும் (6) 36.31 வெள்ளைப் பூண்டு சாப்பிடக்கூடியதே … (2) 36.30 உணவுக் காடியின் சிறப்பும் … (4) 36.29 ‘அல்கபாஸ்’ பழங்களில் கருப்பு நிறப் பழத்தின் சிறப்பு (1) 36.28 உணவுக் காளானின் சிறப்பும் … (6) 36.27 மதீனத்துப் பேரீச்சம் பழங்களின் சிறப்பு (3) 36.26 குடும்பத்தாருக்காக … உணவுகளைச் சேமித்துவைத்தல் (2) 36.25 பலருடன் சேர்ந்து உண்பவர் … (2) 36.24 உணவு உண்பவர் அமரும் முறை; பணிவோடு அமர்வது விரும்பத் தக்கது (2) 36.23 பேரீச்சை செங்காய்களுடன் வெள்ளரிக்காயையும் சேர்த்து உண்பது (1) 36.22 விருந்தளிப்பவருக்காக விருந்தாளி பிரார்த்திப்பது … (1) 36.21 சுரைக் குழம்பு உண்ண அனுமதி … (2) 36.20 வீட்டு உரிமையாளரின் சம்மதம் கிடைக்கும் என்ற நம்பிக்கை இருந்தால் … (4) 36.19 விருந்துக்கு அழைக்கப்பட்டவரைத் தொடர்ந்து அழைக்கப்படாதவரும் வந்துவிட்டால் … (2) 36.18 உண்டு முடித்ததும் விரல்களைச் சூப்புவதும் உணவுத் தட்டை வழித்து உண்பதும் … (9) 36.17 வலப் பக்கத்திலிருந்து பரிமாறுதல் விரும்பத் தக்கதாகும் (4) 36.16 பாத்திரத்தினுள் (பருகும்போது) வெளியே மூன்று முறை மூச்சு விட்டுப் பருகுவது விரும்பத் தக்கதாகும் (3) 36.15 ஸம்ஸம் நீரை நின்றுகொண்டு அருந்துவது (4) 36.14 நின்றுகொண்டு அருந்துவது வெறுக்கத் தக்கதாகும் (4) 36.13 உண்பது, அருந்துவது ஆகியவற்றின் ஒழுங்குகளும் விதிமுறைகளும் (10) 36.12 இரவு நேர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் (6) 36.11 பழச்சாறுகளைப் பருகுவதும் பாத்திரங்களை மூடிவைப்பதும் (3) 36.10 (ஆட்டுப்) பால் அருந்த அனுமதி (3) 36.9 பழச்சாறுகள் (புளித்துக்) கெட்டியாகி, போதையேறாதவரை அனுமதிக்கப்பட்டவையாகும் (10) 36.8 குடிகாரன் பாவமன்னிப்புக் கோரி திருந்தாவிட்டால் … (3) 36.7 போதை தரும் ஒவ்வொரு பானமும் தடை செய்யப்பட்ட மதுவாகும் (9) 36.6 பானங்கள்-பாத்திரங்கள், தடை-தடை நீக்கம் (36) 36.5 பேரீச்சம் பழம், உலர் திராட்சைக் கலவை ஊறல் வெறுக்கத் தக்கதாகும் (14) 36.4 ‘மதுபானம்’ என்று சொல்லப்படுபவை (4) 36.3 மதுவை மருந்தாகப் பயன்படுத்துவதற்குத் தடை (1) 36.2 மதுபானத்தை (சமையல்) காடியாக மாற்றிப் பயன்படுத்துவதற்குத் தடை (1) 36.1 போதையூட்டும் ஒவ்வொன்றும் மதுவாகும் (9) 35.8 அல்லாஹ் அல்லாதவரின் பெயர் கூறிப் பிராணிகளை அறுப்பதற்குத் தடை (3) 35.7 தலைமுடியை, நகங்களைக் களைவதற்குத் தடை (5) 35.6 அல் ஃபரஉ வல் அத்தீரா (1) 35.5 பலி இறைச்சியை எவ்வளவு காலம் சேமித்து வைக்கலாம்? (14) 35.4 பல், நகம், எலும்பு ஆகியவை தவிர எந்தப் பொருளாலும் பிராணியை அறுக்க அனுமதி (1) 35.3 தாமே அறுப்பதும் அல்லாஹ்வின் பெயரோடு தக்பீர் கூறுவதும் விரும்பத் தக்கவை ஆகும் (3) 35.2 பலிப் பிராணியின் வயது (4) 35.1 பலி கொடுக்கப்படும் நேரம் (10) 34.12 விலங்குகளைக் கட்டிவைத்து அம்பெய்து கொல்வதற்குத் தடை (5) 34.11 … கத்தியைக் கூர்மையாகத் தீட்டிக் கொண்டு வதையற்ற முறையைக் கையாளக் கட்டளை (1) 34.10 … பயிற்சிகளை மேற்கொள்வது அனுமதிக்கப் பட்டதாகும். கல்சுண்டு விளையாட்டு வெறுக்கப்பட்டதாகும் (2) 34.9 முயல் கறி உண்ணத் தக்கது (1) 34.8 வெட்டுக்கிளி உண்ணத் தக்கது (1) 34.7 உடும்புக் கறி உண்ணத் தக்கது (13) 34.6 குதிரைகளின் இறைச்சியை உண்பது கூடுமா? (3) 34.5 நாட்டுக் கழுதைகளின் இறைச்சியை உண்பதற்குத் தடை (14) 34.4 கடல்வாழ் உயிரினங்களில் செத்தவற்றை உண்பதற்கு அனுமதி (5) 34.3 உண்பதற்குத் தடை செய்யப்பட்ட விலங்குகளும் பறவைகளும் (6) 34.2 வேட்டையாடிய பிராணி மறைந்து, பிறகு கிடைத்தால் … (2) 34.1 பயிற்சியளிக்கப்பட்ட நாய்கள் மூலம் வேட்டையாடுதல் (8) 33.56 பயணத்திலிருந்து திரும்புகின்றவர் … (5) 33.55 பயணம் என்பது துன்பத்தின் ஒரு பகுதியாகும் … (1) 33.54 பயணத்தில் கால்நடைகளின் நலன் காப்பதும் … (2) 33.53 “என் சமுதாயத்தாரில் ஒரு குழுவினர் எப்போதுமே உண்மைக்கு ஆதரவாளர்களாக இருப்பார்கள் … (8) 33.52 அம்பெய்வதன் சிறப்பும் … (3) 33.51 உயிர்த் தியாகிகள் பற்றிய விளக்கம் (3) 33.50 அல்லாஹ்வின் பாதையில் எல்லைக் காவல் புரிவதன் சிறப்பு (1) 33.49 கடல்வழிப் போரின் சிறப்பு (2) 33.48 போரில் கலந்துகொள்ள முடியாமல் போனவருக்கும் நன்மை … (1) 33.47 அறப்போரில் கலந்துகொள்ளாமல் இறந்துபோனவர் … (1) 33.46 அல்லாஹ்வின் பாதையில் வீரமரணத்தை வேண்டுவது விரும்பத் தக்கதாகும் (2) 33.45 “எண்ணங்களைப் பொருத்தே செயல்கள் அமைகின்றன” எனும் நபிமொழி … (1) 33.44 … போர்ச் செல்வங்களைப் பெற்றோரும் பெறாதோரும் … (2) 33.43 பிறர் பார்ப்பதற்காகவும் விளம்பரத்திற்காகவும் போரிட்டவர் … (1) 33.42 அல்லாஹ்வின் பாதையில் போரிட்டவர் … (3) 33.41 உயிர்த் தியாகிக்குச் சொர்க்கம் நிச்சயம் (6) 33.40 தகுந்த காரணம் உள்ளவர்களுக்கு அறப்போரில் கலந்து கொள்வது கடமை இல்லை (2) 33.39 அறப்போர் வீரர்களின் துணைவியருடைய கண்ணியம் … (1) 33.38 அறப்போர் வீரருக்கு வாகனம் மற்றும் பிற உதவிகள் … (6) 33.37 அல்லாஹ்வின் பாதையில் தர்மம் செய்வதன் சிறப்பும் அதற்குக் கிடைக்கும் பன்மடங்கு நன்மைகளும் (1) 33.36 இறைமறுப்பாளனை (போரில்) கொன்ற பின்னர் (மார்க்கத்தில்) உறுதியோடு இருத்தல் (2) 33.35 இரு போராளிகளில் ஒருவர் மற்றவரைக் கொன்று, பின் அவ்விருவருமே சொர்க்கத்தில் … (2) 33.34 அறப்போர் மற்றும் எல்லைக் காவலின் சிறப்பு (3) 33.33 வீரமணம் அடைந்தவர்களின் உயிர்கள் … (1) 33.32 அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டவரின் கடனைத் தவிர அனைத்துப் பாவங்களும் மன்னிக்கப்படுகின்றன (3) 33.31 அல்லாஹ் (தனது பாதையில்) அறப்போர் புரிந்தவர்களுக்காகச் சொர்க்கத்தில் வைத்துள்ள உயர்நிலைகள் (1) 33.30 அல்லாஹ்வின் பாதையில் காலையாயினும் மாலையாயினும் (போரிடச்) செல்வதன் சிறப்பு (5) 33.29 அல்லாஹ்வின் பாதையில் வீரமரணம் அடைவதன் சிறப்பு (4) 33.28 அல்லாஹ்வின் பாதையில் புறப்படுதலின், அறப்போரில் ஈடுபடுதலின் சிறப்பு (4) 33.27 குதிரையின் தன்மைகளில் விரும்பத் தகாதவை (1) 33.26 மறுமை நாள்வரை நெற்றிகளில் நன்மை பிணைக்கப்பட்டிருக்கும் குதிரைகள் (5) 33.25 குதிரைப் பந்தயமும் அதற்காகக் குதிரையை மெலிய வைப்பதும் (1) 33.24 குர்ஆன் பிரதிகளை இறைமறுப்பாளர்களின் நாட்டுக்கு எடுத்துச் செல்வது … (3) 33.23 பருவ வயது பற்றிய விளக்கம் (1) 33.22 இயன்றவரை கட்டுப்பட்டு நடப்பதாக உறுதிமொழி அளித்தல் (1) 33.21 பெண்களிடம் உறுதிப் பிரமாணம் (பைஅத்) வாங்கும் முறை (2) 33.20 மக்கா வெற்றிக்குப் பின் ஹிஜ்ரத் கிடையாது (5) 33.19 நாடு துறந்து (ஹிஜ்ரத்) சென்றவர் மீண்டும் தமது தாயகத்தில் குடியேறுவதற்குத் தடை (1) 33.18 ஆட்சித் தலைவர் படையினரிடம் உறுதி மொழி பெற்றுக்கொள்வது … (13) 33.17 ஆட்சித் தலைவர்களில் நல்லவர்களும் தீயவர்களும் (2) 33.16 ஆட்சித் தலைவர்கள் மார்க்கத்திற்கு முரணாகச் செயல்படும்போது … (2) 33.15 இரு ஆட்சியாளர்களுக்கு வாக்களிப்புப் பிரமாண நெருக்கடி ஏற்பட்டால் … (1) 33.14 முஸ்லிம்கள் (ஒரே தலைமையின் கீழ்) ஒன்றுபட்டிருக்கும்போது … (2) 33.13 குழப்பங்கள் தோன்றும்போது கூட்டமைப்போடு சேர்ந்திருப்பது கடமையாகும் … (8) 33.12 உரிமைகள் மறுக்கப்பட்டாலும் தலைமைக்குக் கட்டுப்படுதல் (1) 33.11 அதிகாரத்திலிருப்போர் அநீதியிழைக்கும்போதும் தகுதியற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கும்போதும் … (1) 33.10 கலீஃபாக்களில் முதலாமவருக்கு உறுதிப் பிரமாணம் (பைஅத்) அளிப்பது கடமையாகும் (3) 33.9 ஆட்சித் தலைவர் கேடயம் போன்றவர் … (1) 33.8 பாவமற்றவற்றில் தலைவர்களுக்குக் கட்டுப்படுவது கடமையாகும். பாவமானவற்றில் கட்டுப்படுவதற்குத் தடை (11) 33.7 அதிகாரிகளுக்கு அன்பளிப்புகள் வழங்குவதற்குத் தடை (3) 33.6 பொதுச் சொத்துகளில் மோசடி செய்வது வன்மையாகத் தடை செய்யப்பட்டது (1) 33.5 நேர்மையான ஆட்சியாளரின் சிறப்பும் … (6) 33.4 தேவையின்றி ஆட்சிப் பொறுப்பை ஏற்பது விரும்பத் தக்கதன்று (2) 33.3 ஆட்சியதிகாரத்தைத் தேடி அலைவதற்கும் அதன் மீது ஆசை கொள்வதற்கும் தடை (3) 33.2 ஆட்சித் தலைவரை நியமிக்கலாம்; நியமிக்காமல் விடலாம் (2) 33.1 ஆட்சியதிகாரம் குறைஷியரிடையேதான் இருக்கும் (10) 32.51 அறப்போர்களில் இறைமறுப்பாளரிடம் உதவி கோருவது … (1) 32.50 ‘தாத்துர் ரிக்காஉ’ (ஒட்டுத் துணிப்) போர் (1) 32.49 நபி (ஸல்) கலந்துகொண்ட அறப்போர்களின் எண்ணிக்கை (6) 32.48 அறப்போரில் கலந்துகொண்ட பெண்களுக்கு … (4) 32.47 அறப்போரில் ஆண்களுடன் பெண்களும் கலந்துகொள்வது (2) 32.46 “அவனே உங்களைத் தாக்காமல் அவர்கள் கைகளை தடுத்(து வைத்)தான்” எனும் (48:24) வசனம் (2) 32.45 ‘தூ கரத்’ போரும் பிற போர்களும் (2) 32.44 அஹ்ஸாப் போர் (அ) அகழ்ப் போர் (6) 32.43 கைபர் போர் (5) 32.42 கஅப் பின் அல்அஷ்ரஃப் கொல்லப்படுதல் (1) 32.41 அபூஜஹ்லு கொல்லப்படுதல் (1) 32.40 நபி (ஸல்) (மக்களை) இறைவன்பால் அழைத்து, துன்பங்களைப் பொறுத்துக் கொண்டது (2) 32.39 நபி (ஸல்) எதிர்கொண்ட துன்பங்கள் (7) 32.38 இறைதூதரால் கொல்லப்பட்டவன் மீது இறைவனின் கோபம் (1) 32.37 உஹுதுப் போர் (3) 32.36 கூட்டுப் படையினருக்கு எதிரான அகழ்ப் போர் (2) 32.35 வாக்குறுதியை(ப் போரிலும்) நிறைவேற்றுவது (1) 32.34 ஹுதைபிய்யா சமாதான உடன்படிக்கை’ (7) 32.33 மக்கா வெற்றிக்குப் பின் … (1) 32.32 கஅபாவைச் சுற்றிலும் இருந்த சிலைகளை அப்புறப்படுத்தியது (1) 32.31 மக்கா வெற்றி (2) 32.30 பத்ருப் போர் (1) 32.29 தாயிஃப் போர் (1) 32.28 ஹுனைன் போரில் … (5) 32.27 இறைமறுப்பு அரசர்களுக்கு நபி (ஸல்) எழுதிய கடிதங்கள் (1) 32.26 அழைப்பு விடுத்து ஹெராக்ளியஸ் மன்னருக்கு நபி (ஸல்) எழுதிய கடிதம் (1) 32.25 போரில் கிடைத்த உணவை, பகை நாட்டில் இருக்கும் போதே உண்ணலாம் (2) 32.24 முஹாஜிர்கள் தன்னிறைவு அடைந்தபோது … (2) 32.23 செயல்களுள் முன்னுரிமை அளிக்கத் தக்கது (1) 32.22 ஒப்பந்தத்தை முறித்துவிட்ட (பகை)வர்களுடன் போர் செய்யலாம் (3) 32.21 யூத கிறித்தவர்கள் அரபிய தீபகற்பத்திலிருந்து வெளியேற்றப்படுவது (1) 32.20 யூதர்களை ஹிஜாஸ் பகுதியிலிருந்து நாடு கடத்தியது (2) 32.19 கைதியை என்னென்னவெல்லாம் செய்யலாம் (1) 32.18 பத்ருப் போரில் வானவர்களின் உதவியும் … (1) 32.17 போர் வெற்றிச் செல்வத்தைப் பங்கிடும் முறை (1) 32.16 இறைத்தூதர்களுக்கு யாரும் (சொத்தில்) வாரிசாக முடியாது (5) 32.15 போர் செய்யாமல் கிடைத்த செல்வங்களின் சட்டம் (3) 32.14 … போர்க் கைதிகளைப் பரிமாறிக்கொள்வது (1) 32.13 போரில் கொல்லப்பட்ட எதிரியின் உடைமைகள் (4) 32.12 போர் வெற்றிச் செல்வங்கள் (7) 32.11 போர் வெற்றிச் செல்வங்கள் யாருக்குச் சொந்தம்? (1) 32.10 போரில் மரங்களை வெட்டுவதும் எரிப்பதும் அனுமதிக்கப்பட்டதாகும் (3) 32.9 பெண்களையும் குழந்தைகளையும் அறியாமல் கொன்றுவிட்டால் … (3) 32.8 போரில் பெண்களையும் குழந்தைகளையும் கொல்வதற்குத் தடை (2) 32.7 எதிரிகளை(ப் போரில்) எதிர்கொள்ளும்போது பிரார்த்திப்பது (2) 32.6 எதிரியை(ப் போர்க் களத்தில்) சந்திக்க ஆசைப்படுவது வெறுக்கத் தக்கது … (2) 32.5 போரில் தந்திரம் அனுமதிக்கப்பட்டது (2) 32.4 மோசடி செய்வது தடை செய்யப்பட்டதாகும் (8) 32.3 மக்களிடம் இலகுவாக நடந்துகொள்ள வேண்டும்; வெறுப்பைக் கைவிட வேண்டும் (3) 32.2 படைத் தலைவர், போர் நெறிகள் குறித்து அறிவுறுத்துவது (1) 32.1 முன்னறிவிப்பின்றித் தாக்குதல் தொடுக்கலாமா? (1) 31.5 பயணத்தில் உணவைப் பகிர்ந்துண்ணல் (1) 31.4 செல்வத்தால் பிறருக்கு உதவுவது விரும்பத் தக்கது (1) 31.3 விருந்தோம்பல் சார்ந்தவை (3) 31.2 உரிமையாளரின் அனுமதியின்றி கால் நடையில் பால் கறப்பதற்குத் தடை (1) 31.1 ஹாஜிகள் தவறவிட்டவை (2) 31.0 கண்டெடுக்கப்பட்டவை (5) 30.11 நீதிபதி சமரசம் செய்துவைப்பது விரும்பத் தக்கதாகும் (1) 30.10 ஆய்வாளர்களிடையே கருத்து வேறுபாடு (1) 30.9 சாட்சிகளில் சிறந்தவர் (1) 30.8 தவறான தீர்ப்புகளைத் தள்ளுபடி செய்வதும் (மார்க்கத்தில் இல்லாத) புதுமைகளை நிராகரிப்பதும் (2) 30.7 கோபமாக இருக்கும் நீதிபதி, தீர்ப்பளிப்பது விரும்பத் தக்கதன்று (1) 30.6 நீதிபதியின் ஆய்வுக்கு நன்மை உண்டு (1) 30.5 தடைகள் மூன்று (4) 30.4 ஹிந்த் (ரலி) வழக்கு (3) 30.3 வாதங்களின் அடிப்படையில் தீர்ப்பு அமைந்துவிடுதல் (2) 30.2 சத்தியத்தின் / சாட்சியத்தின் அடிப்படையில் தீர்ப்பளித்தல் (1) 30.1 சத்தியம் செய்து நிரூபிப்பது பிரதிவாதிமீது கடமையாகும் (2) 29.11 இழப்பீடு இல்லாத விபத்துகள் (2) 29.10 தண்டனைகள், குற்றங்களுக்கான பரிகாரமாகும் (3) 29.9 சீர்திருத்திற்காக வழங்கப்படும் சாட்டையடிகளின் (அதிகபட்ச) அளவு (1) 29.8 மது அருந்திய குற்றத்திற்கான தண்டனை (4) 29.7 மகப்பேறான பெண்ணின் தண்டனையைத் தள்ளிவைத்தல் (1) 29.6 இஸ்லாமிய அரசின் கீழ் வாழும் யூதர்கள் விபச்சாரத்தில் ஈடுபட்டாலும் கல்லெறி தண்டனை (6) 29.5 விபச்சாரம் செய்தவரின் ஒப்புதல் வாக்குமூலம் (9) 29.4 மணமானவர்கள் விபச்சாரம் செய்தால் கல்லெறி தண்டனை (1) 29.3 விபச்சாரக் குற்றத்திற்கான தண்டனை (2) 29.2 தண்டனையிலிருந்து விலக்கு அளிக்குமாறு பரிந்துரைப்பதற்குத் தடை (3) 29.1 தண்டனைக்குரிய திருட்டின் அளவுகோலும் தண்டனையும் (7) 28.11 சிசுக் கொலைக்கான இழப்பீடும் … (6) 28.10 கொலையாளி, தன் குற்றத்தை ஒப்புக்கொள்வதும் … (2) 28.9 மனிதர்களின் உயிர், தன்மானம், செல்வம் ஆகியவற்றுக்கு ஊறு விளைவிப்பது … (2) 28.8 மறுமையில் வழங்கப்படும் தீர்ப்பும் தண்டனையும் … (1) 28.7 கொலையை (உலகுக்கு) அறிமுகப்படுத்தியவர் மீதான பாவம் (1) 28.6 முஸ்லிமின் மரண தண்டனைக்கான காரணங்கள் (2) 28.5 பற்கள் போன்ற(உறுப்புகளான)வற்றில் பழிக்குப்பழி உண்டு (1) 28.4 தாக்க வந்தவனிடமிருந்து தற்காத்துக் கொள்வதற்காக … (6) 28.3 கல் மற்றும் கூராயுதங்களால் கொலை செய்தால், பழிக்குப்பழி உண்டு … (3) 28.2 வன்முறையாளர்களுக்கும் மதம் மாறியோருக்குமான தண்டனை (4) 28.1 அல்கஸாமா (4) 27.13 விடுதலைக்கு வாக்களிக்கப்பட்ட அடிமையை விற்கலாம் (2) 27.12 அடிமையில் தமது பங்கை மட்டும் விடுதலை செய்தல் (8) 27.11 ‏தன் உரிமையாளருக்கு விசுவாசமாகவும் … (4) 27.10 அடிமைக்கு எஜமானர் உண்பதிலிருந்து உணவளிப்பதும் … (4) 27.9 விபசாரம் செய்துவிட்டதாக அவதூறு கூறுவதற்கான கண்டனம் (1) 27.8 அடிமைகளுடனான நல்லுறவும் கன்னத்தில் அறைந்ததற்கான பரிகாரமும் (8) 27.7 இறைமறுப்பாளராக இருந்தபோது செய்த நேர்ச்சை… (2) 27.6 ஆகுமாக்கப்பட்டதற்கான சத்தியமாக இருந்தாலும் … (1) 27.5 இன்ஷா அல்லாஹ் என்பதை (சத்தியத்தின்போது) சேர்த்துக் கூறுதல் (4) 27.4 சொல்பவரின் எண்ணப்படியே ஒருவருடைய சத்தியம் அமையும் (2) 27.3 சத்தியம் செய்தவர், அதைவிடச் சிறந்ததாக மற்றொன்றைக் காணும்போது … (12) 27.2 ‘லாத்’ மற்றும் ‘உஸ்ஸா’வின் மீது சத்தியம் செய்துவிட்டவர் … (2) 27.1 அல்லாஹ்வைத் தவிர எவர்/எதன் மீதும் சத்தியம் செய்யத் தடை (3) 26.5 நேர்ச்சை முறிவுக்கான பரிகாரம் (1) 26.4 கஅபாவரை நடைப்பயணம் செல்வதாக நேர்ந்துகொண்டவர் (3) 26.3 இறைவனுக்கு மாறு செய்வதிலோ உரிமை இல்லாததிலோ நேர்ச்சை. (1) 26.2 நேர்ச்சை செய்வதற்குத் தடை; அது (விதியில்) எதையும் மாற்றிவிடாது (6) 26.1 நேர்ச்சையை நிறைவேற்றக் கட்டளை (1) 25.5 வசதியற்றவர் மரண சாஸனம் செய்ய முடியாது (6) 25.4 அறக்கொடை (1) 25.3 மனிதன் இறந்த பின்பும் தொடரும் நன்மைகள் (1) 25.2 இறந்துவிட்டவருக்காகச் செய்யப்படும் தர்மங்களின் நன்மை … (3) 25.1 மரண சாஸனம் 1/3 மட்டுமே (5) 25.0 மரண சாஸனம் (2) 24.4 ஆயுட்கால அன்பளிப்பு (11) 24.3 அன்பளிப்பு வழங்குவதில் பிள்ளைகளிடையே பாகுபாடு காட்டுவது … (10) 24.2 தானமும் அன்பளிப்பும் வழங்கப்பட்ட பின், திரும்பப் பெறுவதற்குத் தடை … (4) 24.1 தானமாகக் கொடுத்ததை விலைக்கு வாங்குவது விரும்பத் தக்கதல்ல (4) 23.4 ஒருவர் விட்டுச்செல்லும் செல்வம் அவருடைய வாரிசுகளுக்கு உரியதாகும் (4) 23.3 இறுதியாக அருளப்பெற்றது கலாலா வசனமாகும் (4) 23.2 ‘கலாலா’ சொத்துரிமை (5) 23.1 உரியவர்களுக்கும் உறவினருக்கும் பிரிக்கப்பட்ட பாகங்கள் (3) 23.0 ஒரு முஸ்லிம், இறைமறுப்பாளருக்கு வாரிசாகமாட்டார் (1) 22.31 பாதைக்கு நிலம் ஒதுக்குவதில் கருத்து வேறுபாடு ஏற்பட்டால் அதற்கான தீர்வு (1) 22.30 பிறர் நிலத்தை அபகரித்தல் போன்ற அநீதி இழைத்தல்களுக்குத் தடை (6) 22.29 அண்டை வீட்டாரின் சுவரில் (சாரம் கட்டுவதற்கு) மரக்கட்டை பதிப்பது (1) 22.28 பங்காளியின் இசைவு (3) 22.27 வியாபாரத்தில் (வீண்)சத்தியம் செய்வது விலக்கப்பட்டுள்ளது (2) 22.26 உணவுப் பொருட்களைப் பதுக்குவதற்குத் தடை (2) 22.25 முன்பணம் செலுத்தும் வணிகம் (2) 22.24 அடமானம் உள்ளூரிலும் பயணத்திலும் செல்லும் (3) 22.23 ஓர் உயிரினத்தை அதே இனத்திற்குப் பதிலாக ஏற்றத்தாழ்வோடு விற்கலாம் (1) 22.22 உங்களில் சிறந்தவர் கடனை அழகிய முறையில் திருப்பிச் செலுத்துபவரே (4) 22.21 ஒட்டகத்தை விற்றவர் அதில் பயணிக்க நிபந்தனை விதிப்பது (5) 22.20 அனுமதிக்கப்பட்டவற்றையும் ஐயத்திற்குரியவற்றையும் கையாளுதல் (1) 22.19 வட்டி வாங்குபவருக்கும் வட்டி கொடுப்பவருக்கும் சாபம் (2) 22.18 உணவுப் பொருளை, சரிக்குச் சரியாக விற்றல் (12) 22.17 பொன்னும் மணியும் பதித்த மாலையை விற்பது (4) 22.16 தங்கத்திற்கு வெள்ளியைக் கடனாக விற்பதற்குத் தடை (3) 22.15 நாணயமாற்று வியாபாரம்; வெள்ளிக்குத் தங்கத்தை ரொக்கத்துக்கு விற்பது (7) 22.14 வட்டி (4) 22.13 மது, செத்தவை, பன்றி, சிலைகள் ஆகியவற்றை விற்பதற்குத் தடை (4) 22.12 மதுபான வியாபாரத்திற்குத் தடை (4) 22.11 குருதி உறிஞ்சி எடுப்பதற்காகக் கூலி பெறுவது கூடும் (4) 22.10 வேட்டை, காவல், பாதுகாப்புக்காக நாய் வளர்க்கலாம் (18) 22.9 நாய் விற்ற காசு, சோதிடரின் தட்சணை, விபச்சாரியின் வருமானம் (4) 22.8 தேவைக்குப் போக மீதம் உள்ள நீரை விற்பதற்குத் தடை (5) 22.7 வசதியுள்ளவர் கடனைச் செலுத்த தாமதம் செய்யக் கூடாது (1) 22.6 கடனை அடைக்க சிரமப்படுபவருக்கு அவகாசம் அளிப்பதன் சிறப்பு (7) 22.5 திவாலானவரிடம் திரும்பப் பெற்றுக்கொள்ளும் உரிமை (4) 22.4 கடனில் தள்ளுபடி செய்வது விரும்பத் தக்கதாகும் (3) 22.3 சேதமடைந்த பழங்களுக்கான தொகைக்குத் தள்ளுபடி (5) 22.2 மரம் நடுதலின், பயிர் செய்தலின் சிறப்பு (5) 22.1 நிபந்தனையின் பேரில் தோப்பைக் குத்தகைக்கு விடுவது (4) 21.21 நிலத்தை (விளைவித்துக்கொள்ள) இரவலாக வழங்குவது (4) 21.20 ‘முஸார’ஆவும் ‘முஆஜரா’வும் (2) 21.19 பொன், வெள்ளி(நாயணங்களு)க்கு நிலத்தைக் குத்தகைக்கு விடுவது (3) 21.18 தானியத்திற்கு நிலத்தைக் குத்தகைக்கு விடுவது (2) 21.17 நிலக் குத்தகை (24) 21.16 தடை செய்யப்பட்ட வியாபார வகைகள் (6) 21.15 கனிகள் நிறைந்த பேரீச்ச மரத்தை விற்பது (4) 21.14 (மரத்திலுள்ள) செங்கனிகளை மாற்றிக் கொள்வதற்குத் தடை (14) 21.13 மரத்திலுள்ள பழங்களை முற்றுவதற்கு முன் விற்பதற்குத் தடை (10) 21.12 வியாபாரத்தில் ஏமாற்றப்படுபவர் (1) 21.11 வியாபாரத்தில் உண்மை பேசுவதும் குறைகளைத் தெளிவுபடுத்துவதும் (1) 21.10 விற்பவருக்கும் வாங்குபவருக்கும் வியாபாரத்தை முறித்துக்கொள்ளும் உரிமை (4) 21.9 அளவு தெரியாத பேரீச்சம் பழக் குவியலை விற்பதற்குத் தடை (1) 21.8 வாங்கப்பட்ட பொருள் கைக்கு வருமுன் (பிறருக்கு) விற்பது கூடாது (13) 21.7 மடி கனக்கச் செய்யப்பட்ட கால்நடைகளை விற்பனை செய்வது பற்றிய சட்டம் (5) 21.6: கிராமவாசிக்காக, நகரவாசி விற்றுக் கொடுக்கத் தடை (5) 21.5: விற்பனைக்கு வரும் சரக்குகளை இடைமறித்து வாங்கத் தடை (4) 21.4: வியாபாரத்தில் தடை செய்யப்பட்டவை (7) 21.3: ஒட்டகக் கன்று (அது பிறக்குமுன்) விற்பதற்கு தடை! (2) 21.2: கல்லெறி வியாபாரம் மற்றும் மோசடி வியாபாரம் ஆகியவை செல்லாது (1) 21.1: ‘முலாமஸா’ மற்றும் ‘முனாபதா’ ஆகிய வியாபாரங்கள் செல்லாது (3) 20.7: அடிமையான தந்தையை விடுதலை செய்வதன் சிறப்பு (1) 20.6: அடிமைகளை விடுதலை செய்வதன் சிறப்பு (4) 20.5: விடுதலை செய்த உரிமையாளரை மாற்றிக் கூறத் தடை (4) 20.4: வாரிசாகும் உரிமையை விற்பதற்கும் அன்பளிப்பாக வழங்குவதற்கும் தடை (1) 20.3: விடுதலை செய்தவருக்கே வாரிசுரிமை உரியது (9) 20.2: அடிமை (தனது முழு விடுதலைக்காக) உழைத்துப் பொருளீட்டுவது (2) 20.1: ஓர் அடிமையி(ன் விலையி)ல், ஒருவர் தமக்கான பங்கை விடுவிப்பது (1) 19.1: சுய சாபம் வேண்டுதல் (17) 18.9: கணவன் இறந்து ‘இத்தா’விலிருக்கும் பெண் துக்கம் கடைப்பிடிப்பது (11) 18.8: கர்ப்பமுற்றிருக்கும் பெண்ணின் ‘இத்தா’க் காலம், பிரசவத்துடன் முடிந்துவிடும் (2) 18.7: ‘இத்தா’விலிருக்கும் பெண் தன் தேவைக்காக வெளியே செல்லலாம் (1) 18.6: மூன்று தலாக் சொல்லப்பட்ட பெண்ணுக்கு ஜீவனாம்சம் பற்றி… (18) 18.5: ஈலாச் செய்வது, மனைவியிடமிருந்து விலகுவது, விருப்ப உரிமை அளிப்பது (5) 18.4: மனைவிக்கு (த் தம்மைப் பிரிந்துவிட) உரிமை அளிப்பது மணவிலக்கு ஆகாது (8) 18.3: மணவிலக்குச் செய்யும் நோக்கமின்றி கூறினால், அது மணவிலக்கு ஆகாது (4) 18.2: மூன்று தலாக்குகள் (3) 18.1: மாதவிடாயான மனைவியை அவளது சம்மதமின்றி மணவிலக்குச் செய்வதற்குத் தடை (14) 17.19: ஹவ்வா-வும், பெண்கள் கணவரை ஏமாற்றுதலும் (2) 17.18: மனைவியரின் நலம் நாடுதல் (4) 17.17: பயன் தரும் இவ்வுலகச் செல்வங்களுள் மிகச் சிறந்த செல்வம், நற்குணமுள்ள மனைவியே (1) 17.16: கன்னிப் பெண்ணை மணப்பது விரும்பத் தக்கதாகும் (5) 17.15: மார்க்கப் பற்றுள்ள பெண்ணை மணப்பது விரும்பத் தக்கதாகும் (2) 17.14: மனைவியருள் ஒருவர், தனது முறைநாளை மற்றவருக்கு விட்டுக்கொடுக்கலாம் (4) 17.13: மனைவியருக்கு (இரவுகளை) ஒதுக்கீடு செய்வது (1) 17.12: கன்னி கழிந்த பெண்ணுக்கும், கன்னிப் பெண்ணுக்கும் கணவன் ஒதுக்க வேண்டிய நாட்கள் (6) 17.11: சாயல் அறியும் நிபுணரின் கூற்றுப்படி, குழந்தைக்கு உரியவரைக் கண்டறிவது (3) 17.10: எஜமானரின் கீழ் வாழும் பெண்ணின் குழந்தை, அவருக்கே உரியது (2) 17.9: பெண் போர்க் கைதியுடன் உடலுறவு கொள்ளலாம் (2) 17.8: பசிக்காகத் தாய்ப்பால் அருந்தினால்தான் பால்குடி உறவு ஏற்படும் (1) 17.7: பருவ வயதை அடைந்தவருக்குப் பாலூட்டுவது (6) 17.6: ஐந்து தடவை அருந்தினால்தான் பால்குடி உறவு உண்டாகும் (2) 17.5: ஓரிரு தடவை (பெண்ணின் மார்பில்) பால் குடிப்பது பற்றிய சட்டம் (6) 17.4: மனைவியின் மகளையும் மனைவியின் சகோதரியையும் மணப்பதற்குத் தடை (2) 17.3: பால்குடிச் சகோதரரின் மகளை மணப்பது தடை செய்யப்பட்டுள்ளது (3) 17.2: பால்குடித் தந்தையின் (இரத்த பந்த) உறவினரும் மணமுடிக்கத் தகாதவரே! (6) 17.1: பிறப்பால் ஏற்படும் உறவும் பால்குடி உறவும் (2) 16.24: பாலூட்டும் மனைவியுடன் உடலுறவு கொள்ளும்போது அஸ்லுச் செய்வது வெறுக்கத் தக்கது (3) 16.23: கருவுற்றிருக்கும் பெண் போர்க் கைதியுடன் உடலுறவு கொள்வது தடை செய்யப்பட்டுள்ளது (1) 16.22: உடலுறவின்போது இடைமுறிப்பு – ‘அஸ்லு’ச் சட்டம் (12) 16.21: மனைவியுடன் நடைபெறும் உடலுறவு இரகசியங்களை வெளியே சொல்வது தடுக்கப்பட்டது (2) 16.20: ஒரு பெண், தன் கணவனின் படுக்கைக்குச் செல்ல மறுப்பதற்குத் தடை (3) 16.19: உடலுறவின் ஒழுங்குகள் (2) 16.18: உடலுறவின்போது ஓத வேண்டிய விரும்பத் தகுந்த பிரார்த்தனை (1) 16.17: மூன்று முறை மணவிலக்கு அளிக்கப்பட்ட பெண்ணின் மறுவிருப்பம் (4) 16.16: விருந்துக்கான அழைப்பை ஏற்பது பற்றிய கட்டளை (13) 16.15: ஸைனப் பின்த்து ஜஹ்ஷு (ரலி) திருமணம்; ஹிஜாப் பற்றிய வசனம்; மணவிருந்து (7) 16.14: அடிமைப் பெண்ணை விடுதலை செய்து, பின்னர் அவளை மணமுடித்துக்கொள்வதன் சிறப்பு (6) 16.13: மணக்கொடை (மஹ்ரு) என்பது … (7) 16.12: ஒருவர் தாம் மணமுடிக்க விரும்பும் பெண்ணின் முகத்தையும் இரு முன் கைகளையும் பார்ப்பது (2) 16.11 ஷவ்வால் மாதத்தில் மணமும் தாம்பத்திய உறவும் (1) 16.10: இளவயதுக் கன்னிக்கு அவளுடைய தந்தை மணமுடித்துவைத்தல் (4) 16.9: மணப் பெண்ணின் வாய் வழிச் சம்மதமும் மௌனச் சம்மதமும் (4) 16.8: திருமண (முன்) நிபந்தனைகளை நிறைவேற்றல் (1) 16.7: மணக்கொடையில்லா திருமணம் செல்லாது (5) 16.6: தம் (முஸ்லிம்) சகோதரன் கேட்டுக்கொண்டிருக்கும் ஒரு பெண்ணை, மற்றவர் கேட்கலாகாது (7) 16.5: இஹ்ராம் புனைந்தவர் திருமணம் செய்வதற்குத் தடை; அவர் பெண் கேட்பது வெறுக்கத் தக்கது (8) 16.4: மனைவியின் அத்தையை, சின்னம்மாவை மணக்கத் தடை (8) 16.3: இடைக்காலத் திருமணம், (முத்ஆ) காலாவதியானது (21) 16.2: இச்சை தூண்டப்பட்டவர், தமது இச்சையைத் தணித்துக் கொள்ளட்டும் (2) 16.1: வசதி இருந்தால் மணமுடிப்பதும் இல்லாதவர் நோன்பு நோற்பதும் (6) 15.97: குபாப் பள்ளிவாசல், அதில் தொழுவது, அதைத் தரிசிப்பது ஆகிய சிறப்புகள் (7) 15.96: இறையச்சத்தின் மீது நிறுவப்பட்ட பள்ளிவாசல் (1) 15.95: மூன்று பள்ளிவாசல்களைத் தவிர வேறெதற்கும் (புனிதப்) பயணம் கிடையாது (2) 15.94: மக்கா, மதீனாப் பள்ளிவாசல்களில் தொழுவதன் சிறப்பு (6) 15.93: ‘உஹுத்’ மலை நம்மை நேசிக்கிறது; நாமும் அதை நேசிக்கின்றோம் (3) 15.92: சொர்க்கப் பூஞ்சோலைகளுள் ஒன்று (3) 15.91: மதீனாவாசிகள் மதீனாவை விட்டு அகலும்போது அதன் நிலை (2) 15.90: மதீனாவிலேயே தங்கியிருப்பதற்கு ஆர்வமூட்டல் (2) 15.89: மதீனாவாசிகளுக்குக் கேடு நினைப்பவர்களை, அல்லாஹ் உருக்குலைத்துவிடுவான் (3) 15.88: தன்னிலுள்ள தீயவர்களை மதீனா அகற்றிவிடும் (5) 15.87: கொள்ளை நோயும் தஜ்ஜாலும் நுழைய முடியாமல் மதீனா பாதுகாக்கப்பட்டுள்ளது (2) 15.86: மதீனாவில் ஏற்படும் நெருக்கடிகளைச் சகித்துக்கொண்டு, அங்குக் குடியிருக்க ஆர்வ மூட்டல் (10) 15.85: மதீனாவின் சிறப்பு; பிரார்த்தித்ததும் புனிதமானவையும் (17) 15.84: இஹ்ராமின்றி மக்காவிற்குள் நுழைய அனுமதி (5) 15.83: அவசியத் தேவையின்றி மக்காவிற்குள் ஆயுதம் எடுததுச் செல்வதற்குத் தடை (1) 15.82: மக்காவும், அதன் புனிதமானவைகளும் (4) 15.81: முஹாஜிருக்கு மக்காவில் தக்குவதற்கு அனுமதிக்கப்பட்ட நாட்கள் (4) 15.80: ஹாஜிகள் மக்காவில் தங்குவதும் அங்குள்ள வீடுகளை வாரிசுரிமையாகப் பெறுவதும் (3) 15.79: ஹஜ், உம்ரா, அரஃபா நாள் ஆகியவற்றின் சிறப்பு (3) 15.78: இணைவைப்பவருக்கான ஹஜ் சட்டங்கள் (1) 15-77: ஹஜ் அல்லது உம்ராவிலிருந்து திரும்பும்போது துல்ஹுலைஃபாவில் தங்கித் தொழுவது (5) 15.76: பயணத்திலிருந்து திரும்பி வரும்போது ஓத வேண்டியவை (2) 15.75: பயணங்களில் வாகனத்தில் ஏறியதும் ஓத வேண்டிய துஆ (2) 15.74: மஹ்ரமான ஆணுடன் மட்டுமே பெண்ணின் ஹஜ் முதலான பயணம் (11) 15.73: ஹஜ் கடமை, ஆயுளில் ஒரு முறைதான் (1) 15.72: குழந்தையின் ஹஜ் செல்லும்; அதை ஹஜ்ஜுக்கு அழைத்துச் சென்றவருக்கும் நற்பலன் உண்டு (3) 15.71: இயலாதவருக்காகவோ, இறந்தவருக்காகவோ பிறர் ஹஜ் செய்தல் (2) 15.70: கஅபாவின் வளைந்த சுவரும் அதன் தலைவாயிலும் (1) 15.69: இறையில்லம் கஅபாவை இடித்துக் கட்டுதல் (7) 15.68: கஅபாவின் உள்ளே நுழைவதும் அதனுள் தொழுவதும் (9) 15.67: விடைபெறும் தவாஃப் மாதவிடாய் ஏற்பட்ட பெண்ணுக்குக் கடமையில்லை (8) 15.66: செல்லும் வழியில் பலிப் பிராணி பாதிப்புக்குள்ளாகிவிட்டால் … (2) 15.65: பலியிடக் கொண்டுசெல்லும் ஒட்டகத்தில், பயணம் செய்ய அனுமதி (6) 15-64: ஹரம் எல்லைக்குச் செல்லாதவர், பலிப் பிராணியை அனுப்பிவைக்கும் முறை (11) 15.63: ஒட்டகத்தை அறுக்கும் முறை (1) 15.62: பலிப் பிராணிகளுள் மாட்டிலும் ஒட்டகத்திலும் கூட்டுச் சேர்வது (8) 15.61: பலிப் பிராணிகளின் இறைச்சி, தோல், சேணம் ஆகியவை தர்மத்துக்குரியன (2) 15.60: ‘தஷ்ரீக்’ நாட்களின் இரவுகளில் மினாவில் தங்குவது கட்டாயமாகும் (2) 15.59: ‘நஃப்ரு’டைய நாளில் ‘அல்முஹஸ்ஸபி’ல் தங்குவதும் அங்குத் தொழுவதும் (9) 15.58: துல்ஹஜ் பத்தாவது நாளில் ‘தவாஃபுல் இஃபாளா’ செய்வது (2) 15.57: ஹஜ் சடங்குகளில் முன் – பின் ஆகிவிட்டால் … (6) 15.56: துல்ஹஜ் பத்தாம் நாளின் சடங்குகள் (3) 15.55: தலைமுடியை மழிப்பதும் குறைப்பதும் (6) 15.54: கற்களின் எண்ணிக்கை (1) 15.53: கல்லெறியும் நேரம் (1) 15.52: பொடிக் கற்கள் போதும் (1) 15.51: துல்ஹஜ் பிறை பத்தில் ஜம்ரத்துல் அகபாவுக்குக் கல்லெறிதல் (3) 15.50: ‘ஜம்ரத்துல் அகபா’வின் மீது கல் எறியும்போது தக்பீர் கூறுவது (4) 15.49: முஸ்தலிஃபாவிலிருந்து மினாவிற்குப் புறப்படச் செய்வது (11) 15.48: முஸ்தலிஃபாவில் ஸுப்ஹுத் தொழுகையை ஆரம்ப நேரத்தில் தொழுவது (1) 15.47: மஃக்ரிப், இஷா வை அடுத்தடுத்துத் தொழுவது (14) 15.46: அரஃபா நாளில் மினாவிலிருந்து அரஃபாவிற்குப் போகும்போது தல்பியாவும் தக்பீரும் கூறுதல் (4) 15.45: துல்ஹஜ் பத்தாவது நாளன்று கல்லெறியத் துவங்கும்வரை தல்பியாச் சொல்லிக்கொண்டிருப்பது (7) 15.44: ஸஃபா-மர்வாவுக்கிடையே ஸயீ (ஓட்டம்) ஒரே தடவைதான் (1) 15.43: ஸஃபா-மர்வாவுக்கிடையே ஸயீச் செய்வது முக்கியக் கடமையாகும் (5) 15.42: வாகனங்கள் மீதமர்ந்து தவாஃப் செய்யலாம் (6) 15.41: தவாஃபின்போது ஹஜருல் அஸ்வதை முத்தமிடுவது (5) 15.40: இறையில்லத்தில் முத்தமிடப்படும் இரு மூலைகள் (6) 15.39: தவாஃபில் விரைந்து நடப்பது விரும்பத்தக்கது (12) 15.38: மக்காவினுள் நுழையும் முன்… (4) 15.37 மக்காவினுள் நுழைவதும் வெளியேறுவதும் (3) 15.36 ரமளான் மாதத்தில் உம்ராச் செய்வதன் சிறப்பு (2) 15.35: நபியவர்களின் உம்ரா எண்ணிக்கையும் காலமும் (4) 15.34 நபியவர்களின் தல்பியாவும் பலியும் (4) 15.33: உம்ராவில் தலைமுடி குறைத்தல் (5) 15.32: இஹ்ராமின்போது பலிப் பிராணி (4) 15.31: ஹஜ்ஜுப் பருவங்களில் உம்ராச் செய்ய அனுமதி (6) 15.30: தமத்துஉ ஹஜ் (2) 15.29: இஹ்ராம் ஹாஜிக்குக் கட்டாயம் (3) 15.28: தவாஃபும் ஸயீயும் கட்டாயம் (3) 15.27: ஹஜ் உம்ரா சேர்த்தும் தனித்தும் செய்வது (3) 15.26: ஒரே இஹ்ராமில் உம்ரா ஹஜ் (3) 15.25: இஹ்ராமிலிருந்து விடுபடுதல் (3) 15.24: பலிப் பிராணியும் ஹஜ் கடமையும் (2) 15.23: தமத்துஉ ஹஜ் அனுமதிக்கப்பட்ட ஒன்றாகும் (13) 15.22: ஒருவர் வேறொருவரின் இஹ்ராமை அச்சொட்டி பூணுதல் (3) 15.21: அரஃபா பெருவெளியில் தங்கி திரும்புதல் தொடர்பான இறை கூற்று (3) 15.20: அரஃபாப் பெருவெளி முழுவதும் தங்குமிடம் (2) 15.19: நபி (ஸல்) அவர்களின் ஹஜ் (1) 15.18: உம்ராவையும் ஹஜ்ஜையும் தனித் தனியாக நிறைவேற்றி பயனடைதல் (2) 15.17: இஹ்ராமின் முறைகள் (27) 15.16: இரத்தப்போக்குடைய பெண் இஹ்ராமில் குளித்தல் (2) 15.15: இஹ்ராமிலிருந்து விடுபட முன் நிபந்தனையிட அனுமதி (5) 15.14: முஹ்ரிம் இறந்துவிட்டால் செய்ய வேண்டியவை (9) 15.13: இஹ்ராம் பூண்ட முஹ்ரிம், தம் உடலைக் கழுவிக்கொள்ள அனுமதி (1) 15.12: இஹ்ராம் பூண்ட முஹ்ரிம், தம் கண்களுக்கு மருந்திட அனுமதி (2) 15.11: இஹ்ராம் பூண்ட முஹ்ரிம், ஹிஜாமா செய்ய அனுமதி (2) 15.10: முஹ்ரிமுக்குத் தலைமுடி மழிக்க அனுமதியும் பரிகாரமும் (7) 15.09: ஹரம் எல்லைக்குள் கொல்ல அனுமதிக்கப்பட்டவைகள் (12) 15.08: இஹ்ராம் பூண்ட முஹ்ரிம் வேட்டையாடுவது குறித்து.. (9) 15.07: இஹ்ராமின்போது நறுமணம் பூசுதல் (19) 15.06: துல்ஹுலைஃபா பள்ளியில் தொழுதல் (1) 15.05: வாகனம் புறப்படுவதற்கு ஆயத்தமானவுடன் தல்பியா கூறுவது (4) 15.04: மதீனாவாசிகள் இஹ்ராம் பூண வேண்டிய இடம் (2) 15.03: தல்பியாவின் பண்பும் அதன் நேரமும் (4) 15.02: ஹஜ்/உம்ராவிற்கான இஹ்ராம் எல்லைகள் (7) 15.01: ஹஜ்/உம்ராவில் அனுமதிக்கப்பட்டவை.. (10) 14.04: துல்ஹஜ் மாதத்தின் பத்து நோன்புகள் (2) 14.02: இஃதிகாஃப் இருக்குமிடத்தினுள் நுழையும் நேரம் (1) 14.03: இறுதிப் பத்தில் வழிபாடுகளில் ஈடுபடுவது (2) 14.01: இறுதிப் பத்து நாட்களில் இஃதிகாஃப் இருத்தல் (5) 13.40: லைலத்துல் கத்ர் இரவு குறித்து.. (17) 13.39: ஷவ்வால் ஆறு நோன்பு (1) 13.37: ஷஅபான் மாத இறுதியில் நோன்பு நோற்றல் (3) 13.38: முஹர்ரம் நோன்பின் சிறப்பு (2) 13.36: சுன்னத்தான நோன்புகள் (5) 13.35: ஒரு நாள் விட்டு ஒரு நாள் நோன்பு (12) 13.34: நோன்பில்லாமல் எந்த மாதத்தையும் கடக்க விடாமலிருப்பது விரும்பத் தக்கது (9) 13.33: மறதியால் (நோன்பாளி) நோன்பு முறியாது (1) 13.32: கூடுதலான நோன்பு முடிவு செய்வதற்கும் விடுவதற்கும் அனுமதி (2) 13.31: அல்லாஹ்வின் பாதையில் செல்லும்போது சக்தி பெற்றிருப்பவர் நோன்பு நோற்பதன் சிறப்பு (2) 13.30: நோன்பின் மாண்பு (6) 13.29: நோன்பாளி, நாவைக் காப்பது (1) 13.28: நோன்பாளி விருந்துக்கு அழைக்கப்பட்டால் “நான் நோன்பாளி” என்று சொல்லிவிட வேண்டும் (1) 13.27: இறந்துபோனவரின் விடுபட்ட நோன்பை நோற்பது (5) 13.26: ரமளானில் விடுபட்ட நோன்பை ஷஅபான் மாதத்தில் ‘களா’ச் செய்தல் (2) 13.25: இறைவசனம் வேறொரு வசனத்தின் மூலம் மாற்றம் (2) 13.24: வெள்ளிக்கிழமை மட்டும் நோன்பு நோற்பது விரும்பத் தக்கதன்று (3) 13.23: அய்யாமுத் தஷ்ரீக் நாட்களில் நோன்பு நோற்பதற்குத் தடை (2) 13.22: நோன்புப் பெருநாளிலும் ஹஜ்ஜுப் பெருநாளிலும் நோன்பு நோற்பதற்குத் தடை (6) 13.20: ஆஷூரா நோன்பை எந்த நாளில் நோற்க வேண்டும்? (4) 13.19: ஆஷூரா நாளில் நோன்பு நோற்றல் (17) 13.18: அரஃபா நாளில் அரஃபாவில் தங்கும் ஹாஜிகளின் நோன்பு (4) 13.17: பயணத்தில் நோன்பு நோற்பதையோ விட்டுவிடுவதையோ தேர்ந்துகொள்ளலாம் (5) 13.16: பயணத்தில் நோன்பைக் கைவிட்டவர், பொதுப் பணியாற்றினால் கிடைக்கும் நன்மை (3) 13.15: பயணத்தில் இருப்பவர் மீதான கடமையான ரமளான் நோன்பு (11) 13.14: ரமளான் பகலில் உடலுறவில் ஈடுபடுவதற்குத் தடையும் அதன் பரிகாரமும் (5) 13.13: பெருந்துடக்குடன் வைகறைப் பொழுதை அடைந்தவரின் நோன்பு செல்லும் (6) 13.12: கட்டுப்படுத்தும் நோன்பாளிக்கு (தம் மனைவியை) முத்தமிடத் தடையில்லை (13) 13.11: தொடர்நோன்பு நோற்பதற்குத் தடை (7) 13.10: பகற் பொழுது வெளியேறி நோன்பு நிறைவடையும் நேரம் (3) 13.09: ஸஹரைத் தாமதிப்பதும் நோன்பு துறப்பதை விரைந்து செய்வதும் (6) 13.08: ஃபஜ்ரு நேரம் வந்தவுடன் நோன்பு ஆரம்பமாகிவிடும் (11) 13.07: ‘இரு பெருநாட்களின் இரு மாதங்களும் குறைவுபடாது’ நபிகளாரின் விளக்கம் (2) 13.06: (வானை) மேகம் மூடிக்கொண்டால் (மாதத்தின் நாட்கள்) முப்பதாக முழுமையாக்கப்படும் (2) 13.05: ஒவ்வோர் ஊர்க்காரர்களுக்கும் அவரவர் பார்க்கும் பிறையே பொருந்தும் (1) 13.04: மாதம் என்பது இருபத்தொன்பது நாட்களாகவும் இருக்கும் (6) 13.03: ரமளானுக்கு முந்தைய இரு நாள்களில் நோன்பு நோற்கக் கூடாது (1) 13.02: ரமளான் நோன்பு தொடக்கமும் முடிவும் (17) 13.01: ரமளான் மாதத்தின் சிறப்பு (2) 12.55: ஸகாத் வசூலிப்பவர், தடை செய்யப்பட்டதைக் கோராதவரை அவரைத் திருப்திபடுத்த வேண்டும் (1) 12.54: தர்மப் பொருள் கொண்டுவந்தவருக்காகப் பிரார்த்தித்தல் (1) 12.53: நபி (ஸல்) அன்பளிப்பை ஏற்றதும் தர்மத்தை மறுத்ததும் (1) 12.52: தர்மப் பொருள், அதன் பண்பு நீங்கி விடுதல் (5) 2.27: நாய் நக்கிய பாத்திரம் பற்றிய சட்டம் (6) 2.28: தேங்கிக் கிடக்கும் தண்ணீரில் சிறுநீர் கழிப்பதற்குத் தடை (3) 2.29: பெருந்துடக்குடையவர் தேங்கிய நீரில் இறங்கிக் குளிக்கத் தடை (1) 2.30: பள்ளிவாசலில் சிறுநீர் கழித்தால்… (3) 2.31: தாய்பால் குடிக்கும் குழந்தையின் சிறுநீரைக் கழுவும் சட்டம் (4) 2.32: விந்து பற்றிய சட்டம் (4) 2.33: மாதவிடாய் இரத்தம் கழுவும் முறை (1) 2.34: சிறுநீரைச் சுத்தம் செய்வது கட்டாயம் (1) 3.01: மாதவிடாயான மனைவியைக் கீழாடைக்கு மேல் அணைத்துக் கொள்வது. (3) 3.02: மாதவிடாயான மனைவியுடன் ஒரே போர்வைக்குள் படுத்துக் கொள்வது. (2) 3.03: மாதவிடாயான பெண் செய்ய அனுமதிக்கப்பட்டவை (11) 3.04: இச்சை நீர் (3) 3.05: உறங்கி எழுந்ததும் முகத்தையும் கையையும் கழுவுதல் (1) 3.06: பெருந்துடக்காளி செய்ய வேண்டியவை (8) 3.07: மதன நீர் வெளிப்பட்ட பெண்ணுக்குக் குளியல் கடமை. (5) 3.08: ஆண்/பெண் (விந்து-மதன)நீரிலிருந்துதான் குழந்தை உருவாகிறது. (1) 3.09: பெருந்துடக்கிற்கான குளியல் முறை (5) 3.10: பெருந்துடக்கு குளியல் தொடர்பானவை (14) 3.11: குளிக்கும் போது மூன்றுமுறை தண்ணீர் ஊற்றுதல் (4) 3.12: குளிக்கும் பெண்களின் சடைமுடி பற்றிய சட்டம் (2) 3.13: மாதவிடாய் குளியலின் போது கஸ்தூரி பயன்படுத்துதல் (2) 3.14: தொடர் உதிரப் போக்குடைய பெண்களின் தொழுகை மற்றும் குளியல் (5) 3.15: மாதவிடாய் நாட்களில் விடுபட்ட கடமைகள் (3) 3.16: குளிப்பவர் திரையிட்டுக் கொள்தல் (3) 3.17: பிறரின் மறையுறுப்பைப் பார்த்தல் (1) 3.18: தனித்துக் குளிக்கும் போது ஆடையின்றி குளித்தல் (1) 3.19: மறையுறுப்பை மறைத்துக் கொள்வதில் கவனம் (3) 3.21: (விந்து)நீர் வெளிப்பட்டாலே (குளியல்)நீர் கடமையாகும் (9) 3.22: ஆண்-பெண் குறிகள் இணைந்து விட்டால் குளியல் கடமையாகும் (3) 3.23: சமைக்கப்படவற்றை உண்டால் மீண்டும் உளூ செய்தல் (3) 3.24: சமைக்கப் பட்டவற்றை உண்டால் உளூச் செய்யும் கட்டாயம் மாற்றப் பட்டது (8) 3.25: ஒட்டக இறைச்சி உண்டால் உளூச் செய்ய வேண்டும் (1) 3.26: வாயு பிரிந்த சந்தேகம் ஏற்பட்டாலும் தொழலாம் (2) 3.27: பதனிடப்படுவதால் செத்த பிராணியின் தோல் தூய்மை ஆகும் (7) 3.28: தயம்மும் (6) 3.29: ஒரு முஸ்லிம் (பெருந்துடக்கு ஏற்பட்டதால்) அசுத்தமாகிவிட மாட்டார். (2) 3.30: பெருந்துடக்கு போன்ற நிலைகளிலும் அல்லாஹ்வைத் துதித்தல். (1) 3.31: சிறுதுடக்காளி (உளூச் செய்யாமல்) உண்ணலாம் (4) 3.32: கழிப்பிடத்திற்குச் செல்லும்போதான பிரார்த்தனை (1) 3.33: உட்கார்ந்து கொண்டு உறங்குவது உளூவை முறிக்காது. (4) 4.01: தொழுகை அழைப்பின் தொடக்கம் (1) 4.02: தொழுகை அறிவிப்பு தொடர் அமையும் விதம் (3) 4.03: தொழுகை அழைப்பு முறை (1) 4.04: ஒரு பள்ளிவாசலுக்கு இரு தொழுகை அழைப்பாளர்கள் (1) 4.05: பார்வையற்றவர் தொழுகை அழைப்பு விட நிபந்தனை (1) 4.06: போரின் போது இணைவைப்பாளர் நாட்டில் தொழுகை அழைப்பு விடுக்கப்பட்டால் (1) 4.07: தொழுகை அழைப்பைச் செவியுறுபவர் செய்ய வேண்டியவை (4) 4.08: தொழுகை அழைப்பின் சிறப்பும் ஷைத்தான் வெருண்டோடுவதும் (6) 4.09: இரு கைகளையும் தோள் புஜத்துக்கு உயர்த்துதல் (4) 4.10: அல்லாஹு அக்பர், ஸமி அல்லாஹு லிமன் ஹமிதஹ் கூறும் இடங்கள் (5) 4.11: தொழுகையில் அல்ஃபாத்திஹா அத்தியாயம் ஓதுதல் (8) 4.12: இமாமைப் பின்பற்றித் தொழுபவர் உரத்து ஓதலாகாது (2) 4.13: பிஸ்மில்லாஹ்வை(த் தொழுகையில்) உரத்து ஓதாலாகாது என்போரின் வாதம் (2) 4.14: அத்தியாயங்களின் துவக்கம் “பிஸ்மில்லாஹ்” குறித்த வாதம் (1) 4.15: தக்பீருக்குப் பின்னும் சஜ்தாவிலும் கைகளை வைக்கும் முறை (1) 4.16: தொழுகையில் அத்தஹிய்யாத் ஓதுவது (4) 4.17: இறுதி அத்தஹியாத்திற்குப் பின் ஸலவாத் கூறுதல் (4) 4.18: ஸமி அல்லாஹு லிமன் ஹமிதஹ், ரப்பனா ல(க்)கல் ஹம்து, ஆமீன் ஆகியவை கூறுவது (5) 4.19: இமாமை மஃமூம் பின்தொடர்வது (5) 4.20: இமாமை முந்துவதற்குத் தடை (4) 4.21: இமாமைப் பின்பற்றுவதில் சட்ட மாற்றம் (10) 4.22: இமாம் வருவதற்குத் தாமதமானால்… (2) 4.23: தொழுகையில் இமாமுக்கு ஏதாவது உணர்த்த விரும்பினால்… (1) 4.24: தொழுகையை முழுமையாக உள்ளச்சத்துடன் தொழல் (4) 4.25: தொழுகையில் இமாமை முந்தாமல் இருத்தல் (7) 4.26: தொழும்போது வானத்தை அண்ணாந்து பார்ப்பதற்குத் தடை (2) 4.27: தொழுகையில் ஒழுங்குகள் (3) 4.28: தொழுகையில் வரிசைகளைப் பேணுதல் (11) 4.29: ஆண்களுக்குப் பின்னால் தொழும் பெண்கள் தலை உயர்த்தும் முறை (1) 4.30: பெண்கள் பள்ளிவாசலுக்குச் செல்தல், நறுமணம் பூசுதல் (11) 4.31: தொழுகையில் அச்சநிலையில் குர்ஆன் ஓதும் முறை (2) 4.32: குர்ஆன் ஓதப்படும்போது செவிதாழ்த்திக் கேட்க வேண்டும். (2) 4.33: ஸுப்ஹுத் தொழுகையில் உரத்துக் குர்ஆன் ஓதுதல் (4) 4.34: லுஹ்ரு, அஸ்ருத் தொழுகைகளில் குர்ஆன் ஓதுதல் (8) 4.35: ஸுப்ஹுத் தொழுகையில் குர்ஆன் ஓதுதல் (13) 4.36: இஷாத் தொழுகையில் குர்ஆன் ஓதுவது (8) 4.37: தொழுகையைச் சுருக்கி, நிறைவுறத் தொழுவிப்பதற்கான கட்டளை (11) 4.38: தொழுகையின் நிலைகளை நிதானமாக, சுருக்கி, நிறைவாகச் செய்வது (4) 4.39: தொழுகையில் இமாமை முந்தி விடாமலிருத்தல் (5) 4.40: ருகூஉவிலிருந்து தலையை உயர்த்திய பின் ஓத வேண்டியவை (5) 4.41: ருகூஉவிலும் ஸஜ்தாவிலும் குர்ஆன் ஓதுவதற்குத் தடை (6) 4.42: ருகூஉவிலும் ஸஜ்தாவிலும் ஓத வேண்டியவை (9) 4.44: ஸஜ்தாவின் போது தரையில் படவேண்டிய உறுப்புகள் (7) 4.45: சீராக ஸஜ்தா செய்தல் (2) 4.46: தொழுகை முறைத் தொகுப்பு (5) 4.47: தனித்துத் தொழுபவர் தடுப்பு ஒன்றை வைத்துக் கொள்வது (13) 4.48: தொழுகையில் குறுக்கே செல்பவரைத் தடுப்பது (4) 4.49: தொழுபவர், தடுப்புக்கு நெருக்கமாக நிற்க வேண்டும் (3) 4.50: தொழுபவருக்கான குறுக்குத் தடுப்பின் அளவு (2) 4.51: தொழுபவருக்குக் குறுக்கே படுத்திருப்பது (8) 4.52: ஒரே ஆடை அணிந்து தொழும் முறை (9) 5.01: பூமியில் எழுப்பப்பட்ட முதலாவது இறையாலயம் (8) 5.02: மஸ்ஜிதுந் நபவீ கட்டப்பட்ட வரலாறு (2) 5.03: தொழுகைத் திசை(கிப்லா) கஅபாப் பள்ளிக்கு மாற்றம் (4) 5.04: மண்ணறைகளில் செய்யக்கூடாதவை (6) 5.05: மஸ்ஜிதுகள் கட்டுவதன் சிறப்பும் அதற்கான ஆர்வமூட்டலும் (2) 5.06: ருகூஉவில் உள்ளங்கைகளை வைப்பதற்கான சட்டத் திருத்தம் (5) 5.07: இரு குதிகால்கள்மீது (தொழுகை அமர்வில்) அமர அனுமதி (1) 5.08: தொழுகையில் பேசிக் கொள்ள இருந்த அனுமதி நீக்கம் (6) 5.09: தொழுகைக்கு இடையில் செய்ய அனுமதிக்கப்பட்டவை (2) 5.10: குழந்தைகளைச் சுமந்துகொண்டு தொழுவதற்கு அனுமதி (3) 5.11: தொழுகையின்போது ஓரிரு அடிகள் நடக்க அனுமதி (1) 5.12: இடுப்பில் கையூன்றிக் கொண்டு தொழுவது வெறுக்கத் தக்கது (1) 5.13: தொழும்போது மண்ணைச் சமப்படுத்துதல் வெறுக்கத் தக்கது (3) 5.14: பள்ளிவாசலில் எச்சில் துப்பத் தடை (10) 5.15: காலணி அணிந்து கொண்டு தொழுவதற்கு அனுமதி (1) 5.16: கவனத்தை ஈர்க்கும் ஆடை அணிந்து தொழுதல் வெறுக்கப்பட்டது (3) 5.17: சிறுநீர்/மலம் அடக்குதல், உணவு காக்க வைத்தல் நிலையில் தொழுதல் (4) 5.18: துர்நாற்றத்துடன் பள்ளிச்செல்லுதலும் அவரை வெளியேற்றலும் (10) 5.19: பள்ளிவாசலினுள் காணாமற்போன பொருளைத் தேடத் தடை (3) 5.20: தொழுகையில் ஏற்படும் மறதிக்குப் பரிகாரம் (17) 5.21: ஸஜ்தா திலாவத் (9) 5.22: அத்தஹிய்யாத்தில் அமரும் முறை (5) 5.23: தொழுகையை நிறைவு செய்யும்போது ஸலாம் கூறும் முறை (3) 5.24: தொழுத பின்னர் திக்ரு (3) 5.25: மண்ணறை வேதனையிலிருந்து பாதுகாப்புக் கோருதல் (3) 5.26: தொழுகையில் பாதுகாப்புக் கோரப்பட வேண்டியவை (8) 5.27: தொழுகைக்குப்பின் திக்ரு செய்தல் (9) 5.28: தொடக்கத் தக்பீருக்குப் பின் கூறவேண்டியவை (4) 5.29: தொழுகையில் கலந்துகொள்ள செல்லும் முறை (5) 5.30: தொழுகைக்காக மக்கள் எப்போது எழுந்து நிற்க வேண்டும்? (5) 5.31: கூட்டுத்தொழுகையை அடைந்துகொள்ள நிபந்தனை (5) 5.32: ஐவேளைத் தொழுகை நேரங்கள் (13) 5.33: கடுங்கோடையில் ஜமாஅத் தொழுகை (8) 5.34: கடுங்கோடையில்லா சமயத்தில் ஜமாஅத் தொழுகை (4) 5.35: அஸ்ருத் தொழுகையின் நேரம் (7) 5.36: அஸ்ருத் தொழுகையைத் தவறவிட்டால்.. (3) 5.37: அஸ்ரு நடுத்தொழுகை என்போரின் சான்று (6) 5.38: ஸுப்ஹு, அஸ்ருத் தொழுகைகளின் சிறப்புகள் (6) 5.39: மஃக்ரிபுத் தொழுகையின் ஆரம்ப நேரம் (2) 5.40: இஷாத் தொழுகையின் நேரமும் அதைத் தாமதமாகத் தொழுவதும் (12) 5.41: ஸுப்ஹுத் தொழுகையின் நேரம் மற்றும் ஓதப்படும் (குர்ஆன் வசனங்களின்) அளவு (7) 5.42: தொழுகைக்கு உரிய நேரத்தைத் தாமதப்படுத்துதல் (7) 5.43: கூட்டுத் தொழுகையின் சிறப்பும் அதைத் தவற விடுவது பற்றிய கண்டனமும் (10) 5.44: தொழுகை அழைப்பைச் செவியுறுபவர் பள்ளிவாசலுக்குச் செல்வது கட்டாயமாகும் (1) 5.45: கூட்டுத் தொழுகை என்பது நேர்வழியைச் சார்ந்தது (2) 5.46: பாங்கு கூறிய பின்னர் பள்ளிவாசலிலிருந்து வெளியேறத் தடை (2) 5.47: இஷா மற்றும் ஸுப்ஹு கூட்டாகத் தொழுவதன் சிறப்பு (4) 5.48: கூட்டுத் தொழுகையைத் தவிர்ப்பதற்கான அனுமதி (1) 5.49: நஃபில் தொழுகைகளை ஜமாஅத்தாகத் தொழுதல் (6) 5.50: கூட்டுத் தொழுகைக்காகக் காத்திருப்பதன் சிறப்பு (5) 5.51: பள்ளிவாசலுக்கு நடந்து செல்வதன் சிறப்பு (6) 5.52: தொழுகைக்கு நடந்து செல்பவருக்குக் கிடைக்கும் பலன்கள் (4) 5.53: உதயம்வரை தொழுத இடத்தில் அமர்ந்திருப்பதன் சிறப்பு (3) 5.54: தொழுகைக்குத் தலைமையேற்க அதிகத் தகுதியுடையவர் (5) 5.55: எல்லாத் தொழுகைகளிலும் குனூத் ஓதும் காலகட்டம் (15) 5.56: விட்டுப்போனத் தொழுகைகளைத் தொழுதல் (8) 6.01: பயணிகளின் தொழுகை; சுருக்கித் தொழுதல் (20) 6.02: மழையின்போது இருப்பிடங்களில் தொழுதுகொள்ளலாம் (4) 6.03: நஃபில் தொழுகைகளை வாகனத்தில் செல்பவர் தொழலாம் (10) 6.04: பயணத்தில் இரு தொழுகைகளைச் சேர்த்து தொழலாம் (7) 6.05: உள்ளூரில் இருக்கும்போது இரு தொழுகைகளை இணைத்து தொழுதல் (10) 6.06: தொழுது முடித்தபின் வலம், இடம் திரும்பி அமர்தல் (3) 6.07: இமாமுக்கு வலப்பக்க வரிசையில் நிற்பது விரும்பத்தக்கது (1) 6.08: இகாமத் கூறத் தொடங்கி விட்டால் நஃபில் தொழுவது வெறுக்கத்தக்கது (5) 6.09: பள்ளிவாசலுக்குள் நுழையும்போது கூறவேண்டிய துஆ (1) 6.10: பள்ளிக் காணிக்கை தொழுகை தொடர்பாக (4) 6.11: பயணத்திலிருந்து திரும்பியவர் இரண்டு ரக்அத் தொழுதல் (3) 6.12: முற்பகல் (ளுஹா) தொழுகை எண்ணிக்கை (11) 6.13: ஃபஜ்ருடைய இரு ரக்அத் சுன்னத் தொழுகை (15) 6.14: சுன்னத் தொழுகைகளின் சிறப்பும் எண்ணிக்கைகளும்! (3) 6.15: நஃபில் தொழுகைகளைத் தொழும் முறைகள் (14) 6.16: இரவுத் தொழுகை (18) 6.17: இரவுத் தொழுகையின் ஒருங்கிணைந்த விபரங்கள் (4) 6.18: அவ்வாபீன் தொழுகை (2) 6.19: இரவுத் தொழுகை, வித்ருத் தொழுகை ரக்அத்கள் (16) 6.20: வித்ருத் தொழுகை நேரம் (2) 6.21: தொழுகையில் மிகச் சிறந்தது (2) 6.22: இரவில் பிரார்த்தனை ஏற்கப்படும் நேரம் (2) 6.23: இரவின் இறுதி நேரத்தில் பிரார்த்தனை (5) 6.24: ‘கியாமு ரமளான்(தராவீஹ்) தொழ ஆர்வமூட்டல் (8) 6.25: இரவுத் தொழுகையில் பிரார்த்திப்பதும் நின்று வணங்குவதும் (17) 6.26: இரவுத் தொழுகையில் நீண்ட நேரம் (நின்று) குர்ஆன் ஓதுவது (2) 6.27: தொழாமல் விடியும்வரை உறங்குபவர் (3) 6.28: கூடுதலான நஃபில் தொழுகைகள் (6) 6.29: நற்செயல்களை வழக்கமாகச் செய்வதன் சிறப்பு. (4) 6.30: இபாதத் தூக்கத்தால் தடைப்பட்டால்… (5) 6.31: குர்ஆனின் தொடர்பைப் பற்றிப் பிடித்துக்கொள்ளக் கட்டளை (7) 6.32: குர்ஆனை இனிய குரலில் ஓதுவது விரும்பத் தக்கதாகும் (5) 6.33: மக்கத்து வெற்றி நாளில்… (2) 6.34: குர்ஆனை ஓதுவதால் இறங்கும் அமைதி (3) 6.35: குர்ஆனை மனனமிட்டவரின் சிறப்பு (1) 6.36: குர்ஆனை ஓதுகின்ற இருவகையினரின் தனிச் சிறப்புகள் (1) 6.37: குர்ஆனில் தேர்ந்த மேன்மக்கள் முன்னிலையில் குர்ஆன் ஓதுவது (2) 6.38: குர்ஆனைச் செவியேற்பதன் சிறப்பு (3) 6.39: குர்ஆனைக் கற்பது மற்றும் ஓதுவதன் சிறப்பு (2) 6.40: குர்ஆன் ஓதுவதன் சிறப்பும் அல்பகரா அத்தியாயத்தின் சிறப்பும் (2) 6.41: ஸூரத்துல் ஃபாத்திஹா, அல்பகரா அத்தியாயத்தின் இறுதி வசனங்களின் சிறப்பு (2) 6.42: ஸூரத்துல் கஹ்ஃப் மற்றும் ஆயத்துல் குர்ஸீ ஆகியவற்றின் சிறப்பு (3) 6.43: குல் ஹுவல்லாஹு அஹது (அத்தியாயத்தை) ஓதுவதன் சிறப்பு (4) 6.44: அல்முஅவ்விதத்தைன் (பாதுகாவல்) அத்தியாயங்களை ஓதுவதன் சிறப்பு (2) 6.45: குர்ஆனின்படி தாமும் செயல்பட்டுப் பிறருக்கும் அதைக் கற்பிப்பவரின் சிறப்பு (4) 6.46: குர்ஆன் ஏழு (வட்டார) மொழிநடையில் அருளப்பெற்றுள்ளது என்பதன் விளக்கம் (4) 6.47: குர்ஆனை வேகமாக ஓதுவதைத் தவிர்த்தல் (4) 6.48: குர்ஆன் ஓதும் முறைகளுள் சில (4) 6.49: தொழத் தடுக்கப்பட்ட நேரங்கள். (8) 6.50: அம்ரு பின் அபஸா (ரலி) இஸ்லாத்தை ஏற்றமை (1) 6.51: சூரியன் உதிக்கும் நேரத்தையும் மறையும் நேரத்தையும் தேர்ந்தெடுத்துத் தொழாதீர்கள்! (2) 6.52: நபி (ஸல்) அஸ்ருக்குப் பிறகு தொழுதுவந்த இரண்டு ரக்அத்கள் எவை? (5) 6.53: மஃக்ரிப் தொழுகைக்கு முன் இரண்டு ரக்அத்கள் தொழுவது விரும்பத் தக்கது (2) 6.54: பாங்குக்கும் இகாமத்துக்கும் இடையிலுள்ள தொழுகை (1) 6.55: அச்சச் சூழல் தொழுகை (8) 7.01: வெள்ளிக்கிழமையில் குளிப்பது வயதுவந்த ஒவ்வோர் ஆண் மீதும் கடமை (7) 7.02: வெள்ளிக்கிழமையில் பல் துலக்குவதும் நறுமணம் பூசுவதும் (4) 7.03: வெள்ளிக்கிழமை சொற்பொழிவின்போது அமைதி காத்தல் (2) 7.04: வெள்ளிக்கிழமையில் (பிரார்த்தனை ஏற்கப்படுவதற்கு) உள்ள ஒரு நேரம் (4) 7.05: வெள்ளிக்கிழமையின் சிறப்பு (2) 7.06: இந்தச் சமுதாயத்தின் (சிறப்பு வழிபாட்டு) நாள் வெள்ளிக்கிழமை (4) 7.07: வெள்ளிக்கிழமை (தொழுகைக்கு) முன்னதாகச் செல்வதன் சிறப்பு (2) 7.08: மௌனமாக (வெள்ளிக்கிழமை) உரையைச் செவியேற்பவரின் சிறப்பு (2) 7.09: சூரியன் (உச்சியிலிருந்து) சாயும்போது ஜும்ஆத் தொழுவது (5) 7.10: தொழுகையின் உரைகளும் இடையே (இமாம்) அமர்வதும் (3) 7.11: வியாபாரத்தையோ வேடிக்கையையோ கண்டால் (62:11ஆவது) இறைவசனம் (4) 7.12: ஜும்ஆத் தொழுகையை(த் தொழாமல்) கைவிடுவதற்குக் கண்டனம் (1) 7.13: (ஜும்ஆத்) தொழுகையையும் (குத்பா) உரையையும் சுருக்கமாக அமைத்தல் (11) 7.14: இமாம் (ஜும்ஆ) உரை நிகழ்த்தும்போது காணிக்கை தொழுகை (6) 7.15: பொது போதனைக்கு நடுவில் தனி போதனை (1) 7.16: ஜும்ஆத் தொழுகையில் ஓத வேண்டியவை (3) 7.17: வெள்ளிக்கிழமை (ஃபஜ்ருத் தொழுகையில்) ஓத வேண்டியவை (3) 7.18: ஜும்ஆவுக்குப் பின் தொழ வேண்டியவை (16) 8.01: பெருநாள் திடலில் பெண்கள் பங்கேற்பது (3) 8.02: பெருநாள் திடலில் தொழுகைக்கு முன்போ பின்போ தொழக் கூடாது (1) 8.03: இரு பெருநாள் தொழுகைகளில் ஓதக் கூடியவை (2) 8.04: பெருநாட்களில் பாவமில்லா விளையாட்டுகளில் ஈடுபட அனுமதி (7) 9.00: இமாம் (மழைத் தொழுகையில்) மேல்துண்டை மாற்றிப் போட்டுக் கொள்வது (4) 9.01: மழைவேண்டிப் பிரார்த்திக்கும்போது இருகைகளை உயர்த்துதல் (3) 9.02: மழைவேண்டிப் பிரார்த்தித்தல் (2) 9.03: கடும் காற்றையும் மேகத்தையும் காணும்போதும்.. மழை பெய்யும்போதும்.. (3) 9.04: கீழைக் காற்று (’ஸபா’) மற்றும் மேலைக் காற்று (’தபூர்’) பற்றிய குறிப்புகள் (1) 10.01: சூரிய கிரகணத் தொழுகை (7) 10.02: கிரகணத் தொழுகையின்போது மண்ணறை வேதனை பற்றி நினைவு கூர்வது (1) 10.03: கிரகணத் தொழுகையின்போது சொர்க்கமும் நரகமும் (6) 10.04: கிரகணத் தொழுகையில் எட்டு ருகூஉகளும் நான்கு ஸஜ்தாக்களும்.. (2) 10.05: கிரகணத் தொழுகைக்காக, “அஸ்ஸலாத்து ஜாமிஆ” அறிவிப்பு.. (8) 11.01: மரணத் தருவாயில் ‘லா இலாஹ இல்லல்லாஹ்’ (எனும் கலிமா)வை நினைவூட்டுதல் (2) 11.02: துன்பம் நேரும்போது வேண்டக்கூடிய பிரார்த்தனை (2) 11.03: நோயாளியிடமும் மரணத் தருவாயில் இருப்பவரிடமும் சொல்ல வேண்டியவை (1) 11.04: உயிர் பிரிந்தவுடன் இறந்தவருக்குச் செய்ய வேண்டியவை (1) 11.05: இறப்பவரின் பார்வை தனது உயிரை நோக்கி நிலைகுத்தி நிற்றல் (1) 11.06: இறந்தவருக்காக அழுவது (3) 11.07: நோயாளிகளைச் சந்தித்து உடல்நலம் விசாரித்தல் (1) 11.08: பொறுமை என்பது துன்பத்தின் முதல் நிலையில் கடைப்பிடிப்பதாகும் (2) 11.09: இறந்தவருக்காக ஒப்பாரி வைத்து அழுதால்.. (14) 11.10: ஒப்பாரிக்குக் கடுமையான கண்டனம் (5) 11.11: ஜனாஸாவின் இறுதி ஊர்வலத்தைப் பின்தொடர்ந்து செல்வதற்குப் பெண்களுக்குத் தடை (2) 11.12: மையித்தைக் குளிப்பாட்டுதல் (4) 11.13: மய்யித்திற்கு ‘கஃபன்’ உடை அணிவித்தல் (4) 11.14: மய்யித்தை மூடிவைத்தல் (1) 11.15: மய்யித்திற்கு அழகிய முறையில் கஃபன் அணிவித்தல் (1) 11.16: இறந்தவர் உடலைத் துரிதமாக அடக்கம் செய்தல் (2) 11.17: ஜனாஸாத் தொழுகையின் மற்றும் ஜனாஸாவைப் பின்தொடர்வதன் சிறப்பு (6) 11.18: மய்யித்துக்காக நூறு பேர் தொழுது செய்யும் பரிந்துரை ஏற்கப்படும் (1) 11.19: மய்யித்துக்காக நாற்பது பேர் பரிந்துரை (1) 11.20: இறந்தவர் குறித்துப் புகழ்ந்து, அல்லது இகழ்ந்து பேசப்படுதல் (1) 11.21: ஓய்வு பெற்றவரும் ஓய்வளித்தவரும் (1) 11.22: ஜனாஸாத் தொழுகையில் சொல்ல வேண்டிய தக்பீர்கள் (6) 11.23: மண்ணறை அருகில் (ஜனாஸாத் தொழுகை) தொழுவது (4) 11.24: ஜனாஸாவுக்காக எழுந்து நிற்பது (7) 11.25: ஜனாஸாவுக்காக எழுந்து நிற்கும் வழக்கம் மாற்றப்பட்டது (3) 11.26: இறந்தவருக்காக ஜனாஸாத் தொழுகையில் செய்யும் பிரார்த்தனை (2) 11.27: ஜனாஸாத் தொழுகையின்போது இமாம் எந்த இடத்தில் நிற்க வேண்டும்? (2) 11.28: ஜனாஸாத் தொழுகை தொழுதுவிட்டு வாகனத்தில் ஏறித் திரும்பிச் செல்லலாம் (2) 11.29: உட்குழியும் மையித்தின் மேல் செங்கற்களை அடுக்குவதும் (1) 11.30: கப்றுக் குழியினுள் போர்வையை விரித்து (மையித்தை) வைப்பது (1) 11.31: கப்றைத் தரை மட்டமாக்க உத்தரவு (2) 11.32: கப்றுகளைக் காரையால் பூசுவதோ அதன் மீது கட்டடம் எழுப்புவதோ கூடாது (2) 11.33: கப்றின்மீது அமர்வதும் அதன் மீது தொழுவதும் தடுக்கப்பட்டவை (3) 11.34: பள்ளிவாசலில் ஜனாஸாத் தொழுகை நடத்துவது (3) 11.35: மையவாடிக்குள் கூற வேண்டியதும் பிரார்த்திப்பதும் (3) 11.36: நபி (ஸல்), தம் தாயாரின் கப்றைக் காண்பதற்கு இறைவனிடம் அனுமதி கோரியது (3) 11.37: தற்கொலை செய்தவருக்கு, (ஜனாஸா) தொழுகையைக் கைவிட்டது (1) 12.00: பல வகை வள வரிகள் (5) 12.01: பத்து சதவீத ஸகாத்; அல்லது ஐந்து சதவீத ஸகாத் (1) 12.02: ஒரு முஸ்லிம் மீது அவர்தம் அடிமைக்காகவும் குதிரைக்காகவும் ஸகாத் கடமை இல்லை (3) 12.03: ஸகாத்தைச் சமர்ப்பிப்பதும் ஸகாத் கொடுக்க மறுப்பதும் (1) 12.04: பெருநாள் தர்மமாகப் பேரீச்சம் பழம், பார்லி (10) 12.05: பெருநாள் தொழுகைக்கு முன்பே பெருநாள் தர்மத்தை வழங்க கட்டளை (2) 12.06: ஸகாத் வழங்க மறுப்பது குற்றமாகும் (4) 12.07: ஸகாத் வசூலிப்பவர்களிடம் கனிவுடன் நடந்துகொள்வது (1) 12.08: ஸகாத் வழங்காதவருக்கான கடும் தண்டனை (2) 12.09: தர்மம் செய்வதற்கு ஆர்வமூட்டல் (2) 12.10: செல்வத்தைச் சேமித்தோர் பற்றிய கண்டனம் (2) 12.11: தர்மம்: ஆர்வமூட்டலும் நற்கூலி உண்டு என்ற நற்செய்தியும் (2) 12.12: செலவழிப்பதன் சிறப்பும் வழங்காதவனின் பாவமும் (4) 12.13: தமக்கும், குடும்பத்தாருக்கும், உறவினர்களுக்குமாக செலவிடுதல் (1) 12.14: இணை வைக்கும் உறவுகளுக்குச் செலவழிப்பதன் சிறப்பு (8) 12.15: இறந்தவருக்காகத் தர்மம் செய்தல் (1) 12.16: எல்லா நல்லறமும் ஸதகா எனப்படும் (5) 12.17: அறவழியில் செலவு செய்பவரும் செய்யாதவரும் (1) 12.18: தர்மம் செய்வதற்கு ஆர்வமூட்டல் (5) 12.19: தர்மம் (இறைவனிடம்) ஏற்கப்படுவதும் வளர்வதும் (3) 12.20: இன் சொல்லையேனும் தர்மம் செய்து நரகத்திலிருந்து பாதுகாப்பு பெறல் (5) 12.21: தர்மத்தின் அளவில் குறை காண தடை (1) 12.22: பாலுக்காக இரவல் வழங்கப்படும் கால்நடைகளின் சிறப்பு (2) 12.23: வள்ளலுக்கும் கஞ்சனுக்குமான உதாரணம் (3) 12.24: உரியவருக்குத் தர்மம் சேரவில்லையேனும் பலன் (1) 12.25: உரிமையாளரின் அனுமதியுடன் தர்மம் செய்தவருக்கும் பலன் (3) 12.26: ஓர் அடிமை தன் உரிமையாளரின் செல்வத்திலிருந்து (அறவழியில்) செலவழித்தல் (3) 12.27: தர்மத்தையும் இதர நற்செயல்களையும் இணைத்துச் செய்தவர் (3) 12.28: அறவழியில் தாராளமாக செலவிடலும் கணக்கு பார்ப்பது விரும்பத்தக்கதல்ல என்பதும் (3) 12.29: சிறிய அளவு தர்மம் (1) 12.30: இரகசியமாகத் தர்மம் செய்வதன் சிறப்பு (1) 12.31: மிகச் சிறந்த தர்மம் (2) 12.32: சிறந்த கை (4) 12.33: யாசிப்பதற்குத் தடை (3) 12.34: ஏழை என்பவன், அடிப்படைத் தேவைகளுக்குப் போதிய பொருளாதாரம் இல்லாதவன் (2) 12.35: மக்களிடம் யாசிப்பது வெறுக்கப்பட்டதாகும் (6) 12.36: யாருக்கு யாசிக்க அனுமதி? (1) 12.37: எதிர்பார்ப்பு இல்லாமல், யாசிக்காமல் வாழ்பவருக்கு வழங்கப்பட்டால் பெற்றுக்கொள்ளலாம் (4) 12.38: உலகாதாயத்தின் மீது பேராசை கொள்வது விரும்பத் தக்கதன்று (2) 12.39: இரு ஓடைகள் இருந்தாலும் மூன்றாவது ஓடையை எதிர்பார்த்தல் (4) 12.40: வாழ்க்கை வசதிகள் அதிகமாக இருப்பது செல்வமன்று (1) 12.41: இவ்வுலகத்தின் கவர்ச்சி குறித்து அஞ்சுதல் (3) 12.42: சுயமரியாதை மற்றும் பொறுமையின் சிறப்பு (1) 12.43: போதுமான வாழ்வாதாரமும் போதுமென்ற மனமும் (4) 12.44: அருவருப்பாகப் பேசி, கடுஞ் சொற்களால் கேட்டவருக்கும் தானம் வழங்குவது (4) 12.45: இறைநம்பிக்கை, (வறுமையால்) கேள்விக்குள்ளாக்கப்படுபவருக்கு உதவுதல் (1) 12.46: இஸ்லாத்தை ஏற்றவர்களுக்கு வழங்கலும் இறை நம்பிக்கை வலுவானவர் பொறுமை கொள்ளலும் (8) 12.47: காரிஜிய்யாக்களும் அவர்களின் தன்மைகளும் (10) 12.48: காரிஜிய்யாக்களைக் கொல்லுவதற்கு ஊக்கப்படுத்துதல் (4) 12.49: காரிஜிய்யாக்கள் படைப்பினங்களிலேயே தீயவர்கள் ஆவர் (3) 12.50: தூதரின் குடும்பத்தார் ஸகாத் பெறுவதற்குத் தடை (6) 12.51: நபி (ஸல்) குடும்பத்தாரைத் தர்மப் பொருட்கள் வசூலிக்கப் பயன்படுத்தலாகாது (1) 2.26: அசுத்தமான கையைப் பாத்திரத்தில் நுழைத்தல் (2) 2.25: ஒருநாள் தொழுகைகளை ஒரு உளூவில் தொழ அனுமதி (1) 2.24: காலுறையில் மஸஹு செய்து தொழுவதற்கான வரம்பு (1) 2.23: முன் தலை மற்றும் தலைப்பாகை மீது மஸஹு செய்தல் (4) 2.22: காலுறையில் மஸஹு செய்தல் (9) 2.21: தண்ணீரால் கழுவித் துப்புரவு செய்தல் (3) 2.20: மலம் கழிப்பதற்குத் தடையுள்ள இடங்கள் (1) 2.19: செயல்களை வலப் புறமிருந்து தொடங்குதல். (2) 2.18: வலக் கரத்தால் கழுவத் தடையானவை (3) 2.17: கழிப்பிடத்தில் துப்புரவு செய்தல் (7) 2.16: இயற்கை மரபுகள் (8) 2.15: பல் துலக்குதல் (7) 2.14: சிரமகாலங்களிலும் முழுமையாக ஒளு செய்வதன் சிறப்பு (1) 2.13: உளூவில் தண்ணீர் படும் இடங்களில் ஒளி படர்தல் (1) 2.12: உளூவில் உறுப்புகளை அதிகப்படுத்திக் கழுவுதல் (6) 2.11: உளூ செய்த நீரோடு வெளியேறும் பாவங்கள் (2) 2.10: உளூவில் உறுப்புகள் முழுவதும் கழுவுதல் (1) 2.09: இரு கால்களையும் முழுமையாகக் கழுவுதல் கட்டாயம் (6) 2.08: சுத்தம் செய்யும் போது ஒற்றைப்படையாக செய்தல் (5) 2.07: நபி (ஸல்) அவர்கள் செய்த அங்கத் தூய்மை (உளூ) (2) 2.06: அங்கத் தூய்மை (உளூ) செய்தபிறகு ஓதப்படும் பிரார்த்தனை (1) 2.05: சிறு பாவங்களுக்கான பரிகாரங்கள் (3) 2.04: அங்கத்தூய்மையின் சிறப்பும் அதன் பின் தொழுவதன் சிறப்பும் (9) 2.03: அங்கத் தூய்மை (உளூ) செய்முறையும் அதை நிறைவாகச் செய்வதும் (2) 2.02: தொழுகைக்குக் கட்டாயமான (அங்கத்) தூய்மை (2) 2.01: அங்கத்தூய்மை(உளூ)யின் சிறப்பு (1) 1.96: மறுமையில் ஆதம்(அலை) அவர்களுக்கு இடப்படும் கட்டளை (1) 1.95: சொர்க்கவாசிகளில் பாதிபேர் (3) 1.94: விசாரணையோ வேதனையோ இன்றி சொர்க்கம் செல்வோர் (7) 1.93: நட்பு கொள்ளத் தக்கவர்களும் தகாதவர்களும் (1) 1.92: இறைமறுப்பாளரின் நற்செயல்கள் பலனளிக்காது (1) 1.91: நரகவாசிகளிலேயே மிகக்குறைவான வேதனை அனுபவிப்பவர். (4) 1.90: அபூதாலிபுக்காக நபி(ஸல்) அவர்களின் பரிந்துரை (3) 1.89: நெருங்கிய உறவினருக்கு எச்சரிக்கை செய்தல் (5) 1.88: இறைமறுப்பாளருக்கு எந்தப் பரிந்துரையும் பலனளிக்காது (1) 1.87: தம் சமுதாயத்தார் மீது நபி(ஸல்) அவர்களுக்குள்ள பரிவு (1) 1.86: நபி(ஸல்) அவர்களின் பரிந்துரைப் பிரார்த்தனை! (8) 1.85: சொர்க்கத்திற்காகப் பரிந்துரைக்கும் முதல் மனிதர் (4) 1.84: சொர்க்கவாசிகளுள் ஆகக் குறைந்த பதவி (14) 1.83: இறுதியானவராக வெளியேறும் நரகவாசி. (3) 1.82: ஷஃபாஅத்(பரிந்துரை) செய்யப்படுபவர்கள் (2) 1.81: இறைவனைக் காணும் வழிமுறை (3) 1.80: இறைவனைக் காண்பதற்கான சான்று (2) 1.79: அல்லாஹ்வின் பார்வை பற்றிய விளக்கம் (2) 1.78: மிஃராஜின் போது நபி(ஸல்) கண்டது பற்றிய விளக்கம் (2) 1.77: நபி(ஸல்) அவர்கள் இறைவனைப் பார்த்தார்களா? என்பது பற்றிய விளக்கம் (5) 1.76: சித்ரத்துல் முந்தஹா(இலந்தை மரம்) பற்றிய குறிப்பு! (4) 1.75: ஈஸா(அலை) மற்றும் தஜ்ஜால் பற்றிய குறிப்புகள் (6) 1.74: விண்ணுலகப் பயணமும் தொழுகை கடமையாக்கப்படலும் (12) 1.73: வேத வெளிப்பாடு (வஹீ) தொடங்குதல் (3) 1.72: இறை நம்பிக்கை ஏற்கப்படாத காலகட்டம் (5) 1.71: ஈசா(அலை) இஸ்லாமிய நெறிப்படி நீதி வழங்குதல் (6) 1.70: தூதுத்துவம் உலக மக்கள் அனைவருக்கும் பொதுவானது (3) 1.69: இறைச்சான்றுகள் மூலம் மன அமைதி (1) 1.68: ஒருவரை இறைநம்பிக்கையாளர் என்று முடிவு செய்தல் (2) 1.67: அச்சநேரத்தில் இறைநம்பிக்கையாளர் நிலை (1) 1.66: இறுதிக் காலத்தில் இறை நம்பிக்கை (அற்றுப்) போய் விடுவது. (2) 1.65: இஸ்லாத்தின் மீளெழுச்சி. (3) 1.64: உள்ளங்களில் குழப்பங்கள் தோன்றுவது. (2) 1.63: குடிமக்களைச் சுரண்டும் ஆட்சியாளன் நரகத்திற்குரியவன் ஆவான். (3) 1.62: செல்வத்தைக் காக்கப் போராடியவர் மற்றும் பிறர் செல்வத்தைப் பறிக்க முனைந்தவர் (2) 1.61: மாற்றாரின் பொருளைக் கைப்பற்றுபவர் நிலை. (5) 1.60: இறைநம்பிக்கையில் தடுமாற்றம் ஏற்பட்டால்.. (8) 1.59: நல்ல-தீய எண்ணங்களுக்கான கூலி (5) 1.58: தீய எண்ணங்களைச் செயல்படுத்தாமல் இருத்தல் (2) 1.57: தாங்க முடியாத சுமை? (2) 1.56: இறை நம்பிக்கையின் வாய்மையும் தூய்மையும் (1) 1.55: இறைமறுப்பாளராக இருந்தபோது செய்த நல்லறங்கள் (3) 1.54: முன் செய்த பாவங்கள் (2) 1.53: அறியாமை காலத்தில் செய்த தீமைகள் (2) 1.52: இறைநம்பிக்கையாளரின் அச்சம் (1) 1.51: குழப்பங்கள் தோன்றுவதற்கு முன் நற்செயல் புரிய விரைதல் (1) 1.50: மறுமை நெருங்கும் வேளையில் வீசும் காற்று (1) 1.49: ஹிஜ்ரத்தில் தற்கொலை செய்து கொண்டவரின் நிலை (1) 1.48: கையாடல் செய்பவரும் இறைநம்பிக்கையாளரும் (2) 1.47: தற்கொலை செய்பவரும் கட்டுப்பட்டு வாழ்பவரும் (7) 1.46: மூன்று பெரும் தவறான செயல்கள் (4) 1.45: புறங்கூறுவது வன்மையாகத் தடை செய்யப் பட்டது (3) 1.44: துக்க வேளைகளில் தடை செய்யப்பட்ட செய்கைகள்! (3) 1.43: முஸ்லிம்களை வஞ்சித்தவர் நிலை! (2) 1.42: முஸ்லிம்களுக்கு எதிராக ஆயுதம் ஏந்தியவர் நிலை! (3) 1.41: “லா இலாஹ இல்லல்லாஹ்” கூறியவரைக் கொல்லத்தடை! (4) 1.40: இணைவைத்தலின் விளைவுகள் (5) 1.39: தற்பெருமை (3) 1.38: பெரும் பாவங்கள் (5) 1.37: பாவங்களில் மிகவும் அருவருப்பானது (2) 1.36: நற்செயல்களில் சிறந்தது (6) 1.35: தொழுகையை விடுதலும் குஃப்ரும் (3) 1.34: இறைநம்பிக்கை குறைவும் குஃப்ர் எனும் சொல்லும் (1) 1.33: அன்ஸாரிகளையும் அலி(ரலி)யையும் நேசித்தல் (6) 1.32: மழையும் இறைமறுப்பும் (4) 1.31: ஓடிப்போன அடிமை (3) 1.30: இறைமறுப்பின் அடையாளங்கள் (1) 1.29: இறைமறுப்பாளர்களாய் மாறுதல் (2) 1.28: முஸ்லிமோடு போரிடுதல் (1) 1.27: தந்தையை வெறுப்பவன் நிலை (4) 1.26: முஸ்லிமை நோக்கி காஃபிர் என அழைத்தல் (2) 1.25: நயவஞ்சகனின் குணங்கள். (3) 1.24: இறைநம்பிக்கையில் குறைவு ஏற்படல் (2) 1.23: மார்க்கம் என்பதே நலன் நாடுவதுதான். (4) 1.22: இறைநம்பிக்கையாளர்களை நேசித்தல் (1) 1.21: இறைநம்பிக்கையில் ஏற்படும் ஏற்றத் தாழ்வு (9) 1.20: நன்மையை ஏவுதல், தீமையைத் தடுத்தல் (2) 1.19: நல்லவற்றிற்கு ஆர்வமூட்டுதல் (3) 1.18: அண்டை வீட்டாருக்குத் தொல்லை தரக் கூடாது (1) 1.17: தமக்கு விரும்வுவதைச் சகோதரனுக்கும் விரும்புதல் (2) 1.16: தூதரை நேசிப்பது கடமை (2) 1.15: இறைநம்பிக்கையின் இனிமை (2) 1.14: இஸ்லாம் கூறும் நல்லறங்களில் சிறந்தது (4) 1.13: இஸ்லாத்தின் அனைத்துப் பண்புகளின் கலவை (1) 1.12: இறைநம்பிக்கையின் கிளைகள் (5) 1.11: இறைநம்பிக்கையைச் சுவைப்பவர் (1) 1.10: ஓரிறை கோட்பாட்டில் மரணித்தவர் நிலை (11) 1.09: இணை வைத்த நிலையில் மரணித்தவர் நிலை (3) 1.08: ஜிஸ்யா செலுத்தாதவர் மீது போர் புரிதல் (6) 1.07: இஸ்லாத்தை ஏற்க அழைப்பு விடுத்தல் (2) 1.06: அறியாதவர்களுக்கு அறிவித்தல் (4) 1.05: இஸ்லாமியக் கடமைகள் (4) 1.04: சொர்க்கம் செல்பவர் (7) 1.03: இஸ்லாத்தின் தூண்கள் (2) 1.02: தொழுகை பற்றிய விளக்கம் (2) 1.01: இறைநம்பிக்கை குறித்த விளக்கம் (7)
முன்னுரை: ஏக அல்லாஹ்வின் திருப்பெயரைக் கொண்டு ஆரம்பிக்கின்றோம். அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்) இப்பகுதியில் சுமார் 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த வரலாற்று புகழ் பெற்ற, மார்க்க அறிஞர்களை உருவாக்கி அனுப்பும் ஓர் மதரசாவை பற்றி இங்கு அறிமுகப்படுத்துகின்றோம் எல்லாம் புகழும் அல்லாஹ்வுக்கே. மதரசா ஜாமிஆ மன்பவுல் அன்வார்: தமிழ்நாட்டில் கடலூர் மாவட்டத்தில் தீன் நெறி கோட்டையாம் லால்பேட்டையில் அமைந்துள்ளது மதரசா ஜாமிஆ மன்பவுல் அன்வார். இது தமிழ்நாட்டில் வேலூர் மதரசா பாக்கித்துள் ஸாலிஹாத்திர்க்கு அடுத்து இரண்டாவது பெரிய மத்ரசாவாகும். இம் மதரசா 1862ஆண்டு ஆற்காடு நவாப்களின் ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்டது. இந்த மதரசாவில் ஒவ்வொரு வருடமும் இருநூறுக்கும் மேற்பட்டோர் மார்க்க கல்வி கற்றுவருகின்றனர். இதில் வருடம்தோறும் 50மேற்பட்டோர் பாஜில், மவ்லவி மற்றும் ஹாபிஸ் பட்டம் பெறுகின்றனர். இந்த மதரசாவில் மார்க்க கல்வி கற்பதற்காக தமிழ்நாட்டின் பல பகுதிகளிலிருந்தும், தென் இந்தியா விலிருந்தும், இலங்கை போன்ற நாடுகளிலிருந்தும் ஏராளமான இஸ்லாமிய மாணவர்கள் வருகின்றனர். பட்டமளிப்பு விழா : ஒவ்வொரு வருடமும் ஹிஜ்ரி ஆண்டில் ரமலானுக்கு முன்பு ஷாபான் மாதம் மதரசாவின் பட்டமளிப்பு விழா நடைபெறும். இரண்டு பெருநாட்களுக்கு பிறகு அடுத்து ஊரே கொண்டாடும் ஒரு விழா எதுவென்றால் அது ஜாமிஆ மன்பவுல் அன்வாரின் பட்டமளிப்பு விழாவாகும். அன்று ஊரே மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு திருவிழா போல் காட்சியளிக்கும். எட்டு வருடம் ஓதி முடிப்பவர்களுக்கு பாஜில் பட்டமும், ஏழு வருடம் ஓதி முடிப்பவர்களுக்கு மவ்லவி பட்டமும், குரானை மனனம் செய்து முடிப்பவர்க்கு ஹாபிஸ் பட்டமும் வழங்கப்படுகிறது. இங்கு ஓதி முடித்து பட்டம் பெறுவோர் தனது பெயருக்கு பின்னால் மன்பஈ எனும் வார்த்தையை சேர்த்து கொள்கின்றனர். மன்பஈ என்றால் மதரசா ஜாமிஆ மன்பவுல் அன்வாரில் ஓதி முடித்து பட்டம் பெற்றவர் என்று பொருள்படும். பட்டமளிப்பு விழாவிற்கு தமிழ்நாட்டிலிருந்து பல புகழ் பெற்ற மார்க்க அறிஞர்களும், சமுதாய தலைவர்களும் கலந்து சிறப்பித்து வாழ்த்துரை வழங்குவார்கள். தாருல் தப்சீர் கலைக்கூடம் : இங்குதான் மதரசாவின் பட்டமளிப்பு விழா நடைபெறும், இது மதரசாவின் உட்புறம் அமைந்துள்ள் பெரிய அரங்கம் ஆகும். இவ்வரங்கத்தில் ஒரே நேரத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உட்கார்ந்து விழா நிகழ்ச்சிகளை காணமுடியும். மதரசாவின் புகழ்பெற்ற முதல்வர்கள்: மதரசாவின் முதல்வர்களாக (பெரிய ஹஜ்ரத்களாக ) மறைந்த புகழ்பெற்ற மார்க்க அறிஞர்கள் இருந்துள்ளனர். அவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் ஹைருள் மில்லத் என்று அழைக்கப்பட்ட மவ்லானா மவ்லவி அல்ஹாஜி அல்லாமா முகம்மது அமானி ஹஜ்ரத் அவர்கள், மவ்லானா மவ்லவி அல்ஹாஜி அப்துல்லா ஹஜ்ரத் அவர்கள் , மவ்லானா மவ்லவி அல் ஹாஜி இப்ராஹீம் ஹஜ்ரத் அவர்கள் மற்றும் சம்சுல் மில்லத் என்று அழைக்கப்பட்ட மவ்லானா மவ்லவி அல் ஹாஜி கே. எ. முகம்மது ஜெக்கரியா ஹஜ்ரத் போன்றவர்களின் நிர்வாகத்தாலும், அவர்களின் புகழாலும் ஜாமிஆ மன்பவுல் அன்வார் புகழ்பெற்றது என்றால் அது மிகை ஆகாது. இன்னும் ஏராளமான பெரும் புகழ்களை தன்னகத்தே பெற்றுள்ளது. அதனை பற்றி விவரிக்க இங்கு பக்கங்கள் போதாமல் போகலாம். மதரசாவின் சிறப்பம்சம்: இம் மதரசாவில் தங்கி மார்க்க கல்வி கற்கும் ஒவ்வொரு மாணவர்களுக்கும் லால்பேட்டையில் உள்ள வீடுகளிலிருந்து மதியம் மற்றும் இரவு உணவு டிபன் கேரியரில் வழங்கப்படுகிறது. இதன் மூலம் ஒவ்வொரு மாணவரையும் தங்கள் வீட்டு பிள்ளைகளைப்போல் கருதுகின்றனர். காலை உணவிற்கு மதரசா நிர்வாகம் பொறுப்பேற்றுள்ளது. மதரசா நிர்வாக சபை: மதரசாவை நிர்வாகத்தை கவனிக்க மதரசா நிர்வாக சபை அமைக்கப்பட்டுள்ளது. நிர்வாக சபைக்கு உறுப்பினர்கள் லால்பேட்டையின் ஒவ்வொரு முஹல்லாவிளிருந்தும் ஒரு குறிப்பிட்ட உறுப்பினர்கள் முஹல்லாவாசிகளால் தேர்ந்தடுக்கப்பட்டு மதரசா நிர்வாக சபைக்கு அனுப்படுகின்றனர், அவர்கள் ஒவ்வொரு மாதமும் கூடி வரவு செலவு கணக்குகள் , மதரசா அபிவிருத்தி திட்டங்கள், பராமரிப்பு மற்றும் நிர்வாகதைப்பற்றியும் விவாதிப்பார்கள். முடிவுரை: 150ஆண்டு கள் பழமை வாய்ந்த புகழ்ப்பெற்ற மதரசா ஜாமிஆ மன்பவுல் அன்வார் மேலும் பல நூற்றாண்டுகளுக்கு ஆலிம்களையும், ஹாபிஸ்களையும், மார்க்க அறிஞர்களையும் உருவாக்கிடவும், அதன் புகழ் என்றென்றும் குறையாமல் இன்னும் பல புகழ்களைப் பெற முஸ்லிமாகிய நாம் அனைவரும் ஏக அல்லாஹ்விடம் வேண்டுமாறு உங்களை அன்புடன் கேட்டுக்கொண்டு முடிவுரைக்கு திரையிடுகின்றேன். அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்). குறிப்பு: இதை படிக்கும் லால்பேட்டையை சேர்ந்தவர்களுக்கு, மதரசாவைப் பற்றிய குறிப்புகளில் குறை இருந்தாலோ அல்லது எதாவது செய்தி விடுப்பட்டு இருந்தாலோ Lalpetnews2009@yahoo.co.uk என்ற முகவரிக்கு ஈ மெயில் அனுப்பவும். அதன்மூலம் திருத்திக்கொள்ளமுடியும்.
குவாங்டாங்கின் வடக்கே உள்ள அற்புதமான நகரமான ஷாவோகுவானில் அமைந்துள்ளது, குவாங்டாங் பெங்வேய் ஃபைன் கெமிக்கல்.கோ., லிமிடெட் (GDPW), 2008 இல் குவாங்சோ பெங்வே கலை மற்றும் கைவினைத் தொழிற்சாலை என்று முன்பு அறியப்பட்டது, இது 2017 இல் நிறுவப்பட்ட ஒரு உயர் தொழில்நுட்ப நிறுவனமாகும், இது மேம்பாடு, உற்பத்தி, சந்தைப்படுத்தல் மற்றும் சேவை ஆகியவற்றில் அக்கறை கொண்டுள்ளது.அக்டோபர், 2020 அன்று, எங்களின் புதிய தொழிற்சாலை Huacai புதிய பொருள் தொழில்துறை மண்டலங்களில் வெற்றிகரமாக நுழைந்தது, Wengyuan கவுண்டி, Shaoguan நகரம், Guangdong மாகாணம். எங்களிடம் 7 உற்பத்தி தானியங்கி வரிகள் உள்ளன, அவை பலவிதமான ஏரோசோல்களை திறமையாக வழங்க முடியும், அவற்றில் 2 கோடுகள் அழகு ஏரோசோல் கோடுகள், மற்றவை வழக்கமான உற்பத்தி வரிகள்.தவிர, தொழில்துறை, பண்டிகை மற்றும் நிகழ்வுகள், தனிப்பட்ட பராமரிப்பு, வீட்டு பராமரிப்பு மற்றும் கார் பராமரிப்பு ஆகியவற்றின் ஏரோசல் தயாரிப்புகளை தயாரிப்பதில் நாங்கள் நிபுணத்துவம் பெற்றுள்ளோம், அதாவது பல வகையான ஏரோசோல்களை உற்பத்தி செய்யும் சக்தி எங்களிடம் உள்ளது.மிக முக்கியமாக, ஆய்வுத் தரத்திற்கு இணங்க எங்கள் நிறுவனத்திற்குச் சொந்தமான தூசி இல்லாத ஒர்க் ஷாப் உள்ளது.தற்போது, ​​எங்களிடம் XETOURFUL, JIALE, PENGWEI, MEILIFANG, QIAOLVDAO போன்ற 6 வர்த்தக முத்திரைகள் உள்ளன, மேலும் 6 காப்புரிமைகள் மற்றும் 6 மென்பொருள் பதிப்புரிமைகள் உள்ளன. அதிக சர்வதேச சந்தைப் பங்கை உள்ளடக்கி, நாங்கள் சீன பண்டிகை ஏரோசோல்களின் முன்னணி நிறுவனமாகப் பிரிக்கப்பட்டுள்ளோம்.எங்கள் தயாரிப்புகள் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் சந்தையில் நன்றாக விற்கப்படுகின்றன, இது சீனாவின் முக்கிய மாகாண நகரங்களை மட்டுமல்ல, வெளிநாடுகளில் உள்ள 50 க்கும் மேற்பட்ட நாடுகளையும் உள்ளடக்கியது.தயாரிப்புப் பிரிவில் புதிய முன்னணி நிறுவனமாக மாறுவதும், ஏரோசல் பகுதியில் மூன்று ஆண்டுகளில் செல்வாக்குமிக்க உற்பத்தித் தளத்தை உருவாக்குவதும் எங்கள் நோக்கம். தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளை கடைபிடியுங்கள் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளை பின்பற்றுவது நமது மைய வளர்ச்சி உத்தி.உயர் கல்விப் பின்னணியில் உள்ள இளம் திறமையான மற்றும் R&D நபரின் வலுவான திறனைக் கொண்ட ஒரு சிறந்த குழுவை நாங்கள் ஏற்பாடு செய்துள்ளோம்.தவிர, தென் சீன தொழில்நுட்ப பல்கலைக்கழகம், குவாங்டாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகம், ஷாகுவான் பல்கலைக்கழகம், ஹுனான் மனிதநேய பல்கலைக்கழகம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் போன்ற பல நன்கு அறியப்பட்ட பல்கலைக்கழகங்களுடன் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப திட்டங்களில் எங்களுக்கு பரந்த ஒத்துழைப்பு உள்ளது. எங்களின் நன்கு பொருத்தப்பட்ட வசதிகள் மற்றும் உற்பத்தியின் அனைத்து நிலைகளிலும் சிறந்த தரக் கட்டுப்பாடு ஆகியவை மொத்த வாடிக்கையாளர் திருப்திக்கு உத்தரவாதம் அளிக்க உதவுகிறது.மேலும், அழகுசாதனப் பொருட்கள், அபாயகரமான இரசாயனங்கள் உற்பத்தி உரிமம், ISO,EN71 மற்றும் மாசுபடுத்தும் வெளியேற்ற அனுமதி ஆகியவற்றைப் பெற்றுள்ளோம்.2008 ஆம் ஆண்டில், 'ஒப்பந்தம் மற்றும் மதிப்புக் கடன்களைக் கடைப்பிடிக்கும் நிறுவனம்' என்ற பட்டம் எங்களுக்கு வழங்கப்பட்டது. குவாங்டாங் பெங்வே ஃபைன் கெமிக்கல்.Co. Ltd, உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் உள்ள அனைத்துத் தரப்பு மக்களும் வணிகம், தொழில்நுட்பம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வெற்றி-வெற்றி தீர்வுகளைக் கண்டறிவதற்கான பேச்சுக்களுக்காக மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கிறது. உயர் தரம், வாடிக்கையாளர் முதலில் மேலும் அறிக எங்களை தொடர்பு கொள்ள தொலைபேசி:+8618680266572 மின்னஞ்சல்:anna@gd-pengwei.cn முகவரி:No.No.B-03,B3 சாலை, மண்டலம் B, Huacai புதிய பொருள் நகரம், Wengcheng டவுன், Wengyuan கவுண்டி, Shaoguan நகரம், குவாங்டாங் மாகாணம் புதிய கடிதம் எங்கள் தயாரிப்புகள் அல்லது விலைப்பட்டியல் பற்றிய விசாரணைகளுக்கு, தயவுசெய்து உங்கள் மின்னஞ்சலை எங்களுக்கு அனுப்பவும், நாங்கள் 24 மணிநேரத்திற்குள் தொடர்பில் இருப்போம்.
ஆறிலும் சாவு; நூறிலும் சாவு. மரணம் என்பது தவிர்க்க இயலாதது. யாருக்கு எந்த நேரத்தில், எந்த வழியில் மரணம் ஏற்படும் என்பதை கூற இயலாது. மரணத்தைக் கண்டு பயப்படாத மனிதர்களே இல்லை. சித்தர்கள் மரணத்தை தவிர்க்கவில்லை. ஆனால், நூற்றுக்கணக்கான ஆண்டுகள் வாழ்ந்து மக்களின் நோய் நொடிகளைத் தீர்த்து வைத்து இருக்கிறார்கள். ஆனால் மனிதனோ..? உடல் நலத்தை சின்னாபின்னமாக்கும் தீய பழக்கங்கள்; தவறான உணவு முறை; தகாத உறவு முறை என்று மனிதன் மரணத்திற்கு வரவேற்பு பத்திரம் வாசித்துக் கொண்டிருக்கிறான். நு£று ஆண்டுகள் வாழ்பவனை விரல்விட்டு எண்ணிவிடலாம். சித்த வைத்தியத்தினை தோற்றுவித்த சித்தர்களில் ஒருவர், மனிதனுக்கு ஏற்படும் சளி வகைகளையும், அதனால் ஏற்படும் சிக்கல்களையும், என்ன உணவு, என்ன வகை சளியை ஏற்படுத்துகிறது என்பதையும் கூறியுள்ளார். சளிகள் நெஞ்சுச் சளி, தொண்டைச் சளி, மண்டைச் சளி என்று மூன்று வகைப்படும். மனிதனுக்கு மரணம் மேற்கண்ட மூன்று சளிகளில் ஏதாவது ஒன்றினால் தான் ஏற்படுகிறது. இச்சளிகள் மனிதனின் உடலில் இல்லை என்றால் மரணம் என்பது இல்லை என்று அவர் கூறுகிறார். மனிதனுக்கு மேற்கண்ட 3 வகை சளிகள் ஏற்படுவதற்குரிய காரணம் என்ன? பால், பால் பொருட்களால் ஆன தயிர், மோர், வெண்ணெய், நெய் ஆகிய உணவுகளும், அனைத்து அசைவ உணவுகளும், உப்பும் தினமும் சாப்பிடுவதால் தான் மனிதனது உடலில் நெஞ்சுச் சளி, மண்டைச் சளி, தொண்டைச் சளி ஏற்படுகிறது. இவை எல்லாம் வெளியேறாது, அங்கேயே தங்கி, அதிக நாட்கள் தங்கி மிகுதியாகி, மனிதனுக்கு இறக்கும் நிலையை உருவாக்கி விடுகிறது. சளியை எவ்வாறு நீக்கலாம்? உப்பு சேர்க்காமல் சமைத்த காய்கறிகள், கீரைகளை உட்கொள்ளலாம். சமைக்காத இயற்கை உணவுகளான தேங்காய், பழ வகைகளை உணவாக நாம் உணவுப் பழக்கத்தில் சிறிது சிறிதாக சேர்த்துக் கொண்டு வரலாம். இதன் மூலம் உடலில் உள்ள அனைத்துச் சளிகளும், படிப்படியாக உடலிலிருந்து வெளியேறி விடும். அதன் பின் உடலில் சளி இல்லாத, வலியோ, நோயோ இல்லாத உறுதியான உடலாக நமது உடல் மாறுவதுடன், இறப்பினையும், முதுமைத் தோற்றத்தையும் தள்ளி வைத்து விடும். மரணத்தை மறுதலிக்க முடியாது; ஆனால் தள்ளி வைக்கலாம். நாம் ஏன் கனியிருக்க காயை கவர வேண்டும்? நீடூழி நெடுநாள் வாழ வாழ்த்துக்கள்.
மாணவன் அல்லது மாணவி (student) என்பவர் ஒரு விஷயத்தை அறிந்து கொள்ள பள்ளி, கல்லூரிகளில் பயில்பவர் ஆவார். மாணாக்கர் என்னுஞ்சொல் விழுமிய பொருளுடையது. பின்வாழ்விற்கு வேண்டப்படும் மாண் பொருளை ஆக்குதற்கு வேண்டப்படும் மாண் பொருளை ஆக்குதற்கு ஒழுக்கநெறி நிற்போர் மாணாக்கராவார்.[1] மாணாக்கருலகிற்கு முதல் வேண்டற்பாலது ஒழுக்கம். ஒழுக்கம் கல்வி அறிவிற்கு அடிப்படை. - திரு. வி. கலியாணசுந்தரனார்[1] ஒழுங்கை மாணாக்கர் உறுதியாகக் கடைப்பிடித்து ஒழுகுவாரானால் வருங்காலத்தில் நாடே நன்னிலை எய்தும். பள்ளியில் படித்துவருங்கால் மாணாக்கர் வேறு துறைகளில் கருத்துச் செலுத்தலாகாதென்று யான் அவர்க்கு அறிவு கொளுத்துவதை எனது கடமைகளில் ஒன்றாகக் கொண்டுள்ளேன். - திரு. வி. கலியாணசுந்தரனார்[1] மாணவர் சான்றுகள்தொகு விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது: மாணவன் ↑ 1.0 1.1 1.2 புலவர் ஆயை. மு. காசாமைதீன் (1984). திருவிக. சென்னை: தமிழ்நாட்டு அரசு பாடநூல் கழகம். pp. 112- 118.
சென்னை: சென்னையில் தொழிலதிபர் பாஸ்கரனை கொலை செய்து கால்வாயில் வீசியவர்களை பிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த பாஸ்கரனை கொலை செய்து பாலித்தீன் கவரில் கட்டி சின்மயாநகர் அருகே கால்வாயில் வீசியுள்ளனர். Related Stories: பொன்னேரி அருகே தனியார் சொகுசு பேருந்தும் லாரியும் மோதிய விபத்தில் 3 பேர் பலி இந்தியாவில் அரசு மருத்துவமனைகளில் முதலிடம் 1 லட்சம் படுக்கை வசதி கொண்ட மாநிலம் தமிழகம்: நாளொன்றுக்கு 6 லட்சம் பேர் பயன் அடையாறு ஆற்றுக்கு அடியில் ஜன.15ல் மெட்ரோ ரயில் சுரங்கம் தோண்டும் பணி: அதிகாரிகள் தகவல் தமிழகத்தில் ஆபரேசன் புதுவாழ்வு மூலம் 1,800 பிச்சைக்காரர்கள் கைது: முதலிடத்தில் தாம்பரம் 2,748 கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு எழுத்து தேர்வு பல லட்சம் பேர் ஆர்வமுடன் தேர்வு எழுதினர் மின் இணைப்பு எண்ணுடன் ஒரே வாரத்தில் 50 லட்சம் பேர் ஆதார் எண் இணைத்தனர்: மின்வாரியம் தகவல் ஓய்வு பெற்றோர் நல அமைப்பு அறிவிப்பு அகவிலைப்படி வழங்க வலியுறுத்தி டிச.29ல் மறியல் போராட்டம் 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியின் சீரழிவு, பேரிடரை போர்க்கால அடிப்படையில் சீர்செய்கிறது திமுக அரசு: க.சுந்தர் எம்எல்ஏ இல்ல திருமண விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு திருமணம், காதல் உறவு தொடர்பான புகாரில் போக்சோ வழக்கில் அவசரப்பட்டு கைது செய்யக் கூடாது: போலீஸ் கமிஷனர்கள், எஸ்பிக்களுக்கு டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு அரசியல் செய்ய எதுவும் இல்லாததால் மதத்தை வைத்து பழி போட முயற்சி: சென்னை விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பரபரப்பு பேச்சு சொத்து, நகை, சிலை தொடர்பாக ஸ்கேன் செய்யபோகும் ஆவணம் குறித்து அறிக்கை தர வேண்டும்: ஆணையர் குமரகுருபரன் உத்தரவு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 15,000 கோயில் பூசாரிகளுக்கு கருணை கொடை: பூசாரிகள் நல சங்கம் கோரிக்கை உதவி தொகை ரூ.1,500 ஆக உயர்வு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மாற்றுதிறனாளிகள் சங்கம் வரவேற்பு திருவண்ணாமலைக்கு இன்று முதல் சிறப்பு ரயில் : தெற்கு ரயில்வே தகவல் கார்த்திகை தீபத்தை முன்னிட்டு சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு நாளை முதல் சிறப்பு ரயில் இயக்கம்: தெற்கு ரயில்வே தகவல் திருமண உறவு, காதல் உறவு போன்ற போக்சோ வழக்குகளில் அவரசப்பட்டு கைது நடவடிக்கை எடுக்கக்கூடாது: டிஜிபி அறிவுறுத்தல் தருமபுரி மாவட்டம் தொழில் வளர்ச்சி இல்லாமல் உள்ளது. சிப்காட் இருந்தாலும், இன்னும் பல தொழில்கள் இங்கு வர வேண்டும்: அன்புமணி ராமதாஸ் ஜல்லிக்கட்டு வழக்கில் உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் பிரமாண பத்திரம் தாக்கல் அரசாங்கம் இயற்றக்கூடிய சட்ட மசோதாக்களுக்கு, ஆளுநர் ஒப்புதல் வழங்கவேண்டும் என்பதுதான் நடைமுறை: அமைச்சர் ரகுபதி திருமண உறவு, காதல் உறவு போன்ற போக்சோ வழக்குகளில் அவரசப்பட்டு கைது நடவடிக்கை எடுக்கக்கூடாது: டிஜிபி அறிவுறுத்தல்
பேரில் தேசிய காசநோயகற்றும் திட்டம் கடம்பூர் காசநோய் பிரிவின் சார்பாக கர்ப்பிணி பெண்களுக்கு காசநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி கடம்பூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்றது. இந் நிகழ்ச்சிக்கு கடம்பூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய *மருத்துவ அலுவலர் அருண் விஸ்வநாத் தலைமை வகித்து பேசியதாவது* காசநோயின் அறிகுறிகள் பற்றி தெளிவாக எடுத்துக் கூறினார் கரனோ போலவே காசநோயும் காற்றின் மூலம் பரவுவம் தன்மை கொண்டது எனவே அனைவரும் முககவசம் அணியவேண்டும் என்று அறிவுறுத்தினார் . கூட்டத்தில் கலந்து கொண்ட கர்ப்பிணி பெண்கள் ஒவ்வொரு பெண்களுக்கும் காசநோய் அறிகுறிகள் உள்ளனவா என்பது பற்றி கேட்டறிந்து கொண்டார் . கர்ப்பிணி பெண்கள் கரனோ தடுப்பூசி செலுத்தி கொண்டார்களா என்பது உறுதி செய்யப்பட்டது மருத்துவ அலுவலர் *திருமதி.காயத்ரி* பேசுகையில் தினந்தோறும் கர்ப்பிணி பெண்கள் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டிய உணவு முறைகள் பற்றி ‌எடுத்துகூறினார் கர்ப்பிணி பெண்கள் மருத்துவ மனைக்கு பரிசோதனைக்கு எந்தெந்த மாதத்தில் வர வேண்டும் என்று தெளிவாக எடுத்துக் கூறினார். *கோவில்பட்டி ரோட்டரி கிளப் சார்பாக காசநோயாளிக்கு இலவச‌ அரிசி மற்றும் மளிகை பொருட்களை மருத்துவர் காயத்ரி வழங்கினார்* *மருத்துவ அலுவலர் நந்தினி* காசநோயாளிகளுக்கு அரசு வழங்கும் நலத்திட்டங்கள் பற்றி எடுத்துக் கூறினார் மருத்துவ அலுவலர்கள் கர்ப்பிணி பெண்களுக்கு காசநோய் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார்கள் இந் நிகழ்ச்சியை பகுதி சுகாதார செவிலியர் *செல்லத்தாய்* வரவேற்றுப் பேசினார் மேலும் இந் நிகழ்ச்சியில் *முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் காசி விஸ்வநாதன்* பெண் துணை செவிலியர் *சகுந்தலா* , ஆய்வக நுட்புனர் *ஸ்டெல்லா மேரி,முருககுமார்* மற்றும் கிராம சுகாதார செவிலியர்கள் கலந்து கொண்டனர் இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் *காசி விஸ்வநாதன் ஏற்பாடு செய்திருந்தார்*
கரிசலாங்கண்ணி சூரணத்தை கால் ஸ்பூன் எடுத்து, தேனுடன் சேர்த்து சாப்பிட்டால் நரை, மூப்பு ஏற்படுவது தள்ளி போகும். மேலும் கரிசலாங்கண்ணி நரம்புத்தளர்ச்சியை போக்கி மூளை நரம்புகளை தூண்டி புத்துணர்ச்சி அடைய செய்யும். ஆஸ்துமா, இருமல், ஈளை பாதிப்பு உள்ளவர்கள் கரிசலாங்கண்ணி பொடியுடன் திப்பிலி சூரணம் சேர்த்து தினமும் ஒருவேளை என ஒரு மண்டலம் அதாவது 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் காச நோய்கள் குணமாகும், மேலும் சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்களும் தீரும். கரிசலாங்கண்ணி கீரை இதய அடைப்பை நீக்கி இதயத்தை சீராக செயல்பட வைக்கும். மேலும் மண்ணீரல், மற்றும் சிறுநீரகத்தைப் பலமாக்கும். மஞ்சள் காமாலை, சிறுநீர் எரிச்சல் ஆகிய அனைத்திற்கும் கரிசலாங்கண்ணி சிறந்த மருந்தாகும். ஆரம்ப நிலையில் உள்ள மனநோய்க்கு கரிசலாங்கண்ணி கீரை தான் மிக சிறந்த மருந்தாக விளங்குகிறது. அடிக்கடி கருச்சிதைவு பிரச்சினைக்கு உள்ளாகும் பெண்கள் கரிசலாங்கண்ணிச் சாற்றையும் பசும் பாலையும் சம அளவு கலந்து குடித்து வந்தால் கருச்சிதைவு ஏற்படாமல் தடுக்கும்.
என் பெயர் சிறிஸ்கந்தராஜா 1991 இலிருந்து சுவிஸில் வாழ்ந்து வருகிறேன். ஊரில் வடமராட்சி வல்வெட்டியை பிறப்பிடமாகக் கொண்டவன். உடுப்பிட்டி அமெரிக்க மிஷன் பாடசாலையில் கல்வி கற்றேன். கலையார்வம் உண்டு பள்ளிக் காலங்களில் இருந்து நாடகங்கள் செய்து கொண்டு இருந்தேன். அதன் பின் புலம்பெயர்ந்து வந்தும் இங்கு அரங்க நாடகங்கள் செய்து கொண்டிருந்தேன் வேறு என்னைப் பற்றிச் சொல்வதற்கு எதுவுமில்லை. ஆரம்பத்தில் நாடகம் என்று செயற்பட்டு இப்பொது ஒரு முழுநீள சினிமாவுக்குள் உங்களை இறக்கிக் கொண்டதற்கான காரணம் என்ன? புலம்பெயர்ந்து வந்த பின் எனது நாடகங்கள் விடுதலை சார்ந்து மக்களின் அவலங்களையும் எழுற்சியையும் சித்தரிக்கும் நாடகங்களாகவே செய்து கொண்டிருந்தேன். 2009 இற்குப் பிறகு எங்கள் பிரச்சனைகளை வெளியே கொண்டு செல்லும் தேவை ஒன்று இருப்பதால், சினிமா என்பது ஒரு பெரிய ஊடகம் அதன் மூலம் எங்கள் எண்ணங்களை மக்களிடம் கொண்டு செல்லலாம் என்ற நோக்கோடு தான் அடம்பன் என்ற முழு நீளத் திரைப்படத்தை எடுக்க முற்பட்டேன் சினிமாத்துறையில் இறங்கியிருக்கிறீர்கள் சினிமா பற்றிய அனுபவங்கள் பயிற்சிகள் என்று ஏற்கனவே உண்டா? அனுபவம் எதுவும் இல்லை. இருபது வருடங்களுக்கு முதல் பதினைந்து நிமிட குறும் படம் ஒன்று செய்தேன் அது ஒன்று தான் அனுபவம்.ஸ்ரூடியோவுக்குள் இருந்த தமிழசினிமா பாரதிராஜா வந்த பிற்பாடு பரட்டைக் காடுகளுக்குள்ளும் எடுக்கலாம் என்ற நிலை ஏற்பட்டிருக்கிறது . அந்த நிலை எல்லோரும் சினிமா எடுக்கக் கூடிய வசதியை தந்திருக்கிறது. பலர் திரைப்படத் துறை பற்றிக் கற்காமல் அந்தத் துறையில் இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். சரி எங்கள் விஷயத்தை நாங்கள் சொல்லப் போகிறோம் ,எங்களாலும் முடியுமென்ற நம்பிக்கையோடு, துணிச்சலோடு முயற்சித்தோம் அது நன்றாக வந்திருக்கிறது என்று நினைக்கிறேன். உங்கள் படத்தின் நோக்கம் பொருளாதாரம், அல்லது விளம்பரம் அல்லது ஆவணப்படுத்தல் இவைகளில் எதை நோக்காகக் கொண்டது? நிச்சயமாக இல்லை, வியாபார நோக்கோடு இந்தப் படம் செய்யப்படவில்லை. வியாபார நோக்கோடு ஒரு படைப்பை கொண்டு வந்தால் தான் நாங்கள் அடுத்த கட்டத்துக்கு நகர முடியும் என்பதும் எனக்குத் தெரியும் . வியாபார நோக்கத்தைத் தாண்டி மக்களுக்குத் தெரியாத எங்களுடைய பிரச்சனைகள் சிலவற்றை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கோடு தான் இந்தப் படம் உருவாக்கப் பட்டது. இந்தப் படத்தில் நீங்கள் இயக்குனராகப் பணியாற்றியிருக்கிறீர்கள். இந்தக் கதைக்கான கரு என்ன மாதிரியானது ? எப்படிப் பெற்றீர்கள்? இந்தக் கதை உங்களின் சொந்தக் கருவா? எழுத்து இயக்கம் என்னுடையது,. நாம் நீண்டகா லமாக விடுதலைக்காகப் போராடிக்கொண்டிருக்கும் இனம் அதன் வலிகள்,இழப்புகள் என்பது எங்களுக்கு தெரிந்த விடயம் பழக்கப்பட்டும் விட்டது. அதை மக்கள் மத்தியில் எப்படிக் கொண்டு செல்லலாம் என்று நினைக்கும் பொது தோன்றிய கதை தான் அடம்பன். அதன் பெயர் என்ன நோக்கோடு சூட்டப்பட்டது என்பதும் உங்களுக்குச் சொல்ல வேண்டும்..இதில் முன்னுக்குத் தெரிவது நான் என்றாலும் இது ஒரு கூட்டு முயற்சி இப்படி ஒன்று செய்ய வேண்டும் என்று எனக்குள் எழுந்த சிந்தனைக்குப் பிறகு ஒளிப்பதிவு செய்ய ஒருவரை தேடி, இசைக்கு ஒருவரைத் தேடி, நாங்கள் மூவரும் கதைத்து அகரம் படைப்பகம் என்ற ஒன்றை உருவாக்கி அகரம் படைப்பகத்தின் தயாரிப்பில் தான் இத்திரைப்படத்தைச் செய்தோம். இந்தக் கதையின் களம் எங்கு? நீங்கள் இருக்கும் நாடா,அல்லது? சுவிஸ் தான் கதைக் களமே அங்கு தானா? கதைக் களமே அங்கு தான். கதைக்களம் புலம்பெயர்ந்து வாழும் எந்த நாடாகவும் இருக்கலாம். ஆனால் கதை தொடுவதற்கு ஒரு இடம் வேண்டும் எங்கள் தாயகத்தில் இருந்து தான் அந்தக் கதை வந்து தொடுகிறது. அடம்பன் என்ற தலைப்புப் பற்றிச் சொல்லுங்கள் ? இந்தச் சொல் எங்கள் மத்தியில் அதிகம் பேசப்படும் ஒன்று. அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு என்று ஒரு பழமொழி இருக்கிறது. அது தனித்தனியாக வளரும் ஒன்றை ஒன்று பின்னிக் கொண்டதாயின் வலிமையானதாக இருக்கும். மற்றது எங்கள் போராட்டத்தில் திருப்புமுனை உருவாக்கிய பிரதேசம் அடம்பன். உங்கள் சொந்தகரு உருவாக்கத்தில் இல்லாமல், அதே நேரத்தில் தரமான வேறொரு கதை கரு தந்தால் செய்வீர்களா? நிச்சயமாக அப்படி ஒரு சந்தர்ப்பம் வரும போது செய்ய முடியும் என்று நினைக்கிறேன்.அடுத்த படைப்பை நாம் செய்யும் பொது இன்னும் சிறப்பாக செய்ய முடியும். இந்தப் படத்துக்கான நடிகர்களை எப்படி தெரிவுசெய்தீகள்?இந்தப் படத்திற்குக் கதை எழுதிய பின் நடிப்பதற்கு ஆட்களைத் தெரிவு செய்து அவர்களிடம் கதையை சொல்லிக் கொண்டிருந்தேன். அப்போது ஸ்ரீ அண்ணை நன்றாக இருக்கிறது செய்வம் என்று சொல்வார்கள். பிறகு ஐந்து நாட்களோ ஒரு கிழமைக்குள்ளோ வந்து தொலை பேசியில் ஸ்ரீ அண்ணை அது கஸ்ரம் ஊருக்குப் போக வேண்டியுள்ளது நேரமில்லை என்று சொல்லும் நிலைப்பாடுகள் தான் இருந்தது அதில் நான் விரக்தியடைந்து போகவில்லை. தொடர்ந்து முயன்று கொண்டு இருந்தேன் .தமிழ் ஆசிரியர் ஒருவரை அணுகி அவருக்கு கதையைச் சொல்லியபோது இதில் நடிப்பதற்கான பிள்ளைகளைத் தந்தார். பிள்ளைகளுடன் நான் பேசிய போது இது எங்களுடைய பிரச்சனை நாங்கள் தான் இதைச் சொல்ல வேண்டும் என்றுகூறி கதையை அவர்களுக்கு விளக்கினேன். அவர்களும் நாங்கள் இதைச் செய்வோம் என்றார்கள். அதன் பின் இப்படத்தை எடுக்கத் தொடங்கி 58 நாட்கள் இதன் ஒளிப்பதிவு நடந்தது. குறும்படம் என்பதை விட ஒரு முழுநீளத் திரைப்படத்தை எடுக்கும் போது நிறைய சிரமங்கள்கள் ,செலவுகள், கால இழுபறிகள் இப்படியான பிரச்சனைகள் இருக்கும் .நீங்கள் விரும்பியது போல இந்தப் படத்தை எடுக்கும் சந்தர்ப்பம் அமைந்ததா? நான் நாடகம் அல்லது தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் எது செய்தாலும் சரி ஸ்கிரிப்ட் கையில் வைத்திருப்பேன் அதற்குள் தான் நின்று கொள்வேன் வெளியில் போக மாட்டேன். எனக்கு அது உதவியாக இருந்தது. வேலைப்பளுக்கள் பிள்ளைகளின் படிப்பு என்ற ரீதியில் நேரம் ஒத்து வராத பிரச்சனைகள் கொஞ்சம் இருந்தன அதனால் நான் நினைத்த அளவு முற்று முழுதாக கொண்டு வரமுடியா விட்டாலும் 90 வீதம் சரியாக வந்திருக்கிறது. இன்னொரு முக்கிய கேள்வி … ஈழத்துத் தமிழை, யாழ்ப்பாணத் தமிழை நாடகத் தமிழ் என்று சொல்வார்கள். இவ்வாறிருக்கையில் எங்கள் ஆட்கள் எடுக்கும் நாடகங்களோ,குறும் படங்களோ அல்லது முழுநீளத்திரைப்படங்களாகினும் சரி தென்னிந்தியப் பேச்சு நடை தான் இப்போது ஒரு போக்கு மாதிரிப் போய்க் கொண்டிருக்கிறது. உங்கள் படத்தில் என்ன மாதிரி, இயல்பான பேச்சு நடையா அல்லது..? நான் வந்து இதில் கவனமாக இருக்கிறேன். இதில் இங்குள்ள பிள்ளைகள் எப்படிப் பேசுவார்களோ அப்படியேயான இயல்பான பேச்சு நடை . அதை யாழ்ப்பாணத் தமிழ் என்று சொல்ல வரவில்லை. இந்தியச் சினிமாக்கள் எங்கள் தமிழை கொச்சை படுத்தி நாங்கள் பார்த்திருக்கிறோம், மனோரமாவில் இருந்து கலமஹாசன் வரை இது தான் யாழ்ப்பாணத் தமிழ் என அவர்கள் பேசும் போது ஒரு விதக் கஸ்ரத்தைக் கொடுத்தது. இந்தப் படத்தில் இப்படித்தான் இது தான் எங்கள் தமிழ் என்ற நிலையை உருவாக்கியிருக்கிறோம். இதில் ஒரு விஷயம் நான் கட்டாயம் குறிப்பிட்டாக வேண்டும். நான் படத்துக்கு சவுண்ட் எடிட் செய்ய கொண்டு போன போதுபார்த்து விட்டு இதன் ரீ ரக்கொடிங் செய்த விஜயன் இந்த மொழியைக் கேட்டீர்களா என்று கேட்டார். அவர் ஏன் என்று கேட்ட போது இது தான் தமிழ் என்றார். ஈழத்துச் சினிமா, ஈழத்துப் புலம்பெயர் சினிமா இரண்டுக்கும் என்ன வித்தியாசம் ? ஈழத்துச் சினிமா என்று சொல்லும் போது 80 களுக்கு முதல் 70 இற்குப் பிறகு வந்த பன்னிரண்டு படங்கள். அவைகளில் மிகவும் தாக்கத்தை ஏற்படுத்திய படம் வாடைக் காற்று, கரையோர மக்களின் வாழ்வை சித்தரித்த கதை அருமையான எங்களுடைய தமிழில் பேசி நடிச்ச படம். அதே மாதிரி புதியகாற்று மலையக மக்களின் வாழ்க்கையைப் பேசிய ஒரு படம். இன்னும் சொல்லிக் கொண்டு போகலாம். இந்தப் படங்கள் மக்கள் மத்தியில் வரவேற்றுப் பெறவில்லை. காரணம் காலங்காலமாக தமிழகத்துச் சினிமாவையே பார்த்துக் கொண்டு வந்த எங்கள் மக்களுக்கு இதை ஏற்றுக் கொள்ளும் மன நிலை இருக்கவில்லை.எண்பதிற்குப் பிறகு புலபெயர்ந்து வந்த பின் இங்கு வசதிகள் இருக்கிறன. நாங்கள் கதைகள் தேடி எங்கும் போகத் தேவையில்லை எங்கள்ஒவ்வொருவரிடமும் கதைகள் இருக்கிறது. அதை செம்மையாகச் செய்தோம் என்றால் வெற்றி பெறலாம் புலம்பெயர் தமிழ் சினிமாவின் வளர்ச்சி போக்கு எப்படி இருக்கிறது? அது முழுவதுமான சர்வதேசத் தரம் கொண்ட சினிமாவாக வருவதற்கு ஒரு இயக்குனராக உங்கள் பார்வையில் இன்னும் என்னென்ன முன்னேற்ற கள் செய்ய வேண்டி இருக்கிறது? அண்மையில் நோர்வே தமிழ் திரைப்பட விழாவிற்கு கனடா, மலேசியா அவுஸ்திரேலியா மற்றும் சுவிஸில் இருந்து எங்கள் அடம்பன் படமும் பங்குபற்றியது செய்து கொண்டிருக்கும் படங்கள் நன்றாக இருக்கின்றன எங்கள் பிரச்சனைகளை நாங்கள் இன்னும் நன்றாகச் சொல்ல முடியும். இங்கு படித்த இளைஞர்கள் புத்திசாலிகள். இங்குள்ள பலதரப்பட்ட வசதிகளை பார்க்கும் கேட்கும் பயன்படுத்தி இப்போது பாடல்கள் குறும்படங்கள் செய்து கொண்டிருக்கிறார்கள் அவர்கள் நினைத்தால் எதிர்காலத்தில் சிறப்பான சினிமாக்களை உருவாக்கலாம் ஒரு முழு நீளத் திரைப்படம் எடுக்க முடியும் என்று நாங்கள் இப்போது வெளியே வந்து கொண்டிருக்கிறோம். எம்மிடம் தொழில்நுட்பவியலாளர்கள் குறைவு. இன்றைய இளைஞர்களின் வளர்ச்சியில் வருங்காலத்தில் அவர்கள் அந்த நிலைக்கு மாறும் போது உலகத்தரமான படைப்பைக் கொடுக்க முடியும்நினைக்கிறேன். இலங்கையில் குறும்படம் முழுநீளத் திரைப்படம் என்று எடுத்துக் கொண்டிருக்கும் இளைஞர்கள், கையில் ஒரு நல்ல டிஜிட்டல் கமெராகிடைத்ததும் நாங்களும் ஒரு படத்தயாரிப்பாளர் இயக்குனர் நடிகர் என்ற ரீதியில் சென்று கொண்டிருக்கிறார்கள். அப்படி உருவாகி வருபவைகளைப் பார்த்தால் அதில் சினிமா என்று சொல்வதற்கான எந்த அம்சமும் இல்லை. அவர்கள் எதைச் சொல்ல வருகிறார்கள் என்பது பற்றி தெரியாமல் கூட இருக்கிறது ஒரு இயக்குனராக நீங்கள் இது பற்றி என்ன நினைகிறீர்கள்? அவர்களின் ஆர்வம் போற்றத் தக்கது வரவேற்கத் தக்கது. அதை சரியாகச் செய்ய வேண்டும் என்பது தான் என் நோக்கம். யாழிலிருந்து வரும் பாடல்கள் குறும்படங்கள் வருகிறது அவைகளைப் பார்க்கும் போது இந்திய சினிமாவின் தாக்கங்கள் இருக்கிறது. அவை தவிர்க்கப்பட்டு எமக்கான ஒரு அடையாளத்தை உருவாக்க வேண்டும் என்பது தான் என் விருப்பம். பிரான்ஸ் தான் சினிமாவின் தாயகமே அப்படி இருக்கும் போது இங்கு ஐரோப்பாவில் இருக்கும் நம்மவர்கள் ஒரு பாட்டு இயக்கம் அப்படி எதை எடுத்தாலும் தமிழ்நாட்டில் போய்அந்தச் சாயலில் தான் செய்து கொண்டு வருகிறார்கள். இப்படிப் போகும் போது இதன் எதிர்காலம் எப்படி இருக்கும்? அதைத்தான் எங்களுக்கான இத்துவமான படைப்பாக மாற்ற எண்டும் என்று சொன்ன காரணம் இது தான். அப்படி நீங்க சொல்வது போலான மாற்றங்கள் வந்தது போல்…முயற்சித்தமாதிரி? செய்கிறார்கள் செய்ய வேண்டும் சினிமா என்று சொல்லப்படும் கலைப்படைப்பில் ஒரு சமூகம் தன்வாழ்வியலை வெளிப்படுத்தக் கூடிய ஊடகம். விடுதலைக்காகப் போராடும் ஒரு இனமான நாங்கள் இன்னுமொரு இனத்துக்கு எங்கள் போராட்டத்தை வலிகளை, துன்பங்கள் எங்கள் போராட்டத்தின் நியாயங்களைச் சொல்ல நாங்கள் சினிமாவைப் பயன்படுத்தலாம் அப்படிப் பயன்படுத்தும் போதுநாம் வேறு மொழிக் கலைஞர்களுடன் இணைந்து ஏன் இதைச் செய்ய முடியாது? செய்யலாம். வேற்று மொழிக் கலைஞர்கள் என்றல்ல. எம்மிடமே இப்போது பன்மொழி ஆளுமை உள்ள இளையவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் மூலமே எம்மால் செய்ய முடியும். நீங்கள் கூறியது போல வேற்றுமொழிக் கலைஞர்களை தேடிப் போய் இணைந்து செயற்படும் போது பலவிதமான அனுபவகளைத் தரும். இலங்கையில் முற்போக்கான சிங்கள திரைப்படக் கலைஞர்கள் சிலர் இருக்கிறார்கள். அவர்களோடு இணைந்து இயங்க வாய்ப்புக் கிடைத்தால் இயங்குவீர்களா? அப்படிச் சந்தர்ப்பம் இலகுவில் கிடைக்காது கிடைத்தால் சேர்ந்து இயங்கும் வாய்ப்பு இருக்கிறது. புலம்பெயர் தேசத்தில் படம் எடுக்கும் நீங்கள் ஈழத்துக் கலைஞர்களுடனும் சேர்ந்து இயங்கும் எண்ணம் உங்களுக்கு இருக்கிறதா ? நிச்சயமாக இருக்கிறது. அதற்கான சந்தர்ப்பம் அடுத்த அல்லது அடுத்தடுத்த ஆண்டுகளில் கிடைக்கும் என்று தான் நான் எதிர்பார்க்கிறேன். அடம்பன் படத்தின் தயாரிப்பு பற்றி கொஞ்சம் சொல்ல முடியுமா? இது ஒன்றரை மணிநேரப் படம். பொதுவாகவே படம் என்னும் போது செலவுகள் இருக்கும் இதிலும் இருந்த போதும் கூட்டு முயற்சி என்பதால் கையில் இருந்தது எல்லாம் போட்டு இந்தப் படத்தை முடித்திருக்கிறோம் 30,000 பிராங் வரை முடிந்திருக்கிறது. இதுவரை ஆயிரம் பேர் வரை தான் பார்த்திருக்கிறார்கள் 3500 பேர் வரை பார்த்தால் தான செலவுத் தொகையை எட்டும். சந்தோசமான விடயம் என்னவென்றால் இப்படத்தைப் பார்த்தவர்கள் இது பற்றி எல்லா விதத்திலும் பாராட்டியிருக்கிறார்கள். இந்தப் படத்துக்கான சந்தைப்படுத்தல் பற்றி அறியத்தாருங்கள்? படம் எடுப்பது கஸ்ரம் என்று சொன்னார்கள். ஆனால் எடுத்த படத்தை மக்கள் மத்தியில் கொண்டு செல்வது தான் கஸ்ரம். இந்திய சினிமாக்கள் மாதிரி பிரபலங்கள் இல்லாததால் எடுத்துத் திரையிட்டால் நஷ்ரம் வருமோ என்ற ரீதியில் தான் இதன் மீதான பார்வை இருக்கிறது. இதனால் சுவிசில் நாமே அரங்குகளை வாடகைக்கு எடுத்து விளம்பரம் செய்து திரையிடுகிறோம்.பிரான்சில் இங்குள்ள திரைப்படம் சார்ந்த கலைஞர்களையும் கலைஞர்களுக்கு ஊக்குவிப்புக் கொடுக்கும் அமைப்பான தடம் என்ற அமைப்பையும், தமிழர் ஒருங்கிணைப்புக் குழு பிரான்ஸ் , மற்றும் உங்களைப் போல ஊடகங்களையும் சந்தித்து எல்லோருடைய அனுசரணையோடும் நாங்கள் இந்தப் படத்தை பிரான்ஸில் வெளியிடுகிறோம். புலம்பெயர் தேசத்தில் ஒவ்வொரு நாட்டிலும் இருந்து தனிப்பட்ட முறையில் தான் படைப்புக்கள் வெளிவருகின்றன. ஒட்டுமொத்தமாக எல்லோரும் சேர்ந்து ஒரு படைப்பைக் கொண்டுவரும் சாத்தியம் ஏன் இதுவரை உருவாகவில்லை அப்படியான முயற்சிகள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. நாங்கள் இருக்கும் நாட்டில் ஒன்று பட்டு ஒரு அமைப்பாக செயற்படுவோமாகில் ஒவ்வொரு நாட்டிலுமிருந்து தொடர்பு கொள்ளலும் இணைந்து செயற்படுவதும் இலகுவாக இருக்கும் . அடம்பனுக்கு அடுத்த முயற்சியாக சுவிசில் அப்படி ஒரு முயற்சியை தான் முன்னெடுக்க இருக்கிறோம் ஒரு இயக்குனராக வளர்ந்து வரும் இயக்குனர்களுக்கு நீங்கள் சொல்வது என்ன? எங்கள் படைப்புக்கள் அதிகமாக வரவேண்டும். காரல்மார்க்ஸ் சொன்னது போல உனக்குள் தேடு… அந்த தேடல் முக்கியம் . எங்களுக்குள் இருக்கும் கதைகளுக்கு வடிவம் கொடுக்க வேண்டும் என்பது தான் என் விருப்பு. அடம்பன் திரைப்படத்திற்கடுத்து வேறு முயற்சியில் ஈடுபட எண்ணியிருக்கிறீ ர்களா? ஆரம்பித்து விட்டீர்களா? இன்னும் ஆரம்பிக்கவில்லை. இந்தத் திரைப்படத்துக்குப் பின் பலரும் எங்களுடன் சேர்ந்து இயங்க விரும்பிக் கேட்டிருக்கிறார்கள். விரைவில் ஆரம்பிப்போம் அடம்பன் படத்தை ஐரோப்பா முழுவதும் வெளியிடும் எண்ணம் உங்களுக்கு இருக்கிறதா? நிச்சயமாக. சுவிசைத் தாண்டி ஒவ்வொரு நாட்டிலும் திரையிடும் ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருக்கிறோம். உங்கள் திரைப்பயணங்கள், முயற்சிகள் எதிர்கொண்ட சவால்கள் பற்றிய அனுபவங்களை மனமுவந்து எங்களுடன் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிகள் உங்கள் படம் வெற்றிபெற வாழ்த்துக்கள். சந்தோசம். இதுவரை படம் சார்ந்து கேட்ட கேள்விகளில் இருந்து பல விடயங்கள் அறிந்து கொள்ள முடிந்தது. உங்கள் நேரத்தை செலவு செய்து இந்த நேர்காணலை மேற்கொண்டமைக்கு உங்களுக்கும் உங்கள் சஞ்சிகைக் குழுவினருக்கும் அடம்பன் திரைப்படக் குழுவின் சார்பில் என் நன்றிகள்.
கலைஞர் திரைத்துறைக்கு வந்து ஐம்பது ஆண்டுகள் ஆனதால், அவரைப் பாராட்டி கௌரவிக்கும் வகையில் ஒரு பிரமாண்ட விழா நடத்த திரையுலகினர் பலர் முடிவு செய்தார்கள். அப்போது ஜெயலலிதா முதல்வராக இருந்த காரணத்தினால் சிலர் அவ்விழாவில் கலந்துகொள்ள பயந்தனர். ‘கலைஞரின் கலையுல பொன்விழா’ என்று அவ்விழாவுக்கு பெயர் முடிவானது. பொன்விழா குழு தலைவராக ‘புரட்சிக் கலைஞர்’ விஜயகாந்த், செயலாளராக ‘புரட்சித் தமிழன்’ சத்யாராஜ், பொருளாளராக இப்ராகிம் ராவுத்தர், உறுப்பினர்களாக இயக்குநர்கள் எஸ்.பி.முத்துராமன், இராமநாராயணன், தயாரிப்பாளர் ஏ.எல்.அழகப்பன், நடிகர்கள் நெப்போலியன், அருண் பாண்டியன், ராதாரவி, வாகை சந்திரசேகர், பாண்டியன், தியாகு ஆகியோர் தேர்வானார்கள். கலைஞரின் கலையுல பொன்விழா மலர் குழு ஆசிரியர் குழுவில் கவிஞர் வாலி, வைரமுத்து, கலைமாமணி ‘பிலிம்நியூஸ்’ ஆனந்தன், பத்திரிகையாளர் சுதாங்கன், ‘தேவி’ மணி, பேராசிரியர் கி.சு.கிருஷ்ணசாமி ஆகியோரும், மலர்க்குழுவில் மக்கள் தொடர்பாளர்கள் ‘திரைநீதி’ செல்வம், ‘கிளாமர்’ கிருஷ்ணமூர்த்தி, ‘மௌனம்’ ரவி, ஓவியர் மேக்ஸ் ஆகியோர் இடம்பெற்றனர். வாள் முனையைக் காட்டிலும் பேனா முனை வலிமையானது என்பார்கள். அப்படி பேனாவுக்கு சொந்தக்காரரான கலைஞர் அவர்களுக்கு ஒரு பிரமாண்ட பேனா பரிசு அளிப்பது என்றும் முடிவுவானது. விழாக்குழு செயல்பட தி.நகரில் இருந்த விஜயகாந்த் அலுவலகத்தில் தனியாக ஒரு இடம் ஒதுக்கப்பட்டது. அலுவலக ஊழியர்கள் மணி, அண்ணாத்துரை, சந்தானம் ஆகியோர் உதவியாக இருந்தார்கள். சென்னை கடற்கரை சீரணி அரங்கில் பிரமாண்ட அரங்கு அமைத்து அங்கு 14.04.1996 அன்று விழா நடத்துவது என முடிவானது. தமிழ்த் திரையுலகினர் அனைவருக்கும் அழைப்பிதழ்கள் வழங்கப்பட்டது. நடிகர் நடிகைகள் அனைவரும் அவர்களது காரின் மூலம் பிலிம் சேம்பர் வளாகத்திற்கு வரவழைத்து அங்கிருந்து பஸ்ஸில் சீரணி அரங்கிற்கு அழைத்துச் செல்வது என்றும், அது பாதுகாப்பாக இருக்கும் என்றும் முடிவானது. இவ்விழாவுக்கும் டைமண்ட் பாபு அவர்கள் தலைமையில் மக்கள் தொடர்பாளர்களான நாங்கள் பலர் வேலை செய்தோம். எனக்கு மேடையில் வேலை. நடிகர் நடிகைகளைத் தவிர, வேறு யாரையும் மேடை ஏற்றக் கூடாது என்று உத்தரவு. மேடைக்கு எதிரே கலைஞர் அவர்களின் குடும்பத்தினர், இந்தப் பக்கம் தி.மு.க. அரசியல் பிரமுகர்கள், அந்தப் பக்கம் பத்திரிகையாளர்கள் என எல்லோரும் வசதியாக அமர்வதற்கு இடம் ஒதுக்கி, அந்த வேலைகளை இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் செய்து கொடுத்திருந்தார். இவ்விழாவுக்கு நடிகர், நடிகைகள் குவிகிறார்கள் என்பதால், அலையலையாக மக்கள் கூட்டம் பெருகி கொண்டே இருந்தது. ஜன சமுத்திரத்திற்குள் பஸ்ஸில் இருந்து வந்து நட்சத்திரங்கள் இறங்கியதும், எங்கிருந்துதான் வந்ததோ ஒரு கூட்டம், தடுப்புகளை உடைத்து சாய்த்து மேடையை நோக்கி முன்னேறியது. இதனால், தள்ளு முள்ளு, நெருக்கடி, என திரைக் கலைஞர்கள் அவதிக்குள்ளானார்கள். நடிகர், நடிகைகளுடன் வந்த உதவியாளர் அல்லது பெற்றோர் நிற்க இடம் கிடைக்காமல் மேடை ஏற முயன்றனர். அவர்களை எவ்வளவோ தடுத்துப் பார்த்தும் கேட்கவில்லை. இதைப் பார்த்துக் கொண்டிருந்த விஜயகாந்த், “சரி விடு... அவர்கள் எங்கு நிற்பார்கள்’’ என்றார். நான் அவர்களையும் மேடை ஏற வழிவிட்டேன். கூட்டத்தினரை மைக்கின் மூலம் அமைதிப் படுத்திக் கொண்டிருந்த தயாரிப்பாளர் ஏ.எல்.அழகப்பன், மேடை ஏறுபவர்களை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே ஓடிவந்து “என்ன பாலா இப்படி பண்ணிட்டே?” ’என்று சத்தம் போட்டார். “கேப்டன் விடச் சொன்னார்” என்று பதில் கூறியதும், அமைதியானார். எந்த வித அசம்பாவிதமும் பெரிதாக இல்லாமல், விழா நடந்து முடிந்தது. அந்த விழா மூலம் பாதுகாப்புடன் எப்படி விழா நடத்த வேண்டும் என்கிற அனுபவத்தைக் கற்றுக் கொண்டேன். 1996 ஆம் ஆண்டு மத்திய ஒலிபரப்புதுறை மந்திரியாக ஜெயபால் ரெட்டி பதவி ஏற்ற போது, அவருக்கு தமிழ்த் திரைபடத் தயாரிப்பாளர் சங்கம் சார்பில் ஒரு பாராட்டு விழா நடத்திக் கௌரவித்தார் கே.ஆர்.ஜி. சென்னையில் உள்ள தாஜ் கன்னிமாரா ஹோட்டலில் நடந்த அவ்விழாவுக்கு தயாரிப்பாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். அந்த விழாவுக்கு அழைப்பிதழ் அனுப்பியது முதல், விழா முடியும் வரையிலான அனைத்து வேலைகளையும் தலைவர் கே.ஆர்.ஜி. செயலாளர் கே.விஜயகுமார் ஆகியோரின் வழி காட்டுதலில் நான் செய்து முடித்தேன். அதில் எனக்கு பாராட்டு கிடைத்தது.
நம் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து காணப்பட்டது. இதன் விளைவாக தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களில் கன மழை கொட்டித் தீர்த்தது. அதோடு வடதமிழக மற்றும் கன்னியாகுமரி போன்ற பல மாவட்டங்களில் மழைநீர் வீடுகளுக்குள் புகுந்து வாழ்வாதாரம் மிகுந்த பாதிப்புக்கு உள்ளானது. இதனால் தாழ்வான பகுதிகளில் வசித்த மக்கள் முகாம்களுக்கு சென்று தஞ்சம் அடைந்தனர். இந்த நிலையில் பல பள்ளிகள் கூட தற்போது வரை முகாம்களாக செயல்பட்டு வருகிறது. இதனால் முகாம்களாக செயல்படும் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை என்று மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். அதன்படி கன்னியாகுமரி மாவட்டத்தில் நிவாரண முகாம்களாக உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை என்று கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். வெள்ளம் சூழ்ந்த பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு நாளை விடுமுறை என்று கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து திருவள்ளூர் மாவட்டத்தில் இரண்டு பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். அதன்படி திருவள்ளூர் மாவட்டத்தில் நிவாரண முகாம்கள் செயல்பட்டு வரும் இரண்டு பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என்று கூறியுள்ளார். ஆவடி நடுக்குத்தகை நடுநிலைப்பள்ளி, மற்றும் திருத்தணி பூனிமாங்காடு உயர்நிலை பள்ளிக்கு நாளைய தினம் விடுமுறை என்று திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
1 தாவீதுடைய கடைசி வார்த்தைகள் மேன்மையாய் உயர்த்தப்பட்டு, யாக்கோபுடைய தேவனால் அபிஷேகம் பெற்று, இஸ்ரவேலின் சங்கீதங்களை இன்பமாய்ப்பாடின ஈசாயின் குமாரனாகிய தாவீது என்னும் புருஷன் சொல்லுகிறது என்னவென்றால்; 2 கர்த்தருடைய ஆவியானவர் என்னைக்கொண்டு பேசினார்; அவருடைய வசனம் என்னுடைய நாவில் இருந்தது. 3 இஸ்ரவேலின் தேவனும் இஸ்ரவேலின் கன்மலையுமானவர் எனக்குச் சொல்லி உரைத்ததாவது: நீதிபரராய் மனுஷரை ஆண்டு, தெய்வபயமாய்த் துரைத்தனம்பண்ணுகிறவர் இருப்பார். 4 அவர் காலையில் மந்தாரமில்லாமல் உதித்து, மழைக்குப்பிற்பாடு தன் காந்தியினால் புல்லைப் பூமியிலிருந்து முளைக்கப்பண்ணுகிற சூரியனுடைய விடியற்கால வெளிச்சத்தைப்போல இருப்பார் என்றார். 5 என்னுடைய வீடு தேவனிடத்தில் இப்படியிராதோ? சகலமும் திட்டம்பண்ணப்பட்டிருக்கிற நிச்சயமான நித்திய உடன்படிக்கையை என்னுடன் அவர் செய்திருக்கிறார்; ஆதலால் என்னுடைய எல்லா ரட்சிப்பும் எல்லா வாஞ்சையும் வளர்ந்தோங்கச் செய்யாரோ? 6 பேலியாளின் மக்கள் அனைவருமோ, கையினால் பிடிக்கப்படக் கூடாததாய் எறிந்துபோடப்படவேண்டிய முள்ளுக்குச் சமமானவர்கள். 7 அவைகளை ஒருவன் தொடப்போனால், இருப்பாயுதத்தையும் ஈட்டித்தாங்கையும் கெட்டியாய்ப் பிடித்துகொள்ளவேண்டும்; அவைகள் இருக்கிற இடத்தில்தானே அக்கினியினால் முற்றும் சுட்டெரிக்கப்படும் என்றான். 8 தாவீதுக்கு இருந்த பராக்கிரமசாலிகளின் நாமங்களாவன: தக்கெமோனியின் குமாரனாகிய யோசேப்பாசெபெத் என்பவன் சேர்வைக்காரரின் தலைவன்; இவன் எண்ணூறுபேர்களின்மேல் விழுந்து அவர்களை ஒருமிக்க வெட்டிப்போட்ட அதீனோஏஸ்னி ஊரானானவன். 9 இவனுக்கு இரண்டாவது, அகோயின் குமரனாகிய தோதோவின் மகன் எலெயாசார் என்பவன்; இவன் பெலிஸ்தர் யுத்தத்திற்குக் கூடின ஸ்தலத்திலே இஸ்ரவேல் மனுஷர் போகையில், தாவீதோடே இருந்து, பெலிஸ்தரை நிந்தித்த மூன்று பராக்கிரமசாலிகளில் ஒருவனாயிருந்தான். 10 இவன் எழும்பித் தன் கைசலித்து, தன் கை பட்டயத்தோடு ஒட்டிக்கொள்ளுமட்டும் பெலிஸ்தரை வெட்டினான்; அன்றையதினம் கர்த்தர் பெரிய ரட்சிப்பை நடப்பித்தார்; ஜனங்கள் கொள்ளையிடமாத்திரம் அவனைப் பின்சென்றார்கள். 11 மூன்றாவது, ஆகேயின் குமாரனாகிய சம்மா என்னும் ஆராரியன்; சிறுபயறு நிறைந்த வயலிருந்த இடத்திலே பெலிஸ்தர் ஏராளமாய்க் கூடி, ஜனங்கள் பெலிஸ்தரைக் கண்டு ஓடுகிறபேது, 12 இவன் அந்த நிலத்தின் நடுவிலே நின்று அதைக் காப்பாற்றி, பெலிஸ்தரை மடங்கடித்துப்போட்டான்; அதனால் கர்த்தர் பெரிய ரட்சிப்பை நடப்பித்தார். 13 முப்பது தலைவருக்குள்ளே இந்தமூன்றுபேரும் அறுப்புநாளிலே அதுல்லாம் கெபியிலே தாவீதிடத்தில் போயிருந்தார்கள்; பெலிஸ்தரின் தண்டு ரெப்பாயீம் பள்ளத்தாக்கிலே பாளயமிறங்கினபோது, 14 தாவீது அரணான ஒரு இடத்தில் இருந்தான்; அப்பொழுது பெலிஸ்தரின் தாணையம் பெத்லகேமிலே இருந்தது. 15 தாவீது பெத்லகேமின் ஒலிமுகவாசலில் இருக்கிற கிணற்றின் தண்ணீரின்மேல் ஆவல்கொண்டு: என் தாகத்திற்குக் கொஞ்சந் தண்ணீர் கொண்டுவருகிறவன் யார் என்றான். 16 அப்பொழுது இந்த மூன்று பராக்கிரமசாலிகளும் பெலிஸ்தரின் பாளயத்திலே துணிந்து புகுந்துபோய், பெத்லகேமின் ஒலிமுகவாசலில் இருக்கிற கிணற்றிலே தண்ணீர் மொண்டு, தாவீதினிடத்தில் கொண்டுவந்தார்கள்; ஆனாலும் அவன் அதைக் குடிக்க மனதில்லாமல் அதைக் கர்த்தருக்கென்று ஊற்றிப்போட்டு: 17 கர்த்தாவே, தங்கள் பிராணனை எண்ணாமல் போய்வந்த அந்த மனுஷரின் இரத்தத்தைக் குடிக்கும் இந்தச்செயல் எனக்குத் தூரமாயிருப்பதாக என்றுசொல்லி, அதைக் குடிக்க மனதில்லாதிருந்தான்; இப்படி இந்த மூன்று பராக்கிரமசாலிகளும் செய்தார்கள். 18 யோவாபின் சகோதரனும் செருயாவின் குமாரனுமான அபிசாய் என்பவன், அந்த மூன்றுபேரில் பிரதானமானவன்; அவன் தன் ஈட்டியை ஓங்கி முந்நூறுபேரை மடங்கடித்ததினால், இந்த மூன்றுபேர்களில் பேர்பெற்றவனானான். 19 இந்த மூன்றுபேர்களில் அவன் மேன்மையுள்ளவனாயிருந்ததினாலல்லவோ, அவர்களில் தலைவனானான்; ஆனாலும் அந்த முந்தின மூன்று பேருக்கு அவன் சமமானவன் அல்ல. 20 பராக்கிரமசாலியாகிய யோய்தாவின் குமாரனும் கப்செயேல் ஊரானுமாகிய பெனாயாவும் செய்கைகளில் வல்லவனாயிருந்தான்; அவன் மோவாப் தேசத்தின் இரண்டு வலுமையான சிங்கங்களைக் கொன்றதுமல்லாமல், உறைந்த மழைகாலத்தில் அவன் இறங்கிப்போய், ஒருகெபிக்குள் இருந்த ஒரு சிங்கத்தையும் கொன்றுபோட்டான். 21 அவன் பயங்கரரூபமான ஒரு எகிப்தியனையும் கொன்றுபோட்டான்; அந்த எகிப்தியன் கையில் ஒரு ஈட்டியிருக்கையில், இவன் ஒரு தடியைப்பிடித்து, அவனிடத்தில் போய், அந்த எகிப்தியன் கையிலிருந்த ஈட்டியைப்பறித்து, அவன் ஈட்டியினாலே அவனைக் கொன்றுபோட்டான். 22 இவைகளை யோய்தாவின் குமாரனாகிய பெனாயா செய்தபடியினால், மூன்று பராக்கிரமசலிகளுக்குள்ளே பேர்பெற்றவனாயிருந்தான். 23 முப்பதுபேரிலும் இவன் மேன்மையுள்ளவன்; ஆனாலும் அந்த முந்தின மூன்றுபேருக்கும் இவன் சமானமானவனல்ல; இவனைத் தாவீது தன் மெய்க்காவலருக்குத் தலைவனாக வைத்தான். 24 யோவாபின் தம்பி ஆசகேல் மற்ற முப்பதுபேரில் ஒருவன்; அவர்கள் யாரெனில், பெத்லகேம் ஊரானாகிய தோதோவின் குமாரன் எல்க்கானான், 25 ஆரோதியனாகிய சம்மா, ஆரோதியனாகிய எலிக்கா, 26 பல்தியனாகிய ஏலெஸ், இக்கேசின் குமாரனாகிய ஈரா என்னும் தெக்கோவியன். 27 ஆனதோத்தியனாகிய அபியேசர், ஊசாத்தியனாகிய மெபுன்னாயி, 28 அகோகியனாகிய சல்மோன், நெத்தோபாத்தியனாகிய மகராயி, 29 பானாவின் குமாரனாகிய ஏலேப் என்னும் நெத்தோபாத்தியன், பென்யமீன் புத்திரரின் கிபியா ஊரானாகிய ரிபாயின் குமாரன் இத்தாயி, 30 பிரத்தோனியனாகிய பெனாயா, காகாஸ் நீரோடைகளின் தேசத்தானாகிய ஈத்தாயி, 31 அர்பாத்தியனாகிய அபிஅல்பொன், பருமியனாகிய அஸ்மாவேத், 32 சால்போனியனாகிய எலியூபா, யாசேனின் குமாரரில் யோனத்தான் என்பவன். 33 ஆராரியனாகிய சம்மா, சாராரின் குமாரனாகிய அகியாம் என்னும் ஆராரியன், 34 மாகாத்தியனின் குமாரனாகிய அகஸ்பாயிம் மகன் எலிப்பெலேத், கீலோனியனாகிய அகித்தோப்பேலின் குமாரன் எலியாம் என்பவன்.
மரபணு மாற்றிய உணவுகள் பற்றிய வரைவு விதிமுறைகளை, 2021 நவ., 15ல், எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., எனப்படும் உணவு பாதுகாப்பு ஆணையம் வெளியிட்டது. அதாவது, மரபணு மாற்றிய உணவுக்கு இந்திய அரசு ஒப்புதல் அளிக்க உள்ளது. இதனால் என்ன பிரச்னை; இதை தடுக்க முடியுமா என்பதை பார்ப்போம். அதற்கு முன் ஒரு சிறிய 'ரீவைண்ட்' இதோ... இன்று வரை, இந்தியாவில், உணவும், உணவு பயிரும் மரபணு மாற்றத்தில் இருந்து தப்பி வந்துள்ளது. பருத்திக்கு மட்டும் உணவு அல்லாத பயிர் என்ற போர்வையில், மரபணு மாற்றம் அனுமதிக்கப்பட்டு உள்ளது. கடந்த 2009- - 10ல், மரபணு மாற்றிய கத்தரிக்காய், பி.டி., கத்தரிக்காய் என்ற பெயரில் நம் நாட்டில் நுழைய முயற்சி நடந்தது. நாடெங்கும் பெரும் எதிர்ப்பு கிளம்பியதால், அப்போதைய மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ், நாடெங்கும் கருத்து கேட்பு கூட்டங்களை நடத்தினார். அவற்றில், விவசாயிகள் முதல் விஞ்ஞானிகள் வரை எதிர்ப்பு தெரிவித்ததால், பி.டி., கத்தரிக்காயின் அறிமுகம் கைவிடப்பட்டது. 'விதை பேராயுதம்; அதை தனியாரிடம் விட்டு வைக்கலாகாது' எனக் கூறி, 'அது பற்றி நாடு தழுவிய விவாதம் தேவை; நாடாளுமன்றத்திலும் விவாதம் தேவை' என அமைச்சர் அறிவித்தார். மேலும், 'சுற்றுச்சூழலில் மரபணு மாற்றிய பயிரின் நீண்டகால தாக்கத்தை அறியும் வகையில், ஆய்வு நடத்தப்பட வேண்டும். உற்பத்தியின் உயிரி பாதுகாப்பை நிறுவும் வரை தடை நீடிக்க வேண்டும்' எனவும் அவர் தெரிவித்தார்.அதெல்லாம் நடக்கும் வரை மரபணு மாற்றிய உணவு பயிர்களுக்கு தடை விதிக்கப்பட்டது. ஆனால், கூறியபடி இன்று வரை எந்த ஆய்வும், விவாதமும் நடக்கவில்லை. கொல்லை வழியாக... அப்படிப்பட்ட ஆய்வும், விவாதமும் நடந்தால் ஒரு காலத்திலும் இந்தியாவுக்குள் நுழைய முடியாது என்பது, பன்னாட்டு விதை மற்றும் உணவு நிறுவனங்களுக்கு தெரியும். வாசல் வழியாக வர முடியவில்லை என்பதால், இப்போது கொல்லை வழியாக வர முயற்சி செய்கின்றனர். அதன் விளைவு தான், உணவு பாதுகாப்பு ஆணையம் வெளியிட்டுள்ள வரைவு விதிமுறைகள். இந்த விதிமுறைகள் அமலுக்கு வந்தால், வெளிநாட்டில் இருந்து, பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்கள், எண்ணெய், கால்நடை தீவனம் வடிவில் மரபணு மாற்றிய உணவும் வரும்.மேலும், உள்நாட்டில் தயாராகும் பதப்படுத்தப்பட்ட உணவுக்கு இடுபொருளாக மரபணு மாற்றிய தானியங்களும் பிற விளை பொருட்களும் வரும். ஆபத்து என்ன? * மரபணு மாற்றிய உணவு, ஆரோக்கியத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தாது என இன்னும் ஆணித்தரமாக நிரூபிக்கப்படவில்லை.இதற்கான அத்தாட்சியை உணவு பாதுகாப்பு ஆணையத்தின் வரைவு விதிமுறைகளிலேயே பார்க்கலாம். குழந்தைகள் உணவில், மரபணு மாற்றப்பட்ட உணவு சேர்க்கப்படக் கூடாது என்கிறது வரைவு விதிமுறை * இதுவரை நடத்தப்பட்ட 400க்கும் மேற்பட்ட ஆய்வுகளும், பன்னாட்டு அறிஞர்களின் ஆய்வறிக்கைகளும், மரபணு மாற்று பயிர் மற்றும் உணவின் தீய விளைவுகளை தெரிவிக்கின்றன.இதை ஒரு புத்தகமாக தொகுத்து, மரபணு அற்ற இந்தியாவிற்கான கூட்டமைப்பினர் வெளியிட்டுள்ளனர். அது பற்றிய தகவலை http://indiagminfo.org/ என்ற இணையதளத்தில் பார்க்கலாம் * சட்டவிரோதமாக நம் நாட்டுக்குள் எடுத்து வரப்பட்ட மரபணு மாற்று உணவு விதைகளால், ஏற்கனவே பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.சமீபத்தில் நம் நாட்டில் இருந்து ஏற்றுமதியான அரிசியில் மரபணு மாற்று எச்சம் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டு, பல கொள்கலன்கள் நிராகரிக்கப்பட்டன. இது, விதை இறையாண்மையை பாதிப்பதோடு, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும். * இன்றும் பெரும்பான்மையான நாடுகள் இந்த தொழில்நுட்பத்தை மறுதலிக்கின்றன. நாம் மட்டும் ஏன் முந்திக் கொள்ள வேண்டும்? வரைமுறையில் குளறுபடி மரபணு மாற்று பயிர், உணவை கண்காணிக்க வேண்டியது சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் கீழுள்ள ஜி.ஈ.ஏ.ஸி., எனப்படும் மரபணு பொறியியல் மதிப்பீட்டு குழு. ஆனால், இவர்கள், பொறுப்பற்ற முறையில், 'உணவு பாதுகாப்பு ஆணையம் பார்த்துக் கொள்ளும்' என நழுவி விட்டனர். உணவு பாதுகாப்பு ஆணையத்தில், இதை கண்காணித்து ஒழுங்குபடுத்த வல்லுனர்கள் கிடையாது. மரபணு மாற்று உணவை விற்க வருவோர், வெறுமனே சுற்றுச்சூழல் பாதுகாப்பு சான்றிதழ் பெற்று, ஒப்புதலுக்கு விண்ணப்பிக்கலாம் என்கிறது வரைவு விதிமுறை. இந்த சுற்றுச்சூழல் பாதுகாப்பு மதிப்பீடு எவ்வாறு செய்யப்படும்; அதில் என்னென்ன சோதனைகள் உண்டு என்பது பற்றி தகவல் இல்லை. சார்பற்ற பொது ஆய்வுக்கும் பரிந்துரை இல்லை. ஒப்புதல் வழங்குவதில் எந்தெந்த அதிகாரிகள், அறிஞர்கள், நிபுணர்கள் இருப்பர் என்பதும் சொல்லப்படவில்லை. ஒப்புதல் பெற்ற பொருட்கள் சந்தைக்கு வந்த பின், அவற்றால் தீமை ஏற்படுகிறதா என்பதை கண்காணிக்க எந்த வழியும் செய்யப்படவில்லை. இப்படி, பல்வேறு ஓட்டைகளோடு விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. இறையாண்மையை பாதிக்கும் இவ்வளவு முக்கியமான விஷயத்தில் முன்னெச்சரிக்கை அணுகுமுறை கடைப்பிடிக்கப்பட்டு இருக்க வேண்டும்.ஆனால், உணவு பாதுகாப்பு ஆணையம் அக்கறை இல்லாமல் பல விதிகளை வகுத்துள்ளது. இன்னும் சொல்லப்போனால், வெளிநாட்டு நிறுவனங்களுக்கு சவுகரியமாக சமரசம் செய்துள்ளது. [வரைவு விதிமுறைகளை https://fssai.gov.in/notifications.php?notification=draft-notification என்ற இணைய தளத்தில் முழுமையாக வாசிக்கலாம்.] தடுப்பது எப்படி? கடந்த 2009- - 10ல் பி.டி., கத்தரிக்காய் பிரச்னை வந்த போது தமிழகம் உட்பட 13 மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்தன. ஆனால், இப்போது இந்த மாநிலங்களிடம் கருத்து கேட்கப்படவில்லை. இது மாநிலங்களின் இறையாண்மையை பாதிக்கும் விஷயம். அதனால் உள்ளூர் எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களை தொடர்பு கொண்டு இது பற்றி பேச வலியுறுத்தலாம். மாநில அரசையும், இதற்கு எதிர்ப்பு தெரிவிக்க வலியுறுத்தலாம். வரும் 5ம் தேதி வரை வரன்முறை விதிகள் பற்றி பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது. தனி நபர்களாகவோ, அமைப்புகளாகவோ, விவசாயக் குழுவாகவோ regulation@fssai.gov.in என்ற மின்னஞ்சலுக்கு கருத்துக்களை அனுப்பலாம். தெரிந்தவர், அறிந்தவரையும் மின்னஞ்சல் அனுப்ப ஊக்குவிக்கலாம். உங்கள் கருத்துகளை பதிவு செய்வதன் மூலம் நீங்கள் உண்ணும் உணவு பற்றிய விபரம் தெரிவதற்கான உரிமை மற்றும் பாதுகாப்பான உணவை தேர்வு செய்யும் உரிமையை நிலைநாட்ட முடியும். Ananthoo's consumer awareness article on backdoor entry of GM foods published in today's Dinamalar (03 Feb 2022)
1.நான்கு மணி நேரத்திற்கு ஒருமுறை கட்டாயம் சிறுநீர் கழியுங்கள். கோடை காலத்திலும் கட்டாயம் நான்கு மணி நேரத்திற்கு ஒருமுறை கழித்தாக வேண்டும். 2.காலையிலும், இரவு உணவுக்கு முன்பும் கட்டாயம். மலம் கழிக்க வேண்டும். கண்ட நேரத்தில் கழிப்பது மலச்சிக்கலுக்கு வழிவகுக்கும். காலை, மாலை இருவேளை குளிக்கவும். மழைக்காலங்களில் காலையில் குளித்தால் போதும். 4. சிறுவர்கள் 1 ஸ்பூன், பெரியவர்கள் 2 ஸ்பூன் ஊறவைத்த வெந்தயத்தை, வெறும் வயிற்றில் மென்று விழுங்க வேண்டும், சர்க்கரையும், இரத்தக் கொதிப்பு வராமல் தடுக்கப்படும். வந்தால் கட்டுக்குள் இருக்கும். 5. காலை உணவுக்கு அரை மணி நேரத்திற்கு முன் தோல் நீக்கிய இஞ்சித் துண்டைச் சாப்பிடுங்கள். கொழுப்பைக் குறைக்கும். தொப்பையைக் கரைக்கும். உணவை நன்றாக மென்று, பொறுமையாக உண்ணுங்கள். 6. சுட்ட எண்ணெயை மீண்டும் பயன்படுத்திச் செய்யப்பட்ட பண்டங்களைச் சாப்பிடக் கூடாது. அதனால் கெட்ட கொழுப்பு அதிகரிக்கும்; புற்றுநோயை உருவாக்கும். 7.பயோட்டின் (பி வைட்டமின்) என்ற வைட்டமின் குறைவால், தலைமுடி உதிர்தல், நகங்கள் உடைதல், தோல் நோய், எடை குறைவு, தசைவலி, கொழுப்பு அடைப்பு, மன அழுத்தம் ஏற்படும். இவற்றைத் தவிர்க்க, வேர்க்கடலை, முந்திரி, மீன், முட்டை, வாழைப்பழம், பப்பாளி, தக்காளி, காலிபிளவர், காளான், மோர் சாப்பிடவேண்டும்.
தமிழ் தொலைக்காட்சி வரலாற்றில் புத்தம் புது முயற்சியாக மருத்துவத்தின் முக்கியத்துவத்தை மையப்படுத்தி வரவிருக்கும் தொடர்தான் ‘உயிர் மெய்’. மாறுபட்ட தொடர்களை தருவதில் எப்போதும் முதன்மையாக இருக்கும் ஜீ தமிழ் தொலைக்காட்சி, மேலும் அடுத்த கட்ட புது முயற்சியாக ஒரு மாபெரும் மருத்துவமனையை கதைக் களமாக கொண்டு உருவாக்கும் மருத்துவத் தொடரே இந்த ‘உயிர் மெய்’ தொடர். தயானந்த் இண்டஸ்ட்ரீஸின் ஸ்தாபகரான திரு.தயானந்தின் வாழ்க்கை கனவுதான் இம்மருத்துவமனை. உலக தரத்துடன் நிர்மாணிக்கப்பட்ட இம்மருத்துவமனையில் அனைத்து மருத்துவ பிரிவுகளும் இருந்தாலும், இதன் அவசர சிகிச்சைப் பிரிவு மற்ற மருத்துவமனைகள் பார்த்து பொறாமைப்படும் விதத்தில் போற்றத்தக்கதாக அமைந்திருக்கிறது. அவசர சிகிச்சை பிரிவின் தலைமை மருத்துவர் டாக்டர் கவிதா சந்தீப், இவருக்கு கீழே பணியாற்றும் டாக்டர் புவனா நடராஜன், குழந்தைகள் நல மருத்துவர் டாக்டர் கரண்பெல்லா, அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் மனோ அருண்மணி, அமெரிக்காவில் மருத்துவம் படித்துவிட்டு அறுவை சிகிச்சையில் பயிற்சி எடுக்க வந்திருக்கும் டாக்டர் தமிழ்செல்வன், அவசர சிகிச்சை பிரிவு நர்ஸ்.ஜென்னி இவர்களே இத்தொடரின் முக்கியமான கதாபாத்திரங்கள். இவர்களைத் தவிர அலுவலகத்தில் பணி புரியும் ஏழுமலை, பன்னீர்செல்வம் மற்றும் இதர நர்ஸ்கள் சரளா, வித்யா, சுமதி… இப்படி அனைவருமே நமது சமுதாயத்தின் வெவ்வேறு குணாதிசயங்கள் கொண்ட மனிதர்களை நினைவூட்டுவார்கள். ‘மைதிலி என்னை காதலி’ படத்தின் மூலம் அறிமுகமாகி தமிழக மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்த சினிமா நட்சத்திரம் நடிகை அமலா, இக்கதையின் முக்கிய கதாபாத்திரமான டாக்டர் கவிதா சந்தீப் கேரக்டரில் நடிக்கிறார். ‘உயிர் மெய்’ தொடரில் ஒரு முக்கிய பிரம்மாண்டமும் இருக்கிறது. கதையின் களமான ஒரு மிகப் பெரிய மருத்துவமனையை கலை இயக்குனர் தோட்டாதரணி அமைத்துள்ளார். 20 ஆயிரம் சதுர அடியில் அமைந்துள்ள இந்த பிரம்மாண்டமான மருத்துவமனையில்தான் தற்போது படப்பிடிப்பு நடத்தி வருகின்றனர். இந்த உயரிய படைப்பான ‘உயிர் மெய்’ தொடரை பூஷன் மற்றும் ப்ரியா இயக்க, ஒளிப்பதிவை அருண்மொழி ஏற்க, கதை, திரைக்கதையை ராதிகா எழுத, இவர்கள் கூட்டணியில் இந்த பிரம்மாண்ட தொடர் உருவாகி வருகிறது. இத்தொடர் பற்றி இயக்குநர் பிரியா கூறும் போது, “இது கண்டிப்பாக பார்ப்பவர்கள் மனதில் புதிய உணர்வை, உருக்கத்தை ஏற்படுத்தும். வழக்கமான தொடர்போல் அல்லாமல், நேயர்களுக்கு ஒரு சிறந்த பொழுதுபோக்கு படைப்பாகவும், ஒவ்வொரு காட்சியும் அழகுபட… பார்ப்பவர் மனதை வசீகரிக்கும்விதமாக உருவாக்கி வருகிறோம்..” என்றார். இத்தொடரின் அழகுக்கு மேலும் பெருமை சேர்க்கும்விதமாக, இதன் தலைப்பு பாடலுக்கான இசையை, இயைமைப்பாளர் தரண் அமைக்க, பாடலை சினேகன் எழுத, ஹரிச்சரண் பாடலைப் பாடியுள்ளார். முற்றிலும் மாறுபட்ட இப்படியொரு புதுமையான தொடரை படைப்பது பற்றி ஜீ தமிழ் தொலைக்காட்சி பிஸ்னஸ் ஹெட் என்.எஸ்.ஈஸ்வரன் கூறும்போது, “உயிர் மெய்’ தொடர் கட்டாயமாக மக்கள் குடும்பத்தோடு, பார்த்து ரசித்து, அவர்கள் கொண்டாடும் ஒரு தொடராக இருக்கப் போகிறது. ஒவ்வொரு மனிதனின் உணர்வையும் பிரதிபலிக்க இருக்கும் இத்தொடர் நேயர்களின் வாழ்க்கையில் ஒரு முக்கியத் தொடராக அமையப் போவது உறுதி..” என கூறினார். குளோபல் ஒன் ஸ்டுயோ இத்தொடரை தயாரித்து வழங்க, வரும் ஆகஸ்ட் மாதம் 18-ம் தேதி முதல் திங்கள் முதல் வெள்ளிவரை, இரவு 8 மணிக்கு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ‘உயிர் மெய்’ ஒளிபரப்பாக உள்ளது. Our Score actress amala cinema news director priya television uyier mei teleserial zee thamiz tv உயிர் மெய் சீரியல் ஜீ தமிழ் டிவி டெலிவிஷன் விருந்து நடிகை அமலா tweet Previous Postஜோதிகா மீண்டும் நடிக்க வருகிறார்..! Next Postபிஸியாக இருக்கும் இசையமைப்பாளர் ஜான் பீட்டர்..!
”படங்கள், இடையில் கொஞ்சம் சீரியல், அடுத்து பிசினஸ் என வாழ்க்கை பிஸியாகவும் ஜாலியாகவும் போய்க் கொண்டிருப்பதில் சந்தோஷம். நான் பெரும்பாலும் நேற்று, நாளை குறித்து அதிகம் யோசிக்காத நபர். இன்று எப்படி என்னால் சிறப்பாக செய்ய முடியும் என்பதைக் குறித்து மட்டும் யோசித்து சிறப்பாகச் செயல்படுவேன். அதை மட்டும் யோசித்து செய்வதால் நானும் மகிழ்ச்சியாக இருப்பேன், மற்றவர்களையும் மகிழ்ச்சியாக வைத்திருப்பேன்” எனர்ஜியாகவும் செம ஜாலியாகவும் பேட்டியை ஆரம்பித்தார் ஜெனிஃபர். படங்கள், சீரியல், ஒப்பனைக் கலைஞர் என்றெல்லாம் வலம்வந்தவர் அடுத்த அவதாரமாக கெளதம் மேனனின் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தில் உதவி இயக்குநராகவும் வேலை பார்த்திருக்கிறார் ஜெனிஃபர். அவரிடம் காமதேனு இணையதள செய்திகளுக்காகப் பேசியதிலிருந்து... ஒரு வயதில் இருந்து குழந்தை நட்சத்திரமாக நடித்துக் கொண்டு வருகிறீர்கள். இந்தப் பயணத்தை திரும்பிப் பார்க்கும்போது என்ன தோன்றும்? திரும்பிப் பார்ப்பதால்தான் நான் நானாக இருக்கிறேன். நான் மறந்தாலும்கூட நிறைய பேர் என்னிடம் வந்து, “நீங்கள் ஜெனிஃபர்தானே... ‘கில்லி’ புவி தானே” என்று இப்போது வரை அன்பைக் கொடுத்துக்கொண்டே இருக்கிறார்கள். அதனால், என்னுடைய மீடியா பயணம் என்பது அவ்வப்போது நினைத்து மகிழக்கூடிய ஒன்றாகதான் இருந்திருக்கிறது. சினிமா பிடிக்குமா இல்லையா என்றுத் தெரிந்துகொள்வதற்கு முன்பாகவே அதாவது நான் ஒரு வயதிலிருந்தே சினிமாவில் நடிக்க ஆரம்பித்துவிட்டேன். இப்போது சினிமா பிடித்து, அதைச் சுற்றியே இயங்கிக் கொண்டிருக்கிறேன். இந்த சோஷியல் மீடியா யுகத்தில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை புகழ் வெளிச்சத்திற்கு கொண்டு வர நினைக்கிறார்கள் என்று சொல்லப்படுவதை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்? உண்மைதான்! போட்டோ, ரீல்ஸ்க்கு வரும் லைக்ஸ், கமெண்ட்ஸ் போன்றவற்றை வைத்துத்தான் பிறர் நம்மை விரும்புகிறார்கள், அதுதான் வெற்றி என்ற மனநிலைக்குக் குழந்தைகளை கொண்டு வந்துவிடக்கூடாது. அதைப் பெற்றோர்தான் பார்த்துக்கொள்ள வேண்டும். இந்த மாதிரி தொழில்நுட்பம் இருக்கக்கூடிய காலகட்டத்தில் இல்லாமல் நான் ஒரு 90’ஸ் கிட் என்பதில் எனக்கு பெரிய ஆறுதல். சிலர் இந்த சோஷியல் மீடியா புகழ் என்பதை பாசிட்டிவாகவும் கையாள்கிறார்கள். ஆனால், எல்லாக் குழந்தைகளுக்கும் அப்படி இருக்கும் என்று சொல்லிவிட முடியாதில்லையா? இப்போதெல்லாம் எல்லாப் படங்களுக்கும் இரண்டாம் பாகம் என்ற ட்ரெண்ட் உள்ளது. அதுபோல ‘கில்லி2’ வருவது பற்றி என்றாவது யோசித்திருக்கிறீர்களா? ‘கில்லி’ படத்துக்குப் பிறகு இயக்குநர் தரணி சாரையும் எப்போதாவதுதான் சந்தித்திருப்பேன். ஆனால், தாமு சார் மட்டும் அடிக்கடி ‘கில்லி2’ பத்தி பேசுவார். அதில் ஓட்டேரி நரியும், புவியும் கண்டிப்பாக இருக்க வேண்டும் என்று சொல்லிக்கொண்டே இருப்பார். படப்பிடிப்புத் தளத்தில் விஜய் சார் செம ஜாலியாக பேசுவார். இதற்கு முன்பு அவருடன் ‘நேருக்கு நேர்’ படத்தில் நடித்திருக்கிறேன். அந்த கெமிஸ்ட்ரிதான் கில்லியிலும் ஜாலியாகத் தொடர்ந்தது. நான் ‘கில்லி’ படத்தில் ‘வாடா போடா’ என்று சொல்லத் தயங்கியபோது கூட, “நீ என் தங்கச்சிதான். தயங்காம சொல்லு” என விஜய் சார் சொன்னார். படத்தில் நான் சொன்ன, “பதில சொல்றா” மாடுலேஷன் பிடித்துப்போய் என்னிடம் அடிக்கடி அதைச் சொல்லச் சொல்லிக் கேட்பார். சீரியல்களிலும் நடித்துக் கொண்டிருந்தீர்கள். இப்போது அங்கு உங்களைப் பார்க்க முடியவில்லையே? சீரியல் என்னுடைய நேரத்தை அதிகம் எடுத்துக்கொண்டது. இரண்டு பிசினஸ்களைப் பார்த்துக் கொண்டிருப்பதால் அதற்கான நேரம் செலவிட முடியாமல் இருந்தது. அதனால், சீரியல்களில் நடிப்பதில் இருந்து பிரேக் எடுத்திருக்கிறேன். படங்களும் நடித்துக் கொண்டிருக்கிறேன். சோப் செய்து தருவது, நலங்கு மாவு என இயற்கைப் பொருட்களைத் தயாரித்து விற்பது, கற்றுக்கொள்ள வேண்டும் என நினைப்பவர்களுக்கு க்ளாஸ் எடுப்பது என பிஸியாகவே இருக்கிறேன். எனது அனுபவத்தில், ஒரே ஒரு வருமானத்தை வைத்திருப்பதைவிட உங்களுக்கு தெரிந்த மற்றொரு தொழிலோ அல்லது உங்கள் திறமையைப் பயன்படுத்தி இன்னொரு வருமானத்தையோ தேடிக்கொள்ள வேண்டும் என்று அனைவருக்கும் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். விஜே சித்ரா உங்களுடைய தோழி. அவருடைய மரணம் இன்னும் மர்மமாகவே நீடிப்பது பற்றி..? சித்ரா எனக்கு நெருங்கிய தோழிதான். ஆனால், அவருடைய மரணத்தைப் பொறுத்தவரை என்ன நடந்தது என்பது எனக்குத் தெரியாது. கொலையா தற்கொலையா என்ற குழப்பம் எனக்கும் இருக்கிறது. ஒருவேளை கொலை என்றால், இதற்குப் பின்னால் இருப்பவர்கள் நிச்சயம் வெளியே வரவேண்டும், தண்டிக்கப்பட வேண்டும் என்று வேண்டிக்கொள்வேன். பிக் பாஸ் இந்த சீசன் பார்க்கிறீர்களா? தொடர்ச்சியாக இல்லை என்றாலும் அவ்வப்போது பார்த்து வருகிறேன். இந்த சீசன் ஆரம்பித்ததில் இருந்தே பரபரப்பாக போய்க் கொண்டிருப்பதாகக் கேள்விப்பட்டேன். மற்றபடி உள்ளே உள்ள சச்சரவுகள் குறித்து முழுதாக பார்க்காமல் என்னால் பதில் சொல்ல முடியாது. என்னுடைய நண்பர்கள் கதிரவன், மகேஸ்வரி இருவருமே உள்ளே இருக்கிறார்கள். இவர்கள் தவிர்த்து ஜிபி முத்துவும் எனக்குப் பிடித்த போட்டியாளர்.
ஆர்எஸ்எஸ் பேரணி நீதிமன்ற அனுமதியோடு நடப்பதால் அது குறித்து கருத்து சொல்ல முடியாது என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். ஆர்எஸ்எஸ் பேரணி அனுமதி வழங்கப்பட்டிருப்பதை பலரும் கண்டித்து வரும் நிலையில் ஜெயக்குமார் இவ்வாறு கூறியுள்ளார். Ezhilarasan Babu First Published Sep 24, 2022, 1:47 PM IST ஆர்எஸ்எஸ் பேரணி நீதிமன்ற அனுமதியோடு நடப்பதால் அது குறித்து கருத்து சொல்ல முடியாது என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். ஆர்எஸ்எஸ் பேரணி அனுமதி வழங்கப்பட்டிருப்பதை பலரும் கண்டித்து வரும் நிலையில் ஜெயக்குமார் இவ்வாறு கூறியுள்ளார். தமிழகம் முழுவதும் ஆர்எஸ்எஸ் அமைப்பினர் அணிவகுப்பு நடத்த தமிழக காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்தியா சுதந்திர தினம் 75வது ஆண்டு , அம்பேத்கர் பிறந்த தின நூற்றாண்டு, விஜயதசமி ஆகியவற்றை முன்னிட்டு தமிழகத்தில் 51 இடங்களில் ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் சார்பில் அக்டோபர் 2ஆம் தேதி அணிவகுப்பு ஊர்வலத்திற்கு அனுமதி கோரி தமிழக அரசின் உள்துறை அமைச்சகம் மற்றும் டிஜிபியிடம் கடந்த மாதம் மனு அளிக்கப்பட்டது. ஆனால் அதன் மீது எந்த முடிவும் எடுக்கப்படாத நிலையில், அணிவகுப்பு ஊர்வலத்திற்கு அனுமதி வழங்க கோரி ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்த 9 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அதில் ஆர்எஸ்எஸ் ஊர்வலத்தை ஒழுங்கு படுத்த காவல்துறைக்கு அதிகாரம் உள்ளது என்றும், ஆனால் அதற்கு அனுமதி மறுக்க காவல் துறைக்கு அதிகாரம் இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி வழங்கப்படும் நிலையில், தமிழகத்தில் மட்டும் அனுமதி மறுக்கப்படுவதாக அதில் கூறப்பட்டது. இதையும் படியுங்கள்: Venkaiah Naidu: pm modi: பிரதமர் மோடிக்கு அறிவுரை கூறிய வெங்கையா நாயுடு இந்த மனு ஜி.கே இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது, அப்போது ஊர்வலத்தில் எந்தவிதமான கோஷங்களை எழுப்பக்கூடாது, சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் எந்த செயலிலும் ஈடுபடக்கூடாது, அதேபோல் எந்த வழியில் ஊர்வலம் செல்ல போகிறார்கள் என்பதை துல்லியமாக தெரிவிக்க வேண்டும் என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது, மேலும் இது போன்ற நிபர்ந்தனைகளுக்கு ஆர்எஸ்எஸ் அமைப்பு உறுதி அளிக்காததால் அனுமதி தருவதில் காலதாமதம் ஆகிறது என்றும் காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுது. இதையும் படியுங்கள்: முதல்வர் நாற்காலியில் ஹாயாக CM மகன்.. வெளியானது அதிர்ச்சி புகைப்படம்... கழுவி ஊற்றும் எதிர்க் கட்சிகள் மேற்கண்ட நிபந்தனைகளுக்கு ஆர்எஸ்எஸ் அமைப்பு உறுதி அளித்தால் அனுமதி அளிப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் ஆர்எஸ்எஸ் அமைப்பினரோ, ஆர்எஸ்எஸ் அமைப்பு என்பது சட்டத்தை மதிக்க கூடிய இயக்கம் என்றும் விளக்கம் அளித்தது. இப்படி இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, பேரணிக்கு அனுமதி அளிக்க காவல் துறைக்கு உத்தரவிட்டார். இந்நிலையில் ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி வழங்கப்பட்டு இருப்பது தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதக் கலவரத்திற்கு வித்திடும் இதுபோன்ற பேரணிகளை தமிழ்நாட்டில் அனுமதிக்கக்கூடாது என பல அரசியல் கட்சித் தலைவர்களும் எச்சரித்து வருகின்றனர். இந்நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நீதிமன்ற அனுமதியோடு ஆர்எஸ்எஸ் பேரணி நடப்பதால் இதில் கருத்து சொல்ல முடியாது என கூறியுள்ளார். சென்னை போயஸ் கார்டன் தோட்டத்தில் சிவந்தி ஆதித்தனார் நினைவு இல்லத்தில் மரியாதை செலுத்திய பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமார் கூறியதாவது:- நீதிமன்ற அனுமதியோடு ஆர்எஸ்எஸ் பேரணி நடக்கிறது என்பதால் நீதிமன்ற முடிவை மதிக்கின்ற சூழல்தான் இருக்கிறது. இதுகுறித்து இதற்குமேல் கருத்து சொல்ல முடியாது என்றார். பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மீதான சோதனை குறித்து கேள்விக்கே, எப்போதும் இஸ்லாமியர்களுடன் தோளோடு தோள் நிற்கும் நண்பன் அதிமுக மட்டும் தான் என்றார். தமிழகத்தில் குண்டுவெடிப்பு கலாச்சாரம் திமுக ஆட்சியில் சர்வசாதாரணமாக நடக்கிறது என்றும், ஏன் திமுக கட்சியை சேர்ந்தவர்களுக்கே தமிழகத்தில் பாதுகாப்பு இல்லை, சட்டம் ஒழுங்கு அந்தளவுக்கு சீர்கெட்டு விட்டது என்றார். Last Updated Sep 24, 2022, 1:47 PM IST RSS Rally RSS Rally in Tamilnadu Admk Support To RSS Rally Follow Us: Download App: RELATED STORIES சிறுபான்மை மக்கள் மீது வெறுப்பு அரசியல் நடத்தி வரும் மோடி அரசு.. இது அநியாயமான தாக்குதல்.. கொதிக்கும் வைகோ.! ஆளுங்கட்சிக்கு எதிரான பேச்சு..! வாட்ஸ் அப் கால் ஒட்டுக்கேட்குறாங்க..? பரபரப்பு புகார் கூறிய சவுக்கு சங்கர் இதை செயல்படுத்த வேண்டாம், கைவிடுக..! ஸ்டாலினுக்கு அவசர கடிதம் எழுதிய கே. பாலகிருஷ்ணன் மோடி அரசின் கைக்கூலி ஆளுநர் RN.ரவி! கார்ப்பரேட்டுகளின் இலாபவெறிக்கு துணை போகிறாரோ?இறங்கி அடிக்கும் வேல்முருகன் திமுக தலைமை கழக நிர்வாகிகள் பட்டியல்.. TKS.இளங்கோவன், பழனிவேல் தியாகராஜன், கலைராஜானுக்கு புதிய பொறுப்பு.! Top Stories சினிமா பாணியில் தடுப்புச்சுவரில் மோதி கவிழ்ந்த அரசு விரைவுப் பேருந்து! தூக்கத்தில் இருந்த பயணிகள் அலறி கூச்சல் Share Market Today: பங்குச்சந்தையில் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி! சென்செக்ஸ் உயர்வு, நிப்டி புதிய உச்சம் Muslim Student: முஸ்லிம் என்றால் தீவிரவாதி எனக் கூப்பிடுவீர்களா? கர்நாடகப் பேராசிரியரை வெளுத்து வாங்கிய மாணவர் நடிகர் சிவாஜி கணேசனின் மகன் மற்றும் பேரன் மீது ‘செக்’ மோசடி வழக்கு சிறுபான்மை மக்கள் மீது வெறுப்பு அரசியல் நடத்தி வரும் மோடி அரசு.. இது அநியாயமான தாக்குதல்.. கொதிக்கும் வைகோ.! Recent Videos ‘பூமர் அங்கிள்’ ஆக மாறி அதகளம் செய்யும் யோகிபாபு... வைரலாகும் டிரைலர் லவ் டுடே பாணியில் வித்தியாசமான கதைகளத்தில் ஜீவா நடித்துள்ள ‘வரலாறு முக்கியம்’ படத்தின் டிரைலர் வெளியானது
ஆர்.எஸ்.எஸ். கருத்தியல்களை எதிர்கொள்ள பண்பாட்டு தளத்திலும் வேலை செய்ய வேண்டும் என்பதை தி.மு.க. உணர்ந்திருக்கிறது என்று தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் ‘தமிழ் இந்து’ நாளேட்டுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். பேட்டியிலிருந்து சில பகுதிகள். பொதுவாக, திமுக - அதிமுக இரண்டுமே தேர்தல்களை நடைமுறைரீதியாக அணுகுவதும், தேர்தல் களில் நிர்வாகரீதியிலான விஷயங்களைப் பேசுவ துமே வழக்கம். மாறாக, இந்தத் தேர்தலைச் சித்தாந்தப் போராக நீங்கள் குறிப்பிடுகிறீர்கள். என்ன காரணம்? இது திமுகவுக்கும் அதிமுகவுக்கும் இடையிலான தேர்தல் இல்லை; தமிழ் மக்களுக்கும் பாசிச சக்தி களுக்கும் இடையில நடக்குற யுத்தங்கிறதாலதான் அப்படிக் குறிப்பிடுறேன். இந்திய ஒன்றியத்துல ஏற்கெனவே மாநிலங்களுக்கு இருக்கிற அதிகாரங்கள் குறைவு. அண்ணா காலத்துலேர்ந்து மாநிலங்களை மையப்படுத்தினதா இந்தியாவை மாற்றியமைக்க ணும்னு நாம பேசிக்கிட்டிருக்கோம். கலைஞர் நிறை வேற்றின மாநில சுயாட்சி தீர்மானத்தைத் தொடர்ந்து வலியுறுத்திக்கிட்டு இருக்கோம். மாநிலங்களுக்குன்னு மிச்சம் இருக்குற கொஞ்சநஞ்ச உரிமைகளையும் வேட்டையாடிட்டுருக்குற அரசா மோடியோட பாஜக அரசு இருக்கு; அதுகிட்ட தன்னோட சொந்த சுயநலன்களுக்காகத் தமிழ் நாட்டோட எல்லாத் தனித்துவங்களையும் உரிமைகளையும் பலி கொடுக்குற அரசா பழனிசாமியோட அதிமுக அரசு இருக்கு. நாம என்ன மொழி பேசணும், நாம என்ன சாப்பிடணும்கிறதுல தொடங்கி நம்ம குழந்தைங் களை என்ன படிக்க வைக்கணும், என்ன வேலைக்கு அவங்களை அனுப்பனும்கிறது வரைக்கும் டெல்லி தீர்மானிக்கும்னா அப்போ நாம எல்லோரும் அடிமைகளா? மாநிலங்களோட நிதி உரிமையை ‘ஜிஎஸ்டி’ மூலமாப் பறிச்சாங்க. கல்வி உரிமையைப் பறிக்குறதுக்குத் தேசிய அளவிலான பொது நுழைவுத் தேர்வு முறையையும் புதிய கல்விக் கொள்கையையும் கொண்டுவந்தாங்க. அடுத்து, வேலை வாய்ப்புகளை யும் குறி வைச்சிட்டாங்க. தன்னுடைய ஆதிக்கப் பலத்தால் ஒட்டுமொத்தமா மாநிலங்களைக் கீழே தள்ளக்கூடிய அக்கிரமம் இது. மாநிலங்களுக்கான வலுவான குரல் கொடுப்பதுதான் தமிழ்நாடு. ஆனா, அதிமுகவை பாஜக கொத்தடிமை ஆக்கிட்டதாலேயே இன்னைக்குத் தமிழ்நாடு தன்னுடைய குரலை இழந்து உரிமைகளைப் பறி கொடுத்து நிக்குது. இது தமிழ் நாட்டுக்கு பாஜகவும் அதிமுகவும் இழைச்சுருக்குற மாபெரும் அவமானம். இந்த அவமானம் துடைக்கப்படணும். அதனாலதான், இது தமிழ்நாட்டோட சுயமரியாதையை மீட்டெடுக்கும் போர்னு குறிப்பிடுகிறேன். தொடர்ந்து, ‘ஆளுமைத் திறன் அற்றவர் ஸ்டாலின்’ என்று முன்னெடுக்கப்படும் பிரச்சாரம் இந்தத் தேர்தலில் மேலும் பெரிதாக ஒலிக்கிறது. இதை எப்படிப் பார்க்கிறீர்கள்? திராவிட இயக்கத் தலைவர்களைச் சித்தாந்த ரீதியா எதிர்க்கத் தெரியாத சில்லறைகள் எப்போதும் இது போன்ற கொச்சைப் படுத்துதல்கள்ல இறங்குறது வழக்கம். இந்த மாதிரி இழிவுபடுத்தல்களால என்னைப் பலவீனப்படுத்த முடியாது; ஏன்னா, தொடக்கக் காலத்துலேர்ந்து இந்த மாதிரி வசைகளை மிதிச்சுக் கடந்துதான் இந்த இடத்துக்கு வந்திருக்கேன். ஆனா, இப்படிப் பேசுறவங்களை நோக்கி ஒரு கேள்வி கேட்கலாம்னு நெனைக்கிறேன், ‘ஆளுமைத் திறன் ஸ்டாலினுக்கு இல்லைன்னு சொல்றீங்க. அப்புறம் எதுக்காகப்பா ஆளுமைத் திறனற்ற ஒரு ஸ்டாலினை எதிர்க்க இத்தனை பேர் ஒண்ணு கூடி நிக்குறீங்க?’ கூட்டங்களில் பேசும்போது சொற்கள் அல்லது எண்ணிக்கையைத் தவற விடுவது உங்களுக்கு அதிகம் நடக்கிறது. இதற்கு என்ன காரணம்? இதை உங்கள் தலைமைப் பண்போடு இணைத்துப் பேசுபவர்களை எப்படிப் பார்க்கிறீர்கள்? தவறுதல் மனுஷ இயல்பு. குறிப்பா, மேடைகள்ல இப்படியான தவறுதல் ஏற்படுற வாய்ப்பு ரொம்ப அதிகம். இது பலருக்கும் நடந்திருக்கு. இன்னைக்குக் காட்சி ஊடகங் களோட காலத்துல இது அதிக வெளிச்சத்துல தெரியுது. நான் சொல்றதுல கருத்துப் பிழை களோ, அரசியல் விமர்சனங்களோ இருந்தால் அதைத் தாராளமா சொல்லுங்க, விவாதிக்க லாம். ஆனா, வார்த்தைகளைத் தவற விடுறதை விமர்சிக்கிறேன்கிற பேருல நான் பேசுற விஷயத்தை இருட்டடிக்கிறது அறிவு நாணயம் கிடையாது. அதோட பேச்சுத்திறன் மட்டுமே தலைமைப் பண்பும் கிடையாது, அது பல்வேறு திறன்களின் தொகுப்பு. திரும்பத் திரும்ப, ‘இந்து மதத்துக்கு எதிரான கட்சி திமுக’ என்று குற்றஞ்சாட்டுவதன் மூலம், கிட்டத்தட்ட ‘இந்துக்களுக்கான கட்சி திமுக’ என்று சொல்லும் நிலைக்கு உங்களைத் தள்ளிவிட்டதா பாஜக? கையில் வேலோடு நீங்கள் நின்றது அரசியல் உத்தியாக எடுபட்டாலும் சித்தாந்தரீதியாகத் திமுகவுக்கு அது சறுக்கல் என்கிற விமர்சனத்தை எப்படிப் பார்க்கிறீர்கள்? திருத்தணிக்குக் கிராம சபைக் கூட்டத்துக்குப் போயிருந்தேன். அந்த ஊரோட அடையாளமாக வேல் என் கையில மக்களால கொடுக்கப்பட்டுச்சு. வாங்கிக்கிட்டேன். இதுல சித்தாந்தச் சறுக்கல் எங்கே வருதுன்னு புரியலை. ஒருவேளை நான் அதை வாங்க மறுத்திருந்தா அப்போ என்ன சொல்லியிருப்பாங்க? சரி, கையில வேலை வாங்கினாலும் தவறு, வாங்காட்டினாலும் தவறுன்னா நான் என்னதான் செய்யணும்னு நெனைக்கிறாங்க? கடவுள் – மதம் சம்பந்தமா என்னோட நிலைப்பாட்டைப் பல இடங்கள்ல தெளிவுபடுத்தியிருக்கேன். அது ஒவ்வொருத்தருடைய விருப்பம், சுதந்திரம். இந்து மதத்துக்கு மட்டும் இல்லை; எந்த மதத்துக்கும் எதிரானது இல்லை திமுக. அதே சமயம், அரசியல்லேயும் அரசு நிர்வாகத்துலேயும் மதத்தைக் கலக்கிறதை உறுதியா திமுக எதிர்க்கும். திமுக எப்போவெல்லாம் ஆட்சிக்கு வந்ததோ அப்போவெல்லாம் எல்லாத் துறைகளையும்போல அற நிலையத் துறையும் சிறப்பாக நிர்வகிக்கப் பட்டதுங்கிறதுதான் வரலாறு. அது அடுத்து வர்ற ஆட்சிலேயும் தொடரும். தேர்தலில் திமுக வென்றாலும், சட்டமன்ற உறுப்பினர்களை உடைத்துத் தம் பக்கம் அவர்களை இழுத்து, பாஜக ஆட்சி அமைக்கலாம் என்ற பேச்சு சகஜமாக இருக்கிறது. இதை எதிர்கொள்ள என்ன வியூகம் வைத்திருக்கிறீர்கள்? எதிரிகளை எதிர்கொள்ள முழு பலத்தோடேயே திமுக இருக்கு. நான் பலம்னு சொல்லும்போது அது ரெண்டு விதமா அர்த்தப்படுத்துறேன். ஒண்ணு, எண்ண பலம்; மத்தொண்ணு, எண்ணிக்கை பலம். பலரையும்போல பாஜகவையும் வெறும் ஒரு அரசியல் கட்சியா திமுக பார்க்கலை. நாம வேற, அவங்க வேற. பாஜக இந்தத் தமிழ் மண்ணுக்கு எதிரி, தமிழர்களின் எதிரி. இந்தப் புரிதல் ஒவ்வொரு திமுககாரருக்கும் இருக்கு. அதை மேலும் வலுப் படுத்துவோம். இதையும் தாண்டி பாஜக விளையாட முயற்சிக்கலாம்னுதான் வெறும் 118 இடங்கள் போதாது; 234 இடங்கள்லேயும் கூட்டணி ஜெயிக் கணும்னு உயிரைக் கொடுத்து வேலை பார்த்துக் கிட்டிருக்கோம். திமுக எதையும் எதிர்கொள்ளும்! பிரதமர் மோடியின் பிரச்சாரத்தை எப்படிப் பார்க்கிறீர்கள்? பாஜக வேட்பாளர்களே மோடி படத்தைத் தவிர்த்துட்டு, ஜெயலலிதா படத்தோடு ஓட்டு கேட்கப்போறாங்கன்னா அதுக்கு மேல அவருடைய பிரச்சாரத்துக்குத் தமிழ்நாட்டுல உள்ள மதிப்பைப் பத்தி நான் சொல்ல என்ன இருக்கு? மாறிக்கொண்டிருக்கும் சூழலில், வெறும் நிர்வாகத்தை மட்டுமே முன்னிறுத்தி அரசியலில் நீடித்து நிற்க முடியாது. பண்பாட்டுத் தளத்தில் ஆர்எஸ்எஸ் செயலாற்றுவதன் மூலம் உண்டாக்கும் சிந்தனை மாற்றங்களுக்கான பலன்களையே மேலே அரசியல் தளத்தில் பாஜக அறுவடை செய்கிறது. ஆக, அதற்கு எதிர்ச் சிந்தனைகளைப் பேசுவதற்குப் பண்பாட்டுத் தளத்தில் திமுகவும் செயலாற்ற வேண்டும்; திமுகவுக்கும் இதற்கென ஓர் அமைப்பு வேண்டும் என்ற குரல் இருக்கிறது. இப்படி நீண்ட கால நோக்கில் பாஜகவை எதிர்கொள்ள என்ன செய்யப் போகிறீர்கள்? சாதிய, மதவிய சக்திகளின் கொட்டத்தை அடக்க அரசியல்ரீதியா தேர்தல் களத்தில் மட்டுமல்லாமல், தத்துவார்த்தரீதியா பண்பாட்டுத் தளத்திலும் வேலைசெய்ய வேண்டிய கட்டாயத்தை முழுமையா உணர்ந்திருக்கோம். திமுக தேர்தல் அறிக்கையில் ‘சென்னையில் திராவிடர் இயக்க தீரர்கள் கோட்டம் அமைக்கப்படும்’னு சொல்லிருக்கோம் இல்லையா, தமிழர்களின் எதிர்காலத்தைத் தீர்மானிப்பதற்கான வரலாற்றைச் சொல்றதா அதை அமைப்போம். கழகத்தோட பாசறைகளுக்கு மீண்டும் புத்துயிர்ப்பு கொடுப்போம். பாசறைக் கூட்டங்களைக் கிராமங்கள்ல தொடங்கி சமூக வலைதளங்கள் வரை கொண்டுபோவோம். இது பெரியார், அண்ணா, கலைஞர் மண்… திராவிட மண்… எல்லாப் பிளவு சக்திகளையும் தமிழை வெச்சு திருப்பியடிப்போம்! பாலின, சாதி, மதச் சமத்துவத்தை முழுமையாக ஏற்றவர்களாக எப்படிக் கட்சியைத் தயார் செய்யப் போகிறீர்கள்? சமூகநீதி - சுயமரியாதை - சமத்துவம் - சகோதரத்துவம் இதெல்லாம்தான் திராவிட இயக்கத்தோட அடிப்படைக் கொள்கைகள். இதை ஆழமாக் கட்சியினர் மனசுல விதைக்கணும்னு நெனைக்கிறேன். தமிழுணர்வு இதற்கான கருவியா அமையணும். ஒவ்வொரு தலைவருக்கும் தான் சார்ந்திருக்கும் சமூகம் தொடர்பில் ஒரு கனவு இருக்கும். உங்கள் கனவில் உள்ள தமிழ்நாடு எப்படி இருக்க வேண்டும் என்று எண்ணுகிறீர்கள்? அனைத்து அதிகாரங்களையும் கொண்டதா நம்ம தமிழ்நாட்டை மாத்தணும். எல்லோர்க்கும் எல்லாம் கிடைக்கிறதா தமிழ்நாடு இருக்கணும். இதுதான் என்னோட தமிழ்நாடு!
சுற்றுச்சூழலுக்கும் உடல் நலத்துக்கும் பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் நெகிழியை ஒழிக்க “மீண்டும் மஞ்சப்பை” எனும் இயக்கத்தைத் தமிழக அரசு முன்னெடுத்திருப்பது மனதார வரவேற்கத்தக்கது. இந்த முயற்சியில் உற்பத்தி நிறுவனங்கள், விற்பனையாளர்கள், நுகர்வோர், அரசு என அனைவரும் கைகோர்ப்பது அவசியம். Image: TNDIPR அந்த வகையில் ஒரு முறை பயன்படுத்தும் நெகிழிக்கானத் தடையை அறிவித்ததோடு நெகிழி ஒழிப்பில் விழிப்புணர்வையும் மாற்றுப் பொருட்களுக்கானச் சந்தையையும் உருவாக்கும் விதமாக மஞ்சப்பை இயக்கத்தை முன்னெடுத்திருப்பது மிகச் சரியான நகர்வு. எனினும் இவையெல்லாம் தொடக்கப் புள்ளிகளே. இந்தத் தொடக்கம் வெற்றிகரமானப் பயணமாக மாற அரசுக்குச் சில கோரிக்கைகளையும் முன்வைக்கிறோம். 1. மஞ்சப்பை இயக்கத்தின் தொடக்க விழா கண்காட்சி அரங்கில் ‘ஹிந்துஸ்தான் கோக கோலா பிவரேஜஸ் பிரைவேட் லிமிட்டட்’ நிறுவனத்தின் அரங்கில் ‘ரிக்கார்ன் பேனல்ஸ்’ (Ricron Panels) என்ற நிறுவனத்தின் பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. பல்வேறு வகையான தூக்கி வீசப்பட்ட நெகிழிப் பொருட்களை வெப்பத்தில் அழுத்தி (heat compressed) தயாரிக்கப்பட்ட நெகிழிப் பலகைகளும் அவற்றை பயன்படுத்திச் செய்யப்படும் கூரைகள், பள்ளிக் குழந்தைகளுக்கான மேஜை நாற்காலிகள் போன்றவை காட்சிப்படுத்தப்பட்டிருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கொக்கோகோலா நிறுவனமானது நெகிழி மாசு ஏற்படுத்தும் நிறுவனங்களில் உலகில் முதன்மையானதாகும். இப்படி நெகிழி மாசுக்குக் காரணமான நிறுவனங்கள் அவற்றுக்குத் தீர்வுகள் என்ற பெயரில் உலகெங்கும் தவறான சூழல் விரோதத் திட்டங்களை (False Solutions) அறிமுகப்படுத்தி வருகின்றன. அவற்றில் ஒன்றுதான் மேற்கண்ட நெகிழிப் பலகைகள். நெகிழியே நச்சுத் தன்மையுடையது என்பதாலேயே அதை நாம் ஒழிக்க நினைக்கிறோம். இப்படியிருக்க அந்த நச்சு நெகிழியைப் பள்ளிக் குழந்தைகள் ஒட்டி உறவாடும் மேஜை நாற்காலிகளாகவோ கட்டிடக் கூரைகளாகவோ பயன்படுத்துவது கடுமையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். தமிழக அரசு இம்மாதிரியானப் போலித்தீர்வுகளை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும். 2. தமிழக அரசு நெகிழிக் குப்பைகளை எரித்து ஆற்றலைப் பெறும் நிலையங்களை அமைக்கத் திட்டமிட்டு செயல்படுத்தியிருக்கிறது. இந்த ‘பைராலிஸிஸ்’ நிலையங்கள் கடுமையான சூழல் மாசுக்களை ஏற்படுத்துபவை. அத்தோடு இவை தொடர்ந்து இயங்க நெகிழிக்குப்பைகள் தொடர்ந்து தேவைப்படும். நெகிழி ஒழிப்பும் குப்பை எரிவுலைகளும் வெவ்வேறு எதிரெதிரானப் பாதைகள். நெகிழிக் கட்டுப்பாடுகள் முறையாக நடைமுறைப்படுத்தப்பட்டால் மிக அதிகச் செலவுமிக்க பைராலிசிஸ் நிலையங்களை நிறுவுவதற்கானத் தேவை எழாது. வடிவமைபு மட்டுமல்ல அவற்றின் இயக்கமும் மிக அதிக செலவு பிடிக்கக்கூடியது. எனவே குப்பை எரிவுலைகளை அரசு முழுமையாகக் கைவிட்டு அந்தச் செலவை சூழலுக்குப் பாதகமில்லாத நெகிழிக்கான மாற்றுப் பொருட்களை உருவாக்குவதற்காக அரசு செலவிட வேண்டும். 3. நெகிழி என்றதும் பெரும்பாலும் நெகிழிப் பைகள் மட்டுமே பேசுபொருளாக இருந்தாலும் மற்ற நெகிழிப் பொருட்கள் குறிப்பாக ஒற்றைப் பயன்பாட்டு நெகிழிப் பொருட்கள் நெகிழிப் பையைவிட அதிகச் சிக்கலை ஏற்படுத்துபவை. மாநகராட்சி நெகிழிக் கழிவுகளில் 40 விழுக்காடுக்குமேல் ஒற்றைப் பயன்பாட்டு நெகிழியே இடம்பெறுகின்றன. இவற்றைக் கருத்தில்கொண்டு அரசு அறிவித்துள்ள ஒற்றைப் பயன்பாட்டு நெகிழித் தடையை வீரியத்தோடு தமிழகமெங்கும் நடைமுறைப்படுத்த வேண்டும். 4. மேலும் ஒற்றைப் பயன்பாடு நெகிழித் தடையில் சிறு குறு உற்பத்தியாளர்கள் உற்பத்திச் செய்யும் பொருட்கள் மட்டுமே தடை செய்யப்பட்டிருக்கின்றன. பெருநிறுவனங்களின் பொட்டலங்கள் (உதாரணமாக பிஸ்கெட் பாக்கெட்டுகள் மற்றும் சேஷேக்கள் போன்றவை) சேர்க்கப்படவில்லை. இவை பெரும்பாலும் பல்லடுக்கு நெகிழியாக இருப்பதால் மறுசுழற்சியும் செய்ய முடியாது என்பது கவலை தருகிறது. இந்த பாரபட்சத்தைக் களைய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். குறைந்தபட்சம் நீட்டிக்கப்பட்ட உற்பத்தியாளர் பொறுப்பு (EPR) போன்ற சட்டங்கள் மூலம் இந்தப் பெருநிறுவனங்களின் குப்பையைக் கையாளும் பொறுப்பையும் நிதிச் சுமையையும் அந்த நிறுவனங்களே ஏற்க வகைசெய்ய வேண்டும். 5. நெகிழிப் பைக்கு மஞ்சள் பை மாற்றுபோல பல்வேறுவிதமான நெகிழிப் பொருட்களுக்கும் பல எளிமையான மாற்றுக்கள் நம்மிடம் இருக்கின்றன. உதாரணமாக நெகிழி டீ கப்புக்குப் பதிலாக மீண்டும் பயன்படுத்தத்தக்க கண்ணாடி அல்லது ஸ்டீல் டம்ளர்களை பயன்படுத்த முடியும். ஆனால், நெகிழிக்கு மாற்று என்று சொல்லி கொண்டுவரப்படும் மட்கும் நெகிழி, பிஸ்கட்போலவே டீ குடித்துவிட்டு சாப்பிடக்கூடிய டீ கப் போன்றவை சூழல் பார்வையில் சரியான மாற்றுகள் அல்ல. மட்கும் நெகிழி என்று சொல்லப்படும் நெகிழி Industrial compost facility இல் மட்டுமே மட்க்கக்கூடியது. அத்தகைய அமைப்புகள் நம் மாநிலத்தில் பெரியளவில் இல்லை என்றே சொல்ல முடியும். இந்த மட்கும் நெகிழி நீர் நிலைகளிலோ அல்லது நிலத்திலோ கொட்டப்பட்டால் சாதாரண நெகிழி போலவே மட்கப் பலவருடங்கள் எடுத்துக்கொள்ளும். (இது குறித்து கண்காட்சி அரங்கில் மட்கும் நெகிழியை விளம்பரப்படுத்திய நபரிடம் வினவியபோது திறந்த வெளியில் மட்க எவ்வளவு நாள் எடுத்துக்கொள்ளும் என்று ஆய்வுகள் நடந்துகொண்டிருக்கிறது என்றும் பின்னர் 2 வருடங்கள் வரையாகும் என்றும் மழுப்பினார்). இரண்டுவருடங்கள் என்றே எடுத்துக்கொண்டாலும் இவை சென்னை மழைநீர் வடிகால்களில் சேர்ந்தால் என்ன ஆகும் என்பதற்கு இப்போது நாம் சந்தித்தப் பெருமழை பாதிப்புகளே சாட்சி. 6. நெகிழிப் பைகள் கடைகளில் இலவசமாகக் கொடுக்கப்பட்டதுபோல பெருமளவில் துணிப்பைகள் கொடுக்கப்பட்டால் இவையும் ஒரு குப்பைப் பிரச்சினையையே உருவாக்கும். இவற்றைக் குறைந்த விலையில் மக்கள் பெற வழிவகுத்து நுகர்வோர் தனக்குத் தேவையானப் பையை வீட்டிலிருந்தே கடைக்குக் கொண்டு செல்ல வழிசெய்வதே சிறப்பானதாக அமையும். 7. நெகிழிப் பைக்கு மாற்றாக ஒருமுறை மட்டுமே பயன்படுத்தத்தக்க காகிதப் பைகள் கொடுப்பதை அரசு முடிந்த மட்டும் கட்டுப்படுத்த வேண்டும். உறுதியான மீண்டும் மீண்டும் பயன்படுத்தும் வகையிலான துணிப்பைகளே சரியானத் தீர்வாக அமையும். 8. பொட்டலங்கள் இல்லாத பொருட்களின் (Packaging free goods) விற்பனையை அரசு ஊக்குவிக்க கொள்கைகளை உருவாக்க வேண்டும். 9. நெகிழிக்கான மாற்றுப் பொருட்களை உருவாக்கும்போது எளிய மக்களுக்கும் தொழில் வாய்ப்புகளை உருவாக்கும் விதத்தில் இருப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும். இன்றையக் கண்காட்சி அரங்கிலேயே பெருமளவில் முதலீடற்ற எந்த இயந்திரங்களின் தேவையுமற்ற பலையோலையால் செய்யப்பட்ட பொட்டலங்கள் கட்டப் பயன்படும் பொருட்கள் காட்சிப் படுத்தப்பட்டிருந்த்து மிகச்சிறப்பு. இவை விலையில் குறைவானதாகவும் அதே நேரத்தில் விழிம்புநிலை மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதாகவும் இருக்கும். இவற்றை அரசு அதிகம் ஊக்குவித்து அதற்கானச் சந்தை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும். இறுதியாக நெகிழி ஒழிப்பு நிச்சயம் எளிமையானதல்ல. அதே நேரத்தில் கழிவில்லா நிலை (zero waste) நோக்கிய கழிவு மேலாண்மை, சுழற்சிப் பொருளாதாரம் (circular economy) போன்றவற்றின் மூலம் இவற்றை சில ஆண்டுகளில் சாத்தியப்படுத்த முடியும். இந்திய நகரங்கள் உட்பட உலக அளவில் பல நகரங்களும் கழிவில்லா நிலை நோக்கித் திட்டமிட்டு பயணத்தைத் தொடங்கிவிட்டிருக்கின்றன. இந்தக் கழிவில்லா நிலையை அடைவதுதான் இன்று தொடங்கப்பட்ட மஞ்சள் பை இயக்கத்தின் முழு வெற்றியாக இருக்கும்.
ஆறு பேரை திருமணம் செய்து பணம், நகைகளைத் திருடிக் கொண்டு மாயமான பெண், திருச்செங்கோடு அருகே வெள்ளிக்கிழமை 7ஆவதாக ஒருவரை திருமணம் செய்து கொள்வதற்காக காரில் வந்த போது அப் பெண் உள்பட 4 பேரை பொலிஸாா் கைது செய்தனா். பரமத்தி வேலூா் வட்டம், கள்ளிபாளையம், வடக்கு தெருவைச் சோ்ந்த கந்தசாமி மகன் தனபால் (37). நிதி நிறுவன உரிமையாளரான இவருக்கும், மதுரை மாவட்டம், வாடிப்பட்டி, சோழவந்தான் பேட்டையைச் சோ்ந்த சந்தியா (27) என்பவருக்கும் கடந்த 7 ஆம் திகதி அண்ணாநகா் அருகே உள்ள புதுவெங்கரையம்மன் கோயிலில் உறவினா்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது. திருமணத்தில் பெண் வீட்டாா் சாா்பில் பெண்ணின் அக்கா, மாமா எனக் கூறிக் கொண்டு வந்த இருவரைத் தவிர வேறு யாரும் கலந்து கொள்ளவில்லை. திருமணத்திற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்த திண்டுக்கல் மாவட்டம், தாதன்குளத்தைச் சோ்ந்த பாலமுருகன் (45) திருமணத்தை நடத்தி முடித்துவிட்டு தரகு தொகையாக ரூ. 1.50 லட்சத்தை வாங்கிக் கொண்டு சென்றுவிட்டாா். திருமணம் முடிந்து 2 நாள்கள் மட்டுமே தனபாலுடன் குடும்பம் நடத்திய சந்தியா, மூன்றாம் நாள் காலை வீட்டிலிருந்த உடமைகள், பணத்தை எடுத்துக்கொண்டு மாயமானாா். அவரது செல்லிடப்பேசி, உறவினா், திருமணத்தை நடத்திவைத்தவா் என அனைவரது செல்லிடப்பேசிகளும் அணைத்து வைக்கப்பட்டிருந்தன. இதை அடுத்து தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த தனபால், வேலூா் காவல் நிலையத்தில் கடந்த 9 ஆம் திகதி புகாா் அளித்தாா். இதனிடையே, அதே பகுதியைச் சோ்ந்த வேறு ஒருவா் திருமணத்துக்கு மணமகளைத் தேடிய போது மதுரை,மேலவாசல்,வீட்டுவசதி வாரிய பகுதியைச் சோ்ந்த திருமண தரகா் தனலட்சுமியிடம் (45) அளித்த புகைப்படங்களில் சந்தியாவின் புகைப்படம் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, அவரிடம் பேசி திருமணத்தை முடிவு செய்துள்ளனா். வியாழக்கிழமை காலை திருச்செங்கோட்டில் திருமணம் செய்வதாக முடிவு செய்து காலை ஆறு மணிக்கு சந்தியாவும், உறவினா் எனக் கூறிக் கொண்டு வந்த 3 பேரும் காரில் திருச்செங்கோடு வந்தனா். அப்போது, தனபால், உறவினா்கள் காரில் வந்தவா்களைப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்தனா். வேலூா் காவல் நிலைய ஆய்வாளா் வீரம்மாள் நடத்திய விசாரணையில், மதுரை, திண்டுக்கல், விருதுநகா் மாவட்டங்களைச் சோ்ந்த 5 பேரை அவா் திருமணம் செய்துள்ளதும், ஆறாவதாக தனபாலை திருமணம் செய்து ஏமாற்றியதும் தெரிய வந்தது. இதுதொடா்பாக சந்தியா, தனலட்சுமி, மதுரை மாவட்டம், வில்லாபுரம், அம்மாச்சியாா் கோயில் தெருவைச் சோ்ந்த நாகராஜன் மகன் கெளதம் (26), மதுரை மாவட்டம், வாடிப்பட்டி , மேல்நாச்சியாபுரத்தை சோ்ந்த முருகேசன் மகன் ஜெயவேல் (30) ஆகியோரைக் கைது செய்தனா். மேலும், தலைமறைவான பாலமுருகன், விருதுநகா் மாவட்டம், சாத்தூா், மேட்டமலை பகுதியைச் சோ்ந்த ரத்தினம் மகன் அய்யப்பன் (28) ஆகிய இருவரையும் தேடி வருகின்றனா். ஒவ்வொரு திருமணத்தின் போதும் மணமகன் வீட்டாரிடம் லட்சக்கணக்கில் பணத்தை பெற்றுக்கொண்டு சில நாள்கள் மட்டும் குடும்பம் நடத்திவிட்டு பொருள்களை அபகரித்துக் கொண்டு ஏமாற்றியுள்ளனா். இதுதொடா்பாக சந்தியா உள்பட கைது செய்யப்பட்டவா்களிடம் பொலிஸாா் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
We were deeply saddened to hear the news of Vithushan's sudden departure. Our heartfelt condolences to Vithushan's Mom & Dad, his brother and also to all the immediate relatives and friends. Vithushan will be deeply missed and it's extremely hard to say 'goodbye' to such a lovely little boy. May God grant Vithushan's family the required courage and wisdom to accept this tragedy. Read the POEM by Cletus According to the Tamil Newspapers :- ஓட்டோவிலிருந்து வீழ்ந்த சிறுவன் 13 நாட்களின் பின் உயிரிழப்பு! வெள்ளிக்கிழமை, 17 செப்ரெம்பர் 2004, 1:43 ஈழம் பாடசாலைப் பிள்ளைகளை ஏற்றி இறக்கும் ஓட்டோவில் இருந்து தவறி வீழ்ந்ததில் தலையில் படுகாயமடைந்து மயக்கமுற்றிருந்த சிறுவன் ஒருவன் 13 தினங்களின் பின் நேற்று அதிகாலை மரணமானான். யாழ். புனித ஜோன் பொஸ்கோ பாடசாலையில் கல்வி பயிலும் இருபாலை, கட்டப்பிராயைச் சேர்ந்த ஜோன்சன் விதுஷனன் (வயது 6) என்ற சிறுவனே இவ்வாறு அகால மரணமடைந்தான். கடந்த 2ஆம் திகதி வியாழக்கிழமை பாடசாலையில் இருந்து வீடு திரும்பும் வழியில் ஓடிக்கொண்டிருந்த ஓட்டோவில் இருந்து இந்தச் சிறுவன் திடீரெனத் தவறி தலையடிபட வீதியில் வீழ்ந்தான். நல்லு}ர் சட்டநாதர் வீதியில் இவ்விபத்து இடம்பெற்றது. அந்த இடத்திலேயே மயக்கமடைந்த சிறுவன் உடனடியாக யாழ்.போதனா மருத்துவமனையில் அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் சேர்க்கப்பட்டான். தலையில் பலமாக அடிபட்டதால் உள்ளே இரத்தக் கசிவு ஏற்பட்ட நிலையில் அங்கு அவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டான். அங்கும் மயக்க முற்ற நிலையிலேயே சிறுவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. சம்பவம் நடந்து 13 ஆவது நாளான நேற்று அதிகாலை சிறுவன் அங்கு உயிரிழந்தான். ஓட்டோவின் பின் ஆசனத்தில் மேலும்பல சிறுவர்களோடு ஒன்றாகக் கதவோரமாக அமர்ந்திருந்த இந்தச் சிறுவன் திடீரென வாயில் ஊடாக வெளியே வீழ்ந்துள்ளான் என்று கூறப்படுகின்றது. சந்தடி மிகுந்த நேரங்களில் பாடசாலை பிள்ளைகளை ஏற்றிச் செல்லும் வாகனங்களை வேகமாக செலுத்துவதாலும் நன்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படாத திறந்த வாகனங்களில் அளவுக்கு அதிகமாக சிறுவர்களை ஏற்றிச் செல்லுதல் போன்ற செயற்பாடுகளாலும் இது போன்ற அனர்த்தங்கள் ஏற்படுவதாக பொலீஸ் மற்றும் மருத்துவ வட்டாரங்களில் சுட்டிக்காட்டப்படுகிறது.
“அந்த ஜக் டானியல் போத்தல் உள்ள பெட்டியை கையில் எடு” என நண்பன் கூறினான். நானும் அதேபோன்ற சிங்கிள் மோல்ட் விஸ்கி இரண்டு போத்தல் வைத்திருந்தேன். ஏனைய பெட்டிகளை அகமட் விமான நிலய பெல்டில் இருந்து தூக்கினார். குதிரையையும் வாளையும் துருக்கியர்கள் மற்றவர்களிடம் கொடுக்கமாட்டார்கள். அது போலத்தான் எங்களது விஸ்கி போத்தல்களை மற்றவர் கைகளில் கொடுக்க நாங்கள் தயாரில்லை. இரண்டு பேருமே குடிகாரர்கள் என நினைக்க வேண்டாம். அந்தப் போத்தில்கள் தனியாக கதை சொல்லும். கம்பன் வீட்டு கைத்தறிபோல எகிப்தில் எந்த குடிவகையும் குடிக்க முடியாது என்பதும் எங்களுக்குச் சொல்லப்பட்ட தகவல்களில் ஒன்று. அது இஸ்லாமிய நாடு. இதன் காரணத்தால் துபாயில் ஆளுக்கு இரண்டு போத்தல்கள் வாங்கியபோது அதற்கு உபரியாக எடுத்துச் செல்ல தள்ளிக்கொண்டு செல்லும் அழகான பெட்டியையும் தந்திருந்தார்கள். அந்தப் பெட்டியை எப்படியும் எகிப்துக்கு எடுத்துச் செல்வது எமது நோக்கமாக இருந்தது. எகிப்திய விமான நிலையத்தில் இறங்கியதும் ஐரோப்பியரது நிறத்தில் அழகான இளைஞர் ஒருவர் எங்களுக்கான முகவர் என கூறி தன்னை அகமட் என அறிமுகபபடுத்திவிட்டு எங்களுக்கு விசா எடுத்துத்தருவதற்காக பாஸ்போட்டுகளுடன் சென்று விட்டார். மனிதர்களை எப்பொழுதும் கூர்ந்து பார்ப்பது எனது இயல்பு. அவுஸ்திரேலியாவில் உலகத்தில் உள்ள எல்லா நாடுகளையும் சேர்ந்த மக்கள் வாழ்கிறார்கள். கருப்பு நிறமான அவுஸ்திரேலிய ஆதிவாசிகள் இருந்த இடத்தில் சகல கண்டங்களையும் சேர்ந்தவர்கள் வந்துவிட்டார்கள். மனிதர்களின் நிறம் மூக்கு கண்; என்ற பனரோமிக்கான இந்த வித்தியாசங்கள் வெவ்வேறு சீதோசணத்திற்கு ஏற்ப பரிணாமமடைந்தபோது உருவாகியது. ஆனால் இப்பொழுது இந்த வித்தியாசங்கள் ஒரே இடங்களில் வாழும்போது விஞ்ஞானிகளின் பரிணாமக் கருத்தும் கட்டுடைபடுகிற வேளையில் படைப்பு கருத்தாக்கமும் கேள்விக்குள்ளாகிறது. இனிமேல் அவுஸ்திரேலியாவில் ஆண்டவனால் படைக்கப்படுபவர்கள் ஏன் வித்தியாசப்படவேண்டும்? அதேபோல் வெள்ளையர்கள் எல்லோரும் அவுஸ்திரேலிய சீதோசணத்திற்கேற்ப பரிணாம கருத்துப்படி கருமையாவார்களா? விமான நிலையத்தில் உள்ள எகிப்திய மக்களின் நிறமும் பல தரப்பட்டது. தென் ஆபிரிக்காவின் நிலக்கரி நிறத்தில் தொடங்கி ஐரோப்பியரின் வெளிர் நிறம் வரையில் பலவண்ணமேனியர் வாழ்கிறார்கள். எல்லோருக்கும் மூக்கில் மட்டும் ஒற்றுமை இருந்தது. யாழ்ப்பாணத்தில் அந்தக்காலத்தில் மூக்குப்பேணி வீடுகளில் வைத்திருப்பார்கள். சாதி ரீதியில் குறைந்தவர்கள் அல்லது சாதி தெரியாதவர்கள் வந்தால் மட்டும் மூக்குப்பேணி வெளியே வரும் அந்த மூக்குப் பேணியின் மூக்கை நினைவுபடுத்தினார்கள். எகிப்தியர்கள் பாதிரிமாரின் நீண்டஅங்கியைப்போன்ற ஆடைகளை அணிகிறார்கள். அந்த உடைகள் பாலைவன வெப்பத்திற்கு ஏற்றதாக இருக்கும் என நினைக்கிறேன். எங்கள் பகுதி வேட்டி சேலை போல் உள்ளே சென்ற காற்று வெப்பத்தை வெளியேற்றும் காற்றோட்டத்தை உருவாக்கும் உடுப்பு என நினைத்தேன். பெரும்பாலான பெண்களும் முகத்தை தவிர்த்து மற்ற பகுதிகளை ஆடைகளினால் மூடியிருந்தார்கள.; ஆண்களிலும் பெண்களிலும் பெருந்தொகையினர் ஐரோப்பிய உடை அலங்காரத்தில் காணப்பட்டார்கள.; அகமது இலகுவாக விசாவையும் எடுத்துக்கொண்டு, எங்கள் பெட்டிகளையும் எடுத்துவர உதவி செய்ததால் விமான நிலையத்தை விட்டுச் செல்வது மிகவும் இலகுவாக இருந்தது. மேலும் விமான நிலையத்தில் ரக்சியில் பேரம் பேசுவது போன்ற விடயங்கள் அவசியப்படவில்லை. ஒரு விதத்தில் இந்த பேரம் பேசும் சந்தர்ப்பம் கிடைக்காதது கவலையை அளித்தாலும் அரபிய மொழி தெரியாமல் பேரம் பேசுவது இமயமலை ஏறுவது போல் இருந்திருக்கும் மாலை நேர போக்குவரத்து நெருக்கடியில் ஹொட்டலுக்கு போவதற்கு ஒரு மணித்தியாலத்திற்கு மேல் எடுக்கும் என்று அகமத் சொல்லி விட்டு எங்களை வானில் ஏற்றினார். சிகப்பு கலந்த மண்நிற கட்டிடங்கள் நகரமெங்கும் அடுக்கு மாடியாக இருந்தன. வண்ணக் கலவையில் பச்சைக்கு பஞ்சம் இருந்தது. கண்களுக்கு அதிகமான வித்தியாசங்கள் இல்லை. எகிப்து 7 கோடி மக்களைக் கொண்ட பெரியதேசமாக இருந்த போதிலும் நைல் நதியை அண்டிய பிரதேசத்தில் மட்டுமே மக்கள் வாழ்கிறார்கள். உலகவரலாற்றில் பல போர்களையும் பல படையெடுப்புகளையும் பார்த்த தேசத்தின் தலைநகர் கெய்ரோ. அதன் சரித்திரத்தை மேலோட்டமாகவேனும் பார்க்காவிடில் மக்களையோ நகரத்தையோ புரிந்து கொள்ள முடியாது இப்போது உள்ள கெய்ரோவை புரிந்து கொள்ள சரித்திரத்தின் சில சுவடிகளைப் கொஞ்சம் பார்ப்போம் கெய்ரோ தற்போதைய எகிப்து இஸ்லாம் மதத்தையும் இஸ்லாமிய கலாச்சாரத்தையும் பிரதிபலிப்பதால் நாம் பார்க்கும் சரித்திரம் இஸ்லாமிய மதத்தின் வருகையில் இருந்து தொடங்குகிறது. AD 640 அரேபியாவில்-அக்கால அரேபியா இக்கால சிரியா, ஜோர்டான், ஈராக் மற்றும் அரேபிய வளைகுடா நாடுகளைக் கொண்டது. இந்தப் பகுதியில் இருந்து இஸ்லாம் எகிப்திற்கு சென்றது. சிரியாவின் ஒரு மாகாணமாக மாறியது. அக்காலத்தில் கெய்ரோ தலைநகராக இருக்கவில்லை. புராதன காலத்தில் இருந்து எகிப்தில் பல தலைநகர்கள் இருந்தன. புராதன எகிப்தின் தலைநகரம் மெம்பிஸ். கிரேக்கர் ஆண்டபோது அலெக்சாண்டிரா. கெய்ரோ பிற்காலத்தில்தான் எகிப்தின் தலைநகராகியது. யுனு 969 எகிப்துக்கு படை எடுத்த ருனிசியர்கள் அதனைக் கைப்பற்றினார்கள். (The Fatimid Caliphate- – பத்திமா முகமது நபியின் மகளாகவும் அலியின் மனைவியாகவும்; இஸ்லாத்தின் முக்கியமான இடத்தை வகிப்பவர். இவரது பெயரில்தான் அக்காலத்தில் உருவாகிய வட ஆபிரிக்காவில் பெரிய பிரதேசத்தை உள்ளடக்கிய இராச்சியம் இருந்தது.) கைப்பற்றியதும் அல்-கயிரோ(AL Qahira) பெயரிட்டு உருவாக்கிய நகரம் திரிபடைந்து பிற்காலத்தில் கெய்ரோவாகியது (Cairo). இந்த பாத்திமா கலிப்பேட் அரசு இஸ்லாத்தின் சியா எனப்படும் பகுதியில் இஸ்மயிலியை ((Ismailism)சேர்ந்தவர்கள். ஆனால் அக்காலத்தில் பெரும்பாலான எகித்திய மக்கள் சுனி இஸ்லாமியர்கள். மற்றவர்கள் கொப்ரிக் கிறிஸ்துவர்கள். இவர்கள் எகிப்தை சிலுவை யுத்தகாலம் வரை ஆண்டார்கள். சிலுவை யுத்தம் ஜெருசலேத்தை கைப்பற்ற மேற்கு ஐரோப்பா ரோமன் கத்தோலிக்க அரசுகளால் 1096 தொடங்கிய போது பாலஸதீனம் பத்திமா கலிப்பேட்டின்; சுயாதீனமான ஒருபகுதியாக இருந்தது. இந்த சிலுவை யுத்தம் இரு நூறு வருடங்கள் நடந்தது. ஜேருசலேத்தை ஐரோப்பியரிடம் இருந்து மீண்டும் கைப்பற்றிய சலாடினால்(Saladin) எகிப்து சிரியாவில் ஒரு மாகாணமாகியது. இதன்பின்பு இதன் இடைப்பட்ட சில காலம் பிரான்சிய மன்னன் லுயிஸ் எகிப்தை(1249-1250) ஆளமுயன்றாலும் விரைவில் மாமலுக்கால்(Mamaluke); தோற்கடிக்கப்பட்டார். மாமலுக்கர்கள் சலாடினோடு போர்வீரர்களாக வந்த கோக்கேசிய இனத்தை சேர்ந்தவர்கள். இவர்கள்; எகிப்தை பல நூற்றாண்டுகளாக ஆண்டார்கள் 1798 பிரான்சிய தளபதியாக நெப்போலியன் வந்து மலுக்கை தோற்கடித்தாலும் அவர்கள் அதிக காலம் நிற்கவில்லை. இங்கிலாந்தால் தோற்கடிக்கப்பட்டதால் பிரான்ஸ்; வெளியேற 1801இல் அந்த இடத்தை ஓட்டமான் பேரசு என அக்காலத்தில் சொல்லப்பட்ட துருக்கியர் பிரான்சின் வெற்றிடத்தை நிரப்பவந்தார்கள். அப்படி வந்த துருக்கிய படையணியின் தளபதி ஆர்மேனியாவை பிறப்பிடமாக கொண்ட முகமட் அலி. அவரே தற்போதைய நவீன எகிப்தின் தந்தையாவார். இவர் அன்னியராக இருந்த போதிலும் எகிப்தை ஐரோப்பிய நாடுகள் போன்ற அரசை உவாக்குவதற்கு அரச நிர்வாகிகள் தேவை என நினைத்து மாணவர்களை ஐரோப்பா அனுப்பினார். தொழிற்சாலைகள் பாதைகள் பாதுகாப்பு படைகள் என்று ஒரு நவினமான தேசத்துக்கு தேவையான விடயங்களை கட்டமைப்பதிலும் ஈடுபட்டார். எகிப்தின் வரலாறு எகிப்தியல் என புதிய ஒரு கல்விப் பகுதியாக பல பல்கலைக்கழகங்களில் வைக்கப்பட்டிருக்கிறது. இது வரலாறு மட்டுமல்ல பொறியியல் தொல்பொருளியல் மற்றும் மொழியியல் என பல துறைகளின் சேர்க்கையாகும். உலக வரலாற்றில் எகிப்தின் இடம் எவ்வளவு முக்கியமானது எனப் புரிந்து கொள்ள சிறிய தகவல் போதுமானது. வரலாறு பதிவாகிய காலத்திலிருந்து பேசப்படும் வீரர்களில் முக்கியமானவர்கள் மகா அலக்சாண்டர், ஜுலியஸ் சீசர் என்போர் கிறீஸ்துவிற்கு முன்பாக எகிப்;துக்கு வந்து போனார்கள். சிலுவை யுத்தத்தை வென்ற கேடிஸ் முஸலீம் ஹீரோ சலாடின் பின்பு நெப்போலியன் இருவரும் பிற்காலத்தில் வந்து போனார்கள். இப்படியான வீரர்கள் நடந்த மண்ணில் நாம் காலடி எடுத்து வைக்கிறோம் என்பது பெருமையாக இருந்தது. இதை விட எகிப்தின் பாதிப்பால் பல விடயங்கள் உலகத்தில் நடந்தன. அதில் ஒரு விடயம் நமக்கு முக்கியமானது. ஐரோப்பாவுக்கும் ஆசியாவுக்கும் நடந்த வாணிபம்; ஆரம்பகாலத்தில் சில்க் ருட் எனப்படும் மத்திய ஆசியா வழியே நடந்தது. பல போரால் அந்தப் பாதை மூடப்பட்டபோது பெரும்பாலான கிழக்கு – மேற்கு- வாணிபம் எகிப்;து வழியே நடந்தது. இந்த வியாபாரத்தை அக்காலத்தில் எகிப்தை ஆண்ட மாம்லுக்கியர் தங்கள் கையில் வைத்திருந்தார்கள்;. இதனால் எகிப்து செல்வச் செழிப்பான நாடாக இருந்தது. இந்த ஒற்றைப்படையான வர்த்தகத்தை உடைக்கவே 1498ல் வாஸ்கொடிகாமா கீழைத் தேசங்களிற்கு புதியவழி தேடி தென் ஆபிரிக்காவை சுற்றி இந்தியா வந்தார். அதனால்;தான் இலங்கைக்கு போர்த்துக்கேயர் வந்தனர். பின்னாட்களில் கோட்டை அரசனையும் சங்கிலி மன்னனையும் தோற்கடித்தனர். எமது வரலாற்றில் எகிப்தின் தாக்கம் எப்படி இருக்கிறது? செங்கடலையும் மத்தியதரைகடலையும் இணைக்கும் கால்வாயை நெப்போலியன் கட்ட நினைத்தது பிற்காலத்தில். அதை முடித்தபின் ஆங்கில –பிரான்ஸ் கொம்பனிகள் தங்கள் வசம் வைத்திருந்தன. அதை கமால் அப்துல் நாசர் தேசிய மயமாக்கியது போன்ற விடயங்கள் உலக சரித்திரத்தில் ஆழமாக பதிவான விடயங்கள். எனது நண்பன் பிரயாண ஒழுங்கை செய்திருந்ததால் நான் கடைசிவரையும் எந்த ஹோட்டல் என்று கூட பார்க்கவில்லை. பிரயாண விடயங்களை ஒழுங்காக செய்வதில் அவனில்; எனது நம்பிக்கை பலமானது. ஆனால் கிரடிட் கார்ட் பசிபிக் சமுத்திரத்தின் ஆழத்தில் இருக்க வேண்டும.; மற்றும்படி எந்தக் குறையும் இல்லை. எங்களை சுமந்து கொண்டு வந்த வாகனம் வந்து சேர்ந்த இடம் கெய்ரோ மரியட். நைல் நதிக்கு மிக அருகாமையில் மட்டுமல்ல கெய்ரோவின் பிரதான பகுதியிலும் உள்ளது. அவுஸ்திரேலியாவில் இருந்து பல மணித்தியால பயணம் என்பதால் விரைவாக அறைகளுக்கு போய் இளைப்பாறுவது என்பதுதான் எமது நோக்கமாக இருந்தது. எமது அறையிலிருந்து நைல் நதியை பார்க்கக் கூடியதாக இருந்தது. நாங்கள் வெளியே பார்க்கிறோமோ இல்லையோ அறையின் ஜன்னல் ஊடாக என்ன தெரிகிறது என்பது முக்கியமானது. ஒரு முறை சென்னையில் ஒரு ஹோட்டலில் நடு இரவில் சென்று தங்கிவிட்டு காலை எழுந்ததும் அருகில் ரயில்வே தண்டவாளங்களை பார்த்துவிட்டு உடனே அந்த ஹோட்டலை காலி செய்தேன். அதேபோல் சைகோனில் எங்களுக்குத் தந்த அறையில் ஜன்னலே இருக்கவில்லை . மூன்று பக்கமும் சுவராக இருந்தது. இவ்வளவிற்கும் அமெரிக்கர்கள் கடைசியாக இருந்துவிட்டு தப்பிப்போன ஹோட்டல் சைகோன். உடனே காலிசெய்தேன். இணையத்தில் பதிவு செய்யும்போது எல்லாவற்றையும் காட்டுவார்கள். ஜன்னலைத்தவிர. விமானத்தில் பயணம் செய்பவர்களுக்கு எப்படி வெளியேறும் கதவுகள் முக்கியமோ அதேபோல் ஜன்னலும் முக்கியம். பணத்தை கொடுக்கும் போது நமக்கு விரும்பியதை கேட்பது நீதியானதுதானே? நைல் நதியின் காட்சியில் லயித்துக்கொண்டிருந்த போது அறைக்கு வந்து அரை மணித்தியாலமாக எமது உடைகளைக் கொண்ட பொதிகள் வரவில்லை. “என்ன பெரிய ஹோட்டல் என்கிறீர்கள். அரைமணிநேரமாக பேக்குகளைக் காணவில்லை” என்றள் எனது மனைவி. தொலைபேசியில் கஸ்ரமர் சேர்விஸில் கேட்டபோது அந்தக் குரல் “நீங்கள்தானே அந்த இந்திய பெண்மணியோடு வந்தவர். இன்னும் ஐந்து நிமிடத்தில் உங்கள் பொதிகள் வந்து சேரும்.” எனச்சொன்னது. ஒரு விதத்தில் ஆச்சரியமாக இருந்தது. மறுபுறத்தில் கோபமாக வந்தது. ஒரு இந்திய அயிட்டத்தை தள்ளிக்கொண்டு வந்த எகிப்தியன் என்ற அர்த்தமா. இல்லை இஸ்லாமிய நாகரீகத்துக்கு ஏற்ப முடிந்தவரை உடலை மறைத்துப் போடும்படி சொன்னதால் பஞ்சாபி உடையை அணிந்து என் மனைவி வந்ததால்; வந்த குழப்பமா என்பது தெரியவில்லை. அவன் சொன்னதை எனது மனைவிக்கு சொல்லியிருந்தால் என்ன நடக்கும் என நினைத்துவிட்டு அமைதியை வேண்டியதால் சொல்லாமல் “விரைவில் பொதிகள் வரும்” என்றேன் நாங்கள் ஐரோப்பிய கலாச்சாரத்தை ஏற்று உடைகளை அணிந்து கொண்டு பெண்களை மட்டும் நமது கலாச்சாரத்தை சுமக்கும் சுமைதாங்கியாக மாற்றிவிடுகிறோம். அவுஸ்திரேலியால் ஏதாவது விசேடத்திற்கு நான் சூட் போட்டால் எனது மனைவி பட்டுச்சேலை கட்டுவது எனக்கே வியப்பாக இருக்கும். இதேமாதிரியான காட்சிகள் எகிப்தில் மட்டுமல்ல துபாயிலும் கண்டேன். ஏவாளால் தடை செய்யப்பட்ட பழத்தை சாப்பிட காலத்தில் இருந்து இனப்பெருக்கத்தின் சுமையுடன் இந்த கலாசார சுமையையும் அவர்களிடம் கொடுத்துவிட்டு ஹாயாக முன்னால் நடக்கிறோம். குறைந்தபட்சம் ஐரோப்பியர் பக்கத்தில் நடக்கிறார்கள். ஆசியர்கள் சில அடி முன்னால் நடக்கிறார்கள்.
கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 5 ஆம் தேதி முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்று 4 ஆவது நாளாக காலையில் இருந்து மாலை வரை அவ்வப்போது மழை பெய்தது. சில இடங்களில் காலையில் இருந்து மழை தூறிக்கொண்டே இருந்தது. இதனால், மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் உற்பத்தியாகி கோவை, திருப்பூர் வழியாக ஓடும் நொய்யல் ஆற்றில் இருகரை களையும் தொட்டபடி தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இந்த ஆறு மூலம் நீராதாரம் பெற்று வரும் அனைத்து குளங்களுக்கும் தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. இதனால், அந்த குளங்கள் வேகமாக நிரம்பி வருகின்றன. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். அத்துடன் ஆற்றில் உள்ள அனைத்து தடுப்பணைகளும் நிரம்பி வழிகின்றன. இவ்வாறு செய்திகள் வந்து கொண்டிருக்கும் நிலையில் கோவையச் சேர்ந்த ஒரு அமைப்பு வெளியிட்டுள்ள புகைப்படங்கள் அதிர வைக்கின்றன. noyyal இது பனி மழை அல்ல. இன்று அதிகாலையிலிருந்து கோவையில் கொட்டித் தீர்த்துக் கொண்டிருக்கும் மழையால் நொய்யல் ஆற்றில் இருந்த சாயக் கழிவுகளும், தொழிற்சாலைக் கழிவுகளும் நுரைத்து மேலே வந்து சாலையில் பறக்கின்றன. கற்பனையே செய்ய முடியாத விஷயங்களை எல்லாம் இயற்கையின் கோர தண்டவம் நிகழ்த்திக் காட்டுகிறது. இயற்கையின் கோபத்தில் வெளிப்படும் மனிதனின் அயோக்கியத்தனம். எந்த அளவுக்கு ஆறுகளையும், ஓடைகளையும் கெடுத்து வைத்திருக்கிறோம் என்பதைக் காட்டும் படம் இது. உலகப் புகழ் பெற வேண்டிய படம்.
இருப்பினும் மற்ற கட்டண உயர்வு திரும்பபெறாததால் 20ஆம் நாளான இன்றும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். JNU students protest | &nbspPhoto Credit:&nbspANI டெல்லி ஜே.என்.யூ மாணவர்களின் தொடர் போராட்டத்தால் உயர்த்திய விடுதி கட்டணத்தை திரும்பப் பெறுவதாக கல்லூரி நிர்வாகம் அறிவித்துள்ளது. ஆனால் மாணவர்கள் மற்ற கட்டண உயர்வையும் திரும்பப் பெற வேண்டும் என்று இன்றும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் விடுதி கட்டணம், கல்விக் கட்டணம், சேவைக் கட்டணம் சுமார் 300% உயர்த்தப்பட்டது. இதனால் கல்லூரி மாணவர்கள் மிகப் பெரிய போராட்டத்தை முன்னெடுத்து 20 நாட்களுக்கும் மேலாக நடத்தி வருகிறார்கள். திங்கட்கிழமை மாணவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மாணவர்கள் மீது தண்ணீர் பாய்ச்சியும் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தியும் போலீசார் பல விதமான முயற்சிகளை முன்னெடுத்து வருகிறார்கள். இருப்பினும் மாணவர்கள் தொடந்து போராடி வந்தனர். இந்நிலையில் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கல்வித்துறை செயலாளர் சுப்ரமணியம் தனது ட்விட்டர் பக்கத்தில், விடுதி கட்டண உயர்வு திரும்பப் பெறுவதாகக் கூறியுள்ளார். இருப்பினும் மற்ற கட்டண உயர்வு திரும்பபெறாததால் 20ஆம் நாளான இன்றும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
தமிழகத்தில் தற்போது தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களில் நிவாரண முகாம்கள் தயாராகப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு 4 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். அதன்படி சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை என்று அறிவித்துள்ளார். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் 1070 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்றும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். சென்னையில் மட்டும் தற்போது 160 நிவாரண முகாம்கள் தயாராக உள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார். அதன்படி மீட்பு, நிவாரணப் பணிகளை விரைந்து மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளேன் என்று தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் கூறியுள்ளார். குடியிருப்பு பகுதியில் தேங்கியுள்ள நீரை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும் அவர் கூறியுள்ளார். மீட்பு, நிவாரணப் பணியில் தேசிய பேரிடர் மீட்பு படை, தீயணைப்பு, காவல் துறையினர் இணைந்து ஈடுபட்டுள்ளனர் என்றும் கூறியுள்ளார். சென்னையில் ஒரே நாளில் 20 சென்டி மீட்டருக்கு மேல் அதி கனமழை பெய்துள்ளது என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இதனால் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு பள்ளிகள் விடுமுறை அளிக்கப்பட்டதாகவும் கூறியுள்ளார். Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள். Categories செய்திகள் Tags camp, mk stalin, school leave, பள்ளிகளுக்கு விடுமுறை, பள்ளிகள் விடுமுறை, மு க ஸ்டாலின்
பாபநாசம் சட்டமன்ற தொகுதியில் பாபநாசம் வட்டம் கபிஸ்தலம் சரக வருவாய் கிராமங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களை பாபநாசம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பேராசிரியர் முனைவர் எம் எச் ஜவாஹிருல்லா அவர்கள் இன்று பார்வையிட்டார். திருமண்டங்குடி, துரும்பூர், கொங்கன் சாலை, ஆதனூர்,சத்தியமங்கலம், வாழ்க்கை, உமையாள்புரம், இராமானுஜபுரம், உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்து பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களை பார்வையிட்டு விவசாயிகளிடம் குறைகளை கேட்டார். இப்பகுதியில் உள்ள வடிகால் மற்றும் பாசன வாய்க்கால்கள் ஆகியவற்றை ஆய்வு செய்தார். கூனஞ்சேரியில் கால்நடை மருத்துவமனை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கால்நடைகளுக்கான நோய் தடுப்பூசி போடும் முகாமை துவக்கி வைத்தார். கொள்ளிடம் ஆற்றின் கரையில் செய்யப்பட்டுள்ள வெள்ளத் தடுப்பு பணிகளை பார்வையிட்டார், இந்த ஆய்வின் போது பாபநாசம் வட்டார வேளாண் உதவி இயக்குநர் மோகன், தஞ்சாவூர் வடக்கு மாவட்ட திமுக துணைச் செயலாளர் கோவி அய்யாராசு, பாபநாசம் வடக்கு ஒன்றிய செயலாளர் கோ.தாமரைச்செல்வன், பாபநாசம் ஊராட்சி ஒன்றியக் குழு பெருந்தலைவர் சுமதி கண்ணதாசன், மனிதநேய மக்கள் கட்சியின் மாநில இளைஞரணி துணைச் செயலாளர் மைதீன், மாநில செயற்குழு உறுப்பினர் ஹிபாயத்துல்லா, ஒன்றிய கவுன்சிலர்கள் விஜயன், ஹாஜா மைதீன் ஊராட்சி மன்ற தலைவர்கள் N.பிரபாகரன், K.செல்வராஜ், D.விஜி,சித்ரா மகாலிங்கம், பாலா, மகாலிங்கம்,யசோதா சரவணன்,ராஜ் குமார்,கற்பகம் இராஜேந்திரன்,சுதா பிரபு, மற்றும் கழக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ராம்பிற்கு எதிராக டுவிட்டர் நிறுவனம் பிறப்பித்திருந்த தடை நீக்கப்பட்டுள்ளது. அண்மையில் டுவிட்டர் நிறுவனத்தை, உலகின் முதனிலை செல்வந்தர்களில் ஒருவரான எலான் மஸ்க் வாங்கியிருந்தார். இதனைத் தொடர்ந்து டுவிட்டரில் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. வன்முறைகளைத் தூண்டும் வகையில் டுவிட் பதிவுகளை இட்டதாக குற்றம் சுமத்தி ட்ராம்பின் கணக்கு முடக்கப்பட்டு, தடையும் விதிக்கப்பட்டது. இவ்வாறான ஓர் பின்னணியில் ட்ராம்பின் கணக்கு முடக்கம் தொடர்பில் எலான் மஸ்க் கருத்துக் கணிப்பு ஒன்றை நடாத்தியுள்ளார். இதன் போது கருத்துக் கணிப்பில் பங்குபற்றிய 51.8 வீதமானவர்கள் ட்ரம்பின் கணக்கு முடக்கத்தை நீக்குமாறு கோரியுள்ளனர். மக்களின் குரலுக்கு அமைய ட்ரம்பின் கணக்கு முடக்கம் நீக்கப்படும் என மஸ்க் டுவிட் செய்துள்ளார். இதேவேளை, ஏதேனும் தெளிவான காரணங்கள் இன்றி தடை செய்யப்பட்ட கணக்குகளின் தடைகள் நீக்கப்பட மாட்டாது எனவும் மஸ்க் தெரிவித்துள்ளார்.
கேரளக் கடற்கரையோரத்திலிருந்துஅவுஸ்திரேலியாவிற்கு கள்ளத் தோணியில் புறப்பட தயாராகவிருந்த 15-பேர் காவல்த்துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டு, மீண்டும் அவர்கள் இருந்த அகதி முகாமிற்கு கொண்டு வந்து விடப்பட்டுள்ளனர். வந்தவர்கள் சும்மா இருந்துவிடவில்லை, தம்மைக் காட்டிக் கொடுத்தவர்கள் என இரண்டொருவரை வெட்டித்தள்ளி வைத்தியசாலைக்கும் அனுப்பி வைத்தார்கள். இது ஆகஸ்ட்மாத 9-ம் திகதிய தமிழகப் பத்திரிகைகளின் செய்தி. இனி 4-8-10 ஜுனியர் விகடன் சஞ்சிகையில் பார்த்த ஒரு விடயம். கவிஞரும், சினிமாப் பாடகருமான புகழ் பூத்த தாமரை அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகளுக்கு 30-நாட்கள் பயணம் சென்று வந்திருக்கும் அவர் வழங்கியுள்ள செவ்வியைப் படித்ததால் புல்லரிக்கும. அப்படியே தமிழ் ஈழத்தில் தான் இருக்கிறோம் என்ற பிரமிப்பிற்கு ஆளாவோம். மேலை நாடுகளில் நாடுகடந்த ஈழத்திற்காக போராடுகிறவர்கள் தாமரைக்கு அப்படியொரு நம்பிக்கையை வழங்கியிருக்கின்றார்கள். முடிவுரையாக அவர் சொல்வார் “தலைவர் பிரபாகரன்” உயிருடன் இருப்பதாக அவர்கள் உறுதியாக நம்புகின்றார்கள். மே 17-வரை போர்க்களத்தில் இருந்த எப்படியோ தப்பி வந்த சிலரும் இதனை மறுக்கவில்லை. அதே நேரம் ‘தலைவர் வருவார். தமிழீழம் பெற்றுத் தருவார்’’ என்கின்ற முழக்கத்தை தவிர்த்து, ‘நாம் போராடித் தமிழீழம் பெறுவோம், அதனைத் தலைவர் கையில் தருவோம்’ என முழங்கும்படி நான் வேண்டினேன். உலகளாவிய அளவில் இப்போது உருவாகி இருக்கும் ஆக்கபூர்வமான கைகோர்ப்புக் – கைகோப்பு கண்டிப்பாகத் தலைவர் கையில் தமிழீழத்தை ஓப்படைக்கும்” நரம்புகளில் நம்பிக்கை தெறிக்கச் சொலகிறார் தாமரை (இறுதி வரியும் ஜீனியர் விகடன் உபயம்.) தாமரையின் தமிழீழப்பற்று! தாமரையின் தாயுள்ளம் மாவிலாறு முதல் முள்ளிவாய்க்கால் வரை இன்னும் இரத்த வெள்ளம் ஓடிட வேண்டாம் என்பதில் வெளிப்படுகின்றது. அதனால் தான் தலைவர் வந்து பெற்றுத் தருவதாக இல்லாமல், டொலர்-ஈரோ தேசத்துப் புலம்பெயர் குடிகளைப் பார்த்து, டொலரை-ஈரோவை வைத்து என்னவாச்சும் பண்ணி ஈழத்தை வாங்கி தலைவர் கையில் கொடுக்கச் சொல்லியுள்ளார். டொலரை வைத்து அம்மணியை வந்து போக ஏற்பாடு பண்ணி இது போல எதையாச்சும் வாய்ச் சவடால்களைப் பேச வைத்து நிதிதிரட்டலுக்கு வாய்க்கால் வெட்ட முடியுமே அல்லாமல், ஈழத்தை வெட்டியெடுக்க முடியுமா? அதென்னங்க அப்பிடியொரு இழக்காரம் முன்னதாக தொடக்கத்தில் அம்மணி சொன்னதைப் பாருங்க: “இந்த நேரத்தில் ஈழத்தின் வீழ்ச்சி குறித்து மனம் வெதும்பிக் கிடப்பது மூடத்தனம். அதனால்தான், அடிபட்ட புலியாய் மறுபடியும் ஆர்த்தெழத் தொடங்கி இருக்கிறது தமிழினம். 20-ற்கும் மேற்பட்ட நாடுகளில் ‘தமிழீழ அரசு’ அங்கீகரிக்கப்பட்டு, இருக்கின்றன. சட்டத்திற்கு உட்பட்டு தமிழர்கள் எடுக்கும் இத்தகைய ஆக்கபூர்வமான முன்னெடுப்புகள் சிங்களத்தில் கழுத்தில் கயிறு வீசி இருக்கின்றன. இந்த நேரத்தில், ஒரு சேர நாம் திரள்வது தான் நம்மை சதிராடியவர்களுக்கு சம்மட்டி அடியாக இருக்கும். இதை தமிழக தமிழர்களும் தணியாத வேகத்தோடு கையில் எடுக்கவேண்டும்.” வேண்டியது தான் என்றாலும் மனக்குடையும் கேள்விகளை அடக்க முடியவில்லையே!. மே 17-துயரைத் தவிர்க்க மேல் நாடெல்லாம் நம்மவர்கள் கெம்பியெழுந்து ‘சட்டபூர்வமாய்ப் போராடி’ என்ன ஆயிற்று? தமிழகத்தில் பலரும் எண்ணையூற்றி எரிந்தும் பல வருடங்களின் பின்னர் கைகோர்த்துப் பல நூறு பேர் போராடியும் தடுக்க முடிந்ததா? சுயத்தை இழந்து அந்நியத்தை நம்பிய தலைவர்! நாடு கடந்த ஈழத்தை 20-ற்கும் மேற்பட்ட நாடுகள் அங்கீகரித்திருக்கின்றனவா? இந்த நம்பிக்கை தானே கடைசி நேரம் வரை தலைவரை முள்ளியவாய்க்காலில் தவமிருக்க வைத்தது. நாடு கடந்ததை அங்கீகரிக்கிறவர்கள் தலைவரின் ஈழப் பிரகடனத்ததை அங்கீகரிக்கத் தயாராக இருக்கவில்லையெனினும், அவரைக் காவாந்து பண்ணுவோம் என்ற நம்பிக்கையைக் கொடுத்துக் கொண்டு இருந்தார்கள். அவரும் அந்த நம்பிக்கையோடு காத்துக் கிடந்தார். ஒரு மாதத்திற்கு முன் எரிக்சொல்கெய்ம் சொன்னார். “அவர்கள் சரணடைவது தொடர்பில் எங்களுடன் தொடர்பில் இருந்தார்கள். நாங்களும் ஏற்பாடுகளுடன் இருந்தோம். அதற்குள் இலங்கை ராணுவம் அவசர கோலமாய் அனைத்தையும் முடித்துவிட்டது.” என்பதாக. நேரடியாக அமெரிக்க-நோர்வே கப்பல் ஏதும் வராத போதிலும், அவர்களது அனுசரணையோடு கையேற்கப்படுவதாக கூறப்படுகிறது என்ற நம்பிக்கையோடு சரணடைந்த பல நூறு பேர்கள் கொன்றொழிக்கப்பட்மை தொடர்பில் தான் இப்போது இலங்கை அரசிற்கு எதிரான கொலைக்குற்ற விசாரணை குறித்த ஐ.நா. பேசிக்கொண்டிருக்கின்றது. சரணடைந்து கொல்லப்பட்டவர்களில் தலைவர் இருந்தாரா? இருந்ததாக தமிழ் மக்கள் நம்ப விரும்பவில்லை. அவ்வளவு வீரம் பேசியவர்-இல்லை, வீரத்தோடு ஆயிரக்கணக்கானோரை கள வேள்வி கொடுத்து சாதனைகளை நிகழ்த்தியவர் இப்படிக் கோழைத்தனமாக சரணடைந்து இருக்கமுடியுமா? சில நம்பிக்கைகளை விட்டு விட வேண்டும். இல்லையென்றால் மேலே தட்டிவிடும். பெரும்பான்மையான் சமூகத்திற்கும் மேலே தட்டிவிட்டால் எப்படி? கொழும்பு உட்பட உலகின் பெரு நகரங்கள் பலவற்றில் அலகு குத்திப் பறவைக்காவடியில் தொங்கும் எமது சமூகத்தைப் பிறர் ‘முழுக்கக் கழன்ற கூட்டம்’ என்றுதான் சொல்கின்றார்களா? சொல்லட்டும். ‘கடவுளாவது காக்கவில்லை’யென்றால் எப்படி? நம்பிக்கைள் ஆறுதல் தருவன, தயவுசெய்து விட்டு விடுங்கள்! ஆமென். எல்லாம் முடிந்து ஒரு சில தினங்களில் இலங்கை ஜனாதிபதி ஒரு பேட்டியில் சொன்னார். (சரணடைந்ததைக் கவனமாக தவிர்த்தாலும், புலித்தலைவர்கள் எல்லோரும் அநியாயமாக மாண்டார்கள் என்பதாக அவர் கூறுவார் என) சரி பேட்டியில் என்னதான் சொன்னார்?. “முப்பது வருடங்களாக கொரில்லா யுத்தத்தோடு பெரும் படையாக வளர்ந்த புலிகள் இப்படி அநியாயத்துக்கு ஒர் இடக்கு முடக்கில் மாட்டுப்பட்டு செத்தொழிந்திருக்க வேண்டியதில்லை. நானாக இருந்திருந்தால் ஒரு பக்கத்தால் உடைத்துக்கொண்டு வெளியேறி காட்டுக்குள் இருந்து தொடர்ந்து போராடி இருப்பேன்” என்பது ஜனாதிபதியின் கூற்று. என்ன தெனா வெட்டான பேச்சு? உங்களுக்கத் தெரிந்து அவர்களுக்குத் தெரியாமல் போகிற அளவுக்ககு அவர்கள் முட்டாள்களா? உண்மையில் புலிகளின் இராணுவ வல்லாண்மை வியப்பளிக்கத்தக்கது. புலிகளின் ‘விடுதலைப்’ போராட்டத்தில் அவர்கள் அளவிற்கு கடற்படையை இத்தனை வலிமையுடன் வளர்த்தவர்கள். வேறு எவரும் இவ் உலக உருண்டையில் வேறெங்கும் இல்லை. இராணுவத் தாக்குதலுடன் ஓரடியில் ஈழத்தை வென்றெடுக்கும் வலிமை புலிகளிடம் இருந்தது. வடக்கிலிருந்து 2000-ம் ஆண்டில் பிடரி தெறிக்க ஓடிய ராணுவத்திற்கு இது தெரியும். கட்டுநாயக்காவில் விமானத் தளத்துக்குள் புகுந்து கோடிக்கணக்கான பெறுமானமான சொத்தை அழிதத்து முதல், அநுராதபுர விமானப் படைத்தளத்தைப் பல மணிநேரம் புலிகள் தமது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்தவரை புலிகளின் தாக்குதல் திறன் இலங்கை அரசிற்கு தெரியும். அரசியல் ஞான சூனியமாக இருந்து வெறும் இராணுவ வல்லாண்மை கவைக்குதவாது என்பதைத்தான் கடைசி நேர தலைவரின் அவலம் உணர்த்த விரும்பும் உண்மை என்பதை விளங்கிக்கொள்வதில் தயக்கம் வேண்டாம். உடைத்துக்கொண்டு காட்டுக்குப் போவது பயன்தரும் என்று கருதியிருப்பின் தலைவர் போயிருப்பார். அதை புரிந்துகொள்ள முடியாத குழந்தையல்ல அவர். அந்த ரகமான இராணுவப் போராட்டத்தில் பயனில்லை என்ற நிலையில்தான் எரிக் சொல்கெய்ம் சொன்ன ஏற்பாடுகளில் நம்பிக்கை வைத்து மோசம் போனார்! அந்த ஏற்பாடுகளுக்கு இடைத்தரகராக இருந்து, தலைவரால் சர்வதேசத் தலைவரென முடிசூட்டப்பட்ட கே. பத்மநாதன் தற்போது இலங்க அரசின் ‘முடிசூடா மன்னன்’. இந்த வகையறா சர்வதேசம் இந்தளவிற்குத் தான் இருக்க முடியும். தமிழீழம் கட்டக் கடைசி வரை சாத்தியமில்லை என்பதை உறுதியாக விளங்கிக் கொண்டவர் தலைவர் ஒருவர் தான். மற்றவர்கள் நம்பிக்கை கொண்டிருக்க இடமுண்டு. அந்தாள் அதி உச்சம்வரை சென்று தோற்றவர். சர்வதேசத் தலைவர் கே. பத்மநாதன் சேர்த்த காசை இலங்கை அரசிடம் சமர்ப்பணம் செய்து அகதிகளுக்கு ஏதும் பண்ண வந்திருக்கின்றேன் என்கின்றார். இப்போது நாடு கடந்த ஈழத்துக்காக காசு திரட்டுகிறவர்களும் எப்போது வந்து அந்தக் காட்டிக்கொடுப்பை செய்வார்கள்? அல்லது ஊர்வசியோ, மேனகாவோ போன்ற சினிமாத்தாரகை எவருக்காவது வாழ்வளித்து உலகம் உய்யும் வழி காண்பீர்களோ? அவர்களைக் குற்றம் சொல்ல யாருக்க என்ன உரிமை இருக்கிறது. ஏமாறுகிறவர்கள் இருந்தால், ஏமாற்றுபவர்களும் இருக்கத்தானே செய்வார்கள். நாடுகடந்த ஈழத்திற்கான பயணங்கள்? இது வெறும் ஏமாறுகிற-ஏமாற்றுகிற விவகாரமல்ல. இந்தக் கட்டுரையின் தொடக்கத்தை கேரளக் கடற்கரையிலிருந்து தொடங்கியிருந்தோம். ஈழக் கடற்கரை முதல் இந்தோனேசிய, கனடாக் கரை வரை இதே கதைதான். பல கள்ளத் தோணிகள் நடுக்கடலில் மூழ்கிப் பலபேர் ஜலசமாதியான கதை பல பத்திரிகைகளில் வந்தபடிதான். கள்ளத்தோணிக்கு காசு கொடுத்ததால் உள்ளதையும் இழந்த சம்பவங்களைப் பல குடும்பங்கள் சொல்லியழுவது தொடர் தொடராய் பத்திரிகைகளில் வந்தபடிதான். இத்தனை கொடிய கடற்பயணத்தில் உயிரைப பணயம் வைத்து அக்கரை போகும் அவதி ஏன்? எமது மண்ணில் போராட்டம் வந்த போதும் தீர்வு எட்டவில்லை என்ற விரக்தி உண்மைதான். பௌத்த சிங்களப் பேரினவாதம் என்றுமில்லாத அளவு இன்று கோரத்தாண்டவம் ஆடுவதும் உண்மைதான். ஆதலால் எங்கள் சினிமாத் தாரகைகளும், சீமான்களும் சொல்கின்ற மாதிரி கடல் கடந்த தமிழ் ஈழத்திற்கு போராடக் கிளம்ப வேண்டியதுதான். ஈழம் முதல் கேரளம் வரையான கரையோரங்களில் இருந்து படகுகள் அலைபோல் கிளம்புவது அதற்காகத் தான். ஓரிரு தசாப்தங்களின் முன்னர் ஈழத்திலிருந்து இந்தியக் கரைகளுக்கு படகேறிவந்து போராட்டத்தில் இணைந்த பல்நூறு இளைஞர்களின் தியாகம் எமக்கான எந்தப் படிப்பினையைப் பெற்றுத்தந்துள்ளது. எந்தவொரு விடுதலைப் போராட்டத்திற்கும் மற்றவர்களது ஆதரவு மிக மிக அவசியமானது தான். அது உதவிகரமானது என்கின்ற அளவில் அமைந்திருக்க வேண்டும். கறிக்கு உப்பு போல், நாங்களோ பிறரைத்தானே முழு அளவில் நம்பித் தொலைத்தோம். உப்புக்கறி ஆக்க முயன்ற கதையாக!, தமது விடுதலைக்காகப் போராடுவதாக அல்லாமல், வேறொருவர் நலன்களுக்காகப் போராடுகிறவர்கள் இலவச இணைப்பாக விடுதலை வந்த சேரும் எனக் கருதின், அது முதலுக்கும் நட்டமாகும். கடவுளாலும் காப்பாற்ற முடியாமல் போகும் என்பதைத் தான் கடந்த மூன்று தசாப்தங்களின் யுத்தவரலாறு எமக்கு உணர்த்தியிருக்கிறது. ஆயினும் அதை நாம் உணர்ந்திருக்கிறோமா? இல்லை என்பதைத் தானே அவுஸ்திரேலியத் திகில்ப் பயணங்கள் காட்டுகின்றன. என்னகாணும், பகிடியும் வெற்றியும் தெரியாமல், மெய்யாலுமே நம்மாளுகள் நாடுகடந்த ஈழத்திற்கு போராடப் படகு ஏறுவதாய் நம்பித் தொலைத்து விட்டீரோ? இல்லாமல்? இவர்கள் வழமான வாழ்வு தேடித் தான் அங்கே போகின்றார்கள் என்பது தான் சரி. போய் என்ன செய்யப்போகிறார்கள். சினிமா நட்சத்திரங்களை அழைத்துக் களியாட்டம் நடாத்தும் ‘கிக் தீர்ந்து போனால்’, வைரமுத்து-தாமரை போன்ற பாடகர்களையும், சீமான்-தங்கர்பபச்சன் போன்ற இயக்குனர்களையும் அழைத்து ‘நம்புங்கள் தமிழீழம் நிச்சயமென்று’ முழங்க வைப்பார்கள். அவர்கள் குளிர் காய்வதற்கு எண்ணையூற்றி எரிக்கிற கூட்டமும் தமிழ் கூறு நல்லுலகில் இருந்து தொலைக்கிறது. திரைகடலோடிய ஈழப்பற்றாளர்களால், இன்னும் ஒரு 50-ஆண்டுகளுக்கு ஆயினும் தலையிடிதான். பொது எதிரியை இனங்காண வேண்டாமோ? ஏன் இப்படி அலுத்துக் கொள்ளவேண்டும்.? இலங்கையில் யுத்தம் முடிந்தபோதிலும் வடக்கு-கிழக்கில் மட்டுமின்றி நாடு பூராவிலும் இராணுவம் துப்பாக்கி சமேதரராய் வீதியோரங்களில் நின்றுகொண்டிருக்கிறார்கள். யுத்தத்தைச் சொல்லி பிழைப்பு நடாத்த இடமற்றுப் போன நிலையில் மக்களின் வயிற்றிலடிக்கும் பொருளாதார நடைமுறையைத் தொடர்ந்து முன்னெடுக்கின்றபோது, மக்கள் கிழர்ந்தெழலாம் என உணர்ந்தே இலங்கை அரசு நாட்டைத் தொடர்ந்து இராணுவ மயப்படுத்தி வைத்திருக்கிறது. இராணுவத்திற்காக வரவு-செலவுத் திட்டத்தில் தொடர்ந்தும் முன்னுரிமை . இது சொந்த மக்களுக்கு எதிராக என்று உணர இடம் ஏற்படக்கூடாது. அதற்கு உதவுகிறவர்கள் நாடுகடந்த ஈழ வெங்காயங்கள். இலங்கையில் புலியை அழித்து விட்ட போதிலும் உலகெங்கும் இருக்கிற புலிக்கு எதிராக போராடவேணடியிருக்கிறது என இலங்கை அரசின் பிரதிநிதிகளால் பேசமுடிகிறது. ஆக புலி இருந்தம் கெடுதி, இறந்தும் கெடுதி. வடகிழக்கு பிராந்திய மக்களது தலைவிதியை, நாடுகடந்த ஈழம் என்கின்ற மேலைநாட்டு கனவான்கள் நெருக்கடிக்கு உள்ளாக்குவது ஒன்றும் புதிய அனுபவம் அல்ல. எல்லாம் பழக்கப்பட்ட பழைய பல்லவிதான். முன்னர் இலங்கைக்குள் அடங்கியது, உலகம் கிராமமாகி விட்ட உலகமயமாதலில், இன்று முழு உலகு சார்ந்துள்ளது. முன்னர் கொழும்பு வாழ் தமிழர்களது (குறிப்பாக யாழ்ப்பாணத்திலிருந்து வந்து கொழும்பில் நிரந்தர வாசிகளான முதலாளிகளதும், உயரதிகாரிகள் மற்றும் உயர் மத்தியதர வர்க்கத்தினரதும்) பகடைக்காய்களாகவே வட-கிழக்கு தமிழ்மக்கள் பயன்படுத்தப்பட்டார்கள். ஈழத் தமிழ்த் தேசியத் தலைவர்கள் மண்சார்ந்த பிரச்சினைகளைப் பேசுவது இழிவானது எனக்காட்டி தமிழ் உரிமை என மகத்தான வாய்ச்சவடால்களைப் பேசிக்கொண்டு கொழும்புத் தமிழர்களது நலன்களைத் காத்து விருத்திசெய்து வந்தனர். இன்று அந்த ஆண்ட பரம்பரை புலம் பெயர்ந்துள்ளது. அவ்வளவே! பிரச்சனை, மண்ணில் வாழும் மக்கள் எவருக்காகவோ, தொடர்ந்து பகடைக்காய்கள் ஆவதா? அந்நியர் நலன்களுக்காக நாம் இனியும் அடிபட்டு மாள்வதா? அவர்களது கெட்டித்தனம், தங்களது கொண்டாட்டங்களுக்கு எங்களை இரையாக்க முடிகிறது என்பது, நாம் தொடர்ந்துமே புத்திகெட்டு பேதலிக்க வேண்டுமா? எங்களை அடக்கி கொட்டமடிக்கிற ஆண்டபரம்பரையின் நலனுக்காக எங்களைப் போலவே உழைத்து ஓட்டாண்டியாகிற சிங்கள-முஸலிம் மக்களை இனியும் எதிரிகளாகப் பார்க்க வேண்டுமா? சிங்கள அரசு தமிழ்ப் புலிப் பூச்சாண்டியைக் காட்டி உங்கள் வயிற்றிலும் அல்லவா அடிக்கிறது என உழைக்கும் சிங்கள மக்களுக்கு எப்படி உணர்த்தப் போகிறோம்? எதிரி யார்? நண்பன் யார்? என அறிய முயலாமல், ஊடக மோசடிக்கு ஆட்பட்டு இன்னமும் இருளில் மூழ்கப் போகிறோமா? தமிழ்-முஸ்லிம்-சிங்கள உழைக்கும் மக்களுக்கான ஊடக மார்க்கம் கண்டடைவோமா?. கேள்விகள் ஆயிரம்-தேடுவோம்.
ஒன்றிய அரசின் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் போட்டித் தேர்வு: இந்த ஆண்டு 20,000-க்கும் மேற்பட்ட காலி பணியிடங்களுக்கு அறிவிப்பு | Dinakaran × × முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾ இன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன் மாவட்டம் ▾ சென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி படங்கள் அறிவியல் ஸ்பெஷல் கோவை, காருண்யா பல்கலைக்கழகம், காருண்யா, ஒன்றிய அரசு, கோவை, காருண்யா பல்கலைக்கழகம், காருண்யா, ஒன்றிய அரசு, முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾ இன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன் மாவட்டம் ▾ சென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி படங்கள் அறிவியல் ஸ்பெஷல் கோவை, காருண்யா பல்கலைக்கழகம், காருண்யா, ஒன்றிய அரசு, கோவை, காருண்யா பல்கலைக்கழகம், காருண்யா, ஒன்றிய அரசு, முக்கிய செய்தி சென்னை ஒன்றிய அரசின் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் போட்டித் தேர்வு: இந்த ஆண்டு 20,000-க்கும் மேற்பட்ட காலி பணியிடங்களுக்கு அறிவிப்பு 08:35 pm Oct 05, 2022 | dotcom@dinakaran.com(Editor) யூனியன் அரசு சென்னை: ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (Staff Selection Commission) ஆண்டுதோறும் ஒன்றிய அரசின் துறைகளுக்கு தகுதி வாய்ந்த பணியாளர்களை பிரிவு B மற்றும் C பணிகளுக்கு போட்டித் தேர்வுகள் நடத்தி பணியமர்த்துகிறது. இந்த ஆண்டு 20,000-க்கும் மேற்பட்ட காலி பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பெரும்பாலான B பிரிவு பணிகளுக்கு பட்டப்படிப்பு முடித்த 20 முதல் 30 வயதிற்கு உட்பட்ட இளைஞர்கள் Combined Graduate Level Examination (CGLE) போட்டித் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இவற்றில் உதவி பிரிவு அலுவலர் (Assistant Section Officer) பணியிடங்கள் ஒன்றிய அரசின் தலைமைச் செயலகம், மத்திய புலனாய்வுத் துறை, இரயில்வே துறை, வெளியுறவுத்துறை, பாதுகாப்புத் துறை, தலைமை அலுவலகம் ஆகியவற்றிற்கும், ஆய்வாளர் பணியிடங்கள் (Inspector) ஒன்றிய அரசின் வருவாய் துறைகளான Central Board of Direct Taxes, Central Board of In Direct Taxes & Customs, Directorate of Enforcement, Central Bureau of Narcotics ஆகியவற்றிலும் மற்றும் உதவியாளர், கண்காணிப்பாளர் (Assistant Superintendent) பணியிடங்கள் ஒன்றிய அரசின் அனைத்துத் துறைகளுக்கும் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். மேலும் C பிரிவு பணிகள் 12ஆம் வகுப்பு முடித்த 18 முதல் 27 வயதிற்குட்பட்ட இளைஞர்கள் Combined Higher Secondary Level (CHSL) தேர்வு மூலம் ஒன்றிய அரசின் அனைத்துத் துறைகளுக்கும் இளநிலை உதவியாளர் மற்றும் உதவியாளர் பணியிடங்களுக்கு (Lower Division Clerks) தேர்ந்தெடுக்கப்படுவார்கள். மேலும், இப்பொதுப்பணிகள் தவிர Junior Engineer தேர்வு, Stenographer தேர்வு, Sub Inspector in Delhi Police, Central Armed Police Force (CAPF) and Central Industrial Security Force (CIF) தேர்வுகளும் ஆண்டுதோறும் நடைபெறுகிறது. மேற்கண்ட தேர்வுகளுக்கு நிலை 1-ல் பொதுவான போட்டித் தேர்வுகளுக்குரிய பாடத்திட்டங்களான General Intelligence and Reasoning, General Awareness, Quantitative Aptitude, English Comprehension பிரிவுகளிலிருந்துதான் வினாக்கள் கேட்கப்படுகிறது. நிலை 2-ல் Mathematics Abilities, Reasoning and General Intelligence, English, General Awareness and Computer Knowledge மற்றும் General studies பாடப் பிரிவுகளிலிருந்தும் வினாக்கள் கேட்கப்படுகிறது. இப்பாடப் பிரிவுகள் போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள் அனைவரும் அறிந்த ஒன்றே! எனவே தமிழ்நாடு மாணவர்கள் ஒன்றிய அரசின் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் போட்டித் தேர்வுகளில் பெருமளவு பங்கேற்று வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கில், மனிதவள மேலாண்மைத் துறை மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் ஆகிய துறைகள் இணைந்து, இத்தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கும் அனுபவம் மிக்க வல்லுநர்களை கொண்டு, ஒரு நாள் கருத்தரங்கம் வரும் ஞாயிற்றுக்கிழமை 09.10.2022 அன்று சென்னை, கோட்டூர்புரத்தில் அமைந்துள்ள அண்ணா நூற்றாண்டு நூலகம் அரங்கில் காலை 10.00 மணி முதல் நடைபெறும். அரசு நடத்தும் இப்பயிற்சி முகாமில் போட்டித் தேர்வுகளில் ஆர்வமுள்ள இளைஞர்கள் கலந்துக் கொள்ளலாம். நேரில் வர இயலாத மாணவர்கள் பயனடையும் வகையில் இந்நிகழ்ச்சி முழுவதுமாக இணையதளத்திலும், அரசு கேபிள் டிவியிலும் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் மற்றும் சமூக ஊடகங்களிலும் பதிவேற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. Tags : Union Government , Competitive Exam Conducted by Union Government Staff Selection Commission: Notification for 20,000+ Vacancies This Year More முக்கிய செய்தி முதல்வராக பதவியேற்ற பின் முதன்முறையாக ரயில் மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை தென்காசி பயணம்: மதுரையில் அம்பேத்கர் சிலையை திறந்து வைக்கிறார் 09:58 pm 06 Dec, 2022 தமிழகத்தில் உள்ள மதுக்கடைகளில் கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்ற 852 டாஸ்மாக் பணியாளர்கள் சஸ்பெண்ட்: அமைச்சர் தகவல் 09:21 pm 06 Dec, 2022 திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா: பொதுமக்கள் வசதிக்காக 2700 சிறப்பு பேருந்துகள் இயக்கம்; அமைச்சர் சிவசங்கர் தகவல் 07:50 pm 06 Dec, 2022 அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பான மேல்முறையீட்டு வழக்கை டிசம்பர் 12-ம் தேதிக்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவு . 07:01 pm 06 Dec, 2022 திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழா: அரோகரா’ முழக்கம் விண்ணை பிளக்க 2,668 அடி உயர மலை மீது மகாதீபம் ஏற்றம் 06:16 pm 06 Dec, 2022 ராஜஸ்தானில் இந்திய ஒற்றுமை நடைபயணம்: மோடி என கூச்சலிட்டு வெறுப்பேற்றிய பாஜக தொண்டர்கள்.. பறக்கும் முத்தம் கொடுத்து அன்பை வெளிப்படுத்திய ராகுல் காந்தி..!! 05:22 pm 06 Dec, 2022 சென்னை மெட்ரோ இரயில் இரண்டாம் கட்டம் பணி நிறைவின்போது ஓட்டுநர் இல்லாத தானியங்கி மெட்ரோ இரயில் இயக்கம் 04:43 pm 06 Dec, 2022 சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி: இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை ரூ.5 வரை குறைக்கப்பட வாய்ப்பு 04:27 pm 06 Dec, 2022 மூளை வளர்ச்சி குறைபாடு உடைய 33 வார கருவை கலைக்க டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு.. 04:03 pm 06 Dec, 2022 மாற்றுத்திறனாளிகளின் உதவித்தொகை ரூ.1,500ஆக உயர்வு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்..!!
''இல்லை. ஆனா, 'நய்யாண்டி’ டீம்கூட ஏன் வொர்க் பண்ணோம்னு ரொம்பவே ஃபீல் பண்றேன்!'' - 'ஒதுங்கிச் செல்பவள் அல்ல; எகிறி அடிக்கும் ஏஞ்சல் நான்’ என்று ஒவ்வொரு வார்த்தையிலும் உணர்த்துகிறார் நஸ்ரியா. 'நய்யாண்டி’ தொப்புள், ஜெய்யுடன் காதல், ஜீவா படத்தில் இருந்து நீக்கம்... என நஸ்ரியாவைச் சுற்றி எப்போதும் இடி, மின்னல், புயல்தான். ஆனால், ''எப்பவுமே நான் இப்படித்தான்'' என சிரிக்கிறார் நஸ். ''நீங்க பரபரப்பு கிளப்பின அளவுக்கு 'நய்யாண்டி’ படத்தில் எந்தக் காட்சிகளும் இல்லையே... எதற்கு அந்த பப்ளிசிட்டி?'' ''அந்தப் படத்தில் நடிக்கிறதுக்கு முன்னாடியே, 'இப்படில்லாம் நடிக்க மாட்டேன்’னு தெளிவா சொல்லிட்டேன். அதுக்கு அவங்களும் ஓ.கே. சொன்ன பிறகுதான் அக்ரிமென்ட் சைன் பண்ணினேன். என் தோழிகள்தான் 'நய்யாண்டி’ டிரெய்லர் பார்த்துட்டு 'இந்த மாதிரி ஒரு சீன் இருக்கு’னு சொன்னாங்க. நான் டைரக்டர் சற்குணத்துக்கிட்ட, 'அந்த சீன்ல நான் நடிக்கவே இல்லையே! படம் ப்ரிவியூ பார்க்க முடியுமா?’னு கேட்டேன். 'நீ வரலை... அதனால டூப் வெச்சு எடுத்துட்டோம். படத்தை முன்னாடியே காட்ட முடியாது’னு சொன்னார். அந்த ஈகோதான் பிரச்னைக்குக் காரணம். சினிமாவில் பணம் முக்கியம்தான். ஆனா, அதைவிட நம்பிக்கை ரொம்ப முக்கியம். 'நய்யாண்டி’யில எனக்கு நடந்தது நம்பிக்கை மோசடி. அதைப் பத்தி இனிமேல் பேசி எந்தப் பயனும் இல்லை!'' இந்தப் படத்தை 3Dயில் பார்க்க, இங்கே க்ளிக் செய்யவும் ''படமும் நல்ல ரிசல்ட் கொடுக்கலையே?!'' ''இந்த மாதிரி சீட்டிங் இல்லாமப் பண்ணியிருந்தா, நல்லா வந்திருக்குமோ என்னவோ!'' '''தமிழ் சினிமாக்களில் நஸ்ரியாவை கமிட் பண்ண யோசிக்கிறாங்க’, 'ஜீவா நடிக்கும் படத்தில் இருந்து விலக்கிட்டாங்க’னு உங்களைப் பற்றி பரவும் செய்திகள் உண்மையா?'' ''எல்லாம் வதந்திகள். இப்பவும் தமிழ் சினிமாவில் நிறையப் பேர், 'என் சப்போர்ட் உனக்குத்தான்’னு சொல்றாங்க. நிறைய தமிழ் படங்களில் நடிக்கக் கேட்டு வர்றாங்க. ஆனா, எல்லாமே 'ராஜா ராணி’ பட கேரக்டரோட ஜெராக்ஸ். அதான் யோசிக்கிறேன். இன்னொரு விஷயம், ஜீவா படத்தில் நான் நடிக்கிறேன்!'' '' 'நான் ஒரு மலையாளியைத்தான் கல்யாணம் பண்ணிப்பேன்’னு லட்சுமி மேனன் சொல்றாங்க. நீங்க 'நய்யாண்டி’ விவகாரத்தில் அதிரடி பண்ணிட்டீங்க. கேரள சேச்சிகள் அந்த அளவுக்கு ஸ்ட்ரிக்ட்டா... இல்லை, தமிழ்நாட்டில் மட்டும் இப்படிக் கோபப்படுவீங்களா?'' ''கேரளாவில் எதுவா இருந்தாலும் முகத்துக்கு நேரா சொல்லிடுவோம். சும்மா சும்மா வெட்கப்பட்டுட்டு இருக்க மாட்டோம். மத்தவங்களைப் பத்தி வம்பு பேச மாட்டோம். கேரளப் பொண்ணுங்கனு இல்லை... எல்லாப் பொண்ணுங்களும் கண்டிப்பா ஃபாலோ பண்ணவேண்டிய நல்ல விஷயம் இது!'' ''இவ்வளவு போல்டா இருக்கீங்க... ஜெய்க்கும் உங்களுக்கும் காதல்னு உலவும் வதந்தி பத்தியும் உண்மை சொல்லுங்களேன்!''’ ''அவரை லவ் பண்ணா... அதைக் கண்டிப்பா சொல்லிருவேன். ஆனா, இல்லையே... என்ன பண்ண? ஜெய், என் ஃப்ரெண்ட். என் வீட்ல எல்லாருக்கும் நல்ல அறிமுகம். அவ்ளோதான்!''
‏و حَدَّثَنَا ‏ ‏إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏عَبْدُ الْوَهَّابِ الثَّقَفِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏خَالِدٌ وَهُوَ الْحَذَّاءُ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي قِلَابَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي الْمُهَلَّبِ ‏ ‏عَنْ ‏ ‏عِمْرَانَ بْنِ الْحُصَيْنِ ‏ ‏قَالَ ‏سَلَّمَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فِي ثَلَاثِ رَكَعَاتٍ مِنْ الْعَصْرِ ثُمَّ قَامَ فَدَخَلَ الْحُجْرَةَ فَقَامَ رَجُلٌ بَسِيطُ الْيَدَيْنِ فَقَالَ أَقُصِرَتْ الصَّلَاةُ يَا رَسُولَ اللَّهِ فَخَرَجَ مُغْضَبًا فَصَلَّى الرَّكْعَةَ الَّتِي كَانَ تَرَكَ ثُمَّ سَلَّمَ ثُمَّ سَجَدَ سَجْدَتَيْ السَّهْوِ ثُمَّ سَلَّمَ அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (ஓர்) அஸ்ருத் தொழுகையில் மூன்று ரக்அத் முடிந்ததும் ஸலாம் கொடுத்துவிட்டார்கள். பிறகு எழுந்து (பள்ளியை ஒட்டியிருந்த) தமது அறைக்குள் சென்று விட்டார்கள். உடனே நீளமான கைகளை உடைய ஒருவர் (துல்யதைன்) எழுந்து, “தொழுகை குறைக்கப்பட்டுவிட்டதா அல்லாஹ்வின் தூதரே?” என்று கேட்டார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கோபத்தோடு வெளியே வந்தார்கள். விடுபட்ட ரக்அத்தைத் தொழுவித்தார்கள். பிறகு ஸலாம் கொடுத்தார்கள். பிறகு (மறதிக்கான) இரு ஸஜ்தாக்கள் செய்துவிட்டு (மீண்டும்) ஸலாம் கொடுத்தார்கள். அறிவிப்பாளர் : இம்ரான் பின் ஹுஸொய்ன் (ரலி) அத்தியாயம்: 5, பாடம்: 20, ஹதீஸ் எண்: 898 ‏و حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَزُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عُلَيَّةَ ‏ ‏قَالَ ‏ ‏زُهَيْرٌ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏إِسْمَعِيلُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏عَنْ ‏ ‏خَالِدٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي قِلَابَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي الْمُهَلَّبِ ‏ ‏عَنْ ‏ ‏عِمْرَانَ بْنِ حُصَيْنٍ ‏ ‏أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏صَلَّى الْعَصْرَ فَسَلَّمَ فِي ثَلَاثِ رَكَعَاتٍ ثُمَّ دَخَلَ مَنْزِلَهُ فَقَامَ إِلَيْهِ رَجُلٌ يُقَالُ لَهُ ‏ ‏الْخِرْبَاقُ ‏ ‏وَكَانَ فِي يَدَيْهِ طُولٌ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ فَذَكَرَ لَهُ صَنِيعَهُ وَخَرَجَ غَضْبَانَ يَجُرُّ رِدَاءَهُ حَتَّى انْتَهَى إِلَى النَّاسِ فَقَالَ أَصَدَقَ هَذَا قَالُوا نَعَمْ ‏ ‏فَصَلَّى رَكْعَةً ثُمَّ سَلَّمَ ثُمَّ سَجَدَ سَجْدَتَيْنِ ثُمَّ سَلَّمَ அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (ஓர்) அஸ்ருத் தொழுகையில் மூன்றாவது ரக்அத் முடிந்ததும் ஸலாம் கொடுத்துவிட்டு(ப் பள்ளியை ஒட்டியிருந்த) தமது இல்லத்திற்குள் நுழைந்துவிட்டார்கள். உடனே கிர்பாக் எனும் பெயருடைய, கைகள் நீளமான ஒருவர் (துல்யதைன்) எழுந்து, “அல்லாஹ்வின் தூதரே! …” என்றழைத்து அவர்கள் செய்ததை நினைவூட்டினார். அப்போது கோபத்தோடு தமது மேல்துண்டை தரையில் இழுத்தபடி வெளியேறி வந்து சேர்ந்தார்கள். பிறகு “இவர் சொல்வது உண்மைதானா?” என்று மக்களிடம் கேட்டார்கள். மக்கள் “ஆம்!” என்றனர். உடனே அவர்கள் இன்னொரு ரக்அத் தொழுவித்து ஸலாம் கொடுத்தார்கள். பிறகு (மறதிக்காக) இரு ஸஜ்தாக்கள் செய்து விட்டுப் பிறகு (மீண்டும்) ஸலாம் கொடுத்தார்கள். அறிவிப்பாளர் : இம்ரான் பின் ஹுஸொய்ன் (ரலி) அத்தியாயம்: 5, பாடம்: 20, ஹதீஸ் எண்: 897 ‏حَدَّثَنَا ‏ ‏قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏عَنْ ‏ ‏مَالِكِ بْنِ أَنَسٍ ‏ ‏عَنْ ‏ ‏دَاوُدَ بْنِ الْحُصَيْنِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي سُفْيَانَ ‏ ‏مَوْلَى ‏ ‏ابْنِ أَبِي أَحْمَدَ ‏ ‏أَنَّهُ قَالَ سَمِعْتُ ‏ ‏أَبَا هُرَيْرَةَ ‏ ‏يَقُولُا ‏ ‏صَلَّى لَنَا رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏صَلَاةَ الْعَصْرِ فَسَلَّمَ فِي رَكْعَتَيْنِ فَقَامَ ‏ ‏ذُو الْيَدَيْنِ ‏ ‏فَقَالَ أَقُصِرَتْ الصَّلَاةُ يَا رَسُولَ اللَّهِ أَمْ نَسِيتَ فَقَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏كُلُّ ذَلِكَ لَمْ يَكُنْ فَقَالَ قَدْ كَانَ بَعْضُ ذَلِكَ يَا رَسُولَ اللَّهِ فَأَقْبَلَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏عَلَى النَّاسِ فَقَالَ أَصَدَقَ ‏ ‏ذُو الْيَدَيْنِ ‏ ‏فَقَالُوا نَعَمْ يَا رَسُولَ اللَّهِ فَأَتَمَّ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏مَا بَقِيَ مِنْ الصَّلَاةِ ثُمَّ سَجَدَ سَجْدَتَيْنِ وَهُوَ جَالِسٌ بَعْدَ التَّسْلِيمِ ‏ ‏و حَدَّثَنِي ‏ ‏حَجَّاجُ بْنُ الشَّاعِرِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏هَارُونُ بْنُ إِسْمَعِيلَ الْخَزَّازُ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَلِيٌّ وَهُوَ ابْنُ الْمُبَارَكِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏يَحْيَى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو سَلَمَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو هُرَيْرَةَ ‏ ‏أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏صَلَّى رَكْعَتَيْنِ مِنْ صَلَاةِ الظُّهْرِ ثُمَّ سَلَّمَ فَأَتَاهُ رَجُلٌ مِنْ ‏ ‏بَنِي سُلَيْمٍ ‏ ‏فَقَالَ يَا رَسُولَ اللَّهِ أَقُصِرَتْ الصَّلَاةُ أَمْ نَسِيتَ وَسَاقَ الْحَدِيثَ ‏ ‏و حَدَّثَنِي ‏ ‏إِسْحَقُ بْنُ مَنْصُورٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏عُبَيْدُ اللَّهِ بْنُ مُوسَى ‏ ‏عَنْ ‏ ‏شَيْبَانَ ‏ ‏عَنْ ‏ ‏يَحْيَى ‏ ‏عَنْ ‏ ‏أَبِي سَلَمَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏ ‏قَالَ ‏ ‏بَيْنَا أَنَا أُصَلِّي مَعَ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏صَلَاةَ الظُّهْرِ سَلَّمَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏مِنْ الرَّكْعَتَيْنِ فَقَامَ رَجُلٌ مِنْ ‏ ‏بَنِي سُلَيْمٍ ‏ ‏وَاقْتَصَّ الْحَدِيثَ அல்லாஹ்வின் தூதர் (ஸல்) எங்களுக்கு அஸ்ருத் தொழுகையைத் தொழுவித்தபோது இரண்டு ரக்அத் முடிந்ததும் ஸலாம் கொடுத்து விட்டார்கள். உடனே துல்யதைன் (கிர்பாக் பின் அம்ர் ரலி) என்பார் எழுந்து, “அல்லாஹ்வின் தூதரே! தொழுகை(யின் ரக்அத் ஏதேனும்) குறைக்கப்பட்டுவிட்டதா, அல்லது தாங்கள்தாம் மறந்துவிட்டீர்களா?” என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “இவற்றில் எதுவுமே நடக்கவில்லை” என்று கூறினார்கள். துல்யதைன், “(இல்லை) இதில் ஏதோ ஒன்று நிகழ்ந்தது அல்லாஹ்வின் தூதரே!” என்று கூறினர். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எஞ்சிய ரக்அத்களையும் தொழு(வித்)துவிட்டு அந்த இருப்பிலேயே ஸலாம் கொடுத்தபின் இரு ஸஜ்தாக்கள் செய்தார்கள். அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி) குறிப்பு : அபூஸலமா (ரலி) வழி அறிவிப்பில், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) லுஹ்ருத் தொழுகையின் இரண்டு ரக்அத் முடிந்ததும் ஸலாம் கொடுத்துவிட்டார்கள். அப்போது பனூஸுலைம் குலத்தைச் சேர்ந்த ஒருவர் (துல்யதைன்) வந்து, ‘அல்லாஹ்வின் தூதரே! தொழுகை(யின் ரக்அத்) குறைக்கப்பட்டு விட்டதா, அல்லது தாங்கள் மறந்துவிட்டீர்களா?’ என்று கேட்டார் …” என்று இடம்பெற்றுள்ளது. உபைதுல்லாஹ் பின் மன்ஸூர் (ரஹ்) வழி அறிவிப்பில், “நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் லுஹ்ருத் தொழுகை தொழுது கொண்டிருந்தேன். அவர்கள் இரண்டாவது ரக்அத் முடிந்ததும் ஸலாம் கொடுத்துவிட்டார்கள். உடனே பனூஸுலைம் குலத்தைச் சேர்ந்த ஒருவர் (துல்யதைன்) எழுந்தார் …” என்று அபூஹுரைரா (ரலி) அறிவித்ததாகக் குறிப்பிடப் பட்டுள்ளது. அத்தியாயம்: 5, பாடம்: 20, ஹதீஸ் எண்: 896 ‏حَدَّثَنِي ‏ ‏عَمْرٌو النَّاقِدُ ‏ ‏وَزُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عُيَيْنَةَ ‏ ‏قَالَ ‏ ‏عَمْرٌو ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَيُّوبُ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏مُحَمَّدَ بْنَ سِيرِينَ ‏ ‏يَقُولُ سَمِعْتُ ‏ ‏أَبَا هُرَيْرَةَ ‏ ‏يَقُولُا ‏ ‏صَلَّى بِنَا رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِحْدَى صَلَاتَيْ ‏ ‏الْعَشِيِّ ‏ ‏إِمَّا الظُّهْرَ وَإِمَّا الْعَصْرَ فَسَلَّمَ فِي رَكْعَتَيْنِ ثُمَّ أَتَى ‏ ‏جِذْعًا ‏ ‏فِي قِبْلَةِ الْمَسْجِدِ فَاسْتَنَدَ إِلَيْهَا مُغْضَبًا وَفِي الْقَوْمِ ‏ ‏أَبُو بَكْرٍ ‏ ‏وَعُمَرَ ‏ ‏فَهَابَا أَنْ يَتَكَلَّمَا وَخَرَجَ سَرَعَانُ النَّاسِ قُصِرَتْ الصَّلَاةُ فَقَامَ ‏ ‏ذُو الْيَدَيْنِ ‏ ‏فَقَالَ يَا رَسُولَ اللَّهِ أَقُصِرَتْ الصَّلَاةُ أَمْ نَسِيتَ فَنَظَرَ النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَمِينًا وَشِمَالًا فَقَالَ مَا يَقُولُ ‏ ‏ذُو الْيَدَيْنِ ‏ ‏قَالُوا صَدَقَ لَمْ تُصَلِّ إِلَّا رَكْعَتَيْنِ ‏ ‏فَصَلَّى رَكْعَتَيْنِ وَسَلَّمَ ثُمَّ كَبَّرَ ثُمَّ سَجَدَ ثُمَّ كَبَّرَ فَرَفَعَ ثُمَّ كَبَّرَ وَسَجَدَ ثُمَّ كَبَّرَ وَرَفَعَ ‏قَالَ ‏ ‏وَأُخْبِرْتُ ‏ ‏عَنْ ‏ ‏عِمْرَانَ بْنِ حُصَيْنٍ ‏ ‏أَنَّهُ قَالَ ‏ ‏وَسَلَّمَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو الرَّبِيعِ الزَّهْرَانِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏حَمَّادٌ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَيُّوبُ ‏ ‏عَنْ ‏ ‏مُحَمَّدٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏ ‏قَالَ ‏ ‏صَلَّى بِنَا رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِحْدَى صَلَاتَيْ ‏ ‏الْعَشِيِّ ‏ ‏بِمَعْنَى حَدِيثِ ‏ ‏سُفْيَانَ அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்கு மதியத் தொழுகைகளில் ஒன்றான லுஹ்ரையோ அஸ்ரையோ தொழுவிக்கும்போது இரண்டு ரக்அத் முடிந்த உடனே ஸலாம் கொடுத்துவிட்டார்கள். பிறகு பள்ளிவாசலின் கிப்லாத் திசையிலிருந்த ஓர் ஈச்சமரக் கட்டைக்கு வந்து அதன்மீது சாய்ந்து கொண்டார்கள். அப்போது அவர்கள் ஏதோ கோபத்தில் இருந்தார்கள். மக்களிடையேயிருந்த அபூபக்ரு (ரலி) அவர்களும் உமர் (ரலி) அவர்களும் நபியவர்களிடம் பேச்சுக்கொடுக்க அஞ்சினர். மக்களில் தொழுதுவிட்டு விரைந்து செல்பவர்கள் தொழுகை குறைக்கப்பட்டுவிட்டது என்று புறப்பட்டுச் சென்றும்விட்டனர். இந்நிலையில் துல்யதைன் (கிர்பாக் பின் அம்ரு) என்பவர் எழுந்து, “அல்லாஹ்வின் தூதரே! தொழுகை குறைக்கப்பட்டுவிட்டதா? அல்லது தாங்கள் மறந்துவிட்டீர்களா” என்று கேட்டார். உடனே நபி (ஸல்) வலப்பக்கமும் இடப்பக்கமும் (திரும்பிப்) பார்த்தார்கள். பிறகு, “துல்யதைன் என்ன சொல்கிறார்?” என்று கேட்டார்கள். மக்கள், “(ஆம்) அவர் சொல்வது உண்மைதான். தாங்கள் இரு ரக்அத்கள்தாம் தொழுவித்தீர்கள்” என்று கூறினர். உடனே நபி (ஸல்) மேலும் இரு ரக்அத்கள் தொழுவித்துவிட்டு ஸலாம் கொடுத்தார்கள். பிறகு தக்பீர் சொல்லி மற்றொரு ஸஜ்தாச் செய்தார்கள். பிறகு தக்பீர் சொல்லிவிட்டு எழுந்துவிட்டார்கள். அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி) குறிப்பு : இம்ரான் பின் ஹுஸொய்ன் (ரலி) வழி அறிவிப்பில், “(இறுதியில்) ஸலாம் கொடுத்தார்கள்” எனக் கூடுதலாக இடம் பெற்றுள்ளது. அத்தியாயம்: 5, பாடம்: 20, ஹதீஸ் எண்: 895 ‏و حَدَّثَنِي ‏ ‏الْقَاسِمُ بْنُ زَكَرِيَّاءَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏حُسَيْنُ بْنُ عَلِيٍّ الْجُعْفِيُّ ‏ ‏عَنْ ‏ ‏زَائِدَةَ ‏ ‏عَنْ ‏ ‏سُلَيْمَانَ ‏ ‏عَنْ ‏ ‏إِبْرَاهِيمَ ‏ ‏عَنْ ‏ ‏عَلْقَمَةَ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ ‏ ‏قَالَ ‏صَلَّيْنَا مَعَ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَإِمَّا ‏ ‏زَادَ أَوْ نَقَصَ قَالَ ‏ ‏إِبْرَاهِيمُ ‏ ‏وَايْمُ اللَّهِ مَا جَاءَ ذَاكَ إِلَّا مِنْ قِبَلِي ‏ ‏قَالَ فَقُلْنَا يَا رَسُولَ اللَّهِ أَحَدَثَ فِي الصَّلَاةِ شَيْءٌ فَقَالَ لَا قَالَ فَقُلْنَا لَهُ الَّذِي صَنَعَ فَقَالَ ‏ ‏إِذَا زَادَ الرَّجُلُ أَوْ نَقَصَ فَلْيَسْجُدْ سَجْدَتَيْنِ قَالَ ثُمَّ سَجَدَ سَجْدَتَيْنِ நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் தொழுதோம். அப்போது அவர்கள் (ரக்அத்தைக்) கூட்டிவிட்டார்கள் அல்லது குறைத்துவிட்டார்கள். உடனே நாங்கள், “அல்லாஹ்வின் தூதரே! தொழுகையில் (மாற்றம்) ஏதேனும் வந்துவிட்டதா?” என்று கேட்டோம். அதற்கு அவர்கள், “இல்லை” என்றார்கள். அவர்களிடம் அவர்கள் செய்ததைத் தெரிவித்தோம். அப்போது அவர்கள், “ஒருவர் (தமது தொழுகையில்) கூட்டிவிட்டாலோ குறைத்துவிட்டாலோ அவர் இரு ஸஜ்தாக்கள் செய்துகொள்ளட்டும்” என்று சொல்லிவிட்டுப் பிறகு (தாம் மறந்துவிட்டதற்காக) இரு ஸஜ்தாக்கள் செய்தார்கள். அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) குறிப்பு: “அல்லாஹ்வின் மீதாணையாக! கூட்டினார்களா குறைத்தார்களா என்ற ஐயப்பாடு எனது தரப்பிலிருந்து ஏற்பட்டதேயாகும்” என்று அறிவிப்பாளர்களில் ஒருவரான இப்ராஹீம் பின் ஸுவைத் (ரஹ்) கூறியுள்ளார். அத்தியாயம்: 5, பாடம்: 20, ஹதீஸ் எண்: 894 ‏و حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَأَبُو كُرَيْبٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏أَبُو مُعَاوِيَةَ ‏ ‏قَالَ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏ابْنُ نُمَيْرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏حَفْصٌ ‏ ‏وَأَبُو مُعَاوِيَةَ ‏ ‏عَنْ ‏ ‏الْأَعْمَشِ ‏ ‏عَنْ ‏ ‏إِبْرَاهِيمَ ‏ ‏عَنْ ‏ ‏عَلْقَمَةَ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ ‏أَنَّ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏سَجَدَ سَجْدَتَيْ السَّهْوِ بَعْدَ السَّلَامِ وَالْكَلَامِ நபி (ஸல்) (தொழுது) ஸலாம் கொடுத்து (மக்களிடம்) பேசியபின் மறதிக்கான இரு ஸஜ்தாக்கள் செய்தார்கள். அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அத்தியாயம்: 5, பாடம்: 20, ஹதீஸ் எண்: 893 ‏و حَدَّثَنَا ‏ ‏مِنْجَابُ بْنُ الْحَارِثِ التَّمِيمِيُّ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏ابْنُ مُسْهِرٍ ‏ ‏عَنْ ‏ ‏الْأَعْمَشِ ‏ ‏عَنْ ‏ ‏إِبْرَاهِيمَ ‏ ‏عَنْ ‏ ‏عَلْقَمَةَ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ ‏ ‏قَالَ ‏ ‏صَلَّى رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَزَادَ أَوْ نَقَصَ قَالَ ‏ ‏إِبْرَاهِيمُ ‏ ‏وَالْوَهْمُ مِنِّي ‏ ‏فَقِيلَ يَا رَسُولَ اللَّهِ أَزِيدَ فِي الصَّلَاةِ شَيْءٌ فَقَالَ ‏ ‏إِنَّمَا أَنَا بَشَرٌ مِثْلُكُمْ ‏ ‏أَنْسَى كَمَا تَنْسَوْنَ فَإِذَا نَسِيَ أَحَدُكُمْ فَلْيَسْجُدْ سَجْدَتَيْنِ وَهُوَ جَالِسٌ ثُمَّ تَحَوَّلَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَسَجَدَ سَجْدَتَيْنِ அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (ஒருபோது) எங்களுக்குத் தொழுவித்தார்கள். அதில் அவர்கள் கூட்டியோ குறைத்தோ தொழவைத்துவிட்டார்கள். அப்போது, “அல்லாஹ்வின் தூதரே! தொழுகையில் (ரக்அத்) ஏதேனும் அதிகமாக்கப்பட்டுவிட்டதா?” என்று கேட்கப்பட்டது. அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “நானும் உங்களைப் போன்ற ஒரு மனிதன்தான். நீங்கள் மறப்பதைப் போன்று நானும் மறந்துவிடுகிறேன். ஆகவே, உங்களில் ஒருவர் (தொழுகையில்) மறந்துவிட்டால் அதே இருப்பில் இரு ஸஜ்தாக்கள் செய்துகொள்ளட்டும்” என்று கூறிவிட்டுப் பிறகு (கிப்லாவை நோக்கித்) திரும்பி இரு ஸஜ்தாக்கள் செய்தார்கள். அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) குறிப்பு : இந்த ஹதீஸின் அறிவிப்பாளர்களில் ஒருவரான இப்ராஹீம் பின் ஸுவைத் (ரஹ்), “(கூட்டினார்களா குறைத்தார்களா என்பதில்) ஐயம் எனக்கு ஏற்பட்டதுதான்” என்று கூறுகின்றார். அத்தியாயம்: 5, பாடம்: 20, ஹதீஸ் எண்: 892 ‏و حَدَّثَنَاه ‏ ‏عَوْنُ بْنُ سَلَّامٍ الْكُوفِيُّ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏أَبُو بَكْرٍ النَّهْشَلِيُّ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْأَسْوَدِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ ‏ ‏قَالَ ‏ ‏صَلَّى بِنَا رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏خَمْسًا فَقُلْنَا يَا رَسُولَ اللَّهِ أَزِيدَ فِي الصَّلَاةِ قَالَ وَمَا ذَاكَ قَالُوا صَلَّيْتَ خَمْسًا قَالَ ‏ ‏إِنَّمَا أَنَا بَشَرٌ مِثْلُكُمْ أَذْكُرُ كَمَا تَذْكُرُونَ ‏ ‏وَأَنْسَى كَمَا تَنْسَوْنَ ثُمَّ سَجَدَ سَجْدَتَيْ السَّهْوِ அல்லாஹ்வின் தூதர் (ஸல்) எங்களுக்கு (ஒருமுறை) ஐந்து ரக்அத்கள் தொழுவித்தார்கள். நாங்கள், “அல்லாஹ்வின் தூதரே! தொழுகையில் (ரக்அத்) ஏதேனும் அதிகமாக்கப்பட்டுவிட்டதா?” என்று கேட்டோம். அவர்கள், “என்ன விஷயம்?” என்று கேட்டார்கள். மக்கள், “தாங்கள் ஐந்து ரக்அத் தொழுவித்தீர்கள்” என்று கூறினர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “நானும் உங்களைப் போன்ற ஒரு மனிதன்தான். நீங்கள் நினைப்பதைப் போன்று நானும் நினைக்கிறேன்; நீங்கள் மறப்பதைப் போன்று நானும் மறக்கிறேன்” என்று கூறிவிட்டு பிறகு மறதிக்கான இரு ஸஜ்தாக்கள் செய்தார்கள். அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அத்தியாயம்: 5, பாடம்: 20, ஹதீஸ் எண்: 891 ‏و حَدَّثَنَا ‏ ‏ابْنُ نُمَيْرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏ابْنُ إِدْرِيسَ ‏ ‏عَنْ ‏ ‏الْحَسَنِ بْنِ عُبَيْدِ اللَّهِ ‏ ‏عَنْ ‏ ‏إِبْرَاهِيمَ ‏ ‏عَنْ ‏ ‏عَلْقَمَةَ ‏ ‏أَنَّهُ صَلَّى بِهِمْ خَمْسًا ‏ ‏ح ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَاللَّفْظُ لَهُ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏جَرِيرٌ ‏ ‏عَنْ ‏ ‏الْحَسَنِ بْنِ عُبَيْدِ اللَّهِ ‏ ‏عَنْ ‏ ‏إِبْرَاهِيمَ بْنِ سُوَيْدٍ ‏ ‏قَالَ ‏ ‏صَلَّى بِنَا ‏ ‏عَلْقَمَةُ ‏ ‏الظُّهْرَ خَمْسًا فَلَمَّا سَلَّمَ قَالَ الْقَوْمُ يَا ‏ ‏أَبَا شِبْلٍ ‏ ‏قَدْ صَلَّيْتَ خَمْسًا قَالَ كَلَّا مَا فَعَلْتُ قَالُوا بَلَى قَالَ وَكُنْتُ فِي نَاحِيَةِ الْقَوْمِ وَأَنَا غُلَامٌ فَقُلْتُ بَلَى قَدْ صَلَّيْتَ خَمْسًا قَالَ لِي ‏ ‏وَأَنْتَ أَيْضًا يَا أَعْوَرُ تَقُولُ ذَاكَ قَالَ قُلْتُ نَعَمْ قَالَ ‏ ‏فَانْفَتَلَ ‏ ‏فَسَجَدَ سَجْدَتَيْنِ ثُمَّ سَلَّمَ ‏ ‏ثُمَّ ‏ ‏قَالَ قَالَ ‏ ‏عَبْدُ اللَّهِ ‏ ‏صَلَّى بِنَا رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏خَمْسًا فَلَمَّا ‏ ‏انْفَتَلَ ‏ ‏تَوَشْوَشَ ‏ ‏الْقَوْمُ بَيْنَهُمْ فَقَالَ مَا شَأْنُكُمْ قَالُوا يَا رَسُولَ اللَّهِ هَلْ زِيدَ فِي الصَّلَاةِ قَالَ لَا قَالُوا فَإِنَّكَ قَدْ صَلَّيْتَ خَمْسًا ‏ ‏فَانْفَتَلَ ‏ ‏ثُمَّ سَجَدَ سَجْدَتَيْنِ ثُمَّ سَلَّمَ ثُمَّ قَالَ ‏ ‏إِنَّمَا أَنَا بَشَرٌ مِثْلُكُمْ ‏ ‏أَنْسَى كَمَا تَنْسَوْنَ ‏ ‏وَزَادَ ‏ ‏ابْنُ نُمَيْرٍ ‏ ‏فِي حَدِيثِهِ فَإِذَا نَسِيَ أَحَدُكُمْ فَلْيَسْجُدْ سَجْدَتَيْنِ அல்லாஹ்வின் தூதர் (ஸல்) எங்களுக்கு (ஒருபோது) ஐந்து ரக்அத்கள் தொழுவித்தார்கள். அவர்கள் தொழுகையை முடித்துத் திரும்பியபோது மக்கள் தமக்கிடையே முணுமுணுத்துக் கொண்டனர். அப்போது நபி (ஸல்), “உங்களுக்கு என்ன நேர்ந்தது?” என்று கேட்டார்கள். மக்கள், “அல்லாஹ்வின் தூதரே! தொழுகையில் (ரக்அத்) அதிகமாக்கப்பட்டு விட்டதா?” என்று கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “இல்லை” என்றார்கள். “அவ்வாறாயின் தாங்கள் ஐந்து ரக்அத்கள் தொழுவித்துவிட்டீர்களே?” என்று கூறினர். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (அப்படியே) திரும்பி இரு ஸஜ்தாக்கள் செய்துவிட்டுப் பிறகு ஸலாம் கொடுத்தார்கள். மேலும், “நானும் உங்களைப் போன்ற ஒரு மனிதன்தான். நீங்கள் மறப்பதைப் போன்று நானும் மறந்துவிடுகிறேன்” என்று கூறினார்கள். அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) குறிப்பு : இப்னு நுமைர் (ரஹ்) வழி அறிவிப்பில், “உங்களில் ஒருவர் (தமது தொழுகையில்) மறந்து விட்டால் அவர் இரு ஸஜ்தாக்கள் செய்து கொள்ளட்டும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறியதாக இடம் பெற்றுள்ளது. ஹஸனிபுனு உபைதுல்லாஹ் வழி அறிவிப்பில், “… நபி (ஸல்) மக்களுக்கு (மறதியாக) ஐந்து ரக்அத்கள் தொழுவித்துவிட்டார்கள் …” என்று இடம்பெற்றுள்ளது. அல்கமா (ரஹ்) அவர்கள் எங்களுக்கு (ஒரு) லுஹ்ருத் தொழுகையில் ஐந்து ரக்அத்கள் தொழுவித்தார்கள். அவர்கள் ஸலாம் கொடுத்தபோது (அவர்களிடம்) மக்கள், “அபூஷிப்லே! தாங்கள் ஐந்து ரக்அத் தொழுவித்து விட்டீர்கள்” என்று கூறினர். அதற்கு அல்கமா (ரஹ்), “இல்லை; அவ்வாறு நான் செய்யவில்லை” என்று மறுத்தார்கள். மக்கள், “ஆம் (அவ்வாறுதான் செய்தீர்கள்)” என்று கூறினர். அப்போது சிறுவனாயிருந்த நான் கூட்டத்தின் ஓரத்தில் இருந்து கொண்டிருந்தேன். நானும், “ஆம் தாங்கள் ஐந்து ரக்அத்கள் தொழுவித்து விட்டீர்கள்” என்று கூறினேன். அல்கமா (ரஹ்) அவர்கள் என்னைப் பார்த்து, “மாறுகண்ணா! நீயுமா இவ்வாறு கூறுகிறாய்?” என்று கேட்டார்கள். நான், “ஆம்!” என்றேன். உடனே அவர்கள் அப்படியே திரும்பி இரு ஸஜ்தாக்கள் செய்துவிட்டுப் பின்னர் ஸலாம் கொடுத்தார்கள். பிறகு அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாக மேற்கண்ட ஹதீஸைக் கூறினார்கள் என்று இப்ராஹீம் பின் சுவைத் (ரஹ்) குறிப்பிடுகிறார். அத்தியாயம்: 5, பாடம்: 20, ஹதீஸ் எண்: 890 ‏حَدَّثَنَا ‏ ‏عُبَيْدُ اللَّهِ بْنُ مُعَاذٍ الْعَنْبَرِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبِي ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏عَنْ ‏ ‏الْحَكَمِ ‏ ‏عَنْ ‏ ‏إِبْرَاهِيمَ ‏ ‏عَنْ ‏ ‏عَلْقَمَةَ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ ‏ ‏أَنَّ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏صَلَّى الظُّهْرَ خَمْسًا فَلَمَّا سَلَّمَ قِيلَ لَهُ أَزِيدَ فِي الصَّلَاةِ قَالَ وَمَا ذَاكَ قَالُوا صَلَّيْتَ خَمْسًا فَسَجَدَ سَجْدَتَيْنِ நபி (ஸல்) (ஒருபோது) லுஹ்ருத் தொழுகையில் ஐந்து ரக்அத்கள் தொழுவித்தார்கள். அவர்கள் ஸலாம் கொடுத்(துத் தொழுகையை முடித்)தபோது அவர்களிடம், “தொழுகையில் (ரக்அத்) அதிகமாக்கப்பட்டு விட்டதா?” என்று கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள், “என்ன விஷயம்?” என்று கேட்டார்கள். மக்கள், “நீங்கள் ஐந்து ரக்அத்கள் தொழுவித்தீர்கள்” என்று கூறினர். உடனே நபி (ஸல்) இரு ஸஜ்தாக்கள் செய்தார்கள். அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) மேலும் காண்பி... ↓ விரும்பும் பாடம் செல்ல… ↓ விரும்பும் பாடம் செல்ல… Select Category 43.37 நபி (ஸல்) அவர்களைக் கண்ணியப்படுத்துவதும் … (8) 43.36 நபி (ஸல்) அவர்களைப் பின்பற்ற வேண்டியது (முஸ்லிம்களின்) கட்டாயக் கடமையாகும் (1) 43.35 நபி (ஸல்) அவர்களின் அல்லாஹ்வைப் பற்றிய அறிவும் அவனைப் பற்றிய கடுமையான அச்சமும் (2) 43.34 நபி (ஸல்) அவர்களின் பெயர்கள் (3) 43.33 நபி (ஸல்) மக்காவிலும் மதீனாவிலும் எத்தனை ஆண்டுகள் வாழ்ந்தார்கள்? (8) 43.32 நபி (ஸல்) இறந்தபோது அவர்களுக்கு வயது எத்தனை? (2) 43.31 நபி (ஸல்) அவர்களின் உடலமைப்பு; நபியாக அனுப்பப்பெற்றது; அவர்களின் வயது (1) 43.30 நபி (ஸல்) உடலில் நபித்துவ முத்திரை … (3) 43.29 நபி (ஸல்) அவர்களின் தலைநரைமுடி (10) 43.28 நபி (ஸல்) அவர்களின் வெண்ணிறமும் களையான முகமும் (2) 43.27 நபி (ஸல்) அவர்களின் வாய், கண்கள், குதிகால்கள் ஆகியவை (1) 43.26 நபி (ஸல்) அவர்களது தலைமுடியின் தன்மை (3) 43.25 நபி (ஸல்) அவர்களின் உருவத் தோற்றம் … (3) 43.24 நபி (ஸல்) தமது தலைமுடியை … (1) 43.23 நபி (ஸல்) அவர்களுக்கு வேத அறிவிப்பு வரும்போது … (4) 43.22 நபி (ஸல்) அவர்களது வியர்வையின் நறுமணமும் அதன்மூலம் வளம் ஏற்பட்டதும் (3) 43.21 நபி (ஸல்) அவர்களின் மேனியில் கமழ்ந்த நறுமணம் … (3) 43.20 நபி (ஸல்) பாவங்களை விட்டு வெகு தொலைவில் விலகியிருந்தது … (3) 43.19 நபி (ஸல்), மக்களுடன் நெருங்கிப் பழகியதும் அவர்களிடமிருந்து மக்கள் வளம் பெற்றதும் (3) 43.18 மனைவியர்மீது நபி (ஸல்) காட்டிய அன்பும் … (4) 43.17 நபி (ஸல்) அவர்களின் புன்னகையும் அழகிய உறவாடலும் (1) 43.16 நபி (ஸல்) அவர்களின் நாண மிகுதி (2) 43.15 நபி (ஸல்) குழந்தைகள் மீதும் குடும்பத்தார் மீதும் காட்டிய அன்பு … (5) 43.14 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வேண்டப்பட்ட எந்த ஒன்றுக்கும் அவர்கள் “இல்லை” என்று சொன்னதேயில்லை … (5) 43.13 அல்லாஹ்வின் தூதர் (ஸல்), மக்களிலேயே மிகவும் அழகான … (5) 43.12 மக்களிலேயே நபி (ஸல்), தொடர்ந்து வீசும் (மழைக்) காற்றைவிட … (1) 43.11 நபி (ஸல்) அவர்களின் வீரமும் அறப்போருக்காக அவர்கள் முன்னே சென்றதும் (2) 43.10 உஹுதுப் போர் நாளில் நபி (ஸல்) … (2) 43.9 நம் நபி (ஸல்) அவர்களுக்கு (மறுமையில் ‘அல்கவ்ஸர்’) தடாகம் உண்டு … (20) 43.8 உயர்ந்தோன் அல்லாஹ் ஒரு சமுதாயத்தின்மீது அருள் புரிய நாடினால் … (1) 43.7 நபி (ஸல்), இறுதி இறைத் தூதர் என்பது பற்றிய குறிப்பு (4) 43.6 நபி (ஸல்), தம் சமுதாயத்தார் மீது கொண்டிருந்த பரிவும் … (4) 43.5 நபி (ஸல்), நேர்வழியுடனும் ஞானத்துடனும் அனுப்பப் பெற்றதற்கான உவமை (1) 43.4 அல்லாஹ்வையே முழுமையாக நபி (ஸல்) சார்ந்திருந்ததும் … (1) 43.3 நபி (ஸல்) அவர்களின் அற்புதங்கள் (7) 43.2 எல்லாப் படைப்புகளையும்விட நம் நபி (ஸல்) அவர்களின் சிறப்பு (1) 43.1 நபி (ஸல்) அவர்களின் தலைமுறையின் சிறப்பும் … (2) 42.4 நபி (ஸல்) கண்ட கனவு (6) 42.3 கனவுக்கு விளக்கமளித்தல் (1) 42.2 ஷைத்தான் கனவில் விளையாடியது குறித்து … (3) 42.1 கனவில் என்னைக் கண்டவர் … (4) 42.01 கனவுகள் (11) 41.2 பகடை விளையாட்டு, தடை செய்யப்பட்டதாகும் (1) 41.1 கவிதைகள் (9) 40.5 நறுமணப் பொருட்களில் மிகவும் சிறந்த கஸ்தூரியைப் பயன்படுத்துவது … (4) 40.4 ஒருவர், ‘கபுஸத் நஃப்ஸீ’ (என் மனம் அசுத்தமாகிவிட்டது) எனும் சொல்லை … (2) 40.3 ‘அப்து’ (அடிமை ஆண்), ‘அமத்து’ (அடிமைப் பெண்), ‘மவ்லா’/’ஸய்யித்’ (அடிமையின் உரிமையாளர்) ஆகிய சொற்களின் சட்டம் (3) 40.2 திராட்சையை, “கர்மு / கண்ணியம்” என்று பெயரிட்டழைப்பது … (7) 40.1 காலத்தை ஏசுவதற்குத் தடை (5) 39.41 விலங்குகளுக்கு நீர் புகட்டுவதின், உணவளிப்பதின் சிறப்பு (3) 39.40 பூனைகளைக் கொல்வதற்குத் தடை (2) 39.39 எறும்புகளைக் கொல்லத் தடை (3) 39.38 பல்லியைக் கொல்வது நல்லது (5) 39.37 பாம்பு போன்ற விஷ ஜந்துகளைக் கொல்வது (13) 39.36 தொழுநோயாளிகள் போன்றோரிடம் நெருக்கம் தவிர்ப்பது (1) 39.35 சோதிடர்களிடம் செல்வதும் சோதிடம் பார்ப்பதும் (5) 39.34 பறவை சகுனம், நற்குறி, துர்குறி பற்றிய பாடம் (11) 39.33 இல்லாத சகுனங்களும் தொற்றுநோய்களும் (6) 39.32 கொள்ளைநோய், பறவை சகுனம், சோதிடம் போன்றவை (8) 39.31 தேனூட்டு மருத்துவம் (1) 39.30 ‘தல்பீனா‘, நோயாளியின் மனத்துக்கு(ம் உடலுக்கும்) தெம்பு அளிக்கக்கூடியதாகும் (1) 39.29 கருஞ்சீரக மருத்துவம் (2) 39.28 இந்தியக் கோஷ்டக் குச்சியால் சிகிச்சையளிப்பது (2) 39.27 நோயாளிக்கு வற்புறுத்தி சிகிச்சையளிப்பது … (1) 39.26 ஒவ்வொரு நோய்க்கும் மருந்து உண்டு; (நோய்க்கு) மருத்துவம் செய்துகொள்வது விரும்பத் தக்கது (17) 39.25 தொழுகையில் மனம் அலைபாயச் செய்யும் ஷைத்தானிடமிருந்து பாதுகாப்புக் கோரல் (1) 39.24 பிரார்த்திக்கும்போது வலியுள்ள இடத்தில் கையை வைப்பது (1) 39.23 குர்ஆன் வசனங்கள் மற்றும் அல்லாஹ்வைத் துதிக்கும் சொற்களால் ஓதிப்பார்ப்பதற்கு ஊதியம் பெறலாம் (2) 39.22 இறைவனுக்கு இணை கற்பிதம் இல்லாத சொற்களால் ஓதிப்பார்பது தவறில்லை (1) 39.21 கண்ணேறு, சின்னம்மை, விஷக்கடி, (தீய)பார்வை ஆகியவற்றுக்காக ஓதிப்பார்ப்பது விரும்பத் தக்கதாகும் (12) 39.20 பாதுகாப்புக் கோரும் அத்தியாயங்களால் நோயாளிக்கு ஓதிப்பார்ப்பது … (2) 39.19 நோயாளிக்கு ஓதிப்பார்ப்பது விரும்பத் தக்கதாகும் (4) 39.18 விஷம் (1) 39.17 சூனியம் (1) 39.16 நோயும் மருத்துவமும் ஓதிப்பார்த்தலும் (4) 39.15 மூன்றாமவரின் ஒப்புதலின்றி இருவர் மட்டும் இரகசியம் பேசிக்கொள்வது தடை செய்யப்பட்டதாகும் (3) 39.14 … அந்நியப் பெண்ணை, வழிசெல்லும் ஒருவர் வாகனத்தில் அமர்த்திக்கொள்ளலாம் (2) 39.13 பெண்கள் இருக்கும் இடத்திற்கு அலிகள் செல்லத் தடை (2) 39.12 அமர்ந்திருந்த இடத்திற்கு உரியவர் (1) 39.11 அமர்ந்திருக்கும் ஒருவரை எழுப்பிவிடுவது தடை செய்யப்பட்டதாகும் (4) 39.10 அவைக்கு வருபவர், அமரும் ஒழுங்கு (1) 39.9 … கெட்ட எண்ணத்தை அகற்றுவது விரும்பத் தக்கதாகும் (2) 39.8 அந்நியப் பெண்ணிடம் … தனிமையில் இருப்பது தடை செய்யப்பட்டதாகும் (3) 39.7 … பெண்கள் வெளியே செல்லலாம் (2) 39.6 உள்ளே செல்ல அனுமதியாகக் கருதுவதற்கு … (1) 39.5 சிறாருக்கு(ப் பெரியவர்கள்) முகமன் கூறுவது விரும்பத் தக்கதாகும் (2) 39.4 வேதக்காரர்களுக்கு முந்திக்கொண்டு ஸலாம் கூறுவதற்குத் தடை (7) 39.3 ஸலாத்துக்குப் பதிலுரைப்பது முஸ்லிமுக்குக் கடமை (2) 39.2 நடைபாதைகளில் அமர்வதன் ஒழுங்குகளில் … (2) 39.1 முந்தி ஸலாம் சொல்ல வேண்டியவர்கள் (1) 38.10 இயல்பான பார்வை (1) 38.9 பிறர் வீட்டில் எட்டிப் பார்ப்பது தடை செய்யப்பட்டதாகும் (5) 38.8 “யார்?“ என்று கேட்டால் … (2) 38.7 அனுமதி கோருதல் (5) 38.6 “என் அருமை மகனே!“ (2) 38.5 குழந்தை பிறந்தவுடன் இனிப்பான பொருளை மென்று அதன் வாயிலிடுவதும் … (9) 38.4 மன்னாதி மன்னன் எனப் பெயர் சூட்டிக்கொள்வது தடை செய்யப்பட்டதாகும் (2) 38.3 அருவருப்பான பெயரை அழகான பெயராக மாற்றியமைப்பது … (6) 38.2 அருவருப்பான பெயர்கள் … (4) 38.1 … விரும்பத் தகுந்த பெயர்கள் (8) 37.35 வெறும் பெருமை (2) 37.34 மெல்லிய உடையணிந்து, பிறரைத் தன்பால் ஈர்க்கும் வண்ணம் தோள்களைச் சாய்த்து ஒயிலாக நடக்கும் பெண்கள் (1) 37.33 பெண்களின் பொய் அலங்காரங்காரங்களுக்குத் தடை (10) 37.32 நடைபாதைகளில் அமர்வதற்குத் தடையும் பாதைகளுக்குரிய உரிமைகளைப் பேணுவதும் (1) 37.31 தலை முடியில் பகுதி மழித்துவிட்டு, பகுதி மழிக்காமல் விட்டுவிடுவது வெறுக்கத் தக்கதாகும் (1) 37.30 ஸகாத் / ஜிஸ்யாவுக்கான கால்நடைகளில் சூடிட்டு அடை யாளமிடலாம் (4) 37.29 விலங்குகளின் முகத்தில் அடிப்பதும் அடையாளச் சூடிடுவதும் தடை செய்யப்பட்டவை ஆகும் (3) 37.28 ஒட்டகத்தின் கழுத்தில் (திருஷ்டிக்) கயிற்று மாலை அணிவிப்பது வெறுக்கத் தக்கதாகும் (1) 37.27 பயணத்தின்போது நாயும் (ஒலியெழுப்பும்) மணியும் வெறுக்கத் தக்கவை (2) 37.26 உயிரினங்களின் உருவப் படங்களை வரைவதும் … தடை செய்யப்பட்டவை ஆகும் (21) 37.25 (நரைமுடிக்கு) சாயமிட்டுக்கொள்வது யூதர்களுக்கு மாறு செய்வதாகும் (1) 37.24 நரைமுடியில் கருப்பு நிறச் சாயமிடுவது தடை செய்யப்பட்டதாகும் (2) 37.23 ஆண்கள் (மேனியில்) குங்குமப்பூச் சாயமிட்டுக்கொள்வதற்குத் தடை (1) 37.22 மல்லாந்து படுத்துக்கொண்டு கால்மீது காலைப் போட்டுக் கொள்வதற்கு அனுமதி (1) 37.21 மல்லாந்து படுத்துக்கொண்டு கால்மீது காலைப் போட்டுக் கொள்வதற்குத் தடை (3) 37.20 தடை செய்யப்பட்ட இரு நிலைகள் (2) 37.19 காலணிகளை அணிந்து கழற்றும் முறைகள் (3) 37.18 காலணி அல்லது அது போன்றதை அணிந்துகொள்வது விரும்பத் தக்கதாகும் (1) 37.17 மோதிரம் அணிவதற்குத் தடை செய்யப்பட்ட விரல்கள் (2) 37.16 கைச் சுண்டுவிரலில் மோதிரம் அணிவது (1) 37.15 அபிசீனியக் வெள்ளிக் குமிழ் மோதிரம் (2) 37.14 மோதிரங்களை(க் கழற்றி) எறிந்த நிகழ்வு (2) 37.13 நபி (ஸல்) அவர்களின் (முத்திரை) மோதிரம் (3) 37.12 ‘முஹம்மதுர் ரசூலுல்லாஹ்’ எனும் இலச்சினை பொறிக்கப்பட்ட வெள்ளி மோதிரம் (2) 37.11 ஆண்கள் தங்க மோதிரம் அணிவதற்குத் தடை (3) 37.10 ஆடைகளை எண்ணிப் பெருமை கொண்டு, கர்வத்தோடு நடப்பதற்குத் தடை (2) 37.9 பெருமைக்காக ஆடையைத் தரையில் படும்படி இழுத்துச் செல்வதற்குத் தடை (7) 37.8 தேவைக்கு அதிகமான விரிப்புகளும் ஆடைகளும் இருப்பது விரும்பத் தக்கதன்று (1) 37.7 படுக்கை விரிப்புகளைப் பயன்படுத்த அனுமதி (2) 37.6 ஆடையில் (எளிமை,) பணிவு காட்டுவது … (5) 37.5 பருத்தி ஆடை அணிவதன் சிறப்பு (2) 37.4 ஆண்கள் செம்மஞ்சள் நிறச் சாயமிடப்பட்ட ஆடை அணிவதற்குத் தடை (5) 37.3 தோல் உபாதைகள் இருந்தால் ஆண்கள் பட்டாடை அணியலாம் (3) 37.2 பொன் மோதிரம் மற்றும் பட்டாடை அணிவது ஆண்களுக்குத் தடை; பெண்களுக்கு அனுமதி (20) 37.1 பொன் / வெள்ளிப் பாத்திரங்களைப் பயன்படுத்துவது ஆண்களுக்கும் பெண்களுக்கும் தடை (2) 36.35 உணவைக் குறை சொல்லவேண்டாம் (2) 36.34 இறைநம்பிக்கையாளர் ஒரே குடலில் உண்பார்; இறைமறுப்பாளன் ஏழு குடல்களில் உண்பான் (5) 36.33 உணவு குறைவாக இருக்கும்போது … (4) 36.32 விருந்தினரை உபசரிப்பதும் முன்னுரிமை வழங்குவதன் சிறப்பும் (6) 36.31 வெள்ளைப் பூண்டு சாப்பிடக்கூடியதே … (2) 36.30 உணவுக் காடியின் சிறப்பும் … (4) 36.29 ‘அல்கபாஸ்’ பழங்களில் கருப்பு நிறப் பழத்தின் சிறப்பு (1) 36.28 உணவுக் காளானின் சிறப்பும் … (6) 36.27 மதீனத்துப் பேரீச்சம் பழங்களின் சிறப்பு (3) 36.26 குடும்பத்தாருக்காக … உணவுகளைச் சேமித்துவைத்தல் (2) 36.25 பலருடன் சேர்ந்து உண்பவர் … (2) 36.24 உணவு உண்பவர் அமரும் முறை; பணிவோடு அமர்வது விரும்பத் தக்கது (2) 36.23 பேரீச்சை செங்காய்களுடன் வெள்ளரிக்காயையும் சேர்த்து உண்பது (1) 36.22 விருந்தளிப்பவருக்காக விருந்தாளி பிரார்த்திப்பது … (1) 36.21 சுரைக் குழம்பு உண்ண அனுமதி … (2) 36.20 வீட்டு உரிமையாளரின் சம்மதம் கிடைக்கும் என்ற நம்பிக்கை இருந்தால் … (4) 36.19 விருந்துக்கு அழைக்கப்பட்டவரைத் தொடர்ந்து அழைக்கப்படாதவரும் வந்துவிட்டால் … (2) 36.18 உண்டு முடித்ததும் விரல்களைச் சூப்புவதும் உணவுத் தட்டை வழித்து உண்பதும் … (9) 36.17 வலப் பக்கத்திலிருந்து பரிமாறுதல் விரும்பத் தக்கதாகும் (4) 36.16 பாத்திரத்தினுள் (பருகும்போது) வெளியே மூன்று முறை மூச்சு விட்டுப் பருகுவது விரும்பத் தக்கதாகும் (3) 36.15 ஸம்ஸம் நீரை நின்றுகொண்டு அருந்துவது (4) 36.14 நின்றுகொண்டு அருந்துவது வெறுக்கத் தக்கதாகும் (4) 36.13 உண்பது, அருந்துவது ஆகியவற்றின் ஒழுங்குகளும் விதிமுறைகளும் (10) 36.12 இரவு நேர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் (6) 36.11 பழச்சாறுகளைப் பருகுவதும் பாத்திரங்களை மூடிவைப்பதும் (3) 36.10 (ஆட்டுப்) பால் அருந்த அனுமதி (3) 36.9 பழச்சாறுகள் (புளித்துக்) கெட்டியாகி, போதையேறாதவரை அனுமதிக்கப்பட்டவையாகும் (10) 36.8 குடிகாரன் பாவமன்னிப்புக் கோரி திருந்தாவிட்டால் … (3) 36.7 போதை தரும் ஒவ்வொரு பானமும் தடை செய்யப்பட்ட மதுவாகும் (9) 36.6 பானங்கள்-பாத்திரங்கள், தடை-தடை நீக்கம் (36) 36.5 பேரீச்சம் பழம், உலர் திராட்சைக் கலவை ஊறல் வெறுக்கத் தக்கதாகும் (14) 36.4 ‘மதுபானம்’ என்று சொல்லப்படுபவை (4) 36.3 மதுவை மருந்தாகப் பயன்படுத்துவதற்குத் தடை (1) 36.2 மதுபானத்தை (சமையல்) காடியாக மாற்றிப் பயன்படுத்துவதற்குத் தடை (1) 36.1 போதையூட்டும் ஒவ்வொன்றும் மதுவாகும் (9) 35.8 அல்லாஹ் அல்லாதவரின் பெயர் கூறிப் பிராணிகளை அறுப்பதற்குத் தடை (3) 35.7 தலைமுடியை, நகங்களைக் களைவதற்குத் தடை (5) 35.6 அல் ஃபரஉ வல் அத்தீரா (1) 35.5 பலி இறைச்சியை எவ்வளவு காலம் சேமித்து வைக்கலாம்? (14) 35.4 பல், நகம், எலும்பு ஆகியவை தவிர எந்தப் பொருளாலும் பிராணியை அறுக்க அனுமதி (1) 35.3 தாமே அறுப்பதும் அல்லாஹ்வின் பெயரோடு தக்பீர் கூறுவதும் விரும்பத் தக்கவை ஆகும் (3) 35.2 பலிப் பிராணியின் வயது (4) 35.1 பலி கொடுக்கப்படும் நேரம் (10) 34.12 விலங்குகளைக் கட்டிவைத்து அம்பெய்து கொல்வதற்குத் தடை (5) 34.11 … கத்தியைக் கூர்மையாகத் தீட்டிக் கொண்டு வதையற்ற முறையைக் கையாளக் கட்டளை (1) 34.10 … பயிற்சிகளை மேற்கொள்வது அனுமதிக்கப் பட்டதாகும். கல்சுண்டு விளையாட்டு வெறுக்கப்பட்டதாகும் (2) 34.9 முயல் கறி உண்ணத் தக்கது (1) 34.8 வெட்டுக்கிளி உண்ணத் தக்கது (1) 34.7 உடும்புக் கறி உண்ணத் தக்கது (13) 34.6 குதிரைகளின் இறைச்சியை உண்பது கூடுமா? (3) 34.5 நாட்டுக் கழுதைகளின் இறைச்சியை உண்பதற்குத் தடை (14) 34.4 கடல்வாழ் உயிரினங்களில் செத்தவற்றை உண்பதற்கு அனுமதி (5) 34.3 உண்பதற்குத் தடை செய்யப்பட்ட விலங்குகளும் பறவைகளும் (6) 34.2 வேட்டையாடிய பிராணி மறைந்து, பிறகு கிடைத்தால் … (2) 34.1 பயிற்சியளிக்கப்பட்ட நாய்கள் மூலம் வேட்டையாடுதல் (8) 33.56 பயணத்திலிருந்து திரும்புகின்றவர் … (5) 33.55 பயணம் என்பது துன்பத்தின் ஒரு பகுதியாகும் … (1) 33.54 பயணத்தில் கால்நடைகளின் நலன் காப்பதும் … (2) 33.53 “என் சமுதாயத்தாரில் ஒரு குழுவினர் எப்போதுமே உண்மைக்கு ஆதரவாளர்களாக இருப்பார்கள் … (8) 33.52 அம்பெய்வதன் சிறப்பும் … (3) 33.51 உயிர்த் தியாகிகள் பற்றிய விளக்கம் (3) 33.50 அல்லாஹ்வின் பாதையில் எல்லைக் காவல் புரிவதன் சிறப்பு (1) 33.49 கடல்வழிப் போரின் சிறப்பு (2) 33.48 போரில் கலந்துகொள்ள முடியாமல் போனவருக்கும் நன்மை … (1) 33.47 அறப்போரில் கலந்துகொள்ளாமல் இறந்துபோனவர் … (1) 33.46 அல்லாஹ்வின் பாதையில் வீரமரணத்தை வேண்டுவது விரும்பத் தக்கதாகும் (2) 33.45 “எண்ணங்களைப் பொருத்தே செயல்கள் அமைகின்றன” எனும் நபிமொழி … (1) 33.44 … போர்ச் செல்வங்களைப் பெற்றோரும் பெறாதோரும் … (2) 33.43 பிறர் பார்ப்பதற்காகவும் விளம்பரத்திற்காகவும் போரிட்டவர் … (1) 33.42 அல்லாஹ்வின் பாதையில் போரிட்டவர் … (3) 33.41 உயிர்த் தியாகிக்குச் சொர்க்கம் நிச்சயம் (6) 33.40 தகுந்த காரணம் உள்ளவர்களுக்கு அறப்போரில் கலந்து கொள்வது கடமை இல்லை (2) 33.39 அறப்போர் வீரர்களின் துணைவியருடைய கண்ணியம் … (1) 33.38 அறப்போர் வீரருக்கு வாகனம் மற்றும் பிற உதவிகள் … (6) 33.37 அல்லாஹ்வின் பாதையில் தர்மம் செய்வதன் சிறப்பும் அதற்குக் கிடைக்கும் பன்மடங்கு நன்மைகளும் (1) 33.36 இறைமறுப்பாளனை (போரில்) கொன்ற பின்னர் (மார்க்கத்தில்) உறுதியோடு இருத்தல் (2) 33.35 இரு போராளிகளில் ஒருவர் மற்றவரைக் கொன்று, பின் அவ்விருவருமே சொர்க்கத்தில் … (2) 33.34 அறப்போர் மற்றும் எல்லைக் காவலின் சிறப்பு (3) 33.33 வீரமணம் அடைந்தவர்களின் உயிர்கள் … (1) 33.32 அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டவரின் கடனைத் தவிர அனைத்துப் பாவங்களும் மன்னிக்கப்படுகின்றன (3) 33.31 அல்லாஹ் (தனது பாதையில்) அறப்போர் புரிந்தவர்களுக்காகச் சொர்க்கத்தில் வைத்துள்ள உயர்நிலைகள் (1) 33.30 அல்லாஹ்வின் பாதையில் காலையாயினும் மாலையாயினும் (போரிடச்) செல்வதன் சிறப்பு (5) 33.29 அல்லாஹ்வின் பாதையில் வீரமரணம் அடைவதன் சிறப்பு (4) 33.28 அல்லாஹ்வின் பாதையில் புறப்படுதலின், அறப்போரில் ஈடுபடுதலின் சிறப்பு (4) 33.27 குதிரையின் தன்மைகளில் விரும்பத் தகாதவை (1) 33.26 மறுமை நாள்வரை நெற்றிகளில் நன்மை பிணைக்கப்பட்டிருக்கும் குதிரைகள் (5) 33.25 குதிரைப் பந்தயமும் அதற்காகக் குதிரையை மெலிய வைப்பதும் (1) 33.24 குர்ஆன் பிரதிகளை இறைமறுப்பாளர்களின் நாட்டுக்கு எடுத்துச் செல்வது … (3) 33.23 பருவ வயது பற்றிய விளக்கம் (1) 33.22 இயன்றவரை கட்டுப்பட்டு நடப்பதாக உறுதிமொழி அளித்தல் (1) 33.21 பெண்களிடம் உறுதிப் பிரமாணம் (பைஅத்) வாங்கும் முறை (2) 33.20 மக்கா வெற்றிக்குப் பின் ஹிஜ்ரத் கிடையாது (5) 33.19 நாடு துறந்து (ஹிஜ்ரத்) சென்றவர் மீண்டும் தமது தாயகத்தில் குடியேறுவதற்குத் தடை (1) 33.18 ஆட்சித் தலைவர் படையினரிடம் உறுதி மொழி பெற்றுக்கொள்வது … (13) 33.17 ஆட்சித் தலைவர்களில் நல்லவர்களும் தீயவர்களும் (2) 33.16 ஆட்சித் தலைவர்கள் மார்க்கத்திற்கு முரணாகச் செயல்படும்போது … (2) 33.15 இரு ஆட்சியாளர்களுக்கு வாக்களிப்புப் பிரமாண நெருக்கடி ஏற்பட்டால் … (1) 33.14 முஸ்லிம்கள் (ஒரே தலைமையின் கீழ்) ஒன்றுபட்டிருக்கும்போது … (2) 33.13 குழப்பங்கள் தோன்றும்போது கூட்டமைப்போடு சேர்ந்திருப்பது கடமையாகும் … (8) 33.12 உரிமைகள் மறுக்கப்பட்டாலும் தலைமைக்குக் கட்டுப்படுதல் (1) 33.11 அதிகாரத்திலிருப்போர் அநீதியிழைக்கும்போதும் தகுதியற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கும்போதும் … (1) 33.10 கலீஃபாக்களில் முதலாமவருக்கு உறுதிப் பிரமாணம் (பைஅத்) அளிப்பது கடமையாகும் (3) 33.9 ஆட்சித் தலைவர் கேடயம் போன்றவர் … (1) 33.8 பாவமற்றவற்றில் தலைவர்களுக்குக் கட்டுப்படுவது கடமையாகும். பாவமானவற்றில் கட்டுப்படுவதற்குத் தடை (11) 33.7 அதிகாரிகளுக்கு அன்பளிப்புகள் வழங்குவதற்குத் தடை (3) 33.6 பொதுச் சொத்துகளில் மோசடி செய்வது வன்மையாகத் தடை செய்யப்பட்டது (1) 33.5 நேர்மையான ஆட்சியாளரின் சிறப்பும் … (6) 33.4 தேவையின்றி ஆட்சிப் பொறுப்பை ஏற்பது விரும்பத் தக்கதன்று (2) 33.3 ஆட்சியதிகாரத்தைத் தேடி அலைவதற்கும் அதன் மீது ஆசை கொள்வதற்கும் தடை (3) 33.2 ஆட்சித் தலைவரை நியமிக்கலாம்; நியமிக்காமல் விடலாம் (2) 33.1 ஆட்சியதிகாரம் குறைஷியரிடையேதான் இருக்கும் (10) 32.51 அறப்போர்களில் இறைமறுப்பாளரிடம் உதவி கோருவது … (1) 32.50 ‘தாத்துர் ரிக்காஉ’ (ஒட்டுத் துணிப்) போர் (1) 32.49 நபி (ஸல்) கலந்துகொண்ட அறப்போர்களின் எண்ணிக்கை (6) 32.48 அறப்போரில் கலந்துகொண்ட பெண்களுக்கு … (4) 32.47 அறப்போரில் ஆண்களுடன் பெண்களும் கலந்துகொள்வது (2) 32.46 “அவனே உங்களைத் தாக்காமல் அவர்கள் கைகளை தடுத்(து வைத்)தான்” எனும் (48:24) வசனம் (2) 32.45 ‘தூ கரத்’ போரும் பிற போர்களும் (2) 32.44 அஹ்ஸாப் போர் (அ) அகழ்ப் போர் (6) 32.43 கைபர் போர் (5) 32.42 கஅப் பின் அல்அஷ்ரஃப் கொல்லப்படுதல் (1) 32.41 அபூஜஹ்லு கொல்லப்படுதல் (1) 32.40 நபி (ஸல்) (மக்களை) இறைவன்பால் அழைத்து, துன்பங்களைப் பொறுத்துக் கொண்டது (2) 32.39 நபி (ஸல்) எதிர்கொண்ட துன்பங்கள் (7) 32.38 இறைதூதரால் கொல்லப்பட்டவன் மீது இறைவனின் கோபம் (1) 32.37 உஹுதுப் போர் (3) 32.36 கூட்டுப் படையினருக்கு எதிரான அகழ்ப் போர் (2) 32.35 வாக்குறுதியை(ப் போரிலும்) நிறைவேற்றுவது (1) 32.34 ஹுதைபிய்யா சமாதான உடன்படிக்கை’ (7) 32.33 மக்கா வெற்றிக்குப் பின் … (1) 32.32 கஅபாவைச் சுற்றிலும் இருந்த சிலைகளை அப்புறப்படுத்தியது (1) 32.31 மக்கா வெற்றி (2) 32.30 பத்ருப் போர் (1) 32.29 தாயிஃப் போர் (1) 32.28 ஹுனைன் போரில் … (5) 32.27 இறைமறுப்பு அரசர்களுக்கு நபி (ஸல்) எழுதிய கடிதங்கள் (1) 32.26 அழைப்பு விடுத்து ஹெராக்ளியஸ் மன்னருக்கு நபி (ஸல்) எழுதிய கடிதம் (1) 32.25 போரில் கிடைத்த உணவை, பகை நாட்டில் இருக்கும் போதே உண்ணலாம் (2) 32.24 முஹாஜிர்கள் தன்னிறைவு அடைந்தபோது … (2) 32.23 செயல்களுள் முன்னுரிமை அளிக்கத் தக்கது (1) 32.22 ஒப்பந்தத்தை முறித்துவிட்ட (பகை)வர்களுடன் போர் செய்யலாம் (3) 32.21 யூத கிறித்தவர்கள் அரபிய தீபகற்பத்திலிருந்து வெளியேற்றப்படுவது (1) 32.20 யூதர்களை ஹிஜாஸ் பகுதியிலிருந்து நாடு கடத்தியது (2) 32.19 கைதியை என்னென்னவெல்லாம் செய்யலாம் (1) 32.18 பத்ருப் போரில் வானவர்களின் உதவியும் … (1) 32.17 போர் வெற்றிச் செல்வத்தைப் பங்கிடும் முறை (1) 32.16 இறைத்தூதர்களுக்கு யாரும் (சொத்தில்) வாரிசாக முடியாது (5) 32.15 போர் செய்யாமல் கிடைத்த செல்வங்களின் சட்டம் (3) 32.14 … போர்க் கைதிகளைப் பரிமாறிக்கொள்வது (1) 32.13 போரில் கொல்லப்பட்ட எதிரியின் உடைமைகள் (4) 32.12 போர் வெற்றிச் செல்வங்கள் (7) 32.11 போர் வெற்றிச் செல்வங்கள் யாருக்குச் சொந்தம்? (1) 32.10 போரில் மரங்களை வெட்டுவதும் எரிப்பதும் அனுமதிக்கப்பட்டதாகும் (3) 32.9 பெண்களையும் குழந்தைகளையும் அறியாமல் கொன்றுவிட்டால் … (3) 32.8 போரில் பெண்களையும் குழந்தைகளையும் கொல்வதற்குத் தடை (2) 32.7 எதிரிகளை(ப் போரில்) எதிர்கொள்ளும்போது பிரார்த்திப்பது (2) 32.6 எதிரியை(ப் போர்க் களத்தில்) சந்திக்க ஆசைப்படுவது வெறுக்கத் தக்கது … (2) 32.5 போரில் தந்திரம் அனுமதிக்கப்பட்டது (2) 32.4 மோசடி செய்வது தடை செய்யப்பட்டதாகும் (8) 32.3 மக்களிடம் இலகுவாக நடந்துகொள்ள வேண்டும்; வெறுப்பைக் கைவிட வேண்டும் (3) 32.2 படைத் தலைவர், போர் நெறிகள் குறித்து அறிவுறுத்துவது (1) 32.1 முன்னறிவிப்பின்றித் தாக்குதல் தொடுக்கலாமா? (1) 31.5 பயணத்தில் உணவைப் பகிர்ந்துண்ணல் (1) 31.4 செல்வத்தால் பிறருக்கு உதவுவது விரும்பத் தக்கது (1) 31.3 விருந்தோம்பல் சார்ந்தவை (3) 31.2 உரிமையாளரின் அனுமதியின்றி கால் நடையில் பால் கறப்பதற்குத் தடை (1) 31.1 ஹாஜிகள் தவறவிட்டவை (2) 31.0 கண்டெடுக்கப்பட்டவை (5) 30.11 நீதிபதி சமரசம் செய்துவைப்பது விரும்பத் தக்கதாகும் (1) 30.10 ஆய்வாளர்களிடையே கருத்து வேறுபாடு (1) 30.9 சாட்சிகளில் சிறந்தவர் (1) 30.8 தவறான தீர்ப்புகளைத் தள்ளுபடி செய்வதும் (மார்க்கத்தில் இல்லாத) புதுமைகளை நிராகரிப்பதும் (2) 30.7 கோபமாக இருக்கும் நீதிபதி, தீர்ப்பளிப்பது விரும்பத் தக்கதன்று (1) 30.6 நீதிபதியின் ஆய்வுக்கு நன்மை உண்டு (1) 30.5 தடைகள் மூன்று (4) 30.4 ஹிந்த் (ரலி) வழக்கு (3) 30.3 வாதங்களின் அடிப்படையில் தீர்ப்பு அமைந்துவிடுதல் (2) 30.2 சத்தியத்தின் / சாட்சியத்தின் அடிப்படையில் தீர்ப்பளித்தல் (1) 30.1 சத்தியம் செய்து நிரூபிப்பது பிரதிவாதிமீது கடமையாகும் (2) 29.11 இழப்பீடு இல்லாத விபத்துகள் (2) 29.10 தண்டனைகள், குற்றங்களுக்கான பரிகாரமாகும் (3) 29.9 சீர்திருத்திற்காக வழங்கப்படும் சாட்டையடிகளின் (அதிகபட்ச) அளவு (1) 29.8 மது அருந்திய குற்றத்திற்கான தண்டனை (4) 29.7 மகப்பேறான பெண்ணின் தண்டனையைத் தள்ளிவைத்தல் (1) 29.6 இஸ்லாமிய அரசின் கீழ் வாழும் யூதர்கள் விபச்சாரத்தில் ஈடுபட்டாலும் கல்லெறி தண்டனை (6) 29.5 விபச்சாரம் செய்தவரின் ஒப்புதல் வாக்குமூலம் (9) 29.4 மணமானவர்கள் விபச்சாரம் செய்தால் கல்லெறி தண்டனை (1) 29.3 விபச்சாரக் குற்றத்திற்கான தண்டனை (2) 29.2 தண்டனையிலிருந்து விலக்கு அளிக்குமாறு பரிந்துரைப்பதற்குத் தடை (3) 29.1 தண்டனைக்குரிய திருட்டின் அளவுகோலும் தண்டனையும் (7) 28.11 சிசுக் கொலைக்கான இழப்பீடும் … (6) 28.10 கொலையாளி, தன் குற்றத்தை ஒப்புக்கொள்வதும் … (2) 28.9 மனிதர்களின் உயிர், தன்மானம், செல்வம் ஆகியவற்றுக்கு ஊறு விளைவிப்பது … (2) 28.8 மறுமையில் வழங்கப்படும் தீர்ப்பும் தண்டனையும் … (1) 28.7 கொலையை (உலகுக்கு) அறிமுகப்படுத்தியவர் மீதான பாவம் (1) 28.6 முஸ்லிமின் மரண தண்டனைக்கான காரணங்கள் (2) 28.5 பற்கள் போன்ற(உறுப்புகளான)வற்றில் பழிக்குப்பழி உண்டு (1) 28.4 தாக்க வந்தவனிடமிருந்து தற்காத்துக் கொள்வதற்காக … (6) 28.3 கல் மற்றும் கூராயுதங்களால் கொலை செய்தால், பழிக்குப்பழி உண்டு … (3) 28.2 வன்முறையாளர்களுக்கும் மதம் மாறியோருக்குமான தண்டனை (4) 28.1 அல்கஸாமா (4) 27.13 விடுதலைக்கு வாக்களிக்கப்பட்ட அடிமையை விற்கலாம் (2) 27.12 அடிமையில் தமது பங்கை மட்டும் விடுதலை செய்தல் (8) 27.11 ‏தன் உரிமையாளருக்கு விசுவாசமாகவும் … (4) 27.10 அடிமைக்கு எஜமானர் உண்பதிலிருந்து உணவளிப்பதும் … (4) 27.9 விபசாரம் செய்துவிட்டதாக அவதூறு கூறுவதற்கான கண்டனம் (1) 27.8 அடிமைகளுடனான நல்லுறவும் கன்னத்தில் அறைந்ததற்கான பரிகாரமும் (8) 27.7 இறைமறுப்பாளராக இருந்தபோது செய்த நேர்ச்சை… (2) 27.6 ஆகுமாக்கப்பட்டதற்கான சத்தியமாக இருந்தாலும் … (1) 27.5 இன்ஷா அல்லாஹ் என்பதை (சத்தியத்தின்போது) சேர்த்துக் கூறுதல் (4) 27.4 சொல்பவரின் எண்ணப்படியே ஒருவருடைய சத்தியம் அமையும் (2) 27.3 சத்தியம் செய்தவர், அதைவிடச் சிறந்ததாக மற்றொன்றைக் காணும்போது … (12) 27.2 ‘லாத்’ மற்றும் ‘உஸ்ஸா’வின் மீது சத்தியம் செய்துவிட்டவர் … (2) 27.1 அல்லாஹ்வைத் தவிர எவர்/எதன் மீதும் சத்தியம் செய்யத் தடை (3) 26.5 நேர்ச்சை முறிவுக்கான பரிகாரம் (1) 26.4 கஅபாவரை நடைப்பயணம் செல்வதாக நேர்ந்துகொண்டவர் (3) 26.3 இறைவனுக்கு மாறு செய்வதிலோ உரிமை இல்லாததிலோ நேர்ச்சை. (1) 26.2 நேர்ச்சை செய்வதற்குத் தடை; அது (விதியில்) எதையும் மாற்றிவிடாது (6) 26.1 நேர்ச்சையை நிறைவேற்றக் கட்டளை (1) 25.5 வசதியற்றவர் மரண சாஸனம் செய்ய முடியாது (6) 25.4 அறக்கொடை (1) 25.3 மனிதன் இறந்த பின்பும் தொடரும் நன்மைகள் (1) 25.2 இறந்துவிட்டவருக்காகச் செய்யப்படும் தர்மங்களின் நன்மை … (3) 25.1 மரண சாஸனம் 1/3 மட்டுமே (5) 25.0 மரண சாஸனம் (2) 24.4 ஆயுட்கால அன்பளிப்பு (11) 24.3 அன்பளிப்பு வழங்குவதில் பிள்ளைகளிடையே பாகுபாடு காட்டுவது … (10) 24.2 தானமும் அன்பளிப்பும் வழங்கப்பட்ட பின், திரும்பப் பெறுவதற்குத் தடை … (4) 24.1 தானமாகக் கொடுத்ததை விலைக்கு வாங்குவது விரும்பத் தக்கதல்ல (4) 23.4 ஒருவர் விட்டுச்செல்லும் செல்வம் அவருடைய வாரிசுகளுக்கு உரியதாகும் (4) 23.3 இறுதியாக அருளப்பெற்றது கலாலா வசனமாகும் (4) 23.2 ‘கலாலா’ சொத்துரிமை (5) 23.1 உரியவர்களுக்கும் உறவினருக்கும் பிரிக்கப்பட்ட பாகங்கள் (3) 23.0 ஒரு முஸ்லிம், இறைமறுப்பாளருக்கு வாரிசாகமாட்டார் (1) 22.31 பாதைக்கு நிலம் ஒதுக்குவதில் கருத்து வேறுபாடு ஏற்பட்டால் அதற்கான தீர்வு (1) 22.30 பிறர் நிலத்தை அபகரித்தல் போன்ற அநீதி இழைத்தல்களுக்குத் தடை (6) 22.29 அண்டை வீட்டாரின் சுவரில் (சாரம் கட்டுவதற்கு) மரக்கட்டை பதிப்பது (1) 22.28 பங்காளியின் இசைவு (3) 22.27 வியாபாரத்தில் (வீண்)சத்தியம் செய்வது விலக்கப்பட்டுள்ளது (2) 22.26 உணவுப் பொருட்களைப் பதுக்குவதற்குத் தடை (2) 22.25 முன்பணம் செலுத்தும் வணிகம் (2) 22.24 அடமானம் உள்ளூரிலும் பயணத்திலும் செல்லும் (3) 22.23 ஓர் உயிரினத்தை அதே இனத்திற்குப் பதிலாக ஏற்றத்தாழ்வோடு விற்கலாம் (1) 22.22 உங்களில் சிறந்தவர் கடனை அழகிய முறையில் திருப்பிச் செலுத்துபவரே (4) 22.21 ஒட்டகத்தை விற்றவர் அதில் பயணிக்க நிபந்தனை விதிப்பது (5) 22.20 அனுமதிக்கப்பட்டவற்றையும் ஐயத்திற்குரியவற்றையும் கையாளுதல் (1) 22.19 வட்டி வாங்குபவருக்கும் வட்டி கொடுப்பவருக்கும் சாபம் (2) 22.18 உணவுப் பொருளை, சரிக்குச் சரியாக விற்றல் (12) 22.17 பொன்னும் மணியும் பதித்த மாலையை விற்பது (4) 22.16 தங்கத்திற்கு வெள்ளியைக் கடனாக விற்பதற்குத் தடை (3) 22.15 நாணயமாற்று வியாபாரம்; வெள்ளிக்குத் தங்கத்தை ரொக்கத்துக்கு விற்பது (7) 22.14 வட்டி (4) 22.13 மது, செத்தவை, பன்றி, சிலைகள் ஆகியவற்றை விற்பதற்குத் தடை (4) 22.12 மதுபான வியாபாரத்திற்குத் தடை (4) 22.11 குருதி உறிஞ்சி எடுப்பதற்காகக் கூலி பெறுவது கூடும் (4) 22.10 வேட்டை, காவல், பாதுகாப்புக்காக நாய் வளர்க்கலாம் (18) 22.9 நாய் விற்ற காசு, சோதிடரின் தட்சணை, விபச்சாரியின் வருமானம் (4) 22.8 தேவைக்குப் போக மீதம் உள்ள நீரை விற்பதற்குத் தடை (5) 22.7 வசதியுள்ளவர் கடனைச் செலுத்த தாமதம் செய்யக் கூடாது (1) 22.6 கடனை அடைக்க சிரமப்படுபவருக்கு அவகாசம் அளிப்பதன் சிறப்பு (7) 22.5 திவாலானவரிடம் திரும்பப் பெற்றுக்கொள்ளும் உரிமை (4) 22.4 கடனில் தள்ளுபடி செய்வது விரும்பத் தக்கதாகும் (3) 22.3 சேதமடைந்த பழங்களுக்கான தொகைக்குத் தள்ளுபடி (5) 22.2 மரம் நடுதலின், பயிர் செய்தலின் சிறப்பு (5) 22.1 நிபந்தனையின் பேரில் தோப்பைக் குத்தகைக்கு விடுவது (4) 21.21 நிலத்தை (விளைவித்துக்கொள்ள) இரவலாக வழங்குவது (4) 21.20 ‘முஸார’ஆவும் ‘முஆஜரா’வும் (2) 21.19 பொன், வெள்ளி(நாயணங்களு)க்கு நிலத்தைக் குத்தகைக்கு விடுவது (3) 21.18 தானியத்திற்கு நிலத்தைக் குத்தகைக்கு விடுவது (2) 21.17 நிலக் குத்தகை (24) 21.16 தடை செய்யப்பட்ட வியாபார வகைகள் (6) 21.15 கனிகள் நிறைந்த பேரீச்ச மரத்தை விற்பது (4) 21.14 (மரத்திலுள்ள) செங்கனிகளை மாற்றிக் கொள்வதற்குத் தடை (14) 21.13 மரத்திலுள்ள பழங்களை முற்றுவதற்கு முன் விற்பதற்குத் தடை (10) 21.12 வியாபாரத்தில் ஏமாற்றப்படுபவர் (1) 21.11 வியாபாரத்தில் உண்மை பேசுவதும் குறைகளைத் தெளிவுபடுத்துவதும் (1) 21.10 விற்பவருக்கும் வாங்குபவருக்கும் வியாபாரத்தை முறித்துக்கொள்ளும் உரிமை (4) 21.9 அளவு தெரியாத பேரீச்சம் பழக் குவியலை விற்பதற்குத் தடை (1) 21.8 வாங்கப்பட்ட பொருள் கைக்கு வருமுன் (பிறருக்கு) விற்பது கூடாது (13) 21.7 மடி கனக்கச் செய்யப்பட்ட கால்நடைகளை விற்பனை செய்வது பற்றிய சட்டம் (5) 21.6: கிராமவாசிக்காக, நகரவாசி விற்றுக் கொடுக்கத் தடை (5) 21.5: விற்பனைக்கு வரும் சரக்குகளை இடைமறித்து வாங்கத் தடை (4) 21.4: வியாபாரத்தில் தடை செய்யப்பட்டவை (7) 21.3: ஒட்டகக் கன்று (அது பிறக்குமுன்) விற்பதற்கு தடை! (2) 21.2: கல்லெறி வியாபாரம் மற்றும் மோசடி வியாபாரம் ஆகியவை செல்லாது (1) 21.1: ‘முலாமஸா’ மற்றும் ‘முனாபதா’ ஆகிய வியாபாரங்கள் செல்லாது (3) 20.7: அடிமையான தந்தையை விடுதலை செய்வதன் சிறப்பு (1) 20.6: அடிமைகளை விடுதலை செய்வதன் சிறப்பு (4) 20.5: விடுதலை செய்த உரிமையாளரை மாற்றிக் கூறத் தடை (4) 20.4: வாரிசாகும் உரிமையை விற்பதற்கும் அன்பளிப்பாக வழங்குவதற்கும் தடை (1) 20.3: விடுதலை செய்தவருக்கே வாரிசுரிமை உரியது (9) 20.2: அடிமை (தனது முழு விடுதலைக்காக) உழைத்துப் பொருளீட்டுவது (2) 20.1: ஓர் அடிமையி(ன் விலையி)ல், ஒருவர் தமக்கான பங்கை விடுவிப்பது (1) 19.1: சுய சாபம் வேண்டுதல் (17) 18.9: கணவன் இறந்து ‘இத்தா’விலிருக்கும் பெண் துக்கம் கடைப்பிடிப்பது (11) 18.8: கர்ப்பமுற்றிருக்கும் பெண்ணின் ‘இத்தா’க் காலம், பிரசவத்துடன் முடிந்துவிடும் (2) 18.7: ‘இத்தா’விலிருக்கும் பெண் தன் தேவைக்காக வெளியே செல்லலாம் (1) 18.6: மூன்று தலாக் சொல்லப்பட்ட பெண்ணுக்கு ஜீவனாம்சம் பற்றி… (18) 18.5: ஈலாச் செய்வது, மனைவியிடமிருந்து விலகுவது, விருப்ப உரிமை அளிப்பது (5) 18.4: மனைவிக்கு (த் தம்மைப் பிரிந்துவிட) உரிமை அளிப்பது மணவிலக்கு ஆகாது (8) 18.3: மணவிலக்குச் செய்யும் நோக்கமின்றி கூறினால், அது மணவிலக்கு ஆகாது (4) 18.2: மூன்று தலாக்குகள் (3) 18.1: மாதவிடாயான மனைவியை அவளது சம்மதமின்றி மணவிலக்குச் செய்வதற்குத் தடை (14) 17.19: ஹவ்வா-வும், பெண்கள் கணவரை ஏமாற்றுதலும் (2) 17.18: மனைவியரின் நலம் நாடுதல் (4) 17.17: பயன் தரும் இவ்வுலகச் செல்வங்களுள் மிகச் சிறந்த செல்வம், நற்குணமுள்ள மனைவியே (1) 17.16: கன்னிப் பெண்ணை மணப்பது விரும்பத் தக்கதாகும் (5) 17.15: மார்க்கப் பற்றுள்ள பெண்ணை மணப்பது விரும்பத் தக்கதாகும் (2) 17.14: மனைவியருள் ஒருவர், தனது முறைநாளை மற்றவருக்கு விட்டுக்கொடுக்கலாம் (4) 17.13: மனைவியருக்கு (இரவுகளை) ஒதுக்கீடு செய்வது (1) 17.12: கன்னி கழிந்த பெண்ணுக்கும், கன்னிப் பெண்ணுக்கும் கணவன் ஒதுக்க வேண்டிய நாட்கள் (6) 17.11: சாயல் அறியும் நிபுணரின் கூற்றுப்படி, குழந்தைக்கு உரியவரைக் கண்டறிவது (3) 17.10: எஜமானரின் கீழ் வாழும் பெண்ணின் குழந்தை, அவருக்கே உரியது (2) 17.9: பெண் போர்க் கைதியுடன் உடலுறவு கொள்ளலாம் (2) 17.8: பசிக்காகத் தாய்ப்பால் அருந்தினால்தான் பால்குடி உறவு ஏற்படும் (1) 17.7: பருவ வயதை அடைந்தவருக்குப் பாலூட்டுவது (6) 17.6: ஐந்து தடவை அருந்தினால்தான் பால்குடி உறவு உண்டாகும் (2) 17.5: ஓரிரு தடவை (பெண்ணின் மார்பில்) பால் குடிப்பது பற்றிய சட்டம் (6) 17.4: மனைவியின் மகளையும் மனைவியின் சகோதரியையும் மணப்பதற்குத் தடை (2) 17.3: பால்குடிச் சகோதரரின் மகளை மணப்பது தடை செய்யப்பட்டுள்ளது (3) 17.2: பால்குடித் தந்தையின் (இரத்த பந்த) உறவினரும் மணமுடிக்கத் தகாதவரே! (6) 17.1: பிறப்பால் ஏற்படும் உறவும் பால்குடி உறவும் (2) 16.24: பாலூட்டும் மனைவியுடன் உடலுறவு கொள்ளும்போது அஸ்லுச் செய்வது வெறுக்கத் தக்கது (3) 16.23: கருவுற்றிருக்கும் பெண் போர்க் கைதியுடன் உடலுறவு கொள்வது தடை செய்யப்பட்டுள்ளது (1) 16.22: உடலுறவின்போது இடைமுறிப்பு – ‘அஸ்லு’ச் சட்டம் (12) 16.21: மனைவியுடன் நடைபெறும் உடலுறவு இரகசியங்களை வெளியே சொல்வது தடுக்கப்பட்டது (2) 16.20: ஒரு பெண், தன் கணவனின் படுக்கைக்குச் செல்ல மறுப்பதற்குத் தடை (3) 16.19: உடலுறவின் ஒழுங்குகள் (2) 16.18: உடலுறவின்போது ஓத வேண்டிய விரும்பத் தகுந்த பிரார்த்தனை (1) 16.17: மூன்று முறை மணவிலக்கு அளிக்கப்பட்ட பெண்ணின் மறுவிருப்பம் (4) 16.16: விருந்துக்கான அழைப்பை ஏற்பது பற்றிய கட்டளை (13) 16.15: ஸைனப் பின்த்து ஜஹ்ஷு (ரலி) திருமணம்; ஹிஜாப் பற்றிய வசனம்; மணவிருந்து (7) 16.14: அடிமைப் பெண்ணை விடுதலை செய்து, பின்னர் அவளை மணமுடித்துக்கொள்வதன் சிறப்பு (6) 16.13: மணக்கொடை (மஹ்ரு) என்பது … (7) 16.12: ஒருவர் தாம் மணமுடிக்க விரும்பும் பெண்ணின் முகத்தையும் இரு முன் கைகளையும் பார்ப்பது (2) 16.11 ஷவ்வால் மாதத்தில் மணமும் தாம்பத்திய உறவும் (1) 16.10: இளவயதுக் கன்னிக்கு அவளுடைய தந்தை மணமுடித்துவைத்தல் (4) 16.9: மணப் பெண்ணின் வாய் வழிச் சம்மதமும் மௌனச் சம்மதமும் (4) 16.8: திருமண (முன்) நிபந்தனைகளை நிறைவேற்றல் (1) 16.7: மணக்கொடையில்லா திருமணம் செல்லாது (5) 16.6: தம் (முஸ்லிம்) சகோதரன் கேட்டுக்கொண்டிருக்கும் ஒரு பெண்ணை, மற்றவர் கேட்கலாகாது (7) 16.5: இஹ்ராம் புனைந்தவர் திருமணம் செய்வதற்குத் தடை; அவர் பெண் கேட்பது வெறுக்கத் தக்கது (8) 16.4: மனைவியின் அத்தையை, சின்னம்மாவை மணக்கத் தடை (8) 16.3: இடைக்காலத் திருமணம், (முத்ஆ) காலாவதியானது (21) 16.2: இச்சை தூண்டப்பட்டவர், தமது இச்சையைத் தணித்துக் கொள்ளட்டும் (2) 16.1: வசதி இருந்தால் மணமுடிப்பதும் இல்லாதவர் நோன்பு நோற்பதும் (6) 15.97: குபாப் பள்ளிவாசல், அதில் தொழுவது, அதைத் தரிசிப்பது ஆகிய சிறப்புகள் (7) 15.96: இறையச்சத்தின் மீது நிறுவப்பட்ட பள்ளிவாசல் (1) 15.95: மூன்று பள்ளிவாசல்களைத் தவிர வேறெதற்கும் (புனிதப்) பயணம் கிடையாது (2) 15.94: மக்கா, மதீனாப் பள்ளிவாசல்களில் தொழுவதன் சிறப்பு (6) 15.93: ‘உஹுத்’ மலை நம்மை நேசிக்கிறது; நாமும் அதை நேசிக்கின்றோம் (3) 15.92: சொர்க்கப் பூஞ்சோலைகளுள் ஒன்று (3) 15.91: மதீனாவாசிகள் மதீனாவை விட்டு அகலும்போது அதன் நிலை (2) 15.90: மதீனாவிலேயே தங்கியிருப்பதற்கு ஆர்வமூட்டல் (2) 15.89: மதீனாவாசிகளுக்குக் கேடு நினைப்பவர்களை, அல்லாஹ் உருக்குலைத்துவிடுவான் (3) 15.88: தன்னிலுள்ள தீயவர்களை மதீனா அகற்றிவிடும் (5) 15.87: கொள்ளை நோயும் தஜ்ஜாலும் நுழைய முடியாமல் மதீனா பாதுகாக்கப்பட்டுள்ளது (2) 15.86: மதீனாவில் ஏற்படும் நெருக்கடிகளைச் சகித்துக்கொண்டு, அங்குக் குடியிருக்க ஆர்வ மூட்டல் (10) 15.85: மதீனாவின் சிறப்பு; பிரார்த்தித்ததும் புனிதமானவையும் (17) 15.84: இஹ்ராமின்றி மக்காவிற்குள் நுழைய அனுமதி (5) 15.83: அவசியத் தேவையின்றி மக்காவிற்குள் ஆயுதம் எடுததுச் செல்வதற்குத் தடை (1) 15.82: மக்காவும், அதன் புனிதமானவைகளும் (4) 15.81: முஹாஜிருக்கு மக்காவில் தக்குவதற்கு அனுமதிக்கப்பட்ட நாட்கள் (4) 15.80: ஹாஜிகள் மக்காவில் தங்குவதும் அங்குள்ள வீடுகளை வாரிசுரிமையாகப் பெறுவதும் (3) 15.79: ஹஜ், உம்ரா, அரஃபா நாள் ஆகியவற்றின் சிறப்பு (3) 15.78: இணைவைப்பவருக்கான ஹஜ் சட்டங்கள் (1) 15-77: ஹஜ் அல்லது உம்ராவிலிருந்து திரும்பும்போது துல்ஹுலைஃபாவில் தங்கித் தொழுவது (5) 15.76: பயணத்திலிருந்து திரும்பி வரும்போது ஓத வேண்டியவை (2) 15.75: பயணங்களில் வாகனத்தில் ஏறியதும் ஓத வேண்டிய துஆ (2) 15.74: மஹ்ரமான ஆணுடன் மட்டுமே பெண்ணின் ஹஜ் முதலான பயணம் (11) 15.73: ஹஜ் கடமை, ஆயுளில் ஒரு முறைதான் (1) 15.72: குழந்தையின் ஹஜ் செல்லும்; அதை ஹஜ்ஜுக்கு அழைத்துச் சென்றவருக்கும் நற்பலன் உண்டு (3) 15.71: இயலாதவருக்காகவோ, இறந்தவருக்காகவோ பிறர் ஹஜ் செய்தல் (2) 15.70: கஅபாவின் வளைந்த சுவரும் அதன் தலைவாயிலும் (1) 15.69: இறையில்லம் கஅபாவை இடித்துக் கட்டுதல் (7) 15.68: கஅபாவின் உள்ளே நுழைவதும் அதனுள் தொழுவதும் (9) 15.67: விடைபெறும் தவாஃப் மாதவிடாய் ஏற்பட்ட பெண்ணுக்குக் கடமையில்லை (8) 15.66: செல்லும் வழியில் பலிப் பிராணி பாதிப்புக்குள்ளாகிவிட்டால் … (2) 15.65: பலியிடக் கொண்டுசெல்லும் ஒட்டகத்தில், பயணம் செய்ய அனுமதி (6) 15-64: ஹரம் எல்லைக்குச் செல்லாதவர், பலிப் பிராணியை அனுப்பிவைக்கும் முறை (11) 15.63: ஒட்டகத்தை அறுக்கும் முறை (1) 15.62: பலிப் பிராணிகளுள் மாட்டிலும் ஒட்டகத்திலும் கூட்டுச் சேர்வது (8) 15.61: பலிப் பிராணிகளின் இறைச்சி, தோல், சேணம் ஆகியவை தர்மத்துக்குரியன (2) 15.60: ‘தஷ்ரீக்’ நாட்களின் இரவுகளில் மினாவில் தங்குவது கட்டாயமாகும் (2) 15.59: ‘நஃப்ரு’டைய நாளில் ‘அல்முஹஸ்ஸபி’ல் தங்குவதும் அங்குத் தொழுவதும் (9) 15.58: துல்ஹஜ் பத்தாவது நாளில் ‘தவாஃபுல் இஃபாளா’ செய்வது (2) 15.57: ஹஜ் சடங்குகளில் முன் – பின் ஆகிவிட்டால் … (6) 15.56: துல்ஹஜ் பத்தாம் நாளின் சடங்குகள் (3) 15.55: தலைமுடியை மழிப்பதும் குறைப்பதும் (6) 15.54: கற்களின் எண்ணிக்கை (1) 15.53: கல்லெறியும் நேரம் (1) 15.52: பொடிக் கற்கள் போதும் (1) 15.51: துல்ஹஜ் பிறை பத்தில் ஜம்ரத்துல் அகபாவுக்குக் கல்லெறிதல் (3) 15.50: ‘ஜம்ரத்துல் அகபா’வின் மீது கல் எறியும்போது தக்பீர் கூறுவது (4) 15.49: முஸ்தலிஃபாவிலிருந்து மினாவிற்குப் புறப்படச் செய்வது (11) 15.48: முஸ்தலிஃபாவில் ஸுப்ஹுத் தொழுகையை ஆரம்ப நேரத்தில் தொழுவது (1) 15.47: மஃக்ரிப், இஷா வை அடுத்தடுத்துத் தொழுவது (14) 15.46: அரஃபா நாளில் மினாவிலிருந்து அரஃபாவிற்குப் போகும்போது தல்பியாவும் தக்பீரும் கூறுதல் (4) 15.45: துல்ஹஜ் பத்தாவது நாளன்று கல்லெறியத் துவங்கும்வரை தல்பியாச் சொல்லிக்கொண்டிருப்பது (7) 15.44: ஸஃபா-மர்வாவுக்கிடையே ஸயீ (ஓட்டம்) ஒரே தடவைதான் (1) 15.43: ஸஃபா-மர்வாவுக்கிடையே ஸயீச் செய்வது முக்கியக் கடமையாகும் (5) 15.42: வாகனங்கள் மீதமர்ந்து தவாஃப் செய்யலாம் (6) 15.41: தவாஃபின்போது ஹஜருல் அஸ்வதை முத்தமிடுவது (5) 15.40: இறையில்லத்தில் முத்தமிடப்படும் இரு மூலைகள் (6) 15.39: தவாஃபில் விரைந்து நடப்பது விரும்பத்தக்கது (12) 15.38: மக்காவினுள் நுழையும் முன்… (4) 15.37 மக்காவினுள் நுழைவதும் வெளியேறுவதும் (3) 15.36 ரமளான் மாதத்தில் உம்ராச் செய்வதன் சிறப்பு (2) 15.35: நபியவர்களின் உம்ரா எண்ணிக்கையும் காலமும் (4) 15.34 நபியவர்களின் தல்பியாவும் பலியும் (4) 15.33: உம்ராவில் தலைமுடி குறைத்தல் (5) 15.32: இஹ்ராமின்போது பலிப் பிராணி (4) 15.31: ஹஜ்ஜுப் பருவங்களில் உம்ராச் செய்ய அனுமதி (6) 15.30: தமத்துஉ ஹஜ் (2) 15.29: இஹ்ராம் ஹாஜிக்குக் கட்டாயம் (3) 15.28: தவாஃபும் ஸயீயும் கட்டாயம் (3) 15.27: ஹஜ் உம்ரா சேர்த்தும் தனித்தும் செய்வது (3) 15.26: ஒரே இஹ்ராமில் உம்ரா ஹஜ் (3) 15.25: இஹ்ராமிலிருந்து விடுபடுதல் (3) 15.24: பலிப் பிராணியும் ஹஜ் கடமையும் (2) 15.23: தமத்துஉ ஹஜ் அனுமதிக்கப்பட்ட ஒன்றாகும் (13) 15.22: ஒருவர் வேறொருவரின் இஹ்ராமை அச்சொட்டி பூணுதல் (3) 15.21: அரஃபா பெருவெளியில் தங்கி திரும்புதல் தொடர்பான இறை கூற்று (3) 15.20: அரஃபாப் பெருவெளி முழுவதும் தங்குமிடம் (2) 15.19: நபி (ஸல்) அவர்களின் ஹஜ் (1) 15.18: உம்ராவையும் ஹஜ்ஜையும் தனித் தனியாக நிறைவேற்றி பயனடைதல் (2) 15.17: இஹ்ராமின் முறைகள் (27) 15.16: இரத்தப்போக்குடைய பெண் இஹ்ராமில் குளித்தல் (2) 15.15: இஹ்ராமிலிருந்து விடுபட முன் நிபந்தனையிட அனுமதி (5) 15.14: முஹ்ரிம் இறந்துவிட்டால் செய்ய வேண்டியவை (9) 15.13: இஹ்ராம் பூண்ட முஹ்ரிம், தம் உடலைக் கழுவிக்கொள்ள அனுமதி (1) 15.12: இஹ்ராம் பூண்ட முஹ்ரிம், தம் கண்களுக்கு மருந்திட அனுமதி (2) 15.11: இஹ்ராம் பூண்ட முஹ்ரிம், ஹிஜாமா செய்ய அனுமதி (2) 15.10: முஹ்ரிமுக்குத் தலைமுடி மழிக்க அனுமதியும் பரிகாரமும் (7) 15.09: ஹரம் எல்லைக்குள் கொல்ல அனுமதிக்கப்பட்டவைகள் (12) 15.08: இஹ்ராம் பூண்ட முஹ்ரிம் வேட்டையாடுவது குறித்து.. (9) 15.07: இஹ்ராமின்போது நறுமணம் பூசுதல் (19) 15.06: துல்ஹுலைஃபா பள்ளியில் தொழுதல் (1) 15.05: வாகனம் புறப்படுவதற்கு ஆயத்தமானவுடன் தல்பியா கூறுவது (4) 15.04: மதீனாவாசிகள் இஹ்ராம் பூண வேண்டிய இடம் (2) 15.03: தல்பியாவின் பண்பும் அதன் நேரமும் (4) 15.02: ஹஜ்/உம்ராவிற்கான இஹ்ராம் எல்லைகள் (7) 15.01: ஹஜ்/உம்ராவில் அனுமதிக்கப்பட்டவை.. (10) 14.04: துல்ஹஜ் மாதத்தின் பத்து நோன்புகள் (2) 14.02: இஃதிகாஃப் இருக்குமிடத்தினுள் நுழையும் நேரம் (1) 14.03: இறுதிப் பத்தில் வழிபாடுகளில் ஈடுபடுவது (2) 14.01: இறுதிப் பத்து நாட்களில் இஃதிகாஃப் இருத்தல் (5) 13.40: லைலத்துல் கத்ர் இரவு குறித்து.. (17) 13.39: ஷவ்வால் ஆறு நோன்பு (1) 13.37: ஷஅபான் மாத இறுதியில் நோன்பு நோற்றல் (3) 13.38: முஹர்ரம் நோன்பின் சிறப்பு (2) 13.36: சுன்னத்தான நோன்புகள் (5) 13.35: ஒரு நாள் விட்டு ஒரு நாள் நோன்பு (12) 13.34: நோன்பில்லாமல் எந்த மாதத்தையும் கடக்க விடாமலிருப்பது விரும்பத் தக்கது (9) 13.33: மறதியால் (நோன்பாளி) நோன்பு முறியாது (1) 13.32: கூடுதலான நோன்பு முடிவு செய்வதற்கும் விடுவதற்கும் அனுமதி (2) 13.31: அல்லாஹ்வின் பாதையில் செல்லும்போது சக்தி பெற்றிருப்பவர் நோன்பு நோற்பதன் சிறப்பு (2) 13.30: நோன்பின் மாண்பு (6) 13.29: நோன்பாளி, நாவைக் காப்பது (1) 13.28: நோன்பாளி விருந்துக்கு அழைக்கப்பட்டால் “நான் நோன்பாளி” என்று சொல்லிவிட வேண்டும் (1) 13.27: இறந்துபோனவரின் விடுபட்ட நோன்பை நோற்பது (5) 13.26: ரமளானில் விடுபட்ட நோன்பை ஷஅபான் மாதத்தில் ‘களா’ச் செய்தல் (2) 13.25: இறைவசனம் வேறொரு வசனத்தின் மூலம் மாற்றம் (2) 13.24: வெள்ளிக்கிழமை மட்டும் நோன்பு நோற்பது விரும்பத் தக்கதன்று (3) 13.23: அய்யாமுத் தஷ்ரீக் நாட்களில் நோன்பு நோற்பதற்குத் தடை (2) 13.22: நோன்புப் பெருநாளிலும் ஹஜ்ஜுப் பெருநாளிலும் நோன்பு நோற்பதற்குத் தடை (6) 13.20: ஆஷூரா நோன்பை எந்த நாளில் நோற்க வேண்டும்? (4) 13.19: ஆஷூரா நாளில் நோன்பு நோற்றல் (17) 13.18: அரஃபா நாளில் அரஃபாவில் தங்கும் ஹாஜிகளின் நோன்பு (4) 13.17: பயணத்தில் நோன்பு நோற்பதையோ விட்டுவிடுவதையோ தேர்ந்துகொள்ளலாம் (5) 13.16: பயணத்தில் நோன்பைக் கைவிட்டவர், பொதுப் பணியாற்றினால் கிடைக்கும் நன்மை (3) 13.15: பயணத்தில் இருப்பவர் மீதான கடமையான ரமளான் நோன்பு (11) 13.14: ரமளான் பகலில் உடலுறவில் ஈடுபடுவதற்குத் தடையும் அதன் பரிகாரமும் (5) 13.13: பெருந்துடக்குடன் வைகறைப் பொழுதை அடைந்தவரின் நோன்பு செல்லும் (6) 13.12: கட்டுப்படுத்தும் நோன்பாளிக்கு (தம் மனைவியை) முத்தமிடத் தடையில்லை (13) 13.11: தொடர்நோன்பு நோற்பதற்குத் தடை (7) 13.10: பகற் பொழுது வெளியேறி நோன்பு நிறைவடையும் நேரம் (3) 13.09: ஸஹரைத் தாமதிப்பதும் நோன்பு துறப்பதை விரைந்து செய்வதும் (6) 13.08: ஃபஜ்ரு நேரம் வந்தவுடன் நோன்பு ஆரம்பமாகிவிடும் (11) 13.07: ‘இரு பெருநாட்களின் இரு மாதங்களும் குறைவுபடாது’ நபிகளாரின் விளக்கம் (2) 13.06: (வானை) மேகம் மூடிக்கொண்டால் (மாதத்தின் நாட்கள்) முப்பதாக முழுமையாக்கப்படும் (2) 13.05: ஒவ்வோர் ஊர்க்காரர்களுக்கும் அவரவர் பார்க்கும் பிறையே பொருந்தும் (1) 13.04: மாதம் என்பது இருபத்தொன்பது நாட்களாகவும் இருக்கும் (6) 13.03: ரமளானுக்கு முந்தைய இரு நாள்களில் நோன்பு நோற்கக் கூடாது (1) 13.02: ரமளான் நோன்பு தொடக்கமும் முடிவும் (17) 13.01: ரமளான் மாதத்தின் சிறப்பு (2) 12.55: ஸகாத் வசூலிப்பவர், தடை செய்யப்பட்டதைக் கோராதவரை அவரைத் திருப்திபடுத்த வேண்டும் (1) 12.54: தர்மப் பொருள் கொண்டுவந்தவருக்காகப் பிரார்த்தித்தல் (1) 12.53: நபி (ஸல்) அன்பளிப்பை ஏற்றதும் தர்மத்தை மறுத்ததும் (1) 12.52: தர்மப் பொருள், அதன் பண்பு நீங்கி விடுதல் (5) 2.27: நாய் நக்கிய பாத்திரம் பற்றிய சட்டம் (6) 2.28: தேங்கிக் கிடக்கும் தண்ணீரில் சிறுநீர் கழிப்பதற்குத் தடை (3) 2.29: பெருந்துடக்குடையவர் தேங்கிய நீரில் இறங்கிக் குளிக்கத் தடை (1) 2.30: பள்ளிவாசலில் சிறுநீர் கழித்தால்… (3) 2.31: தாய்பால் குடிக்கும் குழந்தையின் சிறுநீரைக் கழுவும் சட்டம் (4) 2.32: விந்து பற்றிய சட்டம் (4) 2.33: மாதவிடாய் இரத்தம் கழுவும் முறை (1) 2.34: சிறுநீரைச் சுத்தம் செய்வது கட்டாயம் (1) 3.01: மாதவிடாயான மனைவியைக் கீழாடைக்கு மேல் அணைத்துக் கொள்வது. (3) 3.02: மாதவிடாயான மனைவியுடன் ஒரே போர்வைக்குள் படுத்துக் கொள்வது. (2) 3.03: மாதவிடாயான பெண் செய்ய அனுமதிக்கப்பட்டவை (11) 3.04: இச்சை நீர் (3) 3.05: உறங்கி எழுந்ததும் முகத்தையும் கையையும் கழுவுதல் (1) 3.06: பெருந்துடக்காளி செய்ய வேண்டியவை (8) 3.07: மதன நீர் வெளிப்பட்ட பெண்ணுக்குக் குளியல் கடமை. (5) 3.08: ஆண்/பெண் (விந்து-மதன)நீரிலிருந்துதான் குழந்தை உருவாகிறது. (1) 3.09: பெருந்துடக்கிற்கான குளியல் முறை (5) 3.10: பெருந்துடக்கு குளியல் தொடர்பானவை (14) 3.11: குளிக்கும் போது மூன்றுமுறை தண்ணீர் ஊற்றுதல் (4) 3.12: குளிக்கும் பெண்களின் சடைமுடி பற்றிய சட்டம் (2) 3.13: மாதவிடாய் குளியலின் போது கஸ்தூரி பயன்படுத்துதல் (2) 3.14: தொடர் உதிரப் போக்குடைய பெண்களின் தொழுகை மற்றும் குளியல் (5) 3.15: மாதவிடாய் நாட்களில் விடுபட்ட கடமைகள் (3) 3.16: குளிப்பவர் திரையிட்டுக் கொள்தல் (3) 3.17: பிறரின் மறையுறுப்பைப் பார்த்தல் (1) 3.18: தனித்துக் குளிக்கும் போது ஆடையின்றி குளித்தல் (1) 3.19: மறையுறுப்பை மறைத்துக் கொள்வதில் கவனம் (3) 3.21: (விந்து)நீர் வெளிப்பட்டாலே (குளியல்)நீர் கடமையாகும் (9) 3.22: ஆண்-பெண் குறிகள் இணைந்து விட்டால் குளியல் கடமையாகும் (3) 3.23: சமைக்கப்படவற்றை உண்டால் மீண்டும் உளூ செய்தல் (3) 3.24: சமைக்கப் பட்டவற்றை உண்டால் உளூச் செய்யும் கட்டாயம் மாற்றப் பட்டது (8) 3.25: ஒட்டக இறைச்சி உண்டால் உளூச் செய்ய வேண்டும் (1) 3.26: வாயு பிரிந்த சந்தேகம் ஏற்பட்டாலும் தொழலாம் (2) 3.27: பதனிடப்படுவதால் செத்த பிராணியின் தோல் தூய்மை ஆகும் (7) 3.28: தயம்மும் (6) 3.29: ஒரு முஸ்லிம் (பெருந்துடக்கு ஏற்பட்டதால்) அசுத்தமாகிவிட மாட்டார். (2) 3.30: பெருந்துடக்கு போன்ற நிலைகளிலும் அல்லாஹ்வைத் துதித்தல். (1) 3.31: சிறுதுடக்காளி (உளூச் செய்யாமல்) உண்ணலாம் (4) 3.32: கழிப்பிடத்திற்குச் செல்லும்போதான பிரார்த்தனை (1) 3.33: உட்கார்ந்து கொண்டு உறங்குவது உளூவை முறிக்காது. (4) 4.01: தொழுகை அழைப்பின் தொடக்கம் (1) 4.02: தொழுகை அறிவிப்பு தொடர் அமையும் விதம் (3) 4.03: தொழுகை அழைப்பு முறை (1) 4.04: ஒரு பள்ளிவாசலுக்கு இரு தொழுகை அழைப்பாளர்கள் (1) 4.05: பார்வையற்றவர் தொழுகை அழைப்பு விட நிபந்தனை (1) 4.06: போரின் போது இணைவைப்பாளர் நாட்டில் தொழுகை அழைப்பு விடுக்கப்பட்டால் (1) 4.07: தொழுகை அழைப்பைச் செவியுறுபவர் செய்ய வேண்டியவை (4) 4.08: தொழுகை அழைப்பின் சிறப்பும் ஷைத்தான் வெருண்டோடுவதும் (6) 4.09: இரு கைகளையும் தோள் புஜத்துக்கு உயர்த்துதல் (4) 4.10: அல்லாஹு அக்பர், ஸமி அல்லாஹு லிமன் ஹமிதஹ் கூறும் இடங்கள் (5) 4.11: தொழுகையில் அல்ஃபாத்திஹா அத்தியாயம் ஓதுதல் (8) 4.12: இமாமைப் பின்பற்றித் தொழுபவர் உரத்து ஓதலாகாது (2) 4.13: பிஸ்மில்லாஹ்வை(த் தொழுகையில்) உரத்து ஓதாலாகாது என்போரின் வாதம் (2) 4.14: அத்தியாயங்களின் துவக்கம் “பிஸ்மில்லாஹ்” குறித்த வாதம் (1) 4.15: தக்பீருக்குப் பின்னும் சஜ்தாவிலும் கைகளை வைக்கும் முறை (1) 4.16: தொழுகையில் அத்தஹிய்யாத் ஓதுவது (4) 4.17: இறுதி அத்தஹியாத்திற்குப் பின் ஸலவாத் கூறுதல் (4) 4.18: ஸமி அல்லாஹு லிமன் ஹமிதஹ், ரப்பனா ல(க்)கல் ஹம்து, ஆமீன் ஆகியவை கூறுவது (5) 4.19: இமாமை மஃமூம் பின்தொடர்வது (5) 4.20: இமாமை முந்துவதற்குத் தடை (4) 4.21: இமாமைப் பின்பற்றுவதில் சட்ட மாற்றம் (10) 4.22: இமாம் வருவதற்குத் தாமதமானால்… (2) 4.23: தொழுகையில் இமாமுக்கு ஏதாவது உணர்த்த விரும்பினால்… (1) 4.24: தொழுகையை முழுமையாக உள்ளச்சத்துடன் தொழல் (4) 4.25: தொழுகையில் இமாமை முந்தாமல் இருத்தல் (7) 4.26: தொழும்போது வானத்தை அண்ணாந்து பார்ப்பதற்குத் தடை (2) 4.27: தொழுகையில் ஒழுங்குகள் (3) 4.28: தொழுகையில் வரிசைகளைப் பேணுதல் (11) 4.29: ஆண்களுக்குப் பின்னால் தொழும் பெண்கள் தலை உயர்த்தும் முறை (1) 4.30: பெண்கள் பள்ளிவாசலுக்குச் செல்தல், நறுமணம் பூசுதல் (11) 4.31: தொழுகையில் அச்சநிலையில் குர்ஆன் ஓதும் முறை (2) 4.32: குர்ஆன் ஓதப்படும்போது செவிதாழ்த்திக் கேட்க வேண்டும். (2) 4.33: ஸுப்ஹுத் தொழுகையில் உரத்துக் குர்ஆன் ஓதுதல் (4) 4.34: லுஹ்ரு, அஸ்ருத் தொழுகைகளில் குர்ஆன் ஓதுதல் (8) 4.35: ஸுப்ஹுத் தொழுகையில் குர்ஆன் ஓதுதல் (13) 4.36: இஷாத் தொழுகையில் குர்ஆன் ஓதுவது (8) 4.37: தொழுகையைச் சுருக்கி, நிறைவுறத் தொழுவிப்பதற்கான கட்டளை (11) 4.38: தொழுகையின் நிலைகளை நிதானமாக, சுருக்கி, நிறைவாகச் செய்வது (4) 4.39: தொழுகையில் இமாமை முந்தி விடாமலிருத்தல் (5) 4.40: ருகூஉவிலிருந்து தலையை உயர்த்திய பின் ஓத வேண்டியவை (5) 4.41: ருகூஉவிலும் ஸஜ்தாவிலும் குர்ஆன் ஓதுவதற்குத் தடை (6) 4.42: ருகூஉவிலும் ஸஜ்தாவிலும் ஓத வேண்டியவை (9) 4.44: ஸஜ்தாவின் போது தரையில் படவேண்டிய உறுப்புகள் (7) 4.45: சீராக ஸஜ்தா செய்தல் (2) 4.46: தொழுகை முறைத் தொகுப்பு (5) 4.47: தனித்துத் தொழுபவர் தடுப்பு ஒன்றை வைத்துக் கொள்வது (13) 4.48: தொழுகையில் குறுக்கே செல்பவரைத் தடுப்பது (4) 4.49: தொழுபவர், தடுப்புக்கு நெருக்கமாக நிற்க வேண்டும் (3) 4.50: தொழுபவருக்கான குறுக்குத் தடுப்பின் அளவு (2) 4.51: தொழுபவருக்குக் குறுக்கே படுத்திருப்பது (8) 4.52: ஒரே ஆடை அணிந்து தொழும் முறை (9) 5.01: பூமியில் எழுப்பப்பட்ட முதலாவது இறையாலயம் (8) 5.02: மஸ்ஜிதுந் நபவீ கட்டப்பட்ட வரலாறு (2) 5.03: தொழுகைத் திசை(கிப்லா) கஅபாப் பள்ளிக்கு மாற்றம் (4) 5.04: மண்ணறைகளில் செய்யக்கூடாதவை (6) 5.05: மஸ்ஜிதுகள் கட்டுவதன் சிறப்பும் அதற்கான ஆர்வமூட்டலும் (2) 5.06: ருகூஉவில் உள்ளங்கைகளை வைப்பதற்கான சட்டத் திருத்தம் (5) 5.07: இரு குதிகால்கள்மீது (தொழுகை அமர்வில்) அமர அனுமதி (1) 5.08: தொழுகையில் பேசிக் கொள்ள இருந்த அனுமதி நீக்கம் (6) 5.09: தொழுகைக்கு இடையில் செய்ய அனுமதிக்கப்பட்டவை (2) 5.10: குழந்தைகளைச் சுமந்துகொண்டு தொழுவதற்கு அனுமதி (3) 5.11: தொழுகையின்போது ஓரிரு அடிகள் நடக்க அனுமதி (1) 5.12: இடுப்பில் கையூன்றிக் கொண்டு தொழுவது வெறுக்கத் தக்கது (1) 5.13: தொழும்போது மண்ணைச் சமப்படுத்துதல் வெறுக்கத் தக்கது (3) 5.14: பள்ளிவாசலில் எச்சில் துப்பத் தடை (10) 5.15: காலணி அணிந்து கொண்டு தொழுவதற்கு அனுமதி (1) 5.16: கவனத்தை ஈர்க்கும் ஆடை அணிந்து தொழுதல் வெறுக்கப்பட்டது (3) 5.17: சிறுநீர்/மலம் அடக்குதல், உணவு காக்க வைத்தல் நிலையில் தொழுதல் (4) 5.18: துர்நாற்றத்துடன் பள்ளிச்செல்லுதலும் அவரை வெளியேற்றலும் (10) 5.19: பள்ளிவாசலினுள் காணாமற்போன பொருளைத் தேடத் தடை (3) 5.20: தொழுகையில் ஏற்படும் மறதிக்குப் பரிகாரம் (17) 5.21: ஸஜ்தா திலாவத் (9) 5.22: அத்தஹிய்யாத்தில் அமரும் முறை (5) 5.23: தொழுகையை நிறைவு செய்யும்போது ஸலாம் கூறும் முறை (3) 5.24: தொழுத பின்னர் திக்ரு (3) 5.25: மண்ணறை வேதனையிலிருந்து பாதுகாப்புக் கோருதல் (3) 5.26: தொழுகையில் பாதுகாப்புக் கோரப்பட வேண்டியவை (8) 5.27: தொழுகைக்குப்பின் திக்ரு செய்தல் (9) 5.28: தொடக்கத் தக்பீருக்குப் பின் கூறவேண்டியவை (4) 5.29: தொழுகையில் கலந்துகொள்ள செல்லும் முறை (5) 5.30: தொழுகைக்காக மக்கள் எப்போது எழுந்து நிற்க வேண்டும்? (5) 5.31: கூட்டுத்தொழுகையை அடைந்துகொள்ள நிபந்தனை (5) 5.32: ஐவேளைத் தொழுகை நேரங்கள் (13) 5.33: கடுங்கோடையில் ஜமாஅத் தொழுகை (8) 5.34: கடுங்கோடையில்லா சமயத்தில் ஜமாஅத் தொழுகை (4) 5.35: அஸ்ருத் தொழுகையின் நேரம் (7) 5.36: அஸ்ருத் தொழுகையைத் தவறவிட்டால்.. (3) 5.37: அஸ்ரு நடுத்தொழுகை என்போரின் சான்று (6) 5.38: ஸுப்ஹு, அஸ்ருத் தொழுகைகளின் சிறப்புகள் (6) 5.39: மஃக்ரிபுத் தொழுகையின் ஆரம்ப நேரம் (2) 5.40: இஷாத் தொழுகையின் நேரமும் அதைத் தாமதமாகத் தொழுவதும் (12) 5.41: ஸுப்ஹுத் தொழுகையின் நேரம் மற்றும் ஓதப்படும் (குர்ஆன் வசனங்களின்) அளவு (7) 5.42: தொழுகைக்கு உரிய நேரத்தைத் தாமதப்படுத்துதல் (7) 5.43: கூட்டுத் தொழுகையின் சிறப்பும் அதைத் தவற விடுவது பற்றிய கண்டனமும் (10) 5.44: தொழுகை அழைப்பைச் செவியுறுபவர் பள்ளிவாசலுக்குச் செல்வது கட்டாயமாகும் (1) 5.45: கூட்டுத் தொழுகை என்பது நேர்வழியைச் சார்ந்தது (2) 5.46: பாங்கு கூறிய பின்னர் பள்ளிவாசலிலிருந்து வெளியேறத் தடை (2) 5.47: இஷா மற்றும் ஸுப்ஹு கூட்டாகத் தொழுவதன் சிறப்பு (4) 5.48: கூட்டுத் தொழுகையைத் தவிர்ப்பதற்கான அனுமதி (1) 5.49: நஃபில் தொழுகைகளை ஜமாஅத்தாகத் தொழுதல் (6) 5.50: கூட்டுத் தொழுகைக்காகக் காத்திருப்பதன் சிறப்பு (5) 5.51: பள்ளிவாசலுக்கு நடந்து செல்வதன் சிறப்பு (6) 5.52: தொழுகைக்கு நடந்து செல்பவருக்குக் கிடைக்கும் பலன்கள் (4) 5.53: உதயம்வரை தொழுத இடத்தில் அமர்ந்திருப்பதன் சிறப்பு (3) 5.54: தொழுகைக்குத் தலைமையேற்க அதிகத் தகுதியுடையவர் (5) 5.55: எல்லாத் தொழுகைகளிலும் குனூத் ஓதும் காலகட்டம் (15) 5.56: விட்டுப்போனத் தொழுகைகளைத் தொழுதல் (8) 6.01: பயணிகளின் தொழுகை; சுருக்கித் தொழுதல் (20) 6.02: மழையின்போது இருப்பிடங்களில் தொழுதுகொள்ளலாம் (4) 6.03: நஃபில் தொழுகைகளை வாகனத்தில் செல்பவர் தொழலாம் (10) 6.04: பயணத்தில் இரு தொழுகைகளைச் சேர்த்து தொழலாம் (7) 6.05: உள்ளூரில் இருக்கும்போது இரு தொழுகைகளை இணைத்து தொழுதல் (10) 6.06: தொழுது முடித்தபின் வலம், இடம் திரும்பி அமர்தல் (3) 6.07: இமாமுக்கு வலப்பக்க வரிசையில் நிற்பது விரும்பத்தக்கது (1) 6.08: இகாமத் கூறத் தொடங்கி விட்டால் நஃபில் தொழுவது வெறுக்கத்தக்கது (5) 6.09: பள்ளிவாசலுக்குள் நுழையும்போது கூறவேண்டிய துஆ (1) 6.10: பள்ளிக் காணிக்கை தொழுகை தொடர்பாக (4) 6.11: பயணத்திலிருந்து திரும்பியவர் இரண்டு ரக்அத் தொழுதல் (3) 6.12: முற்பகல் (ளுஹா) தொழுகை எண்ணிக்கை (11) 6.13: ஃபஜ்ருடைய இரு ரக்அத் சுன்னத் தொழுகை (15) 6.14: சுன்னத் தொழுகைகளின் சிறப்பும் எண்ணிக்கைகளும்! (3) 6.15: நஃபில் தொழுகைகளைத் தொழும் முறைகள் (14) 6.16: இரவுத் தொழுகை (18) 6.17: இரவுத் தொழுகையின் ஒருங்கிணைந்த விபரங்கள் (4) 6.18: அவ்வாபீன் தொழுகை (2) 6.19: இரவுத் தொழுகை, வித்ருத் தொழுகை ரக்அத்கள் (16) 6.20: வித்ருத் தொழுகை நேரம் (2) 6.21: தொழுகையில் மிகச் சிறந்தது (2) 6.22: இரவில் பிரார்த்தனை ஏற்கப்படும் நேரம் (2) 6.23: இரவின் இறுதி நேரத்தில் பிரார்த்தனை (5) 6.24: ‘கியாமு ரமளான்(தராவீஹ்) தொழ ஆர்வமூட்டல் (8) 6.25: இரவுத் தொழுகையில் பிரார்த்திப்பதும் நின்று வணங்குவதும் (17) 6.26: இரவுத் தொழுகையில் நீண்ட நேரம் (நின்று) குர்ஆன் ஓதுவது (2) 6.27: தொழாமல் விடியும்வரை உறங்குபவர் (3) 6.28: கூடுதலான நஃபில் தொழுகைகள் (6) 6.29: நற்செயல்களை வழக்கமாகச் செய்வதன் சிறப்பு. (4) 6.30: இபாதத் தூக்கத்தால் தடைப்பட்டால்… (5) 6.31: குர்ஆனின் தொடர்பைப் பற்றிப் பிடித்துக்கொள்ளக் கட்டளை (7) 6.32: குர்ஆனை இனிய குரலில் ஓதுவது விரும்பத் தக்கதாகும் (5) 6.33: மக்கத்து வெற்றி நாளில்… (2) 6.34: குர்ஆனை ஓதுவதால் இறங்கும் அமைதி (3) 6.35: குர்ஆனை மனனமிட்டவரின் சிறப்பு (1) 6.36: குர்ஆனை ஓதுகின்ற இருவகையினரின் தனிச் சிறப்புகள் (1) 6.37: குர்ஆனில் தேர்ந்த மேன்மக்கள் முன்னிலையில் குர்ஆன் ஓதுவது (2) 6.38: குர்ஆனைச் செவியேற்பதன் சிறப்பு (3) 6.39: குர்ஆனைக் கற்பது மற்றும் ஓதுவதன் சிறப்பு (2) 6.40: குர்ஆன் ஓதுவதன் சிறப்பும் அல்பகரா அத்தியாயத்தின் சிறப்பும் (2) 6.41: ஸூரத்துல் ஃபாத்திஹா, அல்பகரா அத்தியாயத்தின் இறுதி வசனங்களின் சிறப்பு (2) 6.42: ஸூரத்துல் கஹ்ஃப் மற்றும் ஆயத்துல் குர்ஸீ ஆகியவற்றின் சிறப்பு (3) 6.43: குல் ஹுவல்லாஹு அஹது (அத்தியாயத்தை) ஓதுவதன் சிறப்பு (4) 6.44: அல்முஅவ்விதத்தைன் (பாதுகாவல்) அத்தியாயங்களை ஓதுவதன் சிறப்பு (2) 6.45: குர்ஆனின்படி தாமும் செயல்பட்டுப் பிறருக்கும் அதைக் கற்பிப்பவரின் சிறப்பு (4) 6.46: குர்ஆன் ஏழு (வட்டார) மொழிநடையில் அருளப்பெற்றுள்ளது என்பதன் விளக்கம் (4) 6.47: குர்ஆனை வேகமாக ஓதுவதைத் தவிர்த்தல் (4) 6.48: குர்ஆன் ஓதும் முறைகளுள் சில (4) 6.49: தொழத் தடுக்கப்பட்ட நேரங்கள். (8) 6.50: அம்ரு பின் அபஸா (ரலி) இஸ்லாத்தை ஏற்றமை (1) 6.51: சூரியன் உதிக்கும் நேரத்தையும் மறையும் நேரத்தையும் தேர்ந்தெடுத்துத் தொழாதீர்கள்! (2) 6.52: நபி (ஸல்) அஸ்ருக்குப் பிறகு தொழுதுவந்த இரண்டு ரக்அத்கள் எவை? (5) 6.53: மஃக்ரிப் தொழுகைக்கு முன் இரண்டு ரக்அத்கள் தொழுவது விரும்பத் தக்கது (2) 6.54: பாங்குக்கும் இகாமத்துக்கும் இடையிலுள்ள தொழுகை (1) 6.55: அச்சச் சூழல் தொழுகை (8) 7.01: வெள்ளிக்கிழமையில் குளிப்பது வயதுவந்த ஒவ்வோர் ஆண் மீதும் கடமை (7) 7.02: வெள்ளிக்கிழமையில் பல் துலக்குவதும் நறுமணம் பூசுவதும் (4) 7.03: வெள்ளிக்கிழமை சொற்பொழிவின்போது அமைதி காத்தல் (2) 7.04: வெள்ளிக்கிழமையில் (பிரார்த்தனை ஏற்கப்படுவதற்கு) உள்ள ஒரு நேரம் (4) 7.05: வெள்ளிக்கிழமையின் சிறப்பு (2) 7.06: இந்தச் சமுதாயத்தின் (சிறப்பு வழிபாட்டு) நாள் வெள்ளிக்கிழமை (4) 7.07: வெள்ளிக்கிழமை (தொழுகைக்கு) முன்னதாகச் செல்வதன் சிறப்பு (2) 7.08: மௌனமாக (வெள்ளிக்கிழமை) உரையைச் செவியேற்பவரின் சிறப்பு (2) 7.09: சூரியன் (உச்சியிலிருந்து) சாயும்போது ஜும்ஆத் தொழுவது (5) 7.10: தொழுகையின் உரைகளும் இடையே (இமாம்) அமர்வதும் (3) 7.11: வியாபாரத்தையோ வேடிக்கையையோ கண்டால் (62:11ஆவது) இறைவசனம் (4) 7.12: ஜும்ஆத் தொழுகையை(த் தொழாமல்) கைவிடுவதற்குக் கண்டனம் (1) 7.13: (ஜும்ஆத்) தொழுகையையும் (குத்பா) உரையையும் சுருக்கமாக அமைத்தல் (11) 7.14: இமாம் (ஜும்ஆ) உரை நிகழ்த்தும்போது காணிக்கை தொழுகை (6) 7.15: பொது போதனைக்கு நடுவில் தனி போதனை (1) 7.16: ஜும்ஆத் தொழுகையில் ஓத வேண்டியவை (3) 7.17: வெள்ளிக்கிழமை (ஃபஜ்ருத் தொழுகையில்) ஓத வேண்டியவை (3) 7.18: ஜும்ஆவுக்குப் பின் தொழ வேண்டியவை (16) 8.01: பெருநாள் திடலில் பெண்கள் பங்கேற்பது (3) 8.02: பெருநாள் திடலில் தொழுகைக்கு முன்போ பின்போ தொழக் கூடாது (1) 8.03: இரு பெருநாள் தொழுகைகளில் ஓதக் கூடியவை (2) 8.04: பெருநாட்களில் பாவமில்லா விளையாட்டுகளில் ஈடுபட அனுமதி (7) 9.00: இமாம் (மழைத் தொழுகையில்) மேல்துண்டை மாற்றிப் போட்டுக் கொள்வது (4) 9.01: மழைவேண்டிப் பிரார்த்திக்கும்போது இருகைகளை உயர்த்துதல் (3) 9.02: மழைவேண்டிப் பிரார்த்தித்தல் (2) 9.03: கடும் காற்றையும் மேகத்தையும் காணும்போதும்.. மழை பெய்யும்போதும்.. (3) 9.04: கீழைக் காற்று (’ஸபா’) மற்றும் மேலைக் காற்று (’தபூர்’) பற்றிய குறிப்புகள் (1) 10.01: சூரிய கிரகணத் தொழுகை (7) 10.02: கிரகணத் தொழுகையின்போது மண்ணறை வேதனை பற்றி நினைவு கூர்வது (1) 10.03: கிரகணத் தொழுகையின்போது சொர்க்கமும் நரகமும் (6) 10.04: கிரகணத் தொழுகையில் எட்டு ருகூஉகளும் நான்கு ஸஜ்தாக்களும்.. (2) 10.05: கிரகணத் தொழுகைக்காக, “அஸ்ஸலாத்து ஜாமிஆ” அறிவிப்பு.. (8) 11.01: மரணத் தருவாயில் ‘லா இலாஹ இல்லல்லாஹ்’ (எனும் கலிமா)வை நினைவூட்டுதல் (2) 11.02: துன்பம் நேரும்போது வேண்டக்கூடிய பிரார்த்தனை (2) 11.03: நோயாளியிடமும் மரணத் தருவாயில் இருப்பவரிடமும் சொல்ல வேண்டியவை (1) 11.04: உயிர் பிரிந்தவுடன் இறந்தவருக்குச் செய்ய வேண்டியவை (1) 11.05: இறப்பவரின் பார்வை தனது உயிரை நோக்கி நிலைகுத்தி நிற்றல் (1) 11.06: இறந்தவருக்காக அழுவது (3) 11.07: நோயாளிகளைச் சந்தித்து உடல்நலம் விசாரித்தல் (1) 11.08: பொறுமை என்பது துன்பத்தின் முதல் நிலையில் கடைப்பிடிப்பதாகும் (2) 11.09: இறந்தவருக்காக ஒப்பாரி வைத்து அழுதால்.. (14) 11.10: ஒப்பாரிக்குக் கடுமையான கண்டனம் (5) 11.11: ஜனாஸாவின் இறுதி ஊர்வலத்தைப் பின்தொடர்ந்து செல்வதற்குப் பெண்களுக்குத் தடை (2) 11.12: மையித்தைக் குளிப்பாட்டுதல் (4) 11.13: மய்யித்திற்கு ‘கஃபன்’ உடை அணிவித்தல் (4) 11.14: மய்யித்தை மூடிவைத்தல் (1) 11.15: மய்யித்திற்கு அழகிய முறையில் கஃபன் அணிவித்தல் (1) 11.16: இறந்தவர் உடலைத் துரிதமாக அடக்கம் செய்தல் (2) 11.17: ஜனாஸாத் தொழுகையின் மற்றும் ஜனாஸாவைப் பின்தொடர்வதன் சிறப்பு (6) 11.18: மய்யித்துக்காக நூறு பேர் தொழுது செய்யும் பரிந்துரை ஏற்கப்படும் (1) 11.19: மய்யித்துக்காக நாற்பது பேர் பரிந்துரை (1) 11.20: இறந்தவர் குறித்துப் புகழ்ந்து, அல்லது இகழ்ந்து பேசப்படுதல் (1) 11.21: ஓய்வு பெற்றவரும் ஓய்வளித்தவரும் (1) 11.22: ஜனாஸாத் தொழுகையில் சொல்ல வேண்டிய தக்பீர்கள் (6) 11.23: மண்ணறை அருகில் (ஜனாஸாத் தொழுகை) தொழுவது (4) 11.24: ஜனாஸாவுக்காக எழுந்து நிற்பது (7) 11.25: ஜனாஸாவுக்காக எழுந்து நிற்கும் வழக்கம் மாற்றப்பட்டது (3) 11.26: இறந்தவருக்காக ஜனாஸாத் தொழுகையில் செய்யும் பிரார்த்தனை (2) 11.27: ஜனாஸாத் தொழுகையின்போது இமாம் எந்த இடத்தில் நிற்க வேண்டும்? (2) 11.28: ஜனாஸாத் தொழுகை தொழுதுவிட்டு வாகனத்தில் ஏறித் திரும்பிச் செல்லலாம் (2) 11.29: உட்குழியும் மையித்தின் மேல் செங்கற்களை அடுக்குவதும் (1) 11.30: கப்றுக் குழியினுள் போர்வையை விரித்து (மையித்தை) வைப்பது (1) 11.31: கப்றைத் தரை மட்டமாக்க உத்தரவு (2) 11.32: கப்றுகளைக் காரையால் பூசுவதோ அதன் மீது கட்டடம் எழுப்புவதோ கூடாது (2) 11.33: கப்றின்மீது அமர்வதும் அதன் மீது தொழுவதும் தடுக்கப்பட்டவை (3) 11.34: பள்ளிவாசலில் ஜனாஸாத் தொழுகை நடத்துவது (3) 11.35: மையவாடிக்குள் கூற வேண்டியதும் பிரார்த்திப்பதும் (3) 11.36: நபி (ஸல்), தம் தாயாரின் கப்றைக் காண்பதற்கு இறைவனிடம் அனுமதி கோரியது (3) 11.37: தற்கொலை செய்தவருக்கு, (ஜனாஸா) தொழுகையைக் கைவிட்டது (1) 12.00: பல வகை வள வரிகள் (5) 12.01: பத்து சதவீத ஸகாத்; அல்லது ஐந்து சதவீத ஸகாத் (1) 12.02: ஒரு முஸ்லிம் மீது அவர்தம் அடிமைக்காகவும் குதிரைக்காகவும் ஸகாத் கடமை இல்லை (3) 12.03: ஸகாத்தைச் சமர்ப்பிப்பதும் ஸகாத் கொடுக்க மறுப்பதும் (1) 12.04: பெருநாள் தர்மமாகப் பேரீச்சம் பழம், பார்லி (10) 12.05: பெருநாள் தொழுகைக்கு முன்பே பெருநாள் தர்மத்தை வழங்க கட்டளை (2) 12.06: ஸகாத் வழங்க மறுப்பது குற்றமாகும் (4) 12.07: ஸகாத் வசூலிப்பவர்களிடம் கனிவுடன் நடந்துகொள்வது (1) 12.08: ஸகாத் வழங்காதவருக்கான கடும் தண்டனை (2) 12.09: தர்மம் செய்வதற்கு ஆர்வமூட்டல் (2) 12.10: செல்வத்தைச் சேமித்தோர் பற்றிய கண்டனம் (2) 12.11: தர்மம்: ஆர்வமூட்டலும் நற்கூலி உண்டு என்ற நற்செய்தியும் (2) 12.12: செலவழிப்பதன் சிறப்பும் வழங்காதவனின் பாவமும் (4) 12.13: தமக்கும், குடும்பத்தாருக்கும், உறவினர்களுக்குமாக செலவிடுதல் (1) 12.14: இணை வைக்கும் உறவுகளுக்குச் செலவழிப்பதன் சிறப்பு (8) 12.15: இறந்தவருக்காகத் தர்மம் செய்தல் (1) 12.16: எல்லா நல்லறமும் ஸதகா எனப்படும் (5) 12.17: அறவழியில் செலவு செய்பவரும் செய்யாதவரும் (1) 12.18: தர்மம் செய்வதற்கு ஆர்வமூட்டல் (5) 12.19: தர்மம் (இறைவனிடம்) ஏற்கப்படுவதும் வளர்வதும் (3) 12.20: இன் சொல்லையேனும் தர்மம் செய்து நரகத்திலிருந்து பாதுகாப்பு பெறல் (5) 12.21: தர்மத்தின் அளவில் குறை காண தடை (1) 12.22: பாலுக்காக இரவல் வழங்கப்படும் கால்நடைகளின் சிறப்பு (2) 12.23: வள்ளலுக்கும் கஞ்சனுக்குமான உதாரணம் (3) 12.24: உரியவருக்குத் தர்மம் சேரவில்லையேனும் பலன் (1) 12.25: உரிமையாளரின் அனுமதியுடன் தர்மம் செய்தவருக்கும் பலன் (3) 12.26: ஓர் அடிமை தன் உரிமையாளரின் செல்வத்திலிருந்து (அறவழியில்) செலவழித்தல் (3) 12.27: தர்மத்தையும் இதர நற்செயல்களையும் இணைத்துச் செய்தவர் (3) 12.28: அறவழியில் தாராளமாக செலவிடலும் கணக்கு பார்ப்பது விரும்பத்தக்கதல்ல என்பதும் (3) 12.29: சிறிய அளவு தர்மம் (1) 12.30: இரகசியமாகத் தர்மம் செய்வதன் சிறப்பு (1) 12.31: மிகச் சிறந்த தர்மம் (2) 12.32: சிறந்த கை (4) 12.33: யாசிப்பதற்குத் தடை (3) 12.34: ஏழை என்பவன், அடிப்படைத் தேவைகளுக்குப் போதிய பொருளாதாரம் இல்லாதவன் (2) 12.35: மக்களிடம் யாசிப்பது வெறுக்கப்பட்டதாகும் (6) 12.36: யாருக்கு யாசிக்க அனுமதி? (1) 12.37: எதிர்பார்ப்பு இல்லாமல், யாசிக்காமல் வாழ்பவருக்கு வழங்கப்பட்டால் பெற்றுக்கொள்ளலாம் (4) 12.38: உலகாதாயத்தின் மீது பேராசை கொள்வது விரும்பத் தக்கதன்று (2) 12.39: இரு ஓடைகள் இருந்தாலும் மூன்றாவது ஓடையை எதிர்பார்த்தல் (4) 12.40: வாழ்க்கை வசதிகள் அதிகமாக இருப்பது செல்வமன்று (1) 12.41: இவ்வுலகத்தின் கவர்ச்சி குறித்து அஞ்சுதல் (3) 12.42: சுயமரியாதை மற்றும் பொறுமையின் சிறப்பு (1) 12.43: போதுமான வாழ்வாதாரமும் போதுமென்ற மனமும் (4) 12.44: அருவருப்பாகப் பேசி, கடுஞ் சொற்களால் கேட்டவருக்கும் தானம் வழங்குவது (4) 12.45: இறைநம்பிக்கை, (வறுமையால்) கேள்விக்குள்ளாக்கப்படுபவருக்கு உதவுதல் (1) 12.46: இஸ்லாத்தை ஏற்றவர்களுக்கு வழங்கலும் இறை நம்பிக்கை வலுவானவர் பொறுமை கொள்ளலும் (8) 12.47: காரிஜிய்யாக்களும் அவர்களின் தன்மைகளும் (10) 12.48: காரிஜிய்யாக்களைக் கொல்லுவதற்கு ஊக்கப்படுத்துதல் (4) 12.49: காரிஜிய்யாக்கள் படைப்பினங்களிலேயே தீயவர்கள் ஆவர் (3) 12.50: தூதரின் குடும்பத்தார் ஸகாத் பெறுவதற்குத் தடை (6) 12.51: நபி (ஸல்) குடும்பத்தாரைத் தர்மப் பொருட்கள் வசூலிக்கப் பயன்படுத்தலாகாது (1) 2.26: அசுத்தமான கையைப் பாத்திரத்தில் நுழைத்தல் (2) 2.25: ஒருநாள் தொழுகைகளை ஒரு உளூவில் தொழ அனுமதி (1) 2.24: காலுறையில் மஸஹு செய்து தொழுவதற்கான வரம்பு (1) 2.23: முன் தலை மற்றும் தலைப்பாகை மீது மஸஹு செய்தல் (4) 2.22: காலுறையில் மஸஹு செய்தல் (9) 2.21: தண்ணீரால் கழுவித் துப்புரவு செய்தல் (3) 2.20: மலம் கழிப்பதற்குத் தடையுள்ள இடங்கள் (1) 2.19: செயல்களை வலப் புறமிருந்து தொடங்குதல். (2) 2.18: வலக் கரத்தால் கழுவத் தடையானவை (3) 2.17: கழிப்பிடத்தில் துப்புரவு செய்தல் (7) 2.16: இயற்கை மரபுகள் (8) 2.15: பல் துலக்குதல் (7) 2.14: சிரமகாலங்களிலும் முழுமையாக ஒளு செய்வதன் சிறப்பு (1) 2.13: உளூவில் தண்ணீர் படும் இடங்களில் ஒளி படர்தல் (1) 2.12: உளூவில் உறுப்புகளை அதிகப்படுத்திக் கழுவுதல் (6) 2.11: உளூ செய்த நீரோடு வெளியேறும் பாவங்கள் (2) 2.10: உளூவில் உறுப்புகள் முழுவதும் கழுவுதல் (1) 2.09: இரு கால்களையும் முழுமையாகக் கழுவுதல் கட்டாயம் (6) 2.08: சுத்தம் செய்யும் போது ஒற்றைப்படையாக செய்தல் (5) 2.07: நபி (ஸல்) அவர்கள் செய்த அங்கத் தூய்மை (உளூ) (2) 2.06: அங்கத் தூய்மை (உளூ) செய்தபிறகு ஓதப்படும் பிரார்த்தனை (1) 2.05: சிறு பாவங்களுக்கான பரிகாரங்கள் (3) 2.04: அங்கத்தூய்மையின் சிறப்பும் அதன் பின் தொழுவதன் சிறப்பும் (9) 2.03: அங்கத் தூய்மை (உளூ) செய்முறையும் அதை நிறைவாகச் செய்வதும் (2) 2.02: தொழுகைக்குக் கட்டாயமான (அங்கத்) தூய்மை (2) 2.01: அங்கத்தூய்மை(உளூ)யின் சிறப்பு (1) 1.96: மறுமையில் ஆதம்(அலை) அவர்களுக்கு இடப்படும் கட்டளை (1) 1.95: சொர்க்கவாசிகளில் பாதிபேர் (3) 1.94: விசாரணையோ வேதனையோ இன்றி சொர்க்கம் செல்வோர் (7) 1.93: நட்பு கொள்ளத் தக்கவர்களும் தகாதவர்களும் (1) 1.92: இறைமறுப்பாளரின் நற்செயல்கள் பலனளிக்காது (1) 1.91: நரகவாசிகளிலேயே மிகக்குறைவான வேதனை அனுபவிப்பவர். (4) 1.90: அபூதாலிபுக்காக நபி(ஸல்) அவர்களின் பரிந்துரை (3) 1.89: நெருங்கிய உறவினருக்கு எச்சரிக்கை செய்தல் (5) 1.88: இறைமறுப்பாளருக்கு எந்தப் பரிந்துரையும் பலனளிக்காது (1) 1.87: தம் சமுதாயத்தார் மீது நபி(ஸல்) அவர்களுக்குள்ள பரிவு (1) 1.86: நபி(ஸல்) அவர்களின் பரிந்துரைப் பிரார்த்தனை! (8) 1.85: சொர்க்கத்திற்காகப் பரிந்துரைக்கும் முதல் மனிதர் (4) 1.84: சொர்க்கவாசிகளுள் ஆகக் குறைந்த பதவி (14) 1.83: இறுதியானவராக வெளியேறும் நரகவாசி. (3) 1.82: ஷஃபாஅத்(பரிந்துரை) செய்யப்படுபவர்கள் (2) 1.81: இறைவனைக் காணும் வழிமுறை (3) 1.80: இறைவனைக் காண்பதற்கான சான்று (2) 1.79: அல்லாஹ்வின் பார்வை பற்றிய விளக்கம் (2) 1.78: மிஃராஜின் போது நபி(ஸல்) கண்டது பற்றிய விளக்கம் (2) 1.77: நபி(ஸல்) அவர்கள் இறைவனைப் பார்த்தார்களா? என்பது பற்றிய விளக்கம் (5) 1.76: சித்ரத்துல் முந்தஹா(இலந்தை மரம்) பற்றிய குறிப்பு! (4) 1.75: ஈஸா(அலை) மற்றும் தஜ்ஜால் பற்றிய குறிப்புகள் (6) 1.74: விண்ணுலகப் பயணமும் தொழுகை கடமையாக்கப்படலும் (12) 1.73: வேத வெளிப்பாடு (வஹீ) தொடங்குதல் (3) 1.72: இறை நம்பிக்கை ஏற்கப்படாத காலகட்டம் (5) 1.71: ஈசா(அலை) இஸ்லாமிய நெறிப்படி நீதி வழங்குதல் (6) 1.70: தூதுத்துவம் உலக மக்கள் அனைவருக்கும் பொதுவானது (3) 1.69: இறைச்சான்றுகள் மூலம் மன அமைதி (1) 1.68: ஒருவரை இறைநம்பிக்கையாளர் என்று முடிவு செய்தல் (2) 1.67: அச்சநேரத்தில் இறைநம்பிக்கையாளர் நிலை (1) 1.66: இறுதிக் காலத்தில் இறை நம்பிக்கை (அற்றுப்) போய் விடுவது. (2) 1.65: இஸ்லாத்தின் மீளெழுச்சி. (3) 1.64: உள்ளங்களில் குழப்பங்கள் தோன்றுவது. (2) 1.63: குடிமக்களைச் சுரண்டும் ஆட்சியாளன் நரகத்திற்குரியவன் ஆவான். (3) 1.62: செல்வத்தைக் காக்கப் போராடியவர் மற்றும் பிறர் செல்வத்தைப் பறிக்க முனைந்தவர் (2) 1.61: மாற்றாரின் பொருளைக் கைப்பற்றுபவர் நிலை. (5) 1.60: இறைநம்பிக்கையில் தடுமாற்றம் ஏற்பட்டால்.. (8) 1.59: நல்ல-தீய எண்ணங்களுக்கான கூலி (5) 1.58: தீய எண்ணங்களைச் செயல்படுத்தாமல் இருத்தல் (2) 1.57: தாங்க முடியாத சுமை? (2) 1.56: இறை நம்பிக்கையின் வாய்மையும் தூய்மையும் (1) 1.55: இறைமறுப்பாளராக இருந்தபோது செய்த நல்லறங்கள் (3) 1.54: முன் செய்த பாவங்கள் (2) 1.53: அறியாமை காலத்தில் செய்த தீமைகள் (2) 1.52: இறைநம்பிக்கையாளரின் அச்சம் (1) 1.51: குழப்பங்கள் தோன்றுவதற்கு முன் நற்செயல் புரிய விரைதல் (1) 1.50: மறுமை நெருங்கும் வேளையில் வீசும் காற்று (1) 1.49: ஹிஜ்ரத்தில் தற்கொலை செய்து கொண்டவரின் நிலை (1) 1.48: கையாடல் செய்பவரும் இறைநம்பிக்கையாளரும் (2) 1.47: தற்கொலை செய்பவரும் கட்டுப்பட்டு வாழ்பவரும் (7) 1.46: மூன்று பெரும் தவறான செயல்கள் (4) 1.45: புறங்கூறுவது வன்மையாகத் தடை செய்யப் பட்டது (3) 1.44: துக்க வேளைகளில் தடை செய்யப்பட்ட செய்கைகள்! (3) 1.43: முஸ்லிம்களை வஞ்சித்தவர் நிலை! (2) 1.42: முஸ்லிம்களுக்கு எதிராக ஆயுதம் ஏந்தியவர் நிலை! (3) 1.41: “லா இலாஹ இல்லல்லாஹ்” கூறியவரைக் கொல்லத்தடை! (4) 1.40: இணைவைத்தலின் விளைவுகள் (5) 1.39: தற்பெருமை (3) 1.38: பெரும் பாவங்கள் (5) 1.37: பாவங்களில் மிகவும் அருவருப்பானது (2) 1.36: நற்செயல்களில் சிறந்தது (6) 1.35: தொழுகையை விடுதலும் குஃப்ரும் (3) 1.34: இறைநம்பிக்கை குறைவும் குஃப்ர் எனும் சொல்லும் (1) 1.33: அன்ஸாரிகளையும் அலி(ரலி)யையும் நேசித்தல் (6) 1.32: மழையும் இறைமறுப்பும் (4) 1.31: ஓடிப்போன அடிமை (3) 1.30: இறைமறுப்பின் அடையாளங்கள் (1) 1.29: இறைமறுப்பாளர்களாய் மாறுதல் (2) 1.28: முஸ்லிமோடு போரிடுதல் (1) 1.27: தந்தையை வெறுப்பவன் நிலை (4) 1.26: முஸ்லிமை நோக்கி காஃபிர் என அழைத்தல் (2) 1.25: நயவஞ்சகனின் குணங்கள். (3) 1.24: இறைநம்பிக்கையில் குறைவு ஏற்படல் (2) 1.23: மார்க்கம் என்பதே நலன் நாடுவதுதான். (4) 1.22: இறைநம்பிக்கையாளர்களை நேசித்தல் (1) 1.21: இறைநம்பிக்கையில் ஏற்படும் ஏற்றத் தாழ்வு (9) 1.20: நன்மையை ஏவுதல், தீமையைத் தடுத்தல் (2) 1.19: நல்லவற்றிற்கு ஆர்வமூட்டுதல் (3) 1.18: அண்டை வீட்டாருக்குத் தொல்லை தரக் கூடாது (1) 1.17: தமக்கு விரும்வுவதைச் சகோதரனுக்கும் விரும்புதல் (2) 1.16: தூதரை நேசிப்பது கடமை (2) 1.15: இறைநம்பிக்கையின் இனிமை (2) 1.14: இஸ்லாம் கூறும் நல்லறங்களில் சிறந்தது (4) 1.13: இஸ்லாத்தின் அனைத்துப் பண்புகளின் கலவை (1) 1.12: இறைநம்பிக்கையின் கிளைகள் (5) 1.11: இறைநம்பிக்கையைச் சுவைப்பவர் (1) 1.10: ஓரிறை கோட்பாட்டில் மரணித்தவர் நிலை (11) 1.09: இணை வைத்த நிலையில் மரணித்தவர் நிலை (3) 1.08: ஜிஸ்யா செலுத்தாதவர் மீது போர் புரிதல் (6) 1.07: இஸ்லாத்தை ஏற்க அழைப்பு விடுத்தல் (2) 1.06: அறியாதவர்களுக்கு அறிவித்தல் (4) 1.05: இஸ்லாமியக் கடமைகள் (4) 1.04: சொர்க்கம் செல்பவர் (7) 1.03: இஸ்லாத்தின் தூண்கள் (2) 1.02: தொழுகை பற்றிய விளக்கம் (2) 1.01: இறைநம்பிக்கை குறித்த விளக்கம் (7)
ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ எந்தக் கூட்டணியில் இருக்கிறாரோ, அந்தக் கூட்டணி வெற்றிபெறாது என்கிற பார்வை தமிழக அரசியல் களத்தில் ஒரு சாராரிடம் உண்டு. பல தேர்தல்களில் வைகோ இடம்பெற்ற கூட்டணிகள், தோல்வியையே தழுவியுள்ளன. அதனால், வைகோ சேரும் கூட்டணி வெற்றிபெறாது என்கிற சென்டிமென்ட் பொதுவாக உண்டு. `வைகோ சென்டிமென்ட்’ என்று சொல்லி, மாற்றுக்கட்சிகளின் மேடைகளிலும், சமூகவலைதளங்களிலும் வைகோவைக் கிண்டல் செய்யும் நிலையும் இருந்துவந்தது. 2016 சட்டமன்றத் தேர்தலின்போது, ம.தி.மு.க., சி.பி.எம்., சி.பி.ஐ., வி.சி.க ஆகிய கட்சிகள் இணைந்து மக்கள் நலக்கூட்டணி என்கிற ஓர் அணியை அமைத்தனர். அதில் தே.மு.தி.க-வையும் த.மா.கா-வையும் கொண்டுவருவதில் வைகோ பெரும் பங்காற்றினார். தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் தலைமையில் அந்த அணி தேர்தலைச் சந்தித்தது. அந்தக் கூட்டணி பெரும் தோல்வியைத் தழுவியது. அப்போதும் அந்தத் தோல்விக்கு வைகோ சென்டிமென்ட்தான் காரணம் என்று கிண்டலும் கேலியும் செய்தார்கள். இந்நிலையில், தி.மு.க கூட்டணியில் ம.தி.மு.க இடம்பெற்றது. `சிங்கம் களம் இறங்கிடிச்சே...’ என்று சமூகவலைதளங்களில் மீம்ஸ் தட்டினார்கள் நெட்டிசன்கள். `ஸ்டாலினை முதல்வராக்காமல் ஓயமாட்டேன்’ என்று வைகோ முழங்கினார். பலரும் அதை, சமூகவலைதளங்களில் கேலியும் கிண்டலும் செய்தார்கள். ஆனால், இந்த நாடாளுமன்றத் தேர்தலில், ஒரு தொகுதியைத் தவிர மற்ற அனைத்துத் தொகுதிகளிலும் தி.மு.க கூட்டணி வேட்பாளர்களின் வெற்றி கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. இந்த வெற்றியின் மூலம் வைகோவுக்கு எதிரான அந்த சென்டிமென்ட் பிரசாரம் தவிடுபொடியாகிவிட்டது. ``தமிழகம், திராவிட இயக்கப் பூமி... மதவாத சக்திகளுக்கு இடமில்லை என்பதைத் தமிழக மக்கள் உறுதிசெய்திருக்கிறார்கள்” என்று உற்சாகத்துடன் கூறியிருக்கிறார் வைகோ.
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வறுத்து அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து பச்சை வாசனை போக நன்கு வதக்கி, இறக்கி குளிர வைத்து, மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும். அதன் பின்னர் மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, பின் இஞ்சி பூண்டு பேஸ்ட் மற்றும் வெங்காயத்தை சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்க வேண்டும். பின்பு அதில் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து 2 நிமிடம் கிளறி, பின் சிறிது தண்ணீர் ஊற்றி, உப்பு சேர்த்து குறைவான தீயில் வைத்து கொதிக்க விட வேண்டும்.ம மற்றொரு அடுப்பில் ஒரு நாண்ஸ்டிக் பேனை வைத்து, அதில் முட்டையை வைத்து, அதன் மேல் மிளகாய் தூள், கரம் மசாலா மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு பிரட்டி, பின் அதனை கொதித்துக் கொண்டிருக்கும் மசாலாவில் சேர்த்து 2 நிமிடம்முட்டையில் மசாலா சேரும் வரை நன்கு வேக வைத்து இறக்கி, கொத்தமல்லியைத் தூவினால், முட்டை தொக்கு தயார். Tags: #Eggmasala Previous நீரிழிவு நோய் முதல் உயர் இரத்த அழுத்தம் வரை- பல நோய்களுக்கு இயற்கை மருந்தாக திகழும் பிராணாயாமா!
"லஞ்சம் கொடுப்பதோ பெறுவதோ சட்ட விரோதமானது. லஞ்சம் தொடர்பான புகார்களை நேரிலோ அல்லது தொலைபேசி வாயிலாகவோ தெரிவிக்க வேண்டிய முகவரி: இயக்குனர், விழிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை, எண். 293, M.K.N சாலை, ஆலந்தூர், சென்னை - 16 அல்லது உள்ளூர் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலர் இணையதளம்: www.dvac.tn.gov.in தொலைபேசி எண்கள்:(044) 22310989/22321090/22321085/22342142;தொலை நகலி: 044-22321005. இத்தளத்தில் தவறான தகவல்கள் இடம்பெற்றிருந்தால் அது குறித்த விவரங்கள் மற்றும் உங்களது கருத்துக்களை dtpwebportal@gmail.com என்ற EmailIDக்கு அனுப்பவும்) Terms and Conditions இவ்வலைத்தளம் சென்னை பேரூராட்சிகளின் இயக்குநரகம் மூலம் பராமரிக்கபட்டு வருகிறது. இத்தளத்தின் உள்ளடக்கமானது, துல்லியமாகவும், நம்பத்தகுந்த வகையிலும் இருப்பதற்கு, அனைத்து வகை முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இருப்பினும், இவற்றை, சட்டம் சார்ந்த அறிக்கையாக அமைக்கவோ அல்லது எந்த ஒரு சட்டம் சார்ந்த நோக்கங்களுக்கோ பயன்படுத்தக்கூடாது. இத்தளம் குறித்து, தெளிவின்மை அல்லது ஐயம் இருப்பின், பயனாளர்கள் தொடர்புள்ள துறை(கள்)/இதர மூலங்கள் வழியாக சரிபார்க்கவும் மற்றும் தேவையான ஆலோசனைகள் பெறவும் அறிவுறுத்தப்படுகிறது. எந்த சூழ்நிலையிலும் இத்தளத்திலுள்ள தரவுகளைப் பயன்படுத்துவதால் எழும் எந்தவொரு செலவு, அளவற்ற இழப்பு அல்லது சிதைவு, மறைமுகமான அல்லது அதன் காரணமாக ஏற்படும் இழப்பு அல்லது சிதைவுகள் ஆகியவற்றுக்கு இத்துறை கட்டுப்பட்டதல்ல. This website is maintained by Directorate of Town Panchayat. Though all efforts have been made to ensure the accuracy and currency of the content on this website, the same should not be construed as a statement of law or used for any legal purposes. In case of any ambiguity or doubts, users are advised to verify/check with the Department(s) and/or other source(s), and to obtain appropriate professional advice. Under no circumstances will this Department be liable for any expense, loss or damage including, without limitation, indirect or consequential loss or damage, or any expense, loss or damage whatsoever arising from use, or loss of use, of data, arising out of or in connection with the use of this website.
நமது பாரம்பரிய சின்னங்கள் சூறையாடப்படுவதை எதிர்த்து தொடரும் எங்கள் முயற்சியின் விளைவால் பல திடுக்கிடும் தகவல்கள் வெளி வந்துள்ளன. இவை கண்டிப்பாக வெளிச்சத்திற்கு வரவேண்டும் – அப்படி கொண்டு வந்தால் தான் இந்த திருட்டுக்கு மட்டும் அல்ல இதைப் போல இனியும் திருட்டுகள் தொடராமல் ஒரு முற்றுப் புள்ளி வைக்க இயலும். இணையம், தொழில் நுட்பம் என்று பல துறைகளில் வல்லுனர்கள் நம்மிடையே இருந்தும் நம் குலதனங்கள் நமது கண்முன்னரே திருடப்படுவது மட்டும் அல்லாமல் பகிரங்கமாக விற்கவும்படுகின்றன. ஒரு பக்கம் குருட்டு நம்பிக்கைகளை காட்டி எங்களை போன்ற ஆர்வலர்களை இந்த அரிய பொக்கிஷங்களை படம் எடுக்க விடாமல் செய்யும் கூட்டம் நமது ஆலயங்களில் உள்ளன. அவர்களுக்கு இந்தப் பதிவு ஒரு பாடமாக அமையும். படம் எடுத்தால் பவர் போய்விடும் என்று எங்களை துரத்தும் இவர்களுக்கு படம் எடுக்காவிட்டால் சாமியே போய்விடும் என்பது புரிய வேண்டும். இன்னொரு பக்கம் நமது அரசு, காவல் துறை. திருமேனிகளுக்கு தகுந்த பாதுகாப்பை அளிக்காமல், காலை பாட்டு பாடி எழுப்பி, நீராட்டி, அலங்காரம் செய்து , உணவு படைத்து, மூன்று வே​ளை பூஜித்து, இரவு தாலாட்டு பாடித் தூங்க வைக்கப்பட்ட சிலைகளை அப்புறப்படுத்தி பாதுகாப்பு என்ற பெயரில் பாசறையில் தரையில் அடுக்கி வைத்துள்ளனர்!!! அதுவும் எந்தவித பட்டியலும் இல்லாமல் அடைத்து வைப்பது என்பது எந்த விதத்தில் நல்லது? அங்கே அவை களவு போனாலோ பழைய சிலையை அப்புறப்படுத்திவிட்டு புதிய சிலை ஒன்றை செய்து வைத்து விட்டலோ எப்படி அரசாங்கம் கண்டுபிடிக்கும்? சரி, இந்தத் திருட்டுக்கு வருவோம். இந்தக் களவு பற்றி காவல் துறை தனது இணைய பக்கத்தில் 2009 ஆம் ஆண்டு இவ்வாறு தகவல்களை வெளியிட்டுள்ளது என்று அறிகிறோம். இதில் என்ன சோகம் என்றால் மிகவும் முக்கியமான இந்த வழக்கில் சம்பந்தர் சிலையை கண்ணன் என்றும், சண்டிகேஸ்வரர் சிலையை முருகன் என்றும் அஸ்திர தேவர் சிலையை தீபலக்ஷ்மி என்றும் தங்கள் தலத்தில் பெயர் இட்டுள்ளனர். சென்னையில் இவை பற்றி தெரிந்த வல்லுனர்களுக்கா பஞ்சம்!!! அதிர்ஷ்டவசமாக அங்கேயே ஒரு இணைப்பும் உள்ளது அதில் உள்ள பெயர்கள் பரவாயில்லை. எனினும் படங்கள் மிகவும் மங்கலாகவும் சிறியனவாகவும் உள்ளன. ஆனால் இவையாவது உள்ளனவே – 1970,1980களின் ​போது இந்தப் படங்கள் எடுக்கப்பட்டன. பல படங்கள் எடுத்து பட்டியல் செய்து வைத்தது பாண்டி பிரெஞ்சு இன்ஸ்டிடியூட் முயற்சி என்று நம்புகிறோம். பல முறை கேட்டும் இந்தப் படங்களை பெரிய அளவில் எனக்கு தர அந்த நிறுவனம் இணங்க வில்லை. நான் முனைவர் பட்ட படிப்புக்கோ அல்லது ஏதோ ஒரு பல்கலைக்கழகத்துடன் சேர்ந்து ஆய்வுக்காகவோ செயல்பட்டால் தான் தர முடியுமாம்! நான் எனது சொந்த படிப்பிற்கோ பட்டம் பெறவோ இவற்றை கேட்கவில்லை – கொள்ளை போன நமது கலைப் பொருட்களை திரும்பப் பெற வேண்டும் என்ற ஒரே எண்ணம் தான் என்று பல முறை சொல்லியும் பயன் இல்லை – இந்த இணையப் படங்கள் மட்டுமே எனக்கு. விருதாச்சலம் அர்தனாரி ஆஸ்திரேலியா சென்ற திருட்டு பாதை என்ற பதிவின் மூலம் இந்த கும்பலின் கொள்ளைகளை பற்றி எழுதிய தினம் முதல் கடந்த இரண்டு மாதங்களாய் பல நூறு படங்களை ஆராய்ந்து இந்த உண்மைகளை உங்கள் முன்னர் வைக்கிறேன். கூகிள் உதவி மூலம் கபூர் அமெரிக்காவில் நடத்தி வந்த ஆர்ட் ஆப் தி பாஸ்ட் என்ற கா​லெரி மற்றும் அதன் மாதாந்திர பட்டியல்கள் கிடைத்தன. இன்று செப்டம்பர் 2009 ​கேடலாக், குறிப்பாக அதில் இருக்கும் ஒரு சிலையை பார்க்க போகிறோம். பட்டியலில் 14 ஆவதாக வரும் முருகன் சிலை. அருமையாக, விதம் விதமாக படம் பிடித்து கலர் பிரிண்டிங் செய்து விளம்பரம் செய்துள்ளார்கள். மீண்டும் நமது காவல் துறை வெளியிட்ட அறிக்கையில் உள்ள சிலைகளின் படங்களை பாருங்கள். குறிப்பாக சிகப்பு நிறத்தில் நான் சுட்டிக்காட்டி இருக்கும் முருகன். முடித்த அளவிற்கு அந்த படத்தை பெரிதுப்படுத்தி கணினியில் சற்று சரி செய்துள்ளேன். அருமையான சிலை – முருகன் சிலை. சோழர் காலத்து சிலை இல்லை (சற்று அழகு கம்மி தான்!) – விஜயநகர அரசு காலம். இரண்டும் ஒரே சிலையா? ஒன்று எழுபதுகளில் சுத்தமல்லி கோவிலில் இருந்த​போது எடுத்த படம் – மற்றொண்டு கடல் கடந்து அமெரிக்க சென்ற பிறகு …. செப்புச் சிலை வார்க்கும் கலை சோழர் காலத்திருக்கு பிறகு சற்று அழகு குறைந்தாலும், மெழுகை உருக்கி செய்யும் பாணி அதே தான். விஜயநகர அரசர்கள் காலத்திலும் கையால் மெழுகில் முதலில் படிமம் செய்யும் முறை தொடர்ந்தது – எனவே ஒவ்வொரு சிலைக்கும் தனித்தன்மை உண்டு. இதை மனதில் கொண்டு சிலையின் கை – குறிப்பாக கட்டை விரல் கையுடன் இணைக்கப்படும் பாணியை பாருங்கள். இரண்டு படங்களிலும் அதே போல இருப்பதை பாருங்கள். அதே போல இந்த சிலையின் காதணிகள் மிகவும் வினோதம். இதிலும் ரெண்டு படங்களும் ஒத்து போகின்றன. மார்பில் உள்ள பதாகம் கூட அதே அச்சு அசல்…. இந்தப் படம் கொண்டே இந்த சிலைகள் ஒன்றே என்று நாம் நிரூபணம் செய்ய இயலும். இந்த சிலை இப்போது எங்கே உள்ளது – ஏதாவது அருங்காட்சியகத்திற்கு அல்லது ஆர்வலருக்கு விற்றுவிட்டார்களோ? இல்லை அமெரிக்காவில் ஆர்ட் ஆப் தி பாஸ்ட் நிறுவனக் கிடங்கில் இன்னும் இருக்கிறதா? இந்த திருட்டுச் சிலையின் படத்தில் இன்னும் ஒரு துப்பு மறைந்து இருக்கிறது – இல்லாத ஒன்று தான் துப்பு. சிலையின் அடியில் இருந்த அடி மேடை அகற்றப்பட்டுள்ளது. இது தற்செயலான செயல் இல்லை. வேண்டும் என்று அதன் அடி பாகம் பிரிக்கப்பட்டுள்ளது. அடுத்து வரும் பதிவுகளில் ஏன் இப்படி என்றும் இன்னும் பல திடுக்கிடும் உண்மைகளுடன் சந்திப்போம். இதுவரை இரண்டு சிலைகள் தான் – இன்னும் இருபத்தி ஆறு பாக்கி… !!
செல்லுலார் தொலைபேசிகள் உலகில் 1980ஆம் ஆண்டு முதல் உபயோகத்தில் இருந்து வருகின்றன. முதன் முதலில் செல்லுலார் தொலைபேசிச் சேவைகள் ஐரோப்பாவின் பல்வேறு நாடுகளில்தான் தொடங்கப்பட்டது. இத்தொலைபேசிகள் அனலாக் (analogue) என்ற தொழில்நுட்ப முறையில் இயங்கி வந்தன. ஆனால் பல்வேறு நாடுகளில் இயங்கிவந்த இந்த செல்லுலார் தொலைபேசித் தொழில்நுட்பம் ஒன்றோடு ஒன்று இணங்காமல் தனித் தனி திசைகளில் சென்றுகொண்டிருந்தன. 1982-83இல், அப்பொழுது இந்த சேவையினை அளித்து வந்த ஒரு சில நிறுவனங்கள் ஒன்று சேர்ந்து Groupe Speciale Mobile (GSM) என்ற ஒரு தரம் நிர்ணயிக்கும் ஒரு நிறுவனத்தை உருவாக்கின. 1988இல் GSM ஒரு பொதுவான செல்லுலார் தொலைபேசித் தொழில்நுட்பத்தை உருவாக்கி, உபயோகிக்கத் தொடங்கினர். அதுவே இப்பொழுது Global System for Mobile Communication (GSM) என்ற பெயரால் அழைக்கப் படுகிறது. இந்த GSM தொழில்நுட்பம், டிஜிட்டல் (digital) மற்றும் TDMA (Time Division Multiple Access) ஆகிய தொழில்நுட்பங்களை உள்ளடக்கி இயங்குகிறது. 1992ஆம் ஆண்டு இந்திய அரசு தனியார் நிறுவனங்களை செல்லுலார் தொலைபேசிச் சேவையை அளிக்க அனுமதிக்க முடிவு செய்தது. 1994ஆம் ஆண்டு, தில்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை ஆகிய நான்கு பெருநகரங்களில், நகருக்கு இரண்டு நிறுவனங்களுக்கு அனுமதி (license) அளிக்கப்பட்டது. அதன்பிறகு, 1995ஆம் ஆண்டில் தமிழகம் (சென்னை இல்லாமல்), மஹாராஷ்டிரம் (மும்பை இல்லாமல்), மேற்கு வங்காளம் (கொல்கத்தா இல்லாமல்), மற்றும் இதர மாநிலங்களுக்கு முழுமையாகவும் ஒரு வட்டத்திற்கு (circle) இரு நிறுவனங்கள் வீதம் என்று செல்லுலார் தொலைபேசிச் சேவை வழங்க அனுமதி தரப்பட்டது. இச்சேவை ஆரம்பிக்க, தனியார் நிறுவனங்கள் அரசுக்கு அனுமதித் தொகையாக (license fee) பெரும் அளவில் பணம் செலுத்த வேண்டியிருந்தது. மேலும், பெருமளவில் கருவிகளை நிர்மானிக்க முதலீடும் செய்ய வேண்டியிருந்தது. இதனால், இந்த சேவை ஆரம்பித்த காலகட்டங்களில், இந்நிறுவனங்கள் உள்ளூரில் பேச ஒரு நிமிடத்திற்கு கிட்டத்தட்ட 36 ரூபாய் வரை வசூலித்து வந்தன. இதற்கும் மேலாக, இந்த சேவையினைப் பெற விரும்புவோர் கையோடு எடுத்டுச் செல்லுமாறு உள்ள செல்லுலார் தொலைபேசியினை ரூ. 20,000 வரை செலவு செய்து வாங்க வேண்டியிருந்தது. இதனால் பொதுமக்கள் இந்த சேவை பெரும் பணக்காரர்களுக்கு மட்டுமே என்று இதன் பக்கம் கூட நெருங்கவேயில்லை. 1996 முதல் 2000ஆவது ஆண்டு வரை அரசின் போக்கிலும், இந்நிறுவனங்களின் போக்கிலும் பலத்த மாறுதல் ஏற்பட்டது. 1999ஆம் ஆண்டு இந்திய அரசு புதிய தேசியத் தொலைதொடர்புக் கொள்கையை அறிமுகம் செய்தது. இதன்படி, செல்லுலார் தொலைபேசி நிறுவனங்கள் அனுமதித்தொகையை, முழுத்தொகையாக இல்லாமல், நிகர வருமானத்தில் ஒரு பங்காகச் செலுத்த அரசு அனுமதித்த்து. இதனை மேற்கொண்டு, செல்லுலார் நிறுவனங்களும் கட்டணத் தொகையை வெகுவாகக் குறைக்க ஆரம்பித்தன. ஆனாலும், செல்லுலார் தொலைபேசிக் கட்டணம் ஒரு நிமிடத்திற்கு ரூ. 3-8 வரை இருந்து வந்தது. இதுவும் கூட Airtime, அதாவது செல்லுலார் தொலைபேசி உபயோகத்தில் இருக்கும் நேரத்திற்கான கட்டணம் ஆகும் - வெளிச்செல்லும் மற்றும் உள்ளே வரும் இணைப்புகள் இரண்டிற்குமே உபயோகிப்பவர்கள் கட்டணம் செலுத்த வேண்டியிருந்தது. இதன் மேலும், நிலம் சார்ந்த தொலைபேசியினைக் (fixed line அல்லது land line) கூப்பிட இன்னும் அதிகக் கட்டணம் கூடச் சேர்த்து செலுத்த வேண்டியிருந்தது. இப்படி கட்டுக்கடங்காத கட்டணம் இருந்தபோதும் வியாபாரப் பெருமக்களும், அரசியல்வாதிகளும் இந்த செல்லுலார் சேவையினைப் பெரிதும் உபயோகித்து வந்தனர். இதன் மூலம், அவர்கள் எங்கு இருந்தாலும், அவர்களைக் கூப்பிட முடிந்தது. செல்லுலார் தொலைபேசிச் சேவையின் இன்னுமொரு முக்கிய அம்சம் Roaming (அதாவது "உலாவுதல்") என்பது. இதன்மூலம், கையிலே எடுத்துச் செல்லும் செல்லுலார் தொலைபேசியினை இந்தியாவில் உள்ள எந்த ஊருக்கும், ஏன்? உலகில் GSM தொழில்நுட்ப முறையில் செல்லுலார் சேவை நடந்துகொண்டிருக்கும் எந்த நாட்டிற்கும் எடுத்துச் செல்ல முடிந்தது. உலாவும் செல்லுலார் தொலைபேசி வைத்திருக்கும் ஒருவரை, அதே தொலைபேசி எண் மூலம், அவர் எந்த ஊரிலும், எந்த நாட்டிலும் இருந்தாலும் கூப்பிட முடிந்தது. மேல்மட்டத்திலே ஆடம்பரப் பொருளாகவும், காட்சிப் பொருளாகவும் இருந்து வந்த செல்லுலார் தொலைபேசி எப்படி சாதாரண மனிதர்களின் அத்தியாவசியத் தேவையாகவும், தினமும் உபயோகிக்கும் ஒரு சாதனமாகவும் மாறத்தொடங்கியுள்ளது என்பதை நாளை பார்ப்போம்.
1.இஸ்ரவேலின் வம்சத்தினர் தேசத்தை மீண்டும் ஆண்டுகொள்வர் என ஆமோஸ் கிமு 750 வாக்கில் முன்னுரைத்தது அப்படியே கிபி.1948-ல் நிறைவேறியது.ஆமோசின் இறுதி வார்த்தைகளை கவனியுங்கள் “நான் அவர்களுக்குக் கொடுத்த தேசத்திலிருந்து அவர்கள் இனிப் பிடுங்கப்படுவதில்லையென்று உன் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார்” அப்படியே ஆகும்.ஆமேன். ஆமோஸ் 9 14. என் ஜனமாகிய இஸ்ரவேலின் சிறையிருப்பைத் திருப்புவேன்; அவர்கள் பாழான நகரங்களைக் கட்டி, அவைகளில் குடியிருந்து, திராட்சத்தோட்டங்களை நாட்டி, அவைகளுடைய பழரசத்தைக் குடித்து, தோட்டங்களை உண்டாக்கி, அவைகளின் கனிகளைப் புசிப்பார்கள். 15. அவர்களை அவர்கள் தேசத்திலே நாட்டுவேன்; நான் அவர்களுக்குக் கொடுத்த தேசத்திலிருந்து அவர்கள் இனிப் பிடுங்கப்படுவதில்லையென்று உன் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார் என்றார். 2.மீண்டும் யூத இனம் புத்துயிர் பெற்றுவரும் என கிமு 593-571 இடையே எசேக்கியேல் உரைத்தது அப்படியே நடந்தது.நாசிக்களால் நடத்தப்பட்ட ஹோலோகோஸ்ட (Holocaust) எனப்படும் யூதப்படுகொலையின் போது ஆறு மில்லியன் யூதர்கள் கொல்லப்பட்டார்கள். அப்போது யாருமே யூதர்கள் இப்படி மீண்டும் புத்துயிர் பெற்று வருவார்கள் என நம்பவில்லை. இப்படி உலர்ந்து போன எலும்புகள் மீண்டும் உயிர் பெற்று வந்தது முழுக்க முழுக்க தெய்வச்செயலே. எசேக்கியேல் 37 10. எனக்குக் கற்பிக்கப்பட்டபடி நான் தீர்க்கதரிசனம் உரைத்தேன்; அப்பொழுது ஆவி அவர்களுக்குள் பிரவேசிக்க, அவர்கள் உயிரடைந்து, காலூன்றி, மகா பெரிய சேனையாய் நின்றார்கள். 11. அப்பொழுது அவர் என்னை நோக்கி: மனுபுத்திரனே, இந்த எலும்புகள் இஸ்ரவேல் வம்சத்தார் அனைவருமே; இதோ, அவர்கள் எங்கள் எலும்புகள் உலர்ந்துபோயிற்று; எங்கள் நம்பிக்கை அற்றுப்போயிற்று; நாங்கள் அறுப்புண்டுபோகிறோம் என்கிறார்கள். 12. ஆகையால் நீ தீர்க்கதரிசனம் உரைத்து, அவர்களோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார், இதோ, என் ஜனங்களே, நான் உங்கள் பிரேதக்குழிகளைத் திறந்து, உங்களை உங்கள் பிரேதக்குழிகளிலிருந்து வெளிப்படவும், உங்களை இஸ்ரவேல் தேசத்துக்குவரவும்பண்ணுவேன். 13. என் ஜனங்களே, நான் உங்கள் பிரேதக்குழிகளைத் திறந்து, உங்களை உங்கள் பிரேதக்குழிகளிலிருந்து வெளிப்படப்பண்ணும்போது, நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வீர்கள். 14. என் ஆவியை உங்களுக்குள் வைப்பேன்; நீங்கள் உயிரடைவீர்கள்; நான் உங்களை உங்கள் தேசத்தில் வைப்பேன்; அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வீர்கள்; இதைச் சொன்னேன், இதைச் செய்வேன் என்று கர்த்தர் உரைக்கிறார் என்று சொல் என்றார். 3.ஒரே நாளில் இஸ்ரேல் தேசம் உருவாகும் என ஏசாயா தீர்க்கதரிசி கிமு 701-681 வாக்கில் உரைத்தது 1948 மே-14ல் நிறைவேறியது. ஏசாயா 66 7. பிரசவவேதனைப்படுமுன் பெற்றாள், கர்ப்பவேதனை வருமுன் ஆண்பிள்ளையைப் பெற்றாள். 8. இப்படிப்பட்டவைகளைக் கேள்விப்பட்டது யார்? இப்படிப்பட்டவைகளைக் கண்டது யார்? ஒரு தேசத்துக்கு ஒரேநாளில் பிள்ளைப்பேறு வருமோ? ஒரு ஜாதி ஒருமிக்கப் பிறக்குமோ? சீயோனோவெனில், ஒருமிக்க வேதனைப்பட்டும் தன் குமாரரைப் பெற்றும் இருக்கிறது. 4.யூதா,இஸ்ரேல் என முன்பு இராஜாக்கள் காலத்தில் இரண்டாக பிரிந்திருந்த தேசங்கள் ஒருங்கிணைந்து ஒரே தேசமாகும் என எசேக்கியேல் கிமு593-571-களில் முன்னுரைத்திருந்தார். அது அப்படியே நிறைவேறியது. எசேக்கியேல் 37 21. நீ அவர்களை நோக்கி: கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால், இதோ, நான் இஸ்ரவேல் வம்சத்தாரை அவர்கள் போயிருக்கும் ஜாதிகளிடத்திலிருந்து அழைத்து, சுற்றிலுமிருந்து அவர்களைச் சேர்த்து, அவர்களை அவர்கள் சுயதேசத்திலே வரப்பண்ணி, 22. அவர்களை இஸ்ரவேலின் மலைகளாகிய தேசத்திலே ஒரே ஜாதியாக்குவேன்; ஒரே ராஜா அவர்கள் எல்லாருக்கும் ராஜாவாக இருப்பார்; அவர் இனி இரண்டு ஜாதிகளாக இருப்பதில்லை: அவர்கள் இனி இரண்டு ராஜ்யங்களாகப் பிரிவதுமில்லை. 5.பல தேசங்களிலிருந்து யூதர்கள் திரும்பி தங்கள் சொந்த தேசத்துக்கு வருவார்கள் என எரேமியா கிமு626-586 வருடங்களுக்கு இடையே உரைத்தது அப்படியே நடந்தது. எரேமியா 16 14. ஆதலால், இதோ, நாட்கள்வரும், அப்பொழுது இஸ்ரவேல் புத்திரரை எகிப்துதேசத்திலிருந்து வரப்பண்ணின கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு இனிமேல் சத்தியம்பண்ணாமல், 15. இஸ்ரவேல் புத்திரரை வடதேசத்திலும் தாம் அவர்களைத் துரத்திவிட்ட எல்லா தேசங்களிலுமிருந்து வரப்பண்ணின கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு சத்தியம்பண்ணுவார்கள்; நான் அவர்கள் பிதாக்களுக்குக் கொடுத்த அவர்களுடைய தேசத்துக்கு அவர்களைத் திரும்பிவரப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். அதையே எசேக்கியேலும் 593-571 BC வாக்கில் தீர்க்கதரிசனமாக சொல்லியிருந்தார். எசேக்கியேல் 34 13. அவைகளை ஜனங்களிடத்திலிருந்து புறப்படவும் தேசங்களிலிருந்து சேரவும்பண்ணி, அவைகளுடைய சுயதேசத்திலே அவைகளைக் கொண்டுவந்து, இஸ்ரவேல் மலைகளின் மேலும் ஆறுகள் அண்டையிலும் தேசத்தின் சகல வாசஸ்தலங்களிலும் அவைகளை மேய்ப்பேன். 6.இஸ்ரேல் தேசத்தை தேவன் தன் மந்தையைக் காக்கும் வண்ணமாக அதைக் காப்பார் என எரேமியா முன்னுரைத்தது அப்படியே நடந்து கொண்டிருக்கிறது. சூழ்ந்திருக்கும் எல்லா தேசங்களும் அதற்கு எதிராக பல முறைவந்தும் அந்த சிறிய தேசத்தை யாராலும் ஒன்றும் செய்ய இயலவில்லை. ஆமேன். கர்த்தர் காக்கின்றார். எரேமியா 31 10. ஜாதிகளே, நீங்கள் கர்த்தருடைய வார்த்தையைக் கேட்டு, தூரத்திலுள்ள தீவுகளில் அறிவித்து, இஸ்ரவேலைச் சிதறடித்தவர் அதைச் சேர்த்துக்கொண்டு, ஒரு மேய்ப்பன் தன் மந்தையைக் காக்கும்வண்ணமாக அதைக் காப்பார் என்று சொல்லுங்கள் 7.மீண்டும் இஸ்ரேல் தேசத்தை கர்த்தர் ஆசீர்வதிப்பார் என ஏறத்தாழ கிமு 1400 -ல் எழுதப்பட்டது.அப்படியே நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. வறண்ட நிலமாக கிடந்த இந்நிலத்திலிருந்து பல நாடுகளுக்கும் இப்போது பல்வேறு பொருட்களும், தொழில்நுடபங்களும் ஏற்றுமதியாக்கிக்கொண்டிருக்கின்றது. உபாகமம் 30 3. உன் தேவனாகிய கர்த்தர் உன் சிறையிருப்பைத் திருப்பி, உனக்கு இரங்கி, உன் தேவனாகிய கர்த்தர் உன்னைச் சிதற அடித்த எல்லா ஜனங்களிடத்திலும் இருக்கிற உன்னைத் திரும்பச் சேர்த்துக்கொள்ளுவார். 4. உன்னுடையவர்கள் வானத்தின் கடையான திசைமட்டும் துரத்துண்டிருந்தாலும், உன் தேவனாகிய கர்த்தர் அங்கே இருக்கிற உன்னைக் கூட்டி, அங்கேயிருந்து உன்னைக் கொண்டுவந்து, 5. உன் பிதாக்கள் சுதந்தரித்திருந்த தேசத்தை நீ சுதந்தரிக்கும்படிக்கு, உன் தேவனாகிய கர்த்தர் அதில் உன்னைச் சேர்த்து, உனக்கு நன்மைசெய்து, உன் பிதாக்களைப்பார்க்கிலும் உன்னைப் பெருகப்பண்ணுவார்.
பொழிப்பு (மு வரதராசன்): பிரிவைப்பற்றித் தெரிவிக்கும் அளவிற்குக் கல் நெஞ்சம் உடையவரானால், அத்தகையவர் திரும்பி வந்து அன்பு செய்வார் என்னும் ஆசை பயனற்றது. மணக்குடவர் உரை: பிரிவினை யுரைக்கும் வன்கண்மையை யுடையராயின் அவர் மறுத்துவந்து நல்குவரென்னும் ஆசை யில்லை. இது தலைமகன் பிரிந்தானென்று கேட்டவிடத்து நின்னிற் பிரியேனென்ற சொல்லை உட்கொண்டு தலைமகள் கூறியது. பரிமேலழகர் உரை: (தலைமகன் பிரிவுணர்த்தியவாறு வந்து சொல்லிய தோழிக்குச் சொல்லியது.) அவர் பிரிவு உரைக்கும் வன்கண்ணராயின் -நம் கவவுக் கடுமையறிந்த தலைவர், தாமே நம் முன்னின்று தம்பிரிவினை உணர்த்தும் வன்கண்மை உடையராயின்; நல்குவர் என்னும் நசை அரிது - அத்தன்மையார் பின்பு நம் ஆற்றாமை அறிந்து வந்து தலையளி செய்வார் என்று இருக்கும் ஆசை விடப்படும். (அருமை: பயன்படுதல் இல்லாமை.. 'கூடியிருந்தே அன்பின்றிப் பிரிவு எண்ணுதலும் உணர்த்தலும் வல்லராயினார், பிரிந்துபோய் அன்புடையராய் நம்மை நினைத்து வந்து நல்குதல் யாண்டையது'? என்பதாம். அழுங்குவித்தல் : பயன்.) சி இலக்குவனார் உரை: தம் பிரிவினைச் சொல்லும் அன்பற்றவராய் இருப்பாரானால் நாம் ஆற்றமுடியாத் தன்மை அறிந்து வந்து அன்பு காட்டுவார் என்னும் விருப்பம் விடப்படும். பொருள்கோள் வரிஅமைப்பு: அவர் பிரிவுரைக்கும் வன்கண்ணர் ஆயின் நல்குவர் என்னும் நசை அரிது. பதவுரை: பிரிவு-பிரிந்து செல்லல்; உரைக்கும்-சொல்லும், தெரிவிக்கும்; வன்கண்ணர்-கொடுமையுடையவர்; ஆயின்-ஆனால்; அரிது-அருமையானது; அவர்-அவர்; நல்குவர்-அன்பு செய்பவர்; என்னும்-என்கின்ற; நசை-விருப்பம், ஆசை. பிரிவுரைக்கும் வன்கண்ணர் ஆயின்: இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்: மணக்குடவர்: பிரிவினை யுரைக்கும் வன்கண்மையை யுடையராயின்; பரிப்பெருமாள்: பிரிவினை யுரைக்கும் வன்கண்மையை யுடையராயின்; பரிதி: பிரிவுரைக்கும் தறுகண்ணராயின்; காலிங்கர்: இங்ஙனம் தமது உரைதேறிப் பிரிவின் இயல் அஃது என்று இருந்த நமக்கு இஃது ஒழிந்து பிரிவினையும் நமக்குத் தாம் உரைக்கும் வன்கண்மையும் உடையாராயின்; பரிமேலழகர்: (தலைமகன் பிரிவுணர்த்தியவாறு வந்து சொல்லிய தோழிக்குச் சொல்லியது.) -நம் கவவுக் கடுமையறிந்த தலைவர், தாமே நம் முன்னின்று தம்பிரிவினை உணர்த்தும் வன்கண்மை உடையராயின்; [கவவுக் கடுமை-முயங்குதலின் வன்மை; வன்கண்மை - அருளின்மை] 'பிரிவினை உணர்த்தும் வன்கண்மை உடையராயின்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர். இன்றைய ஆசிரியர்கள் 'பிரிவு பேசும் துணிவுடையராயின்', 'நம் அன்பின் மிகுதியை அறிந்த தலைவர் நம்மிடம் பிரிவுபற்றிக் கூறும் நெஞ்சழுத்தம் உடையராயின்', 'தலைவர் பிரிவினை உணர்த்தும் கொடுமையுடையர் என்றால்', 'என் காதலர் மீண்டும் மீண்டும் தாம் பிரிந்து போக வேண்டியிருக்கிற அவசியத்தைப் பற்றியே சொல்லும் கடின சித்தமுடையவராக இருக்கிறார்' என்ற பொருளில் உரை தந்தனர். பிரிந்து செல்லலை என்னிடம் வந்து சொல்லும் அளவுக்குக் கொடியமனம் கொண்டவராய் இருப்பின் என்பது இப்பகுதியின் பொருள். அரிதவர் நல்குவர் என்னும் நசை: இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்: மணக்குடவர்: அவர் மறுத்துவந்து நல்குவரென்னும் ஆசை யில்லை. மணக்குடவர் குறிப்புரை: இது தலைமகன் பிரிந்தானென்று கேட்டவிடத்து நின்னிற் பிரியேனென்ற சொல்லை உட்கொண்டு தலைமகள் கூறியது. பரிப்பெருமாள்: அவர் மறுத்துவந்து நல்குவரென்னும் ஆசை யில்லை. பரிப்பெருமாள் குறிப்புரை: 'பிரிதலும் ஆற்றலும் உலகியல்; என்று நெருங்கிக் கூறிய தோழிக்குத் தலைமகள் கூறியது. பரிதி: நமக்கு இன்பம் தருவர் என்னும் நசை அரிது என்றவாறு. காலிங்கர்: இனி மற்று அவர் வந்து தலையளிப்பர் என்னும் பற்றுடைமையும் அரிது என்றவாறு. பரிமேலழகர்: அத்தன்மையார் பின்பு நம் ஆற்றாமை அறிந்து வந்து தலையளி செய்வார் என்று இருக்கும் ஆசை விடப்படும். பரிமேலழகர் குறிப்புரை: அருமை: பயன்படுதல் இல்லாமை.. 'கூடியிருந்தே அன்பின்றிப் பிரிவு எண்ணுதலும் உணர்த்தலும் வல்லராயினார், பிரிந்துபோய் அன்புடையராய் நம்மை நினைத்து வந்து நல்குதல் யாண்டையது'? என்பதாம். அழுங்குவித்தல் : பயன். 'வந்து தலையளி செய்வார் என்று இருக்கும் ஆசை விடப்படும்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர். இன்றைய ஆசிரியர்கள் 'வந்து அருளுவார் என எதிர்பார்த்தல் பயனற்றது', 'அவர் நம் ஆற்றாமை யறிந்துவந்து அன்பு செய்வர் என்னும் ஆசை கைகூடாது', 'அவர் திரும்பி வந்து நமக்கு அருள் செய்வாரென்னும் ஆசைக்கு இடமில்லை', 'அதனால் அவர் என் விருப்பத்தின்படி போகாமல் இருப்பார் என்ற ஆசையை நான் விட்டுவிட வேண்டியதுதான்' என்றபடி பொருள் உரைத்தனர். திரும்பி வரும்பொழுது நிறைஅன்பு காட்டுவார் என எதிர்பார்ப்பது வீணான ஆசை என்பது இப்பகுதியின் பொருள். நிறையுரை: பிரிந்து செல்லலை என்னிடம் வந்து சொல்லும் அளவுக்குக் கொடியமனம் கொண்டவராய் இருப்பின் அவர் திரும்பி வரும்பொழுது நிறைஅன்பு காட்டுவார் என எதிர்பார்ப்பது வீணான ஆசை என்பது பாடலின் பொருள். 'பிரிவுரைக்கும் வன்கண்ணர்' குறிப்பது என்ன? அவரால் எப்படி என்னிடம் வந்து 'போய்வருகிறேன்' எனச் சொல்ல முடிந்தது? பிரிவைப் பற்றி என்னிடம் சொல்லும் கொடியவராயிருக்கும் அவர் திரும்பி வந்து இன்பம் தருவார் என்னும் ஆசைகூட நமக்கு இருக்கமுடியுமா! என்கிறாள் தலைவி. காட்சிப் பின்புலம்: பொருள் தேடுதற்காகக் கணவன் மனைவியைப் பிரிந்து சென்றிருக்கிறான். அவன் சென்றவுடன் தலைவி அவன் பிரிந்ததன் அதிர்வில் இருந்து மீளமுடியாமல் அவன் சென்றது பற்றி நினைக்கிறாள். அவன் புறப்படுவதற்கு முன் அவளிடம் விடைபெற வருகிறான். அவள் 'நீ பிரிந்துபோகவில்லை என்பதைச் சொல்வதானால் சொல். வேறு ஏதாவது சொல்வதானால் அப்பொழுது என் உயிர் என்னிடம் இருக்காது' என நா தழுதழுக்கக் கூறினாள். காதலன் தழுவுதல் பிரிவை உணர்த்துவதால் துன்பம் தருகிறது என்றாள். பிரிவின் துன்பத்தை அறிந்து வைத்திருக்கிறேன்; அப்படியும் பிரிவு தாங்க முடியவில்லையே என்று புலம்பினாள். உன்னைவிட்டு என்றும் பிரியேன். அஞ்சாதே! என்ற அவர் சொல்லில் ஆறுதல் பெற்றது என் தவறா எனத் தனக்குத் தானே முறையிட்டுக் கொள்கிறாள். அவரது பிரிவில் என் உயிர் நீங்கிவிடுமே என்று சொல்லிக்கொண்டிருக்கிறாள். இக்காட்சி: ''சென்று வருகிறேன்' என்று என் முன்நின்று கூறும் அளவுக்குக் கல்மனம் கொண்டவர் திரும்பி வந்து தன்னிடம் முன்போல நிறைஅன்பு காட்டுவாரா' என்று தனக்குத் தானே கேட்டுக் கொள்கிறாள். பிரிதலும் ஆற்றிக்கொள்ளுதலும் உலகியல்தான் என்பதை உணரமாட்டாத பேதை அல்ல தலைவி. ஆனாலும் தன் கணவர் தன்னிடம் வந்து பிரிவுவிடை கேட்கும்போது அதைப் பொறுக்கமுடியாமல் அரற்றுகிறாள். எப்போது அவர் மனம் இப்படி இறுக்கமானது? சரி சென்று விட்டார். பணிமுடிந்து இல்லம்திரும்பும்போது இளகிய மனதுடன் வந்து என்னிடம் அன்பு செய்வாரா? என்று பலவாறாக நினைக்கத் தொடங்குகிறாள். நல்குவர் என்றதற்குத் தலையளி செய்வார் தண்ணளி செய்வார், அருள் செய்வார், அன்பு செய்ய வருவார், பேரன்பு செய்வர், அன்பு செலுத்துவார், இன்பம் தருவர் என்று உரையாளர்கள் பொருள் கூறினர். காமத்துப்பாலில் நல்குதல் என்பது தண்ணளி செய்தல் அதாவது நிறைந்த அன்பு காட்டுதல் என்ற பொருளிலேயே பயின்று வரும். நல்குவர் என்றதற்கு இங்கு 'முழுஅன்பு காட்டுபவர்' என்பது பொருள். 'பிரிவுரைக்கும் வன்கண்ணர்' குறிப்பது என்ன? 'பிரிவுரைக்கும் வன்கண்ணர்' என்ற தொடர்க்குப் பிரிந்து செல்லலைக் கூறும் கொடியவர் என்பது பொருள். அவர் ஏன் கொடியவர்? பணி காரணமாக அவர் அயல் செல்ல வேண்டிய வேளையில் அவளிடம் 'சென்றுவருகிறேன்' என விடைபெற்றதைத்தான் அவள் கொடுமை என்கிறாள். அவரின்றித் தன் உயிர் நீங்கிவிடுமே என்று எண்ணிக்கொண்டிருந்தவளுக்கு அவரைவிட்டுக் கொஞ்சகாலம் பிரிந்திருக்க வேண்டியிருக்குமே என்பதைத் தலைவியால் தாங்கிக்கொள்ளமுடியவில்லை. போய் விரைவில் திரும்பிவிடுவதாக அவர் கூறினாலும் அவளால் ஆற்றிக்கொள்ளமுடியவில்லை. பிரிந்து செல்வதை முன்னிருந்தே சொன்னதைக் கொடுமையான செயல் என்கிறாள். எனவே அவர் வன்கண்ணர். 'உரைக்கும் என்பதிலே நிகழ்வு, எதிர்வு ஆகிய காலங்களை அடக்கிக் கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் முக்காலங்களுக்கும் செய்யும், செய்க, என்று இரு வாய்பாடுகளை மட்டுமே தொல்காப்பியர் கூறியுள்ளார்' என்பார் இரா சாரங்கபாணி. இங்கு 'பிரிவுரைத்த வன்கண்ணர்' எனக் கொள்வது தெளிவு பயக்கும். 'பிரிவுரைக்கும் வன்கண்ணர்' என்றது பிரிவாற்றாமையால் தலைவி கணவனைக் கொடுமைக்காரர் எனச் சொல்வது. பிரிந்து செல்லலை என்னிடம் வந்து சொல்லும் அளவுக்குக் கொடியமனம் கொண்டவராய் இருப்பின் அவர் திரும்ப வரும்வேளை அன்பு காட்டுவர் என எதிர்பார்ப்பது வீணான ஆசையே என்பது இக்குறட்கருத்து. பிரிவாற்றாமை கணவரைக் கொடுமைக்காரர் என எண்ணச் செய்கிறது. பிரிவை என்னிடம் கூறும் கொடியநெஞ்சம் கொண்டவராய் இருப்பின், திரும்ப வந்து காதலர் என்னிடம் பேரன்பு காட்டுவார் என்று நான் ஆசைப்படலாமா?
மட்டக்களப்புக்கும் திருகோணமலைக்கும் இடையில் இன்று புதிய ரயில் - பஸ் சேவையொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. கிழக்கின் உதயம் கருத்திட்டத்தின்கீழ் ஆரம்பிக்கப்பட்டுள்ள இப்புதிய சேவை மூலம் மட்டக்களப்புக்கும் திருகோணமலைக்கும் இடையிலான பிரயாண நேரம் வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் - பஸ் சேவையை ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் பாராளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ஷ இன்று ஆரம்பித்து வைத்தார். இது தொடர்பில் இன்று நடைபெற்ற வைபவத்தில் இலங்கைக்கான இந்தியத் தூதுவர் ஆலோக் பிரசாத், போக்குவரத்து அமைச்சர் டளஸ் அழகப்பெரும உட்பட முக்கிய அரசாங்க அதிகாரிகளும் கலந்து கொண்டனர். 4 ரயில் - பஸ் சேவைகளை விரைவில் நடத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. அத்துடன் இன்று முற்பகல் மட்டக்களப்பு நகரில் ஹலங்காபுத்திரஹ வங்கிக் கிளையை திறந்து வைக்கவிருக்கும் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷ அதன் பின்னர் மாவட்ட செயலகத்தில் ஹகிழக்கின் உதயம்ஹ குழுக் கூட்டத்திற்கும் தலைமை தாங்கவிருக்கின்றார். நேற்று மாலை மட்டக்களப்பு ரயில் நிலையத்திற்குச் சென்றிருந்த கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் சில மீற்றர் தூரம் குறித்த ரயில் பஸ்ஸில் பயணம் செய்து அதனைப் பார்வையிட்டார். வெலிக்கந்தை வரையிலான இச் சேவையை பொலன்னறுவை வரை நீடிப்பது தொடர்பாக ரயில்வே அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை மேற்கொண்டார். இரண்டு பஸ்களை இணைத்து ரயில்வே திணைக்களம் தயாரித்துள்ள இந்த ரயில்பஸ்ஹஸில் 80 பேர் அமர்ந்து பயணம் செய்யக் கூடிய வகையில் ஆசனங்கள் உள்ளன. நின்று கொண்டும் 100 முதல் 110 பேர் வரை பயணம் செய்யக் கூடியதாக இருக்கும் என மட்டக்களப்பு ரயில் நிலைய அதிபர் அருணாசலம் சிவனேசராஜா தெரிவித்தார். »» (மேலும்) 7/29/2009 | 0 commentaires | சு.கவின் 19வது தேசிய மாநாட்டில் தீர்வு யோசனையை வெளியிட தி;ட்டம் செப்டெம்பர் 1 இல் நடத்த ஏற்பாடு ஜனாதிபதி மஹிந்த தலைமை 6000 பிரதிநிதிகள் பங்கேற்பர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 19வது தேசிய மாநாடு எதிர்வரும் செப்டெம்பர் முதலாம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் கொழும்பு சுகததாஸ உள்ளக அரங்கில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் அரசியல் தீர்வு யோசனை அடங்கலாக நாட்டின் எதிர்காலம் தொடர்பான பல முக்கிய திட்டங்கள் வெளியிடப்படும் என சுதந்திரக் கட்சி செயலாளரும் அமைச்சருமான மைத்ரிபால சிரிசேன தெரிவித்தார். மகாவலி நிலையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவித்த அமைச்சர் மேலும் கூறியதாவது, இந்த மாநாட்டில் நாடுபூராவும் இருந்து சுமார் 6 ஆயிரம் பிரதிநிதிகள் பங்குபற்ற உள்ளனர். நாட்டின் எதிர்காலம் தொடர்பான பல முக்கிய திட்டங்கள் இந்த மாநாட்டில் வெளியிட்டு வைக்கப்படும். இந்த திட்டங்கள் இந்த வருட இறுதியிலும் அடுத்த வருட முதற்பகுதியிலும் மக்களின் நலனுக்காக முன்னெடுக்கப்படும். பயங்கரவாதத்திற்கு முடிவு கண்டுள்ள நிலையில் அடுத்ததாக நாட்டை துரித அபிவிருத்தி செய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையிலான அரசாங்கத்தின் கீழ் புதிய நாடொன்றை கட்டியெழுப்பும் முக்கிய திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இந்த திட்டங்களினூடாக நாட்டில் புரட்சிகரமான மாற்றங்கள் மேற்கொள்ளப்படும். நாட்டின் அபிவிருத்திக்கென பல திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. 2010 வரவு செலவுத் திட்டத்தினூடாக மேலும் பல புரட்சிகரமான திட்டங்களை முன்னெடுக்கவும் அபிவிருத்தி இலக்குகளை அதிகரிக்கவும் அரசு திட்டமிட்டுள்ளது. பலம்வாய்ந்த பொருளாதாரத்தை கட்டியெழுப்பவும் மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தவும் வரவு செலவுத் திட்டத்தினூடாக முக்கிய திட்டங்கள் முன்வைக்கப்படும். »» (மேலும்) | 0 commentaires | யாழ். நலன்புரி நிலையம்215 முதியவர்கள் நேற்று உறவினரிடம் ஒப்படைப்பு யாழ். குடாநாட்டில் உள்ள நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர் களில் 60 வயதுக்கு மேற்பட்ட 215 முதியவர்கள் நேற்று உறவினர்களிடம் ஒப்படைக்கப் பட்டனர். இதேவேளை, இந்த நலன்புரி நிலையங்களுக்குள் குடும்ப உறவினர்களை பிரிந்து வாழும் 245 நபர்களை ஒன்று சேர்க்கும் நடவடிக்கைகளும் நேற்று ஆரம்பித்து வைக்கப் பட்டன. சமூகசேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முய ற்சிகளினாலேயே இந்த நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அமைச்சரின் யாழ். பணிமனையோடு தொடர்புகொண்டு நலன்புரி நிலையங் களில் உள்ள தமது முதிய உறவினர்களை அழைத்துச் சென்றதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். இதேவேளை, நலன்புரி நிலையங்களுக் குள் உறவினர்களை பிரிந்து வாழ்பவர் களை ஒன்று சேர்க்கும் நடவடிக்கைகளை யும் நேற்று முதல் ஆரம்பித்துள்ளனர். வெவ்வேறு நலன்புரி நிலையங்களில் பிரிந்து வாழும் 245 பேரை ஒன்று சேர்க் கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் நலன்புரி நிலையங்களில் பிரி ந்து வாழும் குடும்பங்கள் தொடர்பில் மேலதிக விபரங்கள் சேகரிக்கப்பட்டு வரு கின்றன. சரியான தகவல்கள் கிடைக்கும் பட்சத்தில் எஞ்சியிருப்பவர்களையும் அவர் களது குடும்பங்களுடன் ஒன்று சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமை ச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். »» (மேலும்) | 0 commentaires | அ’புரம் விமானப்படை தளம் மீதான தாக்குதல் சூத்திரதாரி மன்னாரில் கைது அநுராதபுரம் விமானப் படை தளத்தின் மீது புலிகள் நடத்திய தாக்குதல்களுக்கு திட்டம் தீட்டிய பிரதான சூத்திரதாரியை மத்திய மாகாண புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளனர். மீட்டெடுக்கப்பட்ட மக்களுக்கு மத்தியில் மறைந்திருந்த நிலையிலேயே மன்னாரில் வைத்து இவர் கைது செய்யப்பட்டுள்ளார். 26 வயதுடைய இராமலிங்கம் தபரூபன் என்பவரே கைது செய்யப்பட்டவராவார். இவர் காங்கேசன்துறை பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்டவர். மத்திய மாகாண புலனாய்வு பிரிவினர் அண்மையில் கைதுசெய்த புலிச் சந்தேக நபர் ஒருவர் வழங்கிய தகவல்களின் அடிப்படையில் இந்த பிரதான சூத்திரதாரியை பொலிஸார் கைது செய்துள்ளனர். புலிகளின் ராதா படைப் பிரிவில் பயிற்சிபெற்ற இவர், அந்தப் படைப் பிரிவின் புலனாய்வுத் துறை முக்கியஸ் தராவார். 2002ம் ஆண்டு புலிகள் இயக்கத்தில் இணைந்து கொண்ட இவர் ஆயுதம் ஏந்தி சுடுதல், குண்டுத் தாக்குதல் நடத்துதல், கடல் வழி தாக்குதல், காட்டுப் பிரதேச நடவடிக்கை போன்றவற்றில் தேர்ச்சி பெற்றவர். விமானப் படைத்தளம் மீதான தற்கொலை தாக்குதல்களை தற்கொலைதாரிகள் 2007ம் ஆண்டு ஜனவரி 22ம் திகதி அதிகாலை 3.20 மணியளவில் மேற் கொண்டனர். இதுதவிர விமான தாக்குதல் களும் நடத்தப்பட்டதென புலனாய்வுப் பிரிவினரிடம் இவர் வாக்குமூலம் வழ ங்கியுள்ளார். இந்த சூத்திரதாரி வழங்கியுள்ள வாக்கு மூலத்தில் மேலும் கூறியுள்ளதாவது :- பிரபாகரனின் கோரிக்கையின் பேரில் 25 தற்கொலை குண்டுதாரிகள் இந்த தாக்கு தல்களை மேற்கொண்டனர். விமானப் படைத் தளத்திற்குள் நுழைவது தொடர்பாக பல நாட்கள் வேவு பார்த்தோம். சிலாவத்துறை, மல்வத்து ஓயா - நுவரவெவ, சாலியபுர மற்றும் கண்டிய கிராமங்களில் மாடு மேய்ப்பவர்கள் போன்ற வேடத்தில் தான் வேவுபார்த்த தாகவும் மேற்படி புலி உறுப்பினர் குறிப் பிட்டுள்ளார். நுவரவெவவுக்கு அருகிலுள்ள காட்டுப் பகுதியில் வேவுபார்த்துக் கொண்டிருந்த போது மாடு ஒன்றைத் தேடிவந்த அப்பு ஹாமி என்பவர் தங்களை நேரில் கண்டு கொண்டதை அடுத்து அவரைச் சுட்டுக் கொலை செய்ததோடு அவரின் கழுத்தை வெட்டி துண்டாக்கி மரப் பொந்து ஒன்றில் மறைத்து வைத்ததாகவும் குறிப் பிட்டுள்ளார். 2007ம் ஆண்டு ஜனவரி 21ம் திகதி பல குழுக்களாக பிரிந்து சுமார் இரு மணி நேரத்திற்குள் விமான நிலையத்தை நெருங் கியதாகவும் தாக்குதல் நடத்துவதற்கு ஜனவரி 22ம் திகதி வருமாறு தன்னிட மிருந்த அதிநவீன தொலைத் தொடர்பு கருவி ஊடாக புலிகளின் விமானப் பிரிவி னருக்குத் தகவல் வழங்கியதாகவும் குறிப் பிட்டுள்ளார். விசுவமடுவிலிருந்து வந்த புலிகளின் விமானம் ஆகாய மார்க்கமாக விமான தளத்தின் மீது தாக்குதல் நடத்துகையில் மறைந்திருந்த தற்கொலை தாரிகள் தரை மார்க்கமாக தளத்துக்குள் நுழைந்து தாக்குதல்களை நடத்தினர். தாக்குதல் நடத்தப்படுவதை வீடியோ படம் பிடிக்கும் பொறுப்பே புலி தலைமைத்துவத்தால் தனக்கு வழங்கப்பட்டிருந்த பிரதான பொறுப்பாகும் என்றும் குறிப்பிட்டார். »» (மேலும்) 7/28/2009 | 0 commentaires | தமிழ்க் கட்சிகளின் ஐக்கியமும் தேசிய இனப் பிரச்சினையும் நடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர் தல்கள் முடிவுற்றதும் இனப் பிரச் சினைக்கான அரசியல் தீர்வு தொட ர்பாக ஏனைய தமிழ்க் கட்சிகளு டன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பேச்சு வார்த்தை நடத்தும் என்று கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிஷோர் கூறியுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப் பைப் பொறுத்த வரையில் காலங்கடந்த ஞானோதய மெனினும் இது ஒரு உற்சாக மூட்டும் ஆரம்பம். தேசிய இனப் பிரச்சினையின் தீர்வு இல ங்கையர் அனைவருக்கும் முக்கியமானது. சகல துறைகளிலும் இலங்கையின் முன் னேற்றத்துக்கு இத்தீர்வு அத்தியாவசியமா னது. தமிழ் மக்கள் மத்தியில் அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட்டிருக்கும் சகல கட்சிகளும் இவ்விடயத்தில் கவனம் செலு த்தக் கடமைப்பட்டுள்ளன. அதாவது தமி ழ்க் கட்சிகள் மாத்திரமன்றித் தேசிய மட் டத்தில் செயற்படும் கட்சிகளும் இவ்விட யத்தில் கரிசனைகொள்ள வேண்டியவையே. தமிழ்க் கட்சிகளுக்கிடையிலான ஐக்கியம் வேறொரு பரிமாணத்தில் முக்கியத்துவம் பெறுகின்றது. இனப் பிரச்சினையின் தீர்வு தொடர்பாக ஒவ்வொரு தமிழ்க் கட்சியும் வெவ்வேறு கோரிக்கைகளை முன்வைக்காமல் கூடிப் பேசி ஒரே கோரிக்கையை முன்வைப்பது பிரச்சினையின் தீர்வை இலகுவாக்கும். கட ந்த காலத்தில் இரண்டு சந்தர்ப்பங்களில் இனப் பிரச்சினையை மையமாகக்கொண்டு தமிழ்க் கட்சிகளுக்கிடையிலான ஐக்கியம் ஏற்படுத்தப்பட்டது. ஒன்று தமிழர் விடு தலைக் கூட்டணி. மற்றது தமிழ்த் தேசிய கூட்டமைப்பு. இரண்டிலிருந்தும் மக்கள் எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை. தமிழர் விடுதலைக் கூட்டணி யதார்த்தத் துக்கு முரணானதும் நடைமுறைச் சாத்தி யமற்றதுமான தனிநாட்டுக் கோரிக்கையை முன்வைத்ததால் அதனால் எதையும் சாதி க்க முடியவில்லை. நடைமுறைச் சாத்திய மற்ற கோரிக்கையை முன்னெடுத்துச் செல்ல முடியாத நிலையில், ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தின் மாவட்ட சபைத் திட்ட த்தை ஏற்றுக்கொண்டது. பின்னர் பொது சன ஐக்கிய முன்னணி அரசாங்கத்தின் அதி காரப் பகிர்வுத் தீர்வுத் திட்டத்துக்குக் கடை சிக் கட்டம் வரை ஆதரவளித்தது. தமிழர் விடுதலைக் கூட்டணியின் தனிநாட்டுத் தீர்மானம் தென்னிலங்கையில் பேரினவாத சக்திகளைப் பலப்படுத்தியதைத் தவிர வேறெ ந்த விளைவையும் ஏற்படுத்தவில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீண்டும் தனிநாட்டுப் பாதையிலேயே செல்லத் தொட ங்கியது. மற்றைய தமிழ்க் கட்சிகளை எதி ரிகளாகவே கருதியது. தனிநாட்டைத் தவிர வேறெந்தத் தீர்வு பற்றியும் பேச அது விரும்பவில்லை. இச்செயற்பாட்டின் விளை வாக ஏராளம் தமிழ் மக்கள் உயிரிழந்த தோடு லட்சக் கணக்கானோர் அகதி முகா ம்களில் தஞ்சமடையும் நிலை ஏற்பட்டது. மற்றைய தமிழ்க் கட்சிகளுடன் பேச்சுவா ர்த்தை நடத்துவதற்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வருகின்ற இச்சந்தர்ப்ப த்தில் கடந்த காலத்தின் கசப்பான நிகழ்வு களை நினைவூட்டுவது மீண்டும் அத்தவறு நேராமலிருப்பதற்கு உதவும். தமிழ்க் கட்சிகள் ஒன்று சேர்ந்து தயாரி க்கும் தீர்வுக் கோரிக்கை நடைமுறைச் சாத் தியமானதும் தமிழ் மக்களுக்குப் பாதி ப்பை ஏற்படுத்தாததுமாக இருக்க வேண் டியது அவசியம். அதேநேரம், தமிழ்க் கட்சி களால் மாத்திரம் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியாதென்பதால், அரசாங்கத்துட னும் சாதகமான தேசியக் கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டியதன் அவ சியத்தையும் தமிழ்க் கட்சிகள் விளங்கிக் கொள்ள வேண்டும். இனப் பிரச்சினையின் தீர்வுக்காகத் தமி ழ்த் தலைமைகள் அறுபது வருடங்களாக மேற்கொண்ட முயற்சிகள் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு உதவவில்லை. பிரச்சினை சிக்கலாகுவதற்கே அவை உதவின. இந்த வரலாறு தொடராமலிருப்பதை உறுதிப்ப டுத்தும் பொறுப்பு தமிழ்க் கட்சிகளைச் சார் ந்தது. thinakaran. »» (மேலும்) | 0 commentaires | பேருவளை பதற்றம் தணிவு; பேருவளை, மஹகொடை பகுதியில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தற்பொழுது பூரண கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் குணசேகர தெரிவித்தார். பேருவளை மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களில் தற்பொழுது பூரண அமைதி நிலவுவதாகவும் அந்தப் பிரதேசத்திற்கு தேவையான பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். பொலிஸாரும், விசேட அதிரடிப் படையினரும் இணைந்து தொடர்ந்தும் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். மஹகொடை மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளிவாசலில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பாக இதுவரை 131 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார். இதேவேளை, களுத்துறை மேலதிக நீதவான் சாந்தினி டயஸ் முன்னிலையில் நேற்று 103 பேர் சந்தேகத்தின் பேரில் ஆஜர் செய்யப்பட்டனர். இவர்களை எதிர்வரும் 29ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார். இந்த 103 பேரும் சட்டத்தரணி பி.மானமடு மூலமாக பொலிஸாரிடம் சரணடைந்துள்ளனர். நீதிமன்றத்தில் இடம் பெறவுள்ள அடையாள அணிவகுப்புக்கு இவர்களை உட் படுத்துமாறும் நீதவான் உத்தரவிட்டார். ஏற்கனவே சந்தே கத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 28 சந்தேக நபர்களும் ஆகஸ்ட் 8ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட் டுள்ளனர். இவர்களது உடைகளை அரச பகுப்பாய்வு பிரிவு க்கு அனுப்பி அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதவான் உத்தர விட்டுள்ளார் »» (மேலும்) | 0 commentaires | கனகராயன்குளம் பொலிஸ் நிலையத் திறப்பு விழா புளியங்குளம் ஏ-9 பிரதான வீதியின் கனகராயன்குளம் பிரதேசத்தில் நிறுவப்பட்டுள்ள பொலிஸ் நிலையம் மற்றும் பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயம் ஆகியன எதிர்வரும் முதலாம் திகதி சனிக்கிழமை உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது. சகல வசதிகளையும் கொண்ட இந்த பொலிஸ் நிலையம் நவீன மயப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச் சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் குண சேகர தெரிவித்தார். எதிர்வரும் சனிக்கிழமை காலை 10.45 மணிக்கு அங்குரார்ப்பணம் செய்யப் படவுள்ள இந்த வைபவ த்தில் பொலிஸ் மாஅதிபர் ஜயந்த விக்ரமரத்ன மற்றும் அரசியல் முக்கிஸ்தர்கள் பலர் கலந்து கொள்ளவுள் ளதாக அவர் மேலும் தெரி வித்தார். »» (மேலும்) | 0 commentaires | வவுனியா நகர சபைத் தேர்தல் மு.கா வேட்பாளர்கள் நால்வர் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸில் நேற்று இணைவு வவுனியா நகரசபைத் தேர்தலில் போட்டியிடும் மு. கா வேட்பாளர்களான நால்வர் நேற்று அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸில் இணைந்துகொண்டு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வெற்றிக்காக உழைக்கப்போவதாக பகிரங்கமாக அறிவித்தனர் .ஏ. முஸாதிர், எஸ். எம். அபுல்கலாம், இல்முதீன் தஸ்மீம், எஸ். அஜ்மயின் ஆகிய வேட்பாளர்களே இணைந்து கொண்டவர்களாகும்.வவுனியா பட்டானிச்சூரில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தின்போதே இந்நால்வரும் இணைந்துகொண்டனர். அமைச்சர்களான றிஷாட் பதியுதீன், அமீர்அலி, பிரதியமைச்சர் ஹுசைன் பைலா ஆகியோர் முன்னிலையிலேயே இவர்கள் இணைந்துகொண்டனர் »» (மேலும்) | 0 commentaires | குறித்த பிரதேச மக்களுக்கான உரிய சேவையினை அம்மக்களின் விருப்பத்தோடு மேற்கொள்வதே உள்ளுராட்சி சபைகளின் முக்கிய நோக்கமாகும்- கிழக்கு முதல்வர் உள்ளுராட்சி வாரத்தின் நிறைவினை கொண்டாடும் மூலமாக இன்று திருமலை நகராட்சி மண்டபத்தில் நகராட்சி மன்றத் தலைவர் கௌரி முகுந்தன் தலைமையில் இடம்பெற்ற உள்ளுராட்சி வாரம் நிறைவு நிகழ்வும் பரிசளிப்பு விழாவும் இடம்பெற்றது. இதில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரைநிகழ்த்தியபோது கிழக்கு மாகாண முதலமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில் அடிமட்டத்தில் உள்ள ஜனநாயக அரசியல் நிறுவனம்தான் உள்ளுராட்சி சபையாகும். அதாவது ஒரு நாட்டு மக்களால் பிரதிநிதிகள் தெரிவு செய்யப்படுகின்ற மிகச்சிறிய அரசாங்கமாகும்.மத்திய அரசின் செயற்பாடுகளுடன் மக்கள் நேரடியாக தொடர்புகளை ஏற்படுத்த முடியாது ஆனால் உள்ளுராட்சி அரசின் செயற்பாடுகளில் நேரடியாக தொடர்பினை ஏற்படுத்தலாம். அத்தோடு குறித்த பிரதேசத்தின் சமூகத்தில் வாழ்கின்ற பிரஜைகளுக்கான கல்வி, அரசியல், பொருளாதார செயற்பாடுகளை விருத்தி செய்தல் போன்ற உயரிய நோக்கங்களை கொண்டு செயற்படுகின்றது.ஒவ்வொரு குறித்த பிரதேசங்களினது மக்களே பிரதிநிதிகளை தெரிவு செய்து அவர்களை ஆட்சியில் இருத்தி இருக்கின்றார்கள். நீங்கள் உங்களது பிரதேசங்களில் அபிவிருத்தி தொடர்பான செயற்பாடுகள் குறித்து இலகுவாக தொடர்பு கொண்டு அறியமுடியும் அப்போது அவர்கள் அனைவருமே பொறுப்புடன் செயற்படுவார்கள். கிராமங்கள் மட்டத்தில் இருந்து அனைத்து அபிவிருத்தி செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படுகின்ற போதுதான் அபிவிருத்தி என்பது முழுமை பெறுகின்றது எனவே கிழக்கு மாகாணத்தைப் பொறுத்த வரையில் திருமலை நகர சபையானது மிகப் பெறுமதி மிக்க சேவையினை மக்களுக்கு ஆற்றி வருவதையிட்டு நான் மகிழ்ச்சி அடைகின்றேன் எனவும் குறிப்பிட்டார். இந்நிகழ்வில் நகராட்சி மன்றத்தினால் நடாத்தப்பட்ட விளையாட்டு மற்றும் கல்வி துறை சார்ந்த போட்டிகளில் பங்கு பற்றிய மாணவ மணவிகளுக்கு பரிசில்கள் வழங்கப்பட்டது. அத்தோடு பிரதேசங்களை முதன்மைப்படுத்தி செயற்பட்ட முக்கிய பிரமுகர்களும் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்படனர். இந்நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுனரின் செயலாளர் அமிர்தலிங்கம், உள்ளுராட்சி ஆணையாளர் குகநாதன் மற்றும் நகரசபை உறுப்பினர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர். »» (மேலும்) 7/27/2009 | 0 commentaires | கூட்டணி தலைமை மறுப்பு! தமிழர் விடுதலை கூட்டணி என்றும் தனது தனித்துவத்தை விட்டு விலகி செல்லவில்லை. வவுனியாவில் தமிழர் விடுதலைக்கூட்டணி (TULF), ஈழமக்கள் ஜனநாயக கட்சியை (EPDP) ஆதரிப்பதாக வெளிவந்த செய்தி எமக்கு ஆச்சரியத்தை தருகிறது. எமது கட்சி வவுனியாவில் அண்மையில் ஒரு கிளை அலுவலகத்தை திறந்து வைத்துள்ளதே தவிர நிர்வாக கட்டமைப்பு எதனையும் ஏற்படுத்தவில்லை.இவ்வாறு தமிழர் விடுதலை கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி நேற்றையதினம் விடுத்த அறிக்கையில் தெரிவித்துள்ளார். வவுனியா நகரசபை தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணி(TULF) வெற்றிலை சின்னத்தில் போட்டியிடும் ஈழமக்கள் ஜனநாயக கட்சியை (EPDP) ஆதரிக்கும் என்று நேற்றையதினம் பத்திரிகைகளில் வெளியான செய்தி குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். தமிழர் விடுதலை கூட்டணி(TULF) வவுனியாவில் ஈழமக்கள் ஜனநாயக கட்சியை(EPDP) ஆதரிப்பதாக வந்த செய்தி எமக்கு ஆச்சரியத்தை தருகின்றது. எமது கட்சி வவுனியாவில் அண்மையில் ஒரு கிளை அலுவலகத்தை திறந்துள்ளதே தவிர நிர்வாக கட்டமைப்பு எதனையும் ஏற்படுத்தவில்லை. வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி ஆகிய பகுதிகளில் எமது கிளைகள் பல ஆண்டுகளாகவே இயக்கவில்லை என்பதே யாவரும் அறிந்த உண்மை. இவ்வாறன விஷமப் பிரச்சாரங்கள் தேர்தல் காலங்களில் வருவது வழமைதான். இதனை பொது மக்கள் எவரும் நம்பவேண்டாம் எனவும் தமிழர் விடுதலை கூட்டணி என்றும் தனது தனித்துவத்தை விட்டு விலகி செல்வதில்லை என்பதையும் தெரியப்படுத்தி கொள்கின்றேன் என தமிழர் விடுதலை கூட்டணி (TULF) தலைவர் வீ.ஆனந்தசங்கரி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார் »» (மேலும்) | 0 commentaires | வெல்லுற குதிரை எங்கட குதிரை - த.வி.கூ. தமிழர் விடுதலைக் கூட்டணியின் வன்னி மற்றும் கிளிநொச்சி மாவட்ட பிராந்தியக் கிளைகள் ஒன்று கூடி எதிர்வரும் வவுனியா நகரசபைத் தேர்தலில் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர்களை ஆதரிப்பதென ஏகமனதாக முடிவு செய்துள்ளனர். தமிழர் விடுதலைக் கூட்டணியும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியும் இணைந்து இன்று மாலை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் தலைமையில் வவுனியாவில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் வவுனியா நகர சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புடன் இணைந்து வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிடும் ஈ.பி.டி.பியின் ஆறு வேட்பாளர்களையும் தமிழர் விடுதலைக் கூட்டணி ஆதரிப்பதென முடிவு செய்துள்ளதாக அதன் நிர்வாகச் செயலாளர் ஐp.வி.சகாதேவன் தெரிவித்துள்ளார். தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளில் இருந்து அம்மக்களை விடுவிக்கும் தூர நோக்குடனும் நிகழ்கால அபிவிருத்தித் திட்டங்களை கருத்தில் கொண்டும் அரசுடன் இணக்கப்பாட்டுடன் பேச்சுவார்தைகளை மேற்கொண்டு கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காகவும் இந்த நகரசபைத் தேர்தலில் ஐக்கிய சுதந்திர கூட்டமைப்பில் இணைந்து போட்டியிடும் ஈ.பி.டி.பி.யை ஆதரிப்பதாகத் தெரிவித்துள்ள தமிழர் விடுதலைக் கூட்டணியின் நிர்வாகச் செயலாளர் சகாதேவன் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் அரசுக்கெதிரான வெறுப்புணர்வை மேலும் தூண்டிவிட்டு அவர்களை அழிவுப் பாதைக்கு இட்டுச் சென்று அழிவு அரசியலை மேற்கொள்ளாது மக்களுக்கு வளமூட்டும் எதிர்காலத் திட்டத்திற்கு ஊக்கமளிக்கும் பொருட்டே ஈ.பி.டி.பி.க்கு ஆதரவளிப்பதாகவும் தெரிவித்துள்ளார். நடைமுறைச் சாத்தியமான வழிமுறைகளில் ஈ.பி.டி.பியின் எதிர்கால அரசியல் முன்னெடுப்புகளிற்கு வழியேற்படுத்தும் பொருட்டும், நிவாரண முகாம்களிலுள்ள மக்களின் துயர் துடைப்புப் பணிகளை மேலும் முன்னெடுப்பதற்காகவும்; வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிடும் ஈ.பி.டி.பியின் ஆறு வேட்பாளர்களுக்கும் தமிழர் விடுதலைக் கூட்டணி ஆதரவு வழங்குவதாகவும் அதன் நிர்வாகச் செயலாளர் தெரிவித்துள்ளார். இதேவேளை வவுனியா நகர சபையை இலங்கையிலேயே அழகான மாநகர சபையாக மாற்றி அழகுபடுத்தித் தரும் பொறுப்பினை நிறைவேற்றித் தருமாறு ஈழமக்கள் ஜனநாயக் கட்சியின் ஆறு வேட்பாளர்களையும் கேட்டுக் கொள்வதாகத் தெரிவித்துள்ள தமிழர் விடுதலைக் கூட்டணியின் நிர்வாகச் செயலாளர் சகாதேவன் ஈ.பி.டி.பி வேட்பாளர்களின் வெற்றிக்காக அயராது உழைக்குமாறும் தமிழர் விடுதலைக் கூட்டணியினருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளதும் குறிப்பிடத்தக்கதாகும். »» (மேலும்) 7/26/2009 | 0 commentaires | த.ம.வி.புலிகள் கட்சியின் ஆரம்ப கால உறுப்பினர்; அமரர் குகனேசனின் 5ம் ஆண்டு நினைவு நாள் த.ம.வி.புலிகள் இயக்கத்தின் ஆரம்பகால உறுப்பினரும் த.ம.வி.புலிகள் அரசியல் கட்சியின் உருவாக்கத்தின் ஆரம்ப கர்த்தாவுமான அமரர் குகனேசன் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் ஆரம்ப கால உறுப்பினர்களான ஜெயகீசன்(ஜெயந்தன்) தலைமையில் அவரின் சொந்த ஊரான வாழைச்சேனை கண்ணகிபுரத்தில் இன்று இடம் பெற்றது. அமரர் குகநேசனின் தாயார் திருமதி கதிர்காமத்தம்பி புவனேஸ்வரி மங்கள விளக்கேற்றி ஆரம்பித்து வைத்தார்.இந்நினைவு தினத்தினை முன்னிட்டு மாபெரும் விளையாட்டுப் போட்டி நடாத்தப்பட்டு அதில் வெற்றியீட்டிய அணிகளுக்கு பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டது. அத்தோடு இன்று விநாயகபுரத்தில் அமைந்துள்ள பேச்சி அம்மன் ஆலயத்தில் வைத்து அன்னதானமும் வழங்கப்பட்டது. இன்றைய நிகழ்விற்கு த.ம.வி.புலிகள் கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார். இதில் கலந்து கொண்டு உரையாற்றிய கிழக்கு மாகாண முதலமைச்சர், எமது தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் ஆரம்பகால உறுப்பினர் அமரர் குகநேசனின் உயிர் தியாகத்தின்; ஊடாகவே கிழக்கு வாழ் தமிழ் மக்களுக்கான தனித்துவமான ஓர் அரசியல் இருப்பிடம் அமையப்பெற்றிருக்கின்றது, அதுதான் இன்று தனித்துவத்தோடும் சலுகைகளுக்காக உரிமைகளை விட்டுக்கொடுக்காமலும் பேரம் பேசும் ஒரு மாபெரும் தனிச் சக்தியாக பரினமித்துக்கொண்டிருக்கின்றது. எத்தனையோ மனிதர்கள் இவ்வுலகத்திலே இறக்கின்றார்கள். அவர்களில் ஒரு சிலர்தான் வரலாற்றில் தடம்பதிக்கிறார்கள். அந்த வகையிலேதான் கிழக்கு மாகாணத்தின் தமிழ் மக்களுக்கான தனியான ஒரு தமிழ் கட்சி உதயமாவதற்கு ஆரம்ப கருத்தாவாகவும் முன்னோடியாகவும் இருந்து செயற்பட்ட ஒருவராவார். இவரது மரணத்தினை ஒரு கணம் நினைவு கூர்ந்து பார்க்கின்ற போது எம்மினமே எம்மவனை அழித்த வரலாற்றின் ஓர் நாளாகும். காலங்கள் கடந்து சென்றாலும் கண்ணியமிக்க அச்சகோதரனின் இழப்பிற்கு கிடைத்திருக்கும் ஒரு ஈடாக இன்றைய தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியை குறிப்பிடலாம். அமரர் குகனேசனுடன் உயிர் நீத்த கஷ்ரோ, கேசவன், ரூபன், ஆரப்பரன், தம்மிக்க, விக்கி, கமலகாந்தன் ஆகிய எம் சகோதர உறவுகளையும் அவர்களின் தியாகங்களையும் இந்நேரத்தில் நாம் நினைவு கூர கடமைப்பட்டிருக்கின்றோம். »» (மேலும்) | 0 commentaires | கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கான கதைப்புத்தகங்கள் “ரூம் ரூ ரீட்” நிறுவனத்தினால் கிழக்கு முதல்வர் சந்திரகாந்தனிடம் கையளிப்பு அமெரிக்க நாட்டினை தலைமையமாக கொண்டு இயங்கும் “ரூம் ரூ ரீட”; நிறுவனமானது ஒன்பது நாடுகளில் தமது பணியினை மேற்கொண்டு வருகின்றது. இதில் இலங்கையும் மிக முக்கியமான ஓர் நாடாகும். கிழக்கு மாகாணத்தில் இருக்கின்ற ஐனூற்று இருபத்தொன்பது பாடசாலைகளுக்கான கதைப்புத்தகங்கள் “ரூம் ரூ ரீட்” நிறுவனத்தின் பணிப்பாளர் ஜோன் வூட் தலைமையில் இலங்கைப் பிரதமரின் வாசஸ்தலத்தில் வைத்து கிழக்கு மாகாண முதலமைச்சரிடம் பிரதமர் ரட்ணசிறி விக்ரமநாயக்க கையளித்தார். இந்நிகழ்வில் “ரூம் ரூ ரீட்” நிறுவனத்தின் ஆசிய பிராந்தியத்திற்கான பணிப்பாளர் டேர்வின் ஜிங்டரின், “ரூம் ரூ ரீட்” நிறுவனத்தின் இலங்கைக்கான பணிப்பாளர் விலன் ரி டிமல் ஆகியோர் கலந்து கொண்டார்கள். கிழக்கு மாகாண பாடசாலைகளில் இருந்து அதிபர்களும் கலந்து கொண்டார்கள். இவ் நிகழ்வுகள் அனைத்தையும் ஒருங்கமைத்து நெறிப்படுத்தியவர் “ரூம் ரூ ரீட”; நிறுவனத்தின் தொழிற்பாட்டுப்பணிப்பாளர் ரியாஸ் முஹமட் என்பதும் குறிப்பிடத்தக்கது. »» (மேலும்) | 0 commentaires | மீசைவைத்த சிங்களவன், அடங்காத் தமிழன் முடங்கிப்போன முஸ்லிம் - (பாகம் -8) எஸ்.எம்.எம் பஷீர் ஏ.சி.எஸ் ஹமீத் அவர்கள் புலிகளைச் சந்தித்தபொழுது பிரபாகரனுடைய மிக முக்கிய நிபந்தனை வடகிழக்கு மாகாண சபை கலைக்கப்பட்டு 6 வது திருத்தச்சட்டம் நீக்கப்படவேண்டும். மேலும் எம்மக்கள் மத்தியில் புரிந்துணர்வான சூழல் ஏற்படட்டும் ஜனாதிபதி பிரேமதாசாவைச் சந்திக்கலாம் என்று பிரபாகரன் கூறினார். (தகவல் அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை ---அற்புதன்) அதேவேளை 09.05.1990 ம் ஆண்டு புலிகளின் அரசியல் கட்சியான விடுதலைப் பலிகளின் மக்கள் மன்னணி விடுத்த அறிக்கையில் மலையகத்தில் வாழும் தமிழ் மக்கள் அனைவரும் இலங்கைக் குடி மக்களே! அவர்கள் அனைவருக்கும் குடியரிமை உடனே வழங்கப்பட வேண்டும். மலையக மக்களை திருப்பி அனுப்புவதற்கு செய்யப்பட்ட ஒப்பந்தங்கள் அந்த மக்களை கலந்தாலோசிக்காமல் செய்யப்பட்டவை. ராஜீவ் --ஜே.ஆர் ஒப்பந்தம் இன்று செத்துவிட்டதைப் போலவே அந்தப் பழைய ஒப்பந்தங்களும் செல்லுபடியற்றவையாகும் என்று குறிப்பிட்டிருந்தனர். இந்தப் பின்னணியில் முஸ்லிம் ஐக்கிய விடுதலை முன்னணியினதும், புலிகளினதும் ஒப்பந்த சரத்துக்களும் புலிகளின் நிர்த்தாட்சண்யமற்ற செயற்பாடுகளும் நோக்கப்படவேண்டும். இலங்கை--இந்திய ஒப்பந்தத்தின் பின்னர் புலிகளின் மக்கள் முன்னணியின் தலைவரான மாத்தையா என அழைக்கப்பட்ட மகேந்திரராஜா திருகோணமலையில் இடம்பெற்று ஒரு கூட்டத்தில் முஸ்லிம்களை அச்சுறுத்தும் அவர்களின் தனித்துவ அரசியலுக்கு எதிரான கருத்துக்களை பகிரங்கமாக முன்வைத்திருந்தார். மலையக மக்களின் குடியுரிமை குறித்தும் அவர்கள் திருப்பியனுப்பக்கூடாது (இந்தியாவிற்கு) என்று மே மாதம் 1990 ல் அறிக்கைவிட்ட புலிகள்தான் ஆகஸ்ட் மாதம் கிழக்கில் முஸ்லிம் மக்கள்மீதான படுகொலையையும் அக்டோபர் மாதம் வடமாகாண வெளியேற்றத்தினையும். தமிழ் மக்களுடன் பூர்வீகமாக வாழ்ந்த முஸ்லிம் மக்கள்மீது மேற்கொண்டனர். புலிகளுடன் பேச்சுவார்த்தை நடாத்திய ஏ.சி.எஸ் ஹமீத் அவர்கள் புலிகளின் நன்மதிப்பை பெற்றிருந்தமைக்கு முக்கிய காரணம் அவரது ராஜதந்திர அணுகுமுறைதான் என்றும் புலிகள் பின்னா குறிப்பிட்டனர். இவரது புலிகளுடனான கிழக்கு மாகாண சந்திப்பு குறிதது இக்கட்டுரையின் தொடர்ச்சியில் பின்னர் குறிப்பிட்டுக் காட்டவேண்டிய தேவையும் உள்ளது. இக்கால கட்டத்தில முஸ்லிம் ஐக்கிய விடுதலை முன்னணி புலிகளுடன் ஒப்பந்தம ஒன்றினைச் செய்வதற்கு இந்திய --இலங்கை ஒப்பந்தத்திற்குப் பின்னர் செயற்பட்ட சம்பவங்கள் முஸ்லிம் அரசியல் குறிப்பாக வட, கிழக்கில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது. ஆனால் இதன் பின்னணியிலுள்ள நோக்கங்கள், செயற்பாடுகள் ஒருபுறம் சமூகப் பாதுகாப்பையும் இன சௌகன்யத்தையும் எற்படுத்துவதற்காக செய்யப்பட்டாலும் மறுபுறத்தில் புலிகளின் தந்திரோபாய நலன்களுக்கு முஸ்லிம்களின் தலைமைததுவங்கள் எவ்வாறு பலியானார்கள்; என்ற கேள்வியும் எழுகின்றது. இந்திய---இலங்கை ஒப்பந்தத்திற்கு எதிரான குறிப்பாக ஜனாப் எம்.எச்.எம் அஷ்ரப் அவர்களின் தலைமையிலான முஸ்லிம் காங்கிரஸின் எழுச்சிக்கு எதிரான அரசியல் எதிர்ப்பு நிலைப்பாடுகளை கட்டமைத்து தமிழ் தேசிய பாரம்பரிய கோட்பாட்டினை முன்னெடுக்கும் செயற்பாடுகளை புலிகள் மேற்கொண்டனர். முஸ்லிம்களுக்கான தனித்துவ கட்சி ஒன்றினை கட்டியெழுப்பவதற்கான முயற்சியில் குறிப்பாக கிழக்கினை அடிப்படையாகக்கொண்டு கொழும்பிலே பினனர் முஸ்லிம் காங்கிரஸில் பிரபல்யமான பலரை உள்வாங்கிய தொடாச்சியான கலந்துரையாடல்களை; மேற்கொண்டிருந்த பின்னணியையும் எம்.ஐ.எம் முகைதீன கொண்டவர். அவா பின்னர் உருவாக்கிய அரசியல் கட்சியான முஸ்லிம்.ஐக்கிய. ஐக்கிய விடுதலை முன்னணியின் சார்பில் எனக்கும் இன்னும் பலருக்கும் அனுப்பிய கடிதம் ஒனறில் குறிப்பிடுகையில் “ எமது தீவிர செயற்பாடுகளின் விளைவாக தமிழீழ விடுதலைப் புலிகள் நேரடிப் பேச்சுவாhத்தைகளை நடாத்துவதற்கான அழைப்பினையும் எமக்கு விடுத்தனர். இதனை ஏற்று நாங்கள் இந்தியாவிற்கு மேற்கொண்ட விஜயத்தினையும் நடந்த பேச்சுவார்த்தைகளின் பெறுபேறுகளையும் நீங்கள் அறிவீர்கள். இக்கட்டத்தில் நாங்கள் மிகப் பெருமையுடனும் மகிழ்ச்சியடனும் கூறிக்கொள்ள விரும்புவது எங்களது பேச்சுவார்த்தையின் பின்னர் இன்றுவரை தமிழீழ விடுதலைப்புலிகளால் ஒரு சிறிய அளவிலான தாக்குதலும் எற்படவில்லை என்பதைத்தான். தங்களது கட்சி மகாநாட்டிற்கு முன்னோடியாக அனுப்பப்பட்ட இக்கடிதத்தில் மேலும் குறிப்பிட்டிருந்தது வடக்கிலும், கிழக்கிலும் வாழும் முஸ்லிம்களாகிய எமக்கு தற்போதைய சூழ்நிலையில் எற்படக்கூடிய ஆபத்துக்களிலிருந்து எம்மைப் பாதுகாத்து, நிரந்தரமான அமைதிக்கும், உரிமைகளுக்கும், பாதுகாப்பிற்கும், முன்னேற்றத்திற்கும் உத்தரவாதம் அளிக்கக்கூடிய யதார்த்தபூர்வமானதும், துரதிருஸ்டி வாய்ந்ததுமான ஒரு கொள்கைத் திட்டத்தை முன்னெடுத்துச் செல்லவேண்டிய கடமைப்பாடு எங்களுக்கு இருந்தது. இதுபற்றிய ஒரு அக்கறையும், கவலையும் எங்களைப்போலவே இச்சமூதாயத்தின் புத்திஜீவிகளில் ஒருவரான உங்களுக்கும் இருந்தது. எமது சமூதாயத்தில் ஏற்கனவே ஒரு அரசியல்கட்சி (இங்கு முஸ்லிம் காங்கிரஸினரையே குறிப்பிடப்பட்டுள்ளது.) தன்னை நிலைப்படுத்திக் கொண்டுள்ளதை முழுமையாக தெரிந்திருந்தும் இன்னொரு கொள்கையினை முன்வைக்கும்போது இது முஸ்லிம்களை பிளவுபடுத்தும் முயற்சி என்ற அங்கலாய்ப்பினை பரவலாக ஏற்படுத்தும் என்பதனை பூரணமாக அறிந்திருந்தும் நாம் எமது சமூதாயத்தை குறிப்பாக வடக்கிலும், கிழக்கிலும் வாழும் முஸ்லிம்களை சரியான பாதையில் வழிநடாத்திச் செல்லவேண்டியது எமது கட்டாயக் கடமையென உணர்ந்தோம். இதன் விளைவாகவே முஸ்லிம் ஐக்கிய விடுதலை முன்னணி உருவாகியது” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. கிழக்கு மாகாணத்திலும் பொதுவாக இலங்கையிலும் பெரிதும் மதிக்கப்பட்ட மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் முதன்முதலில் தேர்தல் களத்தில் இறங்கிய டாக்டர் பதியுதீன் மஹ்மூத் அவர்களை தமது புலிகளுடனான பேச்சுவார்த்தைக் குழுவின் தலைமைத்துவத்திற்காக மு.ஐ.வி.முன்னணியினர் அணுகினர். இவர்களின் உள்நோக்கம் புலிகளின அங்கீகாரத்துடன், அஷரப் அவர்களின் அரசியல் எழுச்சியினை தடுத்து தங்களைப் பதிலீடு செய்வதுமாகும். இவ்வொப்பந்தம் புலிகள் --முஸ்லிம் ஒப்பந்தம் என்றும் கூறப்பட்டாலும் கிழக்கில் அஷரப்பின் எதிரணியினரால் முஸ்லிம்களின் மதிப்பைப் பெற்றிருந்த அக்காலகட்டத்தில ;அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்த ஜனாப் பதியுதீன் அவர்களின் முகவரி அவர்களுக்கு கைகொடுத்ததாயினும இவ்வொப்பந்த அறிக்கையில் எம்.ஐ.எம் முகைதீனும், கிருஸ்னகுமாரும் (கிட்டு) ஒப்பமிட்டார்கள். எனவே இது உண்மையில் முகைதீன் --கிட்டு ஒப்பந்தமெனச் சொல்வதும் பொருத்தமாயிருக்கலாம். ஓப்பந்தத்திலுள்ள முக்கிய விடயங்கள் பாதுகாப்புக் குறித்த அச்சம்கொண்ட முஸ்லிம்களின் பகைப்புலத்தில் அதன் உள்ளடக்கம் முக்கியம் வாய்ந்ததாகவே கருதப்பட்டது. புலிகள் அஷரப்பின் எதிரணியினரின் அரசியலையும் முஸ்லிம்களின் பலவீனத்தையும் பயன்படுத்திக்கொண்டனர். இவ்வொப்பந்தத்தின்மூலம் புலிகளின் அடிப்படை இலக்கான தமிழர் பாரம்பரிய தாயகக்கோட்பாடான இலக்கினை ஆதரிபப்தென்றும் இலங்கையில் வாழும் முஸ்லிம் மக்கள் தமிழ் மொழி பேசுபவர்களாயினும் அவர்கள் தமிழ் தேசியத்திற்கு உட்படும் தனித்துவமான ஒரு இனக்குழு என இது அடிப்படையில் தனித்தேசிய அடையாளத்தினை முஸ்லிம்களால் அவ்வப்போது முன்வைக்கப்படும் சுய நிர்ணய உரிமைக் கோரிக்கையினை மறுப்பதாக அமைந்திருந்தது. ( They (Muslims ) are a distinct ethnic group falling within the totality of Tamil nationality ) இக்குழுவினர் இலங்கை திரும்பியதும் முதன்; முதல் எம்.ஐ.எம் முகைதீன் இந்தியப பிரதமரை யுத்த நிறுத்தம் செய்யுமாறு வேண்டுகோள் விடுத்ததுடன் வடகிழக்கு மாகாணங்கள் இணைந்திருக்கும் பிரகடனத்தினை வெளியிடுமாறும் ஜனாதிபதி ஜே.ஆர் ஜயவர்தனாவிற்கு வேண்டுகோள் விடுத்தார். தொடரும்......... »» (மேலும்) | 0 commentaires | தலைவர் தங்கத்துரை, குட்டிமணி, ஜெகன் உட்பட 53 வீரமறவர்களின் 26வது ஆண்டு நினைவு அஞ்சலி. ஈழத்தமிழின வரலாற்றில் கோரத்தாண்டவம் ஆடி (1983), இருண்ட பக்கங்களை எழுதி நிற்கும் இருபத்தியாறவது இருண்ட ஜூலை (1989) சுதந்திரம் அடைந்த இலங்கைத்தீவில், சுதந்திரக் காற்றைக்கூட சுவாசிக்க முடியாமல், பெரும்பான்மைவாதம் வேரூன்றி, சிறுபான்மை மக்களின் உரிமைகள் படிப்படியாக பறிக்கப்பட்டு,தமிழினம் ஓரங்கப்பட்டதோடு, ஈழத்தமிழினத்தின் இருப்பையே இல்லாதொழிக்க மாறி மாறி வந்த இலங்கை அரசுகள் எடுத்த முயற்சிகள் ஏராளம் ஏராளம். ஈழத்துக்காந்தி தந்தை செல்வா போன்ற உன்னதமான அரசியல் தலைவர்களால் ஈழத்தமிழினத்தின் இருப்பைக் காக்க தொடுக்கப்பட்ட சாத்வீகப் போராட்டங்கள் அனைத்தும் சாகடிக்கப்பட்டபோது அகிம்சை முறைப்போராட்டங்கள் அனைத்தையும் அதிகாரவர்க்கம் ஆயதம் கொண்டு அழித்தொழித்தபோது, இல்லாது ஒழிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் ஈழத்தமிழினத்தின் இருப்பைக் காப்பாற்ற இறுதி முயற்சியாய் கையிலே ஆயதம் ஏந்த வேண்டிய கட்டாய நிலைக்கு தமிழினம் தள்ளப்பட்டபோது. தலைமை ஏற்றவர்தான் தங்கத்துரை என்ற தங்கண்ணா. நடராஜா தங்கவேல் என்று அழைக்கப்படும் தங்கத்துரை என்ற தங்கண்ணா தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைலவர் மட்டுமல்ல. அவர் ஒரு தத்துவ ஞானியும் கூட. அமைதியும், அன்பும், அடக்கமும், கொண்டகொள்கையிலே உறுதியும் அணிகலன்களாக அமையப் பெற்ற இந்த இலட்சியமறவன், வாதத்திறமையும், சிறந்த பேச்சாற்றலும் கொண்டவர். “நாம் வன்முறை மீது காதல் கொண்ட மனநோயாளிகள் அல்லர்.“ என்று நீதிமன்ற விசாரணையின்போது இவர் உதிர்த்த வார்த்தைகள் சரித்திரத்தில் சாகா வரம் பெற்றவை. தளபதி குட்டிமணி: செல்வராஜா யோகச்சந்திரன் என்ற குட்டிமணி, தலைவர் தங்கண்ணா கூறும் தத்துவங்களையெல்லாம் களத்திலே காரியமாக்கிக் காட்டிய கட்டளைத்தளபதி. கயமைத்தனங்களை கட்டவிழ்த்து விட்ட சிங்கள இராணுவத்தினருக்கு சிம்மசொப்பனமாய் திகழ்ந்தவன். களத்திலே இவன் இறங்கிவிட்டால், இவன் கைகளில் வீரம் விளையாடும். புடைத்து நிற்கும் இவன் தோள்களிலே வெற்றிகள் புன்னகை பூக்கும். இவன் வெறுங்கையோடு வீதியில் வந்தபோது, ஆயதங்களோடு நேருக்கு நேர் வந்த ஆயதப்படைகள் ஆயதங்களைப் போட்டுவிட்டு, அலறியடித்து ஓடிய சம்பவங்கள் பல உண்டு. இவன் தன் தலைவன் காட்டிய நெறி தவறியதில்லை. வைத்த குறியும் தப்பியதில்லை. சிங்கள நீதிமன்றம் மரணதண்டனை விதித்தபோதும் இவன் நீதிமன்றத்தில் “என்னைத் தூக்கிலிட்ட பின் என் கண்களை கண்ணில்லாத ஒரு தமிழனுக்கு கொடுங்கள். அதன் மூலம் மலரப்போகும் தமிழ்ஈழத்தை நான் பார்க்கவேண்டும்.“ என்றான். இதன் காரணத்தாலேயே சிறைச்சாலையில் வைத்தே சிங்கள வெறியரின் முழமையான இரையாகி, உயிரோடிருக்கும் போதே இவன் கண்கள் தோண்டப்பட்டு வீரஉரை நிகழ்த்திய இவன் நாவும் அறுக்கப்பட்டது. ஏ! அஞ்சா நெஞ்சமே! உன் மறுபெயர் தான் குட்டிமணியோ? முன்னணிப் போராளிகள்: ஜெகன் என்கின்ற ஜெகநாதன் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் இளைய மகன், தளபதி குட்டிமணியை விட்டு இணைபிரியாத் தோழன். இயந்திரத்துப்பாக்கியும் கையுமாக இந்த இளம்சிங்கம் கண்ட களங்கள் பல. வயதிலே சின்னவன்; வேட்டுக்களை குறி வைப்பதில் மன்னவன். இராணுவத்தின் பிடியிலிருந்து பல தடவை தப்பியவன். அழகிய புன்முறுவலும், அடங்காத புரட்சியுணர்வும் கொண்டவன். சிவசுப்பிரமணியம் என்கின்ற தேவன் தலைவர் தங்கண்ணாவின் மெய்ப்பாதுகாவலர். பட்டத்து யானை போன்று நெடிய, கம்பீரமான தோற்றம் ஜெகனைப் போலவே இராணுவத்தின் பிடியிலிருந்து பலமுறை தப்பி சாகசம் புரிந்தவர். பொலிசாரின் துப்பாக்கிக் குண்டுகள் வயிற்றைக் கிழித்தபோதும், சாரத்தைக் கிழித்து, வயிற்றில்க் கட்டிக் கொண்டே கடலை நீந்தித் தாண்டித் தப்பிய மனோதைரியம் கொண்டவர். இப்படி தொடர்ந்தது இளைஞர்படை. தொகை தொகையாய் தலைவர் பின்னால், சுதந்திரக் காற்றை சுவாசிக்கத் துடித்து நின்ற மறத்தமிழ் வீரர்களின் மரணத்துக்கு அஞ்சாநிலை கண்டு, அகிலமே முதல் முறையாய் அண்ணாந்து பார்த்தது. அடக்கி ஆண்டவர்களோ அச்சத்தால் மிரண்டனர். தலைகுனிந்த நம்மினமோ தலை நிமிர்ந்து நின்றது. அடலேறுகளின் ஆக்கிரோசத்தில் அகமகிழ்ந்த அன்னை தமிழும் அரியணையில் ஏற ஆயத்தமானாள். தமிழினத்தின் விடிவுக்காய் தமிழர்படை தொடர்ந்த வேளை துரோகக்கரம் ஒன்று பின்னால் தொடர்ந்ததை யார் அறிவார். பதவி வெறியால் பாவி அவன் சதியாய் பாதியிலே (1981) கைதானார்கள் எங்கள் பைந்தமிழ் வீரர்கள். காட்டிக் கொடுத்தவர்களே கடைசிவரை நீங்கள் சிறை மீண்டுவிடக்கூடாது என்பதற்காக காங்கேசன்துறை சீமேந்துக் கூட்டுத்தாபனத்தின் சிங்கள ஊழியரோடு பேரம் பேசி சிறையில் வைத்தே உங்களை தீர்த்துக்கட்ட முயற்சி எடுத்தார்கள். கைதான உங்களைக் காக்கவென்று புறப்பட்டோம். ஆத்திரமுற்றிருந்த அதிகாரவர்க்கம் கோர்த்தது கை இந்தக் கோடாலிக்காம்புகளோடு. சாய்த்தது சிறையில் வைத்தே எங்கள் சரித்திர நாயகர்களை. “இலட்சியத்தை கை விடுங்கள். இன்னொரு நாட்டில் இல்லறத்தோடு இனிதே வாழ வசதிகளோடு வாய்ப்புக்கள் தரப்படும். நீங்கள் மகிழ்ச்சியாக வாழலாம்.“ என்று பேரம் பேசியது ஜெயவர்த்தனா அரசு. அன்று மாத்திரம் நீங்கள் ஆம் என்று சொல்லியிருந்தால், இன்றும் இருந்திருப்பீர்கள் இன்னொரு நாட்டில் வளமாக. ஈழத்தமிழினத்திற்காக நீங்கள் ஏற்றுக்கொண்ட துன்பங்கள் எண்ணில் அடங்காதவை; கல்நெஞ்சையும் கரைக்கக் கூடியவை. உங்கள் உயிரிலும் மேலான இலட்சியத்தைக் கை விட மறுத்ததினால், பூட்டிய சிறையினில் மாட்டிய விலங்கோடு தீட்டிய ஆயுதத்தினால் காடையரின் துணையோடு உங்கள் கண்கள் தோண்டப்பட்டு, கால்களில் போட்டு மிதிக்கப்பட்டன. கழுத்து அறுக்கப்பட்டு, உடல்கள் சிதைக்கப்பட்டன. உங்கள் உயிர்கள் பிரியும் முன்பே அங்கங்கள் அறுக்கப்பட்டன. இப்படி ஒவ்வொரு போராளிகளின் உறுப்புக்களும் தனித்தனியாக பிரிக்கப்பட்டு புத்தருக்கு காணிக்கையாக்கப்பட்டன. தென்னிலங்கை வீதிகளில் தமிழர்களின் அவலக்குரல்கள், தெருவெங்கும் தமிழர் பிணங்கள். தமிழரின் சொத்துக்கள் சூறையாடப்பட்டன. கட்டிடங்கள் தீயிடப்பட்டன. இப்படி மனிதநாகரிகம் வெட்கித் தலைகுனிந்த நிலைமையில் நடத்தப்ட்ட கோழைத்தனமான தாக்குதலில் சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கத் துடித்துநின்ற இளைஞர்கள் பின்தொடர ஆயதப்போராட்டத்தை ஆரம்பித்து வைத்த தமிழ்ஈழத் தேசபிதா திரு. தங்கத்துரை, தளபதி குட்டிமணி உட்பட புதுயுகத்தின் அத்தியாயங்களை எழுதத் துடித்துநின்ற தோழர்கள் ஜெகன், தேவன், நடேசுதாஸ், சிவபாதம், குமார், ஸ்ரீகுமார், மரியாம்பிள்ளை, குமரகுலசிங்கம் போன்ற முன்னணிப்போராளிகள் உட்பட ஐம்பத்திமூன்று உயிர்கள் வெலிக்கடைச்சிறையில் வெட்டிக் குதறப்பட, நலிவுற்ற நம்மினமோ இன்று நடுத்தெருவில், மரணித்துவிட்ட எங்கள் விடியல்களே! எங்கள் இனத்தின் இன்றைய இன்னல்கள் தீர்க்க இன்னும் ஒருமுறை எழுந்துவர மாட்டிரோ? உங்கள் அனைவருக்கும் எமது ஆத்மாந்தமான கண்ணீர் அஞ்சலிகள் காணிக்கையாகட்டும். புலம்பெயர்ந்து வாழும் தமிழ் ஈழ விடுதலை இயக்க உறுப்பினர்கள் TELO »» (மேலும்) | 0 commentaires | அம்பாறையில் 13 வயது மாணவியை பாலியலுக்குட்படுத்தி கொலை, சந்தேக நபரும் பொதுமக்களால் அடித்துக்கொலை. அம்பாறை மத்தியமுகாம் 4ம் கொலனிப் பகுதியில் பாடசாலை மாணவி மதுனுஸ்கா இனந்தெரியாதோரால் பாலியல் வன்முறைக்குட்படுத்தப்பட்டு கொலைசெய்யப்பட்டுள்ளார்.அம்பாறை மத்தியமுகாம் 4ம் கொலணி வாணி வித்தியாலய 7ம் வகுப்பு மாணவி மோகன் மதுனுஸ்கா (வயது 12)கடந்த 22ம் திகதி புதன்கிழமை அன்று குரூரமான முறையில் பாலியல் வன்முறைக்குட்படுத்தப்பட்டு கொலைசெய்யப்பட்டுள்ளார். அவர் சம்பவதினம் முட்டை விற்பதற்காக அருகிலுள்ள சிங்களக் கிராமமான 3ம் கொலனிக்குச் சென்றுவிட்டு, வரும் வழியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.மாலை ஆறு மணியாகியும் அவர் திரும்பி வராததால் சந்தேககம் கொண்ட பெற்றோர் அவரைத் தேடத் தொடங்கினர். இதேவேளை மத்திய முகாம் எல்லைக்கிராமத்திலுள்ள பாமடி பின் அணைக்கட்டுப் பகுதியில் ஆடைகளில்லாத நிலையில் முகம் உள்ளிட்ட உடம்பு பூராகக் கீறல் காயங்களுடனும் வயிற்றிலும் கழுத்திலும் கத்திக் குத்துக் காயங்களுடனும் குடல் வெளியே தெரிந்த நிலையில் சடலமொன்று காணப்படுவதாகத் தகவல் கிடைத்தை தொடர்ந்து, பெற்றோரும் மத்திய முகாம் பொலிஸாரும் அயலவர்களும் சென்று பார்த்தபோது சடலத்தின் மேல் பறாங்கல் ஒன்று வைக்கப்பட்டிருந்தது. குறித்த மாணவியின் சடலமே அது என்பதை அவர்கள் உறுதிப்படுத்திக் கொண்டனர். இதனையடுத்து மத்தியமுகாம் 3ஆம் 4ஆம் கொலனிகளில் பதற்றம் நிலவி வருகிறது. பாடசாலை மாணவர்களின் வரவிலும் வீழ்ச்சி கண்டுள்ளது. தற்போது அப்பகுதி எங்கும் காவற்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். மோப்ப நாய் சகிதம் அவர்கள் தேடுதல் மேற்கொண்டு வருவதோடு பலரை விசாரணைக்குட்படுத்தியும் வருகின்றனர். இப்பாலியல் கொலையுடன் சம்பந்தப்பட்ட குற்றவாளி பாவா என அழைக்கப்படும் கனகரெத்தினம் ஸ்ரீஸ்கந்தராஜா (வயது 29)என்பவர் நேற்று மாலை 5.00 மணியளவில் பொதுமக்களால் அடித்து நையப்புடைக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளார். பெண் வேடம் தரித்து முக்காட்டுடன் வயலில் கதிர் பொறுக்கிக் கொண்டிருந்த வேளை அவரை இனங்கண்ட தமிழ் சிங்கள பொது மக்கள் ஆத்திரம் தீர அடித்துள்ளனர்.அதன்போது இவா’ இறந்துள்ளார். சடலத்தை பொலிசார் எடுத்துச் சென்றனர். »» (மேலும்) | 0 commentaires | காணிப்பிரச்சினையை தீர்ப்பது உள்ளுராட்சி பிரச்சினையில் அரைவாசியை தீர்ப்பதற்கு சமம். காணியோடு சம்மந்தப்பட்ட பிரச்சினைகளை தீர்ப்பது உள்ளுராட்சி பிரச்சினையில் அரைவாசிப்பிரச்சினையை தீர்ப்பதற்கு சமமாகுமென கிழக்கு மாகாண சபையின் உறுப்பினர் யு.எல்.எம்.என். முபீன் தெரிவ்த்தார். கிழக்கு மாகாண சபையின் அமர்வு கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றபோது அங்கு காணி தொடர்பான பிரேரணையொன்றில் உரை நிகழ்த்தும் போதே மேற்கண்டவாறு அவர் தெரிவித்தார். இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய முபீன், கிழக்கு மாகாணம் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசம்.யுத்தம் நடைபெற்ற சகல நாடுகளிலும் காணியோடு தொடர்புடைய பிரச்சினைகள் அதிகமாக இருக்கின்றன எனவும், கிழக்கு மாகாண சபைக்கு அதிகாரங்கள் இல்லையென்று சொல்வதை விட அந்த அதிகாரங்களைப் பெற்றுக்கொள்வதற்காக அல்லது இந்த சமூகத்தின் கிழக்கு மாகாணத்திலிருக்கின்ற அடிப்படை காணிப் பிரச்சினைகளை தீர்த்து வைத்தால் கிழக்கு மாகாணத்திலிருக்கின்ற ஐம்பது வீதமான பிரச்சினைகளை தீர்த்து வைக்க முடியும் எனக்குறிப்பிட்டார். »» (மேலும்) 7/24/2009 | 0 commentaires | அரசியல்வாதிகள் எல்லாம் இப்படி இருந்துவிட்டால் ,,,!- எஸ். எம். எம் .பஷீர் “இந்த உலகத்தில் அநீதி தலையெடுக்கிற போதெல்லாம் கோபமும் வெறுப்பும் கொண்டு நீ குமுறி நடுங்குவாயானால் நாம் இருவரும் தோழர்கள். அதுதான் முக்கியமான விஷயம்.” எர்னஸ்டோ சேகுவாரா முன்னாள் மொரட்டுவ நாடாளுமன்ற உறப்பினர் மெர்ரில் பெர்னாண்டோ (Merryl Fernando) அண்மையில் காலமானார்; அவரது மறைவினை தொடர்ந்து மொரட்டுவ பல்கலைகழகத்தின் முன்னால் துணை வேந்தர் க. பிரான்சிஸ் த சில்வா (G.T. Francis De Silva) அவர்கள் நினைவு கூர்ந்த சம்பவங்கள் ஒரு அரசியல்வாதி எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு சிறந்த உதாரணமாகும். இப்போதெல்லாம் நாம் காண்கின்ற அரசியல்வாதிகளில் : சில இடதுசாரி அரசியல் வாதிகள் அபூர்வமாக ஏனைய அரசியல் கட்சிகளின் சில அரசியல்வாதிகள் தவிர பொதுவாக மக்களின் வாக்குகளால் திருடுவதற்கும் சுயமேம்பாட்டுக்கும் வழங்கப்படும் உரிமம் ( LICENSE) பெற்றவர்கள் போல் தான் இன்றைய அரசியல்வாதிகள் செயற்படுகின்றர்கள். என். எம். பெரேரா அமைச்சராக இருந்தபோது ஒருதடவை நாடாளுமன்றத்திலிருந்து நேரடியாக வந்து கியூவில் நின்று கொழும்பு ஆர்மி கிரவ்ண்டில் கிரிக்கெட் மேட்ச் பார்ப்பதற்காக நுழைவுசீட்டு பெற்றுக்கொண்டு சாதாரணமாக ஒரு பொதுமகனாக அரங்கிலிருந்து பார்த்தார் என்பது அவரது வாழ்வில் பல சம்பவங்களில் ஓன்று.மெர்ரில் . பெர்னாண்டோ 1956 ஆண்டில் லங்க சமசமாஜ பார்ட்டி உறுப்பினராக மொரட்டுவா தொகுதியில் அய்க்கிய தேசிய கட்சியின் ஜாம்பவானான ருச்கின் பெர்னாண்டோவை தோற்கடித்து நாடாளுமன்றம் சென்றார். இலங்கை பல்கலைக்கழக கல்வியையும் 1953 ஹர்த்தால் நடந்தபோது தனது அரசியல் சமுக மேம்பாட்டுக்காக சாதாரணமாக பேருந்துக்காக வரிசையில் காத்துநின்று தனது போகுமிடம் செல்வதை இவரது வாழ்வில் சாதாரணமாக காணப்பட்டது என்று துணை வேந்தர் பிரான்சிஸ் குறிப்பிடுகிறார். ஒருதடவை இவர் தனது தொகுதில் உள்ள வைத்தியசாலைக்கு சுகவீனம் காரனமாக சென்று வைத்தியரை காண்பதற்கு காத்திருந்தபோது, வைத்தியரிடம் ஊழியர்கள் சொன்னபோதும் அதனை ஒரு சிறநத உதாரணமாக குறிப்பட்ட வைத்தியர் மெர்ரில் பெர்னாண்டோ தன்னிடம் வந்தபோது எதிர்காலத்தில் வைத்திய உதவிக்காக வருவதேன்றால் தனது விடுதிக்கு (Quarters) வருமாறு கேட்டுக்கொண்டார். 1960 தேர்தலில் ரஸ்கின் பெர்னாண்டோவிடம் (Ruskin Fernando) தனது தொகுதியை இழந்த மெர்ரில் மீன்றும் ஜூலையில் நடைபெற்ற தேர்தலில் வெற்றிபெற்றார். 1965 ஆண்டு மறைந்த எட்மொந்து சமரக்கொடி ( Edmond Samrakody -LSSP) உடன் சேர்ந்து அரசுக்கெதிரான நம்பிக்கை இல்லா பிரேரணைக்கு வாக்களித்து தமது கட்சியில் இருந்து வெளியேறி இருவரும் நாடாளுமன்ற அங்கத்துவத்தை இழந்தனர்.இவர் பல்கலைக்கழகத்தை விட்டு வெளியேறியதும் மஹரகம ஆசிரியர் பயிற்சி கல்லூரி ஆங்கில விரிவுரையாளராக பணியாற்றினார். அன்றைய கட்டுபொத்தை வளாகத்திலும் ( University of Morattuwa) பணிக்குழு (staff officer) ஆகவும் பணியாற்றி உள்ளார். தனது நா. உறுப்பினர் பதவியை இழந்தும் ஆசிரியர் பதவியை இழந்தும் பொருளாதார கஷ்டங்களுக்கும் உள்ளானபோதும் கொள்கையில உறுதியாகவிருந்தார். தனது பொருளாதரக் கஷ்டத்தினால் , வேலை தேடும் நோக்குடன் கணக்கியல் துறையில் இடைத்தரநிலை (Intermediate) கணக்கியல் தரத்தில் சித்தி எய்தி வித்தியோதய பல்கலைகழகத்தில் சிரேஷ்ட உதவி நிதி பொறுப்பாளராக (Bursar) ஆக பணியாற்றியும் இவர் ஒரு முன்னாள் எம்.பி .என்றோ அல்லது முன்னாள் மொரட்டுவா நகரசபை தவிசாளர் என்றோ பல்கலைகழக அதிகாரம் இவருக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை என்பதுடன் இவரும் சாதாரண ஊழியரகவே தன்னை அடையாளப்படுத்தி செயற்பட்டார்.. இவர் மொரட்டுவை பல்கலைகழகத்தில் கணக்கியல் பகுதியில் பணியற்றியபோது இவரிடம் பேராசிரியர் பிரான்சிஸ் தே சில்வா ஏன் நீங்கள் மீதமுள்ள கணக்கியல் பகுதிகளை முடித்து முழு தகுதிபெற்ற கணக்காளர் ஆக கூடாது என்று கேட்டபோது; அது (கணக்காளர்-accountant ) என்பது முதலாளித்துவ தொழில் என்று குறிபிட்டபோது: ஏன் அப்படியானால் படித்தீர்கள் எனக் கேட்க: தனக்கு தொழில் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக படித்ததாக கூறினார். சிறிது . இடைவெளியின் பின்னர் முதலாளித்துவ ஐக்கிய தேசிய கட்சியின் (UNP) தேர்தல் எழுச்சிகளினை முன்னுணர்ந்து தேர்தலில் தமது புதிய கட்சியை ஆரம்பித்து தோல்வி அடைவோம் என்று அறிந்தபோதும் தனது பல்கலைகழக பதவியை துறந்து போட்டி இட்டார்,. தனது பல்கலைகழக பதவியில் விடுமுறை பெற்று போட்டியிட அனுமதி இருந்தும் அது தனது கொள்கைக்கு மாறானது என்று மறுத்து பதவியை ராஜினாமா செய்துவிட்டு போட்டி இட்டார். மேலும் இவர் தொழிலாளர்களுக்கு ஆங்கிலம் படிப்பதற்காக இவரது மணித்தியால கட்டணத்தை கேட்டபோது; ஒரு மணித்தியால வேதனமாக ரூபாய் 25 போதும் என்று கூறினார் ஆனாலும் மெர்ரில் பெர்னாண்டோ கேட்கும் தொகை அவரைபோன்ற ஆங்கில ஆசிரியருக்கு கொடுக்ககூடிய பொருத்தமான ஊதியம் அல்ல என்றும் அதனை சொல்வது வெட்கிக்கக்கூடியது என்றும் தான் ரூபாய் 50 வழங்குமாறு கேட்டுக்கொண்டதாக ஆங்கில ஆசிரியரை வேலைகமர்த்த தேடியவர் குறிப்பட்டார். ஆனால் நியமனம் வழங்கும் சபை அவரது தகுதியை உணர்ந்து ரூபாய் 100 வழங்குவதற்கு அனுமதித்தனர். ஒருதடவை தனக்கு பின்னால் வரிசையில் வைத்தியரை பர்ர்க்க காத்திருந்தவர் முன்னால் பிரதமர் தஹநயக என்று அறிந்துகொண்டு முன்னால் இருந்தவர்கள் தாதிகள் என பலர் அவரை முன்செல்ல தூண்டியும் அத்னை மறுத்து காத்திருந்தார் அவர் என்ற செய்தியை என்னிடம் சொன்னவர் அவருக்கு முன்னால் காத்திருந்த ஒருவர் . ஆங்கிலம் .இரண்டாவது விருப்பு மொழியாக ( English as a second language ) கலைமாணி பட்டதாரி மாணவர்களுக்கு பல்கலைக்கழகத்தில் வேலை வாய்ப்பிற்கு மூன்று வருட கல்வியின் பின்னர் அனுகூலமானது என்ற அவரது கருத்து மொழி தேசிய முக்கியத்துவம் வாய்ந்தது என்பது பின்னர் உணரப்பட்டது.. இப்படியான உதாரண அரசியல்வாதிகள் சிலர் இல்லாமலும் இல்லை. இன்றைய அரசில் அமைச்சராக இருக்கும் திஸ்ஸ விதாரணவும் தனது சொந்த வாழ்வில் எளிமையானவர் மிகவும் சாதார பட்டோபகரமான வாழ்க்கை நடத்தாதவர். பழகுவதறகு இனியவர். பொது, அரச வாகனம் ஏனைய சொத்துக்களை தனது சொந்த வாழ்க்கைக்கு பயன்படுத்தாத இன்னுமொருவராக குறிப்பிடக்கூடியவர். முன்னால் அமைச்சரும் இன்றைய ஜனாதிபதியின் ஆலோசகர் ஜனப் எம்.அஸ்வர் ஆகும். முன்னால் கல்வி அமைச்சர் பதயுடீன் மஹ்மூத் அவர்களும் ஒரு ஊழலற்ற மனிதராகவே வாழ்ந்தார். முன்னால் மட்டக்களப்பு எம் . பி நல்லையாவும் ஒரு எளிய மனிதராகவே வாழ்ந்து வாடகை வீட்டிலே காலமானார்.. இன்றைய பல அரசியல்வாதிகளின் பட்டோபக வாழ்ககை பற்றி எழுதுவது அவசியமற்றது ஏனெனில் அவர்கள்தான் அதிகமானவர்கள் (majority) என்பதால்.. »» (மேலும்) | 0 commentaires | யாழ். தீவு பகுதியில் 6 இந்திய மீனவர்களின் சடலங்கள் கரையொதுங்கின இராமேஸ்வரத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்றபோது காணாமற்போனதாக கூறப்படும் இந்திய மீனவர்கள் அறுவரின் சடலங்கள் இலங்கையின் வடக்கு கடலில் கரையொதுங்கியிருப்பதாக கடற்படைப் பேச்சாளர் கொமாண்டர் டி. கே. பி. தஸநாயக்க தெரிவித்தார். நெடுந்தீவு மற்றும் ஊர்கா வற்றுறை பகுதிகளில் கடந்த 19 ஆம் திகதி முதல் 22 ஆம் திகதி வரையில் கரையொங்கிய ஆறு இந்திய மீனவர்களின் சடலங்களை கடற்படையினர் மீட்டிருப்பதாகவும் கடற்படைப் பேச்சாளர் கூறினார். இந்திய மீனவர்கள் ஏழு பேரைக் கொண்ட படகு கடலில் கடந்த வாரம் கவிழ்ந்துள்ளது. இதனையடுத்து இம் மீனவர்கள் பற்றிய தகவல்கள் தெரியவரின் அறிவிக்குமாறு இந்திய பொலிஸார் எமக்கு அறிவித்திருந்தனர். அதனைத் தொடர்ந்து நாம் வடக்கு கடலில் கூடுதல் அவதானத்துடன் இருந்தோம். இதன்போதே கரையொதுங்கிய ஆறு சடலங்க ளும் மீட்கப்பட்ட தாகவும் கடற்படைப் பேச்சாளர் கூறினார். இந்திய மீனவர்கள் அறுவரின் சடலங்களும் யாழ்ப்பாண வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக இந்தியப் பொலிஸாருக்கும் தகவல் வழங்கப்பட்டுள்ளது எனக் குறிப்பிட்ட கடற்படை பேச்சாளர், சடலங்கள் குறித்த மேலதிக விடயங்களை இந்திய உயர் ஸ்தானிகராலயம் மேற்கொண்டு வருவதாகவும் குறிப்பிட்டார். »» (மேலும்) | 0 commentaires | சர்வதேச நாணய நிதியம் அரசின் மீது முழு நம்பிக்கை மஹிந்த சிந்தனை கொள்கைகளுக்கு முரணான எந்த ஒரு நிபந்தனையையும் சர்வதேச நாணய நிதியம் முன்வைக்க வில்லை. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் முன்னெடுத்து வரும் பொருளாதார கொள்கை தொடர்பான நம்பிக்கையின் அடிப்படையிலே சர்வதேச நாணய நிதியம் நாம் கோரியதைவிட கூடுதலான நிதியை கடனாக வழங்க முன்வந்துள்ளது என ஏற்றுமதி அபிவிருத்தி மற்றும் சர்வதேச வர்த்தகத்துறை அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் தெரிவித்தார். இலங்கை வரலாற்றில் எமக்குக் கிடைத்த மிகப் பெரிய கடனுதவி இது எனவும், இந்தக் கடனுதவி இலங்கைக்கு கிடைத்திருப்பது யுத்த வெற்றிக்கு இரண்டாம் பட்சமாக கருத முடியாத வெற்றியாகும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார். அமைச்சரவை முடிவுகள் அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த அமைச்சர் மேலும் கூறியதாவது; சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு 2.5 பில்லியன் டொலர் கடனுதவியாக வழங்க தீர்மானித்துள்ளது. இலங்கைக்கு இந்தக் கடனுதவி கிடைக்காது எனவும் பாரிய நிபந்தனைகளை விதித்துள்ளதாகவும் எதிர்க் கட்சிகள் தெரிவித்து வந்த குற்றச்சாட்டுகள் யாவும் இன்று பொய்யாகியுள்ளன. இலங்கைக்கு வழங்கப்பட உள்ள கடனுதவி குறித்து இன்று (24) நடைபெற உள்ள சர்வதேச நாணய நிதிய பணிப்பாளர் சபைக்கூட்டத்தில் உத்தியோகபூர்வ முடிவு எடுக்கப்பட உள்ளது. 30 வருடகால யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்து பொருளாதாரத்தை மேம்படுத் தவும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும் அரசாங்கம் எடுத்துவரும் நடவடிக்கை கள் குறித்து சர்வதேச நாணய நிதியத்துக்கு முழு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. அதனாலேயே இந்தக் கடனுதவியை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 1.9 பில்லியன் அமெரிக்க டொலர்களே நாம் கடனாகக் கோரினோம். ஆனால் 2.5 பில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க சர்வதேச நாணய நிதியம் முன் வந்துள்ளது. இலங்கைக்குரிய கோட்டாவில் 400 மடங்கு தொகை எமக்கு கடனாகக் கிடைக்க உள்ளது. இந்தக் கடன் தொகை சமமான எட்டுத் தவணைகளாக வழங்கப்பட உள்ளதோடு, முதலாவது தவணை இன்று ஆரம்பமாக உள்ளதோடு கடைசித் தவணை 2011 மார்ச் 15ஆம் திகதி கிடைக்க உள்ளது. ஒரு தவணை யில் 312 மில்லியன் டொலர் கிடைக்க உள்ளது. எமது அரசாங்கம் முன்னெடுத்து வரும் ஆக்கபூர்வமான திட்டங்கள் குறித்த நம்பிக்கையின் காரணமாகவே நாம் கேட்ட தொகையை விட கூடுதலாக தருவதற்கு சர்வதேச நாணய நிதியம் முன்வந்துள்ளது. நாட்டின் பொருளாதார நிலை முன்னேற்றம் கண்டு வருகிறது. கடந்த வருடம் ஜூன் மாதத்தில் 28 வீதமாக இருந்த பணவீக்கம் தற்பொழுது 2 வீதமாகக் குறைந்துள்ளது. இந்த வருடத்தின் முதல் காலாண்டில் 1.5 வீதமாக பொருளாதார வளர்ச்சி வீதம் குறைந் திருந்தது. ஆனால் தேயிலை, இறப்பர், கறுவா மற்றும் ஏற்றுமதிப் பொருட்களால் கிடைக்கும் வெளிநாட்டுச் செலாவணி அதிகரித்து வருவதோடு வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கையர் அனுப்பும் அந்நியச் செலாவணியும் மூன்று வீதத்தினால் அதிகரித் துள்ளது. இலங்கையின் வெளிநாட்டு வளம் 1.2 பில்லியன் டொலரில் இருந்து 1.7 பில்லியனாக உயர்ந்துள்ளது. வெளிநாட்டு நிறுவனங்கள் இலங்கையில் கூடுதலாக முதலீடு செய்யத் தொடங்கியுள்ளதாலே இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. சர்வதேச சமூகத்தின் மத்தியில் இலங்கை குறித்த நம்பிக்கை பெருமளவு அதிகரித்துள்ளது. சர்வதேச நாணய நிதியம் முன்வைத்துள்ள நிபந்தனைகள் எதுவும் இலங்கைக்குப் பாதகமாக இல்லை. இலங்கைக்குச் சாதகமான கொள்கையையே சர்வதேச நாணய நிதியம் கொண்டுள்ளது. முரணான எந்த நிபந்தனையும் முன்வைக்கப்படவில்லை. வரவு செலவுத் திட்ட துண்டு விழும் தொகையை 6.5 வீதத்திற்கு மேற்படாதவாறு பேணுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆனால் துண்டு விழும் தொகை 7வீதம் வரை அதிகரித்தாலும் எதுவித பிரச் சினையும் கிடையாது என சர்வதேச நாணய நிதியம் குறிப்பிட்டுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் கடனினூடாக பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்படும். இந்த கடனுதவி மூலமாக வட்டி வீதத்தை குறைக்கவும் வெளி நாட்டு செலாவணி வீதத்தை நிலையாக தக்கவைக்கவும் முடியும். சர்வதேச நாணய நிதிய கடன் காரணமாக இந்த வருட முடிவுக்குள் இலங்கை யின் பொருளாதார வளர்ச்சி வீதம் 5 ஆக உயரும். இந்த கடனுதவி காரணமாக இலங்கை யுடன் கொடுக்கல் வாங்கல் செய்யும் நாடு களுக்கு எமது நாடு குறித்து பூரண நம்பி க்கை ஏற்படும். அரசாங்கம் முன்னெடுத்துவரும் கிராமிய அபிவிருத்தித் திட்டங்கள் மகநெகும, கமநெகும, வறி யோரை ஊக்குவிக்கும் திட்டங்களுக்கு சர்வதேச நாணய நிதியம் எதுவித நிபந்தனையும் விதிக்க வில்லை. நாட்டின் பொருளாதார நிலைமை மோச மாக இருந்தால் சர்வதேச நாணய நிதியம் கடனுதவி வழங்க முன்வந்திருக்காது. இலங்கை குறித்து திருப்தி ஏற்பட்டதாலேயே இந்த நிதி கிடைக்க உள்ளது என்றார். »» (மேலும்) | 0 commentaires | பெண்களின் அரசியல் பிரவேசத்திற்கு எப்போதுமே எமது கட்சி ஆதரவளிக்கும். த.ம.வி.பு கட்சியின் திருமலை மாவட்ட அமைப்பாளர் திருமதி ஜுடி தேவதாசன்.ஆண்கள் மாத்திரமே அரசியலுக்கு தகுதியானவர்கள் என்கின்ற பெரும்பாலான மக்களின் கருத்துக்களுக்கு எமது த.ம.வி.பு கட்சி சரியான ஓர் சமத்துவ வாத அரசியல் சிந்தனையினை கொண்டிருக்கிறது. என்பதற்கு சிறந்த உதாரணமாக பெண்களின் அரசியல் பிரவேசத்திற்கு எப்போதும் எமது கட்சி ஆதரவளிக்கும் என திருமதி ஜுடி தேவதாசன் தெரிவித்துள்ளார். அவர் மேலும் குறிப்பிடுகையில், கௌரவ முதலமைச்சர் கிழக்கு மாகாணத்தில் ஆட்சி பொறுப்பேற்றதனால் கிழக்கு மாகாணத்திற்கு ஒரு விடிவுகாலம் ஆரம்பித்துள்ளதை மக்கள் தொடர்பு அதிகாரி என்ற வகையில் மக்களின் மனங்களில் இருந்து அறியக்கூடியதாக உள்ளது எனவும், பெண்கள் உரிமைகள் தொடர்பாக பேசுகின்ற பல்வேறு அமைப்புக்கள் மற்றும் தொண்டர் நிறுவனங்களில் சேவை ஆற்றிய நான் அரசியல் ரீதியான ஓர் பின்புலத்தின் ஊடாகா பெணகளுக்கான உரிமைகளை பெறுவதற்கு முயற்சிக்க முடியும் என தான் நம்புவதாகவும் தெரிவித்தார். மேலும் குறிப்பிடுகையில் முக்கியமாக பெண்களினதும்; சிறுவர்களினதும் பிரச்சனைகளுக்கு தீர்வுகாணும் பொருட்டே எமது மாவட்ட அமைப்பாளர்கள் இயங்கி வருகிறார்கள். குறிப்பாக திருகோணமலை மாவட்டத்தில் கிழ்மட்ட நிலையில் இருக்கின்ற பெண்கள் அனைவரினதும் வாழ்வாதாரம், கல்வி, தொழில் முயற்சி,அரசியல் பிரவேசம் என்பவற்றை மேம்படுத்துவதற்காக எமது கட்சி அற்பணிப்புடனும் சேவை மனப்பான்மையுடனும் செயற்படுகின்றது. இதனூடாக எமது பெண் சமுதாயத்திற்கான ஓர் அரசியல், சமூக அபிவிருத்தி மாற்றத்தினை ஏற்படுத்த முடியும் என தான் நம்புவதாகவும் தெரிவித்தார் »» (மேலும்) | 0 commentaires | மன்னார்-திருகோணமலை நேரடி பஸ் சேவை இன்றுமுதல் ஆரம்பம் மன்னாரிலிருந்து திருகோணமலைக்கான நேரடி பஸ் சேவை இன்றுமுதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. வைபவ ரீதியாக இன்று காலை 6.30 மணிக்கு இச்சேவை ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதன்போது மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் ஏ.நிக்கொலாஸ்பிள்ளை பஸ்சேவையை ஆரம்பித்து வைத்தார்.மன்னார் அரச போக்குவரத்துச் சபை பஸ் ஒன்றே இச்சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. இந்நிகழ்வுக்கு மன்னார் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜெயந்த விக்ரமசிங்கஇ கொமாண்டர் மேஜர் பீரிஸ்இ மன்னார் போக்குவரத்துச் சபை முகாமையாளர் அஸ்வர் ஆகியோர் உட்பட மற்றும் பலர் கலந்து கொண்டனர். ஆரம்ப நிகழ்வினை மன்னார் அரச போக்குவரத்து நெடுஞ்சாலையின் முகாமையாளர் அஸ்வர் ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது. »» (மேலும்) | 0 commentaires | மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் பாஸ் நடைமுறை ரத்து செய்யப்பட்டது. மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் நேற்று முதல் (22.07.2009) வாகன பாஸ் நடைமுறை இரத்துச்செய்யப்பட்டுளதாக நேற்று மட்டக்களப்பு மாவட்டத்திற்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபர் எடிசன் குணதிலக தெரிவித்தார்.மட்டக்களப்பு நகரில் உள்ள வர்த்தகர்களை மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் வைத்து நேற்று சந்தித்த போது மேற்கண்டவாறு அவர் தெரிவித்தார் அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், மட்டக்களப்பு மாவட்டத்தல் இருந்து கொழும்பு போன்ற இடங்களுக்கு செல்லும் வாகனங்கள் பாஸ் எடுத்து செல்லும் நடைமுறை கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக இருந்து வந்தது. இன்று முதல் இப்பாஸ் நடைமுறை இரத்துச் செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.இனிமேல் எந்த வாகனங்களும் பாஸ் எடுக்கத்தேவiயில்லை. நாட்டில் பயங்கரவாதம் அழிக்கப்பட்டு புதிய சூழ்நிலை ஏற்பட்டுள்ள நிலையில் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் இந்த வாகன பாஸ் நடைமுறை இரத்து செய்யப்பட்டுள்ளது. ஜனாதிபதியினதும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரினதும் அறிவுறுத்தலுக்கும், ஆலோசனைக்கு ஏற்பவுமே இந்த நடைமுறை அமுல்படுத்தப்படுகின்றது எனத் தெரிவித்தார். »» (மேலும்) | 0 commentaires | முதலமைச்சர் தலைமையில் விசேட குழு நியமனம் கிழக்கு மாகாணத்தில் வேலை வாய்ப்பற்றிருக்கும் பட்டதாரிகளது கோரிக்கை தொடர்பாக ஆராய்வதற்கென கிழக்கு மாகாண முதலமைச்சர், அமைச்சர்கள் மற்றும் எதிர்கட்சி உறுப்பினர்கள் அடங்கிய விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டது. நேற்று இடம்பெற்ற மாகாண சபை மாதாந்த அமர்வின்போது இக்குழு நியமிக்கப்பட்டது.சபையின் தவிசாளர் ஏ.எம்.எம். பாயிஸ் இது குறித்து உத்தியோக பூர்வமாக அறிவித்தார்.கிழக்கு மாகாண முதலமைச்சர் மற்றும் அமைச்சரவைக் குழு எதிர்த்தரப்பு உறுப்பினர்கள் இக்குழுவில் அடங்கியுள்ளனர்.கிழக்கு மாகாணத்தில் தற்போது வேலைவாய்ப்பற்ற நிலையில் உள்ள சுமார் 1400 பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கக்கோரி மட்டக்களப்பில் கடந்த 22 நாட்களாக பட்டதாரிகள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகின்றனர் இவர்களை கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் குழு உடனடியாக சந்திக்க உள்ளது. மாகாண சபை அமர்வில் இது குறித்து கடுமையான விவாதம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. »» (மேலும்) 7/23/2009 | 0 commentaires | பொது நலம் சார்ந்த சிந்தனையாளர்களாக மக்கள் மாறுகின்ற போது அதிகாரிகள் அனைவருமே விழிப்படைவார்கள். சத்தியசீலன். - அம்பாறை மாவட்டத்தின் திருக்கோவில் பிரதேசத்திற்கு அண்மையில் தமிழ் மக்கள் விடதலைப்புலிகள் கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களை மாவட்ட அமைப்பாளர் வி. சத்தியசீலன் அவர்கள் அழைத்து திருக்கோவில் பிரதேச மக்களின் அபிவிருத்தி குறைபாடுகள் தொடர்பாக எடுத்துக் கூறப்பட்டது. திருக்கோவில் பிரதேச மக்கள் மத்தியில் உரையாற்றிய தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் அம்பாறை மாவட்ட அமைப்பாளர் வி. சத்தியசீலன், மக்கள் அனைவருமே பொது விடயங்களை தனி ஒவ்வொருவரது பிரச்சினையாகப் பார்க்க வேண்டும் இவ்வாறாக அனைவருமே செயற்பட்டால் எமது பிரதேசத்தின் அபிவிருத்தி செயல்பாடுகள் வெகு விரைவாக முன்னெடுக்கப்படும் மேலும் ஊழல்கள், துஷ்பிரயோகங்கள் இல்லாது செயற்படலாம். எனவே எதிர்காலத்தில் அனைத்து மக்களும் பொது நலம் சார்ந்த சிந்தனையாளர்களாக மாறுகின்ற போது அதிகாரிகள் அனைவருமே விழிப்படைவார்கள் எனக் கேட்டுக்கொண்டார் »» (மேலும்) | 0 commentaires | கிழக்கு மாகாணத்தில் இருக்கின்ற காணிகள் வெளியாருக்கு பகிர்ந்தளிக்கப்படும்போது மாகாணசபையின் ஒப்புதல் பெறவேண்டும் மாகாண சபையின் அங்கிகாரமின்றி வெளியாருக்கு காணிகள் பகிர்ந்தளிக்கப்படுவதை தடுத்து நிறுத்துமாறு கிழக்கு மாகாண சபையில் பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டு விவாதம் இடம்பெற்றது.அரசியல் அமைப்பின் 13ம் திருத்தத்தின் பிரகாரம் காணி நிர்வாகம் மாகாண சபைகளுக்குரியதாகும் ஆனால் இத்திருத்தம் முழுமையாக இன்னமும் அமுல்படுத்தப்படாத நிலையில் மாகாண நிர்வாகத்தின் அனுமதி பெறாமல் மத்திய அரசு தனியாருக்கு காணிகளை பகிர்ந்தளிப்பதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கடும் ஆட்சேவணையை வெளியிட்டிருக்கிறார். கந்தளாய் பிரதேசத்தில் உள்ள அரச காடுகள் மாகாண சபையின் அங்கிகாரமின்றி வெளியாருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டு வருவதாகவும் இதனைத் தடுத்து நிறுத்தவேண்டும் எனவும் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணை மீதான விவாதத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை கலந்து கொண்டு பேசிய முதலமைச்சர் சந்திரகாந்தன் கிழக்கு மாகாணத்தில் உள்ள அரசு நிலம், மாகாண சபையின் அங்கிகாரம் பெறாமல் தனியார் கம்பனிகளுக்கு மத்திய அரசாங்கத்தரினால் பகிர்ந்து வழங்கப்படுவது குறித்து எதிர்காலத்தில காத்திரமான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.முதலமைச்சர் தொடர்ந்து கூறியதாவது. கிழக்கு மாகாணத்தில் காணிகள் தனியார் கம்பனிக்கு வழங்கப்படுவது மாகாணத்தில் வாழும் சகல இன மக்களையும் புண்படுத்துவதாக அமைகிறது. ஆதிகார சக்தி இதில் தலையீடு செய்கிறது கிழக்கு மாகாணத்தில் காணிப்பிரச்சினை முக்கியமானதொன்றாகும். ஏனைய மாகணங்களிலும் பார்க்க கிழக்கு மாகாணத்தில்தான் காணிப்பங்கீடு முக்கியமாதொன்றாக கருதப்படுகின்து மற்றும் கிழக்கு மாகாணத்தின் அனைத்து இன மக்களின் மனங்களை புண்படுத்துவதாக அமைகின்றது »» (மேலும்) 7/20/2009 | 0 commentaires | யாழ், வவுனியா, ஊவா தேர்தலுக்கான வாக்காளர் அட்டை விநியோகம் நாளை யாழ்ப்பாணம், வவுனியா உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் மற்றும் ஊவா மாகாண சபைத் தேர்தலுக்கான வாக்காளர் அட்டை விநியோகம் நாளை (21ம் திகதி) முதல் ஆரம்பமா கிறது. அனைத்து வாக்காளர்களுக்குமான வாக்காளர் அட்டைகள் தயார் நிலையில் உள்ளதாகவும் விநியோக நடவ¨க்கைகளுக்காக இவை நாளை (21) தபால் நிலையங்களுக்கு வழங்கப்படவுள்ளதாகவும் அந்தந்த மாவட்டங்களின் உதவித் தேர்தல் ஆணையாளர்கள் கூறினர். தேர்தல்களுக்கான அனைத்து நடவடிக்கைகளும் அமைதி யாகவும் மும்முரமாகவும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். யாழ். மாநகரசபை தேர்தலில் 70 வாக்குச் சாவடிகள் அமைக்கப்படவிருப்பதாக யாழ். உதவித் தேர்தல் ஆணையாளர் பொன்னுத்துறை குகநாதன் தெரிவித்தார். தேர்தல் நடைபெறும் காலப்பகுதியில் அதற்கான கடமைகளை முன்னெடுப்பதற்கென 1200 அரச அதிகாரிகளுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன. இவர்களுக்கான நியமனக் கடிதங்கள் விரைவில் வழங்கப்படுமெனவும் அவர் குறிப்பிட்டார். இதேவேளை யாழ்ப்பாணத்திலிருந்து வெவ்வேறு சூழ்நிலைகள் காரணமாக இடம்பெயர்ந்து புத்தளம், கம்பஹா, கொழும்பு, அநுராதபுரம் மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களில் தங்கியிருக்கும் 6004 பேருக்கும் நாளை முதல் வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கப்படுமெனவும் அவர் தெரிவித்தார். இவர்களுக்காக தேர்தல் திணைக்களம் 16 வாக்குச்சாவடிகளை பிரத்தியேகமாக அழைத்துள்ளது என சுட்டிக்காட்டிய யாழ். உதவித் தேர்தல் ஆணையாளர், நாட்டின் நிலைமை சமுகமடைந்திருப்பதால் இடம்பெயர்ந்துள்ளோர் எதிர்காலங்களில் தமது வாக்காளர் பதிவை மாற்றியமைக்க வேண்டும் அல்லது வாக்களிக்க யாழ்ப்பாணத்துக்கு நேரடியாக வருகை தர வேண்டுமெனவும் குறிப்பிட்டார். அத்துடன் யாழ். மாநகரசபை தேர்தல் கடமையில் ஈடுபடவிருக்கும் எழுதுவிளைஞர்களுக்கு நாளையும் (21) கனிஷ்ட மற்றும் சிரேஷ்ட தலைமை தாங்கும் அதிகாரிகளுக்கு எதிர்வரும் 23 ஆம் 24 ஆம் திகதிகளிலும் விசேட பயிற்சி வகுப்புக்கள் நடத்தப்படவுள்ளன. வவுனியாவில் இம்முறை 18 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படுவதுடன் தேர்தல் கடமைகளில் ஈடுபடுவதற்காக 500 அரசாங்க அதிகாரிகளுக்கு நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டிருப்பதாக வவுனியா மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் எ. எஸ். கருணாநிதி கூறினார். பொலிஸ் பாதுகாப்புக்கு மத்தியில் தேர்தல் ஏற்பாடுகள் மும்முரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். வாக்குப்பெட்டி தயாரிப்பு மற்றும் வாக்குச் சாவடிகளுக்குத் தேவையான காகிதாதிகள் என்பவற்றை தயார்படுத்துவதில் தற்போது கவனம் செலுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். தேர்தல் கடமையில் ஈடுபடும் பல்வேறு தரப்பினருக்கும் பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ள நிலையில் கனிஷ்ட தலைமை தாங்கும் அதிகாரிகளுக்கு எதிர்வரும் வாரங்களில் பயிற்சிகள் நடத்தப்படுமெனவும் அவர் குறிப்பிட்டார். »» (மேலும்) | 0 commentaires | முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் இன்று காங்கேயன் ஓடை முகைதீன் ஜும்மா பள்ளிவாசலில் நடைபெற்ற 30 வருட புஹாரி சரீஃப் பாராயணம் ஓதும் நிகழ்வில் காங்கேயன் ஓடை முகைதீன் ஜும்மா பள்ளிவாசலில் எ.எல.எம்.ரிபாய் மௌலவி தலைமையில் நடைபெற்ற புஹாரி சரீஃப் பாராயணம் ஓதும் நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் மாகாண சுகாதார அமைச்சர் எம்.எல்.எ.எம் ஹிஷ்புல்லா, ஏறாவூர் பற்று பிரதேச சபை தவிசாளர் உருத்திரா, போரதீவுப்பற்று பிரதேச சபை தவிசாளர் சிறிதரன், மண்முனை மேற்கு பிரதேச சபை தவிசாளர் சுப்பிரமணியம், மற்றும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் அம்பாறை மாவட்ட அமைப்பாளர் வி.சத்தியசீலன், கிழக்கு மாகாண முதலமைச்சரின் இணைப்புச் செயலாளர் பூ.பிரசாந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர். இப்புஹாரி சரீஃப் பாராயணம் ஓதும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய கிழக்கு முதல்வர் நாட்டில் சாந்தியும் சமாதானமும் ஏற்படுத்தப்படவேண்டும் இதற்கு இனங்களுக்கிடையிலான ஒற்றுமை மற்றும் மதப்பாகுபாடின்மை, சமூகங்களுக்கிடையிலான புரிந்துணர்வு என்பவை சீராக அமைவதன் ஊடாகவே எமது நாட்டின் சகல பாகங்களிலும் சாந்தியும் சமாதானமும் ஏற்பட வாய்ப்பு அமையும். இதுபோன்ற மத நிகழ்வுகளில் இனமத பேதமின்றி அனைவருமே பங்கு கொள்கின்ற வேளையில் அனைவருமே ஒருமித்த சிந்தனை உடையவர்களாக எமது நாட்டிற்கான அபிவிருத்தியையும் சமாதானத்தையும் வேண்டி நிற்பவர்களாக மாறிவிடலாம். பல நெடுங் காலமாக தமிழ் முஸ்லிம் மக்களுக்கிடையில் ஏற்படுத்தப்பட்ட குரோதங்கள் மறக்கப்பட்டு இனங்களுக்கிடையிலான நல்லுறவு ஏற்படுத்துவதற்கு இலங்கையில் வாழ்கின்ற அனைத்தின மக்களும் ஒருமித்த கருத்துக்களோடு ஒரே குடையின் கீழ் ஒன்று திரளவேண்டும் என கிழக்கு மாகாண முதலமைச்சர் தனது உரையில் குறிப்பிட்டார். இதில் மாகாண அமைச்சர் எம்.எல்.எ.எம் ஹிஷ்புல்லா சமூகங்களுக்கடையிலான ஒற்றுமை பற்றியும் புஹாரி சரீஃப் பாராயணம் ஓதும் நிகழ்வு பற்றியும் சிறப்புரை ஆற்றினார். »» (மேலும்) 7/19/2009 | 0 commentaires | பொதுமக்களுக்காக வழங்கப்பட்ட A/C வண்டிகளை காட்டில் மறைத்து வைத்தாரா கருணா? கிழக்கு மாகாண பொதுமக்களுக்களின் பொது தேவை கருதி, அரச சார்பற்ற நிறுவனமொன்று நன்கொடையாக வழங்கிய இரண்டு அதி நவீன குளிரூட்டி வாகனங்களை (A/C Vehicles) அமைச்சர் முரளிதரன், காட்டில் மறைத்து வைத்து நெருங்கிய ஒருவருக்கு அன்பளிப்பு செய்யவிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.அண்மையில் சேவா லங்கா எனும் அரசார்பற்ற நிறுவனம், கிழக்கு மீன்பிடிதொழிலாளர்களில் தொழில் அபிவிருத்திக்காக இவ் இரு அதிநவீன குளுரூட்டி வாகனங்களை அமைச்சர் முரளிதரன் ஊடாக வழங்க முற்பட்டது.எனினும், அவற்றை பெற்றுக்கொண்டு, மட்டக்களப்பை அண்டிய காட்டுப்பிரதேசம் ஒன்றில் தனது நெருங்கிய சகாக்களின் உதவியுடன் மறைத்து வைத்திருந்த முரளிதரன், அவரது பிரத்தியேக செயலாளராக செயற்பட்டு வரும் சாந்தினி எனும் பெரும்பான்மையின பெண்ணது சகோதரனுக்கு அன்பளிப்பு செய்யவிருந்ததாகவும், தற்போது செய்திகள் கசிந்துள்ளன.அவ்வண்டிகள் இரண்டும் கண்டுபிடிக்கப்பட்டு கிழக்கு மாகாண சபையிடம் தற்சமயம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக காவற்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். »» (மேலும்) | 0 commentaires | எமது கிழக்கு மாகாண சமூகங்களின் ஒற்றுமையின் ஊடாக கிழக்கிற்கான அரசியல் பலத்தை ஏற்படுத்த வேண்டும். – கிழக்கு முதல்வர். கிழக்கு மாகாணத்தில் வாழுகின்ற தமிழ் பேசுகின்ற மக்களான தமிழர்கள் மற்றும் முஸ்லிகள் ஒற்றுமையாக வாழ்வதன் ஊடாகவே எதிர் காலத்தில் கிழக்கிற்கான ஓர் நிலையான அரசியல் ஸ்த்தரத்தினை ஏற்படுத்த முடியும் என கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் இன்று அக்கரைப்பற்று அஸ் சிராஜ் மகாவித்தியாலயத்தில் நடைபெற்ற புத்தகக் கண்காடசியில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போது தெரிவித்தார். தொடர்ந்து கருத்துத் தெரிவித்த முதல்வர் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்னர் எமது மூதாதையர்கள் எவ்வாறு தமிழ் முஸ்லிம் உறவுகளைப் பேணி வந்தார்களோ அவ்வாறே நாம் எமது உறவுகளைப் பேண வேண்டும் அதற்கான சரியான தருணமாக இக் காலகட்டத்தை நான் பார்க்கின்றேன். எமது கிழக்கு மாகாணத்தில் தற்போது பல அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றமை வரவேற்கத்தக்கது. அத்தோடு நிலையானதும் நீண்ட காலத்திற்கு எமது சமூகத்திற்கான அபிவிருத்தி என்று பார்க்கின்ற போது அதனை நாம் இன்னும் எட்டவில்லை என்றே எண்ணத் தோன்றுகின்றது என்றார். காரணம் எமது தமிழ் பேசும் சமூகம் அதிலும் குறிப்பாக தமிழ் சமூகம் அரசியலில் மி கவும் பின் தங்கியே காணப்படுகின்றது. குறிப்பாக கிழக்கு வாழ் தமிழ் மக்களில் அதிகமானவர்கள் அரசியல் சிந்தனைகளில் நாட்டம் குறைந்தவர்களாகவே காணப்படுகின்றார்கள். இதற்கான காரணம் காலம்காலமாக இம்மக்கள் அரசியல் வாதிகளால் ஏமாற்றப்பட்ட வரலாறுகளும் உண்டு. எது எவ்வாறு இருந்த போதிலும் நாம் இனிவருகின்ற காலங்களில் ஒற்றுமையாகவும் இன நல்லுறவோடும் வாழ்வதன் மூலமே எமக்கான அரசியல் தனித்துவத்தினைப் பேன முடியும் எனக் குறிப்பிட்டார். 2009ம் ஆண்டிற்கான உள்@ராட்சி வாரத்தினை முன்னிட்டு அக்கரைப் பற்று பிரதேசசபை நூலகங்களுக்கடையிலான புத்தகக் கண்காட்சியின் முதல் நாள் நிகழ்வு அக்கரைப்பற்று பிரதேச சபைத் தவிசாளர் தவாம் தலைமையில் இடம்பெற்றது. இதில் அம்பாறை மாவட்டத்தின் பிரதேச சபை நூலகங்களில் திருக்கோவில், அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, நாவிதன்வெளி, ஆலயடிவேம்பு, காரைதீவு போன்ற பிரதேச சபைகள் பற்குபற்றின. இதில் பிரதம அதிதகளாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சி. சந்திரகாந்தன், தேசிய காங்கிரஸின் தலைவரும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைச்சர் ஏ.எல்.எம் அதாவுல்லா, கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி மற்றும் கிராமிய மின்சாரம் வீடமைப்பு அமைச்சர் எம். எஸ் உதுமாலெவ்வே,தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் அம்பாறை மாவட்ட அமைப்பாளர் வி. சுத்தியசீலன், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளரும் முதலமைச்சரின் இணைப்புச் செயலாளருமான பூ.பிரசாந்தன் மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டார்கள். »» (மேலும்) | 0 commentaires | மட்டு திருமலைக்கான ரயில் பஸ் சேவை 29ம் திகதி முதல் ஆரம்பம். கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் வேண்டுதலுக்கமைய இந்திய அரசின் நேரடி உதவியுடன் மட்டு திருகோணமலைக்கான ரயில் பஸ் சேவைக்கான ரயில் பஸ்கள் 5 வழங்கப்படுகின்றன. இதற்கான பொருத்து வேலைகள் தற்போது இடம் பெற்றுக்கொண்டிருக்கின்ற இவ்வேளையில் இதன் முதற்கட்டமாக எதிர்வருகின்ற 29.07.2009 அன்று பி.ப.03.00 மணிக்கு மட்டக்களப்பு புகையிரத நிலையத்திலிருந்து திருமலைக்கான முதலாவது ரயில் பஸ் சேவை அங்குரார்ப்பன நிகழ்வு இடம் பெற இருக்கின்றது இந்நிகழ்வில் பிரதம அதிதிகளாக கிழக்கு மாகாண முதலமைச்சர் சி.சந்திரகாந்தன் போக்குவரத்து அமைச்சர் டலஸ் அழகப்பெரும இந்திய உயர்ஸ்தானிகர் ஆலோத் பிரசாத் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளார்கள் என கிழக்கு மாகாண முதலமைச்சரின் ஊடகச் செயலாளர் ஆ.தேவராஜா தெரிவித்தார். மேலதிக தகவல்களுக்கு:- ஆ.தேவராஜா, 0772961815 »» (மேலும்) | 0 commentaires | உள்ளுராட்சி மன்றங்களை எதிர்காலத்தில் ஒன்றிணைப்பது தொடர்பான உயர்மட்ட கலந்துரையாடல். மேற்படி கலந்துரையாடலானது கிழக்கு மாகாண சபையின் பிரதம செயலாளர் டீ.P. பாலசிங்கம் தலைமையில் ஹோட்டல் கிரின் ஓசியானிக் திருமலையில் பி.ப 06.30 மணியளவில் இடம்பெற்றது இதில் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், உலக வங்கி, ஏசியன் பவுண்டேசன், ஆசிய அபிவிருத்தி வங்கி போன்றவற்றின் பிரதிநிதிகளும் மற்றும் உள்ளுராட்சி மன்றங்களின் அதிகாரிகளும் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் கருத்து தெரிவித்த முதல்வர் சிவநேசதுரை சந்திரகாந்தன், எதிர்காலத்தில் உள்ளுராட்சி மன்றங்களை வலுப்படுத்துவதற்காக ஓர் அங்கிகாரத்தினை மேற்படி அமைப்புக்கள் வழங்கவேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். »» (மேலும்) 7/17/2009 | 0 commentaires | இலங்கைக்கான பிரித்தானிய தூதுவர் பீற்றர் ஹெய்ஸ் கிழக்கு மாகாணத்திற்கு இருநாள் விஜயம் இலங்கைக்கான பிரித்தானிய தூதுவர் டாக்டர் பீற்றர் ஹெய்ஸ் நேற்று புதன்கிழமை மாலை இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு திருகோணமலை வந்தார். திருமலை வந்த அவர் முதலில் கிழக்கு மாகாண சபை முதலமைச்சர் செயலகத்திற்கு வந்து முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனைச் சந்தித்தார். முதலமைச்சர் பிரிட்டிஷ் தூதுவரை வரவேற்றார். பின்னர் முதலமைச்சர் அலுவலகத்தில் பிரிட்டிஷ் தூதர் முதலமைச்சருடன் கலந்துரையாடினார். சந்திப்பில் முதலமைச்சருடன் அவரின் சிரேஷ்ட ஆலோசகர் டாக்டர் விக்னேஸ்வரன், முதலமைச்சரின் செயலாளர் ஆஸாத் மௌலானாவும் கலந்து கொண்டனர். சுமார் 45 நிமிடங்கள்வரை நீடித்த பேச்சுகளின் பின்னர் முதலமைச்சர் சந்திரகாந்தனும் பிரிட்டிஷ் தூதுவர் டாக்டர் பீற்றர் ஹெய்ஸும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். பிரிட்டிஷ் தூதருடனான பேச்சுகள் பெறுமதியாகவும் கனதியாகவும் அமைந்தன. பிரிட்டிஷ் தூதுவர் முன்னரும் மூன்றுதடவைகள் திருகோணமலைக்கு வந்துள்ளார். கிழக்கு மாகாண அபிவிருத்தி குறித்து பிரிட்டன் கொண்டுள்ள அக்கறையை பிரிட்டிஷ் தூதுவர் தமது சந்திப்பின் போது வெளிப்படுத்தினார். எதிர்காலத்தில் பிரிட்டன் வழங்கவிருக்கும் உதவிகள் பற்றியும் சந்திப்பில் கலந்துரையாடப்பட்டது என்று முதலமைச்சர் சந்திரகாந்தன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். திருகோணமலைக்கு நான்காவது தடவையாக இன்றுவந்துள்ளேன். கிழக்கு மாகாணம் எதிர்நோக்கும் சவால்கள் பற்றி முதலமைச்சருடனான சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டது. மேற்கொள்ளப்பட வேண்டிய அபிவிருத்திக்கான வாய்ப்புப்பற்றியும் பேசப்பட்டது. பொருளாதாரம், விவசாயம், பண்ணை அபிவிருத்தி ஆகியன தொடர்பான அபிவிருத்திகள் குறித்து அறிந்து கொண்டேன் என்று பிரிட்டிஷ் தூதுவர் டாக்டர் பீற்றர் ஹெய்ஸ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். கிழக்கு மாகாணத்திலே திருகோணமலை அழகான இயற்கை வளம் பொருந்திய பிரதேசம். பிரிட்டிஷ் பிரஜைகள் இலங்கைக்கு உல்லாசப்பயணம் மேற்கொள்வதற்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் தற்போது தளர்த்தப்பட்டுள்ளன. இது உல்லாசப் பயணத்துறையின் அபிவிருத்திக்கு உதவும். பிரிட்டிஷ் பிரஜைகள் பெரும் எண்ணிக்கையில் இங்கு வந்து செலவு செய்யும் வாய்ப்பு இதனால் ஏற்படும் என்றும் பிரிட்டிஷ் தூதுவர் கூறினார். முதலமைச்சருடனான சந்திப்பின் பின்னர் பிரிட்டிஷ் தூதுவர் உப்புவெளியிலுள்ள இரண்டாம் உலக மகாயுத்தத்தில் உயிரிழந்த பிரிட்டிஷ் படையினர் அடக்கம் செய்யப்பட்ட மயானத்துக்குச் சென்று அஞ்சலி செலுத்தினார். திருமலை விஜயத்தின்போது திருமலை மாவட்ட வர்த்தக சமூகத்தின் பிரதிநிதிகள் மற்றும் திருகோணமலை அரசாங்க அதிபர் ஆகியோரையும் பிரிட்டிஷ் தூதர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. »» (மேலும்) | 0 commentaires | எகிப்து செல்ல முயற்சி: எகிப்து செல்வதற்காக தயாராகியிருந்த புலி பயங்கர வாதிகள் இருவரும் அவர்க ளுடன் இருந்த இன்னு மொருவரும் விசேட பொலிஸ் குழுவினரால் நேற்று (16) கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் இருவரும் எகிப்து நோக்கிப் பயணிப்பதற்குத் தேவையான ஆவணங்கள் மற்றும் கடவுச்சீட்டு ஆகியவற்றுடனேயே கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்களுள் இருவர் கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வைத்தும் மற்றையவர் கொழும்பில் வைத்தும் கைது செய்யப்பட்டுள்ளனர். அணிசேரா நாடுகளின் 15வது உச்சிமாநாட்டில் கலந்துகொள்வதற்காக எகிப்து சென்றிருக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஏதேனும் வழிகளில் பாதிப்பை ஏற்படுத்தும் நோக்கிலேயே இவ்விருவரும் எகிப்து செல்ல ஏற்பாடு செய்திருக்க வேண்டுமெனவும் பொலிஸாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. கைது செய்யப்பட்டிருக்கும் மூவரும் வெள்ளவத்தை மற்றும் கொட்டாஞ்சேனை பகுதியில் தற்காலிகமாக தங்கியிருப்பவர்களென்றும் இவர்கள் யாழ்ப்பாணம், சாவகச்சேரி மற்றும் பலாலி ஆகிய இடங்களை பிறப்பிடமாகக் கொண்டவர்களென்றும் விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளது. சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் நிமல் மெதிவக்கயின் பணிப்புரையின் பேரில் மேல் மாகாண பாதுகாப்பு நடவடிக்கைப் பிரிவு இவர்களை கைது செய்துள்ளது. »» (மேலும்) | 0 commentaires | மீள்கட்டுமான செயற்பாட்டில் எட்டு மாதங்களுக்குள் துரித முன்னேற்றம் வடபகுதி மீள்கட்டுமானப் பணிகளுக்காக, புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களின் ஆலோசனைகளையும் பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுத்திருப்பதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகத்திடம் தெரிவித்துள்ளார். இந்தப் பணிகளுக்கு ஒத்துழைப்பதற்காக சகல கட்சிகளையும் கொண்ட சர்வகட்சி மாநாடொன்றைக் கூட்டியிருப்பதாகவும் ஜனாதிபதி விளக்கியுள்ளார். எகிப்தின் ஷான் அல் ஷேய்க் நகரில் நடைபெற்ற அணிசேரா நாடுகளின் மாநாட்டில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூனுடன் நடந்த இருதரப்புப் பேச்சுவார்த்தையின் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். ப யங்கரவாதிகளிடமிருந்து மக்களை மீட்டு எட்டு மாதங்களே கடந்துள்ளதாகக் கூறிய ஜனாதிபதி, அவர்களின் நலன்களை மேம்படுத்துவதற்கு அரசாங்கம் உயரிய மட்டத்தில் நடவடிக்கை எடுத்து வருவதாகத் தெரிவித்துள்ளார். இடம்பெயர்ந்த மக்களுக்கு மிகக் குறுகிய காலத்திற்குள் புனர்வாழ்வளித்து அவர்களை மீளக்குடியமர்த்துவதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். இந்தச் சந்திப்பின் போது, இடம்பெயர்ந்த மக்களுக்கான நிவாரணக் கிராமங்களின் தற்போதைய நிலவரம் குறித்துக் கேட்டறிந்த ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ முன், புலிகளுடனான இறுதிக்கட்ட மோதலின் போது தாம் இலங்கை வருவதற்கும், நலன்புரித் திட்டங்கள் குறித்து அறிந்து கொள்வதற்கும் வாய்ப்பளித்தமைக்காக இலங்கை அரசாங்கத்துக்கு நன்றி தெரிவித்தார். இதேபோல் மக்களை உரிய முறையில் மீளக்குடியமர்த்துவதற்கு முன்னதாக, கண்ணி வெடிகளை அகற்றுதல் மற்றும் உட்கட்டமைப்பை மேம்படுத்துவது தொடர்பான செயற்பாடுகளுக்கு அரசாங்கம் கூடுதல் கவனம் செலுத்தியுள்ளதாகவும் ஜனாதிபதி எடுத்துரைத்துள்ளார். இடம்பெயர்ந்த மக்களின் பிரச்சினைகைள நிவர்த்திப்பதற்கு இதுவரை ஐ.நா. வழங்கி ஒத்துழைப்புகளுக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி, எதிர்காலத்திலும் நெருக்கடியான காலகட்டங்களில் தொடர்ந்து ஐ.நா. சபை இலங்கைக்கு உதவுமென எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார். வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம, பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, வெளியுறவுச் செயலாளர் பாலித கொஹன, ஜனாதிபதியின் இணைப்புச் செயலாளர் சஜித் வாஸ் குணவர்தன ஆகியோரும் இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டனர். »» (மேலும்) 7/16/2009 | 0 commentaires | இடம்பெயர்ந்த மக்களை உடனடியாக மீளக் குடியமர்த்தி அவர்களது வாழ்வாதாரத்துக்கு வழி ஏற்படுத்துவதே எமது நோக்கம் அணிசேரா நாடுகளின் உச்சி மாநாட்டில் ஜனாதிபதி மஹிந்த உரை “வடக்கில் இடம்பெயர்ந்துள்ள மக்களை உடனடியாக அவர்களது சொந்த இடங்களில் மீளக் குடியேற்றி அவர் களது வாழ்வாதாரத்துக்கு வழி ஏற்படுத்திக் கொடுப்பதே எமது நோக்கமாகும்” என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறினார். அணிசேரா நாடுகளின் உச்சி மாநாட்டில் கலந்துகொண்ட ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறினார். அணிசேரா நாடுகளின் 15வது உச்சி மாநாடு நேற்று எகிப்து, சார்ம் எல்ஷேக் நகரத்திலுள்ள மெரிரைம் மண் டபத்தில் நேற்று ஆரம்பமாகியது. 118 நாடுகள் அங்கம் வகிக்கும் இந்த அமைப்பின் தலைவர்கள் நேற்றைய மாநாட்டில் கலந்துகொண்டனர். இங்கு, இலங்கை நேரப்படி இரவு 8 மணியளவில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உரையாற்றினார். னது உரையில் அவர் மேலும் கூறியதாவது :- உலகில் கொடூரமான பயங்கரவாத அமைப்பொன்றை வேருடன் பிடுங்கி எறிவதற்கு எமது நாட்டால் முடிந்துள் ளது என்பதை முதலில் கூறிக்கொள்வதையிட்டு நான் பெருமையடைகிறேன். அது எவ்வகையிலும் விடுதலை அமைப்பு ஒன்று அல்ல. வன்முறைகளை அடிப்படையாகக் கொண்ட தேச விரோதம் உக்கிரமடைந்த பிரிவினைவாத குழுவாகும். எனினும், இவ்வாறான பிரிவினைவாத பயங்கரவாத அமைப்பை சில நாடுகள் பிரசாரம் பண்ணுவதற்கு முனைந்திருப்பது கவலைக்குரிய விடயமாகும். அவ்வாறு செய்வதற்கு அவர்களால் முடிந்துள்ளமைக்கு காரணம் அசாதாரணமான அரசியல் நிலைமைதான் என்பது தெளிவாகிறது. ஏனெனில் அந்த நாடுகளுக்கு பயங்கரவாதம் சவாலாக இல்லையென்பதையே தெளிவாகக் காட்டுகிது. பயங்கரவாதம் எம்மை அச்சமடையச் செய்வதுடன் பல வீனப்படுத்திவிடும். அதற்கு முகம் கொடுத்த சந்தர்ப்பங்க ளில் எமக்கு நிரந்தரமாக ஒத்துழைப்பு வழங்கிய அணி சேரா நாடுகளுக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம். எவ்வாறான பயங்கரவாதமாக இருந்தாலும் இலங்கை அதனை எதிர்ப்பு தெரிவித்த நாடாகும். எமது நாட்டின் பயங்கரவாதத்தை அடியுடன் தோல்வியுறச் செய்யக் கிடைத்தமை மகிழ்ச்சிகுரிய விடயமாகும். எமது நாட்டு மக்கள் கடந்த 27 வருடங்களாக மரண பயத்துடன் வாழ்ந்தார்கள். இறுதியாக பயங்கரவாதத்திலி ருந்து விடுபட்ட பின் இன்று எமது நாடு முழுமையாக நிம்மதியடைந்துள்ளது. இலங்கையிலுள்ள அனைத்து மக்க ளும் எதிர்காலம் தொடர்பில் எதிர்பார்ப்புடன் இருக்கின்றனர். எங்களுக்கு உதவிகள் தேவைப்பட்ட இக்கட்டான நிலை மைகளின் போது எங்களுடன் இணைந்து சினேகபூர்வ மாக செயற்பட்டவர்கள் எதிர்காலத்திலும் அவ்வாறு செய் வார்களென்றும் இலங்கை மக்களின் நலன் மற்றும் அபி விருத்திக்காக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளுக்குத் தொடர்ந்தும் உதவுவார்களென்பது எமது பாரிய நம்பிக் கையாகும். இடம்பெயர்ந்துள்ளவர்களை உடனடியாக அவர்களது வீடுகளில் மீளக்குடியேற்றி அவர்களது வாழ்வாதாரத்துக்கு வழி ஏற்படுத்திக் கொடுப்பதே எமது நோக்கமாகும். இடம் பெயர்ந்தவர்களது தேவைகள் மிகவும் முக்கியமானதாகும். அவர்களின் நலனுக்காக எங்களுக்கு உதவிய சர்வதேச பிரஜைகளுக்கு இந்த தருணத்தில் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். அவ்வாறு ஐக்கிய நாடுகள் அமைப்புக்கும் விசேடமாக இலங்கைக்கு சமுகமளித்த ஐக்கிய நாட்டுப் பிரஜைகளுக்காகவும் எமக்கு உதவிய அதன் செயலாளர் நாய கத்துக்கும் எனது விசேட நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். எமது நாட்டு மக்கள் ஏனைய மக்களுக்கு உதவுவதற்கு பழக்கப்பட்டவர்கள். அதனாலேயே இக்கட்டான நிலைமை களின் போது எமது நாட்டின் ஏனைய பிரதேசங்களைச் சேர்ந்த மக்கள் இடம்பெயர்ந்தவர்களுக்காக உதவ முன்வந்தனர். இடம்பெயர்ந்த மக்களுக்கு கூடிய விரைவில் அவர்களின் வாழ்வாதாரத்தை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு எனது அரசாங்கம் மேற்கொண்டுள்ள சமூக, அரசியல் மற்றும் பொருளாதார வேலைத் திட்டத்துக்கு அவர்களது பங்களிப்பினை பெற்றுக்கொள்வதற்கும் எங்களது அரசுக்கு முடியுமென நான் நம்புகின்றேன். வேறு விடயங்களுள் பாதிக்கப்பட்ட நாடுகள் தற்போதைய சவால்களை வெற்றிகொள்வதற்காக தேவையான குறுகியகால கடனை திருப்பிச் செலுத்துவதை தற்காலிகமாக இடை நிறுத்துவதை கவனத்திற்கொள்ளுமாறு நான் மிகவும் பணிவன்போடு கேட்டுக்கொள்கிறேன். பல்வேறு நாடுகளைக் கொண்ட சிறிய அமைப்பாக சார்க் அமைப்பு விளங்குகின்றது. இந்த சார்க் அமைப்பு க்கு நிரந்தர செயலகம் ஒன்று உள்ளது. துரதிஷ்டவசமாக அணிசேரா அமைப்புக்கு 50 ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் நிரந்தரமான செயலகமொன்றை ஸ்தாபித்துக் கொள்வதற்கு முடியாமல் போயுள்ளது. எமது அமைப்புக்காக செயலகமொன்றை ஸ்தாபிப்பதற்கு அணிசேரா அமைப்பின் தலைவர்களாகிய நாங்கள் ஒன்றி ணைந்து செயற்படுவோமென்று நான் ஆலோசனை வழங் குகிறேன். தாங்கள் இந்த சந்தர்ப்பத்திலே பயங்கரவாதத்திற்கு எப் பொழுதும் தலைதூக்க முடியாத படி சமூகத்தில் சமாதா னம் மற்றும் பாதுகாப்புக்காக ஒற்றுமையாக செயற்படுவ தற்கும் எமது இனங்களின் ஒருமைப்பாடு மற்றும் அபிவி ருத்தி பொருளாதாரக் கட்டமைப்பு ஒன்றை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு பொறுப்புடன் செயற்பட ஒன்றுபடுவோம் எனவும் ஜனாதிபதி தனது உரையில் தெரிவித்துள்ளார். »» (மேலும்) 7/15/2009 | 0 commentaires | எல்லைக்கிராமங்கள் மட்டக்களப்பு மாவட்டத்துடன் இணைக்கப்பட்டன அம்பாறை மாவட்டத்துடன் கடந்த பதினெட்டு வருடங்களாக இணைக்கப்பட்டிருந்த மட்டக்களப்பு மாவட்ட எல்லைக்கிராமங்கள் நிர்வாக ரீதியாக மீண்டும் மட்டக்களப்பு மாவட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.மட்டக்களப்பு செங்கலடி- பதுளை வீதியிலுள்ள கெமுனுபுர,மங்களாகம போன்ற கிராமங்கள் ஏறாவூர்பற்று செங்கலடி பிரதேச செயலகப் பிரிவிலும் கெவிலியாமடு, புலுகன்னாவை போன்ற கிராமங்கள் பட்டிப்பளை பிரதேச செயலகப் பிரிவிலும் சேர்க்கப்பட்டு மீண்டும் மட்டக்களப்பு மாவட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே மட்டக்களப்பு மாவட்டத்தின் சில பிரதேசங்கள் தமிழீழ விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தபோது எல்லைக் கிராமங்களிலுள்ள மக்கள் தமது சிவில் நிர்வாக அலுவல்களின் நிமித்தம் அங்கு செல்ல முடியாத நிலையில் இருந்ததாகவும். மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திலுள்ள அதிகாரிகள் தமது சுய பாதுகாப்பு உட்பட பல்வேறு காரணங்களினால் அங்கு செல்ல முடியாத நிலை காணப்பட்டதாகவும். இதன் காரணமாகவே சிங்களக் குடும்பங்களைச் சேர்ந்த குறிப்பிட்ட எல்லைக் கிராம மக்கள் தற்காலிகமாக அம்பாறை மாவட்டத்துடன் இணைக்கப்பட்டிருந்தனர். இக்கிராம மக்கள் மீண்டும் மட்டக்களப்பு மாவட்டத்துடன் இணைக்கப்பட்டிருப்பது தொடர்பாக அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சுனில் கன்னங்கர சகல திணைக்களத் தலைவர்களுக்கும் அறிவித்துள்ளார். Categories: செய்திகள் Tags: --> »» (மேலும்) | 0 commentaires | கிழக்கு மாகாண விளையாட்டு விழா: மட்டு மாவட்டம் முதலாமிடம் 35 வது தேசிய விளை யாட்டு விழாவிற்கு வீர வீராங்கனைகளை தெரிவு செய்து அவர்களை போட்டி க்காக ஆயத்தப்படுத்தும் பொருட்டு நடத்தப்பட்ட இவ் ஆண்டுக்கான கிழக்கு மாகாண விளையாட்டு விழா கடந்த 10, 11, 12 ஆம் திகதி களில் அம்பாறை பொது விளையாட்டு மைதானத் தில் இடம் பெற்றது. கிழக்கு மாகாண சுகா தார விளையாட்டுத்துறை அமைச்சர் எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லாஹ் தலை மையில் ஆரம்பமான இவ் விளையாட்டு விழாவின் இறுதி நாள் நிகழ்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை (12) கோலா கலமாக இடம் பெற்றது. இதன் போது மூவின சமூக இளைஞர், யுவதிகளால் ஒற்றுமையை வலியுறுத்தும் கலை கலாசார நிகழ்வுகள் இடம் பெற்றன. இந் நிகழ்விற்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண ஆளுநர் அட்மிரல் மொஹான் விஜயவிக்ரம கலந்து கொண்டதுடன் விசேட அதிதிகளாக கிழக்கு மாகாண அமைச்சர்கள் விமல வீர திஸாநாயக்க, எம். எஸ். உதுமாலெப்பை, ரீ. நவரட்ணராஜா, ஜனாதிப தியின் இணைப்பாளரும் மாகாண சபை உறுப்பி னருமான பிரியந்த பத்தி ரண, மாகாண சபை உறுப் பினர் கே. எம். அப்துல் றஸாக் மற்றும் திணைக் களத் தலைவர்கள், அரச உயரதிகாரிகள் மற்றும் பல முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர். இவ் விளையாட்டு விழா வில் மாவட்ட வீரர்கள் பெற்ற புள்ளிகளின் அடிப் படையில் மட்டக்களப்பு மாவட்டம் முதலாமிடத் தினை பெற்று இவ் ஆண்டு க்கான சம்பியனாகவும், இரண்டாமிடத்தினை திரு கோணமலை மாவட்ட மும், மூன்றாமிடத்தை அம் பாறை மாவட்டமும் பெற் றுக் கொண்டன. மெய்வல்லுநர் போட்டிகளில் சம்பியனாக அம்பாறை மாவட்டமும் தெரிவாகின. இவ் விழாவில் குழுநிலைப் போட்டிகள், தனி நபர் போட்டிகள் மற்றும் மெய் வல்லுநர் போட்டி நிகழ்ச்சி ஆகியவற்றில் திறமை காட்டிய ஒவ்வொருவரும் கிண்ணம் வழங்கி கெள ரவிக்கப்பட்டனர். இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றிய கிழக்கு மாகாண ஆளுநர் அட்மிரல் மொஹான் விஜய விக்ரம தனதுரையின் போது, பயங் கரவாதம் ஒழிக்கப்பட்டு சுதந்திரமான சூழ்நிலையில் கிழக்கு மாகாண மட்ட போட்டி நிகழ்ச்சிகளை சந் தோஷமாக நடத்த முடி ந்ததையிட்டு பெருமை கொள் கின்றேன். இம் முறை அம்பாறை மாவட்டத்தில் இடம் பெற்ற இவ் விளையாட்டு விழாவின் போது துடிப் புள்ள இளைஞர், யுவதிகள் மத்தியில் ஒற்றுமையும் திற மையும் ஒருங்கே காணப் பட்டன. இவ் விளையாட்டு நிகழ் வின் போது மூவின சமூக வீர வீராங்கனைகள் ஒற்று மையுடன் நடந்து கொண் டதனை பார்க்கும் போது விளையாட்டின் மூலம் ஒற் றுமை வலியுறுத்தப்படு வதை அவதானிக்க முடி கிறது. 35 வது தேசிய விளை யாட்டு விழாவில் கிழக்கு மாகாண வீரர்கள் தமது திறமைகளை வெளிக் காட்டி வெற்றி பெற வேண்டுமென கேட்டுக் கொண்டார். »» (மேலும்) | 0 commentaires | அணிசேரா உச்சி மாநாடு இன்று ஆரம்பம்; அணிசேரா நாடுகளின் உச்சிமாநாடு இன்று எகிப்தில் நடைபெறுகிறது. இம்மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று எகிப்துக்குப் பயணமானதுடன் இன்று மாநாட்டில் சிறப்புரையொன்றையும் நிகழ்த்தவுள்ளார். நேற்றுக்காலை 9.30 மணியளவில் ஸ்ரீலங்கா விமான சேவைக்குச் சொந்தமான விசேட விமானம் மூலம் எகிப்தின் கைரோ விமான நிலையத்தைச் சென்றடைந்த ஜனாதிபதிக்கு அங்கு மகத்தான வரவேற்பளிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியுடன் வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, வெளிவிவகார செயலாளர் பாலித கொஹன்னே, பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச ஆகியோரும் எகிப்துக்கான விஜயத்தில் இணைந்து கொண்டுள்ளதுடன் அணிசேரா நாடுகளின் உச்சிமாநாட்டில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று விசேட உரை நிகழ்த்தவுள்ளதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்தது. 118 நாடுகள் பங்கேற்கும் அணிசேரா நாடுகளின் 15 வது உச்சிமாநாடு 11ம் திகதி முதல் 15ம் திகதி வரை எகிப்தின் ஷாம் அல்ஷேக் நகரில் நடை பெறுகிறது. 12ம் திகதி இடம்பெற்ற வெளிவிவகார அமைச் சர்களுக்கான அமர்வில் இலங்கையின் சார்பில் வெளிவிவ கார அமைச்சர் ரோஹித போகொல்லாகம கலந்து கொண்டார். இன்று நடைபெறும் அணிசேரா நாடுகளின் அரச தலைவர்கள் பங்கேற்கும் உச்சி மாநாட்டில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கலந்து கொண்டு சிறப்புரையாற்றவுள்ளார். “அபிவிருத்திக்கான சமாதானமும் சர்வதேச ஒருமைப்பாடும்” என்ற தொனிப்பொருளில் நடைபெறும் இந்த உச்சிமாநாட்டில் எதிர்வரும் மூன்று வருட காலங்களுக்குள் அங்கத்துவ நாடுகள் எதிர்பார்க்கும் நோக்கங்கள் சம்பந்தமாகவும் அந்த இலக்கை எட்டுவதற்கான நடவடிக்கைகள் தொடர்பிலும் விரிவாக ஆராயப்படவுள்ளன. அத்துடன் 2006ம் ஆண்டு கியூபாவின் ஹவானா நகரில் இடம்பெற்ற அணிசேரா நாடுகளின் 14 வது உச்சிமாநாட்டில் மேற்கொண்ட தீர்மானங்களின் முன்னேற்றம் குறித்தும் இங்கு கலந்துரையாடப்படவுள்ளன. நேற்று முன்தினம் இடம்பெற்ற வெளிவிவகார அமைச்சர்களுக்கான மாநாட்டில் உரையாற்றிய வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம வளர்ந்து வரும் மனித சமூகத்திற்குள் பயங்கரவாதத்திற்கு இடமில்லை என தெரிவித்துள்ளார். லங்கையில் பயங்கரவாதத்தை ஒழிக்க மேற்கொண்ட முயற்சிகள் குறித்து விளக்கிய அவர், இலங்கையின் வெளிவிவகாரக் கொள்கையில் முன்னாள் பிரதமர் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க அறிமுகப்படுத்திய மாற்றங்கள் இலங்கை பெற்றுக்கொண்டுள்ள பாரிய வெற்றிகளுக்குக் காரணமாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 1955ம் ஆண்டு இந்தோனேசியாவில் நடைபெற்ற ஆசிய - ஆபிரிக்க மாநாட்டின் போது அணிசேரா நாடுகளின் அமைப்பு ஆரம்பிக்கப்பட்டது. தற்போது இவ்வமைப்பில் 118 நாடுகள் அங்கம் வகிப்பதுடன் 17 கண்காணிப்பு நாடுகளும் இடம்பெறுகின்றன. ஐக்கிய நாடுகள் சபையின் அங்கத்துவ நாடுகளில் மூன்றில் இரண்டு நாடுகள் அணிசேரா நாடுகள் அமைப்பில் இடம்பெறுகின்றன. உலக சனத்தொகையில் ஐம்பது வீதத்தினர் இதில் உள்வாங்கப்படுகின்றனர். இதில் பெரும்பாலானவை அபிவிருத்தியடைந்துவரும் நாடுகள் என்பதும் குறிப்பிடத்தக்கது. »» (மேலும்) 7/14/2009 | 0 commentaires | சுனாமியால் இடம்பெயர்ந்த 470 கடற்றொழிலாளர்களுக்குஒரு வருடத்துக்குள் 23 கோடி ரூபா செலவில் வீடுகள் சுனாமி அனர்த்தத்தால் இடம்பெயர்ந்த மீனவர் குடும்பங்களுக்குத் தேவையான வீடமைப்பு வசதிகளைச் செய்து கொடுக்க தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையால் திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் களுத்துறை மாவட்டங்களைப் போலவே அம்பாறை மாவட்ட கல்முனை பிரதேச செயலாளர் பிரிவிலும் நடைமுறைப்படுத்தி வரும் வீடமைப்புத் திட்டங்கள் வெற்றிகரமான பெறுபேறுகளைக் காட்டியுள்ளன. விவசாய அபிவிருத்திக்கான சர்வதேச நிதியம் ‘இபாட்’ நிறுவனத்தின் உதவியுடன் கடற்றொழில் மற்றும் நீரியல் வள அமைச்சின் வழிகாட்டுதலுடன் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை இந்த வீடமைப்பு அபிவிருத்தி வேலைத் திட்டத்தை நடைமுறைக்கிட்டுள்ளது. சுனாமியால் இடம்பெயர்ந்துள்ள 470 குடும்பங்களுக்கு இத்திட்டத்தால் தேவையான சகல வீடுகளையும் நிர்மாணித்து ஒரு வருடத்திற்குள் பூர்த்தி செய்ய தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளதுடன், இந்த சகல வீடுகளையும் நிர்மாணிக்க செலவு செய்துள்ள மொத்த தொகை 23 கோடி ரூபாவாகும். (230 மில்லியன் ரூபா). இத்திட்டத்தின் கீழ் திருகோணமலை மாவட்டத்தில் 210 அலகுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளதுடன், இதற்குச் செலவு செய்துள்ள தொகை 105 மில்லியன் ரூபாவாகும். மட்டக்களப்பு மாவட்டத்தில் 160 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளதுடன், அதற்காக செலவு செய்யப்பட்டுள்ள தொகை 80 மில்லியன் ரூபாவாகும். அம்பாறை மாவட்டத்தில் கல்முனைப் பிரதேசத்தில் 70 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளதுடன், அதற்காக செலவு செய்த தொகை 35 மில்லியன்களாகும். களுத்துறை மாவட்டத்தில் 30 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளதுடன், அதற்காக செலவிடப்பட்ட தொகை 15 மில்லியன் ரூபாவாகும். சுனாமி அனர்த்தத்தால் இடம்பெயர்ந்துள்ள இந்த ஒவ்வொரு மீனவ குடும்பத்திற்கும் ‘இபாட்’ நிறுவனம் 05 இலட்சம் ரூபா தொகையை கடற்றொழில் நீரியல் வள அமைச்சினூடாக தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபைக்கு வழங்கியுள்ளது. இந்த ஒவ்வொரு வீட்டுக்கும் தேவையான நீர், மின்சாரம், உள்ளக வீதி உட்பட சகல உட்கட்டமைப்பு வசதிகளையும் செய்து கொடுக்க தேவையான நிதியையும் ‘இபாட்’ நிறுவனம் பெற்றுக் கொடுத்துள்ளதாக கடற்றொழில் நீரியல் வள அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த மீனவர் வீடமைப்புத் திட்டத்தின் கீழ் களுத்துறை மாவட்டத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள பிஹானிமுள்ள வீடமைப்புத் திட்டம் 30 புதிய வீடுகளைக் கொண்டுள்ளதுடன், இந்த வீடுகளின் நிர்மாணம் வீட்டுக்குரியவர்களின் பூரண ஒத்துழைப்புடன் 100 நாட்களில் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது. இந்த வீடமைப்புத் திட்டத்திற்குத் தேவையான உள்ளக வீதிகள், நீர், மின்சாரம் போன்ற வசதிகளைச் செய்து கொடுக்கத் தேவையான நடவடிக்கைகள் கடற்றொழில் நீரியல்வள அமைச்சின் பங்களிப்புடன் களுத்துறை மாவட்டச் செயலாளரால் இத்தினங்களில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பிஹானிமுள்ள மீனவர் வீடமைப்புத் திட்டம் இன்னும் ஒரு சில தினங்களில் கடற்றொழில் நீரியல்வள அமைச்சர் பீலிக்ஸ் பெரேரா, வீடமைப்பு பொது வசதிகள் அமைச்சர் திருமதி பேரியல் அஷ்ரஃப், தேசத்தைக் கட்டியெழுப்பும் அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன ஆகியோரின் பங்குபற்றலுடன் பிரதமர் ரத்னசிரி விக்ரமநாயக்காவால் திறந்து வைக்கப்படவுள்ளதாக களுத்துறை மாவட்ட செயலாளர் ஹப்புஆரச்சி குறிப்பிட்டார். இந்த வீடமைப்புத் திட்டத்தை நிர்மாணித்த வெற்றிகரமான அனுபவத்தைக் காரணமாகக் கொண்டு ‘இபாட்’ அமைப்பால் கடற்றொழில் நீரியல்வள அமைச்சின் பங்களிப்புடன் பிரதேச மட்டத்தில் பல புதிய வீடமைப்புத் திட்டங்களை நடைமுறைப்படுத்த தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபைக்கு முடிவுசெய்துள்ளது. அதன்படி திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை, கல்முனைப் பகுதிகளில் மேலும் 200 வீடுகளை நிர்மாணிக்க இன்னும் ஒரு சில வாரங்களில் நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், அதற்காக 100 மில்லியன் ரூபா செலவிடப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது »» (மேலும்) | 0 commentaires | மட்டக்களப்பு மாவட்டத்தின் முதலாவது இறங்குதுறை களுவன்கேணியில் அமைக்கப்பட இருக்கிறது கிழக்கு முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் அபிவிருத்தியூடான மக்கள் பணியின் ஓர் முக்கிய கட்டமாக களுவன்கேணியில் இறங்குதுறை ஒன்று அமைக்கப்படவுள்ளது. இபார்ட் நிறுவனத்தின் நிதியுதவியுடனும் யுனொப்ஸ் நிறுவனத்தின் அனுசரனையோடும் மேற்படி இறங்குதுறை அமைக்கப்படவுள்ளது. இதற்குரிய அமைவிடம் மற்றும் நிர்மானிக்கப்படும் வியூகங்கள் குறித்து ஆராயும் நோக்கில் கிழக்கு மாகாண முதலமைச்சர் சி. சந்திரகாந்தன், ஏறாவூர் பற்று பிரதேச சரைத் தவிசாளர் ஜீவரங்கன் மற்றும் யுனொப்ஸ் நிறுவனத்தின் பிரதிநிதிகள், பொறியில் நிபுனர்; குழாம் என்பன நேரில் சென்று பார்வையிட்டதோடு , வெகு விரைவில் ஆரம்பகட்ட வேலைகள் ஆரம்கப்பட இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. நவீன வசதிகளுடன் கூடிய இவ் இறங்குதுறை ஓரே நேரத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட படகுகள் தரித்து நிற்கக் கூடிய வகையில் அமையப் பெற இருப்பது விசேட அம்சமாகும். இதனோடு இணைந்த வகையில் எரிபொருள் நிரப்பு நிலையம் மற்றும் ஜஸ் தொழிற்சாலை என்பனவும் நிறுவப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது »» (மேலும்) | 0 commentaires | கரையோரப் பாதை அமைக்கும் வேலைத்திட்டங்களை நேரில் சென்று பார்வையிட்டார் கிழக்கு முதல்வர் பாலமீன்மடு முதல் பாசிக்குடா வரையான கரையோரப் பாதை அமைக்கும் வேலைத்திட்டம் தற்போது வேகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இவ் வேலைத்திட்டமானது எந்தளவு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது என்பதனை நேரில் சென்று கிழக்கு முதல்வர் சி. சந்திரகாந்தன் அவர்கள் பார்வையிட்டார். இப் பாதையினது முக்கியத்துவத்தினை உணர்ந்து இதற்குரிய ஒப்பந்தக் காரர்களை அழைத்த முதல்வர் வெகு விரைவில் இவ் வேலை திட்டங்களை முடித்துத் தரவேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.இப் பாதை அமைக்கப்பட்ட பின்னர் பஸ் போக்குவரத்து மேற்கொள்வது தொடர்பாகவும் பேசப்பட்டுக் கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இப் பிரதேசத்தை அண்டிய மீனவர் மக்கள் தாங்கள் பிடிக்கின்ற மீன்களை நியாய விலையில் சந்தைப் படுத்துவதற்கான ஓர் நல்ல வாய்ப்பாக அமையும். அத்தோடு வியாபாரிகள் நேரடியாக வந்து மீன்களைக் கொள்வனவு செய்து போவதற்கும் மிவும் இலகுவாக அமையும். இதனால் மட்டக்களப்பு மாவட்ட மீனவர்கள் பெரும் நன்மை அடைவார்கள். »» (மேலும்) | 0 commentaires | வெல்லாவெளி பிரதேசத்திற்கு விஜயம் செய்த முதல்வர் போரதீவுப்பற்று பிரதேச சபை தவிசாளர் திரு.சிறி அவர்களின் வேண்டுதலுக்கு அமைய வெல்லாவெளி பிரதேசத்திற்கு விஜயம் செய்த முதல்வர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்கள் அப்பிரதேசத்தின் புத்தி ஜீவிகள்,பொது நல அமைப்புக்களின் தலைவர்கள் மற்றும் வெல்லாவெளி பிரதேசத்தின் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளின் அரசியல் கட்சி உறுப்பினர்கள் ஆகியோருடன் சிறிய கலந்துரையாடல் ஒன்றினை நடத்திய முதல்வர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்கள் எதிர்காலத்தில் தமிழ் மக்களுக்கான அரசியல் தேவையினை விளக்கியதோடு அப்பிரதேசத்தின் அபிவிருத்தி பணிகள் தொடர்பாகவும் அப்பிரதேசத்திற்கான உடனடித்தேவைகள் குறித்தும் கேட்டறிந்ததுடன், அப்பரதேசத்தின் வரட்சி நிலையினை போக்கச் செய்கின்ற அடிப்படையில் குடிநீர் பிரச்சினைகள் மற்றும் விவசாய செய்கைகளுக்கான நீர் பிரச்சினைகளைதீர்ப்பது தொடர்பாகவும் கலந்துரையாடினார். அத்துடன் இப்பிரதேசத்தில் முக்கியமான ஆறுகளில் ஒன்றான கம்பி ஆற்றுக்கான பாலம் ஒன்றினை அமைப்பது தொடர்பாகவும், அப்பாலம் அமைக்கப்பட வேண்டிய இடத்தினையும் நேரில் சென்று பார்வையிட்டார். இவ்விஜயத்தின்போது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் கொள்கை பரப்புச் செயலாளர் பூ.பிரசாந்தன்,தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளின் ஊடகப்பேச்சாளர் ஆஷாத் மௌலானா மற்றும் மாவட்ட அமைப்பாளர்கள் பலரும் கலந்து கொண்டனர »» (மேலும்) 7/12/2009 | 0 commentaires | racism by Jaffna principal recruited a Muslim art teacher appointed Saraswathi Tamil School in Badulla. Princiapal asked him to remove his beard and not allowed to go for Jumma prayer.Muslim teacher has shown the circular about Muslims special leave for Jumma prayer. But Principal is sending the Muslim students for Jumma prayer from the same school but not this teaher. As this is new recruit the Muslim teacher doesn't aruge much and now got transferred to another tamil national school in Passara. Now this Badulla resident has to travel one hour every day from Badulla to Passara due to this Jaffna origin Principals racial activity. This is first school before not allowed a Muslim teacher was not allowed to wear Fardah. Now they start with Muslims beard. I donot know what is principal do if minister Keheliya Rambukwela or Douglas Devananda visit this school because they too have beard. Even Indian Prime Minister Manmohan Singh having beard. I would like to bring this to Muslim association to investigate this and take necessary actiotions. naasar »» (மேலும்) | 0 commentaires | சலுகைகளுக்காக உரிமைகளை விட்டுக் கொடுக்க முடியாது. –கிழக்கு முதல்வர் சந்திரகாந்தன் கடந்த பல காலங்களாக யுத்தத்தினாலும் பயங்கரவாதத்தினாலும் பாதிக்கப்பட்டு இருந்த எமது மக்கள் இன்றுதான் தலை நிமிர்ந்து நடக்கத் தொடங்கியிருக்கின்றார்கள். இம் மக்கள் பூரண சுதந்திரத்துடன் வாழ்வதற்கு எமது நாட்டின் ஜனாதிபதி அவர்கள் நல்லதொரு சந்தர்ப்பத்தினை ஏற்படுத்தித்தந்திருக்கின்றார். இதனை நாம் அதாவது மக்களாக இருந்தாலும் சரி அரசியல் வாதிகளாக இருந்தாலும் சரி அதனைச் சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அதாவது சரியான தருணத்தில் பிழையான முடிவினை எடுக்கக் கூடாது. அதே போல் சலுகைகளுக்காக எமது உரிமைகளையும் விட்டுக் கொடுக்க முடியாது. என நேற்று (11.07.09)பேத்தாழையில் குகநேசன் கலாசார பண்டபத்தினைத் திறந்து வைத்து உரையாற்றும் போது கிழக்கு முதல்வர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார். எமது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியானது மிகவும் தெளிவான ஓர் சிந்தனையோடும் ஆக்கபூர்வமான சேயற்பாடுகளோடும் அமைந்த வகையிலே சென்று கொண்டிருக்கின்றது. சிலர் பல்வேறு புரளிகளைக் ஏற்படுத்தி விட்டு புதினம் பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள். நாம் குழம்பத் தேவையில்லை காலத்தின் தேவை கருதி வேலை செய்வோமாக இருந்தால் நாம் நிச்சயமாக வெற்றி பெறலாம் எனவும் தெரிவித்தார். தொடர்ந்து கருத்துத் தெரிவத்த முதல்வர் இன்று திறந்து வைக்கப் பட்டிருக்கின்ற இக்கலாசார மண்டபத்திற்கு குகநேசன் கலாசரா மண்டபம் எனப் பெயரிடப் பட்டிருக்கின்றது. மறைந்த இந்தக் குகநேசன்தான் இப்போது பெரிதாக வளர்ந்திருக்கின்ற தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அரசியல் கட்சியினை வளர்த்தவர்களில் மிக மிக முக்கியமானவராவார். எனவேதான் அவரின் நினைவாக இப் பெயர் சூட்டப்பட்டிருக்கின்றது. மக்களாகிய நீங்கள் அனைவரும் ஒற்றுமையோடும் தெளிவான ஒருமித்த அரசியல் சிந்தனைகளோடும் இருக்கின்ற போதும் யாரும் ஏமாற்றமுடியாது. காலங்காலமாக எமது மக்களைத் தூண்டிவிட்டுச் சென்றவர்களில் ஒருசிலர் இன்று வேடிக்கையாக தங்களது பேச்சுக்களை மாற்றிக் கொண்டு அரசியல் நடாத்த முற்படுகின்றார்கள். இவர்களை நீங்கள் இனம் கண்டு சரியான உங்களின் பதிலை வழங்க வேண்டும் எனக்கேட்டுக் கொண்டார். இந்நிகழ்வி;ற்குகிழக்கு மாகாண சபை உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அரசியல் கட்சியின் கிழக்கு மாகாண அமைப்பாளருமான பிரதீப் மாஸ்டர், நெகோட் திட்டப் பணிப்பாளர், உள்ளுராட்சி ஆணையாளர் மா. தயாபரன், உதவி உளளுராட்சி ஆணையாளர் து. சத்தியானந்தி, தமிழ் மக்கள் விடுதபை; புலிகள் கட்சியின் முக்கிய பிரமுகர்கள் மற்றும் பெரும் திரளான மக்குளும் கலந்து கொண்டார்கள். கலாசார நிகழ்வுகளைப் பிரதிபலிக்கின்ற வகையிலான கலை நிகழ்ச்சிகளும் இடம் பெற்றிருந்தது. »» (மேலும்) | 0 commentaires | பேத்தாழை பொது நூலகத்திற்கான அடிக்கல் கிழக்கு முதலமைச்சர் சந்திரகாந்தனால் நடப்பட்டது. பலநெடுங்காலமாக வாழைச்சேனைப் பிரதேசத்தில் பொதுநூலகம் ஒன்று இல்லாது இருந்தது. இதனை முதலமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு வந்த பேத்தாழை மக்களின் வேண்டுதலுக்கமைய 350.000ரூபா பெறுமதியான நூலகம் ஒன்றிற்கான அடிக்கல் நேற்று (11.07.09) பேத்தாழையில் நாட்டப்பட்டது. கிழக்கு மாகாண முதலமைச்சர் சி; சந்திரகாந்தன் தனது பொது அபிவிருத்தித் திட்டத்தின் ஓர் அங்கமாக அனைத்து மக்களும் பயன் பெறக் கூடியதும் எதிர்காலத்தின் தேவை கருதியும் மேற்படி நூலகமானது இப் பிரதேசத்தில் அமைக்க வேண்டிய தேவை ஏற்பட்டது. இப் பிரதேசத்தில் கல்வி கற்கின்ற பாடசாலை மாணவர்கள், இளைஞர்கள், முதியவர்கள் எனப் பலர் தங்களது ஓய்வு நேரங்களை வீணடித்துக் கொண்டிருக்கின்றார்கள். இவர்கள் அனைவரும் பொன்னான நேரத்தினை வாசிப்பிற்காக ஒதுக்குவதன் மூலம் பூரண அறிவைப் பெறலாம். அத்தோடு சமூகத்திற்கு தேவையான பல விடயங்களையும் கற்றுக்கொள்ளலாம். எமது மட்டக்களப்பு மாவட்டம் கல்லியில் மிகவும் பின்தங்கிக் காணப்படுகின்றது. அதற்கு முக்கிய காரணமாக வாசிப்பின்மையும் ஓர் காரணமாக அமையலாம். எனவே எதிர்காலத்தில் இவ்வாறான பிரச்சினைகன் ஏற்படாத வண்ணம் இந்நூலகம் பயன் தரும். இந் நிகழ்வில் உள்ளூராட்சி ஆணையாளர் மா.தயாபரன், உதவி உள்ளூராட்சி ஆணையாளர் து. சத்தியானந்தி, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் முக்கிய பிரமுகர்கள் பொது மக்கள் எனப் பலர் கலந்து கொண்டார்கள்.
விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி.-சி54 ராக்கெட் : 9 செயற்கைக்‍கோள்களுடன் ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்திலிருந்து ஏவப்பட்டது களைக்கட்ட தொடங்கிய திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா : செண்டை மேளம், நாதஸ்வரம் முழங்க பஞ்ச மூர்த்திகளின் திருக்குடை மாடவீதியுலா சபரிமலை வரும் 30-ம் தேதி முதல் ஜனவரி 19-ம் தேதி வரை மகர விளக்‍கு புஜை : தமிழகத்திலிருந்து சிறப்பு ரயில்கள், பேருந்துகள் விழுப்புரம் விக்கிரவாண்டியில் பா.ம.க பிரமுகர் கொலை வழக்‍கு : முக்கிய குற்றவாளிகளை பிடிக்க முடியாமல் தனிப்படை போலீசார் திணறல் நீலகிரி மாவட்ட ஆட்சியருக்‍கு எஸ்.எம்.எஸ். மூலம் வெடிகுண்டு மிரட்டல் : டெல்லியைச் சேர்ந்த நபர் தஞ்சையில் கைது சென்னை தாம்பரம் அடுத்த​கெளரிவாக்‍கம் நகைக் கடையில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகள் கொள்ளை : சி.சி.டி.வி. காட்சிகள் அடிப்படையில் கொள்ளையன் சுற்றிவளைப்பு - நகைகள் மீட்பு நீலகிரி குன்னூர் பகுதியில் சாலைகளில் உலா வந்த கரடி மற்றும் புலி - வாகன ஓட்டிகள் அச்சம் திருப்பூர் பல்லடத்தில் குத்தகைக்கு வீடு பிடித்து தருவதாகக்கூறி ஏமாற்றிய ரியல் எஸ்டேட் புரோக்கர் - பலரிடம் லட்சக்கணக்கில் மோசடியில் ஈடுபட்ட 2 பேரை கைது செய்து போலீஸ் நடவடிக்கை சபரிமலை ஐயப்பன் கோயிலில் வரும் 30-ம் தேதி வரையிலான தரிசனத்திற்கு 8 லட்சத்திற்கும் அதிகமானோர் முன்பதிவு : பக்‍தர்கள் முகக்‍கவசம் அணிய அறிவுறுத்தல் நியாயவிலை கடைகளுக்‍கு பொருட்கள் வழங்கியதில் வரி ஏய்ப்பு நடந்ததாக புகார் : சேலம் பருப்பு குடோனில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை
தமிழகத்தில் இதுவரை ஜெம் தளத்தில் ரூ.7400 கோடிக்கும் அதிகமான ஆர்டர்கள் விற்பனையாளர்களிடமிருந்து பெறப்பட்டுள்ளன பத்திரிகை தகவல் அலுவலகத்தின் ஒத்துழைப்புடன் அரசு இ-சந்தை (ஜெம்) சென்னை சாஸ்திரி பவனில் இன்று விற்பனையாளர் மற்றும் ஊடகவியலாளர் கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது. ஜெம் தளத்தின் புதிய அம்சங்கள், அதன் செயல்பாடுகள் குறித்து சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் இடையே விழிப்புணர்வை உருவாக்குவதே இந்த நிகழ்ச்சியின் நோக்கமாகும். மேலும் விற்பனையாளர்களுக்கு இந்த தளம் எவ்வாறு பயனுள்ளதாக இருக்கிறது என்பது குறித்த அனுபவங்களை பகிர்ந்து கொள்ளவும் இது உதவியது. சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், மகளிர் சுய உதவி குழுக்கள், புத்தொழில் நிறுவனங்கள் போன்ற விற்பனையாளர் குழுக்களுக்கு ஜெம் தளம் ஏராளமான வாய்ப்புகளை வழங்குவதுடன், மோடி அரசின் மேக்இன் இந்தியா முன் முயற்சியை வலுப்படுத்துகிறது. தமிழக அரசின் கருவூலங்கள் மற்றும் கணக்கு ஆணையர் திரு விஜயேந்திர பாண்டியன் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். பத்திரிகை தகவல் அலுவலக கூடுதல் தலைமைச் செயலாளர் திரு அண்ணாதுரை, ஜெம், துணைத் தலைமை நிர்வாக அதிகாரி திரு முரளீதரன் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த திரு விஜயேந்திர பாண்டியன், 2016-ம் ஆண்டு முதல் ஜெம் தளம் இயங்கி வருகிறது என்றும், 3 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான பரிவர்த்தனைகள் நடந்துள்ளன என்றும் கூறினார். 2014-ம் ஆண்டில் இருந்து இன்று வரை தமிழக அரசு ரூ.1108 கோடி மதிப்பிலான பரிவர்த்தனைகளை ஜெம் தளம் மூலம் செய்துள்ளது என்றும், மாநிலத்தில் ரூ. 7400 கோடிக்கும் அதிகமாக பரிவர்த்தனைகளை விற்பனையாளர்கள் மேற்கொண்டுள்ளனர் என்றும் அவர் கூறினார். இதுபோன்ற விற்பனையாளர் கலந்துரையாடல் நிகழ்ச்சி மூலம் தமிழகத்திற்கு வெளியே உத்தரப்பிரதேசம், பீகார் உள்ளிட்ட ஆகிய பல்வேறு மாநிலங்களில் வர்த்தகம் புரிவது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுவதாக அவர் தெரிவித்தார். மேலும் விற்பனையாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பது குறித்தும் விளக்கப்பட்டன. இந்த தளத்தின் மூலம் மத்திய, மாநில அரசுகள் பொதுத்துறை நிறுவனங்களுக்கு விநியோகம் செய்யும் வாய்ப்புகளை சிறு மற்றும் குறு தொழில் நிறுவனங்கள் பெற்றுள்ளதாக அவர் தெரிவித்தார். சமுதாயத்தில் அனைவரையும் உள்ளடக்கும் வகையில் ஜெம் தளம், ஷெட்யூல்ட் வகுப்பினர் மற்றும் பழங்குடியினருக்கு பதிவு கட்டண விலக்கு அளிக்கிறது. செய்தியாளர்களிடம் பேசிய கூடுதல் தலைமை இயக்குனர் திரு அண்ணாதுரை, பிரதமரின் தொலைநோக்குப் பார்வைக்கேற்ப ஜெம் தளத்தின் பயன்கள் உள்ளது குறித்து விளக்கினார். தமிழகத்தில் இருந்து மேலும் அதிக விற்பனையாளர்கள் இந்த இ-சந்தை தளத்தில் சேர்ந்து பயன்பெறும் வகையில், இந்த ஆன்லைன் தளம் குறித்த விழிப்புணர்வை கிராமப்பகுதிகளில் ஏற்படுத்துமாறு ஊடகத்துறையினருக்கு அவர் வேண்டுகோள் விடுத்தார். ஜெம் தளத்தின் துணை தலைமைச் செயல் அதிகாரி திரு முரளீதரன் பேசுகையில், தளத்தின் பயன்கள் குறித்தும், எம்எஸ்எம்இ-க்கள், புத்தொழில் நிறுவனங்கள் அவற்றை அணுகும் விதம் குறித்தும் விளக்கினார். கடைசி மைல் பொது கொள்முதல், பரிவர்த்தனையில் சவால்கள் பற்றி குறிப்பிட்ட அவர், அனைவருக்கும் இந்த வசதி கிடைக்கும் வகையில் அரசின் இ-சேவைகள், அஞ்சல்துறை ஆகியவற்றுடன் ஜெம் தளம் கைகோர்த்துள்ளதாக தெரிவித்தார். தமிழ் உள்ளிட்ட 12 பிராந்திய மொழிகளில் விற்பனையாளர்களுக்கான உதவி மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். விற்பனையாளர்களுடனான கலந்தாய்வு அமர்வுக்கு இந்த நிகழ்ச்சியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தங்களது தொழில் வளர்ச்சியடைய, மத்திய மாநில அரசுதுறைகளுடன் இணைந்து விற்பனையை மேற்கொள்ளவும், இந்தியா முழுவதும் எல்லைகளுக்கு அப்பாற்பட்டு சந்தைகளை அணுகவும் ஜெம் தளம் எவ்வாறு உதவுகிறது என்ற தங்களது அனுபவங்களை விற்பனையாளர்கள் பகிர்ந்து கொண்டனர். அரசு பரிவர்த்தனைகளில் முன்பு காணப்பட்ட நிர்வாக சிக்கல்கள் நிறைந்த நடைமுறையை அகற்றி, வெளிப்படையான, அனைவரையும் உள்ளடக்கிய, உரிய நேர பணம் செலுத்துதல் ஆகியவற்றின் மூலம் எளிதாக தொழில் புரியும் வாய்ப்புகளை வழங்கி வரும் நடைமுறையை அவர்கள் பாராட்டினர்.
சமுத்திரக்கனி 1973 ஆம் ஆண்டு ஏப்ரல் 26ல் ராஜபாளையம் செய்தூர் கிராமத்தில் பிறந்தார். விவசாயக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர். சிறு வயதிலிருந்தே சினிமா பார்ப்பது தவறு என்ற தந்தையின் சொல்லை ஆழமாக நம்பியதால் தனது 13வது வயது வரை ஒரு சினிமா கூட பார்த்ததே இல்லை. பத்தாம் வகுப்பு சிறப்பு வகுப்புகளுக்குப் படிக்கச் சென்றபோது வகுப்பைப் புறக்கணித்து விட்டு நண்பனின் கட்டாயத்தின் பேரில் படம் பார்க்கச் சென்றார். அப்படி அவர் பார்த்த முதல் படம் 'முதல் மரியாதை' ..மனதைப் பிழிந்தெடுத்த அந்தப் படத்திலிருந்து மீள முடியாமல் தினம் படம் பார்க்கச் செல்ல ஆரம்பித்தார். நுழைவுச்சீட்டுக்காக முறுக்கு விற்றார். விஷயம் வீட்டிற்கு தெரிந்து தர்ம அடிவாங்கிக் கொண்டு நேரே அவர் சென்ற இடம் திரையரங்கம் தான்... படங்களின் மீது ஏற்பட்ட தீராக் காதலால் தமது 15வது வயதில் ரூ.130 யுடன் சென்னைக்குப் புறப்பாட்டார்..பாக்யராஜ் மற்றும் டி.ஆர்.ராஜேந்திரன் பரம ரசிகன் . சென்னையில் எங்கு செல்வதென்று கூடத் தெரியாமல் நடத்துனரிடம் குத்து மதிப்பாக ஒரு நிறுத்தத்தைத் சொல்லி இறங்கி சுற்றித் திரிந்தார். மனிதர்களின் மீதான அவரது நம்பிக்கை என்றுமே வியக்கத்தக்கது! அதற்கு வித்திட்டது அண்ணா பாலத்தில் அவருக்கு உதவிய போலீஸ்காரர் ... 'நான் சென்னையில் சந்தித்த முதல் மனிதர் நல்லவர்' என்பார் இன்றும் .அதனாலோ என்னவோ அவர் படத்தில் கண்டிப்பாக ஒரு ஏட்டையா கதாப்பாத்திரம் நிச்சயம் இடம்பெறும். இயக்குனர்களின் அலுவலகம் தேடி அலைந்த போது தான் சினிமா உலகின் நிதர்சனம் புரிந்தது.. ஊருக்குத் திரும்பினார். ஏழ்மையிலும் 'நமக்குத் தெரியாத ஒன்றைப் பையன் முயற்சி பண்ணனுமுனு நினைக்கிறான் .. ஊக்கப்படுத்த முடியலனாலும் அதுக்குத் தடையா இருக்க வேண்டாம் ' என்று கூறிய தந்தையே இவரிடம் இருக்கும் பாஸிட்டிவ் எனர்ஜியின் பிறப்பிடம்.. தந்தையின் விருப்பத்திற்கேற்ப 10ஆம் வகுப்பில் நல்ல தேர்ச்சி பெற்று 11 ஆம் வகுப்பு சேர்ந்தார்.. தந்தையின் எதிர்பாராத மரணத்தால் குடும்பத்தைக் காப்பாற்ற மேலும் படிக்க வேண்டிய சூழல்.. பி. எஸ். சி கணிதம் மற்றும் சட்டக் கலை முடித்தார். தாயிடம் 2000 ரூபாய் வாங்கிக்கொண்டு நடிகராகும் ஆசையுடன் மீண்டும் சென்னை சென்றார்.. அவரின் தன்னம்பிக்கையை உடைக்கும் நிறைய விமர்சனங்களைக் கடந்து இயக்குனர் சிகரம் கே. பாலச்சந்தரிடம் பார்த்தாலே பரவசம் படத்தில் உதவி இயக்குனராகச் சேர்ந்தார். முதன்முதலில் திரையில் தோன்றியது இயக்குனர் பாண்டியராஜனின் ' படிக்கிற வயசு'.. பல படங்களில் உதவி இயக்குனராகப் பணியாற்றிய இவர் சசிக்குமாரின் சுப்ரமணியபுரம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.. அவர் இயக்கிய நாடோடிகள் படம் நல்ல வரவேற்பைப் பெற்றது.. தொடர்ந்து போராளி, நிமிர்த்து நில், அப்பா, தொண்டன் எனப் பல படங்களை இயக்கி நடித்தார். தமிழ் மட்டுமல்லாமல் கன்னடம், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் இயக்கியுள்ளார். குறுகிய காலத்தில் பல வேடங்களில் நடித்த இவருக்கு விசாரணை படம் தேசிய விருது பெற்றுத்தந்தது. சமூகத்தில் நடக்கும் அநீதிகளைத் தட்டிக் கேட்க வேண்டும் என்ற சாமானியனின் குரல்களையே தன் படங்களில் பதிவு செய்கிறார். 'அப்பா' வில் குழந்தைகளின் நுண்ணுணர்வுகள் பற்றி பதிவு செய்தார். தொண்டன் மூலம் ஒரு சாமானியனின் உணர்வை, உரிமைப் மறுப்பைப் பற்றிப் பேசினார். சாதி ஒழிப்பைப் பற்றித் தீவிரமாகப் பேசுகிறார். தஞ்சைப் பல்கலைக்கழகத்தோடு இணைந்து ' தென்னிந்தியக் குலங்களும் குடிகளும் ’ என்னும் புத்தகத்தில் ஆய்வு மேற்கொண்டார் . ’நீயே சிற்பி நீயே சிலை’ என்ற தன் குருநாதரின் வார்த்தைகளே இவருக்கு வேத வாக்கு! 'நான் எடுக்கும் படத்தின் கதையை வெளியில் சொல்ல எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை.ஒவ்வொருவருக்கும் ஒரு கண்ணோட்டம் உண்டு.என்னைப்போல் என்னால் மட்டுமே படம் இயக்க முடியும்" என்பார். 'நான் சொல்ல நினைக்கும் 4 விஷயங்களை என் படங்களின் மூலம் சொல்லி விட்டால் நான் இயக்குவதை நிறுத்தி விடுவேன் ’ என்கிறார். அவர் அடிக்கடி சொல்லும் வார்த்தைகள் ’ நல்ல மனிதர்கள் எங்கும் நிறைந்து இருக்கிறார்கள்.. மனிதர்களை நம்புங்கள் . என்றும் தோற்கமாட்டீர்கள்!'
கோவையில் தனியார் மருத்துவமனையில் புகுந்து தாக்குதல் நடத்திய சம்பவத்தில் தலைமறைவாக இருந்த கொங்கு வேளாள கவுண்டர்கள் பேரவை தலைவர் ராஜேந்திரனை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர்.. கோவை காந்திபுரத்தில் உள்ள எல்லன் மருத்துவமனையை, அதன் நிர்வாக இயக்குநரான மருத்துவர் ராமச்சந்திரன் (75), சென்னையை சேர்ந்த மருத்துவர் உமா சங்கர் என்பவருக்கு லீசுக்கு கொடுத்திருந்தார். இந்த நிலையில், கடந்த 2020ஆம் ஆண்டு மருத்துவமனைக்குள் மர்மநபர்கள் புகுந்து மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களை தாக்கிவிட்டு, பொருட்களையும் சூரையாடினர். இது தொடர்பாக மருத்துவர் ராமச்சந்திரன் அளித்த புகாரின் அடிப்படையில், ரத்தினபுரி போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரித்து வந்தனர். மேலும், அவர் ரூ.4.95 கோடி வாடகை தராமல் மோசடி செய்ததாகவும், ரூ.100 கோடி மதிப்பிலான மருத்துவமனையை மருத்துவர் உமா சங்கர், அவரது மேலாளர் மருதவாணன் விற்பனை செய்ய முயற்சிப்பதாகவும் கூறி, கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்தார். அதன் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து மருத்துவர் உமா சங்கர், அவரது மேலாளர் மருதவாணன் ஆகியோரை கைது செய்தனர். இந்த வழக்கில் ஜாமினில் வெளியே வந்த மருத்துவர் உமா சங்கர் சாலை விபத்தில் உயிரிழந்தார். இந்த சூழலில், தனியார் மருத்துவமனைக்குள் புகுந்து தாக்குதல் நடத்திய வழக்கு கோவை சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றப்பட்டது. சிபிசிஐடி போலீசாரின் விசாரணையில், எல்லன் மருத்துவமனை தாக்குதல் சம்பவத்திற்கு மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் ராமச்சந்திரன் உள்ளிட்ட 5 பேர் தான் காரணம் என்பது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து, சிபிசிஐடி போலீசார், மருத்துவர்கள் ராமச்சந்திரன், காமராஜ்(49), ராமச்சந்திரனின் உதவியாளர் முருகேஷ்(47), மூர்த்தி(45) மற்றும் கார் ஓட்டுநர் பழனிசாமி ஆகியோர் மீது 9 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அவர்களை கைது செய்தனர். கைதானவர்களிடம் சிபிசிஐடி போலீசார் நடத்திய விசாரணையில், மருத்துவர் ராமச்சந்திரனுக்கு உதவியாக அடியாட்களை ஏற்பாடு செய்தது கொங்கு வேளாள கவுண்டர்கள் பேரவை தலைவரும், வழக்கறிஞருமான ராஜேந்திரன் என்பது தெரியவந்து. இதனை தொடர்ந்து, ராஜேந்திரனை சிபிசிஐடி போலீசார் விசாரணைக்கு அழைத்தபோது, அவர் தலைமறைவாகினார். சிபிசிஐடி போலீசார் 3 தனிப்படைகள் அமைத்து ராஜேந்திரனை தேடி வந்தனர். இந்த நிலையில், நேற்று கோவை சிபிசிஐடி அலுவலகத்தில் வழக்கறிஞர் ராஜேந்திரன் சரணடைந்தார். இதனை அடுத்து, அவரை கைது செய்த போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
காலையில் சோம்பல் முறித்த வண்ணம் எழுந்தான் அபிமன்யூ. இரவு பார்ட்டி முடித்து அதிகாலையில் தான் வீடு திரும்பியிருந்தான். இருந்தாலும் அவனது தினசரி ஷெட்யூலில் உடற்பயிற்சிக்கு ஒதுக்கியிருந்த நேரத்தில் அவனுக்கு விழிப்பு தட்ட மெதுவாக எழுந்தவனுக்கு தலை வலிக்கவே எப்போதும் போல ஹேங் ஓவருக்கு போடக்கூடிய மாத்திரையை போட்டுக் கொண்டான் அவன். வீட்டினுள்ளேயே மேல்தளத்திலிருக்கும் அவனது பிரைவேட் ஜிம்மிற்கு சென்றவன் வியர்வை வழியும் வரை உடற்பயிற்சி செய்ய தொடங்கினான். டிரேட் மில்லில் ஓடத்துவங்கியவனின் நினைவலைகளில் தோன்றினாள் அந்த கறுப்பு ஸ்கர்ட் பெண். அவனை பொறுத்தவரைக்கும் அவள் நன்றாக ஆடினாள், எந்த வித அட்வாண்டேஜும் எடுத்து கொள்ளவில்லை. அதற்கு மேல் அவனுக்கு எதுவும் நினைவுக்கு வராமல் போகவே அவளை நினைத்தபடியே உடற்பயிற்சியை முடித்தவன் அவனது அறைக்கு செல்ல அங்கே அவனது நண்பன் அவனுக்காக காத்திருந்தான். ஸ்ராவணி மற்றும் மேனகாவிடம் உரையாடிய அதே வாலிபன் தான். அபிமன்யூ நேற்று அணிந்திருந்த டீசர்ட்டை எடுத்தவன் அதிலிருந்து விழுந்த அந்த செயினை கண்டதும் யாருடையது என்று யோசிக்க அவனது மனக்கண்ணில் அந்தப் பெண் வந்து போனாள். நெற்றியில் தட்டிக் கொண்டு அவளைப் பற்றி யோசித்தவனுக்கு “ஐயாம் வனி. நான்சியோட ஃப்ரெண்ட்” என்று கூறியவளின் பெயர் நினைவுக்கு வர நண்பனிடம் “டேய் இது அந்த வனியோட செயின்டா” என்று சொல்லிவிட்டு அதை மேஜை மீது வைத்தான். அவனை ஆச்சரியமாக பார்த்தபடி எழுந்தான் அவனது நண்பன் அஸ்வின். அவனது தோளில் தட்டி “நாட் பேட் அபி. வழக்கமா உனக்கு விடிஞ்சதும் நைட் மீட் பண்ணுன பொண்ணு முகமே நியாபகம் வராது. இதுல சாருக்கு அந்தப் பொண்ணோட பேர் முதற்கொண்டு நியாபகம் இருக்கு போல. என்னடா மச்சான், நீ அபி தானே?” என்று அவன் முகத்தைப் பிடித்துத் திருப்பிக் பார்க்க ஒரு நமட்டுச்சிரிப்புடன் அவன் கையைத் தட்டி விட்டான் அபிமன்யூ. “கம் ஆன் அச்சு! அவ நான் பாத்த பொண்ணுல கொஞ்சம் டிஃபரெண்ட். அதுவும் இல்லாம நான்சியோட ஃப்ரெண்டுடா” என்று கண்ணாடியை பார்த்தபடி ட்ரிம் செய்யப்பட்ட தாடியை வருடிக் கொடுத்தவன் குளிக்கத் தயாரானான். திடீரென்று நினைவு வந்தவனாக “டேய் மச்சான்! எப்பிடியும் இந்த செயினை அவளுக்கு திருப்பி குடுக்கணுமே” என்று சொன்னவன் செய்த முதல் காரியம் நான்ஸிக்குப் போன் செய்தது தான். அவள் போனை எடுத்ததும் “ஹலோ நான்ஸி டார்லிங்!” என்று பேச்சை ஆரம்பித்தவன் அவளுக்குப் பதிலாக பார்ட்டியில் கலந்து கொண்ட அவளின் தோழியின் போன் நம்பரை கேட்க அஸ்வின் மனதிற்குள் “க்கும்! இவனால மட்டும் எப்பிடி தான் முன்னாள் கேர்ள் ஃப்ரெண்ட் கிட்டவே வருங்கால கேர்ள் ஃப்ரெண்டோட நம்பரை கேக்க முடியுதோ? தைரியசாலி தான்” என்று நண்பனை பாராட்டிக் கொண்டான். ஆனால் எதிர்முனையில் நான்சி தான் அப்படி யாரையும் அனுப்பி வைக்கவில்லை என்று சொல்லவும் அபிமன்யூவுக்கு ஏதோ தப்பு நடப்பதாகத் தோன்ற அவன் செய்த அடுத்த காரியம் அந்த பப்பிற்கு போன் செய்தது தான். போனை எடுத்த மேனேஜரிடம் வனியின் அங்க அடையாளங்களை விளக்க அவர் பவுன்சர்களிடம் கேட்டால் விடை கிடைக்கும் என்று அவர்களில் ஒருவரை அழைத்து அபிமன்யூவுடம் பேசுமாறு கூறினார். அவர் “சார் அவங்க பேர் நான்ஸினு சொன்னாங்க. கெஸ்ட் லிஸ்ட்ல பேரு இருந்ததால உள்ளே போக அலோ பண்ணுனோம்” என்று சொல்ல அபிமன்யூவிற்கு தெளிவாக தெரிந்து விட்டது அந்தப் பெண்ணிடம் ஏதோ தவறு இருக்கிறது என்று. போனை வைத்தவன் அஸ்வினிடம் “டேய் அச்சு! நீ போய் அந்த பப்போட மேனேஜர் கிட்ட சிசிடிவி ஃபூட்டேஜை பார்க்கணும்னு சொல்லி அவளைப் பத்தி டீடெயிலை கலெக்ட் பண்ணு. நான் வந்துடுறேன்” என்று அவசரமாகச் சொல்ல அவனை கேலிப்புன்னகையுடன் பார்த்தான் அஸ்வின். அவனது சிரிப்பின் அர்த்தத்தை புரிந்து கொண்டவன் “அடப்பாவி உன் மைன்ட் வாய்சை நான் கேட்ச் பண்ணிட்டேன்டா. அந்த மாதிரி சண்டைகோழிலாம் எனக்கு செட் ஆகாது. ஆனா அவ கிட்ட ஏதோ இருக்குடா” என்றான் கண்ணில் கூர்மையுடன். “சரிடா நான் கிளம்புறேன். நீ கவனமா இருடா வருங்கால எம்.எல்.ஏ” என்று அவனது தோளில் தட்டிவிட்டுச் செல்ல அபிமன்யூ குளிக்கச் சென்றான். அஸ்வின் கீழே சென்றவன் சோபாவில் அமர்ந்து செய்தித்தாளில் முகம் புதைத்திருந்த அமைச்சர் பார்த்திபனிடம் “ஹலோ அங்கிள் குட் மார்னிங்” என்று வணக்கத்தை போட்டுவிட்டு வெளியேறினான். அவன் சென்றதும் செய்தித்தாளை படித்து முடித்து வைத்தவர் “டேய் சகா” என்று அழைக்கவும் வேகமாக அறையிலிருந்து வெளியே வந்தார் அவரின் தம்பி சகாதேவன். தமயன் சொல் தட்டாத தம்பி அவர். மனைவியை இழந்து தன் பெண்குழந்தை ஜனனியுடன் தனித்து நின்றவருக்கு அடைக்கலம் கொடுத்த அண்ணனும் அண்ணியும் தெய்வத்துக்குச் சமானம். மனதளவில் கூட யாருக்கும் துரோகம் நினைக்காத சகாதேவன் அப்படியே அவரது அண்ணனுக்கு எதிர் துருவம். ஆனால் அண்ணனின் பேச்சைத் தட்ட அவர் என்றுமே எண்ணியதில்லை. நல்லதோ கெட்டதோ அண்ணன் சொல்லே மந்திரம் என்று வாழ்பவர். அறையிலிருந்து வெளியே வந்தவர் “அண்ணா இன்னைக்கு நம்ம தொகுதிக்கு பிரச்சாரத்துக்கு போகணும். அதுக்கு அபியும் கூட வந்தா நல்லா இருக்கும். வேட்பாளர் இல்லாத பிரச்சாரத்தை யாரும் கண்டுக்க மாட்டாங்க அண்ணா” என்றார் பணிவுடன். அவரின் தோளில் தட்டி கொடுத்து அருகில் அமர்த்திக் கொண்டார் பார்த்திபன். நிதித்துறை அமைச்சரான அவரின் இரு கண்கள் தம்பியும் மகனும் தான். அரசியலில் அவர் செய்யாத தகிடுதத்தமே இல்லை. ஆனால் வீட்டுக்கு அவர் என்றுமே உத்தமன் தான். பதவியைப் பயன்படுத்தி அவர் செய்த ஊழல்கள் சம்பந்தப்பட்ட வழக்கு ஒன்று நிலுவையில் இருப்பதால் அவர் தனக்கு பதில் தம்பியை தேர்தலில் நிற்க வைக்க முயல சகாதேவனோ தனக்கு அரசியல் சரி வராது என்று பணிவுடன் மறுத்துவிட்டார். பின்னர் அவர் கொடுத்த யோசனையின் பேரில் தான் பார்த்திபன் லண்டனில் வழக்கறிஞராக பயிற்சி செய்து கொண்டிருந்த மகனை இந்தியாவுக்கு அழைத்து தனக்குப் பதிலாக சட்டமன்ற தேர்தலில் நிற்க வைத்தது. அபிமன்யூ முதலில் மறுத்தாலும் தந்தையின் சங்கடத்தைப் புரிந்து கொண்டு ஒப்புக்கொண்டான். இந்த தேர்தல் வெற்றி அவனது தந்தையின் கௌரவம் சம்பந்தப்பட்ட விஷயம் என்பதால் அவனது விளையாட்டுத்தனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தீவிரமாகத் தேர்தல் பணியில் ஈடுபட்டான். ஆனால் எதிர்க்கட்சிக்காரர்களும் சும்மா இல்லை. வாரிசு அரசியல் என்று கொளுத்திப் போட அது மீடியாக்களில் பற்றி எரியத் தொடங்கியது. எங்கே பார்த்தாலும் இதை பற்றிய விவாதமே நடக்க அந்த நேரத்தில் தான் பார்த்திபன் ஜஸ்டிஸ் டுடேவில் ஒரு நேரலை விவாதத்தில் கலந்து கொண்டு வாரிசு அரசியல் ஒன்றும் அவ்வளவு பெரிய தவறு இல்லை என்று ஆணித்தரமாக பேசியது. சும்மா இருந்த அந்த சேனலை அவராகவே சீண்டி விட அதன் தலைமை அபிமன்யூவை பற்றிய தகவல்களை திரட்டும் பணியை ஸ்ராவணியிடம் ஒப்படைத்தது. அவளும் அவளுடைய தோழி மற்றும் சக பணியாளருமான மேனகாவும் அவனைப் பற்றிய தகவல்களை திரட்டிக் கொண்டிருந்தவர்கள் அவன் கொடுத்த பார்ட்டியில் ஏதேனும் விஷயம் சிக்குமா என்று பார்க்க தான் நோட்டம் விட அன்று பப்புக்குச் சென்றிருந்தனர். பார்த்திபன் இது எதுவும் அறியாதவராய் மகனின் வெற்றி நிச்சயமான சந்தோசத்துடன் விடுமுறை நாட்கள் போல தேர்தல் நாட்களை எண்ணி அனுபவித்து வந்தார். அவருடைய உலகம் மனைவி, மக்கள் மற்றும் தம்பி சகாதேவன் மட்டுமே. மற்றவர்களை பற்றி அவர் என்றுமே கவலைப்பட்டதில்லை. சகோதரர்கள் இருவரும் பேசிக் கொண்டிருக்கையிலேயே பார்த்திபனின் மனைவி சுபத்ராவும், அவரது தம்பி மகள் ஜனனியும் பூஜைத்தட்டுடன் வெளியே வந்தனர். அவர்களை பார்த்ததும் இவ்வளவு நேரம் இருந்த தீவிரமான முகபாவம் மாற “சுபிம்மா! என்ன காலையிலயே உன் பொண்ணு கூட கோயிலுக்கு கிளம்பிட்ட போல இருக்கு” என்றார் பார்த்திபன் கனிவுடன். சுபத்ரா தன்னைப் பார்த்ததும் எழுந்த மைத்துனரை பார்த்து புன்னகைத்தவர் “ஆமாங்க! வேற என்ன வேண்டுதல்? என்னோட அபி இந்த எலக்சன்ல ஜெயிக்கணும். அப்புறம் என்னோட பொண்ணுக்கு வேற போர்ட் எக்சாம் ரிசல்ட் வர போகுது. அவளுக்கு நல்ல மார்க் கிடைக்கணும்னு வேண்டிக்க போயிட்டுருக்கேன்” என்றார் வெள்ளந்தியாய். கணவர், குழந்தைகள் மற்றும் மைத்துனரை தவிர வேறு எந்த விஷயத்திலும் கவனம் செலுத்தாத அமைதியான பெண்மணி. ஜனனி “ஆமா பெரியப்பா. அண்ணா மட்டும் இந்த எலக்சன்ல ஜெயிச்சிட்டான்னா நான் என்னோட ஃப்ரெண்ட்ஸ் கிட்ட பெருமையா எம்.எல்.ஏ தங்கச்சினு சொல்லிப்பேன்” என்று ஆர்வத்துடன் கூற பார்த்திபன் பாசத்துடன் அவளது தலையை வருடிக் கொடுத்தார். இதை கண்ட சகாதேவனுக்கு வேறு என்ன சந்தோசம் வேண்டும்? பெரியவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே படிகளில் வேகமாக இறங்கி வந்தான் அபிமன்யூ. “என்னாச்சு? மார்னிங்லயே வீட்டு ஹால்ல ரவுண்ட் டேபிள் கான்ஃபரென்ஸ் நடந்திட்டிருக்கு போல” என்றபடி வந்தவனை கர்வத்துடன் பார்த்தனர் பார்த்திபனும், சகாதேவனும். அவன் நேரே சகாதேவனிடம் வந்து “சித்தப்பா இன்னைக்கு நீங்க டேரக்டா தொகுதிக்கு போயிடுங்க. எனக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கு. முடிச்சிட்டு கார்ல வந்துடுறேன்” என்று சொல்லவும் அவர் தலையாட்டினார். பார்த்திபன் மகனை பெருமையுடன் பார்த்தவர் “நீ ஜெயிக்கிறதுல எந்த சந்தேகமும் இல்ல அபி. உன்னை நான் வச்சு அழகு பாக்க நினைக்குற இடமே வேற. அதை அப்புறமா சொல்லுறேன். எலக்சன் வேலைனு அலையுறதுல ரெண்டு பேரும் உடம்பை கெடுத்துக்க கூடாதுடா” என்றார் தமையனிடமும், மகனிடமும். “ஓகேப்பா! எனக்கு டைம் ஆகுது. நான் கிளம்புறேன். மா! ஜானு! ரெண்டு பேரையும் வேணா கோயில்ல டிராப் பண்ணவா?” என்று கேட்கவும் சுபத்ரா தாங்கள் வேறு காரில் சென்று கொள்வதாக கூற அவன் புன்னகை நிறைந்த முகத்துடன் கிளம்பினான். சுபத்ரா மகனின் கம்பீர நடையை ரசித்தவர் சீக்கிரம் அவனுக்கு ஒரு கால்கட்டு போட வேண்டும் என்று வழக்கமான தாயாக எண்ணிக்கொண்டார். பின்னர் மகளுடன் சேர்ந்து கோயிலுக்கு கிளம்பிவிட, சகாதேவனும் அண்ணனிடம் சொல்லிவிட்டு தொகுதி பக்கமாக செல்ல ஆயத்தமானார். இவ்வாறிருக்க அபிமன்யூ பப்பை அடைந்தவன் அங்கே அவனுக்கு முன்னரே வந்து மேனேஜரிடம் பேசிக்கொண்டிருக்கும் அஸ்வினை கண்டதும் “என்னடா ஏதாச்சும் விஷயம் தெரிஞ்சுச்சா அவளைப் பத்தி?” என்று தீவிர முகபாவத்துடன் கேட்க மேனேஜர் அவனை குறுகுறுவென்று பார்த்தார். அவரின் பார்வையை கண்டவன் நகைத்துவிட்டு “ஃபூட்டேஜை ஓட விடுங்க சார், என்னை அப்புறமா ஆசை தீர பாத்துக்கோங்க” என்று கேலி செய்தபடி இருக்கையில் அமர்ந்தான். வனியும், மேகியும் உள்ளே வந்தது, அஸ்வின் மீது மோதியது, அபிமன்யூவுடன் அவள் நடனமாடியது இது எல்லாமே திரையிலோட இதிலிருந்து அவள் யாரென்று கண்டறிவது சாத்தியமில்லை என்று அவனுக்கு தோணியது. அதே நேரம் கடைசியாக பப்பின் வெளியே இருக்கும் சிசிடிவி ஃபூட்டேஜை ஓடவிட்டவனுக்கு அவளை பற்றிய ஒரு க்ளூ கிடைக்கவே அவன் கண்கள் ஆர்வத்தில் விரிந்தது. அது வனியும், மேகியும் ஊபரில் வந்து இறங்கிய காட்சி. அதை ஜூம் செய்தவனுக்கு அதன் நம்பர் பிளேட் தெரிய அதைக் குறித்து கொண்டவன் “அச்சு! கிளம்புடா. இதை வச்சு அவளை எங்க பிக்கப் பண்ணுனாங்கன்னு கண்டுபிடிச்சுடலாம்” என்று சொல்லிவிட்டு எழும்பினான். செல்வதற்கு முன் மேனேஜரிடம் “உங்க பவுன்சர்ஸுக்கு விவரம் பத்தாது மிஸ்டர் மேனேஜர். ஊபர் டாக்சில வர்றவங்கல்லாம் உள்ளே நுழையற அளவுக்கா உங்க பப்போட ஸ்டேண்டர்ட் அண்ட் கிளாஸ் லோ ஆயிடுச்சு?” என்று அவரை சீண்டி விட்டுச் செல்ல தவறவில்லை. அஸ்வின் “ஏன்டா இந்த வேலை உனக்கு? இப்போ அந்தாளு பவுன்சர்சை போட்டு லெஃப் அண்ட் ரைட் வாங்க போறான்” என்று சொல்ல “வாங்கட்டும்டா அச்சு. கெஸ்டை உள்ளே விடுறப்போ பார்த்து விசாரிச்சு அனுப்ப தானே அவங்க இருக்காங்க. அதை சரியா செய்யலைனா அவன் இருந்தா என்ன போனா என்ன?” என்றபடி கூலர்ஸை கண்ணில் மாட்டிக் கொண்டே காரில் அமர அஸ்வினும் அவனுடனே காரில் ஏறினான். “ரொம்ப நல்ல எண்ணம்டா உனக்கு” என்று சொன்னவனை பார்த்து சத்தம் போட்டு சிரித்தவன் “போற போக்குல ஒரு பொதுச்சேவைடா மச்சான்” என்று கண் சிமிட்டியபடி காரை ஸ்டார்ட் செய்தான். “அச்சு! உன்னோட கார் இங்கே நிக்குதேடா” என்றவனின் தோளில் தட்டிய அஸ்வின் “டோன்ட் ஒரிடா, நான் டிரைவரை வரச் சொல்லிட்டேன். நீ காரை எடு. தொகுதிப் பக்கம் போவோம்” என்று சொல்ல கார் தொகுதியை நோக்கி செல்ல தொடங்கியது. அபிமன்யூ ஒரு மெல்லிய புன்னகையுடன் காரை ஓட்டி கொண்டிருக்க அஸ்வினுக்கு அவன் செய்கை வித்தியாசமாக தோன்றியது. “டேய் மச்சான்! உனக்கு அந்தப் பொண்ணு மேல கொலைவெறி வரலைனாலும் பரவால்ல அட்லீஸ்ட் நம்மளை முட்டாளாக்கினவ மேல கோவம் கூடவா வரலை?” என்று சந்தேகத்துடன் அவனைப் பார்க்க அவன் ஒரு கையால் ஸ்டியரிங் வீலை வளைத்தபடியே “ச்சே ச்சே! எனக்கு அவ மேல கோவமே வரலடா. கிரிமினல் லாயரான என் கிட்டவே கேடித்தனம் பண்ணிட்டுப் போனால்ல, அந்த டேலண்டை பாராட்டணுமே தவிர கோவப்படக்கூடாதுடா மடையா” என்றான் இன்னொரு கையால் நண்பனின் தலையை கலைத்தபடி. அஸ்வின் அவன் கையைத் தட்டிவிட்டவன் “இதுவே ஒரு பையனா இருந்துருந்தா சாருக்கு இப்பிடி தோணிருக்காது. பொண்ணா போனதும் இரக்கம், கருணைலாம் இதயத்துல அப்பிடியே பொங்குமே” என்று கிண்டலடிக்க “பெண்கள் நாட்டின் கண்கள்டா அச்சு” என்று நண்பனிடம் கேலி செய்தவனை நக்கலாக பார்த்த அஸ்வின் “நம்பிட்டேன்டா நல்லவனே” என்று சொல்ல இருவரும் சிரித்தபடியே தொகுதியை அடைந்தனர். அதற்குள் அங்கே சென்றிருந்த சகாதேவன் மகனை கண்டதும் “அபி இதை போட்டுக்கோ” என்று அவன் கழுத்தில் கட்சித்துண்டை போட அவன் “சித்தப்பா எதுக்கு இது?” என்று கேட்டுவிட்டு கூலர்ஸை கழற்றினான். அஸ்வின் “டேய் நீ வேட்பாளர்டா. ஒரு கேண்டிடேட்டுக்கு இதுலாம் மஸ்ட்” என்று சொன்னபடி அவனுடன் நடக்க ஆரம்பித்தான். அபிமன்யூ கூட்டத்தைப் பார்த்து சிரித்தபடியே நடந்தவன் மேடையில் ஏறி அனைவருக்கும் வணக்கம் சொல்ல கூட்டம் ஆர்ப்பரித்தது.
கடந்தமாதத்தில் படிப்படியாக குறைந்துவந்த தங்கத்தின் விலை இந்த மாததுவக்கத்திலிருந்தே உயரத்தொடங்கியுள்ளது. சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 அதிகரித்து, 22 கேரட் தங்கம் ஒரு சவரன் 38,200 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதன்படி, ஒரு கிராம் 70 ரூபாய் அதிகரித்து 4,775 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் ஒரு சவரன் 38 ஆயிரத்தை தாண்டியது குறிப்பிடத்தக்கது. இதேபோல், வெள்ளி கிலோவுக்கு 4,200 ரூபாய் அதிகரித்து 66,700 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பின் வீழ்ச்சி உள்ளிட்ட காரணங்களால் தங்கம் விலை உயர்ந்துள்ளது. படித்ததில் பிடித்தது சிந்தனைத்துளிகள் கடுங் குளிர் நிறைந்த ஒரு இரவில் ஒரு மன்னன் தன் அரண்மனைக்கு வந்தான்.அரண்மனைவாசலில் மெல்லிய […] பொது அறிவு வினா விடைகள் விஜயின் வாரிசு படத்திற்கு இப்படிஒரு சிக்கலா?..அதிர்ச்சி தகவல் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படும் வாரிசு திரைப்படம் புதிய சிக்கலில் சிக்கி இருப்பதால் அவரது […] உற்பத்தி துறையில் இந்தியா வளர்ச்சி அடைந்து வருகிறது- பிரதமர் பெருமிதம் உற்பத்தித் துறையில் இந்தியா தொடர்ந்து வளர்ச்சி அடைந்து வருகிறது என்று பிரதமர் மோடி பெருமிதத்துடன் கூறியுள்ளார்.உற்பத்தித் […] குறள் 330 உயிருடம்பின் நீக்கியா ரென்ப செயிருடம்பின்செல்லாத்தீ வாழ்க்கை யவர் பொருள் (மு.வ): நோய் மிகுந்த உடம்புடன் வறுமையான […] டிஜிட்டல் அவதாரம் எடுக்கும் எம்.ஜி.ஆர் படம் புரட்சி தலைவர் எம்ஜிஆர் நடிப்பில் 1974 ஆம் ஆண்டு வெளியான ‘சிரித்து வாழ வேண்டும்’ திரைப்படம் […] அஜித்தின் புதிய லுக்…செம மாஸ் துணிவு படத்தின்படப்பிடிப்புகள் முடிந்தநிலையில் அஜித் செமமாஸான புதிய தோற்றத்தில் காட்சியளிக்கிறார்.எச். வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து […] மின்சாரம் தாக்கி உயிரிழந்த திமுக பிரமுகர்- துரைமுருகன் அஞ்சலி பேனர் கட்டும்போது மின்சாரம் தாக்கி உயிரிழந்த திமுக பிரமுகர் உடலுக்கு அமைச்சர் துரைமுருகன் நேரில் அஞ்சலி […] சென்னையில் பெட்ரோல், டீசல் விலை நிலவரம்..! சென்னையில் 193-வது நாளாக பெட்ரோல், டீசல் ஒரேவிலையில் நீடிக்கிறது.சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை […] உதகை அருகே ஹயாகா சென்ற சிறுத்தை- வைரல் வீடியோ கன்னேரிமுக்கு, எடக்காடு சாலையில் ஹயாகா சென்ற சிறுத்தை வாகன ஓட்டிகளை பார்த்து உறுமியதுநீலகிரி மாவட்டம் உதகை […] பழனி முருகன் கோவிலில் இன்று கார்த்திகை தீபத்திருவிழா தொடக்கம் திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா இன்று காப்புக்கட்டுதலுடன் தொடங்குகிறது. 7 நாட்கள் […] சென்னை திருவொற்றியூர் ரயில் நிலையத்தின் பயணிகள் நடைபாதையில் வட மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் ஆபத்தான நிலையில் அமர்ந்து இருந்தவரை சாதுர்யமாக மீட்ட போலீசார் புதுச்சேரி மணக்குள விநாயகர் கோயில் யானை லட்சுமி திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தது திருநெல்வேலி : திருநங்கைகளுக்கான குறைதீர்க்க கூட்டத்தில் கல்லூரி படிக்கும் தனக்கு படிக்க உதவியாக லேப்டாப் வேண்டும் என ஆட்சியரிடம் திருநங்கை ஒருவர் கோரிக்கை வைத்தார் கூட்டம் நிறைவு பெறும் முன்பு புதிய லேப்டாப்பை வாங்கி கொடுத்த மாவட்ட ஆட்சியர் விஷ்ணு தேவாரம் திருவாசகம் எல்லாம் கருவறைக்குள் பாட அனுமதி இல்லை ஏன் இல்லை ? அதை எல்லாம் ஆகமம் அனுமதிக்கவில்லை – ஆனால் அர்ச்சனை சீட்டு விற்க அனுமதியை எந்த ஆகமம் கொடுத்திருக்கிறது ?? – பேச்சாளர் சுகி சிவம்
சாம்பியன்ஸ் கோயப்பைத் தொடரில் இருந்து இந்திய அணி அடுத்தடுத்து தொடர்களில் விளையாடி வருகிறது. வெஸ்ட் இண்டீஸ், இலங்கை, ஆஸ்திரேலியா தற்போது நியூசிலாந்து என அடுத்தடுத்து ஓய்வில்லாமல் கிரிக்கெட் விளையாடி வருகிறது இந்திய அணி. இலங்கயுடனான் 3 டெஸ்ட் 5 ஒருநாள் 3 டி20 பின்னர் ஆஸ்திரேலிய அணியுடன் 5 ஒருநாள் மற்றும் 3 டி30 தற்போது நியூசிலாந்துடன் 3 ஒருநாள் மற்றும்3 டி20 போட்டிகள் அடுத்து இலங்கை அணி இந்தியா வரவுள்ளது அப்போது 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் முடிவடைந்த உடனடியாக தென்னாப்பிரிக்க அணியுடனான முழு அளவிளான தொடருக்கு தென்னாப்பிரிக்கா பயணம் செய்கிறது இந்திய அணி. தென்னாப்பிரிக்க பயணம் முக்கியத்துவம் வாய்ந்தது, இந்திய அணி கிட்டத்தட்ட 6 மாதங்கள் இந்தியாவின் வெற்றிகரமாக தொடர்களை வெற்றி பெற்று பின்னர் ஜனவர் 5ஆம் தேதி தென்னாப்பிரிக்காவில் நடக்கும் முதல் டெஸ்ட் போட்டிக்கு அங்கு செல்கிறது. அங்கு 3 டெஸ்ட் போட்டிகள் 6 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகளில் இந்திய அணி களம் காண்கிறது. தொடர்ந்து இந்தியாவில் தனது ஆதிக்கத்தை செலுத்தி டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் முதல் இடத்தைப் பிடிக்கும் இந்திய அணி வெளிநாடுகளில் என்ன செய்யப்போகிறது என்பதைக் காண உலக கிரிக்கெட் அணிகள் உற்று நோக்க்கியுள்ளது. மேலும், தொடர்ந்து இவ்வாறு ஆடும் இந்திய அணிக்கு அவ்வப்போது ஓய்வு தேவை. பந்து வீச்சாளர்களை சுழற்சி முறையில் ஆட வைக்கிறது இந்திய அணி. மேலும், ஒரு தோனி போ ரகானே போன்ற ஒரு சில வீரர்கள் ஒரு சில ஃபார்மட் மட்டுமே ஆடுகின்றனர். ஆனால், கோலி மற்றும் பாண்டியா போன்ற (தவான் விடுப்பு எடுத்துள்ளார்) வீரர்கள் ஓய்வில்லாமல் அடுத்தடுத்து மூவிதமான போட்டிகளிலும் ஆடி வருகின்றனர். இதன் காரணமாக கோலிக்கு ஓய்வு தேவை என பல்வேறு ஊடகங்களிலும் சமூக வலை தளங்களிலும் விவாதங்கள் நடைபெற்றது. கடந்த ஆஸ்திரேலியத் தொடர் துவங்கும் முன் நிரூபர்கள் கோலியிடம் சிறு ஓய்வு பற்றி கேட்ட போது, “எனக்கு ஏன் ஓய்வு தேவைப்படுகிறது? நான் தற்போது ஓய்வு எடுக்க வேண்டும் என நீங்கள் எப்படி தீர்மாணிக்கிறீர்கள்? இந்த வதந்திகள் எல்லாம் எங்கிருந்து வருகின்றது என எனக்கு தெரியவில்லை” என நிரூபர்களிடம் கடிந்து கொண்டார். தற்போதும் இலங்கையுடனான முதல் 2 டெஸ்ட் போட்டிகளுக்கு கோலி கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதன் காரணமாக மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு அவருக்கு ஓய்வு அளிக்கப்படும் என கூறப்பட்டது. இது பற்றி இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் மற்றும் தற்போதைய இந்திய அண்டர்-19 அணியின் பயிற்சியாளர் ராகுல் ட்ராவி கூறியதாவது, அவருக்கு ஓய்வு வேண்டுமானால் அவர் கேட்டு பெற்றுக்கொள்வார், மேலும் இப்படி கேட்பது ஒரு தேவையிள்ளாத ஒரு சர்ச்சைக் கேள்வியாகும். எல்லோருக்கும் தான் ஓய்வு தேவைப்படுகிறது. சுழற்சி முறையில் வீரர்கள்ளுக்கு வாய்ப்பளித்தால் போதும். அணி நிர்வாகம் அதற்கான வேலைகளை செய்கிறது. எனக் கூறினார் ராகுல் ட்ராவிட். Tagged: Hardik Pandya, India vs austraia, India vs New Zealand, India vs Southafrica 2018, Rahul Dravid, Virat Kohli Leave a comment Your email address will not be published. Required fields are marked * Comment * Name * Email * Website Δ Recent Posts சென்னை சூப்பர் கிங்ஸ் இல்லை… பென் ஸ்டோக்ஸை ஏலத்தில் எடுக்க போவது இந்த அணி தான்; ரவிச்சந்திர அஸ்வின் உறுதி !! ஐந்து பந்துவீச்சாளர்கள் போதும்… இந்த பையனுக்கு ஒரு வாய்ப்பு கொடுங்க; இந்திய அணிக்கு முன்னாள் வீரர் கோரிக்கை !!
பொழிப்பு (மு வரதராசன்): வேறு தெய்வம் தொழாதவளாய்த் தன் கணவனையே தெய்வமாகக் கொண்டு தொழுது துயிலெழுகின்றவள் பெய் என்றால் மழை பெய்யும்! மணக்குடவர் உரை: தெய்வத்தைத் தெய்வமென்று தொழாளாய், எல்லாத் தெய்வமுந் தன்கணவனென்றே கருதி, அவனை நாடோறுந் தொழுதெழுமவள் பெய்யென்று சொல்ல மழை பெய்யும். எழுதல்-உறங்கி எழுதல். பரிமேலழகர் உரை: தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுது எழுவாள் பெய்என - பிற தெய்வம் தொழாது தன் தெய்வம் ஆகிய கொழுநனைத் தொழாநின்று துயிலெழுவாள் 'பெய்' என்று சொல்ல; மழை பெய்யும்-மழை பெய்யும். (தெய்வம் தொழுதற்கு மனம் தெளிவது துயிலெழும் காலத்தாகலின், 'தொழுது எழுவாள்' என்றார். 'தொழாநின்று' என்பது, 'தொழுது' எனத் திரிந்து நின்றது. தெய்வந்தான் ஏவல் செய்யும் என்பதாகும். இதனால் கற்புடையவளது ஆற்றல் கூறப்பட்டது) நாமக்கல் இராமலிங்கம் உரை: (கற்புடைய மனைவியின் சிறப்பு என்னவெனில்) கற்புடைய பெண் தெய்வத்தைக் கூட தொழமாட்டாள். அவள் கணவனையே தெய்வமாக வணங்கிச் சிறப்படைவாள். அப்படிப்பட்டவள் பெய் என்று சொன்னால் மழை பெய்யும்படியான தெய்வபலம் உள்ளவள். பொருள்கோள் வரிஅமைப்பு: தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுது எழுவாள் பெய்என மழை பெய்யும். பதவுரை: தெய்வம்-கடவுள்; தொழாஅள்-வழிபடாதவள்; கொழுநன்-கணவன்; தொழுது-வழிபட்டுக்கொண்டு; எழுவாள்-எழுந்திருப்பவள்; பெய்-பொழிவாய்; என-என்று சொல்ல; பெய்யும்-பொழியும்; மழை-மழை. தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்: இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்: மணக்குடவர்: தெய்வத்தைத் தெய்வமென்று தொழாளாய், எல்லாத் தெய்வமுந் தன்கணவனென்றே கருதி, அவனை நாடோறுந் தொழுதெழுமவள்; மணக்குடவர் குறிப்புரை: எழுதல்-உறங்கி எழுதல். பரிப்பெருமாள்: தெய்வத்தைத் தெய்வமென்று தொழாளாய், எல்லாத் தெய்வமுந் தன்கணவனென்றே கருதி, அவனை நாடோறுந் தொழுதெழுமவள்; பரிப்பெருமாள் குறிப்புரை: எழுதல்-உறங்கி எழுதல். பரிதி: குலதேவதையைக் கும்பிடாள் தன்பத்தாவைத் தெய்வமென்று தொழுதபடியால்; [குலதேவதை-அந்தந்த குலத்தினரால் தொன்றுதொட்டு மரபுக்கு உரியதாக வைத்து வழிபடு தெய்வம்; பத்தா-கணவன், பர்த்தா என்பதன் சிதைசொல்.] காலிங்கர்: வேறொரு கடவுளையும் வணங்காதவளாய்த் தன் கணவனையே நாடோறும் வணங்கி எழுகின்றாள் யாவள்? பரிமேலழகர்: பிற தெய்வம் தொழாது தன் தெய்வம் ஆகிய கொழுநனைத் தொழாநின்று துயிலெழுவாள்; பரிமேலழகர் குறிப்புரை: தெய்வம் தொழுதற்கு மனம் தெளிவது துயிலெழும் காலத்தாகலின், 'தொழுது எழுவாள்' என்றார். 'தொழாநின்று' என்பது, 'தொழுது' எனத் திரிந்து நின்றது. மணக்குடவர் 'எல்லாத் தெய்வமும் தன் கணவன் என்று கருதி அவனை நாள்தோறும் தொழுது எழுபவள்' என்றும் பரிதி 'குலதேவதையைக் கும்பிடாமல் தன்கணவனைத் தெய்வமென்று தொழும்' பெண் என்றும். காலிங்கரும் பரிமேலழகரும் 'வேறொரு கடவுளையும் வணங்காதவளாய்த் தன் கணவனையே வணங்கி எழுபவள்' என்றும் இப்பகுதிக்கு உரை நல்கினர். இன்றைய ஆசிரியர்கள் 'தெய்வத்தை வணங்காது கணவனை வணங்குபவள்', 'பிறதெய்வம் தொழாமல் தன் கணவனையே கண்கண்ட தெய்வமாய்த் தொழுது எழுபவள் கற்பாற்றலால்', 'தெய்வத்தை தொழாதபோதும் கணவனையே தெய்வமாகத் தொழுது காலையில் எழுகின்றவள்', 'பிற தெய்வங்களை வணங்காமல் கணவனாகிய கடவுளையே தொழுதுகொண்டு உறக்கத்தினின்றும் எழுபவள்' என்ற பொருளில் உரை தந்தனர். தெய்வத்தைத் தொழாதவளாய் தன் கணவனை வணங்கி எழுகின்றவள் என்பது இப்பகுதியின் பொருள். பெய்யெனப் பெய்யும் மழை: இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்: மணக்குடவர்: பெய்யென்று சொல்ல மழை பெய்யும். பரிப்பெருமாள்: பெய்யென்று சொல்ல மழை பெய்யும். பரிப்பெருமாள் குறிப்புரை: எழுதல்-உறங்கி எழுதல். தெய்வமும் ஏவல் செய்யும் என இம்மைப்பயன் கூறிற்று. பரிதி: அவள் சொல்ல மழை பெய்யும் என்றவாறு. காலிங்கர்: மற்றிவள் இவ்வுலகத்து மழை வறங்கூர்ந்த காலத்து வானைக் குறித்து 'வந்து பெய்வாயாக' என்று சொன்ன அளவிலே வந்து பொழியும் மழை. [வறங்கூர்ந்த காலத்து-வறட்சிமிக்க காலத்து] பரிமேலழகர்: 'பெய்' என்று சொல்ல மழை பெய்யும். பரிமேலழகர் குறிப்புரை: தெய்வந்தான் ஏவல் செய்யும் என்பதாகும். இதனால் கற்புடையவளது ஆற்றல் கூறப்பட்டது. ''பெய்' என்று சொல்ல மழை பெய்யும்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர். இன்றைய ஆசிரியர்கள் 'பெய்யென்றால் மழையும் பெய்யுமே', 'பெய் என்று ஆணையிட்டால் மழை பெய்யும்', 'மழையைப் பெய்யென்று சொல்ல அது பெய்யும்', 'பெய் என்று சொன்னால் பெய்யும் மழைக்கு ஒப்பாவாள்' என்றபடி பொருள் உரைத்தனர். 'பெய்யட்டும்' என்று சொன்னால் மழை பெய்யும் என்பது இப்பகுதியின் பொருள். நிறையுரை: தெய்வத்தைத் தொழாதவளாய் கணவனை வணங்கி எழுகின்றவள் 'பெய்யட்டும்' என்று சொன்னவுடன் மழை பொழியும் என்பது பாடலின் பொருள். 'தெய்வம் தொழாப்' பெண் பற்றியா குறள் பேசுகிறது? 'கணவனைத் தொழுதெழும் மங்கை'யா இப்பாடலில் சொல்லப்படுகிறாள்? தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்: இக்குறளின் முதலடியிலுள்ள 'தெய்வம் தொழாஅள்', 'கொழுநன் தொழுதெழுவாள்' ஆகிய இரண்டு தொடர்களும் வள்ளுவத்துக்கு முரணாகத் தோன்றுகின்றன. தெய்வம் தொழாத பெண்ணையா வள்ளுவர் போற்றுகிறார்? கணவனைத் தொழுதெழும் மங்கையா இங்கு பேசப்படுகிறாள்? இப்பகுதியிலுள்ள முதல் தொடரான 'தெய்வம் தொழாஅள்' என்றது 'கடவுளை வணங்காத பெண்' என்ற பொருள் தரும். கோளில் பொறியில் குணமிலவே எண்குணத்தான் தாளை வணங்காத் தலை (கடவுள்வாழ்த்து 9 பொருள்: கடவுளின் திருவடியை வணங்காத தலைகள், பொறிகள் இருந்தும் புலன்கள் அற்றவை போல, உணர்வில்லாதவை) என்று முதலதிகாரத்தில் கூறிய வள்ளுவர் தெய்வத்தைத் தொழவேண்டா என இங்கு சொல்லியிருக்கமாட்டார் என எண்ணினர் சிலர். திருவள்ளுவரடிமை முருகு ''தெய்வம் தொழாஅள்' என்ற தொடர்க்குத் 'தெய்வத்தைத் தொழவேண்டியதில்லை என்று இங்கு சொல்லப்பட்டுள்ளது என்பது தவறான கருத்து; திருவள்ளுவர் இறைவனைத் தொழவேண்டும் என வலியுறுத்துபவர்; (அக்காலத்தில்) பெண்கள் கணவனைத் தொழுததாகத் தெரியவில்லை. தெய்வங்களைத் தொழுது வந்ததாக வரலாறும் இலக்கியங்களும் இயம்புகின்றன; ஆகவே வேறு தெய்வத்தைத் தொழாமல் கணவனைத் தொழுது எழுவாள் என்பதாகப் பொருள் கொள்வது பொருந்தாது; தெய்வம் தொழாள் என்பதற்கு நாடோறும் வணங்கத்தக்க தெய்வத்தையே ஒருக்கால் தொழாது போனாள் ஆயினும் எனக் கொள்வது பொருத்தமாகப் படுகிறது' என விளக்கம் தந்தார். வேறு சிலர், இக்குறளில் பேசப்படும் பெண் 'தெய்வம் தொழுபவளே' என்பதை நிறுவுவதற்காக புது விளக்கங்கள் கண்டனர். அவர்கள், 'இப்பாடலில் சொல்லப்பட்ட தெய்வம் குலதெய்வம், சிறுதெய்வம் அல்லது இல்லுறை தெய்வம் குறித்தது' எனவும் 'இங்கு கூறப்படுவது தேவர்களை வணங்கமாட்டாத வாழ்க்கைத் துணைவி' எனக் கொள்ளமுடியும் எனவும் விளக்கம் செய்தனர். 'முதலில் தெய்வத்தை வணங்காளாய்த் தன் கணவனையே வணங்கிக்கொண்டு எழுபவள்' என்பதாகவும் ஓர் உரை கூறுகிறது. காமாட்சி சீனிவாசன் கூறுவதாவது: 'அன்பின் மிகுதியால் எப்பொழுதும் தன் கணவன் நினைவாகவே யிருக்கும் பெண் துயிலெழும்போதும் அவன் நினைவாகவே எழுவாள் என்பது கருத்துப் போலும்.' அடுத்ததான 'கொழுநன் தொழுதெழுவாள்' என்ற தொடர்க்கு 'கணவனைத் தொழுது எழுபவள்' என்பது பொருள். இதை மனைவி துயில் எழும்பொழுது கணவனைத் தொழுது எழுபவள் என விளக்கினர். குறளில் சொல்லியுள்ளபடி 'தொழுது எழுவது எப்படி?' என்று சிலர் வினவினர். இதற்கு 'எழுந்து தொழுவாள் என முன்பின்னாகப் பிறந்தது' அதாவது 'தொழுது எழவில்லை; எழுந்து தொழுவதே குறிப்பிடப்பட்டுள்ளது' என்பதாகப் பதில் கூறப்பட்டது. தொழுது எழுவதா அல்லது எழுந்து தொழுவதா என்று ஆராய்வது தேவையற்றது, 'வேறு எந்தத் தெய்வத்தையும் தொழாமல் தன் கணவனையே தெய்வமாக நினைத்துத் தொழும் பெண்'தான் பேசப்படுகிறாளா என்பதுதான் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டியது. 'மனையாள் எதற்காக நாளும் தன் கணவனைத் தொழவேண்டும்? ஆணைத் தொழுதெழ வேண்டும் என்று பெண்ணுக்கு கூறப்பட்டிருந்தால் பெண்ணைத் தொழுதெழ வேண்டும் என்று எங்காவது ஆணுக்கும் அறிவுறுத்தப்பட்டிருக்க வேண்டும் அல்லவா' என்பது நேர்மையான கேள்வி. 'காதலால் கட்டுண்ட இல்வாழ்வில், பெண்பாலர் மட்டுமே தாழ்ந்து வணங்கியவர்களாக உள்ளது ஒத்த அன்பைக் காட்டுவதாகாது; இந்தப் பாடலையே குறளிலிருந்து நீக்க வேண்டும்' என்னும் அளவிற்கு இக்குறட்கருத்தை மறுப்பவர்கள் போர்க் குரல் கொடுக்கின்றனர். இதற்குக் குறள் பற்றாளர்களால் அமைதி கூற இயலவில்லை. 'சிறியவளான மனைவி வயதில் மூத்த கணவனை வணங்குகிறாள்'; 'அன்பு மேலீட்டால்தான் மனைவி தன் விருப்பமாகத் தொழுகிறாள்'; 'துயில் கொள்ளுங்காலும் துயிலுங்காலும் கொழுநனைத் தொழுது கொண்டே துயில்வாள், தெய்வந் தொழுதல் மற்றைய காலத்திலே'; 'கணவன் வணங்கத்தக்கவனாகத் திகழ வேண்டும் எனும் கருத்தை வலியுறுத்துவது இது' என்றவாறான, இக்குறளில் சொல்லப்பட்ட கருத்தைத் தாங்கவந்த உரைகள் ஏற்கும்படி இல்லை. எப்படிப்பட்ட கணவனை இக்குறள் சொல்கிறது என்பதற்கும் எந்தக் குறிப்பும் இல்லை. முந்தைய அதிகாரமான இல்வாழ்க்கையில் இல்வாழ்வானுக்குரிய இலக்கணம் சொல்லப்பட்டாலும் இங்கு கொழுநன் என்ற சொல்லுக்கு முன் அவன் தொழத்தக்கவனாக இருக்கும் பண்பு கொண்ட ஒரு அடைச் சொல் இருந்திருக்கலாம்; அதுவும் காணப்படவில்லை. கடவுளை வழிபடாது கணவனைத் தொழுவது என்றால், தெய்வத்திற்கு இணையாகக் கொழுநன் ஆகிவிடுகிறான். அப்படியானால் ஆண்களின் ஆதிக்க நிலையையும், பெண்கள் கணவனை வணங்கி, ஏவல் பணி செய்பவர்கள் என்ற உணர்வையும் இது ஏற்படுத்துகிறது என்ற குற்றச்சாட்டில் உண்மை இல்லாமல் இல்லை. இச்சொற்றொடர் பற்றிய வா செ குழந்தைசாமியின் கருத்துரை வருமாறு: 'சிலர் முடிந்தவரை இன்றைய பின்னணிக்குப் பொருந்தும் கருத்துக்களை வலிந்து மேலேற்றிக் கூறும் முயற்சியில் ஈடுபடுகின்றனர். 'கொழுநன் தொழுதெழுவாள்' என்பதை 'கொழுநன் தொழ எழுவாள்' என்று மாற்றி, தமது கொழுநர் தொழும் அளவிற்கு உயர்ந்த நிலைக்கு எழும் பெண்கள் என்று பொருள் கூறுவர். இது முறையன்று. இப்படிப்பட்ட முயற்சிகள் அறிஞருலகம் ஏற்கத் தக்கனவல்ல. பயன் தருவனவுமல்ல, தேவையுமில்லை.' வள்ளுவர் உள்ளத்தை நன்குணர்ந்த அறிஞர்களுக்கே குறளின் முதலடியைப் புரிந்துகொள்வதில் இடர்ப்பாடு உண்டாகிறது. திரு வி கலியாணசுந்தரம் (திரு வி க) உளம் திறக்கிறார்: 'பன்னெடுநாள் என்னெஞ்சில் குடிகொண்ட பாக்கள் சிலவற்றுள் இதுவும் ஒன்று. பாடபேதமிருக்குமோ என்று ஐயுற்ற நாளும் உண்டு'. பாடவேறுபாடாக இருக்கக் கூடாதா என்று ஏக்கமுற்ற அவர் தொடர்ந்து. 'பண்டையாசிரியர் சிலர் இக்குறளை உள்ளவாறே ஆண்டுள்ளமையால் ஐயப்பாட்டுக்கு இடமில்லை என்ற தெளிவும் ஏற்படுவதுண்டு' என்று ஏமாற்றம் மேலிட உரைக்கிறார். பெய்யெனப் பெய்யும் மழை: இது பாடலின் ஈற்றடி. மனிதரில் மேம்பட்டோர் இயற்கை கடந்த அருநிகழ்வுகள் செய்ய வல்லவர்கள் என்பது காலந்தோறும் நம்பப்படுவது. கற்பென்னும் திண்மை கொண்ட பெண், 'மழையே, பெய்!' என்று சொன்னவுடன் மேகம் அந்த ஆணைவழி நடந்து மழை பொழிய வைக்கும் ஆற்றல் பொருந்தியவள் என்ற பொருள் நல்குவது இப்பகுதி. இல்வாழ்வுக்குத் துணையாக நிற்கும் பெண்ணின் மாண்பைச் சிறப்பிக்க அவள் தவவலிமைவுடையவள் என்றும் பல ஆற்றல்கள் கைவரப் பெற்று நிறை மகளாக இலங்குகிறாள் என்றும் சொல்வது ஈற்றடியின் நோக்கம். பாட்டிலே நயங்கருதிப் பெய்யெனப் பெய்யும் மழை என்று புனைந்துரைக்கப்பட்டது. ஆனால் இதை ஏற்றுக் கொள்ளாது கற்புடைப் பெண்டிர் மழை பெய் என்று சொன்னால் மழை பெய்யுமா? எனச் சிலர் வினவுகின்றனர். மழை பிறர் விருப்பத்திற்கேற்பப் பெய்யுந் தன்மையுடையதன்று. இயற்கைச் சூழ்நிலைக்கேற்ப அது பெய்யும் அல்லது பெய்யாது போகும் என்பது உண்மைதான். கவிதை என்பது நாடக வழக்கு கொண்டது; உயர்வாக்கம் கொண்டது. உண்மையை உள்ளவாறே கூற வேண்டும் என்பது கவிதைக்குக் கிடையாது. கற்புள்ள பெண்கள் இறைத்தன்மை கொண்டவர்கள் என்று சொல்லவந்த வள்ளுவர் மழையை ஏவல் செய்யும் ஆற்றல் கொண்டவள் என்று உயர்வு நவிற்சியாக இங்கு கூறுகிறார். நற்குணம் கொண்ட வாழ்க்கைத்துணையின் சிறப்பை உயர்த்திக் கூறியது இது; அவ்வளவே. கவிதை உணர்வு உள்ளவர்கள் கற்புடையாள் ஏவலைக் கேட்டு மழை பெய்யுமா என்ற கேள்வி எழுப்பமாட்டார்கள். அளக்கமுடியாத ஒரு பொருளினை முற்றும் மேலாகச் சொன்னால்தான் எண்ணிய பெருமையை பிறர்க்கு உணர்த்த முடியும். பிற பழம் இலக்கியங்களில் நன்னெறி தவறாத பெண்டிர்க்காக மழைபெய்யும் என்ற கருத்துமரபில் உண்டான பாடல்கள்: வறன் ஓடின் வையகத்து வான்தரும் கற்பினாள் (கலித்தொகை 116:20 பொருள்; வானம் பொய்த்து வையகம் வறண்டுவிட்டால் மழையைப் பெய்விக்க வல்லவள் அவள்). அருமழை தரல்வேண்டின் தருகிற்கும் பெருமையளே (கலித்தொகை 39:6) மழைவளம் தரூஉம் பெண்டி ராயின் பிறர்நெஞ்சு புகாஅர் (மணிமேகலை 22; 45, 46); வான்தரு கற்பின் மனையறம் பட்டேன் (மணிமேகலை 22; 53); நல்ல மாந்தருக்காக மழை பெய்யும் என்று ஒளவையாரும் பாடியுள்ளார்: நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை (மூதுரை 10) என்று; மாதரார் கற்பின் நின்றன கால மாரியே என்று கம்பர் பின்னாளில் பாடியிருக்கிறார். பழமரபு நம்பிக்கைகளில் உடன்படாத புதுமைச் சிந்தனையாளர்கள் இப்பகுதிக்கு 'ஒருவர் மழை பெய்ய வேண்டும் என்று நினைக்கிற பொழுது பெய்யும் மழையைப் போன்றவள் கற்புடையவள்' என்று 'பெய்யெனப் பெய்யும் மழை' என உவமைப்படவே உரைத்தார் என்றனர். இப்புத்துரையின்வழி இவர்கள் என்ன சொல்லவருகிறார்கள் என்பது அறியக்கூடவில்லை. முடிப்பு இக்குறளின் முதலடி பேரிடராகவும் ஈற்றடி பெரு மழையாகவும் அமைந்து மிகையான வேறுவேறான கடிந்துரைகளை எதிர்கொண்டன. முதலடி வள்ளுவர் வரைந்ததுதானா என்று கேட்கும் அளவு நம்பமுடியாதபடி அமைந்துள்ளது. இரண்டாம் அடி கவிதை இன்பம் ஊட்டுவதாக ஏற்றம் மிகுந்து விளங்குகிறது. ஆயினும் இரண்டுமே மறுப்புரைகளுக்கு இலக்காயின. இக்குறள் பற்றிய எதிர்மறைக் கருத்துக்கள் பல. எல்லோரினும் பெண்ணுரிமை பேசுவோர் இப்பாடலைக் கடுமையாகத் தாக்கியுள்ளனர். அவர்களது குற்றச்சாட்டுகளில் சில மறுக்க முடியாதனவே. எல்லோரும் ஏற்கும்படியான உரை இக்குறளுக்கு இன்னும் எழவில்லை. 'தெய்வம் தொழாது கணவனை வழிபடு என்றாலே வள்ளுவனின் இல்வாழ்வுக் கோட்பாடுகள் தோற்றுப் போய்விடுகின்றன' என்ற கூற்று நேர்மையானதாகவே தோன்றுகிறது. ஆனாலும் வள்ளுவர் பெண்ணின் பெருமை பேசியவர் என்பதிலும் அவர் பெண்ணை இழிவுபடுத்துவதற்காக இக்குறளை எழுதவில்லை என்பதிலும் எவர்க்கும் ஐயமில்லை. இக்குறளும் பெண்ணை உயர்வுபடுத்திக் கூறவே எழுந்தது என்பதையும் நினைவிற் கொள்ளவேண்டும். "பெய்யெனப் பெய்யும் மழை" - எவ்வளவு இனிமையான வரி! பெய் என்று சொன்னவுடன் மழை பொழிந்து மனதுக்கு மகிழ்வளிக்கும் என்ற அழகிய கற்பனையை வள்ளுவரைத் தவிர வேறு எவராலும் இத்துணை ஆற்றல் மிக்க சொற்களால் மொழிய முடியாது. இக்குறளின் ஈற்றடி என்றும் படித்து மகிழத்தக்க உயர் கவிதை வரியாகும். அது சொல்லழகும் நடைநிமிர்வும் கொண்டு சிறந்து விளங்குகிறது. ‌மகளிரின் மன உறுதியைப் போற்றி, அவர்களது பெருமைக்குச் சிறப்பு சேர்ப்பதற்காகவும் அவர்கள்‌ மழையைப்‌ பெய் என ஏவிப் பணி கொள்ளும்‌ ஆற்றல்‌ பெற்று விளங்கினர் என்பதைப் புலப்படுத்தவே வள்ளுவர் இக்குறளை யாத்திருப்பார். 'கற்பு நெறி' மற்றும் 'பதிவிரதா தர்மம்' குறித்த கருத்துக்களையும் இவ்வேளையில் நோக்குவது நன்று. ராஜ் கௌதமன் "வள்ளுவர் 'வாழ்க்கைத் துணை நலத்'தில், தமிழ் மரபுக்கு ஒத்துப் போகிற விதத்தில் பதிவிரதா தருமத்தை எடுத்துக் கூறியமை புரியும்" என்கிறார். கற்பு என்பது திருமணம் ஆன ஒரு பெண் கணவனுக்கு உண்மையாயிருத்தலும், அவனைத் தவிர வேறு யாருடனும் உள்ள/உடலுறவு கொள்ளாத நிலையைக் குறிக்கும். இது கற்பு நெறியின் அடிப்படை. கற்பு நெறியின் முதல் படிநிலையைத் தாண்டி வெகுதொலைவு இட்டுச் செல்வது பதிவிரதா தர்மம் ஆகும். பதிவிரதா தர்மம் கூறுவன: 'கற்புடைய பெண் தன் கணவனைத் தெய்வமாகப் பேணுதல் அவளது கடமைகளில் ஒன்று; பெண்களுக்குப் ஐம்பெரு வேள்வி, நோன்பு இன்னபிற தருமங்களில் தனிஉரிமை இல்லை; கணவனுக்குப் பணிவிடை செய்வதாலேயே அவர்கள் சொர்க்கத்தில் பெருமை அடைகிறார்கள்; பதிவிரதா தர்மத்திற்குப் பதிவிரதையே முதற் பொறுப்பு. அந்த நோன்பை அவள் முழுவதுமாகக் கடைப்பிடிக்கும் வரை தர்மத்திற்குக் கேடு வராது; பதிவிரதா தர்மத்தின் படிநிலையில்- கணவன் என்ற தெய்வத்தை வழிபடுவதால் பதிவிரதைக்கு இயற்கை மீறிய ஆற்றலும் வசப்படுகிறது; பத்தினித் தெய்வம் என்ற நிலைக்கு உயர்கிறாள்.' கடவுள் வழிபாட்டினால் அடையக்கூடிய பயனை மனைவி தன் கணவனிடம் செலுத்தும் கற்பினால் அடைவாள். கணவனைத் தெய்வமாக வழிபடுவதால் மட்டுமே ஒரு மனைவி தன் பாலியல் ஒழுக்கத்தில் மீறல் வராதவாறு கட்டுப்படுத்த முடியும் அதாவது கணவனைத் தெய்வமாக வழிபடுவதால் அவளது கற்பு காப்பாற்றப்படுகிறது என்பது இத்'தரும'த்தின் உட்கிடக்கை. பதிவிரதா தர்மத்தின் கோட்பாடுகளில் கணவனைத் தெய்வமாக வழிபடுதல் என்றது இக்குறளில் எதிரொலிப்பதை உணரலாம். கற்பு நெறியின் முதல் படிநிலைதான் பெண்கள் விரும்பி ஏற்றுக் கொள்வது. ஆனால் பதிவிரதா தர்மம் பெண்களின்மேல் கட்டுப்பாடு மிகச் செலுத்திப் பேதைமையின் மேலெல்லையைத் தொடும் அளவுக்கான வேறு நிலைக்குப் பெண்ணைக் கொண்டு செல்வது - தொழுநோயாளியான கணவனின் விருப்பத்திற்காக அவனைக் கூடையில் வைத்துப் காமக்கிழத்தியின் இடத்துக்குத் தலையில் சுமந்து செல்லும் - பதிவிரதா தர்மத்துக்குக் காட்டாக அடிக்கடி சொல்லப்படும் - நளாயினி கதையை நோக்குக. இது இம்மண்ணின் மரபுக்கு ஒத்துப் போவதல்ல. கற்புடைய பெண் பேராற்றல் பெறுகிறாள் என்பது ஒப்பற்குரியது. ஆனால் தெய்வம் தொழாமல் கணவனைத் தொழுதெழும் பெண் என்பது ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல. இதுவே இப்பாடலின் குறைபாட்டுக்குக் காரணமாக அமைந்தது. 'இளங்கோவடிகள் வள்ளுவரின் மொழிநடையால் ஈர்க்கப்பட்டு சிலப்பதிகாரத்தில் இக்குறளின் அடியை அப்படியே எடுத்தாண்டுள்ளார்: தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுவாளைத் தெய்வம் தொழுந்தகைமை திண்ணிதால்- தெய்வமாம் மண்ணக மாதர்க்கு அணியாய கண்ணகி விண்ணக மாதர்க்கு விருந்து (கட்டுரை காதை) என்பது அப்பாடல். 'மற்றக் கடவுளைத் தொழாதவள்' என்றவுடன் இறை நம்பிக்கை பற்றிய எண்ணங்களும் எழுந்தன. தெய்வ வழிபாடுகளை மறுத்துரைக்கும் புத்தர் கொள்கையினை ஏற்றுள்ளது இக்குறள் எனப் பொருள்படும்படி தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யும் பெருமழை என்றஅப் பொய்யில் புலவன் பொருளுரை தேறாய் (மணிமேகலை 22; 65-70) என்ற மணிமேகலையின் வரிகள் அமைக்கப்பட்டன என்றனர் புத்த சமயத்தார். 'திருவள்ளுவர் பொய்யில் புலவர்; அவர் உரை பொருளுரையே; புனைந்துரையன்று' என்று மணிமேகலையாசிரியர் சீத்தலைச் சாத்தனார் இப்பாடலில் தெய்வம் தொழாத நிலையை (புத்த கொள்கைகளில் ஒன்றை) பாராட்டுவது போல் அமைத்தார் என்பர் அவர்கள். ஆனால் வள்ளுவர் கடவுள்உண்மை சொன்னவராதலாலும் கடவுள் மறுப்பாக இவ்வரிகள் பாடப்படவில்லை என்பதாலும், சமயவாதிகளின் கருத்து முற்றிலும் தவறானது. குறள் எழுதப்பட்ட காலத்தை நிறுவ மேற்சொன்ன இரண்டு பாடல்களும் (சிலப்பதிகாரம், மணிமேகலை) ஒருவகையில் உதவுகின்றன. மணிமேகலையும் சிலப்பதிகாரமும் ஒரே காலத்தவை. இக்காப்பியங்களில் மேலே கண்டவாறு இப்பாடல் வரிகள் மேற்கோள் கூறப்பட்டிருப்பதால் குறள் இவற்றிற்கு முன் தோன்றிய நூல் ஆகும் என்பது அறியப்பட்டது. சிலம்பில் இலங்கை வேந்தன் கயவாகு கண்ணகி கோயில் கட்டிமுடித்த விழாவிற்கு வந்தான் என்ற குறிப்பு ஒன்று உள்ளது; கயவாகு மன்னன் கி. பி. 2 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததவன் என்கிறது இலங்கை வரலாறு கூறும் மகாவம்சம் என்ற நூல். அந்த முறையில் குறள் கி பி 2-ம் நூற்றாண்டிற்கு முந்தியது என்று அது எழுதப்பட்ட காலத்தைக் கணிக்க இக்குறள் உதவுகிறது. தெய்வத்தைத் தொழாதவளாய் தன் கணவனையே வணங்கி எழுகின்றவள் 'பொழியட்டும்' என்று சொன்னவுடன் மழை பெய்யும் என்பது இக்குறட்கருத்து.
நன்றி: திரு #ஸ்டான்லிராஜன் தமிழகத்தில் கேட்க தொடங்கியிருக்கும் #ஒன்றியம் #ஜெய்ஹிந்த் சர்ச்சைகள் ஏதோ புதியது என்பது போல் பலர் பொங்கி கொண்டிருப்பதுதான் ஆச்சரியம் #திமுக வின் வரலாற்றில் இதெல்லாம் புதிதே அல்ல‌., அவர்களின் தேர்தல அறிக்கை எப்பொழுதும் செவ்வாய்கிரகத்தில் ~1/n #தமிழன் குடியேறி தமிழ் கிரகம் அமைத்து, தமிழ் சோறு பொங்குவது போல்தான் இருக்கும் ஆனால் ஆட்சிக்கு வந்து அவர்கள் செய்வதற்கும் அவர்களின் தேர்தல் அறிக்கைக்கும் சம்பந்தமே இருக்காது காரணம் அந்த தேர்தல் அறிக்கை எதுவும் நிறைவேற்றுவது போலவே இருக்காது 1967ல் #இலவசஅரிசி ~2/n #எல்லோருக்கும்_நிலம் என இன்னும் என்னவெல்லாமோ சொல்லி ஆட்சிக்கு வந்தார்கள் ஆனால் வந்து என்ன செய்தார்கள்? அறிக்கையில் சொல்லபடாத மதுகடையினை திறந்தார்கள், படுபயங்கரமான தோல்வியினை ஆட்சியில் கண்டார்கள் அந்த தோல்வியினை மறைக்க ராமர்படத்தை செருப்பால் அடித்தல், இந்திராமேல் தாக்குதல் ~3/n Read 16 tweets Related hashtags #சமூகநீதி #ஒன்றியம் #எல்லோருக்கும்_நிலம் #மதுவிலக்கு_எங்கடா #மீனவர்கள் #பெட்ரோல்_விலை_குறைப்பு_எங்கடா #இந்திரா #ஜெஜெ #கல்வி #ஒன்றியன் #திமுக #விவசாயக்கடன்_ரத்து_எங்கடா #கச்சதீவு #திராவிடியன் #தமிழன் #ஒன்றாதவன் #திராவிடன் #இலவசஅரிசி #மோடி #விவாசயி #ஜெய்ஹிந்த் #நீட் #இந்து #மதுவிலக்கு Did Thread Reader help you today? Support us! We are indie developers! This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.
சாரு தமிழில் பரவலாக அறியப்பட்ட நவீன மற்றும் பின் நவீனத்துவ எழுத்தாளர். என்றாலும் மலையாளம் மற்றும் ஆங்கில இலக்கிய வாசகரப் பரப்பிலும் நன்கு அறியப்பட்டவர். அவரின் எழுத்துகள் நான் லீனியர் மற்றும் ட்ராஸ்கிரசிவ் ( transgressive) எழுத்து என்பதால் தமிழ் வாசக பரப்பில் அதிக எதிர்ப்புகளை சம்பாதித்தவர் சாரு. நவீனத்துவ மற்றும் பின்நவீனத்துவ கோட்பாடுகளை ஆழமாக வலியுறுத்திய சாரு சர்ச்சைக்குரிய எழுத்தாளராக தமிழிலக்கிய உலகில் பார்க்கப்பட்டார். இதனால் பல இன்னல்களையும் இடையூறுகளையும் தொடர்ந்து சந்தித்து வந்துள்ளார். தவிர பொதுவில் தனிநபர் தாக்குதல்களுக்கும் ஆளாகி இருப்பதாகவும் அடிக்கடி தமது வலைதளத்தில் பகிர்வார். எவ்வளவு இன்னல்கள் இடையூறுகள் தனிநபர் தாக்குதல்கள் வந்தபோதும் அவைகளை ஒரு பொருட்டாக நினைக்காமல் யாரிடமும் எந்த சமரச போக்கும் வைத்துக் கொள்ளாமல் தான் படைக்கவிருக்கும் படைப்புகளுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து கடுமையான வாசிப்பு, தொடர் தேடல், உலக இலக்கிய ஆய்வு எழுத்து என அயராமல் உழைத்து இலக்கியத்திற்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டு வரும் ஒரு முக்கிய படைப்பாளி சாரு. தன் படைப்புகள் உலக இலக்கியத் தரம் வாய்ந்தவை என்று திண்ணமாகச் சொன்ன சாரு நிவேதிதாவின் கட்டுரைகள் தற்போது ஆங்கிலப் பத்திரிகைகளில் பிரசுரமாகி பிரபலமாகி வருவருவதையும் பலரும் அறிவர். சாரு எழுதிய மிக முக்கிய நாவலான `ஸீரோ டிகிரி’ உலகளவில் மொழிபெயர்க்கப்பட்டு பரந்த வாசகப்பரப்பைக் கொண்ட மிக பிரபலமான நாவலாக இன்றளவும் திகழ்ந்து வருகிறது. இந்தியாவின் ஐம்பது முக்கிய புத்தகங்களின் ஒன்றாக திகழும் இந்நாவல் சுவிட்லாந்தின் யான் மிஸால்ஸ்கி இலக்கிய விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர் தமிழுக்கு கிடைத்த மிக முக்கிய படைப்பாளி என்றாலும், மலேசிய தமிழிலக்கிய மண்ணில் இவர் இன்னும் பரவலாக அறியப்படும் எழுத்தாளராகத் திகழவில்லை என்பதுதான் வருத்தமளிக்கக்கூடிய ஒன்று. சாருவின் எழுத்து கொடுக்கும் உன்னத இலக்கிய வாசிப்பு அனுபவம் பற்றிய மகத்துவத்தை வார்த்தைகளால் சொல்லியோ அல்லது எழுத்துக்களால் எழுதியோ பிறருக்கு விளங்க வைத்துவிட முடியாது. நான் லீனியர் எழுத்தை அவ்வளவு எளிதாக உள்வாங்கி நாம் பெற்ற இலக்கிய அனுபவத்தை அப்படியே பிறருக்கும் பகிரலாம் என்று அதன் சாரம் கெடாமல் கதையாகச் சொல்லி எளிதாகக் கடந்துவிட முடியும் என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. அதன் வாசிப்பு அனுபவம் என்பது தியான நிலைக்கு ஒப்பானது. எழுத்தாளர் சாரு கிறங்க வைக்கும் வசீகர எழுத்துக்குச் சொந்தக்காரர். அவரின் கைவண்ணத்தில் தமிழில் பல முக்கிய நாவல்கள், சிறுகதைகள், அரசியல் சினிமா விமர்சனங்கள், விழிப்புணர்வுக் கட்டுரைகள், நேர்காணல்கள் என எண்ணிலடங்கா எழுத்துகள் நூல் வடிவமாக வந்திருப்பினும் அவரின் இணையத்தளத்திலும் பலதரப்பட்ட அனுபவப் பகிர்வுகள், வாசகர் கடிதங்கள், வசை பாடும் விமர்சன எழுத்துகள், மேற்கத்திய இசை அறிமுகம், உலக சினிமா, உலக இலக்கியம், ரஷ்ய எழுத்தாளர்கள், புதிய தொடர், நூல் அறிமுகம் என விடாமல் எழுதி பகிர்ந்த வண்ணம் இருப்பதைக் காணலாம். அவரின் இணையத்தளத்தை (charuonline) தொடர்ந்து வாசிக்கும் வாசகர்களுக்கு அது போதையூட்டும் வஸ்துவாக மாறி அங்கே வாசிப்பு கொண்டாட்டமாக அமைவதையும் உணரலாம். பத்தி எழுத்துகளுக்கு இலக்கிய அடையாளத்தை ஏற்படுத்தியவர் சாரு. அந்த வகையில் அவரின் பத்தி எழுத்தான பழுப்பு நிறப் பக்கங்கள் அவரின் கைவண்ணத்தில் உருவான ஒர் அற்புத இலக்கியப் பிரதி. கடந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில் தமிழ் இலக்கியச் சூழலில் இயங்கிய பேரிலக்கிய ஜாம்பவான்களைக் கண்டடைந்து அவர்களின் படைப்புகளில் பொதிந்திருக்கும் இலக்கியச் சாராம்சங்களை வலுவான ஆதாரங்களை துணையாகக் கொண்டு விரிவான விளக்கத்தின் மூலம் மூன்று பகுதிகளாக, எழுத்தாளர்களைப் பற்றியும் அவர்களின் படைப்புகள் குறித்தும் மிக ஆழமாக எழுதியிருக்கிறார். இவ்வரிய தொகுப்பானது தமிழுக்குக் கிடைத்துள்ள பொக்கிஷம். காரணம் இந்த மூன்று தொகுப்புகளையும் வாசிக்கும் வாசகனுக்கு ஒரே வாசிப்பு அனுபவத்தில் நூறு நாவல்களையும் ஆயிரம் சிறுகதைகளையும் வாசிப்பது போன்ற அனுபவம் கிடைக்கப் பெறுகிறது. இப்புத்தகத்தை எழுதிய சாருவே இதுபோன்றதொரு நூலை தன் வாழ்நாளில் இதுவரையிலும் எழுதியதில்லை என்றும், எப்படி இப்பேர்பட்ட எழுத்து தனக்கு வசமானது என்றும் சிலாகித்து வியக்கிறார் தமிழ்ப் படைப்புலகின் போக்கை மாற்றி அமைத்த முன்னோடிகள் பற்றிய அறிமுக நூலான பழுப்பு நிறப் பக்கங்கள் ஏற்கனவே இணையப் பதிப்பில் வெளியாகி பரந்த வாசகப் பரப்பைக் கொண்டு மிகுந்த பாராட்டைப் பெற்ற தொடர். மூன்று பாகங்களாக வந்திருக்கும் இத்தொகுப்பு ஒரு classic collection. முதல் பாகம் பதினாறு எழுத்தாளர்கள் கொண்ட தொகுப்பு, இரண்டாம் பாகம் ஐந்து எழுத்தாளர்களைப் பற்றியது. மூன்றாம் பாகம் ஆறு எழுத்தாளர்களைப் பற்றியது. மொத்தம் இருபத்தேழு எழுத்தாளர்களைப் பற்றிய இத் தொகுப்பானது வாசிப்பதற்கு இலகுவாக மிக எளிய நடையில் சாருவிற்கே உரித்தான எள்ளல் பகடி பாணியில் நகைச்சுவையாகவும் அதேவேளையில் மனபாரத்தைக் கொடுக்கும் எழுத்தாளர்களின் துயர் சொல்லும் கருப்பு பக்கங்களாகவும் இந்நூல் அமைகிறது. இந்நூலின் நாயகர்களை வெளிக்கொணர சாரு போட்ட உழைப்பை அவ்வளவு எளிதாக எண்ணி விடலாகாது.. ஒவ்வொருவராக அறிமுகம் செய்வதற்கு அவர்களைப் பற்றிய தேடலில் சிறப்பானதை நமக்குக் கொடுக்க அவர் எடுத்துக்கொண்ட வாசிப்பும் அதற்கான நேரமும் நம்மை பிரமிக்க வைக்கிறது. இத்தொகுப்பில் வரும் பலர் ட்ராஸ்கிரசிவ் மற்றும் பின்நவீனத்துவ எழுத்தாளர்கள். சமூக மூடத்தனங்களையும் போலித்தனங்களையும், குடும்ப வன்முறைகளையும், வாழ்வியல் ஆதாரங்களையும், பெண்ணடிமைத்தனத்தை யும், தாம்பத்திய துரோகங்களையும், அறியாமையின் உச்சத்தையும். தேகம் உடல் சார்ந்த நுண்ணிய உணர்வுகளையும், கீழ்மையான எண்ணங்களையும் கலவையாகச் சேர்த்து படைக்கப்பட்ட படைப்புகளை நிறைய அலசி ஆராய்ந்திருக்கிறார். கலாச்சார பின்னணியை ஆதாரமாக வைத்து அங்கே நிகழ்த்தப்படும் கொடுமைகளைக் கட்டுடைக்கும் ஆதவனின் கதைகள் மீண்டும் மீண்டும் வாசிக்கத்துண்டும்படி அறிமுகம் செய்கிறார் சாரு. உதாரணமாக என் பெயர் ராமசேஷன் நாவல். ராமசேஷன் எல்லா வயதுப் பெண்களுடன் சகஜமாக பாலியல் உறவு வைத்துக் கொண்டு உல்லாசமாக இருக்கும் ஒரு வாலிபன். ஆனால் தன் தங்கைக்கு மட்டும் நல்ல மாப்பிள்ளை அமைய வேண்டும் என தங்கையின் காதலை பிரிக்க முயல்கிறான். நமது வாழ்வியல் முறையே நம் உள்ளுணர்வை உலுக்குகிறது என்பதற்கு இந்த நாவல் ஆதாரம். ஆதவனின் எழுத்து தனிப்பட்ட சமூக வாழ்வின் போலித்தனங்களில் இருந்து நம்மை விடுவிப்பவை என்கிறார் சாரு. கோபி கிருஷணன் பற்றிய தொடர் கொஞ்சம் துயரமாக இருந்தது. நான் மிகவும் ரசித்து வாசித்தது கோபி கிருஷ்ணன் பற்றிய தொகுப்பைத்தான். கோபிகிருஷ்ணன் படைப்புகள் அவரின் வாழ்வோடு சம்பந்தப் பட்டது என்று தெரிய வரும்போது மனதில் ஈரம் கசிகிறது. இந்தச் சமூகம் எல்லோரும் செய்வதைச் செய்கிறவனை நல்லவன் என்றும், எல்லோரும் செய்கிற செயல்கள்தான் நல்ல செயல்கள் என்றும். அப்படிச் செய்யாதவனை எதற்கும் உதவாத பைத்தியக்காரன் என்றும் புறந்தள்ளி புறக்கணிப்பதை ஆதாரமாகச் சொல்லும் நிறைய கதைகளை எழுதியிருப்பவராக கோபியைக் காட்டுகிறார் சாரு. கோபியின் கதைகளில் வரும் மனோதத்துவ மருத்துவ terms களை வாசிக்கின்ற போது, அவர் எவ்வளவு பெரிய ஜீனியஸ் என்பதை நம்மால் உணர்ந்துக்கொள்ள முடிகிறது. அவரின் வாழ்வும் மரணமும் அதிர்ச்சி மிக்கது. அம்மணமாகத் திரியும் ஊரில் ஆடை அணிந்தவன் அரைக்கிறுக்கன் என்கிற வாசகம் தான் நினைவுக்கு வந்தது கோபியின் அத்தியாயத்தை வாசித்து முடித்த போது.. பழுப்பு நிறப் பக்கங்களில் வரும் ஒவ்வொரு இலக்கிய முன்னோடிகளை வாசிக்கின்றபோது ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் தனித்துவம் மிக்கவர்களாகவும் தமிழ் இலக்கிய சூழலில் மிக முக்கிய படைப்பாளி களாகவும் பார்க்கும்படி காட்டியிருக்கின்றார் சாரு. யாரும் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல என்கிற ரீதியில் படைக்கப்பட்டது தான் ப.நி.ப. அப்படி இருக்கையில், கு.ப.ராஜகோபாலன் பற்றி சொல்லுகையில், அவர்தான் தமிழ்ச் சிறுகதையின் பிதாமகன் என்று குறிப்பிடுகிறார். ஆண் பெண் உறவின் நுண்ணிய தேக உணர்வுகள் பற்றி சிறுகதைகளில் சொல்லும்போது, வாசகன் தன் நிலைக்கேற்ப அவைகளை ஆபாசக் கதைகளாக எடுத்துக்கொள்கிறான். அதன் பின் எழுத்தாளர் மிக மோசமாக விமர்சனம் செய்யப்பட்டு துரத்தியடிக்கப்படுகிறார். இந்த புறக்கணிப்பு கு.ப.ரா வை ஒன்றுமே செய்யவில்லை. மிக மெல்லிய குரலில் மென்மையான முறையில் அடுத்த இலக்கியப் பிரதிக்கு தயாராகலாமே, என்பாராம் கு.ப.ரா.. எல்லாக் காலத்திலும் பெண்களின் மறைக்கப்பட்ட உணர்வுகளை கதைகளின் வழி சொல்ல வந்த நவீன பின்நவீனத்துவ எழுத்தாளர்கள் சர்ச்சைக்குரிய எழுத்தாளர்களாக மாற்றி அவர்களை சமூக விரோதிகளாக அடையாளப்படுத்துகிறது நம் சமூகம். எஸ்.சம்பதின் இடைவெளி என்கிற சிறிய நாவல் மகாபாரதம் போன்ற காவியத்திற்கு ஒப்பான படைப்பு என்கிறார் சாரு. ஒரு படைப்பாளியின் மரண சாசனம் இந்த நாவல். இறக்கும் தருவாயில் தனது மரணம் குறித்து தானே எழுதி வைத்திருக்கும் மரண அறிக்கைதான் இந்த இடைவெளி நாவல். நாவல் வெளிவரும் முன்பே நோயின் தாக்கத்தால் மாண்டு போகிறார் சம்பத். ந. சிதம்பர சுப்ரமணியம் என்கிற எழுத்தாளர் பற்றிச் சொல்லுகையில், பிரபல எழுத்தாளர்கள் என்று நாம் நினைக்கின்ற பல எழுத்தாளர்களுக்குக் கூட ந. சிதம்பர சுப்ரமணியம் யார் என்று தெரியாமல் போய்விட்டது என வருத்தப்பட்டு எழுதுகிறார் சாரு. ந. சிதம்பர சுப்ரமணியத்தின் இதயநாதம் என்கிற நாவலை வாசித்த போது அவருக்கு ஏற்பட்ட இலக்கிய அனுபவத்தை இப்படி நம்மிடம் பகிர்கிறார், ‘கோவில்களில் கற்பூர தீபாராதனை நடக்கும் போதும், காலை நேரத்தில் வசீகரிக்கும் மலர்களைக் காணும்போதும், புண்ணிய நதியில் நீராடும் போதும், பேராலயங்களில் நுழையும் போதும் நமக்கு எத்தகைய புனிதமான உணர்வு ஏற்படுகிறதோ, அப்படிப்பட்ட உணர்வு சிதம்பர சுப்ரமணியனின் கதைகளை படிக்கும்போது ஏற்படுகிறது என்று சிலாகிக்கிறார். அசோகமித்திரனை தன்னுடைய தகப்பன் ஆசான் ஆகியவர்களைவிட மிக உயரத்தில் வைப்பதாகச் சொல்கிறார். அசோகமித்திரனின் எழுத்துகள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டால் அவர் சர்வதேச அளவில் ஐரோப்பிய எழுத்தாளர்களுக்கு நிகராகப் போற்றப்பட்டிருப்பார். உலகின் மிகச் சிறந்த எழுத்தாளர்களின் பட்டியலில் அசோகமித்திரனுக்கு உயர்ந்த இடம் கொடுக்கலாம் ஆனால் அவர் தமிழ் இலக்கியச் சூழலில் சிக்குண்டு இறுதிவரை ஏழ்மையிலேயே காலம் கழித்ததாக மனவருத்தத்துடன் சொல்கிறார் சாரு. இருத்தலின் சாரத்தை வலியுறுத்தும் கதைகளை எழுதியவர் ஆ. மாதவன் என்று சொல்லி அவரின் `எட்டாவது நாள்’ என்கிற நாவலைப் பற்றி எழுதுகிறார் - ``இந்த கணத்தை தீவிரமாக வாழ், அதுவே முழுக்க முழுக்க அறம் சார்ந்தது. இருத்தலியல் தருணத்தில் வாழும் மனிதனுக்கு எந்த ஒரு குற்ற உணர்ச்சியும் ஏற்படுவதில்லை.’’ என்ற வரிகளை நம்மிடம் பகிரும்போது ஆ.மாதவனின் கதை சொல்லும் பாணி என்பது எப்படிப்பட்ட தத்துவ சாரங்களை உள்ளடக்கியதாக இருக்கக்கூடும் என்கிற சிந்தனையை நம்மிடம் பரவ விடுகிறார். எம்.வி. வெங்கட்ராம் - தமிழில் ட்ரான்ஸ்கிரஸிவ் எழுத்தின் முன்னோடியாக எழுத்தாளர் எம்.வி.வெங்கட்ராம் அவர்களைப் பார்ப்பதாகச் சொல்கிறார் சாரு. ட்ரான்ஸ்கிரஸிவ் எழுத்து என்பது சமூகத்தில் கட்டமைக்கப்பட்ட ஒழுக்க விதிகளை உடைத்து அலசி அதை அப்படியே எழுத்தில் கொண்டுவந்து விவாதிப்பது தான். அதற்கு உதாரணமாக அவர் எழுதிய `காதுகள்’ நாவலைப் பற்றி எழுதுகிறார். காதுகளுக்குள் புகும் பலரின் அகோர குரல்கள் அசரீரியாக நின்று தனி ஒரு மனிதனின் மனசாட்சியுடன் எப்படி கொச்சையாக உரையாடி அவனின் நிம்மதியை சீர்குலைக்கிறது. மனிதனின் கீழான அவல நிலைக்கு முக்கிய பங்கு வகிப்பது காதுகள் உள்வாங்கும் பரவலான உரையாடல்கள் என்பதைச் சொல்லும் நாவலாக இந்நாவல் இருப்பதாகச் கோடிக் காட்டுகிறார். பெண்ணின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க தெரியாத ஆண், ஆண் மகவு வேண்டி ஐந்து ஆறு மனைவிகளை மணம் முடித்துக் கொள்கிறான். அவர்களுடன் எப்படி தாம்பத்திய வாழ்வில் ஈடுபடுகிறான், அப்படி ஈடுபடுகையில் அந்த வீட்டில் மகள் ஸ்தானத்தில் இருக்கும் பருவப் பெண் படும் அவஸ்தைகள் குறித்தும் தஞ்சை பிரகாஷின் கரமுண்டார் வூடு நாவல் சொல்வதாக எழுதுகிறார் சாரு. லெஸ்பியன் உறவு பற்றி தமிழில் எழுதிய முதல் எழுத்தாளர் தஞ்சை பிரகாஷ் தான் என்றும் அறிமுகம் செய்து வைக்கிறார். . ஒரு ஆணின் வீரிய வளர்ச்சிக்கு என்ன மாதிரியான உணவுகள் தேவைப்படுகின்றன என்கிற நீண்ட பட்டியலையும் கொடுத்திருக்கின்றார்.. அக்காலத்தில் அறுபது வயதுவரை பெண்கள் கர்ப்பம் தரித்து குழந்தை பெற்று வந்துள்ளதையும், ஆண்கள் எழுபத்தைந்து வயது வரை வீரியம் குறையாமல் பல மனைவிகளை மணமுடித்துக் கொண்டதையும் தஞ்சை பிரகாஷின் நாவல்கள் மூலம் தெரிந்து கொள்ளலாம் என்பதையும் சுட்டிக்காட்டுகிறார். இந்த பூமியில் பிறந்த அத்தனை பெண்களும் நிச்சயம் தஞ்சை பிரகாஷின் நாவல்களை குறிப்பாக கரமுண்டார் வூடு நாவலை கண்டிப்பாக வாசிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார். அதற்குக் காரணம் பெண்ணியம் பேசும் அத்தனை எழுத்தாளர்களையும் ஒன்று சேர வீழ்த்தியவர் தஞ்சை பிரகாஷ் என்று புகழ்மாலை சூட்டுகிறார் சாரு. பெண்களின் அடக்கப்பட்ட காமத்தின் உக்கிர வெளிப்பாட்டை எந்த பெண் எழுத்தாளரும் இவர்போல் எழுதிவிட முடியாது என்கிறார். தன் பூட்டி பாட்டிகளின் சொந்த அனுபவங்களை உண்மையின் பிரதிநிதியாக நின்று பிரகாஷ் வடித்திருக்கும் இக்கதைகள் அனைத்து பெண்களுக்கும் சமர்ப்பணம் என்கிறார் சாரு. இப்படி இன்னும் நிறைய சுவாரஸ்யங்களைக் கொண்ட நூல்தான் பழுப்பு நிறப் பக்கங்கள். தமிழ் இலக்கியச் சூழலுக்கு சாரு கொடுத்திருக்கின்ற இந்த அரிய புதையல் அனைவரும் வாசித்துப் பயன் பெற வேண்டிய ஒன்று. பின்நவீனத்துவ கூறுகளில் ஒன்றான புனிதங்களை கட்டுடைத்தல் என்பதில் தீவிர போக்கு உடைய எழுத்தாளர்களை சர்ச்சைக்குரிய எழுத்தாளர்கள் என்று புறந்தள்ளும் போக்கு மாறவேண்டும். பின்நவீனத்துவ எழுத்துகளில் மறைந்திருக்கும் சாராம்சத்தை விளங்கிக்கொள்ள முயல்வதே நாம் நல்ல இலக்கிய பிரதிகளைக் கண்டடைவதற்கு வழி வகுக்கும். கதை என்பது கதை சொல்வதல்ல, சொல்லப்பட்ட கதைக்கும் சொல்லப்படாத கதைக்கும் இடையே வாசகனான நாம் சிந்தித்திருக்கும் தருணத்தில் உதிக்கின்ற ஒரு பொறிதான் நமக்குள் ஓராயிரம் அர்த்தங்கள் கற்பித்துக் கடக்கும் இலக்கிய சூட்சுமம். இங்குதான் இலக்கிய வாசிப்பின் மகத்துவம் புரிந்து கொள்ளப்படுகிறது. இதுதான் இலக்கியம் நிகழ்த்தும் அற்புதம். இதுபோன்ற அற்புத நூல் வாசிப்பை நமக்குக் கொடுத்த சாருவிற்கு நன்றி. நூல் கிடைக்கும் இடம் : tamilasia.com Posted by ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மி at 7/20/2022 கருத்துகள் இல்லை: இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Twitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர் திங்கள், ஜனவரி 14, 2019 நட்பின் அத்தியாயம் - முற்றும் இதை நான் சொல்லியே ஆக வேண்டும். அப்படிச்சொல்லவில்லை என்றால் நான் நன்றி கெட்டவள் ஆகிவிடுவேன். ஒருவரின் மறைவு ஈடுகட்டமுடியாத இழப்பு என்பதற்கான அர்த்தத்தை இப்போது உணர்ந்து, அதைக் கொஞ்ச நாளாக அனுபவித்து வருகிறேன். நாம் நேசித்த ஒருவர் மண்ணைவிட்டு மறைந்துவிட்டால், அவரின் நினைவு வருகிறபோதெல்லாம், அவர் நமக்கு சுயநலமில்லாமல் செய்த சில செயல்கள் நம் முன் வந்து வந்து போகும். நட்பு என்றால், தினமும் கைக்கோர்த்து நடந்து சென்று உண்பது அரட்டை அடிப்பது ஊர் சுற்றுவது என்பதுதான் என்று பெருவாரியாக நினைக்கின்றபோதிலும், கிட்டத்தட்ட 18ஆண்டுகள் பார்க்காமல் சந்திக்காமல் தொலைத்தொடர்பின் மூலமாகவே நட்பு பாராட்டி உளமாற ரசனைகளைப் பகிர்ந்து, படித்ததை, பார்த்ததை அனுபவித்ததை, கேட்டதை நினைத்த நேரத்தில் நினைத்த மாத்திரத்தில் மனதில் எந்த ஒரு நெருடலும் இல்லாமல் உடனுக்குடன் பகிர்ந்து களிப்புறுகிற நட்பு நம்மில் எத்தனை பேருக்கு வாய்த்திருக்குமென்று எனக்குத்தெரியாது. ஆனால் நான் மிகுந்த அதிர்ஷ்டசாலி. எனக்கு அப்படி ஒரு நட்பு இருந்தது ஆனால் இப்போது இல்லை. மரணித்துவிட்டார். சொல்லாமல் சென்றுவிட்டார். நோயாளியல்ல அவர். நோய்களுக்கு மருந்துசொல்லும் மருத்துவர். இருந்தபோதிலும் நோய் ஆள்பார்த்து வருவதில்லையே. அவரையும் தாக்கியது மாரடைப்பு. இறப்புச் செய்தியினைக்கேட்டு அவரின் மனைவிக்கு அழைத்தபோது சொன்னார், திடீர் மூச்சுத்திணறல், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அசைவற்று, ஒருவாரத்திற்குப்பிறகு திரும்பிவரவேயில்லை, என்று. அன்று அவரின் மனைவிக்கு ஆறுதல் சொன்ன நான் ஆரம்பத்தில் தெளிவாகத்தான் இருந்தேன். கண்களில் ஒரு சொட்டு நீர்கூட வரவில்லை எனக்கு. மரணம் இயற்கை என்று மனதிற்குள் சொல்லிவிட்டு ஒரிரு வார்த்தைகளை முகநூலில் பகிர்ந்துவிட்டு, நான் எனது அன்றாட கடமைகளில் வழக்கமாக ஈடுபடத்துவங்கினேன். சில நாட்கள் சென்றது, எனது மகிழ்வு, சோகம், வாசிப்பு, எழுத்து, அறிவுப்பூர்வ கேள்வி, அறிவியல், மருத்துவம், இலக்கியம், நகைச்சுவை, பழைய சினிமா, காதல், வரலாறு, புத்தகம், ஆங்கிலம் என எதையொட்டிய தேடலாக இருந்தாலும் அங்கே டாக்டர் மட்டுமே வந்து நிற்கிறார். என்ன நடக்கிறது எனக்குள், என்கிற குழப்பத்தில் துவண்டுபோனேன். கிட்டத்தட்ட பதினெட்டு ஆண்டுகள் எனது மனப்பூர்வ பகிர்வுகளில் டாக்டர் ஒருவர் மட்டுமே ஆக்கிரமித்துக்கொண்டிருந்ததை உணரத்துவங்கினேன். உணர்ந்த மறுநொடி பயங்கரமான தனிமைக்குள் தள்ளப்பட்டேன். யாரிடமும் நான் மனதளவில் இவ்வளவு நெருக்கமாக இருந்தது கிடையாது. பெண் நட்பில்கூட இப்படி ஒரு நல்ல நட்பு எனக்கு இதுவரையிலும் இருந்ததில்லை. நிறைய நட்புகள் நமக்கு இருக்கலாம், இருந்தபோதிலும் யாரிடம் நாம் எல்லாவற்றையும் நம்பிக்கையுடன் பகிர்ந்துகொண்டிருக்கின்றோம் என்பதனை கூர்ந்து நோக்கினால் அங்கே ஒருவர் மட்டுமே இருப்பார். அப்படி இருந்த ஒர் நட்புதான் டாக்டர் ஜி.ஜான்சன். டாக்டர் அவர்களின் நட்பு 2000ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் துவங்கியது. அப்போது, அவர் தமிழ்நேசன் பத்திரிகையில் மருத்துவ கேள்வி பதில் அங்கத்தை எழுதிக்கொண்டிருந்தார். அந்த அங்கத்தில் மருத்துவம் சார்ந்த கேள்விகளுக்கு மட்டுமே இடமுண்டு என்கிறபோதிலும், அங்கு அச்சிடப்பட்டுள்ள அவரின் கைபேசிக்கு அழைத்துப்பேசினால், முகஞ்சுளிக்காமல் அனைத்துவிதமான கேள்விகளுக்கும் பதில் சொல்வார். விலாவரியாக மிகுந்த அக்கரையுடன் அன்புமிகுந்த பணிவுடன் இருக்கும் அவரின் பேச்சு. மெத்தப்படித்த ஒரு மருத்துவர் சாதாரண மக்களின் அழைப்பை ஏற்று அக்கரையுடன் பணிவாக பதிலளிக்கின்ற பாணி பிடித்திருந்ததால் அவருடனேயான நட்பை நான் தக்கவைத்துக்கொண்டு தொடர்ந்தேன். ஒருமுறை கேள்வி ஒன்றினை வைத்தபொழுது, இக்கேள்விக்கான பதிலை நான் பத்திரிகையில் இன்னும் பல உதாரணங்களோடு விளக்கமளிக்கின்றேன் விஜயா, இவ்வார நேசனை கண்டிப்பாக வாசியுங்கள் என்று கூற, அந்த வாரம் அனைத்து கேள்விகளும் வர, எனது கேள்வி விடுபட்டிருந்தது. அதற்கான காரணத்தைக்கேட்க மீண்டும் அழைத்தபோது, அடுத்தவாரம் கண்டிப்பாக வரும் என்று சொல்ல, அடுத்தடுத்த வாரமும் வராமல் இருக்க… அதையொட்டிய அழைப்புகள் தொடர, பத்திரிகையின் நிலவரங்களை நகைச்சுவையாக சுட்டிக்காட்ட, நட்பு மலர்ந்தது எங்களுக்குள். இந்த நட்பு கிட்டத்தட்ட பல ஆண்டுகள் கடந்துகொண்டிருக்கின்றவேளையில், ஜொகூர்பாருவில் இருந்து இலக்கிய நிகழ்வு ஒன்றிற்கு, 2018 ஜூலை மாதம் என்று நினைக்கிறேன், தலைநகர் வந்திருந்தபோது, அழைப்பு விடுத்தார் சந்திக்க, வேலை நாட்களில் பணியிடத்திலிருந்து தலைநகர் செல்வது சாமானியமான செய்கை அல்ல, அதனால் அந்தச் சந்தர்ப்பமும் நழுவியது. அவரை நான் சந்தித்ததே இல்லை. சிலரின் நட்பு நம்மை ஒன்றுமே செய்யாது. இருந்தார் மறைந்தார் என்று ஒரு நாள் அல்லது இரண்டு நாள் துக்கம் அனுசரித்துவிட்டு கடந்துவிடலாம். பெரும்பாலும் நட்பு என்கிறபோது, நட்பு என்றல்ல, என் அப்பாவின் மறைவைத்தவிர்த்து மற்ற யாரின் மறைவும் என்னை எதுவுமே செய்தில்லை. ஆனால் டாக்டர் ஜான்சனின் மறைவு கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் கடந்துவிட்ட போதிலும், ஒவ்வொருநாளும் அவரின் நினைவு இல்லாமல் பொழுது விடிவது இல்லை. எனக்கு ஏற்படுகிற அனைத்து அனுபவங்களையும், கேள்விகளையும், சந்தேகங்களையும் பக்குவப்பட்ட, கல்வியறிவில் சிறந்து விளங்கிய, உலக விவரங்களை விரல் நுனியில் வைத்திருந்த டாக்டரிடம் மட்டுமே பகிரவேண்டும் என்கிற எண்ணம் விடாமல் என்னைத் துரத்துகிறது. தினமும் பேசுவோம். நான் ஒரு கேள்வியினை வைத்திருக்க, அவர் அதற்கு பதில் கொடுத்து கூடுதல் விவரங்கள் பகிர, அந்த விவரங்களில் இருந்து வேறொரு தகவல்கள் உதிக்க, அப்படி உதிக்கின்ற தகவல்கள் எந்த அளவிற்கு நமது அடுத்தடுத்த தேடல்களைத் தூண்டிவிடும் என்பதை அவரின் நட்பின் வழி உணர்ந்துகொண்டேன். அவரைப்பற்றி சொல்லவேண்டுமென்றால்… தனது மருத்துவப் பணியினை உளமாற நேசிப்பவர். இரவு பகல் பாராமல் உழைத்தார், எவ்வளவு நேரம் உழைத்தாரோ அந்த அளவிற்கு எழுதவும் வாசிக்கவும் செய்தவர். எப்போது பார்த்தாலும் எதையவது வாசித்துக்கொண்டேதான் இருப்பார். பெரிய பெரிய ஆங்கில நாவலாகட்டும் கடுகளவு வந்துள்ள வாசகர் கடிதமாகட்டும் அனைத்தையும் வாசிப்பார். ஞாயிற்றுக்கிழமைகளில் வெளிவரும் அனைத்து தமிழ் பத்திரிகைகளையும் வாங்கி வாசித்துவிடுவார். 2000ஆம் ஆண்டு ஆரம்பத்தில் தரணிமைந்தன் என்கிற புனைப்பெயரில் பல சிறுகதைகளை விமர்சனம் செய்துவந்தபோது, அவர் வாசித்துவிட்ட சிறுகதைகளை என்னை வாசிக்கச்சொல்லி கருத்து கேட்பார். நான் வாசிக்க தாமதமானாலும் காத்திருந்து கதை எப்படி இருந்தது என்று கேட்பார். நன்றாக இல்லாத, ஒன்றுமே இல்லாத எழுத்துகளை, நான், இது கதையே அல்ல என்று சொல்லும் போது, எப்படிச் சொல்கிறீர்கள்.? ஏன் சொல்கிறீர்கள்.? எந்தப்பகுதி உங்களை அப்படிச்சொல்லவைத்தது.? புதிய எழுத்தாளர் என்பதாலா.? நீண்ட நாள் எழுதிய எழுத்தாளார் என்பதாலா.? என்றெல்லாம் கேட்பார். இருவரிடையே என்னமாதிரியான கருத்துக்கள் பரிமாறப்பட்டாலும், எழுதுகிறபோது யார் மனதேனும் புண்பட்டுவிடுமே என்கிற நோக்கிலேயே விமர்சம் வைப்பார். அந்தப்பகுதியில் வந்த அனைத்து விமர்சனமும் எழுத வரும் புதிய வாசகர்களுக்கு உத்வேகமாக இருக்கும்படி பார்த்துக்கொள்வார். எழுத்தில் கன்னியம் காப்பதுபோலவே பேச்சிலும் யாரைப்பற்றியும் தரக்குறைவாக பேசாத பண்பும் என்னை அவரிடம் நெருங்க வைத்து நம்பகத்தன்மையை வளர்த்து நட்பில் தடுப்புச்சுவர் இல்லாமல் தைரியமாக அனைத்தையும் பகிர வழிவகுத்தது. கணினி பயன்பாட்டில் பரிச்சயம் இல்லாமல் இருந்தவரை, கணினி யுகத்திற்கு (தமிழில் தட்டச்சு செய்வது, கைபேசியில் குறுந்தகவல் அனுப்புவது, முகநூலில் பதிவுகள் செய்வது புகைப்படம் ஏற்றுவது, வட்சாப் அனுப்புவது) அழைத்து வந்ததே நான் தான் என்று இந்த அடியேன் மார்தட்டிக்கொள்ளலாம். புத்தகப்புழுவாக இருந்த அவரை, கணினியின் பக்கம் தற்போதைய மாற்றங்களை நோக்கி (எனக்குப்புரிந்தவரையில்) நகரவைத்த எனக்கு அடிக்கடி புகழாரம் சூட்டுவார். அதை வஞ்சப்புகழ்ச்சியாக நான் புறக்கணித்தாலும், அவர் அதை மனதார சொல்வதாகச் சொல்வார். மெத்தப்படித்த அவர் கணினி பற்றிய போதனையின்போது பாலர்பள்ளி மாணவன் போல் ஆகிவிடுவார். குறிப்பு எடுத்துவைத்துக்கொண்டு நேரம் கிடைக்கின்றபோதெல்லாம் அதை மீண்டும் மீண்டும் செய்துபார்த்து விளக்கம் கேட்டு முழுமையாக புரிந்துகொண்ட பண்பைக் கண்டு வியந்துபோவேன். ஓஷோ சொல்வதைப்போல், மனிதன் எப்போதும் காலி கோப்பையாக இருக்கவேண்டும். அப்போதுதான் கற்றலின்போது காலிகோப்பையை நிரப்பிக்கொள்ளலாம், என்று. அதுபோலவே இறுதிவரை காலி கோப்பையாகவே இருந்தார் டாக்டர். தினமும் எதையாவது கற்றுக்கொள்ளவேண்டும் என்கிற தீராத வேட்கை அவரிடம் நாம் கற்றுக்கொள்ளவேண்டிய பாடம். சிலவேளைகளில் நான் பிதற்றுவதை ஏற்கனவே அவர் எங்கேனும் வாசித்திருந்தாலும் சரி, அல்லது அந்த விவரம் அவருக்கு ஏற்கனவே தெரிந்திருந்தாலும் சரி, நம் பேச்சினை இடைமறித்துப் பேசாமல் அமைதியாக முழுமையாக கேட்டுவிட்டு, மிகப் பணிவாக அதைப்பற்றிய மேல் விவரங்களை நம்மிடம் பகிர்கிற பாணியினை நானும் பழகவேண்டும் என்று நினைத்துக்கொண்ட நற்பண்பு அது. ஒன்றுமே தெரியாத அப்பாவிபோல் இருப்பார், அனைத்தும் அவருக்கு தெரிந்திருந்தாலும் கூட. யாரைப்பற்றியும் அநாவசியமாக புறங்கூறும் மனிதரல்ல. பிடித்தவரை தூக்கிவைத்துக்கொண்டாட மாட்டார் அதேவேளையில் பிடிக்காதவரை வெறுத்துத் தூற்றித்திரியவும் மாட்டார். அவருக்கு மிகவும் பிடித்த விஷயம் புகைப்பிடித்துக்கொண்டே தேநீர் அருந்துவது. காரில் நீண்ட தூர பயணத்தின் போது மிக மிக பழைமையான (ஜிக்கி, AM ராஜா, கண்டசாலா, ராஜேஸ்வரி, தியாகராஜ பாகவதர், பானுமதி) அவர் பதிவு செய்து வைத்திருந்த பாடல்களை கேட்டுக்கொண்டே செல்வது பிடித்தமான ஒன்று. பயணத்தின்போது இடையே எனக்கும் அழைத்து, பாடலின் ஒலியை வேகமாக வைத்து, இந்தப்பாடலை கேட்டுப்பாருங்களேன், அற்புதம் ஆஹா.. என்று நம்மையும் ரசிக்கவைப்பார். எப்போதும் உற்சாகமாகவே இருப்பார். கவலையாக சோர்வாக இருந்ததை ஒருமுறைகூட கண்டதில்லை. அவரின் மூத்த மகன் காரில் அமர்ந்தவாக்கிலேயே மரணமுற்ற இரண்டு நாளுக்குபின் நான் யதார்த்தமாக அழைத்தபோது, முதலில் அந்த கவலையினை வெளிக்காட்டாமல் என்னிடம் எப்போதும்போலவே பேசிவிட்டு, கைப்பேசியினை வைக்கின்றவேளையில் இந்தச் சோகச்செய்தியினைப் பகிர்ந்தார். அதிர்ச்சிக்குள்ளான நான் அவருக்கு ஆறுதல் சொன்னபோது, ``அதைவிடுங்க.. என்ன செய்வது, என் மனைவிதான் பாவம்,’’ என்று பெருமூச்சுடன்.. ச்ச், என்கிற வார்த்தையில் அந்தச் சோகத்தைக் கடந்துசென்றார். வாசிப்பு மற்றும் எழுதுவது இறுதி மூச்சுவரை உயிர் துடிப்பாய் இருந்தவை அவரிடம். திண்ணையில் ‘தொடுவானம்’ தொடரை விடாமல் எழுதிக்கொண்டே வந்தார். தொடுவானமும் புத்தக வடிவில் வந்தது. அது அவரின் இரண்டாவது நூல். முதல் நூல் அவர் உயிராய் நேசித்த அவரின் மருத்துவ பணியின் சவாலை ரசித்து ரசித்து எழுதிய நாவல் `உடல் உயிர் ஆத்மா’. இரண்டு நாவல்களும் என்னிடம் உண்டு. உடல் உயிர் ஆத்மா நாவல் என்னைக்கவர்ந்தது காரணம் ஆன்மிகமும் விஞ்ஞானமும் கலவையாக வந்து அவர் சந்தித்த பல பிரபலங்களையும் இனைத்து நாவலாக்கியிருந்தார். தொடுவானம் – சுயசரிதை - வாசிப்பில் எனக்கு சோர்வினைத்தந்தது. அதை அவரிடமும் பகிர்ந்தேன். வள்ளுவனின் திருக்குறளை தினமும் ஒரு குறள் எடுத்து, அதே இரண்டு வரிகளில் தமிழில் உள்ளதுபோலவே அதன் அழகைச் சிதைக்காமல் ஆங்கிலப்படுத்திக்கொண்டிருந்தார். எனக்கு ஆங்கில அறிவு தமிழறிவை விட படுமோசம், அதை என்னிடம் காண்பித்து விளங்காத கடினமான சொற்களுக்கு விளக்கம் கொடுப்பார். விளங்கிக்கொள்வதற்கு ஆர்மூட்டுவார். குறளை தமிழில் உள்ளதுபோலவே அதே பாணியில் அதே நடையில் தாம் மட்டுமே ஆங்கிலப்படுத்திக்கொண்டிருப்பதாகச் சொல்லி மகிழ்ந்துகொள்வார். உள்ளூர் கவிஞர்களின் தமிழ் கவிதைகளை (அவருக்கு மிகவும் பிடித்தமான) ஆங்கிலப்படுத்தி வாசித்துக்காட்டி பரவசப்படுவார். அர்த்தம் அதே போல் உள்ளதா, என்றும் கேட்பார். கவிதை என்பது உணர்வு, எப்படி மொழிபெயர்த்தாலும் அதன் உள்ளடக்கம் வேறு கோணத்தில்தான் இருக்கும், அதனால் அதை அப்படியே விட்டுவிடுங்கள் என்பேன். அதில் முரண்படுவார். அப்படியென்றால் கவிதைக்கு விளக்கம் கொடுக்கமுடியாதா.? ஏன் கவிஞர்கள் புரியாத மொழிநடையில் எழுதுகிறார்கள்.? புரியாமல் எழுதி யாருக்கு என்ன சொல்லவருகிறார்கள்.? எது இலக்கியம் .? காமம் கலந்து எழுதினால் அது இலக்கியமா.? எது கவிதை.? பாரதியார்/பாரதிதாசன் போல் கவிதை எழுதிவிட்டார்களா அவர்கள்..? புரியாமல் எழுதி என்ன சாதிக்கப்போகின்றார்கள்.? என்று ஆவேசமாக பேசுவார். எனக்கு அது படு நகைச்சுவையாக இருக்கும். Leo Tolstoy யின் அன்னகரினா நாவலை மீள்வாசிப்பு செய்துகொண்டிருந்தபோது, அந்நாவல் புதிய வாசிப்பில் தமக்கு இன்னும் பல சுவாரஸ்யங்களைக் கொடுப்பதாகச் சொல்வார். அந்நாவல் கொடுக்கின்ற புதிய அனுபவங்களை என்னிடம் பகிர்ந்தவண்ணமாகவே இருந்தார். தினமும் நாவலின் முக்கிய அத்தியாயங்களை என்னிடம் பகிர்வார். அன்னகரினா நாவலை வாசிக்காமலேயே அந்தக் கதையின் கரு எனக்குப் பரிச்சயமானது. ஆங்கிலப்பத்திரிகைகளை வாங்கி வாசிக்கும்படி அடிக்கடி வழிகாட்டுவார். ஆங்கில வாசிப்பு அவசியம் என்பார். தமிழ் முக்கியம் என்கிற கருத்தில் அசைக்கமுடியாத நம்பிக்கை வைத்திருப்பினும், ஆங்கிலமும் அதே அளவிற்கு முக்கியம் என்பதனையும் அடிக்கடி வலியுறுத்துவார். அவர் தினமும் வாசிக்கின்ற NST பத்திரிகையில் அடிக்கடி கட்டுரைகள் எழுதுவார். குறிப்பாக பொங்கல் வந்தால், பொங்கல் தமிழர் திருநாள், தை முதல்நாள் தான் நம்மவர்களின் புத்தாண்டு, என்பனவற்றைக் குறிப்பிட்டு திராவிடர் வரலாற்றுச்சான்றுகளோடு திராவிடர் தலைவர்கள் முன்மொழிந்த தைத்திருநாள் சான்றுகளை சாட்சிகளாக வைத்து தைப்பொங்கல்தான் நமது புத்தாண்டு என்று சொல்லி கட்டுரையினை முடித்திருப்பார். அது வாசகர் கருத்துப்பகுதியில் முக்கிய எழுத்தாக பிரசுரமாகும், நல்ல தலைப்புடன். இதை ஒவ்வொரு வருடமும் விடாமல் எழுதிக்கொண்டே இருப்பார். NST’யும் பிரசுரித்துக்கொண்டே இருக்கும். இந்த வருடத்தில் இருந்து அது வராது. நான் பெரிய படிப்பு படித்தவன், எனக்கு எல்லாம் தெரியும் என்று ஒருநாளும் காட்டிக்கொண்டு பேசியதே இல்லை. அலோபதி மருந்து மாத்திரைகளைப் பற்றி கறாரான கருத்துகள் வைத்திருந்தாலும், நாட்டு வைத்தியம், சித்த வைத்தியம், தொடுசிகிச்சை போன்றவற்றைப்பற்றி கருத்து சொல்ல மாட்டார். இருக்கலாம்…!! என்று மௌனமாக நழுவிவிடுவார். படித்தவர் பண்பு அதுதானே. நவம்பரில் தீபாவளி வரும், டிசம்பர் 20 ஆம் தேதி அவரின் பிறந்தநாள். டிசம்பர் 25 கிருஸ்த்துமஸ். பிறகு புத்தாண்டு போகி பொங்கல் என ஆண்டு இறுதியிலும் புத்தாண்டு பிறப்பிலும் பலவிதமான வாழ்த்துப்பரிமாற்றங்கள் வழி மீண்டும் உறவை புத்தாண்டு தொடக்கத்தில் புத்திப்பித்து நட்பிற்கு உயிர் கொடுப்போம். கடந்த தீபாவளிக்கு அவரின் தீபாவளிவாழ்த்து அழைப்பு வரவில்லை. வட்சாப் கூட அனுப்பிவைக்கவில்லை. தீபாவளி முடிந்த பத்தே நாட்களில் 16/11/2018யில் இறப்புச்செய்தி வந்தது. எல்லோருக்கும் வருவதுதானே என்று நினைத்தாலும் சிலரின் மறைவு ஈடுகட்டமுடியாத இழப்பு. நான் ஒரு நூலகத்தை, பொக்கிஷத்தை, வழிக்காட்டி அகராதியை இழந்து வாடுகிறேன். இனி இவர்போல் நட்பு எனக்கு வாய்க்காது. அதற்கு அவசியமும் இருக்காது. படித்தவற்றை பாராபட்சமில்லாமல் பகிர்கிற தன்மை எல்லோருக்கும் வந்துவிடாது. நமக்கு என்ன தேவையோ, எதையொட்டிய விவரத்தில் சந்தேகமோ, அதை யாரிமாவது கேட்டு, எங்கேயாவது வாசித்து நேரமெடுத்து நம்மிடம் பகிர்வார். அப்பேர்பட்ட பண்பு கொண்ட நல்ல நண்பர் டாக்டர் ஜி.ஜான்சன் எனக்கு 18 ஆண்டு கால நட்பாய் இருந்தது நான் செய்த பாக்கியம். இந்த நட்பு ஒரு வரம். அதன் அத்தியாயம் முடிந்துவிட்டது. வெள்ளைமனம் கொண்ட வளர்ந்த குழந்தை டாக்டர் ஜி.ஜான்சன்… Posted by ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மி at 1/14/2019 1 கருத்து: இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Twitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர் வெள்ளி, ஆகஸ்ட் 03, 2018 நிலநடுக்கம் Lombok'கில் நாம் எவ்வளவு மனபலம் உள்ளவர்களாக இருந்திருந்தாலும், எதிர்ப்பாராமல் ஏற்படுகிற சில சம்பவங்களில் அல்லது சில சூழ்நிலைகளில் சிக்குகிறபோது நாம் நம்மை உற்று ஆராய்ந்தால் நம் பலகீனம் நம்மைப் பார்த்து எள்ளி நகையாடும். இதற்கு உதாரணமாக ஒரு நிகழ்வை நான் இங்கே உங்களிடம் பகிர்கிறேன். மிக அண்மையில் நானும் எனது ஐந்து தோழிகளும் இந்தோனீசியாவில் உள்ள லொம்போக் (Lombok) என்கிற அழகிய தீவிற்கு சுற்றுலா சென்று வந்தோம். நிஜமாலுமே அழகிய தீவுதான் அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. மலையில் ஏறி நுரைகக்கிய அழகிய கடல் சூழலைக் காண்கிற கண்கொள்ளாக் காட்சியினை நிச்சயமாக அனைவரும் கண்டுகளிக்கவேண்டிய ஒன்று. நாங்கள் 26/7/2018ஆம் தேதி காலையில் புறப்பட்டோம். மூன்று மணிநேரத்தில் இந்தோனீசியா லொம்பொக் விமானநிலையை அடைந்தோம். அப்பொழுதே தொடங்கிற்று எங்களின் பயணம். இங்கிருந்தே ஆன்லைனில் மற்றொரு தோழியின் மூலமாக ஒரு வாகன ஓட்டுனரை தொலைபேசியில் தொடர்புகொண்டு சுற்றுலா பேரம் பேசிக்கொண்டு எங்களின் பயண ஏற்படுகளை செய்துகொண்டமையால், நாங்கள் விமானம் விட்டு இறங்குகிறபோதே அவன் அங்கே எங்களுக்காக காத்திருந்தான். டூர் பெக்கெஜ் என்று எந்த நிபந்தனையும் இல்லை. பிரபல சுற்றுலா தளங்களை ஆன்லைனின் மூலமாக குறித்துவைத்துக்கொண்டு அதை அவனிடம் காண்பிக்கின்றபொழுது, பயணத்தை எங்கிருந்து தொடங்கினால், செல்லுகிற வழியில் இருக்கிற சில இடங்களை ஒன்றின் பின் ஒன்றாக பார்த்துமுடித்து விட்டு மாலைவேளையில் தங்கும்விடுதிற்குச் சென்று விடலாம் என்கிற பட்டியலை அவன் எங்களிடம் கொடுத்தான். அப்படியே எங்களின் பயணம் தொடங்கிற்று. முதல் பயணமாக சாசாக் என்கிற கிராமத்திற்குச் சென்று அங்கே அவர்களின் வாழ்க்கைச்சூழலை கண்டுகளித்தோம். தமிழர்களைப்போலவே வீட்டின் உள்ளே நுழைகிறபோது தலைகுணிந்து நுழையவேண்டும். கதவைத்திறந்து சட்டென்று உள்ளே நுழையக்கூடாது. ஒரு வாசகத்தைச் சொல்லி (அவன் சொல்லிக்கொடுத்தான், நான் மறந்துவிட்டேன்.) அவர்களை அழைக்கவேண்டும், அவர்கள் திறந்தால் மட்டுமே நுழையவேண்டும் இல்லையேல் அப்படியே ’கொஸ்தான்’ தான். கீராமிய வீட்டு வாசலில் சாணியை மொழுகிவைத்திருக்கிறார்கள். சாணிதான் எரிபொருள். அங்கே சாசாக் மக்கள்தான் 90%. அவர்கள் அவர்களின் மொழியைக் காக்கவில்லை ஆனாலும் கலாச்சாரத்தைக் காக்கின்றார்கள். அவர்களின் தாய் மொழியை ஆங்கில எழுத்துகளைக்கொண்டு ரொமனைஸ் செய்து வைத்துக்கொண்டுதான் வாசிக்கின்றார்கள். அந்தமொழிக்கு பள்ளி இல்லை. பழங்காலத்து மக்கள் சிலருக்கு வாசிக்கத்தெரிகிறது இக்காலத்து மக்கள் அந்தமொழியினைப்பேசுகிறார்கள் ஆனால் எழுத படிக்கத்தெரியவில்லை. இருப்பினும் எனது பெயரை (விஜயா) அந்த சாசாக் மொழியில் எழுதச்சொல்லி எழுதி வாங்கிக்கொண்டேன். அசப்பில் தமிழ் போலவே இருக்கிறது சாசாக் மொழி எழுத்துச் சுழிவுகள். மறுநாள் 27/7/2018, இரவில் சந்திரகிரணம் தொடங்கவிருப்பதால், அங்குள்ள இந்துக்கோவில் ஒன்றில் சிறப்புப்பூஜை இருப்பதாகக்கேள்விப்பட்டு அங்கு சென்றோம். பூஜையில் கலந்துகொண்டு சூரியன் கடலில் மூழ்கி மறைகின்ற கண்கொள்ளாக் காட்சியினைக் கண்டு ரசிப்பதற்கும் அக்கோவில் சிறந்த இடமாக இருந்தது. கோவிலுக்குள் நுழைகிறபோது, எங்களோடு வந்திருந்த பக்தியிலும் ஆன்மிகத்திலும் ஓரளவு அறிவுகொண்ட தோழி அதில் நுழைய மறுத்துவிட்டாள். என்ன காரணம் என்பதைப் பற்றி நாங்கள் ஆராயவில்லை. அது அவளின் விருப்பம். நெற்றியில் அரிசிபொட்டு வங்கிக்கொண்டு இரவானதால் ஹோட்டலுக்குச் சென்று உணவருந்திவிட்டு தங்கும்விடுதிற்குச் சென்றுவிட்டோம். அங்கே பாட்டு கூத்து கச்சேரி மது மாமிசம் என மிக உல்லாசமாக இருந்தோம். 28/7/2018 சந்திரகிரணம். காலை உணவிற்குப்பிறகு நாங்கள் தங்கியிருந்த ஹோட்டலில் இருந்து அரைமணிநேர பயணத்தில் மற்றொரு தீவிற்குச் (Gili Trawangan) செல்லவேண்டும். அங்கு செல்வதற்கு எந்த ஏற்பாடுகளையும் எங்களோடு வந்திருந்த வாகனஓட்டி செய்யவில்லை காரணம் நாங்களே சொந்தமாக பெர்ரி டிக்கட்’களை வாங்கிக்கொண்டு செல்லலாம் என்று முடிவு செய்திருந்தபடியால், அவன் வாகனத்தை படகு துறைமுகம் வரை செலுத்திவிட்டு எங்களையும் இறக்கிவிட்டான். கிரணம் பிடிக்க உள்ளது அதனால் அந்த தீவிற்கு மட்டும் சென்றுவிட்டு ஓய்வு எடுங்கள் வேறு எந்த தீவிற்கும் செல்லவேண்டாம் என்று எச்சரித்து அனுப்பினான். Gili trawangan சென்றால் Gili air மற்றும் Gili Meno கண்டிப்பாகச் செல்வார்கள். காரணம் Lombok தீவின் மொத்த அழகும் அந்த இரண்டு தீவுகளில்தான் அதிகமாக உள்ளதாக வெப்சைட்டில் வாசித்திருந்தோம். கடலுக்குள் சென்று மீன்களின் விளையாட்டுகளைக் கண்டுகளிப்பதோடல்லாமல் கண்ணாடிபோன்ற கடல் நீரின் வழியாக உள்ளே அடி ஆழத்தில் இருக்கின்ற கடலின் அழகையும் ரசிப்பதற்கு அந்த தீவுகள் மிகவும் பிரசித்தி. அவனின் பேச்சுக்கு செவிசாய்ப்பதைப்போல் தலையை ஆட்டிவிட்டு, ஸ்பீட்போர்ட் trawangan தீவை அடைந்தவுடன், மதிய நேரமானதால், நேராக மற்ற இரண்டு தீவுகளையும் சென்று காண்பதற்கு பெர்ரி டிக்களை அந்த துறைமுகத்து முகப்பிலேயே வங்கிக்கொண்டோம். ஹோட்டலில் செக்இன் செய்து விட்டு, பெர்ரி நிறுத்துமிடத்திற்கு வந்தோம். கிட்டத்தட்ட முப்பதிரண்டு பயணிகளை ஏற்றிக்கொண்ட பெர்ரி மெதுவாக அடுத்தடுத்த தீவுகளை நேக்கிப்ப்பயணித்தது. அந்த பெர்ரியில் அனைவரும் ஐரோப்பியர்கள் நாங்கள் மட்டுமே மலேசிய இந்தியர்கள். பெர்ரி நாற்பத்தைந்து நிமிடங்கள் கடல் நீரைக்க்கிழித்து நகர்ந்துகொண்டிருந்தது. அதிகவேகமில்லாமலும், மிகமெதுவாகச் செல்லாமலும் நடுநிலையாக நகர்ந்தது. எங்களின் பார்வையில் கடல் கொந்தளித்துக்கொண்டிருப்பதைப் போல் தோற்றமளித்தது. அடுப்பில் வைக்கப்பட்ட நீர் எப்படி கொத்திக்குமோ அப்படி.! நடுகடலில் நாங்கள்; அப்போது எங்களின் பெர்ரியின் மீது மிகவேகமாக ஒரு அலை வந்து மோதியது. பெர்ரி அதிவேகமாக வலது இடது புறமாக ஆடி குழுங்கிவிட்டு மீண்டும் நகர்ந்தது. நாங்கள் பதறிப்போனோம். உள்ளே இருந்த அனைவரும் அலறினார்கள். நாங்கள் கூடுதலாக அம்மா அப்பா என்று கத்தினோம். அதன் பிறகு பெர்ரி பல இடங்களில் கவிழ்கிற நிலையிலேயே நகர்ந்து கொண்டிருந்தது. எங்களுக்கு நடுக்கம். ஐரோப்பியர்களைப் பார்த்தோம். நிதானமாகவே இருந்தார்கள். பெர்ரியை செலுத்துகிறவர்கள் அங்கும் இங்கும் நகர்ந்து சில முன் ஏற்பாடுகளை செய்துகொண்டிருப்பதை மற்றவர்கள் கவனிக்கவில்லை ஆனால் நான் அவர்களின் நடவடிக்கைகளை கூர்ந்து கவனித்தேன். எதோ ஒரு அவசர நடவடிக்கைக்கு அவர்கள் தயாராகிக்கொண்டிருப்பதை என்னால் உணர முடிந்தது. இருந்தபோதிலும் அதை அவரகள் பயணிகளுக்குத் தெரிவுபடுத்தாமலேயே செய்துகொண்டிருந்தார்கள். பெர்ரி ஓர் இடத்தில் நின்றது அனைவரும் நீச்சல் குளத்தில் குதிப்பதைப்போல் படாரென்று கடலில் குதித்தார்கள். நாங்கள் ஆறுபேர்மட்டும் பரிதாபமாக பெர்ரியிலேயே அமர்ந்திருந்தோம். வயிற்றில் ஒருவித இரசாயண கலவை சுரந்துகொண்டிருந்தது. பயம் கவ்வியது. சற்றுமுன் படகு ஏன் இப்படி ஆடியது.! அலை எப்போதும் இப்படித்தான் வருமா.? நமக்குவேறு நீச்ச்சல் தெரியாதே.! நாம் ஏன் இங்குவந்தோம்.! இப்படி படகிலேயே உற்கார்ந்திருப்பதற்காகவா.! கரைக்கு படகு செல்லுமா செல்லாதா.? மீண்டும் அந்தப்பக்கம் செல்லவேண்டுமே, மறுபடியும் அலை வேகமாக வருமா.! மலேசியா சேர்வோமா.! கிரணம் அன்று கடல் மற்றும் மலை பகுதிகளுக்குச் செல்லக்கூடாது என்பது நமக்குத் தெரிந்ததுதானே. பின் ஏன் வந்தோம்.! முன்னமே வாகன ஓட்டி எச்சரித்தானே, கேட்டோமா.! உன்னால்தான்… உன்னால்தான்… உன்னால்தான்…. என மாறி மாறி ஒருமேல் ஒருவர் பழிபோட்டுக்கொண்டும் திட்டிக்கொண்டும் கலவரமாக இருந்தோம். ஒரே இடத்தில் அரை மணி நேரமாக அலையில் மோதியபடி படகு ஆடிக்கொண்டிருப்பதால் எங்களுக்கு தலை சுற்றல் ஏற்பட்டது, குறிப்பாக எனக்கு வாந்திமயக்கமாக இருந்தது . கரைக்குச்செல்லாமல் இப்படியே நான்கு இடங்களில் பெர்ரியை நிறுத்தி நீரினில் மூழ்கி snookerling செய்து மகிழ்ந்தார்கள் ஆங்கிலேயர்கள். நீச்சல் தெரியாதவர்கள் இறங்கவேண்டாம் காரணம் கடல் இங்கு மிக ஆழமானது என்று எச்சரித்தபடியால், இந்திய பெண்கள் நாங்கள் பரிதாபமாக விழிகள் பிதுங்க படகிலேயே அமர்ந்திருந்தோம் நீச்சல் ஆடையுடன். மாலை நேரத்தில் சுமார் மூன்று மணிக்கு மீண்டும் இந்தப்பக்கம் திரும்புவதற்கு பெர்ரி தயாரானது. அம்மா, தாயே காளியாத்தா, மாரியாத்தா, மேரிமாதா, ஏசப்பா சிவபெருமானே முருகா அல்லா என்று பல ஆண்பெண் தெய்வங்களைத் துணைக்கு அழைத்துக்கொண்டோம். மாலைவேளையில் கடலின் நீர்மட்ட நிலை மிக அதிகமாக இருப்பதை அனைவரும் உணர்ந்துகொண்டோம். கொந்தளிப்பு இன்னும் கூடுதலாகவும் படகின் அசைவு அபாயகர நிலையிலும் இருந்தது. பலமுறை அபாயகரமாக அசைந்து அசைந்து திசை திரும்பிய பெர்ரியை கட்டுக்குள் கொண்டுவர படகு செலுத்துநர்கள் போராடினார்கள். இம்முறை ஆங்கிலேய பெண்மணிகள் சிலரும் எங்களோடு சேர்ந்து அலறினார்கள். தப்பித்தோம் பிழைத்தோம் என்று மாலை நான்கு மணிக்கு பெர்ரி துறைமுகம் வந்து சேர்ந்தது, படகு செலுத்துநர்கள் எங்களை மிகவிரைவாக படகைவிட்டு வெளியேறும்படி அவசரப்படுத்தினார்கள். வரிசையாக நால்வர் கரைவரை நின்றுகொண்டு, ஒருவர் பின் ஒருவராக பயணிகளின் கைகளைப் பிடித்து இழுத்து வேகவேகமாக கரைக்குக் கொண்டுவிட்டார்கள். அத்தோடு படகு சவாரிகள் அங்கு மூடப்பட்டு விட்டதாக கரையில் குதிரைசவாரியின் போது குதிரை ஓட்டுனர் தெரிவுபடுத்தினார். 28/7/2018 இரவு அங்கேயே தங்கினோம். கிரணத்தின் பாதிப்புகளிலிருந்து தப்பிக்க உணவு நீர் படுக்கை என எல்லா இடங்களிலேயும் இங்கிருந்து கொண்டுசென்ற தர்ப்பைப்புல்லை போட்டுக்கொண்டோம். தர்ப்பை கிரண பாதிப்புகளுக்கு நிவாரணம் என தோழி ஒருவள் முன்னெச்சரிகையாக கொண்டுவந்திருந்தாள் 29/7/2018 காலை உணவை முடித்துக்கொண்டு உடனே gili trawangan’ஐ விட்டு வெளியேறினோம். கரைக்குச் சென்றவுடன் எங்களின் வாகன ஓட்டுனரிடம் மூன்று தீவுகளுக்குச் செல்லுகையில் ஏற்பட்ட கசப்பான கடல் அனுபவங்களைப் பகிர்ந்தோம். அமைதியாகக் கேட்டுவிட்டு, நல்லவேளை ஒன்றும் நடக்கவில்லை காரணம் நீங்கள் டூர்பேக்கெஜ் எங்களின் கம்பனியில் எடுக்கவில்லை, ஏதேனும் ஆகியிருந்தால் நாங்கள் பொறுப்பை ஏற்கமுடியாது, உங்களுக்கு இங்கே இன்சுரன்ஸ் கூட இல்லை. கவனம் என்றார்.(அவருக்கு அவர் பிரச்சனை.) அதான் ஒன்னும் ஆகவில்லையே, என்று தெனாவெட்டாக வாகனத்தில் ஏறினோம். நேராக நீர்வீழ்ச்சிக்குச் சென்றோம். Rinjani மலையின் அடிவாரத்தில் senaru waterfall உள்ளது. நீர்வீழ்ச்சி இருப்பது மலையின் அடிவாரம் என்கிறார்கள் இருப்பினும் வாகனம் மலையில் மேல் வெகுதூரம் அசைந்து அசைந்து ஏறியது. லொம்போக் இன்னும் வளர்ச்சி காணாத சிறிய தீவாக இருப்பதால், சாலைகளின் நிலை, வாகனம் குதிரை வண்டிபோல் குதித்து குதித்துச் சென்றது. ஒரே பாதையில்தான் செல்வதும் திரும்புவதும். முன்னே எதேனும் வாகனம் வரநேர்ந்தால், எதிரே வரும் வாகனம் நின்று வழிவிட்டுத்தான் செல்லவேண்டும். கிட்டத்தட்ட இரண்டு மணிநேரம் எடுத்தது நீர்வீழ்ச்சி நுழைவாயிலை அடைய. வாகனம் நிறுத்தப்பட்ட இடத்தில் இருந்து நின்றுகொண்டு கீழே பார்க்கின்றபோதுதான் தெரிந்தது நாம் வந்திருக்கிற இடம் எவ்வளவு உயரத்தில் இருக்கின்றது என்பதை. அங்கு நாம் பார்க்கின்ற காட்சியானது கண்களுக்கு விருந்து. வரிசையாக சிறிய சிறிய கோடுகளாக நட்டுவைக்கப்பட்டிருக்கின்ற பயிர் மற்றும் காய்கறி நெல் நிலங்கள் கொள்ளை அழகு. குளுகுளு காற்றை சுவாசித்துக்கொண்டு மிக தூய்மையாக தோற்றமளித்த அந்த சூழல் மனதிற்கு இதமளித்தது. நீர்வீழ்ச்சியின் சத்தம் காதுகளில் கேட்டுக்கொண்டிருப்பினும் உள்ளே காட்டுவழி பாதையில் நீர்வீழ்ச்சியை அடைய கிட்டத்தட்ட ஒரு கிலோமீட்டர் நடந்து செல்லவேண்டும். அதன் அழகை மனதில் அசைபோட்டுக்கொண்டே, அங்குள்ள பழங்குடி இளைஞன் ஒருவனிடம் பணம் செலுத்தி எங்களை காட்டுவழி வழிநடத்த அழைத்துக்கொண்டு கிளம்பினோம். (வாகன ஓட்டுனர் வரமுடியாது என்று சொல்லிவிட்டார்.) சரிசெய்யப்படாத ஒத்தையடி பாதை. வலது புறம் பாறைகளோடு வளர்ந்த மரங்கள் செடிகொடிகள். இடதுபுறம் படுபயங்கர பாதாளம். தவறுதலாக காலை எங்கேனும் வைக்கநேர்ந்தால் மரணம்தான். உடனே காப்பாற்ற வருவதற்கு யாருமே இல்லாத இருளும் அமைதியும் கூடிய இடம் அது. குரங்குகள் வேறு அங்கும் இங்கும் தாவி நம் கைகளில் உள்ள பைகளைப் பிடுங்குவதற்கு அலைமோதுகிறது. அவைகளுக்கு பயந்து அசையமுடியாத நிலையில் உடலை விரைத்துக்கொண்டு நீர்வீழ்ச்சி நோக்கி நடைபயணம் செய்தோம். நீர்வீழ்ச்சியின் அழகையும் அங்கு உடலில் ஏற்பட்ட புத்துணர்ச்சியையும் தெளிவான தூய்மையான குளிர் நீரின் சுவையையும் உணர்ந்தாலேயொழிய வர்ணனை எழுத்துக்களால் எனக்குச் சொல்லத் தெரியவில்லை. உள்ளே சென்றவுடன் வெளியே வருவதற்கு மனமில்லை. குளித்தோம் நீரில் படுத்தோம், பாறைகளில் அமர்ந்து தியானம் செய்தோம். மூழ்கினோம் விளையாடினோம். பசி எடுக்க ஆரம்பித்தவுடன், வெளியே வந்து உணவருந்திவிட்டு மீண்டும் உள்ளே சென்று குளியலைத் தொடரலாம் என்கிற திட்டம் வேறு போட்டிருந்தோம். அது பாழாய்போனது காரணம் நீர்வீழ்ச்சியில் குளித்துவிட்டு மேலே ஏறுகையில் எங்களின் தோழி ஒருவள் பாறையில் தடுக்கிவிழுத்து முட்டியில் அடிபட்டுவிட்டது. கொஞ்சநேரம், நடக்க சிரமப்பட்டாள். அத்தோடு அத்திட்டத்தை கைவிட்டு, காட்டில் இருந்து வெளியே வந்து, உணவருந்தி ஓய்வெடுத்து மாலை நான்கு மணிவாக்கில் Rinjani மலைக்கு பிரியாவிடை கொடுத்தோம். ஆபத்துகளோடு கூடிய அழகிய இடம் அது. இரவானது ஹோட்டல் வந்து சேர. அன்றைய ஹோட்டல் கொஞ்சம் வித்தியாசமான ஹோட்டல். தோழியின் முதலாளி மூலமாக அந்த ஹோட்டல் எங்களுக்கு அறிமுகம் ஆனது. பாழடைந்த பேய் பங்களா போல் இருந்தது. Senggigi beach’யின் அழகை அந்த பங்களாவில் இருந்து முழுமையாக தெளிவாக ரசிக்கும் மிக உயரமான மலையில் கட்டப்பட்டிருந்த அந்த பங்களாவை இரண்டு நாள் எடுத்துக்கொண்டோம். அங்கு வேறு வீடுகள் இல்லை. இந்த ஒரே ஒரு பங்களாதான் ஆக உச்சியில். மூன்று அறைகள் நீச்சல் குளம், ஓய்வு நாற்காலிகள், ஜஃக்குஸ்ஸி, காற்றுவாங்க இடம் என எல்லா வசதிகளையும் கொண்ட ஒரு ஆங்கிலேயரின் அழகிய அற்புத வீடு அது. அன்பே வா படத்தில் எம்.ஜி.ஆர் இல்லாத சமயத்தில் நாகேஷ் வாடகைக்கு விட்டு பணம் சம்பாதிப்பாரே அதுபோல் என்று நினைக்கிறேன். காரணம் வாகனம் எங்களை இறங்கிவிட்டுச்செல்லுகையில் உள்ளிருந்து ஒரு வயோதிகர் வந்து, பங்களா வீட்டின் வாடகை கட்டணத்தை வாங்கிக்கொண்டார். பிறகு புல் வெட்டுதல், பெருக்குதல், பொருட்களை அடுக்குதல் என அவர் வேலைகளை அவர் பார்த்துக்கொண்டார். வீட்டின் காவல்காரரும் அவர்தான். காற்று சற்று பலமாக வீசினால் கீழே விழுந்துவிடுவது போல் மெலிந்து லேசாக உடல் கூன் வளைந்து இருந்தது அவருக்கு. யாரிடமும் பேசவில்லை. நாங்களே எங்களின் பெட்டிகளை சாமான்களை எடுத்து அறையில் வைத்துக்கொண்டோம். இரவு உணவிற்கு வரும் வழியிலேயே பழங்கள், அங்குள்ள கப்மெஃகீ என வாங்கிவந்துவிட்டோம். அந்த மக்களின் உணவுப்பழக்கம் எங்களுக்கு அவ்வளவாக திருப்தி அளிக்கவில்லை. மீன் கோழிகளை எந்த ஒரு மசாலா பொடியையும் சேர்க்காமல் அப்படியே வாட்டி, சுட்டு, அவித்து வைத்துக்கொண்டு இடித்தமிளகாய் சாந்துடன் ஊறுகாய்போல் தொட்டுத்தொட்டு சாப்பிடுகிறார்கள். எங்கள் குழுவில் பலருக்கு அந்த உணவின் கவிச்சி வாடையினை ஜீரணிக்கமுடியவில்லை. அதனால் அன்றிரவு மெஃகீ வாங்கிவந்து சாப்பிட்டோம். இரவு அதிக நேரம் அரட்டை அடித்தோம். பாடல்களைப்போட்டு டான்ஸ் ஆடினோம். karaoke பாட்டு பாடினோம். சிரிப்புக்குப் பஞ்சமில்லை. மிகமகிழ்வாக கழிந்தது. அதிகாலை ஐந்து அல்லது ஆறு மணி இருக்கும், நானும் எனது தோழியும் உறங்கிக்கொண்டிருக்கின்ற வேளையில், நாங்கள் படுத்திருக்கின்ற கட்டிலை இருவர் சேர்ந்து தூக்கி வலது இடது புறமாக ஊஞ்சல் போன்று வேகமாக அசைக்கின்ற உணர்வு வந்தது. நான் விடுக்கென்று எழுந்துவிட்டேன். தோழியின் பாதி உடல் கட்டிலிலும் பாதி உடல் தரையிலும் கிடந்தது. கிட்டத்தட்ட கீழே விழுந்த நிலையில் அவள் கிடந்தாள். அவளை படாரென்று ஒரு அடி கொடுத்து, கழிப்பறை சென்று வந்தால், இப்படித்தான் எருமை மாடு போல் கட்டிலில் விழுவாய்.! நாயே, பேயே என்று திட்டிவிட்டு, தூக்கம் கலைந்துவிட்ட கடுப்பில் மீண்டும் கட்டிலில் சாய்ந்தேன். ’ம்ம்..நான் என்ன செஞ்சேன், என்னிய ஏன் இப்படி ஏசறீங்க, நான் டாய்லெட்டுக்கே போகல, எப்படி இப்படி கீழே பாதி மேலே பாதி கிடக்குறேன்னு எனக்கே தெரியல,’ என்று முணகிய படி அவளும் மேலே ஏறி சரியாக படுத்துக்கொண்டாள். பொழுது நன்கு புலர்ந்தது, சூரியனை தரிசிக்க நீச்சல் குளத்தின் அருகில் அமர்ந்துகொண்டு கடல் அலையின் அழகினை ரசித்துக்கொண்டிருக்கையில், லேசாக மயக்கம் வருவதைப்போன்ற ஒரு அசைவினை உணர்ந்தேன். இருப்பினும் சுதாகரித்துக்கொண்டு, சூடான காப்பியினை ரசித்துக்கொண்டே கடலின் அழகில் மூழ்கினேன். தோழிகள் ஒருவர் பின் ஒருவராக எழுத்து காலைக்கடன்களை முடித்துவிட்டு அறையிலிருந்து வெளியே வருகையில், அனைவரின் பேச்சிலும் அதிகாலையில் கட்டில் ஆடியது குறித்ததாகவே இருந்தது. எல்லோருக்கும் என்ன நடக்கிறது என்ன நடந்தது என்பதனை சரியாக யூகிக்கமுடியவில்லை. வாசலை பெருக்கிக்கொண்டிருந்த முதியவரை அணுகி, நடந்ததைக் கூறினோம், அவர், ஆமாம், நேற்று நிலநடக்கம் வந்தது, அது இன்னமும் தொடர்கிறது என்று சொல்லி எந்த ஒரு சலனமும் இல்லாமல் இடத்தைக் காலி செய்தார். ஆ.. நில நடுக்கமா.! ஐய்யோ நில நடுக்கமா.! என்னது நில நடுக்கமா.! என எல்லோரும் ஒன்றுசேர எங்களின் பீதிகளை வெளிப்படுத்தினோம். எங்களுக்காக வைக்கப்பட்டிருந்த காலை உணவைக்கூட சுவைக்கமுடியாத குழப்பத்தில் இருந்தோம். எங்களின் வாகனம் வந்தது, அன்றைய நாள் 29/7/2018 இறுதிநாள் எங்களின் பிரயாணம், மறுநாள் 30/7/2018 மலேசியா கிளம்ப ஆயத்தமாகிவிடுவோம். அதனால் மேலும் சில இடங்களைச் சுற்றிபார்த்துவிட்டு அங்கு விற்கப்படும் சில பொருட்களை ஞாபகச்சின்னமாக வாங்கிக்கொள்ளலாம் என்கிற எண்ணத்தில் பயணம் தொடர்ந்தது. வாகனத்தில் ஏறி அமர்ந்தவுடன் முதல் வேளையாக, நிலநடுக்கமா இங்கே.! என்று கேட்டோம். ஆமாம், முதல்முறையாக மிகமோசமான நிலநடுக்கம் வந்ததுள்ளது. நீங்கள் இரண்டு நாட்களுக்கு முன் trawangan தீவிற்குச் சென்றீர்களே, அங்கே mini tsunami ஏற்பட்டது, இந்த ஊர்காரர் ஒருவர் மரணம். பிறகு, நீர்வீழ்ச்சிக்குச் சென்று திரும்பிய அதே நேரத்தில் அங்கு நிலநடுக்கம் வந்து, நீங்கள் நடந்து சென்ற பாதை இடிந்து விழுந்துள்ளது, எத்தனைபேர் மாட்டிக்கொண்டார்கள், யார் மரணம் என்கிற விவரமெல்லாம் சரியாகக் கிடைக்கவில்லை. செய்தித்தாள் பார்த்தால்தான் தெரியும், என்று சொல்லி மழுப்பிவிட்டார். பிறகு நாங்கள் செல்கிற இடமெல்லாம் ஆள்நடமாட்டம் அதிகமில்லாமல் பயணிகள் இல்லாமல் அமைதியாகவே இருந்தது. கடலுக்குப் பூட்டுபோட்டு வைத்துவிட்டார்கள். கப்பல்கள், படகுகள், பெர்ரி என துறைமுகத்தில் அதிகமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. கடலில் யாரும் பயணிக்கவில்லை. மீன்பிடி வேலைகள் நடைபெறவில்லை. அலைகள், பாறைகளையும் கரையையும் பேரிரைச்சலாக மோதிக்கொண்டிருந்தது. நாங்கள் மேலும் சில இடங்களை, பழங்குடிவாசிகளின் வாழ்க்கைமுறை, அவர்களின் பாரம்பரிய நடன நிகழ்ச்சி, அவர்களின் பள்ளிக்கூடம், ஷாப்பிங், கடற்க்கரைக்காற்று மீண்டும் கோவில் என சுற்றிவிட்டு, மாலை வீடு திரும்புகையில், நெட் கிடைத்தது. கிடைத்த மறுநொடி எங்களின் கைப்பேசியில் வட்சாப் மற்றும் குறுஞ்செய்திகள் குவியத்துவங்கிற்று. அம்மா எங்கே,? எங்கே இருக்கின்றாய்.? உங்களுக்கு ஒன்னும் ஆகலையே, இங்கே செய்திகள் தெறிக்கின்றன, என்ன ஆச்சு.? நீங்கள் சென்ற இடத்தில்தான் நில நடுக்கமும் மினிசுனாமியும் வந்ததாக சொல்லப்படுகிறதே, நிலைமை எப்படி இருக்கு அங்கே.? எங்கேயும் போகவேண்டாம், உடனே ஊர் திரும்புங்கள்.! முடிந்தால் இன்றே கிளம்புங்கள். கிட்டத்தட்ட 500 வெளியூர்பயணிகள் Rinjani மலையில் மாட்டிக்கொண்டதாக தகவல் வருகிறது. உண்மையா.? இப்போ நீங்களெல்லாம் எங்கே இருக்கின்றீர்கள்.? இதுவரை 66முறை நேற்றும் இன்றும் நிலநடுங்கள் ஏற்பட்டிருந்தனவாம்.! கவனம் கவனம். வீடு திரும்புங்கள், போன்ற செய்திகள் கேள்விகள் அடங்கிய குறுந்தகவல்கள் நூற்றுக்கும் மேலாக வந்து குவிந்திருந்தன. எங்களுக்கு அப்போதுதான் அதன் பேராபத்தை சரியாக உணரமுடிந்தது. இவ்வளவு நடந்துள்ளது, ஆனால் இங்கே உள்ள நமக்கு எதுவும் தெரியாமலேயே நாம் சுற்றுலா என்கிற பெயரில் சுற்றிக்கொண்டிருக்கின்றோமே, என்று பதற ஆரம்பித்தோம். பெரிய ஹோட்டலில் தங்கியிருந்தால் ஆள் நடமாட்டம் அதிகமாக இருந்திருக்கும், நாம் யாரிடமாவது பேசி தகவல் அறிந்துகொள்ள வாய்ப்பு ஏற்பட்டிருக்கும். இதுவோ ஒரு பங்களா, அங்குள்ள முதியவர் யாரிடமும் பேச்சுகொடுப்பவராகத் தெரியவில்லை. எங்களின் வாகனமோட்டியோ, உண்மை நிலவரத்தை மறைந்தே கூறிவருகிறான். வெப்சைட் சென்று என்ன நடக்கிறது என்று அனைவரும் ஒன்றுசேர செய்திகளை வாசித்தோம், நிலவரங்களை பதிவுசெய்திருந்த youtube காட்சிகளைப் பார்த்து திடுக்கிட்டோம், காரணம் நேற்று நாங்கள் சென்ற நீர்வீழ்ச்சிப் பாதைகள் இடிந்து விழுந்திருந்தது, அங்கே ஹெலிக்கப்டர் மூலம் மக்களுக்கு அந்நாட்டு அரசாங்கம் உதவி செய்துகொண்டிருப்பதைக் கண்டோம்.. மலேசியர் ஒருவர் பலி என்கிற செய்தியையும் வாசித்தோம். எல்லோர் முகத்திலும் கலவரம் தெரிந்தது. அதே வேளையில் எதோ ஒரு சக்தி நம்மை எல்லா ஆபத்துகளில் இருந்தும் காப்பாற்றிக்கொண்டே வந்திருக்கிறது என்கிற ஆறுதலும் இதமளித்தது. இரவு உணவிற்கு முன் அனைவரும் வட்டமாக அமர்ந்து, பிரார்த்தனை செய்தோம். அமைதியாக இருந்தோம். இன்னும் ஒரு பொழுது, ஊருக்கு ஓடிவிடலாம் என்கிற சிந்தனை வார்த்தை வடிவமாக எல்லோர் வாயிலிருந்தும் வந்துகொண்டே இருந்தது இரவு தூக்கம் வரவில்லை. கட்டிலில் கண்விழித்துக்கிடந்தோம். என் அருகில் படுத்திருந்த தோழி அதிகம் புலம்பியவளாக இருப்பினும் விரைவாகவே கண்யர்ந்தாள். நானும் எப்படித்தூங்கினேன் என்று தெரியவில்லை. தீடீரென்று ஒரு அலறல் சத்தம், அருகில் தூங்கிக்கொண்டிருந்த தோழி, சாமி வந்ததைப்போல் ஸ்ஸ்ஸ்ஸ் ஷூஷூஷூ….. ஆ..ஆ..ஆ..ஆஆஆஆஆ ஐயோ… ஐயோ… என்று அலறினாள். தடாரென்று எழுந்து, ஏய் என்னாச்சு.? என்று கேட்டேன். சத்தம் அடங்கவில்லை. அவளின் பெயரைச்சொல்லி அழைத்தேன். அமைதியாக இருந்தாள். பக்கத்து அறையில் இருந்த தோழிகளும் ஓடிவந்து, என்ன சத்தம்., யாரு சத்தம் போட்டா.? என்று கேட்டுக்கொண்டே கதவைத்தட்டினார்கள். மணி அதிகாலை 2.00. சத்தம் போட்ட தோழி தனது போர்வையை இழுத்து நெடுமுக்காடு போட்டுக்கொண்டு தூக்கத்தைத் தொடர்ந்தாள். மீண்டும் பிரார்த்தனை செய்தோம். ஜபம் செய்தாள் மற்றொரு தோழி. கொஞ்ச நேரம் என் அறையில் இருந்தார்கள். பிறகு அவர்களின் அறைக்குச் சென்றுவிட்டர்கள். நான் தைரியசாலிதான் இருப்பினும் அன்று மிகவும் பலகீனமானவளாக மாறிப்போயிருந்தேன். நெஞ்சு கனத்தது. இருதயத்தின் படபடப்பு அதிகரித்துக்கொண்டே இருந்தது. என்னால் அந்த அறையில் தொடர்ந்து தலை சாய்க்கமுடியவில்லை. எந்த லாஜிக்’கும் எனக்கு வேலைசெய்யவில்லை. எந்த விஞ்ஞானமும் மெய்ஞானமும் கைகொடுக்கவில்லை. அவளைப்பார்த்துக்கொண்டே அமர்ந்திருந்தேன். மீண்டும் அலற ஆரம்பித்தாள், இந்தமுறை பேசினாள், என் கழுத்தை யாரோ பிடித்து நெருக்குகிறார்கள். ஆ... ஐய்யோ, வலி வலி விடுங்கள் விடுங்கள்… என்று, அதற்கு மேல் நான் நிற்கவில்லை, அங்கிருந்து ஓட்டம் பிடித்து பக்கத்து அறையின் தோழிகளோடு படுத்துக்கொண்டேன். விடிந்ததும் முதல்நாள் நடந்த எதுவும் அவளுக்குத் தெரியவே இல்லை நினைவிலும் இல்லை. நாங்களும் அதிகமாக அதைப்பற்றி பேசிக்கொள்ளவும் இல்லை. பாதுகாப்பாக ஊர் திரும்பினோம். இப்போது, ’ரிஸ்க் எடுப்பது எங்களுக்கு ரஸ்க் சாப்பிடுவதைப்போல்’ என்று சொல்லிக்கொண்டு திரிகிறோம் திகிலாக... Posted by ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மி at 8/03/2018 2 கருத்துகள்: இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Twitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர் புதன், அக்டோபர் 04, 2017 கவனம் கவனம் முகநூலில் ஒன்பது வருடம் கடந்துவிட்ட எனக்கு நேற்று ஏற்பட்ட சங்கடம் இது… என் உறவுக்கார தங்கை ஒருவள் முகநூலில் என் நட்பு வட்டத்தில் இருக்கின்றாள். சமீபத்தில் நானும் அவளும் நண்பர்களானோம். ஆனால், நேற்று இரவு தீடீரென்று அவளிடமிருந்து மீண்டும் ஒரு நட்பு விண்ணப்பம் வந்திருந்தது. `இவள்தான் நம் நட்பு வட்டத்தில் இருக்கின்றாளே.! ஏன் மீண்டும் அனுப்புகிறாள், என்று யோசித்துக்கொண்டே, அவளின் நட்பு விண்ணப்பத்தை ஏற்றுக்கொண்டேன். அப்போது நான் இரவு உணவிற்காக வெளியே சென்றிருந்தேன். என் கைப்பேசியின் பேட்டரி வேறு முடியும் தருவாயில் அதன் விளக்கை மங்கச்செய்துகொண்டிருந்தது. விண்ணப்பம் ஏற்றுக்கொண்ட மறு நொடி, மெசன்ஞர்’இல் வந்து அக்கா ஒரு உதவி, என்றாள். அவள் இதுவரையில் என்னிடம் எந்த ஒரு உதவியும் கேட்டதில்லை. இளவயதில் கணவனை இழந்தவள். அழகானவள். இருந்தபோதிலும் யாருடைய உதவியும் இல்லாமல் தன் சொந்தக்காலில் கம்பீரமாக வாழ்ந்துவருபவள் அவள். அவளிடமிருந்து இப்படி உதவி என்று கேட்டு ஒரு கோரிக்கை வருகின்றபோது அதை என்னால் மறுக்க முடியவில்லை. சரி சொல்லு என்ன உதவி, என்றேன். என் கைப்பேசியில் உள்ள எண்கள் எல்லாமும் அழிந்துவிட்டன, என்னிடம் உங்களுடைய கைப்பேசி எண்ணைக்கொடுங்கள் என்றாள். நானும் கொடுத்தேன். இந்த உரையாடலின் போது, பேட்டரி இன்னமும் கரைந்துகொண்டிருந்தது. என் எண்ணைக்கொடுத்த மறுகணம், அக்கா இப்போது உங்களின் கைப்பேசியில் நான்கு எண்கள் கொண்ட ஒரு `கோட்’ வரும் அதை என்னிடம் பகிருங்கள் என்றாள். அதைச்சொல்கிற போது அவள் அவசரத்தில் உள்ளதுபோல், விரைவாக விரைவாக என்று என்னிடம் மன்றாடினாள். நானும் கொடுத்தேன். எனது பேட்டரி மங்கிக்கொண்டே இருந்தது. மறுமொழி சொல்கிறபோது, எனது பேட்டரி எச்சரிக்கையினை அவளிடம் மெசஞ்சர் வழி சொன்னேன். அதைக்கேட்ட அவள், அக்கா ப்ளீஸ், கொஞ்ச நேரம், எனக்காக, ப்ளீஸ் என்று போராடுவதைப்போல் இருந்தது. முதலில் வந்த நான்கு எண்களைக்கொடுத்தவுடன், மீண்டும் ஒரு நான்கு எண்கள் வந்துள்ளது, அதையும் சொல்லுங்கள் என்றாள், அதையும் கொடுத்தேன். என்னமோ பிரச்சனை போலிருக்கிறது அக்கா, நான் உங்களிடம் பிறகு சொல்கிறேன், இன்னொரு நான்கு எண்கள் வந்துள்ளது அதையும் கொடுங்கள் என்றாள். கொடுத்தேன். இப்படியே நான்கு ஐந்து முறை இருக்கும். கொடுத்துக்கொண்டிருந்தேன். சட்டென்று மனதிற்குள் ஒரு பொறி தட்டியது. மர்ம ஆசாமியிடம் சிக்கியதை உணர்ந்தேன். தம்பியை அழைத்து, அந்த உறவுக்கார தங்கையின் தொலைபேசி எண்களை வாங்கி அவளுக்கு அழைப்பு கொடுத்தேன். (அவளின் புதிய எண்கள் என்னிடம் இல்லை) ஹாலோ யார் இது.? மறுமுனையில் அவள்தான். நான் தான் விஜயாக்கா, என்றேன். ஏன் திடீர் அழைப்பு.? இப்போதுதான் என் நினைப்பு வந்ததா.? என்றாள். எனக்குத் தூக்கிவாரிப்போட்டது. முகநூல் மெசஞ்சர் விஷயத்தை அவளிடம் விளக்கினேன். அரண்டுபோனாள். ஏன்க்கா இப்படி இருக்கீங்க.! என்னிடம் ஒரு வார்த்தை கேட்டிருக்கக்கூடாதா.? என்று உரிமையுடன் திட்டினாள். பேசிக்கொண்டிருக்கின்றபோது பேட்டரி மடிந்துவிட்டது. கைப்பேசி அணைந்துவிட்டது. மண்டையில் நண்டு ஓட, உணவுக்கடையில் உணவைக்கூட சுவைத்து உண்ண முடியாமல், எதோ ஒருவித பயம் மனதைக் கவ்விக்கொண்ட சூழலில், சாப்பிட்டும் சாப்பிடாமலும் வீடு வந்து சேர்ந்தேன். வந்தவுடன் முதல் வேலையாக கைப்பேசிக்கு உயிர்கொடுக்க சார்ஜரில் போட்டேன். சிலநிமிடம் கழித்து கைப்பேசி கண்விழித்தது. என்ன தான் நடந்தது என்று எல்லா குறுந்தகவல்களையும் படபடப்புடன் வாசித்தேன். அதில், use PIN code ____ to complete your payment. This key is valid for 30minutes. என்று வந்திருந்தது. DIGI ringtone புதுப்பிக்கின்ற குறுந்தகவல்கள் வருகின்ற எண்ணில் இந்த குறுந்தகவல்களும் வந்திருந்தன. என்ன payment confirmation ஆக இருக்கும் என்கிற குழப்பத்தில், DIGI செண்டருக்கு அழைத்தேன். தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு ஒரு அவசர வேலைக்காக அழைத்தால், ஒன்ன அமுத்து, இதுக்காக.. ரெண்ட அமுத்து, அதுக்காக…. மூன அமுத்து, இதுக்காக….. நால அமுத்து அதுக்காக …’ன்னு பொறுமைக்கு சோதனை வரும். பலமுறை முயன்று, ஒருவர் அழைப்பை எடுத்தார். விவரத்தைச்சொன்னேன். அவர்.. ஐய்யோ, உங்களை யார் உங்களின் தனிப்பட்ட விவரங்களைக் கொடுக்கச்சொன்னது, உங்களின் இந்த மாத பில்’இல் இருந்து ரிங்கிட் மலேசியா முன்னூறு சற்றுமுன் தான் அந்த எண்ணிற்கு மற்றப்பட்டுவிட்டது. அதை நாங்கள் திருப்பிக்கொண்டு வர, நீங்கள் கிட்டத்தட்ட ஒருமாதகாலம் காத்திருக்கவேண்டும். இருந்தபோதிலும் பயம் வேண்டாம், அதை நாங்கள் மீட்டுக்கொள்வோம். இப்படிப் பலமோசடிகள் ஆன்லைனில் நடந்துகொண்டு வருகிறது. நீங்கள்தான் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். கவலைவேண்டாம்.! வேறு எதாவது கேட்கவேண்டுமா.? என்று அழைப்பைத்துண்டிக்க நினைத்தார். அவரிடம் சிலகேள்விகள் கேட்டேன். எப்படி எங்களின் DIGI பில் பணத்தை பிறர் எடுத்துக்கொள்ள DIGI அனுமதிக்க முடியும்.! அதற்கு நீங்கள் செய்யவிருக்கின்ற பாதுகாப்பு அம்சங்கள் யாவை.? ஏன் இப்படி நடக்கிறது.? DIGI எடுக்கவிருக்கின்ற எதிர்கால பாதுகாப்பு நடவடிக்கைகள் என்ன.? அவர் சொன்ன பதில், ஆன்லைனில் இப்படி பலவித மோசடிகள் நிகழ்கின்றன, நீங்கள்தான் உங்களின் விவரங்களை பாதுகாப்பாக வைத்திருக்கவேண்டும். இனிமேல் யார் எதைக்கேட்டாலும் பகிராதீர்கள். எங்களின் நிறுவனம் இந்தச்சிக்கல்களை கூடிய விரைவில் சரி செய்யும். பொறுமை காக்க, என்று சொல்லி அழைப்பைத்துண்டித்தார். எச்சரிக்கை..எச்சரிக்கை. இப்படி என் பெயரில் யாரேனும் உங்களின் தனிப்பட்ட விவரங்களைக் கேட்க நேர்ந்தால், தயவு செய்து பகிராதீர்கள். Fraudகள் நிரைந்த உலகமைய்யா இது. எல்லாம் முடிந்தபிறகு தங்கைக்கு அழைத்து விவரங்களைக் கேட்டேன். அவளின் முகநூலில் எந்தச்சிக்கலும் இல்லை. யாரும் `ஹெக்’ செய்யவில்லை. ஆனால் யாரோ ஒருவர், அவரின் புகைப்படங்களை எடுத்து/திருடி, பெயரில் சில மாற்றங்கள் (சட்டென்று கண்டு கொள்ளமுடியாத அளவிற்கு) செய்து, உதாரணத்திற்கு; அப்பா பெயர் Murthy என்றால் அதை Mutty என்று மாற்றி, அதை வைத்து ஒரு பேக் ஐடி செய்து, எல்லா உறவுகளுக்கும் நட்பு விண்ணப்பம் கொடுத்து, அவர்களிடம் அவரவர் தனிப்பட்ட விவரங்களை சேகரித்துவருவதாக சில உறவுக்கார நபர்கள் பகிர்ந்தார்கள். இந்த வகை திருட்டு, வட்சாப்பிலும் பரவலாக வந்துகொண்டிருக்கிறதாம். கவனம்.!! Posted by ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மி at 10/04/2017 2 கருத்துகள்: இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Twitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர் வியாழன், ஆகஸ்ட் 17, 2017 ஒரு புரிதலுக்காக நம் எல்லோருக்கும் பள்ளிப்பருவத்தில், வருங்கால ஆசை, யாராக என்னவாக ஆக வேண்டும் என்கிற கனவு ஒன்று இருந்திருக்கும். மண்டையில் படிப்பே ஏறாத எனக்கு, மற்றவருக்குப் போதிக்கின்ற ஆசிரியை தொழிலில் அவ்வளவு ஈடுபாடு. அது எனது லட்சியமாகவும் இருந்தது. மலாய் மொழியில் கிரெடிட் பெற்றிருந்தாலேயொழிய அந்தத் தொழிலுக்குச் செல்வது முடியாத காரியமாகவே இருந்தது. இருப்பினும் முயன்று முயன்று தோற்றுப்போனவள் நான். அதேவேளையில் கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களில் மிகுந்த ஆர்வமுள்ள நான், அந்தப்பாடங்களை மாலை நேர வகுப்பின் மூலம் டியூஷன் சொல்லிக்கொடுத்து எனது ஆசிரியை தொழில் ஆர்வத்தைத் தீர்த்துக்கொண்டேன். நல்ல வழிகாட்டல், தொடர்ந்து படிக்க வசதிகுறைவு போன்ற காரணங்கள் இருந்தபோதிலும், பரீட்சை புத்தகம் போன்றவற்றின்பால் வெறுப்பு ஏற்பட்டதன் விளைவாகவும், ஒரு கம்பனியில் ரிமா390.00 சம்பளத்தில் வேலைக்குச்சேர்ந்தேன், (அப்போது 1980களில்- இது நல்ல சம்பளம்) ஆசிரியருக்கும் ஆரம்பச் சம்பளம் கூட அதேதான் என்கிற மன ஆறுதலுடன் நான் எனது ஆசிரியை ஆகும் கனவை நிறுத்திக்கொண்டு, அட்மின் வேலையிலேயே எனது அனுபவத்தை வளர்த்துக்கொண்டு அந்தத் துறையிலேயே தொடர்ந்து படித்து எனது அலுவலக கணினி அறிவுகளை மேம்படுத்திக்கொண்டேன். இருந்தபோதினிலும், என் குழந்தைகள் மூலமாக, எனது கனவிற்கு தீனிபோட ஆரம்பித்தேன். என் மகள் ஆரம்பத் தமிழ் பள்ளியில் பயின்றபோது, ஆசிரியை ஆகும் கனவை வைத்திருந்தாள். ஆசிரியர் போல் பாவனை செய்து, கையில் பிரம்பை ஏந்திக்கொண்டு தனக்குக்கீழ் உள்ள பலகீனமான தனது தம்பியை அடிப்பது, மிரட்டுவது, தண்டனை கொடுப்பது என ராஜ்ஜியம் செய்துகொண்டிருப்பாள். படி, இது என்ன.?, அது என்ன.? என்பாள். பிறகு நான்காம் வகுப்பில் அடியெடுத்து வைக்கின்றபோது ஆரிசியை கனவில் இருந்து விஞ்ஞானி ஆகவேண்டும் என்கிற கனவிற்குள் நுழைந்திருந்தாள். அப்துல் கலாம் மற்றும் கல்பனா போன்றவர்களின் தாக்கத்தால் இந்த முடிவு. பிறகு இடைநிலை பள்ளிக்குச்சென்றவுடன், பல கனவுகளைச் சுமந்த பலவிதமான மாணவர்களின் சகவாசம் கிடைத்தபொழுது, படிப்பில் கூடுதல் கவனம் தேவைப்படுகிறபொழுது, கனவுளே இல்லாமல், இந்த நிலையில் இருந்து அடுத்த நிலைக்கு தேறினாலே போதும் என்கிற மனநிலையில் பயணித்துக்கொண்டிருந்ததை என்னால் உணரமுடிந்தது. இருப்பினும் லட்சியம் இல்லாமல் வாழ்வில்லை, விஞ்ஞானி என்கிற லட்சியத்திலேயே இரு, என்று நான் எச்சரிக்கை விடுத்தபோது, `உங்க தாத்தாதானே, வா கொடுக்கறேன் என்பதற்கு,’ என்று போதனாமுறையின் பால் உள்ள அழுத்தத்தினால் விரக்தியாக உதிர்த்த வார்த்தைகளில் மிரண்டு போயிருந்தேன். கனவுகள் இல்லாமல் லட்சியமில்லை. லட்சியமில்லாத கல்வி எதற்கு, என்கிற எச்சரிக்கையினை அடிக்கடி கூறிய வண்ணமாகவே இருப்பேன். அதன்பிறகு நாலாபக்கமும் தோல்வி, விரக்தி, விழுந்து எழுந்து, அழுது புரண்டு, இரவுபகல் பாராமல் படித்து இப்போது மருத்துவர். அதுவும் சிறைச்சலையில். தூக்கு போடவிருக்கின்ற கைதியை நன்கு பரிசோதித்துவிட்டு, இவருக்கு உடல்நிலை சரியாக உள்ளது, தூக்கு போடலாம், என்று சொல்கிற வேலை. சில அனுபவங்கள் பதைபதைக்கவைக்கும். சில அனுபவங்கள் கண்ணீரை வரவழைக்கும். இன்னமும் படித்தவண்ணமாக அவளின் வாழ்க்கைப் பயணம் தொடர்கிறது. என் மகன், படிக்கமாட்டான். படிப்பு என்றாலே வேப்பங்காயைய் கடித்ததுபோல் கசக்கும் அவனுக்கு. வீட்டுப்பாடம் இருக்கிறாதா.? என்று கேட்டாலே, நான் செய்துவிட்டேன் என்று பொய்களைச் சொல்லி கார்ட்டூன் பார்ப்பான். கார்ட்டூன் படங்கள் என்றால் அவ்வளவு பிரியம். பார்ப்பதோடல்லாமல் அங்கே அவனை பரவசமூட்டுகிற பாத்திரங்களை வீட்டுச்சுவரில் வரைபடமாக வரைந்து வரைந்து பார்த்து மகிழ்ந்துகொள்வான். அடேயப்பா எவ்வளவு பாத்திரப்படைப்புகளை அவன் வரைந்துள்ளான். கைதேர்ந்த ஓவியர்போல் மிக அழகாக வரைவான். அந்த ஆர்வத்தைக் குழிதோண்டிப்புதைத்தது தாயான நான் தான். சுவர் அசிங்கமாகிறது, உறவுகள் வந்தால் முகஞ்சுழிப்பார்கள், விலையுள்ள சாயம் வீணாய்ப்போகிறது என்று பாடாய் படுத்தி துன்புறுத்தி படிப்பில் கவனத்தைத் திருப்பப்போராடினேன். நான் மட்டுமல்ல கணவரும்தான். என்னுடைய கனவு ஆசியர்தான். கணவருடைய கனவு என்பது பல் மருத்துவர். அதற்கான அனைத்து தகுதிகளும் அவருக்கு இருந்தும், ஆரசாங்கத்தையே நம்பியிருந்ததால், இரண்டுமுறை சிபாரிசுமூலம் இண்டர்வியூ சென்று தோற்றுப்போய் சோர்வாகி அந்தக்கனவை நினைவாக்கும் முயற்சியினைக் கைவிட்டார். பணம் இருந்திருந்தால், தனியார் கல்லூரிக்குச்சென்று கல்வி தொடர்ந்திருக்கலாம். அதற்கும் வழியில்லை. காலமும் கடந்துவிட்டது. நம் குழந்தைகளை நாம் அப்படி விடமுடியாதல்லவா.! எப்பேர்பட்டாவது அவர்களுக்கு ஒரு கனவை உருவாக்கவேண்டும் அதை நிறைவேற்ற பாடுபடவேண்டும் என்பதில் மிகுந்த கவனமாக இருந்தோம், நாங்கள். எங்களுக்குக் கிடைக்காததையெல்லாம் அவர்களுக்குக்கொடுக்கவேண்டும் என்கிற வெறியுடன் பணம் சேர்க்க ஆரம்பித்தோம். இருந்தபோதிலும், மகனுக்கு ஆரம்பப்பள்ளியில் (தமிழ்) படிப்பில் இருந்த ஆர்வம் இடைநிலை பள்ளியில் கணிசமாகக் குறைந்து போனது. முக்கியப்பாடமான மலாய் மொழியில் தேர்ச்சி பெற படாதபாடு பட்டான். வாசிப்புப் பழக்கம் இருந்தாலேயொழிய மொழிப்பாடத்திலும் வரலாறு போன்ற பாடங்களிலும் தேர்வது சிரமம்தான் என்கிறபோது வாசிப்பில் கவனத்தைத் திசை திருப்ப முயற்சி எடுத்தோம். இது எங்களுக்கு மிகுந்த மன உளைச்சலைக் கொடுத்தது. வாசிக்கச்சொல்லி போராடினார் கணவர். புத்தகக் கடைகளுக்கு அழைத்துச்சென்றால், கார்ட்டூன்ஸ் புத்தகங்களை வாங்கி வாசிக்க ஆர்வப்படுவான். எதையாவது வாசிக்கட்டும், வாசிப்பு பழக்கமிருந்தாலே போதும் என்று போராடுவதை நிறுத்தினோம். அதேவேளையில், கல்வியில் கவனமில்லாமல் இருக்கின்றானே என்கிற வருத்தம் வாட்டி எடுத்தது. மூன்றாம் படிவ தேர்வில் பின்தங்கி இருந்தான். இருந்தபோதிலும் எஸ்.பி.எம்’இல் அறிவியல்துறை மாணவனாக ஏற்றுக்கொள்ளப்பட்டது ஆறுதலைக்கொடுத்தது. அந்தத் தேர்வின் முடிவை அவமானமாகக் கருதி உறவுகளிடம் எதையும் பகிராமல், அவனை, மனதளவில் நோகடித்து துன்புறுத்தினேன். படிப்பு ஏறவில்லை, புண்ணியமில்லை, எதற்கும் லாயக்கு இல்லை, சாவு, செத்துத்தொலை என்றெல்லாம் திட்டியிருக்கின்றேன். எஸ்.பி.எம் பரீட்சை வந்தது. எஸ்.பி.எம் என்பது மாணவப்பருவ வாழ்வை புறட்டிப்போடுகிற முக்கிய காலகட்டம் என்பதால், படி.. படி.. படி.. தம்பி.. என்று கோரஸ் ஆக பாட்டுப்பாடினோம். இரவு பகல் பாராமல் டியூஷன் வகுப்பிற்கு அனுப்பிவைத்து படி..படி.. படி என்று அவனுக்கு அழுத்தம் கொடுத்து நாங்களும் மனதளவில் நிம்மதியில்லாமல் இருந்தோம். தேர்வும் வந்தது, நினைத்ததைவிட நல்ல நிலையிலேயே தேர்வாகி இருந்தான். கணிதம் அறிவியலில் சிறப்புத்தேர்வு பெற்றிருந்தான். முக்கிய நான்கு பாடங்களில் A+ B+ என்று தேர்வாகி மனதில் பாலைவார்த்தான். உறவுகளோடு மகிழ்வாக பகிர்ந்தோம். அவனுக்கு நான் ஒரு லட்சியக் கனவை வளர்த்துவிட்டிருந்தேன். அதாவது விமானி ஆவது. (Pilot). ஆரம்பப்பள்ளி முதலாம் ஆண்டு படிக்கின்றபோது, நீ வருங்காலத்தில் என்னவாகப்போகிறாய்.? என்று கேட்டதிற்கு. `எனக்கு எங்க சார, ரொம்ப பிடிக்கும், நான் டீச்சர் ஆகப்போகிறேன்.’, என்றான். பெரும்பாலான குழந்தைகளுக்கு முதல் ஹீரோ அவர்களைக் கவர்ந்த ஆசிரியர்தான். அதுவே அவர்களின் கனவாகியும் போகிறது. பிறகு கால ஓட்டத்தில் அது மாறிவிடுகிறது. அண்மையில் ஆசிரியர் பயிற்சிக்கல்லூரி விரிவுரையாளரோட பேசிக்கொண்டிருந்தேன். அங்கு நடந்த ஒரு உரையாடலை இங்கே பகிர்கிறேன். அவர் சொன்னார், ஆண்கள், ஆசிரியர் வேலைக்கு வருவது அதிகமாகக் குறைந்து வருகிறது. அதனால் தேவைக்கேற்ப பள்ளித்தகுதியோடு எந்த ஆண் மாணவன் ஆசிரியர் பயிற்ச்சிக்கு மனு செய்திருந்தால், எந்த ஒரு தடையும் இல்லாமல் அவனை அப்பயிற்ச்சிக்கு உடனே எடுத்துக்கொள்வோம், என்கிறார். இருப்பினும், அந்த பயிற்ச்சிக்கு வந்திருந்த ஆண் மாணவர்கள் பெண்பிள்ளைகளோடு ஒப்பிடுகையில் கால் வாசி கூட இல்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாய், அம்மா அடித்து விரட்டியதுபோல் சோகமாய் உற்கார்ந்திருந்தார்கள் அவர்கள். உற்சாகமாய் பெண்பிள்ளைகள். இதிலிருந்து ஆண்களுக்கு ஆசிரியர் ஆவதற்கு ஆர்வமில்லை என்று புரிந்துகொள்ளலாம். ஆக, நான், என் மகனுக்கென்று தேர்ந்து எடுத்த கனவு, பைலட். அறிவியல் துறை மாணவனான என் மகனுக்கு, பைலட் கல்லூரியில் நுழைவதற்கு எந்த தடையும் இக்காது என்று நம்பி சில முயற்சியிகளில் இறங்கினேன். மலேசியன் எர்லைன்ஸ் (MAS) கல்லூரியில் விசாரித்தபோது, 10ஏக்களுக்கு மேல் உள்ள மாணவர்கள் மட்டுமே அவர்கள் கொடுக்கவிருக்கின்ற தேர்வில் அமர வாய்ப்பு உள்ளதாக அனுபவப்பட்டவர்கள் சொல்லக்கேட்டு, மகனிடமும் கூறினேன். அதற்கு அவன், அப்படியென்றால் அங்கே நுழைவது அவ்வளவு சுலபமல்ல போலிருக்கிறது, நான் விமானம் பழுதுபார்க்கின்ற என்ஜினரிங் துறையில் படித்து, சில நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டு பிறகு பைலட் வேலைக்கு முயல்கிறேன், என்று ஒரு முடிவுக்கு வந்தான். அந்தத் துறையில் படிக்க அரசாங்கத்தில் மனு போட்டான். கிடைத்தது மெக்கனிக்கல் என்ஜினரிங். அது வேண்டாம் என்று முடிவெடுத்து, தனியார் கல்லூரியில் ஏர்கிராஃப்ட் என்ஜினரிங் பயிற்சியில் சேர்ந்தான். படித்தான். டிப்ளோமா முடித்தவுடன். அந்தத்துறையில் மேலும் தொடர்ந்து படிக்கவேண்டுமென்றால், வேலை அனுபவம் மட்டுமே உதவக்கூடும் என்பதுதான் விதி. வேலைக்கு மனு செய்தான். ஏர் எசியாவில் ஆறு மாதம், மாஸ்’யில் ஆறு மாதம், SAE’யில் ஒரு வருடம் என அனுபவங்களைத் தேடிக்கொண்டான். இடையிடையே பைலட் வேலைக்கு வாய்ப்பு கிடைக்குமா என்றும் காத்திருந்தான். நாட்கள் நகர்ந்தன. விமானப்பழுது பார்க்கின்ற பணியிலேயே தொடர்ந்தான். சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் அவன் அனுப்பிய வேலை மனுவிற்கு பதில்கொடுத்து பணிக்கு அழைத்திருந்தது. அங்கு சென்று வேலை பார்ப்பது அவனின் அப்போதைய கனவாக இருந்தபோதிலும், அடி ஆழ்மனதில் பைலட் என்கிற கனவு தணலாக இருந்துகொண்டுதான் இருந்திருக்கிறது என்பதை, ஏர் ஏசியாவின் ஃகெடேட் பைலட்’க்கு மாணவர்களை எடுக்கின்ற விண்ணப்பம் வந்தவுடன், அதற்கு தாவியபோது எனக்குத் தெரியவந்தது. கட்டங்கட்டமாக ஆறு படிநிலையில் தேர்வு நடத்தப்பட்டபோது, பலர், முதல் படிநிலையிலேயே தோல்வியுற்று திரும்பியிருக்கையில், என் மகன் நான்கு படிநிலை தாண்டி தேர்வாகி, கிட்டத்தட்ட அந்தக் கல்லூரியில் இடம் கிடைக்கின்ற நிலையில் முழுநம்பிக்கையுடன் இருந்தபோது, அந்தக் கனவு தரைமட்டமாகச் சரிந்தது. நல்ல உயரம், அழகிய முகவெட்டு, ஆரோக்கிய உடல்வாகு, மாநிறம், அழகிய பெரிய கண்கள், கிட்டத்தட்ட ஹீரோ மாதிரியான லூக் (காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு) கொண்ட அவனுக்கு நிச்சயம் இந்த பயிற்ச்சியில் இடமுண்டு என்றிருக்கையில். இப்படி ஒரு இடி. இறுதி படிநிலை அந்தத்தேர்விற்கு, மருத்துவப்பரிசோதனைக்கு அழைப்பு கொடுக்கப்பட்டிருந்தது. முதல்நிலை (first class) மருத்துவப்பரிசோதனை செய்யவேண்டும். உடலைப்பெருத்தவரையில், முதல்நிலை மருத்துவப்பரிசோதனையில் தேர்வாகி இருந்தான். ஆனால், கண்பரிசோதனை என்று வருகிறபோது முதல்நிலை கிடைக்கவில்லை. இரண்டாம் நிலைதான் கிடைத்தது. இரண்டாம் நிலை என்பது ஃகெடேட்பைலட்’ பயிற்ச்சியிற்கு சேர்த்துக்கொள்ளப்படமாட்டாது என்கிற முடிவு தெளிவாகத் தெரிந்தாகிவிட்டது. அதன் பிறகு என்ன.!!? மனம் உடைந்து குளிர்காய்ச்சலே வந்து விட்டது என் மகனுக்கு. கனவுக்கோட்டை சரிந்தால் எப்படி இருக்கும் மனநிலை என்பதனை, இதயம் சுக்குநூறாக வெடிக்க என் மகனின் சோர்வில் பங்குகொண்டு ஆறுதல் வார்த்தைகளைக் கூறினேன். எல்லோரும் சொல்வதைப்போல்தான். `இது எதோ நல்லதிற்குத்தான். இவ்வளவு தூரம் அனுப்பிவைத்த இறைவன், இந்த ஒரு நிலையினைக் கடக்கச்செய்யாமல் விட்டிருப்பானா.! இந்த வேலை உனக்குத் தேவையில்லை என்பதனை இறைவனே எடுத்த முடிவாக நினைத்துக்கொள். இல்லையேல், இப்படி உன் கனவிற்கு முற்றுப்புள்ளி வைத்திருப்பானா.? பணமில்லை, தேர்வில் தோல்வி என்றிருந்திருந்தால், எப்படியாவது அடுத்தமுறை முயன்றிருக்கலாம் அல்லது பார்க்கலாம் என்று நம்மைத் தேற்றிக்கொள்ளலாம். ஆனால்,. இது, இப்போதுதான் தெரியவந்த ஒரு பிரச்சனை. இதற்குத்தீர்வு இல்லை, அதற்கு அவசியமும் இல்லை என்று மருத்துவர்கள் முடிவு செய்தபிறகு, முடிவு நம் கையில் இல்லை. என்ன செய்வது.! அப்படியே நகர்ந்துசெல்லவேண்டியதுதான் என்கிற ஆறுதலை நான் அவனுக்குக் கொடுத்தபோது என மனமும் சுக்குநூறாக சிதறிப்போனதை என்னால் உணர முடிந்தது. ஊன் உறக்கமில்லமல் நாட்கள் நகர்ந்து மூன்று வாரங்களுக்குப்பிறகு சகஜ நிலைக்கு வந்துவிட்டதை கொஞ்சம் உணர முடிகிறது. இப்போதுதான் நான் இந்தக் கட்டுரையினை எழுதியதற்கான முக்கியக் காரணத்திற்கே வருகிறேன். சரி என் மகனின் பிரச்சனை என்னவென்றால்… அவனுக்கு பிறவியிலேயே மிகமெல்லிய யாரும் கண்டுகொள்ளமுடியாத அளவிற்கு Diplopia என்கிற பிரச்சனை இருந்துள்ளது. அது என்ன Diplopia.? என்கிறீர்களா.? இரண்டு கண்களும் ஒரு பொருளை இரண்டு கோணத்தில் காண்பது. அது மிக மோசமாக இருந்தால், பார்ப்பதற்கு மாறுகண் போல் தெரியும் ஆனால் என் மகனுக்கோ, கண் விழிகளை முழுமையாக மேலே உயர்த்தி (விழிகளை மட்டும்- தலையை ஆட்டக்கூடாது) அப்படியே வலது பக்கம் முழுமையாகக் கொண்டுவந்து (விழிகளை மட்டும்-தலையினை ஆட்டக்கூடாது) ஒரு பொருளைப் பார்க்கவேண்டும். அப்படிப்பார்க்கின்றபோது, அந்தப்பொருள் அவனுக்கு இரண்டாகத்தென்படுகிறது. இப்படி ஒரு பிரச்சனை உள்ளதென்று இப்போதுதான் அவனுக்கே தெரிய வந்துள்ளது. காரணம், நாம் எப்போதுமே விழிகளை ஆக மேலே உயர்த்தி, ஆக வலதுபக்கம் திருப்பி ஒரு பொருளைப் பார்க்கப்போவதில்லை, தலையினைத் திருப்பி தலையினை ஆட்டி அங்கும் இங்கும் பார்த்துவிடுவோம். ஆனால், மருத்துவ முதல்நிலை பரிசோதனை என்று வருகிறபோது, இப்படித்தான் பரிசோதிப்பார்கள் கண் மருத்துவர்கள். எனக்கு என்ன மன உளைச்சல் என்றால், சிறுவயதில் ஒருமுறை அவன் என்னிடம் சொல்லியுள்ளான், அதாவது, அம்மா, நான் கண்களை பக்கவாட்டில் நகர்த்தி ஜாடைப்பார்வை பார்க்கின்றபோது, என் கண்கள் மங்களாகத் தெரிகிறது, என்பான். உடனே நான், மூக்குக் கண்ணாடிக்கு அடிபோடுகிறான் போல என்று நினைத்து அதை காதில் வாங்கிக்கொள்ளவில்லை, குழந்தைகள் குணம்தான் தெரியுமே, நண்பன் யாராவது, கண்கண்ணாடி அணிந்திருந்தால், அதே போல் தாமும் போட்டுக்கொள்ள வேண்டும் என்பதற்காக பொய் சொல்வதற்குத் தயங்க மாட்டார்கள். உடனே தாயான நான், இதென்ன?, அதென்ன?, இந்த நம்பர் என்ன?, அந்த நம்பர் என்ன? என்று கேள்விகளைக் கேட்டு, எல்லாம் சரியாகத்தான் உள்ளது. சும்மா இரு, என்று சொல்லி, அவனின் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தேன். பைலட் ஆக முடியவில்லை என்பது இரண்டாவது பிரச்சனை. அது ஒரு பிரச்சனையே இல்லை என்பது வேறு. ஆனால் ஏன் தாயான, கூடுதல் நேரம் என்னோடு இருந்த என் மகனுடைய இந்தப்பிரச்சனையை என்னால் கண்டுகொள்ள முடியாமல் போய்விட்டதே என்பதுதான் என்னுடைய முக்கியப் பிரச்சனை. அன்றே கண்டு பிடித்திருந்தால், ஏழுவயதிற்குள் அறுவைசிகிட்சையின் மூலம் இதை சரி செய்திருக்கலாம் என்கிறார்கள் மருத்துவர்கள். இருந்தபோதிலும் இப்போது இது ஒரு பிரச்ச்னையே இல்லை பைலட் ஆகமுடியாது. அது மட்டும்தாம். மற்றபடி எல்லாம் நார்மல்தான். என்கிறார்கள். என்னுடைய இந்த விழிப்புணர்வு கனவுக்கட்டுரை பிறந்ததிற்கான காரணம் புரிகிறதா.? Posted by ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மி at 8/17/2017 4 கருத்துகள்: இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Twitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர் செவ்வாய், செப்டம்பர் 27, 2016 கள்ளி நான் உன் வீட்டில் நெருப்பு இல்லாத அடுப்பில் பால் பொங்குகிறது அம்மன் போல் ஒரு பெண் கள்வன் நீ நல்லவன். Posted by ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மி at 9/27/2016 1 கருத்து: இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Twitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர் செரிமானம் மூன்று தக்காளி, இரண்டு முள்ளங்கி, மூன்று உருளைக்கிழங்கு, அரை கிலோ ஆட்டிறைச்சி... `ஏம்மா, எல்லாத்தையும் கொஞ்ச கொஞ்சமாக வாங்குறீங்க.?’ தலைக்குமேல் உயர்ந்த மகன் தன் தாயிடம் கேட்டுக்கொண்டே, தாய் தேர்ந்தெடுத்த காய்கறிகளை கூடையில் போட்டு தூக்கிக்கொண்டான். `மாசம் முடியுற வரைக்கும் காசு வேணுமே.. இருக்கிற நூறு ரிங்கிட்’ஐ செலவு செஞ்சுட்டா, அப்புறம் நாளைக்கு என்ன செய்யுறதா.!?’ . `பேங்க்’ல இல்லியா..?’ `எடுக்கற சம்பளம், திங்கறதிக்கே பத்தல. இப்ப சாமான் விக்கிற வெலைய பாத்த இல்லெ,.. இதுல, பேங்க்’ல வேறு காசு இருக்குமா.!?’ தாய் சொல்லிக்கொண்டே, எதையோ மறந்து விட்டதாக, மீண்டும் காய்கறி அடுக்கியிருக்கின்ற பகுதிக்குள் நுழைகிறாள். `எங்கேம்மா..?’ `இரு இரு, இஞ்சி ரெண்டு துண்டு எடுத்திட்டு வரேன். நீ போய் வரிசையில் நில்லு..’ நெரிசலான அந்த பேரங்காடியில் பணம் செலுத்துகிற கவுண்டர் எல்லாம் நீண்ட வரிசையினைப் பிடித்து நின்றது. மகன் கூடையினை வைத்துக்கொண்டு வரிசையில் நின்றான். வரிசையில் அவர்களுக்கு முன் நின்ற மலாய்க்கார பெண்மணியின் ட்ரொலியில் அடுக்கியிருந்த சாமான்களைப் பார்த்தால், அது ட்ரொலிக்கு மேலேயே நின்றது. மேலும் சில சாமான்கள் விலைப்பட்டியல் இடாமல் பிளாஸ்டிக் பைக்குள் மட்டும் போடப்பட்டிருந்தது. விலைப்பட்டியல் இல்லாததால், கவுண்டரில் உள்ள பெண்மணிக்கு ஸ்கேன் செய்வதற்குக் கடினமாக இருந்தது. எல்லோரும் பரபரப்பாக இருந்தார்கள். விலைப்பட்டியல் இல்லாத பொருட்களை மீண்டும் எடுத்துச்சென்று நிறுவையில் வைத்து விலையினை ஒட்டவேண்டும். தவறு அவளுடையதுதான், முதலிலேயே அதைச்செய்துவிட்டு கவுண்டருக்கு வரவேண்டும். இப்போது பாதி ஸ்கேன் செய்யப்படுகிறது மீதியை எடுத்துக்கொண்டுபோய் விலைப்பட்டியல் இட்டு மீண்டும் எடுத்துவரவேண்டும். எல்லோருக்கும் அவசரம், வரிசையில் அதிகம் பேர் காத்திருக்கின்றார்கள். தன்னுடையதை முதலில் கணக்குப் பண்ணி அனுப்பிவிட்டால் தேவலாம் என்கிற மாதிரி சலிப்புடன் நின்றார்கள் சிலர். ஒரு சீனர், `Apa pasal lambat ni.? Cepat lah sikit..’ என்று ஒரு கோகோ கோலா’வை கையில் ஏந்திக்கொண்டு முகத்தை உர்ர் என்று வைத்திருந்தார். `Tolong tunggu ye, biar yang ini habis dulu. கவுண்டர் பெண்மணி பவ்யமாக பதிலுரைத்தார். நாங்களும் விரைவாகச் செல்லவேண்டும், கொஞ்சம் முடித்துக்கொடுத்தால், தேவலாம்.. என்பதைப்போல் மகனுடன் நின்ற அந்தத்தாயும் வேண்டுகோள் விடுத்தாள். `ஏம்மா அவசரம். முடியட்டும் போலாம்.’ என்றார் மகன். `சமைக்கணும், வந்திருவாங்க..’ என்றாள் தாய். அவர்களின் பின்னால் இருந்த நம்மவர் ஒருவர், `ஏன் இந்த வரிசை நகரவேயில்லை.. ? Orang dah ramai, bukak lah counter sebelah. Leceh tunggu lama.. என்றார் சத்தமாக. தடுமாறினாள் கவுண்டரில் உள்ள பெண். உதவிக்கும் சிலர் வந்தார்கள். அவள் வேலைக்குப்புதியவள் போலும். பதற்றமாகவே இருந்தாள். அனுபவசாலி ஊழியர்கள் அப்பெண்மணிக்கு சில வழிகாட்டிகளை சொல்லிக் கொடுத்துக்கொண்டிருந்தார்கள். அதைப்பார்த்த சிலர் இன்னும் கூடுதல் எரிச்சல் அடைந்தார்கள். ஒருவகையாக முன்னே இருந்த பெண்மணி நகர்ந்தாள். தாய் மகன் முன்னே, நின்ற சீனரும் டாப் டுப் படார் தடார் என்று பொருளை வைத்துவிட்டு பணம் செலுத்திக் கிள்ம்பினான். மகன் கூடையில் இருந்த பொருட்களை வைக்க, தாய் தன்னிடமுள்ள நூறு ரிங்கிட்’ஐ அப்பெண்ணிடம் கொடுத்தாள். பொருட்களின் விலை, ரிம17..00 தான். மீதம் ரிம83.00 கொடுக்கவேண்டும், ஆனால் அவள் என்ன பதற்றத்தில் இருந்தாளோ தெரியவில்லை, ரிம133.00 ஆக திருப்பித்தந்தாள். பணம் அதிகமாக திருப்பித்தருகிறாள், என்பதைத் தாய் உணர்ந்துகொண்ட போதிலும், வாங்கிய பணத்தை விரைவாக தமது பர்ஸுக்குள் திணித்தாள். மகன் பார்க்கவில்லை என்று நினைத்தாள் போலும். ஆனால், காருக்குள் ஏறிய மகன் கேட்ட முதல் கேள்வி, `யம்மா, பணம் கணக்குத்தெரியாமல் அதிகமா கொடுத்திட்டா போலிருக்கு,’ என்றான் .. தாயிற்கு தூக்கிவாரிப்போட்டது. `ஆ..ஆ..ஒ..ஓ..அப்படியா. கவனிக்கலையே, இரு பார்க்கிறேன்.’ என்று பாவனை செய்துவிட்டு, அட, ஆமா.. கூட கொடுத்திட்டா..’ என்றாள் தடுமாறியபடி. `சரி, இந்தா பில், விளக்கிச்சொல்லி அவளிடம் பணத்தைத் திருப்பிக்கொடுத்திடு,’ என்று காரில் இருந்தபடியே மகனை அனுப்பிவைத்தாள், மனதிற்குள் `எல்லா கருமம் பிடிச்ச குணமும் என்னோடு ஒழியட்டும்..’ என்றபடி... Posted by ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மி at 9/27/2016 1 கருத்து: இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Twitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர் பழைய இடுகைகள் முகப்பு இதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom) ஆத்மாநாம் உண்மையத் தவிர வேறு எதுவும் இலக்கியமாக முடியாது charu nivedita இலக்கியம் என்பது சுயவிமர்சனத்தில் பிறக்கும் ஒரு கலை வெளிப்பாடு jeyamohan உங்களின் அனுபவங்களை தைரியமாகச் சொல்லுங்கள், நிச்சயம் அவை போல் வேறொன்று இருக்கவே முடியாது. Alvin Toffler `The illiterate of the 21st century will not be those who cannot read and write, but those who cannot learn,unlearn and relearn' Paulo Coelho Don’t try to innovate storytelling, tell a good story and it is magical. I see people trying to work so much in style, finding different ways to tell the same thing. It’s like fashion. Style is the dress, but the dress does not dictate what is inside the dress. பிரபலமான இடுகைகள் மாதவிடாய் மாதவிடாய் - இது பெண்களுக்கான பிரத்தியேக சலுகை. இயற்கையிலே அமையப்பெற்ற ஒரு வரன் என்றும் சொல்லலாம். காரணம் மாதவிடாய் நிற்கும்வரை ஒரு ப... விறால் மீன் விறால் மீன் பற்றிய சில தகவல்கள். விறால் மீன் பிடிப்பது கடினமான ஒரு வேலை. இருப்பினும் சுவாரிஸ்யமான ஒன்று என்கிறார்கள் அனுபவசாலிகள். ஒர... நீண்ட கூந்தல் அவசியமா? திருமணம் ஆகும் வரை எனது கூந்தல் மிக நீளமாகத்தான் இருந்தது. அடர்த்தியாக பட்டுபோல் பளபளப்பாக இருக்கும். அதே போன்று பளபளப்பாக எப்போதும் வைத்தி... அங்கோர் வாட் (சியாம் ரீப்) - பயணக்கட்டுரை நாம் ஏன் பயணம் செய்கிறோம்.? ஒன்று நமக்கு அனுபவம் கிடைக்கவேண்டும் என்பதற்காக, இரண்டாவது நாம் அனுபவித்ததை பிறரோடும் பகிர்ந்து ரசி... பிரசுரமான எனது படைப்புகள் எனது ( கிட்டத்தட்ட இருபது ஆண்டு கால அனுபவம்) எழுத்துலக பயணம், கற்கள் முட்கள் நிறைந்தவை. அப்படி என்னதான் செய்துவந்துள்ளோம்!? என எனக்குள் த... காலை சூரியன் (மாமிகதை) மாமிகதை.. தோல் எல்லாம் அரிப்புகண்டு மிக மோசமாகிவிட்டது மாமியின் உடல். எவ்வளவு அரிப்பு மருந்துகள் வாங்கியும், இலைகளைக்கொண்டு மூலிகை வைத்த... சாருவை சந்தித்தேன்.... நவம்பர் 20ஆம் தேதி, செவ்வாய்க்கிழமை, மலாயா பல்கலைக்கழகத்தில், தம்பி தயாஜி மற்றும் நவீன் அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற ஓர் அற்புத இலக்கிய ...
ஆனந்தவிகடனில் எழுத்தாள இரட்டையர்களான சுபா எழுதிய ‘யட்சன்’ கதையையே கொஞ்சம் டிங்கரிங் வேலை செய்து திரைப்படமாக்கியிருக்கிறார்கள். வேறு வேறான நோக்கத்துடன் பயணிக்கும் இருவர் எதிர்பாராமல் சந்திக்கும் நேரத்தில் நடக்கும் அசம்பாவிததால் தொடரும் திரைக்கதையின் தொகுப்பு என்று இந்தப் படத்தைச் சுருக்கமாக சொல்ல்லாம். பரம்பரை பரம்பரையாக பழனியில் பஞ்சாமிர்த தொழிலைச் செய்து வரும் குடும்பத்தில் பிறந்த கிருஷ்ணாவுக்கு கோடம்பாக்கத்தில் குடியேறி இன்றைய சூப்பர் ஸ்டார்களையெல்லாம் வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்கிற வெறி. இவருக்கு ஒரு காதலி. காதலனைவிடவும் காதலி புத்திசாலியாகவும், அனுபவசாலியாகவும் இருக்கிறாள். தன் வீட்டில் தனக்காக வைத்திருக்கும் நகைகள், பணம் எல்லாவற்றையும் காதலனிடம் கொடுத்து சென்னைக்கு பஸ் ஏற்றி அனுப்புகிறாள். இன்னொரு பக்கம் தூத்துக்குடியில் சின்னச் சின்ன அடிதடி செய்யும் சின்னா என்னும் ரவுடியான ஆர்யா.. தற்செயலாக ஒரு கொலையைச் செய்துவிட்டு அந்த குரூப்பிடமிருந்து தப்பிக்க நினைத்து சென்னைக்கு வண்டியேறியிருக்கிறார். சென்னையைவிட்டும் வேறு ஏதாவது ஒரு நாட்டுக்கு போய்விடலாம் என்று நினைக்கிறார். அதற்கு 2 லட்சம் பணம் வேணுமே என்கிற தவிப்பில் இருக்கிறார். பிறவியிலேயே அனாதை இல்லத்தில் வளர்ந்து வரும் இன்னொரு ஹீரோயினான தீபா சந்நதி, திடீரென்று மின்னல் தாக்கி தூக்கி வீசப்படுகிறாள். உயிர் பிழைத்தாலும் அன்றிலிருந்து யாராவது ஒருவரை உற்றுக் கவனித்தாலே அவருக்கு அடுத்து என்னென்ன நடக்கும் என்பது தெரிய ஆரம்பிக்கிறது. ஈ.எஸ்.பி. எனப்படும் இந்த எதிர்காலத்தைக் கணிக்கும் ஆற்றல் ஒரு நேரத்தில் தீபாவுக்கு சிக்கலை உருவாக்க.. தீபாவை கொலை செய்ய லோக்கல் கட்சிப் பிரமுகர் திட்டமிடுகிறார். அந்தக் கொலையை செய்யும் பணி ஆர்யாவுக்குக் கிடைக்கிறது. லட்சத்தில் பணம் கிடைக்குமே என்றெண்ணி இதற்கு ஒத்துக் கொண்டு ஒரு நல்ல நாள் குறித்துக் கொடுக்கிறார் கொலைச் சம்பவத்திற்கு.. இன்னொரு பக்கம் கிருஷ்ணா அரும்பாடுபட்டு எஸ்.ஜே.சூர்யாவின் கண்ணில்பட்டு தல அஜீத்திற்கு தம்பியாக நடிக்கும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறார். அதற்கான அறிவிப்புக் கூட்டமும் அதே நல்ல முகூர்த்த நாளில்தான் நடைபெறுகிறது. திருவல்லிக்கேணியின் அருகருகே இருக்கும் லாட்ஜ்களில் தங்கியிருக்கும் கிருஷ்ணாவும், ஆர்யாவும் தங்களை அழைக்க வந்த கார்களில் மாறி உட்கார்ந்து பயணிக்க படமும் வேறு திசையில் பயணிக்கிறது. அவரவர் வேலையை செய்து முடித்தார்களா? இல்லையா? என்பதுதான் மிச்சம் மீதிக் கதை. ஒரு கதையாகப் படித்தபோதும், இப்போது திரும்பவும் வாசிக்கின்றபோதும் அதில் கிடைத்த ஒரு சுவாரஸ்ய அனுபவமே படத்தை பார்த்தே தீர வேண்டும் என்கிற ஆர்வத்தை ஏற்படுத்தியது. ஆனால் எதிர்பார்த்தது முழுமையாக கிடைக்கவில்லையே என்கிற அதிருப்தியும் நமக்குண்டு. இது போன்ற படங்களை சீரியஸாகத்தான் அணுகியிருக்க வேண்டும். பாதி சீரியஸாகவும், மீதியை காமெடியாகவும் நகர்த்தியிருப்பதால் கடைசியில் ஒரு பக்கா கமர்ஷியல் படம் பார்த்த திருப்தியை மட்டுமே படம் நமக்குக் கொடுத்திருக்கிறது. ஆர்யாவின் கெட்டப்பிலும், செட்டப்பிலும் எந்த மாற்றமுமில்லை. இப்படியே இன்னும் எத்தனை படங்களில்தான் நடிக்க முடியும்..? இயக்குநரையும் தாண்டி நம்மை ரசிக்க வைக்க நடிகர்கள்தான் எதையாவது செய்ய வேண்டும்..? இதில் அவர் என்ன செய்திருக்கிறார் என்று ஆர்யாதான் சொல்ல வேண்டும். பட் ஒன் கின்க்.. தீபா சந்நதியை நினைத்து நினைத்து உருகுவதை மாற்றி மாற்றிப் பேச இதற்கு சென்ட்ராயனின் குயில்கள் விளக்கம் கொடுக்கும் காட்சி ரம்மியம்.. ஆர்யாவின் நடிப்பும், துடிப்பும் ரசிக்க வைக்கிறது..! மற்றபடி சண்டை காட்சிகள், நடனக் காட்சிகளின் ஆர்யாவின் பங்களிப்பு அதே வழக்கம்போலத்தான்.. கிருஷ்ணா இரண்டாவது ஹீரோவாக நடித்திருக்கிறார். நிறைவாகவே இருக்கிறது. திரைக்கதையின் வேகத்திலும், அடுத்து என்ன என்கிற எதிர்பார்ப்பிலும் இருப்பதால் இதையெல்லாம் யோசிக்கவே நேரமுமில்லை. தோணவும் இல்லை. கிருஷ்ணாவிடம் இன்னும் நிறைய எதிர்பார்க்கிறோம். சந்தேகமே இல்லாமல் நடிப்பில் முதலிடம் ஸ்வாதி ரெட்டிக்குத்தான். இவ்வளவு தேர்ந்த நடிப்பைக் காட்டும் இவர் ஏன் இன்னமும் தமிழ்த் திரையுலகில் முன்னணிக்கு வரவில்லை என்பது ஆச்சரியமாக இருக்கிறது. கிருஷ்ணாவின் வீடு தேடி வந்து மிரட்டுவதில் இருந்து கிருஷ்ணாவை தேடி வந்து மாட்டிக் கொண்டு கடைசியில் அவரைக் கண்டுபிடித்து லெப்ட் அண்ட் ரைட் வாங்குவதுவரையிலும் பின்னியிருக்கிறார். வெல்டன் மேடம்.. தீபா சந்நதி. இவரை அதிகமாக அழுக வைத்தே கதையை முடித்திருக்கிறார் இயக்குநர். பாடல் காட்சியொன்றில் மட்டுமே அழகாக சிரித்திருக்கிறார். ஆனால் தமிழ் தகிரத்தாளம் போடுவதால் பல குளோஸப் ஷாட்டுகளில் இழுத்து, இழுத்து பேசவது அப்பட்டமாகத் தெரிகிறது. ஆர்.ஜே.பாலாஜியின் காதல் எபிசோடுகள் சுவாரஸ்யம்.. இடையிடையே இவர் உதிர்க்கும் ஜோக்குகள் திரைக்கதைக்கு சுவாரஸ்யத்தைக் கொடுத்திருக்கின்றன. தங்கமணியாக வரும் தம்பி ராமையா வழக்கம்போல.. ஏற்ற இறக்கத்துடன் வசனங்களை பிய்ச்சு, பிய்ச்சு பேசி பிரித்து மேய்ந்திருக்கிறார். அடக்கமான அரசியல்வியாதியாக ஒய்.ஜி.மகேந்திரா.. கண்டிப்பான அரசியல்வாதியா.. அல்லது தட்டிக் கொடுக்கும் அண்ணனா என்பதே புரியாத அளவுக்கு வசனத்தை பேச வைத்து இயக்கியிருக்கிறார் இயக்குநர். இவருடைய கேரக்டர் ஸ்கெட்சுன்னால் கடைசியில் ஒரு சிறிய குழப்பம்.. இவரை கொலை செய்தால் அப்படியே போலீஸ் விட்டுவிடுமா..? ஒளிப்பதிவாளர் ஓம்பிரகாஷின் ஒளிப்பதிவிற்கு ஒரு பெரிய கும்பிடு. அடுத்தடுத்த பல காட்சிகளிலும் கலர் காம்பினேஷனை மாற்றி, மாற்றி காட்டி கண்களை குளிர வைத்திருக்கிறார். தூத்துக்குடியின் கடல் பரப்பு.. சென்னையின் வான் பரப்பு.. பாடல் காட்சிகளில் அத்தனை கலர்புல்.. மழை காட்சிகளில்கூட ஏதோ ஒருவித பயம் கொண்ட சூழலை கேமிராவிலேயே காட்டியிருக்கிறார். பாராட்டுக்கள் ஸார்..! இறுதியான கிளைமாக்ஸில் கேமிராவின் பரபரதான் ரசிக்க வைத்திருக்கிறது. யுவனின் இசையில் ‘காக்கா பொண்ணு’ பாடலும், ‘கொஞ்சலை’யும் கேட்க வைத்திருக்கிறது. பின்னணி இசை தேவையே இல்லை என்கிற ரீதியில்தான் படத்தில் இருக்கிறது. யுவன் எப்போதுமே இதற்கு மெனக்கெட மாட்டார். இதில் மட்டும் செய்துவிடுவாரா என்ன..? விஷ்ணுவர்த்தின் இயக்கம் தனி ஸ்டைல் கொண்டது. இதில் அதற்கான பல காட்சிகள் உண்டு என்றாலும் கதையின் முடிச்சு வலுவில்லாமல் இருப்பதாலும், யூகிக்க முடிந்த திரைக்கதையினாலும் விஷ்ணுவர்த்தனுக்கு இந்தப் படத்தில் பெயர் கிடைப்பதென்பது சந்தேகம்தான்.. ஆர்யாவின் சென்னை அறையில் அவரை தனித்து காட்டும் பல ஷாட்டுகளும் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாதது. ஆனால் அத்தனையும் அருமை. பஸ்ஸ்டாண்டில் பொன்வண்ணனின் அடியாட்களின் ரகளை.. இதில் கிருஷ்ணன் மாட்டுவது.. டீக்கடையில் கிருஷ்ணனும், ஆர்யாவும் எதேச்சையாக சந்திப்பது.. ஸ்வாதியும், கிருஷ்ணாவின் அப்பாவும் வரும்போது உள்ளே தம்பி ராமையா இருப்பது.. பொன்வண்ணனின் கேரக்டர் ஸ்கெட்ச். அவரது அறிமுகம்.. வில்லனின் பிளாஷ்பேக் கதை.. என்றெல்லாம் சில சில விஷயங்கள் படத்தினை பேச வைத்திருக்கின்றன. ஆனால் ஒரு விஷயம்.. ஈ.எஸ்.பி. எனப்படும் முன்கூட்டியே அறியும் சக்தியை கொண்ட தீபாவால் இறந்து போனது வெற்றியா அல்லது அவர் தம்பி செல்வமா என்பதை சொல்ல முடியவில்லையா..? செத்தது செல்வம்தான் என்று தீபா சொல்வது உண்மையெனில் கிளைமாக்ஸில் வெற்றி சொல்வது பொய்யாக அல்லவா இருக்கும். ஏன் இந்தக் குழப்பம்..? ‘யட்சன்’ என்றால் ‘காப்பவன்’ என்றும் சொல்லலாம். ஆர்யாவுக்கு இந்த டைட்டில் பொருத்தமில்லை.. கிருஷ்ணாவுக்கும் இந்த டைட்டில் பொருத்தமில்லை.. தீபாவுக்கும் டைட்டிலில் வேலையில்லை. ஆனால், கச்சிதமான பொருத்தம் ஸ்வாதி ரெட்டிக்குத்தான்..! அவர்தான் சவுண்டோடு ஜீப்பில் ஆட்களைக் கூட்டி வந்து தன் காதலனையும் மற்றவர்களையும் காப்பாற்றுகிறார். ஆக,, இந்த அடாவடி பொண்ணை ரசிக்கணும்னே இந்தப் படத்தைப் பார்க்கலாம்..! Our Score actor aarya actor krishna Actress Deepa Sannidhi actress swathi reddy cinema reviews director vishnuvarthan movie reviews reviews yatchan cinema reviews yatchan movie yatchan movie reviews இயக்குநர் விஷ்ணுவர்த்தன் நடிகர் ஆர்யா நடிகர் கிருஷ்ணா நடிகை தீபா சந்நதி நடிகை ஸ்வாதி ரெட்டி யட்சன் சினிமா விமர்சனம் யட்சன் திரைப்படத்தின் விமர்சனம் யட்சன் திரைப்படம் tweet Previous Post"இசைப்பிரியா கற்பழிக்கப்பட்டார் என்பதற்கு வீடியோ ஆதாரம் இருக்கா...?" - நடிகர் எஸ்.வி.சேகர் கேட்ட அற்புதமான கேள்வி..! Next Post'குளம்பி' திரைப்படத்தின் டீஸர்
நீங்கள் ஆன்லைனில் ஏதேனும் ஷாப்பிங் செய்தால், அமேசானின் ஆசியப் பதிப்பான சீன இ-காமர்ஸ் நிறுவனமான அலிபாபாவின் சில்லறை விற்பனைப் பிரிவான AliExpress பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். AliExpress உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பொருட்களை ஆன்லைனில் விற்கிறது மற்றும் தேவைக்கேற்ப அவற்றை அமெரிக்காவிற்கு அனுப்பும். பொருட்கள் மலிவானவை (தரம் இஃதியாக இருந்தாலும் கூட), அளவுகள் வரம்பற்றவை, மேலும் தளத்தில் உங்களுக்குத் தேவையான அனைத்தையும் நீங்கள் காணலாம். ஆனால் AliExpress வாங்குவது பாதுகாப்பானதா? தளத்தைப் பயன்படுத்தும் போது நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன? அலிஎக்ஸ்பிரஸ் அலிபாபா உலகின் பத்து பெரிய நிறுவனங்களில் ஒன்றாகும், 2018 இல் $500 பில்லியனுக்கும் அதிகமான சந்தை மூலதனத்துடன் உள்ளது. AliExpress என்பது மேற்கத்திய பார்வையாளர்களை இலக்காகக் கொண்ட நிறுவனத்தின் சில்லறை முகமாகும். இது சீன தயாரிப்புகளுக்கான அணுகலை (பெரும்பாலும்) சீன விலையில் வழங்குகிறது. பிராண்ட் பெயர்கள் இல்லாமல் அமேசான் போலவே தோற்றமளிக்கிறது. அலிபாபாவின் விலைகள் குறைவாகவே இருக்கும், முக்கியமாக சீனாவில் உழைப்பு மற்றும் உற்பத்தி செலவுகள் குறைவாக இருப்பதால் உற்பத்தியாளர்களிடமிருந்து நேரடியாக வாங்குகிறீர்கள். மற்ற காரணம் என்னவென்றால், தயாரிப்புகள் போலியானதாக இருக்கலாம். இறுதியாக, ஷிப்பிங் மலிவானது (அல்லது இருந்தது) ஏனெனில் சமீபத்திய ஆண்டுகளில் ஆசியாவில் இருந்து ஏற்றுமதிகள் சர்வதேச அஞ்சல் ஏற்பாடுகளில் முன்னுரிமை பெற்றுள்ளன, அவை சிறிய பேக்கேஜ்களுக்கு நாடுகளுக்கிடையேயான கப்பல் விலைகளை நிர்ணயிக்கின்றன. 2018 இன் பிற்பகுதியில், சர்வதேச அஞ்சல் ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதற்கான தனது விருப்பத்தை அமெரிக்கா அறிவித்தது, மேலும் இது எதிர்காலத்தில் AliExpress-ஐ குறைவான போட்டித்தன்மையடையச் செய்யலாம். AliExpress பாதுகாப்பானதா? அத்தகைய ஒரு சிறிய கேள்விக்கு மிக நீண்ட பதில் உள்ளது. சில நன்கு விளம்பரப்படுத்தப்பட்ட இணைய ஸ்கிரிப்ட் பாதிப்புகள் இணைக்கப்பட்டுள்ளன, எனவே தளம் இப்போது மற்ற ஈ-காமர்ஸ் தளத்தைப் போலவே பாதுகாப்பாக உள்ளது. இருப்பினும், சந்தை வலைத்தளங்களைக் கையாளும் போது நிறைய 'வாங்குபவர் ஜாக்கிரதை' உள்ளது. அமேசான் மார்க்கெட்பிளேஸில் நீங்கள் காணும் பல அபாயங்கள் ஒரே மாதிரியானவை: உத்தரவாதங்கள் குறைவாகவே உள்ளன மற்றும் நீங்கள் முழுவதுமாக விற்பனையாளரைச் சார்ந்திருக்கிறீர்கள். AliExpress க்கும் இதுவே உண்மை. எல்லா அபாயங்களையும் பட்டியலிடுவதற்குப் பதிலாக, நான் நேர்மறையில் கவனம் செலுத்தி, AliExpress ஐப் பாதுகாப்பாகப் பயன்படுத்துவதற்கான சில செயல் குறிப்புகளை வழங்குவேன். நிறுவப்பட்ட விற்பனையாளர்களைப் பயன்படுத்தவும் ஈபே, எட்ஸி அல்லது அமேசானைப் போலவே, நீங்கள் ஒப்பந்தம் செய்வதற்கு முன் விற்பனையாளரைச் சரிபார்க்க வேண்டும். கருத்தைச் சரிபார்த்து, தளத்தில் எவ்வளவு காலம் விற்பனையாளராக இருந்தார்கள் என்பதைச் சரிபார்த்து, எத்தனை தயாரிப்புகளை விற்றிருக்கிறார்கள் என்பதைச் சரிபார்க்கவும். இது முட்டாள்தனமானதல்ல, ஆனால் அவை எவ்வளவு நம்பகமானவை மற்றும் வாக்குறுதியளித்தபடி பொருட்களை வழங்குவதற்கான வாய்ப்புகள் பற்றிய நல்ல யோசனையை இது உங்களுக்கு வழங்கும். ஒவ்வொரு தயாரிப்புப் பக்கமும் கருத்துத் தாவல் உள்ளது. மக்கள் என்ன சொல்கிறார்கள் என்பதைப் படியுங்கள் மற்றும் விற்பனையாளரைப் பற்றிய உணர்வைப் பெறுங்கள். பரிவர்த்தனை வரலாற்றைக் காண தயாரிப்புப் பக்கத்தை கீழே உருட்டவும் மற்றும் அவர்கள் எவ்வளவு விற்பனை செய்துள்ளனர் என்பதை மதிப்பிடவும், அவர்கள் எவ்வளவு காலம் வணிகத்தில் ஈடுபட்டுள்ளனர் என்பதை உணரவும். உங்கள் தீர்ப்பை வழங்க இந்தத் தகவல்களைப் பயன்படுத்தவும். விளக்கத்தை கவனமாக படிக்கவும் AliExpress இல் அனைத்து வகையான விசித்திரமான தயாரிப்புகள் அல்லது விசித்திரமான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் உள்ளன. விளக்கத்தை மிகவும் கவனமாகப் படித்து, நீங்கள் பார்க்கும் பொருளை உண்மையில் வாங்குகிறீர்களா என்பதை இருமுறை சரிபார்க்கவும். சில நேரங்களில், தனிப்பயனாக்குதல் விருப்பங்கள் விளக்கத்தில் சேர்க்கப்பட்டுள்ளன, சிறப்பு சொற்கள் பட்டியலிடப்பட்டுள்ளன அல்லது பிற பயனுள்ள தகவல்கள். விற்பனையாளர் உத்தரவாதத்தை சரிபார்க்கவும் AliExpress ஒரு சந்தை, ஒரு விற்பனையாளர் அல்ல. அவர்கள் பரிவர்த்தனையை எளிதாக்குகிறார்கள், ஆனால் அதற்கு பொறுப்பல்ல. தனிப்பட்ட விற்பனையாளர் சில வகையான உத்தரவாதம் அல்லது உத்தரவாதத்தை வழங்குகிறார் என்பதை நீங்கள் உறுதிப்படுத்த வேண்டும். நீங்கள் எவ்வளவு அதிகமாகச் செலவிடுகிறீர்களோ, அவ்வளவு சிறந்த உத்தரவாதம் உங்களுக்கு இருக்க வேண்டும். விற்பனையாளர் உத்தரவாதங்கள் தாவலைக் கவனமாகச் சரிபார்த்து, நீங்கள் போதுமான அளவு பாதுகாக்கப்பட்டுள்ளீர்கள் என்பதை உறுதிப்படுத்தவும். கவனிக்க வேண்டிய மற்ற உத்தரவாதம் 'உத்தரவாதம் உண்மையானது'. சீனாவில் நடக்கும் கள்ளநோட்டுக்கு தீர்வு காணும் வகையில் இது அமைந்துள்ளது. ஏதாவது Oakley அல்லது Casio என விற்கப்பட்டு, இந்த உத்தரவாதம் இருந்தால், அது போலியானது எனத் தெரியவந்தால், பொருளின் விலை மற்றும் அதன் ஷிப்பிங்கிற்கு நீங்கள் காப்பீடு செய்யப்படுவீர்கள். போலிகளைக் கவனியுங்கள் நீங்கள் AliExpress இல் பல பிராண்ட் பெயர் தயாரிப்புகளை விரைவாகக் காணலாம். சில உண்மையானவை, சில நாக்-ஆஃப் மற்றும் சில போலியானவை. பல பிராண்ட் பெயர் தயாரிப்புகள் சீனாவில் தயாரிக்கப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. சில தொழிற்சாலைகள் AliExpress இல் 'உதிரிகளை' விற்கும். நாக்-ஆஃப்ஸ் என்பது பிராண்டட் அல்லாத தயாரிப்புகள் ஆகும், அவை ஒரே மாதிரியான அச்சு அல்லது வடிவத்தைப் பயன்படுத்துகின்றன. இவை உத்தியோகபூர்வ பிராண்டைப் போலவே சிறந்ததாக இருக்கலாம் அல்லது இல்லை. போலி என்பது ஒரு தயாரிப்பு பிராண்ட் பெயர் என்று கூறுகிறது, ஆனால் அது இல்லை. AliExpress இல் இந்த நடத்தை நிறைய உள்ளது, எனவே நீங்கள் எதை வாங்குகிறீர்கள் என்பதை நீங்கள் அறிந்திருக்க வேண்டும். டெலிவரிக்கு பணம் செலுத்துங்கள் எனது இறுதி அறிவுரை தனிப்பட்ட அனுபவத்திலிருந்து வருகிறது. நீங்கள் விலையுயர்ந்த ஒன்றை வாங்கினால், இலவச அஞ்சல் கட்டணத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டாம். காப்பீடு செய்யப்பட்ட அல்லது உத்தரவாதம் அளிக்கப்பட்ட டெலிவரிக்கு சிறிது கூடுதல் கட்டணம் செலுத்துங்கள். இலவச அஞ்சல் கட்டணம் மலிவான கேரியர்களைப் பயன்படுத்தும், பொதுவாக மெதுவாக இருக்கும் மற்றும் குறைந்தபட்ச காப்பீட்டை உள்ளடக்கும். நீங்கள் விலையுயர்ந்த ஒன்றை வாங்குகிறீர்கள் என்றால், அது உங்களுக்கு பாதுகாப்பாக கிடைக்கும் என்பதை உறுதிப்படுத்த கூடுதல் சில டாலர்களை செலவழிக்க வேண்டும். AliExpress என்பது ஒரு பெரிய சந்தையாகும், அங்கு நீங்கள் விரும்பும் எதையும் வாங்கலாம். மேலே உள்ள புள்ளிகள், சுங்க வரி மற்றும் நீண்ட டெலிவரி நேரங்களின் காரணி. சீனா அமெரிக்காவிலிருந்து வெகு தொலைவில் உள்ளது மற்றும் பெரும்பாலான கப்பல் ஏற்றுமதி செய்பவர்கள் கடல் சரக்குகளைப் பயன்படுத்துகின்றனர், எனவே உங்கள் உருப்படி உங்களிடம் வருவதற்கு 40-50 நாட்கள் ஆகலாம். அதன்படி திட்டமிடுங்கள். நீங்கள் நன்கு கடைப்பிடிப்பவராக இருந்து, எல்லாவற்றையும் இருமுறை சரிபார்த்தால், AliExpress வாங்குவதற்கு பாதுகாப்பான இடமாகும். உங்கள் அனுபவங்கள் என்ன? அவற்றைப் பற்றி கீழே சொல்லுங்கள்!
பகலவன் அவனின் வருகையால் தன் முகத்தின் மீது விழுந்த அவனின் சுடரில் எழுந்தமர்ந்தான் தேவமித்திரன் .. விடியும் வேளை தான் வந்து உறங்கியதால் அவனின் இருவிழிகளும் அவனிடம் ஓய்வு கேக்க மறுபடியும் உறங்க படுத்தவன் அப்போது தான் கீழே இருந்து வரும் சத்தத்தை உணர்ந்தவன் சலிப்புடன் மாடியிலிருந்து கீழே இறங்கினான்.. அங்கே அவனின் மொத்த குடும்பமும் கூடியிருக்க தேவமித்திரனின் பாட்டியும் அவனின் தாயும் முறைத்தபடி நின்றிருந்தனர்… அவர்களை பார்த்தபடி வந்தவன் தனது தந்தையை பார்க்க அவரோ அவரின் தந்தையை பார்த்து கொண்டிருந்தார்… இவன் வந்ததை யாரும் கவனிக்காது அந்த மாமியார் மருமகள் சண்டையை பார்த்து கொண்டிருக்க ” எதுக்கு இப்படி ரெண்டு பேரும் கத்திட்டு இருக்கிங்க ” என்றவனின் குரலில் அங்கிருந்த குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் அவனை பார்த்து நிம்மதி பெருமூச்சு விட்டனர்… அவன் ஒருவனின் குரலுக்கு மட்டும் தானே அவனது தாயும் பாட்டியும் அமைதியாயிருப்பர்… ” தாத்தா ரெண்டு பேரும் சண்டை போடுறது ரொம்ப ரசிச்சு பாத்துட்டு இருக்கிங்களா எல்லாரும் ..” என்றவனது குரல் நக்கலாய் கேட்டாலும் விழிகள் இரண்டும் கோவத்தை பிரதிபலித்தது… பேரனின் கோவம் புரிந்தாலும் அதை சட்டை செய்யாதவர் ” மித்திரா அவுங்க சண்டை போடுறது உன் கல்யாண விஷயமா இதுல நான் என்ன சொல்லனும்னு நினைக்கிற நான் என் முடிவ சொன்னா நீ ஒத்துப்பியா … ” என்று கேட்டவரின் வார்த்தைகள் தன் காதிலே விழாதது போல் நின்றிருந்தான் தேவமித்திரன்… இது இருவருக்குள்ளும் வழக்கமாக நடக்கும் வாக்குவாதம் ஆகையால் அவனது பாட்டி விசாலாட்சி பேரனிடம் தனது கோரிக்கையை வைத்தார்… ” நீயே நியாத்த கேளு சாமி இந்த வீட்டோட முத வாரிசான உன்னோட கல்யாணத்த ஊரு உறவெல்லாம் கூப்டு எல்லாரும் பிரமிச்சு போறளவுக்கு பண்ணனும்னு இருக்காக … ஆனால் அதுக்கு என்மகள கூப்டவே கூடாதுனு உங்கம்மா சொல்றா .. போறவன் வரவனெல்லாம் எம்பேரன் கல்யாணத்துக்கு வரலாம் .. ஆனா அவன தூக்கி வளத்தவள வரக்கூடாதுனு சொல்றது எந்தவிதத்துல சரி … நீயே சொல்லு உன் கல்யாணத்துக்கு உங்கத்தைய கூப்டுவியா மாட்டியா … ” என்று கண்கலங்கி கேட்டவரின் முகத்தை பார்த்தவனுக்கு அவரின் ஆசையை மறுக்கும் எண்ணமில்லை… ஆனால் அவனின் தாயோ இதற்கு ஒரு போதும் ஒத்துக்கொள்ள மாட்டாரே என்று கவலையுடன் பார்த்தவன் ” எனக்கு அத்தை வந்தா சந்தோஷம் தான் பாட்டி… ” என்று கூறிவிட்டு அங்கிருந்து அகன்றான்… மித்திரன் கூறியதை கேட்ட விசாலாட்சி தனது மருமகளை நோக்கி ” இப்ப என் பேரனே அவுங்க அத்தை வந்தா சந்தோஷம்னு சொல்லிட்டான் இதுக்கு மேலயும் என் மக லட்சுமி வரத நீ மறுப்பியா என்ன… ” என்று எள்ளலுடன் கேட்ட தன் மாமியாரின் மேல் அளவுகடந்த ஆத்திரம் தான் வந்தது மித்திரனின் தாய் தெய்வநாயகிக்கு… மகேந்திரன் விசாலாட்சி தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் இரண்டு மகள்கள்… மூத்த மகன் குணசேகரன் அவரது மனையாள் தெய்வநாயகி…தெய்வநாயகி மகேந்திரனின் தங்கை மகள்… இவர்கள் இருவருக்கும் தேவமித்திரன் , ஆதவன் என இரு புதல்வர்கள்… குணசேகரனுக்கு அடுத்ததாய் பிறந்தவர் விஜயலட்சுமி இவரை தெய்வநாயகியின் அண்ணன் மற்றும் தனது தங்கை மகனாகிய பிரபாகரனுக்கே மணமுடித்து வைத்தார்… இவர்களுக்கு ஆகாஷ், நிஷாந்தி, காவ்யா என மூன்று பிள்ளைகள்… விஜயலட்சுமிக்கு அடுத்தவர் தனசேகரன் அவரது மனைவி அன்புகரசி இவர் விசாலாட்சியின் அண்ணன் மகளாவார்… இவர்களுக்கு மாதவன் , மகிழினி என இரு பிள்ளைகள்… கடைசியாக அந்த வீட்டின் செல்ல மகளாய் பிறந்தவர் தான் லட்சுமி எனும் பவித்ரலட்சுமி … இவருக்கும் தெய்வநாயகியின் தம்பியான தினகரனுக்கும் திருமணம் ஏற்பாடாகியிருந்தது… ஆனால் கடைசி நேரத்தில் லட்சுமி தினகரனின் நண்பன் வரதராஜனை திருமணம் செய்து கொண்டார்… இதை லட்சுமியின் வீட்டினர் எதிர்க்க அவ்வூரை விட்டு தன் கணவனுடன் வெளியேறினார்.. இதில் மனமுடைந்த தினகரன் வீட்டை விட்டு வெளியேறினார்… அவருக்கு என்றாயிற்று என்று குடும்பத்தினர் அனைவரும் பரிதவிப்புடன் தேட அவர்களுக்கு தினகரனின் உயிரற்ற உடலே கிடைத்தது… மலையிலிருந்து குதித்து இறந்துவிட்டதாக அவரின் உடலை கண்டு அவர்களுக்கு தகவல் தெரிவித்தவர்கள் கூற திருமணம் நின்று போன விரக்தியில் இப்படி செய்து கொண்டான் என்று நினைத்தவர்களுக்கு பவித்ரலட்சுமி மேல் அங்கிருக்கும் அனைவருக்கும் கோவம் உண்டாகியது… அதிலும் தங்கள் உடன்பிறந்தவனை இழந்த தெய்வநாயகிக்கும் , பிரபாகரனுக்கும் லட்சுமியை கொலை செய்யும் அளவுக்கு வெறுப்பு உண்டானது… காலபோக்கில் அவ்வீட்டில் இருந்த அனைவருக்கும் லட்சுமி மேல் இருந்த கோவம் குறைந்தாலும் அவரை யாரும் குடும்பத்தில் சேர்த்துக்கொள்ளவில்லை… அதற்கு முக்கிய காரணம் தெய்வநாயகி தான் … அவருக்கு லட்சுமி மேல் இருக்கும் கோவத்தின் அளவு இன்றளவும் குறையாதிருக்க மற்ற அனைவரும் அவரின் எண்ணங்களுக்கு மதிப்பளித்தனர்… இதில் விசாலாட்சி பாட்டிக்கு சற்று வருத்தம் தான்… தன் மகளிடம் விருப்பம் கேட்காமல் ஏற்பாடு செய்து அவளை அந்நிலைக்கு கொண்டு வந்தது தன் கணவரும் மருமகளும் தானே என்று அவர் மனது லட்சுமிக்காக அழும்… வருடங்கள் கடந்தும் இன்று வரை தனது மகளை காண விடாது இருக்கிறார்களே என்ற கோவத்தில் இருந்தவருக்கு அவரின் சொந்தகாரர் ஒருவரின் மூலம் லட்சுமி பற்றி தெரியவர பல வருடங்கள் கழித்து தன் பெண்ணிடம் அலைபேசி வாயிலாக பேசியவர் அதனை குடும்பத்தினரிடம் கூற அன்றிலிருந்து விசாலாட்சிக்கும் தெய்வநாயகிக்கும் ஆரம்பித்தது வாக்குவாதம்… இதில் பெரும்பாலும் வீட்டினர் யாரும் தலையிட முடியாது … மீறி இருவருக்கும் இடையில் சமாதானம் செய்ய யாராவது வந்தால் அவர்களின் பாடு திண்டாட்டம் தான்… இருவரும் கட்டுபடும் ஒரே நபர் மித்திரன் மட்டும் தான்… மித்திரனுக்கும் அவனது அத்தை மகள் நிஷாந்திக்கும் மற்றும் ஆகாஷ்க்கும் மகிழினிக்கும் திருமணம் செய்து வைக்க தெய்வநாயகியும் விஜயலட்சுமியும் முடிவெடுத்தனர்… அவர்கள் இருவரின் இந்த முடிவு பல வருடங்களுக்கு முன்பே எடுத்ததால் வீட்டினர் அனைவருக்கும் சம்மதமே அதனால் உடனே திருமண ஏற்பாட்டினை தொடங்கினர்… இன்னும் ஒரு வாரமே திருமணத்திற்கு இருக்க விசாலாட்சி பாட்டி பவித்ரலட்சுமியின் குடும்பத்தினரை திருமணத்திற்கு அழைக்க வேண்டும் என்று கூறினார்… விசாலாட்சி பாட்டி கூறியதை கேட்டு கோவம் கொண்ட தெய்வநாயகி” இங்கே பாருங்கத்த என் தம்பிய கொன்னவ அவ … அவளோட மூச்சுகாத்து கூட இந்த வீட்ல படக்கூடாதுனு நினைச்சுட்டு இருக்கேன்… நீங்க அவள கல்யாணத்துக்கு கூப்டு சீராட்டா பாக்குறிங்களா … என் புள்ள கல்யாணத்துக்கு அவ வரக்கூடாது… ” என்று கோவத்தில் கூறினார்… “ஏ மக இந்த வீட்டுக்கு வரக்கூடாதுனு நீ எப்படி சொல்லலாம்.. இந்த வீட்டுல உனக்கு இருக்க உரிமை அவளுக்கும் இருக்கு… அத மறந்துடாத… “ ” அடேங்கப்பா ஓடிப்போனவளுக்கு என்ன உரிமை வேண்டிகிடக்கு… ” என்று இடக்காய் கேட்ட தெய்வநாயகிடம் ” ஆமா .. என் மக ஓடிப்போனவ தான் அவளுக்கு பிடிக்காத கல்யாணத்தை பண்ணிக்க முடியாதுனு எம்புட்டு சொன்னா நீங்களாம் கேட்டிகளா … அவள கட்டாயப்படுத்தினிங்க அதான் அவளுக்கு பிடிச்ச வாழ்க்கைகாக அவ போன … அந்த மனுஷனும் அவள ராணியாட்டம் தானே வச்சுருக்காரு… ” என்று பதிலடி கொடுத்தார் விசாலாட்சி… ” ஆஹான்.. அப்போ ராணியாட்டம் இருக்கவளுக்கு எதுக்கு இந்த வீட்ல உரிமை வேண்டிகிடக்கு… ” என்று தெய்வநாயகி பேசிக்கொண்டிருக்கும் போது தான் மித்திரன் வந்து பவித்ரலட்சுமி வரட்டும் என்று சொல்லி சென்றான்… மகன் இவ்வாறு கூறியதும் அதற்கு தனது மாமியாரின் எள்ளல் பேச்சும் சேர்ந்து தெய்வநாயகி மிகுந்த கோவத்துடன் இருந்தவர் தனதறைக்கு சென்று அவரின் அண்ணனுக்கு கைப்பேசியில் அழைத்தார்… பிரபாகரன் தனது தங்கையிடம் இருந்து அழைப்பு வருவதை பார்த்தவர் அழைப்பை ஏற்றார் ” என்ன நாயகி காலைலயே போன் போட்டுருக்க … என்ன விஷயம்.. “ ” அண்ணே இந்த வீட்ல என் பேச்சுக்கு மதிப்பில்லாம போச்சுணே … ” என்று அழுவது போல் பேசியவரின் குரலில் அவரின் உடன்பிறந்தவர் பதறினார்… ” என்னாச்சுத்தா … எதுக்கு இப்படி அழுதுட்டு பேசுற .. யாரு என்ன சொன்னாங்க… ” என்று பதட்டமாய் கேட்டார்.. ” வேற யார்ணே இந்த வீட்ல என்னை திட்ட போற எல்லாம் அத்தை தான் … அவங்களுக்கு தான் நான் ஆகாத மருமகளாச்சே .. என் மனசு கஷ்டப்பட்டா அவுங்களுக்கு குளுகுளுனு இருக்கும் போல … “ ” என்ன விஷயம்னே சொல்லாம இப்படி பேசுனா நான் என்னனு நினைக்குறது … முதல்ல அழாம விஷயத்தை சொல்லு நாயகி… “ ” நம்ம தம்பிய கொன்னுட்டு போன அவுங்க பொண்ணு இந்த வீட்டுக்கு வரனுமாம் அதுவும் நம்ம பிள்ளைங்க கல்யாணத்துக்கு… “ ” என்னாத்தா சொல்ற … அத்தையா இப்படி சொன்னாங்க.. “ “ஆமாண்ணே.. அவுங்க பொண்ணு கூட கொஞ்ச நாளா பேசிட்டு இருக்காங்கனு சொன்னேன்ல அப்ப இருந்தே எங்கூட ஒரே வழக்கு தான்… இன்னிக்கு அவ கல்யாணத்துக்கு வரனும்னு பேச ஆரம்பிச்சாகா… நான் முடியாதுனு மறுத்து பேசுனே … நான் செஞ்சதுல எதுவும் தப்பிருக்காணே… ” என்று அழுதபடி கேட்ட தன் தங்கையின் கோவம் புரிந்தவர் அதே கோபத்துடன் தானும் இருந்தார்.. ” எந்த மடப்பய இதை தப்புனு சொல்லுவான்… அவ பண்ண துரோகத்தை அதுக்குள்ள மறந்து சீராட்ட பாக்கிறாகலா … அவ பண்ண தப்புல பாதிக்கப்பட்டது நாமே தானே அவுக இல்லையே… அதால தான் அம்புட்டு சுலபமா போச்சு போல அவுங்களுக்கு… அவ எப்படி ஊருக்குள்ள காலெடுத்து வைக்கிறானு நானும் பாக்குறேன்… ” என்று எரிமலையாய் வெடித்து கொண்டிருந்தவரின் பேச்சில் இடைபுகுந்த நாயகி ” உன் மருமகன் அவுங்க அத்தை கல்யாணத்துக்கு வரனும்னு முடிவா சொல்லிட்டு போயிட்டாணே… ” என்று கூறினார்… ” மித்திரனா இப்படி சொன்னான்… ” என்று சற்று ஆதங்கத்துடன் கேட்டவரிம் , ” ஆமாண்ணே அவன் தான் அவன்தான் சொன்னான்.. அவன் சொன்னதுக்கு இந்த வீட்ல யாரும் மறுத்து பேசல … அப்போ அவுங்களுக்கும் அவ வரதுல விருப்பம் தான் இருக்குது போல… நாம இது புரியாம இத்தனை நாள் முட்டாளா இருந்திருக்கோம்னு நினைக்க நினைக்க எனக்கு பைத்தியமே பிடிச்சுரும் போல … “ ” நீ வருத்தப்படாம இருத்தா… நாளைக்கு அண்ணன் இங்கே பத்திரிக்கை எல்லாம் கொடுத்து முடிச்சுட்டு வந்துருவேன்… வந்து அவுகள பேசிகிறேன்… ” என்று கூறியவரின் குரலுக்கு அவரின் தங்கை அடிபணிந்தார்…
செங்கல்பட்டு : மதுராந்தகம் அருகே சாலையை கடந்த பாம்பால் லாரி, அரசு பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. அதில் 4 பேர் படுகாயமடைந்தனர். சென்னை - திருச்சி சாலையில் பாம்பு கடப்பதை பார்த்த லாரி ஓட்டுனர் பிரேக் போட்டதால் பின்னால் வந்த பேருந்து மோதியதால் விபத்து ஏற்பட்டது. இதனால். சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. Related Stories: வங்கக்கடலில் நிலைக்கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது: வானிலை மையம் தகவல் சென்னையில் பெரியார் சிலைகளுக்கு போலீஸ் பாதுகாப்பு இன்று உருவாகிறது 'மாண்டஸ்'புயல்: சென்னை, தூத்துக்குடி, எண்ணூர், கடலூர், நாகை, புதுச்சேரி துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்..! மதுராந்தகம் அருகே கண்டெய்னர் லாரி மீது மினி வேன் மோதிய விபத்தில் ஓட்டுநர் உள்ளிட்ட 6 பேர் உயிரிழப்பு 60 வயதுக்கு மேற்பட்ட 131 பேர் நீக்கம்; அம்மா உணவக ஊழியர்களுக்கு மாற்றுப்பணி குறித்து ஆலோசனை நல்ல விஷயங்களைவிட எளிதில் மக்களை சென்றடையும் தீய விஷயங்கள் வன்முறை, காதல், காமம் என எல்லை மீறுகிறதா வெப் சீரிஸ்: எச்சரிக்கும் சமூக ஆர்வலர்கள் சாலை விபத்தில் சிக்கியவரின் கண்ணிலிருந்து 10 செ.மீ மரத்துண்டு அகற்றம்: ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனை டாக்டர்கள் சாதனை மதுரவாயல் உயர்மட்ட சாலையால் பாதிக்கப்பட்ட வணிகர்களுக்கு கடை ஒதுக்கீடு செய்ய வேண்டும்: விக்கிரமராஜா மனு பஸ்சில் ஐபோன் திருடிய ஆசாமியை பிடித்த பெண் காவலருக்கு டிஜிபி நேரில் பாராட்டு புது வகையான 3 சைபர் க்ரைம் குற்றம் குறித்து க்யூஆர் கோடு ஸ்கேன் செய்து பொதுமக்கள் படிக்கலாம்: சென்னை மாநகர காவல்துறை தகவல் தானியங்கி மெட்ரோ ரயில் இயக்க 2 நிறுவனங்களுடன் ரூ.1,620 கோடி ஒப்பந்தம்: மெட்ரோ நிர்வாகம் தகவல் சென்னை மாநகராட்சியின் கட்டமைப்பு திட்டங்கள், செயல்பாடுகள் எப்படி? அமெரிக்காவின் சான்ஆன்டோனியோ மாநகர மேயர் குழு கலந்துரையாடல் தடம் புரண்டது மின்சார ரயில் வீட்டின் முன்னாள் ஊழியர் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு: நடிகை பார்வதி நாயர் அளித்த புகாரில் போலீஸ் நடவடிக்கை சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் 12 தமிழ் படங்கள் மோதல்: 51 நாடுகள் பங்கேற்பு கோயம்பேடு மார்க்கெட்டில் வாழை இலை விலை கடும் உயர்வு: கட்டு ரூ.1700க்கும் ஒரு வாழை இலை ரூ.8க்கும் விற்பனை இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 14 பேர் சென்னை வந்தனர்: விமான நிலையத்தில் அதிகாரிகள் வரவேற்பு டாஸ்மாக்கில் கூடுதல் விலைக்கு மது விற்ற 852 பேர் சஸ்பெண்ட்: அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல் ஓய்வூதியம் ரூ.1000த்தில் இருந்து ரூ.1,500-ஆக உயர்வு மாற்றுத்திறனாளிகள் சங்க தலைவர்கள் முதல்வரை சந்தித்து நன்றி தெரிவித்தனர் ஐஏஎஸ், ஐ.பி.எஸ். மெயின் தேர்வு ரிசல்ட் வெளியீடு இந்திய அளவில் 2,529 பேர் தேர்ச்சி: தமிழகத்தில் 110 பேர் வெற்றி பெற்று சாதனை
பேருந்துகளை அரசுடமை ஆக்கினார் கலைஞர் என்பது தான் நாம் இதுவரையில் அறிந்து வைத்திருக்கும் அல்லது அறிய வைக்கப்பட்டிருக்கும் செய்தி. ஆனால், ஸ்பின்னிங் மில்ஸ் எனப்படும் பின்னலாடை நிறுவனங்களையும் அரசுடமை ஆகியவர் கலைஞர் என்பது புதிய செய்தி ; தமிழ்நாடு பின்னலாடை நிறுவனம் கலைஞரால் உருவாக்கப்பட்டது என்பதும் புதிய செய்தி. ஆண்டுகளில் வேலைக்குச் செல்லும் மகளிருக்கு, சேவை இல்லங்களையும், மகளிர் விடுதிகளையும் தொடங்கியவர் கலைஞர் ; இந்தியாவில், வேறு எந்த தலைவரும் யோசிப்பதற்கு முன்னர், சமூக மேம்பாட்டுத் திட்டங்களை நிரைவேற்றியவர் கலைஞர். இப்படி, கலைஞர் அவர்களின் அறியப்படாத சாதனைகளை தொகுத்து வெளியிட்டால், எல்ல்லோரும் அறிந்து கொள்வார்கள் என்ற எண்ணத்தால் விளைந்த சிறு முயற்ச்சியே இந்நூல். நண்பர்கள், தங்களது மேலான ஆதரவரையும், செம்மைப்படுத்த கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ளவும். வாழ்க கலைஞர்; வளர்க திராவிடம்; ஓங்குக சமத்துவம். – வெற்றிச் செல்வன், B.E, PMP Series: அரசியல், ஆளுமைகள், சமூகம், திராவிடம், வரலாறு Tagged with: அரசியல், கலைஞர், சமூகம், திமுக, திராவிடம்
அயோத்தியில் விரைவில் ராமர்கோவில் கட்டப்படுமென ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் பேசியிருந்தார்.இதற்கு பதிலடி கொடுத்துள்ள காங்கிரஸ் கட்சி ஆர்.எஸ்.எஸ் தலைவரை இவ்வாறு விமர்சித்துள்ளது. இது தொடர்பாக ,காங்கிரஸ் தலைமைச் செய்தியாளர் ரன்தீப் சுர்ஜேவாலா விடுத்துள்ள அறிக்கையில் அவர்களுக்கு தேர்தல் வரும் போதெல்லாம் ராமர் கடவுள் நினைவுக்கு வந்து விடுகிறார் என கூறியுள்ளார். தேர்தல் முடிந்ததும் ராமர் நாடு கடத்தப்பட்டுவிடுவார் என்றும் தெரிவித்துள்ளார். இது மழையும் தேர்தலும் கலந்த ஒரு காலம் ஆகும். எண்ணற்ற தவளைகள் சத்தம் போடுகின்றன. ஆனால் அத்தகைய சத்தங்கள் எதுவும் உண்மையாக இருக்கபோவதில்லை என சுட்டிக்காட்டியுள்ளார். ராம ஜென்மபூமி-பாபர் மசூதி விவகார வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது என்று காங்கிரஸ் நம்புகிறது. எவ்விதமான தீர்ப்பு யார் பக்கம் வந்தாலும் அதன்படி நடக்க வேண்டும், அரசாங்கம் அதை செயல்படுத்த வேண்டும் என ரன்தீப் சுர்ஜேவாலா தெரிவித்துள்ளார்.
புயல்களுக்கு பெயர் வைப்பதைப் போலவே வெப்ப அலைகளுக்கும் பெயர் சூட்ட ஆரம்பித்துள்ளன ஐரோப்பிய நாடுகள். சில நாட்களுக்கு முன்னர் ஐரோப்பிய நாடுகளை நிலைகுலைய வைத்த வெப்ப அலைகளால் பலர் உயிரிழந்தனர், சாலைகள் உருகின, விமான ஓடுபாதைகள் வெப்பத்தை தாங்க முடியாமல் உருகியதால் பிரிட்டன் விமானப் படைக்கு சொந்தமான பிரைஸ் நார்டன் விமான தளத்தில் விமானங்கள் தரையிரங்க தடைவிதித்தது. இதனைத் தொடர்ந்து புயல்களுக்கும் சூறாவளிக்கும் பெயர் சூட்டும் முறையில் வெப்ப அலைகளுக்கு பெயர் சூட்டும் முடிவை ஸ்பெயின் நாடு தொடங்கி வைத்துள்ளது. அந்த நாட்டின் செவிலி நகரத்தில் வீசிய வெப்ப அலைக்கு “Zoe” என்று பெயரிட்டு, வெப்ப அலைகளுக்கு பெயரிட்ட உலகின் முதல் நகரம் என்ற பெயரைப் பெற்றுள்ளது. மக்களிடம் வெப்ப அலைகள் வீசும் என்று சொல்வதற்கு பதிலாக, சோ வீசும் என்று சொன்னால் அதன் தாக்கத்தின் அளவை மக்கள் புரிந்துகொண்டு தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள் என உள்ளூர் வானிலை நிலைய அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள். வெப்ப அலைகளுக்கு பெயர் சூட்டுவது என முடிவு கடந்த மாதம் எடுக்கப்பட்டது. உள்ளூர் வானிலை அமைப்பான ProMeteo Sevilla மற்றும் அமெரிக்காவின் ராக்பெல்லர் பவுண்டேஷன் இணைந்து இத்திட்டத்தை செயல்படுத்தவுள்ளனர். இதன்படி, காலநிலை நிபுணர்கள், வானிலை நிபுணர்கள் எல்லோரும் இணைந்து, கடந்த காலத்தில் பதிவான வெப்பம், அந்த காலகட்டத்தில் உள்ள வெப்பம், ஈரப்பதம் இவற்றை வைத்துக்கொண்டு வருகின்ற ஐந்து நாட்களில் வீச இருக்கும் வெப்ப அலைகளை கணித்து அது தொடர்பான அறிவிப்புகளை வெளியிடுவார்கள். காலநிலை மாற்றம் எல்லா இயற்கை நிகழ்வுகளையும் துரிதப்படுத்தவும், தீவிரமாக்கவும் செய்யும் என்று சொல்லப்பட்ட கணிப்புகள் நிகழ ஆரம்பித்துள்ளன. வெப்ப அலைகளுக்கு பெயர் வைக்க இந்திய வானிலை ஆய்வு மையமும் தயாராக வேண்டும்.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி நாளை சந்திக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த சில நாட்களாகவே எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் ஆளும் கட்சி மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை தெரிவித்து வருகிறார். சமீபத்தில் மழையால் பாதிக்கப்பட்ட கடலூர், மயிலாடுதுறை போன்ற பகுதிகளை ஆய்வு செய்யும் போது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். டி20 கிரிக்கெட் தொடர்! இந்திய அணி அபார வெற்றி!! அதே போல் சட்டம் ஒழுங்கு நிலைமை குறித்து பல்வேறு இடங்களில் பேசியுள்ளார். இந்த நிலையில் இபிஎஸ்-யின் ஆளுநர் சந்திப்பானது முக்கியத்துவமாக பார்க்கப்படுகிறது. இந்த சந்திப்பில் தமிழக நலம் குறித்து பல்வேறு கோரிக்கைகளை முன்வைப்பார் என தெரிவிக்கப்படுகிறது. இந்த சூழலில் நாளை மதியம் 12.45 மணிக்கு சந்திக்க இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. பாஜக கூட்டங்களில் பங்கேற்க தடை- சூர்யா சிவாவுக்கு அதிரடி!! மேலும், கட்சியின் மூத்த நிர்வாகிகளும் ஆளுநரை சந்திக்க இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
தமிழ் திரையுலகில் நம்பிக்கை தரும் நகைச்சுவை நடிகராக முன்னேறி வருபவர் திருச்சி சரவணக்குமார் என்கிற டிஎஸ்கே.. சின்னத்திரையில் வளர்ந்து வந்த நேரத்தில், தமன்னா நடித்த காமெடி ஹாரர் படமான பெட்ரோமாக்ஸ் படம் மூலம் லைம்லைட்டுக்குள் வந்த இவர், தற்போது பல படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்து வருகிறார். இன்னொரு பக்கம் சற்றே வித்தியாசமான முயற்சியாக ‘புனிதன்’ என்கிற பைலட் படத்தில் கதையின் நாயகனாக நடித்துள்ளார் டிஎஸ்கே. அதென்ன பைலட் பில்ம் ? ஒரு திரைப்படத்தின் கதையை முன்னோட்டம் காட்டும் ட்ரெய்லர் போல, பைலட் பிலிம் என்பது அரைமணி நேரம் வரையில் ஓடும் சற்று நீண்ட ஒரு முன்னோட்டம் என்று சொல்லலாம். இதில் படத்தின் கதையோட்டத்தையொட்டி காட்சிகள் அமைக்கப்பட்டு, இயக்குனர், ஒளிப்பதிவாளர், எடிட்டர், இசையமைப்பாளர் எனப் பலரும் இணைந்து பணியாற்றி உருவாக்கியிருப்பார்கள். அவர்களின் குழு முயற்சி – டீம் வொர்க் எப்படி பிரதிபலிக்கிறது என்பதை தயாரிப்பாளருக்கும், ஆடியன்ஸூக்கும் எடுத்துக்காட்டும் விதமாகவும் ஒரு பைலட் பிலிம் இருக்கும். டாப் வியூ என்டர்டெய்ன்மென் சார்பில், வினோத் தயாரிப்பில், உருவாகியுள்ள இந்தப்படத்தை, இயக்குநர் பாபி ஜார்ஜ் இயக்கியுள்ளார். இவர் பிரம்மா உள்ளிட்ட படங்களில், உதவி இயக்குனராக பணியாற்றியவர். 28 நிமிடம் ஓடும் பைலட் பிலிமாக உருவாகியுள்ள, இந்த புனிதன் படத்தின் திரையிடல் மற்றும் பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று மாலை சென்னை சாலிகிராமம் பிரசாத் லேபில் நடைபெற்றது. இந்த நிகழ்வில், படக்குழுவினருடன் நடிகர்கள் காளி வெங்கட், முனீஸ்காந்த், ஜெய்வந்த், ஆதவன், ஜார்ஜ், இயக்குனர் ரோஹின் வெங்கடேசன் இசையமைப்பாளர் ரமேஷ், தயாரிப்பாளர் சங்கத்தின் (கில்ட்) கௌரவ செயலாளர் ஜாக்குவார் தங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் இயக்குனர் பாபி ஜார்ஜ் பேசும்போது, “இது ஒரு முழுநீள திரைப்படமாக எடுக்கப்போகும் கதை.. தயாரிப்பாளருக்காக, தற்போது இதை பைலட் பிலிமாக எடுத்துள்ளோம். கதை வெளியே தெரிந்துவிடக்கூடாது என்பதற்காக, நிறைய விஷயங்களை மறைத்து தான், படமாக்கியுள்ளோம். இதன்மூலம் நாயகன் டிஎஸ்கே மற்றும் படத்தில் நடித்த பலருக்கும் பெரிய வாய்ப்புகள் கிடைக்கும் என நம்புகிறேன்” என்று கூறினார். நாயகன் டிஎஸ்கே பேசும்போது, “இந்தக் படத்தின் இயக்குநர் பாபி ஜார்ஜ் என்னை போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்க சொன்னபோது, எனக்கு ஒரு சந்தேகம் எழுந்தது.. காமெடியாக நடித்துவரும் நான், போலீஸ் கேரக்டரில் நடித்தால், அது காமெடியாக போய்விடக்கூடாது என்கிற பயம் இருந்தது. ஆனால், “இது ஹீரோ கதாபாத்திரம் அல்ல படத்திலுள்ள மற்ற கதாபாத்திரங்கள் போல, இதுவும் ஒன்று என, நினைத்துக்கொண்டு நடியுங்கள், அதுமட்டுமல்ல, ஏற்கனவே காமெடியாக நடித்துள்ளீர்கள் சீரியஸ் கதாபாத்திரங்களையும் முயற்சித்துப் பார்க்கலாமே என்று இயக்குநர் பாபி ஜார்ஜ் என்னை ஊக்கப்படுத்தினார்” என்றார் டிஎஸ்கே. நடிகர் காளி வெங்கட் பேசும்போது, “நீண்ட நாட்களாகவே, இதை முழு நீள திரைப்படம் என்றுதான் நினைத்துக்கொண்டிருந்தேன்.. இங்கே வந்தபோது தான், இது பைலட் படம் என்பது தெரியவந்தது.. நான், நிறைய குறும்படங்களில், நடித்திருக்கிறேன். ஆனால், அது முழுநீள திரைப்படமாக மாறியபோது, அதில் நடிக்க, எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.. இந்த படத்தின் இயக்குநர், கண்டிப்பாக டிஎஸ்கேவை வைத்து, இதை முழுநீள திரைப்படமாக எடுக்க வேண்டும்” என்று வேண்டுகோள் ஒன்றை வைத்தார்.. நடிகர் முனீஸ்காந்த் பேசும்போது, “பெட்ரோமாக்ஸ் படத்தில் நடிக்கும்போது தான், டிஎஸ்கே அறிமுகமானார்.. என்றாலும், சமீபத்தில் விஜய் டிவியில் நடைபெற்ற ஒரு தெருக்கூத்து நிகழ்ச்சியில், அவரது நடிப்பை பார்த்து மிரண்டு போனேன்.. அவருக்குள் உணர்ச்சிகரமான நடிப்பு இருப்பது, அப்போதுதான் தெரிந்தது. இந்த புனிதன் படத்திலும் அதே உணர்வைத்தான் வெளிப்படுத்தியுள்ளார்” என்று பாராட்டினார் நடிகர் ஆதவன் பேசும்போது, “நான் ஒரு காமெடி நடிகர், என்னை சீரியஸான கதாபாத்திரத்தில், மக்கள் ஏற்றுக்கொள்வார்களா என, நண்பன் டிஎஸ்கே சந்தேகமாக, ஒரு கேள்வி கேட்டார். ஆரம்பத்திலேயே, அவரிடம் நான் சொல்லவேண்டும் என நினைத்தேன், அவர் ஒரு காமெடி நடிகரே கிடையாது.. ரொம்ப சீரியஸான ஒரு நடிகர் என்று.., சமீபத்தில் நடைபெற்ற, தெருக்கூத்து கலை நிகழ்ச்சியில் டிஎஸ்கேவின் நடிப்பை பார்த்தபோது அதை முழுதாக உணர்ந்தேன்.. ஒரு நகைச்சுவை கலைஞரால் அவ்வளவு சீரியஸாக மாற முடியாது.. டிஎஸ்கே, ஒரு உணர்வுப்பூர்வமான நடிகர்.. அவருக்கு ஒரு மிகப்பெரிய, நல்ல இடம் கிடைக்க வேண்டும் என்பது, என்னுடைய ஆசை.. எங்களை மாதிரி டிவி நடிகர்களை வைத்து, பைலட் பிலிம் மட்டும்தான் எடுப்பார்கள்.. ஆனால், அது பெரிய படமாக மாறும்போது, வேறு யாருக்கோ, அந்த வாய்ப்புகள் போய்விடும், இந்த படத்தின் இயக்குநர் பாபி ஜார்ஜ், டிஎஸ்கேவை கதாநாயகனாக வைத்தே, இதை முழு நீள திரைப்படமாக இயக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என்றார்