Content
stringlengths
0
19k
Title
stringlengths
2
120
Category
stringlengths
0
643
தினம்தோறும் இருவரும் திரும்பிப் பார்த்தும் அறிமுகம் இல்லாதவராய் வழி செல்லும் பயணம் இதயம் மேடையிட்ட காதல் கச்சேரிக்கு சரிகமபதநி கூட சரியாக உச்சரிக்கபடவில்லை பூக்காத மொட்டுக்கு கூந்தல் ஏற ஆசை போகாத ஊருக்கு வழித் தேடி தவிப்பு சந்து முடுக்குகளில் சங்கமித்த நம் காதல் சமுத்திரமாய் விரிவதற்குள் வற்றிய நீர் குளமாய் அழகான குழந்தைக்கு ஊனமாய் ஒரு கால் ரசம் சொட்டும் கவியில் நெருடலாய் சில பிழைகள் முற்று பெறாத முதல் வார்த்தைக்கு அர்த்தம் மட்டும் எப்படி கிடைக்கும் ஓடாத கடிகாரத்தில் மணிபார்த்த கதையாய் உலா வந்த நம் காதல் கல்லடிபட்ட கண்ணாடியாய் விரிசலுக்குள் மறைந்த என் காதல் பிம்பத்தை விழிப் போட்டு தேடுகிறேன் எட்டிய தூரத்தில் நீ இருந்தும் தினம்தோறும் இருவரும் திரும்பிப் பார்த்தும் அறிமுகம் இல்லாதவராய் வழி செல்லும் பயணம் இதயம் மேடையிட்ட காதல் கச்சேரிக்கு சரிகமபதநி கூட சரியாக உச்சரிக்கபடவில்லை பூக்காத மொட்டுக்கு கூந்தல் ஏற ஆசை போகாத ஊருக்கு வழித் தேடி தவிப்பு சந்து முடுக்குகளில் சங்கமித்த நம் காதல் சமுத்திரமாய் விரிவதற்குள் வற்றிய நீர் குளமாய் அழகான குழந்தைக்கு ஊனமாய் ஒரு கால் ரசம் சொட்டும் கவியில் நெருடலாய் சில பிழைகள் முற்று பெறாத முதல் வார்த்தைக்கு அர்த்தம் மட்டும் எப்படி கிடைக்கும் ஓடாத கடிகாரத்தில் மணிபார்த்த கதையாய் உலா வந்த நம் காதல் கல்லடிபட்ட கண்ணாடியாய் விரிசலுக்குள் மறைந்த என் காதல் பிம்பத்தை விழிப் போட்டு தேடுகிறேன் எட்டிய தூரத்தில் நீ இருந்தும்
மௌனமே வாழ்க்கையாய - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
கழுதை கத்துதல் சுபம் விதவை எதிர்வந்தால் பாவம் மொட்டையடித்தால் முக்தி உள்ளங்கை அரித்தால் வருவாய் காலையில் கண்ட கனவு பலிக்கும் இறுதியாக மந்திரியிடம் மனு கழுதை கத்துதல் சுபம் விதவை எதிர்வந்தால் பாவம் மொட்டையடித்தால் முக்தி உள்ளங்கை அரித்தால் வருவாய் காலையில் கண்ட கனவு பலிக்கும் இறுதியாக மந்திரியிடம் மனு
மூட நம்பிக்கை - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
உயிர் இல்லாத மலரைக் கூட நேசிக்கிறோம் ஆனால் நமக்காக உயிரையே கொடுப்பவர்களை மட்டும் நேசிக்க யோசிக்கிறோம் ஆகையால் ஒருவரை ஒருவர் காதல் செய்யுங்கள் சோ லவ் ஈச் அதர் உயிர் இல்லாத மலரைக் கூட நேசிக்கிறோம் ஆனால் நமக்காக உயிரையே கொடுப்பவர்களை மட்டும் நேசிக்க யோசிக்கிறோம் ஆகையால் ஒருவரை ஒருவர் காதல் செய்யுங்கள் சோ லவ் ஈச் அதர்
காதல் செய்யுங்கள் - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
உன்னைவிட அழகான பெண்கள் எல்லாம் என்னைக் கடந்து போகிறார்கள். உன்னைவிட அக்கறையோடும் சிலர் என்னை நேசிக்கிறார்கள். இருந்தும் உன்னை மட்டுமே நினைக்கும்படியாய் என்ன செய்தாய் என்னை? உன்னைவிட அழகான பெண்கள் எல்லாம் என்னைக் கடந்து போகிறார்கள். உன்னைவிட அக்கறையோடும் சிலர் என்னை நேசிக்கிறார்கள். இருந்தும் உன்னை மட்டுமே நினைக்கும்படியாய் என்ன செய்தாய் என்னை?
என்ன மந்திரம் செய்தாய் - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
எதுவுமே தெரியாமல் உன்னை காதலித்தேன் எல்லாம் தெரிந்த பின்பு உன்னை நான் பிரிந்தேன் எது தவறு? எது சரி? எதுவுமே தெரியாமல் உன்னை காதலித்தேன் எல்லாம் தெரிந்த பின்பு உன்னை நான் பிரிந்தேன் எது தவறு? எது சரி?
எது சரி? எது தவறு? - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
பிரிதல் எப்படிச் சாத்தியம்? உன்னில் இன்னும் நான் இருக்கையில். உதடுகள் மாறுகின்ற உண்மையை கண்ணாடியில் முகம் பார்த்து கண்களிடம் கேள். கோபத்தில் நீ எறிந்த வார்த்தைகளைக் கனல்துளிகளைக் குவித்து வைத்திருக்கிறேன் குளிர் காய்வதற்கு நீ தந்த காயங்களை கூட ஆறுவதற்கு நான் அனுமதிப்பதில்லை அந்த வலிகள் உன்னை நினைவூட்ட வேண்டுமென்று உன் நினைவுகளை எரித்த சாம்பலிலும் பீனிக்ஸ் பறவையாய் நீயேதான் எழுகிறாய் பிறகெப்படி நாம் பிரிந்தோம் என்கிறாய்.? பிரிதல் எப்படிச் சாத்தியம்? உன்னில் இன்னும் நான் இருக்கையில். உதடுகள் மாறுகின்ற உண்மையை கண்ணாடியில் முகம் பார்த்து கண்களிடம் கேள். கோபத்தில் நீ எறிந்த வார்த்தைகளைக் கனல்துளிகளைக் குவித்து வைத்திருக்கிறேன் குளிர் காய்வதற்கு நீ தந்த காயங்களை கூட ஆறுவதற்கு நான் அனுமதிப்பதில்லை அந்த வலிகள் உன்னை நினைவூட்ட வேண்டுமென்று உன் நினைவுகளை எரித்த சாம்பலிலும் பீனிக்ஸ் பறவையாய் நீயேதான் எழுகிறாய் பிறகெப்படி நாம் பிரிந்தோம் என்கிறாய்.?
பிரிந்தோமா.? - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
வார்த்தை தவறிவிட்டாய் - அடி கண்ணம்மா! மார்பு துடிக்குதடீ! பார்த்த இடத்திலெல்லாம் - உன்னைப்போலவே பாவை தெரியுதடீ!. தீர்த்தக் கரையினிலே - தெற்கு மூலையில் செண்பகத் தோட்டத்திலே பார்த்திருந்தால் வருவேன் - வெண்ணிலாவிலே பாங்கியோ டென்று சொன்னாய் வார்த்தை தவறிவிட்டாய் - அடி கண்ணம்மா! மார்பு துடிக்குதடீ! பார்த்த விடத்திலெல்லாம் - உன்னைப்போலவே பாவை தெரியுதடீ! (தீர்த்தக் கரையினிலே.) மேனி கொதிக்கு தடீ! - தலை சுற்றியே வேதனை செய்கு தடீ! வானி லிடத்தை யெல்லாம் - இந்த வெண்ணிலா வந்து தழுவுது பார்! மோனத் திருக்கு தடீ! இந்த வையகம் மூழ்கித் துயிலினிலே நானொருவன் மட்டிலும் - பிரி வென்பதோர் நகரத் துழலுவதோ? (தீர்த்தக் கரையினிலே.) கடுமை யுடைய தடீ! - எந்த நேரமும் காவலுன் மாளிகையில் அடிமை புகுந்த பின்னும் - எண்ணும்போது நான் அங்கு வருவதற்கில்லை கொடுமை பொறுக்க வில்லை - கட்டுங் காவலும் கூடிக் கிடக்கு தங்கே நடுமை யரசி யவள் - எதற்காகவோ நாணிக் குலைந்திடுவாள் (தீர்த்தக் கரையினிலே.) கூடிப் பிரியாமலே - ஓரி ரவெலாம் கொஞ்சிக் குலவி யங்கே ஆடி விளை யாடியே, - உன்றன் மேனியை ஆயிரங்கோடி முறை நாடித் தழுவி மனக் - குறை தீர்ந்து நான் நல்ல களி யெய்தியே பாடிப் பரவசமாய் - நிற்கவே தவம் பண்ணிய தில்லையடி! தீர்த்தக் கரையினிலே. (கண்ணம்மா - என் காதலி) மகாகவி சுப்பிரமணிய பாரதி English Stub: theerththak karaiyinilae therku moolaiyil shenbagath thoattaththilae paarththirundhaal varuvaen vennilaavilae paanigiyoadenru sonnaay vaarththai thavarivittaai adi kannammaa maarbu thudikkudhadi paarththa idaththilellaam unnaip poalavae paavai theriyudhadi paavai theriyudhadi (theerththak) maeni kodhikkudhadi thalai sutriyae vaedhanai seygudhadi vaanin idaththaiyellaam indha vennilaa vandhu thazhuvudhu paar moanaththirukkudhadi indha vaiyagam moozhgith thuyilinilae naanoruvan mattilum pirivenbadhoar naragath thuzhaluvadhoa (2) வார்த்தை தவறிவிட்டாய் - அடி கண்ணம்மா! மார்பு துடிக்குதடீ! பார்த்த இடத்திலெல்லாம் - உன்னைப்போலவே பாவை தெரியுதடீ!. தீர்த்தக் கரையினிலே - தெற்கு மூலையில் செண்பகத் தோட்டத்திலே பார்த்திருந்தால் வருவேன் - வெண்ணிலாவிலே பாங்கியோ டென்று சொன்னாய் வார்த்தை தவறிவிட்டாய் - அடி கண்ணம்மா! மார்பு துடிக்குதடீ! பார்த்த விடத்திலெல்லாம் - உன்னைப்போலவே பாவை தெரியுதடீ! (தீர்த்தக் கரையினிலே.) மேனி கொதிக்கு தடீ! - தலை சுற்றியே வேதனை செய்கு தடீ! வானி லிடத்தை யெல்லாம் - இந்த வெண்ணிலா வந்து தழுவுது பார்! மோனத் திருக்கு தடீ! இந்த வையகம் மூழ்கித் துயிலினிலே நானொருவன் மட்டிலும் - பிரி வென்பதோர் நகரத் துழலுவதோ? (தீர்த்தக் கரையினிலே.) கடுமை யுடைய தடீ! - எந்த நேரமும் காவலுன் மாளிகையில் அடிமை புகுந்த பின்னும் - எண்ணும்போது நான் அங்கு வருவதற்கில்லை கொடுமை பொறுக்க வில்லை - கட்டுங் காவலும் கூடிக் கிடக்கு தங்கே நடுமை யரசி யவள் - எதற்காகவோ நாணிக் குலைந்திடுவாள் (தீர்த்தக் கரையினிலே.) கூடிப் பிரியாமலே - ஓரி ரவெலாம் கொஞ்சிக் குலவி யங்கே ஆடி விளை யாடியே, - உன்றன் மேனியை ஆயிரங்கோடி முறை நாடித் தழுவி மனக் - குறை தீர்ந்து நான் நல்ல களி யெய்தியே பாடிப் பரவசமாய் - நிற்கவே தவம் பண்ணிய தில்லையடி! தீர்த்தக் கரையினிலே. (கண்ணம்மா - என் காதலி) மகாகவி சுப்பிரமணிய பாரதி English Stub: theerththak karaiyinilae therku moolaiyil shenbagath thoattaththilae paarththirundhaal varuvaen vennilaavilae paanigiyoadenru sonnaay vaarththai thavarivittaai adi kannammaa maarbu thudikkudhadi paarththa idaththilellaam unnaip poalavae paavai theriyudhadi paavai theriyudhadi (theerththak) maeni kodhikkudhadi thalai sutriyae vaedhanai seygudhadi vaanin idaththaiyellaam indha vennilaa vandhu thazhuvudhu paar moanaththirukkudhadi indha vaiyagam moozhgith thuyilinilae naanoruvan mattilum pirivenbadhoar naragath thuzhaluvadhoa (2)
வார்த்தை தவறிவிட்டாய் - அடி கண்ணம்மா! மார்பு துடிக்குதடீ! (சுப்பிரமணிய பாரதி - Vaarthai Thavarivittaai) - ஏனைய கவிதைகள்
அடி கண்ணம்மா! மார்பு துடிக்குதடீ! (சுப்பிரமணிய பாரதி - Vaarthai Thavarivittaai) - ஏனைய கவிதைகள்
தன் ஏழை மகள் பெரியவள் ஆனதால் தாயும் தாவணிக்கு மாறினாள் தன் ஏழை மகள் பெரியவள் ஆனதால் தாயும் தாவணிக்கு மாறினாள்
வறுமைத் தாய் - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
ஆமாம்! பிழைப் பெயர்பலகையில் ! (அ)நியாயவிலைக்கடை! ஆமாம்! பிழைப் பெயர்பலகையில் ! (அ)நியாயவிலைக்கடை!
பிழை - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
உன்னை என் இதயம் என்று சொல்ல மாட்டேன் ஏன் என்றால் நீ துடித்து நான் உயிர் வாழ விரும்ப வில்லை உன்னை என் இதயம் என்று சொல்ல மாட்டேன் ஏன் என்றால் நீ துடித்து நான் உயிர் வாழ விரும்ப வில்லை
இதயம் - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
ஓய்ந்தது மழை மட்டுமல்ல நம் கூடலும் தான்! மீண்டும் வானம் பார்த்த பூமியாய் காத்திருக்கிறேன். ஓய்ந்தது மழை மட்டுமல்ல நம் கூடலும் தான்! மீண்டும் வானம் பார்த்த பூமியாய் காத்திருக்கிறேன்.
காத்திருக்கிறேன். - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
வீட்டில் ஒட்டடை கவலைப்பட்டேன் ஓட்டடைதான் வீடு சிலந்தி சந்தோசப்பட்டது வீட்டில் ஒட்டடை கவலைப்பட்டேன் ஓட்டடைதான் வீடு சிலந்தி சந்தோசப்பட்டது
முரண்பாடு - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
நேரு பெருமானே! குழந்தைகள் தினம் கொண்டாட வேண்டும் கூப்பிடுங்கள் குழந்தைகளை அங்கங்கே தேசமெங்கும் இரும்படிக்கும் ரோஜாக்களை தாய்ப்பாலுக்கு சம்பளம் கட்டச் சம்பாதிக்கும் சிசுக்களை இருக்கிறார்கள். சிவகாசியின் வெடிமருந்து கிடங்குகளில் காஷ்மிரின் கம்பளைக் கிடங்குகளில் மேற்கு வங்கத்தின் செங்கற் சூளைகளில் சூரத்தின் வைரத் தொழிற்சாலைகளில் டெல்லியின் சாலையோர டீகடைகளில் பெரோசாபாதின் வளையல் கூடங்களில் அலிகாரின் பூட்டுத் தொழிற்சாலைகளில் கூப்பிடுங்கள் நேருஜி அந்தக் கொழுந்துகள் இல்லாமல் குழந்தைகள் தினம் கொண்டாடினால் சட்டையில் நானும் கட்டாயம் அணிவேன் ஒரு கருப்பு ரோஜா! நேரு பெருமானே! குழந்தைகள் தினம் கொண்டாட வேண்டும் கூப்பிடுங்கள் குழந்தைகளை அங்கங்கே தேசமெங்கும் இரும்படிக்கும் ரோஜாக்களை தாய்ப்பாலுக்கு சம்பளம் கட்டச் சம்பாதிக்கும் சிசுக்களை இருக்கிறார்கள். சிவகாசியின் வெடிமருந்து கிடங்குகளில் காஷ்மிரின் கம்பளைக் கிடங்குகளில் மேற்கு வங்கத்தின் செங்கற் சூளைகளில் சூரத்தின் வைரத் தொழிற்சாலைகளில் டெல்லியின் சாலையோர டீகடைகளில் பெரோசாபாதின் வளையல் கூடங்களில் அலிகாரின் பூட்டுத் தொழிற்சாலைகளில் கூப்பிடுங்கள் நேருஜி அந்தக் கொழுந்துகள் இல்லாமல் குழந்தைகள் தினம் கொண்டாடினால் சட்டையில் நானும் கட்டாயம் அணிவேன் ஒரு கருப்பு ரோஜா!
குழந்தைகள் தினம் - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
இது வானத்தின் இசை கருப்பு காகிதத்தின் வெள்ளை பாடல் தூய்மையின் திறப்பு விழா இறைவனின் திரவ நிலை என் மேல் விழுவது பாரதியின் பார்வைகளா? இல்லை விழுவதென்ன கண்ணாடித் தமிழா? கவிதைகளாய் சிதறுகிறதே! இது காகிதங்கள் கப்பலாகும் நேரம் குடைகள் மலரும் நேரம் வெள்ளை நிறம் வர்ணங்களாகும் நேரம் நான் கவிதையாகும் நேரம் . என்னை எதுவுமற்றவனாக்கி எல்லாவற்றையும் என்னுள் நிரப்பும் மாயப் பெண்ணா? இல்லை என் முகாரி ராகத்தை உடைக்க வந்த காதலா? இது எனக்காக வானம் செய்யும் ஆனந்தப் பிரகடனம். நனையவே விருப்பப்பட்டேன் கரைந்தே போனேன் இன்னும் யாருக்கும் தெரியாது . உன்னோடு கரைந்து போன என் கண்ணீர் துளிகளின் அர்த்தங்களை. ஏய் மழையே! நான் உன்னை உணரும் போது என்னையும் என் கண்ணனையும் நான் உணர்வேன். இது வானத்தின் இசை கருப்பு காகிதத்தின் வெள்ளை பாடல் தூய்மையின் திறப்பு விழா இறைவனின் திரவ நிலை என் மேல் விழுவது பாரதியின் பார்வைகளா? இல்லை விழுவதென்ன கண்ணாடித் தமிழா? கவிதைகளாய் சிதறுகிறதே! இது காகிதங்கள் கப்பலாகும் நேரம் குடைகள் மலரும் நேரம் வெள்ளை நிறம் வர்ணங்களாகும் நேரம் நான் கவிதையாகும் நேரம் . என்னை எதுவுமற்றவனாக்கி எல்லாவற்றையும் என்னுள் நிரப்பும் மாயப் பெண்ணா? இல்லை என் முகாரி ராகத்தை உடைக்க வந்த காதலா? இது எனக்காக வானம் செய்யும் ஆனந்தப் பிரகடனம். நனையவே விருப்பப்பட்டேன் கரைந்தே போனேன் இன்னும் யாருக்கும் தெரியாது . உன்னோடு கரைந்து போன என் கண்ணீர் துளிகளின் அர்த்தங்களை. ஏய் மழையே! நான் உன்னை உணரும் போது என்னையும் என் கண்ணனையும் நான் உணர்வேன்.
மழை - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
சில நாட்களாகவே நம் விடைபெறுதல் முழுமையாக இல்லை , ஏதோவொன்று நிகழ்வதேயில்லை . இறுதியாக நாம் விடைபெற்ற போதும் நீயோ அல்லது நானோ அதைச் செய்யவில்லை . சில நாட்களாகவே நம் விடைபெறுதல் முழுமையாக இல்லை , ஏதோவொன்று நிகழ்வதேயில்லை . இறுதியாக நாம் விடைபெற்ற போதும் நீயோ அல்லது நானோ அதைச் செய்யவில்லை .
ஏதோவொன்று - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
இறுதியாக ஏதாவது எழுதிவிட்டு இன்றோடு எழுதுவதை நிறுத்தி கொள்ளலாம் - என முடிவு செய்து வெகு நாட்களாகிவிட்டன . இன்னும் அந்த காகிதம் வெள்ளையாகவே இருக்கிறது . இறுதியாக ஏதாவது எழுதிவிட்டு இன்றோடு எழுதுவதை நிறுத்தி கொள்ளலாம் - என முடிவு செய்து வெகு நாட்களாகிவிட்டன . இன்னும் அந்த காகிதம் வெள்ளையாகவே இருக்கிறது .
கவிதை - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
உன் காதோர கூந்தலை கலைத்து போகும் காற்றை போலத்தான் - நீயும் அடிக்கடி என்னை அழகாய் கலைத்து விடுகிறாய் . உன் காதோர கூந்தலை கலைத்து போகும் காற்றை போலத்தான் - நீயும் அடிக்கடி என்னை அழகாய் கலைத்து விடுகிறாய் .
நீ - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
ஒரு முறை எனை பார்த்தும் வாசலிலேயே அமர்ந்திருக்கிறாய் . ஒரு முறை எனை பார்த்ததும் எழுந்து உள்ளே சென்றுவிடுகிறாய் . நான் புரியாமல் தவித்து கொண்டிருக்கிறேன் . இவற்றில் எதை என் காதலோடு சம்பந்தபடுத்திகொள்ளட்டும் . ஒரு முறை எனை பார்த்தும் வாசலிலேயே அமர்ந்திருக்கிறாய் . ஒரு முறை எனை பார்த்ததும் எழுந்து உள்ளே சென்றுவிடுகிறாய் . நான் புரியாமல் தவித்து கொண்டிருக்கிறேன் . இவற்றில் எதை என் காதலோடு சம்பந்தபடுத்திகொள்ளட்டும் .
புரியவில்லை - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
1) பிறப்பு எப்படி என்பதை நான் பிறந்து உனர்ந்தேன் இறப்பு எப்படி என்பதை உனர்கிறேன் உன் பார்வையில் 2) உன் நினைவு இல்லாத நாள் என் நினைவு நாள் 3) அவள் என்னை நினைக்கவெ யொசிக்கிராள் ஆனால் நான் அவளை நினைக்கவெ சுவாசிக்கிறேன். 1) பிறப்பு எப்படி என்பதை நான் பிறந்து உனர்ந்தேன் இறப்பு எப்படி என்பதை உனர்கிறேன் உன் பார்வையில் 2) உன் நினைவு இல்லாத நாள் என் நினைவு நாள் 3) அவள் என்னை நினைக்கவெ யொசிக்கிராள் ஆனால் நான் அவளை நினைக்கவெ சுவாசிக்கிறேன்.
இது உனக்காக - கைபேசி கவிதைகள்
கைபேசி கவிதைகள்
என் ஆயுள் முழுவதும் உன் அன்பு வேண்டும் இல்லையேல் உன் அன்பு உள்ள வரை எனக்கு ஆயுள் போதும்! என் ஆயுள் முழுவதும் உன் அன்பு வேண்டும் இல்லையேல் உன் அன்பு உள்ள வரை எனக்கு ஆயுள் போதும்!
ஒரே பார்வையில் காதலா?? சாத்தியமா?? - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
வெள்ளை காகிதமாகத்தான் நானும் பிறந்தேன் என்னில் நான் எழுதிக்கொண்ட தவறான பக்கங்களை உன்னில் நனைந்தே அழித்துவிடுவேன் ஏனெனில் நீ ஒரு ஈரமான கவிதை. வெள்ளை காகிதமாகத்தான் நானும் பிறந்தேன் என்னில் நான் எழுதிக்கொண்ட தவறான பக்கங்களை உன்னில் நனைந்தே அழித்துவிடுவேன் ஏனெனில் நீ ஒரு ஈரமான கவிதை.
மழை - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
ஆயிரம் இதயம் உன்னை நேசிக்கலாம் ஆயிரம் இதயத்தை நீ நேசிக்கலாம் ஆனால் நான் உன்னை நேசிப்பது போல் எந்த இதயமும் உன்னை நேசிக்காது ஆயிரம் இதயம் உன்னை நேசிக்கலாம் ஆயிரம் இதயத்தை நீ நேசிக்கலாம் ஆனால் நான் உன்னை நேசிப்பது போல் எந்த இதயமும் உன்னை நேசிக்காது
உனக்கே உயிரானேன் - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
இந்தியத் தாயின் இறுதிக் கண்ணீர்த்துளி. இலங்கை ------ சொந்தமண்ணிலிருந்து துரத்தப்பட்ட அகதி துடுப்பற்ற பரிசல் பிறைநிலா இந்தியத் தாயின் இறுதிக் கண்ணீர்த்துளி. இலங்கை ------ சொந்தமண்ணிலிருந்து துரத்தப்பட்ட அகதி துடுப்பற்ற பரிசல் பிறைநிலா
ஹைக்கூ கவிதை - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
என் இதயம் ஒரு தாஜ்மஹால் . அதில் நீ இருந்தால் அது ஒரு காதல் சின்னம் அதில் நீ இல்லாவிட்டால் அது ஒரு சமாதி என் இதயம் ஒரு தாஜ்மஹால் . அதில் நீ இருந்தால் அது ஒரு காதல் சின்னம் அதில் நீ இல்லாவிட்டால் அது ஒரு சமாதி
தாஜ்மஹால் - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
உன்னை என் இதயம் என்று சொல்லமாட்டேன் ஏன் என்றால். நீ துடித்து நான் உயிர் வாழ விரும்பவில்லை. உன்னை என் இதயம் என்று சொல்லமாட்டேன் ஏன் என்றால். நீ துடித்து நான் உயிர் வாழ விரும்பவில்லை.
இதயம் - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
என்னை சுமந்து கொண்டிருக்கும் உன்னக்காக. துடித்து கொண்டே இருப்பேன் என் " ஆயுள் " முழுதும் - இப்படிக்கு இதயம் என்னை சுமந்து கொண்டிருக்கும் உன்னக்காக. துடித்து கொண்டே இருப்பேன் என் " ஆயுள் " முழுதும் - இப்படிக்கு இதயம்
உன்னக்காக - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
ஒரு பார்வை பார் ஒரே பார்வை பார் நெஞ்சு பூப்பூத்தாலும் பூக்கட்டும் கடும் தீப்பிடித்தாலும் பிடிக்கட்டும் ஒரு புன்னகை செய் ஒரே புன்னகை செய் உயிர் வாழ்வதாயினும் வாழட்டும் இல்லை சாவதாயினும் சாகட்டும் ஒரு பார்வை பார் ஒரே பார்வை பார் நெஞ்சு பூப்பூத்தாலும் பூக்கட்டும் கடும் தீப்பிடித்தாலும் பிடிக்கட்டும் ஒரு புன்னகை செய் ஒரே புன்னகை செய் உயிர் வாழ்வதாயினும் வாழட்டும் இல்லை சாவதாயினும் சாகட்டும்
ஒரு பார்வை பார் ஒரே பார்வை பார் - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
தாய்மையின் வலி என்னவென்று எனக்கும் தெரியும். அதனால் தான் அவளோடு சேர்ந்து நானும் அழுதேன். அன்று நான் பிறந்த போது. தாய்மையின் வலி என்னவென்று எனக்கும் தெரியும். அதனால் தான் அவளோடு சேர்ந்து நானும் அழுதேன். அன்று நான் பிறந்த போது.
தாய்மையின் வலி - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
உன் அன்பென்ற மழையில் நனையலாம் என்று எண்ணினேன் எங்கே நனைந்தால் சிறிது நாழிகையில் பிரிந்து விடுவாயோ என அஞ்சி உன் அன்பில் கரைந்தே போனேன் . உன் அன்பென்ற மழையில் நனையலாம் என்று எண்ணினேன் எங்கே நனைந்தால் சிறிது நாழிகையில் பிரிந்து விடுவாயோ என அஞ்சி உன் அன்பில் கரைந்தே போனேன் .
அன்பென்ற மழை - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
வந்தே மாதரம் என்போம் - எங்கள் மாநிலத் தாயை வணங்குதும் என்போம். (வந்தே) சரணங்கள் ஜாதி மதங்களைப் பாரோம் - உயர் ஜன்மம் இத் தேசத்தில் எய்தின ராயின் வேதிய ராயினும் ஒன்றே - அன்றி வேறு குலத்தின ராயினும் ஒன்றே (வந்தே) 1 ஈனப் பறையர்க ளேனும் அவர் எம்முடன் வாழ்ந்திங் கிருப்பவர் அன்றோ? சீனத்த ராய்விடு வாரோ? - பிற தேசத்தர் போற்பல தீங்கிழைப் பாரோ? (வந்தே) 2 ஆயிரம் உண்டிங்கு ஜாதி - எனில் அன்னியர் வந்து புகல் என்ன நீதி? - ஓர் தாயின் வயிற்றில் பிறந்தோர் - தம்முள் சண்டைசெய் தாலும் சகோதரர் அன்றோ? (வந்தே) 3 ஒன்று பட்டால் உண்டு வாழ்வே - நம்மில் ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வே நன்றிது தேர்ந்திடல் வேண்டும் - இந்த ஞானம் வந்தாற்பின் நமக்கெது வேண்டும்? (வந்தே) 4 எப்பதம் வாய்த்திடு மேனும் - நம்மில் யாவர்க்கும் அந்த நிலைபொது வாகும் முப்பது கோடியும் வாழ்வோம் - வீழில் முப்பது கோடி முழுமையும் வீழ்வோம் (வந்தே) 5 புல்லடி மைத்தொழில் பேணிப் - பண்டு போயின நாட்களுக் கினிமனம் நாணித் தொல்லை இகழ்ச்சிகள் தீர - இந்தத் தொண்டு நிலைமையைத் தூவென்று தள்ளி (வந்தே) 6 வந்தே மாதரம் என்போம் - எங்கள் மாநிலத் தாயை வணங்குதும் என்போம். (வந்தே) சரணங்கள் ஜாதி மதங்களைப் பாரோம் - உயர் ஜன்மம் இத் தேசத்தில் எய்தின ராயின் வேதிய ராயினும் ஒன்றே - அன்றி வேறு குலத்தின ராயினும் ஒன்றே (வந்தே) 1 ஈனப் பறையர்க ளேனும் அவர் எம்முடன் வாழ்ந்திங் கிருப்பவர் அன்றோ? சீனத்த ராய்விடு வாரோ? - பிற தேசத்தர் போற்பல தீங்கிழைப் பாரோ? (வந்தே) 2 ஆயிரம் உண்டிங்கு ஜாதி - எனில் அன்னியர் வந்து புகல் என்ன நீதி? - ஓர் தாயின் வயிற்றில் பிறந்தோர் - தம்முள் சண்டைசெய் தாலும் சகோதரர் அன்றோ? (வந்தே) 3 ஒன்று பட்டால் உண்டு வாழ்வே - நம்மில் ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வே நன்றிது தேர்ந்திடல் வேண்டும் - இந்த ஞானம் வந்தாற்பின் நமக்கெது வேண்டும்? (வந்தே) 4 எப்பதம் வாய்த்திடு மேனும் - நம்மில் யாவர்க்கும் அந்த நிலைபொது வாகும் முப்பது கோடியும் வாழ்வோம் - வீழில் முப்பது கோடி முழுமையும் வீழ்வோம் (வந்தே) 5 புல்லடி மைத்தொழில் பேணிப் - பண்டு போயின நாட்களுக் கினிமனம் நாணித் தொல்லை இகழ்ச்சிகள் தீர - இந்தத் தொண்டு நிலைமையைத் தூவென்று தள்ளி (வந்தே) 6
வந்தே மாதரம் என்போம் - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
நீயோ அங்கே. நானோ இங்கே. இருவர் மனமும் எங்கே??? நீயோ அங்கே. நானோ இங்கே. இருவர் மனமும் எங்கே???
எங்கே??? - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
இனிமேல் உன்னோடு பேச முடியாது என்றாகும் - நாளில் என்னவெல்லாம் பெசிகொண்டிருபேனோ உன்னோடு ??? இனிமேல் உன்னோடு பேச முடியாது என்றாகும் - நாளில் என்னவெல்லாம் பெசிகொண்டிருபேனோ உன்னோடு ???
உன்னோடு - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
அழகாக இருக்கும் பொருட்கள் எல்லாம் அவளை நினைவுபடுத்துகின்றன இல்லையில்லை அவளை நினைவுபடுத்தும் பொருட்கள் எல்லாம் அழகாகத் தெரிகின்றன அழகாக இருக்கும் பொருட்கள் எல்லாம் அவளை நினைவுபடுத்துகின்றன இல்லையில்லை அவளை நினைவுபடுத்தும் பொருட்கள் எல்லாம் அழகாகத் தெரிகின்றன
அழகு அவள் அது - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
அவளும் நோக்கினாள் அண்ணலும் நோக்கினாள் வந்தது மெட்ராஸ் ஐ அவளும் நோக்கினாள் அண்ணலும் நோக்கினாள் வந்தது மெட்ராஸ் ஐ
ஹைக்கூ கவிதை - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
SMS ல் கூட ஒற்றை முத்தத்தை தர மறுக்கும் உன் திமிரை விடவா அழகிய கவிதையை எழுதிவிடப் போகிறேன்??? SMS ல் கூட ஒற்றை முத்தத்தை தர மறுக்கும் உன் திமிரை விடவா அழகிய கவிதையை எழுதிவிடப் போகிறேன்???
ஒற்றை முத்தம் - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
பனி விழும் இரவைக் கூட பகலாக்கத் துணிந்தேன்! பகலில் தானே உன்னை பார்த்துக் கொண்டிருக்க முடிகிறது! பனி விழும் இரவைக் கூட பகலாக்கத் துணிந்தேன்! பகலில் தானே உன்னை பார்த்துக் கொண்டிருக்க முடிகிறது!
பகல் மட்டும் - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
நான் தூங்கிவிட்டதாய் நினைத்துக்கொண்டு, என் நெற்றிப்பொட்டில் நீ தந்துவிட்டுப் போகும் ஒற்றை முத்தத்தில் தெரிந்துகொண்டேன். என் மீதான உன் காதலின் அளவை நான் தூங்கிவிட்டதாய் நினைத்துக்கொண்டு, என் நெற்றிப்பொட்டில் நீ தந்துவிட்டுப் போகும் ஒற்றை முத்தத்தில் தெரிந்துகொண்டேன். என் மீதான உன் காதலின் அளவை
ஒற்றை முத்தம் - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
ஒரு புன்னகையைகொல்வது போல் ஒரு தவிர்த்தலை எதிர்கொள்வது போல் ஒரு உறவை முறிப்பது போல் கொடூரமானதும் துயரமானதும் வேதனையானதும்தான்இந்த. ஒரு புன்னகையைகொல்வது போல் ஒரு தவிர்த்தலை எதிர்கொள்வது போல் ஒரு உறவை முறிப்பது போல் கொடூரமானதும் துயரமானதும் வேதனையானதும்தான்இந்த.
நீங்குதல். - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
கனவுகளால் ஆனது காதல் அது வருவதும் போவதும் ஏனோ ? கண்களில் வழிகின்ற கண்ணீர் என் மனம் கனமகியது ஏனோ கனவுகளால் ஆனது காதல் அது வருவதும் போவதும் ஏனோ ? கண்களில் வழிகின்ற கண்ணீர் என் மனம் கனமகியது ஏனோ
காதல் - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
கண்ணீருக்குச் சொந்தம் இன்று நான். கரை கண்டு முடிப்பேனோ என்றும் நான். என் வாழ்வில் வந்த துன்பம் சொந்த வாழ்க்கையில் இடையூர் ஆகுமோ. விடை தேடி அலைகின்றேன் விடிவொன்று கிடைக்குமோ.! கண்ணீருக்குச் சொந்தம் இன்று நான். கரை கண்டு முடிப்பேனோ என்றும் நான். என் வாழ்வில் வந்த துன்பம் சொந்த வாழ்க்கையில் இடையூர் ஆகுமோ. விடை தேடி அலைகின்றேன் விடிவொன்று கிடைக்குமோ.!
விடை தேடி அலைகின்றேன் - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
இப்பொழுதெல்லாம் கவிதை எழுத அதிகம் சிந்திப்பதில்லை காதலில் தோல்வி ! இப்பொழுதெல்லாம் கவிதை எழுத அதிகம் சிந்திப்பதில்லை காதலில் தோல்வி !
காதலில் தோல்வி ! - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
எங்கும் வந்தாய், என் மனதோடு………… எங்கும் தெரிந்தாய், என் கண்ணோடு…… எப்படி பிரிவேன், உன் நினைவோடு…….! எங்கும் வந்தாய், என் மனதோடு………… எங்கும் தெரிந்தாய், என் கண்ணோடு…… எப்படி பிரிவேன், உன் நினைவோடு…….!
எப்படி பிரிவேன் - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
என் முதலும் முடிவும் உன்னால் மட்டுமே நிரப்ப பட்டிருப்பதை வேறெப்படித்தான் சொல்லச்சொல்கிறாய். என்னை! என் முதலும் முடிவும் உன்னால் மட்டுமே நிரப்ப பட்டிருப்பதை வேறெப்படித்தான் சொல்லச்சொல்கிறாய். என்னை!
என் முதலும் முடிவும் - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
தனிமை பயம் என்றாய் என்னை தனியாக விட்டுவிட்டு. தனிமை பயம் என்றாய் என்னை தனியாக விட்டுவிட்டு.
தனிமை - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
பிடிவாதம் பிடிகாதேன்பாய் பிடிவாதமாய் என்னிடம். பிடிவாதம் பிடிகாதேன்பாய் பிடிவாதமாய் என்னிடம்.
பிடிவாதம் - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
காதல் கவிதை எனப்படுவது யாதெனில் தான் காதலித்தவளை(ரை ) நினைத்து கணவன்கள் (மனைவியர்) எழுதுவது ! காதல் கவிதை எனப்படுவது யாதெனில் தான் காதலித்தவளை(ரை ) நினைத்து கணவன்கள் (மனைவியர்) எழுதுவது !
மொக்கை - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
காதல் தோல்வி எனப்படுது யாதெனில் தாடி வளர்த்துக்கொள்வது அடுத்த அழகான பெண்ணைப் பார்க்கும் வரை ! காதல் தோல்வி எனப்படுது யாதெனில் தாடி வளர்த்துக்கொள்வது அடுத்த அழகான பெண்ணைப் பார்க்கும் வரை !
மொக்கை தத்துவம் - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
தோல்வி இன் அடையாளமும் "தயக்கம்" வெற்றி இன் அடையாளமும் "துணிச்சல்" துணிந்தவர் தோற்றதில்லை, தயங்கியவர் வென்றதில்லை. தோல்வி இன் அடையாளமும் "தயக்கம்" வெற்றி இன் அடையாளமும் "துணிச்சல்" துணிந்தவர் தோற்றதில்லை, தயங்கியவர் வென்றதில்லை.
வெற்றி - தோல்வி - ஏனைய கவிதைகள்
தோல்வி - ஏனைய கவிதைகள்
தூக்கத்தில் உன் குரல் கேட்டு எழுந்து பார்த்தேன் ஆனால் நீ இல்லை. பின்பு தான் தெரிந்தது அது பக்கத்து வீட்டு "எருமை மாடு" என்று! சில உண்மைகள் கசகத்தான் செயும் . தூக்கத்தில் உன் குரல் கேட்டு எழுந்து பார்த்தேன் ஆனால் நீ இல்லை. பின்பு தான் தெரிந்தது அது பக்கத்து வீட்டு "எருமை மாடு" என்று! சில உண்மைகள் கசகத்தான் செயும் .
எருமை - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
ஆவேசம் நான் கொள்கையில் அடக்கி வைக்கும் உன் ஆதிக்கம் கலந்த அன்பு. எங்கேனும் நான் எல்லை மீறினால் கண் ஜாடையிலேயே என்னைக் கட்டுப்படுத்தும் தீரம். உறவின் உச்சத்தில் என் மார்பு உணரும் உன்னிரு கண் ஈரம். இத்தனை கேட்டாலும் என் இதழ் அசைவது ஒரு கேள்விக்குத்தான். கிடைப்பாயா? ஆவேசம் நான் கொள்கையில் அடக்கி வைக்கும் உன் ஆதிக்கம் கலந்த அன்பு. எங்கேனும் நான் எல்லை மீறினால் கண் ஜாடையிலேயே என்னைக் கட்டுப்படுத்தும் தீரம். உறவின் உச்சத்தில் என் மார்பு உணரும் உன்னிரு கண் ஈரம். இத்தனை கேட்டாலும் என் இதழ் அசைவது ஒரு கேள்விக்குத்தான். கிடைப்பாயா?
கிடைப்பாயா? - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
உன் நினைவுகளைக்கூட் என்னால் கொல்லை செய்ய முடியவில்லை நீயோ இல்லை என்ற ஒரு வார்த்தையில் என்னை நடைபினமாக்கினாய். உன் நினைவுகளைக்கூட் என்னால் கொல்லை செய்ய முடியவில்லை நீயோ இல்லை என்ற ஒரு வார்த்தையில் என்னை நடைபினமாக்கினாய்.
நடைபினமாக்கினாய் என்னை - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
என் கடைசி ஆசை…! நான் இறந்து விட்ட பிறகு.! என் இதயத்தை எடுத்து இதயமே இல்லாத என் காதலிக்கு கொடுங்கள்…! என் கடைசி ஆசை…! நான் இறந்து விட்ட பிறகு.! என் இதயத்தை எடுத்து இதயமே இல்லாத என் காதலிக்கு கொடுங்கள்…!
என் கடைசி ஆசை…! - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
எழுதி,எழுதி என் கவிதைக்கே காதல் வந்துவிட்டது, உனக்கு? எழுதி,எழுதி என் கவிதைக்கே காதல் வந்துவிட்டது, உனக்கு?
காதல் வந்துவிட்டது - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
கடிதம் எழுது எழுது……. எனக்கு ஒரு கடிதம் எழுது…. என்னை நேசிக்கிறாய் என்றல்ல்…. நீ வேறு எவரையும் நேசிக்கவில்லை என்றாவ்து எழுது! கடிதம் எழுது எழுது……. எனக்கு ஒரு கடிதம் எழுது…. என்னை நேசிக்கிறாய் என்றல்ல்…. நீ வேறு எவரையும் நேசிக்கவில்லை என்றாவ்து எழுது!
கடிதம் எழுது - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
திருமணங்கள் தோல்வியில் முடிவதன் காரணம். காதல் குறைபாடு அல்ல. நட்புக் குறைபாடே. திருமணங்கள் தோல்வியில் முடிவதன் காரணம். காதல் குறைபாடு அல்ல. நட்புக் குறைபாடே.
காதல் மொழி - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
வெயில் அதிகமாய் இருக்கிறது. உன் முகத்தை மறைத்துக்கொள். உலகுக்கு ஒரு சூரியன் போதும்! வெயில் அதிகமாய் இருக்கிறது. உன் முகத்தை மறைத்துக்கொள். உலகுக்கு ஒரு சூரியன் போதும்!
ஒரு சூரியன் போதும் - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
இந்த அறியாச் சிறுமிக்கு அனைத்தும் நீயாகவே இருக்கிறாய். நீ என்ன என்னை கொள்ளை அடித்தவனா? இல்லை சிறை மீட்டவனா? இந்த அறியாச் சிறுமிக்கு அனைத்தும் நீயாகவே இருக்கிறாய். நீ என்ன என்னை கொள்ளை அடித்தவனா? இல்லை சிறை மீட்டவனா?
என்னை கொள்ளை அடித்தவனா? - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
இந்த உலகத்தில், நான் யாரோ ஒருவன் என நினைக்காதே. யாரோ ஒருத்திக்கு நீயே உலகமாக இருக்க முடியும்! இந்த உலகத்தில், நான் யாரோ ஒருவன் என நினைக்காதே. யாரோ ஒருத்திக்கு நீயே உலகமாக இருக்க முடியும்!
பொன் மொழி - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
உறங்கும்போது மட்டுமல்ல. இமைக்கும்போதெல்லாம் வந்து போகும் புயல்வேக கனவு நீ! உறங்கும்போது மட்டுமல்ல. இமைக்கும்போதெல்லாம் வந்து போகும் புயல்வேக கனவு நீ!
நீ - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
நீ பெரிசா நான் பெரிசாங்கறது இல்லம்மா வெற்றி. நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து வாழுற வாழ்க்கை பெரிசுங்கறதை நீயும் அவரும் புரிஞ்சுக்கணும். அதுதாம்மா வெற்றி. நீ பெரிசா நான் பெரிசாங்கறது இல்லம்மா வெற்றி. நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து வாழுற வாழ்க்கை பெரிசுங்கறதை நீயும் அவரும் புரிஞ்சுக்கணும். அதுதாம்மா வெற்றி.
வெற்றி - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
இது நீ நேற்றணிந்த தாவணி நிறம். இது உன் கன்னச் சிவப்பு. இது விரல் நகப் பூச்சு. வானவில் வர்ணத்துக்கு இப்படியொரு விளக்கம் தருகிறாய். ஐயோ. உன் காதலுக்கு வரையறையே இல்லையா? இது நீ நேற்றணிந்த தாவணி நிறம். இது உன் கன்னச் சிவப்பு. இது விரல் நகப் பூச்சு. வானவில் வர்ணத்துக்கு இப்படியொரு விளக்கம் தருகிறாய். ஐயோ. உன் காதலுக்கு வரையறையே இல்லையா?
காதலுக்கு வரையறையே இல்லையா? - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
வாழ்க்கைதான் எத்தனை விசித்திரமானது! அழ வைக்கிற கோபத்தையும் சிரிப்பைத் தரும் அன்பையும் உன் ஒருவனிடமே தந்திருக்கிறது! வாழ்க்கைதான் எத்தனை விசித்திரமானது! அழ வைக்கிற கோபத்தையும் சிரிப்பைத் தரும் அன்பையும் உன் ஒருவனிடமே தந்திருக்கிறது!
வாழ்க்கை - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
காதல் வழிச் சாலையிலே வேகத்தடை ஏதுமில்லை. நாணக்குடை நீ பிடித்தும் வேர்வரைக்கும் சாரல்மழை! காதல் வழிச் சாலையிலே வேகத்தடை ஏதுமில்லை. நாணக்குடை நீ பிடித்தும் வேர்வரைக்கும் சாரல்மழை!
சாரல்மழை - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
உன்னை மறக்கத்தான் நினைக்கிறேன் ஆனால் பாழாய்ப் போன இயற்கை படுத்துகிறதே கண்ணே வெண் மேகம் திட்டாய் நுரை போல என்னவள் பல் துலக்குகிறாள் சாரல் மழை என்னவள் கூந்தல் துளிர்கிறாள் அது என்ன குயிலோசை ஒ என் பெயரை உச்சரிகிறாள் இப்படி எவ்வாறோ உன்னை நினைவுபடுத்துகிறதே பெண்ணே நீ எப்போது என்னைப் பற்றி நினைப்பாய் எதாவது இறுதி ஊர்வலம் உன்னை கடக்கும் போதா?? உன்னை மறக்கத்தான் நினைக்கிறேன் ஆனால் பாழாய்ப் போன இயற்கை படுத்துகிறதே கண்ணே வெண் மேகம் திட்டாய் நுரை போல என்னவள் பல் துலக்குகிறாள் சாரல் மழை என்னவள் கூந்தல் துளிர்கிறாள் அது என்ன குயிலோசை ஒ என் பெயரை உச்சரிகிறாள் இப்படி எவ்வாறோ உன்னை நினைவுபடுத்துகிறதே பெண்ணே நீ எப்போது என்னைப் பற்றி நினைப்பாய் எதாவது இறுதி ஊர்வலம் உன்னை கடக்கும் போதா??
ஞாபகம் - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
காதலி என்பவள் பாட்டி சுட்ட வடை மாதிரி ஒழுங்கா watch பண்ணலைனா நரிபயல் pickup பண்ணிடுவான் காதலி என்பவள் பாட்டி சுட்ட வடை மாதிரி ஒழுங்கா watch பண்ணலைனா நரிபயல் pickup பண்ணிடுவான்
காதல் வடை - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
கண்ணா. நீ சுமாரா லவ் பண்ணா 35 மார்க் சூப்பரா லவ் பண்ணா 80 மார்க் சின்சியரா லவ் பண்ணா தம்பி நோட் பண்ணிக்கோ டாஸ்மாக் தான்! கண்ணா. நீ சுமாரா லவ் பண்ணா 35 மார்க் சூப்பரா லவ் பண்ணா 80 மார்க் சின்சியரா லவ் பண்ணா தம்பி நோட் பண்ணிக்கோ டாஸ்மாக் தான்!
காதல் டாஸ்மாக் - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
இந்திய திரு நாட்டில் … தோண்டினால் தங்கம் கிடைக்கும் … வெட்டினால் வெள்ளி கிடைக்கும் … ஆனால் … படித்தால் மட்டும் வேலை கிடைக்காது ! இந்திய திரு நாட்டில் … தோண்டினால் தங்கம் கிடைக்கும் … வெட்டினால் வெள்ளி கிடைக்கும் … ஆனால் … படித்தால் மட்டும் வேலை கிடைக்காது !
இதுதான் இந்தியா - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
யாரை காதலித்தது இந்த மேகம் …. இப்படி அழுகிறதே! யாரை காதலித்தது இந்த மேகம் …. இப்படி அழுகிறதே!
மேகம்.மோகம் - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
சில நிமிடங்கள் வார்த்தைகள் மொழிய யோசித்தது கனவிலும் பேசிக்கொண்டது கண்ணாடி என் நண்பனானது இவை சில நிமிடம் தான் நாள்களில் இவை மட்டுமே நாட்களானது உன்னை கண்ட பின்னால் ! சில நிமிடங்கள் வார்த்தைகள் மொழிய யோசித்தது கனவிலும் பேசிக்கொண்டது கண்ணாடி என் நண்பனானது இவை சில நிமிடம் தான் நாள்களில் இவை மட்டுமே நாட்களானது உன்னை கண்ட பின்னால் !
சில நிமிடம் - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
உன் காதோரம் கவி சொல்லும் காதணி . நித்தம் என் நினைவோடு விளையாடும் கண்மணி . உன் காதோரம் கவி சொல்லும் காதணி . நித்தம் என் நினைவோடு விளையாடும் கண்மணி .
உன் காதோரம் - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
நினைவெல்லாம் நீ ஆனதால் வார்த்தைகளெல்லாம் கவிதைகள் ஆனது. நானும் இன்று ஒரு காதல் காவியம் தான் என் இதய பக்கங்கள் உன் விழிகளால் எழுதப்படுவதினால் . நினைவெல்லாம் நீ ஆனதால் வார்த்தைகளெல்லாம் கவிதைகள் ஆனது. நானும் இன்று ஒரு காதல் காவியம் தான் என் இதய பக்கங்கள் உன் விழிகளால் எழுதப்படுவதினால் .
நினைவெல்லாம் - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
நானும் சமையல் கற்றுக்கொள்ளுகிறேன் நீ மறுத்தாலும் உன் உதடுகள் இறக்கப்பட்டு முத்தம் கொடுக்கும் என்பதக்காக. நானும் சமையல் கற்றுக்கொள்ளுகிறேன் நீ மறுத்தாலும் உன் உதடுகள் இறக்கப்பட்டு முத்தம் கொடுக்கும் என்பதக்காக.
நானும் சமையல் - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
உன்னைக் கண்களால் கட்டி அனைத்து வார்த்தைகளால் முத்தமிட்டுக் உன் மனதைத் திருட வந்த திருட்டுப்பயன் நான் உன்னைக் கண்களால் கட்டி அனைத்து வார்த்தைகளால் முத்தமிட்டுக் உன் மனதைத் திருட வந்த திருட்டுப்பயன் நான்
உன்னைக் கண்களால் - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
உன் அழகினை கண்டால் சித்திரங்கள் மட்டுமா பேசும் அந்தக் கண்ணாடி கூட கண்ணடிக்குமே. பொய் சொல்லாதே- கண்ணாடி கவிதை மட்டும் தானே பாடும். இல்லை இல்லை- அந்த கண்ணாடி மூர்ச்சையாகி பேசாமல் நின்றுருக்கும். அப்படித்தானே நடந்தது உண்மையை சொல் . உன் அழகினை கண்டால் சித்திரங்கள் மட்டுமா பேசும் அந்தக் கண்ணாடி கூட கண்ணடிக்குமே. பொய் சொல்லாதே- கண்ணாடி கவிதை மட்டும் தானே பாடும். இல்லை இல்லை- அந்த கண்ணாடி மூர்ச்சையாகி பேசாமல் நின்றுருக்கும். அப்படித்தானே நடந்தது உண்மையை சொல் .
உண்மையை சொல் - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
நான் கேட்பதெல்லாம் உன் விழி கொண்டு பேசும் தருணங்கள் உன் விரல் கொண்டு மீட்டும் சப்தங்கள் உன் இதழ் கொண்டு பூக்கும் ஓசைகள் நான் கேட்பதெல்லாம் உன் விழி கொண்டு பேசும் தருணங்கள் உன் விரல் கொண்டு மீட்டும் சப்தங்கள் உன் இதழ் கொண்டு பூக்கும் ஓசைகள்
நான் கேட்பதெல்லாம் - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
உன்னை பிரிந்த சோகத்தை எழுதியதை கண்டு மனம் தாளாமல் என்னது பேனா சிந்திய கண்ணீர் துளிகள் தான் இந்தமுற்றுப்புள்ளிகள் . உன்னை பிரிந்த சோகத்தை எழுதியதை கண்டு மனம் தாளாமல் என்னது பேனா சிந்திய கண்ணீர் துளிகள் தான் இந்தமுற்றுப்புள்ளிகள் .
இந்தமுற்றுப்புள்ளிகள் - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
வள்ளுவன் எழுத மறந்த இரு வார்த்தைகள் தானோ நீ என்னிடம் சொல்லும் இச்சி போடா. வள்ளுவன் எழுத மறந்த இரு வார்த்தைகள் தானோ நீ என்னிடம் சொல்லும் இச்சி போடா.
வள்ளுவன் - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
அன்று உன் மூலம் எனக்கு உயிர் கொடுத்த இறைவன் இன்று என் உயர்வை காண உன்னை உயிரோடு விட்டு வைக்கவில்லையே ! அன்று உன் மூலம் எனக்கு உயிர் கொடுத்த இறைவன் இன்று என் உயர்வை காண உன்னை உயிரோடு விட்டு வைக்கவில்லையே !
அப்பா - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
உன் அருகாமையில், உன் காதலியாக உன்னில் தொலைந்து போக நினைத்தாலும், நீ என் நல்ல தோழன், என்னை என்னிடமே திருப்பிச் சேர்க்கிறாய்… எந்த ஆணையும் காதலிக்காதே என்று சொல்கிறாய், நீ என்றுமே என் இனிய தோழி என்று சொல்கிறாய்… இந்த இரண்டும் எப்படிச் சாத்தியம்? அது உனக்கே வெளிச்சம்… நீ என் கைக்கோர்க்கும் போது என் மனதில் துளிர்க்கும் உணர்வுக்கு பெயர் தெரியாமல் தான் தவிக்கிறேன்… என் மனதிலும் நட்பைத் தவிர வேறேதுமில்லை என்று ஆணித்தரமாக உன்னிடம் சொல்ல முடியாத உனது கோழை தோழி ஆனேன் நான்! உன் அருகாமையில், உன் காதலியாக உன்னில் தொலைந்து போக நினைத்தாலும், நீ என் நல்ல தோழன், என்னை என்னிடமே திருப்பிச் சேர்க்கிறாய்… எந்த ஆணையும் காதலிக்காதே என்று சொல்கிறாய், நீ என்றுமே என் இனிய தோழி என்று சொல்கிறாய்… இந்த இரண்டும் எப்படிச் சாத்தியம்? அது உனக்கே வெளிச்சம்… நீ என் கைக்கோர்க்கும் போது என் மனதில் துளிர்க்கும் உணர்வுக்கு பெயர் தெரியாமல் தான் தவிக்கிறேன்… என் மனதிலும் நட்பைத் தவிர வேறேதுமில்லை என்று ஆணித்தரமாக உன்னிடம் சொல்ல முடியாத உனது கோழை தோழி ஆனேன் நான்!
கோழை தோழி ஆனேன் நான்! - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
உன்னோடு இருக்கும் வரை நான் உணரவில்லை உன்னை பிரிந்த போது தான் உணர்ந்தேன் எனக்கு உன் மேல் காதல் என்று. இப்பொது அவள் நினைவில் நீ எப்போதும் உன் நினைவில் நான். (உறவுகள் பிரிந்தாலும் நினைவுகள் மறப்பதில்லை) உன்னோடு இருக்கும் வரை நான் உணரவில்லை உன்னை பிரிந்த போது தான் உணர்ந்தேன் எனக்கு உன் மேல் காதல் என்று. இப்பொது அவள் நினைவில் நீ எப்போதும் உன் நினைவில் நான். (உறவுகள் பிரிந்தாலும் நினைவுகள் மறப்பதில்லை)
காதல் அறியாமை - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
என்னவர்களே உயிரின் ஒரு துளியை இங்கே விட்டு செல்லுங்கள் நான் உயிர் வாழ உறுதுணையாக இருக்கட்டும்! என்னவர்களே உயிரின் ஒரு துளியை இங்கே விட்டு செல்லுங்கள் நான் உயிர் வாழ உறுதுணையாக இருக்கட்டும்!
பிரிவு - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
உனக்கு மலர் பிடிக்காதென்று மலர் சூடா மங்கையாக இருந்தேன். அதற்கு நீ எனக்கு அளித்த பரிசு என் இதயத்தில் மலர் வளையம். உனக்கு மலர் பிடிக்காதென்று மலர் சூடா மங்கையாக இருந்தேன். அதற்கு நீ எனக்கு அளித்த பரிசு என் இதயத்தில் மலர் வளையம்.
காதல் பரிசு - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
அவன் என்னிடம் சிரித்து பேசிய காலம்மும் உண்டு , அதை நினைத்து மகிழ்கிறேன் இன்று! ஆனால். அந்த காலம் இனி எப்போது வரும் என்று தவிக்கிறேன் நான் தனிமையில் இன்று! அவன் என்னிடம் சிரித்து பேசிய காலம்மும் உண்டு , அதை நினைத்து மகிழ்கிறேன் இன்று! ஆனால். அந்த காலம் இனி எப்போது வரும் என்று தவிக்கிறேன் நான் தனிமையில் இன்று!
தனிமை - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
இன்பமாகவே ஒரு கனவு எனக்கான உலகத்தில் நீ மட்டும் என் கணவனாக! இன்பமாகவே ஒரு கனவு எனக்கான உலகத்தில் நீ மட்டும் என் கணவனாக!
கனவு - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
அன்று மௌனம் - எனக்கு மிகவும் பிடித்த விஷயம்! ஆனால், என்னில் இல்லாத ஒன்று! இன்று மௌனம் - எனக்கு மிகவும் பிடிக்காத விஷயம்! ஆனால், என் சொந்தம் ஆயிற்று காரணம் நீ என்னிடம் காட்டிய மௌனம் அன்று மௌனம் - எனக்கு மிகவும் பிடித்த விஷயம்! ஆனால், என்னில் இல்லாத ஒன்று! இன்று மௌனம் - எனக்கு மிகவும் பிடிக்காத விஷயம்! ஆனால், என் சொந்தம் ஆயிற்று காரணம் நீ என்னிடம் காட்டிய மௌனம்
மௌனம் - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
பட்டுப் பாப்பா தூங்கு!-நீ பாலும் குடித்தாய் தூங்கு! மொட்டில் மணக்கும் முல்லை!-என் முத்தே என்ன தொல்லை? சிட்டாய் ஆடிப் பறந்தாய்-உன் சிரிப்பால் எங்கும் நிறைந்தாய். பிட்டும் தருவேன் தூங்கு!-என் பெண்ணே கண்ணே தூங்கு! பட்டுப் பாப்பா தூங்கு!-நீ பாலும் குடித்தாய் தூங்கு! மொட்டில் மணக்கும் முல்லை!-என் முத்தே என்ன தொல்லை? சிட்டாய் ஆடிப் பறந்தாய்-உன் சிரிப்பால் எங்கும் நிறைந்தாய். பிட்டும் தருவேன் தூங்கு!-என் பெண்ணே கண்ணே தூங்கு!
தாலாட்டு (பெண்) - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
நீ இருக்கும் உலகத்தில் காற்றுக்கும் வேலை இல்லை . நீ மட்டும் போதும் எனக்கு உலகத்தை புரிந்து கொள்ள நீ நான் என்று இல்லாத நிலை வேண்டும் இந்த வேளையில். நீ சுவாசித்த காற்று எனக்கு மட்டும் தான் சிறுப்பிள்ளை தனமான பிடிவாதம் வந்ததே உன் நாசியில் இருந்து வந்த காற்றின் சுவை அறிந்த பின்பு . நீ இருக்கும் உலகத்தில் காற்றுக்கும் வேலை இல்லை . நீ மட்டும் போதும் எனக்கு உலகத்தை புரிந்து கொள்ள நீ நான் என்று இல்லாத நிலை வேண்டும் இந்த வேளையில். நீ சுவாசித்த காற்று எனக்கு மட்டும் தான் சிறுப்பிள்ளை தனமான பிடிவாதம் வந்ததே உன் நாசியில் இருந்து வந்த காற்றின் சுவை அறிந்த பின்பு .
பாசம் - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
விதவை வானம் மறுநாளே திருமணம் பிறைநிலவு விதவை வானம் மறுநாளே திருமணம் பிறைநிலவு
நிலவு - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
சீதை அசோகவனத்தில் ஹனுமனிடம்: எனை மீட்க- ஐயன் வரலாம், மீட்டபின் ஐயம் வரலாம் நான் சிறை நீங்கினாலும் - என் கறை நீங்குமா ? சீதை அசோகவனத்தில் ஹனுமனிடம்: எனை மீட்க- ஐயன் வரலாம், மீட்டபின் ஐயம் வரலாம் நான் சிறை நீங்கினாலும் - என் கறை நீங்குமா ?
ஐயம் வரலாம்??? - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
இன்னிசையாக உனது ஆறுநாள் புன்னகை என் இருதயத்தின் ஒரு சிறு கீரல் நீ பேச முடியாத மௌனங்கள் என்னுள் இன்னிசையாக உனது அழுகுரல் என் மனதின் பிரதிபலிப்பு உனது மெல்லிய சிரிப்பு எந்தன் ஜீன்களின் பரவசம். இன்னிசையாக உனது ஆறுநாள் புன்னகை என் இருதயத்தின் ஒரு சிறு கீரல் நீ பேச முடியாத மௌனங்கள் என்னுள் இன்னிசையாக உனது அழுகுரல் என் மனதின் பிரதிபலிப்பு உனது மெல்லிய சிரிப்பு எந்தன் ஜீன்களின் பரவசம்.
இன்னிசையாக - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
இருத்தல் வேண்டும். என் சிந்தனைகள் கலைகின்றன உன் இமையின் எழுச்சியில். நித்தம் உன்னைப் பார்க்காமல் இருக்க வேண்டுகிறேன். ஏழு பிறவிகள் உலகில் உண்டு எனில் மறு பிறவியில் நான் உன்னை பார்க்காமல் இருத்தல் வேண்டும். இருத்தல் வேண்டும். என் சிந்தனைகள் கலைகின்றன உன் இமையின் எழுச்சியில். நித்தம் உன்னைப் பார்க்காமல் இருக்க வேண்டுகிறேன். ஏழு பிறவிகள் உலகில் உண்டு எனில் மறு பிறவியில் நான் உன்னை பார்க்காமல் இருத்தல் வேண்டும்.
இருத்தல் வேண்டும். - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
கண்ணீர்த் துளிகள். இன்றொடு பத்து வருடங்கள் கழிகின்றன. உன்னை பார்க்காமல். இருந்தும் என் எண்ணஙகள் உன்னில் நினைவிழந்து கிடைக்கின்றன. உன் இமைகளின் ஒரத்தில் துளிர்விடும் கண்ணிர்த் துளிகள். கல்லூரி வாழ்வின் நண்பர்களின் பிரிவினைகள். என் உணர்வுகளில் மனதில் தள்ளப்படும் ஒரங்க நாடகமாக இன்றும் மனதில் நீரோட்டமாக பதிவுகளாகின்றன. கண்ணீர்த் துளிகள். இன்றொடு பத்து வருடங்கள் கழிகின்றன. உன்னை பார்க்காமல். இருந்தும் என் எண்ணஙகள் உன்னில் நினைவிழந்து கிடைக்கின்றன. உன் இமைகளின் ஒரத்தில் துளிர்விடும் கண்ணிர்த் துளிகள். கல்லூரி வாழ்வின் நண்பர்களின் பிரிவினைகள். என் உணர்வுகளில் மனதில் தள்ளப்படும் ஒரங்க நாடகமாக இன்றும் மனதில் நீரோட்டமாக பதிவுகளாகின்றன.
கண்ணீர்த் துளிகள். - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
என் குளிர்காலக் கனவுகள் மறைகின்றன நிகழ்கால நிஜங்களில். சிறு இடைவெளிகளில் உன்னை காண்கிறேன். உன் இருகண்களில் என்னை இழுக்கிறாய். என் குளிர்காலக் கனவுகள் மறைகின்றன நிகழ்கால நிஜங்களில். சிறு இடைவெளிகளில் உன்னை காண்கிறேன். உன் இருகண்களில் என்னை இழுக்கிறாய்.
இழுக்கிறாய். - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
உன் கனிப்பான (கனிவான) பேச்சில் என் கவனங்களை சிதறடிக்கிறாய். உன் கற்கண்டு பேச்சில் கல்மணம் கரைக்கிறாய். உன் புன்சிரிப்பில் என் உள்ளம் திசைமாறுகிறது. எனது எழுத்தில் நீ உயிர் என்றால் நான் மெய்யாக. எனது கற்பனையில் நீ என்றால் என் உள்ளங்களில் பருவக்காற்றாக. குயில் ஒசையாக என் மனதிலும் தெருக்களிலும் வண்ணக்கோலங்கள் இட்டு சென்று விட்டாள். கற்சிலை போலிருந்த எனக்கு உயிர் அளித்தவளே நீ தான். என்னை ஏன் விலகிச் செல்கிறாய். நான் அறியாத காரணத்தால். உன் கனிப்பான (கனிவான) பேச்சில் என் கவனங்களை சிதறடிக்கிறாய். உன் கற்கண்டு பேச்சில் கல்மணம் கரைக்கிறாய். உன் புன்சிரிப்பில் என் உள்ளம் திசைமாறுகிறது. எனது எழுத்தில் நீ உயிர் என்றால் நான் மெய்யாக. எனது கற்பனையில் நீ என்றால் என் உள்ளங்களில் பருவக்காற்றாக. குயில் ஒசையாக என் மனதிலும் தெருக்களிலும் வண்ணக்கோலங்கள் இட்டு சென்று விட்டாள். கற்சிலை போலிருந்த எனக்கு உயிர் அளித்தவளே நீ தான். என்னை ஏன் விலகிச் செல்கிறாய். நான் அறியாத காரணத்தால்.
தலைப்புகள் இல்லாத கவிதைகள் - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
என்னையறியாமல். என் மனதில் சப்தங்கள் இல்லாமல் யுத்தங்கள் செய்கிறாய் என்னையறியாமல். என்னையறியாமல். என் மனதில் சப்தங்கள் இல்லாமல் யுத்தங்கள் செய்கிறாய் என்னையறியாமல்.
என்னையறியாமல். - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
வானக் கன்னிகையின் கோலப்புள்ளி பனித்துளி வானக் கன்னிகையின் கோலப்புள்ளி பனித்துளி
பனித்துளி - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
சன்னல் முற்றத்தின் அறை நிலா வெளிச்சம் என் மனத்திரையில் உன் மலர்முகம். என் மனதில் முழுமதியின் வெளிச்சமாக நீ தான். சன்னல் முற்றத்தின் அறை நிலா வெளிச்சம் என் மனத்திரையில் உன் மலர்முகம். என் மனதில் முழுமதியின் வெளிச்சமாக நீ தான்.
முழுமதி - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
உன்னை சுற்றி ஒளிவட்டம் தோன்றும் உலகம் அர்த்தப்படும் ராத்திரியின் நீளம் விளங்கும் உனக்கும் கவிதை வரும் கையெழுத்து அழகாகும் தபால்காரன் தெய்வமாவான் உன் பிம்பம் விழுந்தே கண்ணாடி உடையும் கண் இரண்டும் ஒளி கொள்ளும் காதலித்துப்பார் அமுதம் உன்னை சுற்றி ஒளிவட்டம் தோன்றும் உலகம் அர்த்தப்படும் ராத்திரியின் நீளம் விளங்கும் உனக்கும் கவிதை வரும் கையெழுத்து அழகாகும் தபால்காரன் தெய்வமாவான் உன் பிம்பம் விழுந்தே கண்ணாடி உடையும் கண் இரண்டும் ஒளி கொள்ளும் காதலித்துப்பார் அமுதம்
கொஞ்சம் - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
புகழ்ச்சிக்கும் இகழ்ச்சிக்கும் நா ஒன்றுதான் வெற்றிக்கும் தோல்விக்கும் களம் ஒன்றுதான் இரவுக்கும் பகலுக்கும் நாள் ஒன்றுதான் நன்மைக்கும் தீமைக்கும் விதி ஒன்றுதான் வாழ்வுக்கும் தாழ்வுக்கும் வாழ்க்கை ஒன்றுதான் வரவுக்கும் செலவுக்கும் பொருள் ஒன்றுதான் அன்பிற்கும் ஆதிரத்திற்கும் இதயம் ஒன்றுதான் உள்ளம் தராசானால் ஏற்றத் தாழ்வு இல்லை கடமையைச் செய் பலனை எதிர்பாராதே! புகழ்ச்சிக்கும் இகழ்ச்சிக்கும் நா ஒன்றுதான் வெற்றிக்கும் தோல்விக்கும் களம் ஒன்றுதான் இரவுக்கும் பகலுக்கும் நாள் ஒன்றுதான் நன்மைக்கும் தீமைக்கும் விதி ஒன்றுதான் வாழ்வுக்கும் தாழ்வுக்கும் வாழ்க்கை ஒன்றுதான் வரவுக்கும் செலவுக்கும் பொருள் ஒன்றுதான் அன்பிற்கும் ஆதிரத்திற்கும் இதயம் ஒன்றுதான் உள்ளம் தராசானால் ஏற்றத் தாழ்வு இல்லை கடமையைச் செய் பலனை எதிர்பாராதே!
கடமை - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
நீ பிரிந்து விட்டாய் என் அன்பே ! காதலெனும் வாணலியில் வறுபடுகின்றது என் இதயமென்னும் இறைச்சித்துண்டு நீ பிரிந்து விட்டாய் என் அன்பே ! காதலெனும் வாணலியில் வறுபடுகின்றது என் இதயமென்னும் இறைச்சித்துண்டு
என் அன்பே ! - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
README.md exists but content is empty. Use the Edit dataset card button to edit it.
Downloads last month
97
Edit dataset card

Collection including abishekmahi/tamil-kavithai