Content
stringlengths
0
19k
Title
stringlengths
2
120
Category
stringclasses
127 values
ஓ!. மழைத் துளிகளே! நீங்கள் அதிஷ்ட்டசாலிகளா.? உங்களில் எத்தனை பேர் புண்ணியம் செய்தீர்கள்.? ம்!. புண்ணியம் செய்த துளிகள் மட்டுமே இந்தப் புனிதம் நிறைந்தவளின் மேல் விழுவீர்கள்! ஓ!. மழைத் துளிகளே! நீங்கள் அதிஷ்ட்டசாலிகளா.? உங்களில் எத்தனை பேர் புண்ணியம் செய்தீர்கள்.? ம்!. புண்ணியம் செய்த துளிகள் மட்டுமே இந்தப் புனிதம் நிறைந்தவளின் மேல் விழுவீர்கள்!
மழைத் துளிகளே! - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
எதற்காக என்று புரியாத சில கேள்விகள் சற்றும் பொருத்தமற்ற சில பதில்கள் சில மன்னிப்புகள் பல நன்றிகள் ஒவ்வாமைகள் ஒத்துழைப்புகள் மிகுந்த கெளரவமாவே காணப்படுகின்றது நம் நட்பு. எதற்காக என்று புரியாத சில கேள்விகள் சற்றும் பொருத்தமற்ற சில பதில்கள் சில மன்னிப்புகள் பல நன்றிகள் ஒவ்வாமைகள் ஒத்துழைப்புகள் மிகுந்த கெளரவமாவே காணப்படுகின்றது நம் நட்பு.
கெளரவ நட்பு - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
உன் பிம்பத்தை சுமப்பதனால் தானோ இந்த உலகம் என் கண்களுக்கு அழகாய் தோன்றுகிறது உன்னையே நினைப்பதால் தானோ நானும் காதல் யோகி ஆனேன் . உன்னை போல் ஒருத்தியை காண்பதால் தானோ எனக்கு அந்த ஒருத்தியையும் பிடித்துள்ளது.(சரி சரி இது கற்பனை முறைக்காதே ) உன் விழிகள் வருடியதால் தானோ என் கன்னம் சிவந்தது. உன்னை நினைத்த நானே இப்படி கவிதை எழுதிகிறேனே பாவம் அந்த பிரம்மன் உன்னை படைத்தவன் இந்நேரம் பிரம்மலோகத்தில் பேப்பர் பஞ்சம் வந்து இருக்கும் . உன் பிம்பத்தை சுமப்பதனால் தானோ இந்த உலகம் என் கண்களுக்கு அழகாய் தோன்றுகிறது உன்னையே நினைப்பதால் தானோ நானும் காதல் யோகி ஆனேன் . உன்னை போல் ஒருத்தியை காண்பதால் தானோ எனக்கு அந்த ஒருத்தியையும் பிடித்துள்ளது.(சரி சரி இது கற்பனை முறைக்காதே ) உன் விழிகள் வருடியதால் தானோ என் கன்னம் சிவந்தது. உன்னை நினைத்த நானே இப்படி கவிதை எழுதிகிறேனே பாவம் அந்த பிரம்மன் உன்னை படைத்தவன் இந்நேரம் பிரம்மலோகத்தில் பேப்பர் பஞ்சம் வந்து இருக்கும் .
உன் பிம்பத்தை - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
உள்ளம் என்பது ஆமை - அதில் உண்மை என்பது ஊமை சொல்லில் வருவது பாதி - நெஞில் தூங்கிக் கிடப்பது நீதி உள்ளம் என்பது ஆமை - அதில் உண்மை என்பது ஊமை சொல்லில் வருவது பாதி - நெஞில் தூங்கிக் கிடப்பது நீதி
உள்ளம் - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
காற்று வெளியிடைக் கண்ணம்மா, - நின்றன் காதலை யெண்ணிக் களிக்கின்றேன் ;-அமு தூற்றினை யொத்த இதழ்களும் - நில வூறித் ததும்பும் விழிகளும் - பத்து மாற்றுப்பொன் னொத்தநின் மேனியும் - இந்த வையத்தில் யானுள்ள மட்டிலும் - எனை வேற்று நினைவின்றித் தேற்றியே - இங்கொர் விண்ணவ னாகப் புரியுமே! இந்தக் (காற்று) நீயென தின்னுயிர் கண்ணம்மா ! - எந்த நேரமும் நின்றனைப் போற்றுவேன் - துயர் போயின, போயின துன்பங்கள் - நினைப் பொன்னெனக் கொண்ட பொழுதிலே - என்றன் வாயினி லேயமு தூறுதே - கண்ணம் மாவென்ற பேர்சொல்லும் போழ்திலே - உயிர்த் தீயினி லேவளர் சோதியே ! - என்றன் சிந்தனையே, என்றன் சித்தமே! - இந்தக் (காற்று) காற்று வெளியிடைக் கண்ணம்மா, - நின்றன் காதலை யெண்ணிக் களிக்கின்றேன் ;-அமு தூற்றினை யொத்த இதழ்களும் - நில வூறித் ததும்பும் விழிகளும் - பத்து மாற்றுப்பொன் னொத்தநின் மேனியும் - இந்த வையத்தில் யானுள்ள மட்டிலும் - எனை வேற்று நினைவின்றித் தேற்றியே - இங்கொர் விண்ணவ னாகப் புரியுமே! இந்தக் (காற்று) நீயென தின்னுயிர் கண்ணம்மா ! - எந்த நேரமும் நின்றனைப் போற்றுவேன் - துயர் போயின, போயின துன்பங்கள் - நினைப் பொன்னெனக் கொண்ட பொழுதிலே - என்றன் வாயினி லேயமு தூறுதே - கண்ணம் மாவென்ற பேர்சொல்லும் போழ்திலே - உயிர்த் தீயினி லேவளர் சோதியே ! - என்றன் சிந்தனையே, என்றன் சித்தமே! - இந்தக் (காற்று)
கண்ணமாவின் காதல் - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
உன்னை பிடித்திருக்கிறது காரணம் தெரியாமல் மல்லி மாலையில் மலரும் தெரிவதில்லை மணமது விசும் மறைக்கமுடியாமல் என்னுள் மலர்ந்த மலரா ? நேசம் வருகிறது மறைக்க முடியாமல் வாசம் விசும் உன் பார்வை தேசம் கடந்து மடல் கொண்டுவருகிறது . கொலுசு தவழும் பாதம் புது வரிகளை மிச்சம் வைத்து போகிறது என் கவிதைக்காக . வானவில் பேசுகிறது இன்று எட்டவது வண்ணம் பிறக்குமாம் உன் கார்மேக குழல் கண்டு சில வரி உரையாடல் போல் நீண்டு கொண்டே போகிறது நிமிடங்கள் உன் தரிசனம் காணாமல் என்கிறது என் விழிகள் வழி விழி இவை அனைத்தும் உன்னுடன் வரு மொழி ஒளி இவைக்கு தானோ தவமிருக்கிறது உன் பாடசாலை இன்னுமொரு காவியம் சொல்லும் அழகிய நினைவுகள் தவழும் அங்கே ஏன் நீ படித்து முடித்தாய் என்ற ஏக்கத்துடன் . உன்னை பிடித்திருக்கிறது காரணம் தெரியாமல் மல்லி மாலையில் மலரும் தெரிவதில்லை மணமது விசும் மறைக்கமுடியாமல் என்னுள் மலர்ந்த மலரா ? நேசம் வருகிறது மறைக்க முடியாமல் வாசம் விசும் உன் பார்வை தேசம் கடந்து மடல் கொண்டுவருகிறது . கொலுசு தவழும் பாதம் புது வரிகளை மிச்சம் வைத்து போகிறது என் கவிதைக்காக . வானவில் பேசுகிறது இன்று எட்டவது வண்ணம் பிறக்குமாம் உன் கார்மேக குழல் கண்டு சில வரி உரையாடல் போல் நீண்டு கொண்டே போகிறது நிமிடங்கள் உன் தரிசனம் காணாமல் என்கிறது என் விழிகள் வழி விழி இவை அனைத்தும் உன்னுடன் வரு மொழி ஒளி இவைக்கு தானோ தவமிருக்கிறது உன் பாடசாலை இன்னுமொரு காவியம் சொல்லும் அழகிய நினைவுகள் தவழும் அங்கே ஏன் நீ படித்து முடித்தாய் என்ற ஏக்கத்துடன் .
உன்னை பிடித்திருக்கிறது - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
போடி போடி கல்நெஞ்சி! மார்புக்கு ஆடை மனசுக்கு பூட்டு ஒரே பொழுதில் இரண்டும் தரித்தவளே! காதல் தானடி என்மீதுனக்கு? பிறகேன் வல்லரசின் ராணுவ ரகசியம்போல் வெளியிட மறுத்தாய்? தூக்குக்கைதியின் கடைசி ஆசைபோல் பிரியும்போது ஏன் பிரியம் உரைத்தாய்? நஞ்சு வைத்திருக்கும் சாகாத நாகம்போல் இத்தனை காதல் வைத்து எப்படி உயிர் தரித்தாய்? இப்போதும் கூட நீயாய்ச் சொல்லவில்லை நானாய்க் கண்டறிந்தேன் இமைகளின் தாழ்வில் - உடைகளின் தளர்வில் - என்னோடு பேசமட்டும் குயிலாகும் உன்குரலில் - வாக்கியம் உட்காரும் நீளத்தில் - வார்த்தைகளுக்குள் விட்ட இடைவெளியில் - சிருங்காரம் சுட்ட பெருமூச்சில் வறண்ட உதட்டின் வரிப்பள்ளங்களில் - நானாய்த்தான் கண்டறிந்தேன் காதல் மசக்கையில் கசங்கும் உன் இதயத்தை. சேமித்த கற்பு சிந்தியா போயிருக்கும்? நீயாக கேட்டிருந்தால் நெஞ்சு மலர்ந்திருப்பேன் உண்டென்றால் உண்டென்பேன் இல்லையென்றால் இல்லையென்பேன் இப்போதும் கூட தேசத்துரோகமென்பதை ஒப்புக்கொள்ளாத தீவிரவாதி மாதிரி உள்ளாடும் காதலை ஒளிக்கவே பார்க்கிறாய் காதலில் தயக்கம் தண்டனைக்குரியது வினாடி கூட விரயமாதல் கூடாது காலப் பெருங்கடலில் நழுவி விழும் கணங்களை மீண்டும் சேகரிக்க ஒண்ணுமா உன்னால் இந்தியப் பெண்ணே! இதுவுன் பலவீனமான பலமா? பலமான பலவீனமா? என் வாத்தியக்கூடம்வரை வந்தவளே உன் விரல்கள் என் வீணைதடவ வந்தனவா? இல்லை புல்லாங்குழல் துளைகளைப் பொத்திப்போக வந்தனவா? என் நந்தவனத்தைக் கிழித்துக்கொண்டோடிச் சட்டென்று வற்றிவிட்ட நதி நீ உன் காதலறிந்த கணத்தில் என் பூமி பூக்களால் குலுங்கியது நீ வணங்கிப் பிரிந்தவேளை என் இரவு நடுங்கியது பிரிவைத் தயாரித்துக் கொண்டுதானே காதலையே அறிவித்தாய் இருபதா? முப்பதா? எத்தனை நிமிடம்? என் மார்பு தோய்ந்து நீ அழுததும் தொழுததும் என் பாதியில் நீ நிறையவும் உன் பாதியில் நான் நிறையவும் வினாடித்துகள் ஒன்று போதுமே சிநேகிதி நேரம் தூரம் என்ற தத்துவம் தகர்த்தோம் நிமிஷத்தின் புட்டிகளில் யுகங்களை அடைத்தோம் ஆலிங்கனத்தில் அசைவற்றோம் உணர்ச்சி பழையது உற்றது புதியது இப்போது குவிந்த உதடுகள் குவிந்தபடி முத்தமிட நீயில்லை தழுவிய கைகள் தழுவியபடி சாய்ந்து கொள்ள நீயில்லை என் மார்புக்கு வெளியே ஆடும் என் இதயம் என் பொத்தானில் சுற்றிய உன் ஒற்றை முடியில் உன் ஞாபக வெள்ளம் தேங்கி நிற்குது முட்டி அழுத்தி நீ முகம்பதித்த பள்ளத்தில் தோட்டத்துப் பூவிலெல்லாம் நீ விட்டுப்போன வாசம் புல்லோடு பனித்துளிகள் நீவந்துபோன அடையாளமாய்க் கொட்டிக் கிடக்கும் கொலுசுமணிகள் நம் கார்காலம் தூறலோடு தொடங்கியது வானவில்லோடு நின்றுவிட்டது உன் வரவால் என் உயிரில் கொஞ்சம் செலவழிந்து விட்டது இந்த உறவின் மிச்சம் சொல்லக்கூடாத சில நினைவுகளும் சொல்லக்கூடிய ஒரு கவிதையும். போடி போடி கல்நெஞ்சி! மார்புக்கு ஆடை மனசுக்கு பூட்டு ஒரே பொழுதில் இரண்டும் தரித்தவளே! காதல் தானடி என்மீதுனக்கு? பிறகேன் வல்லரசின் ராணுவ ரகசியம்போல் வெளியிட மறுத்தாய்? தூக்குக்கைதியின் கடைசி ஆசைபோல் பிரியும்போது ஏன் பிரியம் உரைத்தாய்? நஞ்சு வைத்திருக்கும் சாகாத நாகம்போல் இத்தனை காதல் வைத்து எப்படி உயிர் தரித்தாய்? இப்போதும் கூட நீயாய்ச் சொல்லவில்லை நானாய்க் கண்டறிந்தேன் இமைகளின் தாழ்வில் - உடைகளின் தளர்வில் - என்னோடு பேசமட்டும் குயிலாகும் உன்குரலில் - வாக்கியம் உட்காரும் நீளத்தில் - வார்த்தைகளுக்குள் விட்ட இடைவெளியில் - சிருங்காரம் சுட்ட பெருமூச்சில் வறண்ட உதட்டின் வரிப்பள்ளங்களில் - நானாய்த்தான் கண்டறிந்தேன் காதல் மசக்கையில் கசங்கும் உன் இதயத்தை. சேமித்த கற்பு சிந்தியா போயிருக்கும்? நீயாக கேட்டிருந்தால் நெஞ்சு மலர்ந்திருப்பேன் உண்டென்றால் உண்டென்பேன் இல்லையென்றால் இல்லையென்பேன் இப்போதும் கூட தேசத்துரோகமென்பதை ஒப்புக்கொள்ளாத தீவிரவாதி மாதிரி உள்ளாடும் காதலை ஒளிக்கவே பார்க்கிறாய் காதலில் தயக்கம் தண்டனைக்குரியது வினாடி கூட விரயமாதல் கூடாது காலப் பெருங்கடலில் நழுவி விழும் கணங்களை மீண்டும் சேகரிக்க ஒண்ணுமா உன்னால் இந்தியப் பெண்ணே! இதுவுன் பலவீனமான பலமா? பலமான பலவீனமா? என் வாத்தியக்கூடம்வரை வந்தவளே உன் விரல்கள் என் வீணைதடவ வந்தனவா? இல்லை புல்லாங்குழல் துளைகளைப் பொத்திப்போக வந்தனவா? என் நந்தவனத்தைக் கிழித்துக்கொண்டோடிச் சட்டென்று வற்றிவிட்ட நதி நீ உன் காதலறிந்த கணத்தில் என் பூமி பூக்களால் குலுங்கியது நீ வணங்கிப் பிரிந்தவேளை என் இரவு நடுங்கியது பிரிவைத் தயாரித்துக் கொண்டுதானே காதலையே அறிவித்தாய் இருபதா? முப்பதா? எத்தனை நிமிடம்? என் மார்பு தோய்ந்து நீ அழுததும் தொழுததும் என் பாதியில் நீ நிறையவும் உன் பாதியில் நான் நிறையவும் வினாடித்துகள் ஒன்று போதுமே சிநேகிதி நேரம் தூரம் என்ற தத்துவம் தகர்த்தோம் நிமிஷத்தின் புட்டிகளில் யுகங்களை அடைத்தோம் ஆலிங்கனத்தில் அசைவற்றோம் உணர்ச்சி பழையது உற்றது புதியது இப்போது குவிந்த உதடுகள் குவிந்தபடி முத்தமிட நீயில்லை தழுவிய கைகள் தழுவியபடி சாய்ந்து கொள்ள நீயில்லை என் மார்புக்கு வெளியே ஆடும் என் இதயம் என் பொத்தானில் சுற்றிய உன் ஒற்றை முடியில் உன் ஞாபக வெள்ளம் தேங்கி நிற்குது முட்டி அழுத்தி நீ முகம்பதித்த பள்ளத்தில் தோட்டத்துப் பூவிலெல்லாம் நீ விட்டுப்போன வாசம் புல்லோடு பனித்துளிகள் நீவந்துபோன அடையாளமாய்க் கொட்டிக் கிடக்கும் கொலுசுமணிகள் நம் கார்காலம் தூறலோடு தொடங்கியது வானவில்லோடு நின்றுவிட்டது உன் வரவால் என் உயிரில் கொஞ்சம் செலவழிந்து விட்டது இந்த உறவின் மிச்சம் சொல்லக்கூடாத சில நினைவுகளும் சொல்லக்கூடிய ஒரு கவிதையும்.
பூக்களும் காயம் செய்யும் - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
என்னைக் கல்லில் கட்டி கடலில் யார் போட்டாலும் கல்லே எனைக் காப்பாற்றும் உன் மனக்கல்லை காதலித்தவனென்ற உண்மை சொன்னால் என்னைக் கல்லில் கட்டி கடலில் யார் போட்டாலும் கல்லே எனைக் காப்பாற்றும் உன் மனக்கல்லை காதலித்தவனென்ற உண்மை சொன்னால்
உன் மனம் - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
பூமியன் ஆவேசம் பூகம்பம் பூமியன் ஆவேசம் பூகம்பம்
பூகம்பம் - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
புன்னகை மட்டும் காயப்படுத்தவில்லை உன் அன்பும் தான் நீங்காத உன் இதய சிறை தந்துவிட்டது தவித்து முழித்தால் குழந்தை ஆக்கி என் வயதையும் கொன்றுவிட்டது . தத்தி தவழும் என்னக்கு நடை கற்று கொடு உன் மெலிய விரல் கொண்டு . இல்லை என்றால் அழுவேன் ஆசை முத்தம் தர வேண்டும் என் அழுகை நிறுத்த என்ன செய்ய போகிறாய் புன்னகை மட்டும் காயப்படுத்தவில்லை உன் அன்பும் தான் நீங்காத உன் இதய சிறை தந்துவிட்டது தவித்து முழித்தால் குழந்தை ஆக்கி என் வயதையும் கொன்றுவிட்டது . தத்தி தவழும் என்னக்கு நடை கற்று கொடு உன் மெலிய விரல் கொண்டு . இல்லை என்றால் அழுவேன் ஆசை முத்தம் தர வேண்டும் என் அழுகை நிறுத்த என்ன செய்ய போகிறாய்
புன்னகை மட்டும் - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
உனக்காக இருக்கவா.? உன்னோடு இருக்கவா.? என்றால் உனக்கா எழுதிக் கொண்டு உன்னோடு இருக்கவே விரும்புகிறது மனசு நியமாக உன்னோடு வரமுடியாமல் போனாலும் என் நிறமாவது வருகிறதே உன் நிழலாக நீ பயத்தோடு வருவதைக் கண்டாலே நான் தனியா பேச வந்ததை மறந்து விடுகிறேன் நீ படபடப்பதை யாரும் பார்த்தால் பயத்தை விரும்பும் கோழை என என்னை நினைக்கப் போறார்கள் நீ என்னைக் காதலிக்கிறாய் என்பதை என்னால் நம்பமுடியாமல் இருக்கிறது பொறுக்கியை எப்பிடி தேவதை காதலிக்கும்.? உனக்காக இருக்கவா.? உன்னோடு இருக்கவா.? என்றால் உனக்கா எழுதிக் கொண்டு உன்னோடு இருக்கவே விரும்புகிறது மனசு நியமாக உன்னோடு வரமுடியாமல் போனாலும் என் நிறமாவது வருகிறதே உன் நிழலாக நீ பயத்தோடு வருவதைக் கண்டாலே நான் தனியா பேச வந்ததை மறந்து விடுகிறேன் நீ படபடப்பதை யாரும் பார்த்தால் பயத்தை விரும்பும் கோழை என என்னை நினைக்கப் போறார்கள் நீ என்னைக் காதலிக்கிறாய் என்பதை என்னால் நம்பமுடியாமல் இருக்கிறது பொறுக்கியை எப்பிடி தேவதை காதலிக்கும்.?
காதலிக்கும் தேவதை - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
நிமிடங்கள் நின்ற விழிகளில் நில்லாது வழியும் துளிகள் விழிகள் பார்க்காமல் நடிப்பதால் நடிப்பது உன் மனம் தானே என்னை விரும்பும் உன் விழிகளை ஏனடி சிறை வைகிறாய் பாவம் அவைகள் உன்னை கேளாமல் என்னை பார்க்கிறது . அலைகள் கரையை தொட்டுச் செல்வதுபோல் . நிமிடங்கள் நின்ற விழிகளில் நில்லாது வழியும் துளிகள் விழிகள் பார்க்காமல் நடிப்பதால் நடிப்பது உன் மனம் தானே என்னை விரும்பும் உன் விழிகளை ஏனடி சிறை வைகிறாய் பாவம் அவைகள் உன்னை கேளாமல் என்னை பார்க்கிறது . அலைகள் கரையை தொட்டுச் செல்வதுபோல் .
நிமிடங்கள் நின்ற - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
அவள், கரு விழியாள் பெரு விழியால் ஒரு வழி இல் - நம் உயிர் வலியில் இவன், பெண் விழியால் விதி வசத்தால் மதி இழப்பால் மது ரசதால் பெரும் பழியால் மனக் கசப்பால் பவுசு கெடுப்பார்.! அவள், கரு விழியாள் பெரு விழியால் ஒரு வழி இல் - நம் உயிர் வலியில் இவன், பெண் விழியால் விதி வசத்தால் மதி இழப்பால் மது ரசதால் பெரும் பழியால் மனக் கசப்பால் பவுசு கெடுப்பார்.!
உன்மத்தன்.! - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
வாழ்வில் துன்பம் வரவு சுகம் செலவு, இருப்பது கனவு காலம் வகுத்த கணக்கை இங்கே யார் காணுவார்??? வாழ்வில் துன்பம் வரவு சுகம் செலவு, இருப்பது கனவு காலம் வகுத்த கணக்கை இங்கே யார் காணுவார்???
கணக்கை இங்கே யார் காணுவார்? - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
யாரோ அவள் கண்ணிமை மறக்க வைத்தவள் யாரோ அவள் என் சுவாசத்தின் கீதமானவள் யாரோ அவள் வண்ணத்தின் நிறமானவள் யாரோ அவள் வாசலில் கோலமானவள் யாரோ அவள் வார்த்தைகளின் சொல்லானவள் யாரோ அவள் கண்ணாடி பிம்பமானவள் யாரோ அவள் நினைக்காமல் நினைவில் இருப்பவள் யாரோ அவள் நிலவின் குளிரானவள் யாரோ அவள் இன்னிசையின் சுரமானவள் யாரோ அவள் சோலைகளின் பசுமையானவள் யாரோ அவள் வாழ்கையின் வரமானவள் யாரோ அவள் மலரின் மனமானவள் யாரோ அவள் மாலைகளில் மலரானவள் யாரோ அவள் விடியலின் வெளிச்சமானவள் யாரோ அவள் சிறகுகளுக்கு பறக்க கற்றுத்தந்தவள் அவளே என் சுகமான நினைவானவள். யாரோ அவள் கண்ணிமை மறக்க வைத்தவள் யாரோ அவள் என் சுவாசத்தின் கீதமானவள் யாரோ அவள் வண்ணத்தின் நிறமானவள் யாரோ அவள் வாசலில் கோலமானவள் யாரோ அவள் வார்த்தைகளின் சொல்லானவள் யாரோ அவள் கண்ணாடி பிம்பமானவள் யாரோ அவள் நினைக்காமல் நினைவில் இருப்பவள் யாரோ அவள் நிலவின் குளிரானவள் யாரோ அவள் இன்னிசையின் சுரமானவள் யாரோ அவள் சோலைகளின் பசுமையானவள் யாரோ அவள் வாழ்கையின் வரமானவள் யாரோ அவள் மலரின் மனமானவள் யாரோ அவள் மாலைகளில் மலரானவள் யாரோ அவள் விடியலின் வெளிச்சமானவள் யாரோ அவள் சிறகுகளுக்கு பறக்க கற்றுத்தந்தவள் அவளே என் சுகமான நினைவானவள்.
யாரோ அவள் - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
நீ வெக்கப்பட்டு மறுத்தால் என்ன உன் விட்டு தலையனை சொல்லிவிடும். அந்தச் செல்லக் கொஜ்சலை . நீ வெக்கப்பட்டு மறுத்தால் என்ன உன் விட்டு தலையனை சொல்லிவிடும். அந்தச் செல்லக் கொஜ்சலை .
நீ வெக்கப்பட்டு - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
அன்பாக அரவணைக்கும் உன் தோள்களிலே தலை சாய்த்து உன் மார்பு சூட்டில் குளிர் காய்ந்து உன் மடி மீது முகம் புதைத்து வாழப்போகும் அந்நாட்கள் தரும் இன்பத்தை…… சொர்க்கத்தை…… இன்னொரு ஜென்மம் எடுப்பினும் தரமுடியுமா இவர்களால் எனக்கு? உன்னாலே உயிர் பெற்றேன் உன்னாலே உணர்வுகளை சுவாசிக்கின்றேன் உனை பிரிவதனிலும் பிரிவது என் உயிராயிருக்க ஆசைப்படுகின்றேன் அன்பனே அன்பானவனே அடைக்கலம் கேட்கின்றேன் உனக்குள் மட்டும் சிறைக்கைதியாயல்ல ஆயுள் கைதியாய்! என் ஒவ்வொரு நாளையும் உனக்காய் உனக்காய் மட்டுமே விடிய ஆசைப்படுகின்றேன் நீ எனக்குள் வாழ்வதால்! உனை சிந்திக்க மறந்தால் என் இதயம் சின்னாபின்னம்தான் உயிர்ப்பதாயினும் உனக்காய் உயிர்க்கவே ஆசைப்படுகின்றேன் உயிர்விட்டு போவதாயினும் உனக்காய் உயிர்விட்டு போகவே ஆசைப்படுகின்றேன் என்னவனே எனக்குள்ளேயே தொலைந்துவிடு என் இறுதிவரை! அன்பாக அரவணைக்கும் உன் தோள்களிலே தலை சாய்த்து உன் மார்பு சூட்டில் குளிர் காய்ந்து உன் மடி மீது முகம் புதைத்து வாழப்போகும் அந்நாட்கள் தரும் இன்பத்தை…… சொர்க்கத்தை…… இன்னொரு ஜென்மம் எடுப்பினும் தரமுடியுமா இவர்களால் எனக்கு? உன்னாலே உயிர் பெற்றேன் உன்னாலே உணர்வுகளை சுவாசிக்கின்றேன் உனை பிரிவதனிலும் பிரிவது என் உயிராயிருக்க ஆசைப்படுகின்றேன் அன்பனே அன்பானவனே அடைக்கலம் கேட்கின்றேன் உனக்குள் மட்டும் சிறைக்கைதியாயல்ல ஆயுள் கைதியாய்! என் ஒவ்வொரு நாளையும் உனக்காய் உனக்காய் மட்டுமே விடிய ஆசைப்படுகின்றேன் நீ எனக்குள் வாழ்வதால்! உனை சிந்திக்க மறந்தால் என் இதயம் சின்னாபின்னம்தான் உயிர்ப்பதாயினும் உனக்காய் உயிர்க்கவே ஆசைப்படுகின்றேன் உயிர்விட்டு போவதாயினும் உனக்காய் உயிர்விட்டு போகவே ஆசைப்படுகின்றேன் என்னவனே எனக்குள்ளேயே தொலைந்துவிடு என் இறுதிவரை!
உனக்காய் உனக்காய் மட்டுமே! - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
இரவும் பகலும் நீரும் நெருப்பும் வடக்கும் தெற்கும் வானும் மண்ணும் நன்மையும் தீமையும் நாமமும் பட்டையும் மதமும் மனிதமும் சாதியும் சமத்துவமும் எதிர் துருவங்களே - எப்போதும் இவைகள் இணைவதில்லை இரவும் பகலும் நீரும் நெருப்பும் வடக்கும் தெற்கும் வானும் மண்ணும் நன்மையும் தீமையும் நாமமும் பட்டையும் மதமும் மனிதமும் சாதியும் சமத்துவமும் எதிர் துருவங்களே - எப்போதும் இவைகள் இணைவதில்லை
துருவங்கள்.! - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
ஏ கடலே உன் கரையில் இதுவரையில் கிளிஞ்சல்கள்தானே சேகரித்தோம் முதன் முதலாய்ப் பிணங்கள் பொறுக்குகிறோம் ஏ கடலே நீ முத்துக்களின் பள்ளத்தாக்கா முதுமக்கள் தாழியா உன் அலை எத்தனை விதவைகளின் வெள்ளைச் சேலை? உன் மீன்களை நங்கள் கூறுகட்டியதற்காக எங்கள் பிணங்களை நீ கூறுகட்டுகிறாய்? அடக்கம் செய்ய ஆளிராதென்றா புதை மணலுக்குள் புதைத்துவிட்டே போய்விட்டாய்? பிணங்களை அடையாளம் காட்டப் பெற்றவளைத் தேடினோம் அவள் பிணத்தையே காணோம் மரணத்தின் மீதே மரியாதை போய்விட்டது பறவைகள் மொத்தமாய் வந்தால் அழகு மரணம் தனியே வந்தால் அழகு மொத்தமாய் வரும் மரணத்தின் மீது சுத்தமாய் மரியாதையில்லை இயற்கையின் சவாலில் அழிவுண்டால் விலங்கு இயற்கையின் சவாலை எதிர்கொண்டால் மனிதன். ஏ கடலே உன் கரையில் இதுவரையில் கிளிஞ்சல்கள்தானே சேகரித்தோம் முதன் முதலாய்ப் பிணங்கள் பொறுக்குகிறோம் ஏ கடலே நீ முத்துக்களின் பள்ளத்தாக்கா முதுமக்கள் தாழியா உன் அலை எத்தனை விதவைகளின் வெள்ளைச் சேலை? உன் மீன்களை நங்கள் கூறுகட்டியதற்காக எங்கள் பிணங்களை நீ கூறுகட்டுகிறாய்? அடக்கம் செய்ய ஆளிராதென்றா புதை மணலுக்குள் புதைத்துவிட்டே போய்விட்டாய்? பிணங்களை அடையாளம் காட்டப் பெற்றவளைத் தேடினோம் அவள் பிணத்தையே காணோம் மரணத்தின் மீதே மரியாதை போய்விட்டது பறவைகள் மொத்தமாய் வந்தால் அழகு மரணம் தனியே வந்தால் அழகு மொத்தமாய் வரும் மரணத்தின் மீது சுத்தமாய் மரியாதையில்லை இயற்கையின் சவாலில் அழிவுண்டால் விலங்கு இயற்கையின் சவாலை எதிர்கொண்டால் மனிதன்.
வைரமுத்துவின் சுனாமி கவிதை - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
எவ்வளவு பிடிக்கும் என்று சொல்லட்டுமா அழுகின்ற குழந்தையை அரவணைக்கும் தாயின் அன்பை விட பாலைவனம் ஏங்கித் தவிக்கும் மழை நீரை விட தேன் உன்ன காத்து கிடக்கும் தேனீ கடமை விட அதிகமாக எளிமயாக சொன்னால் அன்னையை காணாமல் அழுகின்ற குழந்தை இடம் உன் அன்னையை எவ்வளவு பிடிக்கும் என்று கேட்டால் அது தன் இரு கைகளை விரித்து இவ்வளவு என்று சொல்லி தன்னால் அதனை முழுதை சொல்ல முடியாமல் விழிக்கும் அது போலத்தான் நானும் இப்பொழுது. எவ்வளவு பிடிக்கும் என்று சொல்லட்டுமா அழுகின்ற குழந்தையை அரவணைக்கும் தாயின் அன்பை விட பாலைவனம் ஏங்கித் தவிக்கும் மழை நீரை விட தேன் உன்ன காத்து கிடக்கும் தேனீ கடமை விட அதிகமாக எளிமயாக சொன்னால் அன்னையை காணாமல் அழுகின்ற குழந்தை இடம் உன் அன்னையை எவ்வளவு பிடிக்கும் என்று கேட்டால் அது தன் இரு கைகளை விரித்து இவ்வளவு என்று சொல்லி தன்னால் அதனை முழுதை சொல்ல முடியாமல் விழிக்கும் அது போலத்தான் நானும் இப்பொழுது.
எவ்வளவு பிடிக்கும் - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
காதலித்துப் பார்! --- உன்னைச் சுற்றி ஒளிவட்டம் தோன்றும். உலகம் அர்த்தப்படும். ராத்திரியின் நீளம் விளங்கும். உனக்கும் கவிதை வரும். கையெழுத்து அழகாகும் தபால்காரன் தெய்வமாவான். உன் பிம்பம் விழுந்தே கண்ணாடி உடையும். கண்ணிரண்டும் ஒளிகொள்ளும். காதலித்துப்பார் ! தலையணை நனைப்பாய் மூன்று முறை பல்துலக்குவாய். காத்திருந்தால் நிமிஷங்கள் வருஷமென்பாய். வந்துவிட்டால் வருஷங்கள் நிமிஷமென்பாய். காக்கைகூட உன்னை கவனிக்காது ஆனால். இந்த உலகமே உன்னை கவனிப்பதாய் உணர்வாய். வயிற்றுக்கும் தொண்டைக்கமாய் உருவமில்லா உருண்டையொன்று உருளக் காண்பாய். இந்த வானம் இந்த அந்தி இந்த பூமி இந்த பூக்கள் எல்லாம் காதலை கவுரவிக்கும் ஏற்பாடுகள் என்பாய் காதலித்துப் பார்! இருதயம் அடிக்கடி இடம் மாறித் துடிக்கும். நிசப்த அலைவரிசைகளில் உனது குரல் மட்டும் ஒலிபரப்பாகும். உன் நரம்பே நாணேற்றி உனக்குள்ளே அம்புவிடும். காதலின் திரைச்சீலையைக் காமம் கிழிக்கும். ஹார்மோன்கள் நைல் நதியாய்ப் பெருக்கெடுக்கும் உதடுகள் மட்டும் சகாராவாகும். தாகங்கள் சமுத்திரமாகும். பிறகு கண்ணீர்த் துளிக்குள் சமுத்திரம் அடங்கும். காதலித்துப் பார்! சின்ன சின்ன பரிசுகளில் சிலிர்க்க முடியுமே. அதற்காகவேனும் புலன்களை வருத்திப் புதுப்பிக்க முடியுமே. அதற்காகவேனும். ஆண் என்ற சொல்லுக்கும் பெண் என்ற சொல்லுக்கும் அகராதியில் ஏறாத அர்த்தம் விளங்குமே. அதற்காகவேனும். வாழ்ந்துகொண்டே சாகவும் முடியுமே செத்துக் கொண்டே வாழவும் முடியுமே. அதற்காக வேணும். காதலித்துப் பார்!
காதலித்துப் பார்! - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
தமிழ் அமுதம் பருகவில்லை - நீ அதன் செம்மை உணரவில்லை அவனவன் அவன் மொழியிலே கண்டு பிடிப்புகளை எழுதயிலே - நீ தமிழிலே அதையும் எழுதவில்லை நம்சித்தர்கள் எழுதிய பாட்டினிலே இல்லாததேது ஆங்கில நூல்களிலே - நீ அதை உணரனும் உண்மைலே விஞ்ஞானமும் அதில் இருக்கு மெஞ்ஞானமும் கலந்து இருக்கு - நீ எந்நாளும் ஏத்துக்கணும் உன்ஞானத்திலே தமிழ் அமுதம் பருகவில்லை - நீ அதன் செம்மை உணரவில்லை அவனவன் அவன் மொழியிலே கண்டு பிடிப்புகளை எழுதயிலே - நீ தமிழிலே அதையும் எழுதவில்லை நம்சித்தர்கள் எழுதிய பாட்டினிலே இல்லாததேது ஆங்கில நூல்களிலே - நீ அதை உணரனும் உண்மைலே விஞ்ஞானமும் அதில் இருக்கு மெஞ்ஞானமும் கலந்து இருக்கு - நீ எந்நாளும் ஏத்துக்கணும் உன்ஞானத்திலே
தமிழ்.! - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
வாழ்ற வாழ்கை கொஞ்ச காலம்தான், அதில் வருத்தம் இல்லாம வாழ்ந்து போகத்தான் அவனவன் அடுத்தடுத்து தப்பு செய்யுறன் - நல்லது செய்ய விருப்பமில்லாம பழகி போய்டான். வாழ்கைல அங்கங்க வருந்தியாகணும் அப்பப்ப திருந்தியாகணும் வருத்தம் வந்தா கொஞ்சநேரம்தான் அதுவே வடுவா மாறிட்டா நீ கொஞ்ச காலம்தான். படிச்சு முடிச்ச உடனே வேல பாத்து வெச்ச பணத்த சம்பாதிச்சு சேத்துவெச்ச உயிர் குடுதவளுக்கு செஞ்சுபுட்ட உன் நாட்டுக்கு நீ என்ன செஞ்ச நாட்டு மேல குத்தம் சொல்லாதே - அதில் நீயும் ஒருத்தன் மறந்துவிடாதே தப்பு செஞ்சா திருந்தி விடு - இங்கே தப்பு நடந்தா திருத்தி விடு.! வாழ்ற வாழ்கை கொஞ்ச காலம்தான், அதில் வருத்தம் இல்லாம வாழ்ந்து போகத்தான் அவனவன் அடுத்தடுத்து தப்பு செய்யுறன் - நல்லது செய்ய விருப்பமில்லாம பழகி போய்டான். வாழ்கைல அங்கங்க வருந்தியாகணும் அப்பப்ப திருந்தியாகணும் வருத்தம் வந்தா கொஞ்சநேரம்தான் அதுவே வடுவா மாறிட்டா நீ கொஞ்ச காலம்தான். படிச்சு முடிச்ச உடனே வேல பாத்து வெச்ச பணத்த சம்பாதிச்சு சேத்துவெச்ச உயிர் குடுதவளுக்கு செஞ்சுபுட்ட உன் நாட்டுக்கு நீ என்ன செஞ்ச நாட்டு மேல குத்தம் சொல்லாதே - அதில் நீயும் ஒருத்தன் மறந்துவிடாதே தப்பு செஞ்சா திருந்தி விடு - இங்கே தப்பு நடந்தா திருத்தி விடு.!
திருத்தம்.! - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
இறக்கமுடியாத சிலுவைகள் சொன்னவள் நான் தான்! உங்களுக்கும் சேர்த்து நான் தான் சுவாசிக்கிறேன் என்று சொன்னவள் நான் தான்! உங்களைத் தவிர என் கண்களுக்கு எதையும் பார்க்கத் தெரியவில்லை என்று சொன்னவள் நான் தான்! உங்கள் வாழ்க்கை என்னும் கோப்பையை என் உயிர் பிழிந்து ஊற்றி நிரப்புவேன் என்று சொன்னவள் நான் தான்! நம் கல்யாணத்தில் கடல் முத்துக்களையும்!. வானம் நட்ஷத்திரங்களையும்!. அட்ஷதை போடும் என்று சொன்னவள் நான் தான்! நாம் பிரிந்தால் மழை மேல் நோக்கிப் பெய்யும்! கடல் மேல் ஒட்டகம் போகும்! காற்று மரிக்கும்! என்று சொன்னவள் நான் தான்! இதோ அடிக்கோடிட்ட வார்த்தைகளால் இதைச் சொல்வதும் நான் தான்! என்னை மன்னித்து விடுங்கள்! என்னை மறந்து விடுங்கள்! நான் காதல் கொண்டது நிஜம்! கனவு வளர்த்தது நிஜம்! என் ரத்தத்தில் இரண்டு அனுக்கள் சந்தித்துக் கொண்டால் உங்கள் பெயரை மட்டுமே உச்சரித்தது நிஜம்! என்னை மன்னித்து விடுங்கள்! என்னை மறந்து விடுங்கள்! காதலரைத் தெரிந்த எனக்கு காதலைத் தெரியவில்லை! இந்தியக் காதல் என்பது காதலர்களோடு மட்டும் சம்மந்தப் பட்டதில்லை! இந்தியா காதலின் பூமி தான் காதலர் பூமியல்ல! காதலுக்கு சிறகு மட்டுமே தெரியும்! கால்யாணத்திற்குத் தான் கால்களும் தெரியும்! எனக்குச் சிறகு தந்த காதலா என் கால்களின் லாடத்தை யாரறிவார்?. என் தாயை விட சாய்வு நாற்காலியை அதிகம் நேசிக்கும் தந்தை! சீதனம் கொணர்ந்த பழைய பாய் போல் கிழிந்து போன என் தாய்! தான் பூப்பெய்திய செய்தி கூட புரியாத என் தங்கை! கிழிந்த பாயில் படுத்தபடி கிளியோபாற்ராவை நினைத்து ஏங்கும் என் அண்ணன்! கருப்பு வெள்ளைத் தொலைக்காட்சியில் கலர்க் கனவு காணும் என் தம்பி! அத்தனை பேருக்கும் மாதா மாதம் பிராணவாயு வழங்கும் ஒரே ஒரு நான்! கால்களில் லாடங்களோடு எப்படி உங்களோடு ஓடி வருவேன்?. என்னை மன்னித்து விடுங்கள்! என்னை மறந்து விடுங்கள்! ஐரோப்பாவில் கல்யாணத் தோல்விகள் அதிகம்! இந்தியவில் காதல் தோல்விகள் அதிகம்! இந்தியா காதலின் பூமி தான்! காதலர் பூமியல்ல! போகிறேன்! உங்களை மறக்க முடியாதவளை நீங்கள் மறப்பீர்கள் என்ற நம்பிக்கையோடு போகிறேன்! என்னை மன்னித்து விடுங்கள்! என்னை மறந்து விடுங்கள்! இறக்கமுடியாத சிலுவைகள் சொன்னவள் நான் தான்! உங்களுக்கும் சேர்த்து நான் தான் சுவாசிக்கிறேன் என்று சொன்னவள் நான் தான்! உங்களைத் தவிர என் கண்களுக்கு எதையும் பார்க்கத் தெரியவில்லை என்று சொன்னவள் நான் தான்! உங்கள் வாழ்க்கை என்னும் கோப்பையை என் உயிர் பிழிந்து ஊற்றி நிரப்புவேன் என்று சொன்னவள் நான் தான்! நம் கல்யாணத்தில் கடல் முத்துக்களையும்!. வானம் நட்ஷத்திரங்களையும்!. அட்ஷதை போடும் என்று சொன்னவள் நான் தான்! நாம் பிரிந்தால் மழை மேல் நோக்கிப் பெய்யும்! கடல் மேல் ஒட்டகம் போகும்! காற்று மரிக்கும்! என்று சொன்னவள் நான் தான்! இதோ அடிக்கோடிட்ட வார்த்தைகளால் இதைச் சொல்வதும் நான் தான்! என்னை மன்னித்து விடுங்கள்! என்னை மறந்து விடுங்கள்! நான் காதல் கொண்டது நிஜம்! கனவு வளர்த்தது நிஜம்! என் ரத்தத்தில் இரண்டு அனுக்கள் சந்தித்துக் கொண்டால் உங்கள் பெயரை மட்டுமே உச்சரித்தது நிஜம்! என்னை மன்னித்து விடுங்கள்! என்னை மறந்து விடுங்கள்! காதலரைத் தெரிந்த எனக்கு காதலைத் தெரியவில்லை! இந்தியக் காதல் என்பது காதலர்களோடு மட்டும் சம்மந்தப் பட்டதில்லை! இந்தியா காதலின் பூமி தான் காதலர் பூமியல்ல! காதலுக்கு சிறகு மட்டுமே தெரியும்! கால்யாணத்திற்குத் தான் கால்களும் தெரியும்! எனக்குச் சிறகு தந்த காதலா என் கால்களின் லாடத்தை யாரறிவார்?. என் தாயை விட சாய்வு நாற்காலியை அதிகம் நேசிக்கும் தந்தை! சீதனம் கொணர்ந்த பழைய பாய் போல் கிழிந்து போன என் தாய்! தான் பூப்பெய்திய செய்தி கூட புரியாத என் தங்கை! கிழிந்த பாயில் படுத்தபடி கிளியோபாற்ராவை நினைத்து ஏங்கும் என் அண்ணன்! கருப்பு வெள்ளைத் தொலைக்காட்சியில் கலர்க் கனவு காணும் என் தம்பி! அத்தனை பேருக்கும் மாதா மாதம் பிராணவாயு வழங்கும் ஒரே ஒரு நான்! கால்களில் லாடங்களோடு எப்படி உங்களோடு ஓடி வருவேன்?. என்னை மன்னித்து விடுங்கள்! என்னை மறந்து விடுங்கள்! ஐரோப்பாவில் கல்யாணத் தோல்விகள் அதிகம்! இந்தியவில் காதல் தோல்விகள் அதிகம்! இந்தியா காதலின் பூமி தான்! காதலர் பூமியல்ல! போகிறேன்! உங்களை மறக்க முடியாதவளை நீங்கள் மறப்பீர்கள் என்ற நம்பிக்கையோடு போகிறேன்! என்னை மன்னித்து விடுங்கள்! என்னை மறந்து விடுங்கள்!
வைரமுத்துவின் கவிதைகள் - காதல் கவிதை
காதல் கவிதை
பார் அழகு பார்க்கும் விழி அழகு பார்ப்பதெல்லாம் அழகு இருள் அழகு - அதிலே ஒரு துளி ஒளியழகு மலை அழகு - ஆங்கே பொழியும் மழையழகு சிலை அழகு - சிற்பியின் கலை அழகு ஆண் அழகு - அவன்கொண்ட ஆண்மை அழகு பெண்மை அழகு - அவள்ஈனும் தாய்மை அழகு மொழி அழகு - செந்தமிழாயின் அதுவன்றோ அழகு உண்மை அழகு - பொதுநல பொய்யும் அழகு பிறப்பு அழகு - பிறர்கெனின் இறப்பும் அழகு திருமணம் அழகு - மனமிரண்டும் ஒன்றாயின் இல்லறம் அழகு துன்பம்நீக்கும் துறவறம் அழகு மானம்காக்கும் மறம் அழகு மகுடம்கொண்ட சிரம் அழகு வாரிவழங்கும் கரம் அழகு மனம் அழகு - எனின், யாவும் பேரழகு.! பார் அழகு பார்க்கும் விழி அழகு பார்ப்பதெல்லாம் அழகு இருள் அழகு - அதிலே ஒரு துளி ஒளியழகு மலை அழகு - ஆங்கே பொழியும் மழையழகு சிலை அழகு - சிற்பியின் கலை அழகு ஆண் அழகு - அவன்கொண்ட ஆண்மை அழகு பெண்மை அழகு - அவள்ஈனும் தாய்மை அழகு மொழி அழகு - செந்தமிழாயின் அதுவன்றோ அழகு உண்மை அழகு - பொதுநல பொய்யும் அழகு பிறப்பு அழகு - பிறர்கெனின் இறப்பும் அழகு திருமணம் அழகு - மனமிரண்டும் ஒன்றாயின் இல்லறம் அழகு துன்பம்நீக்கும் துறவறம் அழகு மானம்காக்கும் மறம் அழகு மகுடம்கொண்ட சிரம் அழகு வாரிவழங்கும் கரம் அழகு மனம் அழகு - எனின், யாவும் பேரழகு.!
அழகு - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
மானிடனாய்ப் பிறந்துவிட்டோம் - நாம் மதிகெட்டு இருந்துவிட்டோம் ஏட்டிலுள்ளதை படித்துவிட்டோம் - அதையேன் படித்தோம் மறந்துவிட்டோம் மதசாதியால் பிரிந்துவிட்டோம் - மனம், அதை சகதியால் நிரப்பிவிட்டோம் பனத்தை மனதிலே எத்திவிட்டோம் - குணம், அதை குப்பையிலே கொட்டிவிட்டோம் கொள்ளாத குற்றங்களை செய்திடுவோம் - பலம் இல்லாத எளியவன்மேல் பழிசொல்லிடுவோம் தள்ளாத வயது சென்றிடுவோம் - அன்றும் இல்லாத பெருமை பேசிடுவோம் மானம்கெட்ட ஈனப்பிறவியடா மானுடன் - இவன் மாண்டு அழிந்தாலும் மனம் குணம் மாறிடன் மானிடனாய்ப் பிறந்துவிட்டோம் - நாம் மதிகெட்டு இருந்துவிட்டோம் ஏட்டிலுள்ளதை படித்துவிட்டோம் - அதையேன் படித்தோம் மறந்துவிட்டோம் மதசாதியால் பிரிந்துவிட்டோம் - மனம், அதை சகதியால் நிரப்பிவிட்டோம் பனத்தை மனதிலே எத்திவிட்டோம் - குணம், அதை குப்பையிலே கொட்டிவிட்டோம் கொள்ளாத குற்றங்களை செய்திடுவோம் - பலம் இல்லாத எளியவன்மேல் பழிசொல்லிடுவோம் தள்ளாத வயது சென்றிடுவோம் - அன்றும் இல்லாத பெருமை பேசிடுவோம் மானம்கெட்ட ஈனப்பிறவியடா மானுடன் - இவன் மாண்டு அழிந்தாலும் மனம் குணம் மாறிடன்
இவன் மானிடன்.! - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
இருக்கின்ற நாழியெல்லாம் இன்பமாய் களிப்பதும் இரவுடன் பகலும் சுகமாய் துயில்வதும் கணமெல்லாம் கேளிக்கையில் திளைப்பதும் திரைகூத்தாடியை சிரஸ்தார் என்பதும் மதி மயக்கும் மது அருந்துவதும் மனம் பசப்பும் மாது பின்செல்வதும் உரிமைகளையும் உடைமைகளையும் இழக்குந்தருணம்- நம் உறவுகளையும் கடமைகளையும் மறக்குந்தருணம் மதிகெட்டு மனிதன் செய்யும் தருணம் - ஆங்குநல் மதியுள்ளோர் அதை மாற்றிட வரணும்.! இருக்கின்ற நாழியெல்லாம் இன்பமாய் களிப்பதும் இரவுடன் பகலும் சுகமாய் துயில்வதும் கணமெல்லாம் கேளிக்கையில் திளைப்பதும் திரைகூத்தாடியை சிரஸ்தார் என்பதும் மதி மயக்கும் மது அருந்துவதும் மனம் பசப்பும் மாது பின்செல்வதும் உரிமைகளையும் உடைமைகளையும் இழக்குந்தருணம்- நம் உறவுகளையும் கடமைகளையும் மறக்குந்தருணம் மதிகெட்டு மனிதன் செய்யும் தருணம் - ஆங்குநல் மதியுள்ளோர் அதை மாற்றிட வரணும்.!
கேளிக்கை.! - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
நீ சொற்கள் நிறுத்தி பார்வை தொடங்கியதும் கவிதை களைந்து நிர்வாணமாகிறது காதல்! இரண்டு முத்தங்கள் கொடுத்து இனிப்பானதை எடுத்துக்கொள் என்றாய் இயலாத செயலென இரண்டையும் திருப்பிக் கொடுத்தேன் யாவரிடமும் இயல்பாய்ப் பழகும் உனது சொற்கள் எனது நுண்விருப்பங்களை அறிந்து கொள்ள என்னிடம் மட்டும் வேவு பார்க்கின்றன எப்பொழுதும் அளந்தே பேசுபவன் உனது சாமர்த்தியங்களை சாத்தியப்படுத்துவதற்காகவே அளவின்றி பேசுகிறேன் உனது பார்வை மலரும்பொழுதெல்லாம் எனது விழிகளை வண்ணத்துப்பூச்சிகளாய் மாற்றிட சிறகடித்து தவிக்கும் இமைகள்! தனியே நீ முணுமுணுக்கும் இனிய பாடல்கள் இசைத்தட்டில் ஒலிக்கையில் இனிமை இழப்பதேன்? நீ சொற்கள் நிறுத்தி பார்வை தொடங்கியதும் கவிதை களைந்து நிர்வாணமாகிறது காதல்! இரண்டு முத்தங்கள் கொடுத்து இனிப்பானதை எடுத்துக்கொள் என்றாய் இயலாத செயலென இரண்டையும் திருப்பிக் கொடுத்தேன் யாவரிடமும் இயல்பாய்ப் பழகும் உனது சொற்கள் எனது நுண்விருப்பங்களை அறிந்து கொள்ள என்னிடம் மட்டும் வேவு பார்க்கின்றன எப்பொழுதும் அளந்தே பேசுபவன் உனது சாமர்த்தியங்களை சாத்தியப்படுத்துவதற்காகவே அளவின்றி பேசுகிறேன் உனது பார்வை மலரும்பொழுதெல்லாம் எனது விழிகளை வண்ணத்துப்பூச்சிகளாய் மாற்றிட சிறகடித்து தவிக்கும் இமைகள்! தனியே நீ முணுமுணுக்கும் இனிய பாடல்கள் இசைத்தட்டில் ஒலிக்கையில் இனிமை இழப்பதேன்?
காதல் கவிதை - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
ஏறும் இறங்காது ஒருவழிப் பாதை விலைவாசி ஏறும் இறங்காது ஒருவழிப் பாதை விலைவாசி
விலைவாசி - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
காதலிப்பதற்கு நீ இருக்கிறாய் என்ற காரணமே போதுமாயிருக்கிறது நான் தொடர்ந்து சுவாசிப்பதற்கு! காதலிப்பதற்கு நீ இருக்கிறாய் என்ற காரணமே போதுமாயிருக்கிறது நான் தொடர்ந்து சுவாசிப்பதற்கு!
நீ இருக்கிறாய் - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
ஓடிவந்து என் கழுத்தைக் கட்டிக்கொண்டு உன் கன்னம் உரச நீ பேசும்பொழுதெல்லாம் விதவித வண்ணங்களாய் என்னுள் பெய்கிறது மழை ஓடிவந்து என் கழுத்தைக் கட்டிக்கொண்டு உன் கன்னம் உரச நீ பேசும்பொழுதெல்லாம் விதவித வண்ணங்களாய் என்னுள் பெய்கிறது மழை
மழை - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
உனக்கு பிடித்த மண்வாசத்தில் நீயும் எனக்கு பிடித்த உன்வாசத்தில் நானும் ஒற்றை குடைக்குள் உனக்கு பிடித்த மண்வாசத்தில் நீயும் எனக்கு பிடித்த உன்வாசத்தில் நானும் ஒற்றை குடைக்குள்
ஒற்றை குடை - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
நெஞ்சு பொறுக்குதில்லையே - இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால் கொஞ்சமோ பிரிவினைகள் - ஒரு கோடியென் றாலது பெரிதாமோ ? அஞ்சுதலைப் பாம்பென்பான் - அப்பன் ஆறுதலை யென்றுமகன் சொல்லிவிட்டால் நெஞ்சு பிரிந்து விடுவார் - பின்பு நெடுநா ளிருவரும் பகைத்திருப்பார் (நெஞ்சு)சாத்திரங்க ளொன்றும் காணார் - பொய்ச் சாத்திரப் பேய்கள்சொலும் வார்த்தைநம்பியே கோத்திரமொன் யிருந்தாலும் - ஒரு கொள்கையிற் பிரிந்தவனைக் குலைத்திகழ்வார் தோத்திரங்கள் சொல்லியவர்தாம் - தமைச் சூதுசெயு நீசர்களைப் பணிந்திடுவார் - ஆனால் ஆத்திரங் கொண்டே யிவன் சைவன் - இவன் அரிபக்த னென்றுபெருஞ் சண்டையிடுவார் (நெஞ்சு) எண்ணிலா நோயுடையார் - இவர் எழுந்து நடப்பதற்கும் வலிமையிலார் கண்ணிலாக் குழந்தைகள்போல் - பிறர் காட்டிய வழியிற் சென்று மாட்டிக் கொள்வார் நண்ணிய பெருங்கலைகள் - பத்து நாலாயிரங் கோடி நயந்து நின்ற புண்ணிய நாட்டினிலே - இவர் பொறியற்ற விலங்குகள் போல வாழ்வார் நெஞ்சு பொறுக்குதில்லையே - இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால் கொஞ்சமோ பிரிவினைகள் - ஒரு கோடியென் றாலது பெரிதாமோ ? அஞ்சுதலைப் பாம்பென்பான் - அப்பன் ஆறுதலை யென்றுமகன் சொல்லிவிட்டால் நெஞ்சு பிரிந்து விடுவார் - பின்பு நெடுநா ளிருவரும் பகைத்திருப்பார் (நெஞ்சு)சாத்திரங்க ளொன்றும் காணார் - பொய்ச் சாத்திரப் பேய்கள்சொலும் வார்த்தைநம்பியே கோத்திரமொன் யிருந்தாலும் - ஒரு கொள்கையிற் பிரிந்தவனைக் குலைத்திகழ்வார் தோத்திரங்கள் சொல்லியவர்தாம் - தமைச் சூதுசெயு நீசர்களைப் பணிந்திடுவார் - ஆனால் ஆத்திரங் கொண்டே யிவன் சைவன் - இவன் அரிபக்த னென்றுபெருஞ் சண்டையிடுவார் (நெஞ்சு) எண்ணிலா நோயுடையார் - இவர் எழுந்து நடப்பதற்கும் வலிமையிலார் கண்ணிலாக் குழந்தைகள்போல் - பிறர் காட்டிய வழியிற் சென்று மாட்டிக் கொள்வார் நண்ணிய பெருங்கலைகள் - பத்து நாலாயிரங் கோடி நயந்து நின்ற புண்ணிய நாட்டினிலே - இவர் பொறியற்ற விலங்குகள் போல வாழ்வார்
நெஞ்சு பொறுக்குதில்லையே - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
கவிதை வேண்டுமென பேனா தூக்கினேன் .! கைகள் தானாய் - கிருக்குதடா உன் பெயரை .! கவிதை வேண்டுமென பேனா தூக்கினேன் .! கைகள் தானாய் - கிருக்குதடா உன் பெயரை .!
கவிதை - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
உன்னோடு கூடவர ஆசையின்றி விழுந்த உன் கொலுசுதான் உன்னோடு கூடவர என் ஆசையை வளர்த்தது உன்னோடு கூடவர ஆசையின்றி விழுந்த உன் கொலுசுதான் உன்னோடு கூடவர என் ஆசையை வளர்த்தது
கொலுசு - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
நான் முதல்த் தடவை பயணித்த விமானத்தில்த்தான் உன் நினைவுகளை தரையிறக்கிவிட்டு முதன்முதல் உன்னை கனவு காண ஆரம்பித்தேன் நான் முதல்த் தடவை பயணித்த விமானத்தில்த்தான் உன் நினைவுகளை தரையிறக்கிவிட்டு முதன்முதல் உன்னை கனவு காண ஆரம்பித்தேன்
முதன்முதல் - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
காயப்படுத்துவதற்கென்றே மெளனங்கள் சிலவற்றை உருவாக்குகிறாய். பூப்பறித்தலின் ஆனந்தத்தை அவை உனக்களிக்கலாம். அல்லது அப்பழுக்கற்ற குழந்தைமையின் குதூகலத்தை உணர்வுகளில் தெளிக்கலாம். இடுகாட்டில் எரிகின்ற உன் சுயத்தின் கருகியவாடையை என்னை நோக்கி சுமந்து வருகின்றன அந்த மெளனங்கள். வலி நிறைந்த புன்னகையுடன் இருகரம் விரித்து வரவேற்கிறேன். எங்கோ உருப்பெற்றுக்கொண்டிருக்கின்றன என் கல்லறைக்கான செங்கல்கள். காயப்படுத்துவதற்கென்றே மெளனங்கள் சிலவற்றை உருவாக்குகிறாய். பூப்பறித்தலின் ஆனந்தத்தை அவை உனக்களிக்கலாம். அல்லது அப்பழுக்கற்ற குழந்தைமையின் குதூகலத்தை உணர்வுகளில் தெளிக்கலாம். இடுகாட்டில் எரிகின்ற உன் சுயத்தின் கருகியவாடையை என்னை நோக்கி சுமந்து வருகின்றன அந்த மெளனங்கள். வலி நிறைந்த புன்னகையுடன் இருகரம் விரித்து வரவேற்கிறேன். எங்கோ உருப்பெற்றுக்கொண்டிருக்கின்றன என் கல்லறைக்கான செங்கல்கள்.
உன் மெளனங்கள் - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
தன் பெயரை பிழையாக எழுதிக் கொண்டிருந்த சிறுமியிடம் அழகாய் எழுத கற்றுக் கொடுத்தேன் என் காதலியின் பெயரும் அது என்பதால் தன் பெயரை பிழையாக எழுதிக் கொண்டிருந்த சிறுமியிடம் அழகாய் எழுத கற்றுக் கொடுத்தேன் என் காதலியின் பெயரும் அது என்பதால்
எழுத கற்றுக் கொடுத்தேன் - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
பல திருமணங்களும் முறிந்து போவது கருத்து வேறுபாடுகளால் அல்ல. அந்த வேறுபாடுகளை எதிர்கொள்ளத் தெரியாததால்தான்! பல திருமணங்களும் முறிந்து போவது கருத்து வேறுபாடுகளால் அல்ல. அந்த வேறுபாடுகளை எதிர்கொள்ளத் தெரியாததால்தான்!
திருமணங்கள் - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
என்னை எழுத வைப்பதற்காகவே கவிதையாய் படுத்துக் கிடப்பாய் எனக்கு முன் நீ என்னை எழுத வைப்பதற்காகவே கவிதையாய் படுத்துக் கிடப்பாய் எனக்கு முன் நீ
கவிதை - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
நீ+நான் முடிவில்லா மனயுத்தம் நான்+நான் சுயமழித்து திரிதல். கர்த்தன்+புத்தன் போதிமர சிலுவைகள் கோபம்+பிடிவாதம் உடைந்த கண்ணாடிக்காதல் நேசம்+பாசம் வறண்ட ஏரியில் துடிக்கும் நினைவுமீன்கள் ஆத்மா+நாம் உயிர் துறந்த உடல்கூடு கடைசியாக, தனிமை+தனிமை ஈரம் கசியும் என் கவிதைகள் நீ+நான் முடிவில்லா மனயுத்தம் நான்+நான் சுயமழித்து திரிதல். கர்த்தன்+புத்தன் போதிமர சிலுவைகள் கோபம்+பிடிவாதம் உடைந்த கண்ணாடிக்காதல் நேசம்+பாசம் வறண்ட ஏரியில் துடிக்கும் நினைவுமீன்கள் ஆத்மா+நாம் உயிர் துறந்த உடல்கூடு கடைசியாக, தனிமை+தனிமை ஈரம் கசியும் என் கவிதைகள்
கடைசியாக. - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
மழை வந்தது மதம் மாறினார்கள் முக்காடு போட்டார்கள் மழை வந்தது மதம் மாறினார்கள் முக்காடு போட்டார்கள்
மழை - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
அவசரமாய் நான் வீதி கடக்கையிலும் நீயே நினைவுக்கு வருகிறாய் எப்போதோ உன்னோடு வீதி கடக்கையில் நீ குட்டுவைத்து குழந்தைபோல் எனை கூட்டிச் சென்றாயே அவசரமாய் நான் வீதி கடக்கையிலும் நீயே நினைவுக்கு வருகிறாய் எப்போதோ உன்னோடு வீதி கடக்கையில் நீ குட்டுவைத்து குழந்தைபோல் எனை கூட்டிச் சென்றாயே
நினைவுக்கு வருகிறாய் - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
சத்தமே எழுப்பாமல் நீ அருகில் செல்லும்போதெல்லாம் பட்டுப்பூச்சி பறந்து விடுகிறது மறுபடியும் தவற விட்டதை நினைத்து நீ முகம் சுளிக்கிறாய் தோல்வியிலும் நீ எத்தனை அழகு தொடர்ந்து முயற்சி செய் என்கிறேன்! பட்டாம்பூச்சிகள் பறந்து விடும் என்ற நம்பிக்கையில்! சத்தமே எழுப்பாமல் நீ அருகில் செல்லும்போதெல்லாம் பட்டுப்பூச்சி பறந்து விடுகிறது மறுபடியும் தவற விட்டதை நினைத்து நீ முகம் சுளிக்கிறாய் தோல்வியிலும் நீ எத்தனை அழகு தொடர்ந்து முயற்சி செய் என்கிறேன்! பட்டாம்பூச்சிகள் பறந்து விடும் என்ற நம்பிக்கையில்!
பட்டுப்பூச்சி - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
உனக்காகவே எல்லாரையும் இழந்தேன் நீ என்னை இழ‌ப்பாய் என்று தெரியாம‌ல்!. உனக்காகவே எல்லாரையும் இழந்தேன் நீ என்னை இழ‌ப்பாய் என்று தெரியாம‌ல்!.
இழப்பு! - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
விரல் பற்றும் தொலைவில் எப்போதும் இருப்பதில்லை உன் இருத்தல். கடிகார முள்ளில் சிக்கித் துடிக்கும் மீனாக நம் ப்ரியங்கள். கனவுகளின் கறுப்புவெள்ளை பிரதேசங்களெங்கும் பொழிகிறது உன் குரல்மழை. தூரத்திலிருந்தும் அதே குறுநகையுடன் எப்போதும் எனக்குள் வசிக்கிறாய் நீ. விரல் பற்றும் தொலைவில் எப்போதும் இருப்பதில்லை உன் இருத்தல். கடிகார முள்ளில் சிக்கித் துடிக்கும் மீனாக நம் ப்ரியங்கள். கனவுகளின் கறுப்புவெள்ளை பிரதேசங்களெங்கும் பொழிகிறது உன் குரல்மழை. தூரத்திலிருந்தும் அதே குறுநகையுடன் எப்போதும் எனக்குள் வசிக்கிறாய் நீ.
தொலைகடல் - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
நமக்கான இடைவெளியில் காற்றோடு அன்பையும் விதைத்த உனக்கு என்னிடமிருந்து என்ன வேண்டும் என்றேன். எதுவுமே வேண்டாம் என்றாய் என் அழகான திடுக்கிடலை அன்பாக ரசித்தபடி. பிறகுதான் சொன்னாய். உன்னைத்தவிர என்று! நமக்கான இடைவெளியில் காற்றோடு அன்பையும் விதைத்த உனக்கு என்னிடமிருந்து என்ன வேண்டும் என்றேன். எதுவுமே வேண்டாம் என்றாய் என் அழகான திடுக்கிடலை அன்பாக ரசித்தபடி. பிறகுதான் சொன்னாய். உன்னைத்தவிர என்று!
உன்னைத்தவிர என்று - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
என்னை அழகாய் ஏற்றிவிட்டாள் குற்றவாளிக் கூண்டில் _ அனுபவிக்கிறேன் அவள் எனக்கு செய்த குற்றங்களுக்கும் சேர்த்து தண்டனையை என்னை அழகாய் ஏற்றிவிட்டாள் குற்றவாளிக் கூண்டில் _ அனுபவிக்கிறேன் அவள் எனக்கு செய்த குற்றங்களுக்கும் சேர்த்து தண்டனையை
கைதியாய் நான் - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
காந்தி நாட்டுக்காக உழைத்தார் நாம் காந்தி நோட்டுக்காக உழைகின்றோம் காந்தி நாட்டுக்காக உழைத்தார் நாம் காந்தி நோட்டுக்காக உழைகின்றோம்
காந்தி நோட்டு - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
உன் சைக்கிள் நட்டுப்போல் அடிக்கடி கழறுகிறேன் நீ ஓடுவதால். உன் சைக்கிள் நட்டுப்போல் அடிக்கடி கழறுகிறேன் நீ ஓடுவதால்.
அடிக்கடி! - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
போதிமரத்தடியில் நாய்கள் கூடலாம். மகாத்மாவின் கல்லறைமேல் பறவைகள் எச்சமிடலாம். மயிலிறகு விற்பவனிடம் மாடுகள்பற்றி விசாரிக்கப்படலாம். . . . இவை போலவே, புனித மலர்கள் நிறைந்த நமது நேசத்தை வெறும் காகிதப்பூக்கள் எனலாம் நீ. போதிமரத்தடியில் நாய்கள் கூடலாம். மகாத்மாவின் கல்லறைமேல் பறவைகள் எச்சமிடலாம். மயிலிறகு விற்பவனிடம் மாடுகள்பற்றி விசாரிக்கப்படலாம். . . . இவை போலவே, புனித மலர்கள் நிறைந்த நமது நேசத்தை வெறும் காகிதப்பூக்கள் எனலாம் நீ.
இவை போலவே - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
என் வீட்டு நாய் நன்றாக தூங்குகிறது. அதற்கு காதல் இல்லை போலிருக்கிறது என் வீட்டு நாய் நன்றாக தூங்குகிறது. அதற்கு காதல் இல்லை போலிருக்கிறது
காதல் இல்லை போலிருக்கிறது - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
உனக்காக காத்திருக்கும் பொழுது வாலறுந்த பட்டமென தத்தளிக்கும் மனது நீ அருகில் வந்த உடன் நூலறுந்த பட்டமாய் உன் மனதில் சிக்கிக் கொள்கிறது உனக்காக காத்திருக்கும் பொழுது வாலறுந்த பட்டமென தத்தளிக்கும் மனது நீ அருகில் வந்த உடன் நூலறுந்த பட்டமாய் உன் மனதில் சிக்கிக் கொள்கிறது
காத்திருப்பு - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
தெளிவாகப் பேசி விடுகிறாய் நீ தடுமாறி விடுகிறேன் நான். தெளிவாகப் பேசி விடுகிறாய் நீ தடுமாறி விடுகிறேன் நான்.
நீ நான். - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
நிழல் தேடி நாம் மரம் ஒதுங்குவது போல் உன் மனம் தேடி என் உயிர் ஒதுங்குமிடம் நம் காதல் நிழல் தேடி நாம் மரம் ஒதுங்குவது போல் உன் மனம் தேடி என் உயிர் ஒதுங்குமிடம் நம் காதல்
நம் காதல் - காதல் கவிதை
காதல் கவிதை
நின் அருகாமையில் வேகமாகவும் தூரத்தில் மெதுவாகவும் சுழல்வதுமாய் உலகம்; உன்னால் பைத்தியமாகிவிட்டது அதுவும்! நின் அருகாமையில் வேகமாகவும் தூரத்தில் மெதுவாகவும் சுழல்வதுமாய் உலகம்; உன்னால் பைத்தியமாகிவிட்டது அதுவும்!
உலகம் பைத்தியம் ஆனது - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
கருப்பு வெள்ளை பச்சை காவி சாம்பல். கருப்பு வெள்ளை பச்சை காவி சாம்பல்.
வாழ்க்கை! - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
காதலிப்பதற்கு நீ இருக்கிறாய் என்ற காரணமே போதுமாயிருக்கிறது நான் தொடர்ந்து சுவாசிப்பதற்கு! காதலிப்பதற்கு நீ இருக்கிறாய் என்ற காரணமே போதுமாயிருக்கிறது நான் தொடர்ந்து சுவாசிப்பதற்கு!
நீ இருக்கிறாய் - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
வெகுநாட்கள் கழித்து சந்திக்கும் கணத்தில் நம் விழி பொங்கும் கண்ணீரில் கப்பல்விடக் காத்திருக்கிறது காதல்! வெகுநாட்கள் கழித்து சந்திக்கும் கணத்தில் நம் விழி பொங்கும் கண்ணீரில் கப்பல்விடக் காத்திருக்கிறது காதல்!
காதல் கப்பல் - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
மழை நின்ற இரவில் முறுக்கிய வேலி கம்பிகளின் முடிச்சுகளில் துளித்துளியாய் தொங்கியபடி இன்னும் (மண்ணில்) கரையாமல் இருக்கிறது ஆகாயம்! மழை நின்ற இரவில் முறுக்கிய வேலி கம்பிகளின் முடிச்சுகளில் துளித்துளியாய் தொங்கியபடி இன்னும் (மண்ணில்) கரையாமல் இருக்கிறது ஆகாயம்!
ஆகாயம்! - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
என்னை விட்டு போனாலும் நீ அழுது கொண்டே போனதில்தான் உணர்தேன் எனக்காகத்தான் பிரிந்திருப்பாய் என்பதை என்னை விட்டு போனாலும் நீ அழுது கொண்டே போனதில்தான் உணர்தேன் எனக்காகத்தான் பிரிந்திருப்பாய் என்பதை
அழுகை - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
நீ பிரிந்தும் சேவை செய்கிறாய் என் கவிதைகளால் பல காதலர்களை சேர்த்து வைக்கிறாயே நீ பிரிந்தும் சேவை செய்கிறாய் என் கவிதைகளால் பல காதலர்களை சேர்த்து வைக்கிறாயே
காதல் சேவை - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
காலையில் சந்தித்து புன்னகையில் வணக்கம் சொல்லி தோளுடன் தோள் உரசி குதூகலமாய் குழம்பி அருந்தி உரக்க நட்பு பேசி பகலிலே பகிர்ந்துண்டு வேலையில் ஒருங்கினைந்து உயர்ந்திடுவோம் ஒற்றுமையாய், கூடு செல்லும் காகங்களாய் பிரிந்திடுவோம் மாலையிலே தனித்தனியாய் தாய், தந்தை கொஞ்சி குலவும் மனைவி மக்கள் அவரவருக்காய் அண்ணன் , அக்கை தங்களுக்காய் தம்பி, தங்கை தம் வீட்டில் இருப்பினும் நட்பென்னும் "ஓர் உறவு" குடும்பம் இது காலையில் சந்தித்து புன்னகையில் வணக்கம் சொல்லி தோளுடன் தோள் உரசி குதூகலமாய் குழம்பி அருந்தி உரக்க நட்பு பேசி பகலிலே பகிர்ந்துண்டு வேலையில் ஒருங்கினைந்து உயர்ந்திடுவோம் ஒற்றுமையாய், கூடு செல்லும் காகங்களாய் பிரிந்திடுவோம் மாலையிலே தனித்தனியாய் தாய், தந்தை கொஞ்சி குலவும் மனைவி மக்கள் அவரவருக்காய் அண்ணன் , அக்கை தங்களுக்காய் தம்பி, தங்கை தம் வீட்டில் இருப்பினும் நட்பென்னும் "ஓர் உறவு" குடும்பம் இது
அலுவலகம் - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
உன் மேலான என் காதல் தோற்று போனாலும் உன் மடியில் தூங்க வருவேன் ஒரு முறை இடம் கொடுப்பாயா சொர்க்கத்தில் தூங்கியபடியே நான் இறக்க வேண்டும் உன் மேலான என் காதல் தோற்று போனாலும் உன் மடியில் தூங்க வருவேன் ஒரு முறை இடம் கொடுப்பாயா சொர்க்கத்தில் தூங்கியபடியே நான் இறக்க வேண்டும்
உன் மடி வேண்டும்! - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
நீ சேலையில் வருகிறாய் சாலையில் அனைவரும் சிலையாய் நிற்க சேலை கட்டிக்கொண்ட சந்தோஷம் உன் முகத்தில் உன்னை கட்டிக்கொண்ட சந்தோஷம் சேலையின் மிதப்பில் இன்னும் எத்தனை இதயங்களை இலவம்பஞ்ச்சாக்கப்போகிறாய், உன் கொப்பளிக்கும் புன்னகையால் . போதும் பெண்ணே இனி இல்லை என்னிடம் இழப்பதற்கு இன்னொரு இதயம். உன் விழிகள் போடும் ஆட்டத்தில் அதிர்வதென்னவோ என் இதயம் தான் அரை நிமிடத்தில் பதரவைத்துவிடுகிறாய் அருகே வரும்போதெல்லாம் . ஏன் உன்னை இப்படி நினைத்ததுதொலைக்கிறேன் என்னையும் மறந்து. நான் என்னுடயது என்று நினைத்திருந்த ஒன்றயும் உன் பின்னே அழைத்துச்சென்றுவிட்டாய், இங்கே என்னை புலம்ப வைத்துவிட்டு. நீ சேலையில் வருகிறாய் சாலையில் அனைவரும் சிலையாய் நிற்க சேலை கட்டிக்கொண்ட சந்தோஷம் உன் முகத்தில் உன்னை கட்டிக்கொண்ட சந்தோஷம் சேலையின் மிதப்பில் இன்னும் எத்தனை இதயங்களை இலவம்பஞ்ச்சாக்கப்போகிறாய், உன் கொப்பளிக்கும் புன்னகையால் . போதும் பெண்ணே இனி இல்லை என்னிடம் இழப்பதற்கு இன்னொரு இதயம். உன் விழிகள் போடும் ஆட்டத்தில் அதிர்வதென்னவோ என் இதயம் தான் அரை நிமிடத்தில் பதரவைத்துவிடுகிறாய் அருகே வரும்போதெல்லாம் . ஏன் உன்னை இப்படி நினைத்ததுதொலைக்கிறேன் என்னையும் மறந்து. நான் என்னுடயது என்று நினைத்திருந்த ஒன்றயும் உன் பின்னே அழைத்துச்சென்றுவிட்டாய், இங்கே என்னை புலம்ப வைத்துவிட்டு.
பெண்ணே - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
மறக்கமுடியா நிகழ்வுகள் முறிந்துபோன உறவுகள் விடிய இயலா இரவுகள் இவை தொடர முடியா கனவுகள் மன்னிப்பது மனித இனம் மறப்பது தெய்வ குணம் மறக்க நான் கடவுளுமில்லை மன்னிக்க இங்கு மனிதருமில்லை மனிதம் மாண்டு ஆகிவிட்டது நூற்றாண்டு சிறையில் கிடக்குது மனிதா உன் அன்பின்று கண்களின் இமையாக மாறிவிட்ட பணம் பணம் செதுக்கும் கற்சிலையாக இன்று உன் மனம் மண் விழுந்த சிசுவிற்க்கும் பகைமை பார்க்கும் சொந்தம் இதுதானா என் உயிராக நான் நினைத்த பந்தம் கடல் தாண்டி வந்தேனே என் குலம் கூடி வாழ நின்றேனே தனி மரமாய் இனி எந்த நாட்டை ஆள மறக்கமுடியா நிகழ்வுகள் முறிந்துபோன உறவுகள் விடிய இயலா இரவுகள் இவை தொடர முடியா கனவுகள் மன்னிப்பது மனித இனம் மறப்பது தெய்வ குணம் மறக்க நான் கடவுளுமில்லை மன்னிக்க இங்கு மனிதருமில்லை மனிதம் மாண்டு ஆகிவிட்டது நூற்றாண்டு சிறையில் கிடக்குது மனிதா உன் அன்பின்று கண்களின் இமையாக மாறிவிட்ட பணம் பணம் செதுக்கும் கற்சிலையாக இன்று உன் மனம் மண் விழுந்த சிசுவிற்க்கும் பகைமை பார்க்கும் சொந்தம் இதுதானா என் உயிராக நான் நினைத்த பந்தம் கடல் தாண்டி வந்தேனே என் குலம் கூடி வாழ நின்றேனே தனி மரமாய் இனி எந்த நாட்டை ஆள
தொடர முடியா கனவுகள் - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
என்ன செய்வது தெரியாமல் இந்த ஜென்மத்தில் உனக்கு பிடிக்காத காதலியை பிறந்து விட்டேன் அடுத்த ஜென்மத்திலாவது நீ விரும்பும் பெண்ணாக பிறக்க வேண்டும் நான்! என்ன செய்வது தெரியாமல் இந்த ஜென்மத்தில் உனக்கு பிடிக்காத காதலியை பிறந்து விட்டேன் அடுத்த ஜென்மத்திலாவது நீ விரும்பும் பெண்ணாக பிறக்க வேண்டும் நான்!
பிடிக்காத காதலி - காதல் தோல்வி கவிதைகள்
காதல் தோல்வி கவிதைகள்
என் கவிதைகளை ரசித்துக்கொண்டிருக்கையில் இது யாருக்காக என்று நீ கேட்கும்போதெல்லாம் என் இதயம் துடிக்கிறது உனக்காக தான் என்று சொல்லடா என.! சொல்லிவிடுவேன். ஆனால் எனக்காகத்தானே என நீ கேட்கும்வரை காத்திருக்கச்சொல்கிறது மனது.! என் கவிதைகளை ரசித்துக்கொண்டிருக்கையில் இது யாருக்காக என்று நீ கேட்கும்போதெல்லாம் என் இதயம் துடிக்கிறது உனக்காக தான் என்று சொல்லடா என.! சொல்லிவிடுவேன். ஆனால் எனக்காகத்தானே என நீ கேட்கும்வரை காத்திருக்கச்சொல்கிறது மனது.!
காத்திருக்கிறேன் - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
எழுத்துப் பிழையின்றி எழுத நினைக்கும் காதல் எழுத்துப் பிழையின்றி வாசிக்க நினைக்கும் நட்பு எழுத்துப் பிழையின்றி எழுத நினைக்கும் காதல் எழுத்துப் பிழையின்றி வாசிக்க நினைக்கும் நட்பு
காதல் - நட்பு - எழுத்து - ஏனைய கவிதைகள்
நட்பு - எழுத்து - ஏனைய கவிதைகள்
ஏன் என் கண்களோடு இந்த கத்திசண்டை. பின் என் கண் பட்டதால் தான் காயம் வந்தது என்று குறை சொல்வாய். நன்றாக பார் காயம் வந்ததா இல்லை காதல் வந்ததா என்று.! ஏன் என் கண்களோடு இந்த கத்திசண்டை. பின் என் கண் பட்டதால் தான் காயம் வந்தது என்று குறை சொல்வாய். நன்றாக பார் காயம் வந்ததா இல்லை காதல் வந்ததா என்று.!
கத்திசண்டை - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
ஞாபகப்படுத்திக் கொண்டே இருக்க மறந்து போன காதல் நம்முடையது ஞாபகப்படுத்திக் கொண்டே இருக்க மறந்து போன காதல் நம்முடையது
மறந்து போன காதல் - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
பூக்களுக்குள் நேற்று கலவரம். அவள் கூந்தலில் இரண்டு மலர்களுக்கு மேல் இடமில்லை என்றதால்.! பூக்களுக்குள் நேற்று கலவரம். அவள் கூந்தலில் இரண்டு மலர்களுக்கு மேல் இடமில்லை என்றதால்.!
பூக்களின் கலவரம் - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
உனக்காக காத்திருந்து என் உயிர் பிரியுமென்றால் அதைவிட வேறன்ன வேண்டும் சொல்லன்பே நான் விட்டமூச்சுக்கும் நான் விடும்மூச்சுகுமான சுவாசமே நீதானே உனக்காக காத்திருந்து என் உயிர் பிரியுமென்றால் அதைவிட வேறன்ன வேண்டும் சொல்லன்பே நான் விட்டமூச்சுக்கும் நான் விடும்மூச்சுகுமான சுவாசமே நீதானே
உனக்காக காத்திருந்து - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
எங்கே நீ சென்றாலும் உன்னோடு ஓடிவரும் நிழலாக நானிருப்பேன் என்பதை நம்பிவிடு எங்கே நீ சென்றாலும் உன்னோடு ஓடிவரும் நிழலாக நானிருப்பேன் என்பதை நம்பிவிடு
எங்கே நீ சென்றாலும் - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
கவிதை கண்டேன் உன் கருவிழியில், இனி கலங்காதே.நீ கலங்கினால். கவிதையுடன் என் இதயமும் நனைந்துவிடும்.! கவிதை கண்டேன் உன் கருவிழியில், இனி கலங்காதே.நீ கலங்கினால். கவிதையுடன் என் இதயமும் நனைந்துவிடும்.!
கவிதையாகிய அவள் விழி. - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
என் கவிதை படிப்பவர்கள் எல்லாரும் என் காதலன் கொடுத்து வைத்தவள் என்கிறார்கள் அதற்காகவாவது உன்னைக் காதலிக்க வேண்டும் எங்கே நீ… என் கவிதை படிப்பவர்கள் எல்லாரும் என் காதலன் கொடுத்து வைத்தவள் என்கிறார்கள் அதற்காகவாவது உன்னைக் காதலிக்க வேண்டும் எங்கே நீ…
எங்கே நீ… என் காதலா - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
பத்து முறை விழுந்தவனை பூமித்தாய் முத்தமிட்டு கேட்டாளாம். நீ தானேயடா, ஒன்பது முறை விழுந்தும் எழுந்து நின்றவன் என்று.! பத்து முறை விழுந்தவனை பூமித்தாய் முத்தமிட்டு கேட்டாளாம். நீ தானேயடா, ஒன்பது முறை விழுந்தும் எழுந்து நின்றவன் என்று.!
தன்னம்பிக்கை - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
மலர்களுக்குத்தான் அவள் மேல் எத்தனை காதல். நான் என்றோ சொன்ன வார்த்தையைக்கேட்டு அவள் கூந்தலோடு வாழ்ந்துவிட்டு தான் சாவேன் என்று இன்றளவும் வாடாமல் காத்திருக்கிறது.! மலர்களுக்குத்தான் அவள் மேல் எத்தனை காதல். நான் என்றோ சொன்ன வார்த்தையைக்கேட்டு அவள் கூந்தலோடு வாழ்ந்துவிட்டு தான் சாவேன் என்று இன்றளவும் வாடாமல் காத்திருக்கிறது.!
என் வீட்டு மலர்கள் - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
உனக்காவே பிறந்த நான் இறைவனிடம் வரம் கேட்டால் உன்னோடு வாழ்ந்து உன்னில் இறந்துபோக வேண்டுமெனக் கேட்பேன் உனக்காவே பிறந்த நான் இறைவனிடம் வரம் கேட்டால் உன்னோடு வாழ்ந்து உன்னில் இறந்துபோக வேண்டுமெனக் கேட்பேன்
உனக்காவே பிறந்த நான் - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
அழகாய் அவசரமாய் ஒரு கவிதை சொல்ல முற்பட்டு அவள் கண்களை பார்த்தேன். வெண் மேகத்தில் சிகப்பு மின்னல்கள், அதனோடு அன்றில் பறவை போல் அவள் கருவிழிகள் அங்கும்மிங்குமாய் ஊஞ்சலாடிக்கொண்டிருந்தன.! அழகாய் அவசரமாய் ஒரு கவிதை சொல்ல முற்பட்டு அவள் கண்களை பார்த்தேன். வெண் மேகத்தில் சிகப்பு மின்னல்கள், அதனோடு அன்றில் பறவை போல் அவள் கருவிழிகள் அங்கும்மிங்குமாய் ஊஞ்சலாடிக்கொண்டிருந்தன.!
அன்றில் பறவை - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
என் தோட்டம் முழுக்க ரோஜா செடிகள்தான். முதல் முதலாய் பூத்த பூக்களிடம் சொன்னேன். உங்களை தொட்டுப் பறிக்க. தேவதை ஒருத்தி விரைவில் வருவாள் என. அத்தனை பூக்களும் வாடாமல் காத்திருக்கிறது. என் தோட்டம் முழுக்க ரோஜா செடிகள்தான். முதல் முதலாய் பூத்த பூக்களிடம் சொன்னேன். உங்களை தொட்டுப் பறிக்க. தேவதை ஒருத்தி விரைவில் வருவாள் என. அத்தனை பூக்களும் வாடாமல் காத்திருக்கிறது.
தேவதை - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
நீ பிரிந்த பின்னும் உன்னை காதலிக்காமல் இருந்ததில்லை நான் கவிதைகள் வேண்டுமே என் தனிமைக்கு நீ பிரிந்த பின்னும் உன்னை காதலிக்காமல் இருந்ததில்லை நான் கவிதைகள் வேண்டுமே என் தனிமைக்கு
நீ பிரிந்த பின்னும் - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
லாபக் கணக்குகளை போட்டு முடிப்பதற்குள் நஷ்டம் வந்து விடுகிறது காதலில். நேற்றைய அவளின் சிரிப்பை முழுவதுமாய் ரசித்து முடிக்கும் முன் இன்று முறைத்து விட்டு போகிறாள். சந்தோஷ கனவுகளை கவிதை ஆக்குவதற்குள் சோகத்தை என் முன் கொட்டி விட்டு போய் விடுகிறாள் .! லாபக் கணக்குகளை போட்டு முடிப்பதற்குள் நஷ்டம் வந்து விடுகிறது காதலில். நேற்றைய அவளின் சிரிப்பை முழுவதுமாய் ரசித்து முடிக்கும் முன் இன்று முறைத்து விட்டு போகிறாள். சந்தோஷ கனவுகளை கவிதை ஆக்குவதற்குள் சோகத்தை என் முன் கொட்டி விட்டு போய் விடுகிறாள் .!
காதல் கணக்குகள் - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
இருவருமே அறியாமல் இடம் மாறிய இதயம் ஒருவருக்கும் தெரியாமல் உன் தெருவோடும் உள்ளம் அருகிருக்கும் பொழுது அணைந்து போகும் மூளை நம் காதல் ஒன்றே என் உயிர் அறிந்த உண்மை உன் கைப்பையின் ஆழத்தில் மறைத்துக்கொள் என்னை நிழலொளியின் மயக்கத்தில் அணைத்துக்கொள் நெஞ்சை எழுத மையில்லை நீ இன்றி கவிதை எனதில்லை உனதன்றி இருவருமே அறியாமல் இடம் மாறிய இதயம் ஒருவருக்கும் தெரியாமல் உன் தெருவோடும் உள்ளம் அருகிருக்கும் பொழுது அணைந்து போகும் மூளை நம் காதல் ஒன்றே என் உயிர் அறிந்த உண்மை உன் கைப்பையின் ஆழத்தில் மறைத்துக்கொள் என்னை நிழலொளியின் மயக்கத்தில் அணைத்துக்கொள் நெஞ்சை எழுத மையில்லை நீ இன்றி கவிதை எனதில்லை உனதன்றி
கவிதை எனதில்லை - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
நான் இறப்பதையும் நேசிப்பேன். அது உனக்காக‌ என்றால். நான் இறப்பதையும் நேசிப்பேன். அது உனக்காக‌ என்றால்.
காதல் - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
என் கவிதைகள் அழுகின்றனவே. ஏன்? அவன் படிக்காமல் போயிருப்பான்! என் கவிதைகள் அழுகின்றனவே. ஏன்? அவன் படிக்காமல் போயிருப்பான்!
படிக்காமல் போயிருப்பான்! - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
எனக்காக நீயும் உனக்காக நானும் விட்டுக்கொடுக்கும் போட்டியில்தான் இன்னும் பிரியாமல் கூட வருகிறது சமாதான புறாவாக நம் காதல் எனக்காக நீயும் உனக்காக நானும் விட்டுக்கொடுக்கும் போட்டியில்தான் இன்னும் பிரியாமல் கூட வருகிறது சமாதான புறாவாக நம் காதல்
சமாதான புறாவாக நம் காதல் - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
நீ என்னிடம் பேசியதைவிட எனக்காக பேசியதில்தான் உணர்ந்தேன் நம் நட்பை. நீ என்னிடம் பேசியதைவிட எனக்காக பேசியதில்தான் உணர்ந்தேன் நம் நட்பை.
நட்பு - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
ஒத்திகை பார்த்தேனடி இன்றாவது உன்னிடம் சொல்லிவிடலாம் என்று உதிரவில்லையடி என் வார்த்தைகள்.உன் அருகே வந்தவுடன்! ஒத்திகை பார்த்தேனடி இன்றாவது உன்னிடம் சொல்லிவிடலாம் என்று உதிரவில்லையடி என் வார்த்தைகள்.உன் அருகே வந்தவுடன்!
காதலின் ஒத்திகை - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
நிலையில்லாத வாழ்க்கையில் எதிலும் நிம்மதி இல்லமால் வாழ்ந்து வந்தேன் அனாதையாய் நானும் எங்கிருந்து வந்தாய் நீ என் நிம்மதியாகவும் என் ஆயிரம் உறவுகளின் சொந்தகாரியாகவும் நிலையில்லாத வாழ்க்கையில் எதிலும் நிம்மதி இல்லமால் வாழ்ந்து வந்தேன் அனாதையாய் நானும் எங்கிருந்து வந்தாய் நீ என் நிம்மதியாகவும் என் ஆயிரம் உறவுகளின் சொந்தகாரியாகவும்
நிலையில்லாத வாழ்க்கையில் - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
உன்னிடம் பேசும்போது மட்டும் தான், என் தமிழும் தலையில் தட்டுகிறது. இன்றாவது திருந்த பேசு என்று .! உன்னிடம் பேசும்போது மட்டும் தான், என் தமிழும் தலையில் தட்டுகிறது. இன்றாவது திருந்த பேசு என்று .!
தவிப்பு - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
எத்தனை முறை பார்த்தாலும் தோற்று போகிறேன். அவளின் ஒரே பார்வையில் .! எத்தனை முறை பார்த்தாலும் தோற்று போகிறேன். அவளின் ஒரே பார்வையில் .!
தோல்வி - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
கண்ணீரை ரசித்தேன், கன்னத்தில் ஆனந்தமாய் என்னோடு விளையாடியபோது. அதே கண்ணீரை இன்று வெறுக்கிறேன், உன் கண்களில் பார்த்தபோது.! கண்ணீரை ரசித்தேன், கன்னத்தில் ஆனந்தமாய் என்னோடு விளையாடியபோது. அதே கண்ணீரை இன்று வெறுக்கிறேன், உன் கண்களில் பார்த்தபோது.!
கண்ணீர் - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
என்னை விட உன்னை நேசித்தேன். உன்னை விட இன்று என்னை நேசிக்கிறேன். என்னுள்ளே நீ இருப்பதனால்.! என்னை விட உன்னை நேசித்தேன். உன்னை விட இன்று என்னை நேசிக்கிறேன். என்னுள்ளே நீ இருப்பதனால்.!
என்னுள்ளே நீ இருப்பதனால் - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
ஆயிரம் உறவுகள் என்னை சூழ்ந்திருந்த போதும்., உன் புன்னகைக்காக ஏங்கும் என் இதயத்தை பார்த்து, ஏளனமாகவாவது சிரித்து விட்டு போ. ஆயிரம் உறவுகள் என்னை சூழ்ந்திருந்த போதும்., உன் புன்னகைக்காக ஏங்கும் என் இதயத்தை பார்த்து, ஏளனமாகவாவது சிரித்து விட்டு போ.
புன்னகை - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
எனக்காக நீயும் உனக்காக நானும் விட்டுக்கொடுக்கும் போட்டியில்தான் இன்னும் பிரியாமல் கூட வருகிறது சமாதான புறாவாக நம் காதல் எனக்காக நீயும் உனக்காக நானும் விட்டுக்கொடுக்கும் போட்டியில்தான் இன்னும் பிரியாமல் கூட வருகிறது சமாதான புறாவாக நம் காதல்
சமாதான புறாவாக நம் காதல் - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
உன் நினைவுகளே வேண்டாம் என்று என் இதய சுவர்களில் மாட்டி இருந்த உன் புகைப்படங்களை தூக்கி எறிந்தேன். ஆனால் இன்னும் வலித்துக்கொண்டுதான் இருக்கிறது உன் புகைபடங்களை மாட்டி வைப்பதற்காக அடிக்கப்பட்ட ஆணிகளின் தழும்புகள். உன் நினைவுகளே வேண்டாம் என்று என் இதய சுவர்களில் மாட்டி இருந்த உன் புகைப்படங்களை தூக்கி எறிந்தேன். ஆனால் இன்னும் வலித்துக்கொண்டுதான் இருக்கிறது உன் புகைபடங்களை மாட்டி வைப்பதற்காக அடிக்கப்பட்ட ஆணிகளின் தழும்புகள்.
இதயத்தழும்புகள் - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
எனதல்ல என் கவிதைகள் என்னவளின் கண் மொழி, சைகை மொழி, பேச்சு மொழி, இன்னும் எங்களுக்குள்ளான, நிறைய ரகசிய மொழிகளின் அரைகுறையான மொழி பெயர்ப்புகளே என் கவிதைகள்.! எனதல்ல என் கவிதைகள் என்னவளின் கண் மொழி, சைகை மொழி, பேச்சு மொழி, இன்னும் எங்களுக்குள்ளான, நிறைய ரகசிய மொழிகளின் அரைகுறையான மொழி பெயர்ப்புகளே என் கவிதைகள்.!
என் கவிதைகள் - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
நீ பார்த்தும் பாரமல் கடந்து செல்கிறாய் நான் தெரிந்தும் தெரியாமல் தொடர்கிறேன் உன் பின்னால் நீ பார்த்தும் பாரமல் கடந்து செல்கிறாய் நான் தெரிந்தும் தெரியாமல் தொடர்கிறேன் உன் பின்னால்
நீ பார்த்தும் பாரமல் - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
கனவு காணுங்கள் - Dr. கலாம் உங்கள் கனவில் மீனா வந்தால் நீங்கள் வாழ்வில் வீனா போவீர்கள்., சிம்ரன் வந்தால் சீரழிந்து போவீர்கள்., சிநேகா வந்தால் செத்து போவீர்கள்., அசின் வந்தால் அழிந்து போவீர்கள்., ஆகையால் கனவு காணுங்கள் காதலில் தவிக்கும் சந்தியாவை பற்றி அல்ல. கஷ்டத்தில் தவிக்கும் இந்தியாவைப் பற்றி. ஜெய்ஹிந்த். கனவு காணுங்கள் - Dr. கலாம் உங்கள் கனவில் மீனா வந்தால் நீங்கள் வாழ்வில் வீனா போவீர்கள்., சிம்ரன் வந்தால் சீரழிந்து போவீர்கள்., சிநேகா வந்தால் செத்து போவீர்கள்., அசின் வந்தால் அழிந்து போவீர்கள்., ஆகையால் கனவு காணுங்கள் காதலில் தவிக்கும் சந்தியாவை பற்றி அல்ல. கஷ்டத்தில் தவிக்கும் இந்தியாவைப் பற்றி. ஜெய்ஹிந்த்.
கனவு காணுங்கள் - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்