text
stringlengths
377
161k
நாகலாபுரம் பள்ளி +1,+2 வேளாண் அறிவியல் கல்வி மாணவ-மாணவியர்களுக்கு " பசுமை பாதுகாவலர் விருது” வழங்கும் விழா நடந்தது "மரங்கள் மற்றும் மூலிகை செடிகளை நேசிக்கும் மாணவர்களை ஊக்கப்படுத்துவதே சுற்றுச் சூழலை காக்கும் ஒரே வழி” என்ற நோக்கத்தில் தனது இல்லம் மற்றும் பொது இடங்களில் பசுமைப் பணி செய்து வரும் தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி கல்வி மாவட்டத்திற்கு உட்பட்ட நாகலாபுரம் சாமி அய்யா நாடார் மேல்நிலைப் பள்ளி +1,+2 வேளாண் அறிவியல் கல்வி மாணவ- மாணவியர்கள் 10 பேர் இனம் கண்டு அவர்களுக்கு "பசுமை பாதுகாவலர் விருது” வழங்கும் விழா பள்ளி வளாகத்தில் நடந்தது. தலைமை ஆசிரியை சே. சுப்புலட்சுமி தலைமை தாங்கி தர்மபுரி பசுமை அறக்கட்டளை, தருமம் அறக்கட்டளை சார்பில் வழங்கப்பட்ட "பசுமை பாதுகாவலர்” விருது வழங்கி வாழ்த்தி பேசினார். தொழிற்கல்வி ஆசிரியர் கோ.சுரேஷ்குமார் முன்னிலை வகித்தார். +1 மாணவர் மு.கார்த்திக், அ.அய்யல்ராஜ், மாணவியர்கள் வி.அபிநயா, ச.அபிருதி, க.தாமரைச் செல்வி, +2 மாணவர் சி.ரவிக்குமார், மா.வசந்தகுமார், மு. பழனிக்குமார், மாணவியர்கள் சொ.மாலதி, ல.சசிகலா ஆகியோர் பெற்றுக்கொண்டனர். முன்னதாக என்.சி.சி பொறுப்பு ஆசிரியர் ஜே.ஜான்ஸ்டானி வரவேற்றார். சரண- சாரணியர் பொறுப்பு ஆசிரியர் ச.இரமேஷ் நன்றி கூறினார். மக்கள் கருத்து மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.
நடிகர் கார்த்தி நடிப்பில் கடந்த மாதம் வெளியான படம் ‘தேவ்’. இந்தப் படம் கார்த்திக்கு தோல்வியை தந்தது. இதனையடுத்து தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகி வரும் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு ஆகிய இருவரும் இணைந்து தயாரித்து வருகின்றனர். படத்தின் கதை ஒரே இரவில் நடக்கும் சம்பவங்களின் அடிப்படையில் உருவாகி வருகிறதாகவும், கார்த்திக்கு ஜோடி கிடையாது எனவும் செய்திகள் கசிகின்றன. ஒரே ஷெட்யூலில் இந்தப் படத்தை முடிக்கத் திட்டமிட்டு, அதன்படி படமாக்கி வருகின்றனர். இம்மாத நடுப்பகுதியில் ஒட்டுமொத்தப் படப்பிடிப்பும் நிறைவடையும் எனத் தெரிகிறது. எனவே, படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட முடிவு செய்துள்ளனர். நாளை (புதன்கிழமை) ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், படத்துக்கு ‘கைதி’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் கார்த்தி, பாக்யராஜ் கண்ணன் இயக்கும் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளதாக தெரிய வருகிறது. அந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக தெலுங்கு நடிகை ராஷ்மிகா நடிக்கவுள்ளார். Related Posts tamil cinema news Post a Comment Popular Posts `` அப்பாவின் பெருமைக்கு உலகப்புகழோ அல்லது அவரது இசையோ காரணம் அல்ல`` - ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதிஜாவின் உருக்குமான பேச்சு ஸ்லம்டாக் மில்லினியர் திரைப்படம் ஆஸ்கர் விருது பெற்று 10 ஆண்டுகள் நிறைவு செய்ததையொட்டி மும்பை தராவி பகுதியில் நிகழ்ச்சி ஒன்று நடந்தது. ஏ.ஆர்... விமர்சகர்களுக்கு தக்க பதிலடி கொடுத்த ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதிஜா அண்மையில் மும்பையில் இடம்பெற்ற '10 இயர்ஸ் ஆஃப் ஸ்லம் டாக் மில்லினியர்' விழாவில் ஏ.ஆர். ரஹ்மான் அவரின் மூத்த மகள் கதிஜா கலந்துக... புத்திசாலித்தனமாக கூட்டணி சேர்க்கும் ரஜினி சட்ட மற்ற தேர்தல் எப்போது நடந்தாலும் நான் தயாராக இருக்கிறேன் என்று ரஜினி கூறியதற்கு பிறகு அவரது வேட்பாளர்கள் குறித்த விஷயங்களில் பிசியா... கமல் கட்சியின் முதல் வெற்றி இதுவே கமல் கட்சி தமிழகத்தில் மூன்றாம் இடத்தில் இருக்கிறது. மேலும் பொள்ளாச்சி, மத்திய சென்னை, தென் சென்னை, வடசென்னை, ஸ்ரீபெரும்புதூர், சேலம், ... சற்று முன் உறுதியான பிக் பாஸ் 3-யின் 16 பிரபலங்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு தான் அதிக வரவேற்பு கிடைக்கும். தமிழில் அடுத்த சீசன் எப்போது தொடங்கும் என்று அனைவரும... ரஜினியா? கமலா? மக்கள் யாரை தேர்வு செய்வார்கள் இம்முறை நடந்த லோக் சாப தேர்தலில் மத்தியில் பாஜகவும் தமிழகத்தில் திமுகவும் வெற்றியைருசித்துள்ளது. அடுத்த நடக்கவிருக்கும் பாராளுமன்ற தேர்... கமலை அசிங்கப்படுத்திய பாஜக! கமலின் பதில் என்ன? கமல் ஹாசன் மோடியின் பதவி ஏற்பு விழாவிற்கு அழைத்ததாக கூறப்பட்டது முழுவதும் மிக பெரிய பொய் என்று தெரியவந்துள்ளது. மேலும், இந்த விஷயத்தை B... சிம்புவின் திடீர் பேங்காக் பயணம் - காரணம் வெளியாகியது தமிழ் சினிமாவின் மிக முக்கியமான நடிகர் சிம்பு. சிம்பு தனது அடுத்த படமாக மாநாடு படத்தில் நடிக்க ரெடியாகி வருகின்றார், ஆனால், இந்த படத்தின் ப... ஏமாற்றிய வேட்பாளர்களுக்கு கமலின் தண்டனை மக்கள் நீதி மய்யம் கட்சியின் தேர்தல் முடிவுகள் அந்த கட்சிக்கு சாதகமாக தான் வந்துள்ளது. வெறும் 14 மதங்களான கட்சிக்கு இந்த வரவேற்பு கிடைக...
டிவைன் ஜாண்சன் படம் என்றாலே அனைவருக்குமே ஒரு திருவிழா போன்று தான். படத்தில் ஆக்‌ஷன் காட்சிகளுக்கு பஞ்சம் என்று ஒன்று இருக்காது. அவர் நடிப்பில் உலகம் முழுவதும் வெளியாகியிருக்கும் படம் தான் ஸ்கை ஸ்கிராப்பர். ராணுவ அதிகாரியான டிவைன் ஜான்சன் ஒரு குண்டு வெடிப்பில் தன்னுடைய ஒரு காலை இழக்கிறார். இதனால் அவர் செக்யூரிட்டி அதிகாரியாக வேலை பார்க்க நேரிடுகிறது. உலகத்திலேயே 250 மாடிக்கும் மிக அதிகமான உயரம் கொண்ட ஒரு கட்டிடத்தில் செக்யூரிட்டி அதிகாரியாக பணியாற்றுகிறார். அதே கட்டிடத்தில் குடும்பங்கள் தங்க ஏதுவாக அந்த கட்டிடம் இருக்கிறதா என்பதற்காக அக்கட்டிடத்தில் சோதனைக்காக ஒரு அப்பார்ட்மெண்டில் அவர் குடும்பத்துடன் குடியேறுகிறார். செக்யூரிட்டி அதிகாரி என்பதால் எல்லா மாடிகளுக்கும் செல்லக் கூடிய ஆக்சஸ் கார்டு அவருக்கு வழங்கப்படுகிறது. இந்நிலையில், வில்லன் கோரெஸ் போத்தா அந்த கட்டிடத்தில் புகுந்து, 96வது தளத்தில் தீ வைக்கிறான். மேலும் அந்த கட்டிடத்தில் வைக்கப்பட்டுள்ள அனைத்து பாதுகாப்பு வசதிகளையும் நிறுத்திவிடுகிறான். அந்த கட்டிடத்தின் தீயை நம்ம ஹீரோ டிவைன் ஜான்சன் எப்படி அணைத்தார்?. தன்னுடைய மனைவியையும் இரண்டு குழந்தைகளையும் காப்பாற்றினாரா? என்பதே மீதிக்கதை. படத்தில் மிக மிக ரசிக்கக் கூடியவர் டிவைன் ஜான்சன். மிக நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். ஆக்‌ஷன் காட்சிகளும், பிரம்மாண்ட கட்டிடத்தின் அமைப்புகளும் நம்மை வியப்பின் உச்சத்திற்கே சென்று விடுகிறது. ஒரு கட்டிடத்தில் இருந்து மற்றொரு கட்டிடத்திற்கு அவர் தாவி செல்லும் போது நம் அனைவரையும் ஒரு நிமிடம் திகைக்க வைத்து விடுகிறார் நாயகன்.
பொழிப்பு (மு வரதராசன்): ஒருவன் அறநெறியில் இல்வாழ்க்கையைச் செலுத்தி வாழ்வானானால், அத்தகையவன் வேறு நெறியில் சென்று பெறத்தக்கது என்ன? மணக்குடவர் உரை: இல்வாழ்க்கையாகிய நிலையை அறநெறியிலே செலுத்தவல்லவனாயின் புறநெறியாகிய தவத்திற் போய்ப் பெறுவது யாதோ? மேல் சீலனாய்க் கொடுக்க வேண்டுமென்றார் அவ்வாறு செய்யின் தவப்பயனும் இதுதானே தருமென்றார். பரிமேலழகர் உரை: இல்வாழ்க்கை அறத்தாற்றின் ஆற்றின் - ஒருவன் இல் வாழ்க்கையை அறத்தின் வழியே செலுத்துவன் ஆயின்; புறத்தாற்றின் போஒய்ப் பெறுவது எவன் - அவன் அதற்குப் புறம் ஆகிய நெறியில் போய்ப் பெறும் பயன் யாது? ('அறத்தாறு' என்பது பழி அஞ்சிப் பகுத்து உண்டலும், அன்பு உடைமையும் என மேற்சொல்லிய ஆறு. 'புறத்தாறு' இல்லை விட்டு வனத்துச் செல்லும் நிலை. அந்நிலையின் இது பயனுடைத்து என்பார் போஒய்ப் பெறுவது எவன் என்றார்.) கா சுப்பிரமணியம் பிள்ளை உரை: ஒருவன் தனது இல்வாழ்க்கையை அறவழியிலே நடத்துவானாயின், அதற்குப் புறம்பாகிய நெறியிலே போய்ப் பெறும் பயன் யாதோ? (செவ்விய இல்வாழ்க்கையே எல்லாப் பயனையும் கொடுக்கும் என்பது கருத்து.) பொருள்கோள் வரிஅமைப்பு: அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றில் போஒய்ப் பெறுவது எவன்? பதவுரை: அறத்து=அறத்தினது; ஆற்றின்-வழியில், நெறியின்கண்; இல்வாழ்க்கை-இல்லாளோடு கூடிய வாழ்க்கை; ஆற்றின்-செய்தால், நடாத்தினால், செலுத்தவல்லவனாயின்; புறத்து-புறமாகிய; ஆற்றில்-நெறியின்கண்; போஒய்-சென்று; பெறுவது-அடைவது; எவன்-யாது? அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின்: இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்: மணக்குடவர்: இல்வாழ்க்கையாகிய நிலையை அறநெறியிலே செலுத்தவல்லவனாயின்; பரிதி: தருமத்தின் மேலாகிய இல்லறத்தின்வழி நிற்பது அன்றியிலே; பரிமேலழகர்: ஒருவன் இல் வாழ்க்கையை அறத்தின் வழியே செலுத்துவன் ஆயின்; பரிமேலழகர் குறிப்புரை: 'அறத்தாறு' என்பது பழி அஞ்சிப் பகுத்து உண்டலும், அன்பு உடைமையும் என மேற்சொல்லிய ஆறு. [மேற்சொல்லிய 'ஆறு' - இவ்வதிகாரத்தின் நான்காம் குறளிலும் ஐந்தாம் குறளிலும் கூறப்பட்டவை] 'இல்வாழ்க்கையை அறத்தின் வழியே செலுத்துவன் ஆயின்' என்று பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர். இன்றைய ஆசிரியர்கள் 'அறத்தின்படி குடும்பம் நடத்தினால்', 'ஒருவன் இல்வாழ்க்கையை அறநெறியில் நடத்துவானாயின்', 'ஒருவன் தர்மநெறி தவறாமல் மனைவி மக்களோடு இல்வாழ்க்கை நடத்தினால்', 'அறவழியில் இல்லற வாழ்க்கையை நடத்தினால்' என்றபடி உரை தந்தனர். அறவழியில் இல்லற வாழ்க்கை நடத்தப்படுமாயின் என்பது இப்பகுதியின் பொருள். புறத்தாற்றில் போஒய்ப் பெறுவது எவன்?: இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்: மணக்குடவர்: புறநெறியாகிய தவத்திற் போய்ப் பெறுவது யாதோ? [புறநெறியாகிய தவம் - இல்வாழ்க்கைக்குப் புறம் ஆதலின் தவத்தைப் புறநெறி என்றார்] மணக்குடவர் குறிப்புரை: மேல் சீலனாய்க் கொடுக்க வேண்டுமென்றார் அவ்வாறு செய்யின் தவப்பயனும் இதுதானே தருமென்றார். [சீலன் - எளியன்] பரிதி: பாவத்தின் வழியிலே நின்று என்னபேறு பெற்றான் என்றவாறு. [பாவவழி - அறநெறிக்குப் புறம்பான பாவநெறி] பரிமேலழகர்: அவன் அதற்குப் புறம் ஆகிய நெறியில் போய்ப் பெறும் பயன் யாது? பரிமேலழகர் குறிப்புரை: 'புறத்தாறு' இல்லை விட்டு வனத்துச் செல்லும் நிலை. அந்நிலையின் இது பயனுடைத்து என்பார், போஒய்ப் பெறுவது எவன் என்றார். மணக்குடவர் புறத்தாறு என்பதை தவநெறி என்று குறிப்பிட்டு 'அங்குப் பெறும் பயனும் இதுதானே' என்று உரை தருகிறார். பரிதி புறவழியைப் பாவவழி என்று கொண்டு 'அவ்வழியிலே என்ன பேறு பெற்றான்?' என்கிறார். பரிமேலழகர் புறத்தாறு என்பது வனத்துச் செல்லும் நிலை அதாவது வனப்பிரத்தன் நிலை என்று கொண்டு 'அதனினும் இல்லறம் பயனுடைத்து' என்று விளக்கினார். இன்றைய ஆசிரியர்கள் 'அதனைச் துறந்துபோய்ப் பெறுவது என்ன?', 'அவன் புறநெறியாகிய துறவால் எய்துவது யாது?', 'துறவறத்துக்குப் போய் அடையக்கூடிய நன்மை என்ன இருக்கிறது? ஒன்றுமில்லை', 'வேறு வழிகளில் சென்று அடைய வேண்டியது ஒன்றும் இல்லை (இங்கு வேறு வழி என்பது துறவற நெறியை)' என்றபடி பொருள் உரைத்தனர். புறம்பாகிய நெறியிலே போய்ப் பெறும் பயன் என்ன? என்பது இப்பகுதியின் பொருள். நிறையுரை: அறவழியில் இல்லற வாழ்க்கை நடத்தப்படுமாயின், புறத்தாற்றில் போய்ப் பெறும் பயன் என்ன? என்பது பாடலின் பொருள். புறத்தாறு குறிப்பது என்ன? பண்புடைய குடும்பவாழ்க்கையே மேம்பாடான வாழ்வுநெறியாம். அறநெறி தவறாது இல்வாழ்க்கையை ஒருவன் நடத்தி வருவானானால், அவன் வேறு நெறியிலே போய் என்ன பெறப்போகிறான்? ஆற்றின் என்ற சொல் இப்பாடலில் இரண்டு இடங்களில் வேறுவேறு பொருளில் ஆளப்பட்டது. அறத்துஆற்றின், புறத்தாற்றில் என்பனவற்றிலுள்ள ஆற்றின் என்பதற்கு வழியில் அல்லது நெறியில் என்பது பொருள். இல்வாழ்க்கைஆற்றின் என்பதிலுள்ள ஆற்றின் என்பதற்குச் செய்தால் அல்லது நடத்தினால் என்பது பொருள். அறத்தாற்றின் என்பது இல்வாழ்வான் அறவழியில் பொருளீட்டி அறவழியில் இன்பங்களைத் துய்ப்பதைச் சொல்வது. இவ்வாழ்வில் அறம் செழிக்க வள்ளுவர் சில நன்னெறிகளை இவ்வதிகாரத்திலேயே வகுத்துச் சொல்லியுள்ளார்: இல்வாழ்வான் துறந்தவர்களுக்கும் இல்லாதார்க்கும் வாழ்விழந்தவர்களுக்கும் துணையாய் இருப்பான்; தன்குடியில் இறந்தோர், வழிபடு தெய்வம், விருந்து, சுற்றம், தான் எனப்பட்ட ஐந்திடத்தினையும் போற்றிக் காப்பான்; பழிக்குப் பயந்தும் பகுத்துண்டும் வாழ்வான்; அறமும் அன்புமுடைய வாழ்க்கை வாழ்வான்; இவனுக்கு இறையருள் இயல்பாகக் கிடைக்கும் என்பன. இவ்வாறாக அறநெறியில் இல்வாழ்க்கை நடத்தும் ஒருவன் இங்கேயே 'பேரின்பம்' பெறுவான். இல்லறத்தில் இருந்துகொண்டே அறநெறி ஆற்றி இறையருள் பெறமுடியும் என்பது ஒரு கொள்கை. துறவால் மட்டுமே அதை அடையமுடியும் என்பது மற்றொரு கோட்பாடு. இரண்டில் எது சிறந்தது என்ற வினா வரும்போது இல்லறத்தையே வள்ளுவர் மிகவும் போற்றுகிறார். துறவு வழியில் என்ன கிடைக்கப்போகிறது என்று சற்று ஏளனத்தோடேயே இங்கு கேட்கிறார் அவர். இல்லறத்திற்கு புறம்பான துறவு வாழ்க்கை என்ன பயன் நல்கும்? துறவு வழிச்சொல்வோர், 'வீடு' எனப்பட்ட, இறையோடு இணையும், பேரின்ப நிலையைப் பெறும் நோக்கோடு தவநெறி தழுவுவர். குடும்ப, சமூக சிக்கல்களின் அழுத்தம் தாங்க முடியாமல் இல்லறவாழ்வில் வெறுப்புக் கொண்டு துறவறம் மேற்கொள்வோரும் உண்டு. துறவறத்தில் உடல் வருத்தித் துன்புற்று, தனது வீடுபேற்று நிலை ஒன்றையே குறிக்கொண்டு, சமுதாயத்திற்கு ஒருவகையிலும் உதவாமல் துறவோர் வாழ்வு கழிகிறது; இவர்களுள் சிலர் கூடாவொழுக்கத்திற்கு ஆளாகியும் போவர்; இறுதியில் 'விடுதலை வாழ்வு' எய்தினாரா என்பதும் தெரியப்போவதில்லை. எனவே நோன்பு ஒன்றனையே மேற்கொண்டொழுகுவாரை வள்ளுவம் ஏற்பதில்லை. இல்லறமே நல்லறம் என்கிறது இக்குறள். துறவு வாழ்வை விடவும் இல்வாழ்வே ஏற்றமுடையது; செவ்விய முறையில் குடும்பம் நடத்தினால் அதனினும்‌ பெரும்பயன்‌ தரும் வாழ்வுமுறை பிறிதொன்றில்லை என்கிறது இது. அறவழியிலே செலுத்தப்படும் இல்வாழ்க்கை புற வழியாகிய துறவுடன் ஒப்பு நோக்கப்பட்டு இல்லற வாழ்வே துறவுநெறியினும் மேலானது எனத் துணிகிறது. இப்பாடல் தவிர்த்து இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான் முயல்வாருள் எல்லாம் தலை (47 பொருள்: இயல்பான இல்வாழ்க்கை வாழ்பவன் என்று சொல்லப்படுபவன் மேலான வாழ்வு பெறவேண்டுமென்று முயற்சி செய்கின்றவர்கள் எல்லாருள்ளும் முதன்மையானவன்), ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை நோற்பாரின் நோன்மை உடைத்து (48 பொருள்: பிறரை நெறியில் நடத்தித் தானும் அறநெறி பிறழாது ஒழுகுவானது இல்வாழ்க்கை, தவம் செய்வார் நிலையினைவிட ஆற்றல் மிக்கது) ஆகிய பின்வரும் இவ்வதிகாரத்துப் பாடல்களும் இல்வாழ்வையும் துறவு வாழ்க்கையையும் ஒப்பிட்டு இல்வாழ்க்கையே மேலானது என்பதை நிலைநாட்டும். தலைப்பட்டார் தீரத் துறந்தார் மயங்கி வலைப்பட்டார் மற்றை யவர் (துறவு 348 பொருள்: பற்றினை முழுதும் விட்டவரே துறவு கைகூடியவராவர்; மற்றவர்கள் அறியாமையால் துன்பவலையுள் அகப்பட்டவராவர்) எனப் பிறிதோரிடத்தில் குறள் கூறியது இப்பாடலுடன் முரணுகிறதே என்று சிலர் வினவுவர். இவர்கள் தலைப்பட்டார் என்ற சொல்லுக்குத் துறவு கைகூடியவராவர் என்பதல்லாமல் வீட்டினை யடைந்தவராவர் எனப் பொருள் கொள்பவர்கள். எனவே இக்குறள் முரண்பட்ட உயர்வு நவிற்சியுரையல்ல. 'புறத்தாற்றின் போஒய்ப் பெறுவ தெவன்' என்னும் பகுதியில் காணப்படும் அளபெடையில் 'அறியாமையால் வீழ்தல்!' என்னும் பொருளும் 'அந்தோ! போய்ப் பெறுவதென்ன?' என்னும் இரக்கமும் ஒலிப்பதாகத் திரு வி க கருத்துரைப்பார். 'புறத்தாறு' என்ற சொல்லாட்சியும், இல்லறம் இருக்கும்போது புற நெறிகள் எதற்கு என்ற வினாவும், 'போஒய்' என்பதிலுள்ள ஓகார ஓசையும் 'அங்கு போய் என்னத்தைப் பெறப்போகிறாய்?' என்ற ஓர் இகழ்ச்சிக் குறிப்பை வெளிப்படுத்துகிறது. 'புறத்தாறு' குறிப்பது என்ன? 'புறத்தாறு' என்ற சொல்லுக்குப் புறநெறியாகிய தவம், பாவத்தின் வழி, (இல்வாழ்க்கைக்குப்) புறம் ஆகிய நெறி, அதர்மமான வழி, வேறு நெறி, தவநெறி, இல்வாழ்க்கைக்குப் புறம்பான பிரமச்சரியம் முதலிய நெறிகள், அறமல்லாத நெறிகள், குடும்பத்தைத் துறந்த வழி, புறநெறியாகிய துறவு, வேறு வழிகள், இல்வாழ்வு அல்லாத பிறவழிகள், இல்வாழ்க்கைக்குப் புறம்பாகிய நெறி, மறம், துறவற நெறி, துறவறம், துறவு முதலிய பிற வாழ்க்கை முறை, இல்லறவாழ்க்கைக்குப் புறம்பாகிய துறவு நெறி, துறவற வாழ்க்கை, துறவு நெறி என்றபடி உரையாசிரியர்கள் பொருள் கூறினர். மணக்குடவர் புறத்தாறு என்பதற்குப் புறநெறியாகிய தவம் என்று பொருள் கூறுவதால் அதைத் துறவுநெறி என்று அவர் குறிப்பிடுகிறார் என அறியலாம். அடுத்து வந்த பரிதி புறத்தாறு என்பதற்குப் 'பாவத்தின் வழி' என்று பொருள் கூறுகிறார். பின்வந்த பரிமேலழகர் புறத்தாறு என்பதற்கு 'இல்லை விட்டு வனத்துச் செல்லும் நிலை' என்கிறார். இல்லை விட்டு வனத்துச் செல்லும் நிலை என்பது வடவரது நான்கு வாழ்வுநிலைகளில் (பிரம்மசரியம், கிரகஸ்தம், வானப்பிரஸ்தம், சந்நியாசம்) மூன்றாவதான வானப்பிரத்தம் ஆகும். இவ்விதமாக புறத்தாறு என்றதற்கு 'இல்லறத்திற்குப் புறம்பான துறவுநெறி', 'அறத்திற்குப் புறம்பான தீயநெறி', 'புறத்தே அமைந்த வானப்பிரத்தநிலை அதாவது காடுறை வாழ்க்கை நிலை' என்ற மூவகையான மாறுபாடான விளக்கங்கள் காணப்பெறுகின்றன. வ சுப மாணிக்கம் புறத்தாறு என்பது இளமைத் துறவைக் குறிப்பதாகக் கொண்டு இத்துறவு நெறியை இயற்கைக்குப் 'புறத்தாறு' என்பார். 'துறவே மறுமை நலமடையும் வழி' என்று சமண, புத்த, வைதிக சமயங்கள் துறவுக்கு முதன்மை தந்து துறவறத்தினால் மட்டுமே மாந்தர் 'வீடு' என்னும் மேலான நிலையை அடைய முடியும் என்னும். துறவு வாழ்வு நம் மண் சார்ந்ததல்ல; இங்குள்ள மரபுப்படி துறவறம் எனத் தனியே ஒரு வாழ்வு முறை இல்லை. இல்லறத்தில் வாழ்ந்து வளரும் நிலையே துறவும் தவமும் ஆகும். உலகவாழ்க்கையின் நோக்கம் தன் கடனும் பிறர் நலமும் பேணுவதாம். மனையறமே மக்களுக்கு மாண்பை வழங்கும். இல்வாழ்வான் அறவாழ்வில் எய்தும் நிறைவையும் அதனால் அவன் பெறும் இன்பத்தையும் கண்கூடாகக் காணமுடியும். நன்னெறியில் அமைந்த இல்வாழ்வே பேரின்பம் பயப்பதுதான் என்பது வள்ளுவம். அறநெறி பின்பற்றிய இல்வாழ்க்கையில் பெறமுடியாத எதனையும் துறவு வாழ்க்கையில் பெற முடியாது என்பது வள்ளுவரின் துணிபாகும். அப்பிற நெறியிற்சென்று காணும் பயனை அறவழி ஒழுகினால் இல்லறத்திலேயே பெறலாம். இதனால்தான் 'அறம் எனப்பட்டதே இல்வாழ்க்கை' என்று உறுதியாகக் கூறினார் அவர். எப்படியேனும், இக்காலச் சூழலில் துறவு என்ற வாழ்வு நிலை ஒன்று இல்லை என்னும் அளவு அது பெரிதும் அருகி விட்டது. புறத்தாறு என்பதற்கு இல்வாழ்க்கைக்குப் புறமாகிய நெறி அதாவது துறவுநெறி என்பது பொருள். அறவழியில் இல்லற வாழ்க்கை நடத்தப்படுமாயின் அதற்குப் புறம்பாகிய நெறியிலே போய்ப் பெறும் பயன் என்ன? என்பது இக்குறட்கருத்து.
சிறிலங்கா இராணுவத்தின் 55 ஆவது டிவிசன் படையணியின் பின்தளப் பகுதியை தமிழீழ விடுதலைப் புலிகளின் சிறப்பு அணிகள் ஊடறுத்து தாக்கியுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக கொழும்பு ஊடகத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள சாலையின் தென்பகுதியில் கடுமையான சமர் நடைபெற்றது . விடுதலைப் புலிகளின் அணிகள் அலை அலையாக ஊடறுத்து தாக்குதலை நடத்தியுள்ளர். 55 ஆவது படையணியின் பின்னணி நேற்று வெள்ளிக்கிழமை அதிகாலை நிலைகளுக்குள் ஊடுருவிய விடுதலைப் புலிகள் பெருமெடுப்பிலான தாக்குதல்களை நடத்தியுள்ளனர். சாலைப் பகுதியில் 55 மற்றும் 58 ஆவது படையணிகள் இணைப்பை ஏற்படுத்தியிருந்த புள்ளியை மையப்படுத்தியே விடுதலைப் புலிகளின் தாக்குதல் நடைபெற்றது. இத்தாக்குதலில் இரு தரப்பிலும் ஏற்பட்ட சேதங்கள் குறித்தான தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை . அது தொடர்பான தகவல்கள் பின்னர் அறியத்தரப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது . !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! ஐக்கிய நாடுகள் சபையின் குழுவில் மூத்த மனித உரிமை ஆலோசகர் இடம்பெறுவதனை சிறிலங்கா அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளதாக நீதித்துறை பணிப்பாளர் மொகான் பீரீஸ் மனித உரிமைகள் ஆணையாளரிடம் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்டுகின்றது. இது தொடர்பாக அவர் மேலும் தெரிய வருவதாவது: மனித உரிமை மீறல்களில் ஈடுபடுபவர்களை தண்டிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்கு சிறிலங்கா அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. அனைத்துக்கட்சி குழுவின் செயற்பாடுகளை முதன்மைப்படுத்தி வருவதுடன், ஐக்கிய நாடுகள் சபையின் குழுவில் மூத்த மனித உரிமை ஆலோசகர் இடம்பெறுவதை சிறிலங்கா அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் பீரீஸ் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையிடம் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது . !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! இலங்கையில், வன்னிப் பகுதியில் சிக்குண்டுள்ள மக்களை அமெரிக்க பசுபிக் கட் டளை அணியின் உதவியுடன் வெளியேற்றுவதற்கான அனுமதி அளிக்கும் சூழல் வரும் வரை, இரண்டு தரப்புகளும் சம்மதம் தெரிவிக்கும் வரை அந்தச் செயற்பாட்டில் நாம் ஈடுபடமுடியாது .” இவ்வாறு தெரிவித்திருக்கின்றார் தெற்காசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் துணைச் செயலாளர் றிச்சார்ட் பவுச்சர். பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு எந்தெந்த உதவிகளை எங்களால் செய்ய முடியுமோ அவற்றைச் செய்வதற்கு முயற்சிப்போம் என்றும் அவர் கூறினார். போர்ப் பிரதேசத்தில் சிக்குண்டுள்ள மக்களை அமெரிக்கப் பசுபிக் கட்டளை அணியின் உதவியுடன் வெளியேற்றி இலங்கை அரசிடம் ஒப்படைக்கத் திட்டமிடப்பட்டிருப்பதாக செய்திகள் வெளிவந்தது தெரிந்ததே . துணைச் செயலாளர் றிச்சர்ட் பவுச்சர் நேற்று நடத்திய தொலைபேசியூடான செய்தியாளர் மாநாட்டில் மேற்படி விடயம் குறித்துக் கேட்கப்பட்டது. அப்போதே அவர் அத்தகைய ஒரு செயற்பாட்டுக்கு அனுமதியளிக்கும் சூழல் ஒன்று உருவாகும் வரை மக்களை அப்புறப்படுத்தும் விடயத்தில் அமெரிக்கா ஈடுபட முடியாது என்று சொன்னார். சிக்குண்டுள்ள பொதுமக்களை முன்னர் குறிப்பிட்ட திட்டத்தின் பிரகாரம் வெளியேற்றுவதற்கு இரண்டு தரப்பபுக்களும் அனுமதிக்க வேண்டும் என்றும் றிச்சர்ட் பவுச்சர் குறிப்பிட்டார். வன்னியில் உள்ள நிலைமை குறித்து ஆராய்ந்து எந்தெந்த வகைகளில் அப்பகுதி மக்களுக்கு உதவ முடியும் என்ற சாத்தியக் கூறுகளை அடையாளம் காண எமது அதிகாரிகள் சிலரை அனுப்புகின்றோம். அப்பகுதியில் அவலப்படும் பொதுமக்களுக்கு எந்தெந்த உதவி செய்யமுடியுமோ அதைச்செய்ய முயல்வோம் என்றும் துணைச் செயலாளர் கூறினார். இலங்கை அரசு தமிழ் மக்களுக்கு சம உரிமைகளை கொடுத்து அவர்களைக் கௌரவத்துடன் நடத்துவதற்கு ஏற்பாடு செய்வது அவசியம். இத்தகைய சூழ் நிலையில் விடுதலைப்புலிகள் பொது மக்களை தொடர்ந்தும் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பது மக்களுக்கு மேலும் சிரமத்தையே கொடுக்கும் என்றும் மேலும் தெரிவித்துள்ளார் !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! வவுனியா பிரதேசத்தில் உள்ள அரசாங்க வங்கியொன்றின் முகாமையாளர் மற்றும் பணியாளரைக் கடத்தி மூன்று கோடி ரூபா கப்பமாக பெற்றுக் கொள்ள முயற்சித்த இரண்டு பொலிஸ் புலனாய்வு அதிகாரிகள் உள்ளிட்ட குழுவினர் கைது செய்யப்பட்டுள்ளனர். கருணா குழுவைச் சேர்ந்தவர்கள் என்ற போர்வையில் குறித்த பொலிஸ் அதிகாரிகள் குழு கப்பம் பெற்றுக்கொள்ள முயற்சி மேற்கொண்டுள்ளதாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது. குறித்த பொலிஸ் அதிகாரிகளுடன் மேலும் இரண்டு பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தக் கப்பம் கோரல் நடவடிக்கையுடன் உயர் பொலிஸ் அதிகாரியொருவருக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! இந்திய மருத்துவ குழுவொன்று எதிர்வரும் திங்கட்கிழமை இலங்கை வரவுள்ளது. வன்னியில் காயமடைந்து திருகோணமலை வரும் பொதுமக்களுக்கு சிகிச்சை மற்றும் மருத்துவ உதவிகளை வழங்கும் வகையிலேயே இந்த குழு இலங்கை வருகின்றது. புல்மோட்டை வைத்தியசாலையில் அவசர மருத்துவ பிரிவை அமைக்கும் நோக்கிலேயே இந்த மருத்துவ குழு இலங்கை வருவதாக இந்தியத் தூதுரக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இலங்கை அரசாங்கத்துடன் ஏற்படுத்தப்பட்ட இணக்கப்பாட்டின் அடிப்படையிலேயே இலங்கை வரும் இக்குழுவினர் மருத்துவ சேவைகளை வழங்கவுள்ளனர். இந்த மருத்துவ குழுவில் அனுபவம் வாய்ந்த 8 நிபுணர்களும் மற்றும் சத்திர சிகிச்சை வல்லுனர்களும் சுகாதார உத்தியோகத்தர்கள் மற்றும் தொழில்நுட்ப அதிகாரிகளும் இடம்பெறுகின்றனர். தேவையான மருந்து பொருட்களையும் இந்தக் குழுவினர் எடுத்து வரவுள்ளனர். இதேவேளை, 70 மில்லியன் ரூபா பெறுமதியான மருந்து பொருட்கள் மற்றும் சாதனங்களையும் இந்த குழுவினர், இலங்கை சுகாதார அமைச்சிடம் கையளிக்கவுள்ளனர். !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! சிறிலங்காவின் நிதி நெருக்கடியை குறைப்பதற்கு ஏதுவாக 2 பில்லியன் டொலர்களை வழங்குவதற்கு உலக நிதி அமைப்பு இணக்கம் தெரிவித்துள்ளதாக அந்நாட்டின் நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: உலகில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு உலக நிதி அமைப்பு உதவிகளை மேற்கொண்டு வருகின்றது. இதன் அடிப்படையில் சிறிலங்காவுக்கு 2 பில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதற்கு அது இணக்கம் தெரிவித்துள்ளது என்றார் அவர !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக் காலத்தின் போது 43 டொலர்களுக்கு மசகு எண்ணெய் கொள்வனவு செய்யப்பட்டு ஒரு லீற்றர் பெற்றோல் 75 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டது . ஆனால், இன்று 29 டொலர்களுக்கு மசகு எண்ணெய் இறக்குமதி செய்யப்படுகின்ற போதிலும் பெற்றோல் ஒரு லீற்றர் 120 ரூபாவுக்கே விற்பனை செய்யப்படுகின்றது. அரசாங்கம் ஏன் மக்களுக்கு இவ்வாறான அநீதியை இழைக்கின்றது என்று ஐக்கிய தேசிய கட்சி எம் .பி. ரவி கருணாநாயக்க நேற்று சபையில் கேள்வி எழுப்பினார் !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! நாட்டின் பிரதான இரண்டு கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சிகளும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு பண உதவி வழங்கியதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது . ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான ஆளும் கட்சி விடுதலைப் புலிகளுக்கு இரகசியமாக 700 மில்லியன் ரூபாவினை வழங்கியதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. விடுதலைப் புலிகளுக்கு பணம் வழங்கப்பட்ட விதம் குறித்து மங்கள சமரவீரவும் ஸ்ரீபதி சூரியாரச்சியும் அம்பலப்படுத்தியுள்ளதாக ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். இதேவேளை ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக் காலத்தில் திறைசேரியிலிருந்து விடுதலைப் புலிகளுக்கு பணம் வழங்கப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி அமைச்சர் தினேஸ் குணவர்தனா தெரிவித்துள்ளார். அரச நிதிநிர்வாக அமைப்பினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கையில் ஐக்கிய தேசியக் கட்சி விடுதலைப் புலிகளுக்கு பணம் வழங்கியுள்ளமை அம்பலப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். !!!!!!!!!!!!!!!!!!!!! வன்னிலிருந்து இடம்பெயர்ந்து வந்த இளைஞர்கள் படையினரால் கைது செய்யப்பட்டு சேனபுர புனர்வாழ்வு முகாமில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். படையினரால் கைது செய்யப்பட்ட 16 இளைஞர்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டு வந்தனர். பின்னர் இவர்கள் அனைவரும் வவுனியா நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டனர். ஆறுபேருக்கு விடுதலைப் புலிகளுடன் நேரடித் தொடர்பிருப்பதாக நீதிமன்றத்தில் காவல்துறையினர் தெரிவித்ததையடுத்து 6 பேர் பொலநறுவை மாவட்டம் வெலிகந்த சேனபுர புனர்வாழ்வு நிலையத்திற்கு அனுப்பு வவுனியா மாவட்ட நீதிபதி ஏ.ஜி அலெக்ஸ்ராஜா உத்தரவிட்டார். ஏனைய பத்துப்பேரையும் விடுதலை செய்யுமாறும், அவர்களை வவுனியா நலன்புரி நிலையங்களில் தங்கியிருக்கும் பெற்றோருடன் இணைக்குமாறும் காவல்துறையினருக்கு நீதிபதி உத்தரவிட்டார். !!!!!!!!!!!!!!!!!!!!!!!!! சிறீலங்கா அரசினால் பயங்கரவாதச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு ஒரு வருடத்திற்கும் மேலாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள சண்டே ரைஸ்ம் பத்திரிகையின் பத்தி எழுத்தாளர் ஊடகவியலாளர் ஜே. எஸ். திஸ்ஸநாயம் விடுதலை செய்யப்பட வேண்டும் என, உலகின் முன்னணி ஊடக மற்றும் மனித உரிமைகள் அமைப்புக்கள் கோரிக்கை விடுத்துள்ளன. 9 அமைப்புக்களின் பிரதிநிதிகள் நேற்று (வெள்ளிக்கிழமை) சிறீலங்கா அரசிடம் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ள போதிலும், அரச தரப்பில் இருந்து இதுவரை எந்தவித பதிலும் வழங்கப்படவில்ல அனைத்துலக மன்னிப்புச்சபை, எல்லைகளற்ற ஊடகவியலாளர் அமைப்பு, ஊடகவியலாளர்களைப் பாதுகாக்கும் கூட்டமைப்பு , அனைத்துலக ஊடக சம்மேளனம் போன்ற அமைப்புக்களை உள்ளடக்கிய ஊடக, மற்றும் மனித உரிமை அமைப்புக்களே இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளன. விடுதலைப் புலிகளுக்கு எதிரான சிறீலங்கா படைகளின் தாக்குதலை விமர்சித்து பத்தி எழுதிய திஸ்ஸநாயம் தொடர்ந்தும் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், அவர் பார்வை மற்றும் உடல் நலக்குறைவினால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இந்த அமைப்புக்கள் சுட்டிக்காட்டியுள்ளன . !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! வன்னியிலிருந்து இடம்பெயர்ந்த மக்களுக்கான ஐ.நா.வின் உதவித் திட்டங்கள் அரசாங்கத்தின் ஊடாகவே முன்னெடுக்கப்படுமென்று அமைச்சரும் பாதுகாப்பு ஊடகப் பேச்சாளருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில் கூறியதாவது; உள்ளூரில் இடம்பெயர்ந்தோருக்கான நலன்புரி கிராமங்கள் அரசாங்கத்தினால் சிறந்த முறையில் நிர்வகிக்கப்படுகின்றதென்பதை இதனை நேரடியாக பார்வையிட்டவர்கள் கண்டுகொண்டுள்ளனர். இவர்களுக்கான அடிப்படைத் தேவைகளை அரசு மேற்கொண்டுள்ளது. இடம்பெயர்ந்து கல்வியை இடை நடுவில் நிறுத்தியவர்களுக்காக பாடசாலைகள் உட்பட சுகாதார வசதிகள் சிறந்த முறையில் முன்னெடுக்கப்படுகின்றது. குடும்பங்களுடன் வந்து தங்குவதற்கான தனித்தனி வீடுகள் அமைக்கும் வேலைகளை அரசு விரிவுபடுத்தி வருகின்றது. ஐ.நா.வின் மனித உரிமைகளுக்கான இணைச் செயலாளர் நாயகம் ஜோன் ஹோம்ஸ் இந்த நலன்புரி கிராமங்களுக்குச் சென்று நேரடியாகப் பார்வையிட்டு திருப்தியடைந்துள்ளார் . இது எமக்கு மகிழ்ச்சியளிக்கின்றது. இதேபோல் பல்வேறு நாடுகளின் தூதுவர்கள் அங்கு சென்று சூழ்நிலைகளை பார்வையிட்டு திருப்தி தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ ஐ.நா. அமைப்புகள் முன்வந்துள்ளதையிட்டு நன்றி தெரிவிக்கின்றோம். இலங்கை இறைமையுள்ள நாடுகள் என்ற வகையிலும் மக்களுக்குத் தேவை எதுவென்பதை அரசாங்கம் தெரிந்து வைத்துள்ள நிலையில் இவர்களின் உதவிகள் அரசின் திட்டங்களுக்கே பங்களிக்க முடியும். இத் திட்டங்கள் அரசினால் முகாமைத்துவம் செய்யப்பட்டு உரிய முறையில் முன்னெடுக்கப்படும். கடந்த காலங்களில் சர்வதேச தொண்டர் நிறுவனங்கள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் நேரடியாகச் செயற்பட்டன. இதன் விளைவாக வன்னியில் நீர்த் தடாகம் மற்றும் உயர் தொழில்நுட்பத்துடன் கூடிய அச்சு இயந்திரங்களை படையினர் மீட்டதன் மூலம் காணக்கூடியதாகவிருந்தது . இதனை தவிர்ப்பதற்காகவே அரசு இந்நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அதுபோல் இந்நிறுவனங்கள் இலங்கைக்கு வழங்கும் நிதி, அவ்வமைப்பின் நாடுகளின் ஊழியர்கள் சம்பளம் மற்றும் புதிய தொழில்நுட்பம் போன்ற செயற்பாட்டின் காரணமாக 70 சதவீதமான நிதி திரும்பிச் செல்வதால் இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளோம் என்றும் அவர் தெரிவித்தார் . !!!!!!!!!!!!!! கடற்படைத் தளபதி வைஷ் அட்மிரல் வசந்த கர்ணகொட அண்மையில் அமெரிக்காவின் ஹவாய்த் தீவுக்கு விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார். ஹவாய்த்தீவிலுள்ள பசுபிக் பிராந்திய கடற்படைக் கட்டளைத் தளபதியின் அழைப்பையேற்றே அட்மிரல் வசந்த கர்ணகொட அங்கு விஜயம் செய்திருந்தார். இதன்போது அவர் பசுபிக் பிராந்திய கடற்படைத் தளபதி அட்மிரல் ரொபேர்ட் எவ் . வில்வாட்டைச் சந்தித்துப் பேசினார். இருதரப்பு உறவுகள், இலங்கையின் தற்போதைய பாதுகாப்பு நிலைவரங்கள் தொடர்பாகவும் இருவரும் கலந்துரையாடியதாகவும் தெரிவிக்கப்படுகிறது. !!!!!!!!!!!!!!! மன்னாரில் இளம் பெண் ஒருவரை சித்திரவதைக்குட்படுத்தி பாலியல் வல்லுறவு மேற்கொண்டதாக குற்றம் சாட்டப்பட்ட பாதுகாப்புத் தரப்பினர் பதினான்கு பேர் மீதான வழக்கு விசாரணை தற்காலிகமாக முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணை அநுராதபுரம் மேல் நீதிமன்ற நீதிபதி மகிந்த சமயவர்த்தன முன்னிலையில் நடைபெற்றபோது, சாட்சிகள் சாட்சியமளிக்க வராததன் காரணமாக வழக்கு விசாரணையை முடிவுக்கு கொண்டுவந்ததாக நீதிபதி தெரிவித்தார். இந்த வழக்கு விசாரணையுடன் தொடர்புடைய சாட்சிகள் எவரும் சாட்சியமளிக்க முன்வருவார்களானால் மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் எனவும் நீதிபதி மன்றில் தெரிவித்தார். கடற்படை மற்றும் பொலிஸாரைச் சேர்ந்த 14 பேர் மீது இந்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. 2001 ஆம் ஆண்டு மன்னார் நகரில் கைது செய்யப்பட்ட இளம் பெண்ணை விசாரணைக்கு கொண்டு சென்று இக் குற்றங்களை புரிந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பான வழக்கு விசாரணை முதலில் மன்னார் நீதிவான் நீதிமன்றத்தில் நடைபெற்றது . பின்னர் பாதுகாப்பு காரணங்களால் எதிரிகளின் வசதி கருதி அநுராதபுரம் மேல் நீதிமன்றத்துக்கு சட்டமா அதிபரால் மாற்றப்பட்டது. தற்போதைய போக்குவரவு பிரச்சினை மற்றும் பாதுகாப்புக் காரணங்களால் சாட்சிகள் மன்னாரில் இருந்து அநுராதபுரத்துக்கு சென்றுவர முடியாதிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. !!!!!!!!!!!!!! கிழக்கு மாகாண சபையை இம் மாகாணத்தில் வாழும் சகல இன மக்களுக்கும் சேவையாற்றும் உயிரோட்டமுள்ள அத்தியாவசியமான சகல அதிகாரங்களும் கொண்ட மாகாண சபையாக மாற்ற வேண்டும் . தற்போது கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள் கதிரைகளை சூடேற்றும் கைங்கரியத்தை மட்டுமே செய்ய முடிகிறது. இவ்வாறு கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், இளைஞர் காங்கிரஸின் தேசிய அமைப்பாளருமான ஏ.எம்.ஜெமீல் கல்முனை மாநகர வைத்தியசாலை அடிக்கல் நாட்டு விழாவில் கௌரவ அதிதியாகக் கலந்து கொணடு உரையாற்றும் போது தெரிவித்தார் . அவர் அங்கு மேலும் கூறுகையில்; ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மூலம் அரசியல் முகவரியை பெற்று பின் இக் கட்சியில் இருந்து பிரிந்து சென்ற அனைவரையும் எதிர்வரும் தேர்தலில் ஓரம் கட்டுவதே எமது நோக்கமாகும். இன்று கிழக்கு மாகாண சபைக்கு உரிய அதிகாரங்கள் வழங்கப்படாமையால் அது பொம்மைகளின் காட்சிக் கூடமாகவே செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது.இதனை அரசாங்கம் உடனடியாக உயிரோட்டமுள்ள மக்களுக்கு சேவையாற்றக் கூடிய சபையாக மாற்றவேண்டும். கிழக்கு மாகாண சபைக்கு தேவையான அதிகாரங்களை வழங்குங்கள் என முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளரும் கிழக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவருமான பஷீர் சேகு தாவுத் தலைமையில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களாகிய நாங்கள் போராடி வருகின்றோம். எங்களை நம்பி வாக்களித்த கிழக்கு மாகாண மக்களுக்கு எதையாவது நாங்கள் செய்ய வேண்டும். அபிவிருத்தி என்ற போர்வையில் மக்களை ஏமாற்றுவதனை தவிர்த்து மக்களின் அத்தியாவசியமான தேவைகளை அடையாளம் கண்டு நிறைவு செய்து கொடுக்க வேண்டியது எமது கடமையாகும். அந்த வகையில் கடற்கோள் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட கரையோர பிரதேச மக்களின் நன்மை கருதி நிர்மாணிக்கப்படவுள்ள இவ் வைத்தியசாலை மூலம் அனைவரும் சிறந்த பயன்களைப் பெற வேண்டும் என்று குறிப்பிட்டார். !!!!!!!!!!!!!!!!!! india !!!!!!!!!!!!!!!!!!!!!!!! இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை நிகழாமல் இருந்தாலும் கூட ஈழத் தமிழர்களுக்கு இந்திய அரசாங்கம் மிகப்பெரிய அளவில் முன்வந்து துணை நின்றிருக்காது என்று இந்திரா காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு பிரிவின் பொதுச் செயலாளராக பதவி வகித்து அண்மையில் விலகிய தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார். !!!!!!!!!!!!!!!!!!!! úTôÄv R¥V¥ NmTYm ùRôPoTô] ¿§T§ c¡ÚxQô®u A±dûLûV HtL Ø¥VôÕ Guß YZdL±OoLs A±®jÕs[]o. ¿§Uu\l ×\dL¦lûTj ùRôPoYRô GuTÕ Ï±jÕ Ø¥Ü ùNnV YZdL±OoL°u áhÓ SPY¥dûLd ÏÝ áhPm ùNuû]«p Cuß SûPùTß¡\Õ. ùNuû] EVo ¿§Uu\j§p ©lWY¬ 19-p SûPùTt\ úUôRp NmTYm ùRôPoTôL ®NôWûQ SPjR ¿§T§ c¡ÚxQô Lªh¥ûV EfN ¿§Uu\m ¨VªjRÕ. ¿§T§ c¡ÚxQô R]Õ A±dûLûV EfN ¿§Uu\j§p ®VôZd¡ZûU NUol©jRôo. CÕ Ï±jÕ RªrSôÓ YZdL±Oo NeLj RûXYo Gv.©WTôLWu á±VRôYÕ: R¥V¥ NmTYm ùRôPoTôL R]Õ ®NôWûQ YWm×dÏ EhThÓ ¿§T§ c¡ÚxQô A±dûLûVf NUol©dL®pûX. G]úY, AYWÕ A±dûLûV HtL Ø¥VôÕ. ¿§Uu\l ×\dL¦l×l úTôWôhPjûRj ùRôPoYRô GuTÕ Ï±jÕ Cuß Ø¥Ü ùNnVlTÓm’ Gu\ôo. ùNuû] EVo ¿§Uu\ YZdL±OoLs NeLj RûXYo Bo.£.TôpL]LWôw á±VRôYÕ: ©lWY¬ 19 NmTYeLs ϱjÕ ®NôWûQ SPjR UhÓúU ¿§T§ c¡ÚxQô ¨VªdLlThPôo. B]ôp, ARtÏ Øu]RôL SûPùTt\ NmTYeLs ùRôPoTôL R]Õ A±dûL«p AYo ùR¬®jÕs[ôo. úTôÄ^ôo Esú[ ÖûZYRtÏ AàU§ A°jRÕ Vôo, R¥V¥dÏ EjRW®hPÕ Vôo úTôu\ûY Lªh¥«u ®NôWûQ YWmTôL ¨oQ«dLlThPÕ. B]ôp, CkR NmTYm ùRôPoTôL GkR úTôÄv A§Lô¬«u ùTVûWÙm c¡ÚxQô ϱl©hÓf ùNôpX®pûX. CkR A±dûL ùRôPoTôL YZdL±OoL°u áhÓ SPY¥dûLd ÏÝ áhPj§p ®Yô§lúTôm Gu\ôo. R¥V¥«p ùRôPo×ûPV úTôÄv A§Lô¬Lû[l T¦¿dLm ùNnVd úLô¬ YZdL±OoLs EVo ¿§Uu\m G§úW ùRôPo EiQô®WRj§p DÓThÓ YÚ¡u\]o. EiQô®WRl TkR#p úT£V YZdL±OoLÞdLô] NêL ¿§l úTWûYj RûXYo úL.TôÛ, “c ¡ÚxQô A±dûL êXm ¨VôVm ¡ûPdÏm Guß Sm©ú]ôm. B]ôp, ¨VôVm ¡ûPdL®pûX Guß ùR¬¡\Õ. EfN ¿§Uu\m úLhP úLs®LÞdÏ, CÕYûW LôYpÕû\ A§Lô¬Ls T§X°dL®pûX. AWÑ EiûUûV ê¥ Uû\d¡\Õ. SUÕ EQoÜLs U§dLlTP®pûX’ Gu\ôo. !!!!!!!!!!!!!!!!!!!!!!! «|RÛX p¿†ÛRL· Lyp RÛXYŸ ‡£UÖY[YÁ ÙRցPŸ LºPÁ SÛPTVQ• ÚU¼ ÙLցPÖŸ. CRÁ ‘Á ÙNÁÛ] ‡£•‘V ‡£UÖY[YÁ ÚS¼¿ LÖÛX TÖ.U.L. RÛXYŸ PÖePŸ WÖURÖÛN N‹‡†‰ BÚXÖNÛ] SP†‡]ÖŸ. ÙNÁÛ] ‡VÖLWÖV SL¡¥ E·[ ÙTÖjh R–² Y[Ÿop A\eLyPÛ[ A¨YXL†‡¥ C‹R BÚXÖNÛ] SÛPÙT¼\‰. ‘Á ˜R¥-AÛUoNŸ L£QÖŒ‡ÛV AYW‰ C¥X†‡¥ ‡£UÖY[YÁ N‹‡†‰ ÚTp]ÖŸ. C‹R N‹‡” 1 U‚ ÚSW• SÛPÙT¼\‰. C‰ T¼½ ‡£UÖY[YÂP• ÚLyP ÚTÖ‰ “C‰ U¡VÖÛR Œ–†RUÖ] N‹‡”” GÁ\ÖŸ. !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! இலங்கை படுகொலையை கண்டித்து அதிமுக வரும் 9ம் தேதி நடத்தும் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆதரவு தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இலங்கை தீவில் ஈழத் தமிழர்களை பாதுகாக்கவும், தமிழின படுகொலை நடத்தும் சிங்கள அரசின் அராஜகத்தை தடுக்க தவறியதோடு மட்டுமல்லாமல் அந்த அரசுக்கு ராணுவ ரீதியாக ஆயுதங்களும், உதவியும் வழங்கும் மத்திய அரசு மற்றும் அதற்கு துணை போகும் மாநில அரசுகளை கண்டித்தும் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா தலைமையில் வரும் 9ம் தேதி நடைபெற இருக்கும் உண்ணாநிலை அறப்போராட்டம், தாய் தமிழகத்துக்கு மக்கள் ஈழத் தமிழர்கள் படும் துன்பத்தில் கொந்தளிக்கும் வேதனையை வெளிப்படுத்தும் அறப்போராட்டமாகும். இந்த போராட்டத்திற்கு மதிமுக ஆதரவையும், வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கிறது. உண்ணாநிலை அறப்போராட்டம் நடைபெறும் அனைத்து இடங்களிலும் மதிமுகவினர் தங்களது ஆதரவினையும், போராட்டம் வெற்றிப் பெறுவதற்கான வாழ்த்துக்களையும் தெரிவிப்பர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! இலங்கை‌த் தமிழர்களுக்காக அ.‌தி.மு.க.பொது‌ச் செயல‌ர் ஜெயலலிதா உண்ணாவிரதம் இருப்பது காலம் கடந்த முயற்சி என்று பா.ம.க. ‌நிறுவன‌ர் ராமதாஸ் தெ‌‌ரி‌வி‌த்தா‌ர். ‘ரி-ஆர்-ரி’ (T.R.T) தமிழ் ஒலியின் இன்றய (15.03.09) செய்திகள் சென்னை தியாகராயநகரில் உள்ள பொங்குதமிழ் வளர்ச்சி அறக்கட்டளை அலுவலகத்தில் பா.ம.க நிறுவன தலைவர் ராமதாசை, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் நேற்று சந்தித்துப் பேசினார். இதை‌த் தொட‌‌ர்‌ந்து செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் பே‌சிய அவ‌ர்,” இலங்கையில் போர் நிறுத்தம் கோரி அ.தி.மு.க . பொதுச் செயலாளர் ஜெயலலிதா மேற்கொள்ள இருக்கும் உண்ணாநிலை போராட்டம் சற்று காலம் கடந்த நடவடிக்கைதான் என்ற போதிலும், வரவேற்கத்தக்க ஒன்றாகும். முல்லைத்தீவில் கொத்துக்கொத்தாக குண்டுகள் வீசப்படுகின்றன. மருத்துவ உதவி கிடைக்காமல் ஈழத் தமிழர்கள் தவிக்கின்றனர் . இந்த சூழலில் அவர்களுக்காக ஜெயலலிதா உண்ணாநிலை மேற்கொள்வது, அவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் ஒன்றாகும் ” என்றார். கூட்டணி தொடர்பாக ஜெயலலிதாவை சந்திக்கப் போவதாகவும் , முதலமைச்சர் கருணாநிதியை சந்திக்கப் போவதாகவும் மாறி, மாறி செய்திகள் வெளிவருகின்றனவே எ‌ன்று செ‌ய்‌தியாள‌ர்க‌ள் கே‌ட்டத‌ற்கு, இதுபோல யூகங்களின் அடிப்படையில் வெளியாகும் செய்திகளுக்கெல்லாம் பதில் கூற முடியாது எ‌ன்றா‌ர். பாராளுமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி அமைப்பது என்பது குறித்து பா.ம.க பொதுக்குழு விரைவில் கூடி முடிவெடுக்கும் எ‌ன்று‌ம் எந்த தேதியில் பொதுக்குழு கூடும் என்பது ஓரிரு நாட்களில் அறிவிக்கப்படும் . அதுவரை நாங்கள் எந்த தலைவரையும் சந்திக்க மாட்டோம் எ‌ன்று ராமதாஸ் மேலும் கூறினார். !!!!!!!!!!!!!!!!!!!!!!!!! .தி.மு.க கொள்கை விளக்க அணி செயலாளர் நாஞ்சில் சம்பத் மீது, இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதை‌த் தொட‌ர்‌ந்து அவரை கைது செ‌ய்ய திருப்பூர் போலீஸார் செ‌ன்னை வ‌ந்து‌ள்ளன‌ர். மார்ச் 1 ம் தேதி அனைத்து மாணவர் கூட்டமைப்பு சார்பில் திருப்பூரில் இலங்கைத் தமிழர் பாதுகாப்பு கருத்தரங்கு நடைபெற்றது. இதில் பேசிய நாஞ்சில் சம்பத், இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசியதாகக் கூறி திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் நே‌ற்று நள்ளிரவு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அவரை கைது செய்ய திருப்பூர் காவ‌ல்துறை‌யின‌ர் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். நாஞ்சில் சம்பத் சென்னையில் இருப்பதாகவும், அவரை கைது செய்ய திருப்பூர் காவ‌ல்துறை‌யின‌ர் சென்னைக்கு விரைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! தன்னிச்சியாக 24 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை காங்கிரஸ் அறிவித்ததை அடுத்து, அந்த கட்சியுடனான தங்களது கூட்டணி முறிந்துவிட்டதாக, சமாஜ்வாடி கட்சி அறிவித்துள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் மொத்தமுள்ள 80 மக்களவைத் தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 25 தொகுதிகளை கேட்டது. ஆனால் 17 தொகுதிகள் தருவதற்கு சமாஜ்வாடி கட்சி முன்வந்தது. இதனால் கூட்டணி பேச்சு வார்த்தையில் இழுபறி நீடித்து வந்தது. இந்நிலையில் 24 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை காங்கிரஸ் கட்சி தன்னிச்சையாக நேற்று முன்தினம் அறிவித்தது. அதில் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோரும் அடங்குவர். கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கும்போதே காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை அறிவித்தது சமாஜ்வாடி கட்சித் தலைவர்களுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியுடனான கூட்டணி முறிந்துவிட்டதாக, சமாஜ்வாடிக் கட்சி அறிவித்துள்ளது. இது குறித்து அக்கட்சி பொதுச் செயலாளர் அமர்சிங் நேற்று நிருபர்களிடம் கூறுகையில், எப்போது தன்னிச்சையாக வேட்பாளர்கள் பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டதோ அப்போதே கூட்டணியின் மரண சாசனம் எழுதப்பட்டுவிட்டது என்றார். எனினும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, அவரது மகன் ராகுல் ஆகியோரை எதிர்த்து தனது கட்சி வேட்பாளர்களை நிறுத்தாது என்று அவர் மேலும் குறிப்பிட்டார். இதற்கிடையே, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவாரை சமாஜ்வாடி கட்சி பொதுச் செயலாளர் அமர்சிங் நேற்று டெல்லியில் சந்தித்தார். அப்போது கூட்டணி குறித்து இருவரும் விவாதித்தனர். !!!!!!!!!!!!!!!!!!!! world !!!!!!!!!!!!!!!!!! ஜிம்பாப்வே தலைநகர் ஹராரேயின் புறநகர் பகுதியில் அந்நாட்டுப் பிரதமர் மோர்கன் ஸ்வன்கிரை சென்ற கார் விபத்துக்குள்ளானதில் அவர் படுகாயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹராரேயின் தெற்குப் பகுதியில் நடைபெற உள்ள பேரணியில் பங்கேற்பதற்காக பிரதமர் மோர்கன், தனது மனைவி சூசன், உதவியாளர் ஆகியோருடன் நேற்று காரில் சென்றார். அவ்வழியாக வந்த சரக்கு வாகனத்தின் மீது பிரதமரின் கார் எதிர்பாராத விதமாக மோதி விபத்துக்குள்ளானது . இதில் மோர்கனின் மனைவி சூசன் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய செய்தித் தொடர்பாளர் ஜேம்ஸ் மரிடாடி, பிரதமர் கோர்கன், அவரது உதவியாளர் ஆகியோர் உயிருக்கு எந்தவித பாதிப்பும் இல்லை எனக் கூறினார். எனினும் பிரதமரின் மனைவி சூசன் குறித்து அவர் எந்தத் தகவலும் வெளியிடவில்லை. !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! அமெரிக்க மருத்துவமனைகளில் இந்தியா உள்ளிட்ட அயல்நாட்டு செவிலியர்களை நியமிக்க அந்நாட்டு அதிபர் பராக் ஹுசைன் ஒபாமா எதிர்ப்புத் தெரிவித்துள்ளார் மருத்துவத்துறையில் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்கள் குறித்து வெள்ளை மாளிகையில் நடந்த விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய அதிபர் ஒபாமா, அமெரிக்காவில் செவிலியர்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், அயல்நாடுகளில் இருந்து செவிலியர்களை இறக்குமதி செய்வது நன்மை தராது . அதற்குப் பதிலாக அமெரிக்காவில் உள்ள செலிவியர்களுக்கு போதிய பயிற்சி அளித்து அவர்களைத் தரம் உயர்த்தி பற்றாக்குறையை போக்குவதே சிறந்த தீர்வாக இருக்கும் எனத் தெரிவித்தார். இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளில் இருந்து பயிற்சி பெற்ற செவிலியர்களுக்கு விசா வழங்கும் நடைமுறைகளை விரைவுபடுத்தி அவர்களுக்கு உடனடியாக விசா வழங்குவதற்கு வகை செய்யும் புதிய சட்டம் கடந்த வாரம் அமெரிக்க நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டது. இந்நிலையில், நடந்த விவாதத்தில் பேசிய ஒபாமா, அமெரிக்காவிலேயே ஏராளமான பெண்கள் செவிலியர் பணியை மேற்கொள்ளத் தயாராக இருப்பதாகவும், ஆனால் அரசுதான் அவர்களுக்கு உரிய பயிற்சிகளை அளித்து அவர்களை சிறந்த செவிலியர்களாக மாற்று நடவடிக்கையை எடுக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார். ஒபாமாவின் இந்த கருத்து காரணமாக இந்தியா, சீனா, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளில் இருந்து அமெரிக்கா சென்று பணியாற்றும் செவிலியர்களுக்கு பாதிப்பு ஏற்படக் கூடும் எனத் தெரிகிறது. !!!!!!!!!!!!!!!!!!! பெண்களுக்கெதிரான வன்முறைகளை முடிவுக்குக் கொண்டுவருமாறு மீண்டும் அழைப்பு விடுத்துள்ள ஐ .நா. செயலாளர் நாயகம் பான்கீமூன், உண்மையான ஆண்கள் பெண்களைத் துன்புறுத்தமாட்டார்கள் எனவும் தெரிவித்துள்ளார். நாளை கொண்டாடப்படவிருக்கும் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வொன்றிலேயே பான்கிமூன் இவ்வாறு தெரிவித்துள்ளார். பெண்களுக்கெதிரான வன்முறைகளின் தாக்கம் வார்த்தைகளால் விபரிக்க முடியாதவையாகவும் அளவிட முடியாதவையாகவும் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ள பான், பெண்கள் விட்டுக்கொடுக்கும் தன்மையைக் கொண்டவர்களாகவும் ஆண்கள் அடிக்கடி சண்டைக்குணம் கொண்டவர்களாகவும் காணப்படுவதாக தெரிவித்துள்ளார். மேலும் பெண்கள் எதிர்கால சந்ததியினரை உருவாக்குகிறார்கள். உலகின் பெரும்பாலான பகுதிகளில் அவர்கள் நாட்டிய பயிர்களே எமக்கு உணவாகிறது. எமது சமூகங்களை ஒன்றிணைக்கும் இழைநாராக பெண்கள் விளங்குகின்றனர். பெண்ளுக்கெதிரான வன்முறைகளை அனைவர் மீதும் நடத்தப்படும் தாக்குதல்களாகத் கருதவேண்டும். இவை எமது உயர்ந்த நாகரிகத்தின் அடித்தளத்தின் மீது நடத்தப்படும் தாக்குதல்களாகும். எனவே இவ்வாறான வன்முறைகள் வெறுக்கத்தக்கவையாகவும் ஐ.நா. சாசனத்திலுள்ள ஒவ்வொரு பிரிவுக்கும் எதிரானவையாகவும் உள்ளதாகத் தெரிவித்துள்ளார். உலகம் பூராகவும் ஐந்தில் ஒருபெண் பாலியல் பலாத்காரத்தினால் பாதிக்கப்படும் அதேவேளை , சில நாடுகளில் மூன்றில் ஒரு பெண் வீதம் அடித்து துன்புறுத்தல் அல்லது ஏனைய வகை துஷ்பிரயோகங்களை எதிர்கொள்வதாக புள்ளிவிபரங்கள் தெரிவித்ததையடுத்து “பெண்களுக்கெதிரான வன்முறைகளை முடிவுக்கு கொண்டுவர ஒன்றிணைவோம்‘ என்ற அழைப்புடன் கடந்த வருடம் பான் உலகளவிலான பிரசாரத்தை ஆரம்பித்திருந்தார். அண்மையில் கொங்கோ ஜனநாயகக் குடியரசுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த போது அங்கு துப்பாக்கி முனையில் 4 படைவீரர்களால் மிருகத்தனமான முறையில் துஷ்பிரயோகத்திற்குள்ளாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 18 வயது யுவதியொருவரை சந்தித்ததாக தெரிவித்த பான், இச்சம்பவத்தால் அப் பெண் உடல் ரீதியாக மட்டும் துன்புறுத்தப்படவில்லை, சமூகம் அப்பெண்ணை களங்கப்பட்டவளாக நோக்குவதால் மனதளவிலும் அப்பெண் பெரும் துன்பத்தை அனுபவிக்கிறார். வெட்கம் என்ற தவறான சிந்தனையால் ஈர்க்கப்பட்ட குறிப்பிட்ட பெண்ணின் குடும்பமும் சமூகம் தீண்டத்தகாதவளாக அவளை ஒதுக்கி வைக்கின்றதென தனது ஆதங்கத்தையும் கவலையையும் வெளிப்படுத்திய பான்கிமூன், “”வன்முறையினால் உண்டாகும் விளைவுகள் கண்ணுக்கெட்டாத தூரத்திற்கு அப்பாலும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இது மரணம், காயம் , மருத்துவ செலவீனம் மற்றும் வேலைவாய்ப்பு போன்றவற்றிற்கு வழிவகுக்கிறது. பெண்களுக்கெதிரான வன்முறை சிறியதாக இந்தாலும் அது பல பிரச்சினைகளை உருவாக்குகிறது‘ எனத் தெரிவித்துள்ளார் . எனவே “”இவ்வாறான துன்புறுத்தல்களுக்கெதிர?க ஆண்கள் கருத்துகளை வெளிப்படுத்த வேண்டியது அவசியமாகும். அதேவேளை, உண்மையான ஆண்கள் பெண்களைத் துன்புறுத்தமாட்டார்கள் என்ற கருத்தை ஆண்களின் மனங்களில் பதிய வைக்க வேண்டியதும் அவசியமாகும். மாற்றத்திற்கான தருணத்தை நாம் சந்தித்துள்ள இவ்வேளையில் பெண்களுக்கெதிரான வன்முறைகளை முடிவுக்கு கொண்டு வருவதற்கான சிறந்த ஒத்துழைப்புக்கு அனைவரிடமும் வேண்டுகோள்விடுக்கின்றேன்‘ என பான் தெரிவித்தார். !!!!!!!!!!!!!!!!!!!!!!!! லெபனானின் ஹிஸ்புல்லாஹ் இயக்கத்தின் அரசியல் பிரிவுடன் தாம் மீண்டும் தொடர்புகளை ஏற்படுத்தியிருப்பதாக பிரிட்டன் தெரிவிக்கின்றது. லெபனானின் அரசியல் நிலைவரங்கள் சாதகமான நிலைக்குத் திரும்பியதைத் தொடர்ந்தே இந் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சின் அதிகாரியொருவர் தெரிவித்தார். 10 மாதங்களுக்கு முன்னர் ஐக்கிய அரசாங்கமொன்றை அமைக்கும் உடன்படிக்கையொன்றில் கைச்சாத்திட்ட ஹிஸ்புல்லாஹ் இயக்கம் அரசாங்கத்துடன் இணைந்தது. ஈராக்கிலுள்ள போராளிகளுக்கு பயிற்சி வழங்கும் குற்றச்சாட்டில் ஹிஸ்புல்லாஹ்வின் இராணுவப் பிரிவை கடந்த வருடம் பிரிட்டிஷ் அரசாங்கம் தடைவிதிக்கப்பட்ட அமைப்புகளின் பட்டியலில் உள்ளடக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது. ஹிஸ்புல்லாஹ்வின் எம்.பி.க்கள் உட்பட அதன் அரசியல் பிரிவுடன் உத்தியோகபூர்வ மட்ட தொடர்புகளை ஏற்படுத்துவது குறித்து ஆலோசித்து வருவதாகத் தெரிவித்துள்ள பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் ஹிஸ்புல்லாஹ்வையும் உள்ளடக்கிய லெபனானின் ஐக்கிய அரசுக்கு தம்மால் முடிந்த ஆதரவை பிரிட்டன் வழங்குமெனத் தெரிவித்தார். மேலும், ஹிஸ்புல்லாஹ் இயக்கம் வன்முறைகளைக் கைவிட்டு ஐ.நா. பாதுகாப்புச் சபையின் தீர்மானத்திற்கு அமைய லெபனானின் அரசியலில் அவ் அமைப்பின் ஜனநாயக ரீதியிலான ஆக்கபூர்வமான பங்களிப்பை அதிகரிப்பதே எமது நோக்கமெனத் தெரிவித்துள்ளதுடன் ஹிஸ்புல்லாஹ்வின் இராணுவப் பிரிவுடன் பிரிட்டன் எவ்வித தொடர்பையும் ஏற்படுத்தாது எனத் தெரிவித்துள்ளார். !!!!!!!!!!!!!!!!! டார்பூர் பிராந்தியத்திலிருந்து உதவி அமைப்புகளை வெளியேற்றும் தீர்மானத்தை சூடான் மறுபரிசீலனை செய்ய வேண்டுமென ஐ.நா.பொதுச் செயலாளர் பான் கீ மூன் வலியுறுத்தியுள்ளார் . இத் தீர்மானம் சூடானில் மனிதாபிமான நடவடிக்கைகளுக்கு பாரிய ஆபத்தை ஏற்படுத்துமென பான் கீ மூன் தெரிவித்துள்ளார். சூடானிய ஜனாதிபதி ஒமர் அல் பஷீருக்கெதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்ததைத் தொடர்ந்தும் சூடானில் மனிதாபிமான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த உதவி அமைப்புகளை நாட்டைவிட்டு வெளியேறுமாறு ஜனாதிபதி பஷீர் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பில் ஐ.நா.வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; 13 உதவி அமைப்புகளை வெளியேற்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் இது அங்குள்ள மக்களுக்கு பாரிய அபாயத்தை தோற்றுவிக்கும். இவ் அமைப்புகள் டார்பூரிலுள்ள 47 இலட்சம் மக்களுக்கான உதவி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் சூடானிலுள்ள தமது அமைப்புகளின் பணியாளர்கள் மற்றும் சொத்துகளின் பாதுகாப்புத் தொடர்பிலும் கவலை வெளியிட்டுள்ள ஐ.நா.உபகரணங்கள், பணம் மற்றும் ஏனைய சொத்துகளை பறிமுதல் செய்வது ஏற்றுக்கொள்ள முடியாதது எனவும் தெரிவித்துள்ளது. டார்பூர் தொடர்பாக அங்குள்ள உதவி அமைப்புகளே சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு தகவல்கள் அனுப்பியுள்ளதாக சூடானிய அதிகாரிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர். ஆனால் இக்குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ள சூடானிலுள்ள வெளிநாட்டு உதவி அமைப்புகள் தாம் அங்கிருந்து வெளியேறினால் பல்லாயிரக்கணக்கான மக்களின் வாழ்வு சிக்கல் நிலைக்கு உள்ளாகுமெனவும் எச்சரித்துள்ளனர். இவ்விடயம் தொடர்பாக சூடான் ஜனாதிபதி பஷீர் தெரிவிக்கையில்; சூடானிலுள்ள இயற்கைவாயு , எண்ணை மற்றும் ஏனைய வளங்களை சுரண்டுவதற்காக சர்வதேச குற்றவியல் நீதிமன்றை ஒரு ஆயுதமாகப் பயன்படுத்துகின்றன. சூடான் காலனித்துவ ஆட்சிக்கு அடிபணியப் போவதில்லையென்ற காரணத்தினாலேயே பலரும் சூடானை இலக்குவைக்கக் காரணமாய் உள்ளது. நாம் கடவுளுக்கு மட்டுமே அடிபணிகின்றோமெனத் தெரிவித்தார் . பிடியாணை பிறப்பிக்கப்பட்ட பின்னர் தனது மக்கள் மத்தியில் முதற்தடவையாக உரையாற்றுகையிலேயே பஷீர் இவ்வாறு கூறினார். இதேவேளை இவர் உரையாற்றிய சமயம் “”மதத்தைப் பாதுகாக்க நாம் தயார்‘, “”அமெரிக்கா கீழே விழும்‘ என்ற கோஷங்களை மக்கள் தொடர்ந்து எழுப்பியிருந்தனர். சூடான் ஜனாதிபதி பஷீருக்கெதிரான பிடியாணையை அமெரிக்கா வரவேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. !!!!!!!!!!!!!!!!!!!!!! º] LPtTûP 60-m BiÓ ùLôiPôhPjÕdÏ BVjRUô¡ YÚ¡\Õ. CûR AkSôhÓ Tj§¬ûL Juß ùYs°d¡ZûU ùR¬®jÕs[Õ. º] LPtTûP«u 60-m BiÓ §]m HlWp 23-m úR§ ªLÜm ©WUôiPUôL ùLôiPôPlTPÜs[Õ. B]ôp CkR ùLôiPôhPm GeÏ SûPùT\Üs[Õ GuTÕ Ï±jÕ AWÑ RWl©p Gq®Rj RLYÛm CpûX. LPtTûP ùLôiPôhPj §]jRuß LPtTûP UôùTÚm §hPeLû[ A±®dLXôm Guß G§oTôodLlTÓ¡\Õ. Es Sôh¥p ùNôkR ùRô¯pÖhT ER®ÙPu ®Uô]m Rôe¡ LlTûX Y¥YûUlTÕ Utßm ùY° SôÓL°p CÚkÕ A§ SÅ] ®Uô]m Rôe¡ LôlTpLû[ YôeÏYÕ Ï±jÕ A±®dLlTPXôm Guß AkR Tj§¬ûL ùR¬®jÕs !!!!!!!!!!!!!!!!!!!!! அமெரிக்காவில் வேலையில்லாதோரின் எண்ணிக்கை கடந்த 25 வருடங்களில் இல்லாத அளவுக்கு அதிகமாக இருப்பதாக அமெரிக்க அரசாங்கம் வெளியிட்ட புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன. கடந்த மாதத்தில் ஆறரை லட்சம் பேர் வேலை இழந்துள்ளார்கள். இதனால் வேலையில்லாதோரின் மொத்த எண்ணிக்கை அரை வீதத்தால் அதிகரித்து 8.1 சதவீதத்தை எட்டியுள்ளது. சில்லறை விற்பனைத்துறை மற்றும் பொழுதுபோக்குத்துறை ஆகியவை உட்பட பல்வேறுபட்ட தொழிற்துறைகளில் வேலையிழப்பு ஏற்பட்டுள்ளது. தொழில்சார் நிபுணர்கள் சேவைகள், வணிக சேவைகள், தொழிற்சாலைகள் மற்றும் கட்டிட நிர்மாணத்துறை ஆகியவையே மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! Australia v South Africa ;,ilapyhd JLg;ngLj;jhl;lg;Nghl;bapy; Ml;lj;ij Muk;gpj;jAustralia mzp 89 Xtupy; 4 tpf;Nfl; ,og;gpw;f;F 303 Xl;lq;fSld; MLfpwJ
திடுக்கிடும் தலைப்புடன் ஒரு புதிய செய்தி வெளியாகிறது. ஆயுதங்களுக்காக உலகம் மேற்கொள்ளும் ஆண்டு செலவுத்தொகை 2 லட்சம் கோடி டாலர்களை கடந்துள்ளது. இந்த பட்டியலில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. பட்டியலில் அடுத்து உள்ள பத்து நாடுகளின் ஒட்டுமொத்த செலவீனத்தை விட அமெரிக்காவின் செலவீனம் அதிகமாக இருக்கிறது. அமெரிக்காவின் உளவுத்துறை செலவீனங்களையும், அணு ஆயுத பராமரிப்பு செலவீனங்களையும் சேர்த்து கணக்கிட்டால் வரும் தொகை மட்டுமே 1 லட்சம் கோடி டாலர்களை கடக்கும். இது மிக மிக அதிகமான தொகை ஆகும். மனித உழைப்பையும் அறிவையும் வீணடிக்கும் கடும் செயல். இன்னொரு செய்தி. சட்டவிரோத வரி ஏய்ப்புக்கு வழிவகுக்கும் நாடுகளில் குவிந்திருக்கும் செல்வத்தின் மதிப்பு 37 லட்சம் கோடி டாலர்களை கடந்திருப்பதாக ஒரு கணிப்பு வெளியாகியுள்ளது. பெரும் செல்வந்தர்கள், மனித வளத்தை சூறையாடிச் சேர்த்த செல்வம் இப்படிப்பட்ட நாடுகளில் பணமாகவும், தங்கமாகவும், வைப்பு நிதியாகவும் சேர்த்து வைக்கப்பட்டிருக்கும் மொத்த தொகையில் ஒரு சிறு பகுதி மட்டுமே. மேற்சொன்ன கணிப்பில் நிலம், விலை உயர்ந்த கலை பொருட்கள், நகைகள் போன்றவை உள்ளடங்காது. அவற்றையும் சேர்த்தால், கையளவு மனிதர்களிடம் குவிந்துள்ள செல்வத்தின் அளவு மிகக் கொடுமையானது. உலகின் முதல் 22 செல்வந்தர்கள் கையில் உள்ள சமூக வளத்தின் மதிப்பு, ஆப்ரிக்காவில் மொத்தம் உள்ள 3.25 கோடி பெண்களிடம் உள்ள ஒட்டுமொத்த செல்வத்தை விட அதிகம் ஆகும். உலகில் நிலவும் ஏழ்மை, பட்டினி மற்றும் எழுத்தறிவின்மை போன்ற சிக்கல்களுடைய அவல நிலைமை குறித்தும், கால நிலை மாற்ற பிரச்சனையால் எழும் அதிபயங்கர தாக்கங்கள் குறித்தும் தொடர்ந்து அறிக்கைகள் வந்து கொண்டே இருக்கின்றன. இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்காக செலவிடப்பட வேண்டிய நம்முடைய சமூக வளத்தின் பெரும் பகுதியை, ஆயுதங்களை குவிக்க செலவிடுவதுடன், வெளிநாடுகளில் பதுக்கியும் வைக்கிறார்கள். ஐக்கிய நாடுகள் சபையின் 17 நிலைத்த நீண்டகால வளர்ச்சிக் குறிக்கோள்களை – பட்டினியை ஒழித்து அமைதியை நிலைநாட்டும் இலக்கினை – எட்டுவதற்கு ஆண்டுக்கு 2.5 லட்சம் கோடி டாலர்கள் செலவிட வேண்டியுள்ளது. இப்போது இந்த குறிக்கோள்களை எட்டுவதற்கு மிகச் சிறிய தொகை மட்டுமே செலவிடப்படுகிறது. பெருந்தொற்றுக் காலத்திலும், அதன் பிறகு அதிகரித்து வரும் விலைவாசி உயர்வுக் காலத்திலும், இந்த செலவினங்களில் மென்மேலும் வெட்டு ஏற்படும். நாம் இந்தக் குறிக்கோள்களை விட்டு மென்மேலும் விலகிச் செல்வோம். மானுடத்தின் மிக முக்கியமான சிக்கலான பட்டினியை ஒழிக்கும் பாதையில் நாம் நெடுந்தொலைவு செல்லவேண்டியுள்ளது. (மக்கள் சீனம் தவிர. அங்கு 2021இல் கடும் ஏழ்மை ஒழிக்கப்பட்டுவிட்டது). உலக மக்களில் 300 கோடிபேர் ஏதோ ஒரு வித பட்டினியால் அவதிப்படுவதாக கணிக்கப்படுகிறது. விடுதலைக்கு பதிலாக ஆதிக்கம் மானுடத்தின் இந்த சிக்கல்களை தீர்க்கும் உலகு தழுவிய ஒரு சமூக – அரசியல் திட்டத்தை உருவாக்குவதற்கு பதிலாக, அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளான ஜி7 நாடுகளும், தங்களின் உலக ஆதிக்கத்தை நீடிப்பதற்கான உத்தியை நோக்கியே செல்கின்றன. சோவியத் ஒன்றியமும், கிழக்கு ஐரோப்பிய சோசலிச நாடுகளும் வீழ்ந்த 1991 ஆம் ஆண்டுக்கு பின், மூன்றாம் உலக நாடுகள் கடன் வலையில் சிக்க வைக்கப்பட்டதில் இருந்து இந்த ஆதிக்க போக்கு தொடங்கியது. இந்த ஆதிக்கம் கால வரம்பின்றித் தொடரும் என்றும், அமெரிக்காவுக்கு எதிரான ஒரு அணியின் வரலாறு முடிந்து போனது என்றும், அமெரிக்க அறிவுஜீவிகள் மார் தட்டினார்கள். ஆனால் அமெரிக்காவும், ஜி7 நாடுகளும் “உலக பயங்கரவாதத்திற்கு எதிரான போர்” என்ற பெயரில் எல்லை மீறி சென்றதாலும், (குறிப்பாக சட்டவிரோதமாக ஈராக் மீது 2003இல் போர் தொடுத்தது) 2007-08இல் ஏற்பட்ட பெரும் பொருளாதார நெருக்கடியின் காரணமாகவும், அந்நாடுகளின் ஆதிக்கம் நிலை குலைய துவங்கியது. அமெரிக்கா மற்றும் ஜி7 நாடுகளில் வறண்டு போன வங்கி அமைப்பிற்கு நிதியளிக்க இந்தியா, சீனா, இந்தோனேசியா போன்ற நாடுகளை அணுகின. அதனால், ஜி7 கூட்டமைப்பை மூடிவிட்டு, உலகளாவிய சட்ட-திட்டங்களை தீர்மானிப்பதை ஜி20 என்ற கூட்டமைப்பின் கீழ் கொண்டு வந்து, அதில் நிதி அளிக்கும் இந்த புதிய நாடுகளையும் சேர்க்க உறுதி அளித்தது. ஆனால் மேற்கத்திய வங்கிகள் மீண்டு வந்த பின்னர், ஜி20 ஒதுக்கப்பட்டு, முந்தைய ஜி 7 ஆதிக்கம் நிலைநாட்டப்பட்டது. இதர சக்திகளை எதிரியாக பார்க்காமல், மானுட சிக்கல்களை தீர்ப்பதில் கூட்டாளியாக பார்க்கலாம் என்ற முன்மொழிவை ஏற்க அமெரிக்கா மறுத்தது. இந்த கூட்டு சக்தியாக ஜி 20 அமைப்பில் பங்கு வகித்த சில நாடுகள் சேர்ந்து BRICS (பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்ரிக்கா) கூட்டமைப்பு 2009 இல் துவங்கப்பட்டது. இந்நாடுகள் ஒன்றிணைந்து, மேற்கத்திய நாடுகளால் கட்டுப்படுத்தப்படாத, ஐ.எம்.எஃப்-பின் சிக்கன அஜெண்டாவிற்கு அப்பாற்பட்ட, வளர்ச்சி திட்டங்களுக்கு வழி வகுக்கும் நிறுவன அமைப்பை ஏற்படுத்த முன் வந்தன. BRICS கூட்டமைப்பு துவங்கப்படுவதற்கு முன், ரஷ்யாவின் விளாடிமிர் புதின் (அதுவரை பல விஷயங்களில் மேற்கத்திய நாடுகளுடன் நெருங்கி இருந்தார்) முனிச் பாதுகாப்பு மாநாட்டில் பங்கேற்று ஒரு முக்கிய உரையாற்றினார். “ஒரு துருவ உலகம் என்றால் என்ன?” என புதின் கேட்டார். “இந்த வார்த்தையை எவ்வளவு அழகு படுத்தி காட்டினாலும், அதன் அர்த்தம் ஒரே அதிகார புள்ளி, ஒரே ஒரு ஆதிக்க மையம் மற்றும் ஒற்றை ஆண்டான்” என்பதுதான். அந்த ஒற்றை அதிகார புள்ளி என்பது அமெரிக்காவையே குறிக்கிறது என்று அனைவரும் அறிந்திருந்தனர். மேற்கத்திய நாடுகளின் “சர்வதேச உறவுகளில் அதீதமாக பயன்படுத்தப்படும் கட்டுக்கடங்காத தாக்குதல் ” குறித்து புதின் கடுமையாக விமர்சித்தார். மேலும் “சர்வதேச சட்டம்” மேற்கத்திய நாடுகளை அவை மேற்கொள்ளும் போர் குற்றங்களிலிருந்து பாதுகாப்பதை குறிப்பிட்டார். “யாரும் பாதுகாப்பாக உணர்வதில்லை. ஏனெனில் யாரும் சர்வதேச சட்டம் தங்களை பாதுக்காக்கும் அரண் என்பதாக உணரவில்லை. இப்படிப்பட்ட சூழல் ஆயுத குவியலை ஊக்குவிப்பதில் ஆச்சரியம் இல்லை”. அமெரிக்கா ஐரோப்பாவை சுற்றி ஏவுகணை வளையத்தை உருவாக்குவதை நிறுத்திவிட்டு, 2002இல் அது கைவிட்டுவிட்ட “அணு ஆயுத ஏவுகணைக்கு எதிரான ஒப்பந்த”-த்திற்கு திரும்பிச் செல்ல வேண்டும் என புதின் குறிப்பிட்டார். அன்றைய அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் இந்த முன்மொழிவை ஏற்க மறுத்தார். அச்சுறுத்தல்கள் 21ஆம் நூற்றாண்டில் தங்களின் ஆதிக்கத்தை நிலைநாட்ட அமெரிக்காவும் அதன் ஆதரவு நாடுகளும் எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டனர். லிபியாவின் மீது 2011 ஆம் ஆண்டு நேட்டோ முன்னெடுத்த தாக்குதல் மேற்கத்திய நாடுகள் தம் ஆதிக்கத்தை நிலைநாட்ட எடுத்த முன்னெடுப்புகளுக்கான குறியீடாக அமைந்தது. இதுவே தெற்கு சீன கடல் பகுதி முதல் கரீபிய கடல் பகுதி வரை உலகளாவிய நேட்டோ ஆதிக்கம் தொடர்பான வாதங்களுக்கு முன்னோட்டமாக அமைந்தது. 30 நாடுகள் மீதான பொருளாதார தடை விதிப்பு மூலம் அமெரிக்காவையும், அதன் கூட்டாளி நாடுகளையும் எதிர்ப்பவர்களை ஒழுங்கு படுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இது மட்டுமல்லாமல் ஐ.எம்.எஃப் அமைப்பின் புதுப்பிக்கப்பட்ட சிக்கன திட்டத்தின் காரணமாக, பல ஏழை நாடுகள் கொரோனா காலத்தில் கூட, தங்களுக்கு கடன் கொடுத்த செல்வச் செழிப்பு மிக்கவர்களுக்கு வழங்க வேண்டியிருந்த பணம், தங்கள் நாட்டு மக்களை காக்க சுகாதாரத்திற்கு மேற்கொண்ட செலவினை விடவும் அதிகம். 2018இல் “தீவிரவாதத்திற்கு எதிரான போர்” நிறைவுற்றதாக அமெரிக்கா அறிவித்தது, அதன் தேச பாதுகாப்பு உத்தியில், சீனாவும் ரஷ்யாவும் அடைந்துவரும் எழுச்சியே மிகப்பெரும் ஆபத்தாக குறிப்பிட்டது. அமெரிக்கா பாதுகாப்பு செயலாளர் ஜிம் மாட்டிஸ் அமெரிக்காவை “நெருங்கி வரும் எதிரி நாடுகளை” கட்டுப்படுத்துவது என்று வெளிப்படையாகவே பேசினார். சீனா மற்றும் ரஷ்யாவை இவ்வாறு தம் எதிரி நாடுகளாக குறிப்பிட்ட அவர், அமெரிக்காவின் மொத்த ஆதிக்கத்தையும் பயன்படுத்தி இந்நாடுகளை அடிபணிய வைப்பது என்று பேசினார். ஐரோப்பா மற்றும் ஆசியாவை சுற்றி அமெரிக்காவின் பல ராணுவ தளங்கள் (மொத்தம் 800) உள்ளதோடு, ஜெர்மனி முதல் ஜப்பான் வரை ரஷ்யா மற்றும் சீனாவை முன் நின்று தாக்கும் பல கூட்டாளி நாடுகளை அமெரிக்கா கொண்டிருக்கிறது. அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளி நாடுகளின் கடற்படைகள், “பயணிப்பதற்கான சுதந்திரம்” என்ற பெயரில் ரஷ்யா (ஆர்டிக் பகுதி) மற்றும் சீனாவிற்கு (தெற்கு சீன கடல் பகுதி) எதிராக மிக அச்சுறுத்தலான படைப் பயிற்சிகளில் ஈடுபட்டன. இப்படிப்பட்ட செயல்பாடுகளோடு, 2014 ஆம் ஆண்டில் அமெரிக்கா உக்ரைன் நாட்டின் அரசியலில் தலையிட்டதும், 2015இல் தைவானிற்கு பெருமளவு ஆயுதங்கள் அளித்ததும், ரஷ்யாவையும், சீனாவையும் மேலும் மிரட்டுவதாக அமைந்தது. மேலும் 2018இல் அமெரிக்கா தன்னிச்சையாக “இடைநிலை தூர அணு-ஆயுத சக்திகள்” ஒப்பந்தத்திலிருந்து விலகியதன் காரணமாக, சர்வதேச அணு-ஆயுத கட்டுப்பாட்டு கட்டமைப்பை நலியச் செய்தது. ரஷ்யாவுக்கும், சீனாவுக்கும் எதிரான போர்க்கள அணு ஆயுத உத்தியை அமெரிக்கா வகுத்துவருகிறது என்பதுதான் இந்த பின்வாங்கலின் வெளிப்பாடு. அமெரிக்காவின் தேச பாதுகாப்பு உக்தியில் சீனாவையும், ரஷ்யாவையும் கட்டுப்படுத்துவது பற்றி குறிப்பிட்டிருப்பதும், “இடைநிலை தூர அணு-ஆயுத சக்திகள்” ஒப்பந்தத்திலிருந்து விலகியதும், ரஷ்யாவுக்கும், சீனாவுக்கும் அமெரிக்காவால் உள்ள அச்சுறுத்தல் கற்பனையானது அல்ல என்பதை தெளிவாக்குகிறது. இதுவரை, ஆசிய பகுதியில் அமெரிக்காவின் நட்பு நாடுகளான தென் கொரியாவும், ஆஸ்திரேலியாவும் இடைநிலை தூர அணு-ஆயுதங்களை அனுமதிக்க தயாராக இல்லை. ஆனால் குவாம் மற்றும் ஒக்கினாவா-வில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களில் ஆயுதங்களை குவிக்க வாய்ப்பு உண்டு. பல ஆண்டுகளாக இவ்வாறு கட்டமைக்கப்பட்டு வரும் அமெரிக்க அச்சுறுத்தலை ரஷ்யா உணர்ந்ததன் விளைவாகவே உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதலை முன்னெடுக்கிறது. நேட்டோ அமைப்பில் உக்ரைன் சேர்ந்தாலும், இல்லாவிட்டாலும் அமெரிக்கா உக்ரேனில் அணு ஆயுதங்களை குவிக்க வாய்ப்பு உள்ளது என்ற கவலை எழுந்துள்ளது. உக்ரைனில் நடந்துவரும் போர் பற்றிய வாதங்களுக்கு பின் ஒரு முக்கியமான கேள்வி உள்ளது: இயற்கையாகவே யூரேசியா (ஆசிய-கிழக்கு ஐரோப்பிய) நாடுகள் நெருங்கி வரும் போக்கை அமெரிக்காவும் அதன் ஆதரவு நாடுகளும் அனுமதிக்குமா? இல்லையேல் இதை தடுக்க ஐரோப்பிய மற்றும் சில ஆசிய நாடுகளில் தலையிடும் முயற்சிகளை தொடருமா? ஐரோப்பிய நாடுகளை ஆங்கிலேய-அமெரிக்க-ஆர்டிக் கூட்டமைப்பினுள் கொண்டு வந்து, ஐரோப்பிய-ஆசிய நாடுகள் இணைப்பை, குறிப்பாக ரஷ்யா மற்றும் சீனா உடனான இணைப்பை தடுக்கும் அமெரிக்காவின் முயற்சியும் உக்ரைன் மீதான போரில் ஒரு பங்கு ஆற்றியுள்ளது என்பதை நிராகரிக்கவே முடியாது. இந்த நிலையில் மானுடத்தின் மிக முக்கிய சிக்கல்கள் கண்டுகொள்ளப் படாமல் போகின்றன. பட்டினியும் போர்களும் பூமியை வாட்டுகின்றன. அன்றாட வாழ்வின் நிதர்சன பிரச்சனைகளை தீர்ப்பதற்காகச் செல்ல வேண்டிய சமூக வளங்களோ, ராணுவ ஆதிக்கத்திலும் போர்களிலும் வீணடிக்கப் படுகின்றன. தமிழில்: அபிநவ் சூர்யா Posted in உலகம்Tagged அணு ஆயுதப் போர் அபிநவ் சூர்யா உக்ரைன் போர் ரஷ்யா விஜய் பிரசாத்Leave a comment 2022 ரஷ்ய – உக்ரைன் போர்:ஒரு பார்வை! Posted on March 28, 2022 March 26, 2022 by Editorial அன்வர் உசேன் ரஷ்யா- உக்ரைன் இடையிலான போர் உலகம் முழுவதும் பல விவாதங்களை உருவாக்கியுள்ளது. ஒரு புறம் புடின் இட்லருக்கு இணையாக விமர்சிக்கப்படுகிறார். இன்னொரு புறம் அவரது நடவடிக்கைகள் அனுதாபத்துடன் பார்க்கப்படுகின்றன. போர் என்பது எப்படியாக இருந்தாலும், எங்கே நடந்தாலும், அது மனித உயிர்களைப் பலி வாங்குகிறது. அரும்பாடுபட்டு உருவாக்கிய உற்பத்தி சாதனங்களும் வளங்களும் இமைப்பொழுதில் அழிக்கப்படுகின்றன. போரில் ஈடுபடும் தேசங்களில், உழைக்கும் மக்களே கடும் இழப்புக்கு ஆளாகின்றனர். இது வெற்றி பெற்ற, தோல்வி அடைந்த இரு தேச உழைப்பாளிகளுக்கும் பொருந்தும். ஆனால், சுரண்டும் வர்க்கங்கள் போர்களுக்கு ஆதரவான கருத்துக்களை கட்டமைப்பதில் தொடர்ந்து ஈடுபடுகிறார்கள். அவற்றில் இருந்து விலகி நின்று போர்களை ஆய்வுக்கு உட்படுத்திட வேண்டும். இப்போதைய சூழலில், நாம் ஒரு முக்கியமான உண்மையை கணக்கிலெடுப்பது அவசியம். சமீபத்தில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் 42% பேர் ரஷ்யாவை இன்னமும் அதுவொரு கம்யூனிஸ்ட் நாடு என்று எண்ணுவதாக தெரியவந்துள்ளது. இந்தியாவிலும் பலர் அவ்வாறு நினைக்க வாய்ப்பு உண்டு. ஆனால், இன்றைய ரஷ்யா ஒரு சோசலிச நாடு அல்ல. அங்கு நடக்கும் ஆட்சி முதலாளித்துவ ஆட்சியே. விளாடிமிர் புடின் அந்த முதலாளித்துவ நாட்டின் தலைவரே. வரலாற்று பின்னணி: 1917ம் ஆண்டு சோவியத் புரட்சி வெற்றியடைந்த பிறகு, வெவ்வேறு காலகட்டங்களில் அதனோடு 14 குடியரசுகள் இணைந்துகொண்டன. அவை: 1. உக்ரேனியா 2. பைலோரஷ்யா 3. உஸ்பெகிஸ்தான் 4. கஜகஸ்தான் 5. ஜார்ஜியா 6. அஜர்பைஜான் 7. லிதுவேனியா 8. மால்டோவா 9. லத்திவியா 10. எஸ்தோனியா 11. கிர்கிஸ்தான் 12. தஜிகிஸ்தான் 13. துர்க்மெனிஸ்தான் 14. அர்மீனியா இதுவே பின்னர் ‘சோவியத் ஒன்றியமாக’ அமைந்தது. ரஷ்ய மொழியோடு சேர்த்து, மேற்சொன்ன 14 தேசங்களின் மொழிகளும் அதிகாரப்பூர்வ மொழிகளாக அங்கீகரிக்கப்பட்டன. 15 தேசிய இனங்களை உள்ளடக்கியிருந்ததால் அவ்வப்பொழுது சில முரண்பாடுகள் ஏற்பட்டாலும், பொதுவாக, சோவியத் குடி மக்கள் எனும் அடையாளம் உருவானது. மேலும், சோவியத் யூனியனின் அரசியல் சட்டம் சுயநிர்ணய உரிமையை உள்ளடக்கியிருந்தது. இதன் பொருள் என்னவெனில், எந்த ஒரு குடியரசும் தாம் விரும்பினால் ஒன்றியத்திலிருந்து பிரிந்து செல்லலாம். இந்த உரிமையை உருவாக்க லெனினும், ஸ்டாலினும் கடுமையாக பாடுபட்டனர். இந்த பிரச்சனையில் லெனினுக்கும், ஜெர்மன் கம்யூனிஸ்டு ரோசா லக்சம்பர்குக்கும் இடையே கடும் விவாதங்கள் நடைபெற்றன. தேசிய இனப்பிரச்சனைகளில் கம்யூனிஸ்டுகளின் நிலையை புரிந்து கொள்ள முயல்பவர்களுக்கு லெனின்-ரோசா லக்சம்பர்க் விவாதங்கள் ஒரு புதையல் எனில் மிகை அல்ல. சோசலிச சமூக அமைப்பின் நன்மைகளான வேகமான தொழில் வளர்ச்சி/ விவசாய முன்னேற்றம்/ இலவச கல்வி மற்றும் மருத்துவம்/ உழைக்கும் மக்களின் உரிமைகள் அனைத்தையும் இந்த 14 குடியரசுகளும் பெற்றன. எனினும், 1970களில் சோவியத் ஒன்றியத்தில் அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி தேக்கமுற்றது. 1980களில் முதலாளித்துவ உலகுடன் ஒப்பிடும் பொழுது அது பின் தங்கியிருந்தது. மின்னணு புரட்சி/ கணிணி மயம் என முதலாளித்துவம் தனது உற்பத்தி சக்திகளை வேகமாக வளர்த்தெடுத்தது. இதனால், கிட்டத்தட்ட ஒரே சமயத்தில் சோவியத் ஒன்றியம் இரு சவால்களை சந்தித்தது. ஒன்று, அதன் பொருளாதாரம் கடுமையாக பின்னடைவை எதிர் கொண்டது. இன்னொருபுறம், சோசலிச ஜனநாயகம் சிதைவுகளுக்கு உள்ளானது. ஏகாதிபத்தியமும் தனது தொடர் தாக்குதல்களை பல முனைகளில் முன்னெடுத்தது. இந்தச் சூழலில் சோசலிசம் பின்னடைவை சந்திப்பதற்கு சற்று முன்னதாக லிதுவேனியா/லத்திவியா/எஸ்தோனியா ஆகிய மூன்று குடியரசுகளும் பிரிந்து போயின. சோசலிசம் பின்னடைவை சந்தித்த பொழுது, அனைத்து குடியரசுகளும் சோவியத் யூனியனிலிருந்து பிரிந்து, தம்மை தனி சுதந்திர தேசங்களாக அறிவித்து கொண்டன. இதில் உக்ரைனும் அடங்கும். எனினும், இந்த நிகழ்வு வேறு ஒரு பிரச்சனையை உள்ளடக்கியிருந்தது. சோவியத் ஒன்றியம் இருந்த பொழுது, ரஷ்ய மக்கள் வேறு குடியரசுகளுக்கு புலம்பெயர்வதும், ஏனைய குடியரசு மக்கள் ரஷ்யாவுக்குள் வருவதும் பரவலாக நடந்தது. குறிப்பாக, இந்த பரஸ்பர புலம்பெயர்வு ரஷ்யா/உக்ரைன்/பைலோரஷ்யா ஆகிய மூன்று குடியரசுகளிடைய வலுவாக நடந்தது. இதன் விளைவுதான், இன்றைய உக்ரைனின் கிழக்கு பகுதியில் சுமார் 20% பேர் ரஷ்ய மொழி பேசுபவர்களாக உள்ளனர். வாக்குறுதி மீறிய ஏகாதிபத்தியம் அந்த சமயத்தில், சோவியத் ஒன்றியத்திலிருந்து பிரிந்த எந்த தேசத்தையும் நேட்டோ எனும் ராணுவ அமைப்புக்குள் இணைக்கக்கூடாது எனவும், ரஷ்யாவின் எல்லை நாடுகளில் நேட்டோ ராணுவத்தையோ அல்லது ஆயுதங்களையோ நிறுத்தக் கூடாது எனவும், ரஷ்யா அமெரிக்காவிடம் முன்வைத்தது. அன்றைய அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜேம்ஸ் பேக்கர் “ரஷ்யா இருக்கும் கிழக்கு நோக்கி ஒரு இன்ச் கூட நேட்டோ விரிவாக்கம் செய்யப்பட மாட்டாது” என வாக்குறுதி அளித்தார். ஆனால் ஏகாதிபத்தியத்தின் பல வாக்குறுதிகள் போல் இதுவும் காற்றில் விடப்பட்டது. நேட்டோ என்ற அமைப்பு இரண்டாம் உலகப்போர் முடிந்த ஆண்டுகளில் (1949) அமெரிக்கா/ பிரிட்டன்/ பெல்ஜியம்/ கனடா/ டென்மார்க்/ பிரான்ஸ்/ ஐஸ்லாந்து/ இத்தாலி/ லக்ஸம்பர்க்/ நெதர்லாந்து/ நார்வே/ போர்ச்சுகல் ஆகிய நாடுகள் சேர்ந்து உருவாக்கிய ராணுவ கூட்டமைப்பு ஆகும். அமெரிக்காவே இந்த அமைப்பின் தலைமை என்பதை கூறத் தேவையில்லை. பின்னர் 1950களில், நேட்டோவுடன் மேற்கு ஜெர்மனி/கிரீஸ் ஆகிய நாடுகளும் 1982இல் ஸ்பெயினும் இணைக்கப்பட்டன. கம்யூனிஸ்ட் நாடுகளிடமிருந்து தம்மை பாதுகாத்து கொள்ளவே இந்த கூட்டமைப்பு என்று நேட்டோ கூறியது. எனவே அதன் எதிர்வினையாக சோவியத் யூனியன்/ கிழக்கு ஜெர்மனி/ அல்பேனியா/ போலந்து/ செக்கோஸ்லேவாகியா/ ஹங்கேரி/ பல்கேரியா/ ருமேனியா ஆகிய சோசலிச நாடுகள் தங்களுக்குள் வார்சா ஒப்பந்த அமைப்பு எனும் கூட்டமைப்பை உருவாக்கின. எனினும், இந்தியா/எகிப்து/யுகோஸ்லவியா/கியூபா/வியட்நாம் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகள் இந்த இரு அமைப்பிலும் சேராமல் அணிசேரா நாடுகளின் அமைப்பை உருவாக்கின. 1991இல் சோவியத் யூனியனும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளும் சோசலிசத்தை கைவிட்ட பிறகு வார்சா ஒப்பந்த அமைப்பும் இல்லாமல் ஆகியது. நாளடைவில் அணிசேரா அமைப்பும் செயலிழந்துவிட்டது. ஆனால் நேட்டோ தொடர்ந்து விரிவடைந்தது. முதலாளித்துவ நாடுகள், குறிப்பாக அமெரிக்கா, தாங்கள்தான் உலக அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் மேலாதிக்கம் பெற வேண்டும் என்று கொண்டிருந்த பேராசையின் வெறிதான் இதற்கு அடிப்படையான காரணம். இந்த வெறியின் ராணுவ முகம்தான் நேட்டோ. எனவே, கிட்டத்தட்ட அனைத்து முன்னாள் சோசலிச நாடுகளையும் நேட்டோ தனது வளையத்திற்குள் கொண்டு வந்தது. பின்னர் எஸ்தோனியா/லத்திவியா/லிதுவேனியா ஆகிய முன்னாள் சோவியத் குடியரசுகளையும் சேர்த்தது. இறுதியாக 2008ஆம் ஆண்டு உக்ரைன் மற்றும் ஜார்ஜியாவை இணைக்கும் விருப்பத்தை வெளிப்படுத்தியது. அன்றிலிருந்துதான் ரஷ்யாவுக்கும் நேட்டோ நாடுகளுக்கும் ஆழமான பிரச்சனைகள் உருவாயின. இந்த பிரச்சனைகளின் மையமாக உக்ரைன் உருவெடுத்தது. நேட்டோவை நாங்கள் விரிவாக்கம் செய்ய மாட்டோம் என ஒரு போதும் உறுதி அளிக்கவில்லை என இப்பொழுது அமெரிக்கா கூறுகிறது. ஆனால் இது வடிகட்டிய பொய் ஆகும். 1991ஆம் ஆண்டே போலந்து நேட்டோவில் சேர விண்ணப்பித்தது. ஆனால் ஜெர்மனி இதனை கடுமையாக எதிர்த்தது. இது குறித்து அமெரிக்கா/ ஜெர்மனி/ பிரான்சு/பிரிட்டன் ஆகிய நாடுகளின் உயர் அதிகாரிகள் கலந்து கொண்ட கூட்டம் 06.03.1991இல் பான் நகரில் நடந்தது. அதில் ஜெர்மனியின் பிரதிநிதியான ஜுர்கன் ஸ்ரோபோக் கீழ்கண்டவாறு கூறினார்: “ஜெர்மனியின் எல்பே நதிக்கு அப்பால் நேட்டோவை விரிவாக்குவது இல்லை எனும் உறுதிமொழியை நாம் ரஷ்யாவுக்கு தந்துள்ளோம். எனவே போலந்தின் கோரிக்கையை நாம் ஏற்க இயலாது”. 1992ஆம் ஆண்டிலிருந்தே பல அமெரிக்க அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் நேட்டோவை கிழக்கே விரிவாக்கம் செய்வது ரஷ்யாவை போருக்கு தள்ளிவிடும் என எச்சரித்துள்ளனர். அந்த எச்சரிக்கைகளில் சில: 1997ஆம் ஆண்டு அமெரிக்காவின் முன்னாள் ராணுவ அமைச்சராக இருந்த ராபர்ட் மக்னமாரா சி.ஐ.ஏ. இயக்குநர் ஸ்டேன்ஸ் டர்னர் உட்பட 12க்கும் அதிகமானவர்கள் இணைந்து பில் கிளிண்டனுக்கு எழுதிய கடிதத்தில் “நேட்டோவை கிழக்கு நோக்கி விரிவாக்கம் செய்வது வரலாற்று பிழையாக மாறி விடும்” என எச்சரித்தனர். பனிப்போர் காலத்தில் அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கைகளை வகுத்தவர்களில் ஒருவரான ஜார்ஜ் கேனன் 1990களிலேயே கீழ்கண்டவாறு கூறுகிறார்: “கிழக்கு பகுதியில் நேட்டோவை விரிவாக்கம் செய்வது பனிப்போரின் பிந்தைய காலகட்டத்தின் மிகப்பெரிய தவறான கொள்கையாகும். இது பல விரும்பத்தகாத விளைவுகளை உருவாக்கும். அமெரிக்க-ரஷ்யா உறவை சீர்குலைத்துவிடும். ரஷ்யா நிரந்தர எதிரியாக ஆகிவிடும்” ரஷ்ய விவகாரங்கள் குறித்த ஆய்வாளர் ஸ்டீபன் கொஹேன் 2014ஆம் ஆண்டு கூறினார்: “நாம் நேட்டோவை ரஷ்யாவை நோக்கி விரிவாக்கம் செய்வது என்பது பிரச்சனையை ராணுவமயமாக்கிவிடும். ரஷ்யா பின்வாங்காது. வாழ்வா-சாவா போராட்டமாக ரஷ்யா இதனை பார்க்கும்” அமெரிக்காவின் பிரபல வெளியுறவு கொள்கை நிபுணர் ஹென்ரி கிசிங்கர் 2014இல் கூறினார்: “உக்ரைனை நேட்டோவில் சேர்க்க கூடாது. அவ்வாறு சேர்த்தால் உக்ரைன் கிழக்கு- மேற்கத்திய நாடுகளின் போர்க்களமாக மாறிவிடும். ரஷ்யா நிரந்தரமாக எதிர் தரப்பில் நிற்கும் ஆபத்து உருவாகும்.” 2008ஆம் ஆண்டில் சி.ஐ.ஏ.வின் இயக்குநர் வில்லியம் பர்ன்ஸ் அமெரிக்க தலைமையகத்துக்கு அனுப்பிய ஒரு குறிப்பில் கீழ்கண்டவாறு கூறுகிறார்: “உக்ரைனை நேட்டோவில் இணைப்பது குறித்து உக்ரைன் மக்களிடையே செங்குத்தான பிளவுபட்ட கருத்து நிலவுகிறது என ரஷ்யா கவலை அடைந்துள்ளது என நமது நிபுணர்கள் கூறுகின்றனர். குறிப்பாக உக்ரைனில் உள்ள ரஷ்ய இன மக்கள் இதற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இத்தகைய பிளவு கடும் விளைவுகளை உருவாக்கும். மோசமான சூழலில் இது உள்நாட்டு போருக்கும் வழிவகுக்கலாம். அப்படிப்பட்ட நேரத்தில் உக்ரைனில் தலையிடும் முடிவு எடுக்க வேண்டி வரும் என ரஷ்யா கவலைப்படுகிறது. அத்தகைய சூழலை ரஷ்யா விரும்பவில்லை.” இவ்வளவு எச்சரிக்கைகளையும் அறிவுறுத்தல்களையும் மீறித்தான், நேட்டோ விரிவாக்கம் திட்டமிடப்பட்டது. அமெரிக்க அரசியல் தலைமை தனது மேலாதிக்கத்தை ஐரோப்பாவில் நிறுவுவதற்காக, ரஷ்யாவை போருக்கு தள்ளினால் தவறு இல்லை எனும் முடிவுக்கு வந்தது என்பதையே இது காட்டுகிறது. அமெரிக்க ஏவுகணைகள் ஐரோப்பிய நாடுகள் பலவற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளன. உக்ரைன் எல்லையிலும் படைகள் நிறுத்தப்படும் என்றால், அது தனது பாதுகாப்பிற்கு ஆபத்து என்று ரஷ்யா கருதுகிறது. உக்ரைன் எல்லையிலிருந்து ஏவுகணைகள் 10 முதல் 15 நிமிடங்களுக்குள் மாஸ்கோவை தாக்கிவிடும். 2008ஆம் ஆண்டு உக்ரைனையும் ஜார்ஜியாவையும் நேட்டோவில் இணைக்கும் அமெரிக்காவின் விருப்பம் ரஷ்யாவிடம் கடும் எதிர்ப்பை விளைவித்தது. அதே போல் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி சமீபத்தில் அணுஆயுதங்களை நிறுவ உக்ரைன் முனைப்புடன் உள்ளது என பேசினார். இவையும் ரஷ்யாவின் அச்சத்தை அதிகரித்தன. உக்ரைன் அரசியலில் அமெரிக்க தலையீடு உக்ரைன் நாட்டின் உள் அரசியலில் ஒரு திருப்புமுனையாக 2014ஆம் ஆண்டினை பார்க்கலாம். அதற்கு முன்பாக, 2010இல் நடந்த தேர்தலில் விக்டர் யோனுகோவிச் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போதே உக்ரைன் மேற்கு பகுதியும் கிழக்கு பகுதியும் பல்வேறு பண்பாடு, அரசியல் அம்சங்களில் பிளவுபட்டிருந்தன. கிழக்கு பகுதியில் வாழும் மக்கள் ரஷ்ய மொழியும், மேற்கு பகுதி மக்கள் உக்ரைன் மொழியும் பெரும்பான்மையாக பேசுகின்றார்கள். எனவே, கிழக்கு பகுதி மக்கள் ரஷ்யாவின் ஆதரவாளர்களாகவும், மேற்கு பகுதி மக்கள் ரஷ்ய எதிர்ப்பாளர்களாகவும் மாறும் வகையில் பல கருத்துகள் கட்டமைக்கப்பட்டன. இதில் அமெரிக்காவின் பங்கு மிக முக்கியமானது. ஜனாதிபதி யோனுகோவிச் தொடக்கத்தில் அமெரிக்காவுடன் நட்பு பாராட்டினார். ஆனால் அவர் எதிர்பார்த்தபடி அமெரிக்க முதலீடுகள் உக்ரைனுக்கு வரவில்லை. எனவே அவர் ரஷ்யாவுடன் முதலீடுகளுக்காகவும், பொருளாதார ஒத்துழைப்புக்காகவும் ஒப்பந்தம் போட்டார். உக்ரைன் தனது பிடியிலிருந்து நழுவுகிறது என்பதை உணர்ந்த அமெரிக்கா, மேற்கு உக்ரைன் மக்களை யோனுகோவிச்சுக்கு எதிராக தூண்டியது. 2014ஆம் ஆண்டில் ஏராளமான கலவரங்கள் நடைபெற்றன. இந்த கலவரங்களை உருவாக்குவதில் உக்ரைன் நாட்டில் இயங்கும் நாஜி ஆதரவாளர்கள் முக்கிய பங்கை ஆற்றினார்கள். “மைதான் புரட்சி” என ஊடகங்களால் அழைக்கப்பட்ட இந்த கலவரங்களின் காரணமாக யோனுகோவிச் பதவி விலகினார். பின்னர் பதவியேற்ற ஜனாதிபதிகள் கிழக்கு உக்ரைன் மக்களுக்கு எதிராக விஷம் கக்கினார்கள். ரஷ்யா மீது வன்மத்தை வெளிப்படுத்தினார்கள். இப்படியான பின்னணியில் கிரீமியா தீவினை ரஷ்யா தன்னோடு இணைத்து கொண்டது. ஏனெனில் ரஷ்யாவின் முக்கிய கப்பற்படை தளம் அங்கு இருந்தது. டோன்பாஸ் எனப்படும் பகுதியில் உள்ள லுகான்ஸ்க் மற்றும் டோன்டெஸ்க் ஆகிய மாநிலங்களில் உள்ள ரஷ்ய மொழி பேசும் மக்கள் தங்களுக்குள் பொது வாக்கெடுப்பு நடத்தி தங்களை சுயாட்சி பிரதேசங்களாக அறிவித்து கொண்டன. உக்ரைனில் வாழும் ரஷ்ய மொழி பேசும் மக்கள் தாக்கப்படுவது ரஷ்யாவில் பெரிய தாக்கத்தை உருவாக்கியது. அவர்களுக்கு ரஷ்ய அரசாங்கம் உதவ வேண்டும் எனும் கருத்து மக்களிடையே இருந்தது. இதுபோன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு காண 2015ஆம் ஆண்டு மின்ஸ்க் நகரில் உக்ரைன்/ரஷ்யா/பிரான்ஸ்/ஜெர்மனி ஆகிய நாடுகளுக்கு இடையே பேச்சு வார்த்தைகள் நடந்தன. இறுதியில் ஒரு ஒப்பந்தம் போடப்பட்டது. அதன் முக்கிய அம்சங்கள்; லுகான்ஸ்க் மற்றும் டோன்டெஸ்க் பகுதிகளுக்கு உக்ரைன் அரசாங்கம் சுயாட்சி வழங்குவது. ரஷ்ய மொழியை அங்கீகரிப்பது. லுகான்ஸ்க் மற்றும் டோன்டெஸ்க் மக்கள் பிரிவினை எண்ணத்தை கைவிடுவது. உக்ரைனின் ஒன்றுபட்ட தன்மையை பாதுகாப்பது. எனினும் இந்த ஒப்பந்தம் அமலாக்கப்படவில்லை. நடைமுறையில் ரஷ்ய மொழி உதாசீனப்படுத்தப்பட்டது. லுகான்ஸ்க் மற்றும் டோன்டெஸ்க் மக்கள் மீது தாக்குதல்களும் தொடர்ந்தன. அன்றிலிருந்து கிழக்கு உக்ரைன் பகுதி மக்கள் மீது உக்ரைன் ராணுவமும், நாஜி சித்தாந்தவாதிகளும் ஏராளமான தாக்குதல்களை நடத்தினர். கடந்த 7 ஆண்டுகளில் சுமார் 18,000 பேர் கொல்லப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. நாஜிக்களை ஊக்கப்படுத்திய நேட்டோ உக்ரைனில் கடந்த 10 ஆண்டுகளாக வலதுசாரி பயங்கரவாதிகளும் நாஜி சித்தாந்தவாதிகளும் பெரும் எண்ணிக்கையில் உருவாகியுள்ளனர். இவர்களை ஆதரிப்போர் உக்ரைன் நாடாளுமன்ற உறுப்பினர்களாகவும் உள்ளனர். நேட்டோவின் ஆய்வு அமைப்பான “அட்லாண்டிக் கவுன்சில்” இவர்களை ஆதரித்தும் புகழ்ந்தும் பல கட்டுரைகளை வெளியிட்டுள்ளது. நாஜி அமைப்புகளில் முக்கியமானது “அசோவ் பட்டாலியன்” என்ற அமைப்பாகும். அசோவ் பட்டாலியன் கோட்பாடுகள் என்ன? உக்ரைன் மக்கள் பரிசுத்த வெள்ளை இனத்தை சேர்ந்தவர்கள். கிழக்கு உக்ரைனில் வசிக்கும் ரஷ்யர்கள் அசுத்தமான ரத்தம் உடையவர்கள். அவர்கள் உக்ரைனின் பரிசுத்த ரத்தத்தை மாசுபடுத்த முயல்கின்றனர். எனவே கிழக்கு உக்ரைன் மக்களை அடிமைப்படுத்த வேண்டும். தேவை எனில் அவர்களை படுகொலை செய்ய வேண்டும். இட்லரின் பல்வேறு நாஜி அடையாளங்களை இந்த அமைப்பு பயன்படுத்துகிறது. இத்தகைய கோட்பாடுகளை கொண்ட அமைப்பை நேட்டோ அமைப்பு ஆதரித்தது; இன்றும் ஆதரிக்கிறது. அசோவ் பட்டாலியன் என்ற இந்த அமைப்புதான் 2014ஆம் ஆண்டில் நடந்த கலகங்களில் முக்கிய பங்கை ஆற்றியது. பின்னர் உக்ரைன் ராணுவத்தின் ஒரு பகுதியாக அது இணைக்கப்பட்டது. டோன்பாஸ் பகுதியில் வாழும் ரஷ்ய மொழி சிறுபான்மையினரை கொன்று குவித்ததும் இந்த அமைப்புதான். இந்த அமைப்பின் கொடூரங்கள் அனைத்தும் நேட்டோ அமைப்புக்கு நன்றாக தெரியும். சில அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த அமைப்பை பயங்கரவாத அமைப்பாக வகைப்படுத்த வேண்டும் என தீர்மானம் கொண்டு வந்தனர். அமென்ஸ்டி மனித உரிமை அமைப்பும் இந்த அமைப்பு தடை செய்யப்பட வேண்டும் என கோரியது. அமென்ஸ்டி தனது அறிக்கையில் கூறியது: “பயங்கரவாத அமைப்புகள் செயல்படுத்தும் கட்டுப்படுத்தப்படாத வன்முறையில் உக்ரைன் சிக்கி மூழ்கி கொண்டுள்ளது. கொடூரங்களை நிகழ்த்தும் இந்த அமைப்புகள் எவ்வித தண்டனைக்கும் உள்ளாக்கப்படுவது இல்லை.” ஆனால், “அசோவ் பட்டாலியன்தான் நாம் ரஷ்யாவுக்கு தரும் பரிசு” என அட்லாண்டிக் கவுன்சில் கருத்து தெரிவித்தது. எத்தகைய வன்மம் நேட்டோவுக்கு உள்ளது என்பதை இதிலிருந்து நாம் அறியலாம். அமெரிக்க செனட் நாடாளுமன்ற உறுப்பினர் பாப் மெனென்டஸ் உக்ரைனுக்கு 500 மில்லியன் டாலர் அதாவது சுமார் 3,800 கோடி ரூபாய் அளவுக்கு ஆயுதங்களை வழங்கிட தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றினார். இந்த ஆயுதங்கள் நாஜிக்களின் கைகளுக்கு செல்வதை தடுக்க என்ன வழிமுறைகள் உள்ளன என அவரிடம் கேட்ட பொழுது “நாம் ஏன் அதைப்பற்றி கவலைப்பட வேண்டும்?” என பதில் கூறினார். புடினின் தேசிய வெறி ரஷ்யாவை நேட்டோ சுற்றி வளைப்பதையும் உக்ரைனில் உள்ள ரஷ்ய மொழி சிறுபான்மையினரை பாதுகாப்பதும் முக்கியம்! இது குறித்த புடினின் கவலை நியாயமானது; அது ரஷ்ய மக்களின் கவலையை பிரதிபலிக்கிறது. ஆனால் தனது போர் நடவடிக்கைகளை நியாயப்படுத்த லெனின் மற்றும் ஸ்டாலின் முன்னெடுத்த தேசிய இனக் கொள்கைகளை புடின் இழிவுபடுத்துகிறார். உக்ரைன் எனும் நாடு வரலாற்றில் இருந்ததே இல்லை எனவும், அதனை உருவாக்கியது லெனினும் ஸ்டாலினும்தான் எனவும் புடின் கூறுகிறார். சுயநிர்ணய உரிமை தந்தது மிகப்பெரிய தவறு எனவும், அதனால்தான் சோவியத் ஒன்றியம் சிதறுண்டது எனவும் குற்றம் சாட்டுகிறார். “மகா ரஷ்யா” எனும் கோட்பாட்டையும் வலியுறுத்தும் புடின், உக்ரைன் ஒரு தேசமாக நீடிக்க உரிமை இல்லை எனவும் கூறுகிறார். புடின் போன்ற முதலாளித்துவ அரசியல்வாதிகளுக்கு, தேசிய பிரச்சனையில் கம்யூனிஸ்டுகள் முன்வைக்கும் கோட்பாடுகள் பிடிக்காமல் போவதில் ஆச்சர்யம் இல்லை. ஜார் மன்னனின் ரஷ்ய சாம்ராஜ்யம் பல தேசிய இனங்களை அடிமைப்படுத்தியிருந்தது. எனவேதான் “ரஷ்யா தேசிய இனங்களின் சிறைச்சாலை” என லெனின் வர்ணித்தார். சுயநிர்ணய உரிமை வழங்கப்படாவிட்டால் எந்த ஒரு குடியரசும் சோவியத் ஒன்றியத்தில் இணைந்திருக்காது. சோவியத் ஒன்றியம் வெறும் ரஷ்யாவாகவே இருந்திருக்கும். தற்போது, “மகா ரஷ்யா” எனும் சாம்ராஜ்யத்தை உருவாக்கும் எந்த வாய்ப்பும் இல்லை என்பதை புடின் உணர மறுக்கிறார். சோவியத் ஒன்றியம் சிதறுண்டது மனித குலத்திற்கு ஏற்பட்ட பின்னடைவுதான். ஆனால் அதற்கு காரணம் சுயநிர்ணய உரிமை அல்ல. ரஷ்யாவின் ராணுவ பாதுகாப்பு மற்றும் உக்ரைனில் உள்ள ரஷ்ய மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு எனும் இரு நோக்கங்களுக்கு அப்பாற்பட்ட வேறு எந்த இலக்கையும் உக்ரைன் படையெடுப்பு மூலம் சாதிப்பதற்கு புடின் முயன்றால், அது விரும்பத்தகாத விளைவுகளையே தோற்றுவிக்கும். உலகின் இரு மிகப்பெரிய தேசங்களான சீனாவும், இந்தியாவும் மற்றும் சில நாடுகளும் ரஷ்யாவின் நியாயமான கவலையை ஏற்கிறார்கள். அதே சமயம், புடினின் நோக்கம் குறிப்பிட்ட எல்லையைத் தாண்டி நீளுமானால், உலக நாடுகளின் எதிர்ப்பையே அவர் சம்பாதிக்க நேரிடும். பாசிச எதிர்ப்பு போரில் உலக மக்களின் ஆதரவை பெற்றார் ஸ்டாலின். ஆனால் புடின் ஸ்டாலின் அல்ல. உக்ரைனில் ஒருவேளை ரஷ்யா வெற்றியடையுமானால், அதுவும் ஆபத்தான விளைவுகளையே ஏற்படுத்தும். முதலாளித்துவ ஜனநாயகத்தின் உண்மை முகம் ரஷ்ய படைகள் உக்ரைனில் நுழைந்ததுமே பல முதலாளித்துவ நாடுகளும் பொருளாதாரத் தடைகளை விதித்தன. இது எதிர்பார்த்த ஒன்றுதான். எனினும், அதன் மூர்க்கத்தனம் எல்லையில்லாமல் விரிவடைந்தது. ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவுடனான எண்ணெய் ஒப்பந்தங்களை திரும்ப பெற்றன. ரஷ்யாவில் செயல்பட்ட ஷெல் போன்ற நிறுவனங்கள் தமது செயல்பாட்டை நிறுத்தின. ஆப்பிள் நிறுவனம்/சாம்சங்/வால்வோ இப்படி பலநிறுவனங்கள் வெளியேறின. ரஷ்ய வங்கிகள் ‘ஸ்விப்ட்’ எனப்படும் நிதி பரிவர்த்தனையை பயன்படுத்த முடியாத அளவுக்கு தடைகள் விதிக்கப்பட்டன. ஐரோப்பா மற்றும் அமெரிக்க வான்வெளிகளில் ரஷ்ய விமானங்களுக்கு தடை விதிக்கப்பட்டன. தன்னுடன் முரண்பட்டால் எந்த ஒரு நாட்டையும் மண்டியிட வைக்க முடியும் என முதலாளித்துவ உலகம் முயல்கிறது. கால்பந்து/ஹாக்கி/மோட்டார் பந்தயம்/மாற்று திறனாளிகள் ஒலிம்பிக் போட்டிகள் என அனைத்து விளையாட்டு போட்டிகளிலுமிருந்து ரஷ்யா வெளியேற்றப்பட்டுள்ளது. ரஷ்யாவின் பூனைகளுக்கும் யோக் மரங்களுக்கும் கூட தடை விதிக்கப்பட்டுள்ளன. இந்த தடைகளால் பாதிக்கப்படப்போவது புடின் அல்லது பிற அரசியல்வாதிகள் அல்ல; ரஷ்ய மக்கள்தான். ரஷ்ய ஊடகங்கள் முழுவதும் ஐரோப்பா/அமெரிக்காவில் தடை செய்யப்பட்டுள்ளன. தொலை காட்சி விவாதங்களில் ரஷ்யாவை சிறிதளவு ஆதரித்து பேசுவோரும் வெளியேற்றப்படுகின்றனர். டோன்பாஸ் பகுதியில் 5 ஆண்டுகளாக ரஷ்ய மொழி பேசும் மக்கள் அடைந்த துன்பங்களை ஆய்வு செய்த ஒரு ஃபிரான்சு பத்திரிக்கையாளர் தனது அனுபவத்தை சொன்னதற்காக நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார். பி.பி.சி./கார்டியன் போன்ற புகழ்பெற்ற ஊடகங்கள் கூட பொய்ச் செய்திகளை தாராளமாக பரப்பின. முதலாளித்துவ ஊடகங்கள் தமது அரசுகளின் கருத்துகளை மட்டுமே மக்கள் கேட்க வேண்டும் என எண்ணுகின்றன. எதிர்த்தரப்பு கருத்துகளை மக்கள் கேட்க கூடாது என கங்கணம் கட்டிக் கொண்டுள்ளன. இது முதலாளித்துவ ஜனநாயகம். இந்த ஜனநாயகத்தில் மாற்று கருத்துக்கு இடமில்லை. எல்லாவற்றுக்கும் மேலாக, இந்தப் போர் முதலாளித்துவத்தின் நிறவெறியை வெளிப்படுத்தியுள்ளது. ஒரு தொலைகாட்சி செய்தியாளர் கூறினார்: “இது சிரியாவோ அல்லது ஆப்கானிஸ்தானோ அல்ல; நாகரிக ஐரோப்பா. இங்கு தாக்குதல் நடக்கிறது” அப்படியானால் சிரியாவும் ஆப்கானிஸ்தானும் நாகரிகமற்ற காட்டுமிராண்டி தேசங்களா? இன்னொரு செய்தியாளர் கூறினார்: “நெஞ்சம் பதைக்கிறது. ஊதா கண்களும் பொன் நிறத்திலான முடியையும் உடைய மக்கள் தாக்கப்படுகின்றனர்.” அப்படியானால் மற்றவர்கள் தாக்கப்பட்டால் பரவாயில்லையா? ஆம். அப்படிதான் அந்த ஊடகங்கள் முன்வைக்கின்றன. உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்த அதே நாளில் அமெரிக்க விமானங்கள் சோமாலியா மீது குண்டு பொழிந்தன. அமெரிக்க ஆதரவுடன் சவூதி படைகள் ஏமன் மீது தாக்குதலை நடத்தின. இஸ்ரேல் விமானங்கள் பாலஸ்தீனம் மீது தாக்குதல்கள் நடத்தின. இஸ்ரேல் ராணுவத்தினர் 15 வயது பாலஸ்தீன் பெண்ணை சித்திரவதை செய்து கொன்றனர். இது குறித்த காணொளி பரவலாக வலம் வந்தது. அமெரிக்காவின் ஆசியோடு ஏமன் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 3,00,000 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதில் 70% பேர் குழந்தைகள். ஆனால் இவை குறித்து முதலாளித்துவ ஊடகங்களில் ஒரு விவாதம் கூட இல்லை. மேற்கத்திய ஊடகங்களின் செய்தி மற்றும் கட்டுரைகள் வெளியிடப்பட்டதில் பாரபட்சத்தை பாருங்கள்: உக்ரைன் மீது ரஷ்ய தாக்குதல்- 1400 சவூதி ஏமன் மீது தாக்குதல்-0 இஸ்ரேல் சிரியா மீது தாக்குதல்- 5. சிறிது நாட்கள் முன்புவரை அரேபிய அல்லது ஆப்பிரிக்க அகதிகளுக்கு அனுமதியில்லை என கூறிய போலந்து போன்ற நாடுகள் இன்று உக்ரைன் அகதிகளை இரு கரம் கூப்பி வரவேற்கின்றன. ஆஸ்திரேலியாவில் உள்ள ரஷ்ய தூதரகத்துக்கு வெடி பொருட்கள் பார்சல் அனுப்பப்பட்டன. நெதர்லாந்தில் ரஷ்யர்களுக்கு சொந்தமான உணவுவிடுதி தாக்கப்பட்டது. அமெரிக்க செனட்டர் லிண்ட்சே கிரஹாம் ரஷ்யாவை சேர்ந்த எவராவது புடினை கொன்று விடுவது ரஷ்யாவின் எதிர்காலத்துக்கு நல்லது என பகிரங்கமாக கூறியுள்ளார். இவையெல்லாம் முதலாளித்துவ ஜனநாயகத்தின் உண்மை முகத்தை தோலுரித்து காட்டுகிறது. முதலாளித்துவம் கைவிட்ட முதலாளித்துவ குழந்தை ரஷ்யா சோசலிசத்தை கைவிட்ட பொழுது அதன் ஒரே கனவு முதலாளித்துவ உலகம் தன்னை சம பங்காளியாக கருதி அரவணைத்து கொள்ளும் என்பதுதான். அந்த விருப்பத்துடனேயே அனைத்து அரசு நிறுவனங்களும் தனியார்மயமாக்கப்பட்டன. கம்யூனிச கருத்துகளும் அவற்றை கடைப்பிடிப்போரும் வேட்டையாடப்பட்டனர். லெனின் மற்றும் ஸ்டாலின் சிலைகள் உடைக்கப்படடன. தாராளமய பொருளாதார கொள்கைகள் அமலாக்கப்பட்டன. அந்தோ பரிதாபம்! முதலாளித்துவ உலகம் ரஷ்யாவை தனது சம பங்காளியாக பார்க்கவில்லை. மாறாக தனக்கு அடிபணிந்து இருக்கும் ஒரு நாடாக ரஷ்யா இருக்க வேண்டும் என்றே கருதியது. மார்க்சிய ஆய்வாளர் டேவிட் ஹார்வி ஒரு சுவையான ஒப்பீட்டை முன்வைக்கிறார். இரண்டாம் உலகப்போரில் துவம்சம் செய்யப்பட்ட நாடுகள் ஜப்பானும் ஜெர்மனியும். ஆனால் இந்த இரு நாடுகளையும் மறுநிர்மாணம் செய்ய ஏராளமான நிதி உதவிகளை முதலாளித்துவ உலகம் செய்தது. அதற்கு “மார்ஷல் திட்டம்” எனவும் பெயரிட்டது. ஆனால் சோசலிசத்தையே தூக்கி எறிந்த ரஷ்யாவுக்கு எந்த உதவியும் செய்யப்படவில்லை. குறைந்தபட்சம் ஐரோப்பிய நாடுகள் கூட ரஷ்யாவை அரவணைக்க முன்வரவில்லை. அதே சமயத்தில் சோவியத் ஒன்றியத்தின் ஒரு வலிமையே ரஷ்யாவை தொடர்ந்து பாதுகாத்தது. அதுதான் ராணுவ வலிமை. புடினை பார்த்து ஓரளவு முதலாளித்துவ நாடுகள் அச்சப்படுகின்றன என்றால் அதற்கு முக்கிய காரணம் ராணுவ வலிமைதான்! இதற்கு புடின் ஸ்டாலினுக்கும் அவருக்கு பின்னால் ஆட்சியிலிருந்த ஏனைய கம்யூனிஸ்டு தலைவர்களுக்கும் நன்றி செலுத்தக் கடமைப்பட்டவர். “சமாதானத்துக்கு சமாதானம்! ஏவுகணைக்கு ஏவுகணை” என முழக்கமிட்ட யூரி ஆண்ட்ரோபோவ் போன்றவர்கள்தான் இந்த ராணுவ வலிமையை உருவாக்கினர்; பாதுகாத்தனர். இப்போது இந்த ராணுவ வலிமையைதான் முதலாளித்துவ நாடுகள் சிதைக்க முயல்கின்றன. இந்த போர் எப்படி முடியும் என்பது இக்கட்டுரை எழுதப்பட்ட சமயத்தில் தெளிவற்றதாகவே இருந்தது. எனினும், ஏற்கெனவே இரு தரப்பிலும் ஏராளமான உயிர்கள் பலியாகியுள்ளன. உக்ரைனின் ஆலைகளும் கட்டடங்களும் கடும் சேதத்தை சந்தித்துள்ளன. உலக அளவில் கம்யூனிஸ்டுகள் ஒரே குரலில்தான் ஒலிக்கிறார்கள்: போர் தொடர்வதில் எந்த நியாயமும் இல்லை. போர் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். நேட்டோ தனது விரிவாக்கத்தை கைவிட வேண்டும். ஐரோப்பாவில் உள்ள அணு ஆயுதங்கள் அகற்றப்பட வேண்டும். உக்ரைனில் ரஷ்ய மொழி பேசும் மக்களின் வாழ்வும் பண்பாடும் பாதுகாக்கப்பட வேண்டும். உக்ரைன் சமாதான வழியில் பயணிப்பதை உத்தரவாதம் செய்யவேண்டும். இதுதான் சரியான பார்வையாக இருக்க முடியும். ஆதாரங்கள்: Consortiumnews/ Fair.org/davidharvey.org/Mint Press/MR online/ Newsclick/ RT.com/ Tricontinental newsletter/multipolarista. Posted in உலகம்Tagged அன்வர் உசேன் அமெரிக்கா உக்ரைன் கம்யூனிஸ்ட் நேட்டோ போர் மார்க்சிஸ்ட் ரஷ்யாLeave a comment உக்ரைன் – அரங்கேறும் ஏகாதிபத்திய நாடகம் Posted on May 10, 2014 March 3, 2022 by Editorial – பாலசுப்பிரமணியன் முந்தைய பனிப்போர் அரசியலுக்குப் பிறகு கிழக்கு – மேற்கு நாடுகளிடையே மிகப்பெரும் நெருக்கடி உருவாகி வருவதாக வரலாறு ஆய்வாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். உக்ரைனில் தற்போது ஆட்சியதிகாரத்தை கைப்பற்றியிருப்போருக்கும் எதிர்த்து நிற்கும் ரஷ்ய ஆதரவாளர்களுக்குமிடையே கடும் மோதல் நிகழ்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன; உக்ரைனின் தென்பகுதியில் உள்ள நகரமான ஒடிச்சாவில் ஒரு தொழிற்சங்க கட்டிடத்திற்குள் அரசுக்கு எதிர்ப்பாளர்களாக இருந்த 42 பேர் உயிரோடு கொளுத்தப்பட்டனர். சென்ற பிப்ரவரி மாதம் ரஷ்ய ஆதரவாளர் என கருதப்பட்ட உக்ரைனின் ஆட்சித் தலைவர் விக்டர் யானுகோவிச் அப்பொறுப்பிலிருந்து வெளியேற்றப்பட்ட பிறகு மிகவும் மோசமான அரசியல் சூழல் உருவாகியுள்ளது. உள்நாட்டுப் போர் விரிவாக நடத்தப்படுமென்றும் உக்ரைன் பல துண்டுகளாக சிதைந்து போகுமென்றும் அரசியல் விமர்சனங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இவை திடீரென்று வெடித்த நிகழ்வுகள் அல்ல. நீண்ட காலமாக தீட்டப்பட்ட ஏகாதிபத்திய சதித் திட்டத்தின் விளைவுகளை உக்ரைன் சந்திக்கிறது. ஒரு பின்னோக்கி பயணம் சோவியத் யூனியனின் ஒரு குடியரசாக உக்ரைன் இருந்தது. 360 ஆண்டுகளுக்கு முன் ரஷ்யப் பகுதியாக அது இணைக்கப்பட்டது. வரலாற்று ரீதியாகவும், கலாச்சார ரீதியாகவும் ரஷ்யாவுடன் உக்ரைன் பலமான இணைப்பை பெற்றிருந்தது. சோவியத் ஆட்சிக் காலத்தில் ரஷ்யப் பகுதிக்கு அடுத்தாற்போல் மிகப் பெருமளவில் பொருளாதார வளர்ச்சியினை பெற்ற குடியரசாக இருந்தது. சோவியத் யூனியன் சிதைவுக்குப் பிறகு நிலைமை பெருமளவு மாறிவிட்டது. ஜெர்மனி, பிரான்ஸ், பிரிட்டன் போன்ற நாடுகளைக் காட்டிலும் பொருளாதார மேன்மை பெற்றிருந்த உக்ரைன் அந்த நிலையிலிருந்து கீழிறங்கத் தொடங்கியது; பொருள் உற்பத்தி, விவசாய உற்பத்தி என்ற அனைத்து அம்சங்களிலும் நெருக்கடியினை சந்தித்தது. சோசலிச அமைப்பை கைவிட்டு முதலாளித்துவ – புதிய தாராளமயக் கொள்கைகளை உக்ரைன் ஏற்றுக் கொண்டதன் விளைவுகளை அந்த குடியரசு சந்தித்தது. மக்களுக்கெதிரான சீர்திருத்தங்களை செயல்படுத்த வேண்டிய நிர்பந்தம் அரசுக்கு வந்தது. ஊழல், விபச்சாரம், போதை, மருந்து விற்பனை போன்ற சமூக கேடுகள் பரவத் தொடங்கின. மக்களின் உடல்நலன், வீட்டுவசதி போன்ற சமூகத் தேவைகளுக்கான சேவைப்பிரிவுகள் குறைக்கப்பட்டன. அதிகார வர்க்கத்தோடு இணைந்து சிலர், சில குழுக்கள் செல்வச் செழிப்பில் வளர்ந்தனர். இவர்கள் தான் யானுகோவிச்சின் பிரதேசங்களின் கட்சிக்கு (Party of Regions) ஆதரவாளர்கள், அதன் எதிர்ப்பாளர்களையும் அவர்கள் சரியாகவே கவனித்துக் கொண்டார்கள். உக்ரைனை மேற்கு நோக்கி நகர்த்தி ஐரோப்பிய யூனியனோடு சேர்த்துவிட வேண்டுமென்று இவர்கள் அழுத்தம் கொடுத்தார்கள். பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள குறைந்தபட்சம் 15 பில்லியன் டாலர் தேவைப்படும் என மேலை நாடுகளின் பொருளாதார நிபுணர்கள் கணித்திருந்தனர். சர்வதேச நிதி நிறுவனத்தை அணுகிய போது, எரிவாயு பயன்பாட்டிற்காக மக்களுக்காக கொடுக்கப்படும் மானியத்தை நீக்க வேண்டும் என அது நிபந்தனை விதித்தது; அதை செயல்படுத்தினால் அதன் விலை 40 சதவிகிதம் உயரும். உக்ரைனின் அன்னிய செலாவணி கையிருப்பு 12 பில்லியன் டாலராக குறைந்தது; உக்ரைனின் நாணயமான ரைவ்னியா (Hryvnia) கடுமையாக வீழ்ச்சியடைந்தது. ஊழியர்களுக்கான ஊதியம் மற்றும் ஓய்வூதியம் கொடுக்கக் கூட போதுமான நிதி அரசு கருவூலத்தில் இல்லை. சொல்லொணா துயரத்திற்கு உட்பட்ட மக்கள் கிளர்ச்சியில், போராட்டங்களில் ஈடுபட்டனர். பல நகரங்கள் போராட்ட களங்களாக மாறின. தலைநகர் கீவில் இளைஞர்கள் நவம்பர் 30, 2013ல் நடத்திய அமைதியான ஆர்ப்பாட்டத்தில் காவல்துறை நடத்திய வன்முறை தாக்குதல் நிலைமையினை மேலும் மோசமாக்கியது. யானு கோவிச் ஆட்சிக்கு எதிரான போராட்டங்கள் அதிகரித்தன. ஆனால் இந்த போராட்டங்களை நாஜி பாரம்பரியத்தில் வளர்ந்த கட்சிகள் பயன்படுத்திக் கொண்டன. வலதுசாரி கட்சியான ஸ்வோபோடா கட்சி அதில் முக்கிய பங்கு வகுத்தது. இதற்கிடையில் யானுகோவிட்ச் இந்த நிதிநெருக்கடியிலிருந்து மீள ஒரு பக்கம் ஐரோப்ப யூனியனுடனும் மறுபக்கம் ரஷ்யாவுடனும் பேச்சுவார்த்தை நடத்தினார். ஐரோப்பிய யூனியன் விதித்த சிக்கன நடவடிக்கைகளை ஏற்றுக் கொள்வதில் யானு கோவிட்சுக்கு தயக்கம் இருந்தது; முடிவில் ஐரோப்பிய யூனியன் ஆலோசனைக்குட்படாது, ரஷ்யாவோடு ஒப்பந்தம் செய்து கொண்டார். போராட்டங்களை முடிவுக்கு கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ரஷ்ய அதிபர் புதின் முயற்சியால் பிப்ரவரி 21, 2014 ஒரு அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டது. அதன்படி உக்ரைன் அரசு (யானுகோவிட்ச்) தனது படைகளை திரும்ப அழைத்துக் கொண்டது. ஆனால் எதிர்ப்பு சக்திகள் அதை மீறி அரசு அலுவலகங்களை கைப்பற்றின. யானுகோவிட்ச் கீவ் நகரை விட்டு வெளியேற நேர்ந்தது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியன் நாடுகளின் முழு அங்கீகரிப்போடு அது நடந்து முடிந்தது. மே 25ல் அதிபருக்கான தேர்தல் நடைபெறும் என்ற அறிவிப்போடு இடைக்கால அரசாங்கம் ஒன்று அமைக்கப்பட்டது. ரஷ்ய மொழியினை அரசாங்க மொழி அந்தஸ்திலிருந்து நீக்கியது தான் இடைக்கால அரசாங்கம் எடுத்த முதல் நடவடிக்கை 46 மில்லியன் மக்களில் 17 சதம் மக்கள் ரஷ்ய மொழி பேசுபவர்கள் அண்மையில் அங்கே நடத்தப்பட்ட ழுயடடரயீ ஞடிடட, என்கிற பொது வாக்கெடுப்பில் 83 சதம் மக்கள் ரஷ்ய மொழியினை தாங்கள் பேசும் மொழியாக கருத்து தெரிவித்தார்கள். இடைக்கால அரசில் உள்ள 4 அமைச்சர்கள் நாஜி சித்தாந்தம் கொண்ட அமைப்பை சேர்ந்தவர்கள். அவர்கள் நடத்திய கலவரத்தில் கீவ் நகரில் லெனின் சிலையினை கீழே தள்ளி சுகம் கண்டவர்கள். அமெரிக்காவின் தலையீடு 2004-05ல் உக்ரைனில் ஏற்பட்ட அரசியல் மாற்றம் ஆரஞ்சு புரட்சி என்று வருணிக்கப்பட்டது. அப்போது மேலை நாடுகளின் ஆதரவாளரான யூலியா டிமொஷெங்கோ அரசு பொறுப்பில் இருந்தார் (பின்பு அவர் லஞ்ச ஊழல் குற்றச்சாட்டில் சிறைக்கு அனுப்பப்பட்டார். யானு கோவிட்ச் தற்போது வெளியேறியவுடன் ஜெர்மனியின் ஏஞ்சலா மெர்க்கல் ஆசியுடன் விடுதலை பெற்று அரசியல் களத்தில் இறங்கியுள்ளார்). அந்த மாற்றத்தை அமெரிக்கா எப்படி பார்த்தது? உக்ரைனின் எதிர்காலமும் அமெரிக்க நலன்களும் என்பதைப் பற்றி 2004ல் அமெரிக்க காங்கிரஸ் விவாதித்து அறிக்கை வெளியிட்டது. உக்ரைனில் ஒரு நிலையான ஜனநாயக மற்றும் வளமான குடியரசை உருவாக்கி, வலுப்படுத்தி அதனை ஐரோப்பா மற்றம் ஐரோப்பா – அட்லாண்டிக் கூட்டணியில் இணைப்பதற்கான அமெரிக்க கொள்கையில் கவனம் செலுத்த வேண்டும்….கீவ் (உக்ரைன்) “வடக்கு அட்லாண்டிக் ஒப்பந்த நாடுகள்” (North Atlantic Treaty Organisation – NATO) அமைப்பில் உறுப்பினராக சேர்வதற்கு அதற்கு உதவி செய்வதற்கான வழிமுறைகளை நாம் தேட வேண்டும் ஏன் அமெரிக்காவுக்கு இவ்வளவு அக்கறை? அதையும் தெளிவுபடுத்துகிறது அந்த காங்கிரஸ் அறிக்கை அந்த உக்ரைன் ஐரோப்பாவின் நிலைத்த பாதுகாப்பிற்கு உதவிகரமாக இருக்கும். பல்கிப் பெருகும் பயங்கரவாதத்திற்கு எதிராக நாம் நடத்தும் போர் போன்ற புதிய சவால்களை சந்திப்பதில் அது நமது கூட்டாளியாக இருக்கும்; பொருளாதாரம், வணிகம் மற்றும் முதலீடுகள் தொடர்பான விஷயங்களில் பரஸ்பரம் பலனடையும் மாற்றங்களை கொண்டு வர அதற்கு நிறைய வாய்ப்புண்டு நினைவில் கொள்ள வேண்டிய தகவல் உண்டு. ஈராக்கின் மீது அமெரிக்கா படையெடுத்த போது உக்ரைன் அதற்கு துணையாக 1600 ராணுவ வீரர்களைஅனுப்பியது; அங்கு போன மிகப்பெரிய படைப் பிரிவினரில் இதுவும் ஒன்று. ஆப்கன் யுத்தத்தில் உக்ரைன் கொடுத்த மதிப்பு மிக்க உதவிக்கு அந்த காங்கிரஸ் நன்றி தெரிவித்தது. யானுகோவிட்ச் வெளியேறியவுடன் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தினபோது அமெரிக்காவின் துணைச் செயலர் திருமதி விக்டோரியா நுலண்ட் உக்ரைனில் உள்ள அமெரிக்க தூதர் ஜாஃப்ரி ப்யாட்டுடன் பேசிய உரையாடல்களில் உக்ரைன் உள்நாட்டு விவகாரங்களில் அமெரிக்கா தொடர்ந்து தலையிட்டுக் கொண்டிருந்ததை வெளிப்படுத்தியது. யானுகோவிட்ச் இடத்திற்கு யார் வர வேண்டுமென்பதைப் பற்றி இருவரும் பேசியது வெளிவந்திருக்கிறது. திருமதி நுலண்ட் டிசம்பர் (2013) மாதத்தில் அமெரிக்கா வளமான ஜனநயாக உக்ரைனை பாதுகாக்க 5 பில்லியன் டாலர் முதலீடு செய்திருக்கிறது என அறிவித்தார். உக்ரைன் அரசுக்கு எதிராக கீவ் நகரின் மைதானத்தில் இருந்த கிளர்ச்சியாளர்களை குறிப்பாக நாஜி கட்சியான ஸ்வோபோடா கட்சியின் உறுப்பினர்களை இந்த இரு அதிகாரிகளும் சந்தித்து ரொட்டி வழங்கினர் என்பதும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. உக்ரைனை எப்படியாவது நேடோ அமைப்புக்குள் கொண்டு வந்து விட வேண்டுமென்ற ஏகாதிபத்தியத்தின் ஆசை தெளிவாக வெளிப்படுகிறது. அண்மையில் கிடைத்த செய்தி. அமெரிக்காவின் உளவுத்துறை அமைப்புகளான குக்ஷஐ மற்றும் ஊஐஹ உக்ரைன் இடைக்கால அரசுக்கு ஆலோசனைகள் வழங்கிக் கொண்டிருக்கிறது என்ற செய்தி தான் அது. அமெரிக்காவும் ஐரோப்பிய யூனியனும் உக்ரைனில் உள்ள வலதுசாரி – நாஜி சக்திகளுக்கு ஆதரவு கொடுப்பதுமல்லாது அவர்களின்தலைமையில் மே 25 தேர்தலை நடத்தி முடித்து விட வேண்டுமென துடிக்கின்றன. ரஷ்யாவின் அணுகுமுறை உக்ரைன் ரஷ்யாவுடன் நீண்ட கால இணைப்பை பெற்றிருந்தது என முன்பே குறிப்பிடப்பட்டுள்ளது – உக்ரைனில் வாழும் ரஷ்யர்களைப் பற்றிய கவலை ரஷ்யாவுக்கு உள்ளது. அங்கே நிகழ்ந்து வரும் அரசியல் மாற்றங்களுக்கு தலைமை வகிக்கும் யூலியா டிமொஷெங்கோ ரஷ்யர்கள் அழிக்கப்பட வேண்டும் என்ற ரஷ்ய மொழியில் வெளியிட்ட அறிவிப்பை கேட்ட பிறகு ரஷ்யாவின் கவலை அதிகரித்திருக்கும். ஹிட்லரின் நாஜி படைகளின் கொலை வெறித் தாண்டவமாடிய பிரதேசம் உக்ரைன். அதன் தலைநகரான கீவில் பாபியார் என்பது ஒரு பகுதி. அங்கே தான் இரண்டாம் உலகப் போர் காலத்தில் செப்டம்பர் 29-30, 1941ல் நாஜி படைகள் ஒரே ராணுவ நடவடிக்கையில் 33771 யூதர்களை படுகெலை செய்தனர். யூதர்களை அழித்தொழிக்கும் களப் பலியில் இதுதான் மிகப் பெரிய அழிப்புச் செயல் என்று வரலாறு கூறுகிறது. நாஜி படைகளும் அதற்கு துணை நின்றவர்களும் சோவியத் யூனியனை அழித்து விட வேண்டும் என்ற நோக்கோடு எடுக்கப்பட்ட போர் நடவடிக்கையின் ஒரு பகுதி அது. ஜெர்மனியின் கட்டுப்பாட்டில் உக்ரைன் இருந்த பொழுது சுமார் 150,000 பேர் பாபியாரில் கொல்லப்பட்டிருக்கின்றனர்; கம்யூனிஸ்டுகள், ஜிப்சி என்று அழைக்கப்படும் நாடோடி மக்கள் உக்ரேனிய தேசியவாதிகள் பிணையக் கைதிகளாக வைக்கப்பட்ட பொதுமக்கள் யாவரும் அதில் அடங்குவர். 2 கோடி மக்களை அந்த போரில் இழந்த சோவியத் யூனியன் நாஜிக்களின் அரசியல் ராணுவ வழிமுயினை அனுபவத்தில் கண்டது. சோவியத் யூனியன் இன்று இல்லை; ஆனால் அந்த கொடுமையினை சந்தித்த ரஷ்யாவும் உக்ரைனும் இருக்கின்றன. எந்த மனிதர்கள், குழுக்கள், அமைப்புகள் ஜெர்மன் உக்ரைனை ஆக்கிரமித்ததற்கு ஆதரவு தெரிவித்தார்களோ அவர்கள் இன்று இடைக்கால அரசில் முக்கிய பொறுப்பாளர்களாக உள்ளனர் என்பதை ரஷ்யா கவலையோடு பார்ப்பதில் ஆச்சரியமேதுமில்லை. பனிப்போரில் தாங்கள் வெற்றி பெற்று விட்டோம் என்ற களிப்பில் (சோசலிச உலக பின்னடைவை சந்தித்ததால்) ரஷ்யாவை வீழ்ந்து விட்ட எதிரியாக அமெரிக்காவும் மேலை நாடுகளும் பார்க்கத் துவங்கின. கொடுத்த வாக்குறுதிகள் சிதைக்கப்பட்டன. பெர்லின் சுவரை உடைப்பதற்கும் கிழக்கு மேற்கு ஜெர்மனி இணைப்பதற்கும் ஒப்புக் கொண்டால் நேடோ கலைக்கப்படும் என்ற வாக்குறுதி கோர்ப்பசேவுக்கு கொடுக்கப்பட்டது; யெல்ட்சினுக்கும் அந்த வாக்குறுதி கொடுக்கப்பட்டது. ஆனால் நேடோ போலந்து, பல்கேரியா, ருமேனியா, பால்டிக் நாடுகள் ஆகியவற்றைத் தாண்டி உக்ரைனை தட்டிக் கொண்டிருக்கிறது. இப்பொழுது புடினும் ஏமாற்றப்பட்டிருக்கிறார். முன்பே நாம் பார்த்த பிப்ரவரி 21 அமைதி ஒப்பந்தத்திற்கு புடினின் உதவியை நாடிய ஐரோப்பிய யூனியன் அதை அப்பட்டமாக மீறுவதற்கு எதிர்ப்பாளர்களை அனுமதித்தன; சட்ட ரீதியான யானுகோவிட்ச் அரசு கவிழ்க்கப்பட்டது. இப்படி ஒன்றன் பின் ஒன்றாக வாக்குறுதிகள், ஒப்பந்தங்கள் மீறப்படுவதைப் பார்த்த பிறகு புடின் உக்ரைனில் அமெரிக்க – ஐரோப்பிய யூனியன் தலையீடு ரஷ்யாவை தங்களின் கட்டுக்குள் வைக்கும் முயற்சியின் ஒரு நடவடிக்கை என்று பார்த்தார். மிகவும் துரிதமாக செயல்பட்டு கருங்கடலில் உள்ள 1954ல் குருஷ்சேவால் உக்ரைனோடு இணைக்கப்பட்ட கிரிமீயா தீபகற்ப பகுதியினை ரஷ்ய பாராளுமன்ற ஒப்புதலோடு ரஷ்யா எடுத்துக் கொண்டது. ஏற்கனவே அதை உக்ரைன் ஒரு விசேஷ ஒப்பந்தத்தில் ரஷ்யப் படைகள் அங்கு வைக்கப்படுவதற்கு அனுமதி அளித்திருந்தது. கருங்கடல் பகுதியில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த செவஸ்டபோல் துறைமுகம் கிரிமீயாவில் தான் உள்ளது, அது ரஷ்யாவின் கடற்படை தளமாக 2042 வரை செயல்பட ஒப்பந்தம் உள்ளது. இடைக்கால அரசு அதை நிராகரிக்கப் போவதாக அறிவித்துள்ளனர். உக்ரைனை நேடோவிற்குள் இழுப்பதில் நேடோ வெற்றி பெற்றால் அந்த இடத்தில் அமர்ந்து 425 கி.மீ. தூரத்தில்உ ள்ள மாஸ்கோவை குறி வைக்கும், கருங்கடல் பகுதியிலிருந்து ரஷ்யாவை வெளியேற்றும். ஆகவே தான் ரஷ்யா அந்தப் பகுதியை அதன் கட்டுப்பாட்டுக்கள் கொண்டு வந்தது. அந்த பகுதியில் மீண்டும் சோவியத்தை உருவாக்கும் முயற்சி என்று ஹிலாரி கிளிண்டன் பதறினார். நாம் எந்த தவறினையும் செய்ய முடியாது. அவர்களின் இலக்கு என்ன என்பது நமக்குத் தெரியும். அதன் வேகத்தைக் குறைத்து தடுத்து நிறுத்துவதற்கான ஆற்றல் வாய்ந்த வழிமுறைகளை நாம் முயற்சித்துக் கொண்டிருக்கிறோம் என்று கூறினார். ஆற்றல் வாய்ந்த என்றால் என்ன பொருள்? முந்தைய சோவியத் யூனியனின் இரண்டாவது மிகப் பெரிய பொருளாதார கட்டமைப்பைக் கொண்டிருக்கும், பெருமளவில் ரஷ்யாவை சார்ந்திருக்கும் உக்ரைனை (ரஷ்ய எரிவாயு பாதி விலைக்கு உக்ரைனுக்கு வழங்கப்படுகிறது) கட்டி இழுத்து ரஷ்யாவின் தாக்கத்திலிருந்து வெளியே கொண்டுவருவது மட்டுமல்ல, நெருக்கடியில் உள்ள ஐரோப்பிய யூனியன் நாடுகள் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு உக்ரைனை ஒரு புதிய சந்தையாக இணைத்துக் கொள்வது என்பது தான் அதன் பொருள். கிரிமீயா நாடாளுமன்றம் மக்களிடையே நடத்திய வாக்கெடுப்பில் 90 சதவிகிதத்திற்கும் மேலாக மக்கள் கிரிமீயா ரஷ்யாவுடன் இணைவதை உறுதிப்படுத்தினர். உக்ரைனின் கிழக்கு, தென்கிழக்கு பகுதிகளில் உள்ள நகரங்களில் இடைக்கால அரசுக்கு எதிரான போராட்டங்கள் நடைபெறுகின்றன; சில நகரங்கள சுயாட்சி பகுதிகாளக அறிவித்துக் கொண்டன. உக்ரைன் பல்வேறு பகுதிகளாக பிளவுப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. உக்ரைனில் எழுந்துள்ள நிலைமைகளை முடிவுக்குக் கொண்டு வர ரஷ்யா மூன்று ஆலோசனைகளை முன்வைக்கிறது. முதலாவதாக உக்ரைன் மக்கள் தொகை பல்வேறு வேற்றுமைகளை உள்ளடக்கியது. மொழி, இனம், கலாச்சார வேற்றுமைகள் இருந்தாலும் ஸ்லாவிக் இன மக்கள் என்ற அடிப்படையில் ரஷ்ய மொழி பேசுவோரும் உக்ரேனிய மொழி பேசுவோரும் கலந்து வாழும் வாழ்க்கை முறையும் உண்டு. ஆகவே ஒரு கூட்டாட்சி அமைப்பினை உருவாக்கி அதற்கான அரசியல் சட்டத்திருத்தங்களை மேற்கொண்டு, சுயாட்சி உரிமையினை அளித்து அதன் ஒற்றுமையினை பாதுகாக்கலாம். இரண்டாவதாக, நேடோ படைகள் கிழக்கு நோக்கி நகர்வதற்கான எந்த அடிப்படை நியாயமும் இல்லை. அப்படி நகருமேயானால் நாடுகளுக்கிடையே (ரஷ்யா உட்பட) உறவுகள் கடுமையாக பாதிக்கும் என ரஷ்யா எச்சரிக்க விரும்புகிறது. மூன்றாவதாக, சோவியத் யூனியன் சிதைவுக்குப் பிறகு ரஷ்ய மொழி பேசும் மக்கள் அந்தந்த நாடுகளில், குறிப்பாக உக்ரைன், லாட்வியா வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களின் நலன்களை பாதுகாக்கும் உரிமை, கடமை தங்களுக்கு இருப்பதாக ரஷ்யா அறிவிக்கிறது. இந்த ஆலோசனைகளில் உள்ள அம்சங்களை விவாதித்து முடிவு காண வேண்டும் என்ற கருத்து அரசியல் அரங்கில் முன்வைக்கப்படுகிறது. உள்ளடக்கிய அரசியல் அம்சங்கள் அண்மையில் அமெரிக்க அதிபர் ஆசிய திருகுமுனை மையம் (Asian Pivot) உருவாக்கப்படுவது பற்றி பேசினார்; அதன் நோக்கம் சீனாவை சுற்றி வளைத்து அதன் கழுத்தை நெரிப்பது என்பது தான். இப்பொழுது அமெரிக்காவின் ஐரோப்பிய திருகுமுனை மையம் (European Pivot) உருவாக்கிறது. இதன் நோக்கம் ரஷ்யாவை சுற்றி வளைப்பது – அதாவது ரஷ்யாவுக்கும் விரிவாக ரஷ்யாவை நோக்கி முன்னேறியிருக்கும் நேடோ அமைப்புக்கும் இடையே உள்ள முக்கிய பகுதியினை (உக்ரைனை) வசப்படுத்தினால் சுற்றி வளைக்கும் திட்டம் முழுமை பெறும் என்பது தான். உக்ரைன் தற்பொழுது பொருளாதார நெருக்கடியில் உள்ளது. இதுவரை ரஷ்யாவின் தாராளமான உதவி அதை நிமிர்ந்து நிக்க செய்திருந்தது; கடந்த 20 ஆண்டுகளில் ரஷ்யா அதன் எண்ணெய் மற்றும் எரிவாயு வணிகத்தில் 200 பில்லியன் டாலர் அளவுக்கு மானியமும், விலை குறைப்பும் அளித்து உதவியிருக்கிறது. சிக்கன நடவடிக்கை எடுக்க வேண்டுமென்ற நிபந்தனையோடு ஐ.எம்.எப். உதவக் கூடும். ரஷ்ய உதவி நிறுத்தப்படுமேயானால் மிகப் பெரிய பேரழிவை உக்ரைன் சந்திக்கும். இந்நிலையில் ஐ.எம்.எப்.பும் நுழைந்து. நேடோ ராணுவமயமாக்கலும் நடைபெறுமானால் உக்ரைன் ஒரு உள்நாட்டுப் போரை சந்திக்க வேண்டியிருக்கும். ஆனால் அண்மையில் நடந்த வாக்கெடுப்பில் 70 சதம் மக்கள் உக்ரைன் நேடோவில் சேர்வதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 56 சதம் மக்கள் சோவியத் சிதைவு மிகப்பெரிய அழிவு என்றும் வாக்களித்துள்ளனர். ஐரோப்பாவில் ஒரு புதிய மாற்றம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. நாஜி என்றும் பாசிஸ்ட் என்று அழைக்கப்பட்டவர்களெல்லாம் தங்களை தேசியவாதிகள் என்று குறிப்பிட்டுக் கொள்கிறார்கள். ஊடகங்கள் கூட அவர்களை வலதுசாரி தேசியவாதிகள் என்று குறிப்பிடுகின்றன. பெயர் மாற்றம் உள்ளுரைந்து கிடக்கும் பாசிச வெறித் தன்மையினை மாற்றி விடுவதில்லை. ஹங்கேரி, குரோஷியா, ஸ்லோவேனியா போன்ற நாடுகளில் (முன்பு சோசலிச கட்டமைப்புக்குள் இருந்தவை) பாசிசத்தின் வாரிசுதாரர்கள் அரசாங்க பொறுப்புக்கு வர முடிந்தது; பிரான்ஸ், ஆஸ்ட்ரியா, டென்மார்க் போன்ற நாடுகளில் பாசிச ஆதரவாளர்கள்அரசியல் அரங்கில் முக்கிய பங்கினை பெற்றார்கள். ஆனால் உக்ரைனில் தான் மூன்று முக்கிய பாசிஸ்ட் அரசியல் குழுக்கள் ஆட்சியில் அமர்ந்திருப்பது மட்டுமல்லாமல், நாட்டின் பாதுகாப்பு அமைப்பையும் தங்கள் வசம் வைத்துக் கொண்டிருக்கிறார்கள் – அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் அங்கீகாரத்தோடு, ஒத்துழைப்போடு வலதுசாரி மற்றும் பாசிச சக்திகளின் துணையோடு ரஷ்யாவை சுற்றி வளைப்பது என்பது அமெரிக்காவின் ஜனநாயக ஊக்குவிப்பு பணியில் புதிய கட்டம். ஆப்கனில் சோவியத் எதிர்ப்புக்கு நல்ல ஜெகாதிகள் கிடைத்தார்கள்; எல்சால்வடார், நிகரகுவா மற்றும் லத்தீன் அமெரிக்க இடதுசாரிகளை எதிர்க்க போதை மருந்து கடத்தும் நல்ல பயங்கரவாதிகள் துணை கிடைத்தது: சிரியாவில் நல்ல அல்கொய்தா கட்டவிழ்த்தப்பட்டிருக்கிறது; இப்பொழுது ஐரோப்பிய மண்ணில் நல்ல பாசிஸ்டுகள் அமெரிக்காவுக்கு கிடைத்திருக்கிறது. இடைக்கால அரசு 60000 பேர் கொண்ட துணை ராணுவ பிரிவு ஒன்றினை உருவாக்கும் முயற்சியில் எடுபட்டுள்ளது. இது நாஜிக்களின் படையாகவே உருவாகும் என்பதில் ஐயமில்லை. 1941-ல் நாஜிக்கள் நடத்திய இனப்படுகொலையில் பலியானவர்களின் நினைவாக ஒடிஸ்ஸா நகரில் எழுப்பப்பட்ட கட்டிடத்தை சிதைத்து அவர்களின் ஸ்வந்திக் அடையாளத்தை பதித்து விட்டுப் போனார்கள். ஐரோப்பிய- அமெரிக்க ஊடகங்கள் இதை கண்டுகொள்ளவே இல்லை. அமெரிக்க அரசாங்கமும் ஊடகங்களும் இரண்டு பொய்களை திரும்பத் திரும்ப பதிவு செய்து கொண்டிருக்கின்றன. இன்று, உக்ரைனில் பதவியில் இருக்கும் ஆட்சி முற்றிலும் அரசியல் சட்ட விதிகளின் படியே ஆட்சியில் உள்ளது; இரண்டு ரஷ்யா கிரீமியா மீது படையெடுத்து அதை கைப்பற்றியது; அது அரசியல் சட்டத்திற்கு புறம்பான நடவடிக்கை. மக்களால் தேர்வு செய்யப்பட்ட யானுகோவிட்ச் வெளியேற்றப்பட்டது தான் உண்மையில் சட்ட விரோதமான செயல்; கிரிமீயா அரசியல் சட்ட உரிமைகளின் படியே விலகியது – எப்படி உக்ரைன் சோவியத் யூனியனிலிருந்து விலகியதோ அதைப்போல. அந்த பொய்களின்அடிப்படையில் ரஷ்யாவிற்கு எதிராக பொருளாதார தடைகள் விதிக்கப்படுகின்றன. தடைகள் தொடருமேயானால் விளைவுகள் கடுமையாக இருக்கும் என்று புடின் எச்சரிப்பதால் மீண்டும் பனிப்போர் சூழல் எழுகிறதோ என்ற ஐயம் எழுகிறது. ரஷ்ய பொருளாதாரத்தின் மீது தாக்குதல் நடந்தால் அது மேற்கு நாடுகளின் பொருளாதாரத்தை கடுமையாக பாதிக்கும் என பொருளாதார ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்; ஏனெனில் அந்த பொருளாதாரங்களின் (ரஷ்ய மற்றும் ஐரோப்பிய நாடுகள்) பரஸ்பரம் தாக்குதலின் விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும். 600 ஜெர்மன் கம்பெனிகள் ரஷ்ய வணிகத்தில் ஈடுபட்டுள்ளன; பல பில்லியன் டாலர்கள் அங்கே முதலீடு செய்யப்பட்டிருக்கின்றன. ரஷ்ய எண்ணெய், எரிவாயு உக்ரைனில் பதிக்கப்பட்ட குழாய்கள் மூலம் ஐரோப்பாவுக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன. எரிசக்திக்கான ஜெர்மனியின் தேவையில் 30 சதம் ரஷ்யா அளிக்கிறது. ரஷ்யாவின் வெளிநாட்டு வணிகத்தில் 50 சதம் ஐரோப்பிய யூனியன் நாடுகளுடன் தான். வளர்ந்து வரும் ரஷ்ய பொருளாதாரத்தில் 75 சதம் ஐரோப்பிய யூனியன் நாடுகள் முதலீடு செய்திருக்கின்றன. பிரான்ஸ் 1.7 பில்லியன் டாலருக்கு ஹெலிகாப்டர்களை எடுத்துச் செல்லும் வாகனங்களை ரஷ்யாவிற்கு விற்பதற்கான ஒப்பந்தம் போட்டிருக்கிறது. பொருளாதார தேக்கத்தை சந்திக்கும் ஐரோப்பிய நாடுகள், அமெரிக்க ஏகாதிபத்திய கனவுகளுக்கு இரையாகுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. அமெரிக்காவின் பொய்களை பரப்பும் திட்டத்திற்கு மற்றொரு நோக்கமும் உண்டு. கிரிமீயாவை கைப்பற்றியதின் மூலம் ரஷ்யா தன்னுடைய நாடுகளுக்கு ராணுவ ரீதியான அச்சுறுத்தலை கொடுக்கும் நிலையில் உள்ளதாக பிரச்சாரம் செய்ய முடியும்; முன்பு சோவியத் யூனியனின் பகுதியாக இருந்த கஜகஸ்தான், உஸ்பெகிஸ்தான் போன்ற (சீனாவுக்கு அருகில் உள்ள) நாடுகளுக்கு இந்த பிரச்சாரத்தை கொண்டு சென்று நேடோவின் ராணுவத்தை அங்கு கொண்டு வைப்பது என்ற நோக்கமும் அதில் உள்ளடங்கியுள்ளது. ரஷ்ய நாடாளுமன்றத்தில் பேசும்பொழுது புடின் வரலாற்று, அரசியல் புரிதலோடு இந்தியாவும் சீனாவும் உக்ரைன் பிரச்சனையை அணுகிய முறை குறித்து பாராட்டுகளை தெரிவித்தார். ப்ரிக்ஸ் (பிரேசில், ரஷ்யா, இந்தியா, சினா, தென்ஆப்பிரிக்கா) நாடுகள் ஏகாதிபத்திய நிலையினை சாராமல் முடிவு மேற்கொண்டதையும் பாராட்டினார். உக்ரைன் நிகழ்வுகள் ரஷ்யாவும், சீனாவும் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக ஒரு கேந்திரமான கூட்டணி அமைத்துக் கொள்ள வாய்ப்பு எழலாம் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள். ஆனால் நடைமுறையில் ரஷ்யாவுக்கும், சீனாவுக்கும் உலக முழுமையும் உள்ள பொருளாதார உறவுகளை கணக்கில் கொண்டால் அது உடனடியாக நிறைவேறுவதற்கு வாய்ப்பில்லை என்று தோன்றுகிறது. உக்ரைன் பிரச்சனையில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் இரட்டை வேடம் வெளிப்பட்டது. 2008ம் ஆண்டு செர்பியாவிலிருந்து கொ சோவா பிரிந்ததை சட்டப்பூர்வமானதாக அங்கீகரித்த அமெரிக்கா கிரீமியா பிரிவதை ஏற்றுக் கொள்ள மறுக்கிறது. நேடோ படையெடுப்பில் உருவானது கொசோவா; கிரீமியா சட்டப்பூர்வமான பொதுவாக்கெடுப்பில் உருவானது. 1991ல் க்ரோஷியாவும் ஸ்லோவேனியாவும் பொது வாக்கெடுப்பு நடத்தி யூகோஸ்லாவியாவிலிருந்து பிரிந்து சென்றன. அமெரிக்கா அதை அங்கீகரித்தது – ஆனால் கிரீமிய வாக்கெடுப்பை அங்கீகரிக்க மறுக்கிறது ஏன்? 15 ஆண்டுகளுக்கு முன்பு யூகோஸ்லோவியா 78 நாட்கள் நேடோ நடத்திய போருக்குப் பிறகு துண்டு துண்டானது. உடைக்கப்பட்ட துண்டு செல்பியாவிலிருந்து தான் கொசோவா பிரிந்தது. இந்த நிகழ்வுகளெல்லாம் பால்கன் பகுதியில் நேடோவின் செல்வாக்கினை விரிவுபடுத்தியது. ரஷ்யாவின் செல்வாக்கு விரிவடைவது அமெரிக்காவுக்கு உகந்ததல்ல. புடின் இந்த மாற்றங்களெல்லாம் சட்டத்தின் அடிப்படையில் நடைபெறவில்லை, துப்பாக்கியின் பலத்தில் நடந்தது என்கிறார். ஏகாதிபத்தியத்தின் தேவைகளுக்கு அனைத்து வழிகளும் சரியானவையே! இந்த நாடகம் தொடர்ந்து அரங்கேறிக் கொண்டிருக்கிறது. ஆனால் இந்த அரசியல் சதுரங்கத்தில் ரஷ்யா சற்று வலுவான நிலையில் உள்ளது போல் தெரிகிறது. ஈரானுடன் அணு ஆயுத பிரச்சனைகளில் அமெரிக்காவுக்கு உதவிட ரஷ்யா தேவைப்படுகிறது; சிரியாவை சமாளிக்க ரஷ்யா தேவைப்படுகிறது. ஆப்கனிலிருந்து அமெரிக்க துருப்புகள் திரும்பப் பெறுகிற போது அங்கு நிகழும் ரத்தக் களரியை எதிர்கொள்ள ரஷ்யாவின் உதவி தேவைப்படலாம். இப்பொழுது கண்ணில் காணும் பனிப்போர் தோற்றம் இல்லாது போகக் கூடும். முந்தைய பனிப்போரின் மையப் புள்ளியாக முரண்பாடுகள் கொண்ட இரண்டு சமூக அமைப்புகளின் செயல்பாடுகள் இருந்தன. சோவியத் யூனியன் சிதைந்த பிறகு அது முடிவுக்கு வந்தது. இன்று நாம் காணும் பனிப்போர் நிலைக்கு அப்படி ஒரு அம்சம் இருப்பதாகக் கூற முடியாது. ஏனெனில் ரஷ்யா சோவியத் யூனியன் அல்ல.
அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய நாடுகளுக்கான விஜயத்தினை தொடர்ந்து லண்டனுக்கும் விஜயம் செய்திருக்கிறார்கள் கூட்டமைப்பின் உயர்மட்ட பிரதிநிதிகள். கனேடிய மண்ணில் புலத்து மக்களால் ஏற்பாடு செய்யபட்ட நிகழ்வை தொடர்ந்து லண்டனிலும் 06/12/2011 ஞாயிற்றுக்கிழமை நடத்த ஏற்பாடாகியிருக்கிறது,நேற்று சனிக்கிழமை காலை லண்டனுக்கு வருகை தந்திருக்கிறார்கள், லண்டனில் ஞாயிற்றுக்கிழமை சிறந்த ஒரு ரெஸ்ரோரண்டில் மக்களை சந்திக்கப்போகிறார்கள்,புலம்பெயர் மக்களுடன் சந்தித்து அவர்களின் கருத்துகளும் அதேபோல் தமிழ் மக்களின் பாராளுமன்ற பிரதிநிதிகளுடைய கருத்துக்களை மக்களும் அறிந்து இதனூடாக உலகஅரங்கில் தமிழின இன உணர்வு செயற்பாடுகளை விரிவுபடுத்த மேற்கொள்ளப்படும் செயற்பாடாக இதை நோக்க முடிகிறது,புலம்பெயர் ஊடகங்களுக்கும் அழைப்பினைவிடுத்து மேற்கொள்ளப்படுதல் அந்த செயற்பாடுகளினுடைய உந்து சக்தியாக இருக்கும்,பொதுவாக தாயக மக்கள் கூடியளவு இருக்கும் கனடா,இங்கிலாந்தில் லண்டன்,அவுஸ்ரேலியா போன்ற இடங்களில் இப்படியான செயற்பாடுகள் புலம்பெயர் தேசத்திலுள்ளவர்களை ஒழுங்குபடுத்தி ஒருங்கிணைக்கலாம்,அந்த அடிப்படையில் தெரிவுசெய்யபட்டு சந்திப்பு மேற்கொள்ளப்படும் இடங்கள் வரவேற்கக்கூடியவை, மக்களோடு கலந்துரையாட கனடாவில் ஏற்பாடு மிகப்பெருமெடுப்பில் மேற்கொள்ளப்பட்டது,சினிமா நடிக நடிகைகளையும் சின்னத்திரை நடிக நடிகைகளையும் அழைத்து அவர்களை சந்திக்க வைத்து அவர்களுடன் புகைப்படம் எடுக்க டிக்கடுக்கு கட்டணம் அறவிட்டு நடாத்தபடும் நிகழ்ச்சி அண்மையில் கனடாவில் நடைபெற்றபுகைப்படங்கள் ஆரம்ப உரை முதல் இராப்போசன விருந்து வரை வெளியாகியிருந்தது,தாயக மக்கள் மிகச்சிறந்த அரசியல் வெற்றியோடு இருப்பதை உணர்த்தும் விதமாக அந்த சந்திப்பு அமைக்கபட்டதா என்ற கேள்வி எல்லோர் மத்தியிலும் எழுந்திருந்தமை அவதானிகள் மத்தியில் அறிய முடிகிறது,தாயக மக்களின் வாழ்வாதாரம்,பொருளாதார அபிவிருத்தி மிகவும் பின் தங்கிய நிலையில் இருப்பதாக பாராளுமன்றங்களிலும் அரசியல் மேடைகளிலும் முழக்கமிடும் அரசியல் வாதிகள் இப்படியான ஐந்து நட்சத்திர உபசரிப்பை மறுத்திருக்கலாமே என்ற கேள்வி தாயக உதவிக்கரம் நீட்டும் சிந்தனைவாதிகள் மத்தியில் எழுந்திருக்கிறது,இந்திய சினிமா மற்றும் கலை நட்சத்திரங்களோடும் புகைப்படம் எடுப்பதற்கு முந்திக்கொள்வதுபோல் ஈழத்தினுடைய அரசியல்வாதிகளும் அதற்கு வழிசமைக்கிறார்களா என்ற கேள்வி தான் அது, அதைத்தான் ஈழசிந்தனை மக்களுடைய உணர்வாகியிருக்கும் காலகட்டங்களில் அதனை பிரதிநிதித்துவபடுத்தும் மக்கள் பிரதிநிதிகள் அவர்களை சந்திப்பதனை ஒரு வாய்ப்பாகக்கொள்ளவைக்கவும் மக்கள் அவர்களை சந்திப்பதானால் அதை ஏங்க வைக்கும் ஒரு செயற்பாடாகவும் கொண்டு வந்து ஈழ சிந்தனை மோக அரசியல் கலாச்சாரத்தை கொண்டு வர முனைகிறார்களா என்ற கேள்வியை எழுப்புகின்றார்கள்,அல்லது இல்லை இல்லை இது முற்றுமுழுதான தாயக உணர்வு சந்திப்பேதான் என்று அறுதியும் உறுதியுமாக உரைக்கிறார்களா? பொதுவாக மக்களிடம் தேர்தல்காலங்களில் ஒவ்வொரு வாக்குகளுக்காகவும் வீடேறி கையேந்திவிட்டு பாராளுமன்றங்களில் நட்சத்திர உணவுகளை மிகக்குறந்த விலைகளில் உண்டு மகிழ்கிறார்கள் என்ற கருத்து ஏலவே மக்கள் மத்தியில் இருக்கிறது,அது எந்த இனத்தை சார்ந்த இலங்கை பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பொருந்தலாம், அதுஅப்படியிருக்க இப்படியான மிகப்பெறுமதியான டொலர்களையும் பவுண்ட்ஸ்களையும் கொட்டி ஏற்பாடு செய்யும் சந்திப்பு அவசியமா? சாதாரண மக்களும் கூடி மக்கள் பிரதி நிதிகளை சந்திக்ககூடிய ஏற்பாடுகள் அமையாதா என்பது எல்லா மட்டத்தினரும் சிந்திப்பதாக அறியமுடிகிறது. வந்திருக்கும் பிரதிநிதிகளின் உரையின் பின் உணவு உண்டு அந்த புகைப்படங்களையும் பிரசுரித்து இந்த சந்திப்புகளினூடாக என்ன விடயத்தினை தாயக மக்களுக்கு கொண்டு செல்லபோகிறார்கள் என்ற தெளிவான அறிக்கையினை மக்கள் பிரதிநிதிகள் வெளியிடுவாரா? புலம்பெயர்மக்களின் உணர்வுகளையும் தெளிவான சிந்தனைகளைகளையும் கருத்துகளையும் இந்த சந்திப்புகளினூடு அறிந்துகொள்ளலாமென்றால் சந்திப்பிற்காக கட்டணம் செலுத்த முடியாதவர்களின் கருத்துகளை எப்படி அறிந்துகொள்வது என்ற கேள்வி அவதானிகள் மத்தியில் எழுகிறது,எங்கள் மக்களுக்காக குரல் கொடுப்பவர்களை உபசரிக்க வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்துச் சொன்னால் அது நன்றிக்கடன் தெரியாத தமிழனாகிவிடுவான், ஆனால் நட்சத்திர சந்திப்பு வைப்பதுதான் தாயகம் நோக்கிய சிந்தனைவாதிகளின் கேள்வியாகிட்டது.மிகக்குறந்த செலவோடு ஏராளமான மண்டபங்கள் இருக்க அதுவும் டிக்கட் கட்டண அறவிட்டோடு வரும் போது அந்த கேள்வி எழுவது நியாயமாகிறது,புலத்தில் தமிழர்கள் எத்தனையோ பதவிகளிலும் உயர் நிலைகளிலும் இருப்பதால் மண்டபங்களுக்கான தொகை சிறிய தொகை என்பதால் அது உயர் நிலை தமிழர்களுக்கு மிக இலகு,சரி வருகை தரும் மக்களின் எண்ணிக்கையை மட்டுபடுத்த இப்படியான நிலையை கையாண்டிருக்கலாம் என்றால் சிறிய மண்டபத்திற்கான செலவோடு மிகுதிப்பணத்தை வந்திருந்த பாராளுமன்ற உறுப்பினர்களிடம் கொடுத்து அந்த பணத்தை தாயக மக்களுக்காக பயன்படுத்த ஆவனசெய்திருக்கலாமே என்று கேட்கிறார்கள் உதவிக்கர சிந்தனைவாதிகள்.மாறாக பல்துறை சார்ந்தவர்களை நிகழ்விற்கு அழைத்து அந்த சந்திப்பில் இணைத்திருக்கலாமே என்ற கருத்தும் நிலவுகிறது.இவையெல்லாம் கவனத்திலெடுக்கபடவேண்டிய விடயங்களாகின்றன, இன்று நடபெறவுள்ள மண்டபத்தின் உத்தியோகபூர்வ இணயத்தளம் இங்கு இணைக்கபட்டிருக்கிறது. என்றாலும் தாயக மக்களுடைய செயற்பாடுகளில் புலம்பெயர் மக்களுடைய சிந்தனைகளும் அவசியமாகிறது என்பதும் அவர்களின் ஒத்துழைப்பு வெற்றியோடுதான் எதுவும் ஆகலாம் என்பதை இந்த சந்திப்புகள் உலகத்திற்கும் உன்னிப்பாக அவதானிப்பவர்களுக்கும் சொல்லபடுகின்ற செய்தியாகிறது, தொடர்ந்து வருகின்ற திங்கட்கிழமை நாளில் பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரமுகர்களையும் சந்திக்க ஏற்பாடு செய்யபட்டிருக்கிறது,கூட்டமைப்பாக உலக அரங்கில் தமிழர்களின் உரிமை சார்ந்த விடயங்களை சகல நாடுகளின் பிரமுகர்களுக்கு கொண்டு செல்வது சிறப்பானதே, தனித்துவத்தோடு தகுந்த முடிவுகளை எடுத்து சிறப்பான முன்னேற்பாடான செயற்பாடுகளுக்காக துணிச்சலான இப்படியான பாராளுமன்ற உறுப்பினர்கள் வாழ்த்தபட வேண்டியவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.ஆனால் அதையே சந்தர்ப்பங்களாக்கபடக்கூடாது என்பதும் மக்களுடைய சிந்தனை.புலத்துமக்களின் வாய்களில் உச்சரிக்கப்பட்ட மற்றும் ஊடகங்களின் கருத்துகளின் தொகுப்பாக இந்த பதிவு வருகிறது,உங்கள் கருத்துகள் ஆரோக்கியமாக பதிவு விதிமுறைகளுக்குட்பட்டு நாகரீகமாக இருப்பின் எல்லாமே பிரசுரிக்கபடும், என்னங்க ரொம்ப வெயிட்டா இருக்கு, எண்டாலும் இதையும் சாப்பிட்டு பார்ப்பம் போட்டோவுக்கு சிரிச்சே ஆகவேணும்,வெப்சைட்டிலை வரும் போது நல்லா இருக்கும்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!1 ஓஓ டயபிற்றிக் பிறசர் இருக்கிறவர்களுக்காக கொஞ்சம் உப்பு உறைப்பு கொழுப்பு எல்லாம் குறைச்சுத்தான் சமைச்சது, நல்லா இருக்கோ?????????????? ஓஓஓஓஒ திறமா இருக்கு!!!!!!!!!!!!!! இதென்ன இது அந்த காலம் தந்த ரோசாப்பூ இப்பவும் வச்சிருக்கிறீங்களோ???? வாடாமல் இருக்கு???? எத்தனை மேடை ஏறியாச்சு?அரசியல் பேச்சு எண்டால் கலக்கல் தான்!!!!!! அது சரி எப்ப சாப்பாடு?? என்ன இருந்தாலும் ஒரு குழம்பு இருக்க வேணும், கண்டு பிடிச்சு தந்திட்டீங்கப்பா!!!!!!!! புகைப்படங்களுக்கான பின்னூட்டம் சற்று நகைச்சுவைக்காகத்தான்,போட்டொ எடுக்கும் போது என்ன பேசிக்கொண்டு இருந்திருப்பார்கள் என்று யாருக்கு தெரியும்.
மன்னார் நகர நுழைவாயிலில் உள்ள ‘லங்கா சதொச’ விற்பனை நிலைய வளாகத்தில் மனித எலும்புகள் அகழ்வு பணி இன்று 24ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. மன்னார் நீதவான் ரி.ஜே.பிராபாகரன் முன்னிலையில் இடம் பெற்று வருகின்ற அகழ்வு பணிகளுக்கு விசேட சட்ட வைத்திய நிபுணர் டபில்யூ. ஆர்.ஏ.எஸ்.ராஜபக்ஷ தலைமை தாங்கிவருகின்றார். மன்னாரில் மனித எச்சங்கள் எலும்புகூடுகள் கண்டுபிடிக்கும் நோக்குடன் அகழ்வு செய்யப்பட்டு வரும் புதைகுழி இடத்தை இன்று பெரிதாக்கி அகழ்வு செய்யப்பட்டபோது தொடர்ந்து மனித எலும்புக்கூடுகள் தென்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் மன்னாரில் சதொச விற்பனை நிலைய கட்டிட கட்டுமான பணியின்போது இவ்விடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனித எச்சங்களைத் தொடர்ந்தே இன் று (29) 24 வது நாளாக இவ் அகழ்வு பணி நடைபெற்றது. இவ் அகழ்வு பணியின்போது ஒரு புறம் ஏற்கனவே கண்டுபிடித்து அடையாளமிடப்பட்டிருந்த எலும்புக்கூடுகள் மண்டையோடுகளை வெளியேற்றும் பணி நடைபெற மறுபுறம் மண்களை அகழ்வு செய்யும் பணியும் நடைபெற்றன. அப்பொழுது புதிதாக அகழ்வு செய்யப்பட்ட இடத்திலும் ஒரிரு எலும்புகூடுகள் தென்பட்டுள்ளது. இன்று நண்பகல் 12 மணியுடன் இவ் பணி இடை நிறுத்தப்பட்டு மீண்டும் திங்கட் கிழமை ஆரம்பிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
{mosimage}அவசரத்திற்கு நாம் சில தேவைகளுக்காகச் சிறு குறிப்புகள் எழுதுவதுண்டு. அது தற்காலிக குறிப்புத்தான். அந்த குறிப்பு தேவையெனில் பின்பு நிரந்தர குறிப்பேட்டுக்கு மாற்றப்படும், தேவையில்லையெனில் அழிக்கப்படும். இதே வேலையை நாம் கணினியிலும் செய்யலாம் . தேவை, மூன்றே படிகள், 1. ஒரு கோப்பினை (Word Document) திறவுங்கள், 2. RESIZE பொத்தானை அழுத்தி அந்தச் சட்டத்தை (Document Window) சிறிதாக்குங்கள், 3. ஏதாவது ஒரு பத்தியை (Paragraph) தேர்ந்தெடுத்துக்கொண்டு, பின்பு அதை DRAG செய்து டெஸ்க்டாப்பில் (Desktop) உள்ள ஐகொன்களுக்கு அருகில் உள்ள காலி இடத்தில் போடுங்கள். தேவையெனில், CUT/COPY&PASTE முறையையும் பயன்படுத்தலாம். இப்போது டெஸ்க்டாப்பில் (Desktop), படத்தில் இருப்பது போன்ற, நீல மற்றும் மஞ்சள் கோடு போட்ட ஐகான் (icon), Document Scrap என்று ஆரம்பித்து, உங்கள் கோப்பின் பெயர் (Document Name) கொண்ட தலைப்புடன் உருவாகி விடும். பின்பு தேவைப்படும்போது அதை மவுஸினால் இருமுறை சொடுக்கினால் (Double Click), அது Word கோப்பில் திறக்கப்பட்டு காட்சியளிக்கும். அதை தேவைக்கேற்றாற் போல் மாற்றி சேமித்து (SAVE) கொள்ளலாம், அல்லது வேலை செய்துகொண்டிருக்கும் கோப்பில் (Word Document) DRAG/DROP செய்து தேவைக்கேற்ப மாற்றியமைத்துக் கொள்ளலாம்.
படுக்கையில் இருந்தே எழ முடியவில்லை.. கவலைக்கிடமான சமந்தாவின் நிலை.. வெளிநாட்டில் சிகிச்சை பெற முடிவா?..! பிரபல நடிகை லட்சுமி திடீர் மரணம்.! தீயாய் பரவிய வதந்தி.! முற்றுப்புள்ளி வைத்து விளக்கமளித்த பிரபலம்!! வேற லெவல்.. மாஸ் லுக்.! உறுதியான சூப்பரான தகவல்! கொண்டாடாத்தை தொடங்கிய தளபதி ரசிகர்கள்!! என் ஓட்டு ரட்சிதாவிற்கே.! ஆதரவாக நிற்கும் பிரபலம்.! ஒருவேளை அது நடந்திருமோ?? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!! பாகுபலி புகழ் பிரபாஸுடன் நடிகை கீர்த்தி திருமணம்?.. ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த நடிகை.. உண்மை தகவல் இதுதான்..! #IndVsNz: அடுத்தடுத்து சரிந்த விக்கெட்டுகள்.. 47.3 ஓவரில் 219 ரன்கள் எடுத்து இந்தியா ஆல்அவுட்.. களமிறங்கும் நியூசிலாந்து.! கெத்துக்காக வீடியோ பதிவிட்டு, வனத்துறையிடம் சிக்கிய பிரபல நடிகை.. இதுதான் காரணமாம்..! கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. தமிழகத்திலும்,கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை மற்றும் கொரோனாவால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3882 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், பாதிப்பு எண்ணிக்கை 94049 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கடந்த 25ம் தேதி முதல் 3,509, 3,645, 3,713, 3940, 3949, 3,943 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருந்தது. இதனால், பாதிப்பு எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்கு ஒரே நாளில் 63 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் பலியானவர்களின் எண்ணிக்கை 1,201ல் இருந்து 1,264 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று மட்டும் 2,182 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தநிலையில் சென்னையில் மொத்த பாதிப்பு 60,533 ஆக அதிகரித்துள்ளது. Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here Tags: #corona #increased #tamilnadu Copy Link தற்போதைய செய்திகள் ரூ.2 கோடி இன்சூரன்ஸ் பணத்திற்காக இப்படியா.! பக்கவாக ப்ளான் போட்டு கணவர் செய்த காரியம்.! அம்பலமான நாடகம்!! மீண்டும் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்திய துயரச் சம்பவம்... தவறான சிகிச்சையால் காலினை இழந்து தவிக்கும் இளைஞர்... சொத்தை பல் வலி குறைக்க அலுமினியம் பாஸ்பேட் வைத்த பெண் மயங்கி விழுந்து மரணம்.. அலட்சியம் வேண்டாம் மக்களே.! தமிழ் சங்கத்திற்கு தமிழ் நாட்டிலேயே எதிர்ப்பு!.. ரயில் மறியலில் ஈடுபட்ட SFI அமைப்பினர் அதிரடி கைது..!
‘துளசிதளம்' எண்டமூரி வீரேந்திரநாத்தின் மாஸ்டர் பீஸ்களில் தலையாயது. சுமார் 20 ஆண்டுகள் முன் ‘சாவி' இதழில் எ.மூ.வீ.நாத்தின் ஆந்திர மூலத்தை சுசீலா கனகதர்கா என்பவரின் மொழிபெயர்ப்பில் வெளிவந்தபோது பெரும் பரபரப்பைக் கிளப்பியது. ஆனால் அந்தத் தொடர்கதையின் இறுதிப்பகுதி அப்ரப்டாக முடிந்தது போலத் தோன்றியது. ஸ்ரீனிவாச பிள்ளை என்பவன்தான் குற்றவாளி என்று ஒரு வரி வரும். யார் அந்த ஸ்ரீனிவாச பிள்ளை துளசி பிழைத்தபின் என்ன நடந்தது என்கிற விடைதெரியாத கேள்விகள் இருந்தன. பின்னர் புத்தகமாக்கப்பட்ட போதும் அப்படியே. இப்போது கௌரி கிருபாநந்தன் என்பவர் எ.மூ.வீ.நாத்தின் நாவல்களை மொழிபெயர்த்து வருகிறார். அவருடன் பழக்கம் உண்டு என என் வாசகி சமீரா சொன்னபோது சமீராவிடம், அந்தப் பரபர நாவலின் க்ளைமாக்ஸைப் படிக்காத வருத்தத்தை வெளியிட்டேன். இப்போது கௌரி கிருபாநந்தன் முழுமையாக மொழிபெயர்த்து அல்லயன்ஸ் வெளியீடாக வந்திருக்கும் துளசிதளம் என் குறையை நீக்கியது. ஒரு நாவல் குறையுடனேயே வெளிவந்து 20 ஆண்டுகளுக்குப் பின் திருத்தப்பட்ட பதிப்பு இப்போது வந்துள்ளது என்பது வெகு வியப்பான விஷயம்! ‘துளசிதளம்' என்ன மாதிரியான கதை? ஸ்ரீதர் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் பணிபுரிபவன். தன் மேலதிகாரியின் பேத்தியை ஒரு பிரச்னையின் போது தொழிலாளி ஒருவனிடமிருந்து காப்பாற்றுகிறான். அதில் ஐம்பதடி உயரத்திலிருந்து கீழே விழுந்து அடிபட்டதில் அவனுக்கு குழந்தை பாக்கியம் இனி இல்லை என்கிறார் டாக்டர். வெகுநாட்களாக குழந்தை இல்லாமலிருந்து அப்போது கர்ப்பமாகி இருக்கும் அவன் மனைவி சாரதாவுக்கு பெண் குழந்தை பிறக்கிறது. துளசி எனகிற அந்தக் குழந்தையின் பேரில், அவள் 10வது வயதில் கிடைக்குமாறு இருபது லட்சம் ரூபாய் சொத்தை எழுதி வைத்துவிட்டு தன் நாட்டிற்கு (இங்கிலாந்து) சென்று விடுகிறார் மேலதிகாரி. துளசி 10ம் வயதை எட்டுவதற்கு முன் இறந்தால் சொத்துக்கள் ஸ்ரீகிருஷ்ணா அநாதைப் பெண்கள் ஆசிரமத்திற்குப் போய்ச் சேரும் என்கிறது உயில். அந்த ஆசிரமத்தை நடத்தும் (போலி) சுவாமி காத்ரா என்கிற மந்திரவாதியின் உதவியை நாடுகிறார் துளசியைக் கொல்ல. அவன் குழந்தைகளுக்கெதிராகச் செய்ய மாட்டேன் என மறுக்க, அவனுக்குத் தெரியாமல் அவன் சிஷ்யன் செய்கிறான் அதை. குழந்தை துளசிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட, ஸ்ரீதரின் நண்பன் நம்பூதிரி அது பில்லி சூனித்தால் வந்தது என்கிறான். அதுபோன்ற விஷயங்களில் நம்பிக்கையற்ற ஸ்ரீதரைக் கேட்காமலேயே வேறொருவன் மூலம் சூனியத்தைத் திருப்பியடிக்க, காத்ராவின் சிஷ்யனை அது பலி கொள்கிறது. விளைவாக, காத்ராவே களத்தில் இறங்கி, காஷ்மோரா என்கிற மிக்க் கொடிய சாத்தானை துளசியின் மேல் ஏவுகிறான். அது தினம் ஒரு வியாதியைத் தந்து 22ம் நாள கொல்லவல்லது. விளைவாக... துளசிக்கு தினம் ஒரு வியாதி ஏற்பட்டு துடிதுடிக்கிறாள். அவளுக்கு சிகிச்சை தரும் டாக்டர் பார்த்தசாரதி என்ன பிரச்னை என்றே கண்டுபிடிக்க முடியாமல் திணறுகிறார். ஸ்ரீதரின் வீட்டில் அவன் தூரத்து உறவு என்று சொல்லி ஒட்டிக் கொள்ளும் சரஸ்வதி என்கிற நடுத்தர வயது நபரும், அவன் மகன் என்று சொல்லிக்கொண்டு மாரி என்கிற இளைஞனும் ஒட்டிக் கொள்கின்றனர். அவர்கள் சுவாமியின் கையாட்கள். தினம் நள்ளிரவு மூன்று சொட்டு ரத்தம் துளசியினுள்ளிருக்கும் காஷ்மோராவுக்கு படைக்க வேண்டும் என்பதை கச்சிதமாக நிறைவேற்றுகின்றனர். ஸ்ரீதரின் தங்கை அனிதாவின் அழகைக் கண்ட மாரி, அவள் அப்பாவித்தனத்தை பயன்படுத்திக் கொண்டு அவளை அடைந்து விடுகிறான். அவள் தற்கொலை செய்து கொள்ள, சாரதாவின் தம்பியான நாராயணன் (பிறவி ஊமை) அதற்குக் காரணம் மாரி என்பதை தெரிந்து கொண்டு, அவனை துடிதுடிக்க வைத்துக் கொல்வேன் என்று சபதமிட்டு அதற்கான வேலைகளில் இறங்குகிறான். ஜெயதேவ் என்கிற புகழ்பெற்ற ஹிப்னாடிக் டாக்டரின் உதவியை நாடுகிறாள் சாரதா. அவர் தன் திறமையின் மூலம் சற்றே துளசிக்கு ஆறுதல் தந்தாலும் நாளுக்கு நாள் குழந்தை கிழிந்த நாராய் மாறிக் கொண்டிருப்பதை தடுக்க முடியவில்லை. இப்படியே 20 நாட்கள் கடந்துவிட, 21ம் நாளன்று பேய், பிசாசு, பில்லிசூனியங்களில் நம்பிக்கையற்ற ஸ்ரீதருக்கு அதை நம்பும் வண்ணம் ஒரு சம்பவம் அவன் கண்முன் நடக்கிறது. தன் நண்பன் நம்பூதிரி மற்றும் லாயர் வித்யாபதியுடன் சேர்ந்து ஒரே நாளில் அந்த சாத்தானை முறியடித்தே தீர வேண்டும் என்று போராடுகிறான். இன்னொருபுறம் நடக்கிற விஷயங்களுக்கு விஞ்ஞான ரீதியாக விடை கண்டுபிடிக்க முயலும் ஜெயதேவுக்கு அதற்கான விடை கிடைக்கிறது. துளசியின் உடலில் தாயத்து வடிவில் கட்டப்பட்ட எலக்ட்ரானிக் டிவைஸ்தான் காரணம் என்று அறியும் அவர் அதன் மூலம் செயல்படுபவனை கண்டுபிடித்து அழிக்க முற்படுகிறார். இந்த இருவழிப் போராட்டத்தின் முடிவில் குழந்தை துளசி பிழைத்தாளா, நடந்தவை அனைத்தும் விஞ்ஞானமா, பைசாசமா? என்கிற (சுவாரஸ்ய) புதிர்களுக்கு விடையை புத்தகம் தரும். நூலாசிரியர் பற்றிய தகவல்கள் : நூலாசிரியர் எண்டமூரி வீரேந்திரநாத் அடிப்படையில் ஒரு சார்ட்டர்ட் அக்கவுண்டன்ட். ஆந்திரா வங்கியில் உயரதிகாரியாகப் பணியாற்றி வந்த இவர் ஒரு கட்டத்தில் (நம்ம ராஜேஷ்குமார் போல) முழுநேர எழுத்தாளராகி விட்டார். பைசாசம், விஞ்ஞானம், சமூகம், த்ரில்லர், ஜேம்ஸ்பாண்ட் கதை, சுயமுன்னேற்றக் கட்டுரைகள் என்று எழுத்தில் எந்த ஏரியாவையும் விட்டு வைக்காதவர் இவர். ஒரு சமயம் என்.டி.ராமராவுக்குப் பிறகு இரண்டாவது பிரபலம் என்று (1982)ல் தேர்ந்தெடுக்கப்பட்டவர். ஜனரஞ்சகமாக எழுத்தைக் கைக்கொணடிருபபவர் என்றாலும் சாகித்திய அகாடமி விருதும் பெற்ற வல்லமையுடையது இவர் எழுத்து. இவர் சினிமாவும் இயக்கியிருக்கிறார். சினிமா வசனத்திற்கான ஜனாதிபதி விருதும், தொலைக்காட்சித் தொடருக்கான கோல்டன் நந்தி விருதையும் வென்றிருக்கிறார். இவரின் ‘வெற்றிக்கு ஐந்து படிகள்’ என்ற சுயமுன்னேற்ற நூல் தெலுங்கில் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் விற்பனையான சாதனை படைத்துள்ளது. விஞ்ஞானமா, பைசாசமா என்கிற கேள்வியை எழுப்பிய ஒரு பரபரப்பு த்ரில்லரை நம்ம சுஜாதா ‘கொலையுதிர் காலம்’ ஆக எழுதியிருக்கிறார். தமிழில் சுஜாதா கையாண்ட விஷயம் ஒருவிதமான சுவாரஸ்யம் என்றால் இந்த ஆந்திர சுஜாதா வேறு ஒரு கோணத்தில் அதைக் கையாண்டு அசத்துகிறார். ஆயின் இரு எழுத்தாளர்களுமே கடைசியில் எதனால் குற்றம் நிகழ்ந்தது என்பதற்கான விளக்கத்தை வாசகர்கள் அவரவர் மனப்போக்கின்படி தீர்மானிக்கட்டும் என்பதில் மட்டும் ஒற்றுமையாக செயல்பட்டிருக்கிறார்கள். ‘துளசிதளம்’ கதையில் ஒருபுறம் 1ம் நாள், 2ம் நாள் என்று துவங்கி 21ம் நாள் வரவும் ஸ்ரீதர் மகளுக்காகப் போராடுவதை மணிக் கணக்காக நம் முன் விவரித்து, இங்கே அதேபோல ஜெயதேவ் போராடுவதையும் மணி, நிமிட சுத்தமக விவரித்து, மூன்றாவது ட்ராக்காக எப்படி புத்திசாலித்தனமாக மாரியை நாராயணன் கொல்கிறான் என்பதை விவரித்து, மும்முனை சுவாரஸ்யத்தில் டோட்டலாக படிப்பவருக்கு பி.பி.யை எகிற வைத்து விடுகிறார் எ.மூ.வீ.நாத். ‘கையில் எடுத்தால் கீழே வைக்க முடியாத நாவல்’ என்கிற வாசகத்தை பெயரளவுக்குச் சொல்லாமல் அசலாக மெய்ப்பிக்கும் புத்தகம். இதில் என்னைக் கவர்ந்த அம்சம் என்னவெனில்... நூலாசிரியர் தரும் தகவல்கள். பூத, பைசாச வித்தைகள் மூலம் சிறுமியை அழிக்க முற்படுகிறார்கள் எனில், அதற்காக மந்திரவாதிகள் மேற்கொள்ள வேண்டிய நியமங்கள், கஷ்டங்கள் போன்ற விவரங்களை ஏதோ மந்திரவாதிகளுடன் பலஆண்டு பழகியவர் போல அள்ளித் தந்திருக்கிறார். அதேசமயம், விஞ்ஞான ரீதியாக வேறொரு இடத்திலிருந்து குழந்தையை மெஸ்மெரிசம் செய்து எப்படி அட்டாக் பண்ண முடியும் என்பதற்கான விளக்கம் (படமே போட்டு) தெளிவாகத் தந்திருக்கிறார். அசத்துகிறது அந்த உழைப்பு! இந்தக் கதை தொடராக வெளிவந்த காலத்தில் ஆந்திர மாநிலத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டதாம். எந்த அளவுக்கு என்றால்... யாராவது சாதாரணமாக உடம்பு முடியாமல் படுத்தால் கூட ‘எனக்கு சூனியம் வெச்சுட்டாங்க’ என்று பயந்து நடுங்கும் அளவுக்கு. ஆசிரியருக்கு நிறைய மிரட்டல்களும், வினோத பார்சல்களும் வந்தனவாம். இத்தனைக்கும் பின்னர் ‘பதினோரு ஆண்டுகளுக்குப் பின் காஷ்மோரா மீண்டும் விழித்துக் கொள்வதோடு அடுத்த நாவலான மீண்டும் துளசி துவங்கும்’ என்று குறிப்பிட்டிருக்கிறார். (நல்லவேளை... அந்த இரண்டாம் பாகத்தையும் வாங்கிவந்து விட்டேன்.) அதைப் படிக்க நான் புறப்படுகிறேன். இதுவரை துளசிதளம் படிக்காதவர் நீங்கள் எனில், உடனே அதைத் தேடிப் பிடித்துப் படிக்கப் புறப்படுங்கள்! நூலின் பெயர் : துளசிதளம், பக்கங்கள் : 368, விலை : ரூ.160, வெளியிட்டோர்: அல்லயன்ஸ் கம்பெனி, ப.எண்.244, ராமகிருஷ்ணா மடம் சாலை, மயிலாப்பூர், சென்னை&14, தொ.பே: 24641314, இணையம்: www.alliancebook.com
சமகாலத்தில் எனக்கு மிகவும் பிடித்தமான எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன். அவருடைய கட்டுரைகள், சிறுகதைகள், நாவல்கள் படித்திருப்பதுடன், உலக இலக்கியப்பேருரைகளும் காணொளிக்காட்சியாக பார்த்து ரசித்து வியந்துமிருக்கின்றேன். எனக்குப்பிடித்தமான எழுத்தாளர்களை நேரில் சென்று பார்த்துப்பேசுவதும் எனது இயல்பு. அந்தவகையில் எஸ்.ரா. அவர்களை இரண்டு தடவைகள் சென்னையில் அவர் வசிக்கும் சாலிக்கிராமத்திற்கே சென்று பார்த்திருக்கின்றேன். அவரது அன்பான உபசரிப்பில் திளைத்திருக்கின்றேன். அவ்வப்போது அவரது படைப்புகள் குறித்தும் தொலைபேசியில் உரையாடியிருக்கின்றேன். எஸ்.ரா. படைப்பிலக்கியவாதி மாத்திரமில்லை. அவர் திரைக்கதை ஆசிரியர். வசனகர்த்தா. சூப்பர்ஸ்டாரின் பாபா படம் உட்பட சில படங்களுக்கும் கதை, வசனம் எழுதியவர். அவுஸ்திரேலியா மெல்பனுக்கும் அவர் ஒரு திரைப்படத்தின் படப்பிடிப்புவேளையில் வந்து சுமார் ஒரு மாதகாலம் தங்கியிருந்தார் என்பதும் பின்னர்தான் தெரியவந்தது. அவ்வேளையில் எங்களையெல்லாம் சந்திக்கமுடியாமல் போனமை குறித்தும் அவர் வருந்தியிருக்கிறார். இடக்கை என்னும் இந்த நாவல், இந்தியாவின் கடைசி மொகாலய சக்கரவர்த்தியின் அந்திமகாலத்தைப்பேசும் கதை. ஆலம்கீர் ஔரங்கசீப் பாதுஷா 1707 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 20 ஆம் திகதி தனது 91 ஆவது வயதில் மறைந்திருக்கிறார் என்று வரலாற்று ஆசிரியர்கள் எழுதிய குறிப்புகளிலிருந்து பார்க்கின்றோம். இவ்வாறு துல்லியமாக அதற்கு முன்னர் இந்தியாவில் தென்னாட்டில் ஆண்ட சேர, சோழ, பாண்டியர்கள் பற்றிய காலம் பதிவுசெய்யப்படவில்லை. வடக்கே பல மொகாலய சக்கரவர்த்திகள் பற்றிய வரலாறுகளுக்கு சான்றுகள் இருப்பதனால் அவற்றை உசாத்துணையாகக்கொண்டு எஸ்.ரா.வும் இந்த நாவலை எழுதியிருக்கிறார். எஸ்.ரா. எழுத்தாளர் மட்டுமல்ல ஒரு யாத்ரீகனும்தான். நாடோடியாக அலைந்து தகவல்கள் திரட்டி எழுதும் அவரது படைப்புகளின் வரிசையில் இந்த இடக்கை எமது கரத்திற்கு வந்துள்ளது. இதனைப்படித்துக்கொண்டே மதன் எழுதியிருக்கும் வந்தார்கள் வென்றார்கள் என்ற அரிய தொகுப்பு நூலையும் சமகாலத்தில் படித்தேன். வந்தார்கள் வென்றார்கள் விகடனில் தொடர்ந்து வெளியாகி வாசகரின் அமோக ஆதரவினால் தனிநூலாகவும் பதிப்பிக்கப்பட்டு ஒரு இலட்சத்திற்கு மேல் விற்பனையாகியிருக்கிறது. அதனை விகடன்குழுமம், தமது விற்பனையில் ஏறு முகம் எனச்சொல்லியிருக்கிறது. ஆனால், வேறு ஒரு சந்தர்ப்பத்தில் ஆனந்தவிகடன் மதன், அங்கிருந்து வெளியேறும் துர்ப்பாக்கியமான சூழல் தோன்றியது. அதுபோன்று சமூக நாவல்களும் சரித்திர நாவல்களும் ஏராளமான கதைகள், கட்டுரைகளும் எழுதியிருக்கும் எஸ்.ரா.வும் இதுவரைகாலமும் எந்த பதிப்பகத்தின் ஊடாக தமது நூல்களை வெளிக்கொணர்ந்தாரோ அந்த உயிர்மைப்பதிப்பகத்திலிருந்து வெளியேறும் சூழ்நிலை தோன்றியிருக்கிறது. எஸ்.ரா. சிறந்த கதை சொல்லி. அவரது நாவல்கள், சிறுகதைகள் அனைத்திலும் இந்தத்தன்மையை காணமுடியும். நான் படித்தவற்றில், அவரது உறுபசி, யாமம், சஞ்சாரம் முதலான நாவல்களிலும் விழித்திருப்பவனின் இரவு என்னும் கட்டுரைத்தொகுப்பிலும் அவருடை தேடல் மனப்பான்மையை பார்த்து வியந்திருக்கின்றேன். அவர் இந்த நாவலுக்கு எழுதியிருக்கும் முன்னுரையில் இருந்து சில வரிகள்:- “இந்நாவல் வரலாற்றில் வாழ்ந்த சாமானியர்களின் கதையைச்சொல்ல முயலுகிறது. அதிலும் குறிப்பாக வரலாற்றின் இருண்ட பக்கங்களை, நிழல்களைப்போல குரலற்றுப்போன மனிதர்களை அடையாளப்படுத்துகிறது. நீதிக்காகக் காத்திருப்பவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாகிப்போன இன்றைய சூழலில் காலம் காலமாக இந்திய மக்கள் நீதிக்காக போராடிய அவலத்தை, நீதி மறுக்கப்பட்ட நிரபராதிகளின் வேதனைக்குரல்களை நினவுபடுத்துகிறது இந்நாவல்.” இந்நாவலில் 45 அங்கங்கள். ஒவ்வொன்றிலும் பல கதைகள், உப கதைகள். அவற்றில் சில வெவ்வேறு சந்தர்ப்பங்களில் ஒன்றிணைகின்றன. சில முடிச்சவிழாத புதிர்களாகிவிடுகின்றன. அந்தக் கதைகள், உபகதைகளின் ஊடாக வாழ்க்கைத்தத்துவமும் மிளிர்கிறது. சில வரிகளைப்பாருங்கள்: ” சாவின் காலடிகள் தனது அறைக்கு வெளியே கேட்டுக்கொண்டிருப்பதை அவர் உணர்ந்தார். ஆனால், கதவைத்தட்டி உள்ளே வரவில்லை. காத்திருக்கிறது. ஒரு வேளை தன்னிடம் அனுமதிகேட்டு காத்திருக்கிறதா? அதுதான் நிஜம் என்றால் வெளியே காத்திருக்கட்டும். சாவைக்கண்டு அவர் பயப்படவில்லை. ஆனால், அவரது மரணத்தின் பின்பு ஏற்படப்போகும் அரியணைச்சண்டைகள் நினைத்து அவர் மிகவும் வேதனைகொண்டார். தேசத்தை ஆளமுடிந்த தன்னால் வீட்டை நிர்வகிக்க முடியவில்லை.” (பக்கம் 9) இந்தவரிகளுடன் சமகால தமிழர் அரசியலையும் நாம் ஒப்பீடு செய்யமுடியும். ஒளரங்கசீப்பின் வாழ்வின் இறுதிக்கட்டத்திலிருந்து நாவல் தொடங்கியிருந்தாலும், Flash back காட்சிப்படுத்தலின் ஊடாக அவரது இயல்புகள் வாசகர்களுக்கு சொல்லப்படுகிறது. இந்நாவல் ஒரு சக்கரவர்த்தி பற்றியது மட்டுமல்ல அவர்கள் காலத்தில் அடிமைச்சேவகர்களாக வாழ்ந்த அடிநிலை மக்களைப்பற்றியதாகவும் அமைந்திருக்கிறது. இது நீதி வழங்கவேண்டிய மன்னனின் கதை மட்டுமல்ல, நீதி மறுக்கப்பட்ட மக்களின் கதையாகவும் விரிகிறது. ஔரங்கசீப்பின் படைகளைப்பற்றிய காட்சி 227 – 228 ஆம் பக்கங்களில் சித்திரிக்கப்படுகிறது. அவரது படை புறப்படுவதற்கு ஆறுநாட்களுக்கு முன்பு படை கிளம்ப இருப்பதற்காக எக்காளம் ஊதப்படுகிறது. அன்றிலிருந்து ஒவ்வொரு படைப்பிரிவும் புறப்படுகிறது. நாற்பதாயிரம் காலாட் படை. எட்டாயிரம் குதிரை வீரர்கள், முந்நூறு யானைகள், பீரங்கிகள். ஆறுகள் குறுக்கே வந்தால் மன்னரும் படைகளும் அவற்றை கடந்துசெல்ல படகுகள் தயார் நிலையில், மன்னருக்கான மருத்துவர்கள், எழுத்தர்கள், சமையற்கலைஞர்கள், இவர்கள் தவிர இருநூறு ஒட்டகங்களில் கூடாரம் அடிக்கத்தேவையான பொருட்களும் ஏற்றிச்செல்லப்படும். ஆயிரம் கூலியாட்களும் உடன் அழைத்துவரப்படுவர். இவ்வாறு மன்னர் முன்னே செல்ல, அவரது பரிவாரங்கள் ஆயிரக்கணக்கில் பின்தொடர வாழ்ந்த சக்கரவர்த்தியின் அந்திமகாலம் எத்தகைய தனிமையில் இருந்திருக்கிறது என்ற செய்தி இந்நாவலில் அழுத்தமாக பதிவாகியிருக்கிறது. இத்தகைய மன்னன் வாழ்ந்த தேசத்தில் காலா என்ற சிறையில் வாடிக்கொண்டிருக்கிறார்கள் ஆயிரக்கணக்கான அடிமைகள். அவர்கள் தீண்டத்தகாதவர்களாகவும் வாழத்தலைப்பட்டவர்கள். அவர்களின் ஒருவன் தூமகேது. அவனது வாழ்வில் விதி கோரமாக விளையாடுகிறது. அவன் ஒரு பாமரன். அவனுடன் சக்ரதார் என்ற பண்டிதரும் சிறைப்பட்டு சித்திரவதைகளை அனுபவிக்கிறார். இந்த நாவலில் இரண்டு பக்கங்களை எஸ்.ரா சித்திரிக்கிறார். அதாவது மன்னர் பரம்பரைக்குள் நிகழும் காட்சிகள், சதிகள், ஆணவம், அதிகார மமதை, சந்தேகப்படும் இயல்பு. மறு புறத்தில் அடிநிலை மக்களின் இயல்புகள், அவர்களின் அறியாமை, இயலாமை, தனிமை, ஏழ்மை, ஏமாற்றம், துயரம். இந்நாவலில் நூற்றுக்கணக்கான பாத்திரங்களை எஸ்.ரா. படைத்துள்ளார். அவற்றில் மன்னருக்கு சேவகம் செய்யும் அஜ்யா பேகம் என்ற அரவாணியும், கைதியாக தண்டனை அனுபவித்து தப்பிஓடும் தூமகேதுவும், அந்நிய தேசத்திலிருந்து வரும் ரெமியஸ் முதலான பாத்திரங்களுடன் பாதுஷா ஔரங்கசீப்பும் முழுமையான பாத்திரங்களாகியிருக்கிறார்கள். பல காட்சிகள் படிம உத்தியிலும் மாயாவாத சித்திரிப்பிலும் வருகின்றன. மன்னர் ஒரு ஆட்டுத்தோலில் எழுதிவைத்த உயிலும் இந்நாவலில் முக்கியமான பாத்திரமாகிறது. ஆனால், அந்த உயிலுக்கு உயிரில்லை. அதனால் அது பேசவில்லை. மற்றவர்கள் பேசுகிறார்கள். அவர்களின் உரையாடல்களினூடே அந்த உயிலும் நாவல் முழுவதும் பேசப்படுகிறது. அரவாணியாக வரும் அஜ்யாபேகம், எவ்வாறு பெண்ணாக உருமாறினாள் என்பதும் தனிக்கதை. அவள், அவனாக இருந்த காலத்தில் பெண்களின் ஆடைகளை அணிந்த காரணத்திற்காக பலதடவை தாயால் தண்டிக்கப்பட்டவள். மன்னரின் பணிப்பெண்ணாகியதும் மன்னரால் எழுதப்படும் உயிலில் அவளது பெயரும் இடம்பெறுகிறது. தன்னை விட அவளிடத்தில் மன்னருக்கிருக்கும் பாசமும் நம்பிக்கையும்தான் இளவரசன் முகம்மது ஆஜம்மிற்கு அவள்மீதான வெறுப்பின் ஊற்றுக்கண்கள். சிறைக்கூடத்திலும் சித்திரவதை செய்யப்பட்டு இறுதியில் தூக்குத்தண்டனையில் மரணிக்கிறாள். நாவலின் 34 ஆம் அங்கம் அவளது இறுதிநாட்களை மிகவும் உருக்கமுடன் சித்திரிக்கிறது. தனக்குத்தண்டனை தரும் அந்தக்காவலர்களிடம் அவள் பேசும் வார்த்தை:” நன்றி சகோதரர்களே” அதுவே அவளது வாழ்வின் இறுதிவார்த்தை. காலைப்பொழுது விடியும்போது அவளது உடலை பொட்டலமாகக்கட்டி ஆற்றில் வீசுவதற்கு எடுத்துச்செல்கிறார்கள் இரண்டு காவலர்கள். ஒரு அதிகாரத்தின் கீழ் இருக்கும் வரையில் அந்த அதிகாரத்தின் பொலிஸாரின் தயவிருக்கும். பாதகமில்லை. ஆனால், அதிகாரம் மாறும்போது அந்தத்தயவு ஆபத்தில் கொண்டுபோய் தள்ளும் என்பது சமகால அரசியல். ஔரங்கசீப்பின் தயவில் வாழ்ந்த அஜ்யா பேகம், அதிகாரம் மாறும்போது ஆபத்தில் சிக்கி சித்திரவதைகளை அனுபவித்து இறுதியில் தூக்குக்கயிற்றை முத்தமிடநேருகிறது. இடக்கையை கூர்ந்து படிக்கும்போது, சமகால உலக அரசியலும் நினைவுக்கு வந்து செல்வது தவிர்க்கமுடியாதது. சௌகான் என்ற கிராமம் மழையின்றி வரட்சியால் வாடுகிறது. அங்கிருக்கும் ஆட்டு இடையர்களினால் மன்னருக்கு வரிசெலுத்தமுடியவில்லை. வரி வசூலிக்கவரும் பட்வாரி என்பவன் இவ்வாறு சித்திரிக்கப்படுகிறான்: அழுக்குப்படிந்த சட்டை. தலையில் சிறிய துணித்தொப்பி. தோல் செருப்பு. ஏழைப்பராரியாக வரும் அவனும் அந்த ஆட்சியில் ஒரு சுரண்டல் பேர்வழி என்பது சுவாரஸ்யமாக சித்திரிக்கப்படுகிறது. வரிகட்டாமலிருக்க அந்த விவசாயிகளுக்கும் இடையர்களுக்கும் ஒரு ஆலோசனை சொல்கிறான். அங்கிருக்கும் மோட்டு என்பவனிடத்திலிருக்கும் பால் தரும் பசுவை லஞ்சமாகக்கேட்கிறான். அவர்களிடமிருக்கும் நிலங்களை கோவிலுக்கு எழுதிக்கொடுத்துவிட்டால், மன்னருக்கு வரி கட்டத்தேவையில்லை எனச்சொல்லும் அவன் பேச்சை நம்பி, நிலங்களை கோவிலுக்கு எழுதுகின்றனர். அவனோ தந்திரமாக ஆவணங்களை தன்பெயருக்கு மாற்றிவிடுகின்றான். இத்தகைய பல காட்சிகள் சமகால எமது அரசியல் வாழ்வையும் நினைவூட்டுகின்றன. துவாபர யுகத்தில் ஒரு பெண் மண்புழு, தனது கணவனான ஆண்புழு தேரின் சக்கரத்தில் நசிந்து கொல்லப்பட்டதற்கு நீதி கேட்க வானுலகம் சென்ற கதை…. மண்ணாலான லகியா என்ற பெண்ணை மணம்முடித்தவன், போதை தேவைப்பட்டபோதெல்லாம் மனைவியை கண்ணீர் விடச்செய்து அதில் கரையும் அவள் உடலை சுவைத்து போதையேற்றிக்கொள்ளும் கதை…. இவ்வாறு பல்வேறு உபகதைகளுடன் இடக்கை நகருகின்றது. நாவல் முழுவதும் வரும் பிரதான பாத்திரங்களில் ஒன்றான தூமகேது 356 ஆம் பக்கத்தில் (45 ஆவது இறுதி அங்கத்தில் எவ்வாறு சாமகேதுவாக மாறினான்? அச்சில் நேர்ந்த தவறோ தெரியவில்லை. ” எறும்புகள் வெல்லக்கட்டியை இழுத்துக்கொண்டு தனது இருப்பிடத்துக்கு வருவதுபோல் தான் பார்த்த உலகை தனது இருப்பிடத்திற்கு இழுத்துக்கொண்டு வருவதற்கு மேற்கொண்ட முயற்சியின் விளைவுதான் தனது எழுத்துலகம்” என்று சொல்பவர் எஸ். ராமகிருஷ்ணன். அந்த உலகை எங்களுடன் பகிர்ந்துகொள்வதனால் இந்திய வரலாற்றில் ஔரங்கசீப்பின் காலத்தையும் அக்கால மாந்தர்களையும் சமகாலத்துடனும் இக்கால மாந்தர்களுடனும் ஒப்பீடுசெய்துகொள்கின்றோம்.
செல்போன் கோபுரத்தை (டவர்) கழற்றி இரும்பு உட்பட இதர பொருள்களை திருடி விற்பனை செய்து வந்த 4 பேரை பொலிசார் கைது செய்துள்ளனர். சென்னை – தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே வைத்து கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 3 இலட்சத்து 80 ஆயிரம் மதிப்புள்ள பொருள்கள், 2 மோட்டார் சைக்கிள் மற்றும் பொருட்கள் ஏற்றும் ஆட்டோ ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே எட்டயபுரம்- விளாத்திகுளம் பொது சாலையில் கடந்த 2008ஆம் ஆண்டு முதல் செயற்பட்டு வந்த செல்போன் டவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு செல்போன் ஜிடிஎல் என்ற நிறுவனத்திடம் விற்கப்பட்டதாக தெரியவருகின்றது. - Advertisement - இந்தநிலையில் டவரின் செயல்பாடுகள் சிலமாதங்கள் நிறுத்தப்பட்டிருந்த நிலையில் இதனை குறிவைத்து , டவரில் இருந்த பேட்டரி மற்றும் ஜெனரேட்டர் ,உள்ளக பாகங்கள், வயர்கள் அடிக்கடி திருட்டு போய் வந்துள்ளது தொடர்பாக ஏற்கனவே பொலிசாருக்கு புகார் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் சிந்தலக்கரை பகுதியில் வாகன சோதனையில் பொலிசார் ஈடுபட்டு இருந்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர் பொலிசாரை பார்த்ததும் தப்பியோட முயற்சி செய்துள்ளார். பொலிசார் அவரை சுற்றி வளைத்து பிடித்து விசாரணை நடத்திய போது , கழுகாசலபுரத்தில் உள்ள செல்போன் டவரில் பொருள்களை திருடிய கும்பலில் ஒருவர் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து இவர் கொடுத்த தகவலின் படி திருட்டி ஈடுபட்ட ஏனையோரை கைது செய்தனர். இன்னும் சில தினங்கள்; டவர் முழுவதும் இருந்த இடம் தெரியாமல் காணாமல் போயிருக்கும் என பொலிசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
புதியக் கல்விக் கொள்கை தமிழ் மொழியில் வெளியிடப்படாததற்குத் தொடர் எதிர்ப்பு எழுந்த நிலையில் தற்போது தமிழ் மொழியில் வெளியிடப்பட்டுள்ளது. 1986ம் ஆண்டு வரையறை செய்யப்பட்ட தேசியக் கல்விக்கொள்கைக்கு மாற்றாக புதிய கல்விக்கொள்கை அறிவிக்கப்பட்டது. இதற்கு மத்திய அமைச்சரகம் கடந்த ஆண்டு ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து இது நடைமுறைக்குக் கொண்டுவரப் பட்டது. இந்நிலையில் புதிய தேசியக் கல்விக்கொள்கையை மாநில மொழிகளில் மொழிபெயர்த்து வெளியிட முடிவு செய்யப்பட்டது. நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள் இந்நிலையில் குஜராத்தி, கன்னடம், அசாமி உள்ளிட்ட 17 மொழிகளில் புதிய கல்விக் கொள்கையானது மொழி பெயர்ந்து வெளியிடப்பட்டது. ஆனால் தமிழில் மட்டும் வெளியாகவில்லை. இதற்கு அரசியல் கட்சித் தலைவர்கள், கல்வியாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் தற்போது புதிய கல்விக்கொள்கை தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
காசி மன்னரது நாட்டின் எல்லைப் பகுதியில் வாழ்ந்துவந்த வேடன் ஒருவன், கடுமையான விஷம் தோய்ந்த அம்பை எடுத்துக்கொண்டு காட்டில் மான் வேட்டைக்குப் போனான். பீஷ்மரிடம், ‘‘எல்லா ஜீவராசிகளிடமும் அன்பாக இருப்பதன் சிறப்பையும், பக்தியுள்ள மக்களின் மேன்மைகளைப் பற்றியும் நான் அறிந்துகொள்ள விரும்புகிறேன்’’ என்றார் தருமர். பீஷ்மர் சொன்னார்: ‘‘காசி மன்னரது நாட்டின் எல்லைப் பகுதியில் வாழ்ந்துவந்த வேடன் ஒருவன், கடுமையான விஷம் தோய்ந்த அம்பை எடுத்துக்கொண்டு காட்டில் மான் வேட்டைக்குப் போனான். ஓரிடத்தில் ஏராளமான மான்களைக் கண்டு, துரத்திச் சென்று அம்பைத் தொடுத்தான். அம்பு குறி தவறி பெரிய மரம் ஒன்றில் குத்தி நின்றது. ஒரு சில விநாடிகளில் அம்பிலிருந்த கடுமையான விஷம் மரம் முழுவதும் பரவியது. மரத்தில் இருந்த காய்களும் இலைகளும் கனிகளும் உதிர்ந்து கீழே விழுந்தன. மரம் காய்ந்துபோனது. அந்த மரத்தின் பொந்தில் நீண்ட காலமாக வசித்து வந்த கிளி ஒன்று, மரத்தின் மீதுள்ள பற்றினால், அங்கிருந்து வெளியேறவில்லை. தர்மத்தில் பற்றுள்ள அந்தக் கிளி, வெளியே போய் இரை தேடவில்லை. பட்டுப்போன அந்த மரத்துடன் சேர்ந்து தானும் காய்ந்தது. அதைக் கண்ட தேவேந்திரன் வியப்பு அடைந்தான். உடனே தேவேந்திரன் ஒரு மானிட வடிவம் எடுத்து, கிளியை நெருங்கிக் கேட்டான்... ‘‘கிளியே! உனது நற்குணத்தைப் போற்றுகிறேன். பட்டுப்போன இந்த மரத்திலேயே நீ ஏன் இன்னும் தங்கி இருக்கிறாய்? வேறு ஏதாவது காய்கனிகளுடன் கூடிய மரமாகப் பார்த்துப் போகக் கூடாதா?’’ அவனை நமஸ்கரித்த கிளி, ‘‘தேவர்களின் தலைவனே! நீ தேவேந்திரன் என்பதை என் தவத்தின் மூலமாகத் தெரிந்து கொண்டேன்!’’ என்றது. ``கிளியே! இந்தக் காட்டில் பச்சைப் பசேலென்று எவ்வளவோ மரங்கள் இருக்கின்றனவே! காய்ந்து கிடக்கும் இந்த மரத்தை ஏன் காவல் காக்கிறாய்? பட்டுப்போன இந்த மரத்தை விட்டுவிடு!’’ என்றான். கிளி பெருமூச்சு விட்டுத் துயரத்துடன் பேசத் தொடங்கியது: ‘‘தேவேந்திரா! அநேக நற்குணங்கள் பொருந்திய இந்த மரத்தில்தான் நான் பிறந்தேன். இந்த மரம்தான் இதுவரை என்னைக் கட்டிக் காத்தது. பகைவர்களிடமிருந்து என்னைக் காத்ததும் இதே மரம்தான். இப்படி நெடுங்காலமாக என்னைக் காக்கும் இந்த மரத்தை, விட்டுவிடும்படி நீ சொல்லலாமா? நல்ல நிலையில் இருந்தபோது இங்கிருந்து எல்லா சுகங்களையும் அனுபவித்துவிட்டு, நிலைமை மாறி, கெட்ட நிலை வந்தவுடன் இந்த இடத்தைவிட்டுப் போவது எந்த விதத்தில் நியாயம்? தர்ம விஷயங்களில் எல்லா தேவர்களும் உன்னிடம் வந்து தெளிவு பெறுகிறார்கள். அப்படிப்பட்ட என்னை நன்றி மறக்கச் சொல்லலாமா?’’ என்றது. தேவேந்திரன் உள்ளம் விம்மினான். ‘‘கிளியே! நன்றி மறவாத உனது செய்கை எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. சரி... உனக்கு வேண்டிய வரத்தைக் கேள்!’’ என்றான். ‘‘இந்த மரம் பழையபடி தழைத்துக் குலுங்க வேண்டும்!’’ என்று கேட்டது கிளி. தேவேந்திரன் உடனே அந்த மரத்தின் மீது அமிர்தத்தைப் பொழிந்தான். கண்மூடித் திறப்பதற்குள் பழையபடி தழையும், பூவும், கனிகளுமாக மரம் செழித்து விளங்கியது. அங்கேயே தொடர்ந்து வசித்த கிளி, தனது ஆயுட்காலம் முடிந்ததும், இந்திரலோகத்தை அடைந்தது.
ஓர் ஆலய கோபுரத்தை பீரங்கியால் தாக்கித் தகர்த்து விடுவோம் என்று வெள்ளையர்கள் மிரட்டியதும், அக்கோபுரத்தைக் காக்கும் நோக்கில் சரணடைந்து, வெள்ளையர்களால் தண்டிக்கப்பட்டு, தூக்கில் தொங்கி, தங்கள் இன்னுயிரை ஈந்து, சரித்திரத்தில் இடம் பெற்ற இரு மாவீரர்களைப் பற்றி நீங்கள் அறிவீர்களா?அந்த மாவீரர்கள்தான் சிவங்கைச் சீமையை ஆட்சி புரிந்த மருது பாண்டிய சகோதரர்கள்.அவர்கள் காக்க விரும்பியது காளையார் கோயில் கோபுரத்தை. அக்கோபுரத்தை வானளாவ எழுப்பியதே அவர்கள்தான். அதுவும் எப்படித் தெரியுமா? காளையார் கோயிலிலிருந்து இருபது கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மானா மதுரையிலிருந்து செங்கல் கொண்டுவர வேண்டியிருந்தது. அங்கேதான் செங்கற்சூளைகள் இருந்தன. (இந்த ஊர் மண்பாண்டங்களுக்குப் பெயர் பெற்றது. அதிலும் ‘கடம்’ எனப்படும் மண்பாண்ட இசைக்கருவி மானா மதுரை மண்ணில் செய்யப்படுவதற்கே வரவேற்பு அதிகம்.) மருது பாண்டியர்கள் எழுப்பும் காளையார் கோயில் கோபுரத்திற்குக் கற்கள் கொண்டு செல்ல வேண்டும் என்றதும், வண்டி எதுவும் வைக்காமல், இருபது கல் தொலைவுக்கும் மக்களே வரிசையாக, மனிதச் சங்கிலியாக நின்று, ஒருவர் கை மாற்றி ஒருவர் கற்களைக் கொண்டுவந்து சேர்த்து விட்டனர். மன்னர்கள் செய்யும் ஆலயப் பணி சிறப்படைவதில் மக்களுக்கு அத்தனை ஆர்வம்! காளையார் கோயில் மிகப் பழமையானது. அதில் முன்பே ஒரு ராஜகோபுரம் உண்டு. அது பன்னிரண்டாம் நூற்றாண்டில், சுந்தரபாண்டியனால் எழுப்பப் பெற்றது. அதை மாற்றவோ, சிதைக்கவோ கூடாது என்று கருதியே பெரிய மருது புதிய கோபுரத்தைக் கட்ட எண்ணினார். இது சோமேசர் கோயிலின் முன் 157 அடி உயரத் தில் அமைந்து, கம்பீரமாக வானைத் தொட்டாற்போல் அழகுற எழுந்து நிற்கிறது. இக்கோபுரத்தின் உச்சியில் நின்று, தூரதரிசினி கருவி மூலம் நோக்கினால் மதுரை மீனாட்சியம்மன் கோயில் கோபுரம் தெரியும் என்கிறார்கள். (அண்மையில் மதுரையில் தமிழ்த்தாயின் சிலையை மிகப் பிரமாண்டமாக நிறுவ எண்ணிய தமிழக அரசு, இடம் தேடி, வண்டியூர் கண்மாய் அருகே நிறுவலாம் என்று தீர்மானித்த நிலையில், அப்படி நிறுவினால் அது மருது பாண்டியர் எழுப்பிய காளையார் கோயில் கோபுரத்திற்கும் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கோபுரத்திற்கும் இடையே ஒரு பார்வைத் தடையாக அமைந்துவிடும் என்று மக்கள் கூறியதால், அத்திட்டத்தை மாற்றி வேறு இடம் தேடுவதாகப் பத்திரிகைகளில் செய்திகள் வந்தன.அந்த அளவு மருது பாண்டியரின் பக்தி உணர்வை மக்கள் இன்றளவும் மதித்துப் போற்றுகிறார்கள்.) பெரிய மருது பாண்டியர், காளையார் கோயில் மீது கொண்டிருந்த பக்தியைப் போன்றே மதுரை மீனாட்சி அம்மன் மீதும் பெரும்பக்தி பூண்டிருந் தார். மீனாட்சி அம்மன் கருவறையில், அம்மன் முகத்துக்கு எதிரே தொங்கும் தூண்டா மணி விளக்குகள் இரண்டு, மருது பாண்டியர் அன்பளிப்பாக அளித்தவை. அக்காணிக்கை தீபங்கள் மருது பாண்டியரின் பக்தியை எடுத்துரைத்தவாறு இன்றளவும் அன்னை மீனாட்சி முகத்தில் ஒளிபரப்பித் தொண்டு செய்தபடி காட்சியளிக்கிறது. (இத்தீபங்களுக்கு நெய் வார்த்து ஒளிரச் செய்ய ஆவியூர் என்ற ஊரையே அவர் இறையிலியாகக் கொடுத்துள்ளார் என்பது வரலாறு.) காளையார் கோயில் காளீசர்-சொர்ண வல்லியம்மன் சந்நதியில் உள்ள உற்சவ மூர்த்தி இறை உருவங்கள் கட்டித் தங்கத்தால் ஆனவை என்பது குறிப்பிடத்தக்கது. இக்கோயில் புதுப்பிக்கப்பெற்றபோது, ஈசனும் ஈஸ்வரியும் தேரில் எழுந்தருளித் திருவீதி உலாவர ஒரு புதிய தேரை நிர்மாணிக்க விரும்பினார் பெரிய மருது. இதற்கான பொறுப்பு மாளகண்டானைச் சேர்ந்த குப்ப முத்து ஆசாரியிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர் மிகவும் புகழ் பெற்ற சிற்பக் கலைஞர். மரச்சிற்பங்களை வடிவமைப் பதில் அவருக்கு இணை எவரு மில்லை என்பார்கள். தமிழகத்தில் மட்டு மல்லாமல், இலங்கையிலும் புகழ் பெற்ற ஆலயங்கள் பல வற்றிற்கு அற்புதமான தேர்களை உருவாக்கிக் கொடுத்த பெருமை அவருக்கு உண்டு. காளீசர் ஆலயத்திற்கான புதிய தேர் செய்ய இரண்டு மருத மரங்களை அவர் தேர்ந்தெடுத்தார். பிரமாண்டமாக வளர்ந்திருந்த அம்மரங்கள் ஒரு சிற்றூரின் ஏரிக்கரையில் இருந்தன. ஆசாரியார் கை காட்டியதும் அம்மரங்களை வெட்ட முயன்றனர் அரண்மனை ஆட்கள். அவற்றை வெட்ட விடாமல் தடுத்தான் ஒரு கிழவன். காவலர்கள் அவனை இழுத்துத் தள்ளிவிட்டு, ‘வெட்டுங்கள் மரத்தை’ என உத்தரவிட்டதும், அக்கிழவன் ஆவேசம் வந்தவன் போன்று எழுந்தோடி வந்து, மரத்தைக் கட்டிப் பிடித்துக்கொண்டு, ‘என்னை வெட்டிவிட்டுப் பிறகு மரத்தை வெட்டுங்கள்’ என்று பிடிவாதம் பிடித்தான். அருகில் குடிசையில் இருந்து வெளியே ஓடிவந்த அவனுடைய பெயர்த்தி இன்னொரு மருத மரத்தைக் கட்டிப் பிடித்துக்கொண்டு அதையே சொன்னாள். இரு கொலை அங்கே தவிர்க்க முடியாது என்கிற நிலையில், காவலர்கள் சிவகங்கை அரண்மனைக்குச் சென்று, நடந்த சங்கதியை மருது பாண்டியர்களிடம் தெரிவித்தனர். ‘காளீசன் ஆலயத் தேருக்காக இரண்டு மரங்களைக் கூடவா வெட்ட முடியாமல் போவது?’ என்கிற சினத்துடன் மருது பாண்டியர் இருவரும் புறப்பட்டு, நேராக அந்தச் சிற்றூருக்குச் சென்று, தடுத்த கிழவனை அழைத்து விசாரித்தனர். “பெரியவரே, ஆலயத் திருப்பணியைத் தடுப்பதுபோல் இருக்கிறதே உமது செயல்! ராஜ தண்டனை சிரச்சேதமாகக்கூட இருக்கலாம் என்கிற அச்சமே உமக்கில்லையா? ஏன் தடுத்தீர், இம்மரங்களை வெட்டக் கூடாதென்று?” என வினவினார், பெரிய பாண்டியர். அதற்கு அந்தக் கிழவன் சிறிதும் அச்சமின்றி, “மருது பாண்டியரின் கட்டளையை மறப்பார்களா சிவகங்கை மக்கள்? அரசே, காளீசர் ஆலயத் திருப்பணியில் எனக்கு மட்டும் அக்கறை இல்லையா? புதிய தேர் உருவானால், அதில் ஈசனும் தேவியும் எழுந்தருளி மக்களுக்குத்தானே காட்சியளிப்பர்! அதைத் தடுப்பதல்ல என் நோக்கம். இவை மருத மரங்கள். அதுவும் இரட்டை மரங்கள். இவற்றை நாங்கள் வெறும் மரங்கள் என எண்ணவில்லை; மருது பாண்டியர் என்றே கருதுகிறோம். நீங்கள் இருவரும் நலமாக வாழ வேண்டும் என்று எண்ணி, ஈசனை வேண்டி, இம்மரங்களை நாங்கள் பூஜித்து வருகிறோம். அரசனும் கடவுளும் ஒன்று என்பார்கள். நாங்கள் மருது பாண்டியர் என்று எண்ணி வழிபடும் இம்மரங்களை வெட்டுவதற்கு எப்படி மனம் ஒப்புவோம்? சிவகங்கைச் சீமை காடுகளுக்குப் பெயர் போனது. இங்கு எத்தனையோ இலுப்பை மரங்கள் இதைவிடப் பெரிதாக, வைரம் பாய்ந்து வளர்ந்து கிடக்கின்றன. அவற்றை வெட்டித் தேர் செய்யலாமே..? இது குப்புமுத்து ஆசாரிக்குத் தெரியாதா?” என்றான்.அக்கிழவன் பேச்சைக் கேட்ட பெரிய மருது சிலிர்த்துப் போனார். அந்த மருத மரங்கள் இரண்டையும் சின்ன மருது பெரிய மருது என்று அப்பெரியவர் குறிப்பிட்டுப் பேசியது, மருது பாண்டியர் மனத்தை நெகிழச் செய்துவிட் டது. உடனே அம்மரங்களை யாரும் வெட்டக் கூடாது என்று ஆணை பிறப்பித்த மன்னர் மருது, அப்பெரியவர் குடும்பத்துக்கு வேண்டிய உதவிகளைச் செய்யும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.காளையார் கோயில் காட்டிலிருந்து வேறு மரங்கள் வெட்டப்பட்டு, புதிய தேர் உருவாக் கப்பட்டது. கோயில் குடமுழுக்கு நிகழ்வையொட்டி, திருத்தேர் உலாவுக்கு ஏற்பாடு செய்யப்பெற்றது. அலங்கரிக்கப் பெற்ற திருத்தேரில் ஈசனும் ஈஸ்வரியும் ஆரோகணித்தனர். மக்கள் கூட்டமும் அலை மோதிக் காத்துக் கிடந்தது. மருது பாண் டியர்களும் வந்துவிட்டனர். பெரிய மருது வடந்தொட்டு இழுக்கவும், தேருலா புறப்பட வேண்டியதுதான். எல்லா ஆயத்தங்களும் முடிந்துவிட்ட அந்த நிலையில் சிற்பி குப்பு முத்து ஆசாரி எதனாலோ தேர் புறப்படுவதைத் தாமதப்படுத்தியபடி இருந்தார். பிறகு பெரிய மருதுவின் அருகே வந்து, “அரசே! ஓர் விண்ணப்பம்’’ என்றார். “சிற்பியாரே! நீர் ஏதோ சொல்ல விரும்புகிறீர். ஆனால், தயங்குகிறீர். உம்மால்தான் தேர் புறப்படத் தாமதமாகிறது. எதுவானாலும் தயங்காமல் சொல்லும். நீர் கேட்ட, எதையும் நான் மறுக்க மாட்டேன்...” என்றார் பெரிய மருது. “அரசே! தேர் புறப்படுவதில் ஒரு சிக்கல் இருக்கிறது. பரிகாரம் செய்யாமல் தேர் ஓடத் துவங்கினால் பெரும் ஆபத்து விளையும். அந்தப் பரிகாரம் எதுவென்பதைச் சொன்னால் மக்கள் என்னைத் திட்டுவர். அதைச் சொல்லவும் அச்சமாக இருக்கிறது. அதனால்தான் தயங்குகிறேன்...” “தயங்க வேண்டாம் சிற்பியாரே! நீர் பரம்பரைச் சிறப்பு உடையவர். நாட்டு நலனுக்கு உகந்ததையே நீர் சொல்வீர், செய்வீர் என்பதை நான் அறிவேன். பரிகாரம் எதுவானாலும் கூறும். உடனே செய்துவிடுவோம்...” “ஆகட்டும் அரசே! இந்தத் தேர் நல்லபடி ஓடி, நிலைக்கு வரவேண்டுமாயின், அதுவரை தங்களின் ராஜமுத்திரை மோதிரத்தை நான் அணிய வே ண்டும். செங்கோல் என் கரத்தில் இருக்க வேண்டும். தேருலா முடியும்வரை நானே அரசன் என்று தாங்கள் பிரகடனம் செய்ய வேண்டும்...” குப்பு முத்து ஆசாரியார் இதைக் கூறி முடித்த மறுகணம், “ என்ன பேராசை! நீர் இந்த நாட்டின் மன்னனா? அரசர் நெருக்கமாக இருந்து அன்பு காட்டினால், எதை வேண்டுமானாலும் கேட்பதா...?” எனக் கூச்சலிட்டனர் மக்கள். சின்ன மருதுவின் கண்களிலும் சீற்றம் தொற்றியது. வாளை உருவத் துடித்தார். பெரிய மருது மக்களை நோக்கிக் கையை உயர்த்தி, “அமைதி, அமைதி” என்றார். பிறகு, “ஆசாரியார் மிக உயர்ந்த சிற்பக் கலைஞர். அவர் ஒன்றும் நாடாளும் ஆசையில் இதைக் கேட்கவில்லை. இதில் ஏதோ உட்பொருள் இருக்கிறது. அதை அவரே பிறகு விவரிப்பார். இப்போது நான் அவருக்கு அளித்த வாக்குப்படி இந்தக் கணம் முதல் சிவகங்கை மன்னர் குப்பு முத்து ஆசாரியார்தான். இதோ என் ராஜ முத்திரை மோதிரம்...” என்று கூறி, அக்கணையாழியைக் கழற்றி, ஆசாரியாரின் விரலில் அணிவித்தார். செங்கோலும் கை மாறியது. வெண் கொற்றக்குடையைத் தாங்கி நின்ற பணியாளனைச் சைகை மூலம், “போ, ஆசாரியார் அருகில் குடை பிடித்து நில்” எனக் கட்டளையிட்டார். அதோடு நில்லடு, “சிவகங்கை அரசர் குப்பு முத்து ஆசாரியார் வாழ்க” என்று உரத்த குரலில் முழங்கினார். மக்களையும் அவ்வாறே முழங்கச் சொன்னார். ராஜ கட்டளை உடனே நிறை வேற்றப்பட்டது. குப்பு முத்து ஆசாரியார் நெகிழ்ந்து, நெருக்குக, கண்ணில் நீர் பனிக்க, பெரிய மருதுவையும் மக்க¬ ளயும் வணங்கினார். பிறகு தேரில் ஏறி, தேரைச் செலுத்தும் பிரம்ம தேவன் சிற்பத்துக்கு அருகில் அமர்ந்தபடி, ‘தேருலா தொடங்கலாம்’ என அறிவித்தார். பெரிய பாண்டியர் வடந்தொட, சின்ன பாண்டியர் வெள்ளைக்கொடி அசைக்க, ஆயிரக்கணக்கான மக்கள் வடந்தொட்டு இழுக்க, காளையார் கோயிலின் ராஜகோபுரமே நகர்ந்து வருவது போன்று, அந்தப் பிரமாண்டமான தேர் நகர்ந்து, விரைந்து ஓடத் தொடங்கியது. பாட்டாளி ஒருவன் நாடாளும் வேந்தனாக அறிவிக்கப்பட்ட அந்த வேளையில், காற்று சில்லென வீசத் தொடங்கிற்றாம். எங்கோ மரங்களினின்று உதிர்ந்த மலர்கள் பறந்து வந்து, ஈசனின் தேர் மீதும், சாரதி போன்று அமர்ந்திருந்த புது வேந்தன் குப்பு முத்து ஆசாரியார் மீதும் மழை போன்று உதிர்ந் தனவாம். ‘ஆனைமடு’ என்னும் திருக்குளத்தின் மதகு அருகே நீர் ஆளுயரம் எழும்பிக் குபுகுபுவெனக் குமிழியிட்டதாம். தேர் மிக விரைவாகத் திருவீதிகளைச் சுற்றிக்கொண்டு நிலைக்கு வந்துவிட்ட கணத்தில், எவருமே எதிர்பாராதச் சம்பவம் ஒன்று நிகழ்ந்தது. எதன் காரணமாகவோ தேர் மிகக் கடுமையாக ஒருமுறை குலுங்கியது. அந்தக் குலுங்கலில் செங்கோல் ஏந்திய சிற்பியார் நிலை தடுமாறிக் கீழே விழுந்தார். தேரை எவராலும் நிறுத்த முடியவில்லை. முட்டுக்கட்டை, ஆரைக்கோல் போடுவோர் அலமலந்து நிற்க, அத்தேர் சிற்பிமீது ஏறி இறங்கி, நசுக்கிய பிறகுதான் நின்றது. மக்கள் பதறியெழுப்பிய ஆஹாஹாம், ‘ஓ’வென்ற அலறல், ‘ஐயோ’ என்னும் பரிதாப ஒலிகளுக்கு நடுவே மருது பாண்டியர் இரு வரும் பாய்ந்தோடிச் சிற்பியருகே மண்டியிட்டு அமர்ந்தனர். திருஷ்டி கழிக்க ஆரத்தி கொட்டியதுபோன்று செங்குருதி பெருகி வழிந்த நிலையிலும், உயிரைக் கையில் பிடித்தபடி குப்பு முத்து ஆசாரியார், ராஜ முத்திரைக் கணையாழியையும் செங்கோலையும் பெரிய மருதுவிடம் ஒப்படைத்தபடி, “அரசே! நான் தேர் செய்யத் தொடங்கியதும், முதல் சிற்பமான விநாயகரின் தும்பிக்கை உடைந்துபோயிற்று. உடனே நான் ஜோதிட சாஸ்திரப்படி கணக்கிட்டுப் பிரச்னம் பார்த்தேன். ‘இந்த ஒச்சம் அரசன் உயிரைக் காவு வாங்கும்’ என்று பதில் வந்தது. நம்பிக்கையோடு தேரைச் செய்து முடித்தாலும் ஜோதிடப்படி, நாடாளும் தங்கள் உயிருக்கு ஊறு நேரக் கூடாது என்று எண்ணி, மிகுந்த துணிவுடன், சில மணி நேரம் நானே மன்னனாகும் நிலையை விரும்பிக் கேட்டுப் பெற்றேன். இனி மக்கள் தங்கள் உயிராகக் கருதும் மருது பாண்டியருக்கு ஆபத்தில்லை என்கிற மகிழ்வோடு நான் என் உயிரை ஈசனுக்கு அர்ப்பணிக்கிறேன்” என்றார். அக்கணமே சிற்பியாரின் ஆவி பிரிந்தது. மன்னன் உயிரைக் காக்கத் தன் இன்னுயிரை நீத்த அந்தச் சிற்பியாரின் தியாக உள்ளம் கண்டு மக்கள் கண்ணீர் உகுத்தனர். இன்னொரு தேருலா போன்று சிற்பியாரின் இறுதி ஊர்வலம் நிகழ்ந்தது. மருது பாண்டிய மன்னர்கள், சிற்பியாரின் குடும்பத்தாருக்கு மாளக்கண்டான், வெற்றியூர், சிறுவயல் ஆகிய ஊர்களில் அரசருக்கே உரிய நிலங்களிலிருந்து சில காணி நிலங்களை மானியமாக அளித்தனர். காளையார் கோயில் தேர் குப்பு முத்து ஆசாரியாரின் புகழைக் கூறியபடி, ‘தியாகத்தேர்’ என மக்களால் கொண்டாடப்பட்டு காலங்களை வென்று நிற்கிறது. அப்படிப்பட்ட தியாகத்தேர் உள்ள மக்களால் கல் சுமந்து எழுப்பப்பெற்ற காளீசர் ஆலயக் கோபுரத்தைத்தான் சுதந்திரப்போராட்ட நாட்களில், ஆங்கிலப் படைத்தளபதி அக்னியூ என்பவன் பீரங்கிகள் கொண்டு தகர்ப்பேன் என்று அறிவிப்பு வெளியிட்டான். மருது பாண்டியர்கள் அப்போது காடுகளில் தலை மறைவு வாழ்க்கை நடத்தும் நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தனர். வீரபாண்டிய கட்டபொம்மனின் வீரச் சரித்திரம் ஒரு கொடுந்தூக்குக் கயிற்றில் முடிந்து போயிருந்த நாட்கள் அவை. ஊமைத்துரைக்கு ஆதரவளித்ததாகக் கூறி, சிவகங்கைச் சீமையை வெள்ளையர்கள் சின்னா பின்னப்படுத்திக் கொண்டிருந்த துன்ப நாட்கள் அவை. தாங்கள் சரணடையாவிட்டால், காளையார் கோயில் கோபுரம் தகர்க்கப்படுமே என்று அஞ்சிய மருது பாண்டியர்கள் அக்னியூவிடம் சரணடைந்தனர். அதன் விளைவாகத் தூக்கிலிடப்பட்டு மடிந்தனர். அந்த வீர சுதந்திரப் போராட்டமெல்லாம் வேறு கதை. மருது பாண்டியர்கள் தங்கள் இன்னுயிரை ஈந்து, காளையார் கோயில் கோபுரத்தைக் காத்துவிட்ட உண்மை இன்றளவும் நம் நெஞ்சத்தை நெகிழ்விக்கிறது. - கௌதம நீலாம்பரன் Tags: தியாகத்தேரும் கோபுரமும் மேலும் செய்திகள் அனந்தனுக்கு 1000 நாமங்கள்! ஆனந்தமாய் என் அறிவாய் பரந்தாமனே செயலாற்றிக்கொண்டுதான் இருக்கிறார்! வள்ளுவர் சொல்லும் வித்து! ஆனந்தமாய் என் அறிவாய் கர்மம் செய்வதிலேயே நீ நிலைத்து நின்றுவிடு மருத்துவம் தேகம் காக்கும் தேங்காய்ப் பூ! மீன் வளர்ப்பு தரும் ஆனந்தம்! நிலத்தில் இருந்து 100 அடிக்குக் கீழே விவசாயம்!: லண்டனில் பிரபலமாகி வரும் "வெர்டிக்கல் ஃபார்மிங்" தாய்லாந்தில் சுற்றுலா பயணிகளை பெரிதும் ஈர்த்த குரங்கு படையல் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது..! பாரிசில் கண்கவர் ஒளி கண்காட்சி: மெய்சிலிர்க்க வைக்கும் வண்ணப் பூச்சிகள்..!! தொடங்கிய இடத்தில் மீண்டும் ஆட்டம் காட்டும் கொரோனா!: சீனாவில் ஒரே நாளில் 31,000க்கும் அதிகமானோருக்கு பாதிப்பு..!!
கையில் ஏந்திய வேலை ஒரு யானையின் மேல் எறிந்து துரத்திவிட்டு, வேறு வேல் தேடி வருகின்றவன் தன் மார்பில் பட்டிருந்த வேலைக் கண்டு பறித்து மகிழ்கின்றான். சாலமன் பாப்பையா உரை: தன்னை எதிர்த்து வந்த யானையின் மீது தன் கையிலிருந்த வேலை எறிந்து விட்டவன், அடுத்து வருகி்ன்ற யானை மீது எறிவதற்காகத் தன் மார்பில் பதிந்து நின்ற வேலைப் பறித்துக் கொண்டே மகிழ்வான். கலைஞர் உரை: கையிலிருந்த வேலினை யானையின் மீது வீசி விட்டதால் களத்தில் போரினைத் தொடர வேறு வேல் தேடுகிற வீரன், தன் மார்பின்மீதே ஒரு வேல் பாயந்திருப்பது கண்டு மகிழ்ந்து அதனைப் பறித்துப் பகையை எதிர்த்திடுகின்றான்.
எரிபொருள்களைப் பெற்றுக் கொள்ள வழி செய்தல் மற்றும் கிழக்கு மாகாணத்திற்கென தனியான பாடசாலை அறிவிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து அம்பாறை மாவட்ட ஆசிரியர்களால் முன்னெடுக்கப்படும் பாடசாலை பகிஷ்கரிப்பு போராட்டம் நாளையும், நாளை மறுதினமும் (30.06.2022 – 01.07.2022 – வியாழன் மற்றும் வெள்ளி ) இடம்பெறும் என இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கத்தினர் இன்று (29) நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தனர். இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கத்தலைவர் ஜெஸ்மி மூஸா தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், இந்த பாடசாலை பகிஷ்கரிப்பு தொடர்பான அறிவிப்பை கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளருக்கு சங்கம் சார்பில் அறிவித்திருப்பதாகவும், அறிவித்தல் கடிதத்தில் எரிபொருள் பிரச்சினையினை மையமாகக் கொண்டு ஜுலை 10 ஆம் திகதி வரை பாடசாலைகளை மூடுமாறு கல்வியமைச்சு அறிவித்துள்ளதனைத் சுட்டிக்காட்டியுள்ளதாவும் அவர் தெரிவித்தார். மேலும் கருத்து தெரிவித்த அவர், இக்காலப்பகுதிக்குள் ஆசிரியர்களுக்கான சொந்த விடுமுறை தொடர்பிலும் தெளிவான அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கிழக்கு மாகாணத்திலுள்ள பாடசாலைகளை நடத்துமாறு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பினால் மாணவர்களின் நலன் கருதி ஆசிரியர்கள் அதனை மேற்கொண்ட நிலையில் சில வலயங்களில் பாடசாலை மூடல் தொடர்பான அறிவிப்பு ஆசிரியர்களுக்கிடையே பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகின்றது. இதனடிப்படையில் தொழிற்சங்கம் என்ற ரீதியில் ஆசிரியர்களால் முன்வைக்கப்படுகின்ற கோரிக்கைகளை நாம் செவிமடுக்க வேண்டியுள்ளது. அம்பாறை மாவட்டத்திலுள்ள வலயங்களிலும் வெளிப்பிரதேச ஆசிரியர்கள் செல்லாமையினால் பாடசாலை நடவடிக்கைகள் ஸ்தம்பிதம் அடைத்துள்ளன. எரிபொருள் பிரச்சினை என்பது ஒரு வலயத்திற்கானது மாத்திரமல்ல என்பதனைத் எல்லோரும் அறிவார்கள். எனவே, எரிபொருள் பெற்றுக் கொள்ளும் சந்தர்ப்பமொன்று உருவாகும் வரை கல்வியமைச்சின் அறிவித்தலினை மாகாணத்திற்கு அறிவிக்க வேண்டும். இதனை வலியுறுத்தி ஆசிரியர்கள் நாளையும் நாளை மறுதினமும் (30.06.2022 முதல் 01.07.2022) வரை பாடசாலை பகிஷ்கரிப்புப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். இதற்கான தீர்வு எட்டவில்லையாயின் இதனை மேலும் தொடர வாய்ப்புள்ளது என்பதை தெரிவித்து கொள்கிறேன். மேலும் 30.06.2022 முதல் 01.07.2022 வியாழன், வெள்ளி ஆகிய தினங்களில் அம்பாறை மாவட்ட பாடசாலை ஆசிரியர்கள் மேற்கொள்ளும் பாடசாலைப் பகிஷ்கரிப்பு போராட்டத்தில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளாக எரிபொருளைப் பெற்றுக் கொள்ளவதற்கு ஆசிரியர்களுக்கென தனியான வழிமுறையொன்றினை மாகாணக் கல்வி அமைச்சினூடாக கல்வியமைச்சு அறிவிப்புச் செய்தல், எரிபொருள் பிரச்சினை காரணமாக பாடசாலைகளை மூடும் போது கிழக்கு மாகாணத்திற்கென தனியான அறிவிப்பினை விடுக்காதிருத்தல், கல்வி அமைச்சு அறிவித்துள்ளது போல் ஜுலை 10 வரை மாகாணப் பாடசாலைகளை மூடுவதற்கான அறிவிப்பினை மேற்கொள்ளல், கிழக்கு மாகாணத்தில் தனித்தனி வலயங்களில் பாடசாலைகளை மூடுவதனை கைவிட்டு மாகாணத்திற்கென பொதுவான தீர்மானத்தை நடைமுறைப்படுத்துதல், அதிபர் மற்றும் அதிகாரிகளுக்கு தனியாகத் தீர்மானம் எடுக்கும் அதிகாரத்தை நிறுத்தி அறிவித்தல்களை ஒருமுகப்படுத்தல், கைவிரல் அடையாளம் இடும் இயந்திரப் பாவனையினை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நிறுத்துதல் போன்ற கோரிக்கைகளையும் முன்வைக்கின்றோம் என்றார். Hizam A Bawa See author's posts Tags: guru tamil news guru tamil news in sri lanka guru tv guru tv news jvp tamil news sri lanka tamil news tamil news in sri lanka
Candice Bergen பிரபலமான பெயருடன் கூடிய நீண்ட கால நாடாளுமன்ற உறுப்பினர். பிளவுபட்டுள்ள கட்சியில் பெரிதும் விரும்பப்படும் ஒருவர். Conservative கட்சியின் இடைக்கால தலைவர். எதிர்க்கட்சியில் தலைவர். குறிப்பாக சிறுபான்மை அரசாங்கத்தை கேள்விக்குப்படுத்த வேண்டிய உத்தியோகபூர்வ பொறுப்பில் (தற்காலிகமாக) உள்ளவர். ஒரு கொந்தளிப்பான, சர்ச்சைக்குரிய பதவிக் காலத்திற்குப் பின்னர், Erin O’Tooleலின் Conservative கட்சியின் தலைமை முடிவுக்கு வந்துள்ளது. பிரதமர் Justin Trudeauவை பதவி நீக்கம் செய்ய முயன்ற கனரக வாகன ஓட்டுனர்களின் போராட்டம் Erin O’Tooleலின் பதிவியை பறித்து சென்றது. Candice Bergen அவரது இடத்தைப் பிடித்துள்ளார்; நிரந்தர தலைவர் தேர்ந்தெடுக்கப்படும் வரை அவர் இடைக்கால தலைவராக இருப்பார். புதிய தலைவரை தெரிவு செய்யும் மாநாடு எப்போது நடைபெறும் என்ற கேள்விக்கு இதுவரை பதில் இல்லை. Stephen Harperரின் 2015 பொது தேர்தல் தோல்விக்குப் பின்னர் Rona Ambrose, ஒன்றரை ஆண்டுகள் இடைக்காலத் தலைவராக பணியாற்றினார் என்பதை இங்கு குறிப்பிடலாம். சரி, Candice Bergen என்பவர் யார்? – நொறுங்கும் கட்சியை ஒன்றாக இணைக்கும் பசை போல அவர் எவ்வாறு செயல்படுவார்? அவர் ஒரு நீண்ட கால நாடாளுமன்ற உறுப்பினர். Bergen முதன் முதலில் 2008இல் நாடாளுமன்றத்திக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். Stephen Harper தலைமையில் Conservative கட்சிக்காக Manitoba மாகாணத்தின் Portage–Lisgar தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தினார். அன்றிலிருந்து அவர் அந்தத் தொகுதியில் தொடர்ந்து வெற்றி பெற்று வருகின்றார். தவிரவும் தனது முதலாவது தேர்தலுக்குப் பின்னர் கட்சிக்குள் தனது நிலையை பலப்படுத்தியும் வந்தார். Harper, 2013இல் அவருக்கு – சமூக மேம்பாட்டுக்கான மாநில அமைச்சர் (State for Social Development) என்ற துணை அமைச்சர் பதவியை வழங்கினார். முன்னாள் இடைக்காலத் தலைவரான Rona Ambrose, அவரை 2016 ஆம் ஆண்டு தனது நாடாளுமன்ற குழு தலைவராக (Opposition House Leader) நியமித்தார். 2020 இல் Conservative கட்சியின் தலைமைக்கு போட்டியிடும் எண்ணம் Bergenனிடம் இருந்தது. ஆனால் அவரால் சரளமாக French பேச முடியாது என்பதால் இறுதியில் அந்த எண்ணத்தை கைவிட்டார். Erin O’Toole அந்த ஆண்டு தலைமைப் பதவியை வென்றார். Bergen கட்சியின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டார். இப்போது O’Toole பதவி விலத்தப்பட, Bergen அவரது பதவியை பெறுகிறார். Bergen பெரிய அரசாங்கங்களின் மீது வெறுப்பு கொண்ட கிராமப்புற (rural) நாடாளுமன்ற உறுப்பினர். அவர் அமெரிக்காவுக்கு அருகில் உள்ள Morden என்ற ஒரு சிறிய சமூகத்தைச் சேர்ந்தவர். Morden, தெற்கு Manitobaவின் ஒரு நகரமாகும். அவரது தந்தை வாகன உதிரி பாகங்களை விற்பனை செய்தார். தாயார் ஒரு மருத்துவமனையில் துப்பரவாளராக இருந்தார். Bergen 2000களின் முற்பகுதியில் Canadian Alliance கட்சியில் ஈடுபட்டார். அவர் இப்போது பிரதிநிதித்துவப்படுத்தும் Portage–Lisgar தொகுதி, Portage–Lisgar உட்பட பல கிராமப்புற Manitoba சமூகங்களை உள்ளடக்கியது. பெரும்பாலான Conservativeகள் அவரை விரும்புவதாகத் தெரிகிறது. சமூக பழமைவாதிகள் (social conservatives) ஒரு புறம், மிதவாதிகள் (moderates) மறு புறம் என அவரது கட்சி கடுமையாக பிளவுபட்டிருக்கும் நேரத்தில் Bergen தலைமைப் பதவிக்கு வருகிறார். இந்த பிளவு அவரது முன்னோடியின் பதவி விலகளுக்கு வழிவகுத்தது. இவரை கட்சியின் தலைமைக்கு ஏற்றியது. Bergen குறைந்தபட்சம் தற்காலிகமாக அந்த பிளவைக் குறைக்கக்கூடிய ஒருவராகத் தெரிகிறார். அவர் Prairies மாகாணங்களில் பிரபலமானவர். Andrew Scheer போன்ற சமூக பழமைவாதிகளுக்கும் Erin O’Toole போன்ற மிதவாதிகளுக்கும் பிடித்தவர். உறுதியான நிலைப்பாடு கொண்ட ஒரு சமாதான புறாவாகக் காணப்படுகிறார். அவருக்கு தற்போது கட்சி ஆதரவு உள்ளது. ஆனால் அடுத்த கட்சி மாநாட்டில் அவருக்குப் பதிலாக புதிய நிரந்தர தலைவர் தேர்ந்தெடுக்கப்படும் வரை கட்சியை கொண்டு நடத்தும் பணி அவருடையது. பல மிதவாத பழமைவாதிகள் (முன்னாள் இடைக்காலத் தலைவர் Rona Ambrose) உட்பட) Bergenனை ஒரு பாதுகாப்பான தேர்வாகக் கருதினாலும், அவரது சமூக பழமைவாதத்தின் (social conservatism) முன்னாள் நிலைப்பாடு கட்சிக்கு வெளியே குறிப்பிடத்தக்க பின்னடைவுக்கு வழிவகுத்தது. அவர் சமூக ரீதியாக பழமைவாதி (socially conservative) – அது ஏற்கனவே அவரை சிக்கலில் ஆழ்த்தியுள்ளது. Bergenனின் புதிய பதவி தொடர்பான பெரும்பாலான ஊடக அறிக்கைகள், நாடளாவிய ரீதியில் குழப்பத்தை ஏற்படுத்திய எதிர்ப்பு போராட்டங்களுக்கு அவர் வெளிப்படையாக வழங்கிய ஆதரவு குறித்தே உள்ளது. Bergen சர்ச்சைகளுக்கு புதியவர் இல்லை. “Make America Great Again” (MAGA) என்ற தொப்பியுடன் Bergen இருக்கும் புகைப்படம் இணையத்தில் கடந்த ஆண்டு வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த தொப்பி அணிந்திருப்பதைக் காட்டும் அவரது புகைப்படம் குறித்து Bergen அமைதியாகவே இருந்தார். முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி Donald Trumpபின் MAGA முழக்கம் பலருக்கு, இனவெறி (racism), வெள்ளையின மேலாதிக்கத்தின் (white supremacy) அடையாளமாக மாறியுள்ளது. இதே Bergen, தற்போது கனடாவின் இரண்டாவது பெரிய கட்சியை தலைமை தாங்குகிறார்.
வெறும் கையில் மோதிரம் வரவழைப்பது, வாயிலிருந்து லிங்கம் வருவது எல்லாம் மந்திரங்களால் முடியுமா? என்று சிலர் கேட்கிறார்கள் அவர்களுக்கு பதிலையும் தெளிவையும் தரவேண்டியது அவசியம் மந்திர வித்தைகள் என்பது வேறு, கண்கட்டி வித்தைகள் என்பது வேறு. இரண்டையும் ஒன்றாக போட்டு நாம் குழப்பிக் கொண்டிருக்கிறோம். இந்த குழப்பல் வேலையை பல புகழ் பெற்ற சாமியார்கள் செய்து பல கோடி ரூபாய்க்கு அதிபதிகளாகவும் ஆகிவிட்டார்கள் இதற்கு எல்லாம் காரணம் மந்திர சாஸ்திரங்கள் பற்றிய அறிவு மக்களிடம் இல்லாததே ஆகும். ஒரு முறை திபெத் நாட்டிற்கு பண்டிதர் நேரு சென்ற போது அந்த நாட்டை சேர்ந்த ஒரு புத்த மத லாமா தனது மந்திர சக்தியால் நேருவின் தலைக்கு மேல் ஒரு மேக கூட்டத்தை வரவழைத்து பன்னீர் தெளிப்பது போல மழையை பெய்வித்தார். இத்தகைய மந்திர சக்திகளை பெற்ற பல லாமாக்கள் இன்று கூட திபெத் நாட்டில் உள்ளனர். அவர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து ஆதிக்க வெறி பிடித்த சீனாவிடமிருந்து தங்களது நாட்டை மீட்டு கொள்ள முடியாதா? முடியும். ஆனால் அவர்கள் அதை செய்ய மாட்டார்கள். காரணம் மந்திர சாஸ்திரம் அறிந்தவர்கள் கர்ம சாஸ்திரத்தையும் அறிந்தவர்களாகவே இருப்பார்கள். இந்த மாதிரி இத்தனை காலம் நடக்க வேண்டும் என்ற ஆண்டவனின் கட்டளையை மீறும் துணிச்சல் அவர்களுக்கு இருக்காது. நடுத்தெருவில் மோடி மஸ்தான் வித்தை காட்டுவதை பலர் பார்த்திருப்பீர்கள். அந்த வித்தையில் சாதாரண கோழி முட்டை அந்தரத்தில் பறப்பதையும் பார்த்து வியந்திருப்பீர்கள். குருவி பறக்கலாம். முட்டை பறக்க முடியுமா? முடியும் ஒரு நல்ல கோழி முட்டையை மேல் புறத்தில் சிறிதாக ஓட்டை போட்டு உள்ளே இருக்கும் கருவை வேளியே எடுத்துவிட வேண்டும். வெறும் முட்டை ஓட்டை மட்டும் மார்கழி மாத பனியில் இரவு முழுவதும் தொடர்ச்சியாக பத்து, இருபது நாள் வைத்து எடுத்து உள்ளே இருக்கும் பனித்துளி வெளியில் போகாத வண்ணம் மெழுகால் அடைத்து விட வேண்டும். பிறகு வெய்யிலில் வைத்தால் உள்ளே இருக்கின்ற பனி உருகி ஆவியாகி மேல் எழும்பும் கூடவே முட்டையும் தூக்கி கொண்டு பறக்கும். சுற்றி இருக்கும் கூட்டத்தார் கூத்தாடியின் சக்தியை பார்த்து வியப்பார்கள். சிலர் பயப்படவும் செய்வார்கள் இப்படி மந்திரத்தோடு சம்பந்தப்படாத எத்தனையோ வித்ததைகள் உள்ளன. சில வருடங்களுக்கு முன்பு ஒரு குறிப்பிட்ட சாமியாரின் படத்திலிருந்து விபூதி கொட்டுவதாக ஒரு பெரிய தகவலே பரவியது. இப்படி விபூதி கொட்டுவது ஒன்றும் தெய்வீகமானது அல்ல. நீங்கள் விரும்பினால் உங்கள் படத்தில் இருந்து கூட விபூதி கொட்ட வைக்கலாம். உங்களுக்கு தெரிந்த நாட்டு வைத்தியர் யாரவது இருந்தால் அவரிடம் சிறிதளவு திமிர் பாஷானம் கேட்டு வாங்கி கொள்ளுங்கள் இது நாட்டு மருந்து கடைகளிலும் விற்பனை செய்யப்படுகிறது. இருப்பினும் அறிமுகம் இல்லாதவர்களுக்கு திமிர்பாஷானத்தை விற்கமாட்டார்கள். நீங்கள் வைத்தியரிடம் வாங்கிய திமிர் பாஷானத்தில் ஒரே ஒரு சொட்டு மட்டும் எடுத்து உங்கள் படத்தின் கண்ணாடியில் வைத்து விடுங்கள். அடுத்து ஆறு மணி நேரத்தில் விபூதி கொட்ட ஆரம்பித்து விடும். இது எப்படி நிகழ்கிறது என்றால் திமிர் பாஷானத்தின் தன்மை காற்றில் உள்ள தூசிகளை தனக்குள் இழுத்து வெளியிடுவதாகும். காற்றில் உள்ள தூசிகள் தான் வெள்ளை விபூதியாக கொட்டும். மேலும் இந்த திமிர்பாஷானத்தை வைத்து சில வித்தைகள் செய்யலாம். கற்பூரத்தை ஒரு பத்து நிமிடம் இதில் ஊர வைத்து ஒரு பாட்டலில் தனியாக எடுத்து வைத்து கொள்ளுங்கள். எதாவது யாகம், ஹோமம் நடக்கும் இடத்திற்கு சென்று சமித்து என்ற மர குச்சிகளின் மீது அந்த கற்புரத்தை வைத்து மந்திரம் சொல்வது போல் முணுமுணுத்து குப் என்று ஊதுங்கள், கரியமலவாயு பட்டவுடன் கற்பூரம் தானாக பற்றி கொள்ளும், நல்ல பருமனான கடப்பாறை கம்பியை வளைத்து ஒடிக்க விரும்புகிறீர்களா? அதற்கு ஒன்றும் நீங்கள் பயில்வானாக இருக்க வேண்டிய அவசியமில்லை. ஒடிக்க விரும்பும் கடப்பாரையை பத்து நாட்களுக்கு முன்பாகவே குலை தள்ளிய வாழை மரத்தில் நடுவில் சொறுகி வைத்துவிட வேண்டும். வாழை மர சாரானது இரும்பின் கட்டி தன்மையை நீர்த்து போக செய்துவிடும். பிறகு சுலபமாக ஒடித்து விடலாம். இப்படி கொதிக்கும் எண்ணெயில் கை விடுவது ஒன்றரை மணி நேரத்தில் கம்பு விதையை பயிராக்கி கதிர் தள்ள செய்தல் என்று எத்தனையோ வித்தைகள் உள்ளன. இவற்றை செய்து பார்க்க மந்திரம் தேவையில்லை. குறுக்கு புத்தி இருந்தால் போதும். இந்த மாதிரியான வித்தைகளை கற்று கொண்டவர்கள் தான் வெறுங்கையில் விபூதி வரவழைப்பது உட்பட பல வேலைபாடுகளை செய்கிறார்கள். இது தவிர குண்டலினி யோகத்தை முறைப்படி கற்றவர்களுக்கு நீர் மேல் நடக்க முடியும். காற்றில் மிதக்க முடியும். கண்ணுக்கு தெரியாமல் மறையவும் முடியும். ஆனால் அத்தகையவர்கள் அதை வெளியில் காட்டி பிழைப்பு நடத்தமாட்டார்கள். நமது சித்தர்களும், ஞானிகளும் செய்கின்ற சித்து விளையாடல்கள் ஆன்மிக நோக்கம் கொண்டதே தவிர இலாப நோக்கம் கொண்டது அல்ல என்பதை நன்கு உணர வேண்டும். மேலும் யோக பாதையில் செல்லுகின்ற துவக்க பயிற்சியாளர்களுக்கு இத்தகைய சித்துக்கள் மனதில் தெம்பையும், உற்சாகத்தையும் கொடுத்து அவர்களது முயற்சிக்கு நல்ல ஊக்க மருந்தாக அமையும். மேலும் ஒரு யோக பயிற்சியாளனுக்கு இறுதி நோக்கம் என்பது கடவுளை அடைவதை தவிர சித்துக்களை அடைவதில்லை. ஒரு யோகி சித்துக்களை காட்ட துவங்கிவிட்டால் அவன் தன் நிலையிலிருந்து கீழே நிலைக்கு வருகிறான் என்று அர்த்தம். சாதாரண மனிதர்களை திகைப்பிலும், வியப்பிலும் ஆழ்த்துவது ஒரு வித வியாபாரமே ஆகும்.
என்னது??? 2016 முடிந்து 2017 தொடங்கி விட்டதா?? அப்படி என்றால் இந்த சுண்டான்கள் பி3ல்லியும் (Billy) மில்லியும் (Milly) வந்து ஒரு வருடம் ஆகி விட்டதா?? என் கணவரின் கைகளைக் கிள்ளிப் பார்க்கிறேன். ‘ஆஆஆ…’ என்று கத்தவும் ஒரு வருடம் முடிந்தது உறுதியே ஆகிவிட்டது. நாட்கள் போனதே தெரியவில்லை. ஒரு நாள், இல்லை இல்லை ஒரு நொடிப் போல் இருக்கிறது, அதற்குள் ஓர் ஆண்டா?? நம்பவே முடியவில்லை!! பி3ல்லி மில்லியின் ஓர் ஆண்டு லீலைகளைப் பதியச் சொல்கிறார் என் கணவர். ஒர் ஆண்டு முடிந்ததையே நம்ப முடியாத எனக்கு எங்கு தொடங்குவது, எதை எழுதுவது, எதை விடுவது என்றே தெரியவில்லை. முறையே 31/2 , 3 மாதத்தில் எங்களிடம் வந்தவர்கள் பி3ல்லியும் மில்லியும். சின்னக் குழந்தைகள். இவர்களை நன்றாகப் பார்த்துக் கொள்ள வேண்டும். அவர்கள் சுதந்திரம் பறிப்போகக் கூடாது என்று பல எண்ணங்கள் எங்களுக்குள். வீட்டிற்க்கு வந்த புதுதில் கொஞ்சம் பயந்தார்கள். பின் எங்களுடன் நன்றாகவே ஒட்டிக் கொண்டார்கள். இப்பொழுது எல்லாம் எங்களைத் தவிர யாரிடமும் போக மறுக்கிறார்கள் எங்கள் செல்லக் குட்டிகள். முதலில் அவர்கள் தேவைகளைப் புரிந்துக் கொள்வதில் எங்களுக்கு மிகுந்த சிரமம் இருந்தது. ஒன்று, இரண்டு வயதுக் குழந்தைகள் தங்களுக்கு தேவையானதை எப்படித் தங்கள் பெற்றேருக்கு புரிய வைப்பார்களோ அப்படி தான் இவர்களும் எங்களுக்கு புரிய வைக்க ஆரம்பித்தார்கள். இன்று இவர்களுடைய பல செயல்களும் எங்களுக்கு புரிய ஆரம்பித்து விட்டது.(!!) பெட்டியைத் தட்டிக் கொண்டும், கணக்கு எழுதிக் கொண்டும் இருந்த எங்களை பிரசவம் கூட பார்க்க வைத்து விட்டார்கள். பிரசவக் காலத்தில் அவர்கள் இருவரின் கடமை உணர்ச்சியையும், அவர்களின் புரிதல்களையும், அவர்களின் திட்டமிடலையும் பார்த்து நாங்கள் வியந்தே போனோம். குழந்தைகள் என்று நினைத்து, பிரசவத்தை எப்படி சமாளிப்பார்களோ?, முட்டையை சரியாக அடைக்காப்பார்களா? குட்டிக்கு உணவை எப்படி ஊட்டுவார்கள் என்று பயந்த எங்களுக்கு, ஏதோ மிகுந்த அனுபவம் உள்ளவர்களைப் போல அவர்கள் அத்தனையும் செய்த அழகு இருக்கிறதே எனக்கு சொல்ல வார்த்தைகள் இல்லை. காலை பொழுதொல்லாம் பி3ல்லியும், இரவு முழுவதும் மில்லியும் அடைக்காத்தார்கள். இவர்கள் ஒரே நாளில் எல்லா முட்டையையும் போடவில்லை. 48மணிக்கு ஒரு முறை ஒரு முட்டைப் போட்டாள் மில்லி. முட்டைப் போடும் முன் மில்லி அங்கும் இங்கும் வேகவேகமாக நடப்பாள். முட்டைப் போட தன்னை தயார் செய்து கொள்கிறாள். இந்த நாட்களில் அவர்கள் அருகில் கூட எங்களை அனுமதிக்கவில்லை இருவரும். உணவு, தண்ணீர் வைப்பதற்கு தவிர வேறு எதற்க்கும் எங்களுக்கு அனுமதி இல்லை. இவ்வளவு ஞானம் எப்படி வந்தது. இயற்கையின் அதிசயம் தான் என்ன!!! ஒருபுறம் சந்தேஷத்தையும் இன்னொருபுறம் சோகத்தையும் முதல் பிரசவத்தில் பார்க்க வைத்து விட்டரார்கள். போட்ட ஐந்து முட்டைகளில் இரண்டில் குட்டிகள். 21 நாட்கள் அடைகாத்து வந்த குட்டிகள். இவர்களுக்கு உணவு ஊட்டுவதும், மீதி இருந்த முட்டையை அடைக்காப்பதுமாக மிகவும் பிஸியாகி விட்டார்கள் இருவரும். குட்டி பிறந்து 21 நாட்கள் முடிந்த நிலையில் நாங்கள் ஆசையாக அவர்களை தூக்கிக் கொஞ்சினோம். எப்படி அது நிகழந்தது என்றே தெரியவில்லை மறுநாள் இரண்டு குட்டிகளில் ஒன்று இயற்க்கை ஏய்திருந்தது. தாங்கவே முடியாத சோகம் எங்களுக்கு. தவறு எங்களுடையதா என்றும் தெரியவில்லை. அவர்கள் இருவருக்கும் இது எவ்வளவு தூரம் பாதித்தது என்று அப்பொழுது எங்களுக்கு தெரியவில்லை. அதன் பாதிப்பாக இரண்டாம் பிரசவம் அடுத்த மூன்று மாதங்களில் . ஆம் இன்று இவர்களுக்கு ஆண் (Belly) ஒன்று பெண் (Ellie) ஒன்று என இருக்குழந்தைகள். ஒரு வருடத்திற்க்குள் மாமனார் மாமியார் கூட ஆகி விட்டார்கள். ஆமாம் அவர்கள் மூத்த மகனு(Belly)க்கு பெண் (Jelly) பார்த்து திருமணமும் செய்தாகிவிட்டது. பி3ல்லியின் திறமைக்கு ஓர் எடுத்துக்க்காட்டு. யுடியூப்(Youtube) ல் நிறைய பாடல்களைக் கேட்டு ஹாப்பி பர்த்டே, கார் ரிவர்ஸ் மட்டும் அல்லாமல் அதில் அவனுக்குப் பிடித்த வரிகளையும், சத்தத்தையும் வைத்து தனக்கென்று ஒரு பாடல், மெட்டு போட்டு அசத்துகிறான் பி3ல்லி. வீட்டில் சிறு குழந்தைகள் இருந்தால் நாம் தான் முக்கியமான, விலைவுயர்ந்த பொருட்களை பத்திரமாக வைக்க வேண்டும் என்பார்கள். அஜாக்கிரதையாக இருந்தால் என்னவாகும் என இருவரும் எங்களுக்குப் புரிய வைத்தார்கள். என் கணவர் ஆபிஸ் மடிக்கணிணியில் வேலைப் பார்த்த்து அதை மூடாமல் சிறிது நேரம் வெளியே சென்று இருந்தோம். நாங்கள் எப்பொழுது கணிணியைத் திறந்தாலும் எங்களையேப் பார்த்துக் கொண்டு இருப்பான் பி3ல்லி. கீயை அழுத்த நாங்கள் சிரமப்படுவதாக நினைத்தானோ என்னவோ, நாங்கள் திரும்பி வருவதற்க்குள் 25 முதல் 30 கீகளை கடித்து எடுத்திருந்தான். எங்களைப் பார்த்ததும், வாயில் ஒரு கீயுடன் கொண்டை அப்படியே நிமிர்ந்து நிற்க பி3ல்லி திருதிரு என முழித்தது இன்றும் எங்களால் மறக்க முடியாது. கீ மட்டும் அல்லாமல் மொபைல் சார்ஜ்ர், துணிக்காயப் போடும் கொடி, புத்தகங்கள், துணியில் இருக்கும் குச்சல் என்று சொல்லிமாளாது. என் மொபைல் அலறினால் போதும், பி3ல்லியும், மில்லியும் நான் வரும் வரை அல்லது நான் ‘வந்துட்டேன்’னு சொல்லும் வரை விசில் அடித்துக் கொண்டே இருப்பார்கள். அதே போல் நான் அலுவலகம் விட்டு வரும் போது எங்கு இருந்தாலும் வாசலுக்கருகில் வந்து எனக்காக காத்துக் கொண்டு இருப்பார்கள். நான் கை, கால் கழுவும் வரை தான் அமைதியாய் இருப்பார்கள். அதற்க்குப்பின் இறக்கையை விரித்து, கழுத்தை மேலே தூக்கி, என்னை தூக்கச் சொல்வார்கள். அப்பொழுதும் தூக்காவிட்டால் பின்னாலேயே வந்து அடம்பிடிப்பார்கள். உறவினர்கள் மற்றும் நண்பர்கள் தொலைபேசியில் அழைத்தால், முதலில் நலம் விசாரிப்பது இவர்களையே!!! சென்னையில் உள்ள உறவினர்கள் வீட்டிற்க்கு மட்டும் அல்லாமல் இரயிலில் ஏறி மதுரை வரைக்கூட சென்று வந்து விட்டார்கள் இந்த சுண்டான்கள்!! இவர்கள் இரயில் பயணம் ஒரு தனிக் கதை. அதை மற்றுமொரு நாளில் தனி பதிவாகவே பதிகிறேன். இவர்களின் லீலைகளை எழுத ஆரம்பித்தால் எழுதிக் கொண்டே இருப்பேன். அதனால் இந்த பதிவை இத்துடன் முடித்துக் கொள்கிறேன். இனி வரும் நாட்களில் இவர்கள் செய்யும் லீலைகளை முடிந்த மட்டும் பகிர்கிறேன்…..
ஜம்மு - காஷ்மீரில் சிறைத் துறை டிஜிபி ஹேமந்த் லோஹியா படுகொலை வழக்கில் பயங்கரவாத சதிச் செயல் எதுவும் இல்லை என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜம்மு - காஷ்மீரில் பாதுகாப்பு நிலவரம் மற்றும் அரசியல் நிலவரம் குறித்து நேரில் ஆய்வு செய்ய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வந்திருக்கும் நிலையில், சிறைத் துறை டிஜிபி லோஹியா படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 1992ஆம் ஆண்டு ஐபிஎஸ் பிரிவைச் சேர்ந்த டிஜிபி லோஹியா, ஜம்மு நகரில், உதய்வாலா என்ற பகுதியில் வசித்து வந்தார். இந்த நிலையில், அவர் நேற்று வீட்டில் படுகொலை செய்யப்பட்டு சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார். கடந்த ஆகஸ்ட் மாதம் தான் அவர் சிறைத்துறை டிஜிபியாக பதவி உயர்வுபெற்று பொறுப்பேற்றுக் கொண்டார். இந்த கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான யாசிர் அகமது(23) கைது செய்யப்பட்டார். இவர் லோஹியா வீட்டில் வேலை செய்து வந்தார். அவரிடம் நேற்று முதல் விசாரணை தொடங்கி நடைபெற்று வருவதாக ஏடிஜிபி முகேஷ் சிங் கூறியுள்ளார். ​முதற்கட்ட விசாரணையில், லோஹியா, கடந்த சில நாள்களாக அவரது நண்பர் வீட்டில் தங்கியிருந்தார். நேற்று இரவுதான் அவரது அறைக்குத் திரும்பியிருக்கிறார். அப்போது வீட்டுப் பணியாளர் அவருக்கு சில உதவிகளை செய்துள்ளார். பிறகு, அந்த அறையின் கதவை உள்பக்கமாக பூட்டிய பணியாளர், டிஜிபியை பயங்கரமாகத் தாக்கி கொலை செய்துள்ளார்.. டிஜிபி லோஹியாவைக் கொலை செய்யப் பயன்படுத்தப்பட்ட ஆயுதம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுவரை நடந்த விசாரணையில் பயங்கரவாத சதிச் செயல் எதுவும் இருப்பதற்கான ஆதாரங்கள் கிடைக்கவில்லை. குற்றவாளியிடம் தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வருகிறது. அவர் அளிக்கும் வாக்குமூலத்தின் அடிப்படையை, கள நிலவரங்கள் மூலம் உறுதி செய்து வருகிறோம் என்றார். மேலும், கொலைக் குற்றவாளியின் டைரி கண்டெடுக்கப்பட்டது. அதில், அவர் பல்வேறு மனநிலை பாதிப்புகளுக்கு உள்ளாகியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேற்கொண்டு விசாரணை நடைபெற்று வருகிறது என்று தெரிவித்துள்ளார். மக்கள் கருத்து மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.
தேசியத் தலைவர் முதன் முதலாக பத்திரிகைக்கு அளித்த பேட்டி ! #ஈழமறவர் #பிரபாகரன் #ஈழம் #தமிழர் #விடுதலைப்புலிகள் #Prabhakaran #Tamil #Eelam #ltte « Velupillai Prabhakaran Velupillai Prabhakaran Leader of tamils - About Hon.Velluppillai Prabhakaran தேசியத் தலைவர் முதன் முதலாக பத்திரிகைக்கு அளித்த பேட்டி ! #ஈழமறவர் #பிரபாகரன் #ஈழம் #தமிழர் #விடுதலைப்புலிகள் #Prabhakaran #Tamil #Eelam #ltte Posted on December 12, 2020 குறிப்பு: தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் தமிழ் நாட்டில் தங்கியிருந்த போது முதன் முதலாக பத்திரிகைக்கு அளித்த பேட்டி இது. இந்தியாவின் பிரசித்திபெற்ற ‘சண்டே’ (SUNDAY) எனப்படும் ஆங்கில வார ஏடு (11 – 17, மார்ச், 1984) தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் இந்த நேர்காணலை பிரசுரித்தது. தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் படத்தை அட்டையில் தாங்கி, மிக முக்கியத்துவம் கொடுத்து வெளியிடப்பட்ட இந்த நேர்காணல் விடுதலைப் புலிகள் இயக்கத்தை சர்வதேச அரங்கில் பிரபல்யப்படுத்த பெரிதும் உதவியது. விடுதலைப் புலிகள் இயக்கத்தின் உருவாக்கம், கொள்கைத் திட்டம், ஆயுதப் போராட்ட வடிவம், மற்றும் அன்றைய காலத்து அரசியல் சூழ்நிலை, ஆகிய விடயங்கள் பற்றி தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் இந்த நேர்காணலில் மிகவும் தெளிவாகவும் ஆணித்தரமாகவும் தனது கருத்துக்களை எடுத்துக் கூறுகிறார். பிரபல இந்திய பெண் பத்திரிகையாளரான அனிதா பிரதாப் இந்த நேர்காணல் முன்னுரையில் தேசியத் தலைவரைப் பற்றி குறிப்பிடுகையில், “இவர் அன்பானவர்; பண்பானவர். மிகவும் பலம்வாய்ந்த விடுதலை இயக்கத்திற்கு தலைமை தாங்கி வழிநடத்துபவர் என்ற முறையில் அவர் சிங்கள ஒடுக்குமுறையிலிருந்து தமிழ் மக்களை விடுதலை செய்யும் இலட்சியத்தில் தீவிரமும் உறுதிப்பாடும் மிக்கவராக விளங்குகிறார்” என கூறியிருந்தார். ஆங்கிலத்தில் வெளியான இந்த நேர்காணலின் தமிழாக்கத்தை இங்கு தருகிறோம். கேள்வி: வழக்கமான அரசியல் அமைப்பில் இருந்து விலகவும், ஒரு விடுதலை இயக்கத்தை உருவாக்கவும் உங்களைத் தூண்டியது எது? அத்தகைய ஒரு விடுதலை இயக்கம் சட்ட விரோதமாக்கப்படும் என்பது உங்களுக்குத் தெரியும் தானே? பதில்: இலங்கையின் சனநாயகப் பாராளுமன்ற அமைப்பு அல்லது நீங்கள் சொல்வதைப்போல இலங்கையின் வழக்கில் உள்ள அரசியல் அமைப்பு எப்போதுமே பெரும்பான்மையினரின் ஆதிக்கத்தையே சிறுபான்மையினர் மீது திணித்து வந்திருக்கிறது. இந்த அரச அமைப்பானது எங்கள் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணத் தவறிவிட்டது என்பதுடன், எமது நிலையை மேலும் மோசமாக்கிவிட்டது. காலம் காலமாக அரசின் ஒடுக்குமுறை ஆட்சியானது எம் மக்களின் வாழ்வு நிலையைச் சகிக்க முடியாததாகவும் துன்பகரமானதாகவும் மாற்றிவிட்டது. எம்மக்கள் நடத்திய சாத்வீக சனநாயகப் போராட்டங்கள் இராணுவத்தால் நசுக்கப்பட்டன. எமது நியாயமான கோரிக்கைகள் முற்று முழுவதாகப் புறக்கணிக்கப்பட்டதுடன் இந்த அடக்குமுறையானது தமிழ் மக்களின் உயிர் வாழ்வுக்கே ஆபத்தாக அமைந்தது. இத்தகைய சூழ்நிலைகளே ஒரு விடுதலை இயக்கத்தை உருவாக்க என்னைத் தூண்டின. தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கு மட்டுமல்ல, சிங்கள அடக்குமுறையிலிருந்து இறுதியாகத் தங்களை விடுவித்துக்கொள்ளவும் எம் மக்களுக்கு ஆயுதப் போராட்டமே நடைமுறைச் சாத்தியமான ஒரே வழியென்று நான் உணர்ந்தேன். எங்கள் இயக்கம் தடை செய்யப்படும் என்பது எனக்கு முன்கூட்டியே தெரியும். அதனால் தான் எங்கள் இயக்கத்தை அதன் ஆரம்ப காலத்திலிருந்தே ஒரு தலைமறைவு இயக்கமாக உருவாக்கினோம். கேள்வி: இலங்கைத் தமிழர்களுக்கு ஆயுதப் போராட்டமே ஒரே வழியென்று நீங்கள் தீர்க்கமான முடிவுக்கு வர நிர்ப்பந்தித்த உங்களின் தனிப்பட்ட அனுபவங்களைச் சற்றுக் கூறுவீர்களா? கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவற்றில் இலங்கை அரசு காட்டிய பாரபட்சமான கொள்கையால் நீங்களோ உங்கள் குடும்பத்தவரோ அல்லது உங்களது நண்பர்களோ நேரடியாகப் பாதிக்கப்பட்டுள்ளனரா? பதில்: நான் பள்ளிச் சிறுவனாக இருந்தபோது 1958ஆம் ஆண்டின் இனக் கலவரங்களில் நிகழ்ந்த பயங்கரச் சம்பவங்கள் என் மனத்தில் ஆழமான பாதிப்பை ஏற்படுத்தின. சிங்கள இனவெறியர்களால் எம் மக்கள், ஈவிரக்கமில்லாது குரூரமாகக் கொல்லப்பட்ட நெஞ்சை உலுக்கும் சம்பவங்களை நான் கேள்விப்பட்டேன். எங்கள் குடும்பத்திற்குத் தெரிந்த ஒரு விதவைத் தாயை நான் ஒருமுறை சந்தித்தபோது அவர் இந்த இன வெறியாட்டத்தால் தனக்கு நேர்ந்த துயரமான அனுபவத்தை என்னிடம் சொன்னார். இனக் கலவரத்தின் போது சிங்களக் காடையர்கள் கொழும்புவிலிருந்த அவர் வீட்டைத் தாக்கினார்கள். அவரது வீட்டுக்குத் தீ வைத்து, அவருடைய கணவரையும் குரூரமாகக் கொலை செய்தனர். அவரும் அவரது பிள்ளைகளும் பலத்த எரிகாயங்களுடன் தப்பினார்கள். அவரது உடலில் காணப்பட்ட எரிகாயத் தழும்புகளைப் பார்த்தபோது நான் மிகவும் அதிர்ச்சியடைந்தேன். சிறு குழந்தைகளைக் கொதிக்கும் தாருக்குள் உயிருடன் வீசிக்கொன்ற கோரச்சம்பவங்களை நான் கேள்விப்பட்டேன். அநாதரவான அப்பாவித் தமிழர்கள் எவ்வாறெல்லாம் கொடூரமான தாக்குதலுக்கு இலக்காகினர் என்பதையெல்லாம் கேட்கும்போது என் மக்கள் மீது ஆழ்ந்த அனுதாபமும், அன்பும் ஏற்பட்டன. இந்த இனவெறி அமைப்பின் பிடிக்குள்ளிருந்து எம் மக்களை மீட்டெடுக்க வேண்டுமென்ற பெரும் உந்துதல் என்னிடம் தோன்றியது. நிராயுதபாணிகளான அப்பாவித் தமிழர்களுக்கெதிராக ஆயுத வலிமையைப் பிரயோகிக்கும் இந்த அமைப்பினை ஆயுதப் போராட்டத்தின் மூலமே எதிர்கொள்ள முடியும் என்று நான் ஆழமாக உணர்ந்தேன். கேள்வி: எந்தக் கட்டத்தில் நீங்கள் பாராளுமன்ற அமைப்பில் நம்பிக்கை இழந்தீர்கள்? உங்கள் நம்பிக்கையைச் சிதைத்தது எது? பதில்: எழுபதுகளின் ஆரம்பத்தில், இளம் தலைமுறையினர் பாராளுமன்ற அரசியலில் நம்பிக்கையிழந்திருந்த கால கட்டத்தில் தான் நான் அரசியலில் நுழைந்தேன். ஆயுதம் தாங்கிய புரட்சிவாதியாகவே நான் அரசியலில் புகுந்தேன். அடுத்தடுத்து பதவிக்கு வந்த சிங்கள அரசுகள் எமது மக்களின் துன்ப, துயரங்களை ஈவிரக்கமின்றி முற்றிலும் புறக்கணித்து வந்த காரணத்தினால் பாராளுமன்ற அரசியலில் எனக்கு அவநம்பிக்கை ஏற்பட்டது. கேள்வி: நீங்கள் விடுதலைப்புலிகள் இயக்கத்தை எவ்வாறு ஆரம்பித்தீர்கள்? பதில்: எம் மக்களின் விடுதலைக்கு ஆயுதப் போராட்டம் தான் ஒரே வழி என்பதில் முழுமையான நம்பிக்கையுடைய புரட்சிகர இளைஞர்களின் துணையுடன் தான் நான் விடுதலைப்புலிகள் இயக்கத்தை ஆரம்பித்தேன். கேள்வி: உங்களைப் ‘புலிகள்’ என்று ஏன் அழைத்துக் கொள்கிறீர்கள் ? பதில்: தமிழர்களின் அரசியல் வரலாற்றில் புலிச்சின்னமானது ஆழ்ந்து வேரோடி இருப்பதால் தான் எமது இயக்கத்திற்கு ‘விடுதலைப் புலிகள்’ என்று பெயரிட்டேன். புலிச்சின்னமானது தமிழ்த் தேசியத்தின் புத்தெழுச்சியை உருவகப்படுத்துகிறது. அத்துடன் கெரில்லா யுத்த முறையையும் புலிச்சின்னம் குறித்து நிற்கிறது. கேள்வி: நீங்கள் “விடுதலைப் புலிகள்” இயக்கத்தை ஆரம்பித்த போது உங்கள் குடும்பத்தாரும் நண்பர்களும் அதனை எவ்வாறு வரவேற்றனர்? பதில்: விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஆரம்பித்ததுமே நான் தலைமறைவாக இயங்கி வந்தேன். அத்துடன் எனக்கும் குடும்பத்தாருக்கும் இருந்த தொடர்பு அறுந்து விட்டது. கேள்வி: உங்கள் குடும்பத்தாரைக் கடைசியாக எப்போது சந்தித்தீர்கள்? உங்கள் தலைமறைவு வாழ்க்கையை அவர்கள் ஏற்றுக்கொண்டு விட்டார்களா? பதில்: என் குடும்பத்தாரை நான் சந்தித்துப் பதினொரு வருடங்கள் ஆகி விட்டன. சாதாரண வாழ்க்கை நடத்தும் சாமான்யனாக அவர்கள் என்னைக் கருதுகிறார்கள் என்று நான் நினைக்கவில்லை. என்னுடைய தலைமறைவுக் கெரிலாப் போராளி வாழ்க்கையை அவர்கள் ஏற்றுக் கொண்டு விட்டார்கள். கேள்வி: 12 வருடகாலப் போராட்டத்தின் பின், உங்கள் இலக்கை நெருங்கிக் கொண்டிருக்கும் கட்டத்தில் இருப்பதாக நீங்கள் நினைக்கிறீர்களா? பதில்: இந்த நீண்ட போராட்டத்தின் பின் எமது இலட்சியத்தை நோக்கி நாங்கள் வேகமாக விரைந்து கொண்டிருப்பதாகவே நான் உணர்கிறேன். ஜூலை 1983 பேரழிவுகள் தமிழ் மக்களின் சகல பிரிவினரையும் ஒரே இலட்சியத்தின் கீழ் ஒன்றிணைத்துவிட்டன. எமது இயக்கத்தின் ஆயுதப்போராட்டத் திட்டத்திற்கு மக்களின் பேராதரவு பெருகி வருகிறது. கேள்வி: கடந்த 12 வருடகால அனுபவங்கள் உங்களைத் தனிநபர் என்ற முறையில் எவ்வாறு பாதித்து இருக்கின்றன? பதில்: இந்தப் போராட்ட அனுபவங்கள் எனது இலட்சியத்தை ஆழமாக வலுப்படுத்தியிருக்கின்றன. எனது பார்வையை மேலும் கூர்மைப்படுத்தியிருக்கின்றன. கேள்வி: இதுவரை உங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களில் மகத்தான அனுபவம் என்று எதைக்கூறுவீர்கள்? பதில்: ஒரு குறிப்பிட்ட அனுபவத்தை மகத்தானது என்று தனிமைப்படுத்திக் கூறுவது எனக்குக் கடினமானது. ஒரு கெரில்லாப் போராளியின் வாழ்க்கையானது துயரமும் மகிழ்ச்சியும் விரக்தியும் கலந்த பல்வேறுபட்ட அனுபவங்களின் கலவையாகும். இவற்றுள் ஒவ்வொன்றுமே ஒவ்வொரு வகையில் மகத்தானது தான். கேள்வி: விடுதலைப் போராட்டத்தில் உங்களது நீண்டகால அனுபவமானது, வாழ்க்கை பற்றிய உங்களது நோக்கில் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கும். இந்த அனுபவங்களின் மூலம் உங்கள் பார்வையில் ஏற்பட்ட தாக்கங்கள் பற்றியும், உங்கள் இலட்சியத்தில் எழுந்த உறுதிப்பாடுகள் பற்றியும் கூறுவீர்களா? அத்துடன் உங்கள் அனுபவங்கள் நீங்கள் ஏற்கனவே வரித்துக் கொண்ட சில கொள்கைகள், கோட்பாடுகள் நடைமுறையில் எத்துணை பொருத்துமற்றது என்பதனை உணர்த்தும் அதேவேளையில் வேறு சில சரியானவைதாம் என்ற கருத்தினையும் ஏற்படுத்தியிருக்கலாம் அல்லவா ? அவற்றில் சிலவற்றைக் கூறுவீர்களா? பதில்: நாங்கள் வரித்துக்கொண்ட ஆயுதப் புரட்சிப் பாதை மிகவும் சரியானது என்பதைக் கடந்த 12 வருடகால அனுபவங்கள் சந்தேகத்திற்கு இடமில்லாமல் எனக்கு உணர்த்தியிருக்கின்றன. எமது ஆயுத ரீதியிலான போராட்ட வடிவத்தை ‘பயங்கரவாதம்’ என்று விமர்சித்த மற்ற விடுதலைக் குழுக்குள் ஒடுக்கப்பட்ட எமது மக்களின் விடுதலைக்கான ஒரே வழி ஆயுதப் போராட்டம் தான் என்பதை இப்போது ஏற்றுக்கொண்டு விட்டன. நாங்கள் கைக்கொண்ட கெரில்லா யுத்தமுறையானது விடுதலைப் போராட்டத்தின் வலிமைமிக்க வடிவமாக அமைந்திருக்கிறது. எமது வெற்றிகரமான கெரில்லாத் தாக்குதல்கள், சிங்கள ஆயுதப் படைகளைத் தோற்கடித்து, சுதந்திரத்தை வென்றெடுக்க எம்மால் முடியுமென்ற நம்பிக்கையை எமது மக்களுக்கு ஊட்டியிருக்கின்றன. கேள்வி: உங்கள் நண்பன், தத்துவாசிரியன், வழிகாட்டி யார்? பதில்: இயற்கை எனது நண்பன்; வாழ்க்கை எனது தத்துவாசிரியன்; வரலாறு எனது வழிகாட்டி. கேள்வி: இலங்கை அரசாங்கத்தால் தேடப்படுபவர்களில் முதன்மையானவராக இருப்பது குறித்து என்ன நினைக்கிறீர்கள்? பதில்: பிரிட்டிஷ் அரசாங்கம் யாரைப் ‘பயங்கரவாதி’ என்று சொல்கிறதோ, அவனே உண்மையான ஐரிஸ் தேசியப் போராளி என்று ஐரிஸ் தலைவர் ஒருவர் குறிப்பிட்டார். அதுபோல, இலங்கை அரசு என்னைத் தேடப்படுபவர்களில் முதன்மையானவராகக் கருதினால் அது நான் உண்மையான தமிழ்த் தேசியப் போராளி என்பதையே உணர்த்துகிறது. அவ்வாறு தேடப்படும் நபராக இருப்பதில் பெருமைப்படுகிறேன். கேள்வி: உங்கள் வாழ்க்கையில் மிகுந்த விரக்தியைத் தந்த கணம் என்று எதையாவது கூறுவீர்களா? பதில்: என் வாழ்க்கையில் அப்படி விரக்தி ஏற்பட்ட கணம் என்று எந்த ஒன்றையும் குறித்துச் சொல்ல முடியாது. இலட்சிய நோக்குக் கொண்டவர்கள் என்று நான் நினைத்து நம்பிய சில நண்பர்கள், சுயநலச் சந்தர்ப்பவாதிகளாக மாறியபோது, நான் மிகுந்த விரக்திக்குள்ளானதுண்டு. கேள்வி: உங்களுக்கும் உமாமகேஸ்வரனுக்கும் இடையிலான பிளவு எப்படி ஏற்பட்டது? பதில்: இந்தக் கேள்வியை நீங்கள் கேட்டிருக்கும் விதம் தவறானது. இப் பிரச்சினையை எனக்கும் உமாமகேஸ்வரனுக்கும் இடையிலான தனிப்பட்ட விரோதமாக அல்லது பிளவாக நோக்குவது தவறானது. விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கும் ஒரு தனி நபருக்கும் இடையிலான பிரச்சினையே அது. இப்பிரச்சினைக்கு நான் தனிப்பட்ட முறையில் எந்த விதத்திலும் பொறுப்பாளியல்ல. அந்தப் பிரச்சினை உமாமகேஸ்வரனாலேயே உருவானது. ஒரு புரட்சி இயக்கத்தின் முக்கியஸ்தர், அந்த இயக்கத்தின் கட்டுப்பாட்டுக்குத் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும். அப்போது தான் இயக்கத்தில் ஒழுங்கும் கட்டுப்பாடும் நிலவும் அடிப்படை விதிகளை அம் முக்கியஸ்தரே மீறி நடப்பாரேயானால் ஒழுங்கு குலைந்து, குழப்பம் மலிந்து, இயக்கம் சிதைந்து போகும். உமாமகேஸ்வரன் எமது இயக்கத்தின் விதிகளை மீறி நடந்தமையால் ஒழுங்கு நடவடிக்கையாக அவர் மத்திய குழுவால் இயக்கத்திலிருந்து வெளியேற்றப்பட்டார். இந்த இயக்கத்தை ஸ்தாபித்தவன் என்ற முறையிலும், உமாமகேஸ்வரனை இயக்கத்தின் ஒரு உறுப்பினராக நியமித்தவன் என்ற முறையிலும் மத்திய குழுவின் தீர்மானத்தை உறுதியாகக் கடைப்பிடிப்பதைத் தவிர வேறு எந்த வழியும் எனக்கு இருக்கவில்லை. கேள்வி: இன்று பல்வேறு ஈழ விடுதலைக்குழுக்கள் தமக்குள் போட்டியிட்டுக் கொண்டிருக்கின்றன. எல்லாரது இலட்சியமும் ஒன்றேயாதலால், இவற்றை ஒருங்கிணைக்கும் முயற்சி அவசியமல்லவா? பொது எதிரிக்கு எதிராக உங்களின் ஒருங்கிணைக்கப்பட்ட சக்தியால் நீங்கள் அதிகளவு பயனடையலாமே!இக்குழுக்கள் ஒருங்கிணைவதை நீங்கள் கொள்கையளவில் எதிர்க்கிறீர்களா? பதில்: இத்தகைய ஒருங்கிணைப்பு முயற்சிகளுக்கு நான் ஆதரவுடையவன் என்பதை மிகத் தெளிவாகவும் வெளிப்படையாகவும் தெரிவித்திருக்கிறேன். இத்தகைய திட்டத்தை நான் வரவேற்கிறேன் என்பதையும், மற்ற விடுதலைக் குழுக்கள் தமக்கிடையிலான வேறுபாடுகளைக் களைந்து, பொது வேலைத் திட்டமொன்றினை ஏற்கும்பட்சத்தில் அத்தகைய கூட்டு முன்னணியில் இணைந்துகொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம் என்பதையும், இந்த விடுதலை அணிகளுக்கு 2-9- 82இல் நான் கடிதம் மூலம் தெரிவித்திருக்கிறேன். ஆனால், துரதிர்ஷ்ட வசமாக இக்குழுக்கள் ஒரு பொதுப்படையான வேலைத்திட்டத்தை உருவாக்குவதில் தோல்வி கண்டன. மாறாக, ஒவ்வொரு ஒருங்கிணைப்புக் கூட்டத்திலும் ஒருவருக்கொருவர் பிணக்குப்பட்டு, மேலும் பிளவுற்றனர். இதில் வருந்தத்தக்க உண்மை என்னவென்றால், ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்ற உண்மையான நோக்கம் இந்தக் குழுக்களிடையே இல்லை என்பது தான். அவர்களது சொல்லுக்கும் செயலுக்குமிடையே பெரும் இடைவெளி காணப்படுகிறது. தங்களுக்கிடையிலான ஒற்றுமையின்மைக்குப் புலிகளைக் குற்றம் சாட்டுவதைக் கைவிடுத்து இக்குழுக்கள் தங்களுக்கிடையிலே ஒற்றுமையை ஏற்படுத்தி முன்னுதாரணமாகத் திகழவேண்டும். ஒரு பொதுத் திட்டத்தில் அவர்கள் ஒருங்கிணையும்போது அவர்களுடன் கைகோர்த்துச் செல்ல நாம் தயாராக இருக்கிறோம். கேள்வி: உங்களைத் தவிர மற்ற அனைவரும் ஒருங்கிணையும் கருத்திற்கு ஆதரவு தருவதாக ஏனைய விடுதலைக் குழுக்களின் அமைப்பாளர்கள் என்னிடம் கூறியிருக்கிறார்கள். இது உண்மையா? பதில்: இது முற்றிலும் பொய்யானது; எங்கள் இயக்கத்திற்கு இழிவுதேட ஏனைய குழுக்கள் மேற்கொண்டிருக்கும் பொய்ப் பிரச்சாரத் தந்திரம் இது. கேள்வி: விடுதலைப் போராட்டத்தில் நீங்கள் தனித்து நிற்கிறீர்களா? பதில்: இல்லை. நான் பலம்மிக்க தேசியப் போராட்ட இயக்கமொன்றினை தலைமைதாங்கி நடத்துபவன். பரந்துபட்ட தமிழ் மக்கள் எனக்கு ஆதரவாக இருக்கிறார்கள். கேள்வி: தனிமை உங்களை வாட்டும் கணங்கள் உண்டா? அதை எவ்வாறு எதிர்கொள்கிறீர்கள்? பதில்: இத்தகைய தனிமையுணர்வுகள் என்னைப் பீடித்ததில்லை. தங்களின் தனிப்பட்ட மனக் குகைக்குள் தங்களை அமிழ்த்திக்கொள்பவர்களுக்கு இந்தத் தனிமையுணர்வு ஒரு பிரச்சினைதான். ஒரு உண்மையான புரட்சியாளன் இத்தனி நபர் பிரச்சினைகளை மேவி, ஒரு கூட்டு பிரக்ஞையை, சமூகப் பிரக்ஞையை உருவாக்குகிறான். நான் ஒரு பொதுவான சமூக இலட்சியத்திற்காக வாழ்பவன்; அதற்காகப் போராடுபவன். கேள்வி: ஒரு சாதாரண இளைஞனின் வாழ்க்கையை வாழவில்லையே என்று நீங்கள் வருந்தியதுண்டா? பதில்: நீங்கள் சொல்லுகிறமாதிரி சாதாரண வாழ்க்கை நடத்துகின்ற இலட்சக்கணக்கான இளைஞர்கள் உள்ளனர். ஆனால், நாங்களோ ஒரு உன்னத இலட்சியத்துக்காகப் போராடி வருகிறோம். அந்த இலட்சியத்திற்காக உழைப்பதும், வாழ்வதும் எங்களுக்குப் பூரண ஆத்ம நிறைவைத் தருகிறது. கேள்வி: இலங்கையில் பெரும்பாலான தமிழ் இளைஞர்கள் இருள்மயமான எதிர்காலத்தை எதிர்நோக்கியிருக்கின்றனர் என்று நீங்கள் கவலைகொள்வதுண்டா ? பதில்: இல்லை. இன்றைய இளம் சமூகத்தினர் சுதந்திரத்திற்கான போராட்டக் களத்தில் குதித்துள்ளனர். இவர்களின் எதிர்காலம் ஒளிமயமானது என்றே எனக்குத் தெரிகிறது. கேள்வி: விடுதலைப் போராட்டத்தில் மேன் மேலும் இளைஞர்கள் பங்குகொண்டு வருகிறார்கள் என்பது உண்மைதானா? பதில்: ஆம். மேன்மேலும் இளைஞர்கள் புரட்சிப் போரில் குதித்து வருகின்றனர். தங்களுக்கும் தங்கள் சமூகத்துக்கும் ஆயுதப் போராட்டத்தின் மூலமே விமோசனம் உண்டு என்பதை உணர ஆரம்பித்துள்ள இளைய தலைமுறையினர் எங்கள் இயக்கத்தின் தலைமையின்கீழ் அணிதிரண்டு வருகின்றனர். கேள்வி: ‘பிரிவினைவாதிகள்’ என்றும் ‘சுதந்திரப் போராளிகள்’ அல்லது ‘பயங்கரவாதிகள்’ என்றும் உங்கள் இயக்கத்தைப் பற்றிக் கூறப்படுகிறதே, அதற்கு உங்கள் பதில் என்ன? பதில்: ‘பிரிவினைவாதிகள்’ என்று எமது இயக்கத்தைக் குறிப்பிடுவது மிகத் தவறானது. பிரிவினைவாதம்’ என்பது தவறான சித்தாந்தம். இதனை எங்கள்போராட்டத்திற்குப் பிரயோகிக்க முடியாது. எங்கள் இனத்தின் தேசிய சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் தேசிய விடுதலைக்காக நாங்கள் போராடி வருகிறோம். சுயநிர்ணய உரிமைக்காக நாங்கள் போராடுகிறோம். எங்கள் தாயகத்தின் இறைமையை மீட்டெடுக்க நாங்கள் போராடுகிறோம். பிரிவினைக்காகவோ, நாட்டை கூறுபடுத்துவதற்காகவோ நாங்கள் போராடவில்லை. எங்கள் மக்கள் சுதந்திரத்தோடும், சுய கௌரவத்தோடும் வாழுகின்ற புனித உரிமையைப் பாதுகாப்பதற்காக நாங்கள் போராடுகிறோம். இந்த அர்த்தத்தில் நாங்கள் பயங்கரவாதிகள் அல்லர்; சுதந்திரப் போராட்ட வீரர்களே. கேள்வி: சிங்கள இராணுவத்தின் கரங்களில் பிடிபடுவதைவிட மரணமடைவது மேலானது என்று கருதுகிறீர்களா? பதில்: உயிரோடு எதிரிகள் கைகளில் பிடிபடுவதைவிட கௌரவமாகச் சாவதையே விரும்புகிறேன். கேள்வி: உங்கள் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் ஜூலை 23ஆம் தேதி நடத்திய தாக்குதலில் 13 சிங்கள இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். அப்பாவித் தமிழர்களுக்கு எதிராகச் சிங்களவர்கள் தாக்குதல் நடத்தியமைக்கு உங்ககளின் கெரில்லாத் தாக்குதலே காரணம் என்று கூறப்படுகிறது. இத்தகைய பாரிய பதில் தாக்குதலை நீங்கள் எதிர்பார்க்கவில்லையா? பதில்: ஜூலைக் கலவரத்தை விடுதலைப் புலிகளின் கெரில்லாத் தாக்குதலுக்கு எதிரான சிங்களவர்களின் பதில் தாக்குதல் என்று வெறுமனே மதிப்பிட்டு விட முடியாது. இவ்வாறு கூறுவது அந்தச் சம்பவத்தை மிகவும் எளிமைப்படுத்துகிறது. இலங்கையில் காலம் காலமாக, திட்டமிட்ட முறையிலே தமிழர்களுக்கெதிரான தாக்குதல் தொடர்ச்சியாக நடந்து கொண்டிருக்கிறது. எங்களின் இயக்கம் தோன்றுவதற்கு முன்பே இனவெறிப் பேரழிவுகள் நடந்திருக்கின்றன. நாங்கள் இராணுவத் தாக்குதலை நடத்துவதற்குச் சில கிழமைகளுக்கு முன்பே திருக்கோணமலையில் மோசமான இனத் தாக்குதல்கள் நடந்து கொண்டிருந்தன. ஆகவே, தமிழர்களுக்கெதிரான இனத் தாக்குதலைத் தனித்த ஒரு சம்பவத்தின் அடிப்படையில் விமர்சிக்க முடியாது. நாங்கள் நீண்ட ஒரு கெரில்லா யுத்தத்தில் ஈடுபட்டிருக்கிறோம். பல கெரில்லாத் தாக்குதல்களை நடத்தியிருக்கிறோம். பல சிங்கள இராணுவ வீரர்களையும் பொலிஸ்காரர்களையும் அழித்திருக்கிறோம். ஜூலையில் நாங்கள் நடத்திய கெரில்லாத் தாக்குதல் நாங்கள் நடத்திவரும் தொடர்ச்சியான போராட்டத்தின் ஒரு அங்கம்தான். குறிப்பிட்ட ஒரு இராணுவ நடவடிக்கைதான் முழுக் கலவரத்திற்கும் காரணம் என்று கருதுவது தவறானதாகும். ஜூலைக் கலவரமானது எம் மக்களைக் கொன்று குவிக்கும் நோக்கம் மட்டும் கொண்டதல்ல, கொழும்பில் வாழுகின்ற தமிழர்களின் பொருளாதாரத் தளத்தையே அழித்து விடுவதையும் நோக்கமாகக் கொண்டிருந்ததை நீங்கள் நிச்சயமாக அவதானித்திருப்பீர்கள். எங்களுடைய கண்ணோட்டத்தில், ஜூலைப் பேரழிவானது ஆளும் கட்சியின் இனவெறிச் சக்திகளால் தமிழர்களுக்கெதிராக நன்கு திட்டமிடப்பட்டு, செயற்படுத்தப்பட்ட இனப் படுகொலைத் திட்டமாகும். ஆரம்பத்தில் இந்த வெறிக் கும்பல் முழுக் குற்றச்சாட்டையும் புலிகள் மேல் சுமத்த முனைந்தது. பிறகு திடீரென்று தங்கள் கருத்தை மாற்றிக்கொண்டு இனக்கலவரங்களுக்கு இடதுசாரிகளே காரணம் என்று குற்றம் சாட்டியது. உண்மையில் எமது மக்களின் பாரிய உயிரிழப்பிற்கும், அவர்களின் உடைமை நாசத்திற்கும் இன்றைய அரசாங்கத்தின் இனவெறிபிடித்த தலைவர்களே பொறுப்பேற்க வேண்டும். கேள்வி: ஏன் நீங்கள் இந்தத் தாக்குதலை நடத்தினீர்கள்? இதற்குப் பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. நான்கு தமிழ்ப் பெண்மணிகள் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டதற்கு எதிரான ஒரு பழி வாங்கல் நடவடிக்கைதான் இது என்று சிலர் கூறுகிறார்கள். நான் விசாரித்தவரையில், உங்களின் இராணுவப் பிரிவுத் தலைவரும் நெருங்கிய நண்பருமான சார்ல்ஸ் அன்ரனியின் மரணத்தில் வெற்றிப் பெருமிதம் கொண்டிருந்த சிங்கள இராணுவத்திற்குப் பாடம் படிப்பிப்பதற்காகத்தான் இத்தாக்குதல் நடந்தது என்று தோன்றுகிறது. அதாவது விடுதலைப் புலிகள் இயக்கம் அதன் ஆற்றல் மிகுந்த தலைவர்களில் ஒருவரை இழந்துவிட்ட பிறகும்கூட சிங்கள இராணுவத்தை எதிர்கொள்ளக்கூடிய வலிமை கொண்டிருக்கிறது என்பதை நீங்கள் நிரூபிக்க முயன்றிருக்கிறீர்கள் என்று நான் கருதுகிறேன். இந்தக் கருத்து சரியா? அல்லது இதை விடவும் கூடுதல் காரணங்கள் உண்டா? பதில்: சார்ல்ஸ் அன்ரனி பற்றியும் இத்தாக்குதல் பற்றியும் நீங்கள் சொல்வதில் ஓரளவு உண்மை இருக்கத்தான் செய்கிறது. இத்தாக்குதல் ஓரளவிற்குப் பதிலடிதான்; சிங்கள இராணுவத்திற்குத் தண்டனை தான். இருப்பினும் எங்களைப் பொறுத்தவரை சார்ல்ஸ் போன்ற உன்னத புரட்சிவாதியின், விடுதலை வீரனின் உயிருக்குப் பதின்மூன்று இராணுவத்தினரின் உயிர்கள் ஒருபோதும் ஈடாகாது. வேறொரு வகையில், எதிரியை நோக்கித் தொடுக்கப்பட்டிருக்கும் எமது கெரில்லாப் போர்முறையின் ஒரு பகுதிதான் இத்தாக்குதலாகும். கேள்வி: வட்டமேசை மாநாடு எந்தவித நிரந்தரமான தீர்வையாவது உருவாக்கும் என்று நீங்கள் நம்புகிறீர்களா? பதில்: தமிழர்களின் பிரச்சினைகளுக்கு வட்டமேசை மாநாடு எந்தவித நிரந்தரத் தீர்வையும் தராது என்பது என் கருத்து. கடந்தகால அரசியல் அனுபவத்தின் அடிப்படையிலேயே இம்முடிவிற்கு வந்திருக்கிறோம். சிங்களத் தலைவர்கள் ஒருபோதும் தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காண எந்தவித நேர்மையான முயற்சியும் மேற்கொண்டதில்லை. இப்போதைய பேச்சு வார்த்தைகளுக்கும் இந்தக்கதி தான் நேரும். முக்கியமான சகல சிங்களக் கட்சிகளும் பௌத்த அமைப்புகளும் தமிழர்களுக்குப் பிரதேச சுயாட்சியை எந்த வடிவத்திலும் எந்த அளவிலும் தரத் தயாராக இல்லை. சிறு சலுகைகள் வழங்கப்படுவதைக்கூட அவர்கள் எதிர்க்கிறார்கள். இம்மாநாட்டிலிருந்து உருப்படியாக எதுவும் கிடைக்காது. கேள்வி: தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர்கள் விடுதலைப் போராட்டத்தைப் பின்னுக்குத் தள்ளுகிறார்கள் என்று நீங்கள் கருதுகிறீர்களா? ஏன்? அவர்களைத் துரோகிகள் என நினைக்கிறீர்களா? பதில்: தமிழர் விடுதலைக் கூட்டணியின் சந்தர்ப்பவாத அரசியலானது விடுதலைப் போராட்டத்தை நிச்சயமாகப் பின்னுக்குத் தள்ளத்தான் செய்கிறது. இப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல திட்டவட்டமான நடவடிக்கைகள் எதனையும் அவர்கள் ஒருபோதும் எடுத்ததில்லை. மாறாக, அவர்கள் பொய்யான நம்பிக்கைகளைத் தருகிறார்கள்; பிரமைகளை ஏற்படுத்துகிறார்கள்; எமது மக்களைத் தொடர்ந்து அடிமைத்தனத்திலேயே வைத்திருக்க முனைகிறார்கள். அவர்கள் தங்களது சுயநல அபிலாசைகளை அடையவே அரசியலில் நுழைந்தார்கள். ஒடுக்கப்பட்ட மக்களை விடுதலை செய்வதற்கான உண்மையான நோக்கம் எதனையும் அவர்கள் ஒருபோதும் கொண்டிருக்கவில்லை. அத்தோடு, எந்தவிதமான உருப்படியான அரசியல் வேலைத் திட்டத்தையும் அவர்கள் முன்வைக்கவில்லை. இந்த விடுதலைப் போராட்டச் சூறாவளியில் மாட்டிக்கொள் வார்கள் என்று, அவர்கள் ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை. புரட்சியின் ஜுவாலை தமிழீழம் முழுவதும் வேகமாகப் பரவிக்கொண்டிருக்கிறது. இதை அணைக்க அவர்கள் தங்களால் ஆனமட்டும் முயன்று பார்க்கிறார்கள். இந்த அர்த்தத்தில் அவர்களைத் துரோகிகள் என வர்ணிக்கலாம். கேள்வி: தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர்கள் தமது சொந்த வீடுகளுக்குத் திரும்பப் பயப்படுகிறார்கள் என்பதற்குக் காரணம் சிங்களவர்கள் அல்ல, புலிகள்தான் என்கிறார்களே! இது உண்மையா? பதில்: அவர்கள் பயப்படுவது புலிகளுக்கல்ல. சுதந்திரத் தமிழீழம் பெற்றுத் தருவார்கள் என்ற நம்பிக்கையில் அவர்களுக்கு வாக்களித்த மக்களின் கோபா வேசத்துக்குத்தான் அவர்கள் பயப்படுகிறார்கள். கேள்வி: இந்தியாவின் நல்லெண்ண முயற்சிகள் உருப்படியான தீர்வு எதையும் தருமா? பதில்: இந்தியாவின் நல்லெண்ண முயற்சிகள் எம் மக்களுக்கும் ஆக்கபூர்வமான நம்பிக்கையைத் தந்திருக்கின்றன. ஆனால், சிங்கள இனவெறி அரசு தமிழர்களின் பிரச்சினையைத் தீர்க்க இந்த உதவியைப் பயன்படுத்திக்கொள்ளும் என, நான் நினைக்கவில்லை. கேள்வி: இந்தமாதிரி நிலைமையில், தமிழர்களுக்கு உதவ இந்தியா செய்யக்கூடிய மிகச் சரியான காரியம் எதுவாக இருக்க வேண்டும்? பதில்: எம் மக்களின் நியாயமான, நேரிய கோரிக்கைகளை இந்திய அரசு அங்கீகரித்து, சுயநிர்ணயத்திற்கான எங்கள் உரிமையினை ஏற்க வேண்டும். கேள்வி: இந்தியாவின் இராணுவம் இதில் தலையிட வேண்டுமென்று நீங்கள் நினைக்கிறீர்களா? பதில்: எமது சுதந்திரத்தை நாமே போராடி வென்றெடுக்கும் மனோதிடமும், நம்பிக்கையும், உறுதிப்பாடும் எங்களிடம் உண்டு. நாமே போராடி எம்மை விடுவித்துக்கொள்ள வேண்டும். எனினும் எங்களுக்கு இந்தியாவின் தார்மீக ஆதரவும் அனுதாபமும் அவசியமாகின்றது. கேள்வி: ஜனாதிபதி ஜெயவர்த்தனா பற்றிய உங்களின் தனிப்பட்ட மதிப்பீடு என்ன? பதில்: ஜெயவர்த்தனா ஓர் உண்மையான பௌத்தராக இருப்பாராயின், நான் ஆயுதம் ஏந்தியிருக்க நேர்ந்திராது. கேள்வி: இந்தப் பேச்சுவார்த்தைகளை ஜெயவர்த்தனா நடத்துவதன் நோக்கம் என்னவென்று நினைக்கிறீர்கள்? காலங் கடத்தப் பார்க்கிறாரா? அப்படியானால் எதற்கு? பதில்: இந்தச் சமாதானப் பேச்சுவார்த்தைகளை ஜெயவர்த்தனா நடத்துவதற்குப் பல காரணங்கள் உண்டு. முதலில், இந்தியர்களின் கோபத்தைத் தணிப்பது. இரண்டாவது, இனக் கலவரங்கள் இலங்கையின் பெயருக்கு ஏற்படுத்திய பெரும் களங்கத்தை நீக்குவது. மூன்றாவதாக, நிதியுதவி தரும் மேற்கத்தைய ஸ்தாபனங்களிலிருந்து உதவி பெறுவது; கால அவகாசம் பெற்று சிங்கள இராணுவ இயந்திரத்தைப் பலப்படுத்துவது. கேள்வி: தன்னுடைய அமைச்சரவையில் இருக்கும் தீவிரவாதிகளின் பிடிக்குள், ஜனாதிபதி ஜெயவர்த்தனா சிக்கிக்கொண்டிருக்கிறாரா? அல்லது அவர் தன்னிச்சையாகவே இயங்குகிறாரா? அல்லது பௌத்த குருமார்களால் நெருக்கப்படுகிறாரா? பதில்: ஜெயவர்த்தனா சுயமாகத்தான் இயங்குகிறார். அவருக்கு சர்வ அதிகாரங்களுமுண்டு. அமைச்சரவையின் தீவிரவாதிகளும் பௌத்த குருமார்களும் அவருக்கு உறுதுணையாக இருக்கிறார்கள். கேள்வி: சிறீலங்காவில் பௌத்த குருமார்கள் என்ன பங்கு வகிக்கிறார்கள்? பதில்: சிறீலங்காவின் அரசியற் போக்குகளை நிர்ணயிப்பதில் பௌத்த குருமார்களுக்கு மிக முக்கியமான பங்குண்டு. சிங்கள மக்கள் மத்தியில் தமிழருக்கு எதிரான இனவெறியைத் தூண்டி விட்டதில் அவர்கள் மிக முக்கிய பங்கு வகித்திருக்கிறார்கள். கேள்வி: சிறீலங்காவை தனிச்சிங்கள பௌத்த நாடாக மாற்றும் முயற்சியில், பௌத்த குருமார்கள் கணிசமான வெற்றி பெற்றிருக்கிறார்கள் என்று நினைக்கிறீர்களா? பதில்: சிறீலங்கா ஏற்கெனவே ஒரு தனிச் சிங்கள பௌத்த நாடுதான். இதில் பௌத்த பிக்குகளுக்குப் பெரும் பங்குண்டு. கேள்வி: இது பௌத்த குருமார்களின் இன வெறியின் விளைவா? அல்லது கிறிஸ்தவ குருமார்கள் தமிழர்களுடன் ஒன்றுபட்டதன் விளைவா? பதில்: இந்த இனவெறி அரசை ஸ்திரப்படுத்துவதில் பௌத்த குருமார்களுக்கு முக்கியமான பங்கு உண்டு. தமிழ் கிறிஸ்தவ பாதிரிமார்கள் தமிழர் பிரச்சினைக்கு அனுதாபம் காட்டுகின்றனர். ஆனால், சிங்கள கிறிஸ்தவப் பாதிரிமார்கள் சிங்களப் பேரினவாத வெறுப்புணர்வை வெளிப்படுத்தித் தமிழர்களின் கோரிக்கைகளை எதிர்க்கின்றனர். கேள்வி: உலக விடுதலை இயக்கங்களுடன் உங்களுக்குத் தொடர்புகள் உண்டா? எந்த அமைப்புகள் உங்களுக்குப் பயிற்சியும், ஆயுத உபகரணங்களும் தந்து உதவுகின்றன? பதில்: உலகின் ஏனைய விடுதலை இயக்கங்களுடன் எங்களுக்குத் தொடர்புகள் உண்டு. உங்களின் இரண்டாவது கேள்விக்குப் பதிலளிக்க நான் விரும்பவில்லை. கேள்வி: உங்களின் இந்தப் போராட்டத்திற்கு எந்த நாடு மிகவும் அனுசரணையாக இருக்கிறது? பதில்: இதுபற்றி ஒன்றும் நான் சொல்ல விரும்பவில்லை. கேள்வி: உங்களின் சித்தாந்தக் கோட்பாடு என்ன ? பதில்: சனநாயக சோசலிசம். கேள்வி: எதிர்காலத்தில் தமிழர்கள் மீது தாக்குதல்களை எதிர்பார்க்கிறீர்களா? எந்தக் காரணத்தை முன்னிட்டு? பதில்: ஆம். நான் எதிர்பார்க்கிறேன். திருகோணமலையிலும் வவுனியாவிலும் பெரும் எண்ணிக்கையில் தமிழர்களைக் கொல்லுவதற்கான ஒரு நாசகாரத் திட்டத்தை இனவெறி பிடித்த பாசிச சக்திகள் உருவாகி வருகின்றன. தங்களுடைய உயிர்களையும் உடமைகளையும் பாதுகாக்கும் சக்தி வாய்ந்த தேசிய இராணுவத்துடன் சுதந்திரமான தமிழீழத் தேசம் உருவாக்கப்படும் வரை தமிழர்களுக்கு பாதுகாப்பு கிடையாது. கேள்வி: கெரில்லாக்களுக்கு எதிரான போர்முறையில் சிங்கள இராணுவத்திற்கு இஸ்ரேலியர்கள் பயிற்சி தருகின்றனர் என்பது உண்மையா? பதில்: இதுவரை இலங்கையில் இஸ்ரேலிய இராணுவ நிபுணர்கள் இருப்பதைப் பற்றி நம்பத்தகுந்த செய்திகள் எதுவும் எங்களுக்குக் கிடைக்கவில்லை. இப்படிப்பட்ட செய்திகள் உண்மையாக இருந்தாலும் நான் ஆச்சரியப்படமாட்டேன். சிறீலங்கா அமெரிக்க ஏகாதிபத்தியத்துக்கும் அதன் கூலிகளுக்குமான ஒரு தளமாக விரைவாக மாறிக் கொண்டு வருகிறது. பயிற்சி தருபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களின் நிபுணத்துவம் எத்தகையதாக இருந்தாலும், விடுதலைப் புலிகளின் மனோ திடத்தையும், உறுதியையும் அழித்துவிட சிங்கள இராணுவத்தால் முடியாது. மகத்தான தார்மீக வலிமையும், தியாக உணர்வும், உன்னத இலட்சியப்பற்றும் எங்களுக்கு உண்டு. கேள்வி: அமெரிக்காவிலிருந்து சிறீலங்காவிற்குப் பெருமளவில் ஆயுதங்களும், உபகரணங்களும் வந்து குவிவது பற்றி உங்கள் கருத்து என்ன ? பதில்: இந்த ஆயுதக் குவிப்பு தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு மட்டுமல்ல, இந்தியாவின் பாதுகாப்பிற்கும் ஆபத்து விளைவிக்கக் கூடியது. சிறீலங்கா இராணுவத்திற்கு உதவிசெய்து தமிழீழ சுதந்திரப் போராட்டத்தை நசுக்குவது மட்டும் அமெரிக்காவின் நோக்கமல்ல என்பது உங்களுக்கத் தெரிந்ததே. திருகோணமலையில் ஒரு கடற்படைத் தளத்தை அமைத்துக் கொள்வது அமெரிக்க ஏகாதிப்பத்தியத்தின் கபட நோக்கம். இது இந்து சமுத்திரப் பகுதியை யுத்தப் பிராந்தியமாக மாற்றுவதுடன் இப்பிரதேசத்தில் யுத்த நெருக்கடியை உண்டுபண்ணும். கேள்வி: எப்படியோ ஒருகாலம் தமிழீழம் கைகூடிவிட்டால் அது எவ் வகையான நாடாக அமையுமென நீங்கள் நினைக்கிறீர்கள்? பதில்: தமிழீழம் ஒரு சோசலிச அரசாக அமையப் பெறும். சோசலிசம் என்பதன் மூலம் சமத்துவமான சமூக அமைப்பை நான் கருதுகிறேன். இதில் மனித சுதந்திரத்திற்கும், தனிநபர் உரிமைகளுக்கும் உத்தரவாதமுண்டு. எல்லாவித ஒடுக்குமுறையும் சுரண்டலும் ஒழிக்கப்பட்ட மக்களின் உண்மையான ஜனநாயகமாக அது திகழும். தமிழ் மக்கள் தங்களுடைய பொருளாதாரத்தைப் பேணி வளர்த்து தமது கலாசாரத்தை மேம்பாடு செய்யும் வகையில் அவர்களுக்கு அதிகபட்ச வாய்ப்புகள் கிடைக்கின்ற ஒரு சுதந்திரச் சமூகமாகத் தமிழீழம் அமையும். இந்தச் சுதந்திரத் தமிழீழம் நடுநிலை நாடாக இருப்பதுடன் அணிசேராக் கொள்கையைக் கடைபிடிக்கும். அத்தோடு இந்தியாவோடு நேச உறவு கொண்டு அதன் பிராந்தியக் கொள்கைகளை, குறிப்பாக அந்துமகா சமுத்திரத்தை ஒரு சமாதானப் பிராந்தியமாக்கும் வெளிநாட்டுக் கொள்கையைக் கெளரவிக்கும். கேள்வி: உங்கள் கணிப்பில் தமிழீழத்தை எப்போது அடைவீர்கள்? பதில்: விடுதலைப் போராட்டத்திற்கு காலவரையறையோ அல்லது ஒரு பூர்வாங்கத் திட்டமோ இருக்க முடியாது. தமிழீழத்திலும் உலக அரங்கிலும் உருவாகும் நிலைமைகளைப் பொறுத்து இது அமையும். நன்றி: எனது மக்களின் விடுதலைக்காக நூல். Share this: Twitter Facebook Like this: Like Loading... Related This entry was posted in ஈழமறவர், ஈழம், தமிழர், பிரபாகரன் and tagged ஈழமறவர், ஈழம், தமிழர், பிரபாகரன். புலிகள் தவறிழைக்கவில்லையா ? #ஜெகத்கஸ்பர் #JegathGaspar #ஈழமறவர் #பிரபாகரன் #ஈழம் #தமிழர் #விடுதலைப்புலிகள் #Prabhakaran #genocide #Tamil #Eelam #TamilGenocide #Mullivaikkal #ltte மேதகு பிரபாகரன் வளர்த்த வீரத் தமிழச்சிகள் ! #ஈழமறவர் #பிரபாகரன் #ஈழம் #தமிழர் #விடுதலைப்புலிகள் #Prabhakaran #genocide #Tamil #Eelam #TamilGenocide #Mullivaikkal #ltte சிந்தனைகள் விம்பங்கள் posts ஈழத்தில் நடைபெற்ற மாவீரர்நாள் நிகழ்ச்சிகளின் தொகுப்பு -2022 | Maveerar Naal 2022 பிரபாகரம் – தமிழின தலைமை -Prabhakaram விடுதலைத் தீப்பொறி பாகம் – முழுநீளக் காணொளிகள் பிரபாகரனியம் பிறந்த வரலாறு ! தமிழ்த்தேசியத்தலைவர் ஆருயிர் அண்ணன் மேதகு வே.பிரபாகரன் அவர்களுக்கு அன்புத்தம்பியின் பிறந்த நாள் வாழ்த்துகள்! – சீமான் Top Posts & Pages Leader V Prabakaran's Heros day speech 2008 English தேசியத் தலைவர் வே.பிரபாகரன் மாவீரர் நாள் ஒளிப்படங்கள் /Leader V.Prabakaran Maaveerar day Pictures தலைவருக்கு பிறந்தநாள் வாழ்த்து -உலைக்களம் பிரபாகரன், ஈழத்தலைவர் மட்டுமல்ல! தமிழ் ஞாலத்தலைவருமாவார்! The Prabakaran leader of tamils Phenomenon Part 6 தலைவர் பிரபாகரனின் சிந்தனையிலிருந்து அடேல் பாலசிங்கம் பார்வையில் திரு.பிரபாகரன் eelamview freedom struggle genocide srilanka Maaveerar day Prabhakaran tamil eelam Uncategorized இனப் படுகொலை ஈழமறவர் ஈழம் உலைக்களம் கரும்புலிகள் காணொளிகள் சுத்துமாத்துக்கள் தமிழர் தமிழீழ கட்டமைப்புகள் தமிழீழ படையணி தமிழ்த்தேசியம் தலைவரின் சிந்தனைகள் தலைவர் பிரபாகரன் தொடர் பாடல்கள் பிரபாகரன் பிரபாகரன் அந்தாதி மாவீரர் நாள் மாவீரர் நாள் உரைகள் முள்ளிவாய்க்கால் விடுதலை தீப்பொறி விடுதலைப்பேரொளி வீரவணக்கம் வீரவரலாறு Blog Stats 259,609 hits பதிவுகள் பதிவுகள் Select Month November 2022 November 2021 October 2021 August 2021 July 2021 June 2021 May 2021 April 2021 December 2020 November 2020 October 2020 August 2020 July 2020 June 2020 May 2020 April 2020 March 2020 February 2020 January 2020 December 2019 November 2019 October 2019 August 2019 May 2019 April 2019 March 2019 February 2019 January 2019 December 2018 November 2018 July 2018 June 2018 May 2018 March 2018 February 2018 January 2018 May 2017 March 2017 February 2017 December 2016 November 2016 September 2016 May 2016 April 2016 March 2016 February 2016 January 2016 November 2015 October 2015 September 2015 August 2015 July 2015 May 2015 April 2015 February 2015 January 2015 December 2014 November 2014 May 2014 November 2013 October 2013 September 2013 August 2013 July 2013 May 2013 February 2013 January 2013 December 2012 November 2012 October 2012 September 2012 August 2012 July 2012 May 2012 April 2012 March 2012 February 2012 January 2012 December 2011 November 2011 October 2011 September 2011 August 2011 February 2011 January 2011 December 2010 November 2010 September 2010 August 2010 July 2010 June 2010 May 2010 April 2010 March 2010 February 2010 January 2010 December 2009 November 2009 October 2009 September 2009 August 2009 July 2009 June 2009 April 2009 March 2009 January 2009 December 2008 November 2008 September 2008 August 2008 தேடுக Search for: Eelavarkural கப்டன் வாணன் ! #வீரவணக்கம் #ஈழமறவர் #ஈழம் #மாவீரர்கள் #இனப்படுகொலை #ltte #Maaveerar #Tamil #Eelam எம்.ஜி. இராமச்சந்திரன் நினைவு நாள், லெப்.கேணல் அப்பையா #வீரவணக்கம் #ஈழமறவர் #ஈழம் #மாவீரர்கள் #இனப்படுகொலை #ltte #Maaveerar #Tamil #Eelam தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் நினைவில் ! #தேசத்தின்குரல் #அன்ரன்பாலசிங்கம் #ஈழமறவர் #ஈழம் #தமிழர் #விடுதலைப்புலிகள் #Tamil #Eelam #ltte எல்லாக் காட்டிலேயும் சிங்கம்தான் ராஜா, எங்கள் காட்டில் புலிதான் ராஜா ! #தேசத்தின்குரல் #அன்ரன்பாலசிங்கம் #ஈழமறவர் #ஈழம் #தமிழர் #விடுதலைப்புலிகள் #AntonBalasingam #Tamil #Eelam #ltte மேதகு பிரபாகரன் வளர்த்த வீரத் தமிழச்சிகள் ! #ஈழமறவர் #பிரபாகரன் #ஈழம் #தமிழர் #விடுதலைப்புலிகள் #Prabhakaran #genocide #Tamil #Eelam #TamilGenocide #Mullivaikkal #ltte Eelamgallery Mullivaikal :Tamil genocide images 19 /வன்னிப்படுகொலை படங்கள் 19 ???????????????????????????????????? Mullivaikal :Tamil genocide images 18 /வன்னிப்படுகொலை படங்கள் 18 Mullivaikal :Tamil genocide images 17 /வன்னிப்படுகொலை படங்கள் 17 Eelamview மாவீரர் துயிலுமில்லப் படிமங்கள் | Maveerar Thuyilumillam images வல்வை நலன்புரிச் சங்கம், வல்வை புளூஸ் கண்டன அறிக்கை ! #ஈழம் #தமிழர் #சுத்துமாத்துக்கள் #இனப்படுகொலை தளபதி ஈழப்பிரியன் , கப்டன் றோய் உட்பட்ட #மாவீரர்கள் #வீரவணக்கம் #ஈழமறவர் #ஈழம் #தமிழர் #விடுதலைப்புலிகள் #Maaveerar #ltte #Tamil #Eelam
மேலும் அந்நாளில் சத்தியம் மட்டுமே கனமுடையதாயிருக்கும். எவர்களுடைய நன்மைகளின் எடை கனமாக இருக்குமோ அவர்கள்தாம் வெற்றியாளர்கள். மேலும், எவர்களுடைய நன்மைகளின் எடை இலேசாக இருக்குமோ அவர்கள்தாம் தங்களைத் தாங்களே இழப்பிற்குள்ளாக்கிக் கொண்டவர்கள். காரணம், அவர்கள் நம்முடைய வசனங்களுடன் அக்கிரமமாக நடந்து கொண்டிருந்தார்கள்! நாம், பூமியில் உங்களை அனைத்து அதிகாரங்களுடன் வாழச் செய்தோம். மேலும், அங்கே உங்களுக்கு வாழ்க்கைச் சாதனங்களையும் அமைத்துத் தந்தோம். ஆயினும், நீங்கள் மிகக் குறைவாகவே நன்றி செலுத்துகின்றீர்கள். மனிதர்(களின் நிலை எவ்வாறு உள்ளதெனில் அவர்)களுக்குத் துன்பம் ஏற்பட்ட பின் நாம் அவர்களுக்கு அருட் கொடை(யின் சுவை)யை சுவைக்கச் செய்தால், உடனே அவர்கள் நம் சான்றுகளுக்கு எதிராக சூழ்ச்சி செய்யத் தொடங்கி விடுகின்றார்கள். நீர் கூறுவீராக: “அல்லாஹ் சூழ்ச்சிகளை (முறியடிக்கச்) செய்வதில் மிக விரைவானவன். அவனுடைய வானவர்கள் நீங்கள் மேற்கொள்ளும் சூழ்ச்சிகளை எழுதிக் கொண்டிருக்கின்றார்கள்.” தரையிலும், கடலிலும் உங்களை இயங்கச் செய்பவன் அவனே! பிறகு, நீங்கள் கப்பல்களில் ஏறி, சாதகமாக வீசும் காற்றோடு மகிழ்ச்சிபூர்வமாக பயணம் செய்து கொண்டிருக்கும்போது திடீரென்று கடுமையான எதிர்க்காற்று வீசுகிறது. மேலும், எல்லாப் பக்கங்களிலிருந்தும் அலைகள் தாக்குகின்றன. அப்பொழுது தாம் கடும் பிரளயத்தால் சூழப்பட்டுள்ளதாகப் பயணிகள் எண்ணுகிறார்கள். அந்நேரத்தில் அவர்கள் கீழ்ப்படிதலை (தீனை) அல்லாஹ்வுக்கு மட்டுமே உரித்தாக்கி, “(இறைவா!) இத்துன்பத்திலிருந்து நீ எங்களைக் காப்பாற்றினால் திண்ணமாக நாங்கள் நன்றியுடையவர்களாய் இருப்போம்” என்று அவனிடம் இறைஞ்சுகின்றார்கள். நன்மையும் தீமையும் சமமாகிவிடாது. (ஆதலால் நபியே! தீமையை) நீர் நன்மையைக் கொண்டே தடுத்துக் கொள்ளும். அவ்வாறாயின், உம்முடைய கொடிய விரோதியை அதே சமயத்தில் உம்முடைய மெய்யான, மிக்க நெருங்கிய சினேகிதனைப்போல் காண்பீர். பொறுமையுடையோர்களைத் தவிர மற்றெவரும் இதனை அடைய மாட்டார்கள். அன்றி பெரும் பாக்கியம் உடையவர்களைத் தவிர மற்றெவரும் இதனை அடையமாட்டார்கள். (அல்குர்ஆன் 41:34,35) ஒரு தீமையை எப்போதும் தீமையால் எதிர்கொண்டால் மனித மனங்கள் குரோதங்களுக்கும், பகைமைக்கும் ஆளாகிவிடும். அதே தீமையை நன்மையால் எதிர்கொண்டால் கோப ஜுவாலைகள் அணைந்து, மனம் கொதிப்படைவதிலிருந்து அமைதியாகி, குரோதமெனும் அழுக்குகளிலிருந்து தூய்மையாகிவிடும். அதன்மூலம் கொடும் விரோதிகளான இருவர் ஒருவரையொருவர் நேசிக்கும் நண்பர்களாக மாறிவிடுவார்கள். இது தீமைகளைத் தடுத்துக்கொள்ள மிக அழகிய வழியாகும். ஆனால் இப்பண்பு பெரும் பாக்கியசாலிக்கே சாத்தியமாகும். அதையே அல்குர்ஆன் சுட்டிக் காட்டுகிறது. இது இஸ்லாமிய சமுதாயத்தில் ஒரு முஃமினிடம் அமைந்திருக்க வேண்டிய பண்பாகும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் முஃமின் தனது கோப உணர்வுகளைக் கட்டுப்படுத்தி, அழகிய முறையில் மறந்து, மன்னித்துவிட வேண்டும். …நீர் கண்ணியமான முறையில் புறக்கணித்து வாரும். (அல்குர்அன் 15:85) இந்த மனிதநேயப் பண்பை வலியுறுத்தி அது முஸ்லிம்களின் இதயத்தில் குடிகொள்ள வேண்டுமெனக்கூறும் எராளமான வசனங்கள் திருமறையில் காணக்கிடைக்கின்றன. முஸ்லிம்களின் வழிகாட்டியும் தலைவருமான நபி (ஸல்) அவர்களும் இப்பண்புகளைக் கைக்கொண்டு பிறரையும் தூண்டினார்கள். அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள் கூறினார்கள்: ‘நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் பாதையில் போரிடும்போதே தவிர (தனிப்பட்ட முறையில்) தங்கள் கரத்தால் எவரையும் அடித்ததில்லை. எந்தவொரு பெண்ணையும் ஊழியரையும் அடித்ததேயில்லை. அவர்களுக்கு எதேனும் துன்பம் விளைவித்ததற்காக எவரையும் பழிவாங்கியதில்லை. அல்லாஹ்வின் கட்டளைகள் தகர்க்கப்படும் சந்தர்ப்பங்களில் மட்டும் அல்லாஹ்வுக்காக பழி வாங்கியுள்ளார்கள்’. (ஸஹீஹ் முஸ்லிம்) நபி (ஸல்) அவர்கள் கீழ்காணும் அல்லாஹ்வின் கட்டளைக்கு செவிசாய்த்தார்கள். நபியே! இந்த அறிவீனர்(களின் செயல்)களை நீர் மன்னித்துப் புறக்கணித்துவிட்டு (பொறுமையையும் கைகொண்டு, மற்றவர்கள்) நன்மையை (ச் செய்யும்படி) ஏவி வருவீராக! (அல்குர்ஆன் 7:199) ….. (நபியே! தீமையை) நீர் நன்மையைக் கொண்டே தடுத்துக் கொள்ளும்… (அல்குர்அன்: 41:34) மன்னித்தல் என்பது அகிலங்களைப் படைத்து பரிபாலிப்பவனின் தன்மையாகும். அதை மனிதர்களிடையேயும் விசாலப்படுத்த வேண்டும். அவர்கள் தீமையை தீமையால் எதிர்கொள்ளாமல் அறிவீனர்களை மன்னிப்பதன் மூலம் எதிர்கொள்ள வேண்டும். இவ்வாறு அழகிய முறையில் நடந்து கொள்வதையே அல்லாஹ் விரும்புகிறான். அனஸ் (ரழி) அவர்கள் கூறினார்கள்: நான் நபி (ஸல்) அவர்களோடு நடந்து சென்று கொண்டிருந்தேன். நபி (ஸல்) அவர்கள் ஒரம் தடித்த நஜ்ரானி போர்வை ஒன்றை அணிந்திருந்தார்கள். அதை ஒரு கிராமவாசி பிடித்துக்கொண்டு மிகக்கடுமையாக இழுத்தார். நான் நபி (ஸல்) அவர்களின் புஜத்தைப் பார்த்தேன். கடுமையாக இழுத்ததன் காரணத்தால் அதில் போர்வையின் ஒரத்தின் அடையாளம் பதிந்திருந்தது. பின்பு அந்த கிராமவாசி ‘முஹ்ம்மதே! உம்மிடமுள்ள அல்லாஹ்வின் செல்வத்திலிருந்து எனக்குக் கொடுக்க உத்தரவிடுங்கள்’ என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள் அவர் பக்கம் திரும்பி சிரித்தவர்களாக அவருக்கு சில அன்பளிப்புகளைக் கொடுக்க உத்தரவிட்டார்கள். (ஸஹீ{ஹல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்) நபி (ஸல்) அவர்களின் மன்னிக்கும் மாண்பு மிக அழமானதாகும். தனக்கு விஷம் கலந்த ஆட்டிறைச்சியைக் கொடுத்தனுப்பிய யூதப் பெண்ணையும் மன்னித்தார்கள். அதன் விபரமாவது: ஒரு யூதப்பெண் நபி (ஸல்) அவர்களுக்கு விஷம் கலந்து சமைக்கப்பட்ட ஆட்டிறைச்சியை அன்பளிப்பாக அனுப்பி வைத்தாள். அதை நபி (ஸல்) அவர்களும் சில நபித் தோழர்களும் சாப்பிடத் தொடங்கினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் தங்களது தோழர்களிடம் ‘அதை சாப்பிடாதீர்கள்; அதில் விஷம் கலக்கப்பட்டிருக்கிறது’ என்றார்கள். பிறகு அந்தப் பெண் நபி (ஸல்) அவர்களிடம் கொண்டு வரப்பட்டாள். அவளிடம் நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள் ‘நீ இவ்வாறு செய்யக் காரணமென்ன?’ அவள், ‘நீங்கள் அல்லாஹ்வின் தூதரா என்பதை அறிய விரும்பினேன். நீங்கள் நபியாக இருந்தால் அல்லாஹ் உங்களுக்கு அறிவித்துக் கொடுத்துவிடுவான்; விஷம் உங்களுக்குத் தீங்களிக்காது. நீங்கள் நபியாக இல்லையென்றால் உம்மிடமிருந்து நாங்கள் நிம்மதி அடைந்து விடுவோம்’ என்றாள். அப்போது நபித்தோழர்கள் ‘அவளை நாங்கள் கொன்றுவிடட்டுமா?’ என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் ‘வேண்டாம்’ என்று கூறி மன்னித்து விட்டார்கள். தெªஸ் என்ற கூட்டத்தினர் அல்லாஹ்வின் கட்டளைக்கு மாறு செய்து கொண்டிருந்தனர். அந்தக் குலத்தைச் சேர்ந்த துஃபைல் இப்னு அம்ரு (ரழி) நபி (ஸல்) அவர்களிடம், ‘தெªஸ் கூட்டத்தினர் அல்லாஹ்வுக்கு மாறு செய்து, சத்தியத்திற்குக் கட்டுப்பட மறுத்து விட்டனர். அவர்களுக்கு எதிராக அல்லாஹ்விடம் துஆ செய்யுங்கள்’ என வேண்டிக்கொண்டார்கள். உடனே நபி (ஸல்) அவர்கள் கிப்லாவை நோக்கி அமர்ந்தவர்களாக தனது திருக்கரத்தை உயர்த்தினார்கள். அங்கிருந்தவர்கள், ‘அந்த தெªஸ் கூட்டத்தினர் அழிந்து விட்டார்கள்’ என்று கூறினார்கள். எனினும் அல்லாஹ்வின் அடியார்கள் மீது கருணையும், பரிவும் கொண்ட காருண்ய நபி (ஸல்) அவர்கள் தமது உம்மத்தினர் அல்லாஹ்வின் தண்டனைக்கு இலக்காவதை விரும்பாமல், ‘யா அல்லாஹ்! தெªஸ் கூட்டத்தினருக்கு நேர்வழிகாட்டி என்னிடம் வரச்செய்வாயாக. யா அல்லாஹ்! தெªஸ் கூட்டத்தினருக்கு நேர்வழிகாட்டி என்னிடம் வரச்செய்வாயாக. யா அல்லாஹ்! தெªஸ் கூட்டத்தினருக்கு நேர்வழிகாட்டி என்னிடம் வரச்செய்வாயாக!’ என்று பிரார்த்தித்தார்கள். (ஸஹீ{ஹல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்) உறவை முறித்தல், புறக்கணித்தல், நேர்வழியைத் தடுத்தல் போன்ற இழி குணங்களை எதிர்கொள்ள நேர்ந்தால், அதை மன்னிப்பு, மற்றும் பெருந்தன்மையின் மூலம் எதிர்கொள்ள வேண்டுமென்ற சிந்தனையை முஸ்லிம்களின் இதயங்களில் நபி (ஸல்) அவர்கள் விதைத்தார்கள். மனிதர்கள் கடினத்தன்மைக்கு கட்டுப்படுவதைவிட மிக அதிகமாக அன்பிற்கு கட்டுப்படுவார்கள் என்பதை நபி (ஸல்) அவர்கள் விளங்கி இருந்தார்கள். எனவேதான் உக்பா இப்னு ஆமிர் (ரழி) நபி (ஸல்) அவர்களிடம், ‘அல்லாஹ்வின் தூதரே! நற்செயல்களில் மிகச் சிறப்பானதை எனக்கு அறிவித்துத் தாருங்கள்’ என வேண்டிக்கொண்டபோது, நபி (ஸல்) அவர்கள், ‘உக்பாவே! உம்மைத் துண்டிப்பவர்களுடன் சேர்ந்து வாழ்ந்து, உமக்குக் கொடுக்காதவர்களுக்குக் கொடுத்து வருவீராக! உமக்கு அநீதமிழைத்தவர்களைப் புறக்கணித்து விடுவீராக!’ என்று கூறினார்கள். மற்றொரு அறிவிப்பில், ‘உமக்கு அநீதமிழைப்பவரை மன்னித்து விடுவீராக!’ என்று வந்துள்ளது. (முஸ்னத் அஹ்மத்)
பிரிக்கப்படாத நாட்டுக்குள் தீர்வொன்றை வழங்காவிட்டால் தமிழர்கள் இலங்கையில் இரண்டாம் தரப் பிரஜைகளாக வாழத் தயாரில்லை. அவ்வாறான சூழ்நிலையில் தமிழர்களின் இறைமைக்கு புத்துயிரளித்து அதனை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் எம்.பி தெரிவித்தார். யுத்தம் காரணமாக 50 வீதமான தமிழர்கள் நாட்டைவிட்டு வெளியேறியுள்ளனர். தேசிய பிரச்சினைக்கு அரசியல் தீர்வை வழங்காது இராணுவ ரீதியில் அதனை அடக்குவதற்கு முயற்சிப்பதன் ஊடாக எஞ்சிய 50 வீத தமிழர்களையும் நாட்டைவிட்டு வெளியேறுமாறா? அரசாங்கம் கூறுகிறது என்றும் அவர் கேள்வியெழுப்பினார். இறுதி யுத்தத்தின் போது வன்னிப் பிரதேசத்தில் மூன்றரை இலட்சத்துக்கும் 4 இலட்சத்துக்கும் இடைப்பட்ட மக்கள் முடங்கிப்போயிருந்த நிலையில் அங்கு 60 ஆயிரம் முதல் 70 ஆயிரம் பேர் வரையிலேயே இருப்பதாக அரசாங்கம் கணிப்பிட்டிருந்தது. இது தொடர்பிலும், உயிரிழந்தவர்கள் தொடர்பிலும் ஏன் இதுவரை விசாரணைகள் நடத்தப்படவில்லையென்றும் அவர் கேள்வியெழுப்பினார். நிதியமைச்சுக்கான ஒதுக்கீடுகள் தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இந்தக் கேள்விகளை முன்வைத்தார். தொடர்ந்தும் உரையாற்றிய அவர், நாட்டின் எதிர்கால பொருளாதாரம் பல்வேறு விடயங்களில் தங்கியுள்ளது. ஒற்றுமை அதனை அடிப்படையாகக் கொண்ட பலம், உள்ளூரில் மற்றும் வெளிநாட்டில் பெற்றுக்கொள்ளும் அங்கீகாரம் என்பவற்றில் தங்கியுள்ளன. ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட பிரேரணைகளை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும். இலங்கையில் நடைபெற்ற யுத்தம் தொடர்பில் இரண்டு சர்வதேச விசாரணைகள் நடத்தப்பட்டுள்ளன. ஒன்று அப்போதைய ஐ.நா செயலாளர் நாயகம் பான்கீ மூனினால் நியமிக்கப்பட்ட சுயாதீன நிபுணர்களின் குழு மற்றையது ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் சொந்த விசாரணை. இந்த இரு விசாரணைகளிலும் போர் குற்றங்கள் மற்றும் மனித நேயத்துக்கு எதிரான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டிருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அரசாங்கம் எந்தவொரு உள்ளக விசாரணைகளையும் நடத்தவில்லை என்பதுடன், ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட பிரேரணையில் உள்ள விடயங்கள் சிலவற்றை நடைமுறைப்படுத்த முடியாதென்றும் கூறியுள்ளது. யுத்த காலத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் பற்றி பலரும் பல்வேறு கருத்துக்களை முன்வைத்துள்ளனர். இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் அப்போதைய ஆணையாளர் நவநீதம்பிள்ளை, வன்னிப் பிரதேசத்தில் குண்டுகள் வீசப்பட்டதுடன், வான்குண்டுகள், பல்குழல் பீரங்கித் தாக்குதல்கள், பீரங்கித் தாக்குதல்கள் என்பன மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார். அது மாத்திரமன்றி மூன்றரை இலட்சம் முதல் நான்கு இலட்சம்பேர் வரை முல்லைத்தீவுப் பிரதேசத்தில் இருந்தபோதும் அங்கு 60 ஆயிரம் முதல் 70 ஆயிரம் பேர் வரையில் இருப்பதாகக் கணிப்பிட்டே உணவு மற்றும் மருத்துவ உதவிகளை அரசாங்கம் அனுப்பியுள்ளது. அங்கு உணவு மற்றும் மருந்துப் பொருட்களுக்குத் தட்டுப்பாடு காணப்பட்டது. இறுதியுத்த நேரத்தில் முல்லைத்தீவிலிருந்த 4 இலட்சம் பேரில் 2 இலட்சத்து 90 ஆயிரம் பேர் பாதுகாப்புத் தரப்பினரிடம் சரணடைந்தால் எஞ்சியவர்களுக்கு என்ன நடந்தது? இது தொடர்பில் ஏன் இதுவரை எந்தவிதமான விசாரணைகளும் நடத்தப்படவில்லை? முல்லைத்தீவிலிருந்த மக்கள் ஷெல் தாக்குதல்களுக்கு மத்தியில் ஒரு முகாமிலிருந்து மற்றொரு முகாமுக்கு இடம்பெயர்ந்துகொண்டிருந்தனர். அங்கு ஐ.நா முகவர் அமைப்புக்களோ அல்லது சர்வதேச அரசசார்பற்ற நிறுவனங்களோ அங்கிருக்கவில்லை. இறுதி யுத்தத்தின்போது வன்னியிலிருந்த மக்களின் எண்ணிக்கையை அரசாங்கம் ஏன் குறைத்து மதிப்பிட்டது? என்றும் கேள்வியெழுப்பினார். இதேவேளை, புதிய அரசியலமைப்பை தயாரிப்பது தொடர்பான பிரேரணை பாராளுமன்றத்தில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து அரசியலமைப்பை தயாரிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டபோதும் இதனை எதிர்காலத்தில் எவ்வாறு முன்கொண்டு செல்வது என்பது அரசாங்கத்துக்குத் தெரியாமல் உள்ளது. 1988ஆம் ஆண்டிலிருந்து புதிய அரசியலமைப்பை தயாரிப்பது குறித்த முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன. மங்கள முனசிங்க அறிக்கை, சந்திரிகா காலத்தில் கொண்டுவரப்பட்ட அரசியலமைப்பு தீர்வு யோசனை, மஹிந்த ராஜபக்ஷவின் காலத்தில் நியமிக்கப்பட்ட சர்வகட்சிக் குழுவின் அறிக்கை என பல அறிக்கைகள் இருக்கின்றபோதும் அவற்றை அடிப்படையாகக் கொண்டு ஒரு முடிவுக்கு எம்மால் வரமுடியாமல் உள்ளது. அரசியலமைப்பு தயாரிக்கும் செயற்பாட்டை எவ்வாறு தொடர்ந்தும் முன்கொண்டு செல்வது என அரசாங்கத்துக்குத் தெரியாமல் உள்ளது. எப்படி முடிவெடுப்பது எனத் தெரியாமல் உள்ளது. பிரிக்கப்படாது ஒன்றிணைந்த நாட்டுக்குள் தீர்வொன்றைக் காண்பதற்குத் தயார் என அறிவித்து அதற்காக நாம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றோம். இவ்வாறான நிலையில் எமக்கு தீர்வொன்றை வழங்க நீங்கள் தயாரில்லை. தமிழர்கள் இரண்டாவது பிரஜைகளாக வாழ்வதற்கு விரும்பவில்லை. தேசிய பிரச்சினைக்குத் தீர்வு வழங்காது இரண்டாவது பிரஜைகளாக வாழ்வேண்டிய நிலை ஏற்பட்டால் தமிழர்களுக்கான இறைமையை புதுப்பித்து அதனை நடைமுறைப்படுத்துவதற்கு நாம் நடவடிக்கை எடுப்போம் என்றும் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
நாட்டில் தற்போது நிலவும் மழையுடனான வானிலை அடுத்த இரு நாட்களில் சற்று அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல் மற்றும் தென் மாகாணங்களிலும் புத்தளம் மாவட்டத்திலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. - Advertisement - நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. வடமேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.
செப்டம்பர் 19 ஆம் தேதியன்று இலண்டன் மாநகரில் இலங்கை அதிபர் ரணில்விக்கிரசிங்கேவைச் சந்தித்தார் லைகா நிறுவனர் சுபாஸ்கரன். அந்தச் சந்திப்பு பல்லாண்டுகளாச் சிறையில் வாடிக் கொண்டிருந்த தமிழ் அரசியல் கைதிகள் வாழ்வில் வெளிச்சத்தைக் கொடுத்துள்ளது. ஆம், அந்தச் சந்திப்பில் லைகா நிறுவனர் வைத்த கோரிக்கையை ஏற்று தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யும் உத்தரவைப் பிறப்பித்தார் ரணில். அதனால் தொடக்கத்தில் 8 தமிழ் அரசியல் கைதிகள் விடுதலையாகினார்கள். அதன் பின்னர் சில தினங்களுக்கு முன்னர் மேலும் 9 அரசியல் கைதிகள் விடுதலையாகியுள்ளார்கள். இவர்களில், முதலில் விடுதலையான 8 தமிழ் அரசியல் கைதிகள், நன்றாக வாழவேண்டும் என்று எண்ணிய சுபாஸ்கரன், அவர்களுக்குத் தலா ரூ 25 இலட்சத்தை வழங்கினார். நவம்பர் 3 ஆம் தேதி வியாழன் அன்று கொழும்பில் உள்ள தாஜ் சமுத்திரா நட்சத்திர விடுதியில் வைத்து, 8 அரசியல் கைதிகளுக்கும் தலா 25 இலட்சம் வழங்கினார் சுபாஸ்கரன். அதன்பின் இனி விடுதலையாகும் ஒவ்வொரு அரசியல் கைதிக்கும், தலா 25 இலட்சம் வழங்க உள்ளதாகவும் சுபாஸ்கரன் கூறியுள்ளார். அதன் மொத்த மதிப்பு சுமார் 20 கோடி ரூபாய் ஆகும். இந்நிகழ்வு நடந்த அன்றைய தினம், காசோலையைப் பிரித்துப் பார்த்த பல அரசியல் கைதிகள் அழுது விட்டார்கள். இப்படி எல்லாம் நடக்கும் என்று நாம் கனவிலும் நினைக்கவில்லை என்று தெரிவித்தார்கள். இவர்களில் சிலருக்கு 200 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி நவம்பர் 6 அன்று கொழும்பில் வைத்து இலங்கை அதிபர் ரணிலை சுபாஸ்கரன் மற்றும் பிரேம் சிவசாமி ஆகியோர் சந்தித்தார்கள். அப்போது மேலும் பல அரசியல் கைதிகளை விடுதலை செய்ய ரணில் ஒப்புதல் வழங்கியுள்ளார். ஒட்டு மொத்தமாக 81, அதாவது அனைத்துத் தமிழ் அரசியல் கைதிகளும் விடுதலையாக உள்ளனர் என்கிற மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது. இங்கிலாந்தில் பெரும் தொழிலதிபராக விளங்கும் அவரை இலங்கையில் முதலீடுகள் செய்யச் சொல்லிக் கேட்ட இலங்கை அரசுக்கு, முதலீடு தேவையா ? அப்படி என்றால் தமிழர்கள் தரப்பு சொல்வதைக் கேட்டாக வேண்டும் என்கிற திட்டவட்டமான செய்தியை சுபாஸ்கரன் கொடுத்துள்ளார். இதன்மூலம் பெரும் அரசியல் காய் நகர்த்தல் ஒன்றில் சுபாஸ்கரன் வெற்றி பெற்றுள்ளார். இதுமட்டுமின்றி, தொடர்ந்து இலங்கையில் தமிழர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த பல நல்ல திட்டங்களை மேற்கொள்ள இருக்கிறார்.இதனால் ஈழத் தமிழர்கள், அனைவரும் அவருக்குக் கண்ணீருடன் நன்றி தெரிவித்து வருகிறார்கள். அதன் உச்சமாக இலங்கை பாராளுமன்றத்தில் உரையாற்றிய செல்வம் அடைக்கலநாதன், அரசாங்கம் சின்னத்தனமாக தமிழ் கைதிகளுக்கு இரண்டு இலட்சம் கொடுத்துள்ளது. ஆனால், லைகா நிறுவனர் சுபாஸ்கரன் மிகப்பெரிய அளவில் உதவிகள் செய்துள்ளார். நம் நாட்டைச் சேர்ந்த ஒரு தமிழர் இங்கிலாந்திலும் இந்தியாவிலும் பெரும் தொழிலதிபராகத் திகழ்கிறார் என்பதில் நாம் பெருமை அடைகிறோம் என்று பேசியுள்ளார். பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின் நன்மை கடலின் பெரிது என்கிற வள்ளுவரின் வாக்கிற்கேற்ப நடந்து கொண்ட லைகா நிறுவனர் சுபாஸ்கரனின் செயலைப் பலரும் பாராட்டிவருகிறார்கள்.
உடலில் அயோடின் குறைபாடு காரணமாக தைராய்டு நோய் ஏற்படுகிறது. தைராய்டு நோய்க்கு பல்வேறு வழிகளில் சிகிச்சையளிக்கப்படுகிறது. தைராய்டு பிரச்சினை மோசமாக இருக்கும் நிலையில், உணவில் அதிக மீன் எண்ணெய்யைப் பயன்படுத்துங்கள். மீன் எண்ணெயில் ஒமேகா கொழுப்பு இருப்பதால் அது அதிக பயனை நல்குகிறது. ஆப்பிள் சீடர் வினிகரில் உயர் இரத்த அழுத்தத்தை குறைக்க உதவும் கார அமிலம் இருப்பதால் ஆப்பிள் வினிகரை சாப்பிட வேண்டும். தேனுடன் கலந்த இஞ்சி தேநீர் குடிப்பதால் தொண்டைக்கு இதம் அளிக்கிறது, அதோடு மிகுந்த நிம்மதி கிடைக்கும். இஞ்சியில் பொட்டாசியம், ஜின்க் போன்ற பொருட்கள் உள்ளன, இது தைராய்டு பிரச்சினையை குறைக்கிறது. பச்சை கொத்தமல்லி சட்னியை உணவில் கலந்து சாப்பிடுங்கள், இதனால் செரிமான அமைப்பு நன்றாக இருக்கும் மேலும் தைராய்டு பிரச்சினை இருக்காது. பெண்களுக்கு ஏற்படும் முக்கியமான பிரச்சனைகளில் ஒன்று தான் தைராய்டு. இந்த தைராய்டு பிரச்சனை உடலில் அயோடின் சத்து குறைவாக இருப்பதால் ஏற்படுகிறது. முடி உதிர்வு, மன உளைச்சல், முடி உதிர்வு, மாதவிடாய் பிரச்சினை ஆகியனவே தைராய்டு கோளாறின் முக்கிய அறிகுறிகளாகும். இதனால் பெண்கள் பல மருந்துகளையும், பல்வேறு சிகிச்சைகளையும் மேற்கொண்டு வருகிறது. ஆனால் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே தைராய்டு பிரச்சினையை குணப்படுத்தலாம். செய்முறை: முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் 1 டம்ளர் தண்ணீர் ஊற்றி, அது ஓரளவு சூடான பிறகு அதில் 2 தேக்கரண்டி அளவு கொத்தமல்லி விதைகளை சேர்த்து 15 நிமிடம் நன்கு கொதிக்கவிட வேண்டும். பிறகு அதை இறக்கி வடிகட்டி அதனுடன் 1 தேக்கரண்டி அளவு தேன் சேர்த்து குடிக்க வேண்டும். இதை தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் தைராய்டு பிரச்சனை சரியாகும்.
இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த், யோகிபாபு, மாளவிகா சர்மா, அம்ரிதா, ரைசா வில்சன், ஐஸ்வர்யா தத்தா, திவ்ய தர்ஷினி (dd), சம்யுக்தா, ரெடின் கிங்க்ஸ்லி என ஒரு பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கும் திரைப்படம் தான் காபி வித் காதல். காதலை வேறொரு பரிணாமத்திற்கு எடுத்துச் சென்று அதில் இருக்கும் சுவாரஸ்யத்தை இயக்குனர் சுந்தர் சி எப்படி விவரித்திருக்கிறார் என்பதை விமர்சனம் மூலம் பார்த்து விடலாம். கதைப்படி, ஸ்ரீகாந்த், ஜீவா, திவ்ய தர்ஷினி மற்றும் ஜெய் நால்வரும் உடன் பிறந்தவர்கள். இதில், ஸ்ரீகாந்திற்கு திருமணம் முடிந்து ஒரு பெண் குழந்தை உள்ளது. திவ்ய தர்ஷினிக்கு திருமணம் முடிந்து நிறைமாத கர்ப்பிணியாக இருக்கிறார்., ஜீவா மற்றும் ஜெய் இருவருக்கும் திருமணம் ஆகவில்லை. ஜீவா ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரும் ஐஸ்வர்யா தத்தாவும் மூன்று வருடங்கள் “லிவ்விங்” வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்கள். சமையல் கலை படித்துள்ள ஜெய்க்கு ஊட்டியில் பெரிய ரெஸ்டாரண்ட் துவக்க ஆசை. அம்ரிதா, ஜெய் இளம் வயதிலிருந்தே நண்பர்கள். அம்ரிதா ஜெய்யை ஒரு தலையாக காதலிக்கிறார். ஆனால், ஜெய்யோ அமிரிதாவுடன் நட்பு பாராட்டி வருகிறார். லிவ்விங்க் வாழ்க்கை வாழ்ந்து வந்த ஜீவாவை விட்டு பிரிகிறார் ஐஸ்வர்யா தத்தா.. அதே சமயத்தில், ஊட்டியில் தனது ரெஸ்டாரண்டை நடத்த எக்ஸ் மிலிட்டரி ஒருவரின் மகளான மாளவிகாவை திருமணம் செய்ய திட்டமிடுகிறார் ஜெய். ஜெய்யின் திட்டம் நிறைவேறியதா.? மாளவிகாவின் காதல் என்னவானது.? ஜீவாவின் வாழ்க்கை எப்படி திசை மாறியது.? இதற்கு நடுவே ஸ்ரீகாந்த் ஆடும் ’லீலை’ ஆட்டத்தின் முடிவு என்ன.? என்பதே படத்தின் மீதி கலகல கதை. நடிப்பில் அனைவரும் தனி முத்திரையே பதித்திருக்கிறார்கள். கதாபாத்திரங்களின் தேர்வு அனைத்தும் ‘நச்’.. கதைக்களம், கதை நகர்வு என ஒவ்வொன்றையும் சுவாரஸ்யமாக கொடுத்து ரசிக்க வைத்திருக்கிறார் இயக்குனர் சுந்தர் சி. எப்போதும் போல கலகல நடிப்பைக் கொடுத்து நம்மை ரசிக்க வைத்திருக்கிறார்கள் ஜீவாவும் ஜெய்யும். சின்ன சின்ன கதாபாத்திரத்தில் நடித்து வந்த டிடி’க்கு இப்படம் ஒரு திருப்பு முனையாக இருக்கும். கதையின் முக்கிய நகர்வாக டிடி இருக்கிறார். படத்தின் நாயகிகளான மாளவிகா சர்மா, அம்ரிதா, ரைசா வில்சன், ஐஸ்வர்யா தத்தா என அனைவரும் கதைக்கான இடத்தை நன்றாகவே நிரப்பியிருக்கிறார்கள். ரைசா ஒரு படி மேலே சென்று இப்படத்தில் பியானோ வாசித்துள்ளார். இடைக்கு பஞ்சமில்லா காட்சியை ஒவ்வொரு இடத்திலும் கொடுத்திருக்கிறார் இயக்குனர். கதை நம்மை சற்று சுழல விட்டாலும் கலகலப்புக்கு பஞ்சமில்லாமல் பார்த்துக் கொள்கிறார் இயக்குனர் சுந்தர் சி. யோகிபாபு & ரெடின் காமெடி காட்சிகள் ஒரு சில இடங்களில் மட்டுமே சிரிக்க வைத்திருப்பது சற்று வேதனை தான். கிருஷ்ணசாமியின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம். காட்சிகள் ஒவ்வொன்றையும் கலர் ஃபுல்லாக கொடுத்து கதையோடு பயணிக்க வைத்திருக்கிறார். யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் பாடல்கள் ஆட்டம் போட வைத்தாலும், பின்னணியின் முன்னணி கொடுக்காமல் சென்றது சற்று ஏமாற்றமே. கதையை தேடி வராதீர்கள், கலகலப்புக்கு நான் கேரண்டி என்ற தனது இயக்கத்தின் முத்திரையை இப்படத்திலும் கொடுத்திருக்கிறார் இயக்குனர் சுந்தர் சி. காபி வித் காதல் – பஞ்சமில்லா கலகலப்பு… Facebook Comments Tags 'Coffee With Kadhal' Coffee with kadhal movie review அம்ரிதா ஐஸ்வர்யா தத்தா காபி வித் காதல் - விமர்சனம் சம்யுக்தா திவ்ய தர்ஷினி (dd) மாளவிகா சர்மா யோகிபாபு ரெடின் கிங்க்ஸ்லி ரைசா வில்சன் ஜீவா ஜெய் ஸ்ரீகாந்த்
உத்தரப்பிரதேசத்தில் முன்னாள் காதலியை குடும்பத்தாரின் உதவியுடன் கொலை செய்து 6 பாங்களாக வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் லிவ் இன்னில் இருந்த ஷ்ரத்தா என்ற பெண்ணை அவரின் காதலர் அப்தாப் கழுத்தை நெரித்து கொலை செய்து, அவரது உடல் பாகங்களை துண்டு துண்டாக வெட்டிய சம்பவம் நாட்டையே உலுக்கி வருகிறது. இந்த நிலையில், உத்தரப்பிரதேச மாநிலம் அசம்கர் பகுதியில் உள்ள கிணற்றில் வெட்டப்பட்ட உடல் பாகங்கள் கிடப்பதாக சில தினங்களுக்கு முன் போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் கிணற்றில், அரை நிர்வாணமான, தலை இல்லாத உடலை மீட்டிருக்கிறது. மேலும், அந்த உடல் பாகத்தை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அதன் பிறகு, அந்த உடல் ஆராதனா (20) என்ற பெண்ணின் உடல் என்பது தெரியவந்தது. இந்த நிலையில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டது. அதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்திருக்கின்றன. இந்த சம்பவம் தொடர்பாக போலீஸ் அதிகாரி கூறுகையில், “ஆராதனா என்ற பெண்ணை அசம்கர் மாவட்டத்தில் உள்ள இஷாக்பூர் கிராமத்தில் வசித்து வந்த யாதவ் என்ற இளைஞர் காதலித்து வந்திருக்கிறார். இந்த நிலையில், கடந்த ஆண்டு இறுதியில் ஆராதனாவை அவருடைய குடும்பத்தினர் வேறொரு நபருக்கு திருமணம் நடத்தி வைத்திருக்கின்றனர். இதனால் ஆத்திரத்தில் இருந்த யாதவ், தன் பெற்றோர், உறவினர் சர்வேஷ் மற்றும் பிற குடும்ப உறுப்பினர்களின் உதவியுடன் ஆராதனாவை கொலை செய்ய திட்டமிட்டிருக்கிறார். திருமணத்துக்கு பிறகும் ஆராதனாவும், யாதவும் தொடர்பில் இருந்ததாகக் கூறப்படுகிறது. கடந்த 9-ம் தேதி யாதவ் ஆராதனாவை தன்னுடைய பைக்கில் கோயிலுக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். அதன் பிறகு ஆராதனாவை கரும்பு தோட்டத்துக்கு அழைத்துச் சென்று, அங்கு தன் உறவினரான சர்வேஷின் உதவியுடன், கழுத்தை நெரித்து கொலை செய்திருக்கிறார். பின்னர் இருவரும் ஆராதனாவின் உடலை 6 பகுதிகளாக வெட்டி பாலித்தீன் பையில் அடைத்து கிணற்றில் வீசியிருக்கிறார்கள். அதன்பிறகே ஊர் மக்களால் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. குற்றம்சாட்டப்பட்ட யாதவை ஆராதனாவின் தலைப் பகுதியை கண்டெடுக்க நேற்று அழைத்துச் சென்றபோது, அங்கே அவர் மறைத்து வைத்திருந்த நாட்டுத் துப்பாக்கியை எடுத்து எங்களை சுடத் தொடங்கினார். அவரிடமிருந்து தற்காத்துக்கொள்ள அவர் காலில் சுட வேண்டிய அவசியம் ஏற்பட்டுவிட்டது. இந்த வழக்கில் இதுவரை கூரிய முனைகள் கொண்ட ஆயுதம், நாட்டு கைத்துப்பாக்கி, தோட்டா ஆகியவை மீட்கப்பட்டுள்ளன. தலைமறைவாகியிருக்கும் சர்வேஷை தேடி வருகிறோம். விசாரணை நடந்து வருகிறது” எனக் கூறினார்.
#EV_கார்ல இருக்க பேட்டரியோட லைப் டைம் என்ன? அதோட சார்ஜிங் டைம் என்ன? சார்ஜிங் கட்டணம் என்ன? நம்ம #EV பேட்டரிய என்ன மாதிரி பராமரிப் செய்யனும்னு #EV_கார் கம்பெனிக சொல்றாங்க அதில் அதில் பொதுவாக இருக்கர்த பற்றி இந்த #திரட்ல பாப்போம்..🙏 ⚡️ #EV_கார் பயன்பாடு வருச வருசம் அதிகமாகிட்டே வருதாலும் பலருக்கு #WV பேட்டரியோட லைப் மற்றும் பேட்டரி மாற்றத்துடன் தொடர்புடைய செலவுகள் குறித்து சந்தேகங்கள பதிவு செய்யறாங்கனு #காக்ஸ்_ஆட்டோமோட்டிவ் நடத்திய கணக்கெடுப்பின்படி சொல்றாங்க..⚡️ கடந்த பத்து வருசத்துல #லித்தியம்_அயன் பேட்டரிகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறிப்பிடத்தக்கதாக உள்ளது. பேட்டரியோட லைப் டைம், பாதுகாப்பை அதிகரித்தது, பேட்டரியோட வெயிட், விலையை குறைத்ததுனு.⚡️ Read 28 tweets Related hashtags #EV_கார் #ARAI #ICE_காரை #ICAT #EV #காக்ஸ்_ஆட்டோமோட்டிவ் #EV_வாகனங்களை #ICE_கார் #லித்தியன்_அயன் #EV_கார்கள் #திரட்ல #லித்தியம்_அயன் #NABL #TNEB #BMS #Tata_Tigor #WV #EB #EV_கார #EV_காரையும் #EV_கார்ல Did Thread Reader help you today? Support us! We are indie developers! This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.
கடையில் விற்கும் மற்ற அழகு சாதனப் பொருட்களை வாங்கி பயன்படுத்துவதைக் காட்டிலும் இந்த இயற்கை மூலப்பொருளை பயன்படுத்தி உங்கள் அழகை மேம்படுத்துவது சருமத்திற்கு ஏற்றதாக கருதப்படுகிறது. இதனால் சருமத்திற்கு சிறந்த சிகிச்சை அளிக்க முடிகிறது. சருமத்தில் உண்டாகும் நிறமாற்றம் மற்றும் நிறமிழப்பை குறைக்கும் தன்மை ஜாதிக்காய்க்கு உண்டு என்பது இதன் அற்புத நன்மைகளில் ஒன்றாகும். சருமத்தில் உண்டாகும் கருந்திட்டுகள், நிறமிழப்பு, சூரிய ஒளியில் இருந்து வெளிப்படும் புறஊதா கதிர்களால் உண்டாகும் கட்டிகள் , ஹார்மோன் மாற்றம், வயது முதிர்வு, மருத்துகளால் உண்டாகும் பக்க விளைவுகள் மற்றும் இதர சரும பிரச்சினைகளுக்கு ஜாதிக்காய் மிகச் சிறந்த தீர்வைத் தருகிறது. ஜாதிக்காய் சருமத்தில் ஈரப்பதத்தைத் தக்க வைக்க உதவுகிறது. இதனால் சருமம் சோர்வடையாமல் தடுக்கிறது. மேலும் வயது முதிர்விற்கான அறிகுறிகளைக் குறைக்க உதவுகிறது. ஆர்கானிக் பால் அல்லது தேங்காய் பால் ஜாதிக்காய் தூள் இந்த இரண்டு மூலப்பொருட்களையும் ஒன்றாகக் கலந்து முகத்திற்கு தடவவும். பாலில் இருக்கும் லாக்டிக் அமிலம் சருமத்திற்கு மிருதுவான தன்மையை அளிக்க உதவுகிறது. உங்கள் சருமம் அழகாகவும் பொலிவாகும் மாறுகிறது. ஜாதிக்காயில் ஆன்டி ஆக்சிடென்ட் மற்றும் வயது முதிர்வைத் தடுக்கும் தன்மை உண்டு. மேலும் அணுக்களை சேதப்படுத்தும் கூறுகளுடன் இது போராட உதவுகிறது. எண்ணெய் சருமத்திற்கு ஜாதிக்காய் பேக் செய்ய தேவையான பொருட்கள்: ஜாதிக்காய் தூள், தேன். செய்முறை: இரண்டு மூலப்பொருட்களையும் ஒன்றாகக் கலந்து உங்கள் சருமத்தில் தடவவும். பத்து நிமிடங்கள் இந்தக் கலவை உங்கள் முகத்தில் இருக்கட்டும். தேன் மற்றும் ஜாதிக்காய் ஆகிய இரண்டிற்கும் கிருமி எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பதால் இது சருமத்தை அழுக்கு மற்றும் கட்டிகளில் இருந்து பாதுகாக்க உதவுகிறது.
அவர்கள் அனைவரும் சாலைப் பணியாளர்கள். தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகாவிலிருந்து சொந்த மண்ணையும், வீடுவாசலையும் விட்டு பிழைப்புத் தேடி மராட்டியத்தின் மும்பைப் பெருநகருக்கு விரட்டப்பட்டவர்கள். மும்பை நகரின் செல்வச் சீமான்களின் சொகுசுக் கார்கள் வழுக்கிச் செல்லும் நெடுஞ்சாலைகள் அமைப்பதுதான் அவர்களின் வேலை. ஆனால், அந்தச் சாலையிலேயே, அத்தகை சொகுசுக் கார்களில் ஒன்றாலேயே தாம் நசுக்கிக் கொல்லப்படுவோம் என்று கொஞ்சமும் எண்ணிப் பார்த்திருக்க மாட்டார்கள்! முன்னிரவில் கொதிக்கும் தாரோடு கலந்த கருங்கல் ""ஜல்லி''களோடு கைகால் வெந்து நெக்குறுகிப் போயிருந்தார்கள். அதன்பிறகு வாட்டி எடுக்கும் கடுங்குளிரில், வெட்டவெளியில் அதே சாலையோரத்தில் அடித்துப் போட்ட மனிதர்களாய் துவண்டு கிடந்தார்கள். அது மும்பை பெருநகரின் பாந்த்ரா பகுதி; கார்ட்டர் சாலை. அதிகாலை 3.45 மணி. பேய்கள்தாம் களிவெறியாட்டம் முடித்து உறங்கப் போகும் நேரம். திடீரென்று பாய்ந்து வந்த ""டொயோட்டோ கோரல்லா'' என்ற சொகுசுக்கார் அவர்கள் மீது ஏறி ஓடியது. ஐந்து வயதுச் சிறுவன், ஏழு வயதுச் சிறுமி, மூன்று பெண்கள், இரண்டு ஆண்களை நசுக்கிக் கொன்றது. மேலும் பதினான்கு பேரை சாவின் விளம்பிற்குத் தள்ளியது. காரை ஓட்டியவர் உட்பட காரிலிருந்த ஆறு பேரும் 18 முதல் 21 வயதேயாகியவர்கள், எல்லோரும் குடிபோதையில் மிதந்தார்கள். போதை இறங்கிவிட்டால் மேலும் ஏற்றிக் கொள்ள சீமைச் சாராயப் புட்டிகளும் காரில் கிடந்தன. அவர்கள் அனைவரும் மும்பையில் செல்வச் சீமான் வீட்டுக் குலக்கொழுந்துகள். பெற்றோர்களின் தொழில் நிர்வாகிகள் அல்லது மேட்டுக்குடிக் கல்லூரி மாணவர்கள். இந்தக் கொலைகாரர்கள் எல்லாம், மும்பையின் முதன்மையான நட்சத்திர விடுதியான தாஜ் ஓட்டலில், வயிறு முட்டக் குடித்தும், தின்றும், ஆட்டம் பாட்டம் என்று கும்மாளமிட்டு விட்டுத் திரும்பியிருக்கிறார்கள். இவர்கள் குடித்துக் கூத்தடித்துக் கொண்டிருந்த அந்த நள்ளிரவிலும், இந்தத் தொழிலாளர்கள் சாலை போட்டுக் கொண்டிருந்தார்கள். அதிகாலை இரண்டு மணிக்குத்தான் பணி முடித்துக் களைப்பாற்றத் தூங்கப் போனார்கள். இந்தக் கோரமான முடிவைச் சந்தித்தார்கள். இந்தக் களிவெறித் தாக்குதலில் இருந்து தப்பிப் பிழைத்த அவர்களின் உறவினர்கள் மொழி அறியாத அந்த இடத்தில் கதறி அழும் காட்சி நெஞ்சை அறுக்கும் துயரம்மிக்கதாகவே இருந்தது. அந்த ஏழைஎளிய உழைப்பாளிகளின் உயிர்கள் அற்பமாக மதித்துப் பறிக்கப்பட்டதைப் போலவே, கொலைகாரர்களுக்கான தண்டனையும் அற்பமாகவே இருக்கப் போகிறது. மும்பைபாந்த்ரா சாலைத் தொழிலாளர்களுக்கெதிரான இந்தக் கோரமான கொலைக்குற்றம், குடித்துவிட்டு மோட்டார் வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் விபத்துக்குரிய அலட்சியத்தால் இழைக்கப்படும் குற்றமாகக் கருதித் தண்டிக்கும் குற்றப்பிரிவின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது, இந்தியத் தண்டனைச் சட்டம் 304(அ) அலட்சியம் காரணமாக மரணம் விளைவிக்கும் குற்றம் இதன்படி குற்றவாளி பிணையில் வந்துவிடமுடியும்; அதிகபட்சம் தண்டனை இரண்டு ஆண்டு சிறையும், அபராதமும் விதிக்கப்படும். ஆனால், நடந்திருப்பது ஒரு கொலைக்குற்றம். தாழ்த்தப்பட்ட மக்களை சாதிவெறியர்கள் படுகொலை செய்வதற்கு சாதி ஆதிக்கவெறி அடிப்படையாக இருப்பதைப் போல, ஏழை எளிய மக்களைக் கிள்ளுக்கீரையாக எண்ணி மிகவும் அலட்சியமாகப் பலியிடுவதற்கு அடிப்படையாக, செல்வமிகு மேட்டுக்குடித் திமிர்த்தனம் இருக்கிறது. ஆண்டைகள் தமது செல்லப்பிராணிகளுக்கு அடிமைகளை இரையாக்கி, அதைக் கண்டு மகிழ்வதைப் போன்ற வக்கிரம் இந்த மேட்டுக்குடித் திமிர்த்தனத்தில் வெளிப்படுகிறது. இதுவொன்றும் வழக்கம் போல குடித்துவிட்டு மோட்டார் வாகனங்களை ஓட்டும் அலட்சியம் அல்ல; தனி ஒரு சம்பவமும் அல்ல. மும்பை மட்டுமல்ல, பிற பெருநகரங்களிலும் இத்தகைய கிரிமினல் குற்றங்களில் மேட்டுக்குடிசெல்வச்சீமான்களின் குலக் கொழுந்துகள் ஈடுபடுவது ஒரு பொதுப்போக்காகவே இப்போது வளர்ந்து வருகிறது. இந்த ஆண்டு துவக்கத்தில் ஸ்டாண்டார்டு வங்கியின் உயர் அதிகாரி நீல் சட்டர்ஜி மும்பையின் பிரபாதேவி பகுதியில் ரமாகாந்த் தூரி என்ற காவலாளியை கார் ஏற்றிக் கொன்றார். இதே பாந்த்ரா பகுதியில் இந்தி நடிகர் ராஜ்குமாரின் மகன் புரு ராஜ் குமார் நடைபாதை மக்கள் மீது கார் ஏற்றிப் பலரைப் படுகாயமுறச் செய்துவிட்டு, வெறும் அபராதத்தோடு தப்பித்துக் கொண்டார். இந்தியக் கடற்படை தலைமைத் தளபதி எஸ்.எம். நந்தாவின் பேரனும், கடற்படை தளபதி சுரேஷ் நந்தாவின் மகனும் கிரௌன் கார்ப்பரேசன் கம்பெனியின் ஆயுதங்கள் விற்பனைத் தலைமை அதிகாரியுமான சஞ்சீவ் நந்தா, தனது பி.எம்.டபிள்யூ என்ற சொகுசுக்காரை ஏற்றி ஆறு பேரைக் கொன்றுவிட்டு, தண்டனையின்றித் தப்பித்துக் கொண்டார். கடந்த ஆண்டு, பிரபல கட்டாவ் துணி ஆலை முதலாளி மகேந்திரா கட்டாவின் மகன் மணிஷ் கட்டாவ் மும்பையின் பிரதான சாலையான மரைன் டிரைவில் நின்றிருந்த ஜிதேந்திரா ரோகடே என்ற போலீசுக்காரரை காரேற்றிக் கொன்றுவிட்டு, தண்டனையின்றி விடுதலை செய்யப்பட்டார். மும்பை சிவசேனாத் தலைவர் பால்தாக்கரேயின் உதவியாளர் ரவீந்திர மகத்ரே காரேற்றி இரண்டு பேரைக் கொன்று இரண்டு பேரைப் படுகாயமுறச் செய்தார். பிரபல இந்தி நடிகர் சல்மான்கான், தனது டயோட்டா சொகுசுக் காரை தலைத்தெறிக்க ஓட்டி சென்று ரொட்டிக் கடையின் முன்பு உறங்கிக் கொண்டிருந்த ஒருவரைக் கொன்றும் நான்கு பேரைப் படுகாயமுறவும் செய்தார். இத்தகைய குற்றங்கள் தொடர்வதற்குக் காரணமென்ன? எப்படிப்பட்டவர்கள் இத்தகைய குற்றங்களைச் செய்கின்றனர். தங்குதடையற்ற கொண்டாட்டமும் பரபரப்பான வாழ்க்கையும் இலக்காகக் கொண்டவர்கள்; கத்தை கத்தையாக பணக் கட்டுகளும், கடன் அட்டைகளும், மின்னணுக் கைச் சாதனங்களும், பேய்த்தனமாகப் பாய்ந்து செல்லும் விலையுயர்ந்த மோட்டார் வாகனங்களுமாகப் பெருநகர சாலைகளிலும், நட்சத்திர நடன விடுதிகளிலும் திரிபவர்கள்; தான்தோன்றித்தனமான கேளிக்கைகளிலும் கனவுகளிலும் மிதப்பவர்கள்; சுருக்கமாகச் சொன்னால், தாராளமயம்உலகமயம் பெற்றெடுத்த செல்வச்சீமான்களின் கொழுப்பேறிய செல்லப் பிள்ளைகள்; அதாவது, நவநாகரீகப் பொறுக்கிகள். இந்த ""இளைஞர்கள் போதிய பணம் வைத்திருக்கிறார்கள்; அந்தப் பணபலமே தமது அதிகார உரிமை என்று அவர்கள் கருதுகிறார்கள். வெறித்தனம், அதிகாரம், போதை மற்றும் கிறுக்குத்தனமான ஆணவம் திமிர்த்தனம் ஆகியவை ஒரு கொடிய உயிர்க் கொல்லி ஆயுதமாக அமையும் உலகமயமாக்கம் கூட இம்மாதிரியான நடத்தைகளுக்கு ஒரு காரணமாக அமைகிறது'' என்கிறார் மும்பையின் பிரபல மான மனநல மருத்துவர் ஹரீஷ் ஷெட்டி. இத்தகைய நச்சுப் பண்பாடு, மும்பை மட்டுமல்ல, தில்லி, சென்னை, பெங்களூர், ஐதராபாத் என்று நாட்டின் பெருநகரங்களிலெல்லாம் தொற்று நோயாகப் பரவி வருகிறது. சென்னை மாமல்லபுரம் கிழக்குக் கடற்கரைச் சாலையின் இருபுறமும் புற்றீசல்களாய் புறப்பட்டுள்ள சொகுசு மாளிகைகளில் சனிக்கிழமை பின்னிரவு வரை குடித்துக் கும்மாளமிட்டு, கூத்தடித்துவிட்டு பாய்ந்து செல்லும் கார்களை ஓட்டிவரும் மேட்டுக்குடி புதுநாகரிகப் பொறுக்கிகளால் ஏற்படும் ""விபத்துகள்'' அங்கே வாழும் மக்களைப் பீதியடைச் செய்து வருகின்றன. இந்தச் சாலையில் நடக்கும் சாவுகள் மட்டும், சென்னையின் பிற பகுதிகளில் நடப்பவைகளைவிட அதிகமென்று விவரங்கள் தெரிவிக்கின்றன. இதற்குக் காரணமானவர்கள் வழக்கமாக நாம் காணும் பரம்பரை பணக்கார வீட்டுச் செல்லப் பிள்ளைகள் அல்ல. கடந்த 15 ஆண்டுகளாக அடுத்தடுத்துவந்த ஆட்சியாளர்கள் பின்பற்றிய தாராளமயம் தனியார்மயம் உலகமயம் என்ற புதிய பொருளாதாரக் கொள்கை காரணமாகப் பெய்த டாலர் மழையில் நனைந்த புதுப்பணக்காரர்கள். குறிப்பாக கணினி தகவல் தொழில்நுட்பம் மற்றும் அதைச் சார்ந்த தொழில்களில் அதன் உண்மை மதிப்புக்குமேல் பன்மடங்கு வரும் வருவாயினால் ஊதிப் பெருத்துப்போன செல்வத்தில் மிதிப்பவர்கள்தான் கண்மண் தெரியாமல் தறிகெட்டு ஆட்டம் போடுகிறார்கள். சில நாட்களுக்கு முன் குடிவெறியில் காரை ஓட்டிச் சென்ற ஒருவர் சாலைத்தடுப்புக் கம்பிகள் மீது மோதி மாண்டார். அதனால், குடிபோதையில் கார் ஓட்டுபவர்களைப் பிடிப்பதற்காக போலீசார் சோதனைகளில் ஈடுபட்டபோது, நள்ளிரவுக்குப் பின்னரும் குடித்துக் கும்மாளமிட்டுவிட்டு இளம் ஜோடிகள் கார்களில் பறப்பதைக் கண்டனர். இதைத் தொடர்ந்து சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் விதிகளை மீறி நடத்தப்படும் சில ""பார்கள்'' மற்றும் நடன அரங்குகள் மீது திடீர் சோதனைகள் நடத்தப்பட்டன. நட்சத்திர விடுதிகளில் நள்ளிரவுக்குப் பிறகும் சீமைச் சாராயம் பரிமாறப்படுவதும், இளம்ஜோடிகள் குடிவெறியில் விளக்குகள் அணைக்கப்பட்டும், மங்கிய ஒளியிலும், வரைமுறைகள் இல்லாமல் ஆபாசமாக நடனமாடுவதும் நடப்பதைக் கண்டார்கள். சோதனையிட வந்த போலீசாரைக் கண்டதும், பலர், ஏற்கெனவே "புக்' செய்திருந்த தமது அறைகளில் பதுங்கிவிட்டனர். மேலும் பலர் பின்புறவழியாகத் தப்பி ஓடினர். போலீசார் வந்ததும் போதையில் ஆடிக் கொண்டிருந்தவர்களைப் பிடித்து விசாரித்த போது அவர்கள் ""நல்ல வேலையில் உள்ளவர்கள்; நல்ல குடும்பப் பின்னணி உள்ளவர்கள்'' என்று தெரிந்ததால் அவர்களின் ""எதிர்கால நலன்களை கருதி எச்சரித்து அனுப்பப்பட்டனர்'' என்கிறார்கள், போலீசார். ஆனால், விதிகளை மீறியும் அனுமதிக்கப்பட்ட நேரத்துக்கு மேலும் பார்களையும் நடன அரங்குகளையும் நடத்தியதற்காக விடுதி ஊழியர்கள் 17 பேர் மட்டும் கைது செய்யப்பட்டனர். ""சென்னையில் தெருவுக்குத் தெரு கம்ப்யூட்டர் நிறுவனங்கள் பெருகி வருகின்றன. இவற்றில் நான்கைந்து ஷிப்டுகளில் வேலை நடக்கிறது. நள்ளிரவில் "ஷிப்டு' முடிந்து செல்பவர்களைக் கவர்வதற்காகவே ஒட்டல்களில் பார்கள் நள்ளிரவைத் தாண்டியும் திறந்து வைக்கப்படுகின்றன. கம்ப்யூட்டர் நிறுவனங்களுக்கு தங்கள் மகன், மகளை வேலைக்கு அனுப்பும் பெற்றோர், வேலை முடித்து அவர்கள் குறிப்பிட்ட நேரத்தில் வீட்டுக்கு வருகிறார்களா என்பதைக் கண்காணிக்க வேண்டும். நள்ளிரவில் வெகுநேரம் குடித்துவிட்டு அதிகாலையில் வீடு திரும்புபவர்கள் வேகமாக கார் ஓட்டிச் செல்கின்றனர். இதனால், நிறைய விபத்துக்கள் நடக்கின்றன என்பதையும் பெற்றோர் உணரவேண்டும்'' என்கிறார், ஒரு போலீசு அதிகாரி. என்னவொரு அக்கறை! என்னவொரு பொறுப்பு! எல்லோரும் ""நல்ல வேலையில் இருப்பவர்கள், நல்ல குடும்பப் பின்னணி உள்ளவர்கள்'' அல்லவா, அதுதான்! ஆனால், பிடிபட்ட பெண்களோ, ""நாங்கள் எவன்கூடப் போனால் இவர்களுக்கென்ன?'' என்று கொழுப்புக் கொப்பளிக்கக் கேட்கிறார்கள். தாங்கள் அவ்வளவாகக் குடித்திருக்கவில்லை என்றும் குடிபோதையில் இருந்த 15,16 வயதுப் பெண்களை மட்டும் தப்பிப் போகவிட்டார்கள்; (மைனர் பெண்கள் ஆதலால் வழக்கும் குற்றமும் கடுமையாகக் கருதப்படும் என்பதால் போலீசின் கரிசனம் நிரம்பி வழிந்திருக்கிறது போலும்!) அடையாள அட்டைகளைக் காட்டியபோதும் காக்க வைத்து பெற்றோரை அழைத்து எச்சரித்துவிட்டுத்தான் வெளியே விட்டார்கள்'' என்று குறைபட்டுக் கொண்டார்கள். இரவு நேரங்களில் இப்படிக் குடித்துக் கூத்தடிப்பது ஒன்றும் தவறில்லை; ஒளிவுமறைவானதுமில்லை, கூச்சத்துக்குரியதுமில்லை, தகுந்த அடையாளத்தைக் காட்டி பகிரங்கமாகவே இப்படிச் செய்வதில் தயக்கமில்லை என்று அவற்றில் ஈடுபட்டவர்கள் காட்டிக் கொள்கிறார்கள். இப்படிச் செய்வது தங்கள் உரிமை என்றும் வாதிடுகிறார்கள். அதை மறுக்காத போலீசுக்காரர்களும் நடன அரங்கின் புகையும் சூழலும்தான் நல்லதில்லை என்று கூறி அவர்களைச் சமாதானப்படுத்த முயன்றிருக்கிறார்கள். போலீசார் மேற்கொண்ட நடவடிக்கை முஷ்டியை மடக்கி மிரட்டுவதாகும் என்று ஐதீகமான ""இந்து'' நாளேடு சித்தரிக்கிறது. பெண்களை ஆயிரம் விளக்கு காவல் நிலையத்துக்குக் கொண்டு போய் ஒருமணிநேரம் காத்திருக்கச் செய்தது பயபீதியூட்டுவதாகும் என்று பொருமுகிறது அந்த நாளேடு. கூடவே, இம்மாதிரியான ஆட்டங்களில் பாடுவதைத் தொழிலாகக் கொண்ட ஒருவரைப் பேட்டி கண்டு, ""இப்படிக் கட்டுப்பெட்டித்தனமாக இருக்கக் கூடாது, மின்னணு இசையை இரசிக்கும் புதிய போக்கை வளர்ப்பதற்காக இன்னும் தாராளமாக நடந்து கொள்ள வேண்டும்'' என்று எழுதியது அந்த நாளேடு. அடுத்தநாளே கூடிய தென்னிந்திய ஓட்டல்கள் உணவகங்களின் உரிமையாளர் சங்கம், ""அந்நிய விமான சேவைகள், அந்நிய நேரடி முதலீட்டாளர்கள், அந்நிய சுற்றுலாப் பயணிகள் ஆகியவர்களுக்காக அரசு தனது கட்டுப்பாடுகளைத் தளர்த்த வேண்டும். குடிக்கவும், ஆடவுமான நேரத்தை அதிகரிக்க வேண்டும். தகவல் தொழில் நுட்பம், அது சார்ந்த சேவை நிறுவனங்கள், கணினிவெளி வேலைகளுக்கான நிறுவனங்கள், கால்சென்டர்கள் போன்றவை பெருகிவரும் சென்னையில் இரவு வாழ்க்கை பற்றித் தெளிவான கொள்கையை அரசு வகுக்க வேண்டும்'' என்று கோரியுள்ளனர். ""இரவு வாழ்க்கை'' என்பது மேலே குறிப்பிடப்பட்ட தொழில்களின் நீட்டிப்பாகவும், புதிய பண்பாடாகவும் அந்நிய, உள்நாட்டுக் கூட்டுப்பங்குத் தொழில் கழகங்களால் திட்டமிட்டு வளர்க்கப்படுகின்றது என்பது முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டியது. தமது பணியாளர்களின் இரவு வாழ்க்கைக்காக இந்தக் கூட்டுப்பங்குத் தொழில் கழகங்கள், தாமே கூடுதல் சம்பளம், சுற்றுப் பயணங்கள் வசதிகள் மற்றும் கொண்டாட்டங்களை ஏற்பாடு செய்கின்றன. ""என்.ஐ.ஐ.டி.'' மற்றும் ""விப்ரோ'' ஆகிய இரண்டு கணினி மென்பொருள் நிறுவனங்கள், தங்கள் ஊழியர்கள் சேர்ந்து ""தேதி வைத்து'' உல்லாசமாகக் கழிப்பதற்கு சிறப்புப் படி (டேட்டிங் அலவன்ஸ்) வழங்குகின்றன. இதனால் தனது மணவாழ்க்கை சிதைவதாக ""விப்ரோ'' நிறுவனப் பணியாளர் ஒருவரின் மனைவி வழக்குத் தொடுத்துள்ளார். தனியார்மயம் தாராளமயம் உலகமயம் என்ற இந்த மறுகாலனியாக்கம் நமது நாட்டுப் பொருளாதாரத்தை மட்டுமல்ல, நமது நாட்டின் பண்பாட்டையும், குடும்பங்களை மட்டுமல்ல, ஏழை எளிய மக்களின் வாழ்வையும், உயிரையும் பறிக்கும் விபரீதங்களாக உருவெடுத்து வருகிறது என்பதையே இவை காட்டுகின்றன.
கொரோனா வைரஸ் தொற்றுக்கு சித்த மருத்துவத்திலும் மருந்து இருப்பதை அரசு பரிசீலிக்காதது ஒரு குறையாகவே பார்க்கப்பட்டது. ட்விட்டரின் முக முக்கிய பிரச்னை போலி அக்கவுன்ட்கள். சீன எல்லையில் இந்திய ராணுவ வீரர்கள் பலியான அன்று ட்விட்டரே கொதித்துக்கொண்டிருந்தது. அப்போது அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் பெயரில் இயங்கும் ஒரு போலி ஐடியில் `stand with India’ என ஒரு ட்வீட் வர, பலர் அதை ரீட்வீட் செய்தனர். இதில் பல பாஜக தலைவர்களும் அடக்கம். டிரம்ப்பின் நிஜ ஐடியிலே இப்படி அதிர்ச்சியான ட்வீட்கள் வருமென்பதால் யாருக்கும் சந்தேகம் வரவில்லை. ஆனால், அது போலி ஐடி என்பது கூடவா தெரியாமல் இருக்கிறார்கள் பாஜக தலைவர்கள் எனக் கலாய்த்துத் தள்ளிவிட்டனர் ட்விட்டர்வாசிகள். மாட்டிக்கிட்டியே கோப்பாலு. தனுஷ் இயக்கத்தில் 60 கோடி ரூபாய் பட்ஜெட்டில் ஆரம்பிக்கப்பட்ட படம், தேனாண்டாள் பிக்சர்ஸ் நிதிச்சிக்கலில் மாட்டியதால் அப்படியே நிறுத்தப்பட்டது. லைவ் போர்ஷனை தனுஷ் எடுத்துமுடித்துவிட்டார். கதையில் 600 ஆண்டுகளுக்கு முந்தைய பீரியட் போர்ஷனும் இருப்பதால் அந்தப்பகுதியை அண்ணன் செல்வராகவனை இயக்கச் சொல்லிக் கேட்டிருக்கிறாராம் தனுஷ். இன்னொரு தயாரிப்பு நிறுவனம் இந்தப்படத்தைக் கையில் எடுக்க முன்வந்திருப்பதுதான் பேச்சுவார்த்தைகள் தொடங்கக் காரணம். ஆயிரத்தில் இருவர் சமீபத்தில் கொரோனாவால் இறந்த மாம்பலம் காவல் ஆய்வாளர் பாலமுரளியின் இறப்பு சென்னை பெருநகரக் காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதனை மனதளவில் பாதித்துவிட்டது. பாலமுரளியின் சிகிச்சைக்காக இரண்டரை லட்ச ரூபாய்க்கு சொந்தப் பணத்தில் மருந்து வாங்கிக்கொடுத்துள்ளார். ஆனாலும் அவரைக் காப்பாற்ற முடியாததால் அதிர்ச்சியான ஏ.கே.வி., காவலர்கள் அனைவரும் மிகுந்த எச்சரிக்கையுடன் பணியாற்றும்படி கேட்டுக்கொண்டுள்ளார். இம்முறை சென்னையில் ஊரடங்கு விதிகளை கடுமையாக போலீஸ் கடைப்பிடிப்பதற்கு பாலமுரளியின் இறப்பு ஏற்படுத்திய தாக்கமும் ஒரு காரணம் என்கிறது போலீஸ் வட்டாரம். பத்திரமா இருப்போம்! கீர்த்தி சுரேஷ் தேசிய விருது வாங்கியதும் ஒதுக்கப்படும் நடிகைகள் லிஸ்ட்டில் கீர்த்தி சுரேஷையும் சேர்த்துவிட்டிருக்கிறது கோலிவுட். ‘சாவித்ரி’ படத்தில் பிரமாதமாக நடித்து விருதுவென்ற கீர்த்திக்கு அதன்பிறகு பெரிய வாய்ப்புகள் வரவில்லை. இதனால் சம்பளத்தையெல்லாம் குறைத்திருக்கிறார் கீர்த்தி. நியாயமாரே இளம் இயக்குநர்களே லாக்டெளனில் சத்தம் இல்லாமல் இருக்க, சீனியர் கெளதம் செம பிஸி. ‘கார்த்திக் டயல் செய்த எண்’ குறும்படம், ‘ஒரு சான்ஸ் குடு பெண்ணே’ பாடல் என லாக்டெளனிலும் ஷூட் செய்து வியூஸ் அள்ளியவர், இப்போது ‘துருவ நட்சத்திரம்’ படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷனையும் முடித்துவிட்டாராம். விக்ரமை வைத்து இன்னும் 5 நாள்கள் ஷூட்டிங் மட்டும் பாக்கி. அனுமதி கிடைத்து ஷூட் முடித்துவிட்டால் நேரடி ஓடிடி ரிலீஸுக்கு ‘துருவநட்சத்திரம்’ தயாராகிவிடும். வழக்கமா இருக்கிற ரெண்டு கதையில் எந்தக் கதை? டி20 ஸ்பெஷலிஸ்ட் சுரேஷ் ரெய்னாவுக்கும் பயோபிக் ஆசை வந்துவிட்டது. சென்னை சூப்பர் கிங்ஸின் ‘சின்ன தல’க்கு தன்னுடைய பயோபிக் எடுக்கப்பட்டால் அதில் மலையாள நடிகர் துல்கர் சல்மான்தான் நடிக்கவேண்டுமாம்! சல்மான் சதை போடணும்ல நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனர் ரீட் ஹேஸ்டிங்ஸ் கல்விக்காக அள்ளி அள்ளிக் கொடுப்பவர். 2016-ல் கல்விக்காக 100 மில்லியன் அமெரிக்க டாலர் தந்திருக்கிறார். இப்போது அவரும் அவர் மனைவியும் சேர்ந்து ஆப்ரோ-அமெரிக்க மக்களுக்கான மூன்று கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு தலா 40 மில்லியன் டாலர் என மொத்தம் 120 மில்லியன் டாலர் தர முன்வந்திருக்கிறார். உதவிபெற்ற மூன்று கல்வி நிலையங்களும் “எங்களுக்கு இதுவரை கிடைத்த உதவித்தொகையிலே இதுதான் அதிகம்” என்கின்றன. “இனவெறிக்கு எதிராக நம்மால் ஆன ஒவ்வொன்றையும் அனைவரும் செய்ய வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டிருக்கிறார் ஹேஸ்டிங்ஸ். ஊர்கூடி... ஹாரிபாட்டரில் லேவண்டர் பிரவுனாக நடித்த ஜெஸி கேவ் மூன்றாவது முறையாகத் தாயாகவிருக்கிறார். மேடிட்ட வயிற்றை இன்ஸ்டாவில் போஸ்ட் செய்து, ‘ஊப்ஸ்... மீண்டும் இதைச் செய்துவிட்டேன்’ என்று ஹார்ட்டின் விட்டிருக்கிறார் ஜெஸி. அவரின் பாய்ஃபிரெண்ட் ஆல்ஃபி பிரவுனோ, முதல் இரண்டு குழந்தைகளின் பிஞ்சுப் பாதங்களையும், பிறக்கவிருக்கிற சிசுவின் ஸ்கேனிங்கையும் புகைப்படமாக எடுத்து போஸ்ட் செய்திருக்கிறார். கூடவே, ‘அந்தப் புத்தம் புது உறவை உலகத்துக்கு அறிமுகப்படுத்தக் காத்துக்கொண்டிருக்கிறேன்’ என்று உருகியிருக்கிறார். இது பாசம்தான ஜெஸி! அப்பா சயிஃப் அலிகானின் வீடியோ இன்டர்வியூவில் தன் குறும்பு முகத்தைக் காட்டுவதே மகன் தைமூர் அலிகானின் வேலை. சமீபத்திய வீடியோவிலும் தைமூர் எட்டிப்பார்க்க, நிருபர் ‘ச்சோ... ஸ்வீட்’ என்று பொடிசைக் கொஞ்ச, ‘ஐ யம் நாட்...’ என்று கோபம் காட்டுகிறார் ஜூனியர் சயிஃப். ‘உன்னை ஹேண்ட்ஸம் பாய் என்று பாராட்டுகிறார்கள். தேங்க்ஸ் சொல்லேன்’ என்று அப்பா சொன்னதும், ‘தேங்க்ஸ் ஆன்ட்டி’ என்கிறான் தைமூர் கெத்தாக. இந்த வீடியோவை சம்பந்தப்பட்ட நிருபர் தன் சமூகவலைதளத்தில் பகிர, தைமூருடன் சேர்த்து அவரும் ட்ரெண்டாகிக்கொண்டிருக்கிறார். வைரல் ஜூனியர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு சித்த மருத்துவத்திலும் மருந்து இருப்பதை அரசு பரிசீலிக்காதது ஒரு குறையாகவே பார்க்கப்பட்டது. விஷயத்தை சில மூத்த சித்த மருத்துவர்கள் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் கவனத்துக்குக் கொண்டு சென்றவுடன், “நிலவேம்பு குடிச்சதனால தான் டெங்கு காய்ச்சலைக் கட்டுக்குள் கொண்டுவர முடிஞ்சது. சித்த மருத்துவமும் வேணும்ங்க. கபசுரக் குடிநீர் மட்டுமல்ல, வேறென்ன மருந்துகள் இருக்கு, எதையெல்லாம் மக்களுக்கு நாம கொடுக்கலாம்னு உடனே ஆய்வு பண்ணி ரிப்போர்ட் கொடுங்க” என்று சென்னை மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இதைத் தொடர்ந்து மளமளவென சித்த மருந்து சிகிச்சைக்கு மாநகராட்சியில் ஏற்பாடு செய்யப்படுகிறது. மெல்ல மெல்ல... சோஷியல் மீடியாவில் அவ்வப்போது புதுப்புதுப் புயல் கிளம்பும். யாருமே கண்டுகொள்ளாத ஒரு ஆப், உலகையே ஆக்டிவ் ஆக்கும். அப்படி சென்ற வாரம் அடித்த புயல் “ஃபேஸ் ஆப்.” நம் புகைப்படத்தை அப்லோடு செய்தால், 80 வயதில் நாம் எப்படியிருப்போம், ஆணாக இருந்தால் நம்மைப் பெண்ணாக மாற்றுவது என ஏகப்பட்ட ஃபில்டர்ஸ் கொண்டது ஃபேஸ் ஆப். அவரவர் படங்களை அப்லோடு செய்தது மட்டுமல்லாமல், பிரபலங்களையும் இழுத்துவிட்டு செம ஆட்டம் போட்டனர் நெட்டிசன்ஸ். இந்திய கிரிக்கெட் அணி முழுவதையும் கிழவர்களாகவும் பெண்களாவும் மாற்றியதுதான் உச்சக்கட்ட வைரல். அதில், பெரும்பாலானோரின் லைக்ஸ் விழுந்தது, புவனேஷ்வர் குமாரிக்குத்தான். லாக்டெளன் மேட்ச்
லில்லி ஜேம்ஸ் ஒரு ஆங்கில நடிகை, 'டவுன்டன் அபே,' 'சிண்ட்ரெல்லா,' 'பேபி டிரைவர்' மற்றும் 'மம்மா மியா! மீண்டும் நாம் போகலாம்.' லில்லி ஜேம்ஸ் யார்? லில்லி ஜேம்ஸ் ஒரு ஆங்கிலத் திரைப்படம், தொலைக்காட்சி மற்றும் மேடை நடிகை ஆவார், அவர் கற்பனைத் திரைப்படத்தில் திருப்புமுனைப் பாத்திரத்தில் நடித்துள்ளார் சிண்ட்ரெல்லா (2015) ஹாலிவுட்டில் வளர்ந்து வரும் நடிகையாக அவரை வரைபடத்தில் சேர்த்தார். இதற்கு முன் சிண்ட்ரெல்லா , அவர் கால நாடகத்தில் கலகக்கார லேடி ரோஸ் மேக்லேராக தனது துணைப் பாத்திரத்தில் தொலைக்காட்சியில் ஏராளமான அறிவிப்புகளைப் பெறத் தொடங்கினார். டோவ்ன்டன் அபே . போன்ற பெரிய பட்ஜெட் படங்களில் ஜேம்ஸ் நடித்துள்ளார் குழந்தை ஓட்டுநர் (2017), டார்கெஸ்ட் ஹவர் (2017) மற்றும் மாமா மியா! மீண்டும் நாம் போகலாம் (2018) ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி லில்லி ஜேம்ஸ் ஏப்ரல் 5, 1989 இல் இங்கிலாந்தின் சர்ரே, எஷரில் பிறந்தார். நடிப்பு மீதான அவரது காதல் அவரது மரபணுக்களில் கட்டமைக்கப்பட்டது: அவரது பெற்றோர்களான நினெட் மற்றும் ஜேம்ஸ் இருவரும் நடிகர்கள், அதே போல் அவரது பாட்டி ஹெலன் ஹார்டன், அம்மாவுக்கு குரல் கொடுத்த கணினி மெயின்பிரேம் ரிட்லி ஸ்காட் 1979 இல் வெளிவந்த திரைப்படம் ஏலியன் . 'அவள் நிறைய, நிறைய தொலைக்காட்சிகளில் செய்ததால், அவளை மேலும் படிக்க நான் திரும்பிச் செல்ல விரும்புகிறேன் சூப்பர்மேன் ,' ஜேம்ஸ் தன் பாட்டியைப் பற்றி கூறினார். 'நான் வளரும்போது அதைப் பார்த்தது எனக்கு நினைவிருக்கிறது. நான் அவளை மேடையில் பார்க்க விரும்புகிறேன்: அவள் நிறைய தியேட்டர் செய்தாள். ட்ரிங் பார்க் ஸ்கூல் ஃபார் தி பெர்ஃபார்மிங் ஆர்ட்ஸில் தனது படிப்பை முடித்த பிறகு, ஜேம்ஸ் 2010 இல் லண்டனின் கில்டால் ஸ்கூல் ஆஃப் மியூசிக் அண்ட் டிராமாவில் பட்டம் பெற்றார். திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் 'டவுன்டன் அபே' காஸ்டிங் டைரக்டர்களின் கவனத்தை ஜேம்ஸ் கவர அதிக நேரம் எடுக்கவில்லை. அவரது தொலைக்காட்சி அறிமுகமானது 2010 இல் தொடங்கியது, பிபிசி ஒன் தொடரில் எதெல் பிரவுன் கதாபாத்திரத்தில் நடித்தார். வெறும் வில்லியம் . அவர் ஒரு தொடர்ச்சியான பாத்திரத்தைத் தொடர்ந்தார் ஒரு அழைப்பு பெண்ணின் ரகசிய நாட்குறிப்பு அவர் 2012 இல் சர்வதேச வெளிப்பாட்டிற்கு வருவதற்கு முன்பு, லேடி ரோஸ், க்ராலீஸின் ஊர்சுற்றல், கலகக்கார உறவினர் டோவ்ன்டன் அபே . ஜேம்ஸின் பங்கு நான்காவது மற்றும் ஐந்தாவது சீசன்களுக்கான வழக்கமான தொடராக விரிவுபடுத்தப்பட்டது. அதே நேரத்தில், அவர் விளையாட்டு படத்தில் நடித்தார் வேகமான பெண்கள் (2011) மற்றும் சாகச கற்பனைத் திரைப்படம் டைட்டன்ஸ் கோபம் (2012) 'சிண்ட்ரெல்லா' ஆனால் 2015 ஆம் ஆண்டில் தான் ஜேம்ஸ் டிஸ்னியின் கற்பனை நாடகத்தில் பெயரிடப்பட்ட பாத்திரத்தில் நடித்ததன் மூலம் இன்றுவரை அவரது மிகப்பெரிய மற்றும் நிதி ரீதியாக வெற்றிகரமான திரைப்படத்தை கைப்பற்றினார். சிண்ட்ரெல்லா (2015), எதிர் கேட் பிளான்செட் மற்றும் கென்னத் பிரானாக் இயக்கியுள்ளார். இந்த திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது, உலகளவில் $540 மில்லியனுக்கு மேல் சம்பாதித்து, அந்த ஆண்டின் பன்னிரண்டாவது அதிக வசூல் செய்த திரைப்படமாக அமைந்தது. 'போரும் அமைதியும்' 2016 இல், ஜேம்ஸ் மீண்டும் தொலைக்காட்சியில் நடிக்கத் தொடங்கினார் லியோ டால்ஸ்டாய் பிபிசி தழுவலில் நடாஷா ரோஸ்டோவாவின் கற்பனைக் கதாபாத்திரம் போர் & அமைதி . பெரிய திரையில் அவர் போர்-காதல் நாடகத்தில் நடித்தார் விதிவிலக்கு (2016) மற்றும் எலிசபெத் பென்னட்டாக அவரது இரண்டாவது முன்னணி பாத்திரத்தையும் பிடித்தார் பெருமை மற்றும் தப்பெண்ணம் மற்றும் ஜோம்பிஸ் (2016) - இதில் அவரது காதலனும் நடித்தார் மாட் ஸ்மித் - ஆனால் அது பாக்ஸ் ஆபிஸில் சராசரி விற்பனையைப் பெற்றது. தொடர உருட்டவும் அடுத்து படிக்கவும் 'குழந்தை டிரைவர்,' 'அம்மா மியா! மீண்டும் நாம் போகலாம்' ஜேம்ஸின் திரைப்படத் திட்டங்கள் 2017 இல் சிறப்பாக செயல்பட்டன, ஏனெனில் அவர் முக்கிய கதாபாத்திரத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். குழந்தை ஓட்டுநர் மற்றும் இல் முக்கியமாக இடம்பெற்றது வின்ஸ்டன் சர்ச்சில் போர் நாடகம் டார்கெஸ்ட் ஹவர். அடுத்த ஆண்டு, பிரபலமான ஜூக்பாக்ஸ் இசைத் தொடரில் அவர் தனது பாடலையும் நடனமாடுவதையும் காட்சிப்படுத்தினார். மாமா மியா! மீண்டும் நாம் போகலாம் . 'தி குர்ன்சி இலக்கியம் மற்றும் உருளைக்கிழங்கு பீல் பை சொசைட்டி' அவரது முன்னணி பெண் பாத்திரங்களைச் சேர்க்க, ஜேம்ஸ் வரலாற்று நாடகத்தில் நடிக்கும்படி கேட்கப்பட்டார் குர்ன்சி இலக்கியம் மற்றும் உருளைக்கிழங்கு பீல் பை சங்கம் (2018), அதை அவள் முதலில் நிராகரித்தாள். “இரண்டாம் உலகப்போர் படத்தைத் தொடங்கவிருந்தேன் விதிவிலக்கு , மற்றும் நான் பீரியட் டிராமாக்கள் செய்வதை விட்டு வெளியேற வேண்டும் அல்லது குறைந்த பட்சம் வெவ்வேறு வழிகளை ஆராய முயற்சி செய்ய வேண்டும் என உணர்ந்தேன்,” என்று அவர் ஒப்புக்கொண்டார். ஆனால் உடன் பணிபுரியும் வாய்ப்பு கிடைத்தது நான்கு திருமணங்கள் மற்றும் ஒரு இறுதி சடங்கு இயக்குனர் மைக் நியூவெல் அவளை மறுபரிசீலனை செய்தார். அதிர்ஷ்டவசமாக, அவளுக்காக, ஸ்கிரிப்ட் மீண்டும் அவளிடம் கொண்டு வரப்பட்டது, இந்த முறை, வலுவான விருப்பமுள்ள கதாநாயகி மற்றும் எழுத்தாளர் ஜூலியட் வேடத்தில் நடிக்க அவர் முடிவு செய்தார். 'லிட்டில் வூட்ஸ்,' 'நேற்று' ஜேம்ஸ் உடன் இணைந்து நடித்தார் டெஸ்ஸா தாம்சன் நவீன பெண்ணிய மேற்கத்தியத்தில் லிட்டில் வூட்ஸ் , இது 2019 இல் அதன் திரையரங்கு வெளியீட்டைப் பெற்றது. சிறிது நேரத்திற்குப் பிறகு, பீட்டில்ஸ்-இன்ஸ்பயர்டு மூலம் ஒளி-இதயம் கொண்ட இசை வகை கட்டணத்திற்குத் திரும்பியது. நேற்று . மேடை வேலை ஜேம்ஸின் தொழில்முறை நாடக அரங்கேற்றம் 2011 ஆம் ஆண்டு டிபிசி பியரின் நாவலின் மேடை தழுவலில் இருந்தது. IN எர்னான் கடவுள் லிட்டில். என்ற தயாரிப்புகளில் தொடர்ந்து நடித்தார் சீகல் மற்றும் ஓதெல்லோ , அவர் டெஸ்டெமோனா என்ற விமர்சனப் பாராட்டைப் பெற்றார். மற்ற நாடகங்கள் அடங்கும் ப்ளே ஹவுஸ், நிச்சயமாக பஹாமாஸ் மற்றும் Branagh இன் 2016 தயாரிப்பு ரோமீ யோ மற்றும் ஜூலியட். தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் காதலன் புற்றுநோயால் 2008 இல் இறந்த ஜேம்ஸ் தாம்சனின் தந்தையை கௌரவிக்கும் வகையில், லில்லி க்ளோ நினெட் தாம்சன் என்ற லில்லி தன் குடும்பப்பெயரை 'ஜேம்ஸ்' என்று மாற்றிக்கொண்டார்.
உலகமே கொரோனாவை ஒழிக்க முயன்று வருகையில் பாகிஸ்தான் மட்டும் இதனை வாய்ப்பாக பயன்படுத்தி கொண்டு தனது தீய எண்ணங்களை செயல்படுத்த நினைக்கிறது. ஏற்கனவே பயங்கரவாதிகளை ஊடுருவ வைக்க முயன்று வருகையில், தற்போது கொரோனா தொற்று கொண்ட பயங்கரவாதிகளை இந்தியாவுக்கு அனுப்பி கொரோனாவை பரவ வைக்க முயற்சி செய்கிறது அம்பலமாகி உள்ளது. இந்திய உளவுத்துறை இடைமறித்த சில தகவல்களின் படி பாக் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள பயங்கரவாதிகளில் பலர் கொரோனா தொற்று கொண்டவர்கள் எனவும் இவர்கள் அனைவரும் ஊடுருவ தயார் நிலையில் உள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. ஏற்கனவே ஏப்ரல் 2ஆம் தேதி பாதுகாப்பு படையினரிடம் இருந்து தப்பி ஒரு குழு ஊடுருவி பதுங்கி உள்ள நிலையில் இவர்கள் கொரொனா தொற்று கொண்டவர்களா எனும் சந்தேகம் வலுக்கிறது. இத்திட்டத்தின் சூத்திரதாரி லஷ்கர் இ தொய்பா இயக்கத்தின் தலைவனான ஹஃபீஸ் சயீத் ஆவான், இவனே நேரடியாக பாகிஸ்தானுடைய சிந்த் மாகாணத்திற்கு சென்று இதற்கென ஆள் சேர்த்ததாக கூறப்படுகிறது. மேலும் ஏற்கனவே எல்லை கட்டுபாட்டு கோடு அருகே இயங்கி வரும் பயங்கரவாத முகாம்களில் பயிற்சி அளித்த வரும் பாக் ராணுவ வீரர்களில் சுமார் 600க்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ரியாஸ் நாய்க்கூ எனும் ஹிஸ்புல் முஜாஹிதின் இயக்க தளபதி தனது இயக்க உறுப்பினர்களிடையே கொரொனா தொற்று மிக வேகமாக அதிகரித்து வருவதை கவனித்து வருவதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
பல்கலைக்கழகத்தில் பல்வேறு இடங்களை சுற்றிப்பார்தாலும் மறக்க முடியாத இடம் அந்த பல்கலைக்கழகத்தில் உள்ள செயற்கை ஏரி. நம்பமுடியாத அளவில் அந்த ஏரி ஒரு செயற்கையான ஆற்றுடன் இணைக்கப்பட்டு இருந்தது. அதில் பணி கட்டியாகி இருந்தது. போதிசத்துவரும் லாமாக் கோவிலும் நாங்கள் சென்றது லாமா கோவில். மிகவும் அருமையான, அமைதியான கோவில். அங்கு நம் நாட்டில் கோவில்களில் பக்தி ஏற்றுவது போன்று, இங்கும் புத்த பெருமானுக்கு வரும் பக்தர்கள் பக்தி ஏற்றுகிறார்கள். மிகவும் அருமையான வாசனை அதில் வருகிறது. நம் ஊர் பக்தியைப் போல் அல்லாது, இது மிகப் பெரிதாக உள்ளது. அதில் பல்வேறு உருவங்கள் அச்சிடப்பட்டுள்ளன. தியென்மென் சதுக்கத்திலும் அரண்மனை அருங்காட்சியகத்திலும் மூன்றாம் நாள் பயணம் பீஜிங் நகரத்தில் மேற்கொண்டோம். காலையில் சென்ற இடம் ஒரு வாரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தத் தெரு. சீனாவின் பண்டைய காலத்தில் வியாபாரத்திற்காக பயன்படுத்தப்பட்ட அந்தத் தெருவினை இன்றும் அதேப் போன்று பாதுகாத்து வருகின்றனர். உலகின் மிகவும் புகழ்பெற்ற இடமான சீனப் பெருஞ்சுவருக்கு சீனப் பெருஞ்சுவர் பற்றி ஏராளம் சொல்ல வேண்டும். வாரலாற்றுத் தகவல்கள் உங்களுக்கு இணையத்தில் கிடைக்கும். ஆனால் அனுபவப் குறிப்புகள் கிடைப்பது மிகவும் அறிது. எனது அனுபவத்தினில் மனிதாராக பிறந்த ஒவ்வொருவரும் கட்டயாம் தனது வாழ்நாளில் பார்த்தே தீரவேண்டிய ஒரு சில இடங்களை நினைத்து வைத்திருப்போம். அதில் நிச்சயம் இந்த இடத்தினையும் நாம் சேர்த்துக்கொள்ள வேண்டும். சீனச் சுற்றுலா தொடங்கியது காலை சீன வானொலியின் தமிழ் பிரிவுக்கு சென்றேன். அங்கு கடமையாற்றிக் கொண்டு இருந்த துணைத் தலைவர் வாணி உட்பட அனைவரையும் சந்துத்து எனது வணக்கத்தினை வாழ்த்துக்கலையும் தமிழக நேயர்களின் சார்பாகவும் எனது மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் சார்பாகவும் தெரிவித்துக் கொண்டேன். அதன் பின் தமிழ் பிரிவின் கலையகங்களைக் காணச் சென்றேன். மிகவும் அருமையாக இருந்தது.
ஊழிற் பெருவலி யாவுள = விதியை விட வலியது இருக்கா; மற்றொன்று சூழினும் = நாம என்ன தான் யோசனை பண்ணி செஞ்சாலும்; தான்முந் துறும் = விதி முன்னாடி வரும். அப்போ நம்ம வள்ளுவப்பெருந்தகை என்ன பண்ணியிருக்கனும்? திருக்குறளை எழுதறதை அதோட நிறுத்தியிருக்கனும். அவன் அவன் தலையெழுத்து போல நடக்கட்டும்னு நடைய கட்டியிருக்கனும். ஆனா, அவர் நிறுத்தலை. அப்போ, இந்த குறள்கள் எதுக்குன்னு கேட்டால், ஒரு எச்சரிக்கை, விதி விலக்குகள் எப்பவும் உண்டு, தயாரா இருந்துக்கோ; தடுமாறாதே; அறமல்லதை செய்யாதே! அமைதியா இருன்னு ஒரு நிலைப்படுத்த ஒரு அருமையான பாட்டு: “மயக்கமா கலக்கமா, மனதிலே குழப்பமா வாழ்க்கையில் நடுக்கமா, வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும் வாசல்தோறும் வேதனை இருக்கும், வந்த துன்பம் எதுவென்றாலும் வாடி நின்றால் ஓடுவது இல்லை, எதையும் தாங்கும் இதயம் இருந்தால் இறுதி வரைக்கும் அமைதி இருக்கும்.” --- கவியரசு கண்ணதாசன் காலம் நம்மை மாறி மாறி புரட்டிப்போட்டாலும் தொடர்ந்து பயணி… அதுவும் எப்படின்னா, நடுங்காம, தயங்காம முயற்சியிலே தொய்வு இல்லாம பயணம் இருந்தா அந்த விதியையும் வெல்லலாம். நான் சொல்லலை. வள்ளுவப்பெருமானே குறள் 620 ல் ஒரு உலுக்கு உலுக்குகிறார். இதோ அந்த குறள்: “ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித் தாழாது உஞற்று பவர்.” – குறள் 620; அதிகாரம் – ஆள்வினைஉடைமை ஆள்வினைஉடைமை = பெரு முயற்சி உடைமை; உலைவு = நடுக்கம், கலக்கம்; தாழாது = தன் முயற்சியில் சற்றும் மனம் தளராது (விக்கிரமாதித்தன் போல!); உஞற்று பவர் = முயற்சிப்பவர் உப்பக்கத்துக்கு முதுகுப்பக்கம்ன்னு சில அறிஞர்கள் பொருள் சொல்றாங்க. அதாவது புறமுதுகிட்டு ஓட விடறதை சொல்றாங்க. சரியாதான் இருக்கு. மாற்றி யோசிப்போம். இப்பக்கம்ன்னா இந்த பக்கம்; அப்பக்கம்ன்னா அந்த பக்கம்; அப்போ உப்பக்கம்னா என்ன? உள்பக்கம்ன்னு எடுத்துக்கலாமா? எடுக்கலாம்னு தோணுது. என்ன பொருள்? தாழாது முயன்றால் ஊழையும் உள்பக்கமாவே பிரிச்சு மேய்ஞ்சுடலாம்! சரியா? தாழாது உஞற்றுபவர்க்கு இன்னொன்றும் நடக்குமாம். சொல்லியிருக்காரு பேராசான். கண்டுபிடின்னார் ஆசிரியர்!
தமிழ்நாட்டில் உள்ள திருப்பூர், ஈரோடு, கரூர் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் மேற்கூறிய 7 சிவஸ்தலங்களும் அமைந்துள்ளன. தகவல் பகுதி கோபுர தரிசனம் கோடி புண்ணியம். கோபுரத்தை வணங்கியபின் ஆலயத்திற்குள் செல்ல வேண்டும். கோவிலில் நுழைந்தவுடன் பலிபீடம், கொடிமரம் இருக்கும். அதன் முன்புறம் மட்டுமே வடக்கு நோக்கி அல்லது கிழக்கு நோக்கி விழுந்து வணங்க வேண்டும். கோவிலுக்குள் மற்ற இடங்களில் விழுந்து வணங்கக் கூடாது. பாடல் பெற்ற சிவஸ்தலங்கள் பற்றிய ஒரு வழிகாட்டி (Fourth Edition - 248 pages) இந்த புத்தகத்தை சென்னையைச் சேர்ந்த திரு சாய்குமார் அவர்கள் வெளியிட்டுள்ளார். தலங்கள் பற்றிய ஒரு சிறிய குறிப்பு, தலங்களின் முகவரி, செல்லும் வழி, மேலும் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் ஆகியவை இப்புத்தகத்தில் இடம் பெற்றுள்ளன. விலை ரூபாய் 120/- மட்டுமே. புத்தகம் கிடைக்குமிடம்: கே. சாய்குமார், 16/28, 2வது பிரதான சாலை, ஜெய் நகர், அரும்பாக்கம், சென்னை - 600106. தொலைபேசி எண்கள்: 24757212, 9382872358. திருப்புகழ் முருகன் தலங்கள் பற்றியும், 108 திவ்யதேசத் தலங்கள் மற்றும் அபிமானத் தலங்கள், தேவார வைப்புத் தலங்கள் பற்றியும் இவர் புத்தகங்கள் வெளியிட்டுள்ளார்.
வைத்தி மாமாவை நீங்கள் பாராமல் இருந்திருக்க முடியாது. எந்த ஒரு அரசாங்க அலுவலகத்திலும் இருப்பவர் அவர். பொதுவான ஒரு தோற்றம் போலவே பொதுவான ஒரு தொழிலும் அவர்களுக்கு உண்டு. அந்தக்காலத்து பி.ஏ. லிட்ரேச்சர் ஆஃபீஸர்களுக்கு அந்தக் காலத்து சிக்ஸ்த் ஃபார்ம் (இந்தக்காலத்து எம்.ஏக்கு சமமாக்கும் என்ற அலட்டலுடன்) எனக்கு டிக்டேட் பண்ணக்கூடிய அளவுக்கு உனக்கு லேங்க்வேஜ் போதுமா என்ற திமிருடனும், நான் சொல்ற ஸ்பீடுக்கு எழுதீடுவியா என்ற கித்தாப்புடன் இருக்கும் அதிகாரிக்கு ஸ்டெனோவாக ஒரு லவ் ஹேட் ரிலேஷன்ஷிப்புடன் இருப்பவர்கள். தனிப்பட்ட ரீதியாக, டெரர் ஆஃபீஸர் வீட்டில் எலி என்ற ரகசியத்தை கான்ஃபிடன்ஷியலாகப் பரப்பும் தூதர்கள். தன்னைத் தவிர யாரும் நெருக்கமாகிவிடாமல் கீழ்மட்ட ஊழியர்களைப் போட்டுக் கொடுத்தே பேர்வாங்கும் புலவர்களும் இதில் உண்டு. வெள்ளிக்கிழமை ரேசுக்கு நம்பர் கிடைக்காமல் அல்லாடும் அதிகாரியின் கடுப்பைப் புரிந்துக் கொண்டு யாரையும் பார்க்க அனுமதிக்காமல் இருப்பது, வெளியூர் டூர் போகும்போது தீர்த்தவாரி கொண்டாடும் ஆஃபீசர்களுக்குத் தோதான ப்யூனை செலக்ட் செய்து கொண்டு போவது, மதுரை டூட்டியானால் இருட்டுக் கடை அல்வாவும், சுங்கடிப் புடவையும் விற்கும் ஊழியரின் தகவல், திருச்சியானால் மாவடு, மாம்பழம், மடிக்கு வாழைமட்டை இத்யாதிகள் போன்ற பொது அறிவு மிக முக்கியம். பிட்மன் வேண்டுமானால் பென்ஸிலில் எழுதி இருக்கட்டும், நாங்கள் இங்க் பேனாவோ, பால்பென்னிலோ எழுதுவோம் என்ற தெனாவட்டும், ‘நீ திக்கித் திணறி குடுக்கற டிக்டேஷனுக்கு ஷார்ட் ஹேண்ட் ஒரு கேடா’ என்று சொல்லாமல் நக்கலடிக்கும் லாங் ஹேண்ட் நோட்ஸ் எழுதும் குசும்பும், இதற்காகவே எங்கேயோ ட்ரெயினிங் எடுத்தமாதிரி இருந்தவர்கள் இவர்கள். சக ஸ்டெனோ பெண்ணாக இருக்கும் பட்சத்தில் அது கிழவியோ குமரியோ, ஆஃபீசரின் ‘அந்தரங்க’ என்பதை அழுத்தி காரியதரிசியாகப் பரப்புபவர்கள். இளம் வயதானால் டெரிலின் ஷர்ட்டும், கத்தி முனை டெரிகாட்டன் பளபளா பேண்டும், மினுக்கும் ஷூவுமாக பந்தாவும், நடுத்தர வயது தாண்டினால் தொளதொளா பேண்டு அல்லது வேட்டி, இஸ்திரி காணாத சட்டை (நடு முதுகில் கொடியில் உலர்த்திய கோடு அணில் மாதிரி தெரியும்), ஏரோப்ளேன் டயர் செருப்புமாக பரிணாம மாற்றம் அடைந்தவர்கள். எழுதுவது பேனாவில் என்றாலும், ஸ்டெனோ என்பதற்கு அடையாளமாக கூராக சீவிய பென்ஸிலும், காலிகோ அட்டைக்குள் செருகிய ஷார்ட் ஹேண்ட் நோட்டும் கவச குண்டலங்களாகக் கொண்டவர்கள். வைத்தி என்கிற வைத்தீஸ்வரன் இதற்குரிய சகல அடையாளங்களும் கொண்டவர். பெரும்பாலும் சந்தனக் கலர் டெரிலீன் ஷர்ட், காப்பி கலர் பேண்ட், நெற்றியில் பட்டையாக விபூதி, குங்குமம், ஆஞ்சநேயர் சிந்தூரம், ஐயப்பன் கோவில் கருப்பு மை என்று சகலமும் இருக்கும். சுமாரான உயரம், எச்சில் விழுங்கினால் தெரியும் பல்லி வெள்ளை நிறம், அலையலையான முடி, குறுகுறு கண்கள், கண்ணாடி, மழுங்கச் சிரைத்து படிகாரம் பாலிஷ் போட்ட முகம், தாமரைப் பூவிதழ் நிறத்தில் மெல்லிய உதடுகள், மெலிந்த கையில் ஃபேவ்ரி லூபா கடிகாரம், விரல் நுனிகளில் காலைப் பூஜையின் அட்சதை மஞ்சள், எப்போதும் சிரித்த முகம் என்று லைவ்லியாக இருப்பார். காலையில் வந்ததும் டைப்ரைட்டருக்கு மூடிய தகரக் கூட்டின் இரண்டு பக்கப் பூட்டுக்களை கழற்றி, டேபிள் அறையிலிருந்து டங்க்ரி துணியால், குளுப்பாட்டிய குழந்தை மாதிரி வாஞ்சையோடு துடைத்து, கவரைக் கழற்றி டைப்பிங் பேஸ்கட்டில் ப்ரஷ் செய்து திரும்பப் பூட்டி, பதக்க இரண்டு உள்ளங்கையும் ஊன்றி கண்ணில் ஒற்றிக் கொள்ளும்போது வாய் முணு முணுக்கும். ஒரு வேளை டைப்ரைட்டர் அகவலோ, அந்தாதியோ அவரே இயற்றி இருக்கக் கூடுமாவென சந்தேகம் பலருக்கும் உண்டு. பிறகு டேபிள் கண்ணாடியின் கீழ் இருக்கும் வெங்கடாசலபதி, லக்ஷ்மி, சரஸ்வதி, பிள்ளையார், குருவாயூரப்பன், அண்ணாமலையான், முருகன் இத்யாதியோடு பல சாமியார் படங்களுக்கும் முணுமுணுப்பும் கண்ணொற்றுதலும் நடக்கும். பிறகு மேல் சட்டைப் பாக்கட்டிலிருந்து புறப்படும் பாக்கட் டைரியின் உள் மடிப்புகளில் இருக்கும் சில்லறை தெய்வ வழிபாடு, ஷார்ட் ஹேண்ட் நோட்டுக்கு ஸ்பெஷலாக முகத்தோடு ஒற்றி ஒரு நமஸ்காரம், கால் இண்டிகேட்டர் பச்சையில் இருக்கிறதா என்ற செக்கப்புக்குப் பிறகு ப்யூனை அழைத்து ஆஃபீசரை வரவேற்று ப்ரீஃப்கேஸ், சாப்பாட்டுப் பை கொண்டு வர அனுப்பி, ஆஃபீஸர் ரூம் துடைத்திருக்கிறதா, ஃபைல் எல்லாம் நேராக இருக்கிறதா, அவுட் ட்ரே சுத்தமாக இருக்கிறதா, டெலிஃபோன், இண்டர்காம், காலிங் பெல் செக்கிங் எல்லாம் முடித்து அயற்சியோடு வந்து ஒரு வாய் தண்ணீர் குடித்து முடிக்க, சார்வாள் வந்திருப்பார். ‘குட் மார்னிங் சாரோடு உள்ளே போய், அன்றைய கடைமைகளான மச்சினிக்கு டிக்கட், மாமனாருக்கு எமர்ஜன்ஸி கோட்டா தகவல், காசிச் செட்டித் தெருவில் வாங்க வேண்டிய பன்ஸி ரவைக்காக பிதுக்கி எண்ணிக் கொடுத்த சில்லரை ஆகியவற்றோடு வந்தால் அப்புறம் ஆரம்பிக்கும் வைத்தி மாமாவின் ராஜ்ஜியம். ஆர்டர் அதகளம் பறக்கும். சீனியர் ஸ்டெனோவாக இருந்தும், லேட்டஸ்டாக கோத்ரஜ் ஏ.பி., ரெமிங்டன் மெஷினெல்லாம் ஒத்து வராது. பழைய ஹால்டா மெஷின்தான். பக்கத்தில் குட்டியாக போர்ட்டபிள் ப்ரதர் டைப்ரைட்டரும் இருக்கும். வைத்தி டைப் அடிக்க ஆரம்பித்தால் கொஞ்சம் ரசனை உள்ளவர்களுக்கு அது ஒரு கச்சேரி. சில நேரம் மணி அய்யரின் அவுட்வாண சங்கதியாக, சில நேரம் பாலக்காடு மணி அய்யரின் ஃப்ரண்களாக, சில நேரம் சிவமணியின் ட்ரம்ஸாக ரசிக்க முடியும். இன்றைக்கு வேர்ட் ஃபைலில் ஃபார்மட் செய்வதற்கே மூச்சுத் திணறிப் போகும் வேளையில், அந்த வேகத்தில் அடிக்கும் போதே கூடிய வரை வலது பக்க மார்ஜினும் ஒழுங்காக, மேல் கீழ் மார்ஜின் சீராக, கடைசிக் கார்பன் காப்பியிலும் எல்லா எழுத்தும் ஒரே தெளிவுடன் இருக்கும்படியான கலைஞன் வைத்தி. ஒரு எழுத்து விட்டுப் போனதோ, ஸ்பெல்லிங் மிஸ்டேக்குக்கு கரக்டிங் ஃப்ளூயிட் போடுவதோ, எக்ஸ் அடிப்பதோ கிடையவே கிடையாது. பொதுவாக ஸ்டெனோக்கள், அதுவும் உயர் அதிகாரியின் ஸ்டெனோக்கள் காசுக்காக எக்ஸ்ட்ரா வேலை பார்ப்பது அரிது. வைத்தி மாமாவுக்கு அதெல்லாம் பொருட்டில்லை. வைத்தி மாமா டைப்பிங் என்றால் ப்ரூஃப் பார்க்கத் தேவை இல்லை என்பதால், ஊழியர்களின் வீட்டுக் கடன் அடமானப் பத்திரங்கள், ஒப்பந்தங்கள், காண்ட்ராக்ட் ஒப்பந்தங்கள், அலுவலக விசாரணை மனுக்கள் என்று பல வேலைகள் தேடி வரும். அத்திப் பூத்தாற்போல் டிக்டேஷனும் உண்டு. களைத்த விரலைச் சொடுக்குவது, பெருமூச்சு, சலிப்பு ஒன்றும் காணமுடியாது. இத்தனை வேலைகளுக்கு நடுவிலும் ஆஃபீஸ் அக்கப்போர்கள், கிசுகிசுக்கள், இதர ஆஃபீசர்களின் நிறை குறைகள் பற்றிய விமரிசனம் எல்லாவற்றிற்கும் எங்கிருந்து நேரம் ஒதுக்குகிறார் என்பது யாரும் அறியாத ஒன்று. வைத்தி மாமா, சில நேரம் மாமா என்று அழைக்கப்படுவதற்குக் காரணமும் உண்டு. மனுஷனுக்கு ஒரு குணக்கேடு உண்டு. ஒரு ஊகமாக வேறு யாரும் செய்ய வாய்ப்பில்லை என்று ஏகோபித்த கருத்துடன் இருந்தாலும் நிரூபிக்கவும் முடியாமல், கையும் களவுமாக பிடிக்க முடியாமல் வைத்தி மாமா செய்யும் ஒரு வேலை கூலரில், கக்கூஸ் கதவுகளில், லிஃப்டில் என்று ஜோடி சேர்த்து எழுதுவது. எங்கெங்கு காணினும் கமலா (ஹார்ட்டின் ஏரோ) அனந்து, டெய்ஸி/சுந்தரம், மெஹர்/கார்த்தி என்று சீர்திருத்தக் காதல் உட்பட சகலமும் காணலாம். கொடுமை என்னவென்றால் இது குறித்து ஆஃபீசரிடம் முறையிட பெர்மிஷன் கேட்டு வரும்போது மாமா அவர்களுக்கு ஆதரவாகத் திட்டும் திட்டில் வேறு யாராவது எழுதி இருந்தால் தற்கொலையே செய்துக் கொள்ளக் கூடும். யாராவது பிடிக்காத ஆட்கள் என்றால் மொட்டைப் பெட்டிஷன் போடுவது உபரிப் பொழுது போக்கு. மாமாவுக்கு மாதம் ஒரு முறை எப்படியாவது தீர்த்தவாரி ஆகிவிடும். காண்ட்ராக்ட் கிடைத்த மகிழ்ச்சியோ, கல்யாணம் நிச்சயமான கொண்டாட்டமோ, அலுவலகப் பரிட்சை பாசோ, மகன்/மகளுக்கு வேலையோ ஏதோ ஒரு சாக்கில் நடக்கும் பார்ட்டியில் வைத்தி மாமா உற்சாகமாகக் கலந்து கொள்வார். மூடியைத் திறக்கும்போதே முழி சொருகும் அளவுக்குதான் தாங்கும் சக்தி என்றாலும், விடுகிற பந்தா முழு பாட்டிலை ராவாக அடிக்கிறவன் தோற்கும் அளவிற்கு இருக்கும். பார்ட்டி முடிந்து மாமாவை வீடு சேர்க்கும் பொறுப்பு இருப்பதால் ப்யூனுக்கும் ஆங்கே பொசியும். ஒரு விரற்கணு மதுவுக்கு அரையடி நீர் சேர்த்து, தலை குலுக்கி, ஊறுகாய் நக்கி, சிப்ஸ் கடித்து, வடையோ, மிக்ஸரோ ஸ்ருதி சேர்த்து பார்ட்டி முடியும் வரை பாதி தாண்டியிருக்க மாட்டார். புறப்படும் நேரம் பெரிய குடிகாரன் மாதிரி ஒரு கல்ப்பில் முடித்து, ஹாய்/பை சொல்லி ப்யூனுடன் புறப்படும் போதுதான் சிக்கல். எத்தனை சாமர்த்தியமாக கூட்டிக் கொண்டு போனாலும் ஏதோ ஒரு தெருவிளக்குக் கம்பம் கண்ணில் பட்டு/கவனத்தில் பட்டால் போதும். அது சாய்ந்து விழுந்துவிடுவது போல் தோன்றுமோ என்னமோ? கைப்பையை காலிடுக்கில் வைத்துக் கொண்டு விளக்குக் கம்பம் சரியாமல் பிடித்துக் கொள்வார். படைத்த ப்ரம்மனே வந்தாலும் அவரைப் பிரிக்க முடியாது. ஒரே ஒரு வார்த்தை வெளிவராது. மணிக்கணக்கில் பிடித்தபடி நிற்பார். ப்யூன் ‘சார்! உழாது வா சார்! லாஸ்ட் ட்ரெயின் போயிடும் சார் வா சார்! என்ற கெஞ்சலெல்லாம் காதில் ஏறும் என்ற நம்பிக்கை பொய்த்தபின், சோடா வாங்கி முகத்தில் அடித்து, கன்னத்தில் தட்டி என்று சண்டிமாடு கணக்காய் இடம் பெயர்த்தினால் தள்ளாட்டமின்றி போவார். ஆனாலும் எப்போதும் சள சளவென்று பேசுபவர் ஊமையாகி விடுவார். சவடால் வைத்தி உண்மையில் பெரும் கோழை என்பதை விதி ஒரு நாள் காட்டிக் கொடுத்துவிட்டது. ஒரு ரவுடி ஊழியனை பணி நீக்கம் செய்தபின் அப்பீலுக்காக ஆஃபீசரைப் பார்க்க வந்திருந்தான். வரும்போதே நல்ல போதை. ஆஃபீஸர் அறையில் இல்லை என்பதை விட அவருக்கு குடிகாரர்களைக் கண்டால் இருக்கும் பயம் தெரியுமாதலால் சவடாலாக ’அதெல்லாம் இப்ப பார்க்க முடியாதுய்யா! தெளிஞ்சிருக்கும் போது வா!’ என்று எகிறியபோது துணைக்கு ப்யூன் இல்லை என்பதை மறந்துவிட்டார். ‘அய்ரே! என்னப் பார்த்தா போதை பண்ணா மாதிரியா தெரியுது?’ என்று அடிக்கப் பாய்ந்தபோது, தப்புக் கணக்குப் போட்டு ஆஃபீசரின் அறைக்குள் பாய்ந்து விட்டார். அதே வேகத்தில் பாய்ந்து அந்த ஊழியன் விட்ட ஒரு அறையில் அங்கிருந்த சோஃபாவில் விழுந்து, அபயக் குரல் எழுப்புவதற்குள், கொலை வெறியோடு விழுந்த சில அறைகளில் காலரா வந்தவன் போல் கழிந்து விட்டது. அப்புறம் ப்யூன்கள் ஓடி வந்து விலக்கி விட்டு, வைத்திமாமாவை டாய்லட்டுக்கு அழைத்துப் போய், எல்லாம் செய்தாலும் விலை உயர்ந்த சோஃபா கழித்துக் கட்டப்பட்டது. ஆனாலும், ஆட்டோ பிடித்து உடை மாற்றி கடமையுணர்வுடன் திரும்பவும் டூட்டிக்கு வந்த வைத்திமாமாவின் கடமை உணர்ச்சியை என்னவென்று பாராட்ட? ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து என்பார்களே அப்படி ஏதோ ஒரு சபிக்கப் பட்ட நேரத்தில் நேர்மையான, போலீஸில் உயர்மட்ட தொடர்புள்ள ஒரு அதிகாரியைக் கடிக்கத் தோன்றியது வைத்தியின் குணக்கேடு. ரிட்டையர் ஆக மூன்றாண்டு இருந்த நிலையில், ப்ரமோஷனுக்காக போய் பார்த்தபோது இவரின் குணக்கேடும் கூட ஒரு காரணமாக இருக்கக்கூடும், எல்லாருக்கும் நல்லவரான அந்த அதிகாரி கடுமையாகப் பேசிவிட்டார். அந்தக் கடுப்பில், ரொம்பவும் புத்திசாலித்தனமாக அவர் அறையில் இருந்த ஒரு பழைய டைப்ரைட்டரில் பொய்க் கையெழுத்தோடு விஜிலன்சுக்கு ஒரு பெட்டிஷன் தட்டிவிட்டார் வைத்தி. உயர் அதிகாரி ஆனதால் போலீசுக்கு கேஸ் போய்விட்டது. சந்தேக லிஸ்டில் வைத்திமாமா இருந்தார். புலனாய்வில் தேய்ந்து போன ஒரிரு எழுத்துக்களை வைத்து இவர் அறையில் இருந்த ஹால்டா டைப்ரைட்டரில்தான் அடிக்கப்பட்டிருக்கிறது என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சாட்சியம் போதாதுதான் என்றாலும், ஓரிரு அறைக்கே கழிந்தவர், போலீஸ் விசாரணைக்கு என்று அழைத்ததும் கலங்கிப்போனார். ஒரு மிரட்டல், ஒரு அறையில் ஒப்புதல் வாக்கு மூலம் கொடுத்துவிட்டு வெளிறிப் போய் வந்த பிறகு சஸ்பென்ஷன், பணி நீக்கம் என்றாயிற்று. திறமையான ஆள் என்றாலும் யாருக்கு எந்த நேர்த்தில் என்ன நேருமோ என்ற சந்தேகமும் சேர்ந்ததால் அப்பீல் எதுவும் ஏற்கப்படவில்லை. டிஸ்மிஸ் ஆனதால் பென்ஷன், க்ராச்சூவிடி, ரிடையர்மெண்ட் பாஸ் எதுவும் இல்லை. பின்பொரு நாள், ஹைகோர்ட் எதிர் சந்து ஒன்றில் நோட்டரி பப்ளிக்கிடம் அஃபிடவிட் வாங்கச் சென்றபோது ஒரு கடை ஓரத்தில் ஒரு பழைய ஹால்டா மெஷின் எதிரில் வைத்தி மாமா அமர்ந்திருந்தார். நீர்க்காவி வேட்டியும், காலர் கிழிந்த சட்டையும், செருப்பற்ற காலும், பொலிவிழந்த முகமுமாக இருந்த போதும், டைப்ரைட்டரில் விரல் பாவியபோது மணி அய்யர்களோ, சிவமணியோ அவர் விரலை விட்டு நீங்கி விடவில்லை.
இந்து மதக் கடவுளை அவமதித்துப் பேசியது மற்றும் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா முதல்வர் ஸ்டாலின் உள்பட பலரை அவதூறாக பேசியதாக குற்றம் சாட்டப்பட்ட பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா இன்று கைது செய்யப்பட்டார் என்பது தெரிந்ததே. இதனையடுத்து பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நிலையில் அவரை 15 நாட்கள் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை அடுத்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அவர் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்ட ஜார்ஜ் பொன்னையாவுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதாகவும் இதனை அடுத்து அவர் சிறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா சிறையில் அடைக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
இந்தக் காலத்தில் எதைப் பற்றிய தகவல் வேண்டுமானாலும் சிரமமே படவேண்டாம். கூகுள் மாமாவைக் கேட்டால் சல்லிசாக “இந்தத் தகவல் போதுமா? இன்னும் கொஞ்சம் வேண்டுமா?” என்று கொண்டு வந்து கொட்டிவிடுவார். ஆனால், ஒரு பத்து, இருபது ஆண்டுகளுக்கு முன்பு வரை நிலைமை இப்படி இல்லை. தமிழ் சினிமா குறித்த எந்த தகவல் வேண்டுமானாலும் தருவதற்கு ஒரே ஒருவர்தான் இருந்தார். அவர்தான் ‘ஃபிலிம் நியூஸ் ஆனந்தன்”. பத்திரிகை அலுவலகங்களில் ஒரு பழைய சினிமாவின் ஸ்டில் தேவையென்றால், உடனே ஆசிரியர் சொல்லுவார்: "ஃபிலிம் நியூஸ் ஆனந்தனுக்கு போன் செஞ்சு கேளுங்க!" ஒரு குறிப்பிட்ட படத்தின் பிரதான வில்லன் நம்பியாரா?அசோகனா? என்று ஒரு பத்திரிகையாளருக்கு சந்தேகம் வந்தால், அதைத் தீர்த்துக்கொள்ள ஆனந்தனுக்குத்தான் போன் செய்வார்கள். சினிமா உலகைச் சேர்ந்த யாருடைய டெலிபோன் எண் தேவை என்றாலும், உதவிக்கரம் நீட்டுபவர் ஆனந்தனேதான்! அவ்வளவு ஏன். " தேவி தியேட்டரில் எத்தனை மணிக்கு சார் மேட்னி ஷோ? ‘தசாவதாரம்’ படம் ரிலீஸ் எப்போ சார்?" என்றெல்லாம்கூட மதியான வேளையில் அவர் சற்று கண் அசரும் நேரத்திலும் சினிமா ரசிகர்கள் அவருக்கு ஃபோன் செய்து, தொந்தரவு செய்த நாட்கள் பல உண்டு. இதை அவரே என்னிடம் மனம் நொந்து சொல்லி இருக்கிறார். அவர் பல்லாண்டுகளாக தான் தொகுத்து வைத்திருந்த ஒவ்வொரு தமிழ்ப் படத்தைப் பற்றிய தகவல்களையும் முழுமையாகத் தொகுத்து " சாதனைகள் படைத்த தமிழ்த் திரைப்பட வரலாறு" என்ற சுமார் 750 பக்க புத்தகமாக வெளியிட்டார். அது தமிழ் சினிமாவின் பொக்கிஷம் என்றால் மிகை இல்லை. தனது 90 வயது வரை சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருந்த சினிமாத் தேனீ அவர். ஆனந்தனிடம் தகவல்கள் கேட்டுப் பெற்று செய்திகள், பேட்டிகள் வெளியிடுவது பத்திரிகையுலக வழக்கம் என்றாலும், அவரது அனுபவங்களை அவரே சொல்லக்கேட்டு, தொடராக ‘அமுதசுரபி’பத்திரிகையில் எழுதும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அதற்கு அவர் அளித்த ஒத்துழைப்பு அபாரமானது. ஒவ்வொரு முறையும், அவரது தகவல் சுரங்கத்திலிருந்து கிடைக்கும் விஷயங்கள் வெகு சுவாரசியமாக இருக்கும். சில சமயங்களில், சிலரைப் பற்றி ஆச்சர்யகரமான, அம்பலத்துக்கு வராத தகவல்களையும் கூட “ஆஃப் தி ரெக்கார்டு” ஆக சொல்லுவார். “தனது வாழ்க்கை அனுபவங்கள் முழுமையான ஒரு தொடராக அச்சில் பதிவு செய்யப்படுகிறது” என்ற வகையில் ஆனந்தனுக்கு மிகுந்த மகிழ்ச்சி அளித்தது அந்தத் தொடர். வசதியான குடும்பத்தில் பிறந்தவர் ஆனந்தன். ஐம்பதுகளின் துவக்கத்தில் மகன் ஆசைப்படுகிறான் என்பதற்காக மூவாயிரம் ரூபாய் கொடுத்து புத்தம் புது ரோலிஃப்ளெக்ஸ் கேமரா (ஜெர்மன் தயாரிப்பு) வாங்கிக் கொடுத்தார் ஆனந்தனின் அப்பா ஞானசாகரம். அவர் ஏ,ஜி'ஸ் அலுவலகத்தில் துணை அக்கவுண்டென்ட் ஜெனெரல் ஆக பதவி வகித்தவர். ஆனந்தனின் தாத்தா கிருஷ்ணசாமி முதலியார் பச்சையப்பன் கல்லூரியில் தமிழ் ஆசிரியராகப் பணியாற்றியவர். ஒருநாள் அப்பா வாங்கிக் கொடுத்த புது கேமராவோடு, நியூடோன் ஸ்டுடியோவுக்குப் போனார் ஆனந்தன். “அங்கே ‘ராஜா ராணி’ படத்தின் ஷூட்டிங் நடந்து கொண்டிருந்தது. ஓர் ஓரமாக வயசான ஒருவர் ஈசி சேரில் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தார். அருகில் சென்று பார்த்தபோது இன்ப அதிர்ச்சி! தயக்கத்துடன், "உங்களை போட்டோ எடுத்துக் கொள்ளலாமா? என்று தமிழில் கேட்டேன். அவர், என்னை நேருக்கு நேர் பார்த்து, "Of course you can take" என்று ஆங்கிலத்தில் பதில் அளித்தார். அன்று நான் படமெடுத்த முதியவர் (மேக்-அப்பில் இருந்தவர்) யார் தெரியுமா? சிவாஜி கணேசன்!" என்று எண்பது வயதில் கூட உற்சாகத்துடன் பழைய அனுபவங்களை நினைவு கூறுவார். ‘கெய்ரோ’ திரைப்பட விழாவில் (1959) ‘வீரப்பாண்டிய கட்டபொம்மன்’ படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான விருதைப் பெற்றுக் கொண்டு, இந்தியா திரும்பியவுடன், சிவாஜிக்கு சினிமா பத்திரிகையாளர்கள் சங்கத்தின் சார்பில் , ஒரு பாராட்டு விழாவுக்கு ஏற்பாடு செய்தார் ஆனந்தன். சிவாஜியின் சம்மதம் பெற்றுவிட்ட சூழ்நிலையில், விழாவை நடத்த ஓட்டல் கிடைக்கவில்லை. கடைசியில், சிவாஜியிடம் நிலைமையை விளக்கிச் சொல்லி, தன் வீட்டின் பெரிய மொட்டை மாடியில் ஷாமியானா போட்டு சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் கலந்துகொள்ள, பாராட்டுவிழாவை நடத்தி ஜமாய்த்துவிட்டார் ஆனந்தன். அந்த நிகழ்ச்சியில் மனம் திறந்து சிவாஜி தெரிவித்த சில கருத்துக்கள் தமிழகத்தில் சில சர்ச்சைகளை ஏற்படுத்தின. இன்னொரு சுவாரசியமான தகவலையும் சொன்னார் ஆனந்தன். கெய்ரோ திரைப்படத் திருவிழாவின் நிறைவு விழாவில், “ சிறந்த நடிகருக்கான விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பவர் மிஸ்டர் சிவாஜி கணேசன், இந்தியா” என்று அறிவிக்கப்பட்டபோது, சிவாஜி கணேசன் அரங்கத்தில் இருந்தாலும் அதை அவர் கவனிக்கவில்லை. பக்கத்தில் அமர்ந்திருந்த பத்மினிதான் சந்தோஷத்தில் துள்ளிக் குதித்து, சிவாஜியிடம் விஷயத்தைச் சொன்னாராம். எம்.ஜி.ஆர். ‘நாடோடி மன்னன்’ படம் எடுத்துக் கொண்டிருந்த சமயம், வித்வான் லட்சுமணன் மூலமாக ஆர்.எம். வீரப்பனோடு ஆனந்தனுக்கு அறிமுகம் ஏற்பட்டது. அதன் மூலமாக, அந்தப் படத்தின் ஸ்டில்களைப் பெற்று, எல்லா பத்திரிகைகளுக்கும் வினியோகித்து, படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பாகவே, எம்.ஜி.ஆரின் இரட்டை வேட புகைப்படங்களை பத்திரிகைகளில் வெளிவரச் செய்துவிட்டார் ஆனந்தன். அந்த புகைப்படங்களைப் பார்த்து எம்.ஜி.ஆர். ரசிகர்கள் திக்குமுக்காடிப் போனார்களாம். அது மட்டுமில்லை, இது எம்.ஜி.ஆரையே வியப்பில் ஆழ்த்தியது. இதற்குக் காரணமானவர் ஆனந்தன் என்பதை அறிந்து, அவரைப் பாராட்டிய எம்.ஜி.ஆர். பட ரிலீசின்போது, பத்திரிகையாளர்களுக்கான காட்சிக்கான ஏற்பாடுகளைச் செய்யும் பொறுப்பையும் ஆனந்தன் வசமே ஒப்படைத்தார். அதன் பிறகு பல்லாண்டுகளுக்கு, படத்துக்கு யார் பி.ஆர்.ஓ. என்றாலும், பிரஸ் ஷோவுக்கான ஏற்பாடுகளை ஆனந்தன்தான் செய்யவேண்டும் என்பது எம்.ஜி.ஆரின் உத்தரவு. அதேபோல, பிரஸ் ஷோ நடந்த மறுநாள் காலை ஆனந்தனுக்கு ஃபோன் செய்து, படம் பற்றி முக்கியமான பத்திரிகையாளர்களின் கருத்து என்ன என்று கேட்டுத் தெரிந்துகொள்வது எம்.ஜி.ஆரின் வழக்கம். சினிமா செய்திகளை சேகரித்து பத்திரிகைகளுக்குக் கொடுத்ததால் அவருக்கு “பிலிம் நியூஸ் ஆனந்தன்” என்று பெயர் வந்தது என்று பலரும் நினைப்பார்கள். ஆனால், அதற்குக் கூட ஒரு சுவையான கதை உண்டு. ஒரு புகைப்படக்காரராக பல ஸ்டூடியோக்களுக்கும் சென்று எடுக்கிற புகைப்படங்களையெல்லாம் பிரிண்ட் போட்டு, அழகான ஆல்பங்களில் ஒட்டிவைப்பது ஆனந்தனின் பழக்கம். படமெடுக்க ஸ்டுடியோக்களுக்கு அவர் தன் காரில்தான் போவார். அப்படி ஸ்டுடியோ ரவுண்டு செல்லும்போது, அந்த ஆல்பங்களை தனது காரிலேயே வைத்திருப்பது அவரது பழக்கம். ஒரு நாள், பாண்டிபஜாரில் தன்னுடன் கல்லூரியில் படித்த நண்பரான தேவராஜன் என்பவரை சந்தித்தபோது, அவர், ஆனந்தனின் ஆல்பங்களைப் பார்த்து ஆச்சரியப்பட்டார். "நான் 'பிலிம் நியூஸ்' என்று ஒரு சினிமா மாதப் பத்திரிகை நடத்திக் கொண்டிருக்கிறேன். நீ எடுக்கும் புகைப்படங்களை என் பத்திரிகைக்குக் கொடு" என்றார் தேவராஜ். பிலிம் நியூஸ் பத்திரிகையின் தீவிர வாசகரான ஆனந்தன், அந்தப் பத்திரிகையின் ஆஸ்தான புகைப்படக்காரர் ஆனார். "ஃபிலிம் நியூஸ் பத்திரிகைக்காக இந்த புகைப்படங்களை பிரத்யேகமாக எடுத்தவர் "பிலிம் நியூஸ் ஆனந்தன்" என்று ஸ்பெஷலாக முக்கியத்துவம் அளித்து, ஆனந்தன் எடுத்த புகைப்படங்கள் வெளியாகத் துவங்கின. இப்படியாகத்தான் வெறும் ஆனந்தன், 'பிலிம் நியூஸ் ஆனந்தன்' ஆனார். பேசும் படம் பத்திரிகைக்காக, டைரக்டர் ஸ்ரீதரை விதம் விதமான போஸ்களில் ஆனந்தன் ஏராளமான புகைப்படங்கள் எடுத்தார். அப்போது, ‘கல்யாணப் பரிசு’ படம் பற்றி உணர்ச்சி பொங்க நிறைய பேசினார் ஸ்ரீதர். பேச்சு சுவாரசியத்தில், படத்தின் கிளைமாக்ஸையும் சொல்லிவிட்டார். உடனே, "படத்தின் கிளைமாக்ஸ் என்ன என்பது என் பார்ட்னர்களுக்குக் கூடத் தெரியாது. எனவே, அது பற்றி எந்தப் பத்திரிகையாளரிடமும் சொல்லிவிடாதீர்கள்" என்று கேட்டுக் கொண்டார். அதன் படி ஆனந்தன், கல்யாணப் பரிசு கிளைமாக்ஸ் பற்றி படம் ரிலீஸ் வரை யாரிடமும் மூச்சுவிடவில்லை. இன்று, படம் ரிலீசான மறுநாளே படத்தின் வெற்றி விழா, பிரஸ் மீட், பார்ட்டி என்று கொண்டாடுகிறார்கள். ஆனால், அந்தக் காலத்தில் படங்கள் நிஜமாகவே நூறு நாட்கள், 200 நாட்கள் ஓடின. தயாரிப்பாளர்கள், அதை விழா எடுத்துக் கொண்டாடினார்கள். படங்கள் நூறு நாட்கள் ஓடுவதைப் போலவே,சினிமா நட்சத்திரங்கள் நூறு படங்களில் நடிப்பதும் ஒரு சாதனைதானே? அத்தகைய சாதனை நட்சத்திரங்கள் நடித்த நூறு படங்களிலிருந்தும் படத்துக்கு ஒரு ஸ்டில் வீதம் தேர்ந்தெடுத்து, அவற்றைத் தொகுத்து ஒரு ஆல்பம் தயாரித்து, அந்த நட்சத்திரங்களிடம் கொடுத்து, அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியவர் ஆனந்தன். அந்த நட்சத்திரங்களில் ஜெயலலிதா, கே.ஆர். விஜயா. சிவகுமார் உட்பட பலரும் அடக்கம். ஆனாலும், அந்தப் பணிகளை செய்து முடிப்பதற்குள் அவர் பட்ட கஷ்டங்கள்! அப்பப்பா! எம்.ஆர்.ராதா மிகவும் வித்தியாசமான மனிதர். ஒரு முறை புகைப்படம் எடுக்க ஆனந்தன் அவரது வீட்டுக்குப் போயிருந்தபோது "ரஷ்யா" என்று எம்.ஆர்.ராதா அழைக்க, ஒரு பையன் வந்தான். சற்று குழப்பமாகி, "என்ன சார்! பையன் பேரு ரஷ்யாவா?" என்று கேட்டபோது, " ஏன், பழனி, சிதம்பரம், திருப்பதின்னு இங்கே பசங்களுக்கு பேர் வைக்கிறபோது, நான் ரஷ்யான்னு பேர் வைக்கக்கூடாதா? என்று அவர் லாஜிக்காக பதில் கேள்வி கேட்டார். ராதாவையும், அவர் அன்றைக்குக் கேட்ட கேள்வியையும் என்னால் மறக்கவே முடியாது" என்பார் ஆனந்தன். எம்.ஜி.ஆரை சுட்ட விவகாரத்தில் தண்டனை பெற்று, சிறையிலிருந்து விடுதலையானவுடன், எம்.ஆர். ராதா பத்திரிகையாளர்களை சந்திக்க ஏற்பாடு செய்தார் ஆனந்தன். ஒரு பத்திரிகையாளர் எம்.ஜி.ஆரை. எம்.ஆர். ராதா சுட்டதைப் பற்றி விவகாரமான கேள்வி ஒன்றைக் கேட்க, ராதா ஏதாவது பதில் சொல்லி அது ஏதாவது பெரிய ரகளையாகிவிடுமோ என்று ஆனந்தன் பயந்தபோது, ராதா அந்தக் கேள்விக்கு வெகு சாதுரியமாக ஒரு பதிலைச் சொல்லி சர்ச்சை எதுவும் ஏற்படுத்த வழியே இல்லாமல் நழுவி விட்டார். ராதாவின் பதில்: " நாங்க சும்மா துப்பாக்கியால விளையாடினோம் அவ்வளவுதான்" என்பதுதான். எழுபதுகளில், சினிமாக் கலைஞர்களின் முகவரிகளைத் தொகுத்து “திரைக் கலைத் தொகுப்பு” என்று ஒர் புத்தகம் வெளியிட்டார் ஆனந்தன். அதற்கான செலவுக்காக அவர் வங்கி ஒன்றில் கடன் வாங்கினார். புத்தகத்தின் வெளியீட்டு விழாவில் பல நட்சத்திரங்கள் கலந்துகொண்டார்கள். அவர்களில் பலரும் மேடையில் புத்தகப் பிரதியை வாங்கிக்கொண்டு, மைக்கில் "ஆனந்தனுக்கு இந்தப் புத்தகத்துக்காக நான் ஆயிரம் ரூபாய் அளிக்கிறேன்; 2000 ரூபாய் அளிக்கிறேன்; 5000 தருகிறேன் என்றெல்லாம் அறிவித்தார்கள். அவர்கள் மேடையில் அறிவித்தார்களே தவிர, அறிவித்தபடி யாரும் பணம் கொடுக்கவில்லை. ஆனால், மறுநாள் ஆனந்தனுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. வங்கி மேனேஜர் ஃபோன் செய்து, "பேப்பரில் வெளியீட்டு விழா நியூஸ் பார்த்தேன். நட்சத்திரங்கள் பலர் நிறைய பணம் கொடுத்திருக்கிறார்கள் போல இருக்கே! நாளைக்கே வாங்கின வங்கிக் கடனை அடைத்துவிடுங்கள்!" என்று சொன்னதும், அதிர்ச்சியில் உறைந்துபோனார் ஆனந்தன். ஒவ்வொரு ஆண்டும் இறுதியில் அந்த ஆண்டில் வெளியான தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், சென்சார் ஆகி, ரிலீஸ் ஆகாத படங்கள், விழா கொண்டாடிய படங்கள், அந்த ஆண்டில் நிகழ்ந்த திரைப்பிரபலங்களின் திருமணம், மறைவு உள்ளிட்ட முக்கிய தகவல்கள் இவற்றை எல்லாம் தொகுத்து சிறு புத்தகமாக அச்சிட்டு, பத்திரிகையாளர்களுக்கு வழங்குவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். 2016ல் ஃபிலிம் நியூஸ் ஆனந்தன் மறைந்தார். அவருக்குப் பின் அப்பணியை வேறு யாரும் தொடரவில்லை.
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் பலமனேர் அருகே பிரேக் செயலிழந்த கண்டெய்னர் லாரி ஷேர் ஆட்டோ, மோட்டார்சைக்கிள் ஆகியவற்றின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் விவசாயக் கூலி வேலைக்கு சென்று ஷேர் ஆட்டோவில் வீடு திரும்பிக்கொண்டிருந்த 10 பெண்கள், மோட்டார் சைக்கிளில் சென்ற ஒரு ஆண் உட்பட 11 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் உடல்கள் எளிதில் அடையாளம் காண இயலாத வகையில் நசுங்கி விட்டன. தீவிர முயற்சிக்கு பின் இதுவரை ஐந்து உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. Published by:Yuvaraj V First published: November 08, 2019, 20:30 IST உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம். Tags: Accident, Andhra Pradesh Latest Story Links Trending Tag Latest Story Chennai IITJobsPudukkottaiCrime NewsMayiladuthuraiChennaiChennai PoliceActor Arun VijayVizhupuramdoctorCrime NewsSelfieParvathy NairJobsTamil Nadu Government Jobs
பழநி: பழநி அருகே கோழி பண்ணையில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 ஆயிரம் கோழிக்குஞ்சுகள் கருகி பலியாகின. திண்டுக்கல் மாவட்டம், பழநி அருகே தா.புதுக்கோட்டையை சேர்ந்தவர் கர்ணன் (65). விவசாயி. தனது தோட்டத்தில் கோழிப்பண்ணை வைத்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கோழிப்பண்ணையில் 5 ஆயிரம் கோழிக்குஞ்சுகளை விட்டுள்ளார். நேற்று அதிகாலை கோழிப்பண்ணையில் திடீரென தீப்பிடித்தது. தீ மளமளவென பற்றி எரிந்ததை கண்டு அக்கம்பக்கத்து தோட்டத்தில் இருந்தவர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து ஒட்டன்சத்திரம் தீயணைப்பு துறையினர் நிலைய அலுவலர் ராஜேந்திரன் தலைமையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். சுமார் 1 மணி நேரத்திற்கும் மேல் போராடி தீயை அணைத்தனர். அதற்குள் கோழிப்பண்ணை முழுவதும் எரிந்து நாசமானது. இதில் இருந்த சுமார் 5 ஆயிரம் கோழிக்குஞ்சுகள் கருகி பலியாகின. சத்திரப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீ விபத்திற்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர். Related Stories: தூத்துக்குடி மாவட்டத்தில் மீனவர்கள் இன்று முதல் மறு உத்தரவு வரும் வரை கடலுக்குச் செல்ல வேண்டாம்: மீன்வளத்துறை அறிவுறுத்தல் படை வீரர்களின் குடும்பங்களுக்கு பாதுகாப்பான வாழ்க்கையை அமைத்து தருவது நம் கடமை: முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடி நாள் செய்தி கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு அண்ணாமலையார் கோயிலில் அதிகாலை 4 மணிக்கு பரணி தீபம் ஏற்றப்பட்டது: ‘ஏகன் அநேகனாய்’ அருட்காட்சி இலங்கை கடற்பகுதிக்குள் இந்திய மீனவர்கள் வந்தால் துப்பாக்கிச்சூடு நடத்த அதிகாரம்: டக்ளஸ் தேவானந்தா பதிலால் சர்ச்சை வேலூர் மாநகராட்சியில் தரமற்ற சாலை உதவி பொறியாளர் சஸ்பெண்ட் என்எல்சி நில அளவை பணிக்கு கடும் எதிர்ப்பு ஊருக்குள் நுழைய விடாமல் அதிகாரிகளை தடுத்த மக்கள்: சாலையில் அமர்ந்து போராட்டம் தீபத்திருவிழா கோலாகலம் 2,668 அடி உயர மலை மீது மகாதீபம் இன்று பாபர்மசூதி இடிப்பு தினம்; மேலப்பாளையம், காயல்பட்டினத்தில் 1200 கடைகள் அடைப்பு: நெல்லை, தூத்துக்குடி, தென்காசியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு கார்த்திகை தீபத் திருநாளை ஒட்டி பேரூர் படித்துறையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விளக்குகளை ஏற்றி ஜொலிக்க வைத்த கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர். திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா: பொதுமக்கள் வசதிக்காக 2700 சிறப்பு பேருந்துகள் இயக்கம்; அமைச்சர் சிவசங்கர் தகவல் திருகார்த்திகையை முன்னிட்டு உடலில் தீபங்கள் ஏற்றி யோகா: ராஜபாளையம் மாணவர்கள் அசத்தல் குமரியில் பிரசித்திபெற்ற சுசீந்திரம் கோயில் மார்கழி திருவிழா 28ம் தேதி தொடக்கம்: ஜன.5ல் தேரோட்டம் ஆனந்தூர் அருகே சாலை தரைப்பாலம் சேதம் மேம்பாலம் கட்டித் தர வேண்டும்: பொதுமக்கள் வேண்டுகோள் புதர் மண்டி கிடக்கும் பொது கழிவறை: சீரமைக்க வலியுறுத்தல் திருவாரூாில் ஆதரவற்றோர் 25 பேர் காப்பகத்தில் ஓப்படைப்பு திருப்பூர் வனக்கோட்டத்தில் குளிர்கால புலிகள் கணக்கெடுப்பு பணி துவங்கியது பந்தலூர் அருகே தொழிலாளர் குடியிருப்பில் புகுந்து உணவு பொருட்களை சூறையாடிய காட்டு யானை: பின்வாசல் வழியாக தொழிலாளி தப்பி ஓட்டம் திருக்கார்த்திகையை முன்னிட்டு மண்ணை மலையாக்கும் விநோத திருவிழா: மேலூர் அருகே பொதுமக்கள் வழிபாடு திருவண்ணாமலை மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்பட்டது: விண்ணைப் பிளக்கும் அளவிற்கு பக்தர்கள் முழக்கம் திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழா: அரோகரா’ முழக்கம் விண்ணை பிளக்க 2,668 அடி உயர மலை மீது மகாதீபம் ஏற்றம்
ஐம்பதாவது சர்வதேச திரைப்பட விழா கோவாவில் கோலாகலமாக தொடங்கியது. இதில் இந்திய திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டனர். இவ்விழா நவம்பர் 20 முதல் நவம்பர் 28 வரை நடைபெறும். இதில் Super Star ரஜினிக்கு இந்திய அரசு ஐகான் ஆப் கோல்டன் ஜூப்ளி விருது வழங்கி கௌரவித்தது. Super Star Rajinikanth receiving award சர்வதேச திரைப்பட விழா 2019 இந்த விழாவில் சிறந்த திரைப்படங்களுக்கு அங்கீகாரம் தரும் வகையில், இந்த 9 நாட்களில் 250 திரைப்படங்கள் திரையிடப்படவுள்ளது. அதுமட்டுமின்றி இந்த விழாவின் 50-ஆம் ஆண்டை கொண்டாடும் விதமாக பெண் இயக்குனர்கள் இயக்கிய மற்றும் தயாரித்த 50 படங்கள் திரையுலக பெண்களை சிறப்பிக்கும் வகையில் திரையிடப்படும் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவேத்கர் தெரிவித்தார். இந்த விழாவில் தமிழ் திரையுலகிற்கே பெருமை சேர்க்கும் வகையில் நமது Super Star ரஜினிகாந்த் அவர்களுக்கு ஐகான் ஆப் கோல்டன் ஜூப்ளி விருதையளித்து கௌரவப்படுத்தியுள்ளது இந்திய அரசு. இந்த விருதுக்கான அறிவிப்பை கடந்த நவம்பர் 2-ஆம் தேதி மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவேத்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். In recognition of his outstanding contribution to Indian cinema, during the past several decades, I am happy to announce that the award for the ICON OF GOLDEN JUBILEE OF #IFFI2019 is being conferred on cine star Shri S Rajnikant. IFFIGoa50 pic.twitter.com/oqjTGvcrvE — Prakash Javadekar (@PrakashJavdekar) November 2, 2019 விழாவில் ரஜினிகாந்த் தனது மனைவி லதா ரஜினிகாந்துடன் கலந்து கொண்டார். அங்கு பேசிய ரஜினிகாந்த் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனை தனது Inspiration என புகழ்ந்தார். Super Star Rajinikanth with Amitabh Bachchan and Union minister Prakash Javadekar “இந்த விருதை எனக்கு வழங்கி கௌரவித்த இந்தியா அரசுக்கும், இங்கு அமர்ந்திருக்கும் அனைத்து பெரியவர்களுக்கும் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். என் திரையுலக வாழ்க்கையில் எனக்கு உறுதுணையாக இருந்த என் இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் என்னை வாழ வைக்கும் தெய்வங்கள் ஆகிய என் அன்பார்ந்த தமிழ் மக்களுக்கும் இந்த மதிப்பிற்குரிய விருதை சமர்ப்பிக்கிறேன்”, என விழாவில் ரஜினி உரையாற்றினார். மேலும் இந்த விருதை தனக்கு அறிவித்ததற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இரண்டு டுவீட்களை தன ட்விட்டர் பக்கத்தில் ரஜினிகாந்த் பதிவிட்டிருந்தார். I thank the government of India for this prestigious honour bestowed upon me on the golden jubilee of the International film festival of India 🙏🏻#IFFI2019 — Rajinikanth (@rajinikanth) November 2, 2019 Many thanks to all my well-wishers, friends, colleagues from the film industry, political leaders and my dearest fans … for the warm wishes & greetings for the honour conferred upon me by the government of india. 🙏🏻 #IFFI2019 — Rajinikanth (@rajinikanth) November 2, 2019 ரசிகர்கள் கொண்டாட்டம் சூப்பர்ஸ்டார் ரஜினிக்கு இந்த விருது கிடைத்ததை அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர். #PrideIconOfIndiaRAJINIKANTH என்ற ஹாஷ்டாகை உபயோகித்து ரஜினிகாந்திற்கு வாழ்த்துக்களை ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் தெரிவித்து வருகின்றனர். ரஜினிகாந்தின் 44 வருட திரையுலக வாழ்க்கையில் அவர் 40-ற்கும் மேற்பட்ட விருதுகளை இதுவரை பெற்றுள்ளார். கலைமாமணி, பத்ம பூஷன் என பல மதிப்பிற்குரிய விருதுகளைப் பெற்று சாதனையின் சிகரமாக திகழ்கிறார் நமது சூப்பர்ஸ்டார். வெற்றிப் பயணம் 160-ற்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள ரஜினி, தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம், பெங்காலி, ஆங்கிலம் என பல்வேறு மொழிப்படங்களிலும் நடித்துள்ளார். 1975-ல் பாலச்சந்தர் இயக்கிய அபூர்வ ராகங்கள் படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்த ரஜினி, 44 வருடங்களில் தனக்கென ஒரு பெரிய ரசிகர்கள் சாம்ராஜ்ஜியத்தையே உருவாக்கியுள்ளார். ஒரு சாதாரண பேருந்து நடத்துனர் நினைத்தால் கூட மக்களின் சூப்பர்ஸ்டார் ஆகலாம் என நிரூப்பித்து, பலருக்கும் சிறந்த உதாரணமாக ரஜினி திகழ்கிறார். Super Star Rajinikanth at IFFI-2019 தற்போது A.R.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள தர்பார் திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். அதைத் தொடர்ந்து சன் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் ‘சிறுத்தை’ சிவா இயக்கும் தலைவர் 168-ல் ரஜினி நடிக்கவுள்ளார். சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மேலும் பல விருதுகளையும், அங்கீகாரங்களையும் பெற சூரியன் FM சார்பில் வாழ்த்துகிறோம்.
தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ’வாரிசு’. இப் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வரும் நிலையில் அவர் நடிக்கயிருக்கும் ‘தளபதி 67’ திரைப்படத்தின் படப்பிடிப்பு இவ்வருட இறுதியில் தொடங்கும் என்று கூறப்படுகின்றது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகயிருக்கும் இந்த படத்தில் ஆக்சன் கிங் அர்ஜூன் உள்பட 6 வில்லன்கள் நடிக்க இருப்பதாகவும் வில்லன்களில் ஒருவராக பிரபல இயக்குனர் கௌதம் மேனன் நடிக்க உள்ளார். கௌதம் மேனன் இந்த படத்திற்காக 47 நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ளதாக தகவல் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இப்படத்தில் த்ரிஷா, சமந்தா, கீர்த்தி சுரேஷ் ஆகிய 3 நாயகிகள் நடிப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் கௌதம் மேனன் இந்த படம் முழுவதும் ட்ராவல் செய்யும் ஒரு கேரக்டரில் நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அனிருத் இசையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தை லலித் குமார் தயாரிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. Tags: Anirudh Arjun Gowtham menon Keerthy Suresh Lalith Kumar Lokesh Kanagaraj samantha Thalapathy 67 Trisha Vijay கீர்த்தி சுரேஷ் சமந்தா தளபதி 67 த்ரிஷா விஜய் Share on Share on Facebook Share on Twitter Share on Pinterest Share on WhatsApp Share on WhatsApp Share on Linkedin Share on Tumblr Share on Reddit
நீ இங்கே இருக்கிறாய்: வீடு » தயாரிப்புகள் » கேப்பிங் மெஷின் » தானியங்கி தொடர்ச்சியான கேப்பிங் இயந்திரம் தானியங்கி தொடர்ச்சியான கேப்பிங் இயந்திரம் தானியங்கி தொடர்ச்சியான கேப்பிங் இயந்திரம் சுருக்கமான அறிமுகம்: இந்த இயந்திரம் 1-5 எல் மசகு எண்ணெய் தயாரிப்புகளுக்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது சி.என்.சி ஒற்றை-தட மின்சார ஒற்றை-தலை கிராப்-வகை கண்காணிப்பு திருகு தொப்பியை ஏற்றுக்கொள்கிறது. பிரான்ஸ் ஷ்னீடர் சர்வோ சிஸ்டம், பிரான்ஸ் ஷ்னீடர் பி.எல்.சி நிரல்படுத்தக்கூடிய கட்டுப்பாடு, தொடுதிரை மனித-இயந்திர இடைமுக செயல்பாடு, அனைத்து அளவுருக்கள் தொடுதிரையில் சமமாக மாற்றப்பட்டுள்ளன. சர்வோ மோட்டாரால் தானியங்கி பிடிப்பு மற்றும் கேப்பிங் முடிக்கப்படுகின்றன, மேலும் இயக்கம் துல்லியமானது மற்றும் வேகம் வேகமாக இருக்கும். சர்வோ சிஸ்டம் + முறுக்கு தொகுதி கேப்பிங் தலையைக் கட்டுப்படுத்துகிறது, மேலும் தொப்பி இறுக்கம் சுதந்திரமாக அமைக்கப்படுகிறது. கேப்பிங் தலை வேலை செய்யும் போது, செட் முறுக்கு தானாகவே நிறுத்தப்படும். எலக்ட்ரிக் ரோட்டரி வகை கேப்பிங் இயந்திரம் நேர்மறை மற்றும் எதிர்மறை அட்டைகளுக்கு இரட்டை ஒளிமின்னழுத்தத் திரையிடலைப் பயன்படுத்துகிறது, மேலும் ஸ்கிரீனிங் பாஸ் வீதம் 100% ஆகும்.
தமிழில் இணையங்கள் பெருகிவிட்டன. இணையங்களில் எழுதுபவர்களும் பேசுபவர்களும் பெருகிவிட்டார்கள். இணையங்களைப் பார்ப்பவர்களும் பெருகிவிட்டார்கள். மிகவும் வரவேற்க வேண்டிய பெருக்கம். ஆனால், இணையச் சமூகப் பெருக்கத்துடன் எழுத்துத் தவறுகளும் பெருகிவிட்டன. நல்ல உணவில் கல்லும் மண்ணும் கடிபடுவது போலத் தவறுகள் உறுத்துகின்றன. தமிழில் தொடர்பாடல் ஊக்குவிக்கப்பட வேண்டும், அதேவேளை தவறுகளும் களையப்பட வேண்டும். சமூக ஊடகங்களில் தவறுகளைக் கண்டும் காணாமல் சகித்துக் கொள்வது, தவறுகளுக்குத் துணைபோவதாகும். தொடரச்சியாக இழைக்கப்படும் தவறு பழக்கமாகி வழக்கமாகிவிடும். தமிழ் மரபு கெட்டுப்போகும். இணையங்களில் தமிழ் ஓர் அளவுக்கு ‘அந்த நிலைமைக்கு’ வந்துவிட்டது. தமிழில் தவறின்றி எழுத வழிகாட்டிகளாகப் பல நூல்கள் உள்ளன. சொற்களைத் தேடிப் பார்க்கப் பல நிகண்டுகளும் அகரமுதலிகளும் உள்ளன. ஆனாலும், இணையச் சமூகத்தில் உள்ள பலர் அவற்றைக் கண்டுகொள்வதாகத் தெரியவில்லை. தொடர்ச்சியாகத் தவறுகள் இழைக்கப்படுகின்றன. தவறுகளைக் கண்டுபிடித்துக் கூண்டில் ஏற்ற ‘இணையத் தமிழ்க்காவல் நிலையம்’ பல தோன்றவேண்டும். நாம் (நான் உட்பட) விடும் தவறுகளைச் சுட்டிக்காட்டி நம்மை நல்வழிப்படுத்தத் தமிழ் அறிந்தோர் தமிழ்க்காவலர்களாக வேண்டும். தவறு விட்டவரைக் கூண்டில் ஏற்றுவதல்ல, தவறைத் திருத்துவதே நோக்கமாக இருக்க வேண்டும். இணையத் தமிழ்க்காவல் நிலையங்கள் தோன்றுமா? தமிழ் அறிந்தோர் தமிழ்க்காவல் நிலையங்களில் கடமையாற்றுவார்களா? நாம் விடும் தவறுகள் திருத்தப்படுமா? எதிர்வரும் காலங்களில் தமிழ் இணையங்களில் நான் கண்ட கேட்ட எழுத்துத் தவறுகளைத் தொகைப்படுத்திக் கூண்டில் ஏற்றுவேன். தவறுகளை ஆய்ந்து திருத்தும் கடமையைத் தமிழ்க்காவலர்களிடம் விட்டுவிடுகிறேன். இணையச் சமூகம் மிகப் பெரியது; மிகமிக வலியது. இது பலர்கூடித் வடம்பிடித்து இழுக்கவேண்டிய தேர்.
ஜி-20 நாடுகளின் தலைவர்கள் உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் ஆக்கிரமிப்புக்குக் கடுமையான கண்டனங்களைத் தெரிவித்ததுள்ளதுடன், உக்ரைன் நாட்டிலிருந்து ரஷ்யா முழுமையாகவும் நிபந்தனையின்றியும் வெளியேற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், உக்ரைனில் நிகழ்ந்துவரும் போரானது மிகப்பெரிய மனிதத் துயரங்களை ஏற்படுத்தி வருகிறது என்றும், உலகப் பொருளாதாரத்தில் இருக்கும் பலவீனங்களை அதிகரிக்கிறது என்றும் வலியுறுத்திக் கூறியுள்ளனர். பன்னாட்டுச் சட்டத்தை நிலைநிறுத்த வேண்டும் என்றும், அணு ஆயுதங்களைப் பயன்படுத்துதல் அல்லது அச்சுறுத்துதல் ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் சுட்டிக்காட்டியுள்ள ஜி-20 நாடுகளின் தலைவர்கள், இயற்கையோடு இணைந்த உற்பத்தித்திறன் மற்றும் நிலைத்தன்மையை மேம்படுத்தும் புதுமையான நடைமுறைகள் மற்றும் தொழில்நுட்பங்களை ஏற்றுக்கொள்வதற்கான தங்கள் உறுதிப்பாட்டையும் தெரிவித்துள்ளனர். கல்விபெறும் உரிமை, பாலின சமத்துவம் மற்றும் பெண்களுக்கு அதிகாரமளித்தல் ஆகியவற்றை உள்ளடக்கிய நிலையான வளர்ச்சிக்கான முயற்சிகளும் ஜி-20 அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளன. மேலும் இடம்பெயர்ந்தோர், புலம்பெயர்ந்தோர் ஆகியோரை ஆதரிப்பதிலும், மீட்பதிலும், அவர்களின் அடிப்படை மனித உரிமைகளை மதித்துப் போற்றுவதிலும் முக்கியத்துவம் கொடுக்கப்படவேண்டும் என்பதையும் இந்த அறிவிப்பு எடுத்துக்காட்டியுள்ளது.
வணக்கம் தோழர்களே தோழிகளே, நீண்ட நாட்களுக்குப் பிறகு மீண்டும் ஒரு அருமையான செக்ஸ் கதையுடன் உங்களைச் சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி. என் வாழ்வில் கடந்த இரண்டு வருடங்களாக நடந்து வரும் உண்மையான செக்ஸ் நிகழ்வை வரிசையாகப் பகிர்ந்து வருகிறேன். இந்த கதையில் ஒரு ஆச்சரிய மிக வாசகியை ஒத்த சம்பவத்தைச் சொல்கிறேன்! வாருங்கள் கதைக்குப் போகலாம்! இதற்கு முன்பு பல்வேறு காம கதையைப் பகிர்ந்து கொண்டாலும், இந்த கதை சற்று சுவாரசியமாக இருக்கும். நான் கல்லூரி முடித்து விட்டு வேலை கிடைக்காமல் பொழுதுபோக்குக்குக் காம கதைகளை எழுதி இணையத்தளத்தில் பதிவு ஏற்றம் செய்து வந்தேன். வீட்டுக்கு ஒரே மகன் என்பதால் செல்லமாக வளர்ந்து வந்தார்கள். என் குடும்பத்தில் அதிகமான சொந்தக்காரர்கள் இருப்பார்கள், ஆகையால் சித்தி மகள், அத்தை மகள் என்று வரிசை காட்டும். அதிலும் நான் சற்று அழகாக இருப்பேன், தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் உடற்பயிற்சி செய்து உடம்பை கட்டுமஸ்தாக வைத்துக் கொள்வேன். மேலும் நான் பள்ளிப்படைக்கும் காலத்திலிருந்தே ஆபாசப் படம் மற்றும் காம கதைகள் படித்து சுன்னியை விறைக்க வைத்துக் கையடிப்பேன். அதன் காரணமாகச் சுன்னியின் வளர்ச்சி சற்று அதிகமாக இருக்கும். தற்பொழுது என் வயது 25 தான் ஆனால் சுன்னி 7 இன்ச் அளவுக்கு நீண்டதாக வைத்துக் கொண்டு இருப்பேன். கல்லூரி படிக்கும்போது அடிக்கடி தோழிகள் சில முறை டீச்சர்கள் என்று மேட்டர் அடித்து இருக்கிறேன். அந்த அனுபவத்தை எல்லாம் இதற்கு முன்பு பல கதைகளில் பகிர்ந்து இருக்கிறேன். தற்பொழுது வீட்டில் வெட்டியாக இருப்பதால், மேட்டர் அடிக்கும் வாய்ப்பு மிகவும் குறைவாக மாறியது. அப்பொழுது தான் ஒரு வாசகியின் அறிமுகம் கிடைத்தது. நான் கதை எழுதி முடித்த பின்பு கீழே ஈமெயில் முகவரியைச் சேர்த்து இருப்பேன். ஒரு சில வாசகர்கள் கதையில் கீழே கமெண்ட் செய்வார்கள், சில நபர்கள் ஈமெயில் செய்வார்கள். முதல் முறையாக அஞ்சலி என்று ஒரு பெண்ணின் பெயரிலிருந்தது ஈமெயில் வந்தது. கதை நன்றாக இருப்பதாக மிகவும் பாராட்டிப் பேசிக் கொண்டு இருந்தால், ஆரம்பத்தில் சற்று ஆர்வம் காண்பிக்காமலிருந்தேன். “என் சரியாகப் பேசுவது இல்லை?” என்று கேட்டாள். இதுபோன்று பெண்கள் பெயரில் பல ஆண்கள் மெசேஜ் செய்வார்கள் ஆகையால் உன்னிடம் பேசச் சற்று தயக்கமாக இருக்கிறது என்று கூறினேன். “நீ நம்ப வேண்டும் என்றால், என்ன செய்யவேண்டும்?” என்று கேட்டாள். “உன் புகைப்படத்தை அனுப்பு பார்த்து விட்டு நம்புகிறேன்” என்று கூறினேன். சற்று நேரத்தில் ஒரு புகைப்படத்தை அனுப்பினால், முகத்தை மட்டும் மறைத்தபடி இறுக்கமான டாப்ஸ் மற்றும் ஸ்கிர்ட் அணிந்து கொண்டு இருந்த மாதிரி போட்டோ அனுப்பினாள். ஒரு நிமிடம் உறைந்து பார்த்துக் கொண்டு இருந்தேன். அவளின் இரண்டு காம்புகளும் கூர்மையாக டாப்ஸ் வழியாக வெளியில் தெரிந்தது, மேலும் உள்ளே ப்ரா போடாமல் இருந்தாள். இரண்டு முலைகளின் இடையில் பள்ளத்தாக்கு மறைந்து கொண்டு இருந்தது. இடுப்பு மொழு மொழு வென்று அருமையாக இருந்தது. பக்கவாட்டிலிருந்து பார்க்கும்போது சூத்து சற்று தூக்கலாக இருந்தது. இரண்டு தொடைகளும் வாழைத் தண்டு போன்று அருமையாக இருந்தது. கூந்தல் சூத்து வரை நீண்டதாக இருந்தது, மொத்தத்தில் முகத்தைத் தவிர மற்ற அந்தரங்க பகுதிகள் தெரியும்படி இரண்டு புகைப்படத்தை அனுப்பினால், கண்டிப்பாக அந்த பெண் அழகாக இருப்பாள் என்று மனதில் தோன்றியது. “ஹேய் உன் போட்டோ அனுப்பு டி!” என்று கேட்டேன். “ஒரு நாள் நேரிலே பார்க்கலாம்” என்று கூறினாள். அதன்பின் இருவரும் ஈமெயில் மூலம் தினமும் மெசேஜ் செய்து கொண்டு இருந்தோம். இருவரும் இரட்டை வசனம் மற்றும் ஜாலியாக பேசிக் கொண்டு இருந்ததால் புகைப்படத்தைக் கேட்பதைப் பற்றி நிறுத்தி விட்டேன். நாட்கள் வேகமாக ஓடியது, தினமும் காம கதைகளைப் படித்து விட்டு நெருக்கமான தோழியாகவே மாறினாள். இருவரும் இரவு நேரங்களில் நீண்ட நேரமாக மெசேஜ் செய்து பேசி கொண்டோம். “இருவரும் ஒன்றாகச் சந்தித்துக் கொள்ளலாம்” என்று அழைத்தேன். “கொஞ்ச நாள் பொறுத்துக் கொள், சந்திக்கலாம்” என்று கூறினாள். இரண்டு வாரங்களுக்குப் பிறகு வீட்டில் ஒரு விசேஷம் நடந்தது, ஆகையால் ஊரிலிருந்து அனைத்து உறவினர்களும் வந்தார்கள். குறிப்பாக என் மாமா மகள் பெங்களூரிலிருந்து வந்து இருந்தால், வீடு விழாக்கோலம் போன்று மாறியது. என் மாமா மகளைப் பார்த்து நன்றாக சைட் அடித்துக் கொண்டு இருந்தேன். அவள் மேற்படிப்புக்குப் பெங்களூரில் படித்து இருந்ததால், மிகவும் மாடர்ன் பெண் போன்று மாறி இருந்தாள். என்னை அடிக்கடி பார்த்து சைட் அடித்து விட்டுச் சென்றால், முதலில் மாமா மகளை மேட்டர் அடித்து விட்டு பிறகு ஒரு நாள் வாசகி அஞ்சலியை செக்ஸ் செய்து விடலாம் என்று திட்டம் திட்டினேன். பகல் நேரம் முழுவதும் மாமா மகளுடன் கடலை போட்டுவிட்டு, இரவு நேரங்களில் வாசகியுடன் பேசிக் கொண்டு இருப்பேன். ஒரே நேரத்தில் இரண்டு பெண்களை ஜாலியாக ஒட்டிக்கொண்டு இருந்தேன். என் மாமா மகள் சற்று கவர்ச்சியாக இருந்தால், காலை குளித்து விட்டு பாத்ரூமில் இருந்து வெளியில் வந்தால் அப்பொழுது ஈரமான முலையைப் பார்த்து மயங்கினேன். அவளின் பிங்க் நிற உதடு அழகான உடம்பு என்று பார்த்து அசந்துவிட்டேன். விரைவாக ஒத்து விட வேண்டும் என்று நினைத்தேன். என் வீடு பெரியதாக இருக்கும், மொட்டை மாடியில் இருக்கும் என் அறையில் இரவு நேரங்களில் உறங்குவேன். பக்கத்து அறையில் மாமா மகள் இருந்தால், ஒரு நாள் இரவு வாசகி அஞ்சலியுடன் மெசேஜ் செய்து கொண்டு இருந்தேன். “நான் சற்று மூடாக இருந்தேன், ஆகையால் இப்பொழுது நான் மட்டும் உன் அருகிலிருந்தால் கிஸ் அடித்து மேட்டர் செய்து விடுவேன்” என்று மெசேஜ் செய்து கூறினேன். “சரி நான் உன் வீட்டுக்கு வருகிறேன். இருவரும் செய்யலாம், தற்பொழுது மொட்டை மாடிக்கு வா” என்று மெசேஜ் செய்து கூறினாள். நானும் விளையாட்டாக மேலே ஏறிச் சென்றேன்.அப்பொழுது மிகப் பெரிய ஆச்சரியம் காத்துக்கொண்டு இருந்தது, என் மாமா பொண்ணு மொட்டை மாடியில் நின்று கொண்டு இருந்தாள். “டேய்! மாமா நான் தான் உன் வாசகி அஞ்சலி! இப்பொழுது நேரில் பார்த்தால் மேட்டர் செய்து விடுவாய்” என்று கூறினாய். ஒழுங்கா வந்து செய்து விடு டா! என்று கூறினாள். ஒரு நிமிடம் உறைந்த பனி கல் போன்று நின்றேன். அவள் டாப்ஸ் மற்றும் கீழே ஒரு ஷார்ட்ஸ் அணிந்து கொண்டு இருந்தால், மெதுவாக அருகில் வந்து என்னைக் கட்டிப்பிடித்து உதட்டில் முத்தம் கொடுத்தாள். “உன் கதைகளுக்கு நான் அடிமை டா! இரண்டு நாட்களுக்கு முன்பு தான் நீ தான் கதை எழுதுகிறாய் என்று கண்டு பிடித்தேன்” என்று கூறினாள். அந்த நிலா வெளிச்சத்தில் இருவரும் நெருக்கமாக நின்று கொண்டு இருந்தோம். மெதுவாக உதட்டின் மீது உதட்டை வைத்து லிப்லாக் கிஸ் செய்து கொண்டோம். அவளின் உதட்டின் உள்ளே நாக்கை விட்டு உரிந்து கொண்டு இருந்தேன், இருவரின் எச்சுகளும் சூடாக மாறியது. பின்பு அவளைத் தூக்கிக் கொண்டு படுக்கை அறைக்குச் சென்றேன். கீழே உறங்கும் பெற்றோர்களுக்குச் சந்தேகம் வராமல் உள்ளே அழைத்துச் சென்றேன். இருவரும் இறுக்கமாகக் கட்டிப்பிடித்துக் கொண்டு படுக்கையில் புரண்டு கொண்டோம். பின்பு அவளைக் கீழே படுக்க வைத்து விட்டு டாப்ஸை வேகமாகக் கழட்டினேன். உள்ளே வெள்ளை நிற ப்ரா அணிந்து கொண்டு இருந்தால், இரண்டு முலைகளையும் மாவு பிசைவது போன்று பிசைந்தேன். ப்ராவின் ஹூக்கை கடித்து முலைகளுக்கு விடுதலை கொடுத்தேன். இரண்டு அழகிய முலைகளும் தளதள வென்று ஆடிக்கொண்டு வெளியில் வந்தது. ஒரு முலையின் காம்பை உதட்டில் வைத்து சப்பிக்கொண்டு மாற்று ஒரு காம்பின் நுனியை கை விரலால் உருட்டிக் கொண்டு இருந்தேன். அவள் சுகத்தில் தலையை இறுக்கமாக முலையுடன் சேர்த்து அழுத்திக் கொண்டாள். பின்பு தொப்புள் ஓட்டையை நன்றாகச் சப்பிவிட்டு கீழே இறங்கி ஷார்ட்ஸை கழட்டினேன். உள்ளே ஜட்டி போடாமல் ஷாவ் செய்த புண்டையுடன் அழகாகக் காட்சியளித்துக் கொண்டு இருந்தாள். இரண்டு கவர்ச்சியான தொடைகளுக்கும் முத்த மழையாகப் பொழிந்து விட்டு பின்பு புண்டை ஓட்டையில் விரலை விட்டு வேகமாக ஆட்டினேன். விரலை விட்டு ஆட்டிக்கொண்டே நுனி நாக்கை வைத்து வேகமாகச் சப்பினேன். அவளுக்கு இன்பம் தாங்கமுடியாமல் தலையை இறுக்கமாக கூதியுடன் சேர்த்து அழுத்திக் கொண்டால், பின்பு நுனி நாக்கை வைத்து புண்டை பருப்பைக் கிண்டிக் கொண்டு இருந்தேன். சற்று நேரத்தில் சூடான விந்து வழிந்து வந்தது, அதை நக்கி சுவையாகக் குடித்தேன். பின்பு என் பேண்ட் கழட்டி சுன்னியை வெளியில் எடுத்து புண்டையின் மேற்புறத்தில் மென்மையாகத் தேய்த்தேன்.இருவரின் சாமான்களும் சூடாக மாறியது, பின்பு மெதுவாக இடுப்பில் ஒரு கை மற்றும் முலையில் ஒரு கை வைத்துத் தடவிக் கொண்டு சுன்னியை வேகமாக உள்ளே விட்டு அழுத்தினேன். அவளின் கூதி சற்று ஈரமாக இருந்ததால் சுலபமாக உள்ளே சென்று மறைந்து கொண்டது. முதலில் மெதுவாக விட்டு ஆட்டிக் கொண்டு இருந்தேன், பின்பு சுன்னியைச் சற்று வேகமாக உள்ளே விட்டு அடித்தேன். என் 7 இன்ச் சுன்னி முழுமையாக மறைந்து வெளியில் வந்தது. அவளை டாகி முறையில் முட்டி போடா வைத்து விட்டு பின் வழியாகப் புண்டை ஓட்டையில் சுன்னியை விட்டு வேகமாக அடித்தேன். இருவருக்கும் முட்டி தேயும் அளவுக்கு டாகி முறையில் வேகமாகச் செய்து கொண்டு இருந்தோம். பின்பு அவளைக் குப்புறப் படுக்க வைத்து சூத்தை இரண்டு முறை பளார் பளார் என்று அறைந்தேன். சூத்து சற்று சிவந்து போனது, பின்பு சுன்னியை மெதுவாக எடுத்து உள்ளே விட்டு அடிக்க ஆரம்பித்தேன். “ஆஹா ஆஹா ஆஹா ஹ்ம்ம் ஹ்ம்ம் அம்மா வலிக்கிறது டா! ஆஹா ஆஹா ஆஹா ஆஹா ஹ்ம்ம் ம்ம் ம் ம் ஸ் ஸ் ஸ்ஸ் ஸ் ஆஹா ஸ் ஸ் ஸ் ஸ் இன்னும் வேகமாகப் பண்ணு டா!” என்று வலிக்கலந்த சுகத்தில் கதறிக் கொண்டு இருந்தாள். அந்த கதறலைக் காதில் வாங்கிக் கொண்டு அசுர வேகத்தில் புண்டை மற்றும் சூத்து ஓட்டை என்று ஒத்துக்கொண்டு இருந்தேன். சொந்த மாமா மகள் வாசகியாக வந்து ஒழு வாங்குவாள் என்று நினைத்துக் கூட பார்க்கவில்லை. பின்பு சுன்னியை வெளியில் எடுத்து முகம் மற்றும் முலைகளுக்கு நேராக எடுத்து நீட்டி வேகமாகக் குலுக்கினேன். சுன்னியிலிருந்து மழை போன்று கஞ்சி பொழிந்து கொண்டு வெளியில் வந்து வேகமாக அடித்தது. அவள் கையால் எடுத்து நக்கிக் கொண்டு, “டேய்! மாமா உன் கதையில் இருப்பது போன்றே மேட்டர் செய்ற டா!” என்று பாராட்டினாள்.
ரோசாப்பூ ரவிக்கைக்காரி திரைப்படம் 1979ம் ஆண்டு வெளிவந்த போது மிக கட்டுப்பட்டியாக இருந்துவந்த மக்களிடையே பெரும் கிளர்ச்சியை உண்டுசெய்தது. அந்... சித்தரிக்கப்பட்ட கலாச்சார ஃபாசிச கொள்கையும்...கால மாற்றமும் இயற்கைக்கு எதிராக போரிடுவதில் வீரம் ஒன்றும் இல்லை. ~ நகிசா ஒஷிமோ நீங்கள் பெங்களூரில் ஒரு தெருவில் கல்லைக்கொண்டு எறிவீர்களேயானால் அது ஒரு ... துர்சொப்பணக் குறிப்புகள் - Notes of a Nightmare எல்லாம் கனவில் நடப்பது போலவே இருக்கிறது. மங்கிய இருளில், வண்ணங்களற்று, குறைந்த ஓசையில். நான் இவ்வளவு சீக்கிரமாக இதற்குமுன் எழுந்ததே கிடையாத... உதிர்காலத்தின் இலைகள் (மொழிப்பெயர்ப்பு கவிதை) [ஜேக் ப்ரவெர் (Jacques Prevert) என்ற ஃப்ரெஞ்சு கவிஞரின் > " (Les Feuilles Mortes) உதிர்காலத்தின் இலைகள்" என்ற கவிதையை நேரடியா... எல்லாவற்றையும் கொஞ்சம் சரிசெய்து கொள்ளலாம்... குளிர்ச்சியூட்டப்பட்ட நேற்றைய உணவை சூடுசெய்து கொள்ளலாம் ஏற்கனவே கட்டி வைத்த பூமாலையின் விளிம்புகளை கத்தரித்துக்கொள்ளலாம் முந்தைய இரவு எது...
Posted on November 20, 2020 November 20, 2020 By admin No Comments on அக்மார்க் கமர்ஷியல் படம் ‘என் பெயர் ஆனந்தன்’ நவ-27ல் வெளியாகிறது சர்வதேச விருதுகளை வென்ற அக்மார்க் கமர்ஷியல் படம் ‘ ’ நவ-27ல் வெளியாகிறது கனகா வெங்கடேசன், சவீதா வெங்கடேசனின் சவீதா சினி ஆர்ட்ஸ் மற்றும் கோபி கிருஷ்ணப்பாவின் காவ்யா புரொடக்சன்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள படம் ‘என் பெயர் ஆனந்தன்’. இந்தப்படத்தை ஸ்ரீதர் வெங்கடேசன் இயக்கியுள்ளார். இவர் ‘6 அத்தியாயம்’ படத்தில் இடம்பெற்ற ஆறு அத்தியாயங்களில் ஒன்றான ‘சித்திரம் கொல்லுதடி’ படத்தை இயக்கியவர். இவரது இரண்டாம் படம் தான் ‘என் பெயர் ஆனந்தன்’. ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’, ‘தாயம்’ ஆகிய படங்களில் நடித்த சந்தோஷ் பிரதாப் கதாநாயகனாக நடிக்க, அதுல்யா ரவி கதாநாயகியாக நடித்துள்ளார். இவர் அடுத்த சாட்டை, நாடோடிகள்-2 ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்தவர். மேலும் தீபக் பரமேஷ், அரவிந்த் ராஜகோபால் உள்ளிட்ட பலர் இந்தப்படத்தில் நடித்துள்ளனர். இந்தப்படத்தின் கதை ஆரம்பத்தில் த்ரில்லராக பயணித்தாலும், போகப்போக உணர்வுப்பூர்வமான பயணத்துக்குள் ரசிகர்களை அழைத்து சென்றுவிடும். காரணம் த்ரில்லருக்கென்றே உள்ள வழக்கமான கதைக்களங்களை தேர்வு செய்யாமல் சில உண்மை சம்பவங்களை அடிப்படையாகக்கொணடு இந்தப்படம் உருவாகியுள்ளது… குறிப்பாக இதுவரை யாருமே பேசியிராத ஒரு சமூக பிரச்சனையை கையிலெடுத்து துணிச்சலாக இந்தப்படம் பேசியுள்ளது. படம் பார்த்துவிட்டு வெளியே வரும் ரசிகர்களிடம், இப்படியெல்லாம் கூட மக்கள் இருக்கிறார்களா, இவர்களுக்கு இப்படியெல்லாம் கூட பிரச்சனைகள் இருக்கிறதா என இந்தப்படம் நிச்சயம் ஒரு புதிய தாக்கத்தை ஏற்படுத்தும். . செம்பல் சர்வதேச திரைப்பட விழா, சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச திரைப்பட விழா மற்றும் தென் கொரியாவில் நடைபெற்ற SEE சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு மூன்றுமுறை சிறந்த திரைப்படத்திற்கான விருதுகளை இந்தப்படம் பெற்றுள்ளது. மேலும் நியூயார்க்கில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த படத்திற்கான ஸ்பெஷல் ஜூரி விருதையும் பெற்றது. “திரைப்பட விழாக்களில் இந்தப்படத்தை பார்த்த பலரும் இதுவரை பார்த்திராத, ஒரு வித்தியாசமான அதேசமயம் ஜனரஞ்சகமாக ரசிக்க கூடிய விஷயங்கள் இந்தப்படத்தில் இடம்பெற்றுள்ளதாக கூறினார்கள். குறிப்பாக படத்தின் டேக்லைனில் குறிப்பிடப்பட்டுள்ளது போல, இது தனித்துவமான தமிழ்ப்படமாகவே உருவாகி இருக்கிறது என பாராட்டினார்கள்” என்கிறார் ஸ்ரீதர் வெங்கடேசன். மேலும் தமிழ் சினிமா வரலாற்றில் முதன்முறையாக ஒரு புதுமுயற்சியாக க்ளைமாக்ஸுக்கு சற்று முன்பாக 11 நிமிடங்கள் கொண்ட பாடல் காட்சி இடம்பெறுகிறது. இது வழக்கமான ஒரு பாடலாக இல்லாமல் உணர்வுப்பூர்வமான பாடலாக இருக்கும். “இந்தப்படத்தின் நாயகன் சந்தோஷ் பிரதாப்பின் ஒத்துழைப்பும் அர்ப்பணிப்பு உணர்வும் மறக்க முடியாது ஒன்று.. ஒரு நாற்காலியிலேயே அமர்ந்தபடி, தனது நடிப்பை முகத்தின் உணர்ச்சிகளிலேயே விதம் விதமாக பிரதிபலித்து நடித்துள்ளார். நிச்சயம் இந்தப்படம் தமிழ்சினிமாவில் அவருக்கு அடுத்த படியாக இருக்கும்” என்கிறார் இயக்குனர் ஸ்ரீதர் வெங்கடேசன். தற்போது திரையரங்குகள் செயல்பட ஆரம்பித்துவிட்ட நிலையில், இந்தப்படம் வரும் நவ-27ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.. ஓடிடி தளங்கள் இந்தப்படத்தை வெளியிட தங்களை அணுகியபோதும் மறுத்துவிட்டார்களாம் தயாரிப்பாளர்கள். “இந்த படத்தை ஆரம்பிக்கும்போதே நாங்கள் இரண்டு விஷயங்களில் உறுதியாக இருந்தோம்.. முதலில் படத்தை சர்வதேச திரைப்பட விழாக்களுக்கு அனுப்பிவிட்டு, அதன்பிறகே திரையரங்குகளில் ரிலீஸ் செய்வது, இரண்டாவதாக தியேட்டர்களில் ரிலீஸ் செய்த பின்னரே, ஒடிடிக்கு படத்தை தருவது என நாங்கள் முடிவு செய்தபடியே இந்தப்படத்தை தியேட்டர்களில் வெளியிடுகிறோம்..” என்கிறார் இயக்குனர் ஸ்ரீதர் வெங்கடேசன்.
வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்கள் தங்கள் கணக்கு இருக்கும் வங்கியின் ஏ.டி.எம். மூலம் மாதத்துக்கு 5 முறையும்பிற வங்கி ஏ.டி.எம்.கள் மூலம் 3 முறை மட்டுமே இலவசமாக பணம் எடுக்க முடியும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. அதற்கு மேல் நடை பெறும் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் கட்டணம் வசூலிக்கப்படும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.அந்தவகையில் அனுமதிக்கப்பட்ட இலவச பரிமாற்றத்துக்கு அப்பால் நடைபெறும் பரிமாற்றங்களுக்கு ரூ.20 கட்டணமாக பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த கட்டணம் இன்று (சனிக்கிழமை) முதல் உயர்த்தப்படுகிறது.அதன்படி, ரூ.20-க்கு பதிலாக ரூ.21 ஆக இது அதிகரிக்கப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்து உள்ளது. ஏ.டி.எம். பராமரிப்புபாதுகாப்பு உள்ளிட்ட செலவினங்களுக்கான நிதி தேவை அதிகரித்து உள்ளதை கருத்தில் கொண்டு இந்த கட்டண உயர்வை அமல்படுத் துவதாக ரிசர்வ் வங்கி ஏற்கனவே கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த ஏடிஎம் சேவை கட்டணத்திற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பும் கண்டனமும் தெரிவித்து வருகிறார்கள். முந்தைய காலத்தைப் போல வங்கிக்கு சென்று பணம் எடுத்துக் கொள்ளலாம் அதனால் எந்தவித நட்டமும் பொதுமக்களுக்கு ஏற்படப்போவதில்லை என்கிற மனநிலைக்கு பலர் வந்துள்ளனர். அறிவியல் முன்னேற்றத்திற்கு பிறகு கணினி வசதிகள் ஏற்படுத்தப்பட்ட பிறகும் வங்கி ஏடிஎம் சேவைக்கு வங்கிகள் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை பொதுமக்கள் ஏற்கவில்லை. வங்கி ஊழியர்களுக்கு வேலை பளு குறைந்துள்ள நிலையில் பொதுமக்கள் கடும் நிதிச் சுமையில் இருக்கும் பொழுது இந்த கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. குணசேகரன் வே இதையும் படிங்க.! கே.பி.பார்க் அடுக்குமாடி குடியிருப்பு விவகாரம் அதிகாரிகள் மீது அரசு நடவடிக்கை எடுக்குமா? இரா. தேவேந்திரன். December 5, 2021, 10:12 PM December 5, 2021, 10:12 PM அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் செல்லாது தனி நீதிபதி தீர்ப்பு ரத்து ; சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு முழுவிவரம்.
லிஸ்பனில் வாஸ்கோடகாமா நினைவிடம் இருந்தது. அவரது சமாதியும், போர்ச்சுக்கல் கடற்கரை நோக்கிய அவரது சிலையும் இருந்தது. ஆனால் அவற்றை பார்க்க போகவில்லை. மாலையில் லிஸ்பன் பேருந்தில் ஏறி கடற்கரைக்கு போகலாம் என கிளம்பினேன். தவறான இடத்தை சொல்லிவிட்டார்கள். அங்கே ஆறு ஒன்று கடலுடன் கலந்தது. அங்கே பீச் எதுவும் இல்லை. குளிக்க முடியாது. அட்லாண்டிக் சமுத்திரத்தை பார்த்தபடி சற்று நேரம் நின்றேன். நிறைய ஆட்டோக்கள் இருந்தன. அவற்றில் ஏறினால் சும்மா ஜாலியாக ஊரை சுற்றிக் காட்டுவார்கள். டுக்-டுக் என அவற்றுக்கு பெயர். லிஸ்பனில் கடைகள் இருந்த இடத்தில் சற்று நேரம் நடந்தேன். சீன உணவகம் என போர்டு மாட்டியிருந்தது. அரிசி உணவை உண்டு பல நாட்கள் ஆகியிருந்தது. பிராகா நகரில் உணவகங்களில் எல்லாம் கோதுமைதான். அரிசியை கண்ணில் பார்ப்பதே அபூர்வம். லிஸ்பனில் இப்போதுதான் இது கண்ணில் பட்டது. சரி என சொல்லி ஒரு பிரைடு ரைஸ் ஆர்டர் செய்தேன். நன்றாகவே இல்லை. சமைத்தது சீனர்களும் இல்லை. போர்ச்சுக்கீசியர்கள் யுடியூபை பார்த்து சீன உணவை சமைத்தால் எப்படி இருக்குமோ அப்படி இருந்தது. அடுத்த நாள் காலை ஸ்விட்சர்லாந்தின் ஜெனீவா நகருக்கு விமானம் ஏறவேண்டும். அதனால் ஓட்டலுக்கு வந்து நன்றாக உறங்கினேன். காலையில் விமான நிலையம் சென்று போர்ச்சுக்கலில் இருந்து ஸ்விட்சர்லாந்தின் ஜெனிவா நகருக்கு வந்தேன். ஸ்விட்சர்லாந்து ஒரு வித்தியாசமான நாடு, ஜெர்மனி, பிரான்சு, இத்தாலி ஆகிய நாடுகளால் சூழப்பட்ட நாடு. ஜெர்மனிக்கு அருகே இருக்கும் ஸ்விஸ் மக்கள் ஜெர்மன் பேசுவார்கள். பிரான்சுக்கு அருகே இருப்பவர்கள் பிரெஞ்சு பேசுவார்கள். ஆனால் இவர்கள் பேசும் ஜெர்மன், பிரெஞ்சு, இத்தாலி மொழிகள் சற்று மாறுபட்டதாக இருக்கும். 32,000 பேர் மட்டுமே பேசும் “ரொமான்ஷ்” என்ற மொழியும் உண்டு. ரோம் பேரரசு ஆக்கிரமித்த காலத்தில் உருவான மொழி. ஆனால், அதையும் தேசிய மொழியாக மதித்து ஏற்றுக்கொண்டுள்ளனர். நாலு தேசிய மொழிகள். அந்தந்த பிராந்தியத்தில் அந்தந்த மொழி பேசுவார்கள். இணைப்பு மொழி என எதுவும் இல்லை. தகவல் தொடர்புக்கு வேண்டுமானால் பள்ளியில் இன்னொரு மொழி கற்றுக்கொள்ள வேண்டியதுதான். ஜெனிவா பிரெஞ்சு பேசும் பகுதியில் உள்ளது. நகர பேருந்துகள், டிராம் ரயில்கள் சகஜமாக சென்றுவந்துகொண்டிருக்கின்றன. ஜெனிவா மிக செலவு பிடிக்கும் நகரம் என்பதால் பல ஜெனிவா மக்கள் பிரான்சில் வசித்து, தினம் நகர பேருந்தில் வந்து செல்வார்கள். ஜெனிவாவில் பேருந்து, டிராம் போக்குவரத்து முற்றிலும் இலவசம். பிரான்சு எல்லைப் பகுதியிலேயே மூன்று இந்திய உணவகங்கள், சீன, ஜப்பானிய, மெக்சிகோ உணவகங்கள் நல்ல மலிவான விலையில் உள்ளன. ஜெனிவாவில் ‘செர்ன்’ எனப்படும் புகழ்பெற்ற ஆராய்ச்சி மையம் உள்ளது. ஐ.நா சபை உள்ளது. மியூசியங்கள் அனைத்தும் இலவசம். படகில் ஜெனிவா எரியில் க்ரூஸ் போக மட்டும் தான் $20 செலவு செய்தேன். ஸ்விஸ் சாக்லெட் எப்படி இருக்கும் என்ற ஆசையில் ஒரு சின்ன சாக்லெட் வாங்கி சாப்பிட்டு பார்த்தேன். பால்கோவா மாதிரி வாயில் வைத்ததும் கரைந்தது. ஆங்கிலம் யாருக்கும் தெரியாது. எல்லாம் பிரெஞ்சுதான். ஆனால் கூகிள் மேப் இருந்தால் பக்காவாக எந்த பஸ், டிராம் எத்தனை மணிக்கு வந்துவிடும் என சொல்லிவிடும். கடை பலகைகளில் பிரெஞ்சில் எழுதியிருந்தாலும் பல வார்த்தைகள் படிக்க எளிதில் புரியும்படிதான் இருந்தது. ‘ரெஸ்டாரண்ட்’ என்பதை ‘ரெஸ்டராண்டே’ என எழுதுவார்கள். கடனட்டை எல்லா பக்கமும் வாங்குகிறார்கள் என்பதால் ஸ்விஸ் பிரான்க் மாற்றும் அவசியமே இல்லை. அமெரிக்காவில் இருந்து வருகையில் நூறு யூரோ மட்டும் தான் கொண்டுவந்தேன். அதில் ஐம்பது யூரோ இன்னும் மிச்சம் இருக்கு. போர்ச்சுக்கல் பேருந்துகளுக்கு டிக்கட் வாங்க ஆன செலவு அது. சில போர்ச்சுக்கல் உணவகங்களில் கிரெடிட் கார்டு வாங்கவில்லை. ஓட்டல், விமானம் எல்லாம் கடனட்டையை வைத்து அமெரிக்காவில் இருந்தே டால்ரில் புக் செய்துவிட்டதால் யூரோவாக மாற்றும் பிரச்னை இல்லை. அதனால், ஜெனிவாவுக்கு வந்தால் செலவாகும் என பயப்படாமல் மினிமலிஸ்ட் சுற்றுப்பயணமாக தாராளமாக வரலாம். ஆனால், மெனக்கெட்டு ஆராய்ச்சி பண்ணினால்தான் காசை நிறைய மிச்சம் பண்ணமுடியும்.
இந்து சமய அறநிலையக் கொடைகள் திருத்தச் சட்டத்தின் மீது, முதல்வர் கலைஞர் சட்டசபையில் நிகழ்த்திய, இன உணர்வு மிக்க உரை. சட்டப் பேரவையில் முதல்வர் கலைஞர் இந்து சமய அறநிலையக் கொடைகள் திருத்தச் சட்டத்தின் 8வது பிரிவைக் கைவிடுவது பற்றி ஆற்றிய உரை வருமாறு:- "தமிழகத்திலுள்ள இந்துத் திருக்கோயில்களில் அனைத்துச் சாதியினரையும், சாதி வேறுபாடின்றி அர்ச்சகராக நியமிக்க வழி கோல வேண்டுமென்ற கோரிக்கை நீண்டகாலமாக இருந்து வருகிறது. இந்தக் கோரிக்கையை நிறைவேற்றும் வண்ணம் - 2002 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் இது தொடர்பாக வழங்கியுள்ள தீர்ப்பினையும், அரசு தலைமை வழக்கறிஞரின் கருத்துரையையும் விரிவாகப் பரிசீலனை செய்து - இந்துக்களின் உரிய பயிற்சியும், தகுதிகளும் உள்ள அனைத்துச் சாதியினரும் தமிழ்நாட்டிலுள்ள இந்து சமயத் திருக்கோயில்களில் அர்ச்சகர் ஆகலாம் என்று அரசு முடிவு செய்து, 23.5.2006 அன்று, அதற்கான ஆணையை வெளியிட்டது. இந்த அரசாணையை சிறப்பாகச் செயல்படுத்துவதற்கு ஏதுவாக - பயிற்சிக்கானப் பாடத் திட்டம், பயிற்சியாளர்களுக்கான அடிப்படை கல்வித் தகுதி, வயது, பயிற்சிகால வரையறை, எத்தனை இடங்களில் பயிற்சி நிலையங்களை அமைப்பது போன்ற அம்சங்களின் மீது கொள்கை ரீதியாக முடிவெடுப்பதற்காக சென்னை உயர்நீதி மன்ற ஓய்வு பெற்ற நீதிபதி திரு.ஏ.கே. ராஜன் அவர்கள் தலைமையில் உயர் நிலைக் குழு ஒன்று 10.6.2006 அன்று அமைக்கப்பட்டு இந்தக் குழு செயல்படத் தொடங்கிய நாளிலிருந்து இரண்டு மாதக் காலத்திற்குள் தனது பரிந்துரைகளை அரசுக்கு அளிக்க வேண்டுமென்றும் உத்தரவிடப்பட்டது. 23.5.2006 அன்று வெளியிடப்பட்ட அரசாணை, 12.6.2006 அன்று தமிழ்நாடு அரசிதழிலும் பிரத்தியேகமாக அறிவிக்கை செய்யப்பட்டது. அனைத்துச் சாதியினரும் திருக்கோயில்களில் அர்ச்சகர்களாக அமர்த்தப்படுவதற்கு வழக்கமோ அல்லது வழக்காறோ இடையூறாக இருந்திடக் கூடாது என்ற கருத்தில் - 1959 ஆம் ஆண்டு தமிழ்நாடு இந்து சமய அறநிலையக் கொடைகள் சட்டத்தின் 55வது பிரிவை தக்கவாறு திருத்துவதென்று முடிவு செய்யப்பட்டு அவசரச் சட்டம் ஒன்று 16.7.2006 அன்று வெளியிடப்பட்டது. இந்த அவசரச் சட்டத்தை, சட்டமாக்குகின்ற வகையில் 12.8.2006 அன்று சட்ட முன் வடிவு, தமிழ்நாடு சட்ட மன்றப் பேரவையில் அறிமுகப்படுத்தப்பட்டது. சட்டமன்றத்திலுள்ள பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க. தவிர மற்ற அனைத்துக் கட்சிகளும் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த சட்ட முன் வடிவினை ஏற்றுக் கொண்டன. இதற்கிடையில் அனைத்துச் சாதியினரும் அர்ச்சக ராவதற்கேதுவான அவசரச் சட்டத்தின் ஒரு பிரிவினை மட்டும் எதிர்த்து ஆதி சைவ சிவாச்சாரியார்கள் நலச் சங்கமும், தென்னிந்திய திருக்கோயில் அர்ச்சகர்கள் பரிபாலன சபையும் உயர்நீதி மன்றத்தில் உரிய முறையில் முறையீடு செய்யாமல், நேரடியாக உச்சநீதிமன்றத் திலேயே வழக்கு தொடுத்தனர். 14.8.2006 அன்று உச்சநீதி மன்றம் தமிழ்நாடு அரசின் அவசரச் சட்டப் பிரிவு 8 அதாவது அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர்கள் ஆவதற்கு வழக்கமோ அல்லது வழக்காறோ இடையூறாக இருந்திடக் கூடாது என்ற இந்தப் பிரிவுக்கு மட்டும் இடைக்காலத் தடை விதித்தும், பதில் மனு தாக்கல் செய்வதற்கு ஆறு வார கால அவகாசம் கொடுத்தும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்து சமயத் திருக்கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்வதற்கு ஆணை பிறப்பிக்கப்பட்ட போதும், உச்சநீதிமன்றம் வரை வழக்கு தொடுத்து தமிழில் பக்தர்கள் அர்ச்சனை செய்ய வேண்டுமென்று விரும்பும்போது மட்டும் தமிழிலே அர்ச்சனை செய்வதற்கான வசதியை செய்து தரலாமென்று 1992 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் ஆணையிட்டது. 1971 ஆம் ஆண்டு தமிழக அரசு இந்து சமயத் திருக்கோயில்களில் பரம்பரை முறையில் இல்லாமல் தகுதியுள்ளவர்களை அர்ச்சகர்களாக நியமிக்க வழி வகை செய்து சட்டம் இயற்றியபோது, அப்போதும் உச்சநீதிமன்றம் வரை வழக்கு எடுத்துச் செல்லப்பட்டு, உச்சநீதிமன்றம் தமிழக அரசின் சட்டம் செல்லுபடியாகும் என்று 1972 இல் தீர்ப்பு அளித்தது. உச்சநீதிமன்றம் 1972 இல் அளித்த தீர்ப்பிலும் 2002 இல் அளித்த தீர்ப்பிலும் மதத்தைப் பற்றி குறிப்பிடுகிறதே தவிர, சாதியைப் பற்றி எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை. மறைந்த எல்.இளைய பெருமாள் அவர்கள் தலைமையில் மத்திய அரசு நியமித்த தீண்டாமை ஒழிப்பு ஆணையம் அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆக உரிமை வேண்டும் என்ற பரிந்துரையை செய்திருந்தது. அதைப் போலவே நீதியரசர் மகராசன் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவும் அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராக ஆகம விதிகள் தடை செய்யவில்லை என்றும் உரிய பயிற்சியளித்து அவர்களை அர்ச்சகர்களாக ஆக்கலாம் என்றும் பரிந்துரைத்திருந்தது. இந்தப் பரிந்துரையை நடைமுறைப்படுத்துவதற்கான வழி முறைகளை நீதிபதி கிருஷ்ணசாமி ரெட்டியார் அவர்கள் தலைமையிலான ஆணையம் ஆய்வு செய்து அதற்கான திட்டங்களையும் பாடங்களையும் பட்டியலிட்டு அரசுக்கு அளித்திருந்தது. அதன் பின்னர் 2002 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் கேரள மாநிலம் தொடர்பான வழக்கு ஒன்றில் இந்திய உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் துரைசாமி ராஜூ, ராஜேந்திர பாபு ஆகியோர் மிகத் தெளிவான தீர்ப்பு ஒன்றை அளித்துள்ளார்கள். இந்து சமயத்தைச் சார்ந்த எவரும் சாதி வேறுபாடு இல்லாமல் அர்ச்சகர் ஆகலாம் என்ற தீர்ப்பினை அவர்கள் வழங்கியுள்ளார்கள். இந்தத் தீர்ப்பின் அடிப்படையிலே தான் தற்பொழுது நாம் அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராக நியமனம் செய்ய ஆணை வழங்கியுள்ளோம். சாதி முறை என்ற பிறவி இழிவைப் போக்கவும், தீண்டாமையை அடியோடு ஒழிக்கவும், சமூக நீதியை நிலைநாட்டவும், நாம் முயற்சி செய்யும் போதெல்லாம் ஒரு பிரிவினர் முட்டுக்கட்டை போடுவதையே வழக்கமாகக் கொண்டுள்ளனர். எனினும் நாம் இடையறாது போராடி அந்த முட்டுக்கட்டைகளை உடைத்தெறிந்து நமது இலட்சியங்களை நிலைநாட்டியுள்ளோம். ஆலயங்களுக்குள் செல்லவே அனுமதி மறுக்கப்பட்ட நிலையும், சிலர் வசிக்கும் தெருவிலே ஆடுமாடுகள் நடமாடலாம். ஆனால் சாதியால் பிரிக்கப்பட்டவர் நடமாடக் கூடாது என்றிருந்த நிலையும், தாய்மார்கள் மேலாடை அணியக் கூட கூடாது என்ற நிலையிலும், ஆடவர்கள் மேல் துண்டு போடக் கூடாது. கால்களிலே செருப்பு அணியக் கூடாது. டீக்கடைகளில், அலுவலகங்களில், பள்ளிகளில் தனித்தனி பாத்திரங்கள் என்ற கொடுமைகளிலிருந்து விடுபட்ட தமிழகம், இன்னமும் முழு விடுதலை பெறாத நிலை இருப்பதைத்தான் தற்போதுள்ள சூழ்நிலைகள் நமக்குத் தெளிவாக்குகின்றன. “வேத காலத்தில் பிறப்பால் சாதி எதுவும் இல்லை என்றும், ரிக் வேத மக்கள் அனைவரும் ஒரே வகுப்பைச் சார்ந்தவர்கள் என்றும்; வேத காலத்தில் சமுதாய இடப் பெயர்வு இருந்தது என்றும்; மிகப் பிற்காலத்தில்தான் அவரவர் மேற்கொண்டு வந்த தொழில்கள் இன்றைய அருவருக்கத்தக்க சாதிகள் எனும் வடிவத்தைப் பெற்றன என்றும்; பண்டித நேரு அவர்கள் உறுதிபடக் கூறியிருக்கிறார்.” இவ்வாறு வேதங்களே பிறப்பால் சாதி எதுவும் இல்லையென்றும், அனை வரும் சமம் என்றும் உறுதியாக சொல்லி விட்டதற்குப் பிறகும்,வேதங்களின் பெயரால் இன்றைய விஞ்ஞான யுகத்திலும் கூட சாதிப் பிரிவினைகள் பேசப்படுவதும், மேல் சாதி - கீழ் சாதி என்று வேறுபடுத்தப்படுவதும்; ஒரு சாதியினர் செய்யக்கூடிய அர்ச்சகர் பணியை மற்றொரு சாதியினர் செய்யக் கூடாது என்று தடுப்பதும்; இந்தக் கொடுமை களுக்கு எல்லாம் சட்ட அங்கீகாரம் தேடுவதும் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது என்பது நமக்கெல்லாம் மிகுந்த வேதனை தரக்கூடிய செய்தியாகும். அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக நியமனம் செய்வதற்கு ஏதுவாக இந்து சமய அறநிலையச் சட்டத்தில் திருத்தம் செய்து அவசரச் சட்டம் இயற்றியதை எதிர்த்து இந்திய உச்சநீதி மன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் அந்த சட்டத் திருத்தத்திற்கு தடையாணை விதித்து இடைக்கால தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. இடைக்காலத் தீர்ப்பெனினும் இதனை ஏற்று, சட்டத்தின் ஆட்சி தொடர்ந்து மேலோங்கி இருக்க வேண்டும் என்ற எண்ணத்தின் அடிப்படையில் உச்சநீதிமன்றம் சுட்டிக் காட்டியுள்ள குறிப்பிட்ட இந்தச் சட்டத் திருத்தத்தை, நீதிக்குத் தலைவணங்கு என்ற அடிப்படையில், அதாவது, அவசரச் சட்டம் 5/2006-ல் பிரிவு 8 ஐ நீக்கி விடுவதென்று அரசு முடிவு செய்துள்ளது. அந்த முடிவினை ஒட்டி திருத்தச் சட்ட முன் வடிவை நிறைவேற்றிட வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். இந்திய அரசியல் சாசனத்தின் 25-வது பிரிவில், சமுதாய நலனைக் கருதியும், சமுதாய மறுமலர்ச்சியை உருவாக்கிடவும் உரிய சட்டம் கொண்டு வர அரசுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. குடிமக்களுக்கு அளிக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகள் உரிய முறையில் நிலைநாட்டப் படவும், அந்த உரிமைகளின் பலன்களை அனைத்து சாதியினரும் அனுபவித்திடவும் தொடர்ந்து நாம் முயற்சிகளை மேற்கொள்வோம். அனைத்துச் சாதியினரும் எந்தவித வேறுபாடுமின்றி இந்து சமய ஆலயங்களில் அர்ச்சகராகப் பணியாற்றுவதற்கு இடர் எதுவும் ஏற்படுமானால் அதனைக் களைந்து நமது இலட்சியத்தை நோக்கிய பயணம் தொடர்ந்து நடைபெறும். அரசியல் சாசனத்தை நமக்கு வடித்துத் தந்த சிற்பிகளில் தலைமைச் சிற்பியான அண்ணல் டாக்டர் அம்பேத்கர் கண்ட கனவை நனவாக்கிட ஒல்லும் வகையெல்லாம் நாம் தொடர்ந்து உழைத்திடுவோம். அனைத்து இந்தியாவையும் கவர்ந்த கழகத் தேர்தல் அறிக்கையிலே சொல்லப்பட்டுள்ள உறுதிமொழிகளில் பெரும்பாலானவற்றை மிகக் குறுகிய காலத்தில் நிறைவேற்றி வரும் இந்த அரசு, இந்து சாதியினர் அனைவரும் எந்தவித வேறுபாடுமின்றி இந்து சமயத் திருக்கோயில்களில் அர்ச்சகர்களாகப் பணியாற்ற வேண்டும் என்ற நமது நீண்டநாள் கனவு நிறைவேறுவதை எண்ணியும், தந்தை பெரியார் நடத்திய சமுதாயப் புரட்சியில் ஒரு அத்தியாயம் இது எனினும், இன்னும் பல படிக்கட்டுகளைக் கடந்திட, இது பயன்படட்டும் என்ற நம்பிக்கையுடனும் நடைபோடுவோம்." அர்ச்சகர் சட்டம் : மக்கள் மன்றத்தின் அய்யங்கள்! கடந்த ஆகஸ்டு 21 ஆம் தேதி இந்து சமயம் அறநிலையக் கொடைகள் திருத்தச் சட்டம் நிறைவேறியது. ஏற்கனவே அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்பதற்கான அவசரச் சட்டத்தை, ஆளுநர் உத்தரவு வழியாக, தமிழக அரசு பிறப்பித்திருந்தது. அந்த அவசரச் சட்டத்துக்கு - சட்டப் பேரவை வழியாக அங்கீகாரம் தரவேண்டும் என்ற நடைமுறையின் கீழ் - சட்டசபையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டு - பிறகு, தீர்மானமாக நிறைவேறியிருக்கிறது. இதற்கிடையே - அவசரச் சட்டத்தின் 8 ஆவது பிரிவுக்கு எதிராக - பார்ப்பனர்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரவே, உச்சநீதிமன்றம் 8வது பிரிவுக்கு இடைக்காலத் தடை விதித்து, தமிழக அரசிடம் விளக்கம் கேட்டு தாக்கீது அனுப்பியது. “அனைத்து சாதியினரும் திருக்கோயில்களில் அர்ச்சகர்களாக அமர்த்தப்படுவதற்கு வழக்கமோ அல்லது வழக்காறோ (Custom of Usage) இடையூறாக இருந்திடக் கூடாது” என்ற பிரிவுக்குத்தான் இப்போது உச்சநீதி மன்றம், இடைக்காலத் தடை விதித்துள்ளது. எனவே - இந்தப் பகுதியை நீக்கிவிட்டு, தமிழக சட்டப்பேரவை தீர்மானத்தை நிறைவேற்றியிருக்கிறது. இந்தப் பகுதியை நீக்கியிருப்பதன் மூலம், அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகும் சட்டம், முடங்கிவிட்டதா? அது செயல்படுத்தப்படுமா, என்ற சந்தேகம் எழுந்துள்ளது. சட்டமன்றத்தில் - இதுபற்றி கலைஞர் உரையில் தெரிவித்த இன உணர்வுக் கருத்துகள் மிகவும் சிறப்பானது என்பதால், அந்த உரையை இங்கு பதிவு செய்திருக்கிறோம். அதே நேரத்தில், 8வது பிரிவு நீக்கப்பட்டுள்ளதால் ஏற்படும் விளைவுகளைப் பற்றி மக்களுக்கு தமிழக அரசு தெளிவுபடுத்த வேண்டும் என்று வற்புறுத்துகிறோம். அத்துடன், ஆகமப் பயிற்சிப் பள்ளி உருவாக்கி, அதில் முறையான பயிற்சி பெற்றவர்கள் தான் அர்ச்சகராக முடியும் என்ற நிலையில், ஏற்கனவே முறையான பயிற்சிகள் பெறாமல் பிறப்பின் அடிப்படையில் அர்ச்சகர்களாக இருப்பவர்கள், தொடர்ந்து அப்பதவியில் எப்படி நீடிக்க முடியும்? அவர்களை பதவி நீக்கம் செய்தாக வேண்டும். அப்போது தான் - பார்ப்பனரல்லாதார் அர்ச்சகராக நியமனம் பெற முடியும். இந்த நடைமுறைகள் குறித்தும், அரசு உரிய விளக்கம் தர வேண்டியது அவசியமாகும் என்று வற்புறுத்துகிறோம்.
திருச்சி சிவாவின் மகனும் தற்போது தமிழக பாஜக ஓ.பி.சி அணியின் மாநில செயலாளருமான சூர்யா சிவா சமீபத்தில் தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சரை விமர்சனம் செய்து பேசியதோடு நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சரின் மறைந்த தம்பி ராமஜெயம் குறித்தும் பல விமர்சனங்களை முன் வைத்துள்ளார். Written by WebDesk August 2, 2022 3:30:42 pm Follow Us திருச்சி சிவாவின் மகனும் தற்போது தமிழக பாஜக ஓ.பி.சி அணியின் மாநில செயலாளருமான சூர்யா சிவா சமீபத்தில் தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சரை விமர்சனம் செய்து பேசியதோடு நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சரின் மறைந்த தம்பி ராமஜெயம் குறித்தும் பல விமர்சனங்களை முன் வைத்துள்ளார். மறைந்த தொழிலதிபர் ராமஜெயம் கொலை செய்யப்பட்ட வழக்கு தற்போது விசாரணையில் இருந்தாலும் குற்றவாளிகளை ஒருபோதும் கண்டுபிடிக்க முடியாது. கொலை செய்தவரை கண்டுபிடித்து தண்டனை வாங்கி தரும் அளவிற்கு ராமஜெயம் தியாகி அல்ல என்றும் பேசியுள்ளார். மேலும் மறைந்த ராமஜெயம் அடாவடியானவர் என்றும் அவர்களுடைய வளர்ச்சியில் தான் தற்போது அமைச்சர் கே.என்.நேரு வாழ்ந்து வருகிறார் என்றும் சர்ச்சையை கிளப்பியுள்ளார். இதற்கு கண்டனம் தெரிவித்து திருச்சி மாவட்ட திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அருண் மத்திய மண்டல காவல்துறை தலைவரிடம் இன்று புகார் மனு அளித்துள்ளார். அதில் ஏற்கனவே தன்னிடம் பணியாற்றிய கார் ஓட்டுனருக்கு முறையான சம்பளம் வழங்காமல் அதை கேட்க சென்றவரை கொலை முயற்சி செய்ததாக வழக்கு அவர் மீது பதிவு செய்யப்பட்டு இருந்தும் தற்போது மீண்டும் இப்படி சர்ச்சைக்குரிய பேச்சை வெளியிட்டு இருப்பது சட்டம் ஒழுங்கை பாதிக்கும் நிலையாக இருக்கின்றது. எனவே, பாஜக பிரமுகர் சூர்யா சிவா மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார். அவர்களைத் தொடர்ந்து சமூக நீதி பேரவை அமைப்பின் சார்பில் சூர்யா சிவா மத கலவரத்தை தூண்டும் விதமாக தொடர்ந்து சர்ச்சைக்குரிய பேச்சாலும் செயல்பாடுகளாலும் மற்றவர்களை தூண்டி விடுவதாக குற்றம் சாட்டி அவர் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி மத்திய மண்டல காவல்துறை தலைவரிடம் மனு அளித்துள்ளதால் திருச்சி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சூர்யா சிவா மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருக்கின்றது என்பதும், பாஜகவின் அரசியலுக்கு கைப்புள்ளையாக சூர்யா சிவா பயன்பட்டு வருகின்றார் என அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது. செய்தி: க. சண்முகவடிவேல் Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.
குழந்தைகளுக்கான பீட்ரூட் கம்பு கஞ்சி Beetroot Kambu Kanji for babies 8 மாத குழந்தைக்கான சிறந்த உணவு கம்பு ஐந்து நிமிடங்களில் செய்யக்கூடிய ஆரோக்கிய உணவு. நீண்ட நேரம் பசியைத் தாங்கும். எனர்ஜி கொடுக்கும். அதேசமயம் ஊட்டச்சத்துகள் நிறைந்தது. Beetroot Kambu Kanji for babies / Beetroot Pearl Millet Porridge for Babies: தேவையான பொருட்கள்: கம்பு – 2 தேக்கரண்டி தண்ணீர் – 2 கப் பீட்ரூட் சாறு – 1/4…Read More Filed Under: கஞ்சி, சிறு தானியம் Tagged With: 8 month baby recipes in tamil, beetroot kambu kanji for babies, how to make kambu kanji for babies in tamil?, kambu koozh for babies, kambu koozh health benefits, kambu recipe in tamil 8 மாத குழந்தைகளுக்கான டேஸ்டி தயிர் கிச்சடி February 16, 2018 Leave a Comment Thayir kichadi for babies: தயிர் உடலுக்கு நல்லது… குழந்தைகள் உண்ணும் உணவில் தயிர் இருப்பதால் குழந்தைகளுக்கு நன்மையே. இதில் கால்சியம் நிறைந்துள்ளது. வயிற்றுக்குச் சிறந்த உணவு. பசும்பாலில் தயாரித்த தயிராக இருப்பது கூடுதல் சிறப்பு. இந்த ரெசிபியை செய்ய, அதிகம் புளிக்காத தயிராகப் பயன்படுத்துவது நல்லது. 8 மாதத்துக்கு மேல் இருக்கும் குழந்தைகளுக்கு இந்தத் தயிர் கிச்சடி ரெசிபியை செய்து தரலாம். தயிர் கிச்சடி தேவையானவை அரிசி – 1 கப் சிறு பயறு…Read More Filed Under: கிச்சடி, அரிசி Tagged With: 8 month baby recipes in tamil, baby food in tamil, curd for babies, thayir kichadi, thayir saadam, குழந்தைகளுக்கான தயிர் கிச்சடி- ஈ-ஸ்டோருக்கு வாங்க நான் Dr.ஹேமா, அல்லது டாக்டர் மம்மி. இப்போ ஆக்டிவா மருத்துவம் பார்ப்பதில்லை. என் இரு சுட்டிப் பிள்ளைகள் என்னை பிசியா வைத்திருக்கிறார்கள்.புதிய பெற்றோர்களுக்கு எப்படி குழந்தை வளர்ப்பதென்று எளிய முறையில் உதவ இந்த வலைதளத்தை ஆரம்பித்துள்ளேன்... மேலும் படிக்க...
மேஷம்: உங்களின் புத்திசாலித்தனத்தை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். சகோதர ஒற்றுமை பிறக்கும். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவீர்கள். மனைவி மூலம் உதவி கிடைக்கும். வியாபாரத்தில் புதிய சலுகைகளை அறிவிப்பீர்கள். பணியில் பெரிய பொறுப்புகள் வந்து சேரும். எதிர்பாராத நன்மைகள் கிடைக்கும் நாள். ரிஷபம்: பணவரவு அதிகரிக்கும். பழைய உறவினர்கள் நண்பர்களிடம் சென்று பேசுவார்கள். அரசாங்கத்தால் அனுகூலம் உண்டு. வழக்கில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். பிரபலங்கள் அறிமுகம் செய்யப்படுவார்கள். வியாபாரத்தில் சில மாற்றம் செய்து லாபம் அடைவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளுடன் நெருங்கிப் பழகுவீர்கள். தொட்டது ஒரு வேதனையான நாள். மிதுனம்: மனதில் புதிய எண்ணங்கள் வரும். குழந்தைகளின் தனித்துவ குணங்களை அறிந்து கொள்வீர்கள். நீண்ட பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். புதியவர்கள் நண்பர்களாகிறார்கள். தொழிலை விரிவுபடுத்துவீர்கள். பணியில் அதிகாரிகள் வந்து உதவுவார்கள். கனவு நனவாகும் நாள். கடகம்: எதிர்ப்புகள் அடங்கும். நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் முடியும். தாயாருடன் வீண் வாக்குவாதங்கள் வந்து நீங்கும். பணப்பற்றாக்குறையை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். வேலையில் உரிமை மறுக்கப்படுகிறது. தேவைகள் பூர்த்தி செய்யப்பட்ட தேதி. சிம்மம்: அனுபவ அறிவு உங்கள் பேச்சில் தெரிகிறது. சகோதரர்களால் ஆதாயம் அடைவீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பைப் பெறுவீர்கள். அரசாங்கத்தால் ஆதாயம் உண்டு. வாகனத்தை பழுது பார்ப்பீர்கள். வியாபாரத்தில் சில நுணுக்கங்களைக் கற்றுக் கொள்வீர்கள். வேலையில் உங்கள் கை வீங்கும். தைரியமான நாள். கன்னி: நீங்கள் எப்பொழுதும் சத்தம் போடுபவர். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். சோர்வு நீங்கி சுறுசுறுப்புடன் பணியாற்றுவீர்கள். எதிர்பாராத இடங்களிலிருந்து பணம் வரும். நட்பு வட்டம் விரிவடையும். வியாபாரத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். வேலையில் திருப்தி ஏற்படும். புதுப்பிக்கும் நாள். துலாம்: லக்னத்தில் சந்திரன் உங்களை சிலரை இழிவாகப் பார்க்க வைப்பார். உடனே உணர்ச்சிவசப்பட்டு கத்தாதீர்கள். கொஞ்சம் பொறுமையாக இருங்கள். கணவன் மனைவிக்கிடையே இருந்த வீண் சந்தேகங்கள் நீங்கும். தொழிலில் வேலையாட்களை தட்டிக்கேட்காமல் வேலை கிடைப்பது நல்லது. வேலையில் சக ஊழியர்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். விழிப்புடன் இருக்க வேண்டிய நாள். விருச்சிகம்: தூண்டுதலின் பேரில் அவசர முடிவுகளை எடுக்க வேண்டாம். குழந்தைகளின் உணர்வுகளைப் புரிந்துகொள்வீர்கள். எதிர்மறை எண்ணங்கள் வந்து நீங்கும். வியாபாரத்தில் புதிய முதலீடு செய்யலாம். வேலையில் சக ஊழியர்களுக்கு இடமளிக்கவும். ஓய்வெடுக்க ஒரு நாள். தனுசு: அதிரடியான சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் பாசத்தைப் பொழிவார்கள். பழைய கடனில் ஒரு பகுதியை அடைப்பீர்கள். ஆடை அணிகலன்கள் சேர்க்கிறது. தொழிலில் பணியாளர்கள் பணிவுடன் செயல்படுவார்கள். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகள் உங்களை மதிப்பார்கள். இனிய நாள். மகரம்: நம்பிக்கையுடன் பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். குழந்தைகளை புதிய பாதையில் அழைத்துச் செல்வீர்கள். மேலதிகாரிகள் உங்களை நம்பி பெரிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வீடு, வாகனம் பழுது பார்ப்பீர்கள். வியாபாரம் சூடுபிடிக்கும். பணியில் சக ஊழியர்களின் ஆதரவு. கும்பம்: கணவன்-மனைவிக்குள் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் உடனடியாக நிறைவேறும். உறவினர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். புண்ணிய ஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள். தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தை சரிசெய்வீர்கள். வேலையில் அமைதி நிலவும். மீனம்: சந்திராஷ்டமம் காரணமாக சில விஷயங்களில் போராடி முடிப்பீர்கள். குடும்பத்தில் ஒருவரை ஒருவர் குறை கூறாதீர்கள். சிலர் உங்கள் மீது வீண் பழி சுமத்த முயற்சிப்பார்கள். ஆரோக்கியத்தைப் பாதிக்கும். கொஞ்சம் சிக்கனமாக இருங்கள். வியாபாரத்தில் பணியாளர்களால் டென்ஷன் அதிகரிக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகளிடம் கண்ணியமாக நடந்து கொள்ளவும்.
தமிழ் சினிமாவில் பல வெற்றிப் படங்களைக் கொடுத்து வரக்கூடிய டாக்டர் ஐசரி கே கணேஷின் வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் தயாரிப்பில் ’சிங்கப்பூர் சலூன்’ எனப் பெயரிடப்பட்டுள்ள புதிய படத்தில் இணைந்திருக்கிறார் ஆர்.ஜே. பாலாஜி நடிகரும் இயக்குநருமான ஆர்.ஜே. பாலாஜி ’எல்.கே.ஜி.’, ‘மூக்குத்தி அம்மன்’ மற்றும் ‘வீட்ல விசேஷங்க’ ஆகிய மூன்று படங்கள் மூலம் பாக்ஸ் ஆஃபிஸ் வெற்றியைக் கொடுத்து தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் வர்த்தக வட்டத்தில் முன்னணி கதாநாயகனாக இருக்கிறார் ஆர்.ஜே. பாலாஜி இதற்கு முன்பு தான் நடித்திருந்த படங்களின் வெற்றி மூலம் வர்த்தக வட்டாரத்தில் நல்லதொரு வசூல் செய்து வியாபாரம் கொடுத்திருக்கிறார். அதேபோல, வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனலும் அடுத்தடுத்து கமர்ஷியல் ரீதியாக வெற்றிப் படங்களைக் கொடுத்து வருகிறது. இப்போது, சினிமா ரசிகர்களுக்குப் பிடித்த பொழுதுபோக்கு இயக்குநரான கோகுலுடன் ‘சிங்கப்பூர் சலூன்’ படத்தில் இந்தக் கூட்டணி இணைந்திருப்பது பார்வையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் மத்தியில் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரும் பொருட்செலவில் தயாரிக்கப்பட்டுள்ள இந்தப் படம், முக்கிய கதாபாத்திரத்தில் பல முக்கிய நடிகர்கள் நடிக்கக் கூடிய மல்டி ஸ்டாரர் படமாக இருக்கும். விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடந்து வரக்கூடிய ‘சிங்கப்பூர் சலூன்’ திரைப்படம் அடுத்த வருடம் அதாவது 2023 கோடை விடுமுறையை ஒட்டி வெளியாக இருக்கிறது. இந்த வெற்றிகரமான கூட்டணியில் புதிய இயக்குநர் இணைந்திருப்பது சுவாரஸ்யம் தரக்கூடிய ஒன்று. வழக்கமாக ஆர்.ஜே. பாலாஜி அவரது படங்களுக்கு அவரே இயக்குநராக அல்லது அவரது முதன்மை/ உதவி இயக்குநர்களுடன் கூட்டணி சேர்வார். இந்த முறை ஆர்.ஜே. பாலாஜி- டாக்டர் ஐசரி கே கணேஷ் இணை, இயக்குநர் கோகுலுடன் (ரெளத்திரம், இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, காஷ்மோரா, ஜூங்கா புகழ் இயக்குநர்) இணைந்திருக்கிறது. நிச்சயமாக இந்தக் கூட்டணி பார்வையாளர்களுக்குப் பிடித்த வகையிலான ஒரு கதையைத் தரும்.
ஒரு வலைத்தளத்தை ஆராய்வது எப்போதுமே எளிதான பணியாகும், ஆனால் உங்கள் தகவல்களை பாதுகாப்பாக வைத்திருக்கவில்லை. தனிப்பட்ட தரவை யாரோ திருடலாம் என்பது உலகம் முழுவதும் ஒரு பொதுவான கவலை. இணையத்தில் உலாவல் இன்னும் 100% பாதுகாப்பாக இல்லை, ஆனால் திருட்டு பயத்தை கணிசமாக மோசமாக்கிய ஒன்று எஸ்.எஸ்.எல் சான்றிதழ். இன்று வலை உலாவிகள் SSL சான்றிதழ் இல்லாத தளங்களுக்கான பாதுகாப்பு எச்சரிக்கைகளையும் காட்டுகின்றன. இத்தகைய எச்சரிக்கைகள் பெரும்பாலான பயனர்கள் முன்னேறுவதைத் தடுக்கின்றன. இது பயனர்களுக்கும் வணிக/வலைத்தள உரிமையாளர்களுக்கும் வெவ்வேறு அர்த்தங்களைக் கொண்டுள்ளது. பயனர்களின் பார்வையில், இதுபோன்ற விழிப்பூட்டல்கள் நன்றாகத் தெரிகிறது. எச்சரிக்கை தங்கள் சாதனத்தில் வைரஸ் தாக்குதலை அல்லது அவர்களின் தகவல்களை திருடுவதைத் தடுத்ததாக அவர்கள் உணர்கிறார்கள். எஸ்எஸ்எல் சான்றிதழ் இல்லாத வணிகத்தின் வலைத்தளம் அதன் ஆன்லைன் இருப்பைக் கொல்ல போதுமானது. உலாவிகளின் எச்சரிக்கைகள் காரணமாக, பெரும்பாலான பயனர்கள் அந்த வணிக வலைத்தளத்தை கூட திறக்க மாட்டார்கள். இன்று, நீங்கள் எஸ்எஸ்எல் சான்றிதழைப் பற்றி பல விஷயங்களைக் கற்றுக் கொள்ளப் போகிறீர்கள், ஆனால் நம்பகமான மூலங்களிலிருந்து ஒரு எஸ்எஸ்எல் சான்றிதழைப் பெறுவது ஏன் செமால்ட், சரி. எஸ்எஸ்எல் சான்றிதழ் என்றால் என்ன? எஸ்எஸ்எல் சான்றிதழில், எஸ்எஸ்எல் என்பது பாதுகாப்பான சாக்கெட் லேயரைக் குறிக்கிறது. இது டிஜிட்டல் சான்றிதழ் ஆகும், இது வலைத்தளங்களை அங்கீகரிக்கிறது மற்றும் தரவு ஒருமைப்பாட்டையும் அவற்றில் தரவு குறியாக்கத்தையும் அனுமதிக்கிறது. பயனர்பெயர்கள், கடவுச்சொற்கள், கிரெடிட் கார்டுகளின் விவரங்கள் மற்றும் இணையத்தில் அனுப்பப்பட்ட மற்றும் பெறப்பட்ட பிற தரவுகளின் முக்கியமான தகவல்களின் பாதுகாப்பிற்காக இது பயன்படுத்தப்படுகிறது. முகவரிப் பட்டியைப் பார்த்து எஸ்எஸ்எல் சான்றிதழ் கொண்ட வலைத்தளத்தை நீங்கள் அடையாளம் காணலாம். வழக்கமான ஒன்றுக்கு (HTTP) பதிலாக பாதுகாப்பான ஹைபர்டெக்ஸ்ட் பரிமாற்ற நெறிமுறையை (HTTPS) காண்பீர்கள். எஸ்.எஸ்.எல் சான்றிதழ்களைப் பற்றி அறியும்போது நீங்கள் பெரும்பாலும் டி.எல்.எஸ் சான்றிதழ் என்ற சொல்லைக் காணலாம். அது என்ன என்று பார்ப்போம். TLS சான்றிதழ் டி.எல்.எஸ் (போக்குவரத்து அடுக்கு பாதுகாப்பு) என்பது எஸ்.எஸ்.எல் இன் வாரிசு நெறிமுறை. இது எஸ்.எஸ்.எல் போல ஆனால் மேம்பட்ட வழியில் செயல்படுகிறது. இணையம் வழியாக தகவல் மற்றும் தரவை மாற்றுவதை பாதுகாக்க இது குறியாக்கத்தையும் வழங்குகிறது. SSL ஐப் போலவே, TLS உடன் பாதுகாக்கப்பட்ட வலைத்தளங்கள் அல்லது வலைப்பக்கங்களின் URL களும் HTTPS உடன் முத்திரை குத்தப்படுகின்றன. எஸ்எஸ்எல் சான்றிதழின் தேவை என்ன? வலைத்தளங்களும் தனிப்பட்ட சாதனங்களும் இணையம் வழியாக இணைக்கும்போது எப்போதும் பாதுகாப்பு அபாயங்கள் உள்ளன. வலைத்தளங்களுக்கும் சாதனங்களுக்கும் இடையிலான இணைப்பு பாதுகாப்பானது மற்றும் எந்த தகவலும் திருடப்படவில்லை என்பதை ஒரு SSL சான்றிதழ் உறுதி செய்கிறது. ஒரு பாதுகாப்பு சான்றிதழ் ஒரு வலைத்தளத்தை நம்பகமானதாக ஆக்குகிறது மற்றும் மோசடி செய்பவர்களின் வலையில் சிக்காமல் பயனர்களைப் பாதுகாக்கிறது. எஸ்எஸ்எல் சான்றிதழ் பாதுகாக்கும் பல வகையான தகவல்களில் சில கீழே உள்ளன: பயனர்பெயர்கள் மற்றும் கடவுச்சொற்கள் வங்கி கணக்கு விவரங்கள் கிரெடிட் கார்டு விவரங்கள் மற்றும் பரிவர்த்தனைகள் தனிஉரிமைத்தகவல் தனிப்பட்ட தகவல் - முழு பெயர், பிறந்த தேதி, முகவரி அல்லது தொடர்பு எண் மருத்துவ பதிவுகள் ஒப்பந்தங்கள் மற்றும் பிற சட்ட ஆவணங்கள் SSL சான்றிதழ்கள் வகைகள் பாதுகாப்பு ஒருமைப்பாட்டைப் பொறுத்து, மூன்று வகையான எஸ்எஸ்எல் சான்றிதழ்கள் உள்ளன. நீங்கள் ஒரு வலைத்தளத்தை வைத்திருந்தால், ஒரு SSL சான்றிதழைத் தேடுகிறீர்களானால், இந்த மூன்று வகையான சான்றிதழ்களை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். உங்கள் தேவைகளை எந்த வகையான சான்றிதழ் பூர்த்தி செய்யும் என்பதை தீர்மானிக்க இது உதவும். அவற்றைப் பார்ப்போம்: 1. டொமைன் சரிபார்ப்பு (டி.வி) இவை எளிய எஸ்எஸ்எல் சான்றிதழ்கள் மற்றும் வலைத்தள உரிமையாளரை சரிபார்த்த பிறகு வழங்கப்படுகின்றன. உரிமையாளரின் அடையாளத்தை சரிபார்க்க, சான்றிதழ் அதிகாரிகள் (CA) வலைத்தளத்தின் பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சலுக்கு சரிபார்ப்பு மின்னஞ்சலை அனுப்பவும். வழக்கில் நிறுவனத்தின் அடையாளத்தை சரிபார்க்க வேண்டிய அவசியமில்லை டொமைன் சரிபார்க்கப்பட்ட சான்றிதழ்கள். எளிதில் பெறக்கூடிய இந்த சான்றிதழ்கள் மிகக் குறைந்த அளவிலான பாதுகாப்பை வழங்குகின்றன என்பதையும் நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். அதனால்தான் பாதுகாப்பற்ற வலைத்தளங்களை உருவாக்க சைபர் கிரைமினல்கள் அவற்றை அதிகம் பயன்படுத்துகின்றன. 2. நிறுவன சரிபார்ப்பு (OV) இந்த சான்றிதழ்கள் மிதமான அளவிலான பாதுகாப்பை வழங்குகின்றன. அமைப்பு, அதன் வலைத்தளத்தின் டொமைன் பெயர், ப location தீக இருப்பிடம் மற்றும் பிற ஒத்த விஷயங்கள் போன்ற தகவல்களை சான்றிதழ் அதிகாரிகள் (CA) சரிபார்க்கும்போது மட்டுமே ஒரு நிறுவன சரிபார்ப்பு சான்றிதழ் வழங்கப்படுகிறது. குறைந்த உணர்திறன் பரிவர்த்தனைகளைக் கையாளும் வலைத்தளங்களுக்கு இந்த சான்றிதழ்கள் சிறந்தவை. OV சான்றிதழ்களின் சரிபார்ப்பு செயல்முறை பொதுவாக 1-3 நாட்கள் ஆகும் என்பதை நினைவில் கொள்க. 3. விரிவாக்கப்பட்ட சரிபார்ப்பு (EV) ஒரு நீட்டிக்கப்பட்ட சரிபார்ப்பு சான்றிதழ் மிக உயர்ந்த அளவிலான பாதுகாப்பை வழங்குகிறது மற்றும் முக்கியமான தகவல்களைக் கையாளும் வலைத்தளங்களுக்கு கட்டாயமாகும். இந்த சான்றிதழைக் கொண்ட வலைத்தளம் மிகவும் நம்பகமானதாகக் கருதப்படுகிறது. இந்த சான்றிதழை வழங்க, சான்றிதழ் அதிகாரிகள் (CA) விண்ணப்பதாரரின் விரிவான மதிப்பாய்வைச் செய்கிறார்கள். மதிப்பாய்வு செய்யும் போது, ​​அதிகாரிகள் பெருநிறுவன ஆவணங்களை ஆராய்ந்து, விண்ணப்பதாரரின் அடையாளத்தை உறுதிசெய்து, பக்கச்சார்பற்ற மூல/தரவுத்தளத்தின் மூலம் அதன் தகவல்களை சரிபார்க்கிறார்கள். எஸ்எஸ்எல் சான்றிதழ்களின் வகைப்பாடு அவற்றின் பயன்பாட்டின் அடிப்படையில், எஸ்எஸ்எல் சான்றிதழ்கள் பின்வரும் மூன்று வகைகளாக வகைப்படுத்தப்படுகின்றன: 1. ஒற்றை டொமைன் SSL சான்றிதழ் பெயர் குறிப்பிடுவது போல, இந்த வகை SSL சான்றிதழ் ஒற்றை களத்திற்கு பொருந்தும். இந்த சான்றிதழ் இந்த டொமைனின் கீழ் வரும் அனைத்து பக்கங்களையும் பாதுகாக்கிறது, ஆனால் அந்த டொமைனின் எந்தவொரு துணை டொமைனையும் அங்கீகரிக்க நீங்கள் இதைப் பயன்படுத்த முடியாது. 2. வைல்டு கார்டு எஸ்எஸ்எல் சான்றிதழ் வைல்டு கார்டு எஸ்எஸ்எல் சான்றிதழ் ஒரு டொமைனை மட்டுமல்ல, அதன் கீழ் வரும் அனைத்து துணை டொமைன்களையும் பாதுகாக்கிறது. வைல்டு கார்டு எஸ்எஸ்எல் சான்றிதழால் பாதுகாக்கப்பட்ட துணை டொமைன்களைப் பற்றி பயனர்கள் தெரிந்து கொள்ள விரும்பினால், அவர்கள் தங்கள் வலை உலாவியின் முகவரிப் பட்டியில் உள்ள பேட்லாக் மீது கிளிக் செய்யலாம். அடுத்து, விவரங்களைக் காண அவர்கள் "சான்றிதழ்" (Google Chrome இல்) என்பதைக் கிளிக் செய்ய வேண்டும். 3. மல்டி டொமைன் எஸ்எஸ்எல் சான்றிதழ் (எம்.டி.சி) ஒரு MDC என்பது பல களங்களுக்கு பாதுகாப்பை வழங்கும் ஒரு SSL சான்றிதழ் ஆகும். துணை டொமைன்கள் கூட இல்லாத களங்கள் ஒரே SSL சான்றிதழைப் பகிரலாம். நீங்கள் பல வலைத்தளங்களை வைத்திருந்தால், அவை அனைத்தையும் பாதுகாக்க ஒற்றை சான்றிதழ் விரும்பினால், பல டொமைன் எஸ்எஸ்எல் சான்றிதழுக்குச் செல்லுங்கள். தனிப்பயனாக்கப்பட்ட மற்றும் பிரத்யேக SSL சான்றிதழை நீங்கள் விரும்பினால், a உடன் தொடர்பு கொள்ளுங்கள் நம்பகமான சான்றிதழ் வழங்குநர். ஒரு வலைத்தளம் பாதுகாக்கப்பட்டுள்ளதா என்பதை எவ்வாறு கண்டுபிடிப்பது? ஒரு வலைத்தளம் ஒரு SSL சான்றிதழால் பாதுகாக்கப்பட்டுள்ளதா என்பதைக் கண்டுபிடிக்க, உங்கள் உலாவியில் உள்ள முகவரிப் பட்டியைப் பார்க்க வேண்டும். அங்கு முதல் விஷயம் ஒரு பேட்லாக் இருந்தால் மற்றும் தளத்தின் முகவரி தொடங்குகிறது https, மீதமுள்ள வலைத்தளம் ஒரு எஸ்எஸ்எல் மூலம் பாதுகாக்கப்படுகிறது. நீங்கள் ஒரு படி மேலே சென்று ஒரு வலைத்தளத்திற்கு வலுவான SSL சான்றிதழ் இருக்கிறதா இல்லையா என்பதை அறிய விரும்பினால், மீண்டும் உங்கள் உலாவியின் URL பட்டியைப் பாருங்கள். நீங்கள் ஒரு பேட்லாக் பார்த்தால், அதைக் கிளிக் செய்க. இந்த சான்றிதழ் யாருடையது மற்றும் பிற தகவல்களை நீங்கள் காண்பீர்கள். மேலும் விவரங்களை அறிய, அந்தந்த புலத்தில் கிளிக் செய்க. HTTPS மற்றும் எஸ்சிஓ. ஏதாவது தொடர்பு இருக்கிறதா? கூகிளின் எஸ்சிஓ தரவரிசை வழிமுறைகள் எப்போதும் மாறிக்கொண்டே இருக்கும் என்பது பொதுவாக அறியப்படுகிறது. டிசம்பர் 17, 2015 அன்று, கூகிள் HTTPS பக்கங்களுக்கு முன்னுரிமை அளிக்கத் தொடங்கியது. வலைத்தளங்களில் ஒரு SSL சான்றிதழ் கிடைப்பது HTTPS உடன் தொடங்குகிறது. வலைத்தளம் நம்பகமானது மற்றும் இது ஒரு எஸ்சிஓ லிப்ட் பெறும் என்பதை இது குறிக்கிறது. இரண்டு வலைத்தளங்கள் உள்ளன (ஒன்று HTTP உடன் தொடங்குகிறது, மற்றொன்று HTTPS உடன்) மற்றும் அவற்றின் உள்ளடக்கம் ஒரே விஷயத்தைப் பற்றியது என்று வைத்துக்கொள்வோம், சூழல் நட்பு தயாரிப்புகள் என்று சொல்லலாம். மற்ற எல்லா தரவரிசை காரணிகளையும் நீங்கள் தொடர்ந்து வைத்திருந்தால், HTTPS உடன் தொடங்கும் வலைத்தளம் அல்லது ஒரு SSL சான்றிதழைக் கொண்டிருப்பதாகக் கூறுவது கூகிளின் தேடல் முடிவுகள் பக்கத்தில் உயர்ந்த இடத்தில் இருக்கும். எஸ்எஸ்எல் சான்றிதழ்களை சரியான முறையில் செயல்படுத்துவதை வெப்மாஸ்டர்கள் உறுதி செய்ய வேண்டும், ஏனெனில் இது பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கும் தேடுபொறிகளில் மேம்பட்ட தரவரிசைக்கும் வழிவகுக்கும். செமால்ட்டிலிருந்து எஸ்எஸ்எல் சான்றிதழ். இது வேறுபட்டதா? செமால்ட்டிலிருந்து எஸ்எஸ்எல் சான்றிதழ் இது பிற மூலங்களால் வழங்கப்படுவதைப் போன்றது. செமால்ட் வழங்கிய சேவை மற்றும் நிறுவலின் எளிமை ஆகியவற்றில் வித்தியாசம் உள்ளது. செமால்ட் மூன்று வகையான திட்டங்களை வழங்குகிறது: 1. அடிப்படை உங்களிடம் ஏற்கனவே ஒரு SSL சான்றிதழ் இருக்கும் நேரத்திற்கான அடிப்படை திட்டம், ஆனால் அது உங்கள் தளத்தில் நிறுவப்படவில்லை. இந்த திட்டம் SSL நிறுவலையும் HTTPS ஆதரவையும் வழங்குகிறது. 2. தரநிலை சிறந்த ஒப்பந்தம் என்றும் பிரபலமானது, நிலையான திட்டம் அதிக மதிப்பை வழங்குகிறது. இந்தத் திட்டத்தில் நிறுவலுடன் கோமோடோவிலிருந்து நேர்மறையான எஸ்எஸ்எல் சான்றிதழ் அடங்கும். கொமோடோவின் நேர்மறை எஸ்எஸ்எல் சான்றிதழ்கள் உயர் மட்ட பாதுகாப்பை வழங்குகிறது. அவர்கள் காகிதமற்ற சரிபார்ப்பு நடைமுறையைப் பின்பற்றுகிறார்கள், ஆனால் மிக முக்கியமான விஷயம் செமால்ட்டிலிருந்து அவற்றின் நிறுவலாகும். உங்கள் தளம் ஒரு பேட்லாக் பெறுகிறது மற்றும் சில நிமிடங்களில் மிகவும் பாதுகாப்பாகிறது. 3. பிரீமியம் இந்த திட்டம் உயர் மட்ட பாதுகாப்பையும் உறுதி செய்கிறது. இது உங்கள் வலைத்தளத்திற்கான நேர்மறையான SSL வைல்டு கார்டு சான்றிதழ், அதன் துணை டொமைன் மற்றும் அனைவருக்கும் நிறுவல் ஆகியவற்றை உள்ளடக்கியது. நீங்கள் ஒரு இணையவழி கடையை இயக்குகிறீர்கள் அல்லது உங்கள் தளத்திற்கு பல துணை டொமைன்கள் இருந்தால், செமால்ட்டிலிருந்து பிரீமியம் திட்டத்திற்குச் செல்லுங்கள். செமால்ட்டிலிருந்து ஒவ்வொரு எஸ்எஸ்எல் சான்றிதழையும் நிறுவுவதன் மூலம், நீங்கள் பெறுவீர்கள்: உங்கள் டொமைன் மற்றும் துணை டொமைன்களுக்கான வலுவான பாதுகாப்பு (பிரீமியம் திட்டத்தின் விஷயத்தில்) SSL சான்றிதழை விரைவாக நிறுவுதல் அனைத்து வலை உலாவிகளிலும் ஒரு பேட்லாக் அல்லது ஒத்த பாதுகாப்பு அடையாளம் உங்கள் வலைத்தளத்தைப் பார்வையிடும் அனைவருக்கும் தனியுரிமை பாதுகாப்பு உறுதி அதிகரித்த கரிம போக்குவரத்து, குறிப்பாக Google SERP களில் இருந்து (தேடுபொறி முடிவு பக்கங்கள்) முடிவுரை ஆன்லைன் உலகில், தகவல் திருட்டுக்கு எதிரான பாதுகாப்பு மிகப்பெரிய கவலையாக உள்ளது. ஒரு SSL சான்றிதழ் வலைத்தள உரிமையாளர்கள் மற்றும் பயனர்கள்/பார்வையாளர்கள் இருவரின் பாதுகாப்பு தொடர்பான கவலைகளை மங்கச் செய்கிறது. உங்கள் வலைத்தளம் ஒரு இணையவழி கடை, நிதி நிறுவனம் அல்லது பெரிய நிறுவனத்தை பிரதிநிதித்துவப்படுத்தினாலும், ஒரு SSL சான்றிதழ் அவசியம் இருக்க வேண்டும். இது உங்கள் தளத்தை நம்பகமானதாக ஆக்குகிறது மற்றும் பயனர்பெயர்கள், கடவுச்சொற்கள், கட்டண விவரங்கள், முகவரிகள் போன்ற முக்கியமான வாடிக்கையாளர் தகவல்களை உங்கள் தளம் கையாண்டால் பாதுகாப்பை வழங்குகிறது. கூகிள் ஒரு பாதுகாப்பான வலைத்தளம் அல்லது வலைப்பக்கத்திற்கும் முன்னுரிமை அளிப்பதால், ஒரு நம்பகமான மூலத்திலிருந்து SSL சான்றிதழ் உங்கள் வலைத்தளத்தின் மிகவும் தேவையான எஸ்சிஓ தரவரிசையை மேம்படுத்த முடியும்.
என் நண்பன் பீனிக்ஸை தன் ஆட்டோவின் பிண்னணியில் பல்லவன் வரைந்திருந்த ஒரு உயிருள்ள ஓவியத்தைப் பார்த்து, பல மாதங்களுக்குப் பின் அவரைத் தொலைபேசியில் அழைத்தேன். இருவருக்குமே குரல் கம்மியிருந்தது. சொற்களில் லேசான நடுக்கமிருந்ததை கவனித்தேன். “அந்தப்படம்!?” மௌனத்தில் ஒட்டியிருந்த ஒரு சொல்லை எடுக்க வெகுநேரமானது. அவர் புளகாங்கிதமடைந்ததை இங்கிருந்தே உணர முடிந்தது. “அற்புதம் ஓவியர்” “நன்றி பவா” இருவரும் வேறென்னென்னமோ பேசினோம். ஆனால் பீனிக்ஸின் ஓவியத்தின் முன் வார்த்தைகள் மரணித்து உதிர்வதை அவதானித்தேன். அந்த ஓவியத்திற்கு அவர் ஒரு சில வரிகள் எழுதி இருந்தார். எழுத்தும் அவரின் அந்த ஓவியத்தைப் போலவே ஜீவனுள்ளதாயிருந்தது. தொடர்ந்து பிரமீள், கந்தர்வன், ஜே.கே., ஜி.நாகராஜன் என நாளுக்கு ஒரு ஓவியமும், எழுத்துமாய் அவரிடமிருந்து வந்து கொண்டிருந்தது என்னை ஆச்சர்ய நீரில் அமுக்கிப் போட்டது. படைப்பூக்கம் ஒன்றிணைந்து முயங்கி வரும் போதெல்லாம் தன் லௌகீக வாழ்வில் அதை கரைய விடுபவர் பல்லவன் என்ற என் மதிப்பீடு மெல்ல சரியத் தொடங்கியது. அவருக்கு எப்போதுமே என் குடும்பத்தில் பெரிய அண்ணன் ஸ்தானம். வம்சிக்கும் மானசிக்கும் அவர் எப்போதும் பெரியப்பாதான். ஸ்தாபனம், அமைப்பு இதெல்லாம் பல அருமையான மனிதர்களை பகைகொள்ள செய்துவிடுகிறது. அது எனக்கு மட்டும் நேரவில்லை, உலகமெங்கும் உள்ள அசல் கலைஞர்களை எப்போதும் நிலைகுலைய வைத்திருக்கிறது. பல்லவனும் நானும் அப்படியொரு பொய் விரோதம் பூண்டு விலகியிருந்தோம். ஒரு ஓவியம் எங்களை மீண்டும் அன்பு கொள்ள செய்துவிட்டது. பூக்களின் எத்தனை உதிர்விலும் இன்னொன்று புதிதாய் பூத்துவிடுகிறதுதானே!? ஒரு சைன் போர்டு ஆர்ட்டிஸ்ட்டாகத்தான் ஓவியர் பல்லவன் என் பள்ளி நாட்களில் எனக்கு அறிமுகமாகிறார். அவர் ஓவியக் கூடத்திற்கு வெளியே தெருவையே வியாபித்து அவர் வைத்திருக்கும் போர்டுகளும் ஏஅஃஃஙு ஙிOOஈ டெய்லர் கடைக்கு ஒரு வெள்ளைக்காரனின் உதட்டிலிருந்து உதிரும் கடைசித்துளி சிகரெட் சாம்பலையும் பார்த்து, யார் இந்த ஆள்? என என்னைத் தேட வைத்தது. அவர் ஓவியக்கூடத்திலிருந்து வீசும் எனாமல் பெயிண்ட் வாசனை, என் காதலியின் மீதிருந்து மேலெழுந்த பர்ஃபியூம் வாசனைக்கு நிகரானது. இரண்டுமே என்னை அவ்வயதில் கிறங்கடித்தன. நான் படித்த புகழ்பெற்ற டேனிஷ் மிஷன் பள்ளியின் மெயின் கேட்டுக்கு பக்கத்திலிருந்த அவர் ஓவியக்கூடத்திற்கு, திருவண்ணாமலையில் வியாழக் கிழமைகளில் ஒவ்வொரு கடைக்கும் முன்னும் வந்து நிற்கும் ஒரு யாசகனைப் போல போய் நின்றிருக்கிறேன். எப்போதும் கையில் கசியும் புகையோடு அவர் எதிர்கொண்ட விதம் அப்போது என்னை ஆகர்ஷித்தது. பள்ளி நாட்களில் வகுப்பறைகளில் இருந்த நேரத்தைவிட அவர் ஓவியக் கூடத்திலிருந்த தருணங்களே அதிகம் எனக்கு. ஒரு மாணவனைப்போல, ஒரு தம்பியைப்போல, ஒரு பணியாளனைப்போல நான் அங்கு என்னை உருமாற்றி உருமாற்றி அமர்ந்து கொண்டேன். அவர் வரைவதை, வண்ணங்களை வாரி இறைக்கும் தைரியத்தை, தவறை தன் சுண்டு விரலால் சுண்டிவிடும் லாவகத்தை குளிர்ந்த மது மாதிரி என்னுள் இறக்கிக்கொண்டு போதையேறியிருந்த நாட்கள் அவை. நிறைவுறும் ஒவ்வொரு ஓவியத்திலும் சைன் போர்டிலும் அவர் பல்லவன் என கையெழுத்திடும்போது ‘ல’ என்கிற எழுத்தை திருப்பிப்போட்டு, தன்னை தனியே அடையாளப் படுத்திக்கொள்வார். திருப்பிப்போடப்படும் ‘ல’ வே பலபேரை அவர் ஓவியக்கூடத்திற்குள் இழுத்து வரும். ஒரு பெருங்கலைஞனுக்கான எல்லாவித கொண்டாட்டங் களிலேயுமே அவரின் இளமையான நாட்கள் கழிந்தன. பாக்கியவான்களுக்கு மட்டுமே அது வாய்க்கும். ஒழுக்க சீலர்கள் என்று தங்களை நம்பிக் கொள்பவர்கள் கழிவறையைத் தாழ்ப்பாள் போட்டுக் கொண்டு மனம் கசந்து அழக்கடவது. அப்போதெல்லாம் ஓவியருக்கு நீராகாரம் அருந்தும் பழக்கமிருந்தது. அது அவரை குழந்தையாக்கி குதூகலிக்க வைக்கும். திருப்பதியில் போய் மொட்டை போட்டுக் கொண்டு கும்பல் கும்பலாய் மனிதர்கள் சொந்த ஊர்களுக்கு பேருந்தில் திரும்புவார்கள். நீராகாரம் அருந்தி முடிந்த ஆனந்தத்தில் தலைவனும், அவர் நண்பர் ராமலிங்கமும் ஏதாவது ஒரு பேருந்தில் சில மொட்டைகளின் பின்னிருக்கையில் அமர்ந்து கொள்வார்கள். யாரும் கவனிக்காத வேளைகளில் நறுக் நறுக்கென சில மொட்டைகளுக்கு கொட்டும் விழும். சில நேரங்களில் பெரும் கலவரமாகி அவர்களுக்குள்ளாக அடித்துக் கொள்வதை வேடிக்கைப் பார்ப்போம். கலைஞர்களின் விளையாட்டிற்கு எல்லையில்லைதானே. ஒரு டிசம்பரின் மழை இரவு அது. அன்றும் நீராகரமே உணவு. திட உணவை நோக்கி பெரியார் சிலைக்கு எதிலிருந்த ஒரு இரவு உணவுக்கடைக்குச் சென்றோம். பரோட்டாவும், சிக்கன் கறியும் ருசியால் நிரப்பப்பட்ட இரவு கடை அது. நாங்கள் இருவரும் போய் உட்காருகிறோம். கீத்து வேயப்பட்ட அந்த இரவு பரோட்டா கடைக்கு சம்மந்தமில்லை... ‘டக் செய்யப்பட்ட பீட்டர் இங்லேண்ட்’ சட்டை, டை, ஷீ இவைகளோடு ரத்த சிவப்பில் ஒரு எக்ஸ்சிகியூட்டிவ் எங்கள் எதிர் பென்ச்சில் உட்காருகிறார். ஒரு நாகரிகத்திற்காக கூட எதிரில் இரண்டு பேர் உட்கார்ந்திருக்கிறார்களே என எங்களை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. இரண்டு ப்ளைன் ஆம்லேட் ஆர்டர் செய்துவிட்டு, தன் பிரீப்கேஸிலிருந்து ஒரு விலையுயர்ந்த மது பாட்டிலை எடுத்து, திறந்து ஜஸ்கீயூப்கள் மிதந்த கண்ணாடி குடுவையிலிட்டு மழையினால் சில்லிட்டிருந்த தன் இரு கைகளையும் சூடுபறக்க தேய்த்துக் கொள்கிறார். பல்லவனுக்கு அந்த அதீத நாகரீகமும், சுத்தமும் பிடிக்கவில்லை. அதையேப் பார்த்துக் கொண்டிருந்தவர் யாரும் எதிர்பார்க்காத ஒரு தருணத்தில் அந்த குப்பியை எடுத்து சவகாசமாக குடிக்க ஆரம்பிக்கிறார். எக்சிகியூட்டிவ் பதற்றத்தை கொஞ்சமும் தன் உடல் மொழியால் காண்பிக்காமல் மனதுக்குள் எரியவிடுகிறார். டபுள் ப்ளைன் ஆம்லேட்டுகள் அந்த அழுக்கடைந்த மேசைக்கு வருகின்றன. அதற்குறியவனை வெறிக்க வைத்துக்கொண்டே அதையும் சாப்பிடுகிறார் ஒவியர். இப்போது எக்சிகியூட்டிவ் மெல்ல எழுந்து மீதி சரக்கை பேக் செய்து தன் பிரீப்கேஸீக்குள் வைத்து மூடி, மறக்காமல் இரண்டு ஆம்லேட்டுகளுக்கான பணத்தைக் கொடுத்துவிட்டு, சுவாரசியமாய் ஆம்லேட் சாப்பிட்டுக் கொண்டிருந்த ஓவியரிடம் வந்து ‘கேரியான்’ என சூடான தன் கரங்களைக் கொடுத்து விடைபெற்று சென்ற காட்சி அவர் ஓவியத்தைப் போலவே நினைவில் தங்கிவிட்ட ஒன்று. கலைஞர்கள் இப்படித்தான் என அந்த எக்சிகியூட்டிவுக்கு தெரியாமல் கூட போயிருக்கலாம். எனக்கு நன்கு தெரிந்திருந்தது. எனக்கு பல்லவன் என்ற கலைஞனின் ஆர்பாட்டமும், கொண்டாட்டங்களும் பிடித்திருந்தன. ஒரு வகையில் நான் வாழ விரும்பிய வாழ்வை அவர் வாழ்ந்து கொண்டிருந்தார் எனலாம். தன் ஓவியக் கூடத்திலிருந்து கடைசி மனிதனும் வெளியேறும் கணத்துக்காக அவர் எப்போதும் காத்திருப்பார். அக்காத்திருப்பின் தவிப்பு எனக்குத் தெரியும். என்னைப் போகச்சொல்லி ஒரு நாளும் சொன்னதில்லை. எல்லோரும் போனபின் அக்கூடத்தின் எல்லா விளக்குகளையும் என்னை அணைக்கச் சொல்வார். அதற்காகவே தயாரித்து வைக்கப்பட்டிருந்த ஆணியடிக்கப்பட்ட மரப்பலகையில் ஒரு செவ்வக வடிவிலான கண்ணாடியைப் பொருத்துவார். இருட்டில் அவர் கையிலிருந்து புகையும் கோல்ட் பிளாக் சிகரெட் கூட எனக்குத் தெரியாது. கண்ணாடிக்கு முன் 40’x50” , 30”x40” என்ற அளவிலான மிகப்பெரிய துணி பேனரோ, பெயிண்ட் அடிக்கப்பட்ட தகர ஃபிரேம்களோ அவருக்காகக் காத்திருக்கும். தனியறையில் ஒருவனின் தொடுதல் வேண்டி மல்லார்ந்து படுத்திருக்கும் வேட்கை கொண்ட பெண்ணின் விரகதாபம் போன்றது அது. தான் வரையப்போகும் படத்தை அக்கண்ணாடியில் சின்னஞ்சிறுசாக வரைந்து, அம்மரச்சட்டத்தில் பொருத்தி இரண்டடி பின்னகர்ந்து ஒரு டார்ச் லைட்டில் அக்கண்ணாடியின் மீது வெளிச்சத்தை பாய்ச்சுவார். ஒரு தேர்ந்த வேட்டைக்காரனின் லாவகமும், கவனமும் குவியும் கணமது. இப்போது அந்தப்படம் எதிரிலிருந்த பேனரில் அசாத்தியமான பெரிய சைசில் பிரதிபலிக்கும். விளக்குகள் மீண்டும் ஒளியூட்டப்படும். ஒரு சாய்விருக்கையிலிருந்து கணநேரம் படத்தை அவதானித்துக்கொள்வார். அதற்குள் ஆறேழு கோல்ட் பிளாக் சிகரெட்டுகள் புகைந்து சாம்பலாகியிருக்கும். கறுப்பு வண்ணம் தோய்க்கப்பட்ட பிரஷ்ஷில் அப்படத்தை அப்படியே ஒற்றி ஒற்றி எடுப்பார். ஒவ்வொரு ஒற்றலும், அப்போதுதான் தலைகுளித்து ஈரம் சொட்ட சொட்ட குளியலறையிலிருந்து வந்து சிந்தும் ஒரு யுவதியின் முத்தத்திற்கு ஒப்பானது. ஓவியக்கூடம் இழுத்து மூடப்படும் அப்பின்னிரவில், தோளில் தொங்கும் ஜோல்னா பையோடு என் கேரியரற்ற சைக்கிளில் தனியே வீட்டிற்கு வருவேன். மனம் அவரின் அசுரத்தனமான அந்த இயங்குதலிலேயே கிடக்கும். விவாதம் சூடேறும் நாட்களில், “நீங்கள் ஒரு ஆர்ட்டிஸ்டே இல்லை, வெறும் சைன் போர்டு ஆர்ட்டிஸ்ட்” எனக் குரலை உயர்த்தியிருக்கிறேன். ஒரு ஓவியத்தை சொந்தமாக உங்களால் உருவாக்க முடியாது, பல்லவன், நீங்கள் வெறுமனே நகலெடுத்திருக்கிறீர்கள் என அவரைச் சீண்டுவேன், ஒரு பார்வையில் என்னைக் கடந்துவிடுவார். ஒருவேளை இப்போது அவர் ஆரம்பித்திருக்கும் இரண்டாம் ஆட்டத்திற்கான காத்திருப்பு என அதை இப்போது எடுத்துக் கொள்கிறேன். அவ்வண்ணமே அவர் வரைந்த சில்க்ஸ்மிதாவின் ஒரு ஒயின்ஷாப் ஓவியம், ஆர்டர் கொடுத்தவரால் நீண்டநாள் எடுத்து செல்லப்படாமலேயே அவர் ஓவியக்கூடத்திற்குப் பக்கத்து சந்தில் வைக்கப்பட்டிருந்தது. அக்கூடத்திற்கு சில்க்ஸ்மிதா தெரு என வெகுஜனங்களால் பெயரிடப்பட்டது. யாராவது ஒருவன் தொட்டால், ஸ்மிதா எழுந்து வந்துவிடக்கூடும் என்ற எச்சரிக்கையிலும், ஆர்வத்திலும் பல நூறு பேர்கள் அப்பேனரை ஸ்பரிசிப்பதை நான் தூர நின்று ரசித்திருக்கிறேன். மிகு போதையில் அதை முத்தமிடுவதும், கட்டி அணைக்க முயலுவதும், வணங்குவதுமான பல விசித்திர மனிதர்களை ஒரு புன்னகையுடன் கடந்திருக்கிறேன். பெரியார் சிலைக்கு எதிரிலிருந்த மணி டீக்கடைக்கு, ஒரு ஜோல்னா பையோடு நான் தேநீர் அருந்தும் படம். அப்போது ஊரெங்கும் பிரசித்தம் பெற்றது.அப்போர்டில் பார்த்த யாரும் ஒரு முறை என்னைத் திரும்பிப் பார்த்து, புன்னகைப்பார்கள். மெல்ல நான் பல்லவன் என்ற அந்த ஓவியனை, வாசிப்பின் பக்கம் நகர்த்த முயன்றேன். தோல்விதான் மிஞ்சியது. இன்னும் கணநேரம்தான், என நான் நினைக்கும் பொதெல்லாம் அவர் பின்னகர்ந்து ஓடிப்போய் தன் ஓவியக்கூடத்திற்குள் அமர்ந்து கொள்வார். இருக்காதா பின்னே? நானே அந்த எனாமல் பெயிண்ட் வாசனையில் கிறுகிறுத்திருந்தபோது, அதையே தன் வசிப்பிடமாகக் கொண்டவனுக்கு!? செம்மண் கலந்து புரண்டோடும் ஒரு காட்டாற்றின் கட்டற்ற வெள்ளத்திலிருந்து கரை ஒதுங்கும் ஒரு காய்ந்த மரக்கட்டையைப் போல இத்தனிமையில் அவருடனான என் ஒவ்வொரு நாட்களையும் இப்போது மீட்டெடுக்கிறேன். அரசு ஊழியர் சங்கத்திற்கான மாநில மாநாடு வேலூரில் நடந்தது. அதற்காக மெகா பெரிய சைசில் ஒரு பேனரை வடிவமைக்கும் பொறுப்பை தோழர் சந்துரு, பல்லவனை நம்பி ஏற்றிருந்தார். வழக்கம்போல் வரைவதற்கான முன்னேற்பாடுகளில் நாங்கள் மூவருமிருந்தோம். கற்சிற்பங்களினான ஒரு ரஷ்ய ஓவியம் அதற்கென கண்டெடுக்கப்பட்டது. கண்ணாடி பிரதிபலிப்பு முடிந்து, அடுத்தநாள் காலை, வரைதல், துவங்கியது. பல நாட்கள் நான் பல்லவனுக்காக டீயும், பில்டர் கோல்ட் பிளாக்கும் பாக்கெட், பாக்கெட்டாக வாங்கி வரும் பணியாளனாயிருக்கிறேன். அவர் வரைந்து கொண்டிருக்கும் போது அவருக்கு ஒரு சிகரெட் பற்ற வைத்த கையோடு, ஓவியம் பற்றிய தீவிர விவாதத்திற்கு நான் இன்னொரு தீக்குச்சியை உரசினேன். தீ மள மள வென பரவியது. ஆற்றாமையின் உக்கிரத்தில் அவர் ஐந்து லிட்டர் சிகப்பு பெயிண்ட் டப்பாவை எடுத்து ஓவியம் வரையப்பட்டிருந்த அந்த பெரிய பேனர் மீது விசிறினார். சந்துரு தோழர் மனமுடைந்து, இந்த நெருப்பை எதைக் கொண்டு அணைப்பது என தெரியாமல் தவிக்க, எதைக் கொண்டும் அணைக்க முடியாது என நான் சைக்கிளை எடுத்துக் கொண்டு வீட்டிற்கு வந்து விட்டேன். பயத்தில் இரண்டு மூன்று நாட்கள் அப்பக்கமே எட்டிப்பார்க்கவில்லை. மூன்றாவது நாள் இரவு, அப்பேனர் முன்னிலும் அழகோடு உருமாற்றமடைந்து பெரியார் சிலை எதிரில் ஏற்றப்பட்டிருந்தது. மக்கள் கூட்டம்கூட்டமாய் நின்று அதன் வனப்பை, பிரமாண்டத்தை ரசிப்பதைப்பார்த்து, ஒரு பெரும் கலைஞனை அவமதித்துவிட்ட அவமானத்தில் ஒரு வாரம் அவர் ஓவியக் கூடம் பக்கமே போகாமல் இருந்துவிட்டேன். கலைஞனுக்கு ஏது கோபமும், குரோதமும்? அடுத்த வாரமே ஒரு மூத்த அண்ணனின் வாஞ்சையோடு என்னை அணைத்துக்கொண்டார்.’ அந்த வயதில் எப்போதுமே சாத்தியமற்ற ஒன்றை சாத்தியமாக்கிட வேண்டும் என்ற துடிப்பு எங்கள் எல்லோரிடமும் உண்டு. உலகப் புகழ்பெற்ற ஓவியனின் ஒரு ஓவியம். கடலுக்கிடையே உயர்ந்த ஒரு பாறை மீதமர்ந்து ஒரு சிங்கம் சூர்ய உதயத்தைப் பார்க்கும் காட்சி அது. மஞ்சளும், ஆரஞ்சும், வெண்மையும், சிகப்புமாய் வர்ணம் அக்கடற் பரப்பை வியாபித்திருக்கும். நீலம் கடலிலிருந்து முற்றிலும் நீக்கப்பட்டிருக்கும். அப்படத்தை ஒரு Painting Collections-ல் இருந்து எடுத்து புது உற்சாகத்தோடு அடுத்த நாள் காலை பல்லவனிடம் காட்டினேன். இடது கையில் அதை வாங்கிப் பார்த்துவிட்டு வலதுகையில் ஒரு சிகரெட்டைப் பற்றவைத்துக் கொண்டு, “சொல்லு என்ன பண்ணனும்?” “இதை பெரிய பேனரா வரையணும்” - என் தயங்கிய வார்த்தைகளை அவர் உள்ளுக்குள் ரசிப்பதுத் தெரிந்தது. “பத்து ‘டீ’ சொல்லு” சொன்னேன். அன்றிரவும் ஆட்களின் அப்புறப்படுத்தலுக்குப் பின் கிடைத்த எங்கள் இருவருக்குமான தனிமையில் அவர் கண்ணாடியில் அச்சிங்கத்தின் பிடறி மயிரை வரைந்து முடித்து எக்ஸ்போஸ் பண்ணும்வரை உடனிருந்தேன். “பொறப்படு” அந்த பொறப்படுவில் ஏதோ ஒரு உத்தரவிருந்தது. புறப்பட்டேன். இந்த ஆள் முகத்திலேயே பட்டுவிடக்கூடாது என்ற வெறியில் சைக்கிள் மிதித்தேன். அன்று மாலை யார் உந்துதலுமின்றியே என் கால்கள் பல்லவன் ஆர்ட்ஸை நோக்கி நடந்தது. சில்க் ஸ்மிதா, வைக்கப்பட்டிருந்த அதே கார்னரில் சிங்கம் சூர்ய உதயம் பார்க்கும் அப்படம் முழுமைப் பெற்று வைக்கப்பட்டிருந்தது. சுற்றிலும் இரண்டு மூன்று பேர் நின்று பார்த்துக் கொண்டிருந்தார்கள். தூர நின்று ஒரு வெள்ளைக்காரன் அதைப் புகைப்பட மெடுத்துக் கொண்டிருப்பதைக் கவனித்து அவனுடன் போய் நின்று கொண்டு படத்தை உள்வாங்கினேன். ஓவியம் ஒரிஜனலைவிட மெருகேறியிருந்தது. இன்னும் கண நேரத்தில் சூர்யக் கதிர்கள் தன் முரட்டு உடம்பில் படப்போகும் பரவசத்தில் சிங்கம் அதை உற்றுப் பார்ப்பது மாதிரியிருந்தது. நான் அநியாயத்திற்கு பரவசமாகி, என் பல்லவனை அணைத்துக் கொண்டேன். இப்படி பல நிகழ்வுகளில் நான் வியப்படைந்த தருணங்கள் ஒரு நாள் முடிவுக்கு வந்தன. பிரிந்த நண்பர்களைப்பற்றிய தவறான தகவல்களை மட்டுமே நிகழ்காலத்தில் தாங்களும் நண்பர்களாய் இருப்பதாய் தங்களையே நினைத்துக் கொள்ளும் நண்பர்கள் தங்கள் வாழ்நாள் லட்சியமாகக் கொண்டிருக்கிறார்கள். அது எங்கள் இருவரின் வாழ்விலும் எங்கள் நண்பர்களால் துல்லியமாய் நிறைவேற்றப்பட்டது. காலம் எல்லாவற்றையும் ஆற்றிவிடக்கூடும் என்பதில் பெரும் நம்பிக்கை உடையவன் நான். இதோ பல்லவன் என்ற கருப்பசாமியின் அய்யா, அல்லது ஓவியன், பீனிக்ஸ் என்ற இறந்துபோன என் இன்னொரு நண்பனை நினைவு வைத்து, அவனை தன் ஓவியத்தால் உயிர்பித்து எனக்கு பரிசளித்து என்னை நோக்கி நட்புக்கரம் நீட்டுகிறார். நான் என்னில் கசிகிறேன். அப்படத்தை திரையில் பெரிதாக்கி என் மனைவிக்கும் பிள்ளைகளுக்கும் காட்சிப்படுத்துகிறேன். உணர்வு மேலிட்டு, ஷைலஜா, பல்லவனை அழைத்து கண்ணீர் மல்க ஒரு ஓவியனின் உயிர்த்தெழுதலுக்கான தன் நன்றியைத் தெரிவிக்கிறாள். என் பிள்ளைகள் என் அருகிலமர்ந்து தன் பெரியப்பாவின் கடந்த கால படைப்பூக்கமுள்ள நாட்களை அவர்களுக்காகச் சொல்லச் சொல்கிறார்கள். நான் அவர்களுக்கு பல்லவன் என்ற ஒரு ஓவியனின் கதையைச் சொல்கிறேன். என் கதையின் நாயகன் தன் வீட்டின் ஒரு மூலையிலமர்ந்து மரணித்துப் போன ஆறேழு கலைஞர்களை தன் தூரிகையின் மூலம் உயிர்பித்துவிட முயன்று கொண்டிருக்கிறான்.
#Mallika: சொல்றேன்னு தப்பா நினைக்காதீங்க டீச்சர். உங்க கணவர் divorce தரலைன நீங்க ஒருத்தர காதலிங்க டீச்சர். காதல் தப்பே இல்ல இந்த உலகத்துல. அவர் divorce தரும்வரை உங்க காதல் ரகசியமா இருக்கட்டும். ஏன் அவரு divorce தரவே இல்லைனா lifelong ரகசியமா இருக்கட்டும். #Divya: கள்ள காதல் பண்ற சொல்றீங்களா?? #Mallika: காதல்ல ஏது கள்ள காதல் நல்ல காதல். நீங்க உங்க மனசுக்கு புடிச்ச ஒருத்தன் கூட இருக்கிறது தப்பா?? இது எப்போ தப்பா மாறும்ன மூணாவது ஓரு நபர் அறியும் போதும் தான். யார்க்கும் தெரியாம ஒருத்தர காதலிங்க. இப்படியே இருந்த உங்க life தான் waste ஆகும். கூடவே இந்த அழகும். என்ன அழகு நீங்க. இதையும் waste பண்ண போறீங்களா?? #Divya: இது பெரிய பிரேச்சனைகளை வர வைக்கும். மன நிம்மதி போகும். மாணம் போகும். #Divya: வெளியே தெரிஞ்ச தானே. வெளியே தெரியாம வச்சுகலமே!! சத்தியமா சொல்றேன் டீச்சர், எனக்கே கள்ள தொடர்பு இருக்கு யார்க்கும் தெரியாது. என் கணவர் என்ன ஓத்து 3 வருஷம் ஆச்சு டீச்சர். ஆனா நான் daily ஓழு வாங்கிட்டு தான் இருக்கேன். யார்க்கும் இன்னும் தெரியாது. இங்க பாருங்க…. பெண் என்பவள் இன்பத்துக்காக பிறந்தவள். நாம வரவன் போராவனுக்கு எல்லாம் விரிச்சு காட்டிட்டு கிடந்த தான் தப்பு. இருக்க இடத்துல கிடைக்காத ஒன்றுக்கு கிடைக்கிற இடத்துல தேடுறது தப்பே இல்ல டீச்சர். அப்புறம் உங்க இஷ்டம் டீச்சர். அப்பப்போ தனியா இருந்து யோசிங்க டீச்சர். உங்களுக்கே அப்போ புரியும். இங்க disturbஆ இருக்கிறதுன அடிக்கடி libraryல போய் உக்கருங்க. தனிமைக்கும் உங்களுக்கும் நல்ல இடம். அப்படியே மல்லிகா சுப்பையாவுக்கு மாமா வேலை பார்த்து கொண்டு இருக்கும்போது மணியும் அடித்தது. அனைவரும் வீட்டிற்கு கிளம்ப திவ்யாவும் சோகமாக கிளம்பினாள். Bus வந்ததும் அனைவரும் busயில் ஏறினார்கள். திவ்யாவுக்கு உக்கார இடம் கிடைத்தது. திவ்யா உக்காந்திருந்த இருக்கையின் அருகில் தான் இன்று பிரியாவும் சிவாவும் நின்றனர். வழக்கம் போல் பிரியா சிவா லீலைகள் ஆரம்பம் ஆனது. இதை பார்த்த திவ்யா “அம்மா அங்க ஒருத்தன் கூட ஓழு வாங்கிட்டு இருக்க, பொண்ணு இங்க ஒருத்தன் கூட ஓழு வாங்கிட்டு இருக்க” என்று மனதில் நினைத்து கொண்டாள். அடுத்த நிறுத்தத்தில் பெரியவர் ஒருவர் ஏறி திவ்யாவிடம் உக்கார இடம் கேட்டதால் வேர் வழி இன்றி எழும்பிய திவ்யா எதிர் பாராத விதமாய் பிரியா சிவா இடையில் மாட்டி கொண்டாள். பிரியா திடீர் என்று ஏமாற்றம் அடைந்தாள். பிரியா குண்டியை பதம் பார்த்து கொண்டிருந்த சிவாவுக்கோ பயங்கர கோபம் திவ்யா மேல். பேருந்து செல்ல செல்ல கூட்ட நெரிசலில் சிவா சுன்னி திவ்யா குண்டியில் இடித்தது. திவ்யா குண்டி பல நாட்கள் ஓழு வாங்கிய குண்டி என்பதால் அது பஞ்சு போல இருந்தது. அது சிவா சூட்டை ஏத்தி விட்டது. திவ்யா டீச்சர் என்பதால் சிறு பயம் இருந்தது சிவாவுக்கு. இருந்தும் கூட்டத்தில் படுவது போல் சிவா அடிக்கடி திவ்யா குண்டியில் இடித்தான். திவ்யா தெரிந்தும் கூட்ட நெரிசலில் தான் என்று நினைத்து அவளும் தெரியாதது போல் நின்றாள். அடுத்த நிறுத்தத்தில் பேருந்தில் இன்னும் கூட்டம் அதிகமானது. சிவா திவ்யா நெருக்கமும் அதிகம் ஆனது. சிவா சுன்னி திவ்யாவின் பருத்த குண்டியில் அணைந்தது. திவ்யா குண்டி அதிகமான ஓழ் வாங்கிய குண்டி என்பதால் அவள் குண்டி பஞ்சு போல் கொஞ்சம் சதை அதிகமாக இருந்தது. சிவா அவன் சுன்னியை திவ்யா குண்டியில் மெல்லமாகா அழுத்தி வைத்தான். அவள் குண்டி சப்பியது. இதை நன்றாக உணர்த்த சிவா செம்மையான குண்டி என்று மனதில் நினைத்து கொண்டு திவ்யா குண்டியில் அவன் சுன்னியை தேய்த்து அழுத்தினான். சிவா வேண்டும் என்று தான் இப்படி பன்ரான் என்று உணர்ந்த திவ்யா இடம் மாற முயற்சித்தும் வேறு வழி இன்றி நின்று கொண்டாள். சிவா தன் சுன்னியை திவ்யா குண்டியில் இறுக்கமாக அழுத்தி வைத்ததும். சிவா சுண்ணியின் நீளத்தை உணர்ந்தாள் திவ்யா. 11th படிக்கிற ஒரு பையனுக்கு இவ்வளவு நீளமான சுன்னியா என்று திகைத்தாள். சிவா செய்த சேட்டைகளை பிடித்தும் பிடிக்காமல் ஏற்று கொண்டாள் திவ்யா. சிவா அவன் சுன்னியை திவ்யா குண்டியில் நன்றாக அழுத்தி தேய்த்து தேய்த்து நின்றான். சிறிது நேரத்தில் சிவா சற்று ஒரு இறுக்கமான அழுத்தம் கொடுத்து அப்படியே அழுத்தி வைத்து கொண்டான். சிவா சுன்னி அவள் குண்டியில் துடிப்பதை நன்றாக உணர்ந்த திவ்யாவுக்கு புரிந்தது சிவாவுக்கு தண்ணி வந்தது என்று. திவ்யாவுக்கு இது பிடித்தும் இருந்தது ஆனால் இது எல்லாம் தப்பு என்ற எண்ணத்தில் கோபம் தான் அவள் மனதில் பற்றி கொண்டது. நிறுத்தம் வந்ததும் அனைவரும் இறங்கினர். இறங்கும் போது தெரியாமல் திவ்யா கை சிவா சுண்ணியின் மேல் பட்டது. அவன் சுன்னியில் வடிந்திருந்த அந்த காம நீர் திவ்யா கையில் பட்டது. இது என்ன ஈரமாக இருக்கு என்று இறங்கியதும் சிவா சுண்ணியை பார்த்தாள். அவன் pantயில் சுன்னி இருக்கும் இடத்தில் roundஆக ஈரமாக இருந்தது. அது சிவாவின் மதன நீர் என்பதை உணர்ந்த திவ்யா தன் கையில் பட்டது சிவாவின் மதன நீர் தான் என்று உணர்ந்து சீய்ய் என்று தன் sareeயில் கையை தொடைத்தாள். திவ்யா வீட்டிற்கு சென்று தன் sareeயை கழட்டியதும் அதில் ஈரமாக தண்ணீர் வடிந்து இருப்பதை பார்த்தாள். அது சிவா சுன்னி தண்ணியக தான் இருக்கும் என்று தெரிந்து உறுதி செய்ய அதை முகர்ந்து பார்த்தாள். மதன நீரின் அதே மணம். சீய்… இவ்வளவு பீச்சி அடிச்சனா அந்த நாய் என்று sareeயை குளியல் அறையில் தூக்கி போட்டாள். திவ்யாவும் கையோடு குளித்துவிட்டு வந்து படுக்கையில் படுத்தாள். படுத்ததும் தன் nightyயை பொக்கி வைத்து கொண்டு அவள் விரலை அவள் புண்டையில் விட்டுக்கொண்டு கண் மூடி படுத்தாள். அப்படியே சுப்பையவை நுனைத்து கொண்டு விரல் போட்டாள் அவள் புண்டையில். சுப்பையா சுப்பையா என்று சொல்லிக்கொண்டே அவள் புண்டையை வருடினாள். சுப்பையாவிடம் மல்லிகா வாங்கிய ஓழை தான் வாங்கியது போல் நினைத்து கொண்டு அவள் புண்டையில் விரல் போட்டுக்கொண்டே இருந்தாள். திடீர் என்று சிவா நினைவுக்கு வர சிவா என்று ஒரு குத்து குத்த அவள் புண்டை பீச்சி அடித்தது ஆஹ்ஹ்ஹ் என்று எழும்பி அவள் புண்டையை பார்த்தாள். அவள் காம நீர் மூத்திரம் போல் பீச்சி அடித்து கொண்டிருப்பதை பார்த்து ஆச்சரிய பட்டாள். எவ்வளவு காமத்தை என்னுள் அடைத்து வைத்திருக்கேன் என்று நினைத்து அப்படியே தளர்ந்து படுத்தாள். படுத்து கொண்டு மல்லிகா சொன்னதை நினைத்த திவ்யா சுப்பையாவுடன் ஓழ் வாங்கலாமா வேண்டாமா என்ற குழப்பத்தில் இருந்தாள். சற்று யோசித்து… வேண்டாம், இது எல்லாம் சரியா வராது. இவ்வளவு நாள் இருந்த நமக்கு இனி கட்டுப்பாடாக இருக்க முடியாத என்று தன்னை தேற்றிக்கொண்டாள் திவ்யா. மறுநாள்: வழக்கம் போல் காலை ஓட… மணி 10 ஆனது!! Staffroomயில் மல்லிகா mobile மணி அடிக்க மல்லிகா வகுப்பறைக்கு போய் இருந்ததால் mobileயை எடுத்த திவ்யா எதிர் பாராதா விதமாய் அதில் சுப்பையா அனுப்பி இருந்த messageயை பார்த்தாள். அப்படி அவர்கள் என்ன பேசி இருபங்கன்னு தெரிஞ்சிக்க ஆசை பட்ட திவ்யா messageயை open செய்தாள்!! #Subbaiya: Hai!! என் செல்ல கள்ள பொண்டாட்டி… #Mallika: சொல்லுட என் கிழட்டு கள்ள புருஷா.. #Subbaiya: உன் புருஷன் தூங்கிட்டன செல்லம். #Malliga: ஆமா!! #Subbaiya: அப்போ நமக்கு ஓக்கலாமா?? நான் உன் புண்டைல நல்லா ஓழு ஓழுனு ஒத்து தரேன்டா செல்லம்! #Malliga: ஏன் உன் கள்ள பொண்டாட்டி அனிதா வீட்டுல இல்லையா?? (அப்படி அனிதா சுப்பையா கள்ள உறவு திவ்யாவுக்கு தெரியவந்தது… …அனிதா சுப்பையவின் மருமகள் ஆச்சே என்று ஒரு நிமிடம் அதிர்ந்து தொடர்ந்து படித்தாள்) Categories Akka Sex Stories In Tamil - அக்கா செக்ஸ் கதைகள் தமிழ், Incest Sex Stories In Tamil - ఇన్సెస్ట్ సెక్స్ స్టోరీస్ ఇన్ తమిళ్, Tamil kamaveri - తమిళ్ కామావెరి
ஆகஸ்ட் 26 ஆம் நாள் தமிழ்த்தென்றல் திரு வி.க.வின் பிறந்தநாள். அதனையொட்டி, 1948 ஆம் ஆண்டு ஈரோட்டில் நடைபெற்ற திராவிடர் கழக மாநாட்டில், திராவிட நாடு படத்தைத் திறந்து வைத்து அவர் ஆற்றிய உரையிலிருந்து சில பகுதிகள்... திராவிட நாட்டுப்படத்தை நான் திறந்து வைக்கவேண்டும் என்கிற விருப்பத்தை என்னிடத்துத் தோற்றுவித்தவர் இவ்வியக்கத் தலைவரும் என் நெருங்கிய நண்பருமான பெரியார் ஆவார். அவர் என்னிடம் தன் விருப்பத்தை முதல்முதலாகத் தெரிவித்தபோது, நான் பேசாமல் இருந்து விட்டேன். அவரும் அதையே ஒப்புதலாகக் கொண்டு அதற்கேற்ப இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளார். திராவிடர் கழக உறுப்பினன் அல்லாத நான் திராவிட நாட்டுப் படத்தைத் திறந்து வைப்பது பொருந்துமா என்று பலதடவை யோசித்துப் பார்த்தேன். முடிவில், இந்நாட்டு மக்கள் எல்லோருமே திராவிடர்கள்தான், நானும் திராவிடன்தான், எனவே தாராளமாகத் திறந்து வைக்கலாம், அதில் ஒன்றும் தவறில்லை என்கின்ற முடிவுக்கு வந்தேன். அம்முடிவுக்கு வந்தது முதற்கொண்டு என் மனத்தில் என்னென்னவோ எண்ணங்கள், என்னென்னவோ ஆதாரங்கள் தோன்றிக் கொண்டே இருக்கின்றன. இந்தியாவென்பது பெரியநாடு. இதில் பலதிறப்பட்ட மக்கள் வாழ்கிறார்கள் என்றாலும் இந்த நாட்டில் இரண்டு பெரிய கலாச்சாரங்களே அடிப்படைக் கலாச்சாரங்களாகக் காணப்படுகின்றன. இவை இரண்டும் பெரிதும் முரண்பட்ட கலாச்சாரங்களாகவும் இருந்து வருகின்றன. இவற்றுள் ஒன்று ஆரிய கலாச்சாரமாகும். மற்றொன்று திராவிடக் கலாச்சாரமாகும். வடநாட்டில் பெரும்பாலும் ஆரியக் கலாச்சாரமும், தென்னாட்டில் பெரும்பாலும் திராவிடக் கலாச்சாரமும் நிலவி வருகின்றன. இவற்றுள் ஆரியக் கலாச்சாரம் சுரண்டலையும், ஏமாற்றுதலையும் அடிப்படையாகக் கொண்டிருப்பதால் அதைப் பின்பற்றி வருபவர்கள் தம் சுரண்டலுக்காக அந்நிய நாடுகளை ஆக்கிரமிக்கும் எண்ணம் கொண்டு முயற்சி செய்து வருகிறார்கள். திராவிடக் கலாச்சாரம் சமதர்மத்தை, சோ­லிசத்தை அடிப்படையாகக் கொண்டதாக இருப்பதால் அதைப் பின்பற்றுபவர்கள் பிறர் சுரண்டலை ஒழித்துச் சுதந்திரமாக வாழ விழைகிறார்கள். எனவேதான் பிரிந்து வாழ நினைக்கிறார்கள், தென்னாட்டவர்கள். ஒரு காலத்தில் தமிழ்நாடு மிக மிக உயர்ந்திருந்தது. பிறகு ஆரியத்தின் சுரண்டலுக்கு ஆட்படவே, இன்று மிக மிகத் தாழ்ந்து விட்டது. சுரண்டலுக்கு உள்ளாக்கிய வடநாடு மிக மிக உயர்ந்து நிற்கின்றது, இன்று. ......................................... எவ்வளவு எடுத்துக் கூறினாலும் ஆரியரும், திராவிடரும் ஒன்றென்று பிதற்றிக்கொண்டு வருகிறீர்களே! ஆராய்ச்சி நூல் எதையேனும் படித்துப் பார்த்ததுண்டா நீங்கள்? ஆரியக் கலை வேறு, திராவிடக் கலை வேறு. ஆரியப் பண்பு வேறு, திராவிடப் பண்பு வேறு என்பதை ஜெர்மன் ஆராய்ச்சியாளர்கள் கூட ஒப்புக் கொண்டிருக்கிறார்களே! திருக்குறள் ஒன்று போதுமே, ஆரியத்தையும் திராவிடத்தையும் பிரித்துக்காட்ட. திருக்குறளில் அறம், பொருள், இன்பம் இம்மூன்றைப் பற்றித்தானே எழுதியிருக்கிறது. வீட்டைப் பற்றி, மோட்சத் தைப் பற்றிக் குறிப்புக் கூடக் காட்டவில்லையே திருவள்ளுவர். திருவள்ளுவர் ஒன்றும் நாஸ்திகர் அல்லவே! இருந்தும் ஏன் மோட் சத்தைப் பற்றிப் பேசமறுத்தார்? திருக்குறள் திராவிடப்பண்பை விளக்கும் நூல். எனவே, ஆரியப்பண்பான மோட்சத்திற்கு அதில் இடம் இருக்கக் கூடாது என்பதுதானே! ......................................... அன்று சொன்னேன் நிலக்கோட்டையில், எனது கடைசி மூச்சுக் கூட, திராவிடம் வாழ்க, திராவிடர் கழகம் வாழ்க என்பதாக இருக்கும் என்று. ......................................... திராவிட மக்களுக்கு நல்வழிகாட்ட, அவர்கள்தம் அடிமை வாழ்க்கையை மாற்றி இன்ப வாழ்வு அமைத்துக்கொடுக்க இயற்கை தோற்றுவித்த பெரியார்தான் நமது ஈரோட்டுப் பெரியார். இயற்கையின் அருமைப் புதல்வர் இவர். அதனால்தான் காந்தியையும் மிஞ்சிய அளவுக்கு அகிம்சாவாதியாகவும், சாக்ரடீசையும் மிஞ்சிய அளவுக்குச் சமுதாயச் சீர்திருத்தக்காரராகவும் பெரியார் விளங்குகிறார். இவர்தம் முயற்சியால் தமிழர்கள் விழித்துக் கொண்டார்கள். ....................... கெட்டதிலிருந்து நல்லது பிறப்பதுபோல், அவிநாசியாரின் இந்தி நுழைப்பு, ஆரியம் இந்நாட்டைவிட்டு அகலக் காரணமாக இருக்கட்டும். திராவிடர்கள் யாவரும் பெரியாருக்கு எப்போதும் நன்றி அறிதல் உடையவர்களாக இருக்கட்டும். நாமும் நமது நன்றியறிதலைக் காட்டிக்கொள்ளும் முகத்தான் பெரியார் வாழ்க என்றும் அவர்தம் முயற்சி வெல்க என்றும் வாழ்த்துக் கூறுவோம். (1948 இல் தமிழ்நாடு கல்வி அமைச்சராக இருந்த அவிநாசிலிங்கம் (செட்டியார்) இந்திப்பாடத்தை மீண்டும் புகுத்தினார்)
நேற்றிலிருந்து (ஜூலை 13) கனடிய மத்திய வங்கியின் வட்டி வீதம் 1% த்தால் உயர்கிறது. 0.75% அதிகரிப்பைத் தான் பெரும்பாலான பொருளாதார நிபுணர்கள் எதிர்பார்த்திருந்தார்கள் ஆனால் ஒரு முழு வீதத்தால் அதிகரிதது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. கட்டற்று அதிகரித்து வரும் பணவீக்கத்தைத் தடுத்து நிறுத்த வட்டி வீத அதிகரிப்பு அவசியமென்கிறார்கள். கடந்த இரு தடவைகளில் மத்திய வங்கி தலா 0.5% படி வட்டி வீதத்தை அதிகரித்திருந்தது. ஆனாலும் பண வீக்கம் தளர்வதாக இல்லை. ‘குறைந்த வட்டி’ காரணமாக மக்கள் பெருந்தொகையான கடன்களை வங்கிகளிலிருந்து பெற்று தங்களது வலுவை மீறிய கடன் சுமைகளைத் தூக்கி வைத்துக்கொள்கிறார்கள். இவர்களைக் கட்டுப்படுத்த ஒரே வழி வட்டி வீதத்தை அதிகரிப்பதே என நிபுணர்கள் பலரும் அரசாங்கத்துக்கு ஆலோசனகூறி வந்தார்கள். நிபுணர்களது ஆலோசனையை ஆரம்பத்தில் கனடிய மத்திய வங்கி பொருட்படுத்தவில்லையாயினும் தற்போது அது விழித்துக் கொண்டுவிட்டது. பண வீக்கமென்பது ஒரு நாணயத்தின் பெறுமதி. பண வீக்கம் அதிகரிக்க அதில் கொள்வனவு செய்யப்படும் பொருளின் பெறுமதி குறைந்துகொண்டே செல்லும். இதனால் ஒருவரது வாழ்க்கைச் செலவுக்கான பணத் தேவை முன்னையவிட அதிகமாக இருக்கும். இதன் காரணமாக அவர்களது சம்பளத் தேவைகள் அதிகரிக்க வேண்டும். அது அதிகரிக்காத பட்சத்தில் மக்கள் வட்டி குறைவுதானே எனக் கருதி வங்கியில் கடன்களைப் பெற்றுத் தமது தேவைகளைப் பூர்த்தி செய்வார்கள். இதனால் பண்டங்களின் விலைகளும் அதிகரிக்கும். வீடுகளின் விலை அதிகரிப்பிற்கு குறைந்த வட்டியில் கடன் பெறக்கூடியதாக இருந்தமையும் ஒரு காரணம். இதே வேளை கோவிட் பெருந்தொற்று, யூக்கிரெய்ன் போர் ஆகியன பண்டங்களைப் பெறுவதில் தட்டுப்பாடுகளை ஏற்படுத்தியமையும், ரஷ்யா மீதான பொருளாதாரத் தடை எரிபொருள் மீதான தட்டுப்பாடுகளை ஏற்படுத்தியமையும் பண்டங்களின் விலை அதிகரிப்பிற்கும் அதன் காரணமாகப் பணவீக்க அதிகரிப்பிற்கும் முக்கிய காரணம். பெருந்தொற்றிலிருந்து உலகம் ஓரளவு நிவாரணத்தைப் பெற்றிருந்தாலும் மேற்குநாடுகள் எதிர்பார்த்தபடி போர் முடிந்தபாடில்லை. இப் பணவீக்க அதிகரிப்பு இன்னும் சில வருடங்களுக்கு நம்மோடு இருக்கப்போகிறது என முடிவெடுத்த அரசாங்கங்கள் இதன் விளைவாக ஏற்படப்போகும் பொருளாதார இறுக்கத்தை (economic contraction) எதிர்நோக்கி சுய கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. அதிலொன்றுதான் வட்டிவீத அதிகரிப்பு. தற்போதைய அதிகரிப்போடு கனடிய மத்திய வங்கியின் வட்டி வீதம் 2.5% மாக உயர்கிறது. கடந்த 24 வருடங்களின் பின் உயர்வு இந்த மட்டத்தில் நிகழ்ந்திருக்கிறது. இந்த வட்டியில்தான் கனடிய சில்லறை வங்கிகள் மத்திய வங்கியிடமிருந்து பணத்தைக் கடனாகப் பெறுகின்றன. இதை Overnight lending rate அல்லது Policy rate என அழைப்பார்கள். இப்படிப் பெற்ற பணத்தையே சில்லறை வங்கிகள் மக்களுக்கு அடமானமாகவும் கடனாகவும் வழங்குகின்றன. இதற்காக அவை மக்களிடம் அறவிடும் வட்டி 2 அல்லது 3% அதிகமாகவிருப்பது வழக்கம். மத்திய வங்கியிடம் policy rate இல் (2.5%) பெற்ற பணத்தை சில்லறை வங்கிகள் தமது கண்ணியமான வாடிக்கையாளர்களுக்கு சலுகை முறையில் கொடுக்கும் வட்டி வீதத்தை Prime Rate என்கிறார்கள். ஒவ்வொரு வங்கியும் தத்தம் Prime Rete ஐத் தீர்மானித்தாலும் போட்டி காரணமாக எல்லா வங்கிகளும் ஏறத்தாழ ஒரே வட்டி வீதத்தை அனுசரிக்கின்றன. நேற்றைய அதிகரிப்புடன் Prime Rate 4.70% ஆக உயர்கிறது. இவ்வட்டி உயர்வு நாட்டின் பொருளாதாரத்தைப் பாதிக்கப் போகிறது என்பதில் சந்தேகமில்லை. வீட்டு நிர்மாண நிறுவனங்கள் உட்படப் பல தொழில் ஆரம்பங்கள், விஸ்தரிப்புகள் ஆகியவற்றை செயற்படுத்தும் நிறுவனங்கள் வங்கிகளிடமிருந்து கடனைப் பெற்ற முதல்களைக் கொண்டே தமது வியாபார முயற்சிகளை ஆரம்பிக்கின்றன. வட்டி வீத அதிகரிப்பினால் இப்படியான தொழில் முயற்சிகளின் ஆரம்பம் இனிமேல் தாமதமாகும். இதனால் வேலைவாய்ப்புகள் குறையும். இதன் பலனாக அரசாங்கத்துக்குச் சேரும் வரியும் குறையும். சில நிறுவனங்கள் தமது செயற்பாடுகளை நிறுத்திக்கொண்டு வேறு நாடுகளுக்குச் சென்றுவிடும். இப்படியான வேளைகளில் அரசாங்கம் தலையிட்டு அந்நிறுவனங்களுக்கு பெருந்தொகையான பணத்தைக் கொடையாக வாரிக்கொடுக்கவேண்டி ஏற்படும். 2008 இல் இப்படியானதொரு சம்பவம் கனடாவிலும் அமெரிக்காவிலும் நடைபெற்றது. இதில் பல வங்கிகளும் நிதி நிறுவனங்களும் பலனடைந்தன. தற்போதுள்ள பொருளாதார சீர்குலைவு தொடருமானால் கனடாவில் ஒரு மந்த நிலை ஏற்படுவதற்கான சாத்தியங்களுண்டு. எனவே வட்டி வீத அதிகரிப்பு போன்ற முன்னேற்பாட்டு நடவடிக்கைகளினால் மக்கள் பைகளில் அதிக பணப்புழக்கம் இல்லாதவாறு பார்த்துக்கொள்ள அரசாங்கம் எத்தனிக்கிறது. இதனால் பண்டங்களை வாங்குவாரில்லாது அவற்றின் விலைகளும் குறைய எத்தனிக்கும். வீடுகளின் விலைகளும் சரியும் (supply and demand). வீட்டுச் சந்தை ஒரு நாட்டின் பொருளாதார அளவுகோல்களில் வீட்டு நிர்மாணம் (housing starts) முதலிடத்தைப் பெறுகிறது. புதிய வீடுகள் கட்டுவதற்கான விண்ணப்பங்கள் கிடைத்தவுடன் அத் தகவலை நகராட்சி அரசு ஏனைய இருநிலை அரசுகளுடன் பகிர்கிறது. இந்த எண்ணிக்கை பொருளாதாதத் திட்டமிடுபவர்களுக்கு ஒரு அடியாதாரம். இதைப் பொறுத்து வீட்டு நிர்மாணத்துடன் தொடர்புடைய இதர தொழில்களும் தங்களது உற்பத்திகளை முடுக்கி விடுகின்றன. இவிண்ணப்பங்களின் எண்ணிக்கை அரசாங்கத்துக்கு பல வழிகளில் முன்னறிவிப்புக்களைக் கொடுக்கிறது. வீடு நிர்மாணச் செயற்பாடுகளால் மூன்று நிலை அரசுகளும் நிரம்ப வருமானங்களை ஈட்டுகின்றன. கட்டிய வீடுகளை வாங்குபவர்களை ஊக்குவிப்பதற்காக மத்திய வங்கி குறைந்த வட்டி வீதத்தில் கடன்களை வழங்குகிறது. வேலைவாய்ப்புகள் அதிகரிக்கின்றன. பொருளாதாரமும் வளர்கிறது. இதே போல வேலைவாய்ப்பின்மை (unemployment) என்பதும் இன்னுமொரு பொருளாதார அளவுகோல். வேலைவாய்ப்பின்மையை (unemployment) ஏறத்தாழ 5-7% த்திற்குள் வைத்திருப்பது நல்லது எனப் (optumum) பெரும்பாலான பொருளாதார நிபுணர்கள் கருதுவார்கள். வேலை வாய்ப்பு அருகும்போது அது அரசியல் சிக்கலை உருவாக்கிவிடும். அதே வேளை வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும்போதும் பணியாளர்கள் சம்பள உயர்வு கேட்டுத் தொந்தரவு செய்வார்கள். அப்படிக் கொடுக்கும்போது அவர்கள் பைகளில் அதிக பணப்புழக்கம் ஏற்படும். அதன் விளைவு பண வீக்கம் (அரசாங்கம் கோவிட் நிவாரணப்பணம் கொடுத்த காரணத்தாலும், மக்களின் உல்லாசப் பயணங்கள் தடைபட்டதால் அவர்கள் பைகளில் அதிக பணம் சேர்ந்தமையும் தற்போதைய பண வீக்கத்துக்குக் காரணம்). நெருக்கடிகள் இந்த நிலையில் வட்டி வீத அதிகரிப்பு வீட்டுச் சொந்தக்காரர்களுக்குப் புதிய பண நெருக்கடிகளை உருவாக்குமென எதிர்பார்க்கலாம். உதாரணத்துக்கு ஒருவருடைய தற்போதைய அடமானம் மாறுநிலை வட்டியில் (variable rate) இருக்குமானால் அறிவிக்கப்பட்ட இந்த வட்டி வீத அதிகரிப்புகளுக்கேற்ப அவருடைய மாதாந்த கட்டுப்பணம் அதிகரிக்கும். சிலர் இந்த வேளைகளில் அடமானக் கடன்களை மாறாத வட்டியுள்ள கடனாக (fixed rate) மாற்றிக்கொள்ள விரும்புவார்கள். அப்படிச் செய்ய விரும்புபவர்கள் பல்வேறு காரணிகளையும் முன்யோசித்துச் செய்வது நல்லது. இதனால் மொத்தமாக எவ்வளவு பணத்தைச் சேமிப்பீர்கள் என ஆராய்ந்து முடிவெடுப்பது நல்லது. எப்படி இருந்தாலும் அரசாங்கம் உயர் வட்டியை நீண்ட காலத்துக்கு வைத்திருக்க முடியாது. அது பொருளாதார வளர்ச்சியைப் பாதிக்கும் என்பதனையும் மனதில் கொள்ளவேண்டும். திடீர் வட்டி வீத அதிகரிப்பினால் மாதாந்த கட்டுபணத்தைக் கட்டுவதற்குச் சிரமப்படுபவர்கள் வங்கிகளுடன் பேசி உங்களது மொத்த அடமானக் கடன் தவணையை (amortization) அதிகரிக்கக் கோரலாம். உதாரணத்துக்கு 25 வருடக் கடன் தவணையில் இன்னும் 10 வருடங்களே மீதமிருப்பின் வங்கியுடன் பேசி அதி மீண்டும் 15 /20/ 25 வருடமாக மாற்றிக்கொள்ளலாம். இதற்கான செலவு பற்றியும் வங்கியுடன் உரையாடி முற்கூட்டியே அறிந்துவைப்பது நல்லது. இதில் நினைவில் வைத்திருக்க வேண்டிய ஒரு விடயம் என்னவென்றால் தவணை அதிகரிப்பதோடு நீங்கள் வங்கிக்குக் கொடுக்கும் வட்டியின் தொகையும் அதிகரிக்கும் என்பது. உதாரணமாக 25 வருடத் தவணையில் ஒரு அடமானத்தை எடுத்தீர்களானால் 12.5 வருடம் வரும்போது நீங்கள் செலுத்தும் கட்டுப்பணத்தில் அரைவாசி முதலும் அரைவாசி வட்டியுமாக இருக்கும். 12.5 வருடத்துக்கு முதல் கட்டுப்பணத்தின் வட்டி அதிகமாகவும் 12.5 வருடத்துக்குப் பிறகு முதல் அதிகமாகவும் இருக்கும். எனவே தவணையை அதிகரிப்பதன் மூலம் மாதாந்த கட்டுப்பணம் குறைக்கப்படுமெனினும் வருடங்களை நீட்டிக்கொள்வதனால் நீங்கள் வங்கிக்கு அதிக வட்டியைச் செலுத்துகிறீர்கள் என்பதை ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும். கடந்த இரண்டு வருடங்களில் வீடுகளை வாங்கியவர்கள் வட்டி வீதம் குறைவாக இருந்தமையால், வீட்டுச் சந்தையில் முதலீடு செய்தவர்களும், சந்தை இப்படியே தான் இருக்கப்போகிறது என்ற எண்ணத்தில் பெரும் முதலீடுகளோடு வீடுகளை வாங்கியவர்களும் இவ்வட்டிவீத அதிகரிப்பால் சிரமப்படப் போகிறார்கள் என்பது உண்மை. என்ன இருந்தாலும் மாதாந்த கட்டுப் பணத்தைக் காலம் தவறாது செலுத்திக்கொண்டு வந்தால் பெரும்பாலான வங்கிகள் கேள்வியேதுமில்லாது தவணை முடியும்போது அடமானத்தைப் புதுப்பிக்கச் சாத்தியமுண்டு. ஆனால் கட்டுப்பணம் பல தடவைகள் தமதமாகினாலோ அல்லது தவறினாலோ அடமானத்தை வேறு நிறுவனத்துக்கு மாற்றிக்கொள்ளும்படி வங்கி உங்களுக்கு அறிவிக்கலாம். அப்போது அடமானத் தொகையைவிட வீட்டின் விலை மிகவும் குறைவாக இருப்பின் தேவையான அடமானத்தைப் பெறுவது கடினமாகவிருக்கும். எப்படியாகினும் அடமானக் கட்டுப்பணம் செலுத்துவதில் சிரமங்கள் ஏற்படுமாயின் உங்கள் வங்கிகளுடனோஈ அல்லது அடமான முகவர்களுடனோ கலந்தாலோசித்து முடிவுகளை எடுத்துக்கொள்வது நல்லது. புதிய வீடுகளை வாங்க ஒப்பந்தம் செய்தவர்கள் சூடான வீட்டுச் சந்தையில் பல வானொலி விளம்பரங்களைக் கேட்டு அவசரம் அவசரமாகப் புதிய வீடுகளை வாங்குவதற்கென ஒப்பந்தங்களை செய்துகொண்டவர்கள் இவ்வட்டிவீத அதிகரிப்பினால் பல சிரமங்களையும் எதிர்நோக்கலாம். ஒப்பந்தம் செய்யப்பட்டது ஒரு தொடர்மாடிக் குடியிருப்பாகில் (கொண்டோமினியம்), தனி வீடுகளைப் போலல்லாது அந் நிர்மாண நிறுவனங்களின் வித்தியாசமான கட்டுமான விதிகளுக்கு கட்டுப்படவேண்டும். அதிலொன்று ஆரம்பத்தில் அந்நிறுவனம் கோரிய முற்பணத்தைவிட மேலும் ஒரு தொகையை அது அறவிடலாம். கட்டுமானச் செலவு அதிகரிப்பின் காரணமாக ஏற்கெனவே ஒத்துக்கொள்ளப்பட்ட விலையை விட மேலதிகமான தொகையை அறவிடுவதற்கு இந் நிறுவனங்கள் முயற்சிக்கலாம். ஒப்பந்தச் சட்டங்களின்படி இது ஏற்றுக்கொள்ளப்பட முடியாதாகினும் அரசாங்கங்களும் நீதிமன்றங்களும் கட்டுமான நிறுவனங்களின் பரிதாப நிலைக்கு இரங்கி அவர்களுக்குச் சில சலுகைகளைக் கொடுப்பதாக அறியப்படுகிறது. கட்டுமானம் ஆரம்பிக்காதவிடத்து அல்லது ஆரம்ப நிலையில் கட்டுமானத் திட்டத்தை நிறுத்திவிட்டு வாங்குபவர்களின் முற்பணத்தைத் திருப்பிக் கொடுப்பது. பல திட்டங்கள் குறைந்த விலைக்கு வீடுகளை விற்றபின்னர் கட்டுமானச் செலவுகள் அதிகரித்தவுடன் அத் திட்டங்களை நிறுத்திவிட்டுப் புதிய அதிகரித்த விலைகளில் குடியிருப்புக்களை விற்கின்றன. கட்டுமானம் முடிவுற்ற நிலையில் வங்கிகள் வீடுகளின் விலைகளை நிர்ணயம் செய்யும்போது (appraisal) ஏற்கெனவே உங்களுக்குத் தருவதாக இணங்கியிருந்த அடமானத் தொகையைவிட மிகவும் குறைவான தொகையொன்றை தருவதாகக் கூறலாம். இந் நிலையில் பற்றாக்குறை விழும் தொகையை நீங்கள் கையாலோ அல்லது அதிக வட்டிக்கு வேறெங்காவது பெற்றொ கொடுக்கவேண்டியோ நிர்ப்பந்திக்கப்படலாம். இந்த வேளையில் வீட்டின் சந்தை விலையைவிட அடமானத் தொகை அதிகமாக இருக்குமானால் பலர் கட்டிய முற்பணத்தை விட்டுவிட்டு ஓட்டம் பிடிக்கலாம். அப்போது நிர்மாண நிறுவனம் உங்களைத் துரத்தி தாம் அடைந்த நட்டத்தை உங்களிடமிருந்து மீளப்பெறுவதற்கு முயற்சிக்கும். எனவே புதிய தொடர்மாடிக் குடியிருப்புக்களையோ அல்லது வீடுகளையோ வாங்குவதற்கு ஒப்பந்தங்களைச் செய்தவர்கள் இப்படியான அசெளகரிய்ங்களை எதிர்நோக்கத் தயாராகவிருப்பது நல்லது. இந் நிலையில் உங்கள் சட்டத்தரணிகளின் ஆலோசனைகளைப் பெறுவது நன்மை பயக்கும். பழைய வீடுகளை வாங்குவதற்கு ஒப்பந்தம் செய்தவர்கள் சிலர் தமது தற்போதைய வீடுகளை விற்றுவிட்டு கொஞ்சம் பெரிய, வசதியான வீடுகளை வாங்குவதற்கென கடந்த சில மாதங்களில் ஒப்பந்தங்களைச் செய்திருக்கலாம். வீட்டுச் சந்தையில் தற்போது ஏற்பட்டுவரும் விலைச்சரிவு காரணமாக உறுதிகள் கைமாறும் தருணத்தில் (closing dates) வங்கிகள் திடீரெனக் காலைவாரிவிடும் சம்பவங்கள் நிறைய நடைபெற்று வருகின்றன. இதற்குக் காரணம் வீடு வாங்குவதற்கான ஒப்பந்தம் செய்யும்போது இருந்த விலையை விட இப்போது வீட்டின் விலை கணிசமான வீழ்ச்சியை அடைந்திருக்கும். இப்போது அடமானம் தருவதற்கு முன்னர் உறுதிமொழி தந்திருந்த வங்கிகள் வீட்டு விலைகள் சரிவடைந்த காரணத்தை வைத்துக்கொண்டு தாம் இணங்கியிருந்த அடமானத் தொகையைவிடக் குறைவான தொகையைத் தருவதற்குத் தயாராகும். இந்த இறுதிநேர, எதிர்பாராத நெருக்கடிகளை எதிர்கொள்ளமுடியாதவர்கள் ஒப்பந்தத்தை முறித்துக்கொள்ள வேண்டியோ அல்லது துண்டுவிழும் தொகையை அதிக வட்டிக்கு இரண்டாம் தரப்பிடமிருந்து கடனாகப் பெறவேண்டியோ தள்ளப்படுவார்கள். கடந்த மாதம் மட்டும் ரொறோண்டோ பெரும்பாகத்தில் இப்படியாக 22 ஒப்பந்த முறிப்புகள் நடைபெற்றுள்ளன. இதன்போது வாங்குபவர்கள் கட்டுப்பணத்தை இழப்பது மட்டுமல்லாது விற்பவர்களின் நட்டஈட்டு வழக்கையும் எதிர்கொள்ளவேண்டி வரும். இப்படியான சந்தர்ப்பங்களில் சில பலமான சட்டத்தரணிகள் வாதாடி ஒப்பந்த விலையைக் குறைத்ததும் நடைபெற்றுள்ளது. எனவே வீடுகளை வாங்கியவர்கள் காலதாமதமில்லாது விரைவாகத் தமது உறுதிமாற்ற எழுத்துக்களை முடித்துக்கொள்வது உசிதமானது. இவ் விடயத்தில் இரு தரப்பினரும் சம்பந்தப்பட்ட சட்டத்தரணிகளோடு ஆலோசித்து செயற்படுவது மிகவும் நல்லது.
ஈழத்து இலக்கிய உலகில் 1970 இல் பிரவேசித்த கலை இலக்கியவாதியும் சமூகப்பணியாளருமான எழுத்தாளர் திருமதி அருண் விஜயராணி, நேற்று ஞாயிற்றுக்கிழமை 13 ஆம் திகதி மதியம் அவுஸ்திரேலியா மெல்பனில் காலமானார். இலங்கை வானொலியிலும் அவுஸ்திரேலியா தமிழ் வானொலிகளிலும் நிகழ்ச்சிகளை நடத்தியும் உரைகள் நிகழ்த்தியும் சிறுகதைகள் கட்டுரைகள் பத்தி எழுத்துக்கள் எழுதியும் தமிழ் கலை இலக்கியப்பங்களிப்பு நல்கியவரான அருண்.விஜயராணி அவுஸ்திரேலியாவில் தமிழர் ஒன்றியம் – தமிழ் இலக்கிய கலைச்சங்கம் மற்றும் இலங்கை மாணவர் கல்வி நிதியம் ஆகியனவற்றில் பெரும் பங்கினையாற்றியவர். தமிழர் ஒன்றியத்தில் கலாசார செயலாளராகவும் அந்த அமைப்பின் வெளியீடான அவுஸ்திரேலியா முரசுவின் ஆசிரியராகவும் இயங்கியவர். பின்னாளில் தமிழ் இலக்கிய கலைச்சங்கம் – இலங்கை மாணவர் கல்வி நிதியம் ஆகியனவற்றில் தலைவராகவும் பணியாற்றியவர். இவருடைய கன்னிகா தானங்கள் என்ற சிறுகதைத்தொகுப்பு 1991 ஆம் ஆண்டு சென்னை தமிழ்ப்புத்தகாலயத்தினால் வெளியிடப்பட்டது. இவருடைய சிறுகதைகள் ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. 1970 களில் ஈழத்து இலக்கியத்துறையில் குறிப்பிடத்தக்க எழுத்தாளராக அறிமுகமான இவர் – பின்னாளில்; மத்திய கிழக்கிலும் இங்கிலாந்திலும் வாழ்ந்திருப்பவர். 1989 இல் அவுஸ்திரேலியாவுக்கு வந்தபின்னரும் தொடர்ந்து கலை – இலக்கிய சமூகப்பணிகளில் ஈடுபட்டவர். மெல்பன் வானமுதம் வானொலியின் சார்பில் விற்றில்சீ தமிழ்ச்சங்கத்தினால் அருண். விஜயராணி இதுவரைகாலமும் மேற்கொண்ட வானொலி ஊடகசேவைக்காக அண்மையில் பாராட்டி கௌரவிக்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
"மாநில கவுன்சிலின் பொது அலுவலகத்தால் அறிவிக்கப்பட்ட 2022 விடுமுறை ஏற்பாடுகள்" படி, நிறுவனத்தின் உண்மையான உற்பத்தி நிலைமையுடன் இணைந்து, டிராகன் படகு விழா விடுமுறை ஏற்பாடுகள் பின்வருமாறு அறிவிக்கப்படுகின்றன: 1. விடுமுறை நேரம்: ஜூன் 3, 2022 (வெள்ளிக்கிழமை) - ஜூன் 5 (ஞாயிற்றுக்கிழமை), மொத்தம் மூன்று நாட்கள் விடுமுறை மற்றும் ஜூன் 6, 2022 (திங்கட்கிழமை) அன்று சாதாரண வேலை 2. விடுமுறையின் போது, ​​விற்பனைக்குப் பிந்தைய சேவை தடைபடாது, மேலும் தொழில்நுட்பப் பொறியாளர்கள், விடுமுறையின் போது உபகரணங்கள் சிறப்பாகச் செயல்படுவதை உறுதிசெய்ய, நேரடியாக வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு உதவுவதற்குத் தங்களால் இயன்றவரை முயற்சிப்பார்கள். விடுமுறைக்கு பிறகு சேவை ஒத்திவைக்கப்படும். 3. Guangzhou Longcheng Electronics Co., Ltd. உங்களுக்கு ஆரோக்கியமான டிராகன் படகு விழாவை வாழ்த்துகிறது! உனக்கு தேவைப்பட்டால்9டி விஆர் சிமுலேட்டர் மெஷின், விஆர் சினிமா, விஆர் எக் சேர், விஆர் 360 சேர், விஆர் ரேசிங் மெஷின்,Contact Us !!email:lcdzvart@aliyun.com திருவிழாவின் போது நாங்கள் இன்னும் கூடிய விரைவில் உங்களை தொடர்பு கொள்வோம். இடுகை நேரம்: ஜூன்-02-2022 எங்களை தொடர்பு கொள்ள +8618122182584 lcdzvart@aliyun.com கட்டிடம் 5, எண்.6, பிளாக் E, Xinli அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பூங்கா, No.6 Shixin சாலை, Panyu மாவட்டம், Guangzhou, சீனா
சாலையில் மாடுகள் சற்றி திரிந்தால் ரூ.3000 அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. Lenin Updated on : 29 September 2022, 11:20 AM சென்னை மாநகராட்சியில் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக தெருக்களில் சுற்றித்திரியும் மாடுகள் மாநகராட்சி பொது சுகாதாரத்துறையினரால் கால்நடை பிடிக்கும் வாகனங்கள் மூலம் பிடிக்கப்பட்டு, புதுப்பேட்டை மற்றும் பெரம்பூரில் உள்ள மாநகராட்சி மாட்டுத் தொழுவங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு வருகின்றது. அவ்வாறு தெருக்களில் சுற்றித்திரிந்து மாநகராட்சியால் பிடிக்கப்படும் மாடுகளின் உரிமையாளர்களுக்கு அபராதத் தொகையாக மாடு ஒன்றிற்கு 1250 ரூபாய் அபராத தொகை, 100 ரூபாய் ஒரு நாள் விகிதம் 300 ரூபாய் பராமரிப்பு பணி என மொத்தமாக ரூ.1,550/- விதிக்கப்பட்டு வந்தது. 2021 ஜூலை 7ஆம் தேதி முதல் 2022 ஜூன் 30-ஆம் தேதி வரை மொத்தமாக 4099 மாடுகள் பிடிக்கப்பட்டு 61 லட்சத்து 63 ஆயிரத்து 750 ரூபாய் அபராதமாக இதுவரை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது இந்த அபராதம் ஆனது ரூ.1550 முதல் ரூ.3000 ஆக மாநகராட்சி உயர்த்தி உள்ளது. இனி வரும் காலங்களில் மாடு பிடிபட்டால் 3 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு அந்த மாட்டின் காதில் மாநகராட்சி வரிசை எண் பொருத்தப்படும். அதே மாடு மீண்டும் பிடிக்கப்பட்டால் தன்னார்வ தொண்டு நிறுவனங்களிடம் உரிய முறையில் ஒப்படைக்கப்படும் என மாநகராட்சி தெரிவித்துள்ளது. Also Read “RSS ஊர்வலத்துக்கு அனுமதி மறுப்பு : சட்டம் - ஒழுங்கு பிரச்சினை ஏற்படும்” - தமிழ்நாடு அரசு விளக்கம்! Chennai Corporation cows Trending சோமாலியாவில் விழுந்த விண்கல்:உடைத்துப்பார்த்த விஞ்ஞானிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி..உள்ளே இருந்தது என்ன? ஆளுநருக்கு இத்தனைகோடி செலவா ? வேலையே செய்யாதவர்களுக்கு இத்தனை செலவு ஏன் என இணையவாசிகள் ஆவேசம் ! பயணிகள் கவனத்திற்கு.. ரயிலில் ஜன்னலோரம் அமர்ந்த நபரின் கழுத்தில் பாய்ந்த இரும்பு ராட்: திக் திக் சம்பவம்! கேரளாவை உலுக்கிய 6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு.. ஆசிரியருக்கு 62 ஆண்டு சிறை தண்டனை ! Latest Stories சோமாலியாவில் விழுந்த விண்கல்:உடைத்துப்பார்த்த விஞ்ஞானிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி..உள்ளே இருந்தது என்ன? உலகக்கோப்பையில் ஈரான் அணி தோல்வி.. கொண்டாடிய நபரை சுட்டுக்கொன்ற ஈரான் ராணுவம்.. அதிர்ச்சியில் உலகநாடுகள்! அரளி சித்தராக மாற்றப்பட்ட மனநலம் பாதித்த முதியவர்: உண்டியல் வைத்து பணம் வசூலித்த கும்பலிடமிருந்து மீட்பு!
அமர்த்தியா சென்னை ஒரு உலகக்குடிமகன் எனலாம், இந்தியன் என்கிற அடையாளத்துக்கும் அப்பால் மத இனபேதம் கடந்து மனித குலத்துக்கான நலப்பணியில் ஈடுபட்டிருப்பவர் அவரை பொருளாதார வல்லுநர் என்கிற அளவிலேயே நாம் தீர்மானித்து விட முடியாது. ஏழைகளின் கல்வி, மருத்துவம், சமத்துவம் இவற்றை வலியிறுத்தும் அந்த மனிதர் அதற்க்கும் மேலே நோபல் குறித்து அத்தனை சிறப்புகளுக்கும் தகுதியானவர் ஆவர். எல்லையற்ற அறிவு காரணமாக அமர்த்தியாவிற்கு ஆக்ஸ்போர்டு, கேம்பிரிட்ஜ் போன்ற மேலைநாட்டு பல்கலைக்கழகங்களில் உயர்பதவி,கவுரவிப்புகள் அவருடைய அறிவைப போலவே அவர் கொண்ட அன்பும், இறக்கமும் எல்லையற்றவையாம்… ரூ. 100/- No Comments Product Categories Select a category Ayisha Era. Natarasan Book Desanthiri sooriyan publications Uncategorized ஃப்ரான்ஸ் காஃப்கா அ.முத்துக்கிருஷ்ணன் அ.முத்துலிங்கம் அகராதி அஜயன் பாலா அப்பண்ணசாமி அம்பை அரசியல் அரசியல் கட்டுரைகள் அறிவியல் அறிவியல் – ஆய்வு – தொழில்நுட்பம் அறிவியல் புனைகதை ஆக்‌ஸிஜன் புக்ஸ் ஆதவன் ஆன்மிக வரலாறு ஆன்மிகம் ஆன்றோர்களின் வாழ்வும் வாக்கும் ஆய்வு ஆய்வுகள் ஆரோக்கிய சமையல் ஆர்.முத்துக்குமார் இசை இதழ் தொகுப்பு இன வரைவியல் இயற்கை விவசாயம் இரா.கோவர்தன் இருவாட்சி இலக்கியம் இலக்கியம்‍‍ – இலக்கணம் – பொன்மொழிகள் இல்லற இன்பம் இல்லறம் ஈழம் உதயச்சந்திரன் உயிர்மை உலக சினிமா எதிர் வெளியீடு எதிர்வெளியீடு எனி இந்தியன் பதிப்பகம் எஸ். ராமகிருஷ்ணன் எஸ்.ராமகிருஷ்ணன் எஸ்.ஹீஸேன் ஸைதி ஓவியம் கடிதங்கள் கட்டுரைகள் கணிதம் கண்மணி குணசேகரன் கயல் கவின் பதிப்பகம் கலீல் ஜிப்ரான் கலை/ஊடகம் கலைஞர் மு .கருணாநிதி கலைப் பொருட்கள் கல்வி கவிதா பதிப்பகம் கவிதை கவிதைகள் காப்பியங்கள் கார்த்திகை பாண்டியன் காலச்சுவடு கி. வீரமணி கிராபியென் ப்ளாக் கிருஷ்ணன் நம்பி கிழக்கு பதிப்பகம் கீரனூர் ஜாகிர்ராஜா குறுங்கதைகள் குறுநாவல் குழந்தைகள் இலக்கியம் கேள்வி-பதில்கள் கைவினைப் பொருட்கள் கௌதம சித்தார்த்தன் ச. வின்சென்ட் ச.பாலமுருகன் சட்டம் சந்தியா பதிப்பகம் சமூக சமூகநீதி சமூகம் சமூகவியல் சமையல் சயின்ஸ் ஃபிக்‌ஷன் சரவணன் சந்திரன் சரித்திரம் சாரு நிவேதிதா சிக்ஸ்த் சென்ஸ் சிட்டி பெ. கோ. சுந்தரராஜன் சினிமா சினிமா திரைக்கதை சினிமா – திரைக்கதை சினிமா – திரைக்கதை – வசனம் – நாடகம் – இசை சிறுகதை சிறுகதை தொகுப்பு சிறுகதைகள் சிறுவர் நூல்கள் சுஜாதா சுட்டிகளுக்காக சுதேசமித்திரன் சுந்தர ராமசாமி சுப்ரபாரதிமணியன் சுயசரிதை – வரலாறு சுயமுன்னேற்றம் சூழலியல் செம்மொழி சொல் புதிது பதிப்பகம் ஜாதி தீண்டாமை ஜி.கார்ல் மார்க்ஸ் ஜீவானந்தம் ஜெயமோகன் ஜோதிடம் டாக்டர் நாராயண ரெட்டி டிஸ்கவரி புக் பேலஸ் டைரக்டர் ஷங்கர் தத்துவம் தந்தை பெரியார் தன்னம்பிக்கை – சுயமுன்னேற்றம் தமிழினி தமிழினி வெளியீடு தமிழ் தமிழ்மகன் நாவல்கள் தாம்பத்திய வழிகாட்டி நூல்கள் தி. ஜானகிராமன் தியான நூல்கள் திருக்குறள் திருமகள் நிலையம் திரைப்படக் கலை தேடல் தொ. பரமசிவன் தொகுப்பு நற்றிணை நாடகங்கள் நாடுகளின் வரலாறு நாட்டுப்புறக் கதைகள் நாவல்கள் சுந்தர ராமசாமி நினைவோடை நூலகம் நூல்கள் வாங்க நேர்காணல்கள் பகுத்தறிவு பக்தி இலக்கியம் பக்தி நூல்கள் பயணம் பாரதி புத்தகாலயம் பாரதியார் பிரணாய் ராய் & தொராப் ஆர். சொபாரிவாலா பிரபஞ்சன் பிஸினஸ் – முதலீடு – சேமிப்பு புதினம் (நாவல்) புதுமைபித்தன் பெண்களுக்காக பெண்ணியம் பெண்ணுரிமை பெரியார் பெரியார் புத்தக நிலையம் பெருமாள் முருகன் பொது பொது அறிவு – தகவல் களஞ்சியம் – சுற்றுலா – பயணம் பொன்மொழிகள் பொருளாதாரம் பௌத்தம் ம. காமுத்துரை மகாகவி பாரதியார் மகுடேசுவரன் மதம் மனித சமூகம் மனுஷ்ய புத்திரன் மன்னார் கேணி பதிப்பகம் மருத்துவம் மருத்துவர் கு.சிவராமன் மற்ற நூல்கள் மானஸ் பதிப்பகம் மித்தி நிலையம் மினிமாஸ் மின்னங்காடி பதிப்பகம் மெட்ராஸ் மொழி மொழி பெயர்ப்பு சிறுகதைகள் மொழிபெயர்ப்பு நாவல் யங் சாங் லியோ ஜோசப் வம்சி வரலாறு வா.மு.கோமு வாழ்க்கை வரலாறு வாழ்வியல் விகடன் பதிப்பகம் விகடன் பிரசும் விஜயா பதிப்பகம் விடியல் விடுதலை விடுதலை பதிப்பகம் விளையாட்டு விவசாயம் – பிராணி வளர்ப்பு வேலை வாய்ப்பு
ஆனால் சிலருடைய ஆசைகள் எப்படி இருக்கிறதெனறால் உடலைப் பார்ப்பதற்குத் தான் தியானம் செய்கின்றார்களே தவிர… உடலுக்குப்பின் நாம் எப்படி நிலையாக இருக்க வேண்டும்…? என்று எண்ணவில்லை. அழியாத நிலைகள் கொண்டு உயிர் என்றுமே நிலையாக இருக்கின்றது. அதை நாம் தியானித்து அந்தச் சக்தி பெற வேண்டும் என்று இல்லை. 1.தியானம் இருந்தேன் நல்லதானது… 2.காப்பாற்றினார் கடவுள் ஆகிவிட்டது…! என்ற இந்த உணர்வுக்கு நாம் சென்றால் 3.மீண்டும் புவியின் ஈர்ப்புக்குள் தான் வருகின்றோம். அப்படி இல்லாதபடி எல்லோரும் அந்த அருள் உணர்வு பெற வேண்டும் என்ற ஏகாந்த நிலையை நாம் கொண்டு வர வேண்டும். வாழ்க்கையின் நிமித்தம் எத்தனையோ நினைக்கின்றோம்… எண்ணியபடி காரியங்கள் நடக்கவில்லை என்றால் உடனே வருத்தம் வருகின்றது… அப்பொழுது வேதனை வருகின்றது. அப்போது எந்தப் பற்று வருகிறது…? வேதனை என்ற பற்று தான் அதிகமாக வருகிறது. இதைப் போன்ற நிலைகளிலிருந்து எல்லாம் விடுபட்டு அருள் ஞானத்தை வளர்ப்பதற்குண்டான நிலைகளை நாம் செயல்படுத்த வேண்டும். எப்பொழுதுமே… எதிலுமே… உடல் பற்று இல்லாதபடி… உயிர் எப்படி உணர்வை ஒளியாக மாற்றுகின்றதோ அதே போன்று எல்லோருக்கும் அந்த அருள் பெற வேண்டுமென்ற அந்தப் பற்றினை நாம் வளர்க்க வேண்டும். அதைப் பற்றுடன் பற்றி இந்த வாழ்க்கையில் வரும் இருள் என்ற நிலையைப் பற்றற்றதாக மாற்றி விட வேண்டும். “இது தான் தியானம்…” 1.தியானம் இருந்தேன் கல்யாணம் நடந்தது… 2.தியானம் செய்தேன் சொத்து வந்தது… அது வந்தது… இது வந்தது… என்று வெறுமனே சொல்லிக் கொள்ளலாம். 3.ஆனால் இதற்கு ஆசையைக் கூட்டக் கூடாது. நலமாக வேண்டும் என்று ஆசைப்படலாம்… அந்த அருள் உணர்வு பெற வேண்டும் என்ற அந்த இச்சை வரவேண்டும். இச்சாசக்தி… கிரியாசக்தி…! அந்த துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பெற இச்சைப் படும்பொழுது உயிரிலே பட்டுக் கிரியையாகி அந்த ஞானத்தின் வழி நம்மை வழிநடத்தும். உடலுக்கு என்று நாம் இச்சைப்பட்டு அதைக் கிரியை ஆக்கினால் இந்த வாழ்க்கையின் நிலைக்குத்தான் வரும். 1.சிறு குறையானால் தடைப்பட்டால் ஞானத்தை இழக்க வேண்டி வரும். 2.இதைப் போன்ற நிலையிலிருந்து விடுபட்டு அருளைப் பெறுக்க வழி காட்டுகின்றோம். வாழ்க்கையில் வரக்கூடிய பற்றை எல்லாம் நீக்கி “எல்லோரும் பேரின்பம் பெற வேண்டும் என்று எண்ணுவதுதான் ஏகாதசி விரதம்…” அன்று ஒரு நாள் முழுவதும்… அந்த மாதம் முழுவதற்கும் அதில் வரக்கூடிய குறைகளை நீக்குவதற்கும் பிறருடைய பகைமைகளைக் குறைப்பதற்கும்… அவர்களுக்கெல்லாம் அருள் பெற வேண்டுமென்ற ஏகாந்த நிலை வரப்படும் பொழுது நமக்குள் ஏகாதசி ஆகிறது. உடலை விட்டுப் பிரியும் சமயம் யாரிடமும் பகைமை இல்லாது சென்றால் பிறவியில்லாத நிலை அடைகிறோம்… பத்தாவது நிலை அடைகின்றோம்…. ஏகாதசி விரதம் என்ற முழுமைக்கு வருகின்றது. ஆகவே 12 மாதங்களிலும் 12 ராசிகளிலும் மாறி வரப்படும் பொழுது ஒவ்வொரு ராசியிலும் ஒவ்வொரு மனிதனுடைய உணர்வுகள் அந்த ராசிகள் மாறப்படும் பொழுது அதை எப்படி மாற்றவேண்டும் என்று தான் தத்துவ ஞானிகள் கூறியுள்ளார்கள். 1.வைகுண்ட ஏகாதசி…! – எல்லோரும் ஏகமாகச் சேர்ந்து 2.ஒருவருக்கொருவர் பகைமை உணர்வுளை இழுக்காதபடி 3.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி அனைவரும் பெற வேண்டும் என்று ஏங்கி இருக்க வேண்டும். வெறுப்பு வேதனை சலிப்பு சஞ்சலம் சங்கடம் கோபம் குரோதம் இவையெலலாம் மனித உடலுக்குள் வராதபடி தடுத்து அனாதையாக்குதல் வேண்டும். அப்படி ஆனாதையாக்கினால் காலையில் ஆறு மணிக்கெல்லாம் அந்த உணர்வுகளைச் சூரியன் கவர்ந்து மேலே சென்று கொண்டு விடுகிறது. சூரியன் கவர்ந்து சென்று விட்டால் நம் ஆன்மா தூய்மை அடைகிறது… ஜீவாத்மா தூய்மை அடைகிறது… உயிராத்மா ஒளியாகிறது.. இந்தப் பரமாத்மாவும் (காற்று மண்டலம்) புனிதமாகிறது. இந்த உடலை விட்டுச் செல்லும் நாம் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் சப்தரிஷி மண்டலத்துடன் இணைகின்றோம். ஆகவே அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பெறக்கூடிய தகுதியை வளர்த்து எல்லோரும் ஒன்று சேர்ந்து வாழும் தன்மை கொண்டு இதையே நாம் கடைபிடித்தால்
இந்தியாவின் பெருமுயற்சியால் கண்ணுக்கு தெரியாத வைரஸ் கிருமியான கொரோனா கட்டுப்படுத்தப்பட்டது. கொரோனா நோய் தடுக்க மிகவும் உதவியது தடுப்பூசி. அதோடு மட்டுமில்லாமல் கொரோனாக்கு எதிராக பேரயுதமாக தடுப்பூசிகள் காணப்பட்டன.இதனால் இந்தியாவில் நூறு கோடிக்கும் அதிகமான கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு, இவை உலகத்தை திரும்பிப் பார்க்கும் அளவிற்கு பெரிய சாதனையாக காணப்படுகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் வாராவாரம் கொரோனா மெகா தடுப்பூசி முகாம் அமைக்கப்பட்டு லட்சக்கணக்கில் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் நம் தமிழகத்தில் இன்றைய தினம் பத்தாவது மெகா தடுப்பூசி முகாம் தொடங்கியுள்ளது. அதன்படி இவை தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் மையங்களில் பத்தாவது மெகா கொரோனா தடுப்பூசி முகாம் தொடங்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் இரண்டாவது தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தவேண்டிய 75 லட்சம் பேர் இந்த முகாம்களை பயன்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சுமார் இரண்டாயிரம் கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடைபெறுகின்றன.ஏற்கனவே தமிழகத்தில் கடந்த வியாழக்கிழமை கொரோனா தடுப்பூசி முகாம் அமைக்கப்பட்டு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டில் போலீசாருடன் மோதல்களில் ஒன்பது பேர் உயிரிழந்துள்ளனர். ஒரு செப்பு ஸ்டெர்லைட் மீது ஆர்ப்பாட்டங்கள் நடந்துள்ளன.துறைமுக நகரமான தூத்துக்குடி நகரில் மாதங்கள் துவங்குவதற்கு ஸ்டெர்லைட் காப்பர் துணை நிறுவனத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன.ஆர்ப்பாட்டக்காரர்கள் பெரும் கூட்டம் மாவட்ட அரசாங்க தலைமையகத்தை தாக்கினர் என போலீசார் தெரிவித்தனர்.பலர் விமர்சன ரீதியாக காயமுற்றனர்.காவல்துறையினர் மற்றும் அலுவலக கட்டிடங்களில் கற்களை வீச ஆரம்பித்தனர், கார்களைத் தூக்கி எறிந்து, பல வாகனங்களை தீ வைத்தனர். இன்று: ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் காவல் துறையினருக்கும் ஏற்பட்ட மோதலில் 11 பேர் இதுவரை இறந்துள்ளதாக தூத்துக்குடி காவல்துறை தரப்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.தூத்துக்குடி உள்ளிட்ட மூன்று மாவட்டங்களில் இணையத்தை முடக்கி உத்தரவிட்டுள்ளது அரசு. இது புரளி பரவுவதைத் தடுக்கும் முயற்சியா, கருத்துச் சுதந்திரத்தை முடக்கும் செயலா? என வாதம் விவாதம் பகுதியில் கேட்டிருந்தோம்.தூத்துக்குடியில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி அம்மாவட்ட மக்கள் நடத்திய போராட்டத்தையடுத்து நடந்த வன்முறையில், போலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இதுவரை 13 பேர் பலியாகியுள்ளனர். துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களில் ஒருவர்தான் ஆண்டனி செல்வராஜ். இவருக்கும் தூத்துக்குடியில் நடந்த போராட்டத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை என்கின்றனர் ஆண்டனி செல்வராஜின் குடும்பத்தினர்.தமிழகத்தில் ஸ்டெர்லைட் ஆலை இயங்குவதை தமிழக அரசும் விரும்பவில்லை எனவேதான் ஆலைக்கு தேவையான மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளது என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். மூலம்[தொகு] புதன், மே 25, 2022 BBC Tamil "தூத்துக்குடி சாவு 13 ஆனது: போக்குவரத்து, இணையம், கடைகள், வங்கிகள் முடக்கம்". BBC Tamil, 25.05.2018 இச்செய்தியைப் பகிர்க: "https://ta.wikinews.org/w/index.php?title=தூத்துக்குடி_செய்தி_இன்று&oldid=51603" இருந்து மீள்விக்கப்பட்டது
வலைத் தளத்தில் எனக்குக் கிடைத்த முதல் விருது. இதை வழங்கிய முனைவர் இரா.குணசீலன் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் ...... பிரபலமான இடுகைகள் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் சகானா ! மலரிலும் மெல்லிய மனமிது தழைத்திட நற் குணநலன் பெற்றிங்கு என் குலமகள் வாழ்ந்திட கலைகளைப் பயின்றிட நற் கடமைகள் புரிந்திட அறிவ... இன்பமே சூழ்க எல்லோரும் வாழ்க !!... அன்பைப் பொழிவோம் எந்நாளும் அதுவே வாழ்வின் பயனாகும் ! இன்பம் துன்பம் எல்லாமும் இறைவன் விட்ட வழியாகும் ! அன்னல் காந்தி மகானைப்போல் அ... மலர்கொண்டு பூஜித்தாலும் மகிழ்வான நாள்தான் இன்று!... அகிம்சையின் வழியில் வாங்கிய சுதந்திரம் அடடா கிடக்குது காலுக்கடியினிலே¨!!!.... இதை வாங்கித் தந்த காந்தித் தாத்தா அழகாய் சிரிக்கிறார... பேசடா என் செல்லக் கிளியே!.... அன்னையின் பாடல் கேட்டு பிள்ளையின் தோற்றம் பாரு இந்த முல்லை ப் பூ சிரிப்பழகு முகத்தினை மறப்பார் யாரு !.... இன்னலைப் போக்கும் விழி... பா மரம் பட்டுப் போகும் நிலைகண்டால்.... பா மரம் பட்டுப் போகும் நிலைகண்டால் தேன் துளி விட்டுச் செல்லும் தேனீக்கள் யார் இதை அழித்திட நினைத்தாரோ ...அந்த வாசகர் நெஞ்சம் என்றும் ... மரணம் என்ற வலையில் விழுந்து..... மரணம் என்ற வலையில் விழுந்து மனிதன் எரிந்து கருகும்போது மனதில் உள்ள துயரை என்றும் மறைத்து வைக்க முடியாதன்பே.! எதிரிகூட நண்ப... மாமா மாமா..என்னப் பார்த்தால் உனக்கு கூச்சமா ....... மாமா மாமா என்னப் பார்த்தால் உனக்கு க் கூச்சமா ? மாமா மாமா என்னப் பார்த்தால் உனக்கு கூச்சமா ? மைனஸ் ஓட்டுப் போடுற மாமா... காலனைத் தொழும் கரங்கள்!.... தூண்டி லி ல் மாட்டிய புழுப்போலே துடியாய் துடிக்கும் யீவன் களுக்கு வேண்டிய வரமது அளிப்பதற்கு நீ தான் என்றும் விதிவிலக்கு!:...... கேட... கற்பனைக் கோட்டை! எண்ணற்ற கோட்டை கட்டி என்ன பயன் கண்டோம் இங்கே! கண்ணிறைந்த இயற்கை ஒன்றே காவலரணாகும் எங்கும்! மண்மீது உயிர்கள் வாழ மறுபிறவி தானும...
ஊடகவியலாளர் மெல்ஷியா குணசேகர கூரிய ஆயுதத்தினால் கழுத்து வெட்டப்பட்ட நிலையில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் நேற்றுக் காலை 6.15 மணிக்கும் 8.15 மணிக்கும் இடையில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன தெரிவித்தார். பத்தரமுல்ல, கெமுனு மாவத்தையின் சுபுதிபுர பிரதேசத்திலுள்ள அவரது வீட்டில் சமையலறையில் உயிரிழந்த நிலையிலேயே சடலமாக மீட்டெடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். பொலிஸ் தலைமையகத்தில் நேற்று பிற்பகல் இடம்பெற்ற விஷேட ஊடகவியலாளர் மாநாட்டின் போது இந்தக் கொலை சம்பவம் தொடர்பில் பொலிஸ் பேச்சாளர் மேலும் விளக்கமளிக்கையில்: ஊடகவியலாளரின் தாய், தந்தை மற்றும் சகோதரன் நேற்றுக்காலை 6.00 மணியளவில் வழிபாட்டுக்காக வெளியில் சென்றுவிட்டு காலை 8.15 மணியளவில் வீட்டுக்கு மீண்டும் திரும்பியுள்ளனர். வீட்டிற்குள் நுழைந்த அவர்கள் தனது மகள் வீட்டின் சமையலறையில் இரத்த காயங்களுடன் விழுந்து கிடந்துள்ளதைக் கண்டு அதிர்ச்சியுற்ற அவர்கள் உடனடியாக அருகிலுள்ள பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர். முறைப்பாட்டை அடுத்து உடனடியாக ஸ்தலத்திற்கு விரைந்த பொலிஸார் கூரிய ஆயுதத்தினால் கழுத்து வெட்டப்பட்டு விழுந்த கிடந்த நிலையில் மெல்ஷியா குணசேகரவை மீட்டெடுத்துள்ளனர். 1997 ஆம் ஆண்டு முதல் 2012ம் ஆண்டு வரை பரான்ஸ் செய்தி சேவையான (அஸோஸியேட் பிரஸ் – ஏ. பி) செய்தி நிறுவனத்தின் வர்த்தக செய்திகள் தொடர்பிலான ஊடகவிய லாளராக செயற்பட்டு வந்து அவர் தற்போது உலக வர்த்தக நிலையத்திலுள்ள நிறுவனம் ஒன்றில் சேவையாற்றி வருகின்றார். இவரது மர்மக் கொலை தொடர்பில் விரிவாக ஆராய்ந்து விசாரணை நடத்தவெனன பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஒருவர் மற்றும் நுகேகொட பிரிவு பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் விசேட குழுக்கள் உடனடியாக நியமிக்கப்பட்டுள்ளன. குற்றச் செயல்கள் தொடர்பிலான தடயவியல் நிபுணத்துவம் பெற்ற பொலிஸ் குழுவும் விரல் அடையாளங்கள் தொடர்பிலான ஆராயும் குழுவும் உடனடியாக ஸ்தலத்திற்கு அழைக்கப்பட்டனர். இந்தச் சம்பவம் திட்டமிட்ட கொலையா? எவ்வாறு இடம்பெறுள்ளது. யார் இதனை மேற்கொண்டனர். போன்ற விடயங்கள் தொடர்பாக விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டதுடன் பல்வேறு கோணங்களில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று நண்பகல் கொலை இடம்பெற்ற இடத்திலிருந்து விரல் அடையாளம் ஒன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. மேற்படி ஊடகவியலாளர்ரின் வீட்டில் நான்கு நாய்கள் வளர்க்கப்பட்டு வருகின்றது. எனினும் சம்பவம் நடைபெற்ற நேரத்திற்குள் எந்த ஒரு நாயும் குரைக்கவில்லை என்பது ஆரம்பக் கட்ட விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளது. இதனையடுத்து இந்த கொலைச் சம்பவத்திற்கு பின்னால் உள்ள மர்மம் தொடர்பில் விரிவாக ஆராய்ந்து வருகின்றனர். இதேவேளை, குறித்த ஊடகவியலாளரின் எதிர் மற்றும் அயல் வீட்டின் வெளிப்பகுதியில் பொருத்தப்பட்ட சிசி. ரி. வி. கெமராக்களில் சில காட்சிகள் பதிவாகி இருக்கலாம் என்ற அடிப்படையில் அந்தக் காட்சியையும் பெற்றுக்கொண்டு விசாரணைகளை துரிதப்படுத்த பொலிஸார் தீர்மானித்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சுட்டிக்காட்டினார். சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு விரைந்த கடுவெல பதில் மஜிஸ்திரேட் கமல் விஜேசிறி மஜிஸ்திரேட் பரிசோதனைகளை மேற்கொண்டதுடன் பிரேத பரிசோதனை நடத்துமாறு உத்தரவிட்டுள்ளார். இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் விரைவில் கைது செய்யப்படுவார் என்று தொடர்ந்து பொலிஸ் பேச்சாளர் கொலைச் சம்பவத்திற்கான காரணம் உடனடியாகத் தெரிய வரவில்லை. விசாரணைகளுக்குப் பின்னரே உறுதிப்படுத்த முடியும் என்றார். அத்துடன் சண்டே ரைம்ஸ் வார இதழிலும், லங்கா பிஸ்னஸ் ஒன்லைன் ஊடகத்திலும் இவர் பணிபுரிந்துள்ளார். தற்போது, பிட்ச் ரேட்டிங் லங்கா நிறுவனத்தின் துணைத் தலைவராக பணியாற்றி வந்த நிலையிலேயே, இன்றுகாலை வீட்டில் வைத்து கொலை செய்யப்பட்டுள்ளார். இவரது தாயும் சகோதரனும், தேவாலயத்துக்குச் சென்று திரும்பிய போது மெல் குணசேகர, சமையலறையில் கூரிய ஆயுதத்தினால் வெட்டப்பட்ட காயங்களுடன் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக கிடந்துள்ளார். கொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மெல் குணசேகர, அரசியல் மற்றும், வர்த்தக விவகாரங்களில் செய்திகள், ஆயவுகளை எழுதி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
வீணடிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசியை எடுத்துக்கொண்ட அமெரிக்கர்கள்: மருந்தாளரின் அலட்சியத்தால் நேர்ந்த விபரீதம் அமெரிக்காவில் விஸ்கான்சின் மருத்துவமனை மருந்தாளர் ஒருவர், இந்த வாரத் தொடக்கத்தில் 57 மருந்து குப்பிகளை குளிர்சாதனப் பெட்டியில் சேமிக்காமல் வெளியே… World | January 2, 2021 இத்தாலியில் குளிர்சாதன பெட்டியில் இருந்ததை சாப்பிட்ட சிறுது நேரத்தில் சுருண்டு விழுந்து இறந்த பெண்! இத்தாலியில் 27 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் குளிர்சாதனப் பெட்டியில் இறால் இருப்பதை அறியாமல், மீதமுள்ள பாஸ்தாவை சாப்பிட்ட பின்…
மற்றவற்றை போல இலங்கையர்களின் ஓர் அங்கமாக கையடக்க தொலைபேசிகள் தேவையாகிவிட்டது. நீங்கள் இலங்கையில் ஒரு நல்ல தொலைபேசியைத் தேடுகிறீர்களானால், ikman.lk ஐத் தவிர வேறு எங்கும் கிடைக்காது. ஒவ்வொரு வாங்குபவரும் பார்க்கும் பல்வேறு பிராண்டுகள் மற்றும் மாடல்களில் எங்களிடம் பரந்த அளவிலான தேர்வுகளாக உள்ளன. உங்கள் வருவாய்க்கு ஏற்ற ஸ்மார்ட்போனை கண்டுபிடிப்பது எளிதான பணி அல்ல, ஆனால் நீங்கள் ikman.lk பக்கத்திற்கு சென்றால் நீங்கள் அதனை மிக எளிதாக கண்டறியமுடியும். உங்கள் தேடலை இன்னும் எளிதாக்க குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச விலை வரம்புகளைச் சேர்க்க உங்களுக்கு தெரிவு உள்ளது. ikman.lk விற்பனையாளர்களிடமிருந்தும், சரிபார்க்கப்பட்ட உறுப்பினர்களிடமிருந்தும் இலங்கையில் உள்ள Samsung கையடக்க தொலைபேசிகளை கண்டறியவும். இலங்கையில் சிறந்த விலையில் Samsung Galaxy Note-1 கையடக்க தொலைபேசிகள் களை வாங்கவும் Samsung கையடக்க தொலைபேசிகளை இலங்கையின் சிறந்த வர்த்தக சந்தையான ikman.lk இல் மட்டுமே கண்டறிந்து தேர்ந்தெடுக்கவும். நீங்கள் குறிப்பிட்ட Samsung கையடக்க தொலைபேசி மாடலில் ஆர்வமாக இருந்தால், நீங்கள் எங்கள் வலைதள பக்கத்திற்கு சென்று எங்கள் நம்பகமான உறுப்பினர்கள், தனியார் விற்பனையாளர்கள் மற்றும் இலங்கை முழுவதிலும் உள்ள அங்கீகரிக்கப்பட்ட முகவர்களிடமிருந்து வாங்கலாம். Galaxy A10s, Galaxy A51, Galaxy A10, Galaxy A03s, Galaxy A2 Core போன்ற சிறந்த கையடக்க தொலைபேசி மாடல்களும் நியாயமான விலையில் எங்களிடம் உள்ளன. Samsung Galaxy Note-1 கையடக்க தொலைபேசிகளை விலை, பாவனைக்குரிய தன்மை, மாடல் மூலம் பட்டியலிடவும் இலங்கையில் சிறந்த Samsung கையடக்க தொலைபேசி விலையினை கண்டறியவும். விலை, பிராண்ட், பாவனைக்குரிய தன்மை, மாதிரி மற்றும் பிற விவரக்குறிப்புகள் போன்ற வடிப்பான்களைப் பயன்படுத்தி உங்கள் தேடல்களை ikman.lk எளிதாக்குகிறது. உங்களுடைய வருவாய்க்கு ஏற்ப உங்கள் கோரிக்கைகளை எங்களுடன் வரிசைப்படுத்தலாம். நீங்கள் துள்ளியமாக பட்டியலிட்டால் சிறந்த தொலைபேசியை சிறந்த விகிதத்தில் தேர்ந்தெடுப்பது ஒரு இலகுவான செயலாகும். ikman.lk இல் Samsung Galaxy Note-1 கையடக்க தொலைபேசிகளை எளிதாக விற்பனை செய்யவும் ஸ்மார்ட்போனை விற்பனை செய்வது என்பது சவாலானது. ஆனால் ikman.lk தளத்துடன் அச்சவாலை எளிதாக முறியடிக்க முடியும். எனவே, எங்கள் தளத்தினூடாக விற்பனை செய்ய ஏன் முயற்சி செய்யக்கூடாது? ikman.lk இல் உங்கள் ஸ்மார்ட்போனை மிக எளிதாகவும் பாதுகாப்பாகவும் விற்கலாம். ஆனால் உங்கள் தொலைபேசியை resetting செய்வதன் மூலம் உங்கள் தனியுரிமையைப் பாதுகாப்பதை உறுதி செய்யுங்கள்.
யாரையும் விட நாம் மிக்க காதல் கொண்டிருக்கிறோம் என்று சொன்னேனாக; ய‌ாரை விட…? யாரை விட..? என்று கேட்டு ஊடல் கொண்டாள். சாலமன் பாப்பையா உரை: காதலர் எவரைக் காட்டிலும் நாம் மிகுந்த காதல் உடையவர்கள் என்றேன்; அதற்கு அவள் நான் பலரையும் காதலிப்பதாகவும், அவர்களுள் இவள்மீது அதிகக் காதல் உடையவன் என்று சொன்னதாகவும் எண்ணி, எவளைக் காட்டிலும் எவளைக் காட்டிலும் என் மீது காதல் உடையீர் என்று ஊடினாள். கலைஞர் உரை: “யாரைக் காட்டிலும் உன்னிடம் நான் காதல் மிகுதியாகக் கொண்டுள்ளேன்” என்று இயல்பாகச் சொன்னதைக் கூடக் காதலி தவறாக எடுத்துக் கொண்டு “யாரைக்காட்டிலும் யாரைக் காட்டிலும்” எனக் கேட்டு ஊடல் புரியத் தொடங்கி விட்டாள்.
உலகம் முழுவதும், நாடுகள் மற்றும் மண்டலங்களிலிருந்து பஹாய் சமூகங்களின் பிரதிநிதிகள் அப்துல்-பஹாவின் விண்ணேற்றத்தை நினைவுகூர்ந்திட பஹாய் உலக மையத்தில் ஒரு வரலாற்று முக்கியத்துவம் மிக்க கூட்டத்தில் கலந்துகொள்ள வருகின்றனர் 22 நவம்பர் 2021 பஹாய் உலக மையம், 22 நவம்பர் 2021, (BWNS) – உலகம் முழுவதும், நாடுகள் மற்றும் மண்டலங்களிலிருந்து பஹாய் சமூகங்களின் பிரதிநிதிகள் அப்துல்-பஹாவின் விண்ணேற்றத்தை நினைவுகூர்ந்திட பஹாய் உலக மையத்தில் ஒரு வரலாற்று முக்கியத்துவம் மிக்க கூட்டத்திற்காக வந்துள்ளனர். இவ்வார நிகழ்வுகள், நாறு ஆண்டுகளுக்கு முன், அப்துல்-பஹா விண்ணேற்றம் அடைந்ததைக் குறிக்கும் வரும் சனிக்கிழமை அதிகாலை நேரத்தில் ஒரு நினைவேந்தலுடன் முடிவுறும். மானிடத்தின் ஒரு குறுக்களவினரைப் பிரதிநிதிக்கும் இந்த ஒன்றுகூடல், அப்துல்-பஹாவின் பின்வரும் சொற்களைப பிரதிபலிக்கின்றன: “இசையின் பல்வேறு சுரங்கள் ஒன்றுகலந்து ஒரு பூரணமான இசையை உருவாக்குவதைப் போல, மனித குடும்பத்தின் வேறுபாடு அன்புக்கும் இணக்கத்திற்கும் காரணமாக இருக்க வேண்டும்.” news.bahai.org -இல் இடம்பெற்ற படங்களின் தொகுப்பு, உலகெங்கிலும் இருந்து பிரதிநிதிகளின் வருகையிலிருந்து சில தருணங்களையும் கடந்த சில நாட்களாக அவர்களிடையிலான தொடர்புகளையும் காண்பிக்கின்றது. அவர்களின் உள்ளங்களும் எண்ணங்களும் ‘அப்துல்-பஹாவின் மீது இலயித்துள்ள நிலையில், அவர் மறைந்த அதே நிலத்தில் அவரைக் கெளரவிக்க உலகின் ஒவ்வொரு மூலையிலிருந்தும் பிரதிநிதிகள் புனித நிலத்திற்கு வந்துள்ளனர். பாப் பெருமானார் நினைவாலயத்திற்கு அருகில் அமைந்துள்ள யாத்ரீகர் வரவேற்பு மையத்திற்கு பங்கேற்பாளர்கள் வருகின்றனர் பாஹ்ஜியில் உள்ள பஹாவுல்லாவின் நினைவாலய தளத்திற்குப் பங்கேற்பாளர்கள் வருகின்றனர். பாஹ்ஜியில் உள்ள வருகையாளர் மையத்திற்கு வந்தவுடன், பங்கேற்பாளர்களுக்கு வரவிருக்கும் நாள்கள் பற்றிய தகவலை வழங்கும் ஒரு விளக்கமளிப்பில் கலந்துகொள்கின்றனர். அன்பு, ஒற்றுமை மற்றும் பக்தி நிறைந்த ஒரு சூழ்நிலையில், பஹாவுல்லாவின் நினைவாலயத்திற்கான தங்களின் முதல் வருகைக்காகத் பங்கேற்பாளர்கள் தங்களைத் தயார்படுத்திக்கொள்கின்றனர். பஹாய்களுக்கு அதிப்புனிதத் தளமாக விளங்கும் பஹாவுல்லாவின் நினைவாலயத்திற்கு ஒரு பங்கேற்பாளர் குழு செல்கின்றது. பங்கேற்பாளர்கள், புனிதநிலத்திற்கு வந்ததிலிருந்து இப்புனிதத் தலத்திற்கு வருகையளித்து வருகின்றனர் ஹைஃபா யாத்ரீகர் இல்லத்திற்கு வெளியே, பங்கேற்பாளர்கள் பாப் பெருமானார் நினைவாலயத்திற்கான தங்களின் முதல் விஜயத்திற்காக தயாராகின்றனர். அப்துல்-பஹா இக்கட்டிடத்தில்தான் பல யாத்ரீகர்கள் மற்றும் உள்ளூர் சமூக உறுப்பினர்களுடன் பல சந்திப்புகளை மேற்கொண்டார். பாப் பெருமானார் நினைவாலயத்தின் அறைகள் மற்றும் கதவுகளின் இட அமைப்புகளைக் காண்பிக்கும் ஒரு படத்தை (அதன் அண்மை காட்சி வலப்புறம்) இரண்டு பங்கேற்பாளர்கள் பார்வையிடுகின்றனர். பங்கேற்பாளர்கள் பாப் பெருமானார் நினைவாலயத்தை அணுகுகின்றனர். இது அப்துல்-பஹாவின் வழிகாட்டல் மற்றும் மேற்பார்வையின் கீழ் கட்டப்பட்டது. இங்குதான் அப்துல்-பஹாவின் நல்லுடல் அவரது மறைவுக்குப் பிறகு அடக்கம் செய்யப்பட்டது. பாப் பெருமானார் நினைவாலயத்தைச் சூழ்ந்திருக்கும் பூங்காவில் ஒரு பங்கேற்பாளர் குழு பங்கேற்பாளர்கள் பாப் பெருமானார் நினைவாலயத்திற்கு மாலை வேளையில் வருகையளிக்கின்றனர் பங்கேற்பாளர்கள் பாப் பெருமானார் நினைவாலயத்தின் சுற்றுப்புறங்களில் அமைதியான சூழலில், அப்துல்-பஹாவின் வாழ்க்கையின் முக்கியத்துவத்தையும் உலகளாவிய அமைதிக்கான அவரது அழைப்பையும் பிரதிபலிக்கின்றனர். மூலாதாரம்: https://news.bahai.org/story/1553/ ஆசிரியர் prsamyபிரசுரிக்கப்பட்டது 23 நவம்பர், 2021 23 நவம்பர், 2021 பிரிவுகள் பொதுLeave a comment on அப்துல்-பஹா மறைவின் நூறாம் நினைவாண்டு: உலகம் முழுவதிலுமிருந்து பிரதிநிதிகள் வருகை
முனைவரும் கவிஞருமாகிய தமிழச்சி தங்கபாண்டியனை இங்கு உங்களுக்க அறிமுகப்படுத்துவதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். மறைந்த ஈழத்து எழுத்தாளர் எஸ்.பொன்னுத்துரை அவர்களால் 14 வருடங்களுக்கு முன்பாக எனக்கு சிட்னியில் அறிமுகமான பின்பு நெஞ்சுக் அருகில் உறவாகியவர் அவர் மட்டுமல்ல அவரது டிஐஜி கணவர் சந்திரசேகரன் குழந்தைகளும் உறவாகினார்கள். சுமதி என்ற தமிழச்சி தங்கபாண்டியன் தமிழ்நாட்டில் விருதுநகர் மாவட்டத்தில் மல்லாங்கிணறு கிராமத்தில் பிறந்தவர். விருதுநகரில்ஆரம்பக்கல்வியையும் மதுரையில் கல்லூரிப்படிப்பையும் நிறைவுசெய்துகொண்ட சுமதி இளம் வயதிலிருந்தே கலை இலக்கியஆர்வலராகவும் சமூகச்செயற்பாட்டாளராகவும் வளர்ந்தவர். கவிதை விமர்சனம் மொழிபெயர்ப்பு நாடகம் நடனம் ஆய்வு முதலான துறைகளில்ஈடுபாடுகொண்டிருந்தவர். இவரது எஞ்சோட்டுப்பெண் வனப்பேச்சி அருகன் மஞ்சனத்தி பாம்படம் முதலான கவிதைத் தொகுப்புகள் தென் தமிழக கிராமங்களைச் சுற்றி வரும் .சென்னை ராணிமேரி கல்லூரியின் ஆங்கில இலக்கிய விரிவுரையாளராகப் பணியாற்றிய வேளையில் 2005 இல் அவுஸ்திரேலியாவுக்குத் தனது முனைவர் பட்ட ஆய்விற்காக முதல் முதலில் வந்திருக்கும் தமிழச்சி குறிப்பிட்ட ஆய்வினை பூர்த்திசெய்து அதைத் தமிழில் அறிமுகப்படுத்துவதற்கு மீண்டும் அவுஸ்திரேலியாவுக்கு வருகை தந்துள்ளார். அவுஸ்திரேலியாவிலும் வெளிநாடுகளிலும் நன்கு அறியப்பட்ட கலைஞர் ஏர்னஸ்ட் தளையசிங்கம் மர்க்கண்டையரின் நாடகங்களைத்தனது ஆராய்ச்சிப்பொருளாக கொண்டு அதன் தமிழாக்கம் நிழல்வெளி என்னும் பெயரில் எழுதியுள்ளார்) இந்த நூல் தமிழர்களின் அவுஸ்ரேலிய வரவு இலங்கை அரசியல் அரசியல் காலனித்துவ அரசியல் நாடகங்கள் மற்றும் ஏர்னஸ்ட் தளையசிங்கம் மர்க்கண்டையரின் வரலாற்றைப் பேசுகிறது . அத்துடன் எமக்குத் தெரியாத புலம்பெயர்ந்து அவுஸ்திரேலியாவில்வாழும் பல சிங்கள எழுத்தாளர்களைப் பற்றியும் பேசுகிறது.எம்போன்ற ஈழத்தமிழர்களை வரலாற்றுச் சுவடிகளுள் அழுத்தமாகப் பதித்ததால் நாமெல்லாம் சுமதி தங்கபண்டியனுக்கு நன்றிக்கடன்பட்டிருக்கிறோம். அவரது திறமைகள் கவிஞர் எழுத்தாளர் ஆராய்ச்சியாளர் என்பவற்றிற்கு மேலாக ஈழத்தமிழர்களில் மிகவும் அன்புகொண்டவர். சுமதி தங்கபாண்டியன் இந்த நூலை முள்ளிவாய்க்காலில் இறந்த ஈழத்து மக்களுக்குச் சமர்ப்பித்திருக்கிறார். 2009 ஜுலையில் போரின் பின்பு நாங்கள் ஐந்துபேர் – நண்பர்கள் சிவநாதன் கனடா மனோரஞ்சன் மறைந்த டாக்டர் நரேந்திரன் எழுத்தாளர் இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் ஆகியோர் இலங்கை அரசில் முக்கியமானவர்கள் பலரை சந்தித்தோம். அமைச்சர் பசில் இராஜபக்சாவைத் சந்தித்தபோது அவர் நாங்கள் இந்திய பாராளுமன்ற அங்கத்தினரை தாங்கள் அழைத்ததாகச் சொன்னார் . அத்துடன் எங்களுக்குத் தமிழ் அகதிகள் வாழும் முகாம்களை பார்க்க அனுமதி கிடைத்தது. இலங்கையில் உள்ள தமிழ் அரசியல்வாதிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்ட காலம் முகாம்களுக்கு சென்ற நாங்கள் முகாமில் பொறுப்பாக இருந்த இராணுவ அதிகாரிகளிடம் நாம் முள்ளிவாய்காலில் இருந்து இறுதியாக வந்த மக்களைப் பார்க்க வேண்டுமென வற்புறுத்தினோம் அங்கு சென்றபோது ஒரு முகாமில் மக்கள் சுகாதார வசதிகள் மற்றும் இட வசதியற்று தோல் நோய்களுடன் இருந்தார்கள். குழந்தைகள் பெண்கள் போசாக்கற்று நலிந்திருந்தார்கள். இதை இலங்கை அரசிடம் சொல்லி உடனடியாக மாற்றம் கொண்டு வரமுடியாது என நினைத்து நானும் எழுத்தாளர் இராஜேஸ்வரியும்சென்னை சென்றோம் .அங்கு எங்களுக்கு உடனடியாக – நாடளுமன்ற உறுப்பினராக இருந்த கனிமொழியை சந்திக்கச் சுமதி தங்க பாண்டியனே உதவி செய்தார். அந்தச் சந்திப்பின்போது கனிமொழி “எனக்கு மட்டுமே அழைப்பிருக்கிறது. நான் எப்படி தனியே போக முடியும் “ என்றார். அதையறிந்துகொண்டதும் உடனே பசில் இராஜபக்சாவிற்கும் ஜனாதிபதியின் செயலாளருக்கும் இந்திய நாடாளுமன்ற பிரதிநிதிகளுக்கும்அழைப்பு அனுப்ப வேண்டுமென கேட்டுக் கொண்டோம் . இந்திய நாடாளுமன்ற குழு வந்தது எல்லோரும் அறிந்த வரலாறு. அக்காலங்களில் அகதி முகாம்களின் சுகாதார இட வசதியை சீரமைக்கவேண்டிய கட்டாயம் இலங்கை அரசிற்கு ஏற்பட்டது . சுமதி தங்கபாண்டியன் எமக்கு கனிமொழியை சந்திக்க உதவியது அந்தக்காலத்தில் போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் பேருதவியாகஇருந்தது. அதற்கான நன்றியை இன்று உங்கள் மத்தியில் சொல்லிக்கொண்டு இந்த இந்த அறிமுக உரையை முடிக்கிறேன். பிற்குறிப்பு – ஒரு இலட்சத்திற்கு மேல் ஈழத்து அகதிகளாக இருப்பவர்களுக்கு இந்தியாவில் வாக்குரிமை இல்லைத்தான் . ஆனாலும் எங்கள் ஒவ்வொருவருக்கும் தென்சென்னையில் தமிழர்களைத் தெரிந்திருக்கும் என்பதால் வரவேற்புரை இங்கு பதிவாகிறது.
குடும்ப கவலைகளை முறியடிப்பது எப்படி? | Kudumba kavalaikalai Muriyadipathu Epadi வித விதமான சாதம் குழம்பு பொரியல் வகைகள் | Vitha Vithamana Satham Kulambu Poriyal Vagaigal பிரேக்கிங் நியூஸ் தாறுமாறாக உயர்ந்த பூக்களின் விலை தாறுமாறாக உயர்ந்த பூக்களின் விலை flowers Market kalaimohan Fri, 02/12/2022 - 10:00 கார்த்திகை தீ [...] முள் புதரில் இருந்து மீட்கப்பட்ட இளைஞரின் தலை; இருவர் கைது முள் புதரில் இருந்து மீட்கப்பட்ட இளைஞரின் தலை; இருவர் கைது sivakangai incident police kalaimohan Fri [...] தமிழகத்தில் நாளை கனமழை - இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தமிழகத்தில் நாளை கனமழை - இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் rain weather kalaimohan Fri, 02/12/2022 - 0 [...] "அவரே மூன்றாவது முறை தமிழகம் வர திட்டம் போட்டுக் கொண்டிருக்கிறார்; இப்ப போய் பாதுகாப்பு சரியில்லையாம்" - டி.கே.எஸ்.இளங்கோவன் பேட்டி "அவரே மூன்றாவது முறை தமிழகம் வர திட்டம் போட்டுக் கொண்டிருக்கிறார்; இப்ப போய் பாதுகாப்பு சரியில் [...] சர்வதேச பலூன் திருவிழா - தமிழக அரசு அறிவிப்பு சர்வதேச பலூன் திருவிழா - தமிழக அரசு அறிவிப்பு pollachi Festival Tamilnadu Tourism kalaimohan Fri, 02 [...]
ஸஊதி அரேபிய ரியாத் மாநகரில் அமைந்துள்ள ரபுவா தஃவா நிலையம் முஸ்லிம், முஸ்லிம் அல்லாதோருக்கான பல மார்க்க, அழைப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றது. இதன் பிரதான பொறுப்பாளராக ஹாலித் அபல் கைல் என்பவரும், ஜாலியாத் பகுதிக்கு பொறுப்பாளராக நாஸிர் அல்குவைஷ் என்பவரும் நீண்ட காலமாக கடமையாற்றி வருகின்றனர். இத் தஃவா நிலையம் வாரா வாரம் தொடராக பல நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கும் அவர்களது தாய்மொழிகளில் மார்க்க விளக்க வகுப்புகளையும், வருடா வருடம் உம்ரா,ஹஜ் போன்ற வணக்கங்களையும், மக்கா,மதினா போன்ற புனித இடங்களுக்கு சுற்றுலா பிரயாணங்களையும் மேற்கொண்டு வருகின்றது. அதே போன்று தனியான மொழிபெயர்ப்பு, நூலுருப்படுத்தல் பகுதியையும், இவர்களால் இயக்கப்படும் இஸ்லாம் ஹவ்ஸ் என்ற இணையத்தளம் 100 இற்கும் அதிகமான மொழிகளில் தரப்படுத்தப்பட்டு இயங்கிவருகின்றது. இதனுடைய கிளைக்காரியாலயம் இலங்கையிலும் திறக்கப்பட்டு தஃவா நடவடிக்கைகளை விஸ்தரிப்பு செய்துள்ளது. ரியாத் நகரிலும் பல இடங்களில் அவர்களுடைய கிளைக்காரியாலயங்கள் அமைக்கப்பட்டுள்ளதோடு அதனூடாக இஸ்லாமிய கொள்கைகள் பரப்பப்படுகின்றன. இந் நிலையத்தோடு இணைந்து எமது மாணவர்களும் தஃவா பணியை முன்னெடுத்து வருகின்றனர். வாரா வாரம் தொடரான வகுப்புகளை வெற்றிகரமாக நடாத்திவருகின்றனர். April 27, 2017 Newer Post Older Post கருத்துரையிடுக... வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் : 1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். 2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
நேற்று தனிமையை நாடி ஒரிடத்தில் அமரந்திருந்தேன். அப்போது தம்பி என்று ஒரு குரல். திரும்பிப் பார்க்க ஒரு முதியவர். ஐயா என்ன வேண்டும் என்றேன். ஒன்றுமில்லை, நீங்கள் தானே குறள் குறிப்புகளை எழுதுவது என்றார். எனக்கு ஆச்சரியம். ஆம் ஐயா என்றேன். பரவாயில்லை, படிக்கலாம் என்றார். எனக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவியல்லை. அவரே தொடர்ந்தார். வறுமையைக் குறித்தும் அவர்களுக்குத் தேவையான தன்முனைப்பு குறித்தும் எழுதி இருந்தீர்கள். சிந்திக்க வேண்டியதுதான், செயல் படுத்தவும் வேண்டும். சந்தேகமில்லை. எல்லாம் செய்தும் வறுமை போகாத சிலர் இருப்பார்களா? என்றார். அதிலென்ன சந்தேகம் ஐயா. ஒருவருக்கு மூன்று வகையிலே துன்பங்கள் வரலாம். தன்னால், பிறரால், எந்த ஒரு காரணமும் இல்லாமலும் வரலாம் என்றேன். மிகச்சரி. இன்பத்திற்கும் அதே என்று ஏற்றுக் கொள்வீர்களா? என்றார். ம்ம்ம். அதுவும் சரிதான் என்றேன். சிலருக்கு (luck) அபரிமிதமான வாய்ப்புகள் வரத்தானே செய்கிறது. எனக்குத் தெரிந்துவிட்து. இந்தப் பெரியவர் சாதாரணமானவர் இல்லை என்று. என் வாயை கொஞ்சம் மூட வேண்டும் என்று நினைத்துக் கொண்டு சொல்லுங்கள் ஐயா என்றேன். அவரே தொடர்ந்தார். தம்பி, என்ன ஒருவர் செய்தாலும், சில சமயம் அவர்களின் வறுமை போகாது. அவர்கள் ‘போகூழி’ல் சிக்கியிருப்பார்கள். அவர்கள் யாசித்துத்தான் உண்ணவேண்டும் என்ற நிலையில் உழலுவார்கள். அதற்காக அவர்கள் மனம் வருந்திக் கொண்டு இருக்கும். கவனித்திருக்கலாம். யாசகம் கேட்போர்கள் பல வகை. அதில் சிலர் தன்பாட்டில் அமர்ந்திருப்பார்கள். குறிப்பிட்ட சிலரிடம் தான் கையை நீட்டுவார்கள். எல்லோரிடத்திலும் உதவி கேட்கமாட்டார்கள். மற்றபடி கொடுத்தாலும், கொடுக்காவிட்டாலும் மிகவும் அமைதியாகவே இருப்பார்கள். இரவு என்றால் யாசித்தல் என்று பொருள். அதுவும் இரு வகைப் படும். ஒன்று, மானம் போகா இரவு, மற்றொன்று, மானம் போகும் இரவு. இதில், மானம் போகா இரவு என்பது இரவு அல்ல. அது இரவாமையையேச் சாரும். கடவுளிடம் சிலர் வேண்டுகோள் வைப்பார்கள். நான் எல்லாம் செய்துவிட்டேன், இனி நீ செய்ய வேண்டியதைச் செய்யவில்லை என்றால் அது என் குற்றம் அல்ல. அது உன் குற்றம் என்று கடவுளைக் குற்றம்சாட்டி பேசுவார்கள். இருக்கு இல்லையா என்றார்.
கழுத தேஞ்சு கட்டெறும்பான கதையாக வர வர விஜய் ஆண்டனி நடிக்கும் படங்கள் எதுவுமே ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெறுவதில்லை. அனைத்தும் ரசிகர்களை தியேட்டரில் தூங்கவைக்கும் படமாகவே நடித்து வருகிறார். ஒரு காலத்தில் இசையமைப்பாளராக நாக்க முக்க நாக்க முக்க என தமிழக ரசிகர்களையே ஒரு முக்கு முக்கி ஆட்டம் போட வைத்தவர் தான் விஜய் ஆண்டனி. பேசாமல் இசையமைப்பாளர் ஆகவே இருந்திருக்கலாம். தொடர்ந்து வேட்டைக்காரன், வேலாயுதம் போன்ற பெரிய நடிகர் விஜய்யின் படங்களுக்கு இசையமைத்து பிரபலமான இசையமைப்பாளராக வலம் வந்தார். அந்த சமயத்தில் தொடர்ந்து இசையமைப்பாளர்கள் ஹீரோவாக அறிமுகமாக விஜய் ஆண்டனிக்கு அந்த ஆசை வந்ததில் தப்பில்லையே. இருந்தாலும் மற்றவர்களை போல ஏனோதானோ என்று படம் நடிக்காமல் ஆரம்பத்திலேயே அக்கறையாக சினிமா நல்ல கதையை தேர்ந்தெடுத்து நான் எனும் படத்தில் நடித்தார். ஆரம்பமே அட்டகாசமாக தொடங்கிய விஜய் ஆண்டனியின் தொடர்ந்து சலீம், சைத்தான், பிச்சைக்காரன், இந்தியா பாகிஸ்தான் போன்ற தரமான படங்களை கொடுத்தார். அதிலும் பிச்சைக்காரன் படம் மொழி கடந்து தெலுங்கில் சுமார் 50 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்தது. அதன் பிறகு விஜய் ஆண்டனிக்கு தெலுங்கிலும் நல்ல மார்க்கெட் ஏற்பட்டது. பிறகு யார் பேச்சைக் கேட்டு மாஸ் எனும் குப்பையில் விழுந்தாரோ தெரியவில்லை. எமன், அண்ணாதுரை, காளி போன்ற படங்களின் மூலம் தனது மார்க்கெட்டை இழந்து தடுமாறி வருகிறார். அதுமட்டுமில்லாமல் அவர் தேர்வு செய்யும் கதைகளும் அநியாயத்துக்கு அதர பழசாக உள்ளது. எப்படியோ தட்டுத்தடுமாறி கொலைகாரன் எனும் படத்தின் மூலம் மீண்டும் ஹிட் கொடுத்து விட்டார். இனி அடுத்தடுத்த படங்களில் கவனமாக நடக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து அவரது நடிப்பில் தமிழரசன், அக்னி சிறகுகள் போன்ற படங்கள் வெளிவர உள்ளன. விஜய் ஆண்டனியிடம் ரசிகர்கள் எதிர்பார்த்தது எப்போதுமே வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பார் என்பதுதான். இதைப் புரிந்துகொள்ளாமல் மாஸ் என்கிற குப்பையில் விழுந்து தடுமாறிக் கொண்டிருக்கும் விஜய் ஆண்டனிக்கு இனிவரும் படங்களாவது வெற்றி பெற வேண்டும். அண்மைய செய்திகள் அதர்வாவுக்கு ஜோடியான சசிக்குமார் பட நடிகை நடிகை சமீரா ரெட்டிக்கு கொரோனா வைரஸ் தொற்று தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகர் விவேக் காலமானார் நடிகர் பிரஷாந்த்திற்கு கேக் ஊட்டிவிட்ட பிரபல நடிகை … தமிழக சட்டமன்ற தேர்தலில் வாக்களிக்க சைக்கிளில் வந்த நடிகர் விஜய் இந்திய சினிமா துறையில் மிக உயரிய விருதாக கருதப்படும் தாதா சாகேப் பால்கே விருது நடிகர் ரஜினிகாந்துக்கு !
حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ، حَدَّثَنَا رَوْحٌ، أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ، أَخْبَرَنِي زِيَادٌ، أَنَّ ابْنَ شِهَابٍ، أَخْبَرَهُ أَنَّ أَنَسَ بْنَ مَالِكٍ أَخْبَرَهُ :‏ أَنَّهُ رَأَى فِي يَدِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم خَاتَمًا مِنْ وَرِقٍ يَوْمًا وَاحِدًا ثُمَّ إِنَّ النَّاسَ اضْطَرَبُوا الْخَوَاتِمَ مِنْ وَرِقٍ فَلَبِسُوهَا فَطَرَحَ النَّبِيُّ صلى الله عليه وسلم خَاتَمَهُ فَطَرَحَ النَّاسُ خَوَاتِمَهُمْ ‏ حَدَّثَنَا عُقْبَةُ بْنُ مُكْرَمٍ الْعَمِّيُّ، حَدَّثَنَا أَبُو عَاصِمٍ، عَنِ ابْنِ جُرَيْجٍ، بِهَذَا الإِسْنَادِ مِثْلَهُ ‏ ஒரு நாள் நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் கையில் வெள்ளி மோதிரத்தைக் கண்டேன். பிறகு மக்களும் வெள்ளி மோதிரங்களை வார்த்து, அவற்றை அணிந்துகொண்டனர். ஆகவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (முன்பு அணிந்திருந்த) தமது (தங்க) மோதிரத்தை எறிந்துவிட்டார்கள். எனவே, மக்களும் தம் (தங்க) மோதிரங்களை எறிந்துவிட்டனர். அறிவிப்பாளர் : அனஸ் (ரலி) அத்தியாயம்: 37, பாடம்: 14, ஹதீஸ் எண்: 3898 حَدَّثَنِي أَبُو عِمْرَانَ مُحَمَّدُ بْنُ جَعْفَرِ بْنِ زِيَادٍ أَخْبَرَنَا إِبْرَاهِيمُ، – يَعْنِي ابْنَ سَعْدٍ – عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ :‏ أَنَّهُ أَبْصَرَ فِي يَدِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم خَاتَمًا مِنْ وَرِقٍ يَوْمًا وَاحِدًا – قَالَ – فَصَنَعَ النَّاسُ الْخَوَاتِمَ مِنْ وَرِقٍ فَلَبِسُوهُ فَطَرَحَ النَّبِيُّ صلى الله عليه وسلم خَاتَمَهُ فَطَرَحَ النَّاسُ خَوَاتِمَهُمْ ‏ ஒரு நாள் நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது கையில் வெள்ளி மோதிரம் ஒன்றைக் கண்டேன். (அதைக் கண்ட) மக்களும் வெள்ளி மோதிரங்களைச் செய்து அணிந்துகொண்டனர். ஆகவே, நபி (ஸல்) (முன்பு அணிந்திருந்த) தமது (பொன்) மோதிரத்தை (கழற்றி) எறிந்துவிடவே, மக்களும் தம் (பொன்) மோதிரங்களை (கழற்றி) எறிந்துவிட்டனர். அறிவிப்பாளர் : அனஸ் (ரலி) மேலும் காண்பி... ↓ விரும்பும் பாடம் செல்ல… ↓ விரும்பும் பாடம் செல்ல… Select Category 43.37 நபி (ஸல்) அவர்களைக் கண்ணியப்படுத்துவதும் … (8) 43.36 நபி (ஸல்) அவர்களைப் பின்பற்ற வேண்டியது (முஸ்லிம்களின்) கட்டாயக் கடமையாகும் (1) 43.35 நபி (ஸல்) அவர்களின் அல்லாஹ்வைப் பற்றிய அறிவும் அவனைப் பற்றிய கடுமையான அச்சமும் (2) 43.34 நபி (ஸல்) அவர்களின் பெயர்கள் (3) 43.33 நபி (ஸல்) மக்காவிலும் மதீனாவிலும் எத்தனை ஆண்டுகள் வாழ்ந்தார்கள்? (8) 43.32 நபி (ஸல்) இறந்தபோது அவர்களுக்கு வயது எத்தனை? (2) 43.31 நபி (ஸல்) அவர்களின் உடலமைப்பு; நபியாக அனுப்பப்பெற்றது; அவர்களின் வயது (1) 43.30 நபி (ஸல்) உடலில் நபித்துவ முத்திரை … (3) 43.29 நபி (ஸல்) அவர்களின் தலைநரைமுடி (10) 43.28 நபி (ஸல்) அவர்களின் வெண்ணிறமும் களையான முகமும் (2) 43.27 நபி (ஸல்) அவர்களின் வாய், கண்கள், குதிகால்கள் ஆகியவை (1) 43.26 நபி (ஸல்) அவர்களது தலைமுடியின் தன்மை (3) 43.25 நபி (ஸல்) அவர்களின் உருவத் தோற்றம் … (3) 43.24 நபி (ஸல்) தமது தலைமுடியை … (1) 43.23 நபி (ஸல்) அவர்களுக்கு வேத அறிவிப்பு வரும்போது … (4) 43.22 நபி (ஸல்) அவர்களது வியர்வையின் நறுமணமும் அதன்மூலம் வளம் ஏற்பட்டதும் (3) 43.21 நபி (ஸல்) அவர்களின் மேனியில் கமழ்ந்த நறுமணம் … (3) 43.20 நபி (ஸல்) பாவங்களை விட்டு வெகு தொலைவில் விலகியிருந்தது … (3) 43.19 நபி (ஸல்), மக்களுடன் நெருங்கிப் பழகியதும் அவர்களிடமிருந்து மக்கள் வளம் பெற்றதும் (3) 43.18 மனைவியர்மீது நபி (ஸல்) காட்டிய அன்பும் … (4) 43.17 நபி (ஸல்) அவர்களின் புன்னகையும் அழகிய உறவாடலும் (1) 43.16 நபி (ஸல்) அவர்களின் நாண மிகுதி (2) 43.15 நபி (ஸல்) குழந்தைகள் மீதும் குடும்பத்தார் மீதும் காட்டிய அன்பு … (5) 43.14 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வேண்டப்பட்ட எந்த ஒன்றுக்கும் அவர்கள் “இல்லை” என்று சொன்னதேயில்லை … (5) 43.13 அல்லாஹ்வின் தூதர் (ஸல்), மக்களிலேயே மிகவும் அழகான … (5) 43.12 மக்களிலேயே நபி (ஸல்), தொடர்ந்து வீசும் (மழைக்) காற்றைவிட … (1) 43.11 நபி (ஸல்) அவர்களின் வீரமும் அறப்போருக்காக அவர்கள் முன்னே சென்றதும் (2) 43.10 உஹுதுப் போர் நாளில் நபி (ஸல்) … (2) 43.9 நம் நபி (ஸல்) அவர்களுக்கு (மறுமையில் ‘அல்கவ்ஸர்’) தடாகம் உண்டு … (20) 43.8 உயர்ந்தோன் அல்லாஹ் ஒரு சமுதாயத்தின்மீது அருள் புரிய நாடினால் … (1) 43.7 நபி (ஸல்), இறுதி இறைத் தூதர் என்பது பற்றிய குறிப்பு (4) 43.6 நபி (ஸல்), தம் சமுதாயத்தார் மீது கொண்டிருந்த பரிவும் … (4) 43.5 நபி (ஸல்), நேர்வழியுடனும் ஞானத்துடனும் அனுப்பப் பெற்றதற்கான உவமை (1) 43.4 அல்லாஹ்வையே முழுமையாக நபி (ஸல்) சார்ந்திருந்ததும் … (1) 43.3 நபி (ஸல்) அவர்களின் அற்புதங்கள் (7) 43.2 எல்லாப் படைப்புகளையும்விட நம் நபி (ஸல்) அவர்களின் சிறப்பு (1) 43.1 நபி (ஸல்) அவர்களின் தலைமுறையின் சிறப்பும் … (2) 42.4 நபி (ஸல்) கண்ட கனவு (6) 42.3 கனவுக்கு விளக்கமளித்தல் (1) 42.2 ஷைத்தான் கனவில் விளையாடியது குறித்து … (3) 42.1 கனவில் என்னைக் கண்டவர் … (4) 42.01 கனவுகள் (11) 41.2 பகடை விளையாட்டு, தடை செய்யப்பட்டதாகும் (1) 41.1 கவிதைகள் (9) 40.5 நறுமணப் பொருட்களில் மிகவும் சிறந்த கஸ்தூரியைப் பயன்படுத்துவது … (4) 40.4 ஒருவர், ‘கபுஸத் நஃப்ஸீ’ (என் மனம் அசுத்தமாகிவிட்டது) எனும் சொல்லை … (2) 40.3 ‘அப்து’ (அடிமை ஆண்), ‘அமத்து’ (அடிமைப் பெண்), ‘மவ்லா’/’ஸய்யித்’ (அடிமையின் உரிமையாளர்) ஆகிய சொற்களின் சட்டம் (3) 40.2 திராட்சையை, “கர்மு / கண்ணியம்” என்று பெயரிட்டழைப்பது … (7) 40.1 காலத்தை ஏசுவதற்குத் தடை (5) 39.41 விலங்குகளுக்கு நீர் புகட்டுவதின், உணவளிப்பதின் சிறப்பு (3) 39.40 பூனைகளைக் கொல்வதற்குத் தடை (2) 39.39 எறும்புகளைக் கொல்லத் தடை (3) 39.38 பல்லியைக் கொல்வது நல்லது (5) 39.37 பாம்பு போன்ற விஷ ஜந்துகளைக் கொல்வது (13) 39.36 தொழுநோயாளிகள் போன்றோரிடம் நெருக்கம் தவிர்ப்பது (1) 39.35 சோதிடர்களிடம் செல்வதும் சோதிடம் பார்ப்பதும் (5) 39.34 பறவை சகுனம், நற்குறி, துர்குறி பற்றிய பாடம் (11) 39.33 இல்லாத சகுனங்களும் தொற்றுநோய்களும் (6) 39.32 கொள்ளைநோய், பறவை சகுனம், சோதிடம் போன்றவை (8) 39.31 தேனூட்டு மருத்துவம் (1) 39.30 ‘தல்பீனா‘, நோயாளியின் மனத்துக்கு(ம் உடலுக்கும்) தெம்பு அளிக்கக்கூடியதாகும் (1) 39.29 கருஞ்சீரக மருத்துவம் (2) 39.28 இந்தியக் கோஷ்டக் குச்சியால் சிகிச்சையளிப்பது (2) 39.27 நோயாளிக்கு வற்புறுத்தி சிகிச்சையளிப்பது … (1) 39.26 ஒவ்வொரு நோய்க்கும் மருந்து உண்டு; (நோய்க்கு) மருத்துவம் செய்துகொள்வது விரும்பத் தக்கது (17) 39.25 தொழுகையில் மனம் அலைபாயச் செய்யும் ஷைத்தானிடமிருந்து பாதுகாப்புக் கோரல் (1) 39.24 பிரார்த்திக்கும்போது வலியுள்ள இடத்தில் கையை வைப்பது (1) 39.23 குர்ஆன் வசனங்கள் மற்றும் அல்லாஹ்வைத் துதிக்கும் சொற்களால் ஓதிப்பார்ப்பதற்கு ஊதியம் பெறலாம் (2) 39.22 இறைவனுக்கு இணை கற்பிதம் இல்லாத சொற்களால் ஓதிப்பார்பது தவறில்லை (1) 39.21 கண்ணேறு, சின்னம்மை, விஷக்கடி, (தீய)பார்வை ஆகியவற்றுக்காக ஓதிப்பார்ப்பது விரும்பத் தக்கதாகும் (12) 39.20 பாதுகாப்புக் கோரும் அத்தியாயங்களால் நோயாளிக்கு ஓதிப்பார்ப்பது … (2) 39.19 நோயாளிக்கு ஓதிப்பார்ப்பது விரும்பத் தக்கதாகும் (4) 39.18 விஷம் (1) 39.17 சூனியம் (1) 39.16 நோயும் மருத்துவமும் ஓதிப்பார்த்தலும் (4) 39.15 மூன்றாமவரின் ஒப்புதலின்றி இருவர் மட்டும் இரகசியம் பேசிக்கொள்வது தடை செய்யப்பட்டதாகும் (3) 39.14 … அந்நியப் பெண்ணை, வழிசெல்லும் ஒருவர் வாகனத்தில் அமர்த்திக்கொள்ளலாம் (2) 39.13 பெண்கள் இருக்கும் இடத்திற்கு அலிகள் செல்லத் தடை (2) 39.12 அமர்ந்திருந்த இடத்திற்கு உரியவர் (1) 39.11 அமர்ந்திருக்கும் ஒருவரை எழுப்பிவிடுவது தடை செய்யப்பட்டதாகும் (4) 39.10 அவைக்கு வருபவர், அமரும் ஒழுங்கு (1) 39.9 … கெட்ட எண்ணத்தை அகற்றுவது விரும்பத் தக்கதாகும் (2) 39.8 அந்நியப் பெண்ணிடம் … தனிமையில் இருப்பது தடை செய்யப்பட்டதாகும் (3) 39.7 … பெண்கள் வெளியே செல்லலாம் (2) 39.6 உள்ளே செல்ல அனுமதியாகக் கருதுவதற்கு … (1) 39.5 சிறாருக்கு(ப் பெரியவர்கள்) முகமன் கூறுவது விரும்பத் தக்கதாகும் (2) 39.4 வேதக்காரர்களுக்கு முந்திக்கொண்டு ஸலாம் கூறுவதற்குத் தடை (7) 39.3 ஸலாத்துக்குப் பதிலுரைப்பது முஸ்லிமுக்குக் கடமை (2) 39.2 நடைபாதைகளில் அமர்வதன் ஒழுங்குகளில் … (2) 39.1 முந்தி ஸலாம் சொல்ல வேண்டியவர்கள் (1) 38.10 இயல்பான பார்வை (1) 38.9 பிறர் வீட்டில் எட்டிப் பார்ப்பது தடை செய்யப்பட்டதாகும் (5) 38.8 “யார்?“ என்று கேட்டால் … (2) 38.7 அனுமதி கோருதல் (5) 38.6 “என் அருமை மகனே!“ (2) 38.5 குழந்தை பிறந்தவுடன் இனிப்பான பொருளை மென்று அதன் வாயிலிடுவதும் … (9) 38.4 மன்னாதி மன்னன் எனப் பெயர் சூட்டிக்கொள்வது தடை செய்யப்பட்டதாகும் (2) 38.3 அருவருப்பான பெயரை அழகான பெயராக மாற்றியமைப்பது … (6) 38.2 அருவருப்பான பெயர்கள் … (4) 38.1 … விரும்பத் தகுந்த பெயர்கள் (8) 37.35 வெறும் பெருமை (2) 37.34 மெல்லிய உடையணிந்து, பிறரைத் தன்பால் ஈர்க்கும் வண்ணம் தோள்களைச் சாய்த்து ஒயிலாக நடக்கும் பெண்கள் (1) 37.33 பெண்களின் பொய் அலங்காரங்காரங்களுக்குத் தடை (10) 37.32 நடைபாதைகளில் அமர்வதற்குத் தடையும் பாதைகளுக்குரிய உரிமைகளைப் பேணுவதும் (1) 37.31 தலை முடியில் பகுதி மழித்துவிட்டு, பகுதி மழிக்காமல் விட்டுவிடுவது வெறுக்கத் தக்கதாகும் (1) 37.30 ஸகாத் / ஜிஸ்யாவுக்கான கால்நடைகளில் சூடிட்டு அடை யாளமிடலாம் (4) 37.29 விலங்குகளின் முகத்தில் அடிப்பதும் அடையாளச் சூடிடுவதும் தடை செய்யப்பட்டவை ஆகும் (3) 37.28 ஒட்டகத்தின் கழுத்தில் (திருஷ்டிக்) கயிற்று மாலை அணிவிப்பது வெறுக்கத் தக்கதாகும் (1) 37.27 பயணத்தின்போது நாயும் (ஒலியெழுப்பும்) மணியும் வெறுக்கத் தக்கவை (2) 37.26 உயிரினங்களின் உருவப் படங்களை வரைவதும் … தடை செய்யப்பட்டவை ஆகும் (21) 37.25 (நரைமுடிக்கு) சாயமிட்டுக்கொள்வது யூதர்களுக்கு மாறு செய்வதாகும் (1) 37.24 நரைமுடியில் கருப்பு நிறச் சாயமிடுவது தடை செய்யப்பட்டதாகும் (2) 37.23 ஆண்கள் (மேனியில்) குங்குமப்பூச் சாயமிட்டுக்கொள்வதற்குத் தடை (1) 37.22 மல்லாந்து படுத்துக்கொண்டு கால்மீது காலைப் போட்டுக் கொள்வதற்கு அனுமதி (1) 37.21 மல்லாந்து படுத்துக்கொண்டு கால்மீது காலைப் போட்டுக் கொள்வதற்குத் தடை (3) 37.20 தடை செய்யப்பட்ட இரு நிலைகள் (2) 37.19 காலணிகளை அணிந்து கழற்றும் முறைகள் (3) 37.18 காலணி அல்லது அது போன்றதை அணிந்துகொள்வது விரும்பத் தக்கதாகும் (1) 37.17 மோதிரம் அணிவதற்குத் தடை செய்யப்பட்ட விரல்கள் (2) 37.16 கைச் சுண்டுவிரலில் மோதிரம் அணிவது (1) 37.15 அபிசீனியக் வெள்ளிக் குமிழ் மோதிரம் (2) 37.14 மோதிரங்களை(க் கழற்றி) எறிந்த நிகழ்வு (2) 37.13 நபி (ஸல்) அவர்களின் (முத்திரை) மோதிரம் (3) 37.12 ‘முஹம்மதுர் ரசூலுல்லாஹ்’ எனும் இலச்சினை பொறிக்கப்பட்ட வெள்ளி மோதிரம் (2) 37.11 ஆண்கள் தங்க மோதிரம் அணிவதற்குத் தடை (3) 37.10 ஆடைகளை எண்ணிப் பெருமை கொண்டு, கர்வத்தோடு நடப்பதற்குத் தடை (2) 37.9 பெருமைக்காக ஆடையைத் தரையில் படும்படி இழுத்துச் செல்வதற்குத் தடை (7) 37.8 தேவைக்கு அதிகமான விரிப்புகளும் ஆடைகளும் இருப்பது விரும்பத் தக்கதன்று (1) 37.7 படுக்கை விரிப்புகளைப் பயன்படுத்த அனுமதி (2) 37.6 ஆடையில் (எளிமை,) பணிவு காட்டுவது … (5) 37.5 பருத்தி ஆடை அணிவதன் சிறப்பு (2) 37.4 ஆண்கள் செம்மஞ்சள் நிறச் சாயமிடப்பட்ட ஆடை அணிவதற்குத் தடை (5) 37.3 தோல் உபாதைகள் இருந்தால் ஆண்கள் பட்டாடை அணியலாம் (3) 37.2 பொன் மோதிரம் மற்றும் பட்டாடை அணிவது ஆண்களுக்குத் தடை; பெண்களுக்கு அனுமதி (20) 37.1 பொன் / வெள்ளிப் பாத்திரங்களைப் பயன்படுத்துவது ஆண்களுக்கும் பெண்களுக்கும் தடை (2) 36.35 உணவைக் குறை சொல்லவேண்டாம் (2) 36.34 இறைநம்பிக்கையாளர் ஒரே குடலில் உண்பார்; இறைமறுப்பாளன் ஏழு குடல்களில் உண்பான் (5) 36.33 உணவு குறைவாக இருக்கும்போது … (4) 36.32 விருந்தினரை உபசரிப்பதும் முன்னுரிமை வழங்குவதன் சிறப்பும் (6) 36.31 வெள்ளைப் பூண்டு சாப்பிடக்கூடியதே … (2) 36.30 உணவுக் காடியின் சிறப்பும் … (4) 36.29 ‘அல்கபாஸ்’ பழங்களில் கருப்பு நிறப் பழத்தின் சிறப்பு (1) 36.28 உணவுக் காளானின் சிறப்பும் … (6) 36.27 மதீனத்துப் பேரீச்சம் பழங்களின் சிறப்பு (3) 36.26 குடும்பத்தாருக்காக … உணவுகளைச் சேமித்துவைத்தல் (2) 36.25 பலருடன் சேர்ந்து உண்பவர் … (2) 36.24 உணவு உண்பவர் அமரும் முறை; பணிவோடு அமர்வது விரும்பத் தக்கது (2) 36.23 பேரீச்சை செங்காய்களுடன் வெள்ளரிக்காயையும் சேர்த்து உண்பது (1) 36.22 விருந்தளிப்பவருக்காக விருந்தாளி பிரார்த்திப்பது … (1) 36.21 சுரைக் குழம்பு உண்ண அனுமதி … (2) 36.20 வீட்டு உரிமையாளரின் சம்மதம் கிடைக்கும் என்ற நம்பிக்கை இருந்தால் … (4) 36.19 விருந்துக்கு அழைக்கப்பட்டவரைத் தொடர்ந்து அழைக்கப்படாதவரும் வந்துவிட்டால் … (2) 36.18 உண்டு முடித்ததும் விரல்களைச் சூப்புவதும் உணவுத் தட்டை வழித்து உண்பதும் … (9) 36.17 வலப் பக்கத்திலிருந்து பரிமாறுதல் விரும்பத் தக்கதாகும் (4) 36.16 பாத்திரத்தினுள் (பருகும்போது) வெளியே மூன்று முறை மூச்சு விட்டுப் பருகுவது விரும்பத் தக்கதாகும் (3) 36.15 ஸம்ஸம் நீரை நின்றுகொண்டு அருந்துவது (4) 36.14 நின்றுகொண்டு அருந்துவது வெறுக்கத் தக்கதாகும் (4) 36.13 உண்பது, அருந்துவது ஆகியவற்றின் ஒழுங்குகளும் விதிமுறைகளும் (10) 36.12 இரவு நேர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் (6) 36.11 பழச்சாறுகளைப் பருகுவதும் பாத்திரங்களை மூடிவைப்பதும் (3) 36.10 (ஆட்டுப்) பால் அருந்த அனுமதி (3) 36.9 பழச்சாறுகள் (புளித்துக்) கெட்டியாகி, போதையேறாதவரை அனுமதிக்கப்பட்டவையாகும் (10) 36.8 குடிகாரன் பாவமன்னிப்புக் கோரி திருந்தாவிட்டால் … (3) 36.7 போதை தரும் ஒவ்வொரு பானமும் தடை செய்யப்பட்ட மதுவாகும் (9) 36.6 பானங்கள்-பாத்திரங்கள், தடை-தடை நீக்கம் (36) 36.5 பேரீச்சம் பழம், உலர் திராட்சைக் கலவை ஊறல் வெறுக்கத் தக்கதாகும் (14) 36.4 ‘மதுபானம்’ என்று சொல்லப்படுபவை (4) 36.3 மதுவை மருந்தாகப் பயன்படுத்துவதற்குத் தடை (1) 36.2 மதுபானத்தை (சமையல்) காடியாக மாற்றிப் பயன்படுத்துவதற்குத் தடை (1) 36.1 போதையூட்டும் ஒவ்வொன்றும் மதுவாகும் (9) 35.8 அல்லாஹ் அல்லாதவரின் பெயர் கூறிப் பிராணிகளை அறுப்பதற்குத் தடை (3) 35.7 தலைமுடியை, நகங்களைக் களைவதற்குத் தடை (5) 35.6 அல் ஃபரஉ வல் அத்தீரா (1) 35.5 பலி இறைச்சியை எவ்வளவு காலம் சேமித்து வைக்கலாம்? (14) 35.4 பல், நகம், எலும்பு ஆகியவை தவிர எந்தப் பொருளாலும் பிராணியை அறுக்க அனுமதி (1) 35.3 தாமே அறுப்பதும் அல்லாஹ்வின் பெயரோடு தக்பீர் கூறுவதும் விரும்பத் தக்கவை ஆகும் (3) 35.2 பலிப் பிராணியின் வயது (4) 35.1 பலி கொடுக்கப்படும் நேரம் (10) 34.12 விலங்குகளைக் கட்டிவைத்து அம்பெய்து கொல்வதற்குத் தடை (5) 34.11 … கத்தியைக் கூர்மையாகத் தீட்டிக் கொண்டு வதையற்ற முறையைக் கையாளக் கட்டளை (1) 34.10 … பயிற்சிகளை மேற்கொள்வது அனுமதிக்கப் பட்டதாகும். கல்சுண்டு விளையாட்டு வெறுக்கப்பட்டதாகும் (2) 34.9 முயல் கறி உண்ணத் தக்கது (1) 34.8 வெட்டுக்கிளி உண்ணத் தக்கது (1) 34.7 உடும்புக் கறி உண்ணத் தக்கது (13) 34.6 குதிரைகளின் இறைச்சியை உண்பது கூடுமா? (3) 34.5 நாட்டுக் கழுதைகளின் இறைச்சியை உண்பதற்குத் தடை (14) 34.4 கடல்வாழ் உயிரினங்களில் செத்தவற்றை உண்பதற்கு அனுமதி (5) 34.3 உண்பதற்குத் தடை செய்யப்பட்ட விலங்குகளும் பறவைகளும் (6) 34.2 வேட்டையாடிய பிராணி மறைந்து, பிறகு கிடைத்தால் … (2) 34.1 பயிற்சியளிக்கப்பட்ட நாய்கள் மூலம் வேட்டையாடுதல் (8) 33.56 பயணத்திலிருந்து திரும்புகின்றவர் … (5) 33.55 பயணம் என்பது துன்பத்தின் ஒரு பகுதியாகும் … (1) 33.54 பயணத்தில் கால்நடைகளின் நலன் காப்பதும் … (2) 33.53 “என் சமுதாயத்தாரில் ஒரு குழுவினர் எப்போதுமே உண்மைக்கு ஆதரவாளர்களாக இருப்பார்கள் … (8) 33.52 அம்பெய்வதன் சிறப்பும் … (3) 33.51 உயிர்த் தியாகிகள் பற்றிய விளக்கம் (3) 33.50 அல்லாஹ்வின் பாதையில் எல்லைக் காவல் புரிவதன் சிறப்பு (1) 33.49 கடல்வழிப் போரின் சிறப்பு (2) 33.48 போரில் கலந்துகொள்ள முடியாமல் போனவருக்கும் நன்மை … (1) 33.47 அறப்போரில் கலந்துகொள்ளாமல் இறந்துபோனவர் … (1) 33.46 அல்லாஹ்வின் பாதையில் வீரமரணத்தை வேண்டுவது விரும்பத் தக்கதாகும் (2) 33.45 “எண்ணங்களைப் பொருத்தே செயல்கள் அமைகின்றன” எனும் நபிமொழி … (1) 33.44 … போர்ச் செல்வங்களைப் பெற்றோரும் பெறாதோரும் … (2) 33.43 பிறர் பார்ப்பதற்காகவும் விளம்பரத்திற்காகவும் போரிட்டவர் … (1) 33.42 அல்லாஹ்வின் பாதையில் போரிட்டவர் … (3) 33.41 உயிர்த் தியாகிக்குச் சொர்க்கம் நிச்சயம் (6) 33.40 தகுந்த காரணம் உள்ளவர்களுக்கு அறப்போரில் கலந்து கொள்வது கடமை இல்லை (2) 33.39 அறப்போர் வீரர்களின் துணைவியருடைய கண்ணியம் … (1) 33.38 அறப்போர் வீரருக்கு வாகனம் மற்றும் பிற உதவிகள் … (6) 33.37 அல்லாஹ்வின் பாதையில் தர்மம் செய்வதன் சிறப்பும் அதற்குக் கிடைக்கும் பன்மடங்கு நன்மைகளும் (1) 33.36 இறைமறுப்பாளனை (போரில்) கொன்ற பின்னர் (மார்க்கத்தில்) உறுதியோடு இருத்தல் (2) 33.35 இரு போராளிகளில் ஒருவர் மற்றவரைக் கொன்று, பின் அவ்விருவருமே சொர்க்கத்தில் … (2) 33.34 அறப்போர் மற்றும் எல்லைக் காவலின் சிறப்பு (3) 33.33 வீரமணம் அடைந்தவர்களின் உயிர்கள் … (1) 33.32 அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டவரின் கடனைத் தவிர அனைத்துப் பாவங்களும் மன்னிக்கப்படுகின்றன (3) 33.31 அல்லாஹ் (தனது பாதையில்) அறப்போர் புரிந்தவர்களுக்காகச் சொர்க்கத்தில் வைத்துள்ள உயர்நிலைகள் (1) 33.30 அல்லாஹ்வின் பாதையில் காலையாயினும் மாலையாயினும் (போரிடச்) செல்வதன் சிறப்பு (5) 33.29 அல்லாஹ்வின் பாதையில் வீரமரணம் அடைவதன் சிறப்பு (4) 33.28 அல்லாஹ்வின் பாதையில் புறப்படுதலின், அறப்போரில் ஈடுபடுதலின் சிறப்பு (4) 33.27 குதிரையின் தன்மைகளில் விரும்பத் தகாதவை (1) 33.26 மறுமை நாள்வரை நெற்றிகளில் நன்மை பிணைக்கப்பட்டிருக்கும் குதிரைகள் (5) 33.25 குதிரைப் பந்தயமும் அதற்காகக் குதிரையை மெலிய வைப்பதும் (1) 33.24 குர்ஆன் பிரதிகளை இறைமறுப்பாளர்களின் நாட்டுக்கு எடுத்துச் செல்வது … (3) 33.23 பருவ வயது பற்றிய விளக்கம் (1) 33.22 இயன்றவரை கட்டுப்பட்டு நடப்பதாக உறுதிமொழி அளித்தல் (1) 33.21 பெண்களிடம் உறுதிப் பிரமாணம் (பைஅத்) வாங்கும் முறை (2) 33.20 மக்கா வெற்றிக்குப் பின் ஹிஜ்ரத் கிடையாது (5) 33.19 நாடு துறந்து (ஹிஜ்ரத்) சென்றவர் மீண்டும் தமது தாயகத்தில் குடியேறுவதற்குத் தடை (1) 33.18 ஆட்சித் தலைவர் படையினரிடம் உறுதி மொழி பெற்றுக்கொள்வது … (13) 33.17 ஆட்சித் தலைவர்களில் நல்லவர்களும் தீயவர்களும் (2) 33.16 ஆட்சித் தலைவர்கள் மார்க்கத்திற்கு முரணாகச் செயல்படும்போது … (2) 33.15 இரு ஆட்சியாளர்களுக்கு வாக்களிப்புப் பிரமாண நெருக்கடி ஏற்பட்டால் … (1) 33.14 முஸ்லிம்கள் (ஒரே தலைமையின் கீழ்) ஒன்றுபட்டிருக்கும்போது … (2) 33.13 குழப்பங்கள் தோன்றும்போது கூட்டமைப்போடு சேர்ந்திருப்பது கடமையாகும் … (8) 33.12 உரிமைகள் மறுக்கப்பட்டாலும் தலைமைக்குக் கட்டுப்படுதல் (1) 33.11 அதிகாரத்திலிருப்போர் அநீதியிழைக்கும்போதும் தகுதியற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கும்போதும் … (1) 33.10 கலீஃபாக்களில் முதலாமவருக்கு உறுதிப் பிரமாணம் (பைஅத்) அளிப்பது கடமையாகும் (3) 33.9 ஆட்சித் தலைவர் கேடயம் போன்றவர் … (1) 33.8 பாவமற்றவற்றில் தலைவர்களுக்குக் கட்டுப்படுவது கடமையாகும். பாவமானவற்றில் கட்டுப்படுவதற்குத் தடை (11) 33.7 அதிகாரிகளுக்கு அன்பளிப்புகள் வழங்குவதற்குத் தடை (3) 33.6 பொதுச் சொத்துகளில் மோசடி செய்வது வன்மையாகத் தடை செய்யப்பட்டது (1) 33.5 நேர்மையான ஆட்சியாளரின் சிறப்பும் … (6) 33.4 தேவையின்றி ஆட்சிப் பொறுப்பை ஏற்பது விரும்பத் தக்கதன்று (2) 33.3 ஆட்சியதிகாரத்தைத் தேடி அலைவதற்கும் அதன் மீது ஆசை கொள்வதற்கும் தடை (3) 33.2 ஆட்சித் தலைவரை நியமிக்கலாம்; நியமிக்காமல் விடலாம் (2) 33.1 ஆட்சியதிகாரம் குறைஷியரிடையேதான் இருக்கும் (10) 32.51 அறப்போர்களில் இறைமறுப்பாளரிடம் உதவி கோருவது … (1) 32.50 ‘தாத்துர் ரிக்காஉ’ (ஒட்டுத் துணிப்) போர் (1) 32.49 நபி (ஸல்) கலந்துகொண்ட அறப்போர்களின் எண்ணிக்கை (6) 32.48 அறப்போரில் கலந்துகொண்ட பெண்களுக்கு … (4) 32.47 அறப்போரில் ஆண்களுடன் பெண்களும் கலந்துகொள்வது (2) 32.46 “அவனே உங்களைத் தாக்காமல் அவர்கள் கைகளை தடுத்(து வைத்)தான்” எனும் (48:24) வசனம் (2) 32.45 ‘தூ கரத்’ போரும் பிற போர்களும் (2) 32.44 அஹ்ஸாப் போர் (அ) அகழ்ப் போர் (6) 32.43 கைபர் போர் (5) 32.42 கஅப் பின் அல்அஷ்ரஃப் கொல்லப்படுதல் (1) 32.41 அபூஜஹ்லு கொல்லப்படுதல் (1) 32.40 நபி (ஸல்) (மக்களை) இறைவன்பால் அழைத்து, துன்பங்களைப் பொறுத்துக் கொண்டது (2) 32.39 நபி (ஸல்) எதிர்கொண்ட துன்பங்கள் (7) 32.38 இறைதூதரால் கொல்லப்பட்டவன் மீது இறைவனின் கோபம் (1) 32.37 உஹுதுப் போர் (3) 32.36 கூட்டுப் படையினருக்கு எதிரான அகழ்ப் போர் (2) 32.35 வாக்குறுதியை(ப் போரிலும்) நிறைவேற்றுவது (1) 32.34 ஹுதைபிய்யா சமாதான உடன்படிக்கை’ (7) 32.33 மக்கா வெற்றிக்குப் பின் … (1) 32.32 கஅபாவைச் சுற்றிலும் இருந்த சிலைகளை அப்புறப்படுத்தியது (1) 32.31 மக்கா வெற்றி (2) 32.30 பத்ருப் போர் (1) 32.29 தாயிஃப் போர் (1) 32.28 ஹுனைன் போரில் … (5) 32.27 இறைமறுப்பு அரசர்களுக்கு நபி (ஸல்) எழுதிய கடிதங்கள் (1) 32.26 அழைப்பு விடுத்து ஹெராக்ளியஸ் மன்னருக்கு நபி (ஸல்) எழுதிய கடிதம் (1) 32.25 போரில் கிடைத்த உணவை, பகை நாட்டில் இருக்கும் போதே உண்ணலாம் (2) 32.24 முஹாஜிர்கள் தன்னிறைவு அடைந்தபோது … (2) 32.23 செயல்களுள் முன்னுரிமை அளிக்கத் தக்கது (1) 32.22 ஒப்பந்தத்தை முறித்துவிட்ட (பகை)வர்களுடன் போர் செய்யலாம் (3) 32.21 யூத கிறித்தவர்கள் அரபிய தீபகற்பத்திலிருந்து வெளியேற்றப்படுவது (1) 32.20 யூதர்களை ஹிஜாஸ் பகுதியிலிருந்து நாடு கடத்தியது (2) 32.19 கைதியை என்னென்னவெல்லாம் செய்யலாம் (1) 32.18 பத்ருப் போரில் வானவர்களின் உதவியும் … (1) 32.17 போர் வெற்றிச் செல்வத்தைப் பங்கிடும் முறை (1) 32.16 இறைத்தூதர்களுக்கு யாரும் (சொத்தில்) வாரிசாக முடியாது (5) 32.15 போர் செய்யாமல் கிடைத்த செல்வங்களின் சட்டம் (3) 32.14 … போர்க் கைதிகளைப் பரிமாறிக்கொள்வது (1) 32.13 போரில் கொல்லப்பட்ட எதிரியின் உடைமைகள் (4) 32.12 போர் வெற்றிச் செல்வங்கள் (7) 32.11 போர் வெற்றிச் செல்வங்கள் யாருக்குச் சொந்தம்? (1) 32.10 போரில் மரங்களை வெட்டுவதும் எரிப்பதும் அனுமதிக்கப்பட்டதாகும் (3) 32.9 பெண்களையும் குழந்தைகளையும் அறியாமல் கொன்றுவிட்டால் … (3) 32.8 போரில் பெண்களையும் குழந்தைகளையும் கொல்வதற்குத் தடை (2) 32.7 எதிரிகளை(ப் போரில்) எதிர்கொள்ளும்போது பிரார்த்திப்பது (2) 32.6 எதிரியை(ப் போர்க் களத்தில்) சந்திக்க ஆசைப்படுவது வெறுக்கத் தக்கது … (2) 32.5 போரில் தந்திரம் அனுமதிக்கப்பட்டது (2) 32.4 மோசடி செய்வது தடை செய்யப்பட்டதாகும் (8) 32.3 மக்களிடம் இலகுவாக நடந்துகொள்ள வேண்டும்; வெறுப்பைக் கைவிட வேண்டும் (3) 32.2 படைத் தலைவர், போர் நெறிகள் குறித்து அறிவுறுத்துவது (1) 32.1 முன்னறிவிப்பின்றித் தாக்குதல் தொடுக்கலாமா? (1) 31.5 பயணத்தில் உணவைப் பகிர்ந்துண்ணல் (1) 31.4 செல்வத்தால் பிறருக்கு உதவுவது விரும்பத் தக்கது (1) 31.3 விருந்தோம்பல் சார்ந்தவை (3) 31.2 உரிமையாளரின் அனுமதியின்றி கால் நடையில் பால் கறப்பதற்குத் தடை (1) 31.1 ஹாஜிகள் தவறவிட்டவை (2) 31.0 கண்டெடுக்கப்பட்டவை (5) 30.11 நீதிபதி சமரசம் செய்துவைப்பது விரும்பத் தக்கதாகும் (1) 30.10 ஆய்வாளர்களிடையே கருத்து வேறுபாடு (1) 30.9 சாட்சிகளில் சிறந்தவர் (1) 30.8 தவறான தீர்ப்புகளைத் தள்ளுபடி செய்வதும் (மார்க்கத்தில் இல்லாத) புதுமைகளை நிராகரிப்பதும் (2) 30.7 கோபமாக இருக்கும் நீதிபதி, தீர்ப்பளிப்பது விரும்பத் தக்கதன்று (1) 30.6 நீதிபதியின் ஆய்வுக்கு நன்மை உண்டு (1) 30.5 தடைகள் மூன்று (4) 30.4 ஹிந்த் (ரலி) வழக்கு (3) 30.3 வாதங்களின் அடிப்படையில் தீர்ப்பு அமைந்துவிடுதல் (2) 30.2 சத்தியத்தின் / சாட்சியத்தின் அடிப்படையில் தீர்ப்பளித்தல் (1) 30.1 சத்தியம் செய்து நிரூபிப்பது பிரதிவாதிமீது கடமையாகும் (2) 29.11 இழப்பீடு இல்லாத விபத்துகள் (2) 29.10 தண்டனைகள், குற்றங்களுக்கான பரிகாரமாகும் (3) 29.9 சீர்திருத்திற்காக வழங்கப்படும் சாட்டையடிகளின் (அதிகபட்ச) அளவு (1) 29.8 மது அருந்திய குற்றத்திற்கான தண்டனை (4) 29.7 மகப்பேறான பெண்ணின் தண்டனையைத் தள்ளிவைத்தல் (1) 29.6 இஸ்லாமிய அரசின் கீழ் வாழும் யூதர்கள் விபச்சாரத்தில் ஈடுபட்டாலும் கல்லெறி தண்டனை (6) 29.5 விபச்சாரம் செய்தவரின் ஒப்புதல் வாக்குமூலம் (9) 29.4 மணமானவர்கள் விபச்சாரம் செய்தால் கல்லெறி தண்டனை (1) 29.3 விபச்சாரக் குற்றத்திற்கான தண்டனை (2) 29.2 தண்டனையிலிருந்து விலக்கு அளிக்குமாறு பரிந்துரைப்பதற்குத் தடை (3) 29.1 தண்டனைக்குரிய திருட்டின் அளவுகோலும் தண்டனையும் (7) 28.11 சிசுக் கொலைக்கான இழப்பீடும் … (6) 28.10 கொலையாளி, தன் குற்றத்தை ஒப்புக்கொள்வதும் … (2) 28.9 மனிதர்களின் உயிர், தன்மானம், செல்வம் ஆகியவற்றுக்கு ஊறு விளைவிப்பது … (2) 28.8 மறுமையில் வழங்கப்படும் தீர்ப்பும் தண்டனையும் … (1) 28.7 கொலையை (உலகுக்கு) அறிமுகப்படுத்தியவர் மீதான பாவம் (1) 28.6 முஸ்லிமின் மரண தண்டனைக்கான காரணங்கள் (2) 28.5 பற்கள் போன்ற(உறுப்புகளான)வற்றில் பழிக்குப்பழி உண்டு (1) 28.4 தாக்க வந்தவனிடமிருந்து தற்காத்துக் கொள்வதற்காக … (6) 28.3 கல் மற்றும் கூராயுதங்களால் கொலை செய்தால், பழிக்குப்பழி உண்டு … (3) 28.2 வன்முறையாளர்களுக்கும் மதம் மாறியோருக்குமான தண்டனை (4) 28.1 அல்கஸாமா (4) 27.13 விடுதலைக்கு வாக்களிக்கப்பட்ட அடிமையை விற்கலாம் (2) 27.12 அடிமையில் தமது பங்கை மட்டும் விடுதலை செய்தல் (8) 27.11 ‏தன் உரிமையாளருக்கு விசுவாசமாகவும் … (4) 27.10 அடிமைக்கு எஜமானர் உண்பதிலிருந்து உணவளிப்பதும் … (4) 27.9 விபசாரம் செய்துவிட்டதாக அவதூறு கூறுவதற்கான கண்டனம் (1) 27.8 அடிமைகளுடனான நல்லுறவும் கன்னத்தில் அறைந்ததற்கான பரிகாரமும் (8) 27.7 இறைமறுப்பாளராக இருந்தபோது செய்த நேர்ச்சை… (2) 27.6 ஆகுமாக்கப்பட்டதற்கான சத்தியமாக இருந்தாலும் … (1) 27.5 இன்ஷா அல்லாஹ் என்பதை (சத்தியத்தின்போது) சேர்த்துக் கூறுதல் (4) 27.4 சொல்பவரின் எண்ணப்படியே ஒருவருடைய சத்தியம் அமையும் (2) 27.3 சத்தியம் செய்தவர், அதைவிடச் சிறந்ததாக மற்றொன்றைக் காணும்போது … (12) 27.2 ‘லாத்’ மற்றும் ‘உஸ்ஸா’வின் மீது சத்தியம் செய்துவிட்டவர் … (2) 27.1 அல்லாஹ்வைத் தவிர எவர்/எதன் மீதும் சத்தியம் செய்யத் தடை (3) 26.5 நேர்ச்சை முறிவுக்கான பரிகாரம் (1) 26.4 கஅபாவரை நடைப்பயணம் செல்வதாக நேர்ந்துகொண்டவர் (3) 26.3 இறைவனுக்கு மாறு செய்வதிலோ உரிமை இல்லாததிலோ நேர்ச்சை. (1) 26.2 நேர்ச்சை செய்வதற்குத் தடை; அது (விதியில்) எதையும் மாற்றிவிடாது (6) 26.1 நேர்ச்சையை நிறைவேற்றக் கட்டளை (1) 25.5 வசதியற்றவர் மரண சாஸனம் செய்ய முடியாது (6) 25.4 அறக்கொடை (1) 25.3 மனிதன் இறந்த பின்பும் தொடரும் நன்மைகள் (1) 25.2 இறந்துவிட்டவருக்காகச் செய்யப்படும் தர்மங்களின் நன்மை … (3) 25.1 மரண சாஸனம் 1/3 மட்டுமே (5) 25.0 மரண சாஸனம் (2) 24.4 ஆயுட்கால அன்பளிப்பு (11) 24.3 அன்பளிப்பு வழங்குவதில் பிள்ளைகளிடையே பாகுபாடு காட்டுவது … (10) 24.2 தானமும் அன்பளிப்பும் வழங்கப்பட்ட பின், திரும்பப் பெறுவதற்குத் தடை … (4) 24.1 தானமாகக் கொடுத்ததை விலைக்கு வாங்குவது விரும்பத் தக்கதல்ல (4) 23.4 ஒருவர் விட்டுச்செல்லும் செல்வம் அவருடைய வாரிசுகளுக்கு உரியதாகும் (4) 23.3 இறுதியாக அருளப்பெற்றது கலாலா வசனமாகும் (4) 23.2 ‘கலாலா’ சொத்துரிமை (5) 23.1 உரியவர்களுக்கும் உறவினருக்கும் பிரிக்கப்பட்ட பாகங்கள் (3) 23.0 ஒரு முஸ்லிம், இறைமறுப்பாளருக்கு வாரிசாகமாட்டார் (1) 22.31 பாதைக்கு நிலம் ஒதுக்குவதில் கருத்து வேறுபாடு ஏற்பட்டால் அதற்கான தீர்வு (1) 22.30 பிறர் நிலத்தை அபகரித்தல் போன்ற அநீதி இழைத்தல்களுக்குத் தடை (6) 22.29 அண்டை வீட்டாரின் சுவரில் (சாரம் கட்டுவதற்கு) மரக்கட்டை பதிப்பது (1) 22.28 பங்காளியின் இசைவு (3) 22.27 வியாபாரத்தில் (வீண்)சத்தியம் செய்வது விலக்கப்பட்டுள்ளது (2) 22.26 உணவுப் பொருட்களைப் பதுக்குவதற்குத் தடை (2) 22.25 முன்பணம் செலுத்தும் வணிகம் (2) 22.24 அடமானம் உள்ளூரிலும் பயணத்திலும் செல்லும் (3) 22.23 ஓர் உயிரினத்தை அதே இனத்திற்குப் பதிலாக ஏற்றத்தாழ்வோடு விற்கலாம் (1) 22.22 உங்களில் சிறந்தவர் கடனை அழகிய முறையில் திருப்பிச் செலுத்துபவரே (4) 22.21 ஒட்டகத்தை விற்றவர் அதில் பயணிக்க நிபந்தனை விதிப்பது (5) 22.20 அனுமதிக்கப்பட்டவற்றையும் ஐயத்திற்குரியவற்றையும் கையாளுதல் (1) 22.19 வட்டி வாங்குபவருக்கும் வட்டி கொடுப்பவருக்கும் சாபம் (2) 22.18 உணவுப் பொருளை, சரிக்குச் சரியாக விற்றல் (12) 22.17 பொன்னும் மணியும் பதித்த மாலையை விற்பது (4) 22.16 தங்கத்திற்கு வெள்ளியைக் கடனாக விற்பதற்குத் தடை (3) 22.15 நாணயமாற்று வியாபாரம்; வெள்ளிக்குத் தங்கத்தை ரொக்கத்துக்கு விற்பது (7) 22.14 வட்டி (4) 22.13 மது, செத்தவை, பன்றி, சிலைகள் ஆகியவற்றை விற்பதற்குத் தடை (4) 22.12 மதுபான வியாபாரத்திற்குத் தடை (4) 22.11 குருதி உறிஞ்சி எடுப்பதற்காகக் கூலி பெறுவது கூடும் (4) 22.10 வேட்டை, காவல், பாதுகாப்புக்காக நாய் வளர்க்கலாம் (18) 22.9 நாய் விற்ற காசு, சோதிடரின் தட்சணை, விபச்சாரியின் வருமானம் (4) 22.8 தேவைக்குப் போக மீதம் உள்ள நீரை விற்பதற்குத் தடை (5) 22.7 வசதியுள்ளவர் கடனைச் செலுத்த தாமதம் செய்யக் கூடாது (1) 22.6 கடனை அடைக்க சிரமப்படுபவருக்கு அவகாசம் அளிப்பதன் சிறப்பு (7) 22.5 திவாலானவரிடம் திரும்பப் பெற்றுக்கொள்ளும் உரிமை (4) 22.4 கடனில் தள்ளுபடி செய்வது விரும்பத் தக்கதாகும் (3) 22.3 சேதமடைந்த பழங்களுக்கான தொகைக்குத் தள்ளுபடி (5) 22.2 மரம் நடுதலின், பயிர் செய்தலின் சிறப்பு (5) 22.1 நிபந்தனையின் பேரில் தோப்பைக் குத்தகைக்கு விடுவது (4) 21.21 நிலத்தை (விளைவித்துக்கொள்ள) இரவலாக வழங்குவது (4) 21.20 ‘முஸார’ஆவும் ‘முஆஜரா’வும் (2) 21.19 பொன், வெள்ளி(நாயணங்களு)க்கு நிலத்தைக் குத்தகைக்கு விடுவது (3) 21.18 தானியத்திற்கு நிலத்தைக் குத்தகைக்கு விடுவது (2) 21.17 நிலக் குத்தகை (24) 21.16 தடை செய்யப்பட்ட வியாபார வகைகள் (6) 21.15 கனிகள் நிறைந்த பேரீச்ச மரத்தை விற்பது (4) 21.14 (மரத்திலுள்ள) செங்கனிகளை மாற்றிக் கொள்வதற்குத் தடை (14) 21.13 மரத்திலுள்ள பழங்களை முற்றுவதற்கு முன் விற்பதற்குத் தடை (10) 21.12 வியாபாரத்தில் ஏமாற்றப்படுபவர் (1) 21.11 வியாபாரத்தில் உண்மை பேசுவதும் குறைகளைத் தெளிவுபடுத்துவதும் (1) 21.10 விற்பவருக்கும் வாங்குபவருக்கும் வியாபாரத்தை முறித்துக்கொள்ளும் உரிமை (4) 21.9 அளவு தெரியாத பேரீச்சம் பழக் குவியலை விற்பதற்குத் தடை (1) 21.8 வாங்கப்பட்ட பொருள் கைக்கு வருமுன் (பிறருக்கு) விற்பது கூடாது (13) 21.7 மடி கனக்கச் செய்யப்பட்ட கால்நடைகளை விற்பனை செய்வது பற்றிய சட்டம் (5) 21.6: கிராமவாசிக்காக, நகரவாசி விற்றுக் கொடுக்கத் தடை (5) 21.5: விற்பனைக்கு வரும் சரக்குகளை இடைமறித்து வாங்கத் தடை (4) 21.4: வியாபாரத்தில் தடை செய்யப்பட்டவை (7) 21.3: ஒட்டகக் கன்று (அது பிறக்குமுன்) விற்பதற்கு தடை! (2) 21.2: கல்லெறி வியாபாரம் மற்றும் மோசடி வியாபாரம் ஆகியவை செல்லாது (1) 21.1: ‘முலாமஸா’ மற்றும் ‘முனாபதா’ ஆகிய வியாபாரங்கள் செல்லாது (3) 20.7: அடிமையான தந்தையை விடுதலை செய்வதன் சிறப்பு (1) 20.6: அடிமைகளை விடுதலை செய்வதன் சிறப்பு (4) 20.5: விடுதலை செய்த உரிமையாளரை மாற்றிக் கூறத் தடை (4) 20.4: வாரிசாகும் உரிமையை விற்பதற்கும் அன்பளிப்பாக வழங்குவதற்கும் தடை (1) 20.3: விடுதலை செய்தவருக்கே வாரிசுரிமை உரியது (9) 20.2: அடிமை (தனது முழு விடுதலைக்காக) உழைத்துப் பொருளீட்டுவது (2) 20.1: ஓர் அடிமையி(ன் விலையி)ல், ஒருவர் தமக்கான பங்கை விடுவிப்பது (1) 19.1: சுய சாபம் வேண்டுதல் (17) 18.9: கணவன் இறந்து ‘இத்தா’விலிருக்கும் பெண் துக்கம் கடைப்பிடிப்பது (11) 18.8: கர்ப்பமுற்றிருக்கும் பெண்ணின் ‘இத்தா’க் காலம், பிரசவத்துடன் முடிந்துவிடும் (2) 18.7: ‘இத்தா’விலிருக்கும் பெண் தன் தேவைக்காக வெளியே செல்லலாம் (1) 18.6: மூன்று தலாக் சொல்லப்பட்ட பெண்ணுக்கு ஜீவனாம்சம் பற்றி… (18) 18.5: ஈலாச் செய்வது, மனைவியிடமிருந்து விலகுவது, விருப்ப உரிமை அளிப்பது (5) 18.4: மனைவிக்கு (த் தம்மைப் பிரிந்துவிட) உரிமை அளிப்பது மணவிலக்கு ஆகாது (8) 18.3: மணவிலக்குச் செய்யும் நோக்கமின்றி கூறினால், அது மணவிலக்கு ஆகாது (4) 18.2: மூன்று தலாக்குகள் (3) 18.1: மாதவிடாயான மனைவியை அவளது சம்மதமின்றி மணவிலக்குச் செய்வதற்குத் தடை (14) 17.19: ஹவ்வா-வும், பெண்கள் கணவரை ஏமாற்றுதலும் (2) 17.18: மனைவியரின் நலம் நாடுதல் (4) 17.17: பயன் தரும் இவ்வுலகச் செல்வங்களுள் மிகச் சிறந்த செல்வம், நற்குணமுள்ள மனைவியே (1) 17.16: கன்னிப் பெண்ணை மணப்பது விரும்பத் தக்கதாகும் (5) 17.15: மார்க்கப் பற்றுள்ள பெண்ணை மணப்பது விரும்பத் தக்கதாகும் (2) 17.14: மனைவியருள் ஒருவர், தனது முறைநாளை மற்றவருக்கு விட்டுக்கொடுக்கலாம் (4) 17.13: மனைவியருக்கு (இரவுகளை) ஒதுக்கீடு செய்வது (1) 17.12: கன்னி கழிந்த பெண்ணுக்கும், கன்னிப் பெண்ணுக்கும் கணவன் ஒதுக்க வேண்டிய நாட்கள் (6) 17.11: சாயல் அறியும் நிபுணரின் கூற்றுப்படி, குழந்தைக்கு உரியவரைக் கண்டறிவது (3) 17.10: எஜமானரின் கீழ் வாழும் பெண்ணின் குழந்தை, அவருக்கே உரியது (2) 17.9: பெண் போர்க் கைதியுடன் உடலுறவு கொள்ளலாம் (2) 17.8: பசிக்காகத் தாய்ப்பால் அருந்தினால்தான் பால்குடி உறவு ஏற்படும் (1) 17.7: பருவ வயதை அடைந்தவருக்குப் பாலூட்டுவது (6) 17.6: ஐந்து தடவை அருந்தினால்தான் பால்குடி உறவு உண்டாகும் (2) 17.5: ஓரிரு தடவை (பெண்ணின் மார்பில்) பால் குடிப்பது பற்றிய சட்டம் (6) 17.4: மனைவியின் மகளையும் மனைவியின் சகோதரியையும் மணப்பதற்குத் தடை (2) 17.3: பால்குடிச் சகோதரரின் மகளை மணப்பது தடை செய்யப்பட்டுள்ளது (3) 17.2: பால்குடித் தந்தையின் (இரத்த பந்த) உறவினரும் மணமுடிக்கத் தகாதவரே! (6) 17.1: பிறப்பால் ஏற்படும் உறவும் பால்குடி உறவும் (2) 16.24: பாலூட்டும் மனைவியுடன் உடலுறவு கொள்ளும்போது அஸ்லுச் செய்வது வெறுக்கத் தக்கது (3) 16.23: கருவுற்றிருக்கும் பெண் போர்க் கைதியுடன் உடலுறவு கொள்வது தடை செய்யப்பட்டுள்ளது (1) 16.22: உடலுறவின்போது இடைமுறிப்பு – ‘அஸ்லு’ச் சட்டம் (12) 16.21: மனைவியுடன் நடைபெறும் உடலுறவு இரகசியங்களை வெளியே சொல்வது தடுக்கப்பட்டது (2) 16.20: ஒரு பெண், தன் கணவனின் படுக்கைக்குச் செல்ல மறுப்பதற்குத் தடை (3) 16.19: உடலுறவின் ஒழுங்குகள் (2) 16.18: உடலுறவின்போது ஓத வேண்டிய விரும்பத் தகுந்த பிரார்த்தனை (1) 16.17: மூன்று முறை மணவிலக்கு அளிக்கப்பட்ட பெண்ணின் மறுவிருப்பம் (4) 16.16: விருந்துக்கான அழைப்பை ஏற்பது பற்றிய கட்டளை (13) 16.15: ஸைனப் பின்த்து ஜஹ்ஷு (ரலி) திருமணம்; ஹிஜாப் பற்றிய வசனம்; மணவிருந்து (7) 16.14: அடிமைப் பெண்ணை விடுதலை செய்து, பின்னர் அவளை மணமுடித்துக்கொள்வதன் சிறப்பு (6) 16.13: மணக்கொடை (மஹ்ரு) என்பது … (7) 16.12: ஒருவர் தாம் மணமுடிக்க விரும்பும் பெண்ணின் முகத்தையும் இரு முன் கைகளையும் பார்ப்பது (2) 16.11 ஷவ்வால் மாதத்தில் மணமும் தாம்பத்திய உறவும் (1) 16.10: இளவயதுக் கன்னிக்கு அவளுடைய தந்தை மணமுடித்துவைத்தல் (4) 16.9: மணப் பெண்ணின் வாய் வழிச் சம்மதமும் மௌனச் சம்மதமும் (4) 16.8: திருமண (முன்) நிபந்தனைகளை நிறைவேற்றல் (1) 16.7: மணக்கொடையில்லா திருமணம் செல்லாது (5) 16.6: தம் (முஸ்லிம்) சகோதரன் கேட்டுக்கொண்டிருக்கும் ஒரு பெண்ணை, மற்றவர் கேட்கலாகாது (7) 16.5: இஹ்ராம் புனைந்தவர் திருமணம் செய்வதற்குத் தடை; அவர் பெண் கேட்பது வெறுக்கத் தக்கது (8) 16.4: மனைவியின் அத்தையை, சின்னம்மாவை மணக்கத் தடை (8) 16.3: இடைக்காலத் திருமணம், (முத்ஆ) காலாவதியானது (21) 16.2: இச்சை தூண்டப்பட்டவர், தமது இச்சையைத் தணித்துக் கொள்ளட்டும் (2) 16.1: வசதி இருந்தால் மணமுடிப்பதும் இல்லாதவர் நோன்பு நோற்பதும் (6) 15.97: குபாப் பள்ளிவாசல், அதில் தொழுவது, அதைத் தரிசிப்பது ஆகிய சிறப்புகள் (7) 15.96: இறையச்சத்தின் மீது நிறுவப்பட்ட பள்ளிவாசல் (1) 15.95: மூன்று பள்ளிவாசல்களைத் தவிர வேறெதற்கும் (புனிதப்) பயணம் கிடையாது (2) 15.94: மக்கா, மதீனாப் பள்ளிவாசல்களில் தொழுவதன் சிறப்பு (6) 15.93: ‘உஹுத்’ மலை நம்மை நேசிக்கிறது; நாமும் அதை நேசிக்கின்றோம் (3) 15.92: சொர்க்கப் பூஞ்சோலைகளுள் ஒன்று (3) 15.91: மதீனாவாசிகள் மதீனாவை விட்டு அகலும்போது அதன் நிலை (2) 15.90: மதீனாவிலேயே தங்கியிருப்பதற்கு ஆர்வமூட்டல் (2) 15.89: மதீனாவாசிகளுக்குக் கேடு நினைப்பவர்களை, அல்லாஹ் உருக்குலைத்துவிடுவான் (3) 15.88: தன்னிலுள்ள தீயவர்களை மதீனா அகற்றிவிடும் (5) 15.87: கொள்ளை நோயும் தஜ்ஜாலும் நுழைய முடியாமல் மதீனா பாதுகாக்கப்பட்டுள்ளது (2) 15.86: மதீனாவில் ஏற்படும் நெருக்கடிகளைச் சகித்துக்கொண்டு, அங்குக் குடியிருக்க ஆர்வ மூட்டல் (10) 15.85: மதீனாவின் சிறப்பு; பிரார்த்தித்ததும் புனிதமானவையும் (17) 15.84: இஹ்ராமின்றி மக்காவிற்குள் நுழைய அனுமதி (5) 15.83: அவசியத் தேவையின்றி மக்காவிற்குள் ஆயுதம் எடுததுச் செல்வதற்குத் தடை (1) 15.82: மக்காவும், அதன் புனிதமானவைகளும் (4) 15.81: முஹாஜிருக்கு மக்காவில் தக்குவதற்கு அனுமதிக்கப்பட்ட நாட்கள் (4) 15.80: ஹாஜிகள் மக்காவில் தங்குவதும் அங்குள்ள வீடுகளை வாரிசுரிமையாகப் பெறுவதும் (3) 15.79: ஹஜ், உம்ரா, அரஃபா நாள் ஆகியவற்றின் சிறப்பு (3) 15.78: இணைவைப்பவருக்கான ஹஜ் சட்டங்கள் (1) 15-77: ஹஜ் அல்லது உம்ராவிலிருந்து திரும்பும்போது துல்ஹுலைஃபாவில் தங்கித் தொழுவது (5) 15.76: பயணத்திலிருந்து திரும்பி வரும்போது ஓத வேண்டியவை (2) 15.75: பயணங்களில் வாகனத்தில் ஏறியதும் ஓத வேண்டிய துஆ (2) 15.74: மஹ்ரமான ஆணுடன் மட்டுமே பெண்ணின் ஹஜ் முதலான பயணம் (11) 15.73: ஹஜ் கடமை, ஆயுளில் ஒரு முறைதான் (1) 15.72: குழந்தையின் ஹஜ் செல்லும்; அதை ஹஜ்ஜுக்கு அழைத்துச் சென்றவருக்கும் நற்பலன் உண்டு (3) 15.71: இயலாதவருக்காகவோ, இறந்தவருக்காகவோ பிறர் ஹஜ் செய்தல் (2) 15.70: கஅபாவின் வளைந்த சுவரும் அதன் தலைவாயிலும் (1) 15.69: இறையில்லம் கஅபாவை இடித்துக் கட்டுதல் (7) 15.68: கஅபாவின் உள்ளே நுழைவதும் அதனுள் தொழுவதும் (9) 15.67: விடைபெறும் தவாஃப் மாதவிடாய் ஏற்பட்ட பெண்ணுக்குக் கடமையில்லை (8) 15.66: செல்லும் வழியில் பலிப் பிராணி பாதிப்புக்குள்ளாகிவிட்டால் … (2) 15.65: பலியிடக் கொண்டுசெல்லும் ஒட்டகத்தில், பயணம் செய்ய அனுமதி (6) 15-64: ஹரம் எல்லைக்குச் செல்லாதவர், பலிப் பிராணியை அனுப்பிவைக்கும் முறை (11) 15.63: ஒட்டகத்தை அறுக்கும் முறை (1) 15.62: பலிப் பிராணிகளுள் மாட்டிலும் ஒட்டகத்திலும் கூட்டுச் சேர்வது (8) 15.61: பலிப் பிராணிகளின் இறைச்சி, தோல், சேணம் ஆகியவை தர்மத்துக்குரியன (2) 15.60: ‘தஷ்ரீக்’ நாட்களின் இரவுகளில் மினாவில் தங்குவது கட்டாயமாகும் (2) 15.59: ‘நஃப்ரு’டைய நாளில் ‘அல்முஹஸ்ஸபி’ல் தங்குவதும் அங்குத் தொழுவதும் (9) 15.58: துல்ஹஜ் பத்தாவது நாளில் ‘தவாஃபுல் இஃபாளா’ செய்வது (2) 15.57: ஹஜ் சடங்குகளில் முன் – பின் ஆகிவிட்டால் … (6) 15.56: துல்ஹஜ் பத்தாம் நாளின் சடங்குகள் (3) 15.55: தலைமுடியை மழிப்பதும் குறைப்பதும் (6) 15.54: கற்களின் எண்ணிக்கை (1) 15.53: கல்லெறியும் நேரம் (1) 15.52: பொடிக் கற்கள் போதும் (1) 15.51: துல்ஹஜ் பிறை பத்தில் ஜம்ரத்துல் அகபாவுக்குக் கல்லெறிதல் (3) 15.50: ‘ஜம்ரத்துல் அகபா’வின் மீது கல் எறியும்போது தக்பீர் கூறுவது (4) 15.49: முஸ்தலிஃபாவிலிருந்து மினாவிற்குப் புறப்படச் செய்வது (11) 15.48: முஸ்தலிஃபாவில் ஸுப்ஹுத் தொழுகையை ஆரம்ப நேரத்தில் தொழுவது (1) 15.47: மஃக்ரிப், இஷா வை அடுத்தடுத்துத் தொழுவது (14) 15.46: அரஃபா நாளில் மினாவிலிருந்து அரஃபாவிற்குப் போகும்போது தல்பியாவும் தக்பீரும் கூறுதல் (4) 15.45: துல்ஹஜ் பத்தாவது நாளன்று கல்லெறியத் துவங்கும்வரை தல்பியாச் சொல்லிக்கொண்டிருப்பது (7) 15.44: ஸஃபா-மர்வாவுக்கிடையே ஸயீ (ஓட்டம்) ஒரே தடவைதான் (1) 15.43: ஸஃபா-மர்வாவுக்கிடையே ஸயீச் செய்வது முக்கியக் கடமையாகும் (5) 15.42: வாகனங்கள் மீதமர்ந்து தவாஃப் செய்யலாம் (6) 15.41: தவாஃபின்போது ஹஜருல் அஸ்வதை முத்தமிடுவது (5) 15.40: இறையில்லத்தில் முத்தமிடப்படும் இரு மூலைகள் (6) 15.39: தவாஃபில் விரைந்து நடப்பது விரும்பத்தக்கது (12) 15.38: மக்காவினுள் நுழையும் முன்… (4) 15.37 மக்காவினுள் நுழைவதும் வெளியேறுவதும் (3) 15.36 ரமளான் மாதத்தில் உம்ராச் செய்வதன் சிறப்பு (2) 15.35: நபியவர்களின் உம்ரா எண்ணிக்கையும் காலமும் (4) 15.34 நபியவர்களின் தல்பியாவும் பலியும் (4) 15.33: உம்ராவில் தலைமுடி குறைத்தல் (5) 15.32: இஹ்ராமின்போது பலிப் பிராணி (4) 15.31: ஹஜ்ஜுப் பருவங்களில் உம்ராச் செய்ய அனுமதி (6) 15.30: தமத்துஉ ஹஜ் (2) 15.29: இஹ்ராம் ஹாஜிக்குக் கட்டாயம் (3) 15.28: தவாஃபும் ஸயீயும் கட்டாயம் (3) 15.27: ஹஜ் உம்ரா சேர்த்தும் தனித்தும் செய்வது (3) 15.26: ஒரே இஹ்ராமில் உம்ரா ஹஜ் (3) 15.25: இஹ்ராமிலிருந்து விடுபடுதல் (3) 15.24: பலிப் பிராணியும் ஹஜ் கடமையும் (2) 15.23: தமத்துஉ ஹஜ் அனுமதிக்கப்பட்ட ஒன்றாகும் (13) 15.22: ஒருவர் வேறொருவரின் இஹ்ராமை அச்சொட்டி பூணுதல் (3) 15.21: அரஃபா பெருவெளியில் தங்கி திரும்புதல் தொடர்பான இறை கூற்று (3) 15.20: அரஃபாப் பெருவெளி முழுவதும் தங்குமிடம் (2) 15.19: நபி (ஸல்) அவர்களின் ஹஜ் (1) 15.18: உம்ராவையும் ஹஜ்ஜையும் தனித் தனியாக நிறைவேற்றி பயனடைதல் (2) 15.17: இஹ்ராமின் முறைகள் (27) 15.16: இரத்தப்போக்குடைய பெண் இஹ்ராமில் குளித்தல் (2) 15.15: இஹ்ராமிலிருந்து விடுபட முன் நிபந்தனையிட அனுமதி (5) 15.14: முஹ்ரிம் இறந்துவிட்டால் செய்ய வேண்டியவை (9) 15.13: இஹ்ராம் பூண்ட முஹ்ரிம், தம் உடலைக் கழுவிக்கொள்ள அனுமதி (1) 15.12: இஹ்ராம் பூண்ட முஹ்ரிம், தம் கண்களுக்கு மருந்திட அனுமதி (2) 15.11: இஹ்ராம் பூண்ட முஹ்ரிம், ஹிஜாமா செய்ய அனுமதி (2) 15.10: முஹ்ரிமுக்குத் தலைமுடி மழிக்க அனுமதியும் பரிகாரமும் (7) 15.09: ஹரம் எல்லைக்குள் கொல்ல அனுமதிக்கப்பட்டவைகள் (12) 15.08: இஹ்ராம் பூண்ட முஹ்ரிம் வேட்டையாடுவது குறித்து.. (9) 15.07: இஹ்ராமின்போது நறுமணம் பூசுதல் (19) 15.06: துல்ஹுலைஃபா பள்ளியில் தொழுதல் (1) 15.05: வாகனம் புறப்படுவதற்கு ஆயத்தமானவுடன் தல்பியா கூறுவது (4) 15.04: மதீனாவாசிகள் இஹ்ராம் பூண வேண்டிய இடம் (2) 15.03: தல்பியாவின் பண்பும் அதன் நேரமும் (4) 15.02: ஹஜ்/உம்ராவிற்கான இஹ்ராம் எல்லைகள் (7) 15.01: ஹஜ்/உம்ராவில் அனுமதிக்கப்பட்டவை.. (10) 14.04: துல்ஹஜ் மாதத்தின் பத்து நோன்புகள் (2) 14.02: இஃதிகாஃப் இருக்குமிடத்தினுள் நுழையும் நேரம் (1) 14.03: இறுதிப் பத்தில் வழிபாடுகளில் ஈடுபடுவது (2) 14.01: இறுதிப் பத்து நாட்களில் இஃதிகாஃப் இருத்தல் (5) 13.40: லைலத்துல் கத்ர் இரவு குறித்து.. (17) 13.39: ஷவ்வால் ஆறு நோன்பு (1) 13.37: ஷஅபான் மாத இறுதியில் நோன்பு நோற்றல் (3) 13.38: முஹர்ரம் நோன்பின் சிறப்பு (2) 13.36: சுன்னத்தான நோன்புகள் (5) 13.35: ஒரு நாள் விட்டு ஒரு நாள் நோன்பு (12) 13.34: நோன்பில்லாமல் எந்த மாதத்தையும் கடக்க விடாமலிருப்பது விரும்பத் தக்கது (9) 13.33: மறதியால் (நோன்பாளி) நோன்பு முறியாது (1) 13.32: கூடுதலான நோன்பு முடிவு செய்வதற்கும் விடுவதற்கும் அனுமதி (2) 13.31: அல்லாஹ்வின் பாதையில் செல்லும்போது சக்தி பெற்றிருப்பவர் நோன்பு நோற்பதன் சிறப்பு (2) 13.30: நோன்பின் மாண்பு (6) 13.29: நோன்பாளி, நாவைக் காப்பது (1) 13.28: நோன்பாளி விருந்துக்கு அழைக்கப்பட்டால் “நான் நோன்பாளி” என்று சொல்லிவிட வேண்டும் (1) 13.27: இறந்துபோனவரின் விடுபட்ட நோன்பை நோற்பது (5) 13.26: ரமளானில் விடுபட்ட நோன்பை ஷஅபான் மாதத்தில் ‘களா’ச் செய்தல் (2) 13.25: இறைவசனம் வேறொரு வசனத்தின் மூலம் மாற்றம் (2) 13.24: வெள்ளிக்கிழமை மட்டும் நோன்பு நோற்பது விரும்பத் தக்கதன்று (3) 13.23: அய்யாமுத் தஷ்ரீக் நாட்களில் நோன்பு நோற்பதற்குத் தடை (2) 13.22: நோன்புப் பெருநாளிலும் ஹஜ்ஜுப் பெருநாளிலும் நோன்பு நோற்பதற்குத் தடை (6) 13.20: ஆஷூரா நோன்பை எந்த நாளில் நோற்க வேண்டும்? (4) 13.19: ஆஷூரா நாளில் நோன்பு நோற்றல் (17) 13.18: அரஃபா நாளில் அரஃபாவில் தங்கும் ஹாஜிகளின் நோன்பு (4) 13.17: பயணத்தில் நோன்பு நோற்பதையோ விட்டுவிடுவதையோ தேர்ந்துகொள்ளலாம் (5) 13.16: பயணத்தில் நோன்பைக் கைவிட்டவர், பொதுப் பணியாற்றினால் கிடைக்கும் நன்மை (3) 13.15: பயணத்தில் இருப்பவர் மீதான கடமையான ரமளான் நோன்பு (11) 13.14: ரமளான் பகலில் உடலுறவில் ஈடுபடுவதற்குத் தடையும் அதன் பரிகாரமும் (5) 13.13: பெருந்துடக்குடன் வைகறைப் பொழுதை அடைந்தவரின் நோன்பு செல்லும் (6) 13.12: கட்டுப்படுத்தும் நோன்பாளிக்கு (தம் மனைவியை) முத்தமிடத் தடையில்லை (13) 13.11: தொடர்நோன்பு நோற்பதற்குத் தடை (7) 13.10: பகற் பொழுது வெளியேறி நோன்பு நிறைவடையும் நேரம் (3) 13.09: ஸஹரைத் தாமதிப்பதும் நோன்பு துறப்பதை விரைந்து செய்வதும் (6) 13.08: ஃபஜ்ரு நேரம் வந்தவுடன் நோன்பு ஆரம்பமாகிவிடும் (11) 13.07: ‘இரு பெருநாட்களின் இரு மாதங்களும் குறைவுபடாது’ நபிகளாரின் விளக்கம் (2) 13.06: (வானை) மேகம் மூடிக்கொண்டால் (மாதத்தின் நாட்கள்) முப்பதாக முழுமையாக்கப்படும் (2) 13.05: ஒவ்வோர் ஊர்க்காரர்களுக்கும் அவரவர் பார்க்கும் பிறையே பொருந்தும் (1) 13.04: மாதம் என்பது இருபத்தொன்பது நாட்களாகவும் இருக்கும் (6) 13.03: ரமளானுக்கு முந்தைய இரு நாள்களில் நோன்பு நோற்கக் கூடாது (1) 13.02: ரமளான் நோன்பு தொடக்கமும் முடிவும் (17) 13.01: ரமளான் மாதத்தின் சிறப்பு (2) 12.55: ஸகாத் வசூலிப்பவர், தடை செய்யப்பட்டதைக் கோராதவரை அவரைத் திருப்திபடுத்த வேண்டும் (1) 12.54: தர்மப் பொருள் கொண்டுவந்தவருக்காகப் பிரார்த்தித்தல் (1) 12.53: நபி (ஸல்) அன்பளிப்பை ஏற்றதும் தர்மத்தை மறுத்ததும் (1) 12.52: தர்மப் பொருள், அதன் பண்பு நீங்கி விடுதல் (5) 2.27: நாய் நக்கிய பாத்திரம் பற்றிய சட்டம் (6) 2.28: தேங்கிக் கிடக்கும் தண்ணீரில் சிறுநீர் கழிப்பதற்குத் தடை (3) 2.29: பெருந்துடக்குடையவர் தேங்கிய நீரில் இறங்கிக் குளிக்கத் தடை (1) 2.30: பள்ளிவாசலில் சிறுநீர் கழித்தால்… (3) 2.31: தாய்பால் குடிக்கும் குழந்தையின் சிறுநீரைக் கழுவும் சட்டம் (4) 2.32: விந்து பற்றிய சட்டம் (4) 2.33: மாதவிடாய் இரத்தம் கழுவும் முறை (1) 2.34: சிறுநீரைச் சுத்தம் செய்வது கட்டாயம் (1) 3.01: மாதவிடாயான மனைவியைக் கீழாடைக்கு மேல் அணைத்துக் கொள்வது. (3) 3.02: மாதவிடாயான மனைவியுடன் ஒரே போர்வைக்குள் படுத்துக் கொள்வது. (2) 3.03: மாதவிடாயான பெண் செய்ய அனுமதிக்கப்பட்டவை (11) 3.04: இச்சை நீர் (3) 3.05: உறங்கி எழுந்ததும் முகத்தையும் கையையும் கழுவுதல் (1) 3.06: பெருந்துடக்காளி செய்ய வேண்டியவை (8) 3.07: மதன நீர் வெளிப்பட்ட பெண்ணுக்குக் குளியல் கடமை. (5) 3.08: ஆண்/பெண் (விந்து-மதன)நீரிலிருந்துதான் குழந்தை உருவாகிறது. (1) 3.09: பெருந்துடக்கிற்கான குளியல் முறை (5) 3.10: பெருந்துடக்கு குளியல் தொடர்பானவை (14) 3.11: குளிக்கும் போது மூன்றுமுறை தண்ணீர் ஊற்றுதல் (4) 3.12: குளிக்கும் பெண்களின் சடைமுடி பற்றிய சட்டம் (2) 3.13: மாதவிடாய் குளியலின் போது கஸ்தூரி பயன்படுத்துதல் (2) 3.14: தொடர் உதிரப் போக்குடைய பெண்களின் தொழுகை மற்றும் குளியல் (5) 3.15: மாதவிடாய் நாட்களில் விடுபட்ட கடமைகள் (3) 3.16: குளிப்பவர் திரையிட்டுக் கொள்தல் (3) 3.17: பிறரின் மறையுறுப்பைப் பார்த்தல் (1) 3.18: தனித்துக் குளிக்கும் போது ஆடையின்றி குளித்தல் (1) 3.19: மறையுறுப்பை மறைத்துக் கொள்வதில் கவனம் (3) 3.21: (விந்து)நீர் வெளிப்பட்டாலே (குளியல்)நீர் கடமையாகும் (9) 3.22: ஆண்-பெண் குறிகள் இணைந்து விட்டால் குளியல் கடமையாகும் (3) 3.23: சமைக்கப்படவற்றை உண்டால் மீண்டும் உளூ செய்தல் (3) 3.24: சமைக்கப் பட்டவற்றை உண்டால் உளூச் செய்யும் கட்டாயம் மாற்றப் பட்டது (8) 3.25: ஒட்டக இறைச்சி உண்டால் உளூச் செய்ய வேண்டும் (1) 3.26: வாயு பிரிந்த சந்தேகம் ஏற்பட்டாலும் தொழலாம் (2) 3.27: பதனிடப்படுவதால் செத்த பிராணியின் தோல் தூய்மை ஆகும் (7) 3.28: தயம்மும் (6) 3.29: ஒரு முஸ்லிம் (பெருந்துடக்கு ஏற்பட்டதால்) அசுத்தமாகிவிட மாட்டார். (2) 3.30: பெருந்துடக்கு போன்ற நிலைகளிலும் அல்லாஹ்வைத் துதித்தல். (1) 3.31: சிறுதுடக்காளி (உளூச் செய்யாமல்) உண்ணலாம் (4) 3.32: கழிப்பிடத்திற்குச் செல்லும்போதான பிரார்த்தனை (1) 3.33: உட்கார்ந்து கொண்டு உறங்குவது உளூவை முறிக்காது. (4) 4.01: தொழுகை அழைப்பின் தொடக்கம் (1) 4.02: தொழுகை அறிவிப்பு தொடர் அமையும் விதம் (3) 4.03: தொழுகை அழைப்பு முறை (1) 4.04: ஒரு பள்ளிவாசலுக்கு இரு தொழுகை அழைப்பாளர்கள் (1) 4.05: பார்வையற்றவர் தொழுகை அழைப்பு விட நிபந்தனை (1) 4.06: போரின் போது இணைவைப்பாளர் நாட்டில் தொழுகை அழைப்பு விடுக்கப்பட்டால் (1) 4.07: தொழுகை அழைப்பைச் செவியுறுபவர் செய்ய வேண்டியவை (4) 4.08: தொழுகை அழைப்பின் சிறப்பும் ஷைத்தான் வெருண்டோடுவதும் (6) 4.09: இரு கைகளையும் தோள் புஜத்துக்கு உயர்த்துதல் (4) 4.10: அல்லாஹு அக்பர், ஸமி அல்லாஹு லிமன் ஹமிதஹ் கூறும் இடங்கள் (5) 4.11: தொழுகையில் அல்ஃபாத்திஹா அத்தியாயம் ஓதுதல் (8) 4.12: இமாமைப் பின்பற்றித் தொழுபவர் உரத்து ஓதலாகாது (2) 4.13: பிஸ்மில்லாஹ்வை(த் தொழுகையில்) உரத்து ஓதாலாகாது என்போரின் வாதம் (2) 4.14: அத்தியாயங்களின் துவக்கம் “பிஸ்மில்லாஹ்” குறித்த வாதம் (1) 4.15: தக்பீருக்குப் பின்னும் சஜ்தாவிலும் கைகளை வைக்கும் முறை (1) 4.16: தொழுகையில் அத்தஹிய்யாத் ஓதுவது (4) 4.17: இறுதி அத்தஹியாத்திற்குப் பின் ஸலவாத் கூறுதல் (4) 4.18: ஸமி அல்லாஹு லிமன் ஹமிதஹ், ரப்பனா ல(க்)கல் ஹம்து, ஆமீன் ஆகியவை கூறுவது (5) 4.19: இமாமை மஃமூம் பின்தொடர்வது (5) 4.20: இமாமை முந்துவதற்குத் தடை (4) 4.21: இமாமைப் பின்பற்றுவதில் சட்ட மாற்றம் (10) 4.22: இமாம் வருவதற்குத் தாமதமானால்… (2) 4.23: தொழுகையில் இமாமுக்கு ஏதாவது உணர்த்த விரும்பினால்… (1) 4.24: தொழுகையை முழுமையாக உள்ளச்சத்துடன் தொழல் (4) 4.25: தொழுகையில் இமாமை முந்தாமல் இருத்தல் (7) 4.26: தொழும்போது வானத்தை அண்ணாந்து பார்ப்பதற்குத் தடை (2) 4.27: தொழுகையில் ஒழுங்குகள் (3) 4.28: தொழுகையில் வரிசைகளைப் பேணுதல் (11) 4.29: ஆண்களுக்குப் பின்னால் தொழும் பெண்கள் தலை உயர்த்தும் முறை (1) 4.30: பெண்கள் பள்ளிவாசலுக்குச் செல்தல், நறுமணம் பூசுதல் (11) 4.31: தொழுகையில் அச்சநிலையில் குர்ஆன் ஓதும் முறை (2) 4.32: குர்ஆன் ஓதப்படும்போது செவிதாழ்த்திக் கேட்க வேண்டும். (2) 4.33: ஸுப்ஹுத் தொழுகையில் உரத்துக் குர்ஆன் ஓதுதல் (4) 4.34: லுஹ்ரு, அஸ்ருத் தொழுகைகளில் குர்ஆன் ஓதுதல் (8) 4.35: ஸுப்ஹுத் தொழுகையில் குர்ஆன் ஓதுதல் (13) 4.36: இஷாத் தொழுகையில் குர்ஆன் ஓதுவது (8) 4.37: தொழுகையைச் சுருக்கி, நிறைவுறத் தொழுவிப்பதற்கான கட்டளை (11) 4.38: தொழுகையின் நிலைகளை நிதானமாக, சுருக்கி, நிறைவாகச் செய்வது (4) 4.39: தொழுகையில் இமாமை முந்தி விடாமலிருத்தல் (5) 4.40: ருகூஉவிலிருந்து தலையை உயர்த்திய பின் ஓத வேண்டியவை (5) 4.41: ருகூஉவிலும் ஸஜ்தாவிலும் குர்ஆன் ஓதுவதற்குத் தடை (6) 4.42: ருகூஉவிலும் ஸஜ்தாவிலும் ஓத வேண்டியவை (9) 4.44: ஸஜ்தாவின் போது தரையில் படவேண்டிய உறுப்புகள் (7) 4.45: சீராக ஸஜ்தா செய்தல் (2) 4.46: தொழுகை முறைத் தொகுப்பு (5) 4.47: தனித்துத் தொழுபவர் தடுப்பு ஒன்றை வைத்துக் கொள்வது (13) 4.48: தொழுகையில் குறுக்கே செல்பவரைத் தடுப்பது (4) 4.49: தொழுபவர், தடுப்புக்கு நெருக்கமாக நிற்க வேண்டும் (3) 4.50: தொழுபவருக்கான குறுக்குத் தடுப்பின் அளவு (2) 4.51: தொழுபவருக்குக் குறுக்கே படுத்திருப்பது (8) 4.52: ஒரே ஆடை அணிந்து தொழும் முறை (9) 5.01: பூமியில் எழுப்பப்பட்ட முதலாவது இறையாலயம் (8) 5.02: மஸ்ஜிதுந் நபவீ கட்டப்பட்ட வரலாறு (2) 5.03: தொழுகைத் திசை(கிப்லா) கஅபாப் பள்ளிக்கு மாற்றம் (4) 5.04: மண்ணறைகளில் செய்யக்கூடாதவை (6) 5.05: மஸ்ஜிதுகள் கட்டுவதன் சிறப்பும் அதற்கான ஆர்வமூட்டலும் (2) 5.06: ருகூஉவில் உள்ளங்கைகளை வைப்பதற்கான சட்டத் திருத்தம் (5) 5.07: இரு குதிகால்கள்மீது (தொழுகை அமர்வில்) அமர அனுமதி (1) 5.08: தொழுகையில் பேசிக் கொள்ள இருந்த அனுமதி நீக்கம் (6) 5.09: தொழுகைக்கு இடையில் செய்ய அனுமதிக்கப்பட்டவை (2) 5.10: குழந்தைகளைச் சுமந்துகொண்டு தொழுவதற்கு அனுமதி (3) 5.11: தொழுகையின்போது ஓரிரு அடிகள் நடக்க அனுமதி (1) 5.12: இடுப்பில் கையூன்றிக் கொண்டு தொழுவது வெறுக்கத் தக்கது (1) 5.13: தொழும்போது மண்ணைச் சமப்படுத்துதல் வெறுக்கத் தக்கது (3) 5.14: பள்ளிவாசலில் எச்சில் துப்பத் தடை (10) 5.15: காலணி அணிந்து கொண்டு தொழுவதற்கு அனுமதி (1) 5.16: கவனத்தை ஈர்க்கும் ஆடை அணிந்து தொழுதல் வெறுக்கப்பட்டது (3) 5.17: சிறுநீர்/மலம் அடக்குதல், உணவு காக்க வைத்தல் நிலையில் தொழுதல் (4) 5.18: துர்நாற்றத்துடன் பள்ளிச்செல்லுதலும் அவரை வெளியேற்றலும் (10) 5.19: பள்ளிவாசலினுள் காணாமற்போன பொருளைத் தேடத் தடை (3) 5.20: தொழுகையில் ஏற்படும் மறதிக்குப் பரிகாரம் (17) 5.21: ஸஜ்தா திலாவத் (9) 5.22: அத்தஹிய்யாத்தில் அமரும் முறை (5) 5.23: தொழுகையை நிறைவு செய்யும்போது ஸலாம் கூறும் முறை (3) 5.24: தொழுத பின்னர் திக்ரு (3) 5.25: மண்ணறை வேதனையிலிருந்து பாதுகாப்புக் கோருதல் (3) 5.26: தொழுகையில் பாதுகாப்புக் கோரப்பட வேண்டியவை (8) 5.27: தொழுகைக்குப்பின் திக்ரு செய்தல் (9) 5.28: தொடக்கத் தக்பீருக்குப் பின் கூறவேண்டியவை (4) 5.29: தொழுகையில் கலந்துகொள்ள செல்லும் முறை (5) 5.30: தொழுகைக்காக மக்கள் எப்போது எழுந்து நிற்க வேண்டும்? (5) 5.31: கூட்டுத்தொழுகையை அடைந்துகொள்ள நிபந்தனை (5) 5.32: ஐவேளைத் தொழுகை நேரங்கள் (13) 5.33: கடுங்கோடையில் ஜமாஅத் தொழுகை (8) 5.34: கடுங்கோடையில்லா சமயத்தில் ஜமாஅத் தொழுகை (4) 5.35: அஸ்ருத் தொழுகையின் நேரம் (7) 5.36: அஸ்ருத் தொழுகையைத் தவறவிட்டால்.. (3) 5.37: அஸ்ரு நடுத்தொழுகை என்போரின் சான்று (6) 5.38: ஸுப்ஹு, அஸ்ருத் தொழுகைகளின் சிறப்புகள் (6) 5.39: மஃக்ரிபுத் தொழுகையின் ஆரம்ப நேரம் (2) 5.40: இஷாத் தொழுகையின் நேரமும் அதைத் தாமதமாகத் தொழுவதும் (12) 5.41: ஸுப்ஹுத் தொழுகையின் நேரம் மற்றும் ஓதப்படும் (குர்ஆன் வசனங்களின்) அளவு (7) 5.42: தொழுகைக்கு உரிய நேரத்தைத் தாமதப்படுத்துதல் (7) 5.43: கூட்டுத் தொழுகையின் சிறப்பும் அதைத் தவற விடுவது பற்றிய கண்டனமும் (10) 5.44: தொழுகை அழைப்பைச் செவியுறுபவர் பள்ளிவாசலுக்குச் செல்வது கட்டாயமாகும் (1) 5.45: கூட்டுத் தொழுகை என்பது நேர்வழியைச் சார்ந்தது (2) 5.46: பாங்கு கூறிய பின்னர் பள்ளிவாசலிலிருந்து வெளியேறத் தடை (2) 5.47: இஷா மற்றும் ஸுப்ஹு கூட்டாகத் தொழுவதன் சிறப்பு (4) 5.48: கூட்டுத் தொழுகையைத் தவிர்ப்பதற்கான அனுமதி (1) 5.49: நஃபில் தொழுகைகளை ஜமாஅத்தாகத் தொழுதல் (6) 5.50: கூட்டுத் தொழுகைக்காகக் காத்திருப்பதன் சிறப்பு (5) 5.51: பள்ளிவாசலுக்கு நடந்து செல்வதன் சிறப்பு (6) 5.52: தொழுகைக்கு நடந்து செல்பவருக்குக் கிடைக்கும் பலன்கள் (4) 5.53: உதயம்வரை தொழுத இடத்தில் அமர்ந்திருப்பதன் சிறப்பு (3) 5.54: தொழுகைக்குத் தலைமையேற்க அதிகத் தகுதியுடையவர் (5) 5.55: எல்லாத் தொழுகைகளிலும் குனூத் ஓதும் காலகட்டம் (15) 5.56: விட்டுப்போனத் தொழுகைகளைத் தொழுதல் (8) 6.01: பயணிகளின் தொழுகை; சுருக்கித் தொழுதல் (20) 6.02: மழையின்போது இருப்பிடங்களில் தொழுதுகொள்ளலாம் (4) 6.03: நஃபில் தொழுகைகளை வாகனத்தில் செல்பவர் தொழலாம் (10) 6.04: பயணத்தில் இரு தொழுகைகளைச் சேர்த்து தொழலாம் (7) 6.05: உள்ளூரில் இருக்கும்போது இரு தொழுகைகளை இணைத்து தொழுதல் (10) 6.06: தொழுது முடித்தபின் வலம், இடம் திரும்பி அமர்தல் (3) 6.07: இமாமுக்கு வலப்பக்க வரிசையில் நிற்பது விரும்பத்தக்கது (1) 6.08: இகாமத் கூறத் தொடங்கி விட்டால் நஃபில் தொழுவது வெறுக்கத்தக்கது (5) 6.09: பள்ளிவாசலுக்குள் நுழையும்போது கூறவேண்டிய துஆ (1) 6.10: பள்ளிக் காணிக்கை தொழுகை தொடர்பாக (4) 6.11: பயணத்திலிருந்து திரும்பியவர் இரண்டு ரக்அத் தொழுதல் (3) 6.12: முற்பகல் (ளுஹா) தொழுகை எண்ணிக்கை (11) 6.13: ஃபஜ்ருடைய இரு ரக்அத் சுன்னத் தொழுகை (15) 6.14: சுன்னத் தொழுகைகளின் சிறப்பும் எண்ணிக்கைகளும்! (3) 6.15: நஃபில் தொழுகைகளைத் தொழும் முறைகள் (14) 6.16: இரவுத் தொழுகை (18) 6.17: இரவுத் தொழுகையின் ஒருங்கிணைந்த விபரங்கள் (4) 6.18: அவ்வாபீன் தொழுகை (2) 6.19: இரவுத் தொழுகை, வித்ருத் தொழுகை ரக்அத்கள் (16) 6.20: வித்ருத் தொழுகை நேரம் (2) 6.21: தொழுகையில் மிகச் சிறந்தது (2) 6.22: இரவில் பிரார்த்தனை ஏற்கப்படும் நேரம் (2) 6.23: இரவின் இறுதி நேரத்தில் பிரார்த்தனை (5) 6.24: ‘கியாமு ரமளான்(தராவீஹ்) தொழ ஆர்வமூட்டல் (8) 6.25: இரவுத் தொழுகையில் பிரார்த்திப்பதும் நின்று வணங்குவதும் (17) 6.26: இரவுத் தொழுகையில் நீண்ட நேரம் (நின்று) குர்ஆன் ஓதுவது (2) 6.27: தொழாமல் விடியும்வரை உறங்குபவர் (3) 6.28: கூடுதலான நஃபில் தொழுகைகள் (6) 6.29: நற்செயல்களை வழக்கமாகச் செய்வதன் சிறப்பு. (4) 6.30: இபாதத் தூக்கத்தால் தடைப்பட்டால்… (5) 6.31: குர்ஆனின் தொடர்பைப் பற்றிப் பிடித்துக்கொள்ளக் கட்டளை (7) 6.32: குர்ஆனை இனிய குரலில் ஓதுவது விரும்பத் தக்கதாகும் (5) 6.33: மக்கத்து வெற்றி நாளில்… (2) 6.34: குர்ஆனை ஓதுவதால் இறங்கும் அமைதி (3) 6.35: குர்ஆனை மனனமிட்டவரின் சிறப்பு (1) 6.36: குர்ஆனை ஓதுகின்ற இருவகையினரின் தனிச் சிறப்புகள் (1) 6.37: குர்ஆனில் தேர்ந்த மேன்மக்கள் முன்னிலையில் குர்ஆன் ஓதுவது (2) 6.38: குர்ஆனைச் செவியேற்பதன் சிறப்பு (3) 6.39: குர்ஆனைக் கற்பது மற்றும் ஓதுவதன் சிறப்பு (2) 6.40: குர்ஆன் ஓதுவதன் சிறப்பும் அல்பகரா அத்தியாயத்தின் சிறப்பும் (2) 6.41: ஸூரத்துல் ஃபாத்திஹா, அல்பகரா அத்தியாயத்தின் இறுதி வசனங்களின் சிறப்பு (2) 6.42: ஸூரத்துல் கஹ்ஃப் மற்றும் ஆயத்துல் குர்ஸீ ஆகியவற்றின் சிறப்பு (3) 6.43: குல் ஹுவல்லாஹு அஹது (அத்தியாயத்தை) ஓதுவதன் சிறப்பு (4) 6.44: அல்முஅவ்விதத்தைன் (பாதுகாவல்) அத்தியாயங்களை ஓதுவதன் சிறப்பு (2) 6.45: குர்ஆனின்படி தாமும் செயல்பட்டுப் பிறருக்கும் அதைக் கற்பிப்பவரின் சிறப்பு (4) 6.46: குர்ஆன் ஏழு (வட்டார) மொழிநடையில் அருளப்பெற்றுள்ளது என்பதன் விளக்கம் (4) 6.47: குர்ஆனை வேகமாக ஓதுவதைத் தவிர்த்தல் (4) 6.48: குர்ஆன் ஓதும் முறைகளுள் சில (4) 6.49: தொழத் தடுக்கப்பட்ட நேரங்கள். (8) 6.50: அம்ரு பின் அபஸா (ரலி) இஸ்லாத்தை ஏற்றமை (1) 6.51: சூரியன் உதிக்கும் நேரத்தையும் மறையும் நேரத்தையும் தேர்ந்தெடுத்துத் தொழாதீர்கள்! (2) 6.52: நபி (ஸல்) அஸ்ருக்குப் பிறகு தொழுதுவந்த இரண்டு ரக்அத்கள் எவை? (5) 6.53: மஃக்ரிப் தொழுகைக்கு முன் இரண்டு ரக்அத்கள் தொழுவது விரும்பத் தக்கது (2) 6.54: பாங்குக்கும் இகாமத்துக்கும் இடையிலுள்ள தொழுகை (1) 6.55: அச்சச் சூழல் தொழுகை (8) 7.01: வெள்ளிக்கிழமையில் குளிப்பது வயதுவந்த ஒவ்வோர் ஆண் மீதும் கடமை (7) 7.02: வெள்ளிக்கிழமையில் பல் துலக்குவதும் நறுமணம் பூசுவதும் (4) 7.03: வெள்ளிக்கிழமை சொற்பொழிவின்போது அமைதி காத்தல் (2) 7.04: வெள்ளிக்கிழமையில் (பிரார்த்தனை ஏற்கப்படுவதற்கு) உள்ள ஒரு நேரம் (4) 7.05: வெள்ளிக்கிழமையின் சிறப்பு (2) 7.06: இந்தச் சமுதாயத்தின் (சிறப்பு வழிபாட்டு) நாள் வெள்ளிக்கிழமை (4) 7.07: வெள்ளிக்கிழமை (தொழுகைக்கு) முன்னதாகச் செல்வதன் சிறப்பு (2) 7.08: மௌனமாக (வெள்ளிக்கிழமை) உரையைச் செவியேற்பவரின் சிறப்பு (2) 7.09: சூரியன் (உச்சியிலிருந்து) சாயும்போது ஜும்ஆத் தொழுவது (5) 7.10: தொழுகையின் உரைகளும் இடையே (இமாம்) அமர்வதும் (3) 7.11: வியாபாரத்தையோ வேடிக்கையையோ கண்டால் (62:11ஆவது) இறைவசனம் (4) 7.12: ஜும்ஆத் தொழுகையை(த் தொழாமல்) கைவிடுவதற்குக் கண்டனம் (1) 7.13: (ஜும்ஆத்) தொழுகையையும் (குத்பா) உரையையும் சுருக்கமாக அமைத்தல் (11) 7.14: இமாம் (ஜும்ஆ) உரை நிகழ்த்தும்போது காணிக்கை தொழுகை (6) 7.15: பொது போதனைக்கு நடுவில் தனி போதனை (1) 7.16: ஜும்ஆத் தொழுகையில் ஓத வேண்டியவை (3) 7.17: வெள்ளிக்கிழமை (ஃபஜ்ருத் தொழுகையில்) ஓத வேண்டியவை (3) 7.18: ஜும்ஆவுக்குப் பின் தொழ வேண்டியவை (16) 8.01: பெருநாள் திடலில் பெண்கள் பங்கேற்பது (3) 8.02: பெருநாள் திடலில் தொழுகைக்கு முன்போ பின்போ தொழக் கூடாது (1) 8.03: இரு பெருநாள் தொழுகைகளில் ஓதக் கூடியவை (2) 8.04: பெருநாட்களில் பாவமில்லா விளையாட்டுகளில் ஈடுபட அனுமதி (7) 9.00: இமாம் (மழைத் தொழுகையில்) மேல்துண்டை மாற்றிப் போட்டுக் கொள்வது (4) 9.01: மழைவேண்டிப் பிரார்த்திக்கும்போது இருகைகளை உயர்த்துதல் (3) 9.02: மழைவேண்டிப் பிரார்த்தித்தல் (2) 9.03: கடும் காற்றையும் மேகத்தையும் காணும்போதும்.. மழை பெய்யும்போதும்.. (3) 9.04: கீழைக் காற்று (’ஸபா’) மற்றும் மேலைக் காற்று (’தபூர்’) பற்றிய குறிப்புகள் (1) 10.01: சூரிய கிரகணத் தொழுகை (7) 10.02: கிரகணத் தொழுகையின்போது மண்ணறை வேதனை பற்றி நினைவு கூர்வது (1) 10.03: கிரகணத் தொழுகையின்போது சொர்க்கமும் நரகமும் (6) 10.04: கிரகணத் தொழுகையில் எட்டு ருகூஉகளும் நான்கு ஸஜ்தாக்களும்.. (2) 10.05: கிரகணத் தொழுகைக்காக, “அஸ்ஸலாத்து ஜாமிஆ” அறிவிப்பு.. (8) 11.01: மரணத் தருவாயில் ‘லா இலாஹ இல்லல்லாஹ்’ (எனும் கலிமா)வை நினைவூட்டுதல் (2) 11.02: துன்பம் நேரும்போது வேண்டக்கூடிய பிரார்த்தனை (2) 11.03: நோயாளியிடமும் மரணத் தருவாயில் இருப்பவரிடமும் சொல்ல வேண்டியவை (1) 11.04: உயிர் பிரிந்தவுடன் இறந்தவருக்குச் செய்ய வேண்டியவை (1) 11.05: இறப்பவரின் பார்வை தனது உயிரை நோக்கி நிலைகுத்தி நிற்றல் (1) 11.06: இறந்தவருக்காக அழுவது (3) 11.07: நோயாளிகளைச் சந்தித்து உடல்நலம் விசாரித்தல் (1) 11.08: பொறுமை என்பது துன்பத்தின் முதல் நிலையில் கடைப்பிடிப்பதாகும் (2) 11.09: இறந்தவருக்காக ஒப்பாரி வைத்து அழுதால்.. (14) 11.10: ஒப்பாரிக்குக் கடுமையான கண்டனம் (5) 11.11: ஜனாஸாவின் இறுதி ஊர்வலத்தைப் பின்தொடர்ந்து செல்வதற்குப் பெண்களுக்குத் தடை (2) 11.12: மையித்தைக் குளிப்பாட்டுதல் (4) 11.13: மய்யித்திற்கு ‘கஃபன்’ உடை அணிவித்தல் (4) 11.14: மய்யித்தை மூடிவைத்தல் (1) 11.15: மய்யித்திற்கு அழகிய முறையில் கஃபன் அணிவித்தல் (1) 11.16: இறந்தவர் உடலைத் துரிதமாக அடக்கம் செய்தல் (2) 11.17: ஜனாஸாத் தொழுகையின் மற்றும் ஜனாஸாவைப் பின்தொடர்வதன் சிறப்பு (6) 11.18: மய்யித்துக்காக நூறு பேர் தொழுது செய்யும் பரிந்துரை ஏற்கப்படும் (1) 11.19: மய்யித்துக்காக நாற்பது பேர் பரிந்துரை (1) 11.20: இறந்தவர் குறித்துப் புகழ்ந்து, அல்லது இகழ்ந்து பேசப்படுதல் (1) 11.21: ஓய்வு பெற்றவரும் ஓய்வளித்தவரும் (1) 11.22: ஜனாஸாத் தொழுகையில் சொல்ல வேண்டிய தக்பீர்கள் (6) 11.23: மண்ணறை அருகில் (ஜனாஸாத் தொழுகை) தொழுவது (4) 11.24: ஜனாஸாவுக்காக எழுந்து நிற்பது (7) 11.25: ஜனாஸாவுக்காக எழுந்து நிற்கும் வழக்கம் மாற்றப்பட்டது (3) 11.26: இறந்தவருக்காக ஜனாஸாத் தொழுகையில் செய்யும் பிரார்த்தனை (2) 11.27: ஜனாஸாத் தொழுகையின்போது இமாம் எந்த இடத்தில் நிற்க வேண்டும்? (2) 11.28: ஜனாஸாத் தொழுகை தொழுதுவிட்டு வாகனத்தில் ஏறித் திரும்பிச் செல்லலாம் (2) 11.29: உட்குழியும் மையித்தின் மேல் செங்கற்களை அடுக்குவதும் (1) 11.30: கப்றுக் குழியினுள் போர்வையை விரித்து (மையித்தை) வைப்பது (1) 11.31: கப்றைத் தரை மட்டமாக்க உத்தரவு (2) 11.32: கப்றுகளைக் காரையால் பூசுவதோ அதன் மீது கட்டடம் எழுப்புவதோ கூடாது (2) 11.33: கப்றின்மீது அமர்வதும் அதன் மீது தொழுவதும் தடுக்கப்பட்டவை (3) 11.34: பள்ளிவாசலில் ஜனாஸாத் தொழுகை நடத்துவது (3) 11.35: மையவாடிக்குள் கூற வேண்டியதும் பிரார்த்திப்பதும் (3) 11.36: நபி (ஸல்), தம் தாயாரின் கப்றைக் காண்பதற்கு இறைவனிடம் அனுமதி கோரியது (3) 11.37: தற்கொலை செய்தவருக்கு, (ஜனாஸா) தொழுகையைக் கைவிட்டது (1) 12.00: பல வகை வள வரிகள் (5) 12.01: பத்து சதவீத ஸகாத்; அல்லது ஐந்து சதவீத ஸகாத் (1) 12.02: ஒரு முஸ்லிம் மீது அவர்தம் அடிமைக்காகவும் குதிரைக்காகவும் ஸகாத் கடமை இல்லை (3) 12.03: ஸகாத்தைச் சமர்ப்பிப்பதும் ஸகாத் கொடுக்க மறுப்பதும் (1) 12.04: பெருநாள் தர்மமாகப் பேரீச்சம் பழம், பார்லி (10) 12.05: பெருநாள் தொழுகைக்கு முன்பே பெருநாள் தர்மத்தை வழங்க கட்டளை (2) 12.06: ஸகாத் வழங்க மறுப்பது குற்றமாகும் (4) 12.07: ஸகாத் வசூலிப்பவர்களிடம் கனிவுடன் நடந்துகொள்வது (1) 12.08: ஸகாத் வழங்காதவருக்கான கடும் தண்டனை (2) 12.09: தர்மம் செய்வதற்கு ஆர்வமூட்டல் (2) 12.10: செல்வத்தைச் சேமித்தோர் பற்றிய கண்டனம் (2) 12.11: தர்மம்: ஆர்வமூட்டலும் நற்கூலி உண்டு என்ற நற்செய்தியும் (2) 12.12: செலவழிப்பதன் சிறப்பும் வழங்காதவனின் பாவமும் (4) 12.13: தமக்கும், குடும்பத்தாருக்கும், உறவினர்களுக்குமாக செலவிடுதல் (1) 12.14: இணை வைக்கும் உறவுகளுக்குச் செலவழிப்பதன் சிறப்பு (8) 12.15: இறந்தவருக்காகத் தர்மம் செய்தல் (1) 12.16: எல்லா நல்லறமும் ஸதகா எனப்படும் (5) 12.17: அறவழியில் செலவு செய்பவரும் செய்யாதவரும் (1) 12.18: தர்மம் செய்வதற்கு ஆர்வமூட்டல் (5) 12.19: தர்மம் (இறைவனிடம்) ஏற்கப்படுவதும் வளர்வதும் (3) 12.20: இன் சொல்லையேனும் தர்மம் செய்து நரகத்திலிருந்து பாதுகாப்பு பெறல் (5) 12.21: தர்மத்தின் அளவில் குறை காண தடை (1) 12.22: பாலுக்காக இரவல் வழங்கப்படும் கால்நடைகளின் சிறப்பு (2) 12.23: வள்ளலுக்கும் கஞ்சனுக்குமான உதாரணம் (3) 12.24: உரியவருக்குத் தர்மம் சேரவில்லையேனும் பலன் (1) 12.25: உரிமையாளரின் அனுமதியுடன் தர்மம் செய்தவருக்கும் பலன் (3) 12.26: ஓர் அடிமை தன் உரிமையாளரின் செல்வத்திலிருந்து (அறவழியில்) செலவழித்தல் (3) 12.27: தர்மத்தையும் இதர நற்செயல்களையும் இணைத்துச் செய்தவர் (3) 12.28: அறவழியில் தாராளமாக செலவிடலும் கணக்கு பார்ப்பது விரும்பத்தக்கதல்ல என்பதும் (3) 12.29: சிறிய அளவு தர்மம் (1) 12.30: இரகசியமாகத் தர்மம் செய்வதன் சிறப்பு (1) 12.31: மிகச் சிறந்த தர்மம் (2) 12.32: சிறந்த கை (4) 12.33: யாசிப்பதற்குத் தடை (3) 12.34: ஏழை என்பவன், அடிப்படைத் தேவைகளுக்குப் போதிய பொருளாதாரம் இல்லாதவன் (2) 12.35: மக்களிடம் யாசிப்பது வெறுக்கப்பட்டதாகும் (6) 12.36: யாருக்கு யாசிக்க அனுமதி? (1) 12.37: எதிர்பார்ப்பு இல்லாமல், யாசிக்காமல் வாழ்பவருக்கு வழங்கப்பட்டால் பெற்றுக்கொள்ளலாம் (4) 12.38: உலகாதாயத்தின் மீது பேராசை கொள்வது விரும்பத் தக்கதன்று (2) 12.39: இரு ஓடைகள் இருந்தாலும் மூன்றாவது ஓடையை எதிர்பார்த்தல் (4) 12.40: வாழ்க்கை வசதிகள் அதிகமாக இருப்பது செல்வமன்று (1) 12.41: இவ்வுலகத்தின் கவர்ச்சி குறித்து அஞ்சுதல் (3) 12.42: சுயமரியாதை மற்றும் பொறுமையின் சிறப்பு (1) 12.43: போதுமான வாழ்வாதாரமும் போதுமென்ற மனமும் (4) 12.44: அருவருப்பாகப் பேசி, கடுஞ் சொற்களால் கேட்டவருக்கும் தானம் வழங்குவது (4) 12.45: இறைநம்பிக்கை, (வறுமையால்) கேள்விக்குள்ளாக்கப்படுபவருக்கு உதவுதல் (1) 12.46: இஸ்லாத்தை ஏற்றவர்களுக்கு வழங்கலும் இறை நம்பிக்கை வலுவானவர் பொறுமை கொள்ளலும் (8) 12.47: காரிஜிய்யாக்களும் அவர்களின் தன்மைகளும் (10) 12.48: காரிஜிய்யாக்களைக் கொல்லுவதற்கு ஊக்கப்படுத்துதல் (4) 12.49: காரிஜிய்யாக்கள் படைப்பினங்களிலேயே தீயவர்கள் ஆவர் (3) 12.50: தூதரின் குடும்பத்தார் ஸகாத் பெறுவதற்குத் தடை (6) 12.51: நபி (ஸல்) குடும்பத்தாரைத் தர்மப் பொருட்கள் வசூலிக்கப் பயன்படுத்தலாகாது (1) 2.26: அசுத்தமான கையைப் பாத்திரத்தில் நுழைத்தல் (2) 2.25: ஒருநாள் தொழுகைகளை ஒரு உளூவில் தொழ அனுமதி (1) 2.24: காலுறையில் மஸஹு செய்து தொழுவதற்கான வரம்பு (1) 2.23: முன் தலை மற்றும் தலைப்பாகை மீது மஸஹு செய்தல் (4) 2.22: காலுறையில் மஸஹு செய்தல் (9) 2.21: தண்ணீரால் கழுவித் துப்புரவு செய்தல் (3) 2.20: மலம் கழிப்பதற்குத் தடையுள்ள இடங்கள் (1) 2.19: செயல்களை வலப் புறமிருந்து தொடங்குதல். (2) 2.18: வலக் கரத்தால் கழுவத் தடையானவை (3) 2.17: கழிப்பிடத்தில் துப்புரவு செய்தல் (7) 2.16: இயற்கை மரபுகள் (8) 2.15: பல் துலக்குதல் (7) 2.14: சிரமகாலங்களிலும் முழுமையாக ஒளு செய்வதன் சிறப்பு (1) 2.13: உளூவில் தண்ணீர் படும் இடங்களில் ஒளி படர்தல் (1) 2.12: உளூவில் உறுப்புகளை அதிகப்படுத்திக் கழுவுதல் (6) 2.11: உளூ செய்த நீரோடு வெளியேறும் பாவங்கள் (2) 2.10: உளூவில் உறுப்புகள் முழுவதும் கழுவுதல் (1) 2.09: இரு கால்களையும் முழுமையாகக் கழுவுதல் கட்டாயம் (6) 2.08: சுத்தம் செய்யும் போது ஒற்றைப்படையாக செய்தல் (5) 2.07: நபி (ஸல்) அவர்கள் செய்த அங்கத் தூய்மை (உளூ) (2) 2.06: அங்கத் தூய்மை (உளூ) செய்தபிறகு ஓதப்படும் பிரார்த்தனை (1) 2.05: சிறு பாவங்களுக்கான பரிகாரங்கள் (3) 2.04: அங்கத்தூய்மையின் சிறப்பும் அதன் பின் தொழுவதன் சிறப்பும் (9) 2.03: அங்கத் தூய்மை (உளூ) செய்முறையும் அதை நிறைவாகச் செய்வதும் (2) 2.02: தொழுகைக்குக் கட்டாயமான (அங்கத்) தூய்மை (2) 2.01: அங்கத்தூய்மை(உளூ)யின் சிறப்பு (1) 1.96: மறுமையில் ஆதம்(அலை) அவர்களுக்கு இடப்படும் கட்டளை (1) 1.95: சொர்க்கவாசிகளில் பாதிபேர் (3) 1.94: விசாரணையோ வேதனையோ இன்றி சொர்க்கம் செல்வோர் (7) 1.93: நட்பு கொள்ளத் தக்கவர்களும் தகாதவர்களும் (1) 1.92: இறைமறுப்பாளரின் நற்செயல்கள் பலனளிக்காது (1) 1.91: நரகவாசிகளிலேயே மிகக்குறைவான வேதனை அனுபவிப்பவர். (4) 1.90: அபூதாலிபுக்காக நபி(ஸல்) அவர்களின் பரிந்துரை (3) 1.89: நெருங்கிய உறவினருக்கு எச்சரிக்கை செய்தல் (5) 1.88: இறைமறுப்பாளருக்கு எந்தப் பரிந்துரையும் பலனளிக்காது (1) 1.87: தம் சமுதாயத்தார் மீது நபி(ஸல்) அவர்களுக்குள்ள பரிவு (1) 1.86: நபி(ஸல்) அவர்களின் பரிந்துரைப் பிரார்த்தனை! (8) 1.85: சொர்க்கத்திற்காகப் பரிந்துரைக்கும் முதல் மனிதர் (4) 1.84: சொர்க்கவாசிகளுள் ஆகக் குறைந்த பதவி (14) 1.83: இறுதியானவராக வெளியேறும் நரகவாசி. (3) 1.82: ஷஃபாஅத்(பரிந்துரை) செய்யப்படுபவர்கள் (2) 1.81: இறைவனைக் காணும் வழிமுறை (3) 1.80: இறைவனைக் காண்பதற்கான சான்று (2) 1.79: அல்லாஹ்வின் பார்வை பற்றிய விளக்கம் (2) 1.78: மிஃராஜின் போது நபி(ஸல்) கண்டது பற்றிய விளக்கம் (2) 1.77: நபி(ஸல்) அவர்கள் இறைவனைப் பார்த்தார்களா? என்பது பற்றிய விளக்கம் (5) 1.76: சித்ரத்துல் முந்தஹா(இலந்தை மரம்) பற்றிய குறிப்பு! (4) 1.75: ஈஸா(அலை) மற்றும் தஜ்ஜால் பற்றிய குறிப்புகள் (6) 1.74: விண்ணுலகப் பயணமும் தொழுகை கடமையாக்கப்படலும் (12) 1.73: வேத வெளிப்பாடு (வஹீ) தொடங்குதல் (3) 1.72: இறை நம்பிக்கை ஏற்கப்படாத காலகட்டம் (5) 1.71: ஈசா(அலை) இஸ்லாமிய நெறிப்படி நீதி வழங்குதல் (6) 1.70: தூதுத்துவம் உலக மக்கள் அனைவருக்கும் பொதுவானது (3) 1.69: இறைச்சான்றுகள் மூலம் மன அமைதி (1) 1.68: ஒருவரை இறைநம்பிக்கையாளர் என்று முடிவு செய்தல் (2) 1.67: அச்சநேரத்தில் இறைநம்பிக்கையாளர் நிலை (1) 1.66: இறுதிக் காலத்தில் இறை நம்பிக்கை (அற்றுப்) போய் விடுவது. (2) 1.65: இஸ்லாத்தின் மீளெழுச்சி. (3) 1.64: உள்ளங்களில் குழப்பங்கள் தோன்றுவது. (2) 1.63: குடிமக்களைச் சுரண்டும் ஆட்சியாளன் நரகத்திற்குரியவன் ஆவான். (3) 1.62: செல்வத்தைக் காக்கப் போராடியவர் மற்றும் பிறர் செல்வத்தைப் பறிக்க முனைந்தவர் (2) 1.61: மாற்றாரின் பொருளைக் கைப்பற்றுபவர் நிலை. (5) 1.60: இறைநம்பிக்கையில் தடுமாற்றம் ஏற்பட்டால்.. (8) 1.59: நல்ல-தீய எண்ணங்களுக்கான கூலி (5) 1.58: தீய எண்ணங்களைச் செயல்படுத்தாமல் இருத்தல் (2) 1.57: தாங்க முடியாத சுமை? (2) 1.56: இறை நம்பிக்கையின் வாய்மையும் தூய்மையும் (1) 1.55: இறைமறுப்பாளராக இருந்தபோது செய்த நல்லறங்கள் (3) 1.54: முன் செய்த பாவங்கள் (2) 1.53: அறியாமை காலத்தில் செய்த தீமைகள் (2) 1.52: இறைநம்பிக்கையாளரின் அச்சம் (1) 1.51: குழப்பங்கள் தோன்றுவதற்கு முன் நற்செயல் புரிய விரைதல் (1) 1.50: மறுமை நெருங்கும் வேளையில் வீசும் காற்று (1) 1.49: ஹிஜ்ரத்தில் தற்கொலை செய்து கொண்டவரின் நிலை (1) 1.48: கையாடல் செய்பவரும் இறைநம்பிக்கையாளரும் (2) 1.47: தற்கொலை செய்பவரும் கட்டுப்பட்டு வாழ்பவரும் (7) 1.46: மூன்று பெரும் தவறான செயல்கள் (4) 1.45: புறங்கூறுவது வன்மையாகத் தடை செய்யப் பட்டது (3) 1.44: துக்க வேளைகளில் தடை செய்யப்பட்ட செய்கைகள்! (3) 1.43: முஸ்லிம்களை வஞ்சித்தவர் நிலை! (2) 1.42: முஸ்லிம்களுக்கு எதிராக ஆயுதம் ஏந்தியவர் நிலை! (3) 1.41: “லா இலாஹ இல்லல்லாஹ்” கூறியவரைக் கொல்லத்தடை! (4) 1.40: இணைவைத்தலின் விளைவுகள் (5) 1.39: தற்பெருமை (3) 1.38: பெரும் பாவங்கள் (5) 1.37: பாவங்களில் மிகவும் அருவருப்பானது (2) 1.36: நற்செயல்களில் சிறந்தது (6) 1.35: தொழுகையை விடுதலும் குஃப்ரும் (3) 1.34: இறைநம்பிக்கை குறைவும் குஃப்ர் எனும் சொல்லும் (1) 1.33: அன்ஸாரிகளையும் அலி(ரலி)யையும் நேசித்தல் (6) 1.32: மழையும் இறைமறுப்பும் (4) 1.31: ஓடிப்போன அடிமை (3) 1.30: இறைமறுப்பின் அடையாளங்கள் (1) 1.29: இறைமறுப்பாளர்களாய் மாறுதல் (2) 1.28: முஸ்லிமோடு போரிடுதல் (1) 1.27: தந்தையை வெறுப்பவன் நிலை (4) 1.26: முஸ்லிமை நோக்கி காஃபிர் என அழைத்தல் (2) 1.25: நயவஞ்சகனின் குணங்கள். (3) 1.24: இறைநம்பிக்கையில் குறைவு ஏற்படல் (2) 1.23: மார்க்கம் என்பதே நலன் நாடுவதுதான். (4) 1.22: இறைநம்பிக்கையாளர்களை நேசித்தல் (1) 1.21: இறைநம்பிக்கையில் ஏற்படும் ஏற்றத் தாழ்வு (9) 1.20: நன்மையை ஏவுதல், தீமையைத் தடுத்தல் (2) 1.19: நல்லவற்றிற்கு ஆர்வமூட்டுதல் (3) 1.18: அண்டை வீட்டாருக்குத் தொல்லை தரக் கூடாது (1) 1.17: தமக்கு விரும்வுவதைச் சகோதரனுக்கும் விரும்புதல் (2) 1.16: தூதரை நேசிப்பது கடமை (2) 1.15: இறைநம்பிக்கையின் இனிமை (2) 1.14: இஸ்லாம் கூறும் நல்லறங்களில் சிறந்தது (4) 1.13: இஸ்லாத்தின் அனைத்துப் பண்புகளின் கலவை (1) 1.12: இறைநம்பிக்கையின் கிளைகள் (5) 1.11: இறைநம்பிக்கையைச் சுவைப்பவர் (1) 1.10: ஓரிறை கோட்பாட்டில் மரணித்தவர் நிலை (11) 1.09: இணை வைத்த நிலையில் மரணித்தவர் நிலை (3) 1.08: ஜிஸ்யா செலுத்தாதவர் மீது போர் புரிதல் (6) 1.07: இஸ்லாத்தை ஏற்க அழைப்பு விடுத்தல் (2) 1.06: அறியாதவர்களுக்கு அறிவித்தல் (4) 1.05: இஸ்லாமியக் கடமைகள் (4) 1.04: சொர்க்கம் செல்பவர் (7) 1.03: இஸ்லாத்தின் தூண்கள் (2) 1.02: தொழுகை பற்றிய விளக்கம் (2) 1.01: இறைநம்பிக்கை குறித்த விளக்கம் (7)
கேரளா மாநிலத்தை சேர்ந்த நயன்தாரா, 2004ம் ஆண்டு ஹரி இயக்கத்தில் வெளியான ஐயா படம் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து, அடுத்தப்படமே சூப்பர்ஸ்டார் ஜோடியாக சந்திரமுகி படத்தில் நடித்தார். கஜினி, சிவகாசி, வல்லவன் போன்ற போன்ற படங்களில் சூர்யா, விஜய், சிம்பு போன்ற தமிழ் டாப் நடிகர்களுடன் நடித்தார். கடந்த சுமார் 20 ஆண்டுகளில், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற அனைத்து தென்னிந்திய மொழி படங்களில் நடித்து தென்னிந்திய திரையுலகின் லேடி சூப்பர்ஸ்டாராக வலம் வருகிறார். சினிமா கெரியர் சக்சஸ்புல்லாக அமைந்த இவருக்கு, பர்சனல் வாழ்க்கையில் நிறைய சங்கடங்கள், தோல்விகள் இதனால் வந்த அவப்பெயர்கள் என ஏராளம். அத்தனையும் சகித்து வந்து படங்களில் கவனம் செலுத்த தொடங்கிய இவர், கோலமாவு கோகிலா, டோரா, கொலையுதிர் காலம் போன்ற படங்களில் நடித்து தனக்கென இடத்தை பிடித்தார். இதன் நடுவே, நானும் ரவுடி தான் படத்தில் நடித்ததன் மூலம் அப்படத்தின் இயக்குனர் ஆன, விக்னேஷ் சிவன் உடன் காதல் வயப்பட்டு அவர்கள் காதல் வாழ்க்கை தற்போது 7 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வருகிறது. போடா போடி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாக விக்னேஷ் சிவன், இவரது 2வது திரைப்படம் தான் நானும் ரவுடி தான். இதன் பின்னர், தானா சேர்ந்த கூட்டம் திரைப்படத்தை இயக்கினார். கடந்தாண்டு நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் இவர்களது நிச்சயதார்த்தம் முடிந்தது என்பதனை ஒரு பேட்டியில் நயன்தாரா கூறியிருந்தார். விரைவில் திருமணம் செய்துகொள்ள உள்ளதாகவும் கூறி இருந்தார். நானும் ரவுடி தான் போல ஒரு வெற்றி படத்தை தந்த பிறகு திருமணம் என முடிவு செய்துள்ளதாக விக்னேஷ் சிவன் ஒரு பேட்டியில் கூறியிருந்தார். சமீபத்தில், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வந்தது. இந்நிலையில், அடிக்கடி கோவில்களுக்கு விசிட் அடித்து வரும் இவர்கள், கடந்த சில நாட்களுக்கு முன் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தரிசனம் செய்தனர். நடிகை நயன்தாராவுக்கும், இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் வருகிற ஜூன் மாதம் 9ம் தேதி திருமணம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியானது. இது குறித்து அவர்கள் பக்கம் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை. நயன்தாரா, விக்னேஷ் சிவன் குலதெய்வ கோவிலில் பொங்கல் வைத்து வழிபட்ட வீடியோ மற்றும் புகைப்படங்கள் வைரலாகி வந்தது. தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை அருகே வழுத்தூரில் உள்ள விக்னேஷ் சிவனின் குலதெய்வ கோவிலான காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலில் நயன்தாரா பொங்கல் வைத்து சாமி தரிசனம் செய்தனர். அவ்வப்போது, விக்னேஷ் சிவன், தாங்கள் இருவரும் வெளியே செல்வது, சாப்பிடுவது, கோவிலில் வழிபடுவது போன்ற புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் ஒரு விருது வழங்கும் விழாவில், சிறந்த லிரிஸிஸ்ட்கான விருதை பெற்றார் விக்னேஷ் சிவன். அப்போது மேடையில் திருமணம் பற்றி கேள்வி எழுப்பினார் தொகுப்பாளர் பிரியங்கா. கூடிய விரைவில், அது பற்றிய அறிவிப்பு வெளியாகும் என கூறியிருந்தார். தற்போது, இதுதான் விக்னேஷ் சிவன் - நயன்தாரா திருமண அழைப்பிதழ் என ஒரு புகைப்படம் இணையத்தில் பரவி வருகிறது. அதன் படி, சென்னை மகாபலிபுரத்தில் ஜூன் 9ம் தேதி திருமணம் நடக்க இருப்பதாக சொல்லப்பட்டுள்ளது. திருமணத்தில் தென்னிந்திய சினிமா துறையின் முக்கிய நட்சத்திரங்கள் பலரும் கலந்துகொள்வார்கள் என தகவல் வெளியாகியுள்ளது. இவர்களது திருமணத்திற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், இவர்களது திருமணத்திற்கு திரைப்பிரபலங்களுக்கு அழைப்பு விடுக்கப்படும், எந்த முன்னணி நட்சத்திரங்கள் கலந்து கொள்ளவிருக்கிறார்கள் என ரசிகர்கள் எதிர்பார்த்து வந்தனர். இந்நிலையில், நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்துகொள்ள உள்ளார்கள் எனவும், தமிழ் திரையுலகைச் சேர்ந்த 3 முக்கிய பிரபலங்களுக்கு மட்டும் அவர்கள் அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி விக்னேஷ் சிவனின் பேவரைட் ஹீரோவும், நண்பருமான விஜய் சேதுபதி, நயன்தாராவின் நெருங்கிய தோழியும், நடிகையுமான சமந்தா, டாக்டர் மற்றும் பீஸ்ட் படத்தின் இயக்குனரான நெல்சன், இவர்களை மட்டுமே அழைக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. திருமணத்திற்கு பின்னர், சென்னையில் பிரம்மாண்டமாக வரவேற்பு நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டுள்ள இந்த ஜோடி, வரவேற்பிற்கு திரையுலக பிரபலங்களை அழைக்க திட்டமிட்டுள்ளார்கள் என தகவல் வெளியாகியுள்ளது. 🏷️Tags Nayanthara, Vignesh shivan Share this post Whatsapp Facebook Twitter Telegram Prev Post Next Post Related Posts சினி கார்னர் பிரபல தமிழ் இயக்குனரின் படத்தை தூசிதட்டி எடுக்கும் சூர்யா? ஹோ அப்போ விட்டத இப்போ எடுத்துட்டாரா? ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த உலகநாயகனின் படம் டிராப்? அட கடவுளே! December 08, 2022 Viral Video: "ஹீரோயின அப்படி சொல்றது Humour'ஆ" - 'லவ் டுடே' பட காட்சியை வெளுத்து வாங்கிய கோமாளி பட நடிகை. December 08, 2022 வைல்ட்கார்ட் எண்ட்ரி'ஆ? போஸ்டருடன் உறுதி செய்த ஹாட்ஸ்டார் ! December 08, 2022 'எந்த position பிடிக்கும்?' ரசிகரின் மோசமான கேள்விக்கு வீடியோவுடன் பதில் சொன்ன யாஷிகா! December 08, 2022 பணத்துக்காக தயாரிப்பாளரை நிர்வாணமாக்கி அடித்து உதைத்து சித்ரவதை.. யோகிபாபு படத்தால் ஏற்பட்ட பிரச்சனை December 08, 2022 Viral Video: ஜோதிகா, சிம்ரனை.. "குதிரை" என வர்ணித்த விஜய்.. நடிகரின் பேட்டி வீடியோவால் எழுந்த சர்ச்சை!
கோவை மாவட்டம் பொள்ளாச்சி நேதாஜி ரோட்டில் உள்ள அரசு மகளிர் மேல் நிலைப்பள்ளியில் பள்ளி மாணவிகளுக்கான கலை நிகழ்ச்சிகள் மற்றும் நிகழ்வுகள் நடத்த இதுவரை கலையரங்கம் இல்லாத நிலையில் தற்சமயம் பள்ளி பெற்றோர் - ஆசிரியர் சங்கம் சார்பில் பள்ளி வளாகத்தில் கலையரங்கம் அமைக்க பூமி பூஜை நடத்தப்பட்டது. Please Subscribe This Channel to get current news ↓ https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ இந்நிகழ்ச்சியில் பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் ச.தர்மராஜ் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் பள்ளி தலைமையாசிரியர் ஏ.கோமதி.பெற்றோர் ஆசிரியர் சங்க செயலாளர் ஜெய்னுலாப்தீன் துணைத்தலைவர் காளிமுத்து. துணைச்செயலாளர் கவிஞர் பொள்ளாச்சி முருகானந்தம் மற்றும் நேதாஜி இளைஞர் பேரவை தலைவர் வெள்ளை நடராஜ், மணிகண்டன் மற்றும் ஆசிரிய ஆசிரியர்கள் மாணவிகள் திரளாக கலந்து கொண்டனர்.
அப்டின்னு வச்சி மணி ஸாரை டென்ஷனாக்கிப் பார்த்த படம் மணிரத்னம்.மணி ஸார் கோச்சுக்கப் படாது என்பதற்காக ஒரு உபாயம் செய்தது தான் ஹைலைட். அதாகப்பட்டது படத்தின் டைட்டிலில் மணிரத்னம் என்று பதியாமல் மணி மைனஸ் ரத்னம் அதாவது மணி-ரத்னம் என்று தோன்றச் செய்தார்கள். தட் மீன்ஸ் தி சைன்ஸ் ஃபிக்சன் ஆஃப் 90’ஸ் கிட்ஸ். இந்தப் படத்தை கிளாப் கட்டை அடித்து தொடக்கம் செய்து வைத்தவர் சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்கள். அதனாலேயே படம் பிய்த்துக் கொண்டு ஓடும் என்று எதிர்பார்த்தவர்கள் ஓடிக்கொண்டே பாப்கார்ன் பாக்கெட்டுக்களை பிய்த்துக் கொண்டார்கள். படத்தின் ஆரம்ப சீனே அமர்க்களமாக இருக்கும். நெப்ஸூக்குத் தனது வாத்தியார் பட்டத்தை ட்ரான்ஸ்பர் செய்து தருவார் வெள்ளை சுப்பையா. அதற்கு சாட்சியாக நெப்ஸூக்கு பரிவட்டம் கட்டி விடுவார். எல்லோரும் சந்தோசப்படுவார்கள். தட் இஸ் தி பிகின்னிங் என்று சொல்லாமல் சொல்லி படத்தை ஆரம்பிப்பார்கள். மார்த்தாண்டன் கருப்பு சுப்பையா வெள்ளை சுப்பையா இடிச்சபுளி செல்வராஜ் மற்றும் கேகே சவுந்தர் போன்ற பண்பட்ட நடிகர்களின் புண்பட்ட நடிப்புக் காட்சிகள் நிறைந்த படம் மணி-ரத்னம். பார்த்து உய்யவும். வானத்துல நிலா ஒண்ணுதான். அதே மாதிரி என் மனசுலயும் நிலா ஒண்ணே ஒண்ணுதான். அது நீ தான் என்று நிசமாகவே தன்னிடம் அழுதபடி பேசும் ஈரோயினிடம் தானும் அழுது பேசும் காட்சியில் நெப்ஸ் நடிப்பில் மிளிர்வார் பாருங்கள். அந்தக் காட்சி ஒன்று போதும் டிக்கட் காசு செரிமானம் ஆகும். இதே படத்தில் டிங்கி டாகா டிங்கி டாகா என்று ஒரு பாட்டு வரும். தமிழில் எடுக்கப்பட்ட மிகச்சிறந்த சைன்ஸ் பிக்சன் பாடல் காட்சிகளில் ஒன்று. இதே படத்தில் வில்லனும் அவருடைய அஜீஸ்டெண்டும் ரூமுக்கு வெளியே இருந்தபடி ஜன்னல் வழியாக பார்த்துக் கொண்டிருப்பது தெரியாமல் தனக்குத் தானே பேசி சிரித்து மகிழும் நட்ராஜந்தம்பி அலையஸ் பப்புலுவின் பெர்பார்மன்ஸ் இருக்கிறதே பத்துப் பைனஞ்சு எண்டி.ராமராவ் ஆறேழு அமிதாப்பச்சன் ஆகியோரைக் கரைத்து ஒன்றாக்கினாற் போலத் தோன்றும். சந்திரமுகி படத்தில் ரூமுள்ளே ஜோதிகாவின் இலக்கிய எழுச்சியைக் கண்ணுற்று வெளியே கண்கலங்கும் பிரபோ மற்றும் கூடவே நிற்கும் ரஜ்ஜினியார் என்கிற அந்தக் காட்சிக்கு முன் மாதிரி ஸீன் மணி-ரத்னம் படத்தின் இந்தக் காட்சி தான் என்பது நம்மில் எத்தனை க்ராஜூவேட்களுக்குத் தெரியும்..? வில்லன் பெரியமண்டை தன் பய்யன் பப்புலு அலையஸ் நட்ராஜந்தம்பி ஒன்சைடு ஆக நெப்ஸின் தங்கச்சி மோகனாவை சிறுவயதிலிருந்தே காதழிப்பதை அறிந்து கொண்டு நூதனமாக ஒரு உபாயத்தைக் கைக்கொள்வார். அதாகப்பட்டது நாம ஏன் நெப்ஸை சந்திச்சு டென்சனாக்கி டென்சனாகணும்..? நெப்ஸின் மனைவி தங்கத்திடம் பக்குவமாய் பேசி காரியத்தை பலிதம் செய்தால் என்ன என்பதே அந்த யோசனா உபாயம். இதில் பாருங்கள் உலகப் படங்களில் எதிலும் எந்த மொழியிலும் இடம்பெறாத காட்சி ஒன்று இங்கே மலரப் போகிறது என்பது தான் அதிசயம். வில்லன் தங்கத்தை மீட் பண்ணி தன் மகனுக்கு நெப்ஸ் தங்கையைப் பெண் கேட்பார். கெஞ்சுவார். கண் கலங்குவார். தங்கம் என்கிற நெப்ஸின் மனைவி பாத்திரம் அவரைக் கண்டபடி திட்டும். அழவைக்கும். அவமானப் படுத்தும் . வில்லன் கண் மல்க கிளம்பிச் சென்றுவிடுவார். இத்தனை கண்ணியமான வில்லனும் இவ்வளவு திட்டு திட்டுகிற ஈரோயினியும் சந்திக்கும் காட்சி வேறெந்தப் படத்திலும் இல்லய் இல்லய் இல்லவேய் இல்லய். படத்தின் ஆணிவேராய்ப் பல காட்சிகள் வரும். அவற்றின் ஆதிப் பிடிமானமாய் ஒரு காட்சி. தன் தங்கையும் ஆனந்த்பாபுவும் காதழிக்கிறார்கள் என்பதைக் கண்ணுற்ற நெப்ஸூக்கு கண் மற்றும் மண் தெரியாமல் கோவம் வரும். வரணுமில்லியா..? உடனே அவர் ஆனந்த்பாபுவை அடிக்கத் தொடங்குவார். அதுவொரு தியாக ஃபைட்டிங்.தன் வீட்டின் மர செல்ஃபைத் தானே தள்ளி விடுவார். தான் கஷ்டப்பட்டு உருவாக்கிய மண்பானைகளைத் தானே தள்ளி விட்டு நொறுக்குவார். தன் வீட்டைத் தானே சூறையாடிய தானைத் தலைவர் நெப்ஸ் என்று தியேட்டரில் கத்தியவர்கள் கேண்டீன் பக்கம் அப்புறப்படுத்தப் படுவார்கள். காண்பதற்கு ஆனந்தம் ஆனந்தம் பாபு என்று இனிக்கும் காட்சி அது. தன்னை அடிக்க அடிக்க வேண்டாம் வேண்டாம் என்று விறைப்பாக முறைப்பாக சொல்லிக் கொண்டே இருப்பார் ஆனந்தமற்ற பாபு அடித்துக் கொண்டே வீட்டை விட்டு வெளியேற்றி அழைத்து வரும் நெப்ஸை ஒரு கட்டத்தில் அவர் வீட்டு அரிவாளை எடுத்து ஒரே ஒரு கீறல் கீறுவார் அடிகள் பெற்ற பாபு. என் வீட்டுக்கு வந்து என்னையே மெரட்டுறியா என்று நெப்ஸ் அவரைப் பார்த்துக் கேட்ட பிறகு தான் வெட்டுவார்.வெட்டிருவியா வெட்டிருவியா என்று கேட்டால் வெட்டாமல் என்ன பண்ண என்று கேட்காமல் கேட்பார் அரிவாள் தூக்கி பாபு. அப்புறம் வெட்டுப் பட்ட நெப்ஸின் காதோடு போய் அண்ணே என்னைய நீ பேசவே விடல்லியே அவர் என் கூட படிச்சவர்ணேய் என்பார். அதைக் கேட்ட அதிர்ச்சியில் ரத்னம் அலையஸ் நெப்ஸ் மயக்கமுறுவார். மணி அலையஸ் அரிவாள் ஹோல்டிங் பாபு ஆல்ஸோ கண்கள் கலங்குவார்.ஊரார் எல்லாரும் கண்கள் கலங்கி ப்ரபஞ்சமே ப்ளர் மோடுக்குப் போய்விடும். வில்லனாக மனம் முகிழ்ந்து வில்லனாகவே மாறிவிடும் பப்புலுவுக்கும் ஆனந்தபாபுவுக்கும் ஷண்டய் வரும். சேதி கேட்டு ஓடி வரும் நெப்ஸைப் பார்த்து தங்கச்சி மோகனா கண்கலங்க அதைப் பார்த்து ஆனந்தமற்ற பாபு கண்கலங்க துரத்தி வரும் வில்லக்குட்டி நடிகர்கள் எல்லாரும் கண் கலங்கும் அரியவகை இலக்கியக் காட்சியும் அடுத்து இடம்பெறும். இந்தப் படத்தைத் துவக்கி வைத்தவர் யார்..? சூப்பர் ஸ்டார் ரஜ்ஜினிகாந்தர். அவருக்கு படத்தில் ஒரு முக்கிய கேரட்டர் வழங்காமல் இருக்க முடியுமா..? படத்தில் ஒரு சிவலிங்கம் ட்ரான்ஸ்போர்ட் பஸ் வரும். அதன் ஓனர் வில்லன் பெரியமண்டை தட் மீன்ஸ் பப்புலுவின் தந்தையாகப் பட்டவர். அவருடைய பஸ் ட்ரைவர் ஒரு தியாகட்ரைவர். அவரது தங்கை காதலைத் தடுத்ததில் தங்கை மரித்ததில் தான் மட்டும் சோகட்ரைவராக வாழ்க்கை எனும் பஸ்ஸை நிறுத்தாமல் ஓட்டிக் கொண்டிருப்பார். அவர் தான் அடிபட்டு விழும் அவஸ்தை பாபுவுக்கு அவசர உதவி ட்ரைவராகவும் விளங்கித் தன் வீட்டில் அடைக்கலம் தந்து ஆதரித்திருப்பார். கண் விழிக்கும் அடிபட்ட பாபுவுக்கு நடந்த கதையை விளக்குவார். அவர் வீடு முழுக்க ரஜ்ஜினி காந்தம் படங்களைக் கட் பண்ணி ஒட்டி வைத்திருப்பார். தங்கச்சி காதழைத் தான் தடுத்ததில் தங்கச்சி இறந்து விட்ட கதயையும் சொல்லித் தான் ஒரு ரஜ்ஜினி காந்தத்தால் ஈர்க்கப்பட்ட ரசிக இரும்புத் தூள் என்பதையும் விளக்கி சொல்லி இருப்பார். பிற்காட்சியில் நெப்ஸூக்கு உண்மைகளை விளக்கி சொல்லி விட்டு உயிரை விட்டு அடுத்த பிறவியில் தமிழறியாத ஆங்கிலேயனாகத் தான் பிறப்பேன் என்று சந்தோஷமாய் நரகத்துக்குப் போவார். இது வரய் இந்தப் படத்தின் கதயை பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்தவர்கள் அனைவருக்கும் நாலாவது வார்ட் ஆனந்த்பாபு தற்கொலைப் படை சார்பாக நன்றிகலந்த வணக்கங்கள். படத்தின் பெயருக்கு கூடுதல் வால்யூ ஆடட் விஷயமாக மழைக்கு நடுவே மின்னல் வெட்டியதில் வில்லன் பப்புலு மேல் பிரம்மாண்டமாண கோயில் மணி அறுந்து விழுந்து அவர் நசுங்கிச் செத் போவார். மணி இஸ் தி கில்லர் பட் நோபடி கேன் பனிஷ் தி மணி என்கிற சைன்ஸ் ஃபிக்சன் தியரி ப்ராக்டிகலாக வெரிஃபை ஆகும் உன்னத இடம் அது. பெரியமண்டை தி ஃபாதர் ஆஃப் தி பப்லு ஆல்சோ கோடரி வெட்டுப் பட்டு பப்புலு பக்கத்திலேயே விழுந்து செத்துப் போவதுடன் படம் நிசமாகவே முடியாது.ஜெயிலுக்குப் போய் விட்டு மீண்டும் ஊருக்குத் திரும்பி வரும் நெப்ஸைக் குடும்பத்தோடு சந்திப்பார் எக்ஸ்டெண்டட் ஆனந்தம் பாபு. அங்கே தான் ரீல் அறுந்து விழும். சிற்பி இசையில் வைரமுத்து எழுதி எஸ்பி பீ மற்றும் சித்ரா பாடிய அருமையான பாடலொன்று இந்தப் படத்தில் க்ளைமாக்ஸூக்கு முன்பாக இடம்பெறும். காதல் இல்லாதது ஒரு வாழ்க்கை ஆகுமா என்ற அந்தப் பாடலை இன்றைக்குக் கேட்டாலும் இனிக்கும். மொத்தப் படமும் கசக்கும். மணி ஸார் எடுத்த படங்களை மட்டும் தான் மணிஸார் படம் என்று அழைக்க முடியுமா மணி ஸார் பேரிலேயே படமெடுத்து அதையும் மணிஸார் படமாகவே மாற்றிக் காட்டுறேன் பார் என்று தயாரிப்பாளரும் தைரடக்கரும் ஒருவருக்கொருவர் விட்டுக் கொண்ட சவாலில் கூட்டம் கூட்டமாகப் படம் பார்த்த பலரும் தலை சுற்றிக் கிறுக்குப் பயித்தியமாக மாறி அலைந்தது இந்தப் படத்தின் பின் வரலாறு. படத்தின் ஒரு காட்சியில் மக்களிடம் பேசவேண்டும் என்று வடிவேலு கேட்பார் “அறிவு இல்ல உங்களுக்கு?” அதைக் கேட்கும் போது தேனாய் இனிக்கும்.
VIDEO: 'பிறந்து' 8 வாரம் கூட ஆகல!.. பச்ச 'குழந்தை' செய்ற வேலையா இது? ஆச்சரியத்தில் பெற்றோர்.. வைரல் வீடியோ! முகப்பு > செய்திகள் > உலகம் By Siva Sankar | Aug 27, 2020 10:05 AM இங்கிலாந்தில் பிறந்து 8 வாரங்களே ஆன நிலையில் பச்சிளம் குழந்தை ஒன்று ஹலோ என்று தன் தந்தையை பார்த்து கூறுவது இணையத்தில் வைரலாகி வருகிறது. இங்கிலாந்தின் Cheshire பகுதியைச் சேர்ந்த Nick , 36 மற்றும் Caroline, 37 தம்பதிக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பிறந்த குழந்தைதான் தற்போது வைரலாக மாறியுள்ளது. குழந்தை John Taylor-Mullington-ஐ, தந்தை நிக் தனது மடியில் வைத்து கொஞ்சிக் கொண்டிருந்துள்ளார். அப்போது குழந்தையை இவ்வுலகிற்கு வரவேற்கும் விதமாக குழந்தையை பார்த்து ஹலோ என்று கூறுகிறார் நிக். அப்போது தனது தந்தைக்கு மீண்டும் குழந்தை பதில் சொன்னதுதான் பெரிய ஆச்சர்யம். ஆம் குழந்தை மீண்டும் தனது தந்தைக்கு பதில் சொல்லும் விதமாக காற்றில் பேசுவது போல் அழகாய் ஹலோ என்று மழலை குரலில் பேசுகிறது. இந்த வீடியோவை பார்த்த பலரும் ஆச்சரியத்திற்கு உள்ளாகியுள்ளனர். பொதுவாகவே குழந்தைகள் பேசுவதற்கு அதிக மாதங்கள் எடுத்துக் கொள்ளும் என்பதும் அப்படியே பேசினாலும் பெற்றோர் பேசியதை திரும்ப பேசுவதற்கு 10 முதல் 14 மாதங்கள் வரை எடுத்துக்கொள்ளும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பிறந்து எட்டு வாரங்களில் குழந்தை இப்படி தந்தையை பார்த்து ஹலோ சொல்வது ஆச்சரியம் என்று இணையத்தில் பலரும் கருத்து தெரிவிப்பதுடன், இந்த வீடியோவை பகிர்ந்தும் வருகின்றனர். All the info, about all the OTT & Streaming Platforms Here! Tags : #FATHER #INFANT #BABY #NEWBORN #CHESHIRE #NICK #CAROLINE #ENGLAND #VIDEOVIRAL #HELLO மற்ற செய்திகள் 'வெள்ளை மாளிகையில் ஜொலித்த பட்டு புடவை'... 'இந்திய சாப்ட்வேர் இன்ஜீனியருக்கு அடித்த ஜாக்பாட்'... டிரம்ப் சொன்ன குட்டி ஸ்டோரி! VIDEO: 'மிலிட்டரி'ல இருந்து வந்து 'ஹீரோ'ன்னு பாராட்டுனாங்க,,.. ஒரே நைட்டில் ஸ்டாரான '3' வயது 'சிறுவன்'!!!,,.. அப்படி என்ன மாஸ் பண்ணிட்டான் பையன்?? 'அபார்ட்மென்ட்டுல விளையாடிட்டு இருந்தாங்க'... 'வெளியே கிடந்த சிறுவனைப் பார்த்து'... 'கதறித் துடித்த குடும்பம்'... 'பதறவைத்த சிசிடிவி வீடியோ!'... 'இடைவேளையில் கழிவறைக்குச் சென்ற சில நொடிகளில்'... 'அலறி ஓடிய' மாணவ, மாணவிகள்.. 16 பேர் 'மருத்துவமனையில்' அனுமதி!.. 1200 பேர் வீட்டுக்கு அனுப்பப்பட்ட சம்பவம்! 'இனிமேல் எந்த பெர்மிசனும் தேவையில்லை...' 'ஜாலியா கோவா போலாம்...' - ஆனால் ஒண்ணு மட்டும் ரொம்ப முக்கியம்...! 'காணாமல்' போன 18 வயது 'இளம்பெண்'!.. கண்டுபிடிக்க உதவிய ‘வலது கை டாட்டூவில் இருந்த மெசேஜ்!’ மேலும் செய்திகளுக்கு தொடர்புடைய செய்திகள் “ஹலோ.. ஹலோ..?!!”.. திடீரென, அமைதியான மகளின் குரல்.. மீண்டும் வந்த ‘அதிர்ச்சி’ போன் கால்.. ‘பயங்கர’ அலறல் சத்தம்...! - சிறுவன் கண் முன்னே தாய்க்கு நடந்த கோரம்! 'அம்மாவ இழந்தா தான்...' 'அது' நமக்கு கிடைக்கும்...! 'அப்பா போட்ட மாஸ்டர் பிளான்...' - கொலைக்கு ஓகே சொன்ன மகன்...! கொரோனா ‘பணிகளுக்காக’ பம்பரமாய் சுற்றிய பீலா ராஜேஷ் குடும்பத்தில் ‘இப்போது’ இப்படி ஒரு சோகம்! VIDEO: 'தனிப்பெருந்துணையே!'..“கோவிந்த் வசந்தா சார்?.. அப்படியே அந்த ‘96’ BGM-அ கொஞ்சம் வாசிங்களேன்!” .. நெகிழ வைக்கும் வீடியோ! 'நம்பி குழந்தையை அனுப்பிய தோழி'... 'கணவருடன் சேர்ந்துகொண்டு'... 'பெண் செய்த அதிரவைக்கும் காரியத்தால் பரபரப்பு!'... VIDEO: கொரோனா வார்டில்.. குடும்பமே சேர்ந்து போட்ட குத்தாட்டம்!.. ‘நடந்தது இதுதான்’!.. வைரல் ஆகும் வீடியோ! ”அந்த செல்போனை ஒரு நிமிஷம் இப்படி கொடுங்க!.. இனி எந்த அப்பாவும்.. இப்படி பண்ணக் கூடாது!”.. செல்ல மகள் செய்த படுபயங்கர காரியம்.. சும்மா தீயாய் பரவும் வீடியோ! “அசுர வேகத்தில் வந்த ரயில்.. வீல் சேருடன் தண்டவாளத்தில் சிக்கிய முதியவர்!”.. ‘அசகாயமாக’ வந்த பெண் ‘போலீஸ்’ செய்த ‘வைரல்’ காரியம்! வீடியோ! '8 நாளா தேடியும் கண்டுபுடிக்க முடியல!.. 2 வயசு தான் ஆகுது'!.. காணாமல் போன குழந்தையை... கடைசி நேரத்தில் மீட்டெடுத்த நாய்!.. மனதை உருக்கும் பாசப் போராட்டம்! “திடீர்னு இப்படி பண்ணிட்டாளே!”.. கதறி அழுத தந்தை.. திருமணமான நபரை காதலித்த கல்லூரி மாணவிக்கு நேர்ந்த கதி.. விசாரணையில் தெரியவந்த அதிர்ச்சி உண்மை! 'விடுமுறைக்கு வந்தபோது காத்திருந்த பேரதிர்ச்சி'... 'இரக்கமின்றி பெற்ற தந்தையே செய்த பயங்கரம்'... 'வெளியான பதறவைக்கும் சிசிடிவி பதிவு!'... 'நோ Lay off... சம்பளமும் Cut இல்ல’... ‘இத்தன கொடுத்தும்... வேறு வேலை தேடும் ஊழியர்கள்'... 'தக்கவைக்கும் முயற்சியில் பிரபல நிறுவனம்!'... '30க்கும் அதிகமானோருடன் சென்றுகொண்டிருந்த பேருந்து'... 'திடீரென பற்றிய தீயால் அலறியடித்த பயணிகள்'... 'இறங்குவதற்குள் நிகழ்ந்த கோர விபத்து'... 'நல்லா வாழ்ந்த மனுஷன்...' '3 கோடி சொத்துக்காக அப்பாவை தெருவில் தள்ளிய 3 மகன்கள்...' அதோட விடல...' - கண்ணீரோடு தவிக்கும் தந்தை...! “ஆரம்பத்துல ரொட்டி விற்று கஷ்டப்பட்டார்!”.. ‘ஐஏஎஸ்’ தேர்ச்சி பெற்று, இறந்த அப்பாவின் கனவை நனவாக்கிய மகள்.. .. அதற்காக 2018ல் செய்த துணிச்சலான காரியம்’! 'கடத்தப்பட்ட கணவரை தேடியபோது'... 'அடுத்தடுத்து அதிர்ச்சி கொடுத்த மகன்'... 'நடுங்கச் செய்யும் சம்பவம்'... "மகளைக் கொன்றதற்காக சிறை தண்டனை அனுபவிக்கும் தந்தை!".. 18 மாதம் கழித்து மகன் கண்ட அதிர்ச்சி காட்சி! 'ஆசையாக தாத்தா காத்திருக்க'... 'தாய் மண்ணை வந்தடைவதற்குள்'... 'முதல் பயணமே இறுதியான சோகம்'... 'கலங்கச் செய்யும் சம்பவம்'... Viral Video : என்ன நடக்குதுன்னு தெரியாம தன்னோட 'வேலை'ய பார்த்த நியூஸ் 'ரிப்போர்ட்டர்'... பின்னாடி நின்னு சுட்டி 'பையன்' செய்த குறும்பு 'வேலை'!!! 'ஆசையாக ப்ரபோஸ் செய்ய திட்டம் போட'... 'கடைசியில் காத்திருந்த அதிர்ச்சி'... 'வீடு பற்றி எரிந்தபோதும்'... 'காதலியை திகைக்க வைத்த இளைஞர்!'... மேலும் செய்திகளுக்கு ABOUT THIS PAGE This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. World's youngest talking baby says hello in 8 weeks videoviral | World News.
உணவு பிரியர்களை கவரும் வகையில் தங்க தோசை விற்பனை செய்யப்படுகிறது. ஒரு தங்க தோசை 1001 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சாதா தோசை, மசால் தோசை, கல் தோசை, பொடி தோசை, நெய் தோசை ,கறிவேப்பிலை தோசை, கொத்தமல்லி தோசை, புதினா தோசை என்று தோசையில் ஏகப்பட்ட வகைகள் உண்டு . உணவு பிரியர்களுக்காகவே இப்படி பலவகையான தோசைகளை உணவகங்கள் தயார் செய்து விற்பனை செய்கின்றன. இந்த நிலையில் தங்க தோசை என்று அறிமுகப்படுத்தி இருக்கிறது ஒரு உணவகம் . இது உணவு பிரியர்களிடையே மிக வரவேற்பினை பெற்றிருக்கிறது. இந்த ஒரு தங்க தோசை ஆயிரத்தில் ஒரு ரூபாய்க்கு விற்கப்படுகிறது. கர்நாடக மாநிலத்தில் துமகூரு பகுதியில் உள்ள ஒரு உணவகத்தில் தான் புதிய முயற்சியாக இந்த தங்க தோசை விற்பனை செய்யப்படுகிறது. தோசை மசால் தோசை தயார் செய்து அது சூடாக இருக்கும் போதே அந்த தோசையின் மேல் 24 காரட் தங்கம் முலாம் பூசப்பட்ட மெல்லிய தாளினை அதன் மீது வைக்கப்படுகிறது. இந்த தங்க தோசை அந்த உணவகத்தில் பரபரப்பாக விற்பனையாகிறது. தினமும் 20 தங்க மசால் தோசைகள் விற்பனையாகின்றன என்று அந்த உணவகம் தெரிவித்து இருக்கிறது. இந்த தோசையில் வைக்கப்படும் தங்கமூலாம் பூசப்பட்ட தாள்கள் குஜராத்தில் இருந்து வரவழைக்கப்படுகின்றன என்று தெரிவித்திருக்கிறது அந்த ஹோட்டல் நிர்வாகம். இந்த தங்க தோசைக்கு கோல்டன் பாயில் எடிபல் மசால் தோசை என பெயரிட்டுள்ளனர். இந்த தோசையின் விலை ஆயிரத்து ஒரு ரூபாய் என்றாலும் தங்க தோசை என்பதால் அதை சாப்பிட பலரும் ஆர்வம் காட்டிய வருகின்றனர் என்கிறது அந்த ஓட்ட நிர்வாகம். தங்கத்தில் நகைகள் செய்து வந்த காலம் போக, தங்கத்தில் சாப்பாடு தட்டு, தங்கத்தில் சேலை எல்லாம் தயார் செய்து வந்தனர். கொரோனா காலத்தில் தங்கத்தில் முக கவசம் கூட தயார் செய்து அணிந்து வந்தனர். இந்த நிலையில் தங்கத்தில் தங்க தோசை என்பது மிகவும் வித்தியாசமான அனுபவமாக இருக்கும்.
நூறு வருஷங்களுக்கு முன்பு கட்டப்பட்டு இப்போது பாழடைந்த காடு அடர்ந்திருந்த பள்ளிப்படைக் கோவிலை முன்னொரு தடவை நாம் பார்த்திருக்கிறோம். ஆழ்வார்க்கடியான் இங்கே ஒளிந்திருந்துதான் ரவிதாஸன் முதலியவர்களின் சதியைப் பற்றி ஓரளவு தெரிந்து கொண்டான். அதே இடத்துக்கு இப்போது வந்தியத்தேவனும் மற்றவர்களும் வந்து சேர்ந்தார்கள். பாழடைந்த பள்ளிப்படையின் ஒரு பக்கத்துச் சுவர் ஓரமாக வந்தியத்தேவனையும், அவன் குதிரையையும் அழைத்து வந்தார்கள். “அப்பனே! சற்று நீ இங்கேயே இரு! உன்னைக் கூப்பிட வேண்டிய சமயத்தில் கூப்பிடுகிறோம். தப்பித்துச் செல்லலாம் என்று கனவு காணாதே! பழக்கப்பட்டவர்களைத் தவிர, வேறு யாரும் இக்காட்டுக்குள் வரவும் முடியாது; வெளியேறவும் முடியாது; அப்படி வெளியேற முயன்றால், நிச்சயம் உயிரை இழப்பாய்!” என்றான் ரவிதாஸன். “அப்படி நான் வழி கண்டுபிடித்துப் போகப் பார்த்தால் நீ மந்திரம் போட்டுக் கொன்று விடுவாய்! இல்லையா, மந்திரவாதி!” என்று கூறி வந்தியத்தேவன் நகைத்தான். “சிரி, சிரி! நன்றாய்ச் சிரி!” என்று சொல்லி, ரவிதாஸனும் சிரித்தான். அச்சமயம் பார்த்து எங்கேயோ தூரத்தில் நரி ஒன்று ஊளையிடத் தொடங்கியது, அதைக் கேட்டுப் பக்கத்தில் எங்கேயோ கோட்டான் ஒன்று முனகியது. வந்தியத்தேவனுடைய உடல் சிலிர்த்தது, குளிரினால் அல்ல. அடர்ந்த அந்தக் காட்டின் மத்தியில் வாடைக் காற்றுப் பிரவேசிக்கவும் பயந்ததாகக் காணப்பட்டது; ஏன்? அங்கே மழைகூட அவ்வளவாகப் பெய்ததாகத் தெரியவில்லை. தரையில் சில இடங்களில் மட்டும் மழைத்துளிகள் சொட்டி ஈரமாயிருந்தது. காற்று இல்லாதபடியால் இறுக்கமாக இருந்தது. அங்கே வந்து சேர்வதற்குள் வந்தியத்தேவனுடைய அரைத்துணி உலர்ந்து போயிருந்தது. சுற்றிக் கட்டியிருந்த துணிச் சுருள் மட்டும் ஈரமாயிருந்தது அதை எடுத்து விரித்துப் பக்கத்தில் கிடந்த பாறாங்கல்லின் மீது உலர்த்தினான். அதே கல்லின் ஒரு மூலையில் வந்தியத்தேவன் உட்கார்ந்து பள்ளிப்படைச் சுவரின் மீது சாய்ந்து கொண்டான். அவனுக்குக் காவலாக அருகில் ஒருவன் மட்டும் இருந்தான். சற்றுத் தூரத்தில் காட்டின் மத்தியில் ஏற்பட்டிருந்த இடைவெளியில் அவனுடன் மற்றவர்கள் வட்ட வடிவமாக உட்கார்ந்தார்கள். பள்ளிப்படைக்கு உள்ளேயிருந்து ஒருவன் பழைய சிம்மாசனம் ஒன்றை எடுத்துக் கொண்டு வந்து போட்டான். அதில், ‘சக்கரவர்த்தி’ என்று அழைக்கப்பட்ட சிறுவனை உட்காரச் செய்தார்கள். தீவர்த்திகளில் இரண்டை மட்டும் வைத்துக்கொண்டு மற்றவற்றை அணைத்து விட்டார்கள். அவ்விதம் தீவர்த்திகளை அணைத்த போது எழுந்த புகை நாலாபுறமும் சூழ்ந்தது. “ராணி இன்னும் வரவில்லையே?” என்றான் ஒருவன். “சமயம் பார்த்துத் தானே வரவேண்டும்? இரண்டாவது ஜாமத்திலேதான் நானும் வரச் சொல்லியிருக்கிறேன். அதுவரையில் வழுதி குலத்துப் புகழ்மாலையை யாராவது பாடுங்கள்!” என்றான் சோமன் சாம்பவன். இடும்பன்காரி உடுக்கு ஒன்றை எடுத்து இலேசாக அதைத் தட்டினான். தேவராளன் ஏதோ ஒரு பாட்டுப் பாடத் தொடங்கினான். வந்தியத்தேவன் தான் உட்கார்ந்திருந்த இடத்திலிருந்து இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்தான்; கேட்டுக் கொண்டுமிருந்தான். ‘வழுதிகுலம்’ என்பது பாண்டியகுலம் என்று அவன் அறிந்திருக்கிறான். பாடல் ஏதோ ஒரு சோகப் பிரலாபமாக அவன் காதில் தொனித்து. உடுக்கின் நாதமும், சோகப் பாடலின் இசையும் அவன் உள்ளத்தில் ஒரு நெகிழ்ச்சியை உண்டாக்கின. பாடலில் சிற்சில வார்த்தைகள் அவன் காதில் விழுந்தன. அவற்றிலிருந்து அந்த இடத்தில் நூறு வருஷங்களுக்கு முன்னால் நடந்த மாபெரும் போரைப் பற்றிய வரலாறு அவன் நினைவுக்கு வந்தது. ஆம்; அங்கேதான் வரகுண பாண்டியனுக்கும், அபராஜித பல்லவனுக்கும் மூன்று நாட்கள் கொடிய யுத்தம் நடந்தது. பல்லவனுக்குத் துணையாகக் கங்க மன்னன் பிருதிவீபதி வந்தான். அப்போரில் மாண்ட லட்சக்கணக்கான வீரர்களைப் போல் அம்மகாவீரனும் இறந்து விழுந்தான். அவனுடைய ஞாபகமாகக் கட்டிய பள்ளிப்படைக் கோவில்தான் இப்போது சதிகாரர்கள் கூடும் இடமாக அமைந்திருக்கிறது. கங்க மன்னன் இறந்ததும், பல்லவர் படைகள் சிதறி ஓடத் தொடங்கின. பாண்டிய சைன்யத்தின் வெற்றி நிச்சயம் என்று தோன்றியது. இச்சமயத்தில் சோழர் படைகள் பல்லவர்களின் உதவிக்கு வந்தன. அப்படைக்கு தலைமை வகித்துத் திருமேனியில் தொண்ணூற்றாறு புண் சுமந்த விஜயாலய சோழன் வந்தான். இரண்டு கால்களையும் முன்னமே இழந்திருந்த அவ்வீரப் பெருங்கிழவனை நாலு பேர் தூக்கிக் கொண்டு வந்தார்கள். இரண்டு கைகளிலும் இரண்டு நெடிய வாள்களை ஏந்திக் கொண்டு அவன் பாண்டியர் சைன்யத்தில் புகுந்தான். இரண்டு வாள்களையும் சக்கராகாரமாகச் சுழற்றிக் கொண்டே போனான். அவன் சென்ற இடங்களிலெல்லாம் இருபுறமும் பாண்டிய வீரர்களின் உயிரற்ற உடல்கள் மலைமலையாகக் குவிந்தன. சிதறி ஓடிய பல்லவ சேனா வீரர்கள் திரும்பி வரத் தொடங்கினார்கள். ஜண ஜண ஜண ஜணார்! – பதினாயிரம் வாள்கள் மாலைச் சூரியனின் மஞ்சள் வெய்யிலில் மின்னிக் கொண்டு வந்தன! டண டண டண டணார்- பதினாயிரம் வேல்கள் இன்னொரு பக்கமிருந்து ஒளி வீசிப் பாய்ந்து வந்தன! வாள்களும் வேல்களும் மோதின! ஆயிரம் பதினாயிரம் தலைகள் நாலாபுறமும் உருண்டன. ஆயிரம் பதினாயிரம் உயிரற்ற உடல்கள் விழுந்தன! ஈ ஈ ஈ ஈ!- குதிரைகள் கனைத்துக் கொண்டே செத்து விழுந்தன! ப்ளீ ளீ ளீ ளீ!- யானைகள் பிளிறிக் கொண்டே மாண்டு விழுந்தன! இரத்த வெள்ளத்தில் செத்த மனிதர்கள் – மிருகங்கள் உடல்கள் மிதந்தன. இருபதினாயிரம் கொட்டைப் பருந்துகள் வட்டமிட்டுப் பறந்து வானத்தை மூடி மறைத்தன! முப்பதினாயிரம் நரிகள் ஊளையிட்டுக் கொண்டு ஓடிவந்து போர்க்களத்தைச் சூழ்ந்து கொண்டன! “ஐயோ! ஓ ஓ ஓ!” என்ற ஐம்பதினாயிரம் ஓலக் குரல்கள் ஒன்றாய்ச் சேர்ந்து எழுந்தன! “விடாதே! பிடி! துரத்து! வெட்டு! குத்து!” இவ்விதம் நூறு ஆயிரம் குரல்கள் முழங்கின. பதினாயிரம் ஜயபேரிகைகள் “அதம்! அதம்! அதம்!…” என்று சப்தித்தன. இருபதினாயிரம் வெற்றிச் சங்கங்கள் “பூம்! பூம்! பூம்!” என்று ஒலித்தன. “ஹா! ஹா! ஹா! ஹா!” என்று அறுபதினாயிரம் பேய்கள் சிரித்தன. வந்தியத்தேவன் திடுக்கிட்டுக் கண் விழித்தான். நாலாபுறமும் பார்த்து விழித்தான். பள்ளிப்படைச் சுவரில் சாய்ந்தபடியே சிறிது நேரம் தான் கண்ணயர்ந்துவிட்டதாக அறிந்து கொண்டான். அந்த அரைத்தூக்கத்தில் கண்ட பயங்கரமான கனவை மறுபடி நினைத்துப் பார்த்தான். கனவுதானா அது! இல்லை! உடுக்கின் முழக்கத்துக்கு இணங்கத் தேவராளன் பாடிய பாடலில் போர்க்களத்தைப் பற்றிச் செய்த வர்ணனை தான் அப்படி அவன் மனக்கண் முன் தோன்றியிருக்க வேண்டும். அச்சமயம் தேவராளன் பாண்டியர் படைக்கு முன்னால் பல்லவரும், கங்கரும் தோற்று ஓடியதைப் பற்றிப் பாடிக் கொண்டிருந்தான். அதைக் கேட்டுக் கொண்டிருந்தவர்கள் சிரித்த களிச் சிரிப்புத்தான் அப்படி அநேகாயிரம் பேய்களின் சிரிப்பைப் போல் ஒலித்து, வந்தியத்தேவனைத் திடுக்கிட்டுக் கண் விழிக்கச் செய்திருக்க வேண்டும். உடுக்கு முழக்கம் திடீர் என்று நின்றது. தேவராளனும் பாட்டை உடனே நிறுத்தினான். சற்றுத் தூரத்தில் ஒரு தீவர்த்தி வெளிச்சம் தெரிந்தது. அது நெருங்கி நெருங்கி வந்தது. தீவர்த்தி வெளிச்சத்தைத் தொடர்ந்து ஒரு பல்லக்கு வந்தது. பல்லக்கைச் சுமந்து வந்தவர்கள் அதைக் கீழே இறக்கி வைத்தார்கள். பல்லக்கின் திரைகள் விலகின. உள்ளேயிருந்து ஒரு ஸ்திரீ வெளியில் வந்தாள். ஆம்; அவள் பழுவூர் ராணி நந்தினிதான். ஆனால் முன் தடவைகளில் வந்தியத்தேவன் பார்த்தபோது அவள் சர்வாலங்கார பூஷிதையான மோகினியாக விளங்கினாள். இப்போது தலைவிரி கோலமான உக்கிரதுர்க்கா தேவியாகக் காட்சி தந்தாள். அவளை இந்தத் தோற்றத்தில் பார்த்த வந்தியத்தேவனுடைய உள்ளத்தில் ஒரு திகில் தோன்றியது; அவன் உடம்பில் ஒரு நடுக்கம் ஏற்பட்டது. நந்தினி பல்லக்கிலிருந்து இறங்கியதும் சிம்மாசனத்தில் வீற்றிருந்த சிறுவனைப் பார்த்தாள். அவனையே பார்த்த வண்ணம் நடந்து வந்தாள். சிறுவனும் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். மற்ற அனைவரும் அவர்கள் இருவரையும் பார்த்துக் கொண்டிருந்தார்கள். சிறுவனைப் பாழும் மண்டபத்துக்குத் தேடி ஓடி வந்த ஸ்திரீ – அவனால் “அம்மா” என்று அழைக்கப் பட்டவள், சிம்மாசனத்துக்குப் பின்னால் நின்று கொண்டிருந்தாள். நந்தினி சிறுவன் அருகில் வந்ததும் தன் இருகரங்களையும் நீட்டினாள். சிறுவன் அவளையும் தனக்குப் பின்னால் நின்ற ஸ்திரீயையும் மாறி மாறிப் பார்த்தான். “நீ தானே என் அம்மா? இவள் இல்லையே” என்று கேட்டான். “ஆம், கண்மணி!” “இவள் ஏன் என்னுடைய அம்மா என்று சொல்லிக் கொள்கிறாள்?” “அவள் உன்னை வளர்த்த தாய்!” “நீ ஏன் என்னை வளர்க்கவில்லை? ஏன் உன்னுடன் என்னை வைத்துக் கொள்ளவில்லை? இவள் எதற்காக என்னை எங்கேயோ மலைக் குகையில் ஒளித்து வைத்துக் கொண்டிருக்கிறாள்?” “கண்மணி! உன் தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்காகத்தான். உன் தந்தையைக் கொன்றவர்களைப் பழிக்குப் பழி வாங்குவதற்காகத்தான்!” “ஆமாம்; அது எனக்குத் தெரியும்!” என்று சிறுவன் எழுந்து நந்தினியை அணுகினான். நந்தினி அவனைத் தன் இரு கரங்களாலும் அணைத்துக் கொண்டாள், உச்சி முகந்தாள். சிறுவனும் அவளைக் கெட்டியாகப் பிடித்துக் கட்டிக் கொண்டான். மறுபடியும் அவள் தன்னைவிட்டுப் போகாமலிருக்கும் பொருட்டு அவன் அப்படிப் பிடித்துக் கொண்டான் போலும்! ஆயினும் இந்தக் காட்சி நீடித்திருக்கவில்லை. அவனுடைய பிஞ்சுக்கரங்களை நந்தினி பலவந்தமாக எடுத்துத் தன்னை விடுவித்துக் கொண்டாள். சிறுவனைச் சிம்மாசனத்தில் உட்கார வைத்தாள். மீண்டும் பல்லக்கின் அருகில் சென்றாள். அதனுள்ளிருந்து நாம் முன்பார்த்திருக்கும் வாளை எடுத்துக் கொண்டாள். பல்லக்குத் தூக்கி வந்தவர்களைப் பார்த்து ஏதோ சமிக்ஞை செய்தாள். அவர்கள் பல்லக்கைத் தூக்கிக் கொண்டு சற்றுத் தூரத்தில் போய் மறைவாக உட்கார்ந்து கொண்டார்கள். நந்தினி மீண்டும் சிம்மாசனத்தின் அருகில் வந்தாள். கத்தியை அச்சிம்மாசனத்தின் மீது குறுக்காக வைத்தாள். சிறுவன் அதை அடங்கா ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டே, “நான் இதைக் கையில் எடுக்கலாமா?” என்று கேட்டான். “சற்றுப் பொறு, என் கண்மணி!” என்றாள் நந்தினி. பிறகு, ரவிதாஸன் முதலியவர்களையும் வரிசைக் கிரமமாக உற்றுப் பார்த்தாள். “சபதம் எடுத்துக் கொண்டவர்களைத் தவிர இங்கு வேறு யாரும் இல்லையே?” என்று கேட்டாள். “இல்லை, தேவி!” என்றான் சோமன் சாம்பவன். ரவிதாஸனைப் பார்த்து நந்தினி “சேநாதிபதி!…” என்று ஆரம்பித்தாள். ரவிதாஸன் சிரித்தான். “இன்றைக்கு உமக்குச் சிரிப்பாயிருக்கிறது. அடுத்தமாதம் இந்த நாளில் எப்படியிருக்குமோ, யார் கண்டது!” “தேவி! அந்த நல்ல நாள் எப்போது வரப்போகிறது என்று எத்தனையோ காலமாக நாங்கள் காத்துக் கொண்டிருக்கிறோம்.” “ஐயா! நாமோ ஒரு சிலர். நம் சக்கரவர்த்தி சின்னஞ்சிறு குழந்தை. சோழ ராஜ்யம் மகத்தானது, சோழர்களின் சேனாபலம் அளவற்றது. நாம் அவசரப் பட்டிருந்தோமானால் அடியோடு காரியம் கெட்டுப் போயிருக்கும். பொறுமையாக இருந்ததினால் இப்போது காரிய சித்தி அடையும் வேளை நெருங்கியிருக்கிறது. ரவிதாஸரே! நீர் ஏதாவது சொல்ல வேண்டியிருக்கிறதா; இங்குள்ள வேறு யாரேனும் ஏதாவது சொல்ல வேண்டியிருக்கிறதா!” ரவிதாஸன் அங்கே இருந்தவர்களின் முகங்களை வரிசையாகப் பார்த்துக் கொண்டு வந்தான். அனைவரும் மௌனவிரதம் கொண்டவர்களாய்க் காணப்பட்டார்கள். “தேவி! நாங்கள் சொல்ல வேண்டியது எதுவும் இல்லை. தாங்கள்தான் சொல்ல வேண்டும். சபதம் நிறைவேறும் வேளை நெருங்கி விட்டது என்றீர்கள். எங்கே, எப்படி, யார் மூலமாக நிறைவேறப் போகிறது என்று சொல்லி அருள வேண்டும்” என்றான். “ஆகட்டும்; அதைச் சொல்வதற்காகவே இங்கு வந்தேன். அதற்காகவே உங்கள் எல்லாரையும் இங்கே தவறாமல் வரச் சொன்னேன். நம்முடைய சக்கரவர்த்தியையும் அழைத்து வரச் செய்தேன்” என்றாள் நந்தினி. சிம்மாசனத்தில் வீற்றிருந்த சிறுவன் உள்பட அனைவரும் நந்தினியின் முகத்தையே உற்று நோக்கிக் கொண்டிருந்தார்கள். அவள் மேலும் கூறினாள்: “உங்களில் சிலர் அவசரப்பட்டீர்கள். நாம் எடுத்துக் கொண்ட சபதத்தை மறந்துவிட்டேனோ என்றும் சிலர் சந்தேகப் பட்டீர்கள். அந்தச் சந்தேகம் அடாதது. மறவாமல் நினைவு வைத்துக் கொள்ள, உங்கள் எல்லோரைக் காட்டிலும் எனக்குத் தான் காரணம் அதிகம் உண்டு. இல்லை; நான் மறக்கவில்லை. சென்ற மூன்று ஆண்டுகளாக அல்லும் பகலும் அனவரதமும் நான் வேறு எதைப் பற்றியும் சிந்தித்ததில்லை. நாம் எடுத்துக்கொண்ட சபதத்தின்படி பழி வாங்குவதற்குச் சமய சந்தர்ப்பங்களையும், தந்திர உபாயங்களையும் தவிர வேறு எதையும் பற்றி நான் எண்ணியதில்லை. எங்கே சென்றாலும், என்ன காரியம் செய்தாலும், யாரிடம் பேசினாலும் நமது நோக்கம் நிறைவேறுவதற்கு அதனால் உபயோகம் உண்டா என்பதைத் தவிர வேறு நினைவு எனக்கில்லை. சமய சந்தர்ப்பங்கள் இப்போது கூடியிருக்கின்றன. சோழ நாட்டுச் சிற்றரசர்களும் பெருந்தர அதிகாரிகளும் இரு பிரிவாகப் பிரிந்திருக்கிறார்கள். பழுவேட்டரையர், சம்புவரையர் முதலானோர் மதுராந்தகனுக்குப் பட்டம் கட்ட முடிவு செய்து விட்டார்கள். கொடும்பாளூர் பூதி விக்கிரம கேசரியும், திருக்கோவலூர் மலையமானும் அதற்கு விரோதமாயிருக்கிறார்கள். பூதி விக்கிரமகேசரி தென் திசைச் சைன்யத்துடன் தஞ்சை நோக்கி வருவதாகக் கேள்விப்படுகிறேன். திருக்கோவலூர் மலையமான் படை திரட்டி வருவதாகவும் அறிகிறேன். இருதரப்பாருக்கும் எந்த நிமிஷமும் யுத்தம் மூளலாம். “தேவி! அப்படி யுத்தம் மூளாதிருப்பதற்குத் தாங்கள் பெரு முயற்சி செய்து வருவதாகக் கேள்வியுறுகிறோம். கடம்பூர் சம்புவரையன் மாளிகையில் சமரசப் பேச்சு நடக்கப் போவதாக அறிகிறோம்.” “ஆமாம்; அந்த ஏற்பாடு செய்திருப்பது நானேதான். ஆனால் என்ன காரணத்திற்காக வென்று உங்களால் ஊகிக்க முடியவில்லையா?” “முடியவில்லை. ராணி! ஒரு பெண் உள்ளத்தின் ஆழத்தைக் கண்டுபிடிக்க சர்வேசுவரனால் கூட முடியாது என்று பெரியோர்கள் சொல்லியிருக்கிறார்கள். எங்களால் எப்படி முடியும்?” “அது உங்களால் முடியாத காரியந்தான். நான் சொல்கிறேன், தெரிந்து கொள்ளுங்கள். நம்முடைய சபதம் நிறைவேறுவதற்கு முன்னால் சோழ ராஜ்யத்தில் இந்த உள்நாட்டுச் சண்டை மூண்டால், அதன் விளைவு என்ன ஆகும் என்று சொல்ல முடியாது சுந்தர சோழன் இன்னும் உயிரோடிருக்கிறான்; அன்பில் பிரம்மராயன் ஒருவனும் இருக்கிறான்; இவர்கள் தலையிட்டு இருகட்சிக்காரர்களையும் அடக்கி விடுவார்கள். அல்லது ஒரு கட்சி தோற்று, இன்னொரு கட்சி வலுத்துவிட்டாலும் நமது நோக்கம் நிறைவேறுவது அசாத்தியமாகிவிடும். அதற்காகவே இந்தச் சமாதானப் பேச்சை இப்போது தொடங்கியிருக்கிறேன். சண்டை உண்மையாக மூளுவதற்குள்ளே நம் நோக்கத்தை நிறைவேற்றிவிட வேண்டும். அப்படி நிறைவேற்றிய பிறகு சோழ ராஜ்யத்துச் சிற்றரசர்களுக்குள் மூளும் சண்டைக்கு முடிவேயிராது. ஒரு கட்சியாரும் சர்வநாசம் அடையும் வரையில் சண்டை நடந்து கொண்டேயிருக்கும். இப்போது தெரிகிறதா…சமாதானப் பேச்சு தொடங்கியதன் காரணம்?” இதைக் கேட்டதும் அங்கே சூழ்ந்து நின்றவர்கள் எல்லாருடைய முகங்களிலும் வியப்புக்கும், உற்சாகத்துக்கும் அறிகுறிகள் காணப்பட்டன. பழுவூர் இளைய ராணியின் மதிநுட்பத்தை வியந்து அவர்கள் ஒருவருக்கொருவர் மெல்லிய குரலில் பேசிக் கொண்டார்கள். ரவிதாஸனுக்கும் ஆச்சரியப்படாமலிருக்க முடியவில்லை. “தேவி! தங்களுடைய அபூர்வமான முன் யோசனைத் திறனை வியக்கிறோம். சமாதானப் பேச்சின் கருத்தை அறிந்து கொண்டோ ம். ஆனால் சபதம் நிறைவேறும் நாள் நெருங்கி விட்டது என்கிறீர்கள். அதை நடத்துவது யார்? எப்படி? எப்போது?” என்றான். “அதற்கும் சேர்த்துத்தான் இந்த யுக்தி செய்திருக்கிறேன். சமாதானப் பேச்சு என்ற வியாஜத்தின் பேரில் நமது முதற் பகைவனைக் கடம்பூர் சம்புவரையர் மாளிகைக்கு வரும்படி அழைப்பு அனுப்பியிருக்கிறது; அவன் அங்கே கட்டாயம் வந்து சேருவான். நம்முடைய சபதத்தை அங்கேதான் நிறைவேற்றியாக வேண்டும். வீரபாண்டிய சக்கரவர்த்தியின் ஆபத்துதவிகளே! உங்களுடைய பழி தீரும் வேளை நெருங்கி விட்டது. இன்றைக்கு சனிக்கிழமையல்லவா? அடுத்த சனிக் கிழமைக்குள் நம்முடைய சபதம் நிறைவேறிவிடும்!…” அங்கே இருந்த இருபது பேர்களும் ஏக காலத்தில் ‘ஆஹா’ காரம் செய்தார்கள். சிலர் துள்ளிக் குதித்தார்கள். உடுக்கு வைத்திருந்தவன் உற்சாக மிகுதியினால் அதை இரண்டு தடவை தட்டினான். மரக்கிளைகளில் தூங்கிக்கொண்டிருந்த ஆந்தைகள் விழித்து உறுமிக்கொண்டு வேறு கிளைகளுக்குத் தாவின. வௌவால்கள் சடசடவென்று சிறகுகளை அடித்துக் கொண்டு ஓடின. வந்தியத்தேவனுடைய குதிரை உடம்பைச் சிலிர்த்துக் கொண்டது. வந்தியத்தேவனும் நிமிர்ந்து பார்த்தான். நந்தினி தன்னைச் சுற்றியிருந்தவர்களிடம் ஏதோ பரபரப்புத் தரும் விஷயத்தைச் சொல்லிக் கொண்டிருந்தாள் என்பது மட்டுந்தான் தெரிந்தது. அவளுடைய பேச்சு ஒன்றும் அவன் காதில் விழவில்லை. ரவிதாஸன் மற்றவர்களுடைய உற்சாகத்தைக் கையமர்த்தி அடக்கினான். “தேவி! தங்களுடைய கடைசி வார்த்தை எங்களுக்கு அளவிலாத குதூகலத்தை அளித்திருக்கிறது. நமது முதற்பகைவனைக் கொன்று பழி முடிக்கும் காலம் இவ்வளவு அண்மையில் வந்திருப்பதை எண்ணிக் களிக்கிறோம்! ஆனால், பழிமுடிக்கும் பாக்கியம் யாருக்கு?” என்று கேட்டான். “அதற்கு நமக்குள் போட்டி ஏற்படுவது இயற்கைதான். அதை யாருக்கும் மனத்தாங்கல் இல்லாத முறையில் முடிவு செய்வதற்காகவே வீரபாண்டியரின் திருக்குமாரச் சக்கரவர்த்தியை இங்கு அழைத்து வரச் செய்தேன். வீரபாண்டியரின் கத்தியும் இதோ இருக்கிறது. இந்தச் சின்னஞ்சிறு குழந்தை தந்தையின் கத்தியைத் தொட்டு நம்மில் எவர் கையில் கொடுக்கிறதோ, அவர் பழி முடிக்க வேண்டும். மற்றவர்கள் அக்கம் பக்கத்தில் உதவிக்குச் சித்தமாக நிற்க வேண்டும். ஏற்றுக்கொண்டவர் தவறிவிட்டால் மற்றவர்கள் முன் வந்து முடிக்கவேண்டும். கடம்பூர் மாளிகைக்குள்ளேயே நான் இருப்பேன். இடும்பன்காரி கோட்டைக் காவலர்களில் ஒருவனாக இருப்பான். பழிமுடிக்கும் பொறுப்பு ஏற்றுக் கொண்டவர் மாளிகைக்குள் பிரவேசிப்பதற்கு நாங்கள் உதவி செய்வோம். இந்த ஏற்பாடுகளுக்கெல்லாம் சம்மதந்தானே?” ஆபத்துதவிகள் ஒருவரையொருவர் ஆர்வத்துடன் பார்த்துக்கொண்டார்கள். எல்லோருக்கும் அந்த ஏற்பாடு சம்மதமாகவே தோன்றியது. ரவிதாஸன் கூறினான்:”தாங்கள் சொன்னது சரியான ஏற்பாடுதான். அதற்கு நாங்கள் எல்லோரும் சம்மதிக்கிறோம். ஆனால் இன்னும் ஒரு விஷயம். பழிமுடிக்கும் பொறுப்பு யாருக்குக் கிடைக்கிறதோ, அவர் சொல்கிறபடி மற்றவர்கள் கண்டிப்பாகக் கேட்கிறதென்று வைத்துக் கொள்ள வேண்டும். சக்கரவர்த்திக்குப் பிராயம் வருகிறவரையில் பழி முடித்தவன் இட்டதே சட்டமென்று மற்ற அனைவரும் நடந்து கொள்ள வேண்டும்.” இதைக் கேட்ட நந்தினியின் முகத்தில் புன்னகை அரும்பியது. “என்னையும் உட்படுத்திதானே சொல்கிறீர்?” என்று கேட்டாள். “ஆம் தேவி! விதிவிலக்குச் செய்யமுடியாது!” என்றான் ரவிதாஸன். “சந்தோஷம், இப்போது ரவிதாஸன் கூறியதும் உங்கள் எல்லோருக்கும் சம்மதந்தானே!” என்று நந்தினி மற்றவர்களை நோக்கி வினவினாள். எல்லாரும் ஒருவரையொருவர் பார்த்தார்கள்; மறுமொழி சொல்வதற்குத் தயங்கினார்கள். சிலருக்கு அந்த ஏற்பாடு சம்மதமில்லையென்று தோன்றியது. சோமன் சாம்பவன், “அது எப்படி நியாயமாகும்? நமக்கு எல்லா உதவியும் அளித்துவரும் தேவியை எப்படிப் பொது விதிக்கு உட்படுத்த முடியும்?” என்று கேட்டான். “என்னைப் பற்றிக் கவலை வேண்டாம். நான் உயிர் வாழ்ந்திருப்பதே வீரபாண்டிய சக்கரவர்த்தியின் கொடூரக் கொலைக்குப் பழி வாங்குவதற்காகத்தான். அந்தப் பழியை முடித்துக் கொடுக்கிறவர் யாராயிருந்தாலும், அவருக்கு நான் என்றென்றும் அடிமையாக இருக்கச் சித்தம்!” என்றாள் நந்தினி. பின்னர், இந்தப் பேச்சுக்களையெல்லாம் புரிந்தும் புரியாமலும் கேட்டுக் கொண்டிருந்த சிறுவனை நந்தினி தேவி பார்த்து “என் கண்மணி! இந்த வீரவாள் உன் தந்தையினுடையது. இதை உன் பிஞ்சுக் கையினால் எடுத்து இங்கே உள்ளவர்களில் உனக்கு யாரை அதிகமாய்ப் பிடித்திருக்கிறதோ, அவர்களிடம் கொடு!” என்றாள். ரவிதாஸன் சற்று அருகில் வந்து “சக்கரவர்த்தி, எங்களையெல்லாம் நன்றாய்ப் பாருங்கள்! எங்களில் யார் வீரன் என்றும் தைரியசாலி என்றும் தங்களுக்குத் தோன்றுகிறதோ, அவனிடம் இந்தப் பாண்டிய குலத்து வீரவாளைத் தொட்டுக் கொடுங்கள்!” என்றான். சிம்மாசனத்தில் வீற்றிருந்த சிசு சக்கரவர்த்தி சுற்று முற்றும் பார்த்தார். எல்லாரும் அடங்காத ஆவலுடனும் பரபரப்புடனும் சக்கரவர்த்தியின் முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஒவ்வொருவருடைய கண்களும் “என்னிடம் கொடுங்கள்! என்னிடம் கொடுங்கள்!” என்று கெஞ்சும் பாவத்தைக் காட்டின. ரவிதாஸனுடைய முகமும் கண்களும் மட்டும் “என்னிடம் கொடுங்கள்!” என்று அதிகாரபூர்வமாகப் பயமுறுத்திக் கட்டளையிட்டன. சிறுவன் இரண்டு மூன்று தடவை எல்லாரையும் திருப்பித் திருப்பிப் பார்த்த பின்னர், கத்தியைக் கையில் எடுத்தான். அதைத் தூக்க முடியாமல் தூக்கினான். அனைவருடைய பரபரப்பும் சிகரத்தை அடைந்தது. சிறுவன் பளிச்சென்றும் நந்தினி நின்ற பக்கம் திரும்பினான். “அம்மா! எனக்கு உன்னைத்தான் எல்லாரைக் காட்டிலும் அதிகமாகப் பிடித்திருக்கிறது. நான் பெரியவனாகும் வரையில் நீதான் எனக்காக இராஜ்யத்தை ஆளவேண்டும்” என்று சொல்லிக் கொண்டே வாளை அவளிடம் கொடுத்தான்.
சட்டத்தை மதிக்காத எஸ்.ஆர்.எஃப்.நிர்வாகத்திற்கு போலீசு பாதுகாப்பு! போராடிய தொழிலாளிகளுக்கு தடியடி, கைது! சட்டத்தை மதிக்காத எஸ்.ஆர்.எஃப்.நிர்வாகத்திற்கு போலீசு பாதுகாப்பு! போராடிய தொழிலாளிகளுக்கு தடியடி, கைது! அச்சிடுக விவரங்கள் தாய்ப் பிரிவு: புதிய ஜனநாயகம் பிரிவு: புதிய ஜனநாயகம் 2008 வெளியிடப்பட்டது: 03 அக்டோபர் 2008 படிப்புகள்: 3989 கும்மிடிப்பூண்டியிலுள்ள எஸ்.ஆர்.எஃப். ஆலைத் தொழிலாளர்கள் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பாக "எஸ்.ஆர்.எஃப். புதிய ஜனநாயகத் தொழிலாளர் சங்கம்'' என்ற பெயரில் அணி திரண்னர். சங்கம் தொடங்கப்பட்ட நாள் முதல் இன்று வரையிலும் சங்கத்தை உடைக்கப் பல்வேறுவிதமான சதிகளை நிர்வாகம் கைக் கொண்டு வருகிறது. சங்கம் தொடங்கியதற்காக 11 பேரை மத்தியப் பிரதேசத்துக்கு பணியிட மாற்றம் செய்வது; சங்க நிர்வாகிகளை "தொடர்பணி'' என்ற பெயரில் இராஜஸ்தான், கேரளா, கோயமுத்தூர் என ஆலையின் இதர கிளைகளுக்கு விரட்டி, மாதக்கணக்கில் ஊருக்கு வர முடியாதபடி செய்வது, பொய்க் குற்றம் சுமத்தி பணியிடை நீக்கம் செய்வது, பணிநீக்கம் செய்வது என நீளும் நிர்வாகத்தின் சட்டவிரோத பழிவாங்கும் நடவடிக்கைகளைப் பட்டியலிடப் பக்கங்கள் போதாது. இந்நிலையில் சங்க நிர்வாகிகளை பாதுகாக்கப்பட்ட தொழிலாளியாக அறிவிக்கக் கோரி, தொழிலாளர் நல ஆணையரிடத்தில் தொழிற் தாவா தாக்கல் செய்யப்பட்டிருக்கும் செய்தி அறிந்ததுதான் தாமதம் உடனே செப்டம்பர் 2ந் தேதியன்று சங்க நிர்வாகிகள் அனைவரையும் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டது, நிர்வாகம். சங்க நிர்வாகிகளைப் பதம் பார்த்த இதே ஆயுதம் நாளை நம்மையும் நோக்கிப் பாயும் அபாயத்தை உணர்ந்து, ஆலையில் பணி புரிந்து கொண்டிருந்த தொழிலாளர்கள் சங்க நிர்வாகிகளின் பணியிடை நீக்கத்தை ரத்து செய்யக் கோரி செப். 4 அன்று ஆலைக்குள் திடீரென உள்ளிருப்புப் போராட்டத்தைத் தொடங்கினர். தொழிலாளர்கள் அனைவரும் ஒன்றுபட்டு போராடுவதைக் கண்டு அரண்ட நிர்வாகிகளும் கைக்கூலிகளும் கழிவறைக்குள் தஞ்சம் புகுந்தனர். உள்ளிருப்புப் போராட்டத்தை முறியடிக்க உள்ளூர் போலீசை வரவழைக்க நிர்வாகம் முயன்றது. இதனை அறிந்த புதிய ஜனநாயகத் தொழிலாளர் சங்கத் தலைமை, உள்ளூர் மக்களை அணி திரட்டி வந்து, ஆலைக்கு வெளியே ஆர்ப்பாட்டம் நடத்தியது. இதனையடுத்து, ஆலை நிர்வாகம் மாவட்ட போலீசு கண்காணிப்பாளரின் ஆதரவோடு, கலவரத் தடுப்பு போலீசுப் படையை இறக்கியது. அப்படை ஆலைக்கு வெளியே ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருந்த மக்களையும், தொழிலாளர்களையும் மட்டுமின்றி, ஆலைக்கு உள்ளேயும் புகுந்து காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை நடத்தியது. இப்போராட்டம் தொடர்பாக, 125 தொழிலாளர்களைக் கைது செய்த போலீசு அவர்களுள் 13 முன்னணி தொழிலாளர்கள் மீது பொய் வழக்குப் போட்டுச் சிறையில் அடைத்தது. 13 தொழிலாளர் மீதான பொய் வழக்கைத் திரும்பப் பெறு, தொழிற்சங்கம் துவங்கியதிலிருந்து பணியிடை நீக்கம், பணிநீக்கம் செய்யப்பட்ட 30 தொழிலாளிகளை வேலைக்கு அமர்த்து, செப். 30க்குள் அனைத்துப் பிரச்சினைகளையும் பேசித் தீர் என்ற கோரிக்கைகளை முன் வைத்து சங்கம் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றது. கடந்த 06.09.08 அன்று மாலை கும்மிடிப்பூண்டியில் கண்டனக் கூட்டமும்; அதனைத் தொடர்ந்து 08.09.08 அன்று சென்னை மெமோரியல் ஹால் அருகே 500 பேருக்கும் மேற்பட்டோரின் பங்கேற்புடன் கண்டன ஆர்ப்பாட்டமும் நடத்தப்பட்டன. தொழிலாளிகளின் உறுதியான போர் குணத்தை கண்டு திகைத்துப் போன மாவட்ட அரசு நிர்வாகம் ஆர்.டி.ஓ. விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. தொழிலாளி ஆர்.டி.ஓ. நிர்வாகம் என முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. 13 தொழிலாளிகளை நிபந்தனை பிணையில் விடுவிக்க ஆலை முதலாளியே சம்மதித்துவிட்ட போதிலும், "12,000 ரூபாய் சம்பளம் வாங்குற நீ எதுக்கு ஸ்டிரைக் பண்ற?'' என கேள்வியெழுப்பி பிணை தர கும்மிடிப்பூண்டி மாவட்ட அமர்வு நீதிமன்றமும், சென்னை உயர்நீதி மன்றமும் மறுத்துவிட்டன. எஸ்.ஆர்.எஃப். நிர்வாகம், தொழிலாளிகளின் தொழிற்சங்க உரிமையை நசுக்குவது ஒரு தனிப்பட்ட ஆலையின் பிரச்சினை அல்ல; இது ஒட்டு மொத்த தொழிலாளிகளின் உரிமைப் போராட்டங்களை நசுக்கும் முதலாளிகளின் வர்க்க நெறியின் ஒரு பகுதி என்பதை விளக்கி, கும்மிடிப் பூண்டி சிப்காட் மற்றும் சுற்று வட்டாரத்திலுள்ள ஆலைத் தொழிலாளிகளிடமும் தெருமுனைக் கூட்டங்கள், ஆலைவாயிற் கூட்டங்கள் மூலம் ஆதரவை திரட்டி அடுத்த கட்டப் போராட்டத்துக்கு ஆயத்தமாகி வருகிறது, எஸ்.ஆர்.எஃப். புதிய ஜனநாயகத் தொழிலாளர் சங்கம்.
அக்னிபாத் திட்டத்தின் மூலம் ஆள் சேர்ப்பது ராணுவத்தை பலவீனப்படுத்தும். பிரதமர் பதவி நிரந்தரமல்ல; என்றாவது ஒருநாள் அந்தப் பதவியிலிருந்து விலகவேண்டியிருக்கும் என்பதை மோடி புரிந்துகொள்ள வேண்டும் `கலகத் தலைவன்’ சத்ய பால் மாலிக்! பெரும்பாலான ஆளுநர்கள், மாநில முதல்வர்களுடன் மல்லுக்கட்டிக்கொண்டிருக்க, தனி ஓர் ஆளுநர் மட்டும் மத்திய அரசுக்குச் சவால்விட்டுக்கொண்டிருக்கிறார். மேகாலயா ஆளுநர் சத்ய பால் மாலிக்தான் அவர். புதிய வேளாண் சட்டங்கள், அக்னிபாத் திட்டம், கோவா பா.ஜ.க அரசின் ஊழல்கள் எனப் பல்வேறு விவகாரங்களில் பா.ஜ.க அரசுக்கும், பிரதமர் மோடிக்கும் எதிராக நின்றவர் மாலிக். தற்போது மீண்டும் மோடியைச் சீண்டியிருக்கிறார். ராஜஸ்தான் பல்கலைக்கழக நிகழ்ச்சி ஒன்றில் பேசியவர், சத்ய பால் மாலிக் ``அக்னிபாத் திட்டத்தின் மூலம் ஆள் சேர்ப்பது ராணுவத்தை பலவீனப்படுத்தும். பிரதமர் பதவி நிரந்தரமல்ல; என்றாவது ஒருநாள் அந்தப் பதவியிலிருந்து விலகவேண்டியிருக்கும் என்பதை மோடி புரிந்துகொள்ள வேண்டும். இனி நாட்டில் பல போராட்டங்கள் வெடிக்கும். விவசாயிகள் போராட்டம் விரைவில் தொடங்கும். இளைஞர்கள் இயக்கமும் தொடங்கும்’’ என்று பேசி மீண்டும் பரபரப்பைக் கிளப்பியிருக்கிறார். `தத்தா’வா... `குத்தா’வா..? மேற்கு வங்க மாநிலம், பங்குரா மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீகந்தி குமார் தத்தா. ரேஷன் கார்டில் தவறாக அச்சிடப்பட்ட தனது பெயரை மாற்றுவதற்காக இரண்டு முறை விண்ணப்பித்திருக்கிறார் ஸ்ரீகந்தி. அந்த இரண்டு முறையும் தவறு திருத்தப்படாமலேயே இருந்திருக்கிறது. இதையடுத்து, மூன்றாவது முறை விண்ணப்பித்தபோது, `ஸ்ரீகந்தி குமார் தத்தா’ என்பதற்கு பதிலாக, `ஸ்ரீகந்தி குமார் குத்தா’ என மாற்றியிருக்கின்றனர். இந்தியில் `குத்தா’ என்ற சொல்லுக்கு `நாய்’ என்று அர்த்தம். இதனால் கோபமடைந்த ஸ்ரீகந்தி, அந்தப் பகுதியின் வட்டார வளர்ச்சித்துறை அலுவலர் காரில் வந்தபோது, அவரை மறித்து வித்தியாசமான வகையில் முறையிட்டார். இது தொடர்பான புகார் மனுவை அந்த அதிகாரியிடம் கொடுத்து, சுமார் 45 நொடிகள் நாய்போலக் குரைத்து கவனம் ஈர்த்தார். முதலில் ஒன்றும் புரியாமல் விழித்த அந்த அதிகாரி, புகார் மனுவைப் பார்த்த பிறகு, சரிசெய்து தருவதாகக் கூறினார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகப் பரவிவருகிறது. ``மூன்று முறை தவறைத் திருத்த விண்ணப்பித்து வெறுத்துவிட்டேன். அதனால்தான் நாய்போலக் குரைத்து கோரிக்கைவைத்தேன். என்னைப்போல எளிய மக்கள் பிழைப்பை விட்டுவிட்டு வந்து எத்தனை முறைதான் அலைவது?’’ என்று கேள்வியெழுப்பியிருக்கிறார் ஸ்ரீகந்தி.
ஜெய்ஹிந்த் என்ற வார்த்தை எப்படி உருவானது? ஜெயஹிந்த் என்ற வார்த்தை எப்படி பிரலம் அடைந்தது? அதன் அர்த்தம் என்ன? வந்தே மாதரம் விடுதலைப் போராட்டம். வார்த்தை வரலாறு புதிய வார்த்தைகள் எப்படி உருவாகிறது? யாரால் உருவாக்கப்படுகிறது? என இன்று நம்மிடம் தரவுகள் சேமிக்கும் தொழில்நுட்பம் இருக்கலாம். ஆனால், இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன்பு ஆதாரங்கள் திரட்டுவது சுலபமான காரியம் அல்ல. மன்னர்கள் காலம் தொட்டே எத்தனையோ ஆதாரங்கள், எதிரி நாட்டு அரசர்களால் அழிக்கப்பட்டு உள்ளன. எஞ்சியுள்ள கோவில் கல்வெட்டு, சிற்பம், ஓவியம், ஓலைச்சுவடி, இலக்கிய பாடல்கள் மூலம் வரலாறுகளை அறிந்து வைத்து இருக்கிறோம். அகழ்வாராய்ச்சிகள் மூலம் தமிழ் தான் உலகின் மூத்த மொழி என நாளுக்கு நாள் புதிய புதிய ஆதாரங்கள் கிடைத்துக்கொண்டே உள்ளது. இவைகளைத் தவிர, பல செவி வழி சொற்கள் உள்ளன. ஆனால் அவற்றிக்கு ஆதாரம் எனக் கேட்டால் கொடுப்பது என்பது சுலபமான காரியம் இல்லை. அவை காலம் தொட்டே நாம் செவி வழியாக கேட்ட ஒன்று. யார் முதல் சுதந்திரப் போராட்ட வீரர்? என இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலங்களிலும் இந்தக் கேள்வி எழுப்பினால் ஒரே மாதிரி பதில்கள் கிடைக்காது. ஏன் என்றால்? அவரவர் தங்கள் இனத்தைச் சேர்த்தவர்களை அடையாளப்படுத்தும் விதமாக ஏதாவது ஒரு நிகழ்வை சுட்டிக்காட்டி ஒருவர் பெயரை கூறுவார்கள். இந்தியா என்ற ஒரு நாட்டை உருவாக்கி அதற்கு பெயர் சூட்டி அதை ஆட்சி செய்து, அதற்கு சுதந்திரம் கொடுத்து இன்று வரை நம்மை பேச வைத்துவிட்டு சென்றவர்கள் ஆங்கிலேயர்கள். ஆங்கிலேயருக்கு முன் எத்தனையோ மன்னர்கள் கிட்டத்தட்ட இந்தியாவின் பலபகுதிகளை கையகப்படுத்தி பெரிய சாம்ராஜ்ஜியம் உருவாக்கி உள்ளனர். ஆனால் உருவாக்கிய வேகத்தில் சரிந்தும் விழுந்தனர். ஆங்கிலேயர்களால் மட்டுமே ஒரு மிகப்பெரிய நாட்டை ஒற்றுமைப்படுத்தி ஆட்சி செய்து, மக்களாட்சி நாடக மாற்றி இந்தியா என்ற நாட்டை உருவாக்கினர். எல்லோரையும் இந்தியர்கள் என்ற ஒரு வட்டத்திற்குள் கொண்டு வந்தவர்கள் ஆங்கிலேயர்கள். அதன்பிறகே நமக்கு இந்தியர்கள் என்ற உணர்வும், இந்தியாவிற்கு சுதந்திரம் வேண்டும் என்ற உணர்வும் ஏற்பட்டது. அந்த உணர்வை உருவாக்கும் ஒரு மந்திரச்சொல் தான் ஜெய்ஹிந்த். மொழி எதுவாகினும் உணர்வு ஒன்று தான். ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த் என்றால் “இந்தியா வெல்க” என்று பொருள் படும். “இந்துஸ்தான் கி ஜெய்” என்ற வார்த்தையின் மறுஉருவாக்கம் தான் “ஜெய்ஹிந்த்”. இந்த வார்த்தையை யார் முதலில் முழங்கியது எனக் கேட்டால் அதற்கும் ஒரு பெரிய வரலாறே உள்ளது. ஜெய்ஹிந்த் என்ற வார்த்தையை முதலில் கூறியவர்கள் என இருவர் பெயர் உச்சரிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தை சேர்ந்த செண்பகராமன் பிள்ளை மற்றும் தெலுங்கானாவைச் சேர்ந்த ஆபித் ஹசன் சப்ரானி. செண்பகராமன் பிள்ளை செண்பகராமன் பிள்ளை இளம் வயது முதலே சுதந்திர போராட்ட வேட்கை கொண்டவர். புரோ இந்தியா என்ற நாளிதழை நடத்தினார். சர் வால்டர் வில்லியம் என்ற ஜெர்மானிய ஒற்றர் மூலம் ஜெர்மனி சென்றவர் அங்கேயே பட்டப்படிப்பை முடித்தார். ஹிட்லர் வழியைப் பின்பற்றி இந்திய விடுதலைக்காக பாடுபட்டார். 1933-ல் சுபாஸ் சந்திரபோஸ் வியன்னாவில் நடக்கும் மாநாட்டில் கலந்துகொண்டபோது, சுபாசிடம் ஜெய்ஹிந்த் என்ற வார்த்தையை செண்பகராமன் தெரிவித்ததாக இரண்டு புத்தகங்களின் தரவு கூறுகிறது. Madras Presidency in Pre-Gandhian Era என்ற புத்தகத்தை எழுதிய சரோஜா சுந்தராஜன், புத்தகத்தில் வியன்னா மாநாடு பற்றி எழுதியுள்ளார். Germany’s Asia-Pacific Empire என்ற புத்தகத்தை எழுதிய சார்லஸ் ஸ்டீபன்சன், அந்த புத்தகத்தில் ஜெய்ஹிந்த் பற்றியும் செண்பகராமன் பிள்ளை பற்றியும் குறிப்பிட்டு உள்ளார். ஆபித் ஹசன் சப்ரானி ஆபித் ஹசன் ஜெர்மனி சென்று பொறியியல் பட்டம் பெற்றவர். சந்திரபோஸ் பேச்சால் ஈர்க்கப்பட்டு விடுதலைப்போரில் இந்திய தேசிய ராணுவத்தில் இணைந்தார். இந்திய தேசிய ராணுவத்திற்கும், சுபாஸ் சந்திரபோஸுக்கும் மொழிப் பெயர்ப்பாளராக செயலாற்றினார். ஆபித் ஹசன் தான் “ஜெய் ஹிந்த்” என்ற வார்த்தையை சுபாசிற்கு பரிந்துரை செய்தார் என்றும் கூறப்படுகிறது. தாகூர் யஸ்வந் சிங் அவர்கள் கூறிய ஹிந்துஸ்தான் ஹி ஜெய் என்ற வார்த்தையைத் தழுவி ஜெய்ஹிந்த் என்ற வார்த்தையை ஆபித் ஹசன் உருவாக்கியதாக குர்பச்சன் சிங் மன்கட் தனது புத்தகத்தில் குறிப்பிட்டு உள்ளார். ஜெய்ஹிந்த் பிரபலம் ஆனது எப்படி? ஜெய்ஹிந்த் என்ற வார்த்தையை யார் முதலில் கூறினார் என்பதைவிட அதை பிரபலப்படுத்தியது சுபாஸ் சந்திரபோஸ். இந்திய விடுதலைப் போராட்டம் வெற்றி பெற காரணமான இந்திய தேசிய இராணுவத்தில், சுபாஷ் தன்னுடைய உரையை முடிக்கும் போது ஜெய்ஹிந்த் எனக் கூறி முடிப்பார். அதன்பிறகு, இந்தியா விடுதலை பெற்றதும் முதலில் கொடியேற்றிய பிரதமர் ஜவஹர்லால் நேரு ஜெய்ஹிந்த் எனக்கூறி உரையாற்றினார். ஆகஸ்டு 15, 1947 முதல் அனைத்து அஞ்சல்களில் ஜெய் ஹிந்த் என்ற வெற்றி முழக்கச் சொல் முத்திரையாகப் பதிக்கப்பட்டது. அனைத்து அகில இந்திய வானொலி நிகழ்ச்சிகளும், ஜெய் ஹிந்த் என்ற வெற்றி முழக்கச் சொல்லுடன் முடிவு பெரும். 1947-ல் நடந்த பிரித்தானிய அரசி எலிசபத் – பிலிப் திருமணத்திற்கு, மகாத்மா காந்தி தன் கையால், “ஜெய் ஹிந்த் என்ற வெற்றி முழக்கச் சொல்” சால்வையை அன்பளிப்பாக அனுப்பி வைத்தார். இன்று வரை, ஜெய்ஹிந்த் மற்றும் வந்தே மாதரம் என்பது இந்தியர்கள் தங்கள் தேசபற்றை வெளிப்படுத்தும் ஒரு முழக்கமாக முழங்குகின்றனர்.
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, தேர்தல் பிரச்சாரத்தின் ஓர் அங்கமாக இந்துக்களுக்கு மதவெறியூட்டிக் கொண்டு வருகிறது பா.ஜ.க! மனித குலத்திற்கே வேட்டு வைக்கும் இத்தகைய மதவெறியர்களை அடையாளம் கண்டுகொண்டு கண்டித்து வரும் இந்து சகோதரர்களுக்கு இச்சமயத்தில் நாம் நன்றி சொல்லியாக வேண்டும். ஓட்டுப் பொறுக்கிகளின் கேவலமான அரசியல் லாபத்திற்காக, அப்பாவிச் சிறுபான்மையினர் மீது பழியைப் போட்டு இந்து – முஸ்லிம் ஒற்றுமையைக் குலைக்கும் செயல்கள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக தமிழகத்தில் இந்து இயக்க தலைவர்கள் மீது நடத்தப்பட்டு வரும் கொலைகளை முன்னிறுத்தி, முஸ்லிம்கள் மீது பழி போடுவதற்கான முயற்சிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. எனினும் அவற்றில் பெரும்பாலானவை தோல்வியில் முடிந்து வருகின்றன. “படுகொலைகளைச் செய்தவர்கள் முஸ்லிம்கள் தான்!” என்று போராட்டம் நடத்திய ஹிந்துத்துவா இயக்கங்களே வெட்கப்பட்டு தலைகுனியும் படியாக, அக் கொலைகளுக்கான காரணம் முன் விரோதம், தொழிலில் போட்டி, கொடுக்கல் வாங்கல், பெண் தொடர்பு, கந்து வட்டி, அரசியல் இலாபம் என்று பல்வேறு பரிமாணங்கள் தொடர் விசாரணைகளில் வெளிவந்து பல் இளிக்கிறது. மேற்கண்ட காரணங்களில் லேட்டஸ்டாக இணைந்திருப்பது ஹிந்துத்துவா நிர்வாகிகளின் “விளம்பர மோகம்” அதாவது, தன் வீட்டிற்குத் தானே வெடிகுண்டு வீசிவிட்டு – தீவிரவாதிகள் தாக்கியதாகவும், அதனால் தனக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் பொய் புகார் அளித்து, டிவி, செய்தித்தாள்கள் மூலம் “புகழ்” அடைய எண்ணிய கேவலங்கள் வெளியே வந்து சந்தி சிரிக்கின்றன. இன்றைய (05-10-2013) ஊடங்களில் வெளியான பரபரப்பான செய்தி: இந்நேரம்.காம்: குண்டு வீசியதாக நாடகமாடிய பா.ஜ.க நிர்வாகி கைது! கோவை: தனது வீட்டில் தானே குண்டு வீசி நாடகமாடிய பா.ஜ.க நிர்வாகியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோவை, வடவள்ளி அருகே, சோமையம்பாளையம் தாயுமானவர் வீதியில், வசிப்பவர் ராமநாதன். இவர்,பா.ஜ.,வின், நிர்வாகி. தன் வீட்டில் மர்ம நபர்கள், பெட்ரோல் குண்டு வீசியதாக, காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் ராமநாதன், வேண்டுமென்றே, தனக்குத்தானே தனது வீட்டில் குண்டு வீசிவிட்டு தவறான புகார் அளித்தது தெரியவந்தது. இதையடுத்து, ராமநாதன் கைது செய்யப்பட்டார். பின்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைக்கப்பட்டார் இதேபோல தன் சொந்த விளம்பரத்திற்காக கடந்த ஆகஸ்ட் மாதம் திண்டுக்கல்-பழனி சாலையில் பாஜக நிர்வாகி பி. பிரவீண்குமார் தன் சொந்த வீட்டில். பெட்ரோல் நிரப்பப்பட்ட பாட்டில்கள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டதும் இதுதொடர்பாக பிரவீண்குமார் மற்றும் கமலக்கண்ணன் ஆகியோர் கைது செய்யப்பட்டதும் குறிப்பிடத் தக்கது. இதை வாசித்தீர்களா? : ராம் - பாம் என்று மீடியாக்கள் ஏன் தலைப்பிட வில்லை? http://www.inneram.com/news/tamilnadu/2410-bombing-acting-bjp-personage-arrested.html http://www.dinamalar.com/news_detail.asp?id=819441 http://newindianexpress.com/states/tamil_nadu/BJP-worker-hurls-bomb-at-his-house-files-false-complaint/2013/10/04/article1818993.ece பாஜக நிர்வாகி ராமனாதன் வீட்டில் குண்டு வெடித்ததைத் தொடர்ந்து காவல்துறையினரின் விசாரணை தொடர்புடைய Youtube வீடியோ: {youtube}CWsrgzmjP70{/youtube} Ramanathan had lodged a police complaint after an organisation had put up posters in Coimbatore opposing the visit of Gujarat Chief Minister and BJP’s prime ministerial candidate Narendra Modi to Tamil Nadu. (The Hindu) ஹிந்துத்துவாவின் இத்தகைய மோசமான செயல்களை இந்து சகோதர சகோதரிகளே தற்போது பெருமளவில் அடையாளம் கண்டு வருகின்றனர். மேலும், இத்தகைய வேஷங்களுக்கு ஆதரவு தரும் பார்ப்பன தினமலர் போன்ற மோடி பிரச்சாரப் பத்திரிகைகளும் இந்துக்களாலேயே இனம் கண்டு ஒதுக்கப்படுகின்றன. தமிழக மக்கள் இத்தகைய மதவெறிப் பிரச்சாரங்களை அடையாளம் கண்டு நிராகரித்து ஒருங்கிணைய வேண்டும். அமைதிப் பூங்காவான தமிழகத்தில் இந்துமதவெறியருக்கு இம்மியளவும் இடமில்லை என்பதை நிலைநாட்ட வேண்டும். – அபூ ஸாலிஹா தொடர்புடைய செய்திகள்: “கட்சியில் பதவிக்காக, தன் பைக்கை, தானே எரித்த இந்து முன்னணி பிரமுகர் சக்திவேல் கைது!!” “பிரதமா் மோடிக்கு வெடிகுண்டு மிரட்டல்: காஞ்சிபுரம் பாஜக நிா்வாகி திருநாவுக்கரசு கைது!” “ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மனோகரன் கைது: விளம்பரத்திற்காக ஒரு வெடிகுண்டு மிரட்டல்!”
அமிர்தசஸ் பொற்கோயில் அருகே சிவசேனா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சுதிர் சூரி சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாநிலம், அமிர்தசரஸ் நகரில் புகழ்பெற்ற பொற்கோயில் உள்ளது. அந்தக் கோயில் வளாகத்திற்கு வெளியே குப்பையில் உடைந்த சாமி சிலைகள் சில கிடந்துள்ளன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிவசேனா சார்பில் தர்ணா போராட்டம் இன்று அறிவிக்கப்பட்டிருந்தது. சிவசேனா மூத்த தலைவர்களில் ஒருவரான சுதிர் சூரி தலைமையில் அக்கட்சியினர் அதிகாரிகளுக்கு எதிராக தர்ணா போராட்டம் நடத்திக் கொண்டிருந்தனர். அவர்களைப் போலீஸார் தடுத்ததால் அங்கு தள்ளு முள்ளு ஏற்பட்டது. இந்த நிலையில் அப்போது கூட்டத்தில் இருந்தவர் ஒருவர் சுதிர் சூரியை துப்பாக்கியால் சுட்டார். இதில் சம்பவ இடத்திலேயே சுதிர் சூரி உயிரிழந்தார். இச்சம்பவத்தைப் பார்த்த ஒருவர் கூறுகையில்,"காரில் இருந்து இரண்டு பேர் வெளியே வந்தனர். அதில் ஒருவர், மிக அருகில் இருந்து சுதிர் சூரி மீது 5 முறை சுட்டார். இதில் அவரது தலை, தோளில் குண்டு பாய்ந்தது. சம்பவ இடத்திலேயே சுதிர் சூரி உயிரிழந்து விட்டார். இந்த சம்பவம் நடந்த போது அந்த பகுதியில் போலீஸார் நின்று கொண்டிருந்தனர்" என்றார். இச்சம்பவம் குறித்து சிவசேனா பஞ்சாப் தலைவர் யோகராஜ் ஷர்மா கூறுகையில்," ஆம் ஆத்மி அரசு பொறுப்பேற்றதில் இருந்து பஞ்சாப்பில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது" என்று குற்றம் சாட்டினார். பஞ்சாப்பில் பாடகர் சித்து மூஸ்வாலா சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அடங்குவதற்குள் அடுத்து ஒரு கட்சி தலைவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்து அரசியல் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டிலுள்ள அனைத்து பிள்ளைகளுக்கும் இலவசக் கல்வியை உறுதிசெய்து கற்ற பரம்பரையொன்றைக் கொண்ட சமூகத்தைக் கட்டியெழுப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கொழும்பு விசாகா வித்தியாலயத்தின் நூற்றாண்டு விழாவில் இன்று முற்பகல் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். வித்தியாலயத்துக்கு சென்ற ஜனாதிபதியை மாணவிகள் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். விழாவில் உரையாற்றிய ஜனாதிபதி விசாகா கல்லூரியின் நூறு வருட சிறந்த பயணத்தைப் பாராட்டினார். புதிய தொழில்நுட்பம், வர்த்தகமயமாதல், போட்டித்தன்மை போன்ற அம்சங்கள் பல்வேறு சவால்களை ஏற்படுத்தியிருக்கின்ற நிலையில் எமது கலாசாரத்தைப் பாதுகாத்து முன்னேறிச்செல்வதற்கு எமது பிள்ளைகள் தயாராக இருக்கவேண்டும் என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார். 1917ஆம் ஆண்டு ஜெரமியஸ் டயஸ் அம்மையாரினால் ஆரம்பிக்கப்பட்ட கொழும்பு விசாகா வித்தியாலயம் இலங்கையில் உள்ள பழைமைவாய்ந்த பௌத்த மகளிர் கல்லூரியாகும். கல்லூரியின் நூற்றாண்டை முன்னிட்டு வெளியிடப்பட்ட நினைவு நாணயத்தை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி ஜனாதிபதியிடம் கையளித்தார். Related posts: காசநோயால் பீடிக்கப்பட்டிருக்கும் 183 பேருக்கு 5,000 உதவித்தொகை! வடக்கு - கிழக்கில் தாதியருக்கான வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்கை! பாடசாலை அதிபா்கள் தொடர்பில் முக்கிய பணிப்புரை விடுத்துள்ள வடக்கின் ஆளுநர்! Tweet தில்லைக்காளி அம்மன் கோவில் வீதியை புனரமைத்துத் தருமாறு கோண்டாவில் வடகிழக்கு பகுதி மக்கள் ஈழ மக்கள் ...
தமிழ் திரையுலகில் வெற்றிகரமான நடிகராக, தயாரிப்பாளராக அறியப்படுகின்ற ஆர்கேவுக்கு வெற்றிகரமான பிசினஸ்மேன் என்கிற இன்னொரு முகமும் இருக்கிறது. கடந்த 17 வருடங்களாக தான் திறம்பட நடத்தி வரும் வி கேர் நிறுவனத்தின் புதிய கண்டுபிடிப்பாக விஐபி ஹேர் கலர் ஷாம்பூ என்கிற புதிய புராடக்டை மார்க்கெட்டில் அறிமுகப்படுத்தியுள்ளார் ஆர்கே.. ‘டை’ அடிப்பதில் உள்ள நடைமுறை சிரமங்களுக்கு தீர்வு காணும் விதமாக அதற்கு மாற்றாக எளிமையாக பயன்படுத்தும் விதமாக இது உருவாகியுள்ளது. இந்த புதிய கண்டுபிடிப்பும் அதன் பயன் குறித்தும் ஆர்.கேவிடம் கேட்டோம்.. “இன்றைய தேதியில் எல்லோருமே நரைமுடி என்பதை கருப்பாக்க, கலராக்க வேண்டுமென நினைக்கிறார்கள். உலகத்திலேயே ஆண்களாக இருக்கட்டும் பெண்களாக இருக்கட்டும் இளமைக்கும் முதுமைக்குமான வித்தியாசத்தை உணர்த்துவது நரைமுடி தான். நரைமுடி வந்துவிட்டதற்காக வருத்தப்படுகிறவர்கள் பலரும் அதை மறைப்பதற்கு அதிகப்படியான நேரம், பணம் செலவிடுகிறார்கள். இன்றைக்கு நாற்பது சதவீத மக்கள் நரைமுடியை மறைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். முன்பெல்லாம் வயதானவர்களுக்கு நரை வந்தது போய், தற்போது டீனேஜில் உள்ள இளம் வயதினருக்கும் நரைமுடி வர ஆரம்பித்துவிட்டது. ஆக, இன்று நரைமுடி என்பது அழகைவிட மிகப்பெரிய பிரச்சனையாக இருந்துகொண்டு இருக்கிறது. ஒருவர் கருப்பா, சிவப்பா என்கிற அழகு பிரச்சனையையெல்லாம் தாண்டி இருதரப்பினருக்குமே பொதுவான பிரச்சனையாகவே நரைமுடி மாறிவிட்டது. உலகம் முழுவதிலும் இதற்கு தீர்வாக இப்போதுவரை இருப்பது ‘டை அடித்தல்’ ஒன்று மட்டுமே. ஒரு பியூட்டி பார்லருக்கு சென்றால் அங்கே உள்ளவர்கள் கைகளில் க்ளவுஸ் அணிந்துகொண்டு, இரண்டுவிதமான கெமிக்கல்களை எடுத்து, அதை சரியான விகிதத்தில் கலந்து, அங்கேயே காற்றில் சற்று உலரவைத்து அதன்பின்னர் நமது தலைமுடியில் அதை அடித்துவிடும் முறை தான் தொழில் ரீதியாக இருக்கிறது. ஆனால் பெரும்பாலான மக்கள் அங்கே ஒருமுறை செல்வதற்கே ஆயிரக்கணக்கில் செலவாகிறது என்பதாலும், மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டியிருப்பதாகவும் நினைக்கிறார்கள். அதனால் இதை பயன்படுத்திக்கொண்டு வியாபாரிகள் இதே பொருட்களை, மக்களே பயன்படுத்திக்கொள்ளும் வகையில் கடையில் விற்பனை செய்ய ஆரம்பித்துவிட்டார்கள்.. ஆனாலும் கடைகளில் செய்வது போன்றே கைகளில் க்ளவுஸ் அணிந்துகொண்டு, இரண்டுவிதமான கெமிக்கல்களை எடுத்து அதை சரியான விகிதத்தில் கலப்பது, தனக்குத்தானே டை அடித்துக்கொள்ள முடியாதது என பலவித சிரமத்தை நாம் எதிர்நோக்க வேண்டியிருக்கிறது. அதுமட்டுமல்ல இந்த வகை டை கைகளில் ஓட்டும் தன்மை கொண்டவை. தோலில் ஒட்டும் டை தான் இன்றுவரை உலகத்தில் நடைமுறையில் இருந்து வருகிறது. அமோனியா அல்லது ஏதாவது ஒரு கெமிக்கல் அதில் கலந்திருக்கும்.. கண் எரிச்சல் ஏற்படும்.. சதவீத அடிப்படையில் சரியாக கலக்காவிட்டால் இருக்கும் முடியை இழந்துவிட கூடிய அபாயமும் இருக்கிறது. இதனாலேயே பலர் தங்களது முடியை இழந்து பரிதாபகரமான தோற்றத்தில் வலம் வருகிறார்கள். சரி டையே அடிக்கவேண்டாம் என விட்டுவிட்டால், நண்பர்கள் வட்டாரத்தில் அதற்கும் கேலிப்பேச்சுக்கு ஆளாக வேண்டியிருக்கும். அதையும் மீறி டை அடித்துக்கொண்டுவந்தால் ‘கருப்பு ஹெல்மெட்’ போட்டிருக்கிறான் என பலர் கிண்டலுக்கு ஆளாவதும் உண்டு. எது அழகு என நினைக்கிறோமோ அதுவே நமக்கு அசிங்கமாக மாறிவிட கூடிய சூழல் தான் இதனால் உருவாகும். இதற்கெல்லாம் தீர்வாகத்தான் உலகத்திலேயே இதுவரை யாருமே கண்டுபிடிக்காத ஒரு புது தொழில்நுட்பத்தை நாம் கண்டுபிடித்திருக்கிறோம்.. அதுதான் விஐபி ஹேர் கலர் ஷாம்பூ இதை கண்டுபிடித்ததில் ஒரு இந்தியனாக, அதிலும் தமிழ்நாட்டில் இருந்து உலகத்திற்கு இந்த கண்டுபிடிப்பை கொண்டுசெல்லும் ஒரு தமிழனாக நான் பெருமைப்படுகிறேன். இதுவரை டை அடித்துவிட்டு குளிக்கும்போது ஷாம்பூ போடுவது தான் வழக்கமாக இருக்கிறது. ஆனால் ஷாம்பூ போட்டு குளித்தால் எப்படி அழுக்கெல்லாம் மறைகிறதோ, அதேபோல நரைமுடியும் மறைகின்ற மாதிரி கண்டிஷனருடன் சேர்த்தே இந்த ஷாம்பூவை வழங்குகின்றோம். இதற்கு கிளவுஸ் தேவையில்லை, கிண்ணம் தேவையில்லை, பிரஷ் தேவையில்லை, கண் எரிச்சல் கிடையாது, இன்னொருவரின் உதவி தேவையில்லை, தோலில், முகத்தில் கருப்பாக ஒட்டிக்கொள்ளுமே, பார்ப்பதற்கு அசிங்கமாக இருக்குமே என்கிற கவலை கிடையாது. வழக்கமான ஷாம்பூவை பயன்படுத்துவதை போல இதை பயன்படுத்த முடியும்.. கைகளை தண்ணீரால் ஈரமாக்கிக்கொண்டு நமக்கு தேவையான அளவு விஐபி ஹேர் கலர் ஷாம்பூவை கைகளில் விட்டு, அதில் வரும் நுரையை உலர்ந்த நம் தலைமுடியில் ஷாம்பூ போலவே தேய்த்துக்கொண்டு கால்மணி நேரம் கழித்து குளித்துவிட்டு வந்தால் நரைமுடி இருந்த இடமே இல்லாம் போயிருப்பதை கண்கூடாக பார்க்கலாம். இதை ஒருமுறை பயன்படுத்தினால் சுமார் இருபது நாட்களுக்கு குறையாமல் நரைமுடியை தெரியவிடாமல் தடுக்கும். இன்று பல பிரபலங்கள் கைகளில் பார்த்தோம் என்றால் நரைமுடி இருக்காது.. காரணம் wax எனும் செயற்கை முறைதான். ஆனால் தலைமுடி, தாடி இவற்றையும் தாண்டி நெஞ்சு முடி, கை முடிக்கும் இந்த விஐபி ஹேர் கலர் ஷாம்பூவை பயன்படுத்தலாம் என உலகத்திலேயே முதன்முறையாக நிரூபித்துள்ளோம். சுருக்கமாக சொன்னால் உச்சிமுதல் உள்ளங்கால் வரை நரைமுடிக்கு சரியான தீர்வுதான் இந்த விஐபி ஹேர் கலர் ஷாம்பூ” என பெருமை பொங்க கூறுகிறார் ஆர்கே...
நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி முதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி தொலைபேசி எண் கணிப்பொறி -லிருந்து அங்கியுலாஅங்கேரிஅங்கோலாஅசர்பைஜான்அசென்சன் தீவுஅந்தோராஅன்டிகுவா பர்புடாஅமெரிக்க ஐக்கிய நாடுகள்அமெரிக்க சமோவாஅயர்லாந்துஅருபாஅர்கெந்தீனாஅல்சீரியாஅல்பேனியாஆசுதிரியாஆப்கானித்தான்ஆர்மீனியாஆஸ்திரேலியாஇசுரேல்இத்தாலிஇந்தியாஇந்தோனேசியாஇலங்கைஈராக்ஈரான்உகாண்டாஉக்ரைன்உசுபெக்கிசுத்தான்உருகுவைஉருசியாஎகிப்துஎக்குவடோரியல் கினிஎக்குவடோர்எசுத்தோனியாஎசுப்பானியாஎதியோப்பியாஎயிட்டிஎரித்திரியாஎல் சால்வடோர்ஐக்கிய அரபு அமீரகம்ஐசுலாந்துஓமான்கசக்ஸ்தான்கத்தார்கனடாகமரூன்கம்போடியாகயானாகாங்கோ மக்களாட்சிக் குடியரசுகானாகாபோன்காம்பியாகினிகினி-பிசாவுகிரிபட்டிகிரெனடாகிரேக்ககிர்கிசுத்தான்கிறீன்லாந்துகிழக்குத் திமோர்குக் தீவுகள்குரோவாசியாகுவாதலூப்பேகுவாத்தமாலாகுவைத்கூபாகென்யாகேப் வர்டிகேமன் தீவுகள்கொக்கோசு (கீலிங்) தீவுகள்கொங்கோ குடியரசுகொசோவோகொமொரோசுகொலொம்பியாகோட் டிவார்கோஸ்ட்டா ரிக்காசமோவாசவூதி அரேபியாசாகோசு ஆர்சிபெலகோசாட்சான் மரீனோசாம்பியாசாவோ டொமே மற்றும் பிரின்சிப்பிசிங்கப்பூர்சிபூட்டிசிம்பாப்வேசியார்சியாசியேரா லியோனிசிரியாசிலிசிலோவாக்கியாசீசெல்சுசீனாசுரிநாம்சுலோவீனியாசுவாசிலாந்துசுவிட்சர்லாந்துசுவீடன்சூடான்செக் குடியரசுசெனிகல்செயிண்ட் எலனாசெயிண்ட் கிட்சும் நெவிசும்செயிண்ட் மார்டென்செயிண்ட் லூசியாசெயிண்ட். வின்செண்ட் கிரெனேடின்ஸ்செயின்ட் பியர்ரே மற்றும் மிக்குயலான்செர்பியாசைப்பிரஸ்சொலமன் தீவுகள்சோமாலியாஜப்பான்ஜிப்ரல்டார்ஜெர்மனிஜோர்தான்டிரினிடாட் மற்றும் டொபாகோடென்மார்க்டொமினிக்கன் குடியரசுடொமினிக்காடோகோடோக்கெலாவ்தஜிகிஸ்தான்தன்சானியாதாய்லாந்துதாய்வான்துனீசியாதுருக்கிதுருக்மெனிஸ்தான்துவாலுதென்கொரியாதென்னாப்பிரிக்காதெற்கு சூடான்தொங்காநமீபியாநவூருநிக்கராகுவாநியுவேநியூ கலிடோனியாநியூசிலாந்துநெதர்லாந்துநெதர்லாந்து அண்டிலிசுநேபாளம்நைஜர்நைஜீரியாநோர்போக் தீவுநோர்வேபகாமாசுபகுரைன்பனாமாபப்புவா நியூ கினிபரகுவைபரோயே தீவுகள்பலத்தீன் நாடுபலாவுபல்காரியாபாக்கித்தான்பார்படோசுபிஜிபிட்கன் தீவுகள்பின்லாந்துபிரான்சுபிரெஞ்சு கயானாபிரெஞ்சு பொலினீசியாபிரேசில்பிலிப்பைன்ஸ்புருண்டிபுரூணைபுர்க்கினா பாசோபூட்டான்பெனின்பெரிய பிரித்தானியா மற்றும் வட அயர்லாந்தின் ஐக்கிய பெருபெர்மியுடாபெலருஸ்பெலீசுபெல்ஜியம்பொசுனியா எர்செகோவினாபொலிவியாபோக்லாந்து தீவுகள்போட்சுவானாபோர்த்துகல்போலந்துமக்காவுமங்கோலியாமடகாசுகர்மத்திய ஆபிரிக்கக் குடியரசுமர்தினிக்குமலாவிமலேசியாமல்தோவாமார்சல் தீவுகள்மாலிமாலைத்தீவுகள்மால்ட்டாமியான்மர்மூரித்தானியாமெக்சிக்கோமைக்கிரோனீசியக்மொசாம்பிக்மொண்டெனேகுரோமொனாக்கோமொரிசியசுமொரோக்கோயமேக்காயெமென்ரீயூனியன்ருமேனியாருவாண்டாலக்சம்பர்க்லாத்வியாலாவோஸ்லித்துவேனியாலிபியாலீக்டன்ஸ்டைன்லெசோத்தோலெபனான்லைபீரியாவங்காளதேசம்வடகொரியாவடக்கு மரியானா தீவுகள்வடமாக்கடோனியக்வத்திக்கான் நகர்வனுவாட்டுவலிசும் புட்டூனாவும்வியட்நாம்வெனிசுவேலாஹொங்கொங்ஹொண்டுராஸ் -க்கு அழைத்திடுக யான் மேயன்AzoresBougainvilleCasey Station (அன்டார்க்டிக்கா)Ceuta / MelillaChatham IslandsChuukDavis Station (அன்டார்க்டிக்கா)Dumont d'Urville Station (அன்டார்க்டிக்கா)GalapagosGambier IslandsKerguelenKiritimatiLord Howe IslandMadeiraMarquesasMawson Station (அன்டார்க்டிக்கா)McMurdo Station (அன்டார்க்டிக்கா)Palmer Station (அன்டார்க்டிக்கா)PohnpeiRothera Station (அன்டார்க்டிக்கா)Saint-BarthélemySyowa Station (அன்டார்க்டிக்கா)TarawaTroll Station (அன்டார்க்டிக்கா)Vostok Station (அன்டார்க்டிக்கா)Wakeஅங்கியுலாஅங்கேரிஅங்கோலாஅசர்பைஜான்அசென்சன் தீவுஅந்தோராஅன்டார்க்டிக்காஅன்டிகுவா பர்புடாஅப்காசியாஅமெரிக்க ஐக்கிய நாடுகள்அமெரிக்க கன்னித் தீவுகள்அமெரிக்க சமோவாஅயர்லாந்துஅருபாஅர்கெந்தீனாஅல்சீரியாஅல்பேனியாஆசுதிரியாஆப்கானித்தான்ஆர்மீனியாஆஸ்திரேலியாஇங்கிலாந்துஇசுக்கொட்லாந்துஇசுரேல்இத்தாலிஇந்தியாஇந்தோனேசியாஇலங்கைஈராக்ஈரான்ஈஸ்டர் தீவுஉகாண்டாஉக்ரைன்உசுபெக்கிசுத்தான்உருகுவைஉருசியாஎகிப்துஎக்குவடோரியல் கினிஎக்குவடோர்எசுத்தோனியாஎசுப்பானியாஎதியோப்பியாஎயிட்டிஎரித்திரியாஎல் சால்வடோர்ஏர்ட் தீவுஐக்கிய அரபு அமீரகம்ஐசுலாந்துஓமான்ஓலாண்ட் தீவுகள்கசக்ஸ்தான்கத்தார்கனடாகமரூன்கம்போடியாகயானாகாங்கோ மக்களாட்சிக் குடியரசுகாத்தலோனியாகானாகாபோன்காம்பியாகால்வாய் தீவுகள்கினிகினி-பிசாவுகிரிபட்டிகிரெனடாகிரேக்ககிர்கிசுத்தான்கிறிஸ்துமசு தீவுகிறீன்லாந்துகிழக்குத் திமோர்குக் தீவுகள்குயெர்ன்சிகுராசோகுரோவாசியாகுவாதலூப்பேகுவாத்தமாலாகுவாம்குவைத்கூபாகென்யாகேனரி தீவுகள்கேப் வர்டிகேமன் தீவுகள்கொக்கோசு (கீலிங்) தீவுகள்கொங்கோ குடியரசுகொசோவோகொமொரோசுகொலொம்பியாகோட் டிவார்கோஸ்ட்டா ரிக்காசன்சிபார்சபாசமோவாசவூதி அரேபியாசாகோசு ஆர்சிபெலகோசாட்சான் மரீனோசாம்பியாசாவோ டொமே மற்றும் பிரின்சிப்பிசிங்கப்பூர்சிபூட்டிசிம்பாப்வேசியார்சியாசியேரா லியோனிசிரியாசிலிசிலோவாக்கியாசீசெல்சுசீனாசுரிநாம்சுலோவீனியாசுவாசிலாந்துசுவிட்சர்லாந்துசுவீடன்சூடான்செக் குடியரசுசெனிகல்செயிண்ட் எசுடேசசுசெயிண்ட் எலனாசெயிண்ட் கிட்சும் நெவிசும்செயிண்ட் மார்டென்செயிண்ட் லூசியாசெயிண்ட். வின்செண்ட் கிரெனேடின்ஸ்செயின்ட் பியர்ரே மற்றும் மிக்குயலான்செர்பியாசைப்பிரஸ்சொலமன் தீவுகள்சோமாலியாஜப்பான்ஜிப்ரல்டார்ஜெர்மனிஜோர்தான்டிரிசுதான் டா குன்ஹாடிரினிடாட் மற்றும் டொபாகோடென்மார்க்டொமினிக்கன் குடியரசுடொமினிக்கன் குடியரசுடொமினிக்கன் குடியரசுடொமினிக்காடோகோடோக்கெலாவ்தஜிகிஸ்தான்தன்சானியாதாய்லாந்துதாய்வான்துனீசியாதுருக்கிதுருக்மெனிஸ்தான்துர்கசு கைகோசு தீவுகள்துவாலுதென்கொரியாதென்னாப்பிரிக்காதெற்கு சண்ட்விச் தீவுகள்தெற்கு சூடான்தெற்கு யோர்சியா தீவுதொங்காநகோர்னோ கரபாக் குடியரசுநடுவழி தீவுகள்நமீபியாநவூருநிக்கராகுவாநியுவேநியூ கலிடோனியாநியூசிலாந்துநெதர்லாந்துநெதர்லாந்து அண்டிலிசுநேபாளம்நைஜர்நைஜீரியாநோர்போக் தீவுநோர்வேபகாமாசுபகுரைன்பனாமாபப்புவா நியூ கினிபரகுவைபரோயே தீவுகள்பலத்தீன் நாடுபலாவுபல்காரியாபாக்கித்தான்பார்படோசுபிஜிபிட்கன் தீவுகள்பின்லாந்துபிரஞ்சு தெற்கத்திய மற்றும் அண்டார்க்டிக் நிலங்கள்பிரான்சுபிரித்தானிய இந்தியப் பெருங்கடல் மண்டலம்பிரித்தானிய கன்னித் தீவுகள்பிரெஞ்சு கயானாபிரெஞ்சு பொலினீசியாபிரேசில்பிலிப்பைன்ஸ்புருண்டிபுரூணைபுர்க்கினா பாசோபுவேர்ட்டோ ரிக்கோபுவேர்ட்டோ ரிக்கோபூட்டான்பூவே தீவுபெனின்பெரிய பிரித்தானியா மற்றும் வட அயர்லாந்தின் ஐக்கிய பெருபெர்மியுடாபெலருஸ்பெலீசுபெல்ஜியம்பொசுனியா எர்செகோவினாபொனெய்ர்பொலிவியாபோக்லாந்து தீவுகள்போட்சுவானாபோர்த்துகல்போலந்துமக்காவுமக்குவாரி தீவுமக்டொனால்ட் தீவும்மங்கோலியாமடகாசுகர்மத்திய ஆபிரிக்கக் குடியரசுமயோட்டேமர்தினிக்குமலாவிமலேசியாமல்தோவாமாண் தீவுமார்சல் தீவுகள்மாலிமாலைத்தீவுகள்மால்ட்டாமியான்மர்மூரித்தானியாமெக்சிக்கோமேற்கு சகாராமைக்கிரோனீசியக்மொசாம்பிக்மொண்டெனேகுரோமொனாக்கோமொன்செராட்மொரிசியசுமொரோக்கோயமேக்காயெமென்யேர்சிரீயூனியன்ருமேனியாருவாண்டாலக்சம்பர்க்லாத்வியாலாவோஸ்லித்துவேனியாலிபியாலீக்டன்ஸ்டைன்லெசோத்தோலெபனான்லைபீரியாவங்காளதேசம்வட அயர்லாந்துவடகொரியாவடக்கு சைப்பிரசுவடக்கு மரியானா தீவுகள்வடமாக்கடோனியக்வத்திக்கான் நகர்வத்திக்கான் நகர்வனுவாட்டுவலிசும் புட்டூனாவும்வியட்நாம்வெனிசுவேலாவேல்ஸ்ஸ்வால்பார்ட்ஹவாய்ஹொங்கொங்ஹொண்டுராஸ்
கார்த்திகை மாதத்தின் ஞாயிற்றுக்கிழமைகளில், வீட்டு வாசலில் மாலையில் விளக்கேற்றி வைத்தால், நம் இல்லத்தில் ஐஸ்வர்யம் பெருகும். தரித்திரம் விலகும் என்பது ஐதீகம். கார்த்திகை மாதம் என்பது வழிபாட்டுக்கு உரிய அற்புதமான மாதம். கொஞ்சம் மழையும் கொஞ்சம் குளிரும் கலந்திருக்கக் கூடிய இந்த மாதத்தில் நம் மனமானது ஒருபுள்ளியில் அழகுற இயங்கும் என்றும் முழு ஈடுபாட்டுடன் எந்தவொரு செயலையும் நம்மால் செய்யும் சக்தி கிடைக்கும் என்றும் ஆச்சார்யர்கள் கணித்துச் சொல்லியிருக்கிறார்கள். கார்த்திகை மாதம் என்பது ஒருபக்கம் ஐயப்ப பக்தர்களுக்கான மாதம். இன்னொரு பக்கம் சிவாலய வழிபாட்டுக்கான மாதம். மற்றொரு பக்கம் பார்த்தால், கார்த்திகேயன் என்று அழைக்கப்படும் முருகப்பெருமானை வணங்குவதற்கு உரிய மாதமும் கூட! அடியும் முடியும் தேடிக் கிடைக்காமல் போனதால், ‘சிவமே பெரிது’ என மகாவிஷ்ணுவும் பிரம்மாவும் ஏற்றுக் கொண்டதால், பெருமாளை வணங்கி வழிபடுவதும் பிரம்மா கோயிலுக்குச் சென்று தரிசித்து அருளைப் பெறுவதும் என அற்புதமான வழிபாடுகளும் பூஜைகளுமாக செய்கிற மாதம் இது. முக்கியமாக, கார்த்திகை மாதம் என்பது தீப மாதம். திருமண மாதம் என்றும் சொல்லுவார்கள். திருக்கார்த்திகை தீபத்திருவிழா நடைபெறும் மாதம். கிராமங்களில், கார்த்திகை மாதம் வந்துவிட்டாலே, தினமும் வீட்டு நிலைவாசற்படியில் விளக்கேற்றி வைத்திருப்பார்கள். இன்றைக்கும் இதை வழக்கமாகக் கொண்டிருக்கிற கிராமங்கள் இருக்கின்றன. சென்னை முதலான பெருநகரங்கள், அபார்ட்மென்ட் குடியிருப்புகளாக மாறிய போது, கிராமத்தில் இருந்து வந்தவர்கள், இதைக் கடைப்பிடித்தார்கள். பிறகு கொஞ்சம்கொஞ்சமாக மாறிவிட்டன. கார்த்திகை மாதத்தில், தினமும் நிலைவாசற்படியில் விளக்கேற்றி வைப்பது விசேஷமானது. முடிந்தால் கார்த்திகை மாதத்தின் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டுமாவது, மறக்காமல் இரண்டு அகல்விளக்குகளை ஏற்றிவைத்து பூஜையறையில் நாம் அமர்த்தியிருக்கும் தெய்வங்களை வழிபடுவது பல நன்மைகளைத் தந்தருளும் என்கிறார் முநீஸ்வர சாஸ்திரிகள். ஞாயிற்றுக் கிழமை என்பது சூரியனின் ஆதிக்கம் நிறைந்த நன்னாள். மாலை என்று சொல்லப்படுகிற சாயங்கால வேளையில் சந்திரன் ஆதிக்கம் வந்துவிடும். மறுநாள் திங்கட்கிழமையும் சந்திரனின் ஆதிக்கம் நிறைந்திருக்கும். திங்கள் என்றால் சந்திரன் என்று அர்த்தம். ஞாயிற்றுக்கிழமை மாலையில் சந்திரனின் ஆதிக்கம் தொடங்குகிற வேளையில், வாசலில் விளக்கேற்றி வைத்து, வழிபட்டு வந்தால் நன்மைகள் அனைத்தும் கிடைக்கப் பெறலாம். இல்லத்தில் ஐஸ்வர்யம் குடிகொள்ளும். இதுவரை வீட்டில் இருந்த தரித்திரம் நீங்கப்பெற்று நிம்மதியாக வாழலாம். மேலும், சந்திரனை மனோகாரகன் என்கிறது ஜோதிடம். நம் மனதை இயக்குபவன் சந்திரன். அந்த சந்திரனை ஞாயிற்றுக்கிழமைகளில் வரவேற்கும் விதமாக வாசலில் தீபமேற்றி வழிபட்டு வந்தால், மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கும். மனதில் தெளிவு பிறக்கும் என்கிறார் முநீஸ்வர சாஸ்திரிகள்.
300ஆவது பதிவு – கிழக்கையும் மேற்கையும் கலைவண்ணத்தால் இணைப்போம்- “ஒரு கலைவண்ணத்தின் கடந்தகால கதை” – நரசய்யா 300 … இன்று மூன்று சதங்கள் தாண்டி இந்தக் கலைப் பயணம் தொடர்கின்றது. நடு நடுவே எத்தனை எத்தனை புதிய தொடர்புகள், நட்புகள் – களைப்பே தெரியாத வண்ணம் படு ஜாலியான பயணமாக உள்ளது. சாமானியர்கள் முதல் வல்லுனர்கள் வரை பலரின் ஆசியுடன் – நண்பர்கள், உறவினர்கள் என்று பலர் தோள்கொடுக்க, பலம் சேர்க்க இன்னும் பல லட்சியங்களை நோக்கி கால் எடுக்க தோள்தட்டி தைரியத்தை ஊட்டும் அன்பு உள்ளங்களுக்கு மீண்டும் ஒரு பெரிய நன்றி. இன்று அப்படி ஒரு வல்லுநர் – ஆர்வலர் – குழந்தை போல தட்டித் தடவி இந்த துறையில் நடக்கப் பயிலும் பொது ஊக்கம் அளித்து நல்லாசிகள் தந்த வழிகாட்டி – திரு கடலோடி நரசையா அவர்கள் இந்த தளத்தை கௌரவிக்கும் வகையில் ஒரு பதிவை தருகிறார். இந்த படங்களை பார்த்ததும் முதலில் உங்கள் மனதில் தோன்றும் எண்ணம் என்ன? படங்கள் நன்றி : Flickr: Pigalle ” பரவாயில்லையே – நன்றாக நிர்மாணிக்கப்படும் எதோ ஒரு கோயிலில் உள்ள நாயகார் கால தூண் மண்டபம் ?” என்றுதானே நினைக்கிறீர்கள். மேலே படியுங்கள். ஐயாவிடம் இந்த பதிவை குறிப்பாக கேட்டதற்கும் ஒரு காரணம் உண்டு. ஒரு முறை அவர் ஒரு இனைய குழுமத்தில் இந்த பதிவை ittaar.. ” மதுரையில் உள்ள மதனகோபால சுவாமி ஆலயம் உள்ளது. அது பதினாறாம் நூற்றாண்டைச் சேர்ந்தது. தற்போது ஆலயத்தின் வாசலில் உள்ள ரோட்டில் இருபுறமும் கடைகள் நிறைந்து காணப்படுகிறது. ஒரு காலத்தில் இந்த இடத்தில சிற்ப்பங்கள் நிறைந்த ஒரு முழு மண்டபம் இருந்தது. இந்த முழு மண்டபமும்… …………………………….. இதன் இடையில் அந்த பினம்னி தவறி விட அவர்களது குடபதினர் Susan Pepper Gibson, Mary Gibson Henry, மற்றும் Henry C. Gibson , இந்த பொருட்களை மீட்டு Adeline Pepper Gibson அவர்களது நினைவில் அதை அப்படியே பிலடெலபியா கலை அருங்காட்சியகத்திற்கு கொடுத்துவிட்டனர். தற்போது இவை அந்த அருங்காட்சியகத்தின் இரண்டாவது மாடியில் Gallery No. 224, உள்ளன ” ஐயா அவர்களை பற்றி படிக்கவே தலை சுற்றும். அப்படி இருக்க அவர் Profession: Retired Chief Mechanical Engineer of Vizag Port. Former Consultant to the World Bank for the Emergency rehabilitation Programme of Kingdom of Cambodia. Former ADB consultant, Visiting Faculty AMET University for MBA Programme. (Terminal Management and IMO related subjects) Education: Marine engineering. I. N. S. Shivaji Naval Engineering College Lonavla Writing: over 100 short stories in Tamil (9 as Muthirai kathai in Vikatan.) 3 collections of short stories published, first one for 6 years as non-detailed study for UGs in Madura College. Second won 2 awards. Third won TN State award. Non fiction. Kadal Vazhi Vanikam a treatise on sea trade from 3rd century BC –won TN State award. Madrasapattinam the story of Chennai from 1630 to 1947. Won TN State award and Chidambaram Meyyapan award Sadharana Manithan Biography of Chitti Sundararajan. Madras (Tracing the history of Madras from 1369) in ENGLISH Overcoming Challenges the story of 125 years of the Port of Chennai with S Muthiah (English) Author of the book on the history of Madurai (Aalavai) …………நமக்கு பதில் சொல்வாரா என்று நினைத்த போது உடன் பதில் கொடுத்து பல அரிய தகவல்களைப் பகிர்ந்துக்கொண்டார். அதனால் தான் இன்று கேட்டதும் உடனே எழுதி அனுப்பிவிட்டார். மேலே படியுங்கள் . .. படங்கள் நன்றி : Flickr: Pigalle சரி, இவர் விஷயங்களுக்குப் போவதற்கு முன், நாம் ஸ்டெல்லா கிராம்ரிஸ்ச் எனும் அம்மையாரைப் பற்றி அறிந்துகொள்ளத்தான் வேண்டும். நான் கிருத்திகாவின் (மதுரம் பூதலிங்கம்) ‘லெட்டெர்ட் டயலாக்’ எனும் புத்தகத்தை எழுதும்போதும் அதற்கான ஆராய்ச்சியில் ஈடுபடும்போதுதான் ஸ்டெல்லா, கிருத்திகாவை அமெரிக்காவுக்கு அழைத்த விவரம் கண்டு வியந்தேன். ஸ்டெல்லா (1896-1993) ஒரு கலைப்பிரியர். ஆஸ்திரியாவில் பிறந்தாலும் பாரதத்தின் பண்பாடு இவரை ஈர்த்தது. இளம்பருவத்திலே மேற்கத்திய நடனத்தில் தேர்ந்தவர்தான் எனினும், வியன்னாவில் வசிக்கும்போது இவருக்கு அறிமுகப்படுத்தப்பட்ட பகவத் கீதை இவர் மனதை கொள்ளை கொண்டது. இது இவரை வடமொழியில் ஈடுபாடு கொள்ளச் செய்ததோடு மட்டுமல்லாமல் வடமொழியில் டாக்டர் பட்டமும் பெறும் அளவுக்கு கொண்டு சென்றது. இந்திய சமயத் தத்துவங்களில் இவர் ஈடுபாடும் இவர் ஆக்ஸ்போர்ட் பல்கலையில் பேசிய சொற்பொழிவும் கல்கத்தாவில் உள்ள தேசிய கவிஞர் ரவீந்திரநாத தாகூர் கேள்விப்பட்டு இவரை சாந்திநிகேதனில் பணியாற்றுமாறு அழைத்தார். 1924 முதல் 1950 வரை சாந்திநிகேதனில் இந்தியக் கலைகளுக்கான பேராசிரியராகப் பணியாற்றியபோதுதான் ஃபிஸ்கே கிம்பெல் (இவர் அப்போது பிலெடெல்பியாவில் அருங்காட்சியக இயக்குநராக இருந்தவர்) பேராசிரியை ஸ்டெல்லாவை அமெரிக்காவில் அந்த அருங்காட்சியகப் பொறுப்பாளராக அழைப்பு விடுத்தார். ஏற்கனவே இந்தியக் கலைப் பண்பாடுகளில் ஆர்வம் மிகுந்த ஸ்டெல்லா இந்த அழைப்பை ஏற்றுக் கொண்டு பிலடெல்பியா சென்றதும் செய்த முதல் வேலை இந்தியக் கலைப்பொருள்களுக்கான பகுதியை அந்த அருங்காட்யகத்தில் விரிவாக்கியதுதான். அத்துடன் இல்லாமல் பொறுப்பாளருக்கான நிதி உதவி (நன்கொடை) இருக்கை (Curatorial Chair Endowment) ஒன்றையும் உருவாக்கி ஊக்கமளித்தார். இப்படி இந்த இருக்கைக்கான முதல் நிதியுதவி நியமனத்தைப் பெற்றவர் டெரீல்லெ மேஸன் எனும் பெண்மணியார். மதுரை (ஆலவாய்) பற்றி எழுதும்போது மேஸன் அவர்களிடமிருந்து பல செய்திகள் பெற்றுக் கொண்டதையும் என்னால் மறக்கமுடியாது. மறுபடியும் நார்மன் பிரவுன் அவர்களிடத்தே வருவோம். 1931 இல் அருங்காட்சியகத்தில் இந்தியக் கலைச் சொத்துக்கான முதல் பொறுப்பாளராக பதவியேற்றவர் பிற்காலத்தில் பலமுறை இந்தியா வந்து சென்றார். அவருக்கு கல்கத்தா, சென்னை பல்கலைக்கழகங்கள் கௌரவ டாக்டர் கொடுத்துப் பெருமை பெற்றன. அவருடைய கலையறிவும் ஞானமும் அவர் எழுதிய எழுத்துக்கள் மூலம் நாம் தெரிந்து கொள்ளலாம். அதில் ஒன்றுதான் ஒரு சிறிய புத்தகம், ஆனால் ஞானம் தோய்ந்தது. அதன் பெயர் ‘எ பில்லர்ட் ஹால் ஃபிரம் டெம்பிள் அட் மதுரா’ என்பது. இப் புத்தகத்தை பென்சில்வேனியா பல்கலைக்கழகமே 1940 இல் பிரசுரித்தது. இந்தப் புத்தகத்தில்தான் அந்த அருங்காட்யகத்தில் உள்ள அரிய சிலைகளின் பிறப்பிடத்தை தான் எப்படி கண்டுகொண்டு அதன் நேர்த்தியையும் அழகையும் எப்படியெல்லாம் வியந்தோம் என்பதையும் எழுதி இருக்கிறார். மதுரை மதனகோபால் சுவாமி சிற்பங்கள் பிலடெல்பியா அருங்காட்யகத்தில் பார்க்கப்படும்போதும் அவைகளின் பிறப்பிடம் நம்முடைய ஊர்தான் என்று தெரியவரும்போதும், நம்மை விட மிக எச்சரிக்கையாகவும், அழகாகவும் பராமரிக்கப்படும் நேர்த்தியைப் பார்ர்க்கும்போதும் நமக்குள் ஒருவித பெருமை நம்மையறியாமல் தோன்றும்தான் 11285 இதோ நார்மன் அவர்களின் முன்னுரை அவர் எழுதியதை அப்படியே கொடுக்கப்பட்டுள்ளது. II PILLARED HALL FROM A TEMPLE AT MADURA IN THE PHILADELPHIS MUSEUM OF ART BY NORMAN BROWN Printed at the University of Philadelphia Press 1940 PREFACE The only Indian stone temple ensemble in America is the pillared Hall (mandapam) from Madura belonging to the Philadelphia Museum of Art and now installed in a gallery on the top floor of the south wing of eh main building at Fairmont. It consists of a number of monolithic pillars with corbels, Lion capitals and some ornamental frieze slabs, all apparently carved in the sixteenth century. These originally constituted part of the temple until at some unknown date they were defaced and the temple badly damaged or razed, possibly by a Mohammedan conqueror in the eighteenth century. No other museum anywhere can show such a large grouping of integrated architectural unit from a single building of India. The nearest approach in America is the small carved wooden room from a sixteenth century Jain sheine of Putan, Gujarat, in western India which is now set up in the Metropolitan Museum of Art New York. The unit in the Philadelphia Museum so rare outside of India illustrates so many aspects of India Architecture, sculpture and iconography that it has seemed worthy of description in a small monograph, especially since the dimension produces explanation of numerous points not heretofore treated in any publication. The pieces constituting the pillared hall were originally acquired in Madura in 1912, by Adeline Pepper Gibson who died in France January 10, 1919, in the military service of the United States Base Hospital 38, American Expeditionary force at Nantes. They were presented to the Philadelphia Museum of Art in August 1919 in her memory by Mrs. J. Howard Gibson, Mrs. Norman Henry and Mr. Henry C. Gibson. Shortly after the pieces were presented to the Museum, they were installed in Memorial Hall Fairmount Park, and the installation with a pageant called “The Building of The Temple” which was given daily on April 19, 20, 21 and 23, 1920. They remained in Memorial Hall until 1938 when it was possible to remove them to the India Gallery in the Fairmount building and commence to install them there with the aid of Federal Works Progress Administrative grant. In 1934-35, aided by the late Mrs. Robert G. Logan, the Museum made it possible for me to examine the site from which the pieces had come. The mani purpose of my visit to Madura was to secure information that might assist in the future installation of the pieces at Fairmount. I went to Madura at the end of November and spent five days in intensive investigation, taking with me as interpreter and consultant Mr T. G. A. of the Government Museum Madras.who is mentioned frequently in the book. In the hope that additional pieces could be securd, Mr. J. Noraman Henry and Mr. Henry C. Gibson then generously gave a fund which they also graciously permitted to be drawn against the preparation of this book and for assistance in the final installation of the temple. The main purpose of this work is to determine the site, date, and the significance of the elements comprising mandapams. To do so it has been necessary to develop some points in the history of Madura architecture showing that features described by Jowean Dubreil to the Madura period appear actually to have been known inn the latter part of the preceding period, that is the known one as Vijayanagara. In the iconography many types have received description which are without printed explanation anywhere. A mirror point elsewhere has been to discuss the mandapam with enough attention to the back ground for a non-Indian visitor to the Museum to understand the meaning of the Indian terms employed and the cultural significance of the ensemble. To this end I have included the two very summary introductory chapters, which contain almost no new material and have throughout tried to treat the mythology with enough fullness to be intelligible. The book has VI chapters. I. The age of importance of Madura II. South India temple architecture III. The architectural units in the Mandapam. 16 simple columns 8’ 2” average height. 5 of one variety and others different; 14 compound columns 8’ 4” to 8’ 8” in height, 12 of one variety and one of different variety. 12 corbels; 12 lion capitals; 8 frieze slabs.When purchased in 1912, they were all lying in the compound of Madana Gopalswamy temple. When presented to the museum someone felt that the pieces do not belong to this temple but are from Perumal temple (Kudal Alagar Madura.) Norman feels that the items might have come from other temples also. They may have been kept here. May 31, 2013 by Vijay Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34 Leave a comment சோழர்கள் பற்றி பல தகவல்கள் புதைந்து இருந்த கோவில் – எசாலம்-இரண்டாம் பாகம் பல நேரங்களில் நம் கண் முன்னே, நாம் பலமுறை பார்த்த, பொருள்களில் உள்ள நுணுக்கங்களை ஏனோ கேள்வில்களை எழுப்புவதில்லை. ஆனால் அதை யாரவது கை காட்டியதும் ” அடடே – ஆமாம் இதுவா ” என்று நம்மை சிந்திக்க வைக்கும். அது போலவே இன்று நண்பர் சாஸ்வத் வீணையின் நுனியில் இருக்கும் யாளியை நமக்கு காட்டுகிறார். இந்து நாளிதழில் இவ்வாறு சிங்க தலை என்று உள்ளது ! இது சிங்க தலையா ?? கண்டிப்பாக இல்லை. யாளி தான். …மேலும் விவரிக்கிறார் சாஸ்வத் – எசாலம், இரண்டாம் பாகம் முதல் பகுதியில் இந்த அற்புத டக்ஷினமுர்த்தி வடிவம் என்ற குறிப்பை மட்டுமே சொல்லி அது இருக்கும் இடத்தை மட்டும் சொலிவிட்டு அடுத்த சிற்பங்களுக்கு சென்றுவிட்டேன் . இன்று இந்த அற்புத வீணாதார வடிவத்தை அருகில் சென்று காண்போம். தக்ஷினமுர்த்தி வடிவம் எனபது சிவன் குருவாக இருப்பது. சாதாரண குரு அல்ல குருவுக்கு எல்லன் குரு. திரு கோபிநாத் ராவ் ( பல சிற்பக்கலை மாணவர்களுக்கு முதல் குரு இவர்) இவ்வாறு தனது நூலில் இந்த வடிவத்தை பற்றி சொல்கிறார். “சிவன் – யோக கலை, சங்கீதம், நாட்டியம் என்று பலவற்றில் வல்லுநர். இவ்வாறு அவற்றை நமக்கு கற்றுக்கொடுக்கும் வடிவமே தக்ஷினமுர்த்தி வடிவம் . இந்த வடிவத்தையே இக்கலைகளை பயில துவங்கும் மாணவர்கள் முதலில் வழிபட வேண்டும்.” மேலும் – இந்த வடிவம் நான்கு அம்சங்களை கொண்டது – யோக குரு, வினை மீட்டும் கலை, ஞானத்தை – சாஸ்திரங்களை விளக்கும் – வியாக்யானமூர்த்தி. இந்த வடிவத்தை தான் பெரும்பாலும் ஆலயங்களில் தெற்கு திசையில் காண முடியும்.” இங்கேயும் அதே திசையில் தான் அவர் இருக்கிறார். துரதிருஷ்ட வசமாக சிலை சேதம் அடைந்துவிட்டதால் யாரோ அதற்கு முன்னர் புதிதாக ஒரு சிலையை நிறுவி உள்ளனர். நமது பார்வைக்கு சோழர் கால சிலையை அது மறைத்து விடுகிறது. வீணாதார தக்ஷிணாமூர்த்தி – சங்கீத குரு – இது இன்னும் சற்று அரிய வடிவம். எனினும் பல ஆலயங்களில் இவரையும் நாம் காணலாம். கங்கைகொண்ட​சோழபுரத்தில் இதோ .. இன்னும் சற்று பழமையான சிலை – கீழையூர் நிற்கும் பாணியில் உள்ள வடிவங்கள் – கொடும்பாளூர் மற்றும் லால்குடி இதோ எசாலத்தில் சிற்ப ஆகமங்களின்படி பார்த்தால் வியாக்யான வடிவத்திற்கும் வீணாதார வடிவத்திற்கும் வீணை தான் வித்தியாசம்! அதுவும் அந்த குடம் வலது ​தொடைமேலே இருப்பது. ஜடா முடி, தலையில் ஊமத்தம்பூ, கபாலம், பிறை, கையில் அக்ஷரமாலை, பாம்பு, தீ, மான் என்று எல்லாம் இருக்கும் – ஆனால் குரு என்பதால் ஆயுதம் தரிப்பது இல்லை போல! முதல் பாகத்தில் பார்த்த மாதிரி – வியாக்யான வடிவத்திற்கு மேலே விமானத்தில் வீணாதார வடிவம் உள்ளது. அந்த உயரத்தில் பலவற்றை காண முடியவில்லை. இருந்தாலும் அந்த முகமும் வீணையும் என்னை ஈர்த்தது. பார்த்துக்கொண்டே இருக்கலாம் போல. அதன் அழகை பற்றி என்ன எழுதுவது !! தலைப்பட்டி அழகாக சிரத்தில் – காற்றில் சடா முடி பறந்து முகத்தில் விழாமல் இருக்கவோ ? காதில் அணிகலன், தலையில் வலது புறம் பிறை சூடி … கழுத்தில் பல்வேறு அணிகலன்கள் – யக்​​ஞோபவீதம் என்று அந்த உயரத்திலும் சிற்பி ஒன்றை கூட விடாமல் செதுக்கிய அழகு அபாரம். ஒருநாள் சாரம் கட்டி மேலே ஏறி இடுப்பில் சிங்கமுகப் பட்டி இருக்கிறதா என்று பார்த்துவிட வேண்டும். அவ்வளவு உயரத்தில் சென்று யாரடா பார்க்கப் போகிறார்கள் என்று விட்டு விடாமல் ​செதுக்கிய அந்தக் காலத்து கலைஞனின் கடமை உணர்ச்சியை எப்படி பாராட்டுவது ? சரி, வீணைக்கு வருவோம். வலது புறம் குடம் ​தொ​டையில் நிற்கிறது. சற்றே வெளியில் வந்த வண்ணம் – ஆகமங்கள் அப்படித் தான் இருக்க வேண்டும் என்று சொல்கின்றன – வலது கரம் மீட்டும் வண்ணம் அருமை. இடது புறம் வீணையின் முகத்தில் – இன்று உள்ள வடிவம் போல வளைத்து இல்லாவிட்டாலும் – அங்கே யாளி முகம் தெளிவாக தெரிகிறது. இந்த வடிவத்தின் காலம் – ராஜேந்திர சோழர் காலம் – அதற்கு அவர் பல சான்றுகளை விட்டுச்சென்றுள்ளார். இதுவும் கங்கைகொண்ட சோழபுரமும் சம காலமாக இருக்க வேண்டும். இரண்டையும் சிற்ப வடிவங்களை கொண்டு தெளிவாக குறிக்க இயலும். ஒரே போல இருக்கின்றன அல்லவா? இப்போது முதலில் பார்த்த வடிவங்களை கொண்டு ஒப்பிடுங்கள். இவை காலத்தால் சற்றே முந்தைய வடிவங்கள் – ஆதித்ய சோழர் காலம் – சுமார் நூறு வருடங்களுக்கு முன்னர் வடித்த வடிவங்கள். இன்னும் காலத்தில் பின்னால் சென்றாலும் இந்த வடிவத்தை நாம் காணாலாம் – ராஜசிம்ஹா பல்லவர் காலம் – காஞ்சி கைலாசநாதர் ஆலயத்து வடிவம் இதோ. கர்நாடகத்தில் உள்ள நரசமன்கலம் சிற்பம். இந்த வடிவங்களில் குடம் இடம் மாறி உள்ளது – நாம் முன்னர் கண்ட பதிவில் இது போன்ற பல வடிவங்களில் குடம் மேல் பக்கம் இருக்கும் வண்ணம் உள்ளன. அப்படியானால் வீணைகள் முதலில் குடம் மேலே இருக்கும் படி வடிக்கப்பட்டு – பின்னர் அந்த பழக்கம் மாறியதா? இல்லை இரண்டு வடிவங்களுமே அந்நாளில் இருந்தனவா? அப்படி என்றால் எதற்காக ராஜேந்திர சோழர் காலத்தில் எல்லா சிற்பங்களிலும் ஒரு சேர குடத்தை கீழ்ப்பக்கம் வைக்கத் துவங்கினார்? இப்படி ஒரு ஆராய்ச்சி செய்தால் இசையும் சிற்பமும் மேலும் சங்கமிக்கும் என்பது உறுதி ! குரு இன்னும் நமக்கு ஏதோ சொல்லித்தருகிறார் போல! இன்னும் இருக்கிறது. முன்னர் இந்த வடிவத்தை கீழிருந்து காண்பது கடினம் என்று சொன்னேன் அல்லவா – பின்னர் எப்படி படம் எடுத்தேன் என்று நீங்கள் கேட்பது புரிகிறது. இந்த ஆலயம் மணற்மேட்டில் புதையுண்டு இருந்தது. அதாவது காலப்போக்கில் அருகில் உள்ள கிராமம் வளர வளர தரையின் சமன் மேலே ஏறி விட்டது. அதனால் அருகில் உள்ள மேட்டில் ஏறி இந்த சிற்பத்தைப் பார்த்து விடலாம். அப்படி நாங்கள் சென்ற ​போது இன்னும் ஓரிரண்டு ஆச்சரியங்கள் எங்களுக்கு தென்பட்டன. மிகவும் பழமை வாய்ந்த கிராம தெய்வ வடிவங்கள் அவை. அவற்றைப் பற்றி ……தொடரும் May 13, 2013 by Vijay Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34 Leave a comment யார் இந்த இரு பொடி கணங்கள் ? என்னை போன்றவர்களுக்கு இணையம் ஒரு வரப்பிரசாதம் ! ஒரு பெரியவர் நாற்காலி ஆராய்ச்சியாளர் என்று பட்டம் கூட சூட்டினார் ! அப்படி ஒரு ஆராய்ச்சி தான் இது. புகழ் பெற்ற ராஜ சிம்ஹ பல்லவரது கைலாசநாதர் சிதைந்த ஓவியங்களுக்கு உயிர் கொடுக்க எடுத்த முயற்சியின் பொது பல கடினமான இடங்களை சந்தித்தோம். குறிப்பாக மிகவும் சிதைந்த அடி பாகத்தில் இருந்த இரு உருவங்களை அடையாளம் கண்டுகொள்ள பல படங்களை ஆராய்ந்தோம். முடிந்தவரை இவை அந்நாளில் எப்படி இருந்திருக்கும் என்று கற்பனை செய்து அதன்படி படங்களை வடித்தோம். எனினும் இந்த இரு குள்ள கணங்கள் அங்கே இருப்பதே ஒரு ஆச்சரியமாக இருந்தது. அந்த பெண் வடிவ குள்ள கணம் – உமையவளின் தோழியா ? இலக்கணத்தில் இவர்களை பற்றி ஏதாவது குறிப்பு உள்ளதா? இப்படி எல்லாம் அப்போது தோணவே இல்லை. பல காலம் கழிந்து நண்பர் அரவிந்த் அவர்கள் தான் லால்குடி சென்ற பொது எடுத்த படங்களை சுட்டியை அனுப்பி வைத்தார். அங்கே உள்ள கதை சொல்லும் புடிப்புச் சிற்ப்பங்களை ஆராய்வதே எங்கள் நோக்கம் என்றாலும் அதில் இன்னொரு வடிவம் கவனத்தை ஈர்த்தது. எதையோ நினைவூட்டியது. இங்கேயும் அரியணையில் அம்மையப்பன் வடிவம் என்றாலும் முருகன் இல்லை. வலது புறம் அடியவர் ஒருவரும் – மேலே இருபுறமும் இரு முகங்கள் தெரிகின்றன. அவற்றில் நான்முகன், பெருமாள் வடிவங்கள் உள்ளனவா என்பது சரியாகத் தெரியவில்லை. நம் கவனத்தை ஈர்த்தப் பகுதி அரியணைக்கு அடியில் இருக்கும் இரு கணங்கள் தான்…. இந்த சிலையின் காலத்தை சரியாக கணிப்பது கடினம் என்றாலும் சுவாரசியம் என்னவெனில் பல்லவ ஓவியன் தீட்டிய அதே பாணியில் அந்த இரு குள்ள கணங்களும் இங்கே இருப்பது தான்!! இவர்கள் யாராக இருக்கக்கூடும் ? May 6, 2013 by Vijay Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34 Leave a comment சிவப்புரம் ​சோமாஸ்கந்தர் – ​சொல்லப்படாதக் கதை இந்தத் தலைப்​பு பலருக்கும் ஆச்சரியத்தைத் தூண்டும் என்பதில் ஐயமில்லை. ஏ​னெனில்​ சிவப்புரத்தின் பிரசித்தி பெற்ற தலைப்பு சிவப்புரம் நடராஜர் – ஒரு வே​ளை தலைப்பைத் தவறாக இட்டிருக்கிறேனோ என்று தோன்றக்கூடும். இல்லை, இன்று நீங்கள் காணப்போவது அதேக் கோவிலின் மற்ற ​வெண்கலச்சிலைகள் பற்றிய கதை – யாருக்கும் சொல்லப்படாதக் கதை. ​தொன்மையான பொருட்களைத் திருப்பித் தருவது பற்றிய முக்கியத் தீர்ப்பின் இருண்ட பக்கங்கள் அவை. புகழ் வாய்ந்த சிவப்புரம் நடராஜர் வழக்கைப் பற்றி கூகிள் மூலம் சுலபமாக அறியலாம். அதன் சாராம்சம் இ​தோ: 1951: சிவப்புரம் கோவிலின் புனரமைப்புப் பணிகளின்போது நடராஜருடன் கூட மேலும் 5 ​வெண்கலச்சிலைகள் கண்டெடுக்கப்பட்டன. இந்திய டி​​​ரெஷர் ட்​ரோவ் ஆக்டின்படி (Indian Treasure Trove Act) அவை அக்கோவிலுக்குத் திருப்பியளிக்கப்பட்டன. (அதன் உரி​மை மாநில அரசிடம்) “1951-இல் தஞ்சாவூர் சிவப்புரத்தைச் ​சேர்ந்த அன்னமுத்து படையாச்சி புதையுண்டிருந்த நடராஜர், திருஞானசம்பந்தர், ​சோமாஸ்கந்தர், பிள்ளையார் மற்றும் இரண்டு அம்மன் சிலைகளைத் தன் நிலத்திலிருந்து எடுத்தார்.” தஞ்சாவூரின் மாவட்ட ஆட்சியாளர் அந்த ஆறு சிலைகளையும் சிவப்புரம் ஸ்ரீ சிவகுருநாதசுவாமி​ கோவிலில் ஒப்ப​டைத்தார் (G.O. Ms. No. 2987/Revenue Department dated 29-10-1953)” 1954-56: ​அந்தச் சிலைகளை சீர் செய்ய அ​வை உள்ளூர் ஸ்தபதியிடம் அளிக்கப்பட்டன. அங்​கே​போலிகள் உருவாக்கப்பட்டு, கண்​டெடுக்கப்பட்ட தொன்மையான சிலைகள் திருடப்பட்டன. கோவிலின் தர்மகர்த்தாக்கள் அந்தச் சிலைகளைப் பழுது பார்க்க விரும்பி அந்தப் பணியை கும்பகோணத்தைச் சேர்ந்த ராமசாமி ஸ்தபதியிடம் 1954 ஜூன் மாதத்தில் ஒப்புவித்தனர். 1956ஆம் ஆண்டு குத்தாலத்தைச் சேர்ந்த திலகர் மற்றும் அவனது சகோதரன் தாஸ் இருவரும் தொன்மை வாய்ந்த நடராஜர் மற்றும் 5 சிலைக​ளையும் தங்கள் வசம் தந்துவிடும்படியும் அவற்றிற்குப் பதிலாக ​போலியான சிலைகளை​ செய்துவிடும்படியும் தூண்டினர். திலகர் அந்த உண்மையான நடராஜர் சி​லை​யை தாஸின் ஏற்பாட்டின்படி பம்பாயைச் சேர்ந்த லான்ஸ் ​டேன் எனும் க​லைப்​பொருள் ​சேகரிப்பானிடம் அளித்தான். அவர் அச்சிலையை 10 ஆண்டுகள் தன்னிடம் வைத்திருந்தார். 1963: ஒரு முக்கிய குறிப்பு மற்றும் நிகழ்ச்சி – அதைப் பற்றி பிறகு காண்போம். 1965: பிரிட்டிஷ் மியூசியத்தைச் சேர்ந்த டாக்டர் டோக்லாஸ் பாரட் ​கோவிலுக்கு வருகைத் தருகிறார். அந்தச் சி​லைப் ​போலியானது என்று குற்றஞ்சாட்டி தனது புத்தகத்திலும் பதிவு செய்கிறார். மேலும் அசலான சி​லை பம்பா​யைச்​ சேர்ந்த வணிகரிடம் இருந்த​தையும்​ வெளிப்படுத்துகிறார். பிரிட்டிஷ் மியூசியத்​தைச் சேர்ந்த டாக்டர் டோக்லாஸ் பாரட் தனது ​தென்னிந்திய வெண்கலச் சிலைகள் எனும் புத்தகத்தில் சிவப்புரத்திலுள்ள நடராஜர் சி​லை​ ​போலியானது என்றும் அசல் சிலை ஒரு தனியார் க​லைப்​பொருள் ​சேகரிப்பானிடம் உள்ளது என்றும் கூறுகிறார். Tr.P.R. ஸ்ரீனிவாசன் (மியூசியத்தின் மேற்பார்வையாளர்) உட​னே மியூசியத்தின் இயக்குநருக்கும் தமிழக அரசிற்கும் எச்சரிக்​கை​ செய்தார். இதன்​பேரில் நடந்த விசாரணையின் விளைவாக நாச்சியார் ​கோவிலில் ஒரு வழக்கு பதிவு ​செய்யப்பட்டது. P.S.Cr.No.109/69 U/S 406 IPC. குற்றப் புலனாய்வுத் து​றை தனது புலனாய்​வை மேற்கொண்டது. 1967: நடராஜர் சிலை போமன் ​பெஹ்ரம் எனும் பம்பாயைச் சேர்ந்த கலைப்​பொருள் சேகரிப்பாளரின் வசம் வந்தது. அவர் அதனை நியூயார்க்​கைச் ​சேர்ந்த க​லைப்​பொருள் வணிகர் பென் ஹெல்லருக்கு விற்றார். லான்ஸ் டேன் 10 ஆண்டுகள் சிலையைத் தன்னிடம் வைத்திருந்து பின் பம்பாயைச் சேர்ந்த​போமன் பெஹ்ரமிற்கு விற்றார். அவர் அதனை மெனு நரங்கிடம் விற்றார். பிறகு 1969இல் நியூயார்க்​கைச் சேர்ந்த பென் ஹெல்லர் 6 லட்சம் ரூபாய் கொடுத்து அதனை வாங்கி நார்டன் ​சைமன் ஃபவுண்​டேஷனுக்கு 9 லட்சம் அ​மெரிக்க டாலருக்கு விற்றார். 1973: பென் ஹெல்லர் அந்தச் சிலையை நார்டன் ​சைமன் ஃபவுண்டேஷனுக்கு 9 லட்சம் அ​மெரிக்க டாலருக்கு விற்றார். 1973: நியூயார்க்கில் உள்ள ​மெட்ரோபொலிடன் மியூசியம் ஆஃப் ஆர்ட் (MET) எனும் கலைப்பொருள் அருங்காட்சியகம், நார்டன் சைமன் ஃபவுண்டேஷனுடைய இந்தியக் க​லைப் ​பொருட்க​ளைக்​ கொண்டு ஒரு கண்காட்சி நடத்தத் திட்டமிட்டது. அதையொட்டிய விளம்பரத்தின் மூலமாக இந்திய அரசு அச்சி​லை அ​மெரிக்காவில் இருப்பது குறித்து அறிந்து ​கொண்டது. கடத்தப்பட்ட தொன்பொருளை இந்திய அரசு முதன்மு​றையாகக் கண்டுபிடித்தது. உடனே அந்த மியூசியத்திற்கு இந்திய அரசு ஆட்​சேபம்​தெரிவித்து ஒரு கடிதம் எழுதியது. மேலும், அ​மெரிக்காவின் மாநிலத்துறையின் உதவியுடன் அந்தக் கண்காட்சி​யைத் தடை செய்தது. 1973: ​மேலும் சீர் ​செய்ய நடராஜர் சிலை ​பிரிட்டிஷ் மியூசியத்திற்கு அனுப்பப்பட்டது. 1973: இந்திய அரசு அச்சிலையை திருப்பிக் கொடுக்கக் கோரி லாஸ் ஏஞ்சல்சிலும் (நார்டன் சைமன் ஃபவுண்டேஷனின் இருப்பிடம்) நியூயார்க்கிலும் (பென் ஹெல்லரின் இருப்பிடம்) வழக்குப் பதிவு செய்தது. மேலும் இந்திய அரசு இங்கிலாந்து அரசிற்கு அரசியல்​ நெருக்கடி தரவும், அச்சிலையை ஸ்காட்லேண்டு யார்டு தன் வசம் கொணர்ந்தது. நார்டன் சைமன் ஃபவுண்டேஷன் இந்தியாவிற்கு நடராஜர் சிலையின் மீது எந்த உரி​மையும் இல்​லை​யெனக் கூறிஅத​னைத் திருப்பித் தர மறுத்தது. 1975: நீதிமன்றத்தின் ​வெளியே ஒரு தீர்மானத்திற்கு வருவதற்கு ஏதுவாக ஒரு வருடகாலத்திற்கு இந்தியா தானாக​வே இந்த வழக்கி​னை நிறுத்தி ​வைத்தது. 1976: நார்டன் சைமன் ஃபவுண்டேஷனும் இந்திய அரசாங்கமும் நீதிமன்றத்திற்கு ​வெளியே மத்யஸ்த ஒப்பந்தத்தின் மூலம் ஒரு தீர்மானத்திற்கு வந்தன. இந்தியாவில் ​வெளியான ​செய்திகள் இங்​கே தடிமனான எழுத்துகளில் உள்ளன: லான்ஸ் ​டேன், திலகர், தாஸ், ராமசாமி ஸ்தபதி ஆகி​யோ​ரை ஒரு பிரத்​யேகக் குழு ​கைது ​செய்தது. குற்றப் புலனாய்வுப் பிரிவின் அப்​பொழு​தைய DIG திரு. Tr.S. கிருஷ்ணராஜ் அமெரிக்க ஐக்கிய நாடுகளுக்குச் ​சென்று சி​லை கடத்தலுக்கான ஆதாரங்க​ளை ​சேகரித்தார். ஸ்காட்லாண்டு யார்டு நடராஜர் சி​லை​யை நார்டன் ​சைமன்ஃபவுண்டேஷன் லண்டனில் உள்ள திருமதி. ஆனா ப்லெளடனுக்கு பழுது பார்க்க அனுப்பிய​தை அறிந்து அத​னைக் ​கைப்பற்றியது. இந்திய அரசாங்கம் நடராஜர் சி​லை​யைத் திரும்பப் ​பெற நார்டன்​ ​சைமன் ஃபவுண்டேஷனுக்கு எதிராக இங்கிலாந்து, நியூயார்க் மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் ஆகிய இடங்களில் வழக்குப் பதிவு ​செய்தது. ​சென்​னை​யைச் ​சேர்ந்த திரு. KK ராஜ​சேகரன் நாயர் IPS, IGP (Crime), சி​லை​யைத் திரும்பப் ​பெற​ வெளியுறவு அ​மைச்சகத்​திடம் விண்ணப்பிக்குமாறு தமிழ்நாடு அரசிற்கு கடிதம் எழுதினார். புது தில்லியில் உள்ள​ இந்தியத் தொல்​பொருள் ஆய்வகத்தின் ​டைரக்டர் ​ஜெனரல் டாக்டர் MS நாகராஜ ராவ் வாஷிங்கடனில் உள்ள இந்திய தூதரகத்திடமிருந்து அச்சி​லை​யைப் ​பெற்றுக்​கொண்டார். தற்​போது அந்த நடராஜர் சி​லை ​சென்​னை, மயிலாப்பூர் கபாலீசுவரர்​ ​கோவிலின் பாதுகாப்பான ​பெட்டகத்தில் உள்ளது. குற்றஞ்சாட்டப்பட்​டோர் அ​னைவரும் ​கைது ​செய்யப்பட்டு தண்ட​னையளிக்கப்பட்டது. மற்ற சி​லைக​ளைப் பற்றி தகவல் ஏதும் இல்​லை. இங்கு தான் சுவாரசியமான விஷய​மே உள்ளது. மற்ற 5 ​வெண்கலச் சி​லைகள் என்னவாயின? “1951-இல் தஞ்சாவூர் சிவப்புரத்தைச் ​சேர்ந்த அன்னமுத்து படையாச்சி புதையுண்டிருந்த நடராஜர், திருஞானசம்பந்தர், ​சோமாஸ்கந்தர், பிள்ளையார் மற்றும் இரண்டு அம்மன் சிலைகளைத் தன் நிலத்திலிருந்து எடுத்தார்.” ​மே​லே குறிப்பிட்டுள்ள 1963ஆம் ஆண்டு நி​னைவிலுள்ளதா? இந்த வருடத்தில்தான் திரு. PR ஸ்ரீநிவாசன் அவர்கள் தனது​ “தென்னிந்திய ​வெண்கலச் சி​லைகள்” எனும் மிகச் சிறந்த புத்தகத்​தை ​ வெளியிட்டார். (Bronzes of South India – P.R. Srinivasan (F.E. 1963, L.R. 1994) அதிர்ஷ்டவசமாக அவர் நடராஜர் சி​லை​யை மட்டுமில்லாமல் ​சோமாஸ்கந்தர் சிலையையும் புகைப்படம் எடுத்திருந்தார். ​மேலும் அந்தச் சி​லைகள் சிவப்புரம் ​கோவிலில் வழிபடப்படுப​வை என்று இடத்​தையும் சுட்டிக் காட்டியுள்ளார். இ​தோ இங்குள்ள படத்​தைப் பாருங்கள். நார்டன் ​சைமன் மியூசியத்தின் ஒரு காட்சிப்பொருள் – இது 20 டிசம்பர் 2008 ​தேதியிட்ட flickr படமாகும். இக்க​லைப் ப​டைப்பின் பிறப்பிடத்​தை கீழுள்ள தகடு அறிவிப்பது மிக சுவாரசியமானது. ஒரு சாதாரண மனிதனுக்குக்கூட இந்த ஒப்பீடு எளிதில் விளங்கும். ​மேலும் சற்று கூகிளாரின் உதவி​யைப் ​பெற்​றோமானால் அ​தே அருங்காட்சியகத்தில் 1972 மற்றும் 1973 ஆண்டுகளில் ​சேர்க்கப்பட்ட க​லைப்​பொருட்கள் எ​வையெவை என்பது நம் கவனத்​தை ஈர்க்கக்கூடிய​வை. அதே சோமாஸ்கந்தர் ஆனால் பெயர் பலகை இல்லை. மேலும் சில திருமேனிகள் அங்கே உள்ளன திருஞானசம்பந்தர் பார்வதி பிள்ளையார் “1951-இல் தஞ்சாவூர் சிவப்புரத்தைச் ​சேர்ந்த அன்னமுத்து படையாச்சி புதையுண்டிருந்த நடராஜர், திருஞானசம்பந்தர், ​சோமாஸ்கந்தர், பிள்ளையார் மற்றும் இரண்டு அம்மன் சிலைகளைத் தன் நிலத்திலிருந்து எடுத்தார்.” இந்த வழக்​கைப் பற்றியத் தகவல்கள் மாநிலத்தின் வலைத்தளத்தில் இவ்வாறு முடிகிறது – “குற்றஞ்சாட்டப்பட்​டோர் அ​னைவரும் ​கைது ​செய்யப்பட்டு தண்ட​னையளிக்கப்பட்டது. மற்ற சி​லைக​ளைப் பற்றி தகவல் ஏதும் இல்​லை.” நீதிமன்றத்தின் ​வெளி​யே ஏற்கப்பட்ட ஒப்பந்தத்தின் நிபந்த​னைகள் என்ன? அதிலும் இவ்வாறு கூறிய ஒருவருடன்: நியூயார்க் ​டைம்ஸ் பத்திரிக்​கையில் நடராஜர் சி​லை குறித்து ​சைமன் கூறியதாவது: “ஆமாம்! அது கடத்தப்பட்டதுதான். கடந்த 2 ஆண்டுகளில் ஆசிய க​லைப்​பொருட்க​ளைப் ​பெற 15 முதல் 16 மில்லியன் டாலர் வ​ரை ​செலவழித்திருக்கி​றேன். அவற்றில் அ​நேகப் ​பொருட்கள் கடத்தப்பட்டவையே.” தனது து​ணை​யையும், மக​னையும், பக்த​னையும் தனி​யே விட்டுச் ​சென்றா​ரோ நடராஜர்!!! வாசகர்களின் கவன ஈர்ப்புக்கு கீழ்க்கண்டதைக் கொண்டு வருகிறோம். பொதுவாகவே இந்த தொல்சிற்பங்கள், அதை வாங்கி ஏலம் போடும் உலகளாவிய நிறுவனங்கள், அவைகளை பொருட்காட்சியாக்கும் மியூசியங்கள் பற்றிய தகவல்கள் மிகவும் எச்சரிக்கையாகக் கையாளவேண்டும். தவறான போக்கு எனத் தெரியும்போது இவர்கள் மீது நாம் எளிதாக குற்றம் சாட்டிவிடலாம். அதேசமயத்தில் இந்த விஷயத்தில் உள்ள உணர்ச்சிமயமான விஷயங்களைக் கூட கவனிக்கவேண்டும். ஆகையினால் இந்தப் பதிவு மிகக் கவனமாகக் கவனிக்கப்படவேண்டும். இங்கு நாம் யாரையும் குற்றம் குறை சொல்ல வரவில்லை. அது நம் நோக்கமும் அல்ல. அதே சமயத்தில் உண்மை என்பது எங்கு மறைத்துவைக்கப்பட்டாலும் அது தெரியப்படும்போது, அதனை வெளிப்படுத்துவது மிகவும் முக்கியம். மேலே சொன்னபடி இந்த சிற்பங்கள் மிகத் தொன்மையானவைதான். மிகுந்த செல்வச் சிறப்பு பெற்றது கூட. அதே சமயத்தில் தெய்வத்தின் மறு உருவாகப் பார்க்கப்பட்டு வணங்கப்பட்டது கூட என்பதையும் நினைவில் நிறுத்திப் பார்க்கவேண்டும். தற்சமயம் நூற்றுக்கணக்கில் இந்த தொல் சிற்பங்கள் நமது ஊரிலேயே மியூசியத்து கோடவுனில் கிடத்தப்பட்டு கேட்பாரற்றுக் கிடக்கின்றன. அவைகளை உரிய இடத்தில் ஒப்படைத்தால் அவைகளின் பாதுகாப்புக்கு பங்கம் ஏற்படலாம் என்ற அச்சம் இருக்கிறது என்பது உண்மையும் கூட. இந்த விஷயத்தில் சம்பந்தப்பட்ட சிறந்த நிபுணர் குழு ஒன்று அமைத்து இதற்கு சரியான தீர்வு காண்பதே வழியாகும் என்பதே எம் கூற்று. Ref: https://plone.unige.ch/art-adr/cases-affaires/nataraja-idol-2013-india-and-norton-simon-foundation-1/case-note-2013-nataraja-idol-2013-india-and-norton-simon-foundation/view http://www.forbes.com/2004/05/25/cx_0525conn.html|Forbes http://www.tneow.gov.in/IDOL/judgement.html April 16, 2013 by Vijay Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34 Leave a comment சோழர்கள் பற்றி பல தகவல்கள் புதைந்து இருந்த கோவில் – எசாலம்-முதல் பாகம் நண்பர் சாஸ்வத் போன்ற கட்டிளம் கா​ளைகள் நமது வரலாற்றுசின்னங்களின் மேல் காட்டும் அக்கறை மனதிற்கு பெரிதும் ஆறுதல் அளிக்கிறது. இன்று நம்மை அவர் தன்னுடன் எசாலம் கூட்டிச் செல்கிறார் – அப்படி அங்கே என்ன ஸ்பெஷல் ? மேலே படியுங்கள் மார்கழி மாதத்தின் ஒரு காலைப்பொழுதில் சோழர் சரித்திரத்தில் முக்கியத்துவம் வாய்ந்த ஓரிடத்தைக் காண ஒரு சிறிய குழுவாக பல சரித்திரங்களைக் கண்ட முக்கிய சாலை வழியே நாங்கள் சென்றோம். அன்று காலை நாங்கள் சந்திக்கும்போது திரு. அரவிந்த் அவர்கள் நாங்கள் காணவிருந்த நான்கு கோவில்களைப் பற்றி விவரித்தார். சென்னையிலிருந்து ஒரே நாள் பயணத்தில், ஒன்றுக்கொன்று வெறும் 5 கி.மீ. தொலைவிற்குள் அந்த நான்கு கோவில்களும் அமைந்திருக்கின்றன. நாங்கள் செல்லவிருந்த இடங்களின் பட்டியலில் “எசாலம்” என்கிற பெயரைக் கண்டதும் எனக்குள் பெரும் பரபரப்பு. அது ஒரு முழுமையான கற்றளி (விமானத்தையும் சேர்த்து – இது சற்று அரிதாகும்), மேலும் மிகுந்த அழகுடைய வீணாதார தக்ஷிணாமூர்த்தியும் அங்குள்ளது என்பதைத் தவிர வேறென்ன எதிர்நோக்குவது என்று எனக்குத் தெரியவில்லை. கோவிலைப் பற்றி சொல்வதற்கு முன்பு எசாலத்தைக் காண நான் ஏன் இத்தனை பரபரப்புடன் இருந்தேன் என்று சொல்லிவிடுகிறேன். ஒருஆட்சியாளர் நிறுவிய கோவிலைப் பற்றி அக்கோவில் கூறும் விவரங்கள் மிகவும் குறைவேயெனக் கூறலாம். கங்கைகொண்ட சோழபுரத்தில் அதனை கட்டிய முதலாம் ராஜேந்திரசோழரைப் பற்றி குறிப்புகள் ஏதும் இல்லை. தன் தந்தையைப் போல் அல்லாது “கங்கை வரை கைப்பற்றிய சோழன்” என்பதே ஒரு புதிராக உள்ளது. ஏனெனில், இக்கோவிலில் கிடைக்கப்பெற்ற கல்வெட்டுகளில் முதலாவதே அவரது இரண்டாவது மகன் வீரராஜேந்திர சோழனின் ஆட்சிக் காலத்தியதுதான். அவர் யார்? அவரது குறிக்கோள் என்ன? அவரது தூண்டுதல் யார்? – இவையனைத்தும் மிகவும் கடினமான கேள்விகளே! இக்கேள்விகளுக்கான பதில்களைக் கண்டறிய உதவும் இடங்களில் ஒன்று தான் ஈசாலம். பலஅற்புதமான அழகிய வெண்கலச் சிலைகளுடன் ஒரு தானசாஸனச்செப்பேடு கண்டெடுக்கப்பட்டது இங்குதான். இந்தச் செப்பேட்டினை மொழிபெயர்த்த டாக்டர். நாகசுவாமி அவர்கள், “ஆகஸ்டு 11, 1987ல் தமிழ்நாட்டின் தென்னாற்காடு மாவட்டத்தில் விழுப்புரத்தின் அருகே உள்ள ஈசாலம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர்கள், அங்குள்ள ராமநாதேஸ்வர திருக்கோவிலின் புனரமைப்புப் பணிகளை நடத்தும்போது, அக்கோவிலின் உள்ளே பல வெண்கலச் சிலைகள், கோவில் பாத்திரங்கள் மற்றும் செப்பேடு ஒன்றையும் கண்டெடுத்தனர்” என்று கூறுகிறார். இந்தச் செப்பேட்டில் உள்ள விவரங்கள் முக்கியமானவை, சுவாரசியமானவை. அதன் முழுமையான விவரங்களை மேலேயுள்ள சுட்டியில் காண்க. மேலே செல்வதற்கு முன் சில முக்கிய செய்திகளை இங்கேஅறிந்து கொள்வோம். இந்த சாஸனம் ராமநாதேஸ்வரர் எனும் பெயர் கொண்ட சிவபெருமானுக்கு காணிக்கையாக புதிய தேவதானம் உருவாக்கப்பட்டதின் விவரங்களைக் கூறுகிறது. இந்தக் குறிப்பின் மூலம் நாம் இவ்விடத்தைப்பற்றி அறியும் முக்கியத் தகவல் என்னவென்றால் இது ஒரு சாதாரண கோவில் அன்று. இக்கோவில் ராஜேந்திர சோழரால் கட்டப்பட்டு அவரது குருவும், தஞ்சைப் பெருவுடையார் கோவிலின் முதன்மை குருக்களும் (இவர் கங்கைகொண்டசோழபுரத்தின் முதன்மை குருக்களாகவும் இருந்திருக்கக்கூடும்) ஆகிய சர்வசிவ பண்டிதருக்கு அளிக்கப்பட்டது. சோழர்களில் மிகுந்த பலம் பொருந்திய மன்னனால் கட்டப்பட்டு தனது ஆசானுக்குப் பரிசாக அளிக்கப்பட்ட இக்கோயில் அரசாங்கத்தின் முக்கியத்துவம் வாய்ந்தது. ஆக நாட்டிலுள்ள சிறந்த கைவினைஞர்கள் இங்கு வேலை செய்ய அழைக்கப்பட்டிருக்கக்கூடும் என்பது இக்கோவிலைக் கண்டால் நம்மால் அறிந்துகொள்ள முடிகிறது. கோவிலின் முகப்பிலிருந்து பார்க்கும்போது நமக்கு பெரிதாக ஒன்றும் தோன்றவில்லை. ஒரு சிறிய கோபுரம், இக்கால வடிவமைப்பில் கண்ணைப் பறிக்கும் நிறங்களில் நம்மை வரவேற்கிறது. உள்ளே சென்றபின் தான் அழகிய சோழர் கோவிலைக் காண்கிறோம். நம் கண்களில் முதலில் தென்படுவது பெரிய உருண்டையான விமானமும் ( அபுதாபிக்கு வந்துவிட்டோமோ ?), அனைத்துப் பக்கங்களிலும் அழகிய வேலைப்பாடமைந்த பலிபீடமும்தான். சட்டங்களில்அழகிய வேலைப்பாடுகளும், ஆடும் மங்கையரும் கொண்ட கருங்கல் ஜாலி கோவிலின் முகப்பில் அமைந்துள்ளது. மேலும் உள்ளே செல்லும் வழி இடதுபுறத்திலுள்ளது. கோவிலின் சுவர்கள் முழுதும் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. கோவிலைச் சுற்றி கோஷ்ட தேவதைகள் அமைந்துள்ளனர் – முறையே விநாயகர், தக்ஷிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா, துர்க்கை அடுத்த பகுதியில் தொடரும் … எசாலம் செப்பேடு படங்களுக்கு நன்றி – திரு ராமன் அவர்கள். தமிழாக்க உதவி – திருமதி பர்வதவர்தினி March 13, 2013 by Vijay Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34 Leave a comment பழமையான சிவ லிங்க வடிவங்கள் – குடிமல்லம் டிசம்பர் மாதம் 2009 ஆம் ஆண்டு நானும் அரவிந்தும் ஒரு சுவாரசியமான பயணம் மேற்கொண்டோம். கார் போன போக்கில் சென்ற எங்களுக்கு பல சிதிலமடைந்த கோயில்கள் சோர்வூட்டின. அப்படி பல பக்தி ஷேத்ராடனங்களின் வரைபடத்தில் கூட இல்லாத கோவில்களில் ஒன்று புதுக்கோட்டை மூவர் கோயில் அருகில் இருக்கும் முசுகுந்தன் கோயில். செழுமையான பச்சை வயல்களுக்கு நடுவில் அமைந்த ஒரு அமைதியான கிராம சூழலில், அரை அடி ஆழ சேற்றில் முட்டி வரை இறங்கி கடினப்பட்டு சிற்பங்கள் எதுவுமே இல்லாத ஒரு தூண் மண்டபத்தை அடைந்தோம். இதற்கா இவ்வளவு சிரமப்பட்டோம் என்று நினைத்துக்கொண்டே உள்ளே சென்றோம். அந்த தூண்களின் வகைபடுத்தல், யாரோ சிக்கலான ஒரு புதிரை சேர்க்க முயற்சி செய்தது போல வெவ்வேறு கால, இடம் , பாணி என்று பல வித்தியாசமான தூண்களை ஒன்று சேர்த்து அமைத்திருப்பது புரிந்தது. உள்ளே கருவறையானது இருட்டாகவும் ஈரமாகவும், எலிகள் நிறைந்தும் இருந்தது. அத்துடன் புகைப்பட கருவியின் ப்ளாஷ் தேவையான ஒளியை தர இயலவில்லை. இது போன்ற வசதியற்ற சூழலிலும், வெற்று வயிறிலும் என்னடா இப்படி புகைப்படம் எடுக்க கூட முடியவில்லையே என்று இப்படி அப்படி காமெராவை காட்டி கிளிக் செய்தபோது – அர்த்தமண்டபத்தின் ஒரு பகுதியை ஒளியேற்றியது. பார்ப்பதற்கு கனமான தூண் போன்ற ஒன்று ஒரு மணல் மூட்டையின் மீது இருப்பதாக புகைப்பட கருவியில் தெரிந்தது. மீண்டும் அருகில் சென்று இருட்டில் காமெராவை காட்டி படம் எடுத்தால் அங்கே.. அங்கு வீற்றிருப்பது. பிரம்மாண்டமான ஒரு சிவலிங்கம். மேன்மை ஸ்தபதி ஸ்ரீ உமாபதி ஆச்சார்யாவை அப்போது தான் சந்தித்து எனது அறியாமையால் ஒரு கேள்வி கேட்டு இருந்தேன் “அவரை பொறுத்த வரை சிற்ப வேலையில் எந்த உருவம் மிகவும் கடினமானது என்று”. உடனடியாக சற்றும் எதிர்பாராத பதில் வந்தது = “சிவலிங்கம்”. அவர் அப்போது தான் சிவலிங்க படிமவியலில் (Iconography) இரண்டு நாட்கள் அமர்வு நடத்தியதாக தெரிவித்தார். அவர் எங்களை கிண்டல் செய்கிறாரோ என்று சந்தேகம் வந்தது. சாதாரணமான ஒரு சிவலிங்கம் செய்வதில் என்ன சிரமம் இருக்க போகிறது! இந்த “சாதரணமான” உருவத்தின் மீது ஒரு பதிவை எழுதுவதற்கான துணிவை திரட்டி முடிவெடுக்க எனக்கு நான்கு ஆண்டுகள் ஆகியுள்ளது. முதலில் ஹிந்து படிமவியலில் சர்ச்சைக்குரிய பாடம் இது என்பதால் நான் சிறிது துணிந்தும் கவனமாகவும் எழுத வேண்டியதாக இருக்கிறது. இந்தியா மட்டும் அல்லாது தென்மேற்கு ஆசிய நாடுகளில் – அதாவது மத்திய வியெட்னாம், கம்போடியா போன்ற நாடுகளிலும் பிரசித்தி பெற்று விளங்கும் இந்த உருவத்தில் அப்படி என்ன சிறப்பு? அதுவும் 6ஆம் 7ஆம் நூற்றாண்டுகளிலேயே இவை அங்கு பரவ காரணம் என்ன ! என்ன நம்ப முடியவில்லையா? நான்கு அடி உயரத்தில் கம்பீரமாக நின்று அருங்காட்சியகத்தை அலங்கரிக்கும் அந்த கற்தூண்? அருகில் சென்று நோக்கினால் தெரிகிறது – இது தூண் இல்லை சிவலிங்கம் என்றும், இந்த இடம் இந்திய அருங்காட்சியகம் இல்லை – ஹோ சீ மின்ஹ் , வியெட்னாம் அருங்காட்சியகத்தில் உள்ள 6ஆம் நூற்றாண்டு “பு நான்” காலத்தியது. இது சிவலிங்கம் போன்று வியெட்னாமில் இருக்கும் ஒரு உருவம் அல்ல. ஆகம சாஸ்திரத்தின்படியும் படிமவியல் சட்டப்படியும், துல்லியமாக செதுக்கப்பட்ட சிவலிங்கமே. இங்கு நாம் பார்க்கும் லிங்கம் நம் ஊரில் கோவில்களில் உள்ள லிங்கம் போலவே ஆவுடை எனும் பீடத்துடன் தான் இருக்கிறது. மேலும், லிங்கத்தில் மூன்று பாகங்கள் இருக்கிறது. சதுரமாக இருக்கும் அடிப்பாகம் ப்ரஹ்ம பாகதயும், நடுவில் இருக்கும் எண்கோணமான பகுதி விஷ்ணு பாகத்தையும், உருளையாக இருக்கும் மேல் பகுதி ருத்ர பாகத்தையும் குறிக்கிறது. கீழே வட்டமாகவும் மேலே முட்டை வடிவத்திலும், நடுவில் துளையுடனும் இருக்கும் ஆவுடையுடன் சேர்க்கும் பொது ப்ரஹ்ம பாகம் ஆவுடையின் கீழேயும், விஷ்ணு பாகம் ஆவுடையின் உள்ளேயும், ருத்ர பாகம் ஆவுடையின் மேலே பார்க்க கூடிய வகையிலும் இருக்கும். இதன் அளவு, விகிதம் மற்றும் ப்ரஹ்ம சூத்திரத்தின் வரிகள் எழுதபட்டிருக்கும் நுணுக்கங்களைஆய்வு செய்ய சுவாரசியமாக இருக்கும் போதிலும், இந்த லிங்கத்தின் ப்ரஹ்ம பாகத்தின் மேலே ஒரு முகம் செதுக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. இது போன்ற லிங்கங்கள் முகலிங்கம் என்பார்கள். பொதுவாக வட இந்தியாவில் இதை போல வடிவங்களை நாம் பார்க்க இயலும் ( ஆனால் அங்கே முகம் இன்னும் பெரிதாக இருக்கும் ), வட ஆந்திராவில் பஞ்ச ஆராம லிங்கங்கள் இப்படிப்பட்டவைதான் (சாமல்கோட், திராட்சாராமம், பீமாவரம், அமராவதி போன்ற தலங்கள்) இன்னும் நாம் தலைப்புக்கே வரவில்லையே ! உலகிலேயே மிக பழமையான லிங்கங்களில் ஒன்று பிரசித்தி பெற்ற திருப்பதி அருகில் உள்ள காளஹஸ்தியிலிருந்து 21 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள குடிமல்லம் என்ற இடத்தில உள்ளது. சுமார் 2nd C BCE இருந்து 1st C BCE காலத்தை சேர்ந்த வசீகரமான இந்த லிங்கம் சரியாக 5 அடி உயரம் கொண்டது. வெறும் லிங்கம் மட்டும் இல்லை, அதில் நம்மை வியக்க வைக்கும் சிற்பங்களும் உண்டு. கூர்ந்து கவனிப்போருக்கு இது ஒரு மிக பழமையான தூங்கானை ( கஜ ப்ரிஷ்டம்) வடிவ கருவறை என்பதை புரியும். (இருப்பினும் கோவிலை காட்டிலும் லிங்கம் பழமையானது) 1973-74 இல் வெளியான ASI Review வின் புகைப்படம் ஒன்றை உங்களுக்கு வைக்கிறேன். அதில் தெரியும் லிங்கத்தின் கீழ் பகுதி அப்போது நயமற்ற ஒரு ஆவுடையாரால் மறைக்கப்பட்டு இருப்பது தெரியும். இதுவே அந்த உருவம் பரசுராமர் என்ற ஸ்தல புராணம் உருவாக காரணமாக இருந்து இருக்காலம். . அந்த புராணங்களை முழுவதுமாக தூக்கி போட முடியாத வகையாக அந்த உருவம் வலது கரத்தில் (செம்மறி ??)ஆடு ஒன்றை அதன் பின்னன்கால்களிலும், சிறிய வாய் கொண்ட சொம்பு ஒன்றை இடது கையிலும் பிடித்து இருப்பதாய் இருக்கிறது. ஒரு கோடரி இடது தோளிலும் தொங்குகிறது. ஆயினும் அறிஞர்களின் ஒருமனதாக கருத்து – இது ஒரு விகாரமான ராட்சசன் மீது நிற்கும் சிவன் என்பதே (கோடரியும் – பரசு அவர் ஆயுதமும் தானே ). அந்த ராட்சசன் மண்டியிட்டவாறும் தனது எடையை கால் முட்டி மீது கைகளை பதித்து தாங்கி நிற்கிறான். இவன் முகம் நாம் நடராஜர் இடத்தில் பார்க்கும் அந்த அழகிய முயலகன் போன்று காணப்படவில்லை – வௌவால் போன்ற காதுகளும், கன்னங்களில் ஆழமான கோடுகளுடன் பற்களை காட்டி கோராமாக இருக்கிறான். ஆனால் அவன் சிகை அலங்காரமும் அணிகலன்களும் அருமையாக செதுக்கப்பட்டு இருக்கிறது. இந்து படிமவியல் படிக்கும் மாணவர்களுக்கு ஒரு முதன்மை நூலாய் இருக்கும் திரு கோபிநாத் ராவ் அவர்களின் Elements of Hindu Iconography நூலிலிருந்து இந்த அறிய உருவத்தையும், அணிகலன்களை பற்றியும் வடிவமைப்பை பற்றியும் ஆராய சில படங்களை உபயோக படுத்துகிறேன். இதில் நாம் முக்கியமாக கவனிக்க வேண்டியது இந்த பழமையான லிங்கமானது நிச்சயமாக ஒரு ஆண் குறி வடிவம் தான். அந்த தண்டு ஏன் ஏழு பட்டைகளை கொண்டுள்ளது என்பதும் நாம் ஆய்வு மேற்கொள்ள வேண்டிய ஒன்றே. பின்னங்கால்களை கொண்டு ஒரு (செம்மறி??) ஆட்டினை பிடித்து இருக்கும் இந்த தனிப்பட்ட விதம், இதை வேட்டை ஆடப்பட்ட மிருகமாகவும், பிற்காலங்களில் இருக்கும் மான் இல்லை என முடிவு செய்ய வைக்கிறது. மேலும் ஆர்வமூட்டுவது இடுப்பில் ஆடை (மிருக தோல் இல்லை !) இருக்கும்போதிலும், ஆண் குறியை நன்றாக பார்க்க முடிகிறது. அந்த ஆடை மெல்லியதானதாக இருக்கக்கூடும் என்பது பொதுவான கருத்து. இதில் நாம் கவனிக்க வேண்டிய ஒன்று ஆண் குறி ஊர்த்துவ முகமாக இல்லை. (இதற்கு உங்களில் சிலர் கூகுளார் உதவியை நாட போகிறீர்கள் தானே !) இந்த வடிவம் பல முக்கியமான கேள்விகளை எழுப்புகிறது. பொதுவாக தென்னிந்தியாவில் கி.பி ஆறாம் நூற்றாண்டுக்கு முன்னர் இந்து வடிவங்கள் கிடைப்பதில்லை. இதற்குப் பொதுவாக சொல்லப்படும் காரணம் கல் ஈம சடங்குளுடன் சார்ந்து இருப்பதால் அதுவரை கல் கொண்டு சாமி சிலைகள் செய்வது இல்லை என்பதே. மரம் அல்லது சுதையால் தான் செய்தார்கள் – அப்படி செய்த வடிவங்கள் சில காலம் மட்டுமே இருக்கும். அப்படி இருக்க இந்த வடிவம் இந்த கால வரைக்கு சுமார் எண்ணூறு ஆண்டுகளுக்கு முன்னரே எப்படி செதுக்கப்பட்டது? மேலும் செதுக்கிய வடிவத்தின் அழகு, முறை கொண்டு பார்க்கும் பொது ஒரு மேலான கலை தெரிகிறது. இது ஒன்றும் ஏனோ தானோ என்று யாரோ சும்மா ஒரு கல்லை எடுத்து விளையாட்டிற்கு செதுக்கிய சிலை அல்ல – கைத் தேர்ந்த சிற்பி ஏதோ சில பல விதிகளை கொண்டு செதுக்கிய சிலை. மேலும் முதன் முதலில் யார் சிவனின் முகத்தை பார்த்தாலும் மனதில் எழும் கேள்வி – இது நம்ம ஊரு சிலை போல இல்லையே என்பது தான். அப்படி இருந்தால் இது எங்கிருந்து வந்தது? இன்னும் பல கேள்விகள் உங்கள் மனதில் எழும் என்பது உறுதி – கண்டிப்பாக பின்னூட்டமாக போடுங்கள்… படங்கள் நன்றி : திரு. வசந்தா பெர்னாண்டோ , திரு காமன் பலம் மற்றும் ASI Review 1973 -74 and Elements of Hindu Iconography March 6, 2013 by Vijay Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34 Leave a comment கையளவு கல்லில் சோழ சிற்பியின் காவியம் – புஞ்சை புரனமைப்பு என்ற பெயரில் பல அருமையான சோழர் கோயில்களை சிதைந்த நிலையில் பார்த்த எங்களுக்கு – புதிதாக எந்த கோயிலுக்கு சென்றாலும் முதல் வேலை கோபுர வாயிலை தாண்டியதும் வெளியில் சென்று பழைய வேலைபாடு ஏதாவது மிஞ்சி இருக்கிறாதா என்று பார்ப்பதே ! அப்படி ஏதாவது தென்பட்டால் குச்சி ஐஸ் கிடைத்த மாணவனைப்போல ஒரு ஆனந்தம் ! அதுவும் அங்கே சோழர் கால சிறு / நுண்ணிய சிற்பம் இருந்துவிட்டால் தேன்மிட்டாய் கிடைத்த மாதிரி தான். அப்படி ஒரு அனுபவம் புஞ்சை நல்துணை ஈஸ்வரம் சென்ற பொது கிடைத்தது. பொதுவாக அடியில் இருக்கும் சிறு சிற்ப்பங்களை கண்டு கொள்வது எளிது – அவை புராண கதைகளை சொல்லும். இருந்தும் ஒரு சில இடங்களில் மேலே இருக்கும் சிறு தூண்களிலும் நுனின்ய சிற்ப்பங்கள் இருக்கும். கண்ணில் விளக்கெண்ணை விட்டு அவற்றை தேட வேண்டும். ஓவியம் தீட்டும் கலைஞர்களிடம் இருப்பதிலேயே எது மிகவும் கடினமான பனி என்று கேட்டால் – மனித உணர்சிகளின் பாவனை – அவற்றை வெளிகொனர்வதே மிகவும் மிகவும் கடினமான காரியம் என்பார்கள். நாட்டியம், இசை இவற்றை கல்லில் வடிப்பது ? இந்த தூணின் ஒவ்வொரு அங்குலமும் அழகு பட செதுக்கிஉலான் அந்த சிற்பி. அந்த சிறு சிறு நகம் அளவு பூத கணங்களின் அசைவுகளில் கூட பாவனை தெரிகிறது. இந்த வடிவங்களின் அழகு இந்த அளவில், இத்துணை கடினமான ஒரு பாவனையை இவ்வளவு லயத்துடன் வெளிக்கொணர்ந்ததுதான். நண்பர் ஓவியர் முரளிதரன் அழகர் அருமையாக இந்த சிற்ப்பத்தை நமக்கு ஓவியம் மூலம் மேலும் ரசிக்க உதவுகிறார். மேளம் வசிக்கும் பெண், அந்த மேளத்தின் கனத்தால் கழ்துப் பட்டை தலையை சற்றே கீழே இழுக்க அதனை ஈடு கொடுக்க தந்து துடையில் அவள் வாத்தியத்தை முட்டு கொடுக்கும் இயல்பான சித்தரிப்பு மிகவும் அருமை. ஆடல் மங்கை – புடைப்புச் சிற்பம் , அதுவும் அரை அங்குலம் தான் அளவு – அதிலும் டிரும்ப்ஹி பின்புறம் ஆடும் கோலம் ! அந்த அளவிலும் கனக்கச்சிதமான வடிவம், இடுப்பு துணியின் மடிப்பு என்று கலக்குகிறான் கலைஞன். பத்தாம் நூற்றாண்டின் முதல் பாதியில் வைத்த சிலை இன்றும் ஆயிரம் ஆண்டுகள் தாண்டியும் நம்மை நெகிழ்விக்கிறது. இதை பார்த்தாவது இதனை போன்ற மற்ற இடங்களிலும் இருக்கும் சிற்ப அதிசயங்களை நாம் ரசித்து போற்றி பாதுகாக்க குரல் எழுப்ப வேண்டும். February 22, 2013 by Vijay Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34 Leave a comment திருவிடந்தை கோஷ்ட வடிவங்கள் – ஒரு பார்வை ஒரு இனிய மாலைபொழுது கிடைத்ததும் கடற்கரை சாலையில் ஒரு ரைடு – அப்படியே ஒரு பழைய (ரொம்ப நாள் பார்க்கவேண்டும் என்று குறித்து வைத்த) ஆலயத்தையும் பார்த்துவிடலாமே என்று ஒரே கல்லில் ரெண்டு மாங்காய்! அப்படி போனது தான் திருவிடந்தை. டிசம்பர் மாதம் விடுமுறை ஆரம்பித்து இருந்தும் சாலையில் அவ்வளவு கூட்டம் இல்லை. சில கார்கள் மட்டுமே நாற்பது கிலோ மீட்டர் என்ற அந்த காமெடி ஸ்பீட் லிமிட்டை சட்டை செய்யாமல் பறந்துக்கொண்டு இருந்தன. அப்படி பலரும் அவமதித்த லிமிட்டின் லிமிட் ஆங்காங்கே சிதறி கிடந்த கார் கண்ணாடிகள் விளம்பரப்படுத்திக்கொண்டிருந்தன. சற்று தொலைவில் இடது புறம் சவுக்கு மரத்து காடுகள் வர துவங்கியவுடனே வேகத்தை குறைத்து வலதுபுறம் திருவிடந்தை நோக்கி திரும்பினோம். சூப்பர் ஸ்டார் அவர்கள் திருவண்ணாமலையை பிரபலப் படுத்தும் முன்னர் இந்த ஆலயத்தை சற்று பிரபல படுத்தி விட்டார். அதன் பின்னர் ஆகவேண்டியவற்றை அதன் ஸ்பெஷல் ஸ்தல புராணம் பார்த்துக்கொண்டது. அது என்ன ஸ்பெஷல் ஸ்தல புராணம் ? மேலே படியுங்கள். ஆலயம் கண்ணில் பட்டவுடன் ரோடோரத்தில் வண்டியை நிறுத்தினோம். அதிசமாக வேறு ஒரு கார், மாக்சி-காப் ஒரு டெம்போ / ஆட்டோ கூட இல்லை ! பூ கடை அம்மா நம்மை பார்த்தவுடன் ’சிக்கினாண்டா ஒருத்தன்’ என்று முகம் மலர – பூ கூடையுடன் இரண்டு மாலையுடன் ஓடோடி வந்தாள். (அது என்ன இரண்டு மாலை ! மேலே படியுங்கள் ) . அந்த அம்மா கிட்ட நாம் சிற்பம் பாக்க வந்திருக்கிறேன் என்று சொல்லி புரியவைப்பதை விட நமக்கு பத்து வயதில் ஜூனியர் இருக்கிறான் என்று சொல்லிவிட்டு தப்பினேன். வெளியே அழகே இல்லாத நாயகர் கால மண்டபம் மற்றும் வாயில் கோபுரத்தை கடந்து உள்ளே சென்றோம். மிகவும் கம்மியான வெளிச்சத்துக்கு கண்கள் பழக்கப்பட எதிரே பல்லவர் கலை – வராஹர் சுதை வடிவம் ! அதற்குள் படம் எடுக்க தடை அறிக்கை !! வேண்டும் என்றால் வெளியே ’வரை-படம்’ உள்ளது வாங்கிக்கொள்ளுங்கள் என்றார்கள் ! என்ன அழகு வடிவம் , எட்டாம் நூற்றாண்டுச் சிற்பங்களாயிற்றே அதற்குள் பலர் சேர்ந்து விட்டனர். அவரது ஸ்தல புராணம் தந்த வரலாறு. அதன்படி வாலிபர் ஒருவர், இரு இளம் பெண்கள் – அனைவர் கையிலும் இரண்டு இரண்டு மாலைகள். ஒரு மலையை தாங்களே மாட்டிக்கொண்டு கோவிலை சுற்றி வர வேண்டும். மற்றொரு மாலை ? அது பெருமாளின் கை வண்ணம். அப்படி செய்த ஒரே வருடத்தில் திருமணம் நடந்து விடும்…பின்னே – முனிவர் மகள்கள் 365 பேரை நாளைக்கு ஒன்று என்று வருடம் முழுதாக மணக்கோலத்தில் இருந்து மணந்தவர் …நித்ய கல்யாண பெருமாள் – பயங்கர பவர் ! மணமாக நண்பர்கள் இருவர் ஆலயத்துக்குள்ளே என்ன ஊருக்குள்ளே கூட வர பயந்து ஓடி விட்டனர். சரி! இதெல்லாம் போதும். சிற்பத்துக்கு வருவோம். பல்லவர் கால வைணவ ஸ்தலம் – கோஷ்டங்களில் யார் இருப்பார்கள் என்ற ஆவலுடன் விரைந்தோம். முதலிலேயே ஒரு அதிர்ச்சி. ஆனைமுகன் தான் , அதுவும் சரியான இஅடதில் தான் – ஆனால் பட்டைக்கு பதில் நாமம் – மேலே பெயர்…. மல்லை மற்றும் காஞ்சி கைலாசநாதர் வடிவங்களுடன் ஒப்பிடும் பொது ராஜசிம்ம பல்லவ காலத்து பிள்ளையார் போல இல்லாவிட்டாலும் பழைய சிலை தான். வல்லம் விநாயகர் போலும் இல்லை. இது எந்த காலத்து சிலை? மற்ற கோஷ்ட சிலைகளை பாத்துவிட்டு மீண்டும் இந்த கேள்விக்கு வருவோம். அடுத்து வருவது – சத்யன். ஆஹா ,பல்லவர் கைவண்ணம் தாம் – கண்டிப்பாக சொல்லி விடலாம் – கையில் அழகிய பிரயோக சக்கரம் உள்ளதே. அடுத்த கோஷ்டம் – அச்யுதன். மீண்டும் சற்று குழப்பம். இங்கே சற்று வித்யாசமாக சக்கரம் பிரயோகத்தில் இல்லை. அடுத்து – அநிருத்தன் – ஆஹா, இங்கே மீண்டும் பிரயோக சக்கரம். ! முடிவாக விஷ்ணு துர்க்கை வரும் கோஷ்டத்தில் வைஷ்ணவி – அடுத்த முறை சரியான ஆட்களை கூட்டிச்சென்று காலுக்கு அடியில் எருமை தலை இருக்கிறதா என்று பார்க்கவேண்டும்., எனினும் கையில் பிரயோக சக்கரம் உள்ளது. இவற்றை கொண்டு கோஷ்ட வடிவங்கள் பல்லவர் காலத்திலேயே அமைக்கப்பட்டவை என்று ஓரளவிற்கு முடிவாகவே சொல்லி விடலாம். மூலவர் சுதை உருவம் என்பதாலும் கருவறை கருங்கல் திருப்பணி என்பதாலும் – மூலவர் நிறுவி ( எட்டாம் நூற்றாண்டு ) ஒரு நூறு ஆண்டுகளுக்கு பின்னர் இந்த கோஷ்ட வடிவங்கள் வடிக்கப்பட்டு இங்கே பொருந்த பெற்றன என்று நாம் தெரிந்துகொள்ளலாம். இவை கண்டிப்பாக பத்தாம் நூற்றாண்டு சோழ வேலைப்பாடு அல்ல. கணேஷ , சத்யன் அச்யுதன் அநிருத்தன், வைஷ்ணவி . இப்படி உள்ள அமைப்பில் கணேஷ வடிவம் கோஷ்ட தெய்வமாக கடை பல்லவ வைணவ ஆலயத்தில் இடம்பெற்று விட்டமையை நாம் அறியலாம். பின்னர் நடந்த மாற்றங்களாலும் பிரிவுகளினாலும் பிளவுகளை ஏற்படுத்த – அவற்றை மறைக்க ஒட்டு போடவே அவருக்கு வேறு பெயரிட்டு வேறு அடையாளத்தையும் சூட்டி இருப்பது தெளிவாகிறது. February 18, 2013 by Vijay Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34 Leave a comment பரங்குன்றம் உமை ஆண்டார் குடைவரை – பல கேள்விகள் – ஒரு ஆய்வு – பாகம் 1 நமது பண்டைய கலைச்செல்வங்களை புரிந்துக்கொள்ள அறிதலும் புரிதலும் பகிர்தலும் மிகவும் முக்கியம். பல விஷயங்கள் நமக்கு முதல் கண்ணோட்டத்தில் பல கேள்விகளை எழுப்பி குழப்பினாலோ – அவை அனைத்தும் நமது அறிவுப் பயணத்தில் படிகள் என்றே உணர்ந்து மேலும் நம்மை நம் பணிக்கு அர்ப்பணிக்க வேண்டும். அப்போது முடிச்சுகள் தானே அவிழும் ! அப்படி ஒரு முடிச்சு பரங்குன்றம் உமை ஆண்டார் குடைவரை. முருகனை மட்டுமே தரிசித்து திரும்பும் பக்தர்கள் மலைக்கு பின்புறம் ஒரு குடைவரை இருப்பதையே மறந்துவிடுகின்றனர். குடைவரையின் முகப்பை பார்க்கும் போதே – அந்தத் தூண்களில் உள்ள வேலைப்பாடு அப்படி ஒன்றும் சிறப்பானதாக இல்லை என்பதை உணரலாம். இந்த கலை வேலைப்பாடு அதிகம் இல்லாத தடியான தூண்களை கொண்டு இந்த குடைவரையின் காலம் எட்டாம் நூற்றாண்டு அல்லது அதற்கு முன்னர் என்று நாம் சொல்லமுடியும். இந்த குடைவரையின் வெளியிலேயே பல புடைப்புச் சிற்பங்கள் உள்ளன. அவற்றை அடுத்த பதிவில் காண்போம். உள்ளேயும் பல சிற்பங்கள் இருக்க நேரே உள்ளே கருவறைக்கு செல்வோம். இங்கே தான் முதல் முடிச்சு. புடைப்புச் சிற்பங்களில் உள்ள கலைத் திறன் வடிவம் ( ஒரு அழகிய நடராஜ வடிவமும் உள்ளது இதைக் கொண்டு இவை கண்டிப்பாக பன்னிரெண்டாம் / பதின்மூன்றாம் நூற்றாண்டுக்கு முன்னதாக இருக்க முடியாது என்று சொல்லிவிடலாம். இவற்றைக் கொண்டு பரவலாக இந்த குடைவரை சமணர் குடைவரையாக இருந்து சைவர்களால் மாற்றி அமைக்கப்பட்டது என்று ஒரு பொதுவான கருத்து நிலவுகிறது. இந்த முடிச்சை அவிழ்க்க – கருவறையில் உள்ள சிற்பத்தை ஆராய்ந்து ஏதாவது துப்பு கிடைக்கிறதா என்று பார்ப்போம். உள்ளே சிவனுடைய அர்த்தநாரி வடிவம் உள்ளது. நான்கு கரங்கள் கொண்ட அர்த்தநாரிவடிவம் – உமை , மகேசன் இருவரின் பாகங்களும் சிறப்பாக வேற்றுமை காட்டப்பட்டு செதுக்கப்பட்டுள்ளது. இங்கே தான் குழப்பம் ஆரம்பிக்கிறது. பொதுவாக கருவறையில் நாம் அர்த்தனாரி வடிவத்தை பார்ப்பதில்லை – சோமாஸ்கந்தர் வடிவம் நிறைய இடங்களில் வரும். அடுத்து இந்த புடைப்புச் சிற்ப்பத்தின் அளவு கருவற்றின் அளவை வைத்துப் பார்க்கும் பொது மிகவும் சிறியதாக உள்ளது. மேலும் பீடத்தின் அமைப்பு – அகலமான அளவு மற்றும் தரையில் இருந்து உயரம் – இவற்றை வைத்து பார்த்தல் அது அமர்ந்திருக்கும் வடிவம் ஒன்றுக்காக வடித்து போலவே உள்ளது. ரிஷப வாஹனம் இருக்கும் பக்கமும் விநோதமாக உள்ளது. நாம் முன்னரே அர்தனாரி வடிவத்தின் தோற்ற வளர்ச்சியை ” சிற்பிக்கு “விடை”யே விடை” என்ற பதிவில் பார்த்தோம். மீண்டும் ஒரு முறை பாருங்கள். தர்மராஜா ரதம். அகஸ்தீஸ்வர திரிபங்க வளைவை ஈடு கொடுக்க ரிஷபம் வருவதை பாருங்கள். விருத்தாசலம். எலிபண்டா இப்போது பரங்குன்றம் வடிவத்தில் உள்ள ரிஷபம் இடம் மாறி இருப்பது தெரிகிறதா. இப்படி ஒரு தவறை இவ்வளவு பெரிய குடைவரையை வடித்த சிற்பி செய்ய வாய்ப்பில்லை. மேலும் அர்தனாரி வடிவத்தின் மேல் புறம் சற்று பார்க்கும் போது இன்னும் ஒரு துப்பு கிடைக்கிறது. எதோ சுருள் சுருளாக மற கிளை போலவும் இல்லாமால் கொடி போன்ற வடிவங்கள் உள்ளன. பொதுவாக குரு வடிவத்தின் மேலே மட்டுமே மரம் வரும். இந்த சுருள் வடிவம் நமக்கு ஒரு முக்கிய ஆதாரம். கீழ் வரும் சமணர் வடிவங்களை பார்த்தால் உங்களுக்கே அது புரியும். தேடல் தொடரும். படங்கள் நன்றி : உதயன், அரவிந்த், மற்றும் ஹிந்து பேப்பர் http://www.hindu.com/2003/05/22/stories/2003052203230500.htm http://www.hindu.com/2006/02/06/stories/2006020602410200.htm http://www.herenow4u.net/index.php?id=76895 January 31, 2013 by Vijay Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34 Leave a comment லிங்கோத்பவர் தோற்றமும், அதன் வடிவமைப்பின் வளர்ச்சியும்… எந்த ஒரு சிற்பத்தைப் பார்க்கும் பொழுதும் நமக்கு மனதில் எழும் முதல் வினா, ’இது எந்தக் காலத்தைச் சார்ந்ததாக இருக்கும்?’. அது கற்சிலைகளாக இருந்தால் நன்று, ஏனெனில் பெரும்பான்மையான் சிற்பங்கள் அது ஸ்தாபிக்கப்பட்ட நிலையிலேயே அதே இடத்திலேயே இருப்பதால் கல்வெட்டுக்களை வைத்தோ அல்லது வரலாற்றைத் தேடியோ நம்மால் அதன் பூர்வீகத்தை அறிந்து கொள்ள முடியும். ஆனால் இது உலோகச் சிற்பங்களுக்கு சாத்தியமில்லை. காரணாம் ஏனைய உலோகச் சிற்பங்கள் அதன் இடங்களில் இருந்து பெயர்க்கப்பட்டு உலகின் வெவ்வேறு மூலைகளில், காட்சியகங்களில் வைக்கப் பட்டுள்ளன. அது மட்டுமின்றி, அதே இடத்தில் இருக்கும் சிற்பங்களைப் பற்றி அறிய நம் வழிபாட்டு முறை கட்டுப்பாடுகள் விதிக்கின்றன. ஆகவே, நாம் இங்கு கல்லில் வடிக்கப்பட்ட லிங்கோத்பவரின் கலைப் பரிணாம வளர்ச்சியைப் பற்றி பார்ப்போம். ஒவ்வொரு சிவாலயத்திலும் உள் பிரகாரச் சுற்றில் கருவறைக்கு பின்புறம், மூலவருக்குச் சரியாக பின்னால் எதிர்ப்புறம் நோக்கியச் சிற்பம் லிங்கோத்பவராகத்தான் இருக்கும். பெரும்பான்மையான ஆலயங்கள் கிழக்குப் பார்த்த நிலையில், கருவறையின் மேற்குப் பகுதியில் வீற்றிருப்பார் நம் கட்டுரையின் நாயகர். பல்லவர் காலம் தொட்டு, முற்கால மற்றும் பிற்காலச் சோழர்களின் கலையையும் எடுத்துக் காட்டும் விதமாக ஆறு சிற்பங்களை எடுத்துக் கொள்வோம். இது காஞ்சி கைலாசநாதர் ஆலயத்திலிருந்து – ராஜசிம்ம பல்லவன் (700-728CE) இந்தச் சிற்பம் பிற்காலப் பல்லவர் கலையைச் சார்ந்தது, அதாவது குடைவரைகளிலிருந்து மாறுபட்டு தனிக்கோயில்களாக கட்டத் தொடங்கிய பின்பு உருவானது. உற்று நோக்கினால், பல்லவர்களுக்கே உரித்தான மிகவும் கனமான யக்னோபவிதம் மற்றும் ஆபரண அலங்காரங்கள் தெரியும். கட்டு மஸ்தான உருவமாக அல்லாமல சிவன் ஒரு சாதாரண இளைஞன் போன்ற தோற்றத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளார். அக்னி லிங்கத்தைப் பிளந்து காட்சியளிப்பது போல் அல்லாமல், தனியாக ஒரு சாய்ந்த சதுரவடிவத்திற்குள்ளே வடிவமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. திரிசூலம், பிறைச் சந்திரன், பக்கவாட்டில் உள்ள பிரம்மாவையும், விஷ்ணுவையும் போல் நீண்ட மேல் பாகத்து உடல், வட்ட வடிவ முகம், தடித்த மூக்கு, அலங்காரத் தோரணங்கள் மிகவும் குறிப்பிடத்தக்கவை. என்ன அழகு! அது சரி இந்தச் சிற்பம் அந்த ஆலயத்தில் எங்குள்ளது என்று சொல்லுங்கள் பார்ப்போம்! திருமயம் சத்யகிரி சிவ குகையிலிருந்து… ஏறக்குறைய முன் கண்ட சிற்பத்தின் காலக்கட்டமே இதுவும், ஆனால் இதனை வடிவமைத்தவர் பல்லவர்கள் என்றும், பாண்டியர்கள் என்றும், முத்தரையர்கள் என்றும் வெவ்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன. அற்புதமான சிற்பம். அக்னி பிழம்புகள் தூணின் பக்கவாட்டில் இருந்து கிளம்பி, இயற்கையாய் மேல் நோக்கி வளர்வதைப் போல் செதுக்கப்பட்டுள்ளது. இரண்டு கைகள் மட்டும் கொண்டு சாம பங்கத்தில் நிற்கும் சிவன், இடக்கையை இடுப்பின் மீது வைத்து கதி ஹஸ்த முத்திரையையும், வலது கையில் வரத ஹஸ்த முத்திரையையும் காட்டி வரமளிக்கும் தோற்றத்தில் உள்ளார். நீள்வட்டத்தில் சிவபெருமானை அழாய் வெளிப்படுத்துகிறது அந்தத் தூண். தூணின் தடிமனை பயன்படுத்தி, வலது கையை மடித்து வைத்து அழகுக்கு மேலும் அழகு சேர்த்திருக்கிறான் சிற்பி. தடித்த நாசிகளும், உதடுகளும், அழகிய வதனமும் அமைதியைக் காட்டுகிறது. சில்பசாஸ்திரங்கள் சொல்வதைப் போல், முகத்தின் உயரத்திற்கும் மேல் வளர்ந்த சடாமுடியின் கட்டமைப்பு சிறப்பு. ஆபரண அணிகலன்கள் குறைவு, அதே சமயம் தொப்புளுக்கு மேலே உள்ள் மிகவும் தடித்த உதர பந்தனம் குறிப்பிடத்தக்கது. அழகாய் வடிக்கப்பட்ட கீழாடையிலும் கற்கள் பதிக்கப்பட்ட அல்லது சிங்க முத்திரை இடுப்புக் கச்சையும் காணப்படாதது குறிப்பிடத்தக்கது. வலது கையின் மேல் ஒற்றை நூலாலான மிகவும் தடித்த யக்னோபவிதம், சுவாரசியம் கூட்டுகிறது. பல்லவருக்கு உரித்தான வடிவமைப்பு அல்லவா! இயற்கையான ஒரு சாதுவைப் போன்றதொரு உருவமைப்பு, கட்டுமஸ்தாக இல்லைதான் ஆனாலும் வலிமையான் தோள்கள். குறைந்த ஆபரணங்களும், இந்த வடிவமைப்பும் சிற்ப சாஸ்திர நூல்களின் குறிப்புகள் படி ஏழு அல்லது எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக காட்டுகிறது. அங்கே கிடைக்கும் சிதைந்த கிரந்த கல்வெட்டுகளும் உறுதிப் படுத்தும் ஆனாலும் ப்ரம்மனையும், விஷ்ணுவையும் ஏன் அன்னமாகவும், பன்றியாகவும் கூட அந்த சிற்பி இங்கு காட்டவில்லை?! சோழம் மீண்டும் துளிர்த்ததும், ஆலயங்கள் கட்டுவது மிகுந்தது. அதனால் சிற்பிகளும் போட்டிப் போட்டுக்கொண்டு அந்தக் கலையை வளர்த்தனர். ஆகவே, இனிவரும் உருவங்களைப் படித்தல் சற்று கடினமான வேலைதான். பத்தாம் நூற்றாண்டைச் சார்ந்த புஞ்சை நல்துணை ஈஸ்வரம் மற்றும் புள்ளமங்கை ப்ரம்மபுரீஸ்வரர் சிற்பங்களைக் காண்போம். புள்ளமங்கை – முதலாம் பராந்தகச் சோழன் ( 907 – 955 CE) சிவனின் முகம் சிதைந்துள்ளது. மாபெரும் லிங்கோத்பவர், விஸ்ணுவும், ப்ரம்மாவும் இரண்டு பக்கமும். இதைத் தவிர வேறு சிற்பங்கள் இங்கு தனித்துவம் பெறவில்லை. இரண்டு நூற்றாண்டுகளின் வளர்ச்சி, தேவைக்கு அதிமானவை நீக்கப்பட்டு லிங்கோத்பவர் மட்டும் தனித்துவம் பெறுகிறார். அதோடு ப்ரம்மா மேலே பறந்து செல்வது போலும், விஸ்ணு பூமியை வராகமாகி துளைத்துச் செல்வது போன்ற காட்சி தத்ரூபம். இந்தத் தூண் மொத்தமும் இன்னும் சிற்பத்தால் ஆக்கிரமிக்கப்படவில்லை, தூணில் இருந்து அக்னி வெளிப்படுவது போன்ற காட்சிதான் இன்னமும் தெரிகிறது. சிவனைத் தவிர மற்ற இரு உருவங்களிம் அளவில் சிறியதாகத்தான் வடிவமைக்கப்பட்டுள்ளது. சிறிய ஆனால் தெளிவான முத்திரைகளாக மானும், மழுவும் கொண்ட கைகள் தூணிற்குள்ளே மற்றும் இடையளவு யக்னோபவிதம் கொண்ட மெலிதான ஒல்லி உருவம், அழகிய நீள்வட்ட முகம். பல்லவர் கால நேர்கோட்டிலிருந்து சற்றே வளைந்த வடிவத்திற்குள் இருந்து கால்கள் தெரியும் அளவிற்கு வடிக்கப் பட்ட உருவம். என்ன கலையின் வளர்ச்சி தெரிகிறதா? புஞ்சை – 955 CE கல்வெட்டுகளில் புஞ்சைப் பற்றிய குறிப்புகள் இரண்டாம் ஆதித்தர் காலத்தைக் ( 965-969 CE) குறித்தாலும் சிற்பங்களின் வடிவமைப்பு முதலாம் பராந்தகர் காலத்தையே காட்டுகிறது. ஆஹா! லிங்கோத்பவருக்கென்றே சிறந்த தோரணம், லிங்கத்திற்கு தொப்பி போன்ற உருவமைப்பு மலர் வளையத்துடன், அன்னமாக ப்ரம்மனும், வராகமாக விஸ்ணுவும் கொள்ளையழகு. இங்கு தனியாக சிற்பங்கள் ப்ரம்மனுக்கும், விஸ்ணுவுக்கும் இங்கு இல்லை. மற்றும், அக்னி சுவாலைகள் தூணின் பக்கவாட்டிலிருந்தே இன்னமும் கிளம்புகின்றன. பல்லவர் காலம், பல்லவர் காலத்திற்கும் சோழர்களுக்கும் இடைப்பட்ட மற்றும் முந்திய சோழர் காலம், இந்த காலகட்டத்தில் லிங்கோத்பவரின் கலை வளர்ச்சி இரண்டு நூற்றாண்டுகளில் அபரிமிதம்! நன்கு தெளிவான, வலிமையான மார்பு, வட்ட வடிவ முகம், சிம்ம முகம் பதாகை, லிங்கத்தின் திறப்பு குறிப்பிடத்தக்கவை. தஞ்சாவூர் ப்ரஹதீஸ்வரர் – ஸ்ரீ ராஜ ராஜ சோழர் ( 985 -1014 CE) மற்றுமொரு நூற்றாண்டில் ஏராளமான மாற்றங்கள், முழுமையான லிங்கம், அளவில் மிகவும் குறைந்த ப்ரம்மாவும், விஸ்ணுவும், துல்லியமான முக வடிவமைப்பு, நன்கு விரிந்த மார்புகள், மெலிந்த இடை, அக்னி தூண் முதலியன குறிப்பிடத்தக்கவை. திருபுவனம் – மூன்றாம் குலோத்துங்க சோழன்( 1178 -1218CE) மேலும் ஒரு நூற்றாண்டு, சிற்பக்கலை அதன் சிகரத்தில்! விதிகள் வளர்ந்து, தன்னிஷ்டம் போல் வடிக்கும் அலங்காரங்கள் குறைக்கப்பட்டு, முழு லிங்கமும் சிவ பெருமானால் ஆக்கிரமிக்கப் பட்டு, அளவில் குறைந்த, மேலே பார்த்ததை விட சற்று பெரியதான ப்ரம்மாவும், விஸ்ணுவும் கொண்டு, சிவனைச் சுற்றிய நீள்வட்ட வெளிப்பாடு துல்லியமாக விதிகளுக்குட்பட்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இது கடைசி சோழ மன்னன் குலோத்துங்கன் காலச் சிற்பம். படங்கள்: நண்பர்கள் அசோக், சௌரப், அர்விந்த், சதீஷ் , சாஸ்வத் மற்றும் ஸ்ரீராம் January 18, 2013 by Vijay Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
"இஸ்லாமாபாத்தை எங்கள் இரண்டாவது தலைநகராக மாற்றுவோம்" -பாகிஸ்தானுக்கு தாலிபான்கள் எச்சரிக்கை! காரணம் என்ன? பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தை எங்களது இரண்டாவது தலைநகராக மாற்றுவோம் என தாலிபான்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார். Praveen Updated on : 11 October 2022, 11:47 AM ஆப்கானிஸ்தானில் நடைபெற்று வந்த அரசை வீழ்த்தி தற்போது அங்கு தாலிபான் ஆட்சி நடைபெற்று வருகிறது. தாலிபான் ஆட்சிக்கு வந்ததும் அங்குள்ள மக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. மேலும் பெண்களுக்கு உண்டான உரிமைகளும் பறிக்கப்பட்டு வருவதாக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் எழுந்து வருகிறது. அதோடு அங்கு தாலிபனுக்கு எதிரான அமைப்புகள் தொடர்ந்து சண்டையில் ஈடுபட்டு வருவதால் அங்கு தொடர்ந்து பதற்ற நிலை இருந்து வருகிறது. இந்த நிலையில் பாகிஸ்தானுக்கும், ஆப்கானிஸ்தானுக்கு இடையே எல்லை பிரச்னைகள், பயங்கரவாதம் தொடர்பாக பதற்றமான சூழல் நிலவி வருகிறது. ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சிக்கு வர உதவினாலும் தற்போது எதிர்தரப்புக்கு பாகிஸ்தான் உதவுவதாக தாலிபான் தலைவர்கள் கருதி வருகின்றனர். ஆப்கானிஸ்தானில் நடக்கும் குண்டு வெடிப்புகளுக்கு பின்னர் பாகிஸ்தான் இருப்பதாக தாலிபான் தலைவர்கள் கூறி வருகின்றனர். இந்த நிலையில், தலிபான்கள் அதிகாரி அப்துல் பாசிர் ஷெர்சாடி, வெளியிட்ட வீடியோவில், "ஒவ்வொரு ஆப்கானிஸ்தானியரும் பாகிஸ்தானை வெறுக்கின்றனர். ஆப்கானிஸ்தானுக்கு 5,000 ஆண்டுகால வரலாறு இருக்கிறது; அதை எவ்வாறு பாதுகாப்பது என்று அவர்களுக்கு தெரியும். பாகிஸ்தான் மீது தற்கொலைப்படை தாக்குதல் நடத்த ஆயிரக்கணக்கானோர் இருக்கின்றனர். பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தை எங்களது இரண்டாவது தலைநகராக மாற்றுவோம்." என எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Also Read கேள்வி கேட்டு பதில் சொல்லாத மாணவர்.. கோவத்தில் ஆசிரியர் செய்த செயலால் வெடித்துச் சிதறிய சிறுவனின் நரம்பு! islamabad Taliban Taliban warning to Pakistan Trending சோமாலியாவில் விழுந்த விண்கல்:உடைத்துப்பார்த்த விஞ்ஞானிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி..உள்ளே இருந்தது என்ன? பயணிகள் கவனத்திற்கு.. ரயிலில் ஜன்னலோரம் அமர்ந்த நபரின் கழுத்தில் பாய்ந்த இரும்பு ராட்: திக் திக் சம்பவம்! உலகக்கோப்பையில் ஈரான் அணி தோல்வி.. கொண்டாடிய நபரை சுட்டுக்கொன்ற ஈரான் ராணுவம்.. அதிர்ச்சியில் உலகநாடுகள்! ஆளுநருக்கு இத்தனைகோடி செலவா ? வேலையே செய்யாதவர்களுக்கு இத்தனை செலவு ஏன் என இணையவாசிகள் ஆவேசம் ! Latest Stories சோமாலியாவில் விழுந்த விண்கல்:உடைத்துப்பார்த்த விஞ்ஞானிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி..உள்ளே இருந்தது என்ன? உலகக்கோப்பையில் ஈரான் அணி தோல்வி.. கொண்டாடிய நபரை சுட்டுக்கொன்ற ஈரான் ராணுவம்.. அதிர்ச்சியில் உலகநாடுகள்! அரளி சித்தராக மாற்றப்பட்ட மனநலம் பாதித்த முதியவர்: உண்டியல் வைத்து பணம் வசூலித்த கும்பலிடமிருந்து மீட்பு!