text
stringlengths
328
398k
தென்காசியில் உள்ள அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையாக மாற்ற வேண்டும் என்று இந்திய ஜன நாயக வாலிபர் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர். தென்காசி சசி மஹாலில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க கூட்டம் தென்காசி மாவட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத் தலைவர் மேனகா தலைமையில் நடைபெற்றது. தென்காசி வாலிபர் சங்க வட்டார செயலாளர் என்.கண்ணன் முன்னிலை வகித்தார் திருநெல்வேலி முன்னாள் வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் கே.ஜி.பாஸ்கரன் துவக்கி வைத்து பேசினர். தென்காசி மாவட்ட செயலாளர் உச்சிமாகாளி பேரவை நோக்கத்தை பற்றி பேசினார் , பேரவை கூட்டத்தை முடித்து வைத்து வாலிபர் சங்க மாநில செயலாளர் எஸ்.பாலா பேசினார். பேரைவையில் 10 பெண்கள் உட்பட 100 பேர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:- தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையை மருத்துவ கல்லூரி மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும் . தென்காசி மாவட்டத்தில் மாவட்ட அளவிலான விளையாட்டு மைதானம் அமைக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தென்காசி ஐசிஐ அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெறும் கட்டிடப் பணிகளை நிறுத்திவிட்டு வேறு இடங்களில் கட்டிடங்கள் கட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தென்காசி மாவட்டத்தில் படித்த இளைஞர் களுக்கு வேலை வாய்ப்பினை உருவாக்கித் தரும் வகையில் புதிய தொழிற்சாலை களை உருவாக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டுள்ளது. முடிவில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க தென்காசி மாவட்ட நிர்வாகி கனகராஜ் நன்றி கூறினார்..
முதல் குணாதிசயம்: மூன்று அடுக்குகளில் ஒவ்வொன்றிற்கும் பத்து குழாய்கள் உலர, ஒரு பெரிய பகுதி உலர்த்தும் இடம் இரண்டாவது சிறப்பியல்பு: மடிப்பு வடிவமைப்பு, பயன்பாட்டில் இல்லாதபோது பின்வாங்குகிறது, உங்களுக்காக அதிக இடத்தை சேமிக்கவும் மூன்றாவது சிறப்பியல்பு: மென்மையான மற்றும் உறுதியான அச்சு, எளிதாக மடிக்கக்கூடியது நான்காவது சிறப்பியல்பு: எஃகு குழாய் மற்றும் பிளாஸ்டிக் பாகங்கள் உறுதியாக இணைக்கப்பட்டுள்ளன, பாதுகாப்பாக பயன்படுத்த உயர் தரம் விண்ணப்பம் 3 அடுக்கு மடிப்பு டவர் ஆடைகள் காற்றோட்டம் மல்டிஃபங்க்ஸ்னல் ஃபோல்டிங் ரோட்டரி ஏயர், ஒவ்வொரு மட்டத்தையும் அகற்றலாம் வாடிக்கையாளர்களுக்கு விரிவான மற்றும் சிந்தனைமிக்க சேவையை வழங்க ஓராண்டு உத்தரவாதம் முதல் குணாதிசயம்: மூன்று அடுக்குகளில் ஒவ்வொன்றிற்கும் பத்து குழாய்கள் உலர, ஒரு பெரிய பகுதி உலர்த்தும் இடம் இரண்டாவது சிறப்பியல்பு: மடிப்பு வடிவமைப்பு, பயன்பாட்டில் இல்லாதபோது பின்வாங்குகிறது, உங்களுக்காக அதிக இடத்தை சேமிக்கவும் மூன்றாவது சிறப்பியல்பு: மென்மையான மற்றும் உறுதியான அச்சு, எளிதாக மடிக்கக்கூடியது நான்காவது சிறப்பியல்பு: எஃகு குழாய் மற்றும் பிளாஸ்டிக் பாகங்கள் உறுதியாக இணைக்கப்பட்டுள்ளன, பாதுகாப்பாக பயன்படுத்த உயர் தரம்
தனுஷ் நடிப்பில் சமீபத்தில் நானே வருவேன் திரைப்படம் செப்டம்பர் 29 அன்று திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. தனுஷின் கேப்டன் மில்லர் திரைப்படம் செப்டம்பர் 21 சென்னையில் முறையான பூஜையுடன் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டது. கேப்டன் மில்லர் படத்தை ராக்கி மற்றும் சானி காயிதம் புகழ் அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ளார்.படத்தில் டாக்டர் மற்றும் டான் புகழ் பிரியங்கா மோகன் இப்படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார், இது தனுஷுடன் அவரது முதல் வெளியீடாகும். இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார், அவர் சிறந்த ஃபார்மில் இருக்கிறார், மீதமுள்ள தொழில்நுட்பக் குழுவினர் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. சத்யஜோதி ஃபிலிம்ஸ் பதாகையின் கீழ் டிஜி தியாகராஜன் தயாரித்துள்ள இந்த படத்தில் தனுஷுக்கு ஆதரவாக சூப்பர் திறமையான துணை நடிகர்கள் சந்தீப் கிஷன், நிவேதிதா சதீஷ், ஜான் கொக்கன், இளங்கோ குமரவேல் மற்றும் பலர் உள்ளனர். ஜிவி பிரகாஷ் – கௌதம் வாசுதேவ் மேனன் வில்லனாக நடித்த 13 படத்தின் டீசர் இதோ! கேப்டன் மில்லர் 1950 களில் நடக்கும் ஒரு தீவிரமான ஆக்ஷன் கேங்க்ஸ்டர் நாடகம் என்று கூறப்படுகிறது. இந்தப் படம் ஜனவரியில் தொடங்க இருக்கிறது.தமிழ், தெலுங்கு, இந்தியில் உருவாகிறது. சமீபத்தில் ராஷ்மிகா மந்தனா, தனுஷ் ஜோடியாக நடிக்க இருக்கிறார். இது தொடர்பான பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியானது. 16 வேடங்களில் கலக்கிய கார்த்தியின் சர்தார் ! அனல் பறக்கும் விமர்சனங்கள்! இந்நிலையில் கேப்டன் மில்லர் திரைப்படத்தின் வெளியாகும் முன்பே ஓ.டி.டி உரிமையை, பெரிய தொகைக்கு சமீபத்தில் விற்பனை செய்ய பட்டது. இதைத்தொடர்ந்து தமிழக திரையரங்கு வியாபாரம் வெளிமாநில வியாபாரம், வெளிநாட்டு வியாபாரம், ஹிந்தி டப்பிங் உரிமை ஆகியவற்றின் மூலம் பெரிய தொகையை கிடைக்க வாய்ப்புள்ளது . Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள். Categories பொழுதுபோக்கு Tags கேப்டன் மில்லர், தனுஷ் 12 ஆம் வகுப்பு படித்தவரா?.. 122 காலியிடங்கள்… ரூ.29200 சம்பளம்.. மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையில் வேலை! 12 ஆம் வகுப்பு படித்தவரா?.. டைப்பிங்க் தெரியுமா? 418 காலியிடங்கள்… ரூ.25500 சம்பளம்.. மத்திய அரசு வேலை!
தியாகராஜன் குமாரராஜா-ன்ற டைரக்டர் மொத்தமே ரெண்டு படம்தான் எடுத்துருக்காரு. முதல் படம் செம ஃப்ளாப். இரண்டாவது படம் ப்ளாக் பஸ்டர். யோசிச்சுப் பாருங்க, கடந்த ஒரு 12 வருஷத்துல இந்த மனுஷன் மொத்தமே ரெண்டு படம்தான் பண்ணியிருக்காரு. அதுக்குள்ள ஒரு யூனிவர்ஸ், ஒரு ஐடியாலஜி, ஒரு கலர் டோன், ஒரு ரெட்ரோ தாட் எல்லாத்தையும் கிரியேட் பண்ணி தனக்குனு ஒரு ஃபேன் பேஸையும் உருவாக்கிட்டாரு. அவரோட படங்கள் பத்தி நிறைய விஷயங்களை நிறைய பேர் பேசிட்டாங்க. அதனால, இந்த வீடியோல தியாகராஜன் குமாரராஜா அப்டின்ற தனி மனுஷன் வாழ்க்கையை எப்படி அணுகுறாரு? என்ன மாதிரியான எண்ணங்களையெல்லாம் வைச்சிருக்காரு, அவர்கிட்ட இருந்து நாம கத்துக்க வேண்டிய 4 விஷயங்கள் என்னங்குறதைப் பற்றி பார்க்கலாமா? Scribbled Arrow பொதுவாக நம்ம வாழ்க்கைல எல்லாத்துக்கும் ஒரு தியரி வைச்சுட்டு சுத்துவோம்ல, அது எல்லாத்தையும் உடைச்சு, இப்படியும் வாழலாம்னு வாழ்ற ஒரு கேரக்டர்தான் தியாகராஜன் குமாரராஜா. சினிமா துறைக்குள்ள இருந்தே அவரோட பெர்ஸ்பெக்டிவ ஆரம்பிப்போமே. இன்னைக்கு ஒரு டைரக்டர் முதல் படம் பண்ணி செம ஹிட் ஆகுது. அப்போ, அடுத்தப் படம் எப்போ அவர் பண்ணப்போறாருன்ற கேள்வியும் ப்ரஷரும் தானாகவே அவருக்கு மேல விழ ஆரம்பிச்சிரும். வர்றான்... 'WOW' Fact சொல்றான்... வைரல் வீடியோ அனுப்புறான்... ரிப்பீட்டு..! இதெல்லாம் உங்க Whatsapp-க்கு வரணுமா? கீழ இருக்க லிங்க்கை கிளிக் பண்ணி ஜாயின் பண்ணுங்க Arrow Tooltip Click here to join அதனாலயே, அந்த டைரக்டரும் அடுத்தடுத்த லைன் அப் அனௌன்ஸ் பண்ணி பிஸியாவே ஓடிட்டு இருப்பாங்க. அதுல சில டைரக்டர்கள் சில நேரங்கள்ல தவறி விழவும் செய்றாங்க. ஆனால், தியாகராஜன் குமாரராஜாகிட்ட செம ஹிட்டு கொடுத்துட்டீங்க, அடுத்து எப்போ படம் பண்ணப்போறீங்க?னு கேட்டா, “என்ன அவசரம், மெதுவா பண்ணலாம்”னுதான் சொல்லுவாரு. அந்த நிதானம் ரொம்பவே முக்கியமானது. இதை நாம பல நேரங்கள்ல மறந்துடுறோம். அதனாலயே நிறைய விஷயங்களை இழக்குறோம். இல்லையா? கத்துக்கணும் அந்த நிதானத்தை அவர்கிட்ட. அதேமாதிரி, அவர் எடுக்குற சினிமா பத்தின பெர்ஸ்பெக்டிவ்ஸ ஆடியன்ஸ் எப்படி புரிஞ்சுக்குறாங்கனு கேக்க ஆர்வமா இருப்பாரு. அவர் எந்த பெர்ஸ்பெக்டிவ்ஸ் கொடுக்கவும் விரும்பமாட்டாரு. எதுக்கும் எக்ஸைட் ஆகவும் மாட்டாரு. சட்டிலான ஒரு ஆள். சினிமானு மட்டுமில்ல எந்த ஃபீல்டுக்கு போனாலும் எண்டர் ஆகும்போது அந்த ஃபீல்டுல பெரிய ஆளா இருக்குற ஒருத்தர காமிச்சு, அவரை மாதிரி வரணும்னு சொல்லுவாங்க. ஆனால், யாருமே உன்னோட வழி தனி வழிடா, உனக்குனு ஒரு பாதையை கிரியேட் பண்ணிக்கோனு யாரும் சொல்லமாட்டாங்க. அவரை மாதிரி வரணும்னு சொல்லி சொல்லியே நம்மளோட தனித்துவத்தை நிறைய நேரங்கள்ல இழந்திடுறோம். ஆனால், தியாகராஜன் குமாரராஜா அப்படி இல்லை. என் வழி தனி வழினு போறவருதான். எப்போ அவருகிட்ட போய் உங்க எய்ம் என்ன?னு கேட்டாலும், ``எனக்குனு பர்டிகுலரா பெரிய எய்ம் எதுவும் இல்லை. இவரை மாதிரி யார் வரணும்னு நினைக்கிறாங்களோ அவங்களுக்கு ரெண்டு உதை விடணும். வர்றான்... 'WOW' Fact சொல்றான்... வைரல் வீடியோ அனுப்புறான்... ரிப்பீட்டு..! இதெல்லாம் உங்க டெலிகிராமுக்கு வரணுமா? கீழ இருக்க லிங்க்கை கிளிக் பண்ணி ஜாயின் பண்ணுங்க Arrow Tooltip Click here to join பெரிசா என்னை எதுவும் எக்ஸைட் பண்ணாது. ஆனால், நான் சந்தோஷமாதான் இருக்கேன். சில நேரங்கள்ல எனக்கு பிளான் இருக்கும். ஆனால், அது நடக்கணும்னு எந்த அவசியமும் இல்லை. ஒரு விஷயம் பண்றீங்க. புடிக்கலைனா அதை விட்டுட்டு வேற வேலையும் பார்க்கலாம்”னு சொல்லுவாரு. இவர் லைஃப் பார்த்தா விஜய்யோட குட்டி ஸ்டோரி மாதிரிதான். மாஸ்டர் ஆடியோ லாஞ்ச்ல சொல்லுவார்ல, நதி மாதிரி போய்கிட்டே இருக்கணும்னு. அப்படிதான். அந்த நதி மாதிரி போறதுல ஒரு ப்ளஸர் இருக்கு. அப்படி போகவும் நம்ம வாழ்க்கைல கத்துக்கலாம் தப்பில்லை. மனிதர்களை தியாகராஜன் குமாரராஜா பார்க்குற விதமே கொஞ்சம் இண்டரஸ்டிங்கானது. இன்னைக்கு நம்மள சுத்தி நிறைய பேசுறவங்க இருக்காங்க. ஆனால், பேசுறத கவனிக்கிறவங்க இல்லை. நம்ம குமாரராஜா ஒரு நல்ல லிஸனர். ஒரு நல்ல லிஸ்னரால நிறைய விஷயங்களை பண்ண முடியும். சினிமால இருந்தாலே சோசியலைஸ் ஆகணும்ன்றது முக்கியமான விஷயமா சொல்லுவாங்க. அதுக்கு நம்ம ஆளு செட் ஆக மாட்டாரு. ஒரு இண்ட்ரோவெர்ட்டாவேதான் வாழ்றாருனு சொல்லலாம். சோஷியலைஸ் ஆகாம இருக்குறதுல இருக்குற பிளஸர் பத்தி குமாரராஜா பேசும்போது, “மனுஷங்களை தூரத்துல இருந்து பார்க்குறதுல ஒரு ப்ளஸர் இருக்கு. அதை அனுபவிச்சிட்டீங்கனா அப்புறம் சோஷியலைஸ் ஆக மாட்டீங்க. படம் பார்க்குற மாதிரிதான். ஒருத்தரோட லைஃப் நிஜத்துலயும் இருக்கும். உங்க ரெகுலர் வேலைகளை பார்க்குறப்போவே ஜாலியான தகவல்களையும் தெரிஞ்சுக்கணுமா? தமிழ்நாடு நவ் பாட்காஸ்ட் கேளுங்க! மிஸ் பண்ணவே கூடாத ரகளையான மூணு சீரீஸ் வருது! அவங்க நல்லவங்களா இல்லை கெட்டவங்களானு ஜட்ஜ்லாம் பண்ண வேணாம். ஆனால், குடிச்சா ஒரு மனுஷன் இப்படிலாம் பண்ணுவானா அப்டினு தோணும்”னு சொல்லுவாரு. மனுஷங்களை அப்சர்வ் பண்ணி அவங்க பேசுறதைக் கேட்டாலே பாதி பிரச்னை இங்க வராது. இதையும் குமாரராஜாகிட்ட இருந்து கத்துக்கணும். பணம்தான் மகிழ்ச்சியோட அல்டிமேட் எய்ம்னு சொல்லுவாங்க. பணமும் வாழ்க்கைல தேவை அவ்வளவு தான். இதை ரொம்பவே அழகா குமரராஜா சொல்லுவாரு. “என்னாட காசு கிடைக்கும்போது லக்ஸூரியஸ் பொருள்களை வாங்கி யூஸ் பண்ண முடியும். அதே நேரத்துல எதுவும் இல்லைனா ஒரு கல்லு மாதிரி ஒரு இடத்துல என்னால உட்காரவும் முடியும்”னு சொல்லுவாரு. ஆக்சுவலா இது ஒரு ஞானி மனநிலைனுகூட சொல்லலாம். ஏன்னா, இப்படியான ஒரு மனநிலை நம்ம எல்லாருக்கும் வந்திடுச்சுனா தேவைகள் குறையும். போட்டி, பொறாமைனு எதுவுமே இருக்காது. இருக்கதுதான் மகிழ்ச்சின்ற ஒரு நிறைவு வந்துரும். எவ்வளவு பெரிய விஷயம் இல்லை இது? மனுஷன் இதை அவ்வளவு அசால்டா சொல்லுவாரு. இந்த மாதிரியான மன நிலையெல்லாம் கிஃப்டட்தான். சோம்பேறியா இருக்குறது, அதேநேரம் செய்யுற வேலைக்கு நேர்மையா இருக்குறது இப்படி நிறைய குட்டி குட்டி விஷயங்களை குமாரராஜாகிட்ட இருந்து கத்துக்கலாம். அவர் சொன்ன ஒரு விஷயம்தான் திரும்பவும் சொல்லத்தோணுது. யாரையும் ஐடியலா எடுத்துட்டு இப்படி ஆகணும் அப்படி ஆகணும்னுலாம் நினைக்காதீங்க. Follow Your Own Way. அதுல ஒரு செம கெத்து ஃபீல் இருக்கு.
ஒளியாண்டு வேகத்தில் பயணித்து எட்டிப்பிடித்த படங்களில் தெரியாத நிகழ்காலத் துகளொன்று, ஊடுருவல் பாதையைத் தெரிந்து குதித்துப் பார்த்தது.. பயணத்தின் மறுமுனையைக் கவ்வுகையில் இடறிச் சிதறிவிழ ஆரம்பித்த இடங்களில்.. எத்தனை இறைஞ்சிக் கேட்டும் உணவளிக்க மறந்தவனைப் பழிவாங்கச்சொன்ன தனது மரபணுவின் ஆணையை நிறைவேற்ற அவனது சேகரத்தில் இருந்த காமிக்ஸ் ஸ்ட்ரிப்புகளைப் புரட்டிப் பார்த்த அந்த பூனை சன்னலின் வெளியே தெரியும் பச்சை நிற ஒளிக்குமிழைப் பார்த்தது. முன்னர் அரச மாளிகையாக இருந்த நட்சத்திர அந்தஸ்து இல்லாத ஆனால் அதற்கு இணையான அறை வாடகை கொண்ட ஒரு ஹெரிட்டேஜ் விடுதியில் நானூற்றைம்பது ஆண்டுகளுக்குப் முன்னால் தான் கொலைசெய்யப்பட்ட மாளிகைக்கு அவள் தன் ஆண் நண்பரோடு வருகையில் அவளுக்கு எந்த ஞாபகமும் இல்லை.. பால் கொட்டியது போல கவிழ்ந்திருந்த மேகமூட்டத்திற்கு மேல், ஊதிவிட்ட பாலாடை போலத் தெரியும் ஓசோன் படலத்தைக் கிழித்துக்கொண்டு கடற்கரையோரம் இறங்கியது சோப்புக்குமிழ் போன்ற ஒன்று அவள் அதைப் பார்க்கையில். சாமத்தில் யாரும் வெளியே போகக்கூடாது என்கிற மலையுச்சி ஆசிரமத்தின் கட்டுப்பாட்டை தன் வயிற்றுப்போக்கை காரணம் காட்டி விலக்கம் பெற்றான். நூறடிக்குள் பேண்டு விடுமாறு சொன்ன காவல்காரத் துறவியை பெயரளவில் ஆமோதித்தாலும், சாணிக்காகித எழுத்தையே வாசிக்குமளவு இருக்கும் நிலவொளியில்கூட நான்கெட்டுகள் போனால் என்னவென்று கடந்துசென்று குத்த வைத்தான். முறுக்கி வைக்கும் ஈயத்தட்டுகள் போல திண்ணமாய் ஒலிக்கும் பாறைகள் மேல் பட்டுத்தெறிக்கும் ஓடையில் கால் நனைத்தால் என்ன என்று கைகளில் கொண்டு சென்ற ஃபேண்டா பாட்டிலை அங்கேயே போட்டுவிட்டு குளிர் எனும் ஆயுதத்தை உணராத அவன், கால் நனைக்கும்போது கத்தியிருக்க வேண்டும். திடீரென தன் சப்தங்களை நிறுத்திக்கொண்ட ஆந்தைகளால் நிசப்தமாகிப்போன காட்டில் மின்மினிப்பூச்சிகளை எதனையோ சுற்றி வட்டமடித்தபடி மேலிருந்து கீழிறங்கியது. அகண்ட டயர்களைக் கொண்ட சொகுசு வாகனத்தை ஒரு பாலைவனத்தின் சாலை ஓரத்தில் ஓரங்கட்டிவிட்டு, புதிதாகச் சுற்றிப்பார்க்க வந்திருக்கும் அந்நண்பர்களுக்கு குன்று போன்ற மணல்மேடுகளைக் காண்பித்தான். பருமன் மிக்க அவனை மணல்மேல் ஏற முடியாது என பரிகாசம் செய்ய, ஒன்பதாம் வகுப்பு ஓவிய வாத்தியாரை நினைத்தபடி பற்களைக் கடித்தபடி அங்கிருக்கும் உயரமான மணல்மேட்டில் விருட்டென்று ஏறினான். யாரும் எதிர்பாரா வண்ணம் மணல்மேட்டின் உச்சியை அடைந்ததும், கொண்டாடத் தெம்பில்லாதவன் மூச்சுவாங்கியபடி கைகளை அசைக்க, கீழிருந்த நண்பர்கள் “குதி குதி.. சீக்கிரம் இறங்கு” என்று கத்தினார்கள். அவர்கள் நினைத்த மணற்புயல் போல் இல்லையென்றாலும் விசித்திரமான மணல்களால் மூடிய ராட்சத வெங்காயம் போன்ற ஒன்று அந்தரத்தில் தொங்கிக்கொண்டிருந்தது மேலும்மேலும் கடல்நீர் நகரத்தில் புகுந்துகொண்டிருக்கிறது என்கிற செய்தியைக்கூடப் பேசாத பாடல்களை மட்டுமே கடமையென ஒலிபரப்பும் ரேடியோவை ஒலிக்க விட்டபடி மொட்டைமாடியில் காத்திருந்தது வீண் போகவில்லை. தாழப்பறந்து வந்த ஹெலிகாப்டரொன்று மனித நடமாட்டம் தெரியும் ஒவ்வொரு வீட்டின் மாடிகளிலும் அரச அதிகாரத்தின் ஸ்டிக்கர் ஒட்டிய உணவுப்பொட்டலங்களை போட்டுக்கொண்டிருந்தது. கூடவே பிஸ்கட், பால்பவுடர், கசாயப் பவுடர், கொசுக்கடியிலிருந்து தப்பிக்க உதவும் க்ரீம் கொண்ட பார்சல் என. சிதறவிடாமல் பிடித்துக்கொண்டவர் சாப்பிடும் முன்னர் அதைப்பற்றிய காணொளிப் பதிவை பதிவிட்டால் லைக்ஸ் அள்ளுமென உற்சாகமானார். கேமிராவைப் பொருத்திவிட்டு உணவுப்பொட்டலத்தைத் திறக்கையில் பொட்டலத்தில் சிக்கிக்கொண்டிருந்த ஒரு இங்க் ஃபில்லர் துளிக்கு இணையான அடர்பச்சை வண்ணக்குமிழ் ஒன்று கண்ணுக்கு நேரே வந்தது. எதிர்த்து ஓட்டுபோட இருந்த மக்களில் எழுபத்தைந்து சதவீதம் வரை கொன்றுவிட்ட வெற்றிக்கு அடுத்தபடியாக, மீதமிருந்த மக்களால் தடுக்கமுடியாத ஜனநாயகத்தின் சக்தியால் தேர்தலில் வெற்றி பெற்றான் அவன். வெற்றிச் செய்தியோடு சந்திக்க ஓடியது தமது ஆன்மிக குருவும் பயலாஜிகல் தந்தையுமான நாட்டின் மூத்த துறவியின் மாளிகைக்கு. நாட்டின் அதிபரையே தடுக்கும் வல்லமை படைத்த துறவின் நம்பிக்கைக்குரிய காவலாளி தடுத்துவைக்கையிலே சற்று கண் சிமிட்டவும் செய்தான். அவன் ராஜ விசுவாசியும் ஒளிந்துகொண்ட இருபத்தைந்து சதவீதத்தினனும் கூட. அவனது சமிக்ஞைக்கு என்ன அர்த்தம் என்று சாளரம் வழியே அண்ணாந்து பார்த்தபடி இருந்தவனுக்கு உள்ளிருந்து கேட்ட பரிச்சயமிக்க மாற்றுப்பாலினத்தின் குரல் நினைவூட்டிய ரௌத்திரத்தை சட்டென மறக்க வைத்தது உயரமான ஓக் மரத்தின் இலையோடு உதிர்ந்து வந்த மஞ்சள் நிற குமிழின் ஒளி. விசாலமான எழுதும் மேசையில் அரதப்பழசான டெம்ப்ளேட் ஸ்க்ரீன் சேவர் ஓடிக்கொண்டிருக்க, எப்படியாவது ஒரு நல்ல கதையை எழுதி சான்றோர்களிடம் பெயர்வாங்கிடத் துடிக்கும் ஒரு புனைப்பெயரற்ற எழுத்தாளனின் குறட்டைக்குத் திறக்கும் வாயில் தலைவெட்டித் தாத்தா பூ அளவிற்கே உள்ள ஒரு ஒளிச்சிதறலொன்று உள்ளே போக… அவனது ஒளிமிகுந்த பிரகாசமான முகத்தில் கதையை வெற்றிகரமாகப் பிடித்துவிட்டதாகத் தெரிந்தது. எழுதத் தொடங்கினான். கொடுக்க வேண்டிய லஞ்சங்களை உபரித்தொகையோடு கட்டியதாலும், மாசு அளக்கும் இயந்திரத்தை காற்றின் எதிர்திசைக்கு பொருத்தாமல் மாற்றி அமைத்ததாலும், உயரம் குறைந்த சிம்னியில் வெளியேற்றும் மிகக்குறைந்த அளவே ஆர்ஸனிக் கலந்த மாசு கடல் காற்றில் பறந்துவந்து நகரத்தின் பொலிவைக் குறைக்கவே ஆர்பரிக்கும். அவ்விதமே அந்த டெலஸ்கோப்பில் அப்பிய துகள்களையெல்லாம் கிரகங்களென்றும் விண்வெளிப் படலங்களென்றும் வல்லமை பொருந்திய வல்லாதிக்க நாடுகளோடு போட்டி போட்டுக்கொண்டு செய்திகளாக்க ஆணையிட்ட அரசாங்கத்தின் கட்டளைக்கு கீழ்படிந்தே ஆகவேண்டுமெனக் காத்திருந்த துணை வேந்தர் தன் அழகிய மீன்தொட்டியின் மீன்களை எடுத்து ஒவ்வொன்றாக விழுங்கிக்கொண்டிருந்தார். இதைப் பார்த்துக்கொண்டிருந்த பங்களாவின் பூர்வ ஜென்மத்தின் ராணி தனது வைராக்கியத்தைத் தீர்க்கும் பொருட்டு சிப்பந்தியிடம் ஆணையிட்டுப் பெறப்பட்ட பழம் வெட்டும் கத்தியை எடுத்துக்கொண்டு அவனது ஆண் நண்பனை நோக்கி நடந்தாள். குளிர்ந்த நீர்பட்டு வயிற்றுப்போக்கு நீங்கிவிடுமென நினைத்தவனின் குதத்திலே சொருகப்பட்ட அந்தக் கூரான கத்தியின் பொருட்டு ஓலமிட்ட அவனது வாயில் மணலை அள்ளிப் போட்டு விளையாடிக்கொண்டிருந்தது கருஞ்சிவப்பிலும் இளஞ்சிவப்பிலும் வட்டவட்டமாக தோல்கொண்ட அழகிய அப்பூனை. மெல்ல மெல்ல அவன் சாவை வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்த அந்தப் பூனை, மின்மினிப்பூச்சி, பூர்வஜென்ம நினைவுகளை மீட்ட கம்பீரமான அந்தப்பெண் வரலாற்றில் மறையாத பெரும் வெற்றிகொண்ட அந்த அதிபர், அதிகம் கடன் வாங்கியிருந்த அவனது நண்பர்கள் மற்றும் லட்சியமற்ற எழுத்துகளே தனக்கு எதிரிகளை சம்பாதிக்காது என்று உறுதியோடு விருதுக்கு காத்திருக்கும் எழுத்தாளன் மற்றும் அவனது ப்ரூஃப் ரீடர். * “வந்த வழியே ஏன் இவ்ளோ சீக்கிரமா திரும்புன?” என்று அவர்கள் பேசிக்கொண்டிருந்தது எனக்குப் புரியாத ஒரு அயல்கிரகத்து பாஷை என்றாலும் அது இப்படித்தான் இருக்க முடியும். சுபம் *** ஜீவ கரிகாலன் – டிரங்கு பெட்டிக் கதைகள், கண்ணம்மா, ஒரு சம்பிரதாய தேநீர் சந்திப்பு அல்லது ஒரு விநோதமான கைத்தடியின் அசுவாரசியமான கதை & பிற கதைகள் என மூன்று சிறுகதைத் தொகுப்புகள் வெளிவந்திருக்கிறது. மின்னஞ்சல்: k[email protected]
தற்போது கிடைத்துள்ள எரிபொருளுக்கு மேலதிகமாக விமான எரிபொருள் மற்றும் மற்றுமொரு தொகை டீசல் என்பன தரையிறக்கப்பட்டுள்ளன. போதியளவு எரிபொருள் கையிருப்பு கிடைத்துள்ளதால் விநியோகத்துக்கு இடையூறு விளைவிக்காமல் நாட்டுக்கு ஆதரவளிக்குமாறு வலுசக்தி மற்றும் மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர வேண்டுகோள் விடுத்துள்ளார். எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வரிசைகள் இருந்தாலும், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திடம் போதுமான அளவு எரிபொருள் கையிருப்பு உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இரண்டு கப்பல்கள் மூலம் கொண்டுவரப்பட்ட 120,000 மெட்ரிக் டன் நிலக்கரிக்கு 38 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலுத்தப்பட்டதை அடுத்து அதனை இறக்கும் பணிகள் தொடங்கியுள்ளன. - Advertisement - தற்போதுள்ள நிலக்கரி மற்றும் புதிதாக பெறப்பட்ட இருப்புகளை கொண்டு 810 மெகாவாட் கொண்ட நிலக்கரி மின் உற்பத்தி நிலையங்களை உச்ச செயற்திறனுடன் இயக்குவதற்கு போதுமானது . நாடு பூராகவும் எரிபொருளை முறையாக விநியோகிப்பதற்கு, தற்போது ஆங்காங்கே நடைபெற்று வரும் ஆர்ப்பாட்டங்களும் வீதி மறியல் போராட்டங்களும் பாரிய தடையாக இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அத்தியாவசிய எரிபொருட்கள் விநியோகம் தடைப்படும் போது மருத்துவமனைகளில் உள்ள மின்பிறப்பாக்கிகளை கூட இயக்க முடியாமல்போகும் என்பதால், மக்களின் உயிர் காக்க அத்தியாவசியமான எரிபொருட்களை விநியோகிப்பதில் இடையூறு ஏற்படுத்த வேண்டாம் என வலுசக்தி அமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்தியா மட்டுமின்றி உலக நாடுகள் அனைத்தையும் கரோனா வைரஸ் கடந்த இரண்டு வருடங்களாக அச்சுறுத்தி வருகிறது. உலக நாடுகள் கரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவந்தாலும், அதில் முக்கியமானது கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்வது. இந்தியாவில், கோவாக்ஸின், கோவிஷீல்டு உள்ளிட்ட பல்வேறு கரோனா தடுப்பூசிகள் பயன்பாட்டில் இருந்தாலும், மேற்குறிப்பிட்ட இரண்டு மட்டுமே அதிகளவில் மக்களுக்கு செலுத்தப்பட்டுவருகிறது. அதேசமயம், மக்கள் மத்தியில் இன்னும் கரோனா தடுப்பூசி குறித்தான அச்சமும் தேவையற்ற வதந்திகளும் நிலவி வரும் நிலையில், மாநில அரசுகளும், ஒன்றிய அரசும் பல்வேறு வகைகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றன. இந்நிலையில், ஜார்க்கண்ட் மாநிலம், பொக்காரோ நகரில் சால்காடி கிராமத்தில் வசித்து வரும் துலார்சந்த் முண்டா (வயது 55). கடந்த சில தினங்களுக்கு முன் கோவிஷீல்டு தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளார். துலார்சந்த் முண்டா கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் ஒரு விபத்தில் சிக்கி நடக்க முடியாமல் முடங்கியும், பேசும் திறனை இழந்தும் பெரும் இன்னல்களைச் சந்தித்துவந்தார். மேலும், பேசுவதற்கும், மீண்டும் பழையபடி நடப்பதற்கும் அவர் பல லட்சங்களை செலவு செய்துள்ளார். ஆனாலும், அவர் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லாமல் இருந்துள்ளது. இந்த நிலையில், கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திய பின்னர் அதிசயம் ஒன்று நடந்துள்ளதாக கூறுகிறார் துலார்சந்த். அதன்படி, அவர் எழுந்து நிற்கிறார். நடந்து செல்கிறார். “எனது குரல் எனக்கு கிடைத்துவிட்டது” என மகிழ்ச்சியுடன் கூறுகிறார். இதனால் சுகாதார அதிகாரிகள் ஆச்சரியத்தில் மூழ்கி போயுள்ளார்கள். இதுபற்றி மருத்துவர் ஜிதேந்திரா குமார் கூறியதாவது; “இது ஆச்சரியமாக உள்ளது. முதலில் மருத்துவக் குழு ஒன்றை அமைத்து அவரது மருத்துவ வரலாற்றை ஆய்வு செய்ய வேண்டும். சில நாள் பிரச்சனைக்கு பின் பழைய நிலைக்கு மீண்டால் அதுபற்றி புரிந்து கொள்ள முடியும். ஆனால், 4 ஆண்டு காலத்திற்கு பின் தடுப்பூசியால், இயல்பு நிலைக்கு திரும்பி இருக்கிறார் என்பது நம்ப முடியாதது” என கூறியுள்ளார்.
An effort to bring back the memories of the hidden treasures of our rich culture and to change the way we live in... முகப்பு முதுசொம் விதிவிலக்குகளின் கதை - Story of exceptions Friday, July 23, 2010 ‘3R’ முறைமை சொல்வது என்ன? பசுமை, சூழல் மாசு, காலநிலை மாற்றம், கடல் மட்ட உயர்வு என்ற பல சொற்பதங்களை அன்றாடம் கேள்விப்படுகிறோம். அதேவகையில்தான் ‘3R’ எனற் சொற்பதமும் அமைகிறது. எந்த ஒரு செயற்பாடாயினும் ‘3R’ முறைமைக் கமைய மேற்கொள்ளப்பட வேண்டு மென்ற நியதி உலகளாவிய ரீதியிலே உருவாக்கப்பட்டு வருகிறது. ‘3R’ எனப்படுவது ஞிலீனீuணீலீ, ஞிலீணீyணீlலீ, ஞிலீusலீ என்ற 3 சொற்க ளையும் சுருக்கமாகக் குறிக்கும் சொற் பதமாகும். அதாவது, பாவனைக்குறை ப்பு, மீள்சுழற்சி, மீள்பாவனை ஆகிய மூன்று விடயங்களையும் கருத்தில் கொண்டே எம் அன்றாடச் செயற் பாடுகள் அமைய வேண்டுமென்ற நியதி உருவாக்கப்பட்டு வருகிறது. எதிர்காலத்தை கருத்தில் கொள்ளாமல், தொழில்நுட்ப வளர்ச்சிகள், புதிய கண்டுபிடிப்புகள் அவற்றினாலான வருமானம் என புதிய பல இலக் குகளைத் தேடி மனிதன் தொடக்கிய பயணத்தின் வேகம் ஒரு கட்டத்தில் குறையத் தொடங்கியது. ஓசோன் படை அரிப்பு, சூழல் மாசடைதல், காலநிலை மாற்றம் எனப் புதிய பல பிரச்சினைகள் அவனது பயணத்தின் வேகத்தைக் குறைத்தன. இயற்கையைக் கருத்தில் கொள்ளாமல் மனிதன் தொடுத்த கணைகளுக்கு இயற்கையும் எதிர்க்கணை தொடுத்தது. இயற்கையைத் தனது கட்டுப்பாட்டுக்குள் வைக்கும் முயற்சியில் சற்றும் தளராத மனிதன், புதுப்புது வழிமுறைகளைக் கண்டுபிடித்தான். அந்த வழியிலேலே உருவாக்கப்பட்ட கொள்கை தான் ‘3R’ முறையாகும். பாவித்த பின் தூக்கியெறியும் கலாசாரம் 1980களில் பின்பு பரவத் தொடங்கியது. மேற்குலக நாடுகளிலே ஆரம்பிக்கப்பட்ட போதும், காலப் போக்கில் மூன்றாம் உலக நாடுகளினுள் நன்றாக ஊடுருவியது. அடிப்படையில் மூன்றாம் உலக நாடுகள், சிறந்த கலாசாரப் பின்னணியையும் இயற்கையுடன் இணைந்து செல்கின்ற வாழ்வியலையும் கொண்டவை. ஆனால் அபிவிருத்தியடைந்த மேற்குலக நாடுகள் தமது உற்பத்திகளையும், கழிவுகளையும் நவீன யுகம், உலக மயமாதல் எனும் போர்வைகளில் மூன்றாம் உலக நாடுகளிடம் சந்தைப் படுத்தின. விளைவு, பாவித்ததும் தூக்கியெறியும் கலாசாரம் உலகம் முழுவதும் பரவியது. அது மட்டுமன்றி, இயற்கை வளங்கள் மிகையாக நுகரப்பட்டன. பணக்கார நாடுகள், வறிய நாடுகளின் வளங்களைச் சுரண்டின. விளைவாக, சுற்றுச் சூழல் பிரச்சினைகள் உருவாகின. அவற்றைத் தொடர்ந்து சமூக பொருளாதாரப் பிரச்சினைகளும் அணிவகுத்தன. தொட்டிலைக் கிள்ளியவர்களே பிள்ளையையும் ஆட்ட வேண்டு மல்லவா? ‘3R’ முறையையும் அதே பணக்கார நாடுகள் உருவாக்கின. இன்று எம் மத்தியில் பிரபல்யப் படுத்துகின்றன. எந்த ஒரு பொருளினதும் தேவையற்ற, தேவைகளுக்கு மேலதிகமாக பாவனை குறைக்கப்பட வேண்டும். இரவு நேரங்களில் வீட்டின் பாவனையற்ற அறைகளிலும் மின் விளக்குகள் எரிந்தபடி இருக்கும். ஆனால் அவற்றைச் சிறிதளவிலேனும் கருத்தில் கொள்ளாதவர்களாக நாம் இருந்து விடுகிறோம். அவ்வாறு இருப்பதைத் தவிர்க்க வேண்டுமென்பதையே ’3R’ முறைமையின் ‘பாவனையைக் குறைத்தல்’ செயற்பாடு எதிர் பார்க்கிறது. ஒரு தடவை பாவித்தபின், பயனில்லையெனப் பல பொருட்களை எறிந்துவிடுகிறோம். ஆனால், அவற்றை இயன்றளவு மீள மீள ஏதோ ஒரு வழியில் பாவிப்பதே சூழலுக்கு நன்மை பயக்குமெனத் தெரிவிக்கப் படுகிறது. ஒரு பக்கம் எழுதியோ அல்லது அச்சிடப்பட்ட கடதாசிகளை அவற்றின் தேவை முடிந்ததும் கசக்கியெறிந்து விடுகிறோம். ஆனால் மாறாக அவற்றின் அச்சிடப்படாத மறுபக்கத்தை வேறு தேவைகளுக்காகப் பயன்படுத்தலாமே? இத்தகைய செயற்பாடுகளைத்தான் ‘மீள் பாவனை’ எனும் பதவி ஊக்குவிக்கிறது. ஒரு பொருளின் பாவனை முடிந்த பின், அப்பொருளை அதேவடிவில் மீள உபயோகிக்க முடியாத ஒரு நிலையில், அதனை பயனுள்ள இன்னொரு பொருளாக்கிப் பயன்படுத்துதல் இன்று நடைமுறையில் உள்ளது. பிளாஸ்டிக், கண்ணாடி மற்றும் கடதாசிப் பொருட்கள் பல அவ்வாறு உருமாற்றப்பட்டு பயன்படுத்தப்படுகின்றன. இத்தகைய செயற்பாடுகளைத் தான் ‘மீள் சுழற்சி’ எனும் பதம் ஊக்குவிக்கிறது. ‘3R’ முறைமையானது இலங்கை போன்ற கீழைத்தேய நாடுகளுக்கு ஒன்றும் புதிதானதல்ல. எம் முன்னோர்கள் கைக்கொண்டு வந்து பின் காலப் போக்கில் புறந்தள்ளிய முறைமைகளை மேற்குலக நாடுகள் புதிய வர்ணத்தீட்டி அறிமுகப்படுத்துகின்றன. நாமும் ஆவலுடன் அறிய முயல்கிறோம். வாழையிலைலே உணவருந்தியவர்கள் இன்று வாழையிலை போன்றே வடிவமைக்கப்பட்ட பிளாஸ்டிக் தட்டில் பெருமையாக உண்கிறார்கள். மாவிலே கோலம் போட்டு மாவிலைத் தோரணம் கட்டியவர்கள் வீடுகளை பிளாஸ்டிக் கோல ஸ்டிக்கர்களும் பிளாஸ்டிக் மாவிலை தோரணங்களும் அலங்கரிக்கின்றன. கடவுளைக்கூட நாம் விட்டுவைக்கவில்லை. அவரது திருவுருவங்களையும் வாசனை திரவியம் பூசிய செயற்கைப் பூக்கள் தான் அலங்கரிக்கின்றன. இவற்றையெல்லாம் கெளரவம் எனக் கருதி பெருமை பேசுவோர் பலரைக் கண்டிருப்போம். ஏன் அவர்களில் ஒருவராக நாங்களும் இருக்கலாம். நாம் ‘3R’ முறையைக் கடைப்பிடிப்பதற்காகப் புதிதாக ஒன்றும் செய்யத் தேவையில்லை. கால ஓட்டத்தில் நாம் தொலைத்துவிட்ட எம் பண்பாட்டு, கலாசார நடைமுறைகளைத் தேடிக் கண்டுபிடித்து மீண்டும் கைக்கொண்டாலே போதும் ‘3R’ முறைமை எம் வாழ்வியலுடன் பின்னிப்பிணைந்து விடும். Posted by என்றும் அன்புடன், சாரதாஞ்சலி-ம at 9:27 PM 0 comments Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest Labels: 3R Friday, July 16, 2010 மருத்துவமனை கழிவுகளுக்கு என்ன நடக்கிறது? கடந்த ஞாயிறன்று, உலக சனத்தொகை தினம் கொண்டாடப்பட்டது நாம் யாவரும் அறிந்த விடயமேயாகும். உலக சனத்தொகையானது காலத்துடன் அதிகரித்து வருவதும், 2050 ஆம் ஆண்டு சனத்தொகையின் பருமனில் இந்தியா சீனாவை விஞ்சப் போவது தொடர்பான எதிர்வுகூறல்களும் கூட நாம் அறிந்த விடயங்களே! இவ்வாறு சனத்தொகை வளர்ச்சியடைந்து வருவதற்கான காரணங்களுள் மேம்பட்ட சுகாதார நிலைமைகளும் அடங்கிவிடுகின்றன. நோய்த் தொற்றைத் தடுப்பதற்கான வழிமுறைகளும் உடனடி மருத்துவ வசதிகளும் நல்ல கழிவகற்றல் வசதிகளும் சராசரி மனிதனின் ஆயுட் காலத்தையும் அதிகரிப்பதில் துணைபுரிகின்றன. அதுமட்டுமன்றி சிசு மரண வீதத்தையும் குறைக்கின்றன. நாடொன்றைப் பொறுத்த வரையிலே அரச வைத்திய சாலைகளைத் தவிர்த்து மூலை முடுக்குகளெங்கும் தனியார் வைத்தியசாலைகள் முளைத்து வருகின்றன. இத்தகைய நிலைமையை அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளிலே பரவலாகக் காண முடிகிறது. பொது இடங்களில் கொட்டப்படும் வீட்டுக் கழிவுகள் பற்றியும் குப்பைகள் பற்றியும் அதிக கரிசனம் செலுத்தும் நாங்கள் வைத்தியசாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகள் தொடர்பான விழிப்புணர்வை குறைந்தளவில் உடையவர்களாகவே காணப்படுகிறோம். வைத்தியசாலைகள் உட்பட, சுகாதாரத் துறையுடன் தொடர்புடைய பெரும்பாலான கட்டமைப்புக்களின் மூலம் வெளியேற்றப்படும் கழிவுகள் மிகவும் ஆபத்தானவை என்பது கூட எம்மில் பலருக்குத் தெரிவதில்லை. சுகாதாரத் துறையுடன் தொடர்புடைய கட்டமைப்புக்களின் அடிப்படை நோக்கம், மக்கள் மத்தியில் சுகாதாரத்தை மேம்படுத்துவதேயாகும். ஆதலால், அந்தக் கட்டமைப்புக்களின் மூலம் வெளியேற்றப்படும் கழிவுகள் சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துவனவாக அமையக்கூடாது. ஆனால், இன்றைய நிலைமையோ அவ்வாறு அமையவில்லை. உலகளாவிய ரீதியிலே ஒவ்வொரு வருடமும் பல பில்லியன் கிலோகிராம் திணிவுடைய இத்தகைய கழிவுகள் வெளியேற்றப்படுகின்றன. ஆனால் இக்கழிவுகளுள் 75 – 90 சதவீதமானவை வீட்டுக் கழிவுகளுடன் ஒப்பிடுகையில் ஆபத்து அற்றவை என உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவிக் கிறது. ஏனெனில் அவை நிர்வாக, பராமரிப்பு, மற்றும் உள்ளக நிர்வாகச் செயற்பாடுகள் காரணமாக வெளியேற்றப்படுப வையாகும். ஆயினும் மிகுதி 10 – 25 சதவீதமான கழிவுகள் நச்சுத் தன்மை மிக்கவையாகக் கருதப்படுகின்றன. அவை சுகாதார ரீதியாக மிகவும் அபாயமானவையாகும். எச். ஐ. வி. முதலான சில தொற்றுக்கள் மிகவும் வேகமாகப் பரவியதையடுத்து, ஒரு தடவை பாவிக்கப்பட்ட பின் வீசப்படும் மருத்துவ உபகரணங்களின் பாவனை அதிகரித்தது. அவை மருத்துவமனைக் கழிவுகளைப் பல மடங்காக்கின. அடிப்படையில் மருத்துவமனைக் கழிவுகள் தொற்றுக்களையுடைய கழிவுகள், உடற்பாகங்களாலான கழிவுகள், கூரான கழிவுப் பொருட்கள், மருந்துக் கழிவுகள், பரம்பரை அலகுகளில் பிறழ்வை ஏற்படுத்தும் கழிவுகள், இரசாயனக் கழிவுகள், கதிர்த்தொழிற்பாடுகளுடைய கழிவுகள், பார உலோகக் கழிவுகள் எனப் பலவாறு வகைப்படுத்தப்படுகின்றன. ஒவ்வொரு வகையிலும் திடக் கழிவுகளும் காணப்படலாம். திரவக் கழிவுகளும் காணப்படலாம். ஏன் வாயுக்கழிவுகள் கூடக் காணப்படலாம். பக்aரியா, வைரஸ், பங்கசு மற்றும் ஏனைய ஒட்டுணிகளின் தொற்று இருக்கலாமெனக் கருதப்படும் கழிவுகள் யாவுமே தொற்றை ஏற்படுத்தக் கூடிய கழிவுகளாகும். தொற்றுள்ள ஆய்வுகூடக் கழிவுகள், சத்திரசிகிச்சைகளின் பின் வெளியேற்றப்படும் கழிவுகள், தொற்றுக்குள்ளாகியதால் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் நோயாளிகளின் கழிவுகள், ஆய்வுகூடங்களிலுள்ள தொற்றுக்குள்ளான மிருகங்கள் போன்ற யாவுமே இத்தகைய கழிவுகளுக்குள் அடங்குகின்றன. அவை மட்டுமன்றி தொற்றுக்குள்ளான மனிதர்களுடனோ விலங்குகளுடனோ ஏதோ ஒரு வகையில் தொடுகைக்குள்ளான உபகரணங்களும் தொற்றுக்குள்ளானவையாகக் கருதப்படும். தொற்றுக்குள்ளான கூரிய உபகரணக் கழிவுகளும் தொற்றை ஏற்படுத்தும் கழிவுகளாகவே கருதப்படுகின்றன. மருத்துவ மனைகளிலே கழிவுகளாக வெளியேற்றப்படும் உடற் பாகங்கள், உடற் திராவகங்கள், குருதி, போன்றன யாவுமே உடற் பாகங்களின் கழிவுகளாகக் கருதப்படுகின்றன. வெட்டுக்காயம் உட்பட காயங்களை ஏற்படுத்தக் கூடிய உபகரணங்களான ஊசிகள், உடைந்த கண்ணாடித் துண்டுகள், சத்திர சிகிச்சைக் கத்திகள், ஆணிகள் போன்றன யாவுமே கூரிய உபகரணக் கழிவுகளாகக் கருதப்படுகின்றன. இவை தொற்றை உடையனவாகவோ அல்லது தொற்றற்றனவாகவோ எப்படியிருந்தாலும் மிகவும் ஆபத்தானவையாகவே கருதப்படுகின்றன. மருந்துக் கழிவுகளுள், காலாவதியான, பாவிக்கப்படாத, பழுதடைந்த, மற்றும் வீணாக்கப்பட்ட மருந்துகள், தடுப்பு மருந்துகள் யாவுமே அடங்கிவிடுகின்றன. மருந்துகளைக் கையாளும் போது பாவிக்கப்படும் பொருட்களும் இக்கழிவுகளுள் அடக்கப்படுகின்றன. பரம்பரை அலகுகளில் பிறழ்வுகளை ஏற்படுத்தும் கழிவுகளாகச் சில இரசாயனப் பதார்த்தங்களும் கதிர்த் தொழிற்பாட்டுப் பதார்த்தங்களும் கருதப்படுகின்றன. இக்கழிவுகள் மிகவும் ஆபத்தானவையாகவே கருதப்படுகின்றன. ஏனெனில் புற்று நோயைத் தோற்றுவிக்கவும் பரம்பரை அலகுகளில் மாற்றங்களை ஏற்படுத்தவும் இவை காரணமாகிவிடுகின்றன. இரசாயனக் கழிவுகள், திண்மம், திரவம், வாயு ஆகிய மூவகை நிலைகளிலும் வெளியேற்றப்படுகின்றன. அவற்றில் சில ஆபத்தானவை. சிலவோ ஆபத்தற்றவை. பார உலோகங்களான பாதரசம் போன்றவற்றைக் கொண்டுள்ள கழிவுகளும் வெளியேற்றப் படுகின்றன. அவை மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்தவையாகக் கருதப்படுகின்றன உடைந்த வெப்பமானிகள், குருதியமுக்க மானிகள் போன்ற உணர் கருவிகள் பாதரசம் வெளியே சிந்தக் காரணமாகின்றன. வீசப்படும் உலர் கலங்களால் கட்மியமானது கழிவுகளுடன் கலக்கிறது. இவை தவிர கதிர்த் தொழிற்பாட்டுடன் தொடர்புடைய கருவிகளும் வாயு உருளைகளும் கூட பார உலோகங்களைக் கழிவுகளுடன் கலக்கச் செய்கின்றன. இன்று சிறிய மருத்துவமனைகளிலும் கூட கீ கதிர் மற்றும் ஸ்கானிங் தொழில்நுட்பங்கள் நடைமுறைக்கு வந்துவிட்டன. ஆனால் அத்தகைய கதிர்த்தொழிற்பாடுகளுக்குப் பாவிக்கப்படும் பதார்த்தங்கள் கழிவுகளாக வெளியேற்றப்படும் போது ஏற்படுத்தும் பாதிப்புகள் மிகவும் பாரதூரமானவை. பொதுவாக அப்பதார்த்தங்கள் ஒழுங்கான கொள்கலன்களினுள் அடைக்கப்பட்டு பாதுகாப்பாக வெளியேற்றப்படும். ஆயினும் அவை எங்கே, எப்படி வெளியேற்றப்படுகின்றனவென எவரும் அறிய முனைவதில்லை. ஒரு வைத்தியசாலையிலே இவ்வளவு கழிவுகளும் வெளியேற்றப்படுகின்றன என்று கூட இதுவரை காலமும் நாம் சிந்தித்திருக்க மாட்டோம். ஒரு வைத்தியசாலையில் வெளியேற்றப்படும் கழிவுகளின் அளவு, அவ் வைத்தியசாலையின் தன்மையைப் பொறுத்துமாறுபடும். நடுத்தர அளவு, குறைந்தளவு வருமானம் பெறும் நாடுகளுடன் ஒப்பிடுகையில் கூடிய வருமானம் பெறும் நாடுகளால் வெளியேற்றப்படும் கழிவுகள் மிகவும் அதிகமாகும். அதேபோல அணு உலைகளினால் வெளியேற்றப்படும் கதிர்த் தொழிற்பாடுடைய கழிவுகளுடன் ஒப்பிடுகையில், வைத்தியசாலைகளில் வெளியேற்றப்படும் இத்தகைய கழிவுகளின் அளவும் குறைவாகும். வைத்தியசாலைகளில் கழிவுகள் வெளியேற்றப்படுபவதைத் தவிர்க்க முடியாது. ஆனால் அக்கழிவுகளை செவ்வனே முகாமைப்படுத்தினால், அவற்றினால் ஏற்படும் பாதிப்புக்களிலிருந்து சுற்றுச் சூழலையும் மனிதர்களையும் பாதுகாக்க முடியும். மருத்துவமனைகள் போன்ற சுகாதார அமைப்புக்களின் நச்சுக் கழிவுகள் ஒருபோதும் நகரக் கழிவுகளுடன் கலக்கவிடப்படலாகாது. ஆனால் பல அபிவிருத்தியடைந்த நாடுகளில் அவை நகரக் கழிவுகளுடன் கலக்கப்பட்டு அப்புறப்படுத்தப்படுகின்றன. இல்லையேல் சுத்திகரிக்கப்படாமல் நீர் நிலைகளிலோ அல்லது நிலத்தினுள் புதைக்கப்பட்டோ அப்புறப்படுத்தப்படுகின்றன. ஏனெனில் மருத்துவமனைக் கழிவுகளை முகாமைப்படுத்துவதொன்றும் எளிதான காரியமல்ல. அதற்கான செலவை ஈடுசெய்ய அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளின் பொருளாதார நிலை இடம் கொடுப்பதில்லை. அத்துடன் செலவுகளைக் கணித்து அவற்றின் அடிப்படையில் வேறு உத்திகளைக் கையாளும் நிலையிலும் அந்த நாடுகள் இல்லை என்றே கூற வேண்டும். இந்த மருத்துவமனைக்கழிவுகளால் உருவாக்கப்படும் சுற்றுச் சூழல், சுகாதாரப் பிரச்சினைகள் தான் அவற்றை அப்புறப்படுத்துவதில் இருக்கவேண்டிய அக்கறையை மேன் மேலும் தெளிவுபடுத்துகின்றன. சுற்றுச் சூழலின் ஆரோக்கியத்துக்கும் வாழும் மக்களின் ஆரோக்கியத்துக்குமிடையில் இடைத்தொடர்பு காணப்படுகிறது என்பதை எவராலும் மறுக்க முடியாது. சுற்றுச் சூழல் ஒழுங்காகப் பேணப்பட்டால், அங்கு வாழும் மக்களின் ஆரோக்கியமும் தானே அமைந்துவிடும். நாம் சூழலுக்கு வெளியேற்றும் கழிவுகளின் நச்சுத்தன்மை குறைக்கப்பட்டாலே, அக்கழிவுகளால் ஏற்படும் சூழல் மாசும் பல மடங்குகள் குறைவடையும். மருத்துவமனைக் கழிவுகளைப் பொறுத்தவரையிலே, அவற்றை மீள் சுழற்சி செய்தலும் அப்புறப்படுத்தலும் ஒழுங்குபடுத்தப்பட்ட கட்டமைப்பினடிப்படையிலே பாதுகாப்பாக மேற்கொள்ளப்படவேண்டும். தெற்காசிய நாடுகளில், மருத்துவமனைக் கழிவுகளின் சில வகைகள் உயர் வெப்ப நிலையிலே எரிக்கப்படுவதாகவும் சில வகைகள் தொற்று நீக்கம், நுண்ணுயிரழிவாக்கம் செய்யப்பட்டுப் பின் பரிகரிக்கப்படுவதாகவும் தாய்லாந்திலுள்ள ஆசிய தொழில்நுட்ப நிறுவகத்தின் ஆய்வொன்று தெரிவிக்கிறது. தொற்றுக்களையுடைய கழிவுகளும் பரம்பரை அலகுகளில் பிறழ்வுகளை ஏற்படுத்த வல்ல கழிவுகளும் மிக உயர் வெப்பநிலையிலே எரிக்கப்படுகின்றன. அவற்றுள், வெப்பத்தைத் தாக்குப்பிடிக்கக் கூடியவை சில, மிக உயர் வெப்பநிலையிலே பிரிகையடையச் செய்யப்படுகின்றன. பொதுவாக, திரவ நிலையிலுள்ள கழிவுகள் இரசாயனப் பதார்த்தங்கள் மூலம் தொற்று நீக்கப்படுகின்றன. அதேபோல, திண்ம நிலையிலுள்ள கழிவுகள் உயர் வெப்பம் வழங்கப்பட்டு தொற்று நீக்கப்படுகின்றன. கழிவுகள் நீராவியால் நுண்ணுயிரழிவாக்கம் செய்யப்படுகின்றன. நுண்ணலைகள் மூலம் கழிவுகளின் ஈரப்பற்று அகற்றப்படுகிறது. ‘பிளாஸ்மா ஆக்’ எனப்படும் நவீன தொழில்நுட்பமானது மின்வாய்கள் மூலம் கழிவுகளைச் சுத்திகரிக்கிறது. இத்தொழில் நுட்பத்தின் படி கழிவுகள் எரிக்கப்படவோ அல்லது சாம்பலாக்கப்படவோ மாட்டாது. இறுதியாக சூழலுக்கு இவை பாரிய தீங்கை விளைவிக்கமாட்டாது எனக் கருதும் நிலையில் கழிவகற்றலுக்காக அமைக்கப்பட்ட கிடங்குகளுள் இட்டு நிரப்பப்படுகின்றன. ஆனால் நடைமுறையிலே, பல வைத்தியசாலைகளில் இவை முறையாக நடைமுறைப்படுத்தப்படுவதில்லை. நகரக்கழிவுகளுடனே சேர்க்கப்படுகின்றன. சில வைத்தியசாலைகள் திறந்த வெளியிலே கழிவுகளைக் கொட்டி எரிக்கின்றன. அல்லது புதைக்கப்படுகின்றன. நகரக் குப்பைகளைச் சேகரிக்கும் சாதாரண தொழிலாளர்கள் சில இறப்பர் மற்றும் பிளாஸ்டிக்கினால் செய்த மருததுவமனைக்கழிவுகளை மீள் சுழற்சி செய்து பாவனைக்குட்படுத்துகின்றன. இவை எவ்வளவு தூரம் ஆரோக்கியமானவை என்ற விடயம் கேள்விக்குறியாகவே இருக்கிறது. பூட்டானிலே பாவித்தபின் எறியும் கூரான வைத்தியசாலை உபகரணங்கள் சுத்திகரிக்கவோ அல்லது நுண்ணுயிரழிக்கப்படவோ செய்யாமல் மீளப் பாவிக்கப்படுவதும் ஆசிய தொழில்நுட்ப நிறுவகத்தின் ஆய்விலே தெரியவந்திருக்கிறது. இந்தியாவிலே, ஒரே குப்பை வண்டியில் சகல வகையான கழிவுகளும் அப்புறப்படுத்தப்படுவதும், சகல கழிவுகளும் ஒருங்கே கலக்கப்படுவதும் கூடக் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவின் புனித நதிகள் என்றால் மனக்கண்ணில் முதலில் தெரிவது கங்கை நதியாகும். காலத்தால் தொன்மைவாய்ந்தது மட்டுமன்றி வருடம் முழுவதும் நீர் சல சலவென ஓடிக்கொண்டிருக்கும் நதியாகவும் கங்கை நதி காணப்படுகிறது. கங்கையிலே மூழ்கி எழுந்தால் செய்த பாவங்கள் கரைக்கப்பட்டுவிடும் என்பது ஐதீகம். ஆனால் இன்றைய நிலையில் கங்கையில் மூழ்கி எழுந்தால் புதிய நோய்களையும் சேர்த்துக் காவிக்கொண்டு வந்து விடுவோமோ என்ற அச்சம்தான் எழுகிறது. தொழிற்சாலைக் கழிவுகளும், மருத்துவமனைக்கழிவுகளும் கங்கை நதியிலே கலக்கப்படுகின்றன. டையொக்சின் எனப்படும் நச்சு இரசாயனத்தின் செறிவு கங்கை நதி நீரில் அதிகமாக இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. அதற்கான அடிப்படைக் காரணம் உயர் வெப்ப நிலையிலே எரிக்கப்பட்ட வைத்தியசாலைக்கழிவுகளின் மீதிகள் கங்கை நதி நீருடன் கலக்கப்படுதலேயாகும். வவுனியாவின் வைத்தியசாலைக் கழிவுகள் சுத்திகரிக்கப்படாமல் வவுனியாக் குளத்திலே கலக்கப்பட்டதால் அக்குளம் முற்றாக மாசடைந்து காணப்படுவதாக, ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழக, பட்டப்பின் கல்வி ஆய்வறிக்கையொன்று தெரிவிக்கிறது. விவசாயத்துக்காக அமைக்கப்பட்ட இந்தக் குளம் இன்று மாசடைந்து போயுள்ளது. இந்த நீர் விவசாயத்துக்காகப் பயன்படுகையில், அதனால் உருவாகப் போகும் சுற்றுச் சூழல் மற்றும் சுகாதாரப் பிரச்சினைகள் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும் எனக் கற்பனை செய்யவே முடியவில்லை. குறுகிய காலத்திலே எந்த ஒரு விளைவும் கண்ணுக்குத் தெரிவதில்லை. ஆனால் நீண்ட கால நோக்கிலே அவற்றை கண்டறியும் போது அவற்றைக் கட்டுப்படுத்த முயல்தலானது எமது கையை மீறிய செயற்பாடாகவே இருக்கும். வவுனியா வைத்தியசாலை மட்டுமன்றி இன்னும் பல வைத்தியசாலைகளிலும் இதனை ஒத்த செயற்பாடுகள் நடைபெற்றிருக்கலாம். ஆனால், அவை வெளிக்கொணரப்படுவதில்லை. இங்குதான் ஆய்வாளர்களது தேவை அவசியமாகிறது. ஆய்வாளர்களும் ஆய்வு நிறுவனங்களும் இணைந்து இத்தகைய ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும். ஆய்வு முடிவுகளை விஞ்ஞானச் சஞ்சிகைகளிலும் புத்தகங்களிலும் உறங்க வைக்காமல், அவற்றை எளிமைப்படுத்த வேண்டும். அவை வெகுசனத் தொடர்பு ஊடகங்கள் மூலம் பொதுமக்களைச் சென்றடைய வழி செய்ய வேண்டும். அப்போதுதான் பொதுமக்கள் விழிப்படைவார்கள். அவர்கள் விழிப்படைந்தால், மருத்துவமனை நிர்வாகம் தனது எண்ணப்படி இக்கழிவுகளை அகற்றிவிட முடியாது. இதனால் கிடைக்கும் வெற்றி எம் யாவருக்குமுரியதே. மருத்துவமனை நிர்வாகத்தையோ, அல்லது ஒரு நாட்டையோ அல்லது ஒரு கருதுகையில், இக்கழிவுகளை அப்புறப்படுத்துவதற்காகக் கொடுக்கும் விலை, விளைவுகளுடன் ஒப்பிடுகையில் இலாபகரமானதில்லை என்ற கருத்தொன்றும் நிலவி வருகிறது. எங்கு பார்த்தாலும் பணரீதியான பெறுமதிக்கு முக்கியத்துவம் வழங்கப்படும் இன்றைய உலகைப் பொறுத்த வரையிலே பலருக்கு இக்கருத்து நியாயமாகவும் தெரிகிறது. இயற்கையும் உயிர்களும் விலைமதிப்பற்றவை. அவற்றிற்கு தீங்கு விளைவிக்கப்படும் எந்த ஒரு செயற்பாட்டிற்கான செலவும் நட்டமாகக் கருதப்பட முடியாதது என்பதை நாம் உணர வேண்டும். அங்கும் ஆய்வுகள் தான் அவசியமாகின்றன. ஏனெனில் எந்த ஒரு விடயமும் தர்க்கபூர்வமாக நிரூபிக்கப்பட வேண்டுமென இன்றைய உலகம் விரும்புகிறது. நாம் ஒவ்வொருவரும், இந்தக் கழிவுகளுக்கெல்லாம் என்ன நடக்கிறது எனத் துருவ முற்பட்டால் சகல கழிவுச் சுத்திகரிப்புச் செயற்பாடுகளும் ஒழுங்காக நடக்கும் என்பதே நிதர்சனமான உண்மையாகும். Posted by என்றும் அன்புடன், சாரதாஞ்சலி-ம at 8:05 AM 2 comments Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest Labels: வைத்தியசாலை கழிவுகள் Thursday, July 15, 2010 சூழலியலில் செய்மதி தொழில்நுட்பம் செய்மதித் தொழில்நுட்பம் வளர்ந்து வரும் வேகம் பிரமிக்கத்தக்கது. மறைந்த விஞ்ஞானி ஆதர் சி கிளாக்கின் விஞ்ஞான புனைகதையொன்றிலே கருவுற்று இன்று வானுயர்ந்த விருட்சமாக வளர்ந்து வருகிறது. செய்மதிகளின்றி உலகில்லையென்ற நிலையே இன்று காணப்படுகிறது. ஆனால் இணைய வசதியுள்ள எந்த ஒரு நபரும் செய்மதித் தொழில் நுட்பத்தை உபயோகிக்க முடியுமென்ற விடயத்தைப் பலர் உணர்வதில்லை. 1980 களிலே 25 அங்குலம் X 25 அங்குலம் என்ற பரிமாணமுடைய சதுர அலகுகளை (pixels) அடிப்ப டையாகக் கொண்ட புகைப்படங்கள் செய்மதித் தொழில்நுட்பத்தின் மூலம் பெறப்பட்டன. ஆனால் இன்றோ, 9 அங்குலம் X 9 அங்குலம் பரிமாணமுடைய சதுர அலகுகளை அடிப்படையாகக் கொண்ட செய்மதி மூலமான வான் புகைப்படங்கள் பெறப்படுமளவிற்கு செய்மதித் தொழில்நுட்பம் வளர்ச்சி கண்டுள்ளது. சூழலியல் நோக்கிலும் செய்மதித் தொழில்நுட்பத்தின் பங்கு அளப்பரியது. முக்கியமாக காடுகள் அழிக்கப்படுதல் நிலங்கள் வரண்டு போதல் போன்ற சூழல் பிரச்சினைகளை இலகுவாக இனங்காண்பதற்கான அடிப்படையாகவும் செய்மதித் தொழில்நுட்பமே அமைந்து விடுகிறது. வனப்பகுதிகளிலோ தோட்டங்களிலோ நோய்களின் பீடிப்பால் ஏற்படும் தாக்கத்தை இனங்காண்பதற்கும் இந்தச் செய்மதிப் புகைப்படங்களே துணைபுரிகின்றன. அடர்ந்த காடுகளில் மேற்கொள்ளப்படும் சட்டவிரோத செயற்பாடுகளை இனங்காணவும் இந்தச் செய்மதிப் படங்கள் வழிவகுக்கின்றன. சட்டவிரோத செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுவதை இனங்காணுமிடத்து அவை தொடர்பாகச் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு அறியத்தர வேண்டும். அவற்றை இனங்காண நாம் நேரடியாக அந்த இடத்துக்குச் செல்லத் தேவையில்லை. செய்மதித் தொழில்நுட்பத்தின் மூலம் சம்பந்தப்பட்ட இடத்தைச் கண்காணிக்கக் கூடிய வசதியைச் செய்மதித் தொழில்நுட்பம் ஏற்படுத்தித் தந்திருக்கிறது. இணைய இணைப்பும் ஒரு கணனியும் இருந்தாலே எமது நாட்டின் வனப்பிராந்தியங்களுக்கு என்ன நடக்கிறது என்று அறிந்து கொள்ள முடியும். google இணையத்தளத்திலே இருக்கும் google earth என்ற மென்பொருளைத் தரவிறக்கி நீங்களும் முயன்று பாருங்களேன்.! Posted by என்றும் அன்புடன், சாரதாஞ்சலி-ம at 6:31 PM 2 comments Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest Labels: கூகிள் எர்த் Friday, July 9, 2010 உலக மக்கள் தொகை பெருகி வருகையில் உணவுக்கும் நீருக்கும் எங்கு போவது? மனித வாழ்வின் சமூக பொருளாதாரக் கட்டமைப்புக்கள் ஒவ்வொன்றும் குடிசனத் தொகையின் அளவிலேயே தங்கியுள்ளன. உலகளாவிய ரீதியிலே சனத்தொகையானது அதிகரித்து வருகின்ற போதிலும் சில அபிவிருத்தியடைந்த நாடுகளிலே சனத்தொகையின் வளர்ச்சிப் போக்கு குறைவடைந்தும் செல்கிறது. அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளின் நகர்ப் பகுதிகள் சனத்தொகை அடர்த்தி கூடியவையாக மாறிவருகின்றன. உலகளாவிய ரீதியிலே அதிகரித்து வரும் சனத்தொகையால் தான் பற்றாக்குறை மற்றும் மிகை நுகர்வு போன்ற புதிய பிரச்சினைகள் உருவாகத் தொடங்கின. எங்கு பார்த்தாலும் நிலப்பற்றாக்குறை, நீர்ப் பற்றாக்குறை என இயற்கை வளங்கள் பற்றாக்குறையாகத் தொடங்கின. அதேபோல ஒரு பகுதி சனத்தொகையால் வளங்கள் மிகையாக நுகரப்பட ஒரு பகுதி சனத்தொகைக்கு வளங்களே இல்லாமல் போயின. இத்தகைய சமமற்ற வளப் பங்கீடு காரணமாக மேலும் பல சமூக பொருளாதாரப் பிரச்சினைகள் தோற்றம் பெற்றன. அதிகரித்து வரும் சனத்தொகையால் சூழல் மாசடைதல் பிரச்சினைகளைக் கட்டுப்படுத்த முடியாமல் போயிற்று. உலக சனத்தொகை வளர்ச்சிப் போக்கினடிப்படையில், உலக குடித்தொகை கடிகாரமானது. உலக சனத்தொகையைத் தினமும் மதிப்பிட்டுக் கொண்டிருக்கிறது. அதேபோல சனத்தொகை வளர்ச்சி வீதம் வருடாந்தமும் ஒரு தசாப்தத்துக்கொரு முறையுமெனக் கணிப்பிடப்படுகின்றது. இது வரைகாலத்துக்குள் 1950 களே உயர் சனத்தொகை வளர்ச்சி வீதத்தையுடைய தசாப்தமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அத்தசாப்தத்தின் சனத்தொகை வளர்ச்சி வீதம் வருடத்துக்கு 1.8 சதவீதமாக இருந்தது. அதேபோல 1963 ஆம் ஆண்டே சனத்தொகை வளர்ச்சி வீதம் அதிகமாக இருந்த ஆண்டாகப் பதியப்பட்டுள்ளது. அவ்வாண்டின் சனத்தொகை வளர்ச்சி வீதம் 2.2 ஆகும். 2040 ஆம் ஆண்டுக்கும் 2050 ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்திலே உலக சனத்தொகை 9 பில்லியனை எட்டுமெனத் தெரிவிக்கப்படுகிறது. ஒவ்வொரு தனிமனித வாழ்வியலிலும் காணப்படும் சமூக பொருளாதா ரீதியிலான பிரச்சினைகளுக்கு அடிப்படையாக அமைவது உலகளாவிய சனத்தொகை வளர்ச்சியேயாகும். அது மட்டுமன்றி நாடுகள், பிராந்தியங்களின் அபிவிருத்தியும் உலகளாவிய, பிராந்திய ரீதியிலான, நாடளாவிய சனத்தொகை வளர்ச்சியில் தங்கியுள்ளமையை மறுக்க முடியாது. உலக சனத்தொகையானது 1987 ஆம் ஆண்டு ஜுலை 11 ஆம் திகதி 5 பில்லியனை எட்டியது. அதன் பின்னர், உலக சனத்தொகை சீரான வீத்தில் வளர்ச்சியடையத் தொடங்கியது. உலக சனத்தொகை 5 பில்லியனை எட்டியதையடுத்து அது தொடர்பாக மேலும் அறிந்து கொள்வதற்கு உலக மக்கள் ஆர்வம் கொண்டனர். அதையடுத்து ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தித்திட்டம் 1989 ஆம் ஆண்டு முதல் ஜுலை 11 ஆம் திகதியை உலக சனத்தொகை தினமாகப் பிரகடனப்படுத்தியது. உலகளாவிய சனத்தொகை தொடர்பான விழிப்புணர்வை மக்கள் மத்தியிலே உருவாக்கும் பொருட்டு ஒவ்வொரு வருடமும் அந்த நடப்பு வருடத்திலுள்ள, சனத்தொகை தொடர்பான பிரச்சினைகளைத் தொனிப் பொருளாகக் கொண்டு இத்தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அதற்கமைய 2010 ஆம் ஆண்டுக்கான தொனிப் பொருளாக ‘ஒவ்வொருவரும் முக்கியமானவர்கள்’ என்ற தொனிப்பொருள் அமைந்துள்ளது. உத்தியோகபூர்வமான குடிசனத்தொகை மதிப்பீட்டிலே, குழந்தைகள் முதல் முதியோர் வரை சகலரும் பங்கு பற்றும் வகையில் மக்களை ஊக்குவிக்கும் நோக்கை அது அடிப்படையாகக் கொண்டது. அதுமட்டுமன்றி குடிசனத்தொகை மதிப்பீட்டிற்கான தரவுகளைச் சேகரித்தல் தொடர்பான அறிவூட்டுதலை உபநோக்காகக் கொண்டமைந்திருக்கிறது. வறுமைப் பிரச்சினைகளை வெற்றிகரமாக எதிர்நோக்க சமூகக் கொள்கைளையும் செயற்றிட்டங்களையும் வடிவமைக்க வேண்டியது அவசியமாகிறது. அத்தகைய செயற்பாடுகளுக்கு குடிசனத் தொகை தொடர்பான தரவுகள் மிகவும் அவசியமாகும். ‘ஒவ்வொரு கருத்தரிப்பும் முக்கியமானது; ஒவ்வொரு பிறப்பும் பாதுகாப்பாக இருக்கிறது; ஒவ்வொரு இளைஞனும் எச். ஐ. வி. தொற்று அற்றவனாக இருக்கிறான்; ஒவ்வொரு பெண்ணும் மாண்புடனும் மரியாதையுடனும் மதிக்கப்படுகிறாள்’ என இத்தினத்திலே நாம் உறுதி செய்துகொள்ள வேண்டுமென ஐக்கிய நாடுகள் ஸ்தாபனம் தெரிவிக்கிறது. குடிசனத்தொகை தொடர்பான விடயங்களை நோக்கவென, ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் கிளை அமைப்பாக ஸினிபிஜிதி எனும் அமைப்பு ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. தேசிய அரசாங்கங்கள் மட்டுமன்றி மாகாண சபைகளுடனும் ஏனைய அரச சார்பற்ற, தனியார் நிறுவனங்களுடனும் இணைந்து பல செயற்றிட்டங்களை இந்த அமைப்பு மேற்கொண்டு வருகிறது. அத்துடன் ஒவ்வொரு நாட்டிலும் சனத்தொகைப் பிரச்சினைகளை அணுகுதல் தொடர்பாக மேற்கொள்ளப்படும் செயற்றிட்டங்களுக்கு ஒத்துழைப்பையும் வழங்குகிறது. 2050 ஆம் ஆண்டளவிலே, உலகின் சனத்தொகை 9 பில்லியனாக மாறப்போகிறது. பரந்தளவிலான வறுமை, வேலையின்மை, பட்டினி போன்ற பல பிரச்சினைகள் உருவெடுக்கப் போகின்றன என எதிர்பார்க்கப்படுகிறது. இப்பிரச்சினைகளை முறையாக அணுக, ஒழுங்காக ஆய்வு செய்யப்பட்ட துல்லியமான தரவுகள் மிகவும் அவசியமாகின்றன. அத்தரவுகள் எங்கிருந்தோ பெறப்படுபவை அல்ல. அவை எம் ஒவ்வொரு வரிடமிருந்தும் பெறப்பட்டவையாகும். நாம் ஆய்வாளர்களுக்குத் தேவையான தரவுகளைச் சரியாக வழங்கினால் தான் ஆய்வு முடிவுகளும் துல்லியமாக அமையும். ஒவ்வொரு குடிமகனிடமிருந்தும் பெற்ற தரவுகளை ஒழுங்குபடுத்தி முறையே ஆய்வுசெய்து முடிவுகளைப் பெறுவதொன்றும் இலகுவான காரியமல்ல. அதனால் தான் குடிசனத்தொகை மதிப்பீடு நீண்ட காலத்துக்கொருமுறை நடைபெறுகிறது. குடிசன மதிப்பீடு நடைபெறும் ஆகக் குறைந்த காலப் பகுதி 10 வருடங்களாகும். இந்த வருடத்துக்கான உலக சனத்தொகை தினத்தின் தொனிப் பொருள், ஒவ்வொருவரும் குடிசனத்தொகை மதிப்பீட்டில் பங்கெடுக்க வேண்டுமென வலியுறுத்துகிறது. குறிப்பாக, சிறுவர்களதும் பெண்களினதும் பங்களிப்பு அதிகமாக இருக்க வேண்டுமென எதிபார்க்கிறது. 1790 ஆம் ஆண்டின் பின்னரே, சிறுவர்களைக் குடிசனத் தொகை மதிப்பீட்டில் பங்கெடுக்க வைக்கும் செயற்பாடு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. ஆயினும் 5 வயதிற்குட்பட்ட சிறுவர்களின் பங்களிப்பு ஏனைய வயதினருடன் ஒப்பிடுகையில் மிகவும் குறைவானதாகவே இருக்கிறது. குடிசனத் தொகை மதிப்பீட்டில் பங்கெடுக்கும் ஒவ்வொரு சிறுவனும், தேவையுடைய சமுதாயங்களை இனங்காண்பதற்கு மிகவும் அவசியமானதாக இருப்பானெனத் தெரிவிக்கப்படுகிறது. குடிசனத் தொகை மதிப்பீடானது தேசிய ரீதியிலான தேவைகளை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட வேண்டும். அத்துடன், அக் குடிசனத் தொகை மதிப்பீட்டின் மூலம் பெறப்படும் முடிவுகள், சர்வதேச ரீதியாகவும் காலத்துடனும் ஒப்பிடப்படக் கூடியதாக இருக்க வேண்டும். அதேபோல, பொதுமக்கள் விரும்பித் தரவுகளைத் தரும் வகையிலேயும் அமைய வேண்டும். ஒரு சமுதாயமோ அல்லது ஒரு தனி நபரோ சிரந்த சுகாதார வசதியுடன் , கல்வி, போக்குவரத்து, மற்றும் வசிப்பிட வசதிகளுடன் இருப்பதையோ அல்லது அந்த வசதிகளற்றிருப்பதையோ முழு உலகுக்கும் தெரிவிக்கும் காட்டியாக குடிசனத்தொகை மதிப்பீடு காணப்படுகிறது. ஒரு நாட்டுக்குள்ளும் கல்விக்கான, சுகாதார வசதிகளுக்கான இட ஒதுக்கீடுகளும் ஏனைய அபிவிருத்தித்திட்டங்களும் கூட குடிசனத்தொகை மதிப்பீட்டினடிப்படையிலேயே மேற்கொள்ளப்படுகின்றன. அண்மைக்காலங்களிலே, சூழலியலாளர்களும் பொருளியலாளர்களும் உலக சனத்தொகை வளர்ச்சிப்போக்கை ஆராய்ந்து எதிர்கால நிலைமைகளை மதிப்பிடவும் எதிர்வு கூறவும் அதிக ஆர்வமுடையவர்களாகக் காணப்படுகிறார்கள். ஏனெனில், சனத்தொகையின் வளர்ச்சிப் போக்கு இன்று மனிதனின் எதிர்காலம் தொடர்பான சகல விடயங்களையும் தீர்மானிக்கும் காரணியாக மாறிவிட்டது. சனத்தொகை வளர்ச்சிவீதம் எங்ஙனம் கணிக்கப்படுகிறது எனப்பலர் அறிவதில்லை. ஒரு நாட்டின் சனத்தொகை வளர்ச்சி வீதமானது அந்நாட்டின் பிறப்பு, இறப்பு வீதங்களிலேயே தங்கியுள்ளது. அத்துடன் பிறப்பு இறப்பு வீதங்கள் ஏனைய சதவீதங்களைப் போன்று நூறுக்கு எத்தனை எனக் கணிக்கப்படுவதில்லை. அவை ஆயிரத்துக்கு எத்தனை எனக் கணிக்கப்படுபவையாகும். பிறப்பு வீதத்துக்கும் இறப்பு வீதத்துக்கும் இடையிலான வித்தியாசத்தைப் பத்தால் வகுக்கும் போது பெறப்படுவதே சனத்தொகை வளர்ச்சி வீதமாகும். சனத்தொகை அதிகரிக்க, அதிகரிக்க மனிதத் தேவைகளும் அதிகரிக்கும். இதனால் வளங்களின் பாவனை மிகவேகமாக அதிகரிக்கும். வளங்களின் பாவனையின் துரித அதிகரிப்பு, சுற்றுச் சூழல் மாசைத் தோற்றுவிக்கும். ஆய்வுகளின் அடிப்படையிலே உலக சனத்தொகை வளர்ச்சி வீதம் இப்போது குறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சனத்தொகை காலத்துடன் அதிகரிக்கும் அளவு தான் குறைவடைந்துள்ளதே தவிர காலத்துடன் சனத்தொகை குறைவடையவில்லையென்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும். 2050ஆம் ஆண்டளவிலே, இந்தியாவின் சனத்தொகையானது (1.7 பில்லியன்) அதே நடப்பு ஆண்டிலுள்ள சீனாவின் சனத்தொகையை (1.4 பில்லியன்) விட அதிகமாக இருக்குமென எதிர்வு கூறப்படுகிறது. அப்போது, இவ்விரண்டு நாடுகளில் மட்டுமே உலக சனத்தொகையின் ஒன்றில் மூன்றைவிட அதிகமான பகுதி மக்கள் வாழ்வர் எனவும் குறிப்பிடப்படுகிறது. அதேபோல சனத்தொகை வளர்ச்சிவீதம் அதிகமுள்ள கண்டமாக ஆபிரிக்கா காணப்படுகிறது. ஏனெனில் இக்கண்டத்திலுள்ள 20க்கும் மேற்பட்ட நாடுகளிலே மொத்தக் கருத்தரிப்பு வீதம் (ஒரு பெண்ணுக்குப் பிறக்குமென எதிர்பார்க்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை) 5 இலும் அதிகமாக இருக்கிறது. இதனால், 2050ஆம் ஆண்டளவிலே ஆபிரிக்காவின் சனத்தொகை இரட்டிப்படைந்து 2 மில்லியனாகுமெனவும் எதிர்வு கூறப்படுகிறது. சனத்தொகை வளர்ச்சிவீதம் பிரச்சினைக்குரியதாக இருக்குமென எதிர்பார்க்கப்படும் நாடுகள் யாவுமே அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளாகும். வாழ்க்கைத்தரமும் தலாவருமானமும் உயர்வாக இருக்கும் நாடுகள் அபிவிருத்தியடைந்த நாடுகளாகக் கருதப்படுகின்றன. அவ்விரு காட்டிகளும் குறிப்பிட்ட மட்டத்தைவிடக் குறைவாக உள்ள நாடுகள் அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளாகவும் கருதப்படுகின்றன. அபிவிருத்தியடைந்த நாடுகள் நீண்டகால பொருளாதார வளர்ச்சியைக் கண்டுவரும் அதேவேளை தொழில்நுட்ப ரீதியாகவும் முன்னேற்றம் கண்டவையாகக் காணப்படுகின்றன. ஆனால் அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளோ, நீண்டகால அபிவிருத்தியின் நன்மைகளைப்பெறாதவையாக இருப்பதுடன் தொழில்நுட்பத்துக்காக அபிவிருத்தியடைந்த நாடுகளை நம்பியிருப்பனவாகவும் காணப்படுகின்றன. அபிவிருத்தியடைந்த நாடுகளின் சனத்தொகை வளர்ச்சி வீதமும் அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளின் சனத்தொகை வளர்ச்சி வீதத்தை விடக் குறைவாகும். ஆகையால் தான் சீன அரசு, சீனாவில் வசிக்கும் குடும்பம் ஒன்றிலே இருக்கும் குழந்தைகளின் எண்ணிக்கையை மட்டுப்படுத்த முனைகிறது. அந்த எண்ணிக்கையை விட ஒரு குடும்பத்திலுள்ள குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்தால், அக்குழந்தைகளுக்கு கல்வி உட்பட்ட பல வசதிகளை அரசு வழங்க மறுக்கிறது. மாறாக அமெரிக்கா போன்ற நாடுகள் இத்தகைய மட்டுப்படுத்தல் நடவடிக்கைகள் எவற்றிலும் ஈடுபடுவதில்லை. இங்கு தான் வளங்களின் சமமற்ற பகிர்வும் உருவாகிறது. உலக வரைபடத்திலே, இலங்கை ஒரு சிறிய புள்ளியாய் தெரிவதால், இலங்கையின் சனத்தொகை தனியாக உலகளாவிய ரீதியிலே பெரிய தாக்கத்தைச் செலுத்தப் போவதில்லை. ஆயினும் இலங்கையும் அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளுள் ஒன்று என்பதை நாம் ஒரு போதும் மறக்கக் கூடாது. இலங்கையின் அபிவிருத்தித் திட்டங்கள் பல சனத்தொகைப் பரம்பலின் அடிப்படையிலேயே மேற்கொள்ளப்படுகின்றன. இலங்கையின் இலவசக் கல்வித் திட்டத்தின் கீழ் கல்வி பயிலும் ஒவ்வொரு மாணவனதும் இலக்காக இருக்கும் பல்கலைக்கழக அனுமதியும் குடிசனத்தொகை மதிப்பீட்டுடன் தொடர்புடையதேயாகும். மாவட்டங்களின் சனத்தொகைப் பரம்பலையும் அதனுடன் தொடர்புபட்ட ஏனைய காட்டிகளையும் அடிப்படையாகக் கொண்டே மாவட்டங்களுக்கான பல்கலைக்கழக வெட்டுப் புள்ளியும் இட ஒதுக்கீடும் தீர்மானிக்கப்படுகின்றன. அதே காட்டிகளின் அடிப்படையிலேயே பின்தங்கிய மாவட்டங்களும் கணிக்கப்படுகின்றன. இவற்றையெல்லாம் தீர்மானிப்பது கூட குடிசனத்தொகை மதிப்பீடேயாகும். இலங்கையிலே குடிசனத்தொகை மதிப்பீடு 2001 ஆம் ஆண்டு நடைபெற்றது. ஆனால், சில தவிர்க்க முடியாத காரணங்களால் இலங்கை பூராவும் நடத்தப்படவில்லை. இந்நிலையில், எதிர்வரும் 2011 ஆம் ஆண்டு முழு இலங்கையிலும் குடிசனத் தொகை மதிப்பீடு நடத்தப்படவிருக்கிறதென இலங்கை புள்ளிவிபரவியல் திணைக்களம் அறிவித்திருக்கிறது. அவ்வாறு குடிசனத்தொகை மதிப்பீடு மேற்கொள்வதால் ஏற்படும் நன்மைகளையும், மேற்கொள்வதில் அரசும் சம்பந்தப்பட்ட ஊழியர்களும் எதிர்நோக்கும் சிரமங்களையும் உணர்ந்து எமது பூரண பங்களிப்பை நாம் வழங்க வேண்டும். ஏனெனில் அந்தக் குடிசன மதிப்பீடு மிகவும் துல்லியமாக இருக்கும் பட்சத்தில் அதனால் கிடைக்கும் நன்மைகளை அனுபவிக்கப் போவதும் நாங்களே! ஆகையால், 2011 இலே இலங்கையில் மேற்கொள்ளப்படவிருக்கும் குடிசன மதிப்பீடு முன்னைய காலங்களினதைவிட மிகவும் துல்லியனமாக இருக்கும் வகையில் எமது பங்களிப்பைச் செலுத்துவோமென, உறுதி கொள்வோமாக! Posted by என்றும் அன்புடன், சாரதாஞ்சலி-ம at 7:56 AM 0 comments Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest Labels: உலக சனத்தொகை, குடிசன மதிப்பீடு, சனத்தொகை வளர்ச்சி Friday, July 2, 2010 கோபத்தின் வெளிப்பாட்டால் மாசுபடும் சுற்றுச் சூழல் ஒவ்வொரு தனி மனிதனின் வெற்றியினதும் தோல்வியினதும் பின்னணியில் உள்ள முக்கிய காரணங்களுள் பழக்கவழக்கங்களும் குறிப்பிடத்தக்க இடத்தை வகிக்கின்றன. பழக்கவழக்கங்கள் எனப்படுபவை நாம் வழக்கங்களாக்கிவிட்ட பழக்கங்களையே குறிக்கின்றன. ‘ஒவ்வொருவருடைய பழக்க வழக்கங்களும் அவர்களின் மனப்பாங்கையே பிரதிபலிக்கின்றன’ என்ற கூற்றை ஒருபோதும் மறுக்க முடியாது. ஒருவருடைய மனப்பாங்கைத் தீர்மானிப்பதில், அவர் சார்ந்த சூழல் பெரும்பங்கு வகிக்கிறது. எமது பழக்கவழக்கங்கள் எம்மை மட்டுமே பாதித்துக் கொண்டிருக்கின்றவரை அவை பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தாது. ஏற்படுத்தினாலும் தனி ஒருவரை மட்டுமே பாதிக்கும். அதேசமயம் தனிநபர் ஒருவரின் பழக்கவழக்கங்கள் மற்றவர்களையும் பாதிக்கின்றது என அறியப்படும் பட்சத்தில் அவை மாற்றப்பட வேண்டியது மிக அவசியமாகும். சிலர் பிறரைக் கேலி பேசுவர். சிலர் தமது பிழைகளையும் நியாயப்படுத்துவர். சிலர் எதற்கெடுத்தாலும் கோபம் கொள்வர். சிலர் எவருடனும் சாந்தத்துடன் கண்ணியமாகப் பேசுவர். சிலர் நல்ல விடயங்களைப் பாராட்டுவர். சிலர் வயது வித்தியாசம் பார்க்காமல் மரியாதையுடன் பழகுவர். ஆனால் சிலரோ யாரைக் கண்டாலும் மரியாதைக் குறைவாகவே பேசுவர். நேரந்தவறாமை சிலரது வழக்கமாக இருக்கும். நேரம் தவறுவதே சிலரது வழக்கமாக இருக்கும். பிறரிடம் காணப்படும் நல்ல பழக்கவழக்கங்களை நாம் பின்பற்றிக் கொள்ளும் அதேவேளை எம்மிடம் குடிகொண்டிருக்கும் கெட்ட பழக்கங்களை உணர்ந்து மாற்ற முயலவேண்டும். அத்தகைய மாற்றப்பட வேண்டிய பழக்கவழக்கங்களுள் கண்ட இடங்களில் துப்புதலும் குப்பைகளைக் கொட்டுதலும் கூட அடங்குகின்றன. சூழலியல், மற்றும் சுகாதார நோக்கிலே இப்பழக்கவழக்கங்கள் இரண்டும் மாற்றப்படுதல் மிகவும் அவசியமாகிறது. பீஜிங் ஒலிம்பிக் போட்டிகளுக்கான ஏற்பாட்டை, சீனா மேற்கொண்டு வந்த காலங்களில், அதிகாரிகள் சீன மக்களின் சில பழக்க வழக்கங்கள், சீன தேசத்துக்கு அவதூறை ஏற்படுத்திவிடுமோ என அச்சம் அடைந்தனர். துப்புதல், வரிசைகளில் நிற்கும் போது இடையே குறுக்கிடுதல், குப்பைகளைக் கொட்டுதல் ஆகியனவே அதிகாரிகள் அச்சமடைந்த பழக்கவழக்கங்களாகும். ஒலிம்பிக் போட்டிகளின் நிமித்தமாவது அவற்றை மாற்றியமைப்பதற்கு ஒலிம்பிக் குழுவினர் பல முயற்சிகளை மேற்கொண்டனர். ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கும் வரை ஒவ்வொரு மாதத்தின் 11ஆவது நாளும் வரிசையில் நிற்பதற்கான தினமாகப் பிரகடனப்படுத்தப்பட்டது. அத்தினத்திலே அவசரப்படாமல் வரிசையில் நின்று தமது வேலைகளை நிறைவேற்றுவதற்கு மக்கள் ஊக்குவிக்கப்பட்டனர். மக்கள் வீதிகளில் துப்புவதைத் தவிர்க்க ஒவ்வொருவருக்கும் பைகள் இலவசமாக வழங்கப்பட்டு, அப்பைகளினுள் துப்புமாறு அவர்கள் அறிவுறுத்தப்பட்டனர். அதனை மீறுபவர்களிடம் தண்டப் பணம் அறவிடப்பட்டது. இத்தகைய கெட்ட பழக்கங்களைத் தவிர்த்தலை ஊக்குவிக்கு முகமாக பல பதாகைகளும் தொங்கவிடப்பட்டன. இந்தத் தகவலானது, பிரித்தானிய ஒளிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் செய்திப் பிரிவின் ஒலிபரப்பிலிருந்து பெறப்பட்டது. உமிழ் நீரையோ அல்லது வாய்க்குள் இருக்கும் பொருட்களையோ பலவந்தமாக வெளியேற்றுதலைத் ‘துப்புதல்’ என்பர். ஒரு நபர், மற்றொருவர் மீது துப்புவதானது வெறுப்பு, கோபத்தை வெளிப்படுத்தும் செயலாக உலகளாவிய ரீதியிலே கருதப்படுகிறது. கண்ட இடங்களிலே துப்புவதால் அந்த இடங்கள் அழுக்கடைவதுடன் அவற்றின் அழகும் இழக்கப்பட்டு விடுகிறது. சாதாரண பக்aரியா கொல்லி மருந்துகளுக்குக் குணமாகாத நிமோனியா நோயும் கசமும் வெகுவிரைவாகப் பரவுவதற்கு கண்ட இடங்களில் துப்பும் பழக்கம் காரணமாய் அமைந்துவிடுகிறது. வைரஸ்கள் பரவுவதற்கும் இதே பழக்கம் காரணமாகிறது. இலங்கையிலே சி1னி1 இன்ஃபுளுவென்சா வைரஸ் பரவுவதற்கான மூலகாரணிகளுள் இப்பழக்கம் முன்னணி வகித்ததாக ஆய்வாளர்கள் தெரிவித்திருந்தனர். இவ்வைரஸ் உமிழ் நீரில் ஏறத்தாழ 8 மணித்தியாலங்கள் வரை உயிர் வாழ்வதால், அது நோய் வெகு விரைவாகவும் சுலபமாகவும் பரவ ஏதுவாக அமைந்துவிடுகிறது- ‘துப்புதல்’ என்ற பழக்கம் சி1னி1 இன்ஃபுளுவென்சா மட்டுமன்றி எந்தவொரு சுவாச நோயும் பரவுவதற்குக் காரணமாக அமைகிறது. இப்பழக்கத்தை கல்வியறிவற்ற வறிய சமுதாயங்களுக்குரியதொரு பழக்கமென வரையறுத்துக் கூறமுடியாது. நவீனரக வாகனங்களிலே பயணிக்கும் பணக்காரர்களையும் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்களையும் கூட இப்பழக்கம் விட்டு வைப்பதில்லை. கண்ட இடங்களில் துப்புதல் சுகாதாரத்துக்குக் கேடானது என அவ்வாறு துப்புபவர்கள் எவருமே எண்ணுவதில்லை. வெற்றிலையை மெல்பவர்கள் ஒரு இலக்கை நோக்கித் துப்புவதை கலையாகவே கருதுகின்றனர் என்ற விடயம் மிகவும் வருந்தத் தக்கதாகும். சுட்டு விரலுக்கும் நடு விரலுக்குமிடையே வாயை வைத்து உயர் விசையுடன் துப்புவதை இன்றும் கிராமங்களில் அவதானிக்கலாம். துப்புவதை ஒரு பாரம்பரியமாகக் கருதுபவர்களும் இருக்கத்தான் செய்கின்றனர். இவர்களெல்லாம் தாம் உன்னதமாக நினைக்கும் செயற்பாட்டால் உருவாகும் விளைவுகளை அறியாத வர்களாகவே தெரிகின்றனர். ஆபிரிக்காவின் மசாய் இன மக்களைப் பொறுத்தவரையிலே, துப்புதல் அதிஷ்டத்துடன் தொடர்புபட்ட விடயமாகக் கருதப்படுகிறது. அதிஷ்டத்துக்காக மட்டுமன்றி, சிறுவர்களைக் கண்டாலோ அல்லது தமக்குப் பிடித்தமானவர்களைக் கண்டாலோ இந்த இன மக்கள், சம்பந்தப்பட்ட நபர்களின் கைகளில் துப்பிய பின்னரே கை குலுக்குவார்கள். கிரேக்க கலாசாரத்திலே, ஒருவருக்கு புகழாரம் கிடைத்தால் உடனே அவர் மீது மூன்று தடவை துப்புவார்கள். இது திருஷ்டி கழிக்கும் செயற்பாடாகக் கருதப்படுகிறது. அத்துடன் திருமணங்களின் போது மணமகளின் மீது துப்புவதன் மூலம் நல் வாழ்த்துக்களைத் தெரிவிக்கும் வழக்கமும் கிரேக்க மக்களிடம் காணப்பட்டது. திருஷ்டி கழித்தபின் அதற்கான பொருட்களின் மீது மூன்று தடவைகள் துப்பும் வழக்கம் இன்றும் எம் கிராமங்களில் காணப்படுகிறது. இன்று பல இடங்களில், ‘இங்கே துப்புதல் தடைசெய்யப்பட்டுள்ளது’ என்ற அறிவித்தலைக் காண முடிகின்றது. கால்பந்து மற்றும் கிரிக்கெட் வீரர்களிடமும் இப்பழக்கம் காணப்படுவதை நாம் அவதானித்திருப்போம். முன்னைய காலங்களிலே, துப்புவதற்கென ‘படிக்கம்’ என்ற சாடியைப் பாவித்தார்கள். பித்தளை, வெண்கலம் போன்ற உலோகங்களினால் ஆக்கப்பட்டிருக்கும் இச்சாடியினுள் மண் போடப்பட்டிருக்கும். துப்ப வேண்டிய தேவையேற்படின், அதனுள் துப்புவார்கள். அதனால் இப்பழக்கம், சுகாதார சீர்கேடுகளை ஏற்படுத்தாது. எமது பாட்டன், முப்பாட்டன் காலங்களிலே காணப்பட்ட இந்த முறைமை, இன்றைய அவசர உலகிலே, வழக்கொழிந்து போய்விட்டது. எமது முன்னோர்கள் எத்துணை தீர்க்கதரிசனத்துடன் இத்தகைய நடைமுறைகளைக் கையாண்டார்கள் என்பதும் தெளிவாகிறது. பொது இடங்களிலே இவ்வாறு துப்புபவர்களை நாம் கண்டிருப்போம். பாதைகளில் நடந்து செல்லும் போதும், வாகனங்களில் பயணிக்கும் போது யன்னல்களூடும் துப்புபவர்களை நாம் பல தடவைகள் சந்தித்திருப்போம். அருகிலே நடந்து செல்லும் பொதுமக்கள் பற்றிய அக்கறை அவர்களுக்கு துளியளவேணும் இருப்பதில்லை. ஒரு நாட்டை உருவகப்படுத்த வேண்டுமாயின் முதலில் தெரிவது அந்த நாட்டில் வாழும் மக்களேயாவர். ஒரு நாட்டைப் பற்றிச் சிந்திக்கும் போது எழிலும் அன்பும் மட்டுமே மனக் கண்ணில் தெரிய வேண்டுமென்பர். வீதிகளில் துப்புபவர்களின் பின்புலம் எப்படிப்பட்டதாக இருக்கும் என, உடனேயே தீர்மானிக்க முடியும். சிங்கப்பூர் போன்ற நாடுகளைப் பார்த்த உடனேயே மனம் மகிழ்வுறும். ஏனெனில் வீதியோரங்களிலே கூட குப்பைகூளங்களைக் காணமுடியாது. அங்கே, கண்ட கண்ட இடங்களில் எவரும் துப்பமாட்டார்கள். மீறுவோர் பெரிய பெறுமதியைத் தண்டப் பணமாகச் செலுத்தியே ஆக வேண்டும்.இந்த நடைமுறை பல வருட காலங்களாக, சிங்கப்பூரிலே உள்ளது. அதனால் தான் சிங்கப்பூர் அழகு மிளிரும் நாடாகத் தெரிகிறது. சிங்கப்பூர் போன்ற பல நாடுகளிலே கண்ட இடங்களில், பொது இடங்களில் துப்புதல் சட்ட ரீதியாகத் தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால் இலங்கையைப் பொறுத்தவரையிலே அத்தகைய சட்டங்கள் எவையும் இதுவரை உருவாக்கப்படவில்லை. அவ்வாறு சட்டங்கள் உருவாக்கப்பட்டு தண்டப் பணம் அறவிடப்பட்டால் தான் எம் மக்கள் திருந்துவார்கள் என்றே எண்ணத்தோன்றுகிறது. ஆனால், இன்றைய இளஞ்சந்ததியினர் இப்பழக்கத்தின் விளைவுகளை அறிந்து திருந்தினால், நாளைய சமுதாயமாவது நாகரிகமான ஆரோக்கியமான சமுதாயமாக இருக்குமெனலாம். துப்புதல் போலவே, கண்ட இடங்களில் குப்பைகளை வீசும் வழக்கமும் இன்று எம்மவர் மத்தியில் அதிகரித்துக் காணப்படுகிறது. தங்கள் வீட்டுக் குப்பைகளை பொது இடங்களிலே கொட்டிவிட்டு தமது வீட்டைச் சுத்தமாக வைத்திருப்பதில் வல்லவர்களாகவே யாவரும் இருக்கின்றனர். நாம் பொது இடங்களில் போடுவது சிறு கடதாசித் துண்டாக இருப்பினும், அதனை அகற்றுவதற்கான செலவு அக்குப்பையின் உண்மைப் பெறுமதியை விட அதிகமென்ற உண்மை பலருக்குப் புரிவதில்லை. பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் பொலித்தீன் பைகளின் பாவனை ஒவ்வொருவரது வாழ்வியலிலும் நன்கு ஊடுருவிவிட்டது. பாவனை முடிந்ததும் பொருட்களைத் தூக்கியெறியும் கலாசாரம் சகஜமாகிவிட்டது. ஆகையால் பொது இடங்களில் சேரும் குப்பைகள் பெருகத் தொடங்கின. அங்கிருக்கும் குப்பைத் தொட்டிகள் மட்டும் வெறுமையாக இருப்பதையும் வேறு தேவைகளுக்காகப் பாவிக்கப்படுவதையும் கூடக் காணமுடிகிறது. குப்பைகளோ நாலா பக்கங்களிலும் சிதறிக் கிடக்கின்றன. இத்தகையதோர் நிலை இலங்கையில் மட்டும் காணப்படுவதான ஒன்றல்ல. பெரும்பாலான வளர்முக நாடுகளில் இதேநிலை தான் காணப்படுகிறது. சென்னை மாநகரின் பிரதான பஸ் நிலையமாகிய கோயம்பேடு ஒம்னி பஸ் நிலையத்தில் கிடைத்த அநுபவமொன்று ஞாபகத்துக்கு வருகிறது. எங்கு பார்த்தாலும் ‘நகரைச் சுத்தமாக வைத்திருங்கள்!’ என்ற விளம்பரப் பலகைகளைக் காணக் கூடியதாக இருந்தது. ஆனால் கையிலிருந்த குப்பைகளைப் போடுவதற்காக குப்பைத் தொட்டிகளைத் தேடி கடைசியில் களைப்பு மட்டுமே எஞ்சியது. பின்னர் எமது பயணப்பை தான் அக்குப்பைகளையும் ஏற்றுக் கொண்டது. கண்ட இடங்களிலே குப்பைகள் வீசப்படுவதற்கு இத்தகைய அனுபவங்கள் கூட, காரணமாகிவிடுகின்றன. குறித்த இடத்திலே குப்பைத் தொட்டி இல்லாவிட்டால் என்ன? அது இருக்கும் இடத்தைக் காண்கையில் குப்பைகளை அப்புறப்படுத்த முயலலாமே! வைத்தியசாலைகளிலும் கழிவுகள் மற்றும் குப்பைகளை அகற்றும் சிற்றூழியர்கள் வேலை நிறுத்ததில் ஈடுபடும் காலங்களில் அவ்வைத்தியசாலைகளின் நிலையைக் கற்பனை செய்து பார்க்கக்கூட முடியாது. சிற்றூழியர்கள் இருந்தால்கூட, சில வைத்தியசாலைகளின் குப்பைகள் கிரமமாக அகற்றப்படாத நிலையைப் பல இடங்களிலே காணமுடிகிறது. பொது இடங்களில் உள்ள இத்தகைய குப்பைகளைக் கருதுகையில் கண்ணிருந்தும் குருடர்களாகவே இருக்கிறோம். இவ்வாறு பொது இடங்களிலே வீசப்படும் குப்பைகள் ஒரு நாட்டிற்கு சுகாதார ரீதியாகவும் நிதி ரீதியாகவும் பெரும் சுமையையே தருகின்றன. பலதொற்று நோய்கள் பரவுவதற்கும் புதிய பல நோய்கள் உருவாக்கப்படுவதற்கும் கூட, இந்த குப்பை கூளங்கள் காரணமாக அமைந்துவிடுகின்றன. பாவனைக்குதவாதென வீசப்படும் வெற்றுக் கொள்கலன்களில் மழை காரணமாக தேங்கி நிற்கும் தெளிந்த நீர் டெங்கு நுளம்புகளின் இனப்பெருக்கத்துக்குக் காரணமாக அமைந்து விடுகிறது. இதே போல இக்குப்பைகள் பல்வேறு நோய்க்கிருமிகளின் விருத்திக்கும் வழிவகுத்து விடுகின்றன. நீர்நிலைகளில் கொட்டப்படும் கழிவுகள் நீரை மாசுபடுத்துகின்றன. குப்பைகளினூடு வடிந்தோடும் நீரிலே கரைந்திருக்கும் மாசுக்கள் நிலக் கீழ் நீரை மாசுபடுத்தி விடுகின்றன. அத்துடன் பார உலோகங்களின் செறிவையும் நிலக்கீழ் நீரிலே அதிகரித்து விடுகின்றன. இவை காரணமாக நீரினால் பரவும் நோய்களும் நீண்டகால நோக்கில் புற்றுநோய் போன்ற கொடிய நோய்களும் கூட உருவாகும் வாய்ப்புகள் அதிகம் காணப்படுகின்றன. இதனால், ஒரு நாட்டின் சுகாதாரச் செலவு அதிகரிப்பதுடன் ஆரோக்கியமற்ற மக்கள் சமுதாயம் காரணமாக நாட்டின் அபிவிருத்தியும் பாதிக்கப்படும். இக்குப்பைகளைச் சேர்த்து பொருத்தமான இடத்திலே வைத்து அப்புறப்படுத்துவதுடன், தேவையான சந்தர்ப்பங்களில் அவற்றை மிக உயர் வெப்பநிலையிலே எரிப்பதற்கான செலவும் மிக அதிகமாகும். குப்பை போடுபவர்கள் எவரும், அச்செலவைப் பற்றிச் சிந்திப்பதில்லை யென்பதே வெளிப்படையான உண்மையாகும். மக்களின் இத்தகைய மனப்பாங்குகளுக்கு பாடசாலைகளும் பொறுப்பேற்க வேண்டுமென்றே தோன்றுகிறது. பொது இடங்களிலே குப்பைகளை வீசுதல், துப்புதல் தொடர்பான விழிப்புணர்வு இளஞ்சமுதாயத்திடம் சரியாக ஊட்டப்பட்டாலே போதுமானது. அதற்கான முதலடியை எடுத்து வைக்க வேண்டியவர்கள் பாடசாலைச் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களேயன்றி வேறெவருமல்லர். ஆனால் அது பாடசாலைகளின் வேலையென எண்ணி மற்றையவர்கள் அலட்சியமாக இருத்தலும் உகந்ததல்ல. எடுத்தற்கெல்லாம் நகர சபைகளையும் அரச அதிகாரிகளையும் குறை கூறாது, நாம் ஒவ்வொருவரும் முயன்றால் குப்பைகளையே காணமுடியாத சிங்கப்பூராக எமது நாட்டையும் மாற்றமுடியுமென்பதில் எதுவித ஐயமுமில்லை! Posted by என்றும் அன்புடன், சாரதாஞ்சலி-ம at 8:21 PM 0 comments Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest Labels: குப்பைகளைக் கொட்டுதல், துப்புதல், பழக்கவழக்கங்கள் Newer Posts Older Posts Home Subscribe to: Posts (Atom) About Me என்றும் அன்புடன், சாரதாஞ்சலி-ம கணிதத்துடன் ஊடகவியலும் சூழல், இயற்கை வள முகாமைத்துவமுமாய் பரந்து விரிந்த என் கல்வியுலகும் அரச ஊடகத்துறையும் பின் நிர்வாகமும் அபிவிருத்தியுமாய் மாறிப்போன என் தொழிலுலகும் தகவல் அறியும் அடிப்படை உரிமையால் என்னிடமே மீண்டு வந்த எழுத்துரிமையும் என்னை மீளவும் வலையுலகில் கால் பதிக்கச்சொல்கின்றன... புதிய பரிமாணத்துடன் என் வலைப்பூ மீண்டும் உயிர் பெறுகிறது! இக்கட்டுரைகளுள் பெரும்பாலானவை தினகரனிலோ அல்லது Daily News இலோ பிரசுரமானவை....
இஸ்லாம் எனும் எரிபொருள் மூலம்,இறைமறை-இறைத்தூதர்[ஸல்]வழி எனும் தண்டவாளத்தில் சுவனத்தை இலக்காக்கி தனது பயணத்தை தொடர்கிறது!! அவசர அறிவிப்பு! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.... வெள்ளி, 2 டிசம்பர், 2011 முஹர்ரம் 10.செய்யவேண்டியவையும்-செய்யக்கூடாதவையும்! பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம். முஸ்லிம்களில் சிலர் முஹர்ரம் 10 வந்துவிட்டால், அந்த நாளில் என்னசெய்ய வேண்டுமென்று மார்க்கம் சொல்லியிருக்கிறது என்றெல்லாம் பார்ப்பதில்லை காலம் காலமாக நடைமுறையில் என்ன உள்ளதோ அல்லது ஆலிம்சாக்கள் என்ன சொல்கிறார்களோ அதை செய்து நன்மைக்கு பதிலாக அல்லாஹ்விடம் பாவத்தை பெற்றுக்கொள்வதை பார்க்கிறோம். சில பகுதிகளில் முஹர்ரம10. அன்று கொழுக்கட்டை சுட்டு, வீடுவாசலை நன்றாக கழுவிவிட்டு ஆலிம்சாவை கூப்பிட்டு பாத்திகா ஓதிவிட்டால் கடமை முடிந்தது என்ற பழக்கம் இருந்தது. அல்லாஹ்வின் பேரருளால் தற்போது இந்த பித்அத் குறைந்துள்ளது. எனினும், முழுமையாக ஒழியவில்லை. வேறு சில பகுதிகளில் ஹுஸைன் [ரலி] அவர்கள் ஷஹீதானதை நாங்கள் நினைவு கூறுகிறோம் என்ற பெயரில், ஷியாக்களின் வழிமுறையான பஞ்சா எடுத்து, இந்துக்களின் வழிமுறையான தீ மிதிப்பதையும் முஸ்லிம்கள் வழக்கமாக கொண்டுள்ளனர். இது தெளிவான வழிகேடாகும். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்" தன்னுடைய கன்னத்தில் அறைந்து கொள்பவனும் ஆடையைக் கிழித்துக் கொள்பவனும் அறியாமைக் காலத்துச் சொற்களைப் பயன்படுத்துபவனும் நம்மைச் சார்ந்தவன் அல்லன்." [புகாரி எண்; 1294 ] முஹர்ரம் மாதத்தில் செய்யவேண்டியது என்ன என்று நபி[ஸல்] அவர்கள் நமக்கு தெளிவாக்கிவிட்டார்கள். நாம் செய்யவேண்டியது இரண்டு நோன்புகள் நோற்பது மட்டுமே நபிவழியாகும்; நபி(ஸல்) அவர்கள் மதினாவிற்கு வருகை தந்தபோது ஆஷூரா நாளில் யூதர்கள் நோன்பிருப்பதைக் கண்டார்கள். இந்நாளின் சிறப்பென்ன? என்று யூதர்களிடம் நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு யூதர்கள் இது மகத்தான நாளாகும். இந்நாளில் தான் மூஸா (அலை) அவர்களை அல்லாஹ் காப்பாற்றினான். மேலும் ஃபிர்அவுனையும் அவனுடைய சமூகத்தினரையும் (கடலில்) மூழ்கடித்தான். எனவே அல்லாஹ்வுக்கு நன்றி கூறும் விதமாக மூஸா (அலை) அவர்கள் நோன்பு நோற்றார்கள். அதனால் நாங்கள் நோன்பு நோற்கிறோம் என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள் நாங்கள் தான் மூஸா (அலை) அவர்களை பின்பற்றுவதில் உங்களை விடத் தகுதியானவர்கள் என்று கூறினார்கள். அந்நாளில் நோன்பு நோற்றார்கள், மேலும் நோன்பு நோற்குமாறு கட்டளையிட்டார்கள். அறிவிப்பாளர்;இப்னு அப்பாஸ் (ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம், ஆஷுரா தினத்தன்று நபி(ஸல்) அவர்கள் நோன்பு நோற்று அதை நோற்கும்படி ஏவிய போது இது யூதர்களும் கிறிஸ்தவர்களும் கண்ணியப்படுத்தும் நாளல்லவா அல்லாஹ்வின் தூதரே! என நபித்தோழர்கள் கேட்டார்கள், அதற்கு நபி(ஸல்) அவர்கள், அல்லாஹ் நாடினால், எதிர்வரும் வருடம் ஒன்பதாவது நாளையும் (சேர்த்து) நோற்பேன் என்றார்கள். அடுத்த வருடம் வருவதற்கு முன்பே நபி(ஸல்) அவர்கள் மரணித்து விட்டார்கள். (முஸ்லிம்) ஆஷுரா நோன்பை ஆர்வமூட்டிய அல்லாஹ்வின் தூதர்; இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்கள்; "ஆஷுரா எனும் இந்த நாளையும் (ரமளான் எனும்) இந்த மாதத்தையும் தவிர, வேறெதையும் ஏனையவற்றைவிடச் சிறப்பித்துத் தேர்ந்தெடுத்து நபி(ஸல்) அவர்கள் நோன்பு நோற்பதை நான் பார்த்ததில்லை!" [புகாரி எண்; 2006 ] ஸலமா இப்னு அக்வஃ(ரலி) அறிவித்தார்கள்; நபி(ஸல்) அவர்கள் அஸ்லம் கிளையைச் சேர்ந்த ஒரு மனிதரை அனுப்பி, 'இன்று ஆஷுரா நாளாகும்; எனவே, இந்நாளில் யாரேனும் சாப்பிட்டிருந்தால் அவர் இந்நாளின் எஞ்சிய பகுதியில் நோன்பாக இருக்கட்டும்! யாரேனும் சாப்பிடாமல் இருந்தால் அவர் நோன்பாக இருக்கட்டும்!" என்று அறிவிக்கச் செய்தார்கள்! [புகாரி எண்; 2007 ] ஆஷுரா நோன்பு ரமளானுக்கு முன்னும்; பின்னும்; ஆயிஷா(ரலி) அறிவித்தார்கள்; அறியாமைக் காலக் குறைஷியர் ஆஷுரா நாளில் நோன்பு நோற்றனர்; நபி(ஸல்) அவர்களும் நோற்றனர். நபி(ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்தபோது, தாமும் அந்நாளில் நோன்பு நோற்று மக்களையும் நோன்பு நோற்குமாறு ஏவினார்கள். ரமலான் நோன்பு கடமையாக்கப்பட்டதும் ஆஷுரா நோன்பைவிட்டுவிட்டனர். விரும்பியவர் நோன்பு நோற்றனர். விரும்பாதவர்விட்டுவிட்டனர். [புகாரி எண்; 2002 ] எனவே, சகோதர/சகோதரிகளே! இரண்டு நோன்பை நோற்பதன் மூலம் இறை உவப்பை பெறுவோம். மேலும் அநியாயக்கார அரசனான ஃபிர்அவ்ன் இடமிருந்து அல்லாஹ்வின் தூதர் மூஸா[அலை] அவர்களையும் நம்பிக்கை கொண்டோரையும் அல்லாஹ் காப்பாற்றினான். அதுபோல் ஃபிர்அவ்னின் மறுவடிவமான அமெரிக்கா, இஸ்ரேல், சங்பரிவாரத்திடமிருந்தும், சக முஸ்லிம்களின் உயிர்- உடமை- மானத்தோடு விளையாடும் குழப்பவாதிகளிடமிருந்தும் உலக முஸ்லிம்களை பாதுகாக்குமாறு அந்நாளில் துஆ செய்வோம். அல்லாஹ்வே மிக அறிந்தவன். -முகவை எஸ்.அப்பாஸ் இடுகையிட்டது முகவைஅப்பாஸ் நேரம் முற்பகல் 9:36 கருத்துகள் இல்லை: சனி, 5 நவம்பர், 2011 இனிய பெருநாளே..தியாகத் திருநாளே..! பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம். ஏகத்துவக் கொள்கையை உலகில் நிலைநாட்ட, சோதனைகளுக்கு முகம் கொடுத்து, நெருப்பிலிட்டபோதும் ஏகத்துவ தங்கமாய் மின்னிய ஏந்தல் நபி இப்ராஹீம் அலை] அவர்களின் தியாகத்தையும் , தரணியின் தலைவன் அல்லாஹ்வின் கட்டளையின்படி, தன்னை அறுக்க தந்தை கோரியபோது, ''இறைவன் நாடினால் பொறுமையாளனாக என்னை காண்பீர்கள்' என்று இறைக்கட்டளைக்கு தன் தலை கொடுக்க முன்வந்த தனயன் நபி இஸ்மாயீல்[அலை] அவர்களின் தியாகத்தையும் நினைவு கூறும் இந்த தியாகத்திருநாளில் உலகமெங்கும் வாழும் எனது இஸ்லாமிய சகோதரர-சகோதரிகளுக்கு வாழ்த்தினை தெரிவிப்பதோடு, எல்லாம் வல்ல அல்லாஹ், ஏகத்துவத்தை நிலைநாட்டும் உயரியபனியில் நபிஇப்ராஹீம்[அலை] அவர்களுக்கு வழங்கிய உள்ள உறுதியையும், தியாக மனப்பான்மையையும் நமக்கும் வழங்கிட, நம்மை அல்லாஹ் பொருந்திக்கொண்ட வாழ்க்கை வாழ்ந்திட இறைவனிடம் இறைசுகிறேன். -உங்கள் இஸ்லாமிய சகோதரன் முகவைஅப்பாஸ்., மற்றும் இந்திய தவ்ஹீத் ஜமாஅத், குவைத் மண்டலம். இடுகையிட்டது முகவைஅப்பாஸ் நேரம் முற்பகல் 9:02 கருத்துகள் இல்லை: லேபிள்கள்: பெருநாள் வெள்ளி, 4 நவம்பர், 2011 அரஃபா நோன்பை மறந்துடாதீங்க...! பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் அல்லாஹ்வை ஏற்றுக்கொண்ட அடியார்களை அல்லாஹ் சொர்கத்தில் சேர்க்கும் பொருட்டு சின்ன சின்ன அமல்களுக்கும் கணக்கிலடங்கா நன்மைகளை அள்ளித்தருகிறான். இதுபோக மெகா ஜாக்பாட் பரிசுகளை தரக்கூடிய அமல்களை தனது திருத்தூதர்[ஸல்] அவர்கள மூலம் தன்னுடைய அடியார்களுக்கு அருளியுள்ளான்அப்படிப்பட்ட மகத்தான அமல்தான் அரபாநோன்பு. இந்த நோன்பை பற்றி இறைத்தூதர்[ஸல்] அவர்கள் கூறினார்கள்; நாட்களில் மிகச்சிறந்த நாள் அரஃபாவுடைய நாள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம் : ஸஹீஹ் இப்னு ஹிப்பான். فقد ورد عن أبي قتادة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم سئل عن صوم يوم عرفة فقال : " يكفر السنة الماضية والسنة القابلة " رواه مسلم அரஃபா நோன்பு :- அரஃபா நோன்பு (நோற்பவருக்காக) அந்த நாளுக்கு முந்திய வருடத்தின் பாவங்களையும் அதற்கு பின்னுள்ள வருடத்தின் பாவங்களையும் அல்லாஹ் மன்னிப்பான் என நான் நம்புகின்றேன் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.ஆதாரம்-முஸ்லிம். என்ன சகோதரர்களே! ஒருநாள் நோன்புக்காக இரண்டுவருட பாவங்களை மன்னிக்க அல்லாஹ் ரெடி, நீங்க ரெடியா..? இடுகையிட்டது முகவைஅப்பாஸ் நேரம் முற்பகல் 9:07 கருத்துகள் இல்லை: லேபிள்கள்: அரஃபா நோன்பு ஞாயிறு, 30 அக்டோபர், 2011 உலக சிக்கன நாள்; சிக்கனமும்-கஞ்சத்தனமும்! அல்லாஹ்வின் திருப்பெயரால்.... இன்று உலக சிக்கன நாள் அனுஷ்டிக்கப்படுகிறது. சிக்கனம் வீட்டை காக்கும்-சேமிப்பு நாட்டை காக்கும் என்ற வார்த்தைகள் நாம் பல்வேறு காலகட்டங்களில் செவியுற்றவைத்தான். நம்மில் பலருக்கு சிக்கனம் என்பதற்கும்- கஞ்சத்தனம் என்பதற்கும் வேறுபாடு தெரிவதில்லை. சிக்கனம் செய்கிறேன் என்ற பெயரில் தன்னுடைய-தன்னுடைய குடும்பத்தாருடைய தேவைகளை நிறைவேற்றாமல் காசை சேமிப்பதையே குறியாக கொள்வோரும் உண்டு. சிக்கனம் என்பது இதுவல்ல. சிக்கனம் என்றால் அவசியமான தேவைகளுக்கு அவசியமான அளவு [வீண் விரயமின்றி] செலவு செய்துவிட்டு மீதியை சேமிப்பதாகும். கஞ்சத்தனம் என்பது தம்மிடம் போதிய வசதியிருந்தும் தம்முடைய தம்மை சார்ந்தவர்களுடைய தேவையை மறுப்பதாகும். மனிதனை படைத்த அல்லாஹ், மனிதனின் வாழ்வில் அத்துணை பிரச்சினைக்கும் தீர்வு சொல்லும் தனது மார்க்கமான இஸ்லாத்தில் குர்ஆன்-மற்றும் நபிமொழிகள் வாயிலாக இந்த விசயத்திற்கும் வழிகாட்டியுள்ளான்.பொதுவாக இஸ்லாம் வணக்கமாக இருந்தாலும், வாழ்க்கையாக இருந்தாலும் அதில் நடுநிலை பேன சொல்லும் மார்க்கமாகும். அந்தவகையில் செலவு செய்வதை பற்றி அல்லாஹ் தன் அருள்மறையில்; இன்னும் அவர்கள் செலவு செய்தால் வீண் விரையம் செய்யமாட்டார்கள்; (உலோபித்தனமாகக்) குறைக்கவும் மாட்டார்கள் - எனினும், இரண்டுக்கும் மத்திய நிலையாக இருப்பார்கள்.[அல்-குர்ஆன் 25:67 ] இந்த வசனத்தில் அல்லாஹ், நாம் எவ்வாறு செலவு செய்யவேண்டும் என்பதை தெளிவாக விளக்குகிறான். நம்முடைய தேவைகளுக்காக செலவு செய்வதை மார்க்கம் தடுக்கவில்லை. ஆனால் அதில் வீண் விரையம் வந்துவிடக்கூடாது. மேலும் கஞ்சத்தனமாக இல்லாமல் நடுநிலையாக இருக்கவேண்டும் என்றும் சொல்லிக்காட்டுகின்றான் . ஆனால் முஸ்லிம்களாகிய நம்மில் பெரும்பாலோரின் நிலை என்ன..? 'வைச்சா குடுமி; இல்லைன்னா மொட்டைஎன்பார்களே அதுபோன்று, ஒன்று ஆடம்பரம் என்ற பெயரில் வீண் விரயம் செய்பவர்களாக இருக்கிறார்கள். அல்லது சிக்கனம் என்ற பெயரில் வடிகட்டிய கஞ்சர்களாக இருக்கிறார்கள். வசதி படைத்த முஸ்லிம்களின் வீடுகளில் தேவைக்கதிகமாக உணவுகள் தயாரிக்கப்பட்டு அவை விரையமாக்கப்படுகிறது. இதுபோக திருமணம் உள்ளிட்ட பல்வேறு சுப காரியங்களில் தங்களின் 'பணத்திமிரை' ஊரறிய செய்ய தேவைக்கு அதிகமாக உணவுகள், ஆடம்பர செலவுகள், மார்க்கம் அனுமதிக்காத பல்வேறு அனுஷ்டானங்கள் இவைகளுக்காக லட்சக்கணக்கான ரூபாய்கள் வீன்விரையம் செய்யப்படுகிறது. இப்படி வீன்விரையம் செய்பவர்கள் பற்றி இதோ அல்லாஹ் கூறுகின்றான்; மேலும், எவர்கள் மற்ற மனிதர்களுக்குக் காட்டுவதற்காகத் தங்கள் பொருட்களைச் செலவு செய்வதுடன், அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பாதிருக்கின்றனரோ (அவர்களுக்கு ஷைத்தான் கூட்டாளியாவான்). எவனுக்கு ஷைத்தான் கூட்டாளியாக இருக்கின்றானோ, அவன் கூட்டாளிகளிலெல்லாம் மிகத் தீயவன் (என்பதை அறியவேண்டாமா?)[அல்-குர்ஆன் 4:38 ] மேலும் அல்லாஹ்கூறுகின்றான்;மேலும் விரயஞ் செய்பவர்கள் ஷைத்தான்களின் சகோதரர்களாவார்கள்; ஷைத்தான் தன்னுடைய இறைவனுக்கு நன்றி கெட்டவனாக இருக்கின்றான்.[அல்-குர்ஆன் ] இறைவனின் இந்த எச்சரிக்கையை கவனத்தில் கொண்டு வீன்விரையம் தவிர்ப்போம். நம்முடைய தேவைகளை கணக்கிட்டு தேவையான உணவுகளை தயாரிப்போம். திடீர் என்று ஒரு விருந்தாளி வந்தாலும் அவர்களுக்கென மாற்று உணவு தயாரிக்க இப்போதுள்ள நவீன காலத்தில் உடனே சாத்தியமானதுதான். அப்படி இல்லையென்றால் கூட ஒருவர் உணவு இருவருக்கு போதுமானது என்ற நபிமொழிக்கு ஏற்ப நம்முடைய உணவை பங்கிட்டு வழங்கினால் அதில் அல்லாஹ் நிச்சயமாக பரக்கத் செய்வான். மேலும் வசதி படைத்தவர்க்ள அணியும் ஆடைகளை அவ்வப்போது மாற்றிக்கொண்டே இருப்பார்கள். ஒருமுறை அணிந்த ஆடையை மறுமுறை அணியாதவர்களும் உண்டு. அப்படிப்பட்டவர்கள் தங்கள் உபயோகித்த ஆடைகளை தேவையுடையவர்களை தேடி வழங்கினால் இவர்களுக்கு நன்மை கிடைக்கும். மாறாக நாம் எவ்வளவு பெரிய அந்தஸ்துடையவர்; நாம் அணிந்த ஆடையை சாதரண ஒருவன் அணிவதா..? என்ற கர்வத்துடன் தூக்கி குப்பையில் வீசினால் இதுவும் வீண் விரயமாகும். இதுவும் அல்லாஹ்விடத்தில் தண்டனைக்குரியதாகும். அடுத்து அல்லாஹ் செல்வத்தை தந்திருந்தும் கஞ்சத்தனம் செய்பவர்கள் பற்றி எடுத்துக்கொண்டால் இவர்கள் தங்களை மிகப்பெரிய பொருளாதார மேதை என்று நினைத்துக்கொண்டு இவர்கள் செய்யும் கூத்து சொல்லிமாளது. ஒரு சோப்பு வாங்கி மனைவியிடம் கொடுத்துவிட்டு இத்துணை நாளைக்கு வைத்துக்கொள்ளவேண்டும் என்று கெடு விதிப்பவர்களும் உண்டு. குறிப்பிட்ட கெடுவுக்கு முன்னால், அந்த மனைவி ஏங்க! சோப்பு காலியாயிருச்சு என்று சொன்னால் அவ்வளவுதான் இவன் அதற்காக போடும் சத்தம் அடுத்த வீடுதாண்டி கேட்கும். சோப்பு என்பது கரையக்கூடியது அது என்ன கல்லிலா தயாரிக்கப்பட்டது அப்படியே இருப்பதற்கு..? அல்லது அது என்ன சாப்பிடக்கூடிய பொருளா..? மனைவி லேசா கடிச்சிருப்பா என்று சொல்வதற்கு ..? இது உதாரணம் தான்! இவ்வாறான கஞ்சர்களை, சாப்பிட்ட கையால் காக்கா விரட்டமாட்டன் என்பார்கள்ஏனெனில் இவன் கையில் ஒட்டியிருக்கும் சோத்து பருக்கை கீழே விழுந்து அதை காக்கா தின்றுவிடக்கூடாதாம். இவ்வாறு கஞ்சத்தனம் செய்பவர்களை பற்றி அல்லாஹ், அறிந்து கொள்க! அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்யுமாறு அழைக்கப்படும் கூட்டத்தினர் நீங்கள், ஆனால் உங்களில் கஞ்சத்தனம் உடையோரும் இருக்கிறார்கள்; ஆனால் எவன் கஞ்சத்தனம் செய்கிறானோ, அவன் தன் ஆத்மாவுக்கே கஞ்சத்தனம் செய்கிறான் - அல்லாஹ் எவ்விதத் தேவையுமற்றவன் - நீங்கள் தேவையுடையவர்களாக இருக்கின்றீர்கள். எனவே (சத்தியத்தை) நீங்கள் புறக்கணிப்பீர்களாயின், உங்களல்லாத (வேறு ஒரு) சமூகத்தாரை அவன் பதிலாகக் கொண்டு வருவான் பின்னர், உங்களைப் போன்று அவர்கள் இருக்கமாட்டார்கள். (47:38) எனவே, அல்லாஹ் நமக்களித்த அருட்கொடைகளை அவன் விதித்த வரம்புகளுக்குட்பட்டு அனுபவிப்போம். மேலும் அவன் வழியில் செலவும் செய்வோம். நமது சந்ததிகளுக்காக சேமிக்கவும் செய்வோம். அதே நேரத்தில் நம்முடைய உள்ளத்தில் கஞ்சத்தனம் வந்துவிடாமலும், நம்முடைய செயலில் வீண் விரையம் வந்துவிடாமலும் பார்த்துக் கொள்வதோடு, அதற்காக அல்லாஹ்விடத்திலும் பிரார்த்திப்போம். குறிப்பு; இன்றைய தினம் அனுஷ்டிக்கப்படும் உலக சிக்கன நாளை ஆதரித்து இக்கட்டுரை எழுதப்படவில்லை. மாறாக இந்த நாளில் எழுதினால் மாற்றார்களும் சிக்கனம் குறித்த இஸ்லாமிய நிலைப்பாட்டை விளங்கிக்கொள்வார்கள் என்பதற்காக எழுதப்பட்டது. அல்லாஹ்வே மிக அறிந்தவன். இடுகையிட்டது முகவைஅப்பாஸ் நேரம் பிற்பகல் 5:25 கருத்துகள் இல்லை: லேபிள்கள்: சிக்கனம் சனி, 29 அக்டோபர், 2011 துல் ஹஜ் மாதத்தின் முந்திய பத்து நாட்களின் சிறப்புகளும் உழ்ஹிய்யாவின் சட்டங்களும்! அல்லாஹ்வின் திருப்பெயரால்..... ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்களும் மிக சிறப்புக்குரிய நாட்களாகும் ஆகவே இந்த நாட்களில் செய்யும் நல் அமல்களை தெரிந்து நாமும் அமல் செய்து அல்லாஹ்வின் அருட்கொடைகளை பெற்றவர்களாகுவோமாக. சிறப்புகள்1- துல் ஹஜ் மாத முதல் பத்து நாட்களில் செய்யக்கூடிய நல் அமல்களுக்கு ஈடாக வேறு எந்த நாட்களில் செய்யும் நல் அமல்களும் அல்லாஹ்வுக்கு மிகப்பிரியமானவைகளாக இல்லை என நபி (ஸல்) அவர்கள் கூறியபோது அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாத் செய்வதை விடவுமா? என நபித்தோழர்கள் கேட்டார்கள். அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாத் செய்வதை விடவும்தான் ஆனால் அல்லாஹ்வின் பாதையில் பொருளையும் உயிரையும் அர்ப்பணித்து வீரமரணம் அடைந்தவரைத் தவிர என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம் : புகாரி 2- நாட்களில் மிகச்சிறந்த நாள் அரஃபாவுடைய நாள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம் : ஸஹீஹ் இப்னு ஹிப்பான். இந்த நாட்களில் செய்யும் அமல்கள்; 1- ஹஜ் உம்ரா:- ஒரு உம்ரா மற்ற உம்ராவுக்கு இடைப்பட்ட பாவங்களுக்கு பரிகாரமாகும். மேலும் ஏற்றுக்கொள்ப்பட்ட ஹஜ்ஜுக்குரிய கூலி சுவர்க்கத்தைத்தவிர வேறு எதுவும் இல்லை என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.ஆதாரம் - புகாரி முஸ்லிம். 2-உபரியான தொழுகைகள் நோன்புகள் தர்மங்கள் உறவினர்களுக்கு உதவுவது குர்ஆன் ஓதுவது பாவமன்னிப்பு தேடுவது நன்மையை ஏவுவது தீமையை தடுப்பது போன்ற நல் அமல்களில் ஈடுபடுவது. [குறிப்பு- துல் ஹஜ் மாதத்தின் பத்தாம் நாளாகிய பெருநாளன்று நோன்பு நோற்பது தடை செய்யப்பட்டுள்ளது.ஆதாரம் - புகாரிமுஸ்லிம்] 3- அரஃபா நோன்பு :- அரஃபா நோன்பு (நோற்பவருக்காக) அந்த நாளுக்கு முந்திய வருடத்தின் பாவங்களையும் அதற்கு பின்னுள்ள வருடத்தின் பாவங்களையும் அல்லாஹ் மன்னிப்பான் என நான் நம்புகின்றேன் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.ஆதாரம்-முஸ்லிம் [குறிப்பு :- அரஃபா நோன்பை ஹாஜிகள் நோற்க்கக்கூடாது ஹஜ் செய்யாதவர்கள் இந்த நோன்பை நோற்பது மிகவும் சிறந்தது] அரஃபா தினத்தன்று அரஃபாவில் தங்கியிருந்த நபி (ஸல்) அவர்கள் தன்னிடம் கொண்டுவந்த பாலை அருந்தி தான் நோன்பு நோற்கவில்லை என்பதை மக்களுக்கு அறிவித்திருக்கின்றார்கள்.ஆதாரம் புகாரி முஸ்லிம். 4- தக்பீர் கூறுவது:- கடமையான தொழுகைகளுக்குப் பின்னரும் பள்ளிவாசல் வீடு கடைவீதி போன்ற எல்லா இடங்களிலும் தக்பீர் கூறுவது ; ஹஜ் மாத முதல் பத்து நாட்களில் செய்யக்கூடிய நல் அமல்களுக்கு ஈடாக வேறு எந்த நாட்களில் செய்யும் நல் அமல்களும் அல்லாஹ்வுக்கு மிகப்பிரியமானவைகளாக இல்லை. ஆகவே லாஇலாஹா இல்லல்லாஹ், அல்லாஹு அக்பர், அல்ஹம்து லில்லாஹ் போன்ற திக்ருகளை அதிகமாக செய்யுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம் : அஹ்மத். இப்னு உமர் (ரலி) அபூஹுரைரா (ரலி) ஆகிய இரு நபித்தோழர்களும் துல்ஹஜ் (மாதம் ஆரம்ப) பத்து தினங்களிலும் கடைவீதிகளுக்கு செல்லும் போதெல்லாம் தக்பீர் கூறுவார்கள் இவ்விருவரும் கூறுவதை கேட்கின்ற மற்ற மக்களும் தக்பீர் கூறுவார்கள். ஆதாரம் - புஹாரி. 5- ஹஜ் பெருநாள் தொழுகை இன்னும் குத்பா பிரசங்கத்தில் கலந்து கொள்வது. நோன்புப் பெருநாளிலும் ஹஜ்ஜுப்பெருநாளிலும் கன்னிப்பெண்கள் மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண்கள் (உட்பட) முஸ்லிம்களின் பிரார்த்தனைகளிலும் நல்ல அமல்களிலும் கலந்து கொள்ள வேண்டும் என நபி (ஸல்) அவர்கள் எங்களுக்கு கட்டளையிட்டார்கள். மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண்கள் தொழுகையில் கலந்து கொள்ளாமல் தொழுகை நடக்கும் பகுதிக்கு வெளியே இருந்து கொள்ள வேண்டும் என்றார்கள். ஆதாரம் :- புகாரி முஸ்லிம். 6- உழ்ஹிய்யா:- உழ்ஹிய்யா என்பது ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகைக்கு பின் இறை திருப்தியை நாடி அறுக்கப்படும் பிராணிக்கு சொல்லப்படும் இது நபியவர்கள் வலியுறுத்திய சுன்னத்தாகும்.கொம்புள்ள கறுப்பு நிறம் கலந்த இரண்டு வெள்ளை நிற ஆடுகளை நபி (ஸல்) அவர்கள் உழ்ஹிய்யாவாக கொடுத்தார்கள் அப்போது பிஸ்மில்லாஹி அல்லாஹு அக்பர் என்று கூறி அவ்விரண்டின் ஒரு பக்கத்தின் மீது தனது காலை வைத்து கையால் அறுத்தார்கள். ஆதாரம் - புஹாரி. குர்பானி பிராணியின் வயது; குர்பானி கொடுக்கப்பட வேண்டிய பிராணிகளில் ஒட்டகத்திற்கு ஐந்து வயதும், ஆடு, மாடுகளுக்கு இரண்டு வயதும் பூர்த்தியடைந்திருக்க வேண்டும். “முஸின்னா”வைத் தவிர வேறு எதனையும் அறுக்காதீர்கள். அது கிடைக்க வில்லையானால் ஆறுமாதக் குட்டியைக் கொடுங்கள்! என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்”.(ஜாபிர்(ரலி) – முஸ்லிம், அபூதாவூத், நஸஈ, இப்னுமாஜா, அஹ்மத் ) இங்கு “முஸின்னா” என்று கூறப்படும் வார்த்தை ஆடு மாட்டில் இரண்டு பல் முளைத்த பிராணிகளுக்கு பயன்படுத்தப் படுகின்றது. ஒட்டகம் ஐந்து வயது முடிந்தவுடனும், ஆடு, மாடு இரண்டு வயது முடிந்தவுடனும் இரண்டு பற்கள் வருவதால், ஒட்டகம் ஐந்து வயது, ஆடு, மாடு இரண்டு வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டுமெனக் கூறப்படுகின்றது. “முஸின்னா” கிடைக்காவிட்டால் ஆறுமாதக் குட்டியாட்டை அறுப்பது இந்த ஹதீஸில் அனுமதிக்கப்பட்டுள்ள போதிலும் பிறிதொரு ஹதீஸின் மூலம் அது ஒரு தோழருக்கு மாத்திரம் வழங்கப்பட்ட சலுகை என்பதைப் புரிந்துகொள்ள முடிகின்றது. “இன்றைய நாளில் நாம் முதலாவது செய்வது தொழுகையாகும். பிறகு நாம் (வீட்டிற்கு) திரும்பிச்சென்று குர்பானி கொடுப்போம். யார் இப்படி நடந்துகொள்வாரோ அவர் நமது வழியில் நடந்துகொண்டார். யார் (தொழுமுன்) அறுத்தாரோ அவர் தன் குடும்பத்தினருக்காக மாமிசத்தை முற்படுத்திக் கொண்டார். அவருக்கு குர்பானியின் நன்மை எதுவும் கிடையாது” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது அபூபுர்தா(ரலி) அவர்கள் (தொழு முன்) அறுத்துவிட்டார். அவர் (நபி(ஸல்) அவர்களிடம்) என்னிடத்தில் முஸின்னாவை விட சிறந்த ஆறுமாதக் குட்டியுள்ளது (அதைக் குர்பானி கொடுக்கலாமா) என்றார். முன் அறுத்ததிற்கு இதைப் பகரமாக்குவீராக (அறுப்பீராக). எனினும், உமக்குப் பிறகு வேறு எவருக்கும் இதை (குர்பானிகொடுக்க) அனுமதியில்லை” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (பரா(ரலி) – புகாரி, முஸ்லிம்) உழ்ஹிய்யாவிற்கான கால் நடைகளில் கீழ்க்கண்ட குறைகள் இருக்கக்கூடாது: கண் குறுடு கடுமையான நோயானவை மிகவும் மெலிந்தவை நொண்டியானவை அங்கங்கள் குறையுள்ளவை. கூட்டு குர்பானி; உழ்ஹிய்யாவுக்காக அறுத்துப் பலியிடப்படும் பிராணி ஒட்டகம் அல்லது மாடாக இருப்பின் ஏழு நபர்கள் கூட்டாகச் சேர்ந்து கொடுக்க முடியும். என்பதைப் பின்வரும் நபிமொழி விளக்குகின்றது. “ஹுதைபியா என்ற இடத்தில் நபி(ஸல்) அவர்களுடன் ஏழு பேர் சேர்ந்து ஓர் ஒட்டகத்தையும், ஏழு பேர் சேர்ந்து ஒரு மாட்டையும் நாங்கள் அறுத்துப் பலியிட்டோம்”(ஜாபிர்(ரலி) – முஸ்லிம், அபூதாவூத், திர்மிதி) குர்பானிப் பிராணி ஆடாக இருப்பின் ஒருவர் தமக்காகவும், தமது குடும்பத்தினருக்காகவும் ஓர் ஆட்டை அறுத்துப் பலியிட முடியும். “நபி(ஸல்) அவர்கள் காலத்தில் எவ்வாறு குர்பானி கொடுக்கப்பட்டு வந்தது என்று அபூ அய்யூப்(ரலி) அவர்களிடம் நான் கேட்டேன். அதற்கு அவர்கள், ஒருவர் தமக்கும் தமது குடும்பத்திற்கும் சேர்த்து ஒர் ஆட்டையே குர்பானி கொடுப்பார்.(அதாஃ பின் யஸார்(ரலி) – திர்மிதி, இப்னு மாஜா முவத்தா) அறுக்கும் நேரம் ; ஹஜ்ஜு பெருநாள் தொழுகைக்கு பின் அறுக்க வேண்டும்யார் தொழுகைக்கு முன் அறுக்கின்றாரோ அது உழ்ஹிய்யாவாக ஆகாது அவர் தன் குடும்பத்தின் தேவைக்காக அறுத்ததாகவே கணக்கிடப்படும்.யார் தொழுகைக்கு முன் அறுக்கின்றாரோ அவர் இன்னும் ஒரு முறை குர்பாணி கொடுக்கட்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம் - புகாரி, யார் (பெருநாள்) தொழுகைக்கு முன் அறுக்கின்றாரோ அது அவரின் குடும்பத்தேவைக்காக அறுத்ததாக கணக்கிட்டுக்கொள்ளட்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்) அறுக்கும் முறை~ ஆடு மாடுகளை படுக்கவைத்து ஒருக்கணித்து அறுக்க வேண்டும் (முஸ்லிம்)~ ஒட்டகத்தை நிற்கவைத்து அறுபடும் நரம்புகள் வெட்டப்படும் அளவுக்கு அறுக்கும் கருவியால் கீறிவிடவேண்டும். (முஸ்லிம்)~ அறுக்கும் போது பிஸ்மில்லாஹி அல்லாஹு அக்பர் என்று கூற வேண்டும். (புகாரி) இறைச்சிகளை விநியோகித்தல்; لِيَشْهَدُوا مَنَافِعَ لَهُمْ وَيَذْكُرُوا اسْمَ اللَّهِ فِي أَيَّامٍ مَّعْلُومَاتٍ عَلَى مَا رَزَقَهُم مِّن بَهِيمَةِ الْأَنْعَامِ فَكُلُوا مِنْهَا وَأَطْعِمُوا الْبَائِسَ الْفَقِيرَ தங்களுக்குரிய பலன்களை அடைவதற்காகவும்; குறிப்பிட்ட நாட்களில் அல்லாஹ் அவர்களுக்கு அளித்துள்ள (ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற) நாற்கால் பிராணிகள் மீது அவன் பெயரைச் சொல்(லி குர்பான் கொடுப்)பவர்களாகவும் (வருவார்கள்); எனவே அதிலிருந்து நீங்களும் உண்ணுங்கள்; கஷ்டப்படும் ஏழைகளுக்கும் உண்ணக் கொடுங்கள்.[22:28 ] ஸலமா இப்னு அக்வஃ(ரலி) கூறினார் நபி(ஸல்) அவர்கள், 'உங்களில் குர்பானிப் பிராணியை அறுக்கிறவர் (அறுத்ததிலிருந்து) மூன்று நாள்களுக்குப் பின் (அதிலிருந்து எதுவும் அவரின் வீட்டில் எஞ்சியிருக்கும் நிலையில்) காலைப் பொழுதை அடைய வேண்டாம்' என்று கூறினார்கள். அடுத்த ஆண்டு வந்தபோது, மக்கள் 'இறைத்தூதர் அவர்களே! சென்ற ஆண்டு செய்ததைப் போன்றே (இந்த ஆண்டும்) நாங்கள் செய்ய வேண்டுமா?' என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள் 'நீங்களும் அதிலிருந்து உண்டு (மற்றவர்களுக்கும்) உண்ணக் கொடுங்கள். சேமித்து வைத்துக்கொள்ளுங்கள். ஏனென்றால், கடந்த ஆண்டில் மக்களுக்கு (பஞ்சத்தால்) சிரமம் ஏற்பட்டிருந்தது. எனவே, நீங்கள் அந்தச் சிரமத்தைப் போக்க (அவர்களுக்கு) உதவ வேண்டும் என்று விரும்பினேன்' என்று பதிலளித்தார்கள். ஆதாரம்;புஹாரி எண் 5569 “உழ்ஹிய்யாக் கொடுப்பவர் தானும் சாப்பிட்டு தனது உறவினர்களுக்கும் அன்பளிப்புச் செய்து ஏழைகளுக்கு தர்மமாகக் கொடுத்தல் சுன்னத்தாகும். செய்யக்கூடாதவை; உழ்ஹிய்யா கொடுக்கப்பட்ட கொடுக்கப்பட்ட பிராணிகளின் முடிகளையோ தோல்களையோ மாமிசங்களையோ அறுத்தவருக்கு கூலியாக கொடுக்கக்கூடாது. குர்பானி கொடுப்பதற்கான ஒட்டகங்களை மேற்பார்வை செய்வதற்கு என்னை நபி (ஸல்) அவர்கள் நியமித்தார்கள் அவைகளின் மாமிசம் தோல் ஆகியவற்றை தர்மமாகவே கொடுக்க வேண்டும் என்றும் அவற்றில் எதையும் அறுப்பவருக்கு கூலியாக கொடுக்கக்கூடாது என்றும் கூறினார்கள் என அலி (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.ஆதாரம்:- புகாரி, ஹஜ் மாதம் பிறந்ததும் உழ்ஹிய்யா கொடுக்க நாடியவர் தன்னுடைய முடி மற்றும் நகத்திலிருந்து எதையும் அகற்றக்கூடாது என நபி (ஸல்) அவர்கள் தடைசெய்தார்கள்.ஆதாரம்:- முஸ்லிம் குறிப்பு:- இத்தடை உழ்ஹிய்யா கொடுப்பவருக்கு மாத்திரம்தான் அவரின் குடும்பத்தினருக்கு அல்ல. நன்றி; இப்ராஹீம் மதனி மற்றும் மவ்லவி இஸ்மாயில் ஸலபி ஆகியோரின் ஆக்கங்களில் இருந்து தொகுக்கப்பட்டது. இடுகையிட்டது முகவைஅப்பாஸ் நேரம் முற்பகல் 9:26 கருத்துகள் இல்லை: லேபிள்கள்: உள்ஹிய்யா, துல்ஹஜ் ஞாயிறு, 25 செப்டம்பர், 2011 உள்ளாட்சித் தேர்தல்; உளரும் பீஜே! بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ ''பத்ஹுல்முயீன்' எனும் மத்ஹப் நூலைப் பற்றி பீஜே பேசும் போது, ''எந்த ஒரு மஸாயில் பிரச்சினையை இந்த நூலில் பார்த்தாலும், சரியான சொல்படி கூடும்; மிகச்சரியான சொல்படி கூடாது; தேர்ந்தெடுக்கப்பட்ட சொல் பிரகாரம் வெறுக்கத்தக்கது; இதில் நான் என்ன சொல்றேன்னா தவிர்ந்து கொள்வது நல்லது என்று கிதாபுக்காரர் சொல்வது. ஆக மத்ஹபுங்கிற பேருல இப்பிடி பைத்தியம் வெளையாடுராங்கம்மா என்பார். இப்போது சற்றேறக் குறைய உள்ளாட்சித் தேர்தலில் இதே பாணியில் பீஜே பதில் சொல்லியுள்ளார். * சரியான சொல் பிரகாரம் பைலா படி உறுப்பினர் போட்டியிடுவது கூடும். *மிகச் சரியான சொல் பிரகாரம் உறுப்பினரும் ஈமான் இழக்க கூடாது என்பதுதான் நமது நிலைப்பாடு.[அதாவது ஈமானை இழக்க நேரிடும் என்பதால் போட்டியிடக் கூடாது] *தேர்ந்தெடுக்கப்பட்ட சொல் பிரகாரம் உறுப்பினர்கள் போட்டியிட தடை விதிக்கும் சட்ட திருத்தம் பொதுக்குழு உறுப்பினர்கள் கொண்டு வரலாம். * இதுல என்னுடைய [கிதாபுக்காரர் பீஜே] கருத்து என்னன்னா தனிப்பட்ட உறுப்பினர்களும் போட்டியிடக் கூடாது என்பதுதான். உள்ளாட்சியின் மூலம் அரசியல் வெள்ளோட்டம் விடும் ததஜ..?என்ற நமது கட்டுரையையொட்டி, உணர்வு வார இதழில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்துள்ள பீஜே, ''ததஜ விதிமுறைகளை வகுத்துக்கொண்டு அதன்படி செயல்படும் அமைப்பாகும். அந்த பைலாவை ஏற்றுக்கொண்டு தான் உறுப்பினர்கள் அதில் அங்கம் வகிக்கின்றனர்'' என்கிறார். நாம் கேட்பது பைலாவின் சட்டதிட்டங்கள் அனைவருக்கும் பொதுவானதாக இருக்கும் நிலையில், சில ஷரத்துகள் உறுப்பினர்களை கட்டுப்படுத்தாது என்று பைலாவில் இருந்து பீஜே காட்டவேண்டும். ''உள்ளாட்சி தேர்தலில் உறுப்பினர்கள் போட்டியிடலாம் என்ற அறிவிப்பு, புதிதாக ஏற்பட்ட மாற்றம் காரணமாக அறிவிக்கப்பட்டதல்ல. இத்தனை ஆண்டுகளாக எந்த நிலை இருந்ததோ அதே நிலைதான் இப்போதும் நீடிக்கிறது'' என்கிறார். நாம் கேட்பது உறுப்பினர்கள் போட்டியிடலாம் என்று பகிரங்கமாக அனுமதி அளித்து பொதுச்செயலாளர் அறிக்கை வெளியிட்டாரே! இது போன்று கடந்த ஆண்டுகளில் வெளியிட்ட அறிக்கைகளை பீஜே காட்டவேண்டும். ''மதுஅருந்துதல், வட்டி வாங்கி சாப்பிடுதல், சூதாட்டத்தில் ஈடுபடுதல், விபச்சாரத்தில் ஈடுபடுதல்,விபச்சாரத்தில் ஈடுபட்டிருக்க வாய்ப்புள்ள விதத்தில் அந்நியப் பெண்ணுடன் தனித்திருத்தல், இயக்கத்துக்கோ தனி நபருக்கோ பொருளாதார மோசடி செய்தல், உள்ளாட்சி, சட்டமன்றம், நாடாளுமன்றம், ஆகிய தேர்தலில் போட்டியிட்டுதல், அதுபோன்ற பதவிகளை வகித்தல், இதுபோன்ற காரியங்களில் ஈடுபடுவோர் கிளை மாவட்டம் மற்றும் மாநிலம் ஆகிய பொறுப்புகளுக்கு போட்டியிட அனுமதியில்லை. மேற்கண்ட காரியங்களில் ஈடுபடுவோர் கிளை மாவட்டம் மற்றும் மாநிலம் ஆகிய பொறுப்புகளுக்கு போட்டியிட அனுமதியில்லை என்ற வாசகமே அத்தகையவர்கள் உறுப்பினராக இருக்கலாம் என்பதை தெள்வுபடுத்துகிறது எனவே உறுப்பினர்கள் போட்டியிடலாம் என்கிறார் பீஜே. நாம் கேட்பது மேற்கண்ட தீமைகளை செய்தால் இந்த ஜமாஅத்தில் சாதாரண கிளை நிர்வாகியாக கூட உனக்கு அனுமதியில்லை என்று எச்சரிப்பதற்காக மேற்கண்டவைகள் சொல்லப்பட்டுள்ளதா? அல்லது நிர்வாகிகள் நீங்கலாக மற்றவர்கள் மேற்கண்ட தீமைகளை செய்யலாம் என்று அனுமதிக்கும் வகையில் சொல்லப்பட்டுள்ளதா? சரி பீஜேயின் கூற்றுப்படி, மேற்கண்ட தவறை ஒரு உறுப்பினர் தானாக செய்தாலே அவன் நிர்வாகி ஆகமுடியாது என்ற நிலை இருக்கும் போது, உறுப்பினர் இந்த தவறை செய்யலாம் என்று ஒரு பொதுச்செயலாளர் அறிவிப்பது அந்த செயலை அவனை செய்யத் தூண்டுவிட்டு பின்னர் அவனை நீ பொறுப்புக்கு தகுதியிலாதவன் எண் கூறுவது எந்த வகையில் அறிவுடமை என்று பீஜே சொல்லவேண்டும். அடுத்து உள்ளாட்சியில் உறுப்பினர் போட்டியிடலாம் என்று அறிவித்தவர்கள் மேற்கண்ட பாரவை மேற்கோள் காட்டி சட்டமன்றம் நாடாளுமன்ற தேர்தலிலும் உறுப்பினர் போட்டியிடலாம் என்று அறிவிப்பார்களா? அதுமட்டுமல்ல, உறுப்பினர் மது அருந்தலாம்; அவ்வாறு அருந்தும் போது அமைப்பின் கொடியையோ, அமைப்பின் பெயரையோ பயன்படுத்துவது கூடாது. என்று அறிவிப்பார்களா? உறுப்பினர் வட்டிவாங்கி சாப்பிடலாம்; அவ்வாறு சாப்பிடும் போது அமைப்பின் கொடியையோ, அமைப்பின் பெயரையோ பயன்படுத்துவது கூடாது. என்று அறிவிப்பார்களா? உறுப்பினர் விபச்சாரம் செய்யலாம்; அவ்வாறு செய்யும் போது அமைப்பின் கொடியையோ, அமைப்பின் பெயரையோ பயன்படுத்துவது கூடாது. என்று அறிவிப்பார்களா? உறுப்பினர் விபசாரத்தில் ஈடுபட வாய்ப்புள்ள வகையில் அன்னியப் பெண்ணுடன் தணித்திருக்கலாம்; அவ்வாறு இருக்கும் போது அமைப்பின் கொடியையோ, அமைப்பின் பெயரையோ பயன்படுத்துவது கூடாது. என்று அறிவிப்பார்களா? உறுப்பினர் தனி நபருக்கோ, இயக்கத்துக்கோ பொருளாதார மோசடி செய்யலாம்; அவ்வாறு செய்யும் போது அமைப்பின் கொடியையோ, அமைப்பின் பெயரையோ பயன்படுத்துவது கூடாது. என்று அறிவிப்பார்களா? உள்ளாட்சியில் போட்டியிடுவதை அதிகாரப்பூர்வமாக அறிவித்ததை போன்று, மேற்கண்டவைகள் குறித்தும் அதிகாரப்பூர்வமாக அறிக்கை வெளியிட்டு உறுப்பினர்களின் சந்தேகத்தை நீக்குவார்களா? ''உறுப்பினர்களாக உள்ளவர்கள் செய்யும் எந்தக் காரியமும் ஜமாஅத்துடன் தொடர்பு படுத்த முடியாது. ஜமாஅத்தின் பெயரை அல்லது கொடியை, அல்லது நிர்வாக பதவியை பயன்படுத்தினால் தான் அது ஜமாஅத் செய்ததாக கருதப்படும். சாதாரண உறுப்பினர்களுக்கு இது பொருந்தாது என்ற அடிப்படையில் தான் பல ஆண்டுகளாக இந்த முடிவு கடைபிடிக்கப்படு வருகிறது'' என்கிறார். நாம் கேட்பது ஜமாஅத் என்பது நிர்வாகிகள் மட்டும் தானா? உறுப்பினர்கள் உங்கள் ஜமாஅத்தின் அங்கத்தினர் இல்லையா? உறுப்பினர் மேற்கண்ட தீமைகளை செய்தால் அது ஜமாஅத்தை ஜமாஅத்தின் அடிப்படைக் கொள்கையை பாதிக்காது என்றால், உங்களால் பாலியல்-ஊழல் குற்றம்சாட்டப்பட்ட பாக்கரை அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்க முடியாதே? ஏனென்றால் ஒருவர் விபசாரம் செய்தால் கூட உறுப்பினராக இருக்கலாம் என்று நீங்கள் சொல்லும் விளக்கம் பிரகாரம் வெறும் விபச்சார குற்றம் சாட்டப்பட்ட பாக்கரை நீக்கியது எப்படி? ஜமாத்திற்கோ, தனி நபருக்கோ பொருளாதார மோசடி செய்தாலும் உறுப்பினராக இருக்கலாம் என்ற உங்களின் விளக்கபடி, உறுப்பினரான சைபுல்லாஹ் மோசடியே செய்திருந்தாலும் அவரை நீக்க முடியாதே! நீக்கியது எப்படி? ''கடந்த உள்ளாட்சி தேர்தலின் போது நம்முடைய உறுப்பினர்கள் பலர் சொந்த ஊரில் சுயேட்சையாக நின்றனர். அது குறித்து விசாரணை நடத்தப்பட்ட போது பைலாவில் உள்ள விதிப்படி இதை தடுக்க முடியாது என்பதால் அதை ஏற்றுக்கொண்டோம்'' என்கிறார். பீஜேயின் மேற்கண்ட வாக்குமூலப்படி உறுப்பினர் போட்டியிடலாம் என்ற பைலா அனுமதி கடந்த உள்ளாட்சி தேர்தல் முடியும் வரை வரை பீஜே உள்ளிட்ட மாநில நிர்வாகிகளுக்கே தெரியவில்லையாம். அதனால்தான் போட்டியிட்டவரை விசாரித்துள்ளார்கள். அதன் பின்புதான் பைலா அனுமதி, பைலா வடிவமைப்பாளரான பீஜெவுக்கே தெரிந்ததாம். இதன் மூலம் தெரிவது என்ன? தேர்தலில் உறுப்பினர்கள் போட்டியிடலாம் என்பது பல்லாண்டுகளாக உள்ள நிலை என்றால், கடந்த முறை போட்டியிட்ட உறுப்பினரை ஏன் விசாரணை நடத்த வேண்டும்? இதன் மூலம் கடந்த தேர்தல் வரை தேர்தலில் போட்டியிடும் சிந்தனை மாநில நிர்வாகத்திற்கு இருக்கவில்லை. இந்த ஆண்டு தான் புதியதாக உதயமாகியுள்ளது என்பது தெரிகிறதல்லவா? ''உள்ளாட்சித் தேர்தலில் தனது தெருவில் மட்டும் தான் ஒருவர் ஓட்டுக் கேட்பார். அவர் ஈமானை இழக்கும் செயலில் ஈடுபடும் அவசியம் ஏற்படாது'' என்ற அற்புதமான விளக்கமளிக்கிறார் பீஜே. நாம் கேட்கிறோம். தேர்தலில் போட்டியிடாமல் களப்பணி ஆற்றினாலே ஈமான் போய்விடும் என்ற கொள்கையுடைய நீங்கள், ஒரு தெருவில் ஓட்டுக் கேட்டால் ஈமான் போகாது என்பதற்கு வைக்கும் அளவுகோல் என்ன? மேலும் உள்ளாட்சியின் எல்லை கூட பேரறிவாளர் என்று கருதப்படும் இவருக்கு தெரியாதது ஆச்சர்யமே! ஒரு வார்டு எல்லை கூட ஒரு தெருவோடு முடிவதில்லை. வார்டை தாண்டி ஊராட்சி மன்றத் தலைவரும் உள்ளாட்சியில் உள்ளதுதான். ஊராட்சி மன்றத் தலைவருக்கு போட்டியிட்டால் ஒரு தெரு அல்ல; ஒரு ஊரைக் கூட தாண்டி ஓட்டுக் கேட்டாக வேண்டும். அப்படியானால் ஊரளவில் ஓட்டுக் கேட்பவர் ஈமான் நிலை என்ன? அடுத்து, நகராட்சி எல்லை இதையும் தாண்டியது. பேரூராட்சி எல்லை அதையும் தாண்டியது. மாநகராட்சி மேயர் எல்லை பல தொகுதிகளை உள்ளடக்கியது. இவையெல்லாம் உள்ளாட்சியின் அங்கம் தான். பீஜேயின் உறுப்பினர் மேயருக்கு போட்டியிட்டால் பல சட்டமன்றத் தொகுதிகளில் ஓட்டுக் கேட்கும் நிலை வருமே? அப்போது ஈமான் போகுமா? போகாதா? ''ஈமானை இழக்கும் காரியத்தில் ஈடுபட்டால் அவர் அதற்காகவே அடிப்படை உறுப்பினர் தகுதியில் இருந்து நீக்கப்படுவார்'' என்கிறார். கையெடுத்து கும்பிடுவது மட்டும் தான் ஈமானை இழக்கும் காரியமா? ஊராட்சி அலுவலகம்- நகராட்சி- பேரூராட்சி- மாநகராட்சி அலுவலகங்களின் நடைமுறை அனைத்தும் ஈமானை பலப்படுத்தும் காரியம் என்று பீஜே சொல்வாரா? சட்டமன்றத்தில் நடக்கும் கூத்துக்களுக்கு கடுகளவும் குறைவில்லாமல் இங்கும் நடக்குமே? அப்படிப்பட்ட பதவிக்கு தனது உறுப்பினர் போட்டியிடலாம் என்று அனுமதி அளித்து விட்டு, பின்னர் அவர்களை வேறு வழியின்றி சிலகாரியங்களை செய்யும் நிலைக்கு தள்ளி, பிறகு அதற்காக நடவடிக்கை என்றால், பிள்ளையையும் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டிய கதையாகாதா? ''ஒரு தெருவில் ஓட்டுக் கேட்பது ஈமானை பாதிக்காது' என்பது உங்களின் நிலையானால், உறுப்பினர்களும் ஈமானை இழக்க கூடாது என்ற பேச்சுக்கு இங்கு வேலை இல்லையே? என்னுடைய கருத்து என்னன்னா...? என்று சொந்த கருத்தை கொண்டு வர வேண்டியதில்லையே? பொதுக்குழுவில் திருத்தம் என்றெல்லாம் புலம்ப வேண்டியதில்லையே? ஆக, சகோதரர்களே! உள்ளாட்சியில் போட்டியிடுவது பைலா படி சரியென்றால், சட்டமன்றம்- நாடாளுமன்றம் உள்ளிட்ட தேர்தல்கள், மேலே பட்டியலிட்டுள்ள தீமைகள் அனைத்தும் உறுப்பினர்கள் செய்யலாம் என்று பீஜே அறிவிக்கத் தயாரா? என்பதுதான் நமது சவாலாகும். இடுகையிட்டது முகவைஅப்பாஸ் நேரம் பிற்பகல் 5:36 கருத்துகள் இல்லை: லேபிள்கள்: பீஜே வெள்ளி, 23 செப்டம்பர், 2011 நபி[ஸல்] அவர்களின் திருமணங்கள்; பீஜே அன்றும்-இன்றும்! بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ நபி[ஸல்] அவர்கள் பல திருமணங்களை செய்துள்ளதை நாம் அறிவோம். இத்தனை திருமணங்கள் என்ன காரணத்திற்காக நபி[ஸல்] அவர்கள் செய்தார்கள் என்று அல்லாஹ் தனது வேதத்தில் கூறியிருக்க வேண்டும். [ஒரு திருமணம் நீங்கலாக] நபி[ஸல்] அவர்களின் வேறு திருமணங்களுக்கான காரணம் அல்லாஹ்வின் வேதத்தில் சொல்லப்படவில்லை. அடுத்து சம்மந்தப்பட்ட நபி[ஸல்] அவர்களும் இத்தனை திருமணம் செய்ததற்கான காரணத்தை சொல்லவில்லை. ஆக குர்'ஆனிலும்-ஹதீஸிலும் இல்லாத சுய விளக்கம் தரமுயன்றால் அங்கே முரண்பாடு வரும் என்பதற்கு அறிஞர் பீஜே ஒரு அற்புத சான்றாக திகழ்கிறார். இவரது சுய விளக்கம் குர்'ஆன்- ஹதீஸோடு முரண்படுவது மட்டுமன்றி, இவருக்கு இவரே முரண்படுவதையும் நீங்கள் இப்போது படியுங்கள்; நபி[ஸல்] அவர்கள் பல திருமணம் செய்தது ஏன் என்று தனது திருக்குர்ஆன் தமிழாக்கத்தில் எழுதிய விளக்கத்தை அவரது தளத்தில் வெளியிட்டுள்ளார் மவ்லவி பீஜே. பார்க்க; http://onlinepj.com/Quran-pj-thamizakkam-thawheed/vilakkangal/378/ அதில் நபி[ஸல்] அவர்கள் ஒவ்வொரு மனைவியை திருமணம் செய்ததற்கும் இதுதான் காரணம் என்று சொல்கிறார். அவரது சுய வியாக்கியானம் எந்த அளவுக்கு குர்'ஆன்- ஹதீஸோடு மோதுகிறது என்பதை முதலில் இங்கே முன்வைக்கிறோம். அன்னை ஆயிஷா[ரலி] அவர்களை திருமணம் செய்ததற்கு பீஜே கூறியுள்ள காரணம்; அபூபக்கர்[ரலி] அவர்கள் நபி[ஸல்] அவர்களின் உயிர் நண்பராக இருந்ததால் ,தமக்கும் நபிகள் நாயகத்திற்கும் ஒரு உறவை ஏற்படுத்தவேண்டும் என்று ஆசைப்பட்டுஅபூபக்கர்[ரலி] அவர்கள் வற்புறுத்தியதன் பேரில்தான் ஆயிஷா[ரலி] அவர்களை நபிகள் நாயகம்[ஸல்] அவர்கள் மணந்தார்கள். ஹதீஸில் பீஜே கூறும் விளக்கத்திற்கு மாற்றமாக உள்ளதை கவனியுங்கள்; உர்வா இப்னு ஸுபைர்(ரஹ்) அறிவித்தார்; நபி(ஸல்) அவர்கள் அபூ பக்ர்(ரலி) அவர்களிடம் (அவர்களின் புதல்வியும் சிறு வயதினருமான) ஆயிஷா(ரலி) அவர்களைப் பெண் கேட்டார்கள். அதற்கு அபூ பக்ர்(ரலி) 'நான் தங்களின் சகோதரன் ஆயிற்றே!'' என்று கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'அல்லாஹ்வின் மார்க்கத்தின் அடிப்படையிலும் வேதத்தின் அடிப்படையிலுமே நீங்கள் எனக்கு சகோதரர் ஆவீர்கள். உங்களுடைய புதல்வி எனக்கு மணமுடிக்க அனுமதிக்கப்பட்டுள்ளவர் தாம்'' என்று கூறினார்கள்.[புஹாரி எண்; எண் 5081 ] அபூபக்கர்[ரலி] அவர்கள் வற்ப்புறுத்தியதின் பேரில்தான் அன்னை ஆயிஷா[ரலி] அவர்களை நபி[ஸல்] அவர்கள் மணந்தார்கள் என்ற பீஜேயின் விளக்கத்திற்கு மாற்றமாக, நபி [ஸல்] அவர்கள்தான் அபூபக்கர்[ரலி] அவர்களை சந்தித்து பெண் கேட்கிறார்கள். அபூபக்கர்[ரலி] அவர்கள் நபி[ஸல்] அவர்களை சந்தித்து என் மகளை மணந்து கொள்ளுங்கள் என்று ஒரு போதும் கேட்கவில்லை. மேலும், நபி[ஸல்] அவர்கள், அன்னை ஆயிஷா[ரலி] அவர்களை பெண் கேட்டவுடன் அப்போது கூட அபூபக்கர்[ரலி] அவர்கள் உடனே சம்மதிக்கவில்லை. நான் உங்கள் சகோதரன் அல்லவா என்று கேட்கிறார்கள். பின்பு நபியவர்கள் விளக்கமளித்தபின் தான் ஒப்புக்கொள்கிறார்கள். உண்மை இவ்வாறிருக்க நபியவர்களை வற்புறுத்தி அன்னை ஆயிஷா[ரலி] அவர்களை திருமணம் செய்துவைத்தார் அபூபக்கர்[ரலி] என்று பீஜே கூறுவது ஹதீஸுக்கு முரணில்லையா..? அன்னை ஹஃப்ஸா[ரலி] அவர்களை நபி[ஸல்] அவர்கள் மணந்து கொண்டதற்கு பீஜே கூறும் காரணம்; நபிகள் நாயகம்[ஸல்] அவர்கள் தமது 56 வது வயதில் ஹஃப்ஸா[ரலி] அவர்கள் திருமணம் செய்தார்கள். இவர் நபிகள் நாயகத்தின் மற்றொரு உயிர் நண்பரான உமர்[ரலி] அவர்களின் புதல்வியாவார். தமது விதவை மகளை நபிகள் நாயகம்[ஸல்] மணந்துகொண்டால், நபிகள் நாயகத்துடன் தமது உறவு பலப்படும் என்று விரும்பிய உமர்[ரலி] அவர்கள் வற்புறுத்தியதுதான் இத்திருமணத்திற்கும் காரணம் என்கிறார் பீஜே. ஹதீஸில் பீஜே கூறும் விளக்கத்திற்கு மாற்றமாக உள்ளதை கவனியுங்கள்; அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்கள்; உமர் இப்னு கத்தாப்(ரலி) (தம் மருமகன்) குனைஸ் இப்னு ஹுதாஃபா அஸ்ஸஹ்மீ(ரலி) இறந்துவிட்டதால் (மகள்) ஹஃப்ஸா விதவையானபோது (அவர்களை வேறொவருக்குத் திருமணம் முடித்து வைக்க எண்ணினார்கள்.)-குனைஸ் அவர்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களின் தோழர்களில் ஒருவரும், பத்ருப்போரில் பங்கெடுத்தவருமாயிருந்தார்கள். மேலும், மதீனாவில் இறந்தார்கள். உமர்(ரலி) கூறினார்:எனவே, நான் உஸ்மான் இப்னு அஃப்பான்(ரலி) அவர்களிடம் சென்று, (என் மகள்) ஹஃப்ஸாவைக் குறித்து எடுத்துக் கூறினேன். அதற்கு உஸ்மான்(ரலி), '(தங்கள் மகளை நான் மணந்துகொள்ளும் இந்த) என் விஷயத்தில் நான் யோசிக்க வேண்டியுள்ளது; (யோசித்து என் முடிவைக் கூறுகிறேன்)'' என்று கூறினார்கள். சில நாள்கள் பொறுத்திருந்தேன். பிறகு உஸ்மான்(ரலி) என்னைச் சந்தித்து 'இப்போது திருமணம் செய்துகொள்ளவேண்டாம் என்றே எனக்குத் தோன்றியது'' என்று கூறினார்கள். எனவே, நான் அபூ பக்ர் ஸித்தீக்(ரலி) அவர்களைச் சந்தித்தேன். (அவர்களிடம்) 'நீங்கள் விரும்பினால், என் மகள் ஹஃப்ஸாவைத் தங்களுக்குத் திருமணம் முடித்து வைக்கிறேன்'' என்று கூறினேன். அபூ பக்ர்(ரலி) அமைதியாக இருந்தார்கள். எனக்கு அவர்கள் எந்த பதிலையும் கூறவில்லை. எனவே, உஸ்மான்(ரலி) அவர்களை விட அபூ பக்ர்(ரலி) மீதே நான் மிகவும் மனவருத்தம் கொண்டவனாக இருந்தேன். சில நாள்கள் பொறுத்திருந்தேன். பிறகு, இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஹஃப்ஸாவைப் பெண் கேட்டார்கள். எனவே, இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கு ஹஃப்ஸாவைத் திருமணம் செய்து வைத்தேன். பிறகு(ஒருநாள்) அபூ பக்ர்(ரலி) என்னைச் சந்தித்து, 'நீங்கள் என்னிடம் ஹஃப்ஸா அவர்களைக் குறித்துச் சொன்னபோது நான் உங்களுக்கு பதிலேதும் கூறாததால், உங்களுக்கு என் மீது மனவருத்தம் இருக்கக்கூடும்'' என்று கூறினார்கள். நான், 'ஆம்'' என்று சொன்னேன். (அதற்கு) அபூ பக்ர்(ரலி), 'நீங்கள் கூறியபோது நான் உங்களுக்கு பதில் கூறாததற்குக் காரணம், இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஹஃப்ஸா அவர்களை (தாம் மணப்பது) பற்றிப் பேசியதை நான் அறிந்திருந்ததே ஆகும். இறைத்தூதர்(ஸல்) அவர்களின் இந்த இரகசியத்தை நான் வெளிப்படுத்த விரும்பவில்லை. (எனவேதான், உங்களுக்கு பதிலோதும் கூறவில்லை). இறைத்தூதர்(ஸல்) அவர்கள் 'ஹஃப்ஸாவை (திருமணம் செய்யாமல்) விட்டிருந்தால், உறுதியாக அவர்களை நான் (மனைவியாக) ஏற்றுக் கொண்டிருப்பேன்..[புஹாரி எண் 5122 ] அன்னை ஹஃப்ஸா[ரலி] அவர்களை, பீஜே கூறியது போல் நபியவர்களை வற்புறுத்தி உமர்[ரலி] அவர்கள் திருமணம் செய்து வைக்கவில்லை. இன்னும் சொல்லப்போனால் நபியவர்களுக்குத்தான் அன்னை ஹஃப்ஸா[ரலி] அவர்களை திருமனம் செய்துவைக்கவேண்டும் என்று உமர்[ரலி] அவர்கள் எண்ணியதுமில்லை. தமது விதவை மகளுக்கு எல்லா தந்தையும் செய்வதுபோல் மணம் செய்துவைக்க உமர்[ரலி] அவர்கள் எண்ணினார்கள். அதற்காக உஸ்மான்[ரலி] அவர்களையும், பின்பு அபூபக்கர்[ரலி] அவர்களையும் சந்தித்து விருப்பமா என்கிறார்கள். இதற்கிடையில் நபியவர்கள் அன்னை ஹப்ஸா[ரலி] அவர்களை பெண் கேட்டதால் அன்னையை நபியவர்களுக்கு உமர்[ரலி] திருமணம் செய்துவைத்தார்கள். மேலும் நபியவர்களை சந்தித்து என்மகளை திருமணம் செய்து கொள்ளுங்கள் என்று உமர்[ரலி] அவர்கள் சொல்லவேயில்லை என்பதும் இங்கே கவனிக்கத்தக்கது. உண்மை இவ்வாறிருக்க நட்பு பலப்படும் என்பதற்காக நபியவர்களை வற்புறுத்தி அன்னையை திருமணம் செய்துவைத்தார் உமர்[ரலி] என்று பீஜே கூறுவது ஹதீஸுக்கு முரணில்லையா..? மேலும், மேற்கண்ட இரு திருமணங்களும் நட்புக்காக நடந்தது என்று கூறி ஹதீஸுக்கு முரண்பட்ட பீஜே, நபிகள் நாயகம் பல திருமணங்கள் செய்தது ஏன்? என்ற தனது நூலில், ''நட்புக்காக அந்த திருமணங்கள் நடந்ததாக கூறுவது பொருந்தாத காரணம்'' என்று கூறி தனக்கு தானே முரண்படுவதை கீழே படியுங்கள்; நட்பைப் பலப்படுத்துவதற்கா? நபிகள் நாயகம் (ஸல்) அவர்களது பிரச்சாரத்தின் ஆரம்ப காலத்திலேயே இஸ்லாத்தை ஏற்றுகொண்ட உற்ற நண்பர்கள் சிலர் இருந்தனர். அவர்களுடன் இருந்த உறவை பலப்படுத்திக் கொள்வதற்காகவும், அதன் மூலம் அவர்களுக்கு மகிழ்ச்சி ஏற்படுத்திடவும் நபியவர்கள் சில திருமணங்களை செய்ய வேண்டிய நிலைக்கு ஆளானார்கள். அபுபக்கர் (ரலி) அவர்களின் புதல்வி ஆயிஷா (ரலி) அவர்கள், உமர் (ரலி) அவர்களின் புதல்வி ஹப்ஸா (ரலி) ஆகியோரை நபியவர்கள் திருமணம் செய்ததை இதற்கு உதாரணமாகக் குறிப்பிடலாம் என்பர் வேறு சிலர். இந்தக் காரணமும் பொருந்தாக் காரணேமயாகும். மேலும், திருமணத்தின் மூலம் பலப்படுத்திக் கொள்ளும் அளவுக்கு நபியவர்களுக்கும், அவர்களின் நண்பர்களுக்கும் இடையே இடைவெளி எதுவுமிருக்கவில்லை.. இந்தத் திருமணங்கள் நடந்திருந்தாலும் , நடக்காதிருந்தாலும் அந்த உறவுக்குப் பங்கம் ஏதும் வந்திருக்காது. உலகத்து இலாபங்களை எதிர்பார்க்காது தங்கள் தலைவராக நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை நேசித்தவர்கள் அந்தப் பெருமக்கள். இந்தக் காரணம் சரியென வைத்துக் கொண்டாலும் ஒன்றிரண்டு திருமணங்களுக்குத் தான் இது பொருந்தி வருமேயன்றி அனைத்து திருமணங்களுக்கும் இது பொருந்தி வராது என்பதால் இந்தக் காரணத்தையும் ஏற்க இயலாது. *************************************** அன்பானவர்களே! விளக்கம் என்ற பெயரில் குர்'ஆனுக்கும்-ஹதீஸுக்கும் முரண்படுவது மட்டுமன்றி, தனக்குத் தானே முரண்படும் இவரை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். நபி[ஸல்] அவர்களின் ஏனைய திருமணங்கள் பற்றிய இவரது வியாக்கியானங்களும்- முரண்பாடுகளும் தொடரும் இன்ஷா அல்லாஹ். இடுகையிட்டது முகவைஅப்பாஸ் நேரம் பிற்பகல் 1:51 கருத்துகள் இல்லை: சனி, 17 செப்டம்பர், 2011 வாழ்க என்று சொல்லலாமா? பீஜே அன்றும்-இன்றும்! بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ தேர்தல் நேரத்தில் கலைஞர் டிவி நிகழ்ச்சி ஒன்றில், அந்நிகழ்ச்சியின் தொகுப்பாளர் 'வணக்கம் சார்' என்று சொல்ல, பீஜே சொன்ன பதில் என்ன என்பதில் இருவேறு கருத்துக்கள் நிலவின. ஒரு சாரார் பீஜே பதிலுக்கு வணக்கம் சொன்னார் என்றனர். ஆனால் பீஜேயும் அவரது தரப்பும் 'வாழ்க சார்' என்று தான் சொன்னோம் என்று அடித்துச் சொனார்கள். உங்களால் முடியுமென்றால் இந்த வீடியோவை பார்த்து பீஜே என்ன சொன்னார் என்று கண்டு பிடித்துக் கொள்ளுங்கள்; இப்ப நாம் பிரச்சினையில் சம்மந்தப்பட்ட பீஜேயின் வாக்குமூலத்தின் அடிப்படையில் 'வாழ்க சார்' என்றே சொன்னார் என்று வைத்துக் கொள்வோம். இதன் மூலம் பீஜே சொன்ன 'வாழ்க சார்' என்ற வார்த்தையை சொல்வதற்கு மார்க்கத்தில் தடையில்லை என்று பீஜே காட்டுகிறார். இந்த வாழ்க சார் என்ற வார்த்தைக்கு, '' நன்றாக வாழுங்கள்' என்று ஆசி வழங்குவது என்பதுதான் இதன் பொருள். இந்த வார்த்தையை சொல்லலாம் என்பது பீஜேயின் நிலை அன்று. இன்று என்ன நிலை? இதோ பீஜேயின் வார்த்தையில் படியுங்கள்; ''வாழ்த்து என்ற சொல் இரண்டு அர்த்தங்கள் கொள்வதற்கு ஏற்ற வகையில் அமைந்துள்ளது. நீங்கள் நன்றாக வாழுங்கள் என்று ஆசி வழங்குவது ஒரு அர்த்தம். நீங்கள் நன்றாக வாழ இறைவனை வேண்டுகிறேன் என்பது இன்னொரு அர்த்தம். நீங்கள் நலமாக இருக்க அல்லது மகிழ்வுடன் இருக்க அல்லது கவலைகள் மறக்க அல்லாஹ்விடம் துஆ செய்கிறேன் என்ற பொருளில் இதைக் கூறினால் இறைவனிடம் ஒரு முஸ்லிம் சகோதரனுக்காக துஆ செய்யும் பொது அனுமதியில் இது அடங்கும். ஆசி வழங்குதல் என்ற பொருள் கொள்பவர்கள் வாழ்த்துகிறேன் என்ற சொல்லை கூற முடியாது. வாழ்த்துகிறேன் என்று ஒருவர் கூறுவதால் அவர் வாழ்ந்து விடுவார் என்று கருதுவதை ஏற்க முடியாது. அப்படி நம்ப முடியாது. நம்பக் கூடாது'' என்கிறார் பீஜே. படிக்க;http://onlinepj.com/kelvi_pathil/bidath_kelvi/eid_mubarak/ பீஜேயின் மேற்கண்ட விளக்கத்தின் படி, சண்முக சுந்தரத்தின் நலம்-மகிழ்வுக்காகவும், கவலைகள் நீங்கவும் அல்லாஹ்விடம் துஆ செய்யும் அடிப்படையில் 'வாழ்க சார்' என்று பீஜே கூறியிருக்க முடியாது. ஏனெனில் அது முஸ்லிம் சகோதரர்களுக்கானது என்று அவரே சொல்லி விட்டார். பீஜேயின் மற்றொரு விளக்கபடி ஆசி வழங்கும் வகையில் தான் 'வாழ்க சார்' என்று பீஜே சொல்லியுள்ளார் என்பது தெளிவாகிறது. மேலும் வாழ்க என்று ஒருவரை வாழ்த்தினால் அவர் வாழ்ந்து விடுவார் என்று நம்பக் கூடாது என்று சொல்லும் பீஜே, அப்படி ஒரு ஆசியை ஏன் சண்முக சுந்தரத்திற்கு வழங்க வேண்டும்? பெருநாள் அன்று வாழ்த்துக்கள் சொல்வது ஃபித்அத் என்றால் இவர் சண்முக சுந்தரத்திற்கு 'வாழ்க சார்' என்று கூறி ஏன் அந்த ஃபித்அத்தை செய்தார்? இப்ப பீஜே இப்படி பல்டியடிக்கலாம். அதாவது முஸ்லிம்கள் பெருநாள் அன்று வாழ்த்து சொல்வதை நன்மையான காரியம் என்று கருதி செய்கிறார்கள். அதனால் அது ஃபித்அத். அனால் நான் 'வாழ்க சார்' என்று சொன்னது சம்பிரதாயத்திற்காக. எனவே இது பித்அத்தில் சேராது என கூற கூடும். முஸ்லிம்கள் யாரும் பெருநாள் வாழ்த்து சொன்னால் இத்தனை நன்மை கிடைக்கும்; அதனால் சொல்கிறோம் என்று இவரிடம் சொன்னார்களா? இவர் எப்படி சம்பிரதாயத்திற்காக வாழ்க சார் போட்டாரோ அதே மாதிரித்தான் முஸ்லிம்கள் சந்தோஷத்தை வெளிப்படுத்த பெருநாள் வாழ்த்துக்கள் என்று சொல்கிறார்கள். இவருக்கு மட்டும் கூடுமான ஒன்று ஏனைய முஸ்லிம்களுக்கு மட்டும் ஃபித்அத்ஆக மாறிவிடுகிறது. இவர் சண்முக சுந்தரத்திற்கு ஆசி வழங்கும் போது வாழ்த்து சொல்வது கூடும். ஆனால் முஸ்லிம்களுக்கு மகிழ்ச்சியான பெருநாளில் வாழ்த்து சொல்வது அர்த்தமற்றது; கூடாதது. இன்னும் இந்த வாழ்த்து விவகாரம் இவரால் எத்தனை பரிமானம் எடுக்குமோ? இடுகையிட்டது முகவைஅப்பாஸ் நேரம் பிற்பகல் 7:34 கருத்துகள் இல்லை: சனி, 10 செப்டம்பர், 2011 நபி[ஸல்] அவர்களை, பீஜே மனநோயாளியாக கருதினாரா? بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ நபி[ஸல்]அவர்களுக்கு சூனியம் வைக்கப்பட்டது என்பதை நம்பினால் நபி[ஸல்] அவர்களை மனநோயாளி ஆக்கப் பார்க்கிறீர்கள் என்று அர்த்தம் என்று இந்த வீடியோவில் அறிஞர் பீஜே சொல்கிறார். அப்படியானால், நபி(ஸல்) அவர்கள் சூனியம் செய்யப்பட்டு அதனால் பாதிக்கப்பட்டார்கள் என்ற செய்தி புகாரி உட்பட பல ஹதீஸ் நூல்களில் காணப்படுகின்றது. அது உண்மைதான். என்று அன்று பீஜே சொல்லிக் கொண்டிருந்தாரே! அப்போது நபியவர்களை பீஜே மனநோயாளியாக கருதினாரா? [நவூதுபில்லாஹ்]. எல்லாம் வல்ல அல்லாஹ் பீஜேயின் சூன்யத்திலிருந்து முஸ்லிம்களை பாதுகாப்பானாக! http://www.youtube.com/watch?v=GQlZ4-lghEQ&feature=related இடுகையிட்டது முகவைஅப்பாஸ் நேரம் பிற்பகல் 7:37 கருத்துகள் இல்லை: சனி, 3 செப்டம்பர், 2011 முகவைஅப்பாஸின் முக்கிய அறிவிப்பு! بسم الله الرحمن الرحيم அறிஞர் பீ.ஜைனுல் ஆபிதீன் அவர்களின் மார்க்க முரண்பாடுகளை விளக்கும் 'அன்றும்-இன்றும்' தொடரை நாம் தொடர்ந்து எழுதி வருகிறோம். இதற்கு சம்மந்தப்பட்ட பீஜே, இதுகுறித்து நேரடியாக பதிலளிக்க திராணியின்றி, தனதுஆசியுடன் இயங்கும் பினாமியின் பிளாக்கில் ஆபாச தொடரை தொடங்கியுள்ளார் என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான். இந்நிலையில் எமது இந்த 'அன்றும்-இன்றும்' தொடர் பற்றி பீஜேயின் அபிமானிகளிடம் கேள்வி எழுப்பும் சகோதரர்களிடம், ''பீஜே மட்டும் அல்ல மார்கத்திற்க்கு விளக்கம் கொடுக்கும் அத்தனை இமாம்களும் ஏன் முஹம்மது (ஸல்) அவர்களும் கூட முன்பு சொன்னதை பின்பு மாற்றி உள்ளார்கள்'. என்று திசைதிருப்பும் பதிலை சொல்வதாக நமக்கு தகவல் வந்துள்ளது. அதையொட்டியே இந்த விளக்கம். இதே பீஜே ஒரு சட்டம் சொல்லி 'பலம்' என்றும் 'பலவீனம்' என்றும் மாற்றியவைகள் ஏராளம் உண்டு. அதேபோல் இதே பீஜே ஒரு சட்டம் சொல்லி வேறு ஆதாரத்தை வைத்து மாற்றியவைகள் ஏராளம் உண்டு. அவைகளை நாம் பட்டியலிடவில்லை. நாம் கையில் எடுத்திருப்பது, ஒரு சட்டத்தில் ஒரே வசனத்தை ஆதாரமாக வைத்து, இரு முரண்பட்ட தீர்ப்பை வழங்குவது. ஒரு சட்டத்தில் ஒரே ஹதீஸை ஆதாரமாக வைத்து இரு முரண்பட்ட தீர்ப்பை வழங்குவது. பிறரால் சுட்டிக்காட்டியபோது தனது தீர்ப்பை மாற்றாமல் வியாக்கியானம் செய்து விளக்கமளித்து, பின்னாளில் சத்தமில்லாமல் மாற்றியது. குர்'ஆனிலும் ஹதீஸிலும் இல்லாமல் சொந்த வியாக்கியானங்களை ஃபத்வா'வாக வழங்கியது. இவைகளைத்தான் நமது தொடர் விளக்குறது. இதற்கு விளக்கமளிக்க முடியாமல், பீஜே எனும் தனிமனிதன் மீதான பற்று அவரது முரண்பாட்டுக்கு நபி[ஸல்] அவர்கள் அல்லாஹ்வின் வஹீ அடிப்படையில் மாற்றிய விஷயங்களை ஆதாரமாக காட்ட வைக்கிறது. அல்லாஹ் பாதுகாப்பானாக! இமாம்கள் மாற்றினார்களே என்கிறார்கள். எல்லா சஹாபாக்களுக்கும் எல்லா சட்டமும் தெரியாது என்று பீஜேயே சொல்லியுள்ளார். அப்படியிருக்க இமாம்கள் மடிக்கணினியை மடியில் வைத்துக் கொண்டிருக்கவில்லை. அவர்கள் ஒரு சட்டத்தை சொல்லி வேறு ஆதாரங்கள் கிடைக்கும்போது அதன் அடிப்படையில் மாற்றியிருப்பார்கள். இமாம்கள் மாற்றியதும் பீஜே மாற்றியதும் ஒன்றல்ல. அப்படியே இவர் இன்று மாற்றியது போன்று இமாம்கள் ஒரே வசனத்தை வைத்து முரண்பட்ட சட்டத்தை சொல்லியிருந்தாலும், இமாம்கள குர்'ஆன் ஹதீஸுக்கு மாற்றமாக பல்வேறு சட்டங்களை சொல்லியுள்ளார்கள். எனவே மத்ஹபை பின்பற்றக் கூடாது. இதோ நான் 'தூயவடிவில்' இஸ்லாத்தை சொல்கிறேன் என்றவர், அன்று இமாம்கள் முரண்பட்டார்கள். அதனால் நானும் முரண்படுவேன் என்றால் இவர் இமாம்களை பின்பற்றுகிறாரா? எனவே அவுக மாத்தலையா? இவுக மாத்தலையா? என்று வழக்கம் போல திசை திருப்ப வேண்டாம் என்று கூறிக் கொள்கிறோம். மேலும் பீஜேயின் இரு முரண்பட்ட ஃபத்வாக்களில் இரண்டில் எது சரி என்று சொல்லுமாறு சில சகோதர்கள் கேட்கிறார்கள். என்னிடம் கேட்பதை விட, இரு முரண்பட்ட ஃபத்வாக்களை வழங்கியவரிடத்தில் சகோதரர்கள் கேட்பதுதான் சரியானது. அல்லாஹ்வே மிக அறிந்தவன். அன்புடன் முகவைஅப்பாஸ். இடுகையிட்டது முகவைஅப்பாஸ் நேரம் பிற்பகல் 4:07 கருத்துகள் இல்லை: வெள்ளி, 2 செப்டம்பர், 2011 பயணத் தொழுகை; பீஜே அன்றும்-இன்றும்! بسم الله الرحمن الرحيم பயணத்தில் 'கஸ்ர்' தொழுகை அதாவது சுருக்கித் தொழுவதற்கு மார்க்கத்தில் அனுமதியுள்ளது என்பதை அனைவரும் அறிவோம். இந்த தொழுகை எத்தனை கிலோ மீட்டர் பயணம் மேற்கொண்டால் தொழவேண்டும் என்று அறிஞர் பீஜேயிடம் அன்று கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் அளித்துள்ள பதிலை படியுங்கள்; கேள்வி : வெளியூர் பயணம் செல்வோர், நான்கு ரக்அத் தொழுகைகளை (மட்டும்) இரண்டு ரக்அத்களாக தொழ சலுகை உண்டு என்பதைத் தெரிந்திருக்கிறேன். அருகில் உள்ள ஊர்களுக்குப் பயணம் சென்றாலும் இவ்வாறு சலுகை உண்டா? அல்லது நீண்ட தொலைவு பயணங்களுக்கு மட்டுமே இந்த சலுகையா? நீண்ட தொலைவு என்றால் எத்தனை மைல்கள்? விரிவாக விளக்கம் தரவும்! "சிலர் 48 மைல்கள்" என்கிறார்களே! அது சரிதானா? நெய்னா முகம்மது B.A., தஞ்சை மாவட்ட தவ்ஹீது கமிட்டி அமைப்பாளர். பதில் : "48 மைல்கள்" என்பதற்கு ஹதீஸில் அறவே ஆதாரம் கிடையாது. மூன்று நாள் பிரயாண தூரம் என்று கூறுவதற்கும் ஆதாரம் இல்லை. மாறாக முஸ்லிம், அஹ்மத், அபூதாவூத், பைஹகீ ஆகிய ஹதீஸ் நூல்களில் இடம் பெற்றுள்ள ஹதீஸ் ஒன்றைக் கீழே தருகிறோம். யஹ்யா இப்னு யஸீத்(ரழி) அவர்கள் கூறுகின்றார்கள்:- தொழுகையைக் கஸர் செய்யும் தூரத்தைப்பற்றி அனஸ்(ரழி) அவர்களிடம் நான் கேட்ட போது "நபி(ஸல்) அவர்கள் மூன்று மைல்கள் அளவு அல்லது மூன்று "பர்ஸக்" அளவு பயணம் செய்யும்போது கஸர் செய்பவர்களாக இருந்திருக்கின்றனர்" என்று அனஸ்(ரழி) அவர்கள் கூறினார்கள். இந்த ஹதீஸில் இடம் பெற்றுள்ள "மைல்" என்பதும் "பர்ஸக்" என்பதும் வெவ்வேறான தூரங்களைக் கொண்டதாகும். அதாவது மூன்று மைல்களைக் கொண்டது ஒரு "பர்ஸக்" ஆகும். இந்த ஹதீஸில், அறிவிப்பாளர் "மூன்று மைல்கள் அல்லது மூன்று பர்ஸக்கள்" என்று சந்தேத்திற்குரிய சொல்லைப் பயன்படுத்தியுள்ளார். இரண்டில் ஏதொ ஒன்றுதான் உண்மையாக இருக்கமுடியும். இந்த இடத்தில் அறிவிப்பாளருக்கு ஏற்பட்ட சந்தேகத்தை ஸயிது இப்னுமன்ஸுர் அவர்கள் பதிவு செய்து வைத்துள்ள, ஹாபிழ் இப்னு ஹஜர்(ரஹ்) அவர்கள் தனது "தல்கீஸ்" என்ற நூலில் எடுத்து எழுதியுள்ள ஹதீஸ் தெளிவுப்படுத்துகிறது. அது வருமாறு:- நபி(ஸல்) அவர்கள் ஒரு "பர்ஸக்" பயணம் செல்லும்போது கஸர் செய்வார்கள்". அறிவிப்பவர்: அபூஸயீது அல்குத்ரி(ரழி) இந்த ஹதீஸில் "ஒரு பர்ஸக்" என்ற சொல் இடம் பெற்றுள்ளதால், முந்தைய ஹதீஸில் "மூன்று மைல்" என்பதே சரியானதாக இருக்கும் என்று தெரிய முடிகின்றது. ஏனெனில் மூன்று மைல் என்பதும் ஒரு பர்ஸக் என்பதும் ஏறக்குழைய ஒரே தூரத்தைக் கொண்டவைதாம். ஹதீஸ் கலையின் மாமேதை ஹாபிழ் இப்னுஹஜர் அஸ்கலானி(ரஹ்) அவர்கள் "அனஸ்(ரழி) மூலம் அறிவிக்கப்பட்ட அந்த ஹதீஸ்தான் கஸர் பற்றிய ஹதீஸ்களில் மிகவும் வலுவானது, தெளிவானது" என்று குறிப்பிடுகின்றார்கள். எனவே ஹதீஸ்களிலிருந்து மூன்று மைல்கள் தூரம் பயணம் செல்பவர்களே கஸர் செய்யலாம் என்று தெரிகின்றது. அன்றைக்கு வழக்கில் இருந்த "அரபுநாட்டு மைல்" என்பது 1748 மீட்டர்களாகும். மூன்று மைல்களுக்கு 5244 மீட்டர்களாகின்றது. அதாவது ஐந்தேகால் கிலோமீட்டர் பயணம் செய்பவர்கள் கஸர் செய்யலாம் என்பதே ஹதீஸ்களிலிருந்து தெரிய வருகின்றது. தெளிவான ஹதீஸ்கள் இருக்கும்போது எவருடைய சொந்த அபிப்பிராயங்களுக்கும் நாம் கட்டுப்படுவது மாபெரும் குற்றமாகும். "48 மைல்கள்" என்று கூறுவோர் அதற்கான ஹதீஸ்களை வெளியிடட்டும். நபிகள் காட்டிய மார்க்கத்துக்கு மாற்றமாக எவர் சொன்னாலும் ஒரு மூமின் அதனை ஏற்க முடியாது. இன்னும் சொல்லப்போனால் "ஒருமைல் தூரத்துக்கே நபி(ஸல்) கஸர் செய்திருப்பதாக இப்னு உமர்(ரழி) அவர்கள் மூலம் இப்னு அபீ ஷைபா பதிவு செய்திருக்கிறார்கள். இந்த ஹதீஸைவிட அந்த ஹதீஸ் பலமானதாக உள்ளதால் அதன் அடிப்படையில் நாம் விளக்கம் தந்துள்ளோம். 48 மைல்கள் என்பவர்கள் நேரடியாக ஹதீஸ் எதனையும் கூறியதாக தெரியவில்லை. தெளிவான ஹதீஸ் அடிப்படையில் ஐந்தே கால் கிலோமீட்டர் பயணம் செல்பவர்கள் தொழுகைகளைக் கஸர் செய்யலாம் என்று தெரிகின்றது. அந்நஜாத்.1986 ஜூன் இதழ் பக்கம் 35 மேற்கண்ட பீஜேயின் ஃபத்வா சொல்வது என்ன? மூன்று மைல்கள் அளவு அல்லது மூன்று "பர்ஸக்" அளவு என்று ஹதீஸில் வந்துள்ளது. இதில் மைல் என்பதுதான் சரியானது. எனவே மூன்று மைல் தூரம் தூரம் அதாவது ஐந்தே கால் கிலோமீட்டர் பயணம் செல்பவர்கள் தொழுகைகளைக் கஸர் செய்யலாம் என்று கூறுகிறது. இன்று அதே பீஜே மேற்கண்ட இதே ஹதீஸை ஆதாரமாக காட்டி, ''மூன்று மைலில் நபி[ஸல்]அவர்கள் கஸ்ர் செய்தார்களா என்பது சந்தேகத்திற்கு இடமானது. எனவே உறுதியானதை எடுத்துக் கொள்ளவேண்டும் என்ற அடிப்படையில் மூன்று 'பர்ஸக்' என்பதை எடுத்துக் கொள்ளவேண்டும். அன்றைய கால மூன்று 'பர்ஸக்' என்பது இன்றைய கால அளவின் படி சுமார் 25 கிலோ மீட்டர்களாகும். எனவே ஒருவர் 25 கிலோ மீட்டர் பயணம் செய்ய நாடி ஊர் எல்லையைக் கடந்து விட்டால் அவர் ஜம்வு, கஸ்ர் செய்யலாம்' என்கிறார். பார்க்க;http://onlinepj.com/kelvi_pathil/thozukai_kelvi/payanathil_kasar_seythal மேற்கண்ட பீஜேயின் இரு முரண்பட்ட ஃபத்வாக்களில் கவனிக்கவேண்டிய அம்சங்கள்; தனது இரு முரண்பட்ட ஃபத்வாக்களுக்கும் ஒரே ஹதீஸைத் தான் ஆதாரமாக வைக்கிறார். முதல் ஃபத்வாவின் 'மைல்' என்பதுதான் சரி. எனவே ஐந்தே கால் கிலோமீட்டர் பயணம் செல்பவர்கள் தொழுகைகளை கஸர் செய்யலாம் என்கிறார். இரண்டாம் ஃபத்வாவில் இல்லை 'மைல்' அளவு சரியல்ல; மூன்று 'பர்ஸக்' என்பதை எடுத்துக் கொள்ளவேண்டும். அன்றைய கால மூன்று 'பர்ஸக்' என்பது இன்றைய கால அளவின் படி சுமார் 25 கிலோ மீட்டர்களாகும். எனவே ஒருவர் 25 கிலோ மீட்டர் பயணம் செய்ய நாடி ஊர் எல்லையைக் கடந்து விட்டால் அவர் ஜம்வு, கஸ்ர் செய்யலாம்' என்கிறார். முதல் ஃபத்வாவில் ஐந்தே கால் கிலோமீட்டர் தான் நபி வழி. நபிகள் காட்டிய மார்க்கத்துக்கு மாற்றமாக எவர் சொன்னாலும் ஒரு மூமின் அதனை ஏற்க முடியாது என்றவர், பின்பு இரண்டாம் ஃபத்வாவில் 25 கிலோ மீட்டர் என்று சொல்லி அவருக்கு அவரே இல்லை இல்லை. இவரின் கூற்றுப்படி நபிவழிக்கு முரண்படுகிறார். சிந்திக்கும் மக்களுக்கு இவரின் முரண்பாடும், மார்க்க சட்டங்களில் இவர் காட்டும் பொடுபோக்கும் உள்ளங்கை நெல்லிகணியாக விளங்கும். இடுகையிட்டது முகவைஅப்பாஸ் நேரம் பிற்பகல் 6:56 கருத்துகள் இல்லை: செவ்வாய், 30 ஆகஸ்ட், 2011 நபி[ஸல்] அவர்களின் பரிந்துரையைக் கேட்பது கூடுமா? பீஜே அன்றும்-இன்றும்! بسم الله الرحمن الرحيم நாளை மறுமையில் நபி[ஸல்] அவர்களின் பரிந்துரையைக் கேட்பது கூடுமா? என்பது குறித்து அறிஞர் பீஜே அவர்கள், திருக்குர்'ஆன் மொழியாக்கம் செய்வதற்கு சில ஆண்டுகளுக்கு முன்னால் எழுதிய 'திருமறை தோற்றுவாய்' என்ற நூலில் 'மறுமையில் பரிந்துரை' என்ற பகுதியில் எழுதியுள்ளதை கீழே படியுங்கள்; ''நபிமார்கள் மற்றும் நல்லவர்கள் நமக்காக பரிந்துரை செய்ய வேண்டுமென்று விரும்பினால், அப்போது இறைவனை மட்டும் வணங்கி இறைவனிடம் தான் இதை கேட்கவேண்டும். இறைவா! என் விஷயத்தில் நபிகள் நாயகம் [ஸல்] அவர்களை பரிந்துரை செய்ய வை என்று கேட்க வேண்டுமே தவிர, நபியே நீங்கள் பரிந்துரை செய்யுங்கள் என்று கேட்கலாகாது. பீஜேயின் மேற்கண்ட விளக்கத்தில், பரிந்துரையை நபிகளாரிடத்தில் நேரடியாக கேட்கக் கூடாது. அதே நேரத்தில், ''இறைவா! என் விஷயத்தில் நபிகள் நாயகம் [ஸல்] அவர்களை பரிந்துரை செய்ய வை' என்று கேட்கலாம் என்று சொன்னவர் பின்னாளில் தனது திருக்குர்'ஆன் தமிழாக்கத்தில் 'பரிந்துரை பயனளிக்குமா' என்ற விளக்கத்தில் மேற்கண்ட தனது கூற்றிற்கு தானே முரண்படுவதை கீழே படியுங்கள்; இறைவா! நபிகள் நாயகத்தின் பரிந்துரையத் தா!' என்று கேட்பது தவறாகும். என் பரிந்துரையை அல்லாஹ்விடம் வேண்டுங்கள் என்று நபி[ஸல்] அவர்கள் கற்றுத்தரவில்லை. பாவிகளுக்கு என் பரிந்துரை உண்டு என்றே கூறினார்கள். சில காரியங்கள் மூலம் என் பரிந்துரை கிடைக்கலாம் எனவும். கூறினார்கள். முதலில் ''இறைவா! என் விஷயத்தில் நபிகள் நாயகம் [ஸல்] அவர்களை பரிந்துரை செய்ய வை' என்று கேட்கலாம் என்று சொன்னவர், பிறகு அவரே அந்தர் பல்டியடித்து, இறைவா! நபிகள் நாயகத்தின் பரிந்துரையத் தா!' என்று கேட்பது தவறாகும் என்று கூறுகிறார். நிகழ்ச்சிக்கொரு சட்டையை மாற்றுவது போன்று நித்தமும் ஃபத்வா'வை மாற்றும் இவரை மக்கள் புரிந்து கொள்ள அல்லாஹ் அருள்புரிவானாக! இடுகையிட்டது முகவைஅப்பாஸ் நேரம் பிற்பகல் 7:03 கருத்துகள் இல்லை: திங்கள், 29 ஆகஸ்ட், 2011 திருக்குர்' ஆனை விளங்க சஹாபாக்கள் கருத்துக்கு முக்கியத்துவம் தரவேண்டுமா? பீஜே அன்றும்-இன்றும். بسم الله الرحمن الرحيم குர்'ஆனும்-ஹதீஸும் மட்டுமே மார்க்கம் என்பதில் எள் முனையளவும் சந்தேகமில்லை. ஆனால் இந்த குர்'ஆனுக்கும்- ஹதீசுக்கும் விளக்கம் தேவைப்பட்டால் நமது கருத்தை விட, நபி[ஸல்] அவர்களின் நிழலாக வாழ்ந்த சஹாபாக்கள் கருத்துக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்பது தவ்ஹீத் அறிஞர்களில் பெரும்பாலோர் கருத்தாக உள்ளது. இவ்வாறு நபித்தோழர்கள் கருத்துக்கு முக்கியத்துவம் தரவேண்டும் என்ற கருத்துடையவர்களை வழிகேடர்கள் என்று விமர்சிக்கும் அறிஞர் பீஜே, அன்று திருக்குர்'ஆனை விளங்க நபிகள் நாயகம்(ஸல்)அவர்களின் அன்புத்தோழர்களின் சுயநிர்ணய ஆற்றல்களுக்கே முதலிடம் தர வேண்டும் என்ற கொள்கையில் இருந்துள்ளார் என்பதை கீழே படியுங்கள்; ''முதலில் திருமறைக்குத் தெளிவு பெற விரும்புவோர் திருமறை மூலமே பெற்றிட முயல வேண்டும். ஏனெனில் திருமறையின் வசனங்களில் பெரும்பாலானவற்றிற்குத் திருமறையின் வேறு சில வசனங்களே தெளிவுரையாக அமைந்து விட்டிருக்கின்றன. அவ்வாறு திருமறைக்குத் திருமறை மூலமே தெளிவுரை பெறமுடியாத இடங்களில் அண்ணல் நபி (ஸல்) அவர்களின் வாழ்வு வாக்குகளிலிருந்து விளக்கமும் தெளிவும் பெற முயல வேண்டும். ஏனெனில் பேரறிஞர் பெருந்தகை இமாம் ஷாஃபியீ அவர்கள் குறிப்பிடுவது போல் "அண்ணல் நபி (ஸல்) அவர்கள் தமது வாழ்நாளில் செய்த தீர்ப்புகள், சட்டங்கள் யாவுமே அவர்கள் தனது திருமறையில் திருக்குர்ஆனை அவர்களுக்கு அருளப்பட்டதற்கான காரணங்களைச் சொல்லும் போது அதனையே அவர்கள் முன் எழும் சட்டப்பிரசினைகளுக்கு அவர்களே விளக்கம் தரக் கடமைப்பட்டவர்கள் என்பதாகவும் தெளிவாகவே குறிப்பிட்டிருக்கிறான். "(நபியே!) மக்களுக்கிடையில் (எழும் பிரசினைகளுக்கு) அல்லாஹ் உமக்கு அறிவித்தவாறு நீர் தீர்ப்பளிக்க வேண்டுமென்பதற்காக, சத்தியத்தைக் கொண்டுள்ள இவ்வேதத்தை நிச்சயமாகவே நாம் தான் உமக்கு அருளினோம் (4:105) (இந்த வேதத்திலிருந்து) மக்களுக்குச் சிறுக சிறுக அருளப் படுபவற்றிற்கு நீர் விளக்கம் அளிக்க வேண்டும் என்பதற்காகவே உமக்கு நாம் இந்த நினைவூட்டும் வேதத்தை அருளினோம் (உமது விளக்கத்தின் மூலம் அதனை) அவர்கள் சிந்தித்து அறிந்து கொள்வார்கள். இதைத்தான், நபிக் நாயகம் (ஸல்) அவர்கள் "நான் திருக்குர்ஆனையும், அதனுடன் அதுபோன்ற (மதிப்பும் சிறப்பும் உடைய) வற்றையும் வழங்கப்பட்டிருக்கிறேன்" என்றார்கள். திருக்குர்ஆன் போன்றது என்பதற்கு, "திருக்குர்ஆனின் விளக்கமாக அமைந்து விட்ட நபிகள்(ஸல்) அவர்களின் வாழ்வும், வாக்கும் என்றே அனைவரும் விளக்கம் தந்துள்ளனர். அதுவும் இறைவன் மூலம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அறிவிக்கப்பட்ட செய்திகள் தான் எனினும், திருக்குர்ஆன் ஓதி உணரப்பட வேண்டிய ஒன்றாகவும், அதனுடைய ஒரு காற்புள்ளி உட்படப் பாதுகாக்கப்பட்ட ஒன்றாகவும், அமைந்துள்ளது. ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வாக்குகள் குர்ஆன் அளவுக்கு சொல்லுக்கு சொல் பாதுகாக்கப்பட்டதில்லை. எனினும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வாழ்வும் வாக்கும் சந்தேகத்திற்கு இடமின்றி அவர்களுடையவைதான் எனத் தெரிய வரும்போது பின்பற்றப்பட்டாக வேண்டியவையாகவும் திகழ்கின்றன. மொத்தத்தில் திருக்குர்ஆனுக்குத் தெளிவுரை பெற முயல்வோர் திருக்குர்ஆனின் மூலமும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வாழ்வு வாக்கு மூலமுமே பெற வேண்டும். அவ்வாறு அவ்விரண்டின் மூலமும் தெளிவுரை பெறாத போது "முஆது(ரழி) அவர்களுக்கு நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கூறியதைப் போன்று, இஜ்திஹாது என்ற சுயநிர்ணய ஆற்றல் மூலம் தெளிவுரை பெற முயல வேண்டம். திருமறைக் குர்ஆன் அருளப்பட்ட இருபத்தி மூன்றாண்டு காலத்தில் அதனுடன் ஒட்டி உறவாடி, அதன் வழியில் தமது அடிச்சுவடு ஒவ்வொன்றையும் எடுத்து வைத்து, நடந்து குர்ஆன் விரும்பும் இலட்சிய சமுதாயதாய் உருவாகி நின்ற, நபிகள் நாயகம்(ஸல்)அவாகளின் அன்புத்தோழர்களின் சுயநிர்ணய ஆற்றல்களுக்கே முதலிடம் தர வேண்டும். அவர்களிலும் குறிப்பாக நபிகள் நாயகம்(ஸல்) அவர்களுக்கு பின், அறநெறி வழுவா ஆட்சி நடத்திய நாற்பெரும் குடியரசு தலைவர்களான அறிஞர் பெருந்தகையினராக ஒருமித்து ஏற்றுக் கொள்ளப்பட்டு விட்ட அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊது(ரழி) அப்துல்லாஹ் அப்னு அப்பாஸ்(ரழி) போன்றோரின் சுய நிர்ணய ஆற்றலால் எடுக்கப்பட்ட முடிவுகளுக்கும், அவர்கள் தந்த தெளிவுரைகளுக்குமே முதலிடம் தரப்பட வேண்டும். எனினும் இப்னு மஸ்ஊது(ரழி) இப்னு அப்பாஸ்(ரழி) ஆகிய இருவரும் கூட "இஸ்ரவேலர்கள் பற்றி உங்களுக்குத் தெரிந்ததைச் சொல்லுங்கள்" என்ற நபிமார்களின் அனுமதிகேற்ப, இஸ்ரவேலர்களிடமிருந்து வாழையடி வாழையாக வந்த கருத்துகளைத் தமது திருமறைத் தெளிவுரைகளில் கலந்துவிட்டிருக்கின்றனர். ஆயினும் அவற்றை, இஸ்லாத்தின் கருத்துக்களுக்கு ஒத்து வரும் போது அதற்கொரு சான்றாகக் கொள்ளலாமே தவிர, அதனையே தீர்ந்த முடிவாகவும், உறுதியாகவும் நம்பிட முடியாது. இஸ்ரவேலர்களின் மூலம் அறிவிக்கப்படுபவை, அறிஞர்களால் மூன்று வகைகளாக பகுக்கப்பட்டிருக்கின்றன. (1) குர்ஆன், நபிமொழி மூலம் அவை நம்பத்தகுந்தவை என்று நிரூபிக்கப்பட்டவை. (2) குர்ஆன் நபிமொழி மூலம் நம்பத்தகாதவை என்று நிரூபிக்கபட்டவை. (3) இந்த இரண்டு வகைகளிலும் சேராத கதைகள், இவைகளை நாம் உண்மை என்றும் கூறத்தேவையில்லை. பொய் என்றும் அவமதிக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் அவற்றை நபிகள்(ஸல்) அவர்கள் அனுமதித்து இருப்பதால் எடுத்துச் சொல்வதில் தவறில்லை. எனினும், ஒன்றை நிரூபிக்கும் ஆதாரமாக அவற்றைப் பயன்படுத்த முடியாது. இவற்றில் பெரும்பாலான கதைகளில் எவ்வித மார்க்க நன்மையும் இல்லை. சுவையூட்டுவதாக தமது திருமறைத் தெளிவுரைகளில், இவற்றை எடுத்துச் சொல்வதின் மூலமே பெரும்பாலும் அவர்களின் தெளிவுரைகளுக்கிடையே கருத்து வேறுபாடுகள் தோன்றுகின்றன. (கஹ்ஃபு) குகை என்ற அத்தியாயத்தில் கூறப்படும் குகைவாசிகளின் பெயர்கள், அவர்களுடன் சென்ற நாயின் நிறம், அவர்களின் எண்ணிக்கை போன்றவற்றையும், மூஸா(அலை) அவர்களிடமிருந்த கைத்தடி எந்த மரத்தில் ஆனது என்பதையும், இப்ாஹிம்(அலை) அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க அல்லாஹ், உயிர்ப்பித்துக் காட்டிய நான்கு பறவைகள் எவை என்பதையும், அந்த நான்கு பறவைகளையும் அல்லாஹ் ஏன் தெரிவு செய்தான் என்பதற்குக் கட்டிவிடப்பட்ட கதைகளையும், மூஸா(அலை) அவர்களின் சமூகத்தவரில், ஒருவர் கொல்லப்பட, கொல்லப்பட்டவரை உயிர்ப்பிக்க ஒரு மாட்டை அறுத்து, அதன் உறுப்புகளில் ஒன்றால் அடித்ததும், அவர் உயிர் பெற்ற வரலாற்றில், எந்த உறுப்பில் கொல்லப்பட்டவன் அடிக்கப்பட்டான் என்பதையும், மூஸா(அலை) அல்லாஹ்விடம் உரையாடிய போது நின்று பேசிய மரம் எந்த மரம் என்பதையும் இதற்கு உதாரணங்களாக குறிப்பிடலாம். இவ்வாறு அல்லாஹ் குறிப்பிட்டபடி குர்ஆனுக்கு "குர்ஆன் மூலம், நபிமொழி மூலம், ஸஹாபாக்களின் தெளிவுரை மூலம் தெளிவுரை பெற முடியாத போது, நபிகள் நாயகம்(ஸல்) அவர்களின் அன்புத் தோழர்களிடம், அதிகமதிகமாக நட்பும் தோமையும் வைத்திருந்த தாபியின்களில் குறிப்பிடத்தக்கவர்களான, முஜாஹித் இப்னு ஜப்ரு(ரழி), சயீதுபின் ஜுபைர்(ரழி), இக்ரிதா அதா இப்னு ரபாஹ்(ரழி), ஹஸன் அல்பஸரீ(ரழி)மஸ்ருக், சயீதுஇப்னு அல்முஸய்யபு, அபுல் ஆலியா(ரழி), ரபீவு இப்னு அனஸ்(ரழி), கதாதா லஹ்ஹாக்(ரழி) போன்றோரின் கருத்துகளுக்கு முதலிடம் தர வேண்டும். இவர்களில் பெரும்பாலோர் மேற்கூறப்பட்ட நாயகத் தோழர்களிடம் மிக நெருங்கிப் பழகியவர்களும் அவர்களின் மாணவர்களுமாவார்கள். மேற்கூறப்பட்ட இந்த நடைமுறைகளைப் பின்பற்றாது, தன்னிச்சையாகக் திருமறைக்கு தெளிவுரை தரும் போக்கு தடை செய்யப்பட்ட ஒன்றாகும். நஸயீ, திர்மிதி, அபுதாவூது போன்றோர் அறிவிக்கும் நபிமொழி ஒன்று "தன்னிச்சையாக திருக்குர்ஆனுக்கு எவன் விளக்கம் தர முற்பட்டானோ, அவன் சரியான விளக்கமே தந்தாலும் (திருமறையை இலேசாகக் கருதி அவன் மேற்கொண்ட அசட்டுத் துணிச்சலுக்காக) அது தவறாகவே கருதப்படும்" என்று எச்சரிக்கின்றது. எனவேதான், மேற்கூறப்பட்டவைகளின் அடிப்படையில், திருமறைக்கு சரியான விளக்கம் தமக்குக் கிடைக்காதபோது, அதுபற்றி தன்னிச்சையாக தெளிவுரை கூற அபூபக்கர், உமர்(ரழி) போன்ற மிகப் பெரும் நாயகத் தோழர்களெல்லாம் கூட பெரிதும் அஞ்சி இருக்கின்றனனர். பேரறிஞர் பெருந்தகை இமாம் இப்னு கஸீர்(ரஹ்) அவர்கள் தங்களின் திருமறைத் தெளிவுரைக்குத் தந்திருக்கின்ற முன்னுரையை உங்கள் முன் வைத்திருக்கிறோம். அவர்கள் தந்துள்ள விளக்கங்களுக்கு உட்பட்டு திருமறைத் தெளிவுரையை "நஜாத்" மாத இதழில் தொடர்ந்து வெளியிட இருக்கிறோம். வாசகர்கள் தொடர்ந்து அதனைப் படித்து வரும்போது "இன்ஷா அல்லாஹ்" திருமறையின் சரியான தெளிவுரையைப் பெறும் வாய்ப்பினை பெறுவார்கள். எல்லாம் வல்ல அல்லாஹ் இந்தப் பணியை அவனுக்காகவே துவக்கி அவனுக்காகவே முடித்து, அதற்கான நன்மையை மறுமையில் நமக்கு வழங்கிட அவனிடமே பிரார்த்திக்கின்றோம்.வல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன்.[ 1986 மே,by அந்நஜாத்] அன்பு சகோதரர்களே! மேலே நீங்கள் படித்த விளக்கம் என்பது, அந்நஜாத்தில் திருக்குர்'ஆன் விரிவுரை எழுதிய காலஞ்சென்ற அறிஞரும் பீஜேயின் அண்ணனுமான பீ.எஸ்.அலாவுதீன் அவர்கள், திருக்குர்'ஆனுக்கு விரிவிரை எழுத தொடங்குவதற்கு முன்பாக பிரபல மேதை இமாம் இப்னு கஸீர் அவர்களின் முன்னுரையை பதிவு செய்து, இமாம் இப்னு கஸீர் அவர்கள் எந்த வழிமுறையை காட்டினார்களோ அந்த வழிமுறையில் நான் திருக்குர்'ஆனுக்கு விரிவுரை எழுத இருக்கிறேன் என்று அறிஞர் பீ.எஸ். அலாவுதீன் அவர்கள் கூறுகிறார்கள். மேற்கண்ட செய்தியின் மூலம் திருக்குர்'ஆன் விரிவுரை எழுத விரும்பும் எவராகினும் பேன வேண்டிய விதிமுறைகள்; திருமறைக்குத் தெளிவு பெற விரும்புவோர் திருமறை மூலமே பெற்றிட முயல வேண்டும். அவ்வாறு திருமறைக்குத் திருமறை மூலமே தெளிவுரை பெறமுடியாத இடங்களில் அண்ணல் நபி (ஸல்) அவர்களின் வாழ்வு வாக்குகளிலிருந்து விளக்கமும் தெளிவும் பெற முயல வேண்டும். அவ்விரண்டின் மூலமும் தெளிவுரை பெறாத போது நபிகள் நாயகம்(ஸல்)அவர்களின் அன்புத்தோழர்களின் சுயநிர்ணய ஆற்றல்களுக்கே முதலிடம் தர வேண்டும். அவர்களிலும் குறிப்பாக அறிஞர் பெருந்தகையினராக ஒருமித்து ஏற்றுக் கொள்ளப்பட்டு விட்ட அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊது(ரழி) அப்துல்லாஹ் அப்னு அப்பாஸ்(ரழி) போன்றோரின் சுய நிர்ணய ஆற்றலால் எடுக்கப்பட்ட முடிவுகளுக்கும், அவர்கள் தந்த தெளிவுரைகளுக்குமே முதலிடம் தரப்பட வேண்டும். ஸஹாபாக்களின் தெளிவுரை மூலம் தெளிவுரை பெற முடியாத போது, நபிகள் நாயகம்(ஸல்) அவர்களின் அன்புத் தோழர்களிடம், அதிகமதிகமாக நட்பும் தோமையும் வைத்திருந்த தாபியின்களில் குறிப்பிடத்தக்கவர்களான, முஜாஹித் இப்னு ஜப்ரு(ரழி), சயீதுபின் ஜுபைர்(ரழி), இக்ரிதா அதா இப்னு ரபாஹ்(ரழி), ஹஸன் அல்பஸரீ(ரழி)மஸ்ருக், சயீதுஇப்னு அல்முஸய்யபு, அபுல் ஆலியா(ரழி), ரபீவு இப்னு அனஸ்(ரழி), கதாதா லஹ்ஹாக்(ரழி) போன்றோரின் கருத்துகளுக்கு முதலிடம் தர வேண்டும். மேற்கண்ட ஐந்து வழிமுறைகளை பின்பற்றாமல் குர்'ஆனில் விளக்கம் இல்லை; நபிமொழியில் விளக்கம் இல்லை எனு கூறிக்கொண்டு, தனது சொந்த வியாக்கியானத்தை திணிக்கக் கூடாது என்றும், கீழ்கண்டவாறு இமாம் இப்னு கஸீர் அவர்களின் கருத்தை பதிவு செய்கிறார் அறிஞர் பீ.எஸ்.அலாவுதீன். மேற்கூறப்பட்ட இந்த நடைமுறைகளைப் பின்பற்றாது, தன்னிச்சையாகக் திருமறைக்கு தெளிவுரை தரும் போக்கு தடை செய்யப்பட்ட ஒன்றாகும். நஸயீ, திர்மிதி, அபுதாவூது போன்றோர் அறிவிக்கும் நபிமொழி ஒன்று "தன்னிச்சையாக திருக்குர்ஆனுக்கு எவன் விளக்கம் தர முற்பட்டானோ, அவன் சரியான விளக்கமே தந்தாலும் (திருமறையை இலேசாகக் கருதி அவன் மேற்கொண்ட அசட்டுத் துணிச்சலுக்காக) அது தவறாகவே கருதப்படும்" என்று எச்சரிக்கின்றது. எனவேதான், மேற்கூறப்பட்டவைகளின் அடிப்படையில், திருமறைக்கு சரியான விளக்கம் தமக்குக் கிடைக்காதபோது, அதுபற்றி தன்னிச்சையாக தெளிவுரை கூற அபூபக்கர், உமர்(ரழி) போன்ற மிகப் பெரும் நாயகத் தோழர்களெல்லாம் கூட பெரிதும் அஞ்சி இருக்கின்றனனர். மேலே உள்ள விஷயங்களை காய்தல் உவத்தலின்றி படித்தால், குர்'ஆனை விளங்க குர்'ஆன் மட்டும் போதாது; நபிமொழி மட்டும் போதாது. சஹாபாக்களின் விளக்கம் வேண்டும், தாபியீன்களின் விளக்கம் வேண்டும் என்ற கருத்தை பீ.எஸ். அலாவுதீன் ஏற்றுள்ளார். பீ.எஸ். அலாவுதீனின் இந்த விதிமுறையை பீஜேயும் ஒப்புக்கொண்டு அவர் ஆசிரியராக இருந்த காலகட்டத்தில் அந்நஜாத்தில் இடம்பெற செய்துள்ளார். இதன் மூலம் பீஜேயும் அன்று குர்'ஆனை விளங்க சஹாபாக்கள் கருத்துக்கு முக்கியத்துவம் தரவேண்டும் என்பது மட்டுமல்லாது அதையும் தாண்டி தாபியீன்கள் கருத்தையும் ஏற்கவேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்துள்ளார் என்பது தெளிவாகிறது. இன்று மார்க்கத்தில் நமது கருத்தை விட சஹாபாக்கள் கருத்துக்கு முக்கியத்துவம் தரவேண்டும் என்று சொல்பவர்களை 'வழிகேடர்கள்' 'தடம் புரண்டவர்கள்' என்று விமர்சிக்கும் பீஜே, இவரது அண்ணனை வழிகேடர் என்று சொல்வாரா? ஏன் அண்ணனின் கருத்தை வழிமொழிந்த பீஜே, தன்னைத் தானே 'வழிகேடர்' என்று சொல்லிக் கொள்வரா? சிந்தியுங்கள் மக்களே! குர்'ஆனுக்கு நபித்தோழர்கள் விளக்கத்தை ஏற்காமல் இவரது மனோஇச்சை விளக்கத்தை தினித்ததால் ஏற்பட்ட விளைவுகள் பட்டியலிடப்படும் இன்ஷா அல்லாஹ். இடுகையிட்டது முகவைஅப்பாஸ் நேரம் பிற்பகல் 6:03 கருத்துகள் இல்லை: ஞாயிறு, 28 ஆகஸ்ட், 2011 அல்லாஹ் அர்ஷின் மீது அமைந்தானா? அமர்ந்தானா? பீஜே அன்றும்-இன்றும்! அந்நஜாத்தில் இடம்பெற்ற திருக்குர்'ஆன் விளக்கம் தொடரில், காலஞ்சென்ற அறிஞரும் பீஜேயின் அண்ணனுமான பீ.எஸ்.அலாவுதீன் அவர்கள், 'அல்லாஹ் அர்ஷின் மீது அமைந்தான் என்று திருக்குர்'ஆன் வசனத்திற்கு மொழிபெயர்த்துள்ளார். இது தவறு அர்ஷின் மீது 'அமர்ந்தான்' என்பதுதான் சரியாகும் என்று தவ்ஹீத் மூத்த அறிஞர் மவ்லவி K.M. முகம்மது இக்பால் மதனீ அவர்கள் சுட்டிக் காட்டியபோது அதை ஏற்க மறுத்து அறிஞர் பீஜே அளித்துள்ள பதில் பாரீர்; கேள்வி; இஸ்லாமியக் கொள்கை விளக்கம் என்ற பகுதியில் அர்ஷின் மீது ஒழுங்குற அமைந்தான் என்று போடப்பட்டுள்ளது. அந்த இடத்தில் அமர்ந்தான் என்றே எழுதி இருக்க வேண்டும். மவ்லவி K.M. முகம்மது இக்பால் மதனீ, துபை. ஜஹாங்கீர் சுல்தான், துபை. பதில்; 'இஸ்தவா' என்று திருக்குர்ஆனில் இடம் பெற்றுள்ள சொல்லுக்கு P.S. அலாவுதீன் அவர்கள் 'அமைந்தான்' என்று மொழி பெயர்த்துள்ளனர். அந்த வார்த்தைக்கு 'அமர்ந்தான்' என்றும் மொழி பெயர்த்துள்ளனர். அந்த வார்த்தைக்கு 'அமர்ந்தான்' என்றே பொருள் கொள்ள வேண்டும் என்பது உங்கள் கருத்து. 'இஸ்தவா' என்ற சொல்லுக்கு 'உட்காருதல்' என்று நேரடியாகப் பொருளில்லை. விரிவான பொருளைக் கொண்ட ஒரு வார்த்தை அது. உட்காருதல், நிலைபெறுதல், ஆதிக்கம் செலுத்தல் போன்ற பல பொருள்களுக்கு இடம் தரக் கூடிய ஒரு வார்த்தை. அதற்கு 'அமர்ந்தான்' என்று பொருள் கொள்ளும் போது, அதன் விரிவான பொருள் சிதைக்கப்பட்டு, சுருங்கிய ஒரு பொருளைத் தரக் கூடியதாக அது ஆகின்றது. அதனால் தான், அதற்கு நிகரான விரிந்த பொருள் கொண்ட அமைந்தான் என்ற சொல் பயன்படுத்தப்பட்டது. P.S. அவர்கள் உயிருடன் இருக்கும் போதே இது பற்றி நானும், அவர்களும் விவாதித்த பின்னர் தான் 'அமைந்தான்' என்ற சொல் பயன்படுத்தப்பட்டது. 'இஸ்தவா' என்பதற்கு நேரடியாக 'அமர்ந்தான்' என்று பொருள் இருப்பதாக நமக்குத் தெரியவில்லை. 'இஸ்தவல் மாவு' என்று அரபியர்கள் பயன்படுத்தும் சொல்லுக்கு 'தண்ணீர் அமர்ந்தது' என்று பொருள் கொள்ளப்படுவதில்லை. 'இஸ்தவத் அலல்ஜுதிய்யி என்ற குர்ஆன் வசனத்திற்கு, அமர்ந்தது என்று அங்கே பொருள் கொள்ளப்படுவதில்லை. இந்த இடங்களிலும்…. மற்றும் ஏனைய இடங்களிலும் 'அமைந்தான்' என்றெ பொருள் கொள்ளப்பட வேண்டும்' என்பதற்குரிய ஆதாரங்களை எடுத்துச் சொன்னால் நாம் ஏற்கிறோம். 'அமைந்தான்' என்பது. 'அமர்ந்தான்' என்ற பொருள் உட்பட வேறு பல பொருள்களையும் உள்ளடக்கிய அதே தரத்தில் உள்ள சொல் தான். எனவே 'அமைந்தான்' என்பது சரியான மொழி பெயர்ப்பு என்றே நாம் கருதுகிறோம்.[அந்நஜாத்: டிசம்பர், 1986 ] மேற்கண்ட பதிலில் பீஜே, 'அமர்ந்தான்' என்று மொழியாக்கம் செய்தால் அது விரிவான பொருளை சிதைக்கிறது. எனவே 'அமைந்தான்' என்று மொழிபெயர்ப்பதுதான் சரி என்று சொல்லி, அன்று தனது அண்ணனின் கூற்றுக்கு வக்காலத்து வாங்கிய பீஜே, இன்றைக்கு 'அமர்ந்தான்' என்று கூறுவதுதான் சரி என்று அந்தர் பல்டியடித்து ஃபத்வா வழங்கியுள்ளதை இணைப்பை கிளிக் செய்து படியுங்கள்; http://onlinepj.com/kelvi_pathil/quran_virivurai/arshil_amarnthan_enbathu_sariya/ இந்த புதிய ஃபத்வாவில் 'இஸ்தவா' என்ற வார்த்தை இடம்பெறும் வசனங்கள் அனைத்திற்கும் 'அமர்ந்தான்' என்றும் 'அமர்தல்' என்றும் மொழிபெயர்த்துள்ள பீஜே, இறுதியாக 'இவ்வாறு அர்த்தம் செய்யக்கூடாது என்பவர்கள் இவ்வார்த்தைகளுக்கு வேறு விளக்கங்களைத் தருகிறார்கள். அந்த விளக்கங்கள் அனைத்தும் அரபு இலக்கணப்படியும், குர்'ஆன் ஹதீஸ் ஆதாரங்களின் அடிப்படையில் பார்த்தாலும் தவறாகவே இருக்கின்றன' என்கிறார். அதாவது 'இஸ்தவா' என்ற சொல்லுக்கு 'அமர்ந்தான்' என்ற அர்த்தம் தவிர்த்து வேறு விளக்கங்கள் சரியல்ல என்று அழுத்தமாக பதிவு செய்கிறார்.இதன் மூலம் காலஞ்சென்ற தனது அண்ணன் விளக்கம் தவறு என்பதையும், அண்ணனுக்கு வக்காலத்து வாங்கி அன்று அந்நஜாத்தில் 'அமைந்தான்' என்பதுதான் சரி என்று தான் கூறியதும் குர்'ஆன் ஹதீஸ் ஆதாரங்களின் அடிப்படையில் தவறானது என்று ஒப்புக் கொள்கிறார். இதை இங்கே முன் வைப்பதற்கு காரணம் இவரது ஒரு மஸாயில் தவறு என்று பிறரால் சுட்டிக் காட்டப்பட்டால் ஏற்க மறுக்கும் இவரது மன முரண்டை மக்கள் விளங்கிக் கொள்ளவும், இவரது கூற்றுக்கு தகுந்த ஆதாரமின்றி இவரே முரண்படுவதையும் மக்கள் விளங்கிக் கொள்ளத்தான். நேரத்துக்கு நேரம் இவருக்கு இவரே முரண்படும் இந்த மனோஇச்சை வாதியை பின்பற்றுபவர்கள் சிந்திப்பார்களா? இடுகையிட்டது முகவைஅப்பாஸ் நேரம் பிற்பகல் 5:24 கருத்துகள் இல்லை: வெள்ளி, 26 ஆகஸ்ட், 2011 சகோதரி மகளை திருமணம் செய்தவர்கள் நிலை; பீஜே அன்றும்-இன்றும்! بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ முஸ்லிமல்லாத ஒருவர் தனது சகோதரி மகளை திருமணம் செய்திருந்த நிலையில் இஸ்லாத்தை தழுவினால் அந்த திருமண உறவின் நிலை என்ன என்ற கேள்விக்கு அன்று அறிஞர் பீஜே அளித்துள்ள பதிலை படியுங்கள்; ஐயம் : தனது உடன் பிறந்த சகோதரி மகளை மனம் செய்த ஒரு மாற்று மத தம்பதியினர், முஸ்லிமாக மாறினால் அவர்களின் திருமண உறவு தொடருமா? முடியுமா? S.M. நாசர், தேங்கா பட்டிணம். தெளிவு : திருமணம் செய்து கொள்ளத் தகாத உறவுகளை அல்லாஹ் திருமறையில் 4 : 23 வசனத்தில் கூறும் போது சகோதரியின் மகள்களும் ஹராமாக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடுகிறான். எக்காரணத்தினாலும் சகோதரியின் மகளை ஒருவன் மணம் புரியக் கூடாது. இஸ்லாத்தை அவர்கள் தழுவினாலும் அந்த உறவு தொடரக் கூடாது. உடனடியாக அவர்கள் திருமண உறவை முறித்துக் கொள்ள வேண்டும். "குர்ஆனில் அல்லாஹ் இடுகின்ற கட்டளையை ஏற்கிறேன்" என்பதையும் உள்ளடக்கித்தான் ஒருவன் இஸ்லாத்தைத் தழுவுகிறான். குர்ஆனுடைய இந்தக் கட்டளைகளையும் ஏற்றே ஆக வேண்டும். "மூமின்களே! நீங்கள் இஸ்லாத்தில் பூரணமாக நுழைந்துவிடுங்கள்!" (அல்குர்ஆன் 2:28) என்று அல்லாஹ் ஆணையிடுகிறான். யூதர்களில் ஒரு பிரிவினர் இஸ்லாத்தை தழுவும் போது சனிக் கிழமையைத் தாங்கள் புனித நாளாகக் கொண்டாட அனுமதி கேட்டார்கள். அதை நிராகரிக்கும் விதமாகவே இந்த வசனம் இறங்கியது (இப்னு கஸீர்) இஸ்லாத்தின் அனைத்துச் சட்டங்களையும் ஏற்றுக் கொண்டு அதில் இணைபவர்கள் தான் இஸ்லாத்திற்கு வேண்டும். அவர்கள் கடந்த காலங்களில் கணவன், மனைவியாக வாழ்ந்த தவறான உறவை அல்லாஹ் மன்னிக்கிறான். மேலும் அந்தக் தவறு தொடர்வதை அல்லாஹ் அனுமதிக்கவில்லை.[1987 மார்ச், அந்நஜாத்]. பீஜே அவர்களின் மேற்கண்ட பதிலை கவனமாக நீங்கள் பார்த்தால், இஸ்லாத்தை ஏற்ற ஒருவர் தான் திருமணம் செய்திருந்த சகோதரி மகளை உடனடியாக விவாகரத்து செய்யவேண்டும் என்கிறார். இஸ்லாத்தை தழுவும் ஒருவன் குர்'ஆனின் கட்டளையை ஏற்பதாக உறுதிமொழி அளித்தே இஸ்லாத்தில் இணைகிறான். எனவே குர்'ஆனின் கட்டளையான சகோதரி மகள் விசயத்தையும் அவன் ஏற்றே ஆகவேண்டும் என்கிறார். அது மட்டுமன்றி இஸ்லாத்தின் அனைத்து சட்டங்களையும் ஏற்றுக்கொண்டு இணைய விரும்புபவர்கள் மட்டும் தான் இஸ்லாத்திற்கு வரவேண்டும் என்று அழுத்தம் திருத்தமாக முன் வைக்கிறார் பீஜே. ஆனால் இன்று இதே விஷயத்தில் அவரது நிலை என்ன? இணைப்பை படியுங்கள்; http://onlinepj.com/kelvi_pathil/matru_matha_kelvi/sakothari_makalai_thirumanam_seythavar_islathil_sera_mutiyuma/ பீஜேயின் இந்த லேட்டஸ்ட் ஃபத்வாவில் இஸ்லாத்தில் ஒருவர் இணைவதற்கு அவர் மணந்திருந்த சகோதரி மகளை விவாகரத்து செய்து விட்டு வா என்று சொல்ல கூடாது என்கிறார். உண்மைதான். ஆனால் இஸ்லாத்தை ஏற்ற பின் அவரை உடனடியாக தனது சகோதரி மகளை விவாகரத்து செய் என்று சொல்லக் கூடாது என்றும், சிறிது காலம் மார்க்க உபதேசங்களை கேட்டு பின்பு அவராகவே விவாகரத்து செய்ய அவகாசம் அளிக்க வேண்டும் என்கிறார். இஸ்லாத்தை ஏற்ற ஒருவர் தான் திருமணம் செய்திருந்த சகோதரி மகளை உடனடியாக விவாகரத்து செய்யவேண்டும் என்று அன்று சொன்ன பீஜே, இன்று அவகாசம் அளிக்க வேண்டும் என்று சொல்லி தனக்குத் தானே முரண்படுகிறார். மேலும் இவரது இந்த நவீன ஃபத்வாவிற்கு அவர் என்ற சான்றையும் வைக்க வில்லை. முழுக்க முழுக்க இவரது சொந்த மனோஇச்சையன்றி வேறில்லை. இவரது கூற்றுப்படி இஸ்லாத்தை ஏற்ற ஒருவருக்கு அவகாசம் அளித்து அந்த அவகாச காலத்தில் தனக்கு அனுமதிக்கப்படாத அந்த அந்த மனைவியுடன் உடலுறவு கொண்டால் அதை ஆகுமானது என்று பீஜே கூறுவரா? இது ஒருபுறமிருக்க, இந்த விசயத்திற்கு மார்க்கம் தெளிவான வழியை காட்டியுள்ளது. இப்னு உமர்[ரலி] அவர்கள் கூறினார்கள்; ஃகைலான் இப்னு சலமா[ரலி] அவர்களுக்கு பத்து மனைவியர் இருந்தனர். அவர் இஸ்லாத்தை தழுவியபோது அவருடன் அவரது மனைவியரும் இஸ்லாத்தை தழுவினர். அப்போது நபி[ஸல்] அவர்கள் அவரிடம், 'அவர்களில் நால்வரைத் தேர்ந்தெடுத்தக் கொள்ளும்படி[யும்] மற்றவர்களை விவாகரத்து செய்யும்படி[யும்] கட்டளையிட்டார்கள். நூல்; திர்மிதீ, பைஹகீ. நாம் வைத்துள்ள மேற்கண்ட ஹதீஸில் இஸ்லாத்தை ஏற்ற ஃகைலான் இப்னு சலமா[ரலி] அவர்களுடன் அவரது பத்து மனைவியரும் இஸ்லாத்தை ஏற்ற நிலையிலும், அந்த சஹாபிக்கு நபியவர்கள் அவகாசம் அளிக்கவில்லை. நால்வரைத் தவிர மற்றவர்களை விவாகரத்து செய்யுங்கள் என்று கட்டளையிடுகிறார்கள் என்றால், இதிலிருந்து புரிவது என்ன? இஸ்லாத்தை ஏற்ற ஒருவர், இஸ்லாத்திற்கு மாற்றமாக மனமுடித்திருந்தால் உடனடியாக விவாகரத்து செய்ய வேண்டும் என்பதுதானே? சொல்ல முடியாது, இந்த ஹதீஸில் 'உடனடியாக' விவாகரத்து செய் என்று நபியவர்கள் கட்டளையிட்டார்கள் என்ற கருத்து உள்ளதா? என்று வார்த்தை விளையாட்டை பீஜே செய்தாலும் ஆச்சர்யமில்லை. பீஜேயிக்கு ஹதீஸ்கள் முக்கியமல்ல. மாறாக அவரது நோக்கமெல்லாம் முஸ்லிமல்லாதவர்கள் ஏற்கும் வகையில் சட்டங்களை பூசி மெழுகி சொல்வது தானே! இடுகையிட்டது முகவைஅப்பாஸ் நேரம் பிற்பகல் 1:20 கருத்துகள் இல்லை: செவ்வாய், 23 ஆகஸ்ட், 2011 நபி[ஸல்] அவர்கள் சில சொற்களை அறிந்து கொள்வார்கள்; பீஜேயின் 'சூப்பர்' ஃபத்வா! بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ அறிஞர் பீஜே அவர்கள், ஒரு ஹதீஸை வைத்து ஒரு சட்டம் சொல்லி விட்டால் அதை அப்படியே ஏற்றுக்கொள்வதும், பின்னாளில் அவரே அதே ஹதீஸை பலவீனம் என்று சொல்லி வேறு சட்டம் சொன்னால் அதையும் அப்படியே ஆமோதிப்பதையும் அவரது அபிமானிகள் வழக்கமாக கொண்டுள்ளனர். இதற்கு காரணம் பீஜேயிக்கும் தவறு ஏற்படும் என்று ஒருபக்கம் சொல்லிக் கொண்டு, அவர் சொல்லும் அனைத்தையும் சரி காண்பது அவருக்கு தவறே ஏற்படாது என காட்டுவதாகவே பீஜேயின் அபிமானிகளின் செயல்பாடுகள் உள்ளது. ஆனால் பீஜே ஒரு சாமான்யனுக்கு புரிந்த விஷயத்தைக் கூட புரியாமல் பல விஷயங்களில் ஃபத்வா வழங்கக் கூயயவர் என்பதற்கு ஒரு சான்று; நபி[ஸல்] அவர்களுக்கு எழுதப் படிக்கத் தெரியாது என்பது இஸ்லாமிய மார்க்கத்தில் இருக்கும் சராசரி முஸ்லிமும் அறிந்த ஒன்றாகும். ஆனால் பீஜே இது குறித்து வழங்கிய ஃபத்வா பாரீர்; நபி(ஸல்) அவர்களுக்கு எழுதப் படிக்கத் தெரியாது என்று எழுதி இருந்தீர்கள். ஹுதைபிய்யா உடன்படிக்கையின் போது "ரஸுலுல்லாஹ்" என்ற வார்த்தையைக் காபிர்கள் ஆட்சேபணை செய்த போது தங்கள் கையாலேயே அந்த வார்த்தையை அழித்ததாகக் கூறப்படுகிறதே! குறிப்பிட்ட அந்த வார்த்தையை மட்டும் அழிக்க வேண்டுமாயின் நிச்சயம் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்? இதில் எது உண்மை? K.A. முஹம்மது கோரி, த.பெ.எண். 6930, ஜித்தா. இரண்டுமே உண்மைதான், குறிப்பிட்ட சில வார்த்தைகள் படிக்கத் தெரியாதவர்களும் அடையாளம் கண்டு கொள்ள முடியாது. என் மகனுக்கு ஆங்கிலம் தெரியாது. ஆனால் ஆங்கிலத்தில் அவர் பெயரை Mohamed என்று எழுதுவான். அவன் பெயர் ஆங்கிலத்தில் எங்காவது எழுதப்பட்டிருந்தால் சரியாகக் கண்டு பிடித்து விடுவான். ஆனால் அவனுக்கு ஆங்கிலம் தெரியாது. எழுதவும், படிக்கவும் தெரியாத எத்தனையோ கிராமவாசிகள் தங்கள் கையெழுத்தை மட்டும் போடுவார்கள். அதனால் எழுதப் படிக்கத் தெரிந்தவர் என்று கூற முடியாது. நபி(ஸல்) அவர்களுக்கு எழுதப் படிக்கத் தெரியாது என்பது இந்தக் கருத்தில் தான். அந்த மொழியில் உள்ள எல்லா சொற்களையும் எல்லா வார்த்தைகளையும் அவர்களால் எழுதவோ, படிக்கவோ இயலாது. அவர்கள் ஒரு சில சொற்களை அடையாளம் கண்டு கொள்ளக் கூடியவர்களாக இருந்திருக்கிறார்கள்.1987 மே,அந்நஜாத் மேற்கண்ட பீஜேயின் ஃபத்வாவில், நபி[ஸல்] அவர்களுக்கு எழுதப் படிக்கத் தெரியாது என்பது உண்மைதான். ஆனால் அவர்கள் சில சொற்களை அடையாளம் கண்டுகொள்வார்கள் என்று கூறியுள்ளார். இவரின் கூற்றுபடி நபி[ஸல்] அவர்கள் குறிப்பறிந்து அழித்தது 'முஹம்மது' என்ற வார்த்தை என்றால் ஓரளவு இவரது கூற்றில் அர்த்தமிருக்கும். ஆனால் நபியவர்கள் அழித்தது அல்லாஹ்வின் தூதர் என்ற வார்த்தையாகும். அவ்வாறாயின் தனது பெயர் அல்லாத வேறு சொற்களையும் நபி[ஸல்] அறியக்கூடியவர்களாக இருந்தார்கள் என்று பீஜே சொல்ல வருகிறாரா? சில சொற்களை நபியவர்கள் அறியக்கூடியவராக இருந்தார்கள் என்றால் இறைவன் 'உம்மி நபி' என்று சொன்னதற்கு அர்த்தம் இல்லாமல் போய் விடுமே, குர்'ஆன் வசனத்திற்கு எதிராக போய் விடுமே என்றெல்லாம் கூட பீஜே கவலைப்படவில்லை. ஆனால் உண்மை நிலை என்ன? நபி[ஸல்] அவர்களுக்கு எழுதவோ- படிக்கவோ- வார்த்தைகளை அறிந்து கொள்ளவோ[ அது முஹம்மத் என்பதாக இருந்தாலும்] அவர்களுக்கு தெரியவே தெரியாது. அப்படியாயின் ஒரு வார்த்தையை நபியவர்கள் அழித்தது எப்படி? இதோ விடை; பராஉ(ரலி) அறிவித்தார். (ஹுதைபிய்யா ஆண்டில்) நபி(ஸல்) அவர்கள் உம்ரா செய்ய நாடியபோது மக்காவாசிகளிடம் ஆளனுப்பி மக்காவினுள் நுழைய அனுமதி கேட்டார்கள். அவர்கள் (அடுத்த ஆண்டு உம்ரா செய்ய வரலாம் என்றும்) மூன்று நாள்களுக்கு மேல் அங்கு தங்கக் கூடாது என்றும் அவர்களில் எவரையும் (தம் மார்க்கத்தை ஏற்கும்படி) அழைக்கக் கூடாது என்றும் நிபந்தனையிட்டனர். அவர்கள் இருவருக்குமிடையிலான (ஒப்பந்த) ஷரத்துகளை அலீ இப்னு அபீ தாலிப்(ரலி) எழுதலானார்கள். அப்போது அவர்கள், 'இது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் செய்த சமாதான ஒப்பந்தமாகும்" என்று எழுதினார்கள். மக்காவாசிகளில், 'நீங்கள் இறைத்தூதர்(ஸல்) தாம் என்று நாங்கள் நம்பியிருந்தால் உங்களை (மக்காவினுள் நுழையவிடாமல்) தடை செய்திருக்கமாட்டோம். மேலும், உங்களை நாங்கள் (ஏற்று) பின்பற்றவும் செய்திருப்போம். மாறாக, 'இது அப்துல்லாஹ்வின் மகன் முஹம்மது செய்த சமாதான ஒப்பந்தம்' என்று எழுதுங்கள்" என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள், 'அல்லாஹ்வின் மீதாணையாக! நான் அப்துல்லாஹ்வின் மகன் முஹம்மது தான். மேலும், அல்லாஹ்வின் மீதாணையாக! நான் அல்லாஹ்வின் தூதருமாவேன்" என்று கூறினார்கள். ஆனால், நபி(ஸல்) அவர்கள் எழுதத் தெரியாதவர்களாக இருந்தார்கள். எனவே, அலீ(ரலி) அவர்களிடம், ' 'இறைத்தூதர்' என்னும் சொல்லை அழித்து விடுங்கள்" என்று உத்தரவிட்டார்கள். அலீ(ரலி), 'அல்லாஹ்வின் மீதாணையாக! நான் அதை ஒருபோதும் அழிக்க மாட்டேன்" என்று மறுத்தார்கள். நபி(ஸல்) அவர்கள், 'அப்படியானால் அ(ந்தச் சொல் இருக்கும் இடத்)தை எனக்குக் காட்டுங்கள்" என்று கேட்டார்கள். அலீ(ரலி) நபி(ஸல்) அவர்களுக்கு அதைக் காட்டினார்கள். நபி(ஸல்) அவர்கள் அதைத் தம் கரத்தால் அழித்தார்கள். பின்பு (அடுத்த ஆண்டு), நபி(ஸல்) அவர்கள் (உம்ராவிற்காக) மக்காவிற்குள் நுழைந்து மூன்று நாள்கள் கழிந்தவுடன் மக்காவாசிகள் அலீ(ரலி) அவர்களிடம் வந்து, 'உங்கள் தோழரை (மக்காவைவிட்டுப்) புறப்படும் படி கூறுங்கள்" என்று கேட்டுக் கொண்டார்கள். உடனே, அலீ(ரலி) அவர்களிடம் அதைத் தெரிவித்தார்கள். நபி(ஸல்) அவர்கள், 'ஆமாம் (புறப்பட வேண்டியது தான்)" என்று கூறிவிட்டுப் புறப்பட்டார்கள். நூல்; புகாரி எண்; 3184 ] அலீ[ரலி]அவர்கள் சம்மந்தப்பட்ட வார்த்தையை அடையாளம் காட்டிய பின்பே நபியவர்கள் அதை அழித்தார்கள் என்று புகாரியிலேயே ஹதீஸ் இருக்கும் போது அதைக் கூட கவனிக்காமல் இவர் ஃபத்வா வழங்குகிறார் என்றால் இவரது பொடுபோக்கை விளங்கிக் கொள்ளலாம். குறிப்பு; வழக்கம் போல இப்போது இந்த விஷயத்திலும் பீஜே தனது நிலையை மாற்றிக் கொண்டு விட்டார் என்றாலும், இவர் மார்க்க சட்ட விஷயத்தில் எவ்வளவு மேம் போக்கானவர் என்பதை விளங்கிக் கொள்வதற்காகவே இங்கே இதை பதிவு செய்கிறோம். எனவே பீஜே சொல்லும் சட்டத்தை அப்படியே நம்பி விடாமல் ஆய்வு செய்து அங்கரிக்க வேண்டும். இல்லையேல் அமல்கள் பாழாகும் என்று அவரது அபிமானிகளுக்கு அறிவுறுத்துகிறோம். இடுகையிட்டது முகவைஅப்பாஸ் நேரம் பிற்பகல் 5:30 கருத்துகள் இல்லை: திங்கள், 22 ஆகஸ்ட், 2011 காயிப் ஜனாஸா தொழுகை; பீஜே'யின் மூன்று பரிமாணங்கள்! بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ காயிப் ஜனாஸா தொழுகை தொழலாமா என்பதில் பீஜே தொடர்ந்து முரண்பட்டு வருகிறார். இந்த மஸாயில் பிரச்சினையில் பீஜே'யின் முதல் பரிமாணம்; கேள்வி: காயிப் ஜனாஸா தொழலாமா? ஹனபி மத்ஹப் கூடாது எனிகிறார்களே? – T. ஷேக் ஜாகிர் ஹுஸைன், கடையநல்லூர். பதில்: தொழலாம். ஏனெனில் நபி ஸல்லல்லாஹு வஸல்லம் வெளியூர் சென்றிருந்த போது, உம்முஸஃது என்பவர் இறந்து விடுகிறார். ஒரு மாதம் கழித்து மதீனா வந்த நபி ஸல்லல்லாஹு அலைஹு வஸல்லம் அவர்கள், காயிப் ஜனாஸாத் தொழுகை நடத்தினார்கள் என்று திர்மிதீயில் ஹதீஸ் உள்ளது. இன்னும் பைகஹீ தாரகுத்னீ ஆகிய நூல்களிலும் காயிப் ஜனாஸா பற்றி ஹதீஸ்கள் உள்ளன. இவைகள் காயிப் ஜனாஸாத் தொழலாம் என்று தெளிவாகக் காட்டுகின்றன. [1986 அக்டோபர் அந்நஜாத்] மேற்கண்ட ஃபத்வாவில் காயிப் ஜனாஸா கூடும் என்பதற்கு திர்மிதி உள்ளிட்ட ஹதீஸ்களில் ஆதாரம் உள்ளது என்று கூறிய பீஜே, பின்னாளில் காயிப் ஜனாஸா கூடாது என்ற சட்டத்தை அறிவித்தார். அப்படியாயின் கூடும் என்பதற்கு ஆதாரமாக இவர் வைத்த ஹதீஸ்களின் நிலை குறித்த இவரின் நிலைப்பாடு என்ன? என்பது பற்றி எல்லாம் கவலை கொள்ளாமல், அந்த ஹதீஸ்களை கண்டு கொள்ளாமல் காயிப் ஜனாஸா கூடாது என்று அவர் வழங்கிய ஆய்வை[?] படிக்க இங்கே கிளிக் செய்க; http://onlinepj.com/kelvi_pathil/thozukai_kelvi/kayip_janaasa_eppothu/ முந்தைய ஃபத்வாவில், ஒருமாதம் கழித்து நபியவர்கள் காயிப் ஜனாஸா தொழுகை நடத்தினார்கள் எனவே கூடும் என்றவர், பிந்தைய பத்வாவில், தொழுகை நடத்தப்பட்ட ஒரு ஜனாஸாவுக்கு மீண்டும் ஜனாஸா தொழுகை கூடாது என்கிறார். இதிலாவது இவர் உறுதியாக உள்ளாரா என்றால் இல்லை. காயிப் ஜனாஸா விசயத்தில் இவர் [அதாவது இவரது கண்ணசைவில் செயல்படும் ஜமாஅத்] மீண்டும் பழைய நிலைக்கு திரும்பியுள்ளதை படியுங்கள்; உணர்வு வார இதழில், [15;42 ] ''காயிப் ஜனாஸா தொழுகை' என்ற தலைப்பில் ஒரு செய்தி வெளியிட்டுள்ளார்கள். ''நல்ல கவுண்டன் பாளையம் தவ்ஹீத் கல்லூரி ஆலிமா ஒருவர் மரணித்துவிட, நபிவழியின் அடிப்படையிலேயே அவருக்கான இறுதிக் காரியங்கள் அனைத்தும் நடக்கவேண்டும் என்று மரணித்தவரின் தாயார் உள்ளிட்டோரின் வேண்டுகோளை புறந்தள்ளி, சுன்னத் ஜமாஅத்தினர் ஜனாஸா தொழுகை நடத்தி விட்டார்களாம். பிறகு பீஜே ஜமாஅத்தினர்,மாநிலத்தலைமையின் ஆலோசனையின் படி தனியாக, இறந்த பெண்ணின் வீட்டிற்கு முன்பாக காயிப் ஜனாஸா [பிரேதம் இல்லாமல் நடத்துவது] தொழுகை நடத்தினார்களாம். மேற்கண்ட செய்தியை கவனமாக படியுங்கள். ஏற்கனவே தொழுகை நடத்தப்பட்ட ஒரு பெண்ணிற்கு இவரது ஜமாஅத், மீண்டும் காயிப் ஜனாஸா தொழுகை நடத்தியுள்ளது. இந்த செய்திக்கும் பீஜேயிக்கும் சம்மந்தமில்லை என்று கூறி தப்பிக்க முடியாது. ஏனெனில், மாநிலத்தலைமையின் ஆலோசனையின் படி [மாநிலத் தலைவர் பீஜேயின் ஆலோசனையின் படி] நடந்துள்ளது. மேற்கண்ட விஷயங்களை மாச்சர்யமின்றி படித்தால், இவர் ஒரு மஸாயில் பிரச்சினையில் நாளுக்கொரு அவதாரம் எடுப்பவர் என்பதை சிந்திப்பவர்கள் விளங்கிக் கொள்வார்கள். இடுகையிட்டது முகவைஅப்பாஸ் நேரம் பிற்பகல் 5:26 கருத்துகள் இல்லை: ஞாயிறு, 21 ஆகஸ்ட், 2011 நபியும்-ரசூலும் ஒன்றா? பீஜே அன்றும்-இன்றும்! بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ அறிஞர் பீஜே, நபியும்- ரசூலும் ஒன்றுதான் என்ற கொள்கையை இப்போது கொண்டிருக்கிறார். இதே அறிஞர் பீஜே நபியும்-ரசூலும் ஒன்றல்ல என்று அன்று வழங்கிய ஃபத்வா'வை கீழே படியுங்கள்; கேள்வி: நபி, ரசூல் வேறுபாடு என்ன? நபிமார்கள் எத்தனை? ரசூல்மார்கள் எத்தனை? K.நதீம் அஹ்மது, ஆம்பூர். பதில்: முந்திய சமுதாயத்துக்கு இருந்த சட்டங்களில் சில மாறுதல்களுடன் புதிய சட்டங்கள் கொடுக்கப்பட்டு அனுப்பப்பட்ட இறைதூதரை ரசூல் என்று கூறுகிறோம். ஒரு ரசூல் கொண்டு வந்த சட்டங்கள் மறக்கப்பட்டு விட்ட கால கட்டத்தில் அந்தச் சட்டங்களுக்குப் புத்துயிர் ஊட்ட இறைவனால் அனுப்பபட்டவர் நபி எனப்படுவார். எண்ணிக்கை பற்றி பல்வேறு கருத்துக்கள் காணப்படுகின்றன. அல்லாஹ் அனுப்பிய அனைவரையும் ஏற்றுக் கொள்வதாகப் பொதுப்படையாக நாம் நம்பிக்கை கொள்ளவேண்டும். அல்லாஹ்வும், அவனது ரசூல் என்று கூறினார்களோ அவர்களை அவ்வாறே ஏற்க வேண்டும். -அந்நஜாத் 1986 ஆகஸ்ட் மேற்கண்ட ஃபத்வா'வில் நபி வேறு; ரஸூல் வேறு என்று தெளிவாக குறிப்பிடுகிறார் பீஜே. மேலும் தனது இந்த தீர்ப்பு குர்'ஆனின் ஆதாரத்தின் அடிப்படையில் அமைந்தது என்றும் பீஜே கூறுவதை கீழ்கண்ட ஃபத்வா'வில் படியுங்கள்; ரசூல், நபிக்கு உள்ள வேறுபாட்டைச் சென்ற இதழில் எழுதி இருந்தீர்கள்! அந்த விளக்கம் குர்ஆன், ஹதீஸிலிருந்து பெறப் பட்டதா? S.A. இப்னு அப்துல்லா, அம்மாபட்டினம். ஆமாம்! குர்ஆனிலிருந்து பெறப்பட்டதுதான். "நாம் தவ்ராத்தை இறக்கியருளினோம். அதில் நேர்வழியும் பிரகாசமும் உண்டு. அதைக் கொண்டு பல நபிமார்கள் தீர்ப்பு வழங்குவர்" (அல்குர்ஆன் 5:44) இந்த இறைவசனம், "மூஸா" என்ற ரசூலுக்கு அருளப்பட்ட தவ்ராத்தை அடிப்படையாகக் கொண்டு, பல நபிமார்கள் தீர்ப்பு வழங்கியுள்ளனர்" என்று தெளிவாகின்றது. -அந்நஜாத்1986 அக்டோபர் நபியும்-ரசூலும் ஒன்றல்ல என்றும் குர்'ஆன் அடிப்படையில் இருவரும் வெவ்வேறானவர்கள் என்றும் தீர்ப்பளித்த பீஜே, இன்று நபியும் ரசூலும் ஒன்றே என்று வாதிடுவதை இந்த இணைப்பை கிளிக் செய்து படியுங்கள்; http://onlinepj.com/Quran-pj-thamizakkam-thawheed/vilakkangal/398/ அன்று நபி வேறு; ரஸூல் வேறு என்று ஃபத்வா வழங்கும் போதும் தனது கூற்றுக்கு குர்'ஆனை ஆதாரம் வைத்தார். இன்று அந்த 5:44வசனத்தின் அர்த்தம் மாறி விட்டதா? அல்லது அந்த வசனம் குர்'ஆனிலிருந்து மறைந்து விட்டதா? இப்போது நபியும்-ரசூலும் ஒன்றல்ல என்று கூறுவதற்கும் வேறு பல குர்'ஆன் வசனங்களை ஆதாரமாக வைக்கிறார். இவர் சில சட்டங்களை மாற்றியது குறித்து கேள்வி எழுப்பினால், ''சம்மந்தப்பட்ட இந்த ஹதீஸ் இப்போதுதான் என் கவனத்திற்கு வந்தது; உடனே மாற்றிக் கொண்டேன் என்பார். ஆனால் இந்த நபி-ரஸூல் பிரச்சினையில் அன்றும் சரி, இன்றும் சரி குர்'ஆன் வசனங்களை வைத்தே இரு வேறு முரண்பட்ட தீர்ப்பை வழங்குகிறார். அவ்வாறாயின் நபியும்-ரசூலும் ஒன்றுதான் என்று கூறும் இந்த வசனங்கள் கூட இவரது கவனத்திற்கு இப்போதுதான் வந்ததா? இதன் மூலம் ஒன்று தெளிவாக புலப்படுகிறது. இவர் அன்றும் இன்றும் தான் கொள்ளும் கருத்திற்கு ஏற்ப உள்ள வசனங்களை மட்டும் கையிலெடுத்து, கண்டபடி தீர்ப்பு வழங்கி, கண்ட நேரத்தில் மாற்றிக் கொள்பவர் என்பதற்கு இவரது இந்த நபி-ரஸூல் சட்ட முரண்பாடும் ஒரு சான்றாக திகழ்கிறது. சிந்திப்பவர்கள் இவரது முரண்பாட்டை விளங்கிக் கொள்வார்கள். இடுகையிட்டது முகவைஅப்பாஸ் நேரம் பிற்பகல் 5:38 கருத்துகள் இல்லை: புதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு இதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom) வருகையாளர்கள்; [URL=http://img152.imageshack.us/i/assalamoalaikum.gif/][IMG]http://img152.imageshack.us/img152/2259/assalamoalaikum.gif[/IMG][/URL] என் மூச்சும்;என்பேச்சும்! அல்லாஹ்வின் அழகிய திருப்பெயர்கள்; அன்று; கொள்கைக்காக உயிர்த்தியாகம் செய்தவர் அன்னை சுமைய்யா [ரலி]. இன்று; கொள்கைக்காக உயிர்த்தியாகம் செய்தவர் சகோதரி.மர்வா அல்- ஷெர்பினி. எனது வலைப்பூக்கள்! சஹாபாக்களின் வாழ்வினிலே... நிழல்களும் நிஜங்களும் பிரபலமான இடுகைகள் வீட்டை விட்டு வெளியேறும் போது ஓதும் துஆ (Dua while going out of home) ராக்காஹ் இஸ்லாமிய கலாச்சார மையம் - தமிழ் மற்றும் சிங்களப் பிரிவு Rakah Islamic Cultural Center - Tamil & Sinhala langu... கவலைகள் நீங்கிட, கடன் தொல்லை தீர.... அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் ஒரு முறை பள்ளிவாசலில் உள்ளே நுழைந்தார்கள், அப்போது `அபூஉமாமா' என்ற அன்சாரித் தோழர்களில் ஒருவர், அமர... சாபத்திற்குரியவர்கள் யார்..? بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ பொதுவாக சாபத்தில் பலவகை உண்டு. நம்மைப்போன்ற சகமனிதர்கள் நம்மால் பாதிக்கப்படும்போது அவர்கள் நம்மீது விடும...
Thennakam Admin 10th January 2017 நடப்பு நிகழ்வுகள் – 02 ஜனவரி 20172017-01-10T16:31:41+05:30 நடப்பு நிகழ்வுகள் இந்தியா 1.இந்திய ராணுவத்தின் புதிய தலைமைத் தளபதியாக விபின் ராவத் கடந்த டிசம்பர் 31-ம் தேதி பதவியேற்றுக் கொண்டார்.இந்திய ராணுவத்தின் தலைமைத் தளபதியாக பதவி வகித்த தல்பீர் சிங் சுஹாக் ஓய்வு பெற்றதை அடுத்து புதிய தலைமைத் தளபதி பதவியேற்றுக் கொண்டார். 2.பிரபல ஹிந்தி நடிகர் ரிஷிகபூர் , தனது சுயசரிதையை Khullam Khulla என்ற பெயரில் புத்தகமாக மீனா ஐயருடன் இணைந்து எழுதியுள்ளார். 3.இந்தியா, பாகிஸ்தானில் செயல்படும் அணு மின் நிலையங்களின் பட்டியலை இருநாடுகளும் நேற்று பரஸ்பரம் பரிமாறிக்கொண்டன.முதல்தடவையாக 1992 ஜனவரி 1-ம் தேதி பட்டியல் பரிமாறிக் கொள்ளப்பட்டது. இப்போது 26-வது முறையாக டெல்லி, இஸ்லாமாபாதில் உள்ள தூதரகங்கள் வாயிலாக இரு நாடுகளும் ஒரே நேரத்தில் நேற்று தகவல்களைப் பரிமாறிக்கொண்டன.மேலும் இரு நாட்டு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள இந்திய, பாகிஸ்தான் சிறைக் கைதிகள் தொடர்பான விவரங்களும் பரிமாறிக் கொள்ளப்பட்டன. உலகம் 1.பிரிட்டன் ராணியால் வழங்கப்படும் சிறப்புமிகு ” சர் ” பட்டம் , இந்திய வம்சாவழி பேராசிரியர் சங்கர் பாலசுப்ரமணியம் , ஹர்தீப் சிங் பெகோல் , கமல்தீப் சிங் பூய் உள்ளிட்டோருக்கு வழங்கப்பட்டுள்ளது. 2. 2016ம் ஆண்டில் தனக்கு மிகவும் பிடித்தமானவர்கள் / உத்வேகமானவர்கள் என மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் 5 நபர்கள் கொண்ட பட்டியலை வெளியிட்டுள்ளார்.Jimmy Carter,Nate Bowling,Nandan Nilekani,Dr. Ana Mari Cauce,Ken Caldeira ஆகியோர் பில் கேட்ஸ்க்கு பிடித்தமானவர்கள் பட்டியலில் உள்ளனர். விளையாட்டு 1.இந்தியாவின் சார்பாக ஒற்றையர் பிரிவு டென்னிஸ் போட்டிகளில் விளையாடி வந்த பிரபல வீரர் சோம்தேவ் தேவ்வர்மன் தொழில்முறை டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 2.அபுதாபியில் நடைபெற்ற Mubadala World Tennis Championship – 2016 போட்டியில் ரபேல் நடால் பட்டம் வென்றுள்ளார்.ரபேல் நடால் 6-4 7-6, என்ற செட் கணக்கில் டேவிட் கோபின்னை தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். 3.உலகின் முதல்நிலை டென்னிஸ் வீரர் ஆன்டி முரேவுக்கு பிரிட்டனின் ராணி சர் பட்டம் வழங்கி கவிரவித்துள்ளனர். 4.International Federation of Football History & Statistics (IFFHS) அமைப்பு , அர்ஜென்டினா நாட்டின் கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸியை World’s Best Playmaker ஆக தேர்வு செய்துள்ளது. 5.டென்னிஸ் உலகின் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையான செர்பியாவின் அனா இவானோவிச் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 6.இலங்கைக்கு எதிராக அடுத்த மாதம் தொடங்கவுள்ள டி20 தொடரில் பங்கேற்கவுள்ள ஆஸ்திரேலிய அணியின் உதவி பயிற்சியாளராக ரிக்கி பான்டிங் நியமிக்கப்பட்டுள்ளார்.இவர் ஆஸ்திரேலிய அணியின் தற்காலிக தலைமைப் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் மற்றும் தற்காலிக உதவி பயிற்சியாளர் ஜேசன் ஜில்லஸ்பி ஆகியோருடன் இணைந்து செயல்படுவார் என ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
வவுனியா வடக்கு பகுதியில் இயங்கம் WSEEDS-vavuniya வடக்கு (பெண்கள் சமுக பொருளாதார வலுவூட்டல் மற்றும் கல்வி அபிவிருத்தி சங்கம்) அமைப்பின் ஏற்பாட்டில்; நேற்றைய தினமும் இன்றும் (10.09.2022 மற்றும் 11.09.2022) காலை 9.30 மணி முதல் மாலை 4.00 மணி வரை “குடும்ப நல வாழ்வு” என்ற தொனிப்பொருளில் பயிற்சி பட்டறை இடம்பெற்றதுடன் இப்பயிற்சியில் வவுனியா வடக்கு பகுதியை சேர்ந்த 07 கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட கிராமங்களிலிருந்து 20 பெண்களுக்கு மதுபானம், புகைத்தல் மற்றும் போதைப்பொருள் பாவணை தொடர்பான இரண்டு நாள் பயிற்சி இராமனூர் தெய்வம் முன்பள்ளி வளாகத்தில் இடம்பெற்றது. இப் பயிற்சிக்கான வளவாளராக றகமா (RAHAMA) நிறுவனத்தின் பயிற்சி இணைப்பாளரான இராமன் சஞ்சியகாந்தி அவர்கள் நடாத்தியிருந்தார். இன் நிகழ்வில் புளியங்குளம் கிராம சேவையாளர் மற்றும் RAHAMA நிறுவன செயலாளர் நாயகம் எம் எப் மரிக்கார் அவர்களும் கலந்துகொண்டு நிலையான மாற்றத்தை எற்படுத்தும் உத்திகள் தொடர்பாகவும் பெண்கள் சங்கங்கள் வலுவாக இருந்தால் தான் பெண்களின் சமூக பொருளாதார மற்றும் சட்ட ரீதியிலான சமூக மாற்றத்தை உருவாக்கமுடியும் அத்துடன் பல விடயங்களை சாதிக்க முடியும் என்ற கருத்தை தெளிவுப்படுத்தியதுடன் மேலும் பெண்கள் சங்கங்கள் வலுப்படுத்தப்பட வேண்டும் போன்ற ஆக்கபூர்வமான கருத்துக்களை தெரிவித்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும். மது மற்றும் போதைவஸ்து பாவனை அண்மைக்காலமாக அதிகரித்துள்ளது அதன் விளைவாக தற்போது சமூக விரோத செயற்பாடுகள் அதிகரித்துள்ளதுடன் சிறுவர் மீதான துஸ்பிரயோகம், குடும்ப வன்முறை, குடும்ப பிரிவு, பெண்கள் பாலியல் விற்பனைக்கு ஆளாகுதல் போன்ற பல்வேறுபட்ட பிரச்சினைகள் இனங்காணப்பட்டதுடன் கிராம மட்டத்தில் விழிப்புணர்வு மற்றும் நடத்தை ரீதியான மாற்றங்கள் துரித கதியில் ஆரம்பிக்கப்பட வேண்டும். அத்துடன் ஒவ்வொரு கிராமத்திலும் நடந்த நடக்கின்ற அனுபவ ரீதியாக சமூக மட்ட பிரச்சினைகள் சீரழிவுகள் போன்றன பேசப்பட்டு மேலும் அதற்கு சாதகமான தீர்வுகள் கலந்தாலோசிக்கப்பட்டது. கிராம மட்டங்களில் இருக்கு சமூக மட்ட அமைப்புக்களை ஒன்றினைத்து ஒரு ஒருங்கிணைக்கப்பட்ட நிறுவனமாக உரு மாற்றம் பெற்று மேலும் சாதகமான சட்டங்களுக்குட்பட்ட தீர்வுகள் மற்றும் சமூக மாற்றத்திற்கான அனுகுமுறைகளின் தேவைப்பாடு குறித்து இனக்கப்பாடு எட்டப்பட்டது.
வரலாற்றில் தேடவும் ஆண்டு உட்பட முந்திய: மாதம் உட்பட முந்திய: அனைத்து மாதங்களும் ஜனவரி பெப்ரவரி மார்ச் ஏப்ரல் மே சூன் சூலை ஆகத்து செப்டம்பர் அக்டோபர் நவம்பர் டிசம்பர் குறிச்சொல் வடிப்பான்: வேறுபாட்டைக் காண வேண்டிய இரண்டு பத்திப்புக்களை தெரிவுச் செய்து கீழுள்ள பொத்தானை அழுத்தவும். குறியீட்டு விளக்கம்: (நடப்பு) = நடைமுறையிலுள்ள பதிப்புடனான வேறுபாடு, (கடைசி) = முந்திய பதிப்புடனான வேறுபாடு, சி = சிறு தொகுப்பு (நடப்பு | முந்திய) 02:21, 14 அக்டோபர் 2022‎ Meuriy (பேச்சு | பங்களிப்புகள்)‎ . . (2,755 எண்ணுன்மிகள்) (-8)‎ (நடப்பு | முந்திய) 03:06, 30 ஆகத்து 2021‎ Meuriy (பேச்சு | பங்களிப்புகள்)‎ சி . . (2,763 எண்ணுன்மிகள்) (0)‎ . . (Meuriy, மல்லிகை 1980.12 பக்கத்தை மல்லிகை 1980.12 (148) என்ற தலைப்புக்கு வழிமாற்று இன்றி நகர்த்தியுள்ளார்) (நடப்பு | முந்திய) 04:48, 14 மார்ச் 2016‎ Nirosha (பேச்சு | பங்களிப்புகள்)‎ . . (2,763 எண்ணுன்மிகள்) (+10)‎ (நடப்பு | முந்திய) 10:24, 6 சூன் 2015‎ Gopi (பேச்சு | பங்களிப்புகள்)‎ சி . . (2,753 எண்ணுன்மிகள்) (-47)‎ . . (Text replace - "பகுப்பு:இதழ்கள்" to "") (நடப்பு | முந்திய) 01:27, 26 நவம்பர் 2011‎ Valarmathy (பேச்சு | பங்களிப்புகள்)‎ சி . . (2,800 எண்ணுன்மிகள்) (0)‎ . . (மல்லிகை 148, மல்லிகை 1980.12 என்றத் தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது) (நடப்பு | முந்திய) 03:52, 19 சூலை 2011‎ Valarmathy (பேச்சு | பங்களிப்புகள்)‎ சி . . (2,800 எண்ணுன்மிகள்) (+2,098)‎ (நடப்பு | முந்திய) 04:39, 27 மே 2009‎ Vajeevan (பேச்சு | பங்களிப்புகள்)‎ சி . . (702 எண்ணுன்மிகள்) (+11)‎ (நடப்பு | முந்திய) 01:52, 3 ஏப்ரல் 2009‎ Vinodh (பேச்சு | பங்களிப்புகள்)‎ சி . . (691 எண்ணுன்மிகள்) (+18)‎ . . (Text replace - '==வாசிக்க==' to '=={{Multi|வாசிக்க|To Read}}==') (நடப்பு | முந்திய) 18:31, 24 ஏப்ரல் 2008‎ Rukmani (பேச்சு | பங்களிப்புகள்)‎ . . (673 எண்ணுன்மிகள்) (0)‎ (நடப்பு | முந்திய) 18:30, 24 ஏப்ரல் 2008‎ Rukmani (பேச்சு | பங்களிப்புகள்)‎ . . (673 எண்ணுன்மிகள்) (+673)‎ . . (New page: {{இதழ்| நூலக எண் =1958 | தலைப்பு = '''மல்லிகை 148''' | படிமம் =150px | வெளியீட...)
Chinese Simplified Chinese Traditional Albanian Arabic Belarusian Bengali Bulgarian Cambodian Croatian Czech English Esperanto Filipino French German Greek Hausa Hebrew Hindi Hungarian Indonesian Italian Japanese Korean Laos Malay Mongol Myanmar Nepal Persian Polish Portuguese Pushtu Romanian Russian Serbian Sinhalese Spanish Swahili Tamil Thai Turkish Ukrainian Urdu Vietnamese துருக்கி-கியூபா தலைவர்கள் சந்திப்பு 2022-11-24 17:09:17 பகிர்க: துருக்கி அரசுத் தலைவர் தயீப் எர்டோகனும் கியூபா அரசுத் தலைவர் மிகுல் டியஸ் கேனலும் 23ஆம் நாள் துருக்கி தலைநகர் அங்காராவில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். இதை அடுத்து, வெளியுறவு, பொருளாதார மற்றும் வர்த்தகம் உள்ளிட்ட பல துறைகளைச் சேர்ந்த ஒத்துழைப்பு ஒப்பந்தங்களில் இரு நாடுகளின் பிரதிநிதிக்குழுக்கள் கையெழுத்திட்டன. துருக்கி செய்தி நிறுவனம் வெளியிட்ட அறிக்கையின்படி, பேச்சுவார்த்தையின் போது, இரு நாட்டுறவுவின் பல்வேறு துறைகள் பற்றி இரு தரப்பும் விவாதித்துள்ளன. ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தி இரு தரப்பு வர்த்தக தொகையை 20கோடி அமெரிக்க டாலராக அதிகரிக்கும் விருப்பத்தை இரு தரப்பும் தெரிவித்துள்ளதாக எர்டோகன் கூறினார்.
Colombo (News 1st) அமைச்சரவையின் அங்கீகாரம் பெற்ற செலன்திவ முதலீட்டுத் திட்டத்தின் கீழ், யாழ்ப்பாணம் – கீரிமலையில் மக்களின் நிலத்தில் நிர்மாணிக்கப்பட்ட ஜனாதிபதி மாளிகை கூறுவிலை கோரல் மூலம் வெளியாருக்கு வழங்கப்படவுள்ளமை தற்போது பிரதான பேசுபொருளாக மாறியுள்ளது. யாழ். மாநகரத்திலிருந்து சுமார் 20 கிலோமீட்டர் தொலைவிலும், இந்திய முதலீட்டில் விஸ்தரிக்கப்பட்ட பலாலி விமான நிலையத்திலிருந்து சுமார் 5.5 கிலாமீட்டர் தொலைவிலும் கீரிமலை ஜனாதிபதி மாளிகையின் அமைவிடம் உள்ளது. செலன்திவ ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் அசையா சொத்து அபிவிருத்தியின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள, காங்கேசன்துறையிலுள்ள சர்வதேச இணைப்பு நிலையம் அமைந்துள்ள 5 ஏக்கர் பகுதி முதலீட்டுக்காக வழங்கப்படவுள்ளதாக அமைச்சரவைப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கமைய, தொடர்ந்தும் கடற்படையினரின் வசமுள்ள கீரிமலை ஜனாதிபதி மாளிகையை சர்வதேச விருந்தினருக்கான சந்திப்பு நிலையம் எனும் பெயரில் இலங்கை முதலீட்டு சபை ஏலத்தில் வழங்கவுள்ளதாக காலைக்கதிர் பத்திரிகை செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பில் வலிகாமம் வடக்கு மீள்குடியேற்ற புனர்வாழ்வு சங்கத்தின் தலைவர் அருணாசலம் குணபாலசிங்கம் யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்தார். மக்களின் காணிப்பிரச்சினை தீர்க்கப்படாமல் அரசாங்கம் அந்தப் பகுதியை எவ்வாறு மற்றவர்களுக்கு வழங்க முடியும் என அவர் கேள்வி எழுப்பினார். யாழில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வட மாகாண சபையின் முன்னாள் தவிசாளர் சி.வி.கே.சிவஞானமும் இந்த விவகாரம் குறித்து கருத்துத் தெரிவித்தார். “இந்த கட்டடத்தை மாகாண சபைக்கு கையளிக்க வேண்டும் என்ற தீர்மானம் வட மாகாண சபையில் 2016 ஆம் ஆண்டு என்னால் முன்வைக்கப்பட்டது. அந்தப் பிரேரணை ஜனாதிபதிக்கும் பிரதம மந்திரிக்கும் எம்மால் அனுப்பி வைக்கப்பட்டது,” என அவர் கூறினார். பெருந்தொற்றுக் காலத்தில் அதனை அவசரப்பட்டு வழங்குவதற்கான தேவை என்ன எனவும் அவர் கேள்வி எழுப்பினார். குறித்த பகுதியில் கடற்படையினரால் விடுவிக்கப்படாதுள்ள காணி உரிமையாளர்களும் இந்த செயற்பாட்டிற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர்.
ருக்கோயில்களில்... குறிப்பாக அம்மன் கோயில்களில் சூரசம்ஹாரம், பாட்டுக் கச்சேரியுடன் விழா வைபவங்கள் நடக்கும். சிவாலயங்களில் 9 நாட்களும் ஒன்பது அலங்காரத்தில் அம்பாளை ஆராதிப்பது வழக்கம். காஞ்சி ஸ்ரீகாமாட்சியம்மன் ஆலயத்தில் நவராத்திரியின்போது யாகசாலை பிரதிஷ்டை செய்து, தினமும் 2 வேளை ஸ்ரீவித்யா ஹோமம் நடைபெறும். மாலையில் உற்ஸவர் அம்பாள் புறப்பட்டு, நவராத்திரி மண்டபத்தில் எழுந்தருள்வாள். தொடர்ந்து... சூரசம்ஹார வைபவம். அசுரன் தலை, ரிஷி தலை, எருமைத் தலையுடன் மாறி மாறி வரும் மகிஷனை அம்பாள் சம்ஹார செய்யும் வைபவத்தைக் காணக் கண்கோடி வேண்டும். அடுத்து, இன்னிசை கச்சேரியும் களைகட்டும். தினமும் காலை 11:00 மணிக்கு நவாவரண பூஜை நடக்கும். பிறகு கன்யா பூஜையும் சுமங்கலி பூஜையும் நடைபெறும். நவராத்திரி முழுக்க பூஜை முடிந்து வழங்கப்படும் தீர்த்தப் பிரசாதம் விசேஷம். பூஜை முடிந்ததும் தெளிக்கப்படும் சங்கு தீர்த்தமும் விசேஷம்! நல்வரம் தரும் நவராத்திரியில் அம்பாளை வழிபடுவதுடன், அருகிலிருக்கும் ஆலயங்களுக்கும் சென்று கண்குளிர- உளம் மகிழ தரிசித்து வாருங்கள். ஆதிசக்தியின் அருளால் உங்கள் வாழ்வில் அனைத்து நலன்களும் கைகூட, அம்பாளைப் பிரார்த்திக்கிறேன்.
இஸ்ரோ விஞ்ஞானியான நம்பி நாராயணன், இந்திய விண்வெளி ஆராய்ச்சி தொடர்பான ஆவணங்களை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்ததாக கடந்த 1994-ஆம் ஆண்டில் கேரள காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார். மாலத்தீவு பெண்கள் இருவர், மற்றொரு விஞ்ஞானி உள்ளிட்டோரும் இதே குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டனர். பின்னர் இது ஒரு பொய் குற்றச்சாட்டு என நிரூபிக்கப்பட்டது. இதையடுத்து அவருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்காக 50 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது அத்துடன் நம்பி நாராயணன் மீது பொய் வழக்கு தொடுக்கப்பட்டது குறித்து விசாரிக்க உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி டி.கே.ஜெயின் தலைமையில் 3 நபர்கள் அடங்கிய விசாரணைக் குழுவையும் அமைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் தவறான குற்றச்சாட்டின் காரணமாக சிறையில் அடைக்கப்பட்ட இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு, இழப்பீடாக வழங்க ரூ. 50 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கேரள முதல்வர் பினராய் விஜயன் தெரிவித்துள்ளார். கேரளா அமைச்சரவையின் வாராந்திர அமைச்சரவைக் கூட்டம் முடிவடைந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர் ,நம்பி நாராயணனுக்கு இந்தப் பணம் வெகு விரைவில் வழங்கப்படும் என்றார். தவறிழைத்த காவல்துறை அதிகாரிகளிடம் இருந்து இந்தப் பணத்தை வசூலிக்க முடியுமா என்பது குறித்து ஆராயுமாறு சட்டத் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
தமிழில் சில படங்களில் துணை நடிகையாக இருக்கும் நடிகை பிரகதி, தான் என்ன சுவாரஸ்யமாக செய்தாலும் அதை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து விடுவார். வாத்தி கம்மிங் ஒத்து, அரபி கடலோரம் பாடலுக்கு வெறித்தனமாக ஒரு டான்ஸ் ஆடியதை யாருக்கும் மறக்க முடியாது. இந்த வயதிலும் இப்படி ஆடுகிறாரே என ஆச்சரியப்பட வைத்திருந்தார். சில படங்களில் காமெடி வேடத்தில் நடித்திருந்தாலும் இன்றைக்கும் ஹீரோயின் போல் கச்சிதமாக கும்முன்னுதான் இருக்கிறார். சில காமெடி நடிகர்கள் கூட இவருடன் ஜோடி சேர வேண்டும் என்ற ஆசையில்தான் சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கிறார்கள். தற்போது ஏறக்குறைய 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இவரை பின்தொடர்ந்து வரும் நிலையில் தற்போது இளம் நடிகைகளுக்கு சவால் விடும் வகையில் கவர்ச்சி உடையில் போஸ் கொடுத்துள்ளார். இப்போது ஜிம் ஒர்க் அவுட் செய்து கிட்டத்தட்ட 18 கிலோ வரை உடல் எடையை குறைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் சினிமா வாய்ப்பு வருமா என்பது சந்தேகம்தான்.மேலும் தற்போது கோலி சோடா உடைப்பது போல, வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார். ஹீரோயின் அம்மா வேடத்தில் நடித்தாலும் ஹீரோயினை விட கும்முனு இருக்கிறார் “நான் பார்க்காத குண்டு கோலியா..” என்று ரசிகர்களின் கருத்தாக இருக்கிறது. https://instagram.com/stories/pragstrong/2942201696879384499?utm_source=ig_story_item_share&igshid=MDJmNzVkMjY= Continue Reading Share this: Twitter Facebook Post navigation “விளக்கு தானா பத்திக்குது..” சாக்ஷி Hot Video ! சம்பள விஷயத்தில் கறாராக இருக்கும் சத்யராஜ்.. ‘ஒரு நாளுக்கு இவ்ளோ வேணும்’ என கேட்டதால் அதிர்ச்சியில் லைகா நிறுவனம்..!
ஐயத்துக்கு இடமில்லா ஓர் உண்மை, பொன்னியின் செல்வன்தான் தமிழிலேயே அதிகமாக வாசிக்கப்பட்ட நாவல். சரி, உங்களைச் சுற்றி இருப்பவர்களிடம் விசாரித்துப் பாருங்கள் இதுவரை பொன்னியின் செல்வன் வாசித்தவர்கள் எவரெவர் என. கதையாவது கேட்டவர்கள் எத்தனை பேர் என? திகைப்படைவீர்கள். மிகமிகக்குறைவாகவே அதை வாசித்திருப்பார்கள். இளைய தலைமுறை கேள்விப்பட்டே இருக்காது பொன்னியின் செல்வன் இதுவரை ஐந்து லட்சம் பிரதிகள் விற்றிருக்கும். பத்துலட்சம் பேர் படித்திருப்பார்கள். தமிழக மக்கள் தொகை பத்துகோடிக்கும் மேல். உலகளவில் பன்னிரண்டு கோடி. ஆகவே அந்நாவலை படித்தவர்கள் தமிழ்மக்களிலேயே மிகமிகச்சிறுபான்மையினர்தான். இது தமிழகத்தின் கதை. தமிழகத்துக்கு வெளியே ராஜராஜ சோழன் என்ற பெயர், சோழ அரசகுடி என்ற பெயர் பெரும்பாலும் எவருக்குமே தெரியாது. அது மிக இயல்பானது. ஏனென்றால் இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்துக்கும் அவர்களுக்குரிய பல பேரரசுகள் உள்ளன. ராஷ்டிரகூடப் பேரரசு அல்லது கீழைச்சாளுக்கியப் பேரரசு பற்றி நமக்கு என்ன தெரியும்? பள்ளி,கல்லூரிகளில் பெயர்கள் மட்டும் அறிமுகமாகின்றன. அவ்வாறு பிற அரசுகள் பற்றிச் சொல்வதில் நமக்கு துணைத்தேசியம் சார்ந்த உளத்தடைகள் பல உண்டு. சோழர்கள் இருநூற்றைம்பது ஆண்டுக்காலம் ஆட்சி செய்த நிலம் கேரளம்.கேரளத்தில் பின்னாளில் உருவான ஐம்பத்தாறு அரசுகள் (நாடுகள்) என்னும் அமைப்பு சோழர்காலத்தில் உருவானது. அதன் சிற்றரசர்கள் நாடுவாழிகள். அவர்களின் கூட்டமைப்பே சோழர்களுக்குப் பின் திருவிதாங்கூர், கொல்லம், கொச்சி ,கோழிக்கோடு அரசுகளாகியது. சோழர் காலகட்டத்தில் கட்டப்பட்ட ஆலயங்கள், வெட்டப்பட்ட ஏரிகள் பலநூறு கேரளத்தில் உள்ளன ஆனால் கேரளத்தில் பொதுவாக வர்லாறு பற்றிப் பேசுபவர்களுக்குக்கூட சோழர்கள் பற்றி தெரியாது. கேரள பாடநூல்களில் சோழர்கள் பற்றி பெரிதாக ஏதுமில்லை. கேரள வரலாற்றையே பதினைந்தாம் நூற்றாண்டில் இருந்து ஆரம்பிப்பார்கள். ஏனென்றால் அவர்கள் சோழர்களின் வரலாற்றை தவிர்க்க நினைக்கிறார்கள். நாம் தமிழகத்தை ஆட்சி செய்த நாயக்க மன்னர்களின் வரலாற்றை பொதுப்போக்காகத்தானே அறிந்து வைத்திருக்கிறோம். நாயக்க மன்னர்கள் வெட்டிய ஏரிகளும், உருவாக்கிய சாலைகளும் சந்தைகளும்தான் இன்றைய தமிழ்நாடு. ஆனால் நாம் கண்டுகொள்வதில்லை. நான் தமிழகத்துக்கு வெளியே எவரிடம் பேசினாலும், அறிஞர்களிடமும் இலக்கியவாதிகளிடமும் பேசும்போதுகூட, சோழர்கள் என்று சொன்னால் மேலும் கூடுதலாக ஒரு ஐந்து நிமிடம் அவர்கள் எவர் என விளக்கவேண்டியிருக்கிறது. இச்சூழலில் வருகிறது பொன்னியின் செல்வன்.ஒரு மாபெரும் வெற்றிப்படமாக அமையும் என்றால் தேசிய அளவில் மட்டுமல்ல, உலகளவிலேயே கூட பலகோடி பேருக்கு சோழர்களை, தமிழ்வரலாற்றின் ஒளிமிக்க பகுதியைக் கொண்டுசென்று சேர்த்துவிடும். நாம் அதன்பின் விளக்கவேண்டிய தேவையே இருக்காது. பொன்னியின் செல்வனின் சொல்லப்பட்ட சோழநாடு என ஒரு வரி சொன்னாலே போதும். ஆகவேதான் பொன்னியின் செல்வன் சினிமாவாக எடுக்கப்பட்டாகவேண்டும். ஆங்கிலம் வழியாக கல்விகற்று, உலகமெங்கும் சிதறிக் குடியேறிக்கொண்டிருக்கும் நம் அடுத்த தலைமுறைக்கு பொன்னியின் செல்வன் என்னும் ஒரு படம் ஒட்டுமொத்த சோழர் வரலாற்றையும் அறிமுகம் செய்துவிடும். தேவை என்றால் அவர்கள் நாவலை படிக்கலாம். மேலும் வரலாற்று நூல்களை வாசிக்கலாம். நீங்களே கவனியுங்கள், நம் அடுத்த தலைமுறை இன்று தமிழுடன் கொண்டிருக்கும் ஒரே தொடர்பு சினிமாதான். புலம்பெயர்ந்தோர் குழந்தைகள் தமிழ்ப்பேச்சை காதில் வாங்குவதே சினிமா வழியாகத்தான். ஆகவேதான் பொன்னியின் செல்வன் சினிமாவாக எடுக்கப்பட்டாகவேண்டும். ஏன் திரைப்படமாக எடுக்கவேண்டும்? தொலைத்தொடராக எடுக்கலாமே? சினிமாவாக எடுத்தால், எப்படி எடுத்தாலும் அத்தனை பெரிய நாவலை சுருக்காமலிருக்க முடியாது.தொலைத்தொடராக எடுக்கலாம். ஆனால் அதற்கு முதலீடு கிடைக்காது. வெறும் ‘காஸ்ட்யூம் டிராமா’வாகவே எடுக்க முடியும். சினிமா தவிர எந்த ஊடகத்திற்கும் சோழர்காலத்தை சித்தரித்துக் காட்டும் அளவுக்கு முதலீடு அமையாது. மேலும், ஏற்கனவே பொன்னியின் செல்வன் பற்றி அறிந்தவர்களுக்குத்தான் தொலைத்தொடரோ, காமிக்ஸ் வடிவமோ ஈர்ப்பை அளிக்கும். இன்னமும் பொன்னியின் செல்வன் அல்லது சோழர்கள் பற்றி எதுவுமே தெரியாதவர்களை சினிமா மட்டுமே ஈர்க்க முடியும். பிற ஊடகங்கள் பொன்னியின் செல்வன் என்னும் நாவலின் புகழை தங்களுக்கு பயன்படுத்திக் கொள்பவை. சினிமா மட்டுமே பொன்னியின் செல்வன் என்னும் நாவலுக்கு தன் புகழை அளிப்பது. எண்ணிப்பாருங்கள், பொன்னியின் செல்வன் நாவலின் புகழ் என்பது தமிழகத்துக்குள் மட்டுமே. அதிலும்கூட தமிழகத்தில் பெரும்பான்மையினருக்கு அந்நாவலை பற்றி ஒன்றுமே தெரியாது. பொன்னியின் செல்வன் சினிமா பலகோடி ரூபாயை விளம்பரத்துக்காகச் செலவிடுகிறது, இன்னும் பலகோடி செலவிடப்படவிருக்கிறது. உலகம் முழுக்க. அது நாவலை ஆயிரம் மடங்கு மக்களிடையே கொண்டுசெல்கிறது. அது சினிமாவால்தான் இன்றைய சூழலில் முடியும். சோழர்காலப் பெருமையைச் சொல்கிறோம், ராஜராஜனின் புகழைச் சொல்கிறோம் என்றால் தமிழகத்திலேயே அடுத்த தலைமுறையினர் பொருட்படுத்த மாட்டார்கள். தமிழகத்துக்கு வெளியே உள்ளவர்களிடம் அப்படி ஒரு பேச்சையே எடுக்க முடியாது. அகன்ற காட்சிகள், நாடகீயத்தன்மை, சாகசங்கள் ஆகியவை கொண்ட ஒரு பொழுதுபோக்கு சினிமா என்ற அளவிலேயே பொன்னியின் செல்வன் மக்களிடையே தன்னை முன்வைக்க முடியும். அதன்பொருட்டு வந்து அமர்பவர்களிடமே அது சோழர்களின் உலகை விரித்துக் காட்டமுடியும். ஏன் சினிமா தேவைப்படுகிறது? இது காட்சியூடகத்தின் உலகம்.நாம் இளமையில் பார்த்ததை விட பத்து இருபது மடங்கு இன்றைய தலைமுறை காட்சியூடகங்களை பார்க்கிறது. நாம் மாதம் ஒருமுறை திரையரங்கு சென்று சினிமா பார்த்தோம். கைபேசியில் சினிமா ஓடும் காலம் இது. இன்று எந்த ஒன்றும் காட்சியூடகமாக ஆகவில்லை என்றால் பொதுப்பிரக்ஞையில் நீடிக்காது. நேற்றைய தலைமுறையில் அச்சு ஊடகமே முதன்மையானது. தொடர்கதைகளை முண்டியடித்து வாசித்த காலம் அது. அது போய்விட்டது. ‘எதுவானாலும் காட்டு’ என்பதே இன்றைய தலைமுறையின் கோரிக்கை. ஆகவே பொன்னியின் செல்வன் சினிமாவாக ஆகியே தீரவேண்டும். ஒவ்வொரு சமூகத்துக்கும் அதன் இறந்தகாலம் பற்றிய கனவு தேவைப்படுகிறது. அந்தக்கனவு மிக இளமையிலேயே அச்சமூக உறுப்பினர்களுக்கு அளிக்கப்படுகிறது. அது அவர்களின் ஆழத்தில் வளர்கிறது. அந்தக் கனவையே இலக்கியங்கள் உருவாக்குகின்றன. அவை அக்கனவின் வழியாகவே தலைமுறைகளை இணைத்து பண்பாட்டுத் தொடர்ச்சியை உருவாக்குகின்றன. பண்பாடு என நாம் சொல்வதே நம் முந்தைய தலைமுறையிடமிருந்து நாம் பெற்றுக்கொண்டு நம் அடுத்த தலைமுறைக்குக் கடத்தும் நினைவுகளையும் கனவுகளையும்தான். வரலாறு, தொன்மம் ஆகியவை இதன்பொருட்டே உருவாக்கப்படுகின்றன. ஐரோப்பிய, அமெரிக்கச் சமூகங்களையே பாருங்கள். அவர்கள் அதிநவீனச் சமூகம். ஆனால் தங்கள் கிரேக்க, கெல்டிக், நார்ஸ் பாரம்பரியத்தை குழந்தைக்கதைகளாக, சினிமாக்களாக, காமிக்ஸ்களாக அடுத்த தலைமுறைக்கு அளித்தபடியே இருக்கிறார்கள். தோர் ( Thor ) என தேடிப்பாருங்கள். அது ஒரு நார்ஸ் தொன்மம். இடிமின்னலின் கடவுள். நம்முடைய இந்திரன் போல. உங்கள் குழந்தைகளிடம் அவர் யார் என்று கேளுங்கள். அவர்களிடமே பொம்மை இருக்கும். அவ்வளவு சினிமாக்கள், அத்தனை காமிக்ஸ் படங்கள். ஐரோப்பாவின் தொல்காலகட்டம் முழுக்க சினிமாக்களாக அந்த மக்களிடையே சென்றுகொண்டே இருக்கிறது. அவர்களுக்கு இருக்கும் செல்வ வளத்தால், ஊடக வல்லமையால் உலகம் முழுக்க கொண்டுசெல்கிறார்கள். இந்திரன் எவர் என்று தெரியாத நம் குழந்தைக்கு தோர் வைத்திருக்கும் சுத்தியலின் பெயர் என்ன என்று தெரிந்திருக்கும். உலகம் முழுக்க உள்ள குழந்தைகள் ஐரோப்பியப் பண்பாடு நோக்கி அந்தச் சினிமாக்களால் ஈர்க்கப்படுகிறார்கள். கொஞ்சம் கல்வி கற்றதும் அங்கே சென்றுவிடத் துடிக்கிறார்கள்.அச்சமூகத்துடன் மிக எளிதாக இணையவும் அவர்களால் முடிகிறது. ஐரோப்பியச் சமூகத்தை, அமெரிக்கச் சமூகத்தை இன்று ஒருங்கிணைத்து வைத்திருப்பது, உலகமெங்குமிருந்து மக்களை அதைநோக்கி ஈர்த்து அதை மேலும் வல்லமையானவையாக ஆக்குவது அவர்களின் இந்த வரலாறும் தொன்மமும் உருவாக்கும் கனவுதான். இன்று உலகவல்லமையாக எழுந்து வரும் சீனா முதலில் செய்வது அவர்களின் வரலாற்றையும் தொன்மங்களையும் மாபெரும் சினிமாக்களாக எடுத்து அவர்களின் குழந்தைகளுக்கும், உலகம் முழுக்கவும் கொண்டுசெல்வதுதான்.கோடிக்கணக்கான செல்வத்தை அதன்பொருட்டு சீனா செலவிடுகிறது. உலகம் முழுக்க படையெடுப்பாளனாக, பேரழிவாளனாக அறியப்பட்ட ஜெங்கிஸ்கானை ஒரே சினிமா வழியாக சீனா கதாநாயகனாக ஆக்கிவிட்டது. ஜெங்கிஸ்கானின் வரலாற்றைச் சொல்லும் சீனப்படமான மங்கோல் Mongol (film) உலகமெங்கும் பெருவெற்றி அடைந்த மாபெரும் சினிமா. சீனா தன்னுடைய வரலாற்றையும் தொன்மங்களையும் சினிமா வழியாக உலகமெங்கும் கொண்டு செல்கிறது. அதற்காக ஹாலிவுட் இயக்குநர்களை கொண்டுவந்து, கோடிக்கணக்கான முதலீட்டை இறக்கி, சினிமா எடுக்கிறது. மிகச்சிறந்த உதாரணம் ரெட் கிளிஃப் Red Cliff (film) ஹாலிவுட் இயக்குநர் ஜான் வூ வை கொண்டுசென்று அப்படத்தை இயக்கிநர். அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும், உலகமெங்கும் கொண்டுசென்றனர். அந்த படம் உலக சினிமாவின் மாபெரும் திரைநிகழ்வுகளில் ஒன்று. அதன் நோக்கம் மூன்று. ஒன்று சீனமக்களிடையே, அவர்களின் அடுத்த தலைமுறையில், சீனா பற்றிய பெருமிதத்தை உருவாக்குவது. சீனா பெரும்பேரரசாக இருந்தது என ஆழமாக அவர்களின் உள்ளத்தில் நிறுவுவது. அந்த பொதுக்கனவே சீனாவை ஒருங்கிணைக்கும் ஆற்றல். இரண்டாவது, சீனா பற்றிய ஒரு மதிப்பை ஐரோப்பிய, அமெரிக்கச் சூழலில் உருவாக்குதல். எப்படி ஹாலிவுட் படம் பார்த்து நாம் ஐரோப்பியப் பண்பாடுமேல் பிரமிப்பு கொள்கிறோமோ அதே பிரமிப்பை அவர்களிடம் சீனா பற்றி உருவாக்குதல். அனைத்தையும் விட முக்கியமானது, கிழக்கு முழுக்க பரவியிருக்கும் மஞ்சளின மக்களிடம் சீனப்பெருமிதத்தை நிறுவுதல். அவர்களுக்கு ஏற்கனவே ஐரோப்பியப் பண்பாடு பற்றி பிரமிப்பும் தாழ்வுணர்ச்சியும் உண்டு. இந்த படங்கள் அதற்கு மாற்றாக அமைகின்றன. நாமும் குறைந்தவர்கள் அல்ல என எண்ணச் செய்கின்றன.சீனாவை தங்கள் இனத்தின் மையமாக எண்ண செய்கின்றன. உண்மையில் கிழக்கு ஆசிய நாடுகளுக்கு பலநூறு ஆண்டுகளாக சீனா மேல் இளக்காரமோ வெறுப்போதான் இருந்தது. அங்கு வாழும் பல லட்சம் பேர் சீனாவில் அரசியல் காரணங்களுக்காக தப்பி வந்தவர்கள். பல நாடுகள் சீன ஆக்ரமிப்பில் இருந்த வரலாறு கொண்டவை. ஆனால் இன்று அந்த இளக்காரம் அகன்றுவிட்டிருக்கிறது. இன்று சீனா அவர்கள் அனைவருக்கும் தலைமைப்பொறுப்பு ஏற்கக்கூடியதாக ஆகிவிட்டிருக்கிறது. அடுத்த தலைமுறை உள்ளத்தில் அந்த எண்ணத்தை உருவாக்கியதுல் பெரும்பங்கு சீன சினிமாவுக்கு உண்டு. இந்தப்போட்டியில் எங்கும் நாம் இல்லை. நமக்கு அந்த அளவுக்கு பணம் இல்லை. அந்த அளவுக்குச் செல்வாக்கும் இல்லை. ஆனால் நமக்கும் ஒரு பொற்கால வரலாறு இருந்தது, நாமும் வெற்றிபெற்ற சமூகமாக இருந்தோம் என நம் இளையதலைமுறைக்கும், இந்தியாவுக்கும், உலகுக்கும் சொல்வதற்கான ஒரு முயற்சி பொன்னியின் செல்வன். இதை நாம் சொல்லித்தான் ஆகவேண்டும். ஒரு சமூகமாக நீடிக்க, ஒரு பொதுக் கனவை நம் அடுத்த தலைமுறைக்குக் கையளிக்க.நம் முன் உள்ள பெரும் சவால் அது. ஆகவேதான் பொன்னியின் செல்வன் சினிமாவாக ஆக்கப்படவேண்டும். உலகமெங்கும் கொண்டுசெல்லப்பட்டாகவேண்டும் நன்றி – https://www.jeyamohan.in/166897/ பொன்னியின் செல்வன் பற்றிய அடுத்த வினாவே பொன்னியின் செல்வன் சினிமா எப்படி இருக்கும் என்பது. பொன்னியின் செல்வன் நாவல் ஒரு பெரிய சினிமாவாக எடுக்கப்பட்டு இந்தியாவெங்கும், உலகமெங்கும் கொண்டுசெல்லப்படவேண்டும் என்பதை ஏற்றுக்கொண்டவர்களுக்காகவே மேலே பேசமுடியும். பொன்னியின் செல்வன் ஒரு தூய கிளாஸிக், அதை தொடவே கூடாது, அது எவருக்கும் தெரியாமலேயே இருந்தால்கூட பரவாயில்லை, தமிழர்களின் ஒரு பொற்காலகட்டம் எவர் கவனத்துக்கும் வராமலிருந்தாலும் பரவாயில்லை எனச் சொல்பவர்கள் சிலர் உண்டு. அவர்களைப் பொறுத்தவரை பொன்னியின் செல்வனோ, ராஜராஜ சோழனோ, தமிழர் பண்பாடோ முக்கியமே இல்லை. அவர்கள் தங்கள் இளமையில் வாசித்து அடைந்த ஒரு கனவு அந்நாவல். அக்கனவை அப்படியே பொத்தி வைத்துக் கொள்வது மட்டுமே அவர்களின் நோக்கம். அது ஒரு தனிப்பட்ட உளநிலை. ஒரு பெரிய சமூகச் செயல்பாடு அந்த தனிப்பட்ட உளநிலையை கருத்தில்கொள்ள முடியாது. மேலும் இப்படிச் சொல்பவர்களில் மிகப்பெரும்பான்மையினர் இளமையில் பொன்னியின் செல்வன் வாசித்தபின் வேறெந்த நூலையும் வாசிக்காதவர்கள் என்பதையும் கவனித்திருக்கிறேன். பொன்னியின் செல்வன் சினிமாவாக ஆக்கப்படும்போது உருவாகும் பிரச்சினைகள் என்ன? எந்த ஒரு நாவலை சினிமாவாக ஆக்கினாலும் சில இழப்புகள், சில பெறுதல்கள் நிகழும். அவற்றைப் பற்றிய புரிதல் நம் சூழலில் விமர்சகர்களுக்குக் கூட இல்லை. அந்தப் புரிதல் இருந்தால் நாவலைப்போல சினிமா இல்லை என்பதுபோன்ற மேலோட்டமான விமர்சனங்கள் எழ வாய்ப்பில்லை. உலகமெங்கும் சினிமாவாக ஆக்கப்பட்ட பல இலக்கியப் பெரும்படைப்புகள் உள்ளன. அவற்றிலும் இரண்டு வகை உண்டு. ஒன்று பொதுரசிகர்களுக்குரிய பிரபல சினிமாவாக எடுக்கப்பட்டவை. இன்னொன்று, கலைப்படமாக எடுக்கப்பட்டவை. சினிமா நிபுணர்களுக்காக அல்ல, என்னைப்போன்ற ஆரம்ப சினிமா ரசிகர்களுக்காக சில உதாரணங்களைச் சுட்டிக்காட்டுகிறேன். பிரபல சினிமாக்களில் நாவல்கள் மிக வெற்றிகரமாகப் படமாக்கப்பட்டவை சில உண்டு. என் பார்வையில் சிறந்த உதாரணங்கள் டாக்டர் ஷிவாகோ(Doctor Zhivago), கான் வித் த விண்ட் (Gone with the Wind), இங்க்லீஷ் பேஷண்ட் The English Patient) போன்றவை. இலக்கியங்கள் கலைப்படங்களாக ஆவதன் சிறந்த உதாரணங்கள் அகிரா குரசோவாவின் ரான் (Ran) (ஷேக்ஸ்பியரின் கிங் லியர் ) சத்யஜித் ரேயின் பாதேர் பாஞ்சாலி. இரண்டாவது வகை கலைப்படங்களில் இயக்குநருக்கு பெரிய சுதந்திரம் உண்டு. அவர் தன்னுடைய படைப்பை எடுக்க மூலநூலை பயன்படுத்திக் கொள்கிறார். மூலநூலுக்கு அவர் மறுவிளக்கம் அளிக்கிறார். மூலநூலில் தனக்குத்தேவையான பகுதிகளை மட்டும் எடுத்துக்கொள்கிறார். மொத்த கதையின் களத்தையே மாற்றி எடுக்கப்பட்ட சிறந்த சினிமாக்களும் உண்டு. அந்தக் களத்தில் மூலநூலாசிரியர் முக்கியமல்ல, இயக்குநரே முக்கியமானவர். அவை நூலின் சினிமாச் சித்தரிப்புகள் அல்ல, அவை நூலில் இருந்து உருவான தனிக் கலைப்படைப்புகள். பொதுரசிகர்களுக்காக எடுக்கப்படும் முதல்வகை சினிமாக்கள் என்ன செய்கின்றன என்று பாருங்கள். அவை ஏதேனும் ஒரு திரைக்கதை உத்தி வழியாக மிகப்பெரிய நாவலை சுருக்கமான அடர்த்தியான ஒரு வடிவத்துக்குள் கொண்டுவருகின்றன. டாக்டர் ஷிவாகோ சிறந்த உதாரணம். அப்படித்தான் நாவலை சினிமாவாக எடுக்கமுடியும். ஏனென்றால் சினிமா நாவலைச் சுருக்கியே ஆகவேண்டும். அவ்வாறு சுருக்கியபின் அந்நாவலின் மிக உச்ச தருணங்களை மட்டும் வைத்துக்கொண்டு அந்நாவலின் கதையோட்டத்தையும், உணர்வுநிலையையும் சொல்ல சினிமாக்கள் முயல்கின்றன. அப்போது காட்சிகள்கூட சுருங்கும். ஏனென்றால் நாவலில் ஒரு காட்சி பத்துபக்கம் இருக்கும். வர்ணனைகள், உணர்ச்சிநிலைகள், உரையாடல்கள் என அது நீளும். வாசித்து முடிக்கவே அரைமணிநேரம் ஆகும். சினிமாவில் ஒரு காட்சி அதிகம்போனால் நான்கு ஐந்து நிமிடங்களே ஓடமுடியும். ஒரு நல்ல சினிமா இயல்பாக வெறும் அறுபது காட்சிகளாலானது. ஆகவே காட்சிகளும் சுருங்கும். நாவலில் விரிந்து விரிந்து செல்லும் நிகழ்ச்சி சினிமாவில் காட்சிவடிவில் சுருக்கமாக சில நிமிடங்களில் நிகழ்ந்து மறையும். ஆகவே, சினிமா நாவலின் காட்சியை குறைக்கிறதா? ஆழமற்றதாக ஆக்குகிறதா? இல்லை. சினிமாவின் அழகியலே வேறு. அது வெறும்காட்சி வழியாக ஓர் ஆழத்தை உருவாக்குகிறது. நான் எழுதிய நான் கடவுள் சினிமாவுக்கு தாண்டவன் அறிமுகக் காட்சிக்கு திரைக்கதையில் இரண்டே இரண்டு பக்கம்தான் எழுதியிருந்தேன். அது சினிமாவில் ஆறு நிமிடம் ஓடியது. ஒரு பயிற்சிக்காக அந்தக் காட்சியை திரும்ப நாவல் வடிவுக்கு எழுதிப்பார்த்தேன். நம்ப மாட்டீர்கள், ஏறத்தாழ நாற்பத்தைந்து பக்கம் வந்தது. தாண்டவனின் அந்த வருகை, கெத்து, அவன் அந்த பாதாளக்கோயிலுக்குள் நுழைய நுழைய அவனுடைய மனநிலை மாறிக்கொண்டே இருப்பது, உள்ளே இருக்கும் சிதைந்த மனிதர்கள், அவர்கள் ஒவ்வொருவருக்கும் இன்னொருவருடன் உள்ள உறவு, அவர்கள் தாண்டவனை கண்டதும் அடையும் விதவிதமான மனநிலைகள்… அதை வாசிக்க ஒரு மணிநேரம் ஆகும். சினிமா அளிப்பது அந்த காட்சியின் விரிவையும் ஆழத்தையும்தான். சுந்தரசோழர் படுத்திருக்கும் படுக்கையறையை கல்கி மிகச்சில சொற்களில் வர்ணித்துச் செல்கிறார். தரவுகளே அளிப்பதில்லை. நாம் நமக்குத் தெரிந்த வகையில் அதை கற்பனைசெய்து கொள்கிறோம். ஆனால் சினிமா ஒரு பெரிய சித்திரத்தை அளிக்கிறது. அந்த கட்டில், அந்த அறை, அதற்குள் இருக்கும் ஏவலர்கள், அவர்களின் ஆடைகள், அவர்களின் உடல்மொழி என அது அளிக்கும் நுணுக்கமான செய்திகளுக்கு அளவே இல்லை. சினிமாவில் அந்த ஒரு நிகழ்வை, 3 நிமிடம் மின்னிப்போகும் ஒரு காட்சியை அமைப்பதற்கு பல லட்சம் ரூபாய் செலவாகும். பல நிபுணர்கள் கூடி, ஆராய்ந்து, வரைந்து, செட் போட்டு, வரைகலையில் விரிவாக்கம் செய்து, ஒவ்வொரு முகத்துக்கும் நடிகர்கள் தெரிவுசெய்து, அவர்களுக்கு ஒப்பனை செய்து, உடையலங்காரங்கள் செய்து, நடிக்கச்செய்து, வண்ணம் சரிபார்த்து, வெட்டி ஒட்டி, ஒலி சேர்த்து முழுமை செய்யவேண்டும். ஒரு முழுநாவல் எழுதும் உழைப்பு அந்த ஒரு காட்சிக்கே தேவைப்படும். ஒருவர் கல்கியின் நாலைந்து வரிகளில் இருந்து, அவருடைய கற்பனைக்கேற்ப உருவாக்கி வைத்திருக்கும் சுந்தர சோழனின் படுக்கையறையையே சினிமாவிலும் எதிர்பார்ப்பார் என்றால் அவர் சினிமா ரசிகரே அல்ல. சினிமா காட்டும் அந்தப் படுக்கையறையை மிக நுட்பமாக பார்த்து, அது காட்டும் அக்காட்சியில் இருந்து மிக விரிவாக மேலும் கற்பனை செய்பவரே சினிமாவுக்கு ரசிகர். அவருக்காகவே சினிமா எடுக்கப்படுகிறது. குழந்தைகள் அப்படித்தான் சினிமாவைப் பார்க்கின்றன. அந்தக் குழந்தைகள் சோழர்காலம் பற்றி, நம் கடந்தகாலம் பற்றி ஒரு கனவை அடைவதற்காகவே பொன்னியின் செல்வன் எடுக்கப்படுகிறது. எண்ணிப்பாருங்கள், நாமும் நம் சின்னவயசில் பார்த்த சினிமாக்களில் இருந்தே நமது மனச்சித்திரங்களை அடைந்திருக்கிறோம். சினிமாவை ‘குறைத்தலின் கலை’ (Art of minimalism) என்பார்கள். நாவல் என்பது ‘விரித்துரைத்தலின் கலை’ (Art of elaboration) என்பார்கள். இரண்டும் முற்றிலும் வேறுவேறு திசைகளில் செல்லும் கலைகள். நாவல் அனைத்தையும் விரித்து விரித்துச் சொல்லிச் செல்கிறது. ஒவ்வொன்றையும் வரலாறு, தத்துவம், நினைவுகள் எல்லாவற்றுடனும் இணைக்கிறது. நாவல் வாசிக்கும் அனுபவம் என்பது நாம் நமக்குள் விரிந்துகொண்டே செல்வதுதான். இன்றைய யுகத்தின் முதன்மைக்கலை நாவல் என்பது என் எண்ணம் – ஆகவே நான் நாவல் எழுதுகிறேன். நாம் வாழ்ந்துகொண்டிருப்பது துளித்துளியாக உடைக்கப்பட்ட உலகில். அலுவலகம், வீடு, தெரு, அரசியல் எல்லாமே நமக்கு தனித்தனி அனுபவ உலகங்கள். நாவல் அனைத்தையும் ஒன்றாக இணைப்பது. நாவல் மிகப்பெரிய ஒரு வலைபோல நம்முள் உள்ள சிந்தனைகள், கற்பனைகள், நினைவுகள் எல்லாவற்றையும் ஒன்றாக தொகுக்கிறது. சினிமா நாவல் அல்ல. அது ஓர் அளவுக்குமேல் விரிந்தால் உடனே நாம் சலிப்படைவோம். யோசித்துப்பாருங்கள், அரைமணிநேரம் ஒருவர் பேசினால் கேட்டுக்கொண்டிருக்கிறோம். பத்துநிமிடம் சினிமா சரியாக நம்மை ஈர்க்கவில்லை என்றால் நெளிகிறோம். அதை சினிமாவில் Filmi time என்பார்கள். அது வெளியே உள்ள அதே காலம் அல்ல. அது மிகமிகச் செறிவூட்டப்பட்ட காலம். அதன் அடர்த்தி மிக அதிகம். சினிமாவில் பத்து நிமிடம் என்பது மிக மிக நீளம். ஏனெனில், சினிமா கனவுகளின் தர்க்கமுறை கொண்டது. கனவு சில கணங்களே நீடிக்கக்கூடியது. நீங்கள் பத்தாண்டுகளுக்கு முன் பார்த்து இன்றும் நினைவில் நீடிக்கும் சினிமாக்காட்சி ஒன்றை நினைவுகூருங்கள். மீண்டும் சென்று அந்தக்காட்சியைப் பாருங்கள். அது மிகமிகச் சிறிதாக, சில நிமிடங்களே மின்னி மறைவதாக இருப்பதைக் காண்பீர்கள். அந்தக் காட்சி உங்கள் நினைவில்தான் அவ்வளவு பெரியதாக ஆகியிருக்கும். அதுவே சினிமாவின் கலை. நீங்கள் அந்தக் காட்சியை எந்த முன் எதிர்பார்ப்பும் இல்லாமல் பார்த்தால் அது அந்த சிறிய பொழுதிலேயே உங்களுக்குள் ஆழமாக பதிந்துவிட்டிருக்கும். ஆனால் அதை ஒரு நாவலில் அல்லது நாடகத்தில் அந்தக்காட்சியை ஏற்கனவே நீளமாக பார்த்து, அது அப்படித்தான் என்று உறுதிசெய்துவிட்டு, அந்த சினிமாக்காட்சியை பார்த்தால் அது மிகச் சுருக்கமாக மின்னி மின்னி சென்றுவிட்டது என்றும், விரிவாக இல்லையே என்றும் தோன்றும். நாவல்களை சினிமாவாகப் பார்க்கும்போதுள்ள பெரிய சிக்கல் இதுவே. நாவலை வாசித்தவர்கள் பலர் அந்நாவலின் சினிமா வடிவைப் பார்த்து ‘சட் சட்னு முடிச்சிட்டான். நாவல்ல இன்னும் டீடெயிலா இருக்கும்’ என்பார்கள். அது சினிமா என்னும் கலைவடிவை அறியாததனால் சொல்வது. சினிமாவை அறிந்தவர்கள் நாவலின் அந்த காட்சி சினிமாவில் எந்த அளவுக்கு காட்சிவடிவ செய்திகளை செறிவாகக் காட்டுகிறது என்பதையே கவனிப்பார்கள். வந்தியத்தேவன் கடம்பூர் கடைவீதி வழியாக குதிரையில் சென்றான் என்பது நாவலில் ஒரு வரி. ஆனால் சினிமாக்காட்சியில் அந்த கட்டிடங்கள், அந்த தெருவின் வியாபாரிகள், அந்த குதிரை என பலநூறு நுண் செய்திகள் உள்ளன. நல்ல சினிமா ரசிகன் முடிவே இல்லாமல் அவற்றை பார்க்கமுடியும். ஆகவே ஒரு நாவல் சினிமா ஆகும்போது அதன் நாவல் தன்மையை இழக்கிறது. அது இழப்பு. சினிமாத்தன்மையை அடைகிறது. அது பெறுமானம். நாவல் சினிமாவடிவில் விரிவையும் நீளத்தையும் இழக்கும். விவாதத்தன்மை இருக்காது. நீண்ட உரையாடல்கள் இருக்காது. மன ஓட்டம் இருக்காது. ஆனால் காட்சிவடிவ செய்திகளை பலமடங்கு கூடியிருக்கும். அவற்றிலிருந்து மேலும் கற்பனை செய்ய ஆரம்பித்தால் நாம் ஏற்கனவே வாசித்த நாவலே பலமடங்கு வளர்ந்திருப்பதை உணர்வோம்
ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரந்தோறும் செவ்வாய்கிழமை கொப்பரை தேங்காய் ஏலம் நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில் மிலாது நபியை யொட்டி விடுமுறை விடப்பட்டதால் கொப்பரை தேங்காய் ஏலம் நடைபெற்றது. ஏலத்தை ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளர் மணிவாசகம் தலைமை தாங்கி நடத்தினார். பொள்ளாச்சி, ஆனைமலை சுற்று வட்டார பகுதிகளில் இருந்து கொப்பரை தேங்காய்களை ஏலத்திற்கு கொண்டு வந்தனர். தரம் பிரித்து கொப்பரை தேங்காய்கள் ஏலம் விடப்பட்டது. கடந்த வாரத்தை விட கொப்பரை தேங்காய் வரத்து அதிகரித்து இருந்தது. ஆனால் விலை அதிகரிக்கவில்லை. இதனால் விவசாயிகள் கவலை அடைந்தனர். இதுகுறித்து ஒழுங்குமுறை விற்பனை கூட அதிகாரிகள் கூறியதாவது:- 68 விவசாயிகள் 497 மூட்டை கொப்பரை தேங்காய்களை ஏலத்திற்கு கொண்டு வந்தனர். 272 மூட்டை முதல் தர கொப்பரை தேங்காய் ரூ.93.60 முதல் ரூ.98.15 வரையும், 225 மூட்டை 2-ம் தர கொப்பரை தேங்காய் ரூ.75.30 முதல் ரூ.88.10 வரையும் ஏலம் போனது. தொடர் விடுமுறை காரணமாக 10 நாட்களுக்கு பிறகு ஏலம் நடைபெற்றதால் கடந்த வாரத்தை விட 326 மூட்டை கொப்பரை தேங்காய் வரத்து அதிகரித்தது. கேரளாவில் தொடர் மழையின் காரணமாக வெள்ள பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. சாலைகள், பாலங்கள் துண்டிக்கப்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக இங்கிருந்து கேரளாவுக்கு எண்ணெய் விற்பனைக்கு கொண்டு செல்ல முடியவில்லை. எண்ணெய் மார்க்கெட் சரிவு காரணமாக கொப்பரை தேங்காய் விலையும் உயரவில்லை. வழக்கமாக அக்டோபர் மாதம் வரத்து குறைந்து கொப்பரை தேங்காய் விலை அதிகரித்து காணப்படும். ஏற்கனவே கொரோனா காரணமாக சரிந்து இருந்த எண்ணெய் மார்க்கெட்டில் விலை சற்று உயர்ந்து வந்தது.
கேள்வி என்னவோ சமகாலக்கலையைக் குறித்து தான், ஆனால் யாளிக்கு பைபலோபர் டிஸ்ஸார்டர் வந்துவிட்டதாக, பக்கத்து தூணில் நைட்டி அணிந்த ரதி சிற்பம் உயிர்பெற்றதும் யாளியை கேலி பேசியதில் இருந்து, அதை உண்மையென நம்பி, இப்படித்தான் – தான் பேசவந்ததை அடிக்கடி மாற்றிக் கொள்கிறது யாளி. அதுசரி, திடீரென்று சாதிக்காரர்ரகள், தேசியவாதிகள், நாத்திகர்கள் கூட தன்னைப் பார்த்துக்கொண்டிருக்கும் போது, பக்தர்கள் மட்டும் கம்பிகளுக்குள் வரிசைவரிசையாக வளைந்து நெளிந்து மூச்சு வாங்க மூலவரைப் பார்த்து, மீதமிருக்கும் பிரசாதத்தை தன் வாயில் கட்டப்பட்டிருக்கும் திருநீற்றுக் கிண்ணத்தில் கொட்டிச் சென்று கொண்டிருக்கும் மக்கட்கூட்டத்தைப் பார்த்தால் கோபம் வரத்தானே செய்யும். “சமகாலக் கலையை பற்றி உபதேசித்த உன் ஆசான்களின் வார்த்தைகளை இன்னும் நினைத்துக் கொண்டிருக்காதே, ஏனென்றால் சமகாலத்தில் அவருடன் அவர் வார்த்தைகளும் காலாவதி ஆகியிருக்கும்” என்கிற தத்துவத்தை கலையுலகில் ஒரு சகபயணியோடு உரையாடும்போது முதன்முறை கேட்டேன். அதன் உண்மைத்தன்மை ஏற்றுக்கொள்வதற்குச் சற்று கடுமையானது தான். ஆனால் ரசனையின் வளர்ச்சிக்கு அது எத்தனை அவசியமாகிறது? உண்மையில் கோட்பாடுகளைத் தேடிக்கொண்டிருப்பவன் ஏதோ ஒரு கோட்பாட்டில் தங்கிவிடுவது அல்லது தனக்கென ஒன்றினைச் சுவீகரித்துக் கொள்வது வளர்ச்சியைப் பாதிக்கும் என்று ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒன்றுதான். நேற்றைக்கு வரை ஒரு நண்பரோடு வந்த பயணத்தில் கலை கலைக்கானது என்று நம்பியவன், அதற்கு முன்னர் கலை மக்களுக்கானது என்று நம்பியிருந்தேன். மனம் நெகிழ்வாக இருப்பதால் எல்லாக் கோட்பாடுகளையும் உள்ளே அனுமதித்துப் பயணிக்க முடிகிறது. பயணிக்காமல் வெற்றுக் கூப்பாடு போடுவதால் பிழைப்பு நடக்கலாம். பிழைப்புவாதத்திற்காக கலைகளை அணுகுபவர்களுக்கு அத்துடன் முடித்துக்கொள்ளலாம் பாதகமுமில்லை. சூப்பர் ஈகோ என்று சொல்லப்படும் உணர்வுகளோ அல்லது நித்தியத்தை தேடி அலையும் மனமோ பயணிக்காது ஒன்றையும் கண்டடையமுடியாது. இப்போது எந்த மனநிலையில் இருக்கிறேன் என்று யோசித்துப் பார்த்தால், மேற்சொன்ன அவ்விரு வாக்கியங்களையும் மறு ஆய்வு செய்ய விரும்பும் நிலையில் இருப்பதாக உணர்கிறேன், கலை – கலைக்கானது, மக்களுக்கானது என்கிற இரண்டு விவாதங்களுமே ஒன்றோடு ஒன்று தொடர்புடையதாகத் தான் பார்க்க முடிகிறது. ஆனால் கலைஞன் யாருக்கானவன் – கலைஞன் மக்களுக்கானவனா அல்லது கலைக்கானவனா? கலைஞன் தன் இருப்பு மீது எழும் கேள்விகளுக்காகத் தான் அந்த விவாதத்தை உருவாக்கினானா? அல்லது கோட்பாட்டாளன் கலைஞனை தன் வசத்தில் வைத்திருக்க உருவாக்கினானா? மேற்சொன்ன கோட்பாட்டாளன் என்பது அரசாங்கமாகவும் இருக்கக்கூடும். INFERNO எனும் படம் சமீபத்தில் திரைக்கு வந்திருக்கிறது, DANTEYன் கலைப்படைப்புகளை முன்வைத்து ஒரு கோட்பாட்டாளன் சில ரகசியங்களை வைத்துவிட்டுப் போகிறான் (BERTNARD ZOBRIST). அந்த ரகசியங்களை அவிழ்க்க மற்றொரு கோட்பாட்டாளன் (ROBERT LANGDON) முயல்கிறார். தாந்தேயைப் போன்று மற்றொரு மறுமலர்ச்சி கால ஓவியரான சேண்ட்ரோ போட்டிட்ஸெல்லி (SANDRO BOTTITSELLI) வரைந்திருக்கும் நரகத்தின் வரைபடத்திலிருந்து கிடைக்கும் துப்புகளைக் கொண்டு தாந்தேயின் படைப்புகளை பின்தொடர்ந்து செல்வதால், உலகின் 90 சதவீத மக்களை அழிக்குமளவுக்கு ஜோப்ரிஸ்ட் பதுக்கிவைத்திருக்கும் வெடிக்க ஆயத்தமாகிக் கொண்டிருக்கும் மோசமான (ப்ளேக் நோய் போன்ற தொற்று நோய்) வைரஸினை செயலிழக்க வைக்கிறார் ராபர்ட் லேங்டன். இத்தகைய கொடூரமான அழிவை முற்படுத்த விரும்பும் பெர்ட்னார்ட் ஜோப்ரிஸ்ட் உலகப் பணக்காரர்களில் ஒருவன், மதப்பிரச்சாரகன் போல் உலகமெங்கும் பக்தர்களைப் பெற்றிருப்பவன். “உலகத்தின் மக்கட்தொகை வருங்காலத்தின் உலகநன்மைக்கு எதிராக இருக்கிறது” என்று பிரச்சாரம் செய்பவன். டான் பிரவுன் எழுதிய “INFERNO”நாவலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் வேறு சில திறப்புகளையும் எனக்குள் கொண்டு வந்தது. அது தான் மேற்சொன்ன அவ்விவாதங்கள் பற்றிய கேள்வி. “கலைஞன் யாருக்கானவன்?” என்று அந்த படம் என்னைப் பிரித்துப் பார்க்க உதவியது. சென்ற வருடம் மும்பை சென்று வந்த நினைவுகளில், கலையை போஷிக்கத் தெரியாத தமிழகம் என்று நம்பியவனாகத் தான் இருந்தேன். எல்லா வகைகளிலும் கலைப்படைப்புகளை, கலைஞர்களை போஷிக்கத் தெரியாத நம் ஊர் மக்கள் எங்கே, எங்கே தம் பிள்ளைகள், பேரன்களென குடும்பத்துடன நவீன கலைக்கூடங்களுக்குக் கூட்டிச் சென்று காண்பிக்கும் மக்கள் எங்கே என்று நினைத்துக் கொண்டு தான் அம்முவுடன் பேசிக்கொண்டிருந்தேன். எல்லா வகையிலும் தமிழகம் பின் தங்கியிருக்கிறதே என்று நொந்து கொண்டிருக்கையில் தான், அவள் எனது மும்பை பயணம் பற்றி விசாரித்தாள். அது தான் என் நம்பிக்கைகளை மீண்டும் சிதைத்துப் போட்டது. அம்மு சிதம்பரத்தைச் சேர்ந்தவள், நடனம், இசை, ஓவியம், கவிதைகள் என பல்வேறு பரிச்சயமும் உண்டு எல்லாவற்றையும் விட அவள் ஒரு சிறந்த பயணி. பலமுறை அவளை அழைக்கும் பொழுதும், அவள் கைப்பேசியை எடுக்கவில்லை என்பதை இதுவரைக்கும் பத்திற்கும் மேற்பட்ட மொழிகளில் தெரிந்து கொண்டிருக்கிறேன். மும்பையில், ’இந்தியாவின் நுழைவாயில்’ என்று சொல்லப்படும், பார்ஸி இனத்தவர்கள் அதிகமாக வாழும் செல்வச்செழிப்பு மிக்க நகரத்தின் ஒரு மூலையை மட்டும் மும்பை என்று நினைத்துக் கொண்ட கற்பிதத்தை எண்ணிச் சிரித்தாள். “மும்பையைப் பற்றித் தெரிந்து கொள்ள முதலில் சுகெத் மேஹ்தாவின் MAXIMUM CITY எனும் நூலினைப் படி, இல்லாவிட்டால் ஆனந்த் பட்வர்தனின் ஆவணப்படங்களைப் பார்” என்றாள். ஆனந்த பட்டவர்தனின் ஆவணப்படங்கள் யூட்யூபில் கிடைக்கிறது, அதிலிருந்து அப்படியே பாபர் மஸ்ஜித் இடிப்பு பற்றிய ஆவணப்படங்களும் பார்த்தேன். ஹுசைன் சைதி எழுதிய மும்பை டூ டோங்கிரி எனும் மற்றொரு புத்தகம், மும்பை நகரத்தின் கறுப்புப் பக்கங்களைக் காட்டுகிறது. இவற்றோடெல்லாம் ஒப்பிட்டுப்பார்த்தால் தமிழகம் ஒரு WELFARE STATEதான் என்று அவள் சொன்னதிலும் ஒரு நியாயம் இருக்கவே செய்கிறது. கலைகளை போஷிக்கும் அரசாங்கம் இருந்தும், கலாச்சாரங்களைப் புராணங்களைத் தொழும் மக்கட் கூட்டம் இருந்தும் வடயிந்தியா மிகவும் பின் தங்கியே இருக்கிறது என்றாள். பல கிராமங்கள் தேசத்துடன், அரசாங்கத்துடன் துண்டிக்கப்பட்டு இருப்பதை, அவளுக்கு அஞ்சலிலோ அல்லது கூரியரிலோ ஒரு புத்தகம் அனுப்ப இயலாத அளவுக்கு சிரமப்பட்டபோது தான், இப்படியான கிராமங்கள் இருப்பதைத் தெரிந்து கொள்ள முடிந்தது. அப்போது அவள் இருப்பது அரியானா மாநிலத்தில். செல்வந்தர்களின் வாழ்வியல் முறையை மட்டும் வைத்துக் கொண்டு வடக்கினைப் பற்றி நாம் கொண்டிருக்கும் கற்பிதங்களை சுட்டிக்காட்டினாள். தமிழகத்தில் உருவாகியிருக்கும் ஒரு மத்தியத்தரவர்கம் மற்ற மாநிலங்களைக் காட்டிலும் பெரியது என்றாள். அரசியல்வாதிகளாலும், மத்தியிலிருக்கும் காழ்ப்புணர்வுகளாலும் இயற்கை வளங்கள் சூறையாடப்பட்டிருந்தாலும் பொதுமக்களின் வாழ்வியல் முறை பிரதமரை உருவாக்கியிருக்கும் குஜராத்தைக் காட்டிலும் சிறப்பாகத் தான் இருக்கிறது. *** கலாச்சாரங்கள், தொன்மங்கள், கலைகள் ஆகியவற்றில் பின் தங்கியிருந்தாலும் பெரியதொரு மதக்கலவரம் இங்கே வரவே இல்லை. வடக்கிற்கு இணையான சாதிக்கொடுமைகள் தொடர்ச்சியாக நடைபெறுவதில்லை, அப்படி நடைபெற்றுக் கொண்டிருந்தாலும் அதற்கெதிரான குரல்கள் சத்தமாகவே ஒலிக்கின்றன. இதற்கெல்லாம் காரணம் தேசிய நீரோடையில் நாம் சற்று ஓரமாக ஓடிக்கொண்டிருப்பதாலும் எனலாம். ஆனால் இதையெல்லாம் தடுக்கும் குரலாகத்தான் தேசியக்கட்சிகள் தமிழகத்தைக் குறை கூறிக்கொண்டிருக்கின்றன, அவர்கள் சாதிய மோதல்களையும், மதத்துவேஷங்களையும் பெருக்கினால் மட்டுமே தமிழகத்தைத் தேசிய நீரோடையில் இணைப்பார்கள். அவர்களுக்கு மற்றொமொரு காரணமாக அமைவது தான் கலைத்தன்மை. கலைகளை போஷிக்கத் தெரியாத தமிழகம் என்று ஆழ்மனதில் கொண்டு சேர்ப்பதும் ஒரு கலையாகத் தான் கற்பிக்கப்படுகிறது அது அவநம்பிக்கைகளை உருவாக்கும் கலை. தனது சுவரோவியத்துடன் லியோ டாங்மா (Denver Airport, Colarado) அதிகாரத்தின் கீழ்படிதலால் உருவான கலை அவநம்பிக்கை எழுப்பவே முயற்சி செய்யும், அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் டென்வர் விமானநிலையத்தின் ஓவியங்களைப் பார்த்தவர்களுக்கு இது தெரியும். கலைகளைக் கொண்டாடும் LAND OF OPPORTUNITIES என்று சொல்லப்படும் அமெரிக்காவில் தான் இப்படியான ஒரு ஓவியம் இருக்கிறது, நரகத்தைக் காட்டி பயமுறுத்தும் மத அமைப்புகளை விட பயங்கரமானதாக புது உலக ஏற்பாடு (NEW WORLD ORDER) என்றும் புதிய நாஜிக்களின் உலகம்(NEO NAZI) என்று சொல்லப்படுகிறது டென்வர் விமானதளம் அமைந்திருக்கும் பகுதி. அந்த விமானநிலையத்தில் வைக்கப்பட்டிருக்கும் கலைப்படைப்புகள் பொதுமக்களை அச்சுருத்துபவை, திகிலடையச் செய்பவை. Murals of Denver airport (ref: USA – Conspiracy theories) பன்னாட்டு விமான நிலையத்தின் சுவரோவியங்களில் மாண்டு போன சிறுவர்கள், நோய்வாய்ப்பட்ட, பிச்சையெடுக்கும் மனிதர்கள், கொத்து கொத்தாக மாண்டு போனவர்கள், உயிர் பிழைக்கும் அச்சத்தில் எங்கிருந்தோ எங்கோ செல்பவர்கள், அவர்களைக் காப்பாற்றும் ராட்சஷத போர்வீரர்கள், கொள்ளை நோய்கள், தொற்று நோய்கள் என்று வாதையும், வலியுமான ஓவியங்கள் எதற்காக வரையப்பட்டிருக்கின்றன. இது யாருக்கான கலை? மற்றுமொரு சுவர் சித்திரத்தில் மிகப்பெரிய ஒரு அழிவைச் சந்தித்த, அஃதாவது இரண்டாம் உலகப்போரை விட பலமடங்கு மோசமான யுத்தம் ஒன்றைப் பற்றிய மற்றுமொரு சித்திரம் பிரிட்டன் ஐயர்லாந்து, இந்தியா பாக்கிஸ்தான், ஈரான் ஆஃபகன் கொடிகளைத் தாங்கும் சிறுவர்கள் – லியோ டாங்குமா எனும் ஓவியர் எந்த சிந்தனையில் வரைந்தார் என்பதை நாம் அறியோம். ஆனால் அமெரிக்காவின் சர்ச்சைக்குரிய NEW WORLD ORDER கனவினை விபரணை செய்யும் படைப்பாகவே சித்தரிக்கப்படுகிறது. அதற்கு காரணம், அந்த படைப்புகள் (COMMISSION WORK of DENVER AIRPORT) அரசாங்கத்தின் ஆணைக்கிணங்க வரையப்பட்டது தான். இப்படி உலகம் போற்றும் பல கலைஞர்கள் அரசுக்குக் கட்டுப்பட்டவர்கள் தான், இது பிரமிடுகளின் காலத்திலிருந்து இருக்கின்றது. இந்தியாவில் கூட எமெர்ஜென்சி காலக்கட்டத்தில் இந்திராகாந்தியின் காலக்கட்டத்தில் எம்.எஃப்.ஹுசைனும், ஜே.ஸ்வாமிநாதனும் நம் ஊரைச் சேர்ந்த ஜெயகாந்தன் போன்ற ஆளுமைகளும் அரசாங்கத்திற்கு ஆதரவு தெரிவித்தார்கள். ஆனால் அதே சமயம் இந்த அதிகாரத்தை எதிர்த்து முற்போக்கு கலை அமைப்புகளும் செயல்பட்டுக்கொண்டே தான் இருக்கின்றன. குஜராத் கலவரத்திலிருந்து இன்று வரை மோடி அரசை விமர்சிப்பதில் எந்த ஒரு தயவும் காட்டாதவராக இருக்கும் விவான் சுந்தரம் போன்ற ஓவியர்களும் ஒருபுறம் இருக்கத்தான் செய்கிறார்கள். சொந்த மண்ணை விட்டு அண்டை மாநிலங்களைச் சிறப்பாக இருக்கிறது என்றும், அண்டை மாநிலங்களை விட மேலை நாடுகள் சிறப்பாக இருக்கிறது என்றும் சொல்பவர்கள் சொல்லிக் கொண்டுதான் இருப்பார்கள். நம்பிக்கைகளை உருவாக்கும் கலைகள் தான் இங்கே அவசியம் அது தான் சமகாலக் கலையாக இருக்கும் என்று உணரமுடிகிறது. உலகில் மிக அதிகமாக நகரமயமாதலாகும் நகரம் சென்னை தான், சென்னையோ, தமிழகமோ எத்தனையோ பேருக்கு இன்னும் நம்பிக்கையைக் கொடுத்தபடி தான் இருந்து வருகிறது. இங்கிருக்கும் கலைகளில் மட்டும் அது இல்லாமலா போய்விடும்? சமகாலத்தின் தேவைகளை உணராதப் படைப்புகள் எத்தனை உச்சமான செயல்திறன்களால் உருவாக்கப்பட்டாலும் அது சமகாலக்கலையாகப் பார்க்கப்படாது. *** அண்மையில் நான் சென்று வந்த ஓவியக் கண்காட்சியில் அந்த ஓவியரைச் சந்தித்தேன் பெயர் விஜய் பிச்சுமணி (வயது 29), ஒரு பதிப்போவியராக இயங்கும் அவர் பதிப்போவியத்தில் 56ஆவது ஆண்டு தேசிய விருது பெற்றவர். இவரது படைப்புகள் ART HOUZ கேலரியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது (அக்டோபர் 30ம் தியதி வரை) இவரது படைப்புகள் அனைத்திலும் சமகாலத்தின் சூழலின் பதற்றம் நிறைந்திருக்கிறது, மேற்குத் தொடர்ச்சி மலைகளை ஒட்டிய ஊர் ஒன்றில் பிறந்ததாலோ என்னவோ (திருவட்டாரை ஒட்டி நிறைய கூப்புகள் இருப்பதாக அறிந்திருக்கிறேன் – மரம் அறுக்கும் தொழிற்சாலைகள்) வனம் அவர் படைப்புகளில் மிகுந்திருக்கிறது. DOT என்னும் தலைப்பில் நடைபெற்ற அவரது கண்காட்சியில் பதிப்போவியங்கள் அனைத்தும் WOODCUT முறையில் உருவாக்கப்பட்டிருந்தன. அவரது படைப்புகள் அறுபட்ட மரங்கள், இலைகள், வேர்களின் சப்தங்களை பொதிந்து வைத்திருந்தன. அழிந்து கொண்டிருக்கும் வனத்தின் ஓசையைப் பதிவு செய்வதற்கு அவர் பிரதான ஊடகமாக WOODCUT பயன்படுத்தப்பட்டது சிறப்பானது. நம் வனம் அழிய அதைவிட வேகமாக அழிந்துக் கொண்டிருக்கும் பல்வேறு உயிரினங்களில் பிரதானமான யானைன் WOODCUT பதிப்பு யானையின் அளவிற்கே உருவாக்கியிருந்த விதம் சிறப்பானது. அவர் செயல் திறன், துல்லியத்தன்மையுடன் சமகாலத்தின் உணர்வுகளோடு படைப்புகளை உருவாக்கியிருப்பது குறிப்பிடப்பட வேண்டியது. You & Me(Wood cut print) – Vijay Pichumani மேலும் ஒரு படைப்பு – YOU & ME என்கிற ஓவியம் பார்வையாளனுக்கு ஏற்படுத்தும் தாக்கம் அது சமகாலத்தின் குரலாகவே ஒலிக்கின்றது. அது உலகமயமாக்களுக்குப் பின்பான DEFORESTATIONஐயும், அதைப் பொறுக்க இயலாத ஒரு தனிமனிதன் பதிவு செய்யும் வனத்தின் ரணங்களின் ஓசையாக இருக்கிறது. உச்சம். அவருக்கு வாழ்த்துகள். ஏ.பாலசுப்ரமணியம் பற்றித் தெரிந்து கொண்ட போதும், மும்பையில் எல்.முனுசாமியின் ஓவியங்களால் ஈர்க்கப்பட்டு அவரது MONOGRAMஐத் தேடித்தேடி மும்பையில் வாங்கியபோதும் ஏற்பட்ட மனநிலையில் தான் இப்போது விஜய் பிச்சுமணியையும் பார்க்கிறேன். நம்பிக்கை இருக்கிறது! சமகாலத்தில் எல்லோருக்குமே வாய்ப்பு இருக்கிறது. சமகாலத்தை அறிந்து கொண்ட ஒரு கலைஞன், நம்பிக்கையை உருவாக்கும் கலைஞனாகத் தான் இருப்பார். அந்த வகையில் விஜய் பிச்சுமணியைக் கண்ட திருப்தியோடு யாளியை அனுப்பி வைத்தேன்.
15.4.19 அன்று பாரிஸ் Notre Dame பற்றியெரிந்து சுற்றாடலை புகைமூட்டங்களாலும் சாம்பல் புழுதிகளாலும் மூடிய அதிர்ச்சியும் துயரமும் பலர் மனங்களை ஊடுருவிச் சென்றுகொண்டிருந்தது. ஐரோப்பிய வரலாற்றின் ஒரு குறியீடு தீயில் எரிந்து நாசமாகிக்கொண்டிருந்த துயரம் நிகழ்ந்துகொண்டிருந்தபோது, நாம் எப்படியான உலகத்தில் வாழ்கிறோம் என்பதை இரு பெரும் பணக்காரர்கள் நிறுத்திவைத்து சொல்லியிருக்கிறார்கள். அவர்கள் Arnault and Pinault. இச் சம்பவம் நடந்து 6 மணித்தியாலத்துள் அவர்கள் இருவரும் 300 மில்லியன் யூரோவை Notre Dame இன் மீளமைப்புக்கு அன்பளிப்பாக வழங்கியிருக்கிறார்கள். உலகின் மிகப் பெரிய ஆடம்பரப் பொருட்களை உற்பத்திசெய்கிற கம்பனியின் சொந்தக்காரரான Arnault ஐரோப்பாவின் மிகப் பெரும் பணக்காரரும் உலகின் நான்காவது பெரும் பணக்காரரும் ஆவார். 91.3 பில்லியன் டொலருக்கு அதிபதியாவார் இவர். மற்ற நன்கொடையாளர் Pinault. இவர் 30 பில்லியன் யூரோவுக்கு அதிபதியாவார். இவர்கள் இருவரிடமும் உள்ள பணமானது கொராற்சியா, சேர்பியா, ஸ்லோவாக்கியா, ஸ்லோவேனியா போன்ற நாடுகளில் உள்ள பணத்தைவிட அதிகமானது. இந்த பெருந்தொகை அன்பளிப்பு அவர்களுக்கு ஒரு பொருட்டான தொகையல்ல. உதாரணமாக உங்களிடம் இப்போ 3000 யூரோ பணம் இருக்குமாயின் நீங்கள் ஒரு பத்து யூரோவை .. மீளமைவுக்கு நன்கொடையாக அளிப்பீர்களானால் அது இந்த இரு பணக்காரர்களினது நன்கொடைக்கு விகிதாசாரத்தில் சமமானது. இது எப்படியான உலகத்தில் நாம் வாழ்கிறோம் என்பதை வெளிப்படுத்துகிறது. 7 பில்லியன் மக்களைக்கொண்ட இந்த உலக உருண்டையில் ஒரு 6 மணித்தியாலத்துள் 300 மில்லியன் யூரோக்களை இரு மனிதர்கள் அன்பளிப்பு செய்யக்கூடியதாக இருக்கிறது. இந்த உலகத்தில் ஒவ்வொருவருக்கும் போதிய உணவும், வாழ்வதற்கான குடியிருப்பும் ஒவ்வொரு பிள்ளைகளுக்கான கல்வியும் வழங்க போதுமான பணம் இவ்வாறான சில பணக்காரர்களிடம் முடங்கிப்போய் உள்ளது என்பதை இந்த சம்பவம் வெளிப்படுத்துகிறது. கலைப் படைப்புகளும் கட்டடக்கலை வரலாறும் அழகும் மக்களின் உழைப்பிலும் அவர்களின் சாதுரியத்திலும் உருவாகியவை. எனவே அவை எல்லாவற்றுக்கும் முதலில் அவர்கள்தான் பாதுகாக்கப்பட வேண்டியவர்கள். செங்கற்களும் சுண்ணாம்புக் கலவைகளும் கண்ணாடிகளும் எரியலாம். ஆனால் அவை இரத்தம் சிந்தாது. பட்டினியால் சாகாது. உலகில் -பாரிஸ் உட்பட- எல்லா இடங்களிலும் ஒவ்வொரு நாளும் மக்கள் துன்பப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இது முன்பக்கத்தில் செய்தியாக முக்கியத்துவப்படுத்தப் படுவதில்லை. அன்பளிப்புக்கான உணர்வுத்தூண்டலை உலகின் பணக்காரர்களிடம் ஏற்படுத்துவதில்லை. பிரான்சில் இப்போ 140’000 வீடற்ற மக்கள் இருக்கிறார்கள். இதில் 30’000 பேர் குழந்தைகள். 2018 இல் வெளியான அறிக்கையொன்றின்படி மொத்தம் 8.8 மில்லியன் மக்கள் பிரான்சில் (2017 இல்) வறுமைக் கோட்டின்கீழ் இருக்கிறார்கள். அதாவது மாத வருமானம் 1026 யூரோவுக்கு குறைவான சம்பளம் பெறுகின்றனர். எட்டு பேரில் ஒருவர் என்ற விகிதத்தில் (பிரான்சில்) வறுமையில் வாழ்கின்றனர். இப்படியிருந்தும் உலகின் ஆறாவது பெரும் பணக்கார நாடாக பிரான்ஸ் இருக்கிறது. ஆக பணம் அங்கே இருக்கிறது. சுட்டுவிரலில் காத்துக் கிடக்கிறது. ஆனால் அது மக்களின் கையில் இல்லை ! * அயர்லாந்தைச் சேர்ந்த இளம் ஊடகவியலாளரான Carl Kinsella இன் ஆக்கத்திலிருந்து உருவப்பட்ட தரவுகள்தான் இவை. அந்த ஆக்கம் இதுதான். https://www.joe.ie/life-style/notre-dame-feature-665670 FB Link : https://www.facebook.com/photo.php?fbid=2728637213874022&set=a.146932932044476&type=3&theater
ஜி8 is popularly mentioned in tamil media by the same name. If it is preferred to move this page to a tamil title, then my suggestions are குழு8 or அணி8 --ரவி (பேச்சு) 6 ஜூலை 2005 09:50 (UTC) குழு 8 நாடுகள் எனத் தலைப்பிட்டு ஜி8க்கு ஒரு வழிமாற்று செய்யலாம்.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 01:22, 6 சூலை 2011 (UTC) எட்டு நாடுகள் குழு என்று தலைப்பிட்டு ஜி8க்கு வழிமாற்றுத் தரலாம்.--மணியன் 01:53, 6 சூலை 2011 (UTC) பயண்பாட்டிலுள்ள மாற்றுச்சொல் இல்லாததால் ஜி8 என்ற சொல்லே இருக்கலாம் என நினைக்கிறேன். கிரந்தம் நீக்க வேண்டும் என்றால் சி8 என்று புதிதாக வைக்கலாமா?--நீச்சல்காரன் (பேச்சு) 00:38, 24 மே 2012 (UTC) இங்கு கிரந்த நீக்கம் நோக்கம் இல்லை. மூலப் பெயர் ஒரு காரணப் பெயர் என்பதால், தமிழிலும் தகுந்த பெயரை வைப்பது நன்று. இடாயிட்சு உள்ளிட்ட சில மொழிகளில் முழுமையான பெயரில் வழங்கப்படுவதை நோக்கலாம்: http://de.wikipedia.org/wiki/Gruppe_der_Acht --இரவி (பேச்சு) 06:21, 24 மே 2012 (UTC)
காளமேகம் மற்றும் மற்ற தனிப்பாடல் வித்தகர்களின் வசவுச் சொல்லாண்மை பற்றி ராயர் காபி கிளப்பில் பேசிக்கொண்டிருக்கையில், நான் இப்பொழுது படித்துக் கொண்டிருக்கும் இலக்கியச் சிந்தனை 2002 ஆம் ஆண்டின் சிறந்த சிறுகதைகள் (வானதி பதிப்பகம் வெளியீடில்) புத்தகத்தில் மதிப்புரை எழுதும் ராஜரங்கன் சொல்வது இது: "ஒளிவு மறைவற்ற பேச்சு என்றதும், தற்காலத் தமிழ்ச் சிறுகதைகளில் ஒரு சாராரின் போக்கு நினைவுக்கு வருகிறது. இடக்கரடக்கலை பூர்ஷ்வாக்களின் குறியீடாக எடுத்துக் கொள்வதால் இவர்களுடைய எழுத்தில் 'நாலெழுத்து மந்திரங்கள்' தாராளமாகவே புழங்குகின்றன. வட்டார வழக்கோ, வெளிநாட்டுத் தமிழ்க் கதைகளோ எதுவாயினும் "பச்சை" இச்சைக்குரிய நடையாகப் பயில்வது சகஜமாகி விட்டது. "எல்லோரும் வாழி என்பதற்கு எதுகையான ஒரு வசவு மொழியை அவன் பிரயோகித்தான்" என்று ஒரு பிரபல எழுத்தாளர் முன்பு எழுதிய போது முகிழ்த்த புன்முறுவல், படித்த, ஆனால், வம்புகளில் ஆர்வம் கொண்ட, மத்தியதர வர்க்கத்தின் ரசிப்பைக் காட்டியது. இன்று அந்த எதுகையில்லாமலே சரளமாக வசவு மொழிகளைக் கையாளும் இயல்பும், பக்குவமும் சில தமிழ் எழுத்தாளர்களுக்கு வந்திருப்பது அவர்களாக எடுத்துக் கொண்ட சுதந்திரம்." 'நாலெழுத்து மந்திரங்கள்' - இவையெல்லாம் ஆங்கில நாலெழுத்து சமாச்சாரங்கள். தமிழில் வசவு வார்த்தைகள் இரண்டெழுத்தில் ஆரம்பித்து, ஐந்தெழுத்திற்கும் மேற்பட்டவைகள். மேற்சொன்னதைப் படிக்கும் போது அசோகமித்திரனின் '18வது அட்சக்கோடு' பத்தி ஒன்று நினைவுக்கு வந்தது. உங்களுக்காக இதோ: "ஆங்கில மொழியின் நான்கு எழுத்துச் சொற்களைத் தாராளமாக உபயோகிப்பார்கள். அதற்கு ஒரு பொருத்தமே இருக்காது. கல் தடுக்கினால் நான்கெழுத்து, புல் தடுக்கினால் நான்கெழுத்து. கில்லிதாண்டுலில் தவறினால் நான்கெழுத்து, பம்பர ஆட்டத்தில் தவறினால் நான்கெழுத்து, மரமேறினால் நான்கெழுத்து. மாடு போனால் நான்கெழுத்து, பிளாசா கொட்டகைக்குப் போய் இரண்டு மணிநேரம் கியூவில் நின்று ஜான் ஹால்-மரியா மாண்டஜ் சினிமாவுக்கு டிக்கெட் கிடைக்காவிட்டால் நான்கெழுத்து. மாரிஸுக்குப் பல சகோதரர்களிடையில் இரு அக்காக்களும், ஒரு தங்கையும் உண்டு. அவர்களோடு மாரிஸுக்கு அபிப்ராய பேதமேற்பட்டாலும் நான்கெழுத்து. இதில் ஒரு குறிப்பிடத்தக்கது, அப்பெண்களும் இந்த நான்கெழுத்துச் சொற்களைப் பதிலுக்கு வீசுவார்கள்." பல ஆண்டுகளுக்கு முன்னர் soc.culture.tamil இல் தமிழ் வசவு வார்த்தைகள் அனைத்தையும் திரட்டும் அரும்பெரும் பணி ஒன்று நடந்தது. அந்தப் பொக்கிஷக் குவியல் இப்பொழுது கூகிளோ அல்லது வேறெங்கோ கிடைக்குமா என்று தெரியவில்லை.
அமெரிக்காவில் நாடாளுமன்ற கீழ்சபைத் தேர்தலில் ஆளும்கட்சியான ஜனநாயக கட்சி பெரும்பான்மை இழந்தது. அந்த வகையில் எதிர்க்கட்சியான குடியரசு கட்சி 218 இடங்களை கைப்பற்றி பெரும்பான்மை பெற்றதாக அறிவிக்கப் பட்டுள்ளது. இத்தேர்தலில் அமெரிக்க பிரதிநிதிகள் சபையை எதிர்கட்சியான குடியரசுக் கட்சி கைப்பற்றிய நிலையில், தற்போதைய சபாநாயகர் நான்சி பெலோசி தன் பதவியை ராஜினாமா செய்துள்ளார். அமெரிக்காவில் நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையில் மொத்தம் உள்ள 435 இடங்களுக்கும், செனட் சபையில் 105 இடங்களில் 35 இடங்களுக்கும் கடந்த 8-ம் தேதி தேர்தல் நடந்தது. 2024-ம் ஆண்டு நடக்க உள்ள ஜனாதிபதி தேர்தலில் இந்த தேர்தல் முடிவுகள் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு உருவாகி இருந்தது. அதுமட்டுமின்றி ஜனாதிபதி ஜோ பைடனின் 2 ஆண்டு கால ஆட்சிக்கு மக்கள் அளிக்கிற சான்றிதழாகவும் இந்த தேர்தல் முடிவு அமையும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் கடந்த 8-ம் தேதி நடந்த தேர்தலில் எதிர்க்கடசியான குடியரசு கட்சி 218 இடங்களை கைப்பற்றி பெரும்பான்மை பெற்றுள்ளது. இதையடுத்து சபாநாயகர் நான்சி பெலோசி, பிரதிநிதிகள் சபையில் சபாநாயகர் பதவி மற்றும் ஜனநாயக கட்சி தலைவர் பதவியில் இருந்து விலகவுள்ளார். செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய நான்சி பெலோசி, "அமெரிக்க ஜனநாயகக் கட்சியை தலைமை தாங்க அடுத்த தலைமுறைக்கு நேரம் வந்துவிட்டது. நான் சட்டமன்ற உறுப்பினராக தொடர்ந்து சேவை செய்வேன்’’ என்று தெரிவித்தார். இதனை தொடர்ந்து அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் பதவிக்கு குடியரசு கட்சியைச் சேர்ந்த கெவின் மெக்கார்த்தி தேர்ந்தெடுக்கப்படுவார் என எதிர்பார்க்கப் படுகிறது.
மத்திய அரசில் தற்போது ஏற்பட்டிருக்கும் ஆட்சி மாற்றத்துக்குப் பின் இந்து மதவாத பிற்போக்குச் சக்திகள் ஊக்கம் பெற்றிருப்பதாகக் கருதுகிறீர்களா? இந்துமத மேலாண்மைச் சிந்தனைகளை விதைக்கும், வளர்க்கும் எழுத்து முயற்சிகள் தமிழில் முன்னெடுக்கப்பட்டால், தமிழ் மரபின் பவுத்த, சமண சிந்தனைகளையும், சிந்தனையாளர்களையும் மீட்டுருவாக்கம் செய்து பொதுச் சொல்லாடல்களங்களில் விவாதிப்பது ஒரு சமனிலையாக்கம் என்ற வகையில் பயன்படுமா? [ராஜகாந்தன், அசோக்ராஜ், கருணாகரன்] பதில்: பிரேம் தேசிய அளவில் இந்து மதவாத அரசியல் தனிப் பெரும்பான்மை பெற்று வலுப்பட்டுள்ள இந்தக் காலகட்டத்தில்கூட பொத்தம் பொதுவாக இந்திய மக்கள் அனைவரும் இந்துத்துவக் கருத்தியிலை ஏற்றுக் கொண்டார்கள் என்று நாம் சொல்ல இயலாது. காங்கிரஸ் மற்றும் இடதுசாரிக் கட்சிகள் தற்கால அரசியலுக்கான திட்டமின்றி பின்னடைந்த போது பாரதிய சனதா கட்சி மக்களுக்கு ஒரு மாற்றாகத் தெரிந்தது. உலக அளவிலான சந்தைச் சுரண்டல், நுகர்வுப் பொருளாதாரம் மற்றும் வளங்களைக் கொள்ளையிடும் அரசியல் இந்திய அரசியலைத் தனக்கேற்ப மாற்றியமைக்கத் தொடங்கிய காலகட்டமான 1980 களிலிருந்து இந்தச் சிக்கல் தொடங்கிவிட்டது. காங்கிரசைத் தன் களப்பணிக் கருவியாக வைத்துக் கொள்ள முடியும் என்று பன்னாட்டு முதலாளியம் நம்பிய வரை அக்கட்சியை தேசிய அரசியலில் பலப்படுத்தியது. ஒரு கட்சியை மட்டும் நம்பித் தன் திட்டங்களை இந்திய மண்ணில் விரிவுப்படுத்த முடியாது என்பதையும், இடதுசாரி அரசியல் இந்திய மக்களிடம் மீண்டும் பரவ வாய்ப்புள்ளது என்பதையும் புரிந்து கொண்ட போது காங்கிரசுக்கு இணையான அதே சமயம் பழமையான மற்றொரு கட்சியை வளர்க்க வேண்டும் என்ற தேவையை பன்னாட்டு முதலாளியம் அறிந்து கொண்டது. உலக அளவிலான இந்தத் திட்டமிடலின் விரிவைத்தான் இந்துத்துவ அரசியலின் புத்துருவாக்கத்திலும் வளர்ச்சியிலும் நாம் காண்கிறோம். 1970-கள் வரை மக்களிடம் இருந்த மாற்றுகள், தீர்வுகள் பற்றிய நம்பிக்கைகள் 1980-களில் மெல்லக் கரைந்து முதலாளித்துவத்தின் பலம் பற்றிய மிரட்சி, அரசு ஆயுதங்கள் பற்றிய திகைப்பு, பிற்போக்குச் சக்திகளின் வன்முறை பற்றிய அச்சம் என்பவை வளர்ந்தன. இந்திய மக்கள் அரசியலில் உருவான நம்பிக்கையின்மை மற்றும் பொது அச்சுறுத்தல்தான் இன்றைய இந்துத்துவச் சக்திகளின் பெருக்கத்திற்கான அடிப்படை. பஞ்சாப், கஷ்மீர், வடகிழக்கு மாநில மக்களின் தன்னுரிமைப் போராட்டங்கள் தண்டகாரண்ய நிலப்பகுதி மக்களின் வாழ்வுரிமைப் போராட்டங்கள் அனைத்தைப் பற்றியுமான எதிர் நிலைப்பாடுகளை உருவாக்கிப் பாதுகாப்பற்ற தேசியம் என்ற சொல்லாடலைக் கட்டமைத்துத் தன் அச்சுறுத்தும் அரசியலுக்குப் பயன்படுத்திக் கொண்டன இந்துத்துவச் சக்திகள். வன்முறைக்கெதிரான இந்திய அரசின் சட்டங்களும், திட்டங்களும் இந்து மதவெறி வன்முறைகளைக் கண்டு கொள்ளாமல் விட்டதுடன் அவற்றின் பரவலுக்கு ஆதரவாகவும் பலநேரங்களில் செயல்பட்டன. வன்முறை அரசியலைத் தன் ‘கொடியற்ற’ படைப்பிரிவின் வழியாகச் செயல்படுத்தி வந்த காங்கிரஸ் 1985-இல் சீக்கியர்களின் மீதான கொடும் தாக்குதல் வழியும் 1989-இல் இலங்கைத் தமிழ் மக்கள் மீதான ராணுவத் தாக்குதல் வழியாகவும் தன் அச்சுறுத்தும் அரசியலை விரிவுபடுத்தியது. இந்த வகைத் தடைகள் இல்லாத பாரதிய சனதாவுக்குக் கொடியுடன் கூடிய படை அரசியல் அதிக பலனளிப்பதாக இருந்தது. காங்கிரஸ் பழைய முதலாளிகளின் அணிவகுப்பு என்றால் பாரதிய சனதா கட்சி புதிய முதலாளிகளின் அணிவகுப்பாக உருவானது. உலக மயமாக்கத்தை யார் விரைவாக, வலிமையாக இந்தியாவில் கொண்டு வருவது என்பதில் இரண்டு கட்சிகளுக்கும் கடுமையான போட்டி இருந்து வருகிறது. 1984-இல் அன்றைய பிரதமர் இந்திரா காந்தி கொலை செய்யப்பட்டது, 1991-இல் முன்னாளைய பிரதமர் ஒருவர் கொலை செய்யப்பட்டது. 1992-இல் பெரிய அளவிலான திட்டமிடலுடன் நிகழ்த்தப்பட்ட மசூதித் தகர்ப்பு, அதனைத் தொடர்ந்து நிகழ்த்தப்பட்ட படுகொலைகள் என அச்சுறுத்தும் அரசியல் பெருகி வளர்ந்து 1996-இல் 194 மக்களவை இடங்களைப் பெறவும் 1999-இல் கூட்டணியமைத்து மத்தியில் ஆட்சிப் பொறுப்பை ஏற்கவும் உரிய அளவுக்கு இந்துத்துவக் கட்சியைக் கொண்டு சென்றது. அதன் பின் உருவான 10 ஆண்டு கால இடை வெளியை அக்கட்சியும் அதன் கிளை அமைப்புகளும் திட்டமிட்டுப் பயன்படுத்திக் கொண்டுள்ளன. இன்றைய அச்ச அரசியல் அச்ச மூட்டுபவர்களிடமே தங்களை ஒப்படைக்கும் மக்கள் உளவியலை உருவாக்கியுள்ளது. [குஜராத் முஸ்லிம் மக்கள் படுகொலையின் போது (2002) பதிவு செய்யப்பட்டு உலகம் முழுதும் பரவிய இரு படங்கள் இந்திய அச்ச-அரசியல் உளவியலைப் புரிந்து கொள்ள உதவும். கண்கள் கலங்கத் தன்னைத் தாக்க வரும் ஒரு கூட்டத்தின் முன் கைகூப்பிக் கெஞ்சும் ஒரு மனிதர், படுகொலை செய்வேன் என்பதைப் பரவசவெறியுடன் அறிவிக்கும் ஒரு தொண்டர்] எண்ணிக்கையைச் சொல்லிக் காட்டி புரிய வைக்க முடியாத தொகைகளில் ஊழல் கணக்கு, வெளிநாட்டில் குவிந்துள்ள இந்தியப் பணத்தைக் கொண்டு வந்தால் இந்தியர்கள் ஒவ்வொருவர் கணக்கிலும் சில லட்ச ரூபாய்கள் வந்து சேர்ந்து விடும் என்ற பூதக்கனவு, பத்தாண்டு காங்கிரஸ் ஆட்சி சலித்துப் போனதின் விளைவு, பன்னாட்டு உள்நாட்டு முதலாளிகளுக்கான பாதுகாப்புக்கும் விரிவுக்கும் உத்தரவாதமளிக்கும் கொள்கைத் திட்டங்கள். இரும்புக் கரம் கொண்டு எதிர்ப்புகளை அடக்கும் வலிமை உள்ள கட்சியின் ஆட்சி. இப்படிப் பல காரணங்கள் புதிய ஆட்சிக்கு வழிவகுத்துள்ளன. இஸ்லாமிய வெறுப்பு, கிறித்துவ இழிப்பு, சனாதனக் கொதிப்பு என்பவை மக்களிடம் அதிக தீய விளைவுகளை ஏற்படுத்தியிருப்பதைக் காணமுடிகிறது. இவற்றைக் கடந்தும் கூட இந்து என்ற வகையில் ஒரு பெரும்பான்மை மதவாதத் தேசிய உணர்வு இந்தியச் சமூகங்களிடையே ஏற்பட வாய்ப்பு மிகக்குறைவு. இந்து என்ற பொது அடையாளம் உருவாவதும், திடப்படுவதும் சாதி, மொழி, இனம், நிறம், சமய வழக்குகள், சடங்கு வேறுபாடுகள், பலதெய்வப் பிரிவுகள், பொதுவான சமய நூல் இல்லாமை, குலக்-குடிச் சமயங்களின் வகைமை, தொல்குடி மக்கள், வனக்குடிச் சமூகங்கள் அதிக அளவில் இருப்பது, பொது வரலாறு அற்ற நிலை எனப் பல காரணங்களால் அவ்வளவு இலகுவில் நடக்க வாய்ப்பு இல்லை. பகவத் கீதையைத் தேசிய நூலாக வைத்தால் சைவ, சாக்தேய, கௌமார, காணபத்திய மக்கள் தொகை அந்நியப்பட்டுப் போகும். ஏற்கனவே ராமராஜியம், ராமஜன்ம பூமி என்ற கட்டமைப்பு சைவ, வைணவ மேலாதிக்கப் போட்டியுணர்வின் காரணமாக தளர்ந்து போனது. பிராமண, சனாதன, வைதிக மையம் கொண்ட இந்து ஆதிக்கம் சூத்திர, சத்திரிய இடைநிலைச் சாதிகளிடம் பெயரளவில் இருக்கலாமே தவிர ஒரு சமூக உளவியலாக மாறுவதில் சிக்கல் இருக்கும். மதச்சிறுபான்மையினர் தம்மை அடக்கி ஆள்வதாகவோ, அவர்களே இந்தியா பொன்னாடாக மாறுவதைத் தடுத்துக் கொண்டே இருப்பதாகவோ அனைத்து இந்து-இந்தியச் சமயத்தினரையும் நீண்ட நாட்கள் நம்ப வைக்க முடியாது. பாகிஸ்தான் மீதான வெறுப்பைத் தீமூட்டி வளர்த்து பால் கொதிக்க வைக்க முடியாது. அதற்கு எரிவாயு தாருங்கள் என மக்கள் கேட்க அதிக காலம் ஆகாது. மையப்படாத ஒரு மதம், தன்னளவில் ஒருமைப்படாத ஒரு சமயம் எதிர்நிலை, வெறுப்பு உளவியலை மட்டும் வைத்துத் தன்னை தேசிய அடையாளமாக உருவாக்கிக் கொள்ள முடியாது. பாரதிய ஜனதா கட்சியில் ஆட்சியில் இருப்பவர்கள், அமைச்சர்களாக இருப்பவர்கள் பேசுவது ஒன்று, மக்கள் மத்தியில் உள்ளூர் தலைவர்கள் பேசுவது அதற்கு எதிரான ஒன்று. சாமியார்கள், சாமியாரினிகள் பேசுவது தம் கட்சியின் கொள்கையல்ல என்று தினம் அறிவிக்க வேண்டிய கடமை இன்றைய தலைமை அமைச்சருக்குத் தரப்பட்டிருக்கிறது. இரண்டு மடங்களைச் சேர்ந்த இருபது சாமியார்களை இரண்டு நாட்கள் ஒரே இடத்தில் அடைத்து வைத்துப் பாருங்கள் இவர்கள் பேசும் ஆன்மிகத் தேசியம், தேசிய ஒற்றுமை என்பதன் நிறம் என்ன என்பது தெரியும். இந்த வேறுபாடுகளின் காரணமாக இந்துத்துவா ஒரு அச்சுருத்தும் பேச்சாகத் தொடர்ந்து இருக்கலாமே தவிர அரசியல் கட்டமைப்பாக மாற வாய்ப்பு குறைவு. இந்து சமயங்களில் ஒன்றைப் பின்பற்றி, இந்தியத் தெய்வங்களில் ஏதாவதொன்றை வழிபட்டு இந்து என அடையாள அட்டையில் பதிவு செய்து வாழ்வதும் இந்துத்துவ அரசியலை ஏற்று, இந்து மதவெறி இயக்கமாகச் செயல்படுவதும் ஒன்றிணைய வேண்டிய தேவை இல்லை. காங்கிரஸ் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி, காமராஜர் ஆட்சி என ஏதாவதொன்றைப் பற்றிக் கொண்டு இந்து அடையாளத்தையும் எந்த வில்லங்கமும் இன்றி மக்கள் தொடர வாய்ப்புகள் உண்டு. இந்த நிலைதான் இந்துத்துவ பாசிசத்திற்கு இடைஞ்சலாக இருக்கிறது, காந்தியைக் கொன்று இந்த நிலைக்கான அடையாள எதிர்ப்பை இந்துத்துவ அரசியல் முன்பு நிகழ்த்திக் காட்டியது. தற்பொழுதுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி கல்வி, அறிவுத்துறை, வரலாற்றுப் புனைவுகள், தொன்மங்களின் மீட்டுருவாக்கம், புராணிக அழகியல், கலை-இலக்கிய வடிவங்கள், கருத்தியல் தளங்கள், பன்முனை ஊடகங்கள் என அனைத்தின் வழியாகவும் இதனை மறுகட்டமைப்பு செய்யும் முயற்சிகள் நடக்கும். இதன் ஒரு பகுதியைத்தான் நீங்கள் “இந்துமத மேலாண்மைச் சிந்தனைகளை விதைக்கும், வளர்க்கும் எழுத்து முயற்சிகள் தமிழில் முன்னெடுக்கப் பட்டால்” என்ற வரியாக முன்வைத்திருக்கிறீர்கள். இது இன்று நேற்றல்ல இலக்கிய வரலாறு தொடங்கிய காலத்திலிருந்து நிகழ்ந்து கொண்டிருக்கும் போராட்டம். தமிழ் அச்சு ஊடகம் தொடங்கப்பட்ட போதும் இந்தப் போராட்டம் புதுப்பிக்கப்பட்டது. பக்தி அரசியல் ஒவ்வொரு காலகட்டத்திலும் இருந்து கொண்டே இருக்கும், ஆனால் தமிழில் சிறு தெய்வ மரபுகளும், குலதெய்வ மரபுகளும் வைதிக மையப்படாத இணை மரபுகளும் இதனை கலைத்துக் கொண்டே இருக்கின்றன. ஒடுக்கப்பட்டோர், ஊருக்கு வெளியே இருக்கும்படி ஒதுக்கி வைக்கப்பட்டோர் மரபுகளும் இந்து-வைதிக அதிகாரத்தை ஏற்கக் கூடியவை இல்லை. தமிழ்ப் பண்பாடு பற்றிய நவீன கட்டமைப்பு தெரிந்தோ தெரியாமலோ பகுத்தறிவுச் சார்புடையதாக மாறியிருக்கிறது. தொல்தமிழர் வாழ்வு சாதி-வர்ணப் பகுப்பற்றது என்று சொல்லிக் கொள்வதில் நமக்கு விருப்பம் இருக்கிறது. வள்ளுவ மரபைத் தமிழ் அடையாளமாக வைத்துக் கொள்வதில் பெருமை கொள்ளும் சமூகம் நமது. பெரியாரிய, மதமறுப்புச் சிந்தனைகளை ஒரு புறம் வைத்துக் கொண்டே இந்தியாவிலேயே அதிகக் கோயில்களைக் கொண்ட மண் என்ற பெருமையை தினம் ஒரு புதிய கோயில் கட்டுவதன் மூலம் தக்கவைத்துக் கொள்ளும் சமூகமும் இது. பிராமணரல்லாதோர் அரசியல் தொடங்கிய இடம் என்று வரலாற்றுப் பெயர் பெற்ற போதும் பிராமணச் சமூகத்திற்குக் கோயில் கருவறை முதல் குடும்ப நிகழ்ச்சிகள்வரை அதிக மரியாதையை வழங்கி முன்பு வழக்கில் இல்லாத புதிய புதியச் சடங்குகளைப் பெருக்கி அவர்களுக்குத் தடையற்ற வருமானத்திற்கு வழிசெய்து தருவது, உணவு விடுதிகள், திருமண நிகழ்வுகள் என அனைத்திலும் பிராமணாள் கைப்பதம் என்ற ஒரு நவீன வழக்கத்தை உருவாக்கிப் பேணுவது, ஊடகங்கள் தொடங்கி உள்ளூர் பஜனை மடங்கள் வரை அய்யர் பேச்சுக்கு அடுத்த பேச்சு கிடையாது என்ற அழிச்சாட்டியங்களை அசட்டுத்தனமாக ஏற்று நடப்பது போன்ற வழக்கங்கள் மூலம் கலப்புத் தன்மை கொண்ட சமூகமாகத்தான் நம்மை வைத்துக் கொண்டிருக்கிறோம். இந்தப் பின்னணியில்தான் நாம் ஒன்றைக் கவனிக்க வேண்டும் இந்துமத மேலாண்மைச் சிந்தனைகள் இங்கு தொடர்ந்து இருந்து வந்தாலும் அது இந்துத்துவ, இந்து மட்டும் என்ற அரசியலாக மாறியதில்லை. ஒருவர் மலையாளி எனத் தெரிந்தே தமிழர்கள் அவரைத் தங்களின் பொன்மனச் செம்மலாகத் தயக்கமின்றி தேர்ந்தெடுத்திருக்கிறார்கள், மராத்தியர் என்று தெரிந்தே ஒரு நடிகரைத் தமிழ் நாட்டின் ‘வாழும் தெய்வம்’ என்று கொண்டாடு கிறார்கள். இது மற்ற மொழி மாநிலங்களில் நடக்க முடியாத அடையாள முரண். இதே போன்றுதான் சிலர் பேசித் திரியும் இந்துத்துவம், இந்து தேசியம் போன்ற புனைவுகளையும் தமிழ்ச் சமூகம் கேட்டு ரசிக்குமே தவிர அதனைத் தன் அரசியலாக ஏற்காது. தமிழர்களைச் சுரண்டி வாழ்கிறார்கள் என்று இஸ்லாமிய வெறுப்பை, கிருத்துவ வெறுப்பை இங்கு யாரும் கொளுத்திவிட முடியாது. அப்படிக் கொளுத்த நினைத்தால் அந்த வெறுப்பின் தனல் முதலில் வட இந்திய முதலாளிகள், தெலுங்கு, கன்னட, மலையாள ‘மொழி வழி மாற்றாள்’ என்று அறியப்பட்ட இந்துமதப் பகுதியினரைத்தான் முதலில் வருத்தத் தொடங்கும். அப்போது இந்துத்துவ தீர்த்தம் மருந்தாக வந்து காப்பாற்ற முடியாது. தமிழகத்தில் உள்ள இந்தக் குழப்பமான நிலை மாற்று அரசியலுக்குச் சார்பாகவும் அமையாது. அப்படியெனில் மாற்று அரசியல் பண்பாட்டு இயக்கங்கள் தம் பணிகளை மறுஆய்வு செய்து புதிதாகத் திட்டமிட வேண்டும். பெண்ணிய, தலித்திய, சூழலரசியல், இடதுசாரி இயக்கங்கள் ஒன்றிணைந்து தமிழ்ச் சூழலுக்கான மாற்றுச் செயல் திட்டங்களை வகுக்க வேண்டும். இந்த மறுகோட்பாட்டாக்க முயற்சி நடந்து விடக்கூடாது என்பதில்தான் இன்றைய இலக்கிய-பண்பாட்டு பிற்போக்குக் குழுக்கள் மிகக் கவனமாக உள்ளன. இதற்கெதிரான நுண்கிருமி தாக்குதல்கள் தான் வீண்முரசு, உப்புப் பாண்டவம், ஆட்டோபிக்கிஷன் என்ற பெயர்களில் நடத்தப்படுகின்றன. அரசியல் தளத்தில் இடைநிலைச் சாதிகளின் இந்துத்துவ சார்பு நிலை இன்னும் விரிவான வடிவங்களில் செயல்படக்கூடும். தமிழ் மரபின் பவுத்த, சமணச் சிந்தனைகளையும் சிந்தனையாளர்களையும் மீட்டுருவாக்கம் செய்து பொதுச் சொல்லாடல் களங்களில் விவாதிப்பது மாற்று அறிவு என்ற வகையிலும், தமிழ் அறிவு மரபு பன்மைத் தன்மை கொண்டது என்பதைத் தொடர்ந்து நினைவூட்டுவதற்கும் பயன்படும். ஆனால் நவீன அரசியல்-பொருளாதாரச் சூழலுக்குப்பின் நிலவும் மனிதத் துன்பியல்கள், சிக்கல்களுக்கு நவீனத் தளத்தில் இருந்துதான் தீர்வுகளைத் தேட வேண்டும், இந்த நிலையைத்தான் பின்நவீன நிலை என்று சொல்கிறோம், இந்த இந்திய-தமிழ் பின்நவீன நிலை மிகுந்த அரசியல் தன்மை கொண்டது. பின்நவீன நிலையைப் புரிந்து கொள்ள நாம் பயன்படுத்தும் கோட்பாட்டு முறைகள்தான் பின்நவீனத்துவ பன்மை அறிவுமுறைகள். பின்நவீனத்துவம் என்றவுடன் உங்களுக்கு நினைவுக்கு வரும் ஒரு கருத்து, ஒரு எழுத்தாளரின் பெயர் எது? அதனைத் தொடக்கப் புள்ளியாக வைத்துதான் தமிழின் தற்கால கருத்தியல் உரையாடலில் நீங்கள் எந்தத் தளத்தில், எந்த இடத்தில் இருக்கிறீர்கள் என்பதை நாம் விளக்க முடியும்… இது இப்படியிருக்க இந்தக் கேள்வியின் இன்னொரு விளிம்பும் கவனத்திற்குரியது. மத்திய அரசில் தற்போது ஏற்பட்டிருக்கும் ஆட்சி மாற்றத்துக்குப்பின் இந்துமதவாத பிற்போக்குச்சக்திகள் தங்களைத் தாங்களே ஊக்கப்படுத்திக் கொள்ளும் முயற்சியில் நிச்சயம் ஈடுபடுவார்கள். அனைத்துத் துறைகளிலும் தம் அடியவர் கூட்டத்தை இருத்தி வைக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பார்கள். இது அரசியல் கட்சிகள் ஒவ்வொன்றும் ஆட்சியில் உள்ள போது செய்யக் கூடிய வேலைதான். ஜனநாயக ஆட்சி அரசியலில் இவை நடப்பதைத் தடுக்க முடியாது. ஆனால் இந்துத்துவச் சக்திகள் ஜனநாயகத்தைவிடச் சாமியார் நாயகத்தை அதிகம் நம்புகின்றன. இவர்கள் தங்களின் உண்மையான திட்டங்களை நிறைவேற்றத் தொடங்கும்போது பத்தாண்டுத் திட்டமாக பாஜக அரசைக் கட்டி எழுப்பிய முதலாளித்துவ சக்திகள்கூட கோபமடைவார்கள். இந்திய மக்கள் இவர்களிடமிருந்து அந்நியப்படுவார்கள். பாரதமாதா, அகண்டபாரதம், சமஸ்கிருதச் சங்கீதம் எனக் குறியீட்டு நாடகங்களைத் தொடரும் அளவுக்கு சாமிகள் நாயக அதிகாரத்தை வளர்க்க முடியாத கோபத்தில் ஆட்சித் தலைமையை சாதுக்கள் முறைப்பார்கள். பிரசாதம் கொடுத்து மக்களை அடிமைகளாக வைத்துக் கொள்ள முடியாது என்பதைத் தெரிந்து கொண்ட ஆட்சித் தலைவர்கள் புதிய திட்டங்களைத் தீட்டும் போது கட்சியின் மூத்த பரிவாரங்கள் அவற்றை வெறுத்து ஒதுக்குவார்கள். இவர்களுக்கிடையில் உள்ள உயர்குல பிராமணர்கள் மற்றும் சேவை செய்யும் பிறர் என்ற உள்பகை வெளித் தெரியாதது, ஆனால் மிகக் கடுமையானது. இது ஆட்சியில் இருக்கும்போது வலிமையாக வெளிப்பட்டு பெரும் மோதல்களை ஏற்படுத்தும். இது எல்லாம் ஒருபுறம் இருந்தாலும் பெண்கள், ஒடுக்கப்பட்ட -தலித் சமூகங்கள், மதச் சிறுபான்மையினர், இடதுசாரிச் சிந்தனையு டையோர் அனைவரும் இந்துத்துவ மதவாத அதிகாரத்தை வெறுப்பவர்கள் மட்டும் இல்லை, அதனைத் தினவாழ்வில் எதிர்ப்பவர்களும் கூட, இந்த மக்கள் இந்தியாவின் 60 சதவிகிதத்திற்கு மேற்பட்டவர்கள் என்பதைக் கவனத்தில் கொண்டால் மத்திய அரசில் தற்போது ஏற்பட்டிருக்கும் ஆட்சி மாற்றத்துக்குப்பின் இந்துத்துவம் அழிந்து இந்தியத் தன்மை என்ற கலப்பு அரசியலை அனைவரும் கற்க வேண்டிய தேவை உருவாகும். குருஜி மாதவ் சதாசிவ் கோல்வால்கர் இந்து தேசம் என்றால் என்ன என்பதை இவ்வாறு வரையறுத்துள்ளார் “தர்ம, அர்த்த, காம, மோக்ஷ என்ற சதுர்வித புருஷார்த்தங்களான நான்கு மகத்தான நோக்கங்களின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட சமூகம் அது”. சதுர்வித புருஷார்த்தங்களை ஏற்றால் சத்வம், ராஜசம், தாமசம் என்ற மூன்று குணங்களையும், சதுர் வர்ணியம் என்ற நான்கு வர்க்கப் பிரிவினையையும், தெய்வ சம்பத்து கொண்ட மக்கள் அசுர சம்பத்து கொண்ட மக்கள் என்ற மக்கள் பிரிவினையையும் நாம் ஏற்க வேண்டியிருக்கும். கீதை கூறுகிறது “அசுர ஜனங்கள் செய்யத்தக்க நல்வினையையும் விலக்கத்தக்க தீவினையையும் உணர மாட்டார்கள். அவர்களிடம் சுத்தம் இல்லை, நன்னடத்தை இல்லை, உண்மை இல்லை.” இந்து என்ற மத அடையாளம் சீக்கிய, ஜைன, பௌத்த சமயங்களையும் உள்ளடக்கியதாக நம் அரசியல் சட்டம் அடையாளப்படுத்தியுள்ளது. இதனைக் குறிப்பிட்டு சீக்கியர்கள் உள்ளிட்ட யாரும் தங்களைத் தனியாக அடையாளப்படுத்திக் கொள்ளக்கூடாது என கோல்வால்கர் கூறுகிறார். அதனால் இந்து தேசியம் என்ற திட்டம் இந்தியாவின் பன்மயப் பட்ட இந்தியச் சமயங்களை கீழ்மைப்படுத்தும் வைதிக மையம் கொண்டதாக உள்ளது, இந்துத்துவம் என்பது பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, பழங்குடிச் சமூகங்களை நிரந்தரமாக விளிம்பு நிலையில் வைத்திருப்பதற்கான உள்நோக்கம் கொண்டது. “இந்தியா இனி புண்ணிய பூமியாக மாறும், பாரத சன்ஸ்கிருதி மீட்கப்படும்… எங்கள் ஆட்சி இனி இந்து தர்மத்தை எல்லா இடத்திலும் நிலைப்படுத்தும், ஜீ இன்னும் எத்தனை காலத்திற்கு சோஷலிசம், அம்பேத்கர் என்று பிற்போக்குக் கருத்துக்களை நம்பி ஏமாறப் போகிறீர்கள் நம்ம கட்சியில சேருங்க ஜீ, உங்களுக்கு உள்ள ஹிதிகாச, காவ்ய, சம்ஸகிருத இலக்கியம், உலக இலக்கிய அறிவுக்கு எங்க கட்சி உங்கள எங்கேயோ கொண்டு போகும்…” இதனைக் கூறியது என்னிடம் சில மாதங்கள் மட்டும் வந்து இலக்கியம் கற்ற ஒரு முன்னாள் மாணவர், இன்னாள் அகில பாரதிய விசுவ இந்து பரிஷத் மாணவச் செயல்வீரர். டெல்லி பல்கலைக் கழகத்திற்கு வந்து வாரம் 12 மணிநேரம் இந்திய இலக்கியம், 6 மணி நேரம் உலக-இந்திய சினிமா எனக் கற்பிக்கத் தொடங்கி 10 ஆண்டுகள் முடியப் போகிறது. இந்த காலகட்டத்தில் இந்த ஒரு மாணவர் மட்டும்தான் என்னை எத்தனை பெரிய கூட்டத்திற்கு நடுவில் பார்த்தாலும் குனிந்து பாதத்தைத் தொட்டு பிரணாம் குரு ஜீ என்று வணங்கும் பழக்கமுடையவர். இது என்ன வட இந்தியப் பழக்கமா என்று கேட்ட போது இல்லை ஜீ இதுதான் பாரதப் பண்பாடு என்று விளக்கம் சொன்னவர். இவர் தூரத்தில் வருவதைப் பார்த்தாலே பாதத்தை மறைத்து ஓடி ஒளிவது எனக்குப் பழக்கம். அவர் அப்படிக் கூறியபோது நானும்கூட கொஞ்சம் நெகிழ்ந்து தான் போனேன். சற்றே தெளிந்து அவரிடம் சொன்னேன் “அன்பான ராம் பி…. நான் உங்கள் கட்சியில் சேர சில நிபந்தனைகளை வைக்கிறேன். உங்கள் புனிதத் திட்டப்படி கங்கை யமுனை இரண்டின் கரைகளிலும் உள்ள தொழிற்சாலைகள் அனைத்தையும் மூடுவதுடன் இந்திய நதிகள் அனைத்தையும் கங்கையின் அம்சமாக அறிவித்து ரசாயனக் கழிவுகளைத் தடை செய்யச் சட்டம் கொண்டு வர வேண்டும், இந்திய மரபான இயற்கை மது வகைகளைத் தவிர மேற்கத்திய மது உற்பத்தி மற்றும் விற்பனை அனைத்தையும் தடை செய்ய வேண்டும், இதனை ஒரு ஆண்டுக்குள் செய்ய முடியுமா?” அவர் மீண்டும் ஒரு முறை பாதத்தைத் தொடக் குனிந்தார், இது விடை பெறுவதற்கானது. அவர் போகும் போது சொன்ன வாசகம் இதுதான் ‘ஜீ நீங்கள் இதன் மூலம் இரண்டு செய்திகளைச் சொல்லியிருக்கிறீர்கள். ஒன்று ஒரு ஆண்டில் பாஜபாவை ஆட்சியில் இருந்து அகற்றுவதற்கான திட்டம், மற்றது நீங்கள் உயிருடன் இருக்கும் வரை எங்கள் கட்சியில் சேரப் போவதில்லை என்பது. வருத்தமாகத்தான் உள்ளது ஜீ!’ “ஆமாம் பாண்டே… உங்களைப் போன்ற அறிவுக் கூர்மை கொண்டவர்கள்கூட அந்தக் கட்சியில் இருப்பதை நினைக்கும் போது எனக்கும் வருத்தமாகத்தான் உள்ளது, பார்க்கலாம் நன்றி!” அதனால்தான் கூறுகிறேன்… இந்து மதவாத பிற்போக்குச் சக்திகள் ஊக்கம் பெறலாம் ஆட்சியைப் பிடிக்கலாம், ஆனால் மக்களின் அன்பை, மதிப்பைப் பெறமுடியாது. மக்களின் அன்பைப் பெற உண்மையாக முயற்சித்தால் பன்னாட்டு முதலாளிகளின் கருணையைப் பெற முடியாது. Posted in உரையாடல், கோட்பாடு | Tagged இந்து தேசியம், இந்துத்துவம், உரையாடல், கோல்வால்கர், சதுர் வர்ணம், பகவத் கீதையை, பிரேம் | உரையாடல் : 5-3 இப்படியொரு மார்க்சியம் இருக்க இயலாது-பிரேம் Posted on February 15, 2015 by admin உரையாடல் : 5-3 இப்படியொரு மார்க்சியம் இருக்க இயலாது கேள்வி: உலக முதலாளித்துவம் மற்றும் மாற்று அரசியல் குறித்து ஒரு அடிப்படையான கேள்வி. பெண்ணரசியல், சூழலரசியல், சிறுபான்மை இன, மத மக்களுக்கான உரிமையரசியல், மூன்றாம் பாலினத்தவர்க்கான அரசியல் என்பதெல்லாம் மேல்தட்டு அறிவுஜீவிகள் உலகு தழுவிய முதலாளித்துவம் எனும் பேரரசியல் தளத்தை ஏற்று அதற்குள்ளாகவே மேற்கண்ட உரிமைசார் போராட்டங்களை நிகழ்த்தும் களனாக மாற்று அரசியல் களத்தை மாற்றும் முயற்சி எனவும், மேற்கண்ட மாற்று அரசியல் செயல்பாடுகளை அங்கீகரிக்கவும், அவற்றையும் தம் வர்த்தக, லாப, நோக்கில் கையாளவும் உலக முதலாளித்துவ சக்திகளே தயாராக உள்ளது எனவும், (அமெரிக்க அதிபர் ஒபாமாவின் சமீபத்திய இந்திய வருகையின்போது மதச் சார்பின்மை மற்றும் பெண்களின் சமூகப் பங்களிப்பு குறித்து அவர் தெரிவித்த கருத்துக்கள், உலகை குப்பைக் காடாக மாற்றிய மேற்குநாடுகளே சூழலியல் குறித்து கவலை தெரிவிப்பது, அணுமின் நிலையங்கள் மரபார்ந்த மின் உற்பத்தி முறைகளை விட குறைவாகவே வெளியை மாசுபடுத்தும் என்ற பிரச்சாரம், மேற்குலக முதலாளித்துவ நாடுகளில் மூன்றாம் பாலினத்தவர்க்கு வழங்கப்படும் உரிமைகள், போன்றவற்றை நினைவில் கொள்ளலாம்) எனவே மக்களின் வாழ்வியலோடு தொடர்புடைய அனைத்தையும் தனியார் மயமாக்குதலையும், ஏகபோக பொருளாதாரக் குவிப்பை அடிப்படையாகக் கொண்ட உலகு தழுவிய முதலாளித்துவத்தையும் எதிர்த்து மீண்டும் அரசுடைமையாக்கம் பொதுவுடைமையாக்கம் என மக்களின் போராட்ட உணர்வுகளை ஒரு முனைப்படுத்துவதும்தான் தீர்வு, எனவும் சில மேற்குலக மரபு மார்க்சியர்கள் கூறிவருகிறார்களே அதைப் பற்றி உங்கள் கருத்து என்ன? பதில்: வாழ்வாதாரங்களையும் இயற்கை வளங்களையும் தனியார் மயமாக்குதல் மட்டுமல்ல மனித மயமானதாக, மனித மையத்தன்மை உடையதாக மாற்றுவதும் வன்முறையே. இந்த வன்முறையை அரசியல் மற்றும் சமூகச் செயல்திட்ட அடிப்படையில் முற்றிலும் இல்லாமலாக்கிவிட்டால் அரசுடைமையாக்கம், பொதுவுடைமையாக்கம் எல்லாம் தானாக நிகழ்ந்துவிடும். உயிர் மண்டலம் பற்றிய மனித அணுகுமுறை தன்மையத் தன்மை கொண்டது. தாவரங்கள், விலங்குகள், காற்று, நீர், மண் அனைத்தும் தனக்கானவை அவற்றை உடைத்தும் சிதைத்தும் திரித்தும் தனக்கானதாக மாற்றிக்கொள்ளலாம் என்னும் சுரண்டல் உணர்வுதான் உடைமை மற்றும் ஆதிக்க நடத்தையியலின் அடிப்படை. இது விலங்குகளிடம் இயற்கையானதாக, சமநிலை கொண்டதாக அமைந்துள்ளது. மனிதர்களிடம் பெருக்கப்பட்டதாக, அளவுகடந்த செயல் தந்திரங்களைக் கொண்டதாக விரிவுபட்டுள்ளது. விலங்குகள் தம் உணவுக்காகக் குறிப்பிட்ட சில விலங்குகளைக் கொன்று உண்ணுகின்றன, தம் பசியாறிய பின் ஒய்வு கொள்கின்றன. கொல்லப்படும் நிலையில் உள்ள விலங்குகள் தம் உயிரைக் காக்க விழிப்புடன் இருப்பதுடன் ஓயாமல் தப்பி ஓடியபடியும் உள்ளன. ஒரே இரைக்காக இரண்டு இன விலங்குகள் மோதிக் கொள்கின்றன, ஒரு இனத்திற்குள்ளான உணவுப் போராட்டமும் கூட மோதலாக, கொலையாக மாறுகின்றன. தாவரங்கள்கூட ஒன்றுடன் ஒன்று போட்டியிட்டும் ஒன்றை ஒன்று அடக்கியும் தம் இனத்தைப் பெருக்கிக் கொள்கின்றன. இந்த இரக்கமற்ற இயற்கைச் சுழலின் இன்னொரு பகுதியில் ஒன்றுடன் ஒன்று இணைந்தும் உதவியும் வாழும் உயிர்ச்சூழலும், இன வாழ்க்கை மற்றும் இணக்க வாழ்க்கை கொண்ட உயிர் மண்டலமும் இருக்கவே செய்கின்றது. மனிதர்களிடம் உள்ள சிக்கல் இந்தப் பண்புகள் அனைத்தும் கலந்து கிடப்பதுடன் இவற்றை விளக்குவதற்கான மொழியும் நம்மிடம் உள்ளது. விலங்குகள் உயிர்வாழவும் உயிரைப் பாதுகாத்துக் கொள்ளவும் செய்யும் வேட்டையாடுதல், மோதியழித்தல், பின்வாங்குதல், பதுங்குதல் போன்ற இயல்பான செயல்கள் மனிதர்களிடம் போர்த்திறனாகவும் போர்த்தொழில் உத்தி யாகவும் பெருக்கமடைந்துள்ளன. இந்த அளவுகடந்த பெருக்கத்தின் ஒரு பகுதிதான் நமக்குள் படிந்துள்ள தனியுடைமை, முதலாளித்துவம், ஆதிக்கம், அதிகாரம், அடக்கு முறை, இன ஒடுக்குதல், உலக மயமாக்கம், உரிமை மறுத்தல், உரிமைக்கான போராட்டம், அடிமைப்படுத்தல், விடுதலைக்காகப் போராடுதல் எல்லாம். முதலாளித்துவம் மற்றும் தனிவுடைமை சார்ந்த அரசியல் பொருளாதாரத்தின் உளவியல் அடிப்படைகளை உற்றுக் கவனிக்கும் போது ஒன்று நமக்குப் புரிய வரும். தன் தேவைகளுக்கு அதிகமாகச் சேமித்தல், மற்றவர்களுக்கு உரிய பங்கையும் தானே நுகர்தல், மற்றவர்களை விடத் தன் வாழ்வின்பங்களை பலமடங்கு பெருக்கிக்கொள்ளுதல் என்னும் சில நடத்தை முறைகள் முதல் பார்வையில் தெரியக் கூடியவை. ஆனால் இதன் கடுமையான மறுபகுதி மிகுந்த வன்முறை கொண்டது. தான் உண்ணுவதில் இன்பம் காணுதலைக் கடந்து மற்றவர்களை உண்ணவிடாமல் செய்தலில் பெரும் இன்பம் காணுதல், தான் நுகரக் கூடியவைகளை மற்றவர் நுகரவிடால் செய்து களிப்படைதல், தான் இன்பம் நுகர்வதை விட மற்றவர்கள் துன்புற்று வலியுடன் வாழ்வதில் இன்பம் பெறுதல், தான் சுதந்திரமாக இருத்தலை விடத் தனக்குச் சிலர் அடிமைகளாக இருந்து துயரடைவதில் பெருமை கொள்ளுதல் என்னும் சமூக உளவியலின் மீதுதான் அதிகாரம், ஆதிக்கம், மூலதன அரசியல், தனிவுடைமைச் சட்டவிதிகள் கட்டப்பட்டுள்ளன. மார்க்சியத்தை அதன் அறவியல் அடிப்படையில் புரிந்து கொண்டால் விடுதலை, சமத்துவம், சமநீதி என்பவை வெறும் அரசுடைமையாக்கம், பொதுவுடைமையாக்கம் என்பதில் தொடங்கு வதுமில்லை அதில் முடிவதும் இல்லை என்பது புரியவரும். மனித சமூக அமைப்பாக்கம் முதலில் தனிமனிதர்களிடம் உள்ள தற்காப்பு, தன்னை நிலைப்படுத்திக் கொள்ளும் தன்மை (இவை விலங்குகளிடம் பிறந்தது முதல் இறப்பது வரை தொடரும் பண்பு) என்பனவற்றைக் குறைத்து இன அடையாளத்தை உருவாக்கி இனம் சார்ந்த மனித நிலையை உருவாக்குகிறது. இந்த இனத் தன்மை தனிமனிதர்களுக்குச் சமூக அமைப்பு தரும் பாதுகாப்பு, வாழ்வாதாரங்கள் சார்ந்த ஒப்பந்தம் மற்றும் மரபான உறுதி மொழிகளின் அடிப்படையில் அமைவது. இந்த இனத்தன்மைதான் விலங்குகளையும் மனிதர்களையும் வேறுபடுத்தும் அடிப்படைக் களம். மனிதர்கள் தம்மை இனத்திடம், சமூகத்திடம், அரசிடம், அமைப்பிடம் ஒப்படைத்துவிடுகிறார்கள், மற்றொரு வகையில் அவற்றால்தான் தனிமனிதர்கள் உருவாக்கப்படுகிறார்கள். இதைத்தான் நாம் மனிதர்களின் அரசியல் நிலை என்கிறோம். இந்த இணைப்புதான் ஒவ்வொரு மனிதரும் தனக்கானதைச் சமூகத்திடம், அரசிடம், அமைப்பிடம் கேட்டுப் பெறும் உரிமையை வழங்குகிறது. அத்துடன் சமூகம் கட்டமைத்துள்ள விதிகளைப் பின்பற்றவும், சமூகத்திற்கான தன் பங்கை அளிக்கவும் கடமைப்பட்டவர்களாகத் தனிமனிதர்களை வைக்கிறது. விளக்க மிக எளிமையானது இந்தச் சூத்திரம்: உரிமைகளுக்கும் கடமைகளுக்கும் இடையிலான சமநிலை மற்றும் புரிந்துணர்வுதான் அரசியல் பொருளாதாரம். இதனை முறைப்படுத்தும் துணை அமைப்புகள்தான் பண்பாடுகள், மதங்கள், அறிவமைப்புகள், நீதி நிறுவனங்கள், அழகியல் செயல்பாடுகள் என்பன. இவற்றில் நிகழும் மாற்றங்களும், சிதைவுகளும் சமூகம், தனி மனிதர்கள் என அனைத்தையும் பாதிக்கும். மக்களின் போராட்ட உணர்வுகளை ஒருமுனைப்படுத்துவது என்பதுகூடத் தேவையில்லை, மக்களின் வாழ்வியல் உணர்வுகளை ஒருமுனைப்படுத்தினாலே வரலாற்றின் அத்தனைத் துயரங்களும் அநீதிகளும் நீக்கப்பட்டிருக்க முடியும். ஆனால் அது அவ்வளவு எளிதான செயல்பாடு இல்லை. இவ்வளவு எளிமையான செயல்திட்டம் கொண்டதாக இருந்திருந்தால் 1992-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஐக்கிய அமெரிக்க அரசு தன்னை உடைத்துக் கொண்டு சோவியத் அரசியலுக்கு மாறுவதற்கான தீர்மானத்தை நிறைவேற்றியது, அதிபர் ஜியோர்ஜ் புஷ் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார், கியூபாவுடன் இணைய சில அமெரிக்க மாகாணங்களும், சுதந்திர சோஷலிசக் குடியரசாக இருக்கச் சில மாகாணங்களும் முடிவு செய்தன என்பது போன்ற வரலாற்றுக் குறிப்புகளைத்தான் நாம் இன்று படித்துக் கொண்டிருப்போம். ஆனால் நடப்பியல் அப்படியில்லை, இன்று மிக அடிப்படையான மனித உரிமைகளை நிலைநிறுத்தவும், மக்களாட்சி நெறிகளை பாதுகாக்கவுமே மிகப்பெரும் போராட்டங்களை நிகழ்த்த வேண்டியுள்ளது. பொதுவுடைமைச் சமூகம் வரும்வரை பெண்ணரசியல், சூழலரசியல், சிறுபான்மை இன, மத மக்களுக்கான உரிமையரசியல் என்பவை பற்றிச் சிந்திப்பதோ பேசுவதோ முதலாளித்துத்தை போற்றிப் பாதுகாக்கும் முயற்சி என்று ஒருவர் நம்புவார் எனில் அதன் பொருள் “அரசியல் பற்றிச் சிந்திப்பது, அரசியல் அடைவது, விடுதலை உளவியல் என்பவை இன்றும் இனியும் சாத்தியமில்லை அதனால் செயலற்றுக் கிடந்து செத்து மடியலாம்” என்பதுதான். இந்திய அரசியலில் தீண்டாமைக் கொடுமை, சாதி அடுக்குமுறை பற்றிய மிக அடிப்படையான கேள்விகளை இடதுசாரி அரசியல் இப்படியான அறியாமையுடன் அணுகி ஒடுக்கப்பட்ட மக்களிடமிருந்து அந்நியப்பட்டு நின்றது. சாதிச் சமத்துவம் அற்ற அரசியல் விடுதலை தனது மக்களை ஏமாற்றும் திட்டம் என்று உறுதியாகச் சொன்ன அம்பேத்கரை தேசியவாதிகள், தேசபக்தர்கள் என்ற பெயர்ச்சூட்டிக் கொண்ட ஒரு கூட்டம் ஏகாதிபத்திய கைக்கூலி என்று ஊளையிட்டுக் கொண்டிருந்தது. இன்று வரலாறு நமக்குப் பலவற்றை ஈவு இரக்கமின்றிக் கற்றுத்தந்துள்ளது, விடுதலை அரசியல் ஒருமையான, ஒற்றை நெடுங்கோட்டுப் பயணமல்ல. தனிமனித உளவியல் தொடங்கி தனிநாடு கோரி போராடுவது வரை இன்று புதிய படிப்பினைகள் கிடைத்துள்ளன. மக்களின் போராட்ட உணர்வுகளை ஒருமுனைப்படுத்துவது என்றால் என்ன? எதனை நோக்கி அந்தப் போராட்டம் அமையவேண்டும். மக்களின் போராட்டம் என்பது என்ன? ஏன் மக்கள் போராட வேண்டும்? மக்கள் எப்போதும் பொதுவுடைமை சமூகத்தை அமைக்கவும் உலக முதலாளித்துவத்தை அழிக்கவும்தான் போராடுவார்களா, அல்லது போராட வேண்டுமா? மக்கள் என்பது ஒற்றை அடையாளமா? அமெரிக்க ஐக்கிய நாட்டில் தம் இனத்தாலும் நிறத்தாலும் அடிமைப்படுத்தல், ஒடுக்குதல், ஒதுக்குதல், இழிநிலைப்படுத்தல், உரிமை மறுத்தல் என்பவற்றால் துயருற்ற கருப்பின மக்கள் முதலில் அடிமை முறையிலிருந்து விடுபட்டு மனித நிலையுடன் வாழப் போராடினார்கள். பின்பு மனித மதிப்புடன் வாழப் போராடினார்கள், பிறகு மனித உரிமைகளுடன் வாழப் போராடினார்கள், அதற்கும் பிறகு சம உரிமைகள், சம அதிகாரம், சம பங்கு எனப் போராட்டத்தைத் தொடர்ந்தார்கள். இந்தப் போராட்டம் இன்று வரை சமூகம், பண்பாட்டுப் பொதுவெளி, அரசியல் தளங்களில் தொடர்ந்து கொண்டே உள்ளது. அமெரிக்க குடிமைச் சட்டங்களும், உரிமைச் சட்டங்களும் மாற்றமைடைந்து கொண்டே உள்ளன. தனி உடைமையும் முதலாளித்துவமும் அழிந்து பொது உடைமைச் சமூகம் உருவாகும் வரை தனக்குப் பேருந்தில் உட்கார்ந்து செல்லும் உரிமையெல்லாம் தேவையில்லை என்று அமைதியாகச் செல்லாமல் 1955-இல் ரோசா பார்க் எதிர்த்து நின்றது மேல்தட்டு அறிவுஜீவிகளின் அரசியலா? 1959-இல் கியூபாவில் ஏற்பட்ட புரட்சிகர யுத்தம் தன் நாட்டில் கருப்பின மக்களின் வழியாகப் பரவிவிடக்கூடும் என்ற அச்சத்தின் காரணமாகவும் உலக அரசியலில் தன்னை வல்லாதிக்க நாடாக மாற்ற உள்நாட்டில் கருப்பின மக்களின் ஒத்துழைப்பு வேண்டும், அவர்களின் வலிமை வேண்டும் என்பதைக் கணக்கிட்டுத்தான் அமெரிக்கா கருப்பின அரசியலின் கோரிக்கைகளை சிறிது சிறிதாக ஏற்கத் தொடங்கியது என்பது மிக வெளிப்படையான உண்மை. இஸ்லாமிய தேசியம், மால்கம் எக்ஸ், மார்டின் லூதர் கிங், கருஞ்சிறுத்தைகள் இயக்கம் என எழுச்சி பெற்ற இன உரிமைப் போராட்ட உணர்வை அமெரிக்க வெள்ளை முதலாளித்துவம் தன் அரசியல் உத்தியாக மாற்றிக் கொண்ட போதும் அப்போராட்டங்கள் கருப்பின மக்களின் வாழுவுரிமைகளை மாற்றியமைத்துள்ளது என்பதை யாரும் மறுக்க முடியாது. பெண்ணிய அரசியல், சூழலியல் அரசியல் என்பவை முதலாளித்துவத்தை ஏற்ற மேல்தட்டு அறிவுஜீவிகளின் அரசியல் என்றால் மார்க்சிய, மாற்று அரசியலில் அவற்றிற்கு இடமில்லை என்று பொருளா? மரபு மார்க்சியர்கள் அல்லது கட்சி மார்க்சியர்கள் அல்லது அலுவல் உரிமை பெற்ற மார்க்சியர்கள் என்ற பெயரில் யாரும் இன்று மார்க்சியத்திற்கு உரிமைகோர இயலாது. மார்க்சியம் என்பது மாற்றத்திற்கான அறிவுருவாக்கம், மாறுதல்களைப் புரிந்து கொள்ளும் அறிவாய்வு முறை, அதற்கெல்லாம் கடந்து விடுதலைக்கான அறம். பெண்ணியம், சூழலியல், அடையாள அரசியல், தன்னடையாளச் சுதந்திரங்கள் என்பனவற்றை மறுத்து விட்டு இன்றைய மார்க்சிய அரசியல் இருக்கவே இயலாது. இந்தியச் சமூகத்தில் அது இன்னும் விரிவாகத் தலித் அரசியல், பழங்குடி மக்கள் அரசியல், மொழி அரசியல் என்பவற்றையும் புரிந்து ஏற்ற அரசியலாக இருக்க வேண்டும். அப்படியெல்லாம் இல்லையென்று சொல்லும் ஒரு மார்க்சியக் கட்சி கொடிகாத்த குமரர்களைத்தான் உருவாக்க இயலும். அவர்களால் மக்களை காக்க முடியாது, மக்களும் அவர்களைக் காப்பது பற்றிச் சிந்திக்க மாட்டார்கள். இடதுசாரிகள் மாற்றங்களைப் புரிந்துகொள்ளத் தவறும் போது சிவப்பிந்திய இனத்தில் பிறந்த அமெரிக்க குடியரசுத் தலைவர் ஒருவர் 2025-இல் இந்தியக் குடியரசு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வருவார் மதச்சார்பின்மை, பெண்களின் சமூகப் பங்களிப்பு, இன ஒற்றுமை இவற்றுடன் சுதந்திரம், சோஷலிசம், சமத்துவம் பற்றியும்கூட இந்தியர்களுக்கு நினைவுபடுத்திவிட்டுச் செல்லுவார். Posted in உரையாடல் | Tagged அடையாள அரசியல், அம்பேத்கர், கருஞ்சிறுத்தைகள் இயக்கம், கருப்பின மக்கள், சூழலரசியல், பிரேம், பெண்ணரசியல், மரபு மார்க்சியம், மார்டின் லூதர் கிங், மால்கம் எக்ஸ், ரோசா பார்க் | வரலாறு எல்லோரையும் விடுதலை செய்து விடுவதில்லை – பிரேம் Posted on May 3, 2013 by admin வரலாறு எல்லோரையும் விடுதலை செய்து விடுவதில்லை 1. மறதியின் அரசியலும் நினைவுக் குழப்பங்களும் ஒவ்வொருவரும் ஏதோவொரு வகையில் இழப்புகளைச் சந்தித்திருப்போம். பெற்றோரை, உடன் பிறந்தோரை, உற்றார் உறவினர், நண்பர்கள், அறிந்தோர், தெரிந்தோர், அக்கம்பக்கத்தில் உள்ளோர், ஊரார் எனப் பலவகையில் நம்முடன் தொடர்புடையோரை ஒவ்வொரு கட்டத்திலும் இழந்து கொண்டே இருப்போம். இந்த இழப்புகள் அனைத்தும் ஒரே போன்ற அதிர்ச்சியை, துயரத்தை, வலியை, திகைப்பை, ஆதரவற்ற நிலையை நமக்கு வழங்கி விடுவதில்லை. தன் வாழ்வின் முழு ஆதாரமுமாகக் கொள்ளப்பட்ட ஒருவரை இழந்து நிற்கும் தனிமனிதர் ஒருவருடைய ஈடுசெய்ய முடியாத இழப்பை அவரைத் தவிர சமூகத்தில் யாரும் அதே வகையில் உணர்ந்துவிட முடியாது. அது தேவையும் இல்லை என்பது தான் நடப்பியல் உண்மை. ஆனால் எந்த ஒருவடைய இழப்பையும், மறைவையும் வேறு ஒருவரால் பதிலீடு செய்து விடவோ பகுதியாக நிறைந்துவிடவோ முடியாது என்பதும் தனிமனித நிலையில் மிகவும் பொருளுடைய ஒன்று. சமூகத்தைப் பொறுத்தவரை யாருடைய மறைவும் மேலும் ஒரு உறுப்பினருடைய மறைவே. வாழும் போது அவர் வகித்த பங்கு, அவர் பெற்றிருந்த சமூக இடம், அவருக்கு வழங்கப்பட்டிருந்த சமூக அரசியல் அடையாளம், அவர் தனது வாழ்வின்போது செய்த செயல்கள் என்பவற்றைப் பொறுத்து அவரது மறைவு வரலாற்றிலும் சமூகக் கூட்டு மனநிலையிலும் ஒரு குறியீட்டு இடத்தைப் பெற முடியும். ஆனால் மறைவு என்ற வகையில்யில்கூட அது இருப்பு குறித்து பேசும் ஒரு செயலாகவே உள்ளது. கருத்துருவ, குறியீட்டு இருப்பாக ஒருவரை மாற்றுதல் என்பது சமூகவயமாக்கம் மற்றும் சடங்காக்கம் என்ற நிகழ்வின் ஒரு பகுதியே. அது இருப்பைப் பற்றியே பேசுகிறது, இனியானதுடன் இருந்த ஒன்றை அது உறவு படுத்துகிறது. சமூக, சடங்கு, சமய, அரசியல், கலையிலக்கிய இயங்கு தளங்களில் மரணம் என்பதை மடைமாற்றம், உருமாற்றம், தளமாற்றம், குறிப்பீட்டு மாற்றம் செய்யமுடிந்த அளவுக்கு தனிமனிதத்தளத்தில் செய்ய முடிவதில்லை. ஏனெனில் மரணம் என்பதுடன் ஒருவர் குறித்த மொழி முற்றுப் பெற்றுவிடுகிறது. நிகழ்காலம், எதிர்காலம் என்ற காலக்குறிப்போ, கீழ்மேல், இடவலம் என்ற இடக்குறிப்போ இன்றி எப்படி மொழி இயங்க முடியும். பெயர்ச்சொல் மட்டுமே கொண்டு ஒருகதையை, பேச்சை எப்படித் தொடர முடியும். கடந்த காலம் என்பது வெறுமையே, மொழி முடிந்த இடத்தில் ஒருவருடைய இருப்பும் முடிந்து விடுகிறது. அப்போது உலகில் நமக்கு எல்லாமுமாக இருந்த ஒருவடைய இருப்பே நமக்கு எதிராக, மொழி முடிந்த இடத்தில் நம்மை நிறுத்தி விடுகிறது. மிக மிக நேசித்த ஒருவருடைய மறைவு மிகமிக வெறுக்கத்தக்கதாகும் பொழுது மறைந்தவர் அவரை நேசித்தவருக்கு பகை மொழிப்புலத்தில் இடம் பெற்றவராகி இயலாவெறுப்பு, மறதியற்ற மறதி, நினைவுகூறத் தகாத காலம் என்பவற்றின் குறியீடாக மீந்து நிற்கிறார். இந்தக் கையறவு நிலை பித்துநிலை கொண்டது, “உன்னை இழந்து நிற்கும் இந்தத் துயரத்தை உன்னிடமின்றி யாருடன் பேச முடியும்” என்பது போன்ற ஒருமுரண்நிலை. இந்த நிலையைச் சடங்குகள், சமய நம்பிக்கைகள், மறுபிறப்பு, அரூப உடல், எங்கும் நிறைந்த நிலை, பதிலீட்டுக் குறிப்பொருள்கள் எனக் கற்பனைகள் மூலம் கையாள்வதைத் தவிர தனிமனிதர்களுக்கு வேறு வழியில்லை. எல்லாச் சமயங்களும் மரணம் பற்றிய மர்மத்தையே தமது அடிப்படை வலிமையாகக் கொண்டுள்ளன. பிறப்பை விட இறப்பைக் கையாள்வதன் உத்திகளே மதங்களை எப்போதும் செயலாற்றல் உடையனவாக வைத்திருக்கின்றன. இதே மரணத்தை அரசியலும் வரலாறும் கையாளும் வழிமுறைகள் வேறுபட்டாலும் மனிதர்கள் மீது அவற்றிற்குள்ள முழுக் கட்டுப்பாடும் மரணத்தை முன் நிபந்தனையாகக் கொண்டே இயங்குகிறது. இதனை உடல் மீதான கட்டுப்பாடு என்று கூறுவதைவிட உடல் – உயிர் உறவைக் கையாளும் உத்தி மீதான கட்டுப்பாடு என்று குறிப்பது சரியாக இருக்கும். உயிர் நீக்கும் உரிமையைக் கையாளும் உத்திகளே அரசியலின் அடிப்படை என்பது மிக நுண்மையான தளத்தில் நமக்குப் புரியவரும். உடல் – உயிர், உயிர்ச்செயல்-குறியீட்டுச்செயல் என்பவற்றைக் கட்டுப்படுத்தும் வடிவமைக்கும் தீர்மானிக்கும் செயல் இயந்திரமாக அரசியல், அரசு, அமைப்புகள், அறிவுக்கட்டுமானங்கள் என்பவை நம்முன் நிற்கின்றன. இவற்றின் அளவீட்டுத் தரப்படுத்தல், வரிசைப்படுத்தல், வகைப்படுத்தல், பயன்மதிப்பு அடையாளம் என்பவற்றைக் கொண்டு தனிமனிதர்களான நமக்கு இருப்பும் அதற்கான அர்த்தமும் வழங்கப்படுகிறது. நமது இருப்பும், அதன் அர்த்தமும், உயிர்வாழ்வும், உயிர்நீப்பும் எதனால், எங்கு, எப்படி, எவர்மூலம், எந்தயெந்த காரணங்களால் தீர்மானிக்கப்படுகின்றதோ அங்கே நமக்கான உரிமை கோரலை முன்வைக்கும்போது நாம் நமது அரசியலைத் தீர்மானிக்கிறோம், தேர்ந்தெடுக்கிறோம், திட்டமிடுகிறோம். இந்தத் திட்டமிடலும் தேர்ந்தெடுப்பும்தான் நமது அரசியல் செயல்பாடு. நமது இருப்பு பற்றியும் பிறரின் இருப்பு பற்றியுமான எல்லாச் சிக்கல்களும் இங்குதான் குவிந்து கிடக்கிறது. இந்தச் சிக்கல்களைக் கையாளும்பொழுது நாம் தவிர்க்க முடியாமல் உயிர்நீக்கம், உடல் அழிப்பு என்ற மைய விசையைக் கையாள்பவர்களாக மாறிவிடுகிறோம். இந்த மையவிசை புராதனத் தொன்மைநிலை உத்திமுறைகளுடன் உறவுடையது. இந்த உத்தி முறையை நாம் இன்னும் கடந்து விடவில்லை. அந்த உத்திமுறையைப் மிகப்பல வடிவங்களில் பெருக்கி, விரித்து, வலிமையாக்கி கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். ‘போர்’ என்ற அந்த புராதன உத்திமுறை மிக ஆற்றல் வாய்ந்த அழகியல் உருவங்களால் பெருக்கப்படுவது நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. இந்த அழகியல்’ தனி மனித இழப்புகளைப் பொருளற்றதாக்கி விடுகிறது. தன் பிள்ளையை குண்டு வீச்சில் பறிகொடுத்தத்தாயின் கதறல் அரசியல் பின்புலத்தில், போர் அழகியல் பார்வையில் வெறும் விலங்குத் தன்மை உடைய, அரசியல் நீக்கம் செய்யப்பட்ட, பித்துநிலை கொண்டதாகப் பொருள்படுத்தப்படுகிறது. இந்தக் காட்சி இன்று மூன்றாம் உலக நாடுகள் பலவற்றிலும் தின நிகழ்வாக மாறியிருக்கிறது. அதே சமயம் அமெரிக்காவிலோ, வேறு ஒரு அய்ரோப்பிய நாட்டிலோ ஒரு கட்டிடம் தகர்க்கப்படுதல் என்பதும், ஒரு எதிர்ப்பு ஊர்வலம் என்பதும் பூகோளம் சார்ந்த அழிவிற்கான குறியீடாகி விடுகிறது. ‘மனித குலத்திற்கு எதிரான பயங்கரவாதம்’ என்பது வெள்ளை இனத்திற்கு புறத்தே உள்ள ஒவ்வொரு அடையாளப்படுத்தலுடனும் தொடர்புபடுத்தப் படுகிறது. இன்று அரசுகளின் முதல் கடமை பயங்கரவாதத்திலிருந்து மக்களைக் காப்பது என்ற தளத்திற்கு ‘உலக அரசியல்’ நகர்த்தப்பட்டுள்ளது. ஆனால் ‘பயங்கரவாதம்’ என்ற இந்த உருவமற்ற தாக்குதலின் தொடக்கம், அடிப்படை இன்றைய நவீனஅரசுகள் மற்றும் போர் நிறுவனங்களுடன் தொடர்பு கொண்டவை என்பதும் நவீன அறிவியல் என்ற அறிவுக் கட்டுமானத்தின் விளைபொருள் என்பதும் உலகமேலாதிக்க ஒருமைப்படுத்தலின் பின்விளைவு என்பதும் விளிம்பு நிலை அரசியல் சொல்லாடமாக மட்டுமே மிஞ்சி நிற்கிறது. இன்று எல்லாவித மறுப்பு, எதிர்ப்பு, மாற்று அடையாள அரசியல் சொல்லாடல்களும் ‘பயங்கரவாதம்’ என்ற முனைப்படுத்தப்பட்ட எதிர்ச் சொல்லாடலுடன் உறவுபடுத்தப்பட்டு அழித்தொழிப்பிற்கு உரியவையாக அடையாளப்படுத்தப்படுகின்றன. அப்படியெனில் இனியான மக்கள்சார், மாற்று அரசியல் சொல்லாடல்கள் மற்றும் செயல்முறைகள் எவ்வகையாக இந்தப் போர் அரசியலைக் கையாளப்போகின்றன? வன்முறை, எதிர்ப்பு, தற்காப்பு, எழுச்சி, விடுதலைப் போராட்டம், மக்கள்போர், அடையாள அரசியல், வர்க்கப் போராட்டம், விடுதலை அரசியல் என்பவை ‘உலக அரசு- ராணுவ பங்கரவாதச் சூழலில் எவ்வகையாக மாற்று வரையறை பெறப் போகின்றன? என்ற கேள்விகள் நம்மைத் தாக்கத் தொடங்கி விட்ட சூழலில்தான் ‘ஈழம்’ என்ற வரலாற்று துயரமும் நிகழ்ந்து முடிந்திருக்கிறது. இவை குறித்த கேள்விகள் மற்றும் மறு ஆய்வுகளுக்கு எந்த அவகாசமும் இன்றி ஒரு இனப்படுகொலை நிகழ்த்தப்பட்டிருக்கிறது. இந்த இனப் படுகொலையின் தனிமனித இழப்புகள் குறித்து எந்த வித மொழிச் செயலும் மேலும் ஒரு வன்முறையாக, தாக்குதலாகத்தான் இருக்கும் என்பது நமக்குப் புரியத் தொடங்கும் அதே வேளை, ஒரு இனம் சார்ந்த, மொழி சார்ந்த அடையாள அரசியல் மற்றும் தன்னாட்சி அரசியல் என்ற வகையில் தொடர்ந்தும் பேசப்பட வேண்டியதாக, மறுஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டியதாக, மறுவிளக்கத்திற்கு உள்ளாக்க வேண்டிய தாகவே உள்ளது. தமிழ்மொழி, இனம், பண்பாடு என்பனவற்றை அடிப்படையாக வைத்து கட்டப்பட்ட ஒரு அரசியலின் மூலம் வளர்ந்து, விரிவடைந்து துயரங்களை நிகழ்த்திச் சிதைத்து போன ஒரு வரலாற்றுத் தளம் என்ற வகையில் உலக அரசியல் பின்புலத்தில் ‘ஈழப்போர்’ என்பது அணுகப்படுவதற்கும் தமிழக சமூக, அரசியல், பண்பாட்டுத் தளத்தில் “ஈழத்துயரம்” என்பது அணுகப்படுவதற்கும் அடிப்படையில் மிகுந்த வேறுபாடு உண்டு. இது இழப்புகள் பற்றிய அரசியல், இனம்-மொழி என்ற கட்டமைப்பு மூலம் பிணைக்கப்பட்ட, இருப்பு மற்றும் அழிப்பு என்பதன் அரசியல். அதனால் உலக அரசியல் வல்லுனர்களும், போர் முகவர்களும், இந்திய உளவுத்துறை அறிஞர்களும், நடுநிலை ஊடகவியலாளர்களும், அமைச்சர்களும் இந்த அழிப்பை, துயரை அணுகுவதுபோல ‘தமிழ்’ என்ற களத்திற்குள்ளிருந்தும் இதனை அணுக முடியாது. ஏனெனில் தன்னிலை உருவாக்கம் என்ற அரசியல் செயல்பாட்டுடன் உறவுடையது இது. தமிழ்த் தன்னிலை, தமிழ்த் தன்னடையாளம் என்பவை உருவாகும் களத்தில் அரசியலுக்கு என்ன இடம் உண்டோ அதே இடம் ‘ஈழம்’ பற்றிய அறிதல், அணுகுமுறைகளுக்கும் உண்டு. ஒவ்வொரு சமூகத்திற்கும் இரு முனைப்புப் புள்ளிகள் தேவை. ஒன்று அச்சமூகத்தின் பெருந்திளைப்பு, மற்றது பெருந்துயரம். இவற்றின் கூறுகள் பண்பாடுகளின் ஒவ்வொரு இழையிலும் படிந்தே இருக்கும். இந்த உணர்வுப் புள்ளிகளுடன் தனிமனிதர்கள் பிணைந்தும் விலகியும் தமது உளவியல் அடையாத்தைக் கட்டிக்கொள்ள முடியும். இவை வெவ்வேறு விகிதத்தில் கலந்தும் பிரிந்தும் சமூக உளவியலை உருவாக்கும் தன்மை உடையன. அவ்வகையான ஒரு சமூக உளவியல் உருவாக்கத்துடன் இனிவரும் காலத்தில் தொடர்ந்தும் இணைந்து இயங்கப்போகும் நினைவு மற்றும் துயரத் தொகுதியாக வடிவம் கொண்டிருப்பதுதான் ‘ஈழம்’ என்ற கனத்த உருவகம். அதே சமயம் இதனை மறதிக்குள் புதைக்க முனையும் உருவழிப்புச் சொல்லாடல்கள் தமிழ்ச் சூழலில் பெருகும் என்பதும், கடந்த இருபது ஆண்டுகளாக அவ்வகை உருவழிப்பு, நினைவு மறைப்புச் சொல்லாடல்கள் அதிகம் பெருகியுள்ளன என்பதும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டிவை என்றாலும் அரசியல் களத்தில், பண்பாட்டு அரசியல் உருவாக்கத்தில் இலக்கிய மாற்றுச் சொல்லாடல்களில் இந்தத் ‘துயர்சார் அரசியல்’ (Politics of Agony) இடம்பெறவில்லை என்றால் இனி தமிழ் மொழியில் அரசியல், அடையாள, தன்னிலைக் கட்டுமானச் சொல்லாடல்கள் இல்லாமல் போனதாகவே பொருள்படும். இந்த மறதிக்கெதிரான அரசியலின் ஒரு பகுதியாகவும் ‘துயர்சார் அரசியல்’ குறித்த நினைவுக் குழப்பங்களின் சில பகுதிகளாகவும் இவற்றைப் பதிவு செய்ய வேண்டியுள்ளது. 2. மாறுதல் காலப் பயங்கரங்கள் (Horrors of Transition) உலக அளவிலான தனித்தனி நிலங்களும் சமூகங்களும் அரசுகளும் ஒன்றுடன் ஒன்று பிணைக்கப்பட்டு, கலக்கப்பட்டு, குழப்பப்பட்டு புதிய வகையான அரசுகள், ஆட்சிப் பரப்புகள் உருவாக்கப்பட்ட காலனிய கால மாறுதல்கள் என்பவை உலக வரலாற்றில் பயங்கரங்கள் நிறைந்த பல புதிய அத்தியாயங்களைத் தோற்றுவித்தன. நில ஆக்கிரமிப்பு, இனஅழிப்பு, இன மேலாதிக்கம் என்பவற்றின் மூலம் நிலவியல்சார் பண்பாட்டுச் சமூகங்கள் அடிமை நிலைக்குத் தள்ளப்பட்டன. தமக்கு முற்றிலும் அன்னியமான ஒரு நாடு, இனம், அரசு தம்மீது ஆதிக்கம் செய்தல் என்பதன் புதிர் பல சமூகங்களில் அச்சத்தையும், உள்ளார்ந்த பயங்கரம்சார் உளவியலையும் தோற்றுவித்தன. இந்தக் காலகட்டத்தின் மாற்றங்கள் அனைத்தும் உலகின் நிலம்சார் சமூகங்களின் மீது அவற்றின் அனுமதி இல்லாமலேயே தாக்கத்தை ஏற்படுத்தியதுடன் பல கட்டமைப்பு மாற்றங்களையும் உண்டாக்கின. நவீன அரசுகளும் நவீன அறிவமைப்புகளும் நவீன மதிப்பீடுகளும் நவீன நிறுவனங்களும் ஒவ்வொரு சமூகத்தையும் அவற்றின் மயக்க நிலையூடாகவே ஊடுறுவி அடிப்படைகளைத் திருத்தி அமைத்துவிட்டன. இந்த மாறுதல்களை உலக ஏகாதிபத்தியங்கள் நிகழ்த்தியதன் பின்னணியில் உள்ள பயங்கரங்களும், கொடூரங்களும் பாதிக்கப்பட்ட சமூகங்களின் வரலாற்று நினைவுகளாக இருப்பது ஒரு புறம், தம்மை ஒடுக்கிய சமூகங்களின் அறிவும், அமைப்புகளும் தமக்குள் ஊடுருவி இயக்கிக் கொண்டிருப்பதன் முரண் மறுபுறம் என்ற ஒவ்வாமை மற்றும் பொருந்தாமை அடிமைப்பட்ட நிலங்களின் ஊனமுற்ற உளவியலாக மாறியிருந்தது. இந்த மாறுதல்காலப் பயங்கரங்களை ஒவ்வொரு சமூகமும் ஒவ்வொரு விதமாக எதிர் கொண்டு தனதாக்கம் செய்ய வேண்டிய நிலையும் ஏற்பட்டது. அதில் ஒன்றுதான் நிலங்களுக்குள்ளான உள்மோதல்கள். சுயச்சமூக குற்றச்செயல்கள், தன்னழிவுச் செயல்பாடுகள், சமூகப் பொருத்தமின்மை, தனிமனிதர்களை உள்ளடக்காமை என வெவ்வேறுவித வன்முறை வடிவங்களும் இந்த மாறுதல்காலப் பயங்கரங்களில் அடங்கும். அவ்வகையான மாறுதல் கால பயங்கரங்களின் ஒரு பகுதியாகவே இலங்கை மண்ணில் நிகழ்ந்த ஈழப்போர் என்பதும் அமைந்து விட்டது. நவீன கால ஓருலக அமைப்பில் தன் அடையாளத்தை முதன்மைப்படுத்தி தனக்கான மொழி, நிலம், நாடு என்பதை வடிவமைத்துக்கொள்ள முயன்ற ஒரு மக்கள் தொகுதியின் துயரமாக அது இருந்து வந்தது. தன்னை நவீனப்படுத்திக்கொள்ள உலக சமூகங்கள் ஒவ்வொன்றும் வெவ்வெறு உத்திகளை வெவ்வெறு செயல்வடிவங்களைக் கைக்கொள்கின்றன, போர் என்பதும் அவற்றில் ஒன்று. புராதனமானதும் அதே சமயம் புதிய உத்திகளை உள்ளடக்கியதுமான இந்தச்செயல் மாறுதல்காலப் பயங்கரங்களில் அதிக பலம் மிக்கதாகவும், அதிக வல்லமை கொண்டதாகவும் இருக்கிறது. இதனைத் தேர்ந்தெடுத்ததன் மூலம் இலங்கை மண்ணின் தமிழ்ச் சமூகம் நேரடியாக ஒரு நவீனத் தன்மையை அடைந்து விடுகிறது. மாறுதல் காலப் பயங்கரத்திற்கு உட்படும் ஒரு சமூகம் என்ற நிலையிலிருந்து பயங்கரத்தில் பங்கெடுக்கும் சமூகமாக அது மாற முயற்சிக்கிறது. இதன் மூலம் உலக அரசியலில் தனது அடையாளத்தை அது வலிந்து உருவாக்கிக் கொள்கிறது. இலங்கை அரசு சிங்கள மொழி-இன அடையாளத்தை மையப்படுத்தித் தன் நிலத்தை, வரலாற்றை வரையறை செய்வதற்கான அடிப்படைகளை உருவாக்கிய உடனேயே தமிழ்ச் சமூகமும் தனது மொழி-இன அடையாள அரசியலுக்கு அதிக அழுத்தம் தரத் தொடங்கிவிடுகிறது. இந்த எதிர்மைகள் இலங்கை அரசியல் மற்றும் சமூக இயக்கத்தில் ஒவ்வொருவரையும் ஆயுதமயப்படுத்தும் செயலின் முதல் கட்டமாக அமைந்து விட்டன. மதம், மொழி, இனம் என வேறுபாட்டு அடையாளங்களின் போர்க்குணம் பெரும்பான்மை மக்கள் சிறுபான்மையினர் மீது தாக்குதல்களைத் தொடங்கியவுடன் வெளிப்பட்டு உறுதி செய்யப்படுகிறது. இது இரண்டு இனங்களுக்குமே மாறுதல் காலப் பயங்கரத்தை நிகழ்த்தும் பாத்திரத்தை ஏற்கும் நிலையை உருவாக்கி விடுகிறது. சிங்களர் இனம், மொழி, பௌத்தமதம் என்பவை அரசால் பிரதி நிதித்துவப்படுத்தப்பட்ட நிலையில் ‘தமிழ்’ என்பது அரசற்ற போர்க் குழுக்களால் பிரதிநிதித்துவப்படுத்தப்படும் நிலை ஏற்பட்டது. இங்கு சிங்கள அரசும் இராணுவமும் தமிழ் மக்களை உள்ளடக்காமல் அடிமை நிலையில் வைத்து பணிந்து வாழும் மக்களாக அவர்களை உறுதிப்படுத்தும் செயல்முறைகளைக் கையாண்டதன் மூலம் போராளிகளின் நேரடி எதிர்க்களமாக தம்மை நிறுத்திக் கொண்டன. மாறுதல்காலப் பயங்கரத்தின் மிக அவலமான பகுதி இது. இந்நிலையில் தமிழ்நிலம், தமிழ்த்தேசம் என்பவை உயிர் வாழ்க்கையுடன் மட்டுமின்றி மனித அடையாளத்தின் ஒரு பகுதியாக உறுதி செய்யப்பட்டுவிடுகிறது. இவை அனைத்துமே உருவகச் செயல்பாடுகள் என்றாலும் போர் என்பதை நேரடி உத்தியாக முன்வைத்த ஒரு அரசின் முன் கொல்லுதல், கொல்லப்படுதல் என்ற நிகழ்வியல் துயரமாக மாறிவிடுகிறது. இலங்கை அரசுக்கும் தமிழ்த் தலைவர்களுக்கும் இடையிலான ஒப்பந்தங்கள் மதிக்கப்படாத நிலையிலும் மீறப்பட்ட நிலையிலும் உருவக நிலைகள் உடைந்து உடல் அழிப்பு நிலையை அடைந்து விட்டது. (1957-இன் பண்டாரநாயகா-செல்வநாயகம் ஒப்பந்தம், 1965-இன் டட்லி- செல்வநாயகம் ஒப்பந்தம் ஆகியவை அவமதிக்கப்பட்டன.) 1915, 1956, 1958, 1961, 1974, 1977, 1979, 1981, 1983-ஆம் ஆண்டுகளில் தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட படுகொலைகள் தமிழர்களை, தமிழ்க் குழுக்களை போர் இயந்திரங்களாக மாற்றி விடுகின்றன. இலங்கை அரசு தன்னை தமிழர்களுக்கானதாக வைத்துக்கொள்ள முடியாததுடன் தமிழர் அழிப்புக்கான நிறுவனமாகவும் தன்னை மாற்றிக்கொள்கிறது. அரசியல் பேச்சுவார்த்தைகளால், உள்ளடக்கும் அரசியல் ஒப்பந்தங்களால், ஆட்சிப் பகிர்வுகளால் தமிழர்களிடையே அடையாள உறுதியையும், உயிர்வாழும் உரிமையையும் பலப்படுத்தி இருக்க வேண்டிய இலங்கை அரசு ஆயுதங்களையே மையப்படுத்திய பொழுது தமிழர்களின் குழுக்களும் அதே உத்தியைக் கைக்கொள்ள வேண்டியிருந்து. இந்தப் போர்ச் சூழல் ‘இடைநிலை அரசியல் சொல்லாடல் எதனையும் உருவாக்க முடியாமல் போனதால் போராளிகள் என்போர் தம்மை அரசுக்கு இணையாக எதிர்நிலைப் படுத்திக்கொள்ளும் வாய்ப்பு உருவானது. அர்த்தம் அற்ற, வெற்றடக்கம் கொண்ட, பணிந்து போகும் ஒரு உயிரியாக இருப்பதை விடவும் ஒரு போராளியாக இருப்பது அர்த்தமுடையதாக, பெருமை தருவதாக, அதிகாரத்தை வழங்கக் கூடியதாக தோற்றம் தரத் தொடங்கியது. இதற்கு முன்பே உலக அளவில் புரட்சிகள் என்பவை மனித நிலைமாற்றங்களின் களமாக கொண்டாடப்பட்ட நிலையில் ஆயுதம் தாங்கிய தனிமனிதர்கள் குழுக்களாகவும் படைகளாகவும் மாறும்போது கோட்பாட்டு வலிமை உடைய, அர்த்தம் நிறைந்த மனிதத் தொகுதிகளாக வடிவம் பெறுகின்றனர். இது அரசுகளுக்கு இணையான ஒரு தோற்றத்தை தரக்கூடியது. தனிமைப்பட்ட, சிதறுண்ட மனிதர்களுக்குப் பதிலாக ஒன்றிணைந்த, தொகுதியான, செயலுடைய, மகிமைப்பட்ட உறுப்பினர்களின் உருவாக்கம் இங்கு நிகழ்கிறது. அரசு ராணுவங்களில் இடம் பெறுவோர் தேசபக்தி, தியாகம், புனிதக் கடமை என்ற அடையாளங்களுடன் உயர்வாக்கம் பெறும் நிலையில் போராளிகளாகத் தம்மை மாற்றிக் கொண்டோர் இலட்சியம், புனித இலக்கு, விடுதலைக்கான தியாகம் என்ற அடையாளங்களுடன் உயர்வாக்கம் அடைகின்றனர். இது தாமே உருவாக்கிக் கொண்ட உயர்வாக்கம் என்பதைவிட தமக்குப்பின் உள்ள மக்களால் தமக்கு வழங்கப்பட்ட சிறப்பு அடையாளம் என அர்த்தப்படுத்திக் கொள்ள போராடச் சூழல் அவர்களுக்கு இடம் ஏற்படுத்தித் தருகிறது. இந்த அடையாளம் ஒரு வகையில் மீறப்படவோ, மீள இடம்அளிக்கவோ முடியாத நிலையை அடையக் கூடும். இந்தச் சிக்கல்தான் ஈழப் போராட்டத்தின் ஒரு கட்டத்தில் பின் திரும்பிப்போக முடியாத நிலையை உருவாக்கியது. மாறுதல் காலப் பயங்கரங்கள் என்பவை ஒவ்வொரு சமூகத்தையும் வெவ்வேறு வகையில் பாதிப்பதுண்டு. அரசு, நிர்வாகம், நீதித்துறை, பொருளாதாரக் கட்டுமானம் என்பவை மாறிவிட அதற்குட்பட்ட மக்களோ வேறு வகை சமயநம்பிக்கை, பண்பாட்டு நடத்தைகளைக் கொண்டவர்களாகவே இருந்தால், இவ்வகை பயங்கரம் வெளித்தெரியாத உள்ளடங்கிய உடைவுகளை ஏற்படுத்தும். பிரஞ்சு புரட்சி போல ஒரே அமைப்புக்குள் ஏற்பட்ட உள்முரண்பாடுகள் மோதி உடைத்துக் கொண்டு மாற்று வடிவம் பெற முயற்சிக்கும் போது ஏற்படும் பயங்கரங்கள் வெளிப்படையான நிகழ்வுத் தன்மை கொண்டதாக இருக்கும். அந்த அமைப்புக்குள்ளாகச் சில பகுதிகளை உடைத்து நீக்கி மாறுதல்களைச் செய்வதன் மூலம் கோட்பாட்டு அடிப்படைகள் மாறும். ‘விஞ்ஞானச் செயல் திட்டங்கள்’ ஒரு சமூகத்தின் மீது கவிழும் போது அவற்றின் மீதான புரிதல் இன்றியே அவற்றிற்கு உட்பட்டு பிறகு அம்மாற்றங்களைத் நமதாக்கிக் கொள்ள நேரலாம். இந்தச் சூழலிலும் கூட மாறுதல் காலப் பயங்கரங்கள் உள்ளார்ந்து நிகழவே செய்யும். ஈழப் போராட்டம் என்பது நவீன தேசம், அரசு, நிர்வாகம், ஆட்சி என்ற மாறிய வடிவங்களால் சூழப்பட்ட ஒரு சமூகத்திற்குள் நிகழ்ந்த மாறுதல்கால அமைதியின்மை, சமநிலைக் குலைவு. அதனை இலங்கை அரசு பொறுப்பற்ற வகையில் கையாண்டதும், வன்முறையால் அதனை புதைத்துவிடலாம் என்று முடிவு செய்ததும் மாறுதல் கால பயங்கரத்தை போர்க்கால பயங்கரம் நோக்கித் தள்ளியது. அதே வன்முறை அதனை பயங்கரமானதும் துயர் நிரம்பியதுமான ஒரு முடிவுக்குக் கொண்டு செலுத்தியது. தற்போது மீண்டும் ஒற்றைத் தேசிய அரசு, பலமான நிர்வாகம், வலிமையான இராணுவம், ஒன்றுப்பட்ட நாடு என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இடையில் எல்லாவற்றையும் இழந்த மக்கள் தற்போது ‘உயிர்வாழ்க்கை’ என்பதை மட்டும் பெற்றவர்களாக அரசின் கருணையின் கீழ் வாழ வேண்டியவர்களாகி உள்ளனர். இதுவரை கொல்லப்பட்ட தமிழர்கள், போராளிகள், அரசுப் படையினர் எல்லோரும் இந்த மாறுதல்காலப் பயங்கரத்திற்கு பலியானவர்களாகின்றனர். கொல்லப்பட்டத் தமிழர்கள், போராளிகள் என்ற வகையில் இனி நினைவு கடந்த மறதிக்குள் புதைந்தால் தவிர மீந்திருப்பவர்கள் உயிர்வாழ முடியாது. இந்த நிலைகடந்த வலி, துயரம், இழப்பு, என்பவை ஒரு மரத்துப் போன நிலையை, பேதலித்த கூட்டு மனநிலையை உருவாக்கக்கூடியது. இந்த மன நிலையின் வெளிப்பாடுகள் இனி தம் கடந்த காலப்போராட்டம் பற்றிய கசப்புணர்வாக வெளிப்படும். போராளிகள் மீதான வெறுப்பாக, தாம் கண்ட கனவின் மீதான அச்சமாக, தம்மைப் பற்றியே ஏதும் சொல்லமுடியாத மௌனமாக, செயலற்ற ஒப்படைப்பாக வெவ்வெறு வகைகளில் வெளிப்படும். எல்லா இலட்சியங்களின் அடிப்படையிலும் எளிய மனித உணர்வுகளே உள்ளன, இந்த எளிய அடிப்படை உணர்வுகளே எல்லா வரலாற்று நிகழ்வுகளுக்குப் பிறகும் மீந்து நிற்பவை. தற்போது “மீந்து நிற்கும்” இலங்கைத் தமிழர்களிடம் இருப்பவை அச்சங்கள், எதிர்ப்பார்ப்புகள் நிறைந்த வெற்று மனித நிலை. இந்த ‘வெற்றுமனித’ நிலையைக் கூட ஒரு அரசு தனக்கு வெளியில் உள்ள ஒரு மக்கள் தொகுதியின் அரசியலுடன் அடையாளப்படுத்தியே அணுகும் என்பதுதான் இதில் உள்ள அவலம். அவர்கள் வெற்று மனித நிலை அடைந்த ‘தமிழர்கள்’ என்ற அடையாத்தையோ, அவர்கள் வரலாற்றின் ஒரு கட்டத்தில் தமக்கெனத் தனிநாடு கேட்ட ஒரு நிலப்பகுதியின் மக்கள் என்பதை அரசும் ராணுவமும் மறக்கப் போவதில்லை. இந்த அடையாளத்துடனேயே அவர்களுக்கான எதிர்காலம் திட்டமிடப்படும். அவர்களின் ஒவ்வொரு அசைவும் மற்றொரு விடுதலைப் போரின் தொடக்கமாக அமைந்து விடலாம் என்ற எச்சரிக்கையுடனேயே கவனிப்புக்குள்ளாகும். இந்நிலை இன்னும் ஒரு வகையான மாறுதல் காலப் பயங்ரகங்களைக் கொண்டதாக இருக்கும். அதற்கும் தமிழ்ச் சமூகம் தன்னை ஆயத்தப் படுத்திக் கொள்ள வேண்டிய காலம் இது. 3. துயர் சார் அரசியல் (Politics of Agony) எல்லா போராளிக் குழுக்களையும் ஈழப்பின்னணியில் ஒன்றாகப் பார்க்க வேண்டிய நிலையை இப்போது அடைந்திருக்கிறோம். பல்வேறு இயக்கத்தினரும் இதனை ஏற்க மறுக்கலாம். ஆனால் ஒன்றை ஒன்று அழித்து பிறகு மீந்து நின்ற ஒற்றைப் போராளி அமைப்பும் அழிக்கப்பட்ட நிலையில் இவர்கள் அனைவரும் ஒன்றாகவே பார்க்கப்பட வேண்டியவர்களாகின்றனர். தமிழ் இனவிடுதலை, தமிழர்த் தாயகம் என்ற வகையில் எல்லா இயக்கத்தினரும் ஒற்றை இலட்சியத்திற்காகவே போராடினர். அணுகு முறைகள் வேறுபட்டாலும் எல்லாரும் ஒரே கனவு நோக்கியே தம்மைப் பலியாக்கினர். குழுக்கள், படைகள், முகாம்கள் என்பவை வேறுபட்டாலும் ‘இயக்கும் கருத்தியல்’ ஒன்றாகவே இருந்தது. தற்போது யாரும் இல்லை, தனிமனிதர்களைத் தவிர. இந்த நிலையில் ‘போராளிகள்’ என்ற வரலாற்றுப் பாத்திரத்தை வகித்தவர்கள் எல்லோரும் ஒரு துயர்சார் அரசியலின் குறியீடுகள் ஆகின்றனர். இந்த போராளிப் பாத்திரத்தை அவர்கள் வகித்தபோதுகூட துயர்சார் அரசியலின் பகுதியாகவே இருந்தனர். ஆயுதங்களால் விடுதலை கிடைக்கும் என்ற நம்பிக்கை அவர்களுக்கு இருந்தது. “வரலாறு எம்மை விடுதலை செய்யும்” என்று அவர்கள் நம்பியிருந்தனர். இந்த ‘விளிம்பு நிற்கும் மனநிலை’அடைவதற்கு அல்லது ‘இறுதிகட்ட நிலைப்பாடு’ என்பதை இவர்கள் எடுப்பதற்கும் தம் ‘உயிர்நீப்பு’ என்பதை முன்நிபந்தனையாகக் வைத்த “பகைஅழிப்பு” என்பதை நிர்ப்பந்தமாகக் கொண்ட ‘உயிர்க்கொலை’ அரசியல் உத்தியை இவர்கள் தேர்ந்தெடுப்பதற்கும் பின்னுள்ள அந்த வரலாற்று களம் முழுதும் ‘துயர்சார் அரசியலால்’ நிரம்பிக் கிடக்கிறது. அறுபதுகளின் தலை முறையைச் சேர்ந்த- வர்களே ஈழப் போராட்டத்தின் முன்னோடிகள், அறுபது எழுபதுகளில் மாணவர்களாக இருந்தவர்கள் இவர்கள். அவர்களுக்கு அப்போது தாம் கூடிப்பேசுவது, குழுவாக இணைவது, விவாதிப்பது, அமைப்புக் கட்டுவது எல்லாம் மிக நீண்ட அவலம் நிறைந்த ஒரு கால கட்டத்தைத் தொடங்கி வைக்கப்போகிறது என்றோ, சில இலட்சம் மக்களைக் கொன்று பல இலட்சம் மக்களை நிலம் பெயர்ந்து ஓடச்செய்ய இருக்கிறது என்றோ தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. ரஷ்ய, சீன, கியூப, வியட்நாமிய முன் மாதிரிகளும் சிங்கள இளைஞர்களின் மக்கள் விடுதலைப் படையின் எதிர்ப்புச் செயல்களும் அவர்களுக்கு முன்னே நின்றன. மாபெரும் விடுதலைப் போர் ஒன்றைத் தொடங்குவதன் மூலம் மக்களுக்காக தியாகம் செய்தவர்களாக வேண்டும் என்பது ஒரு உந்து சக்தியாக இருந்தபோதும், இறுதியில் வெற்றியடைவோம் என்ற ஒரு கனவு அவர்களைச் செயல்படவைத்தது. சிறு சிறு வன்முறைகள் மூலம் அரசை அச்சுறுத்தவும், தம் எதிர்ப்பைத் தெரிவிக்கவும் தொடங்கிய அவர்களுக்கு அடுத்து அடுத்து என்ன நடக்கும் என்பது கூட தெரியாமலேயே இருந்தது. இந்திய நிறுவனங்களின் நேரடித் திட்டமிடலும் உதவியும் களப் பொருள்களும் முகாம்களும் கிடைக்கும் வரை எல்லாப் போராளிக் குழுக்களும் ஆதரவற்ற தனிமனிதர்களாகவே தவித்தும் பதுங்கியும் தப்பியும் காலம் கடத்த வேண்டிய நிலையில் இருந்தனர். இவர்களிடம் ஒன்றும் இரண்டுமாக இருந்த கைத்துப்பாக்கிகள் இவர்களுக்குப் பெரிய அளவில் பாதுகாப்பையோ பலத்தையோ வழங்கி விடக்கூடியதல்ல. இந்தச் சூழலிலும் கூட இத்தலைமுறையினர் ஏன் போரைத் தேர்ந்தெடுத்தனர். அவர்களை இயக்கிய கூட்டு மனநிலையும் தனிமனித உளவியலும் என்ன என்பதை வெளியிலிருந்து புரிந்துகொள்வது கடினமானது. ஒருவித பாதுகாப்பின்மை, பொதுக்களத்தின் மீது நம்பிக்கையின்மை, தடுமாற்றத்துடன் கூடிய அச்சம் என்பவை அவர்களை அலைக்கழித்திருக்கிறது. தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதல்கள் கோபத்தை, வஞ்சத்தை ஏற்படுத்திய அதே சமயம் மாணவர்கள் என்ற வகையில் அவர்களுடைய அடையாளம் பின்னமுற்றதாக அவர்களுக்குத் தோன்றியிருக்கிறது. இந்த அந்நியநிலை கடினமான பாத்திரத்தை ஏற்கும் நிலைக்கு அவர்களைக் கொண்டு சென்றது. இலங்கை தேசிய அமைப்புக்குள் அவர்கள் விளிம்பில் வைக்கப்பட்டிருப்பதான ஒரு பொது உளவியல் உருவானது. உலக அளவிலான அரசியல் அழுத்தங்கள் பல்வேறு சமூகங்களில் உள் நொருங்கல்களை ஏற்படுத்தியிருந்தன. ஏகாதிபத்தியங்களின் போருக்குப் பின்னான அரசியல் பொருளாதாரச் சதித்திட்டங்கள் மூன்றாம் உலக நாடுகளை மூச்சுத்திணற வைத்திருந்தன. தேசிய அரசுகளோ மக்களைப்பற்றிய அக்கறையற்று வலிமையான ஆட்சி, தேசிய இறையாண்மை என்பவற்றை மையப்படுத்தியே தமது திட்டங்களைத் தீட்டிக் கொண்டிருந்தன. நவீன அறிவியலின் கருவிகளும் கட்டுமானங்களும் எல்லா சமூகங்களின் உள்கட்டமைப்பிலும் ஊடுறுவிப் புரிந்துகொள்ள முடியாத பக்க விளைவுகளை, நசிவுகளை உருவாக்கிக் கொண்டிருந்தன. இந்தச் சூழலில் மேற்கின் புதிய தலைமுறையினர் கருத்துச் சுதந்திரம், பாலியல் சுதந்திரம், மாற்று வாழ்க்கைமுறை என்பன பற்றிய பரிசோதனைகளில் ஈடுபட்டிருந்தனர். ஆசிய நாடுகளின் இளைஞர்கள் அரசியல் வயப்பட்ட மாற்றுகளைத் தேடிக் கொண்டிருந்தனர். சோஷலிசம், முதலாளித்துவம் என்ற எதிர்வு களுக்கிடையே உலக அரசியல் அலைகழிக்கப்பட்டிருந்தது. உலக மயமான உளவியல் பதற்றமும், நிலம் சார்ந்த பாதுகாப்பின்மையும் இணைந்த துயர்சார் அரசியலின் உளவியல் சிக்கல்களை நாம் இந்த கால கட்டத்தில் காண முடிகிறது. அதே சமயம் இலட்சியவாத, முழு விடுதலைச் சொல்லாடல்களும் புழக்கத்தில் இருக்கின்றன. போராளிகளாக மாறிய தலைமுறையினரின் பின்புலம் இந்த சிக்கல்கள் ஊடாக உருவானது. அவர்களைச் சிறைப்படுத்தியும், சித்திரவதை செய்தும் கொடுமைப்படுத்தி நிலைமைகளைக் கடினப்படுத்திய அரசுகள் மற்றும் நிறுவனங்களின் பின்புலமும் இதே சிக்கல்களுடன் அமைந்திருந்தன. ஆனால் அரசுகள், அமைப்புகள் என்பவற்றை மறுசீரமைப்பு செய்யவும், பலப்படுத்தவும் ஒரு பன்னாட்டு வலைப்பின்னல் அறிவுத்துறை, ஆய்வுத் துறைகள் உதவியுடன் செயல்பட்டதுபோல பாதிக்கப் பட்ட தலைமுறையினரை, துயர்சார் அரசியலில் சிக்கிய மக்களைக் காக்க உலக அளவிலான எந்த வலைப்பின்னலும் உருவாக்கப் படவில்லை. ஒரு வகையில் ஆயுத உற்பத்தியாளர்களே மக்கள் அரசியலில் விரக்தியடைந்த பிரிவினரையும் துயர்சார் அரசியலில் நசுங்கிய பிரிவினரையும் இயக்கக் கூடியவர்களாக மாறினர். இந்த முடிவற்ற உள்முரண் பின்னாட்களில் பல நாடுகளில் அழிவுகளை ஏற்படுத்தியிருக்கிறது. சர்வதேசக் குற்ற வலைப்பின்னல், ஆயுதக் கடத்தல்கள், போதைப் பொருள் சந்தை என்பவை விடுதலைப் படைகளை, மக்கள் போராளிகளை மறைமுகமாக இயக்கும் நிலைக்கு கொண்டு சென்றது. இந்தக் குற்றவலைப் பின்னல்கள் எல்லாமும் சில அரசுகளின் பின்புலம் இன்றி நிகழவில்லை என்பது தற்போது வெளிப்பட்டிருந்தாலும் அன்றைய காலகட்டத்தில் கருத்துருவ அணிச்சேர்க்கைகளே இவற்றை இயக்கியது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியிருந்தன. ஈழப்போராட்டத்தின் களத்தில் இந்தியத் தலையீடும் இவ்வகையில் மிகத்தவறான பல திருப்பங்களை ஏற்படுத்தியுள்ளன. இயக்கங்கள் ஒன்றை ஒன்று தாக்கி அழித்துக் கொள்வது, இயக்கங்களுக்குள்ளே ஒரு தலைமை இன்னொன்றை அழிப்பது என்பது தொடங்கி அரசியல் உத்திகளுக்கு முக்கியத்துவம் அளிக்காமல் ராணுவக் கட்டுமானத்திற்கு மட்டும் முக்கியத்துவம் அளிப்பது என்பது வரை ஏற்பட்ட திசைக் குழப்பங்கள் உளவு அமைப்புகளின் திட்டமிட்ட செயலால் நிகழ்ந்தவை. இந்தத் திரிபுகள் மக்கள்சார் சமூகத்தை மிகக்கடுமையான பாதிப்புக்கு உட்படுத்திய போதும் மறுபரிசீலனை, கட்டுமான மாற்றம் என்பதற்கு இடமளிக்காத அழிவு விளிம்பை நோக்கிய நகர்வை போர் அரசியல் நிகழ்த்திக் கொண்டிருந்தது. இன்று இன்னும் கணக்கிடப்படாத எண்ணிக்கையிலான மக்களைப் பறிகொடுத்து தானும் அழிந்து வலாற்றுத் துயரமாக மீந்து நிற்பதன் பின்னணியில் ஈழப்போராட்டம் பல்வேறு துயர்சார் அரசியல் சொல்லாடல்களை உருவாக்கி விட்டது. இறுதிவரை பேச்சுவார்த்தை, சமாதானம், இடைக்கால ஒப்பந்தம் என்பதன் சாத்தியப்பாடுகளை சிந்திக்காமலேயே தற்கொலை முடிவை எடுக்க அந்த அமைப்பை உந்திய சக்தி, குழு உளவியல் எது என்பது சிக்கலான பல கேள்விகளை எழுப்பக்கூடிய நிலையில் நமக்குக் காட்சியாக நிற்பவை அந்த இறுதி நாட்கள். மக்கள் மிகக்குறுகிய அந்த நிலப்பகுதிக்குள் சிக்கி பட்ட வாததைகள், வலிகள், இழப்புகள். இழப்பு என்பது மொழியை அழித்து பேதலிக்கச் செய்யும் நிலையை அடைந்த பின் அச்சம், அதிர்ச்சி என்பவை நரம்பு மண்டலத்தின் பாதைகளைத் தாண்டிய பின் மீந்துநின்ற வெற்று உடல் நிலை. இந்த வெற்று நிலைக்குச் சென்று திரும்பிய பின்னான சிதைவு நிலை, ஆழிப்பேரலைக்குப் பின் நேர்ந்த ஒரு உயிர் மிச்சம். இவற்றை இனி ஈழத்தமிழ்ச் சமூகம் எப்படி அரசியல் சொல்லாடலில், அடையாளச் சொல்லாடலில் கொண்டு வரப்போகிறது, இந்த நினைவும் மறதியுமான நிலைகள் தமிழ் அரசியல் சொல்லாடலில் எவ்வடிவங்களில் ஊடுருவப்போகின்றன என்பவை வெறும் தகவல் மற்றும் அறிவுத்துறை சார் கேள்விகளாக இருக்க முடியாது. ‘துயர் சார் அரசியலை’ கையாளவும் மாற்றவும் எதிர் கொள்ளவும் மாற்று வழிகளை பன்மையான பார்வைகளுடன் கண்டறிவதற்கான அழுத்தத்தையும் நிர்பந்தத்தையும் ஈழப்போராட்ட நிகழ்வு ஏற்படுத்தியிருக்கிறது. 4. தாள முடியாத நிகழ்வியல் (Unbearable Reality) தமிழ் ஈழம், தமிழீழத் தாயகம் என்ற இலக்கை மட்டுமே வைத்து ஒரு போர் அரசியல், நேடிர அரசு நீக்க இயக்கம் தொடங்குதல் என்பதே இலங்கை தேசப்பின்னணியில் மிகவும் சிக்கலானது. அது ஒரு தீவுக்குள் நிரந்தரப்பகை கொண்ட இரண்டு நாடுகளை அடைத்து விடும் ஏற்பாடாகவே இருக்கும். என்றாலும் தன்னாட்சி உடைய, சமஉரிமை கொண்ட, ஒரு கூட்டாட்சிமுறை நோக்கிய ஏற்பாட்டினை முன்வைத்து அரசியல் தீர்வுகள் பேசப்பட்டிருக்கவேண்டும். இதனை இலங்கை அரசு தொடக்கத்திலிருந்து செய்யத் தவறியதுடன் பழிவாங்கும் நடவடிக்கையிலும், பலியெடுக்கும் நடவடிக்கையிலும் இறங்கியது. இலங்கை சிங்கள மக்களுக்கே, தமிழர்கள் அதன் இரண்டாம் நிலை குடிமக்களே என்றதும் தமிழரின் நிலம் சார் உரிமைகளைப் பறித்ததும் சிறுபான்மையினர் என்ற வகையில் தமிழ்ச் சமூகத்தை பாதுகாப்பற்ற நிலைக்குத் தள்ளியது. திட்டமிட்ட குடியேற்றங்கள், வெளியேற்றங்களின் மூலம் தமிழர் பகுதிகளை இனநீக்கம் செய்யும் முயற்சியும் தேசியத் தன்மை கொண்ட நவீன அரசு செய்யக் கூடாத ஒன்று. இத்துடன் வெகுமக்களின் வெறி உணர்வுகளை சிங்கள மேலாண்மைச் சொல்லாடல்களாலும், திட்டமிட்ட வஞ்சத் தீர்ப்பு நடவடிக்கைகளாலும் தூண்டி இனப்படு கொலைகளை நிகழ்த்திய அரசியல் தலைவர்கள் தமிழர்களை அச்சுறுத்தி பழி தீர்ப்பு மற்றும் தற்பாதுகாப்பு என்ற நிலைக்குத் தள்ளினர். இந்தப் பின்னணியில் போராளிகளுக்கான வரலாற்று, சமூகவியல் நியாயங்கள் ஏற்பட்டு விடுகின்றன. பின்னாட்களில் மக்கள் முழுமையான போர்ச் சூழலில் போராளிகள் குறித்து பல கசப்புணர்ச்சிகளைக் கொண்டிருந்தாலும் தமது இளைஞர்கள் தமிழரின் வாழ்வுரிமையை, விடுதலையை, புதிய நாட்டினைப் பெற்றுத் தருவார்கள் என்றே முதல் கட்டத்தில் நம்பியிருந்தனர். முழுமையான அளவில் படை மற்றும் யுத்த நிர்மானங்களைக் கொண்டிருந்த நான்கு போராளிக் குழுக்களில் ஏதோ ஒன்றின் மீதோ அல்லது மொத்தமாக எல்லா போராளிக் குழுக்களின் மீதோ மக்கள் நம்பிக்கை வைத்தனர். மற்ற போராளிக் குழுக்களை விடுதலைப் புலிகள் படை அழித்தும் கலைத்தும் இல்லாமலாக்கும் வரை மக்களுக்கு இந்த உள்முரண்பாடு முழுமையாகப் புரியாமலேயே இருந்தது. ஆனால் மக்கள் மற்றும் விடுதலைப் படையினர் என்ற இரு தனித்தனி பகுதிகள் உருவானதும், போர்ச்சூழல் மக்களின் புரிதல் எல்லையைத் தாண்டிச் சென்றதும் மக்கள் நிலையில் மட்டுமின்றி புறத்தே உள்ள அரசியல் அக்கறை கொண்டோருக்கும் தாளமுடியாத நிகழ்வியலாக அச்சுறுத்தும் நடப்பியலாக மாறியது. இரண்டு படைகளுக்கு நடுவே சிக்கிய அச்ச நிலையை மக்கள் அடைந்தபோது போர் முடிவுக்கு வந்தால் போதும் என்ற உணர்வே பொதுஉளவியலாக வெளிப்பட்டது. இயல்பு வாழ்க்கை என்பது இல்லாத ஒரு இருபத்து ஐந்து ஆண்டுகள், நிரந்தர தாக்குதலின் கீழ் வாழ நேர்ந்துவிட்ட மூன்று தலைமுறையைச் சேர்ந்த உறுப்பினர்கள் என்பது எண்ணிப் பார்க்கவே நடுக்கத்தை எற்படுத்தக்கூடிய நிகழ்வியல். இந்த தாளமுடியாத நிகழ்வியலின் கீழ்தான் வலிந்து ஏற்கப்பட்ட கனவுகள், எதிர்பார்ப்புகளுடன் ஈழத் தமிழ்ச்சமூகம் வாழநேர்ந்தது. முடிவு என்பது தெளிவற்றது, வழிமுறைகள் மிகவும் பூடகமானது. அரசு பொய்களைப் பரப்பி, சதிகளைத் திட்டமிட்டுத் தனது வெற்றிக்கு முனைந்து கொண்டிருக்கிறது. விடுதலைப் படையினருக்கோ போராடுதல் என்பதைத் தவிர வேறு திட்டங்கள் இல்லாமல் போய்விட்ட நிலை. தற்கொலைப்படை, இளையோர்படை, பதுங்குகுழி வாழ்க்கை என்பவை வாழ்வியல் பொருண்மைகளைக் குலைத்து உயிர்வாழ்தல் என்பதை ஓயாத ஒரு அச்சுறுத்தல் நிலையில் வைத்திருக்கக் கூடியது. போராளிகளும் சரி, அரசு ராணுவமும் சரி உண்மை நிலைகளைச் சொல்லவோ வெளிப்படையாகவோ இருக்கவோ எந்த வாய்ப்பும் இல்லை. புலம்பெயர்ந்த தமிழர்களில் விடுதலைப்புலிகள் இயக்கச் சார்பு கொண்டவர்கள் தினம் நிகழும் மோதல், விடுதலைப் போராளிகள் வெற்றி, ராணுவத்தினரின் இழப்பு என்பவற்றைக் கணக்கிட்டு நாட்களைக் கடத்தும் நோய் நிலைக்கு செல்கின்றனர். ஒரு கட்டத்தில் அமைதிப் பேச்சுவார்த்தை, போர் நிறுத்த ஒப்பந்தம், தமிழர்களுக்கான அதிகாரப்பகிர்வு, அரசியல் தீர்வுகள் என்ற நிலையை அடைந்தபோது அரசின் திட்டம் தெளிவாக இருந்தது. 2002-க்குப் பிறகு போர்நிறுத்த ஒப்பந்தம் தொடங்கி நான்காம் ஈழப்போரின் முடிவுவரை இலங்கை அரசு இறுதி இலக்கைத் தீர்மானித்து விட்டதுடன் அதன் வெற்றியும் பன்னாட்டு ஒத்துழைப்புடன் உறுதி செய்யப்பட்டு விடுகிறது. இந்திய அரசு என்பதைவிட மக்கள், ஜனநாயக அமைப்புகளைக் கடந்த போர் நிறுவனத்தின் பகுதியான இந்திய வல்லுனர்கள் குழு உலக அரசமைப்புகளின் ஒத்துழைப்பு மற்றும் ஆலோசனையுடன் இலங்கையில் ஈழப் போராட்டத்தை முழுமையாக இல்லாமலாக்கிவிடும் முடிவினை எடுத்துவிட்டது. சீன, பாகிஸ்தானிய ஆலோசனைகளும் ஒத்துழைப்புகளும் இலங்கைத் தீவை பன்னாட்டு முதலீடு மற்றும் சந்தைக்கு ஏற்ற ஒரு நாடாக மாற்றுவதை விரைவு படுத்துகின்றன. இலங்கை ராணுவத்தின் பதுங்குமுறை பயிற்சி விடுதலைப்படையினரின் அதே வகை உத்தியுடன் புதிய வகை தாக்குதலை முன்னெடுக்கிறது. ராணுவத்தின் வெற்றி உலக அளவில் உறுதி செய்யப்பட்டு விட்ட ஒன்றாக மாறுகிறது. இந்நிலையில் ஒரு அரசு தன் மக்கள் மீது செல்லுத்தக் கூடாத தாக்குதலைச் செய்ததன் மூலம் இலங்கை அரசு பயங்கரவாதத் தன்மை அடைகிறது. விடுதலைப் படையினரோ மக்களைக்காக்க இயலாத, தமது போர் எல்லைகள் தெரியாத உறைநிலையை அடைகின்றனர். இதற்கு மேல், உலக உளவு மற்றும் போர் உத்திப் பின்னணியில் விடுதலைப் படையினர் செய்வதற்கு ஏதும் இல்லை என்ற நிலை ஏற்படுகிறது. ‘மக்கள்’ இப்போது உயிர் பிழைப்பது தவிர வேறு தேவை எதுவும் இல்லாத நிலையில் நிறுத்தப்படுகின்றனர். இலங்கை அரசு தொழில்நுட்ப முறையில் இனி சரணடைதலையோ, போர்நிறுத்த ஏற்பாட்டையோ ஏற்கக்கூடாது என்ற முடிவெடுத்துவிட்ட நிலையில் அதன் கொலை வெறி மட்டுமே முழு நியாயமாகிறது. அரசு முழுமையான அழித்தொழிப்பிற்குத் தன்னை ஆயத்தப்படுத்திக் கொண்டது. நவீன அரசு, மனித உரிமைகள், தேசிய நியதிகள், மக்கள் சார்பு என்ற எந்த தர்க்கமும் அற்ற முழுமையான அழித்தொழிப்பு மட்டுமே வெற்றியைத் தரும் என்ற நிலையை இலங்கை அரசு எடுத்து விடுகிறது. இந்த அரசியல் நீக்கம் செய்யப்பட்ட கொலை வெறிதான் இதுவரையிலான ‘ஈழம்’ பற்றிய அடிப்படைகளை உறுதிசெய்து “இது ஈழம், இது தமிழ் இனம், இவர் தமிழர்” என்பதைக் காட்டித் தருகிறது. 5. தமிழகத்தின் தன்னிலை மறுப்பு உலகின் அமைதி நேசர்களும், உலக வல்லாண்மை மேலாளர்களும் தமிழினப் படுகொலையை ஒரு அரசின் இயல்பான நடவடிக்கை என்பது போல முடிவை நோக்கிக் காத்திருந்தனர். இந்தக் கட்டத்தில் தமிழகத்தின் நிலைதான் அவ்வளவு எளிதாக விளக்க முடியாத அவலமான நிசப்தத்தில் மூழ்கி இருக்கிறது. இதனை சிறு கட்சிகளும், சிறு குழுக்களும் தவிர வேறு யாரும் துயரமாகவோ வலியாகவோ முன்வைக்கவில்லை. இந்த நிலைக்கு முதல் காரணம்: அரசியல் நீக்கம் செய்யப்பட்ட வெகுசன உளவியல். இரண்டாவது: உள்நோக்கம் கொண்ட அரசியல் கட்சிகளின் திட்டமிட்ட பொய்கள். ஈழப் போராட்டத்தை ஆதரிப்பதாகக் கூறிய, கூறிவரும் எந்த கட்சிக்கும் அதன் அடிப்படைகளை கையாளுவதில் அக்கறை எதுவுமில்லை. விடுதலைப் புலிகள் என்ற அடையாளத்திலிருந்து தம்மை விலக்கிக் கொள்ளும் பொதுஉளவியல் ஒன்று 1991-க்கு பிறகு உருவாகி விட்டது. அதனைத் தெரிந்திருந்தும் ஈழ ஆதரவுத் தலைவர்களும் கட்சிகளும் ‘உணர்வு முழக்கங்களை’ நாடக நிகழ்வாக்கி உலக அரசியலில் இருந்து ஈழப் போராட்டத்தையும் போராளிகளையும் அன்னியப்படுத்தி வைத்தனர். இவர்களுக்கும் வரப்போகும் கொடிய முடிவு தெரிந்தே இருந்தது. கடந்த இருபது ஆண்டுகளின் உலக அரசியல், சமூக மாற்றங்களைக் கவனித்து வரும் யாரும் விடுதலைப் புலி அமைப்பிடம் இறுதி யுத்தம் என்பதைத் தேர்ந்தெடுக்கும்படி கூறமுடியாது. ஆனால் தமிழகத்தின் ஈழ ஆதரவுத் தலைவர்கள் அதனைக் கூறிவந்தனர். விடுதலைப் படையினருக்கு தவறான, பொய்யான உறுதி மொழிகளைத் தந்து அவர்களின் அழிவை நோக்கித் தள்ளினர். இதற்குக் காரணம் தமிழக மக்களிடம், தமிழ்ச் சமூகத்திடம் அடையாள அரசியலோ, மொழி-பண்பாட்டுத் தன்னிலையோ உருவாகாததுதான் என்பதை மேற்பரப்பில் கண்டு கொள்ளலாம். ஆனால் தன்னிலை, சமூக அடையாளக் கட்டுமானம் என்பதைப் பற்றிய குழப்பமான நிலையில் உள்ள தமிழரின் பொதுஉளவியல் எந்த அரசியல் நிலைப்பாட்டையோ, உணர்வு சார்ந்த இன அடையாளத்தையோ ஏற்கத் தயாராக இல்லை என்பதுதான் இதன் உள்ளடங்கிய நிகழ்வு. துயரம் உணரா நிலையை அடைந்த தமிழகத்து வெகுமக்கள் அரசியல் தனது எதிர்காலம் குறித்தும் கூட இனி ஆக்கம் சார்ந்த எந்த திட்டத்தையும் உருவாக்க முடியாது. அடிப்படையிலேயே மாற்றங்கள் ஏற்பட வேண்டிய நிலையில் தமிழகக் கூட்டு நினைவும், நினைவிலி நிலையும் உள்ளது. ஈழப்போரின் தாளமுடியா நிகழ்வியலில் சிக்கி குழப்பங்களை அடைவது ஒருதளம். அதை முழுமையான மறதிக்கு உள்ளாக்கியது என்பது தமிழக அரசியலைப் பற்றியும் பண்பாட்டுக் கூறுகள் பற்றியும் அறிவுருவாக்க முறை பற்றியும் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்துகிறது. ஈழ விடுதலைப்போரில் மிகப்பெரும் குழப்பங்கள், பயங்கரங்கள், சதிகள் ஏற்பட்டு இருந்தாலும் அதனைத் தமிழக அரசியல் தொடர்ந்து பேசியும் கையாண்டும் வந்திருக்க வேண்டும். போர் நீக்கம் செய்யப்பட்ட ஒரு அரசியல் நிலைக்கு விடுதலைப் படையினரை கொண்டுவர அழுத்தம் தந்திருக்க வேண்டும். கடந்த இருபது ஆண்டுகளின் உலக அரசியல் மாற்றங்களை அவர்களுக்கு உணர்த்தி இருக்க வேண்டும். ஆனால் எதுவும் நிகழவில்லை. அண்டை நாடுகளுடன் போர் என்பதை நியாயப்படுத்தி வரும் இந்திய அரசும், உலகில் போர்களுக்கு திட்டமிட்டுத் தரும் மேற்கு அரசுகளும் ‘புனித உருவம்’ எடுத்து அமைதி, அன்பு, சமாதானம், மனித நேயம் என்று மந்திர உச்சாடனம் செய்தவுடன் தமிழ் நாட்டு மக்களுக்கு ‘ஈழப்போராட்டம்’அநியாயமானதாக, தேவையற்றதாக, வன்முறையானதாக எப்படி தீர்வுக்குட்பட முடியும். தமிழகத்தின் வெகுசன உளவியலில் இந்தப் பகுதி மர்மமாக இருக்கிறது. ஆனால் இதன் அடிப்படையாக அமைவது அச்சம் என்பதும் புரிகிறது. தமிழகத்தில் ‘தமிழ் ஈழம்’ அரசியலைக் கையாளும் கட்சிகளும், இயக்கங்களும் ஈழத்தின் தமிழினப் படுகொலைக்கு ஒரு வகையில் பொறுப்பேற்க வேண்டிய நிலையில் உள்ளனர். ஆட்சியில் பங்கு பெற்று, தேர்தல் கூட்டணிகள் வைத்து நிர்வாகத்தில் பங்காளிகளாகி இந்திய நடுவண் ஆட்சியாளர்களுடன் ஓயாத உறவு கொண்டாடி வரும் இவர்கள் தங்களால் எதுவும் செய்ய முடியாது என்பது தெரிந்தும் ‘ஈழ அரசியலை’ மீளா விளிம்பு நிலைக்குத் தள்ளி விட்டனர். பண்பாட்டு அரசியலை வெறும் கும்பல் எழுச்சியாக மாற்றி செயலற்ற, உள்கட்டுமானம் அற்ற அரசியலை உருவாக்கி வருகின்றனர். இது தமிழகத்தின் எதிர்கால அரசியல் புரிதல்களில், செயல்பாடுகளில் கொடும்விளைவுகளையே உருவாக்கும். அடையாள அரசியல் என்பது எதிர்நிலையை முன்வைத்தும் எதிரிகளை முன்வைத்துமே உருவாகும் ஒன்றல்ல. உள்கட்டுமானம், தன்னாக்க செயல்திட்டம், தன்னிலை-பொதுநிலை உருவாக்கம், ஆக்கபூர்வ அழகியல், நிலவியல் சூழலியல் நுண்ணர்வு, அறம்சார் வழிகாட்டு நெறிகள் எனப் பலவும் சேர்ந்து அடையாள அரசியல் உருவாக வேண்டும். ஈழத்தில் நேரடித் தாக்குதல், எதிர்நிலை வரையறை, விளிம்பு நிலைப்படுத்தல் என்பதன் மூலம் தமிழ் அடையாளம் என்பது நசிவுற்ற, தாக்குதலுக்குட்பட்ட, புண்பட்ட, வீழ்ச்சியுற்ற, அச்சுறுத்தப்பட்ட, இனஅழிப்புக்குட்பட்ட அடையாளங்களை அடைந்தது. இது திணிக்கப்பட்டதும், நிர்ப்பந்தமானதுமாக அமைந்து விட்டது. அதன் சிக்கல்களையும், அவலங்களையும் இங்கு தேர்தல் நேரத் தந்திரமாகவும் கும்பல் அரசியலுக்காவும் மட்டும் பயன்படுத்தும் கட்சிகள், இயக்கங்கள் மிக மோசமான பாதிப்புகளையே ஏற்படுத்த முடியும். மாற்று அரசியலும், மக்கள் சார் இயக்கங்களும் இதனைக் கையாளுவதில் மிகுந்த அக்கறையும் பொறுப்பும் கரிசனமும் கொண்டு இயங்கவேண்டும். அல்லாமல் வீர முழக்கங்கள் மீந்திருக்கும் காயப்பட்ட தமிழ் மக்களின் எதிர்காலத்தையும் மொத்தத்தில் இலங்கைத் தமிழ்ச்சமூகத்தின் தலைமுறைகளையும் மீண்டும் பின்னப்படுத்தி அவலங்களையே கொண்டுவரும். அறம்சார் அரசியலும், மக்கள்சார் கோட்பாடுகளும், விடுதலைக் கருத்தியல்களும் வெற்றியடைவதற்கு வரலாறு முழுமையான உத்திரவாதத்தை வழங்கி விடுவதில்லை. அவை மிக நிதானமான செயல் திட்டங்களை வகுத்து செயல்பட வேண்டிய நிலையில் உள்ளன. 6. வெளியே இருந்து உணர இயலுமா தற்போது விடுதலைப்புலிகள் அழிக்கப்பட்டது குறித்தும், கிழங்கிலங்கை 2004 ஆம் ஆண்டு முதல் நேரடி போர்ச் சூழலில் இருந்து வெளியேறியது குறித்தும் எதிர் எதிர் முனைகளில் இருந்து வைக்கப்படும் வாதங்கள் ஒரே வித பகைஉணர்வின் அடிப்படையில் அமைவது மீண்டும் ஒரு துயர நிகழ்வு. விடுதலைப்புலிகள் கிளிநொச்சியை விட்டு, மக்களிடம் இருந்து விலகிச் சென்றிருக்க வேண்டும் என்பது மக்களைக் காக்கவேண்டும் என்ற நோக்கத்தில் மிக அவசியமாகவே இருந்தது. அதே சமயம் விடுதலைப்படையினர் முற்றிலுமாக அழிக்கப்பட வேண்டும் என்பது படுகொலைத் தீர்ப்பினை அடிப்படையாகக் கொண்டது. மரண தண்டனை நீக்கம் என்பதை முன்வைக்கும் மனித உரிமை அரசியலை ஏற்பவர்கள் இதனை முன்வைக்க முடியாது. மக்களை ஒரு இம்மி கூட பொருட்படுத்தாத இலங்கை இராணுவத்தின் செயல்பாடு நவீன ஜனநாயக அரசியலுக்கு எதிரான படுபாதகத்தன்மை கொண்டது. கிழக்கிலங்கை போரில் இருந்து தன்னை விலக்கிக்கொண்டது அம்மக்களுக்கு பாதுகாப்பினை அளிக்கிறதெனில் அவர்களின் தேர்வு சரியானதாக இருக்கலாம். இன்று இலங்கை நடுவண் அமைச்சகத்தில் பொறுப்பு வகிக்கும் போராளித் தலைவர்கள் தம்மை விடுதலைப் போராளிகள் என்ற அடையாளத்துடன்தான் அந்த உரிமையைக் கோருகின்றனர். இவை சூழல் சார்ந்த நிலை மாற்றங்கள். இந்த நிலை மாற்றங்களுக்கான காலஅவகாசம் வன்னிப் பகுதிக்கு வழங்கப்படவில்லை. மாவீரர்களாக முன்பு அடையாளப்படுத்தப்பட்டவர்கள் இப்போது வெறும் பலியான மனிதர்களாகி விடுகின்றனர். மக்களைக் காக்க அமைக்கப்பட்டதாக கூறப்பட்ட போராளிப்படை மக்களைக் காக்கத் தவறியதுடன் மக்களை பலியிடவும் தாக்கவும் கூடியதாக மாறியது. மக்கள் ஒரு கட்டத்தில் போராளிகளை மறுக்கவும் எதிர்க்கவும் வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர். உலக அரசியல் வேறுவிதமாக இருந்து போராளிகள் மீண்டும் ஒரு நிலப்பகுதியைக் கைப்பற்றி தன்னாட்சியுடைய ஒரு அமைப்பை ஏற்படுத்த முடிந்திருந்தால் மக்களின் மனநிலை, கூட்டு நினைவு வேறுவகையாக இருந்திருக்கும். ஆனால் இதுவரை தாங்கள் இழந்திருந்த வாழ்க்கையும், இறுதிப்போரின் போது இழந்த உயிர்களும் வீணில் முடிந்ததாக எஞ்சியுள்ள மக்கள் உணரும் நிலையில் இனிவரும் காலத்தின் இழப்புணர்வு மிகக் கடுமையானதாக, வெளியே இருந்து யாரும் உணரமுடியாததாக இருக்கும். இலங்கையின் தேசிய வரலாறு இந்த முப்பது ஆண்டுகளை உள்நாட்டுப் போர்க்காலமாகவும், பயங்கரவாதத்தால் பாதிப்புற்ற காலமாகவும் பதிவு செய்யும். அந்த வரலாற்றுக்குள் தமிழர்கள் அனைவரும் குற்றவாளிகளாகவே அடையாளம் பெற வேண்டியிருக்கும். இந்த அடையாளப்படுத்தல் துயர்சார் அரசியலுக்கே வழிவகுக்கும். இதனை இலங்கை தேசிய அரசும், பிற பண்பாட்டு நிறுவனங்களும் தமது மேலாதிக்கத்துக்கு நியாயமளிக்கும் உத்தியாக பயன்படுத்திக் கொள்ள வாய்ப்புகள் உண்டு. 7.எஞ்சியிருத்தலின் அவலம் தங்களின் நேரடித் தேர்வு அற்று நிகழ்த்து விட்ட ஒரு அரசியல், வரலாற்று அவலத்திற்குள் மிஞ்சியிருப்பவர்களாகவும், பாதிக்கப்பட்டவர்களாகவும் உணரும் ஒரு மக்கள் குழுவின் நிலை மிகத் துயரமானது. போருக்குப்பின் சிதைவுற்ற ஒரு நாட்டின் மக்களைப் போல மொழியற்று நிற்பது மிகக்கொடூரமானது. தனது மக்களைக் கொன்றொழித்த ஒரு அரசிடமே அடைக்கலமாகி தமது மறுவாழ்விற்கான ஆதாரங்களைப்பெற வேண்டியிருப்பதன் சமூக உளவியல் மிகத் துன்பகரமானது. கடந்த காலத்தைப் பற்றி எதுவும் பேசமுடியாத நிலையில், தமது எதிர்காலத்தையும் தாமே அமைத்துக்கொள்ள முடியாத செயலற்ற நிலையில் நிற்கும் மக்களின் சிந்தனைமுறை, உணர்வுக்குழப்பங்கள் தெளிவாக விளக்கி விடமுடியாத நோய்த்தன்மை கொண்டனவாக இருக்கும். நேரடியாக ஊனப்பட்ட மூன்று லட்சம் மக்களும், மறைமுகமாக உளவகையில் ஊனமும் காயமும் உற்ற மற்ற தமிழர்களும் இனி தமக்கான வாழ்முறையை, சமூகத்திட்டங்களை, ஒத்திசைவு உத்திகளை புதிதாகவே கட்டியெழுப்ப வேண்டியிருக்கும். இந்த தகர்வுகளின் பின் எஞ்சியிருக்கும் மனநிலையில் இருந்து அம்மக்கள் மீள்வதற்கான நடவடிக்கைகளே உடனடியான தமிழின அடையாள அரசியலை ஏற்கும், உலகம் முழுதும் பரவி வாழும் பிற தமிழர்களின் செயல்திட்டமாக இருக்க முடியும். இன்றுள்ள ஈழ மக்கள் தமக்கென தனிநாடும், தன்னாட்சியும் விரும்பினார்கள் என்பது குற்றச்செயலோ கொடூரமான வன்முறையோ இல்லை. அவர்களுக்கு மட்டுமல்ல உலகின் எந்த இனத்திற்கும் அந்த உரிமை உண்டு. அவர்கள் குற்றத்தீர்ப்புக்கு உட்பட்டு, தண்டிக்கப்படவேண்டியவர்கள் என ஒரு தேசியஅரசு சொல்லுமானல் அது அடிப்படை உரிமைகளை மறுக்கும் வன்முறையே. என்றாலும் தற்போது உள்ள தமிழர்கள் இலங்கை என்ற தேசத்தின் பகுதியாகவே இனியும் வாழவேண்டும், வாழப்போகிறார்கள் என்னும் நிலையில் புதிய மாற்று புரிந்துணர்வுகள் உருவாக வேண்டும். நாடு கடந்த தமிழ் ஈழம் அமைப்பதும் மீண்டும் ஈழப்போர் தொடரும் என்பதும் இலங்கை மண்ணில் வாழும் மக்களுக்கு மேலும் துயரங்களையே கொண்டு சேர்க்கும். தமிழகத்தின் அரசியல் தலைவர்களும், தனி இயக்கங்களும் மீண்டும் நடைமுறை சாத்தியமற்ற உறுதி மொழிகளைப் பரப்பி தம் பேச்சுக்களத்தை வலிமைப்படுத்த நினைப்பது மக்கள் துயரம் பற்றிய அக்கரையற்ற போக்கு. அடையாள அரசியல், பண்பாட்டு அரசியல், மொழிசார் தன்னிலைகள் அர்த்தமற்றவை என்றோ தீமையானவை என்றோ இதற்குப் பொருளல்ல. அணுகுமுறைகள் செயல்திட்டங்கள் வேறுவகையில் அமைய வேண்டிய தேவை உள்ளது. தொன்மங்கள் தற்கால சொல்லாடல்களின் பின்புலங்களாக முடியுமே தவிர வழிகாட்டு நெறிகளாக முடியாது. நவீன, பின்நவீன, பொதுக்கள, பன்மை அரசியல் புரிதலுடனும் உலக அரசியல் பொருளாதார, இயற்கைசார் பண்பாட்டு புரிதல்களுடனும் தமிழர்களின் அரசியல் மாற்றுச் சொல்லாடல்களும் செயல் திட்டங்களும் அமைந்தால் மட்டுமே ஆக்கபூர்வமான சமூக மாற்றத்தை நோக்கிச் செல்ல முடியும். இனி அமையப் போகும் ஆக்கப்பூர்வ பண்பாட்டு மாற்றங்களும் அரசியல் செயல் திட்டங்களுமே ஈழத்திற்காக நாம் இழந்த மக்களுக்கு செலுத்தும் துயர் நிறைந்த அஞ்சலியாக அமைய முடியும். ஈழ மக்கள் தமக்கென நாடும், தன்னாட்சியும் அமைத்துக்கொள்ள எதிர்காலம் வழி அமைக்கும்: வேறு வகையில் வேறு செயல் திட்டங்கள் ஊடாக. 8. அமைதி, போர் நடந்து கொண்டிருக்கிறது விடுதலை இயக்கங்கள், மக்கள் யுத்தம் என்பவை பற்றிய மறுஆய்வுகள் இப்போது தேவை. ஈழப்போர் தொடங்கியபோது இருந்த புரிதலும் நிலைமையும் இப்போது இல்லை. ஈழப் போராட்டத்தின் தொடக்கத்தில் ஆயுதம் ஏந்தியவர்களில் பலர் அது தீர்வல்ல என்பதை கண்டு கொண்டனர். விடுதலைப் புலிகளின் அமைப்பு, செயல்முறைகள், உத்திகள் என்பவற்றை இவர்கள் மறுத்தும் விமர்சித்தும் வந்ததற்கு மாறிவிட்ட உலக அரசியல் சூழல்களே பின்புலமாக அமைந்தன. வேறு அமைப்புகளின் நோக்கில் இருந்து ஈழப்போரை மறுத்தவர்கள் புலிகளின் தலைமையை பயங்கரவாதத் தன்மை கொண்டது என்றனர். ஆனால் இவர்கள் எல்லோருடைய தொடக்கமும் வழிமுறையும் இலக்கும் ஒரு கட்டம் வரை ஒன்றாகவே இருந்தன. இந்திய அமைதிகாக்கும் படை இலங்கையில் இருந்தபோது எல்லோரும் கனரக ஆயுதங்களுடன் ஒருவரை ஒருவர் அழித்து இந்தியத் திட்டவியலாளர்களின் கட்டளையை, சதிகளை நிறைவேற்ற முனைப்புடன் இருந்தனர். இதில் முந்திக் கொண்டவர்கள், முன்னே நின்றவர்கள், மீந்து வந்தவர்கள் தலைமையை, போரைத் தம்கையில் எடுத்துக்கொண்டனர். இப்போது திரும்பிப்பார்க்கும் போது இந்த பயங்கரங்கள் புரியவருவது போல் அப்போது யாருக்கும் புரிய வரவில்லை. பின் திரும்ப முடியாத ஒரு துடைத்தழிப்பு அரசியலில் சிக்கிக் கொண்ட நிலை எல்லோருக்கும் இருந்தது. இந்த துடைத்தழிப்பு அரசியல் (Politics of Annihilations) மக்கள் சார் சமூக மாற்றங்களுக்கோ, விடுதலைக்கோ வழியாக அமையாது என்பதை இந்த இருபத்தோராம் நூற்றாண்டு மிகக் கடுமையாக சொல்லிக் கொண்டிருக்கிறது. அப்படியெனில் அரசுகளின் கொடூரங்களும் வன்முறைகளும் நியாயப்படுத்தப்படக் கூடியவை ஆகிவிடுமா. ஒடுக்குதலுக்கும், ஒதுக்குதலுக்கும் உள்ளாகும் மக்கள் போராடாமல் இருந்துவிட முடியுமா? அல்லது இருந்துவிட வேண்டுமா? என்பவை நம்முன் உள்ள அடிப்படைக் கேள்விகள். இலங்கை அல்லது அமெரிக்க ராணுவங்கள் ‘பயங்கரவாத’ படைகளாக மாறி மக்களை கொன்றொழிப்பதற்கு அவர்கள் முன் வைக்கும் நியாயங்கள் ஏற்கப்பட வேண்டியவையா. வன்முறை, போர் என்பவை பற்றி அறிவுரை வழங்கி வழிகாட்டுதலைத் தர தற்போது யார் தகுதியுடையவர்களாகிறார்கள்? வன்முறையை மறுப்பவர்களாக நம்மை அடையாளப்படுத்திக் கொண்டால் நிகழ்வியல் உண்மையாக, தாளமுடியா நடப்பியலாக நிகழ்த்தப்படும் நுண் வன்முறைகள் தொடங்கி உலகமயமான போர் வன்முறைகள் வரையிலான கொடூரங்களை அமைதியாக ஏற்பதன் மூலம் அதன் பங்காளர்களாக நாம் ஆகிவிடுகிறோம் இல்லையா? இவை பலவகையில் நம்பிக்கையிழப்பை ஏற்படுத்தும் கேள்விகள். என்றாலும் எப்போதும் அரசியல் செயல்பாடுகளுக்கான, விடுதலைக் கோட்பாடுகளுக்கான தேவை இருந்துகொண்டே இருக்கிறது, களங்களும் விரிந்து கொண்டே இருக்கிறது. (அணங்கு ,2009) Posted in கட்டுரை, தொடர் | Tagged கூடங்குளம், பின்நவீனத்துவம், பிரேம், மார்க்சியம் | புதியவை எழுதிச் செல்லும் விதியின் கை- பிரேம் May 20, 2022 பழமை துதிக்கும் பாடல்களும் பாவலர் படுத்தும் பாடுகளும் -பிரேம் May 13, 2022 ஜெயமோகன் முன் தொடரும் பொய்களின் நிழல் -பிரேம் May 12, 2022 பன்மெய்-கருத்துகளும் கலைவுகளும் November 28, 2020 சிவகாமி: எழுத்து ஆளுமை, செயல்பாட்டு முன்னோடி September 14, 2020 வகை வகை Select Category அணங்கு (1) உரையாடல் (25) கட்டுரை (38) கோட்பாடு (22) தலையங்கம் (1) தொடர் (7) புனைவு (4) மற்றவை (11) தொகை தொகை Select Month May 2022 (3) November 2020 (1) September 2020 (3) August 2020 (1) December 2019 (1) May 2019 (1) February 2018 (1) October 2017 (2) September 2017 (2) August 2017 (1) April 2017 (2) November 2016 (2) October 2016 (1) August 2016 (1) July 2016 (1) March 2016 (1) February 2016 (1) January 2016 (1) November 2015 (3) October 2015 (3) July 2015 (2) May 2015 (2) March 2015 (2) February 2015 (7) January 2015 (16) June 2014 (1) February 2014 (1) January 2014 (3) December 2013 (1) November 2013 (1) August 2013 (2) June 2013 (2) May 2013 (8)
கொரோனா வைரஸிற்கு எதிராக செயல்படும் போது அரசாங்கத்தினால் அனுமதிக்கப்பட்டுள்ள வழிகாட்டுதல்களை, சுற்றுலா பயணிகள், சுற்றுலா வழிகாட்டிகளுடன் சஃபாரி ஜீப்வண்டி சாரதிகளும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என வனஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்துடன் தேசிய பூங்காக்களுக்கு நுழைவதற்கு அனுமதியளிக்கப்படும் வாகனங்களின் எண்ணிக்கைiயும் மட்டுப்படுத்துவதற்கும் அந்த திணைக்களம் தீர்மானித்துள்ளது. வனஜீவராசிகள் திணைக்களத்தினால் வழங்கப்படும் சுற்றுலா சேவைகள் திங்கட்கிழமை முதல் மீள ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் யால மற்றும் உடவளவை தேசிய பூங்காக்களில் நாள் ஒன்றுக்கு நுழைய கூடிய அதிகபட்ச வாகனங்களின் எண்ணிக்கை 150 என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் மின்னேரிய, கவுடுல்ல மற்றும் வஸ்கமுவ தேசிய பூங்காக்களில் 50 வாகனங்களும் வில்பத்து தேசிய பூங்காவிற்குள் 80 வாகனங்களும் நுழைவதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேநேரம் ஹோட்டன் சமவெளி தேசிய பூங்காவிற்குள் நுழைய 50 சுற்றுலா குழுவினர்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதனுடன் புறா தீவு தேசிய பூங்காவிற்குள் நாள் ஒன்றுக்கு 50 படகுகள் மாத்திரமே பயணிப்பதற்கு அனுமதியளிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. அனைத்து தேசிய பூங்காக்களிலும் நுழைவதற்கான அனுமதி பத்திரத்தை dwc.lankagate.gov.lk என்ற இணையத்தளம் ஊடாக பெற்றுக்கொள்ள முடியும்.
‘Moone Moonu Vaarthai’, the youthful film from Capital Film Works is nearing completion. Director Madhumitha who has already proved her film making skills with Vallamai Tharayo and Kola Kolaya Mundirika is directing the bilingual film. The film’s cast is a medley of experienced and newbie like SP Balasubramaniam, Lakshmi, K Bhakiyaraj , debutant Arjun, ‘Suttakathai’ Venky , Aditi Chengappa. The legendary singer SP Balasubramaniam is quiet happy to recollect his experience in working with the youngsters and Lakshmi once again. “After the success of our Telugu film Mithunam, the director saw myself and Lakshmi will be an apt elderly couple to share screen for ‘Moone Moonu Vaarthai’. It was actually parent couple earlier, Madhumitha changed the script for us and re-molded to grandparents. It was not easy task to act under Madhumitha. She knows what should be done on screen and the level. This was more of experience and a process of learning from the new generation people than acting.” Says the Guinness record holder with a humble. “Music Director Karthigeya Murthy has done a Brilliant Key Work with music and I was overjoyed to know that is was the Grandson of senior most Mirudhangam player Moorthy.his scintillating chords and notes has played a major role in elevating the movie. “When I was singing the track Vaazhum Naal the lyrics and rendition of Karthigeyan made me into tears. After all I’m a father in real life. It is a different genre of commercial Movies .to put that in simple Words Moone moone varthai is an “Hikoo”. I feel very proud of Producer SP Charan who is making many youngsters to achieve their dreams. I wish the team ‘Moone Moonu Vaarthai’ a very great future’. Says the ever melancholic Singer SP Balasubramaniam. மூணே மூணு வார்த்தை ‘ஒரு ஹைக்கூ கவிதை’ – SP பாலசுப்ரமணியம் இயக்குனர் மதுமிதா இயக்கத்தில் Capital Film Works சார்பில் SP சரண் தயாரிக்கும் படம் ‘மூணே மூணு வார்த்தை’. SP பாலசுப்ரமணியம், லக்ஷ்மி, இயக்குனர் பாக்யராஜ், அறிமுக நாயகன் அர்ஜுன் சிதம்பரம், ‘சுட்டகதை’ வெங்கி மற்றும் அதிதி செங்கப்பா என்று புதியவர்கள், ஜாம்பவான்கள் ஆகியோர் ஒன்றர கலந்த நடிப்பு பட்டாளத்துடன் வெளிவர தயாராகி கொண்டிருக்கிறது ‘மூணே மூணு வார்த்தை’. இன்னிசை குரலால் நம்மை கவர்ந்த SP பாலசுப்ரமணியம் இப்படத்தில் லக்ஷ்மியுடன் இணைந்து ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார். “ நானும் லக்ஷ்மியும் நடித்த மிதுனம் என்ற தெலுங்கு படத்தை பார்த்து எங்களை ஒரு மூத்த தம்பதியர் கதாபாத்திரத்தில் நடித்தே ஆகவேண்டும் என்று இயக்குனர் மதுமிதா கேட்டார். இப்படத்தில் நடித்தது ஒரு நல்ல அனுபவமாய் இருந்தது. மேலும், இக்கால தலைமுறையினரிடம் இருந்து பல புதிய விஷயங்களை கற்றுக்கொள்ளக் கூடிய வாய்பாகவும் அமைந்தது” எனக் கூறினார் SP பாலசுப்ரமணியம். “ ஆரம்பத்தில் அர்ஜுனின் பெற்றோராக இருந்த இந்த கதாப்பாத்திரங்களை, எங்களுக்காக தாத்தா, பாட்டி என்று மாற்றி அமைத்தார் இயக்குனர் மதுமிதா. மிகவும் திறமைசாலி. ஒரு நடிகரிடம் எப்படி வேலை வாங்குவது என்று நன்றாக தெரிந்தவர். புதுமுக இசையமைப்பாளர் கார்திகேயமூர்த்தி தனது இசையால் இப்படத்திற்கு மேலும் அழகு சேர்த்துள்ளார். இவர் பழம்பெரும் மிருதங்க கலைஞர் மூர்த்தி அவார்களின் பேரன் என்பதை பின்பே தெரிந்தது. “ இப்படத்தில் ’வாழும் நாள்’ என்ற பாடலை பாடியுள்ளேன். இப்பாடலின் கார்த்திகேயனின் இசையில் அந்த வரிகளை பாடும்பொழுது என் கண்கள் கலங்கியது. தமிழில் வரும் கமர்ஷியல் படங்களில் இது சற்று வித்தியாசமான முயற்சி. ‘மூணே மூணு வார்த்தையில் சொல்ல வேண்டும் என்றால் “ ஒரு ஹைக்கூ கவிதை”.பல இளைஞர்களின் கனவுகளை நினைவாக்கி கொண்டிருக்கும் தயாரிப்பாளர் SP சரண் என் மகன் என்று கூறுவதில் பெருமைபடுகிறேன்.” என்று கூறினார் ‘பாடும் நிலா’ SP பாலசுப்ரமணியம்.
‘வாழ்க்கை வலி நிறைந்தது’ என்பது பிறந்தது முதல் பெண்களுக்குப் போதிக்கப்பட்டுப் பழக்கப்படுத்தப்படுகிறது. அதை உண்மையாக்கும் வகையில், பூப்பெய்துவது தொடங்கி, மெனோபாஸ் வரை அவளது உடல் சந்திக்கிற ஒவ்வொரு மாற்றமும் பலவித வலிகளும் வேதனைகளும் நிறைந்தவையாகவே இருக்கின்றன. இந்த வலிகள் போதாதென்று, காரணமற்ற ஏதோ ஒரு வலியால் அவதிப்படுகிற பெண்களும் ஏராளம். வலி நிவாரண மாத்திரை, மருந்துகள், வெளிப்பூச்சுக் களிம்புகள், கை வைத்தியம் என எதற்கும் கட்டுப்படாமல் எக்ஸ்ரே, ஸ்கேன் என எதிலும் காரணம் அகப்படாமல் தொடர்கிற வலிகள் அவை. வலியை உணர்கிறவர்களுக்கு மட்டுமே தெரிகிற அந்த வேதனை, குடும்பத்தாருக்கும் சுற்றியிருப்பவர்களுக்கும் பொய்யாகவோ, நடிப்பாகவோ, மன நோயாகவோ தெரியும். இப்படியொரு வலி உண்மைதானா? வலியைப் பொறுத்துக் கொள்வதைத் தவிர வேறு தீர்வே இல்லையா? விளக்கமாகப் பேசுகிறார் வலி நிர்வாக சிறப்பு நிபுணர் குமார். ‘‘பெண்களைக் குறி வைக்கிற இந்த விசித்திரமான வலிக்கு ‘ஃபைப்ரோமயால்ஜியா’ என்று பெயர். 25 முதல் 60 வயதுப் பெண்கள் இதனால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். பத்து பேரை பாதித்தால், அதில் 9 பேர் பெண்களாகவும், ஒருவர் மட்டுமே ஆணாகவும் இருப்பார்கள். அந்தளவுக்கு இது பெண்கள் மத்தியில் மிகப் பிரபலம். உலகளவில் 2 முதல் 4 சதவிகிதப் பெண்களுக்கு இந்த வலி இருக்கிறது. பெண்களில் பலருக்கும் பரவலாக உடலில் வலி, கை, கால்களில் குத்தல், குடைச்சல், உடல் சோர்வு, மனத்தளர்ச்சி என ஏதோ ஒன்று இருக்கும். சாதாரண வலி நிவாரண மாத்திரைகள் எதுவும் இதற்குப் பலன் தராது. இது போன்று பலர், பலவித வலிகளால் வருடக் கணக்கில் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்கு உடலளவில், வெளிப்புறத் தோற்றத்தில் நோய்க்கான எந்த அறிகுறிகளும் தெரியாது. ஆனால், வலி மட்டும் விடாமல் படுத்தும். கடந்த சில வருடங்களுக்கு முன்பு வரை இது ஒரு மனநோயாகவே பார்க்கப்பட்டிருக்கிறது. மிகச் சமீபத்தில்தான், வலி நிர்வாகப் பிரிவில் இப்படியொரு நோய் இருப்பதும், அதற்கான தீர்வும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. அதைத் தொடர்ந்துதான் ‘ஃபைப்ரோமயால்ஜியா’ என்பது தசை சம்பந்தப்பட்ட வலிகளை ஏற்படுத்தக் கூடியது என்பதும், இன்றைய தேதியில் மக்களாலும் மருத்துவர்களாலும் சரியாக கவனிக்கப்படாத, சிகிச்சையளிக்கப்படாத, சிகிச்சை எடுக்கப்படாத ஒரு நோயாக இருப்பதும் கூட தெரிய வந்திருக்கிறது. இந்த நோயைப் பற்றி மருத்துவர்களுக்கே கூட இன்னும் முழுமையான விழிப்புணர்வு இல்லை. ரத்தப் பரிசோதனை, எக்ஸ்ரே, ஸ்கேன் மாதிரியான எந்தச் சோதனையின் மூலமும் இதைக் கண்டுபிடிக்கவோ, உறுதி செய்யவோ முடியாது. பாதிக்கப்பட்டவர்கள் சொல்கிற அறிகுறிகளை வைத்துதான் உறுதி செய்ய வேண்டும். வலியின் ஆரம்பத்தில் பலரும் தாமாகவே வலி நிவாரண மாத்திரைகளை வாங்கி உபயோகிப்பார்கள். அதற்குக் கட்டுப்படாத போது, மருத்துவரைப் பார்ப்பார்கள். மருத்துவர் பரிந்துரைக்கிற மருந்துகள் பலன் தராத போது, வேறு வேறு மருத்துவர்களை மாற்றிக்கொண்டே இருப்பார்கள். வலி ஒரு பக்கமும், வலி குறையாத மன அழுத்தம் இன்னொரு பக்கமுமாக இரட்டை அவதியுடன் வாழ்ந்து கொண்டிருப்பார்கள். உடல் முழுவதுமான வலி, நாள்பட்ட வலி, சோர்வு, மனத்தளர்ச்சி, தூக்கமின்மை, கழுத்து, இடுப்பு, முதுகுப் பகுதிகளில் வலி, சில நேரங்களில் மூட்டு வலி, அடிக்கடி ஏற்படுகிற தலைவலி, வயிற்றுவலி, வயிற்று உபாதைகள், சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல், வாய் உலர்ந்து போவது, கவனக்குறைவு, காலை வேளைகளில் உடல் விரைப்பு, கை, கால்களில் எரிச்சல், மறதி… இப்படி ஏதேனும் ஒன்றோ, எல்லாம் சேர்ந்தோ காணப்படும். மேற்சொன்ன அறிகுறிகளில் பலதும் ரத்தசோகை, தைராய்டு, நீரிழிவு, மூட்டு நோய்களின் அறிகுறிகளாகவும் தெரிவதால், முதலில் ரத்தப் பரிசோதனை செய்து, இவற்றில் ஏதேனும் ஒரு நோய் இருக்கிறதா என்பதையும் அதன் விளைவாகத்தான் வலிக்கிறதா என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டியிருக்கும். உடலில் தசையும் எலும்பும் சந்திக்கிற 18 இடங்களில் 11 இடங்களில் வலி இருக்கும். அந்த இடத்து வலிக்கான காரணத்தைக் கண்டறியும் எல்லா பரிசோதனை முடிவுகளும் நார்மல் என்றே வரும். வலி நிர்வாக மருத்துவரை அணுகினால், காரணத்தைத் துல்லியமாகக் கண்டுபிடித்துச் சொல்லி விடுவார். ஃபைப்ரோமயால்ஜியா என்பது உறுதி செய்யப்பட்டால், அதற்கான சிறப்பு மருந்துகள், பயிற்சிகள், மன அழுத்தம் குறைக்கிற உத்திகள் போன்றவை பரிந்துரைக்கப்படும். மருத்துவர் பரிந்துரைக்கிற மருந்துகளை குறிப்பிட்ட காலத்துக்குத் தவறாமல் எடுத்துக் கொள்ள வேண்டும். நடைப் பயிற்சி, நீச்சல் போன்ற உடற்பயிற்சிகள், வலியை சமாளிப்பதில் மிக முக்கிய பங்கு வகிப்பவை. இளஞ்சூடான நீரில் தினம் இரண்டு வேளைகள் குளிப்பதும் ஓரளவு நிவாரணம் தரும். மன அழுத்தமற்ற நிலைக்குப் பழக, யோகா, தியானம் போன்றவற்றை மேற்கொள்ள வேண்டும்.காபி, டீ, சாக்லெட் போன்றவை தவிர்க்கப்பட வேண்டும். வேலைகளுக்கு இடையிடையே பிடித்த செயல்கள் அல்லது பொழுதுபோக்குகளில் சிறிது நேரத்தைத் திருப்பலாம். ஒப்புக்கொள்ளாத உணவுகளை அறவே தவிர்க்க வேண்டும். போதுமான ஓய்வும் உறக்கமும் உடற்பயிற்சியும் தினம் பின்பற்றப்பட வேண்டும்.’’ TAGS உடல் கட்டுப்பாடு Facebook Twitter WhatsApp Viber Previous articleஏன் திருமணத்திற்கு முன்பு செக்ஸ் வைத்துக்கொள்ளக்கூடாது? Next articleஅந்த’ விஷயத்தில் …. எல்லாம் எமக்குத் தெரியும் என்கின்ற ஆளா நீங்க….?! Suresh Deva RELATED ARTICLESMORE FROM AUTHOR இரவில் தூங்கும் போது திடீரென உடல் அதிர்ந்து விழிப்பு வருவது ஏன்? கொஞ்சம் இதை கவனியுங்க! பக்கத்தில் தூங்குறவங்கள பதற விட வேண்டாம்!
11. பின்பு அவர் எருசலேமுக்குப் பிரயாணம்பண்ணுகையில், அவர் சமாரியா கலிலேயா என்னும் நாடுகளின் வழியாக நடந்துபோனார். 12. அவர் ஒரு கிராமத்தில் பிரவேசித்தபோது, குஷ்டரோகமுள்ள மனுஷர் பத்துப்பேர் அவருக்கு எதிராக வந்து, தூரத்திலே நின்று: 13. இயேசு ஐயரே, எங்களுக்கு இரங்கும் என்று சத்தமிட்டார்கள். 14. அவர்களை அவர் பார்த்து: நீங்கள் போய், ஆசாரியர்களுக்கு உங்களைக் காண்பியுங்கள் என்றார். அந்தப்படி அவர்கள் போகையில் சுத்தமானார்கள். 15. அவர்களில் ஒருவன் தான் ஆரோக்கியமானதைக் கண்டு, திரும்பிவந்து, உரத்த சத்தத்தோடே தேவனை மகிமைப்படுத்தி, 16. அவருடைய பாதத்தருகே முகங்குப்புற விழுந்து, அவருக்கு ஸ்தோத்திரஞ்செலுத்தினான்; அவன் சமாரியனாயிருந்தான்.
தமிழ்நாட்டில் ஒருபோக சம்பா நெல் சாகுபடி அதிக பரப்பளவில் செய்யப்டடுகிறது. இப்பருவத்தில் மத்திய மற்றும் நீண்ட கால நெல் ரகங்கள் பயிரிடப்படுகின்றன. மண் பரிசோதனை அடிப்படையில் பயிருக்கு உரமிடல் நன்று. மண் பரிசோதனை செய்ய இயலாத நிலையில் மத்திய மற்றும் நீண்டகால ரகங்களுக்கு எக்டேருக்கு 150கிலோ தழைச்சத்து 50 கிலோ மணிச் சத்து மற்றும் 25 கிலோ சாம்பல் சத்து மற்றும் 25 கிலோ சாம்பல் சத்து மற்றும்க் 25 கிலோ துத்தநாக சல்பேட்டும் பரிந்துரைக்கப்படுகிறது. ஆனால் சில மத்திய கால நெல் வகைகளுக்கு அதிக அளவில் தழைச்சத்து இட்டால் அவை அதிகம் வளர்ந்து பூக்கும் பருவத்திலோ அல்லது பால் பிடிக்கும் பருவத்திலோ சாய்ந்துவிடுவதால் விளைச்சல் பெரிதும் பாதிக்கப்படுகிறது. எனவே நெல் ரகங்களின் தன்மையை அறிந்து தழைச்சத்தினை இடுதல் மிகவும் அவசியமாகும். இயற்கை உரங்கள்: இயற்கை உரங்களை இடுவதால் நெல்லில் நல்ல பயனை அடையலாம். பண்ணை மரங்களான புங்கம், கிளிரிசிடியா, வேம்பு போன்ற -வற்றில் நல்ல தழை உரம் கிடைத்தாலும், அவற்றை வெட்டி எடுத்துச்சென்று வயலில் இடுவதற்கு அதிக ஆட்கள் தேவைப்படுகிறது. ஆகவே கோடை கால மற்றும் தென்மேற்குப்பருவக்காற்று காலத்தில் கிடைக்கும். மழையைக் கொண்டும், கிணற்றுப்பாசன வசதியுள்ள இடங்களிலும் பசுந்தாள் பயிரைப் பயிரிட்டு அவற்றை அதே நிலத்தில் மடக்கி உழுது நெல் பயிரிடலாம். 30 முதல் 45 நாட்களில் நன்கு வளர்ந்து அதிக தழைச்சத்தினை கொடுக்கவல்ல பசுந்தாள் பயிர்களைத்தேர்வு செய்து பயிரிடவேண்டும். இதனால் நெல்லிற்கு இடவேண்டிய தழைச்சத்தின் அளவைக் கணிசமாகக் குறைப்பதுடன் மண் வளத்தை நீண்ட காலத்திற்கு காப்பதற்கு ஏதுவாகிறது. தக்கைப்பூண்டு, மணிலா அகத்தி மற்றும் கொளஞ்சி முதலான பசுந்தாள் பயிர்களைத் தேர்வு செய்து பயிரிடவேண்டும். இதனால் நெல்லிற்கு இடவேண்டிய தழைச்சத்தின் அளவைக் கணிசமாகக் குறைப்பதுடன் மண் வளத்தை நீண்ட காலத்திற்கு காப்பதற்கு ஏதுவாகிறது. தக்கைப்பூண்டு , மணிலா அகத்தி மற்றும் கொளுஞ்சி முதலான பசுந்தாள் உரப்பயிர்கள் சம்பா பருவ நெல்லிற்கு ஏற்றவை. தக்கைப்பூண்டு: இது மிகவும் வேகமாக வளர்ந்து 50-60 நாட்களில் எக்டேருக்கு 40 டன் வரை பசுந்தாள் உரத்தினை கொடுக்கும் தன்மையுடயது. தண்ணீர் தேக்கத்தையும் வறட்சியையும் ஓரளவு தாங்கி வளரக்கூடியது. எக்டேருக்கு 30-35 கிலோ விதை தேவைப்படும் களர், உவர் நிலங்களுக்கு ஏற்ற ஒரு முக்கிய பசுந்தாள் உரம் ஆகும். மணிலா அகத்தி: செஸ்பேனியா ரோஸ்ட்ரேட்டா எனப்படும் மணிலா அகத்தி வேர் முடிச்சுகளுடன் தண்டு பாகத்திலும் முடிச்சுகளைக்கொண்டுள்ளது. அதிக தழைச்சத்தினை சேமிக்க வல்லது. நீர்த்தேக்கமுள்ள நெல் பயிரிடும் நன்செய் நிலங்களில் நன்றாக வளர்ந்து மக்கிய பிறகு விரைவாக நெல்லிற்கு தழைச்சத்தினை தரும் தன்மையுடையது. கோடைப்பருவத்தில் இதன் வளர்ச்சி அதிகம். 60 நாட்களில் 30-40 டன் பசுந்தாள் உரத்தினைக்கொடுக்கவல்லது. கொளுஞ்சி: மணற்பாங்கான நிலங்களில் இதன் வளர்ச்சி நன்கு காணப்படுகிறது. வறட்சியைத் தாங்கும் தன்மையுடையது. ஒருமுறை விதைத்தால் வளர்ந்த பயிரிலிருந்து சிதறும் விதைகள் அடுத்தடுத்த பருவங்களில், இந்த பயிர் தொடர்ந்து முளைக்கும் திறன் பெற்றது. மாடு மேயாததால் இதனைக் கோடைப்பருவத்தில் வயலில் வளர்ப்பது எளிது. இதன் வளர்ச்சி வேகம் குறைவாக இருப்பினும் நீண்ட நாட்களுக்கு (100 நாட்கள் வரை) பசுமையாக இருந்து அதிக தழைச்சத்தினை தரும் இயல்புடையது. பசுந்தாள் உரமிடும் முறை: பசுந்தாள் உரப்பயிர்கள் நீண்ட நாட்களுக்கு (60 நாட்கள்) வளர்ந்தால் அதிக விளைச்சல் கிடைக்கும். ஆனால் தண்ணீர் தேவையும் அதிகரிக்கிறது. மேலும் நீண்ட நாட்கள் வளர்ந்த பசுந்தாள் உரம் நார்த்தன்மை பெற்று மக்கும் தன்மை குறைகிறது. அதிகம் வளர்ந்த பயிரை ஒரு வயலில் இருந்து இன்னொரு வயலுக்கு எடுத்துச் சென்று வயலில் இட அதிக ஆட்கள் தேவைப்படுவதால் சிரமம் அதிகமாகிறது. மேலும் நன்கு வளர்ந்த அதிகப்படியான பசுந்தாள் உரப்பயிர்களை சேற்றில் மடக்குவது சிரமமாகும். தக்கைப்பூண்டு மற்றும் மணிலா அகத்தி முதலியன குறைந்த நாட்களில் நல்ல தழை உரத்தினைக் கொடுக்கவல்லன. மழை, கிணறு மற்றும் கால்வாய் பாசனம் குறைந்த 30-35 நாட்களில் எக்டேருக்கு 7 முதல் 8 டன் தழை உரத்தினை எளிதாகப் பெற முடியும். கொளுஞ்சி வறட்சியைத்தாங்கி வளர்ந்து நீண்ட நாட்களுக்கு பசுமையாக இருப்பதால் குறைவான நீர்ப்பாசன மூலம் வசதி மற்றும் குறைந்த பகுதியில் கோடையில் பயிரிட்டு சம்பா நெல்லிற்குப் பயன்படுத்தாலாம். பசுந்தாள் உரப்பயிர்களை சேற்றில் மடக்கி 5 முதல் 7 நாட்கள் கழித்து நெல் நடவு செய்ய வேண்டும். நெல்லிற்கு எக்டேருக்கு 6.25 டன் பசுந்தாள் உரத்தின் அளவை எக்டேருக்கு 6.25 டன் பசுந்தாள் உரம் பரிந்துரைக்கப்படுகிறது. எனவே பசுந்தாள் உரத்தின் அளவை எக்டேருக்கு 10 முதல் 12 டன் வரை அதிகரித்தால் ரசாயன தழைச்சத்து உரச் செலவை 30 முதல் 50 சதம் வரை சேமிக்கலாம்.
ஊடகங்களில் நான் பார்த்த செய்திகளில் என் மனதைத் தாக்கிய செய்திகளின் தொகுப்பு. பாரிய ஊடக உலகில் ஒரு சாதாரணமானவனின் பார்வையில் பட்ட மிகவும் சிறிய துளி இந்தத் தொகுப்பு. அரசியல்-பிறந்தகம்+புகுந்தகம்+பக்கத்து வீடு மாவீரர் வாரம்தான் இந்த வாரத்தில் தாயக அரசியலின் மிகப்பெரிய செய்தியாகும். தாயகத்தில் இந்த முறை இந்த நாள் அனுட்டிக்கப்பட்டிருக்காது. குழந்தைகளை, தகப்பன்களை, சகோதரன்களை, சகோதரிகளை இழந்த சொந்தங்கள் எத்தனையோ ஊமையாக அழுதிருக்கும். அந்தக் குறையைப் போக்குவது போல் புலம் பெயர் நாடுகளில் மாவீரர் நாள் எழுச்சியுடன் அனுஷ்டிக்கப்பட்டிருக்கிறது என்பதைச் சொல்லியாகவேண்டும். இப்படியாவது ஒன்றுபட்டால் நலம். சீமானை கனடாவுக்கு அழைத்து இங்கே ஒரு விழா நடத்தினார்கள். அவரை கனேடியக் காவல்துறை கைது செய்து நாட்டைவிட்டு வெளியேற்றியிருக்கிறது. இப்படியான உணர்வு பூர்வமான நிகழ்ச்சிக்கான ‘சிறப்பு விருந்தினர்' அழைப்பு, அவரது பேச்சுக்கான விசில்கள் பற்றிய விமர்சனங்களைக் கடந்து, கனேடிய அரசின் இந்தச் செயல் கீழ்த்தரமான அரசியல் அழுத்தங்களைக் கொண்டது என்பதை இங்கே பதிவுசெய்தாக வேண்டும். ‘தமிழ் மக்கள் நிம்மதியாக வாழ ஒரு சிங்களன் கூட உயிருடன் இருக்கக்கூடாது' என்ற தொனியில் பேசியதைவிட கனடாவில் வன்முறை ஒன்று தோன்றும் அளவுக்கோ, பாதுகாப்புக்குப் பங்கம் விளைவிக்கும்வகையில் இளைஞர்களைத் தூண்டும் வகையிலோ சீமான் எதையும் சொல்லியிருக்கவில்லை என்பதே உண்மை. இது இந்திய/இலங்கை அண்ணன் தம்பிகளின் அழுகையைத் துடைக்க கனேடியப் பெரியண்ணன் செய்த கீழ்த்தரமான அரசியல் விளையாட்டு என்பது மட்டும் உண்மை. இலங்கை அரசியல்களம் விரைவில் இன்னும் சூடேறப்போகிறது. வருகிற 26ம் திகதி ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் என்று உத்தியோகபூர்வமாகத் தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. எதிர்க்கட்சிகளின் சார்பாகப் போட்டியிடப் போவதாக சரத் பொன்சேகா உறுதிப்படுத்தியிருக்கிறார். தமிழ் வேட்பாளர் ஒருவரை நிறுத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீவிர ஆலோசனை செய்துவருவதாகச் செய்திகள் வெளியாகியிருக்கின்றன. வன்முறையில்லாமல் நேர்மையான ஒரு தேர்தலுக்குச் சாத்தியமிருப்பதாகத் தெரியவில்லை. சொந்தங்களையும், நட்புக்களையும் நினைக்கும்போது இனம்புரியாத வலி ஏற்படுகிறது. அரசியல்-புகுந்தகம்+உலகம் சென்ற வார ‘நான் பார்க்கும் உலகம்' தொகுப்பில் ஆஃப்கான் போர்க்கைதிகள் மீதான வன்கொடுமைகளில் கனடாவுக்கும் பங்கிருக்கிறது என்கிற செய்தி இப்போது கனேடிய அரசியலை மட்டுமல்லாமல், உலக அரசியலையே உலுக்க ஆரம்பித்திருக்கிறது. இங்கிலாந்திலும் இது தொடர்பான மனித உரிமை அமைப்புக்களின் அழுத்தம் அதிகரித்து வருகிறது. தாம் கைது செய்யப்பட்டு சட்டத்துக்குப் புறம்பாகத் துன்புறுத்தப்பட்டதாக சில பாகிஸ்தானியர்கள் சொல்லியிருப்பதும் உலகின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. மனித உரிமை அமைப்புகள் ‘குய்யோ முறையோ' என்று கத்த ஆரம்பித்திருக்கிறார்கள். மக்கள் கொத்துக்கொத்தாகக் கொல்லும்போதெல்லாம் இவர்கள் கண்ணுக்குத் தெரியாத மனித உரிமை மீறல்கள் இப்போது தெரியும் விந்தை அரசியலை விளங்கிக்கொள்வது என் போன்ற பாமரர்களுக்கு இயலாத காரியம். இதே வேளை இப்படியான துன்புறுத்தல்கல் பற்றி 2006ம் ஆண்டளவிலேயே செஞ்சிலுவைச் சங்கம் மின்னஞ்சல்கள் மூலமாகத் தங்களுக்கு அறிவித்திருந்தது என்று கனேடியப் பாதுகாப்பு அமைச்சர் பீற்றர் மக்கே கூறியிருக்கிறார். இதுவரை காலமும் தீவிரமாக இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்து வந்த அரசதரப்பில் இருந்து இப்போது முழுமையான குத்துக்கரணம் அடித்திருக்கிறார் மக்கே. முன்னைநாள் அமெரிக்க அதிபர் புஷ், முன்னைநாள், இற்றைநாள் பிரித்தானியப் பிரதமர்கள் ரொனி பிளேயர், கோர்டன் ப்ரவுன் ஆகியோரின் தலைமையில் உலகின் பெரியண்ணன்கள் பலர் சேர்ந்து ஆடும் நாடகத்தின் இன்னொரு பகுதியே இது. கைதிகளைத் துன்புறுத்தவென்றே 'குவாண்டனாமோ பே'யில் சிறைக்கூடம். பின்னர் இப்படியான நாடகங்கள். இந்த மனித உரிமைக் குழுக்கள் எல்லாம் திரும்பவும் வேலையில்லாதவர்களுக்கு வேலை கொடுக்கும் வேலை வினைகெட்ட அமைப்புகள் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார்கள். வணிகம்-பொருளாதாரம்-தொழில்நுட்பம் இந்தவார வணிகம் பொருளாதாரம் சம்பந்தமான மிகப்பெரிய அதிர்ச்சியாக அமைந்திருப்பது துபாய் பற்றிய செய்திகளே. துபாய் அரசால் நிர்வகிக்கப்படும் துபாய் வேர்ல்ட் எனப்படும் சார்புவைப்புக் குழுமம் பெரும் கடன் நெருக்கடியில் இருப்பதாக அறிவித்ததை அடுத்து உலகின் பல பாகங்களிலும் பங்குச் சந்தைகள் ஆட்டம் கண்டிருக்கின்றன. ஆசியப் பங்குச்சந்தைகள் ஆட்டம் கண்டதில் பெரும் அதிர்ச்சி இல்லையென்றாலும், வழமையாக அமெரிக்கப் பங்குச் சந்தை ஒரு விடுமுறை தினத்தில் மூடப்பட்டிருக்கும்போது உலகளாவிய ரீதியில் பங்குச் சந்தைகள் ஆட்டம் கண்டது அதிர்ச்சியளிப்பதாகவே உள்ளது. டொலரின் சரிவும் முதலீட்டாளர்களைக் கொஞ்சம் ஆடவைத்திருக்கிறது. ஆசியாவில் சீனாவின் ஷாங்காய் பங்குச்சந்தைச் சுட்டென் 3.18% வீழ்ச்சி கண்டது. ஹொங்கொங்கின் ஹாங் செங் 1.8%, ஜப்பானின் நிக்கேய் 0.6%, இந்தியாவின் மும்பை 2.67% சரிவைச் சந்தித்தன. ஐரோப்பாவில் லண்டன் பங்குச்சந்தை 3.25% வீழ்ச்சியையும், ஃப்ராங்ஃபேர்ட் பங்குச் சந்தை 3.18% வீழ்ச்சியையும் கண்டிருக்கின்றன. விளையாட்டு இந்த வாரம் ஒரே கிரிக்கெட் கொண்டாட்டம். இந்தியா-இலங்கை இரண்டாவது டெஸ்ட் போட்டி, பாகிஸ்தான்-நியூசிலாந்து முதலாவது டெஸ்ட் போட்டி, அவுஸ்திரேலியா-மேற்கிந்தியா முதலாவது டெஸ்ட் போட்டி, இங்கிலாந்து-தென்னாபிரிக்கா ஒரு நாள் போட்டிகள் என்று முக்கிய எட்டு அணிகளும் மோதிக்கொண்ட வாரம் இது. இந்தியா இலங்கையை இன்னிங்ஸ்சால் வென்று தமது 100வது டெஸ்ட் வெற்றியைப் பெற்றது. அவுஸ்திரேலியா மேற்கிந்தியாவை மூன்று நாட்களில் சுருட்டியது. இங்கிலாந்து ஒரு போட்டியையும், தென்னாபிரிக்கா இன்னொரு போட்டியையும் வென்று சமமாக இருக்கிறார்கள். ஆனால் இந்த வாரத்தின் அருமையான போட்டி நியூசிலாந்து-பாகிஸ்தான் போட்டி. மழையால் பாதிக்கப்பட்ட ஆட்டத்தில் கடைசி நாள் தேநீர் இடைவேளைக்குப் பிறகும் இரு அணிகளும் போராடி, நியூசிலாந்து 32 ஓட்டங்களால் வென்றது. இப்படியான போட்டிகள்தான் டெஸ்ட் கிரிகெட்டை வாழவைக்கும். அகமதாபாத் போன்ற போட்டிகள் அல்ல. முதல் போட்டியிலேயே 129+75 ஓட்டங்களைப் பெற்ற 19 வயதான உமார் அக்மல், பந்து வீச்சில் கலக்கும் 17 வயது முகம்மட் ஆமீர் ஆகியோருக்கு அருமையான எதிர்காலம் இருக்கிறது. ஆனால் பாகிஸ்தான் கிரிக்கெட் பற்றிய எதிர்வுகூறல்கள் எப்போதும் சரியாவதற்குரிய வாய்ப்புகள் குறைவு. பார்ப்போம், இந்த இளம்புயல்கள் என்ன செய்கிறார்கள் என்று. அதே போல் அடுத்த இளம் புயல் மேற்கிந்தியாவின் அட்ரியன் பரத். சினிமா-பொழுதுபோக்கு சமீபத்தில் வெளியான அமீரின் ‘யோகி' படம் வெளியான உடனேயே சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது. அமீரும் இயக்குனர் சுப்ரமணிய சிவாவும் காட்சிக்குக் காட்சி ‘டுட்சி' என்ற தென்னாபிரிக்கப் படத்தை சுட்டு விட்டார்கள் என்று திரையுலகம், வலையுலகம் எல்லாம் குதறுகிறார்கள். 'துபாய் திரைப்பட விழாவுக்குப் போகிற படம் எப்படி சுட்ட படமாக இருக்கும்?' என்று கொதிக்கிறார் அமீர். மொத்தத்தில் இரண்டு வருடமாக அமீர் 'செதுக்கிய' யோகி, ஊத்திக்கொண்டாயிற்று. ஒரு மாதிரி அடுத்த ஐ.பி.எல் வரமுன்னரே காதலித்த ஷில்பா ஷெட்டியை நவம்பர் 22ல் கைப்பிடித்து விட்டார் ராஜ் குந்த்ரா. ஷேன் வோர்னின் குக்ளிகளைச் சமாளிக்க முடியாமல் விரைவில் இந்தத் திருமணம் நடக்கும் என்று 'Fake IPL Player' எப்போதோ சொல்லியிருந்தது ஞாபகம் வருகிறது. வோர்ன் ஷமீதாவுக்கு இனி குக்ளிகளை வீசவேண்டியதுதான். அடப் பாவிகளா........ ஆணி புடுங்கும் இடத்தில் Levi Strauss ன் ஆண்களுக்கான பணப்பைகளை விற்பனை நிலையங்களுக்கு அனுப்பத் தயாராகிக் கொண்டிருந்தோம். அப்போது அந்தப் பணப்பைகள் அடைக்கப்பட்ட ஒரு பொலித்தீன் பைகளில் எழுதியிருந்த வசனம் கொஞ்சம் குழப்பியது. சீனாவில் தயாரிக்கப்படும் பொம்மைகள் குழந்தைகளுக்குத் தீங்கு விளைவிக்கின்றன என்று கொஞ்சக் காலத்துக்கு முன்னர் வந்த பரபரப்பையும் சேர்த்து ஒரு வாசகம் அடித்திருந்தார்கள். ‘This is not a toy made in China. But keep away from kids'. கிட்டத்தட்ட சீனத் தயாரிப்புகள் மீதான காழ்ப்புணர்ச்சியைக் காட்டும் வாசகம் அது. வேடிக்கை என்னவென்றால் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் இடுப்புப்பட்டிகளும், பணப்பைகளும் இங்கே வைத்துப் பெயர் மட்டும் பொறிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதுதான். இடுகையிட்டது Unknown நேரம் 6:01:00 pm No comments: சுட்டிகள் அரசியல், தொழில் நுட்பம், நான் பார்க்கும் உலகம், பொருளாதாரம், விளையாட்டு Thursday, 26 November 2009 மாவீரர் வாரம்- பாபா- விபரீத ஆசை மாவீரர் நாள் மாவீரர் வாரம் என்றுமில்லாதவாறு இந்த வருடம் விமரிசையாகக் 'கொண்டாடப்படுகிறது'. கனடாவில் சிறப்பு விருந்தினராக சீமான் கலந்துகொண்ட விழா ஒன்று ‘கொண்டாடப்பட்டது'. இது எல்லாம் எங்கே போய் முடியுமோ தெரியவில்லை. தமிழ் மக்களை ‘மச்சான்' என்று அழைத்த தமிழ் உணர்வாளர் நமீதா இன்னொரு மாவீரர் நாளில் கலந்துகொண்டு சிறப்பித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. வேலையிடத்திலும் பொது இடங்களில் நேரடியாகவும், சிலர் தொலைபேசி வழியாகவும் கேட்ட கேள்வி ‘தம்பி இந்த முறை மாவீரர் நாளுக்கு சீமான் வாறாராம். நீங்கள் போகேல்லையோ?' என்பதாக இருந்தது எரிச்சலூட்டியது. சீமானின் தமிழுணர்வை நான் மறுக்கவோ, குறுக்கவோ இல்லை. எங்களுக்காக செத்தவர்கள், எங்களை விட எத்தனையோ மடங்கு நெஞ்சுரமும், தியாகக் குணமும் கொண்டவர்களுக்காக அனுட்டிக்கப்படும் நினைவுநாட்களில் கலந்து கொள்ளப் பின்நிற்கக்கூடாதுதான். ஆனால், ‘மாவீரர்களை நினைவுகூரும் பொருட்டு சேர்வோம்' என்கிற ஒரு எண்ண ஓட்டத்தைவிட, ‘சீமான் வாறாராம்' என்கிற வேடிக்கை உணர்வே இங்கே விஞ்சி நிற்கிறது. அதாவது, விழா ஏற்பாட்டாளர்கள் ‘சீமான்' என்கிற எலும்புத்துண்டை வீசினால் இந்த ‘விலங்குகள்' ஓடி வரும் என்று நினைத்திருக்கிறார்கள், அல்லது அப்படி நினைக்கும்படி நாங்கள் நடந்துகொண்டிருக்கிறோம். இப்படியே போனால் ஒரு நாள் நான் மேலே சொன்னபடி ‘தனத் தலைவி'... சீச்சீ... ‘தானைத் தலைவி நமீதா கலந்து சிறப்பிக்கும் மாவீரர் நாள் கொண்டாட்டங்கள் என்பதாக ஒரு விளம்பரம் வரும் நாள் தூரத்தில் இல்லை. இதே வேளை இயக்குனர் சீமானை கனேடிய சட்டத்துக்குப் புறம்பாக உரையாற்றியமைக்காக கனேடியப் போலீசார் கைது செய்து நாட்டைவிட்டு வெளியேற்றியிருக்கிறார்கள். பாபா சென்ற வார இறுதி முழுதும் இதே பேச்சாகத்தான் இருந்தது. 'பாபாவுக்குப் பிறந்த நாள் கொண்டாடினமாம், போகேல்லையோ?' என்று பலபேர் கேட்டார்கள். வருடாவருடம் கேட்டுக்கேட்டு அலுத்த கேள்விதான் என்றாலும் சலிக்காமல் ‘எனக்கு உதிலையெல்லாம் நம்பிக்கை இல்லை' என்பதைப் பதிலாகச் சொல்லிவருகிறேன். அம்மா பகவான் கல்யாண சீசனில் பாபா கிடப்பில் போடப்படுவார். பாபா பிறந்த நாள் சீசனில் அம்மா பகவானை மறந்துவிடுவார்கள். எப்படிப்பட்ட சனங்கள் இவர்கள்? இங்கே சத்யசாய் பாடசாலை என்கிற பெயரில் ஆறாம் வகுப்புவரை ஒரு தனியார் பள்ளிக்கூடம் நடத்துகிறார்கள். மற்றைய பொதுப் பாடசாலைகளோடு ஒப்பிடும்போது கல்வி, ஒழுக்கம் என்று எல்லாவற்றிலும் தரமான பாடசாலை. பெற்றோரின் நன்கொடையில் நடப்பது. ஆறாம் வகுப்புவரை மருமகனும் அங்கே தான் படித்தான். கிரீன்வூட் என்று ஒரு அருமையான ஆசிரியர் இருந்தார். ஆறாம் வகுப்புக்கு மேல் வகுப்புக்களை ஆரம்பிக்க நிதி இல்லாமல் திணறுகிறார்கள். தனியான கட்டடம் இல்லாமல் வர்த்தகக் கட்டடம் ஒன்றில் பள்ளிக்கூடம் நடக்கிறது. சாய் பாபா தியான மண்டபம் கட்ட நிலம் வாங்கிப்போட்டு ஒரு குழு சாய் பாபாவைக் குளிர்ச்சிப்படுத்துகிறது. இன்னொரு குழு பள்ளிக்கூட அபிவிருத்திக்கு நிதி இல்லாமல் தவிக்கிறது. இரண்டு குழுக்களும் கூடிப்பேசி அந்தப் பாடசாலையை அபிவிருத்தி செய்யலாம். அதைவிடுத்து ஒரே நெறியைப் பின்பற்றுகிறோம் என்கிற பேரில் இவர்கள் செய்யும் அட்டூழியங்கள் எரிச்சலாக இருக்கிறது. இதைவிடக் கொடுமை, அந்தப் பாடசாலை மாணவர்கள் அடிக்கடி சாயைப் போய்ப் பார்த்து வருபவர்கள் (மருமகனுக்கு அந்தச் சந்தர்ப்பம் வாய்க்கவில்லை). சாய்க்கு கடிதம் எல்லாம் விழுந்து விழுந்து எழுதுவார்கள். சாய் பிறந்த நாளை சிறப்பாகக் கொண்டாடுவார்கள். ஆனால் எனக்கென்னவோ சாய்க்கு இப்படியான பிஞ்சுகளைப் பற்றிச் சிந்திக்க நேரம் இருக்குமா தெரியவில்லை. அவரும் என்னதான் செய்யமுடியும்? அவருக்குத்தான் எத்தனை வேலைகள். சாய்க்கு ஆலயம் கட்டுவதைவிட கல்விச் சாலைகள் கட்டுவது எவ்வளவோ மேல் என்று இந்த முட்டாள்ச் சனங்கள் என்றைக்குப் புரிந்துகொள்ளுமோ தெரியவில்லை. விபரீத ஆசை எனக்கு சமீபத்தில் வந்திருக்கும் விபரீத ஆசை இது. வேட்டைக்காரன் படத்தில் ஒரேயொரு பாடலைக் கடன்வாங்கியாவது நான் தயாரிக்க வேண்டும். எந்தப் பாடலைத் தெரியுமா? ‘புலி உறுமுது' பாட்டைத்தான். அதிலும் முக்கியாமாக ஒரு வரியை மிகவும் தத்ரூபமாக, எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை, படம்பிடிக்க வேண்டும். வரி இதுதான் ‘அடங்க மறுத்தவனை அழிச்சுடுவான், இவன் அமிலத்தை மொண்டு தினம் குளிச்சிடுவான்'. ஆஹா... என்ன அருமையான வரிகள். மொண்டு குளிக்கிற அளவுக்கெல்லாம் வைக்க மாட்டேன். ஒரு பெரிய நீச்சல் குளம் முழுக்க அமிலம் நிரப்பிவிடுகிறேன். ஹீரோ, பாட்டெழுதின கவிஞர், பாட்டை ஓ.கே. சொன்ன இயக்குனர், இசையமைப்பாளர் மற்றும் இன்னபிற வகையறாக்கள் ஒரே ஒரு முறை ஆசைதீர அதில் நீச்சலடிக்க இந்த வரியைப் படமாக்கிப்பாக்கவேண்டும். அடப் போங்கடா..... இடுகையிட்டது Unknown நேரம் 4:49:00 pm 5 comments: சுட்டிகள் அரசியல், கடுப்பு, சினிமா Saturday, 21 November 2009 1999- விமர்சனம் என்றைக்குத் தசாவதாரம் பார்த்து ஏமாற்றம் அடைந்தேனோ அன்றிலிருந்து திரையரங்குகளுக்குப் போய் தமிழ்ப் படங்கள் பார்ப்பதைத் தவிர்த்து வந்திருக்கிறேன். 10 டொலர்களையும் இரண்டரை மணித்தியாலங்களையும் வீணடிப்பதாக ஒரு உறுத்தல் என்னுள் இருந்தபடியே இருக்கும். ஆனால், 1999 வூட்சைட் சினிமாவில் திரையிடப்படுகிறது என்றதும் போய்ப் பார்த்துவிட மனம் துடித்தது. காரணங்கள் பல. லெனின்.எம்.சிவம் உருவாக்கிய இந்தப் படம் வான்கூவர் சர்வதேசத் திரைப்பட விழாவில் திரையிடத் தேர்வானது ஒரு காரணம். கனடாவில் வெளியான சிறந்த 10 படங்களில் ஒன்றாக வாக்களித்துத் தெரியப்பட்டது இன்னொரு காரணம். நம்மவர் படைப்புகளில் நல்ல அங்கீகாரம் கிடைத்த முதல் படைப்பு (எனக்குத் தெரிந்தளவில்) என்பது அடுத்த காரணம். எனக்கு மட்டும் இன்னொரு விசேட காரணம் இருந்தது. படத்தின் இசையமைப்பாளர் ராஜ் தில்லையம்பலத்தின் குடும்பத்துக்கு நான் கடமைப்பட்டிருக்கிறேன். உயர்தரக் கணிதத்தில் பெரிய பெறுபேறுகள் இல்லை என்றாலும்கூட ஆகக்குறைந்தது சித்தியடைவதற்காவது தோள்கொடுத்தவர் ராஜ் அவர்களின் அப்பா தில்லையம்பலம் ஆசிரியர். அவர்களின் குடும்பமும் எங்களின் குடும்பமும் பரஸ்பர அன்பைப் பரிமாறி வந்திருக்கிறது. ராஜ் சொல்வழி கேட்காமல் கோஷ்டிகளில் பாடித்திரிகிறார் என்று ஊரில் ஒரு குற்றச்சாட்டு கூட இருந்தது. ஆனால், ராஜ் சர்வதேசத் திரைப்பட விழாவில் திரையிடப்படும் படத்துக்கு இசையமைக்கும் அளவுக்குத் திறமைசாலி என்பது இன்ப அதிர்ச்சி. அவரது திறமைக்குக் குழப்படி என்பதாகப் பெயரிட்ட எங்கள் சமூகத்தின் மீது கடுமையான காழ்ப்புணர்ச்சி. ஆக, 1999 பார்க்க எனக்குக் கூடுதலாக ஒரு காரணமும் இருந்தது. இனிப் படம் பற்றிப் பார்ப்போமா? கதைச் சுருக்கம் 1999 கனடாவில் வசிக்கும் மூன்று இலங்கைத் தமிழ் இளைஞர்கள் பற்றிய கதை. குமார் (திலிபன் சோமசேகரம்) ரொரன்ரோவின் ஈஸ்ட் சைட்டில் ஒரு குழுமத் தலைவன். பெற்றோரை இந்திய ராணுவத்திடம் கண்முன்னே பலி கொடுத்தவன். தம்பியையும் இழுத்துக்கொண்டு 18 வயதில் கனடா வந்தவன். அவனது தம்பி ஜீவனை (ஜெரோன் தனபாலசிங்கம்) அடித்த வெஸ்ட் சைட் குழுமத் தலைவன் 'மரநாய்' என்பவனைப் பகைத்துத் தானும் ஒரு குழுமத் தலைவனாக மாறியவன். குமாருக்கும், மரநாய்க்கும் பெரியவர்கள் சமாதானம் செய்து வைத்திருந்த 1999ம் வருடத்தின் பிற்பகுதியில் இந்த வன்முறைகளைவிட்டு ஒரு 'கஷ்டப்பட்ட பிள்ளை'யைத் திருமணம் செய்து குழந்தை குட்டியுடன் குடும்பமாக வாழும் வாழ்க்கைக்கு ஏங்குபவன். அன்பு (சுதன் மகாலிங்கம்) தகப்பனுடன் வசித்து வருபவன். தகப்பன் சுந்தரத்துக்கு (அம்பலவாணர் கேதீஸ்வரன்) இரண்டு வேலைகள். ஒன்று முழுநேர உழைப்பு. மற்றது அன்புவுடன் சண்டை போடுவது. அன்புவும் சரியாகப் படிக்காமல் சுற்றிக்கொண்டிருப்பவன். அவன் குமாருடைய குழுவில் சேர்ந்து 5 வருடங்களாகியும், தகப்பனுக்கு இப்போதுதான் அரசல் புரசலாகத் தெரியவருகிறது. அன்பு அம்மாவை ஈழப் பிரச்சினைகளில் பறிகொடுத்தவன். குமார் அண்ணாவுக்காக எதையும் செய்யத் தயாராயிருப்பவன். அன்பு இந்தக் குழுமங்களைவிட்டு விலகி நல்ல முறையில் படித்து முன்னுக்கு வரவேண்டும் என்பது அவனது தகப்பனின் ஆசை. அகிலன் (காண்டி கனா) ஒரு தீவிரமான மாணவன். வோட்டர்லூவில் படிக்கும் இவன் வார இறுதிகளில் தாத்தாவை (கே.எஸ்.பாலச்சந்திரன்) ஸ்கார்பரோ வந்து சந்திப்பதுண்டு. அதே வார இறுதிகளில் வன்னியில் தாய் தகப்பன் இல்லாத பிள்ளைகளைப் பராமரிக்க வீடுவீடாகப் போய் நிதி திரட்டுவது இவன் வேலை. 2001ம் ஆண்டுக்கு முன் 200 பிள்ளைகளைத் தத்தெடுப்பது இவனது இலக்கு. இப்போது இவன் பொறுப்பில் 30 பிள்ளைகள். இவனும் பெற்றோரைப் போரிடம் பறிகொடுத்தவன். அன்புவும் அகிலனும் பாடசாலைக்காலத் தோழர்கள். இப்போது கொஞ்சம் விலகியிருக்கிறார்கள். இருவரும் பழகுவது தாமரையிலைத் தண்ணீராக. இவர்கள் இருவரும் ஒருதலையாக பாடசாலைக்கால ஏஞ்சல் கீதாவை (லக்ஷ்சி) காதலிக்கிறார்கள். அவளது பிறந்தநாளன்று காதலைச் சொல்ல இருவருமே திட்டமிட்டிருக்கிறார்கள். இருவருக்கும் மற்றவரும் கீதாவைக் காதலிப்பது தெரிந்திருக்கிறது. கீதா யாரை விரும்பினாலும் மற்றவர் ஒதுங்கிக்கொள்ளத் தயாராக இருக்கிறார்கள். குமாருக்கு அவன் நினைத்த வாழ்வு கிடைத்ததா? அன்பு திருந்தி தந்தையின் விருப்பப்படி வாழ்ந்தானா? அகிலனது இலட்சியங்கள் நிறைவேறியதா? அன்புவும் அகிலனும் கீதாவிடம் காதல் சொன்னார்களா? கீதா யாரை விரும்பினாள்? இது போன்ற கேள்விகளுக்கு திரையில் பதில் சொல்லியிருக்கிறார்கள். நடிகர்கள் கூடுதலாக எல்லோரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். ஆனால் படத்தில் ஸ்ரார் அன்புவாக வரும் சுதன் மகாலிங்கம்தான். கொஞ்சம் குழப்படிகார, சாகசம் செய்ய விரும்புகிற, அன்பு நிறைந்த ஒரு துள்ளலான இளைஞனை கண்முன் காட்டியிருக்கிறார். அதுவும் அந்தக் குழும இளைஞர்களுக்கே உரித்தான நடை ஒன்று நடக்கிறார், கலக்கல். ஏற்கனவே ஒரு சில படங்களில் பார்த்த திலீபன் சோமசேகரத்தின் நடிப்பும் பரவாயில்லை. மூத்தவர்கள் அம்பலபாணர் கேதீஸ்வரன், கே.எஸ்.பாலச்சந்திரன் ஆகியோர் தங்கள் பங்கைச் செய்திருக்கிறார்கள். அகிலனாக காண்டி கனாவின் நடிப்பு நிறைவில்லை. பல காட்சிகளில் உற்சாகமாக நடித்திருக்கலாம், தவறவிட்டுவிட்டார். லக்ஷ்சிக்கு அன்பு மற்றும் அகிலனுக்கான கனவுப் பாடல்கள் இரண்டில் வண்ண வண்ண உடைகளோடும் மயக்கும் கண்களோடும் ஓடுவதையும் அங்கும் இங்கும் நடப்பதையும் தவிர வேறெந்த வேலையும் இல்லை. படக்குழுவினர் லெனின். எம். சிவம் நல்லதொரு கதையை, பல பிரபல இயக்குனர்கள் பாவித்த பல்வேறு கோணங்களில் கதை சொல்லும் உத்தியைப் பாவித்து, குழப்பமில்லாமல் சொல்லியிருக்கிறார். மூன்று கோணங்களை இணைப்பதில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம். சபேசன் ஜெயராஜசிங்கத்தின் ஒளிப்பதிவில் சின்னச் சின்னக் குறைகள் இருந்தாலும் (உ-ம்: குளோசப் காட்சிகளில் நடிகர்களின் முகங்களில் ஒரு பகுதி அடிக்கடி திரைக்கு வெளியே போகிறது) அவருக்குக் கொடுக்கப்பட்ட மட்டுப்படுத்தப்பட்ட வளங்களை வைத்துத் தன் பணியைச் சிறப்பாகச் செய்திருக்கிறார். ராஜ் தில்லையம்பலத்தின் பாடல்களும், பின்னணி இசையும் திருப்பம்தர வல்லவை இல்லை என்றாலும் மிக நன்றாக இருந்தது. கார்த்திக் பாடும் 'ஓ மை ஏஞ்சல்' பாடலும், எஸ்.பி.பி.யின் ‘மொழியின்றி' பாடலும் கேட்க இனிமையாக இருந்தது. ரொரொன்ரோவின் அழகிய கடல், நதிக் கரைகளிலும், பூங்காக்களிலும் படம்பிடித்ததும் பரவாயில்லை. நிறைகள் நல்ல கதை. நல்லதொரு செய்தியையும் சொல்ல விளைந்திருக்கிறார் லெனின். எம். சிவம். எம்மவர் நிஜவாழ்க்கையில் கண்ட சில சம்பவங்களை ஞாபகப்படுத்திச் செல்கிறார்கள். திரைக்கதை உத்தி நன்றாக இருக்கிறது. அதுவும் அந்த ‘மரநாய்' என்கிற எதிர்க் குழுமத் தலைவனைக் காட்டாமலே அவன் சம்பந்தமான ஒரு பயத்தை வரவைத்திருப்பது சிறப்பு. வசனங்களில் சரிவிகிதத்தில் இயல்பான நகைச்சுவையும் (என்ன எம்மவர்கள் சிரிக்கிறார்களில்லை. விவேக், வடிவேலுவைப் பார்த்து இயல்பான நகைச்சுவை உணர்வை இழந்துவிட்டார்களோ? கமலின் மும்பை எக்ஸ்பிரசிலும் தியேட்டரில் சிரிப்புக் குறைவாகவே இருந்தது) நுணுக்கமான சமூக உணர்வையும் காட்டியிருக்கிறார் லெனின். மேலே சொன்னது போலவே சுதனின் நடிப்புக்கு ஒரு ஸ்பெசல் சபாஷ். குறைகள் மூன்று முக்கிய பாத்திரங்களில் ஒரு பாத்திரம் கடைசியில் இறந்து போவதாகக் காண்பித்திருக்கிறார்கள். அதற்கான காரணம் திரைக்கதையில் பெரிய பொத்தல். ‘என்னைக் கொல்ல வந்தவன் மாறி அவனைக் கொண்டுட்டான்' என்று இன்னொரு பாத்திரம் பேசும் வசனம் ‘அடையாளப் பிழையால்' நடந்த கொலை என்பதாகக் காட்டுகிறது. அடையாளப் பிழையால் அந்தக் கொலை நடக்க வாய்ப்பில்லை. ‘என்னைக் கொல்ல வந்தவன் நானில்லாத ஆத்திரத்தில அதில நிண்ட அவனைக் கொலை செய்துபோட்டுப் போட்டான்' என்று வசனத்தை மாற்றியிருந்தால் கொஞ்சம் ஏற்றுக்கொண்டிருக்கலாம். அதே போல் கதாநாயகிக்குப் பாடல்கள் மட்டுமே. ஒரு வசனம், ஏன் சிரிக்கின்ற மாதிரி ஒரு காட்சி கூட இல்லை. இந்தியப் படங்களிலாவது கதாநாயகிக்கு சும்மாவாவது இரண்டு வசனம் வைப்பார்கள், இங்கே அதுவும் இல்லை. கதையைச் செதுக்கிச் செதுக்கி எடுக்கும் அளவுக்கு எம்மிடம் வளங்கள் இல்லாமல் போனதுகூட இந்தக் குறைக்குக் காரணமாக இருக்கலாம். தலை முடியை வளர்த்து, கிட்டத்தட்ட முகத்தை மறைத்தபடி இருக்கும் அந்தப் பாத்திரம் ராம் கோபால் வர்மாவின் ‘சத்யா' பாத்திரம் ஒன்றையும், மிஷ்கினின் ‘அஞ்சாதே' மொட்டையையும் பாதிபாதியாக ஞாபகப்படுத்துகிறார்கள். அதையும் தவிர்த்திருக்கலாம். என் கருத்து கிடைத்த குறைந்த வளங்களை வைத்துக்கொண்டு எடுத்த இந்தப் படத்துக்கே சர்வதேசத் திரைப்பட விழா ஒன்றில் நல்ல வரவேற்புக் கிடைத்திருக்கிறது. அப்படியானால் எம்மவர்கள் இன்னும் கொஞ்சம் ஆதரவு வழங்கினால லெனின். எம். சிவம் போன்ற இளம் படைப்பாளிகளிடம் இருந்து இன்னும் நல்ல படைப்புகள், உலகத்தரத்தில் கிடைக்கும். தசாவதாரத்துக்கு செலவளித்த 10 ரூபா மற்றும் 3 மணித்தியாலங்களைவிட இது எவ்வளவோ மேல். பின்னிணைப்புகள் ஓ மை ஏஞ்சல் பாடல்... (ரசித்த சில இடங்களில் படமாக்கியிருக்கிறார்கள். Locations அழகாயிருக்கின்றன. பாடல் லெனின் அவருடைய youtube ல் இணைத்தது. இணைப்புத் தந்தது facebookல் காண்டி) இடுகையிட்டது Unknown நேரம் 5:39:00 pm 1 comment: சுட்டிகள் சினிமா, நம்மவர் Friday, 20 November 2009 நான் பார்க்கும் உலகம்: நவம்பர் 15-நவம்பர் 21 2009 ஊடகங்களில் நான் பார்த்த செய்திகளில் என் மனதைத் தாக்கிய செய்திகளின் தொகுப்பு. பாரிய ஊடக உலகில் ஒரு சாதாரணமானவனின் பார்வையில் பட்ட மிகவும் சிறிய துளி இந்தத் தொகுப்பு. அரசியல்-பிறந்தவீடு+பக்கத்துவீடு அவரைத் துரோகி என்று திட்டித் தீர்த்து எல்லோரும் ஓய்ந்து போன நேரம் கலைஞர் திரும்பவும் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியிருக்கிறார். சென்ற 17ம் திகதி ஈழத் தமிழர் பிரச்சினை பற்றி இவர் விட்ட அறிக்கை ஒன்றில் 'விடுதலைப் புலிகள் எடுத்த அவசரமான முடிவுகள்தான் இன்றைய நிலைக்குக் காரணம்' என்று கருத்தை உதிர்த்துச் சென்றிருக்கிறது இந்தக் கிழட்டுசிங்கம். விடுதலைப் புலிகளின் அரசியல் விமர்சிக்கப்பட வேண்டியதுதான். அதற்காகக் செய்ய வேண்டிய நேரத்தில் செய்ய வேண்டியதைச் செய்யாமல் சும்மா இருந்துவிட்டு, ஏற்கனவே காயம்பட்ட நெஞ்சங்களில் கொதிக்கக் காய்ச்சிய வேலைப் பாய்ச்சிக் கிண்டிக் கிளறியிருக்கிறார் கருணாநிதி. ஆகக் குறைந்தது மே 19ம் திகதிக்கு முன்னராவது இந்த அறிக்கையை விட்டுத் தொலைத்திருந்தாலாவது அறிக்கையில் கொஞ்சமாவது யோக்கியத்தனம் இருந்திருக்கும். இப்போது வந்திருக்கும் அறிக்கை சமீபகாலமாக அரசியலில் பரபரப்பு இல்லாமல் இருப்பதால் கொஞ்சம் பரபரப்பைக் கூட்டும் முயற்சியாகவே பார்க்கப்படக்கூடியது. வை.கோ, நெடுமாறன் வழமை போல எதிர்ப்பைப் பதிவு செய்திருக்கிறார். பச்சோந்தித் தலைவி, மன்னிக்கவும், புரட்சித் தலைவியும் கண்டன அறிக்கை விடுகிறார். ஆக மொத்தம் அவர்கள் உருட்டி விளையாடும் பந்துகளாகிவிட்டது ஈழத் தமிழர் பிரச்சினைகள். ஜனநாயகத்துக்காகப் போராடப் போகிறேன் என அறிவித்திருக்கிறார் சரத் பொன்சேகா. (கொஞ்சம் அப்படியே இருங்கள், சிரித்து முடித்துவிட்டு வருகிறேன்). இவ்வளவுகாலமாக தானும் சேர்ந்து கொன்று புதைத்த அந்த ‘ஜனநாயகத்தை' எப்படி உயிர்ப்பிக்கப் போகிறாரோ தெரியவில்லை. வரவர நகைச்சுவைக்காகப் படங்களைப் பார்ப்பதைவிட அரசியல் செய்திகளை வாசித்துவிடலாம் போலிருக்கிறது. அரசியல்-புகுந்தகம் ஆஃப்கானிஸ்தானில் தடுத்துவைக்கப்பட்டிருந்த கைதிகளை சிறைகளில் வைத்துக் கனேடிய அதிகாரிகள் துன்புறுத்தினார்கள் என்று முன்னாள் ஆஃப்கானிஸ்தானுக்கான கனேடியத் தூதரக அதிகாரி ரிச்சர்ட் கொல்வின் (Richard Colvin)குற்றம்சாட்டியிருக்கிறார். பின்வரும் அதிகாரிகளுக்கும் இந்தச் சித்திரவதைகளுக்கும் தொடர்பு இருப்பதாக கொல்வின் கனேடியப் பாராளுமன்றத்தில் தெரிவித்திருப்பது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. டேவிட் மல்ரொனி (David Mulroney)- முன்னைநாள் ஆஃப்கான் துருப்புக்களுக்கான மத்திய அமைச்சர், இப்போதைய சீனாவுக்கான கனேடியத் தூதர் ரிக் ஹில்லியெர் (Rick Hillier)- முன்னைநாள் கனேடியப் பாதுகாப்புப் படைகளுக்கான தலைமை அதிகாரி மார்கரெட் ப்ளட்வேர்த் (Margaret Bloodworth)- முன்னைநாள் பிரதமருக்கான பாதுகாப்பு ஆலோசகர் ஜில் சின்கிளேயர் (Jill Sinclair)- முன்னைநாள் வெளிநாட்டு மற்றும் பாதுகாப்பு தொடர்பான விடயங்களுக்கான அமைச்சகத்தில் உதவிச் செயலர் கொலீன் ஸ்வோர்ட்ஸ் (Colleen Swords)- வெளிநாட்டு விவகாரங்களின் சர்வதேசப் பாதுகாப்பு விவகாரங்கள் பிரிவின் முன்னாள் அமைச்சர். பழங்குடி இந்தியர்கள் விவகாரங்களுக்கான தற்போதைய உதவி அமைச்சர் டேவிட் ஸ்ப்ரோல் (David Sproule)- முன்னைநாள் ஆஃப்கானிஸ்தானுக்கான தூதர் (2006, 2007ல் ஒரு பகுதி) ஆரிஃப் லாலானி (Arif Lalani)- முன்னைநாள் ஆஃப்கானிஸ்தானுக்கான தூதர் (2007 ஒரு பகுதி, 2008) மைக்கேல் கோதியேர் (Michel Gauthier)- ஓய்வுபெற்ற லெப்டினண்ட் ஜெனரல். கனேடியப் படைகளின் எல்லா வெளிநாட்டு நடவடிக்கைகளுக்கும் பொறுப்பானவர். மேற்சொன்ன 8 பேரில் மூவரைத்தவிர மற்றவர்கள் இன்னும் எந்தவிதமான பதில்களையும் அளிக்கவில்லை. எதிர்க்கட்சிகள் இந்தக் குற்றச் சாட்டுகள் தொடர்பான விசாரணைக்குக் கோரிக்கை விடுத்திருக்கின்றன. அரசாங்கம் இந்தக் குற்றச்சாட்டுகளை அடியோடு மறுத்திருக்கிறது. இது தொடர்பாக ஊடகங்களையும் மக்களையும் அமைதிக்காக்குமாறு கேட்டிருக்கிறார்கள் அரசதரப்பு. கொஞ்சம் நாகரீகமான நாடாக நான் பார்க்கிற கனடாவும் உண்மையில் இப்படியானவர்களைக் கொண்டிருக்கிறது என்றால், 2012ல் உலகம் அழிந்து போய்விட்டால் நன்றாக இருக்கும். அரசியல்-உலகம் பெல்ஜியம் ப்ருசெல்சில் நடக்கும் உலகின் பலம் மிக்க நாடுகளின் (தாதாக்களின்) அவசர ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில், அணு ஆயுத உற்பத்தி பற்றிய ஐக்கிய நாடுகள் சபையின் திட்ட வரைபை ஈரான் ஏற்றுக்கொள்ளாவிட்டால் ஈரான் கடுமையான தண்டனைகளைச் சந்திக்கவேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா தெரிவித்திருக்கிறார். கொஞ்சம் கடுமையான வார்த்தைகளோடு கூடிய இந்த உரையில் Sanctions என்கிற பதம் பயன்பட்டிருப்பது கொஞ்சம் நிம்மதியளிக்கிறது. வட கொரியா முதலான இன்னபிற அணு ஆயுத உற்பத்தி செய்யும் நாடுகளையும் சாடிய அவர், அமெரிக்காவின் அணு ஆயுத உற்பத்தி பற்றி ஒன்றும் சொல்லவில்லை (அட, அவர் எப்படிச் சொல்வார். அவைதானே தாதாக்கள், அவை என்னவும் செய்யலாம்). ஒபாமா, புஷ் போல் முட்டாள்தனமாகச் செயற்பட்டு நோபல் குழுவின் முகத்தில் கரிபூசமாட்டார் என்று நினைக்கிறேன். வணிகம்-பொருளாதாரம்-தொழில்நுட்பம் கனடாவின் தொலைத் தொடர்புத் துறையில் ரோஜேர்ஸ் (Rogers), ரெலஸ் (Telus) ஆகிய தொலைத்தொடர்பு நிறுவனங்களைத் தொடர்ந்து பெல் கனடாவும் அவர்களுடைய System Access Fee ஐ இல்லாமல் செய்திருக்கிறார்கள். மாதாந்தம் $6.95 ஆக இருந்த இந்தக் கட்டணம் இனிமேல் புதிதான திட்டங்களில் இணைபவர்களுக்கு இனிமேல் அறவிடப்படமாட்டா. ரோஜேர்ஸ் மற்றும் ரெலஸ் ஏலவே இதை அறிமுகம் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. பழைய வாடிக்கையாளர்கள் ஏதாவது புதிய திட்டங்களுக்கு மாறிக்கொண்டால் இந்தக் கட்டணத்தை இனிமேல் தவிர்க்கலாம். அதற்காக வாடிக்கையாளர்கள் பெரிதாகச் சந்தோசப்பட முடியாது. முன்பு இருந்த திட்டங்களிற்கான மாதாந்தக் கட்டணங்கள் சராசரியாக ஐந்து டொலர்களால் உயர்த்தப்பட்டிருக்கின்றன. மூன்று பெரிய போட்டியாளர்களும் இந்த விஷயத்தில் ஒரே மாதிரித்தான் சிந்தித்திருக்கிறார்கள். எப்படியோ, மாதத்துக்கு 1.95 டொலர்களாவது சேமிக்கலாம் வரும்காலங்களில். விளையாட்டு இலங்கை-இந்தியா முதலாவது டெஸ்ட் போட்டி சமநிலையில் முடிந்திருக்கிறது. முதலாவது நாள் முதல் ஒரு மணித்தியாலம் தவிர மிகுதி நேரம் முழுவதும் துடுப்பாட்டக்காரர்கள் கையே ஓங்கியிருந்தது. ட்ராவிட்-177, தோனி-110 உதவியுடன் இந்தியா 426 ஓட்டங்கள் பெற, டில்சான்-112, மகேல-275, ப்ரசன்ன-154* உதவியுடன் இலங்கை 760-7 என்ற இமாலய இலக்கை அடைந்தது. 334 ஓட்டங்கள் பின்னிலையில் இரண்டாவது இன்னிங்ஸ் ஆடிய இந்தியா ஐந்தாம் நாள் ஆட்ட நேர முடிவில் 412-4 என்ற எண்ணிக்கையைத் தொட்டது. கம்பீர்-114, சச்சின்-100* சிறப்பாக ஆடினார்கள். மகேல 9000 ஓட்டங்கள் கடந்த முதல் இலங்கை வீரர் என்ற புகழையும், ட்ராவிட் 11,000 கடந்த 5வது வீரர் என்ற பெருமையையும், சச்சின் 30,000 சர்வதேச ஓட்டங்கள் கடந்த முதல் வீரர் என்ற பெருமையையும் பெற்றார்கள். இப்படி ஒரு ஆடுகளத்தில் கிரிக்கெட் ஆடுவதைவிட இந்திய வீரர்கள் விளம்பரப்படங்களில் நடிக்கலாம். இலங்கை வீரர்கள் எல்லே விளையாடலாம். (இதைவிடக் கேவலமான ஆடுகளங்களும் இருக்கின்றன. அது பற்றித் தனிப்பதிவே போடலாம்) சினிமா-பொழுதுபோக்கு ராதிகா வித்தியாசமாக ஒன்றைச் செய்திருக்கிறார். சின்னத்திரைக் கலைஞர்கள் கூட்டமைப்பின் விருது வழங்கும் விழாவில் இவரை ‘அரசி' தொலைக்காட்சித் தொடருக்காக சிறந்த நடிகையாகத் தெரிவு செய்திருந்தார்கள். இந்தத் தெரிவுகளில் நடிகர், நடிகை, இயக்குனர் போன்ற பிரிவுகளில் பல திறமைசாலிகளின் பெயர்கள் பரிசீலிக்கப்படவில்லை என்றும், விருதுகளுக்கான தேர்வு முறையில் திருப்தி இல்லை என்றும் கூறி அவருக்கு வழங்கப்பட்ட விருதைத் திருப்பி அனுப்பியிருக்கிறார். தனக்குத் தகுதி திறமை அடிப்படையில் மேற்படி விருது வழங்கப்பட்டிருந்தாலும் (???!!!!), இனிமேலும் திறமைசாலிகள் ஓரம்கட்டப்படக் கூடாது என்ற நல்லெண்ணத்தில் இந்த விருதைத் திருப்பி அனுப்புவதாகவும் தெரிவித்திருக்கிறார். இந்திரா பார்த்தசாரதி செய்த அளவுக்கு சரியான மூக்குடைப்பு இல்லையென்றாலும், இன்னும் கொஞ்சம் பெரிய கலைஞர்கள் இப்படியான கேலிக்கூத்து விருதுகளைப் புறக்கணித்து விருதுகளுக்குரிய மரியாதையைப் பெற்றுத்தரவேண்டும். யாராவது இந்த ‘விஜய் விருதுகள்' கூத்தையும் தட்டிக்கேட்க வேண்டும். (அதுசரி பாரதிராசா பத்மஸ்ரீ விருதைத் திருப்பி அனுப்பிவிட்டாரா. இல்லை அதுவும் நல்லதொரு சீனா? யாரப்பா இயக்குனர்??) இது எப்படி இருக்கு........ மேலே சொன்ன கனேடியத் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் தொடர்பாக ஒரு விசித்திரமான வழக்கொன்று விரைவில் நீதிமன்றத்துக்கு வர இருக்கிறது. அதாவது ரோஜேர்ஸ் (Rogers) தங்களுடைய மகுட வாசகமாக 'Canadas fastest and most reliable network' என்பதைத் தம்முடைய விளம்பரங்களில் பயன்படுத்தி வந்தது. சமீபத்தில் ரெலஸ் (Telus) நிறுவனம் புதிதாக 3-G Network க்கு உரிய Server ஐ மேம்படுத்தி சென்ற வாரம் புத்தம் புதிய Network ஒன்றை களத்தில் இறக்கியது. இதன் காரணமாகத் தாங்களும் ரோஜேர்ஸ் போலவே வேகமானதும், நம்பகமானதுமான Network வைத்திருப்பதால், 'Canadas fastest and most reliable network' என்ற மகுட வாசகத்தை ரோஜேர்ஸ் பயன்படுத்துவது வாடிக்கையாளர்களைப் பிழையாக வழிப்படுத்தும் ஒரு முயற்சி என்றும் இனிமேல் அந்த வாசகத்தை அவர்கள் பயன்படுத்தக்கூடாது என்றும் ரோஜேர்ஸை ரெலஸ் கேட்க, ரோஜேர்ஸ் மறுத்துவிட்டது. இதனால் வான்கூவர் நகரில் இருக்கும் உச்ச நீதிமன்றத்தில் ‘Criminal Competition Law' என்கிற சட்டக் கோர்வையின் கீழ் ரோஜேர்ஸ் மீது நட்டஈடு கேட்டு வழக்குத் தொடர்ந்திருக்கிறார்கள் ரெலஸ். அட இதில் என்ன என்கிறீர்களா? இந்தியாவில் நடிகர், நடிகைகளுக்குக் கோடிகள் கொடுத்து எடுத்த சில விளம்பரங்களை நம்மவர்கள் சர்வசாதாரணமாக அனுமதி எல்லாம் இல்லாமல் பாவிக்கிறார்கள். நாங்கள்தான் சிறந்தவர்கள் என்று அறை கூவுகிறார்கள். இப்படியான ஒரு சின்ன வாசகத்தை வைத்தே ஆப்படிக்கலாம் என்பது அவர்களுக்கெல்லாம் தெரியுமா?? இடுகையிட்டது Unknown நேரம் 5:51:00 pm No comments: சுட்டிகள் அரசியல், தொழில் நுட்பம், நான் பார்க்கும் உலகம், பொருளாதாரம், விளையாட்டு Thursday, 19 November 2009 விஜய் விரும்பியது கிடைக்காவிட்டால், கிடைத்ததை விரும்பி ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று சொல்வார்கள். அப்படி ஏற்றுக்கொண்ட வேலை அது. நேர்முகத்திலேயே செய்பணிகளுக்கான உப தலைவர் லொய்ட் சொல்லியிருந்தார், விஜய் என்கிற இந்தியருடன்தான் நீ பணியாற்றவேண்டும் என்று. எங்கள் பணிப்பகுதியின் முகாமையாளரான டெரிக் என்பவருக்கும் என்னை அறிமுகம் செய்து வைத்திருந்தார்கள். முதல்நாள் நேரடியாக டெரிக்கின் அலுவலகத்துக்கே சென்றேன். அவர் என்னை விஜயிடம் ஒப்படைத்து, ‘இன்று முதல் இவன் இங்கே உன்னுடன் வேலைசெய்யப்போகிறான். இவனுக்கு அன்றாடக் கருமங்களைப் பற்றிச் சொல்லிக்கொடு என்றுவிட்டு டெரிக் விடைபெற, விஜயுடன் ஐக்கியமானேன். ஒருவரை ஒருவர் அறிமுகப்படுத்திக்கொண்டோம். வெளிநாட்டுக்காக நான் பயன்படுத்தும் ஆங்கிலப் பெயரைச் சொல்ல, ‘அதுதான் உன்னுடைய உண்மையான பெயரா?' என்றார். நான் இல்லை என்று என் பெயர் சொல்ல ‘ஓ... அப்போது நீ இந்துவா?' என்றார். ‘இந்துவாகத்தான் பிறந்தேன்' என்றேன் வேகமாக. 60 வயதான அவருக்கு அது சரியாகப் புரிந்து போகாமல் இருக்க அவரது வயது மட்டும் காரணமில்லை. தன்னுடைய பெயர் விஜய் குமார் ஷர்மா என்று அறிமுகம் செய்துகொண்டார். அவரை திரு.ஷர்மா அல்லது திருவாளர். விஜய் என்று அழைக்குமாறு கேட்டுக்கொண்டார். காலைச் சிற்றுண்டிக்கான இடைவேளையில் இருப்பதற்கு இடம் தேடியபோது விஜய் என்னை அழைத்துத் தன்னுடைய மேசையில் இடம் தந்தார். அங்கே வேலை செய்யும் சீனப் பெண்ணொருத்தி இருவரையும் வித்தியாசமாகப் பார்த்துச் சிரித்தாற்போல் தோன்றியது (அவளது கண்கள் எப்போதுமே சிரித்துக்கொண்டேயிருந்தன). கடந்து போன ஒரு கரீபியன் பெண் ‘அட, அதெப்படி விஜய் இவனுக்கு மட்டும் உன் மேசையில் இடம் கொடுத்திருக்கிறாய்?' என்றாள். விஜய் சிம்பிளாகச் சொன்னார், 'அவன் ஒரு இந்து ஆண். அதனால் அவன் எனக்குச் சரிசமமாக இருந்து சாப்பிடலாம்'. அதிர்ந்தேன். விஜய் என்னை ஒரு சக மனிதனாகப் பார்க்கவில்லை என்பது தெரிந்தது. மேலும் தன்னைப் பற்றி அடுக்கினார். 'நான் ஒரு பிராமணன் தெரியுமா?. என்னுடைய குடும்பப் பெயரே ஷர்மா. நாங்களெல்லாம் மற்றவர்கள் கண்முன்னே சாப்பிடக்கூடாது. நீ ஒரு இந்து ஆணாக இருப்பதால் உனக்கு இந்த மேசையில் இருப்பதற்கு அனுமதி இருக்கிறது' என்றார். எனக்கு மதிய உணவருந்த ஒரு புதிய இடம் தேடவேண்டும் என்பது கிட்டத்தட்ட உறுதியானது. காரணம், நல்ல மட்டன் கறிவைத்து சாண்ட்விச் செய்துகொண்டு போயிருந்தேன் அன்றைய மதிய உணவாக. பின்னர் அவரே சொன்னார், ‘இலங்கை இந்துக்கள் மாமிசம் சாப்பிடிவார்கள் எனக் கேள்விப்பட்டிருக்கிறேன். நீயும் சாப்பிடுவாயா?. சாப்பிடுவாய் என்றால் பரவாயில்லை. நீ ஒரு இந்து ஆண். ஆகவே உனக்கு இந்த மேசையில் அனுமதி இருக்கிறது'. அப்பாடா........... விஜய் வேலை செய்யும்போதான சின்னச்சின்ன உரையாடல்களிலும், திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டிருந்தார், ‘நான் ஒரு பிராமணன், அதுவும் ஐயர்' என்று. இலங்கை இந்துக்களும் இந்திய இந்துக்களும் வழிபடும் தெய்வங்கள் பற்றி வகுப்பெடுத்தார். கார்த்திகேயன் (கார்த்திக் என்பது விஜயின் பாஷை) என்கிற முருகனின் பெயருக்கும், எனக்கும் சம்பந்தம் இருப்பதாக அப்பா சொல்வார் என்று சொல்ல, ‘உங்கள் குடும்பம் நல்ல இந்துக் குடும்பம்' என்று சொல்லிச் சிரித்தார். அதன் பின் பல விஷயங்கள் உரையாடினோம். விஜய்க்கு கிரிக்கெட் பிடித்திருந்தது. சினிமா பிடித்திருந்தது. கனடா பிடித்திருந்தது. நீல்கிரீஸ் இட்டலி பிடித்திருந்தது. ஏ-வன் லட்டு பிடித்திருந்தது. ஆப்பிள் பிடித்திருந்தது. ஐஸ்கிரீம் (அந்தச் சீனப் பெண்ணை இப்படித்தான் கூப்பிடுவார் சிங்கன்) பிடித்திருந்தது. எல்லாவற்றையும் விட இந்துமதம் பிடித்திருந்தது. சிவ சேனாவைப் பிடிக்கவில்லை. மோடியைப் பிடிக்கவில்லை. இவர்கள் எல்லோரையும் விட முஸ்லீம்களைப் பிடிக்கவில்லை. இலங்கைப் பிரச்சினை தெரிந்திருந்தது. அரசியல் தலைவர்கள் பெயர் தெரிந்திருந்தது. பிரபாகரனின் கதை தெரிந்திருந்தது. சில தமிழ்ச் சொற்களும் தெரிந்திருந்தன. எல்லாவற்றையும் விட மற்ற மதங்களை மட்டம்தட்டிப் பேசத் தெரிந்திருந்தது. மதம் பற்றியும், தன் குலம் பற்றியும் பெரிதாகப் பீற்றிப் பீற்றியே கடுப்புற வைப்பார் விஜய். நானும் இயன்றவரை இந்தத் தலைப்பிலிருந்து விலகி கிரிக்கெட் பற்றி, வேலை பற்றியெல்லாம் பேசிப்பார்ப்பேன். சுற்றிச் சுற்றி இங்கேதான் வருவார் விஜய். இப்படியான ஒரு நாளில் மதிய உணவு நேரத்தில் புதிதாகச் சேர்ந்த என்னுடன் பேசுவதற்காக லொயிட் எங்கள் பகுதிக்கு வந்தார். ஒரு பெட்டியில் ஏறி உட்கார்ந்து லொயிட், பேர்கர் அடைந்த வாயால் என்னிடம் கேட்ட கேள்விகளுக்கு நானும் சொசேஜ் ரோல் அடைந்த வாயால் பதில் சொன்னேன். லொயிட் விடைபெற்றுத் திரும்புகையில் நானும் லொயிடும் கவனித்தோம். வியர்த்து விறுவிறுக்க, சாப்பிடுவதை நிறுத்திவிட்டு விஜய் எழுந்து நின்றார். 'ஏதாவது பிரச்சினையா விஜய்?' என்றார் லொயிட். ‘இல்லை சேர். நீங்கள் என்னுடைய முதலாளி. உங்கள் முன் நான் நிற்பது தவறாகும். என்ன இருந்தாலும் எங்களுக்குச் சோறு போடும் முதலாளி நீங்கள்' என்று உளறினார். லொயிட் 'என்னப்பா இது?' என்கிற மாதிரி என்னைப் பார்த்துச் சிரித்துவிட்டு நகர்ந்தார். கிட்டத்தட்ட 60 வயது மதிக்கத்தக்க, ஆறடி உயரமான, தன் பிறப்புப் பற்றி மிக உயர்வான மதிப்பீடுகளைக் கொண்ட, அந்த மதிப்பீடுகளைப் பற்றிய கற்பிதங்களை எனக்குள் ஊட்ட முயன்ற அந்த ஆரியப் பிராமணருக்கு, சுய மரியாதை என்பதன் அர்த்தத்தை விரைவில் சொல்லிக்கொடுக்கவேண்டும். இடுகையிட்டது Unknown நேரம் 5:11:00 pm 14 comments: சுட்டிகள் அனுபவம், சிந்தனை Wednesday, 18 November 2009 பிடித்ததும் பிடிக்காததும் இந்த சுவாரஷயமான விளையாட்டுக்கு என்னை அழைக்காமல் விட்ட அனைத்துத் துரோகிகளுக்கும் அனானி பகவான் தண்டனை வழங்கட்டும். லோஷன் அண்ணாவுக்கு இனிமேல் அனானி பகவான அருள் மட்டுமே வழங்குவார். லோஷன் அண்ணா செய்தது மாதிரியே மூலமான நிபந்தனைகளிலிருந்து விலகி எனக்குப் பிடித்த, பிடிக்காத ஆட்கள் பற்றிப் பதிவிட்டிருக்கிறேன். அரசியல் தலைவர்கள் பிடித்தவர்: தமிழ் ஆட்களில் யாரும் இல்லை. சில தலைவர்கள் மட்டுமே அவர்களின் சிந்தனைகள், கொள்கைகள், பேச்சு, நிர்வாகத்திறண் இவற்றைத் தாண்டி, பார்த்தவுடனே ஒரு ஈர்ப்புத் தோன்றும். ஆங்கிலத்தில் Charismatic Appeal என்று சொல்வார்கள். சே-குவேரா, ஜோன்.எஃப்.கென்னடி, ஆபிரஹாம் லிங்கன், ராஜீவ் காந்தி, வேலுப்பிள்ளை பிரபாகரன் ஆகியோரிடம் அந்த ஈர்ப்பை நான் பார்த்திருக்கிறேன். அப்படியான ஈர்ப்புடன் இப்போது கண்ணில் தெரிபவர், பாரக் ஒபாமா. மீண்டும் சொல்கிறேன், இந்த ஈர்ப்புக்கும் கொள்கைகளுக்கும் சம்பந்தமில்லை. பிடிக்காதவர்: பலர் இருக்கிறார்கள். குறிப்பிட்டுச் சொல்லவேண்டுமானால் இருவரைச் சொல்வேன். முதலாமவர் மாவை சேனாதிராசா. வீ.ஆனந்தசங்கரிக்கும் இவருக்கும் ஒரேயொரு வித்தியாசம்தான். ஆனந்தசங்கரி ஒரு விஷயத்தில் உடன்பட மறுத்து அதைப் பொதுவில் சொன்னார். அவர் துரோகி. மாவை அதே விஷயத்தில் சங்கரியின் கருத்தைக் கொண்டிருந்தாலும் அதை வெளிப்படையாகச் சொல்லாதபடியால், மக்கள் பிரதிநிதி. இரண்டாமவர் மக்கள் பிரதிநிதியாகப் பின்வாசல் வழியே நுழைந்த, எந்த ஆளுமைகளுமற்ற செல்வராசா கஜேந்திரன் என்கிற ஜந்து. எழுத்தாளர்கள் பிடித்தவர்: என்றைக்கும் இளைமையான சுஜாதாவை எப்போதுமே பிடிக்கும். உயிருடன் இருக்கும் பலரது எழுத்துக்களை வாசித்தாலும் இன்னும் எவரும் எனக்கு ஆதர்சமாகவில்லை என்பதே உண்மை. பிடிக்காதவர்: தமிழ் எழுத்தாளர்களில் பிடிக்காதவர் என்று ஒருவரையும் கோடிட்டுக் காட்டமுடியாது. மேல் நாட்டில் இப்போது அடிக்கடி Best Sellers கொடுக்கும் டான் ப்ரவுணைப் பிடிப்பதில்லை. மதங்களுக்கெதிரான போராட்டத்தை இவரது நாவல்களைவிட வேறெதுவும் இவ்வளவு கொச்சையாகப் படம்பிடிப்பதில்லை. சினிமா பிடித்த நடிகன்: நாகேஷ் போய்விட்டார். இப்போது கமல் பிடிக்கும். புதிய தலைமுறை நடிகர்களில் பிரசன்னா. எல்லோரையும் விட ஏனோ எனக்கு லியோ டிகாப்ரியோவைப் பிடிக்கும். பிடிக்காத நடிகன்: திலகங்கள் இருவரையும் பிடிக்கவே பிடிக்காது. வம்பு செய்யும் சிம்பு என்கிற துஷ்ட ஜந்துவை இந்தப் பட்டியலில் சேர்க்கத் தயக்கமாய் இருந்தாலும் சேர்த்தே ஆக வேண்டும். பிடித்த நடிகை: ஸ்ரீதேவி (கண்டிப்பாக நடிப்புக்காக மட்டும் அல்ல என்பது உங்களுக்கே தெரியும்) பிடிக்காத நடிகை: பெரிய லிஸ்ட் இருக்கிறது. முன்னணியில் ஆச்சி மனோரமா. இவர் எந்த பாஷயில் படம் நடித்தாலும் மகனிடம் உணர்ச்சி பொங்கப் பேசும்போது ஒரே நடிப்பு மட்டுமல்ல, ‘யெய்யா யெய்யா' என்று ஒரு வசனமும் வைத்திருக்கிறார். இவர் கிராமத்து அம்மாவாகவோ, பாட்டியாகவோ நடித்து இந்த ‘யெய்யா' போடாத படம் ஏதுமிருந்தால் சொல்லவும். இவருக்கு அடுத்ததாய் இருப்பது இவரைவிட மோசமாக எல்லாப் படங்களிலும் ஒரே மாதிரி நடிக்கும் கலைராணி. அதைவிட உச்சக்கடுப்பு ‘மச்சாள்' மீது. பிடித்த இயக்குனர்: தமிழில் மிகவும் ஆதர்சம் என்று சொல்கிற அளவுக்கு யாரையும் பிடிக்கவில்லை இதுவரை. என்னதான் பெரியளவு Classic Movies தராவிட்டாலும் மார்ட்டின் ஸ்கார்ஸசி படங்கள் என்னைக் கவர்ந்திருக்கிறன. பிடிக்காத இயக்குனர்: ஒவ்வொரு இயக்குனரை ஒவ்வொரு விதத்தில் பிடித்தாலும், ஏதோ ஒரு காரணத்துக்காகப் பிடிக்கவே பிடிக்காமல் போய்விட்ட சிலர் இருக்கிறார்கள். விக்ரமன், சுரேஷ் கிருஷ்ணா, பேரரசு போன்றோர் இருக்கிறார்கள் அந்தப் பட்டியலில். சமீபத்திய புதுவரவு கௌதம் லூசுதேவ மன்னிக்கவும் கௌதம் வாசுதேவ மேனன். ‘ஒரு பெண் கனவில்கூடத் தன்னை ஒரு ஆடவன் கற்பழிப்பதாக நினைக்கிறாள்' என்று கதாநாயகிக்கு அறிமுகக்காட்சி வைத்த மாமேதை so called முருஹன் என்கிறவனையும் பிடிக்காது. இசையமைப்பாளர் பிடித்தவர்: இதெல்லாம் ஒரு கேள்வியா? என்றென்றும் 'இளைய'ராஜா. பிடிக்காதவர்: பெரிய பட்டியல் காத்திருந்தாலும், இப்போதைக்குக் கடுப்புகளைக் கிளப்புபவர், எஸ்.ஏ.ராஜ்குமார் பாடலாசிரியர்/கவிஞர் பிடித்தவர்: பட்டுக்கோட்டைப் பாட்டுக்கோட்டையின் பின் வந்த அரசுகளையும், கவியரசுகளையும் ரசிப்பதுண்டு, ஆனால் பிடித்துப்போகவில்லை. கல்யாணசுந்தரத்திடம் இருந்த சமூக நோக்கு எனக்குப் பிடித்தது. ஒரு படைப்பாளிக்கேயுரிய தார்மீகக் கோபத்தை அடிக்கடி வெளிப்படுத்துவதால் இப்போதுள்ளவர்களில் அறிவுமதியைப் பிடிக்கும். உதாரணமாக ஞானிக்கு அவர் எழுதிய கடிதம் ஒன்றில் சொல்லியிருப்பார், ///கடைசியாக சொல்லிக் கொள்வது இது தான் ஞாநி! எங்கள் வீட்டுக்குள் எங்கள் பெண்களைக் கெடுக்க வருகிற மிருகங்களின் ஆண்குறிகளை வெட்ட வேண்டும் என்பது எங்களின் ஆத்திரம் ! இல்லை.. இல்லை… அந்தக் குறிகளுக்கு ஆணுறைகள் மாட்டிவிட வேண்டும் என்பது உங்களின் சாத்திரம்./// இந்தக் கோபம்தான் அறிவுமதி பக்கம் என்னை ஈர்த்தது. அதன்பின்தான் ஓரளவுக்கு அவரைப் பற்றிய தேடல்கள் என்னிடம் முளைத்தன. பிடிக்காதவர்: எத்தனை பேர்??????????????????????? சமீபத்திய எரிச்சல் ரேனிகுண்டா படத்து ‘கந்தர்வனின் கோட்டை' பாடல் எழுதிய பிறைசூடன் மீது. பாடகர்கள்: பிடித்த பாடகன்: என்னதான் ஜேசுதாஸ் என்கிற ராட்சசன் இருந்தாலும் எஸ். பி. பாலசுப்ரமணியம் அசைக்கமுடியாத ஒரு சுவர்தான். (உருவத்திலும் சரி, சாதனையிலும் சரி). பிடிக்காத பாடகன்: க்ரிஷ். இவரைப் பிடிக்காமல் போனது இவரது பாடல்களால் மட்டுமல்ல. சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் இவர் செய்த அதிகப் பிரசங்கித்தனம் கடுப்பாக்கியது. வட மொழிப்பாடகர்கள் எவரையும் பிடிக்காது. சமீபத்திய வரவு சுரேஷ் வடேகார். யுகபாரதி ஒருவாறாக உருகி உருகி எழுதிய வரிகளைக் குழிதோண்டிப் புதைத்துவிட்டார். (திட்டில் பாதி பாடவைத்த வித்யாசாகருக்கு) பிடித்த பாடகி: ‘காற்றில் எந்தன் கீதம் காணாத ஒன்றைத் தேடுதே', ‘தாலாட்டும் பூங்காற்று நானல்லவா'.......... மறக்க முடியுமா ஜானகியை. பி. சுசீலாவும், சித்ராவும், சாதனாவும் குறைந்தவர்களில்லை என்றாலும் ஒரு versatality க்கு ஜானக்கிக்கு அருகில் யாருமில்லை. பிடிக்காத பாடகி: சுசித்ரா முதலாகப் பலர். சுவர்ணலதாவைக்கூடப் பிடிக்காது. மூக்கால் அழுவார். அவர் பாடியதில் ஒரேயொரு விதிவிலக்காக ‘மாலையில் யாரோ மனதோடு பேச..' பாடல் பிடிக்கும். விளையாட்டு வீரர்கள் பிடித்தவர்: என்றைக்கும், என்றென்றைக்கும், அவர் 60-70 'டக்' தொடர்ந்து அடித்தாலும்............ சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின்தான். ஆனால் அடிக்கடி அவரைத் திட்டவேண்டிய கடமை எனக்கு இருக்கிறது. அது ஏன் என்பது ரகசியம். பிடிக்காதவர்: ஸ்ரீசாந்த். இவரை எப்போதாவது நேரில் கண்டால் அந்த நாளில் நான் கொலைகாரன் ஆகும் சாத்தியக்கூறுகள் இருக்கின்றன. ஜிடானைத் தூண்டிவிட்டுக் கேவலம் செய்த மத்தறாஸி, Play Acting ல் பெயர் போன கிறிஸ்டியானோ ரொனால்டோ, டிடியேர் ட்ரொக்பா, கால்பந்தைவிட மொடலிங்கைப் பெரிதாக எண்ணிய டேவிட் பெக்காம் போன்றவர்களைப் பிடிப்பதில்லை. பதிவர்கள் பிடித்தவர்: ஒருமாதமாக இவர் பதிவு போடவில்லை. இவரது வலைப்பதிவு சமீபத்தில் எனக்கு அறிமுகமாகி என்னை நிரந்தர வாசகனாக்கியது. சென்று பாருங்கள் மா.சிவகுமாரின் 'எல்லோரும் எல்லாமும் பெறவேண்டும்' வலைப்பூ. அதிகபடசம் தொழில்நுட்பப் பதிவுகளே அவரது வலைப்பூவில் இருக்கும். திறவூற்று மென்பொருட்கள் பற்றி தமிழில் இவர் எழுதிய இந்தப் பதிவு போல் விரிவானதும், எளிமையானதுமான கட்டுரையை வாசித்த ஞாபகம் எனக்கில்லை. (அதற்காக மற்ற யாரையும் பிடிக்காது என்கிற முடிவுக்கு வரவேண்டாம்) பிடிக்காதவர்: ஒடுக்கப்பட்டவர்களுக்கான கலகக் குரல் என்பதாலேயே இவரை வாசிக்க ஆரம்பித்தேன். சில இடங்களில் அருமையான கருத்துக்கள் சொல்வார். பார்ப்பன முகமூடிகளைக் கிழிப்பார். ஆதிக்க சாதி மனோபாவங்களைத் துவைப்பார். ஒரு கட்டத்தில் இவரிடமிருந்து ஒரு நச்சுத்தன்மை வெளிவர ஆரம்பித்தது. பார்ப்பனர்களையும், ஆதிக்க சாதிகளையும் எதிர்க்கிறேன் என்கிற போர்வையில் தானே ஒரு நவீன பார்ப்பானாக மாறிப்போய்விட்டார். உதாரணத்துக்கு, பின்னூட்டமிட்ட பெண் பதிவரை ‘நீங்களெல்லாம் ஏன் இதற்குள் மூக்கை நுழைக்கிறீர்கள். போய்க் கவிதை எழுதுவதுதானே' என்கிற ரீதியில் புண்படுத்தினார். பார்ப்பனிய எதிர்ப்பு என்கிற பேரில் அந்த ஜாதியில் பிறந்த யாரையும் இழிவு படுத்த எந்த எல்லைக்கும் போவார். (உ-ம்: மணிரத்னம் ஹோட்டல் ருவாண்டா கதையைச் சுட்டு பம்பாய் என்ற பெயரில் எடுத்தார் என்று எழுதுவார். ஹோட்டல் ருவாண்டா வந்தது 2004ல், பம்பாய் வந்தது 1995 ல்). உங்களுக்கே தெரிந்திருக்கும் அவர் யாரென்று. கண்டுபிடியுங்கள் பார்ப்போமே!! சின்னதாக ஒரு க்ளூ தரவா? அவரது பெயர் சுகுணா என்று ஆரம்பித்து திவாகர் என்று முடியும். இடுகையிட்டது Unknown நேரம் 4:34:00 pm 21 comments: சுட்டிகள் தொடர் பதிவு, பதிவுலகம் Saturday, 14 November 2009 மாவீரர் நாள் கொண்டாட்டங்கள் (??!!) பல இடங்களில் பார்த்துச் சலித்துப்போன ஒரு விஷயமாக இது இருக்கிறது. ஒரு இணையத்தளக் கட்டுரையில் எழுதியிருக்கிறார்கள், நவம்பர் மாதம் ஈழத் தமிழர்களுக்குக் கொண்டாட்டமான வாரமாம். ஏனென்றால் இந்த மாதத்தில்தான் மாவீரர் நாள் கொண்டாட்டங்கள் வருகிறதாம். வானொலிகளும் இதே தொனியில்தான் அலறிக்கொண்டிருக்கின்றன. இது ஏதோ ஒரு கோவில் திருவிழா, நவராத்திரி, கந்தசஷ்டி வகையறாக் கொண்டாட்டம் என்பதாக ஒரு கட்டமைப்பு எம்மத்தியில் பலகாலமாக இருந்துவருவது வருந்தத்தக்கது. இணையத்தில்கூட இரண்டொரு குரல்கள் மட்டுமே இந்தக் ‘கொண்டாட்டம்' என்ற சொற்பிரயோகம் பற்றிய எதிர்ப்புக்களை எழுப்பியிருப்பது குறிப்பிடத்தக்கது. உண்மையிலேயே மாவீரர் மயானம் ஒன்றுக்கு ஒரு மாவீரர் நினைவு நாளில் போய்வந்திருக்கும் யாரும், இதை ஒரு ‘கொண்டாட்டம்' என்று வாய்தவறிக்கூடச் சொல்லிவிடமாட்டார்கள். உண்மையைச் சொல்லப்போனால் நானும் 2003 நவம்பர் 27 வரைக்கும் இந்த உணர்வுபூர்வமான அஞ்சலி நிகழ்வை ஒரு கொண்டாட்டமாகத்தான் பார்த்து வந்திருக்கிறேன். அந்த நாட்களில் பல இடங்களில் பந்தல்கள் போட்டு இறந்தவர் படம் எல்லாம் வைத்து மாலை போட்டிருப்பார்கள். சாந்தனும், தேனிசைச் செல்லப்பாவும் ஒலிபெருக்கிகளில் முழங்கிக்கொண்டிருப்பர். நவம்பர் 27 அன்று தலைவரின் உரைக்கான எதிர்பார்ப்பு பயங்கரமாக சாதாரண மக்கள் மத்தியில் எகிறிக்கிடக்கும். 2003 நவம்பர் 27 வரைக்கும் அந்த உரையை அடுத்த நாள் உதயன் பத்திரிகையில் படிக்கும் பழக்கம் மட்டுமே இருந்தது. இந்த நவம்பர் 27 ஐ அண்டி ஒலிக்கும் ‘தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய சந்தனப் பேழைகளே' என்ற பாடலை இசைக்ககவே நானும் ரசித்து வந்திருக்கிறேன். 2003 மாவீரர் வாரத்தில் ஒரு நாள் நித்து வீட்டின் முன்னால் கூடிப் பேசிக்கொண்டிருந்தோம். அப்போது பேச்சோடு பேச்சாக 'இந்த முறை மாவீரர் நாளுக்கு எள்ளங்குளம் சுடலைக்குப் போறதுதான்டா' என்று முடிவாயிற்று. போகும்போது 'எள்ளங்குளம் சுடலை'யாக இருந்தது வரும்போது ‘எள்ளங்குளம் மாவீரர் துயிலும் இல்லமாக' மாறியிருந்தது. அந்த நாளை வீடியோ பிடிக்கவெனக் குழுக்கள் அலைந்து திரிந்த வண்ணம் இருந்தன. பெருந்திரளாய்ச் சனம் வந்திருந்தது. பலர் முகத்தில் நிரந்தரமாக அப்பப்பட்ட சோகம். நாங்களோ வெடிவால்கள். எங்கே என்ன பேசுவது என்றில்லாமல் எல்லாவற்றையும் நக்கலாகப் பார்த்த காலம் அது. அப்படி ஒரு வேடிக்கை பார்க்கிற மனோநிலையில்தான் நாங்கள் எள்ளங்குளம் போனோம். ஒளியேற்றப்பட்டு அழகாக இருந்த அந்தத் துயிலும் இல்லத்திலிருந்த ஒரு கனதியான சோகம் மெல்ல மெல்ல எங்களைக் கவ்வத்தொடங்கியது சண்முகசுந்தரம் சேரைப் பார்த்தபோதுதான். எனக்கு நிச்சயமாக நினைவிருக்கிறது. சண்முகசுந்தரம் சேரின் கண்கள் கலங்கியிருந்தன. தலை துவண்டிருந்தது. அவரது மகனின் சமாதிக்கு முன்னால் நிற்கிறார் 72 வயதில் கால்சட்டை போட்டபடி உயரமான வேப்பமரங்களில் ஏறி ஆட்டுக்குக் குழை வெட்டிப்போடக்கூடிய அந்தக் கம்பீரமான மனிதர். அன்றைக்குத்தான் நான் சண்முகசுந்தரம் சேரை ஒரு வயோதிகராகப் பார்த்தேன். அந்த நேரம் பார்த்து 'தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய சந்தனப் பேழைகளே' பாடல் ஒலித்தது. சத்தியமாக இசையை ரசிக்க முடியவில்லை. மயிர்க்கால்கள் குத்திட்டு நிற்க ஒரு இனம்புரியாத உணர்வு நாடி நரம்பெங்கும் ஓடிப் பரவும். தாய்மார்கள், சகோதரிகள், மனைவிகள், காதலிகள் என்று பலர் புலம்புவார்கள். ‘ஆம்பிளை அழக்கூடாது' என்ற கட்டமைப்பு உடைந்து தந்தைகளதும், சகோதரன்களதும் கண்கள் குளமாகியிருக்கும். பார்த்துக்கொண்டிருக்கிற எம் கண்களும்தான். இந்த நேரம் பார்த்துத் தலைவரின் உரை ஆரம்பமானது. கொஞ்ச நேரம் கேட்டுக்கொண்டிருந்தபோது மகி சொன்னான் ‘மச்சான் டே, இன்னும் கொஞ்ச நேரம் நிண்டா நான் இயக்கத்துக்குப் போடுவன். வா வெளிக்கிடுவம்' என்று. மறுபேச்சில்லாமல் வெளியே வந்துவிட்டோம். வழமையாக ஏதாவது பேசி நக்கல் செய்து திரிகிற எங்களால் அன்றைக்கு மௌனம் தவிர வேறெதையும் தரமுடியவில்லை. அதன் பின் கொஞ்சநாட்கள் 'தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய சந்தனப் பேழைகளே' பாடலின் பின்னணியில் கலங்கிய கண்களோடு சண்முகசுந்தரம் சேர் வந்துபோவார், தூக்கமற்ற இரவுகளில். இப்படிப்பட்ட உணர்வுபூர்வமான ஒரு ‘துக்க அனுஷ்டிப்பை' மிக இலகுவாக ‘மாவீரர் தினக் கொண்டாட்டங்கள்' என்று கொச்சைப்படுத்துவது எப்படிப்பட்ட ஈனச்செயல் தெரியுமா. உண்மையைச் சொல்லப்போனால் ஈழவிடுதலைப் போராட்டம் பற்றிய காட்டமான விமர்சனங்கள் சில எனக்கிருப்பினும், சுகமான வாழ்க்கையைத் துறந்து, துப்பாக்கி ஏந்திச் சண்டைபோட்டுச் சாவதென்பது எல்லோராலும் முடியாது. ஏன், எங்களால்கூட அந்த ஒரு நாள் மட்டும் 'இன்னும் கொஞ்ச நேரம் நிண்டா நான் இயக்கத்துக்குப் போடுவன்' என்று சொல்லவும், அதை நினைவுகூர்ந்து வெளிநாட்டில் இருந்துகொண்டு ஒரு குற்ற உணர்ச்சியோடு எழுதவும் முடிந்ததேயொழிய, அவர்கள் செய்த தியாகங்களில் ஆயிரத்தில் ஒரு பங்கு கூடச் செய்யமுடியவில்லை. பெருந்தலைகளை விட்டுவிடுங்கள். எத்தனை அப்பாவி இளைஞர்கள், பெயர் தெரியாத, முகம் தெரியாத இளைஞர்கள், 30 வருடங்களாக எங்கள் இனத்தை நிலைத்து நிற்க வைக்கின்ற நோக்கில் செத்துப்போயிருக்கிறார்கள்? அப்படிப்பட்ட இளைஞர்களை நினைத்து இன்றைக்கும் எத்தனையாயிரம் குடும்பங்கள் அழுது கொண்டிருக்கின்றார்கள்? அந்தக் குடும்பங்கள் தாம் இழந்த செல்வங்களை நினைவுகூர்கிற ஒரு துக்க நாள், எங்களுக்கெல்லாம் கொண்டாட்டமாகத் தெரிகிறதல்லவா? அன்றைக்குப் பிரபாகரன் மறுபடி தோன்றுவார்... இல்லையில்லை பொட்டு அம்மான் மறுபடி தோன்றுவார் என்று புனைவுகள் எழுத அந்தத் துக்க தினம் எங்களுக்குப் பயன்படுகிறதல்லவா? இப்போதுதான் பிரபாகரன் மீது எனக்கு அடக்கமுடியாத கோபம் வருகிறது. இப்படி ஒரு ஈன இனத்துக்காக (என்னையும் சேர்த்து) 30 வருடங்களாகப் போராட்டம் நடத்திய அவரைவிட ஒரு அடி முட்டாள் அவருக்கு முன்னும் பிறக்கவில்லை, இனியும் பிறக்கப்போவதில்லை. நவம்பர் எங்களுக்கு முக்கியமான மாதம்தான், என்றைக்கும். ஆனால் அதை ஒரு கொண்டாட்டமான மாதம் என்று சொல்வது எமக்கு நாமே செய்யும் மாபெரும் துரோகம். பி.கு: முதலாம் உலகப்போர் முடிவுக்கு வந்த நவம்பர் 11, 11:00 இங்கே அனுஷ்டித்தார்கள். ஒரு கணம் நாடு முழுவதும் ஸ்தம்பித்து நின்றது. அந்த நாளுக்கு முந்திய வாரங்கள் எதிலும் எந்த ஊடகத்திலும் Remembrance Day Celebrations என்ற வார்த்தை பிரயோகிக்கப்படவில்லை. நாங்கள் மேல் நாட்டவரைவிட இதிலும் பின்தங்கித்தான் போய்விட்டோம் இடுகையிட்டது Unknown நேரம் 6:56:00 pm 24 comments: சுட்டிகள் அரசியல், சிந்தனை நான் பார்க்கும் உலகம்: நவம்பர் 08-நவம்பர் 14 2009 ஊடகங்களில் நான் பார்த்த செய்திகளில் என் மனதைத் தாக்கிய செய்திகளின் தொகுப்பு. பாரிய ஊடக உலகில் ஒரு சாதாரணமானவனின் பார்வையில் பட்ட மிகவும் சிறிய துளி இந்தத் தொகுப்பு. அரசியல்-பிறந்தகம் ஒரு மாதிரிக் கத்தரிக்காய் சந்தைக்கு வந்துவிட்டது. சரத் பொன்சேகா ராஜினாமா செய்துவிட்டார். உடனடியாக அதை ராஜபக்ச ஏற்றுக்கொண்டும் விட்டார். இப்போது ஒருவரை ஒருவர் அறிக்கைகளால் தாக்கிக்கொள்ள ஆரம்பித்திருக்கிறார்கள். கொஞ்ச நாளைக்கு முன்னர் உடன்பிறவா சகோதரர்கள் போல் திரிந்தவர்களை வெற்றி தந்த போதை எப்படி மாற்றியிருக்கிறது பாருங்கள். ராஜபக்ச தரப்பு பொன்சேகாவை துரோகியாகச் சித்தரிக்க முயல்கிறது. தான் நாட்டுக்குச் செய்த 'பங்களிப்பை' (வேறென்ன, ஆயிரக்கணக்கான படுகொலைகள்) மறந்து தன்னைத் துரோகி என்று வர்ணிக்கிறார்கள் என பொன்சேகா புலம்பியிருக்கிறார். 'ராணுவப் புரட்சி நடத்துவேன் என்று பயந்தே தன்னை ஜனாதிபதி பணிமாற்றம் செய்தார்' என்றும் குற்றம் சாட்டியிருக்கிறார். நாளைக்கே இவ்வளவு நாளும் தலைவராக இருந்த எனக்கு எந்த முக்கியத்துவமும் தருகிறார்களில்லை என்று ரணில் விக்கிரமசிங்கே ராஜபக்சவுடன் சேர்ந்தாலும் ஆச்சரியமில்லை. போரில் கிடைக்கிற வெற்றிகள் தரும் போதையும், பதவி ஆசையும் இப்படித்தான் கேவலமாகத் தங்களுக்குள்ளே அடிபிடி வரவைத்துவிடும். இலங்கையில் நிலமை தலைகீழாக இருந்திருந்தால்கூட இப்படி இன்னொரு கூட்டம் அடிபட்டுக்கொண்டு இருந்திருக்கும். மக்களின் நலன்களைவிட தம் நலன்களைப் பெரிதாகக் கருதும் தலைவர்கள் வாழ்கிற ஒரு காலகட்டத்தில் நாங்கள் வாழ்கிறோம் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறார்கள் ‘அறசரும்' ‘தலபதி'யும். அரசியல்-புகுந்தகம் 'நானோஸ் ரிசேர்ச்' (Nanos Research) என்ற நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பு ஒன்று பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பர் தலமையிலான ஆளும் கொன்செர்வேற்றிவ் கட்சிக்கு பெரிய சந்தோசத்தைக் கொடுத்திருக்கிறது. கனடாவில் வாக்களிக்க விரும்பும் மக்களில் 38% பேர் தாங்கள் கொன்செர்வேற்றிவ் கட்சிக்கு ஆதரவாகவும், 29% பேர் பிரதான எதிர்க்கட்சியான லிபரல் கட்சிக்கு ஆதரவாகவும் வாக்களிப்போம் என்று கருத்துத் தெரிவித்திருக்கிறார்கள். ப்ளொக் கியூபெக் கட்சிக்கு வெறும் 9% மக்களும், புதிய ஜனநாயகக் கட்சிக்கு 18% மக்களும், பசுமைக் கட்சிக்கு 5% மக்களும் ஆதரவளித்திருக்கிறார்கள். சென்ற மாதம் லிபரல் கட்சி கொண்டுவர இருந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்திலிருந்து எதிர்க்கட்சிகளிடம் இருந்த ஒற்றுமையின்மையால் தப்பிப்பிழைத்த ஹார்ப்பர் அரசாங்கத்துக்கு இந்தச் செய்தி மிகவும் மகிழ்ச்சியானது என்பதை மறுக்கமுடியாது. அரசியல்-உலகம் அமெரிக்காவின் ஜனாதிபதியாகப் பொறுப்பேற்ற பின்னர் முதன் முதலாக சீனாவுக்கு விஜயம் செய்திருக்கிறார் பராக் ஒபாமா. ஆசிய நாடுகளுக்கு அவர் மேற்கொண்டிருக்கும் எட்டு நாள் உத்தியோகபூர்வச் சுற்றுப் பயணத்தின் ஒரு பகுதியாகவே இந்த விஜயம் இடம் பெற இருக்கிறது. ஒபாமாவின் ஆட்சிக்காலத்தில் அமெரிக்க-சீன உறவுகள் மென்மேலும் மேம்பட்டிருப்பதாக இரு நாட்டு ஊடகங்களும் மாறிமாறி ஊதிக்கொண்டிருக்கின்றன. ஒபாமாவுடன் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளின்ரன், வணிக அமைச்சர் காரி லொக் ஆகியோரும் சீனா செல்லவிருக்கிறார்கள். இதே வேளை தலாய் லாமாவுக்கு அமெரிக்கா வழங்கும் ஆதரவை நிறுத்தவேண்டும் என அறிக்கைவிட்டு தன் பங்குக்கு பரபரப்பைக் கிளப்பியிருக்கிறது சீனா. இப்போதைக்கு சீனர்களைப் பகைக்கும் நிலையில் அமெரிக்கா என்ன, எந்த நாடுமே இல்லை என்பது மறுக்கமுடியாத உண்மை. விரைவில் அவர்கள் உலக பொலிஸ்காரனாக மாறினாலும் ஆச்சரியமில்லை. வணிகம்-பொருளாதாரம்-தொழில்நுட்பம் i-Phone மீதான முதலாவது பாரதூரமான குற்றச்சாட்டி பிரான்ஸின் கான்ஸ் நகரில் இருந்து எழுந்திருக்கிறது. அந்நகரைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவரின் i-Phone திரை பாவித்துக்கொண்டிருக்கும்போதே வெடித்ததை முன்னிட்டு, i-Phone களின் பாவனைப் பாதுகாப்புக் குறித்து பிரெஞ்சு நீதிமன்றில் அவ்வர்த்தகர் வழக்குத் தாக்கல் செய்திருக்கிறார். இது Apple நிறுவனத்தின் வடிவமைப்பில் உள்ள குறைபாடா இல்லையா என ஒரு பொதுவான நபர் அல்லது அமைப்புத் தனக்குக் கண்டறிந்து சொல்லவேண்டும் என தன்னுடைய வழக்கறிஞர் மூலமாக அவர் கேட்டுக்கொண்டிருக்கிறார். ஏற்கனவே இப்படியான திரை வெடிப்புகள் பற்றிய செய்திகள் அரசல்புரசலாக வந்தபோதும், பாவனையாளர் ஒருவர் சட்ட உதவியை நாடியிருப்பது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது. இதே வேளை, இது வடிவமைப்பில் உள்ள குறைபாடு இல்லை என்றும், ஏலவே மோசடி i-Phone களைச் சந்தைப்படுத்தப்பட்டிருப்பதாக காவற்துறையால் விசாரிக்கப்படும் சம்பவங்களுக்கும் இதற்கும் சம்பந்தம் இருக்கலாம் என்று Apple நிறுவனமும், i-Phone களை பிரான்சின் சந்தைப்படுத்தும் Bouygues நிறுவனமும் தெரிவித்திருக்கின்றன. விளையாட்டு அவுஸ்திரேலியா-இந்தியா ஒரு நாள் தொடரை அவுஸ்திரேலியா 4-2 என்ற கணக்கில் கைப்பற்றியிருக்கிறது. மும்பையில் நடந்த 7வது போட்டி மழையால் கைவிடப்பட முன்னரே, கௌகாத்திப் போட்டியில் அபார வெற்றி பெற்று அவுஸ்திரேலியா தொடரைக் கைப்பற்றியிருக்கிறது. 9 முக்கிய வீரர்கள் இல்லாமல் பெற்ற இந்த வெற்றி தன்னுடைய வாழ்நாளில் மிகப் பெரிய சந்தோஷங்களில் ஒன்று என்று ரிக்கி பொன்ரிங் தெரிவித்திருக்கிறார். இந்தியாவுக்கு அடுத்த சோதனையாக இலங்கை அணி காத்திருக்கிறது. இதுவரை இந்திய மண்ணில் எந்த ஒரு டெஸ்ட் போட்டியையும் வெல்லாத இலங்கை அணிக்கு இந்த முறை நல்ல வாய்ப்பு இருப்பதாக நம்புகிறார்கள் வல்லுனர்கள். ஸ்ஹீர் கான் அணிக்கு மீண்டிருப்பது இந்தியாவுக்குத் தெம்பூட்டினாலும், ஸ்ரீசாந்தை அணிக்கு அழைத்ததைப் போல் ஒரு முட்டாள்தனம் இருக்க முடியுமா தெரியவில்லை. நாளையோடு (15 நவம்பர் 2009) சர்வதேசக் கிரிக்கெட் விளையாடவந்து 20 ஆண்டுகள் ஆகிறது சச்சினுக்கு. 1989ல் ஆரம்பித்த சச்சினின் சாதனைப் பயணம் இன்றும் தொடர்வது உண்மையில் மகத்தான சாதனையே. அதுவும் 1990 களின் பின்னரான ஒரு நாள் கிரிக்கெட்டின் வளர்ச்சியால் ஒரு ஆண்டில் இன்றைய வீரர்கள் விளையாடும் கிரிக்கெட்டின் அளவை வைத்துப் பார்க்கும்போது, 20 ஆண்டுகள் வில்பிரெட் ரோட்ஸின் 31 ஆண்டுகளைவிடப் பெரிய சாதனையே. சினிமா-பொழுதுபோக்கு கரீனா கபூர் வெற்று முதுகோடு இருக்கும் ஒரு திரைப்பட விளம்பரத்துக்கு இன்னும் அதிகமாக எந்தவிதக் கட்டணமும் இல்லாமல் விளம்பரம் தேடித்தந்திருக்கிறார்கள் சிவசேனா கட்சியினர். எது சரி எது பிழை என்ற விவாதம் இப்போதைக்கு வேண்டாம், ஆனால் இப்போதெல்லாம் ஒரு படத்தை ஓடவைக்க மிக சுலபமான வழிமுறைகளைக் கையாள்கிறார்கள் படக் குழுவினர் என்று எனக்குத் தோன்றுகிறது. கலாசாரக் காவலர்களுக்கு உறுத்தும்படி ஏதாவது செய்தால் போதும், இலவச விளம்பரம் செய்து குப்பைப் படத்தையும் ஓடவைத்துவிடுவார்கள். (சயீஃப் அலிகான் வெற்று மார்போடு இருக்கிறார் அதே படத்தில். அது ஆபாசமில்லையாமா?) இதைச் சொல்லாவிட்டால் தலையே வெடித்துவிடும். கமலின் ஐம்பதாவது ஆண்டுவிழா டி.வி.டி. கிடைத்துப் பார்த்தேன். விஜய் ரி.வி. இப்படியான நிகழ்ச்சிகளுக்கு லாயக்கில்லை எனத் திரும்பவும் நிரூபித்திருக்கிறார்கள். அதுவும் எஸ்.பி.பி.யும், ஹரிஹரனும் சேர்ந்து ஒரு அரைமணித்தியாலம் அறுத்தார்கள் பாருங்கள், இதுவரை ரசித்த சில கமல் பாடல்களை இனிமேல் கேட்கவே முடியாமல் செய்துவிட்டார்கள் (அதுவும் ஹரிஹரனின் முகபாவனை சொல்லவே தேவையில்லை. எப்போதாவது மலச்சிக்கலால் அவதிப்படும்போது எங்கள் குளியலறைக் கண்ணாடியில் பார்த்த என்னுடைய முகபாவங்கள் இதற்கு மேல்). இதெல்லாம் தேவையா கமல்? அடப் பாவி........ George Bush Quotes என்று நண்பர் ஒருவர் ஒரு இணையப் பக்கம் அனுப்பியிருந்தார். அதில் ஒன்று என்னைக் கவர்ந்தது. பிரான்சின் பொருளாதாரம் சரிவில் இருப்பது பற்றி பிரித்தானியப் பிரதமர் ரொனி ப்ளேய்ரிடம் புஷ் உதிர்த்த தத்துவ முத்து இது. ‘The problem with the French is that they don't have a word for entrepreneur'. இதிலென்ன பிரச்சினை என்கிறீர்களா? Entreprenuer என்கிற சொல்லே ஆங்கிலம் பிரெஞ்சிடம் கடன்வாங்கிய சொல்தான். ஹூம்.... இப்படியாகப்பட்ட ஒரு புத்திசாலி கொஞ்சக்காலம் உலகின் பிரதான தலைவராக விளங்கியிருக்கிறார். என்னத்தைச் சொல்ல இடுகையிட்டது Unknown நேரம் 2:51:00 pm 4 comments: சுட்டிகள் அரசியல், தொழில் நுட்பம், நான் பார்க்கும் உலகம், பொருளாதாரம், விளையாட்டு Friday, 6 November 2009 நான் பார்க்கும் உலகம்: நவம்பர் 01-நவம்பர் 07 2009 ஊடகங்களில் நான் பார்த்த செய்திகளில் என் மனதைத் தாக்கிய செய்திகளின் தொகுப்பு. பாரிய ஊடக உலகில் ஒரு சாதாரணமானவனின் பார்வையில் பட்ட மிகவும் சிறிய துளி இந்தத் தொகுப்பு. அரசியல்-பிறந்தகம் விடுதலைப் புலிகளின் வீழ்ச்சிக்குப் பின்னர், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச முதன் முதலாக வன்னிக்கு விஜயம் மேற்கொண்டிருக்கிறார். அங்கு நடைபெற்று வருகிற மீளமைப்புப் பணிகளை ராஜபக்ச பார்வையிட்டதாகவும், துணுக்காய் பகுதியில் மீளக்குடியமர்த்தப்பட்ட மக்களைச் சந்தித்து தமிழில் உரையாடியதாயும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. அவரோடு கூடவே அவரது சகோதரரும், பாதுகாப்பு அமைச்சின் செயலாளருமான கோத்தபாய ராஜபக்சவும், முப்படைகளின் தளபதிகளும், பொலிஸ்மா அதிபரும் போய்வந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன. தேர்தல் அரசியலுக்காக இல்லாமல் உண்மையான நோக்கோடு இதைச் செய்திருந்தார் எனில், ராஜபக்சவுக்கு நன்றிகள். கடைசியாக சிங்கள தேசத்துத் தலைவர் ஒருவர் மக்களைச் சந்தித்து, நம்பிக்கை ஏற்படுத்தி பின்னர் முதுகில் குத்திய அனுபவம் இருப்பதால், (வேறு யார், ரணிலைச் சொல்கிறேன்) எதையும் சந்தேகக் கண்ணோட்டத்தோடுதான் அணுகமுடிகிறது. இதேவேளை புலிகளின் கட்டுப்பாட்டில் வன்னி இருந்தபோது அங்கே பணியாற்றிய அரசு ஊழியர்களைப் பணிக்குத் திரும்புமாறும், இல்லாவிடில் அவ்வாறு திரும்பாதவர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் நிறுத்தப்படும் என்றும் வடமாகாண ஆளுனர் சந்திரசிறி தெரிவித்திருக்கிறார். சொந்த இடங்களை விட்டு வேறு இடங்களில் குடியமர்த்தப்பட்ட இவ்வாறான ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க ஏற்கனவே முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. தலைவரின் பெற்றோர் பற்றிய ஆனந்த விகடன் செய்தியை வியாபார தந்திரமாக மட்டுமே பார்க்கிறேன். மரணவியாபாரிகள் இப்போதைக்கு ஓயப்போவதில்லை. அந்தப் பிணந்தின்னிகளின் வியாபார தந்திரத்தை நம்மவர்களும் ஊக்குவிப்பது உறுத்துகிறது. அரசியல்-புகுந்தகம் பிரிட்டிஷ் கொலம்பியா (British Colombia) மாகாணத்தின் ஃப்ரேசர் (Fraser) ஆற்றுப் பகுதியில் இருந்த சால்மன் (Salmon) மீன்வளம் திடீரெனக் குறைந்தது பற்றிய விசாரணை ஒன்றை நடத்திமுடிக்க பிரதம மந்திரி ஸ்டீபன் ஹார்ப்பர் உத்தரவிட்டிருக்கிறார். கிட்டத்தட்ட 9 மில்லியன் மீன்கள் பசுபிக் சமுத்திரத்தில் காணாமல் போயிருப்பது கனேடிய மீன்வளத்துறையை ஆட்டம்காண வைத்திருக்கிறது. பல காலமாகவே இது பற்றிய ஒரு விசாரணைக்கு பலதரப்பட்ட அமைப்புகள் கோரி வந்த நிலையில் ஹார்ப்பரின் இந்த அறிவிப்புக்கு நல்ல வரவேற்புக் கிடைத்திருக்கிறது. வழமையாக காலநிலை மாற்றத்துக்கேற்ப இடம்பெயர்ந்து திரும்பும் இந்த மீன்கள், இம்முறை 10.5 மில்லியன் பசுபிக் கடலில் இருந்து ஃப்ரேசர் ஆற்றுக்குத் திரும்பியிருக்க வேண்டும். ஆனால் இந்த எண்ணிக்கையின் பத்தில் ஒரு பங்கு மட்டுமே திரும்பியிருப்பது கனேடிய மீன்வளத்துறைய அதிர்ச்சிக்குள்ளாக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது. ஒன்ராரியோ மாநிலத்தின் கல்விக் கட்டணங்களைக் குறைக்குமாறு மாணவர்கள் ஒழுங்கு செய்த ஆர்ப்பாட்டங்கள் ஆங்காங்கே நடைபெற்று வருகின்றன. வியாழனன்று உச்சக்கட்டமாக ரொரன்ரோ குயீன்ஸ் பார்க்கில் மாபெரும் திரளணியாக 1000 த்துக்கு மேற்பட்ட மாணவர்கள் கூடித் தங்கள் எதிர்ப்பை வெளிக்காட்டினார்கள். கனடாவிலேயே கல்விக்கட்டணங்கள் உயர்ந்த மாநிலமாக விளங்கும் ஒன்ராரியோ, இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு இன்மையிலும் முதல் மாநிலமாக விளங்குவது குறிப்பிடத்தக்கது. அரசியல்-உலகம் ஐக்கிய அமெரிக்காவின் Texas மாநிலத்தில் Fort Hood இராணுவ முகாமில் பணியாற்றிய மன நல மருத்துவர் மேஜர். நிடால் மலிக் ஹசன் திடீரென நடத்திய துப்பாக்கித் தாக்குதலில் 13 பேர் கொல்லப்பட்டும், 30 பேர் காயமடைந்தும் இருக்கிறார்கள். தொழில்ரீதியாக எந்தப் பிரச்சினையும் இல்லாதவராக அறியப்பட்ட இந்த மனநல மருத்துவரின் தாக்குதல் இந்த வாரம் ‘பெரியண்ணன்' வீட்டில் நடந்த மிகவும் பரபரப்பான சம்பவமாக அமைந்திருக்கிறது. அதுவும் சுட்டவர் முஸ்லிமாக வேறு போய்விட்டதால் முஸ்லிம்கள் மீதான தாக்குதல்கள் ஏதாவது நடக்கலாம் என அஞ்சுவதாக ஒபாமா தெரிவித்திருக்கிறார். (இவனே ஐடியா கொடுக்கிறான்). இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணைகள் நடந்து வருகின்றன. ஹசன் சமீபத்தில்தான் இந்த முகாமுக்கு மாற்றலாகி வந்தார் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. முதலில் இது ஒரு பெரிய தாக்குதல் என்பதாக அறிவிக்கப்பட்டிருந்த போதும், பின்னர் இது ஹசான் தன்னிச்சையாக ஈடுபட்ட ஒரு தாக்குதல் என்று அறிவித்திருக்கிறார்கள். ஐக்கிய அமெரிக்காவின் மிகப்பெரிய இராணுவ முகாமான Fort Hood இல் நடந்த இந்தத் தாக்குதல், அமெரிக்க-முஸ்லீம் உறவுகளில் இன்னும் பாரிய விரிசலை உருவாக்கும் என்பதுமட்டும் நிச்சயம். வணிகம்-பொருளாதாரம்-தொழில்நுட்பம் ஏறுமுகத்தில் போய்க்கொண்டிருந்த கனேடியப் பொருளாதாரத்துக்கு இந்த வாரம் வெளியான அறிக்கைகள் பேரிடியாக அமைந்திருக்கின்றன. புதிதாக வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படாவிடினும், வேலைகள் இழக்கப்படமாட்டாது என பெரிதும் எதிர்வுகூறப்பட்ட ஒக்ரோபர் மாதத்தில்கூட, கனடாவிலும் அமெரிக்காவிலும் பலர் வேலையிழந்திருக்கிறார்கள். அதுவும் அமெரிக்காவில் கடந்த 26 வருடங்களில் மிகவும் அதிகமான வேலையிழப்பு வீதம் ஒக்ரோபரில் பதியப்பட்டிருப்பது, பொருளாதார மீள்வு பற்றிய சந்தேகங்களை எழுப்பியிருக்கிறது. இதன் காரணமாகக் கொஞ்ச நாட்களாக வெகுவேகமாக ஏறிவந்த கனேடிய டொலரின் மதிப்பும் கொஞ்சம் ஆட்டம் கண்டிருக்கிறது. விளையாட்டு அவுஸ்திரேலியா-இந்தியா ஒரு நாள் தொடர் விறுவிறுப்பாகப் போய்க்கொண்டு இருக்கிறது. 9 முக்கிய வீரர்கள் இல்லாமல் விளையாடும் அவுஸ்திரேலியா ஐந்து போட்டிகள் முடிந்த நிலையில் 3-2 என்று முன்னிலை வகிக்கிறது. டெல்லியில் நடந்த மூன்றாவது போட்டியில் இந்தியா 6 விக்கெட்டுகளால் வெற்றி பெற, அடுத்த போட்டியில் 24 ஓட்டங்களால் போராடி வென்றது அவுஸ்திரேலியா. ஐந்தாவது போட்டியில் முதலில் ஆடி அருமையாக 350 ஓட்டங்களைக் குவித்த போதும், லீ, சிடில், பிராக்கன், ஜோன்சன் போன்ற முன்னணிப் பந்துவீச்சாளர்கள் இல்லாமல் களமிறங்கிய அவுஸ்திரேலியாவை 175 ஓட்டங்கள் அடித்துத் துவம்சம் செய்தார் சச்சின். இருந்தபோதும் கடைசிவரை நின்று அவர் வெற்றியைப் பெற்றுத்தரமுடியாமல் போக, அவுஸ்திரேலியா 3 ஓட்டங்களால் வென்றது. இந்த 175 இல் 7வது ஓட்டம், சச்சின் பெற்ற 17,000 வது ஓட்டம் என்பதும் குறிப்பிடத்தக்கது. இன்னும் 59 ஓட்டங்கள் பெற்றால் சர்வதேசக் கிரிக்கெட் போட்டிகளில் 30,000 ஓட்டங்களைக் குவித்த முதல் வீரர் என்ற பெருமையும் இவர் வசமாகிவிடும். (சச்சின் விளையாடிய ஒரேயொரு சர்வதேச 20-20 போட்டியையும் சேர்த்தால் இன்னும் 49 ஓட்டங்களே தேவை). இதே வேளை அடுத்த ஐ.பி.எல் போட்டிகளின் கொல்கத்தா நைற் ரைடேர்ஸ் அணிக்குத் தலைவராக சவ்ரவ் கங்கூலி திரும்பவும் நியமிக்கப்பட்டிருக்கிறார். டேவிட் வற்மோர் பயிற்றுவிப்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறார். பாகிஸ்தான் வீரர்கள் ஐ.பி.எல். லில் விளையாட அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். ஐ.பி.எல்-1 ல் கடைசி இடம் பிடித்த டெக்கான் அணி ஐ.பி.எல்-2 ஐ வென்றது போல், ஐ.பி.எல்-2 ல் கடைசியாய் வந்த நைற் ரைடேர்ஸ் அடுத்த ஐ.பி.எல். லில் சாதிப்பார்களா? சினிமா-பொழுதுபோக்கு நடிகர் சூர்யா ஒரு சிங்கள இயக்குனரின் படத்தில் நடிக்கவிருப்பதாக வெளிவந்த செய்திகள் சினிமா வட்டாரத்தில் பரபரப்பைக் கிளப்பியிருக்கின்றன. ஆனால் இது தொடர்பாக சூர்யா ஒரு மறுப்பு அறிக்கை வெளியிட்டு, அப்படியான ஒரு படத்தில் தான் நடிக்கவில்லை என உறுதி செய்திருக்கிறார். சூர்யா அப்படி நடித்தால்கூட அது பற்றியெல்லாம் சண்டைபோடுவது முட்டாள்தனம் என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து. அப்படிப் பார்க்கப்போனால் சூர்யா முதலான எல்லா நடிகர்களும் தமிழைத் தவிர வேறு எந்த மொழிப் படத்திலும் நடிக்கவே கூடாது என்பதாகத்தான் போராடவேண்டும் என்பது என்னுடைய பார்வை. ஒருவர் தன் வாழ்வியல் ஆதாரமாக, சட்டத்துக்குட்பட்டு எதையும் செய்யலாம். அதைத் தடுப்பது அராஜகம். அதைவிடப் பரபரப்புக்காக இப்படியான பொய்ச் செய்திகளை விடுப்பது ஊடக விபசாரம். பாவம் சூர்யா, கொஞ்சக் காலமாகவே அவருக்கும் ஊடகங்களுக்கும் ஒத்துப்போவதேயில்லை. ஒரு புரிதல் இலங்கையில், அதுவும் முக்கியமாக யாழ்ப்பாணத்தில் 'தலித்துக்கள்' எங்கே இருக்கிறார்கள் என்பது எனக்கு இதுநாள்வரை புரிந்ததில்லை. ஆனால் சமீபத்தில் அதுபற்றிய ஒரு தெளிவு பிறந்திருக்கிறது. தலித்துக்கள் என்று சொல்லாவிட்டாலும், அவர்களை சாதிப் பெயர்களை நேரடியாகச் சொல்லி ஒதுக்கி வந்திருக்கிறார்கள் யாழ்ப்பாணத்தில். யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த நாட்களை நினைத்துப் பார்க்கையில் தலித்துகள் மீதான வன்கொடுமைகள் ஆற்றியவர்களில் முதலிடத்தில் இருப்பவர்களில் யாழ்ப்பாணத்துச் சாதி வேளாளர்களும் முக்கியமானவர்கள் என்கிற மறுக்கமுடியாத உண்மை உறைக்கிறது. (தலித்துக்கள் பற்றிய தேடலைத் தூண்டியது சயந்தனின் இந்த வலி). இது பற்றி இன்னும் நிறைய எழுதவேண்டும். இடுகையிட்டது Unknown நேரம் 6:12:00 pm 8 comments: சுட்டிகள் அரசியல், தொழில் நுட்பம், நான் பார்க்கும் உலகம், பொருளாதாரம், விளையாட்டு Tuesday, 3 November 2009 மரணத்தின் வாசனை- ஒரு அறிமுகம் அகிலனின் மரணத்தின் வாசனை கனடாவில் வெளியிடப்பட்டு, அது என்னுடைய கையுக்குக் கிடைத்து 2 மாதங்களுக்கு மேலாகிவிட்ட நிலையில் ஒருவாறு வாசித்து முடித்திருக்கிறேன். 'போர் தின்ற சனங்களின் கதை' என்கிற உபதலைப்போடு, வடலி பதிப்பகத்திடமிருந்து வெளியாகியிருக்கிற அகிலனின் பன்னிரண்டு சிறுகதைகள் அல்லது அனுபவத் தூறல்களின் தொகுப்புத்தான் ‘மரணத்தின் வாசனை'. ஒரு சின்னப்பையனின் அப்பா செத்துப்போனார் ஒரு ஊரில் ஓர் கிழவி மந்திரக்காரன்டி அம்மான்டி குமார் அண்ணாவும் மிளகாய்க்கண்டுகளும் ஒருத்தீ சித்தி நீ போய்விட்ட பிறகு சலனங்கள் அற்றவனின் கடைசி நாள் தோற்ற மயக்கங்களோ கரைகளிற்கிடையே செய்தியாக துயரமாக அரசியலாக நரைத்த கண்ணீர் மேற்சொன்ன தலைப்புகளில் படைக்கப்பட்டிருக்கிற படைப்புகள் அத்தனையிலும் ஒரேயொரு ஒற்றுமை இருக்கிறது. அது ‘மரணத்தின் வாசனை'. முதலில் வருகிற ‘ஒரு சின்னப்பையனின் அப்பா செத்துப்போனார்' கதையில் நாசி துளைக்கிற அந்த வாசம், அம்மம்மா, சித்தி, நண்பன் தொடக்கம் நேசித்த நாய் எனப் பல தாங்கிகளில் வந்தாலும் புத்தகத்தை மூடிவைத்த பின்னரும் விலகாமல் இருக்கிறது. எல்லா மரணங்களுக்கும் பொதுவான ஒரே விஷயமாக இருப்பது, போர். நீண்ட கொடும் போர். மண்ணில் மரங்களைக்கூட வேரூன்றவிடாமல் விரட்டியடிக்கிற போர். சனங்களைத் தின்கிற போர். அந்தப் போரின் காரணமாக அகிலனும் முண்டியடித்து ஓடுகிறார். அந்த ஓட்டத்தில் அவர் சந்திக்கிற சாவுகள்தான் இங்கே கதைகளாக உருப்பெற்றிருக்கின்றன. பல சமயங்களில் நாங்கள் மறந்துபோய்விட்ட, அல்லது மறந்துபோய்விட்டதாய் நாங்கள் நம்ப முயன்றுகொண்டிருக்கிற எங்களின் வாழ்வியல்க் கோலங்களை அகிலன் தொட்டுச்செல்கிறார், கூடவே பக்கச்சார்பு குறைவான ஒரு சாதாரண ‘தமிழ்ப் பொடியன்' கண்ட அரசியலையும்தான். அகிலனின் ஒவ்வொரு கதையிலும் ஈழத்தில் ஒரு இருபது வருடம் காலம் கழித்தவன் என்கிற ஒரு தகுதியில், என்னை இணைத்துப் பார்க்க முடிகிறது. அகிலன் போன்றோர் அனுபவித்த துயரங்களை நான் அனுபவித்திருக்கவில்லை. ஆனாலும் அவர் சொல்கிற கதைகளின் பின்னணிகள் என்னுடன் ஒட்டியதாய் இருப்பதாக ஒரு மன ஓட்டம் எழுவதைத் தவிர்க்கமுடியவில்லை. அகிலன் அனுபவித்த பல இன்பதுன்பங்கள் எனக்கு நேரடியாகக் கிட்டவில்லை. ஆனால் ஒரு பார்வையாளனாகவாவது பார்க்கின்ற சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது. அகிலன் இரண்டுபேரை வைத்தியம் கிடைக்காத காரணத்தால் இழந்திருக்கிறார். அவரது அப்பா, வைத்தியசாலைக்குக் கொண்டுபோகமுடியாமல் இறந்திருக்கிறார். (ஒரு சின்னப் பையனின் அப்பா செத்துப்போகிறார்). இளமையில் அப்பா செத்துப்போனார் என்பதைவிட, ‘அப்பா வைத்தியம் கிடைக்காமல் செத்துப்போனார்' என்கிற ஒரு அங்கலாய்ப்பு அகிலனிடமிருந்து வருகிறது. அவரது சித்திகூட இப்படியாக வைத்தியசாலையில் மருந்து கிடைக்காமல் செத்துப்போகிறார். அந்த மரணமும் அகிலனின் மனதில் ‘சித்தி மருந்து கிடைக்காமல் செத்துப்போனா' என்றுதான் விதைத்துச் செல்கிறது. எனக்கும் கிளிநொச்சி வைத்தியசாலையில், விசக்கடியில் தப்பிப் பிழைத்து, காய்ச்சலுக்கு மருந்தில்லாமல், இரண்டு வயதும், ஒரு வயதும் நிரம்பிய இரண்டு சின்னைப் பையன்களைத் தவிக்கவிட்டு இறந்துபோன ஸ்ரீ அண்ணா மனதில் வந்து போகிறார். கணவன்/காதலனால் கைவிடப்பட்டு அல்லது ஏமாற்றப்பட்ட இரண்டு பெண்களைப் பற்றியும் அகிலன் சொல்லிப்போகிறார் (ஒரு ஊரில் ஓர் கிழவி, சித்தி). அந்தப் பெண்களிடம் இயல்பாகத் தொற்றிவிட்ட பிடிவாதம் போன்றவற்றையும் தொட்டுச்செல்கிறார். அதுவும் யார் வீட்டிலும் நிலையாகத் தங்காமல், அங்கும் இங்குமாக அலைபாய்ந்து திரிகிற, உறவினர்களால் ‘அடங்காப்பிடாரி'யாகப் பார்க்கப்படுகிற அவரது 'சித்தி'யின் உருவில் நான் என்னுடைய மாமியைப் பார்க்கிறேன். அம்மனுடன் சகோதரியாக, தாயாக, மகளாக ஏன் ‘வேசை' என்று விளிக்குமளவு உரிமையுள்ளவளாகப் பழகும் அவரின் அம்மம்மா (ஒரு ஊரில் ஓர் கிழவி) எனக்கு எங்களூர்க் கிழவிகள் சிலரைக் கண்முன் நிறுத்துகிறார். அம்மாவிடம் அடிவாங்காமல் சின்னப் பொடியனைக் காப்பாற்றும் அக்காக்கள் ஊரெல்லாம் பரவி இருந்திருக்கிறார்கள். தம்பிகளைப் பிள்ளைகளாய் வளர்க்கும் அந்த உறவுகளைப் பற்றிய எண்ணக் குவியல்களை மீட்டு வருகின்றன அக்காக்கள் பற்றி பெரும்பாலான கதைகளிலும் அகிலன் காட்டும் பிம்பங்கள். அவர் சொல்கிற ஜாம் பழம், வீரப்பழம் போன்ற பழங்கள் எனக்கு எங்கள் உறவுகள் இருந்த முரசுமோட்டையை ஞாபகப்படுத்திச் செல்கின்றன. எங்கள் சின்ன மாமா வீட்டில் ஒரு ஜாம் பழ மரம் இருந்தது. ராஜி அண்ணா ஏறிப் பறித்துத் தருவான். மறக்கமுடியாது. அந்த மரத்தின் கீழ் முதன் முதலாக சின்ன மாமாவிடம் கேட்டுவாங்கிச் சுவைத்த சுருட்டையும். நேமி அண்ணாவின் கையைப் பிடித்துக்கொண்டு போய் வந்த அந்தக் கோவில் திருவிழா, எனக்கு அருகில் வந்து அடிப்பதுபோல் பாவனை காட்டிக் காட்டி மேளம் அடித்த அந்த மேளக்காரர், ஒரு கட்டைக்கு ஒன்றாக இருக்கிற வீடுகள், 2004ல் கிரிக்கெட் விளையாடிய அந்த விவேகானந்தாப் பள்ளிக்கூட மைதானம், இவ்வளவு தூரம் அடிக்கிறியள் என்று வியந்த பெறாமக்கள், இரவில் படுத்துறங்கிய அந்தக் கொட்டில்..... முற்றுமுழுதாக வன்னியில் வாழாவிட்டாலும், அவர்களின் இந்த வாழ்வியல் எனக்குப் பிடித்திருந்தது. யாழ்ப்பாணத்தில் காணாத ஒரு சுகமான வாழ்வு அங்கே இருந்தது. இந்தத் தொகுப்பிலேயே என்னைப் பாதித்த கதை ‘தோற்ற மயக்கங்களோ'. மேலோட்டமாகப் பார்த்தால் அந்தக் கதையில் மரணம் இல்லையோ என்று தோன்றும். ஆனால், நுண்ணிய பாதிப்பைத் தரவல்ல இரண்டு ஜீவன்களின் மரணத்தை அகிலன் அந்தக் கதையில் படம்பிடித்திருந்தார். அவர் செல்லப் பிராணிகளுக்கு வைத்த பெயர்கள், அதை எங்கிருந்து பெற்றார் என்பதெல்லாம் எங்கள் பால்யகாலச் சுவாரஸ்யங்கள். நானும் ‘டெவில்' என்றொரு நாயை பாலில் எறும்பெல்லாம் போட்டு ஊட்டி வளர்த்தேன். என் ‘டெவிலை'யும் யுத்தம் பிரித்தது, வேறுவிதமாக. அகிலனின் எழுத்தில் ஒரு அப்பாவித்தனம் இழையோடிக் கிடக்கிறது. அந்த அப்பாவித்தனம்தான் அவரது பலமும், பலவீனமும். இப்படி அப்பாவித்தனமான எழுத்துக்களை ‘மேதாவிகள்' ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். இதனால் அகிலனின் இந்தப் படைப்பு ஒதுக்கப்படலாம், இன்றைய மேதாவி இலக்கியச் சூழலில். ஆனாலும், அந்த அப்பாவித்தனத்தினூடே ஊமைக் குசும்பனாக அவர் பேசும் அரசியல் எனக்குப் பிடித்திருந்தது. நண்பன் ஒருவனின் மரணம் பற்றிய ‘சலனங்கள் அற்றவனின் கடைசி நாள்' என்கிற கதையில் அவரது நண்பன் கேசவன் போர் காரணமாக ஆறு வருடங்களாக இடுப்புக்குக் கீழ் இயங்காமல் போய் இறந்திருப்பான். அந்தக் கதையில் சில இடங்களில் அகிலன் நுட்பமாக அரசியல் பேசுகிறார். இடுப்புக்குக் கீழே உணர்ச்சியற்றிருக்கும் கணவர்களைச் சுமக்கும் அக்காமார்களின் ‘தியாகம்' என்று கட்டமைக்கப்பட்ட வாழ்வைத் தொட்டுக்காட்டி, பல விஷயங்களை எங்களின் சிந்தனைக்கு விட்டுச்செல்கிறார். ஆறு வருடமாகப் படுக்கையில் கிடந்த கேசவனின் மரணத்தில், அவனது அவஸ்தையிலிருந்தான விடுதலை பற்றிய தனது நிம்மதியைப் பதிவு செய்யும் அதேவேளை, ‘இனியும் கேசவன்கள் உருவாகமாட்டார்கள் என்பதற்கு என்ன நிச்சயம் என்கிற கேள்வி மனசைக் குடைகிறது. துப்பாக்கிகளைத் துதிப்பவர்களுக்குத் தெரியாதபோது எனக்கெப்பிடித் தெரிந்திருக்கும்?' என்கிற கேள்வியோடு அவர் அந்தக் கதையை முடித்திருக்கிற விதம், வலிமை மிகுந்தது. அதே போல் ‘துப்பாக்கிகளில் நல்ல துப்பாக்கி கெட்ட துப்பாக்கி எனப் பிரிவுகள் இருப்பதாக நம்புகிறார்கள் மொக்குச் சனங்கள். துப்பாக்கிக்குத் தெரிந்ததெல்லாம் கொலை. அது மட்டும்தான்' என அவர் சொல்லிச் செல்லுகிற அந்தச் செய்தி கவனிக்கப்படவேண்டியது (கரைகளுக்கிடையே). அகிலனின் எழுத்துக்களில் குறை இல்லாமலில்லை. தொழில் முறை எழுத்தாளர்களின் எழுத்துக்களோடு ஒப்பிடும்போது சில கதைகளில் அகிலனின் எழுத்தின் செழுமை குறைவாகவே இருப்பதாகப்படும் (என்னால் இந்தளவுகூட எழுதமுடியாது என்பது வேறு விஷயம்). ஆனால் எழுத எழுத அகிலனின் எழுத்து இன்னும் செழுமை பெற்று வீரியமாக வரும் என்பதில ஐயமில்லை. ஏனென்றால் 'ஆக்க இலக்கியங்கள்' உருவாவதற்கு அத்தியாவசியம் என்று மெலிஞ்சி முத்தன் சொல்லும் ‘சூழலை உற்றுப் பார்க்கிற' தன்மையும், சுஜாதா சொன்ன ‘காரணங்களும்' அகிலனுக்கு இருக்கின்றன. களம் கிடைத்தால் அகிலன் அடித்து ஆடுவார் என்பது திண்ணம். பதிப்பகம் வடலி பதிப்பகம் மேற்கொண்ட ஒரு நல்ல முயற்சி இது. சமீபகாலமாகத்தான் இவர்கள் இந்தத் துறைக்குள் காலடிவைத்திருக்கிறார்கள். ஈழத்துப் படைப்பாளிகளுக்குப் புத்தகம் அடித்துக்கொடுப்பதில் இருக்கிற பொருளாதாரச் சிக்கல்கள் இவர்களை விழுங்கிவிடாமல் இருக்கவேண்டும் என்பதுதான் இவர்களின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல். அச்சுக்கோர்ப்பு ரீதியாக முன்னேறுகிறார்கள். கானா பிரபாவின் ‘கம்போடியா' சிறப்பான அச்சுக்கோப்பு அல்ல. ‘மரணத்தின் வாசனை' கூட அவ்வளவு சிறந்த ஒன்றாகச் சொல்லமுடியாவிட்டாலும், ‘கம்போடியாவை' விட நன்றாக வந்திருந்தது. சமீபத்தில் வெளியான கே.எஸ்.பாலச்சந்திரனின் ‘கரையைத் தேடும் கட்டுமரங்கள்' அற்புதமாக வந்திருக்கிறது. வடலி சரியான திசையில் போகிறது, என்ன எம்மவரிடம் இருந்து ஆதரவேதும் பெரியளவில் இல்லை என்கிற குறைதான் இவர்கள் நிலைத்து நிற்பதில் பெரும் சிக்கல்களை உருவாக்கியிருக்கிறது. சின்னச் சர்ச்சை ட்விட்டரில் இந்தப் பதிப்பைத் திறந்தவுடனே ஒரு குறை கண்டதாகச் சொல்லியிருந்தேன். சாயினி கூடக் குறை காண்பது பற்றி ஒரு மறைமுகக் குத்துக் குத்தியிருந்தார். தொப்பி அளவாயிருந்ததால் போட்டுக்கொண்டேன் :). அந்தக் குறை இதுதான். 'சொல் விளக்கக் குறிப்புகள்' எதற்காக? வணிக ரீதியான சில நோக்கங்களுக்காகத்தானே. அதாவது இந்தப் படைப்பு இயலுமானளவு பெரியதொரு வீச்சத்தைக் கொண்டிருக்கவேண்டும் என்கிற நோக்கத்தால்தானே? இதுவும் ஒரு வகையிலான பெரியண்ணன்களைக் குசிப்படுத்தும் நோக்கம் இல்லையா? (தொப்பி அளவானவர்கள் போட்டுக்கொள்ளலாம்)
மறைந்த நடிகர் காக்கா ராதாகிருஷ்ணன் தன்னுடைய வாழ்நாளில் இதுவரை கிட்டத்தட்ட 600 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார். மேடை கலைஞராக இருந்த இவர் தான் நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு நாடகத்தில் நடிக்க வாய்ப்பு வாங்கி கொடுத்தவர். குணச்சித்திர வேடங்களில் நடித்து கொண்டிருந்த இவர் பின்னர் காமெடி காட்சிகளிலும் நடித்தார். காதலுக்கு மரியாதை: 1997 ஆம் ஆண்டு இயக்குனர் ஃபாசில் இயக்கத்தில் வெளியான திரைப்படம் காதலுக்கு மரியாதை. இந்த படத்தில் காக்கா ராதாகிருஷ்ணன் காமெடி கேரக்டரில் நடித்திருந்தார். தாமு, சார்லி, விஜய்யுடன் இணைந்து நடித்த காமெடி காட்சிகள் ரசிக்கும்படியாக இருக்கும். Also Read: எல்லாத்துலயும் மூக்கை நுழைக்கும் கமல்.. ஹேண்டில் பண்ண முடியாமல் வெறுத்த பாலா மிடில் கிளாஸ் மாதவன்: இயக்குனர் டி. பி. கஜேந்திரன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் மிடில் கிளாஸ் மாதவன். இந்த படத்தில் ஏற்கனவே வடிவேலு மற்றும் விவேக்கின் காமெடிகள் வயிறு குலுங்க சிரிக்கும்படி இருக்கும். இதில் விவேக்கின் தாத்தாவாக வரும் காக்கா ராதாகிருஷ்ணன் அவருடைய பங்குக்கு சிறப்பாக நடித்திருப்பார். மாயி: சரத்குமார், மீனா நடித்த மாயி திரைப்படம் 2000 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன திரைப்படம். வடிவேலு மற்றும் கோவை சரளா காமெடியில் காக்கா ராதாகிருஷ்ணனும் இணைந்து கலக்கி இருப்பார். வடிவேலுவுடன் நடித்த நகைச்சுவை காட்சிகளில் வடிவேலுவையே மிஞ்சி இருப்பார். வசூல்ராஜா எம்பிபிஎஸ்: இயக்குனர் சரண் இயக்கத்தில் 2004 ஆம் ஆண்டு கமல், பிரபு, சினேகா நடித்த படம் வசூல்ராஜா எம்பிபிஎஸ். இந்த படத்தில் காக்கா ராதாகிருஷ்ணன் கிரேசி மோகனின் தந்தையாக நடித்திருப்பார். இரண்டு காட்சிகளில் வந்தாலும் மனதில் நின்று இருப்பார். Also Read: ரஜினிக்கு 3 பெக்கில் ஏறாத போதை.. தெளிய தெளிய அடித்த கமல் கதாபாத்திரம் உனக்காக எல்லாம் உனக்காக: இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் முழு நீள நகைச்சுவை திரைப்படமாக 1999 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன திரைப்படம் உனக்காக எல்லாம் உனக்காக. இதில் காக்கா ராதாகிருஷ்ணன் வினு சக்கரவர்த்தியின் அப்பாவாக நடித்திருப்பார். கவுண்டமணியின் காம்போவில் இவர் நடித்த காமெடி காட்சிகள் இன்றும் ரசிக்கும்படி இருக்கும். தேவர் மகன்: கமலஹாசன் எழுதி, தயாரித்து, நடித்த திரைப்படம் தேவர் மகன். இந்த படத்தில் சிவாஜியின் சகோதரராக காக்கா ராதாகிருஷ்ணன் நடித்திருப்பார். இதில் அவருக்கு சிவாஜியின் மீது தீராத பகை இருக்கும். முதன்முறையாக இவர் வில்லன் கேரக்டரில் நடித்திருப்பார். கிளைமாக்ஸ் காட்சியில் படம் பார்ப்பவர்களை அழ வைத்திருப்பார். Also Read: இரண்டரை கோடியை தூக்கி கொடுத்த உதயநிதி.. கட்சிக்கு நிதி வேண்டாம் என மெய்சிலிர்க்க வைத்த கமல் Continue Reading Related Topics:vijay, இன்றைய சினிமா செய்திகள், கமல், கமல்ஹாசன், கவுண்டமணி, காதலுக்கு மரியாதை, கோவை சரளா, சரத்குமார், சினிமா செய்திகள், சினேகா, சிவாஜி கணேசன், சுப்ரீம் ஸ்டார் சரத்குமார், தமிழ் சினிமா, தமிழ் படங்கள், தளபதி விஜய், தாமு, தேவர் மகன், நடிகர் விவேக், பிரபு, மீனா, வடிவேலு, விவேக், வைகைப்புயல் வடிவேலு
கேரட் மிகவும் மலிவாக எளிதில் கிடைக்கும் காய்களில் ஒன்றாகும். அதிக நன்மைகள் நிறைந்த கேரட் அனைவராலும் விரும்பி உண்ணும் சுவை நிறைந்த காயாகும். நாம் அனுதினமும் பயன்படுத்தும் … Read more நெல்லி பொடி நெல்லி பொடி பயன்கள் நெல்லியில் இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ் போன்ற தாதுக்கள் அதிக அளவில் நிறைந்துள்ளதால் இது இரத்த சோகைக்கு நல்ல மருந்தாகும். நெல்லியில் அறுசுவையில் உப்பு … Read more முடக்கத்தான் பொடி முடக்கத்தான் பொடி பயன்கள் முடக்கத்தான் முடக்கு அறுத்தான் என்பது நாளடைவில் முடக்கற்றான் என்றானது. கசப்புத் தன்மையுடைய முடக்கத்தான் முடக்கு வாத நோய்களை குணமாக்குவதால் முடக்கத்தான் என்று பெயர் … Read more கரிசலாங்கண்ணி பொடி கரிசலாங்கண்ணி பொடி பயன்கள் கரிசலாங்கண்ணி அதிக அளவில் மருத்துவ குணங்கள் நிறைந்த மூலிகையாகும். இதில் எக்லிப்டால், டெஸ்மீத்தைல், அக்கோண்டனால், ஹென்ட்ரை, ஸ்டிக்மாஸ்டீரால், தங்கச்சத்து, இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் … Read more ஆவாரம் பூ பொடி ஆவாரம்பூ பொடி பயன்கள் ஆவாரம்பூ துவர்ப்புத் தன்மை உடையது. இதில் தங்கச்சத்து நிறைந்துள்ளது. ஆவாரம் பூ பொடியை தினமும் ஒரு டீஸ்பூன் அளவு சாப்பிட்டு வர சர்க்கரை … Read more கஸ்தூரி மஞ்சள் பொடி கஸ்தூரி மஞ்சள் பொடி பயன்கள் கஸ்தூரி மஞ்சள் முக அழகு சாதன பொருட்களில் ஒன்றாகும். இது அனைத்து வகை சருமத்திற்கும் கேடு விளைவிக்காத அலர்ஜி எதிர்ப்பு தன்மை … Read more எலுமிச்சை தோல் பொடி பயன்கள் எலுமிச்சை தோல் பொடியினைக் கொண்டு ஃபேஸ் பேக் முதல் பாதத்திற்கு அழகு தரும் பெடிக்யூர் வரை பயன்படுத்தலாம். எலுமிச்சை தோலில் அதிக அளவு கலோரிகள், கார்ப்ஸ், நார்ச்சத்து, … Read more ஆரஞ்சு தோல் பொடி ஆரஞ்சு தோல் பொடியின் பயன்கள் ஆரஞ்சு தோலில் அதிகளவு ஆன்டி ஆக்ஸிடன்டுகள் நிறைந்துள்ளது. இது இயற்கை அழகை விரும்பும் பெண்களுக்கு மிகச் சிறந்த அழகு சாதன பொருளாகும். … Read more முருங்கை இலை பொடி முருங்கை இலை பொடி பயன்கள் முருங்கையில் விட்டமின்கள், மினரல், அமீனோ ஆசிட்கள், வைட்டமின் சி, கால்சியம், பொட்டாசியம் மற்றும் புரோட்டின் போன்ற ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளது. 10 கிராம் … Read more மருதாணி பொடி மருதாணி பொடி பயன்கள் மருதாணி பொடியானது இளநரையை தடுக்க அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். இதனுடன் அவுரி பொடியை சேர்த்து பயன்படுத்தும் போது நம் கூந்தலுக்கு ஏராளமான நன்மைகள் … Read more ரோஸ் பொடி ரோஸ் பொடியின் பயன்கள் ரோஜாவிற்கு இயற்கையாகவே சருமத்தின் நிறத்தை கட்டுப்படுத்தும் தன்மை உள்ளது. ரோஜாவில் அதிகளவு வைட்டமின் சி நிறைந்துள்ளது. இது நல்ல ஆன்டி-ஆக்ஸிடன்ட் ஆகும். ரோஜா … Read more மண் சிகிச்சை மண்ணின் மகத்துவத்தை அறிந்து அதில் உள்ள மருத்துவ குணங்களை கொண்டு மண் சிகிச்சை முறைகளை சித்த மருத்துவர்கள் கூறியுள்ளனர். பழங்காலங்களில் அனைத்து கிராமங்களிலும் மண் சிகிச்சை முறைகளை … Read more முகத்தில் உள்ள கருமை நீங்க வேண்டுமா? முக அழகு என்பது அனைவரும் விரும்பும் ஒன்றாகும். அதிலும் பெண்கள் முகத்தில் ஏதேனும் ஒரு சிறு பரு வந்தாலும் மிகவும் வேதனைப்படுவர். அநேக பெண்கள் வெள்ளை நிறத்தில் … Read more சர்க்கரை நோயில் இருந்து ஆரம்பத்திலேயே தப்பித்துக்கொள்ள… சர்க்கரைக்கேற்ற முருங்கை சர்க்கரை நோய் சர்க்கரை நோய் இன்றைய காலத்தில் அதிகளவில் காணப்படும் நோயாகும். நம் உடலில் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ … Read more உடலுக்குத் தேவையான வைட்டமின்கள் புழுக்கமான சீதோஷ்ண நிலை பெரும்பாலும் மே, ஜுனில் காணப்படுகிறது. வறட்சியான ஈரப்பதம் ஃபுளூ காய்ச்சலுக்கு ஈடான உடல் நலக் கோளாறுகளை ஏற்படுத்துகிறது. மூக்கடைப்பு, டான்சில், குரல் வளை … Read more
சிங்கப்பூர் சுகாதார அமைச்சின் பத்து சிரேஷ்ட அதிகாரிகள் குழுவொன்று நேற்று (22) இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர். 4,000 இலங்கை தாதியர்களை அடுத்த வருடம் ஆட்சேர்ப்பு செய்வது தொடர்பில் ஆராய அவர்கள் இலங்கை வந்துள்ளனர். 20 வருடங்களின் பின்னர், சிங்கப்பூரில் உள்ள சுகாதாரத் துறைகளில் இலங்கை தாதியர்களுக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. சிங்கப்பூரில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தின் தொழிலாளர் மற்றும் நலன்புரித் தலைவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இந்த விடயத்தை தெரிவித்தார். சிங்கப்பூர் சுகாதார அதிகாரிகள் குழு சிங்கப்பூரிலிருந்து நேற்று இரவு 11.30 மணியளவில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் SK-468 இல் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது
பயனீட்டாளர் பெயர் : மாணவர் அடையாள இலக்கம் (முன்னணி பூஜ்ஜியங்கள் இல்லாமல்) அல்லது அங்கத்தவர் அடையாள இலக்கம் (4 இலக்கங்கள் வரை) கடவுச்சொல் : உங்கள் இலங்கை தேசிய அடையாள அட்டை (NIC) இலக்கத்தின் முதல் நான்கு இலக்கங்கள் அல்லது நிறுவனத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட உங்கள் கடவுச்சீட்டு இலக்கம் இரண்டுமே இல்லாத பட்சத்தில் தயவுசெய்து உங்கள் தேசிய அடையாள அட்டை இலக்கம் அல்லது கடவுச்சீட்டு இலக்கத்தைக் குறிப்பிட்டு மாணவர்களைப் பதிவுசெய்யும் பிரிவிற்கு அல்லது அங்கத்தவர் பிரிவிற்கு கணனிமூல விசாரணையொன்றை அனுப்பவும். << விசாரணையொன்றை அனுப்ப இங்கே சொடுக்கவும் >> நீங்கள் உங்கள் கடவுச்சொல்லை மறந்திருப்பின் தயவுசெய்து "கடவுச்சொல் மீட்டமைப்பு" பட்டனை அழுத்தி கடவுச்சொல்லை மீட்டமைக்கவும் << கடவுச்சொல் மீட்டமைப்பு கோரிக்கையை உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு சமர்ப்பிக்க இங்கே சொடுக்கவும் >> நான் ஒரு மாணவர் நான் ஒரு அங்கத்தவர் நிறுவனம் கடவுச்சொல் உங்கள் சுயவிபரம் புதுப்பிக்கப்படுகின்றது. தயவு செய்து தாவலை மூட வேண்டாம்... நீங்கள் முதல்முறையாக புகுபதிவதானால் தயவுசெய்து உங்களை பதிவுசெய்வதற்கு இங்கே சொடுக்கவும் நீங்கள் உங்கள் கடவுச்சொல்லை மறந்திருப்பின் தயவுசெய்து "கடவுச்சொல் மீட்டமைப்பு" பட்டனை அழுத்தி கடவுச்சொல்லை மீட்டமைக்கவும்
ஒரு டீ-ஷர்ட் 16 ஆயிரம் ரூபாய் என்றால் நீங்கள் வாங்குவீர்களா? ஏன் அவ்வளவு ரூபாய்க்கு அதை வாங்க வேண்டும்? அப்படி என்ன அதில் இருக்கிறது. இந்த டீ-ஷர்ட்டை நீங்கள் அணிந்திருந்து உங்களை யார் கத்தியால் எவ்வளவு கடினமாக குத்தினாளும் அந்தக் டீ ஷர்ட் உங்களைக் காப்பாற்றி விடும். British Armour என்கிற கம்பெனி இந்த டீ-ஷர்ட்டை தயாரித்துள்ளது. இதை டீ-ஷர்ட்டை எப்படி உருவாக்கியுள்ளார்கள் என்று பார்த்தால் இதை மிகவும் வலிமையான Carbon Fibreகளை வைத்து உருவாக்கியுள்ளனர். கத்தியை வைத்து எவ்வளவு கடினமாக குத்தினாலும் இந்த டீ-ஷர்ட் உங்களைக் காப்பாற்றி விடும். இதன் விலை 16 ஆயிரம் முதல் 19 ஆயிரம் வரை உள்ளதாக கூறப்படுகிறது. இதுவரை Bullet Proof என்னும் ஆடைதான் துப்பாக்கி குண்டில் இருந்து மனிதனை காப்பாற்றிக்கொள்ள உருவாக்கப்பட்ட கருவியாக இருந்தது. தற்போது சாதாரணமாக மனிதர்கள் அணியும் டீ-ஷர்ட் கத்திக்குத்தில் இருந்து காப்பாற்றும் அளவிற்கு வடிவமைக்கப்பட்ட விஷயம் மிகவும் பாராட்டக்கூடியது. Categories Entertainment News Tags 16 thousand t-shirt, British Armour, T-shirt, What is the price of a t-shirt 16 thousand rupees ..!, என்னது ஒரு பணியனின் விலை 16 ஆயிரம் ரூபாயா..! Tesla Baby பற்றி உங்களுக்கு தெரியுமா..! குளிர் காலத்தை கூட சந்தோஷமாக கொண்டாடும் அரேபியர்கள்..! Recent Posts Why is Crypto the biggest solution For our problems? United States Dollar மதிப்பு என்ன ? புஷ்பா தி ரூல் நாளை பூஜை விழாவுடன் தொடங்குகிறது:- படத்தின் இணை தயாரிப்பாளராக ரெட் ஜெயண்ட் மூவிஸ் கைகோர்த்து வரும் நிலையில், துருவ நட்சத்திரம் விரைவில் வெளிவரவுள்ளது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப் 4 தேர்வில் நடந்துள்ள முறைகேடு சம்பவம் தமிழகம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 1 ஆம் தேதி தமிழகம் முழுவதும் குரூப் 4 பதவிகளில் அடங்கிய பணிகளுக்கான எழுத்து தேர்வு நடைபெற்றது. இதற்கான தரவரிசை பட்டியல் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வெளியிடப்பட்டது. அதில், ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம்(1606), கீழக்கரை (1608) ஆகிய மாவட்டத்தைச் சேர்ந்த தேர்வு மையங்களில் தேர்வு எழுதியவா்களில் மாநில அளவில் 40 பேர் முதல் 100 இடங்களில் முன்னிலை பிடித்தனர். சமூக இடஒதுக்கீடு ரீதியாக முன்னிலை பெற்றவர்களும் இந்த இரு தேர்வு மையங்களிலேயே தேர்வு எழுதியுள்ளனர். ஒரே மாவட்ட தேர்வு மையங்களில் முறைகேடு நடந்துள்ளதாக தேர்வர்கள் குற்றம்சாட்டினர். இது பெரும் சா்ச்சையை ஏற்படுத்தியது. கீழக்கரை மையங்களில் தேர்வு எழுதியவர்களில் பெரும்பாலானவர்கள் வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என்றும், வெளி மாவட்டங்களில் இருந்து வந்து தேர்வு எழுதியவர்களில் முதல் 100 இடங்களில் முன்னிலை பெற்றிருப்பதும், 15 பேர் மாநிலங்கள் அளவில் முதல் 15 இடங்களில் தேர்ச்சி பெற்றிருப்பது பிற தேர்வு மையங்களில் தேர்வு எழுதியவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் முதல் 40 பேரையும் நேரடியாக அழைத்து விசாரணை நடத்த முடிவு செய்த தோ்வாணையம், சம்பந்தப்பட்ட தோ்ச்சி பெற்ற நபா்களுக்கு கடிதம் அனுப்பியது. அதன்படி, தரவரிசையில் மாநில அளவில் முதல் சுமாா் 40 பேரிடம், கடந்த கடந்த 13 ஆம் தேதி நடைபெற்ற விசாரணையில் சம்பந்தப்பட்ட தேர்வர்கள் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர். இந்நிலையில், குரூப் 4 தேர்வில் நடைபெற்ற முறைகேடு புகார் எதிரொலியாக சர்ச்சைக்குரிய 9 தேர்வு மையங்கள், ராமேசுவரம் பகுதியில் 5 தனியார் பள்ளிகள், ஒரு தனியார் பாலிடெக்னிக் கல்லூரி உள்ளிட்ட தேர்வு மையங்களை டிஎன்பிஎஸ்சி அதிரடியாக ரத்து செய்து நேற்று உத்தரவிட்டது. மேலும் தேர்வாணையம் நடத்திய விசாரணையில் முறைகேடு நடந்திருப்பது உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியானது. இதனை தொடர்ந்து தேர்வாணையம் அளித்த புகாரின் அடிப்படையில் குரூப் 4 முறைகேடு குறித்து சிபிசிஐடி போலீஸார் இன்று வெள்ளிக்கிழமை (ஜன.24) விசாரணையை தொடங்கியுள்ளனர். முதற்கட்டமாக ராமேசுவரம் வட்டாட்சியர் பார்த்தசாரதி, கீழக்கரை வட்டாட்சியர் சிக்கந்தர் பபிதா ஆகிய இருவரிடம் சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்களிடம் ராமேசுவரம், கீழக்கரை மையங்களில் குரூப் 4 தேர்வெழுதியவர்கள் முதன்மை பெற்றது எப்படி என இருவரிடம் விசாரணை தொடங்கிய சிபிசிடி போலீஸார், அவர்கள் இருவரையும் சென்னைக்கு அழைத்து வந்து சிபிசிஐடி அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில், குரூப் 4 தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டதாக ராமேசுவரம், கீழக்கரை தேர்வு மையங்களில் தேர்வு எழுதிய தேர்வர்கள் 99 பேரை தகுதிநீக்கம் செய்து உத்தரவிட்ட தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி), அவர்களுக்கு வாழ்நாள் தடை விதித்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. முதல் 100 இடங்களில், முறைகேட்டில் ஈடுபட்ட 39 பேருக்கு பதில் வேறு 39 நபர்கள் புதிதாக தேர்வு செய்யப்படுள்ளதாகவும், இதுதொடர்பாக புதிய பட்டியல் வெளியிடவும் டிஎன்பிஎஸ்சி முடிவு செய்துள்ளது. மேலும், தேர்வுப்பணியில் ஈடுபட்டிருந்த அலுவலர்களுக்கும், இடைத்தரகர்களுக்கும் தொடர்பு உள்ளது எனவும், தேர்வுப்பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் துணையுடன் விடைத்தாள்கள் மாற்றப்பட்டுள்ளதாகவும், முறைகேடு செய்தவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. குரூப் 4 முறைகேடு நடந்தது எப்படி? இந்த முறைகேடு எப்படி நடந்துள்ளது என்ற விசாரணையில் பல அதிர்ச்சியளிக்கக் கூடிய விசித்திரமான தகவல் வெளியாகி உள்ளது. மேற்கண்ட 2 தேர்வு மையங்களில் தேர்வு எழுதிய 99 இடைத்தரகர்களின் ஆலோசனைப்படி, பேப்பரில் எழுதியவுடன் சிலமணி நேரங்களில் மறையக்கூடிய சிறப்பு மையிலான பேனாவை பயன்படுத்தி தேர்வர்கள் தேர்வு எழுதியது அம்பலமாகி உள்ளது. தேர்வுப்பணியில் ஈடுபட்டிருந்த 52 பேரின் துணையுடன் இவர்கள் முறைகேட்டில் ஈடுபட்டு உள்ளனர். தேர்வு முடிந்ததும் இடைத்தரகர்கள் தேர்வுப்பணியில் ஈடுபட்டு இருந்த 52 பேர் உதவியுடன் அந்த விடைதாள்களை எழுத்து மறையக்கூடிய மையினால் எழுதிய விடைகளை திருத்தி உள்ளனர். பின்னர் அதே விடைத்தாள் கட்டுகளில் சேர்த்து வைத்து அனுப்பியுள்ளனர். இதன்படியே 39 தேர்வர்கள் முதல் 100 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளனர். இத்தேர்வு குறித்து தேர்வாணையம் சம்பந்தப்பட்ட அனைத்து ஆவணங்களையும் தீவிர ஆய்வு செய்தும், சம்பந்தப்பட்ட தேர்வுக்கூடங்கள் மற்றும் கருவூலங்களைக் கள ஆய்வு செய்தும், தேர்வுப்பணியில் ஈடுபட்டிருந்த அலுவலர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட தேர்வர்களிடம் நேரடி விசாரணை செய்ததன் அடிப்படையில் மேற்கண்ட தவறுகள், ராமேசுவரம் மற்றும் கீழக்கரை ஆகிய மையங்களில் மட்டுமே இந்த முறைகேடு நடைபெற்று உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. வேறு எந்த மையங்களிலும் எந்த தவறும் நடைபெற வில்லை என டிஎன்பிஎஸ்சி உறுதியாக தெரிவித்துள்ளது. சம்மந்தப்பட்ட தேர்வர்கள் மற்றும் இடைத்தரகர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ள முதல் தகவல் அறிக்கை செய்யப்பட்டுள்ளது. வரும்காலங்களில் எவ்விதமான தவறுகளும் நிகழாவண்ணம் தேர்வு நடைபெறும் முறையில் தேவையான சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாக டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. டிஎன்பிஎஸ்சி நடத்தும் தேர்வுகள் மீது நம்பிக்கை ஏற்படுத்தப்பட வேண்டியது தான் அவசர, அவசியம் என்றாலும் தொடர்ந்து இதுபோன்ற முறைகேடுகள் நடந்து வருவது உண்மையாக தேர்வுக்கு படிப்பவர்கள் மத்தியில் பெரும் அச்சத்தையும், கவலையும் ஏற்படுத்தியுள்ளது. இனி வரும் காலங்களில் முறைகேடுகள் இல்லாத, நியாயமான தேர்வுகள் நடைபெறுவதை தமிழக அரசு உறுதி செய்யுமா? என்ற எதிர்பாப்பும் எழுந்துள்ளது. வாழ்நாள் முழுவதும் தேர்வு எழுத தடை குரூப் 4 தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டதாக 99 தேர்வர்களை டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் தகுதிநீக்கம் செய்தனர். ராமேஸ்வரம், கீழக்கரை மையங்களில்தேர்வு எழுதிய 99 பேருக்கு வாழ்நாள் முழுவதும் தேர்வு எழுத தடைவிதிக்கப்பட்டுள்ளது. தரவரிசைப் பட்டியலில் வந்துள்ள 39 தேர்வர்களுக்கு பதில் தகுதியான வேறு 39 பேரை டிஎன்பிஎஸ்சி தேர்வு செய்துள்ளது. v அழையக்கூடிய மை இடைத்தரகர்கள் அளித்த, அழையக்கூடிய மை கொண்ட பேனாவால் தேர்வர்கள் தேர்வை எழுதியுள்ளனர். விடைகளை குறித்துத்தந்ததும் சில மணி நேரங்களில் அவை அழியக்கூடிய மையில் தேர்வர்கள் தேர்வெழுதினர். தேர்வு பணி ஊழியர்கள் துணையோடு, இடைத்தரகர்கள் சரியான விடையை விடைத்தாளில் எழுதியுள்ளனர். இவ்வகையில் குரூப் 4 தேர்வில் மோசடி நடைபெற்றுள்ளது. தொடர் விசாரணை 14 லட்சம் பேர் எழுதிய குரூப் 4 தேர்வில் முறைகேடு நடந்திட்டிருப்பதை அடுத்து இதனை சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர். கீழக்கரை, உள்பட 9 மையங்களில் தேர்வு எழுதியவர்கள், பணியில் இருந்தவர்களை விசாரிக்க முடிவு செய்துள்ளது. Tags: Government Government Job Government Order Group I Group II Group IV Tamilnadu Teacher அறிவிப்பு போட்டித்தேர்வு
இந்த வகைமைக்குள் வரும் பதிவுகளைப் படிக்க இங்கே க்லிக் செய்யவும் அரசாணைகள்/ஆவணங்கள்/கடிதங்கள், கரோனா பெருந்தொற்று காலம், சவால்முரசு மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு எளிதில் நோய்த்தொற்று பாதிக்கக்கூடும் என்பதால் அவர்களை பள்ளிக்கு அனுமதிக்காமல் இணையவழி மாற்றுவழிக்கற்றல் முறையில் ஈடுபடுத்தலாம். கூகுல் செய்திகளில் எம்மைப் பின்தொடர மாற்றுத்திறனாளிகள் நலத்துறை லோகோ தமிழகத்தில் கரோனா பெருந்தொற்று நாளுக்குநாள் அதிகரித்துவரும் நிலையில், விடுதியுடன் இயங்கும் சிறப்புப்பள்ளிகள் மற்றும் மறுவாழ்வு இல்லங்களுக்கான கோவிட் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆணையரகம் வெளியிட்டுள்ளது. ஆணையரகத்தால் வெளியிடப்பட்டுள்ள செயல்முறை நடவடிக்கைகளில் கூறப்பட்டுள்ளதாவது, “தமிழ்நாட்டில் நிலவிவரும் கொரோனா பெருந்தொற்று மூன்றாவது அலை காரணமாக அனைத்து மாவட்டத்திலும் மாற்றுத்திறனாளிகள் தங்கியிருக்கும் சிறப்புப்பள்ளிகள் மற்றும் இல்லங்களில், மாணவர்கள் மற்றும் இல்லவாசிகளுக்கு கொரோனா பெருந்தொற்று பரவுவதைத் தவிர்க்கும் பொருட்டு நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் கீழ் கண்டவாறு தெரிவிக்கப்படுகிறது. சோடியம் ஹைப்போகுளோரைட் கரைசல் தெளித்து ஏற்கனவே அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி வளாகம் மற்றும் தளவாட பொருட்கள், கைப்பிடிகள், கதவுகள், ஜன்னல்கள் போன்றவற்றை சுத்தம் செய்து கிருமி நீக்கம் செய்ய வேண்டும். 2 கைகளைச் சுத்தம் செய்வதற்கு சோப்பினைக்கொண்டு குழாய்களில் ஓடும் நீரில் நன்கு கழுவுதல் வேண்டும். கைகளைச் சுத்தம் செய்யும் கிருமி நாசினி (Hand Sanitizer) பயன்பாட்டிற்கு வைக்கப்பட்டிருக்க வேண்டும். 3. சிறப்புப்பள்ளிகள் மற்றும் மறுவாழ்வு மையங்களின் வளாகத்திற்குள் அனைத்துப் பகுதிகளிலும் மக்கள் அனைவரும் முகக்கவசம் அணிவது கட்டாயமாகும். முகக்கவசங்களை அடிக்கடி தொடுவது தவிர்க்கப்படவேண்டும். முகக்கவசங்களை மற்றவர்களுடன் பரிமாரிக்கொள்ளக்கூடாது. சுவாச ஒழுங்குமுறை பற்றி மாற்றுத்திறனாளிகளுக்குக் கற்றுத்தரவேண்டும். 4. சிறப்புப்பள்ளிகள் மற்றும் மறுவாழ்வு மையங்களின் நுழைவு வாயில், வெளியேறும் இடங்கள் மற்றும் தேவைப்படும் இடங்களில் ஆல்கஹால் கலந்த கிருமிநாசினி/சோப்புகள் வைக்கப்பட்டு கை கழுவும் வசதிகள் செய்யப்பட வேண்டும். 5. உடல்வெப்பப் பரிசோதனைக் கருவிகள் (Thermal Scanner), கிருமிநாசினிகள், சோப்புகள், பல்ஸ் ஆக்ஸிமீட்டர்கள் (Pulse Oximeter) போன்ற பொருட்கள் சிறப்புப்பள்ளி மற்றும் மறுவாழ்வு இல்லங்களில் உறுதி செய்யப்பட வேண்டும். 6. கழிப்பறைகள் முறையாகக் கிருமிநாசினியால், சுத்தம் செய்யப்பட்டு பராமரிக்கப்பட வேண்டும். 7. பெருந்தொற்றின் காரணமாக ஆசிரியர்கள் பணியாளர்கள் தொட்டுணர் வருகைப்பதிவிற்கு (Biometric) பதிலாக, சிறப்புப்பள்ளி நிர்வாகத்தால் தற்காலிக மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். 8. மாநில அரசின் அவசர உதவி எண். மற்றும் உள்ளூர் சுகாதார அதிகாரிகள், நடமாடும் மருத்துவக் குழுக்களின் தொலைபேசி எண்கள் பார்வையில் படக்கூடிய இடங்களில் வைக்கப்பட வேண்டும். 9. சிறப்புப்பள்ளி மாணவர்கள் , இல்லவாசிகள் வகுப்பறைக்கு மறுவாழ்வு மையத்திற்கு வெளியே சுற்றித்திரிதல் தவிர்க்கப்பட வேண்டும். 10. சிறப்புப்பள்ளி மாணவர்கள், இல்லவாசிகள் சமூக இடைவெளிக்கான விதிமுறைகளைப் பின்பற்றி குறைந்தபட்சம் 6 அடி சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும். 11 கூட்ட நெறிசலுக்கு வழிவகுக்கும் இறைவணக்கக் கூட்டம், விளையாட்டு நிகழ்ச்சிகள் மற்றும் கலாச்சார நிகழ்வுகள் தவிர்க்கப்பட வேண்டும். 12. வகுப்பறைகள், நூலகங்கள், கழிவறைகள், கை கழுவும் இடங்கள், குடிநீர்ப்பகுதிகள், சமையலறை, அரங்குகள், பேருந்துகள் வண்டிகள் நிறுத்துமிடம், நுழைவுவாயில் மற்றும் வெளியேறும் வழிகள் போன்ற இடங்களில் சமூக இடைவெளியைப் பின்பற்றுவதை நினைவுபடுத்தும் வகையில் சுவரொட்டிகள், குறியீடுகள் போன்றவை வைக்கப்பட வேண்டும். 13. ஆசிரியர்கள், பெற்றோர்கள், பணியாளர்கள் மற்றும் சிறப்புப்பள்ளி மறுவாழ்வு மைய தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் குழு உறுப்பினர்கள் இணைய வழி, நேரடிமுறைகள், துண்டுப்பிரசுரங்கள், கடிதங்கள், கிராமங்கள் மற்றும் நகர்புறத்தில் வார்டு அலுவலகத்தில் உள்ள ஒலிப்பெருக்கிகள் மூலம் கோவிட்-19 நோய் தன்மையை உணர்ந்து செய்யக்கூடிய மற்றும் செய்யக்கூடாதவைகளை விளக்கிக்கூற வேண்டும். 14. தனிமனித சுகாதாரம் தனிமனித ஆரோக்கியம் மற்றும் தூய்மையான சீருடையின் அவசியம் குறித்து மாற்றுத்திறனாளிகளுக்கு அவர்தம் பெற்றோகள், உயர் அதிகாரிகள் விளக்கிக்கூற வேண்டும். 15. மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு எளிதில் நோய்த்தொற்று பாதிக்கக்கூடும் என்பதால் அவர்களை பள்ளிக்கு அனுமதிக்காமல் இணையவழி மாற்றுவழிக்கற்றல் முறையில் ஈடுபடுத்தலாம். 16. சிறப்புப்பள்ளி மாணவர்கள் இல்லவாசிகள் பணியாளர்களுக்கு உடல்வெப்பப் பரிசோதனை செய்யும்போது இருமல் சளி மற்றும் மூச்சுத்திணறல் போன்ற பிற அறிகுறிகளும் உள்ளனவா என்பதை ஆய்வு செய்தல் வேண்டும். இவ்வறிகுறிகள் ஒரு நபருக்கு இருக்குமேயானால் அவரை தனிமைப்படுத்த வேண்டும். அருகில் உள்ள சுகாதாரப்பணியாளருக்குத் தெரிவிக்கப்பட வேண்டும். சிறப்புப்பள்ளி, மறுவாழ்வு மையம் முழுவதும் கிருமிநாசினியால் சுத்தம் செய்யப்பட வேண்டும். 17. பாடப்புத்தகங்கள், குறிப்பேடுகள், பென்சில், பேனா, உணவு, தண்ணீர் பாட்டில் போன்றவைகளை இல்லவாசிகள் பகிர்தல் கூடாது. 18. சிறப்புப்பள்ளிகள் மற்றும் மறுவாழ்வு மையங்களில் சுகாதாரமான முறையில் சமைத்த சுத்தமான, சத்தான நோய் எதிர்ப்புத்திறன் கொண்ட உணவுகள் வழங்கப்பட வேண்டும். உணவு வழங்கும் இடங்களிலும், உண்ணும் இடங்களிலும் கூட்ட நெரிசல்களைத் தவிர்க்க வேண்டும். 19. சிறப்புப்பள்ளி மற்றும் மறுவாழ்வு மையங்களில் தேவையற்ற பார்வையாளர்களின் நுழைவு தவிர்க்கப்பட வேண்டும். 20. 15 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் (மாற்றுத்திறனாளிகள் மற்றும் பணியாளர்கள்) கொரோனா தடுப்பூசி (100%) செலுத்திக்கொள்வதை உறுதி செய்துகொள்ள வேண்டும். 21 மாற்றுத்திறனாளிகளின் உணர்வு சார்ந்த பிரச்சனைகளைக் கவனித்துக்கொள்வதற்கு மனநல மருத்துவர் உளவியல் நிபுணர் ஆலோசகர் முறையாக வருவதை உறுதி செய்ய வேண்டும்.”. என மாற்றுத்திறனாளிகள் நலத்துறையால் வெளியிடப்பட்டுள்ள நிலையான வழிகாட்டு நெறிமுறைகளில் (SOP) தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு எளிதில் நோய்த்தொற்று பாதிக்கக்கூடும் என்பதால் அவர்களை பள்ளிக்கு அனுமதிக்காமல் இணையவழி மாற்றுவழிக்கற்றல் முறையில் ஈடுபடுத்தலாம் என்கிற கருத்து பள்ளித் தலைமை ஆசிரியர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. எதிர்வரும் 19ஆம் தேதி 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு திருப்புதல் தேர்வு தொடங்க உள்ளதால், பொங்கல் விடுமுறைக்கு தங்களின் சொந்த ஊர்களுக்குச் சென்றுள்ள மாணவர்களைத் திரும்ப அழைத்துக்கொள்வதா அல்லது வீட்டிலிருந்தபடியே அவர்களை இணையவழிக் கற்றலில் ஈடுபடுத்துவதா என்ற கேள்வி சிறப்புப்பள்ளித் தலைமை ஆசிரியர்களிடையே எழுந்துள்ளது. நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பதிவிறக்க: பகிர #covid sop #SOP by commissionerate for differently abled #கரோனா நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் Post navigation Previous: வரலாற்றை மீட்டெடுக்கிற தோழர்களின் முயற்சி: நன்றிகளும் வாழ்த்துகளும் பாராட்டுகளும் Next: செய்திக்கொத்து 15/01/2022 Be the first to leave a comment உங்கள் கருத்தை உள்ளிடுங்கள் Cancel reply மேலும் சில அண்மைப் பதிவுகள் நேர்படப்பேசு, நீதிக்கான மன்றாட்டு! ‘கண் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட 4 லட்சத்து 39 ஆயிரத்து 315 பேருக்கான ஓய்வூதியம், ரூ.1,000-ல் இருந்து ரூ.1,500-ஆக உயர்வு’ மாற்றுத்திறனாளிகள் தினத்தில் முதல்வர் அறிவித்தார் சவால்முரசு ஒருங்கிணைக்கும், தமிழ்நாடு பார்வையற்றோர் சங்கத்தின் துணைத்தலைவர் மறைந்த செல்வி. ஏ. ராஜேஸ்வரி அவர்களுக்கான நினைவேந்தல் கூட்டம் நன்றி ஜூனியர் விகடன் 07.12.2022: பரிதவிக்கும் பார்வையற்ற அரசுப் பள்ளி மாணவர்கள்… நடவடிக்கை எடுப்பாரா முதலமைச்சர்..? தமிழ்நாடு பார்வையற்றோர் சங்கத்தின் துணைத்தலைவர் ராஜேஷ்வரி மறைந்தார் சவால்முரசு காணொளிகள் சவால்முரசு வழங்கும், சகாக்கள்: எழுத்தாளர் திரு. நிர்மல் அவர்களுடன் ஓர் கலந்துரையாடல் பார்வையற்ற இசைக்கலைஞனின் உயரிய கனவு நிறைவேறுமா? சவால்முரசு நேர்காணல்: நேத்ரோதயா வழக்கும் உயர்நீதிமன்ற தீர்ப்பின் பின்னணியும் கைகளால் பேசிய காலத்தின் நினைவுகள் - முனைவர் கு. முருகானந்தன் தமிழக அரசின் புதிய கல்விக்கொள்கை உருவாக்கத்தில் பார்வையற்றோர் தொடர்பான பரிந்துரைகள் பதிவுகளின் வகைமைகள் Categories Select Category 30 செப்டம்பர் 2020 31 அக்டோபர் 2020 accessibility achievers agitation AICFB announcements announcements of district collectors arts arunachalam assistance association letters association statements ATM autism balanagendiran banking books braille braille education braille education in general schools budget 20 – 21 tamilnadu budget 20 21 budget 2019 – 20 bus pass CCPD cinema civil service cochlear implant common voice compensation computerlabs condolence corona corona assistance corona schemes court crime csgab differently abled commissioner differently abled department differently abled education differently abled news differently abled rally differently abled teacher disabled news editorial editorials education election 2019 emagazine employment training for VI examinations from the magazine gomathi kuppusami Government Orders/letters/documents Govt. policies affected differently abled gowthami guidelines for scribe system helenkeller association helpline important programs inclusive education interviews jeyabalan kalaignar news kaviya kindle law livelihood manifestos for differently abled muthusami national education policy draft 2019 national ID card naveenkumar new education policy news about association online business online learning oviya P.K. Pincha para-sports news personalities poorana sundari praveena varatharajan PTFB railway relief pension results rights sacrifice savaalmurasu scholarship scribe seminar series sivakumar society special schools sports text thoughts tit bits Uncategorized unicode upsc viralmozhiyar white cane day zoom conference அஞ்சலி அணுகல் அனுபவம் அரசாணைகள் அறிவோம் அரசாணைகள்/ஆவணங்கள்/கடிதங்கள் அரசின் செய்திக்குறிப்புகள் அரசியல் அறிவிப்புகள் ஆட்டிசம் ஆன் சலிவன் மேசி ஆளுமைகள் இதழிலிருந்து இரங்கல் இருட்டை விரட்டும் அரட்டை இருளைப் போக்குகிறதா திரைவெளிச்சம் 2.0 இலக்கியம் உதவிகள் உரிமை கரோனா பெருந்தொற்று காலம் கலை கல்வி காணொளிகள் குற்றம் கோரிக்கைகள் சட்டம் சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை சவால்முரசு சினிமா சிறப்புப் பள்ளிகள் சுற்றுச்சூழல் செய்திகள் செய்திக்கொத்து செஸ் தமிழக அரசு தமிழகத் தேர்தல் 2021 தமிழ்நாடு பிரெயில் செஸ் அசோஷியேஷன் தொடர் தொழில்நுட்பம் நகைச்சுவை நம்பிக்கை குரல் நிதிநிலை அறிக்கைகள் நினைவலைகள் 2021 நினைவுகள் பயிலரங்குகள்/கூடுகைகள் பின்னூட்டம் பேட்டிகள் மகளிர் மருத்துவம் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை முக்கிய சுட்டிகள் முன்றில் வகைப்படுத்தப்படாதது வரலாறு வழக்குகள் வாக்கெடுப்பு வாசகர் பக்கம் விளையாட்டு வெண்கோல் வெளிச்சம் பாய்ச்சுவோம் வேலைவாய்ப்பு Email Address எம்மைப் பின்தொடர நமக்கான ஊடகம், நமக்கு நாமே ஊடகம் சவால்முரசு தளத்தில் வெளியாகும் பதிவுகளைப் பகிரும்போது, தளத்தின் இணைப்பை இணைத்துப் பகிர்வது கட்டாயம். மேலதிக விவரங்களுக்கு தளத்தின்
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, முன்னாள் நிதி அமைச்சர்கள் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பசில் ராஜபக்ஷ ஆகியோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள இரண்டு அடிப்படை உரிமை மனுக்களை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் இன்று (06) அனுமதி வழங்கியுள்ளது.ஞ தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு காரணமானவர்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு அரசாங்கத்திற்கு உத்தரவிடுமாறு கோரி இவர்களுக்கு எதிராக குறித்த இரண்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் சந்திரா ஜயரத்ன, நீச்சல் சாம்பியன் ஜூலியன் போலிங் உள்ளிட்டோரால் அதில் ஒரு அடிப்படை உரிமை மனு சமர்ப்பிக்கப்ட்டிருந்ததுடன், மற்றைய மனுவை திறந்த பல்கலைக்கழக விரிவுரையாளர் பேராசிரியர் மஹீம் மெண்டிஸ் உள்ளிட்ட குழுவினர் தாக்கல் செய்திருந்தனர். இதன்படி, சமர்ப்பிக்கப்பட்ட அடிப்படை உரிமை மனுக்கள், பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான ஐவரடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு முன்னிலையில் இன்று பரிசீலிக்கப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. Videos play பிம்ஷானியை அவரது பதவியில் இருந்து நீக்க முயற்சிக்கும் பொலிஸ் மா அதிபரின் வெள்ளை மற்றும் கருப்பு மகன்கள்!
حَدَّثَنِي أَبُو غَسَّانَ الْمِسْمَعِيُّ، حَدَّثَنَا مُعَاذٌ، – يَعْنِي ابْنَ هِشَامٍ – حَدَّثَنِي أَبِي، عَنْ قَتَادَةَ، حَدَّثَنَا أَنَسُ بْنُ مَالِكٍ :‏ أَنَّ نَبِيَّ اللَّهِ صلى الله عليه وسلم وَأَصْحَابَهُ بِالزَّوْرَاءِ – قَالَ وَالزَّوْرَاءُ بِالْمَدِينَةِ عِنْدَ السُّوقِ وَالْمَسْجِدِ فِيمَا ثَمَّهْ – دَعَا بِقَدَحٍ فِيهِ مَاءٌ فَوَضَعَ كَفَّهُ فِيهِ فَجَعَلَ يَنْبُعُ مِنْ بَيْنِ أَصَابِعِهِ فَتَوَضَّأَ جَمِيعُ أَصْحَابِهِ ‏.‏ قَالَ قُلْتُ كَمْ كَانُوا يَا أَبَا حَمْزَةَ قَالَ كَانُوا زُهَاءَ الثَّلاَثِمِائَةِ ‏ وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا سَعِيدٌ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ بِالزَّوْرَاءِ فَأُتِيَ بِإِنَاءِ مَاءٍ لاَ يَغْمُرُ أَصَابِعَهُ أَوْ قَدْرَ مَا يُوَارِي أَصَابِعَهُ ‏.‏ ثُمَّ ذَكَرَ نَحْوَ حَدِيثِ هِشَامٍ ‏ நபி (ஸல்) அவர்களும் அவர்களுடைய தோழர்களும் (ஒரு முறை) ‘அஸ்ஸவ்ரா’ எனுமிடத்தில் இருந்தார்கள். -அஸ்ஸவ்ரா என்பது மதீனாவின் கடைத்தெருவுக்கும் மஸ்ஜிதுந்நபவீ பள்ளிவாசலுக்கும் அருகில் இருந்த ஓர் இடமாகும்- அப்போது நபி (ஸல்) (உளூச் செய்வதற்காகப்) பாத்திரத்தைக் கொண்டுவரச் சொன்னார்கள். அதில் சிறிது நீர் இருந்தது. பிறகு அப்பாத்திரத்தினுள் தமது கையை வைத்தார்கள். அப்போது அவர்களுடைய விரல்களுக்கிடையிலிருந்து நீர் சுரக்கலாயிற்று. (அங்கிருந்த) நபித்தோழர்கள் அனைவரும் அதிலிருந்து உளூச் செய்தனர். அறிவிப்பாளர் : அனஸ் பின் மாலிக் (ரலி) குறிப்புகள் : நான் அனஸ் (ரலி) அவர்களிடம், “அபூஹம்ஸா! அவர்கள் (மொத்தம்) எத்தனை பேர் இருந்தனர்?” என்று கேட்டேன். அதற்கு அனஸ் (ரலி), “சுமார் முந்நூறு பேர் இருந்தனர்” என்று பதிலளித்தார்கள் என்று இந்த ஹதீஸின் அறிவிப்பாளர்களுள் ஒருவரான கத்தாதா (ரஹ்) கூறுகின்றார். ஸயீத் (ரஹ்) வழி அறிவிப்பு, “நபி (ஸல்) (மதீனாவிலுள்ள) ‘அஸ்ஸவ்ரா’ எனுமிடத்தில் இருந்தார்கள். அப்போது அவர்களிடம் அவர்களின் விரல்களை(முக்கினால் அவற்றை)க்கூட மறைக்காத அளவுக்கு, (அ) விரல்களை மட்டுமே மறைக்கும் அளவுக்கு (சிறிது) நீர் இருந்த (சிறிய) பாத்திரம் ஒன்று கொண்டுவரப்பட்டது …” என்று ஆரம்பமாகிறது. மற்ற தகவல்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன. ← முந்தைய ஹதீஸ்அத்தியாயம்: 43, பாடம்: 3, ஹதீஸ் எண்: 4214 அடுத்த ஹதீஸ் →அத்தியாயம்: 43, பாடம்: 3, ஹதீஸ் எண்: 4216 SatyaMargam ↓ விரும்பும் பாடம் செல்ல… ↓ விரும்பும் பாடம் செல்ல… Select Category 43.37 நபி (ஸல்) அவர்களைக் கண்ணியப்படுத்துவதும் … (8) 43.36 நபி (ஸல்) அவர்களைப் பின்பற்ற வேண்டியது (முஸ்லிம்களின்) கட்டாயக் கடமையாகும் (1) 43.35 நபி (ஸல்) அவர்களின் அல்லாஹ்வைப் பற்றிய அறிவும் அவனைப் பற்றிய கடுமையான அச்சமும் (2) 43.34 நபி (ஸல்) அவர்களின் பெயர்கள் (3) 43.33 நபி (ஸல்) மக்காவிலும் மதீனாவிலும் எத்தனை ஆண்டுகள் வாழ்ந்தார்கள்? (8) 43.32 நபி (ஸல்) இறந்தபோது அவர்களுக்கு வயது எத்தனை? (2) 43.31 நபி (ஸல்) அவர்களின் உடலமைப்பு; நபியாக அனுப்பப்பெற்றது; அவர்களின் வயது (1) 43.30 நபி (ஸல்) உடலில் நபித்துவ முத்திரை … (3) 43.29 நபி (ஸல்) அவர்களின் தலைநரைமுடி (10) 43.28 நபி (ஸல்) அவர்களின் வெண்ணிறமும் களையான முகமும் (2) 43.27 நபி (ஸல்) அவர்களின் வாய், கண்கள், குதிகால்கள் ஆகியவை (1) 43.26 நபி (ஸல்) அவர்களது தலைமுடியின் தன்மை (3) 43.25 நபி (ஸல்) அவர்களின் உருவத் தோற்றம் … (3) 43.24 நபி (ஸல்) தமது தலைமுடியை … (1) 43.23 நபி (ஸல்) அவர்களுக்கு வேத அறிவிப்பு வரும்போது … (4) 43.22 நபி (ஸல்) அவர்களது வியர்வையின் நறுமணமும் அதன்மூலம் வளம் ஏற்பட்டதும் (3) 43.21 நபி (ஸல்) அவர்களின் மேனியில் கமழ்ந்த நறுமணம் … (3) 43.20 நபி (ஸல்) பாவங்களை விட்டு வெகு தொலைவில் விலகியிருந்தது … (3) 43.19 நபி (ஸல்), மக்களுடன் நெருங்கிப் பழகியதும் அவர்களிடமிருந்து மக்கள் வளம் பெற்றதும் (3) 43.18 மனைவியர்மீது நபி (ஸல்) காட்டிய அன்பும் … (4) 43.17 நபி (ஸல்) அவர்களின் புன்னகையும் அழகிய உறவாடலும் (1) 43.16 நபி (ஸல்) அவர்களின் நாண மிகுதி (2) 43.15 நபி (ஸல்) குழந்தைகள் மீதும் குடும்பத்தார் மீதும் காட்டிய அன்பு … (5) 43.14 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வேண்டப்பட்ட எந்த ஒன்றுக்கும் அவர்கள் “இல்லை” என்று சொன்னதேயில்லை … (5) 43.13 அல்லாஹ்வின் தூதர் (ஸல்), மக்களிலேயே மிகவும் அழகான … (5) 43.12 மக்களிலேயே நபி (ஸல்), தொடர்ந்து வீசும் (மழைக்) காற்றைவிட … (1) 43.11 நபி (ஸல்) அவர்களின் வீரமும் அறப்போருக்காக அவர்கள் முன்னே சென்றதும் (2) 43.10 உஹுதுப் போர் நாளில் நபி (ஸல்) … (2) 43.9 நம் நபி (ஸல்) அவர்களுக்கு (மறுமையில் ‘அல்கவ்ஸர்’) தடாகம் உண்டு … (20) 43.8 உயர்ந்தோன் அல்லாஹ் ஒரு சமுதாயத்தின்மீது அருள் புரிய நாடினால் … (1) 43.7 நபி (ஸல்), இறுதி இறைத் தூதர் என்பது பற்றிய குறிப்பு (4) 43.6 நபி (ஸல்), தம் சமுதாயத்தார் மீது கொண்டிருந்த பரிவும் … (4) 43.5 நபி (ஸல்), நேர்வழியுடனும் ஞானத்துடனும் அனுப்பப் பெற்றதற்கான உவமை (1) 43.4 அல்லாஹ்வையே முழுமையாக நபி (ஸல்) சார்ந்திருந்ததும் … (1) 43.3 நபி (ஸல்) அவர்களின் அற்புதங்கள் (7) 43.2 எல்லாப் படைப்புகளையும்விட நம் நபி (ஸல்) அவர்களின் சிறப்பு (1) 43.1 நபி (ஸல்) அவர்களின் தலைமுறையின் சிறப்பும் … (2) 42.4 நபி (ஸல்) கண்ட கனவு (6) 42.3 கனவுக்கு விளக்கமளித்தல் (1) 42.2 ஷைத்தான் கனவில் விளையாடியது குறித்து … (3) 42.1 கனவில் என்னைக் கண்டவர் … (4) 42.01 கனவுகள் (11) 41.2 பகடை விளையாட்டு, தடை செய்யப்பட்டதாகும் (1) 41.1 கவிதைகள் (9) 40.5 நறுமணப் பொருட்களில் மிகவும் சிறந்த கஸ்தூரியைப் பயன்படுத்துவது … (4) 40.4 ஒருவர், ‘கபுஸத் நஃப்ஸீ’ (என் மனம் அசுத்தமாகிவிட்டது) எனும் சொல்லை … (2) 40.3 ‘அப்து’ (அடிமை ஆண்), ‘அமத்து’ (அடிமைப் பெண்), ‘மவ்லா’/’ஸய்யித்’ (அடிமையின் உரிமையாளர்) ஆகிய சொற்களின் சட்டம் (3) 40.2 திராட்சையை, “கர்மு / கண்ணியம்” என்று பெயரிட்டழைப்பது … (7) 40.1 காலத்தை ஏசுவதற்குத் தடை (5) 39.41 விலங்குகளுக்கு நீர் புகட்டுவதின், உணவளிப்பதின் சிறப்பு (3) 39.40 பூனைகளைக் கொல்வதற்குத் தடை (2) 39.39 எறும்புகளைக் கொல்லத் தடை (3) 39.38 பல்லியைக் கொல்வது நல்லது (5) 39.37 பாம்பு போன்ற விஷ ஜந்துகளைக் கொல்வது (13) 39.36 தொழுநோயாளிகள் போன்றோரிடம் நெருக்கம் தவிர்ப்பது (1) 39.35 சோதிடர்களிடம் செல்வதும் சோதிடம் பார்ப்பதும் (5) 39.34 பறவை சகுனம், நற்குறி, துர்குறி பற்றிய பாடம் (11) 39.33 இல்லாத சகுனங்களும் தொற்றுநோய்களும் (6) 39.32 கொள்ளைநோய், பறவை சகுனம், சோதிடம் போன்றவை (8) 39.31 தேனூட்டு மருத்துவம் (1) 39.30 ‘தல்பீனா‘, நோயாளியின் மனத்துக்கு(ம் உடலுக்கும்) தெம்பு அளிக்கக்கூடியதாகும் (1) 39.29 கருஞ்சீரக மருத்துவம் (2) 39.28 இந்தியக் கோஷ்டக் குச்சியால் சிகிச்சையளிப்பது (2) 39.27 நோயாளிக்கு வற்புறுத்தி சிகிச்சையளிப்பது … (1) 39.26 ஒவ்வொரு நோய்க்கும் மருந்து உண்டு; (நோய்க்கு) மருத்துவம் செய்துகொள்வது விரும்பத் தக்கது (17) 39.25 தொழுகையில் மனம் அலைபாயச் செய்யும் ஷைத்தானிடமிருந்து பாதுகாப்புக் கோரல் (1) 39.24 பிரார்த்திக்கும்போது வலியுள்ள இடத்தில் கையை வைப்பது (1) 39.23 குர்ஆன் வசனங்கள் மற்றும் அல்லாஹ்வைத் துதிக்கும் சொற்களால் ஓதிப்பார்ப்பதற்கு ஊதியம் பெறலாம் (2) 39.22 இறைவனுக்கு இணை கற்பிதம் இல்லாத சொற்களால் ஓதிப்பார்பது தவறில்லை (1) 39.21 கண்ணேறு, சின்னம்மை, விஷக்கடி, (தீய)பார்வை ஆகியவற்றுக்காக ஓதிப்பார்ப்பது விரும்பத் தக்கதாகும் (12) 39.20 பாதுகாப்புக் கோரும் அத்தியாயங்களால் நோயாளிக்கு ஓதிப்பார்ப்பது … (2) 39.19 நோயாளிக்கு ஓதிப்பார்ப்பது விரும்பத் தக்கதாகும் (4) 39.18 விஷம் (1) 39.17 சூனியம் (1) 39.16 நோயும் மருத்துவமும் ஓதிப்பார்த்தலும் (4) 39.15 மூன்றாமவரின் ஒப்புதலின்றி இருவர் மட்டும் இரகசியம் பேசிக்கொள்வது தடை செய்யப்பட்டதாகும் (3) 39.14 … அந்நியப் பெண்ணை, வழிசெல்லும் ஒருவர் வாகனத்தில் அமர்த்திக்கொள்ளலாம் (2) 39.13 பெண்கள் இருக்கும் இடத்திற்கு அலிகள் செல்லத் தடை (2) 39.12 அமர்ந்திருந்த இடத்திற்கு உரியவர் (1) 39.11 அமர்ந்திருக்கும் ஒருவரை எழுப்பிவிடுவது தடை செய்யப்பட்டதாகும் (4) 39.10 அவைக்கு வருபவர், அமரும் ஒழுங்கு (1) 39.9 … கெட்ட எண்ணத்தை அகற்றுவது விரும்பத் தக்கதாகும் (2) 39.8 அந்நியப் பெண்ணிடம் … தனிமையில் இருப்பது தடை செய்யப்பட்டதாகும் (3) 39.7 … பெண்கள் வெளியே செல்லலாம் (2) 39.6 உள்ளே செல்ல அனுமதியாகக் கருதுவதற்கு … (1) 39.5 சிறாருக்கு(ப் பெரியவர்கள்) முகமன் கூறுவது விரும்பத் தக்கதாகும் (2) 39.4 வேதக்காரர்களுக்கு முந்திக்கொண்டு ஸலாம் கூறுவதற்குத் தடை (7) 39.3 ஸலாத்துக்குப் பதிலுரைப்பது முஸ்லிமுக்குக் கடமை (2) 39.2 நடைபாதைகளில் அமர்வதன் ஒழுங்குகளில் … (2) 39.1 முந்தி ஸலாம் சொல்ல வேண்டியவர்கள் (1) 38.10 இயல்பான பார்வை (1) 38.9 பிறர் வீட்டில் எட்டிப் பார்ப்பது தடை செய்யப்பட்டதாகும் (5) 38.8 “யார்?“ என்று கேட்டால் … (2) 38.7 அனுமதி கோருதல் (5) 38.6 “என் அருமை மகனே!“ (2) 38.5 குழந்தை பிறந்தவுடன் இனிப்பான பொருளை மென்று அதன் வாயிலிடுவதும் … (9) 38.4 மன்னாதி மன்னன் எனப் பெயர் சூட்டிக்கொள்வது தடை செய்யப்பட்டதாகும் (2) 38.3 அருவருப்பான பெயரை அழகான பெயராக மாற்றியமைப்பது … (6) 38.2 அருவருப்பான பெயர்கள் … (4) 38.1 … விரும்பத் தகுந்த பெயர்கள் (8) 37.35 வெறும் பெருமை (2) 37.34 மெல்லிய உடையணிந்து, பிறரைத் தன்பால் ஈர்க்கும் வண்ணம் தோள்களைச் சாய்த்து ஒயிலாக நடக்கும் பெண்கள் (1) 37.33 பெண்களின் பொய் அலங்காரங்காரங்களுக்குத் தடை (10) 37.32 நடைபாதைகளில் அமர்வதற்குத் தடையும் பாதைகளுக்குரிய உரிமைகளைப் பேணுவதும் (1) 37.31 தலை முடியில் பகுதி மழித்துவிட்டு, பகுதி மழிக்காமல் விட்டுவிடுவது வெறுக்கத் தக்கதாகும் (1) 37.30 ஸகாத் / ஜிஸ்யாவுக்கான கால்நடைகளில் சூடிட்டு அடை யாளமிடலாம் (4) 37.29 விலங்குகளின் முகத்தில் அடிப்பதும் அடையாளச் சூடிடுவதும் தடை செய்யப்பட்டவை ஆகும் (3) 37.28 ஒட்டகத்தின் கழுத்தில் (திருஷ்டிக்) கயிற்று மாலை அணிவிப்பது வெறுக்கத் தக்கதாகும் (1) 37.27 பயணத்தின்போது நாயும் (ஒலியெழுப்பும்) மணியும் வெறுக்கத் தக்கவை (2) 37.26 உயிரினங்களின் உருவப் படங்களை வரைவதும் … தடை செய்யப்பட்டவை ஆகும் (21) 37.25 (நரைமுடிக்கு) சாயமிட்டுக்கொள்வது யூதர்களுக்கு மாறு செய்வதாகும் (1) 37.24 நரைமுடியில் கருப்பு நிறச் சாயமிடுவது தடை செய்யப்பட்டதாகும் (2) 37.23 ஆண்கள் (மேனியில்) குங்குமப்பூச் சாயமிட்டுக்கொள்வதற்குத் தடை (1) 37.22 மல்லாந்து படுத்துக்கொண்டு கால்மீது காலைப் போட்டுக் கொள்வதற்கு அனுமதி (1) 37.21 மல்லாந்து படுத்துக்கொண்டு கால்மீது காலைப் போட்டுக் கொள்வதற்குத் தடை (3) 37.20 தடை செய்யப்பட்ட இரு நிலைகள் (2) 37.19 காலணிகளை அணிந்து கழற்றும் முறைகள் (3) 37.18 காலணி அல்லது அது போன்றதை அணிந்துகொள்வது விரும்பத் தக்கதாகும் (1) 37.17 மோதிரம் அணிவதற்குத் தடை செய்யப்பட்ட விரல்கள் (2) 37.16 கைச் சுண்டுவிரலில் மோதிரம் அணிவது (1) 37.15 அபிசீனியக் வெள்ளிக் குமிழ் மோதிரம் (2) 37.14 மோதிரங்களை(க் கழற்றி) எறிந்த நிகழ்வு (2) 37.13 நபி (ஸல்) அவர்களின் (முத்திரை) மோதிரம் (3) 37.12 ‘முஹம்மதுர் ரசூலுல்லாஹ்’ எனும் இலச்சினை பொறிக்கப்பட்ட வெள்ளி மோதிரம் (2) 37.11 ஆண்கள் தங்க மோதிரம் அணிவதற்குத் தடை (3) 37.10 ஆடைகளை எண்ணிப் பெருமை கொண்டு, கர்வத்தோடு நடப்பதற்குத் தடை (2) 37.9 பெருமைக்காக ஆடையைத் தரையில் படும்படி இழுத்துச் செல்வதற்குத் தடை (7) 37.8 தேவைக்கு அதிகமான விரிப்புகளும் ஆடைகளும் இருப்பது விரும்பத் தக்கதன்று (1) 37.7 படுக்கை விரிப்புகளைப் பயன்படுத்த அனுமதி (2) 37.6 ஆடையில் (எளிமை,) பணிவு காட்டுவது … (5) 37.5 பருத்தி ஆடை அணிவதன் சிறப்பு (2) 37.4 ஆண்கள் செம்மஞ்சள் நிறச் சாயமிடப்பட்ட ஆடை அணிவதற்குத் தடை (5) 37.3 தோல் உபாதைகள் இருந்தால் ஆண்கள் பட்டாடை அணியலாம் (3) 37.2 பொன் மோதிரம் மற்றும் பட்டாடை அணிவது ஆண்களுக்குத் தடை; பெண்களுக்கு அனுமதி (20) 37.1 பொன் / வெள்ளிப் பாத்திரங்களைப் பயன்படுத்துவது ஆண்களுக்கும் பெண்களுக்கும் தடை (2) 36.35 உணவைக் குறை சொல்லவேண்டாம் (2) 36.34 இறைநம்பிக்கையாளர் ஒரே குடலில் உண்பார்; இறைமறுப்பாளன் ஏழு குடல்களில் உண்பான் (5) 36.33 உணவு குறைவாக இருக்கும்போது … (4) 36.32 விருந்தினரை உபசரிப்பதும் முன்னுரிமை வழங்குவதன் சிறப்பும் (6) 36.31 வெள்ளைப் பூண்டு சாப்பிடக்கூடியதே … (2) 36.30 உணவுக் காடியின் சிறப்பும் … (4) 36.29 ‘அல்கபாஸ்’ பழங்களில் கருப்பு நிறப் பழத்தின் சிறப்பு (1) 36.28 உணவுக் காளானின் சிறப்பும் … (6) 36.27 மதீனத்துப் பேரீச்சம் பழங்களின் சிறப்பு (3) 36.26 குடும்பத்தாருக்காக … உணவுகளைச் சேமித்துவைத்தல் (2) 36.25 பலருடன் சேர்ந்து உண்பவர் … (2) 36.24 உணவு உண்பவர் அமரும் முறை; பணிவோடு அமர்வது விரும்பத் தக்கது (2) 36.23 பேரீச்சை செங்காய்களுடன் வெள்ளரிக்காயையும் சேர்த்து உண்பது (1) 36.22 விருந்தளிப்பவருக்காக விருந்தாளி பிரார்த்திப்பது … (1) 36.21 சுரைக் குழம்பு உண்ண அனுமதி … (2) 36.20 வீட்டு உரிமையாளரின் சம்மதம் கிடைக்கும் என்ற நம்பிக்கை இருந்தால் … (4) 36.19 விருந்துக்கு அழைக்கப்பட்டவரைத் தொடர்ந்து அழைக்கப்படாதவரும் வந்துவிட்டால் … (2) 36.18 உண்டு முடித்ததும் விரல்களைச் சூப்புவதும் உணவுத் தட்டை வழித்து உண்பதும் … (9) 36.17 வலப் பக்கத்திலிருந்து பரிமாறுதல் விரும்பத் தக்கதாகும் (4) 36.16 பாத்திரத்தினுள் (பருகும்போது) வெளியே மூன்று முறை மூச்சு விட்டுப் பருகுவது விரும்பத் தக்கதாகும் (3) 36.15 ஸம்ஸம் நீரை நின்றுகொண்டு அருந்துவது (4) 36.14 நின்றுகொண்டு அருந்துவது வெறுக்கத் தக்கதாகும் (4) 36.13 உண்பது, அருந்துவது ஆகியவற்றின் ஒழுங்குகளும் விதிமுறைகளும் (10) 36.12 இரவு நேர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் (6) 36.11 பழச்சாறுகளைப் பருகுவதும் பாத்திரங்களை மூடிவைப்பதும் (3) 36.10 (ஆட்டுப்) பால் அருந்த அனுமதி (3) 36.9 பழச்சாறுகள் (புளித்துக்) கெட்டியாகி, போதையேறாதவரை அனுமதிக்கப்பட்டவையாகும் (10) 36.8 குடிகாரன் பாவமன்னிப்புக் கோரி திருந்தாவிட்டால் … (3) 36.7 போதை தரும் ஒவ்வொரு பானமும் தடை செய்யப்பட்ட மதுவாகும் (9) 36.6 பானங்கள்-பாத்திரங்கள், தடை-தடை நீக்கம் (36) 36.5 பேரீச்சம் பழம், உலர் திராட்சைக் கலவை ஊறல் வெறுக்கத் தக்கதாகும் (14) 36.4 ‘மதுபானம்’ என்று சொல்லப்படுபவை (4) 36.3 மதுவை மருந்தாகப் பயன்படுத்துவதற்குத் தடை (1) 36.2 மதுபானத்தை (சமையல்) காடியாக மாற்றிப் பயன்படுத்துவதற்குத் தடை (1) 36.1 போதையூட்டும் ஒவ்வொன்றும் மதுவாகும் (9) 35.8 அல்லாஹ் அல்லாதவரின் பெயர் கூறிப் பிராணிகளை அறுப்பதற்குத் தடை (3) 35.7 தலைமுடியை, நகங்களைக் களைவதற்குத் தடை (5) 35.6 அல் ஃபரஉ வல் அத்தீரா (1) 35.5 பலி இறைச்சியை எவ்வளவு காலம் சேமித்து வைக்கலாம்? (14) 35.4 பல், நகம், எலும்பு ஆகியவை தவிர எந்தப் பொருளாலும் பிராணியை அறுக்க அனுமதி (1) 35.3 தாமே அறுப்பதும் அல்லாஹ்வின் பெயரோடு தக்பீர் கூறுவதும் விரும்பத் தக்கவை ஆகும் (3) 35.2 பலிப் பிராணியின் வயது (4) 35.1 பலி கொடுக்கப்படும் நேரம் (10) 34.12 விலங்குகளைக் கட்டிவைத்து அம்பெய்து கொல்வதற்குத் தடை (5) 34.11 … கத்தியைக் கூர்மையாகத் தீட்டிக் கொண்டு வதையற்ற முறையைக் கையாளக் கட்டளை (1) 34.10 … பயிற்சிகளை மேற்கொள்வது அனுமதிக்கப் பட்டதாகும். கல்சுண்டு விளையாட்டு வெறுக்கப்பட்டதாகும் (2) 34.9 முயல் கறி உண்ணத் தக்கது (1) 34.8 வெட்டுக்கிளி உண்ணத் தக்கது (1) 34.7 உடும்புக் கறி உண்ணத் தக்கது (13) 34.6 குதிரைகளின் இறைச்சியை உண்பது கூடுமா? (3) 34.5 நாட்டுக் கழுதைகளின் இறைச்சியை உண்பதற்குத் தடை (14) 34.4 கடல்வாழ் உயிரினங்களில் செத்தவற்றை உண்பதற்கு அனுமதி (5) 34.3 உண்பதற்குத் தடை செய்யப்பட்ட விலங்குகளும் பறவைகளும் (6) 34.2 வேட்டையாடிய பிராணி மறைந்து, பிறகு கிடைத்தால் … (2) 34.1 பயிற்சியளிக்கப்பட்ட நாய்கள் மூலம் வேட்டையாடுதல் (8) 33.56 பயணத்திலிருந்து திரும்புகின்றவர் … (5) 33.55 பயணம் என்பது துன்பத்தின் ஒரு பகுதியாகும் … (1) 33.54 பயணத்தில் கால்நடைகளின் நலன் காப்பதும் … (2) 33.53 “என் சமுதாயத்தாரில் ஒரு குழுவினர் எப்போதுமே உண்மைக்கு ஆதரவாளர்களாக இருப்பார்கள் … (8) 33.52 அம்பெய்வதன் சிறப்பும் … (3) 33.51 உயிர்த் தியாகிகள் பற்றிய விளக்கம் (3) 33.50 அல்லாஹ்வின் பாதையில் எல்லைக் காவல் புரிவதன் சிறப்பு (1) 33.49 கடல்வழிப் போரின் சிறப்பு (2) 33.48 போரில் கலந்துகொள்ள முடியாமல் போனவருக்கும் நன்மை … (1) 33.47 அறப்போரில் கலந்துகொள்ளாமல் இறந்துபோனவர் … (1) 33.46 அல்லாஹ்வின் பாதையில் வீரமரணத்தை வேண்டுவது விரும்பத் தக்கதாகும் (2) 33.45 “எண்ணங்களைப் பொருத்தே செயல்கள் அமைகின்றன” எனும் நபிமொழி … (1) 33.44 … போர்ச் செல்வங்களைப் பெற்றோரும் பெறாதோரும் … (2) 33.43 பிறர் பார்ப்பதற்காகவும் விளம்பரத்திற்காகவும் போரிட்டவர் … (1) 33.42 அல்லாஹ்வின் பாதையில் போரிட்டவர் … (3) 33.41 உயிர்த் தியாகிக்குச் சொர்க்கம் நிச்சயம் (6) 33.40 தகுந்த காரணம் உள்ளவர்களுக்கு அறப்போரில் கலந்து கொள்வது கடமை இல்லை (2) 33.39 அறப்போர் வீரர்களின் துணைவியருடைய கண்ணியம் … (1) 33.38 அறப்போர் வீரருக்கு வாகனம் மற்றும் பிற உதவிகள் … (6) 33.37 அல்லாஹ்வின் பாதையில் தர்மம் செய்வதன் சிறப்பும் அதற்குக் கிடைக்கும் பன்மடங்கு நன்மைகளும் (1) 33.36 இறைமறுப்பாளனை (போரில்) கொன்ற பின்னர் (மார்க்கத்தில்) உறுதியோடு இருத்தல் (2) 33.35 இரு போராளிகளில் ஒருவர் மற்றவரைக் கொன்று, பின் அவ்விருவருமே சொர்க்கத்தில் … (2) 33.34 அறப்போர் மற்றும் எல்லைக் காவலின் சிறப்பு (3) 33.33 வீரமணம் அடைந்தவர்களின் உயிர்கள் … (1) 33.32 அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டவரின் கடனைத் தவிர அனைத்துப் பாவங்களும் மன்னிக்கப்படுகின்றன (3) 33.31 அல்லாஹ் (தனது பாதையில்) அறப்போர் புரிந்தவர்களுக்காகச் சொர்க்கத்தில் வைத்துள்ள உயர்நிலைகள் (1) 33.30 அல்லாஹ்வின் பாதையில் காலையாயினும் மாலையாயினும் (போரிடச்) செல்வதன் சிறப்பு (5) 33.29 அல்லாஹ்வின் பாதையில் வீரமரணம் அடைவதன் சிறப்பு (4) 33.28 அல்லாஹ்வின் பாதையில் புறப்படுதலின், அறப்போரில் ஈடுபடுதலின் சிறப்பு (4) 33.27 குதிரையின் தன்மைகளில் விரும்பத் தகாதவை (1) 33.26 மறுமை நாள்வரை நெற்றிகளில் நன்மை பிணைக்கப்பட்டிருக்கும் குதிரைகள் (5) 33.25 குதிரைப் பந்தயமும் அதற்காகக் குதிரையை மெலிய வைப்பதும் (1) 33.24 குர்ஆன் பிரதிகளை இறைமறுப்பாளர்களின் நாட்டுக்கு எடுத்துச் செல்வது … (3) 33.23 பருவ வயது பற்றிய விளக்கம் (1) 33.22 இயன்றவரை கட்டுப்பட்டு நடப்பதாக உறுதிமொழி அளித்தல் (1) 33.21 பெண்களிடம் உறுதிப் பிரமாணம் (பைஅத்) வாங்கும் முறை (2) 33.20 மக்கா வெற்றிக்குப் பின் ஹிஜ்ரத் கிடையாது (5) 33.19 நாடு துறந்து (ஹிஜ்ரத்) சென்றவர் மீண்டும் தமது தாயகத்தில் குடியேறுவதற்குத் தடை (1) 33.18 ஆட்சித் தலைவர் படையினரிடம் உறுதி மொழி பெற்றுக்கொள்வது … (13) 33.17 ஆட்சித் தலைவர்களில் நல்லவர்களும் தீயவர்களும் (2) 33.16 ஆட்சித் தலைவர்கள் மார்க்கத்திற்கு முரணாகச் செயல்படும்போது … (2) 33.15 இரு ஆட்சியாளர்களுக்கு வாக்களிப்புப் பிரமாண நெருக்கடி ஏற்பட்டால் … (1) 33.14 முஸ்லிம்கள் (ஒரே தலைமையின் கீழ்) ஒன்றுபட்டிருக்கும்போது … (2) 33.13 குழப்பங்கள் தோன்றும்போது கூட்டமைப்போடு சேர்ந்திருப்பது கடமையாகும் … (8) 33.12 உரிமைகள் மறுக்கப்பட்டாலும் தலைமைக்குக் கட்டுப்படுதல் (1) 33.11 அதிகாரத்திலிருப்போர் அநீதியிழைக்கும்போதும் தகுதியற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கும்போதும் … (1) 33.10 கலீஃபாக்களில் முதலாமவருக்கு உறுதிப் பிரமாணம் (பைஅத்) அளிப்பது கடமையாகும் (3) 33.9 ஆட்சித் தலைவர் கேடயம் போன்றவர் … (1) 33.8 பாவமற்றவற்றில் தலைவர்களுக்குக் கட்டுப்படுவது கடமையாகும். பாவமானவற்றில் கட்டுப்படுவதற்குத் தடை (11) 33.7 அதிகாரிகளுக்கு அன்பளிப்புகள் வழங்குவதற்குத் தடை (3) 33.6 பொதுச் சொத்துகளில் மோசடி செய்வது வன்மையாகத் தடை செய்யப்பட்டது (1) 33.5 நேர்மையான ஆட்சியாளரின் சிறப்பும் … (6) 33.4 தேவையின்றி ஆட்சிப் பொறுப்பை ஏற்பது விரும்பத் தக்கதன்று (2) 33.3 ஆட்சியதிகாரத்தைத் தேடி அலைவதற்கும் அதன் மீது ஆசை கொள்வதற்கும் தடை (3) 33.2 ஆட்சித் தலைவரை நியமிக்கலாம்; நியமிக்காமல் விடலாம் (2) 33.1 ஆட்சியதிகாரம் குறைஷியரிடையேதான் இருக்கும் (10) 32.51 அறப்போர்களில் இறைமறுப்பாளரிடம் உதவி கோருவது … (1) 32.50 ‘தாத்துர் ரிக்காஉ’ (ஒட்டுத் துணிப்) போர் (1) 32.49 நபி (ஸல்) கலந்துகொண்ட அறப்போர்களின் எண்ணிக்கை (6) 32.48 அறப்போரில் கலந்துகொண்ட பெண்களுக்கு … (4) 32.47 அறப்போரில் ஆண்களுடன் பெண்களும் கலந்துகொள்வது (2) 32.46 “அவனே உங்களைத் தாக்காமல் அவர்கள் கைகளை தடுத்(து வைத்)தான்” எனும் (48:24) வசனம் (2) 32.45 ‘தூ கரத்’ போரும் பிற போர்களும் (2) 32.44 அஹ்ஸாப் போர் (அ) அகழ்ப் போர் (6) 32.43 கைபர் போர் (5) 32.42 கஅப் பின் அல்அஷ்ரஃப் கொல்லப்படுதல் (1) 32.41 அபூஜஹ்லு கொல்லப்படுதல் (1) 32.40 நபி (ஸல்) (மக்களை) இறைவன்பால் அழைத்து, துன்பங்களைப் பொறுத்துக் கொண்டது (2) 32.39 நபி (ஸல்) எதிர்கொண்ட துன்பங்கள் (7) 32.38 இறைதூதரால் கொல்லப்பட்டவன் மீது இறைவனின் கோபம் (1) 32.37 உஹுதுப் போர் (3) 32.36 கூட்டுப் படையினருக்கு எதிரான அகழ்ப் போர் (2) 32.35 வாக்குறுதியை(ப் போரிலும்) நிறைவேற்றுவது (1) 32.34 ஹுதைபிய்யா சமாதான உடன்படிக்கை’ (7) 32.33 மக்கா வெற்றிக்குப் பின் … (1) 32.32 கஅபாவைச் சுற்றிலும் இருந்த சிலைகளை அப்புறப்படுத்தியது (1) 32.31 மக்கா வெற்றி (2) 32.30 பத்ருப் போர் (1) 32.29 தாயிஃப் போர் (1) 32.28 ஹுனைன் போரில் … (5) 32.27 இறைமறுப்பு அரசர்களுக்கு நபி (ஸல்) எழுதிய கடிதங்கள் (1) 32.26 அழைப்பு விடுத்து ஹெராக்ளியஸ் மன்னருக்கு நபி (ஸல்) எழுதிய கடிதம் (1) 32.25 போரில் கிடைத்த உணவை, பகை நாட்டில் இருக்கும் போதே உண்ணலாம் (2) 32.24 முஹாஜிர்கள் தன்னிறைவு அடைந்தபோது … (2) 32.23 செயல்களுள் முன்னுரிமை அளிக்கத் தக்கது (1) 32.22 ஒப்பந்தத்தை முறித்துவிட்ட (பகை)வர்களுடன் போர் செய்யலாம் (3) 32.21 யூத கிறித்தவர்கள் அரபிய தீபகற்பத்திலிருந்து வெளியேற்றப்படுவது (1) 32.20 யூதர்களை ஹிஜாஸ் பகுதியிலிருந்து நாடு கடத்தியது (2) 32.19 கைதியை என்னென்னவெல்லாம் செய்யலாம் (1) 32.18 பத்ருப் போரில் வானவர்களின் உதவியும் … (1) 32.17 போர் வெற்றிச் செல்வத்தைப் பங்கிடும் முறை (1) 32.16 இறைத்தூதர்களுக்கு யாரும் (சொத்தில்) வாரிசாக முடியாது (5) 32.15 போர் செய்யாமல் கிடைத்த செல்வங்களின் சட்டம் (3) 32.14 … போர்க் கைதிகளைப் பரிமாறிக்கொள்வது (1) 32.13 போரில் கொல்லப்பட்ட எதிரியின் உடைமைகள் (4) 32.12 போர் வெற்றிச் செல்வங்கள் (7) 32.11 போர் வெற்றிச் செல்வங்கள் யாருக்குச் சொந்தம்? (1) 32.10 போரில் மரங்களை வெட்டுவதும் எரிப்பதும் அனுமதிக்கப்பட்டதாகும் (3) 32.9 பெண்களையும் குழந்தைகளையும் அறியாமல் கொன்றுவிட்டால் … (3) 32.8 போரில் பெண்களையும் குழந்தைகளையும் கொல்வதற்குத் தடை (2) 32.7 எதிரிகளை(ப் போரில்) எதிர்கொள்ளும்போது பிரார்த்திப்பது (2) 32.6 எதிரியை(ப் போர்க் களத்தில்) சந்திக்க ஆசைப்படுவது வெறுக்கத் தக்கது … (2) 32.5 போரில் தந்திரம் அனுமதிக்கப்பட்டது (2) 32.4 மோசடி செய்வது தடை செய்யப்பட்டதாகும் (8) 32.3 மக்களிடம் இலகுவாக நடந்துகொள்ள வேண்டும்; வெறுப்பைக் கைவிட வேண்டும் (3) 32.2 படைத் தலைவர், போர் நெறிகள் குறித்து அறிவுறுத்துவது (1) 32.1 முன்னறிவிப்பின்றித் தாக்குதல் தொடுக்கலாமா? (1) 31.5 பயணத்தில் உணவைப் பகிர்ந்துண்ணல் (1) 31.4 செல்வத்தால் பிறருக்கு உதவுவது விரும்பத் தக்கது (1) 31.3 விருந்தோம்பல் சார்ந்தவை (3) 31.2 உரிமையாளரின் அனுமதியின்றி கால் நடையில் பால் கறப்பதற்குத் தடை (1) 31.1 ஹாஜிகள் தவறவிட்டவை (2) 31.0 கண்டெடுக்கப்பட்டவை (5) 30.11 நீதிபதி சமரசம் செய்துவைப்பது விரும்பத் தக்கதாகும் (1) 30.10 ஆய்வாளர்களிடையே கருத்து வேறுபாடு (1) 30.9 சாட்சிகளில் சிறந்தவர் (1) 30.8 தவறான தீர்ப்புகளைத் தள்ளுபடி செய்வதும் (மார்க்கத்தில் இல்லாத) புதுமைகளை நிராகரிப்பதும் (2) 30.7 கோபமாக இருக்கும் நீதிபதி, தீர்ப்பளிப்பது விரும்பத் தக்கதன்று (1) 30.6 நீதிபதியின் ஆய்வுக்கு நன்மை உண்டு (1) 30.5 தடைகள் மூன்று (4) 30.4 ஹிந்த் (ரலி) வழக்கு (3) 30.3 வாதங்களின் அடிப்படையில் தீர்ப்பு அமைந்துவிடுதல் (2) 30.2 சத்தியத்தின் / சாட்சியத்தின் அடிப்படையில் தீர்ப்பளித்தல் (1) 30.1 சத்தியம் செய்து நிரூபிப்பது பிரதிவாதிமீது கடமையாகும் (2) 29.11 இழப்பீடு இல்லாத விபத்துகள் (2) 29.10 தண்டனைகள், குற்றங்களுக்கான பரிகாரமாகும் (3) 29.9 சீர்திருத்திற்காக வழங்கப்படும் சாட்டையடிகளின் (அதிகபட்ச) அளவு (1) 29.8 மது அருந்திய குற்றத்திற்கான தண்டனை (4) 29.7 மகப்பேறான பெண்ணின் தண்டனையைத் தள்ளிவைத்தல் (1) 29.6 இஸ்லாமிய அரசின் கீழ் வாழும் யூதர்கள் விபச்சாரத்தில் ஈடுபட்டாலும் கல்லெறி தண்டனை (6) 29.5 விபச்சாரம் செய்தவரின் ஒப்புதல் வாக்குமூலம் (9) 29.4 மணமானவர்கள் விபச்சாரம் செய்தால் கல்லெறி தண்டனை (1) 29.3 விபச்சாரக் குற்றத்திற்கான தண்டனை (2) 29.2 தண்டனையிலிருந்து விலக்கு அளிக்குமாறு பரிந்துரைப்பதற்குத் தடை (3) 29.1 தண்டனைக்குரிய திருட்டின் அளவுகோலும் தண்டனையும் (7) 28.11 சிசுக் கொலைக்கான இழப்பீடும் … (6) 28.10 கொலையாளி, தன் குற்றத்தை ஒப்புக்கொள்வதும் … (2) 28.9 மனிதர்களின் உயிர், தன்மானம், செல்வம் ஆகியவற்றுக்கு ஊறு விளைவிப்பது … (2) 28.8 மறுமையில் வழங்கப்படும் தீர்ப்பும் தண்டனையும் … (1) 28.7 கொலையை (உலகுக்கு) அறிமுகப்படுத்தியவர் மீதான பாவம் (1) 28.6 முஸ்லிமின் மரண தண்டனைக்கான காரணங்கள் (2) 28.5 பற்கள் போன்ற(உறுப்புகளான)வற்றில் பழிக்குப்பழி உண்டு (1) 28.4 தாக்க வந்தவனிடமிருந்து தற்காத்துக் கொள்வதற்காக … (6) 28.3 கல் மற்றும் கூராயுதங்களால் கொலை செய்தால், பழிக்குப்பழி உண்டு … (3) 28.2 வன்முறையாளர்களுக்கும் மதம் மாறியோருக்குமான தண்டனை (4) 28.1 அல்கஸாமா (4) 27.13 விடுதலைக்கு வாக்களிக்கப்பட்ட அடிமையை விற்கலாம் (2) 27.12 அடிமையில் தமது பங்கை மட்டும் விடுதலை செய்தல் (8) 27.11 ‏தன் உரிமையாளருக்கு விசுவாசமாகவும் … (4) 27.10 அடிமைக்கு எஜமானர் உண்பதிலிருந்து உணவளிப்பதும் … (4) 27.9 விபசாரம் செய்துவிட்டதாக அவதூறு கூறுவதற்கான கண்டனம் (1) 27.8 அடிமைகளுடனான நல்லுறவும் கன்னத்தில் அறைந்ததற்கான பரிகாரமும் (8) 27.7 இறைமறுப்பாளராக இருந்தபோது செய்த நேர்ச்சை… (2) 27.6 ஆகுமாக்கப்பட்டதற்கான சத்தியமாக இருந்தாலும் … (1) 27.5 இன்ஷா அல்லாஹ் என்பதை (சத்தியத்தின்போது) சேர்த்துக் கூறுதல் (4) 27.4 சொல்பவரின் எண்ணப்படியே ஒருவருடைய சத்தியம் அமையும் (2) 27.3 சத்தியம் செய்தவர், அதைவிடச் சிறந்ததாக மற்றொன்றைக் காணும்போது … (12) 27.2 ‘லாத்’ மற்றும் ‘உஸ்ஸா’வின் மீது சத்தியம் செய்துவிட்டவர் … (2) 27.1 அல்லாஹ்வைத் தவிர எவர்/எதன் மீதும் சத்தியம் செய்யத் தடை (3) 26.5 நேர்ச்சை முறிவுக்கான பரிகாரம் (1) 26.4 கஅபாவரை நடைப்பயணம் செல்வதாக நேர்ந்துகொண்டவர் (3) 26.3 இறைவனுக்கு மாறு செய்வதிலோ உரிமை இல்லாததிலோ நேர்ச்சை. (1) 26.2 நேர்ச்சை செய்வதற்குத் தடை; அது (விதியில்) எதையும் மாற்றிவிடாது (6) 26.1 நேர்ச்சையை நிறைவேற்றக் கட்டளை (1) 25.5 வசதியற்றவர் மரண சாஸனம் செய்ய முடியாது (6) 25.4 அறக்கொடை (1) 25.3 மனிதன் இறந்த பின்பும் தொடரும் நன்மைகள் (1) 25.2 இறந்துவிட்டவருக்காகச் செய்யப்படும் தர்மங்களின் நன்மை … (3) 25.1 மரண சாஸனம் 1/3 மட்டுமே (5) 25.0 மரண சாஸனம் (2) 24.4 ஆயுட்கால அன்பளிப்பு (11) 24.3 அன்பளிப்பு வழங்குவதில் பிள்ளைகளிடையே பாகுபாடு காட்டுவது … (10) 24.2 தானமும் அன்பளிப்பும் வழங்கப்பட்ட பின், திரும்பப் பெறுவதற்குத் தடை … (4) 24.1 தானமாகக் கொடுத்ததை விலைக்கு வாங்குவது விரும்பத் தக்கதல்ல (4) 23.4 ஒருவர் விட்டுச்செல்லும் செல்வம் அவருடைய வாரிசுகளுக்கு உரியதாகும் (4) 23.3 இறுதியாக அருளப்பெற்றது கலாலா வசனமாகும் (4) 23.2 ‘கலாலா’ சொத்துரிமை (5) 23.1 உரியவர்களுக்கும் உறவினருக்கும் பிரிக்கப்பட்ட பாகங்கள் (3) 23.0 ஒரு முஸ்லிம், இறைமறுப்பாளருக்கு வாரிசாகமாட்டார் (1) 22.31 பாதைக்கு நிலம் ஒதுக்குவதில் கருத்து வேறுபாடு ஏற்பட்டால் அதற்கான தீர்வு (1) 22.30 பிறர் நிலத்தை அபகரித்தல் போன்ற அநீதி இழைத்தல்களுக்குத் தடை (6) 22.29 அண்டை வீட்டாரின் சுவரில் (சாரம் கட்டுவதற்கு) மரக்கட்டை பதிப்பது (1) 22.28 பங்காளியின் இசைவு (3) 22.27 வியாபாரத்தில் (வீண்)சத்தியம் செய்வது விலக்கப்பட்டுள்ளது (2) 22.26 உணவுப் பொருட்களைப் பதுக்குவதற்குத் தடை (2) 22.25 முன்பணம் செலுத்தும் வணிகம் (2) 22.24 அடமானம் உள்ளூரிலும் பயணத்திலும் செல்லும் (3) 22.23 ஓர் உயிரினத்தை அதே இனத்திற்குப் பதிலாக ஏற்றத்தாழ்வோடு விற்கலாம் (1) 22.22 உங்களில் சிறந்தவர் கடனை அழகிய முறையில் திருப்பிச் செலுத்துபவரே (4) 22.21 ஒட்டகத்தை விற்றவர் அதில் பயணிக்க நிபந்தனை விதிப்பது (5) 22.20 அனுமதிக்கப்பட்டவற்றையும் ஐயத்திற்குரியவற்றையும் கையாளுதல் (1) 22.19 வட்டி வாங்குபவருக்கும் வட்டி கொடுப்பவருக்கும் சாபம் (2) 22.18 உணவுப் பொருளை, சரிக்குச் சரியாக விற்றல் (12) 22.17 பொன்னும் மணியும் பதித்த மாலையை விற்பது (4) 22.16 தங்கத்திற்கு வெள்ளியைக் கடனாக விற்பதற்குத் தடை (3) 22.15 நாணயமாற்று வியாபாரம்; வெள்ளிக்குத் தங்கத்தை ரொக்கத்துக்கு விற்பது (7) 22.14 வட்டி (4) 22.13 மது, செத்தவை, பன்றி, சிலைகள் ஆகியவற்றை விற்பதற்குத் தடை (4) 22.12 மதுபான வியாபாரத்திற்குத் தடை (4) 22.11 குருதி உறிஞ்சி எடுப்பதற்காகக் கூலி பெறுவது கூடும் (4) 22.10 வேட்டை, காவல், பாதுகாப்புக்காக நாய் வளர்க்கலாம் (18) 22.9 நாய் விற்ற காசு, சோதிடரின் தட்சணை, விபச்சாரியின் வருமானம் (4) 22.8 தேவைக்குப் போக மீதம் உள்ள நீரை விற்பதற்குத் தடை (5) 22.7 வசதியுள்ளவர் கடனைச் செலுத்த தாமதம் செய்யக் கூடாது (1) 22.6 கடனை அடைக்க சிரமப்படுபவருக்கு அவகாசம் அளிப்பதன் சிறப்பு (7) 22.5 திவாலானவரிடம் திரும்பப் பெற்றுக்கொள்ளும் உரிமை (4) 22.4 கடனில் தள்ளுபடி செய்வது விரும்பத் தக்கதாகும் (3) 22.3 சேதமடைந்த பழங்களுக்கான தொகைக்குத் தள்ளுபடி (5) 22.2 மரம் நடுதலின், பயிர் செய்தலின் சிறப்பு (5) 22.1 நிபந்தனையின் பேரில் தோப்பைக் குத்தகைக்கு விடுவது (4) 21.21 நிலத்தை (விளைவித்துக்கொள்ள) இரவலாக வழங்குவது (4) 21.20 ‘முஸார’ஆவும் ‘முஆஜரா’வும் (2) 21.19 பொன், வெள்ளி(நாயணங்களு)க்கு நிலத்தைக் குத்தகைக்கு விடுவது (3) 21.18 தானியத்திற்கு நிலத்தைக் குத்தகைக்கு விடுவது (2) 21.17 நிலக் குத்தகை (24) 21.16 தடை செய்யப்பட்ட வியாபார வகைகள் (6) 21.15 கனிகள் நிறைந்த பேரீச்ச மரத்தை விற்பது (4) 21.14 (மரத்திலுள்ள) செங்கனிகளை மாற்றிக் கொள்வதற்குத் தடை (14) 21.13 மரத்திலுள்ள பழங்களை முற்றுவதற்கு முன் விற்பதற்குத் தடை (10) 21.12 வியாபாரத்தில் ஏமாற்றப்படுபவர் (1) 21.11 வியாபாரத்தில் உண்மை பேசுவதும் குறைகளைத் தெளிவுபடுத்துவதும் (1) 21.10 விற்பவருக்கும் வாங்குபவருக்கும் வியாபாரத்தை முறித்துக்கொள்ளும் உரிமை (4) 21.9 அளவு தெரியாத பேரீச்சம் பழக் குவியலை விற்பதற்குத் தடை (1) 21.8 வாங்கப்பட்ட பொருள் கைக்கு வருமுன் (பிறருக்கு) விற்பது கூடாது (13) 21.7 மடி கனக்கச் செய்யப்பட்ட கால்நடைகளை விற்பனை செய்வது பற்றிய சட்டம் (5) 21.6: கிராமவாசிக்காக, நகரவாசி விற்றுக் கொடுக்கத் தடை (5) 21.5: விற்பனைக்கு வரும் சரக்குகளை இடைமறித்து வாங்கத் தடை (4) 21.4: வியாபாரத்தில் தடை செய்யப்பட்டவை (7) 21.3: ஒட்டகக் கன்று (அது பிறக்குமுன்) விற்பதற்கு தடை! (2) 21.2: கல்லெறி வியாபாரம் மற்றும் மோசடி வியாபாரம் ஆகியவை செல்லாது (1) 21.1: ‘முலாமஸா’ மற்றும் ‘முனாபதா’ ஆகிய வியாபாரங்கள் செல்லாது (3) 20.7: அடிமையான தந்தையை விடுதலை செய்வதன் சிறப்பு (1) 20.6: அடிமைகளை விடுதலை செய்வதன் சிறப்பு (4) 20.5: விடுதலை செய்த உரிமையாளரை மாற்றிக் கூறத் தடை (4) 20.4: வாரிசாகும் உரிமையை விற்பதற்கும் அன்பளிப்பாக வழங்குவதற்கும் தடை (1) 20.3: விடுதலை செய்தவருக்கே வாரிசுரிமை உரியது (9) 20.2: அடிமை (தனது முழு விடுதலைக்காக) உழைத்துப் பொருளீட்டுவது (2) 20.1: ஓர் அடிமையி(ன் விலையி)ல், ஒருவர் தமக்கான பங்கை விடுவிப்பது (1) 19.1: சுய சாபம் வேண்டுதல் (17) 18.9: கணவன் இறந்து ‘இத்தா’விலிருக்கும் பெண் துக்கம் கடைப்பிடிப்பது (11) 18.8: கர்ப்பமுற்றிருக்கும் பெண்ணின் ‘இத்தா’க் காலம், பிரசவத்துடன் முடிந்துவிடும் (2) 18.7: ‘இத்தா’விலிருக்கும் பெண் தன் தேவைக்காக வெளியே செல்லலாம் (1) 18.6: மூன்று தலாக் சொல்லப்பட்ட பெண்ணுக்கு ஜீவனாம்சம் பற்றி… (18) 18.5: ஈலாச் செய்வது, மனைவியிடமிருந்து விலகுவது, விருப்ப உரிமை அளிப்பது (5) 18.4: மனைவிக்கு (த் தம்மைப் பிரிந்துவிட) உரிமை அளிப்பது மணவிலக்கு ஆகாது (8) 18.3: மணவிலக்குச் செய்யும் நோக்கமின்றி கூறினால், அது மணவிலக்கு ஆகாது (4) 18.2: மூன்று தலாக்குகள் (3) 18.1: மாதவிடாயான மனைவியை அவளது சம்மதமின்றி மணவிலக்குச் செய்வதற்குத் தடை (14) 17.19: ஹவ்வா-வும், பெண்கள் கணவரை ஏமாற்றுதலும் (2) 17.18: மனைவியரின் நலம் நாடுதல் (4) 17.17: பயன் தரும் இவ்வுலகச் செல்வங்களுள் மிகச் சிறந்த செல்வம், நற்குணமுள்ள மனைவியே (1) 17.16: கன்னிப் பெண்ணை மணப்பது விரும்பத் தக்கதாகும் (5) 17.15: மார்க்கப் பற்றுள்ள பெண்ணை மணப்பது விரும்பத் தக்கதாகும் (2) 17.14: மனைவியருள் ஒருவர், தனது முறைநாளை மற்றவருக்கு விட்டுக்கொடுக்கலாம் (4) 17.13: மனைவியருக்கு (இரவுகளை) ஒதுக்கீடு செய்வது (1) 17.12: கன்னி கழிந்த பெண்ணுக்கும், கன்னிப் பெண்ணுக்கும் கணவன் ஒதுக்க வேண்டிய நாட்கள் (6) 17.11: சாயல் அறியும் நிபுணரின் கூற்றுப்படி, குழந்தைக்கு உரியவரைக் கண்டறிவது (3) 17.10: எஜமானரின் கீழ் வாழும் பெண்ணின் குழந்தை, அவருக்கே உரியது (2) 17.9: பெண் போர்க் கைதியுடன் உடலுறவு கொள்ளலாம் (2) 17.8: பசிக்காகத் தாய்ப்பால் அருந்தினால்தான் பால்குடி உறவு ஏற்படும் (1) 17.7: பருவ வயதை அடைந்தவருக்குப் பாலூட்டுவது (6) 17.6: ஐந்து தடவை அருந்தினால்தான் பால்குடி உறவு உண்டாகும் (2) 17.5: ஓரிரு தடவை (பெண்ணின் மார்பில்) பால் குடிப்பது பற்றிய சட்டம் (6) 17.4: மனைவியின் மகளையும் மனைவியின் சகோதரியையும் மணப்பதற்குத் தடை (2) 17.3: பால்குடிச் சகோதரரின் மகளை மணப்பது தடை செய்யப்பட்டுள்ளது (3) 17.2: பால்குடித் தந்தையின் (இரத்த பந்த) உறவினரும் மணமுடிக்கத் தகாதவரே! (6) 17.1: பிறப்பால் ஏற்படும் உறவும் பால்குடி உறவும் (2) 16.24: பாலூட்டும் மனைவியுடன் உடலுறவு கொள்ளும்போது அஸ்லுச் செய்வது வெறுக்கத் தக்கது (3) 16.23: கருவுற்றிருக்கும் பெண் போர்க் கைதியுடன் உடலுறவு கொள்வது தடை செய்யப்பட்டுள்ளது (1) 16.22: உடலுறவின்போது இடைமுறிப்பு – ‘அஸ்லு’ச் சட்டம் (12) 16.21: மனைவியுடன் நடைபெறும் உடலுறவு இரகசியங்களை வெளியே சொல்வது தடுக்கப்பட்டது (2) 16.20: ஒரு பெண், தன் கணவனின் படுக்கைக்குச் செல்ல மறுப்பதற்குத் தடை (3) 16.19: உடலுறவின் ஒழுங்குகள் (2) 16.18: உடலுறவின்போது ஓத வேண்டிய விரும்பத் தகுந்த பிரார்த்தனை (1) 16.17: மூன்று முறை மணவிலக்கு அளிக்கப்பட்ட பெண்ணின் மறுவிருப்பம் (4) 16.16: விருந்துக்கான அழைப்பை ஏற்பது பற்றிய கட்டளை (13) 16.15: ஸைனப் பின்த்து ஜஹ்ஷு (ரலி) திருமணம்; ஹிஜாப் பற்றிய வசனம்; மணவிருந்து (7) 16.14: அடிமைப் பெண்ணை விடுதலை செய்து, பின்னர் அவளை மணமுடித்துக்கொள்வதன் சிறப்பு (6) 16.13: மணக்கொடை (மஹ்ரு) என்பது … (7) 16.12: ஒருவர் தாம் மணமுடிக்க விரும்பும் பெண்ணின் முகத்தையும் இரு முன் கைகளையும் பார்ப்பது (2) 16.11 ஷவ்வால் மாதத்தில் மணமும் தாம்பத்திய உறவும் (1) 16.10: இளவயதுக் கன்னிக்கு அவளுடைய தந்தை மணமுடித்துவைத்தல் (4) 16.9: மணப் பெண்ணின் வாய் வழிச் சம்மதமும் மௌனச் சம்மதமும் (4) 16.8: திருமண (முன்) நிபந்தனைகளை நிறைவேற்றல் (1) 16.7: மணக்கொடையில்லா திருமணம் செல்லாது (5) 16.6: தம் (முஸ்லிம்) சகோதரன் கேட்டுக்கொண்டிருக்கும் ஒரு பெண்ணை, மற்றவர் கேட்கலாகாது (7) 16.5: இஹ்ராம் புனைந்தவர் திருமணம் செய்வதற்குத் தடை; அவர் பெண் கேட்பது வெறுக்கத் தக்கது (8) 16.4: மனைவியின் அத்தையை, சின்னம்மாவை மணக்கத் தடை (8) 16.3: இடைக்காலத் திருமணம், (முத்ஆ) காலாவதியானது (21) 16.2: இச்சை தூண்டப்பட்டவர், தமது இச்சையைத் தணித்துக் கொள்ளட்டும் (2) 16.1: வசதி இருந்தால் மணமுடிப்பதும் இல்லாதவர் நோன்பு நோற்பதும் (6) 15.97: குபாப் பள்ளிவாசல், அதில் தொழுவது, அதைத் தரிசிப்பது ஆகிய சிறப்புகள் (7) 15.96: இறையச்சத்தின் மீது நிறுவப்பட்ட பள்ளிவாசல் (1) 15.95: மூன்று பள்ளிவாசல்களைத் தவிர வேறெதற்கும் (புனிதப்) பயணம் கிடையாது (2) 15.94: மக்கா, மதீனாப் பள்ளிவாசல்களில் தொழுவதன் சிறப்பு (6) 15.93: ‘உஹுத்’ மலை நம்மை நேசிக்கிறது; நாமும் அதை நேசிக்கின்றோம் (3) 15.92: சொர்க்கப் பூஞ்சோலைகளுள் ஒன்று (3) 15.91: மதீனாவாசிகள் மதீனாவை விட்டு அகலும்போது அதன் நிலை (2) 15.90: மதீனாவிலேயே தங்கியிருப்பதற்கு ஆர்வமூட்டல் (2) 15.89: மதீனாவாசிகளுக்குக் கேடு நினைப்பவர்களை, அல்லாஹ் உருக்குலைத்துவிடுவான் (3) 15.88: தன்னிலுள்ள தீயவர்களை மதீனா அகற்றிவிடும் (5) 15.87: கொள்ளை நோயும் தஜ்ஜாலும் நுழைய முடியாமல் மதீனா பாதுகாக்கப்பட்டுள்ளது (2) 15.86: மதீனாவில் ஏற்படும் நெருக்கடிகளைச் சகித்துக்கொண்டு, அங்குக் குடியிருக்க ஆர்வ மூட்டல் (10) 15.85: மதீனாவின் சிறப்பு; பிரார்த்தித்ததும் புனிதமானவையும் (17) 15.84: இஹ்ராமின்றி மக்காவிற்குள் நுழைய அனுமதி (5) 15.83: அவசியத் தேவையின்றி மக்காவிற்குள் ஆயுதம் எடுததுச் செல்வதற்குத் தடை (1) 15.82: மக்காவும், அதன் புனிதமானவைகளும் (4) 15.81: முஹாஜிருக்கு மக்காவில் தக்குவதற்கு அனுமதிக்கப்பட்ட நாட்கள் (4) 15.80: ஹாஜிகள் மக்காவில் தங்குவதும் அங்குள்ள வீடுகளை வாரிசுரிமையாகப் பெறுவதும் (3) 15.79: ஹஜ், உம்ரா, அரஃபா நாள் ஆகியவற்றின் சிறப்பு (3) 15.78: இணைவைப்பவருக்கான ஹஜ் சட்டங்கள் (1) 15-77: ஹஜ் அல்லது உம்ராவிலிருந்து திரும்பும்போது துல்ஹுலைஃபாவில் தங்கித் தொழுவது (5) 15.76: பயணத்திலிருந்து திரும்பி வரும்போது ஓத வேண்டியவை (2) 15.75: பயணங்களில் வாகனத்தில் ஏறியதும் ஓத வேண்டிய துஆ (2) 15.74: மஹ்ரமான ஆணுடன் மட்டுமே பெண்ணின் ஹஜ் முதலான பயணம் (11) 15.73: ஹஜ் கடமை, ஆயுளில் ஒரு முறைதான் (1) 15.72: குழந்தையின் ஹஜ் செல்லும்; அதை ஹஜ்ஜுக்கு அழைத்துச் சென்றவருக்கும் நற்பலன் உண்டு (3) 15.71: இயலாதவருக்காகவோ, இறந்தவருக்காகவோ பிறர் ஹஜ் செய்தல் (2) 15.70: கஅபாவின் வளைந்த சுவரும் அதன் தலைவாயிலும் (1) 15.69: இறையில்லம் கஅபாவை இடித்துக் கட்டுதல் (7) 15.68: கஅபாவின் உள்ளே நுழைவதும் அதனுள் தொழுவதும் (9) 15.67: விடைபெறும் தவாஃப் மாதவிடாய் ஏற்பட்ட பெண்ணுக்குக் கடமையில்லை (8) 15.66: செல்லும் வழியில் பலிப் பிராணி பாதிப்புக்குள்ளாகிவிட்டால் … (2) 15.65: பலியிடக் கொண்டுசெல்லும் ஒட்டகத்தில், பயணம் செய்ய அனுமதி (6) 15-64: ஹரம் எல்லைக்குச் செல்லாதவர், பலிப் பிராணியை அனுப்பிவைக்கும் முறை (11) 15.63: ஒட்டகத்தை அறுக்கும் முறை (1) 15.62: பலிப் பிராணிகளுள் மாட்டிலும் ஒட்டகத்திலும் கூட்டுச் சேர்வது (8) 15.61: பலிப் பிராணிகளின் இறைச்சி, தோல், சேணம் ஆகியவை தர்மத்துக்குரியன (2) 15.60: ‘தஷ்ரீக்’ நாட்களின் இரவுகளில் மினாவில் தங்குவது கட்டாயமாகும் (2) 15.59: ‘நஃப்ரு’டைய நாளில் ‘அல்முஹஸ்ஸபி’ல் தங்குவதும் அங்குத் தொழுவதும் (9) 15.58: துல்ஹஜ் பத்தாவது நாளில் ‘தவாஃபுல் இஃபாளா’ செய்வது (2) 15.57: ஹஜ் சடங்குகளில் முன் – பின் ஆகிவிட்டால் … (6) 15.56: துல்ஹஜ் பத்தாம் நாளின் சடங்குகள் (3) 15.55: தலைமுடியை மழிப்பதும் குறைப்பதும் (6) 15.54: கற்களின் எண்ணிக்கை (1) 15.53: கல்லெறியும் நேரம் (1) 15.52: பொடிக் கற்கள் போதும் (1) 15.51: துல்ஹஜ் பிறை பத்தில் ஜம்ரத்துல் அகபாவுக்குக் கல்லெறிதல் (3) 15.50: ‘ஜம்ரத்துல் அகபா’வின் மீது கல் எறியும்போது தக்பீர் கூறுவது (4) 15.49: முஸ்தலிஃபாவிலிருந்து மினாவிற்குப் புறப்படச் செய்வது (11) 15.48: முஸ்தலிஃபாவில் ஸுப்ஹுத் தொழுகையை ஆரம்ப நேரத்தில் தொழுவது (1) 15.47: மஃக்ரிப், இஷா வை அடுத்தடுத்துத் தொழுவது (14) 15.46: அரஃபா நாளில் மினாவிலிருந்து அரஃபாவிற்குப் போகும்போது தல்பியாவும் தக்பீரும் கூறுதல் (4) 15.45: துல்ஹஜ் பத்தாவது நாளன்று கல்லெறியத் துவங்கும்வரை தல்பியாச் சொல்லிக்கொண்டிருப்பது (7) 15.44: ஸஃபா-மர்வாவுக்கிடையே ஸயீ (ஓட்டம்) ஒரே தடவைதான் (1) 15.43: ஸஃபா-மர்வாவுக்கிடையே ஸயீச் செய்வது முக்கியக் கடமையாகும் (5) 15.42: வாகனங்கள் மீதமர்ந்து தவாஃப் செய்யலாம் (6) 15.41: தவாஃபின்போது ஹஜருல் அஸ்வதை முத்தமிடுவது (5) 15.40: இறையில்லத்தில் முத்தமிடப்படும் இரு மூலைகள் (6) 15.39: தவாஃபில் விரைந்து நடப்பது விரும்பத்தக்கது (12) 15.38: மக்காவினுள் நுழையும் முன்… (4) 15.37 மக்காவினுள் நுழைவதும் வெளியேறுவதும் (3) 15.36 ரமளான் மாதத்தில் உம்ராச் செய்வதன் சிறப்பு (2) 15.35: நபியவர்களின் உம்ரா எண்ணிக்கையும் காலமும் (4) 15.34 நபியவர்களின் தல்பியாவும் பலியும் (4) 15.33: உம்ராவில் தலைமுடி குறைத்தல் (5) 15.32: இஹ்ராமின்போது பலிப் பிராணி (4) 15.31: ஹஜ்ஜுப் பருவங்களில் உம்ராச் செய்ய அனுமதி (6) 15.30: தமத்துஉ ஹஜ் (2) 15.29: இஹ்ராம் ஹாஜிக்குக் கட்டாயம் (3) 15.28: தவாஃபும் ஸயீயும் கட்டாயம் (3) 15.27: ஹஜ் உம்ரா சேர்த்தும் தனித்தும் செய்வது (3) 15.26: ஒரே இஹ்ராமில் உம்ரா ஹஜ் (3) 15.25: இஹ்ராமிலிருந்து விடுபடுதல் (3) 15.24: பலிப் பிராணியும் ஹஜ் கடமையும் (2) 15.23: தமத்துஉ ஹஜ் அனுமதிக்கப்பட்ட ஒன்றாகும் (13) 15.22: ஒருவர் வேறொருவரின் இஹ்ராமை அச்சொட்டி பூணுதல் (3) 15.21: அரஃபா பெருவெளியில் தங்கி திரும்புதல் தொடர்பான இறை கூற்று (3) 15.20: அரஃபாப் பெருவெளி முழுவதும் தங்குமிடம் (2) 15.19: நபி (ஸல்) அவர்களின் ஹஜ் (1) 15.18: உம்ராவையும் ஹஜ்ஜையும் தனித் தனியாக நிறைவேற்றி பயனடைதல் (2) 15.17: இஹ்ராமின் முறைகள் (27) 15.16: இரத்தப்போக்குடைய பெண் இஹ்ராமில் குளித்தல் (2) 15.15: இஹ்ராமிலிருந்து விடுபட முன் நிபந்தனையிட அனுமதி (5) 15.14: முஹ்ரிம் இறந்துவிட்டால் செய்ய வேண்டியவை (9) 15.13: இஹ்ராம் பூண்ட முஹ்ரிம், தம் உடலைக் கழுவிக்கொள்ள அனுமதி (1) 15.12: இஹ்ராம் பூண்ட முஹ்ரிம், தம் கண்களுக்கு மருந்திட அனுமதி (2) 15.11: இஹ்ராம் பூண்ட முஹ்ரிம், ஹிஜாமா செய்ய அனுமதி (2) 15.10: முஹ்ரிமுக்குத் தலைமுடி மழிக்க அனுமதியும் பரிகாரமும் (7) 15.09: ஹரம் எல்லைக்குள் கொல்ல அனுமதிக்கப்பட்டவைகள் (12) 15.08: இஹ்ராம் பூண்ட முஹ்ரிம் வேட்டையாடுவது குறித்து.. (9) 15.07: இஹ்ராமின்போது நறுமணம் பூசுதல் (19) 15.06: துல்ஹுலைஃபா பள்ளியில் தொழுதல் (1) 15.05: வாகனம் புறப்படுவதற்கு ஆயத்தமானவுடன் தல்பியா கூறுவது (4) 15.04: மதீனாவாசிகள் இஹ்ராம் பூண வேண்டிய இடம் (2) 15.03: தல்பியாவின் பண்பும் அதன் நேரமும் (4) 15.02: ஹஜ்/உம்ராவிற்கான இஹ்ராம் எல்லைகள் (7) 15.01: ஹஜ்/உம்ராவில் அனுமதிக்கப்பட்டவை.. (10) 14.04: துல்ஹஜ் மாதத்தின் பத்து நோன்புகள் (2) 14.02: இஃதிகாஃப் இருக்குமிடத்தினுள் நுழையும் நேரம் (1) 14.03: இறுதிப் பத்தில் வழிபாடுகளில் ஈடுபடுவது (2) 14.01: இறுதிப் பத்து நாட்களில் இஃதிகாஃப் இருத்தல் (5) 13.40: லைலத்துல் கத்ர் இரவு குறித்து.. (17) 13.39: ஷவ்வால் ஆறு நோன்பு (1) 13.37: ஷஅபான் மாத இறுதியில் நோன்பு நோற்றல் (3) 13.38: முஹர்ரம் நோன்பின் சிறப்பு (2) 13.36: சுன்னத்தான நோன்புகள் (5) 13.35: ஒரு நாள் விட்டு ஒரு நாள் நோன்பு (12) 13.34: நோன்பில்லாமல் எந்த மாதத்தையும் கடக்க விடாமலிருப்பது விரும்பத் தக்கது (9) 13.33: மறதியால் (நோன்பாளி) நோன்பு முறியாது (1) 13.32: கூடுதலான நோன்பு முடிவு செய்வதற்கும் விடுவதற்கும் அனுமதி (2) 13.31: அல்லாஹ்வின் பாதையில் செல்லும்போது சக்தி பெற்றிருப்பவர் நோன்பு நோற்பதன் சிறப்பு (2) 13.30: நோன்பின் மாண்பு (6) 13.29: நோன்பாளி, நாவைக் காப்பது (1) 13.28: நோன்பாளி விருந்துக்கு அழைக்கப்பட்டால் “நான் நோன்பாளி” என்று சொல்லிவிட வேண்டும் (1) 13.27: இறந்துபோனவரின் விடுபட்ட நோன்பை நோற்பது (5) 13.26: ரமளானில் விடுபட்ட நோன்பை ஷஅபான் மாதத்தில் ‘களா’ச் செய்தல் (2) 13.25: இறைவசனம் வேறொரு வசனத்தின் மூலம் மாற்றம் (2) 13.24: வெள்ளிக்கிழமை மட்டும் நோன்பு நோற்பது விரும்பத் தக்கதன்று (3) 13.23: அய்யாமுத் தஷ்ரீக் நாட்களில் நோன்பு நோற்பதற்குத் தடை (2) 13.22: நோன்புப் பெருநாளிலும் ஹஜ்ஜுப் பெருநாளிலும் நோன்பு நோற்பதற்குத் தடை (6) 13.20: ஆஷூரா நோன்பை எந்த நாளில் நோற்க வேண்டும்? (4) 13.19: ஆஷூரா நாளில் நோன்பு நோற்றல் (17) 13.18: அரஃபா நாளில் அரஃபாவில் தங்கும் ஹாஜிகளின் நோன்பு (4) 13.17: பயணத்தில் நோன்பு நோற்பதையோ விட்டுவிடுவதையோ தேர்ந்துகொள்ளலாம் (5) 13.16: பயணத்தில் நோன்பைக் கைவிட்டவர், பொதுப் பணியாற்றினால் கிடைக்கும் நன்மை (3) 13.15: பயணத்தில் இருப்பவர் மீதான கடமையான ரமளான் நோன்பு (11) 13.14: ரமளான் பகலில் உடலுறவில் ஈடுபடுவதற்குத் தடையும் அதன் பரிகாரமும் (5) 13.13: பெருந்துடக்குடன் வைகறைப் பொழுதை அடைந்தவரின் நோன்பு செல்லும் (6) 13.12: கட்டுப்படுத்தும் நோன்பாளிக்கு (தம் மனைவியை) முத்தமிடத் தடையில்லை (13) 13.11: தொடர்நோன்பு நோற்பதற்குத் தடை (7) 13.10: பகற் பொழுது வெளியேறி நோன்பு நிறைவடையும் நேரம் (3) 13.09: ஸஹரைத் தாமதிப்பதும் நோன்பு துறப்பதை விரைந்து செய்வதும் (6) 13.08: ஃபஜ்ரு நேரம் வந்தவுடன் நோன்பு ஆரம்பமாகிவிடும் (11) 13.07: ‘இரு பெருநாட்களின் இரு மாதங்களும் குறைவுபடாது’ நபிகளாரின் விளக்கம் (2) 13.06: (வானை) மேகம் மூடிக்கொண்டால் (மாதத்தின் நாட்கள்) முப்பதாக முழுமையாக்கப்படும் (2) 13.05: ஒவ்வோர் ஊர்க்காரர்களுக்கும் அவரவர் பார்க்கும் பிறையே பொருந்தும் (1) 13.04: மாதம் என்பது இருபத்தொன்பது நாட்களாகவும் இருக்கும் (6) 13.03: ரமளானுக்கு முந்தைய இரு நாள்களில் நோன்பு நோற்கக் கூடாது (1) 13.02: ரமளான் நோன்பு தொடக்கமும் முடிவும் (17) 13.01: ரமளான் மாதத்தின் சிறப்பு (2) 12.55: ஸகாத் வசூலிப்பவர், தடை செய்யப்பட்டதைக் கோராதவரை அவரைத் திருப்திபடுத்த வேண்டும் (1) 12.54: தர்மப் பொருள் கொண்டுவந்தவருக்காகப் பிரார்த்தித்தல் (1) 12.53: நபி (ஸல்) அன்பளிப்பை ஏற்றதும் தர்மத்தை மறுத்ததும் (1) 12.52: தர்மப் பொருள், அதன் பண்பு நீங்கி விடுதல் (5) 2.27: நாய் நக்கிய பாத்திரம் பற்றிய சட்டம் (6) 2.28: தேங்கிக் கிடக்கும் தண்ணீரில் சிறுநீர் கழிப்பதற்குத் தடை (3) 2.29: பெருந்துடக்குடையவர் தேங்கிய நீரில் இறங்கிக் குளிக்கத் தடை (1) 2.30: பள்ளிவாசலில் சிறுநீர் கழித்தால்… (3) 2.31: தாய்பால் குடிக்கும் குழந்தையின் சிறுநீரைக் கழுவும் சட்டம் (4) 2.32: விந்து பற்றிய சட்டம் (4) 2.33: மாதவிடாய் இரத்தம் கழுவும் முறை (1) 2.34: சிறுநீரைச் சுத்தம் செய்வது கட்டாயம் (1) 3.01: மாதவிடாயான மனைவியைக் கீழாடைக்கு மேல் அணைத்துக் கொள்வது. (3) 3.02: மாதவிடாயான மனைவியுடன் ஒரே போர்வைக்குள் படுத்துக் கொள்வது. (2) 3.03: மாதவிடாயான பெண் செய்ய அனுமதிக்கப்பட்டவை (11) 3.04: இச்சை நீர் (3) 3.05: உறங்கி எழுந்ததும் முகத்தையும் கையையும் கழுவுதல் (1) 3.06: பெருந்துடக்காளி செய்ய வேண்டியவை (8) 3.07: மதன நீர் வெளிப்பட்ட பெண்ணுக்குக் குளியல் கடமை. (5) 3.08: ஆண்/பெண் (விந்து-மதன)நீரிலிருந்துதான் குழந்தை உருவாகிறது. (1) 3.09: பெருந்துடக்கிற்கான குளியல் முறை (5) 3.10: பெருந்துடக்கு குளியல் தொடர்பானவை (14) 3.11: குளிக்கும் போது மூன்றுமுறை தண்ணீர் ஊற்றுதல் (4) 3.12: குளிக்கும் பெண்களின் சடைமுடி பற்றிய சட்டம் (2) 3.13: மாதவிடாய் குளியலின் போது கஸ்தூரி பயன்படுத்துதல் (2) 3.14: தொடர் உதிரப் போக்குடைய பெண்களின் தொழுகை மற்றும் குளியல் (5) 3.15: மாதவிடாய் நாட்களில் விடுபட்ட கடமைகள் (3) 3.16: குளிப்பவர் திரையிட்டுக் கொள்தல் (3) 3.17: பிறரின் மறையுறுப்பைப் பார்த்தல் (1) 3.18: தனித்துக் குளிக்கும் போது ஆடையின்றி குளித்தல் (1) 3.19: மறையுறுப்பை மறைத்துக் கொள்வதில் கவனம் (3) 3.21: (விந்து)நீர் வெளிப்பட்டாலே (குளியல்)நீர் கடமையாகும் (9) 3.22: ஆண்-பெண் குறிகள் இணைந்து விட்டால் குளியல் கடமையாகும் (3) 3.23: சமைக்கப்படவற்றை உண்டால் மீண்டும் உளூ செய்தல் (3) 3.24: சமைக்கப் பட்டவற்றை உண்டால் உளூச் செய்யும் கட்டாயம் மாற்றப் பட்டது (8) 3.25: ஒட்டக இறைச்சி உண்டால் உளூச் செய்ய வேண்டும் (1) 3.26: வாயு பிரிந்த சந்தேகம் ஏற்பட்டாலும் தொழலாம் (2) 3.27: பதனிடப்படுவதால் செத்த பிராணியின் தோல் தூய்மை ஆகும் (7) 3.28: தயம்மும் (6) 3.29: ஒரு முஸ்லிம் (பெருந்துடக்கு ஏற்பட்டதால்) அசுத்தமாகிவிட மாட்டார். (2) 3.30: பெருந்துடக்கு போன்ற நிலைகளிலும் அல்லாஹ்வைத் துதித்தல். (1) 3.31: சிறுதுடக்காளி (உளூச் செய்யாமல்) உண்ணலாம் (4) 3.32: கழிப்பிடத்திற்குச் செல்லும்போதான பிரார்த்தனை (1) 3.33: உட்கார்ந்து கொண்டு உறங்குவது உளூவை முறிக்காது. (4) 4.01: தொழுகை அழைப்பின் தொடக்கம் (1) 4.02: தொழுகை அறிவிப்பு தொடர் அமையும் விதம் (3) 4.03: தொழுகை அழைப்பு முறை (1) 4.04: ஒரு பள்ளிவாசலுக்கு இரு தொழுகை அழைப்பாளர்கள் (1) 4.05: பார்வையற்றவர் தொழுகை அழைப்பு விட நிபந்தனை (1) 4.06: போரின் போது இணைவைப்பாளர் நாட்டில் தொழுகை அழைப்பு விடுக்கப்பட்டால் (1) 4.07: தொழுகை அழைப்பைச் செவியுறுபவர் செய்ய வேண்டியவை (4) 4.08: தொழுகை அழைப்பின் சிறப்பும் ஷைத்தான் வெருண்டோடுவதும் (6) 4.09: இரு கைகளையும் தோள் புஜத்துக்கு உயர்த்துதல் (4) 4.10: அல்லாஹு அக்பர், ஸமி அல்லாஹு லிமன் ஹமிதஹ் கூறும் இடங்கள் (5) 4.11: தொழுகையில் அல்ஃபாத்திஹா அத்தியாயம் ஓதுதல் (8) 4.12: இமாமைப் பின்பற்றித் தொழுபவர் உரத்து ஓதலாகாது (2) 4.13: பிஸ்மில்லாஹ்வை(த் தொழுகையில்) உரத்து ஓதாலாகாது என்போரின் வாதம் (2) 4.14: அத்தியாயங்களின் துவக்கம் “பிஸ்மில்லாஹ்” குறித்த வாதம் (1) 4.15: தக்பீருக்குப் பின்னும் சஜ்தாவிலும் கைகளை வைக்கும் முறை (1) 4.16: தொழுகையில் அத்தஹிய்யாத் ஓதுவது (4) 4.17: இறுதி அத்தஹியாத்திற்குப் பின் ஸலவாத் கூறுதல் (4) 4.18: ஸமி அல்லாஹு லிமன் ஹமிதஹ், ரப்பனா ல(க்)கல் ஹம்து, ஆமீன் ஆகியவை கூறுவது (5) 4.19: இமாமை மஃமூம் பின்தொடர்வது (5) 4.20: இமாமை முந்துவதற்குத் தடை (4) 4.21: இமாமைப் பின்பற்றுவதில் சட்ட மாற்றம் (10) 4.22: இமாம் வருவதற்குத் தாமதமானால்… (2) 4.23: தொழுகையில் இமாமுக்கு ஏதாவது உணர்த்த விரும்பினால்… (1) 4.24: தொழுகையை முழுமையாக உள்ளச்சத்துடன் தொழல் (4) 4.25: தொழுகையில் இமாமை முந்தாமல் இருத்தல் (7) 4.26: தொழும்போது வானத்தை அண்ணாந்து பார்ப்பதற்குத் தடை (2) 4.27: தொழுகையில் ஒழுங்குகள் (3) 4.28: தொழுகையில் வரிசைகளைப் பேணுதல் (11) 4.29: ஆண்களுக்குப் பின்னால் தொழும் பெண்கள் தலை உயர்த்தும் முறை (1) 4.30: பெண்கள் பள்ளிவாசலுக்குச் செல்தல், நறுமணம் பூசுதல் (11) 4.31: தொழுகையில் அச்சநிலையில் குர்ஆன் ஓதும் முறை (2) 4.32: குர்ஆன் ஓதப்படும்போது செவிதாழ்த்திக் கேட்க வேண்டும். (2) 4.33: ஸுப்ஹுத் தொழுகையில் உரத்துக் குர்ஆன் ஓதுதல் (4) 4.34: லுஹ்ரு, அஸ்ருத் தொழுகைகளில் குர்ஆன் ஓதுதல் (8) 4.35: ஸுப்ஹுத் தொழுகையில் குர்ஆன் ஓதுதல் (13) 4.36: இஷாத் தொழுகையில் குர்ஆன் ஓதுவது (8) 4.37: தொழுகையைச் சுருக்கி, நிறைவுறத் தொழுவிப்பதற்கான கட்டளை (11) 4.38: தொழுகையின் நிலைகளை நிதானமாக, சுருக்கி, நிறைவாகச் செய்வது (4) 4.39: தொழுகையில் இமாமை முந்தி விடாமலிருத்தல் (5) 4.40: ருகூஉவிலிருந்து தலையை உயர்த்திய பின் ஓத வேண்டியவை (5) 4.41: ருகூஉவிலும் ஸஜ்தாவிலும் குர்ஆன் ஓதுவதற்குத் தடை (6) 4.42: ருகூஉவிலும் ஸஜ்தாவிலும் ஓத வேண்டியவை (9) 4.44: ஸஜ்தாவின் போது தரையில் படவேண்டிய உறுப்புகள் (7) 4.45: சீராக ஸஜ்தா செய்தல் (2) 4.46: தொழுகை முறைத் தொகுப்பு (5) 4.47: தனித்துத் தொழுபவர் தடுப்பு ஒன்றை வைத்துக் கொள்வது (13) 4.48: தொழுகையில் குறுக்கே செல்பவரைத் தடுப்பது (4) 4.49: தொழுபவர், தடுப்புக்கு நெருக்கமாக நிற்க வேண்டும் (3) 4.50: தொழுபவருக்கான குறுக்குத் தடுப்பின் அளவு (2) 4.51: தொழுபவருக்குக் குறுக்கே படுத்திருப்பது (8) 4.52: ஒரே ஆடை அணிந்து தொழும் முறை (9) 5.01: பூமியில் எழுப்பப்பட்ட முதலாவது இறையாலயம் (8) 5.02: மஸ்ஜிதுந் நபவீ கட்டப்பட்ட வரலாறு (2) 5.03: தொழுகைத் திசை(கிப்லா) கஅபாப் பள்ளிக்கு மாற்றம் (4) 5.04: மண்ணறைகளில் செய்யக்கூடாதவை (6) 5.05: மஸ்ஜிதுகள் கட்டுவதன் சிறப்பும் அதற்கான ஆர்வமூட்டலும் (2) 5.06: ருகூஉவில் உள்ளங்கைகளை வைப்பதற்கான சட்டத் திருத்தம் (5) 5.07: இரு குதிகால்கள்மீது (தொழுகை அமர்வில்) அமர அனுமதி (1) 5.08: தொழுகையில் பேசிக் கொள்ள இருந்த அனுமதி நீக்கம் (6) 5.09: தொழுகைக்கு இடையில் செய்ய அனுமதிக்கப்பட்டவை (2) 5.10: குழந்தைகளைச் சுமந்துகொண்டு தொழுவதற்கு அனுமதி (3) 5.11: தொழுகையின்போது ஓரிரு அடிகள் நடக்க அனுமதி (1) 5.12: இடுப்பில் கையூன்றிக் கொண்டு தொழுவது வெறுக்கத் தக்கது (1) 5.13: தொழும்போது மண்ணைச் சமப்படுத்துதல் வெறுக்கத் தக்கது (3) 5.14: பள்ளிவாசலில் எச்சில் துப்பத் தடை (10) 5.15: காலணி அணிந்து கொண்டு தொழுவதற்கு அனுமதி (1) 5.16: கவனத்தை ஈர்க்கும் ஆடை அணிந்து தொழுதல் வெறுக்கப்பட்டது (3) 5.17: சிறுநீர்/மலம் அடக்குதல், உணவு காக்க வைத்தல் நிலையில் தொழுதல் (4) 5.18: துர்நாற்றத்துடன் பள்ளிச்செல்லுதலும் அவரை வெளியேற்றலும் (10) 5.19: பள்ளிவாசலினுள் காணாமற்போன பொருளைத் தேடத் தடை (3) 5.20: தொழுகையில் ஏற்படும் மறதிக்குப் பரிகாரம் (17) 5.21: ஸஜ்தா திலாவத் (9) 5.22: அத்தஹிய்யாத்தில் அமரும் முறை (5) 5.23: தொழுகையை நிறைவு செய்யும்போது ஸலாம் கூறும் முறை (3) 5.24: தொழுத பின்னர் திக்ரு (3) 5.25: மண்ணறை வேதனையிலிருந்து பாதுகாப்புக் கோருதல் (3) 5.26: தொழுகையில் பாதுகாப்புக் கோரப்பட வேண்டியவை (8) 5.27: தொழுகைக்குப்பின் திக்ரு செய்தல் (9) 5.28: தொடக்கத் தக்பீருக்குப் பின் கூறவேண்டியவை (4) 5.29: தொழுகையில் கலந்துகொள்ள செல்லும் முறை (5) 5.30: தொழுகைக்காக மக்கள் எப்போது எழுந்து நிற்க வேண்டும்? (5) 5.31: கூட்டுத்தொழுகையை அடைந்துகொள்ள நிபந்தனை (5) 5.32: ஐவேளைத் தொழுகை நேரங்கள் (13) 5.33: கடுங்கோடையில் ஜமாஅத் தொழுகை (8) 5.34: கடுங்கோடையில்லா சமயத்தில் ஜமாஅத் தொழுகை (4) 5.35: அஸ்ருத் தொழுகையின் நேரம் (7) 5.36: அஸ்ருத் தொழுகையைத் தவறவிட்டால்.. (3) 5.37: அஸ்ரு நடுத்தொழுகை என்போரின் சான்று (6) 5.38: ஸுப்ஹு, அஸ்ருத் தொழுகைகளின் சிறப்புகள் (6) 5.39: மஃக்ரிபுத் தொழுகையின் ஆரம்ப நேரம் (2) 5.40: இஷாத் தொழுகையின் நேரமும் அதைத் தாமதமாகத் தொழுவதும் (12) 5.41: ஸுப்ஹுத் தொழுகையின் நேரம் மற்றும் ஓதப்படும் (குர்ஆன் வசனங்களின்) அளவு (7) 5.42: தொழுகைக்கு உரிய நேரத்தைத் தாமதப்படுத்துதல் (7) 5.43: கூட்டுத் தொழுகையின் சிறப்பும் அதைத் தவற விடுவது பற்றிய கண்டனமும் (10) 5.44: தொழுகை அழைப்பைச் செவியுறுபவர் பள்ளிவாசலுக்குச் செல்வது கட்டாயமாகும் (1) 5.45: கூட்டுத் தொழுகை என்பது நேர்வழியைச் சார்ந்தது (2) 5.46: பாங்கு கூறிய பின்னர் பள்ளிவாசலிலிருந்து வெளியேறத் தடை (2) 5.47: இஷா மற்றும் ஸுப்ஹு கூட்டாகத் தொழுவதன் சிறப்பு (4) 5.48: கூட்டுத் தொழுகையைத் தவிர்ப்பதற்கான அனுமதி (1) 5.49: நஃபில் தொழுகைகளை ஜமாஅத்தாகத் தொழுதல் (6) 5.50: கூட்டுத் தொழுகைக்காகக் காத்திருப்பதன் சிறப்பு (5) 5.51: பள்ளிவாசலுக்கு நடந்து செல்வதன் சிறப்பு (6) 5.52: தொழுகைக்கு நடந்து செல்பவருக்குக் கிடைக்கும் பலன்கள் (4) 5.53: உதயம்வரை தொழுத இடத்தில் அமர்ந்திருப்பதன் சிறப்பு (3) 5.54: தொழுகைக்குத் தலைமையேற்க அதிகத் தகுதியுடையவர் (5) 5.55: எல்லாத் தொழுகைகளிலும் குனூத் ஓதும் காலகட்டம் (15) 5.56: விட்டுப்போனத் தொழுகைகளைத் தொழுதல் (8) 6.01: பயணிகளின் தொழுகை; சுருக்கித் தொழுதல் (20) 6.02: மழையின்போது இருப்பிடங்களில் தொழுதுகொள்ளலாம் (4) 6.03: நஃபில் தொழுகைகளை வாகனத்தில் செல்பவர் தொழலாம் (10) 6.04: பயணத்தில் இரு தொழுகைகளைச் சேர்த்து தொழலாம் (7) 6.05: உள்ளூரில் இருக்கும்போது இரு தொழுகைகளை இணைத்து தொழுதல் (10) 6.06: தொழுது முடித்தபின் வலம், இடம் திரும்பி அமர்தல் (3) 6.07: இமாமுக்கு வலப்பக்க வரிசையில் நிற்பது விரும்பத்தக்கது (1) 6.08: இகாமத் கூறத் தொடங்கி விட்டால் நஃபில் தொழுவது வெறுக்கத்தக்கது (5) 6.09: பள்ளிவாசலுக்குள் நுழையும்போது கூறவேண்டிய துஆ (1) 6.10: பள்ளிக் காணிக்கை தொழுகை தொடர்பாக (4) 6.11: பயணத்திலிருந்து திரும்பியவர் இரண்டு ரக்அத் தொழுதல் (3) 6.12: முற்பகல் (ளுஹா) தொழுகை எண்ணிக்கை (11) 6.13: ஃபஜ்ருடைய இரு ரக்அத் சுன்னத் தொழுகை (15) 6.14: சுன்னத் தொழுகைகளின் சிறப்பும் எண்ணிக்கைகளும்! (3) 6.15: நஃபில் தொழுகைகளைத் தொழும் முறைகள் (14) 6.16: இரவுத் தொழுகை (18) 6.17: இரவுத் தொழுகையின் ஒருங்கிணைந்த விபரங்கள் (4) 6.18: அவ்வாபீன் தொழுகை (2) 6.19: இரவுத் தொழுகை, வித்ருத் தொழுகை ரக்அத்கள் (16) 6.20: வித்ருத் தொழுகை நேரம் (2) 6.21: தொழுகையில் மிகச் சிறந்தது (2) 6.22: இரவில் பிரார்த்தனை ஏற்கப்படும் நேரம் (2) 6.23: இரவின் இறுதி நேரத்தில் பிரார்த்தனை (5) 6.24: ‘கியாமு ரமளான்(தராவீஹ்) தொழ ஆர்வமூட்டல் (8) 6.25: இரவுத் தொழுகையில் பிரார்த்திப்பதும் நின்று வணங்குவதும் (17) 6.26: இரவுத் தொழுகையில் நீண்ட நேரம் (நின்று) குர்ஆன் ஓதுவது (2) 6.27: தொழாமல் விடியும்வரை உறங்குபவர் (3) 6.28: கூடுதலான நஃபில் தொழுகைகள் (6) 6.29: நற்செயல்களை வழக்கமாகச் செய்வதன் சிறப்பு. (4) 6.30: இபாதத் தூக்கத்தால் தடைப்பட்டால்… (5) 6.31: குர்ஆனின் தொடர்பைப் பற்றிப் பிடித்துக்கொள்ளக் கட்டளை (7) 6.32: குர்ஆனை இனிய குரலில் ஓதுவது விரும்பத் தக்கதாகும் (5) 6.33: மக்கத்து வெற்றி நாளில்… (2) 6.34: குர்ஆனை ஓதுவதால் இறங்கும் அமைதி (3) 6.35: குர்ஆனை மனனமிட்டவரின் சிறப்பு (1) 6.36: குர்ஆனை ஓதுகின்ற இருவகையினரின் தனிச் சிறப்புகள் (1) 6.37: குர்ஆனில் தேர்ந்த மேன்மக்கள் முன்னிலையில் குர்ஆன் ஓதுவது (2) 6.38: குர்ஆனைச் செவியேற்பதன் சிறப்பு (3) 6.39: குர்ஆனைக் கற்பது மற்றும் ஓதுவதன் சிறப்பு (2) 6.40: குர்ஆன் ஓதுவதன் சிறப்பும் அல்பகரா அத்தியாயத்தின் சிறப்பும் (2) 6.41: ஸூரத்துல் ஃபாத்திஹா, அல்பகரா அத்தியாயத்தின் இறுதி வசனங்களின் சிறப்பு (2) 6.42: ஸூரத்துல் கஹ்ஃப் மற்றும் ஆயத்துல் குர்ஸீ ஆகியவற்றின் சிறப்பு (3) 6.43: குல் ஹுவல்லாஹு அஹது (அத்தியாயத்தை) ஓதுவதன் சிறப்பு (4) 6.44: அல்முஅவ்விதத்தைன் (பாதுகாவல்) அத்தியாயங்களை ஓதுவதன் சிறப்பு (2) 6.45: குர்ஆனின்படி தாமும் செயல்பட்டுப் பிறருக்கும் அதைக் கற்பிப்பவரின் சிறப்பு (4) 6.46: குர்ஆன் ஏழு (வட்டார) மொழிநடையில் அருளப்பெற்றுள்ளது என்பதன் விளக்கம் (4) 6.47: குர்ஆனை வேகமாக ஓதுவதைத் தவிர்த்தல் (4) 6.48: குர்ஆன் ஓதும் முறைகளுள் சில (4) 6.49: தொழத் தடுக்கப்பட்ட நேரங்கள். (8) 6.50: அம்ரு பின் அபஸா (ரலி) இஸ்லாத்தை ஏற்றமை (1) 6.51: சூரியன் உதிக்கும் நேரத்தையும் மறையும் நேரத்தையும் தேர்ந்தெடுத்துத் தொழாதீர்கள்! (2) 6.52: நபி (ஸல்) அஸ்ருக்குப் பிறகு தொழுதுவந்த இரண்டு ரக்அத்கள் எவை? (5) 6.53: மஃக்ரிப் தொழுகைக்கு முன் இரண்டு ரக்அத்கள் தொழுவது விரும்பத் தக்கது (2) 6.54: பாங்குக்கும் இகாமத்துக்கும் இடையிலுள்ள தொழுகை (1) 6.55: அச்சச் சூழல் தொழுகை (8) 7.01: வெள்ளிக்கிழமையில் குளிப்பது வயதுவந்த ஒவ்வோர் ஆண் மீதும் கடமை (7) 7.02: வெள்ளிக்கிழமையில் பல் துலக்குவதும் நறுமணம் பூசுவதும் (4) 7.03: வெள்ளிக்கிழமை சொற்பொழிவின்போது அமைதி காத்தல் (2) 7.04: வெள்ளிக்கிழமையில் (பிரார்த்தனை ஏற்கப்படுவதற்கு) உள்ள ஒரு நேரம் (4) 7.05: வெள்ளிக்கிழமையின் சிறப்பு (2) 7.06: இந்தச் சமுதாயத்தின் (சிறப்பு வழிபாட்டு) நாள் வெள்ளிக்கிழமை (4) 7.07: வெள்ளிக்கிழமை (தொழுகைக்கு) முன்னதாகச் செல்வதன் சிறப்பு (2) 7.08: மௌனமாக (வெள்ளிக்கிழமை) உரையைச் செவியேற்பவரின் சிறப்பு (2) 7.09: சூரியன் (உச்சியிலிருந்து) சாயும்போது ஜும்ஆத் தொழுவது (5) 7.10: தொழுகையின் உரைகளும் இடையே (இமாம்) அமர்வதும் (3) 7.11: வியாபாரத்தையோ வேடிக்கையையோ கண்டால் (62:11ஆவது) இறைவசனம் (4) 7.12: ஜும்ஆத் தொழுகையை(த் தொழாமல்) கைவிடுவதற்குக் கண்டனம் (1) 7.13: (ஜும்ஆத்) தொழுகையையும் (குத்பா) உரையையும் சுருக்கமாக அமைத்தல் (11) 7.14: இமாம் (ஜும்ஆ) உரை நிகழ்த்தும்போது காணிக்கை தொழுகை (6) 7.15: பொது போதனைக்கு நடுவில் தனி போதனை (1) 7.16: ஜும்ஆத் தொழுகையில் ஓத வேண்டியவை (3) 7.17: வெள்ளிக்கிழமை (ஃபஜ்ருத் தொழுகையில்) ஓத வேண்டியவை (3) 7.18: ஜும்ஆவுக்குப் பின் தொழ வேண்டியவை (16) 8.01: பெருநாள் திடலில் பெண்கள் பங்கேற்பது (3) 8.02: பெருநாள் திடலில் தொழுகைக்கு முன்போ பின்போ தொழக் கூடாது (1) 8.03: இரு பெருநாள் தொழுகைகளில் ஓதக் கூடியவை (2) 8.04: பெருநாட்களில் பாவமில்லா விளையாட்டுகளில் ஈடுபட அனுமதி (7) 9.00: இமாம் (மழைத் தொழுகையில்) மேல்துண்டை மாற்றிப் போட்டுக் கொள்வது (4) 9.01: மழைவேண்டிப் பிரார்த்திக்கும்போது இருகைகளை உயர்த்துதல் (3) 9.02: மழைவேண்டிப் பிரார்த்தித்தல் (2) 9.03: கடும் காற்றையும் மேகத்தையும் காணும்போதும்.. மழை பெய்யும்போதும்.. (3) 9.04: கீழைக் காற்று (’ஸபா’) மற்றும் மேலைக் காற்று (’தபூர்’) பற்றிய குறிப்புகள் (1) 10.01: சூரிய கிரகணத் தொழுகை (7) 10.02: கிரகணத் தொழுகையின்போது மண்ணறை வேதனை பற்றி நினைவு கூர்வது (1) 10.03: கிரகணத் தொழுகையின்போது சொர்க்கமும் நரகமும் (6) 10.04: கிரகணத் தொழுகையில் எட்டு ருகூஉகளும் நான்கு ஸஜ்தாக்களும்.. (2) 10.05: கிரகணத் தொழுகைக்காக, “அஸ்ஸலாத்து ஜாமிஆ” அறிவிப்பு.. (8) 11.01: மரணத் தருவாயில் ‘லா இலாஹ இல்லல்லாஹ்’ (எனும் கலிமா)வை நினைவூட்டுதல் (2) 11.02: துன்பம் நேரும்போது வேண்டக்கூடிய பிரார்த்தனை (2) 11.03: நோயாளியிடமும் மரணத் தருவாயில் இருப்பவரிடமும் சொல்ல வேண்டியவை (1) 11.04: உயிர் பிரிந்தவுடன் இறந்தவருக்குச் செய்ய வேண்டியவை (1) 11.05: இறப்பவரின் பார்வை தனது உயிரை நோக்கி நிலைகுத்தி நிற்றல் (1) 11.06: இறந்தவருக்காக அழுவது (3) 11.07: நோயாளிகளைச் சந்தித்து உடல்நலம் விசாரித்தல் (1) 11.08: பொறுமை என்பது துன்பத்தின் முதல் நிலையில் கடைப்பிடிப்பதாகும் (2) 11.09: இறந்தவருக்காக ஒப்பாரி வைத்து அழுதால்.. (14) 11.10: ஒப்பாரிக்குக் கடுமையான கண்டனம் (5) 11.11: ஜனாஸாவின் இறுதி ஊர்வலத்தைப் பின்தொடர்ந்து செல்வதற்குப் பெண்களுக்குத் தடை (2) 11.12: மையித்தைக் குளிப்பாட்டுதல் (4) 11.13: மய்யித்திற்கு ‘கஃபன்’ உடை அணிவித்தல் (4) 11.14: மய்யித்தை மூடிவைத்தல் (1) 11.15: மய்யித்திற்கு அழகிய முறையில் கஃபன் அணிவித்தல் (1) 11.16: இறந்தவர் உடலைத் துரிதமாக அடக்கம் செய்தல் (2) 11.17: ஜனாஸாத் தொழுகையின் மற்றும் ஜனாஸாவைப் பின்தொடர்வதன் சிறப்பு (6) 11.18: மய்யித்துக்காக நூறு பேர் தொழுது செய்யும் பரிந்துரை ஏற்கப்படும் (1) 11.19: மய்யித்துக்காக நாற்பது பேர் பரிந்துரை (1) 11.20: இறந்தவர் குறித்துப் புகழ்ந்து, அல்லது இகழ்ந்து பேசப்படுதல் (1) 11.21: ஓய்வு பெற்றவரும் ஓய்வளித்தவரும் (1) 11.22: ஜனாஸாத் தொழுகையில் சொல்ல வேண்டிய தக்பீர்கள் (6) 11.23: மண்ணறை அருகில் (ஜனாஸாத் தொழுகை) தொழுவது (4) 11.24: ஜனாஸாவுக்காக எழுந்து நிற்பது (7) 11.25: ஜனாஸாவுக்காக எழுந்து நிற்கும் வழக்கம் மாற்றப்பட்டது (3) 11.26: இறந்தவருக்காக ஜனாஸாத் தொழுகையில் செய்யும் பிரார்த்தனை (2) 11.27: ஜனாஸாத் தொழுகையின்போது இமாம் எந்த இடத்தில் நிற்க வேண்டும்? (2) 11.28: ஜனாஸாத் தொழுகை தொழுதுவிட்டு வாகனத்தில் ஏறித் திரும்பிச் செல்லலாம் (2) 11.29: உட்குழியும் மையித்தின் மேல் செங்கற்களை அடுக்குவதும் (1) 11.30: கப்றுக் குழியினுள் போர்வையை விரித்து (மையித்தை) வைப்பது (1) 11.31: கப்றைத் தரை மட்டமாக்க உத்தரவு (2) 11.32: கப்றுகளைக் காரையால் பூசுவதோ அதன் மீது கட்டடம் எழுப்புவதோ கூடாது (2) 11.33: கப்றின்மீது அமர்வதும் அதன் மீது தொழுவதும் தடுக்கப்பட்டவை (3) 11.34: பள்ளிவாசலில் ஜனாஸாத் தொழுகை நடத்துவது (3) 11.35: மையவாடிக்குள் கூற வேண்டியதும் பிரார்த்திப்பதும் (3) 11.36: நபி (ஸல்), தம் தாயாரின் கப்றைக் காண்பதற்கு இறைவனிடம் அனுமதி கோரியது (3) 11.37: தற்கொலை செய்தவருக்கு, (ஜனாஸா) தொழுகையைக் கைவிட்டது (1) 12.00: பல வகை வள வரிகள் (5) 12.01: பத்து சதவீத ஸகாத்; அல்லது ஐந்து சதவீத ஸகாத் (1) 12.02: ஒரு முஸ்லிம் மீது அவர்தம் அடிமைக்காகவும் குதிரைக்காகவும் ஸகாத் கடமை இல்லை (3) 12.03: ஸகாத்தைச் சமர்ப்பிப்பதும் ஸகாத் கொடுக்க மறுப்பதும் (1) 12.04: பெருநாள் தர்மமாகப் பேரீச்சம் பழம், பார்லி (10) 12.05: பெருநாள் தொழுகைக்கு முன்பே பெருநாள் தர்மத்தை வழங்க கட்டளை (2) 12.06: ஸகாத் வழங்க மறுப்பது குற்றமாகும் (4) 12.07: ஸகாத் வசூலிப்பவர்களிடம் கனிவுடன் நடந்துகொள்வது (1) 12.08: ஸகாத் வழங்காதவருக்கான கடும் தண்டனை (2) 12.09: தர்மம் செய்வதற்கு ஆர்வமூட்டல் (2) 12.10: செல்வத்தைச் சேமித்தோர் பற்றிய கண்டனம் (2) 12.11: தர்மம்: ஆர்வமூட்டலும் நற்கூலி உண்டு என்ற நற்செய்தியும் (2) 12.12: செலவழிப்பதன் சிறப்பும் வழங்காதவனின் பாவமும் (4) 12.13: தமக்கும், குடும்பத்தாருக்கும், உறவினர்களுக்குமாக செலவிடுதல் (1) 12.14: இணை வைக்கும் உறவுகளுக்குச் செலவழிப்பதன் சிறப்பு (8) 12.15: இறந்தவருக்காகத் தர்மம் செய்தல் (1) 12.16: எல்லா நல்லறமும் ஸதகா எனப்படும் (5) 12.17: அறவழியில் செலவு செய்பவரும் செய்யாதவரும் (1) 12.18: தர்மம் செய்வதற்கு ஆர்வமூட்டல் (5) 12.19: தர்மம் (இறைவனிடம்) ஏற்கப்படுவதும் வளர்வதும் (3) 12.20: இன் சொல்லையேனும் தர்மம் செய்து நரகத்திலிருந்து பாதுகாப்பு பெறல் (5) 12.21: தர்மத்தின் அளவில் குறை காண தடை (1) 12.22: பாலுக்காக இரவல் வழங்கப்படும் கால்நடைகளின் சிறப்பு (2) 12.23: வள்ளலுக்கும் கஞ்சனுக்குமான உதாரணம் (3) 12.24: உரியவருக்குத் தர்மம் சேரவில்லையேனும் பலன் (1) 12.25: உரிமையாளரின் அனுமதியுடன் தர்மம் செய்தவருக்கும் பலன் (3) 12.26: ஓர் அடிமை தன் உரிமையாளரின் செல்வத்திலிருந்து (அறவழியில்) செலவழித்தல் (3) 12.27: தர்மத்தையும் இதர நற்செயல்களையும் இணைத்துச் செய்தவர் (3) 12.28: அறவழியில் தாராளமாக செலவிடலும் கணக்கு பார்ப்பது விரும்பத்தக்கதல்ல என்பதும் (3) 12.29: சிறிய அளவு தர்மம் (1) 12.30: இரகசியமாகத் தர்மம் செய்வதன் சிறப்பு (1) 12.31: மிகச் சிறந்த தர்மம் (2) 12.32: சிறந்த கை (4) 12.33: யாசிப்பதற்குத் தடை (3) 12.34: ஏழை என்பவன், அடிப்படைத் தேவைகளுக்குப் போதிய பொருளாதாரம் இல்லாதவன் (2) 12.35: மக்களிடம் யாசிப்பது வெறுக்கப்பட்டதாகும் (6) 12.36: யாருக்கு யாசிக்க அனுமதி? (1) 12.37: எதிர்பார்ப்பு இல்லாமல், யாசிக்காமல் வாழ்பவருக்கு வழங்கப்பட்டால் பெற்றுக்கொள்ளலாம் (4) 12.38: உலகாதாயத்தின் மீது பேராசை கொள்வது விரும்பத் தக்கதன்று (2) 12.39: இரு ஓடைகள் இருந்தாலும் மூன்றாவது ஓடையை எதிர்பார்த்தல் (4) 12.40: வாழ்க்கை வசதிகள் அதிகமாக இருப்பது செல்வமன்று (1) 12.41: இவ்வுலகத்தின் கவர்ச்சி குறித்து அஞ்சுதல் (3) 12.42: சுயமரியாதை மற்றும் பொறுமையின் சிறப்பு (1) 12.43: போதுமான வாழ்வாதாரமும் போதுமென்ற மனமும் (4) 12.44: அருவருப்பாகப் பேசி, கடுஞ் சொற்களால் கேட்டவருக்கும் தானம் வழங்குவது (4) 12.45: இறைநம்பிக்கை, (வறுமையால்) கேள்விக்குள்ளாக்கப்படுபவருக்கு உதவுதல் (1) 12.46: இஸ்லாத்தை ஏற்றவர்களுக்கு வழங்கலும் இறை நம்பிக்கை வலுவானவர் பொறுமை கொள்ளலும் (8) 12.47: காரிஜிய்யாக்களும் அவர்களின் தன்மைகளும் (10) 12.48: காரிஜிய்யாக்களைக் கொல்லுவதற்கு ஊக்கப்படுத்துதல் (4) 12.49: காரிஜிய்யாக்கள் படைப்பினங்களிலேயே தீயவர்கள் ஆவர் (3) 12.50: தூதரின் குடும்பத்தார் ஸகாத் பெறுவதற்குத் தடை (6) 12.51: நபி (ஸல்) குடும்பத்தாரைத் தர்மப் பொருட்கள் வசூலிக்கப் பயன்படுத்தலாகாது (1) 2.26: அசுத்தமான கையைப் பாத்திரத்தில் நுழைத்தல் (2) 2.25: ஒருநாள் தொழுகைகளை ஒரு உளூவில் தொழ அனுமதி (1) 2.24: காலுறையில் மஸஹு செய்து தொழுவதற்கான வரம்பு (1) 2.23: முன் தலை மற்றும் தலைப்பாகை மீது மஸஹு செய்தல் (4) 2.22: காலுறையில் மஸஹு செய்தல் (9) 2.21: தண்ணீரால் கழுவித் துப்புரவு செய்தல் (3) 2.20: மலம் கழிப்பதற்குத் தடையுள்ள இடங்கள் (1) 2.19: செயல்களை வலப் புறமிருந்து தொடங்குதல். (2) 2.18: வலக் கரத்தால் கழுவத் தடையானவை (3) 2.17: கழிப்பிடத்தில் துப்புரவு செய்தல் (7) 2.16: இயற்கை மரபுகள் (8) 2.15: பல் துலக்குதல் (7) 2.14: சிரமகாலங்களிலும் முழுமையாக ஒளு செய்வதன் சிறப்பு (1) 2.13: உளூவில் தண்ணீர் படும் இடங்களில் ஒளி படர்தல் (1) 2.12: உளூவில் உறுப்புகளை அதிகப்படுத்திக் கழுவுதல் (6) 2.11: உளூ செய்த நீரோடு வெளியேறும் பாவங்கள் (2) 2.10: உளூவில் உறுப்புகள் முழுவதும் கழுவுதல் (1) 2.09: இரு கால்களையும் முழுமையாகக் கழுவுதல் கட்டாயம் (6) 2.08: சுத்தம் செய்யும் போது ஒற்றைப்படையாக செய்தல் (5) 2.07: நபி (ஸல்) அவர்கள் செய்த அங்கத் தூய்மை (உளூ) (2) 2.06: அங்கத் தூய்மை (உளூ) செய்தபிறகு ஓதப்படும் பிரார்த்தனை (1) 2.05: சிறு பாவங்களுக்கான பரிகாரங்கள் (3) 2.04: அங்கத்தூய்மையின் சிறப்பும் அதன் பின் தொழுவதன் சிறப்பும் (9) 2.03: அங்கத் தூய்மை (உளூ) செய்முறையும் அதை நிறைவாகச் செய்வதும் (2) 2.02: தொழுகைக்குக் கட்டாயமான (அங்கத்) தூய்மை (2) 2.01: அங்கத்தூய்மை(உளூ)யின் சிறப்பு (1) 1.96: மறுமையில் ஆதம்(அலை) அவர்களுக்கு இடப்படும் கட்டளை (1) 1.95: சொர்க்கவாசிகளில் பாதிபேர் (3) 1.94: விசாரணையோ வேதனையோ இன்றி சொர்க்கம் செல்வோர் (7) 1.93: நட்பு கொள்ளத் தக்கவர்களும் தகாதவர்களும் (1) 1.92: இறைமறுப்பாளரின் நற்செயல்கள் பலனளிக்காது (1) 1.91: நரகவாசிகளிலேயே மிகக்குறைவான வேதனை அனுபவிப்பவர். (4) 1.90: அபூதாலிபுக்காக நபி(ஸல்) அவர்களின் பரிந்துரை (3) 1.89: நெருங்கிய உறவினருக்கு எச்சரிக்கை செய்தல் (5) 1.88: இறைமறுப்பாளருக்கு எந்தப் பரிந்துரையும் பலனளிக்காது (1) 1.87: தம் சமுதாயத்தார் மீது நபி(ஸல்) அவர்களுக்குள்ள பரிவு (1) 1.86: நபி(ஸல்) அவர்களின் பரிந்துரைப் பிரார்த்தனை! (8) 1.85: சொர்க்கத்திற்காகப் பரிந்துரைக்கும் முதல் மனிதர் (4) 1.84: சொர்க்கவாசிகளுள் ஆகக் குறைந்த பதவி (14) 1.83: இறுதியானவராக வெளியேறும் நரகவாசி. (3) 1.82: ஷஃபாஅத்(பரிந்துரை) செய்யப்படுபவர்கள் (2) 1.81: இறைவனைக் காணும் வழிமுறை (3) 1.80: இறைவனைக் காண்பதற்கான சான்று (2) 1.79: அல்லாஹ்வின் பார்வை பற்றிய விளக்கம் (2) 1.78: மிஃராஜின் போது நபி(ஸல்) கண்டது பற்றிய விளக்கம் (2) 1.77: நபி(ஸல்) அவர்கள் இறைவனைப் பார்த்தார்களா? என்பது பற்றிய விளக்கம் (5) 1.76: சித்ரத்துல் முந்தஹா(இலந்தை மரம்) பற்றிய குறிப்பு! (4) 1.75: ஈஸா(அலை) மற்றும் தஜ்ஜால் பற்றிய குறிப்புகள் (6) 1.74: விண்ணுலகப் பயணமும் தொழுகை கடமையாக்கப்படலும் (12) 1.73: வேத வெளிப்பாடு (வஹீ) தொடங்குதல் (3) 1.72: இறை நம்பிக்கை ஏற்கப்படாத காலகட்டம் (5) 1.71: ஈசா(அலை) இஸ்லாமிய நெறிப்படி நீதி வழங்குதல் (6) 1.70: தூதுத்துவம் உலக மக்கள் அனைவருக்கும் பொதுவானது (3) 1.69: இறைச்சான்றுகள் மூலம் மன அமைதி (1) 1.68: ஒருவரை இறைநம்பிக்கையாளர் என்று முடிவு செய்தல் (2) 1.67: அச்சநேரத்தில் இறைநம்பிக்கையாளர் நிலை (1) 1.66: இறுதிக் காலத்தில் இறை நம்பிக்கை (அற்றுப்) போய் விடுவது. (2) 1.65: இஸ்லாத்தின் மீளெழுச்சி. (3) 1.64: உள்ளங்களில் குழப்பங்கள் தோன்றுவது. (2) 1.63: குடிமக்களைச் சுரண்டும் ஆட்சியாளன் நரகத்திற்குரியவன் ஆவான். (3) 1.62: செல்வத்தைக் காக்கப் போராடியவர் மற்றும் பிறர் செல்வத்தைப் பறிக்க முனைந்தவர் (2) 1.61: மாற்றாரின் பொருளைக் கைப்பற்றுபவர் நிலை. (5) 1.60: இறைநம்பிக்கையில் தடுமாற்றம் ஏற்பட்டால்.. (8) 1.59: நல்ல-தீய எண்ணங்களுக்கான கூலி (5) 1.58: தீய எண்ணங்களைச் செயல்படுத்தாமல் இருத்தல் (2) 1.57: தாங்க முடியாத சுமை? (2) 1.56: இறை நம்பிக்கையின் வாய்மையும் தூய்மையும் (1) 1.55: இறைமறுப்பாளராக இருந்தபோது செய்த நல்லறங்கள் (3) 1.54: முன் செய்த பாவங்கள் (2) 1.53: அறியாமை காலத்தில் செய்த தீமைகள் (2) 1.52: இறைநம்பிக்கையாளரின் அச்சம் (1) 1.51: குழப்பங்கள் தோன்றுவதற்கு முன் நற்செயல் புரிய விரைதல் (1) 1.50: மறுமை நெருங்கும் வேளையில் வீசும் காற்று (1) 1.49: ஹிஜ்ரத்தில் தற்கொலை செய்து கொண்டவரின் நிலை (1) 1.48: கையாடல் செய்பவரும் இறைநம்பிக்கையாளரும் (2) 1.47: தற்கொலை செய்பவரும் கட்டுப்பட்டு வாழ்பவரும் (7) 1.46: மூன்று பெரும் தவறான செயல்கள் (4) 1.45: புறங்கூறுவது வன்மையாகத் தடை செய்யப் பட்டது (3) 1.44: துக்க வேளைகளில் தடை செய்யப்பட்ட செய்கைகள்! (3) 1.43: முஸ்லிம்களை வஞ்சித்தவர் நிலை! (2) 1.42: முஸ்லிம்களுக்கு எதிராக ஆயுதம் ஏந்தியவர் நிலை! (3) 1.41: “லா இலாஹ இல்லல்லாஹ்” கூறியவரைக் கொல்லத்தடை! (4) 1.40: இணைவைத்தலின் விளைவுகள் (5) 1.39: தற்பெருமை (3) 1.38: பெரும் பாவங்கள் (5) 1.37: பாவங்களில் மிகவும் அருவருப்பானது (2) 1.36: நற்செயல்களில் சிறந்தது (6) 1.35: தொழுகையை விடுதலும் குஃப்ரும் (3) 1.34: இறைநம்பிக்கை குறைவும் குஃப்ர் எனும் சொல்லும் (1) 1.33: அன்ஸாரிகளையும் அலி(ரலி)யையும் நேசித்தல் (6) 1.32: மழையும் இறைமறுப்பும் (4) 1.31: ஓடிப்போன அடிமை (3) 1.30: இறைமறுப்பின் அடையாளங்கள் (1) 1.29: இறைமறுப்பாளர்களாய் மாறுதல் (2) 1.28: முஸ்லிமோடு போரிடுதல் (1) 1.27: தந்தையை வெறுப்பவன் நிலை (4) 1.26: முஸ்லிமை நோக்கி காஃபிர் என அழைத்தல் (2) 1.25: நயவஞ்சகனின் குணங்கள். (3) 1.24: இறைநம்பிக்கையில் குறைவு ஏற்படல் (2) 1.23: மார்க்கம் என்பதே நலன் நாடுவதுதான். (4) 1.22: இறைநம்பிக்கையாளர்களை நேசித்தல் (1) 1.21: இறைநம்பிக்கையில் ஏற்படும் ஏற்றத் தாழ்வு (9) 1.20: நன்மையை ஏவுதல், தீமையைத் தடுத்தல் (2) 1.19: நல்லவற்றிற்கு ஆர்வமூட்டுதல் (3) 1.18: அண்டை வீட்டாருக்குத் தொல்லை தரக் கூடாது (1) 1.17: தமக்கு விரும்வுவதைச் சகோதரனுக்கும் விரும்புதல் (2) 1.16: தூதரை நேசிப்பது கடமை (2) 1.15: இறைநம்பிக்கையின் இனிமை (2) 1.14: இஸ்லாம் கூறும் நல்லறங்களில் சிறந்தது (4) 1.13: இஸ்லாத்தின் அனைத்துப் பண்புகளின் கலவை (1) 1.12: இறைநம்பிக்கையின் கிளைகள் (5) 1.11: இறைநம்பிக்கையைச் சுவைப்பவர் (1) 1.10: ஓரிறை கோட்பாட்டில் மரணித்தவர் நிலை (11) 1.09: இணை வைத்த நிலையில் மரணித்தவர் நிலை (3) 1.08: ஜிஸ்யா செலுத்தாதவர் மீது போர் புரிதல் (6) 1.07: இஸ்லாத்தை ஏற்க அழைப்பு விடுத்தல் (2) 1.06: அறியாதவர்களுக்கு அறிவித்தல் (4) 1.05: இஸ்லாமியக் கடமைகள் (4) 1.04: சொர்க்கம் செல்பவர் (7) 1.03: இஸ்லாத்தின் தூண்கள் (2) 1.02: தொழுகை பற்றிய விளக்கம் (2) 1.01: இறைநம்பிக்கை குறித்த விளக்கம் (7)
AUAB சேலம் மாவட்ட சங்கத்தின் முடிவின்படி, இரண்டாம் நாள் சத்யாகிரக போராட்டம், ஆத்தூரில், 31.01.2018 அன்று சிறப்பாக நடைபெற்றது. முதல் நிகழ்வாக, தேச தந்தைக்கு நினைவு அஞ்சலி செலுத்திவிட்டு, போராட்டம் துவங்கியது. போராட்டத்திற்கு, தோழர்கள் P . குமாரசாமி,(BSNLEU), V.ராஜு (SNEA) கூட்டு தலைமை தாங்கினர் . தோழர் S. ஹரிஹரன், (BSNLEU) வரவேற்புரை வழங்கினார். தோழர்கள் M . விஜயன், P . தங்கராஜு (BSNLEU), R . ஸ்ரீனிவாசன், A . மோகன்குமார் (SNEA), கருத்துரை வழங்கினார்கள். பின்னர் தோழர்கள் M . சண்முகசுந்தரம் (மாவட்ட செயலர் AIBSNLEA), V.சண்முகசுந்தரம் (மாவட்ட தலைவர் SNEA), S .தமிழ்மணி ( மாநில உதவி தலைவர், BSNLEU), E . கோபால், (மாவட்ட செயலர், BSNLEU) ஆகியோர் சிறப்புரை வழங்கினார்கள். இறுதியாக, தோழர் E . குருசாமி (SNEA), நன்றி கூறி போராட்டத்தை முடித்து வைத்தார். போராட்டத்தில், தோழர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
பெரும் விலை கொடுத்து வாங்கும் படங்கள் தோல்வி அடையும் போது பெரும் நஷ்டம் ஏற்படுகிறது. அதனால், திரைப் படங்களை வாங்கும் போது, நடிகருக்கு தகுந்தார் போல ஒவ்வொரு ஏரியாவுக்கும் ஒரு விலை நிர்ணயம் செய்து, அந்த தொகைக்கு மேல் வாங்கினால் விநியோகஸ்தர் சங்கங்கள் ஒத்துழைப்பு தராது என்று முடிவெடுத்து விநியோகஸ்தர்களுக்கு விநியோகஸ்தர்கள் சங்கம் அறிவுறுத்தியிருந்தது. ஏற்கெனவே நடிகர்கள் சம்பளம் பெரிதாகப் பேசப்பட்டுப் படப்பிடிப்பில் இருக்கும் படங்களுக்கு விநியோகஸ்தர் சங்கம் எடுத்திருக்கும் அந்த முடிவு பெரிய நஷ்டத்தை ஏற்படுத்தும் க் கூட்டி விவாதித்து விநியோகஸ்தர் சங்கங்களுடன் கலந்து பேச வேண்டும் என்று சில தயாரிப்பாளர்கள் தலைவர் கே.ஆர்.ஜி.யிடம் வந்து முறையிட்டனர். அதனால், செயற்குகுழுக் கூட்டத்தை அன்று மாலையே கூட்டிட ஏற்பாடு செய்யச் சொன்னார் கே.ஆர்.ஜி. கூடவே, ஆலோசனைக் குழு, சிறப்பு அழைப்பாளர்கள் என அனைவரையும் அழைக்க வேண்டும் என்றும் கூறினார். அவசர செயற்குழுக் கூட்டம் என்பதால், தொலைபேசி மூலம் செயற்குழு உறுப்பினர்களுக்கு நான் தகவல் சொல்லிக் கொண்டிருந்தேன். அப்போது ஆனந்த் சினி ஆர்ட்ஸ் தயாரிப்பாளர் கோவை முருகேசன், ஒரு புகார்க் கடிதத்துடன் வந்தார். அந்தக் கடிதத்தில், பாலு மகேந்திரா இயக்கத்தில் ‘ராமன் அப்துல்லா’ என்கிற படத்தை தயாரித்து வருவதாகவும், படப்பிடிப்பில், இயக்குநர் பாலுமகேந்திராவுக்கும் தொழிலாளர் அமைப்புக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சினையால், நான்கு நாட்களாக படப்பிடிப்பு நடைபெறவில்லை என்றும், படப்பிடிப்புக்குத் தொழிலாளர்கள் ஒத்துழைப்பு தராததால், படப்பிடிப்பைத் தொடரமுடியவில்லை என்றும் இந்தப் பிரச்சினையைப் பற்றி பேசி படப்பிடிப்புக்கு உதவுமாறு அந்த கடிதத்தில் கூறி இருந்தார். இயக்குநர் பாலு மகேந்திரா கடிதத்தைத் தலைவர் கே.ஆர்.ஜியிடம் படித்துக் காட்டினேன். தயாரிப்பாளர் கோவை முருகேசனை அழைத்து முழுமையான காரணம் என்ன என்று அவரிடம் கேட்டார். “துணை நடிகர்களைக் காட்சிகளில் பயன்படுத்தும் போது, சங்க உறுப்பினர் அல்லாத சிலரையும் இயக்குநர் பாலு மகேந்திரா பயன்படுத்தினார். இதனால், தொழிலாளர் அமைப்பில் இருந்து நேரில் வந்து விசாரித்தார்கள். இருவருக்கும் கருத்து முரண்பாடு ஏற்பட்டதால், தொழிலாளர் அமைப்பின் தலைவரே, தொழிலாளர்களைப் பார்த்து ‘பேக்கப்’ சொல்லிவிட்டு சென்றுவிட்டார். அதனால் படப்பிடிப்பு நடைபெறவில்லை. ஒளிப்பதிவாளர் சங்கத்திற்குச் சென்று அந்தத் தகவலைப் பாலு மகேந்திரா தெரிவித்தார். அதற்கு, தொழிலாளர் அமைப்பின் தலைவரைச் சந்தித்துப் பேசுங்கள் என்று கூறி உள்ளனர். “எனது படப்பிடிப்பை நிறுத்திய தொழிலாளர் சம்மேளனத் தலைவரிடம் நான் எப்படி பேச முடியும்” என்று பாலுமகேந்திரா செல்லவில்லை. இதனால் நான்கு நாட்களாகப் படப்பிடிப்பு எனக்கு நடைபெறவில்லை” என்று தயாரிப்பாளர் கோவை முருகேசன் தெரிவித்தார். சிறிது நேர அமைதிக்குப் பிறகு என்னை அழைத்த கே.ஆர்.ஜி., “இந்தக் பிரச்சினையையும் செயற்குழுக் கூட்டத்தில் வைத்துப் பேசலாம். கடிதத்தைப் பெற்றுக் கொண்டு கையெழுத்துப் போட்டுக் கொடு” என்று கூறினார். கே.ஆர்.ஜி. மதிய உணவுக்குச் சென்ற பிறகு, மீண்டும் செயற்குழுக் கூட்ட அழைப்பு வேலைகளில் மூழ்கினேன். அன்று மாலை பிலிம் சேம்பர் கட்டடத்தில் இருந்த கூட்ட அரங்கில் செயற்குழு கூட்டம் கூடியது. அழைக்கப்பட்டவர்களில் தொண்ணூறு சதவீத உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். முதலில் விநியோகஸ்தர் சங்கத்தின் முடிவுகள் குறித்த விவாதம் நடந்தது. இப்போது எடுத்து வரும் படங்களுக்கு ஏற்கெனவே சம்பளம் பேசப்பட்டுவிட்டது. அதனால், திடீர் என விநியோகஸ்தர் சங்கம் எடுக்கும் நடவடிக்கைக்கு ஒத்துப் போக முடியாது. வியாபாரத்தில் சுதந்திரம் வேண்டும் என்று காரசாரமாகப் பேசினார்கள். இயக்குநர் பாரதிராஜா இனிமேல் எடுக்கும் படங்களுக்குச் சம்பளம் பேசும் போது விநியோகஸ்தர்களின் முடிவை மனதில் வைத்துப் பேச வேண்டும். இது குறித்து நடிகர் சங்கத்துடன் கலந்து பேச வேண்டும். அதன் பிறகு விநியோகஸ்தர் சங்கம், நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் ஆகிய சங்கங்கள் அடங்கிய ஒரு கூட்டுக் கூட்டத்தை ஏற்படுத்தி, அதில் விவாதிக்க வேண்டும். அதன் பிறகு முடிவெடுக்க வேண்டும் என்று பலர் கருத்து தெரிவித்தனர். அதன் பிறகு தயாரிப்பாளர் கோவை முருகேசன் அவர்கள் கொடுத்த கடிதம் குறித்து விவாதிக்கப்பட்டது. படம் விற்க ஒரு பக்கம் நாம் கஷ்டப் படுகிறோம். இன்னொரு பக்கம் படப்பிடிப்புக்கே வர மறுக்கிறார்கள். நம்ம வேதனையை யாரிடம் சென்று முறையிடுவது என்று வருத்தப்பட்டு பேசினார், தயாரிப்பாளர், எஸ்.எஸ்.துரைராஜ். இதனால் கூட்டம் சூடு பிடிக்க ஆரம்பித்தது. தொழிலாளர்கள் அமைப்பின் சார்பில் கஷ்டத்தை அனுபவித்ததாக சில தயாரிப்பாளர்கள் தங்களுக்கு நேர்ந்த வேதனைகளைப் பகிர்ந்து கொண்டனர். விவாதம் நீண்ட நேரம் நடைபெற்றது. ஒரு கட்டத்தில் இந்தப் பிரச்சினையை அனைத்து தொழிலாளர்களுக்கும் புரிய வைக்க வேண்டும். அதனால் ‘ஸ்டிரைக்’ பண்ண வேண்டும் என்று சிலர் பேசினர். “தொழிலாளர் அமைப்புதான் ஸ்டிரைக் போன்ற வேலைகளில் ஈடுபடுவார்கள், அது அவர்களுக்கு பிரச்சினையாக இருக்காது. நாம் ஸ்டிரைக் செய்தால், நம் உறுப்பினர்களுக்குத்தான் பாதிப்பு ஏற்படும். அதனால், ஆபத்தான காரியங்களில் ஈடுபடக் கூடாது” என்றார் கே.ஆர்.ஜி. அவரது பேச்சை மீறி கூச்சலும், குழப்பமுமாக விவாதம் நடந்தது. நமது கஷ்டத்தையும் வலியையும் எப்படித் தொழிலாளர்களுக்கும், மக்களுக்கும் உணர்த்துவது. அதனால் வேலை நிறுத்தம் அவசியம் என்று பலரும் வாதிட்டனர். எதிர் வரிசையில் அமர்ந்து எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்தார் பாரதிராஜா. அவரிடம், ‘’நீ என்ன சொல்றே பாரதி’’ என்றார் கே.ஆர்.ஜி. “தொழிலாளர்கள் படைப்பு சுதந்திரத்தில் தலையிடுவதை என்னால் ஏற்க முடியவில்லை. இந்த காட்சியில் இன்னார்தான் நடிக்க வேண்டும் என்பதை இயக்குநர்தான் முடிவு செய்ய வேண்டும். அதற்கு உதவியாகத்தான் தொழிலாளர்கள் இருக்க வேண்டும். இவர்களை வைத்துதான் படம் எடுக்க வேண்டும் என்று தொழிலாளர் அமைப்பு சொல்வதை என்னால் ஏற்க முடியாது. என் படத்தில் கூட இப்படிப்பட்ட பிரச்சினையை எதிர்கொண்டிருக்கிறேன். அப்போது யாரும் உதவியாக இப்படி பேசியதில்லை. அதே சமயம், தொழிலாளர்கள் அமைப்பு பலம் உள்ள அமைப்பாக இருக்கிறது. அவர்களைக் கண்டித்து, எதிர்த்து உணர்ச்சிவசப்பட்டு ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டம் என்று முடிவு செய்தால், அதன் பிறகு ஏற்படும் பிரச்சினைகளையும் நீங்கள் அனுபவிக்க வேண்டி வரும். அதனால், அதற்குத் தயாராக இருந்தால், இந்தப் போராட்டம் பற்றி முடிவு செய்யுங்கள்” என்றார் பாரதிராஜா. ராமன் அப்துல்லா - விக்னேஷ், ஈஸ்வரிராவ் வேலை நிறுத்தம் அவசியம் என்று பெஞ்சில் பலமாக அடித்து சிலர் வாதிட்டார்கள் ஸ்டிரைக் செய்தால்தான் நம் உணர்வுகளை அவர்கள் புரிந்து கொள்வார்கள் என்றார்கள். பெரும்பான்மை உறுப்பினர்கள் வேலை நிறுத்தம் செய்வதற்கு ஆதரவுதெரிவித்து கோஷம் எழுப்பினர். அதனால் வேலை நிறுத்தம் என்கிற முடிவுக்கு தள்ளப்பட்டது தலைமை. ஒரு குறிப்பிட்ட தேதியைச் சொல்லி அந்த நாளில் வேலை நிறுத்தம் என்று அறிவிக்கலாம் என்று தெரிவித்தார் கே.ஆர்.ஜி. அதற்கு உறுப்பினர்கள் ஒப்புக்கொள்ளவில்லை. ஒரு தேதியை அறிவித்து வேலை நிறுத்தம் என்று சொன்னால், அது விடுமுறை என்பது போல ஆகிவிடும். காலையில் வேலைக்கு வந்து அவர்கள் நிற்கும் போது படப்பிடிப்பு இல்லை என்று தெரிந்தால்தான் அது வேலை நிறுத்தம் ஆகும் என்று வாதிட்டார்கள். கே.ஆர்.ஜிக்கு அதில் உடன்பாடில்லை. அரசுக்குத் தெரிவிக்காமல், அறிவிப்பு தராமல் வேலை நிறுத்தம் செய்ய அவர் விரும்பவில்லை. ஆனால், பெரும்பான்மை உறுப்பினர்கள் எடுக்கும் முடிவுக்கு அவர் கட்டுப்பட்டார். நாளை வேலை நிறுத்தம் என்கிற முடிவு தீர்மானமாக நிறைவேறியது. பத்திரிகையாளர்கள் கூட்டத்திற்கு உடனே என்னை ஏற்பாடு செய்யச் சொன்னார். மறுநாள் படப்பிடிப்பில் இருக்கும் தயாரிப்பாளர்களுக்கு தகவல் சொல்லி படப்பிடிப்பை நிறுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது. விநியோகஸ்தர் சங்க முடிவு பற்றி விவாதிக்க கூட்டப்பட்ட கூட்டம் திசைமாறி தொழிலாளர்களுக்கு எதிரான ஒரு நாள் வேலை நிறுத்தத்தை அறிவிக்கும் கூட்டமாக மாறியது.
கோவிட் 19-இன் பெரிய பொருளாதார தாக்கங்களில் ஒன்று உள்நாடு மற்றும் வெளிநாட்டு அல்லது எல்லை தாண்டிய இடம்பெயர்வு ஆகும். ஒரு பகுதி, குறிப்பாக மத்திய கிழக்கில் குடியேறியவர்கள் அல்லது புலம்பெயர்ந்தோரின் தலைவிதியை, பலரும் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர், அவர்கள் இந்தியாவுக்கு திரும்பி வர வாய்ப்புள்ளது. கேரள மாநிலத்தில் இருந்து கிட்டத்தட்ட 3,00,000 மலையாளிகள் திரும்பி வர வாய்ப்புள்ளது என்று ஒரு ஆய்வு அல்லது மதிப்பீடு கூறுகிறது. எனவே, - உள்ளூர் பொருளாதாரம் மற்றும் பணம் அனுப்புதல் இரண்டிலும் என்ன நடக்கப் போகிறது, இதன் தாக்கம் என்னவாக இருக்கும்? கோவிட் 19 குறித்த அரசு நிபுணர் குழுவில் உள்ள கேரளாவின் மேம்பாட்டு ஆய்வுகள் மையத்தின் பேராசிரியர் எஸ்.இருதயா ராஜனுடன் பேசுகிறோம். திருத்தப்பட்ட பகுதிகள்: சுமார் 20 லட்சம் மலையாளிகள் மத்திய கிழக்கில் வாழ்கின்றனர். கேரளா ஒரு பணம் பெறக்கூடிய பொருளாதாரம் கொண்டது; மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 36% க்கும் அதிகமானவை வெளியில் வசிக்கும் கேரள மக்கள் அனுப்பும் பணத்தை பெறுவதால் கிடைப்பதாகும். இந்த காரணிகளுடன் சேர்ந்து, பரந்த பொருளாதாரம் மற்றும் எண்ணெய் நாடுகளின் பணம் ஆகியன, வேலைகள், பணம் பெருவது இரண்டிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். இது ஒரு மிகச்சரியானதாக உருவாகிறது. செப்டம்பர் 2020 க்குள் கிட்டத்தட்ட 3,00,000 பேர் சொந்த மாநிலத்திற்கு திரும்பக்கூடும் என்று நீங்கள் கணித்துள்ளீர்கள். இதன் பொருள் என்ன, அது எவ்வாறு வெளியேற வாய்ப்புள்ளது? கோவிட் 19 பற்றி நாம் பேசும் இன்றைய நிலவரப்படி, வளைகுடாவில் மட்டும் ஒரு கோடி புலம்பெயர்ந்த இந்தியர்கள் (நாம் அவர்களை அழைத்து வர இருக்கிறோம்) உள்ளனர். இதை உலகளவில் பார்த்தால், 210 நாடுகளில் 2 கோடி இந்தியர்கள் உள்ளனர். அவர்களில் பாதி பேர் சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கத்தார், பஹ்ரைன், ஓமான் மற்றும் குவைத் ஆகிய ஆறு வளைகுடா நாடுகளில் உள்ளனர். இப்போது நம்மிடம் எந்த தரவுத்தளமும் இல்லை என்பதுதான் பிரச்சினை. தரவுகள் ஏதேனும் கிடைத்தால் தான் நாம் பேசுகிறோம். கேரள புலம்பெயர்ந்தோர் கணக்கெடுப்பு, சில தரவுத்தளங்களை வழங்கியுள்ளதாக நீங்கள் சரியாகச் சொன்னீர்கள்; ஆனால், இந்தியாவில் உள்ள போக்குகளை உங்களுக்கு வழங்க, இந்திய இடம்பெயர்வு கணக்கெடுப்பு என்பது நம்மிடம் இல்லை. ஆனால் கேரள இடம்பெயர்வு கணக்கெடுப்பு மற்றும் இந்திய தரவுகளை பார்த்தால், வளைகுடாவில் உள்ள ஒரு கோடி பேரில் 20 - 25 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கேரளவாசிகள். எந்தவொரு வளைகுடா நாட்டிலும் நான்கில் ஒருவர் மலையாளியாக இருப்பர். அதனால் தான் சிறப்பு விமானத்தை இயக்குமாறு பிரதமருக்கு கேரள அரசு அழுத்தம் கொடுக்கிறது. வேறு எந்த மாநில முதல்வரும், புலம்பெயர் மக்களைப்பற்றி அதிகம் பேசுவதாக நான் கருதவில்லை. அதை நான் மற்ற முதல்வர்களிடம் பார்த்திருக்கிறேன். ஆனால் இங்கே நான் குழுவில் இருக்கிறேன், நான் எந்த அரசியல் கட்சியையும் சேர்ந்தவனல்ல, ஆனால் ‘இடம்பெயர்வு கட்சியை’ சேர்ந்தவன். இடம்பெயர்வு என்பது இப்போது மிகப்பெரிய நெருக்கடி. அதன் அம்சம் மிகத்தெளிவாக உள்ளது: இந்திய குடியேற்றத்தினரில் நான்கில் ஒரு பங்கினர் கேரளாவைச் சேர்ந்தவர்கள் என்பதால், இதில் கேரளா மிகவும் முக்கியமானது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக, இந்திய அரசு ஒரு முடிவை எடுக்காவிட்டால், கேரள அரசு மட்டுமே அப்பணிக்கு தள்ளப்படும்; ஆனால் அவர்களால் மீட்டு கொண்டு வர முடியாது. அடிப்படையில், இது இந்தியாவுக்கு ஒரு நெருக்கடி என்றாலும், அது கேரளாவையே அதிகம் பாதிக்கும். கேரளாவுக்கு என பாஸ்போர்ட் இல்லை, இந்திய பாஸ்போர்ட் தானே உள்ளது. எனவே, கேரளாவால் ஒரு விமானத்தை அனுப்பி கேரள மக்களை அழைத்து வர முடியாது. இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது, ஆனால் அதுதான் வாழ்க்கையின் யதார்த்தம். போரால் குவைத்தில் ஏற்பட்ட நெருக்கடியின் போது, இந்தியர்கள் அழைத்து வரப்பட்டது போல், அனைத்து இந்தியர்களையும் திரும்ப அழைத்து வர வெளியுறவு அமைச்சகம் அல்லது பிரதமர் முடிவெடுக்க வேண்டும். அவர்கள் தான் அதை செய்ய முடியும். இந்தியாவில் உள்ள அனைத்து விமானங்களையும் கூட அவர்கள் அனுப்பலாம்; அதை மத்திய அரசு தான் செய்ய வேண்டும். கோவிட் 19 தொற்று நேரத்தில் வெளிநாட்டு கேரள மக்கள் வந்தால், அவர்களைப் பார்த்துக் கொள்ள முடியும் என்று கேரளாவால் மட்டுமே சொல்ல முடியும். 2,00,000 பேர் வருகிறார்கள் என்றால், அவர்களை தனிமைப்படுத்த அனுமதிக்க எங்களுக்கு இடம் தேவை… [ஆசிரியரின் குறிப்பு: வளைகுடா நாடுகளில் சிக்கித் தவிக்கும் பல ஆயிரம் இந்தியர்களை மீட்டு கொண்டு வர, இந்திய கடற்படை மற்றும் விமானப்படை தயாராக உள்ளதாக, பைனான்சியல் எக்ஸ்பிரஸ் 2020 ஏப்ரல் 29 செய்தி தெரிவித்தது. தெரிவித்துள்ளது. 24 மணி நேரத்திற்குள், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள 50,000 இந்தியர்கள், நாடு திரும்புவதற்காக அரசு இணையதளத்தில் பதிவு செய்திருந்தனர்]. எனவே, உண்மையில் முதல் கேள்வி என்னவென்றால்: விமானங்கள் தயாராக இருந்து அவர்கள் வருவதாக இருந்தால், 2020 செப்டம்பர் மாதத்திற்குள் 3,00,000 பேர் வருவார்கள் என்று எதிர்பார்க்கிறீர்களா? அவர்கள் அவ்வாறு வருவார்கள் என்று நினைக்கிறீர்களா? உலகளாவிய நெருக்கடியின் போது கூட, 50,000 பேர் மட்டுமே தாயகம் திரும்பினர். அது எங்கள் கணிப்பு மற்றும் சரியாக கணித்திருந்தோம் என்று எங்களுக்குத் தெரியும். ஆனால் இப்போது, ​​குறைந்தது 10% பேர் வளைகுடாவில் இருந்து திரும்புவார்கள் என்று கருதுகிறோம். இது, 2,00,000 - 3,00,000க்கு இடையில் இருக்கும், ஏனென்றால் குவைத் பொது மன்னிப்பை தந்திருக்கிறது. நம் மனதில், வளைகுடாவில் ஆவணமற்ற குடியேறியவர்களைப் பற்றி நாம் பேசுவதில்லை. முறையான ஆவணங்களைக் கொண்ட புலம்பெயர்ந்தோரை பற்றி மட்டுமே பேசுகிறோம். ஆனால் வளைகுடாவில் சில உயர் திறமையான புலம்பெயர்ந்தோர் கூட அதிகமாக இருக்கிறார்கள். கோவிட் 19 அச்சத்தால் குவைத் [ஆவணமற்ற புலம்பெயர்ந்தோருக்கு] பொது மன்னிப்பு வழங்கியுள்ளது, அடுத்த 3-6 மாதங்களுக்குள் அனைத்து வளைகுடா நாடுகளும் இதை பின்பற்றும் என்று நம்புகிறேன். வளைகுடா நாடு ஒன்றில் ஏதாவது நடந்தால், ஒவ்வொரு நாடும் அதையே பின்பற்றும். ஆவணப்படுத்தப்படாத புலம்பெயர்ந்தோர் அவர்களின் இணையான தொழிலாளர் சந்தைக்கு தேவை என்பதை நாங்கள் அறிவோம். அவை நிழல் உழைப்பு போன்றவை. உண்மையான குடியேறியவர்களுக்கு கூட சந்தை இல்லாததால் அந்த நிழல் சந்தை மிகவும் மந்தமாக இருக்கும். எனவே அந்த மக்கள் திரும்பி வர வாய்ப்புள்ளது. அதனால்தான் இந்த எண்ணிக்கையை 2,00,000 - 300,000 என்று கணிக்கிறோம். அவர்களில் சிலர், சார்ந்துள்ளவர்களாகவும் இருப்பார்கள். எனவே, அதன் தாக்கம் என்னவாக இருக்கும்? இம்மக்கள் கேரளாவுக்கு வரும்போது, கடந்த காலத்தில் -- 2008 நிதி நெருக்கடி மற்றும் நாம் கண்ட தலைகீழ் ஓட்டம் ஆகியவற்றை குறிப்பிடுகிறீர்கள் என்றால்-- உள்நாட்டு பொருளாதாரத்தில் என்ன நடந்தது? நாம் 3,00,000 மக்களைப் பற்றி பேசும்போது, [அதே போல்] அவர்களின் குடும்பங்கள் பற்றியும் பேசுகிறோம். புலம்பெயர்ந்தவர்கள் வெறும் தனிநபர்கள் அல்ல; அதனால்தான் நாம் உள்நாட்டு புலம் பெயர்ந்தவர்களை பற்றி பேசுகிறோம். கேரளாவில் சிக்கித்தவிக்கும் உள்நாட்டு புலம் பெயர்ந்தவர்கள், தங்களது பணத்தை ஒரிசா, ராஜஸ்தான் அல்லது வடகிழக்கு மாநிலங்களுக்கு அனுப்ப விரும்புகிறார்கள். எனவே, வளைகுடாவில் அமர்ந்திருக்கும் ஒரு மலையாளி கேரளாவில் நான்கு பேருக்கு ஆதரவளிப்பதாக அர்த்தம். எனவே, 3,00,000 பேரால் நேரடியாக பாதிக்கப்படும் 15 லட்சம் மக்களை பற்றி நாம் பேசுகிறோம். ஆனால் அதே நேரத்தில், அவர்கள் அனைவரும் இங்கு நீண்ட காலம் தங்கியிருப்பார்கள் என்று எனக்கு தோன்றவில்லை. பிரச்சனை என்னவென்றால், கேரள சமூகம் எப்படியாவது குடியேற்றத்திற்கு அடிமையாகிறது. கேரளத்தவர்களின் உள்ளுக்குள் இருக்கும் டி.என்.ஏ, அவர்கள் கேரளாவில் இருக்கவே விரும்புகிறது. கேரளாவை ‘கடவுளின் சொந்த நாடு’ என்று அழைத்தாலும், அவர்கள் மும்பை அல்லது டெல்லிக்கு செல்ல விரும்புகிறார்கள், எனவே அவர்கள் புறப்படுவார்கள். ஆனால் பிரச்சனை என்னவென்றால், வளைகுடா சிலருக்கு மூடப்படலாம், எல்லோருக்கும் அல்ல; ஏனெனில் வளைகுடாவில் கேரளாவின் இடம் பெயர்வு வரலாறு 50 ஆண்டுகள் பழமையானது. அவை வளைகுடா சமூகத்தில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. 3,00,000 பேர் தாயகம் வந்தாலும், 17 லட்சம் மக்கள் அங்கேயே இருப்பதை நீங்கள் காணலாம்; அவர்கள் திரும்ப சிறிது காலம் ஆகலாம், ஆனால் அவர்கள் புதிய வாய்ப்புகள், புதிய இடங்களைத் தேடலாம். இப்போது, 90% மலையாளிகள் [குடியேறியவர்கள்] வளைகுடாவில் உள்ளனர், அவர்கள் வேறு சில நாடுகளுக்கு செல்லக்கூடும். அதற்கு தேவை இருக்கலாம். எனவே, நீங்கள் சொல்வது, மாநில அரசோ அல்லது மத்திய அரசோ அவர்களுக்காக அதிகம் செய்ய முடியாவிட்டாலும் ஏதோவொரு வகையில், மலையாளிகள் தங்களை கவனித்துக் கொள்ளவதில் அக்கறை காட்டுவார்கள், உங்கள் கூற்றை நான் சரியாக புரிந்து கொண்டேன் எனில்… அது சரி தான். மக்கள் சொல்கிறார்கள்: நீங்கள் விமானங்களுக்கு ஏற்பாடு செய்கிறீர்கள், நாங்கள் பணம் செலுத்துவோம் என்று. அவர்கள் இலவச விமானங்களை தேடவில்லை. அதுவே மற்ற மாநிலங்களாக இருந்திருந்தால், “தயவுசெய்து எங்களை இலவசமாக அழைத்துச் செல்லுங்கள்” என்று அவர்கள் சொல்லியிருப்பார்கள். சிலர், சொந்த பணத்தை எங்கள் தனிமைப்படுத்திக் கொள்ளலாம், ஆனால் தயவுசெய்து எங்களை வீட்டிற்கு அழைத்துச் செல்லுங்கள் என்று கூறுகிறார்கள். அதுதான் உண்மை. எனவே, இது ஒரு பக்கம் ஆகும். மற்றொரு பக்கம் என்னவென்றால், வளைகுடாவிலும், உலகின் பிற பகுதிகளிலும், இந்தியாவிலும் கேரளாவிலும் கூட வருமானம் குறையும். நீங்கள் என்ன தாக்கத்தை எதிர்பார்க்கிறீர்கள், அது மக்களின் வாழ்க்கை முறைகளையும் வாழ்க்கையையும் எவ்வாறு பாதிக்கும்? இந்த 40 நாள் ஊரடங்கு பணத்தை எவ்வாறு செலவழிக்கக்கூடாது என்பதை மக்களுக்கு [புரிந்து கொள்ள] உதவும் என்று நினைக்கிறேன். உண்மையில், நாம் இப்போது எந்த பணத்தையும் செலவழிக்கவில்லை; இன்று எல்லோரும் வீட்டில் உட்கார்ந்து, டிவி பார்ப்பது, உணவு சமைப்பது போன்றவை தான் நடக்கிறது. எல்லா மக்களின் உண்மையான செலவுகளும் குறைந்துவிட்டன என்று நான் நினைக்கிறேன்; வருமானமும் குறைந்திருக்கலாம். எந்தவொரு வருவாயும் இல்லாத பலரும் உள்ளனர்... ஊரடங்கால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, நாம் செலவினங்களை குறைத்துள்ளோம். அடுத்து ​​என்ன நடக்கப் போகிறது, உலக வங்கி கூட பணம் அனுப்புவதில் 20% குறைக்கப்படலாம் என்று கணித்துள்ளது. கேரளாவிற்கு நாம் கணிப்பது என்னவென்றால், 2020 ஆம் ஆண்டில் பணம் அனுப்புவது 15% வரை குறையக்கூடும். 2018ஆம் ஆண்டில் கேரளாவுக்கு ஆண்டுக்கு ரூ. 85,000 கோடி வந்துள்ளது - இது கேரள மாநில வருமானத்தில் 25% க்கு சமமானதாகும் - என்று மதிப்பிட்டுள்ளோம். தனிநபர் வருமான வழிமுறையை - இந்திய அரசு மாற்றியதால் வருமானம் மாறிவிட்டது. எனவே, நாம் கணித்தது என்னவென்றால், கேரளாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாதபடி 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டிலும் மிகப்பெரிய வெள்ளம் ஏற்பட்டது. வெள்ளம் வந்தபோது, ​​செல்ல வேண்டாம் என்று முடிவு செய்த குடியேறியவர்களில் பலர், கேரளாவில் இருக்க முடிவு செய்த புலம்பெயர்ந்தோர் (திரும்பி வந்த குடியேறியவர்கள்),வெள்ளம் காரணமாக அவர்கள் தங்கள் வாழ்க்கையின் சேமிப்புகளை, வீடுகளை இழந்தனர். எனவே, அவர்களில் சிலர் மீண்டும் வளைகுடாவுக்குச் சென்றனர்; இது மீள் இடம்பெயர்வு என்று அழைக்கப்படுகிறது, வேறுவிதமாகக் கூறினால், சில வகையான கட்டாய இடம் பெயர்வு. அப்போது ரூ. 85,000 கோடி என்று எதிர்பார்த்த நிலையில், 2020ம் ஆண்டில் ரூ.1 லட்சம் கோடியாக அதிகரிக்கும் என்று கருதுகிறோம். இப்போது கோவிட்19 காரணமாக, பலருக்கு முழு சம்பளம் கிடைக்கவில்லை, வேறு பலருக்கு சம்பளமே வழங்கப்படுவதில்லை - நாம் காத்திருந்து பார்க்க வேண்டும். எனவே, 2020 ஆம் ஆண்டில் கேரளாவில் பணம் அனுப்புவது 2018 க்கு சமமாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம். நாங்கள் மீண்டும் ஒரு வட்டத்திற்குள் வருகிறோம்... அதாவது அதிகரிப்பு இல்லை. நீங்கள் குறிப்பிட்ட உலக வங்கி புள்ளிவிவரங்கள் கடந்த ஆண்டு 83 பில்லியன் டாலர். ஒட்டுமொத்த இந்தியாவிற்கு இது 64 பில்லியன் டாலராக குறைக்கபட்டு வரும் என்று கணிக்கப்படுகிறது. இதில் கணிசமான பகுதி கேரளா போன்ற மாநிலங்களுக்குச் செல்கிறது. உள்நாட்டு இடம்பெயர்வு குறித்த கேள்வியை முன்வைக்கிறேன். கேரளாவிலும் ஏராளமான உள்நாட்டு குடியேறியவர்கள் உள்ளனர் - நாட்டின் பிற பகுதிகளிலிருந்து மக்கள் வந்து கேரளாவில் வேலை செய்கிறார்கள். அதை மாற்றம் செய்வது எப்படி? அவர்கள் மீண்டும் தங்கள் மாநிலங்களுக்குச் செல்கிறார்களா? வேலை சந்தை மாறுமா? அல்லது அங்கு ஏதேனும் முன்கூட்டியே போக்குகளை பார்க்கிறீர்களா? நீங்கள் என்ன எதிர்பார்க்கிறீர்கள்? உள்நாடு மற்றும் சர்வதேச போக்குவரத்து இருவழி போக்குவரத்து. கேரளாவை பொருத்தவரை, உள்நாட்டு இடம்பெயர்வு பற்றி பேசாமல் சர்வதேச இடம்பெயர்வு பற்றி பேசலாம் என்று நான் நினைக்கவில்லை. அதனால்தான், நாங்கள் ஆர்வமாக உள்ளோம் - நாங்கள் அவர்களை ‘விருந்தின தொழிலாளர்கள்’ என்று அழைக்கிறோம், ‘அன்னியன்’ அல்ல (அது கேவலமானது). புலம்பெயர்ந்தோருக்கு கேரளா தேவை என்பதல்ல. கேரளாவுக்கு உள்நாட்டு குடியேறியவர்கள் தேவை; நாங்கள் அந்த நிலைக்கு வந்துவிட்டோம். என்ன நடக்கிறது என்றால், அதை எண்ணிக்கையில் வைப்பது - எங்களிடம் 20 லட்சம் மலையாளிகள் நாட்டிற்கு வெளியே உள்ளனர், 10 லட்சம் நாட்டிற்குள் (கேரளாவுக்கு வெளியே ஆனால் இந்தியாவுக்குள் மும்பை, டெல்லி லட்சத்தீவு மற்றும் அந்தமான் நிக்கோபார் தீவுகள் போன்ற இடங்களில்) உள்ளனர். எனவே, உங்களிடம் 30 லட்சம் மலையாளிகள் உள்ளனர், அவர்கள் கேரளாவின் தொழிலாளர் சக்தியின் ஒரு பகுதியாக வெளியே இருக்க வேண்டும். எனவே, நாங்கள் கிட்டத்தட்ட 30 லட்சம் பிற மாநில புலம்பெயர்ந்த தொழிலாளர்களை கொண்டு அவர்களின் இடத்தை நிரம்ப, நாங்கள் அவர்களை அழைக்கிறோம்… மாற்று இடம்பெயர்வு: கேரளாவை சேர்ந்த பிளம்பர் ஒருவர் துபாயில் இருப்பார்; நாங்கள் ஒரிசாவில் இருந்து அவரது இடத்தை நிரப்புகிறோம்; கேரளாவின் எலக்ட்ரீஷியன் கட்டாரில் இருக்கிறார், வடகிழக்கில் இருந்து ஒரு எலக்ட்ரீஷியனைப் பெறுகிறோம். ஒரு கேரள நபர் அதே வேலைக்காக துபாயில் கூடுதல் பணம் பெறலாம், அவர் அந்த வேலையை கேரளாவில் செய்ய மாட்டார் - எப்படியிருந்தாலும் அது குடியேற்றத்தின் பிரச்சினையாகும். எனவே, கேரளாவில் உள்நாட்டு இடம்பெயர்வு அதிகமாக உள்ளது. ஊரடங்கு முன் - கேரளாவில் எங்களுக்கு மூன்று வகையான உள்நாட்டு புலம் பெயர்ந்த குடியேறியவர்கள் உள்ளனர். அவர்களில் சிலர் ஊரடங்குக்கு முன்பே வெளியேறினர் (அதாவது, ஜனதா ஊரடங்கு அறிவித்த பின்னர் இரண்டு நாட்கள் இருந்தன, ஊரடங்கு வரும் என்று மக்கள் கணித்து புறப்பட்டனர்); புலம்பெயர்ந்தோர் புத்திசாலித்தனமான மக்கள், எனவே ஒரு ஊரடங்கு இருக்கும் என்று அவர்கள் கணித்து பின்னர் வெளியேறினர். 5,00,000 பேர் கேரளாவை விட்டு வெளியேறியிருக்கலாம் என்று நான் கணித்துள்ளேன். வழியில் சிக்கித் தவிக்கும் மக்கள் உள்ளனர். நான் தமிழக அரசிடம் பேசினேன். சென்னையில், ஊரடங்கு நடைமுறைக்கு வந்ததால் கேரளாவில் இருந்து புறப்பட்ட பல ரயில்கள் அங்கே நிறுத்தப்பட்டன. அவர்கள் அனைவருக்கும் தமிழக அரசு உதவியது - அவர்கள் பள்ளிகளில் தங்கவைக்கப்பட்டனர். அவர்கள் ஒருபோதும் அவர்களுக்கு சொந்தமானவர்கள் அல்ல; அவர்கள் கேரளாவில் பணிபுரிந்து வந்த குடியேறியவர்கள். அவர்கள் எல்லா இடங்களிலும் இருக்கிறார்கள் - அதனால்தான் அவர்களை திருப்பி அனுப்ப மகாராஷ்டிரா கோரிக்கை விடுத்ததை நாம் பார்த்தோம். மூன்றாவது குழு மக்கள், இங்கே சிக்கித் தவிப்பவர்கள் - கேரள அரசு அவர்களை கவனித்து வருகிறது. பொது உண்வாக, குறைந்தபட்சம் 5,00,000 பேருக்கு உணவளிக்க கேரள முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். நாங்கள் அவர்களுக்கு உணவு தருகிறோம். ரயில்கள் இயங்கத் தொடங்கும் போது, மலையாளிகள் திரும்பி வர விரும்புவதைப் போல, இந்த மக்களும் செல்வார்கள். ஆனால் என்ன நடக்கும், பொருளாதாரத்தை முன்னோக்கி கொண்டு செல்ல கேரளாவில் தொழிலாளர் பற்றாக்குறை இருக்கும் - கேரள பொருளாதாரம் உள்நாட்டு புலம்பெயர்ந்தவர்களுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. துபாயில் மலையாளிகள் இதே காரியத்தைச் செய்கிறார்கள், அவர்கள் இங்கே அதே வேலையைச் செய்யக்கூடாது - அவர்கள் இங்கே சப்பாத்திகளை உருவாக்கக்கூடாது, அவர்கள் அதை சவுதி அரேபியாவில் செய்யலாம். எனவே தானாகவே, திரும்பி வரும் 300,000 மலையாளிகள், கேரளாவில் கிடைக்கும் வேலைகளை செய்ய முடிந்தால், பாதி சிக்கலை நாங்கள் தீர்க்கலாம். பிரச்சனை என்னவென்றால், அவர்கள் அதைச் செய்யவில்லை, அவர்கள் அவர்களை ‘3டி (3D) வேலைகள்’ அல்லது டி.டி.டி (DDD) வேலைகள் (அழுக்கான, ஆபத்தான மற்றும் தகுதியற்ற) வேலை என்று அழைக்கிறார்கள். அவர்கள் அதை செய்ய தயாராக இருந்தால், கேரளாவின் பொருளாதாரம் மேம்படும். இல்லையெனில், ஊரடங்கு தளர்வுக்கு பிறகு பொருளாதாரத்தை இயக்குவதற்கு உழைப்பு பற்றாக்குறை என்ற கடும் சிக்கலை எதிர்கொள்ளப் போகிறோம். நீங்கள் ஒரு ஓட்டலைத் திறக்க முடியாது, ஏனென்றால் யாரும் இல்லை; தொழிலாளர்கள் ஏற்கனவே அந்த இடத்தை விட்டு வெளியேற விரும்புகிறார்கள். எனவே, சுற்றுலாத்துறை, கட்டுமானத் தொழில் மற்றும் ஓட்டல் துறையில் எங்களுக்கு ஒரு கடினமான நேரம் இருக்கப்போகிறது; ஏனெனில் இந்த குடியேறியவர்கள் அனைவரும் வெளியேறுவார்கள். திரும்பி வரும் கேரள குடியேறியவர்கள் இந்த வேலையை எடுக்க முடிந்தால், உடனடியாக கேரள பொருளாதாரம் [நன்றாக] செய்யும். எனவே புலம்பெயர்ந்தோருக்கான ஆலோசனை நமக்கு தேவை, இது சுகாதார ஆலோசனை மட்டுமல்ல, வேலையின் அர்த்தத்தைப் பற்றிய ஆலோசனையும். நீங்கள் அங்கு என்ன செய்கிறீர்களோ அதை இங்கே செய்ய் அவர்களிடம் சொல்லலாம், சம்பளம் கொஞ்சம் குறைவாக இருக்கும். நீங்கள் அவ்வாறு செய்தால், கேரளா பொருந்தக்கூடியது மற்றும் பிற மாநிலங்களுக்கு ஒரு புதிய மாதிரியாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு. Govindraj Ethiraj Govindraj Ethiraj is a television and print journalist who has reported and written on Indian business for over 25 years. He is a media executive and entrepreneur whose public interest journalism ventures including IndiaSpend, FactChecker and BOOM, are safeguarding the transparency, accuracy, and integrity of news in specific and the internet in general in India and world-wide. Previously, he was Founder-Editor in Chief of Bloomberg TV India, Editor (New Media) with Business Standard newspaper, and in various capacities at CNBC-TV18, The Economic Times and leading business magazine. He continues to anchor seasonal shows in the business, economy and financial markets space, on Indian broadcast television and on digital. Govindraj was named a 2018 McNulty Prize Laureate in recognition for his leadership with BOOM, IndiaSpend, and FactChecker. He is a Fellow of the Inaugural Class of Ananta Aspen’s India Leadership Initiative and the Aspen Global Leadership Network, and winner of the 2014 BMW Responsible Leaders Awards.
டிடிவி தினகரன் தனது தவறை ஒப்புக்கொண்டு அதிமுகவில் இணைவது தொடர்பாக மன்னிப்புக் கடிதம் வழங்கினால் அந்தக் கடிதத்தை கட்சித் தலைமை பரிசீலனை செய்யும் என அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார். கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களிடம் பேசிய கே.பி.முனுசாமி, அதிமுக-வில் இல்லாத சசிகலா அதிமுக கொடியை பயன்படுத்தி இருப்பது கண்டனத்துக்குரியது எனக் கூறினார். அதிமுகவில் நிரந்தர பொதுச் செயலாளர் ஜெயலலிதா மட்டும்தான் எனவும் அவர் தெரிவித்தார். நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள் டிடிவி தினகரன் என்ற தனிப்பட்ட ஒருவர் அரசியல் செய்வதற்காக துவங்கப்பட்ட கட்சி அமமுக என்றும் அப்படிப்பட்ட ஓரு கட்சியுடன் அதிமுக இணைவதற்கு வாய்ப்பு இல்லை எனவும் கேபி முனுசாமி கூறினார். சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக கோவை வந்தார். நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா கோவை மாவட்டத்தில் நிறைவு பெற்ற வளர்ச்சித் திட்டப் பணிகள் தொடக்க விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் புதிய பணிகளுக்கான அடிக்கல் நாட்டும் விழா ஆகியவை ஈச்சனாரியில் நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக கோவை ரேஸ்கோர்ஸ் விருந்தினர் மாளிகையில் இருந்து வாகனம் மூலம் புறப்பட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, வழிநெடுகிலும் இருபுறங்களிலும் திரளான ஆண்கள், பெண்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். தனியார் கல்லூரி மாணவிகள் பெருமளவில் திரண்டு வந்து முதலமைச்சரை வரவேற்றனர். அவர்களைப் பார்த்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தனது வாகனத்தில் இருந்து இறங்கி அவர்களுடன் கலந்துரையாடினார். பின்னர், சிறிது தூரம் நடந்து சென்றார். இதையடுத்து அங்கிருந்து வாகனம் மூலம் புறப்பட்டு விழா அரங்கிற்கு வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அங்கு வைக்கப்பட்டு இருந்த அரசுத் துறைகளின் கண்காட்சி அரங்குகளைப் பார்வையிட்டார். பின்னர் விழா மேடைக்கு வந்தார். விழாவில் ரூ.663 கோடி செலவில் 748 புதிய திட்டங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். ரூ.272 கோடி மதிப்பில் 229 முடிவுற்ற பணிகளைத் தொடங்கி வைத்தார். இந்த விழாவில் 1 இலட்சத்து 7 ஆயிரத்து 410 பேருக்கு ரூ.588 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். நிகழ்வில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது….. தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நடந்து இந்த 15 மாதங்களில் கோவை மாவட்டத்திற்கு ஐந்தாவது முறையாக வந்திருக்கிறேன். இந்த மாவட்டத்தின் மீதும் இந்த மாவட்ட மக்கள் மீதும் நான் வைத்திருக்கக்கூடிய அன்பின் அடையாளம் இது. இந்த விழாவை அரசு விழா என்று சொல்வதை விட கோவை மாநாடு என்று சொல்லும் வகையில் சிறப்பாக உள்ளது. இன்னும் சொல்ல வேண்டுமென்றால், வருங்காலங்களில் தேர்தல் முடிவு எப்படி இருக்கும் என்பதை உங்களின் முகங்களில் பார்க்கக்கூடிய மகிழ்ச்சியின் மூலமாக அறிந்து கொள்கிறேன். தென்னிந்தியாவின் மிக முக்கியமான தொழில் நகரம் கோவை. பெருந்தொழில் மட்டுமல்ல சிறு, குறு, நடுத்தர தொழில் அதிகம் நிறைந்த நகரம். தமிழ்நாட்டுக்கே ஏற்றுமதி, இறக்குமதி குறியீடுகளை வளமாக வழங்கக்கூடிய மாவட்டமாக இந்த மாவட்டம் அமைந்துள்ளது. எனவே இங்கு இந்த விழா நடைபெறுவது மிகப்பொருத்தமானது. கணக்குக் காட்டும் அரசு அல்ல, இந்த அரசு மக்களுக்கான அரசாக உள்ளது. பல சாதனைகளைச் செய்து கொண்டிருக்கிறது. ஏதோ சிலருக்கு உதவிகளை செய்துவிட்டு கணக்குக் காட்டுபவர்கள் அல்ல நாங்கள். கணக்கிட முடியாத நலத்திட்ட உதவிகளைச் செய்யும் அரசு தான் தி.மு.க. அரசு என்று கம்பீரமாகச் சொல்வேன். கோவை பன்னாட்டு விமான நிலைய விரிவாக்கத் திட்டப் பணிகளுக்கு 1810 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நாட்டிலேயே அதிக முதலீடுகளை ஈர்த்து, அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்கி கடந்த ஓராண்டு காலமாக தமிழ்நாடு முன்னேறி வருகிறது. அண்மையில் ஜனாதிபதி, துணை ஜனாதிபதி ஆகியோரைச் சந்திக்க டெல்லி சென்று இருந்தேன். அப்போது என்னைச் சந்தித்தவர்கள் தமிழ்நாட்டைப் பற்றியும், அதன் வளர்ச்சியைப் பற்றியும் கேட்டார்கள். அவர்கள் கேட்ட கேள்வியைப் பார்த்து ஒரு உயர்ந்த கருத்து பரவலாக இருப்பதை நான் உணர்ந்தேன். அது ஒரு நாளிலோ, அல்லது ஒரு மாதத்திலோ பெற்றதல்ல. தந்தை பெரியாரும், பேரறிஞர் அண்ணாவும் அளித்துச்சென்ற அடித்தளத்தில், முத்தமிழறிஞர் கலைஞர் வகுத்துத் தந்த பாதையில், தி.மு.க. ஆட்சி செல்வதால் பெற்றிருக்க கூடிய நற்பெயர் இது. மக்களிடம் கேளுங்கள் பல்வேறு மாநில அரசுகளும் தமிழ்நாட்டின் திட்டங்களை உன்னிப்பாகக் கவனித்து தங்களுடைய மாநிலத்தில் இதைப் பின்பற்றி வருகிறார்கள். ஆனால் இங்கே இருக்கக்கூடிய சிலரால் இதனைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. தி.மு.க அரசு எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை என சிலர் பொத்தாம் பொதுவாக சொல்லிக்கொண்டிருகிறார்கள். அவர்களிடம் நான் கேட்பதெல்லாம், எங்கள் ஆட்சியால் பயனடைந்த மக்களிடம் வந்து கேளுங்கள். ஏதோ பேட்டி கொடுப்பதற்காக மட்டும் வீட்டை விட்டு வெளியே வந்துவிட்டு, வீட்டுக்குள் உட்கார்ந்து கொள்பவர்களுக்கு புரிந்து கொள்ள முடியாது. தமிழ்நாட்டு மக்கள் அடையும் நன்மைகளை நீங்கள் தெரிந்துகொள்ள முடியாது. மகளிருக்கு கட்டணமில்லாப் பேருந்து, மக்களைத் தேடி மருத்துவம், ஒரு இலட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு, உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டம் இதுபோல எண்ணற்ற திட்டங்களை ஏற்றுக்கொள்ள, புரிந்து கொள்ள மனமில்லாமல் பேட்டி அளித்துக் கொண்டிருப்பவர்களுக்கு நான் எப்போதும் முக்கியம் தருவதில்லை. தன்மானம் இல்லாத, இனமானம் என்றால் என்னவென்றே தெரியாத கூட்டம்தான் இன்று தி.மு.க. ஆட்சியைப் பார்த்து விமர்சிக்கிறது. தி.மு.க. ஆட்சி என்பது ஒடுக்கப்பட்டவர்களுக்கு ஒளிதரும் ஆட்சி. ஒரு தாய் தனது எல்லாக் குழந்தைகளையும் ஒரே மாதிரி வாழ்விப்பதைப் போல், தி.மு.க. அரசு அனைவருக்குமான அரசாகச் செயல்படுகிறது. தேர்தலுக்கு முன் உங்கள் தொகுதியில் மு.க.ஸ்டாலின் என்ற திட்டத்தின் மூலம் மக்களிடம் இருந்து பெற்ற மனுக்களுக்குத் தீர்வு காண, ஆட்சிக்கு வந்ததும் அதற்காக தனித் துறையை உருவாக்கி, 100 நாட்களில் அவற்றில் பெரும்பாலான கோரிக்கைகளை நிறைவேற்றி உள்ளேன். அந்த வகையில் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் என்ற திட்டத்தை 234 தொகுதிகளுக்கும் விரிவுபடுத்தி இருக்கிறேன். சட்டமன்ற உறுப்பினர்கள் மட்டுமல்ல நாடாளுமன்ற உறுப்பினர்களின் கோரிக்கையும் கவனிக்கப்படும். அதன் அடிப்படையில்தான் அனைத்துத் தொகுதிகளிலும் மக்களுக்குத் தேவையான நீண்ட நாள் கோரிக்கையாக உள்ள, நீண்ட காலமாகச் செயல்படுத்த முடியாத 10 முக்கியமான கோரிக்கைகளை அரசுக்கு வழங்குமாறு அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் கடிதம் எழுதியிருக்கிறேன். இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத முன்னோடித் திட்டம் இது. தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மட்டுமல்ல எங்கள் கூட்டணியில் இடம்பெறக்கூடிய சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மட்டும் அல்ல. அ.தி.மு.க. சார்ந்தவராக இருந்தாலும், பா.ஜ.க.வில் உள்ளவர்களாக இருந்தாலும் அவர்களுக்கும் சேர்த்துத் தான் அந்தத் தொகுதிகளும் பயனடைவதற்குதான் இந்தத் திட்டம். சிலர் காழ்ப்புணர்ச்சியோடு தூற்றுகிறார்கள். பரவாயில்லை. அவர்களும் பிழைக்க வேண்டும் என்று எண்ணிக்கொள்கிறேன். நமது அரசின் திட்டங்களால் பயனடைந்து வரும் மக்களின் பாராட்டு எனக்குப்போதும். நமது கொள்கைகளும், கோட்பாடுகளும் நிறைவேறக்கூடாது என்று நினைப்பவர்கள்தான் என்னை விமர்சிக்கிறார்கள். தனிப்பட்ட விமர்சனங்களைப் பற்றி நான் கவலைப்படவில்லை. ஏனென்றால் நான் விமர்சனங்களால் வளர்ந்தவன். எதிர்ப்பையும், அடக்குமுறைகளையும் மீறி வளர்ந்தவன் நான். என்னை யாராவது எதிர்த்தால்தான் உற்சாகமாகச் செயல்படுவேன். என்னை எதிர்ப்பதன் மூலம் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் குந்தகம் விளைவிக்க நினைத்தால் நான் ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன். விமர்சனங்களை விரும்புபவன் நான், ஆனால் விதண்டாவாதங்களை அல்ல. வழிகாட்டுதல்களை ஏற்றுக்கொள்பவன் நான். சொந்தக் கட்சிக்குள் நடக்கும் அதிகாரப் போட்டியில் தங்களது கையாலாகாத்தனத்தை மறைப்பதற்கு, திசை திருப்புகிற நோக்கத்தோடு தி.மு.க. அரசை விமர்சித்துக்கொண்டிருக்கிறார்கள். தி.மு.க. அரசை விமர்சிப்பதற்கு தகுதி கிடையாது என்பதை நான் அழுத்தந்திருத்தமாகத் தெரிவிக்க விரும்புகிறேன். ஓராண்டு காலத்திலேயே ஓராயிரம் திட்டங்கள். ஓராண்டு காலத்திலேயே இவ்வளவு திட்டம் என்றால் 5 ஆண்டில் அளப்பரிய திட்டங்களை நிறைவேற்றி இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாகவும், உலகில் அனைத்து வளம் கொண்ட மாநிலமாகவும் ஆக்குவதே எங்களுடைய இலட்சியம். இது உங்களுக்கான அரசு. உரிமையுடன் கோரிக்கை வையுங்கள் உண்மையாக நிறைவேற்றித் தருகிறோம். இந்த ஆட்சிக்கு நீங்கள் பக்கபலமாக இருக்க வேண்டும்.
ஆரம்பத்தில் வழக்கமான யோக க்ஷேம விசாரணைக்குப் பிறகு கொடும்பாளூர் பெரிய வேளார் அங்கே கூடியிருந்தவர்களை பார்த்துக் கூறலுற்றார்:- “நான் யார் யாருக்குத் தூது அனுப்பினேனோ, அவர்களில் ஏறக்குறைய எல்லாரும் வந்து இங்கே கூடியிருக்கிறீர்கள். திருக்கோவலூர் முதுகிழவரான மலையமான் அரசர் மட்டும் வரவில்லை. அவர் வர முடியாததற்குத் தக்க காரணம் இருக்கும் என்றே நினைக்கிறேன். மிகவும் அபாயகரமான காரியம் என்று பலரும் கருதக்கூடிய காரியத்தைப் பற்றி யோசிக்க நாம் இங்கே வந்திருக்கிறோம். சோழ குலத்தாரிடமும், சுந்தர சோழ சக்கரவர்த்தியிடமும் நாம் எல்லாரும் எவ்வளவு பக்தி கொண்டவர்கள் என்பது உலகம் அறிந்தது. அதை எவ்வளவோ தடவை எவ்வளவோ காரியங்களில் நிரூபித்திருக்கிறோம். ஆனாலும் நாம் சக்கரவர்த்தியின் விருப்பத்துக்கு விரோதமாக இங்கே கூடியிருக்கிறோம் என்று நம் எதிரிகள் குற்றம் சாட்டக்கூடும். சக்கரவர்த்தியை எதிர்த்து யுத்தம் செய்யப் படை திரட்டி வந்திருக்கிறோம் என்றுகூட அவர்கள் சொல்லலாம். ஆனால் சக்கரவர்த்தியை நாம் தனிப்படப் பார்க்க முடிகிறதில்லை. அவருடைய அந்தரங்க விருப்பத்தை அறிய ஒரு நிமிஷங்கூட அவரிடம் தனித்துப் பேச முடிவதில்லை. ஏன் என்பது எல்லாருக்கும் தெரிந்ததே. சக்கரவர்த்தியின் தேக சுகத்தை உத்தேசித்து அவரைத் தஞ்சைக் கோட்டையில் வைத்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. உண்மையில் பழுவேட்டரையர்கள் அவரைச் சிறைப்படுத்தி வைத்திருக்கிறார்கள் என்றே எனக்குத் தோன்றுகிறது. நீங்கள் எல்லோரும் என்ன கருதுகிறீர்களோ, தெரியவில்லை…” சேனாதிபதி இந்த இடத்தில் சிறிது நின்றதும், “ஆம், ஆம்,” “அதுதான் உண்மை!” “சக்கரவர்த்தியைச் சிறையில்தான் வைத்திருக்கிறார்கள்”, என்று அக்கூட்டத்தில் பல குரல்கள் எழுந்தன. “உங்கள் ஆமோதிப்பிலிருந்து நாம் எல்லாரும் ஒத்த உணர்ச்சியும், ஒரே நோக்கமும் கொண்டவர்கள் என்று ஏற்படுகிறது. விஜயாலய சோழர் காலத்திலிருந்து எத்தனையோ ஆயிரமாயிரம் வீரர்கள் இன்னுயிரைப் போர்க்களத்தில் பலிகொடுத்து இந்தச் சோழ சாம்ராஜ்யம் இந்த மகோந்நத நிலைக்கு வந்திருக்கிறது. சோழ நாட்டைச் சேர்ந்தவர்கள் என்று சொல்லிக் கொள்ளவே நமக்கெல்லாம் பெருமையாயிருக்கிறது. அப்படிப்பட்ட சோழ குலத்துக்கும், சாம்ராஜ்யத்துக்கும் எவ்விதக் குறைவும் ஏற்படாமல் பாதுகாப்பதற்கே நாம் இங்கே கூடியிருக்கிறோம். சக்கரவர்த்திக்கு எதிராகச் சதி செய்வதற்கு அல்ல. சக்கரவர்த்தியின் எதிரிகள் அவரை மூன்று வருஷ காலமாகச் சிறையில் அடைத்து வைத்திருக்கிறார்கள். அவருக்கு உடல் நிலை சரியாக இல்லை என்று காரணம் சொல்லுகிறார்கள். தொண்ணூறும் ஆறும் புண் சுமந்த திருமேனியரான விஜயாலய சோழர், எண்பதாவது பிராயத்தில் திருப்புறம்பயம் போர்க் களத்தில் வந்து இரண்டு கைகளில் இரண்டு கத்திகளை ஏந்திச் சக்கரமாகச் சுழற்றி அவர் புகுந்து சென்றவிடமெல்லாம் எதிரிகளின் தலைகளை மலைமலையாகக் குவித்தார்! அத்தகைய வீரர் வம்சத்தில் பிறந்த சுந்தர சோழர் தேக அசௌக்கியத்தைக் காரணமாகச் சொல்லிக் கொண்டு வெளியில் வரவே மறுக்கிறார் என்றால், அது நம்பக்கூடிய காரியமா? சக்கரவர்த்தியைச் சிறை வைத்திருக்கும் துரோக சிந்தனையாளர், பில்லி சூனிய மாய மந்திர வித்தைகளைக் கொண்டு அவருக்குச் சித்தக் குழப்பத்தையும் உண்டாக்கி விட்டார்கள் என்று தோன்றுகிறது. சக்கரவர்த்தியின் சித்தம் சரியான நிலையில் இருந்தால், தமக்குப் பீமார்ஜுனர்களைப் போன்ற இரண்டு வீராதி வீரப் புதல்வர்கள் இருக்கும்போது, போர்க்களத்தையே கண்ணால் கண்டறியாத மதுராந்தகனுக்குப் பட்டம் கட்ட விரும்புவாரா?…” இப்போது பலர் ஒரே சமயத்தில், “சக்கரவர்த்தியின் விருப்பம் அதுவென்று நமக்கு எப்படித் தெரியும்?” என்று கேட்டார்கள். “நமக்கு நேர்முகமாகத் தெரியாதுதான். பழுவேட்டரையர்கள் கட்டிவிட்ட கதையாக இருக்கலாம். ஆனால் நம் முதன் மந்திரி அநிருத்தப் பிரம்மராயர் கூட அதை நம்புகிறார்…” “அநிருத்தரும் அவர்களோடு சேர்ந்திருக்கலாம்; யார் கண்டது?” என்றார் கூட்டத்தில் ஒருவர். “அப்படியும் இருக்கலாம், அதன் உண்மையை அறிந்து கொள்வது நாம் இங்கே கூடியிருப்பதன் ஒரு முக்கிய நோக்கம். இன்றைய தினம் இத்தஞ்சை மாநகரில் உலவி வரும் வதந்தியை நீங்களும் அறிந்திருப்பீர்கள். நான் அதை நம்பவில்லை. சக்கரவர்த்தியை உயிரோடு தரிசிக்கும் பாக்கியம் நமக்கெல்லாம் கிடைக்கும் என்றே நம்பியிருக்கிறேன். அப்படி அவரைத் தரிசிக்கும்போது பட்டத்தைப்பற்றி அவருடைய விருப்பம் என்னவென்பதை நேரில் கேட்டுத் தெரிந்து கொள்வோம். ஒருவேளை சக்கரவர்த்தியே மதுராந்தகனுக்குப் பட்டம் கட்டும் விருப்பத்தைத் தெரிவித்தார் என்றால், அதை நீங்கள் எல்லாரும் ஒப்புக்கொள்வீர்களா?…” “மாட்டோ ம்! மாட்டோ ம்!” என்ற பெருங் கோஷம் எழுந்தது. “நானும் ஒப்புக்கொள்ள மாட்டேன். ஏனென்றால், சக்கரவர்த்தி தெளிவுள்ள சித்தமுடையவராயிருந்தால் அவ்விதம் ஒரு நாளும் தெரிவிக்க மாட்டார். பராந்தகச் சக்கரவர்த்தியின் காலத்திலேயே பட்டத்து உரிமைபற்றி விஷயம் தீர்ந்து முடிவாகிவிட்டது. சுந்தர சோழரும் அவருடைய சந்ததிகளுமே தஞ்சைச் சிங்காதனம் ஏறவேண்டும் என்று அந்த மன்னர் உயிர் விடும் தறுவாயில் கூறியதை நானே என் செவிகளினால் கேட்டேன். கேட்டவர்கள் இன்னும் பலரும் இங்கே இருப்பார்கள். காலஞ் சென்ற மகானாகிய கண்டராதித்தர் தம் குமாரனுக்கு இராஜ்யம் ஆளும் ஆசையே உண்டாகாத விதத்தில் அவனை வளர்க்க முயன்றார். அவருடைய தர்மபத்தினியாகிய பெரிய பிராட்டியார், – சிவபக்தியே உருக்கொண்டவரான செம்பியன் மாதேவடிகள், – மதுராந்தகனுக்குப் பட்டம் கட்டக் கூடாதென்பதில் பிடிவாதமாயிருப்பதை நாம் எல்லாரும் அறிந்திருக்கிறோம். இதற்கெல்லாம் ஏதோ ஒரு முக்கிய காரணம் இருக்கத் தான் வேண்டும். அப்படியிருக்கும்போது, சுந்தர சோழர் ஏன் மதுராந்தகனுக்குப் பட்டம் கட்ட ஆசைப்படுகிறார்? அவர் சித்தம் சரியாயில்லை என்பதற்கு இன்னும் ஓர் உதாரணமும் கூறுகிறேன். வீர பாண்டியனைக் கொன்று பாண்டிய சைன்யத்தை நிர்மூலம் செய்த பிறகு, பாண்டியனுக்கு உதவி செய்ய முன்வந்த ஈழத்து அரசனைத் தண்டிப்பதற்காக என் சகோதரன் படை எடுத்துச் சென்றான். அவனுக்கு உதவியாகப் போதிய சைன்யங்களையும் தளவாடங்களையும் அனுப்பத் தவறிவிட்டோ ம். அதனால் அவன் போர்க்களத்தில் வீர மரணம் எய்த நேர்ந்தது. சோழ நாட்டின் வீரப் புகழுக்கு நேர்ந்த அந்தக் களங்கத்தைத் துடைத்துக்கொள்ளும் பொருட்டு நானும் பொன்னியின் செல்வரும் சென்றோம். ஈழத்துப் படைகளை நிர்மூலமாக்கினோம். அநுராதபுரத்தைக் கைப்பற்றினோம். மகிந்தனை மலை நாட்டுக்குள் ஓடி ஒளிந்து கொள்ளச் செய்தோம். தனாதிகாரி பழுவேட்டரையர் எங்களுடன் ஒத்துழைக்கவில்லை யென்பது உங்களுக்கெல்லாம் தெரியும். உங்களில் இங்கே வந்திருக்கும் வர்த்தக மகா ஜனத்தலைவர்கள் உணவுப் பொருள்களை அனுப்பிப் பேருதவி செய்தீர்கள். ஆனாலும் நம் வீரர்கள் எவ்வளவோ கஷ்டங்களை அநுபவிக்கும்படி நேர்ந்தது. அவ்வளவையும் பொறுத்துக் கொண்டு மகிந்தன் படைகளை நிர்மூலமாக்கியது எதனால்? சோழ குலத்து மா வீரர்களுக்குள்ளே ஈடில்லா மா வீரராகிய பொன்னியின் செல்வர் அளித்த உற்சாகத்தினாலேதான்! அப்படிப்பட்ட வீரப்புதல்வனுக்குத் தந்தையாகிய சக்கரவர்த்தி அளித்த பரிசு என்ன? இராஜத் துரோகம் செய்துவிட்டதாக அபாண்டம் சுமத்தி இளவரசரைச் சிறைப்படுத்திக் கொண்டு வரும்படி கட்டளையிட்டதுதான்! சித்தசுவாதீனம் உடைய ஒருவர் இவ்வாறு கட்டளை பிறப்பித்திருக்க முடியுமா?…” “சேநாதிபதி! மறுபடியும் சக்கரவர்த்தியின் கட்டளையைப் பற்றியே பேசுகிறீர்கள். சக்கரவர்த்திதான் அக்கட்டளையை அனுப்பினார் என்பதற்கு என்ன அத்தாட்சி?” என்று சபையிலிருந்தவர்களில் ஒருவர் கேட்டார். “அதற்கு அத்தாட்சி ஒன்றுமில்லை. அதன் உண்மையைப் பற்றி நேரில் கேட்டுத் தெரிந்துகொள்ள விரும்பியுந்தான் இங்கே நாம் வந்து சேர்ந்திருக்கிறோம். சக்கரவர்த்தியின் சம்மதமின்றி இத்தகைய கட்டளை பிறந்திருக்கக் கூடுமானால், இந்தச் சோழ சாம்ராஜ்யம் எவ்வளவு பயங்கரமான நிலைமையில் இருக்கிறது என்பதைச் சிந்தித்துப் பாருங்கள். பின்னால் நிகழ்ந்தவற்றையும் எண்ணிப் பாருங்கள். சிறைப்படுத்த வந்த வீரர்கள் இளவரசரைச் சிறைப்படுத்த மறுத்துவிட்டார்கள். இளவரசர் தாமாகவே தந்தையின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து பார்த்திபேந்திர பல்லவனுடைய கப்பலில் ஏறி வந்தார். அந்தக் கப்பல் புயலில் சிக்கிக் கொண்டதாம். அப்போது இளவரசர் கடலில் மூழ்கிமாண்டதாக ஒரு வதந்தி புறப்பட்டது. இதை நான் நம்பவேயில்லை. பொன்னியின் செல்வனை சமுத்திரராஜன் அபகரித்திருக்க மாட்டான் என்று உறுதியாக நம்பினேன். அந்தக் கப்பலில் வந்த மற்ற எல்லாரும் உயிர் பிழைத்திருக்கும்போது இளவரசர் மட்டும் எப்படிக் கடலில் மூழ்கி மாண்டிருக்க முடியும்? ஆகையால் இளவரசர் கரை ஏறியதும் அவரைச் சிறைப்படுத்தச் சதி நடந்திருக்கவேண்டும். அந்தச் சூழ்ச்சியை அறிந்துகொண்ட இளவரசர் தப்பிச் சென்று எங்கேயோ பத்திரமாயிருக்கிறார்; சரியான சமயத்தில் வெளிப் புறப்பட்டு வருவார் என்று நம்பியிருந்தேன். உங்களில் பலரும் அப்படி நம்பியதாகத் தெரிவித்தீர்கள். நமது நம்பிக்கை நிறைவேறியது. நாகைப்பட்டினத்தில் புயல் அடித்த அன்று இளவரசர் வெளிப்பட்டார் என்பதாகவும், சோழ நாட்டு மக்கள் அவரை விஜய கோலாகலத்துடன் வரவேற்றுத் தஞ்சைக்கு அழைத்து வருகிறார்கள் என்பதையும் அறிந்தோம். அவர்களுக்குப் பக்க பலமாக இருக்கும் உத்தேசத்துடனேயே நாமும் இவ்விடம் வந்து சேர்ந்தோம். ஆனால் வஞ்சகச் சூழ்ச்சிக்காரர்கள் மறுபடியும் தங்கள் கை வரிசையைக் காட்டிவிட்டார்கள்…” “என்ன? என்ன?” என்று பலர் கவலைக் குரலில் கேட்டார்கள். “நான் இந்தக் கூட்டத்துக்கு வருவதற்குச் சில நிமிடங்களுக்கு முன்புதான் அச்செய்தி கிடைத்தது. இன்று காலையில் திருவாரூரிலிருந்து இளவரசர் புறப்படவிருந்த சமயத்தில் அவர் ஏறிவந்த யானைக்கு மதம் பிடித்து, யானைப்பாகனைத் தூக்கி எறிந்துவிட்டதாம். யானை தெறிகெட்டு ஓடி விட்டதாம். அப்போது ஏற்பட்ட குழப்பத்தில் இளவரசரும் காணாமற் போய்விட்டாராம்!…” “ஐயையோ!”, “இது என்ன விபரீதம்?” “தெய்வமும் வஞ்சகர்களின் கட்சியில் இருக்கிறதா?” – என்று இப்படிப் பலர் அங்கலாய்க்கத் தொடங்கினார்கள். அவர்களைச் சேநாதிபதி கையமர்த்தி அமைதியாயிருக்கச் செய்தார். “செய்தியை முதலில் கேட்டதும் நானும் கதிகலங்கிப் போனேன். ஒருவாறு சமாளித்துக் கொண்டுதான் இந்தக் கூட்டத்திற்கு வந்து சேர்ந்தேன். இளவரசர் அருள்மொழிவர்மர் போர் முனையில் எத்தகைய நிகரில்லாத வீரம் உடையவரோ, அப்படியே அறிவாற்றலிலும் நிகரற்றவர், வஞ்சகர்களின் சூழ்ச்சி வலையில் அவ்வளவு சுலபமாக அகப்பட்டுக் கொண்டுவிடமாட்டார். சீக்கிரத்தில் அவரைப் பற்றி நல்ல செய்தி ஏதேனும் கிடைக்கும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றேன். அதற்கிடையில் நாம் என்ன செய்யவேண்டும், இந்த இக்கட்டான நிலைமையில் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்பதைப் பற்றி உங்கள் அபிப்பிராயங்களைத் தெரிந்துகொள்ள விரும்புகிறேன்!” இவ்விதம் சேநாதிபதி தாம் சொல்ல வேண்டியதைச் சொல்லி முடிந்ததும், மற்றவர்கள் தங்கள் கருத்துக்களைத் தெரிவித்தார்கள். அவர்களுடைய கருத்துக்கள் முக்கியமான விஷயங்களில் ஏறக்குறைய ஒரு மாதிரியாகவே இருந்தன. சில்லறை விவரங்களில் மட்டுமே மாறுப்பட்டன. அங்கே உள்ளவர்களின் பிரதிநிதிகள் நாளைய தினம் சக்கரவர்த்தியை நேரில் சந்தித்துப் பேச வசதி கோரவேண்டும் என்றும், அதற்கு வாய்ப்புக் கிடைத்தால் சக்கரவர்த்தியிடம் “மதுராந்தகன் சோழ சிங்காதனம் ஏறுவதை நாங்கள் விரும்பவில்லை” என்று தெளிவாகத் தெரிவித்து விடவேண்டும் என்றும் பலர் கூறினார்கள். “ஒன்று, பழுவேட்டரையர்களுடைய சர்வாதிகாரப் பதவிகளிலிருந்து சக்கரவர்த்தி அவர்களை நீக்கிவிடவேண்டும்; அல்லது சக்கரவர்த்தி தஞ்சாவூரை விட்டுப் பழையாறைக்குப் போய்விடவேண்டும்” என்று இன்னும் சிலர் வற்புறுத்தினார்கள். “ஆதித்த கரிகாலருக்கு ஏற்கெனவே யுவராஜ்ய பட்டாபிஷேகம் ஆகியிருப்பதால் அவரே அடுத்து பட்டத்துக்கு உரியவர்; அவராகப் பட்டம் வேண்டாம் என்று மறுதளித்தால் அடுத்தபடி சிங்காதனத்துக்கு உரிமையாளர் அருள்மொழிவர்மர்தான். இதைச் சந்தேகத்துக்கு இடம் வையாமல் சக்கரவர்த்தியிடம் தெரிவித்து அவரையும் ஒப்புக்கொள்ளப் பண்ணவேண்டும்” என்றார்கள், வேறு சிலர், சக்கரவர்த்தியைச் சந்திப்பதற்கே வாய்ப்புக் கிடைக்காவிட்டால், கோட்டைக் கதவுகளைத் திறப்பதற்கு மறுத்தால், கோட்டையை முற்றுகையிட வேண்டியதுதான் என்று சிலர் சொன்னார்கள். “முற்றுகை எதற்காக? உடனடியாகக் கோட்டைக்கதவுகளையும் மதிள்களையும் தகர்க்கும்படி வீரர்களை ஏவ வேண்டியதுதான்!” என்று சிலர் கூறினார்கள். இளவரசரைப் பற்றிச் செய்தி வரும் வரையில் காத்திருப்பது நல்லது என்றும் ஆதித்த கரிகாலருக்கு ஆள் அனுப்பி அவரையும் தருவித்துக்கொள்ள வேண்டும் என்றும் சிலர் கருதினார்கள். “அதற்காகவெல்லாம் காத்திருப்பதில் என்ன பயன்? பழுவேட்டரையர்களின் ஆதிக்கத்திலுள்ள சுந்தர சோழப் பெரும்படை கொள்ளிடத்துக்கு அக்கரையில் மழ நாட்டில் இருந்து வருகிறது. தற்சமயம் கொள்ளிடத்திலும் மற்ற நதிகளிலும் பெருவெள்ளம் போவதால் அப்படைகள் இங்கு வர முடியாது. ஆகையால் கோட்டையை தகர்த்துச் சக்கரவர்த்தியைப் பழுவேட்டரையர்களின் சிறையிலிருந்து மீட்பதற்கு இதுவே தக்க சமயம்” என்று வற்புறுத்தினார்கள் வேறு சிலர். இவ்வாறு விவாதம் நடந்து கொண்டிருக்கையில், கூடாரத்தின் வாசலில் காவல் புரிந்துகொண்டிருந்த வீரன் ஒருவன் அவசரமாக உள்ளே வந்து சேனாதிபதியின் காதில் ஏதோ கூறினான். அவர் கூட்டத்தினரைப் பார்த்து, “இதோ வந்து விடுகிறேன். சற்றுப் பேசிக்கொண்டிருங்கள்” என்று சொல்லி விட்டு வெளியேறினார்.
உடல் சூடு மற்றும் உணவில் அதிகப்படியான கார மசாலாவை சேர்த்துக் கொள்பவர்களுக்கு மூலம் நோய் பாதிப்பு வர அதிக வாய்ப்புள்ளது உட்கார்ந்தே வேலை செய்பவர்கள், மது மற்றும் புகை பிடிக்கும் பழக்கம் மற்றும் நேரத்திற்கு சாப்பிடாதவர்களுக்கு மூலம் நோய் வர வாய்ப்புண்டு. மூலம் நோய் பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் சரியாக உட்கார முடியாமல் தவிப்பதோடு, எப்போதும் டென்சனாகவே இருப்பர். பப்பாளிபழம் மற்றும் மாம்பழம் இரண்டையும் சிறு துண்டுகளாக நறுக்கி, தேனில் ஊறவைத்து சாப்பிட்டால் மூலம் நோய் குணமாகும். மூலக்கடுப்பு மற்றும் எரிச்சல் தீர, சுண்டைக்காயை உணவில் சமைத்து சாப்பிட்டு வந்தால் குணமாகும். முள்ளங்கி ஜூஸை தினமும் காலை மற்றும் மாலையில் அரை கப் தொடர்ந்து குடித்து வந்தால் மூலம் நோய் குணமாகும். மாதுளைப் பழத்தின் தோலை தண்ணீரில் கொதிக்க வைத்து, அதனை நாள்தோறும் ஒரு டம்ளர் குடித்து வந்தால் மூலம் நோய் சரியாகும். உலர்ந்த அத்திப்பழத்தை, இரவில் ஒரு டம்ளர் நீரில் ஊற வைத்து, காலை, மாலைஇருவேளை குடித்தல், மூலம் பிரச்சனை சரியாகும். மூலத்தால் ஏற்படும் ரத்தப் போக்கை சரிசெய்ய வெங்காயத்தை பச்சையாக சாப்பிடலாம். இதனால், மலவாயில் ஏற்படும் வலியும் குறையும். ஓட்ஸ், பார்லி, உளுந்து ஆகியவற்றில் தினமும் ஒன்றை கஞ்சியாக காய்ச்சி குடித்து வரலாம். நார்ச்சத்துள்ள கொய்யா, ஆரஞ்சு, எலுமிச்சை, சாத்துக்குடி, ஆப்பிள் ஆகிய பழங்களை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் சரியாகும். மூலம் நோய் உள்ளவர்கள், வெண்டைக்காய், தக்காளி, கேரட் மற்றும் வெந்தயம், கொண்டைக்கடலை ஆகியவற்றை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
ஒரு அணுவில் உள்ள எலக்ட்ரான்கள் அணுக்கருவைச் சுற்றி கூடுகளில் அமைக்கப்பட்டிருப்பதை நாம் ஏற்கனவே அறிவோம். ஒவ்வொரு கூடும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட துணைக் கூடுகளைக் கொண்டுள்ளது, அதில் எலக்ட்ரான்கள் ஒரு குறிப்பிட்ட முறையில் நிரப்பப்படுகின்றன. இந்த துணைக் கூடுகளைக் \(s\), \(p\), \(d\) மற்றும் \(f\) என பெயரிடப்பட்டுள்ளது. துணைக்கூடுகளில் எலக்ட்ரான்கள் வைக்கப்பட்டுள்ள அமைப்பின் அடிப்படையில் தனிமங்களை \(s\), \(p\), \(d\) மற்றும் \(f\) என நான்கு துணைத் தொகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. \(s\), \(p\), \(d\) மற்றும் \(f\) தொகுதி தனிமங்கள் s - தொகுதி தனிமங்கள்: i. கார உலோகங்கள். இது தொகுதி \(1\) (கார உலோகங்கள்) மற்றும் தொகுதி \(2\) (கார மண் உலோகங்கள்) இல் உள்ள தனிமங்களை வரிசைப்படுத்தும் போது கடைசி எலக்ட்ரானானது \(s\) துணைக் கூட்டில் வைக்கப்படுகிறது. எனவே இந்த தனிமங்கள் s-தொகுதி தனிமங்கள் என்று அழைக்கப்படுகின்றன. ஹைட்ரஜனை தவிர இத்தொகுதியில் உள்ள தனிமங்கள் உலோகங்களாகும். இவை நீருடன் வினைபுரிந்து உருவாக்கும் கரைசலானது சிவப்பு லிட்மஸ் காகிதத்தை நீல நிறமாக மாற்றும். இந்தக் கரைசல்கள் அதிககாரத்தன்மை கொண்டதாகக் காணப்படுகின்றன. எனவே, இவை கார உலோகங்கள் என்று அழைக்கப்படுகின்றன. ii. கார மண் உலோகங்கள். தொகுதி \(2\) இன் தனிமங்களும் உலோகங்களே. இவை ஆக்ஸிஜனோடு இணைந்து ஆக்ஸைடுகளை உருவாக்குகின்றன. முன்பு இவை 'புவி (அ) மண் ' என்று அழைக்கப்பட்டன. இந்த ஆக்ஸைடுகள் நீரில் கரையும் போது கார கரைசல்களை உருவாக்குகின்றன. எனவே, இவை கார மண் உலோகங்கள் என்றும் அழைக்கப்படுகின்றன.
பிரபல நடிகையும், பாடகியுமான மஞ்சுஷா மோகந்தாஸ் சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.பிரபல ரியாலிட்டி ஷோ நிகழ்ச்சியான ஐடியா ஸ்டார் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் வெற்றி பெற்று மலையாள திரையுலகில் பிரபல பாடகியாக திகழ்ந்த மஞ்சுஷா மோகந்தாஸ் (26) சில படங்களில் நடித்துள்ளார். இவர் தற்போது காலடி சம்ஸ்கிருத பல்கலைக்கழகத்தில் இரண்டாம் ஆண்டு MA பயின்று வருகிறார்.இந்நிலையில் கடந்த வரம் தனது கல்லூரி தோழி அஞ்சனாவுடன் நடன கலை ஆராச்சி தொடர்பாக இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர்.அங்குள்ள MC சாலை அருகே சென்ற பொது மஞ்சுஷா இருசக்கர வாகனத்தில் மீது எதிரில் வந்த கார் மோதியது .இதில் பலத்த காயமடைந்த மஞ்சுஷா மற்றும் அவர் தோழி ஆகிய இருவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.பலத்த காயமடைந்த இவர் ஒரு வரமாக சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி மஞ்சுஷா நேற்று உயிரிழந்தார்.உயிரிழந்த மஞ்சுஷாவுக்கு பிரியதர்ஷன் என்ற கணவரும், மகளும் உள்ளனர். Previous குழந்தை இறந்தே பிறந்தது சவப்பெட்டியில் வைத்து புதைத்த தாய்..! தோண்டி எடுத்தவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி
இந்நிலையில் கட்டுப்பாட்டு விலை இல்லாததால், வியாபாரிகள் பல்வேறு விலைகளுக்கு பாண் விற்பனை செய்வதாக மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். சில பிரதேசங்களில் பாண் ஒன்றின் விலை 220 ரூபாவாக உள்ளதாக மக்கள் குற்றம் சுமத்துகின்றனர். பேலியகொட மெனிங் சந்தையில் மரக்கறிகளின் விலைகள் நேற்று மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளன. அறுவடை குறைவினால், மெனிங் சந்தைக்கு மரக்கறியின் வருகை குறைவடைந்துள்ளதாகவும், இதன் காரணமாக மரக்கறிகளின் விலைகள் வேகமாக அதிகரித்துள்ளதாகவும் வியாபாரிகள் குறிப்பிட்டுள்ளனர். பேலியகொட மத்திய மீன் சந்தையில் மீன்களின் விலைகளும் அதிகரித்துள்ளதாக வர்த்தகர்கள் குற்றம் சுமத்துகின்றனர். சந்தைக்கு மீன் பொருட்கள் கிடைப்பது தற்போது குறைந்த அளவிலேயே உள்ளதாக சுட்டிக்காட்டப்படுகிறது. இதேவேளை, 5 அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக லங்கா சதொச நேற்று முன்தினம் அறிவித்துள்ளது. இந்த விலை குறைப்பு இம்மாதம் 30ஆம் திகதி வரை அமுலில் இருக்கும் என கூறப்பட்ட போதிலும் சில சதொச கிளைகளில் இதுவரை பொருட்களின் விலை குறைக்கப்படவில்லை என மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். Facebook Twitter Pinterest WhatsApp Previous articleஎதிர்வரும் ஆண்டு மார்ச் மாதத்திற்கு பின்னர், எந்தவொரு நேரத்திலும் பாராளுமன்றத் தேர்தல் நடத்தப்படலாம்..!
முன்பள்ளி முதல் பல்கலைக்கழகம் வரை கல்வித்துறை முன்னேற்றத்திற்கான திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் கோவிட் நோய்த்தொற்றை தடையாக கொள்ள வேண்டாம் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கல்வித்துறை அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார். மனிதவள அபிவிருத்தி என்பது அரசாங்கத்தின் முதன்மை நோக்கமாகும். நாட்டின் எதிர்கால தலைமுறையினரை உற்பத்தித் திறன்மிக்க பிரஜைகளாக உருவாக்க அவர்கள் புதிய அறிவு மற்றும் திறன்களைக் கொண்டிருக்க வேண்டும். அதற்காக அரசாங்கம் முன்னெடுத்துள்ள வேலைத்திட்டங்களுக்கு தற்போதைய நிலைமைக்கு மத்தியில் இடையூறு ஏற்படக்கூடாது என்று ஜனாதிபதி வலியுறுத்தினார். கல்வி அமைச்சு மற்றும் அதன் கீழ் உள்ள அனைத்து இராஜாங்க அமைச்சுகளும் எதிர்பார்க்கப்பட்ட இலக்குகளை அடைவதற்காக எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து மீளாய்வுசெய்யும் வகையில் ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (9) நடைபெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். ஒரு தேசிய கல்விக் கொள்கையை விரைவாக உருவாக்குவதற்கு "சுபீட்சத்தின் நோக்கு" கொள்கை திட்டத்தில் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. சர்வதேச தரத்திற்கு ஏற்ப தயாரிக்கப்படும் குறிப்பிட்ட குறிக்கோளுடன் கூடிய தனிப் பாடத்திட்டத்தின் கீழ் முன்பள்ளி முதல் பட்டப்படிப்பு வரை கல்வி முறைகளை உருவாக்குவது மற்றொரு நோக்கமாகும். இலக்குகளை அடைந்துகொள்ள கல்வி அமைச்சு மற்றும் அதன் கீழ் வரும் கல்வி சீர்திருத்த, திறந்த பல்கலைக்கழகங்கள், தொலைக் கல்வி மேம்பாட்டு இராஜாங்க அமைச்சு, அறநெறிப் பாடசாலைகள், பிக்கு கல்வி, பிரிவேனா மற்றும் பௌத்த பல்கலைக்கழகங்கள் இராஜாங்க அமைச்சு, பெண்கள் மற்றும் சிறுவர் அபிவிருத்தி, முன்பள்ளி மற்றும் ஆரம்ப கல்வி, பாடசாலைகள் உட்கட்டமைப்பு வசதிகள், கல்விச் சேவைகள் இராஜாங்க அமைச்சு மற்றும் திறன் விருத்தி, தொழிற்கல்வி, ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க இராஜாங்க அமைச்சு ஆகியன முன்னெடுத்துள்ள திட்டங்களை ஜனாதிபதி தனித்தனியாக ஆராய்ந்தார்.
"உண்மை மற்றும் நல்லிணக்க அலுவலகத்தை" மீண்டும் அமைப்பதற்கு தேவையான ஆதரவை வழங்குவதாக தென்னாபிரிக்க ஜனாதிபதி சிறில் ரம்போசா ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் உறுதியளித்துள்ளார். உண்மை மற்றும் நல்லிணக்க அலுவலகத்தை ஸ்தாபிப்பதற்குத் தேவையான அறிவைப் பெற்றுக் கொள்வதற்காக இலங்கையில் இருந்து பிரதிநிதிகள் குழுவொன்று தென்னாபிரிக்காவிற்கு அனுப்பப்படவுள்ளதாகவும் ஜனாதிபதி ரணில், ஜனாதிபதி ரம்போசாவிடம் அறிவித்துள்ளார். உண்மை மற்றும் நல்லிணக்க அலுவலகத்தை ஸ்தாபிப்பதற்கு தேவையான ஆதரவை வழங்க தயாராக இருப்பதாக ஜனாதிபதி சிறில் ரம்போசா தெரிவித்துள்ளார். 2015 ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கத்தின் போது சமூகங்களுக்கிடையில் நீடித்த நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக உண்மை மற்றும் நல்லிணக்க அலுவலகம் ஒன்றை நிறுவுவதற்கான பிரேரணை அப்போதைய பிரதமரும் தற்போதைய ஜனாதிபதியுமான திரு.ரணில் விக்கிரமசிங்கவினால் முன்வைக்கப்பட்டது. தென்னாபிரிக்கா கறுப்பு வெள்ளைப் பிரிவினையை முடிவுக்குக் கொண்டு வந்ததைப் போன்று இந்நாட்டில் உள்ள சமூகங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்குத் தேவையான முன்மொழிவுகளை முன்வைப்பதே இந்த அலுவலகத்தின் நோக்கமாகும். உண்மை மற்றும் நல்லிணக்க அலுவலகம் ஒன்றை நிறுவுவது தொடர்பான கலந்துரையாடல் கடந்த வியாழக்கிழமை கட்டுநாயக்க விமானப்படை வரவேற்பு மண்டபத்தில் நடைபெற்றது. தென்னாப்பிரிக்க ஜனாதிபதி திரு. சிரில் ராமபோசா ஜி. 20 மாநாடு முடிந்து தனது நாட்டுக்கு திரும்பும் போது சிறிது ஓய்வு எடுக்க இலங்கை வந்தார். (யாழ் நியூஸ்) Share Previous News Next News யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.
திருவள்ளூர்: திருவள்ளுர் கோட்டத்தில் மின் நுகர்வோர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் திருவள்ளூர், பெரியகுப்பத்தில் உள்ள செயற் பொறியாளர் அலுவலகத்தில் இன்று ( 7 ஆம் தேதி) காலை 11 மணிக்கு நடைபெறவுள்ளது. காஞ்சிபுரம் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் தலைமை வகித்து நுகர்வோர்களிடம் குறைகள் கேட்க உள்ளார். எனவே திருவள்ளுர் கோட்டத்திற்குட்பட்ட மின் நுகர்வோர்கள் மற்றும் பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் மின்துறை சம்பந்தமான புகார்களை நேரில் தெரிவிக்கலாம் என திருவள்ளுர் செயற்பொறியாளர் கனகராஜ் தெரிவித்துள்ளார். Tags: திருவள்ளூர் மின் நுகர்வோர்குறை தீர்க்கும் நாள் கூட்டம் மேலும் செய்திகள் தமிழகம் முழுவதும் ரூ.84 கோடியில் 3,808 ஊரக நூலகங்களின் கட்டிடங்கள் புதுப்பிப்பு; புதிய புத்தகங்கள், பர்னிச்சர்கள் வாங்க நடவடிக்கை ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.70 ஆயிரத்தை இழந்த ஒடிசா பெண் தற்கொலை; சங்கரன்கோவில் அருகே பரிதாபம் தமிழகத்தின் வரலாற்றை மீட்டுருவாக்கம் செய்ய மேலும் பல புதிய இடங்களில் தொல்லியல் ஆய்வுகள் தேவை; ஒன்றிய அரசுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு கோரிக்கை திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழா, கொடியேற்றத்துடன் தொடங்கியது; அதிகாலையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் புதுவையில் ரூ.900 கோடிக்கு விடப்பட்ட குப்பை; அள்ளும் டெண்டரில் ஊழல்: முன்னாள் முதல்வர் நாராயணசாமி குற்றச்சாட்டு திருச்சி மலைக்கோட்டை கோயிலில் கார்த்திகை தீபம் ஏற்ற மெகா திரி தயாரிக்கும் பணி தொடங்கிய இடத்தில் மீண்டும் ஆட்டம் காட்டும் கொரோனா!: சீனாவில் ஒரே நாளில் 31,000க்கும் அதிகமானோருக்கு பாதிப்பு..!! நாம் ஒன்றாக நடக்கும்போது அடிகள் வலுவாக இருக்கும்; இந்திய ஒற்றுமை பயணத்தில் இணைந்த அண்ணன் - தங்கை..!! இருளில் தவிக்கும் உக்ரைன் மக்கள்: மின் உற்பத்தி நிலையங்களை குறி வைத்து ரஷ்யா தாக்குதல்..! சென்னை கொளத்தூரில் 1.27 கோடியில் இறகுப்பந்து விளையாட்டு அரங்கை திறந்து வைத்து வீரர்களுடன் உற்சாகமாக விளையாடிய முதல்வர் மு.க.ஸ்டாலின்..!!
(நபியே !) அல்லாஹ் ஒருவன்'' என கூறுவீராக!அல்லாஹ் தேவைகளற்றவன்.(யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை.அவனுக்கு நிகராக யாருமில்லை.(112 : 1-4) புதன், 22 ஜூலை, 2015 ஹதீஸ் கலையின் ஐந்து விதிகள் "இஸ்லாத்தின் ஆதாரம் இறைவனின் வஹீ மட்டுமே" சகோ. பிஜெவின் இந்த வருட தொடர் உரையிலிருந்து எடுக்கப்பட்டது ------------------------------------------------------------------------------------------------------------- ஒரு ஹதீஸ் ஆதாரப்பூர்வமானதா அலல்து பலகீனமானதா என்பதை அறிவதற்கு ஐந்துஅளவுகோல்களை இந்த இமாம்கள் முன்வைக்கின்றனர். இந்த ஐந்து அளவுகோலும் சரியாக இருக்கும் பட்சத்தில் தான் ஒரு ஹதீஸை சஹீஹ்அந்தஸ்திற்கு கொண்டு வருகின்றனர். 1. அறிவிப்பாளர் நேர்மையாளராக இருத்தல் வேண்டும் : இது முதல் அளவுகோலாகும். ஒரு செய்தியை ஒருவர் சொல்லும் போது அவர் சொல்வதை நாமே சென்று உறுதி செய்துவிடலாம் என்றால் சொல்பவரின் நம்பகத்தன்மையோ அவரின் நேர்மையையோ நாம் அலசத்தேவையில்லை. உதாரணமாக, ஒரு இடத்தில் புதையல் ஒன்று இருப்பதாக ஒருவர் சொல்கிறார். சொல்பவர் நேர்மையாளரா பொய்யரா என்றெல்லாம் இவ்விடம் நாம் ஆய்வு செய்யத்தேவையில்லை, காரணம், அவர் சொன்னது போல் அந்த இடத்தில் புதையல் இருந்தால் அவர்நேர்மையானவர், புதையல் இல்லையென்றால் அவர் பொய்யர். ஆக, அவர் சொன்னதை நாமேநேரடியாக சரி பார்க்க வழி இருக்கும் போது, அதுவே நமக்கு போதுமானது. ஹதீஸ்களை அறிவிப்பதைப் பொறுத்தவரை, இப்படி நபி (சல்) அவர்கள் சொன்னார்கள் என்றுஒரு அறிவிப்பாளர் ஒன்றை சொல்லும் போது, உண்மையில் இப்படி நபி (சல்) அவர்கள்சொன்னார்களா? என்பதை நபி (சல்) அவர்கள் வாழும் காலம் என்றால் நாம் அவர்களிடமேநேரடியாக சென்று கேட்டு தெளிவுப்படுத்திக் கொள்ளலாம். நபி (சல்) அவர்கள் காலம் முடிந்த பிறகு இந்த வாய்ப்பு இருக்கிறதா? அறிவிப்பாளரின் வார்த்தையை தான் நம்ப வேண்டியுள்ளது. அப்போது, சொன்னவர் நல்லவரா? சொன்னவர் உண்மை பேசுபவரா? என்கிற ஆய்வைஅடிப்படையாக கொண்டு தான் ஒன்றை உறுதி செய்ய இயலும். ஆக, அறிவிப்பவர் நேர்மையாளராக இருக்க வேண்டும் என்கிற அளவுகோல் இங்கேஅவசியமாகிறது. நேர்மையாளர் என்றவுடன் 100% சதவிகிதம் தவறே செய்யாதவர் என்று அர்த்தமில்லை. மனிதன் என்கிற முறையில் எல்லா தவறுகளும் இருப்பவராக தான் இருப்பார். எனினும், தன்னளவில் தவறுகள் செய்பவன் கூட பிறரை வஞ்சிக்கக் கூடாது என்கிறகொள்கையில் இருப்பான், பிறரிடம் மோசடி செய்யக் கூடாது என்கிற ஒழுக்கத்தோடுஇருப்பான்,முக்கியமாக நபியின் பெயரால் பொய்யுரைக்கக் கூடாது என்கிற அச்சத்துடன்இருப்பான். அத்தகையோர் தான் ஒரு ஹதீஸை அறிவிப்பதற்கு தகுதியானவர்கள். இந்த அளவுகோலை கூட இமாம் ஷுஃபா போன்றவர்கள் சுயமாக முடிவு செய்து விடவில்லை. மாறாக, ஒரு செய்தியை நாம் அறிந்தால் கேட்டவுடன் அதை நம்பாமல் ஆய்வு செய்யவேண்டும், சொன்னவரின் நம்பகத்தன்மையை எடை போட வேண்டும் என்பதாக குர் ஆன்கூறுகின்ற பல்வேறு அளவுகோல்களை சான்றாக முன்வைத்து தான் இந்த விதியினைவகுக்கிறார்கள். நம்பிக்கை கொண்டோரே! குற்றம் புரிபவன் உங்களிடம் ஒரு செய்தியைக் கொண்டு வந்தால் ஒரு சமுதாயத்திற்கு அறியாமையால் நீங்கள் தீங்கு இழைக்காதி ருப்பதற்காக அதைத் தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள்! (இல்லையேல்) நீங்கள் செய்ததற்காகக் கவலைப்படுவீர்கள். (49:6) இந்த வசனத்தில், ஒருவர் கொண்டு வரக்கூடிய செய்தியினை அப்படியே ஏற்றுக்கொண்டு விடாமல் இயன்றவரை விசாரித்துக் கொள்ளுமாறு அல்லாஹ் கட்டளையிடுகிறான். அது போல், உமக்கு அறிவு இல்லாததை நீர் பின்பற்றாதீர்! செவி, பார்வை, உள்ளம் ஆகிய அனைத்துமே விசாரிக்கப்படுபவை (17:36) எந்த விஷயத்தில் போதுமான அறிவு நமக்கு இல்லையோ அதை பின்பற்றக் கூடாது எனும் போது, அறிவிப்பாளர் எதை சொன்னாலும் அதை கண்மூடித்தனமாய் பின்பற்றுவது தகாது என்று எளிதில் புரிந்து கொள்ளலாம். இதைக் கேள்விப்பட்ட போது 'இதைப் பற்றிப் பேசுவது எங்களுக்குத் தகாது. (இறைவா) நீயே தூயவன். இது பயங்கரமான அவதூறு' என்று நீங்கள் கூறியிருக்கக் கூடாதா? (24:16) ஆயிஷா (ரலி) அவர்கள் தொடர்பாக பரப்பப்பட்ட அவதூறு செய்தி குறித்து அல்லாஹ் இவ்வசனத்தில் சொல்லும் போது, அதைப் பற்றிய ஞானமில்லாமல் பரப்பிய குற்றத்திற்காக அல்லாஹ் கடுமையாக கோபம் கொள்கிறான். உங்களுக்கு ஞானமில்லாத விஷயங்களை பரப்புவது அவதூறு என்று அல்லாஹ் இதில் சொல்வதிலிருந்தும், ஹதீஸ் எனக்கூறி அறிவிக்கப்படும் அனைத்தையும் தக்க ஞானமின்றி ஏற்கக் கூடாது என்று புரியலாம். அவர்கள் தமக்குரிய தவணையை அடையும் போது அவர்களை நல்ல முறையில் தடுத்து வைத்துக் கொள்ளுங்கள்! அல்லது நல்ல முறையில் அவர்களைப் பிரிந்து விடுங்கள்! உங்களில் நேர்மையான இருவரை சாட்சிகளாக ஏற்படுத்திக் கொள்ளுங்கள்! (65:2) விவாகரத்தின் போது சாட்சிகளை ஏற்படுத்திக் கொள்ளுங்கள் என்று பொதுவாக அல்லாஹ் சொல்லாமல், நேர்மையான சாட்சிகளை ஏற்படுத்திக் கொள்ளுங்கள் என்று சொல்வதிலிருந்து, மனிதர்களின் நேர்மையை உரசிப் பார்ப்பதும், அதை கண்டறிவதும் அவசியம் என்று புரிகிறது இதே கருத்தை கீழ்காணும் வசனமும் விளக்குகிறது. நம்பிக்கை கொண்டோரே! இஹ்ரா முடன் இருக்கும் போது வேட்டைப் பிராணிகளைக் கொல்லாதீர்கள்! உங்களில் எவரேனும் வேண்டுமென்றே அதைக் கொன்றால் அவர் கொன்ற பிராணியுடன் ஒத்துப் போகும் கால்நடை (ஆடு, மாடு ஒட்டகம் ஆகியவை) பரிகாரமாகும். அது கஅபாவைச் சென்றடைய வேண்டிய காணிக்கை(ப் பிராணி). அல்லது பரிகாரமாக ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும். அல்லது அதற்கு ஈடான அளவு நோன்பு நோற்க வேண்டும். உங்களில் நீதியுடைய இருவர் இது பற்றித் தீர்ப்பளிக்க வேண்டும். (5:95) இதிலும் நீதமான இருவரிடம் தீர்ப்பு கேட்குமாறு அல்லாஹ் சொல்வதிலிருந்து மனிதர்களின் நிதமாக நடப்பவர் யார், நீதி தவறி நடப்பவர் யார் என்பதை ஆய்வு செய்ய வேண்டும் என்று தெரிகின்றது. நீ உண்மை சொல்கிறாயா? பொய்யர்களில் ஆகி விட்டாயா? என ஆராய்வோம்' என்று அவர் கூறினார். (27:27) இவ்வசனத்தில், சுலைமான் நபியிடம் ஹூத் ஹூத் பறவை அல்லாஹ்வுக்கு இணை வைக்கும் ராணியின் செயல்கள் குறித்த செய்தி ஒன்றை கூறும் போது, அதை கூட உடனடியாக சுலைமான் நபி ஏற்கவில்லை. மாறாக, நீ சொல்வது உண்மையா பொய்யா என்பதை நான் முதலில் ஆராய்வேன் என்றே கூறினார்கள். ஆக, நபி (சல்) அவர்கள் சொன்னதாக அறிவிப்பவர் நேர்மையாளர் என்று அறியப்பட்டால் தான்அதை சஹீஹ் அந்தஸ்த்துக்கு கொண்டு வருவார்கள். பொய்யர் என்று தெரிந்தாலோ அல்லது அவர் பொய்யரா நேர்மையாளரா என்கிற தகவலேகிடைக்காமல் இருந்தாலோ அவர் கூறுகின்ற ஹதீஸை ஆதாரப்பூர்வமானது என்கிறபட்டியலில் சேர்க்க மாட்டார்கள். 2. செய்தியை சரியான முறையில் உள்வாங்கி புரியக் கூடியவராக இருக்க வேண்டும். இதுவும் ஹதீஸ் விதிகளில் உள்ளது இரண்டாவது அளவுகோல். அறிவிப்பவர் நல்லவராகவும் நேர்மையாளராகவும் இருந்தாலும் கூட, சொல்லப்படும்செய்தியை சரியான முறையில் புரிந்து கொள்வதற்கு அவை போதுமான தகுதிகளாக ஆகாது. நேர்மையாளர் கூட ஒன்றை தவறாக புரிந்து விடுவார், கேட்பதில் சில வார்த்தைகளைகவனக்குறைவால் தவற விடுவார், அதனாலும் கூட கருத்துக்கள் மாறிப்போய் விடலாம். ஆக, சொல்லப்படும் செய்தி என்னவோ அதை அதே பொருளில் புரிந்து கொள்வது என்பதுஹதீஸ் அறிவிப்பாளரின் முக்கிய தகுதியாக இமாம்கள் நிர்ணயம் செய்கின்றனர். நாம் கூட இன்று சஹாபாக்களை பின்பற்றக் கூடாது என்கிறோம். ஆனால் அதை வெளியே பிரச்சாரம் செய்பவர்கள் எப்படி சொல்கிறார்கள், இவர்கள்சஹாபாக்களை திட்டுகிறார்கள் என்கிறார்கள். இது தான் அறிவிப்பாளரின் பலகீனம். எனவே, புரிதலில் கவனத்துடன் இருந்து, சொல்லப்பட்ட செய்தியை முழுமையாகஉள்வாங்கக்கூடியவரா என்பதை அலசுவதை இரண்டாவது விதியாக வகுக்கின்றனர் இந்த இமாம்கள். 3. அறிவிப்பாளர்களில் ஒருவருக்கொருவர் சங்கிலித் தொடர்பு இருக்க வேண்டும். இப்ராஹிம் என்கிற ஒருவர் வாயிலாக நான் இதை கேட்டேன் என்று இஸ்மாயில் என்பவர்சொன்னால், இந்த இஸ்மாயில் இப்ராஹிம் காலத்தில் வாழ்ந்தவர் தானா? என்பதை சரி பார்க்கவேண்டும். அவர் காலத்தில் வாழாதவர் அவரிடம் கேட்டிருக்க முடியாது. அதே போன்று, சம காலத்தில் வாழ்ந்தவராக இருந்தால் மட்டும் போதாது, இருவரும் சந்தித்திருப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருந்திருக்க வேண்டும். உதாரணத்திற்கு இப்ராஹிம் டில்லியிலும் இஸ்மாயில் சென்னையிலும் வாழ்ந்தவர்களாகஇருந்தால் இவர்கள் எப்போதேனும் சந்தித்திருக்கிறார்களா? இவர் டில்லிக்கு சென்றாராஅல்லது அவர் சென்னைக்கு வந்திருக்கிறாரா? என்றெல்லாம் ஆய்வு செய்ய வேண்டும். அதே போல், இப்ராஹிமிடம் கேட்டதாக இஸ்மாயில் சொல்கிறார் என்றால் கேட்டு புரிவதற்குரிய வயதில் தான் இஸ்மாயில் இருந்தாரா? என்பதையும் சரி பார்க்க வேண்டும். இப்ராஹிம் சென்னைக்கு வந்த சமயத்தில் இஸ்மாயிலின் வயது 6 ஆக இருக்கும்,அப்படியானால் இவர் இப்ராஹிமிடம் செய்திகளை கேட்டிருப்பாரா? கேட்டு அறிவிக்கின்றமுதிர்ச்சியை அவர் அப்போது பெற்றிருக்கவில்லை என்கிற முடிவுக்கு வருவார்கள். ஆக, ஒரு அறிவிப்பாளர் நேர்மையானவர் என்று முடிவு செய்த பிறகு, அவர் தெளிவாக புரியக்கூடியவர் தானா என்பதை உறுதி செய்த பிறகு, அவர் பிறந்த வருடம், அவர் வாழ்ந்த காலம்,வாழ்ந்த பகுதி, எத்தனை வருடங்கள் வாழ்ந்தார், எந்த வயதில் இந்த செய்தியை அவர் கேட்டார்,என்றெல்லாம் பல அடுக்கு ஆய்வுகளை இமாம்கள் மேற்கொள்கின்றனர். இதில் எந்த ஒன்றிலாவது குறைவு ஏற்பட்டாலோ சங்கிலித் தொடரில் முறிவு இருந்ததுகண்டுபிடிக்கப்பட்டாலோ, ஒன்று, ஏதேனும் ஒரு நபர் இடையில் விடுபட்டிருக்க வேண்டும்அல்லது இவர் பொய் சொல்லியிருக்க வேண்டும், இரண்டில் எதுவாக இருந்தாலும் இந்தஹதீஸ் சஹீஹாக இருக்க முடியாது என்கிற அடிப்படையில் அதை தள்ளி விடுவார்கள். 4. அறிவிக்கப்பட்ட செய்தி, அதை விட பலமான இன்னொரு செய்திக்கு முரணாக இருத்தல்கூடாது. (ஷுதூத்) இதுவும் முக்கியமான அளவுகோலாகும். ஒரு செய்தியை ஒருவர் அறிவிக்கிறார். அதற்கு முரணான ஒரு கருத்தை மூவர் அறிவிக்கிறார்கள் என்றால் மூவர் அறிவிப்பது தான்நம்பகத்தன்மையில் அதிகம் வலுவானவை, காரணம், மூன்று பேரிடம் குறை ஏற்படுவதைவிட ஒருவரிடம் குறை ஏற்படுவதற்கு சாத்தியக்கூறு அதிகம். ஆக, அந்த ஒருவர் நம்பகமானவராக இருந்தாலும், நேர்மையானவர் என்று அறியப்பட்டாலும்,தெளிவான சிந்தனை கொண்டவர் என்று உறுதி செய்யப்பட்டாலும், அதை விட வலுவாகஅறிவிக்கப்படும் மூன்று பேரின் செய்திக்கு இவரது கூற்று முரணாக இருப்பதால் இவரதுகூற்றை பலகீனம் என்று தள்ளி விடுவார்கள். இஸ்மாயில் என்கிற ஆசிரியர் வழியாக 5 மாணவர்கள் ஒரு செய்தியை அறீவிக்கிறார்கள் என்று வைப்போம். உதாரணத்திற்கும், இரவுத் தொழுகை 8 ரக்காஅத் தான் தொழ வேண்டும் என்று நபி (சல்) அவர்கள் சொன்னார்கள் என்பதாக இஸ்மாயில் என்பவர் அறிவிக்கிறார். அவரிடம் கேட்ட 5 மாணவர்களில் 4 மாணவர்கள், நபியவர்கள் 8 ரக்காஅத் தொழ சொன்னார்கள் என்று அறிவிக்கிறார்கள். ஒரேயொரு மாணவர் மட்டும் நபியவர்கள் 8 ரக்காஅத் தொழ சொல்லவில்லை என்று அறிவிக்கிறார் என்று வைப்போம். அறிஞர்களின் ஆய்வில் இஸ்மாயில் என்பவரும் நம்பகமானவர் தான், அது போன்று அவரது 5 மாணவர்களும் நம்பகமானவர்கள், நேர்மையானவர்கள் தான் எனும் போது, நபி (சல்) அவர்கள் 8 ரக்காஅத் தொழ சொன்னார்கள் என்கிற செய்தியை தான் சஹீஹ் அந்தஸ்துக்கு கொண்டு வருவார்கள். 8 ரக்காஅத் தொழ சொல்லவில்லை என்று ஒரேயொருவர் அறிவிக்கின்ற செய்தி, அவரை விட அதிகமான அறிவிப்பாளர்களால் அறிவிக்கப்படும் செய்திக்கு மாற்றமாக இருப்பதால் அதை புறந்தள்ளி விடுவார்கள். இது தான் ஷுதூத் (ஷாத் வகை ஹதீஸ்) எனப்படும். இப்படியாக ஏராளமான ஹதீஸ்களை நாமும் சரி, நம்மை எதிர்க்கக் கூடிய மாற்றுக் கொள்கையுடையவர்களும் சரி, ஒதுக்கி வைத்துத் தான் இருக்கிறார்கள். ஷாத் வகை என்று சொல்லி ஒரு ஹதீஸ் புறந்தள்ளப்பட்டால், அதனுடைய பொருள், அந்த அறிவிப்பாள்ர் பலகீனமானவர் என்பதல்ல. அவர் பலமானவர் தான். ஆனால், இந்த ஒரு விஷயத்தில் மட்டும் அவர் கவனக்குறைவாக இருந்திருக்கிறார், ஏனெனில், இவரை விட அதிக எண்ணிக்கையில் மற்ற அறிவிப்பாளர்கள் இவர் சொல்வதற்கு மாற்றமாக அறிவிக்கிறார்கள் என்பதால் அது தான் சரியாக இருக்கும். எனவே, இந்த அறிவிப்பாளரின் கருத்தை நாம் ஏற்க மறுக்கிறோம். இந்த ஒரு விஷயத்தில் தான் மறுக்கிறோமே தவிர, இதே அறிவிப்பாளர் அறிவிக்கும் வேறு வேறு ஹதீஸ்களை நாம் மறுப்பது கிடையாது. ஆக, ஒருவர் அறிவிக்கும் செய்தி, 5 பேர் அறிவிக்கும் செய்திக்கு மாற்றமாக இருக்கின்ற காரணத்தால், அந்த ஒருவர், எவ்வளவு தான் நம்பகமானவராக இருந்தாலும் அதை புறந்தள்ளுகிறோமே, அப்படியானால், அந்த 5 பேர் அறிவிக்கும் செய்தியில் இருக்கும் நம்பகத்தன்மையை விட குர் ஆனுக்கு இருக்கும் நம்பகத்தன்மை அதிகமில்லையா? ஒரு ஹதீஸுக்கு மாற்றமாக ஒட்டு மொத்த சமுதாயமும் அறிவித்திருக்கும் குர் ஆனில் ஒரு வசனம் இருந்தால் அதை காரணம் காட்டி இந்த ஒரு ஹதீஸை மறுப்பது மிகப்பெரிய் ஷாத் வகை இல்லையா? நாம் குர் ஆனுக்கு ஒரு ஹதீஸ் மோதுகிறது என்று சொல்லும் போது மட்டும், அந்த ஹதீஸை அறிவிப்பவர் பொய்யரா? அவர் பலகீனமானவரா அவர் நரகத்திற்கு செல்வாரா? என்றெல்லாம் வாய் கிழிய கேட்பவர்கள், இதே கேள்வியை, இவர்களும் நாமும் அனைவருமே சேர்ந்து மறுக்கக்கூடிய ஷாத் வகை ஹதீஸ்களுக்கு கேட்டார்களா? நபிக்கு சூனியம் செய்யப்பட்டதாக வரக்கூடிய ஹதீஸ்களை அறிவிப்பவர்கள் 5 பேரோ 10 பேரோ இருக்கட்டும். ஆனால் நபிக்கு சூனியம் செய்யப்படவேயில்லை, சூனியம் செய்யப்பட்டதாக சொல்பவர்கள் அ நியாயக் காரர்கள் என்பதாக அல்லாஹ் தமது திருமறையில் சொல்கிறானே, அந்த குர் ஆன் வசனத்தை அறிவிப்பவர்கள் ஒட்டு மொத்த சமுதயாமாச்சே, இப்போது எது அதிகம் வலுவானது? சிந்தனையை இவர்கள் இப்படி செலுத்துவதை விட்டு விட்டு, அறிவிப்பாளர் நல்லவரில்லையா, அதை எப்படி ஏற்பது என்பதாக நுனிப்புல் மேய்கிறார்கள். குர் ஆனுக்குரிய மகத்துவமும், அதற்கான கண்ணியமும் இவர்களது உள்ளத்தில் சரியான முறையில் பதிந்திருந்தால் இது போன்ற வாதங்களை இவர்கள் வைத்திருக்க மாட்டார்கள். வெறுமனே, ஹதீஸ்களில் பதியப்பட்டிருக்கிறது என்கிற ஒரு காரணத்திற்காக மட்டும் சூனியம் போன்ற செய்திகளை ஏற்கத் தான் வேண்டும் என்று சொன்னால், அது போல தானே மேலே நாம் குறிப்பிட்ட ஷாத் வகை ஹதீஸ்களும் இருக்கின்றன? அவைகளும் ஹதீஸ் நூற்களில் பதியப்பட்டு தானே இருக்கின்றன? அவற்றையும் நம்பகமான அறிவிப்பாளர் தானே அறிவிக்கிறார்? இந்த அடிப்படையை நாம் சிந்தினையில் செலுத்த வேண்டும். ஆக, ஹதீஸ்களை நாம் மறுக்கவில்லை, மறுக்கவும் கூடாது, ஹதீஸை மறுத்தால் நாம் காஃபிர்களாகி விடுவோம் என்கிற இஸ்லாத்தின் அடிப்படையில் நாம் மிகவும் கவனத்துடன் தான் இருக்கிறோம். பிரச்சனை எங்கே எழுகிறது என்று சொன்னால், சில ஹதீஸ்கள், அவற்றையெல்லாம் விட மிக மிக பலமான ஆதாரமான குர் ஆனோடு நேரடியாக மோதுகின்ற போது, குர் ஆனா ஹதீஸா? என்கிற கேள்விக்கு நாம் தேர்வு செய்ய வேண்டியது குர் ஆனைத் தான். குர் ஆனில் அல்லாஹ் சொல்லும் போது, அவர்கள் இந்தக் குர்ஆனைச் சிந்திக்க மாட்டார்களா? இது அல்லாஹ் அல்லாத வரிடமிருந்து வந்திருந்தால் இதில் ஏராள மான முரண்பாடுகளைக் கண்டிருப்பார்கள். (4:82) குர் ஆன் அல்லாஹ்வின் வேதம் தான் என்பதற்கான ஆதாரமே இதில் எந்த முரண்பாடும் இருக்காது என்பது தான். குர் ஆனுக்கு முரணாக அல்லாஹ்வின் வஹீ செய்தி இருக்கவே இருக்காது. இது தான் இஸ்லாத்தின் அடிப்படை. முரண்படுவது போல் சில ஹதீஸ்கள் இருக்குமானால், அதை நிச்சயம் நபி (சல்) அவர்கள் சொல்லியிருக்க மாட்டார்கள், ஏனெனில், நபியின் பணி என்பது குர் ஆனை விளக்குவது தானே தவிர, குர் ஆனுக்கு முரண்பாடு கற்பிப்பதல்ல. ஏதேனும் ஹதீஸ்கள் குர் ஆனுக்கு முரண்பட்டால், அதை அறிவிப்பவர் தான் எதாவது குறை விட்டிருப்பார், எங்காவது கவனக்குறைவுடன் செயல்பட்டிருப்பார். இது தான் நாம் புரிய வேண்டிய அளவுகோல். அல்லாமல், அந்த அறிவிப்பாளர் பொய்யரா? அந்த அறிவிப்பாளர் பாவியா? என்கிற கேள்விகளுக்கெல்லாம் நாம் பதில் சொல்ல மாட்டோம். நமது அடிப்படை குர் ஆன் தான். அதற்கு முக்கியத்துவம் கொடுக்கின்ற காரணத்தால் தான் அதற்கு முரணான ஹதீஸ்களை மறுக்கிறோம். இவர்களோ, குர் ஆனுக்கு கொடுக்கின்ற முக்கியத்துவத்தை விட, அந்த ஹதீஸ்களை அறிவிக்கும் அறிவிப்பாளர்களுக்கு கூடுதல் முக்கியத்துவம் தருகின்றனர். இவர்களுக்கு தான் குர் ஆனின் போதனைகள் அவர்களது தொண்டைக் குழியை விட்டும் கடக்கவில்லை என்று நபி (சல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள். வில்லை விட்டும் அம்பு எந்த அளவிற்கு வேகமாக வெளியேறுமோ அதே போன்று இஸ்லாத்தை விட்டும் இவர்கள் வேகமாக வெளியேறுகிறார்கள் என்று நபி (சல்) அவர்கள் கூறுகிறார்கள். குர் ஆன் இவர்களது தொண்டைக் குழியை கடந்து, அதன் கருத்துக்களையும் மகத்துவத்தையும் உள்ளத்தால் உணர்ந்தார்களெனில், அவர்கள் இந்த ஹதீஸை ஏற்கவே மாட்டார்கள். இதை கூட, இவர்கள் நம்மைப் பார்த்து சொல்கின்றனர், நாம் தான் இஸ்லாத்தை விட்டு வெளியேறுகிறோம் என்று. ஆனால், இந்த ஹதீஸே குர் ஆனுக்கு முக்கியத்துவம் கொடுப்பதைப் பற்றிப் பேசுகிறது. குர் ஆனுக்கு யார் முக்கியத்துவம் கொடுப்பது ? நாமா அவர்களா? நபியின் பெயரால் புனையப்பட்ட ஒரு ஹதீஸ், ஆபாசமாக இருந்தாலும், அருவருக்கத்தக்க விதத்தில் இருந்தாலும், குர் ஆனையும் நபி (சல்) அவர்களின் கண்ணியத்தையும் இழிவுப்படுத்தும் வகையில் இருந்தாலும், அதை நாங்கள் கண்டுகொள்ள மாட்டோம், அறிவிப்பாளர் நம்பகமானவர் என்று சொல்லப்பட்டு விட்டதல்லவா, ஹதீஸ் நூற்களில் பதிவாகி விட்டதல்லவா? எனவே அதை ஏற்கத் தான் செய்வோம் என்று சொல்பவர்கள் குர் ஆனை மதிப்பவர்களா? அல்லது, குர் ஆனுக்கு முரணாக நம்பகமான அறிவிப்பாளர் என்று அறியப்பட்டவர் ஒன்றை சொன்னாலும், அதை ஏற்க மாட்டோம் என்று சொல்லக்கூடியவர்கள் குர் ஆனை மதிக்கின்றவர்களா? என்பதையும் நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். நம்மைப் பார்த்து ஹதீஸ் மறுப்பாளர்கள் என்று அவர்கள் சொல்கிறார்கள். உண்மையில் அவர்கள் தான் குர் ஆன் மறுப்பாளர்கள் ! அதே போன்று, அல்லாஹ் இன்னொரு வசனத்தில் சொல்லும் போது, மக்களுக்கு அருளப்பட்டதை நீர் அவர்களுக்கு விளக்க வேண்டும் என்பதற்காகவும்,அவர்கள் சிந்திக்க வேண்டும் என்பதற்காகவும் இந்தப் போதனையை உமக்கு அருளினோம்.(16:44) குர் ஆனை விளக்குவதற்கு தான் நபி (சல்) அவர்கள் வந்தார்கள் எனும் போது அவர்கள் ஒரு போதும் அதற்கு முரண்படும் வகையில் பேச மாட்டார்கள். நபிக்கு சூனியம் செய்ய முடியாது என்று குர் ஆன் சொல்கிறது. அப்படியானால், எனக்கு சூனியம் செய்தார்கள் என்று நபி பேச மாட்டார்கள். அப்படிப் பேசுவது குர் ஆனை முரணாக்குவதாக ஆகுமே தவிர, குர் ஆனை விளக்கியதாக இருக்காது. அதே போன்று, இதன் முன்னும், பின்னும் இதில் தவறு வராது. புகழுக்குரிய ஞானமிக் கோனிடமிருந்து அருளப்பட்டது. (41:42) எந்த தவறும் இந்த குர் ஆனில் வராது என்று அல்லாஹ் இவ்வசனத்தில் சொல்லும் போது, குர் ஆனுக்கு முரணாக சில செய்திகளை எடுத்துக் காட்டி அவையும் மார்க்கம் தான், அவையும் அல்லாஹ் அருளியவை தான் என்று சொன்னால், குர் ஆனின் மகத்துவம் அங்கே குலைக்கப்படுகிறது என்றே பொருளாகிறது. எனவே, குர் ஆனுக்கு முதல் மரியாதையை நாம் செலுத்த வேண்டும். அதன் பிறகே ஹதீஸ். ஹதீஸ் என்று சொல்லப்பட்ட அனைத்தையும் ஏற்காமல், எவை ஏற்கத்தகுந்தவை, எவை, இஸ்லாமிய போதனைக்கு, குர் ஆனின் போதனைக்கு முரணில்லாமல் இருப்பவை என்கிற அடிப்படைகளை முதலில் அலசிப் பார்த்து அதன் பிறகு தான் ஹதீஸ்களை ஏற்க வேண்டும். இன்னும் சொல்லப்போனால், அறிவிப்பாளரைக் காரணம் காட்டியெல்லாம் நாமும் சரி, மற்றவர்களும் சரி, பல்வேறு ஹதீஸ்களை மறுக்கத்தான் செய்கிறோம். அறிவிப்பாளரைக் காரணம் காட்டி ஒரு ஹதீஸை மறுப்பது நியாயம் என்றால், குர் ஆனைக் காரணம் காட்டி மறுப்பது அதை விட பல மடங்கு அதிக நியாயமில்லையா? இந்த அளவுகோலின் படி நாம் ஒரு ஹதீஸை மறுத்தால் நம்மை காஃபிர் என்கிறார்களே, இதே அளவுகோலை முன்னிறுத்தி எத்தனையோ அறிஞர்கள் பல ஹதீஸ்களை மறுத்துத் தான் இருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் இவர்கள் காஃபிர் ஃபத்வா கொடுக்கவில்லை ! 5. நுணுக்கமான குறைபாடுகள் (இல்லத்) இருக்கக் கூடாது. இதுவும் ஹதீஸ் கலை விதிகளில் ஒரு முக்கியமான விதியாக இமாம்கள்கருதியிருக்கிறார்கள். வெளிப்படையாக தெரியக்கூடிய குறைகள் இருப்பது போல் நுணுக்கமான குறைகளும்இருக்கக் கூடாது என்கிற அளவிற்கு ஹதீஸ்களை வகைப்படுத்துவதில் அந்த அளவிற்கு கண்ணும் கருத்துமாய் இமாம்கள் இருந்திருக்கிறார்கள் என்பதைப் பார்க்கிறோம். நுணுக்கமான குறைகளையும் கண்டறிந்து அதன் பிறகு தான் ஒரு ஹதீஸ் அறிவிப்பாளரை நம்பகமானவர் என்றும் ஒரு ஹதீஸை சஹீஹ் எனவும் பதிய வேண்டும் என்று அறிஞர்கள் முடிவு செய்கின்றனர். ஆனால், நுணுக்கமான குறைகளைப் பொறுத்தவரை, நூற்றுக்கும் மேற்பட்ட வகைகளை அறிஞர்பெருமக்கள் கொண்டிருக்கின்றனர். எனினும், சில சான்றுகளை இங்கே காண்போம். அப்துர் ரஹ்மான் பின் யசீத் என்கிற அறிவிப்பாளர் வழியாக பலர் அறிவித்தாலும், அவையெல்லாம் ஆதாரப்பூர்வமாக இருக்கின்றன, ஆனால் ஹம்மாத் பின் உசாமா என்பவர், அப்துர் ரஹ்மான் வழியாக கேட்டு அறிவிப்பது மட்டும் பலகீனம் என்கிற பட்டியலில் வருகிறது. ஆழமாக ஆராயும் போது தான் காரணம் புரிகிறது. சில நுணுக்கமான குறையை அறிஞர்கள் கண்டறிந்திருக்கிறார்கள். அதாவது, அப்துர் ரஹ்மான் பின் யசீத் என்கிற பெயரில் இரண்டு பேர் இருந்திருக்கிறார்கள். ஜாபிரின் பேரன் அப்துர் ரஹ்மான் பின் யசீத் அது போல், தமீமின் பேரன் அப்துர் ரஹ்மான் பின் யசீத். இவ்விருவரில் ஜாபிரின் பேரன் அப்துர் ரஹ்மான் பின் யசீத் தான் பலமானவர், தமீமின் பேரன் அப்துர் ரஹ்மான் பின் யசீத் பலகீனமானவர். அப்படியிருக்க, மற்ற அனைவருமே ஜாபிரின் பேரன் அப்துர் ரஹ்மான் பின் யசீத் மூலமாகவே செய்திகளை அறிவிப்பு செய்திருக்க, ஹம்மாத் பின் உசாமாவோ, ஜாபிரின் பேரன் என்று தவறாக எண்ணி, தமீமின் பேரனிடம் செய்திகளை அறிந்திருக்கிறார். இதை அறிஞர்கள், பல கட்ட ஆய்வுகளின் மூலம் கண்டறிகிறார்கள். இந்த ஜாபிரின் பேரன் அந்த ஊருக்கு வரும் போது எவரெல்லாம் உடனிருந்தார்கள், அப்போது இந்த உசாமா என்பவர் உடன் இருந்தாரா? என்பதையெல்லாம் வைத்து, ஹம்மாத் பின் உசாமா அறிவிப்பது ஜாபிரின் பேரன் சொன்ன அறிவிப்பை அல்ல, மாறாக தமீமின் பேரன் சொன்னவற்றை தான் என்கிற முடிவுக்கு வருகிறார்கள். இது தான் நுணுக்கமான குறை என்பது. மற்றொரு உதாரணத்தைப் பார்ப்போம். இப்ராஹிம் என்கிற ஒரு அறிவிப்பாளர் வழியாக (உதாரணத்திற்கு), இஸ்மாயில் என்பவர் ஒன்றை அறிவிக்கிறார் என்றால், ஹதீஸ் கலையின் மூன்றாவது விதிப்படி, இருவருக்கிடையில் சங்கிலித் தொடர் இருக்கிறதா என்பதை அறிஞர் ஆராய்வார்கள். இருவரும் சம காலத்தில் வாழ்ந்தவர்களா, இருவரும் ஒரே ஊரில் வாழ்ந்தவர்களா என்பதையெல்லாம் வைத்தே ஒரு அறிவிப்பை ஏற்பார்கள். ஆனால், அறிஞர்கள், இத்தகைய செய்திகளில் கூட இன்னும் ஆழமாக சென்று நுணுக்கமான ஏதும் குறைகள் இருக்கின்றனவா என்று ஆராய்ந்திருக்கிறார்கள். இப்ராஹிமும் இஸ்மாயிலும் ஒரே ஊரில் வசித்தவர்களாக இருந்தாலும், இவர் அவர் வசிக்கும் பகுதிக்கோ, அவர் இவர் வசிக்கும் பகுதிக்கோ என்றைக்காவது சென்றிருக்கிறார்களா? என்பது வரை ஆராய்ந்து பார்க்கிறார்கள். ஒரே ஊரில் இருந்து கொண்டு கூட ஒருவருக்கொருவர் சந்திக்காமல் இருக்க சாத்தியக்கூறுகள் இருக்கும் போது அத்தகைய நிலை ஏதும் கண்டறியப்பட்டால் அவற்றை நுணுக்கமான குறை என்கிற பட்டியலுக்கு கொண்டு வருகிறார்கள். அதே போல், இதே இப்ராஹிமும் இஸ்மாயிலும் ஒருவருக்கொருவர் சந்தித்தவர்களாக இருந்தாலும் கூட, அதிலும் கூடுதல் ஆய்வை செய்கிறார்கள். இப்ராஹிம் என்பவர் தமது 65 ஆவது வயது வரை சுய அறிவுள்ளவராக இருந்தார் எனவும், 65 வயதுக்கு பிறகு மூளை குழம்பிப் போய் விட்டது எனவும் தகவல் இருந்தால், இஸ்மாயில் என்பவர் இந்த தகவலை இப்ராஹிமிடமிருந்து பெற்றது இப்ராஹிமின் 65 ஆவது வயதிற்கு முன்னரா அல்லது அதற்கு பின்னரா என்று ஆய்வு செய்கிறார்கள். 65 வயதுக்கு பிறகு தான் அவரிடம் இந்த தகவல் கேட்கப்பட்டது என்று தெரிய வந்தால் அப்போதும் இதை நுணுக்கமான குறை என்கிற பட்டியலில் கொண்டு வந்துவிடுவார்கள். ஆக, மேலோட்டமாக காணும் போது சஹீஹான அறிவிப்பாளர்களைப் போன்றும் சஹீஹான ஹதீஸைப் போன்றும் தோன்றினாலும், ஆழமாக அலசிப் பார்க்கும் போது பல நுணுக்கமான குறைகள் (இல்லத்) வெளியாகும்.
Published June 5, 2016 at 1600 × 1177 in திருக்குறள் கல்வெட்டுகள் கலந்தாய்வில் ஈரோடு கலைமகள் மேல்நிலைப்பள்ளித் தாளாளர் மதிப்புமிகு.மங்கலவதி அவர்களுடன் குறள் மலைச்சங்கத்தினர்.. www.thirukkuralmalai.org 2016 All rights reserved. Brought to you by www.pppindia.com A Historical Journey into the Universe Our goal is to create the "Thirukkural Maamalai" , Thirukkural to be recognized by the UNESCO as World Book, to make the key ideas in Thirukkural a universal law through the UN. திருக்குறள் மாமலை, திருக்குறளை யுனெஸ்கோவால் உலக நூல் அங்கீகாரம், திருக்குறளின் முக்கியக் கருத்துக்களை ஐநா மூலம் உலக சட்டம் ஆக்குவது, இவையே நமது இலக்கு...
1930 ஆண்டிலிருந்து 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை உலக கோப்பை கால்பந்து நடைபெறுவது வழக்கம் அந்த வகையில் 22 வது உலக கோப்பை காற்பந்து போட்டிகள் கடந்த 20 /11 /2022 bts இசைக்குழுவின் ஆடல் பாடல்களுடன் வர்ணமயமான கலை நிகழ்ச்சிகளுடன் கட்டாரில் ஆரம்பமானது. இந்த போட்டிகள் 29 நாட்கள் நடை பெற உள்ளத்துடன் டிசம்பர்18 ஆம் திகதியுடன் நிறைவடைய உள்ளது .இந்த போட்டிக்காக கட்டர் நாடு 220 அமெரிக்க டொலர்களை அள்ளி போட்டு செலவு செய்து தனது நாட்டின் பெருமையை பறை சாற்றி உள்ளது. 7 கண்டங்கள் 32 நாடுகள் போட்டியில் பங்கு பெறுவதுடன் கட்டார் தன் விருந்தோம்பலுக்காக 3 மிதக்கும் ஹொட்டலை அமைத்துள்ளதுடன் 7 நட்ஷத்திர தர ஹொட்டலையும் 8 குளிரூட்டப்பட்ட மைதான வசதிகளையும் 400 விமானங்கள் தரையிறங்கும் விமான நிலைய வசதிகளையும் கொண்ட பிரமாண்டமான ஒரு பெரும் ஆயத்தங்களை செய்துள்ள நிலையில் நூறாயிரம் கணக்கான ரசிகர்களையும் கொண்டுள்ளது. இத்தகைய கட்டாரில் நடக்கும் போட்டிகள் 32 அணி 8 பிரிவுகளில் நடந்து வரும் நிலையில் ஈகுவாடவுடன் முதல் நாள் கட்டர் மோதி தோல்வியை அடைந்தது அடுத்து இங்கிலாந்து ஈரான் மோதியது இதில் 6 -2 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. இன்று அர்ஜன்டினாவுடன் சவூதி அரேபியா மோதியது இதில் அர்ஜன்டீனா நன்றாக ஆரம்பத்திலிருந்து விளையாடியது இதில் முதல் கோலை பெனால்டி முறையில் ஆர்ஜன்டினா வீரர் மெஸ்ஸி கோல் போட்டார் அடுத்து சவூதி அணி வீரர் அல் செஹ்ரி 48 வது நிமிடத்தில் முதல் கோலை அடித்தார் அவரை தொடர்ந்து 53 வது நிமிடத்தில் சலாம் அல் தவிசாரியும் கோலை பதிவு செய்தார்கள். எனவே சவூதி 2 -1 என்ற கோல்கணக்கில் வெற்றியை பெற்றது இதில் மெஸ்ஸி நாலு உலக கோப்பைகளில் தன் அணிசார்பில் கோல் அடித்த வீரர் என்ற பெருமையை அடைகிறார்.
அடுத்த மூன்று மணி நேரத்தில் சென்னை உள்பட ஒருசில மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி, மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கனமழை பெய்ய வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல் கோவை, நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கனமழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே கன்னியாகுமரி, நீலகிரி, தேனி, திருப்பூர் மற்றும் திண்டுக்கல் ஆகிய 5 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்பதை பார்த்தோம் Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
YouTube Blacksheep நிறுவனமானது, தனது தொலைக்காட்சி சேவையை நவம்பர் மாதம்,2022 இல் தொடங்கவுள்ளது. நிறுவனத் தூதரான நடிகர் வடிவேலுவின் முன்னோட்டம் (Promo) இணையத்தில் பெருமளவு பகிரப்பட்டு வருகிறது. Youtube சேனல்களில் மிகவும் குறிப்பிடத்தக்க மற்றும் முன்னணியில் இருக்கும் Blacksheep நிறுவனம், நவம்பர் 6, 2022 இல் நிறுவனத் தூதராக “வைகைப் புயல் ” வடிவேலுவை இணைத்து, அதிகாரப்பூர்வமான தொலைக்காட்சி ஒளியலையை தொடங்க உள்ளது. தெளிவான செயல்திறனும் முழுமையான அற்பணிப்புமே பொழுதுபோக்குத்துறை நிறுவனங்களின் வெற்றி மந்திரமாகத் திகழ்கிறது. பரந்த மனம் படைத்த பார்வையாளர்களினாலும், ரசனை நிறைந்த பொழுதுபோக்கு தொகுப்புகளினாலும் பல வருடங்களாக வளர்ந்துவந்த Youtube Blacksheep, தற்போது தங்களது சொந்த தொலைக்காட்சி ஒளியலையான ‘BLACKSHEEP TV’ உடன் நவம்பர் 6,2022இல் இருந்து தொடர்ந்து ஒளிபரப்பாக உள்ளது. Fiction மற்றும் Non fiction என பல பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளின் கூட்டாக இந்த தொலைக்காட்சியானது பலதரப்பட்ட இளம் சமூகத்தினருக்கும் குடும்பத்தினருக்கும் பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்டுள்ளது. இந்நிறுவனத்தின் நிறுவனர் விக்னேஷ்காந்த், BLACLSHEEP தொலைக்காட்சி குறித்து கூறுவதாவது, “தொலைக்காட்சி உலகில் எங்கள் புதுவரவை உலகிற்கு அறிவிப்பதில் மகிழ்ச்சி. எங்கள் youtube நிகழ்ச்சிகளுக்கு கிடைத்த வரவேற்புகளுக்காக நாங்கள் பெற்ற மகிழ்ச்சி சொல்லிலடங்காதது. இறுதியாக, எங்களின் வளர்ச்சிக்கு காரணம், இளைஞர்களின் பெரும் பங்களிப்பு என்பதை அறிந்தோம். அவர்களின் தீவிரமான ஆதரவும் பாராட்டுமே எங்களைப் பல்வேறு உள்ளடக்கங்களையும் படைப்புகளையும் உருவாக்கத் தூண்டியது. இதுவே தொலைக்காட்சியை தொடங்கும் சிந்தனைக்கு வழிவகுத்தது. அது பயனுள்ள பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை படைக்கவும், அவை இளம் தலைமுறையினருக்கு மட்டும் பயன்படும் வழியில் அல்லாமல், அவர்களுது குடும்பத்தினர் அனைவருக்கும் பயனுள்ளதாகவும் அமையும் வண்ணம் தயாரிக்கப்பட்டுள்ளது. பல்வேறு புனைவு மற்றும் அபுனைவு அல்லாத நிகழ்ச்சிகள், வெவ்வேறு பிரிவுகள் மற்றும் கருத்துகளை சார்ந்த படைப்புகளையும் உருவாக்க உள்ளோம். அதுமட்டுமின்றி, சிறந்த சாதனையாளர்கள், வெற்றித் தொழில்முனைவர்கள் மற்றும் வெவ்வேறு தளங்களின் குறிப்பிடத்தக்க ஆளுமைகள் ஆகியோரை இளைஞர்களை ஈர்க்கும் வகையிலும் பொதுமக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் நிகழ்ச்சிகள் வழங்க உள்ளோம் “. நிறுவனத்தூதரான வைகை புயல் வடிவேலு குறித்து விக்னேஷ்காந்த் பகிர்ந்ததாவது, ” வைகைப்புயல் வடிவேலு என்பவர் ஒரு பல்திறன் வாய்ந்த மனிதர். நமது எலும்புகளையும் தன் கலைத்திறனாலும் நகைச்சுவையாலும் சிரித்துணர செய்து, மீம்ஸ் படைப்பாளர்களின் அமிர்தமாக மிளிர்ந்து, பொழுதுபோக்கு உலகையே ஆள்பவறாக திகழ்கிறார். அவரது பல்வகை நகைச்சுவை திறன்களால் பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்திக்கொண்டே உள்ளார். நாமும் நமது BLACKSHEEP தொலைக்காட்சியை அதே வடிவமைப்பில் வளர்த்து வருவதனால், அவர் மட்டுமே நமது தொலைகாட்சியின் மிகப் பொருத்தமான சின்னமாக இருக்க முடியும் என உணர்ந்தோம்.” என்றார். ஆதிகாரப்பூர்வமாக நவம்பர் 2022இல் இருந்து blacksheep தொலைக்காட்சி இயங்கும், நேயர்களுக்கு முழுமையான பொழுதுபோக்கு தொகுப்புகளை வழங்கும். திரை நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்பக்கலைஞர்கள் உடனான உரையாடல் மற்றும் நிகழ்ச்சிகளின் மூலம், இத்தொலைகாட்சியானது, இளம் தலைமுறை மற்றும் குடும்பத்தினருக்கான ஒருமித்த இலக்காக இருக்கும் என்பதில் ஐயமில்லை.
டெல்லியில் இருந்து பெங்களூரு புறப்பட்ட இன்டிகோ விமானத்தில் தீ பற்றியதால் பயணிகள் பீதியடைந்தனர்.இண்டிகோ விமானங்கள் தற்போது அடிக்கடி தொழில் நுட்ப கோளாறில் சிக்குவது வாடிக்கையாகி வருகிறது. நேற்று இரவு டெல்லியில் இருந்து பெங்களூரு செல்லும் 6E2131 இன்டிகோ விமானம் டெல்லி இந்திரா காந்தி விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டது. INDIGO அப்போது விமானம் ஓடுபாதைக்கு 9.40 மணி அளவிற்கு வந்துள்ளது. 9.45 மணி அளவில் டேக் ஆப் ஆவதற்கு வேகமாக சென்ற போது வலப்பக்க இருக்கைக்கு அருகே எந்திரத்தில் திடீரென தீப்பற்றியது. உடனே விமான ஓட்டுநர் அதை அறிந்து விமானத்தை நிறுத்தி கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் தெரிவித்தார். உடனே தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். பின்னர் 6E2131 விமானத்தில் இருந்த அனைத்து பயணிகளும் பாதுகாப்பாக இறக்கி விடப்பட்டு, மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்பட்டு அனுப்பப்பட்டனர். இது குறித்து இண்டிகோ ஒரு அறிக்கையில், “டெல்லியில் இருந்து பெங்களூருக்கு இயக்கப்பட்ட விமானம் 6E2131 டேக் ஆஃப் ரோலில் இருந்தபோது தொழில்நுட்ப சிக்கலைச் சந்தித்தது. அதன் பிறகு விமானி உடனடியாக புறப்படுவதை நிறுத்திவிட்டு விமானம் விரிகுடாவுக்கு திரும்பியது என்று தெரிவித்துள்ளது . பயணிகள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர், மேலும் விமானத்தை இயக்க மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்பட்டது. பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு வருந்துகிறோம்” என இன்டிகோ நிறுவனம் கூறி உள்ளது. அந்த விமானத்தில் 177 பயணிகள், 7 ஊழியர்கள் என மொத்தம் 184 பேர் இருந்துள்ளனர். இது தொடர்பாக உரிய விளக்க அறிக்கையை விரைவில் அளிக்கவேண்டும் என இன்டிகோ நிறுவனத்திற்கு, விமான போக்குவரத்து ஆணையம் உத்தரவிட்டுள்ளது .
2015ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 10ஆம் திகதி முதல் கடவுச்சீட்டுக்காக விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தமது டிஜிட்டல் புகைப்படத்தையும் விரலடையாளத்தையும் திணைக்களத்திற்கு சமர்ப்பித்தல் வேண்டும். டிஜிட்டல் பகைப்படமானது நாடு பூராகவும் அமைந்துள்ள குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்தினால் அங்கீகரிக்கப்பட்ட புகைப்பட நிலையங்களினூடாக அல்லது குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்தின் தலைமை காரியாலயத்தில் அல்லது குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்தின் பிராந்திய காரியாலயங்களில் அமைந்துள்ள புகைப்பட நிலையங்களினூடாக சமாப்பிக்கப்படலாம். அச்சிடப்பட்ட புகைப்படப் பிரதிகள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. விரலடையாளங்கள் குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்தின் தலைமை காரியாலயம் அல்லது பிராந்திய காரியாலயங்களில் சேகரிக்கப்படுவதுடன் இதற்காக விண்ணப்பதாரர்கள் தனிப்பட்ட ரீதியில் திணைக்களத்திற்கு சமூகமளித்தல் வேண்டும். முக்கிய விடயங்கள் எல்லா கடவுச்சீட்டு விண்ணப்பதாரர்களும் வயது பாகுபாடு இன்றி கடவுச்சீட்டு விண்ணப்பம் (பதிவிறக்கம்) K 35A இனை சமர்ப்பித்தல் வேண்டும். (அறிவுறுத்தல்) குழந்தைகள் உட்பட எல்லா கடவுச்சீட்டு விண்ணப்பதாரர்களும் அங்கீகரிக்கப்பட்ட புகைப்பட நிலையங்களினூடாக தமது டிஜிட்டல் புகைப்படத்தினை சமர்ப்பித்தல் வேண்டும். 16 வயதிற்கு மேற்பட்ட அனைத்து விண்ணப்பதாரர்களினதும் விரலடையாளங்கள் குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்தின் தலைமை காரியாலயம் அல்லது இலங்கையிலுள்ள 3 பிராந்திய காரியாலயங்களில் சேகரிக்கப்படும். வெளிநாடுகளிலுள்ள இலங்கை தூதரங்களினூடாக விண்ணப்பிக்கும் கடவுச்சீட்டு விண்ணப்பதாரர்கள் தமது விரலடையாளத்தினையும் டிஜிட்டல் புகைப்படத்தினையும் சமர்ப்பிக்காது தற்போதுள்ள முறையிலேயே விண்ணப்பங்களினை சமர்ப்பிக்கலாம். பெற்றோரின் கடவுச்சீட்டுக்களில் குழந்தைகளை உள்ளடக்கும் நடைமுறைகள் இனிமேல் இடம்பெற மாட்டாது என்பதுடன் அவர்களுக்கு தனியான கடவுச்சீட்டுக்களே விநியோகிக்கப்படும். 60 வயதிற்கு குறைந்த வயதுடைய விண்ணப்பதாரர்களுக்கு அவசர சான்றிதழ்கள் (EC) வழங்கப்படமாட்டாது. டிஜிட்டல் புகைப்படம் எவ்வாறு திணைக்களத்திற்கு சமர்ப்பிக்கப்படலாம்? தங்களுக்கு விருப்பமான அங்கீகரிக்கப்பட்ட புகைப்பட நிலையமொன்றிற்கு வருகை தாருங்கள். ஆறு (06) மாதங்களுக்குள் பெற்றுக்கொண்ட புகைப்படங்கள் மாத்திரம் செல்லுபடியாகும். புகைப்பட நிலையத்தினர் தங்களது புகைப்படத்தினை இணைய வாயிலாக எமது கணனித் தொகுதிக்கு அனுப்பி வைப்பதுடன் புகைப்பட நிலைய அறிவித்தல் குறிப்பினை தங்களுக்கு விநியோகிப்பர். அச்சிடப்பட்ட புகைப்பட பிரதிகள் கடவுச்சீட்டு விண்ணப்பத்திற்கு அவசியமில்லை. புகைப்பட நிலைய அறிவித்தல் குறிப்பு தங்களது கடவுச்சீட்டு விண்ணப்பம் மற்றும் ஏனைய உதவி ஆவணங்களுடன் சமர்ப்பிக்கப்படல் வேண்டும். மேலதிக தகவல்கள்: துரித இலக்கம் 1962 அல்லது தொலைபேசி இலக்கங்கள் 0115329200 / 0115329175 இலங்கைச் கடவுச்சீட்டொன்றைப் பெற எனக்கு உரிமை உண்டா? நீங்கள் பரம்பரை வழியாகவோ பதிவு மூலகமாகவோ இலங்கைப் பிரசையெனில் நீங்கள் இலங்கைக் கடவுச்சீட்டைப் பெற்றுக்கொள்ள முடியும். கடவுச்சீட்டொன்றினை அவசரமாகப் பெற்றுக்கொள்ளல் உங்களின் அவசரப் பயணங்களுக்கு கடவுச்சீட்டு அவசியமெனில் ஒரு நாள் சேவை ஊடாக அதற்காக விண்ணப்பிக்கலாம். குடிவரவு - குடியகல்வுத் திணைக்களத்தின் தலைமையகத்தில் இருந்து மாத்திரமே இச்சேவையைப் பெற்றுக்கொள்ள முடியும். (கடவுச்சீட்டினைப் பெற்றுக்கொள்ளலின் கீழ் பார்க்கவும். கடவுச்சீட்டொன்றின் செல்லுபடியாகும் காலவரையறை தற்போது விநியோகிக்கப்படுகின்ற (N) பிரிவைச் சேர்ந்த கடவுச்சீட்டுகள் வேறுவிதமாகக் காட்டப்பட்டிராவிட்டால் 10 வருடங்களுக்குச் செல்லுபடியாகும். அவசர சான்றிதழ் இரண்டு வருடங்களுக்குச் செல்லுபடியாவதுடன் மேலும் இரண்டு வருடங்களுக்கு அதனை நீடித்துக்கொள்ளலாம். கடமை நேரங்கள் யாவை? சாதாரண சேவை விண்ணப்பப் பத்திரங்கள் கிழமை நாட்களில் மு.ப. 8.00 மணி முதல் பி.ப. 1.30 மணி வரை ஏற்றுக்கொள்ளப்படும். அவசர அடிப்படையிலான விண்ணப்பப் பத்திரங்கள் - கிழமை நாட்களில் மு.ப. 7.00 மணி முதல் 1.30 மணி வரை ஏற்றுக்கொள்ளப்படும். வார இறுதியிலும் அரசாங்க விடுமுறை தினங்களிலும் அலுவலகம் மூடப்பட்டிருக்கும். கடவுச்சீட்டிற்காக விண்ணப்பிப்பது எப்படி? பத்தரமுல்லை, “சுகுறுபாயா” கட்டிடத் தொகுதியில் அமைந்துள்ள குடிவரவு, குடியகல்வுத் திணைக்களத்தின் கடவுச்சீட்டுப் பிரிவிடம் (01 ஆம் மாடி – சாதாரண சேவை/ 02 ஆம் மாடி – அவசர சேவை) கடவுச்சீட்டு விண்ணப்பங்களை ஒப்படைக்கலாம். இங்கு இடஅமைவுப் படத்தைப் பார்க்க ஏற்புடைய பொத்தானை அழுத்துக. கடவுச்சீட்டு வகைகள் யாவை? அனைத்து நாடுகளுக்கும் செல்லுபடியாகும் கடவுச் சீட்டு சாதாரண கடவுச்சீட்டு இராஜதந்திர கடவுச்சீட்டு உத்தியோகபூர்வ கடவுச்சீட்டு இந்தியாவுக்கும் நேபாளத்திற்குமான பெளத்த யாத்திரிக பயணங்களுக்கான அவசர சான்றிதழ். வெளிநாடுகளிலுள்ள இலங்கைத் தூதரகங்களால் விநியோகிக்கப்படுகின்ற அடையாளச் சான்றிதழ் மற்றும் இயந்திரம் மூலமாக வாசிக்க முடியாத கடவுச்சீட்டு அவசர ஒருவழிப் பயணங்களுக்கானது. கடவுச்சீட்டிற்காக விண்ணப்பிப்பது எப்படி? பத்தரமுல்லை, “சுகுறுபாயா” கட்டிடத் தொகுதியில் அமைந்துள்ள குடிவரவு, குடியகல்வுத் திணைக்களத்தின் கடவுச்சீட்டுப் பிரிவிடம் (01 ஆம் மாடி – சாதாரண சேவை/ 02 ஆம் மாடி – அவசர சேவை) கடவுச்சீட்டு விண்ணப்பங்களை ஒப்படைக்கலாம்.
மைசூரு, நவ.22 கருநாடகத்தில், உயர் ஜாதியினர் அல்லாதவர்களுக்கு முடி திருத்தம் செய்ததற்காக, மல்லி கார்ஜூன் ஷெட்டி என்பவர், நாயக் ஜாதிக்காரர்களால் ஊர் விலக்கம் செய்யப்பட்டுள்ளார் மற்றும் அவ ருக்கு ரூ.50000 அபராதமும் விதிக்கப் பட்டுள்ளது. 47 வயதாகும் அந்த முடிதிருத்துநர், மைசூரு மாவட்டத்தின் நன்ஜன்குட் தாலுகாவில், ஹல்லாரா கிராமத்தில் வசித்து வருகிறார். இந்நிலையில், இவர் தனது முடிதிருத்தம் செய் யும் நிலையத்தில் அனைத்து ஜாதி யினருக்கும் முடிதிருத்தம் செய்து வந்தார். அந்த ஊரில் உள்ள உயர்ஜாதியி னர் இவரை வீட்டிற்கு அழைத்து முடிவெட்டி வந்தார்கள். கரோனா பொது முடக்கம் முடிந்த பிறகு இவர் கடையில் முடிவெட்டுபவர்கள் அதிக எண்ணிக்கையில் வரத் தொடங்கவே இவருக்கு உயர் ஜாதி யினரின் வீட்டிற்குச் சென்று முடி வெட்ட நேரம் இல்லை. இதனால் நீங்கள்கடைக்கு வாருங்கள்என்று உயர்ஜாதியினரிடம் கேட்டுக்கொண் டார்.இதனால்ஆத்திரமடைந்த உயர்ஜாதியினர், இனிமேல்உயர்ஜாதி யினருக்குமட்டுமே கடையில்முடி வெட்டவேண்டும் என்று உத்தர விட்டுள்ளனர். இவரின் கடைக் குச் சென்ற, இவரது கிராமத்தின் உயர்ஜாதி சமூகத்தைச் சேர்ந்த மகா தேவா நாயக், சங்கரா மற்றும் சிவராஜு உள்ளிட்டோர், இனி மேல் தங்களைத் தவிர வேறு யாருக்கும் முடிவெட்டக் கூடாது, அப்படி வெட்டினால் ஊரை விட்டு விரட்டிவிடுவோம் என்று மிரட்டி யுள்ளனர். அதற்கு அவர் நான் யாருக்கும் ஜாதி பார்ப்பதில்லை என்பதாகப் பதிலளித்தார். இதனை அடுத்து தாங்கள் சொல்வதைக் கேட்கவில்லை என்றால் இந்த ஊரைவிட்டுச் சென்றுவிடு என்று கூறி அவர் ரூ.50000அபராதம் செலுத்த வேண்டு மெனவும் கூறினர். ஆனால், இதற்கு உடன்பட மறுத்துவிட்டார் மல்லிகார்ஜூன். எனவே, அவர்மீது ஊர்விலக்க நடவடிக்கையை அறிவித் ததோடு, அவரின் கடைக்கு யாரும் முடிதிருத்தச்செல்லக்கூடாதுஎன் றும் ஊருக்குள் பிரச்சாரம் செய்தனர் கடந்த 3 மாதங்களாகவே உயர் ஜாதியினர் மிரட்டி வருவதால், காவல்துறையில் புகார் அளித்தார். காவல்துறையினர், புகாரைப் பதிவு செய்யாமல் விட்டு விட்டனர். காவல் துறையினரிடம் தங்கள் மீது புகார் அளித்ததை அறிந்த உயர்ஜாதியினர் மல்லிகார்ஜூனின் 21 வயது மகனை வீட்டிலிருந்து கடத்திச் சென்று, அவரை வலுக்கட்டாயமாக மது குடிக்க வைத்து நாயக் சமூகத்தைப் பற்றிகேவலமாகப் பேசுமாறுசெய்து, அதை காணொலியில் படம் பிடித்த னர். இதன்மூலம், காவல் துறையிடம் சென்றால், அந்தக் காணொலியை வெளியிட்டு விடுவதாகவும் மிரட் டியுள்ளனர். மல்லிகார்ஜூன் தன்மீதும், தனது குடும்பத்தினர் மீதும் தொடர்ந்து தாக்குதல்கள் தொடுத்துவருவதை அடுத்து அப்பகுதி வட்டாட்சியரிடம் புகார் அளித்துள்ளார். ஆனால், வட்டாட்சியர் உயர்ஜாதியினருக்கு ஆதரவாகப்பேசி அவரைசமாதா னப் படுத்த முயன்றார். இதனை அடுத்து அவர் உள்ளூர் ஊடகவி யலாளர்களைச் சந்தித்து தனது குறையைக்கூறி மாவட்ட ஆட்சித் தலைவரிடம் புகார் மனு அளித் துள்ளார்.
பதினாறு, அவன் இவன், தூங்காவனம் உள்ளிட்ட படங்களில் நாயகியாக நடித்திருந்தவர் மது ஷாலினி. தெலுங்கில் முன்னனி நாயகியாக இருந்த இவர் ஹிந்தியிலும் சில படங்களில் நடித்துள்ளார். மது ஷாலினி கடைசியாக ஆர்.கே.சுரேஷின் விசித்திரன் படத்தில் நடித்திருந்தார். இந்தப் படம் கடந்த மே 6 ஆம் திகதி வெளியாகியிருந்தது. இந்த நிலையில் இவருக்கும் நடிகர் கோகுல் ஆனந்த் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. நடிகர் கோகுல் ஆனந்த் தமிழில் மாலை நேரத்து மயக்கம், சென்னை 2 சிங்கப்பூர், பஞ்சராக்ஷரம், திட்டம் இரண்டு, நடுவன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். பஞ்சராக்ஷரம் படத்தில் கோகுல் ஆனந்த்தும், மது ஷாலினியும் இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தனது திருமண புகைப்படத்தை பகிர்ந்த மது ஷாலினி, ‘நீங்கள் காட்டிய அன்புக்கு நன்றி. எங்கள் வாழ்வின் புதிய அத்தியாத்தை நம்பிக்கையுடனும், நன்றியுணர்வுடனும் துவங்குகிறோம்’ என்று குறிப்பிட்டுள்ளார். அவருக்கு பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர். ‘பஞ்சராக்ஷரம்’ படத்தில் இருவருடனும் இணைந்து நடித்த சந்தோஷ் பிரதாப், இருவருக்கும் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
2023 Kia Niro EV உரிமையாளர்கள் எலக்ட்ரிஃபை அமெரிக்கா நிலையங்களில் 500 kWh இலவச சார்ஜிங்கைப் பெறுகிறார்கள் - telugu samachar telugu samachar Sample Page 2023 Kia Niro EV உரிமையாளர்கள் எலக்ட்ரிஃபை அமெரிக்கா நிலையங்களில் 500 kWh இலவச சார்ஜிங்கைப் பெறுகிறார்கள் புதிய 2023 Niro EV இன் உரிமையாளர்கள் அமெரிக்கா முழுவதும் உள்ள Electrify America நிலையங்களில் 500 kWh இலவச சார்ஜிங்கைப் பெறுவார்கள் என்று Kia மற்றும் Electrify America இன்று அறிவித்துள்ளன. “புதிய Niro EV அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம், Niro EV ஓட்டுனர்கள் விரைவான ரீசார்ஜிங்கின் கூடுதல் நன்மையுடன் அனைத்து மின்சார சாலைப் பயணங்களையும் அனுபவிக்க எலக்ட்ரிஃபை அமெரிக்காவுடனான எங்கள் ஒத்துழைப்பை விரிவுபடுத்துகிறோம்” என்று கியா அமெரிக்காவின் COO & EVP இன் ஸ்டீவன் மையம் கூறினார். நீங்கள் எவ்வளவு கவனமாக ஓட்டுனராக இருக்கிறீர்கள் மற்றும் வானிலை உங்கள் வாகனத்திற்கு ஏற்றதாக இருந்தால், 1,950 மைல்கள் (3,138 கிமீ) இலவசமாக ஓட்டலாம் என்று நிறுவனங்கள் கூறுகின்றன. பொருட்படுத்தாமல், புதிய Niro EV இல் 64.8 kWh பேட்டரி பேக்கை சில கட்டணங்களுடன் வழங்க வேண்டும். மேலும் படிக்க: 2022 Kia Niro PHEV மற்றும் EV சற்று அதிகரித்த வரம்பில் விவரிக்கப்பட்டுள்ளன 2023 இல் புதுப்பிக்கப்பட்ட, இரண்டாம் தலைமுறை Kia Niro EV ஆனது அமெரிக்காவில் DC ஃபாஸ்ட் சார்ஜர்களைப் பயன்படுத்த முடியும், அதாவது அதிகபட்ச சார்ஜிங் சக்தியில் 45 நிமிடங்களுக்குள் 10 முதல் 80 சதவீதம் வரை ரீசார்ஜ் செய்ய முடியும். ஒரு விருப்பமான ஹீட் பம்ப் மற்றும் பேட்டரி வார்மர், இதற்கிடையில், வரம்பை அதிகரிக்க உதவுகிறது மற்றும் வேகமான சார்ஜ்களுக்கு பேட்டரியை தயார்படுத்துகிறது. “Kia மற்றும் Electrify America மின்சார வாகன ஓட்டுநர்களுக்கு DC வேகமாக சார்ஜ் செய்வதன் முக்கியத்துவத்தை புரிந்துகொள்கிறது” என்று Electrify America இன் தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான Giovanni Palazzo கூறினார். “ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம் மற்றும் 800 நிலையங்களில் உள்ள எங்கள் கடற்கரையிலிருந்து கடற்கரை நெட்வொர்க்கில் நம்பிக்கையான DC ஃபாஸ்ட் சார்ஜிங்கை Niro டிரைவர்களுக்கு வழங்க உதவுகிறோம்.” அது மாற்றியமைக்கும் மாடலை விட பெரியது மற்றும் ஆடம்பரமானது, 2023 Niro EV ஆனது 201 hp (150kW/204 PS) மற்றும் 188 lb-ft (255 Nm) முறுக்குவிசையை உருவாக்குகிறது. இது EPA சோதனைச் சுழற்சியில் ஒரு கட்டணத்திற்கு 253 மைல்கள் (407 கிமீ) இலக்கு வரம்பைக் கொண்டுள்ளது. இதற்கிடையில், ஒரு ஆடம்பரமான இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் என்றால், தங்களுடைய இலவச கிலோவாட்களைப் பயன்படுத்திக் கொள்வதற்காக, Niro EV டிரைவர்கள் தங்கள் காரில் உள்ள வழிசெலுத்தல் பயன்பாட்டில் Electrify America நிலையங்களைத் தேடலாம். உரிமையாளர்கள் வாங்கிய தேதியிலிருந்து மூன்று ஆண்டுகள் தங்கள் இலவச சார்ஜிங் கிரெடிட் காலாவதியாகும் முன் பயன்படுத்த வேண்டும்.
கேரட் மிகவும் மலிவாக எளிதில் கிடைக்கும் காய்களில் ஒன்றாகும். அதிக நன்மைகள் நிறைந்த கேரட் அனைவராலும் விரும்பி உண்ணும் சுவை நிறைந்த காயாகும். நாம் அனுதினமும் பயன்படுத்தும் … Read more நெல்லி பொடி நெல்லி பொடி பயன்கள் நெல்லியில் இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ் போன்ற தாதுக்கள் அதிக அளவில் நிறைந்துள்ளதால் இது இரத்த சோகைக்கு நல்ல மருந்தாகும். நெல்லியில் அறுசுவையில் உப்பு … Read more முடக்கத்தான் பொடி முடக்கத்தான் பொடி பயன்கள் முடக்கத்தான் முடக்கு அறுத்தான் என்பது நாளடைவில் முடக்கற்றான் என்றானது. கசப்புத் தன்மையுடைய முடக்கத்தான் முடக்கு வாத நோய்களை குணமாக்குவதால் முடக்கத்தான் என்று பெயர் … Read more கரிசலாங்கண்ணி பொடி கரிசலாங்கண்ணி பொடி பயன்கள் கரிசலாங்கண்ணி அதிக அளவில் மருத்துவ குணங்கள் நிறைந்த மூலிகையாகும். இதில் எக்லிப்டால், டெஸ்மீத்தைல், அக்கோண்டனால், ஹென்ட்ரை, ஸ்டிக்மாஸ்டீரால், தங்கச்சத்து, இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் … Read more ஆவாரம் பூ பொடி ஆவாரம்பூ பொடி பயன்கள் ஆவாரம்பூ துவர்ப்புத் தன்மை உடையது. இதில் தங்கச்சத்து நிறைந்துள்ளது. ஆவாரம் பூ பொடியை தினமும் ஒரு டீஸ்பூன் அளவு சாப்பிட்டு வர சர்க்கரை … Read more கஸ்தூரி மஞ்சள் பொடி கஸ்தூரி மஞ்சள் பொடி பயன்கள் கஸ்தூரி மஞ்சள் முக அழகு சாதன பொருட்களில் ஒன்றாகும். இது அனைத்து வகை சருமத்திற்கும் கேடு விளைவிக்காத அலர்ஜி எதிர்ப்பு தன்மை … Read more எலுமிச்சை தோல் பொடி பயன்கள் எலுமிச்சை தோல் பொடியினைக் கொண்டு ஃபேஸ் பேக் முதல் பாதத்திற்கு அழகு தரும் பெடிக்யூர் வரை பயன்படுத்தலாம். எலுமிச்சை தோலில் அதிக அளவு கலோரிகள், கார்ப்ஸ், நார்ச்சத்து, … Read more ஆரஞ்சு தோல் பொடி ஆரஞ்சு தோல் பொடியின் பயன்கள் ஆரஞ்சு தோலில் அதிகளவு ஆன்டி ஆக்ஸிடன்டுகள் நிறைந்துள்ளது. இது இயற்கை அழகை விரும்பும் பெண்களுக்கு மிகச் சிறந்த அழகு சாதன பொருளாகும். … Read more முருங்கை இலை பொடி முருங்கை இலை பொடி பயன்கள் முருங்கையில் விட்டமின்கள், மினரல், அமீனோ ஆசிட்கள், வைட்டமின் சி, கால்சியம், பொட்டாசியம் மற்றும் புரோட்டின் போன்ற ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளது. 10 கிராம் … Read more மருதாணி பொடி மருதாணி பொடி பயன்கள் மருதாணி பொடியானது இளநரையை தடுக்க அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். இதனுடன் அவுரி பொடியை சேர்த்து பயன்படுத்தும் போது நம் கூந்தலுக்கு ஏராளமான நன்மைகள் … Read more ரோஸ் பொடி ரோஸ் பொடியின் பயன்கள் ரோஜாவிற்கு இயற்கையாகவே சருமத்தின் நிறத்தை கட்டுப்படுத்தும் தன்மை உள்ளது. ரோஜாவில் அதிகளவு வைட்டமின் சி நிறைந்துள்ளது. இது நல்ல ஆன்டி-ஆக்ஸிடன்ட் ஆகும். ரோஜா … Read more மண் சிகிச்சை மண்ணின் மகத்துவத்தை அறிந்து அதில் உள்ள மருத்துவ குணங்களை கொண்டு மண் சிகிச்சை முறைகளை சித்த மருத்துவர்கள் கூறியுள்ளனர். பழங்காலங்களில் அனைத்து கிராமங்களிலும் மண் சிகிச்சை முறைகளை … Read more முகத்தில் உள்ள கருமை நீங்க வேண்டுமா? முக அழகு என்பது அனைவரும் விரும்பும் ஒன்றாகும். அதிலும் பெண்கள் முகத்தில் ஏதேனும் ஒரு சிறு பரு வந்தாலும் மிகவும் வேதனைப்படுவர். அநேக பெண்கள் வெள்ளை நிறத்தில் … Read more சர்க்கரை நோயில் இருந்து ஆரம்பத்திலேயே தப்பித்துக்கொள்ள… சர்க்கரைக்கேற்ற முருங்கை சர்க்கரை நோய் சர்க்கரை நோய் இன்றைய காலத்தில் அதிகளவில் காணப்படும் நோயாகும். நம் உடலில் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ … Read more உடலுக்குத் தேவையான வைட்டமின்கள் புழுக்கமான சீதோஷ்ண நிலை பெரும்பாலும் மே, ஜுனில் காணப்படுகிறது. வறட்சியான ஈரப்பதம் ஃபுளூ காய்ச்சலுக்கு ஈடான உடல் நலக் கோளாறுகளை ஏற்படுத்துகிறது. மூக்கடைப்பு, டான்சில், குரல் வளை … Read more
முப்பதாண்டுகள் வழக்கறிஞராகவும் சுமார் ஏழு ஆண்டுகள் நீதிபதியாகவும் பணியாற்றி ஓய்வுபெற்ற நீதிபதி கே. சந்துருவின் தன் வரலாறெனக் குறிப்பிடப்பட்ட வரலாற்றுப் பதிவுகளின் தொகுதி இது. நூலில் 22 தலைப்புகளில் தாம் எடுத்துக் கொண்ட பொருள்களின்வழி தன்னுடைய வரலாற்றை மட்டுமல்லாமல், குறிப்பிட்ட காலகட்டத்தின் அல்லது பிரச்னையின் வரலாற்றையும் விரிவாக எடுத்துச் சொல்கிறார் சந்துரு. எண்ணற்ற மனித உரிமை வழக்குகளில் வாதாடி வெற்றி பெற்றவர்; மக்கள் கொண்டாடிய எண்ணற்ற தீர்ப்புகளை வழங்கியவர் என்ற வகையில் அந்தந்த காலகட்டத்தையொட்டி, அவருடைய வாழ்வனுபவங்களே வரலாறாகியுள்ளன. சட்டம் செயல்படும் விதம், நீதிமன்றங்களின் செயல்பாடுகள், வழக்குரைஞர்களின் தொழில் நடைமுறைகள், நீதிபதிகளின் சிந்தனை வெளிப்பாடுகள் எல்லாவற்றையும் கோவையாக இணைத்துக் கொடுத்திருப்பதாக நூலாசிரியர் குறிப்பிட்டிருப்பது ஒவ்வொரு தலைப்பிலும் பளிச்சிடுகிறது. அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மாணவர் உதயகுமார் கொலை வழக்கு தொடர்பாக நூலாசிரியர் கொடுத்துள்ள தகவல்களும், நடைமுறைகளும் இளைய தலைமுறையினருக்கு ஒரு புதிய அதிர்வனுபவமாகத் தோன்றக் கூடியவை. ‘ஒரு அப்பா தனது மகனை, இவன் என் மகனில்லை என்று சாட்சி சொல்ல வைத்த இந்த அமைப்பையும் அதன் பின்னாலிருந்த மனிதர்களையும் இன்றைக்கும் என்னால் மறக்க முடியாது” என்கிறார் சந்துரு. ‘பெரியாரைப் போற்றி’ய கட்டுரையில் அவருடைய பேச்சுகள், எழுத்துகள் யார் உடைமை? என்பது தொடர்பாகக் கறாரான தீர்ப்பளித்து ஒரு முடிவை ஏற்படுத்திய நீதிபதி சந்துரு, அவை தொடர்பான வழக்கு விவரங்களை விரிவாக நினைவுகூர்ந்திருக்கிறார். தடா, பொடா வழக்குகள் பற்றிய விவரணங்களின்போது அன்றைய அரசுகளின் அணுகுமுறை பற்றியும் விவரித்திருக்கிறார். ‘நானும் நீதிபதி ஆனேன்’ என்ற நிறைவுக் கட்டுரை, சந்துரு நீதிபதியான கதையை ஒரு நாவலுக்குரிய பரபரப்புடன் கொண்டு செல்கிறது.
மலையகத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து அதிக மழையுடனான வானிலை காரணமாக நுவரெலியா, கந்தப்பொல, தலவாக்கலை, நானுஓயா, கொட்டக்கலை, அட்டன், மஸ்கெலியா, டிக்கோயா, அக்கரப்பத்தனை, டயகம, போடைஸ், வட்டவளை, கினிகத்தேன, நாவலப்பிட்டி ஆகிய பிரதேசங்களில் வாழும் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. கடும் மழையும் பலத்த காற்றும் நுவரெலியா மாவட்டத்தின் மரக்கறிச் செய்கையை பாரிய சேதத்துக்குள்ளாக்கியுள்ளது. கன மழையால் மாவட்டத்தில் பலநூறு ஏக்கருக்கும் அதிகமான மரக்கறி செய்கை நாசமடைந்துள்ளதாகவும், இதனால் பெரும் நஷ்டத்தை விவசாயிகள் சந்திக்க நேரிடும் என்றும் கவலை வெளியிடப்பட்டுள்ளது. இதனால் எதிர்வரும் காலங்களில் காய்கறிகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்படக்கூடும் எனவும் விவசாயிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. இரண்டு, மூன்று நாட்களாக பெய்த கடும் மழையால் விவசாய நிலங்களில் நீர் நிரம்பி, பயிர்கள் முற்றிலும் அழிந்து வருகின்றன. நுவரெலியா, நானுஓயா, தலவாக்கலை, கந்தப்பொல, அக்கரப்பத்தனை, டயகம, பத்தனை, கொட்டக்கலை ஆகிய பிரதேசங்களில் மரக்கறி பயிர்கள் அதிகளவில் சேதமடைந்துள்ளன. கன மழை மற்றும் மண்சரிவால் வீதிகள் மூடப்பட்டமையினால் மரக்கறி தோட்டங்களுக்கு அன்றாடம் வேலைக்கு செல்லும் தொழிலாளர்களின் வருகையும் அதிகளவில் குறைந்துள்ளதாக மரக்கறி தோட்ட உரிமையாளர்கள் கூறுகிறார்கள். இயற்கை அனர்த்தங்களினால் ஒரு வருடத்தில் பல தடவைகள் மரக்கறி செய்கை பாதிக்கப்படுகின்றது. இதனால் மரக்கறி செய்கை மூலம் குறிப்பிட்ட ஒரு இலாபத்தை ஈட்ட முடியாத நிலை ஏற்படுகின்றது. ஒரு தடவை பயிரிடப்பட்ட பயிர்கள் குறிப்பிட்ட 3மாதத்துக்குள் அறுவடை செய்வதற்கு முன்னர் பல்வேறு இன்னல்களை சந்திக்க வேண்டியிருக்கிறது. ஒரு பக்கம் இயற்கையின் கோரத்தாண்டவம் மற்றொரு பக்கம் காட்டு விலங்குகளிடமிருந்து இன்னொரு பக்கம் உரம் மற்றும் கிருமிநாசினிகளின் பற்றாக்குறை இ;பபடி சொல்லென்னா துன்பங்களை மரக்கறி உற்பத்தியாளர்கள் அனுபவிக்கின்றனர். அதிக மழை காலங்களிலும் அதிக வெயில் காலங்களிலும் மரக்கறி செய்கையின் போது செடிகளுக்கு பல்வேறு விதமான நோய்த்தாக்கங்கள் உண்டாகின்றன. இதனை கட்டுப்படுத்துவதற்கு கிருமி நாசினிகள் தேவைப்படுகின்றன. நோயை கட்டுப்படுத்தும் கிருமிநாசிகளின் பற்றாக்குறையினாலும் மரக்கறி உற்பத்தி பெருமளவில் வீழ்ச்சியடைகின்றது. இவ்வாறான பல்வேறு இன்னல்களை கடந்து வந்து அதனை அறுவடை செய்தால் அதற்கு நியாயமான விலைகள் சந்தையில் கிடைப்பதில்லை. தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் பற்றாக்குறையினால் பாரியளவில் மரக்கறி உற்பத்தியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பொதுவாக நுவரெலியா மாவட்ட விவசாயிகள் தங்களுடைய விளைச்சலை வெளி மாவட்டங்களுக்கு கொண்டு செல்ல முடியாதுள்ளது. நுவரெலியாவில் உற்பத்தி செய்யப்படுகின்ற மரக்கறி வகைகளே நாட்டின் அனைத்து மாகாணங்களுக்கும் கொண்டு செல்லப்படுகின்றன. தொடர்ச்சியாக பாராமரிக்கப்பட்டு வந்த மரக்கறி செடிகள் தீடீரென ஏற்படும் வானிலை மாற்றத்தினால் முற்றாக அழிந்து விடுகின்றன. மீண்டும் ஆரம்பத்திலிருந்து அதனை உற்பத்தி செய்ய வேண்டுமெனில் அதற்கு மேலும் மூன்று மாதங்கள் தேவைப்படுகின்றன. அதற்கான மனித வளம், நிதி, உரம் மற்றும் கிருமிநாசினி போன்றன மீண்டும் தேவைப்படுகின்றன. இதனால் பெருமளவு பணம் விரயமாகிறது. இவ்வாறான நிலமையினால் மரக்கறி உற்பத்தியாளர்கள் பொருளாதார ரீதியாக பெருமளவில் நட்டமடைகின்றனர். இது போக, பெரும் மனவுளைச்சலுக்கு ஆளாகின்றனர். பாரிய கடன் சுமையில் வீழ்கின்றனர். அதிலிருந்து அவர்கள் மீள்வதற்கு வருட கணக்காகிறது. மரக்கறி உற்பத்தியாளர்களை ஊக்குவிக்க இந்த அரசாங்கமும் தவறிவிட்டது. விவசாய கடன் உதவிகள், மரக்கறி உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் நல்ல பல திட்டங்கள் இந்த அரசாங்கத்திடம் இருப்பதாகத் தெரியவில்லை. தங்களின் வீழ்ச்சிக்கு இதுவே காரணம் என மரக்கறி உற்பத்தியாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர். நுவரெலியா மாவட்டத்திலேயே அதிகளவில் உருளைக்கிழங்கு மற்றும் ஏனைய மரக்கறி வகைகள் உற்பத்தி செய்யப்படுகின்றது. அதனை விற்பனை செய்துகொள்ள முடியாமல் வியாபாரிகளும் மரக்கறி உற்பத்தியாளர்களும் இம் மழைக்காலத்தில் திண்டாடுகின்றனர். நுவரெலியா விசேட பொருளாதார மத்திய நிலையத்தில் ஒரு வியாபாரி நாளொன்றுக்கு 3000கிலோ முதல் 5000கிலோ மரக்கறி மற்றும் உருளைக்கிழங்கு விற்பனை செய்து வந்த நிலையில் தற்போது 100கிலோ மரக்கறிகளைக்கூட விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக மரக்கறி வியாபாரிகள் கூறுகின்றனர். இதனால் மரக்கறி விலையிலும் மாற்றங்கள் ஏற்படலாம். உதாரணமாக, உருளைக்கிழங்கு, போஞ்சி, கரட், லீக்ஸ், முள்ளங்கி, கோவா ஆகியவற்றின் விலைகள் சடுதியாக அதிகரிக்கலாம். எதிர்காலத்தில் இந்த மரக்கறிகளுக்கு தட்டுப்பாடு ஏற்படலாம். சீரற்ற வானிலை காரணமாக மரக்கறி உற்பத்தியாளர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்தோடு மரக்கறி தோட்டங்களிலும் மரக்கறி வியாபாரிகளிடம் தொழில்புரியும் தொழிலாளர்களும் தொழில் இல்லாமல் கஷ்டப்படுகின்றனர். எனவே பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள மரக்கறி உற்பத்தியாளர்களையும் விவசாயிகளையும் பாதுகாப்பதற்கு இந்த அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல் மரக்கறி உற்பத்தியை ஊக்கவிக்கக்கூடிய நல்ல பல திட்டங்களை உருவாக்கி அதனூடாக மரக்கறி உற்பத்தியை ஊக்குவிக்க வேண்டும். தொடர் மழைக்காலத்தில் புறொய்லர் கோழிகளுக்கு நோய்கள் ஏற்படும் வாய்ப்பு அதிகம் என்றும் அவை நோய் கண்டு இறந்து விடுவதாகவும் கோழி வளர்ப்பில் ஈடுபட்டுள்ளோர் கவலைப்படுகின்றனர். பொதுவாகவே நாட்டுக் கோழிகள் மழைக் காலத்தில் முட்டையிடுவதைக் குறைத்துக் கொள்ளுமாம். இதே சமயம் மலையகப் பகுதிகளில் சோளம் கிடைப்பது கஷ்டம். ஒரு கிலோ 80, 90ரூபாவாக இருந்த சோளம் இப்போது 360, 390ரூபாவுக்கே கிடைக்கிறது. அதேபோல 130ரூபாவுக்கு விற்பனையான கிலோ கோழி உணவு 390க்கு விற்பனையாகிறது. பண்ணைத் தொழிலுக்கும் கஷ்டத்துக்கு மேல் கஷ்டம் என்கிறார்கள் கோழி வளர்ப்பில் ஈடுபட்டுள்ளோர். தலவாக்கலை பி. கேதீஸ் Comments Your name Subject Comment * Leave this field blank Related Articles ​பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுக்க மலையக சமூகம் தயாராக வேண்டும் மலையகத்தின் பிரதான நகரங்கள் மற்றும் நகரை அண்மித்த பகுதிகளில் பொதுப் போக்குவரத்து சேவைகள் குறைந்த அளவிலாவது உண்டு.... பசுமை பூமி திட்டத்தை ஜனாதிபதியிடம் எடுத்துச் சொல்லுங்கள்! நாட்டுக்கு புதிய தலைமைத்துவம் கிடைத்துள்ளது. நேரம், காலம் பார்க்காமல் சூட்டோடு சூடாக தனிவீட்டுத் திட்டத்தை... கடுமையான விலைவாசி உயர்வை பெருந்தோட்ட சமூகம் எப்படிச் சமாளிக்கப் போகிறது? ஸ்ரீமாவோ பண்டாரநாயக்காவின் சோஷலிச கூட்டரசாங்கம் 1970ம் ஆண்டில் மிகப்பெரிய வெற்றியுடன் ஆட்சியில் அமர்ந்தது. ஸ்ரீமாவின்... புசல்லாவ பஸ் விபத்தில் இருவர் நசுங்கிப் பலி! புஸ்ஸலாவ புரடொப் பாதையை பயன்படுத்தும் மக்கள் தொகை மிகப்பெரியது. சுமார் 12தோட்டப்பகுதிகளையும் இரண்டு கிராமங்களையும் சேர்ந்த... வாழ்க்கைச்செலவு உயர்வும் கைக்கெட்டாத சம்பள அதிகரிப்பும் இன்றைய நிலையில் வாழ்க்கைச் செலவு தினம்தினம் உயர்ந்து கொண்டே செல்கின்றது. நாட்டில் அரசியல் ஸ்திரமற்ற நிலையை தமக்கு... பெருந்தோட்ட காணிப் பகிர்வில் இ.தொ.கா.வும் முற்போக்கு முன்னணியும் இரட்டைக் குழல் துப்பாக்கிகளாக செயல்படுவது அவசியம் உண்மையில் இது நிர்வாக ரீதியிலான சிக்கல். இனியாவது குறைந்த வருமானம் பெறுவோர் பட்டியலில் ஓரேவீட்டில் குடியிருந்தாலும் தனித்தனி... "பயன்படுத்தப்படாத பெருந்தோட்ட காணிகளை அரசே பொறுப்பேற்று பகிர்ந்தளிக்க வேண்டும்" தரிசு நிலங்களை பெருந்தோட்டத் தொழிலாளருக்கு பகிர்ந்து கொடுப்பதன் மூலம் எதிர்பார்க்கப்படும் உணவுப் பஞ்சத்தை தவிர்க்கக்... பெருந்தோட்டங்களில் குளவிக் கொட்டு: நிர்வாகங்களுக்கு மட்டுமல்ல: தொழிலாளர்களுக்கும் அக்கறை இல்லை! தேயிலை மலைகளில் உள்ள மரங்களிலும் அதை அண்டிய பகுதிகளிலும் தேயிலைத் தூர்களிலும் இன்று குளவிகள் கூடுகட்டி வாழ்கின்றன. முன்னர்,... லிட்டில் லண்டனில் கரும்புள்ளியாகக் காணப்படும் நுவரெலியா ரேஸ்கோஸ் குடியிருப்புகள் நுவரெலியா பிரதான நகரிலிருந்து அரை கிலோ மீற்றர் தூரத்திலுள்ள நுவரெலியா குதிரைப் பந்தயத் திடல் உள்ளது. இத் திடலினுள் 'ரேஸ்கோஸ... மரத்தால் விழுந்தவனை மாடேறி மிதித்தது போல சோதனைக்கு மேல் வேதனைகளை எதிர்கொண்டிருக்கும் தோட்ட சமூகம் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வருமானம் என்பது ஆரம்ப காலந்தொட்டே போதுமானதாக இருந்ததில்லை. தோட்ட மக்களுக்கான நுகர்வுப் பொருள்... மலையகத்தில் காணி உரிமையும் வேலை வாய்ப்பும் இளைஞர்களின் தன்னெழுச்சியை நாடி நிற்கிறது இலங்கை வரலாற்றில் பெருமளவில் போராட்டங்களை நடாத்திய சமூகமாக மலையக சமூகமே காணப்படுகின்றது. இப்போராட்டங்கள் அனைத்துமே தொழில்... பெருந்தோட்ட தரிசு காணிகளை தோட்ட சமூகத்துக்கு பகிர்ந்தளிக்க வேண்டும் இலங்கையில் மிக விரைவில் உணவு தட்டுப்பாடு அல்லது பஞ்சம் ஏற்படலாம் என்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டு வரும் சூழலில் இதற்காக...
சுற்றுலா மற்றும் காணி அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ மற்றும் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார ஆகியோர் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தமது அமைச்சுப் பதவிகளில் இருந்து விலக தீர்மானித்துள்ளதாக தெரிவித்துள்ளனர். அனைத்துக் கட்சி அரசாங்கத்தை அமைத்து மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்குவதற்காக சுற்றுலா மற்றும் காணி அமைச்சு மற்றும் தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு பதவிகளில் இருந்து விலகுவதாக அமைச்சர்கள் கூட்டுக் கடிதத்தில் தெரிவித்துள்ளனர். அரசாங்கத்திற்கு எதிரான மக்கள் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், இன்றைய தினம் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லம் மற்றும் ஜனாதிபதி செயலகம் என்பன முற்றுகையிட்டப்பட்டது. ஜனாதிபதிக்கு காலக்கெடு இந்நிலையில், ஜனாதிபதி எதிர்வரும் 13ம் திகதி பதவி விலகுவதற்கு தீர்மானித்துள்ளதாக சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன இன்றிரவு அறிவித்திருந்தார். மேலும், அமைச்சு பதவியில் இருந்து விலகி சுயாதீனமாக செயற்படவுள்ளதாக பந்துல குணவர்தன தெரிவித்திருந்தார். அத்துடன், பிரதமர் பதவியில் இருந்து விலகுவதாக ரணில் விக்ரமசிங்கவும் அறிவித்திருந்தார். இன்னும் 24 மணி நேரங்களில் ஜனாதிபதி பதவி விலக வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோரிக்கை விடுத்திருந்தார். மேலும், ஜனாதிபதி, பிரதமர் மட்டுமல்லாது பணிப்பாளர் சபைகள், அனைத்து அமைச்சுக்களின் செயலாளர்கள், தூதுவர்கள் ஆகியோர் உடனடியாக பதவி விலக வேண்டும் என காலி முகத்திடல் செயற்பாட்டாளர்கள் வலியுறுத்தியுள்ளனர். இவ்வாறான பின்னணியில் ஹரின் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோர் தமது அமைச்சுப் பதவிகளை இராஜினாமா செய்துள்ளனர். Facebook Twitter WhatsApp Linkedin Email Previous articleஶ்ரீலங்காவில் அமைதியின்மை ஆபத்தாக மாறலாம் – பிரபல சட்டத்தரணி அச்சம் Next articleபோராட்டம் கையை மீறி செல்லும் எச்சரித்த உளவுத்துறை! நள்ளிரவில் எஸ்கேப் ஆன கோட்டாபய ராஜபக்ச!
பார்சிலோனாவில் நெய்மர் தனது வாழ்க்கையை கொந்தளிப்பான முறையில் முடித்துவைத்த ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, 2013 இல் சாண்டோஸில் இருந்து கட்டலான் கிளப்பில் சேர்ந்தபோது அவரும் மற்றவர்களும் மோசடி செய்தார்களா என்பதை தீர்மானிக்க பிரேசில் முன்கள வீரர் ஸ்பெயினில் சோதிக்கப்படுவார். மேலும் படிக்கவும்| ஃபிஃபா உலகக் கோப்பையை வெல்ல பிரேசில் அணி உள்ளது: கஃபு பார்சிலோனாவில் திங்கள்கிழமை தொடங்கும் விசாரணையில், நெய்மர், அவரது தந்தை மற்றும் பார்சிலோனா மற்றும் பிரேசிலிய கிளப் சாண்டோஸ் ஆகிய இரு அணிகளின் முன்னாள் தலைமைகள் மோசடி மற்றும் நியாயமற்ற போட்டி குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கின்றனர். பிரேசிலிய தனியார் நிறுவனமான DIS, நெய்மரின் 40% வீரர் உரிமைகளுக்கு உரிய உரிமையாளராகக் கடமைப்பட்டிருப்பதாகக் கூறும் பணத்தைச் செலுத்தாத குறிக்கோளுடன் அவரது பரிமாற்றத்தின் உண்மையான செலவை மறைத்ததாக அவர்கள் குற்றம் சாட்டப்பட்டனர். நெய்மர், அவரது முகவராகச் செயல்படும் நெய்மர் என்றும் அழைக்கப்படும் நெய்மர் மற்றும் முன்னாள் பார்சிலோனா நிர்வாகிகள் சாண்ட்ரோ ரோசல் மற்றும் ஜோசப் பார்டோமியு ஐந்தாண்டுகள் சிறையில் அடைக்குமாறு DIS கேட்டுக்கொள்கிறது. குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் எந்த தவறும் செய்யவில்லை என்று மறுத்துள்ளனர். கத்தாரில் நவம்பர் 21-ம் தேதி உலகக் கோப்பை தொடங்கவுள்ள நிலையில், அக்டோபர் இறுதி வரை இந்த விசாரணை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு அமர்வைத் தவறவிட நீதிபதி அனுமதி வழங்காத வரையில் நெய்மர் கலந்துகொள்ளக் கடமைப்பட்டிருப்பார். வாதிகளின் வக்கீல்கள், பார்சிலோனாவும் சாண்டோஸும் ஆரம்பத்தில் கிளப்புகளுக்கு இடையே பரிமாற்றக் கட்டணமாக அறிவித்த 17 மில்லியன் யூரோக்களிலிருந்து ($16.5 மில்லியன்) அதன் நிலுவைத் தொகையை மட்டுமே பெற்றதாக வாதிடுகின்றனர், அதே நேரத்தில் உண்மையான செலவு சுமார் 82 மில்லியன் யூரோக்கள் ($79.7 மில்லியன்) ஆகும். ஸ்பெயினில் உள்ள ஒரு விசாரணை நீதிபதி ஏற்கனவே உண்மையான செலவு குறைந்தது 83.3 மில்லியன் யூரோக்கள் ($81 மில்லியன்) என்று கூறியுள்ளார். “நெய்மர் வீரர், அவரது பெற்றோர் மற்றும் அந்த நேரத்தில் பார்சிலோனா மற்றும் அதன் நிர்வாகிகள் மற்றும் பிற்காலத்தில் சாண்டோஸ் ஆகியோரின் உடந்தையுடன், DIS இன் நியாயமான பொருளாதார நலன்களை ஏமாற்றி, நிறுவனத்தை மட்டுமல்ல, நம்பிக்கையையும் மீறினார். அவருக்குள் வைக்கப்பட்டது,” என்று DIS க்காக வழக்கறிஞர் பாலோ எம். நாசர் கூறினார். DIS மற்றும் ஸ்பானிய அரசு வழக்கறிஞர்கள் ரோசல் 40 மில்லியன் யூரோக்களை ($38.8 மில்லியன்) நேரடியாக நெய்மர் மற்றும் அவரது குடும்பத்தினருக்குக் கூடுதல் தொகையாகச் செலுத்தியதாகக் குற்றம் சாட்டுகின்றனர், அதில் DIS எதுவும் பெறவில்லை. நாசர் அந்த கட்டணத்தை “லஞ்சம்” என்று ஒப்பிட்டார், இது தடையற்ற சந்தையை சிதைத்து மற்ற கிளப்புகள் நெய்மரை ஒப்பந்தம் செய்வதற்கான வாய்ப்புகளை காயப்படுத்தியது. சாண்டோஸில் இருந்தபோது நெய்மரை ஒப்பந்தம் செய்ய ரியல் மாட்ரிட் கடுமையாக அழுத்தம் கொடுத்தது, மேலும் மாட்ரிட் தலைவர் புளோரெண்டினோ பெரெஸ் விசாரணையில் வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் சாட்சியம் அளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. São Paulo பகுதியில் உள்ள பல்பொருள் அங்காடிகளின் சங்கிலியை வைத்திருக்கும் DIS, நெய்மருக்காக பார்சிலோனாவிடமிருந்து பெற்ற கூடுதல் 12 மில்லியன் யூரோக்களை ($11.6 மில்லியன்) சாண்டோஸ் மறைத்ததாகவும் குற்றம் சாட்டுகிறது. இரண்டு போலி ஒப்பந்தங்களில் கூடுதல் பணம் மறைக்கப்பட்டதாக DIS குற்றம் சாட்டுகிறது, ஒன்று பார்சிலோனாவிற்கும் சாண்டோஸுக்கும் இடையிலான நட்புக்காகவும், மற்றொன்று மற்ற சாண்டோஸ் வீரர்களை மாற்றுவதில் பார்சிலோனாவுக்கு முதல் தடையை வழங்கியதாகவும் கூறப்படுகிறது. 2009 ஆம் ஆண்டில் நெய்மரின் குடும்பத்திற்கு 5 மில்லியன் பிரேசிலிய ரியல்களை செலுத்தியபோது, ​​அது 2 மில்லியன் யூரோக்களுக்கு ($1.94 மில்லியன்) செலுத்தியபோது, ​​எதிர்கால நெய்மர் இடமாற்றத்தின் 40% உரிமையைப் பெற்றதாக DIS கூறியது. நெய்மரின் குடும்பம் அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதாகவும், DIS இன் உரிமையாளர்களான டெல்சிர் மற்றும் இடி சோண்டா சகோதரர்கள், “நேமர் சாண்டோஸின் முதல் அணியுடன் அறிமுகமானதற்கு முந்தைய நாள்” என்று நாசர் கூறினார். நாசர் ஒரு பிரேசிலிய வீரர்கள் சங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிறார், தற்போதைய மற்றும் முன்னாள் வீரர்களுக்கு உதவுவதற்காக 0.8% இடமாற்றங்கள் மூலம் நிதியளிக்கப்பட்டது. டிஐஎஸ் பிரேசிலுக்குப் பதிலாக ஸ்பெயினில் நீதியை நாடுகிறது என்று நாசர் கூறினார், ஏனெனில் அவர்களின் பார்வையில் பெரும்பாலான முறைகேடுகள் ஐரோப்பிய நாட்டில் நடந்ததாகக் கூறப்படுகிறது. நெய்மருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் 10 மில்லியன் யூரோக்கள் ($9.7 மில்லியன்) அபராதம் விதிக்க அரசு வழக்கறிஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஸ்பெயினில், நெய்மரின் முன்னாள் பார்சிலோனா அணி வீரர் லியோனல் மெஸ்ஸி மற்றும் அவரது தந்தைக்கு எதிரான வரி மோசடி வழக்கில் நிகழ்ந்தது போல், முதல் குற்றங்களுக்கு இரண்டு வருடங்களுக்கும் குறைவான தண்டனைகள் நிறுத்தி வைக்கப்படலாம். ரோசலுக்கு, வழக்குரைஞர்கள் ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் அதே 10 மில்லியன் யூரோ அபராதம் வேண்டும். சாண்டோஸின் முன்னாள் ஜனாதிபதி ஒடிலியோ ரோட்ரிக்ஸ் மூன்று வருட சிறைத்தண்டனையை எதிர்கொள்கிறார். நெய்மர் ஒப்பந்தத்தின் ஆய்வு அதிகரித்ததால், ரோசலுக்குப் பின் பார்சிலோனா துணைத் தலைவராக இருந்த பார்டோமியு பதவி விலகினார். DIS வழக்கறிஞர்கள் 30 வயதான நெய்மர் மற்றும் அவரது தந்தைக்கு ஐந்து வருட சிறைத்தண்டனையை கோருகின்றனர். ரோசல் மற்றும் பார்டோமியுவுக்கு, டிஐஎஸ் ஐந்து வருட சிறைத் தண்டனையை விரும்புகிறது. DIS 34 மில்லியன் யூரோக்கள் ($33 மில்லியன்) இழப்பீடு மற்றும் 195 மில்லியன் யூரோக்கள் ($189.5 மில்லியன்) அபராதமாக ஸ்பெயின் அரசுக்குக் குற்றம் சாட்டப்பட்டவர்களால் செலுத்தப்பட வேண்டும். நெய்மர் 21 வயதில் ஸ்பெயினுக்கு பெரும் ஆரவாரத்திற்கு மத்தியில் தனது மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பயணத்தை மேற்கொண்டார். அவர் மூர்க்கத்தனமான கோல்களால் ரசிகர்களை பரவசப்படுத்தினார் மற்றும் கிளப்பின் கடைசி சாம்பியன்ஸ் லீக் பட்டத்தை வெல்ல உதவினார், நெய்மர் கிளப்பிற்கு ஒரு நாள்பட்ட தலைவலியாக மாறினார், 2017 இல் பாரிஸ் செயிண்ட்-ஜெர்மைனிலிருந்து வெளியேறும் சோப் ஓபரா உட்பட, பார்டோமியூ தன்னால் முடிந்த அனைத்தையும் செய்தார். சாண்டோஸில் இருந்து நெய்மரின் நகர்வு பார்சிலோனாவை ஸ்பெயினின் வரி அலுவலகத்தில் சிக்கலில் சிக்க வைத்தது. 2016 ஆம் ஆண்டில், அதிகாரிகள் கொண்டு வந்த ஒரு தனி வழக்கைத் தீர்ப்பதற்காக பார்சிலோனா 5.5 மில்லியன் யூரோக்கள் அபராதம் செலுத்தியது. அந்த தீர்வில், கிளப் “வீரரின் பரிமாற்றத்தின் நிதித் திட்டத்தில் பிழை” செய்ததாக ஒப்புக்கொண்டது.
இந்த F face creation நிறுவனம் உலகில் முதன்முறையாக அதிமான 147 ஆண்களை வைத்து 588 வகை உடை அலங்காரம் செய்து 7 சுற்றுகளாக அணிவகுத்து MR RED TIE என்ற பேஷன் ஷோ மூலம் ஒரு உலகசாதனை படைத்துள்ளனர். இதில் 60வயதுக்கு குறைவான பல்வேறு மாநிலங்களை சேர்ந்த ஆண்கள் பங்கேற்றார்கள்.. இந்த உலக சாதனையை கல்கத்தாவில் உள்ள யுனிவர்சல் ரெகார்டு ஃபோரமின் (UNIVERSAL RECORD FORUM) ISO CERTIFIED ORGANISATION ஐ சார்ந்த நடுவர் சுனில் ஜோசப் தலைமையில் வழங்கபட்டது … இந்த MR RED TIE எனும் உலகசாதனை பேஷன் ஷோவை பற்றி ஆடை வடிவமைப்பாளரும் , இந்த F FACE நிறுவனத்தின் உரிமையாளருமான சியா ஸ்ரீ கூறுகையில் இந்த பேஷன் ஷோ பெண்களுக்கு எதிராக நடக்கும் பல்வேறு வன்கொடுமைகளை அகற்ற வலியுறுத்தி நடைபெற்றது. அதுமட்டுமின்றி பொதுவாகவே பேஷன் ஷோ என்றாலே அதிகமாக பெண்களின் அணிவகுப்பே இருந்து வருகிறது. பெண்களை மட்டும் காட்சி பொருளாக எல்லோரும் பார்க்கிறார்கள். அதனை மாற்ற ஒரு சிறு முயற்சியாக அதிகப்படியான ஆண்களை வைத்து ஒரு பேஷன் ஷோ நடத்தி உலக சாதனை படைத்துள்ளோம். பேஷன் ஷோ என்றாலே பெண்களே பங்கேற்று சம்பாதிக்க முடியும் என்ற நிலையை மாற்றி புதிதாக பங்கேற்கும் ஆண்களும் பேஷன் ஷோவில் சம்பாதிக்க முடியும் என்ற நிலையை உருவாகியுள்ளோம். இது வெறும் பொழுதுபோக்கிற்காக மட்டுமின்றி பெண்கள் மீதான வன்கொடுமைகளுக்கெதிரான சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சியாகவே நடத்தி முடித்துள்ளோம். இந்த MR RED TIE உலக சாதனை நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்ற நடிகைகள் ஸ்ரீ துர்கா(தொலைக்காட்சி புகழ் ) , ஸ்ரீதேவி(ராஜா ராணி சீரியல் ) , சுவேதா பண்டிக்கர்(விஜய் டிவி புகழ் ), பிரியதர்ஷன் ராஜ்குமார், ஷைனி ஆகியோருக்கு எங்களது மனமார்ந்த நன்றி என தெரிவித்தார். இந்நிகழ்ச்சி வண்டலூரில் GST சாலையில் உள்ள கல்யாண் ஹோம்டெல் ஹோட்டலில் நடைபெற்றது.
தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் மற்றும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ பன்னீர்செல்வம் மனைவி விஜயலட்சுமி இன்று காலை மாரடைப்பால் காலமானார்.அவருக்கு வயது 63. முன்னாள் முதல்வரும் தற்போதைய தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ பன்னீர்செல்வம் மனைவி விஜயலட்சுமி கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து கொண்டிருந்தனர். அவர் சில நாட்களில் குணமாகிவிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும் இதனை அடுத்து அவர் காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஓ பன்னீர்செல்வம் மனைவி விஜயலட்சுமி திடீர் மறைவு அதிமுக வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனை அடுத்து ஓபிஎஸ் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்பட அனைத்து அரசியல் கட்சிப் பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Thennakam Admin 11th September 2018 Current Affairs – 11 September 20182018-09-11T07:25:58+05:30 நடப்பு நிகழ்வுகள் தமிழகம் 1.தமிழகத்தில் தகவல் தொழில்நுட்பத் துறையில் அதிக முதலீடுகளை ஈர்க்கும் வகையிலும், வேலைவாய்ப்பைப் பெருக்கக் கூடிய வகையிலும் தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பவியல் கொள்கை 2018 என்ற புதிய தகவல்தொழில்நுட்பக் கொள்கையை தமிழக முதல்வர் வெளியிட்டார். இந்தியா 1.பெட்ரோல், டீசல் விலை திங்கள்கிழமை மேலும் அதிகரித்தது. எனினும், அவற்றின் மீதான கலால் வரியை குறைப்பதில்லை என்ற முடிவில் மத்திய அரசு தொடர்ந்து உறுதியாக உள்ளது. 2.மத்திய கண்காணிப்பு ஆணையத் தலைவராக சரத் குமார் நியமிக்கப்பட்டதற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மனுவைத் தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. 3.தேஜாஸ் போர் விமானத்துக்கு நடுவானில் எரிபொருள் நிரப்பி இந்தியா புதிய சாதனை படைத்துள்ளது. வர்த்தகம் 1.கடன் சார்ந்த பரஸ்பர நிதி திட்டங்களிலிருந்து கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ரூ.6,800 கோடி விலக்கி கொள்ளப்பட்டுள்ளது. 2.சீனாவின் மிகப்பெரிய இ.காமர்ஸ் நிறுவனமான அலிபாபாவின் செயல் தலைவர் பொறுப்பிலிருந்து விலகுவதாக அதன் நிறுவனரான ஜாக் மா அறிவித்துள்ளார். உலகம் 1.சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு அமெரிக்கா வரி விகிதங்களை மேலும் அதிரித்தால் அதற்கான தக்க பதிலடி கிடைக்கும் என சீனா தெரிவித்துள்ளது. விளையாட்டு 1.யுஎஸ் ஓபன் டென்னிஸ் போட்டி ஆடவர் ஒற்றையர் பிரிவில் செர்பிய வீரர் ஜோகோவிச் இறுதிச் சுற்றில் ஆர்ஜென்டீனா வீரர் டெல் பொட்ரோவை வீழ்த்தி மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார். 2.குரோஷிய தலைநகர் ஸாக்ரெப்பில் நடைபெறும் 19 வயதுக்குட்பட்டோர் நான்கு நாடுகள் கால்பந்து போட்டியில் பிரான்ஸிடம் 0-2 என்ற கோல் கணக்கில் இந்தியா தோல்வியுற்றது. 3.விளையாட்டுத் துறையில் இந்தியா- ரஷியா ஆகிய இரு நாடுகளிடையேயான உறவை வலுப் பெறச் செய்வதற்காக பிரபல செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்துக்கு நட்புறவு விருது ரஷ்ய அரசின் சார்பில் வழங்கப்பட்டது.
இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியத்தின் நிதி உதவி கிடைப்பதற்கு மூன்று நான்கு மாதங்களாகலாம் என இலங்கை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை இலங்கைக்கு நிதி வழங்கிய நாடுகளுடனான சந்திப்பின்போது இலங்கை அதிகாரிகள் இதனை தெரிவித்துள்ளனர். இலங்கைக்கு நிதி உதவி வழங்கிய நாடுகளிடமிருந்து நிதி தொடர்பான உத்தரவாதங்கள் இன்னமும் கிடைக்காததால் சர்வதேச நாணயநிதியத்தின் நிறைவேற்று குழு இலங்கைக்கு நிதி உதவியை வழங்குவதற்கான அனுமதியை வழங்க முடியாத நிலையில் உள்ளது இதன் காரணமாக சர்வதேச நாணய நிதியத்தின் நிதி உதவி கிடைப்பதற்கு மூன்று நான்கு மாதங்களாகும் என இலங்கை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இலங்கை எதிர்கொண்டுள்ள நெருக்கடியின் அளவு பல்வகை தன்மை, சர்வதேச நாணயநிதியத்துடன் பணியாளர் மட்ட உடன்படிக்கையை செய்து கொள்வதற்காக முன்னெடுக்கப்பட்டுள்ள சீர்திருத்த நடவடிக்கைகள், இலங்கைக்கு எதிர்காலத்தில் நிதி உதவி கிடைப்பதற்கான அவசியமான கடன்பேண்தகு நிலைமை குறித்து கடன் வழங்கிய நாடுகளிற்கு தெரியப்படுத்துவதற்காக இலங்கை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை கடன் வழங்கிய நாடுகளின் பிரதிநிதிகளை சந்தித்தனர், இலங்கையை பிரதிநிதித்துவம் செய்த மத்திய வங்கி ஆளுநரும் திறைசேரி செயலாளரும் இலங்கை சமர்ப்பித்துள்ள திட்டத்திற்கு சர்வதேச நாணயநிதியத்தின் பணிப்பாளர் சபை டிசம்பர் – 2023 ஜனவரிக்குள் அனுமதி வழங்கும் என எதிர்பார்ப்பதாகவும் நவம்பருக்குள் பொது மற்றும் தனியார் கடன்கொடுப்பனவாளர்களிடமிருந்து நிதி உத்தரவாதத்தை பெற்றுக்கொள்ள முடியும் என எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டனர். குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் கடன் வழங்கியவர்களுடன் கொள்கை ரீதியில் உடன்பாடு எட்டப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்ற அதேவேளை பேச்சுவார்த்தைகள் அடுத்த வருடத்தின் இரண்டாவது காலாhண்டு வரை தொடரும் அதன் பின்னரே மீள்பேச்சுவார்த்தைக்கு உட்படுத்தப்பட்ட கடன் ஒப்பந்தங்கள் சட்டபூர்வமாக செயல்படுத்தப்படும். Prevமுந்தய பதிவுஇங்கிலாந்துக்கு எதிரான 4ஆவது சர்வதேச இருபது 20 கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் 3 ஓட்டங்களால் வெற்றி
இணையத்திலும் மீனவர்கள் இருக்கிறார்கள், ஆனால் இவர்கள் தமிழக மீனவர்கள் போல் யாராலும் தாக்கப்படுவதில்லை. இவர்கள் தான் மற்றவர்களைத் தாக்குகிறார்கள், பிஷ்ஷிங் (Phishing not pissing :D) மூல்மாக. இப்பதிவுல பிஷ்ஷிங்னா என்ன, ஏன், எதற்கு, எப்படி எல்லாத்தையும் பார்க்கப் போறோம். பிஷ்ஷிங் - கிட்டத்தட்ட மீன் பிடிக்கிற மாதிரி தான். உதாரணத்துக்கு 'கல்லூரி சாலை' திரைப்படத்துல வடிவேலு சில்லறைக் காசுகளைத் தூவி விட்டு, அதைக் குனிந்து எடுக்க வரும் பெண்களின் அந்தரங்கத்தை அளவெடுப்பாரே, அது தான் பிஷ்ஷிங். அதுல அந்த சில்லறைக் காசுகள் தான் நீங்கள் இணையத்திலோ, மின்னஞ்சலிலோ, உடன் தகவல் சேவை மென்பொருட்களிலோ (Instant messaging sevice - messgengers) கடந்து செல்லும் சுட்டிகள் அல்லது உரல்கள் (hyperlinks or urls). அதை இணையத்தில் குனிந்து எடுக்கும் மக்களெல்லாம் அழகான பெண்கள் (wow). அந்த உரல்களை உங்களுக்கு அனுப்புபவர்கள் அளவெடுக்கும் அந்தரங்கத் தகவல்கள், உங்களின் பயனாளர் பெயர் (username), கடவுச்சொல், கடன் அட்டைத் தகவல்கள் இப்படி ஏராளம் ஏராளம். அவற்றை எப்படி உபயோகிப்பார்கள் என்பது அவற்றைக் கையாளப்போகும் மீனவர்கள்/வடிவேல்களைப் பொருத்தது. சரி, இது எப்படி ஆரம்பித்தது, இதன் வரலாறு என்ன?. கணினிகளை வலையமைத்துப் பயன்படுத்த காலத்திலேயே பிஷ்ஷிங் தொடங்கிவிட்டது. ஆனால் பெயரில்லாத ஒரு விஷயமாக இருந்தது. உதாரணத்துக்கு ஒரு கல்லூரியில் கணிப்பொறியியல் துறை மாணவர்களை ஒவ்வொருவருக்கும் ஒரு தலைப்புக் கொடுத்து வகுப்பில் உரையாற்றச் சொன்னார்கள் (seminars). ஒரு மாணவனுக்கு வலையமைப்பில் பாதுகாப்புக்கான அச்சுறுத்தல்களும் அவற்றைத் தவிர்க்கும் வழிமுறைகளும் அப்படின்னு தலைப்புக் கொடுத்தாங்க. ஒவ்வொருத்தரா தாங்கள் தலைப்பில் உரையாற்றினார்கள். நம்ம மாணவரோட முறை வந்தது. "எல்லாரும் அடிக்கடி கடவுச்சொல்லை மாற்றுங்க, கடவுச்சொல்லாக உங்களைப்பற்றி மற்றவருக்குத் தெரிந்த தகவல்களை வைக்காதீங்க (உ.தா சொந்த ஊர், பிறந்த நாள், தாய் தந்தை பெயர்..), கடவுச்சொல்லை எழுத்துக்களும் எண்களும் கொண்ட கலவையா வைங்க. இதெல்லாம் பின்பற்றுனா எல்லாம் பத்திரமா இருக்கும்னு நினைப்பீங்க. நம்ம கல்லூரில எல்லாருமே இதைப் பின்பற்றி வர்றோம், இருந்தாலும் பாதுகாப்புக் கிடையாது" அப்படின்னு மாணவர் சொன்னதும் எல்லாரும் எப்படி பாதுகாப்பில்லைன்னு சொல்றீங்கன்னு கேட்டாங்க. அதுக்கு அந்த மாணவர் வகுப்பிலிருந்த எல்லாருடைய பெயரையும் அகர வரிசையில எழுதி அவங்க கல்லூரிக் கணினி வலையமைப்பில் உள்ள அவங்களோட கடவுச்சொல்லையும் எழுத ஆரம்பித்ததும், வகுப்பே திகைப்பில் ஆழ்ந்தது. பின்னர் இரண்டு நாள் விசாரணைக்குப்பின் அம்மாணவர் கல்லூரியிலிருந்து ஒரு வாரத்திற்கு தற்காலிக நீக்கம் செய்யப்பட்டார். விசாரணையில் எப்படி கடவுச்சொற்கள் கிடைத்தன? என்ற கேள்விக்கு அவர் சொன்ன பதில் தான் இப்போது பிரபலமாக இருக்கும் 'பிஷ்ஷிங்'. எப்படி?..ஒவ்வொரு மாணவரும் ஆய்வகத்தில் தங்கள் கல்லூரிக் கணினி வலையமைப்பில் நுழைவதற்கென்று ஒரு வலைப்பக்கம் இருக்கும். அதே போன்ற பக்கத்தை ஒரு நிரலைக் கொண்டு அச்சுஅசலாக இந்த மாணவரும் வடிவமைத்து நிறைய கணினிகளில் நிரலை இயக்கி விட்டுச் சென்று விடுவது வழக்கம். பின்னர் வரும் மாணவர்கள் கணினிகளில் அமரும் போது அது வழக்கமான நுழைவுப் பக்கம் என்று எண்ணி அவற்றில் உள்ளிடும் தகவல்களை சேமித்துக் கொண்டிருந்திருக்கிறார், ஆனால் அது தான் பிஷ்ஷிங் என்பது அப்போது அவருக்குத் தெரிந்திருக்கவில்லை. இப்படியும் பண்ண முடியும் என்பது இருபது வருடங்களுக்கு முன்பே சொல்லப்பட்டிருந்தாலும் கடந்த பத்தாண்டுகளாகத்தான் பிஷ்ஷிங் மூலமாக இணையத்தில் கடுமையாக அறுவடை செய்யப்பட்டிடுக்கிறது. இவர்கள் பெரும்பாலும் குறிவைப்பது வங்கிக்கணக்குகளைத் தான். பிஷ்ஷிங்குகளை எப்படி இனம் காணுவது, அவற்றை எப்படி உருவாக்குகிறார்கள், அவற்றிலிருந்து தப்பிக்கும் வழிமுறைகள் ஆகியவை அடுத்த பதிவில்....
கிரான்ஸ்காஃப்டின் சக்தி வெளியீட்டு முடிவில், அதாவது கியர்பாக்ஸ் மற்றும் வேலை செய்யும் உபகரணங்கள் இணைக்கப்பட்டுள்ள பக்கம். ஃப்ளைவீலின் முக்கிய செயல்பாடு, இயந்திரத்தின் பவர் ஸ்ட்ரோக்கிற்கு வெளியே ஆற்றல் மற்றும் மந்தநிலையை சேமிப்பதாகும். நான்கு-ஸ்ட்ரோக் எஞ்சினுக்கு, ஒரு பக்கவாதம் உறிஞ்சுதல், சுருக்க மற்றும் வெளியேற்றத்திற்கான ஆற்றல் மட்டுமே ஃப்ளைவீலில் சேமிக்கப்படும் ஆற்றலிலிருந்து வருகிறது. இருப்பு தவறாக சரி செய்யப்படுகிறது. இயந்திரத்தின் சமநிலை முக்கியமாக தண்டு மீது இருப்புத் தொகுதியைப் பொறுத்தது. ஒற்றை சிலிண்டர் இயந்திரம் ஒரு சிறப்பு இருப்பு தண்டு கொண்டுள்ளது. ஃப்ளைவீல் ஒரு பெரிய மந்தநிலையைக் கொண்டுள்ளது. இயந்திரத்தின் ஒவ்வொரு சிலிண்டரின் வேலையும் இடைவிடாது இருப்பதால், இயந்திர வேகமும் மாறுகிறது. இயந்திர வேகம் அதிகரிக்கும் போது, ​​ஃப்ளைவீலின் இயக்க ஆற்றல் அதிகரிக்கிறது, ஆற்றலைச் சேமிக்கிறது; இயந்திர வேகம் குறையும் போது, ​​ஃப்ளைவீலின் இயக்க ஆற்றல் குறைகிறது, ஆற்றலை வெளியிடுகிறது. என்ஜின் செயல்பாட்டின் போது வேக ஏற்ற இறக்கங்களைக் குறைக்க ஃப்ளைவீல் பயன்படுத்தப்படலாம். இது என்ஜின் கிரான்ஸ்காஃப்ட்டின் பின்புற முடிவில் நிறுவப்பட்டுள்ளது மற்றும் சுழற்சி செயலற்ற தன்மையைக் கொண்டுள்ளது. அதன் செயல்பாடு இயந்திரத்தின் ஆற்றலைச் சேமிப்பது, பிற கூறுகளின் எதிர்ப்பைக் கடப்பது, மற்றும் கிரான்ஸ்காஃப்ட் சமமாகச் சுழற்றுவது; ஃப்ளைவீலில் நிறுவப்பட்ட கிளட்ச் மூலம் இயந்திரம் மற்றும் ஆட்டோமொபைல் டிரான்ஸ்மிஷனை இணைக்கவும்; மற்றும் தொடங்க இயந்திரம் தொடங்குவதற்கு வசதியாக இயந்திரம் ஈடுபட்டுள்ளது. மேலும் இது கிரான்ஸ்காஃப்ட் பொசிஷன் சென்சிங் மற்றும் வாகன வேக உணர்திறன் ஆகியவற்றின் ஒருங்கிணைப்பாகும். பவர் ஸ்ட்ரோக்கில், என்ஜின் மூலம் கிரான்ஸ்காஃப்ட்டுக்கு அனுப்பப்படும் ஆற்றல், வெளிப்புற வெளியீட்டிற்கு கூடுதலாக, ஆற்றலின் ஒரு பகுதி ஃப்ளைவீல் மூலம் உறிஞ்சப்படுகிறது, இதனால் கிரான்ஸ்காஃப்ட் வேகம் அதிகம் அதிகரிக்காது. வெளியேற்றம், உட்கொள்ளல் மற்றும் சுருக்கத்தின் மூன்று பக்கங்களில், ஃப்ளைவீல் இந்த மூன்று பக்கங்களால் நுகரப்படும் வேலைக்கு ஈடுசெய்ய அதன் சேமிக்கப்பட்ட ஆற்றலை வெளியிடுகிறது, இதனால் கிரான்ஸ்காஃப்ட் வேகம் அதிகமாக குறையாது. கூடுதலாக, ஃப்ளைவீல் பின்வரும் செயல்பாடுகளைக் கொண்டுள்ளது: ஃப்ளைவீல் என்பது உராய்வு கிளட்சின் செயலில் உள்ள பகுதியாகும்; இயந்திரத்தைத் தொடங்குவதற்கான ஃப்ளைவீல் ரிங் கியர் ஃப்ளைவீல் விளிம்பில் பதிக்கப்பட்டுள்ளது; அளவீட்டு பற்றவைப்பு நேரம் அல்லது எரிபொருள் உட்செலுத்துதல் நேரம் மற்றும் வால்வு அனுமதியை சரிசெய்ய ஃப்ளைவீலில் மேல் டெட் சென்டர் குறி பொறிக்கப்பட்டுள்ளது. விசாரணைவிவரம் உங்கள் பயணத்தைத் தொடங்குங்கள் எங்கள் தயாரிப்புகள் அல்லது விலைப்பட்டியல் பற்றிய விசாரணைகளுக்கு, தயவுசெய்து உங்கள் மின்னஞ்சலை எங்களுக்கு அனுப்புங்கள், நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்புகொள்வோம்.
ஜெயலலிதா இறப்பு தமிழக மக்களுக்கு இன்னும் ஒரு அவிழ்க்கப்படாத மர்மமாகவே தொடர்கிறது! ஜெயலலிதா மரணத்தில் பல ஆழமான சந்தேகங்கள் இன்னும் மக்கள் மனதை அழுத்திக் கொண்டே உள்ளன…! விசாரணை கமிஷன் அமைத்து ஒரே ஆண்டில் உண்மையை வெளிக் கொண்டு வருவோம் என்ற ஆட்சியாளர்கள், உச்ச நீதிமன்றத்தில் அப்பல்லோ ஏற்படுத்தியுள்ள தடையைக் கூட அகற்றாமல், ஒன்றரை ஆண்டுகளாக அலட்சியம் செய்கிறார்கள்.விசாரணையே நடக்காமல் பலகோடிகள் ஆணையத்திற்கும்,வழக்கிற்குமாக விரயமாகிக் கொண்டுள்ளதன் பின்னணி என்ன…? ’’அரசின் உயர்மட்டத்தில் இருப்பவர்களே ஜெயலலிதா மரணத்தில் உள்ள உண்மைகள் வெளிவருவதை விரும்பவில்லை…’’ என்ற குற்றச்சாட்டையும் சுலபத்தில் புறம் தள்ள முடியாதவாறு தான் பல சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன என்பதையும் நான் கவனப்படுத்த விரும்புகிறேன். இது தொடர்பாக மத்திய அரசுக்கும் தமிழகத்திலிருந்து பல புகார்கள் கொடுக்கப்பட்டன. அதிமுகவின் எம்.பி.சசிகலா புஷ்பாவே உள்துறை அமைச்சகத்தில் புகார் மனு கொடுத்தார். ஆனால், பாஜக அரசு இதில் ஏனோ துளியும் அக்கறை செலுத்தியதாகத் தெரியவில்லை. ஒரு வகையில் ஜெயலிதாவின் மரணம் அவர்களுக்கு இந்த கொத்தடிமை ஆட்சியாளர்களை ஆட்சி வைக்க கிடைத்த பொன்னான வாய்ப்பாகிவிட்டது என்பது தான் உண்மை! ஆனால்,இங்கு ஜெயலலிதாவால் வாழ்வு பெற்றவர்கள்,அதிகாரம் அடைந்தவர்கள் ஆட்சியிலிருந்தும் எந்த உண்மையும் வெளிவரவில்லையே ஏன்? ஜெயலலிதா மரணத்தில் சசிகலாவின் மீது சந்தேகத்தைக் கிளப்பியவர் பன்னீர் செல்வம். அவர் ஆர்.கே நகர் இடைத் தேர்தலில் ஜெயலலிதா பிணமாகக் கிடப்பதை கட்அவுட்டாக வைத்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு கடும் விமர்சனத்திற்கு ஆளானார். அப்படிப்பட்ட பன்னீர்…,ஜெயலலிதாவால் மூன்று முறை முதல்வராகும் வாய்ப்பு பெற்றவர் ஆறுமுகசாமி ஆணையம் ஆறு முறை சம்மன் அனுப்பியும் ஆஜராகவில்லை…! தன் பதவிக்கு ஏதாவது ஆபத்து என்றால்,தலைவி சமாதியில் அமர்ந்து தர்மயுத்தம் நடத்தும் ஒ.பி.எஸுக்கு,தலைவியின் மர்ம மரணத்திற்கு காரணமானவர்களை அடையாளம் காட்ட என்ன தயக்கம். ஒருவேளை அந்த சக்திகளோடு அவர் ஏதேனும் மறைமுக ஒப்பந்தங்களுக்கு வந்துவிட்டாரா…? அதே போல ஜெயலலிதாவால் சுகாதாரத்துறை அமைச்சராகும் வாய்ப்பு பெற்ற விஜயபாஸ்கர், ஆறுமுகசாமி ஆணையம் மீண்டும், மீண்டும் சம்மன் அனுப்பியும் ஆஜராகவில்லை. இத்தனைக்கும் ஜெயலலிதா அப்பல்லோவில் இருக்கும் 75 நாட்களும் மருத்துவமனையோடு சுகாதாரத்துறை அமைச்சர் என்ற வகையிலும், தானே ஒரு டாக்டர் என்ற வகையிலும் தொடர்பில் இருந்தவர் விஜயபாஸ்கர். அவருக்கு ஆறுமுகசாமி ஆணையத்திற்கு ஒத்துழைக்கும் கடமை உண்டு தானே? ஆனால்,ஏன் கடைசி வரை அவர் ஆணையத்தின் அழைப்பைப் புறக்கணித்தார் எனத் தெரியவில்லை. ஆறுமுகசாமி ஆணையம் உண்மையிலேயே அக்கறை காட்டியதாகத் தான் அதனுடைய அணுகுமுறைகள் இருந்தன. இது வரை அது 154 பேரை அழைத்து விசாரித்து விட்டது. ஜெயலலிதாவின் உதவியாளர்கள்,உறவினர்கள்,அரசுத் துறை அதிகாரிகள், சசிகலா மற்றும் அவரது உறவினர்கள்…பெர்சனல் டாக்டர்கள்,அரசு மருத்துவமனையை சேர்ந்த 12 மருத்துவர்கள்,எய்ம்ஸ் மருத்துவமனையைச் சேர்ந்த ஐந்து மருத்துவர்கள்…என பலதரப்பிலும் விசாரித்தது. ஆனால்,அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் மட்டும் சரியாக ஒத்துழைக்கவில்லை. பெரும்பாலும் அவர்கள் அழைத்த நேரத்திற்கு வராமல் போக்குகாட்டி வந்தனர். ஆணையம் கடும் எச்சரிக்கை செய்ததையடுத்து சிலர் வந்தனர். ஆனால், மருத்துவமனையின் சி.சி.டிவி புட்டேஜ் கேட்டபோது, அப்பல்லோ தரவில்லை. பல சந்தேகங்களுக்கு உரிய பதில் தராமல் திசைதிருப்பவும் முயன்றனர். Also read நேர்மையான தேர்தலில் விருப்பமில்லையா ஒன்றிய அரசுக்கு? ஆர் எஸ் எஸ், ஏன் நேருவை வெறுக்கிறது? பிறகு, ’’மருத்துவம் பற்றிச் சொன்னால் நீதிபதிக்குப் புரியாது.அதனால், அவர் 21 துறைகளைச் சேர்ந்த ’எக்ஸ்பர்ட்’ டாக்டர்களை வைத்துக் கொண்டு தான் விசாரிக்க வேண்டும்’’ என உயர் நீதிமன்றத்தில் வழக்குப் போட்டது,அப்பல்லோ! ஆனால், நீதிபதி தனக்கு ஏற்படும் சந்தேகங்களை அதஅதற்கான டாக்டர்களை அழைத்து தெளிவுபடுத்திக் கொண்டார் என்பதே உண்மை என்பதால், உயர் நீதிமன்றம் அப்பல்லோ மனுவை தள்ளுபடி செய்துவிட்டது. அதையடுத்து, அப்பல்லோ உச்ச நீதிமன்றத்தில் மனுசெய்து தடை பெற்று ஒன்றரை வருடத்திற்கும் மேல் ஓடிவிட்டது. உச்ச நீதிமன்றத்தில் அப்போலோ தமிழக அரசால் நியமிக்கப்பட்ட ஆணையத்தின் அதிகாரத்தையே கேள்விக்கு உட்படுத்தியுள்ளது. ’’மருத்துவ சிகிச்சை பற்றியெல்லாம் விசாரிக்க ஆணையத்திற்கு அதிகாரமில்லை.ஆணையம் தன் வரம்பை மீறுகிறது…’’ என குற்றம் சாட்டியது. அப்பல்லோவின் குற்றச்சாட்டுகள் ஆணையத்திற்கானதாக பார்க்க முடியாது.அரசுக்கானதாகவே பார்க்க வேண்டும்.ஏனென்றால், ஆணையம் அமைக்கப்பட்டதிற்கான அரசின் நோக்கங்களுக்கே அப்பல்லோ தடை ஏற்படுத்துகிறது. ஆகவே, அப்போலோ தமிழக அரசுக்கு சவால்விட்டதாகவே அர்த்தமாகிறது. அப்பலோவால் போடப்பட்ட மனுவை அரசால் ஏன் அகற்ற முடியவில்லை! ஆறுமுசாமி கமிஷன் உச்ச நீதிமன்றத்தில் போராடுகிறது. ’’ 90 சதவிகித விசாரணை முடிந்த நிலையில் ஏதோ சில உண்மைகளை மறைப்பதற்காக அப்பல்லோ இப்படியான தடைகளை ஏற்படுத்துகிறது’’ என ஆறுமுகசாமி கமிஷன் சொல்லியுள்ளது. ஆறுமுகசாமி கமிஷன் ஒரு வருடத்தில் விசாரித்து உண்மையை வெளிக்கொண்டு வரும் என அரசால் சொல்லப்பட்டது. கமிஷன் அமைக்கப்பட்டு மூன்றாண்டுகள் கடந்த நிலையில் இது வரை எட்டு முறை அதற்கு விசாரணை நீட்டிப்பு செய்யப்பட்டுவிட்டது. இந்த மாதம் மீண்டும் ஒன்பதாவது முறை நீட்டிப்பு வழங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. விசாரணை காலத்தை நீட்டிக்க, நீட்டிக்க ஒவ்வொரு மாதமும் சம்பளத்திற்காக மட்டுமே அரசுக்கு 4.26 லட்சம் செலவாகிறது. அப்பல்லோ, ’ஜெயலலிதாவிற்கு சிகிச்சை தருகிறேன்’ என பேர் பண்ணிக் கொண்டு மக்கள் பணம் பல கோடிகளை ஏப்பம்விட்டது. தற்போது விசாரணை ஆணையத்தை செயல்படவிடாமல் பல கோடிகளை அரசுக்கு நஷ்டமாக்கியுள்ளது. நாம் கேட்பதெல்லாம் இது தான்! தங்கள் தலைவியின் மரணத்தில் உள்ள ஒரு உண்மை மறைக்கப்படுவதை விலக்க அரசுக்கு ஏன் அக்கறை இல்லை? கொரானா காலத்தில், ’’மதுக் கடைகளை திறக்கக் கூடாது’’ என உச்ச நீதிமன்றத்தில் போடப்பட்ட மனுவை ஒரு சில நாட்களில் அப்புறப்படுத்த முடிந்த அரசுக்கு அப்பல்லோ விஷயத்தில் ஏன் முடியாமல் போனது? மதுக்கடைகளுக்கு தாங்கள் கொடுக்கும் முக்கியத்துவத்தைக் கூட மறைந்த தலைவிக்கு கொடுக்க மறுக்கிறார்களே ஏன்? அவர் இருக்கும் போது அவரது கண் அசைவுகளுக்கே ஓடியாடி வேலை செய்தவர்கள், மறைவுக்குப் பின் மறந்தும் கூட அவர் மரணத்தின் அநீதிகளைக் கேட்பதில்லையே! ’’அப்போலோவிற்கு,அரசுக்கும் ஏதாவது மறைமுக உடன்பாடு உண்டா?’’ என்ற சந்தேகம் மக்களுக்கு வருமா? இல்லையா? அல்லது தமிழக அரசைக் காட்டிலும் ஒரு தனியாரான அப்பல்லோ சக்தி வாய்ந்ததாக உள்ளதா? அல்லது எந்த அரசியல் சக்தி தரும் அழுத்ததால் அப்போலோ இப்படியெல்லாம் பேச வேண்டிய நிலைக்கு உள்ளானது..? எது உண்மை?
பல விஷயங்களில் தலையை நுழைத்து வழி தெரியாமல் திரிந்த எனக்கு சிற்ப கலை ஒரு அதீத மன அமைதியை தந்தது – கல்லின் மேல் ஏற்பட்ட காதல், இந்த அழியும் கலையின் மேல் ஏற்பட்ட மோகம், ஆடாமல் நின்று நம்மை நெகிழ்விக்கும் இந்த சிற்பங்கள் – அவற்றின் மொழி என்னை அவற்றின் வசம் இழுத்து ,ஆயுள் கைதி ஆக்கி விட்டது. லக்ஷ்மி அவர்களின் தளம் மிக அருமையான நம் பழைய நினைவுகளை தூண்டும் தளம். அதனால் சிற்பகலை மற்றும் சுற்றுலா இரண்டும் சேருமாறு ஒரு இடுகை தயார் செய்தேன் – அதுவே மஸ்ரூர். http://backpakker.blogspot.com/2008/09/post-from-guest-blogger-was-this.html சில மாதங்களுக்கு முன் மல்லை சோதனை சிற்பம் சார்ந்த புகை படம் தேடும் பொது, எனது சிறு வயது நண்பர் திரு ஆல்பர்ட் கண்ணில் பட்டர்,பழங்கதை பேசிவிட்டு அவ்வப்போது தொடர்பில் இருந்தோம். சில வாரங்கள் கழிந்த பின்னர், . அவர் ஹிமாச்சல பிரதேசம் சென்று அங்கு உள்ள மஸ்ரூர் ( himachal pradesh – masroor rock cut caves) குடவரை சென்றதாகவும், அங்கு எடுத்த படங்களை எனக்கு அனுப்பி வைத்தார். படங்களை பார்த்தவுடன் திகைத்து போனேன் ! 177717811783 வட இந்தியாவில் இருக்கும் குடவரை, அதுவும் மலையின் உச்சியில் இருப்பவை, எட்டாம் நூற்றாண்டு, சிவன் கோயில், ( தர்மசால அருகில் ). இதுவரை பல குடைவரைகள் நம் பார்த்தோம் – தென் இந்தியா , தெற்கு இந்தியா என்று – எனினும் ஹிமாச்சல பிரதேசத்தில் இப்படி ஒரு குடவரையா என்று திகைத்தேன். 17751779 பார்ப்பதற்கு அங்கோர் வாட் போலவே உள்ளன. அங்கோர் நிறுவியது பதினோராம் நூற்றாண்டு , மஸ்ரூரோ எட்டாம் நூற்றாண்டு. இரண்டு படங்களையும் பாருங்கள், என்ன ஒரு ஒற்றுமை , முன்னால் இருக்கும் குளத்து நீரில் கோபுரத்தின் அழகு பிரதிபலிக்கிறது. 17721785 http://news.nationalgeographic.com/news/2007/08/photogalleries/Angkor-pictures/ காலத்தினால் மிகவும் சிதைந்தாலும் மஸ்ரூர் இன்றும் அழகு தான். அங்க்கொரின் அழகும் அதன் சிதைவினால் தானே. ஒருவேளை மஸ்ரூர் அங்க்கொரின் முன்னோடியா ?
சீர்காழி: தமிழகத்தில் இருக்கும் 90 சதவீத பிரமாணர்கள் வறுமையால் வாடுகின்றனர். எனவே அவர்களுக்கு 7 சதவீத இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என அதிமுக எம்எல்ஏ எஸ்வி சேகர் வேண்டுகோள் விடுத்துள்ளார். சீர்காழி அருகே உள்ள வைத்தீஸ்வரன் கோவிலுக்கு வந்த தென்னிந்திய பிராமணர் சங்க கூட்டமைப்பின் நிறுவனத் தலைவர் எஸ்விசேகர் கூறுகையில், தமிழகம் சமூக நீதி கண்ட மாநிலம் என்று முதல்வர் கூறியுள்ளார். மாநிலத்தில் தற்போது 69 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இன்றைய சூழ்நிலையில் மிகவும் ஏழ்மையான நிலையில் உள்ள பிராமணர்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டால்தான் சமூக நீதி என்பது முழுமையடையும். பிராமணர்களின் இன்றைய நிலையை ஆய்வு செய்ய உடனடியாக ஓய்வுபெற்ற நீதிபதிகள் தலைமையில் ஒரு குழு அமைக்க வேண்டும். எங்கள் அமைப்பை பொறுத்தவரை மற்றவர்களுக்கு இடஒதுக்கீடு கொடுப்பதை தவறு என்று கூற வில்லை. எங்களுக்கும் இட ஒதுக்கீடு கொடுங்கள் என்றுதான் கேட்கிறோம். மாத்தளனில் படையினரின் எறிகணை வீச்சில் ஐ.சி.ஆர்.சி. பணியாளர் பலி தமிழகத்தில் சுமார் 40 லட்சம் பிராமணர்கள் உள்ளனர். இதில் 90 சதவீதம் பேர் வறுமையால் வாடுபவர்கள்தான். எனவே பிராமணர்களுக்கு இடஒக்கீடு வழங்க தமிழக முதல்வரால் முடியும். எனவே தமிழ்நாட்டில் உள்ள பிராமணர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப 7 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளோம். பிராமணர் சங்க கூட்டமைப்பு அரசியல் சார்ந்த அமைப்பு இல்லை என்றார் எஸ்வி சேகர்.
KineMaster என்று சொல்லக்கூடிய இந்த செயலியை KineMaster Corporation என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. இந்த செயலி 2013 டிசம்பர் 26 ஆம் நாள் கூகுள் ப்ளே ஸ்டோரில் KineMaster Corporation நிறுவனம் வெளியிட்டது. இதுவரை இந்த செயலியை 10,00,00,000 க்கும் மேற்பட்ட நபர்கள் பதிவிறக்கம் செய்துள்ளனர். தற்போது இந்த செயலியை நீங்கள் கூகுள் ப்ளே ஸ்டோரில் 75.78 எம்பிக்கு பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த செயலிக்கு ப்ளே ஸ்டோரில் இதுவரை 5 க்கு 4.4 ரேட்டிங் பெற்றுள்ளது. COMPARED TO PC SOFTWARES கணினியில் உங்களது வீடியோக்களை எடிட் செய்வதற்கு அதிகமான Adobe premiere Pro மென்பொருளாக பயன்படுத்தப்படுகிறது. அதைப்போன்று மொபைலில் வீடியோக்களை எடிட் செய்வதற்கு முதலிடத்தில் உள்ள செயலி Kinemaster. Adobe premiere Pro வில் உள்ள அனைத்து அம்சங்களும் இந்த Kinemaster application லிலும் உள்ளது. எனவே மொபைலில் வீடியோக்களை எடிட் செய்வதற்கு இந்த செயலி மிக சிறந்த ஒன்றாக உள்ளது. HOW TO USE BLACK SCREEN VIDEO EFFECT black screen video effect ஐ கொண்டு உங்களது வீடியோ அல்லது புகைப்படங்களை மேலும் அழகாக வடிவமைக்க இந்த effect உதவுகிறது. இதை எப்படி பயன்படுத்துவது என்று கூறுகிறேன். உங்களது புகைப்படங்கள் அல்லது வீடியோவில் மேல் இந்த effect ஐ வைத்துவிட்டு வீடியோவை தேர்வு செய்த பின்னர் blending என்ற ஒரு ஆப்ஷன் இருக்கும். அதில் screen என்ற ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும். பின்னர் உங்களது வீடியோ அந்த விளைவுடன் சேர்ந்து விடும். HOW To USE GREEN SCREEN VIDEO EFFECT green screen video effect கொண்டு உங்களது புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை அழகாக மாற்ற முடியும். உங்களது புகைப்படத்தின் மேல் effect வீடியோவை வைத்துவிட்டு chroma key என்ற ஒரு ஆப்சன் இருக்கும் அதை தேர்வு செய்ய வேண்டும். பின்னர் விளைவில் உள்ள அனைத்தும் உங்களது புகைப்படத்தின் மேல் சேர்ந்துவிடும். HOW To USE INTRO TEMPLATE WITHOUT TEXT இந்த Kinemaster intro template ஐ பயன்படுத்தி உங்களது YouTube Channel க்கான intro video உருவாக்க முடியும். இதில் உங்களது logo மற்றும் text மட்டும் சேர்த்து ஒரு intro வீடியோ உருவாக்கிக்கொள்ள முடியும். இதை மொபைல் மூலம் உருவாக்க முடியும் என்பது தனிச்சிறப்பு எனலாம். இந்த template ஐ கையாள்வது மிகவும் எளிமையான ஒன்று. எனவே அனைவரும் இதை பயன்படுத்தி உங்களது யூட்யூப் சேனலுக்கான இன்ட்ரோ வீடியோ உருவாக்கிக்கொள்ள முடியும். MULTIPLE LAYERS KineMaster அப்ளிகேஷனில் உங்களது விருப்பமான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை ஒன்றன்பின் ஒன்றாக layer ல் add செய்து உங்களால் வீடியோவை எடிட் செய்து கொள்ள முடியும். Video Edit செய்ய பல செயலிகள் இருந்தாலும் இந்த சிறப்பம்சம் Kinemaster அப்ளிகேஷனில் மட்டுமே உள்ளது. BLENDING MODE கூகுள் ப்ளே ஸ்டோரில் வீடியோ எடிட் செய்வதற்காக பல செயலிகள் உள்ளது. ஆனால் அவற்றை எதிலுமே இந்த Blending ஆப்ஷன் கிடையாது. இந்த செயலில் மட்டுமே உள்ளது. இந்த blending ஆப்ஷனை பயன்படுத்தி உங்களது விருப்பமான வீடியோ மற்றும் புகைப்படங்களை ஒன்றாக இணைக்க முடியும். CHROMA KEY வீடியோவின் background ஐ அளிக்க இந்த chroma key ஆப்ஷன் பயன்படுகிறது. வீடியோவின் background ஒரே கலராக இருந்தாள் சுலபமாக நீக்க முடியும். உதாரணமாக வீடியோவின் background பச்சை நிறத்தில் இருந்தால் remove செய்வதற்கு எளிதாக இருக்கும்.வீடியோவின் கலர் எது என்று தெரிந்து கொண்டு remove செய்யும்போது key colour அதே கலராக செலக்ட் செய்ய வேண்டும். அப்போதுதான் வீடியோவின் பின்புற பேக்ரவுண்ட் ரிமூவ் செய்ய முடியும். VOICE RECORDING வீடியோவை எடிட் செய்யும்போது தேவையான இடத்தில் உங்களது குரலை பதிவு செய்ய இந்த செயலியில் அதற்கான அம்சமும் உள்ளது. குரலைப் பதிவு செய்வதற்கு கூகுள் ப்ளே ஸ்டோரில் பல செயலிகள் உள்ளது. இருப்பினும் உங்களது வீடியோக்களை நீங்கள் எடிட் செய்யும்போதே voice record செய்வதற்கு இந்த செயலியில் அம்சம் உள்ளது. HANDWRITING இந்த அம்சம் மூலம் உங்களது வீடியோக்களில் தேவையான இடத்தில் சில குறியீடுகளை அமைக்க முடியும். இதனால் உங்களது வீடியோக்களை பார்க்கும் பார்வையாளர்களுக்கு நீங்கள் கூற விரும்புவது குறியீடு மூலம் காட்டும்போது அவர்களுக்கு எளிதாக புரியும். VOICE CHANGER உங்களது உண்மையான குரலை மாற்றவும் அல்லது வீடியோவில் உள்ள பிற குரலை வேறு குரலாக மாற்றவும் இந்த ஆப்ஷன் பயன்படுகிறது. உதாரணமாக உங்களது குரலை robot பேசினால் எப்படி இருக்குமோ அதுபோன்று மாற்றவும் இந்த செயலியில் அம்சங்கள் உள்ளது. EQ MODES ஆடியோவில் விளைவுகளை ஏற்படுத்த இந்த ஆப்ஷன் பயன்படுகிறது. இதன் மூலம் உங்களது ஆடியோ கேட்பதற்கு தெளிவாக இருக்கும். உதாரணமாக கூறினால் rock, classic இதுபோன்ற ஆடியோ filter இதில் உள்ளது. இதை பயன்படுத்தும் போது உங்களது ஆடியோ கேட்க இனிமையாக இருக்கும். PREMIUM COLOUR FILTER வீடியோ மற்றும் புகைப்படங்களில் கலரை பிடித்த மாதிரி மாற்றிக்கொள்ள இந்த colour filter ஆப்ஷன் பயன்படுகிறது. இதை பயன்படுத்திப் பார்த்தால் மட்டுமே அதன் அனுபவம் உங்களுக்கு தெரியும். EXPORT QUALITY இந்த செயலியை பயன்படுத்தி நீங்கள் edit செய்யும் வீடியோக்களை 4K 60fps வரை output எடுத்துக்கொள்ள முடியும். இதன் மூலம் வீடியோ பார்க்க தெளிவாக இருக்கும். உங்களுக்குப் பிடித்த format ல் வீடியோக்களை மாற்றிக் கொள்ளவும் முடியும். உதாரணமாக உங்களுக்கு 720p 30fps வரை போதும் என்றால் அந்த quality ல் வீடியோக்களை அவுட்புட் எடுத்துக்கொள்ளலாம். SPEED CONTROL உங்களது வீடியோக்களை வேகமாக மற்றும் மெதுவாக இயக்க இந்த ஸ்பீட் கண்ட்ரோல் ஆப்சன் பயன்படுகிறது. இதன் மூலம் உங்களது வீடியோவை தேவையான இடத்தில் வேகமாக இயக்கவும் அல்லது மெதுவாக இயக்கவும் முடியும். இதை பயன்படுத்தி எடிட் செய்யும்போது பார்வையாளர்களை கவர்ந்து இழுக்க முடியும். ஏனென்றால் வேகமாக நடக்கும் நிகழ்ச்சியை மெதுவாக பார்க்கும் அனுபவம் புதிதாக இருக்கும். VIDEO REVERSE MODE ஒரு நிகழ்வை தொடக்கத்திலிருந்து பார்க்காமல் கடைசியிலிருந்து முதல் பகுதிக்கு மாற்றி பார்க்க இந்த ரிவர்ஸ் ஆப்சன் பயன்படுகிறது. உதாரணமாக உங்களுக்குப் புரியும் படி கூறினாள் ஒரு மிதிவண்டி சென்றுகொண்டிருக்கிறது அதை அப்படியே பின்புறமாக வரச்செய்யுவும் மற்றும் பழையபடியே அதை செயல்படுத்தவும் பயன்படும் ஆப்ஷன் video reverse option ஆகும். CLIP GRAPHICS இந்த ஆப்ஷனை பயன்படுத்தி உங்களது வீடியோக்களின் நடுவில் புதிய விளைவுகளை ஏற்படுத்த முடியும். உதாரணமாக கூறினால் ஒரு வீடியோவை நடுவில் இரண்டாக கட் செய்திருந்தால் அந்த இடத்தில் ஒரு புதிய effect கொடுக்க முடியும். இதன் மூலம் ஒரு வீடியோவில் இருந்து மற்றொரு வீடியோவிற்கு மாறும்பொழுது நீங்கள் ஏற்படுத்திய effect நடுவில் இருக்கும். அப்பொழுது அந்த வீடியோவை பார்க்க அழகாக இருக்கும். ROTATE AND MIRRORING வீடியோ மற்றும் புகைப்படங்களை உங்களுக்கு ஏற்றார்போல் ஏற்ற திசைக்கு மாற்றிக்கொள்ள இந்த rotate and mirror option பயன்படுகிறது. உதாரணமாக கூறினால் உங்களது வீடியோ கிழக்கு திசையை பார்த்து இருந்தால் அதை மேற்கு மற்றும் உங்களுக்கு பிடித்த திசையில் மாற்றிக்கொள்ள இந்த ஆப்ஷன் பயன்படுகிறது.இதை உங்கள் புகைப்படங்கள் மற்றும் வீடியோவில் பயன்படுத்திக் கொள்ளலாம். COLOUR ADJUSTMENT உங்களது வீடியோ மற்றும் புகைப்படங்களில் கலர் கம்மியாக இருந்தால் உங்களது வீடியோ மற்றும் புகைப்படங்களை பார்க்கும்போது ஒரு தெளிவு இருக்காது.அப்படி இருக்கும் உங்களது வீடியோ மற்றும் புகைப்படங்களை இந்த கலர் அட்ஜஸ்ட்மெண்ட் ஆப்ஷனை பயன்படுத்தி தேவையான இடத்தில் contrast, level, brightness அட்ஜஸ்ட் செய்யும் போது பார்க்க ஒரு அளவுக்கு தெளிவாகவும் மற்றும் அழகாகவும் மாற்ற இந்த ஆப்ஷன் பயன்படுகிறது. VOLUME ENVELOPE இந்த ஆப்ஷன் Kinemaster அப்ளிகேஷனை அடுத்த லெவலுக்கு கொண்டு செல்ல உதவியது எனலாம். ஏனெனில் இந்த ஆப்சன் கணினியில் எடிட் செய்வதற்கு மட்டுமே உள்ளது.ஆண்ட்ராய்டு செயலியில் அரிதாக காணலாம். இதன்மூலம் உங்களது வீடியோ மற்றும் ஆடியோவில் தேவையான இடத்தில் வால்யூம் அதிகப்படுத்தவும் தேவையற்ற இடத்தில் வால்யூம் முழுமையாக குறைக்கவும் முடியும். VIGNETTE இதைப் பயன்படுத்தி வீடியோ மற்றும் புகைப்படங்களின் கரையில் கருநீல ஷேடோ ஏற்படுத்தமுடியும்.இதனால் நடுவிலுள்ள அனைத்தும் தெளிவாக பார்க்க முடியும். இதற்காக இந்த ஆப்ஷன் பயன்படுத்துகிறோம். இது வீடியோவை தனித்துவமாக காட்ட உதவுகிறது. EXTRACT AUDIO இதுவும் ஒரு சிறந்த அம்சம் எனக் கூறலாம்.ஏனெனில் வீடியோ எடிட் செய்யும் போது அந்த வீடியோவுக்காண பாடல் உங்களிடம் இல்லை என்றாலும் அந்த ஆடியோவிற்கான வீடியோ உங்களிடம் இருந்தால் அந்த வீடியோவில் இருந்து ஆடியோவை தனியாக பிரித்தெடுக்க முடியும்.நீங்கள் பாடல் டவுன்லோட் செய்யாமலே உங்களுக்கு தேவையான பாடலை தனியாக எடுத்துக்கொள்ள இந்த ஆப்ஷன் பயன்படுகிறது. TRIM AND SPLIT வீடியோ, ஆடியோ மற்றும் புகைப்படங்களை தேவையில்லாத இடத்தை cut செய்ய trim and split ஆப்ஷன் பயன்படுகிறது.கூகுள் ப்ளே ஸ்டோரில் வீடியோ எடிட் செய்வதற்கான செயலிகள் பல உள்ளது.அவற்றை ஒப்பிடும்போது இந்த செயலியில் நாம் விரும்பும் இடத்தை சரியான இடத்தில் வெட்டி மற்றொரு இடத்தை சேர்க்கவும் முடியும். PAN AND ZOOM இந்த ஆப்ஷன் மூலம் உங்களது வீடியோக்களை பார்வையாளர்களுக்கு மிக அருகாமையில் காட்ட இந்த ஆப்ஷன் பயன்படுகிறது.உதாரணமாக கூறினால் மிக பின்புறத்தில் உள்ள ஒரு சப்ஜெக்ட்டை மிக அருகாமையில் அதாவது திரைக்கு முன்பாக மிக அருகே கொண்டுவர இந்த ஆப்ஷன் பயன்படுகிறது. PREMIUM TEXT இந்தச் செயலியில் அளவுக்கு அதிகமான அகராதிகள் உள்ளது. உங்களுக்கு பிடித்த மொழியை பதிவிறக்கம் செய்து கொள்ளவும் முடியும். Kinemaster asset Store ல் உங்களுக்கு தமிழ்மொழி தேவை என்றால் தமிழ் மொழியை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இந்த செயலியில் default ஆக ஆங்கில அகராதிகள் உள்ளது. OVERLAY AND STICKERS வீடியோ மற்றும் புகைப்படங்களை மேலும் அழகாக்க இந்த ஓவர்லே அண்ட் ஸ்டிக்கர்ஸ் ஆப்ஷன்ஸ் பயன்படுகிறது.உதாரணமாக கூறினால் உங்களது வீடியோவில் தீப்பொறி பறப்பதுபோல் விளைவை ஏற்படுத்தவும் மற்றும் உங்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறுவதுபோல் விளைவுகளையும் ஏற்படுத்த முடியும். ANIMATION AND TRANSITION EFFECTS எழுத்துக்களில் விளைவுகளை ஏற்படுத்த அனிமேஷன் எபெக்ட்ஸ் பயன்படுகிறது. Transition புகைப்படங்கள் மற்றும் வீடியோவில் விளைவுகளை ஏற்படுத்த உதவுகிறது.தொடக்கம் மற்றும் முடிவில் ஒரு அனிமேஷனை பயன்படுத்த முடியும்.தெளிவாகக் கூறினால் ஒரு எழுத்துக்களின் தொடக்கத்தில் ஒரு விளைவையும் அந்த எழுத்து மறையும் பொழுது ஒரு விளைவையும் கொடுக்க முடியும். KINEMASTER TIPS: WHY DO I HAVE IMAGE INSERT OF MEDIA ? இந்த செயலியில் லேயர் ஆப்ஷனில் மீடியாவிற்கு பதிலாக இமேஜ் என்று இருந்தால் வீடியோக்களை பயன்படுத்த முடியாது. அதை எப்படி மீடியா என மாற்றுவது என்று கூறுகிறேன்.Kinemaster அப்ளிகேஷனை ஓபன் செய்ததும் ரேஷியோ செலக்ட் செய்வதற்கு கீழ் ஒரு கியர் ஐகான் இருக்கும்.அதை கிளிக் செய்த பிறகு பல ஆப்ஷன்ஸ் அதில் வரும் அவற்றில் மூன்றாவதாக DEVICE CAPABILITY INFORMATION என்று ஒரு ஆப்ஷன் இருக்கும் அதை கிளிக் செய்த பிறகு உங்கள் மொபைலை பற்றிய விவரங்கள் அதில் கூறப்பட்டிருக்கும்.அதன்பிறகு மேலே மூன்று புள்ளிகள் இருக்கும் அதை கிளிக் செய்யுங்கள். செய்தபிறகு RUN ANALYSIS NOW என்று வரும் அதை கிளிக் செய்யுங்கள். செய்தபிறகு இரண்டிலிருந்து மூன்று நிமிடங்கள் அது பிராசசிங் ஆகும். அதுவரை வேறு எந்த ஒரு செயலிக்கும் நீங்கள் செல்லக்கூடாது.இது நீங்கள் செய்தபிறகு அப்ளிகேஷனை ஓபன் செய்து பாருங்கள் லேயரில் இமேஜ் என்று இருந்தால் அது மீடியாவாக மாற வாய்ப்பு உள்ளது. இந்த முறையைப் பயன்படுத்தி அனைவருக்கும் மாறும் என்றால் அது கிடையாது. உங்களது மொபைலின் process ஐ பொருத்து மாறக்கூடும்.
கோவா என்கிற தலைப்பின் கீழ் தவிர்க்கவே முடியாத ஒரு விஷயம் கஸினோ. கோவாவில் நிறைய கஸினோக்கள் உள்ளன. தோராயமாக பதினைந்து என்று அறிகிறேன். அவற்றில் சில மட்டும் மண்டோவி நதியில் மிதந்தபடி உள்ளன. மற்றவை நிலப்பகுதியில். சூதாட்டத்தில் பெரிய ஆர்வமில்லாத சாதாரண சுற்றுலா பயணிகளை பொறுத்தவரையில் கஸினோக்களின் கிக்கே அவை தண்ணீரில் மிதக்கின்றன என்பதும் நாம் அங்கே தண்ணீரில் மிதக்கலாம் என்பதும்தான். அதனால் எங்கள் வரைவுத் திட்டத்தில் மிதக்கும் கஸினோக்களை மட்டும் கணக்கில் கொண்டோம். அது ஏன் கஸினோக்கள் மிதக்கின்றன என்பதற்கு பின்னால் ஒரு வரலாறு உண்டு. இந்தியாவின் PUBLIC GAMBLING ACTன் படி சூதாட்டத்திற்கு இந்தியாவில் அனுமதி இல்லை. ஆனால் எல்லா சட்டத்திலும் ஒரு லூப்ஹோல் இருக்குமில்லையா ? அதன்படி இந்திய ‘மண்ணில்’ சூதாட்டத்திற்கு அனுமதி இல்லை என்றுதான் சொல்லப்பட்டிருக்கிறது. சமயோஜிதமாக இதனை பயன்படுத்தி 1999ம் ஆண்டு, மண்டோவி நதியில் கப்பலில் மிதக்கும் கஸினோ துவங்கப்பட்டது. அதே சமயம் விரைவிலேயே கோவாவின் மண்ணிலும் கஸினோக்களுக்கு அனுமதி அளிக்கும் சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டுவிட்டது. மிதக்கும் கஸினோக்களை பொறுத்தவரையில் இரு பெரும் நிறுவனங்கள் தங்கள் கிளைகளை பரப்பி வைத்திருக்கின்றன. முதலாவது கஸினோ ப்ரைட் குரூப். இவர்கள் சார்பாக கஸினோ ப்ரைட் மற்றும் கஸினோ ப்ரைட் 2 ஆகிய இரண்டு கப்பல்கள் இயங்குகின்றன. இரண்டாவது, டெல்டின் குரூப். இவர்கள் சார்பாக டெல்டின் ராயல், டெல்டின் ஜாக் மற்றும் டெல்டின் கேரவெல்லா ஆகிய கப்பல்கள் இயங்குகின்றன. நாங்கள் யாரும் இதுவரை கோவாவுக்கும் சென்றதில்லை, கஸினோவுக்கும் சென்றதில்லை என்பதால் எங்களுக்கு அது குறித்து நிறைய சந்தேகங்களும், தயக்கங்களும் இருந்தன. நேரக் கட்டுப்பாடு உள்ளதா, உணவும் மதுவும் டிக்கட் விலையில் அடக்கமா, சூதாடாமல் உணவுக்காகவும் மதுவுக்காகவும் செல்லலாமா, சூதாடாமல் சும்மா உட்கார்ந்திருந்தால் இலவச மது கிடைக்குமா, சூதில் ஜெயித்தால் பணம் கொடுப்பார்களா இப்படி நிறைய சில்லறை சந்தேகங்கள். பார்த்துப் பார்த்து அலசினோம். சில கேள்விகளுக்கு இணையத்தில் கூட தெளிவான பதில்கள் இல்லை. விலையைப் பொறுத்தவரையில் கஸினோ ப்ரைட் குரூப்பின் இரு கப்பல்களிலும் வார நாட்களில் ரூ.1500, வார இறுதியில் ரூ.2000, டெல்டின் குரூப் கப்பல்களில் ரூ.2500 முதல் ரூ.3500 வரை இருந்தன. கஸினோ ப்ரைட் கப்பல்கள் பற்றி பயணிகளின் விமர்சனக் குறிப்புகள் மோசமாகவே இருந்தன. கூட்டமாக இருக்கும், பயணிகளை மரியாதையாக நடத்துவதில்லை என்று நிறைய பேர் எழுதியிருந்தார்கள். நாங்களும் இருப்பதிலேயே குறைவான கட்டணம் கொண்ட கஸினோவைத் தேடிச் செல்ல விரும்பவில்லை. ஒற்றைமுறை அனுபவம் தானே ! அதனால் டெல்டின் குரூப்பில் உள்ள டெல்டின் ராயல் கஸினோவிற்கு செல்வதென்று தீர்மானித்திருந்தோம். இருப்பினும் நேரடியாக டெஸ்கிற்கு சென்று கூடுதல் சந்தேகங்களைக் கேட்க வேண்டும் என்றும் நினைத்திருந்தோம். இந்த மிதக்கும் கஸினோக்கள் அனைத்தும் வடக்கு கோவாவிலிருந்து தெற்கு செல்லும் பாதையில் தான் அமைந்துள்ளன. அதனால் அவற்றைக் கடந்து செல்லும் போதே விசாரித்துவிடலாம் என்று சென்றோம். விசாரணையின்போது எங்கள் பட்டியலிலேயே இல்லாத ஆடைக்கட்டுப்பாடு என்கிற புதிய விதியை தெரிந்துக்கொண்டோம். பொதுவாக க்ளப்களில் உள்ள விதிகள்தான். டெல்டின் குரூப் என்பதை ஒரு மனதாக தீர்மானித்துவிட்டோம். ஆனால் டெல்டின் ராயலா அல்லது கேரவெல்லாவா என்று குழப்பமாக இருந்தது. இரண்டிலும் டிக்கட் விலை அதே ரூ.3000. கொஞ்ச நேரம் வெளியே நின்று கண்காணித்தோம். வருகிற கூட்டம் பெரும்பாலும் டெல்டின் ராயலையே தேர்வு செய்தனர். கேரவெல்லா பக்கம் யாரும் ஒதுங்கியதாகத் தெரியவில்லை. ஆனால் எனது உள்ளுணர்வோ கேரவேல்லா பக்கம் ஒதுங்கியது. இந்த மொத்தக் கூட்டமும் ராயலுக்குப் போய் கும்மியடிக்கும், நசநசவென்று அவர்களுக்கு மத்தியில் இருப்பதை விட, தனியாக கேரவெல்லாவிற்கு போய்விடலாமே என்பது என் எண்ணம். எதற்கு குழம்புவானேன் என்று நேரடியாக டெல்டின் குரூப் வரவேற்பு மேஜைக்கு சென்று, சுற்றி வளைக்காமல் ஒரு முக்கியமான கேள்வியை நேரடியாக முன்வைத்தோம். அந்த கேள்வி – நாங்கள் முதல்முறை கஸினோவுக்கு வருகிறோம். எங்களுக்கு கஸினோ பற்றி அவ்வளவாகத் தெரியாது. நாங்கள் வெளியிலிருந்து கவனித்தபோது பெரும்பாலானோர் டெல்டின் ராயலையே தேர்வு செய்கிறார்கள். இரண்டும் உங்களுடைய கஸினோக்கள், இரண்டுக்கும் ஒரே கட்டணம் என்று அறிகிறோம். இரண்டுக்கும் அப்படி என்னதான் வித்தியாசம் ?. அதற்கு வரவேற்பு மேஜையிலிருந்த சிப்பந்தி கூறிய பதிலின் சாராம்சம் என்னவென்றால் டெல்டின் ராயலில் ஆட்டம், பாட்டம், சினிமா பாட்டு என்று கொண்டாட்டமாக இருக்கும். கொள்ளளவு அதிகம். அதே சமயம் டெல்டின் கேரவேல்லாவில் டான்ஸ், சினிமா பாட்டு எல்லாம் இல்லாமல் லைவ் மியூஸிக் மட்டும் இருக்கும். கொள்ளளவு குறைவு. பொதுவாக குழுவாக வருபவர்கள் டெல்டின் ராயலைத் தான் தேர்ந்தெடுப்பார்கள் என்றார். அவர் சொன்னதில் இருந்து சுருக்கமாக டெல்டின் ராயல் – மாஸ், டெல்டின் கேரவெல்லா – கிளாஸ் என்று புரிந்துகொண்டோம். இவ்வளவையும் சொல்லி முடித்துவிட்டு, நீங்கள் டெல்டின் ராயலைத் தானே தேர்வு செய்யப் போகிறீர்கள் என்றார் சிப்பந்தி. நாங்கள் இல்லை என்றோம். கிட்டத்தட்ட படையப்பா படத்தில் ரம்யா கிருஷ்ணன் கூலர்ஸைக் கழட்ட, ரஜினி கூலர்ஸை மாட்டும் காட்சிக்கு இணையான கெத்தான தருணம் அது ! அன்றிரவு கிட்டத்தட்ட ஒன்பது மணியளவில் கஸினோவுக்கு சென்றோம். முடிந்தால் விடியும்வரை அங்கேயே நேரம் செலவிட வேண்டும் என்று திட்டம். கட்டணம் ரூ.3000. OTPC எனும் ஒருமுறை மட்டும் விளையாடக்கூடிய டோக்கன் ரூ.5000 மதிப்புக்கு டிக்கட்டுடன் தருகிறார்கள். இதனை பணமாக்க முடியாது. சிப்பந்தி ஒருவர் கப்பலுக்கு தகவல் கொடுக்க, நம்மை அழைத்துச் செல்வதற்காக ஒரு சிறிய படகு வருகிறது. சில நிமிடப் பயணம். மீன்வடிவ கப்பலில் கஸினோ இயங்குகிறது. கப்பலின் நுழைவாயிலிலும் நம்மை வரவேற்பதற்காக சிப்பந்திகள் காத்திருக்கிறார்கள். ராயலான வரவேற்பு என்றுதான் சொல்ல வேண்டும். கீழ் தளம் சூதாட்டக்கூடம். மேல்தளம் உணவகம். இடையில் உள்ள இரு தளங்கள் சூட் அறைகள். வெளியூரிலிருந்து வரும் வி.ஐ.பி. சூதாடிகள் இங்கேயே அறை எடுத்துத் தங்கி சூதாடுவார்கள் என்று கேள்வி. உணவகம் நள்ளிரவு இரண்டு மணிக்கு மூடப்பட்டு விடும் என்று விசாரித்து வைத்திருந்ததால் நேராக மேலடுக்கில் உள்ள உணவகத்திற்கு சென்றோம். கண்ணாடியில் மூடப்பட்ட ஒரு அறை, திறந்தவெளி என்று இரண்டு பகுதியாக அமைந்திருந்தது. கூட்டம் அதிகமில்லை. கண்ணாடி அறையில் ஒரு வெள்ளைக்காரர் ஹிந்தியில் சிதார் என்று சொல்லப்படக்கூடிய ஒரு இசைக்கருவியை மெய்மறந்து வாசித்துக் கொண்டிருக்க ஒரு பத்து, பதினைந்து வாடிக்கையாளர்கள் மட்டும் உள்ளே அமர்ந்திருந்தார்கள். திறந்தவெளியில் யாருமில்லை. நாங்கள் திறந்தவெளியை ஆக்கிரமித்துக்கொண்டோம். அளவில்லா உணவும், மதுவும். சிக்கன், மட்டன், கடல் உணவு, சைவம், பிரதான உணவு, உப உணவு என்று கலவையாக ஒரு இருபது ஐட்டம் கொண்ட மெனு தருகிறார்கள். அவற்றில் நமக்கு எது வேண்டுமோ ஆர்டர் செய்து சாப்பிட்டுக் கொண்டே இருக்க வேண்டியதுதான், எவ்வளவு வேண்டுமென்றாலும். உணவே இப்படி என்றால் மது வேற லெவல். உள்நாடு வெளிநாடு பாரபட்சமில்லாமல் அத்தனையும் நுழைவு கட்டணத்திற்குள் உட்பட்டது. இதுபோக மாக்டெயில், காக்டெயில், ப்ரீஸர் என்று அத்தனையும். மேல்தளம் பகட்டான ஒரு இடத்திற்கு சென்றுவிட்டு சில்லறைத்தனமாக சரக்கடித்து மட்டையாகும் நிலை ஏற்பட்டுவிடக்கூடாது என்பதால் கொஞ்சம் நிதானமாகவே நடந்துகொண்டோம். இட்லிய சாம்பார்ல பெனஞ்சு அடிடா லெவலுக்கெல்லாம் இறங்காமல் மெதுவாக சாப்பிட்டோம். அதே சமயம் நிறைவாகவும். கிட்டத்தட்ட இரவு ஒன்பதரை மணிக்கு தொடங்கிய ஆட்டம், இரண்டு மணிக்கு உணவகம் மூடும் சமயம்தான் முடிவுக்கு வந்தது. அதுவரை பொறுமையாக உண்டும், குடித்தும் தீர்த்தோம். உண்மையில் அதுவரையில் எங்களுக்கு சூதாடும் எண்ணம் இல்லை. ஏனென்றால் எங்களுக்கு சூதுவாது தெரியாது. இருந்தாலும் விடியும் வரை நேரம் செலவிட வேண்டும் (ஹைவேயில் இருட்டில், போதையில் வாகனம் ஓட்டுவதைத் தவிர்க்க) என்பதாலும், OTPCயை காலி செய்ய வேண்டும் என்பதாலும் சூதாட்டத் தளத்திற்கு சென்றோம். சுற்றி பத்து, பதினைந்து மேஜைகள் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு விளையாட்டு, மற்றும் அதனை சொல்லித்தரவும், கண்டக்ட் செய்யவும் வடகிழக்கு யுவதிகள். அங்கேயும் சிப்பந்திகள் மது மற்றும் மது அல்லாத பானங்களை செர்வ் செய்துக்கொண்டிருந்தார்கள். நாங்கள் மூவர் என்பதால் மொத்தம் 15000 ரூபாய்க்கு டோக்கன் கைவசம் இருந்தது. அங்கே இருப்பதிலேயே ஒரு எளிய விளையாட்டைக் கண்டுபிடித்தோம். எங்களிடம் உள்ள டோக்கன் வைத்து சில ஆட்டம் விளையாடுவோம், அதில் ஒன்றிரண்டு வெல்வோம், அப்புறம் வந்து ஓரமாக உட்கார்ந்து ப்ரீஸர் குடிப்போம். இப்படியே அதிகாலை ஐந்து மணிவரை விளையாடிக்கொண்டிருந்தோம். இறுதியில் ரூ.10500 வென்றிருந்தோம். இங்கே ஒரு விஷயம், பொதுவாக சூதில் பணம் வெல்பவர்கள் அதனை சூதிலேயே முழுக்க தொலைத்துவிட்டு தான் வீடு போய் சேர்வார்கள். (விதிவிலக்குகள் உண்டு). நாங்கள் அப்படி வென்ற பணத்தை, அங்கேயே தொலைக்காமல் உடனடியாக கவுண்ட்டருக்கு சென்று அதனை பணமாக மாற்றிக் கொண்டு அங்கிருந்து விடைபெற்றோம். ஆக, டிக்கட் கட்டணம் மூவருக்கும் சேர்த்து ரூ.9000, வென்ற தொகை – ரூ.10500. ஆயிரத்து ஐநூறு ரூபாய் லாபம் மற்றும் ஒரு இரவு முழுக்க உணவு, மது, கேளிக்கை அத்தனையும் இலவசம் ! ஒருவேளை நாங்கள் அந்த பணத்தை வென்றிருக்காவிட்டால் கூட உணவுக்கும், மதுவுக்கும், அங்கே கிடைக்கும் ரம்மியமான அனுபவத்திற்கும் மூன்றாயிரம் ரூபாய் வொர்த்து ! பொதுவாக கஸினோ பற்றி சுற்றுலா பயணிகள் அறிந்துகொள்ள வேண்டிய முக்கிய குறிப்புகள் :- - 21 வயதிற்குட்பட்டவர்கள் அனுமதி இல்லை. - டிக்கட் வாங்கும்போது புகைப்படத்துடன் கூடிய அரசாங்க அடையாள அட்டை காண்பிக்க வேண்டும். - டிக்கட் விலை நீங்கள் தேர்ந்தெடுக்கும் கஸினோவைப் பொறுத்து ரூபாய் ஆயிரத்து ஐநூறிலிருந்து நான்காயிரம் வரை ஆகிறது. வார இறுதியில் வார நாட்களை விட ஐநூறு கட்டணம் அதிகம். - கண்டிப்பான டிரஸ் கோட் உண்டு. ஷார்ட்ஸ், பெர்முடாஸ், ஸ்லீவ்லெஸ், ரவுண்ட் நெக் டீ-ஷர்ட்ஸ் அனுமதி இல்லை. ஷூ கட்டாயம். - லக்கேஜ், முதுகுப்பை உள்ளே கொண்டு செல்ல அனுமதி இல்லை. அவற்றை வெளியே வரவேற்பறையில் வைத்திருந்து பாதுகாக்க வேண்டுமென்றால் ஒரு பைக்கு ரூ.500 கட்டணம். - நேரக்கட்டுப்பாடு எதுவும் இல்லை. எப்போது வேண்டுமானாலும் உள்நுழைந்து, எப்போது வேண்டுமானாலும் வெளியேறலாம். ஆனால் ஒருமுறை வெளியேறிவிட்டால் டிக்கட் காலாவதியாகிவிடும். - அளவில்லா உணவும், மதுவும் டிக்கட் கட்டணத்திற்கு உட்பட்டது. - உள்ளே போட்டோ, வீடியோ எடுக்க அனுமதி இல்லை என்றாலும் உணவகப் பகுதியில் இதனை அவ்வளவாக கண்டுகொள்வது இல்லை. எங்களுடைய கோவா பயணத்தில் எங்களுக்கு அதிக மகிழ்ச்சியைத் தந்த இடமென்றால் அது கஸினோதான். குறிப்பாக, கேரவெல்லா அல்லாமல் வேறு கஸினோவைத் தேர்ந்தெடுத்திருந்தால் இவ்வளவு நல்ல அனுபவம் கிடைத்திருக்குமா என்பது சந்தேகம். கோவா செல்லும் அனைவரும் ஒருமுறையாவது கஸினோ செல்ல வேண்டும் என்பது என் பரிந்துரை. அடுத்த கட்டுரையில் கோவாவின் இன்னொரு முகமான தெற்கு கோவாவைப் பற்றி பார்க்கப் போகிறோம். அடுத்து வருவது: கோவா - தெற்கின் அழகு என்றும் அன்புடன், N.R.PRABHAKARAN Post Comment உதிர்த்தவன் Philosophy Prabhakaran உதிர்த்த நேரம் 09:17:00 வயாகரா... ச்சே... வகையறா: கோவா, பயணம் Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest 4 பேர் கருத்து சொல்லியிருக்காங்க 17 June 2019 பிரபா ஒயின்ஷாப் – 17062019 அன்புள்ள வலைப்பூவிற்கு, பொள்ளாச்சி சூளேஸ்வரன்பட்டியில் ஒயின்ஷாப் எழுத, சிந்திக்க இணக்கமான சூழல் அமையாததால் கடந்த வாரம் ஒயின்ஷாப் வெளியாகவில்லை. ப்ச்... திங்கட்கிழமைக்கும் ஒயின்ஷாப்பிற்கும் உள்ள மரபு உடைந்ததில் கொஞ்சம் வருத்தம். ******************** ஒரு சிறிய கதையுடன் (சிறுகதை ?) இவ்வார ஒயின்ஷாப்பை துவங்கலாம். ஒரு பதின்பருவ பெண். அவளது அம்மா இறந்துவிட்டார். அப்பா இரண்டாவது திருமணம் செய்துகொள்கிறார். சித்தியை அவளுக்கு பிடிக்கவில்லை. அவள் தனது அப்பா மற்றும் சித்தியுடன் புதுவீட்டில் குடியேறுகிறாள். ஆனால் புதுவீட்டில் நடக்கும் சில வினோத சம்பவங்கள் அத்தனை மகிழ்ச்சியானதாக இல்லை. கீழ் தளத்தில் இருக்கும்போது மேல் தளத்தில் யாரோ நடக்கும் சத்தம் கேட்கிறது. இவர்கள் வெளியே போய்விட்டு வரும்போது வீட்டிற்குள் யாரோ வந்துபோன தடயங்கள் தெரிகின்றன. உச்சகட்டமாக ஒருநாள் அவள் உடை மாற்றுகையில் யாரோ ஒருவன் அவளை வீட்டிற்குள் மறைந்திருந்து பார்ப்பதை உணர்கிறாள். உடனே தன் அப்பாவிடம் சென்று முறையிடுகிறாள். அப்பாவும் சித்தியும் இதுகுறித்து ஆலோசிக்கிறார்கள். மகளுக்கு புதுவீடு பிடிக்காததால் தான் இப்படியெல்லாம் புகார் சொல்கிறாள் என்று முடிவுக்கு வருகிறார்கள். வினோத நிகழ்வுகள் தொடர்கின்றன. இந்த வீட்டில் ஏதோ விஷயம் இருக்கிறது என்பதை புரிந்துகொள்ளும் மகள் வீட்டைப் பற்றியும், அங்கே இதற்கு முன்பு குடியிருந்தவர்களைப் பற்றியும் பக்கத்து வீடுகளில் விசாரிக்கிறாள். அந்த வீட்டில் இதற்கு முன்பு ஒரு கணவன், மனைவி அவர்களது மகளுடன் வசித்து வந்ததாகவும், அவர்கள் ஒருநாள் மர்மமான முறையில் இறந்துபோனதாகவும் தெரிந்துகொள்கிறாள். வீடு திரும்பியதும் வீட்டிலுள்ள பழைய ஸ்டோர் ரூமில் இதற்கு முன் குடியிருந்தவர்களுடைய சில பொருட்கள் இறைந்து கிடப்பதை கவனிக்கிறாள். அதிலிருந்த ஒரு குடும்ப புகைப்படத்தை பார்க்கிறாள். அக்கம் பக்கத்து வீடுகளில் சொன்ன கணவன், மனைவி, மகள் குடும்பம். அவளது பயம் அதிகமாகிவிடுகிறது. அதே வீட்டில், அதே போல குடும்பமாக வசிக்கும் இவர்களுக்கும் ஆபத்து ஏற்படலாம் என்று நினைக்கிறாள். அதே சமயம் அப்பாவிடமும், சித்தியிடமும் எப்படி புரிய வைப்பது என்று தவிக்கிறாள். அவளுக்கு அந்த சிரமம் ஏற்படாமல், அடுத்தடுத்த வினோத அனுபவங்கள் அப்பாவுக்கும், சித்திக்குமே ஏற்படுகின்றன. அவர்களுக்கோ பக்கத்து வீட்டிலுள்ள வினோதமான ஆசாமியின் மீது சந்தேகம். அவனது பார்வையே சரியில்லை என்கிறாள் சித்தி. அப்பா மின்னணு பூட்டு இயந்திரங்களை நிறுவி வீட்டின் பாதுகாப்பை பலப்படுத்துகிறார். இனி எந்த பயமும் இல்லையென ஆசுவாசம் அடைகிறார்கள். ஒருநாள் அப்பாவும், சித்தியும் வெளியூர் சென்றிருக்க மகள் மட்டும் வீட்டில் தனியாக இருக்கிறாள். அத்தருணத்தை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்திக் கொள்ள விழையும் மகள் அவளது காதலனை வீட்டிற்கு விளையாட அழைக்கிறாள். அப்பா, அம்மா விளையாட்டு ! பாவம், மகிழ்ச்சியின் உச்சத்தில் இருந்த காரணத்தினால் அவர்களை ஒருவன் மறைந்திருந்து பார்க்கிறான் என்று அவர்களுக்கு அப்போது தெரிந்திருக்கவில்லை. ஒரு சுற்று சுமூகமாக முடிந்து அடுத்த சுற்றுக்காக அவர்கள் காத்திருக்கும் வேளையில் அப்பாவும், சித்தியும் வந்துவிடுகிறார்கள். அவசர அவசரமாக காதலனை அலமாரியில் மறைந்துகொள்ளச் சொல்கிறாள். அப்பாவும், சித்தியும் வந்திருந்து கொஞ்ச நேரம் கழித்து அவர்களுடைய அறைக்கு சென்றுவிடுகிறார்கள். மகள் தனது அறைக்கு விரைந்து அலமாரியைத் திறந்து பார்க்கிறாள். காதலனைக் காணவில்லை. புத்திசாலி காதலன், கிடைத்த சமயத்தில் சாமர்த்தியமாக வீட்டிற்கு கிளம்பிப் போய்விட்டான் என்று நினைக்கிறாள். ஆனால் உண்மையில் காதலன் அங்கிருந்து கிளம்பியிருக்கவில்லை. ஒரு இரண்டு, மூன்று நாள் கழித்து காதலனிடம் இருந்து எந்த குறுந்தகவலோ, அழைப்போ வராததால் அவனை போனில் அழைக்கிறாள். இப்போது அழைப்பு மணி அவளது அலமாரியில் ஒலிக்கிறது. ஒருவேளை அலைபேசியை அலமாரியிலேயே மறந்திருப்பானோ என்று நினைத்துக்கொண்டே மெல்ல அலமாரியைத் திறந்தால் காதலனின் பிணம் உள்ளேயிருந்து சரிந்து விழுகிறது ! போலீஸுக்கு தகவல் சொல்லப்படுகிறது. போலீஸ் அந்த குடும்பத்தையே சந்தேக வளையத்திற்குள் கொண்டு வருகிறது. அப்பாவும், சித்தியும் வேறு மகள் மீது பயங்கர கோபத்தில் இருக்கிறார்கள். பிரச்சனை தீரும்வரை மகளை வீட்டுச்சிறையில் வைக்க முடிவு செய்து ஸ்டோர் ரூமுக்குள் தள்ளி கதவைப் பூட்டி விடுகிறார்கள். அங்கே அவளுக்கு ஒரு மருத்துவ கோப்பு கிடைக்கிறது. ஒரு பதின்பருவ இளைஞனின் மனநோய் பற்றிய குறிப்பு அது. அவனை பீடித்திருக்கும் அந்த மன நோயின் பெயர் – AGORAPHOBIA ! அதாவது வீட்டிலிருந்து வெளியே செல்வது குறித்த அதீத பயம். அந்த மருத்துவ கோப்பில் இளைஞனின் தந்தை பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது. அது இதற்கு முன் அந்த வீட்டில் குடியிருந்த குடும்பத் தலைவனின் பெயர் என்று அக்கம் பக்கத்தினர் சொன்னது நினைவுக்கு வந்து போகிறது. அவளுக்குள் ஏதோவொரு புதிர் விடுபட்டது போல தோன்றியது. முன்பொரு முறை அந்த ஸ்டோர் ரூமில் பார்த்த குடும்ப புகைப்படத்தை தேடியெடுத்து அதனை உற்று நோக்குகிறாள். வீட்டின் முன்புறம் கணவன், மனைவி, மகள் மூவரும் சிரித்தபடி போஸ் கொடுக்க, பின்னால் வீட்டின் ஜன்னலில் மறைந்திருந்து பார்க்கும் ஒரு முகம் தெரிந்தது. புகைப்படத்தில் அந்த முகத்தை கவனித்த வேளையில், அந்த அறையில் அவள் மட்டும் இல்லை என்பதை அவள் உணர்ந்தாள் ! முற்றும். ******************** மேலே எழுதியிருப்பது 2016ம் ஆண்டு ஆங்கிலத்தில் வெளியான வித்தின் (WITHIN) என்கிற படக்கதையின் சாரம். அதாவது அப்படத்தின் கதையை கொஞ்சம் முன்னும், பின்னும் மாற்றி, இப்படி இருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று சில விஷயங்களை மாற்றி எழுதியிருக்கிறேன். சுவாரஸ்யமாக இருந்ததா என்று நீங்கள் தான் சொல்ல வேண்டும். தமிழில் எடுப்பதற்கான அம்சங்கள் பொருத்தமாக இருந்தாலும் கூட ஒரு முக்கியமான லாஜிக் இடிக்கிறது. அது – CRAWLSPACE. சில மேலை நாட்டு கட்டிட முறைகளில் ஒரு தளத்திற்கும் மற்றொரு தளத்திற்கும் இடையே சுமார் ஒரு அடி உயரத்தில் இடத்தை விட்டு வைப்பார்களாம். மின்சரடுகள், தண்ணீர் குழாய்கள் போன்றவற்றை வீட்டிற்குள் கொண்டுவர இந்த இடைவெளியை பயன்படுத்திக்கொள்வார்களாம். கதைப்படி நம் சைக்கோ நாயகன் இந்த இடைவெளியில் தான் ஒளிந்துகொண்டிருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த CRAWLSPACE (தமிழில் தவழ்வெளி என்று வைத்துக் கொள்ளலாமா ?) ஒரு பெரிய டாபிக். இந்த ஒயின்ஷாப் தாங்காது. சுருக்கமாகச் சொல்வதென்றால் படத்தில் சொல்லப்படும் தவழ்வெளி சம்பவம் வெறும் கதைக்காக சேர்க்கப்பட்ட சம்பவம் அல்ல. மெக்ஸிகோவில் கடுமையான பஞ்சம் நிலவிய சமயத்தில் அங்கே வீடற்ற பல மனிதர்கள் இம்மாதிரி தவழ்வெளிகளில் மறைந்திருந்து வாழ்ந்ததாக சொல்லப்படுகிறது. மேலும் நவீன உலகில் நடைபெற்ற இதுபோன்ற உண்மைச் சம்பவங்களை RANKER மற்றும் LISTVERSE போன்ற தளங்கள் பட்டியலிட்டுள்ளன. இவையெல்லாம் பிஸார். சுவாரஸ்யத்துக்காக கற்பனை கலந்து தயாரிக்கப்பட்ட பட்டியல் என்று கூட நினைக்கலாம். கைது செய்யப்பட்டவர் அப்படி நினைப்பவர்களுக்கு ஒரு அண்மைச்செய்தி – அமெரிக்காவின் டெனஸி மாகாணத்தில் தனது பதினான்கு வயது மகளின் அறைக்கு மேலிருக்கும் இடைவெளியில் ஒரு மனிதன் வசிப்பதாக மகளின் தாயார் புகார் அளித்து அந்த ஆளை கைது செய்திருக்கிறார்கள். அந்த மனிதன் அந்த பதினான்கு வயது பெண்ணின் முன்னாள் காதலன் என்பது உபரித்தகவல். சரி, இப்போது WITHIN படத்தை தமிழில் யார் எடுக்கப் போகிறீர்கள். CRAWLSPACE என்பதை வேண்டுமானால் ஸ்டோர் ரூம் அல்லது அலமாரியின் பின்னால் மறைந்திருக்கும் ரகசிய அறை என்று மாற்றிக்கொள்ளலாம். என்றும் அன்புடன், N.R.PRABHAKARAN Post Comment உதிர்த்தவன் Philosophy Prabhakaran உதிர்த்த நேரம் 09:14:00 வயாகரா... ச்சே... வகையறா: பிரபா ஒயின்ஷாப் v4 Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest 2 பேர் கருத்து சொல்லியிருக்காங்க 3 June 2019 பிரபா ஒயின்ஷாப் – 03062019 அன்புள்ள வலைப்பூவிற்கு, தமிழல்லாத திராவிட மொழிகளில் வெளியான இரண்டு திரைப்படங்களைப் பற்றி இவ்வார ஒயின்ஷாப்பில் பார்க்கலாம். முதலாவது, கவளுதாரி (கன்னடம்). யூ-டர்னிற்குப் பிறகு நான் நேரடியாகப் பார்க்கும் இரண்டாவது கன்னட சினிமா. ப்ளாக்பஸ்டர், ஏராளமான பாராட்டுகள் குவிந்துக் கொண்டிருக்கின்றன என்பதைத் தாண்டி நம்மவர்கள் பலரும் கவளுதாரியைப் பார்த்து, மற்றவர்களுக்கு பரிந்துரைத்துக் கொண்டிருக்கிறார்கள். கவளுதாரியில் கதாநாயகியாக நடித்திருக்கும் ரோஷிணி பிரகாஷ் மீது எனக்கு ஒரு பிரத்யேக ஆர்வம். அது அப்புறம். முதலில் படத்தைப் பற்றி பார்க்கலாம். போக்குவரத்து காவல் துணை ஆய்வாளராக பணிபுரியும் ஷ்யாமுக்கு குற்றப் பிரிவில் இணைய ஆசை. ஆனால் கைகூடவில்லை. இன்னொரு பக்கம் திருமணத்திற்கு மணப்பெண் அமையவில்லை. அந்த சமயத்தில் சாலை விரிவாக்கப் பணிகளுக்காக தோண்டப்பட்ட இடத்திலிருந்து மூன்று பேருடைய எலும்புக்கூடுகள் கிடைக்கின்றன. அவை நாற்பது வருடங்களுக்கு முன்பு கொலை செய்யப்பட்ட தொல்லியல் துறை அதிகாரி, அவரது மனைவி மற்றும் குழந்தை ஆகியோருடையது என்று கண்டுபிடிக்கப்படுகிறது. குற்றப்பிரிவு காவல்காரர்கள் அதனை அலட்சியமாக கையாள, ஷ்யாம் தனது தனிப்பட்ட ஆர்வம் காரணமாக அந்த வழக்கைத் தொட்டு, அதனால் ஏற்படும் விளைவுகள், அதன் முடிவு மிச்சக்கதை. ப்ரைமில் இருக்கிறது. கவளுதாரி நிறைய இடங்களில் இரண்டு படங்களை நினைவூட்டுகிறது. ஒன்று, யூ-டர்ன். மற்றொன்று, துருவங்கள் பதினாறு (ஹீரோ வேறு ரகுமான் சாயல்). குறிப்பாக, யூ-டர்னின் வார்ப்புருவை வைத்துக்கொண்டு அதிலே, அதே பாணியிலான வேறொரு கதையை உட்கார வைத்திருக்கிறார்கள். நிறைய இடங்களில் பார்வையாளர்களுக்கு வேலை கொடுத்திருக்கிறார்கள். அதே சமயம் படம் முடியும் போது, படத்தில் நிறைய gaps இருப்பதாகத் தோன்றுகிறது. அதற்காகவே இன்னொரு முறை பார்க்க வேண்டும். கன்னட சினிமா என்றால் ஹீரோக்கள் பார்ப்பதற்கு ஹீரோ மாதிரி இருக்க மாட்டார்கள் என்றொரு கருத்து உண்டு. ஒருமுறை ஒரு நண்பர் கன்னட தேசத்தில் பிறந்த ஆண்கள் அனைவரும் சபிக்கப்பட்டவர்கள், அதே சமயம் அங்கு பிறந்த பெண்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் என்றார். கன்னட ஹீரோக்களின் தோற்றம் அதனை உறுதிப்படுத்தும். அப்படிப்பட்ட வரலாறு கொண்ட மண்ணில் இருந்து ஸ்மார்ட் ஹீரோவாக உருவெடுத்திருக்கிறார் ரிஷி. கவளுதாரிக்கு பிறகு ரிஷி பட வாய்ப்புகளால் பிஸி ! ரோஷிணி பிரகாஷ் ரோஷிணி பிரகாஷ் ! நீண்ட நாட்களாக ரோஷிணி மீது ஏனென்றே தெரியாத ஒரு ஈர்ப்பு இருந்து அது ஏன் என்று இப்போது கண்டுபிடித்துவிட்டேன். ஈர்ப்புக்கு காரணம் கெளதமி. ரோஷிணியிடம் கெளதமியின் சாயல் அப்படியே இருக்கிறது. கெளதமி என்றால் இப்போதுள்ள கெளதமி அல்ல. மாசி மாசம் ஆளான பொண்ணு’வில் ஃப்ரெஷ்ஷாக இருப்பாரே அந்த கெளதமி. அதே கூர் நாசி, அதே ஜூஸியான கீழுதடு. சட்டென இருவரும் ஒரே பூர்வீகத்தில் இருந்து வந்திருப்பார்களோ என்று ஐயப்பட்டு விக்கியில் பார்த்தேன். இல்லை, கெளதமி ஆந்திரா. ரோஷிணி மைசூரு. இருக்கட்டும் இரண்டுக்கும் ஒரே ஸ்க்ரிப்ட் தான். சமீப வருடங்களில் சந்தனக்கட்டை என்று அழைக்கப்படும் கன்னட சினிமாவில் இருந்து கோலிவுட்டிற்கு அளிக்கப்பட்ட கொடை ஷ்ரதா ஸ்ரீநாத். அந்த வகையில் அடுத்த கொடை ரோஷிணி பிரகாஷாக இருக்க வேண்டுமென விரும்புகிறேன். ரோஷிணி ஏற்கனவே ஏமாளி(லி) என்ற படத்தில் சிறிய வேடமொன்றில் நடித்திருக்கிறார். ரோஷிணியின் பேட்டியைப் பார்த்தேன். ஆங்கிலமும், கன்னடமும், தமிழும் கலந்து, அதிலே தமிழ் இலக்கணத்தை மிக்ஸியில் அடித்து மேலே ஊற்றியது போல கொஞ்சலான ஒரு புது மொழியைப் பயன்படுத்துகிறார். பாரதியார் இருந்திருந்தால் தமிழை விட அதுதான் இனிது என்று ஒப்புக்கொண்டிருப்பார். ரோஷிணி தமிழ் சினிமாவில் ஒரு சுற்று வர வேண்டும் ! இரண்டாவது, பார்க்கப்போவது ஆ (Awe) (தெலுங்கு). கவளுதாரியை ரோஷிணிக்காக பார்த்தேன் என்றால் ஆ’வை யாருக்காக பார்த்தேன் என்று தனியாக சொல்ல வேண்டியிருக்காது. ஆனால், அது மட்டும் காரணமல்ல. ஆ ஒரு சைக்கலாஜிக்கல் திரில்லர் ! ஒரு உணவகம். அங்கே வரும் வெவ்வேறு மனிதர்களைப் பற்றியும், அவர்களின் பலதரப்பட்ட உணர்வுகளைப் பற்றியும் காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கிறது. இன்னொரு புறம் காஜல் அகர்வால் எல்லோரையும் கொல்ல வேண்டுமென்ற உணர்வுடன் அதே உணவகத்திற்கு வருகிறார். காஜலுக்கும் உணவகத்தில் உள்ள மற்றவர்களுக்கும் என்ன தொடர்பு என்பதைத் தெரிந்துகொள்ள படம் பார்க்க வேண்டும். கதை என்று சொல்வதை விட காட்சித்துணுக்குகளின் தொகுப்பு என்றால் பொருத்தமாக இருக்கும். கூடவே மனிதர்களின் வெவ்வேறு உணர்வுகளை சுவாரஸ்யமாக சொல்லியிருக்கிறார்கள். ஒரு லெஸ்பியன் ஜோடி, ஒரு ஆணாக இருந்து பெண்ணாக மாறப்போகும் விஞ்ஞானி, ஒரு மந்திரவாதி, அவரோடு போட்டி போட்டு மேஜிக் செய்யும் குழந்தை, டிரக்ஸ் எடுத்துக்கொள்ளும் ஒரு பணிப்பெண், அவளது காதலன், ஒரு சமையல்காரர், ஒரு தங்கமீன், ஒரு போன்சாய் மரம் என்று வெவ்வேறு தரப்பு காண்பிக்கப்பட்டு இறுதியில் எல்லாம் ஒரு புள்ளியில் வந்து முடிகிறது. நெட்ஃப்ளிக்ஸில் கிடைக்கிறது. போகிற போக்கில் லெஸ்பியன் உறவு, பாலின மறுசீரமைப்பு சிகிச்சை, பெண்கள் மீதும் குழந்தைகள் மீதும் நடத்தப்படும் பாலியல் வன்கொடுமைகள், போதைக்கு அடிமையாதல் போன்ற சமூக விஷயங்களைத் தொட்டுச் செல்கிறது. கடைசி பதினைந்து நிமிட படம் நம்மை ஒரு மாதிரியாக குழப்பத்தில் ஆழ்த்திவிடுகிறது என்பதால் அதிலிருந்து விடுபடுவதற்காகவே இரண்டாவது முறை படம் பார்க்க வேண்டியிருக்கிறது. இரண்டு படங்களுக்கும் நிறைய ஒற்றுமைகள் உள்ளன. இரண்டும் அந்தந்த மொழிகளில் உள்ள பிரபல கதாநாயகர்களால் தயாரிக்கப்பட்ட படங்கள். இரண்டிலும் டைட்டில் பாடல் அட்டகாசமாக இருந்து, ஒரு அமானுஷ்ய உணர்வைத் தருகிறது. இரண்டும் நமக்கு நெருக்கமான மொழிகள் என்பதால் சப்-டைட்டிலை படித்துக் கொண்டிராமல் படத்துடன் ஒன்ற முடிகிறது. இரண்டிலும் துணை வேடங்களில் சில தமிழ் படங்களில் பார்த்து பழக்கப்பட்ட துணை நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இரண்டும் நல்ல படங்கள் ! இப்போது நான் இரண்டு பறக்கோடி எண்ணங்களில் ஆழ்ந்திருக்கிறேன். ஒரு புறம், இவ்விரு படங்களை யாரும் தமிழில் ரீமேக் செய்துவிடக் கூடாது என்றும், இன்னொரு புறம், தமிழில் நமக்கு விருப்பமான நடிகர்கள், இயக்குநர்களின் கைவண்ணத்தில் இவற்றை பார்க்க வேண்டும் என்றும் தோன்றுகிறது. என்றும் அன்புடன், N.R.PRABHAKARAN Post Comment உதிர்த்தவன் Philosophy Prabhakaran உதிர்த்த நேரம் 08:38:00 வயாகரா... ச்சே... வகையறா: பிரபா ஒயின்ஷாப் v4
உறவு கொள்வதில் ஆணுக்கும், பெண்ணுக்கும் வெவ்வேறு தருணங்களில் ஆசை ஏற்படும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். ஆணைவிட பெண்ணுக்குத்தான் பாலுணர்வு ஆசை அதிகம் ஏற்படும் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். உறவுக்கான ஆசைகள் பாலுணர்வு ஆசை மூளையில் இருந்து பிறப்பிக்கப்படுகிறது. உடல் தன்னை தயார் செய்து கொண்டு இயங்குகிறது. இதற்கு மரபணு எனப்படும் ஜீன்களையும் உடன் ஆலோசிக்கிறது மூளை. உடலுறவு சக்தியை லிபிடோ சக்தி (Libido Power) எனக் கூறுகிறார்கள். இந்தச் சக்தி ஆண், பெண் இருவருக்கும் வித்தியாசமாக அமைகிறது. பெண்களுக்கும், ஆண்களுக்கும் ஒரே விதத்தில் ஒரே நேரத்தில் உடலுறவு ஆசை உண்டாவதில்லை. ஆண்களுக்கு அதிகாலை நேரத்திலும், பெண்களுக்கு அந்தி மயங்கும் நேரத்திலும் ஆசை வெளிப்படுவதாக ஆராய்ச்சி முடிவுகள் கூறுகின்றன. அபூர்வமாக சில நேரத்தில் மட்டுமே ஆண், பெண் இருவருக்கும் கலவி ஆசை கிளர்ச்சி பெற்று எழுகிறது. கிளிட்டோரிஸ் என்ற உறுப்புத் தான் பெண்களுக்கு செக்ஸ் ஆசையைக் கிளர்ச்சியுறச் செய்கிறது. பெண்ணுக்கு ஆசை அதிகம் பெண்ணுக்கு ஆர்வம் இல்லாத சமயங்களில் ஆண் பல்வேறு விளையாட்டுக்களின் மூலம் பெண்ணிற்கு ஆர்வம் வரச்செய்கிறான். இதில் விஷேசம் என்னவென்றால், ஆண்களை விட, பெண்களுக்குத் தான் எல்லாப் பருவத்திலும் பாலுணர்வு ஆசை அதிகம் எனவும் ஆராய்ச்சிகள் தெரிவிப்பது தான்! இது போலவே உடலுறவின் போதும் ஆண்களுக்குத் தான் எளிதாக உடல் தளர்வு ஏற்படுகிறது. உடலுறவின் போதும், உடலுறவின் முடிவில் வரும் உச்சக்கட்டத்தின் போதும் ஆண்கள் மிகுந்த ஆனந்தம் அடைவதுண்டு என பாலியல் ஆராய்ச்சி நிபுணர்கள் குறிப்பிடுகிறார்கள். அதீத உச்சக்கட்ட உணர்வு பாலுறவு என்பது சம்பிரதாயமான நிகழ்வோ அல்லது கலியாணக் கடமையோ அல்ல. இரு மனங்களின் ஒத்திசைவின் அவற்றின் அன்புப் பிணைப்பின் ஓரியக்க நிலை என்றே கருத வேண்டும் பொதுவாக ஆண்கள் சிங்கிள் ஆர்கஸம் உள்ளவர்கள். பெண்கள் பலமுறை உச்சமடைய வேண்டும் என்று நினைப்பார்கள். ஆக அதே போல் பெண்களின் உணர்வுகள் பாலியலில் அதிகம் ஆதிக்கம் செய்ய வேண்டியதும் கவனத்தில் எடுக்கப்பட வேண்டியதும் அவசியம். தாம்பத்ய உறவு என்பது வெறும் பத்துநிமிடத்தில் முடிந்துவிடக்கூடியது என்று ஆண்கள் தீர்மானிக்கலாம். அதுவே பெண்களைப் பொறுத்தவரை நீடிக்கலாம் குறுகியதாக இருக்கலாம். அது அவர்களின் தனி உரிமை உணர்வு நிலை சார்ந்தது. அதை ஆண் மட்டும் தீர்மானிக்க முடியாது என்கின்றனர் ஆய்வாளர்கள்.
விடுதலைப் புலிகள் பதுங்குகின்றார்களா? அன்றிப் பலவீனப்பட்டுப் போய்விட்டார்களா? என்பதே இன்று கொழும்பிலுள்ள இராணுவ ஆய்வாளர்களின் முக்கிய ஆய்வுக்குரியதொரு பொருளாக இருக்கின்றது. இவ்வாறு அவர்கள் குழப்பம் அடைவதற்குச் சில காரணிகள் இருக்கவே செய்கின்றது. சிறிலங்கா இராணுவத்தரப்பின் தகவல்களைப் பெரும்பாலும் அடிப்படையாகக் கொள்ளும் ஆய்வாளர்களுக்கு இராணுவத்தரப்பால்- இறுதியாக வழங்கப்பட்டுள்ள தகவலானது விடுதலைப் புலிகள் பலவீனம் அடைந்துவிட்டார்கள்; அவர்கள் வலிந்த தாக்குதல்களில் ஈடுபடும் சக்தியை இழந்துவிட்டார்கள் என்பதே ஆகும். இது குறித்து அண்மையில் பேசியிருந்த இராணுவத்தளபதி லெப். ஜெனரல் சரத் பொன்சேகா, விடுதலைப் புலிகளில் 9,000 பேரைக் கொன்றுவிட்டதாகவும்; இன்னமும் 4,000-5,000 வரையிலான புலிகளே இருப்பதாகவும் தெரிவித்திருந்ததோடு, விடுதலைப் புலிகள் மரபுவழி இராணுவமாகச் செயற்படும் வலுவை இழந்துவிட்டதாகவும், அவர்களினால் இனி வலிந்த தாக்குதல்களை மேற்கொள்ள முடியாது எனவும் குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில், இராணுவத்தரப்புத் தகவல்களை மாத்திரம் அடிப்படையாகக்கொண்ட விமர்சகர்களினது மதிப்பீடானது விடுதலைப் புலிகள் பலமிழந்துவிட்டனர் என்பதே ஆகும். அத்தோடு, எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இராணுவ ரீதியில் இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாண முடியாது யுத்தத்தில் விடுதலைப் புலிகளைத் தோற்கடிக்க முடியாது எனக் கூறுவதெல்லாம், வன்னிக் களமுனையில் வெற்றிகளைக் குவித்துவரும் இராணுவத்திற்கு எதிராக மேற்கொள்ளப்படும் பிரச்சாரம் என்ற இராணுவப் பேச்சாளரின் அறிவிப்புக்களும், விடுதலைப் புலிகள் பலவீனப்பட்டுப் போய்விட்டதாகவே சில இராணுவ விமர்சகர்கள் முடிவிற்கு வருவதற்குக் காரணமாய் உள்ளது. இதனைத் தவிர வேறு சில இராணுவ ஆய்வாளர்கள் களமுனைகள் தொடர்பாகக் கிடைக்கப்பெறும் தகவல்களின் அடிப்படையில் புலிகள் பலவீனப்பட்டுப் போய்விட்டார்கள் என்ற முடிவிற்கு வந்துள்ளனர். அதாவது, மன்னார் களமுனையில், விடுதலைப் புலிகள் ஆரம்பத்தில் காட்டிய எதிர்ப்பைக் காட்டுவதில்லை. ஆகையினால் புலிகள் பலவீனப்பட்டுவிட்டது ஊர்ஜிதப்படுத்தப்படத்தக்கதே என்கின்றனர். இவர்கள், மன்னார் மாவட்டத்தில்-மடுவை இராணுவம் கைப்பற்றுவதற்காக மேற்கொண்ட படை நடவடிக்கையை எதிர்த்து ஒரு வருடத்திற்கு மேலாகப் போரிட்ட விடுதலைப் புலிகள் அதற்கு அப்பால் குறிப்பிடத்தக்க அளவில்- அதாவது மடுப் பிரதேசத்திற்காகப் போரிட்டது போல் போரிடவில்லை. குறிப்பிடத்தக்க அளவான நிலப்பரப்பை பெரும் எதிர்ப்புக்காட்டாது விட்டு வெளியேறியுள்ளனர். இது விடுதலைப் புலிகள் பலமிழந்து விட்டதையே காட்டுகின்றது எனத் தெரிவிக்கின்றனர். இவ்வாறாக விமர்சகர்களில் ஒரு பகுதியினர் விடுதலைப் புலிகள் பலவீனம் அடைந்துவிட்டதாகக் கூறுகையில், ஒரு தரப்பினர்- பெரும்பாலும் நடுநிலைமையான ஆய்வாளர்கள் சிறிலங்கா இராணுவத்தரப்புத் தகவல்களைக் கொண்டும் சரி, களமுனையின் நிலவரத்தையும் கொண்டும் சரி விடுதலைப் புலிகளை மதிப்பிடுதல் வரலாற்றுத் தவறாகிவிடும் எனத் தெரிவிக்கின்றனர். இவர்கள், விடுதலைப் புலிகளின் குண இயல்புகளைக் கொண்டே இதனை மதிப்பிடவேண்டும் எனவும், ஆனால் அது ஒரு இயலுமான காரியம் அல்ல எனவும் தெரிவிக்கின்றனர். இதற்குக் கடந்தகால வரலாற்று நிகழ்வுகளை அவர்கள் உதாரணம் காட்ட முற்பட்டுள்ளனர். விடுதலைப் புலிகள் இயக்கம் நேற்றுப் பெய்த மழைக்கு இன்று முளைத்த காளான் அல்ல எனத் தெரிவிக்கும் அவர்கள் அவ் இயக்கமும், அதன் தலைமையும் 30 ஆண்டுகால போராட்ட வரலாற்றைக் கொண்டது என்பதோடு, இரு நாட்டு இராணுவங்களோடு போரிட்டுள்ளதோடு- தற்போதைய நெருக்கடியைவிட மோசமான நெருக்கடியிலும் வெற்றிகரமாகப் போரிட்ட அமைப்பு என்று சுட்டிக்காட்டுகின்றனர். இவர்களின் மதிப்பீட்டின்படி, விடுதலைப் புலிகள் இயக்கமானது தனக்கான போர் யுக்தியைத் தானே வகுத்துக்கொள்ளும் அமைப்பாகும். எவரிடமும் கடன் வாங்கியோ எவரின் அழுத்தத்திற்கு உட்பட்டோ அது தனது போர் யுக்தியை அமைத்துக்கொண்டதும் இல்லை மாற்றிக்கொண்டதும் இல்லை. சிறிலங்கா இராணுவம் ஜெயசிக்குறு நடவடிக்கையை ஆரம்பித்து விடுதலைப் புலிகளில் 70 வீதத்தினரை அழித்துவிட்டோம், 90 வீதத்தினரை அழித்துவிட்டோம் எனப் பெரும் பிரச்சாரத்தில் ஈடுபட்டதோடு புலிகளின் நாட்கள் எண்ணப்படுவதாகவும், சரணாகதி அல்லது சாவு என்பதைத் தவிர அவர்களுக்கு வேறு வழி இல்லை எனப் பிரச்சாரம் செய்துகொண்டிருந்த போதும், விடுதலைப் புலிகள் யுத்தத்தை தமது திட்டத்திற்கும், யுக்திக்கும் ஏற்பவே நடத்தினர். ஜெயசிக்குறு நடவடிக்கை ஆரம்பித்து சில நாட்களில் புளியங்குளம் கைப்பற்றப்படும் என எதிர்பார்த்திருந்த சிறிலங்கா இராணுவத்தால் இரண்டு மாதங்களுக்கு மேலாக அதனைச் சாதிக்க முடியாது போனது. மாறாகப் புலிகள் புளியங்குளத்தை விட்டுத் தாமாகப் பின்வாங்கியபோதே இது சாத்தியமாகியது. கனகராயன்குளத்திலும், ஏன் மாங்குளத்திலும் கூட அதுவே நடந்தது. அதாவது, கிளிநொச்சி நகரை ஓயாத அலைகள்-02 நடவடிக்கை மூலம் விடுதலைப் புலிகள் கைப்பற்றிக்கொண்டதும் - மாங்குளத்தை விட்டுப் புலிகள் வெளியேறி இருந்தனர் என்பதே நிஜமானதாகும். அவ்வேளைகளில் களமுனையில் இருந்த சிறிலங்கா இராணுவ அதிகாரிகளுக்கு அது நன்கே தெரிந்திருக்கும். ஆகையினால், விடுதலைப் புலிகள் ஒரு பிரதேசத்தில் தீவிர எதிர்ப்புக் காட்டுவதும் பிரதேசங்களில் இருந்து பின்வாங்கிக் கொள்வதும் அவர்களின் போரியல் யுக்தியின்பாற்பட்டதானதாக இருக்குமே ஒழிய புலிகள் பலவீனப்பட்டுவிட்டதன் அடையாளமாக இதனைக் கொள்வதென்பது- தவறானதொரு முடிவாகவே இருக்கும் என அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இதற்கு அவர்கள் மற்றொரு உதாரணத்தையும் சுட்டிக்காட்டுகின்றனர். 2006 இல் இராணுவம் வலிந்த தாக்குதல்களை ஆரம்பித்து கிழக்கை ஆக்கிரமித்ததன் பின்னர் புலிகள் பலவீனப்பட்டுவிட்டதாக இராணுவத் தரப்பாலும், அரச தரப்பாலும் பெரும் பிரச்சாரம் முன்னெடுக்கப் பட்டது. ஆனால் ஒரு மாத காலத்தில் மடுப்பிரதேசத்தை ஆக்கிரமித்துக் கொள்ளமுடியும் என ஆரம்பித்த இராணுவ நடவடிக்கை ஒரு வருடம் கடந்த நிலையிலேயே சாத்தியமானதும் - அதுவும் விடுதலைப் புலிகள் அப்பிரதேசத்தைவிட்டு அகன்ற பின்பே சாத்தியமானது எனத் தெரிவிக்கின்றனர். இது ஒருபுறம் இருக்க, சிறிலங்கா இராணுவம் வன்னிக்களமுனையில் எதிர்பார்த்த அளவில் சாதிக்கவில்லை என்று இராணுவத்தின் இழப்பு ஒரு வாதத்திற்குரியதாக மாறியுள்ளது என்றும் ஆய்வாளர்களில் ஒருதரப்பினர் குறிப்பிடுகின்றனர். அதாவது, வடக்கில் விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதியைச் சூழ இராணுவம் நான்கு முனைகளில் ஒரு வருடத்திற்கு மேலாகப் போரிட்டு வருகின்றபோது மன்னார்க் களமுனையில் பெரும் இழப்புக்களின் பின்னர் கண்டுள்ள ஓரளவு முன்னேற்றத்தைத் தவிர வேறு முனைகளில் அதனால் சாதிக்கமுடியாது போனது மட்டுமல்ல ஓரிரு முனைகள் குறித்து அதனால் சிந்திக்கவே முடியாது உள்ளது என்கின்றனர். குறிப்பாக யாழ். குடாநாட்டில் அதாவது, வடபோரரங்கில் சிறிலங்காப் படைத்தரப்பு கையறு நிலையில் இருப்பதாகவும் தமது வலிந்து தாக்குதல் என்பதைவிட விடுதலைப் புலிகளின் தாக்குதல்கள் எப்பொழுது ஆரம்பிக்கப்படும் என்பது குறித்தே அவை எதிர்பார்த்திருப்பதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். இதேவேளை, மணலாற்றுக் களமுனையைத் திறந்த இராணுவம் முல்லைத்தீவை நோக்கி முன்னேறுவதை நோக்கமாகக் கொண்டிருப்பினும்- குறிப்பிடத்தக்கதான முன்னேற்றத்தை அதனால் எட்ட முடியவில்லை. விடுதலைப் புலிகளின் எதிர்ப்பையும் பொறிவெடிகளையும் கண்ணிவெடிகளையும் தாண்டி முன்னேற முடியாத நிலையிலேயே அவை உள்ளன. வவுனியாக் களமுனையிலும் படையினரால் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை எட்டமுடியவில்லை. பாலமோட்டை போன்ற சில கிராமங்களிலேயே ஒரு வருடத்திற்கு மேலாக அவை போரிட்டவண்ணமுள்ளன. இதேவேளை 2007 இன் முதற் காலாண்டின் இறுதியில் ஆரம்பிக்கப்பட்ட வடக்குக் களமுனைகளில் இராணுவம் குறிப்பிடத்தக்கதானதொரு அளவு இழப்பைச் சந்தித்துள்ளது. இது குறித்து இராணுவத்தரப்பில் இருந்தும், அரச தரப்பில் இருந்தும் சரியான புள்ளி விபரங்களோ, பொருத்தமான புள்ளி விபரங்களோ வெளியிடப்படுவதில்லை. இவ்விடயத்தில் அரச தரப்பும், இராணுவத் தரப்பும் உண்மையான தகவல்களை வெளியிடாதது மட்டுமல்ல, முரண்பாடான தகவல்களையும் வெளியிட்டு வருகின்றன. எடுத்துக்காட்டாக எருக்கலம்பிட்டி கடற்படை முகாமை கடற்புலிகள் தாக்கி அழித்தபோது அதில் மூன்று கடற்படையினர் கொல்லப்பட்டதாக அரசாங்கத் தரப்புத் தெரிவித்திருந்தது, கடற்படைத் தரப்போ ஆறு கடற்படையினர் கொல்லப்பட்டதாகத் தகவல்கள் வெளியிட்டிருந்தன. இது இழப்புக் குறித்து சிறிலங்காத் தரப்பு வெளியிடும் புள்ளி விபரங்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாகும். இதனைத் தவிர இறந்த படையினரின் தொகைக்கும் காயமடைந்த படையினருக்கும் இடையிலான விகிதாசாரத் தொடர்பு பொருத்தப்பாடற்றதாயுள்ளது. யூன் மாதத்தில் 112 படையினர் கொல்லப்பட்டும் 789 படையினர் காயமடைந்தும் உள்ளனர் என்ற விகிதாசாரம் போரில் கொல்லப்படும் காயமடையும் வீரர்களின் சர்வதேச மதிப்பீடுகளுக்கு மாறுபாடானதாகவே உள்ளது. இருப்பினும், காயத்தின் எண்ணிக்கை அதிகம் என்ற அளவில் கூட படையினருக்கான சேதம் பெரிதாக இருப்பதனை இப்புள்ளி விபரங்கள் உறுதி செய்பவையாகவே உள்ளன. இவை ஒருபுறம் இருக்க, வன்னிக் களமுனையில்- குறிப்பாக மன்னார்க் களமுனையில் அண்மையில் இராணுவத்தினருக்குச் சாதகமானதாகத் தென்படும் களமுனையின் போக்கானது விடுதலைப் புலிகளின் போர் யுக்தியின் ஒரு பகுதி எனவும் சில இராணுவ ஆய்வாளர்கள் கொள்கின்றனர். அதாவது, இராணுவத்தைப் பரந்து விரிய அனுமதிப்பதன் மூலம் இராணுவத்தின் செறிவைக் குறைக்கவும் - அதன்மூலம் தமது வலிந்த தாக்குதலுக்கான சாதகமானதொரு சூழ்நிலை ஒன்றை உருவாக்கவும் முடியும் என விடுதலைப் புலிகள் கருதுகின்றனர் எனவும் அவர்கள் அபிப்பிராயம் கொண்டுள்ளனர். இந்தவகையில் தற்பொழுது சிறிலங்கா இராணுவ ஆய்வாளர்கள் மட்டத்தில் விடுதலைப் புலிகள் பதுங்குகின்றார்களா? அன்றி பலவீனப்பட்டுப் போய்விட்டார்களா என்பது குறித்து பலமான சந்தேகங்களும், குழப்பங்களும் இருக்கவே செய்கின்றன. ஆனால், விடுதலைப் புலிகளின் வரலாறு அதன் தலைமைத்துவத்தின் இராணுவ மதிநுட்பம் கடந்த காலத்தில் சாதித்துக் காட்டியது போன்றவற்றை மதிப்பீடு செய்ய முற்படுபவர்கள் பெரும் சமர்கள் இடம் பெறுவதற்கான வாய்ப்புக்களே அதிகம் உண்டு என நம்புகின்றனர். அதாவது, விடுதலைப்புலிகள் பதுங்குகின்றார்கள் என்றே கொள்கின்றனர். நன்றி: வெள்ளிநாதம் (11.07.08) Posted by tamil at 6:56 AM 0 comments இலங்கை விவகாரம் பல முகங்களைக் காட்டும் இந்தியா இலங்கைத் தமிழர் குறித்தும் அவர்களது இனப்பிரச்சினை குறித்தும் இந்தியாவிற்குப் பல முகங்கள் உண்டு. ஆனால் சிறிலங்காவிற்கோ சிங்கள ஆட்சியாளருக்கோ இந்தியா குறித்து ஒரு முகம்தான் உண்டு. இலங்கைத் தமிழரின் இனப்பிரச்சினை குறித்துப் பல்வேறு சந்தர்ப்பங்களில் தனது பல்வேறு முகங்களை இந்தியா காட்டியுள்ளது. இலங்கையில் தமிழர்கள் ஆளும் சிங்கள அரசாங்கங்களினால் அடக்கி ஒடுக்கப்பட்டு உரிமைகள் பறிக்கப்பட்ட நிலையில் உரிமைப் போராட்டம் ஒன்றை நடத்தி வருகின்றனர். இதனைப் பயங்கரவாதப் பிரச்சினையென சிங்கள அரசாங்கங்கள் வெளியுலகிற்குக் காட்ட தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இந்த வரலாற்று நிலைமையை இந்தியா ஏற்கெனவே நன்கு உணர்ந்துள்ளது. சர்வதேச சமூகமும் உணர்ந்துள்ள தற்போதைய நிலையில் சிங்கள அரசாங்கத்தின் தமிழர் மீதான அடக்குமுறை மனித உரிமைகள் மீறல்களுக் கெதிராக ஐக்கிய நாடுகள் சபையிலும் மனித உரிமை அமைப்புக்களிலும் உலக நாடுகள் குறிப்பாக ஐரோப்பிய நாடுகள் குரல் கொடுத்து சிங்கள அரசாங்கத்தின் மீது கண்டனத் தீர்மானங்களைக் கொண்டு வர முற்பட்ட வேளையில் இலங்கையில் மனித உரிமை மீறல் நடவடிக்கைகள் தற்போது இல்லை என்று இந்தியா சிறிலங்காவிற்காக வககாலத்து வாங்கியது. இலங்கைத் தமிழர் தொடர்பாக இந்தியா காட்டிய ஒரு முகம். இதேவேளை, அண்மையில் கொழும்பிற்கு விஜயம் செய்திருந்த இந்திய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் விஜேய்சிங், வெளியுறவுத்துறை அமைச்சின் செயலாளர் சிவ்சங்கர் மேனன் ஆகியோர் சிறிலங்கா சனாதிபதி மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலர்- உள்ளிட்ட உயர் அதிகாரிகளுடன் சந்தித்துக் கலந்துரையாடல்களை நடத்தியுள்ளனர். இதன்போது சீனாவிடமோ, பாகிஸ்தானிடமோ ஆயுதங்களைக் கொள்வனவு செய்யவேண்டாம் என்றும் சிறிலங்காவிற்குத் தேவையான ஆயுதங்களை இந்தியா வழங்கத் தயாராய் இருக்கின்றது என்ற பேரம் பேச்சை முடித்துவிட்டுச் சென்றுள்ளனர். தமிழர்களுக்கெதிரான அடக்குமுறை யுத்தத்திற்குத் தேவையான ஆயுதங்களை வழங்கத் தயாராய் இருப்பது என்பது இப்பிரச்சினையில் இந்தியாவின் மற்றைய முகமாகும். இதேவேளை இந்தியப் பிரதமரும் உயர் அதிகாரிகளும் புதுடில்லியிலிருந்து இலங்கை இனப்பிரச்சினை பற்றி அறிக்கைகள் வெளியிடும்போது இந்தப் பிரச்சினையை இராணுவ வழிமுறையில் தீர்க்கமுடியாது அரசியல் பேச்சுவார்த்தை மூலமே தீர்த்துவைக்க முடியும் எனக்கூறி வருவதானது இதன் மற்றொரு முகமே. மேலும் இலங்கை இனப்பிரச்சினை குறித்தும் தமிழர் மீதான சிங்கள இனவாத அடக்குமுறை குறித்தும் தமிழக அரசியல்வாதிகள் இந்திய மத்திய அரசிடம் அழுத்தம் கொடுக்கும் சந்தர்ப்பங்களில் தமிழர் இலங்கையில் ஏனைய இனத்தவர் போன்று சகல உரிமைகளுடனும் வாழக்கூடிய வழிவகைகள் ஏற்படுத்தப்பட வேண்டும் என்று புதுடில்லி கூறியிருக்கிறது. இது அதன் மற்றொரு முகமாகும். இந்திய கொள்கை வகுப்பாளர்களின் தவறான எடுகோள்கள் காரணமாக இந்திய அரசின் இலங்கை தொடர்பான அணுகுமுறைகளில் பல சந்தர்ப்பங்களில் பல முகங்களைக் காட்டுகின்றனர். ஆனால் இந்தியா தொடர்பாக இலங்கையில் சிங்கள ஆட்சியாளருக்கு ஒரு முகமே இருக்கின்றது. அவர்கள் அதில் தெளிவான நிலைப்பாட்டையும் கொண்டுள்ளனர். இந்தியாவின் பிராந்திய வல்லரசு நலனுக்கு எதிரானதே அந்தக் கொள்கையாகும். இதை அவர்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் வெளிப்படுத்தியிருக்கின்றனர�� �. திருக்கோணமலை துறைமுகப்பகுதியிலுள்ள எண்ணைக் குதங்களில் இந்தியா தனியுரிமைபெற சிறிலங்கா அனுமதிக்கவில்லை. இது முக்கிய அம்சமாகும். கொழும்பில் இந்திய எண்ணைக் கூட்டுத்தாபனத்துடன் சிறிலங்கா அமைச்சர் உள்ளிட்ட அதிகாரிகள் தொடர்ந்து முரண்பட்டு வருகின்றனர். அவர்களின் கூட்டுத்தாபனத்தை தேசவுடமையாக்குவோம் என்றும் சிறிலங்கா அமைச்சர் மிரட்டவும் தவறவில்லை. மேலும் இந்திய மீனவர்களைத் தொடர்ந்து சிங்களக் கடற்படையினர் கொன்றொழித்து வருகின்றனர். இது குறித்து இரு அரசுகளின் உயர்மட்டத்திலும் பல தரப்பட்ட பேச்சுக்கள் நடைபெற்றிருந்தாலும் சிங்கள மக்களின் மனங்களில் ஆழவேரூன்றிய இந்திய எதிர்ப்புணர்வு சிறிலங்காக் கடற்படையில் பிரதிபலிப்பதைக் காணலாம். ஒரு நாட்டின் எல்லைக்குள் இன்னுமொரு நாட்டின் மீனவர்கள் புகுந்துவிட்டால் அவர்களைக் கைது செய்து சட்டத்தின் முன்நிறுத்துவதே வழமை. ஆனால் சிறிலங்காக் கடற்படையினரோ அவர்களைக் கண்டவுடன் சுட்டுக்கொலை செய்துவிடுகின்னர். இது சிறிலங்காக் கடற்படையினரதும் அவர்களுக்குக் கட்டளை இடுபவர்களினதும் இந்திய எதிர்ப்புக் குறித்த மன உணர்வையே வெளிக்காட்டுகிறது. ஏன் இந்திய உயர்மட்ட அதிகாரிகளின் கொழும்பு விஜயம் குறித்து ஜே.வி.பி.யின் அநுரா குமாரதிஸநாயக்க (மகிந்தவுடன் சேர்ந்து நிற்கும் அணி) மிகக் கடுமையான அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். 'இந்தியாவிலிருந்து கொழும்பிற்கு விஜயம் செய்துள்ள இந்தியாவின் வெளியுறவுச் செயலர், பாதுகாப்பு ஆலோசகர், பாதுகாப்புச் செயலர் ஆகியோர் கலதாரி விடுதியில் இரவு விருந்துக்காக வரவில்லை அரசியல் விளையாட்டுக்காகவே வந்துள்ளனர். இந்தியா எமது நாட்டு வளங்களைச் சுரண்டுகிறது. எரிபொருள் விற்பனையில் மூன்றில் ஒரு பங்கை இந்தியா இன்று தன்னகத்தே கொண்டுள்ளது என அவர் இந்திய உயர் அதிகாரிகளின் விஜயத்தைச் சாடியுள்ளார். ஜே.வி.பி. எப்போது உருவாகியதோ அன்று தொட்டு இன்றுவரை இந்திய எதிர்ப்புக் கொள்கையையே கைக்கொண்டு வருகிறது. சிங்களப்படைகளுக்குச் சார்பாக விடுதலைப் புலிகளுடன் இந்தியப் படையினர் யுத்தம் செய்த காலத்தில் கூட ஜே.வி.பி. இந்தியாவை பலமாக எதிர்த்தே வந்தது. இந்தியப் பொருட்களை சிங்கள மக்கள் நுகரக்கூடாது என்று கூட தெற்கில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தது. விற்போரைப் படுகொலையும் செய்தது. சிறிலங்காவின் கொள்கை தொடர்பில் இந்தியா தலையிடக்கூடாது என்று சிறிலங் காவின் வெளிவிவகார அமைச்சர் ரோகிதபோகல்லாகம அண்மையில் 'ரைம்ஸ்நவ்|| என்ற பத்திரிகை ஊடாகக் கேட்டிருந்தார். சிறிலங்காவின் முதலாவது பிரதமரான டி.எஸ்.சேனநாயக்க இற்றைக்கு 50 வருடங்களுக்கு முன்பு ஆங்கில இராஜதந்திரிகளுடன் உரையாடும் போது வடக்கு கிழக்குத் தமிழர்கள், வடக்குக் கிழக்குப் பகுதியை இந்தியாவின் ஒரு மாநிலமாக இணைத்து விடுவார்களோ என்று தனக்கு ஒரு அச்சம் இருப்பதாகக் கூறியுள்ளனர். இதற்கு அந்த ஆங்கில இராஜதந்திரி கிழக்கைத் துண்டாக உடைத்துச் சிங்களக் குடியேற்றத்தை நிறுவுவதன் மூலம் இந்த அச்சத்தைப் போக்கலாம் என்று கூறியிருந்தார். இராணுவ வழி மூலம் இலங்கை இனப்பிரச்சினையைத் தீர்க்க முற்படாது அரசியல் பேச்சுக்கள் மூலம் தீர்க்க வேண்டுமென கொழும்பிற்கு அண்மையில் விஜயம் செய்த இந்திய உயர் அதிகாரிகள் கூறியதற்குச் சிங்கள பௌத்தப் பேரினவாதியும் முக்கியமான அரசியல்வாதியுமான ஒருவர் இந்தியா மீதிருந்த சீற்றத்தை வெளிப்படுத்தியுள்ளார். அதாவது, அன்று விடுதலைப் புலிகளுக்குத் தனது நாட்டில் வைத்து ஆயுதப்பயிற்சி அளித்து அவர்களைப் பயன்படுத்தி சிறிலங்காப் படையினரைக் கொலை செய்வதற்குச் சதிசெய்த இந்தியா இன்று சிறிலங்கா அரசிற்கே வந்து இப்படி ஒரு ஆலோசனை வழங்கியிருக்கிறது. தற்போதைக்கு இந்தியாவிற்கு உரிய பணி புலிகளுக்கெதிரான சிறிலங்கா அரசின் யுத்தத்திற்கு இராணுவ ரீதியில் சகல வழிகளிலும் உதவியளிப்பதே தவிர இப்படியான மடத்தனமான ஆலோசனைகளை வழங்கு வதல்ல என்று 'டெய்லி மிரர்" பத்திரிகையில் எஸ்.எல்.குணசேகர எழுதியுள்ள பத்தியில் இந்தச் சீற்றம் வெளிப்பட்டுள்ளது. அதாவது, சிறிலங்காவிற்கு ஆயுத உதவி செய்வதற்கும் புலனாய்வுத் தகவல்களைப் பரிமாறிக்கொள்வதற்குமாக கொழும்பிற்கு வந்த இந்திய அதிகாரிகள் ஏதோ ஒரு இராஜதந்திர மரபுக்கிணங்க (தமிழர் மீதுள்ள தார்மீகக் கடப்பாட்டின் அடிப்படையிலல்ல) கூறிய ஒரு கூற்றுக்காக இனவாதியான எஸ்.எல்.குணசேகர வெளிப்படுத்திய சீற்றம் அவர்களுக்குள்ள இந்திய எதிர்ப்புணர்வை வெளிப்படுத்துவதோடு இந்தியாவிடம் இருந்து பெறக்கூடிய உதவிகளைச் சந்தர்ப்ப சூழலுக்கேற்ப பெறுவதோடு இந்தியாவின் பிராந்திய நலன்சார்ந்த விடயங்களில் விட்டுக்கொடுக்காத உணர்வலைகளையே வெளிப்படுத்தி நிற்கிறது. சிங்கள அரசியல்வாதிகள் மட்டுமல்ல சிங்கள மக்களும் கூட அடிப்படையில் இந்திய எதிர்ப்புணர்வையே ஆழ்மனப் பதிவாகக் கொண்டுள்ளனர். இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்திக்குக் கொழும்பில் வைத்துச் சிங்களக் கடற்படைச் சிப்பாய் தாக்கிய சம்பவம் சிங்கள மக்களின் இந்திய எதிர்ப்புணர்வை வெளிக்காட்டும் குறிகாட்டியாகும். அது மட்டுமல்ல அந்தச் சிப்பாய் சிங்கள அரசாங்கத்தால் தேசிய வீரராகக் கௌரவிக்கப்பட்டிருந்தார். இது சிங்கள மக்களிற்கிருந்த இந்திய எதிர்ப்புணர்வைத் தட்டிக்கொடுத்து ஊக்கம் கொடுத்த அரசின் நடவடிக்கையாகும். சிறிலங்கா அரசியல்வாதிகள், ஆட்சியாளர், சிங்களப் பொதுமக்கள் அனைவரும் இந்திய எதிர்ப்புணர்வைச் சிறிலங்கா சுதந்திரம் பெற்றத்திலிருந்தே வெளிப்படுத்தி வருகின்றனர். இந்தியா - பாகிஸ்தான் யுத்தம் நடைபெற்ற போது பாகிஸ்தானிய யுத்த விமானங்கள் கொழும்பில் எரிபொருள் நிரப்பிச்செல்ல அப்போதைய சிங்கள அரசாங்கம் வழிசெய்து கொடுத்திருந்தது. இவ்வாறாக இந்திய எதிர்ப்பு நிலைப்பாட்டை சிங்கள தேசம் வெளிப்படுத்திய வரலாற்றுச் சம்பவங்கள் அன்றில் இருந்து இன்றுவரை காணலாம். தற்போது கூட யாழ்ப்பாணத்தில் சிங்கள இராணுவத்தினர் பொருத்தியுள்ள சக்தி வாய்ந்த சீனாவின் 'ராடர்" மூலம் இந்தியாவின் தென்பிராந்தியங்களைச் சீனா கண்காணிக்கக் கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்த வரலாற்றுப் பின்னணியில்தான் 'சார்க்" உச்சிமாநாட்டை ஒட்டி கொழும்பில் நடைபெறப்போகும் இந்தியாவின் படைவலு வெளிப்படுத்துகை அமையப்போகிறது. அதாவது, 'சார்க்|| மாநாட்டிற்காகக் கொழும்பிற்கு வரும் இந்தியப் பிரதமரின் பாதுகாப்பிற்காக ஒரு தொகுதி தரைப்படை கொழும்பிற்கு வரவுள்ளதோடு கொழும்பில் அவர் தங்கியிருக்கும் காலத்தில் கொழும்பு வான் பாதுகாப்பிற்கு இந்திய விமானப்படையும் கொழும்பின் கடற்பாதுகாப்பிற்கு இந்திய கடற்படையும் வரவுள்ளன. இந்த அணுகுமுறையானது ஒரு வகையில் சிறிலங்கா மீது தனக்கு இருக்கும் மேலாதிக்கத்தை படைவலு மூலம் உணர்த்த முற்பட்டுள்ளதையே காட்டுகிறது. இது ஒருவகையில் சிறிலங்கா விவகாரங்களில் அதிக கரிசனை கொண்டுள்ள சீனா, பாகிஸ்தான் ஆகியவற்றிற்கான ஒரு எச்சரிக்கையாகவும் கொள்ளமுடியும். இது போன்ற எச்சரிக்கைகள் சிங்கள ஆட்சியாளர் மற்றும் சிங்கள மக்களின் இந்தியாவிற்கெதிரான ஆழ்மனப் பதிவுகளை மாற்றிவிடாது. மாறாக சினத்தையும் சீற்றத்தையும் ஏற்படுத்தி சிங்களத் தீவிரவாதக் கட்சிகளுக்குத் தீனி போடுபவையாகவே அமையும். இந்த எதிர்ப்புணர்வு எதிர்காலத்தில் பிராந்திய நலன் குறித்த விவகாரத்தில் இந்தியாவிற்குச் சாதகமான போக்கைச் சிறிலங்கா கைக்கொள்ள தடையாய் இருக்கும். இதற்கு முன்னுதாரணங்களாக கடந்தகால வரலாற்று நிகழ்வுகளும் தற்போதைய குறிகாட்டிகளாக சீனாவுடனும், பாகிஸ்தானிடம் சிறிலங்கா ஆட்சியாளர் கொண்டுள்ள நெருக்கமான உறவையும் நாம் காணலாம். இந்தியா எவ்வளவுதான் சிறிலங்காவிற்கு இராணுவ, பொருளாதார ரீதியாக உதவினாலும் சிறிலங்கா, சீனா, பாகிஸ்தானின் உறவை உயிர்த்துடிப்புடனேயே பேணிக்கொள்கிறது. இதை இதுவரை இந்திய இராஜதந்திரத்தால் நிறுத்திக்கொள்ள முடியவில்லை என்பது முக்கியமானதாகும். ஆகவே, சிறிலங்காவிற்கு சீனா, பாகிஸ்தானுடன் மேலும் உறவு பலப்பட்டு அவை இங்கு பலமாக காலூன்றுமாகில் இந்தியாவின் ஐக்கியத்திற்கும் பிராந்திய நலனுக்கும் பெரும் ஆபத்து ஏற்படும். ஆகவே, இந்தியாவின் ஐக்கியமும் பிராந்திய நலனும் பாதுகாக்கப்படவேண்டுமாகில் தமிழீழ மக்களின் ஆதரவும் கேந்திர முக்கியத்துவம் மிக்க தமிழீழப் பிரதேசமும் முக்கியமானதாகும். ஆனால் இந்திய கொள்கை வகுப்பாளர்கள், இதைக் குறுகிய வட்டத்திற்குள் நின்று அதாவது சிங்கள மக்களின் மனங்களில் ஆணி அறைந்தால் போலுள்ள இந்திய எதிர்ப்புணர்வைச் சரியாக மதிப்பிடாது தமிழீழ மக்கள் தனி நாட்டை அமைத்தால் அது இந்தியாவின் ஐக்கியத்திற்கு ஆபத்தை விளைவிக்கும் என்று சிந்திப்பது யதார்த்தத்திற்கு முரணானது. ஆகவே, இந்தியா தனது கொள்கையைத் தொப்புள்கொடி உறவுள்ள தமிழீழ மக்களின் தனிநாட்டுக்கு ஆதரவாக மாற்றிக்கொள்ளாத வரை சிங்கள ஆட்சியாளருக்கு உதவிகளை வழங்கிக்கொண்டிருக்க நிர்ப்பந்திக்கப்படுவதோடு சீனா, பாகிஸ்தானை வைத்துச் சிறிலங்கா இந்தியாவை ஏமாற்றிக்கொண்டே இருக்கும். Posted by tamil at 6:52 AM 0 comments Friday, July 11, 2008 ஜே.வி.பியினருக்கும் புலிகளுக்கும் முடிச்சுப் போடும் கோமாளித்தனம் தன்னுடைய "கோயபலஸ்' அரசியல் பிரசாரங்களுக் காக "மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச் சுப் போடக்கூட' பின்னிற்காதவர் இலங்கை அரசின் பாது காப்புத்துறைப் பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல. அவருடைய கோமாளித்தனமான அரசியல் கருத்து வெளிப்பாடுகளால் அவரை அரசியல் விதூஷகராக விமர்சித்துக் கிண்டல் செய்யவும் ஆய்வாளர்கள் தவறு வதில்லை. அந்த வகையில் இப்போதும் ஒரு கருத்து வெளி யிட்டிருக்கின்றார் அவர். யுத்த வெறிப் போக்கை மட்டுமே தனது அரசியலுக் கான மூலதனமாகக் கொண்டு, ஆட்சியைக் கொண்டி ழுக்கும் இந்த அரசு, தான் எதிர்நோக்கும் எந்த அரசியல் நெருக்கடியையும் எதிர்கொள்வதற்கு யுத்தம் என்ற கவசத்துக்குப் பின்னால் போய் ஒளிக்க வேண்டிய கட் டாயத்தில் உள்ளது. "செல்லும் செல்லாதது எல்லாம் செட்டியார் தலை மேல்' என்பது போல அரசுக்கு வருகின்ற சிக்கல்கள், நெருக்கடிகள், கஷ்டங்கள் எல்லாவற்றையும் யுத்தக் கணக்கின் மீது சுமத்திவிட்டுத் தன்னைக் காபந்து பண்ணிக் கொள்ள வேண்டிய சிக்கல் அரசுக்கு. அரசின் அந்த வேலையை அரசியல் விதூஷகரான அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவே அரசின் சார்பில் மேற்கொள்ள வேண்டியவராகவும் இருக்கின்றார். நாட்டு மக்களின் குறிப்பாகத் தொழிலாளர்களின் நலனை முன்னிறுத்தி ஜே.வி.பி. முன்னெடுத்த வேலை நிறுத்தப் போராட்ட முஸ்தீபில் அரண்டுபோன அரசுத் தலைமை, அந்த அரசியல் நெருக்கடியைச் சமாளிப்பதற்காக யுத்தத்தின் பின்னாலேயே பாதுகாப் புத் தேடவேண்டிய இக்கட்டுக்குள் சிக்கியிருக்கின்றது. ஜே.வி.பியின் புலி விரோதப் போக்கு ஏன் தமிழர் விரோதப் போக்கு வெளிப்படையானது; அப்பட்ட மானது; பகிரங்கமானது. பௌத்த சிங்கள மேலாதிக்க வெறியிலும் பேரின வாத மேலாண்மைத் திமிரிலும் அமிழ்ந்து, ஊறி, அதில் மூழ்கிக் கிடக்கும் ஜே.வி.பி., தமிழர் தரப்புடனோ, புலிகளுடனோ சமரசம் செய்து, சமாதானத் தீர்வு காண்பதை எதிர்த்து வருகின்றது. புலிகளுடன் பேசவே கூடாது என்றும், அவர்களை முழு அளவில் அழித்து ஒழிப் பதற்காக யுத்த நிறுத்த ஒப்பந்தத்தைக் கிழித்தெறிய வேண்டும் என்றும் ஒற்றைக்காலில் நின்று வலியு றுத்தி வந்த தென்னிலங்கைத் தீவிரவாதக் கட்சி அது. இந்த அரசுத் தலைமையாவது, ஜனாதிபதித் தேர்த லுக்கு முன்னர் "அமைதித் தீர்வு' குறித்து மேலோட்ட மாகவேனும் நடிப்புக்கேனும் தனது ஈடுபாட்டைக் காட்டியது. ஆனால் ஜே.வி.பியோ நாடாளுமன்றத் தேர்தலுக்கும், ஜனாதிபதித் தேர்தலுக்கும் முன்னர் இருந்தே ஒரே நிலைப்பாட்டில்தான் யுத்த வெறிப் போக்கில் தான் இருந்து வருகின்றது. அது புலிகளுடன் பேசித் தீர்வு காண முயற்சிக் கவே கூடாது. புலிகளை அழித்தொழிக்க இலங்கை அரசு தனது இராணுவப் பலத்தை முழு அளவில் ஏவி விடவேண்டும். தமிழர்களுக்கென்று பிரதேச, பிராந் திய அதிகாரப் பரவலாக்கல் ஏதும் அவசியமில்லை. தேவையானால் கிராம மட்டத்துக்கு அதிகாரப் பகிர்வு செய்யலாம் இதுவே ஜே.வி.பியின் உறுதியான நிலைப்பாடாக இருந்து வந்தது; இருந்து வருகின்றது. அத்தகைய ஜே.வி.பி. நேற்று முன்னெடுத்த அரச பொது வேலைநிறுத்தத்தால் அரண்டுபோன அரசுத் தரப்பு, அதைச் சமாளிக்க முடியாமல் திக்குமுக்காடி இவ்விடயத்திலும் யுத்தத்தை முன்னிறுத்தி, தப்ப எத்தனிக்கின்றது. அதற்காக முழு புலி எதிர்ப்பு சிங்கள அமைப்பான ஜே.வி.பியை புலிகளுடன் முடிச்சுப்போட முயல்கிறது அரசு. அந்தக் கைங்கரியத்தை முன்னெடுக்கின்றார் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல. ""புலிகளுக்கு உதவி செய்வதற்காகத்தான் ஜே.வி. பியினர் இந்தப் பணிப் பகிஷ்கரிப்பு வேலைநிறுத்த போராட்டத்தை முன்னெடுக்கின்றனர். இவ்விடயத் தில் புலிகளுக்கு ஒத்தாசை புரிந்து அதன் மூலம் அர சுப் படைகளுக்கும் கேடு விளைவிக்கவே ஜே.வி.பி. எத்தனிக்கின்றது.'' என்று அவர் குற்றம் சுமத்துகின்றார். ""ஜே.வி.பி. அரச ஊழியர்களுக்கு ஐயாயிரம் ரூபா சம்பள உயர்வு கேட்டு இந்தப் போராட்டத்தை முன் னெடுக்கின்றது. அவர்கள் கேட்கின்றபடி, ஐயாயிரம் ரூபா சம்பள உயர்வை அரச ஊழியர்களுக்கு வழங்குவ தாயின் புலிகளுக்கு எதிரான போருக்கு ஒதுக்கப்படும் கணிசமான தொகையில் வெட்டு விழும். அதைத்தான் புலிகளும் எதிர்பார்க்கின்றார்கள். அதனையே ஜே. வி.பி. செய்வதால் ஜே.வி.பிக்கும் புலிகளுக்கும் ஏதோ தொடர்புகள் இருக்கின்றன என்றுதான் அர்த்தம்'' இப் படி விளக்கமளிக்க முயல்கின்றார் அமைச்சர் கெஹலிய. மாதனமுத்தா வழி வந்தோருக்கு இப்படிக் கதை கூறி, சுலபமாக வெற்றிகரமாக அரசியல் நடத்த லாம் என்பதால் இப்படிப் பேசுவதற்கு தென்னிலங் கையில் கைதட்டும், வரவேற்பும் கிடைக்கின்றன. இக்கூற்றுக்களையெல்லாம் சுலபமாக நம்பும் பொதுமக்கள் இருக்கும்வரை தென்னிலங்கை அரசியல்வாதிகளுக்கு என்ன குறை? அவர்கள் காட்டில் எப்போதும் நல்ல மழைதான்! நன்றி - உதயன் Posted by tamil at 5:44 AM 0 comments Monday, July 7, 2008 இந்திய, அமெரிக்கத் தேர்தல்களால் இங்கு தமிழர்களுக்கு நீதி கிட்டுமா? இலங்கை இனப்பிரச்சினையை ஒட்டிய ஒரு முக்கிய விடயத்தை தமிழர் தரப்பு விடுதலைப் புலிகள் தரப்பு மீண்டும் மீண்டும் பாரத தேசத்துக்குச் சுட்டிக்காட்டி வருகின்றது. "இந்திய அரசும் அதன் கொள்கை வகுப்பாளர்களும் இப்பிராந்தியத்தில் தங்களின் நேச சக்திகள் எவை, நண்பனாக வேடம் போட்டுக்கொண்டு குழிபறிக்கும் சக்திகள் எவை என்பதைச் சரியாக அடையாளம் காண வேண்டும்' என்று புலிகள் உரிமையோடு இந்தியாவை வற்புறுத்தி வருகிறார்கள். அண்மையில் தமிழகத்தின் "குமுதம்' இதழுக்குப் பேட்டியளித்த விடுதலைப் புலிகளின் அரசியல் பொறுப் பாளர் பா.நடேசன், இந்திய விவகாரத்தில் இலங்கைத் தரப்பு நடந்துகொண்ட போக்கை வரலாற்றுப் பின்ன ணியோடு சுட்டிக்காட்டியிருக்கின்றார். ""இந்திய சீனப் போரின் போதும், இந்திய பாகிஸ் தான் போரின்போதும், இந்தியாவுக்கு எதிரான நிலைப் பாட்டையே சிங்கள அரசுகள் எடுத்திருந்தமை வரலாறு. அப்போதெல்லாம் ஈழத் தமிழர்கள் இந்திய அரசுக்கு ஆதரவாகவே செயற்பட்டனர். ஆனால் இப்போது ஈழத் தமிழர் தமது சொந்த விடுதலைக்காக இரத்தம் சிந்திப் போராடும்போது, இந்திய அரசு சிங்கள அரசுக்கு உதவுகின்றதே......? அதை நிறுத்தி எமது விடுதலைப் போராட் டத்துக்கு ஆதரவாகவே அது செயற்பட வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு.'' என்று நடே சன் கூறியிருக்கின்றார். புலிகள் தரப்பிலிருந்தும் ஈழத் தமிழர்கள் பக்கத்தி லிருந்தும் விடுக்கப்படும் இத்தகைய வேண்டுகோள் புதுடில்லியின் காதில் ஏறுமா என்பதே கேள்வி. ஆனால் தனது தற்போதைய பதவிக் காலத்தின் அந்தத்தில் தான் ஆட்சியில் நீடிப்பதே உறுதியில்லை என்ற நிலையில் அரசியல் செல்வாக்கு வறுமையில் சிக்கி அல்லாடித் தள்ளாடிக் கொண்டிருக்கும் தற்போதைய மன்மோகன்சிங் அரசின் காதில் இந்தக் கோரிக்கை விழுவதோ அதை சாதகமாக அது பரிசீலித்து வலிமையான நடவடிக்கைகளில் இறங்குவதோ சாத்தி யமேயற்ற விடயங்கள் என்பதை அரசியல் வட்டாரங்கள் உறுதிப்படுத்தி விட்டன. அமெரிக்காவுடனான அணு ஆயுத ஒப்பந்தத்தைச் செய்வதா, இல்லையா என்ற "இரண்டுங் கெட்டான்' நிலையில் தவித்துப்போய் நிற்கும் மன்மோகன் அர சால், இலங்கை விவகாரத்தில் நீதியின்பால் நியாயத் தின்பால் நின்று தீர்க்கமான முடிவு எடுக்க முடியாது என்பது திண்ணம். அதற்கான அரசியல் பற்றுறுதியும், துணிச்சலும், திடசங்கற்பமும் மன்மோகன் அரசிடமோ, அதற் குள் அதிகாரம் மிக்கவராக இன்று விளங்கும் சோனியா காந்தியிடமோ இல்லவே இல்லை என்பதும் தெளிவு. தேவையானால், அண்மையில் தான் கொழும்புக்கு அனுப்பிய உயர்மட்டப் பிரதிநிதிகள் குழு போன்ற, செல்வாக்குள்ள குழுக்கள் மூலம் கொழும்புக்கு வாய் மூலமாக "டோஸ்' கொடுக்கும் வேலைகளைப் புதுடில்லி செய்து பார்க்கலாம். அதற்கு அப்பால் கொழும்புக்கு அழுத்தம் கொடுத்து அதனை வழிக்கு வரப் பண்ணும் அல்லது பணியவைக்கச் செய்யும் எந்தச் செல்வாக்கோ, தைரியமோ, ஆளுமையோ இன்றைய புதுடில்லி அரசுத் தலை மைக்கு அடியோடு கிடையவே கிடையாது என்கின்றன விடயமறிந்த வட்டாரங்கள். தனது இடதுசாரிக் கூட்டணிக் கட்சிகளோடு கொள்கை ரீதியாகப் பகைத்துக்கொண்டு தன்னுடைய அரசையே ஸ்திரப்படுத்திக்கொள்ள முடியாது தடுமாறும் புதுடில் லித் தலைமை இலங்கை விவகாரத்தில் நீதியைக் கையில் தூக்கிக் கொண்டு, நியாயத்தை நிலைநிறுத்தப் புறப்பட் டால் அது "மூஞ்சூறு தான் போகக் காணோமாம், அதற் குள் விளக்குமாற்றையும் தன்னோடு சேர்த்துத் தூக்கிக் கொண்டதாம்' என்ற மாதிரியாகிவிடும். எனவே தற்போதைய புதுடில்லி அரசிடம் இருந்து தமிழர்கள் நீதி, நியாயத்தை எதிர்பார்த்துக் காத்திருப்ப தில் அர்த்தமில்லை. எனினும், இலங்கை விடயத்தில் மன்மோகன்சிங் அரசின் கையறு நிலைமை குறித்து இந்தியாவில் இவ் வருட முடிவில் அல்லது அடுத்த வருட முற்பகுதி யில் நடைபெறப்போகும் பொதுத் தேர்தலில் அமோக வெற் றியீட்டி மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என எதிர்பார்க் கப்படுகின்ற பாரதீய ஜனதாக்கட்சியின் சார்பில் அதன் தென்னிந்தியப் புலனாய்வுப் பிரிவு சென் னையில் அவசர அவசரமாகக் கூடி ஆராய்ந்திருக்கிறது. இலங்கைத் தமிழர்களின் இன்றைய அவல நிலைமை குறித்து அங்கு விரிவாக ஆராயப்பட்டிருக்கின்றது. இரண்டு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டிருக்கின்றனவாம். * வடக்கில் தமிழர்களை அழிக்க இலங்கைப் படை கள் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு எதிராக ஈழத் தமிழர் களின் கைகளைப் பலப்படுத்துவது. * அரசமைப்பின் 13 ஆவது திருத்தத்துக்கு அப்பால் செல்லும் சமஷ்டிமுறைத் தீர்வை ஆதரிப்பது. இவையே அந்த முடிவுகள் என்கின்றன விடயமறிந்த வட்டாரங்கள். ஆக, அடுத்த வருடத்துக்குள் வரப்போகின்ற இந்தியப் பொதுத் தேர்தல் ஈழத் தமிழர்களுக்கு விடிவு தருவதாக அமையக்கூடும். இந்த நவம்பரில் அமெரிக்காவில் நடை பெறும் ஜனாதிபதித் தேர்தலின் முடிவும், இலங்கை போன்ற நாடுகளில் தமது உரிமைகளுக்காகப் போராடும் சிறுபான்மை இன மக்களுக்கு மீட்சி தர வழி செய்வதாக இருக்கும் என்று நம்பப்படுகின்றது. ஈழத் தமிழர்களுக்கு அடுத்த வருடத்தோடாவது மீட்சி கிட்டலாம் என்ற நப்பாசையை நம்பிக்கையை இந்திய, அமெரிக்கத் தேர்தல்கள் தருவனவாக உள்ளன என்று மட்டும் இப்போதைக்குச் சொல்லலாம். thanks uthayan Posted by tamil at 5:43 AM 0 comments Sunday, July 6, 2008 பொறுப்புணர்ந்து இப்போதாகிலும் பொங்கி எழுவாரா கருணாநிதி? தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி தாம் உலகத்தமிழர்களின் தலைவர்தானா அல்லது இந்தி யாவில் ஒரு மாநிலத்தில் அவ்வப்போது ஆட்சிக்கு வந்து போகும் வெறும் சராசரி அரசியல்வாதியா என் பதைத் தெளிவுபடுத்துவதற்கு ஓர் அமிலச்சோதனை யைப் பிரேரித்திருக்கின்றார் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியற்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன். பிறதமிழக அரசியல் கட்சிகளுடன் ஒன்று சேர்ந்து ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை ஆத ரிக்க கலைஞர் முன்வரவேண்டும் என்ற கோரிக் கையைத் தமிழகத்தின் முன்னணி சஞ்சிகையான குமுதத்தின் ஊடாக முன்வைத்ததன் மூலமே இந்த அமிலச் சோதனையை அவர் பிரேரித்திருக்கின்றார். ஈழத்தமிழர்களின் இருப்புக்கான கௌரவ வாழ்வுக் கான நியாயமான உரிமைகளுக்கான இந்த நீதியான போராட்டத்திற்கு தார்மீக ஆதரவுக் குரல் கொடுக்க வேண்டிய கடப்பாடு தமிழக முதல்வருக்கு உண்டு என்ற பொறுப்பை இந்தப் பேட்டியில் நாசூக்காகச் சுட்டிக் காட்டியிருக்கின்றார் நடேசன். கலைஞர் கருணாநிதியின் தமிழுணர்வு சந்தேகத் துக்கு அப்பாற்பட்டது என்பதையும் ஈழத்தமிழர் மீது கரிசனை உடையவர் கலைஞர் கருணாநிதி என் பதையும் புலிகளின் அரசியற் பொறுப்பாளர் வெளிப் படுத்துகின்றார். இப்படி கலைஞர் குறித்து, குறிப்பிடுவதற்கு உரி மையும், ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாகப் பொங்கிட எழுங்கள் என்ற அவரைப் பார்த்துக் கோருவதற்கான நெருக்கமும் உடையவர் நடேசன் என்பது பலருக்குத் தெரியாமல் இருக்கலாம். எண்பதுகளின் மத்தியில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தமிழகத்திலும் செயற்பட்ட காலத்தில் விடுதலைப்புலிகள் சார்பில் கலைஞருடன் தொடர்பாடல் நடத்தி வந்த முக்கிய புலிகளின் பிரமுகர் நடேசன் அப்போது தமிழக எதிர்க்கட்சித் தலைவராக விருந்த கலைஞருக்கு மிகநெருக்கமானவராகவும், விருப்புக்குரியவராகவும் இருந்தார் நடேசன். அதுமட்டுமல்ல தொண்ணூறுகளின் முற்பகுதி யில் ராஜீவ் படுகொலைக்கு முன்னர்இந்தியப் படைகள் இலங்கையிலிருந்து திரும்பிய பின்னர் அச்சமயம் தமிழக முதல்வராக இருந்த கலைஞர் கருணாநிதியோடு புலிகள் சார்புப் பிரதிநிதியாக நேரடிப் பேச்சுகளிலும், தொடர்பாடல்களிலும் ஈடுபட் டவர் நடேசன். அந்தவகையில் கலைஞருக்கு நன்கு பரிச்சயமானவரான நடேசன் இக்கோரிக்கையை முன் வைத்திருக்கின்றமை ஒரு முக்கிய விடயமாகும். தமிழுணர்வுமிக்க கருணாநிதி ஈழத்தமிழர் மீது கரிசனை உடையவர் என்று குறிப்பிடும் நடேசன், அத்தகையவர் இந்தியத் தேசிய அரசியல், மாநில அரசியல் என்ற எல்லைகளைக் கடந்து வந்து ஈழத் தமிழர்களின் விடுதலைக்கு உதவ வேண்டியது அத்தி யாவசியம், அந்த யதார்த்தத்துக்குக் கலைஞர் முதலிடம் கொடுக்க வேண்டும் என்று சுட்டிக் காட்டுகின்றார். இந்த உண்மையை உணராமல் மாநில, மத்திய அரசி யல் சகதிக்குள் சிக்கிக்கொண்டு உலகத் தமிழினத்தின் பால் உங்களுக்கு உள்ள கடமையையும் பொறுப்பை யும் தட்டிக் கழித்து விடாதீர்கள் என்று மென்மையான வார்த்தைகளில் இடித்துரைக்கின்றார் புலிகளின் அரசி யல் பொறுப்பாளர். சுமார் ஆயிரம் பிறை கண்டு, தமது வாழ்வின் முதிர்ச் சியில் நிற்கின்றார் கலைஞர். எண்பத்தி ஐந்தாவது அகவையைப் பூர்த்தி செய்து, எழுபது ஆண்டு காலப் பொதுவாழ்வைத் தாண்டிய கலைஞரின் காவியப் பயணத்தில் அவர் இன்னும் ஈழத்தமிழருக்கு நியாயம் செய்யாதமை ஈழத்தமிழர்களுக்காக மனவுறுதி யோடும் உத்வேகத்துடனும் குரல் எழுப்பிப் போராடி நீதி பெற்றுக் கொடுக்காமை என்ற பெருங் குறைபாடு நீடிக்கின்றது. அந்தக் குறைவை நிறைவு செய்யக் கூடிய அரசியல் சூழ்நிலைகளும், அதிகார வரம்புகளும், சூழ் நிலை வரப்பிரசாதங்களும் இன்று கலைஞருக்கு வாய்த்திருக்கின்றன. இந்தச் சந்தர்ப்பத்திலும் அந்த வரலாற்றுக் கடமையை நிறைவு செய்து முயற்சிக்காமல் உரிய எத்தனம் எடுக் காமல் மாநில, மத்திய அரசியல் சகதிக்குள்ளிருந்து வெளியே வரமுடியாத சராசரி அரசியல்வாதியாக அவர் இயங்குவாராயின் சரித்திரம் அவரைப் போற்றத்தவறும்; உலகத் தமிழினத் தலைவராக உயர்வதற்குக் கிட்டிய வரலாற்றுச் சந்தர்ப்பங்களைக் குறுகிய அரசியல் இலக்கு களுக்காகக் கோட்டைவிட்ட அரசியல் சந்தர்ப்பவாதி யாக அவரை அடையாளம் கண்டு தூற்றும். இலங்கை விவகாரத்தில் உண்மையான நண்பன் யார், கெட்ட எதிரி யார் என்ற யதார்த்தத்தைப் புரியாமல் இந்திய மத்திய அரசு தொடர்ந்தும் தவறிழைத்துக் கொண் டிருக்கின்றது என்பதே ஈழத் தமிழர்களின் பெரும் ஆதங்கம். இந்த விடயத்தில் இந்திய மத்திய அரசை தெளி வான பாதையில் இடித்துரைத்து, வழி நடத்தும் அதி காரமும், செல்வாக்கும், அரசியல் அந்தஸ்தும் இருந்தும் கூட, வளாவிருக்கும் கலைஞரின் போக்கும் ஈழத்தமிழர் களுக்கு விசனம் தருகின்றது. அரசியல் பயன் எதிர்பாராமல் ஈழத்தமிழர்களுக்காக வும், பொங்கி எழுவாரா இந்தக் காவிய நாயகர் கலை ஞர்? அதன்மூலம் உலகத்தமிழினத்தின் தலைவர் தாமே என்பதை நிரூபிப்பாரா அவர்? அதனைச் செய்ய அவருக்குள்ள காலம் குறுகியது. அது போனால் மீளாது. thanks - uthayan Posted by tamil at 5:25 AM 0 comments Thursday, July 3, 2008 சவால் விடும் சமர் சீமான்களின் சரித்திர பொத்தல்கள் வடபோர் அரங்கில் தாம் சரித்திர புகழ்பெற்ற சாதனைகளை நிகழ்த்தி வருவதாக சிறிலங்கா அரசு போர்முரசறைந்து வரும் வேளையில் ஈழத்தமிழர்கள் இராணுவ ரீதியான தெளிவுகளை ஏற்படுத்திக்கொள்ள வேண்டிய தேவை இக்கால கட்டத்தில் அவசியமாகிறது. விடுதலைப் புலிகள் தமது போராட்ட வரலாற்றில் ஈட்டிய பாரிய வெற்றிகளுக்கெல்லாம் பட்டாசு கொளுத்திப் பூரித்த தமிழினம், அவர்கள் தாக்குதல்களையே ஆரம்பிக்காத இக்காலப்பகுதியில் புலிகளின் மௌனத்தின் அர்த்தத்தைப் புரிந்துகொள்ள வேண்டிய தேவையிருக்கிறது. கிழக்கு போய்விட்டதாம், மன்னார் போய்விட்டதாம். பால்ராஜ் இல்லாததால் மணலாறும் போகப்போகிறதாம் என்றெல்லாம் அரசியல் அரட்டை பேசும் மக்கள், சிறிலங்கா அரச ஊடகங்களின் போர் தொடர்பான செய்திகளின் அடிப்படையிலேயே தமது முடிவுகளை எடுத்து வைத்திருக்கிறார்கள் என்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். அடுத்தது, இன்று மன்னாரிலும் வவுனியாவிலும் குடாநாட்டிலும் மணலாறிலும் சாதனைகளைப் புரிந்து வருவதாகக்கூறும் அரசு, அப்பகுதிகளி;லிருந்து இராணுவ ரீதியான செய்திகளை சேகரிக்க சுயாதீன செய்தியாளர்களுக்கு அனுமதி அளித்துள்ளதா என்பதை அடுத்தததாகப் பார்க்கவேண்டும் இராணுவச் செய்திகளை கொழும்பில் தமக்குச் சார்பாக வெளியிடாத சிங்கள ஊடகவியலாளர்களையே கடத்திச்சென்று தாக்குவதிலும் அரச தலைவரின் சகோதரர் தொலைபேசியில் மிரட்டுவதுமான சம்பவங்கள் இடம்பெறும்போது, மன்னாரிலோ வவுனியாவிலோ இருந்துகொண்டு நடுநிலையான செய்திகளை வெளியிடுவது என்பது நினைத்துப் பார்க்கமுடியாத ஒன்று. அப்படி மீறி அங்கிருந்து பணியாற்றிய ஓரிரு தமிழ் ஊடகவியலாளர்களும் அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட தொடர்ச்சியான மிரட்டல்களினால், தாம் அடுத்த நடேசனாகவோ இல்லை அடுத்த நிமலாராஜனாகவோ மாறிவிடலாம் என்ற அச்சத்தில் அங்கிருந்து வெளியேறிவிட்டனர். இந்நிலையில், இராணுவம் தற்போது களத்தில் ஒரு போரையும் களத்துக்கு வெளியே ஊடகங்களுக்கு எதிரான போரையும் நடத்தி தாம் தொடர்ச்சியாக வெற்றிகளை மட்டுமே கண்டு வருவதாக சிங்கள தேசத்துக்கும் அனைத்துலகத்துக்கும் பறைசாற்றி வருகிறது. இராணுவத் தலைமையகத்தில் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா அண்மையில் நடத்திய ஊடகவியாளர் சந்திப்புக்கூட வெளிநாட்டு நிருபர்களுக்கு உரியதாகவிருந்தது. உள்ளுர் ஊடகவியலாளர்களுக்கு அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் இராணுவ விவகாரங்கள் தொடர்பாக பூசிமெழுகும் இராணுவத் தலைமை, வெளிநாட்டு ஊடகவியலாளர்களுக்கு மட்டும் தானே நேரில் வந்து பதிலளித்திருப்பதிலிருந்து அவர் யாரைக் குறிவைத்து நாட்டில் போரை நடத்துகிறார் என்ற விடயத்தைச் சொல்லாமல் சொல்லி நிற்கிறது. வன்னிப் பெருநிலப்பரப்பை நோக்கி தமது இறுதிப் போரை தொடங்கிவிட்டதாகவும் இன்னும் ஒரு வருடகாலத்தில் விடுதலைப் புலிகளின் உறுப்பினர் ஒருவர்கூட எஞ்சியிருக்கமாட்டார் என்றும் அவர் கூறிய விடயங்களின் பின்னணியில் தமிழ்மக்கள் புரிந்துகொள்ள வேண்டிய பல வரலாறுகள் உள்ளன. கடந்த 20 வருடங்களாக இவ்வாறு புலியை அழிக்கப்போகிறோம் என்று கூறிக்கொண்டு கொழும்பிலிருந்து புறப்பட்ட பல இராணுவத் தளபதிகளின் வெற்றுக்கோசங்கள், களத்தில் எவ்வாறான மாற்றத்தை ஏற்படுத்தியிருந்தன என்பதை நோக்குவது, தற்போதைய இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவின் கருத்தைச் சீர்தூக்கிப் பார்ப்பதற்குத் தக்க ஆதாரங்களாக அமையும். 1996 ஆம் ஆண்டில் முல்லைத்தீவுப் படைத்தள வீழ்ச்சியால் மூக்குடைபட்ட இராணுவம் கிளிநொச்சியைக் கைப்பற்றி அங்கே தமது கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பிரசன்னத்தை நிலைநாட்டுவதற்கு, மேற்கொண்ட பாரிய படை நடவடிக்கை 'சத்ஜெய" எனப்படுகிறது. இதன் முதல் பாகத்தில் ஆனையிறவிலிருந்து பரந்தன் சந்தி வரை வந்த இராணுவம், இரண்டாம் மூன்றாம் பாகங்களை மேற்கொண்டு சுமார் ஒரு மாத காலம் புலிகளுக்கு எதிராக கடும் சமராடியது. இறுதியில் தனது முயற்சியில் வெற்றி கண்டது. கிளிநொச்சி சிறிலங்காப் படைகளின் வசம் வீழ்ந்தது. ஆட்களே இல்லாத வெறும் பிரதேசத்தை கைப்பற்றிய இராணுவம் அங்கு தனது இருப்பை உறுதியாக்கிக்கொண்டது. ஆனால் இதற்காக பூநகரியிலிருந்து தனது படையினரை முழுமையாகப் பின்வாங்கிக் கொண்டது. இந்தகாலப் பகுதியில், ஏ-9 வீதியில் - கிளிநொச்சியில் - நிலைகொண்டிருந்த தமது படையினருடன் கைகோர்ப்பதற்காக - ஏ-9 பாதையை முழுமையாக தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக - வவுனியாவிலிருந்து மேற்கொள்ளப்பட்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த படை நடவடிக்கை யாருமே மறக்கமுடியாத 'ஜெயசிக்குறு" எனப்படும் வெற்றி நிச்சயம். புலிகளின் பல்வேறு எதிர்த்தாக்குதல்களைச் சமாளித்தவாறே ஏ-9 வீதியிலுள்ள மாங்குளம் வரை வந்த இராணுவத்தை அதற்கு அப்பால் வரவிடாமல் கடுமையான எதிர்த்தாக்குதலில் ஈடுபட்டனர் புலிகள். கிளிநொச்சி சந்தியில் நிற்கும் இராணுவத்துக்கும் மாங்குளத்தின் வாயிலில் நின்ற இராணுவத்துக்கும் இடையிலான தூரம் வெறும் 25 கிலோ மீற்றர்கள் தான். இந்த இடைப்பட்ட தூரத்தை கைப்பற்றுவதற்கு இராணுவம் படாதபாடுபட்டது. அப்போது பிரதி பாதுகாப்பு அமைச்சராகவிருந்த - முன்னாள் அரச தலைவர் சந்திரிகா அம்மையாரின் மாமனார் ரத்வத்த - தற்போது சரத் பொன்சேகா விடும் அறிக்கை போலவே - சிங்கள தேசத்தின் காதில் பூச்சுற்றும் அறிக்கை ஒன்றை விடுத்தார். அதாவது, 1998 ஆம் ஆண்டு சிறிலங்கா சுதந்திர தினத்தன்று - பெப்ரவரி நான்காம் நாள் - கிளிநொச்சியிலிருந்து கண்டிக்கு பேருந்து விடப்போவதாக அவர் கூறினார். ஆனால் நடந்தது என்ன? கடும் சமராடி எத்தனையோ தந்திரோபாயங்களை எல்லாம் பயன்படுத்தி, இயலாத கட்டத்தில் ஜெயசிக்குறு நடவடிக்கையையே கைவிடும் நிலைமைக்கு இராணுவம் தள்ளப்பட்டது. தமது ஓர்மமான முறியடிப்புச் சமரில் வெற்றிகண்ட புலிகள், வன்னிக்குள் கால்பதித்த படைகளுக்கு பாரிய அடி ஒன்றைக் கொடுக்க அப்போது ஆயத்தமாகினர். அந்தத் திட்டத்தின்படி 1998 செப்ரெம்பரில் - தியாகி லெப். கேணல் தீலீபன் வீரச்சாவடைந்த நாளில் - தொடங்கப்பட்ட ஓயாத அலைகள் இரண்டின் மூலம் படையினரின் கிளிநொச்சி படைமுகாமுக்கு விழுந்தது அடி. முடிவு, கிளிநொச்சி நகர் புலிகளின் வசம் வீழ்ந்தது. கிளிநொச்சியை இனிமேல் விட்டுக்கொடுக்கக்கூடாது என்ற நோக்குடன் அதை மேலும் பலப்படுத்தும் வகையில், மாங்குளத்திலிருந்து பின்வாங்கிய புலிகள் கிளிநொச்சியை மையமாக வைத்து வன்னிக்குள் கால்வைத்த படையினருக்கு அடுத்த பாடத்தைப் புகட்ட ஆயத்தமாகினர். தற்போது, மன்னாரின் வீழ்ச்சியைப் பார்த்து புலிகள் பலவீனமடைந்து விட்டார்கள் என்று கூக்குரலிடுபவர்கள்; இந்த இடத்தில்தான் புலிகளின் சமச்சீரற்ற இராணுவ உத்தியை நோக்க வேண்டும். வவுனியாவிலிருந்து ஜெயசிக்குறு நடவடிக்கையைத் தொடங்க முன்னரும் ரத்வத்த தலைமையிலான இராணுவத் தளபதிகளின் திட்டப்படி - தற்போது நடைபெற்றதைப் போன்று - வவுனியாவிலிருந்து மன்னார் நோக்கிய வீதி வழியாக புலிகளுக்கு எதிரான - பெருமெடுப்பிலான - 'எடிபல" என்ற நடவடிக்கை நடத்தப்பட்டது. ஆனால், படையினரின் அந்த நடவடிக்கைக்கு எதிராக புலிகளின் ஒரு துப்பாக்கி ரவை கூட பயன்படுத்தப்படவில்லை. இப்போது என்ன நடந்ததோ அதனையே புலிகள் அன்றும் மேற்கொண்டிருந்தனர். இது ஒன்று. அடுத்தது, கிளிநொச்சியை தாம் கைப்பற்றியவுடன் எவ்வளவோ விலை கொடுத்து காத்த மாங்குளத்திலிருந்தே புலிகள்; பின்வாங்கினர். ஏனெனில், 1998 பெப்ரவரியில் ஒரு முயற்சி செய்து புலிகளால் முழுமையாக வெற்றிகொள்ளப்படாததாலும் கண்ணிவெடி வயல்கள் மூலம் அதியுச்சப் பாதுகாப்பு வேலியைக் கொண்டிருந்ததாலும் கிளிநொச்சி முகாம் என்று எமக்கான கோட்டையாகவே இருக்கும் என இராணுவம் இறுமாப்புடன் இருந்தது. அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த அந்தத்தளத்தின் வீழ்ச்சி படையினருக்குப் பாரிய அடியாக இருந்தது. அந்த அடியிலிருந்து மீள எழும்ப எத்தனிக்கும் படையினரால் மாங்குளம் சந்தியைக் கைப்பற்றியும் ஒன்றும் செய்ய முடியாது என்று புலிகள் நம்பினர். அத்துடன், கிளிநொச்சி படையினரின் வசமிருக்கும் வரைதான் மாங்குளம் தமக்கு கட்டாயம் தக்கவைக்க வேண்டிய பிரதேசம் என்பதையும் கிளிநொச்சி தம்மிடம் விழுந்த பின்னர் மாங்குளத்தைப் படையினர் கைப்பற்றினாலும் அது தம்மை முற்றுகையிடும் அவர்களது திட்டத்துக்கு பலனளிக்காது என்ற களநிலையையும் புலிகள் புரிந்திருந்தனர். வாங்கிய அடியில் இனிமேல், கண்டி வீதி சரிவராது என்ற முடிவுடன் புதிய திட்டத்துடன் இன்னோர் நடவடிக்கைக்கு ஆயத்தமானது இராணுவம். அதன்படி, 'ரிவிபல" என்ற படை நடவடிக்கையை ஆரம்பித்து எவ்வித எதிர்ப்புமின்றி நெடுங்கேணியிலிருந்து ஒட்டுசுட்டான் வரை - புலிகள் கோட்டையான புதுக்குடியிருப்பிலிருந்து பத்து பதினைந்து கிலோ மீற்றர் தூரம் வரை - வந்து நின்ற படைகள் புலிகளின் இருப்பையே கேள்விக்குறியாக்கின. கிளிநொச்சி வெற்றியால் மெல்லிதாய் மூச்சுவிட்ட புலிகளுக்கு அடுத்த சவால் விடுக்கப்பட்டது. அதன்பின்னர், மன்னார் - பூநகரி தரைப்பாதையைத் திறப்பதற்கான பாரிய படை நடவடிக்கையையும் இராணுவம் மேற்கொண்டது. 'ரணகோச" எனப்பெயரிட்டு முதலாம் பாகத்தில் தொடங்கி நான்கு பாகங்களை நடத்தி வன்னியின் மேற்குப் பகுதியிலும் புலிகளுக்குப் பாரிய சிக்கலை ஏற்படுத்தி மன்னார் பள்ளமடு வரை இராணுவம் முன்னேறியது. பள்ளமடுவிலிருந்து முன்னேற எடுத்த எந்த முயற்சியும் வெற்றியளிக்காத நிலையில் சில மாத கடும் எத்தனங்களின் பின்னர் 'ரணகோச" படை நடவடிக்கையையும் சிறிலங்கா அரசால் கிடப்பில் போடப்பட்டது. இதன் பின்னர், 'ரிவிபல" நடவடிக்கையின் மூலம் ஏற்கனவே கண்டி வீதிக்கு கிழக்காக வந்து நின்ற இராணுவம் புதிய நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டது. ஒட்டுசுட்டான் - அம்பகாமம் பகுதிகளில் இராணுவத் தளபதி வசந்த பெரேரா தலைமையில் மேற்கொண்ட 'வோட்டர் செட்" (நீர் சிந்து) எனும் பேரிலான இருவேறு நடவடிக்கைகள் புலிகளுக்குக் கணிசமான இழப்பை ஏற்படுத்தின. படையினருக்குப் பெருவெற்றியாக அமைந்த இந்த இரு நடவடிக்கைகளிலும் புலிகளின் பல உடலங்களையும் இராணுவம் கைப்பற்றியது. இந்த இடத்தில் புலிகள் போட்ட திட்டம்தான் வன்னி நமதே என்று மார்தட்டிய அரச படைகளுக்கு மரண அடியானது. 'வோட்டர் செட் - 2" நடவடிக்கை நடந்து நான்கைந்து நாட்களிலேயே புலிகளின் பாய்ச்சல் தொடங்கியது. புதுக்குடியிருப்பின் வாசலில் நின்று படையினர் போட்ட சதிராட்டத்துக்குக் கொடுக்கும் அடியாகவும் ஒட்டுமொத்த வன்னிப் படைகளுக்கு கொடுக்க மேற்கொண்ட பதிலடியாகவும் புலிகளின் 'ஓயாத அலைகள் - 3" நடத்தப்பட்டது. அதுவரை வன்னிக்குள் ஆழ அகல வைத்த படையினரின் கால்கள் புலிகள் கொடுத்த 'ஓயாத அலைகள் - 3" பதிலடியால் எங்கெங்கோ ஓடின. சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் அணியொன்றைத் தலைமை தாங்கி அப்படையணியின் சிறப்புத்தளபதி லெப். கேணல் இராகவன் ஒட்டுசுட்டானில் வரலாற்றுச் சிறப்பு மிக்க 'ஓயாத அலைகள் - 3" படை நடவடிக்கையைத் தொடங்கினார். அந்தத் தொடர் நடவடிக்கையின் முதல் வித்தாக லெப். கேணல் இராகவனே வீழ்ந்தார். மிகச் சிறப்பான தளபதியை முதற்களப்பலியாக் கொடுத்துத் தொடங்கப்பட்ட அந்த நடவடிக்கை தமிழர் சேனைக்குத் தொடர் வெற்றிகளைப் பெற்றுத்தந்தது. 'ஜெயசிக்குறு", 'ரிவிபல", 'வோட்டர் செட்" நடவடிக்கைகள் மூலம் படையினரால் கைப்பற்றப்பட்ட பகுதிகள் வெறும் ஐந்தே நாட்களில் புலிகளால் மீளக் கைப்பற்றப்பட்டதோடு பல்லாண்டுகளின் முன்னர் - ஆயுதப் போராட்டத்தின் தொடக்கக் காலத்தில் சிங்களவரால் வன்பறிப்புச் செய்யப்பட்ட தமிழரின் பூர்வீக வாழ்விடங்களான மணலாறு சிலோன் தியேட்டர், கென்ற் பாம், டொலர் பாம் போன்ற பகுதிகளும் மீட்கப்பட்டன. (இந்த இடங்களில்தான் தற்போது புலிகளின் மணலாறு முன்னணி அரண்கள் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.) அதேபோல, 'ரணகோச" படை நடவடிக்கைகள் மூலம் கைப்பற்றப்பட்ட அனைத்துப் பகுதிகளும் மூன்று நாட்களில் மீளக் கைப்பற்றப்பட்டன. (மன்னார் பள்ளமடு வரை வந்த இராணுவத்தையே வெறும் மூன்று நாட்களில் புலிகள் துரத்தியடித்தனர். ஆனால், தற்போது சரியான களத்தகவலின்படி இராணுவம் பள்ளமடு வரை கூட முன்னேறவில்லை என்பது இந்த வேளையில் சுட்டிக்காட்டப்பட வேண்டிய அடுத்த விடயம்) வன்னி மையத்துக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்திக்கொண்டு யாழ். குடநாட்டை நோக்கிப் புலிகள் தமது பார்வையைத் திருப்பினர். 'ஓயாத அலைகள் - 3" யாழ்ப்பாணத்தை நோக்கித் திரும்பியது. இதில் நடைபெற்ற சம்பவம் ஒன்றும் தற்போதைய இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவின் அறிக்கைகளுடன் ஒப்பிடக்கூடியதொன்றே. கிளிநோச்சியிலிருந்து முன்னேறி குடாநாட்டு இராணுவத்தைப் பின்தள்ளும் 'ஓயாத அலைகள் - 3" நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட சமயம், அதன் ஓர் அங்கமாக கேணல் தீபன் தலைமையிலான படைகள் பரந்தன் இராணுவத்தளம் மீது பாரிய தாக்குதலொன்றை நடத்தினர். ஒருநாள் முற்பகல் தாக்குதல் தொடங்குவதற்குச் சற்று முன்பாக கேணல் தீபன் அவர்கள் பரந்தன் இராணுவத்தள தளபதியுடன் தொலைத்தொடர்பு சாதனத்தில் தொடர்புகொண்டு, 'என்ன அடிபடப்போறியளா. அல்லது இப்பவே, ஓடப்போறியளா" - என்று கேட்டதற்கு - 'எங்களை என்ன ஒட்டுசுட்டான் இராணுவம் என்றா நினைத்தீர்கள். வந்து பாருங்கள நடக்கிறதை" - என்று பதிலுக்கு வீரவசனம் பேசினார். நண்பகல் சண்டையைத் தொடங்கிய புலிகள் அன்றே பரந்தன் தளத்தைத் கைப்பற்றினர். வன்னிக்குள் அகலக்கால் வைத்த அரச படைகளுக்கு புலிகள் வைத்தியம் பார்த்த வரலாறு இதுதான். எடிபல என்றும் 'ஜெயசிக்குறு" என்றும் 'ரணகோச" என்றும் 'சத்ஜெய" என்றும் 'ரிவிபல" என்றும் 'வோட்டர் செட்" என்றும் பத்துக்கும் மேற்பட்ட பாகங்களாக பல நடவடிக்கைகளை மேற்கொண்ட படையினர், 'ஓயாத அலைகள் - 3" என்ற ஒரே பதிலடியில் திரும்பிப்பாராமல் ஓடினர். வன்னிச்சமரில் அன்று புலிகள் பயன்படுத்திய களநிலை சமன்பாட்டைத்தான் இன்றும் வன்னிக்குள் ஆழக்கால் பதிக்கும் இராணுவத்துக்கு எதிராக பயன்படுத்தி வருகிறார்கள். ஆனால், இம்முறை படையினருக்கு எங்கு பொறிவைக்கப்பட்டிருக்கிறது என்பது காற்றுக்கும் கடவுளுக்கும் தெரியாத விடயம். ஆகவே, இராணுவச் சீமான்களின் கடந்த கால வரலாற்று ஒப்புமைகளை நோக்கினால், தற்போதைய தளபதி சரத் பொன்சேகாவும் எதிர்காலச் சந்ததிக்கு இன்னுமொரு ரத்வத்த என்பதில் எந்த மாற்றமும் இல்லை. நன்றி:- -ப.தெய்வீகன்- Posted by tamil at 9:18 PM 0 comments கூரை ஏறிக் கோழி பிடிக்க இயலாதவன் வானம் ஏறி வைகுண்டம் போன கதை இலங்கையில் ஊடகங்கள், ஊடகவியலாளர்கள் மீதான அடக்குமுறைகளும், வன்முறைத் தாக்குதல்களும் ர்வதே மட்டம் வரை பேரதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றன. மீண்டும் முழு இலங்கைத் தீவையுமே இருண்ட யுகத்துக்குள் தள்ளும் ர்வாதிகாரம் - எதேச்ாதிகாரம் - ஆட்சிப்பீடத்தில் ஸ்திரப்பட்டு வருவதையே ஜனநாயக தந்திரங்களுக்கும், ஊடக உரிமைகளுக்கும் எதிரான அராஜகங்கள் கட்டியம் கூறி உறுதிப்படுத்தி வருகின்றன. எண்பதுகளின் கடைசியிலும், தொண்ணூறுகளின் ஆரம்பத்திலும் இத்தகைய ஒரு கொடூரத்துக்குள் - அந்தகாரத்துக்குள் - தேம் மூழ்கடிக்கப்பட்டபோது, நாட்டையும் மக்களையும் அந்த அடக்குமுறை அராஜகத்திலிருந்து மீட்பதற்குக் குரல் எழுப்பியவர்களுள் முக்கியமான ஒருவரின் கைகளில் நாட்டின் நிறைவேற்றதிகாரம் இப்போது வீழ்ந்துள்ள காலகட்டத்திலேயே, மீண்டும் அதே இருட்டுப் பாதையை நோக்கி முழுத் தீவுமே நகர்த்தப்படும் பேரவலம் நேர்ந்திருக்கின்றது. அதுமட்டுமல்ல. அன்று அந்த அராஜகங்களுக்கு எதிராகக் குரல் எழுப்பி, அதனடிப்படையில் அத்தரப்பிடமிருந்து நிறைவேற்று அதிகாரத்தைத் தாம் கைப்பற்றி, பதினொரு ஆண்டு காலம் ஆட்சியிலிருந்து விட்டு, பதவியிலிருந்து இறங்கியிருக்கும் முன்னாள் ஜனாதிபதி ந்திரிகா குமாரதுங்கவும் கூட, இன்றைய அவல நிலைமை குறித்துக் கைவிரித்துவிட்டார். தமது உயிருக்கே - விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அல்லாத வேறு தரப்புகளினால் - ஆபத்து ஏற்பட்டிருப்பதாக இப்போது அச்ம் தெரிவிக்கும் நிலைக்கு அவரும் தள்ளப்பட்டு விட்டார். ஆக, அன்று ஊடக உரிமை உட்பட ஜனநாயக தந்திரத்தை மீட்பதற்காகப் போராடிய இரு முக்கிய தலைவர்களில் ஒருவர் அதிகாரத்தைக் கைப்பற்ற மீண்டும் அச்தந்திரங்கள் கேள்விக்குள்ளாகியுள்ளன. மற்றைய தலைவர் அதிகாரத்தில் இருந்து இறங்க அவரது தந்திரமே கேள்விக்குள்ளாகிவிட்டது. இதுதான் இன்றைய விபரீத நிலைமை. இதற்கிடையில் கடைசியாக ஊடகவியலாளருக்கு எதிராக இடம்பெற்ற கொடூரத் தாக்குதல் குறித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உடனடியாக வெளியிட்டிருக்கும் கருத்து பலரையும் பேராச்ரியத்துக்குள் ஆழ்த்தியிருக்கின்றது. ஊடகவியலாளர்கள் மீதான இந்தத் தாக்குதல்கள் அரசின் நற்பெயருக்குக் களங்கத்தை ஏற்படுத்தும் பல்வேறு தித் திட்டங்களில் ஒன்று எனக் கூறித் தம்மை மீறி நடக்கும் யேல்கள் இவை என்ற ஒரு படத்தைக் காட்ட அவர் முயல்கின்றார். அறுகம் குடா பாலத் திறப்புவிழாவில் உரையாற்றிய அவர், "பயங்கரவாதிகளின் பிடியிலிருந்து நாட்டையும் மக்களையும் மீட்கும் பெரும் போராட்டத்தில் அர ஈடுபட்டுக்கொண்டே நாட்டில் பாரிய அபிவிருத்தி நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருகின்றது. அத்தகைய அரசின் நற்பெயருக்குக் களங்கம் கற்பிக்கும் விதத்தில் பல தித் திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. அவற்றில் ஒன்றுதான் இவ்வாறான ஊடகவியலாளருக்கு எதிரான தாக்குதல் விவகாரம். கள முனைகளில் கிடைக்கும் வெற்றிகளை முறியடிக்கும் விதத்தில் நாட்டின் நற்பெயரை வரலாற்று முக்கியத்துவம் வாந்த இத்தகைய மயத்தில் கெடுப்பதற்காக எடுக்கப்படும் தித்திட்டமே இது" - என்று ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதலை அவர் விமர்சித்திருக்கின்றார். ஊடகவியலாளர்களுக்கு எதிரான இந்த அடக்குமுறை நடவடிக்கைகள் தமது அரக்கு விருப்பமில்லாத - அரசின் போக்குக்கு விரோதமான - அரத் தலைமையின் எத்தரப்பினதும் ஆசி, அங்கீகாரமின்றி - நடக்கின்ற - விடயங்கள் என்பது போல ஜனாதிபதியின் பேச் அமைந்திருக்கின்றது. அது உண்மையானால் - ஊடகங்களையும் ஊடகவியலாளர்களையும் தாக்கும் இத்தகைய ட்டவிரோத - அராஜக - வன்முறைச் யேற்பாடுகளை - ஜனாதிபதியும் அவரது அரம் ஏற்றுக்கொள்ளவில்லை. அத்தகைய போக்கை அவர்களது தரப்பு கிக்காது என்பது நிஜமானால் - ஊடக அடக்குமுறைக்கு எதிராக ஆக்கபூர்வமான நடவடிக்கை ஏதும் எடுக்காமல் - ம்பந்தப்பட்டோரைப் பிடித்து ட்டத்தின் முன் நிறுத்தாமல் - அவரது அர பார்த்துக்கொண்டு வாளாவிருப்பது ஏன்? கொழும்பிலும் பிற இடங்களிலும் பேனா தாங்கிய ஊடகவியலாளர்களுக்கு எதிராகத் துப்பாக்கிகள் நீளுவதைத் தடுக்கவோ, தட்டிக்கேட்கவோ துப்பில்லாத - துணிவில்லாத - ஓர் அரத் தலைமை, ஆயுதம் தாங்கிய போராட்டம் நடத்தும் விடுதலைப் புலிகளை முற்றாக அழிப்பதற்குக் காலக்கெடு விதித்து, அறிவிப்புகளை வெளியிடுவது அபத்தத்திலும் அபத்தம் அல்லவா? "கூரை ஏறிக் கோழி பிடிக்க முடியாதவன் வானம் ஏறி வைகுண்டம் போவேன் என்றானாம்." - என்பது போல இருக்கின்றது ஊடக அடக்குமுறைக்குக் காரணமானவர்களைத் தேடிப் பிடிக்கத் திராணியற்ற இந்த அர, புலிகளைக் கூண்டோடு அழிக்கப் போவதாக ஜம்பம் அடிப்பது. நன்றி - உதயன் Posted by tamil at 8:25 AM 0 comments Tuesday, July 1, 2008 இராணுவ வலுச் சமநிலையும் தமிழர் விடுதலைப் போராட்டமும் ஈழத்தமிழ் விடுதலைப் போராட்ட வரலாற்றை உற்று நோக்கினால் அது ஒரு படிமுறை சார்ந்த வளர்ச்சிப் போக்கைக் கொண்டிருப்பதை காணலாம். ஆரம்பத்தில் கோரிக்கை அரசியலாகவும் (Appeal politics) வேண்டுகோள் (Request politics)அரசியலாகவும் இருந்த நமது அரசியலானது, பின்னர் ஒரு ஆயுத வழி விடுதலைப் போராட்ட அரசியலாகத் தோற்றம் பெற்றது. நமது அரசியல் வெறும் கோரிக்கைகளாகவும், வேண்டுகோள்களாவும் இருந்த காலத்தில் தமிழர் தேசம் என்ற கருத்துநிலை பெருமளவிற்கு வலுவடைந்திருக்கவில்லை. இதனை இன்னும் சற்று விளக்கமாகப் பார்த்தால், தமிழ் மக்கள் இலங்கைத் தேசியம் என்ற பொதுநிலைக்குள் ஒரு உப தேசியமாக வாழ முடியுமென்ற நம்பிக்கையில் நிலைகொண்டிருந்த காலகட்டமாக இதனைச் சொல்ல முடியும். இரண்டாவது காலகட்டம் மேற்படி நம்பிக்கையில் ஏற்பட்ட தோல்வியிலிருந்தும், சந்தர்ப்பவாத தமிழ்த் தலைமைகளின் தடுமாற்றங்களிலிருந்தும் உருவாகியது. இந்த இரண்டாவது கட்டம்தான் தமிழர்கள் ஒரு தனியான தேசிய இனம், அவர்களுக்கான பாரம்பரிய தாயக நிலம் உண்டு என்ற கருத்துநிலையை நோக்கி தமிழர் அரசியலை நகர்த்தியது. அதனை அடைவதற்கான வழிமுறையாகவே, எதிரியை எதிரியின் வழியில் சந்தித்தல் என்னும் ஆயுத வழி புரட்சிகர அரசியல் உருப்பெற்றது. இந்தக் காலத்தில் தோன்றிய பல்வேறு ஆயுதவழி இயக்கங்களுக்கும் இதில் பெருமளவிற்கு உடன்பாடிருந்ததனால் தமிழர் தேசியம், தமிழர் தேசம் என்ற கருத்துநிலைகள் மக்கள் மயப்படுவதற்கு ஏற்றவகையான சூழலும் உருவாகியது. ஆனால், இந்தியத் தலையீட்டைத் தொடர்ந்து இந்த கருத்து நிலையிலும் பிரிவுகள் ஏற்பட்டன. இது நமது விடுதலை அரசியல் வரலாற்றில் நான்காவது காலகட்டமாகும். உண்மையில் இந்தக் காலகட்டத்தில்தான் அரசியல் அர்த்தத்திலும் போராட்ட அர்த்தத்திலும் தமிழர் தேசம் என்ற கருத்து நிலை முதிர்ச்சிப் பருவத்தை எய்தியது எனலாம். இந்த காலகட்டத்தில் விடுதலைப் புலிகள், ஈழத் தமிழர் விடுதலைப் போராட்டத்தை அதன் சரியான அர்த்தத்தில் சுமக்கும் ஒரேயொரு தமிழ்த் தேசிய தலைமையாகப் பரிணமித்தனர். ஆரம்பத்திலிருந்தே எதிரியை இராணுவ ரீதியாக முடக்குவதிலும், புலனாய்வு நடவடிக்கைகளில் நிபுணத்துவத்தை வளர்த்துக் கொள்வதிலும் மிகுந்த ஈடுபாட்டைக் காட்டிவந்த விடுதலைப் புலிகள், எதிரிக்கு இணையான மரபு வழி இராணுவக் கட்மைப்பொன்றில் கவனம் செலுத்தத் தொடங்கினர். அதாவது, எதிரியை அச்சுறுத்தக்கூடிய பலமான படைக் கட்டமைப்புக்களை உருவாக்கினர். ஏலவே புலிகள் மிகவும் இறுக்கமானதும், கடுமையான கட்டுக்கோப்பையும் கொண்ட இயக்கமாக வளர்ச்சியடைந்திருந்ததும்; அவர்கள் ஒரு மரபுவழி இராணுவ கட்டமைப்பை நோக்கி செல்வதை இலகுபடுத்தியது எனலாம். விடுதலைப் புலிகள் ஒரு பலமான மரபுவழி விடுதலை இராணுவமாக பரிணமித்ததைத் தொடர்ந்துதான் சிங்களம் முதல்முதலாக ஆட்டம் காணத் தொடங்கியது என்பதை இந்த இடத்தில் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். நீ எந்த வழிகளிலெல்லாம் வருகிறாயோ அந்த வழிகளிலெல்லாம் நாங்களும் வருவோம் என்பதுதான் சிங்களத்தை எதிர்கொள்வதில் புலிகள் பின்பற்றும் இராணுவக் கோட்பாடாக இருக்கிறது. வரலாற்று அடிப்படையில் இது நியாயமானதே. இன்று விடுதலைப் புலிகளின் இராணுவக் கட்டமைப்பானது ஒரு தேசத்திற்கான முழுமையான படைக்கட்டமைப்பாக வளர்ச்சி அடைந்துள்ளது. காலாட் படைகள், தாக்குதல் படையணிகள், கடற்படை, விமானப்படை என எதிரியின் சகலவிதமான தாக்குதிறனையும் எதிர்கொள்ளக் கூடிய படையணிகளை தமிழர் தேசம் கொண்டுள்ளது. இதற்கும் மேலாக உலக தரத்திற்கான புலனாய்வு கட்டமைப்பொன்றையும் புலிகள் வைத்திருக்கின்றனர். இவ்வாறானதொரு பின்னணியிலிருந்து பிறக்கும் கருத்து நிலைதான் இராணுவ வலுச் சமநிலைக் கோட்பாடாகும். அதாவது, ஒருவரை ஒருவர் வீழ்த்த முடியாத இராணுவ வலிமையைக் கொண்டிருக்கின்றனர் என்பதே இந்தக் கருத்துநிலையின் சாரம். ஆனையிறவு வெற்றியைத் தொடர்ந்து இந்த கருத்துநிலை இராணுவ ஆய்வாளார்கள் மற்றும் சர்வதேச இராஜதந்திரிகள் மத்தியில் ஒரு மௌனமான அங்கிகாரத்தைப் பெற்றது. ஆனால், அது முதல்முதலாக ஒரு சர்வதேச கவனத்தைப் பெற்றது நோர்வேயின் தலைமையில் இடம்;;பெற்ற பேச்சுவார்த்தையின் போதாகும். பேச்சுவார்தையின் போது இரு தரப்பினரையும் சமமாகக் கருதுதல் என்ற நடைமுறை பேச்சுவார்தையின் முக்கிய உள்ளடக்கமாக இருந்தது. அதன் வெளிப்பாடு அரசியல் அர்த்தத்திலும் மற்றும் இராணுவ வலிமையின் அர்த்தத்திலும் புலிகள் அரசிற்கு இணையானவர்கள் என்பதை நோர்வேயும், நோர்வேயின் பின்னால் இருந்த மேற்கு அரசுகளும் ஏற்றுக்கொண்டிருந்தன என்பதாகும். இந்த சமதரப்பு அந்தஸ்து அமெரிக்காவில் நடைபெற்ற உதவி வழங்கும் நாடுகளின் மாநாட்டின்போது நிராகரிக்கப்படதைத் தொடர்ந்தே புலிகள் பேச்சுவார்த்தையிலிருந்து தற்காலிகமாக விலகினர். ஆனால், மகிந்த அரசு ஆட்சிப்பீடமேறிய காலத்திலிருந்து அவர்களது யுத்த நிகழ்சி நிரலில் மேற்படி இராணுவ வலுச் சமநிலைக் கோட்பாடே முக்கிய இடத்தைப் பிடித்தது. சிங்கள பௌத்த ஆளும் வர்க்கத்தைப் பொறுத்தவரையில் தாம் புலிகளிடம் - அதாவது தமிழர்களிடம் - தோல்வியடைந்து விட்டோம் என்பதை எந்தவகையிலும் அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இந்நிலையில், புலிகளின் இராணுவச் சமவலுவைச் சிதைக்க வேண்டுமென்பதில் கருத்து பேதமற்ற ஒற்றுமை அவர்கள் மத்தியில், நிலவியது. அவ்வறானவர்கள் அனைவரும் மகிந்தவின் யுத்த அரசியலின் பின்னால் அணிதிரண்டனர். இன்று சிங்களம் தமது எதிர்பார்ப்பில் சில தற்காலிக வெற்றிகளைக் பெற்றிருக்கிறது. குறிப்பாக கிழக்கில் ஏற்பட்ட கருணா விடயத்தை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட சிங்களம் புலிகளுக்கு எதிரான சில இராணுவ முன்னெடுப்புக்களில் வெற்றியீட்டியிருக்கிறது. கிழக்கில் கிடைத்த வாய்புக்களைப் பயன்படுத்தி பெற்ற வெற்றிகளைப் போன்று, வன்னிக் களமுனைகளிலும் வெற்றிகளை பெற்றுவிடலாம் என்ற பேராவிவிலேயே தனது படையிணியின் முக்கால்வாசி பலத்தை வன்னி நோக்கி திருப்பி இருக்கின்றது. விடுதலைப் புலிகளைப் பொறுத்தவரையில் இன்றைய சூழலில் இராணுவ ரீதியில் அவர்களுக்கு இரண்டு இலக்குகள் இருக்கின்றன. முதலாவது, சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்ற இராணுவ வலுச் சமநிலையை மீளவும் உறுதிப்படுத்துவது. அடுத்தது, முன்னரைக் காட்டிலும் சிங்களத்தை இராணுவ ரீதியாக வலுவிழக்கச் செய்வது. இந்த இரண்டு இலக்கினையும் வெற்றி கொள்வதுதான் இனி வரப்போகும் தமிழரின் அரசியல் எதிர்காலத்தை தீர்மானிக்கப் போகின்றது. இன்று சிங்களத்தின் இறுமாப்பான வார்தைகளின் பின்னால் இருப்பது பேச்சுவார்த்தையின் அடித்தளமாக இருந்த இராணுவ வலுச்சமநிலையை தாங்கள் சிதைத்து விட்டோம் என்ற மகிழச்;சிதான். இதனால்தான் தற்போது சிங்களம் விடுதலைப் புலிகள் ஆயுதங்களைக் கிழே வைத்தால் பேசலாம் என்று ஏளனமாக கூறிவருகிறது. எனவே, நாம் எங்கு சுற்றி வந்தாலும், எந்த சர்வதேச அரசுகளிடம் கோரிக்கை வைத்தாலும் இறுதியில் எல்லாவற்றையும் தீர்மானிக்கப் போவதென்னவோ நமது பலம்தான் என்பதை நாங்கள் மறக்காமல் இருந்தால் சரி. 1973 ஆம் ஆண்டு, சிலியின் அரசுத்; தலைவர் சல்வடோர் அலண்டே சதிகாரர்களால் கொலை செய்யப்பட்ட போது, அது பற்றி கருத்துத் தெரிவித்த பிடல் காஸ்ரோவின் வார்த்தைகள் இந்த இடத்தில் நினைவு கொள்ளத்தக்கது. 'அலண்டேயை அவர்களால் இலகுவாக விழ்த்த முடிந்ததற்கு காரணம் அலண்டேயிடம் ஆயுதங்கள் இல்லாமலிருந்ததுதான். புரட்சிக்கு அயுதங்கள் தேவை. ஆயுதங்கள் மட்டும் போதாது கூடவே மக்களும் தேவை". இந்த இரண்டு அம்சங்களும் விடுதலைப் புலிகளின் வசம் இருக்கும் வரை அவர்களை முறியடிப்பது இலகுவான விடயமல்ல. எனவே, விடுதலைப் புலிகளின் இராணுவப் பலத்தைப் பேணுவது தமிழ் மக்கள் ஒவ்வொருவரதும் கடமையாகின்றது.
வரலாற்றில் தேடவும் ஆண்டு உட்பட முந்திய: மாதம் உட்பட முந்திய: அனைத்து மாதங்களும் ஜனவரி பெப்ரவரி மார்ச் ஏப்ரல் மே சூன் சூலை ஆகத்து செப்டம்பர் அக்டோபர் நவம்பர் டிசம்பர் குறிச்சொல் வடிப்பான்: வேறுபாட்டைக் காண வேண்டிய இரண்டு பத்திப்புக்களை தெரிவுச் செய்து கீழுள்ள பொத்தானை அழுத்தவும். குறியீட்டு விளக்கம்: (நடப்பு) = நடைமுறையிலுள்ள பதிப்புடனான வேறுபாடு, (கடைசி) = முந்திய பதிப்புடனான வேறுபாடு, சி = சிறு தொகுப்பு (நடப்பு | முந்திய) 02:53, 2 டிசம்பர் 2021‎ Meuriy (பேச்சு | பங்களிப்புகள்)‎ . . (2,093 எண்ணுன்மிகள்) (+1,167)‎ (நடப்பு | முந்திய) 00:07, 21 சூன் 2016‎ Baranee Kala (பேச்சு | பங்களிப்புகள்)‎ . . (926 எண்ணுன்மிகள்) (+777)‎ (நடப்பு | முந்திய) 08:08, 14 மே 2016‎ Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)‎ . . (149 எண்ணுன்மிகள்) (+77)‎ (நடப்பு | முந்திய) 04:45, 26 ஜனவரி 2015‎ Thapiththa (பேச்சு | பங்களிப்புகள்)‎ . . (72 எண்ணுன்மிகள்) (+72)‎ . . ("பகுப்பு:இதழ்கள் தொகுப்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
Bhaaratham Online Media: இந்தியர் விவகாரங்களில் நேரடி கவனம்; மஇகாவை புறக்கணிக்கிறாரா டத்தோஶ்ரீ அஸுமு? Wednesday, 1 July 2020 இந்தியர் விவகாரங்களில் நேரடி கவனம்; மஇகாவை புறக்கணிக்கிறாரா டத்தோஶ்ரீ அஸுமு? ரா.தங்கமணி ஈப்போ- பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியில் அங்கத்துவம் பெற்றுள்ள தேசிய முன்னணியின் உறுப்புக் கட்சியாக விளங்கும் மஇகாவை புறக்கணிக்கும் படலத்தை பேரா மந்திரி பெசார் டத்தோஶ்ரீ அஹ்மாட் ஃபைசால் அஸுமு முன்னெடுக்கின்றாரா? எனும் கேள்வி எழுந்துள்ளது. பேரா மாநிலத்திலுள்ள ஆலய விவகாரங்கள் இனி தன்னுடைய நேரடி பார்வைக்குக் கொண்டு வரப்படுவதோடு ஆலயத்திற்கான மானியங்களை இனி மந்திரி பெசார் அலுவலகத்தில் நேரடியாக விண்ணப்பிக்கலாம் என்று டத்தோஶ்ரீ அஸுமு பைசால் அறிவித்துள்ளார் என்று செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன. ஆலய விவகாரங்கள் மட்டுமல்லாது இந்தியர் விவகாரங்களையும் இனி மந்திரி பெசாரே நேரடியாக கவனித்துக் கொள்வார் என்றால் ஒரே கூட்டணியில் இடம்பெற்றுள்ள, இந்தியர்களை பிரதிநிதிக்கும் தாய்க்கட்சியான மஇகாவை மந்திரி பெசார் மதிக்கவில்லை என்பது இதன்வழி புலப்படுகிறது. தாம் ஒரு முஸ்லீமாக இருந்தாலும் ஆலய விவகாரங்களை நேரடியாக கவனிப்பேன் என கூறியுள்ள டத்தோஶ்ரீ அஸுமு பைசாலின் நல்லெண்ணத்தை ஆதரிக்கலாம். ஆனால் அதன் பின்னால் மறைந்துள்ள பல விவகாரங்களை ஆராயமால் கண்மூடித்தனமான அறிவிப்புகள் ஆபத்தில் முடியும் என்பதை டத்தோஶ்ரீ அஸுமு உணர வேண்டும். ஆலய விவகாரங்களை நேரடியாக கவனிக்கப்படும் என்றால் மந்திரி பெசாரே இனி இம்மாநிலத்திலுள்ள ஆலயங்களுக்கு நேரடி வருகை புரிவாரா? அல்லது ஆலயங்களில் நிலவும் பிரச்சினைகளைதான் நேரடியாக களமிறங்கி கவனிப்பாரா? என்பதை விவரிக்க வேண்டும். இந்துக்களின் வழிபாட்டுத் தலங்களான ஆலயங்கள் யாவும் சமயம் சார்ந்த விவகாரங்களை உள்ளடக்கியவையாகும். அதுவும் இங்குள்ள பெரும்பாலான ஆலயங்கள் நிலம், கட்டமைப்பு, பண பலம், நிர்வாகப் போராட்டம் போன்ற பல பிரச்சினைகளை எதிர்நோக்கியுள்ளன. 2018க்கு முன்பு வரை மாநில அரசில் ஆலோசகராக பதவி வகித்த மஇகா ஆலயப் பிரச்சினைகளை நேரடியாக களமிறங்கி தீர்வு கண்டதோடு மானியங்களையும் வழங்கின. 2018க்கு பிறகு பக்காத்தான் ஹராப்பான் ஆட்சியில் இந்தியர்களை பிரதிநிதித்த இஸ்லாம் அல்லாதோர் விவகாரப் பிரிவு ஆலயங்களுக்கான மானியத்தை முறையாக வழங்கவில்லையெனில் கண்டிக்க வேண்டியது முன்னாள் ஆட்சிக்குழு உறுப்பினரைத்தானே தவிர மஇகாவை அல்ல. மாநில மந்திரி பெசார் எனும் நிலையில் நிதி, பாதுகாப்பு, நிலம், இயற்கை வளம், பொருளாதார திட்டமிடல், அரசாங்கத்துடன் சார்பு நிறுவனங்கள் (ஜி.எல்.சி) மற்றும் தேசிய ஒற்றுமை துறை என ஏற்கெனவே பல பொறுப்புகளை டத்தோஶ்ரீ ஃபைசால் அஸுமு பொறுப்பேற்றிருக்கும்போது இந்த கூடுதல் பொறுப்பு ஏற்புடையதாகுமா? அதோடு மந்திரி பெசாரே இவற்றை நேரடியாக கவனிப்பாரா? அல்லது இதற்காக சிறப்புக் குழுவையோ தனிநபர்களையோ நியமிப்பாரா? என்பதை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். அவ்வாறு தனிநபரையோ ஒரு குழுவையோ நியமிக்க முடியாமானால் அந்த பொறுப்பு ஏன் மஇகாவிடம் வழங்கப்படவில்லை? கிளை, தொகுதி, மாநிலம், மத்திய செயலவை என்று ஒரு கட்டுக்கோப்பான தலைமையின்கீழ் செயல்படும் மஇகாவை நம்பாத டத்தோஶ்ரீ அஸுமு எவ்வாறு ஒரு சிறு குழுவை நம்புகிறார்? ஏதேனும் ஆலய விவகாரம் தலைதூக்கினால் முன்பு மஇகாவை தூற்றிய விரல்கள் அனைத்தும் மந்திரி பெசாரையோ, சிறு குழுவையோ நோக்கி நீளும்போது தாக்கு பிடித்து களத்தில் நிற்பார்களா? என்பதும் விவரிக்கப்பட வேண்டும். ஆலய விவகாரங்களை மஇகாவும் இந்திய பிரதிநிதியும் கையாளும் போதே பல பிரச்சினைகள் தலைதூக்கியுள்ளன. இப்போது மந்திரி பெசாரே அவற்றை நேரடியாக கவனிக்கும்போது இப்பிரச்சினைகள் மதம் சார்ந்த விவகாரமாக உருவெடுத்தால் அப்போது மந்திரி பெசாரின் நிலைப்பாடு எங்கு, யார் பக்கம் இருக்கும்? என்பதும் விவரிக்கப்பட வேண்டியது அவசியமாகும். இவ்விவகாரத்தில் மஇகாவும் தனது நிலைப்பாட்டை விவரிக்க வேண்டும். தம்முடைய பதவிகள் யாவும் பறிக்கப்படுவதை மஇகா வேடிக்கை பார்க்குமானால் வரும் காலத்தில் மஇகா இன்னும் அதிகமாக புறக்கணிக்கப்படும் சாத்தியம் உள்ளதை உணர்ந்து இப்போதே தன்னை சுதாகரித்துக் கொள்ள வேண்டும். By myBhaaratham - July 01, 2020 Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest No comments: Post a Comment Newer Post Older Post Home Subscribe to: Post Comments (Atom) 'இயற்கையை காப்போம் இனியதோர் உலகை படைப்போம்' - சிறப்பு கட்டுரை பினாங்கு - இயற்கை என்பது இயல்பாக இருப்பது என்பது பொருள் கொண்டதாகும் . இயல்பாகவே தோன்றி மறையும் பொருட்கள் அவற்றின் இயக்கம் , அவை இயங... மரணத்திலும் பிரியாத தம்பதியர் பூச்சோங்- மாரடைப்பின் காரணமாக மனைவியும் அவரை தொடர்ந்து கணவனும் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியடையச் செய்துள்ளது. சிலாங்கூர்,பூச்சோங்கைச் ச... சோழன் ஆட்சியை இழந்ததைப்போல, மஇகாவை இழந்து விடாதீர்கள்!!! சேரன், சோழன், பாண்டியன் ஆட்சிகளை இழந்து 500 ஆண்டுகளைக் கடந்து விட்டோம். இங்கு வந்து 200 ஆண்டுகளாகக் கட்டமைத்த வாழ்க்கையைத்தான் இன்றும...
உலகிலுள்ள பெரும்பாலான மதங்கள், பொருளாதாரத்தை ஆன்மீகத்திற்கு எதிராகவே சித்தரித்துக் காட்டுகின்றன. பொருளாதாரமும் ஆன்மீகமும் ஒன்றுக்கொன்று எதிரானவை; பொருட்செல்வம் உடையவன் ஆன்மீகவாதியாக முடியாது என்ற கருத்தைத் தான் முன்வைக்கின்றன. ஆனால் ஆன்மீகத்திற்குப் பொருட்செல்வம் ஒரு தடைக்கல் அல்ல என்று இஸ்லாம் கூறுகின்றது. பொருளைத் தேடுவதும், அதைச் சேமிப்பதும், நல்வழியில் செலவளிப்பதும் அனுமதிக்கப்பட்டுள்ளது என்பதை விட வலியுறுத்தப்பட்டுள்ளது என்று கூறலாம். வியாபாரத்தைத் தூண்டும் திருக்குர்ஆன் வசனங்கள் திருக்குர்ஆன் ஆன்மீகத்தைச் சொல்லித் தரக் கூடியது. இதில் அதிகமான இடங்களில் சம்பாதிக்கத் தூண்டக்கூடிய வசனங்களும் இடம்பெற்றுள்ளன. தொழுகை முடிக்கப்பட்டதும் பூமியில் அலைந்து அல்லாஹ்வின் அருளைத் தேடுங்கள்! அல்லாஹ்வை அதிகம் நினையுங்கள்! நீங்கள் வெற்றி பெறுவீர்கள். (அல்குர்ஆன் 62:10) தொழுகை முடிந்தவுடன் வியாபாரத்திற்குச் செல்லச் சொல்வதிலிருந்து பொருள் திரட்டுவது அவசியம் என்று விளங்குகின்றது. நீங்கள் அமைதி பெறவும், அவனது அருளைத் தேடவும், நீங்கள் நன்றி செலுத்தவும் இரவு, பகலை ஏற்படுத்தியிருப்பது அவனது அருளில் உள்ளது. (அல்குர்ஆன் 28:73) பகலில் அவனது அருளை தேட வேண்டும்; இரவில் ஓய்வெடுக்க வேண்டும் என்று சொல்வதிலிருந்து வியாபாரம் செய்வது அவசியம் என்பதை அறிய முடியும். கடலிலிருந்து பசுமையான இறைச்சியை நீங்கள் உண்பதற்காகவும், அணிந்து கொள்ளும் நகையை நீங்கள் அதிலிருந்து வெளிப்படுத்திடவும், அவனது அருளைத் தேடவும், நீங்கள் நன்றி செலுத்திடவும் கடலை உங்களுக்கு அவனே பயன்படச் செய்தான். கப்பல்கள் அதைக் கிழித்துச் செல்வதை நீர் பார்க்கிறீர். (அல்குர்ஆன் 16:14) கடலில் அவனுடைய அருளைத் தேடுவதற்கு வசதியாக அதில் பயணத்தை இறைவன் இலகுவாக ஆக்கிருக்கின்றான். மேற்கண்ட வசனங்கள் அனைத்தும் வியாபாரத்தின் மூலமும் ஆகுமாக்கப்பட்ட பிற வழிமுறைகளிலும் பொருளாதாரத்தைத் திரட்ட வேண்டும் என்பதை விளக்குகின்றன. அனைத்திற்கும் பொருளாதாரம் அவசியம் தாய், தந்தையைக் கவனிக்க பொருளாதாரம் தேவை. திருமணம் முடிக்கும் போது மஹர் கொடுக்கப் பொருளாதாரம் தேவை. வியாபாரத்தை ஆகுமாக்கி வட்டியை இறைவன் தடை செய்தான். குழந்தை பிறந்தால் அகீகா கொடுக்கப் பணம் தேவை. நோன்பு காலத்தில் நோன்பை முறிக்கக்கூடிய காரியமான உடலுறவு கொண்டு விட்டால் இந்தப் பாவத்திற்குப் பரிகாரமாக ஒரு அடிமையை விடுதலை செய்யவேண்டும் அல்லது 60 ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும். இதைச் செய்வதற்குப் பொருளாதாரம் தேவை. சத்தியம் செய்து அதை முறித்துவிட்டால் அடிமையை விடுதலை செய்ய வேண்டும். அல்லது ஏழைக்கு உணவளிக்க வேண்டும். இந்தப் பரிகாரத்தைச் செய்வதற்கும் பொருளாதாரம் தேவை. நோன்பு வைக்க முடியாத நோயாளிகள் தினமும் ஏழைகளுக்கு உணவு கொடுக்க வேண்டும். மனைவியை (லிஹார்) தாய்க்கு ஒப்பாகக் கருதி இல்லற வாழ்வில் சேரவில்லையென்றால் இதை முறித்துவிட்டு இதற்குப் பரிகாரமாக ஒரு அடிமையை விடுதலை செய்ய வேண்டும். அல்லது 60 ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும். குர்பானி மற்றும் நோன்பின் தர்மமான ஸதக்கதுல் பித்ரா கொடுக்க வேண்டும். உண்ணுங்கள், பருகுங்கள் என்று அல்லாஹ் கூறுவதிலிருந்து உண்ண, குடிக்கப் பொருளாதாரம் தேவை. மேற்கூறப்பட்ட விஷயங்கள் தவிர இதில் கூறப்படாத விஷயங்கள் ஏராளம் உள்ளன. ஒரு மனிதன் அன்றாட வாழ்க்கையில் சந்திக்கின்ற அனைத்துப் பிரச்சனைகளுக்கும் பொருளாதாரம் இன்றியமையாததாகும் என்பதை விளங்க முடிகின்றது. சொத்துக்களை வாரிசுகளுக்கு விட்டுச் செல்லுதல் நாம் நம்முடைய சொத்துக்களை நமக்குப் பின்னால் வரக்கூடிய தலைமுறை வாரிசுகளுக்கு விட்டுச் செல்லுமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டுள்ளனர். ஏனென்றால் அவர்கள் ஏழைகளாக மாறி பிறரிடம் கையேந்துவதை விட செல்வந்தர்களாக அவர்களை விட்டுச் செல்வது சிறந்தது. “விடை பெறும்‘ ஹஜ்ஜின் போது நபி (ஸல்) அவர்கள் நோயுற்றிருந்த என்னை (நலம்) விசாரிக்க வந்தார்கள். அந்த நோயினால் நான் இறப்பின் விüம்புக்கே சென்று விட்டிருந்தேன். (நபி (ஸல்) அவர்களைக் கண்டதும்) நான், “அல்லாஹ்வின் தூதரே! நான் ஒரு செல்வந்தன்; எனக்கு ஒரேயொரு மகளைத் தவிர வேறு (நேரடி வாரிசு) எவரும் இல்லை. இந்நிலையில் நீங்கள் பார்க்கின்ற வேதனை என்னை வந்தடைந்து விட்டது. ஆகவே, நான் என் செல்வத்தில் மூன்றில் இரண்டு பங்கை தர்மம் செய்து விடட்டுமா?” என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், “வேண்டாம்” என்று சொன்னார்கள். நான், “அப்படியென்றால் அதில் பாதியை தர்மம் செய்து விடட்டுமா?” என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், “மூன்றிலொரு பங்கு (போதும்.) சஅதே! மூன்றிலொரு பங்கே அதிகம் தான். நீங்கள் உங்கள் வாரிசுகளை மக்கüடம் கையேந்தும் ஏழைகளாக விட்டுச் செல்வதை விடத் தன்னிறைவுடையவர்களாக விட்டுச் செல்வதே சிறந்ததாகும். அறிவிப்பவர்: சஅத் பின் அபீவக்காஸ் (ரலி), நூல்: புகாரி 3936 சொத்துக்களைச் சேர்ப்பது, பணம் சம்பாதிப்பது கூடாது என்றால் நபி (ஸல்) அவர்கள் எதற்காக வாரிசுகளுக்கு விட்டுச் செல்லுமாறு ஏவினார்கள்? அப்படியானால் சொத்து, பணம் சம்பாதிப்பது கூடாது என்ற கருத்து தவறானது என்று விளங்குகின்றது. உயிரைக் கொடுத்தேனும் சொத்தைப் பாதுகாத்தல் ஒரு மனிதனிடத்தில் உயர்ந்த செல்வம் உயிராகும். கத்தியைக் காட்டி பயமுறுத்தினால் உயிருக்குப் பயந்து ஓடி விடுவான். ஆனால் ஒரு மனிதன் தன்னுடைய சொத்தைக் காப்பாற்றுவதற்குப் போராடி அதில் அவன் இறந்து விட்டால் அவன் உயிர் தியாகியுடைய அந்தஸ்தை அடைந்து கொள்வான் என்று இஸ்லாமிய மார்க்கம் கூறுகிறது. ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! ஒருவன் எனது செல்வத்தைப் பறிக்கும் நோக்கத்தில் வந்தால் (நான் என்ன செய்ய வேண்டும்) கூறுங்கள்?” என்று கேட்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அவனுக்கு உமது செல்வத்தை (விட்டு)க் கொடுக்க வேண்டியதில்லை” என்று கூறினார்கள். அந்த மனிதர், “அவன் என்னுடன் சண்டையிட்டால்…?” என்று கேட்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நீரும் அவனுடன் சண்டையிட வேண்டியது தான்!” என்று கூறினார்கள். “(அந்தச் சண்டையில்) அவன் என்னைக் கொன்றுவிட்டால்…?” என்று அந்த மனிதர் கேட்டார். அவர்கள், “அப்போது நீர் உயிர்த்தியாகி (ஷஹீத்) ஆவீர்” என்றார்கள். “நான் அவனைக் கொன்றுவிட்டால்…?” என்று அவர் கேட்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அவன் நரகத்திற்குச் செல்வான்” என்று பதிலளித்தார்கள் அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம் 225 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தன் செல்வத்தைப் பாதுகாப்பதற்காகப் போராடும் போது கொல்லப்பட்டவர், இறைவழியில் உயிர்த் தியாகம் செய்தவர் (ஷஹீத்) ஆவார். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ரு (ரலி), நூல்: புகாரி 2480 பொருளாதாரத்தைக் கேட்டுப் பிரார்த்தித்தல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் பத்து வருடம் வேலை செய்த அனஸ் என்ற நபித்தோழருக்குப் பொருளாதார வளத்தை வழங்குமாறு அல்லாஹ்விடம் நபியவர்கள் துஆச் செய்தார்கள். இதிலிருந்து பொருளாதாரத்தைக் கேட்டு துஆச் செய்யலாம் என்று விளங்குகின்றது. நபி (ஸல்) அவர்கள் (என் தாயார்) உம்மு சுலைம் (ரலி) அவர்களிடம் சென்றார்கள். அவர்கள் பேரீச்சம் பழங்களையும் நெய்யையும் நபி (ஸல்) அவர்களிடம் கொண்டு வந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் “உங்கள் நெய்யை அதற்குரிய (தோல்) பாத்திரத்திலேயே ஊற்றுங்கள்; உங்கள் பேரீச்சம் பழங்களை அதற்குரிய பையில் போடுங்கள்; ஏனெனில், நான் நோன்பு நோற்றிருக்கிறேன்!” என்றார்கள். பிறகு வீட்டின் ஒரு மூலையில் நின்று கடமையல்லாத தொழுகையைத் தொழுதார்கள், உம்முசுலைம் (ரலி) அவர்களுக்காகவும் அவர்களுடைய குடும்பத்தாருக்காகவும் பிரார்த்தித்தார்கள். அப்போது உம்மு சுலைம் (ரலி) அவர்கள் “அல்லாஹ்வின் தூதரே! எனக்கு விருப்பமான ஒன்று உள்ளது!” என்றார். நபி (ஸல்) அவர்கள், “அது என்ன?” என்று கேட்டார்கள். “உங்கள் ஊழியர் அனஸ் தான்!” என்று உம்மு சுலைம் (ரலி) அவர்கள் கூறினார்கள். இம்மை மறுமையின் எந்த நன்மையையும் விட்டுவிடாமல் (எல்லா நன்மைகளையும்) கேட்டு, எனக்காக நபி (ஸல்) அவர்கள் பிராத்தித்தார்கள். “இறைவா! இவருக்குப் பொருட்செல்வத்தையும் குழந்தைச் செல்வத்தையும் வழங்குவாயாக! இவருக்கு சுபிட்சம் (பரக்கத்) புரிவாயாக!” என்று பிரார்த்தித்தார்கள். இன்று நான் அன்ஸாரிகளிலேயே அதிகச் செல்வந்தனாக இருக்கிறேன். அறிவிப்பவர்: அனஸ் (ரலி), நூல்: புகாரி 1982, 6334, 6344, 6378, 6380 அனஸ் அவர்கள் கூறுகின்றார்கள்: நான் இறக்கும் தருவாயில் மதினாவிலேயே மிகப்பெரும் செல்வந்தனாக இருந்தேன். ஏனென்றால் நபி (ஸல்) அவர்கள் செல்வத்தைக் கேட்டு எனக்கு துஆ செய்தது தான் காரணம். செல்வத்தைக் கேட்டு நபியவர்களின் பிரார்த்தனை நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்விடத்தில், “என்னை ஏழையாக வாழச் செய்து, ஏழையாகவே மரணிக்கச் செய்’ என்று பிரார்த்தனை செய்ததாக நபி (ஸல்) பெயரில் சில ஹதீஸ்களை இட்டுக்கட்டியுள்ளனர். நபி (ஸல்) அவர்களே செல்வத்தைக் கேட்டுப் பிரார்த்தனை செய்ததிலிருந்து செல்வத்தைக் கேட்டு நாமும் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்யலாம் என்று விளங்குகின்றது. நபி (ஸல்) அவர்கள் “அல்லாஹும்ம! இன்னீ அஸ்அலுக்கல் ஹுதா, வத்துகா, வல் அஃபாஃப வல் ஃகினா” என்று பிரார்த்தித்துவந்தார்கள். (பொருள்: இறைவா! உன்னிடம் நான் நல்வழியையும் இறையச்சத்தையும் சுய கட்டுப்பாட்டையும் தன்னிறைவையும் வேண்டுகிறேன்.) அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி), நூல்: முஸ்லிம் 5265 அள்ளி அள்ளிக் கொடுப்பவன் சிறந்தவன் எதற்கும் சக்தி பெறாத, பிறருக்கு உடைமையான அடிமையையும், யாருக்கு நாம் அழகிய செல்வத்தை அளித்தோமோ அவனையும் அல்லாஹ் உதாரணமாகக் காட்டுகிறான். இவன் இரகசியமாகவும், வெளிப்படையாகவும் அதிலிருந்து (நல் வழியில்) செலவிடுகிறான். (இவ்விருவரும்) சமமாவார்களா? எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே. எனினும் அவர்களில் அதிகமானோர் அறியமாட்டார்கள். (அல்குர்ஆன் 16:75) இந்த் வசனத்தில் அல்லாஹ், செல்வத்தை வைத்திருப்பவனை தனக்கும், எந்தச் சொத்திற்கும் சொந்தமாகாத அடிமையை சிலைகளுக்கும் உதாரணமாகச் சொல்லிக் காட்டுகிறான். அழகிய செல்வம் வைத்திருப்பவனை உயர்ந்த ஒன்றிற்கு உதாரணமாகக் காட்டுவதன் மூலம் செல்வத்தின் சிறப்பை நாம் உணர்ந்து கொள்ள முடிகின்றது. தர்மம் செய்பவன் மீது பொறாமை கொள்ளுதல் பொதுவாக ஒரு மனிதன் இன்னொரு மனிதன் மீது பொறாமை கொள்வதை அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் தடுத்துள்ளனர். பொறாமைக்காரனிடமிருந்து பாதுகாவல் தேடவும் இறைவன் கற்றுத் தந்துள்ளான். பொறாமை கொள்ளும் போது பொறாமைக்காரனின் தீங்கை விட்டும் பாதுகாப்புத் தேடுகிறேன். (அல்குர்ஆன் 113:5) பொறாமை என்பது ஷைத்தானின் குணம் என்றெல்லாம் எச்சரிக்கையாகச் சொல்லப்பட்டிருந்தும் இரண்டு விஷயங்களில் மட்டும் பொறாமை கொள்ள நபி (ஸல்) அவர்கள் அனுமதியளித்துள்ளார்கள். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இரண்டு விஷயங்களைத் தவிர வேறெதிலும் பொறாமை கொள்ளக் கூடாது. ஒரு மனிதருக்கு அல்லாஹ் வழங்கிய செல்வத்தை அவர் நல்ல வழியில் செலவு செய்தல்; இன்னொரு மனிதருக்கு அல்லாஹ் அறிவு ஞானத்தை வழங்கி, அதற்கேற்ப அவர் தீர்ப்பு வழங்குபவராகவும் கற்றுக் கொடுப்பவராகவும் இருப்பது (ஆகியவையே அந்த இரண்டு விஷயங்கள்).
இது Chi G2 Flat Iron இன் மதிப்பாய்வு ஆகும், இது தயாரிப்பைச் சோதித்த எனது அனுபவத்தின் அடிப்படையில் நான் பெற்றுள்ளேன். நான் ஒரு சிகையலங்கார நிபுணராகப் பணிபுரிகிறேன், மேலும் எனக்கும் எனது வாடிக்கையாளர்களுக்கும் எது சிறந்த பலனைத் தரும் என்பதைக் காண புதிய ஸ்டைலிங் கருவிகளை முயற்சி செய்வதை நான் எப்போதும் வழக்கமாகக் கொண்டிருக்கிறேன். நான் இதற்கு முன்பு ஒரு CHI பிளாட் இரும்பை முயற்சித்தேன், அதில் நான் மகிழ்ச்சியடைந்தேன். இப்போது, ​​CHI Pro G2 பிளாட் அயர்ன் பற்றி பல நல்ல மதிப்புரைகளைப் படித்ததால், அதை முயற்சிக்க ஆர்வமாக உள்ளேன். தொழில்முறை தட்டையான இரும்பைப் பயன்படுத்துவதில் நான் மிகவும் ஆர்வமாக இருக்கிறேன். இது இலகுவாகவும், கச்சிதமாகவும் இருக்க வேண்டும், மேலும் எனது ஸ்டைலிங் வேலையை வேகமாகவும் எளிதாகவும் செய்யும் அம்சங்களுடன் வர வேண்டும் என்று விரும்புகிறேன். CHI Pro G2 எனது எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப வாழுமா? G2 ஆனது டைட்டானியம் உட்செலுத்தப்பட்ட தகடுகளைக் கொண்டுள்ளது, இது எளிதில் ஃபிரிஸ் இல்லாத, மென்மையான மற்றும் பளபளப்பான நேரான முடியை விரைவாக உருவாக்குகிறது. ஸ்டைலிங் நிமிடங்களைக் குறைக்க இது நிச்சயமாக உதவியது என்பதால் நான் இதைக் கவர்ந்தேன். பணிச்சூழலியல் வடிவமைப்பையும் நான் விரும்புகிறேன், ஏனெனில் இது என் கையில் வசதியாகப் பொருந்துகிறது மற்றும் என் தலைமுடியை நேராக்கும்போது கையாளவும் எளிதானது. நான் அதை ஒரு பல்துறை கருவியாகக் காண்கிறேன், ஏனெனில் இது எனக்கு எப்போதும் ஒரு பிளஸ் ஆகும் வெவ்வேறு முடி வகைகளில் பயன்படுத்தப்படலாம். இந்த மதிப்பாய்வில், CHI G2 அயர்ன் பற்றிய கண்ணோட்டத்தைப் பகிர்கிறேன், உங்கள் தனிப்பட்ட பயன்பாட்டிற்கான சிறந்த ஹேர் ஸ்ட்ரெய்ட்னர்களில் ஒன்றாக இது இருக்கும் என்று நான் நம்புகிறேன், மேலும் நீங்கள் கூடுதல் விருப்பங்களைப் பார்க்க விரும்பினால் மாற்று வழிகளையும் பகிர்ந்து கொள்கிறேன். இந்தக் கட்டுரையைப் படித்த பிறகு, CHI G2 புரொபஷனல் பிளாட் அயர்ன் ஏன் சரிபார்த்து முயற்சி செய்யத் தகுந்தது என்பதை நீங்கள் நன்றாகப் புரிந்துகொள்வீர்கள் என்று நம்புகிறேன். உங்கள் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ற முடி நேராக்க கருவிகளைக் கண்டறிவதற்கான ஒரு படியாக இதைப் பயன்படுத்தலாம். ஆம், கவனத்தில் கொள்ள வேண்டிய தட்டையான இரும்புகள் நிறைய உள்ளன, ஆனால் பிளாட் அயர்ன் சிஎச்ஐ பிராண்ட் சந்தையில் மிகவும் நம்பகமான ஒன்றாகும், ஏன் என்று நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பினால், தொடர்ந்து படிக்கவும். CHI PRO G2 1' நேராக்க இரும்பு $80.20 டைட்டானியம் உட்செலுத்தப்பட்ட பீங்கான் தட்டுகள் செராமிக் ஹீட்டர்கள் ஸ்மார்ட் வெப்பநிலை கட்டுப்பாடு Amazon இலிருந்து வாங்கவும் இந்த இணைப்பைக் கிளிக் செய்து, உங்களுக்கு கூடுதல் கட்டணம் ஏதுமின்றி வாங்கினால், நாங்கள் கமிஷனைப் பெறுகிறோம்.04/18/2022 02:31 am GMT உள்ளடக்கம் ஒன்றுCHI G2 பிளாட் அயர்ன் அறிமுகம் இரண்டுஎங்கள் பிடித்த அம்சங்கள் 3மாற்றுகள் 4மடக்கு CHI G2 பிளாட் அயர்ன் அறிமுகம் CHI Pro G2 டிஜிட்டல் டைட்டானியம் உட்செலுத்தப்பட்ட பிளாட் இரும்பு மற்ற வகை CHI பிளாட் இரும்புகளைப் போலவே வேலை செய்கிறது. பணிச்சூழலியல் வடிவமைப்பு நன்கு சிந்திக்கப்படுகிறது, ஏனெனில் எந்தவொரு ஹேர் ஸ்ட்ரைட்னரிலும் இது முக்கியமானது. இதற்குப் பின்னால் உள்ள ஒரு காரணம் என்னவென்றால், இது கனமான சிகை அலங்காரம் செய்யும் இரும்பில் மிகவும் பொதுவான கை சோர்வைக் குறைக்கிறது. சிஎச்ஐ ப்ரோ ஜி2 டிஜிட்டல் பிளாட் அயர்ன் பிடிப்பதற்கு மிகவும் வசதியாக உள்ளது, மேலும் உங்கள் தலையின் பின்பகுதியை அடைவது கூட உங்களுக்கு கடினமாக இருக்காது, ஏனெனில் இது 11-அடி தண்டு சிக்கலுடன் வருகிறது. டைட்டானியம் உட்செலுத்தப்பட்ட பீங்கான் தட்டுகள் சமமாகவும் விரைவாகவும் வெப்பமடைகின்றன, நீங்கள் அவசரத்தில் இருந்தால் இது கைக்கு வரும். தட்டுகள் விரும்பிய வெப்பத்தை அடைய ஒரு நிமிடம் அல்லது இரண்டு நிமிடங்கள் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. அது பொருத்தப்பட்டிருக்கும் வண்ணக் குறியீட்டு எல்சிடி திரையின் அடிப்படையில் தற்போது எந்த வெப்பநிலையில் உள்ளது என்பதை நீங்கள் கூறலாம். இது அடையக்கூடிய அதிகபட்ச வெப்பம் 425 டிகிரி பாரன்ஹீட் ஆகும். CHI G2 பிளாட் அயர்ன் உங்கள் மேனில் பயன்படுத்த ஒரு நல்ல ஹாட் ஸ்டைலிங் கருவியாக இருப்பது எது? சரி, நேராக்க இரும்பு ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையை அடைய 40 வினாடிகள் ஆகும், அது ஒரு நிமிடம் காத்திருக்க வேண்டும். வண்ணக் குறியீட்டு எல்சிடி திரையின் அடிப்படையில் சரியான வெப்பநிலை அமைப்பை நீங்கள் அடைந்துவிட்டீர்களா என்பதைச் சொல்லலாம். இது இரட்டை மின்னழுத்தம் மற்றும் உங்கள் பாதுகாப்பிற்காக ஆட்டோ ஷட் ஆஃப் அம்சத்துடன் வருகிறது. எங்கள் பிடித்த அம்சங்கள் CHI பிராண்ட் பிளாட் அயர்ன்களுக்கு வரும்போது மிகவும் நம்பகமான பெயர்களில் ஒன்றாகும், அதன் தயாரிப்புகள் அனைத்தும் நீடித்த மற்றும் திறமையானவை என்று கொடுக்கப்பட்டதில் ஆச்சரியமில்லை. CHI பிளாட் இரும்பு ஒரு நம்பிக்கைக்குரிய கருவியாகும், ஆனால் இந்த டைனமிக் CHI G2 எதில் முதலீடு செய்ய வேண்டும்? நாம் கண்டுபிடிக்கலாம். டைட்டானியம் உட்செலுத்தப்பட்ட பீங்கான் தட்டுகள் பிளாட் அயர்ன் CHI Pro G2 ஆனது டைட்டானியம் உட்செலுத்தப்பட்ட செராமிக் தகடுகளுடன் வருகிறது, இது பட்டுப் போன்ற மென்மையான நேரான கூந்தலைக் கழித்தல் மற்றும் எல்லா நேரத்திலும் பறக்கும். CHI ஆனது டைட்டானியம் மற்றும் பீங்கான் தகடுகளை கூடுதல் ஆயுள்க்காக பயன்படுத்துகிறது, ஏனெனில் இந்த இரண்டு பொருட்களும் அவற்றின் கடினத்தன்மைக்கு பெயர் பெற்றவை. மேலும், இது 40 வினாடிகளுக்கு மேம்பட்ட தொழில்நுட்பத்தை கொண்டுள்ளது, இது ஏற்கனவே மிகவும் வேகமாக இருக்கும் தட்டுகள் வெப்பமடையும் வரை காத்திருக்கிறது. உங்கள் மேனியை நேராக்க அல்லது அலை அலையாக மாற்றும் நேரத்தை குறைக்கும் ஹேர் ஸ்டைலிங் இரும்பை நீங்கள் தேடுகிறீர்களானால், டைட்டானியம் கலந்த இந்த பீங்கான் தட்டுகள் கண்டிப்பாக உதவும். டைட்டானியம் மற்றும் பீங்கான் கலவையானது, முடியை நேராக்குவதில் முக்கியமான ஆயுளையும் சீரான வெப்பத்தையும் மேம்படுத்த உதவுகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக, தட்டுகளில் உள்ள ஹாட்ஸ்பாட்கள் காரணமாக உங்கள் இழைகளை எரிக்க நீங்கள் விரும்பவில்லை. CHI பிளாட் அயர்ன் செராமிக் ஹீட்டர் பயன்பாட்டில் இருக்கும்போது உங்கள் மேனியைப் பறிக்காது, மாறாக உங்கள் தலைமுடியை அயர்ன் செய்யும் போது சறுக்கும் உணர்வை அனுபவிப்பீர்கள். மேம்படுத்தப்பட்ட செராமிக் தகடு தொழில்நுட்பத்திற்கு நன்றி, CHI Pro G2 ஐப் பயன்படுத்துவது ஒரு நல்ல காற்று. கூடுதல் ஆயுளுக்கான பீங்கான் தட்டுகளைத் தவிர, டைட்டானியம் உட்செலுத்துதல் தட்டையான இரும்பு உங்களுக்கு நீண்ட காலம் நீடிக்கும் என்பதை உறுதி செய்கிறது. கவலைப்படுவதற்கு எந்த சிரமமும் இல்லை, மேலும் நீங்கள் ஒரு நொடியில் உங்கள் இழைகளை அயர்ன் செய்ய முடியும், இது நிச்சயமாக காலையில் முடியை விரைவாக முடிக்க விரும்புவோருக்கு ஒரு நன்மையாகும். CHI மூலம் G2 பிளாட் இரும்பைப் பயன்படுத்திய பிறகு, உங்கள் மேனி மென்மையாகவும், மென்மையாகவும், சுறுசுறுப்பு இல்லாமல் இருக்கும் என்றும் எதிர்பார்க்கலாம். வண்ண குறியிடப்பட்ட டிஜிட்டல் வெப்பநிலை அமைப்புகள் CHI Pro G2 டிஜிட்டல் ஹேர் ஸ்ட்ரெய்ட்னரிலிருந்து வேறு என்ன எதிர்பார்க்கலாம்? மற்ற பிளாட் அயர்ன்களைப் போலல்லாமல், தங்களின் வெப்பநிலை அமைப்புகளைச் சரிசெய்வதற்கான டயல் மூலம், இந்தத் தயாரிப்பு வண்ணக் குறியீட்டு வெப்பநிலை வரம்புகளுடன் வருகிறது, உங்கள் முடி வகையின் அடிப்படையில் எந்த அளவு வெப்பத்தைப் பயன்படுத்த வேண்டும் என்பதை நீங்கள் எளிதாகத் தீர்மானிக்கலாம். CHI G2 ஆனது வெவ்வேறு முடி வகைகளுக்குப் பரிந்துரைக்கப்பட்ட வெப்பநிலைகளை முன்னமைத்துள்ளது மற்றும் அவை: நீலம் (0 முதல் 370F) மெல்லிய அல்லது உடையக்கூடிய முடிக்கு. பச்சை (375 முதல் 395 F) நடுத்தர அல்லது அலை அலையான முடிக்கு. சிவப்பு (400 முதல் 425 F) கரடுமுரடான அல்லது அடர்த்தியான முடிக்கு. குறிப்பிட்ட முடி வகைகளுக்குப் பரிந்துரைக்கப்படும் வெப்பநிலை வரம்புகள் மற்றும் முன்னமைவைப் பின்பற்றுவது உங்கள் இழைகள் வெளிப்படும் சேதத்தைக் குறைக்க உதவும். உங்கள் முடி இழைகள் அதிக வெப்பத்திற்கு வெளிப்படும் போது உடையக்கூடிய வாய்ப்புகள் இருப்பதால், மெல்லிய அல்லது உடையக்கூடிய கூந்தலுக்கான வெப்பநிலை அமைப்பானது மிகக் குறைவான அமைப்பாகும் என்பதைக் கவனத்தில் கொள்ளவும். மறுபுறம், நடுத்தர மற்றும் கரடுமுரடான கூந்தலுக்கான அமைப்பு 375 F முதல் அதிகபட்சமாக 425 F வரை இருக்கும், இது சிறந்த முடிவுகளுக்கு உத்தரவாதம் அளிக்கிறது. எல்லாவற்றிற்கும் மேலாக, அடர்த்தியான முடி அதை நேராக்க அதிக வெப்பம் தேவைப்படும். உங்கள் மேனில் எதைப் பயன்படுத்துவது என்பது உங்களுக்குத் தெரியாவிட்டால், முடிந்தவரை குறைந்த அமைப்பில் தொடங்குவது நல்லது, பின்னர் தேவைக்கேற்ப அதிகரிக்கவும். வண்ணத்தை மாற்றும் திரையைப் பார்ப்பது சரியான வெப்பநிலையைப் பயன்படுத்த அனுமதிக்கிறது. இங்குள்ள சிறந்த அம்சம் என்னவென்றால், எல்சிடி டிஸ்ப்ளேவில் எண்ணைக் காண முடியாவிட்டாலும், வண்ணம் அதன் தற்போதைய வெப்பநிலையைப் பற்றிய யோசனையை உங்களுக்கு வழங்க முடியும். இது உங்கள் தலைமுடியை எரிப்பதைத் தவிர்க்க உதவும். உடையக்கூடிய முடி இழைகளுக்கு 370 முதல் கரடுமுரடான எதிர்ப்பு முடிக்கு 425 எஃப் வரை, இது ஒரு பல்துறை கருவியாகும், இதைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இரட்டை மின்னழுத்தம் CHI Pro G2 Professional பிளாட் அயர்னில் இருந்து வேறு என்ன எதிர்பார்க்கலாம்? சரி, இது இரட்டை மின்னழுத்தத்தைக் கொண்டுள்ளது என்பது கவனிக்கத்தக்கது, அதாவது நீங்கள் வெளிநாடு செல்லும்போது உங்கள் CHI Pro G2 ஐக் கொண்டு வரலாம். நீங்கள் 110 அல்லது 240 வோல்ட்களில் செருகியிருப்பதால், உங்கள் சாதனத்தை சேதப்படுத்துவதைப் பற்றி கவலைப்படாமல் நீங்கள் எங்கு சென்றாலும் சிறந்த தோற்றத்தைப் பெற முடியும் என்பதால் இது ஒரு நன்மையாகும். நீங்கள் வெளியே செல்லும்போது உங்கள் மேனியை ஸ்டைல் ​​​​செய்யாமல் இருப்பதற்கு எந்த காரணமும் இல்லை. அதன் இரட்டை மின்னழுத்த பயணத்தின் மூலம் உங்களுக்கு பிடித்த பிளாட் இரும்புடன் உலகம் இப்போது நிஜமாகிவிட்டது. உலகிற்குச் சென்று பாருங்கள், நீங்கள் பயன்படுத்துவதற்கு CHI G2 தயாராக இருக்கும் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். பணிச்சூழலியல் வடிவமைப்பு CHI Pro G2 இன் பணிச்சூழலியல் வடிவமைப்பை நான் முற்றிலும் விரும்புகிறேன், ஏனெனில் இது மற்றவர்களுடன் ஒப்பிடும்போது பயன்படுத்த எளிதானது. ஒவ்வொரு முறையும் நீங்கள் அதை வைத்திருக்கும்போது, ​​உங்கள் கருவி உங்கள் கைக்கு வசதியாக இருக்கும் என்றும், அது இலகுவாக இருப்பதால், உங்கள் தலைமுடியை முன்பக்கத்திலிருந்து பின்பக்கமாக நேராக்குவதில் உங்களுக்கு எந்த சிரமமும் இருக்காது. பருமனான மற்ற பிளாட் இரும்புகளைப் போலல்லாமல், PRO G2 டிஜிட்டல் நேர்த்தியாகவும் ஸ்டைலாகவும் இருக்கிறது, மேலும் அதை விரும்பாமல் இருப்பது கடினம். ஆட்டோ ஷட்-ஆஃப் இந்த நேராக்க இரும்பின் மற்றொரு முக்கிய அம்சம் என்னவென்றால், இந்த கருவி பயன்படுத்த பாதுகாப்பானது. ஏனென்றால், நீங்கள் அதை துண்டிக்க மறந்துவிட்டால், உங்கள் டிரஸ்ஸர் அல்லது மின்சாரத்திற்கு ஏதேனும் சேதம் ஏற்படாமல் தடுக்க 1 மணிநேர ஆட்டோ ஷட் ஆஃப் அம்சத்துடன் வருகிறது. ஹாட் ஸ்டைலிங் டூல் அதிக நேரம் இயங்கினால் ஆபத்தை உண்டாக்கும் என்பதால், இந்த பாதுகாப்பு அம்சத்துடன் வரும் ஸ்ட்ரெயிட்டனிங் கருவியை நீங்கள் கண்டிப்பாகத் தேட வேண்டும் என்று நான் கூறுவேன். நீண்ட தண்டு G2 பிளாட் அயர்ன் 11 அடி நீளமுள்ள ஒரு மிக நீளமான கம்பியைக் கொண்டுள்ளது, இது உங்கள் மேனை வடிவமைக்கும் போது நீங்கள் சுற்றிச் செல்ல அதிக இடத்தை வழங்குகிறது. சாதனத்தை முன்பக்கத்திலிருந்து பின்புறம் அல்லது வெவ்வேறு கோணங்களில் நகர்த்தும்போது தண்டு சிக்கலாகாது என்பதால் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மாற்றுகள் CHI Pro G2 இன் அம்சங்களுடன் பொருந்தக்கூடிய வேறு பிளாட் இரும்புகள் உள்ளதா? எனது ஆராய்ச்சியிலிருந்து, CHI பிராண்டின் தட்டையான இரும்பிற்கு மூன்று சாத்தியமான மாற்றுகளை என்னால் சுற்றிவர முடிந்தது. அவர்களைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது இங்கே. Furiden - தொழில்முறை முடி நேராக்க FURIDEN புரட்சிகர ஒரு படி நேராக்க மற்றும் நடை $69.99 மேம்படுத்தப்பட்ட MCH ஹீட்டர்கள் நீடித்த மற்றும் ஆற்றல் திறன் கொண்ட வடிவமைப்பு நீண்ட கால முடிவிற்கு வரவேற்புரை உயர் வெப்பம் Amazon இலிருந்து வாங்கவும் இந்த இணைப்பைக் கிளிக் செய்து, உங்களுக்கு கூடுதல் கட்டணம் ஏதுமின்றி வாங்கினால், நாங்கள் கமிஷனைப் பெறுகிறோம்.04/18/2022 12:12 am GMT CHI Pro G2 ஆனது Furiden இல் அதன் நேர்த்தியான வடிவமைப்பு மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பம் மற்றும் 15 வினாடிகளில் வேகமான வெப்ப நேரத்தைக் கொண்டுள்ளது. இது மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பம் மற்றும் சிறந்த செயல்திறன் கொண்டது, இது பதிவு நேரத்தில் உங்கள் தலைமுடியை நேராக்க அல்லது சுருட்ட அனுமதிக்கிறது. இந்த 2-இன்-1 ஸ்டைலிங் கருவி மிகவும் பல்துறை திறன் கொண்டது, ஏனெனில் அதன் அனுசரிப்பு வெப்பநிலை அமைப்புகள், இழைகளுக்கு சேதம் விளைவிக்காமல் அடர்த்தியான முடியுடன் இருப்பவர்களுக்கு இடமளிக்கும். இதன் பொருள் என்னவென்றால், உங்கள் முடி வகையைப் பொருட்படுத்தாமல், இந்த பிராண்டைப் பயன்படுத்துவதில் உங்களுக்கு எந்தப் பிரச்சனையும் இருக்காது. இந்த ஹேர் ஸ்ட்ரைட்னனர், பீப்பாயின் கோணத்தின் அடிப்படையில் தங்களைத் தாங்களே சரிப்படுத்திக் கொள்ளும் சமநிலையான மிதக்கும் தட்டுகளுடன் வர உதவுகிறது, எனவே உங்கள் தட்டையான இரும்பை எப்படி நகர்த்தினாலும் நீங்கள் எதிர்பார்க்கும் முடிவுகளைப் பெற முடியும். உங்கள் மேனியில் வெறுமனே சறுக்கும் பீங்கான் தட்டுகளுக்கு நன்றி, இழைகளை இழுப்பதையோ அல்லது இழுப்பதையோ நீங்கள் அனுபவிக்க மாட்டீர்கள். CHI Pro G2 ஸ்ட்ரெய்டனிங் கருவியைப் போலவே, Furiden இரட்டை மின்னழுத்த அம்சத்தையும் வழங்குகிறது, இது இந்தத் தயாரிப்பை ஒரு பயனுள்ள பயணத் துணையாகவும் ஆக்குகிறது. நிச்சயமாக, வெப்பத்தை எதிர்க்கும் கையுறை, சலூன் சீப்பு, ஒரு தட்டையான இரும்பு பை மற்றும் 2 சலூன் ஹேர் கிளிப்புகள் இல்லாமல் உங்கள் முடியை நேராக்கும்போது அல்லது அயர்ன் செய்யும் போது உங்கள் தலைமுடியின் ஒரு பகுதியைப் பிடிக்க உதவும். NITION தொழில்முறை வரவேற்புரை முடி நேராக்க NITION தொழில்முறை வரவேற்புரை முடி நேராக்க $69.99 ($69.99 / எண்ணிக்கை) Amazon இலிருந்து வாங்கவும் இந்த இணைப்பைக் கிளிக் செய்து, உங்களுக்கு கூடுதல் கட்டணம் ஏதுமின்றி வாங்கினால், நாங்கள் கமிஷனைப் பெறுகிறோம்.04/18/2022 02:31 am GMT CHI Pro G2 டிஜிட்டல் ஹேர் ஸ்ட்ரைட்னருக்கு மற்றொரு சாத்தியமான மாற்று NITION இலிருந்து உள்ளது. தொடக்கத்திலிருந்தே, ஃபுரிடனின் ரவுண்டர் பீப்பாய் வடிவமைப்பைப் போலவே வடிவமைப்பும் உள்ளது, ஆனால் இங்குதான் ஒற்றுமைகள் முடிவடைகின்றன. டைட்டானியம் உட்செலுத்தப்பட்ட பீங்கான் தகடுகளைக் கொண்ட CHI G2 பிளாட் அயர்ன் போலல்லாமல், இது நானோ சில்வர், டூர்மலைன், ஆர்கன் எண்ணெய், பீங்கான் மற்றும் டைட்டானியம் ஆகியவற்றால் உட்செலுத்தப்பட்டுள்ளது, இது எல்லா நேரத்திலும் மென்மையான, பளபளப்பான மற்றும் ஃப்ரிஸ் இல்லாத மேனை உருவாக்க உதவுகிறது. பொருட்களின் தனித்துவமான கலவையானது, உங்களிடம் இருக்கும் முடியின் வகையைப் பொருட்படுத்தாமல், இந்த சாதனத்தைப் பயன்படுத்துவதற்கு மிகவும் பாதுகாப்பானது. பரிந்துரைக்கப்பட்ட வெப்பநிலைகளைக் கொண்டிருக்கும் CHI G2 இரும்பு போலல்லாமல், NITION ஐப் பொறுத்தவரை, இது ஒரு சுழலும் முனையுடன் வருகிறது, இது 450 F இல் அதிக வெப்பநிலை அமைப்பில் உங்கள் முடி வகையின் அடிப்படையில் வெப்பநிலையை அதிகரிக்க அல்லது குறைக்க உதவுகிறது. இது ஒரு ஈர்க்கக்கூடிய ஸ்டைலிங் கருவி, அதன் கூடுதல் நீளமான தட்டுகளின் காரணமாக, மற்றவற்றுடன் ஒப்பிடும்போது அதிக இழைகளை நேராக்க உங்களை அனுமதிக்கிறது, இது உங்கள் ஸ்டைலிங் செயல்முறையை விரைவுபடுத்துகிறது. தடிமனான மேனி உள்ளவர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும், ஏனென்றால் மற்றவர்களுடன் ஒப்பிடும்போது நீங்கள் அதிக முடியை நேராக்க முடியும். வெப்பத்தைக் கட்டுப்படுத்த ஆன் மற்றும் ஆஃப் பட்டன்கள் அல்லது டயல்கள் இருப்பதால் அதன் நேர்த்தியான தோற்றம் பாதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஏனென்றால், இரண்டு திசைகளிலும் சுழற்றக்கூடிய கட்டுப்பாடுகள் கீழே காணப்படுகின்றன. இந்த வழியில், நீங்கள் உங்கள் தலைமுடியை சுருட்டும்போது அல்லது நேராக்கும்போது எந்த பட்டனையும் அழுத்துவதைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை. நிச்சயமாக, இது ஒரு பாதுகாப்பு அம்சத்துடன் வருகிறது, இதில் சாதனம் ஏற்கனவே ஒரு மணிநேரம் செயலற்ற நிலையில் இருக்கும்போது தானாகவே அணைக்கப்படும். இது எனக்கு ஏற்கனவே ஒரு ப்ளஸ் மற்றும் இது அவர்களின் ஸ்டைலிங் கருவிக்கு வரும்போது மறதியாக இருக்கும் எவருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். முந்தைய ஹேர் ஸ்ட்ரைட்னரைப் போலவே, இதுவும் வெப்பத்தை எதிர்க்கும் கையுறை, பயணப் பை, சலூன் சீப்பு மற்றும் ஹேர் கிளிப்புகள் ஆகியவற்றுடன் வருகிறது. REVLON சரியான நேரான மென்மையான ப்ரில்லியன்ஸ் பீங்கான் பிளாட் இரும்பு REVLON சரியான நேரான மென்மையான ப்ரில்லியன்ஸ் பீங்கான் பிளாட் இரும்பு $29.99 Amazon இலிருந்து வாங்கவும் இந்த இணைப்பைக் கிளிக் செய்து, உங்களுக்கு கூடுதல் கட்டணம் ஏதுமின்றி வாங்கினால், நாங்கள் கமிஷனைப் பெறுகிறோம்.04/18/2022 02:32 am GMT இது CHI Pro G2 உடன் வடிவத்திற்கு நெருக்கமாக உள்ளது என்று நான் சொல்ல வேண்டும், ஆனால் நிச்சயமாக, சில நுட்பமான வேறுபாடுகளும் உள்ளன. தொடக்கத்தில், இது 1 அங்குல XL மேம்பட்ட அயனி டூர்மலைன் பீங்கான் தகடுகளுடன் பொருத்தப்பட்டுள்ளது, அவை உங்கள் தலைமுடியை பளபளப்பாகவும், மென்மையாகவும், தொடுவதற்கு மென்மையாகவும் மாற்றும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. மிதக்கும் தட்டுகள் உங்கள் மேனின் ஒவ்வொரு பகுதியையும் நன்றாகப் பிடிக்கும் என்பது கவனிக்கத்தக்கது, இதனால் சலூன் போன்ற முள் நேராக முடியை அடைவதற்கு கின்க்ஸை அயர்ன் செய்வதை எளிதாக்குகிறது. சாதனம் விரும்பிய வெப்பத்தை அடைய 15 வினாடிகள் மட்டுமே ஆகும் என்பதால் இது மிக விரைவாக வெப்பமடைகிறது. மேம்பட்ட தொழில்நுட்பத்துடன் கூடிய CHI செராமிக் ஹீட்டரைப் போலவே, REVLON பிளாட் இரும்பும் வண்ணக் குறியீட்டு வெப்பநிலை வரம்புகளைக் கொண்டிருப்பதை நான் கவனித்தேன், இது உங்கள் தட்டையான இரும்பு தற்போது எந்த வெப்பநிலையில் உள்ளது என்பதைக் கண்டறிவதை எளிதாக்குகிறது. எல்சிடி டிஸ்ப்ளேவை உற்றுப் பார்க்க வேண்டும், ஏனென்றால் நடுத்தர அல்லது கரடுமுரடான முடிக்கான அமைப்பை நீங்கள் அடைந்துவிட்டீர்களா என்பதை வண்ணம் ஏற்கனவே உங்களுக்குத் தெரிவிக்கும். ரெவ்லானின் செராமிக் பிளாட் அயர்ன் 10 வெப்ப அமைப்புகளுடன் வருகிறது, அதிகபட்ச வெப்பநிலை 455 F இல் அமைக்கப்பட்டுள்ளது, இது தடிமனான அல்லது கரடுமுரடான மேனி உள்ளவர்களுக்கு சிறப்பாகச் செயல்படும். இது ஒரு ஆட்டோ ஷட் ஆஃப் அம்சத்துடன் வருகிறது, இது அவசியம். மடக்கு CHI Pro G2 என்பது, பயன்படுத்த எளிதான தட்டையான இரும்பைப் பயன்படுத்த விரும்பினால், உங்கள் முதுகில் இருக்கும் ஹேர் ஸ்ட்ரைட்னராகும். இது டைட்டானியம் உட்செலுத்தப்பட்ட பீங்கான் தகடுகளைக் கொண்டுள்ளது, இது கூடுதல் ஆயுள் மற்றும் உறுதியை அளிக்கிறது. தட்டுகள் அரிப்பிலிருந்து பாதுகாக்கப்படுகின்றன, அதாவது இந்த கருவி உங்களுக்கு நீண்ட காலம் நீடிக்கும். மேம்பட்ட தொழில்நுட்பத்துடன் கூடிய செராமிக் ஹீட்டர், நீங்கள் அயர்ன் அவுட் செய்யும் போது உங்கள் தலைமுடியைக் கவ்வாமல், அதன் பயனர்களுக்கு இன்னும் மென்மையான சறுக்கு டிஜிட்டல் அனுபவத்திற்கு உத்தரவாதம் அளிக்கிறது. டைட்டானியம் உட்செலுத்தப்பட்ட பீங்கான் தகடுகள் பல்வேறு வகையான முடிகளை நன்றாக இருந்து அடர்த்தியான மற்றும் கரடுமுரடான மேனி வரை எளிதாக மென்மையாக்கும் என்பதால் இது ஒரு நம்பிக்கைக்குரிய அம்சமாகும். சிறந்த நடுத்தர மற்றும் கரடுமுரடான முடிக்கு சிறந்த வெப்பநிலை அமைப்பைத் தேர்வுசெய்ய, வண்ண குறியீட்டு வெப்பநிலை வரம்புகள் உங்களுக்கு மிகவும் வசதியான வழியை வழங்குகின்றன. பயன்முறையானது வெவ்வேறு வெப்பநிலை வரம்புகளை வழங்குகிறது மற்றும் வெவ்வேறு வகையான முடிகளுக்குப் பரிந்துரைக்கப்பட்ட முன்னமைவை வழங்குகிறது, எனவே நீங்கள் வைத்திருக்கும் மேனிக்கு எந்த அளவு வெப்பம் பொருத்தமானது என்பதை யூகிக்க வேண்டும். இது 40 வினாடி வெப்பமாக்கலுக்கான மேம்பட்ட தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளது என்பதைக் கவனத்தில் கொள்ளவும், இது ஸ்டைலிங் செயல்முறையை விரைவுபடுத்துகிறது, ஏனெனில் உங்கள் மேனை நேராக்குவதற்கு முன் தட்டுகள் சூடாவதற்கு நீங்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியதில்லை வண்ணக் குறியீட்டுத் திரையில் வெப்பநிலை காட்டப்படும், இதன் மூலம் நீங்கள் சரியான வெப்பநிலையைத் தாக்கியுள்ளீர்களா என்பதை எளிதாகக் கண்டறியலாம். சிஎச்ஐ ப்ரோ ஜி2 ஹேர் ஸ்ட்ரெய்ட்னர்களில் வேறு என்ன எதிர்பார்க்கலாம்? இது ஒரு நேர்த்தியான வடிவமைப்பை வழங்குகிறது, இது ஒரு தொழில்முறை தோற்றத்தை அளிக்கிறது. இது இலகுரக மற்றும் நேராக்க மற்றும் அலை அலையான முடியை உருவாக்க பயன்படும் என்பதால், இது பயன்படுத்த எளிதானது. பிளாட் அயர்ன் சிஎச்ஐ புரோ ஜி2 ஹேர்ஸ்டைலிங் அயர்ன், வண்ணக் குறியீட்டு எல்சிடி திரையுடன், உங்கள் மேனை எப்படி நிர்வகிக்கிறீர்கள் என்பதில் அதிகக் கட்டுப்பாட்டில் இருக்க உங்களை அனுமதிக்கிறது. மென்மையான சறுக்கு டிஜிட்டல் வெப்பநிலை வாசிப்பு மற்றும் வண்ணக் குறியீட்டுடன் பல்துறை திறன் கொண்ட முடி நேராக்கங்களை நீங்கள் தேடுகிறீர்கள் என்றால்,CHI தட்டையான இரும்புநீங்கள் Amazon இலிருந்து பெற வேண்டியது. பிற பரிந்துரைக்கப்பட்ட தயாரிப்புகள் லியா வில்லியம்ஸ் லக்கி கர்லின் நிறுவனர் லியா வில்லியம்ஸ் ஆவார் மற்றும் கடந்த 15 ஆண்டுகளாக முடி பராமரிப்பு மற்றும் ஸ்டைலிங் துறையில் உள்ளது. அப்போதிருந்து, அவர் நம்பமுடியாத நிபுணத்துவம் மற்றும் மிகவும் கடினமான முடி வகைகளை எவ்வாறு கையாள்வது மற்றும் ஸ்டைல் ​​செய்வது என்பது பற்றிய ஆழமான புரிதலை வளர்த்துக் கொண்டார், மேலும் லக்கி கர்லின் வாசகர்களுடன் தனது அறிவைப் பகிர்ந்து கொள்வதில் ஆர்வமாக உள்ளார். தொடர்புடைய கட்டுரைகள் மேலும் ஆராயவும் → சிறந்த CHI பிளாட் இரும்பு தயாரிப்புகளில் 6 மதிப்பாய்வு செய்யப்பட்டது லக்கி கர்ல் 6 சிறந்த CHI பிளாட் அயர்ன் ஹேர் ஸ்ட்ரைட்டனர்களை மதிப்பாய்வு செய்கிறது. CHI பிராண்ட் மற்றும் உங்களுக்கான ஒன்றை எவ்வாறு தேர்வு செய்வது என்பதைப் பற்றி தெரிந்துகொள்ள அனைத்தையும் கண்டறியவும். ராயல் ஹேர் ஸ்ட்ரைட்டனர் விமர்சனங்கள் - 2 இன் 1 ஹேர் ஸ்ட்ரைட்னர் & கர்லர் பல்துறை, உயர்தர ஹேர் ஸ்ட்ரைட்னருக்குப் பிறகு? ராயல் யுஎஸ்ஏவின் லக்சுரி செராமிக் டூர்மலைன் ஐயோனிக் பிளாட் ஐயனின் லக்கி கர்ல் மதிப்பாய்வைப் பார்க்கவும். ஃபிரிஸி முடிக்கான சிறந்த ஹேர் ஸ்ட்ரைட்டனர் - 5 சிறந்த தரமதிப்பீடு செய்யப்பட்ட தட்டையான இரும்புகள் மதிப்பாய்வு செய்யப்பட்டது லக்கி கர்ல் 5 சிறந்த பிளாட் அயர்ன்களை உள்ளடக்கியது. ஃபிரிஸைக் கட்டுப்படுத்த நீங்கள் தயாராக இருந்தால், எங்களின் ஹேர் ஸ்ட்ரெய்ட்னர் மதிப்புரைகளைப் பாருங்கள். அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் சேர்க்கப்பட்டுள்ளன.
"வாசகர் கேள்வி: உடலுறவின் போது விந்து விரைவாக வெளியேறி விடுகிறது? இது விந்து முந்துதல் பிரச்னையா? தீர்வு கூறவும்!" - Read more, லைப்ஸ்டைல்: November 29, 2022 | "WATCH – லவ் டுடே படத்தின் ‘சாய்ச்சிட்டாளே…’ சூப்பர்ஹிட் வீடியோ பாடல்" - Read more, சினிமா செய்திகள்: November 29, 2022 | "மனித குலத்துக்கே பேராபத்து?; உயிர் பெற்றது ஜாம்பி வைரஸ்!" - Read more, செய்திகள்: November 29, 2022 | "’தந்தூரி ஆலு டிக்கா’ ரெசிபியை எளிதாக செய்வதற்கான செய்முறை இதோ!" - Read more, சமையல் குறிப்புகள்: November 29, 2022 | "சென்னை மாநகராட்சியில் சிறப்பு மருத்துவ வல்லுநர்கள் பணி... விண்ணப்பிக்க நாளை கடைசி!" - Read more, வேலை வாய்ப்புகள்: November 29, 2022 | "WATCH – காஃபி வித் காதல் படத்திலிருந்து ‘மாற்றம்’ வீடியோ பாடல்" - Read more, சினிமா செய்திகள்: November 29, 2022 | "இந்தியாவில் டிச. 1 டிஜிட்டல் கரன்சி வெளியீடு - ரிசர்வ் வங்கி அறிவிப்பு" - Read more, வணிகம்: November 29, 2022 | "துணிவு படத்திற்காக புதிய தோற்றத்தில் அஜித்… வைரலாகும் க்ளீன் ஷேவ் ஃபோட்டோ…" - Read more, சினிமா செய்திகள்: November 29, 2022 | "குளிர்காலத்தில் உடலுக்கு ஆரோக்கியம் சேர்க்கும் ’கேரட் பாயாசம்’ - சிம்பிள் ரெசிபி டிப்ஸ் இதோ உங்களுக்காக!" - Read more, சமையல் குறிப்புகள்: November 29, 2022 | "‘விஜயானந்த் திரைப்படத்தை உருவாக மணிரத்னம்தான் காரணம்’ - இயக்குனர் ரிஷிகா சர்மா பேச்சு" - Read more, சினிமா செய்திகள்: November 29, 2022 | × All Sub Categories டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு தயராகுவது எப்படி? 10 முக்கிய டிப்ஸ்கள் இங்கே By: வேலை வாய்ப்புகள் Posted On: September 23, 2022 View: 29 சில அடிப்படைத் திட்டமிடல்கள்: 1. ஆள் சேர்க்கை அறிவிப்பில் தெரிவிக்கப்பட்ட பணியிடங்கள் குறித்த விவரங்களை அறிந்து கொள்ளுங்கள். பணியிடங்க்ளின் எண்ணிக்கை, பதவியின் தன்மை உள்ளிட்டவைகளை அறிந்து கொள்ள வேண்டும். 2. தேர்வு அறிவிப்பில் கூறப்பட்டுள்ள பாடத்திட்டங்களை (Syllabus) பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள். printout எடுத்து உங்கள் மேசை மேல் ஒட்டிவைத்துக் கொள்வது நல்லது.பாடத்திட்டத்தை தெளிவாக வாசித்து உள்வா 1. ஆள் சேர்க்கை அறிவிப்பில் தெரிவிக்கப்பட்ட பணியிடங்கள் குறித்த விவரங்களை அறிந்து கொள்ளுங்கள். பணியிடங்க்ளின் எண்ணிக்கை, பதவியின் தன்மை உள்ளிட்டவைகளை அறிந்து கொள்ள வேண்டும். 2. தேர்வு அறிவிப்பில் கூறப்பட்டுள்ள பாடத்திட்டங்களை (Syllabus) பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள். printout எடுத்து உங்கள் மேசை மேல் ஒட்டிவைத்துக் கொள்வது நல்லது.பாடத்திட்டத்தை தெளிவாக வாசித்து உள்வாங்கிக் கொள்ள முயற்சி செய்ய வேண்டும். 3. tnpsc.gov.in என்ற இணையதளத்தில் இருந்து முந்தைய ஆண்டு வினாத்தாள்களை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். டிஎன்பிஎஸ்சி தேர்வுகளைப் பற்றிய பார்வையை முந்தைய வினாத்தாள்கள் அளிக? 2. தேர்வு அறிவிப்பில் கூறப்பட்டுள்ள பாடத்திட்டங்களை (Syllabus) பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள். printout எடுத்து உங்கள் மேசை மேல் ஒட்டிவைத்துக் கொள்வது நல்லது.பாடத்திட்டத்தை தெளிவாக வாசித்து உள்வாங்கிக் கொள்ள முயற்சி செய்ய வேண்டும். 3. tnpsc.gov.in என்ற இணையதளத்தில் இருந்து முந்தைய ஆண்டு வினாத்தாள்களை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். டிஎன்பிஎஸ்சி தேர்வுகளைப் பற்றிய பார்வையை முந்தைய வினாத்தாள்கள் அளிக்கும். எந்த பாடப்பகுதிக்கு முக்கியம் கொடுக்கப்படுகிறது? ஏன் சில பகுதிகளுக்கு டிஎன்பிஎஸ்சி முக்கியத்துவம் அளிக்கவில்லை என்பதை கண்டறியுங்கள். 4. மிகச் சரியான நேர அட்டவணையை தயாரித்துக் கொள்வது முக்கியமானதாகும். நீங்கள் ஒரு வேலையை செய்து வந்தாலும், முழு நேரமாக தேர்வுக்கு மட்டும் தயார்படுத்தி வந்தாலும் நேர அட்டவணை உருவாக்குவது முக்கியமானதாகும். பணிக்கு செல்பவர்கள் வார/மாத அட்டவணையை தயார் செய்து கொள்ளலா? 3. tnpsc.gov.in என்ற இணையதளத்தில் இருந்து முந்தைய ஆண்டு வினாத்தாள்களை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். டிஎன்பிஎஸ்சி தேர்வுகளைப் பற்றிய பார்வையை முந்தைய வினாத்தாள்கள் அளிக்கும். எந்த பாடப்பகுதிக்கு முக்கியம் கொடுக்கப்படுகிறது? ஏன் சில பகுதிகளுக்கு டிஎன்பிஎஸ்சி முக்கியத்துவம் அளிக்கவில்லை என்பதை கண்டறியுங்கள். 4. மிகச் சரியான நேர அட்டவணையை தயாரித்துக் கொள்வது முக்கியமானதாகும். நீங்கள் ஒரு வேலையை செய்து வந்தாலும், முழு நேரமாக தேர்வுக்கு மட்டும் தயார்படுத்தி வந்தாலும் நேர அட்டவணை உருவாக்குவது முக்கியமானதாகும். பணிக்கு செல்பவர்கள் வார/மாத அட்டவணையை தயார் செய்து கொள்ளலாம். 5. டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கு ஒழுங்கமைத்த பயிற்சி என்பது மிகவும் அவசியமானதாகும். தேர்வர்கள் அவ்வப்போது சுயமதிப்பீடு செய்து கொள்ள வேண்டும். உதாரணமாக, எந்த பாடப் பகுதி நமக்கு சுலபமானது?எது கடினமானது?எந்த பாடத்தை முயன்று படித்தால் சுயமாக புரிந்து கொள்ள முடியும்? எப்பாடத்திற்க்கு பிறரின் உதவு தேவைப்படுகிறது? உதவும் நிலையில் யார் உள்ளார்? போன்ற கேள்விகளை எழுப்பி கொள்ளுங்கள் 6. கடினமான பாடப்பகுதிகளுக்கு எந்த மாதிரி உதவி தேவைப்படுகிறது என்பதை கண்டறியுங்கள். youtube , whatsapp, telegram போன்ற தொழிநுட்பங்களை கற்றலுக்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள். பள்ளி/க 4. மிகச் சரியான நேர அட்டவணையை தயாரித்துக் கொள்வது முக்கியமானதாகும். நீங்கள் ஒரு வேலையை செய்து வந்தாலும், முழு நேரமாக தேர்வுக்கு மட்டும் தயார்படுத்தி வந்தாலும் நேர அட்டவணை உருவாக்குவது முக்கியமானதாகும். பணிக்கு செல்பவர்கள் வார/மாத அட்டவணையை தயார் செய்து கொள்ளலாம். 5. டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கு ஒழுங்கமைத்த பயிற்சி என்பது மிகவும் அவசியமானதாகும். தேர்வர்கள் அவ்வப்போது சுயமதிப்பீடு செய்து கொள்ள வேண்டும். உதாரணமாக, எந்த பாடப் பகுதி நமக்கு சுலபமானது?எது கடினமானது?எந்த பாடத்தை முயன்று படித்தால் சுயமாக புரிந்து கொள்ள முடியும்? எப்பாடத்திற்க்கு பிறரின் உதவு தேவைப்படுகிறது? உதவும் நிலையில் யார் உள்ளார்? போன்ற கேள்விகளை எழுப்பி கொள்ளுங்கள் 6. கடினமான பாடப்பகுதிகளுக்கு எந்த மாதிரி உதவி தேவைப்படுகிறது என்பதை கண்டறியுங்கள். youtube , whatsapp, telegram போன்ற தொழிநுட்பங்களை கற்றலுக்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள். பள்ளி/கல்லூரி ஆசிரியர்களுடன் கலந்துரையாட முயற்சி செய்யுங்கள். இதையும் வாசிக்க: டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கு தயாராகிறீர்களா? இந்த தலைப்பை எல்லாம் மிஸ் பண்ணாம படிங்க 7. பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் இருந்து உதவிகளை கேட்டுப் பெறுங்கள். தேர்வுக்கு தயார் செய்வதை கூச்சமின்றி வெளியுலகிற்கு தெரியப்படுத்துங்கள். குறிப்பாக, திருமணமான பெண் தேர்வர்கள், தேர்வு காலங்களில் சில உதவிகளையும், வசதிகளையும் செய்து கொடுக்குமாறு வீட்டாரிடம் கோரிக்கை வையுங்கள். 8. உங்கள் அருகில் ஏதேனும் இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெறுகிறதா என்பதை அறிந்து கொள்ளுங்கள் 9. அனைத்து பாடப்பகுதிகளிலும் குறைந்தபட்?? 5. டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கு ஒழுங்கமைத்த பயிற்சி என்பது மிகவும் அவசியமானதாகும். தேர்வர்கள் அவ்வப்போது சுயமதிப்பீடு செய்து கொள்ள வேண்டும். உதாரணமாக, எந்த பாடப் பகுதி நமக்கு சுலபமானது?எது கடினமானது?எந்த பாடத்தை முயன்று படித்தால் சுயமாக புரிந்து கொள்ள முடியும்? எப்பாடத்திற்க்கு பிறரின் உதவு தேவைப்படுகிறது? உதவும் நிலையில் யார் உள்ளார்? போன்ற கேள்விகளை எழுப்பி கொள்ளுங்கள் 6. கடினமான பாடப்பகுதிகளுக்கு எந்த மாதிரி உதவி தேவைப்படுகிறது என்பதை கண்டறியுங்கள். youtube , whatsapp, telegram போன்ற தொழிநுட்பங்களை கற்றலுக்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள். பள்ளி/கல்லூரி ஆசிரியர்களுடன் கலந்துரையாட முயற்சி செய்யுங்கள். இதையும் வாசிக்க: டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கு தயாராகிறீர்களா? இந்த தலைப்பை எல்லாம் மிஸ் பண்ணாம படிங்க 7. பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் இருந்து உதவிகளை கேட்டுப் பெறுங்கள். தேர்வுக்கு தயார் செய்வதை கூச்சமின்றி வெளியுலகிற்கு தெரியப்படுத்துங்கள். குறிப்பாக, திருமணமான பெண் தேர்வர்கள், தேர்வு காலங்களில் சில உதவிகளையும், வசதிகளையும் செய்து கொடுக்குமாறு வீட்டாரிடம் கோரிக்கை வையுங்கள். 8. உங்கள் அருகில் ஏதேனும் இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெறுகிறதா என்பதை அறிந்து கொள்ளுங்கள் 9. அனைத்து பாடப்பகுதிகளிலும் குறைந்தபட்ச நிபுணத்துவம் பெற முயற்சி செய்யுங்கள். 10. தேர்வுக்குத் தயாராகும் போது சில ஏமாற்றமும், மனச் சோர்வும் ஏற்படும். இதையெல்லாம் தவிர்த்து விட்டு, முரண்பாடுகளை ஏற்றுக் கொள்ளுங்கள். உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம். Adblock test (Why?) 6. கடினமான பாடப்பகுதிகளுக்கு எந்த மாதிரி உதவி தேவைப்படுகிறது என்பதை கண்டறியுங்கள். youtube , whatsapp, telegram போன்ற தொழிநுட்பங்களை கற்றலுக்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள். பள்ளி/கல்லூரி ஆசிரியர்களுடன் கலந்துரையாட முயற்சி செய்யுங்கள். இதையும் வாசிக்க: டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கு தயாராகிறீர்களா? இந்த தலைப்பை எல்லாம் மிஸ் பண்ணாம படிங்க 7. பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் இருந்து உதவிகளை கேட்டுப் பெறுங்கள். தேர்வுக்கு தயார் செய்வதை கூச்சமின்றி வெளியுலகிற்கு தெரியப்படுத்துங்கள். குறிப்பாக, திருமணமான பெண் தேர்வர்கள், தேர்வு காலங்களில் சில உதவிகளையும், வசதிகளையும் செய்து கொடுக்குமாறு வீட்டாரிடம் கோரிக்கை வையுங்கள். 8. உங்கள் அருகில் ஏதேனும் இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெறுகிறதா என்பதை அறிந்து கொள்ளுங்கள் 9. அனைத்து பாடப்பகுதிகளிலும் குறைந்தபட்ச நிபுணத்துவம் பெற முயற்சி செய்யுங்கள். 10. தேர்வுக்குத் தயாராகும் போது சில ஏமாற்றமும், மனச் சோர்வும் ஏற்படும். இதையெல்லாம் தவிர்த்து விட்டு, முரண்பாடுகளை ஏற்றுக் கொள்ளுங்கள். உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
ஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள் Saturday, February 2, 2019 குந்தி ஜெ தப்பாக நினக்க மாட்டீர்கள் என்றால் ஒரு கருத்து. இந்த தளத்திலே பெண்கள் எழுதிய கடிதங்களில்தான் இந்த தீராத வஞ்சம் பற்றிய செய்திகளும் உள்ளன. ஆண்களை விட பெண்களின் உலகத்தில்தான் இன்றைக்கு இந்தவகையான தீராத வஞ்சங்களும் அதேபோன்ற பாதிப்புகளும் உள்ளன என்று தோன்றுகிறது அப்படிப்பார்க்கையில் குந்தியே கூட ஒரு விதவை என்பதுதான் அவளுடைய வன்மம் வெறி எல்லாவற்றுக்கும் காரணமோ என நினைக்கத்தோன்றுகிறது. அவள் வாழ்க்கையில் இன்பம் என்பதையே அறியாதவள். வெற்றியை வைத்து இன்பத்தை ஈடுசெய்ய நினைக்கிறாள்
சரவணன் (உதயநிதி) மீராவை (ஹன்சிகா) சிக்னலில் பார்த்தவுடன் காதலிக்க ஆரம்பித்துவிடுகிறார். மீரா ஓரளவுக்கு மேல் அவனை வெறுக்க முடியாமல், நண்பனாக ஏற்றுக்கொள்கிறாள். நட்பைக் காதலாக மாற்ற சரவணன் அடிக்கிற பல்டிகள்தான் “ஒரு கல் ஒரு கண்ணாடி’. தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாகக் களமிறங்கியிருக்கிறார். சரக்கைச் சும்மா வாசனை பார்த்தே போதை ஏற்றிக்கொள்வது, அந்தப் போதையில் மொக்கையான ஆங்கிலத்தில் தனது காதலின் மகத்துவத்தைச் சொல்வது என இமேஜ் பார்க்காமல் உதயநிதி அடிக்கும் லூட்டிகள் ரசிக்க வைக்கின்றன. ஒன்றுமே தெரியாத குழந்தை மாதிரி முகத்தை வைத்துக்கொள்ள வேண்டிய இடங்களில் மட்டும் உதயநிதியிடம் அநியாயத்துக்குத் திணறல். திமுதிமு ஹன்சிகா மோத்வானி, சின்னச் சின்ன எக்ஸ்பிரஷன்களால் நடிப்பிலும் ஈர்க்கிறார். “மயிலாப்பூர் பார்த்தா’ என்கிற பார்த்தசாரதியாக சந்தானம் வெளுத்து வாங்கியிருக்கிறார். அம்பி கேரக்டருக்கு வெறுமனே “வந்துடுத்து போயிடுத்து’ பாஷையை நம்பாமல், வாய்ஸ் மாடுலேஷன், பாடி லாங்வேஜ் ஆகியவற்றில் தனிக் கவனமெடுத்து சந்தானம் செய்துள்ள குறும்புகள் பிரமிப்பூட்டுகிறது. இவரது ஜாங்கிரி காதலி ஜாடிக்கேற்ற மூடி. அப்பாவி சரண்யாவும் அவரோடு வருஷக்கணக்காகப் பேசாமல் இருக்கும் அழகம்பெருமாளும் மனதைத் தொடுகிறார்கள். இடையே சினேகா, க்ளைமாக்ஸில் ஆர்யா, ஆண்ட்ரியா வந்து கலகலப்பூட்ட முயல்கிறார்கள். ஹாரீஸின் இசையில் “அகிலா என் செடி பூத்தது’, “வேணாம் மச்சான்’ பாடல்கள் தாளம் போட வைக்கின்றன. காதலுக்கு ஹன்சிகா விதிக்கும் சராசரி நிபந்தனைகளுக்கு உதயநிதி ஓவர் ரியாக்ஷன் கொடுப்பது ஏனோ? ஒருவழியாக ஹன்சிகாவோடு சேர்ந்தபிறகு, “இந்தக் காதல் எனக்கு ப்ராஜக்ட் மாதிரிதான்’ என்று உதயநிதி வில்லத்தனமாக வார்த்தைகளை விடுவதை ஜாலி மேளாவில் சேர்த்துக்கொள்ள முடியவில்லை. நண்பனை ஹீரோ சிக்கலில் மாட்டிவிட்டால்தான் காமெடி படம் என்ற சம்பிரதாயத்துக்காகவே சந்தானம் உதயநிதியால் அவஸ்தைப்படுவது போல் தெரிகிறது. இத்தனை ஓட்டைகளையும் மீறி முழுப்படத்தையும் வயிறு குலுங்க சிரித்துக்கொண்டே தான் ரசிகர்கள் பார்க்கிறார்கள். இயக்குநர் ராஜேஷின் அதிரடி டைமிங் சென்ஸ்தான் அதன் ரகசியம்.
நாட்டை மூடுவதை இனி இலங்கைக்கு சகித்துக்கொள்ள முடியாது என்று நிதி மற்றும் மூலதன சந்தை இராஜாங்க அமைச்சர் அஜித் நிவர்ட் கப்ரால் தெரிவித்துள்ளார். இந்த நாட்டை மூடியதன் விளைவுகளை அறைவாசி மக்களால் எதிர்கொள்ள முடியாது என்றும், இதனால் ஏற்படும் சிரமத்தை சிறு மற்றும் நடுத்தர அளவிலான 4.5 மில்லியன் மக்களால் இனி தாங்க முடியாது என்றும் அவர் மேலும் தெரிவித்தார். இது நாட்டில் உள்ள பாரிய பொருளாதார காரணிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கும் என்றும் நீண்ட கால பொருளாதார சேதம் மிகப்பெரியதாக இருக்கும் என்று அவர் சுட்டிக்காட்டுகிறார். கடுமையான சுகாதார விதிமுறைகளை அமல்படுத்துவதன் மூலம் நாடு மீண்டும் திறக்கப்பட வேண்டும் என்றும் வணிகம், வணிகம் மற்றும் பிற நடவடிக்கைகள் உடனடியாக தொடர வேண்டும் என்றும் அவர் கூறினார். அவர் தனது ட்விட்டர் கணக்கில் இந்த கருத்துக்களை தெரிவித்தார். (யாழ் நியூஸ்) #SriLanka CAN'T afford a #lockdown. Half the #population won't be able to face it's fall-out:4.5 mn in #SME will be driven to despair:Macro fundamentals will be seriously compromised (1/2) pic.twitter.com/lgJKGYykbF — Ajith Nivard Cabraal (@an_cabraal) August 28, 2021 (2/2) Long-term #economic damage will be widespread:Strict health restrictions may be imposed, But..THE #COUNTRY MUST BE KEPT OPEN AND FUNCTIONING. #Covid_19 #lka #NoLockdown — Ajith Nivard Cabraal (@an_cabraal) August 28, 2021 Share Previous News Next News யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்த சாஃப்ட்வேர் பக்,சாஃப்ட்வேர் பக் என்கிறார்களே, அதைப்பற்றி உங்களுக்குத் தெரியுமா? ரூம் போட்டு யோசித்து, பல மாதங்கள் உழைத்து, உருவாக்கி பரிசோதித்து, பரிசோதித்து மீண்டும் உருவாக்கி என்று என்னனவோ செய்து மென்பொருள் உருவாக்குகிறார்கள். ஆனால் அது எப்படியோ பயன்படுத்தும்போது மட்டும் அது சரியில்லாமல், இது சரியில்லாமல் போய்விடுகிறது. அதுவாவது தேவலாம், திடீரென்று இயங்காமல் அப்படியே அந்தரத்தில் தொங்கி தொபேல் என்று விழுந்தேகூடவிடும். இன்னும் சில தூமகேதுக்கழிசடைகள் தேவையில்லாத இதரவேலைகளை எல்லாம் செய்யும். இவையெல்லாமே பக். நாமெல்லாம் 'பக்'கையே போர்வையா போத்திக்கிட்டு வாழறவங்கதானே என்று நினைத்துதான் வாழ்ந்துகொண்டிருக்கிறேன். இருந்தாலும் ஒரு சில 'பக்'கின் தொல்லை தாங்கமுடிவதில்லை. கணிப்பொறியில் மென்பொருளின் 'பக்'கையாவது அட்ஜஸ்ட் பண்ணிக்கொண்டுவிடலாம். ஆனால் இந்த ஆண்டவன் பண்ணிய மென்பொருட்களில் உள்ள 'பக்' இருக்கே, மஹா இம்சை. இன்னும் வெளிப்படையாகச் சொல்லவேண்டுமானால் -பைரவா, ராத்திரி ரோட்ல போகும்போது பழிவாங்கிடாதே- நாய். இன்று இரவுகூட, பணி முடிந்து சைக்கிளில் வந்துகொண்டிருந்தேன். அங்கிங்கென்று பைரவர்க்கூட்டம் ஏதோ கட்சிமீட்டிங்கோ, பொதுக்கூட்டமோ நடத்திக்கொண்டிருந்தன. கவர்னர் மாளிகை வரையிலும்கூட அமைதியேவடிவாகத்தான் இருந்தது பூமி. அண்ணாசாலையருகில் திரும்பும்போதுதான், ஓரமாக அவர் நின்றுகொண்டிருந்தார். பெயர் கேட்கவில்லை. நாலுகாலில், வழக்கமான காட்டுராஜா போசில் என்னைப் பார்த்தபடியே இருந்தார். அண்ணலும் நோக்க, நானும் சைக்கிள் பெடலை மிதித்தபடியே நோக்க திடீரென்று அந்த நாய்க்கு இது நமக்கு மட்டுமேயான ரோடு என்று தோன்றியிருக்கவேண்டும். இரண்டுபேரும் சந்தித்த அந்த ஒரு புள்ளியிலிருந்து துரத்தலென்றால் துரத்தல் அப்படி ஒரு துரத்தல். வீடியோமொபைலில் யாராவது படமெடுத்து யூட்யூபில் போட்டிருந்தால், பாத்தவர்கள் ஏதோ ஹாலிவுட் படக்காட்சி என்று நிச்சயம் நம்பியிருப்பார்கள். உள்ளுக்குள் இருந்த பயத்தை வெளியில் காட்டிக்கொள்ளாமல் நாய்க்கு கௌண்டர் குடுக்க நானும் 'ஏய், ஊய், வா வா. பிடி பார்க்கலாம்' என்று கத்தினேன். வாய்தான் கத்தியதே தவிர, கால்கள் வாயைவிட வேகமாக பெடலை மிதிக்க ஆரம்பித்தன. எனக்கும் பைரவருக்குமான தூரம் கொஞ்சம்கொஞ்சமாகக் குறைய ஆரம்பிக்க, ஏறக்குறைய ஒரே வேகத்தில் ஓட ஆரம்பித்தோம். கடைசி ஆப்ஷனாக, ரோட்டை அப்படியே க்ராஸ் பண்ணி, பைரவரை ஏதோவொரு லாரி, காருக்கு நடுவில் திக்குமுக்காடவிட்டு 'எஸ்'சாகிவிடலாம் என்று ப்ளான் பண்ணியிருந்தேன். ஜீவகாருண்யமெல்லாம் பார்க்கமுடியாத சூழல். தன்னைக்கடிக்கவந்தால், நாயையும் கடிக்கலாம் என்பது க்ருபாநீதிசாஸ்திரம். அப்பொழுதுதான் எதிர்பாராத ஒரு க்ளைமேக்ஸ் நடந்தேறியது. கர்ணனுக்கு முக்கியமான நேரத்தில் ப்ரமாஸ்த்ரமந்திரம் மறந்துவிடும். எனக்கு ப்ராம்மாஸ்த்ர மந்திரமெல்லாம் வாயிலேயே நுழையாது என்றாலும், என் சைக்கிள் அந்த குறையை அவ்வப்போது தீர்த்துவைக்கும். எங்காவது முக்கியமான இடத்திற்கு அவசரமாகப் போகவேண்டும் என்றால் (ஹீ ஹீ... ஆபீசை சொல்லவில்லை), செய்ன் கழன்று கழுத்தை அறுக்கும். அப்புறம் கையில் க்ரீசோடும் கண்ணில் நீரோடும் போய்ச்சேர்வதற்குள் போதும்போதும் என்றாகிவிடும். நாயுடன் நடந்த ரேசில் சைக்கிள் மீண்டும் 'நீ என்னைதான் ஓட்டற' என்று காட்டிவிட்டது. செய்ன் கழன்று, பெடலுடன் இருந்த பந்தத்தை அறுத்தெறிந்து முக்தி அடைந்தது. சரி, நம்ம கதை க்ளோஸ். இன்னிக்கு நாயோட மல்யுத்த பயிற்சியும் முடிந்துதான் வீட்டுக்கு என்று தெரிந்துவிட்டது. பைரவரும் நானும் ஒரே வேகத்தில் இருந்தாலும், சைக்கிளை ஓரம்கட்ட ஆரம்பித்தேன். முன்பெல்லாம் மென்பொருள் கற்றுக்கொள்ளவேண்டும் என்று நினைத்த காலத்தில், தோதுப்பட்ட ஒரு பயிற்சியகத்தில் இரவுநேரம் மட்டும் பயன்படுத்த வாய்ப்பு கிடைத்தது. பில் கட்டுவது, மெய்ண்டனென்ஸ் பணம் வசூல் செய்வது, ஃபோன்பில் கட்டுவது, காய்கறி வாங்கித்தருவது என்று எடுபிடிவேலைகள் முடித்துவிட்டு இரவு 11, 12 மணிக்கு மேல் அந்த இன்ஸ்ட்டிட்யூட்டில் ஒரு நாலைந்து மணிநேரம் கணிப்பொறியைப் பயன்படுத்திக்கொள்ளலாம். அப்புறம் என்றாவது காலையில் அங்கே கொஞ்சம் சிற்சில பணிகள் செய்துதரவேண்டும். மற்றபடி இலவசம். இருந்தாலும் இரவில் சைக்கிளில் போகும்பொழுது அந்த தெருவில் தவராமல் மூன்று நான்கு பைரவர்கள் வீரப்பனை விட்டுவிட்டு என்னைத்தான் துரத்துவார்கள். காலையில் சூரியன் இருந்ததென்றால் தப்பிப்பேன். கையில் ஒரு பல்துலக்கும் ப்ரெஷ்ஷுடன், போர்க்கோலம் பூண்டு அந்த நாய்களுடன் குதிரையிலிருந்து வாள்சுழற்றும் படைத்தலைவனாக த்வந்தம் செய்தபடிதான் இன்ஸ்டிட்யூட்டை அடையவேண்டும். நல்லவேளை, இன்று பாக்கெட்டில் பேனா இருந்தது. சமாளிக்கலாம் என்று பாக்கெட்டில் கையை வைக்கப்போகும்போது, ஆச்சரியம். நாய் பின்வாங்க ஆரம்பித்தது. அதன் எல்லை முடிந்து 'நன்றி, மீண்டும் வருக'என்று சொல்லத்தோன்றி நின்றதா, இல்லை நிஜமாகவே நான் சைக்கிளை நிறுத்தப்போகிறேன் என்று பயந்துபோனதா தெரியவில்லை. ஒரு வழியாக தப்பித்தேன். அதனால்தான் நாய் ஒரு பிழைநிறைந்த தயாரிப்பு என்று தோன்றுகிறது. திருடன் வரும்போது குலைக்குமோ இல்லையோ, தவறாமல் வீட்டில் நண்பர்கள் வந்தால் குலைக்கும். மொட்டை மாடியில் போய் நிம்மதியாக நிற்கலாம் என்று வந்தால், போட்ட சாப்பாடு வீணாகக்கூடாது என்று சும்மாவாவது பக்கத்துவீட்டு நாய் குலைத்துவைக்கும். சைதாப்பேட்டைக்குள் இருக்கும் நாய்கள் கொஞ்சம் சமர்த்துப்பிள்ளைகள். துரத்த ஆரம்பித்ததும், சைக்கிளை ராட்சசத்தனத்துடன் திருப்பி எடுத்துக்கொண்டு மிரட்டிக்கொண்டே துரத்தினால், ஜகா வாங்கிவிடும். இருந்தாலும், எந்த நாயும் கொஞ்சம்கூட நாயாபிமானத்துடன் நடந்துகொள்வதே இல்லை. நானும் ஏதோ சாப்ட்வேர் பக் பத்தி ஏலியன் லேங்குவேஜ்ல ஏதேதோ சொல்லி கழுத்தை அறுக்கப் போறீங்களோனு நெனச்சேன்.. பேஷ் பேஷ். நல்ல உரை நடை பாஸ் :) நாய்க்கதை சூப்பருங்கோ :D Murshid 04 ஆகஸ்ட் 2010 நானும் ஏதோ சாப்ட்வேர் பக் பத்தி ஏலியன் லேங்குவேஜ்ல ஏதேதோ சொல்லி கழுத்தை அறுக்கப் போறீங்களோனு நெனச்சேன்.. பேஷ் பேஷ். நல்ல உரை நடை பாஸ் :) நாய்க்கதை சூப்பருங்கோ :D Murshid 04 ஆகஸ்ட் 2010 எதுக்கும் உங்க ஊரு அய்யனாரு கோவில்ல பைரவர் சிலை செஞ்சு வைக்கறதா வேண்டிக்கோங்க. அப்படியே நம்ம பீரு சித்தர்கிட்ட தாயத்து மந்திரிச்சு கட்டிக்கோங்க.. Or Simple Solution keep a Britania biscuit.. Venkatesh 04 ஆகஸ்ட் 2010 ரொம்ம நல்ல கதை. Gnana Prakash 05 ஆகஸ்ட் 2010 தர்மக்கடி வாங்காமல் தப்பியதுக்கு வாழ்த்துக்கள். ஆனால் சாஃப்ட்வேர்காரர் சைக்கிளில் வருவது நம்பும்படியாக இல்லை. ramalingam 05 ஆகஸ்ட் 2010 முர்ஷித், டெக்னிகலா எழுதாமலேயே ப்ளேடு போடும் படி எழுதும் கலை கைவந்துவிட்டது. நன்றி :-) வெங்கடேஷ், பிஸ்கெட்டை அது உணரும்முன் ஆபத்தை எதிர்கொள்ளவேண்டுமே. பேசாம ஐயனார்+பீர் தாயத்தை முயற்சிக்கிறேன். ப்ரகாஷ், நன்றி. சு. க்ருபா ஷங்கர் 05 ஆகஸ்ட் 2010 ராமலிங்கம், "இன்றுபோய் நாளை வா"ங்கற கண்டிஷன்லதான் என்னை பெய்ல்ல விட்டுருக்குன்னு நெனக்கறேன். பாப்போம். சாஃப்ட்வேர் கம்பனியில் வேலை பார்க்கிறேன், அவ்வளவுதான். இந்த ஒருவேளையயாவது செஞ்சாதான் ஹார்ட் அட்டாக்காவது வராம இருக்கும் ;-) சு. க்ருபா ஷங்கர் 05 ஆகஸ்ட் 2010 Hi, can you give me quotes for web designing for 6 pages in flash & also link for paypal in contact pages. my emil id - chennaivelan1980@gmail.com 17 மார்ச் 2011 :))) கடைசியில நாய் ஜகா வாங்கிருச்சா? என்ன கொடுமை சரவணன் இது? இதுக்காகவா இப்படி வேகமா சைக்கிள் ஓட்டினே? :)) ஜாலியான கட்டுரை!
இந்த டெம்ப்ளேட்டை எப்படி நாம் Kinemaster எடிட் செய்வது என்று இப்பொழுது நாம் பார்க்கலாம் முதலில் இதற்கு பயன்படுத்தக்கூடிய டெம்ப்ளேட்டை டவுன்லோட் செய்யவும் எப்படி டவுன்லோட் செய்ய வேண்டும் என்று மேலே கொடுக்கப்பட்டுள்ளது டவுன்லோட் செய்து முடித்த பிறகு Kinemaster App ஓபன் செய்யவும் பிறகு சென்டரில் உள்ள பிளஸ் ஐகானை கிளிக் செய்து எடிட்டிங்கை தொடங்கவும் முதலில் பக்கத்தில் மேலே மீடியா என்று ஒரு ஆப்ஷன் இணைப்பில் இருக்கும் அதை கிளிக் செய்து உங்களுக்கு தேவையான இமேஜ் அல்லது வீடியோவை உள்ளே இம்போட் செய்யவும் செய்து உடன் Cut ஆக்ஷன் பக்கத்தில் பிரேம் ஐகான் இருக்கும் அதை கிளிக் செய்து இமேஜை சென்டர் பொஸிஷனில் செட் செய்யவும் அதற்குப் பிறகு டிக் செய்து விடவும் அதற்குமேல் Layar கிளிக் செய்து Layer வரும் மீடியாவை கிளிக் செய்து நீங்கள் டவுன்லோட் செய்த டெம்ப்ளேட்டை வீடியோவை இம்போட் செய்யவும் அதை கிளிக் செய்து அதற்கான எடிட்டிங் டூல்ஸ் எல்லாம் ரைட் சைடில் வரும் அதில் கிளி ஸ்குரோல் செய்தால் அதில் பிலண்டிங் என்று ஒரு ஆப்ஷன் இருக்கும் அதை கிளிக் செய்து அதற்குள் Screen என்று ஒரு ஆப்ஷன் இருக்கும் அதை கிளிக் செய்து கொள்ளவும் அதற்கு பிறகு கொஞ்சம் மேலே ஸ்குரோல் செய்தால் அதில் அட்ஜஸ்ட்மெண்ட் என்று ஒரு ஆப்ஷன் இருக்கும் அதை கிளிக் செய்து அதில் இருக்கும் கடைசி பர்சன்டேஜ் கூட்டம் கூட்டி முடித்ததும் டிக் செய்யவும் அதற்குப் பிறகு அந்த வீடியோவிற்கு நீங்கள் என்ன பாடல் வைக்க வேண்டுமென்று விரும்புகிறீர்களோ அந்தப் பாடலை அதற்கு Add செய்யவும் இப்பொழுது பாடநுால் செய்யலாம் அதற்கு நீங்கள் இருக்கும் இடத்திலேயே ரவுண்ட் ஐகானில் ஆடியோ என்று ஒரு ஆப்ஷன் இருக்கும் அதை கிளிக் செய்து உங்களுக்கு பிடித்த பாடலை உள்ளே அட் செய்யலாம் அதற்கு பிறகு வீடியோவை எப்படி எக்ஸ்போர்ட் செய்வது என்று இப்பொழுது பார்க்கலாம் லெஃப்ட் சைடில் Share ஐகான் இருக்கும் அதை கிளிக் செய்து உங்களது வீடியோக்களை நீங்கள் எக்ஸ்போர்ட் செய்து கொள்ளலாம் அது உங்களது கேலரியில் சேவ் ஆகிவிடும் அதற்கு பிறகு உங்கள் சோசியல் மீடியாவில் நீங்கள் அதை பதிவிடலாம். How to Download Template நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் இந்த Page சில குறிப்புகள் கை மாஸ்டரைப் பற்றி இருக்கும் அதற்குக் கீழ் ஸ்குரோல் செய்து சென்றார் கீழே 30 Second Wait செய்து டவுன்லோட் செய்து கொள்ளலாம். How to Use KineMaster WhatsApp Status Video, YouTube Intro Video,Text Animation, Picture Moving Animation and more இவை அனைத்தையும் கைன் மாஸ்டர் ஒன்றில் மிக சுலபமாக எடிட்டிங் செய்யலாம் இந்த ஆப்பை எப்படி நாம் பயன்படுத்தலாம் என்று இப்பொழுது பார்க்கலாம் Kinemaster எனப்படும் பெயரிலுள்ள ஆப் நாம் மொபைலில் இருந்து எடிட் செய்வதற்காக பயன்படுத்தக்கூடிய App இப்பொழுது ஒரு வீடியோவை எடிட் செய்ய வேண்டுமென்றால் சுலபமான முறையில் எடிட் செய்யலாம் அதற்கு இந்த Kinemaster எனப்படும் App நமக்கு உதவியாக இருக்கிறது நமக்குப் பிடித்த ஒரு புகைப்படத்தையோ அல்லது வீடியோவை வைத்து மிக சுலபமாக மொபைலில் இருந்து நாம் எடிட்டிங் செய்யலாம் இந்த App வைத்து வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வீடியோக்களை உருவாக்குவது எப்படி என்று யூடியுப் வீடியோக்களை அப்லோடு செய்யப்பட்டுள்ளது யூடியூப் சேனலில் பெயர் MV Creation Tamil இந்த யூடியூப் சேனலில் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வீடியோக்களை எப்படி உருவாக்குவது என்று தமிழில் வீடியோக்கள் அப்லோட் செய்யப்பட்டுள்ளது அந்த வீடியோக்களை நீங்கள் பார்க்க வேண்டுமென்றால் இந்த click here லிங்கை கிளிக் செய்து நீங்கள் யூடியூப் சேனலுக்கு செல்லமுடியும் அங்கு வீடியோக்கள் 200க்கும் மேற்பட்ட வீடியோக்கள் அப்லோட் செய்யப்பட்டுள்ளது அந்த வீடியோக்களை பார்த்து எப்படி Kinemaster ஐ வைத்து எடிட் செய்ய வேண்டுமென்று நீங்கள் தெரிந்து கொள்ளலாம் . How To Add Song இந்த வீடியோவை எடிட் செய்து முடித்த பிறகு அதில் எப்படி பாடலை இணைப்பது என்று இப்போது பார்ப்போம் உங்களது வீடியோவை எடிட் செய்து முடித்த பிறகு மீடியா லேயர்ஸ் என்று அந்த சர்க்கிள் இருக்கும் அதில் ரைட் சைடில் ஆடியோ என்று ஒரு ஐகான் இருக்கும் அதை கிளிக் செய்து உங்களது பாடலை ஹாய் செய்துகொள்ளலாம். How To Kinemaster Video Export வீடியோவை எப்படி எக்ஸ்போர்ட் செய்வது என்று இப்பொழுது பார்க்கலாம் லெஃப்ட் சைடில் Share ஐகான் இருக்கும் அதை கிளிக் செய்து உங்களது வீடியோக்களை நீங்கள் எக்ஸ்போர்ட் செய்து கொள்ளலாம் அது உங்களது கேலரியில் சேவ் ஆகிவிடும் அதற்கு பிறகு உங்கள் சோசியல் மீடியாவில் நீங்கள் அதை பதிவிடலாம். KineMaster About KineMaster என்பது இந்த ஒரு ஆப் வீடியோ எடிட்டிங் காக யூஸ் செய்யக்கூடிய ஒரு ஆப் இதனை பயன்படுத்தி வீடியோ எடிட்டிங் YouTube Intro Video, WhatsApp Status Video, YouTube Videos and more இந்த Appபிள் மிகவும் சுலபமாக எடிட் செய்யலாம் இதனை முதலில் Google Play Store வெளியிட்டதும் கைன் மாஸ்டர் ஆப்புக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் இருக்கிறது ஏனென்றால் லேப்டாப்பில் பயன்படுத்தும் சாப்ட்வேர் போல் அனைத்துக் கருவிகளையும் உள்ளடக்கி மொபைலுக்கு முதலில் வந்த ஆப் இது Google Play Store இதன் டவுன்லோடு எண்ணிக்கை நான் இந்த ஆர்டிகல் எழுதும்போது 100M+ டவுன்லோட்ஸ் ஆகியிருக்கிறது இதனை பிசியில் எடிட்டிங் செய்யும் நபர்கள் மொபைலில் எடிட்டிங் செய்வதற்கு கைன் மாஸ்டரை டவுன்லோட் செய்து கொள்வார்கள் மேலும் ஒரு வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வீடியோவை உருவாக்க வேண்டுமென்றால் MV Creation Tamil இந்த பெயரை கிளிக் செய்தால் அது உங்களை யூடியூப் விற்கு அழைத்துச் செல்லும் அங்கு வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வீடியோவை எப்படி கை மாஸ்டரின் உருவாக்க வேண்டுமென்று நிறைய வீடியோக்கள் அப்லோடு செய்யப்பட்டுள்ளது அதனை பார்த்து நீங்களும் உங்களுக்கு தேவையான வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வீடியோக்களை உருவாக்கி கொள்ளலாம்.
எண்டேமால் ஷைன் இந்தியா எனும் நிறுவனம், நட்மெக் புரொடக்ஷன்ஸ் எனும் நிறுவனத்துடன் இணைந்து தமிழ் மற்றும் இந்தி என இரண்டு மொழிகளில் தயாரிக்கும் ‘ மாணிக்’. இப்படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கதையின் நாயகியாக நடிக்கிறார். இந்தியில் வெளியான ‘லுடோ’, ‘ஜக்கா ஜாசூஸ்’ மற்றும் ‘சத்ரசல்’ ஆகிய படங்களின் கதாசிரியரான சாம்ராட் சக்கரவர்த்தி, இந்த படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். மேலும் இப்படத்தில், நடிகை சம்யுக்தா சண்முகநாதன், நடிகர் விவேக் பிரசன்னா, குழந்தை நட்சத்திரங்கள் சாய் ஜனனி மற்றும் ஸ்வர் காம்ப்ளே உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். படத்தைப் பற்றி எண்டேமால் ஷைன் நிறுவனத்தின் இந்திய தலைமை நிர்வாக அதிகாரி ரிஷி நேகி பேசுகையில், ” திறமையான இயக்குநர் சாம்ராட் சக்கரவர்த்தியின் இயக்கத்திலும், நட்சத்திர நடிகர்களின் அர்ப்பணிப்புடன் கூடிய கடின உழைப்பிலும் ‘மாணிக்’ படத்தின் உயிரோட்டமான கதைக்களத்தை பார்வையாளர்களுக்கு சமர்ப்பிப்பதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். இந்தப் படத்தை காண்பதற்கு ஆவலுடன் காத்திருக்கிறோம்.” என்றார். நட்மெக் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் வருண் திரிபுராநேனி பேசுகையில், ”எங்கள் நிறுவனத்தின் சார்பில் தயாராகும் இரண்டாவது படத்திற்காக, எண்டேமால் ஷைன் இந்தியா நிறுவனத்துடன் இணைந்திருப்பதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். இயக்குநர் சாம்ராட் சக்கரவர்த்தி இந்த கதையை சொன்னபோது, நாங்கள் இதன் தயாரிப்பில் உற்சாகமாக களமிறங்கினோம். திறமையான நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இந்த படக்குழுவில் இணைந்திருப்பதால், இந்தப் படம் தரமான படைப்பாக உருவாகும். இதனை நாங்கள் பார்வையாளர்களுக்கு வழங்குவதில் ஆர்வத்துடன் காத்திருக்கிறோம்.” என்றார். இந்த படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் நைனிடாலில் தொடங்குகிறது. அடுத்த ஆண்டு வெளியிட திட்டமிடப்பட்டிருக்கிறது. இந்நிறுவனத்தின் முதல் திரைப்படமாக ‘தி டீச்சர்’ என்ற மலையாள மொழி திரைப்படத்தை தயாரித்து வருகிறது. நடிகை அமலா பால் கதையின் நாயகியாக நடித்து வரும் இந்த திரைப்படத்தை ‘அதிரன்’ பட புகழ் இயக்குநர் விவேக் வர்கீஸ் இயக்குகிறார். இந்த திரைப்படம், எதிர்வரும் டிசம்பர் இரண்டாம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகிறது.
பெருமாள் கோவில்களில் இருக்கும் சொர்க்க வாசல் என்று கூறப்படும் அந்த கதவினை குறிப்பாக ஏன் வைகுண்ட ஏகாதசி அன்று திறக்கிறார்கள் என்ற சந்தேகம் நம்மில் பலருக்கு இன்னும் இருந்துதான் வருகிறது. அந்த சந்தேகத்தை தீர்த்துக் கொள்வதற்காக இந்த பதிவு.   நம் முன்னோர்கள் நமக்கு கூறிவிட்டு சென்றுள்ள வழிபாடுகளும் விரதங்களும் நமக்கு நன்மை தரும் வகையில் அமைந்துள்ளது. அப்படிப்பட்ட ஒரு நல்ல புராணக் கதையைத் தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். ஒரு நாள் இந்த பூலோகத்தில் உயிர்களை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் விஷ்ணுவிற்கு வந்தது. உயிர்களைப் படைக்கும் வேலையை செய்வதற்கு ஒருவரை நியமிக்க வேண்டும் அல்லவா? அதற்காக பிரம்மனை படைத்தார். உயிர்களையெல்லாம் இந்த பூலோகத்தில், பிரம்மாவான நான் தான் படைக்கப் போகிறேன், என்ற கர்வமானது பிரம்மனுக்கும் வந்துவிட்டது. தலைகணம் ஏறிவிட்டது. இந்த பிரம்மனின் தலைக்கணத்தை அடக்குவதற்கு என்ன செய்ய வேண்டும் என்று சிந்தித்த விஷ்ணு தன் காதுகளில் இருந்து இரு அசுரர்களை வெளிக்கொண்டு வந்தார். அந்த இரண்டு அரக்கர்களின் பெயர் லோகன் கண்டன்.   இந்த இரண்டு அசுரர்களின் கோர தாண்டவத்தை கண்ட பிரம்மாவின் கர்வமானது அடங்கிவிட்டது. ஏனென்றால் இந்த இரண்டு அரக்கர்களும் விஷ்ணுவால் உருவாக்கப்பட்டவர்கள் அல்லவா? இவர்களுக்கு சக்தி அதிகம். அதாவது ஒரு நல்ல செயலுக்காக உருவாக்கப்பட்ட அரக்கர்கள் இவர்கள். ‘பிரம்மனின் தலை கணத்தை நீக்கிய உங்களுக்கு என்ன வரம் வேண்டும்’ என்று விஷ்ணு அந்த இரண்டு அரக்கர்களையும் நோக்கி கேட்டார். அந்த இரண்டு அரக்கர்களும் வித்தியாசமான ஒரு வரத்தை விஷ்ணுவிடம் கேட்டனர். விஷ்ணு பகவானால் படைக்கப்பட்ட அரக்கர்கள் அல்லவா இவர்களுக்கும் தலைகணம் வந்துவிட்டது.   ‘அந்த விஷ்ணு பகவானான நீங்கள் அரக்கர்களான எங்கள் இருவரிடமும் போர் புரிய வேண்டும்’ என்ற ஒரு கோரிக்கையை வைத்தனர். விஷ்ணுவும் இதை ஏற்றுக் கொண்டார். விஷ்ணு பகவான் வடக்கு வாசலின் வழியாக வந்து இந்த இரண்டு அரக்கர்களிடமும் போரினை தொடங்கினார். விஷ்ணுவிடம் பரமபதத்தில் போரிட்ட அந்த இரண்டு அரக்கர்களும் தோல்வியடைந்து விஷ்ணுவின் பாதங்களில் சரணடைந்தனர். பகவானே! ‘தங்களின் சக்தியால் உருவாக்கப்பட்ட நாங்கள் வைகுண்டத்தில் உன்னிடமே இருக்கவேண்டும்’ என்று வேண்டி வரத்தை கேட்டனர். தோல்வியுற்ற இந்த இரண்டு அரக்கர்களும் வடக்கு வாசலின் வழியாக பெருமாளை சென்றடைந்தனர். இரண்டு அரக்கர்களும், பெருமாளை சென்றடைந்த இந்த நாளைத்தான் வைகுண்ட ஏகாதேசி திருநாளாக கொண்டாடி வருகின்றோம். இரண்டு அரக்கர்களும் இன்றுவரை பெருமாளின் இருபுறங்களிலும் சங்கு சக்கரமாக மாறி காட்சி தருகின்றனர். இந்த வடக்குவாசல் தான் சொர்க்க வாசலாக கூறப்படுகிறது.   இதன் மூலம் ‘வைகுண்ட ஏகாதசியன்று சொர்க்கவாசல் வழியாக வெளியில் தரிசனத்திற்காக வரும் பெருமாளை தரிசிப்பவர்களுக்கும், பெருமாளை சொர்க்கவாசல் வழியாக பின் தொடருபவர்களுக்கும் பாவங்கள் நீங்கி முக்தி அளிக்க வேண்டும்’ என்று அந்த அசுரர்கள் பெருமாளிடம் வரத்தை வாங்கிக் கொண்டனர். இதன் மூலமாகத்தான் வைகுண்ட ஏகாதசியன்று சொர்க்கவாசல் திறக்கப்பட்டு பெருமாள் நமக்கு காட்சி தருகின்றார். அந்த விஷ்ணுவால் படைக்கப்பட்ட அசுரர்கள், தெரியாமல் செய்த தவறினை மன்னித்து அவர்களுக்கு மோட்சம் தந்து தன்னுடனே வைத்துக் கொண்ட அந்தப் பெருமாள், மனித பிறப்பு எடுத்து தெரியாமல் தவறு செய்யும் நம்மையும் மன்னித்து மோட்சத்திற்கு அழைத்துச் செல்வார். ஆகவே நீங்கள் தெரிந்தும் தெரியாமலும் செய்த தவறுகளில் இருந்து விமோசனம் பெற வேண்டுமென்றால் பெருமாளை இந்த ஏகாதேசி அன்று சொர்க்க வாசலில் தரிசனம் செய்யுங்கள்.
கொரோனா வைரஸ் உலகை உலுக்கி வைத்திருக்கும் சம்பவம் யாரும் எதிர்பாராத ஒன்று தான். அனைத்து மக்களும் தொழில் முடக்கத்தால் பொருளாதார சிக்கலில் உள்ளனர். சினிமா தொழில் முற்றிலும் முடங்கியுள்ளது. இதை நம்பியிருக்கும் பலரின் வாழ்க்கையும் கேள்விக்குறியாகியுள்ளது. சிலர் மளிகை கடை, சூப்பர் மார்க்கெட், காய்கறி விற்பனை என குடும்ப வாழ்க்கைக்காக தங்களை பிழைப்பை மாற்றியுள்ளனர். இந்நிலையில் மராத்தி டிவி நடிகர் ரோஹன் பெட்நேகர் தற்போது மீன் வியாபாரியாக மாறியுள்ளார். மன அழுத்தம், தற்கொலை எண்ணம் இருந்தும் வாழ்க்கைக்காக ஏதாவது செய்து பிழைக்க வேண்டும் என்பதால் அவர் இப்படி முடிவு எடுத்துவிட்டாராம்.
எல்லோருக்கும் வணக்கம், உலக அதிசயங்கள் எவை எவை என்பது பற்றிய தகவல்களை விரல் நுனியில் வைத்திருக்கும் நம்மில் பலருக்கு உலக அதிசயங்களை முதன் முதலில் பட்டியலிட்டவர் யார் ?என்ற கேள்விக்கு விடை தெரிந்திருக்குமா என்பது சந்தேகமே. கிரேக்க நாட்டை (தற்போதைய கிரீஸ்) சேர்ந்த சில சுற்றுலா பயணிகள்தான் உலகில் முதன் முதலில் உலக அதிசயங்ககளைப் பட்டியலிட்டவர்கள் என்று சொன்னால் உங்களால் நம்பமுடிகிறதா? நண்பர்களே வாருங்கள் இது பற்றி மேலும் தெரிந்து கொள்வோம்...,! அரேபியர்களின் நாகரீங்கள் மற்றும் அவர்களின் பெருமைகள் பற்றி உலகம் ஏற்கனவே அறிந்திருந்தாலும் கூட அலெக்ஸாண்டரின் பெர்சிய படையெடுப்பிற்கு பிறகுதான் அரேபியர்களின் பெருமைகள் அதிக அளவில் வெளியுலகத்திற்கு தெரிய ஆரம்பித்தது என்று சொன்னால் மிகையில்லை. கி.மு. 323-ஆம் ஆண்டு அலெக்ஸாண்டரின் மறைவுக்கு பின்னர் கிரேக்கத்தில் தோன்றிய புகழ் பெற்ற நாகரீகம் ஹெல்லினிஸ்டிக் நாகரீகம் (Hellenistic Civilization; கி.மு.323-146) ஆகும். ஹெல்லினிஸ்டிக் நாகரீகத்தை சேர்ந்த நாடோடி மக்களில் சிலருக்கு அலெக்ஸாண்டரின் பெர்சிய படையெடுப்பின் மூலம் அரேபியர்களின் வியக்கத்தகு கட்டடங்கள் பற்றி தெரியவந்தது இதனால் அவற்றை நேரில் பார்க்கும் ஆர்வம் கொண்டு மத்தியதரைக்கடலை சுற்றி அமைந்துள்ள நகரங்களுக்கு சுற்றுலா பயணம் மேற்கொண்டனர். பயணத்தின் போது அவர்கள் கண்டு வியந்த இடங்கள் மற்றும் கட்டிடங்களை தங்களிடமிருந்த கைக்குறியேடுகளில் குறித்து வைத்துக் கொண்டனர், அவற்றில் சில முக்கியமான இடங்களையும் கட்டிடங்களையும் எளிதாக நினைவில் வைத்துக்கொள்ள வேண்டி அவற்றை பார்க்க வேண்டிய இடங்கள் (Things to be seen) அல்லது பார்வை (Sights)என்கின்ற தலைப்பில் பட்டியலிட்டனர். எண்ணிக்கையானாலும் சரி இடங்களானாலும் சரி ஒவ்வொரு பயணிகளின் பட்டியலும் இன்னொரு பயணிகளின் பட்டியலிலிருந்து வேறுபட்டது என்று தான் சொல்லவேண்டும். இது தான் உலக அதிசயப்பட்டியல் உருவாவதற்கான முன்னோடி சிந்தனை ஆகும். கி.மு.இரண்டாம் நூற்றாண்டில் கிரேக்கத்தில் புகழ் பெற்று விளங்கிய அண்டிபாட்டர் (Andipater) என்ற கவிஞரின் கைகளில் இந்த பட்டியல் அடங்கிய குறிப்புகள் ஒரு நாள் தற்செயலாக கிடைக்க, ஆர்வமடைந்த அவர் அந்த இடங்களை நேரில் சென்று பார்த்துவிடும் முடிவுகொண்டு குறிப்பேடுகளில் குறிப்பிடப்பட்டிருந்த அனைத்து இடங்களையும் நேரில் சென்று பார்வையிட்டார். பயணமுடிவில் கி.மு. 140-ஆம் ஆண்டு அவர் எழுதிய கவிதை ஒன்றில் ‘அதிசயங்கள்-7’ என்ற தலைப்பில் கிசாவின் பெரிய பிரமிட் (எகிப்து, கி.மு-2680), பபிலோனின் தொங்கு தோட்டம் (Iraq, கி.மு.600),ஒலிம்பியாவின் ஸேயுஸ் சிலை (Greece, கி.மு-433), ஆர்ட்டெமிஸ் கோயில் (Turkey,கி.மு.350(பழையது) & கி.பி.550(புதியது), மௌசோல்லொஸின் மௌசோலியம் (Turkey,கி.மு.350) ரோடொஸின் கொலோசஸ் (Greece, கி.மு.280), அலெக்ஸாந்திரியாவின் கலங்கரை விளக்கம் (Egypt, கி.மு.300) ஆகிய ஏழு இடங்களின் கட்டுமானம் பற்றி வியந்து குறிப்பிட்டார். நாளடைவில் ‘அதிசயங்கள்-7’ என்பதற்கு முன்னால் ‘உலகம்’ என்ற சொல் ஒட்டிக்கொண்டு ‘உலக அதிசயங்கள்-7’ என்று அழைக்கப்பட்டது, இதுதான் ஆதாரப்பூர்வமான முதல் உலக ஏழு அதிசயபட்டியல் ஆகும். அண்டிபாட்டருக்கு முன்பு ஹீரோடோதஸ் (Herodotus, கி.மு.484-425) என்ற துருக்கியை சேர்ந்த வரலாற்று ஆசிரியரும், கல்லிமாக்ஸஸ் (Callimachus, கி.மு.310-240) என்ற லிபியாவை சேர்ந்த கவிஞர் ஒருவரும் இத்தகைய பட்டியலை எழுதிவைத்திருந்தார்கள் என்று சில குறிப்புகள் கிடைக்கப் பெற்றிருந்தாலும் கூட இதுவரையில் உறுதியான ஆதாரங்கள் ஏதும் கிடைக்கப்பெறவில்லை மேலும் இவர்கள் எந்தெந்த இடங்களை பட்டியலிட்டார்கள் என்ற தகவலும் இல்லை. கி.பி. பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பாதிவரை ஆண்டிபாட்டர் பட்டியலிட்ட ஏழு அதிசயங்கள் தான் உலக அதிசயங்களாக வழக்கத்தில் இருந்தது. ஆண்டிபாட்டர் உலக அதிசயங்களை ஏழோடு நிறுத்திக்கொண்டதற்கு ஒரு காரணம் உண்டு. மனித உடலில் உள்ள உயிர்த்துளைகள் ஏழு, வானவில்லின் நிறங்கள் ஏழு, இசையை உண்டாக்கும் ஸ்வரங்கள் ஏழு இப்படி இயற்கையால் படைக்கப்பட்ட அனைத்திலும் ஏழு என்பது முக்கிய எண்ணாக இருப்பதால் ஏழு என்ற எண்ணை ஒரு மந்திரச்சொல்லாகவே கிரேக்கர்கள் கருதினார்கள். இதன் காரணமாகவே அதிசயங்களும் ஏழாக இருந்துவிட்டுப் போகட்டும் என்று ஏழுடன் நிறுத்திவிட்டார் ஆண்டிபாட்டர். அன்றிலிருந்து இன்றுவரை உலக அதிசயங்கள் ஏழாகத்தான் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. பதினாறாம் நூற்றாண்டு வரை ஆண்டிபாட்டர் பட்டியலிட்ட அதிசயங்கள் தான் உலக அதிசயங்களாக வழக்கத்தில் இருந்தன. எகிப்து பிரமிடைத் தவிர ஏனையவை அழிந்துவிட்டதால் பதினாறாம் நூற்றாண்டிற்கு பிறகு சில எழுத்தாளர்கள் உலக அதிசயங்கள் என்று வேறு சில இடங்களை பரிந்துரை செய்ய ஆரம்பித்தனர். இந்நிலையில் கோபான் ப்ரீவர் (Cobhan Brewer) என்ற இங்கிலாந்து நாட்டை சேர்ந்த எழுத்தாளர் 1870-ஆம் ஆண்டு வேற்றுமொழி சொல்களுக்கான விளக்கம், பழமொழி விளக்கம், விடுகதை விளக்கம், மற்றும் சில வரலாற்று புள்ளிவிபரங்கள் அடங்கிய Brewers Dictionary of Phrase & Fable என்ற அகராதி (Dictionary) ஒன்றை வெளியிட்டார். ப்ரீவரின் அந்த அகராதியில் இடைக்காலத்தில் கட்டப்பட்ட சில கட்டிடங்களும் நவீன காலத்தில் கட்டப்பட்ட சில கட்டிடங்களும் (ஸ்டோன் ஹெஞ் (England), சிச்சென் இட்சாபிரமிட் (Mexico), கொலோசியம் (Italy, Rome), சீனப் பெருஞ்சுவர் (China) , பைசா நகர் சாய்ந்த கோபுரம், தாஜ் மஹால் (India), எம்பயர் ஸ்டேட் கட்டிடம் (America), ஈபெல் கோபுரம் (France))புதிதாக உலக அதிசயங்களுக்கான தகுதியான கட்டிடங்களாக பரிந்துரை செய்யப்பட்டன இதில் தான் முதன் முதலாக இந்தியாவின் தாஜ்மஹால் உலக அதிசயங்களுக்கான பட்டியலுக்கு பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. இதை தொடர்ந்து சில நூற்றாண்டுகளாக அதிகாரபூர்வமற்ற உலக அதிசயபட்டியல் வழக்கத்தில் இருந்தது. இந்நிலையில் 1999-ஆம் ஆண்டு கனடா நாட்டை சேர்ந்த பெர்னார்ட் வெபர் என்ற திரைப்பட இயக்குனர் அதிகாரப்பூர்வமான புதிய ஏழு உலக அதிசயங்களை கொண்ட பட்டியலைத் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டார். இதற்காக அவர் நியூ 7 வொண்டர்ஸ் என்ற அறக்கட்டளையை ஏற்படுத்தினார். 2001-ஆம் ஆண்டு புதிய பட்டியல் தயாரிக்கும் பணிக்கான இணையதளம் துவங்கப்பட்டது. உலகம் முழுவதிலும் இருந்து புதிய உலக அதிசயங்களுக்காக போட்டியிடும் நினைவுச் சின்னங்களுக்கான விண்ணப்பங்கள் 2005-ஆம் ஆண்டு நவம்பர்-24,வரை பெற்றுக்கொள்ளப்பட்டது, உலகம் முழுவதிலும் இருந்து 177-நினைவு சின்னங்கள் பரிசீலனைக்கு வந்ததாகவும் அவற்றில்21-தளங்களை மட்டும் உலகின் தலைசிறந்த கட்டிடக்கலை வல்லுனர்களை கொண்டு போட்டிக்கு தகுதியானவை என்று தேர்ந்தெடுத்ததாகவும் நியூ 7 வொண்டர்ஸ் அறக்கட்டளை ஜனவரி 1, 2006-ல் அறிவித்தது. இந்த 21-தளங்களில் உலகின் பண்டைய உலகஅதிசயபட்டியலில் இடம் பிடித்திருந்த எகிப்து பிரமிடும் ஒன்று, எகிப்திய மக்கள் பிரமிடை ஓட்டெடுப்பிற்குள் கொண்டு வர எதிர்ப்பு தெரிவித்ததால் பிரமிடு மதிப்புமிக்க தளமாக கருதப்பட்டு ஓட்டெடுப்புப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது. தொடர்ந்து எஞ்சியிருந்த 20-தளங்கள் மட்டும் மக்களின் ஓட்டெடுப்பிற்காக விடப்பட்டது. 2007-ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஓட்டெடுப்பு முடித்துக்கொள்ளப்பட்டு 2007-ஆம் ஆண்டு ஜூலை 7-ம் தேதி போர்ச்சுக்கல் நாட்டிலுள்ள லிஸ்பன் நகரில் வெற்றி பெற்ற புதிய ஏழு உலக அதிசயங்களாக சிச்சென் இட்சா (Mexico),மீட்பர் கிறிஸ்து சிலை (Brazil), கொலோசியம் (Rome), சீனப் பெருஞ்சுவர் (China), மாச்சு பிச்சு(Peru), பெட்ரா (Jordan), தாஜ் மஹால் (India) ஆகியவை அறிவிக்கப்பட்டது. பதிவுகள் குறித்த உங்களது கருத்துக்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் நண்பர்களே மறக்காமல் உங்கள் வாக்குகளை கீழே உள்ள ஒட்டுப் பட்டைகளில் பதிவு செய்துவிட்டுச் செல்லுங்கள் உங்களது ஓட்டுக்கள் இப்பதிவு அதிக நண்பர்களை சென்றடைய உதவிடும் என்பதை மறக்க வேண்டாம். நன்றி மீண்டுமொரு சிறந்த தகவலுடன் உங்களை சந்திக்கிறேன் வணக்கம்.
மாட்ரிட்டில் நாங்கள் கூறியது போல், 2வது எம்எம் முடிவில், இன்று 2/10/2022 அன்று 3வது எம்எம் தொடங்கும்/முடிவடையும் இடத்தை அறிவிப்போம். நேபாளம், கனடா மற்றும் கோஸ்டாரிகா போன்ற பல நாடுகள் முறைசாரா முறையில் தங்கள் விருப்பத்தை தெரிவித்துள்ளன. இறுதியாக அது கோஸ்டாரிகாவாக இருக்கும், ஏனெனில் அது அதன் விண்ணப்பத்தை உறுதிப்படுத்தியது. கோஸ்டாரிகாவிலிருந்து MSGySV அனுப்பிய அறிக்கையின் ஒரு பகுதியை நான் மீண்டும் உருவாக்குகிறேன்: “மூன்றாவது உலக மார்ச் மத்திய அமெரிக்க பிராந்தியத்தை விட்டு வெளியேற வேண்டும் என்று நாங்கள் முன்மொழிகிறோம், இது கோஸ்டாரிகாவிலிருந்து நிகரகுவா, ஹோண்டுராஸ், எல் சால்வடார் மற்றும் குவாத்தமாலாவுக்கு தனது பயணத்தை அக்டோபர் 3, 2 அன்று தொடங்கும். நியூயார்க்.அமெரிக்காவில் அடுத்த உலகச் சுற்றுப்பயணம் முந்தைய இரண்டு உலக அணிவகுப்புகளின் அனுபவத்தை கணக்கில் கொண்டு வரையறுக்கப்படும்... அர்ஜென்டினாவைக் கடந்து தென் அமெரிக்கா வழியாகப் பயணித்து பனாமாவை அடையும் வரை, கோஸ்டாரிகாவில் பெறப்படும். 2024வது MM இன் முடிவு”. மேற்கூறியவற்றுடன், அமைதிக்கான பல்கலைக்கழகத்தின் ரெக்டருடன், திரு. பிரான்சிஸ்கோ ரோஜாஸ் அரவேனாவுடன் சமீபத்திய உரையாடல்களில், 3வது MM அமைதிக்கான ஐக்கிய நாடுகளின் பல்கலைக்கழக வளாகத்தில் 2/10 அன்று தொடங்கும் என்று ஒப்புக்கொண்டோம். /2024. பின்னர், பிளாசா டி லா டெமோக்ரேசியா ஒய் டி லா அபோலிசியன் டெல் எஜேர்சிட்டோவில் முடிவடையும் சான் ஜோஸ் டி கோஸ்டா ரிகாவிற்கு ஒரு நடைப்பயணத்தை மேற்கொள்வோம், அங்கு பங்கேற்பாளர்களுடன் வரவேற்பும் நிகழ்ச்சியும் நடைபெறும், அங்கு வரும் அனைவரையும் பங்கேற்க அழைக்கிறோம், மற்றவர்களிடமிருந்தும் பங்கேற்கலாம். உலகின் பகுதிகள். ஆர்வத்தின் மற்றொரு அம்சம் என்னவென்றால், கோஸ்டாரிகாவின் அமைதிக்கான துணை அமைச்சருடனான சமீபத்திய சந்திப்பில், ஜனாதிபதி திரு. ரோட்ரிகோ சாவ்ஸ் ரோபிள்ஸுக்கு ஒரு கடிதம் அனுப்பும்படி எங்களைக் கேட்டுக்கொண்டார், அங்கு நாங்கள் 3வது உலகப் போரை விளக்கினோம். கோஸ்டாரிகாவில் அமைதிக்கான நோபல் பரிசு உச்சி மாநாடு மற்றும் லத்தீன் அமெரிக்க மெகா மாரத்தான் திட்டம் 11 ஆயிரம் கி.மீ. மத்திய அமெரிக்காவின் அனைத்து பொதுப் பல்கலைக்கழகங்களையும் ஒன்றிணைக்கும் CSUCA இன் தலைமைத்துவத்தின் மூலம் நோபல் அமைதி உச்சிமாநாட்டின் புதிய மாறுபாடாக இவை உறுதிப்படுத்தப்பட வேண்டியவை. சுருக்கமாக, கோஸ்டாரிகாவில் நடைபெறும் புறப்பாடு/வருகை வரையறுக்கப்பட்டதும், அமைதி மற்றும் அகிம்சைக்கான இந்த 3வது உலக அணிவகுப்புக்கு அதிக உள்ளடக்கத்தையும் உடலையும் எவ்வாறு வழங்குவது என்பதில் நாங்கள் பணியாற்றி வருகிறோம். எதற்காக இந்த அணிவகுப்பை நடத்துகிறோம்? முக்கியமாக இரண்டு பெரிய தொகுதிகளுக்கு. முதலாவதாக, அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவது பற்றி பேசப்படும் ஆபத்தான உலக சூழ்நிலையிலிருந்து ஒரு வழியைக் கண்டுபிடிப்பது. ஏற்கனவே 68 நாடுகளால் அங்கீகரிக்கப்பட்டு 91 நாடுகள் கையெழுத்திட்ட அணு ஆயுத தடைக்கான ஐநா ஒப்பந்தத்தை (TPNW) தொடர்ந்து ஆதரிப்போம். ஆயுதங்களுக்கான செலவைக் கட்டுப்படுத்த வேண்டும். தண்ணீர் பற்றாக்குறை மற்றும் பஞ்சம் உள்ள மக்களுக்கு வளங்களைப் பெறுதல். "அமைதி" மற்றும் "அகிம்சை" மூலம் மட்டுமே எதிர்காலம் திறக்கப்படும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். மனித உரிமைகள், பாகுபாடு காட்டாமை, ஒத்துழைப்பு, அமைதியான சகவாழ்வு மற்றும் ஆக்கிரமிப்பு இல்லாமை ஆகியவற்றைப் பயன்படுத்துவதில் தனிநபர்களும் குழுக்களும் மேற்கொள்ளும் நேர்மறையான செயல்களைக் காணக்கூடியதாக மாற்றுதல். அகிம்சை கலாச்சாரத்தை நிறுவுவதன் மூலம் புதிய தலைமுறைகளுக்கு எதிர்காலத்தை திறக்க வேண்டும். இரண்டாவதாக, அமைதி மற்றும் அகிம்சை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துதல். மிக முக்கியமான விஷயம், குறிப்பிடப்பட்ட அனைத்து உறுதியான விஷயங்களுக்கும் கூடுதலாக, அருவமானவை. இது ஓரளவு பரவலானது ஆனால் மிகவும் முக்கியமானது. 1 வது MM இல் நாங்கள் செய்யத் தொடங்கிய முதல் விஷயம், அமைதி என்ற வார்த்தையையும் அகிம்சை என்ற வார்த்தையையும் ஒன்றாக இணைக்க வேண்டும். இன்று இந்தப் பிரச்சினையில் சில முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக நாங்கள் நம்புகிறோம். விழிப்புணர்வை உருவாக்குங்கள். அமைதி பற்றிய விழிப்புணர்வை உருவாக்குங்கள். அகிம்சை பற்றிய விழிப்புணர்வை உருவாக்குங்கள். அப்போது எம்.எம் வெற்றி பெற்றால் மட்டும் போதாது. நிச்சயமாக, இது மிகப்பெரிய ஆதரவைப் பெற வேண்டும் மற்றும் அதிகபட்ச பங்கேற்பை அடைய வேண்டும், மக்கள் எண்ணிக்கை மற்றும் பரவலான பரவல் ஆகியவற்றில். ஆனால் அது போதுமானதாக இருக்காது. அமைதி மற்றும் அகிம்சை பற்றிய விழிப்புணர்வையும் நாம் ஏற்படுத்த வேண்டும். எனவே, அந்த உணர்திறனை, பல்வேறு துறைகளில் வன்முறையால் என்ன நடக்கிறது என்பதைப் பற்றிய அக்கறையை விரிவுபடுத்தப் பார்க்கிறோம். வன்முறை பொதுவாக கண்டறியப்பட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்: உடல் ரீதியாக கூடுதலாக, பொருளாதார, இன, மத அல்லது பாலின வன்முறையிலும். மதிப்புகள் அருவங்களுடன் தொடர்புடையவை, சிலர் அதை ஆன்மீக பிரச்சினைகள் என்று அழைக்கிறார்கள், என்ன பெயர் கொடுக்கப்பட்டாலும் பரவாயில்லை. இயற்கையை பராமரிப்பதன் அவசியம் குறித்து இளைஞர்கள் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருவதால், விழிப்புணர்வு ஏற்படுத்த விரும்புகிறோம். முன்மாதிரியான செயல்களுக்கு நாம் மதிப்பளித்தால் என்ன செய்வது? உலக சூழ்நிலையை சிக்கலாக்குவது பல பிரச்சனைகளை கொண்டு வரலாம், ஆனால் அது முன்னேற்றத்திற்கான பல வாய்ப்புகளை திறக்கும். இந்த வரலாற்றுக் கட்டம் பரந்த நிகழ்வுகளை இலக்காகக் கொள்ள வாய்ப்பாக இருக்கலாம். அர்த்தமுள்ள செயல்கள் தொற்றுநோயாக இருப்பதால், முன்மாதிரியான செயல்களுக்கான நேரம் இது என்று நாங்கள் நம்புகிறோம். இது சீராக இருப்பது மற்றும் நீங்கள் நினைப்பதைச் செய்வது, நீங்கள் நினைப்பதைச் செய்வது மற்றும் அதைச் செய்வது ஆகியவற்றுடன் தொடர்புடையது. ஒத்திசைவைக் கொடுக்கும் செயல்களில் கவனம் செலுத்த விரும்புகிறோம். முன்மாதிரியான செயல்கள் மக்களிடையே வேரூன்றுகின்றன. பின்னர் அவற்றை அளவிட முடியும். சமூக உணர்வில், நேர்மறை மற்றும் எதிர்மறை விஷயங்களுக்கு எண் முக்கியமானது. நூற்றுக்கணக்கானவர்கள் அல்லது மில்லியன் கணக்கானவர்கள் செய்திருந்தால், அது ஒரு நபர் செய்யும் செயலாக இருந்தால் தரவு வித்தியாசமாக அமைந்துள்ளது. முன்னுதாரணமான செயல்கள் பலரை பாதிக்கும் என்று நம்புகிறோம். இது போன்ற தலைப்புகளை உருவாக்க எங்களுக்கு இங்கு நேரம் இல்லை: அச்சு ஒரு முன்மாதிரியான செயல். முன்மாதிரியான செயல்களில் நுண்ணறிவு. ஒவ்வொருவரும் தங்கள் முன்மாதிரியான செயலுக்கு எவ்வாறு பங்களிக்க முடியும். மற்றவர்கள் சேரும் வகையில் என்ன செய்ய வேண்டும். நிகழ்வுகள் விரிவடைவதற்கான நிபந்தனைகள். புதிய செயல்கள் எப்படியிருந்தாலும், குறைந்தபட்சம் ஒரு முன்மாதிரியான செயலையாவது நாம் அனைவரும் செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று நாங்கள் நம்புகிறோம். "மிகக் குறைவான வன்முறையாளர்களின் செயலைப் பற்றி நான் கவலைப்படவில்லை, ஆனால் பெரும்பான்மையான அமைதியானவர்களின் செயலற்ற தன்மையைப் பற்றி நான் கவலைப்படுகிறேன்" என்று காந்தி சொன்னதை நினைவில் கொள்வது பொருத்தமானது என்று நினைக்கிறேன். அந்த பெரும் பெரும்பான்மையை நாம் வெளிப்படுத்தத் தொடங்கினால், நிலைமையை மாற்றியமைக்கலாம். இப்போது கோஸ்டாரிகாவின் கதாநாயகர்கள், ஜியோவானி மற்றும் பிற இடங்களிலிருந்து வந்த மற்ற நண்பர்களுக்கும், மற்ற கண்டங்களிலிருந்தும் மெய்நிகர் மூலம் இணைக்கப்பட்டவர்களுக்கும் நாங்கள் தடியடி அனுப்புகிறோம். வாழ்த்துக்கள் மற்றும் மிக்க நன்றி. என்ற தலைப்பில் முதலில் வெளியிடப்பட்ட இந்தக் கட்டுரையை எங்கள் இணையதளத்தில் சேர்க்க முடிந்ததை நாங்கள் பாராட்டுகிறோம் அமைதி மற்றும் அகிம்சைக்கான 3வது உலக அணிவகுப்பின் கோஸ்டாரிகாவில் தொடங்கப்பட்டது PRESSENZA இன்டர்நேஷனல் பிரஸ் ஏஜென்சி மூலம் ரபேல் டி லா ரூபியா அமைதி மற்றும் அகிம்சைக்கான 3வது உலக அணிவகுப்பின் தொடக்க மற்றும் முடிவு நகரமாக சான் ஜோஸ் டி கோஸ்டா ரிகா அறிவிக்கப்பட்ட சந்தர்ப்பத்தில்.
திரைப்பட உலகில் ஒரு புதிய கதை சொல்லல் முறையில் உருவாகியிருக்கிறது ‘இறுதிப் பக்கம் ‘ என்கிற திரைப்படம்.ட்ரீம் கிரியேஷன்ஸ் சார்பில் இப்படம் உருவாகியுள்ளது. படத்திற்குக் கதை எழுதி இயக்கியிருக்கிறார் மனோ வெ. கண்ணதாசன்.அவர் படத்தைப் பற்றி… “பொதுவாக பெரும்பாலான திரைப்படங்களில் ரசிகர்கள் திரையில் பார்க்கிற பாத்திரங்கள் யாரையும் எளிதில் வகைப்படுத்தி குணத்தைப் புரிந்து கொள்ளும் வகையில் புறவயத் தன்மையுடன்தான் இருக்கும் . ஒன்று நல்லவனாக இருப்பான், அல்லது கெட்டவனாக இருப்பான், அல்லது நல்லவன் கெட்டவனாகத் தெரிவான், கெட்டவன் நல்லவனாக மாறுவான்.இப்படி பார்க்கிறவர் கற்பனையில் உருவகித்துக் கொள்ளும்படித் தான் பாத்திரங்களின் அமைப்பு இருக்கும் . ஆனால் கதைகள், நாவல்கள் படிக்கும் போது சோதனை முயற்சியான படைப்புகளைப் படிக்கும்போது படிக்கும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான கதை புலப்படும்.வேறு விதமான கதைகளை, பாத்திரங்களின் இயல்புகளை அகவயமாக உணர்வார்கள். அப்படித் திரைப்பட உலகில் ஒரு முயற்சிதான் இந்த ‘இறுதிப் பக்கம்’. ஒரு கொலை நடந்து இருக்கும் . அந்தக் கொலையைச் செய்தது யார்? என்பதுதான் வெளியே தெரியும் கேள்வி. ஆனால் ஆளாளுக்கு வெவ்வேறு வகையான மன நிலையில் அதைப் பார்ப்பார்கள். வேறு வகையான கேள்விகள் இருக்கும். ஆனால் யாராலும் கொலையாளியை ஊகிக்க முடியாது. அப்படி ஒரு படமாக ‘இறுதிப் பக்கம் ‘ இருக்கும் ” என்கிறார் . இவர் மென்பொருள் பொறியாளர். கைநிறைய சம்பளத்துடன் வேலைவாய்ப்பு கிடைத்தும் அதை உதறித் தள்ளிவிட்டு தன் ஆழ்மனதில் உறங்கிக் கொண்டிருந்த சினிமா விருப்பத்தின்படி திரையுலகத்திற்கு வந்துள்ளார். இவர் யாரிடமும் உதவி இயக்குநராக இல்லாததால் அனுபம் மிக்கவர்களைப் படக்குழுவாக்கி பலமான கூட்டணியாக அமைத்து, அந்தத் திறமைசாலிகளைப் பக்கபலமாக வைத்துக்கொண்டு இப்படத்தை உருவாக்கி இருக்கிறார். Related Posts புதுப்பொலிவுடன் ரீ-ரிலீஸுக்கு தயாராகும் பாபா Nov 23, 2022 விஜயானந்த் திரைப்பட டிரெய்லர் வெளியீட்டு விழா Nov 23, 2022 மனோ வெ.கண்ணதாசன் மேலும் பேசும்போது “ஒரு திரைப்படத்திற்கு முக்கியமாக இரண்டு விஷயங்கள் தேவை. ஒன்று நல்ல கதை. இன்னொன்று படக்குழு. அந்த படக்குழு மட்டும் சரியாக அமைந்து விட்டால் 70% படம் முடிந்ததுபோல் நம்பிக்கை வந்து விடும் .அப்படி எனக்கு நல்ல திறமைசாலிகள் கொண்ட படக்குழு தேடினேன் அமைந்தது. இப்படத்தின் ஒளிப்பதிவாளர் பிரவின் பாலு, ஏராளமான குறும்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்து அனுபவம் பெற்றவர் .இப்போது ஏ.ஜி.எஸ்ஸின் ‘நாய் சேகர் ‘ படத்திற்கு அவர் தான் ஒளிப்பதிவாளர். இதற்கு இசையமைத்துள்ள ஜோன்ஸ் ரூபர்ட், ஹரிஷ் கல்யாண் நடித்த ‘பொறியாளன் ‘ மாயன் ‘ போன்ற படங்களுக்கு இசையமைத்தவர் . எடிட்டர் ராம்பாண்டியன் ‘ஆண்டவன் கட்டளை ‘, ‘கிருமி ‘ போன்ற படங்களில் உதவி எடிட்டராகப் பணியாற்றியவர். இப்படி அனுபவம் உள்ள பலம் வாய்ந்த படக்குழு அமைத்துக் கொண்டு இந்தப் படத்தை உருவாக்கியிருக்கிறேன். படத்தில் நாயகியாக நடித்திருக்கும் அம்ருதா ஶ்ரீநிவாசன் அவர் நடித்த வெப்சீரிஸ் பார்த்து நான் அவரது திறமையை மிகுந்த திறமைசாலி என்று இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் உருவான ‘கள்ளச்சிரிப்பு’ அறிந்திருந்தேன். மற்றும் ராஜேஷ் பாலச்சந்திரன், விக்னேஷ் சண்முகம், ஸ்ரீராஜ் உள்ளிட்டவர்களும் நடித்து இருக்கிறார்கள். நான் யாரிடமும் உதவி இயக்குநராக பணியாற்றிய அனுபவம் இல்லாதவன். அதனால் எனது திரைக்கதையை அமைத்துக்கொண்டு ஒவ்வொருவரிடமும் காட்டி பிடித்திருந்தால் மட்டும் பணியாற்றுங்கள் என்ற ரீதியில் தான் அனைவரையும் அணுகினேன். கதை மேல் ஏற்பட்ட நம்பிக்கை மட்டுமே அவர்களை பணியாற்றச் சம்மதித்து இந்த படம் உருவாகி இருக்கிறது. என்கிறார். ‘இறுதிப் பக்கம்’ படத்தின் ட்ரெய்லரைப் பார்த்துப் பிடித்துப்போய் இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு வாழ்த்தியுள்ளார். இதைத் தங்கள் உழைப்பிற்குக் கிடைத்த அங்கீகாரமாக எண்ணி நெகிழ்ந்து போய் உள்ளது படக்குழு.
ஏமன் நாட்டின் ஹொடெய்டா பகுதியில் ஹவுத்தி கிளர்ச்சியாளர்களுக்கும் முன்னாள் அதிபரின் ஆதரவாளர்களுக்கும் இடையில் நிகழ்ந்த மோதலில் 61 பேர் உயிரிழந்தனர். ஏமன் நாட்டில் அரசுக்கு எதிராக ஹவுத்தி இன மக்கள் ஆயுதம் தாங்கிய போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஈரான் அரசின் ஆதரவுடன் அதிபர் அப்ட்-ரப்பு மன்சூர் ஹாதி தலைமையிலான சர்வதேச அங்கீகாரம் பெற்ற அரசை கடந்த 2015-ம் ஆண்டு நிலைகுலையச் செய்த ஹவுத்தி போராளிகள் தலைநகர் சனா நகரத்தை தங்களது கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராக மற்றொரு போட்டி அரசாங்கத்தை நடத்திவரும் இவர்கள்மீது உள்நாட்டுப் படைகளும் அண்டைநாடான சவுதி அரேபியா தலைமையிலான நேசநாட்டுப் படைகள் தொடர் தாக்குதல் நடத்தி வருகின்றன. அந்நாட்டின் இரண்டாவது பெரிய துறைமுகம் அமைந்துள்ள ஹொடெய்டா மாகாணத்தில் ஹவுத்தி போராளிகளின் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இவர்களுக்கு ஈரான் அரசு மறைமுகமாக ஆயுத உதவிகளை அளித்து வருவதாக குற்றம்சாட்டப்படுகிறது. இந்நிலையில், ஹொடெய்டாவில் ஹவுத்தி போராளிகளுக்கும் முன்னாள் அதிபரின் ஆதரவாளர்களுக்கும் இடையில் ஹொடைடா மாகாணத்தில் நேற்றிலிருந்து கடந்த 24 மணிநேரமாக நிகழ்ந்த மோதலில் ஹவுத்தி போராளிகளில் 43 பேரும் முன்னாள் அதிபர் அப்துல்லா சாலேவின் ஆதரவாளர்கள் 18 பேரும் உயிரிழந்ததாக ஏமன் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
யுனெஸ்கோ பாரம்பரிய தளமான மகாபலிபுரம் அதன் 7 ஆம் நூற்றாண்டின் பல்லவர் சிற்பத்திற்காக நன்கு அறியப்பட்டதாகும். 40 பழங்கால நினைவுச்சின்னங்களின் தொகுப்பு 144,984 வெளிநாட்டு பார்வையாளர்களை ஈர்த்தது. 2. தாஜ்மஹால், உத்தரப் பிரதேசம் முகலாயப் பேரரசர் ஷாஜகான் தனது அன்பு மனைவி மும்தாஜுக்காக கட்டிய இந்த அன்பின் சின்னம் உலக அதிசயங்களில் ஒன்றாகும். தாஜ்மஹால் 38922 பார்வையாளர்களை கவர்ந்துள்ளது. 3. சாளுவன்குப்பம், தமிழ்நாடு சாளுவன்குப்பம், மகாபலிபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள ஒரு கடற்கரை குக்கிராமமாகும். அதில் நிறைய தொன்மையும் வரலாறும் ஒளிந்துள்ளன. இது 25579 வெளிநாட்டு பார்வையாளர்களை ஈர்த்தது. 4. ஆக்ரா கோட்டை, உத்தரப் பிரதேசம் ஆக்ராவின் செங்கோட்டை என்றும் அழைக்கப்படும் ஆக்ரா கோட்டை யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமாகும். யமுனை ஆற்றின் கரையில் உள்ள செங்கல் கோட்டை 13,598 வெளிநாட்டினரை ஈர்த்துள்ளது. 5. செஞ்சி கோட்டை, தமிழ்நாடு 16 ஆம் நூற்றாண்டில் விஜயநகரப் பேரரசால் கட்டப்பட்ட இந்த கம்பீரமான கோட்டை 10483 வெளிநாட்டு பார்வையாளர்களை கவர்ந்துள்ளது. 6. வட்டக்கோட்டை, தமிழ்நாடு இந்தியாவின் தென்கோடி முனையான கன்னியாகுமரி கடற்கரையில் அமைந்துள்ள இந்த கிரானைட் கோட்டை 9174 வெளிநாட்டு பார்வையாளர்களுடன் ஆறாவது இடத்தில் உள்ளது. 7. குதுப்மினார், டெல்லி 800 ஆண்டுகளுக்கும் மேலான, உலகின் மிக உயரமான செங்கல் கோபுரம் என்ற பெருமையைப் பெற்றுள்ள இந்த வரலாற்று நினைவுச்சின்னத்தை கடந்த ஆண்டு 8456 பேர் பார்வையிட்டனர். 8. தி ஃபோர்ட் மியூசியம், தமிழ்நாடு 40 ஏக்கர் பரப்பளவில் ராம்நாட்டின் ராஜாவால் கட்டப்பட்ட திருமயம் கோட்டை, 8422 வெளிநாட்டு பார்வையாளர்களை ஈர்த்து 8வது இடத்தைப் பிடித்துள்ளது. 9. செங்கோட்டை, டெல்லி ஷாஜஹானால் கட்டப்பட்டு நகரத்தில் முகலாய பேரரசர்களின் முதன்மை இல்லமாக செயல்பட்ட லால் கிலா என்றழைக்கப்படும் செங்கோட்டை 5579 வெளிநாட்டு பார்வையாளர்களைக் கவர்ந்துள்ளது. 10. ராக் கட் ஜெயின் கோவில், தமிழ்நாடு இந்த கோவிலின் பாறை சிற்பங்கள் ஜெயின் சமூகத்தினரிடையே மிகவும் முக்கியமானவை. இதைப் பார்க்க 5,432 வெளிநாட்டுப் பார்வையாளர்கள் வருகை புரிந்துள்ளனர்.
பாரத ரத்னா ஜவகர்லால் நேரு (நவம்பர் 14,1889 -மே 27,1964), முதலாவது இந்தியத் தலைமை அமைச்சர் ஆவார். 1947, ஆகஸ்ட் 15 இல் இந்தியா, ஆங்கிலே... நரிக்குறவர் - வரலாற்றில் காணமல் போனவர்கள் வறுமை, பிற மதத்தின் தூண்டுகோளால் மதமாற்றம், அரசாங்க சலுகையின்மை போன்ற காரணங்களால் வரலாற்று புத்தகத்தில் காணாமல் போனவர்கள் இவர்கள். தமிழ்நாட்... தமிழ் எழுத்துகள் குறித்த வியப்பான செய்தி தமிழ் எழுத்து பிறந்த கதை பற்றி இணையத்தில் படித்த சுவையான தகவல்கள் சிலவற்றை நானும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். மறைக்கப்பட்ட தமிழர் வரலாறு 1991 மார்ச் 23ல் முதன்முறையாக பூம்புகார் கடல் பகுதியில் குதிரைலாட வடிவத்தில் கட்டுமானம்ஒன்றைக் கண்டுபிடித்தனர். அதன் இரண்டு முனைகளுக்க... நீரோ மன்னன் - ஒரு பக்க வரலாறு நீரோ குளோடியஸ் சீசர் ஆகுஸ்டஸ் ஜேர்மானிக்கஸ் (Nero Claudius Caesar Augustus Germanicus) (சரி படிக்க முடியலனா விடுங்க, ரொம்ப ட்ரை பண்ணாதிங்க) ... 47 நீர் நிலை வகைகளின் பெயர்கள் ஒரு சின்ன குழாயில் நீர் பிடிக்கும் காலத்தில் நாம் இருக்கிறோம். ஆனால், நமது இலக்கியங்களில் சொல்லப்பட்டிருக்கும் நீர் நிலைகள் மொத்தம் ... இலக்கியங்களில் சொல்லப்பட்டிருக்கும் நீர் நிலைகள் ஒரு சின்ன குழாயில் நீர் பிடிக்கும் காலத்தில் நாம் இருக்கிறோம். ஆனால், நமது இலக்கியங்களில் சொல்லப்பட்டிருக்கும் நீர் நிலைகள் மொத்தம் 47 வாரிஸ் டிரீ Waris Dirie இந்த புகைப்படத்தில் இருக்கும் பெண்ணை நீங்கள் பார்த்திருக்கக்கூடும். இவர் ஒரு பிரபல ஆப்பிரிக்கா நாட்டின் மாடல் அழகி வாரிஸ் டிரீஸ். இவரின் வாழ... இந்தியர்களுக்கு இங்கு செல்ல விசா தேவையில்லை கடல் அலைகள் தாலாட்ட, கடற்காற்று உங்கள் நாசிகளில் கடலின் வாசனைகளை நிரப்ப, பனை மரங்கள் சூழ உங்கள் நாள் ஆரம்பித்தால் எப்படி இருக்கும். அ...