text
stringlengths
328
398k
கொரோனா வைரஸ் என்ற கண்ணுக்கு கூட தெரியாத நுண்ணுயிரி இன்று இந்த உலகையே ஆட்டிப்படைத்து வருகிறது. இந்த வைரஸ் தொற்றால் உலக நாடுகள் அனைத்தும் முடங்கியுள்ளன. பொருளாதாரமும் வர்த்தகமும் நிலை குழைந்துள்ளன. கொரோனா வைரசிடம் இருந்து தப்பிக்க வல்லரசு நாடுகளும் வளர்ந்த நாடுகளுமே தவித்து வரும் நிலையில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே தொற்று நோயிடமிருந்து தப்புவதற்கும் தடுப்பதற்கும் மக்கள் பின்பற்றிய வழிமுறைதான் குவாரன்டின் எனப்படும் தனிமைப்படுத்துதல். உலகின் முதல் தொற்று நோய்: நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள் உலக வரலாற்றில் முதல் தொற்று நோயாக தொழு நோயே அறியப்பட்டது. இந்த நோய் குறித்து யூதர்களின் புனித நூலான தோரா எனப்படும் நூலிலேயே குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் ஒருவருடைய தோளில் வெள்ளை ஏற்பட்டாலோ அல்லது உடலில் உள்ள முடியின் நிறம் மாறினாலோ அவர்களை குறைந்த பட்சமாக 7 நாட்களுக்கு தனிமைப்படுத்த வேண்டும் என்றும் 7 நாட்களுக்கு பிறகு மருத்துவர் அவரை சோதிக்க வேண்டும். அப்பொழுதும் நோய் பாதிக்கப்பட்டவரின் தோளில் வெள்ளை நிறம் மாறவில்லை என்றால் அவரை மேலும் ஏழு நாட்களுக்கு தனிமைப்படுத்த வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. 14 நாட்களின் முடிவிலும் நோய் குணமடையவில்லை என்றால் அவருக்கு தொழுநோய் ஏற்பட்டதாக கருதப்படும், தொழுநோயானது மருத்துவ வளர்ச்சி இல்லாத கால கட்டத்தில் தொற்றுநோயாக இருந்தது. இதனால் தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் சமூகத்தில் இருந்து முழுமையாக தனிமைப்படுத்தப்பட்டு ஊருக்கு வெளியே அனுப்பட்டனர். அவர்கள் ஊருக்குள் வரவோ அல்லது ஊரில் இருக்கும் குடும்ப உறுப்பினர்கள் கூட அவர்களோடு தொடர்புகொள்ள தடை விதிக்கப்பட்டிருந்தனர். பின்னர் தொழு நோயுக்கு மருத்து கண்டுபிடிக்கப்பட்ட பிறகு அதன் நோய் பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இபின் சினா (980-1037) இஸ்லாமிய தத்துவயியலாளரும், மருத்துவ நிபுணருமான இபின் சினா (அ) அவிசென்னா என்பவரே முதன் முதலாக மருத்துவ துறையில் குவாரன்டின் (Quarantine) அல்லது தனிமைப்படுத்துதல் எனப்படும் வார்த்தையை அறிமுகப்படுத்தினார். நுண்ணுயிரிகளின் மூலம் நோய் பரவுவதை கண்டறிந்த இபின் சினா இதற்கு குவாரன்டின் மூலமே தீர்வு காணமுடியும் எனவும் கண்டறிந்தார். மொத்தம் 40 நாட்கள் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை குரான்டைனில் இருக்க வேண்டும் எனவும் கூறினார். இந்த முறைக்கு அல்-அர்பினியா என்று பெயரிட்டார். அர்-அர்பினியா என்றால் 40 என்று அர்த்தம். எதற்காக 40 நாட்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும் பல அறிவியலாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். அது ஏன் 30 நாட்களோ அல்லது 50 நாட்களோ அல்லாமல் 40 நாட்களாக இருப்பதற்கு காரணம் என்ன என்று கேள்வி எழுகிறது. ஆனால் இதற்கு பதில் கூறுபவர்களோ இதனை மத நம்பிக்கையோடு இணைக்கின்றனர். அதாவது விவிலியத்தில் மோசே நாற்பது நாட்கள் மலையில் தியானம் செய்ததும், இயேசு கிறிஸ்து 40 நாட்கள் பாலைவனத்தில் தியானம் இருந்தார் என்றும், 40 நாட்கள் கிறிஸ்தவர்கள் தவக்காலத்தை கடைபிடிக்கிறார்கள் என்பதோடு ஒப்பிட்டு பார்க்கப்படுகிறது. ஆனால் அனைத்து மதங்களிலுமே இதைப்போன்ற ஒரு குறிப்பிட்ட தவ முயற்சி கடைபிடிக்கப்படுவதும் குறிப்பிடத்தக்கதாகும். 14ம் நூற்றாண்டு: 11ம் நூற்றாண்டிலேயே குராண்டைன் முறையை இபின் சினா அறிமுகப்படுத்தியிருந்தாலும் 14ம் நூற்றாண்டில்தான் குவாரன்டின் முறை பெரிய அளவில் பின்பற்றப்பட்டது. 13ம் நூற்றாண்டின் இடைக்கால ஆண்டுகளில் ஐரோப்பிய கண்டத்தில் உருவான பிளேக் நோய் தான் உலகளவில் அதிக உயிர்களை பலி வாங்கிய நோயாக கருதப்படுகிறது. அதனால் தான் பிளேக் நோய் (Black Death) அதாவது கருப்பு மரணம் என்று அழைக்கப்பட்டது. மருத்துவ வசதிகள் இல்லாத கால கட்டத்தில் உருவான இந்த நோயை கட்டுப்படுத்த முடியாமல் உலக நாடுகள் அனைத்தும் திணறின. இந்த நோயால் மக்கள் கொத்துக் கொத்தாக மரணமடைந்தனர். இதற்கும் தனிமைப்படுத்துதல் முறையே தீர்வாக இருந்தது. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களையும் தனிமைப்படுத்தினர். அதன் மூலமே அதற்கும் ஒரு தீர்வு கொண்டுவரப்பட்டது. நோய் தொற்று நோய்: சர்வதேச நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையமானது மனிதர்களின் மூலமோ அல்லது மற்ற உயிரினங்களின் மூலமோ வைரஸ்களினால் பரவும் தொற்று நோய்களை வகைப்படுத்தியுள்ளது. அதன்படி, காலரா, டித்தேரியா, பரவக்கூடிய காச நோய், பிளேக், சின்னம்மை, மஞ்சள் காய்ச்சல், வைரல் ஹெமோராஜிக் காய்ச்சல் அதவாது எபோலா, மார்பர்க், காங்கோ கிரிமென் மற்றும் சார்ஸ் ஆகிய நோய்கள் தொற்று நோய்களாக அறியப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில் தற்போது புதிதாக இணைந்திருப்பது தான் கோவிட்19 எனப்படும் கொரோனா வைரஸ் தொற்று நோய். தொழில்நுட்பமும், மருத்துவமும் நன்கு வளர்ந்த இந்த காலகட்டத்திலும் கொரோனா தொற்று நோயை கட்டுப்படுத்த முடியாமல் உலக நாடுகளும், உலக சுகாதார நிறுவனமும் திணறி வருகின்றன. இந்த சூழ்நிலையில் கொரோனா வைரசை பரவாமல் தடுப்பதற்கு 10ம் நூற்றாண்டில் இஸ்லாமியரான இபின் சினா அறிமுகப்படுத்திய குவாரன்டின் முறையே பின்பற்றப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இக்கட்டுரையின் கருத்துக்கள் கட்டுரையாளரையே சாரும், நியூஸ்7 தமிழ் இதற்கு பொறுப்பாகாது. சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
ஜெனிவா மனித உரிமைகள் கூட்டத்தொடர் ஆரம்பமாகவுள்ள நிலையில், அந்த கூட்டத்தில் கலந்துகொள்ளவுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தூதுக்குழு தொடர்பில் தீர்மானிக்கப்படவுள்ளது. இது தொடர்பில் நாளை மறுதினம் இடம்பெறும் தமது நாடாளுமன்ற குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 40வது மாநாடு எதிர்வரும் 25ஆம் திகதி ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ளது. இது குறித்து தொடர்ந்தும் பேசிய அவர், “தற்போது ஜெனிவா மனித உரிமைகள் மாநாட்டில் புதிய பிரேரணை ஒன்று கொண்டுவரப்படவுள்ள நிலையில், அது குறித்து ஆராய வேண்டியுள்ளதாக” கூறியுள்ளார். இதேவேளை, இந்த கூட்டத்தொடரின் போது இலங்கையின் பொறுப்புக்கூறல், மறுசீரமைப்பு மற்றும் மனித உரிமைகளை உறுதிப்படுத்தும் வகையிலான புதிய பிரேரணை ஒன்று முன்வைக்கப்படவுள்ளது. பிரித்தானியா இந்த பிரேரணையை முன்வைக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. இந்நிலையில், இலங்கை அரசாங்கத்தின் சார்பில் வெளிவிவகார அமைச்சின் பிரதிநிதிகள் அடங்கிய குழு ஒன்று ஜெனிவா நோக்கி பயணிக்கவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் தொழிற்சாலையை மூடக்கோரி நடத்தப்பட்ட போராட்டத்தில் துப்பாக்கிச்சூடு நடந்தது. இந்த துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.அந்த தாக்குதலின் போது ஏற்பட்ட உயிரிழப்புகள், காயங்கள், தனியார் மற்றும் பொது சொத்துகளுக்கு ஏற்பட்ட காயங்கள் குறித்து விசாரணை நடத்த சென்னை உயர்நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஆணையம் ஒன்று அமைக்கப்பட்டது. அந்த ஆணையம் தமிழக அரசுக்கு அளித்துள்ள அறிக்கையின் மீது கடந்த மாதம் 19ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் விவாதத்திற்கு பதில் அளித்து பேசினார். அப்போது துப்பாக்கிச்சூட்டில் பலியான 13 பேரின் குடும்பங்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட நிதியுடன் சேர்த்து, கூடுதலாக ரூ.5 லட்சம் நிவாரணம் நிதி வழங்கப்படும் என்று அறிவித்தார். தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த 13 பேரின் குடும்பத்தினருக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட நிதியோடு மேலும் கூடுதலாக தலா ரூ. 5 இலட்சம் வீதம் நிதி வழங்கிட மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் உத்தரவிட்டுள்ளார். pic.twitter.com/h4jW1NaR51 — CMOTamilNadu (@CMOTamilnadu) November 16, 2022 அதன்படி அந்த அறிவிப்பின்படி தற்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் 13 பேரின் குடும்பங்களுக்கு ரூ.5 லட்சம் வீதம் மொத்தம் ரூ.65 லட்சத்தை முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கிட இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.இது குறித்து ட்விட்டர் பக்கத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
பிரான்சில் வசிக்கும் ஆராய்ச்சியாளர் ஏ.முருகையன் – புலம்பெயர்ந்த தமிழ்த் தொழிலாளர்களின் மொழி், கலாசாரம், வாழ்க்கை பற்றி பேசியதின் எழுத்து வடிவம் இது. (Significant population centers of Tamils. 80,000,000 – 100,000,000) ”19-ம் நூற்றாண்டின் இறுதியில் உலகெங்கும் அடிமைத்தனத்தை ஒழிக்கும் முயற்சி நடந்தது. அதனால் தோட்டத் தொழிலாளிகளின் தேவை ஏற்பட்டது. தோட்ட முதலாளிகள் இந்தியாவிலோ, சீனாவிலோ குறைந்த செலவில் தொழிலாளிகளை பெற்றுக்கொள்ளலாம் என்ற நிலை இருந்தது. மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, பிஜி தீவு, மொரிஷியஸ், ரீயூனியன் தீவு, மர்த்தினி, தென் ஆப்பிரிக்கா மற்றும் உகாண்டா போன்ற ஆப்பிரிக்க நாடுகளுக்குத் தொழிலாளர்கள் புலம்பெயர்ந்தார்கள். இந்தியாவிலிருந்த பிரிட்டிஷ் அரசாங்கம்தான் இங்கிருந்து வெளிநாடுகளுக்கு தொழிலாளர்களை அனுப்பலாம் என்ற சட்டத்தை உருவாக்கினார்கள். ஆங்கில, பிரெஞ்சு பகுதிகளுக்கும் தோட்டத் தொழிலாளிகள் கொண்டுசெல்லப்பட்டனர். தமிழ்நாட்டிலிருந்தும் அப்படிதான் புலம்பெயர்ந்தார்கள். 15 ஆண்டுகாலமாக பிரெஞ்சு பகுதிகளிலுள்ள தமிழர் வாழ்க்கை முறை பற்றி ஆராய்ந்து வருகிறேன். பிரெஞ்சு பகுதிகளிலுள்ள தமிழர்களின் மொழி, பண்பாடு பற்றி அறிய, தமிழர் வாழும் மற்ற நாடுகளில் எப்படி இருந்தது என்றும் அறிய வேண்டும். இந்தியாவிலிருந்து 2 வித சூழ்நிலையுள்ள நாடுகளுக்குப் பிரிகிறார்கள். தூரம் இதில் முக்கிய விஷயம். இந்தியா – சிங்கப்பூர், இந்தியா – மர்த்தினி… இந்த தூர வித்தியாசத்தைக் கவனியுங்கள். தூரம் குறைவு என்பதால் சிங்கப்பூர், இலங்கை தமிழர்கள் தமிழ்நாட்டோடு தொடர்புகொள்ள வாய்ப்பு அதிகம். இதனால் இலங்கை, சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளில் தமிழ் பண்பாடு ஏறத்தாழ சமமாயிருக்கும். தூரம் அதிகரிக்கும்போது தமிழ்மொழி, தமிழ் பண்பாடு ஆகியவை குறைகிறது. ரீயூனியன் தீவு மொரிஷியஸ் அருகில் உள்ளதால், அதன் தாக்கம் உண்டு. இந்திய, தமிழ் பண்பாடு வளர்ச்சி, தமிழர் வாழும் மற்ற பிரெஞ்சு பகுதிகளில் இந்த அளவு இருக்காது. அரசியல் ரீதியில் ரெயினியன், மத்தினி போன்றவற்றில் ஒரே நிலைதான். சென்றடைந்த நாடுகளின் மொழிக்கொள்கை அடுத்த காரணம். மொரிஷியஸ், மலேசியா, சிங்கப்பூர் உள்பட சில நாடுகளில் பன்மொழிக் கொள்கை உண்டு. பிரெஞ்சு பகுதியில் பன்மொழிக் கொள்கை இல்லை. புலம் பெயர்ந்த மக்கள்தொகையைப் பொறுத்தும் இது மாறுபடும். மலேசியாவில் தமிழர் அளவு 10%, தென் ஆப்பிரிக்காவில் 2% (விழுக்காடு குறைவு என்றாலும்கூட, அங்கு 3 லட்சம் தமிழர்கள்), சிங்கப்பூரில் 7%, மொரிஷியசில் 8%, பிஜித்தீவுகளில் 5%, மர்த்தினியில் 5-6 % (அதாவது 13000 தமிழர்கள்), ரீயூனியனில் 33% தமிழர்கள். மக்கள் தொகையில் தமிழர் அளவு சிங்கப்பூரை விட அதிகமாக இருந்தாலும், ரீயூனியன் பிரான்சை சார்ந்தது. கடந்த 5, 6 ஆண்டுகளாக இந்தப் பகுதி இந்திய அரசாங்கத்தோடு தொடர்பில் இருக்கிறது. இலங்கையின் ஆட்சிமொழிகளில் தமிழும் ஒன்று. சிங்கப்பூரின் 4 ஆட்சிமொழிகளில் தமிழும் உண்டு. மலேசியாவில் ஆட்சிமொழியாக இல்லாவிட்டாலும் பள்ளி, பல்கலைக்கழகங்களில் பராம்பரியமாகக் கற்றுத் தரப்படும் மொழியாக இருக்கிறது தமிழ். மொரிஷியசிலுள்ள 5 இந்திய மொழிகளில் தமிழுக்கு முக்கியத்துவம் உண்டு.தென் ஆப்பிரிக்காவில் வாழும் புலம்பெயர்ந்தோர் தமிழ் மொழியை தக்க வைக்க காரணிகளை உருவாக்கியுள்ளனர். பயன்பாடு இல்லாத மொழியை தக்க வைக்க முடியாது. சிங்கப்பூரில் பயன்பாடு, அரசியல் அங்கீகாரம் இருந்தாலும்கூட, தமிழ்க் குழந்தைகள் ஆங்கிலமே படிக்கிறார்கள். அங்கே வீட்டுமொழியாகத்தான் தமிழ் இடம்பிடித்திருக்கிறது. A Malbar temple in Réunion. தமிழர் என எப்படி அடையாளம் காணப்படுகிறது? இவை எல்லாம் சிறு தீவுகள். இருந்தாலும் ‘நான் இந்தியன்’, ‘நான் சீனாக்காரன்’ என்ற உணர்வு அவரவர்க்கு இருக்கிறது. இந்தியாவில் ஜாதி உணர்வு, ஊர்காரன் போன்ற பாகுபாடு இருப்பதுபோலதான்… பலநாட்டு மக்கள் வாழும் பகுதியிலும் இது உண்டு. உடை மூலம் அடையாளம் காணமுடியும். தீபாவளி போன்ற பண்டிகைகளில் பெண்கள் புடவை, பொட்டு அணிந்து காணப்படுவார்கள். இங்குள்ள ஆண்களுக்கு அப்படி அடையாளம் இல்லை. மதச்சடங்கு, வீட்டுச் சடங்கு செய்யக்கூடிய இடங்களில்தான் தமிழ்ப் பயன்பாடு அதிகமாக இருக்கிறது. மாரியம்மன் வழிபாடு, சடங்குகளில், பண்பாட்டுச் செயல்பாடுகளில் தமிழ் உள்ளது. இதை மதம் சார்ந்ததாக பார்க்கக்கூடாது. பண்பாட்டுக் காரணியாகவே எடுத்துக்கொள்ள வேண்டும். ஏனெனில், சட்டப்படி அவர்கள் கத்தோலிக்கர்கள்தான். ஞாயிறு அன்று சர்ச்சுக்குப் போவார்கள். உடல்நிலை சரியில்லை, குழந்தை வேண்டுதல் போன்ற காரணங்கள் இருந்தால் மாரியம்மன் கோயிலில் வழிபாடு செய்வார்கள். தமிழ்நாட்டில் உள்ளதைப் போல, இங்குள்ள மாரியம்மன் கோயில் கோபுரத்தோடு இருக்காது. ஒரு கொட்டகைதான்… மேலே தகரக்கூரை இருக்கும். கல்லுக்கு புடவைகட்டி, பொட்டு வைத்து மாரியம்மனாக வழிபடுவார்கள். வெள்ளை வேட்டி கட்டி காத்தவராயனாக வணங்குவார்கள். நிச்சயமாக பண்பாடு சார்ந்ததுதான் இது. இங்கு கொண்டாடப்படும் விழாக்கள் எல்லாம் கலாசாரம் சம்பந்தப்பட்டவையே. ஒவ்வொரு பகுதியிலும், ஒவ்வொரு வித பழக்கம். ரீயூனியனில் ஆண்டுக்கு 6-7 முறை தீமிதி விழா நடத்துவார்கள். மொரிஷியசில் காவடி எடுப்பார்கள்… மாசி மகம் கொண்டாடுவார்கள். மர்த்தினியில் தீமிதி இல்லை… கரகம் உண்டு. ஆடுபலி, கோழிபலி… எப்போது வேண்டுமானாலும் நடத்தலாம். ’பலியிட்டு வழங்குதல்’ பற்றி மாறுபட்ட கருத்துகள் வருகின்றன. காரணம் சான்ஸ்கிரிட்டிஷேன் என்கிற சமஸ்கிருதமயமாக்கல் இந்தப் பகுதிகளில் திணிக்கப்படுவதுதான். அவர்கள் பலிகொடுப்பதை மிருகத்தனம், காட்டுமிராண்டித்தனம் என்று கொச்சைப்படுத்துகிறார்கள். ரீயூனியனில் பலி கொடுத்து வணங்குவதற்கு தனி கோயில், தனி இடம் ஏற்பட்டுவிட்டது. சிவன், விஷ்ணு கடவுளர்கள் அடங்கிய கோயில்களும் உண்டு. Celebrations of Ganesh by the Sri Lankan Tamilcommunity in Paris, France இந்த மக்களுக்கு தமிழ் மொழியை அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்த வாய்ப்பில்லை. எல்லாவற்றுக்கும் பிரெஞ்சுதான் தேவைப்படுகிறது. விழாக்காலங்களில் பாட்டு பாடவும், ‘சாமி வந்தவர்கள்’ மற்றவர் கேள்விகளுக்குப் பதில் சொல்லவும் தமிழ்தான் தேவை. ரீயூனியனில் கோயிலில் பாடப்படும் தமிழ் பாடல்களுக்கு பொருள் புரியும். மர்த்தினியில் என்னவென்று விளங்காமலே பாடுவார்கள். சூடம் ஏற்றும்போதும் கூட பாட்டு உண்டு. மாரியம்மனுக்கு தாலாட்டுப் பாட்டும் உண்டு. பிரெஞ்சு பகுதிகளில் தெருக்கூத்து நிக்கிய நிகழ்வாக இருக்கிறது. விழாக்காலங்களில் தெருக்கூத்து பார்ப்பார்கள். லவகுசங்கன், நல்ல தங்காள், ராஜா தேசிங்கு கியவை கூத்தாக நடத்தப்படும். இந்தியாவில் அச்சுத்தொழில் வளர்ச்சிப்பெற்ற காலகட்டத்தில் 1930, 40-களில் வெளியிடப்பட்ட சிறு புத்தகங்கள் எடுத்துப் போயிருக்கிறார்கள். இன்னும் பத்திரமாக பாதுகாக்கிறார்கள். அவற்றிலுள்ள கதையோடு ஒப்பிட்டுப் பார்க்கிறார்கள். தமிழ்நாட்டு தெருக்கூத்து போலவேதான் இங்கும் நடத்தப்படுகிறது. கட்டியக்காரன், மத்தளக்காரன், ஆர்மோனியக் காரன் எல்லாம் உண்டு. திரை கட்டி, முதலில் கட்டியக்காரன் வந்து கதை சொல்கிறான். விநாயகர் வேசத்தில் ஒருவர் துதிக்கை மாட்டி வருவார். விநாயகர் பூஜை நடக்கும். உடுப்பு, வேடம் உள்பட எல்லாம் தமிழ்நாட்டில் உள்ளதைப் போலவேதான். இந்தக் கலைஞர்கள் நினைவில் உள்ளதை திரும்பத் திரும்ப செய்து வருகிறார்கள். வாய்வழியாக அடுத்த தலைமுறைக்குச் செலுத்தப்படுகிறது இந்தக்கலை. கிரேயோல் மொழி தாக்கமும் இதில் உண்டு. சபையில் உள்ளவர்களுக்கு விளங்குவதற்காக கிரேயோல் மொழியில் விளக்கம் தருகிறார்கள். கட்டியக்காரர்கள் நாடுநடப்புகளை நையாண்டி செய்யும் பகுதி தமிழ்நாட்டில் நன்கு வளர்ச்சியடைந்து உள்ளது. இங்கே இன்னும் பழைய முறையே இருக்கிறது. பெரும்பாலும் மர்த்தினியில் லவகுசங்கா கூத்தும், ரீயூனியனில் மகாபாரதம், ராமாயணமும், மொரிஷியசில் ராஜா தேசிங்கு, நல்லதங்காள் கதைகளும் கூத்தாக நிகழ்கின்றன. ஒரே சமூக சூழ்நிலையிலிருந்து வந்தவர்கள் என்பதால் இந்தக் கதைகள் அவர்களுக்குத் தெரியும். தெரியாதவர்களுக்கும் புரியும். கான் சாகிப் கதை கூட கூத்தாக நடத்தப்படுகிறது. இப்போது கூத்து நடத்துவது குறைந்து வருகிறது. கிரேயோல் மொழிக்கும் பராம்பரிய வரலாறு உண்டு. தோட்ட முதலாளி பேசும் மொழி தொழிலாளிக்குப் புரியாதில்லையா? புரிதலுக்காக இந்திய, ஆப்பிரிக்க, பிரெஞ்சு கலப்பு மொழி – கிரேயோல் மொழியாக உருவானதுதான் கிரேயோல். பெரும்பாலான சொற்கள் பிரெஞ்சுதான். இலக்கணம் எளிமையாக இருக்கும். ‘நான் காப்பி முடிச்சேன்’ என்றால் ‘குடிச்சேன்’ என்றுதான் பொருள். இதில் இப்போது அகராதி கூட வெளிவந்துள்ளது. பாரதியார் கவிதைகள் கிரெயோல் மொழியில் பெயர்க்கப்பட்டுள்ளன. சுருக்கமாகச் சொன்னால், தமிழர்கள் பிரெஞ்சு பேசுவதுபோலதான் கிரேயோல் மொழியும் ஆனால் எளிதில் விளங்கும்.செஷல்ஸ் நாட்டில் கிரேயோல் பயிற்று மொழியாக உள்ளது. பிரெஞ்சிலும் பாட மொழியாக உள்ளது. இதில் இலக்கியமும் உண்டு. மகாபாரதம், ராமாயணம் ஆகியவை கூட கிரேயோல் மொழியில் உண்டு. மாரியம்மன் வழிபாட்டு முறை… இங்கு கிராம பூசாரி போலதான்… ஈடுபாடுள்ள யார் வேண்டுமானாலும் பூசாரி ஆகலாம். சொந்த ஆர்வத்தில் பெரியவர்கள் செய்வதைப் பார்த்து சிஷ்யனைப் போல கற்றுக்கொள்கிறார்கள்… பூசாரி ஆகிறார்கள். மாரியம்மன் கோயில் பூசாரிக்கு அந்தஸ்து உண்டு. மதிப்பும் கவுரவமும் அதிகம். தோட்டத் தொழிலாளி, ஆசிரியர், டிரைவர், மருத்துவ உதவியாளர், எலெக்ட்ரிஷியன் போன்றவர்கள் கூட, ஒய்வு நேரத்தில் பூசாரியாகத் தொண்டு செய்கிறார்கள். யாரும் முழு நேர பூசாரி கிடையாது. ஏதாவது பிரச்னை என பூசாரியிடம் போனால், ‘கவலைப்படாதே. மாரியம்மனுக்கு விழா எடுப்போம்’ என்று சொல்வார். அதற்கு ஏற்பாடு செய்வார். இந்தியத் தொடர்பு அதிகம் உள்ள மொரிஷியஸ், ரீயூனியன் தீவுகளில் பூசாரி திருமணப் பொருத்தம், ஜாதகம், பஞ்சாங்கம் பார்ப்பதும் உண்டு. நன்றிக்கடன் கொடுக்க விரும்புபவர் 40 நாள் விரதம் இருக்கவேண்டும். கோடை காலத்தில் விழா. ஜுன் முதல் செப்டம்பரில் பூசாரியும் விரதம் இருப்பார். மது மாது மாமிசம் கிடையாது. தீட்டு இருந்தால் தெய்வம் தண்டிக்கும் என்பது நம்பிக்கை. முன்பெல்லாம் 3 ஆடுகளை பலி கொடுப்பதே வழக்கம். இப்போது நிறைய பணம் இருப்பதால் 20, 30 ஆடுகள் கூட பலி கொடுக்கிறார்கள். மர்த்தினியில் இறந்த சடங்குகள், கருமாதி, மாரியம்மனுக்கு நன்றிக்கடன் விழா ஆகியவை தமிழ் மரபுப்படி நடந்து வருகிறது. இப்போது முடிஎடுத்தல் குறைந்து வருகிறது. பெண்கள் வயதுக்கு வந்தவுடன் விழா எடுப்பது சில இடங்களில் உண்டு. இந்தியாவில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் இங்கேயும் உண்டு. தேதி, நட்சத்திரப்படி பெயர் வைப்பது ஒரு உதாரணம். 20 ஆண்டுகளுக்கு முன் தமிழ் பெயர்கள் அதிகம். இப்போது நட்சத்திரத்துக்கு உகந்த எழுத்துக்கு மட்டுமே முக்கியத்துவம் உள்ளது. மொரிஷியசில் 72% இந்தியர்கள்… 8% தமிழர்கள். ஆகவே அரசாங்கம் இந்தியர்கள் கையில். பொருளாதாரம் வெள்ளைக்கார தோட்ட முதலாளிகள் கையில். தமிழர்களுக்கும் ஆட்சி அதிகாரத்தில் பங்கு உண்டு. சொந்த உழைப்பினாலும், ஆங்கிலேயேரிடம் இருந்த செல்வாக்கினாலும் நன்கு வளர்ந்தார்கள். படிப்பு, வேலை, சொத்து சேர்ப்பது என எல்லா விஷயத்திலும் தமிழர்கள் முன்னேற்றம் அடைந்தார்கள். தோட்டத் தொழிலாளிகளாக இருந்து, பிறகு தோட்டங்களையும் வாங்கினார்கள். மொரிஷியசில் முதன்முதலாக பயிற்றுவிக்கப்பட்ட இந்திய மொழி – தமிழ். அச்சேறிய முதல் இந்திய மொழியும் இதுதான். வக்கீல், அக்கவுண்டண்ட் போன்ற ஒயிட் காலர் ஜாப்களில் நிறைய தமிழர்கள் இருக்கிறார்கள். மொரிஷியசில் வேலைவாய்ப்பு குறைவு என்பதால், படித்தவர்கள் அங்கிருந்து புலம் பெயர்கிறார்கள். அரசியல், சமூக, பொருளாதார மேம்பாட்டுக்கு பாடுபட்டவர்கள் என்பதால் தமிழர்களுக்கு நல்ல அங்கீகாரம் உண்டு. ரூபாய் நோட்டுகளில் இரண்டாவது இடத்தில் பொறிக்கப்பட்டிருந்த தமிழ் மொழி எந்தக் காரணமும் இல்லாமல் மூன்றாம் இடத்துக்குத் தள்ளப்பட்டதால், 1998-ல் கலவரம் ஏற்பட்டது. மந்திரி சபையிலிருந்த 2, 3 தமிழர்கள் ராஜினாமா மிரட்டல் விடுத்தனர். ரூபாய் நோட்டில் மீண்டும் இரண்டாவது இடம் பிடித்தது தமிழ். பிரச்னைக்குரிய ரூபாய் நோட்டுகள் பயன்பாட்டிலிருந்து விலக்கப்பட்டன. ஒவ்வொரு மொரிஷியனும் முன்னோர் மொழியை படிக்க வாய்ப்புண்டு. பெயரைப் பார்த்தே ‘தமிழ் படி’ என்று சொல்வார்கள். 5 இந்திய மொழிகள் கற்றுத்தரப்படுகின்றன். பத்திரிகைகள் நடத்தப்பட்டிருக்கின்றன. இப்போது அவை குறைந்துள்ளன. ஒளி என்ற பெயரில் கோயில் கட்டமைப்பின் மாதப் பத்திரிகை வெளிவருகிறது. மொரிஷியசில் சுதந்திரத்துக்கு முன்பிருந்ததோடு ஒப்பிடும்போது, மொழிப்பற்று இப்போது குறைவே. தமிழ்க்கோயில்கள் 300 இருக்கின்றன. இந்திய மூஸ்லிம்களும் இருக்கிறார்கள். 1. வட இந்திய இந்துகள், 2. வட இந்திய மூஸ்லிம்கள் 3. தென் இந்திய தமிழர்கள் என 3 விதமாக மொரிஷியசுக்கு புலம்பெயர்ந்த இந்தியர்களைப் பிரிக்கலாம். மொரிஷியசில் ‘இந்து’ என்றால் வட இந்தியர்கள். தென் இந்திய இந்துகள் தமிழர் என்றே அழைக்கப்படுகின்றனர். தமிழ் மதம் என்ற பிரிவே உருவாகிவிட்டது. ரா.பி.சேதுப்பிள்ளையின் தமிழ் மதம் என்ற கருத்து தாக்கம் இங்கே உள்ளது. மொரிஷியஸ் தமிழர்கள் எழுதிய புத்தகங்கள் சென்னையிலும், தஞ்சாவூரிலும் அச்சிடப்பட்டு கொண்டுவரப்பட்டிருக்கின்றன. 1964-65 களில் இங்கு வெளிவந்த பத்திரிகைகளில் காமராஜர், அண்ணாதுரை பற்றிய செய்திகள் இடம்பெற்றுள்ளன, இங்குள்ள தமிழ் கோயில்களுக்குக் கொடி உண்டு. அதில் கறுப்பு-சிவப்பு கொடி உண்டு. இதை தமிழ் கொடியாக கருதுகிறார்கள். உதயசூரியன், கறுப்பு-சிவப்பு, அண்ணாதுரை ஆகியவை தமிழ் அடையாளங்களாகக் கருதப்பட்டு இங்கே வளர்க்கப்படுகின்றன. உதயசூரியன் ஒற்றுமை சங்கம் என்ற அமைப்பு இருக்கும். உதயசூரியன் ஃபுட்பால் கிளப் என்றால் தமிழர்கள் நடத்துகிற தமிழர்களுக்கான விளையாட்டு அமைப்பு. இதற்கு எல்லாம் கட்சி அரசியல், ஜாதி, மத அடையாளங்கள் கிடையாது. இரும்புக்கதவுகளில் கூட இரண்டு மலைகளுக்கு மத்தியில் சூரியன் வருவதுபோல வரையப்பட்டிருக்கும். நீண்டகாலமாக மர்த்தினிக்கும் தமிழ்நாட்டுக்கும் தொடர்பு இல்லாமல் இருந்தது. இப்போது இந்தியாவுக்கும் தொடர்பு ஏற்பட்டிருக்கிறது. ஓம்… இது இந்தியர்களுக்குச் சொந்தமான விஷயம். ஆனால், வடமொழி ஓம்தான் மர்த்தினி காரர்களுக்குத் தெரியும். வடமொழி ஒம் எழுத்தையே தமிழ் என நினைக்கிறார்கள். அவர்கள் இந்தியமயமாக்கப் பட்டிருக்கிறார்கள். இவர்கள் இந்தியா என்றால் தமிழ்… தமிழ்தான் இந்தியா என்று நினைக்கிறார்கள். வித்தியாசம் புரிவதில்லை. ‘மாரியம்மன் விழா கொடூரமாக இருக்கிறது, காட்டுமிராண்டித்தனமாக உள்ளது’ என்று கூறி வேதங்களைக் கோண்டுவந்து சமஸ்கிருத மயமாக்குகிறார்கள். இந்தியாவில் தன் சமூகம் மேம்பாடு அடைய வேண்டும் என்பதற்காக சிறுசிறு சாதிகள் சமஸ்கிருதத்தை விரும்பிப் போகிறார்கள். புலம்பெயர்ந்த பகுதிகளில் விருப்பமில்லாதவர்களுக்கும் சமஸ்கிருதம் திணிக்கப்படுகிறது. இதனால் தமிழ் அழியும் சூழ்நிலை ஏற்படுகிறது. ‘தமிழ் விழா, தமிழ் பண்பாடு என்பது சாத்தானின் விஷயம். செய்யக்கூடாது. மீறிச்செய்தால் கிறிஸ்துவக் கோயிலுக்கு வரக்கூடாது’ என்று முன்பு கிறிஸ்தவ பாதிரிகள் பயமுறுத்தி வைத்திருந்தார்கள். குழந்தைக்கு உடல்நிலை சரியில்லை என்றால் மாரியம்மன் கோவில் போவார்களே… அதைத் தடுக்கவே இப்படி ஒரு மிரட்டல். இப்போது பிராமணிய அடிப்படையில்தான் சடங்குகளைச் செய்யவேண்டும் என்று வற்புறுத்துகிறார்கள் வேறு சிலர். இதனால் தமிழர்கள் புலம்பெயர்ந்த நாடுகளில் இரண்டாம் பட்ச பண்பாட்டிலேயே இருக்க வைக்கப்படுகிறார்கள். ‘ஆடு பலி கொடு’ என்று கடவுள் கேட்டாரா… அல்லது ‘கொடுக்காதே’ என்று சொன்னரா? இல்லையே. சமஸ்கிகிருதம்தான் கேட்டாரா? இல்லையே. ஏற்கனவே தாழ்வுமனப்பான்மையோடு இருக்கிறவர்களை இன்னும் சின்னாபின்னமாக்கும் முயற்சி இது. ஆகவே, இதையெல்லாம் கண்டுகொள்ளாமல் உங்களால் முடிந்த அளவு, தெரிந்த முறையில் செய்யுங்கள் என்பேன் நான். மர்த்தினியில் இருப்பவர்கள் பிரெஞ்சு, மொரிஷியஸ் காரர்களே… ஆனாலும், இந்திய பண்பாடு அடிமட்டத்தில் இருக்கிறது. அவர்கள் இந்தியத்தன்மை இழக்காமல், தமிழ் தன்மையோடு இருக்கவே விரும்புகிறார்கள். படித்தவர்களாக, சமுதாயத்தில் மேல்நிலை அடைந்தவர்களாக இருக்கிறார்கள். ‘முன்னோர் அளித்தவை முக்கியம். அதை இழந்துவிடக்கூடாது’ என்கிறவர்களும் இருக்கிறார்கள். ‘முன்னோர் அளித்தது காட்டுமிராண்டித்தனம்’ என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள். இப்படி இருக்கையில் ஏற்கனவே பிரிந்துபோயிருப்பவர்களை இன்னும் பிரிக்கும்விதத்தில் நடந்துகொள்வதா? அல்லது பிரிந்து போயிருக்கலாம்… ஆனால் சமுதாய முன்னேற்றம் அடைய வேண்டுமே என்பது ஒரு கேள்வி. சிந்தியுங்கள்!” Posted in Life | Tagged கலாசாரம், தமிழன், தமிழர், தமிழ், புலம்பெயர்ந்த தமிழர்கள், மொழி, வாழ்க்கை, CULTURE, FRENCH COLONY, TAMIL LABOURS | Leave a reply
பூமி வெப்பமயமாதலால் காலநிலையில் வெகுவாக மாற்றம் ஏற்ப்பட்டு வருவதை நாம் காண்கின்றோம், நிலையில்லாத கணிக்க முடியாத காலநிலை தான் கடந்த பல வருடங்களாக இருந்து வருவதை நாம் காண்கின்றோம். தொழிற்சாலை கழிவுகள் அது வெளியிடும் கார்பன் அளவு போன்ற காரணங்கள், நீர்நிலைகள் மாசுபடுவதும், காற்று மாசுபடுவது மட்டுமன்றி, ஆர்டிக், அண்டார்டிக் பகுதிகளில் பனிப்பாறைகள் உருகிவருகின்றன, இதனால் கடல் மட்டம் உயர்வதும் மற்றும் பூமியில் பெரிய காலநிலை மாற்றம் உலகெங்கும் உண்டாகியுள்ளது. உலகின் சிலப் பகுதிகளில் வெப்பத்தின் அளவு வழக்கத்திற்கு மாறாக வெளியே தலை கூட காட்ட முடியாமலும், மற்றும் சில பகுதிகளில் மழையால் ஊரே மிதப்பதையும் பார்க்க முடிகிறது, இவையாவும் மனிதர்கள், இந்த காற்று மற்றும் நீரை மாசு படுத்துவதாலே என்பதை இந்த கொரோனா காலத்தில் இருந்த ஊரடங்கு சாமானிய மனிதர்களுக்கும் தெளிவாக விளக்கியது. கடந்த இரண்டு முன்று ஆண்டுகளாக தஞ்சை டெல்டாப் பகுதிகளில் மழையும் சரி, காவிரி நீரும் பெரிய தடங்கள் இல்லாமல் வருவதால் பெரிய மாற்றம் உள்ளதை பார்க்கின்றோம். இன்று அதிராம்பட்டிணம்-முத்துப்பேட்டை கிழக்கு கடற்கரைச்சாலை பகல் மணி 11க்கு மேல் ஆகியும் சூரியனை மேகங்கள் மறைத்து விடியும் காலைப் பொழுது போல தோன்றியது, அது பார்ப்பதற்கு அழகாவும் இருந்தது, எதுவானலும் பூமிக்கும், காலச் சூழ்நிலைக்கும், மக்களுக்கும் நல்லதாக அமைந்தால் சரிதான்.
கொழும்பில் உள்ள ஒரு முக்கிய பெண்கள் பாடசாலையின் அதிபரின் நடவடிக்கைகளை இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் வன்மையாக கண்டித்துள்ளது. கல்வி அமைச்சின் செயலாளரால் குறித்த பாடசாலையில் பணியாற்றுமாறு ஒரு ஆண் ஆசிரியருக்கு வழங்கப்பட்ட இடமாற்ற உத்தரவின் கீழ் அவரை கடமையாற்றுவதைத் தடுத்ததாக அதிபர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அவர் நியமனக் கடிதத்தை ஆசிரியரின் முகத்தில் வீசி எறிந்ததாகவும், பின்னர் பாடசாலை பாதுகாப்பு அதிகாரிகளுக்கு அந்த ஆசிரியரை பாடசாலை வளாகத்திலிருந்து வலுக்கட்டாயமாக அகற்றுமாறு உத்தரவிட்டதாகவும் கூறப்படுகிறது. செய்தித்தாள் தகவல்களின்படி, ஒரு ஆண் ஆசிரியர் தனது பாடசாலையில் சிங்கள இலக்கியங்களை கற்பிக்க முடியாது என்ற அடிப்படையில் நியமனத்தை ஏற்க அதிபர் மறுத்துவிட்டார். கல்வி அமைச்சின் செயலாளரின் நேரடி உத்தரவுகளை அதிபர் மீறியுள்ளதை சுட்டிக்காட்டிய இலங்கை ஆசிரியர் சேவை ஒன்றியம், ஆசிரியரின் சட்டபூர்வமான இடமாற்றத்தை அமுல்படுத்துமாறு கோரிக்கை விடுத்தது. பாதிக்கப்பட்ட ஆசிரியருக்கு கல்வி அமைச்சின் செயலாளர் ஒரு நியாயமான தீர்வை வழங்கத் தவறினால், அனைத்து ஆசிரியர் சங்கங்களும் இலங்கை அரசு ஆசிரியர் சங்கத்திலிருந்து விலகும் என்று யூனியன் மேலும் தெரிவித்துள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகளின் சிறிய கொமாண்டோ அணிகள் சிறிலங்கா படையினரின் நிலைகளுக்குள் ஊடுருவி தாக்குதலை நடத்தியுள்ளதாக கொழும்பில் இருந்து வெளிவரும் ‘லக்பிம‘ வார ஏடு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ‘லக்பிம‘ வார ஏட்டின் பாதுகாப்பு பத்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது : விடுதலைப் புலிகளின் 15 பேர் கொண்ட அணி, முதலாவது சிங்க றெஜிமென்ட் பற்றலியன் நிலைகொண்டிருந்த பகுதிக்குள் கடந்த வாரம் ஊடுருவிய போது கடுமையான சமர் மூண்டது . இத்தாக்குதலின் போது அதிகாரி ஒருவர் உட்பட 7 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் 7 பேர் காயமடைந்துள்ளனர். இதன் பின்னர், அந்த அணியில் இருந்த கரும்புலி வீரர் ஒருவர் 11 ஆவது கெமுனுவோச் பற்றலியனின் கட்டளை அதிகாரி மேஜர் திசந்த பெர்னாண்டோ பயணம் செய்த ஜீப் ஊர்தி மீது தாக்குதலை நடத்தினார். இத்தாக்குதலின் போது வாகனத்தின் சாரதி கொல்லப்பட்டார் . ஆனால், கட்டளை அதிகாரி அந்த வாகனத்தில் பயணம் செய்யாததால் உயிர் தப்பியுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! முல்லைத்தீவிலிருந்து சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினால் 6 வது தொகுதி நோயாளர்கள் நேற்றிரவு கப்பல் மூலம் திருகோணமலைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். யுத்த சூழ்நிலையில் காயமடைந்தவர்கள் ,நோயாளர்கள் மற்றும் கர்ப்பிணிகள் ,அவர்களது உறவினர்கள் என 252 பேர் இக் கப்பலில் அழைத்து வரப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் சிகிச்சை முடிந்த நிலையில் மேலும் 100 பேர் நேற்று வவுனியாவிலுள்ள நலன்புரி நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதையடுத்து இந்த எண்ணிக்கை 746 ஆக அதிகரித்துள்ளது. மேலும் முல்லைத்தீவிலிருந்து அழைத்து வரப்படும் நோயாளர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு காரணமாக புல்மோட்டை வைத்தியசாலையை உடனடியாக அபிவிருத்தி செய்ய சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! இலங்கையில் மனித உரிமை மீறல்கள் மோசமடைந்து வருகின்றன. அங்கு 16 வீத மக்கள் தொகையைக்கொண்ட தமிழ் மக்களில் இளைஞர்கள் அதிகளவில் கொல்லப்படுவதுடன் காணாமலும் போய் உள்ளனர் என அமெரிக்கா கவலை தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் வெளியுறவுத்துறை திணைக்களம் வெளியிட்டுள்ள 2008 ஆம் ஆண்டுக்கான மனித உரிமை அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: இலங்கையில் மனித உரிமை மீறல்கள் மோசமடைந்து வருகின்றன. சிறிலங்கா அரசுடன் இணைந்து செயற்படும் துணை இரணுவக் குழுவினரும், அரசியல் கட்சிகளாக தம்மை பதிவு செய்து கொண்டுள்ள டக்ளசின் ஈ.பி.டி.பி . மற்றும் முரளிதரனின் ரி.எம்.வி.பி. போன்ற கட்சிகளும் அதிகளவில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டு வருகின்றன. விடுதலைப் புலிகளும் படுகொலைகள் மற்றும் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டு வருகின்றனர். போர் தீவிரமடைந்ததை தொடர்ந்து சிறிலங்கா அரசின் மனித உரிமை மீறல்கள் அதிகரித்துள்ளன. அரசின் இந்த மனித உரிமை மீறல்களினால் அதிகளவில் தமிழ் மக்களே பாதிப்படைந்துள்ளனர். இலங்கையில் 16 வீதமான மக்கள் தொகையைக்கொண்ட தமிழ் மக்களில் இளைஞர்கள் அதிகளவில் கொல்லப்படுவதுடன் காணாமலும் போய் உள்ளனர். அரசுடன் இணைந்து செயற்படும் குழுவினரே நீதிக்குப் புறம்பான படுகொலைகளில் ஈடுபட்டு வருவதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. அரசியல் படுகொலைகள், அரச படையினருடன் இணைந்து செயற்படும் துணை இராணுவக் குழுவினர் சிறார்களை படையில் சேர்ப்பத காணாமல் போதல எழுந்தமானமான கைதுகள தடுத்து வைத்தல தரமற்ற சிறைக்கூடங்கள கைது செய்யப்படுபவர்களை நீதிமன்றத்தில் நிறுத்துவதற்கு மறுப்பு தெரிவித்தல அரசின் ஊழல சிறுபான்மை மக்களுக்கு எதிரான பாகுபாடுகள் என்பன இலங்கையில் அதிகரித்துள்ளன. சிறிலங்கா அரசுடன் இணைந்து செயற்படும் துணை இராணுவக் குழுவினர் பொதுமக்களுக்கு எதிரான ஆயுத தாக்குதல்கள், துன்புறுத்தல்கள், கடத்துதல் , பணயக்கைதிகளாக மக்களை பிடித்தல், கப்பம் வாங்குதல் போன்ற செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த குற்றங்களில் ஈடுபட்ட காவல்துறை, இராணுவம், மற்றும் துணை இராணுவக் குழுவினரை சேர்ந்த எவரும் கடந்த வருடத்தில் தண்டிக்கப்படவில்லை என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! திருகோணமலை பாரிய சுற்றிவளைப்பு தேடுதல் 5 தமிழர்கள் கைது திருகோணமலை காவல்துறையினரும் இராணுவத்தினரும் இணைந்து பாரிய சுற்றிவளைப்பு தேடுதல் 5 தமிழர்கள் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்று முந்தினம் வெள்ளிக்கிழமை அதிகாலை வேளையில் திருகோணமலை சிறுபான்மை தமிழர்கள் வாழ்கின்ற உப்புவெளிப் பிரதேசத்தில் காவல்துறையினரும் இராணுவத்தினரும் இணைந்து பாரிய சுற்றிவளைப்பு தேடுதல் ஒன்றை நடத்தியுள்ளனர். திருமலையில் உள்ள புகையிரத நிலையம், பேரூந்து நிலையம், மற்றும் வீதியால் பயணித்துக் கொண்டிருந்த துவிச்சக்கரவண்டி, மோட்டார் சைக்கிளில் சென்றவர்கள் கடும் சோதனைக்குட்படுத்தப்பட்டதுடன் , வாகனங்களும் சோதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. வெள்ளிக்கிழமை நடைபெற்ற தேடுதலில் 5 தமிழர்கள் கைதுசெய்யப்பட்டு உப்புவெளி காவல்நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டுவருவதாகவும் தெரிவிக்கின்றனர். !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! சிறிலங்காவின் பொருளாதாரம் வேகமாக வீழ்ச்சி கண்டு வரும் நிலையில் 54 ஆயிரம் பேர் வேலை இழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: உலக பொருளாதார நெருக்கடி சிறிலங்காவை கடுமையாக பாதித்து வருகின்றது. சிறிலங்காவில் உள்ள 53 ஏற்றுமதி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன . இதனால் 54 ஆயிரம் பேர் வேலை வாய்ப்புக்களை இழந்துள்ளனர். ஆடை உற்பத்தி, கட்டுமானத்துறை , வெப்ப ஆடை உற்பத்தி, சீமெந்து உற்பத்தி, இரத்தினக்கல் ஏற்றுமதி, நிதி முகாமைத்துவ நிறுவனங்களே அதிகளவில் மூடப்பட்டுள்ளன. எதிர்வரும் மாதங்களில் மேலும் பலர் வேலை இழப்புக்களை சந்திக்கலாம் என வர்த்தக சங்கத்தின் தலைவர் வசந்த சமரசிங்க எச்சரிக்கை விடுத்துள்ளார். கட்டுநாயக்க, பியகம, கோகல பகுதிகளில் உள்ள சுதந்திர வர்த்தக வலயத்தில் உள்ள பல நிறுவனங்கள் தமது பணியாளர்களுக்கு ஊதியங்களை வழங்குவதற்கு பாரிய நெருக்கடியை எதிர்நோக்கி உள்ளன. பணியாளர்களுக்கான மேலதிக கொடுப்பனவுகள், பயண கொடுப்பனவுகள், மேலதிக நேர வேலை போன்றவற்றை இந்த நிறுவனங்கள் நிறுத்தியுள்ளன. சில நிறுவனங்கள் தமது பணியாளர்களை விடுமுறையில் அனுப்பியுள்ளன. கம்பகா மாவட்டத்தில் உள்ள சினோரெக்ஸ் ஆடை உற்பத்தி நிறுவனம் மூடப்பட்டதனால் 3 ஆயிரம் பேர் வேலை இழந்துள்ளனர். குருநாகல் மாவட்டத்தில் உள்ள கிறிஸ்ற் லங்கா மூடப்பட்டதனால் 2 ஆயிரம் பேர் வேலை இழந்துள்ளனர் என அவர் மேலும் தெரிவித்துள்ளார !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! தென்பகுதியையும் கிழக்கு மாகாணத்தையும் பாதுகாப்பதற்கு போதியளவு சிறிலங்கா படையினர் இல்லாததால் அவற்றின் பாதுகாப்பினை ஊர்காவல் படையினரிடம் ஒப்படைக்க அந்நாட்டு அரசாங்கம் திட்டமிடப்பட்டுள்ளது . இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது: சிறிலங்காவின் படை பலத்தில் பெருமளவானவை வடபகுதியில் குவிக்கப்பட்டுள்ள நிலையில் ஏனைய பகுதிகளின் பாதுகாப்புக்களை ஊர்காவல் படையினரிடம் ஒப்படைக்க திட்டமிடப்பட்டுள்ளது. மணலாறில் இருந்து ஜனகபுர பகுதி வரையிலுமான வீதிகளின் பாதுகாப்பு ஊர்காவல் படையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதேபோன்று, அம்பாறை மற்றும் பொலநறுவை பகுதிகளிலும் 500 ஊர்காவல் படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர். தமது கிராமங்களுக்கு வெளியில் நிறுத்தப்படும் ஊர்காவல் படையினருக்கு மேலதிக கொடுப்பனவுகளும் இலவச உணவும் வழங்குவதற்கு அரசு தீர்மானித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. !!!!!!!!!!!!!!!!!! போரினால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்து வவுனியா பூந்தோட்டம் நலன்புரி நிலையத்தில் தங்கவைக்கப்பட்டுள்ள நிலையில் ஆறு மாத காலத்திற்குள் 3 தடவைகள் தீப்பிடித்து முற்றாக அழிவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்று சனிக்கிழமை காலை 10.30 மணியளவில் பூந்தோட்டம் நலன்புரி நிலையத்தில் பாரிய தீ விபத்து ஏற்பட்டது. இதில் முதலாவது யுனிட்டில் உள்ள 8 நிலைகள் முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளது. இதனால் 48 குடும்பங்களைச் சேர்ந்த 145 பேர் பாதிக்கப்பட்டு இருப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். பாதிக்கப்பட்டவர்களின் உடமைகள் அனைத்தும் எரிந்து சாம்பலாகியுள்ளதாகவும், அவர்களை வேறு இடத்தில் தற்காலியமாக தங்கவைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார் . தீ ஏனைய இடங்களுக்கு பரவாமல் இருப்பதற்கு பலரின் முயற்சியினால் அணைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த விபத்துக்கான காணரம் என்ன என்பது குறித்து இதுவரையில் தகவல்கள் வெளியாகவில்லை . இது தொடர்பாக வவுனியா காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுவருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது . !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! தலைமைப் பொறுப்பிலிருந்து ரணில் விக்ரமசிங்கவை நீக்க உள்ளதாகவும், கட்சியிலிருந்து பிரிந்த சென்ற ஜனநாயகக் குழு உறுப்பினர்களையும் மீண்டும் கட்சியில் இணைந்து கொள்ளுமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர் ஒருவர் கோரியுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சி தலைமைத்துவத்தில் விரைவில் மாற்றம் ஏற்படுத்தப்படும் என கட்சி வட்டாரத் தகவல்கள் சுட்டிக்காட்டுகின்றன. ரணில் விக்ரமசிங்க தலைமைப் பதவியிலிருந்து நீக்கப்பட்டால் மட்டுமே கட்சியை மீட்டெடுக்க முடியும் என அவர் தெரிவித்துள்ளாh. !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! குற்றத் தடுப்புப் பிரிவினால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள சுடர்ஒளி பத்திரிகையின் ஆசிரியர் எஸ்.வித்தியாதரனை விடுதலை செய்ய வெளிநாட்டு இராஜதந்திரிகளின் உதவியைப் பெற்றுக்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமது கணவரை நேற்று பார்வையிட்டதாகவும், அவர் துன்புறுத்தல்களுக்கு உட்பட்டிருக்கவில்லை எனவும் வித்தியாதரனின் மனைவி ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார் . எவ்வாறெனினும், கைது செய்யப்பட்ட சந்தர்ப்பத்தின் போது வித்தியாதரனுக்கு சில காயங்கள் ஏற்பட்டதாகவும், அதற்காக நேற்றைய தினம் சிகிச்சைகள் அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது . வித்தியாதரனை விடுதலை செய்வது குறித்து சில முக்கிய வெளிநாட்டு இராஜதந்திரிகளிடம் ஏற்கனவே பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளதாக ஊடக நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, அண்மையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் வான் படையினரால் கொழும்பில் மேற்கொள்ளப்பட்ட வான் தாக்குதல்கள் தொடர்பில் வித்தியாதரனிடம் விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் ரஞ்சித் குணசேகர தெரிவித்துள்ளார். வித்தியாதரன் குற்றமற்றவர் என நிரூபிக்கப்பட்டால் வெகுவிரைவில் அவரை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என ஊடக அமைச்சர் அனுர பிரியதர்சன யாபா குறிப்பிட்டுள்ளார். பாதுகாப்பு தொடர்பான பிரச்சினை என்பதால் ஊடக அமைச்சினால் இதில் அதிகளவு தலையீடு செய்ய முடியாதெனவும் அவர் தெரிவித்துள்ளார். !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! வன்னியில் இடம்பெற்று வரும் இன அழிவை தடுத்து நிறுத்த இந்திய மத்திய அரசு விரைந்து நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென அமெரிக்கா வாழ் இந்தியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழ்ச் சிலியன்கள் எதிர்நோக்கி வரும் பாரிய இடர்பாடுகளுக்கு இந்திய மத்திய அரசு விரைவானதும், பொருத்தமானதுமான தீர்வுத் திட்டமொன்றை முன்வைக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது . இலங்கை நிலவரம் குறித்து இந்திய மத்திய அரசிற்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் புலம் பெயர் இந்தியர்களிடம் இணையமூடாக கையொப்பங்கள் கோரப்பட்டுள்ளன. மனிதப் பேரவலத்தை தடுத்து நிறுத்த மத்திய அரச நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தும் வகையில் குறித்த மகஜர் அமைந்துள்ளதாகவும், அமெரிக்காவிற்கான இந்திய உயர்ஸ்தானிகர் நிரூபமா சென்னிடம் இந்த மகஜர் கையளிக்கப்பட உள்ளதாகவும் தெரியவருகிறது. இலங்கையில் உடனடியாக யுத்த நிறுத்தம் அமுல்படுத்தப்பட வேண்டுமென கோரி நூற்றுக்கணக்கான அமெரிக்கா வாழ் இந்தியர்கள் மகஜரில் கையொப்பமிட்டுள்ளனர். யுத்த வலயத்தில் சிக்கியுள்ள சிவிலியன்களுக்கு தேவையான உணவு மற்றும் மருந்துப் பொருட்கள் தொடர்ச்சியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அந்த மகஜரில் மேலும் கோரப்பட்டுள்ளது . !!!!!!!!!!!!!!!!! ஒரு கிலோ 400 கிராம் ஹெரோயின் போதை வஸ்தை கடத்தி வந்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட பாகிஸ்தான் பிரஜைக்கு நீர்கொழும்பு மேல் நீதிமன்றம் மரணதண்டனை விதித்ததுள்ளது. அப்துல் ஹாலி என்ற இந்த நபர் 2001 நவம்பர் 11 ஆம் திகதி விமானம் மூலம் இலங்கைக்கு வந்த போது அவரது பயணப்பொதியை சோதனையிட்ட சுங்க அதிகாரிகள் அதனுள் போதை வஸ்து மறைத்து வைக்கப்பட்டிருப்பதைக்கண்டு பிடித்தனர். இதனையடுத்து இவர் போதைவஸ்து தடுப்புப் பிரிவு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார். இவருக்கு எதிராக நீர்கொழும்பு மேல் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்ற போது இவரிடம் இருந்து பெறப்பட்ட போதைவஸ்தில் 396 கிராம் உண்மையான ஹெரோயின் என்பதை இரசாயனப் பகுப்பாய்வு பரிசோதனை மூலம் தெரிய வந்ததாக பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேல் நீதிமன்ற நீதிபதி திருமதி தென்னக்கோன் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணை எதிரியில்லாமல் நடைபெற்றது. எதிரியைக் கைது செய்யுமாறும் நீதிபதி பிடியானை பிறப்பித்தார !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! பிரான்சில் நேற்று சனிக்கிழமை( 28.02.2009 ) மாபெரும் ஆர்ப்பாட்டப்பேரணி நடைபெற்றிருந்தது. இப்பேரணி பிரான்சின் முக்கிய நகரங்களில் ஒன்றான Bastille பகுதியிலிருந்து ஆரம்பமாகி குடியரசு சதுக்கப்பகுதி வரை ஊர்வலமாக முன்னெடுக்கப்பட்டிருந்தது இப்பேரணியில் சுமார் பத்தாயிரத்திற்கும் அதிகமான மக்கள் கலந்துகொண்டிருந்தனர். கடந்த பெப்ரவரி 4 ஆம் திகதியன்று கறுப்புதினமாகப் பிரெஞ்சுவாழ்தமிழர்களால் முன்னெடுக்கப்பட்ட பேரணிக்குப்பின்னர் இன்றையதினம் மீண்டும் தமிழர்கள் சிறியோர் முதியோர் என்ற வேறுபாடின்றி மிகப்பெரியளவில் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளமையைக் காணமுடிந்தது இப்பேரணி நகர்வின்போது கலந்துகொண்டிருந்த மக்கள் உலக அரசுகளே விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கு விடுதலைப் புலிகளே எமது ஏகப்பிரதிநிதிகள் அவர்கள் மீதான தாக்குதலை நிறுத்துவதனூடாகவே தமிழினப் படுகொலையை நிறுத்த முடியும் என்றவாறான கோசங்களை எழுப்பித்தமது உணர்வுகளை வெளிப்படுத்தியிருந்தனர் !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! india !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! பாகிஸ்தான் ஆதரவு இஸ்லாமிய பயங்கரவாதத்தை ஒழிக்க தைரியமான இலங்கைத் தமிழர்களின் உதவியை பெறுவது குறித்து மத்திய அரசு பரிசீலிக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ள சிவசேனா கட்சி, விடுதலைப்புலிகள் இலங்கை அரசுக்கு எதிராகவே போரிடுகின்றனர். இந்திய அரசுக்கு எதிராக அல்லவெனவும் சுட்டிக்காட்டியுள்ளது. சிவசேனா கட்சியின் பத்திரிகையான “சாம்னா‘ வில் இது தொடர்பாக எழுதப்பட்டுள்ள தலையங்கத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது;இந்தியாவை சுற்றி பல்வேறு தரப்பிலிருந்து ஆபத்து உருவாகிக்கொண்டிருக்கின்றது . அதனை தடுக்க மத்திய அரசு எதனையாவது செய்யவேண்டியது அவசியம். இந்தியாவின் தென்பகுதியில் விடுதலைப்புலிகள் தாக்குதல் நடத்தலாமென இலங்கை இராணுவத்தளபதி சரத் பொன்சேகா கூறியுள்ளார். இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும் இராணுவத்துக்குமிடையே பல ஆண்டுகளாக சண்டை நடந்துகொண்டு வருகின்றது. புலிகளை பெருமளவு வெற்றி கொண்டு விட்டதாக இலங்கை இராணுவத்தினர் அறிவித்தாலும் கொழும்பில் புலிகளின் விமானப்படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர் . இலங்கைத்தமிழர் பிரச்சினை அந்நாட்டின் உள்நாட்டுப்பிரச்சினை. இலங்கைத்தமிழர் விடயத்தில் நாம் அனுதாபம் காட்டினாலும் இந்தப் பிரச்சினையில் எச்சரிக்கையான அணுகுமுறையை பின்பற்றவேண்டியது அவசியம் . காஷ்மீரில் பிரிவினைவாதிகளை எதிர்க்கும் நாம் புலிகளை மட்டும் ஆதரிக்கமுடியாது. புலிகளுடன் போரிட இந்திய இராணுவத்தை அனுப்பியதால்தான் ராஜீவ்காந்தி உயிரிழக்க நேரிட்டது. தற்போதைய அரசும் அதேபோன்ற தவறைசெய்யக்கூடாது. இலங்கை அரசு அங்குள்ள தமிழ்மக்களை அழிக்க நினைக்கிறது. இது கண்டிக்கத்தக்கது. இந்தியாவிலுள்ள முஸ்லிம்களின் நலனில் பாகிஸ்தான் அரசியல்வாதிகள் அக்கறை காட்டும் போது மற்றைய நாடுகளில் வசிக்கும் இந்துக்கள் நலனில் நாம் ஏன் அக்கறை காட்டக்கூடாது? விடுதலைப்புலிகள் இலங்கை அரசுக்கு எதிராகக்தான் போராடி வருகின்றார்கள். இந்திய அரசுக்கு எதிராக அவர்கள் போராடவில்லை.இலங்கைத் தமிழர்கள் அந்நாட்டு அரசுக்கு எதிராகவே போரிடுகின்றனர். இந்தியாவுக்கு எதிராக அவர்கள் போராட நினைத்தால் 100 கோடி இந்தியர்களின் ஆதரவைப் அனுதாபத்தை இழந்துவிடுவார்கள். இந்திய பாராளுமன்றம் மீது தாக்குதல் நடத்தப்பட்ட பின்னரும் எமது நாட்டின் முதல் எதிரியான பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்த இந்திய அரசு தயாரில்லை. அதேபோலத்தான் மத்தியிலுள்ள தற்போதைய அரசு இலங்கை அரசுக்கு எதிராக நடவடிக்கை எதுவும் எடுக்காது . இந்தியாவில் பாகிஸ்தானின் ஆதரவுபெற்ற இஸ்லாமிய பயங்கரவாதத்தை ஒடுக்க தைரியமான இலங்கைத் தமிழரின் உதவியை பெறுவது குறித்து மத்திய அரசு பரிசீலிக்கவேண்டும். அந்நியநாட்டு பயங்கரவாதிகள், நேபாள மாவோயிஸ்டுகள்,சீன அரசு, வங்கதேச கலகம், இலங்கை நிலைவரம் என பலதரப்பிலிருந்தும் இந்திய நாட்டுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்தை தடுக்க மத்திய அரசு உடனடியாக செயலில் இறங்கவேண்டும். !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! தூத்துக்குடிக்கு வந்த மத்திய அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜிக்கு எதிர்ப்புத் தெரிவித்து கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்தியதற்காக கைது செய்யப்பட்ட ம.தி.மு .க. பொதுச் செயலர் வைகோ மீது குற்றவியல் தண்டனைச் சட்டத்தின் 4 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடியில் அமை‌க்க‌ப்பட உ‌ள்ள புதிய அனல்மின் நிலையத்துக்கு நேற்று அடி‌க்க‌ல் நா‌ட்டுவதற்காக வ‌ந்த மத்திய அயலுறவுத்துறை அமை‌ச்ச‌ர் பிரணாப் முகர்ஜிக்கு எதிராக கரு‌ப்பு‌‌க்கொடி கா‌ட்ட முய‌ன்ற ம.‌தி.மு .க. பொது‌ச் செயல‌ர் வைகோ உ‌ட்பட 197 பே‌‌ரை காவல்துறையினர் கைது செ‌ய்தன‌ர் . இந்நிலையில், அவர்கள் அனைவரின் மீதும் சட்ட விரோதமாக ஒன்றாகக் கூடியது, சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் சூழலை உருவாக்கியது, சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டது , உருவப்படத்தை எரித்தது என மொத்தம் 4 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது . முன்னதாக அனைவரையும் 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்கும்படி நீதிபதி உத்தரவிட்டுள்ளது , வைகோ உள்ளிட்ட அனைவரும் இன்று அதிகாலை பாளையங்கோட்டை சிறைச்சாலையில் அடைக்கப்பட்டனர் . வைகோ உள்ளிட்ட ம.தி.மு.க. தொண்டர்கள் கைது செய்யப்பட்டுள்ளதற்கு இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் கண்டனம் தெரிவித்துள்ளார். !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! முதுகுவலி காரணமாக அறுவை சிகிச்சை செய்து கொண்ட முதல்வர் கருணாநிதி, இன்று மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார். வீடு திரும்பும் வழியில் வேனில் இருந்தவாறு புதுப்பிக்கப்பட்ட அன்பகத்தை முதல்வர் திறந்து வைத்தார். முதுகுப்பகுதியில் ஏற்பட்ட தசைப்பிடிப்பு காரணமாக கடந்த ஜனவர் 26ஆம் தேதி முதல்வர் கருணாநிதி போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்தததைத் தொடர்ந்து கடந்த 11ஆம் தேதி அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது. இதன் பின்னர் ராமச்சந்திரா மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த முதல்வர் உடல்நலம் தேறியதைத் தொடர்ந்து இன்று காலை 9 மணியளவில் வேன் மூலம் வீடு திரும்பினார். அவரது மனைவி தயாளு அம்மாள், ராஜாத்தி அம்மாள், மு.க.அழகிரி, அமிர்தம், மத்திய அமைச்சர் ஆ.ராசா, அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி, துரைமுருகன், மருத்துவர் மார்த்தாண்டம் ஆகியோர் வேனில் முதல்வருடன் வந்தனர். வீடு திரும்பும் வழியில் வேனில் இருந்தவாறு தேனாம்பேட்டையில் புதுப்பிக்கப்பட்ட அன்பகம் கட்டிடத்தை முதல் அமைச்சர் திறந்து வைத்தது குறிப்பிடத்தக்கது !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! வரும் மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு கூடுதல் தொகுதி களை விட்டுத்தர திமுக முன்வந்திருப்பதாக கூறப்படுகிறது. திமுக கூட்டணியிலிருந்து வெளி யேற்றப்பட்ட பாமகவை மீண்டும் தங்கள் அணிக்கு கொண்டு வரும் முயற்சியில் காங்கிரஸ் கட்சி தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகவும் தெரிய வருகிறது. . மக்களவை தேர்தலுக்கான அறிவிப்பு எந்த நேரத்திலும் வெளியாகலாம் என்ற பரபரப்பான சூழ்நிலை நிலவுகிறது. இதனால் தொகுதி பங்கீடு செய்வது குறித்து கட்சிகள் தீவிர முயற்சிகளில் ஈடுபட்டுள்ளன. அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா, திமுக கூட்டணி யிலிருந்து காங்கிரஸ் கட்சி வெளியேற வேண்டும் என்று பகிரங்கமாக அழைப்பு விடுத்தார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது . அதிமுக கூட்டணியில் அண்மையில் இடம் பெற்ற மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளை இது அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அதேபோல திமுகவிலும், காங்கிரஸ் கட்சியிலும் சலசலப்பை ஏற்படுத்தியது. ஆளும் கட்சியாக திமுக இருப்பதால் மக்களிடம் செல்வாக்கு குறைந் துள்ளது என்றும், இலங்கை தமிழர் பிரச்சனை தொடர்பான போராட்டங் களின் போது வன்முறையை தடுக்க திமுக அரசு தவறிவிட்டது என்றும், காங்கிரஸ் கட்சியின் ஒரு பிரிவினர் கருதினார்கள். இதனால் அவர்கள் திமுக கூட்டணியில் இருந்த விலகி அதிமுகவுடன் சேர வேண்டும் என்று விரும்பினார்கள். இத்தகைய எண்ணம் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சிலரிடம் மட்டுமின்றி அகில இந்திய காங்கிரஸ் கட்சியில் உள்ள சில முக்கிய பிரமுகர்களிடமும் ஏற்பட்டது. மற்றொரு பிரிவினர் வளர்ந்து வரும் கட்சியான தேமுதிகவுடன் கூட்டணி வைத்து கொள்ள வேண்டும் என்று கூறியதாக தெரிகிறது . ஆனால் திமுக கூட்டணியை விட்டு வெளியே வந்தால்தான் காங்கிரசுடன் தாங்கள் தொகுதி உடன்பாடு வைத்து கொள்ள முடியும் என்று தேமுதிக தரப்பில் கூறிவிட்டதாக தெரிகிறது . இது திமுக தலைமையை அதிர்ச்சி அடைய செய்தது. திமுக நிலைமையை சரிசெய்ய தீவிர முயற்சி களை மேற்கொண்டு வருகிறது. இதன் அடிப்படையில், மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு மற்றும் தயாநிதி மாறன் ஆகியோர் டெல்லியில் காங்கிரஸ் முக்கிய பிரமுகர்களை சந்தித்து காங்கிரஸ், திமுக கூட்டணி தொடரவேண்டும் என்று வலியுறுத்தியதாக தெரிகிறது. தமிழ்நாடு பொறுப்பு வகிக்கும் அகில இந்திய காங்கிரஸ் கட்சி பொதுச் செயலாளர் குலாம்நபி ஆசாத்தை, தயாநிதி மாறன் இருமுறை சந்தித்து பேசியுள்ளார். திமுக–காங்கிரஸ் கூட்டணியில் இருந்த இடதுசாரிகள், மதிமுக போன்ற கட்சிகள் வெளியேறி விட்டதால் அந்த தொகுதிகளில் கணிசமான வற்றை காங்கிரஸ் கட்சிக்கு கூடுதலாக விட்டுத்தர திமுக தரப்பில் முன்வந்ததாக கூறப்படுகிறது. இதனால் காங்கிரஸ், திமுக கூட்டணி தொடரும் என்று புதுடெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! இன்று 57-வது பிறந்த நாள் காணும் தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு கவர்னர் சுர்ஜித் சிங் பர்னாலா சார்பில் அவரது மகன் ஜஸ்ஜித் சிங் பர்னாலா பூக்கூடை அளித்து பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார். . நீண்ட மற்றும் ஆரோக்கியமான வாழ்வுக்கு கவர்னரின் வாழ்த்துக் களை அப்போது அவரிடம் ஜஸ்ஜித் சிங் பர்னாலா தெரிவித்துக் கொண்டார் !!!!!!!!!!!!!!!!!!!!!!!!! பிஜேபி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வந்தால் வயதான விவசாயிகளுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும் என்று எல்.கே.அத்வானி கூறியிருக்கிறார். . ஆந்திர மாநிலம் மதனபள்ளியில் நேற்று நடந்த பேரணி ஒன்றில் உரையாற்றுகையில் அவர் இவ்வாறு கூறினார். வரும் மக்களவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று அரசு அமைந்தால் சிறு விவசாயிகளுக்கு வருவாய் உறுதி திட்டத்தை அமுல்படுத்துவோம் என்று அத்வானி கூறினார். சிறந்த நிர்வாம், சாதாரண மக்களுக்கு பாதுகாப்பு, அனைத்து துறைகளிலும் முன்னேற்றம் என்பதை தேர்தலில் முன்னிறுத்தி தமது கட்சி போட்டியிடும் என்று அவர் கூறினார். முந்தைய ஆட்சியில் செயல்படுத்தப்பட்டு வந்த நெடுஞ்சாலை மற்றும் ஊரக சாலை மேம்பாட்டு திட்டத்தையும், நதிகள் இணைப்பு திட்டத்தையும் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசு கைவிட்டு விட்டதை அவர் கடுமையாக சாடினார். நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இத்திட்டங்களை நிறைவேற்றுவோம். அடிப்படை வசதிக்கான திட்டங்களை மீண்டும் நிறைவேற்றுவதன் மூலம் பொருளாதார வீழ்ச்சியை கட்டுப்படுத்த முடியும் என்றும் அவர் கூறினார். இன்னும் 3 அல்லது 4 மாதங்களில் ஒன்றரை கோடி பேர் வேலை வாய்ப்பை இழக்கும்அபாயம் உள்ளது. இதனை சமாளிக்க மத்தியஅரசு என்ன நடவடிக்கை எடுத்தது? என்று அவர் கேட்டார். நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல் நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட அப்சல் குருவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை மத்திய அரசு நிறைவேற்றாததை அவர் குறை கூறினார். அப்சல் குருவாக இல்லாமல் தாக்குதல் நடத்தியவர்கள் ஆனந்த் சிங்காகவோ, ஆனந்த்மோகனாகவோ இருந்தால் இந்நேரம் மத்திய அரசு தூக்கில் போட்டு இருக்கும் என்றும் அத்வானி கூறினார். ஓட்டு வங்கி அரசியலால் நாட்டின் பாதுகாப்பில் குறைபாடு ஏற்படுவதை அனுமதிக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார் !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! UdL[ûYj úRoRp ùRôϧl Te¸Ó Tt± A§ØLÜPu U.§.Ø.L. Nôo©p úTN IkÕ úTo ùLôiP ÏÝûY ARu ùTôÕf ùNVXô[o ûYúLô ¨VªjÕs[ôo. U.§.Ø.L. AW£Vp BúXôNû]d ÏÝ ùNVXô[o §Úléo Ñ. ÕûWNôª, Bh£Uu\d ÏÝ Eßl©]oLs A. UXoUu]u, úN. ùNYk§VlTu, TôXYôdLm L. úNôØ, NhPjÕû\ ùNVXô[o YZdL±Oo ´. úRYRôv B¡úVôo Cd ÏÝ®p CPm ùTtßs[]o. !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! UdL[ûY úRoRÛdLô] ùNXÜ AùU¬dL A§To úRoRp ùNXûY ®P A§Uô]RôL CÚdÏm G] U§l©PlThÓs[Õ. AùU¬dL A§To úRoR#p úTôh¥«hP JTôUô Es°hP úYhTô[oLs Aû]YÚm ùNnR ùNXÜ 1.8 ©p#Vu PôXWôÏm. CÕ Ck§V U§l©p ÑUôo 8 B«Wm úLô¥ ìTôn BÏm. NÁTj§p SPjRlThP Bn®uT¥ RtúTôÕ SûPùT\ Es[ UdLû[ûY úRoRÛdLô] ùNXÜ ì. 10 B«Wm úLô¥ BL CÚdÏm Guß U§l©PlThÓs[Õ.. C§p ì. 2,500 úLô¥ JhÓdLôL YôdLô[oLÞdÏ AW£VpYô§Ls A°dÏm TQm Gußm Bn®p ùR¬VYkÕs[Õ. AùU¬dLô®u LPkR A§To úRoR#p ùNX®PlThPûR ®P RtúTôÕ SPkR úRoRÛdÏ ùNX®PlThPÕ CÚ UPeLôÏm. Ck§Vô®Ûm YÚm UdL[ûY úRoRÛdLôL ùNX®PlTP Es[ ùRôûL LPkR úRoRûX ®P CÚ UPeLôÏm. LPkR UdL[ûY úRoR#p ì. 4500 úLô¥ ùNX®PlThPÕ. !!!!!!!!!!!!!!!!!!!!!!!! Bk§W RûXSLo ûaRWôTô§p Lôe¡Wv Lh£j RûXYo úNô²Vô Lôk§ TeúLt\ áhPj§p R#j AûUl©]o £Xo LXôhPô®p DÓThP]o. ReLs C]jRYûW RôrjRlThúPôWôL YûLlTÓj§V§p Lôe¡Wv AWÑ Yg£jÕ ®hPRôL Uô§Lô ¬NoúY`u úTôWôhP Nª§ (AÚkR§Vo CP JÕd¸hÓ úTôWôhPd ÏÝ) ×Lôo á±YkRÕ. Ck¨ûX«p, N²d¡ZûU ûaRWôTô§p Lh£l ùTôÕdáhPj§p TeúLtL YkRôo úNô²Vô Lôk§. AlúTôÕ CkR AûUl©]o, Lôe¡Wv Lh£dÏ G§Wô] úLô`eLû[ GÝl© LXôhPô®p DÓThP]o. úTôÄ^ôo EP]¥VôL RûX«hÓ CkR AûUl©]ûW ùY°úVt±]o. CûRVÓjÕ CkR AûUl©u Utù\ôÚ úLôx¥«]o ÁiÓm AeÏ LXôhPô®p DÓThP]o. CR]ôp Lôe¡W^ôÚdÏm CYoLÞdÏm CûPúV YôdÏYôRm HtThÓ JÚYûWùVôÚYo SôtLô#L[ôp Rôd¡d ùLôsÞm ãr¨ûX HtThPÕ. úTôÄ^ôo EP]¥VôL RûX«hÓ ¨ûXûUûV LhÓlTÓj§]o. !!!!!!!!!!!!!!!!!! world !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! வங்கதேச எல்லைக்காவல் படையினரின் கலவரங்களில் கொல்லப்பட்ட இராணுவ அதிகாரிகளின் புதைகுழிகள் மேலும் சில கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்தக் கலவரங்களில் காணாமல் போன 77 அதிகாரிகளைத் தேடும் முயற்சிகளின்போது, தலைநகர் டாக்காவின் காணி ஒன்றுக்குள் ஆழமில்லாமல் இருந்த புதைகுழிகள் மூன்று கண்டுபிடிக்கப்பட்டன . இதில் காணப்பட்ட 10 சடலங்களில் இராணுவ கட்டளை அதிகாரியின் மனைவியின் சடலமும் அடங்கும் என்று பிபிசிக்கு கூறப்பட்டுள்ளது. சடலங்கள் எரிந்த நிலையில் இருந்ததால், அவற்றை அடையாளம் காண்பது சிரமமாக இருந்தது . !!!!!!!!!!!!!!!!!!!!!!!!! சீனாவின் தென்மேற்கு மாநிலமான சிச்சுவானில் திபெத்திய பிக்கு ஒருவர் தீக்குளித்த போது சீன பொலிஸாரால் சுடப்பட்டதாக திபெத்திய ஆதரவுக் குழுக்கள் கூறியுள்ளன. உள்ளூர் தடை உத்தரவுகளையும் மீறி, திபெத்திய புத்தாண்டை கொண்டாட குழுமியிருந்த சுமார் 1000 பிக்குகளில் இவரும் ஒருவர். இந்த பிக்கு தனக்குத்தானே தீமூட்ட முன்னதாக திபெத்திய கொடியை ஏந்தி, சீன எதிர்ப்புக் கோஷத்தை எழுப்பியதாக, சம்பவத்தை நேரில் கண்டவர்கள் கூறினார்கள். அவர் உடனடியாக பொலிஸாரால் அகற்றப்பட்டதாக கூறப்படுகின்ற போதிலும், அவர் உயிரிழந்துவிட்டாரா என்பது தெரியவில்லை. திபெத்தியர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் சிச்சுவானில் ஒருவர் தீக்குளித்தார் என்று மாத்திரம் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! இராக்கில் தற்போது செயற்பட்டுவரும் அமெரிக்கப் படையினர் அடுத்த ஆண்டில் தமது போர்க் கடமைகளை முடிக்கும் போது, இராக்கிய பாதுகாப்புப் படையினர் அந்தக் கடமைகளை கையேற்க தயாராக இருப்பார்கள் என்று இராக்கிய பிரதமர் நூரி அல் மலிக்கி தெரிவித்துள்ளார் . இராக்கின் பாதுகாப்பை இனி இராக்கே பொறுப்பேற்பது என்பதில் இராக் உறுதியாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். இராக்கின் துணை அதிபரும், சுனி இனத்தவருமான தாரிக் அல் ஹஸ்மியும், ஷியா பிரிவுகள் சிலவும் அமெரிக்கப்படைகளின் வெளியேற்றத்தை வரவேற்றுள்ளனர். இராக்குக்கு ஆதரவாகவும், படைகளுக்கு பயிற்சி வழங்குவதற்காகவும் அமெரிக்கப்படையினர் ஐம்பதினாயிரம் பேர் அங்கு தொடர்ந்து தங்கியிருப்பார்கள் என்ற தகவலை ஷியா இன மதகுருவான மொக்தடா அல் சதருக்கு ஆதரவான குழுவினர் கண்டித்துள்ள்னார். !!!!!!!!!!!!!!!!!! Gnhv úSôVô° JÚYo R]Õ WjRjûR JÚ Rô°p T¥VûYjÕ AûR L¥Rj§p ûYjÕ AùU¬dL A§To JTôUôÜdÏ Aàl© A§of£ A°jRôo. AkR L¥RjÕPu ¡±vÕUv YôrjÕ UPp, BWgÑ ¨\ TÜPo, R]Õ ×ûLlTPm B¡VYtû\Ùm úNojÕ Aàl©«ÚkRôo. AkR STûW AûPVô[m LiÓ úTôÄ^ôo AYûW ûLÕ ùNnR]o. AY¬Pm SPj§V ®NôWûQ«p AYo Gj§úVô©Vô SôhûPf úNokR AL§ GuTÕ ùR¬VYkRÕ. CûRVÓjÕ AY¬Pm SPj§V ®NôWûQ«u úTôÕ, Rôu Gnhv úSôVôp LÓûUVôL AY§lThÓ YÚYRôLÜm, R]dÏ ER®P AW£u LY]jûR DodLúY CÕúTôu\f ùNV#p DÓThPRôLÜm YôdÏêXm A°jRôo. JTôUôÜdÏ Aàl©V L¥Rj§p WjRdLû\ T¥V ûYdL R]Õ JÚ ®WûXúV ©ú[Pôp Õi¥jRRôLÜm AkR STo úTôÄ^ôÚdÏ A°jR YôdÏêXj§p ùR¬®jÕs[ôo. CkR L¥Rm JTôUô®Pm LôhPlThPRôLÜm ùYsû[ Uô°ûL A§Lô¬Ls ùR¬®jR]o. JTôUôÜdÏ HtùL]úY ùLôûXªWhPp CÚkÕ YÚ¡\Õ. CR]ôp AYÚdÏ GkR Y¯«Ûm AfÑßjRp YWXôm G] LÚ§ AYÚdÏ LÓûUVô] TôÕLôl× A°dLlThÓs[Õ. CÕúTôu\ ¨ûX«p JTôUôÜdÏ YkR L¥RjÕdÏs CÚkR BWgÑ ¨\ TÜPWôp ùYsû[ Uô°ûL A§Lô¬Ls A§of£ AûPkR]o. CûRVÓjÕ WNôV] ®gOô²Lû[ YWYûZjÕ AkR TÜPûW úNô§dLf ùNnR]o. !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! sports PakistanLahore y; ,lk;ngWk; Pakistan v Sri Lanka ,ilapyhd JLg;ngLj;jhl;lg;Nghl;bapy; Kjypy; JLg;ngLj;jhLk; rpwpyq;fh mzp 24 Xtupy; 2 tpf;Nfl; ,og;gpw;f;F 89 Xl;lq;fSld; MLfpwJ. !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் ஆஸ்திரேலியா முன்னிலை பெற்றுள்ளது. உலக சாம்பியன் ஆஸ்திரேலிய மற்றும் தென்னாப்பிரிக்கா மோதும் முதல் டெஸ்ட் ஜோகன்னஸ் பர்க்கில் நடைபெற்று வருகிறது. . இந்த டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 466 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் அறிமுக வீரர் மார்க்கஸ் நார்த் அபாரமாக ஆடி சதம் அடித்தார். அவர் 117 ரன்களை குவித்தார். அவரது சிறப்பான ஆட்டம் காரணமாக ஆஸ்திரேலிய அணி 466 ரன்களை குவித்தது. ஹாடின் 63 ரன்களை எடுத்தார். பின்னர் தென்னாப்பிரிக்கா அணி ஆடத் தொடங்கியது . ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர்கள் அபாரமாக பந்து வீசியதால் தென்னாப்பிரிக்காவின் முன்னணி ஆட்டக்காரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். ஆட்ட நேர இறுதியில் தென்னாப்பிரிக்கா midj;J விக்கெட் இழப்புக்கு 81.1 over 220ரன்கள் எடுத்துள்ளது. ஆஸ்திரேலிய 246 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது . 2 tJ ,dpq;rpy; jw;nghoJ MbtUk; MTஸ்nuypa mzp 16.3 over y; 1 விக்கெட் இழப்புக்கு 51 Xl;lq;fSld; MLfpwJ. !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! :::::::::::::::::::::::::::::::::::: முக்கிய அறிவிப்பு இறை இரக்கம் வேண்டல். அன்பு உள்ளங்களே! வன்னி பெருநிலப்பரப்பில் போரினால் இறந்த எம் உறவுகளுக்காகவும், அகதிகளாய் உண்ணஉணவின்றி உடுக்க உடையின்றி, இருக்க இடமின்றி குடிக்க நீரின்றி, நோய்க்கு மருந்தின்றித் தவியாய்த் தவிக்கும் எம் தாயக உறவுகளுக்காக, இறைவனை இரந்து வேண்ட ( சகல மதத்தினரும்) புலம்பெயர்ந்து வாழும் தமிழ் உறவுகள்அனைவரையும் அன்பு கலந்த உரிமையுடன் அழைக்கின்றோம். இடம்: Königstraße ,Schlossplatz Stuttgart காலம்: 08-03-2009 ஞாயிறுகாலை 11மணிமுதல் 15மணிவரை நன்றி! ஸ்ருற்காட், கைல்புறோன் ஆன்மிகப் பணியகம் !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! தமிழீழ விடுதலைப் புலிகளின் சிறிய கொமாண்டோ அணிகள் சிறிலங்கா படையினரின் நிலைகளுக்குள் ஊடுருவி தாக்குதலை நடத்தியுள்ளதாக கொழும்பில் இருந்து வெளிவரும் ‘லக்பிம‘ வார ஏடு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ‘லக்பிம‘ வார ஏட்டின் பாதுகாப்பு பத்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது : விடுதலைப் புலிகளின் 15 பேர் கொண்ட அணி, முதலாவது சிங்க றெஜிமென்ட் பற்றலியன் நிலைகொண்டிருந்த பகுதிக்குள் கடந்த வாரம் ஊடுருவிய போது கடுமையான சமர் மூண்டது . இத்தாக்குதலின் போது அதிகாரி ஒருவர் உட்பட 7 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் 7 பேர் காயமடைந்துள்ளனர். இதன் பின்னர், அந்த அணியில் இருந்த கரும்புலி வீரர் ஒருவர் 11 ஆவது கெமுனுவோச் பற்றலியனின் கட்டளை அதிகாரி மேஜர் திசந்த பெர்னாண்டோ பயணம் செய்த ஜீப் ஊர்தி மீது தாக்குதலை நடத்தினார். இத்தாக்குதலின் போது வாகனத்தின் சாரதி கொல்லப்பட்டார் . ஆனால், கட்டளை அதிகாரி அந்த வாகனத்தில் பயணம் செய்யாததால் உயிர் தப்பியுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! முல்லைத்தீவிலிருந்து சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினால் 6 வது தொகுதி நோயாளர்கள் நேற்றிரவு கப்பல் மூலம் திருகோணமலைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். யுத்த சூழ்நிலையில் காயமடைந்தவர்கள் ,நோயாளர்கள் மற்றும் கர்ப்பிணிகள் ,அவர்களது உறவினர்கள் என 252 பேர் இக் கப்பலில் அழைத்து வரப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் சிகிச்சை முடிந்த நிலையில் மேலும் 100 பேர் நேற்று வவுனியாவிலுள்ள நலன்புரி நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதையடுத்து இந்த எண்ணிக்கை 746 ஆக அதிகரித்துள்ளது. மேலும் முல்லைத்தீவிலிருந்து அழைத்து வரப்படும் நோயாளர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு காரணமாக புல்மோட்டை வைத்தியசாலையை உடனடியாக அபிவிருத்தி செய்ய சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! இலங்கையில் மனித உரிமை மீறல்கள் மோசமடைந்து வருகின்றன. அங்கு 16 வீத மக்கள் தொகையைக்கொண்ட தமிழ் மக்களில் இளைஞர்கள் அதிகளவில் கொல்லப்படுவதுடன் காணாமலும் போய் உள்ளனர் என அமெரிக்கா கவலை தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் வெளியுறவுத்துறை திணைக்களம் வெளியிட்டுள்ள 2008 ஆம் ஆண்டுக்கான மனித உரிமை அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: இலங்கையில் மனித உரிமை மீறல்கள் மோசமடைந்து வருகின்றன. சிறிலங்கா அரசுடன் இணைந்து செயற்படும் துணை இரணுவக் குழுவினரும், அரசியல் கட்சிகளாக தம்மை பதிவு செய்து கொண்டுள்ள டக்ளசின் ஈ.பி.டி.பி . மற்றும் முரளிதரனின் ரி.எம்.வி.பி. போன்ற கட்சிகளும் அதிகளவில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டு வருகின்றன. விடுதலைப் புலிகளும் படுகொலைகள் மற்றும் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டு வருகின்றனர். போர் தீவிரமடைந்ததை தொடர்ந்து சிறிலங்கா அரசின் மனித உரிமை மீறல்கள் அதிகரித்துள்ளன. அரசின் இந்த மனித உரிமை மீறல்களினால் அதிகளவில் தமிழ் மக்களே பாதிப்படைந்துள்ளனர். இலங்கையில் 16 வீதமான மக்கள் தொகையைக்கொண்ட தமிழ் மக்களில் இளைஞர்கள் அதிகளவில் கொல்லப்படுவதுடன் காணாமலும் போய் உள்ளனர். அரசுடன் இணைந்து செயற்படும் குழுவினரே நீதிக்குப் புறம்பான படுகொலைகளில் ஈடுபட்டு வருவதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. அரசியல் படுகொலைகள், அரச படையினருடன் இணைந்து செயற்படும் துணை இராணுவக் குழுவினர் சிறார்களை படையில் சேர்ப்பத காணாமல் போதல எழுந்தமானமான கைதுகள தடுத்து வைத்தல தரமற்ற சிறைக்கூடங்கள கைது செய்யப்படுபவர்களை நீதிமன்றத்தில் நிறுத்துவதற்கு மறுப்பு தெரிவித்தல அரசின் ஊழல சிறுபான்மை மக்களுக்கு எதிரான பாகுபாடுகள் என்பன இலங்கையில் அதிகரித்துள்ளன. சிறிலங்கா அரசுடன் இணைந்து செயற்படும் துணை இராணுவக் குழுவினர் பொதுமக்களுக்கு எதிரான ஆயுத தாக்குதல்கள், துன்புறுத்தல்கள், கடத்துதல் , பணயக்கைதிகளாக மக்களை பிடித்தல், கப்பம் வாங்குதல் போன்ற செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த குற்றங்களில் ஈடுபட்ட காவல்துறை, இராணுவம், மற்றும் துணை இராணுவக் குழுவினரை சேர்ந்த எவரும் கடந்த வருடத்தில் தண்டிக்கப்படவில்லை என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! திருகோணமலை பாரிய சுற்றிவளைப்பு தேடுதல் 5 தமிழர்கள் கைது திருகோணமலை காவல்துறையினரும் இராணுவத்தினரும் இணைந்து பாரிய சுற்றிவளைப்பு தேடுதல் 5 தமிழர்கள் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்று முந்தினம் வெள்ளிக்கிழமை அதிகாலை வேளையில் திருகோணமலை சிறுபான்மை தமிழர்கள் வாழ்கின்ற உப்புவெளிப் பிரதேசத்தில் காவல்துறையினரும் இராணுவத்தினரும் இணைந்து பாரிய சுற்றிவளைப்பு தேடுதல் ஒன்றை நடத்தியுள்ளனர். திருமலையில் உள்ள புகையிரத நிலையம், பேரூந்து நிலையம், மற்றும் வீதியால் பயணித்துக் கொண்டிருந்த துவிச்சக்கரவண்டி, மோட்டார் சைக்கிளில் சென்றவர்கள் கடும் சோதனைக்குட்படுத்தப்பட்டதுடன் , வாகனங்களும் சோதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. வெள்ளிக்கிழமை நடைபெற்ற தேடுதலில் 5 தமிழர்கள் கைதுசெய்யப்பட்டு உப்புவெளி காவல்நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டுவருவதாகவும் தெரிவிக்கின்றனர். !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! சிறிலங்காவின் பொருளாதாரம் வேகமாக வீழ்ச்சி கண்டு வரும் நிலையில் 54 ஆயிரம் பேர் வேலை இழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: ரி-ஆர்-ரி’ (T.R.T) தமிழ் ஒலியின் இன்றய (13.01.09) செய்திகள் உலக பொருளாதார நெருக்கடி சிறிலங்காவை கடுமையாக பாதித்து வருகின்றது. சிறிலங்காவில் உள்ள 53 ஏற்றுமதி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன . இதனால் 54 ஆயிரம் பேர் வேலை வாய்ப்புக்களை இழந்துள்ளனர். ஆடை உற்பத்தி, கட்டுமானத்துறை , வெப்ப ஆடை உற்பத்தி, சீமெந்து உற்பத்தி, இரத்தினக்கல் ஏற்றுமதி, நிதி முகாமைத்துவ நிறுவனங்களே அதிகளவில் மூடப்பட்டுள்ளன. எதிர்வரும் மாதங்களில் மேலும் பலர் வேலை இழப்புக்களை சந்திக்கலாம் என வர்த்தக சங்கத்தின் தலைவர் வசந்த சமரசிங்க எச்சரிக்கை விடுத்துள்ளார். கட்டுநாயக்க, பியகம, கோகல பகுதிகளில் உள்ள சுதந்திர வர்த்தக வலயத்தில் உள்ள பல நிறுவனங்கள் தமது பணியாளர்களுக்கு ஊதியங்களை வழங்குவதற்கு பாரிய நெருக்கடியை எதிர்நோக்கி உள்ளன. பணியாளர்களுக்கான மேலதிக கொடுப்பனவுகள், பயண கொடுப்பனவுகள், மேலதிக நேர வேலை போன்றவற்றை இந்த நிறுவனங்கள் நிறுத்தியுள்ளன. சில நிறுவனங்கள் தமது பணியாளர்களை விடுமுறையில் அனுப்பியுள்ளன. கம்பகா மாவட்டத்தில் உள்ள சினோரெக்ஸ் ஆடை உற்பத்தி நிறுவனம் மூடப்பட்டதனால் 3 ஆயிரம் பேர் வேலை இழந்துள்ளனர். குருநாகல் மாவட்டத்தில் உள்ள கிறிஸ்ற் லங்கா மூடப்பட்டதனால் 2 ஆயிரம் பேர் வேலை இழந்துள்ளனர் என அவர் மேலும் தெரிவித்துள்ளார !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! தென்பகுதியையும் கிழக்கு மாகாணத்தையும் பாதுகாப்பதற்கு போதியளவு சிறிலங்கா படையினர் இல்லாததால் அவற்றின் பாதுகாப்பினை ஊர்காவல் படையினரிடம் ஒப்படைக்க அந்நாட்டு அரசாங்கம் திட்டமிடப்பட்டுள்ளது . இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது: சிறிலங்காவின் படை பலத்தில் பெருமளவானவை வடபகுதியில் குவிக்கப்பட்டுள்ள நிலையில் ஏனைய பகுதிகளின் பாதுகாப்புக்களை ஊர்காவல் படையினரிடம் ஒப்படைக்க திட்டமிடப்பட்டுள்ளது. மணலாறில் இருந்து ஜனகபுர பகுதி வரையிலுமான வீதிகளின் பாதுகாப்பு ஊர்காவல் படையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதேபோன்று, அம்பாறை மற்றும் பொலநறுவை பகுதிகளிலும் 500 ஊர்காவல் படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர். தமது கிராமங்களுக்கு வெளியில் நிறுத்தப்படும் ஊர்காவல் படையினருக்கு மேலதிக கொடுப்பனவுகளும் இலவச உணவும் வழங்குவதற்கு அரசு தீர்மானித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. !!!!!!!!!!!!!!!!!! போரினால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்து வவுனியா பூந்தோட்டம் நலன்புரி நிலையத்தில் தங்கவைக்கப்பட்டுள்ள நிலையில் ஆறு மாத காலத்திற்குள் 3 தடவைகள் தீப்பிடித்து முற்றாக அழிவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்று சனிக்கிழமை காலை 10.30 மணியளவில் பூந்தோட்டம் நலன்புரி நிலையத்தில் பாரிய தீ விபத்து ஏற்பட்டது. இதில் முதலாவது யுனிட்டில் உள்ள 8 நிலைகள் முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளது. இதனால் 48 குடும்பங்களைச் சேர்ந்த 145 பேர் பாதிக்கப்பட்டு இருப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். பாதிக்கப்பட்டவர்களின் உடமைகள் அனைத்தும் எரிந்து சாம்பலாகியுள்ளதாகவும், அவர்களை வேறு இடத்தில் தற்காலியமாக தங்கவைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார் . தீ ஏனைய இடங்களுக்கு பரவாமல் இருப்பதற்கு பலரின் முயற்சியினால் அணைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த விபத்துக்கான காணரம் என்ன என்பது குறித்து இதுவரையில் தகவல்கள் வெளியாகவில்லை . இது தொடர்பாக வவுனியா காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுவருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது . !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! தலைமைப் பொறுப்பிலிருந்து ரணில் விக்ரமசிங்கவை நீக்க உள்ளதாகவும், கட்சியிலிருந்து பிரிந்த சென்ற ஜனநாயகக் குழு உறுப்பினர்களையும் மீண்டும் கட்சியில் இணைந்து கொள்ளுமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர் ஒருவர் கோரியுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சி தலைமைத்துவத்தில் விரைவில் மாற்றம் ஏற்படுத்தப்படும் என கட்சி வட்டாரத் தகவல்கள் சுட்டிக்காட்டுகின்றன. ரணில் விக்ரமசிங்க தலைமைப் பதவியிலிருந்து நீக்கப்பட்டால் மட்டுமே கட்சியை மீட்டெடுக்க முடியும் என அவர் தெரிவித்துள்ளாh. !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! குற்றத் தடுப்புப் பிரிவினால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள சுடர்ஒளி பத்திரிகையின் ஆசிரியர் எஸ்.வித்தியாதரனை விடுதலை செய்ய வெளிநாட்டு இராஜதந்திரிகளின் உதவியைப் பெற்றுக்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமது கணவரை நேற்று பார்வையிட்டதாகவும், அவர் துன்புறுத்தல்களுக்கு உட்பட்டிருக்கவில்லை எனவும் வித்தியாதரனின் மனைவி ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார் . எவ்வாறெனினும், கைது செய்யப்பட்ட சந்தர்ப்பத்தின் போது வித்தியாதரனுக்கு சில காயங்கள் ஏற்பட்டதாகவும், அதற்காக நேற்றைய தினம் சிகிச்சைகள் அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது . வித்தியாதரனை விடுதலை செய்வது குறித்து சில முக்கிய வெளிநாட்டு இராஜதந்திரிகளிடம் ஏற்கனவே பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளதாக ஊடக நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, அண்மையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் வான் படையினரால் கொழும்பில் மேற்கொள்ளப்பட்ட வான் தாக்குதல்கள் தொடர்பில் வித்தியாதரனிடம் விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் ரஞ்சித் குணசேகர தெரிவித்துள்ளார். வித்தியாதரன் குற்றமற்றவர் என நிரூபிக்கப்பட்டால் வெகுவிரைவில் அவரை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என ஊடக அமைச்சர் அனுர பிரியதர்சன யாபா குறிப்பிட்டுள்ளார். பாதுகாப்பு தொடர்பான பிரச்சினை என்பதால் ஊடக அமைச்சினால் இதில் அதிகளவு தலையீடு செய்ய முடியாதெனவும் அவர் தெரிவித்துள்ளார். !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! வன்னியில் இடம்பெற்று வரும் இன அழிவை தடுத்து நிறுத்த இந்திய மத்திய அரசு விரைந்து நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென அமெரிக்கா வாழ் இந்தியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழ்ச் சிலியன்கள் எதிர்நோக்கி வரும் பாரிய இடர்பாடுகளுக்கு இந்திய மத்திய அரசு விரைவானதும், பொருத்தமானதுமான தீர்வுத் திட்டமொன்றை முன்வைக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது . இலங்கை நிலவரம் குறித்து இந்திய மத்திய அரசிற்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் புலம் பெயர் இந்தியர்களிடம் இணையமூடாக கையொப்பங்கள் கோரப்பட்டுள்ளன. மனிதப் பேரவலத்தை தடுத்து நிறுத்த மத்திய அரச நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தும் வகையில் குறித்த மகஜர் அமைந்துள்ளதாகவும், அமெரிக்காவிற்கான இந்திய உயர்ஸ்தானிகர் நிரூபமா சென்னிடம் இந்த மகஜர் கையளிக்கப்பட உள்ளதாகவும் தெரியவருகிறது. இலங்கையில் உடனடியாக யுத்த நிறுத்தம் அமுல்படுத்தப்பட வேண்டுமென கோரி நூற்றுக்கணக்கான அமெரிக்கா வாழ் இந்தியர்கள் மகஜரில் கையொப்பமிட்டுள்ளனர். யுத்த வலயத்தில் சிக்கியுள்ள சிவிலியன்களுக்கு தேவையான உணவு மற்றும் மருந்துப் பொருட்கள் தொடர்ச்சியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அந்த மகஜரில் மேலும் கோரப்பட்டுள்ளது . !!!!!!!!!!!!!!!!! ஒரு கிலோ 400 கிராம் ஹெரோயின் போதை வஸ்தை கடத்தி வந்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட பாகிஸ்தான் பிரஜைக்கு நீர்கொழும்பு மேல் நீதிமன்றம் மரணதண்டனை விதித்ததுள்ளது. அப்துல் ஹாலி என்ற இந்த நபர் 2001 நவம்பர் 11 ஆம் திகதி விமானம் மூலம் இலங்கைக்கு வந்த போது அவரது பயணப்பொதியை சோதனையிட்ட சுங்க அதிகாரிகள் அதனுள் போதை வஸ்து மறைத்து வைக்கப்பட்டிருப்பதைக்கண்டு பிடித்தனர். இதனையடுத்து இவர் போதைவஸ்து தடுப்புப் பிரிவு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார். இவருக்கு எதிராக நீர்கொழும்பு மேல் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்ற போது இவரிடம் இருந்து பெறப்பட்ட போதைவஸ்தில் 396 கிராம் உண்மையான ஹெரோயின் என்பதை இரசாயனப் பகுப்பாய்வு பரிசோதனை மூலம் தெரிய வந்ததாக பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேல் நீதிமன்ற நீதிபதி திருமதி தென்னக்கோன் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணை எதிரியில்லாமல் நடைபெற்றது. எதிரியைக் கைது செய்யுமாறும் நீதிபதி பிடியானை பிறப்பித்தார !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! பிரான்சில் நேற்று சனிக்கிழமை( 28.02.2009 ) மாபெரும் ஆர்ப்பாட்டப்பேரணி நடைபெற்றிருந்தது. இப்பேரணி பிரான்சின் முக்கிய நகரங்களில் ஒன்றான Bastille பகுதியிலிருந்து ஆரம்பமாகி குடியரசு சதுக்கப்பகுதி வரை ஊர்வலமாக முன்னெடுக்கப்பட்டிருந்தது இப்பேரணியில் சுமார் பத்தாயிரத்திற்கும் அதிகமான மக்கள் கலந்துகொண்டிருந்தனர். கடந்த பெப்ரவரி 4 ஆம் திகதியன்று கறுப்புதினமாகப் பிரெஞ்சுவாழ்தமிழர்களால் முன்னெடுக்கப்பட்ட பேரணிக்குப்பின்னர் இன்றையதினம் மீண்டும் தமிழர்கள் சிறியோர் முதியோர் என்ற வேறுபாடின்றி மிகப்பெரியளவில் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளமையைக் காணமுடிந்தது இப்பேரணி நகர்வின்போது கலந்துகொண்டிருந்த மக்கள் உலக அரசுகளே விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கு விடுதலைப் புலிகளே எமது ஏகப்பிரதிநிதிகள் அவர்கள் மீதான தாக்குதலை நிறுத்துவதனூடாகவே தமிழினப் படுகொலையை நிறுத்த முடியும் என்றவாறான கோசங்களை எழுப்பித்தமது உணர்வுகளை வெளிப்படுத்தியிருந்தனர் !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! india !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! பாகிஸ்தான் ஆதரவு இஸ்லாமிய பயங்கரவாதத்தை ஒழிக்க தைரியமான இலங்கைத் தமிழர்களின் உதவியை பெறுவது குறித்து மத்திய அரசு பரிசீலிக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ள சிவசேனா கட்சி, விடுதலைப்புலிகள் இலங்கை அரசுக்கு எதிராகவே போரிடுகின்றனர். இந்திய அரசுக்கு எதிராக அல்லவெனவும் சுட்டிக்காட்டியுள்ளது. சிவசேனா கட்சியின் பத்திரிகையான “சாம்னா‘ வில் இது தொடர்பாக எழுதப்பட்டுள்ள தலையங்கத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது;இந்தியாவை சுற்றி பல்வேறு தரப்பிலிருந்து ஆபத்து உருவாகிக்கொண்டிருக்கின்றது . அதனை தடுக்க மத்திய அரசு எதனையாவது செய்யவேண்டியது அவசியம். இந்தியாவின் தென்பகுதியில் விடுதலைப்புலிகள் தாக்குதல் நடத்தலாமென இலங்கை இராணுவத்தளபதி சரத் பொன்சேகா கூறியுள்ளார். இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும் இராணுவத்துக்குமிடையே பல ஆண்டுகளாக சண்டை நடந்துகொண்டு வருகின்றது. புலிகளை பெருமளவு வெற்றி கொண்டு விட்டதாக இலங்கை இராணுவத்தினர் அறிவித்தாலும் கொழும்பில் புலிகளின் விமானப்படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர் . இலங்கைத்தமிழர் பிரச்சினை அந்நாட்டின் உள்நாட்டுப்பிரச்சினை. இலங்கைத்தமிழர் விடயத்தில் நாம் அனுதாபம் காட்டினாலும் இந்தப் பிரச்சினையில் எச்சரிக்கையான அணுகுமுறையை பின்பற்றவேண்டியது அவசியம் . காஷ்மீரில் பிரிவினைவாதிகளை எதிர்க்கும் நாம் புலிகளை மட்டும் ஆதரிக்கமுடியாது. புலிகளுடன் போரிட இந்திய இராணுவத்தை அனுப்பியதால்தான் ராஜீவ்காந்தி உயிரிழக்க நேரிட்டது. தற்போதைய அரசும் அதேபோன்ற தவறைசெய்யக்கூடாது. இலங்கை அரசு அங்குள்ள தமிழ்மக்களை அழிக்க நினைக்கிறது. இது கண்டிக்கத்தக்கது. இந்தியாவிலுள்ள முஸ்லிம்களின் நலனில் பாகிஸ்தான் அரசியல்வாதிகள் அக்கறை காட்டும் போது மற்றைய நாடுகளில் வசிக்கும் இந்துக்கள் நலனில் நாம் ஏன் அக்கறை காட்டக்கூடாது? விடுதலைப்புலிகள் இலங்கை அரசுக்கு எதிராகக்தான் போராடி வருகின்றார்கள். இந்திய அரசுக்கு எதிராக அவர்கள் போராடவில்லை.இலங்கைத் தமிழர்கள் அந்நாட்டு அரசுக்கு எதிராகவே போரிடுகின்றனர். இந்தியாவுக்கு எதிராக அவர்கள் போராட நினைத்தால் 100 கோடி இந்தியர்களின் ஆதரவைப் அனுதாபத்தை இழந்துவிடுவார்கள். இந்திய பாராளுமன்றம் மீது தாக்குதல் நடத்தப்பட்ட பின்னரும் எமது நாட்டின் முதல் எதிரியான பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்த இந்திய அரசு தயாரில்லை. அதேபோலத்தான் மத்தியிலுள்ள தற்போதைய அரசு இலங்கை அரசுக்கு எதிராக நடவடிக்கை எதுவும் எடுக்காது . இந்தியாவில் பாகிஸ்தானின் ஆதரவுபெற்ற இஸ்லாமிய பயங்கரவாதத்தை ஒடுக்க தைரியமான இலங்கைத் தமிழரின் உதவியை பெறுவது குறித்து மத்திய அரசு பரிசீலிக்கவேண்டும். அந்நியநாட்டு பயங்கரவாதிகள், நேபாள மாவோயிஸ்டுகள்,சீன அரசு, வங்கதேச கலகம், இலங்கை நிலைவரம் என பலதரப்பிலிருந்தும் இந்திய நாட்டுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்தை தடுக்க மத்திய அரசு உடனடியாக செயலில் இறங்கவேண்டும். !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! தூத்துக்குடிக்கு வந்த மத்திய அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜிக்கு எதிர்ப்புத் தெரிவித்து கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்தியதற்காக கைது செய்யப்பட்ட ம.தி.மு .க. பொதுச் செயலர் வைகோ மீது குற்றவியல் தண்டனைச் சட்டத்தின் 4 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடியில் அமை‌க்க‌ப்பட உ‌ள்ள புதிய அனல்மின் நிலையத்துக்கு நேற்று அடி‌க்க‌ல் நா‌ட்டுவதற்காக வ‌ந்த மத்திய அயலுறவுத்துறை அமை‌ச்ச‌ர் பிரணாப் முகர்ஜிக்கு எதிராக கரு‌ப்பு‌‌க்கொடி கா‌ட்ட முய‌ன்ற ம.‌தி.மு .க. பொது‌ச் செயல‌ர் வைகோ உ‌ட்பட 197 பே‌‌ரை காவல்துறையினர் கைது செ‌ய்தன‌ர் . இந்நிலையில், அவர்கள் அனைவரின் மீதும் சட்ட விரோதமாக ஒன்றாகக் கூடியது, சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் சூழலை உருவாக்கியது, சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டது , உருவப்படத்தை எரித்தது என மொத்தம் 4 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது . முன்னதாக அனைவரையும் 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்கும்படி நீதிபதி உத்தரவிட்டுள்ளது , வைகோ உள்ளிட்ட அனைவரும் இன்று அதிகாலை பாளையங்கோட்டை சிறைச்சாலையில் அடைக்கப்பட்டனர் . வைகோ உள்ளிட்ட ம.தி.மு.க. தொண்டர்கள் கைது செய்யப்பட்டுள்ளதற்கு இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் கண்டனம் தெரிவித்துள்ளார். !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! முதுகுவலி காரணமாக அறுவை சிகிச்சை செய்து கொண்ட முதல்வர் கருணாநிதி, இன்று மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார். வீடு திரும்பும் வழியில் வேனில் இருந்தவாறு புதுப்பிக்கப்பட்ட அன்பகத்தை முதல்வர் திறந்து வைத்தார். முதுகுப்பகுதியில் ஏற்பட்ட தசைப்பிடிப்பு காரணமாக கடந்த ஜனவர் 26ஆம் தேதி முதல்வர் கருணாநிதி போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்தததைத் தொடர்ந்து கடந்த 11ஆம் தேதி அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது. இதன் பின்னர் ராமச்சந்திரா மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த முதல்வர் உடல்நலம் தேறியதைத் தொடர்ந்து இன்று காலை 9 மணியளவில் வேன் மூலம் வீடு திரும்பினார். அவரது மனைவி தயாளு அம்மாள், ராஜாத்தி அம்மாள், மு.க.அழகிரி, அமிர்தம், மத்திய அமைச்சர் ஆ.ராசா, அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி, துரைமுருகன், மருத்துவர் மார்த்தாண்டம் ஆகியோர் வேனில் முதல்வருடன் வந்தனர். வீடு திரும்பும் வழியில் வேனில் இருந்தவாறு தேனாம்பேட்டையில் புதுப்பிக்கப்பட்ட அன்பகம் கட்டிடத்தை முதல் அமைச்சர் திறந்து வைத்தது குறிப்பிடத்தக்கது !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! வரும் மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு கூடுதல் தொகுதி களை விட்டுத்தர திமுக முன்வந்திருப்பதாக கூறப்படுகிறது. திமுக கூட்டணியிலிருந்து வெளி யேற்றப்பட்ட பாமகவை மீண்டும் தங்கள் அணிக்கு கொண்டு வரும் முயற்சியில் காங்கிரஸ் கட்சி தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகவும் தெரிய வருகிறது. . மக்களவை தேர்தலுக்கான அறிவிப்பு எந்த நேரத்திலும் வெளியாகலாம் என்ற பரபரப்பான சூழ்நிலை நிலவுகிறது. இதனால் தொகுதி பங்கீடு செய்வது குறித்து கட்சிகள் தீவிர முயற்சிகளில் ஈடுபட்டுள்ளன. அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா, திமுக கூட்டணி யிலிருந்து காங்கிரஸ் கட்சி வெளியேற வேண்டும் என்று பகிரங்கமாக அழைப்பு விடுத்தார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது . அதிமுக கூட்டணியில் அண்மையில் இடம் பெற்ற மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளை இது அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அதேபோல திமுகவிலும், காங்கிரஸ் கட்சியிலும் சலசலப்பை ஏற்படுத்தியது. ஆளும் கட்சியாக திமுக இருப்பதால் மக்களிடம் செல்வாக்கு குறைந் துள்ளது என்றும், இலங்கை தமிழர் பிரச்சனை தொடர்பான போராட்டங் களின் போது வன்முறையை தடுக்க திமுக அரசு தவறிவிட்டது என்றும், காங்கிரஸ் கட்சியின் ஒரு பிரிவினர் கருதினார்கள். இதனால் அவர்கள் திமுக கூட்டணியில் இருந்த விலகி அதிமுகவுடன் சேர வேண்டும் என்று விரும்பினார்கள். இத்தகைய எண்ணம் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சிலரிடம் மட்டுமின்றி அகில இந்திய காங்கிரஸ் கட்சியில் உள்ள சில முக்கிய பிரமுகர்களிடமும் ஏற்பட்டது. மற்றொரு பிரிவினர் வளர்ந்து வரும் கட்சியான தேமுதிகவுடன் கூட்டணி வைத்து கொள்ள வேண்டும் என்று கூறியதாக தெரிகிறது . ஆனால் திமுக கூட்டணியை விட்டு வெளியே வந்தால்தான் காங்கிரசுடன் தாங்கள் தொகுதி உடன்பாடு வைத்து கொள்ள முடியும் என்று தேமுதிக தரப்பில் கூறிவிட்டதாக தெரிகிறது . இது திமுக தலைமையை அதிர்ச்சி அடைய செய்தது. திமுக நிலைமையை சரிசெய்ய தீவிர முயற்சி களை மேற்கொண்டு வருகிறது. இதன் அடிப்படையில், மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு மற்றும் தயாநிதி மாறன் ஆகியோர் டெல்லியில் காங்கிரஸ் முக்கிய பிரமுகர்களை சந்தித்து காங்கிரஸ், திமுக கூட்டணி தொடரவேண்டும் என்று வலியுறுத்தியதாக தெரிகிறது. தமிழ்நாடு பொறுப்பு வகிக்கும் அகில இந்திய காங்கிரஸ் கட்சி பொதுச் செயலாளர் குலாம்நபி ஆசாத்தை, தயாநிதி மாறன் இருமுறை சந்தித்து பேசியுள்ளார். திமுக–காங்கிரஸ் கூட்டணியில் இருந்த இடதுசாரிகள், மதிமுக போன்ற கட்சிகள் வெளியேறி விட்டதால் அந்த தொகுதிகளில் கணிசமான வற்றை காங்கிரஸ் கட்சிக்கு கூடுதலாக விட்டுத்தர திமுக தரப்பில் முன்வந்ததாக கூறப்படுகிறது. இதனால் காங்கிரஸ், திமுக கூட்டணி தொடரும் என்று புதுடெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! இன்று 57-வது பிறந்த நாள் காணும் தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு கவர்னர் சுர்ஜித் சிங் பர்னாலா சார்பில் அவரது மகன் ஜஸ்ஜித் சிங் பர்னாலா பூக்கூடை அளித்து பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார். . நீண்ட மற்றும் ஆரோக்கியமான வாழ்வுக்கு கவர்னரின் வாழ்த்துக் களை அப்போது அவரிடம் ஜஸ்ஜித் சிங் பர்னாலா தெரிவித்துக் கொண்டார் !!!!!!!!!!!!!!!!!!!!!!!!! பிஜேபி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வந்தால் வயதான விவசாயிகளுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும் என்று எல்.கே.அத்வானி கூறியிருக்கிறார். . ஆந்திர மாநிலம் மதனபள்ளியில் நேற்று நடந்த பேரணி ஒன்றில் உரையாற்றுகையில் அவர் இவ்வாறு கூறினார். வரும் மக்களவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று அரசு அமைந்தால் சிறு விவசாயிகளுக்கு வருவாய் உறுதி திட்டத்தை அமுல்படுத்துவோம் என்று அத்வானி கூறினார். சிறந்த நிர்வாம், சாதாரண மக்களுக்கு பாதுகாப்பு, அனைத்து துறைகளிலும் முன்னேற்றம் என்பதை தேர்தலில் முன்னிறுத்தி தமது கட்சி போட்டியிடும் என்று அவர் கூறினார். முந்தைய ஆட்சியில் செயல்படுத்தப்பட்டு வந்த நெடுஞ்சாலை மற்றும் ஊரக சாலை மேம்பாட்டு திட்டத்தையும், நதிகள் இணைப்பு திட்டத்தையும் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசு கைவிட்டு விட்டதை அவர் கடுமையாக சாடினார். நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இத்திட்டங்களை நிறைவேற்றுவோம். அடிப்படை வசதிக்கான திட்டங்களை மீண்டும் நிறைவேற்றுவதன் மூலம் பொருளாதார வீழ்ச்சியை கட்டுப்படுத்த முடியும் என்றும் அவர் கூறினார். இன்னும் 3 அல்லது 4 மாதங்களில் ஒன்றரை கோடி பேர் வேலை வாய்ப்பை இழக்கும்அபாயம் உள்ளது. இதனை சமாளிக்க மத்தியஅரசு என்ன நடவடிக்கை எடுத்தது? என்று அவர் கேட்டார். நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல் நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட அப்சல் குருவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை மத்திய அரசு நிறைவேற்றாததை அவர் குறை கூறினார். அப்சல் குருவாக இல்லாமல் தாக்குதல் நடத்தியவர்கள் ஆனந்த் சிங்காகவோ, ஆனந்த்மோகனாகவோ இருந்தால் இந்நேரம் மத்திய அரசு தூக்கில் போட்டு இருக்கும் என்றும் அத்வானி கூறினார். ஓட்டு வங்கி அரசியலால் நாட்டின் பாதுகாப்பில் குறைபாடு ஏற்படுவதை அனுமதிக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார் !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! UdL[ûYj úRoRp ùRôϧl Te¸Ó Tt± A§ØLÜPu U.§.Ø.L. Nôo©p úTN IkÕ úTo ùLôiP ÏÝûY ARu ùTôÕf ùNVXô[o ûYúLô ¨VªjÕs[ôo. U.§.Ø.L. AW£Vp BúXôNû]d ÏÝ ùNVXô[o §Úléo Ñ. ÕûWNôª, Bh£Uu\d ÏÝ Eßl©]oLs A. UXoUu]u, úN. ùNYk§VlTu, TôXYôdLm L. úNôØ, NhPjÕû\ ùNVXô[o YZdL±Oo ´. úRYRôv B¡úVôo Cd ÏÝ®p CPm ùTtßs[]o. !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! UdL[ûY úRoRÛdLô] ùNXÜ AùU¬dL A§To úRoRp ùNXûY ®P A§Uô]RôL CÚdÏm G] U§l©PlThÓs[Õ. AùU¬dL A§To úRoR#p úTôh¥«hP JTôUô Es°hP úYhTô[oLs Aû]YÚm ùNnR ùNXÜ 1.8 ©p#Vu PôXWôÏm. CÕ Ck§V U§l©p ÑUôo 8 B«Wm úLô¥ ìTôn BÏm. NÁTj§p SPjRlThP Bn®uT¥ RtúTôÕ SûPùT\ Es[ UdLû[ûY úRoRÛdLô] ùNXÜ ì. 10 B«Wm úLô¥ BL CÚdÏm Guß U§l©PlThÓs[Õ.. C§p ì. 2,500 úLô¥ JhÓdLôL YôdLô[oLÞdÏ AW£VpYô§Ls A°dÏm TQm Gußm Bn®p ùR¬VYkÕs[Õ. AùU¬dLô®u LPkR A§To úRoR#p ùNX®PlThPûR ®P RtúTôÕ SPkR úRoRÛdÏ ùNX®PlThPÕ CÚ UPeLôÏm. Ck§Vô®Ûm YÚm UdL[ûY úRoRÛdLôL ùNX®PlTP Es[ ùRôûL LPkR úRoRûX ®P CÚ UPeLôÏm. LPkR UdL[ûY úRoR#p ì. 4500 úLô¥ ùNX®PlThPÕ. !!!!!!!!!!!!!!!!!!!!!!!! Bk§W RûXSLo ûaRWôTô§p Lôe¡Wv Lh£j RûXYo úNô²Vô Lôk§ TeúLt\ áhPj§p R#j AûUl©]o £Xo LXôhPô®p DÓThP]o. ReLs C]jRYûW RôrjRlThúPôWôL YûLlTÓj§V§p Lôe¡Wv AWÑ Yg£jÕ ®hPRôL Uô§Lô ¬NoúY`u úTôWôhP Nª§ (AÚkR§Vo CP JÕd¸hÓ úTôWôhPd ÏÝ) ×Lôo á±YkRÕ. Ck¨ûX«p, N²d¡ZûU ûaRWôTô§p Lh£l ùTôÕdáhPj§p TeúLtL YkRôo úNô²Vô Lôk§. AlúTôÕ CkR AûUl©]o, Lôe¡Wv Lh£dÏ G§Wô] úLô`eLû[ GÝl© LXôhPô®p DÓThP]o. úTôÄ^ôo EP]¥VôL RûX«hÓ CkR AûUl©]ûW ùY°úVt±]o. CûRVÓjÕ CkR AûUl©u Utù\ôÚ úLôx¥«]o ÁiÓm AeÏ LXôhPô®p DÓThP]o. CR]ôp Lôe¡W^ôÚdÏm CYoLÞdÏm CûPúV YôdÏYôRm HtThÓ JÚYûWùVôÚYo SôtLô#L[ôp Rôd¡d ùLôsÞm ãr¨ûX HtThPÕ. úTôÄ^ôo EP]¥VôL RûX«hÓ ¨ûXûUûV LhÓlTÓj§]o. !!!!!!!!!!!!!!!!!! world !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! வங்கதேச எல்லைக்காவல் படையினரின் கலவரங்களில் கொல்லப்பட்ட இராணுவ அதிகாரிகளின் புதைகுழிகள் மேலும் சில கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்தக் கலவரங்களில் காணாமல் போன 77 அதிகாரிகளைத் தேடும் முயற்சிகளின்போது, தலைநகர் டாக்காவின் காணி ஒன்றுக்குள் ஆழமில்லாமல் இருந்த புதைகுழிகள் மூன்று கண்டுபிடிக்கப்பட்டன . இதில் காணப்பட்ட 10 சடலங்களில் இராணுவ கட்டளை அதிகாரியின் மனைவியின் சடலமும் அடங்கும் என்று பிபிசிக்கு கூறப்பட்டுள்ளது. சடலங்கள் எரிந்த நிலையில் இருந்ததால், அவற்றை அடையாளம் காண்பது சிரமமாக இருந்தது . !!!!!!!!!!!!!!!!!!!!!!!!! சீனாவின் தென்மேற்கு மாநிலமான சிச்சுவானில் திபெத்திய பிக்கு ஒருவர் தீக்குளித்த போது சீன பொலிஸாரால் சுடப்பட்டதாக திபெத்திய ஆதரவுக் குழுக்கள் கூறியுள்ளன. உள்ளூர் தடை உத்தரவுகளையும் மீறி, திபெத்திய புத்தாண்டை கொண்டாட குழுமியிருந்த சுமார் 1000 பிக்குகளில் இவரும் ஒருவர். இந்த பிக்கு தனக்குத்தானே தீமூட்ட முன்னதாக திபெத்திய கொடியை ஏந்தி, சீன எதிர்ப்புக் கோஷத்தை எழுப்பியதாக, சம்பவத்தை நேரில் கண்டவர்கள் கூறினார்கள். அவர் உடனடியாக பொலிஸாரால் அகற்றப்பட்டதாக கூறப்படுகின்ற போதிலும், அவர் உயிரிழந்துவிட்டாரா என்பது தெரியவில்லை. திபெத்தியர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் சிச்சுவானில் ஒருவர் தீக்குளித்தார் என்று மாத்திரம் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! இராக்கில் தற்போது செயற்பட்டுவரும் அமெரிக்கப் படையினர் அடுத்த ஆண்டில் தமது போர்க் கடமைகளை முடிக்கும் போது, இராக்கிய பாதுகாப்புப் படையினர் அந்தக் கடமைகளை கையேற்க தயாராக இருப்பார்கள் என்று இராக்கிய பிரதமர் நூரி அல் மலிக்கி தெரிவித்துள்ளார் . இராக்கின் பாதுகாப்பை இனி இராக்கே பொறுப்பேற்பது என்பதில் இராக் உறுதியாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். இராக்கின் துணை அதிபரும், சுனி இனத்தவருமான தாரிக் அல் ஹஸ்மியும், ஷியா பிரிவுகள் சிலவும் அமெரிக்கப்படைகளின் வெளியேற்றத்தை வரவேற்றுள்ளனர். இராக்குக்கு ஆதரவாகவும், படைகளுக்கு பயிற்சி வழங்குவதற்காகவும் அமெரிக்கப்படையினர் ஐம்பதினாயிரம் பேர் அங்கு தொடர்ந்து தங்கியிருப்பார்கள் என்ற தகவலை ஷியா இன மதகுருவான மொக்தடா அல் சதருக்கு ஆதரவான குழுவினர் கண்டித்துள்ள்னார். !!!!!!!!!!!!!!!!!! Gnhv úSôVô° JÚYo R]Õ WjRjûR JÚ Rô°p T¥VûYjÕ AûR L¥Rj§p ûYjÕ AùU¬dL A§To JTôUôÜdÏ Aàl© A§of£ A°jRôo. AkR L¥RjÕPu ¡±vÕUv YôrjÕ UPp, BWgÑ ¨\ TÜPo, R]Õ ×ûLlTPm B¡VYtû\Ùm úNojÕ Aàl©«ÚkRôo. AkR STûW AûPVô[m LiÓ úTôÄ^ôo AYûW ûLÕ ùNnR]o. AY¬Pm SPj§V ®NôWûQ«p AYo Gj§úVô©Vô SôhûPf úNokR AL§ GuTÕ ùR¬VYkRÕ. CûRVÓjÕ AY¬Pm SPj§V ®NôWûQ«u úTôÕ, Rôu Gnhv úSôVôp LÓûUVôL AY§lThÓ YÚYRôLÜm, R]dÏ ER®P AW£u LY]jûR DodLúY CÕúTôu\f ùNV#p DÓThPRôLÜm YôdÏêXm A°jRôo. JTôUôÜdÏ Aàl©V L¥Rj§p WjRdLû\ T¥V ûYdL R]Õ JÚ ®WûXúV ©ú[Pôp Õi¥jRRôLÜm AkR STo úTôÄ^ôÚdÏ A°jR YôdÏêXj§p ùR¬®jÕs[ôo. CkR L¥Rm JTôUô®Pm LôhPlThPRôLÜm ùYsû[ Uô°ûL A§Lô¬Ls ùR¬®jR]o. JTôUôÜdÏ HtùL]úY ùLôûXªWhPp CÚkÕ YÚ¡\Õ. CR]ôp AYÚdÏ GkR Y¯«Ûm AfÑßjRp YWXôm G] LÚ§ AYÚdÏ LÓûUVô] TôÕLôl× A°dLlThÓs[Õ. CÕúTôu\ ¨ûX«p JTôUôÜdÏ YkR L¥RjÕdÏs CÚkR BWgÑ ¨\ TÜPWôp ùYsû[ Uô°ûL A§Lô¬Ls A§of£ AûPkR]o. CûRVÓjÕ WNôV] ®gOô²Lû[ YWYûZjÕ AkR TÜPûW úNô§dLf ùNnR]o. !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! sports PakistanLahore y; ,lk;ngWk; Pakistan v Sri Lanka ,ilapyhd JLg;ngLj;jhl;lg;Nghl;bapy; Kjypy; JLg;ngLj;jhLk; rpwpyq;fh mzp 24 Xtupy; 2 tpf;Nfl; ,og;gpw;f;F 89 Xl;lq;fSld; MLfpwJ. !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் ஆஸ்திரேலியா முன்னிலை பெற்றுள்ளது. உலக சாம்பியன் ஆஸ்திரேலிய மற்றும் தென்னாப்பிரிக்கா மோதும் முதல் டெஸ்ட் ஜோகன்னஸ் பர்க்கில் நடைபெற்று வருகிறது. . இந்த டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 466 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் அறிமுக வீரர் மார்க்கஸ் நார்த் அபாரமாக ஆடி சதம் அடித்தார். அவர் 117 ரன்களை குவித்தார். அவரது சிறப்பான ஆட்டம் காரணமாக ஆஸ்திரேலிய அணி 466 ரன்களை குவித்தது. ஹாடின் 63 ரன்களை எடுத்தார். பின்னர் தென்னாப்பிரிக்கா அணி ஆடத் தொடங்கியது . ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர்கள் அபாரமாக பந்து வீசியதால் தென்னாப்பிரிக்காவின் முன்னணி ஆட்டக்காரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். ஆட்ட நேர இறுதியில் தென்னாப்பிரிக்கா midj;J விக்கெட் இழப்புக்கு 81.1 over 220ரன்கள் எடுத்துள்ளது. ஆஸ்திரேலிய 246 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது . 2 tJ ,dpq;rpy; jw;nghoJ MbtUk; MTஸ்nuypa mzp 16.3 over y; 1 விக்கெட் இழப்புக்கு 51 Xl;lq;fSld; MLfpwJ. !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! :::::::::::::::::::::::::::::::::::: முக்கிய அறிவிப்பு இறை இரக்கம் வேண்டல். அன்பு உள்ளங்களே! வன்னி பெருநிலப்பரப்பில் போரினால் இறந்த எம் உறவுகளுக்காகவும், அகதிகளாய் உண்ணஉணவின்றி உடுக்க உடையின்றி, இருக்க இடமின்றி குடிக்க நீரின்றி, நோய்க்கு மருந்தின்றித் தவியாய்த் தவிக்கும் எம் தாயக உறவுகளுக்காக, இறைவனை இரந்து வேண்ட ( சகல மதத்தினரும்) புலம்பெயர்ந்து வாழும் தமிழ் உறவுகள்அனைவரையும் அன்பு கலந்த உரிமையுடன் அழைக்கின்றோம்.
- An australian animal the female of which carries its young in it pouch To practice kangaroo care on an infant; to hold a premature infant against the skin. kinkajoo - தேன்கரடி . (Canada, attributive) A hooded jacket with a front pocket, usually of fleece material, a kangaroo jacket. ஜானுடைய குடும்பத்திற்கு சொந்தமான சிறிய தண்ணீர் தேக்கத்தில் காட்டிலிருந்து வந்த ஒரு ஆண். This page provides all possible translations of the word kangaroo in the Tamil language. Kangaroo Mother Care is needed to provide care and protection to the newborn baby, so that the baby may heal and grow naturally. , warned of the consequences of withholding your time from your children. and wallabies favor frequently burned forest and are said to be fire dependent. By using our services, you agree to our use of cookies. Find more Tamil words at wordhippo.com! Last Update: 2018-03-27 Usage Frequency: 1 Quality: Reference: Anonymous. They asked the natives (Aborigines) what they were called and they answered 'kangaroo' meaning 'I don't understand' your question. (function() {var s=document.createElement("script"); s.async=true; ஆஸ்திரலியா நாட்டு விலங்கு). liger - அரிப்புலி . The Tamil for kangaroo is கங்காரு. Find more Tamil words at wordhippo.com! are hopping on pairs of coiled springs,” says Proske. The Tamil for kangaroos is கங்காரு. இரலை மான், புல்வாய். Get a better translation with 4,401,923,520 human contributions . leapard - சிறுத்தை . இரண்டு ஸ்பிரிங் வைக்கப்பட்டிருப்பதுபோல குதித்து செல்கின்றன” என்று சொல்கிறார் புரோஸ்க். s.src="http://widgets.amung.us/small.js"; KANGAROO BEAR meaning in tamil, KANGAROO BEAR pictures, KANGAROO BEAR pronunciation, KANGAROO BEAR translation,KANGAROO BEAR definition are included in the result of KANGAROO BEAR meaning in tamil at kitkatwords.com, a free online English tamil Picture dictionary. Definition of kangaroo word in the Definitions.net dictionary. , கோலாக்கள், ஈமுக்கள் ஆகியவற்றையும், அத்துடன், வாம்பட்டு உட்பட மற்ற பிராணிகளையும் நீங்கள் பார்த்திருப்பீர்கள். மற்றும் வல்லபி என்னும் சிறிய வகை கங்காருவின் சில இனங்கள், அடிக்கடி எரிக்கப்படும் காட்டில் வாழ விரும்புகின்றன; அவை நெருப்பை. பெரிய காதுகள் இருக்கின்றன, மான்போன்ற தலையில் அவை அழகாக சுழலுகின்றன. have big ears that swivel about on a deerlike head. வால் சூப் சுவையுள்ள உணவாக சிலரால் கருதப்பட்டாலும், எதிர்காலத்தில் இதனைக் கொண்டு செய்யப்படும் முழங்கால் அறுவை சிகிச்சைகள் வெற்றிகரமாக நிரூபித்துவிடுமேயானால், மருத்துவத்துக்கு அதிகமாகவும் உணவுக்கு குறைவாகவுமே, measured over seven feet [200 cm] from his nose to the tip of, மூக்கிலிருந்து வாலின் நுனிவரை ஒரு சிகப்பு நிற ஆண். The Europeans thought that was the name of the animal and the rest is history. Meaning of kangaroo word. kangaroo mother care definition in tamil. Found 65 sentences matching phrase "kangaroo".Found in 3 ms. Cookies help us deliver our services. var _wau = _wau || []; _wau.push(["small", "4xz7oo6bzp0d", "mfi"]); roo Would you like to know how to translate kangaroo to Tamil? , koalas, wombats, and platypuses, Ayers Rock and the Great Barrier Reef —these are names that, , கோஆலாக்கள் (அடிவயிற்றுப் பையில் குட்டிகளைத் தூக்கும் பாலூட்டிகள்), கரடிகள், பிளாட்டிப்பஸ்கள், ஆயர்ஸ் பாறை மற்றும் கிரேட் பாரியர் பவழப்பாறை (கடற்கழிகளால், பிரிக்கப்பட்டிருக்கும் பெரிய பவழப்பாறை)—இவை ஆஸ்திரேலியாவைப். JoshCaleb12 19 year member 419 replies Answer has 27 votes. kangaroo translation in English-Tamil dictionary. , a single hop at high speed may span from 30. மனிதனுடைய பின்னங்காலின் சதைப்பகுதியில் இணைக்கப்பட்டிருப்பதைப் போல. Antelope. தொன்புள். JoshCaleb12 Answer has 27 votes Currently Best Answer. A hooded jacket with a front pocket, usually of fleece material, a kangaroo jacket. What does kangaroo word mean? any of several herbivorous leaping marsupials of Australia and New Guinea having large powerful hind legs and a long thick tail. langur - முசு . , கோஆலா ஒரு பைம்மாவினமாகும் (“உறை” அல்லது “பை” என்ற அர்த்தம் கொண்ட மார்ஸுபியம் என்ற லத்தீன் வார்த்தையிலிருந்து). The kangaroo is a marsupial from the family Macropodidae (macropods, meaning "large foot"). Whatever the case, be sure to bring a telephoto lens and binoculars—wild, எப்படியிருந்தாலும்சரி, டெலிஃபோட்டோ லென்ஸ்களையும் பைனாகுலர்களையும் கொண்டுவர மறவாதீர்கள்—காட்டு, in their natural setting, you must be prepared to leave the. Ikea Friheten Sofa-bed Dimensions, Bratwurst Sausage Recipes, Sealy Memory Foam Mattress King, Lemon Scientific Name And Family, Communication Technology Pdf, A-musing Tale Bug, Types Of Yellow Rose Bushes, Wilkinson Vs 100g, Is Ammonium Fluoride Acidic Or Basic, Auto High Beam Problem, How Long Does It Take For A Pineapple To Grow, Notice Writing For Class 9 Seba, Cardboardboxes Co Uk, Classico Marinara Sauce Review, Zinc Bromine Gel Battery, Safety Beam Sensors For Garage Door Openers, Four Seasons Lisbon, Biona Tinned Beans, Sheet Pans For Baking, Van't Hoff Factor Formula, Movie Theater Popcorn Near Me, Eduqas Media Studies A Level Revision, Godrej Air Purifier Refill, Psalm 27:14 Kjv, Sarah Owens Sourdough Starter, Tempur Pillow Cloud, Singer Heavy Duty Bobbin Problems, This entry was posted on Friday, November 13th, 2020 at 6:12 AM and is filed under Uncategorized. You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site. Leave a Reply Name (required) Mail (will not be published) (required) Website IMPORTANT! To be able to proceed, you need to solve the following simple math (so we know that you are a human) :-)
Following is actually our very own variety of sleek and filthy fun select lines and openingszinnen employed far better than reddit Mani Sep 29, 2021 Browsing Category pet-chat-rooms review bondage.com dating bondage.com login bookofmatches com Italia bookofmatches mobile site Bookofmatches online italia BookOfMatches review bookofmatches reviews Recent Posts தவறு செய் த பிக் பாஸ்.!! அ வரு க்கே பாடம் நடத் திய பிக் பாஸ் போ ட்டி யாளர்.!! தவ றை உண ர்த்த பிக் பாஸ்.!! இணை ய த்தில் ட்ரெ ண்ட் ஆகும் செ ய்தி.!! சமந் தாவை தொட ர்ந்து பிர பல நடி கை க்கு ஏற் பட்ட பிரச் சனை.!! முகம் வீங்கி முக மே இப் படி ஆகிடு ச்சு.!!அட பாவ மே.!! என்ன கார ணம் தெரி யுமா.?? இந் த நடி கை இப் படி எல் லாம் செய் வாங் களா.!! நடி கை செய்த செய லால் ஷாக் கான ரசி கர் கள்.! ! இணை யத் தில் தீ யாய் பர வும் செய் தி.!! இந்த நடி கை இப் படி எல் லாம் செய் வாங் களா.!! நடி கை செய்த செய லால் ஷாக் கான ரசி கர் கள்.!! இணைய த்தில் தீ யாய் பர வும் செ ய்தி.!! உன் னால முடி ஞ்சத பாத் து க்கோ.!! இயக் குன ரை மதிக் காமல் திமி ராக இரு ந்த வடி வேலு.!! திமி ரை அட க்க பெரிய ஆப்பு வைத்த இய க்குனர்.!! மீண் டும் சர்ச் சை செய்த வடி வேலு.!!
1 கீலேயாத்தியனான யெப்தா பலத்த பராக்கிரமசாலியாயிருந்தான்; அவன் பரஸ்திரீயின் குமாரன்; கிலெயாத் அவனைப் பெற்றான். 2 கிலெயாத்தின் மனைவியும் அவனுக்குக் குமாரர்களைப் பெற்றாள்; அவன் மனைவி பெற்ற குமாரர் பெரியவர்களான பின்பு, அவர்கள் யெப்தாவை நோக்கி: உனக்கு எங்கள் தகப்பன் வீட்டிலே சுதந்தரம் இல்லை; நீ அந்நிய ஸ்திரீயின் மகன் என்று சொல்லி அவனைத் துரத்தினார்கள். 3 அப்பொழுது யெப்தா: தன் சகோதரரை விட்டு ஓடிப்போய், தோப்தேசத்திலே குடியிருந்தான்; வீணரான மனுஷர் யெப்தாவோடே கூடிக்கொண்டு, அவனோடேகூட யுத்தத்திற்குப் போவார்கள். 4 சில நாளைக்குப்பின்பு, அம்மொன் புத்திரர் இஸ்ரவேலின் மேல் யுத்தம் பண்ணினார்கள். 5 அவர்கள் இஸ்ரவேலின்மேல் யுத்தம் பண்ணும்போது கீலேயாத்தின் மூப்பர் யெப்தாவைத் தோப்தேசத்திலிருந்து அழைத்துவரப்போய், 6 யெப்தாவை நோக்கி: நீ வந்து, நாங்கள் அம்மோன் புத்திரரோடு யுத்தம் பண்ண எங்கள் சேனாபதியாயிருக்க வேண்டும் என்றார்கள். 7 அதற்கு யெப்தா கீலேயாத்தி மூப்பரைப் பார்த்து: நீங்கள் அல்லவா என்னைப் பகைத்து, என் தகப்பன் வீட்டிலிருந்து என்னைத் துரத்தினவர்கள்? இப்பொழுது உங்களுக்கு ஆபத்து நேரிட்டிருக்கிற சமயத்தில் நீங்கள் என்னிடத்தில் ஏன் வருகிறீர்கள் என்றான். 8 அதற்குக் கீலேயாத்தின் மூப்பர் யெப்தாவை நோக்கி: நீ எங்களுடனேகூட வந்து, அம்மோன் புத்திரரோடு யுத்தம்பண்ணி, கீலேயாத்தின் குடிகளாகிய எங்கள் அனைவர்மேலும் தலைவனாயிருக்க வேண்டும்; இதற்காக இப்பொழுது உன்னிடத்தில் வந்தோம் என்றார்கள். 9 அதற்கு யெப்தா: அம்மோன் புத்திரரோடே யுத்தம்பண்ண, நீங்கள் என்னைத் திரும்ப அழைத்துப்போனபின்பு, கர்த்தர் அவர்களை என் முன்னிலையாய் ஒப்புக்கொடுத்தால், என்னை உங்களுக்குத் தலைவனாய் வைப்பீர்களா என்று கீலேயாத்தின் மூப்பரைக் கேட்டான். 10 கீலேயாத்தின் மூப்பர் யெப்தாவைப் பார்த்து: நாங்கள் உன் வார்த்தையின்படியே செய்யாவிட்டால், கர்த்தர் நமக்கு நடுநின்று கேட்பாராக என்றார்கள். 11 அப்பொழுது யெப்தா கீலேயாத்தின் மூப்பரோடே கூடப்போனான்; ஜனங்கள் அவனைத் தங்கள்மேல் தலைவனும் சேனாபதியுமாக வைத்தார்கள். யெப்தா தன் காரியங்களையெல்லாம் மிஸ்பாவிலே கர்த்தருடைய சந்நிதியிலே சொன்னான். 12 பின்பு யெப்தா அம்மோன் புத்திரரின் ராஜாவினிடத்திற்கு ஸ்தானாபதிகளை அனுப்பி: நீ என் தேசத்தில் எனக்கு விரோதமாக யுத்தம்பண்ண வருகிறதற்கு, எனக்கும் உனக்கும் என்ன வழக்கு இருக்கிறது என்று கேட்கச்சொன்னான். 13 அம்மோன் புத்திரரின் ராஜா யெப்தாவின் ஸ்தானாபதிகளை நோக்கி: இஸ்ரவேலர் எகிப்திலிருந்து வருகிறபோது, அர்னோன் துவக்கி யாபோக்மட்டும், யோர்தான்மட்டும் இருக்கிற என் தேசத்தைக் கட்டிக்கொண்டார்களே; இப்பொழுது அதை எனக்குச் சமாதானமாய்த் திரும்பக்கொடுத்துவிட வேண்டும் என்று சொல்லுங்கள் என்றான். 14 யெப்தா மறுபடியும் அம்மோன் புத்திரரின் ராஜாவினிடத்திற்கு ஸ்தானாபதிகளை அனுப்பி, அவனுக்குச் சொல்லச் சொன்னதாவது: 15 யெப்தா சொல்லுகிறது என்னவென்றால்: இஸ்ரவேலர் மோவாபியரின் தேசத்தையாகிலும், அம்மோன் புத்திரரின் தேசத்தையாகிலும் கட்டிக்கொண்டதில்லையே. 16 இஸ்ரவேலர் எகிப்திலிருந்து வருகிறபோது, வனாந்தரத்தில் சிவந்த சமுத்திர மட்டும் நடந்து, பின்பு காதேசுக்கு வந்து, 17 இஸ்ரவேலர் ஏதோமின் ராஜாவினிடத்திற்கு ஸ்தானாபதிகளை அனுப்பி: நாங்கள் உன் தேசத்துவழியாய்க் கடந்து போகட்டும் என்று சொல்லச்சொன்னார்கள்; அதற்கு ஏதோமின் ராஜா செவிகொடுக்கவில்லை; அப்படியே மோவாபின் ராஜாவிடத்திற்கும் அனுப்பினார்கள்; அவனும் சம்மதிக்கவில்லை. ஆதலால் இஸ்ரவேலர் காதேசிலே தரித்திருந்து, 18 பின்பு வனாந்தரவழியாய் நடந்து ஏதோம் தேசத்தையும் மோவாப் தேசத்தையும் சுற்றிப்போய், மோவாபின் தேசத்திற்குக் கிழக்கே வந்து, மோவாபின் எல்லைக்குள் பிரவேசியாமல், மோவாபின் எல்லையான அர்னோன் நதிக்கு அப்பாலே பாளயமிறங்கினார்கள். 19 அப்பொழுது இஸ்ரவேலர் எஸ்போனில் ஆளுகிற சீகோன் என்னும் எமோரியரின் ராஜாவினிடத்திற்கு ஸ்தானாபதிகளை அனுப்பி: நாங்கள் உன் தேசத்து வழியாய் எங்கள் ஸ்தானத்திற்குக் கடந்துபோக இடங்கொடு என்று சொல்லச்சொன்னார்கள். 20 சீகோன் இஸ்ரவேலரை நம்பாததினால், தன் எல்லையைக் கடந்துபோகிறதற்கு இடங்கொடாமல் தன் ஜனங்களையெல்லாம் கூட்டி, யாகாசிலே பாளயமிறங்கி, இஸ்ரவேலரோடே யுத்தம் பண்ணினான். 21 அப்பொழுது இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சீகோனையும் அவனுடைய எல்லா ஜனங்களையும் இஸ்ரவேலரின் கையில் ஒப்புக்கொடுத்தார்; அவர்களை முறிய அடித்தார்கள்; அப்படியே இஸ்ரவேலர் அந்த தேசத்திலே குடியிருந்த எமோரியரின் சீமையையெல்லாம் பிடித்து, அர்னோன் துவக்கி, 22 யாபோக்மட்டும் வனாந்தரம் துவக்கி யோர்தான்மட்டும் இருக்கிற எமோரியரின் எல்லையையெல்லாம் சுதந்தரமாய்க் கட்டிக்கொண்டார்கள். 23 இப்படி இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் எமோரியரைத் தம்முடைய ஜனமாகிய இஸ்ரவேலுக்கு முன்பாகத் துரத்தியிருக்க, நீர் அந்த தேசத்தைக் கட்டிக்கொள்ளத்தகுமா? 24 உம்முடைய தேவனாகிய காமோஸ் உமக்கு முன்பாகத் துரத்துகிறவர்களின் தேசத்தை நீர் கட்டிக்கொள்ளமாட்டீரோ? அப்படியே எங்கள் தேவனாகிய கர்த்தர் எங்களுக்கு முன்பாகத் துரத்துகிறவர்களின் தேசத்தையெல்லாம் நாங்களும் கட்டிக்கொள்ளுகிறோம். 25 மேலும் சிப்போரின் குமாரனாகிய பாலாக் என்னும் மோவாபின் ராஜாவைப் பார்க்கிலும் உமக்கு அதிக நியாயம் உண்டோ? அவன் இஸ்ரவேலோடே எப்போதாகிலும் வழக்காடினானா? எப்போதாகிலும் அவர்களுக்கு விரோதமாக யுத்தம் பண்ணினானா? 26 இஸ்ரவேலர் எஸ்போனிலும் அதின் கிராமங்களிலும், ஆரோவேரிலும் அதின் கிராமங்களிலும், அர்னோன் நதியருகான எல்லா ஊர்களிலும், முந்நூறு வருஷம் குடியிருக்கையில், இவ்வளவுகாலமாய் நீங்கள் அதைத் திருப்பிக்கொள்ளாதே போனதென்ன? 27 நான் உமக்கு விரோதமாய்க் குற்றம் செய்யவில்லை; நீர் எனக்கு விரோதமாய் யுத்தம் பண்ணுகிறதினால் நீர் தான் எனக்கு அநியாயம் செய்கிறீர்; நியாயாதிபதியாகிய கர்த்தர் இன்று இஸ்ரவேல் புத்திரருக்கும் அம்மோன் புத்திரருக்கும் நடுநின்று நியாயம் தீர்க்கக்கடவர் என்று சொல்லி அனுப்பினான். 28 ஆனாலும் அம்மோன் புத்திரரின் ராஜா தனக்கு யெப்தா சொல்லியனுப்பின வார்த்தைகளுக்குச் செவிகொடாதே போனான். 29 அப்பொழுது கர்த்தருடைய ஆவி யெப்தாவின் மேல் இறங்கினார்; அவன் கீலேயாத்தையும் மனாசே நாட்டையும் கடந்துபோய், கீலேயாத்திலிருக்கிற மிஸ்பாவுக்கு வந்து, அங்கேயிருந்து அம்மோன் புத்திரருக்கு விரோதமாகப் போனான். 30 அப்பொழுது யெப்தா கர்த்தருக்கு ஒரு பொருத்தனையைப் பண்ணி: தேவரீர் அம்மோன் புத்திரரை என் கையில் ஒப்புக்கொடுக்கவே ஒப்புக்கொடுத்தால், 31 நான் அம்மோன் புத்திரரிடத்திலிருந்து சமாதானத்தோடே திரும்பி வரும்போது, என் வீட்டு வாசற்படியிலிருந்து எனக்கு எதிர்கொண்டு வருவது எதுவோ அது கர்த்தருக்கு உரியதாகும். அதைச் சர்வாங்க தகனபலியாகச் செலுத்துவேன் என்றான். 32 யெப்தா அம்மோன் புத்திரரின்மேல் யுத்தம்பண்ண, அவர்களுக்கு விரோதமாய்ப் புறப்பட்டுப்போனான்; கர்த்தர் அவர்களை அவன் கையில் ஒப்புக்கொடுத்தார். 33 அவன் அவர்களை ஆரோவேர் துவக்கி மின்னித்திற்குப் போகுமட்டும், திராட்சத்தோட்டத்து நிலங்கள் வரைக்கும், மகா சங்காரமாய் முறிய அடித்து, இருபது பட்டணங்களைப் பிடித்தான்; இப்படி அம்மோன் புத்திரர் இஸ்ரவேல் புத்திரருக்கு முன்பாகத் தாழ்த்தப்பட்டார்கள். 34 யெப்தா மிஸ்பாவிலிருக்கிற தன் வீட்டுக்கு வருகிறபோது, இதோ, அவன் குமாரத்தி தம்புரு வாசித்து நடனஞ்செய்து, அவனுக்கு எதிர்கொண்டு வந்தாள்; அவள் அவனுக்கு ஒரே பிள்ளையானவள்; அவளையல்லாமல் அவனுக்குக் குமாரனும் இல்லை குமாரத்தியும் இல்லை. 35 அவன் அவளைக் கண்டவுடனே தன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு: ஐயோ! என் மகளே, என்னை மிகவும் மனமடியவும் கலங்கவும் பண்ணுகிறாய்; நான் கர்த்தரை நோக்கி என் வாயைத் திறந்து சொல்லிவிட்டேன்; அதை நான் மாற்றக் கூடாது என்றான். 36 அப்பொழுது அவள்: என் தகப்பனே, நீர் கர்த்தரை நோக்கி உம்முடைய வாயைத் திறந்து பேசினீரல்லவோ? அம்மோன் புத்திரராகிய, உம்முடைய சத்துருக்களுக்கு நீதியைச் சரிக்கட்டும் ஜெயத்தைக் கர்த்தர் உமக்குக் கட்டளையிட்டபடியினால், உம்முடைய வாயிலிருந்து புறப்பட்டபடியே எனக்குச் செய்யும் என்றாள். 37 பின்னும் அவன் தன் தகப்பனை நோக்கி: நீர் எனக்கு ஒரு காரியம் செய்ய வேண்டும்; நான் மலைகளின்மேல் போய்த்திரிந்து, நானும் என் தோழிமார்களும் என் கன்னிமையினிமித்தம் துக்கங்கொண்டாட, எனக்கு இரண்டுமாதம் தவணைகொடும் என்றாள். 38 அதற்கு அவன்: போய் வா என்று அவளை இரண்டு மாதத்திற்கு அனுப்பிவிட்டான்; அவள் தன் தோழிமார்களோடும் கூடப்போய், தன் கன்னிமையினிமித்தம் மலைகளின் மேல் துக்கங்கொண்டாடி, 39 இரண்டுமாதம் முடிந்தபின்பு, தன் தகப்பனிடத்திற்குத் திரும்பிவந்தாள்; அப்பொழுது அவன் பண்ணியிருந்த தன் பொருத்தனையின் படி அவளுக்குச் செய்தான்; அவள் புருஷனை அறியாதிருந்தாள். 40 இதினிமித்தம் இஸ்ரவேலின் குமாரத்திகள் வருஷந்தோறும் போய், நாலு நாள் கீலேயாத்தியனான யெப்தாவின் குமாரத்தியைக்குறித்துப் புலம்புவது இஸ்ரவேலிலே வழக்கமாயிற்று.
இந்த வருட இறுதிக்குள் யாழ்ப்பாண சர்வதேச விமான நிலைய சேவை ஆரம்பிக்கப்படும் என தெரிவித்த துறைமுகங்கள் விமான சேவைகள் இராஜாங்க அமைச்சர் , அவை விரைவில் சாத்தியமாக வேண்டும் என இறைவனை பிரார்த்திப்பதாகவும் தெரிவித்தார். காங்கேசன்துறை துறைமுகம் மற்றும் யாழ்ப்பாண சர்வதேச விமான நிலைய செயற்பாடுகள் தொடர்பில் ஆராய்வதற்காக யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட துறைமுகங்கள் விமான சேவைகள் இராஜாங்க அமைச்சர் இன்றைய தினம் (செவ்வாய்க்கிழமை) காங்கேசன்துறை துறைமுகம் மற்றும் பலாலி விமான நிலையத்தை பார்வையிட்டதோடு அதிகாரிகளுடன் கலந்துரையாடினர் குறித்த விஜயத்தின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார். நாட்டுக்கு பெரும் வருமானத்தை ஈட்டி தந்த காங்கேசன்துறை துறைமுகம் நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக அழிவடைந்து தற்பொழுது பயன்பாட்டில் இல்லை இவ்வாறான சம்பவங்கள் மூலமே எமது நாட்டில் பொருளாதார நெருக்கடிக்கு நாங்கள் முகம் கொடுக்க வேண்டியுள்ளது. அந்த பொருளாதார நெருக்கடியில் இருந்து நாங்கள் மீள வேண்டுமே ஆக இருந்தால் காங்கேசன்துறை துறை போன்ற பொருளாதாரத்தை ஈட்டக்கூடிய இடங்களை நாங்கள் மீள புதுப்பித்து அவற்றை செயல்படுத்துவதன் மூலமே நாட்டுக்கு வருமானம் கிடைக்கும். தற்போதுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அந்த வேலை திட்டத்தில் மிகவும் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றார். அதன் காரணமாகவே காங்கேசன்துறை துறைமுகத்திற்கு நேரடியாக அமைச்சர் என்ற ரீதியில் நான் விஜயத்தினை மேற்கொண்டு இங்கே மேற்கொள்ளப்பட வேண்டிய வேலை திட்டங்கள் மற்றும் செயல்படுத்தப்பட வேண்டிய திட்டங்கள் தொடர்பில் ஆராய்ந்து இருக்கின்றேன். குறிப்பாக இந்திய நாட்டின் உதவியையும் நாங்கள் கோரவுள்ளோம் . ஏற்கனவே நாங்கள் இந்திய நாட்டின் உதவியுடன் சில வேலை திட்டங்களை இங்கே முன்னெடுத்து இருக்கின்றோம். ஆனால் இங்கே பல வேலை திட்டங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன அவ்வாறான வேலை திட்டங்களை விரைவில் ஆரம்பித்து மிக விரைவில் இந்த காங்கேசன் துறைமுகத்தினை செயற்படுத்துவதற்கு நாங்கள் முனைகின்றோம். அதேபோல் யழ்ப்பண சர்வதேச விமான நிலையமும் நமக்கு ஒரு வருமானத்தை ஈட்டக்கூடிய ஒரு விமான நிலையம் ஆகும் அந்த விமான நிலையமும் ஓரிரு மாதங்களில் விரைவில் செயற்படுத்தப்படும் குறிப்பாக அமைச்சின் ஒருவர் இந்தியா தான் அந்த விமான நிலையத்தினை செயல்படுத்துவதற்கு தடையாக இருப்பதாக ஊடகவியலாளர் வினவிய போது அது முதலில் அவ்வாறு பிரச்சனை இருந்தது ஆனால் எல்லாம் பேசி சமரச முயற்சியில் ஈடுபட்டு தற்பொழுது எல்லா விடயங்களும் நிறைவடைந்து விட்டன ஓரிரு மாதங்களில் பலாலி விமான சேவையும் ஆரம்பிக்கப்பட உள்ளது. அவ்வாறு ஆரம்பித்தால் இலங்கையில் உள்ள மூவின மக்களும் குறிப்பாக வடக்கு கிழக்கில் உள்ள மக்களும் ஒன்றிணைந்து இந்த நாட்டில் பொருளாதாரத்தை முன்னேற்ற முடியும் எனவும் தெரிவித்தார். அதேவேளை இவைகள் விரைவில் சாத்தியப்பட வேண்டும் என இறைவன் பிரார்த்திப்பதாகவும் தெரிவித்தார். Videos play பிம்ஷானியை அவரது பதவியில் இருந்து நீக்க முயற்சிக்கும் பொலிஸ் மா அதிபரின் வெள்ளை மற்றும் கருப்பு மகன்கள்!
Anjali, Actress, Celebrity, RC15, Model 26th Feb 2022 : அஞ்சலி 16 ஜூன் 1986 அன்று ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள ரசோலில் பிறந்தார். அவர் ஒரு இந்திய நடிகை மற்றும் மாடல் ஆவார், அவர் முக்கியமாக தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். 2006 ஆம் ஆண்டு தெலுங்கில் ‘ஃபோட்டோ’ என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். அடுத்த ஆண்டு தனது இரண்டாவது தெலுங்குப் படமான ‘பிரேமலேகா ராசா’ மற்றும் தமிழில் அறிமுக இயக்குநர் ராமின் கற்றது தமிழ் படத்தில் ஜீவாவுடன் இணைந்து நடித்தார். 2008ல் ‘ஹொங்கனாசு’ படத்தின் மூலம் கன்னட சினிமாவில் அறிமுகமானார். 2011ல் ஜெயசூர்யாவுடன் மலையாளத்தில் அறிமுகமான படம் ‘பய்யன்ஸ்’. அஞ்சலி நடித்த தெலுங்குப் படங்கள் வெங்கடேஷின் சீதம்மா வக்கிட்லோ சிரிமல்லே செட்டு மற்றும் மசாலா, ரவிதேஜாவின் பலுபு, ஸ்ரீனிவாச ரெட்டியின் கீதாஞ்சலி, நந்தமுரி பாலகிருஷ்ணாவின் டிக்டேட்டர், சித்ராங்கதா, மாதவனின் நிசப்தம் மற்றும் பவன் கல்யாணின் வக்கீல் சாப் போன்றவையாகும். கன்னட சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமாரின் ராணா விக்ரமா மற்றும் பிஜு மேனனின் ரோசாபூ ஆகியவை அவரது பிற மொழித் திரைப் படங்கள். அஞ்சலி பல தமிழ் படங்களிலும் நடித்துள்ளார். அங்காடி தெரு, எங்கேயும் எப்போதும், கலகலப்பு, வத்திக்குச்சி, சேட்டை, சகலகலா வல்லவன், இறைவி, பலூன், காளி, பேரன்பு மற்றும் நாடோடிகள் 2 ஆகியவை குறிப்பிடத்தக்க சில திரைப்படங்கள். இவரது வெளிவர இருக்கும் திரைப்படங்கள் மம்முட்டியின் பீஷ்ம பர்வம் (மலையாளம்), வெங்கடேஷின் F3(தெலுங்கு) பைராகி (கன்னடம்), பூச்சாண்டி (தமிழ்) மற்றும் இந்தி அறிமுக படமான RC15 (இந்தி, தமிழ், தெலுங்கு) ஆகியவை . View this post on Instagram A post shared by Anjali (@yours_anjali) Tags: Actress Anjali Celebrity Model RC15 Share on Share on Facebook Share on Twitter Share on Pinterest Share on WhatsApp Share on WhatsApp Share on Linkedin Share on Tumblr Share on Reddit
இந்த கதை எங்கள் ஊரில் நடைபெற்ற உண்மை சம்பவம். என் பெயர் சுரேஷ். எங்களுடைய ஊர் ஒரு சிறிய கிராமம். எங்கள் வீட்டிற்கு பக்கத்தில் திவ்யா என்ற ஒரு பெண் குடும்பத்துடன் வசித்து வந்தாள். திவ்யா ஒரு முலை அழகி . அவள் முலைகள் தெரியும் படி மெலிந்த ஜாக்கெட்டை அணிந்து இருப்பாள். அவள் புடவை முந்தானை விலகினால் அவள் முலை காம்புகள் நன்றக தெரியும் அளவிற்கு மெலிந்த ஆடைகளை அணிவாள். அவள் 38 இன்ச் பெருத்த முலை ஜாக்கட்டில் விறைத்து கொண்டு இருக்கும். அவன் கணவன் சரியாக அவளை ஒப்பதில்லை.அவள் கூதி புண்டை பெருத்து இருக்கும். அவள் நடக்கும் பொழுது அவள் சூத்து குலுங்கி குலுங்கி நடக்கும். அதை பாக்கும் போது அவள் சூத்திலே ஓக்கவேண்டும் என்று எண்ணம் அனைவருக்கும் வரும். திவ்யாவிற்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. அவளுடைய கணவனும், மாமனாரும் ஒரு பால் வியாபாரிகள். அவளுடைய மாமனாரின் பெயர் முனிசாமி. திவ்யாவும், மாமியாரும் வீட்டுவேலைகளை செய்துகொண்டு தோட்டத்து வேலைகளை பார்த்து வந்தன. திவ்யாவின் மாமனார் நல்ல திடமான உடற்கட்டு கொண்டவன். மாடுகளை பார்த்துக்கொண்டு விவசாயத்தையும் பார்த்துக்கொண்டு வந்தான். அவனுக்கு பெண்களை கண்டால் வலிந்து பேசி அவர்களை ஓத்துவிடுவான். எங்கள் ஊரில் நிறைய பெண்களை ஓத்து உள்ளான். அவனுக்கு சுண்ணி நீண்டு வளர்த்து பெருத்து இருக்கும். அவன் மாலை நேரத்தில் எங்கள் வீட்டின் எதிரே மாடுகளுக்கு பால் கரப்பான். அவன் எப்பொழுதும் அரை டிராயர் மட்டுமே அணிந்து இருப்பான். அவன் பால் கறக்கும் போது அவனுடைய சுண்ணி பெருத்து டிராயர் வழியே நீண்டு மொட்டு காட்சியளிக்கும். அதை காணவே நிறய பெண்கள் பால் வாங்கும் சாக்கில் அவன் சுண்ணியை பார்க்க வந்துவிடுவார்கள். திவ்யாவின் கணவன் ஒரு சோம்பேறி அப்பா சொல்லை மீறாதவன். முனிசாமி (மாமனார்) மனைவி கொஞ்சம் உடல்நிலை சரி இல்லாதவள் . முனிசாமி ஏழ்மையில் உள்ளவர்களுக்கு வட்டிக்கு பணம்கொடுத்து சம்பாதிப்பான். நிறைய பெண்கள் காலையில் அவர்கள் வீட்டின் பின்புறம் உள்ள மாட்டுத்தொழுகைக்கு சென்று அவனிடம் வட்டிக்கு பணம் கேட்பார்கள். அவன் மாட்டுத்தொழுகையில் கட்டிலில் படுத்து இருப்பான். பணம் கேட்டு வரும் பெண்களை பேசி மாட்டுத்தொழுகையில் வைத்து ஓத்து ஓத்து வருவான். இதை அவள் மனைவி கண்டும் காணாமல் சென்று விடுவாள். ஒருநாள் அவனிடம் பணம்கேட்டு எங்கள் தெருவில் உள்ள ஒரு விதவை பெண் (சந்திரா) செல்ல சரி நாளை வரும்படி சொல்லி அனுப்பிவைத்தான். அடுத்த நாள் விடியற்காலை காலை மாடுகளில் பாலை கறந்து ஊற்றிவிட்டு வந்து கட்டிலில் படுத்துக்கொண்டிருக்க, அப்போது சந்திரா அவனிடம் சென்றாள். அப்போது அவன் கட்டிலில் படுத்திருக்க அவனுடைய பெருத்த நீண்ட சுண்ணி டிராயர் வெளியே நீட்டிக்கொண்டிருக்க, அவன் அவளை பார்க்காமல் கண்களை மூடியவாறு இருக்க சந்திரா அவன் சுண்ணி அருகே சென்று அவன் மொட்டை பார்க்க அவளுக்கு கூதியில் அரிப்பு ஏற்பட்டது. அவள் அருகில் செல்ல அவன் கண்விழித்தான். அப்போது வா சந்திரா உட்கரு என்று கட்டிலில் அமரவைக்க அவள் பணம் கேட்க வந்ததை மறந்து அவன் சுன்னியை பார்த்துக்கொண்டிருந்தாள். அதை கவனித்த அவன் அதை கையால் தேய்க்க அது விறைத்து நிற்க அதை பார்த்தவாறு இருந்தாள். இவளை எப்படியாவது இன்று ஓத்து சுன்னி அரிப்பை போக்கிக்கொள்ளவேண்டும் என்று எண்ணினான். மெதுவாக எழுந்து வா உட்காரு என்று சொல்ல அவள் அவன் பக்கத்தில் உட்கார அவன் கை மெதுவாக அவள் தொடையில் படும்படி வைக்க அவள் ஒன்றும் சொல்லாமல் இருந்தாள். அதை உணர்த்த அவன் கையை அவள் இடையில் பிடிக்க அவள் அவன் அருகில் நகரத்து வந்தாள். மெதுவாக அவன் கையை உயர்த்தி அவள் முலைகளை ஜாக்கெட்டோடு சேர்த்து பிசைய அவள் அவன் மடியில் சாய்ந்தாள். அப்போது அவன் மருமகள் திவ்யா அங்கே வர இவர்களை கண்டு பிரமித்து நின்றாள். பிறகு மெதுவாக சென்று மறைந்து கொண்டு இவர்களை கவனிக்க , அவன் சந்திரா முலைகளை கசக்கி கசக்கி எடுக்க அவள் அவன் சுண்ணியை டிராயர் ரோடு சேர்த்து வாயால் கடிக்க அவன் வெறிகொண்டு அவள் முலையை ஜாக்கெட்டோடு கசக்க அவள் அவனோட சுன்னியை கடித்தாள். அவன் அவள் தலையை தூக்கி வாயோடு வாய்வைத்து அவள் நாக்கை உறிஞ்சினான். அவள் அவன் மடியில் அமர்ந்து அவனை கட்டியணைத்து முத்தம் கொடுத்தாள். அவள் அவளை எழுப்பி அவள் முந்தானையை விலக்கி அவள் ஜாக்கெட் ஊக்குலை கழட்டி விட அவள் முலைகளை அவன் வாயில் வைத்து அழுத்த அவன் சப்பி சப்பி இழுத்தான். அவள் ஆஹா அஹ்ஹாஆஆஆ என் முனக அவன் விடாமல் அவள் முலையை சப்பி கொண்டு அவள் கூதியை மேலும் கீழும் தேய்த்து அவளை மூடேற்ற அவள் ஸ்ஸ்ஸ்ஸ் ஆஆஆஆ உஉஉஉஉஉஉ அப்படித்தான் என கதற அவன் எழுந்து டிராயரை கழட்டி எரிந்து அவனுடைய 8 இன்ச் பூலை அவள் கையில் கொடுக்க அவள் அதை வாயில் வைத்து மேலும் கீழும் சப்பி சப்பி உருவினாள். அவன் சுண்ணியை பார்த்தது திவ்யா பிரமித்து போனாள். அவன் கணவன் சுண்ணியை விட பெரியது என்று எண்ணிக்கொண்டு அவர்கள் செய்வதை கவனித்துக்கொண்டிருந்தாள். அவன் சந்திராவின் ஜாக்கெட்டை கழட்டி எரிந்து முலைகளை கசக்கி அவள் காம்புகளில் பாலை உறுஞ்சி உறுஞ்சி குடித்தான், அவள் புழு போல நெளிய அவள் பெருத்த புண்டை அவன் சுண்ணிக்காக தூக்கி தூக்கி கொடுத்தது. அவன் அவளுடைய முலைகளை கசக்கி கடித்து இழுக்க இழுக்க அவள் ஆஆஆஆஆ ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் என்று முனகிக்கொண்டே இருந்தாள். பிறகு அவளை கட்டிலில் படுக்க வைத்து அவள் கால்களை அவன் தோளில் வைத்து அவன் சுண்ணியை அவள் கூதியில் மேலும் கீழும் தேய்த்துக்கொண்டே இருந்தான். அவள் கூதியை மேலும் கீழும் தூக்கி தூக்கி கொடுக்க அவன் மெதுவாக மேலும் கீழும் சுண்ணியை ஆட்டிக்கொண்டே அவள் கூதியில் வைத்து அவன் 8 இன்ச் சுண்ணியை ‘சதக்’ என்று அழுத்த ‘அயோ ஆஆஆஆ அம்மாஆ என்று கதற, அவன் விடாமல் அவளை ஓத்து ஒத்து எடுக்க அவள் கூதியை தூக்கி தூக்கி காண்பித்தாள். திவ்யா பார்த்துக்கொண்டே அவள் கூதியை கையால் தேய்க்க அவள் ஜட்டி ஈரமானது . அவன் வேகமாக சந்திரா கூதியில் வைத்துசுன்னியை அடிக்க அடிக்க சளக் புளக் சளக் புளக் என்று சத்தம் கேட்க விடாமல் வேகமாக அடிக்க அவனுக்கு தண்ணீர் வருவதுபோல் இருக்க அவன் ஆஆஆஆ ஸ்ஸ்ஸ்ஸ் ஆஆஆஆ என்று கண்ணை மூடிக்கொண்டு அவள் கூதியினுள் அடித்து கொண்டிருக்கும் நேரத்தில் அவனோட மனைவி அங்கே என்ன செய்யுற திவ்யா என்று கேட்க அவள் ஒன்று இல்லை என்று சொல்ல திவ்யாவை கண்டதும் , அவன், அவள் கூதியில் இருந்து பூலை எடுக்க அதை திவ்யா பார்ப்பதை அவன் கவனித்தான். பிறகு மறுபடியும் அவன் பெருத்த பூலை சந்திரா கூதியில் விட அவள் யாராவது வரப்போறாங்க என்று சொல்ல அவன் சதக் சதக் என்று கூதியில் அடித்து தண்ணீரை இறக்கினான். பிறகு அவள் எழுந்து ஆடையை மாற்ற அவள் முலையை கசக்கி சப்பி விட்டான் அவளோட முலைகாம்பு விறைத்து அவனை வெறி ஏற்ற அவள் முலைகளை கசக்கி காம்புகளை திருகி திருகி இழுத்துவிட அவள் விலகி சென்று ஆடைகளை மாற்றி அவனிடம் பணம் வாங்கி கொண்டு சென்றாள். அவன் குளித்து முடித்து வீட்டிற்கு வந்து திவ்யா என்று அவன் அழைக்க ஏன் மாமா என்று கேட்டாள். உன் புருஷன் எங்கே என்று கேட்க அவர் பால் கொண்டு சென்றவர் இன்னும் வரவில்லை என்று சொன்னாள். திவ்யாவிற்கு அன்று முழுவதும் மாமனாரின் சுண்ணியை நினைத்து கொண்டே இருந்தாள். அடுத்த நாள் காலை 10 மணிக்கு அவள் குளிக்க சென்றாள். அவள் மாமனாரின் பூலை நினைத்து கொண்டு விரலை கூதியில் விட்டு ஆட்டிக்கொண்டே அவள் முலைகளை கசக்கி கொண்டிருக்க கதவு வழியே யாரோ பார்ப்பதை உணர்ந்தாள். அவன் மாமனார் முனிசாமி என்பதை புரிந்து கொண்டாள். பிறகு குளித்து முடித்து அவள் வெறும் பாவாடையை மட்டும் உடலில் சுற்றிக்கொண்டு வீட்டில் நுழைய அவள் மாமனார் அமர்ந்திருந்தார். அவர் திவ்யாவின் தொடையை பார்த்தது அவனுக்கு சுன்னி விறைக்க அவன் திவ்யாவை பார்த்துக்கொண்டிருக்க அவள் அறைக்கு சென்று கதவை சாத்தி கொண்டாள். இவன் வெளியே வந்து சுற்றும் முற்றும் பார்த்து விட்டு யாரும் இல்லை என்பதை உறுதிசெய்துகொண்டு உள்ளே வந்து கதவை சாத்தினான். அவன் கதவின் வழியே திவ்யாவை பார்க்க அவள் முடி இல்லாத கூதி அவனுக்கு தெரிய அது உப்பி பெருத்து இருந்தது. எப்படியாவது இவளை ஓத்துவிடவேண்டும் என்று எண்ணி கதவின் வழியே பார்க்க அவள் கதவை லாக் செய்யாமல் சாத்தி வைக்க அவன் கை கதவில் பட கதவு திறந்து கொண்டது. அவன் உள்ளே தடமாடி விழ அவள் அவனை கண்டதும் மாமா என்று கூறி அவள் கைகளால் அவள் முலைகளை மறைத்தாள். அவள் பெருத்த கூதி தெரிய அவள் எழுந்து புடவையால் மறைக்க அவன் மெதுவாக அவள் அருகில் வர திவ்யா மாமா வேண்டாம். உன் மகனுக்கு தெரிந்தால் அவளவுதான் என்று சொன்னாள். அவனை நான் பார்த்துக்கொள்கிறேன் என்று சொல்லி அவள் அருகில் வர அவளுக்கும் அவனை எப்படியாவது ஓக்கவேண்டும் என்று இருக்க, அவன் மெதுவாக வந்து அவளை கட்டிஅணைத்தான். திவ்யா மாமா இது தப்பு இல்லையா என்று கூறினாள். அவன் அவள் சொல்வதை பொருட்படுத்தாமல் அவளை கட்டியணைக்க அவளும் அவனை அணைத்து கொள்ள புடவை விலகி கீழே விழுந்தது. அவன் அவளை தூக்கி கட்டிலில் படுக்க வைக்க அவள் முலைகள் இரண்டு குலுங்கின. அதை அவன் முரட்டு கைகளால் அதை அழுத்தி பிடிக்க முலைக்காம்பில் பால் தெறித்து அடித்தது. அவன் அதை அப்படியே உறிஞ்சி குடித்தான். அவளும் அவன் வாயில் முலைகளை வைத்து அழுத்தி அழுத்தி கொடுக்க அவன் காம்புகளை கடித்து இழுத்து இழுத்து விட திவ்யா உணர்ச்சியில் ஆஆஆ ம்ம்ம்மம்மம்ம்ம்மாஆஆ சுப்புரா இருக்குஉஉஉஉஉஉஉஉ உன் மகன் இப்படியெல்லாம் செய்யமாட்டான் மாமா என்று முனகினாள். அவன் முலைகளை சப்ப சப்ப அவள் கூதியில் நீர் கசிய ஆரம்பித்தது. அவன் எழுந்து அவன் ஜட்டியை கழட்டி எரிய அவன் பெருத்த சுன்னியையை ரம்யாகையில் கொடுத்து எப்படி இருக்க மருமகளே என்று கேட்க பெருசா இருக்கு மாமா உன் பயனது சசின்னதா இருக்கு மாமா. என்று சொல்ல அவன் சுண்ணியை அவள் கையில் கொடுத்து மேலும் கீழும் உருவிவிட சொன்னான் . அவள் அதை மேலும் கீழும் உருவ உருவ அது விறைத்து நேராக நின்றது. அவன் சுன்னியை எடுத்து அவள் வாயில் கொடுத்து சப்ப சொல்ல அவள் அதை வாயில் வைத்து சப்பி சப்பி எடுக்க அவள் தொண்டை வரை அவன் சுண்ணியை இழுத்து இழுத்து அடிக்க ம்ம்ம்ம்ம் உஉஉஉஉஉஉஉ ம்ம்ம்ம்ம்ம் என்று முனகிக்கொண்டிருக்க அவன் அவள் முலைக்காம்பை இழுத்து திருகி திருகி விட்டான். அவள் இடுப்பை மேலும் கீழும் ஆட்டிக்கொண்டே இருக்க. அவன் அவள் மேல் படுத்துக்கொண்டு அவள் வாயில் சுண்ணியை ஊம்ப வைத்து அவன் அவள் கூதியில் வாய் வைத்து நாக்கால் மேலும் கீழும் நக்கினான். அவன் புண்டை மேலும் தூக்கி தூக்கி கொடுத்தாள்.அவள் கூதி ஓட்டை சிறியதாக இருந்தது. அவன் அவள் பருப்பை சப்பி சப்பி எடுக்க அப்படித்தா மாமா அப்படிதான் கடி மாமா கடி ஆஆஆஆஅம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் ஆஹா ஹ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ் என்று கதற அவன் விடாமல் அவள் கூதியின் பருப்பை சப்பிகொண்டே அவன் பெருத்த விரலை திவ்யாவின் கூதி ஓட்டையில் விட்டு விட்டு எடுத்தான். அவள் கூதியை தூக்கி தூக்கி கொடுக்க விரல் அவள் கூதியில் உள்ளே சென்று சென்று வர அவள் மதன நீரை அடிக்க அதை அவன் நாக்கால் நக்கி குடித்தான். பிறகு அவன் எழுந்து கீழே அமர்ந்து அவள் கூதியை வாயருகே வைத்து காலை தூக்கி பிடித்து நக்க நக்க அவள் கதறினாள். ஆஆஆ ஆய்ய்யோஒ மாமா அப்படிதான் மாம்ம்மம்மம் ஆஆஆஆஅ சுன்னிய விட்டு அடிமமாம் அடிமமா என்று கதற அவன் அவன் வாயாலே அவை ஒத்து கொண்டிருந்தான். சிறிது நேரம் கூதியை நக்கிவிட்டு எழுந்து சுன்னியை பிடித்து அவன் 8 இன்ச் சுன்னியை அவள் கூதி பிளவில் மேலும் கீழும் தேய்க்க அவள் ஆஆஆஆஅ மாமா மாமா மாமா …… ஆஆ ஆ ஆஅ ஸ்ஸ்ஸ்ஸ் ஹவ் ஹஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் என்று முனகிக்கொண்டே அவள் உதடுகளை பற்களால் கடித்துக்கொண்டே ம்ம்ம்ம்ம்ம்ம்ம் என்று சொல்ல அவன் சுண்ணியை வைத்து மேலும் தேய்க்க அவள் கூதி ஓட்டை விரிந்து விரிந்து மூட அவன் சுண்ணியை மெதுவாக கூதி ஓட்டையில் விட அவன் மொட்டு உள்ளே செல்ல மறுத்தது. அவள் போகாது மாமா உனது எவளோ பெரிய பூலு எப்படிமமா போகும் சென்று சொல்ல அவன் சுன்னிய மேலும் கீழும் கூதியில் வைத்து தேய்க்க சுன்னி மொட்டு மெதுவாக உள்ளே செல்ல அவன் மெதுவாக சுண்ணியை கூதியில் விட்டு விட்டு எடுக்க அவள் அப்படிதான் அப்படித்தா மாமா மாமா அடிடா மாமா அப்படிதான் என்று சொல்லி முனகினாள். அவன் விடாமல் அவள் கூதியில் வைத்து அடிக்க அடிக்க கொஞ்சம் கொஞ்சமாக உள்ளே செல்ல செல்ல அவள் வலியால் கதறினாள். ஐயோ மாமா முடியல மாமா முடியல எடுத்துடுங்க எடுத்துடுங்க மாமா என்று கதற அவன் அவள் வாயோடு வாய் வைத்து முத்தமிட்டு கொண்டே அடிக்க அது உள்ளே செல்ல திணறினாள். அவள் மெதுவாக சுண்ணியை வெளியே எடுத்து அவள் கூதியை விரித்து ஓட்டையில் வைத்து அழுத்திக்கொண்டே அவள் முலைக்காம்புகளை கடித்து இழுக்க அவள் ஆஆஆஆஅ அம்ம்மாஆஆஆ ஆஆஆஆ ஸ்ஸ்ஸ்ஸ் என்று முனக அவன் பலம் கொண்டு ;சதக்’ என்று அவள் கூதியில் வைத்து அடிக்க அவன் முழு சுன்னியும் உள்ளே செல்ல. அவள் ஆஆஆஆ ஐய்யோஓஓஓஓஓ ஆஆஆஆஅ ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் ஸ்ஸ்ஸ்ஸ் என்று கதற அவன் எடுத்து எடுத்து அடிக்க அடிக்க அவள் அப்படிதான்அடிமமா அடிமமா ..ஆஆஆஆ சூப்பராக இருக்கு மாமா …ஸ்ஸ்ஸ்ஸ் அப்படிதான் என்று சொல்ல அவன் அவள் கூதியில் வேகமாக அடிக்க அவள் கூதி கிழிந்து ரத்தம் ஒழுக அவன் அதை கவனிக்காமல் வெறிகொண்டு ஓத்து ஓத்து எடுக்க, அவள் கால்களை தூக்கி பிடித்துக்கொண்டு அவள் கூதியில் முழு சுன்னியையும்விட்டு ஓக்க ஓக்க சளக் புளக் சளக் புளக் என்று சத்தம் கேட்டது. அவன் விடாமல் அவளை ஒத்துக்கொண்டே இருந்தான். 25 நிமிடம் அவளை ஓதும் தண்ணீர் வரவில்லை. அவன் சுண்ணியை எடுத்து அவள் வாயில் கொடுக்க அவள் அதை கைகளால் மேலும் கீழும் உருவி உருவி விட அது விறைத்து கருங்காலி கட்டை போல் இருக்க அவன் அவள் கால்களை தூக்கி அவள் கூதியில் விட்டு அடிக்க அடிக்க அவள் எஸ் இஸ்ஸ் ……… சூப்பர் மாமா சூப்பர் அடிஇஇஇஇஇஇ அப்படிதான் ஆட்டி ஆடி அடிமமா … என்று கூறஅவன் வேகமாக அவன் சுண்ணியையை கூதியில் வைத்து வேகமாக அடிக்க ‘சிக்’ என்று கஞ்சியை அவள் கூதியில் விட மாமா வேண்டாம் என்று சொல்ல அவன் விடாமல் கஞ்சியை கூதியில் விட்டு அடித்தான். பிறகு அவளை அப்படியே கட்டி அணைத்து அவள் முலைகளை சப்பிகொண்டே இருக்க வெளியே வண்டி சத்தம் கேட்க இருவரும் எழுந்து வெளியே வர திவ்யா கணவன் நின்றிந்தான். அவன் திவ்யாவை அழைத்து பால் பாத்திரத்தை கழுவ சொல்ல கழுவ சென்றாள். அன்றிலிருந்து அவன் மாமனார் சுன்னி அரிப்பெடுக்கும்போதெல்லாம் திவ்யாவை ஓத்து ஒத்து ஒரு பிள்ளையை கொடுத்துவிட்டான். அந்த குழந்தை அவள் மாமனார் போலவே இருக்கிறது. இப்போது இருவரும் யாரும் இல்லாதே நேரத்தில் ஓத்து ஓத்து வருகின்றன. இவர்கள் ஓப்பது நாள்பட பக்கத்தில் இருப்பவர்களுக்கு தெரியவர அதை பற்றி அவன் மகனும் ,மனைவியும் கண்டுகொள்ளவில்லை. அவன் திவ்யாவை தனிமையில் இருக்கும் பொழுது அழைத்து முலையை பிசைவது, பால் குடிப்பது, சுண்ணியை ஊம்பவைப்பது என்று செய்து வருகிறான். அவளும் அவன் சுன்னியில் மயங்கி அவன் சொல்வதை கேட்டு மனைவி போல் திவ்யா இருந்துவருகிறாள். feedback comments : shakthi01011980@gmail.com, hangouts. Tags:kudumba kamamsex stories in tamilsex stories tamiltamil kudumba sextamil sex storiestamilkamaveritamilsextamilsexstoriesகுடும்ப செக்ஸ்தமிழ் காமவெறி
'சிறகிலிருந்து/ பிரிந்த இறகு ஒன்று/ காற்றின் / தீராத பக்கங்களில்/ ஒரு பறவையின் வாழ்வை/ எழுதிச்செல்கிறது!' -பிரமிள் Thursday, March 24, 2016 சிறுகதை: உபச்சாரம் அதொன்றும் வழக்கமான விஷயமல்ல. ராகுலனை செஃப்பே(முதலாளி) வலியக்கூப்பிட்டு “உனக்கின்னும் ஒரு கிழமை ஊர்லாப்(விடுமுறை) இருக்கு......... மேலதிமாய் இன்னும் ஒரு கிழமை தாறன்....... இந்த மாதம் நீ; வெளியில எங்காவது போக விரும்பினால் போய்வரலாம்............ ”என்றான். “ஓ........ஜா.....!” மனதுள் சந்தோஷப்பனி தூவ அதைத்தாங்கமுடியாத தவிப்புடன் ராகுலன் விசிலும் வாயுமாய் வீடுவந்து சேர்ந்தான.; இரவுமுழுதும் மனைவி லதாவுடன் பிரான்ஸ{க்குப் போவதா, இல்லை சுவிஸ{க்குப் போவதா என விவாதித்தும் ஒரு தீர்மானத்திற்கும் வரமுடியவில்லை. சுவிஸில் லதாவின் அண்ணன் குடும்பமிருக்கிறது. பிரான்ஸிலோ ராகுலனுக்கு உறவுகள் ஏராளம். கடைசியில் என்றும் போல் லதாவே வென்றுவிட எண்ணிறந்த பலகாரவகைகளாலும,; அண்ணனின் குழந்தை மயூரனுக்கு வாங்கிய ஏராளம் பரிசுப்பொருட்களாலும் டிக்கி நிரம்பி வழியவழி;ய அவர்களது கார் அஷ்டமி,நவமி, மரணயோகம், கரிநாள் தவிர்த்த ஓர் நல்லோரையில் ஷ_ரிச் நோக்கிக் கோலாகலமாய் புறப்பட்டது. எட்டு மணிநேரச்சவாரிக்களைப்போடு ஷ_ரிச்சில் அண்ணன் வீட்டுவாசலை அடைந்தும் உள்ளே அடிஎடுத்து வைக்க மேலும் நாலு மணிநேரம் நற்றவமியற்ற வேண்டியிருக்கும் என்று அவர்கள் எதிர்பார்க்கவில்லை. அண்ணனும் அண்ணியும் வேலைக்குப் போனதாக ஏப்றன் கட்டிக்கொண்டு கண்ணாடி ஜன்னல்கதவுகளைத் துடைத்துக்கொண்டு நின்ற அயல்வீட்டுக்காரி செப்பினாள். “அப்போ அவர்கள் பேபி....? ” “எங்காவது ஹோர்ட்டில் (குழந்தைகள் பராமரிப்பகம்) விட்டிருக்கலாம்!.” இவர்கள் நிலமையை அறிந்தும் சுவிஸ்க்காரி அந்நியரை அதுவும் கறுத்த வெளிநாட்டுக்காரரை தன் வீட்டுக்குள் அழைத்து உட்காருங்கோ என்று உபசரித்துவிடுவாளா என்ன....... தன்பாட்டுக்குக் கதவைச்சாத்திக்கொண்டு உள்ளே போனாள். அண்ணியும் வேலைக்குப்போய்விடுவாள்...... பகலில் யாருமிருக்கமாட்டோம் என்பதை முதலி;லேயே சொல்லித்தொலைத்திருந்தால்....... இரவு வந்துசேரும்படியாகப் புறப்பட்டிருக்கலாம். இப்படிக் கைக்குழந்தையுடன் தெருத்தூங்கவேண்டியிருந்திராது. “சுவிஸ{க்குவருகிறோம்.” என்று ரெலிபோன் பண்ணியபோதே அண்ணன் உள்ளுக்கிழுத்தது ஏனென்று இப்N;பாதான் லதாவுக்கு மெல்ல ஓடி வெளித்தது. எனினும் ராகுலனை மேலும் குழப்பவேண்டாமேயென்று சமர்த்தாயிருந்தாள். ராகுலன் லதாவைக் கல்யாணம் கட்டுவதற்கு முன் அவனை ஷ_ரிச் ரெயில்நிலையத்துக்கே வந்து காத்துக்கிடந்து வார்த்தைக்கு வார்த்தை “அத்தான்.........அத்தான்.........” என்று அன்பொழுக அழைத்து நிலபாவாடை விரிக்காத குறையாக அழைத்துப்போனதும் இN;த மைத்துனன்தான். பயணத்திற்கான ஏற்பாடுகளைக் கவனித்ததில் முதலிரண்டுநாளும் இருவருக்குமே சரியான தூக்கமில்லை. பயணத்தின்போது உட்கார்ந்தது போதாதென்று மேலும் தொடர்ந்து காரில் உட்கார்ந்திருக்;க இருக்க முதுகுத்தண்டுவடம் ஜிவ்ஜிவ்வென்றுவலித்தது. கொஞ்சம் நடந்து திரிந்தால் நல்லாயிருக்கும் போலிருந்தது. ஆனாலும் களைப்பும் அசதியும் அனுமதிப்பதாயில்லை. குளிர்வேறு. காரைச்சூடுபண்ண அடிக்கடி ஸ்ரார்ட் பண்ணவேண்டியிருந்தது. உடம்பைக்கொண்டுபோய் கட்டிலில் எப்போதான் எறிவோம் என்றிருந்தது. அவர்கள் எப்போதுதான் வருவார்கள்.......... இது எப்போசாத்தியமாகும் என்று தெரியாமல் வெட்டிக்கு வீதியில் காத்திருப்பது இரத்தஅழுத்தத்தை உச்சத்திற்குக்கொண்டுபோக குழந்தைவேறு பசியெடுத்து அலறத்தொடங்கினாள். அவளுக்குப் பால் கரைக்க வேண்டிய வெந்நீர் வேறு தீர்ந்துவிட்டிருந்தது. ஒரு ரெஸ்ரோறன்டைத் தேடிப்போய் கேட்;டபோது அவன் உள்ளே பைப்பில் பிடித்திருக்கவேணும் “ வெந்நீர் ” என்று சொல்லிக்கொண்டு வந்து கொடுத்தான். அச்சூட்டில் மா கட்டிபட்டுக் கரைய மறுத்தது. “ வேறேதாவது கடையில கேட்டுப்பார்ப்பமே..... ” என்று காரைக்கிளம்பவும் ஒருவாறாக விருந்தோம்புவார் காரும் வந்து லான்ட் பண்ணியது. ” இவ்வளவு நேரம் தெருவில் காக்கவைத்ததிற்காக ஒரு “சொறி”யாவது சொல்லவேணுமே...... ஊஹ_ம்! “ இத்தனை மணிக்கு வந்துசேர்வோம் என்று உறுதியாக முன்பே சொல்லாதது உங்களது தப்புத்தான் ” என்றார்கள். அதையிட்டு ஒருவிவாதம் நடத்த அவர்களிடம் மேலும் சக்தியில்லை. மௌனம் காத்தனர். வழியில் சாப்பிடுவதற்காகப் பண்ணிக் கொண்டுவந்த சான்ட்விச்சுகள் நிறையவே எஞ்சிக்கிடந்தன. அவை எல்லோருக்கும் இரவுச்சாப்பாட்டிற்குப் போதுமானதாக இருந்தன. லதா எடுத்துச்சென்ற விளையாட்டுச்சாமான்கள், உடுப்புகள், பட்சணங்கள் அண்ணாவின் குழந்தை மயூரனை கவர்ந்துவிட அவளுடன் ஏதோ பலகாலம் பழகியவன் ‘அத்தே அத்தே’ என்று இழைந்தான். மறுநாள் காலை அண்ணன் வேலைக்கப்புறப்பட தானும் வெளிக்கிட்டுக்கொண்டு வந்த அண்ணியார் சுகுணா லதாவுக்குச் சொன்னாள்: “ நானும் ஓரிடத்தை போகவேணும்...... வரக்கொஞ்சம் செல்லும் செல்லும். ” ஓரிடத்துக்கு என்றால்...... “அதைப்பற்றி மேலே கேளாதே” என்பதுதான் அதற்குரிய உளவியல். இது லதா அறியாததா? அவர்கள் குழந்தை மயூரனையும் இழுத்து வைத்துச் சட்டையை அணிவிக்கையில் மட்டும் லதா சொன்னாள்: “மயூரன் நிற்கட்டும் அண்ணி நான் பார்த்துக் கொள்ளமாட்டனே...... ” “ வேண்டாம் லதா அவன் பயங்கரக்குழப்படிவிடுவன், ஒருவருக்கும் அடங்கான்......... ” அதற்கு முன்N;னபின்N;ன ஒருநாளும் முகம் பார்த்திராமலேயே லதாவைக்கண்டதிலிருந்து அவன் குழைஞ்சு அவளுடன் சேர்ந்தமாதிரியைப் பார்க்க அப்படி அது அடம்பிடிக்கிற குழந்தைமாதிரியே தெரியவில்லை. இயல்பில் குழந்தைகளில் அதீதபிரியமுள்ள லதாவுக்கு மொழுமொழுவென்றிருந்த அவனுடன் விளையாடவேணும்போலவும் ஆசையாயிருந்தது. இருந்தும் அவனையும் அவர்கள் வெளியே இழுத்துக்கொண்டு போவதன் சூத்திரம் முழுவதும் அறியாமல் வற்புறுத்திக்கேட்கவும் தயங்கினாள். அவர்கள் புறப்பட்டுப் போனபின்பு குசினியுள் போய்ப்பார்த்தார்கள். நார்முடையொன்றுள் கொஞ்சம் முளைவிட்ட உருளைக்கிழங்கு, புருவமெனக் குனித்தும் வாடியும்போன ஒரு கூர்க்கன் (கெக்கரிக்காய்), ஒரு பிளாஸ்டிக் பைக்குள்(எழுதித்தான் எடுப்பித்தார்களோ?) கோழிகூடக் கொறிக்கத் தயங்கும் ஒரு சுண்டு குறுணல்அரிசி தவிர வெளியாய் வேறொரு சமைக்கக்கூடிய வஸ்த்தும் இருப்பதற்கான தடயங்கள் ஒன்றும் புலப்படவில்லை. பிறிட்ஜைத் திறந்து பார்த்தார்கள். யார்சாபமோ ஐஸ{டன் ஐஸாய் கல்லாய்ச் சமைந்துபோய் மல்லாக்கக் கிடந்தது ஒரு கோழி (அதுவும் கிறில் பண்ணுவதற்கான மலிவுப்பதிப்பு ). அதையங்கிருந்து பெயர்த்தெடுக்கக்கூடிய ஈட்டியோ, வேலன்ன ஒருபோர்க்கருவியோ, கடப்பாரையோ தென்படுகிறதா என்று தேடினார்கள். திடீரென கி.செ.துரையின் கதையொன்றில் சிவபதமடைந்த தேதி தெரியாத கோழியைச்சாப்பிட்ட ஒருவர் வயிற்றுள் கடுஞ்சமர்மூண்டு கலக்கி அவதிப்படுத்திய சம்பவம் ஞாபகம் வரவும்......... அந்த எண்ணத்தை அதிலேயே போட்டுவிட்டு ஆபைசழள ஆயசமவ தேடிப்போய் ஆட்டிறைச்சி மற்றும் சாமான்கள் வாங்கிவந்து சமைத்துச் சாப்பிட்டார்கள். மாலையானதும் அண்ணன்குடும்பம் வந்து சேர்ந்தது. சாப்பாடானதும் அண்ணன் செற்றிக்குள் சாய்கோணத்தில் இருந்துகொண்டு ராகுலனிடம் ஜெர்மனியில் தனிநபர் வருமானம், சேமிப்பு சாத்தியஅசாத்தியங்கள், நடப்பு வட்டிவீதங்கள், மற்றும் அத்யாவசிய நுகர்ச்சிப்பண்டங்களின் விலைதலைகள் பற்றி உசாவினார். பின்னொரு கோழித்தூக்கம் போட்டார். அலாம் வைத்தது போல் ஏழு மணிக்கு எழும்பி பாத்றூம் போனார். பின் ஜாக்கெட்டை மாட்டினார். “எனக்கு ஒரு அலுவலிருக்கு வெளியில.” என்று வெளியேறியவர்தான் எல்லாரும் படுக்கைக்குப்போனதன் மேல் பதினொருமணிக்கு வந்து பூனைமாதிரி ஓசைப்படாமல் மாடியேறிப் போனார். மறுநாளும் இதே செயன்முறைகள் நேரசூசிகை போட்டதுபோல் நடந்தேறின. ஆனால் அண்ணியார் சுகுணாமட்டும் கொஞ்சம் மாற்றி தான் தையல்கிளாஸ{க்குப் போவதாகச் சொன்னாள். மூன்றாம்நாள் காலை புறப்படமுதல் அண்ணியார் லதாவிடம் சொன்னாள் : “ மயூரனை கின்டர் ஹோர்ட் ஒன்றில கொஞ்சநாளாய் விடுகிறனாங்கள்........ புதுசில தனிய நிக்கிறானில்ல அழுகிறான்....... அதுதான் நானும் போய்க்கூட நிக்கிறனான்........தனிய நிற்கப்பழகிட்டனென்றால் நானுமெங்கையென்டாலும் பார்ட் டைம் ஜொப்புக்குப் போகலாமென்றார் இவர்......... அவரும் தனியாளாய் அடிச்சு என்னத்தைத்தான் மிச்சம் பிடிக்கிறது இந்த நாட்டில இருக்கிற விலைவாசியி;ல...... ” அன்று மாலை அவர்கள் வந்திறங்கக்கூடிய நேரந்தான்....... ரெலிபோன் அடிக்கிறது. எடுப்பதா விடுவதா என்று லதா குழம்பவும்..... மீண்டும் மீண்டும் மீண்டும் அடிக்கிறது. ராகுலன் சொன்னான் “போய் எடும் சிலவேளை கொண்ணனாய்கூட இருக்கலாம் ” போய் எடுத்தால் மறுமுனையில்......... “குறுய்ஸ் கொட்..... நான் சூசாரா.... மன்னிக்கவேணும் அப்போது உன்னிடம் உறுதிப்படுத்திக்கொள்ள மறந்துவிட்டேன்..........துகுணா........ நீ முன்னர் ஒத்துக்கொண்டபடி அடுத்த வார இறுதிநாட்கள் இரண்டும் என்னுடைய ஷிப்ட் வேலையையும் சேர்த்துச்செய்வாய்தானே....?” (வியட்னாமோ தாய்லாந்துக்காரி....... வார்த்தைகளை நசித்தும் சப்பியும் மழலை பேசினாள்.) “மன்னிக்கவேணும் நான் சுகுணாவல்ல..... அவர் வீட்டுவிருந்தாளி. இது சுகுணா வாறநேரந்தான் நீங்கள் அவர் வந்த பிறகு பேசுவது நல்லது. குறுய்ஸ் கொட்.....! ” சுகுணா அண்ணனைத் திருமணம் செய்தாலோ செய்யாமலிருந்தாலோ நெருங்கிய உறவுக்காரியாதலால் தங்களை ஏகமாய் வரவேற்பாள், உபசரிப்பாள், வாஞ்சையாய் பாந்தமாய் இருப்பாள், கதைப்பாளென்று எண்ணி எதிர்பார்த்து வந்த லதாவுக்கு அவள் ஏதோ கடன்காசைக் கேட்கப் போயிருக்கிறவர்களிடம் பேசுவதுமாதிரி; முகங்கொடுக்காமல் கதைக்கிறதும் திருப்பிறதும் பெரும் ஏமாற்றமாயும் அவமதிப்பாயுமிருந்தது, ஆனாலும் ராகுலனிடம் வெளியாகச் சொல்லமுடியவில்லை. வெளியில் போயிருந்த அவர்கள் வீடு திரும்பவும் லதா அண்ணியாரிடம் சொன்னாள்: “சூ....சாரா என்று யாரோ போன் எடுத்தார்கள் ” திடீரென்று அவள் முகம் கலவரமாகியது. மறைத்துக்கொண்டு ஆனால் குரலில் சற்றுப்பதட்டத்துடன் கேட்டாள்: “எ...எ..எ.என்னவாம்..........? ” “எனக்கு அவள் பேசிய சுவிஸ்ஜெர்மன் ஒண்டும் விளங்கேல்லை...... எதுக்கும் நீங்கள் வந்தாப்போல எடுங்கோ என்றன்...வைச்சிட்டாள்”; என்ற பிறகுதான் அவளுக்கு மூச்சு வந்தது. உதட்டை வலிந்து மலர்த்தி எமது தலைவி சந்திரிகாவைப் போலொரு சிரிப்பை உதிர்த்துவிட்டு“ என்னோட தையல்கிளாஸ{க்கு வாற ஒரு தாய்லாந்துப்பிள்ளை..”என்றாள். நாலாம்நாள் மாலை அண்ணன் சாப்பிட்டபின்னால் பான்பராக் போட்டுக்கொண்டு கோழித்தூக்கம் போடமுதல் திருவாய்மலர்ந்தார். “ஜெர்மனியைப்போல இல்லை..... இஞ்சை........ கண்டகண்டபாட்டுக்கு ஆக்களைப் பிடிச்சு அனுப்பிறாங்கள்....... நீங்களும் அறிஞ்சிருப்பியள்தானே............. எந்த நேரமும் விசாக்காட்டைப் பிடுங்கிக்கொண்டு ஊருக்கேத்திற நிலமை எங்களுக்கும் வரலாம்........ முந்தி உளைச்சதுகளை அப்பிடியே வீட்டுக்குக்குடுத்தன்........ அடுத்தவளுக்குச் சீதனங்கொடுத்தன்........ லதாவைக்கூப்பிட்டன் கையிருப்பு காலி. இனிமேற்கொண்டு பார்ட் டைம் ஜொப் ஏதாவது பண்ணிக்கிண்ணினால்த்தான் நாலு காசைப்பார்க்கலாம் அதுதான் இப்ப கொஞ்சநாளா பின்னேரத்தில பார்ட் டைம் ஜொப்பொன்றுக்குப் போறனான்............. ” ராகுலனுக்கு அவர் கையிருப்பை அறிவதில் ஓரு சுவாரஸ்யமுமில்லை. அவன் பேச்சில் அசிரத்தையாய் முகட்டைப் பார்த்துக்கொண்டிருந்தான். அண்ணாச்சி தொடர்ந்தார்.......... “அங்கை சமையலெண்ணை லீற்றர் ஒண்டரை மார்க்கென்றியள்.........இஞ்ச லீட்டர் அஞ்சு பிராங்கெல்லே..........வரேக்க மட்டும் உந்தப்பெரிய கொம்பியில பத்து லீற்றர் கேசில ஒரு பத்து அடிச்சந்திருந்தா....... சும்மா ஐநூறு மார்க் வெளிச்சிருக்கும்.......... ” (ராகுலன் மனதுள் -யாருக்கு.....?-) கதை மீண்டும் பொருண்மியத்திக்கிலே செல்ல அறுவை தாங்காமல் ராகுலன் கேட்டான்: “உங்கடை ஷ--_ரிச்சில என்னதான் விஷேசம்........ அதைச்சொல்லுங்கோ......... ” “ விஷேசமெண்டு......?- ” “இங்க யாரும் ரூரிஸ்ட்டுக்கள் வந்தால் என்னத்தைப் போய்ப்பார்க்கிறவை....? ” “ நானூறு கிலோ மீட்டர் தள்ளி..........ஜெனீவா என்றால் யூ.என்.ஓ கட்டிடத்தைச்சொல்லலாம்......... இஞ்சை ஒரு நூற்றைம்பது இருநூறு கிலோமீட்டரில ஒரு சேர்ச் இருக்காம் ........எங்கட சனமும் சிலது போறது......... வடக்கை ஷெளகவுசனில ஒரு நீர்வீழ்ச்சியிருக்காம்.......... நானென்றால் இதொண்டுக்குமின்னும் போகேல்ல.........இருக்கிற வேலைக் கரைச்சலுகளுக்கை எங்களுக்கெங்கால நேரம்.........? ” லதா ஆற்றாமல் கேட்டாள்: “அப்ப ஒரு ஆபத்து அந்தரத்துக்குத்தன்னும் உங்களுக்கு லீவு எடுக்கேலாதோ அண்ணை? ” “இப்ப மற்ற வேலைக்குத்தான் லீவெடுத்தாலும்....... பார்ட் டைம் வேலைக்கு எடுத்தேனென்டால் எங்கையெண்டிருக்கிற நம்ம சனமே ஓடிப்போய் புகுந்திடும்.......... பிறகு கோவிந்தாதான்...........கிறிஸ்மஸ் லீவுக்கை வந்திருந்தியளெண்டால் சோக்காய் எல்லாம் பார்த்திருக்கலாம்........ ” (ராகுலன் மனதுக்குள் “ இதுதான் ஸ்னோ மலையாய் கொட்டிக்கிடக்கு பார்.......- ” என்றிருப்பான்.) இவர்கள் ஒரு நாளாவது லீவு போட்டுவிட்டு தம்மோடு சந்தோஷமாக நிற்பார்கள் அல்லது ஏதாவது ஒரு இடத்திற்குக் கூட்டிப்போவார்கள் என்ற நம்பிக்கை அறவே பொய்த்து இவர்களது -பொருள் முதல் உலகம்- வேறென்பதும் புரிந்து போயிற்று. சடுதியான காலநிலை மாற்றம் ஒத்துக்கொள்ளவில்லையோ என்னவோ லதாவின் குழந்தைக்கு பகல் முழுவதும் லேசாக உடம்பு காய்ந்தது. பின்னேரமும் கொஞ்சம் சிணுங்கிக்கொண்டிருந்தாள். மயூரனுக்கும் காய்ச்சல் தொற்றிக்கொண்டுவிடும் என்ற பயத்தில்போலும் அண்ணனும், அண்ணியும் மாலை முழுவதும் மாடியில் இருந்த தம்படுக்கையறையே கதியென்று கிடந்தார்கள். கீழிறங்கவேயில்லை. அண்ணன் பார்ட் டைம் வேலைக்குப்போய்வந்து மீண்டும் கடுவன் பூனைமாதிரி; மாடிக்கு ஏறிப்போனான். அண்ணி குசினிக்குள்ளிருந்து சாப்பாடு எடுத்துக்கொண்டு போய் அவனுக்குக் கொடுத்தாள். ஒரு சம்பிரதாயத்திற்குக்கூட அவர்களை “என்ன..... குழந்தைக்கு இப்ப எப்பிடியிருக்கு....?” என்று விசாரிக்கவில்லை. லதாவும் தன்னுள் உதிர்ந்து போயிருந்தாள். ராகுல் தன் குடும்பத்தைப்பற்றி அவர்கள் விருந்தோம்பும் பாங்குபற்றி மிகமட்டமாக எடைபோடப்போகிறான் என்ற பயத்தில் மௌனம் காத்தாள். ராகுலுக்கும் அவர்கள் போக்கால் அங்கே மேற்கொண்டு தங்க அதைரியமாகவும், கூச்சமாகவும் இருந்தது. இரவுமுழுவதும் குழந்தை அடிக்கடி சற்றே கண்ணயர்வதும் பின் எழும்பி அழுவதுமாயிருந்தது. இருவரும் மாறிமாறி தோளில் தூக்கிப் போட்டுக்கொண்டு சிறிய கூடத்திலும் ஆளோடியிலும் உலாத்தினார்கள். குழந்தையின் அழுகையில் அண்ணன்காரனுக்கு வந்த உறக்கம் கலைந்து கலைந்து போனது, சினமுண்டானது. அடுத்த தடவை தூக்கம் கலைந்தபோது எரிச்சலுடன் எழும்பி வெளியேவந்து மாடிப்படியில நின்று அதட்டினான். “ ஏய்........ லதா உந்தப்பிள்ளையைக் கொஞ்சம் அழாமல்தான் பாரன்....... மனுஷர் விடியவேலைக்குப் போகவேணுமல்லே.......- ” “பிள்ளைக்குச்சாடையாய் மேல் காயுது அண்ணை... அதுதான் அழுகிறாள்.... ” "சுகமில்லையெண்டால் நேரத்தோட டொக்டரிட்டை காட்டியிருந்திருக்கலாமில்லை! ” அற்பப்பயலே அவர்கள் உனது விருந்தினர்கள். நீயல்லவா டாக்டரிடம் கூட்டிப்போயிருக்க வேணும். “ பராசெற்றோமோல் ஒன்று குடுத்திருக்கிறன்...... தணியுதோ பார்ப்பம்....” “ என்ன குடுத்தியோ....... இனியும் கத்தினால் மயூரனும் எழும்பி வாசிக்கத்தொடங்கிடுவான்........ பிறகெனக்கு வெளியில குதிக்கிறதைத்தவிர வேறை ஒண்டுஞ்செய்யேலா...........” பிள்ளையே பெற்றுக்கொள்ளாதவன் மாதிரி அவன் பொழிந்துவிட்டு உள்ள போகவும் ராகுலன் லதாவின் காதில் மெல்ல ஆனால் உறுதியான குரலில் சொன்னான்: “நாங்கள் உறவென்று நம்பி பிழையான இடத்துக்கு வந்திட்டம்............ இப்ப பிள்ளைக்குச் சட்டையைப் போட்டிட்டு...... நீரும் உடன வெளிக்கிடுறீர். இதுக்கு மேலயுமிங்கை ஒரு நிமிஷந்தன்னும் என்னால தங்கேலாது......... ” லதா ஒரு மறுப்பும் சொல்லவில்லை. அவனோடு ஓசைப்படாது வெளிக்கிட்டாள். குழந்தையின் சாமான்கள் எல்லாம் சரிதானாவென்று இன்னொருதரம் சரிபார்த்துவிட்டு தம் சூட்கேஸ்களைத் தூக்கிக் கொண்டு மெதுவாய் வெளியேறிக் கதவைச்சாத்தினார்கள். காரில் போய் அமர்ந்த பின்புதான் இயல்பாக மூச்சேவிடவே முடிந்தது. நிம்மதி உண்டானது. கார் சுவிற்சலாந்து-ஜெர்மனி எல்லை நகரமான பாசலை அண்மிக்கவும் மலைகளும், அதன் சாரலில் அமைந்திருந்த அழகழகான வீடுகளும,; பள்ளத்தாக்குகளும், தூரிகையால் இழுத்துவிட்டது போலிருந்த நதிகளும், பாலங்களும், சுரங்கப்பாதைகளும்; மறைந்து விடை பெற்றன. சமதரையிலான விரைவுசாலையில் மணிக்கு 120 கி.மீ வேகங்கொள்ள அனுமதித்திருந்தார்கள். எதிர்த்திசையில் ஆபிரிக்க இறக்குமதியான வெள்ளாடுகளை நிறைத்துக்கொண்டு வேகமாக வந்த பாரவுந்தொன்று அவர்களது காரையும் சற்றே குலுக்கிவிட்டு சுவிஸ் நோக்கி அம்புருவிப்பறந்தது. சற்றே பயந்துவிட்ட லதா சொன்னாள்:- “கண் மண் தெரியாதமல் அவன் பறக்கிற வேகத்தைப்பார்த்தியளே........?” “எல்லாம் கொண்ணன் கோவிச்சுக்கொள்ளப்போறாரெண்ட பயத்திலதான்........” “என்ன அண்ணை கோவிக்கப்போறாரெண்டோ....... என்னப்பா சொல்லுறியள்.......? ” “அதெல்லாம் அவர் எங்களுக்காக ஓடர் பண்ணின ஆடுகளல்லே....... அதுதான் விருந்துக்கு லேட்டானால் கொண்ணை கோவிச்சுக்கொள்ளப்போறாரேயெண்டு கிலியில பறக்கிறான்.......” சுவிஸ் நோக்கிக் கார் திரும்பியதிலிருந்தே சிரிப்பைத் தனியாகவே கழற்றி வைத்திருந்த லதா கண்களில் நீர் முட்டும்வரை கனிந்து குலுங்கிச்குலுங்கிச் சிரித்தாள். “என்னவோ தெரியாதப்பா அண்ணை முந்தி முந்தியிப்படியில்லை..... இப்ப சரியாய் மாறித்தான் விட்டார். அண்ணியோட சேர்ந்து எதுக்கெடுத்தாலும் , ஒரு இடத்தை போறம், ஒரு சாமான் வேண்டவேணும், ஒரு ஆக்கள் தந்தவை, ஒரு பகுதி வரும், ஒரு அலுவலிருக்கு......... என்று சஸ்பென்ஸ் வைத்துத்தான் கதைக்கிறார். ” “அது சஸ்பென்ஸ் மாத்திரமில்லை... மற்றவர்களை நாங்கள் ஒரு இடைவெளியோடதான் வைத்திருக்கிறம் என்கிறதின்ற படிமம் அது..! ” அண்ணாச்சி அவர்கள் வீடு தேடிவந்து “ நாங்கள் வேலைப்பழுவில உங்களைச் சரியாய் உபசரிக்காம விட்டிட்டம்....... மன்னிச்சுக்கொள்ளுங்கோ.” என்று வந்து சாஷ்டங்கமாய் காலிலெல்லாம் வீழ்ந்துவிடப்போவதில்லை. ஆனால் சிலவேளை சொல்லிக்கொள்ளாமல் வந்ததுக்காக ரெலிபோனில் ஏதாவது பெனாத்தலாம். வீட்டுக்கு வந்ததும் முதலில் ரெலிபோன் இணைப்பைப் பிடுங்கிவிட்டார்கள். குழந்தையை டாக்டரிடம் கொண்டுபோய்க் காட்டியதில் அன்று மாலையே காய்ச்சல் சுகமாகித் தவழ்ந்தோடித்திரிந்தது. மறுநாள் மாலை தோட்டத்தில் சாய்வுகதிரையைப் போட்டுக்கொண்டு ராகுலன் ஹேர்மன் ஹெஸ்ஸவின் சித்தார்த்தாவை வாசித்துக்கொண்டிருக்கையில் அங்கே சிற்றுண்டியும் சேமியாப்பாயாசமும் கொண்டு வந்த லதாவைக்கேட்டான்: “ ஊர்லாப்தான் இன்னும் ஒரு கிழமை இருக்கே.... பாரீஸுக்குப் போவமே.....? ” அப்போ அவனை லதா மேற்கண்ணால் பார்த்த ஓர் பார்வையிருக்கே.........ச்சொச்சொச்சொ! நாங்கள் மெல்ல மாறுவோமே.. ராகுலன் அதை தனியே ரசிக்கட்டும். -திரு. பொ. கருணாகர மூர்த்தி Thanks :En Puthu Veedu இடுகையிட்டது Jesslya Jessly நேரம் 12:03 No comments: Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest Newer Posts Older Posts Home Subscribe to: Posts (Atom) மனதைக்கவர... கேள்வி-பதில் *மதம் என்பது, மக்களின் புரட்சி எண்ணங்களை மங்கச் செய்யவும், அரசு இயந்திரத்திற்கெதிரான அவர்களின் புரட்சியை தடைசெய்யவுமே தோற்றுவிக்கப்படுகிறது என்பது பொதுவான கருத்து. ஆனால், மதத்தை தோற்றுவிக்கும் செயல்பாடு என்பது ஒரு தனிநபரின் பெரும் முயற்சியாக இருக்கிறது. மத ஸ்தாபகரின் முயற்சிகளுக்கு பின்னணியில் இருந்து பல சக்திகள் ஆதரவு அளிக்கலாம்தான். ஆனால், ஒரு மதம் தோன்றும்போது, அது ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் மதங்களால் பல இன்னல்களுக்கு ஆளாகிறது. பஹாய் எனும் ஒரு மதம் 19ம் நூற்றாண்டில் ஈரான் நாட்டில் வடிவம் எடுத்து வந்தபோது, இஸ்லாமிய மதத்தினால் பெரும் துன்பத்திற்கு ஆளானது. அதன் ஸ்தாபகர் பஹாவுல்லா என்பவர். இப்படி ஒரே நோக்கத்திற்காக உருவாகும் மதங்களுக்குள் எதற்காக இந்தப் போட்டி? அந்தப் போட்டியை உருவாக்குபவர்கள், அந்த மதங்களுக்கு தலைமையேற்கும் மதகுருக்களே. அரசு அமைப்பின் பிரதிநிதிகளாக இருக்கும் அந்த மதகுருக்கள் ஏன் இந்த மோதலை உருவாக்குகிறார்கள்? சமரசம் செய்துகொண்டு செல்லலாமே? பழைய மதத்திலிருந்து புதிய மதத்திற்கு மாறிக் கொள்ளலாமே? தொழில் ஒன்றுதானே?மேலும், ஒரு மதத்தின் ஸ்தாபகர், தன் வாழ்நாளை செலவழித்து, இப்படியொரு கடினமான பணியைச் செய்ய வேண்டிய அவசியமென்ன? அவர்களுக்கு, இதைத் தாண்டி வேறு லட்சியங்களும் உண்டா? அரேபிய வணிகரான முகமது, கதீஜாவின் மூலமாக கிடைத்த சொத்தை அனுபவிப்பதை விட்டுவிட்டு, பல்வேறு கடின முயற்சிகளின் மூலமாக ஒரு மதத்தை தோற்றுவிக்க வேண்டிய அவசியமென்ன? அவர் இறந்த பிறகு, ‍அதைப் பார்க்கப் போகிறாரா என்ன? எனவே, மதங்கள் எதற்காக, எந்த அடிப்படையில் உருவாக்கப்படுகின்றன? அவற்றின் மூலங்கள் என்ன? அவற்றின் தொடர்புகள் என்ன? என்பது குறித்து எனக்கு விரிவான விளக்கம் தேவை.எனது கேள்வியானது சற்று குழப்பமாகவும் இருக்கலாம். ஆனாலும், கேள்வியை மீண்டும் மீண்டும் படித்து, புரிந்துகொண்டு பதிலளிப்பீர்கள் என்று நம்புகிறேன் தோழரே. தங்கள் பதிலை விரைவில் எதிர்பார்க்கிறேன். நீங்கள் கேட்டுள்ளது மிகச் சிறந்த கேள்வி என எண்ணுகிறேன். மதங்களைப் பற்றிய இந்த உங்களின் கேள்விக்கான பதிலை கடவுள் நம்பிக்கைக்கும் மதத்துக்கும் இடையிலான வித்தியாசத்தைக் கூறுவதிலிருந்து தொடங்குவது பொருத்தமாக இருக்கும்.பொதுவாக எல்லோரும் நினைத்துக் கொண்டிருப்பது போல் கடவுள் நம்பிக்கையும் மதமும் ஒன்றல்ல. கடவுள் நம்பிக்கை காலத்தால் முற்பட்டது மதம் பிற்பட்டது. இயற்கையின் மீதான அறியாமை, மரணத்தின் மீதான் பயம், பதைப்பு ஆகியவையே கடவுள் நம்பிக்கைக்கான தோற்றுவாய். மதம் என்பது அரசு உருவான பின்பு குறிப்பிட்ட ஒரு சமூகத் தேவை காரணமாகவோ, தேவையின்மையை அகற்றும் காரணமாகவோ அரசுக்கு ஆதரவாகவோ எதிர்ப்பாகவோ தோற்றம் பெற்றது. இரண்டையும் தனித்தனியே பிரித்துப் பார்த்து புரிந்து கொள்வது மதங்களைப் பற்றிய புரிதலுக்கு இன்றியமையாதது.உலகின் எந்த மதமும் தனியொரு மனிதரால் உருவாக்கப்பட்டவை எனக் கொள்வது மாத்திரைக் குறைவானதாகவே இருக்கும். நீங்கள் கூறும் பஹாய் என்பது தனி மதமல்ல, இஸ்லாத்தின் ஒரு பிரிவு. இதற்கு எதிராய் இஸ்லாத்தின் சன்னி, ஷியா பிரிவு மதவாதிகள் கூறுவதை பொருட்டாய் எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியமில்லை. இஸ்லாம் குறித்து பார்த்தால் இஸ்லாம் முகம்மதால் உருவாக்கப்பட்டதல்ல. அவர் நிறுவியது ஓர் அரசைத் தான். இஸ்லாம் முகம்மதின் மரணத்திற்குப் பிறகே உருவாக்கப்பட்டது.சமூகத்தில் உருவாகும் அனைத்திற்கும் அடிப்படைக் காரணமாக இருப்பது உற்பத்தி முறையே. இதனை மார்க்சியம் அடிக்கட்டுமானம் என்கிறது. இந்த அடிக்கட்டுமானத்தில், உற்பத்தி சக்திகளுக்கிடையில் ஏற்படும் முரண்பாடுகளை தீர்க்க ஏற்படுத்தப்படும் வடிவங்கள் எல்லாம் மேற்கட்டுமானம் ஆகிறது. அந்த வகையில் மதம் என்பது ஒரு மேற்கட்டுமான அமைப்பு. தனிப்பட்ட முறையில் ஒவ்வொரு மதத்தையும் ஆராய்ந்து பார்த்தால் அவை சமூகத்தில் நிலவிய ஏதாவது ஒரு சிக்கலுடன் தொடர்புடையதாகவே இருக்கும். எனவே, மதம் என்பது அதன் தோற்ற அடிப்படையில் சீர்திருத்த நிகழ்வாகவே இருக்கிறது.ஆகவே, மதம் என்றாலே அது புரட்சிகர எண்ணங்களை மழுங்கடிப்பதற்காக தோற்றுவிக்கப்பட்டது என புரிந்து கொள்வது தட்டையான புரிதல். எடுத்துக்காட்டாக ரோமனிய மன்னர்களும் திருச்சபைகளும் இணைந்து நிலப்பிரபுத்துவத்தின் கடைசிக் காலத்தில் மக்களுக்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்த போது அதை எதிர்த்து புரோட்டஸ்டாண்ட் பிரிவு தோன்றியது. பார்ப்பனிய மதம் விவசாயத்துக்கு உற்றதுணையாக இருந்த மாடுகளை தின்று தீர்த்துக் கொண்டிருந்த போது அதற்கு எதிராக பௌத்தம் கொல்லாமையை பேசியது. இந்நிகழ்வுகளை மார்டின் லூதருடனும், கௌதம சித்தார்த்தனுடனும் மட்டுமே இணைத்துப் பார்க்க முடியுமா? அந்தக் காலகட்டத்தின் புரட்சிகர எண்ணங்களை அவர்கள் தங்கள் வாயிலாக வெளிப்படுத்தினார்கள்.அதேநேரம் மதங்கள் தங்கள் இயல்பில் ஆளும் வர்க்கங்களுக்கு ஆதரவாகவே செயல்படுகின்றன. இதை எப்படி புரிந்து கொள்வது? எந்த ஒரு கோட்பாடும் அது தோன்றிய காலகட்டத்துக்கு மட்டுமே புரட்சிகரமானதாக இருக்கும். சமூகத்தில் மாற்றம் நேரும் போது அதை பிரதிபலிக்கும் கோட்பாட்டிலும் மாற்றம் தேவைப்படுகிறது. அவ்வாறான மாற்றம் நேராத போது, அல்லது சமூகத்துக்கு தேவையற்ற காலத்தில் மாற்றங்கள் நேருகின்ற போது அந்தக் கோட்பாடு தேங்கிப் போகிறது. எந்த ஒரு அரசானாலும் அதன் தவிர்க்கவியலாத குணமாக இருப்பது, நிலவுகின்ற உற்பத்தி முறையில் எந்த மாற்றமும் நேர்ந்து விடாதவாறு பாதுகாப்பது. உற்பத்தி உறவுகளுள் முரண்பாடு தோன்றும் போது அது நிலவும் உற்பத்தி முறையை தாக்கிவிடக் கூடாது என்பதற்காக உற்பத்தி உறவுகளான மக்களை மழுங்கடிக்க அரசு செய்யும் பல்வேறு உத்திகளில் மதம் – தேக்கமடைந்து மாற்றங்களுக்கு முகம் கொடுக்காத மதம் – முதன்மையானதாக இருக்கிறது. இது தான் அரசுகளுக்கும் மதங்களுக்கும் இடையேயான பிரிக்க முடியாத பிணைப்பு. மதங்களை மக்களிடம் நிலை நிறுத்துவதற்கு தேவையான இன்றியமையாத கச்சாப் பொருள் தான் கடவுள் நம்பிக்கை.ஆக, மதம் என்பதை அடிக்கட்டுமானம், மேற்கட்டுமானத்திற்கு உட்படுத்தி பார்க்கும் போது மட்டுமே நம்மால் துல்லியமாக புரிந்து கொள்ள முடியும். மதங்கள் அந்தந்த காலகட்டத்தின் தேவையை ஒட்டியே பிறந்திருக்கின்றன. இதை தனி ஒருவரால் முன் திட்டமிட்டு தொடங்கியிருக்க முடியாது. இருப்பினும் மதங்களின் தோற்றத்தில் தனி மனிதர்களின் பங்களிப்பை குறைத்து மதிப்பிடவும் முடியாது. சமூகத்தின் தேவையை முழுமையான அம்சமாக கொண்டால் தனிப்பட்ட மனிதர்களின் பங்களிப்பை குறிப்பிட்ட அம்சமாக கொள்ளலாம்.மதங்களின் தோற்றங்களின் போது தனிப்பட்ட மனிதர்களின் பங்களிப்புக்கு வேறுசில நோக்கங்கள் இருந்திருக்கலாம். இஸ்லாம் எனும் மதத்தை எடுத்துக் கொண்டால் முகம்மதின் நோக்கம் மூன்று பிரிவாக இருந்த மக்களை ஒருங்கிணைத்து ஒரு அரசை தோன்றுவிக்க வேண்டும் என்பது மட்டுமே. அந்த அரசுக்கு வாரிசுகள் யார் எனும் குழப்பத்தை முடிவுக்கு கொண்டுவரும் தேவையே இஸ்லாம் எனும் மதமாக உருத்திரண்டது. கிருஸ்தவத்தை எடுத்துக் கொண்டால் இயேசுவின் – இவர் உலகில் வாழ்ந்த ஒரு மனிதரா? இல்லையா என்பது வேறு விசயம் – நோக்கம் அடிமைகள் மீதான இரக்கமாக இருந்தாலும், பவுலின், அப்பலோஸ்தர்களின் நோக்கம் அடிமைகளின் எழுச்சியை மட்டுப்படுத்தி மன்னனுக்கு கீழ்ப்படிய வைப்பதே.எந்த விதத்தில் பார்த்தாலும் மதங்கள் என்பவை மக்களின் தேவைகளோடு தொடர்பு கொண்டவைகளாகவே இருந்திருக்கின்றன. நேர்மறையாகவோ எதிர்மறையாகவோ மக்களின் துயரங்களுக்கான வடிகால்களாக இருந்திருக்கின்றன. அதேநேரம் மக்களை துயரங்களைத் தீர்க்கும் அறிவியல் ரீதியான தீர்வு எது எனும் பார்வையை மதங்கள் கொண்டிருக்க முடியாது. இதனால் தான் மார்க்ஸ் மதம் மக்களுக்கு அபினியாக இருக்கிறது என்பதோடு இதயமற்ற உலகின் இதயமாகவும் இருக்கிறது என்பதையும் சேர்த்துச் சொன்னார். விலங்குகளுக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது. மனிதனின் தொடக்க காலங்களில் கடவுள் நம்பிக்கையோ, மதவழிப்பாடோ இல்லாமல் இருந்ததைப் போல இனி வருங்காலத்திலும் மதமும் கடவுள் நம்பிக்கையும் இல்லாமல் போகும். *அண்மையில் இணையத்தில் உலாவியபோது தற்செயலாக ‘1969ல் அமெரிக்கர்கள் சந்திரனில் சென்று இறங்கியது பெரும் மோசடி’ என்று ஆதாரங்கள் பலவற்றைச் சுட்டிக்காட்டி விளக்குவதைப் பார்த்தேன். அவர்கள் நிலவில் சென்று இறங்கவேயில்லை என்றும் இறங்கியதாக காண்பிக்கப்படும் படங்கள்,சலனப்படங்கள் அனைத்தும் ஸ்டூடியோக்களிலே சித்தரிக்கப்பட்டவை என்றும் கூறுகின்றனர். அப்பலோ 11 இறக்கம் பற்றிய உத்தியோகபூர்வ ஒளிப்படங்களில் தரையிறங்கிய விண்கலத்தின் நிழலும் விண்வெளி வீரர்களின் நிழலும் வேறுவேறு கோணங்களில் விழுவது. சலனப்படத்தில் அமெரிக்கக்கொடி நிலவில் நடப்படும்போது காற்றிலசைவது போல அசைவது.. விண்கலத்தின் பாதங்களில் சந்திரத்தரையிறங்கலுக்கான சிறு தூசுகூடப்படியாமல் சுத்தமாக இருப்பது.. வானிலே நட்சத்திரங்கள் இல்லாமல் இருப்பது.. என்று ஏகத்துக்கு அடுக்கிக் கொண்டேயிருக்கின்றார்கள். அவர்கள் கூறுவதைப் பார்த்தால் அதை நம்பவும் முடியவில்லை நம்பாமல் இருக்கவும் முடியவில்லையே ? ஒருவேளை அன்றைய சோவியத் யூனியனை மிஞ்சிக் காட்ட வேண்டும் என்ற அவசரத்தில் அவகாசம் போதாமல்தான் மோசடியாக சித்தரித்தார்களா? அப்படியானால் அது எத்தனை பெரிய ஏமாற்று? எது உண்மை என்று கூறுவீர்களா.. ஆம். இப்படி ஒரு செய்தி முன்பிருந்தே உலவிக் கொண்டுதான் இருக்கிறது. நிலவில் தரையிறங்கவே இல்லை என்பதற்கு என்னென்ன காரணங்கள் கூறுகிறார்களோ, அது எப்படி பொருத்தமாக இருக்கிறதோ அதேபோல் அமெரிக்கா அந்தக் கேள்விகளுக்கு கூறிய பதிலும் பொருத்தமாகவே இருக்கிறது. எடுத்துக்காட்டு, நிலவில் காற்றில்லை ஆனால் நட்ப்படும் அமெரிக்க கொடி அசைகிறதே எப்படி? இதற்கு அவர்களின் பதில், நடப்படும் போது உண்டாகும் பௌதிக அசைவு, அதை தடை செய்வதற்கான காற்று போன்ற ஊடகங்கள் இல்லாததால் நீண்ட நேரத்திற்கு இருக்கும் என்பது. இதுவும் அறிவியல் ரீதியில் சாத்தியம் தான். ஆனால் அன்றைய நேரத்தில், சோவியத் யூனியனுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே விண்வெளி வெற்றிகளைச் சாதிப்பதில் பெரும் போட்டியே நிலவியது. அதில் சோவியத் யூனியன் முன்னணியிலும் இருந்தது. நிலவில் மனிதனை தரையிறக்கும் திட்டமும் அதற்கான பணிகளும் நடைபெற்றுக் கொண்டிருந்தன. இந்த விசயத்தில் சோவியத் யூனியனை முந்திக் காட்ட வேண்டும் எனும் முனைப்புடன் அமெரிக்கா செயல்பட்டுக் கொண்டிருந்தது. இந்த வேளயில் தான் 1969ல் அமெரிக்க மனிதனை நிலவில் தரையிறங்க வைத்தது. இது அந்த நேரத்தில் புதிய அறிமுகமான தொலைக்காட்சிப் பெட்டியில் ஒலிபரப்பாகி உலகமெங்கிலுமிருந்து பார்த்தார்கள். அதனால் நேரில் பார்த்த ஒன்றை சந்தேகிக்கும் எண்ணம் அந்த நேரத்தில் பெரும்பாலும் ஏற்படவில்லை. ஆனால் சோவியத் யூனியனின் லூனார் லாண்டிங் சிஸ்டத்தை பிரிட்டன் உதவியுன் திருடித்தான் அமெரிக்கா இதை சாதித்தது என்று பின்னர் நிரூபிக்கப்பட்டது. என்றாலும் அமெரிக்கா நிலவில் தரையிறக்கியது குறித்த சர்ச்சை இன்னும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. தெளிவான முடிவு இல்லை. பொதுவாக இது போன்ற விண்வெளி ஆய்வுகள் மக்களின் உயர்வுக்கு உதவும் விதத்தில் செய்யப்படுவது இல்லை என்பதால் அவைகளை புறக்கணித்து விடலாம். ஆனால் அவ்வாறான ஆய்வுகளுக்கு செலவிடும் பணம் மக்களின் வரிப்பணத்தின் மூலம் பெறப்படுகிறது என்பதால் உண்மைகள் வெளிப்பட்டே ஆக வேண்டும். எய்ட்ஸ் எனும் நோய் எப்படி உருவாகியது என்பதை ஆய்வு செய்த பல அறிவியலாளர்கள் மர்மமான விதத்தில் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். அவர்களை தொடர்ச்சியாக கொலை செய்தது யார் என்பது கண்டுபிடிக்கப்படவே இல்லை. ஆனால் அமெரிக்கா, ஆப்பிரிக்காவில் அது போன்ற உயிரியை உருவாக்கும் முயற்சியில் இருந்தது என்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது. தன்னை ஏகாதிபத்திய தலைமையாக முன்னிருத்திக் கொள்ள இது போன்ற பல மோசடிகளை அமெரிக்க செய்திருக்கலாம். வெளிக்கசிந்திருப்பவை கொஞ்சமே. நாளை அமெரிக்காவில் சோசலிச அரசு ஏற்பட்டால் இது போன்ற பல புதிர்களுக்கு விடை கிடைக்கலாம். *ஆதிகாலத்திலிருந்து உழைக்கும் மக்களின் இலக்கியங்களையும் கலைகளையும் (உ-ம் நாட்டார் பாடல்கள் தெருக்கூத்து) எடுத்துக்கொண்டால் கூட அவற்றில் அந்தந்த பிரதேசங்களுக்குரிய கடவுள் நம்பிக்கைகளும் (சிறுதெய்வ வழிபாடுகள் முதற்கொண்டு இன்றைய நிறுவனமயப்படுத்தப்பட்ட மதங்கள் வரையிலான) மூடநம்பிக்கைகளும் பின்னிப்பிணைந்ததாகத்தானே இருந்து வருகின்றன. இவற்றை நாம் எவ்வாறு புரிந்துகொள்வது..? இவற்றை அவர்களின் அந்தக் காலகட்டத்திற்குரிய நம்பிக்கைகளைத் தவிர்த்த இலக்கிய கலைவடிவங்களாக ஏற்றுக்கொள்வதா அல்லது முற்றிலும் நிராகரிப்பதா? இதனைச் சிறிது விளக்குங்கள். கலை இலக்கியம் யாவும் மக்களின் உழைப்பிலிருந்து கிளைத்தவைகளே. கலைகளை உருவாக்குவதும் அதைப் பாதுகாப்பதும் மக்களே. உழைக்கும் மக்களிடமிருந்து அன்னியப்படும் எந்தக் கலையும் வளரவோ நிலைக்கவோ செய்யாது. ஆனால் அவ்வாறான கலைகளில் மக்களின் மேம்பாட்டுக்கு எந்த விதத்திலும் உதவாத கடவுள், மத நம்பிக்கைகளும், மரபு சார்ந்த மூட நம்பிக்கைகளும் விரவிக் கிடக்கின்றன. இதை எப்படி புரிந்து கொள்வது? அறிவியலும், உண்மைகளும், வரலாறும் உழைக்கும் மக்களின் வாழ்வில் நேரடியாக வெளிப்படுவதில்லை. மறைபொருளாக, வடிவங்களினூடாகத்தான் வெளிப்படும். மறுபக்கம், கடவுள் நம்பிக்கை என்பது வேறு, மதங்கள் என்பது வேறு என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். உழைக்கும் மக்கள் தொடக்க காலத்தில் தங்கள் உழைப்பின் மீதான கடினங்களையும், தடைகளையும், அறியாமைகளையும், பயங்களையும் தான் கடவுளாக உருவகப் படுத்தினார்கள். இந்த உருவகங்களினூடான உண்மைகளை தலைமுறை தாண்டி அறிவிப்பதற்காகத் தான் கலை வடிவங்களை பயன்படுத்தினார்கள். மக்கள் பயன்படுத்திய அந்த வடிவங்களைத் திருடி மறுகட்டமைத்துத்தான் மதங்கள் உருவெடுத்தன. இப்போது மதங்களை அம்பலப்படுத்தி மக்களிடம் மத மயக்கத்தை நீக்கும் அவசியம் இருக்கிறது என்பதற்காக உழைக்கும் மக்களின் கலைகளை மறுதலிப்பது என்பது மக்களையே மறுதலிப்பதாகும். அதேநேரம், இன்றைய ஏகாதிபத்திய சூழலில் கலைகள் எதற்காக பயன்படுத்தப்படுகின்றன? ஏகாதிபத்திய சுரண்டலுக்கு எதிரான, அரசுகளுக்கு எதிரான மக்களின் கோபத்தை மடைமாற்றி மறக்கடிப்பதற்காக பயன்படுகின்ன்றன என்பதையும் உள்வாங்க வேண்டும். எனவே, கலைகள் என்றால் அந்த நேர மக்களின் உண்மைகளின் மேல் மூடியாக இருக்கும் மத அலம்பல்களையும், மக்களை மழுங்கடிக்கும் ஏகாதிபத்திய நோக்கங்களையும் களைந்து தரிசிக்க வேண்டும். இதை உழைக்கும் மக்களை உணர்வூட்டி விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலமே சாதிக்க முடியும். அப்போது தான் கலை இலக்கியம் யாவும் மக்களுக்கானதாக இருக்கும். * “மத நூல்களிலுள்ள அறிவியல் குறைபாடுகளைக் குறிப்பிட்டு அவற்றை ஒருபோதும் நான் இழிவு செய்யப்போவதில்லை. ஏனென்றால் அவை எதுவுமே அறிவியல் நூல்கள் கிடையாது” என்று கலிலியோ கலிலி கூறியதைப் பற்றி உங்கள் கருத்து என்ன? கலிலியோவின் வாதப்படி, மதவாதிகளின் உளறல்களை ஒரு பொருட்டாக எடுத்துக்கொண்டு சக்தியை விரயம் செய்துகொண்டிருக்கின்றோமே என்ற ஐயம் உங்களுக்கு ஒருபோதும் வரவில்லையா கூறுங்கள்? மத நூல்கள், வேதங்கள் அறிவியல் பேசுபவை அல்ல என்பது அனைவருக்கும் தெரியும். கலிலியோ இவ்வாறு குறிப்பிட்டிருந்தாரென்றால் அது சரியானது தான். ஆனால் ஒரு அறிவியலாளனின் பணிக்கும், சமூகத்தை மாற்றியமைக்க விரும்புபவனின் பணிக்கும் இடையே வேறுபாடுகள் உண்டு. அறிவியல் உண்மைகளை கண்டறிந்து உலகிற்கு நிரூபித்துக் காட்டுவது அறிவியலாளனின் பணி. ஆனால் சமூகத்தை மாற்றியமைக்க அது மட்டும் போதாது. எதுவெல்லாம் மக்கள் முன்னேற்றத்துக்கு தடையாக இருக்கிறதோ அவைகளையெல்லாம் அம்பலப்படுத்தி உடைத்து எறிந்து மக்களுக்கு தெளிவை ஏற்படுத்த வேண்டியது அவனுடைய கடமை. மதம் என்பது ஆளும் வர்க்கங்கள் மக்களை அறியாமையில் மூழ்கடித்து வைத்திருக்க கண்டுபிடித்து தக்க வைத்துக் கொண்டிருக்கும் உத்தி. இதில் உடைப்பை ஏற்படுத்துவதுவும் மக்கள் நலம் நாடுபவர்களின் பணி தான். இந்த அடிப்படையில் தான் கம்யூனிடுகள் மதங்களை கடவுளர்களை தொடர்ந்து அம்பலப்படுத்திக் கொண்டிருகிறார்கள். இது சக்தியை விரையம் செய்வதாகாது. ஆனால், கடவுளர்களை அம்பலப்படுத்துவது மட்டுமே அவர்களின் பணியல்ல. இது முதன்மையானதும் அல்ல. பல்வேறு பணிகளில் இதுவும் ஒன்று எனும் அளவில் தான் அதன் முக்கியத்துவம். ஏனென்றால், சமூக அமைப்பில் ஏற்றத்தாழ்வுகள் நீடித்துக் கொண்டிருக்கும் வரை மதங்கள், கடவுட் கொள்கைகள் உயிருடன் இருக்கவே செய்யும். *கமல்ஹாசன்,பாரதி போன்றோரை பார்ப்பன எண்ணம் கொண்டவர்கள் என்று சித்தரிப்பது ஏன்? அவர்கள் முற்போக்கான எண்ணம் கொண்டவர்களாக இருந்தாலும் பிராமணனாக பிறந்ததால் ஏற்பட்ட காழ்ப்புணர்ச்சியா?அவர்கள் சுயஜாதி அபிமானம் கொண்டவர்கள் என்று எவ்வாறு குற்றம் சாட்டுகிறீர்கள்? கமல் பாரதி போன்றவர்களிடம் முற்போக்கு இருக்கிறதா என்பதை அவர்களைச் சுற்றி உருவாக்கப்பட்டிருக்கும் பிம்பத்தின் மூலம் எடை போட முடியாது. அவர்களின் படைப்புகளை சீர்தூக்கிப் பாருங்கள். அவர்களின் முற்போக்கு முகமூடி இற்றுப் போயிருப்பது அப்போது புரியும். வே. மதிமாறன் எழுதிய ‘பாரதீய ஜனதா பார்ட்டி’ படித்திருக்கிறீர்களா? பார்ப்பன ஜாதியில் பிறந்ததால் மட்டுமே ஒருவன் பார்ப்பானாகி விடுவதில்லை. பார்ப்பனீயத்தை யாரெல்லாம் தூக்கிப் பிடித்திருக்கிறார்களோ அவர்களெல்லாம் பாப்பான்கள் தாம், அவர்கள் எந்த ஜாதி, மதத்தில் பிறந்திருந்தாலும். அப்துல் கலாம் கூட ஒரு பாப்பான் தான். பிறப்பின் அடிப்படையில் தகுதியை தீர்மானிப்பது பார்ப்பனியத்தின் ஒரு பகுதி. பாரதி, கமல் போன்றவர்களை ‘முற்போக்கு’ கேட்டகிரியில் வகைப்படுத்தியே ஆகவேண்டும் என நீங்கள் விரும்பினால் பார்ப்பனிய முற்போக்கு என்று குறித்துக் கொள்ளுங்கள், பொருத்தமாக இருக்கும். *ஆண்கள் விருத்தசேதனம் செய்து கொள்வது நன்மையே என்று சில மருத்துவர்கள் சிபாரிசு செய்கின்றனர். சிலர் தேவையற்ற செயல் என்று கண்டிக்கின்றனர். இதை பற்றிய தங்கள் கருத்து என்ன .? விருத்த சேதனம் செய்வது நல்லதா அல்லதா என்று பொதுவாக கேட்டால் நல்லது என்றே கூறலாம். நகம் வெட்டுவது, அதில் அழுக்கு சேரும் என்பது போன்ற பயன்பாடு. ஆனால் அது ஒன்றும் பாலியல் ரீதியான நோய்களுக்கு நிவாரணியல்ல. விருத்த சேதனம் செய்வது நோய்களைத் தடுக்கவும் செய்யாது. அது மதச் சடங்காக இருப்பதனால் புனிதப்படுத்தப்பட்டு உயர்வாக கூறப்படுகிறது அவ்வளவு தான். அப்ரஹாமிய மதங்களான யூத, கிருஸ்தவ, இஸ்லாமிய மதங்களில் மதச் சடங்காக செய்யப்பட்டு வந்தாலும் வட கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் இந்தப் பழக்கம் தொடங்கியது. கிமு 2300லியே விருத்த சேதனப் பழக்கம் இருந்திருக்கிறது என்பதை எகிப்திலுள்ள குகை ஓவியங்கள் தெரிவிக்கின்றன. தனிப்பட்ட சுகத்தை விட சமூக நலனே முதன்மையானது எனும் பொருளில் தொடங்கிய சடங்கானது இன்று மதச் சடங்காக எய்ட்ஸைக் கூட தடுக்கும் என்றெல்லாம் பொய்யாக பிரச்சாரம் செய்யப்படுகிறது. ஆனால் சாதாரண பாலியல் நோய்களைக் கூட இது தடுக்காது என்பதை மருத்துவர் வாலஸ்டைன் என்பவர் அறிவியல் ரீதியாக வெளிப்படுத்தினார். *நலமா? சிறிது காலமாக அலிசினா எனும் இறைமறுப்பாளர் ஒருவரின் இணையத்தளத்தை பார்த்து வருகின்றேன். அவர் உலகின் மதங்கள் அனைத்தையும் ஒரே தராசில் எடைபோடாமல் இஸ்லாத்தை சாத்தானின் மதம் என்கிறார். அதாவது இஸ்லாம் வெறுப்பின் மதம் என்றும் அது மட்டுமே தனது இருப்புக்காக ஏனைய மதங்களையும் அதனைப் பின்பற்றுவோரையும் மதம் மாற்ற நினைக்கின்றது. அது முடியாதபோது அழிக்கத் துடிக்கின்றது…என்பதற்கான ஆதாரங்களைத் தர்க்கரீதியாக முன்வைக்கின்றார்.அலிசினா தன்னை மதநம்பிக்கையற்றவர் என்று சொல்கின்றார். அதேவேளை ஏனைய மதங்களினால் மக்களுக்குள்ள ஆபத்தைவிட இஸ்லாமிய மதத்தினால் விளையும் ஆபத்துதான் பிரமாண்டமானது என்கின்றார். அதேவேளை அவர் கம்யுனிசத்தையும் மறுக்கின்றார். இதுபற்றி என்ன நினைக்கின்றீர்கள். முடிந்தால் அவரது தளத்தைப் பார்வையிடுங்கள். அலி சினாவின் சில கட்டுரைகளை நான் ஏற்கனவே படித்திருக்கிறேன். அவர் முகம்மது குறித்து எழுதிய நூலை படித்துக் கொண்டிருகிறேன். ஈரான் இஸ்லாமிய குடும்பத்தில் பிறந்தவரான அவருடைய இஸ்லாமிய வெறுப்பு மேற்கத்திய கருத்தியலிலிருந்து தோன்றியிருக்கிறது. இஸ்லாம் நடப்பிலிருக்கும் ஏனைய மதங்களுடன் ஒப்பிட்டால் சிறப்பானதே, ஆனால் அது ஏனைய மதங்களைப் போலவே எப்போதோ காலவதியாகிவிட்டது. அலி சினாவின் எழுத்துகளைப் பார்க்கும் போது அவர் நாத்திகர் எனும் நிலையில் கூட இல்லாமல் இஸ்லாமிய வெறுப்பு எனும் நிலையில், வரட்டுத்தனத்தில் நிலை கொண்டிருப்பதாகவே தெரிகிறது. எடுத்துக்காட்டுகளாக, முகம்மது தம் வாழ்நாளின் பிற்பகுதியில் ஒருவித பாலியல் நோய்க்கு ஆட்பட்டிருந்தார், மரியா கிப்தியாவின் மகனுக்கு தந்தை யார்? போன்றவற்றில் அவரின் வாதங்களைக் குறிப்பிடலாம். ஆனால் இஸ்லாமிய வேத, உபனிடதங்களின் மூலை முடுக்குகளையெல்லாம் ஆய்ந்து தன் படைப்புகளை எழுதுகிறார் என்பதில் ஐயமொன்றுமில்லை.பொதுவாக நாத்திகம் என்பது முழுமையானதல்ல என்தை நான் அடிக்கடி குறிப்பிட்டுக் கொண்டிருக்கிறென். கடவுள் நம்பிக்கை, மத நிறுவனங்கள் எல்லாம் சுரண்டலின் வடிவங்கள். சுரண்டலைப் புரிந்து கொள்ளாமல், சுரண்டலை ஒழிப்பது பற்றி சிந்திக்காமல், அதற்கான வழிமுறைகளைக் காணாமல், அவற்றை நடைமுறைப்படுத்த முயலாமல் மதங்களை தங்களின் விருப்பத்தளத்திலிருந்து விமர்சனம் மட்டும் செய்து கொண்டிருப்பது குறைபாடுடையதே. நான் புரிந்து கொண்ட வகையில் அலிசினாவின் இஸ்லாமிய எதிர்ப்பு இந்த வகையானதாகவே இருக்கிறது. இதற்கு வெளியே சமூகப் பார்வை என்று அவருக்கு எதுவும் இருப்பதாக தெரியவில்லை. அவரின் கம்யூனிச எதிர்ப்பு குறித்து சில கட்டுரைகளில் ஒரு சில சொற்களில் வெளிப்படுத்தியிருக்கிறார். சர்வாதிகாரம் எனும் பார்வையில் தான் அதுவும் இருக்கிறது. தன்னுடைய கம்யூனிசத்திற்கு எதிரான நிலைப்பாடு குறித்து அவர் விளக்கினால், ஏதும் கட்டுரை எழுதினால் தான் அதை தெரிந்து கொள்ளவும், சரியா? என அலசவும் முடியும். *…இஸ்லாம் பெண்களின் மனித உரிமைகளை நசுக்குகின்றது என்று கூப்பாடு போடும் மேற்கத்திய சிந்தனையாளர்கள், முஸ்லிம் பெண்கள் அணிகின்ற பர்தாவை மனித உரிமைகளோடு இணைக்கின்ற அளவுக்கு ஏறக்குறைய அதை ஒத்த வடிவிலான உடையையே கிறிஸ்தவ பெண் மதகுருமார்கள் அணிகின்றார்கள் என்ற உண்மையைக் கண்டு கொள்வதில்லை….என்று “ஜனநாயகம் : வெள்ளைக் கிறிஸ்தவர்களின் அரசியல் முறைமை” என்ற தனது நூலிலே எழுதிக்கொண்டு செல்கிறார் எங்கள் நாட்டிலுள்ள ஒரு ஆய்வாளர். இதுபற்றி உங்கள் கருத்துதான் என்ன? நீங்கள் குறிப்பிட்ட அந்த நூலை நான் படித்திருக்கவில்லை, நீங்கள் எழுதியதைக் கொண்டு மட்டும் கூறுவதாக இருந்தால், அந்த ஆய்வாளர் கூறுவதில் உண்மை இருக்கத்தான் செய்கிறது. எதை எதிர்க்கிறார்களோ அதே வடிவிலான ஆடை அணிவதை மத அடிப்படையில் சொந்த மதத்தில் ஏற்கும் போது, பிற மதத்தில் செயல்பாட்டை விமர்சிக்க அடிப்படையற்றுப் போகிறது. குறிப்பிட்ட பெண்களுக்கு மட்டும் என்று கிருஸ்தவமும், எல்லாப் பெண்களுக்கும் என்று இஸ்லாமும் கூறுவதைத் தவிர வேறு வேறுபாடுகள் இரண்டுக்குமிடையே இல்லை. ஆண்களை விட பெண்கள் அதிக அளவு ஆடை அணிய வேண்டும் என்பதிலும் மாற்றுக் கருத்து இல்லை. அதை மதக் கட்டுப்பாடாக திணிப்பதன் நோக்கம் என்ன? அது சமூக நோக்கில் சரியானதா? என்பது தான் அதை பரிசீலிக்கும் போது எடுத்துக் கொள்ளப்பட வேண்டியவைகள். இந்த அடிப்படையில் நின்றுதான் புர்கா குறித்த என்னுடைய விமர்சனத்தை கற்பனைக் கோட்டை .. தொடரில் வைத்திருந்தேன். அந்த அடிப்படைகளை கவனத்தில் கொள்ளாமல் செய்யப்படும் விமர்சனங்களும், விளக்கங்களும் மாற்றுக் குறைவானவைகள் தாம். *கருத்து சுதந்திரம் என்பதின் வரையறை என்ன?ஆதாரம் இல்லாமல் கூட யார் வேண்டுமானாலும் யாரையும் விமர்சிக்கலாம் என்பதா?நடைமுறையில் விமர்சனத்திற்கு உள்ளாகிறவர்கள் எங்கள் மீது அவதூறு கூறுகிறார்கள் என்று கூறி கொண்டு வன்முறையில் இறங்கும் போது அவர்களை கண்டிக்கும் அனைவரும் தனது மனைவியின் நடத்தையையோ அல்லது தனது தாயின் நடத்தையையோ பற்றி ஒருவன் ஆதாரம் இல்லாமல் உளரும் போது அவனை அழைத்து விவாதிப்பதில்லையே?அவனை தாக்க தானே செய்கிறார்கள்?ஆக கருத்து சுதந்திரம் என்பதற்கும் ஒரு எல்லை உண்டு தானே?இதை சற்று உதாரணங்களுடன் விளக்கவும். கருத்து சுதந்திரம் என்பது நினைத்ததை வெளிப்படுத்தும் உரிமை. அதன் எல்லை என்ன? தனி ஒரு மனிதனின் சுதந்திரம் என்பது சமூகத்தை மீறியதாக இருக்கக் கூடாது. சமூகத்தை மீறி யாருக்கும் எந்த சுதந்திரமும் இருக்கக் கூடாது, கருத்துச் சுதந்திரம் உட்பட. ஆனால், அதை இன்னொரு மனிதனை பாதிப்பது என்பதாக சுருக்கிக் கொள்கிறார்கள். விமர்சனம் என்றாலே அது யாருடைய கருத்துக்கு எதிராக விமர்சனம் செய்யப்படுகிறதோ அவரை அவருடைய கருத்தை பாதிக்க வேண்டும். எதையும் பாதிக்காத விமர்சனம் என்று எதிவுமில்லை. உங்களுடைய பார்வை கோணலாக இருக்கிறது என்று கூறினால், கூறப்பட்டவரை அது பாதிக்கவில்லை என்றால் அங்கு பரிசீலனையே எழாது. ஆனால் விமர்சனங்களை எதிர் கொள்ளும் திராணியற்றவர்கள் விமர்சனங்களையே அவதூறு என்று அவதூறு செய்கிறார்கள். விமர்சனம் தனி மனிதன் மீதும் இருக்கலாம் பொதுவானதாகவும் இருக்கலாம் எதன் மீதும் இருக்கலாம். அதை பரிசீலித்தால் தான் அது அவதூறா? விமர்சனமா? என்பது விளங்கும். ஆனால் விமர்சனம் கூடாது எனக் கருதுபவர்கள், விமர்சனங்களை எதிர் கொள்ள முடியாதவர்கள் விமர்சனந்த்தையே அவதூறு என்பது தான் நடந்து கொண்டிருக்கிறது. நீங்கள் குறிப்பிடும் எடுத்துக்காட்டையே எடுத்துக் கொள்வோம். தனிப்பட்ட விசயங்களை யார் விமர்சனம் செய்ய முடியும்? தனிப்பட்ட விசயங்களை அந்த வட்டத்துக்கு உட்பட்டவர்கள் தாம் விமர்சனம் செய்ய முடியும். தாயையோ தாரத்தையோ மகனோ கணவனோ விமர்சனம் செய்தால் யாரும் கோபம் கொள்வதில்லையே பரிசீலனை தானே செய்கிறார்கள். ஆனால், தனிப்பட்ட வட்டத்துக்கு வெளியிலுள்ள யாரும் விமர்சனம் செய்தால் கோபம் வருகிறது. இதை பொதுவான மனிதர்களுக்கு நீட்ட முடியாது. ஒரு மனிதர் பொதுவானவராக, வழிகாட்டியாக கருதப்படுகிறார் என்றால் அவரை விமர்சிக்க எவருக்கும் உரிமையுண்டு. அந்த விமர்சனத்தை பரிசீலித்து அதை அவதூறு என்பதை விளக்க வேண்டும். தொடர்ந்தால் நடவடிக்கை எடுக்கலாம். அதேநேரம் பொதுவான ஒருவருக்கு தனிப்பட்ட வாழ்க்கை என்று எதுவும் கிடையாது. விமர்சனத்தை எதிர்கொள்ள மறுப்பவர்கள் தாம் பொதுவானதையும், தனிப்பட்டதையும் குழப்புவார்கள், விமர்சனத்தை தடுக்க வன்முறையைக் கையாள்வார்கள். ஒன்று விமர்சனமா அவதூறா என்பது விமர்சனத்தின் நோக்கம், ஆதாரம் உண்மைத்தன்மை ஆகியவற்றைப் பொருத்தது. இவைகளைப் பரிசீலிக்காமல் விமரசனங்களை முடக்க நினைத்தால் அவர்களை முடக்க வேண்டியது தான். *நண்பரே,சிலை என்பது பின்னாளில் வழிபடுவதற்கு (கடவுளாக) ஒன்றானதாக ஆகிவிடாதா? சிலை வைப்பதினால் புதிதாக ஒரு கடவுளோ, மதமோ தோன்றி விடுமா? சிலைகள் இல்லாவிட்டால் கடவுள் நம்பிக்கையோ, மதப்பிடிப்போ அற்றுப் போய் விடுமா? கடவுளும் மதமும் ஒரு சிலை வைத்ததினால் தோன்றியது என்று ஏதேனும் ஒரு வரலாற்று நூலில் படித்திருக்கிறீர்களா? அவைகளுக்கெல்லாம் சமூகப் பின்னணி வேண்டும். சமூகத் தேவைகளிலிருந்து தான் கடவுளோ மதமோ தோன்றியிருக்கிறதே ஒழிய, சிலையினாலோ, தனிப்பட்ட ஒரு செயலினாலோ தோன்றிவிடுவதில்லை. ஆண்டான் அடிமைக் காலகட்டத்தின் கொடூரங்களும், நிலப்பிரபுத்துவக் காலகட்டத்தின் வதைகளுமே கடவுளும் மதமும் தோன்றி வளர்வதற்கான தேவையைக் கொடுத்தன. என்று முதலாளித்துவம் தொடங்கியதோ அப்போதே கடவுளோ மதமோ தோன்றுவதற்கான சமூகத் தேவையை அது செரித்து விட்டது. இனி புதிதாக கடவுளோ, மதமோ தோன்றப் போவதில்லை. இப்போது இருக்கும் மதங்களும் கடவுளும் முதலாளித்துவத்திற்கு சேவை செய்வதற்காகவே தக்கவைக்கப் பட்டிருக்கின்றன. மதவாதிகளுக்கு என்றுமே வரலாற்று அறிவோ, சமூகப் புரிதலோ இருந்ததில்லை, இருக்கப் போவதில்லை. அதனால் தான் அவர்கள் ஒரு கற்சிலையால் புதிதாக போட்டிக்கு ஒரு மதம் தோன்றிவிடும் என்று பீதியூட்டுகிறார்கள். அவர்கள் கற்சிலை கூடாது என்கிறார்கள் என்றால் அதன் பொருள் அவர்களின் மதம் அதை தடுத்திருக்கிறது என்பதால் மட்டுமே, இன்னொரு கடவுளோ அதன் மூலம் மேலும் குழப்பங்களோ தோன்றிவிடக்கூடாதே எனும் அக்கரையினால் அல்ல. எப்போதுமே மீன்பிடிப்பவர்கள் முள்ளைக் காட்டி மீன் பிடிப்பதில்லை புழுவைக் காட்டித்தான் மீன் பிடிக்கிறார்கள். இன்னொரு கடவுள் தோன்றிவிடுவார் என்பது புழு. அந்தப் புழுவைக் காட்டி எதை பிடிக்க எண்ணுகிறார்கள் என்பதை சிந்தித்துப் பாருங்கள். அப்போது தான் நீங்கள் தூண்டிலில் மாட்டாமல் தப்பிக்க முடியும். *முதலாளித்துவத்தைக் கடுமையாக எதிர்க்கும் அருந்ததிராய் போன்ற அறிவுஜீவிகள் கம்யூனிசத்தை ஆதரிக்காதது ஏனோ? கம்யூனிசம் என்பது சமூக அறிவியல். முதலாளித்துவம் என்பது சமூக அவலம். சமூக அவலத்தை தம் அறிவால் கண்டு அதை எதிர்பவர்கள் எவரும் கம்யூனிசத்தை ஏற்பார்கள் என்று உறுதியாகக் கூறமுடியாது. அருந்ததிராய் போன்றவர்கள் அடிப்படையில் மேட்டுக்குடி வர்க்கத்தைச் சேர்ந்த அறிவுஜீவிகள். கம்யூனிசம் என்பது பாட்டாளி மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல், இதில் மேட்டுக்குடி வர்க்கத்தினர் இயல்பாகவே ஒன்ற முடிவதில்லை. அதற்கு ஆழ்ந்த சிந்தனையும், பரிசீலனையும் தேவைப்படுகிறது. அருந்ததிராய் போன்றோர் அவர்கள் பிறந்து வளர்ந்த சூழல் கல்வி போன்றவற்றால் ஜனநாயக அரசியலமைப்பு என்பதைத் தாண்டி அவர்களின் பரிசீலனை செல்வதில்லை. ஆனால் முதலாளித்துவ உலகமும் அதன் சுரண்டல் தன்மையும் நேர்மையாய் சிந்திப்பவர்கள் அனைவரையும் பாதிக்கவே செய்யும். இதிலிருந்து தான் அவர்களின் முதலாளித்துவ எதிர்ப்பு தொடங்குகிறது. இதற்கு மாற்று என்ன எனும் சிந்தனை தோன்றினால் தான்; எதிர்ப்பு மட்டுமே முழுமையானதில்லை என்பதை உணர்ந்தால் தான் கம்யூனிசத்திற்கான பாதை விரியும். ஆனால் பெரும்பாலானவர்கள் முதலாளித்துவ எதிர்ப்பை தாண்டி அடுத்த கட்டத்திற்கு நராமல் அப்படியே தேங்கி விடுகிறார்கள். அதனால் தான் முதலாளித்துவத்தை எதிர்ப்பவர்களெல்லாம் கம்யூனிஸ்டுகள் ஆகிவிட முடிவதில்லை. *பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்பது நடைமுறையில் ஒரு கட்சி ஆட்சி முறையில்தான் சாத்தியமா? ஆம். பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் ஒரு கட்சி ஆட்சி முறையில் தான் முழுமையாக சாத்தியப்படும். ஆனால் சர்வாதிகாரம் என்ற சொல்லை தீண்டத்தகாதது போலவும் பலகட்சி ஜனநாயகம் என்ற சொல்லை மேன்மையான ஜனநாயக வடிவமாகவும் நடப்பில் பொருள் கொண்டு அந்த அடிப்படையிலிருந்து பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தையும், ஒரு கட்சி ஆட்சி முறையையும் பார்க்கிறார்கள். இது தவறானது. முதலாளித்துவம் தந்த ஜனநாயகம் எனும் சொல்லின் பொருளே வர்க்க சர்வாதிகாரம் என்பது தான். நடப்பு உலகில் ஜனநாயகம் இருக்கிறது என்றால் அதன் பொருள், ஆளும் வர்க்கமான முதாளிகளுக்கு ஜனநாயகமாகவும் ஏனையவர்களுக்கு சர்வாதிகாரமுமாக இருக்கிறது என்பது தான். உலகில் 10 நூற்றுமேனி இருக்கும் முதலாளிகளுக்கு ஜனநாயகமாகவும் 90 நூற்றுமேனி இருக்கும் மக்களுக்கு சர்வாதிகாரமுமாக இருக்கும் ஒரு அரசு வடிவம் ஜனநாயகம் என்று போற்றப்படுகிறது. அதேநேரம் 90 நூற்றுமேனி இருக்கும் உழைக்கும் மக்களுக்கு ஜனநாயகமாகவும், 10 நூற்றுமேனி இருக்கும் முதலாளிகளுக்கு சர்வாதிகாரமுமாக இருக்கும் அரசு வடிவம் தூற்றப்படுகிறது.இதே விதம் தான் பலகட்சி ஆட்சிமுறையிலும் நடக்கிறது. ஒரு முதலாளித்துவ கட்சி செயல்படும் சுதந்திரத்துடன் பாட்டாளி வர்க்க கட்சி செயல்பட சுதந்திரம் உண்டா? அரசுக்கு எதிராக செயல்படும் கட்சியை தடை செய்கிறார்கள். என்றால் பலகட்சி ஆட்சிமுறை என்பதன் பொருள் தான் என்ன? முதலாளித்துவ சர்வாதிகாரத்தை ஏற்றுக் கொண்டு அதன் கீழ் இருக்கும் கட்சிகளுக்கு மட்டுமே அனுமதி உண்டு, முதலாளித்துவ சர்வாதிகாரத்தை எதிர்க்கும் கட்சிகள் தீவிரவாத கட்சிகளாக அவதூறு செய்யப்படுகின்றன. சுவரொட்டி ஒட்டுவதற்குக்கூட அனுமதி மறுக்கப்படுவது தான் இங்கு நடைமுறையாக இருக்கிறது. அதேநேரம் சோவியத் ரஷ்யாவில் பல கட்சிகள் செயல்பட்டும் இருக்கின்றன. போல்ஷ்விக் மென்ஷ்விக் என்றுஇரண்டு பிரிவுகளாக கட்சிகள் செயல்பட்டிருக்கின்றன. முதலாளித்துவத்தை பிரநிதித்துவப்படுத்தும் கட்சிக்குத்தான் அனுமதி இல்லை.சுருக்கமாகப் பார்த்தால் இன்று ஜனநாயம் என்று கூறப்படுவது சாராம்சத்தில் சர்வாதிகாரமாக இருக்கிறது, சர்வாதிகாரம் என்று தூற்றப்படுவது சாராம்சத்தில் ஜனநாயகமாக இருக்கிறது என்பதே உண்மை. இன்னொருமுனையில் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்பது வெறும் அரசு செயல்படும் வடிவம் மட்டுமல்ல. இதுவரையிலான அரசுகள் சுரண்டல் அரசுகளாய் இருந்ததினால் அதற்கு இசைவாகவே மக்களை மாற்றியமைத்திருக்கின்றன. இன்று மக்கள் சுயநலமிகளாய் இருப்பதன் காரணம் இதுவே. இதை சீராக்கி மக்களை உயர்ந்த பண்பாட்டை நோக்கி அழைத்துச் செல்லும் பணியும் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்துக்கு இருக்கிறது. ஜனநாயகம் என்ற பெயரில் முதலாளித்துவம் சுதந்திரமாக செயல்பட அனுமதித்தால் அது பாட்டாளி வர்க்க சர்வாதிகார அரசை பின்னோக்கி இழுக்கும். கலாச்சாரப் புரட்சி உள்ளிட்டு வர்க்க வேறுபாடுகளை கழித்துக்கட்டும் பெரும்பணிகளுக்கும் முதலாளித்துவத்தை அதன் எச்சங்கள் கூட எழாமல் முறியடிக்க வேண்டியதிருப்பதால் ஒருகட்சி ஆட்சிமுறை மிக அவசியமானது. *ஒரு சிறுகதையையோ அல்லது கவிதை போன்ற ஆக்கங்களையோ நாம் படைக்கும்போது அவற்றிலே இயல்பாகவே நம்மைப் பாதிக்கும் முரண்பாடுகளை வெளிப்படுத்துகின்றோம். அதனை சில பத்திரிகைகள் பிரச்சார நெடி என்று ஒதுக்குவதேன்? ஒரு ஆக்கத்தினை எதுவித சமூக அவலங்களையும் இல்லாமல் எழுதவேண்டுமென்று எதிர்பார்க்கின்றார்களா அல்லது அவ்வாறானவை யாரையும் சிந்திக்க வைக்குமளவுக்கு இருந்துவிடக்கூடாதது என்று விரும்புகின்றார்களா? கலை, இலக்கியம் என்பவை ஒரு கருத்தை பிறருக்கு சொல்லும் வடிவம் தான். தன்னிடம் இருக்கும் கருத்தை பிறருக்கு கூறுவது, புரியவைப்பது எனும்போது அங்கு பிரச்சாரம் தவிர்க்க முடியாதது. இது எல்லா வகை மாதிரி இலக்கியங்களுக்கும் பொருந்தும். ஆனால் எல்லாவற்றையும் பிரச்சாரம் என்று நடைமுறையில் கூறுவதில்லை. என்றால் பிரச்சார நெடி என்று கூறப்படுபவைகள் எந்த அடிப்படையிலிருந்து கூறப்படுகின்றன?கலைக்கு, பொழுதுபோக்கிற்கு, மக்களுக்கு என்று நோக்கத்தைக் கொண்டு மூன்றாக பிரித்தாலும் இரண்டு அம்சங்கள் தான் அவற்றின் அடிப்படையாக இருக்கின்றன. மக்களுக்கானது, மக்களிடம் திணிக்கப்படுவது. பிரச்சார நெடி என்று முத்திரை குத்தப்படும் எழுத்துகளையெல்லாம் எடுத்துப் பார்த்தால் அவை மக்களுக்கான இலக்கியமாகவே இருக்கும். தெளிவாகச் சொன்னால் பிரச்சார நெடி என்று முத்திரை குத்துவது அரசியல் தானேயன்றி இலக்கிய விமர்சனம் அல்ல.எந்த ஒரு நேர்த்தியான யதார்த்தமான எழுத்தையும் அதன் மையக் கருவைப் பார்த்தால் அது குறிப்பிட்ட ஒரு நடைமுறையை, கலாச்சாரத்தை, புரிதலை வாசிப்பவனிடம் அறிமுகப்படுத்துவதாக, தூண்டுவதாக மட்டுமே இருக்கும். இது பிரச்சாரமாக வகைப்படுத்தப்படுவதில்லை. காரணம், அது நுகர்வுப்பண்பாட்டை, நடப்பு சமூகத்தை அப்படியே தக்க வைப்பதை நோக்கமாக கொண்டிருக்கும். இது யதார்த்தமாக இருப்பதால் பிரச்சாரம் என்று முத்திரை குத்தப்படுவதில்லை. அதுவே நடப்பிலிருக்கும் சுரண்டலை எதிர்கொண்டு சமூக மாற்றத்தை நோக்கமாக கொண்டிருந்தால் அது பிராச்சாரமாக முத்திரை குத்தப்படுகிறது. மெய்யாகவே அது செழு நேர்த்தியுடன் வடிக்கப்பட்டிருந்தாலும் கூட அதாவது உள்ளடக்கத்தில் அனைத்துமே பிரச்சாரமாக இருந்தாலும் கூட அரசியல் பார்வையில் எதிர் தன்மை கொண்டிருப்பவைகள் பிரச்சாரம் என வகைப்படுத்தப்படுகிறது. அதேநேரம் கவனமாக அது வடிவம் குறித்த விமர்சனமாகவே முன்வைக்கப்படுகிறது. தெளிவாகச் சொன்னால் எதிர் அரசியலை உள்ளடக்கமாக கொண்டிருப்பவை -உள்ளடக்கத்தை விமர்சிப்பதாக கூறினால் அம்பலப்பட நேரும் என்பதால்- வடிவத்தில் பிரச்சாரம் என முத்திரை குத்தப்படுகிறது. பிரச்சாரம் என முத்திரை குத்தப்படும் அநேக இலக்கியங்கள் வடிவத்தில் யதார்த்த அழகியலோடும் உள்ளடக்கத்தில் செம்மையாகவும் இருப்பதை நீங்கள் காணலாம். ரஷ்ய, சீன நெடுங்கதைகளை படித்துப் பாருங்கள் மொழிபெயர்ப்பு நாவல்கள் என்பதையும் தாண்டி அதன் நடையும் கருவும் உங்களை ஈர்க்கும். மற்றப்படி நேர்மையற்ற விமர்சனங்களை புறந்தள்ளுங்கள் *பொதுவுடமைக் கொள்கையைப் போற்றுபவர்கள் சுரண்டப்படும் மக்களுக்காகப் போராடினாலும் கூடஒருவகையில் வரட்டுத்தனமானவர்கள் என்கிறார் எனது உறவினர் ஒருவர். எப்போதோ ஏற்படுத்தப்படப்போகும் பொதுவுடமைச் சமூக அமைப்பு வரும் வரை இப்போதுள்ள வாழ்க்கையில் (யாருக்காகப் போராடுகிறீர்களோ அந்த மக்கள் கூட அனுபவித்துக் கொண்டிருக்கும்) எந்த ஒரு சிறந்த விடயத்தையும் நீங்களெல்லாம் முழுமையாக இரசித்துக் கொள்ள மாட்டீர்கள் என்கிறார் அவர். உதாரணமாக ஒரு இனிய குரலையுடைய பாடகரின் திறமையை சாதாரண ஒரு ஏழை ஏதாவது ஒரு நேரத்தில் தன் வாழ்க்கைச் சுமையை தற்காலிகமாக மறந்து இரசிப்பான். ஆனால் நீங்களோ குரல் இனிமையாக இருந்தாலும் அவர் பாடுவதெல்லாம் எதிர்ப்புரட்சிக் கருத்துக்களுள்ள பாடலைத்தானே என்பது போன்ற ஏதாவது ஒருவிடயத்தைக் கூறி விமர்சித்து விட்டு ஒதுங்கி விடுவீர்கள். ஒரு நடிகன் ஒரு திரைப்படத்தில் சிறப்பாக நடித்திருந்தாலும் அதை சிலாகிக்காமல் சில வருடங்களுக்கு முன் அவர் வேறு ஒருவிதமான கருத்தை முன்னிறுத்தியவர்தானே என்று சொல்லிவிட்டு நழுவ விடுவீர்கள் அல்லது நழுவிவிடுவீர்கள். நல்ல ருசியான உணவைத் தந்தால் ஒருவேளைச் சோற்றுக்கு இல்லாத ஏழைகளுள்ள நாட்டில் இப்படி ஆடம்பரமாகச் சமைக்கத்தான் வேண்டுமா? என்பீர்கள். அதுவே சரியில்லாமலிருந்தால் எதைக் கொடுத்தாலும் சாப்பிடுவோம் என்ற அலட்சியமா? என்பீர்கள். அழகான பூந்தோட்டத்தை ரசிக்காமல் பணவிரயம் என்பீர்கள் என்று அடுக்கிக் கொண்டே போகிறார். இதற்குரிய உங்கள் பதில் என்ன? இது போன்ற குற்றச்சாட்டுகள் ஒரு உத்தியாக கையாளப்படுபவைகள். இது போன்ற குற்றச்சாட்டுகள் எப்போதெல்லாம் எழுப்பப்படுகின்றன? வைக்கப்பட்ட விமர்சனத்தின் மீது அவர்களின் கருத்து என்ன? இந்த இரண்டு அடிப்படைகளிலிருந்து ‘அந்த வரட்டுத்தனத்தை’ நாம் மதிப்பிடலாம். முதலில், கலை என்பது மக்களுக்காகவேயன்றி வேறெதற்காகவும் அல்ல என்பது உணரப்பட வேண்டும். ஆனால் இன்றைய நிலையில் கலை என்பது வணிகமாகவும், மக்களை அரசியலிலிருந்து விலக்கி வைக்கவும் அல்லது மக்களுக்கான அரசியலிலிருந்து அவர்களை திசை திருப்பவுமே பயன்படுத்தப்படுகிறது. ஒரு நல்ல திரைப்படம் அல்லது ஒரு நல்ல இசைப்பாட்டு என்பது என்ன ஒப்பீடுகளிலிருந்து நல்லவை என மதிப்பிடப்படுகிறது? பொழுது போக்கு அம்சத்திலிருந்தும், உழைப்பின் கடுமையிலிருந்து ஒருவித போதைத்தனமான மாற்றிலிருந்தும் தான் மதிப்பிடப்படுகிறது. எதையுமே இந்த முதலாளித்துவ உத்திகளிலிருந்து அணுகுவது தான் இயல்பானது யதார்த்தமானது என்று உலகம் திட்டமிட்டு பயிறுவிக்கப் பட்டிருக்கிறது. நீங்கள் (உங்கள் உறவினர்) கூறுவதின் சாராம்சமான பொருள் இது தான், முதலாளிகளுக்கான அரசியலிலிருந்து கலையை ஏற்பதும் மறுப்பதும் இயல்பானது, மக்களுக்கான அரசியலிலிருந்து கலையை ஏற்பதும் மறுப்பதும் வரட்டுத்தனமானது. இது தமிழ்ச் சூழலில் மட்டுமல்ல, உலகம் முழுவதுமே இப்படித்தான் இருக்கிறது. எடுத்துக்காட்டாக, தமிழில் வெளிவந்த அர்ஜுன், விஜயகாந்த் வகைப்பட்ட போலீஸ் சூரத்தனங்களைக் காட்டும் படங்கள் தொடங்கி ஹாலிவுட் ஜேம்ஸ்பாண்ட், ராம்போ வரை தேசபக்தி படங்களாக சித்தரிக்கப்படுகின்றன. இப்படி தேசபக்தி படங்களாக சித்தரிக்கப்படும் அதே நடப்பு காலத்தில் யதார்த்தத்தில் காவல்துறை மக்களை அடக்கி ஒடுக்கிக் கொண்டிருப்பதும், சொந்த நாட்டு மக்கள் எனும் எண்ணம் கொஞ்சமும் இல்லாமல் அவர்களைச் சிக்க வைப்பதும், சுட்டுக் கொல்வதும் நடந்து கொண்டிருக்கிறது. ஆக யதார்த்தத்தில் என்ன நடக்கிறதோ அதை பிரதிபலிக்காமல் உள்நோக்கத்துடன் திட்டமிட்டு உண்மையை மறைப்பதுதான் கலையாக இருக்கிறது. இதை மறுத்து, கலை எப்படி திட்டமிட்டு உண்மையை மறைத்து மலிவான ரசனையில் மக்களுக்கு எதிரான கருத்துகளை மக்களிடமே திணிக்கிறது எனும் உண்மையை எடுத்துக் கூறினால் அது வரட்டுத்தனம் எனப்படுகிறது. ஆக, முதலாளித்துவத்திற்கு ஆதரவான மனோநிலையை உண்மையை மறைத்து வெளிப்படுத்தினால் அது ரசனை, இயல்பு. அதை விமர்சித்து உண்மையை பேசினால் அது வரட்டுத்தனம், இயல்புக்கு மாறானது. இது தான் வரட்டுத்தனம் என்று கூறுபவர்களின் பார்வையாக இருக்கிறது. ஒரு கலை வடிவம் விமர்சனத்திற்கு உள்ளாக்கப்படுகிறது என்றால், அந்த விமர்சனம் சரியாக செய்யப்பட்டிருக்கிறதா? தவறாகவா? என்று பார்ப்பது தான் சரியான பார்வையாக இருக்க முடியும். அந்த விமர்சனத்தை வரட்டுத்தனம் என்று கூறப்படும் இடங்களையெல்லாம் கூர்ந்து கவனித்தால், அங்கு செய்யப்பட்ட விமர்சனத்திற்கான பதிலோ அல்லது மாற்றுப் பார்வையோ வைக்கப்பட்டிருக்காது. தெளிவாகச் சொன்னால் எந்த இடத்தில் விமர்சனத்தை எதிர்கொள்ள முடியவில்லையோ அந்த இடங்களிலேயே வரட்டுத்தனம் என்பது முன்வைக்கப்படுகிறது. இதன் பொருள் ஒரு விமர்சனத்தை வரட்டுத்தனம் என்றே கூறக்கூடாது என்பதல்ல. வைக்கப்படும் விமரசனம் வரட்டுத்தனமானது என்றால், இன்னின்ன விதங்களில் அது வரட்டுத்தனமாக இருக்கிறது என்று மீள்விமர்சனம் செய்யலாம். அதை யாரும் குறைகூற முடியாது. ஆனால் இங்கு வரட்டுத்தனம் என சுட்டப்படுவது மக்களின் விருப்பம் எனும் தீர்மானிக்கப்பட்ட முடிவுகளிலிருந்து கூறப்படுகிறது. வரட்டுத்தனம் என உங்கள் உறவினர் கூறுவதை அது எப்படி வரட்டுத்தனமாக இருக்கிறது என்பதை விளக்குமாறு கேளுங்கள். அப்போது உங்களுக்கு புரியும் அவர் வரட்டுத்தனம் என்று கூறுவது விமர்சனத்தை அல்ல, மாறாக விமர்சிப்பதையே வரட்டுத்தனம் என்கிறார் என்பது. இன்னொன்றையும் கூறலாம். ஒரு திரைப்படத்தையோ, ஒரு கலை வடிவத்தையோ பார்க்ககூடாது, கேட்கக்கூடாது என்று யாரும் தடைபோட முடியாது. விமர்சனம் செய்வதன் பொருள் யாரும் அந்த கலை வடிவத்தை ரசிக்காதீர்கள் என்று தடை போடுவதல்ல. ஒரு தவறுக்கு எதிராக எது சரியானது என்று புரியவைப்பதற்கான ஒரு முயற்சி. பொதுவெளிக்கு வரும் ஒன்றை விமர்சிக்கும் உரிமை யாருக்கும் உண்டு. ஆனால் விமர்சிக்காமல் முத்திரை குத்தினால் அதில் உள்நோக்கம் இருக்கிறது என்பதே பொருள். அதேநேரம், கலை என்ற பெயரில் செய்யப்படும் நச்சுத்தனங்களை தடுத்தாக வேண்டும். அண்மையில் ’டேம் 999’ என்ற திரைப்படம் தடை செய்யப்பட்டது குறித்தும் விமர்சனம் எழுந்தது. அதாவது, ஒரு கலை வடிவத்தை மக்கள் பார்க்கக் கூடாது என தடை செய்யலாமா? எனும் அடிப்படையில். கலை என்ற பெயரில் செய்யப்படும் எல்லாவற்றையும் அனுமதிக்க முடியுமா? படுக்கையறை உடலுறவுக் காட்சிகளை அப்பட்டமாக வெளிச்சம் போட்டுக் காட்டும் படங்களையும் எடுத்துத் தள்ளிக் கொண்டிருக்கிறார்கள். அது எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்தும் இருக்கிறது. கலையின் வடிவம் எனும் அடிப்படையில் இதை அனுமதிக்க வேண்டும் என யாரும் கோர முடியுமா? அந்த திரைப்படம் முல்லைப் பெரியாறுடனோ, கேரள தமிழ்நாட்டுடனோ தொடர்புடையதல்ல. முன்பு சீனாவிலுள்ள ஓர் அணை உடைந்த நிகழ்வை வைத்து எடுக்கப்பட்டது அதை ஏன் தடுக்க வேண்டும்? என்கிறார்கள். கூடங்குளம் அணு உலையை எதிர்த்து கடந்த சில மாதங்களாக மக்கள் தீவிரமாக போராடிவருகிறார்கள். அவர்களிடம் உண்மை நிகழ்வை வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம் என்று நாகசாகி, ஹிரோஷிமா அணுக் கதிர்வீச்சின் விளைவுகளையும், புஹுஷிமா அணு உலை விபத்தினால் மக்கள் இறப்பதையும் மக்கள் பயங்கொள்ள வேண்டும் எனும் நோக்கத்தில் திரைப்படம் எடுத்துக் காண்பித்தால் கலையின் வடிவம் எனும் அடிப்படையில் ஏற்பார்களா? கூடங்குளத்தில் விபத்து மட்டும் பிரச்சனையல்ல. வெறுமனே பயங்காட்டி கருத்தை திணிப்பதைவிட அதிலிருக்கும் அரசியல், அடிமைத்தனம், மறுகாலனியாக்க சுரண்டல்கள், மின்சாரம் அதில் பொருட்டல்ல போன்றவை உள்ளிட்ட அனைத்தையும் மக்களிடம் விழிப்புணர்வை ஊட்டுவதனூடாக அணிதிரட்டுவதே சரியானதும் சிறப்பானதுமாக இருக்கும். ஆனால் டேம் 999 திரைப்படம் நடந்த நிகழ்ச்சி என்ற பெயரில் மக்களை பயங்காட்டுவதை மட்டுமே நோக்கமாக கொண்டுள்ளது. மட்டுமல்லாது அத்திரைப்படம் உண்மையின் அடிப்படையிலான பயங்காட்டலல்ல, அரசியல் பொய்யின், தொழில்நுட்ப பொய்யின் அடிப்படையிலான பயங்காட்டல். சில ஆண்டுகளுக்கு முன்பிருந்தே கேரள அரசு இது போன்ற பொய்ப் பரப்புரையை குறுந்தட்டுகள் வாயிலாக செய்து கொண்டிருக்கிறது. இதுவும் தடுக்கப்பட வேண்டியதே. ஆனால் அதே கருத்தை கேரளாவுக்கு வெளியிலுள்ள மக்களிடமும் ஏற்படுத்த வேண்டும் எனும் நோக்கத்தில் நரித்தனமாக எடுக்கப்பட்டிருப்பது தான் அந்த திரைப்படம். கலை என்ற பெயரில் அதை அனுமதிக்க வேண்டும் என்பது ஏற்றுக் கொள்ள முடியாதது. ஒரு வகையில் டேம் 999 திரைப்படமும், வெளிவந்த, வெளிவந்து கொண்டிருக்கும் தேசபக்தி திரைப்படங்களும் ஒரே அடிப்படையிலானவை தாம். ஆளும்வர்க்கங்களுக்கு ஆதரவான கருத்தை நேர்மையற்ற முறையில் பொழுது போக்கு, ரசனை என்று பின்வாயில் வழியாக திணிப்பவை தாம் என்றாலும் டேம் 999 உடனடி விளைவை எதிர்நோக்கி திரையிடப்படுவதால், விமர்சித்து விழிப்புணர்வை எட்டும் காலம் இல்லாததால் தடை செய்வது அவசியமாகிறது. அடுத்து, ஒரு கலை வடிவத்தின் மீதான மக்கள் ரசனை எப்படி இருக்கிறது? அல்லது எப்படி இருக்க வேண்டும்? கலை என்பது படைப்பளனுக்கும் பார்வையாளனுக்கும் இடையில் நடைபெறும் அழகியல் உணர்ச்சியுடன் கூடிய கருத்துப் பரிமாற்றம். இதில் முதன்மையானது கருத்தா? அழகியல் உணர்ச்சியா? இருவர், ஒரு பொருள் குறித்து தமக்குள் உரையாடிக் கொள்கிறார்கள் என்றால் எதிரிலிருப்பவர் என்ன பேசுகிறார் என்பது தான் இன்னொருவருக்கு முக்கியமேயன்றி அப்படி பேசும்போது என்ன உடையணிந்திருந்தார்? அவர் அமர்ந்திருந்த விதம் எப்படி இருந்தது? நளினமாக கைகளை அசைத்தாரா? என்பதெல்லாம் அந்த அளவுக்கு முக்கியத்துவம் இல்லாதவைகள். ஆனால் இங்கு என்ன நடக்கிறது. ஒரு திரைப்படம் என்றால் நடித்தவர்களின் நடிப்புத்திறன் அலசப்படுகிறது, அமைக்கப்பட்ட இசையின் இசைவு தரப்படுத்தப்படுகிறது, பாடியவர்களின், பேசியவர்களின் ஒலியின் குழைவு இனிமையாக பொருத்தமாக இருக்கிறதா என்பது ஒப்புநோக்கப்படுகிறது, ஒளிப்பதிவின் தரமும், ஒளியின் பாங்கும் கணிக்கப்படுகிறது, காட்சியின் பின்னணி கவனிக்கப்படுகிறது, இயக்குனரின் நெறியாள்கையின் நேர்த்தி மதிப்பிடப்படுகிறது. ஆனால், மறந்தும் கூட அத்திரைப்படம் மக்களுக்கு என்ன கூற முனைகிறது என்பதை எடுத்துக் கொள்வதில்லை. இங்கு தான் அரசியல் இருக்கிறது. ஒரு உள்ளடக்கத்தின் புறத்தன்மைகளை மட்டுமே ரசிப்பதற்கு மக்கள் பழக்கப்படுத்தப்படுகிறார்கள். அகத்தன்மை குறித்து வாளாவிருக்குமாறு வழக்கப்படுத்தப்படுகிறார்கள். பார்வையாளனுக்கு புறத்தன்மை சில நாட்களில் மறந்து போகும் அகத்தன்மையோ உள்ளுக்குள் மறைந்திருக்கும். ஒரு கலை வடிவத்தில் ஒருவன் காணும் அகத்தன்மைகளே பிறிதொரு நேரத்தில் அவனுடைய விருப்பமாக வெளிப்படுகிறது. இந்த இடத்தில் இன்னொன்றையும் பேசியாக வேண்டும். வரட்டுத்தனம் என்று கூறுபவர்கள் அதை மட்டுமா சொல்கிறார்கள், பிரச்சாரம் என்றும் சிலவற்றை மதிப்பிடுகிறார்கள். இதை நுணுக்கமாக பார்த்தால் கண்டு கொள்ளலாம். ஒரு இயக்குனர் மக்களுக்கு நல்ல விசயங்களை(அவரின் கோணத்தில்) கூற வேண்டும் என எண்ணி ஒரு படம் எடுத்தால் அதை பிரச்சரப் படமாக இருக்கிறது என்றும் கூறக் கேட்டிருக்கலாம். ஆக, விமர்சனத்தை வரட்டுத்தனம் என ஒதுக்குகிறார்கள், எதிர்மறையான படங்களை பிரச்சாரம் என ஒதுக்குகிறார்கள். என்றால் அவர்கள் ஏற்றுக் கொள்ள விரும்புவது எதை? மக்களுக்கு எதிரான அரசியலை அகத்தன்மையாக உள்ளுக்குள் புதைத்துக் கொண்டு புறத்தன்மையின் ஈர்ப்புகளில் வெளிவருபவைகளை மட்டுமே அங்கீகரிக்கிறார்கள். கலை ரசனை என்ற பெயரில் இருக்கும் இந்த நயவஞ்சக அரசியலை மக்களுக்கு விளக்குவதும், விழிப்புணர்வூட்டுவதும் யாருடைய கடமை? எனவே, வரட்டுத்தனம் என்பன போன்ற முத்திரை குத்தல்களை மக்களைச் சிந்திக்கும் கம்யூனிஸ்டுகள் பொருட்படுத்த வேண்டிய அவசியமில்லை. இந்த நயவஞ்சகமான அரசியல் கலைகளில் மட்டுமல்ல எல்லாவற்றிலும் ஊடாடி நிற்கிறது. அவற்றில் ஒன்று தான் பூ. அழகு என்பதை விடுத்து பூந்தோட்டத்தில், பெண்கள் பூச்சூடுவதில், பூக்களின் வேறு பயன்பாடுகளில் என்ன இருக்கிறது? மருத்துவ பயன்பாட்டுக்காக விளைவிக்கப்படும் பூக்களைத் தவிர ஏனைய பயன்பாடுகளில் ஒரே நாளில் பூக்கள் வீணே வாடி குப்பையாய் உதிர்ந்து போவதற்காக விவசாயிகளின் உழைப்பு வீணடிக்கப்படுகிறது. விவசாயிக்கு பணம் கிடைக்கிறது, ஆனால் உற்பத்திப் பொருளான பூக்களினால் மனித குலத்திற்கான பயன் என்ன? பெண்கள் அழகுக்காக அணிகிறார்கள், வாசனை திரவங்கள் தயாரிக்க பயன்படுகிறது, மத, கலாச்சார சடங்குகளில் பயன்படுகிறது. பெண்கள் பூச்சூடுவதன் பின்னணியில் ஆணாதிக்கம் இருப்பதை யாரால் மறைக்க முடியும்? வாசனை திரவங்களை பூசிக் கொள்வது உடலுழைப்பு செய்பவர்களிடமிருந்து, அடிமைகளிலிருந்து தங்களை மேம்பட்டு காட்டிக்கொள்ள ஆண்டைகள் கைக்கொண்ட பழக்கம் அல்லவா? மத, கலாச்சார விசயங்களில் பயன்படுத்தப்படும் பூக்களுக்கு என்ன அர்த்தம் இருக்கிறது?, மக்களை மடமையில் நீடிக்க வைப்பதைத் தவிர. அன்றாட வாழ்வில் மலர்களின் பயன்பாட்டின் பின்னே மறைந்திருக்கும் பொருளை அறியவிடாமல், மலர் என்றால் அழகு என திசைதிருப்பப் பட்டிருப்பதை எத்தனை பேர் புரிந்து கொண்டிருக்கிறார்கள்? மறுபக்கம், ஏகாதிபத்தியங்களின் நிர்ப்பந்தங்களால் அரசுகள் விவசாயத்திற்கு எந்த ஆதரவையும் வழங்குவதில்லை. விவசாயிகளிடமிருந்து உணவு தானிய விவசாயத்தை அப்புறப்படுத்தி அதை பெருநிறுவங்களிடம் ஒப்படைக்க, அரசு பணப்பயிரை ஊக்குவிக்கிறது. இந்த அடிப்படையில் தான் மலர் விவசாயமும் வருகிறது. ஆக, உணவு தானிய விளைச்சலை பெருநிறுவனங்களிடம் வாரிக்கொடுக்க வழிகாணும், மனித குலத்திற்கு எந்த பயனும் இல்லாத, மடமைகளிலும், ஆணாதிக்கத்திலும் உழன்று கிடக்க ஏதுவாக்கும் பூக்களின் பயன்பாட்டை விமர்சித்தால் அதை வரட்டுவாதம் என்று ஒதுக்குவதும்; இவைகளை எல்லாம் மறைத்து அழகு என்பதாக முன்னிருத்தினால் அதை இயல்பு என்றும் கூறப்படுவதை எப்படி ஏற்றுக் கொள்வது? ”நல்ல உணவைத்தந்தால் ஆடம்பரம் என்பதும், சரியில்லாத உணவைத்தந்தால் மறுப்பதும்” என்பது புரிதலின்றி வைக்கப்படும் குற்றச்சாட்டு. உணவை தேவைக்காக உண்பதும், ருசிக்காக உண்பதும் இருவேறு வகைப்பட்டவை. ருசியை முன்வைத்து உணவை வீணாக்குவதும், லாபத்திற்காகவோ அல்லது வேறு காரணங்களுக்காகவோ சத்துக்குறைவான உணவை வழங்குவதும் தான் விமர்சனங்களுக்கு உள்ளாக்கப்படும். கோடிக்கணக்கான மக்கள் உணவின்றி தவித்திருக்கும் நாட்டில் தங்கள் பணத்திமிரை காட்ட விருந்துகளாகவும் கேளிக்கையாகவும் வீணாக்கப்படும் உணவு குறித்து விமர்சனம் வைக்கப்படுமேயன்றி; மக்கள் பட்டினி கிடக்கும் நாடு என்பதால் தனியொரு மனிதன் தனக்கு விருப்பமான உணவு வகையை உண்பது விமர்சிக்கப்படாது. மாணவர் விடுதிகள், உணவுக்கூடங்களில் லாபநோக்கில் திட்டமிட்டு செய்யப்படும் பற்றாக்குறைகளை, அலட்சியம் செய்யப்படும் கலோரிகளின் அளவை முன்னிட்டு போராட்டம் நடத்தப்படுமேயன்றி, ருசியை மட்டும் முன்வைத்து போராட்டங்கள் நடத்தப்படுவதில்லை. இந்த இரண்டையும் ஒரே நேர்கோட்டில் வைத்து எப்படி ஒப்பீடு செய்ய முடியும்? பொதுவாக, மக்கள் ரசனையாக, விருப்பமாக இருப்பதெல்லாம் முதலாளித்துவ விழுமியங்களுக்கு உட்பட்டே அமைந்திருக்கும். அவர்களின் நலனுக்கு வெளியே எதையும் மக்கள் தங்களின் சொந்த விருப்பமாகவோ, நாகரீகமாவோ, முன்னேற்றம் என்ற பெயரிலோ கொண்டிருக்க முடியாது. சமூகம் அப்படித்தான் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. அதனால் தான் முதலாளித்துவம் தங்களின் சுரண்டலை பெரும்பான்மை மக்களின் கவனத்திற்கு வரமலேயே செய்து கொண்டிருக்க முடிகிறது. இது தான் வரட்டுத்தனம் எனும் சொல்லின் பின்னே மறைந்துள்ள அரசியல். ஒவ்வொருவரின் சொல்லின் செயலின் பின்னேயும் அவரின் வர்க்கம் மறைந்திருக்கிறது என்பது ஆசானின் கூற்று *கடாபியின் நிலை பற்றி உங்களது பார்வை என்ன? தற்கொலை செய்து கொள்வது அல்லது கோரமாக கொலை செய்யப்படுவது இதுதான் உலகின் பல சர்வாதிகாரிகளுக்கு, கொடுங்கோலர்களுக்கு நடந்திருக்கிறது. கடாஃபி இதில் விலக்கானவர் இல்லை. ஆனால் அவரைக் கொன்றவர்கள் யார்? கொலைக்கான காரணம் என்ன? என்பதில் பிரச்சனை இருக்கிறது. கடந்த நாற்பதாண்டுகளாக லிபியாவை சர்வாதிகாரமாக அடக்குமுறை ஆட்சி புரிந்ததற்காக அவர் கொல்லப்படவில்லை. தொடக்கத்தில் ஏகாதிபத்தியங்களுக்கு எதிராக பல நடவடிக்கைகளை லிபியாவில் எடுத்த போதிலும் கடைசியில் ஏகதிபத்திய ஆதரவு நிலையெடுத்து சலுகைகளை வழங்கினார். ஆனாலும் அவை ஏகாதிபத்தியங்களுக்கு போதுமானதாக இல்லை. லிபியாவின் வளங்களை யார் கொள்ளையடிப்பது? கடாஃபி குடும்பமா? பன்னாட்டு நிறுவனங்களா? எனும் போட்டியில் பன்னாட்டு நிறுவனங்கள் வென்றிருக்கின்றன. *பார்ப்பனியம் அல்லது பிராமணியம் பற்றி நீங்கள் உங்கள் பதில்களில் குறிப்பிட்ட வண்ணமுள்ளீர்கள். அந்தச் சொல்லுக்குரிய அர்த்தம் தவிர அதுபற்றி விரிவாகவோ முழுமையாகவோ எனக்குத் தெரியவில்லை என்றுதான் நான் நினைக்கின்றேன். இதுபற்றி சுருக்கமாகவேனும் விளக்குவீர்களா? அதுமட்டுமன்றி ஒருவர் எவ்வளவுதான் அறிவாளியாகவும் மக்களுக்கு பயன்தருபவராகவுமிருந்தாலும் பார்ப்பானியச் சிந்தனை உள்ளவர் என்ற காரணத்துக்காக அவரை நிராகரிப்பது சரியாக இருக்குமா? என்பதும் பிராமணன் என்பதும் ஒரே பொருள் கொண்ட சொல்லாகவே வழமையில் கையாளப்படுகிறது. உடலின் வேறுபட்ட இடங்களிலிருந்து பிறந்ததாகவும், இழிபிறப்பாகவும் பகுத்து வைத்திருக்கும் மக்களில் தான் மட்டும் உயர்ந்தவன், ஏனைய அனைவரும் தமக்கு ஊழியம் செய்ய பிறப்பெடுத்தவர்கள் எனும் பொருளில் தங்களை பிராமணன் என அழைத்துக் கொள்கிறார்கள். இப்படியான சிந்தனை கொண்டவர்களின் அந்த சிந்தனைக்கு துணை செய்பவர்களின் பொதுப்பெயராக பாப்பான் என்பது இருக்கிறது. இந்து என்பது சாரம்சத்தில் ஒரு மதமல்ல. அடக்குமுறைச் சட்டங்களின் தொகுப்பு. தன்னுடைய மேலாதிக்கத்திற்கான அந்த சட்டத் தொகுப்பைக் கொண்டு சிந்தனையாலும் செயலாலும் மக்களை வதைப்பதே பார்ப்பனியம். இது பிராமணன் என தம்மை பெருமையாக அழைத்துக் கொள்ளும் ஒரு கும்பலை மட்டும் குறிப்பதல்ல. ஆனால் அவர்களை சிறப்பாக குறிக்கிறது என்பது வேறு விசயம். அதேநேரம் அங்கு பிறந்திருந்தாலும், அந்த நச்சுச் சிந்தனை தவறு என்று தூக்கி எறிந்தவர்களை பாப்பானாக சுட்டப்படவேண்டிய அவசியமில்லை. அடிப்படயில் பிராமணன் என அழைப்பதே தவறானது. ஏனென்றால் அந்தப் பெயர், அந்த பகுப்பை ஏற்றுக் கொண்டதான ஓர் ஒப்புதல் குறியீடாக பயன்படுத்தப்படுகிறது. எனவே நாங்கள் பிராமணன் எனும் சொல்லைப் பயன்படுத்துவதில்லை. ஒருவர் அறிவாளியாக இருக்கிறாரா என்பதை விட மக்களுக்கு எந்த அளவுக்கு பயன்படக்கூடியவராக இருக்கிறார் என்பதே அவரை அளக்கும் அளவுகோலாக இருக்க வேண்டும். பார்பனியச் சிந்தனை கொண்ட யாரும் மக்களுக்கு பயன்படுபவராக, சமூக உயர்வைச் சிந்திப்பவராக இருக்க முடியாது. ஆனால் அப்படி இருப்பதாக தோற்றம் காட்டலாம். சிறுபான்மை இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் அப்துல் கலாமை நாங்கள் பார்ப்பனியவாதியாக அழைக்கிறோம். அவர் அறிவியலாளர் தான். கனவு காணுங்கள் என்று ஊரெங்கும் பேசி, இந்திய இளைஞர்களின் உயர்மாதிரியாக தூக்கிப் பிடிக்கப்படுபவர்தான். குடியரசுத் தலைவர் மாளிகையிலுள்ள மயிலுக்கு அடிபட்டபோது, அதற்கு மருத்துவம் செய்து அழைத்து வரும் வரையில் உண்ணமாட்டேன் என அடம்பிடித்த அப்துல் கலாம், தன்னுடைய காலத்தில் நடைபெற்ற குஜராத் படுகொலைகளைப் பற்றி இன்றுவரை மூச்சு விடவில்லை. எதைக் கொண்டு இவரை மதிப்பிடுவது? *இன்றைய முதலாளித்துவ அரசும் சுரண்டல் சமூகமும் என்றாவது ஒருநாள் வீழ்ச்சியடையப்போவதும் அதன் பின்பு புதிய சமூக அமைப்பு ஒன்று மலரப்போவதும் உறுதி என்பதுதான் சோசலிசத்தை விரும்புபவரின் எதிர்பார்ப்பு. ஆனால் நாம் வெறுமனே இது நடக்கும் என்று பேசிக்கொண்டும் எழுதிக் கொண்டும் இருப்பதால் துரிதமாக நடந்து விடப் போகின்றதா என்ன? அல்லது பேசாதிருப்பதால் தாமதிக்கத்தான் போகின்றதா…இந்த ரீதியில் சிந்தித்துப் பார்க்கும்போது ஏனோ சலிப்பு மேலிடுகின்றதே..? “ஒரு நல்லவனுக்கும் யோக்கியமானவனுக்கும் கிடைக்கின்ற எல்லா மரியாதையும் அயோக்கியனுக்கும் கிடைத்து விடுகின்றதே!” என்று மகாநதியில் ஒரு சராசரித் தகப்பனாய், மனிதனாய் கமலின் ஆதங்கம்தான் எங்களுக்கும் ஏற்படுகின்றது இது ஏன்? எந்த ஒன்றையும் நாம் எப்படி எதிர் கொள்கிறோம் என்பதில் தான் அதற்கான விளைவும் அடங்கியிருக்கும். சரியான ஒன்றை அது சரியானது தான் என ஒப்புக் கொள்வதற்கும், அதை ஏற்றுக் கொள்வதற்கும் இடையே பாரிய‌ வித்தியாசம் உண்டு. முதலாளித்துவ கோரங்களை உணரும் யாரும், அது சுரண்டலினால் மக்களை எந்த எல்லைக்கு தள்ளியிருக்கிறது என்பதை சிந்திக்கும் யாரும், இதை தீர்க்கும் வழி என்ன? என்பதை ஆலோசிப்பது தான் அடுத்த கட்டமாக இருக்கும். ஆனால் அதில் எந்தவிதமான பங்களிப்பையும் செய்ய முன்வராமல், அதாவது தன்னுடைய சொகுசுகளை எதன்பொருட்டும் இழக்க விரும்பாமல் இருக்கும் போது தான் சலிப்பும், ஆயாசமும் தோன்றுகின்றன. பலவிதமான பொருட்களை பாவிப்பதும், உழைக்காமல் இருப்பதுமே மகிழ்ச்சி எனும் கசடுகளை கழித்து “மகிழ்ச்சி என்பது போராட்டம்” என்பதன் முழுமையான பொருளை உணரும் போது தான், சோசலிசம் என்பது திண்ணை நியாயமல்ல என்பது புரியும். உலகில் இதுவரையான இசங்கள் அனைத்தும் உலகை வியாக்கியானம் மட்டுமே செய்தன. ஆனால் தேவையோ உலகை தலைகீழாய் மாற்றியமைப்பது. இதுதான் கம்யூனிஸ்டுகளின் தலையாய பணி. பேசுவதோடும், எழுதுவதோடும் அவர்கள் முடங்கிவிடுவதில்லை. தனக்கு துன்பம் நேரும் போது நொந்து கொள்வதும், தத்துவம் பேசுவதும் தான் மகாந‌தி கிருஷ்ணசாமிகளின் வேலை. அது ஏன் நேருகிறது? அதிலிருந்து மக்களை மீட்பது எப்படி? என்று செயல்படத் தொடங்கும் போது நொந்து கொள்ளும் அவசியம் நேராது. மாறாக, அதுவே வேலை செய்வதற்கான உற்சாகத்தைத் தரும். *முதலாளித்துவ முறையில் வளர்ந்த வலைதளங்களின் மூலம் பொதுவுடைமை சிந்தனையை வளர்க்கலாமா? வலைதள வளர்ச்சி முதலாளித்துவ முறை மூலம் பலம் பெற்றதுதானே ? இந்த உலகம் முதலாளித்துவ உலகமாகவே இயங்கிக் கொண்டிருக்கிறது. பொதுவுடமை பேசுபவர்கள் முதலாளித்துவத்தின் விளைவுகளை பயன்படுத்தக்கூடாது என்றால், அவர்கள் உலகில் வாழவே கூடாது என்பதுதான் பொருளாக வரும். இன்றைய தொழில்நுட்பம் தொடங்கி, அறிவியல் கண்டுபிடிப்புகள், கருவிகள், வாய்ப்புகள் வரை அனைத்திலும் முதலாளித்துவத்தின் பங்களிப்பு இருக்கிறது. அதை தவிர்க்க முடியாது. மட்டுமல்லாது, அதை தவிர்க்க வேண்டுமென்பது தேவையுமல்ல. புதிய சமூகம் ஏற்கனவே இயங்கிக் கொண்டிருக்கும் சமூகத்திற்குள்ளிருந்து தான் கிளைத்து வரும் என்பதுதான் உண்மை . முதலாளித்துவமேகூட அதற்கு முன்பிருந்த சமூகத்தின் தோளில் ஏறி நின்று தான் இந்த வளர்ச்சிகளை சாதித்தது. எனவே முதலாளித்துவ விளைவுகளை பயன்படுத்தாமல்தான் பொதுவுடமை பேசவேண்டும் என்பது வறட்டுவாதம். *பங்குச்சந்தையும் ஒரு தொழில்தான் என்கிறார்கள். பங்குச்சந்தை ஓர் சூதாட்டம் என்கிறார்கள். பங்குச்சந்தையை எந்த வகையில் சேர்க்கிறீர்கள்? பங்குச்சந்தை என்பது வர்த்தகமோ தொழிலோ அல்ல, அது அப்படி குறிப்பிடப்படும் போதும் சூதாட்டம் என்பதே சரி. முதலாளித்துவ சுரண்டலை தீவிரப்படுத்த உருவாக்கப்பட்ட ஒரு வடிவம். மக்களிடமிருந்தே முதலீட்டை திரட்டி அதன் பலனை சொற்ப அளவில் முதலீடு வழங்கிய மக்களுக்கு வழங்கிவிட்டு மொத்தத்தையும் சுருட்டிக்கொள்ளும் ஒரு ஏற்பாடு. முதலீடு என்பதே உபரி உழைப்பின் குவிப்பு. இந்த முதலீட்டின் காரணமாகவே முதலாளிகள் உற்பத்தியின் பலனில் பெரும்பகுதியை தமதாக்கிக் கொள்கின்றனர். ஆனால் பகுதியளவிலான பங்கை தன்னிடம் வைத்திருக்கும் ஒரு முதலாளி பெரும்பகுதி பங்கை உதிரிகளாக வைத்திருக்கும் பங்குதாரர்களுக்கு உரிய பங்கை பகிர்ந்தளிக்காமல் குறைந்த அளவிலான மதிப்பையே பகிர்ந்தளிக்கிறான். இதையும் கூட திருட்டுத்தனமாக ஏற்றியும் இறக்கியும் காண்பிப்பதற்கு அதன் விதிமுறைகளில் சந்துபொந்துகள் திட்டமிட்டு உருவாக்கி வைக்கப்பட்டுள்ளன. ஆனாலும், ஒட்டுமொத்தமாக தங்களின் சேமிப்பை முதலீடுகளாக செய்யும் மக்களுக்கு சற்று லாபத்தை வழங்குவதாலும், இதற்கென்று தனிப்பட்ட உழைப்பு எதையும் செய்யவேண்டிய தேவையில்லாதிருப்பதாலும் மக்களிடம் வரவேற்பை பெற்றிருக்கிறது. மொத்தமாக பார்த்தால் இது மக்களுக்கு இழப்பையே கொண்டுவருகிறது. *ஜெயா டிவியில் ஒரு நிகழ்ச்சியில் திரைப்பட விமர்சகர் திரு மதன் அவர்கள் ஆவிகள் அல்லது பேய்கள் நான்கு வகைப்படும் என்றும் அவை அறிவியல் படி நிருபிக்கப்படுள்ளன என்றும் கூறுகிறார்.. சினிமாவில் காண்பிக்ககூடிய ஆவிகள் போன்று இருப்பது நடைமுறையில் இருப்பது சாத்தியம் என்கிறார்.அந்த சினிமாவை விட்டுத்தள்ளுங்கள். இந்த விஞ்ஞான நவீன உலகிலும் இது போன்ற நம்பிக்கைகளும் அறிவியற்ப்பூர்வமாக நிருபிக்கப்படுள்ளன என்ற வாதமும் எந்த அளவிற்கு உண்மை..? பேய். பிசாசுகள் இருப்பது சாத்தியமில்லாதவை, அறிவியல் ரீதியாகவும் கூட. மனிதன் என்பது மூளை எனும் பொருளின் அனுபவத்தொகுப்பின் வழிகாட்டலின் ஊடாக உடலுறுப்புகளின் இயக்கங்களின் வழியே சாத்தியப்படும் ஒன்று. ஆனால் பிறப்புக்கும் இறப்புக்கும் இடைப்பட்ட குறைந்த காலத்தில் முடிந்து விடுபவனா மனிதன் என்பது தொடக்கத்திலிருந்தே மனிதனை காயப்படுத்தி வருகிறது. அதன் விளைவுகள் தான் கடவுள், மதம் முதலான பயங்காட்டல்களும் பேய,பிசாசு முதலான பயங்களும். ஒரு மனிதன் இறந்துவிட்டானென்றால், அவன் மூளை மீள முடியாமல் செயலிழந்து விடுகிறது. உடலுறுப்புகளோ புதைப்பதன் மூலமோ எரிப்பதன் மூலமோ வேறு வழிகளின் மூலமோ சீர்குலைந்து ஆற்றல் மாற்றம் நடைபெற்று விடுகிறது. இதன்பிறகு இவைகள் ஒன்று கூடி செயல்படுவதற்கு எந்த வடிவிலும் சாத்தியமில்லை. *இந்திய விடுதலைப்போரில் முஸ்லிம்களின் நோக்கம் இந்தியாவிலிருந்து பிரிந்து தனி நாடு அடைய வேண்டும் என்ற நோக்கத்தில் ஆரம்பிக்கபட்டதா?இல்லை சுதந்திரம் ஒன்றே குறிக்கோள் என்று துவங்கியதா? மதவாதிகள் அப்படித்தான் விளக்கமளிப்பார்கள். முடிந்தால் சிரியுங்கள். அவ்வளவுதான். இந்திய விடுதலைப்போரில் முஸ்லீம்களின் பங்களிப்பு குறிப்பிடத்தக்க அளவில் இருக்கவே செய்தது. இது குறித்து அனேக நூல்கள் கிடைக்கின்றன. நானும் ஓரிரு நூல்களை படித்திருக்கிறேன். விடுதலைப்போரில் பங்களிப்புச் செய்த முஸ்லீம்களிடம் விடுதலையே முதன்மையானதாக இருந்தது. ஆனால் ஜின்னா தலிமையிலான முஸ்லீம் லீக் பிரிவினையை நோக்கமாக கொண்டிருந்தது. ஆனாலும் பிரிவினைக் கோரிக்கை அவர்களால் ஆரம்பிக்கப்பட்டதல்ல. இன்றைய ஆர்.எஸ்.எஸ் ன் தொடக்கமான சித்பவன பார்ப்பனர்களின் கோரிக்கையாகவே பிரிவினை இருந்தது. காங்கிரஸின் பாராமுகத்தால் தோற்றுவிக்கப்பட்ட முஸ்லீம் லீக், முதலில் சமஸ்டி கோரிக்கையைத்தான் வைத்தது. அது நிராகரிக்கப்பட்டதால் தான் பாகிஸ்தான் கோரிக்கையை முக்கியமான நிபந்தனையாக ஜின்னா முன்மொழிந்தார். *இந்தியா போன்ற பல்தேசிய நாடுகளில் வர்க்க ரீதியான ஒன்றிணைவுக்கு மொழி தடைபோல தோற்றமளிக்கிறது. என்றாலும், பாரிய அளவில் தடையாக இருப்பதில்லை. ஒற்றைத் தேசிய நாடுகளையும் பல்தேசிய நாடுகளையும் ஒப்பிட்டு நாடு முழுவதும் ஒத்த கருத்தை உருவாக்குவதில் ஏற்படும் சிரமங்களைச் சுட்டிக் காட்டி இதை முன்வைக்கிறார்கள். ஆனால் தேவையின் அழுத்தம் இருந்தால் எந்த மொழியையும் மனிதன் எளிதாக கற்றுக் கொள்ள முடியும். எடுத்துக் காட்டாக வடகிழக்கு இந்தியாவில் மாவோயிஸ்டுகளின் பரவலில் பெரும் பங்களிப்பை செய்திருப்பது ஆந்திரத்தின் மக்கள் யுத்தக் குழுவினர் தான். நிதிமூலதனங்களின் சுரண்டல் தன்மை சாரம்சத்தில் எல்லா இடங்களிலும் பொதுவாக இருப்பதால் மொழி உள்ளிட்ட வேறுபாடுகள் பெரும் பொருட்டல்ல. வர்க்க ரீதியான ஒன்றிணைவுக்காக போராடுபவர்கள் யதார்த்தத்தில் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்கிறார்கள். அவற்றில் மொழியும் குறிப்பிடத்தக்க ஒன்று, அவ்வளவு தான். அனைத்துமக்களும் ஒரே மொழியைப் பயன்படுத்துவது சாத்தியமும் அல்ல, சரியானதும் அல்ல. கல்வி உள்ளிட்டு அனைத்தும் அவரவர் தாய் மொழியிலேயே இருப்பதுதான் மக்களின் வளர்ச்சிக்கு உகந்தது. ஒரு பல்தேசிய நாட்டில் சரியான வளற்சியற்ற மொழியை ஏனைய மொழிகளின் உயரத்திற்கு வளர்த்தெடுப்பது ஒரு சோசலிச அரசின் கடமைகளில் உள்ளதாகும். சிறுபான்மை மதப் பிரிவுகளுக்கு நீங்கள் குறிப்பிடுவது போல் சில சலுகைகள் வழங்கப்படுகின்றன. சீக்கியர்களுக்கு குறுவாள் வைத்திருக்கும் அனுமதி போன்று மதச் சடங்குகளுக்கு இசைவாக அந்த சலுகைகள் இருக்கும். அதாவது இந்திய குற்றவியல், குடும்பவியல் சட்டங்கள் குறிப்பிட்ட மதப்பிரிவினரின் மரபுகளுக்கு எதிராக இருக்கும் போது அதை ஒரு சலுகையாக அந்த மதத்தினருக்கு அளித்திருக்கிறார்கள். ஆனால் இது பொருளியல் நோக்கில் இருக்க முடியாது. வருமானவரிச் சலுகைகள் என்று இந்து மதத்தினருக்கு இருப்பதாக தெரியவில்லை. அதேநேரம் இந்து மதம் பெரும்பான்மை மதமாக இருப்பதால்இ நீதி நிர்வாகம் உள்ளிட்ட அனைத்தும் பார்ப்பன மயமாக இருப்பதால் அலுவலுக்கு அப்பாற்பட்டு பல வாய்ப்புகளை அவர்கள் பெற்று வருகிறார்கள். ஆனால், வருமான வரி உள்ளிட்ட பொருளாதார ரீதியான பல சலுகைகள் மதம் கடந்து முதலாளிகளுக்கு வழங்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. கடந்த ஓரிரு ஆண்டுகளில் இந்திய அரசு முதலாளிகளுக்கு நிதிநிலை அறிக்கைகளில் அறிவித்துக் கொடுத்த சலுகைகள் மட்டுமே ஐந்து லட்சம் கோடிக்கு மேல். வெளிப்படையாக அறிவிக்காமல் கொடுக்கப்படுவதை கணக்கிடவே முடியாது. முக்கியமாக மக்கள் கவனிக்க வேண்டியதும் போராட வேண்டியதும் இதற்கு எதிராகத்தான். மாறாக மக்களின் கவனம் பிசாத்து மதச் சலுகைகளில் குவிக்கப்படுகிறது. இதுவும் ஒருவகையில் பொருளாதார சலுகைகள் வழங்கப்படுவதிலிருந்து மக்களின் கவனத்தை திசைதிருப்பும் உத்தி தான். *ரிச்சர்ட் டாகின்ஸ், கிறிஸ்டோபர் ஹிட்சென்ஸ், சாம் ஹாரிசன், டேனியல் தந்நெட் போன்ற நாத்திக அறிவியல் அறிஞர்கள் பற்றி உங்கள் கருத்து என்ன?நீங்கள் பொதுவுடைமையை நிறுவ மதங்களை எதிர்க்கிறீர்களா இல்லை அதன் போலித் தன்மையை எதிர்க்கிறீர்களா ? பொதுவாகவே அறிவியல் அறிஞர்கள் பெரும்பாலும் நாத்திகர்களாகவே இருந்திருக்கின்றனர். அதேநேரம் அவர்களிடம் வர்க்கக் கண்ணோட்டம் இருப்பது அரிது. அவர்களின் அறிவியல் தெளிவு கடவுள் கற்பிதமாகத்தான் இருக்க முடியும் எனும் தெளிவை அவர்களுள் ஏற்படுத்தியிருக்கும். ஆனால் அவர்களுக்கு சமூகம் குறித்த தேடல் குறைவாக இருப்பதால் அவர்களின் கடவுள் மறுப்பு முழுமையடையாமல் இருக்கும். சமூகப் பார்வையற்ற, வர்க்கக் கண்ணோட்டமில்லாத கடவுள் மறுப்பு என்பது முழுமையான பலனை தருவதில்லை. கடவுள் மறுப்பு ஒரு பகுதி மட்டுமே. பொதுவுடைமையை நிறுவ மதங்களை எதிர்க்க வேண்டியதில்லை. கடவுள் மதம் என்பதெல்லாம் காயத்தின் மீது காய்ந்திருக்கும் பொருக்கைப் போன்றவை. சமூகத்தில் கடவுளின் தேவை தீர்ந்ததும் தானாகவே உதிர்ந்துவிடும். எனவே மதங்களை எதிர்ப்பது பொதுவுடைமையை நிறுவுவதற்கான முன்நிபந்தனையல்ல. ஆனால் அனைத்துவித அடக்குமுறைகளுக்கும் எதிரான விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்துவது கட்டாயத் தேவை எனும் அடிப்படையில் மதங்களுக்கு எதிராக செயல்படவேண்டியதும் அவசியமானது தான். *நண்பரே, சௌதியில் படுகொலை செய்யப்பட்ட இலங்கைப் பெண் குறித்து உங்கள் கருத்து என்ன? சௌதியில் ஒரு குழந்தையை கொன்ற குற்றத்திற்காக ரிஸானா எனும் இலங்கையைச் சேர்ந்த பணிப்பெண்ணுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது. இதில் இங்குள்ள ஊடகங்களும் அறிவுத் துறையினரும் காட்டும் அதீத கவனம் தேவையற்றது என்பதே என் கருத்து. ஒரு நாடு விதிக்கும் மரண தண்டனைகள் அனைத்துமே சரியாகவும் நேர்மையாகவும் இருக்கும் என எதிர்பார்க்க முடியாது. சிலவோ, பலவோ அந்தந்த நேர மக்களின் உணர்வுகளுக்கும், ஆளும் வர்க்கங்களின் நலனுக்கும் உகந்தவாறே இருக்கும். எடுத்துக்காட்டாக இந்தியாவில் அப்சல் குருவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையைக் கூறலாம். நேரடியாக எந்த ஆதாரமும் இல்லாத நிலையிலும் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து மரணதண்டனை விதிக்கிறோம் என்று போகிறது தீர்ப்பு. இதை எவ்வாறு எடுத்துக் கொள்வது? இதை விடுத்து சிறுமிக்கு மரண தண்டனை விதிப்பது கொடூரம், ரிஸானா கொலை செய்யவே இல்லை என்பன போன்ற வாதங்களுடன் இந்த பிரச்சனையை விவாதிப்பது சரியானதாக இருக்காது. ஆனால் இதில் விவாதிக்கப்பட வேண்டிய அம்சம் சௌதிக்கு செல்லும் பணிப் பெண்களின் பணிச் சூழல் இது போன்ற குற்றங்களைச் செய்யத் தூண்டுகிறதா என்பது தான். மெய்யாகவே சௌதியில் வீடுகளுக்குச் செல்லும் பணிப் பெண்கள் மிகக் கொடுமையாக பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்படுகிறார்கள். ரிஸானா விவகாரம் சௌதியில் புதிதல்ல. இது போன்ற ஏராளமான நிகழ்வுகள் பணிப்பெண்களை தொடர்புபடுத்தி அங்கு நிகழ்ந்துள்ளன. விவாதிக்க வேண்டியதும், களைய்ப்பட வேண்டியதும் அந்த அடிப்படையைத் தான்.
ஆன்லைன் Febspot வீடியோ டவுன்லோடர், Febspot இலிருந்து வீடியோவைப் பதிவிறக்கவும், MP4, M4A, 3GP வடிவங்களில் Febspot வீடியோவை இலவசமாகப் பதிவிறக்கவும் உதவுகிறது. Febspot வீடியோவை பதிவிறக்கம் செய்வது எப்படி? 1) எல்லாவற்றிற்கும் மேலாக, எங்களிடம் செல்லுங்கள் வலைத்தளம், அல்லது எங்கள் Febspot வீடியோ பதிவிறக்கி addon ஐ பதிவிறக்கவும் குரோம், ஃபயர்ஃபாக்ஸ் WEB-STORE. 2) அதன் பிறகு, உங்கள் வீடியோ urlஐ நகலெடுத்து எங்கள் தளம் அல்லது ஆப்ஸ் தேடல் படிவத்தில் ஒட்டவும். 3) எனவே இப்போது, ​​இணையதளம் அல்லது பயன்பாட்டில் (பதிவிறக்க) பொத்தானைக் கிளிக் செய்யவும். Febspot வீடியோ பதிவிறக்கிPWA (Progressive Web APP), "வலை முற்போக்கு ஆப்ஸ்" மூலம் உங்கள் குரோம் உலாவியில் இருந்து உங்கள் ஸ்மார்ட்ஃபோன், டேப்லெட், பிசி அல்லது டிவி ஆகியவற்றில் பயன்பாட்டை நிறுவலாம். Febspot வீடியோ பதிவிறக்கி உடன் Febspot வீடியோ பதிவிறக்கி நீங்கள் MP4, M4A, 3GP இல் எந்த வீடியோ மற்றும் ஆடியோவையும் பதிவிறக்கம் செய்யலாம். கூடுதலாக, பார்வையாளர்கள் 1000 க்கும் மேற்பட்ட சமூக வலைப்பின்னல் வீடியோ தளங்களில் இருந்து படங்களை பதிவிறக்கம் செய்யலாம். பக்கத்தின் மேலே உள்ள உள்ளீட்டு பெட்டியில் வீடியோ இணைப்பு முகவரியை உள்ளிட்டு பதிவிறக்க பொத்தானை அழுத்தவும். எனவே, இப்போது நீங்கள் உங்கள் வீடியோ கோப்புகளை Febspot வீடியோ பதிவிறக்கியில் பதிவேற்றம் செய்து மகிழத் தயாராக உள்ளீர்கள். எங்கள் Febspot வீடியோ டவுன்லோடர் கருவிகள் பல தளங்களில் இருந்து வீடியோவைப் பதிவிறக்க உங்களுக்கு உதவுகின்றன. எங்கள் கருவி ஆல் இன் ஒன் இலவசம் வீடியோ பதிவிறக்கி அனைத்து வீடியோ தளங்களில் இருந்து, அனைத்து வடிவங்களிலும். எந்த பதிவும் இல்லாமல் எளிய மற்றும் நேரடியான படிகளுடன் இலவசமாகவும் விரைவாகவும் வீடியோவைப் பதிவிறக்க. வேலை செய்ய 100% பாதுகாப்பானது, உங்கள் சாதனங்களுக்குள் எந்த வித வைரஸ்களும் வராமல் உங்கள் வீடியோ கோப்பைத் திறக்கலாம். ஆன்லைன் Febspot வீடியோ பதிவிறக்கம் மற்றும் இணையதளம் எல்லாவற்றிற்கும் மேலாக, நீங்கள் எந்த இணையதளத்திலும் ஒரு அற்புதமான ஆன்லைன் வீடியோவைப் பார்க்கும்போதெல்லாம் மற்றும் பார்க்கும்போதெல்லாம், அதைச் சேமிக்க நீங்கள் எப்போதும் அனுமதிக்கப்படுவீர்கள், ஆனால் பெரும்பாலும் அதைச் செய்ய வலைத்தளம் உங்களை அனுமதிக்காது, ஏனெனில் அது வணிகத்தில் நஷ்டம் மற்றும் இப்போது நீங்கள் தேடத் தொடங்க வேண்டும். எங்கிருந்து நீங்கள் எந்த ஆன்லைன் வீடியோவையும் பதிவிறக்கம் செய்யலாம், அதன் பிறகு, உங்கள் ஒரே கிளிக்கில் முழு விளம்பரங்களைக் கொண்ட ஸ்பேம் வலைத்தளத்தைக் காண்பீர்கள். கூடுதலாக, அது என்னுடன் கடந்து செல்கிறது, அதனால்தான் நாங்கள் செய்கிறோம் Febspot வீடியோ பதிவிறக்கி நான் மட்டுமல்ல, அனைவரும் ஒரே கிளிக்கில் எந்த பிரபலமான இணையதளம் அல்லது பயன்பாட்டிலிருந்து ஆன்லைன் வீடியோவைப் பாதுகாப்பாக பதிவிறக்கம் செய்யலாம். மேக்கிற்கான Febspot வீடியோ பதிவிறக்கி Macக்கான மிகவும் பயனுள்ள Febspot வீடியோ டவுன்லோடர், Mac இல் உள்ள எந்த இணையதளத்திலிருந்தும் Febspot வீடியோக்களை இலவசமாக பதிவிறக்கம் செய்வது எப்படி என்பதை அறிய சிறந்த இணையதளம், Mac/PC 2022க்கான சிறந்த இலவச Febspot வீடியோ டவுன்லோடர், Macக்கான சிறந்த Febspot வீடியோ டவுன்லோடர், இலவச Febspot வீடியோ டவுன்லோடர் மேக் ஐபோனுக்கான Febspot வீடியோ பதிவிறக்கி iPhone மற்றும் iPadக்கான சிறந்த இலவச Febspot வீடியோ டவுன்லோடர் ஆப்ஸ், iPhone/iPad இல் Febspot வீடியோக்களைப் பதிவிறக்குவதற்கான சிறந்த இலவச வழி, இலவச Febspot வீடியோ டவுன்லோடர் நாங்கள் iPhone மற்றும் iPad 2022க்கான ஆப்ஸ், iphoneக்கான எளிதான பதிவிறக்கம் மற்றும் iphoneக்கான தனியார் டவுன்லோடர் ஆப்ஸ். Febspot வீடியோ பதிவிறக்கி விண்டோஸ் 11 Windows 11 இல் எந்த இணையதளத்திலிருந்தும் Febspot வீடியோவைப் பதிவிறக்குவது எப்படி, Windows 64 PCக்கான டவுன்லோடர் HD 11 பிட் பதிவிறக்கம், Windows 4K Febspot வீடியோ டவுன்லோடர் 64 பிட் பதிவிறக்கம், Windows 11க்கான சிறந்த டவுன்லோடர் மேலாளர் மென்பொருள் பயன்பாடுகள், Windows 10 PCக்கான Febspot வீடியோ டவுன்லோடர் 2022 இல், PC Windows 11க்கான டவுன்லோடர் HD. Febspot வீடியோ பதிவிறக்கி chromebook 2022 இல் Chrome க்கான சிறந்த Febspot வீடியோ பதிவிறக்கம், 4K மற்றும் பலவற்றில் Chromebook இல் Febspot வீடியோக்களை ஆஃப்லைனில் பதிவிறக்குவது எப்படி Febspot வீடியோ பதிவிறக்கம் மற்றும் சேவைகள் பற்றி மேலும் அறிக எங்களின் இணையப் பயன்பாட்டைப் பயன்படுத்துவதன் மூலம், உங்கள் இணைய இணைப்பிலிருந்து உங்கள் Febspot வீடியோக்களை எளிதாகச் சேமிக்க முடியும். இது 4K உள்ளடக்கத்தை எளிதாகக் கையாளுகிறது, கூடுதலாக எங்களின் 4K Febspot வீடியோ டவுன்லோடர் சிறந்த இலவச, வேகமான மற்றும் தொந்தரவு இல்லாத பதிவிறக்கக் கருவியாகும். MP4, 3GP, M4A போன்ற பதிவிறக்கம் Febspot வீடியோ மற்றும் ஆடியோ வடிவங்கள் இரண்டிலும் விதிவிலக்கான தேர்வு உள்ளது. இது உங்களுக்குப் போதுமானதாக இல்லாவிட்டால், இந்த இலவசம் ஒரு இலவச மாற்றத்தைக் கொண்டுள்ளது, வேறுவிதமாகக் கூறினால், mp4 மாற்றி. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், எங்கள் ஏதேனும் Febspot வீடியோ மாற்றி இலவசம் என்பது ஒரே தரம் மற்றும் Febspot வீடியோ டவுன்லோடர் இலவசம் - எந்த Febspot வீடியோவையும் பதிவிறக்கவும். எனவே, முழு செயல்முறையும் விரைவானது மற்றும் எளிதானது, எனவே, இணையதளத்தில் வழங்கப்பட்ட பயன்பாடுகளை ஒரு முறை பதிவிறக்கம் செய்து, நீங்கள் பயணம் செய்யத் தயாராக உள்ளீர்கள். விண்டோஸ் 10க்கான இலவச Febspot வீடியோ பதிவிறக்கம் விண்டோஸ் 10 க்கான இணைய பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள், பயனர்களிடமிருந்து மிகப்பெரிய கருத்து மற்றும் ஈடுபாட்டை உருவாக்குகிறது. மேலும், எங்கள் வெறித்தனமான பதிவிறக்கக் கருவிகளின் உதவியுடன், உயர்தர உள்ளடக்கத்தைப் பதிவுசெய்வீர்கள். சமூக வலைப்பின்னலில் உள்நுழைந்து, நீங்கள் பதிவிறக்க விரும்பும் இடுகை அல்லது Febspot வீடியோவைத் திறக்கவும். இருப்பினும், நீங்கள் ஆதாரத்தையும், எனவே நீங்கள் பதிவிறக்க விரும்பும் மீடியாவை உருவாக்கிய ஆசிரியரையும் குறிப்பிட விரும்புகிறீர்கள். எனவே, இந்த உள்ளடக்கத்தின் உதவியுடன், பரிந்துரைகள் பிரிவில் நுழைவதற்கு உங்களுக்கு விதிவிலக்கான வாய்ப்பு உள்ளது. நீங்கள் பல Febspot வீடியோ அல்லது ஒரு Febspot வீடியோவை எங்கள் APP மூலம் பதிவிறக்கம் செய்யலாம். இதைச் செய்யும்போது, ​​Febspot வீடியோ டவுன்லோடர் இணையப் பயன்பாட்டில் உள்ள வாக்கெடுப்புகள் அல்லது வினாடி வினாக்களின் வடிவம் மிகவும் கவர்ச்சிகரமானது என்பதை நினைவில் கொள்ளவும். Febspot வீடியோ டவுன்லோடர் உலாவி நீட்டிப்புகள் ஃபெப்ஸ்பாட் வீடியோ டவுன்லோடர் அதனால், Febspot வீடியோ பதிவிறக்கி பலவிதமான சமூக ஊடக தளங்கள் மற்றும் வலைத்தளங்களிலிருந்து ஆன்லைன் வீடியோவைப் பதிவிறக்க தளம் உங்களை அனுமதிக்கிறது, இது ஒரு கேம்-சேஞ்சர் ஆகும், ஏனெனில் இது கூகிள் போன்ற அனைத்து ஆன்லைன் வீடியோ பதிவிறக்கத் தேவைகள் மற்றும் சிக்கல்களுக்கு ஒரே ரன்னருக்கு வர அனுமதிக்கிறது. எங்கள் கருவிகளில் இருந்து Febspot வீடியோவைப் பதிவிறக்குவதற்கான படிகள் Febspot இணையதளத்திற்குச் செல்லவும். நீங்கள் பதிவிறக்க விரும்பும் ஆன்லைன் Febspot வீடியோவைத் தேர்ந்தெடுத்து, பகிர் பொத்தானைக் கிளிக் செய்து இணைப்பை நகலெடுக்கவும். இணைப்பை புதைக்கவும் Febspot வீடியோ பதிவிறக்கிr தளத்தில் தேடல் படிவம் மற்றும் பதிவிறக்க ஐகானை கிளிக் செய்யவும். இப்போது, ​​வடிவமைப்பைத் தேர்வுசெய்தால், ஆன்லைன் வீடியோ எந்தச் சாதனத்திலும் பதிவிறக்கத் தொடங்கும். எல்லோரும் ஏன் நீங்களும் ஆன்லைன் Febspot வீடியோ டவுன்லோடரைப் பயன்படுத்த வேண்டும் சரி, பல காரணங்கள் உள்ளன ஆனால் பெரிய எலும்புகள் பற்றி பேசலாம். மற்ற இணையதளங்களைப் போல ஸ்பேம் விளம்பரங்கள் மற்றும் பாப்-அப்கள் இல்லை. மற்ற இணையதளங்களுடன் ஒப்பிடுகையில் வேகமாக பதிவிறக்கம். Febspot வீடியோக்களை பதிவிறக்கம் செய்ய +1000 இலவச கருவி. 1000க்கும் மேற்பட்ட இணையதளங்கள் ஆதரிக்கப்படுகின்றன. உள்நுழைவுகள் மற்றும் பதிவுகள் இல்லை. வரிசைப்படுத்துதல் நிறுவனங்களிலிருந்து இலவசம் - உங்களைப் பற்றிய எந்தத் தகவலையும் சேகரிப்பதில்லை என்ற கொள்கையை நாங்கள் கடுமையாகக் கொண்டுள்ளோம். எந்த பிரபலமான இணையதளத்திலிருந்தும் ஆன்லைன் வீடியோவைப் பதிவிறக்க, chrome நீட்டிப்பைப் பெறவும் online-videos-downloader.com வீடியோ பதிவிறக்கி குரோம் நீட்டிப்பு என்பது ஸ்டைலான நீட்டிப்பு ஆகும், ஏனெனில் இப்போது நீங்கள் இணைப்பை நகலெடுத்து புதைத்து வேறு வழியைப் பின்பற்ற வேண்டும். வீடியோ டேப்பைப் பதிவிறக்குவதற்கு, ஆதரிக்கப்படும் இடங்களுக்குச் சென்று, நீட்டிப்பு ஐகானைக் கிளிக் செய்யவும். ஆன்லைன் ஃபெப்ஸ்பாட் வீடியோ டவுன்லோடரை புக்மார்க் செய்வது எப்படி உதாரணமாக, Febspot chrome மற்றும் firefox நீட்டிப்புகளைப் பயன்படுத்த முடியாவிட்டால் நான் என்ன செய்ய வேண்டும், ஒரே கிளிக்கில் இந்த இணையதளத்தை எப்படிப் பார்ப்பேன் என்பதை உங்களில் பெரும்பாலானோர் அனுமதிக்கலாம். எனவே, அந்த நபர்களுக்கு, எல்லா உலாவிகளிலும் ஒரு புள்ளி உள்ளது, அதுதான் புக்மார்க். ஒவ்வொரு சாதனத்திற்கான வழியையும் கீழே பட்டியலிடப் போகிறேன். விண்டோஸில் புக்மார்க் செய்வதற்கான படிகள் ஃபெப்ஸ்பாட்டை புக்மார்க் செய்ய Ctrl D வீடியோ பதிவிறக்கி இணைய கண்டுபிடிப்பாளர், குரோம் மற்றும் பயர்பாக்ஸ் உலாவிகளில் தளம். MacOS இல் புக்மார்க் செய்வதற்கான படிகள் Febspot ஐ புக்மார்க் செய்ய டி கட்டளை வீடியோ பதிவிறக்கி சஃபாரி, குரோம் மற்றும் பயர்பாக்ஸ் உலாவிகளில் தளம். Android OS இல் புக்மார்க் செய்வதற்கான வழி 3 புள்ளிகளில் தட்டவும். இப்போது, ​​★ வால்வ் ஆன் செய்தால், புக்மார்க் சேமிக்கப்படும். ஐபோன்கள் iOS இல் புக்மார்க் செய்வதற்கான படிகள் சஃபாரி உலாவியைத் திறந்து, உள்ளீட்டு URL ஐக் கிளிக் செய்யவும். "முகப்புத் திரையில் சேர்" என்பதைத் தட்டி, அதைச் சேர்க்கவும். இப்போது, ​​நீங்கள் தயாராகிவிட்டீர்கள் புக்மார்க் சேர்க்கப்பட்டது மற்றும் நீங்கள் வேகமாக இணையதளத்தைப் பார்வையிடலாம். Febspot வீடியோ பதிவிறக்கி மற்றும் சேவைகள் பற்றி எங்கள் இணையப் பயன்பாட்டைப் பயன்படுத்துவதன் மூலம், உங்கள் இணைய இணைப்பிலிருந்து உங்கள் வீடியோக்களை எளிதாகச் சேமிக்க முடியும். இது 4K உள்ளடக்கத்தை எளிதாகக் கையாளுகிறது, கூடுதலாக எங்களின் 4K வீடியோ டவுன்லோடர் சிறந்த இலவச, வேகமான மற்றும் தொந்தரவு இல்லாத பதிவிறக்கக் கருவியாகும். MP4, 3GP, M4A போன்ற வீடியோ மற்றும் ஆடியோ வடிவங்களில் விதிவிலக்கான தேர்வு உள்ளது. அது உங்களுக்குப் போதவில்லை என்றால், இந்த இலவசமும் இலவச மாற்றத்தைக் கொண்டுள்ளது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், எங்கள் ஏதேனும் வீடியோ மாற்றி இலவசம் என்பது ஒரே தரமான மற்றும் இலவச Febspot வீடியோ பதிவிறக்கிகளில் ஒன்றாகும். எனவே, முழு செயல்முறையும் விரைவானது மற்றும் எளிதானது, எனவே, இணையதளத்தில் வழங்கப்பட்ட பயன்பாடுகளை ஒரு முறை பதிவிறக்கம் செய்து, நீங்கள் பயணம் செய்யத் தயாராக உள்ளீர்கள். Febspot வீடியோ டவுன்லோடர் APP இணைய பயன்பாட்டைப் பதிவிறக்கி, பயனர்களிடமிருந்து மிகப்பெரிய கருத்துக்களையும் ஈடுபாட்டையும் உருவாக்குகிறது. மேலும், எங்கள் வெறித்தனமான பதிவிறக்கக் கருவிகளின் உதவியுடன், உயர்தர உள்ளடக்கத்தைப் பதிவுசெய்வீர்கள். சமூக வலைப்பின்னலில் உள்நுழைந்து, நீங்கள் பதிவிறக்க விரும்பும் இடுகை அல்லது வீடியோவைத் திறக்கவும். இருப்பினும், நீங்கள் ஆதாரத்தையும், எனவே நீங்கள் பதிவிறக்க விரும்பும் மீடியாவை உருவாக்கிய ஆசிரியரையும் குறிப்பிட விரும்புகிறீர்கள். எனவே, இந்த உள்ளடக்கத்தின் உதவியுடன், பரிந்துரைகள் பிரிவில் நுழைவதற்கு உங்களுக்கு விதிவிலக்கான வாய்ப்பு உள்ளது. எங்கள் APP மூலம் நீங்கள் பல வீடியோக்கள் அல்லது ஒரு வீடியோவை பதிவிறக்கம் செய்யலாம். இதைச் செய்யும்போது, ​​வாக்கெடுப்புகள் அல்லது வினாடி வினாக்களின் வடிவம் என்பதை நினைவில் கொள்ளுங்கள் Febspot வீடியோ டவுன்லோடர் ஆப் வலை என்பது
தொடர்ந்து முன்னேறும் அறிவியலின் வளர்ச்சியானது 'கடவுளின் இடைவெளியை' குறுக்கிக்கொண்டு செல்வது போலவே, காலாவதியாகிப்போன மதங்களுக்கும் அடிக்கடி புதிய தலைவலிகளை உருவாக்கத் தவறுவதில்லை. அந்த வகையில் தற்பொழுது சந்தைக்கு வந்துள்ள ஆய்வுகூட மாமிசமானது ஹலால், ஹராம் பேசும் இஸ்லாம், கோஷரை வலியுறுத்தும் யூதம் ஆகியவற்றுடன் சைவம், அசைவம் பேசும் பெளத்த, இந்து மதங்களையும் இக்கட்டில் தள்ளி விட்டுள்ளது. உண்மையான மிருகத்தில் இருந்து பிரித்தெடுக்கப்படும் மிருக உயிரணுவை, உயிரணு வளர்ப்பு முறை மூலம் ஆய்வுகூடத்தில் வளர்த்து உற்பத்தி செய்யப்பட்ட 'ஆய்வுகூட மாமிசம்' தற்பொழுது சந்தைக்கு விற்பனைக்காக வந்துவிட்டது. நேற்றைய தினம் (02 டிசம்பர் 2020) 'சிங்கபூர் உணவு மேலாண்மை மையம்' ஆய்வுகூட மாமிசத்தை சிங்கப்பூரில் விற்பனை செய்வதற்கு அனுமதி வழங்கிவிட்டது. உலகின் ஏனைய நாடுகளும் விரைவில் இதனை பின்பற்றி விற்பனைக்கான அனுமதிகளை படிப்படியாக வழங்கப் போகின்றன என்று எதிர்பார்க்கப்படுகின்றது. 1931 ஆம் ஆண்டு, முன்னாள் இங்கிலாந்துப் பிரதமர் வின்சன்ட் சர்ச்சில் "நெஞ்சுப் பகுதியையோ, பக்கவாட்டு சதையையோ உண்பதற்காக முழுக் கோழியை வளர்த்து, அதனைக் கொல்லும் அபத்தத்தில் இருந்து விடுபட்டு, பொருத்தமான முறைமையின் கீழ் குறித்த பகுதிகளை மட்டும் வளர்க்க வேண்டும்" என்று குறிப்பிட்டு இருந்தார். பல்லாண்டுகளாக நடைபெற்று வந்த தொடர் ஆய்வுகள் இந்த நூற்றாண்டில் வெற்றிபெற ஆரம்பித்தன. அந்த வெற்றிகளின் முதற்படியாக ஆய்வுகூட மாமிசம் சந்தைக்குள் நுழைவதற்கு சிங்கப்பூர் பச்சைக்கொடி காட்டிவிட்டது. தொழில்முறை மிருகப் பண்ணைகள் குறித்து கடும் விமர்சனங்கள் உள்ள நிலையில் ஆய்வுகூட மாமிச உற்பத்தியின் வெற்றியானது உலகம் விரும்பும் மிகச் சிறந்த மாற்றீடாக அமையும் என்று எதிர்பார்க்கலாம். ஆய்வுகூட மாமிசம் உயிருள்ள மிருகத்தில் இருந்து நேரடியாக பெறப்படுவது இல்லை, அதற்கு கழுத்தும் இல்லை, தலையும் இல்லை, இதயமும் இல்லை, ஆகவே அதனை ஹலால் பண்ணுவதற்காக "பிஸ்மில்லாஹி அல்லாஹு அக்பர்" சொல்லி வெட்டுவதற்கு தோதாக அங்கே எதுவுமே இல்லை, அதே போன்று கோஷரும் பண்ண முடியாது. தற்பொழுது இந்த வகையில் உற்பத்தியான கோழி இறைச்சி மட்டுமே சந்தைக்கு வந்துள்ளது. தொடர்ந்து ஆடு, மாடு, பன்றி போன்றவற்றின் மாமிசங்களும் சந்தைக்கு வரப்போகின்றன. "நான் நினைத்துக் கொண்டு இருப்பது போன்று எனது மதம் முக்காலத்தையும் உணர்ந்த, சர்வ வல்லமை கொண்ட, மிகுந்த ஞானமுள்ள இறைவனிடமிருந்து வந்த ஒன்றல்ல" என்பதை உணர்ந்துகொள்ள சிந்திக்கக் கூடிய மனிதர்களுக்கு இது ஒரு அழகான சந்தர்ப்பம் ஆகும். சந்தர்ப்பத்தை பயன்படுத்த எத்தனை பேர் தயார்? எத்தனை பேருக்கு அந்த அளவு சிந்தனைத் தைரியம் உள்ளது? 'ஆய்வுகூட கோழி இறைச்சி' உயிரற்ற ஒன்று, அது உண்மையான கோழி அல்ல என்ற காரணத்தால் அதனை ஹலால் என்று சொன்னால், அதே விதிமுறையின் கீழ் 'ஆய்வுகூட பன்றி இறைச்சியையும்' ஹலால் என்று சொல்ல வேண்டி வரும். அப்படி சொல்லிவிட்டால் முஸ்லிம்களுக்கு முதன் முதலாக ஹலால் பேகன் (Bacon) சாப்பிடும் வரம் கிடைக்கலாம். 'ஆய்வுகூட கோழி இறைச்சி' ஹலால் இல்லை என்று சொன்னால், அதனை எப்படி, எங்கே அறுத்து ஹலால் ஆக்குவது? கழுத்தை எங்கே தேடிப் பிடிப்பது என்கின்ற விடையற்ற பல கேள்விகள் எழலாம். கேள்விகள் இவற்றுடன் நிற்கவில்லை, இஸ்லாமிய, யூத மதங்களைத் தாண்டி இந்து, பெளத்த மதங்களுக்குள்ளும் அவை நுழைகின்றன. சைவ உணவு உண்போரின் நிலை என்னவாகப் போகின்றது? 'ஆய்வுகூட மாமிசம்' சைவ உணவா, அசைவ உணவா? எந்த அடிப்படையில் முடிவு செய்யப் போகின்றீர்கள்? இஸ்லாமிய மத அறிஞர்களே, ஆய்வுகூட கோழி இறைச்சி, ஆய்வுகூட ஆட்டு இறைச்சி, ஆய்வுகூட மாட்டு இறைச்சி ஆகியவைகளை மட்டும் ஹலால் என்று பத்வா கொடுத்து சாப்பிட்டுவிட்டு ஆய்வுகூட பன்றி இறைச்சியை, பேகனை ஹராம் என்று சொல்லி முஸ்லிம்களுக்கு வஞ்சனை செய்யப் போகின்றீர்களா? முக்காலத்தையும் உணர்ந்த எல்லாம் வல்ல இறைவனிடம் இருந்து வந்ததாகச் சொல்லிக்கொண்டு நீங்கள் பின்பற்றும் மதத்தில் நிகழ்காலப் பிரச்சினைகளுக்குக் கூட முறையான தீர்வு இல்லை என்பதால் நீங்கள் இன்னொரு தடவை தடுமாறப் போவது நிச்சயம். பிறை முதல், தொழுகை வரை ஏற்கனவே பல பிரிவுகளாக பிரிந்து, முரண்பட்டுக் கிடக்கும் இஸ்லாத்தில் இந்த விடயம் இன்னொரு வெடிப்பை, கருத்து முரண்பாட்டை உருவாக்கும் என்பது மட்டும் நிச்சயம், பத்வாக்கள் பறக்க ஆரம்பிக்கும் பொழுது அதனை நிதர்சனமாகக் கண்டு கொள்ளலாம். -றிஷ்வின் இஸ்மத் 03.12.2020 பொறுப்புத்துறப்பு: எனது பதிவுகள், இடுகைகள், பகிர்வுகள், பின்னூட்டங்கள் மற்றும் பதில்களின் கீழே பதியப்படும் கருத்துக்களில் மிகவும் காத்திரமான கருத்துக்கள் மட்டுமே கவனத்திற் கொள்ளப்பட்டு பதிலளிக்கப்படும், அல்லது அவற்றிற்கான பதில்கள் முக்கியத்துவம் கருதி தனிப் பதிவாக இடப்படும். அர்த்தமற்ற புலம்பல்கள், நேரம் மற்றும் வளங்களை விரயமாக்கும் நோக்கில் அமைந்த கருத்துக்கள் மற்றும் கேள்விகள், ஆரோக்கியமற்ற கருத்துக்கள், விடய அறிவு இன்றி முன்வைக்கப்படும் கருத்துக்கள், பதிவுடன் எவ்விதத்திலும் தொடர்பற்ற கருத்துக்கள், காழ்ப்புணர்வின் காரணமாக வெளிப்படுத்தப்படும் கருத்துக்கள் ஆகியவை கவனத்தில் கொள்ளப்படமாட்டது. அத்துடன் மோசமான மொழிநடையில் அமையும் கருத்துக்கள் காணப்பட்டால் அவை அவ்வப்பொழுது நீக்கப்படும்.
ஸ்மார்ட்போன்களின் அதிகரிப்புக்கு ஏற்ப வாட்ஸ்அப் சேவைகள் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது. அதன்படி குறுந்தகவல்களை அனுப்புவதற்கு வாட்ஸ்அப் பெரிதும் உதவுகிறது. இதற்கிடையில் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் வாட்ஸ்அப் சேவை முடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. கிட்டத்தட்ட அரைமணி நேரத்திற்கும் மேலாக முடங்கியுள்ளதாக தெரிகிறது. இதனால் 200 கோடிக்கும் அதிகமான பயனாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதனிடையே முடக்கத்திற்கான காரணம் தெரியாமல் பயனாளர்கள் குழம்பத்தில் உள்ளனர். மேலும், தொழில்நுட்ப காரணமாக பல பகுதிகளிலும் வாட்ஸ்அப் சேவை முடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
என்று வெள்ளிக்கிழமை அரசு தெரிவித்துள்ளது நுகர்வோர் விலைகள் ஆண்டு மே மாதம் வரை 8.6% உயர்ந்துள்ளனநான்கு தசாப்தங்களில் மிக விரைவான அதிகரிப்பு விகிதம். அமெரிக்கர்கள் அதிக விலையுயர்ந்த உணவு, எரிபொருள் மற்றும் வீட்டுவசதிகளை எதிர்கொள்கின்றனர், மேலும் சிலர் விலை வெடிப்புக்கு என்ன காரணம், எவ்வளவு காலம் நீடிக்கும் மற்றும் அதைத் தீர்க்க என்ன செய்யலாம் என்பது பற்றிய பதில்களை சிலர் புரிந்துகொள்கிறார்கள். பணவீக்கத்திற்கு வரும்போது சில எளிதான பதில்கள் அல்லது வலியற்ற தீர்வுகள் உள்ளன, இது விநியோக பற்றாக்குறை சூடான நுகர்வோர் தேவையுடன் மோதுவதால் உலகம் முழுவதும் உயர்ந்துள்ளது. இன்றைய விலை ஏற்றம் எவ்வளவு காலம் நீடிக்கும் என்று கணிப்பது கடினம், அதை எதிர்த்துப் போராடுவதற்கான முக்கிய கருவி வட்டி விகித அதிகரிப்பு ஆகும், இது பொருளாதாரத்தை மெதுவாக்குவதன் மூலம் பணவீக்கத்தை குளிர்விக்கிறது – சாத்தியமானது. எக்ஸ்பிரஸ் பிரீமியத்தில் சிறந்தது பிரீமியம் பிரீமியம் பிரீமியம் பிரீமியம் பணவீக்கத்தில் என்ன நடக்கிறது என்பதைப் புரிந்துகொள்வதற்கான வழிகாட்டி இங்கே உள்ளது மற்றும் அமெரிக்க மற்றும் உலகப் பொருளாதாரத்தில் இந்த சிக்கலான தருணத்தில் செல்லும்போது விலை ஆதாயங்களைப் பற்றி எப்படிச் சிந்திக்க வேண்டும். பணவீக்கத்தை தூண்டுவது என்ன இன்றைய பணவீக்கத்தின் காரணங்களை மூன்று தொடர்புடைய வாளிகளில் வீழ்ச்சியடைவதைக் கருத்தில் கொள்வது உதவியாக இருக்கும். — வலுவான தேவை. நுகர்வோர் பெருமளவு செலவு செய்கிறார்கள். தொற்றுநோய்களின் ஆரம்பத்தில், குடும்பங்கள் வீட்டிலேயே சிக்கியிருந்ததால் சேமிப்புகளைச் சேகரித்தனர், மேலும் 2021 வரை தொடர்ந்த அரசாங்க ஆதரவு அவர்களுக்கு இன்னும் அதிகமான பணத்தை ஒதுக்க உதவியது. இப்போது, ​​மக்கள் வேலைகளை எடுத்து, ஊதிய உயர்வை வென்றெடுக்கிறார்கள். அந்தக் காரணிகள் அனைத்தும் வீட்டு வங்கிக் கணக்குகளைத் திணித்துள்ளன, குடும்பங்கள் கொல்லைப்புற கிரில்ஸ் மற்றும் கடற்கரை விடுமுறைகள் முதல் கார்கள் மற்றும் சமையலறை மேசைகள் வரை அனைத்தையும் செலவழிக்க உதவுகின்றன. — மிகக் குறைவான பொருட்கள். குடும்பங்கள் தொற்றுநோய் சேமிப்புகளை எடுத்துக்கொண்டு, பிக்கப் டிரக்குகள் மற்றும் கணினித் திரைகளை வாங்க முயற்சித்ததால், அவர்கள் ஒரு சிக்கலில் சிக்கியுள்ளனர்: சுற்றிச் செல்ல மிகவும் குறைவான பொருட்கள் உள்ளன. தொற்றுநோய், உலகளாவிய ஷிப்பிங் பின்னடைவு மற்றும் குறைக்கப்பட்ட உற்பத்தி ஆகியவற்றுடன் தொடர்புடைய தொழிற்சாலை மூடல்கள், பாகங்கள் மற்றும் தயாரிப்புகள் பற்றாக்குறையில் பனிப்பொழிவை ஏற்படுத்தியுள்ளன. பொருட்களின் விநியோகத்தை விட தேவை அதிகமாக இருப்பதால், நிறுவனங்கள் வாடிக்கையாளர்களை இழக்காமல் அதிக கட்டணம் வசூலிக்க முடிந்தது. இப்போது, ​​சீனாவின் சமீபத்திய லாக்டவுன்கள் சப்ளை செயின் சீர்குலைவுகளை அதிகப்படுத்துகின்றன. அதே நேரத்தில், உக்ரைனில் நடக்கும் போர் உலகின் உணவு மற்றும் எரிபொருளின் விநியோகத்தை குறைத்து, ஒட்டுமொத்த பணவீக்கத்தை உயர்த்தி, பிற பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைக்கு ஊட்டமளிக்கிறது. எரிவாயு விலைகள் தேசிய அளவில் சராசரியாக ஒரு கேலன் $5 ஆக உள்ளது, இது ஒரு வருடத்திற்கு முன்பு $3 ஆக இருந்தது. — சேவைத் துறை அழுத்தங்கள். மிக சமீபத்தில், மக்கள் கொரோனா வைரஸுடன் வாழ்க்கையை சரிசெய்யும்போது தங்கள் செலவினங்களை விஷயங்களிலிருந்து விலகி அனுபவங்களை நோக்கி மாற்றுகிறார்கள் – மேலும் சேவைத் தொழில்களில் பணவீக்கம் அதிகரித்து வருகிறது. குறைந்த அளவிலான அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு அமெரிக்கர்கள் போட்டியிடுவதால், உணவு மற்றும் தொழிலாளர் செலவுகள் அதிகரிப்பதால், உணவகக் கட்டணங்கள் உயர்ந்து வருகின்றன, மேலும் விமான டிக்கெட்டுகள் மற்றும் ஹோட்டல் அறைகளின் விலை அதிகமாக உள்ளது, ஏனெனில் மக்கள் பயணம் செய்ய ஆர்வமாக உள்ளனர் மற்றும் எரிபொருள் மற்றும் உழைப்பு விலை அதிகம். நீங்கள் ஆச்சரியப்படலாம்: கார்ப்பரேட் பேராசை இதில் என்ன பங்கு வகிக்கிறது? அதிகரித்து வரும் செலவுகளை ஈடுகட்ட தேவைக்கு அதிகமாக விலையை உயர்த்துவதால், நிறுவனங்கள் வழக்கத்திற்கு மாறாக பெரிய லாபத்தை ஈட்டி வருகின்றன என்பது உண்மைதான். ஆனால் தேவை மிகவும் வலுவாக இருப்பதால் அவர்கள் அதைச் செய்ய முடிகிறது – நுகர்வோர் விலை உயர்வு மூலம் சரியாகச் செலவிடுகிறார்கள். அந்த விலை நிர்ணயம் எவ்வளவு காலம் நீடிக்கும் என்பது தெளிவாகத் தெரியவில்லை. Target உட்பட சில நிறுவனங்கள், சரக்குகளை அகற்றி வாடிக்கையாளர்களை வர வைக்க முயற்சிப்பதால், சில தயாரிப்புகளின் விலைகளை குறைக்கத் தொடங்கும் என்று ஏற்கனவே சமிக்ஞை செய்துள்ளன. பணவீக்கம் எவ்வாறு அளவிடப்படுகிறது? பொருளாதார வல்லுநர்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்கள் அமெரிக்காவின் இரண்டு முதன்மை பணவீக்க அளவீடுகளை உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்: வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட நுகர்வோர் விலைக் குறியீடு மற்றும் முக்கிய தனிப்பட்ட நுகர்வு செலவுகள் விலைக் குறியீடு. நுகர்வோர் அவர்கள் வாங்கும் பொருட்களுக்கு எவ்வளவு பணம் செலுத்துகிறார்கள் என்பதை CPI கைப்பற்றுகிறது, மேலும் அது முன்னதாகவே வெளிவருகிறது, இது ஒரு மாதத்திற்கு முந்தைய பணவீக்கம் என்ன என்பதை நாட்டின் முதல் தெளிவான பார்வையாக மாற்றுகிறது. PCE புள்ளிவிவரங்களைக் கொண்டு வர குறியீட்டில் இருந்து தரவு பயன்படுத்தப்படுகிறது. ஜூன் 30 அன்று வெளியிடப்படும் பிசிஇ இன்டெக்ஸ், உண்மையில் எவ்வளவு செலவாகும் என்பதைக் கண்காணிக்கும். உதாரணமாக, அரசாங்கமும் காப்பீடும் அவற்றுக்கு பணம் செலுத்தும் போது கூட இது சுகாதாரப் பாதுகாப்பு நடைமுறைகளின் விலையைக் கணக்கிடுகிறது. இது குறைந்த நிலையற்றதாக இருக்கும், மேலும் இது காலப்போக்கில் சராசரியாக 2 சதவீத பணவீக்கத்தை அடைய முயற்சிக்கும் போது பெடரல் ரிசர்வ் பார்க்கும் குறியீடாகும். ஏப்ரல் மாத நிலவரப்படி, PCE குறியீடு முந்தைய ஆண்டோடு ஒப்பிடும்போது 6.3 சதவீதம் உயர்ந்தது – மத்திய வங்கி இலக்கை விட மூன்று மடங்கு அதிகமாகும். ஃபெட் அதிகாரிகள் அதன் வேகத்தை உணர மாதந்தோறும் பணவீக்கத்தில் ஏற்படும் மாற்றங்களை உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். கொள்கை வகுப்பாளர்கள் குறிப்பாக முக்கிய பணவீக்க நடவடிக்கை என்று அழைக்கப்படுவர், இது உணவு மற்றும் எரிபொருள் விலைகளை அகற்றும். மளிகைப் பொருட்கள் மற்றும் எரிவாயு ஆகியவை வீட்டு வரவு செலவுத் திட்டங்களில் பெரும்பகுதியை உருவாக்குகின்றன என்றாலும், உலகளாவிய விநியோகத்தில் ஏற்படும் மாற்றங்களுக்கு பதிலளிக்கும் விதமாக அவை விலையில் ஏறுகின்றன. இதன் விளைவாக, பொருளாதாரத்தில் அடிப்படையான பணவீக்க அழுத்தங்களைப் பற்றி அவர்கள் தெளிவாகப் படிக்கவில்லை – மத்திய வங்கி எதையாவது செய்ய முடியும் என்று நம்புகிறது. “முக்கிய பணவீக்கத்தில் மாதாந்திர அச்சுகள் குறைந்து வருவதை நான் பார்க்கப் போகிறேன், அதற்கு முன், நாங்கள் எங்கள் பணவீக்கப் பாதையை எங்களின் 2-க்கு திரும்பப் பெறப் போகிறோம் என்பதில் நான் அதிக நம்பிக்கையுடன் இருக்கப் போகிறேன். சென்ட் இலக்கு,” என்று மத்திய வங்கியின் துணைத் தலைவரும், அதன் முக்கிய பொதுத் தூதுவருமான Lael Brainard, சமீபத்திய CNBC நேர்காணலின் போது கூறினார். விரைவான விலை ஆதாயங்களை எது மெதுவாக்கலாம்? எவ்வளவு காலம் விலைகள் வேகமாக ஏறிக்கொண்டே இருக்கும் என்பது யாருடைய யூகமும்: 2020ல் தொற்றுநோய் பரவியதில் இருந்து பணவீக்கம் நிபுணர்களை மீண்டும் மீண்டும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. ஆனால் இன்றைய சூடான விலைகளின் பின்னணியில் உள்ள இயக்கிகளின் அடிப்படையில், ஒரு சில முடிவுகள் தோன்றக்கூடும். ஒன்று, விரைவான பணவீக்கம் முற்றிலும் தானாகவே போக வாய்ப்பில்லை. ஊதியங்கள் வழக்கத்தை விட மிக வேகமாக உயர்ந்து வருகின்றன. அதாவது, நிறுவனங்கள் திடீரென்று அதிக செயல்திறன் பெறாவிட்டால், அவர்கள் தங்கள் தொழிலாளர் செலவுகளை ஈடுகட்ட விலையை அதிகரிக்க முயற்சிப்பார்கள். இதன் விளைவாக, மத்திய வங்கியானது தேவையை குறைக்கவும், ஊதியம் மற்றும் விலை வளர்ச்சியைக் குறைக்கவும் வட்டி விகிதங்களை உயர்த்துகிறது. மத்திய வங்கியின் கொள்கைப் பதிலின் அர்த்தம், பொருளாதாரம் நிச்சயமாக மந்தநிலையை நோக்கிச் செல்கிறது. ஏற்கனவே, அதிக கடன் செலவுகள் வீட்டுச் சந்தையில் குளிர்விக்கத் தொடங்கியுள்ளன. கேள்வி – மற்றும் பெரிய நிச்சயமற்ற தன்மை – பணவீக்கத்தை கட்டுக்குள் கொண்டு வர மத்திய வங்கி நடவடிக்கை எவ்வளவு தேவைப்படும் என்பதுதான். அமெரிக்கா அதிர்ஷ்டம் அடைந்து, விநியோகச் சங்கிலி பற்றாக்குறையை எளிதாக்கினால், மத்திய வங்கி பொருளாதாரத்தை மெதுவாகக் குறைக்க முடியும், மந்தநிலையை ஏற்படுத்தாமல் ஊதிய வளர்ச்சியைக் குறைக்கும் அளவுக்கு வேலைச் சந்தையை மெதுவாக்கும். அந்த நம்பிக்கையான சூழ்நிலையில், பெரும்பாலும் சாஃப்ட் லேண்டிங் என்று அழைக்கப்படும், நிறுவனங்கள் தங்கள் விலைகளைக் குறைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளன மற்றும் விநியோகம் மற்றும் தேவை சமநிலைக்கு வருவதால், அவை மீண்டும் வாடிக்கையாளர்களுக்காக போட்டியிடுகின்றன. ஆனால் வழங்கல் சிக்கல்கள் தொடரும் சாத்தியம் உள்ளது, இது மத்திய வங்கிக்கு மிகவும் கடினமான பணியாக இருக்கும்: விலை உயர்வைக் கட்டுக்குள் கொண்டுவரும் அளவுக்கு தேவையை குறைக்க விகிதங்களை கடுமையாக உயர்த்துவது. “மென்மையான தரையிறக்கத்தை நோக்கிய பாதை மிகவும் குறுகியது – மந்தநிலையை அடிப்படையாக எதிர்பார்க்கும் அளவிற்கு குறுகியது” என்று Deutsche Bank இன் தலைமை அமெரிக்க பொருளாதார நிபுணர் Matthew Luzzetti கூறினார். நுகர்வோர் செலவுகள் இதுவரை விரிசல் ஏற்படுவதற்கான சிறிய அறிகுறிகளைக் காட்டுவதால் இது ஓரளவுக்குக் காரணம். குடும்பங்கள் இன்னும் $2.3 டிரில்லியன் அதிகமாகச் சேமிப்பதைக் கொண்டுள்ளன, இது அதிக விலைகள் மற்றும் விலைகளைக் குறைக்க உதவும் என்று லுசெட்டியின் குழு மதிப்பிட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை ஒரு நிகழ்வின் போது ஹோட்டல் நிறுவனமான மேரியட் இன்டர்நேஷனலின் தலைமை நிர்வாக அதிகாரி அந்தோனி கபுவானோ, “தேவையின் ஆழமான பாக்கெட்டுகள் தொடர்ந்து உள்ளன” என்று கூறினார். “முந்தைய பொருளாதார சுழற்சிகள் மற்றும் பொருளாதார வீழ்ச்சிகளைப் போலல்லாமல், இந்த கூடுதல் பரிமாணத்தை நீங்கள் பெற்றுள்ளீர்கள், இது எல்லோரும் 12 முதல் 24 மாதங்கள் வரை பூட்டப்பட்டிருந்தது.”
சென்னை: தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்; ஆந்திர பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் 14 மாவட்டங்களில் 2 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளது. தமிழ்நாட்டில் இன்று நீலகிரி, கோவை, கடலூர், திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. நாளை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடிமின்னலுடன் கூடிய கனமழை பெய்யவாய்ப்புள்ளது. 07ம் தேதி தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடிமின்னலுடன் கூடிய கனமழை பெய்யவாய்ப்புள்ளது. 08.மற்றும் 09ம் தேதிகளில் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர், அரியலூர், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடிமின்னலுடன் கூடிய கனமழை பெய்யவாய்ப்புள்ளது. சென்னையை பொறுத்தவரை: அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்): சின்கோனா (கோயம்புத்தூர்), ஏற்காடு (சேலம்) தலா 3, மன்னார்குடி (திருவாரூர்), தேவாலா (நீலகிரி), பார்வூட் (நீலகிரி), மடத்துக்குளம் (திருப்பூர்), தேவாலா (நீலகிரி), ஹரிசன் எஸ்டேட், செருமுள்ளி (நீலகிரி) தலா 2, நடுவட்டம் (நீலகிரி), கூடலூர் பஜார் (நீலகிரி), கல்லணை (தஞ்சாவூர்), தாளவாடி (ஈரோடு), பெரியநாயக்கன்பாளையம் (கோயம்புத்தூர்), பவானிசாகர் (ஈரோடு), பெரியார் (தேனி), ராசிபுரம் (நாமக்கல்), சங்கரன்கோவில் (தென்காசி), தூத்துக்குடி, தத்தியெங்கர்பேட்டை (திருச்சி), மேல் கூடலூர் (நீலகிரி), பந்தலூர் (நீலகிரி) தலா 1. மீனவர்களுக்கான எச்சரிக்கை 05.10.2022 மற்றும் 06.10.2022: வடக்கு ஆந்திர கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகள், வட தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். 05.10.2022 முதல் 08.10.2022 வரை : குமரிக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென் தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். 09.10.2022: மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென் தமிழக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளது. Related Stories: மாமல்லபுரம் அருகே மாண்டஸ் புயல் நள்ளிரவு கரை கடந்தது: 75 கி.மீ. வேகத்தில் காற்று வீசியது திருப்பதியில் ஜனவரி மாத தரிசனம்: ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் 12ம்தேதி ஆன்லைனில் வெளியீடு “தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கம்”: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார் ஆதிதிராவிடர், பழங்குடியினர் நல கல்லூரி விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவர்களுக்காக 50 விடுதிகளில் ரூ.70 லட்சம் மதிப்பில் புதிதாக நூலகங்கள் அமைக்கப்படும்: அமைச்சர் கயல்விழி செல்வராஜ் மாண்டஸ் புயல் காரணமாக காற்றின் வேகத்திற்கு ஏற்ப மின்சாரம் நிறுத்தப்படும்: மின்வாரியம் அறிவிப்பு மாண்டஸ் புயல் காரணமாக மாமல்லபுரம், பழவேற்காடு காசிமேட்டில் கடல் சீற்றம் மாண்டஸ் புயல் எச்சரிக்கை காரணமாக சென்னையில் 27 விமானங்கள் ரத்து மாண்டஸ் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாளை நடைபெற இருந்த அண்ணா பல்கலைக்கழக பொறியியல் தேர்வுகள் ஒத்தி வைப்பு மாண்டஸ் புயலையொட்டி அதி தீவிர படையினர், சட்டம், ஒழுங்கு, உள்ளிட்ட காவல் குழுவினர் அனைத்து காவல் மாவட்டத்திலும் தயார் நிலையில் நிறுத்தி வைப்பு இன்று 76வது பிறந்த நாள்: சோனியாவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து மாண்டஸ் புயல் எதிரொலி: பொதுமக்கள் தேவையற்ற பயணங்களை தவிர்க்க வேண்டும்: அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அறிக்கை மாண்டஸ் புயல் கரையை கடக்க உள்ளதால் சென்னையில் மிக அவசியமான காரணங்களுக்கு மட்டுமே வெளியே வர வேண்டும்: பொதுமக்களுக்கு போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் வேண்டுகோள் குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் ராஜினாமா: டிச. 12ல் மீண்டும் பதவியேற்பு..! தமிழ்நாட்டில் அரசு பேருந்துகள் வழக்கம் போல் இயங்கும்: புயல் கரையை கடக்கும் போது மக்கள் பேருந்து பயணத்தை முற்றிலும் தவிருங்கள்.. அமைச்சர் சிவசங்கர் வேண்டுகோள்..!! சென்னையில் தீவிர புயலாக வலுப்பெற்றிருந்த மாண்டஸ் புயல் தற்போது வலுவிழந்து புயலாக உள்ளது: வானிலை ஆய்வு மைய இயக்குனர் பேட்டி ஆன்லைன் சூதாட்டத்திற்கு 35வது பலி: ஆளுநர் இனியும் தாமதிக்காமல் தடை சட்டத்திற்கு ஒப்புதல் தர வேண்டும்.. அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள்..!! இடி, மின்னலின்போது மின் சாதனங்களை பயன்படுத்த வேண்டாம்!: மாண்டஸ் புயல் கரையை கடக்கும் போது செய்யக்கூடாதவை எவை?..பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்..!!
சிவகிரி காவல்துறையினர் பெண்குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் போக்சோ சட்டம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் காவல்துறையினர் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். இதேபோல் சிவகிரி காவல் துறையினர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அரசு மருத்துவமனையிலுள்ள பொதுமக்களிடம் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பிற்காக ஏற்படுத்தப்பட்டுள்ள 181,1098 ஆகிய தொடர்பு எண்களில் தொடர்பு கொண்டு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஏற்படும் பிரச்சனைகள் மற்றும் புகார்களுக்கு காவல்துறையினரை எளிதில் தொடர்பு கொள்ளலாம் எனவும், 18 வயதிற்கு கீழுள்ள குழந்தைகளிடம் பாலியல் ரீதிரயாக செய்யப்படும் குற்றங்களுக்கு போக்சோ சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் 18 வயது பூர்த்தியடையாத குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைக்கும் பெற்றோர்கள் மீது குழந்தை திருமண தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். https://www.tnpolice.gov.in
நான் காலேஜ் படித்துக்கொண்டிருந்தேன். வயது 19. அப்போது நான் காலேஜில் ஒரு பிரபலமான் பெண். காரணம், என் உடல். என் உடல் ஒன்றும் அவ்வளவு பிரமாதம் கிடையாது. 36 இஞ்ச் முலைகள், லேசாக சதை போட்ட இடுப்பு, 5 அடி 5 அங்குல உயரம். மாநிறமாக இருப்பேன். ஆனால், அந்த உடலை அனைவருக்கும் எடுத்துக்காட்டுமாறு நான் அணியும் உடைகள் தான் காலேஜில் அனைத்து ஆண்களையும் கவரும். நன்கு முலை தெரியுமாறு சுடிதார் அணிந்து, வீட்டிலிருந்து கிளம்பும்போது, துப்பட்டா போட்டு மறைத்துக்கொள்வேன். வீட்டைவிட்டு வெளியே வந்தவுடன் துப்பட்டாவை கழுத்தையொட்டி இழுத்துவிடுவேன். சட்டை அணிந்தால், வெளியே வந்தவுடன், மேல் இரண்டு பட்டன்களை கழட்டிவிடுவேன். ஜீன்ஸை, தொப்புள் தெரியும் படி இழுத்துவிட்டுக்கொள்வேன். இது போல வீட்டில் நல்ல பெண்ணாகவும், வெளியில் அதைவிட “நல்ல” பெண்ணாகவும் இருந்தேன். என் முலைகள், பெரிதாக இருந்தாலும், பக்கவாட்டாக தொங்காமல், ஒன்றுடன் ஒன்று இடித்துக்கொண்டு, இருக்கமாக நிற்க்கும். அதனால், முலைகளுக்கு நடுவில் ஆழமான கோடு விழும். இதை பார்த்து, என் தோழிகளே பொறாமைப்படுவார்கள். காலேஜ் மாணவர்கள் அதை உற்று உற்று பார்க்கையில் எனக்கு இன்பமாக இருக்கும். கல்லூரியில் ஆண்களிடம் நான் மிகவும் நெருங்கிப்பழகுவேன். இதனால், எனக்கு ஆண் நண்பர்கள் அதிகமாகவும், பெண் நண்பர்கள் குறைவாகவும் இருந்தனர். ஆனாலும், நான் அந்த பசங்களிடம் உடலுஉறவு வைத்துக்கொண்டதில்லை. பலமுறை அவர்களை என் முலைகளையும், இடுப்பையும் தடவ விட்டிறுக்கிறேன், திறந்தும் காட்டியிருக்கிறேன். அதோடு நிறுத்திக்கொள்வேன். ஆனால், என்னுடைய ஆர்வமெல்லாம், 45 வயதை தாண்டிய “அங்கிள்”களிடம் தான். காலேஜ் ப்ரொபெஸர்கள், அப்பாவின் நண்பர்கள், அம்மாவின் தோழிகளின் கணவர்கள், அவர்களின் ஆபீஸ் நண்பர்கள், என் தோழர், தோழிகளின் அப்பாக்கள் என எல்லா அங்கிள்களும் என்னை கவர்ந்த்தார்கள். என் உடம்பைக்காட்டி அவர்களை ஜொள்ளு விட வைப்பதில் எனக்கு பேரார்வம். பல அங்கிள்கள், என்னை படுக்கவைத்து ருசியும் பார்த்தார்கள். அப்படி என்னை ஒரு அங்கிள் ருசிபார்த்த கதைதான் இது. அவர் பெயர் சண்முகம். அவர் என் அப்பாவின் நண்பர். அது மட்டும் அல்ல, அவர் என் காலேஜின் ஸ்டூடெண்ட் இஷ்யூ மேனேஜரும் ஆவார். ஸ்டூடெண்ட் இஷ்யு மேனேஜர் என்றால் என்ன அர்த்தம் என்று அவருக்கே தெரியாது. காலேஜ் சேர்மேனின் சொந்தம். அதனால், அவருக்கு எதோ வேலை தரவேண்டும் என்பதற்க்காக புதுசக ஒரு பதவியை உருவாக்கி இருந்தார்கள். ஆனால் எனக்கு அந்த காலேஜில் அவர்தான் ஸீட் வாங்கி தந்தார். நிறைய பேரிடம் லஞ்சம் வாங்கிக்கொண்டு சீட்டுக்கு ஏற்பாடு செய்வார். என் அப்பாவிற்க்கு நன்பர் என்பதால், எனக்கும் சீட் கிடைக்க ஏற்பாடு செய்தார். கருப்பாக இருப்பார். பணக்காரர், ஆனால் பந்தாவே இருக்காது. சாதுவான முகம். கண்ணாடி அணிந்திருப்பார். 5 அடிக்கு கொஞ்சம் மேல் தான் உயரம். பெரிய தொப்பையுடன் குண்டாக இருப்பார். எப்படியும் 50 வயது இருக்கும். பரவலாக நறைத்த முடி. பல அங்கிள்களிடம் நான் விளையாடினாலும், இவரிடம் கொஞ்சம் பயம் உண்டு எனக்கு. அதானால், இவரிடம் எந்த விளையாட்டும் வைத்துக்கொள்ள மாட்டேன். நான் காலேஜ் முடிந்ததும், காலேஜின் மொட்டை மாடியில், என் தோழர்களுடன் வெகு நேரம் பேசிவிட்டு தான் வீட்டிற்க்கு செல்வேன். வேறு பெண்கள் யாரும் இல்லையென்றால், அந்த பசங்கள் சூடாகி கொஞ்சம் தடவலும் நடக்கும். எனக்கு அவர்களிடம் காமம் எதுவும் இல்லையென்றாலும், நண்பர்களை சந்தோஷப்படுத்த வேண்டும் என்பதற்க்காக, | ஸ்டோரீஸ்-ல் தமிழ் காம கதைகள் படியுங்கள்| அவர்களை சின்ன சின்ன சில்மிஷங்கள் செய்ய விடுவேன். அவர்களும் என்னிடம் உடலுறவோ, காதல், கல்யாணம் என்றோ எதிர்பார்க்காமல், ஒரு லிமிட்டுடன் விளையாடுவார்கள். அப்படி ஒருநாள். வழக்கம்போல் மொட்டை மாடியில் அரட்டை. நான் ஒருவரது செல்போனில் விளையாடிக்கொண்டிருக்க, இரண்டு பேரும் ஆளுக்கு ஒரு பக்கமாக என் சட்டைக்குள் கையை விட்டு ஆளுக்கு ஒரு முலையை அழுத்திக்கொண்டிருந்தார்கள். “நாங்க இப்படி அழுத்திக்கிட்டிருக்கோம், உனக்கு கொஞ்சமாச்சும் சூடேருதா? செல்போன வெச்சி விளையாடுர” என்று அவர்கள் எரிச்சலடைந்தாலும் என் முலையை விட்டுவிட அவர்களுக்கு மனதில்லை. செல்போன் விளையாடும் ஆர்வத்தில் அவர்கள் பேசுவதயும் கேட்கவில்லை, அவர்கள் முலையை பிசைவதயும் கண்டு கொள்ளவில்லை. அவ்வப்போது என் காம்பை பிடித்து முரட்டுத்தனமாக கிள்ளும்போது மட்டும். ஸ்ஸ்ஸ் என்று சத்தம் போட்டேன். மற்றபடி எனக்கு அப்போதெல்லாம், என் வயசு பசங்க குஞ்ச பாத்தா கூட மூடே வராது. ஒன்லி அங்கிள்ஸ் தான். அவர்களும் சலிக்காமல் முலையுடனும் காம்புடனும் விளையாடிக்கொண்டிருந்தனர். கொஞ்ச நேரத்தில் ஒருவன் அழுத்துவதை நிறுத்தி விட்டான். (கஞ்சி வந்துவிட்டிருக்கும் அவனுக்கு என்று நினைத்தேன்). ஒருவன் மட்டும் பிசைந்துகொண்டே இருந்தான். சற்று நேரத்தில், செல்போன் கேம் முடிந்துவிட்டு, அழுத்தலில் பாதி மூடேறி நிமிர்ந்த எனக்கு திடுக் என்றது. இரண்டு பசங்களும் கையைக்கட்டி அமைதியாக நிற்க, என் முலையை பிடித்துக்கொண்டிருந்தது, காலேஜ் செக்யூரிடி. எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. அழுத்திக்கொண்டே இருந்தவன், இன்னொரு கையால் தனது ஜிப்பை திறந்து குஞ்சை வெளியே எடுத்தான். எனக்கோ வாட்ச்மேன் அழுத்துகிறான் என்று தெரிந்தவுடன், சூடேரத்தொடங்கியது. அவனே என் கையை பிடித்து, தன் குஞ்சின் மீது வைத்தான். நானும் பிடித்துக்கொண்டேன். அவன் குஞ்சு இன்னும் எழும்பவில்லை. பாதி எழும்பியும் பாதி எழும்பாமலும் இருந்தது. எனக்கு அந்த நிலையில் இருக்கும் குஞ்சை வாயில் சப்ப மிகவும் பிடிக்கும். அதன் நுனியில், லேசாக பிசுபிசுவென கஞ்சி இருந்தது. அதை எடுத்து சுவைக்க வேண்டும் போலிருந்தது எனக்கு. ஆனாலும் அந்த செக்யூரிட்டியுடன் உடலுறவு கொள்வது பிரச்சனைதான் என்று தோன்றியது. அதுவும் இந்த பசங்க முன்னாடி செய்தால், அவர்களும் கேட்க தொடங்கிவிடுவார்கள். அதனால் முலையை பிசைந்து கொண்டிருந்த அவன் கையை பிடித்து வெளியே எடுத்தேன். அவன் மிரட்டும் குரலில், “என்னடி? தயங்குற. உன்னை இங்க ஒரு தரவ போட்டுட்டு தான் வீட்டுக்கு அனுப்புவேன். முட்டி போட்டு என் பூல சப்புடி. இல்லன்னா, இப்பொவே உன்ன கூட்டிட்டு போய் ப்ரின்சிபால் கிட்ட சொல்வேன்” என்றான். மீண்டும் கையை என் சட்டைக்குள் சொறுகி, என் முலையை முரட்டு பிடி பிடித்தான். அந்த இரண்டு பசங்களையும் பார்த்து “டேய், போங்கடா ரெண்டு பேரும்.” என்றான். உடனே நான், “என்ன மிரட்டுரியா? என்னை தனியா வெச்சி கற்பழிக்க பாத்த. இவங்க ரெண்டு பேரும் தான் காப்பாத்தினாங்க, அப்படின்னு புகார் பன்னவா?” என்றேன். அத்துடன் அதிர்ச்சியில் ஆள் கப்சிப் என்று ஆகிவிட்டான். கையையும் வெளியே எடுத்துவிட்டான். நானும் உடையை சரி செய்து கொண்டு பையை எடுத்துக்கொண்டு, என் நண்பர்களுடன் வீட்டிற்க்கு கிளம்பிவிட்டேன். அந்த வாட்சுமேனின் ஈயாடிய முகத்தைப்பற்றி பேசி சிரித்து கொண்டே சென்றோம். ஆனாலும் என் மனதுக்குள், அந்த குஞ்சு, என் புண்டைக்குள் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்ற எண்ணமே இருந்தது Tags: aunty kamakathaikal, Aunty Ool Kathaikal, Aunty Sex Kathaikal, aunty tamil sex stories, TamilKamakathaikal, tamilsex, tamilsex stories, tamilsex stories in tamil, tamilsexstories, tamilsexstory, www.tamilsex.com
இலங்கையில் வலுவான சுயாதீன ஊடகத் துறையை உருவாக்குவதற்காக ஊடகத் துறையில் பாதுகாப்பான தொழில் ரீதியான மதிப்புகளுடனான வலுவான அமைப்பு எனும் திறன் கொண்ட சுயாதீன ஊடக ஊழியர்களைக் கொண்ட குழுவை உருவாக்குதல் ஊடகத் தொழிலாளர் தொழிற்சங்கங்களின் சம்மேளனம் (FMETU), 2002 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டதுடன், இலங்கையின் ஊடகத் துறையில் ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடகத் தொழிலாளர்களின் தொழிற்சங்கங்களின் துணை நிறுவனமாக வர்த்தக சங்கங்களின் பதிவாளரின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது உரிமைகளை பாதுகாக்கும் பொருட்டு முன்னிற்கும் முன்னணி தொழிற்சங்கமாகும். ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடகத் தொழிலாளர்களின் பொதுவான அல்லது உறுப்பினர்களின் எந்தவொரு பிரச்சினையையும் தீர்ப்பதற்கும், அவர்களின் தொழிலைப் பாதுகாப்பதற்கும் எப்போதும் முன்னிற்கும். 2000ஆம் ஆண்டில், ஊடகவியலாளர்களின் சர்வதேச மாநாட்டில் (IFJ), முழு உறுப்புரிமையை பெற்றுக் கொண்ட இலங்கையின் முதலாவது ஊடக அமைப்பு FMETU ஆகும். பின்வரும் நோக்கங்களுக்காக அது நிறுவப்பட்டது இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடக நிறுவனங்களின் அனைத்து ஊழியர்கள் மற்றும் பிரதேச ஊடகவியலாளர்கள் அனைவரையும் ஒரே சம்மேளனத்திற்குள் கொண்டு வருதல். உறுப்பினர்களின் உரிமைகள், அவர்களுக்கான நன்மைகள் மற்றும் தொழிற்சங்கங்களின் சார்பாக முன்னிற்றல், பாதுகாத்தல் மற்றும் உரிமைகளை விஸ்தரித்தல். உறுப்பினர்களின் பொருளாதார நிலைமையை மேம்படுத்துதல். உறுப்பினர்களுக்கு பின்வரும் நன்மைகளை வழங்குதல் தொழிற்சங்க நடவடிக்கை அல்லது நிவாரணம் மற்றும் வேலைவாய்ப்பு உரிமைகளைப் பெறுவதற்கான தொழிற்சங்க போராட்டங்கள் காரணமாக உறுப்பினர்களை மிரட்டல் விடுத்தல் மற்றும் துன்புறுத்துவதற்கு எதிரான உதவிகளை வழங்குதல் தேவையேற்படும்போது அவர்களது வேலைவாய்ப்பு பிரச்சினைகள் தொடர்பான சட்ட உதவி மற்றும் ஆலோசனைகளை வழங்குதல். சம்மேளனம் மற்றும் ஏனைய அதனுடன் தொடர்புடைய குழுக்களுக்கு இடையேயான உரிய முறையிலான தொடர்புகளை வலுப்படுத்துதல்.
ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்றுவிட்டு, இன்று (செப்டம்பர் 17) அதிகாலை 2 மணியளவில் பிரதமர் மோடி இந்தியா வந்தடைந்தார். ராகுல் நடைபயணம்! ராகுல் காந்தி இன்று (செப்டம்பர் 17) 10-வது நாள் நடைப்பயணத்தைக் கேரள மாநிலம் புதிய காவு சந்திப்பு பகுதியில் தொடங்கி, ஹரிபட் பகுதியில் நிறைவு செய்கிறார். பெரியார் பிறந்த நாள்! தந்தை பெரியார் 144ஆவது பிறந்த நாளான இன்று (செப்டம்பர் 17), தமிழக அரசு சார்பில் சமூக நீதி நாளாக கடைப்பிடிக்கப்படுகிறது. ராமராஜன் நடிக்கும் புதிய படம்! நடிகர் ராமராஜன் நடிக்கும் புதிய படத்தின் பெயர் இன்று (செப்டம்பர் 17) மாலை 6 மணியளவில் அறிவிக்கப்பட உள்ளது இந்திய ஏ அணி வீரர்கள் அறிவிப்பு! நியூசிலாந்து ஏ அணிக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதற்காக, இந்திய ஏ அணி வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். சஞ்சு சாம்சன் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். பிரதமர் மோடி பரிசு பொருட்கள் ஏலம்! பிரதமர் மோடிக்கு பரிசாக வழங்கப்பட்ட பொருட்கள் மின்னணு முறையில் இன்று (செப்டம்பர் 17) ஏலத்தில் விடப்படுகின்றன. கொரோனா அப்டேட்! தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 463 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பினால் 4,820 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பிரதமர் மோடி பிறந்தநாள்! பிரதமர் மோடி தனது 72-வது பிறந்தநாளை இன்று (செப்டம்பர் 17) கொண்டாடுகிறார். அவருக்கு உலக தலைவர்கள் பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். வானிலை நிலவரம்! மேற்குத் திசைக் காற்றின் மேக வேறுபாடு காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று (செப்டம்பர் 17) ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பெட்ரோல் டீசல் விலை! தமிழகத்தில் இன்று (செப்டம்பர் 17) 119-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல், ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63-க்கும் ஒரு லிட்டர் டீசல் விலை 94.24-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது அளவற்ற காதல் கொண்டு தம்மையே தாம் உருக்கி நீராக ஆக்கிச் சுவனம் புகுத்த இப்பெரியாருக்கு ‘ரயீஸுல் உஷ்ஷாக்'(பேரின்பக் காதலர்களின் தலைவர்) என்ற சிறப்புப் பெயர் உண்டு. இவர்கள் லுத்புல் இலாஹி என்ற அரபுக் கவிதையொன்று இறைவனைப் பற்றி எழுதினர். அண்ணலாரின் அடக்கவிடத்தை தரிசிப்பதற்காக அடங்காக் காதலுடன் ஸலவாத் முழங்கிய வண்ணம் இவர்கள் மதீனாவை நோக்கி வரும் போது மதீனாவின் ஆளுனரின் கனவில் பெருமானார் தோன்றி அன்னாரின் அடையாளங்களை சொல்லி அவரை மதீனா நுழையவிடாமல் தடுத்திடுமாறு கூறினர். அவரும் அவர்களை அடையாளம் கண்டு அவ்வாறே தடுத்து நிறுத்தினார். அதனால் அவர்களுக்கு அண்ணலார் மீது இருந்த காதல் பெருந்தீ போன்றாகி நீர் போன்று உருகி அவ்விடத்திலேயே மறைந்தனர். உடனே மதீனாவின் ஆளுநரும் ஏனையோரும் இவர்களின் எலும்புகளை ஒன்று சேர்த்து அவ்விடத்திலேயே நல்லடக்கம் செய்து விட்டு மதீனா திரும்பினர். இவர்களின் அடக்கவிடம் பத்ரிலிருந்து மதீனா செல்லும் வழியில் சற்று விலகி மலையடிவாரத்தில் உள்ளது. இவர்களை ஏன் அண்ணலார் தடுக்க வேண்டும் என்ற சந்தேகத்தோடு ஆளுநர் அவர்கள் படுத்துறங்கினார். அன்னாருக்கு அண்ணலார் கனவில் தோன்றி அவர் என்மீது எத்தகு காதல் கொண்டாரோ அத்தகு காதலை நானும் அவர் மீது கொண்டுள்ளேன். எனவே அவர் என்னை அண்மியதும் என்னையறியாமல் நான் எழுந்து அவரை வரவேற்பின் அது ஷரீஅத்திற்கு மாற்றமாகி விடுமே என்று கருதி அவர் என்னை அடையுமுன் தடுத்து நிறுத்த சொன்னேன் என்று சொல்லி மறைந்து சென்றார்கள்.
தென்காசி மாவட்டத்தில் நடைபெறும் ஊரக உள்ளாட்சித் தேர்தல் ஒலிபெருக்கி பிரச்சாரத்திற்கு கட்டுப்பாடுகள் விதித்து மாவட்ட ஆட்சித்தலைவர் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் ச.கோபால சுந்தர ராஜ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:- தென்காசி மாவட்டத்தில் உள்ள தேர்தல் நடக்கும் அனைத்து ஊரக பகுதிகளுக்கும், அந்த ஊரக உள்ளாட்சி அமைப்பிற்கு அருகில் 5 கி.மீ சுற்றளவு பகுதி வரை மாவட்டத்திற்குள் தேர்தல் நடத்தை விதிகள் தேர்தல் நடவடிக்கைகள் முடியும் நாளான 16.10.2021 வரை அமலில் இருக்கும். தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள போது பொதுக்கூட்டங்களுக்கு அல்லது ஊர்வலங்களுக்கு நிலையான குழல் ஒலிப்பெருக்கிகளை பயன்படுத்த காவல் துறை அலுவலரின் எழுத்து மூலமான முன் அனுமதி பெற வேண்டும். தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் வரை தேர்தல் காலம் முழுவதும் பிரச்சாரங்களுக்காக எந்த ஒரு வகை வாகனங்களிலும் பொருத்தப்பட்டிருக்கும் ஒலிப் பெருக்கிகளை காலை 6.00 மணியிலிருந்து இரவு 10.00 மணி வரை மட்டுமே பயன்படுத்த வேண்டும். அனைத்து ஒலிப்பெருக்கிகளும், பொது பிரச்சாரத்திற்கு அல்லது பொதுக்கூட்டங்களுக்கு அல்லது ஊர்வலங்களுக்கு பயன்படுத்தப்பட்டாலும், நடமாடும் வண்டிகளில் அல்லது வேறு வகையில் பயன்படுத்தப்பட்டாலும் காலை 6.00 மணியிலிருந்து இரவு 10.00 மணி வரை மட்டுமே பயன்படுத்த வேண்டும். டிரக்குகள், டெம்போக்கள், கார்கள், வாடகைக்கார்கள், வேன்கள், மூன்று சக்கர வண்டிகள், ஸ்கூட்டர்கள், சைக்கிள் ரிக்ஷாக்கள் முதலியன உட்பட அனைத்துவகை வரையறுக்கப்படாத நடமாடும் வண்டிகளில் ஒலிப்பெருக்கிகளை பயன்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள், வேறு நபர்கள், ஒலிப்பெருக்கிகளைப் பயன்படுத்துவதற்கான அனுமதி வழங்கும் அதிகாரிகளிடம் அந்த வாகனங்களின் பதிவு எண்களை / அடையாள எண்களை ஒப்படைக்க வேண்டும். மேற்சொன்ன எழுத்து மூலமான அனுமதியின்றி பயன்படுத்தப்படும் ஒலிப்பெருக்கிகள் உள்ள யாதொரு வாகனம் மற்றும் வரையறுக்கப்பட்ட நேரங்களுக்கு அப்பாலும் அல்லது சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் எழுத்து மூலமான அனுமதியின்றி பயன்படுத்தப்படும் அனைத்து ஒலிப்பெருக்கிகளும், அதனைப் பயன்படுத்துவதற்கு தொடர்புடைய அனைத்து கருவிகளுடன் பறிமுதல் செய்யப்படும். நடமாடும் ஒலிப்பெருக்கிகளை பொறுத்தவரை அவை பொருத்தப்பட்ட வாகனங்களை பதிவு எண்கள்/அடையாள எண்களை தேர்தல் நடத்தும் அலுவலர்களிடமும், உள்ளுர் காவல்துறை அதிகாரிகளிடமும் பதிவு செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ச.கோபால சுந்தர ராஜ் செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்;.
நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, இது தாம் லுவாங் குகைக்கு வெளியே ஒரு சேற்று, குழப்பமான மற்றும் உணர்ச்சிவசப்பட்ட காட்சியாக இருந்தது, அங்கு ஆயிரக்கணக்கான மக்கள், தன்னார்வலர்கள் முதல் பெற்றோர்கள் வரை உலகம் முழுவதிலுமிருந்து குகை மூழ்குபவர்கள் வரை, 12 சிறுவர்களையும் அவர்களது கால்பந்தாட்டத்தையும் மீட்பதற்காக ஒரே இலக்குடன் கூடியிருந்தனர். பயிற்சியாளர் உள்ளே ஆழமாக சிக்கினார். 18 நாள் சோதனையில், உலகின் கவனத்தின் பெரும்பகுதி குகையின் மீது நிலைநிறுத்தப்பட்டது, பலர் மோசமான பயத்துடன் இருந்தனர். ஆனால் நம்பமுடியாத முரண்பாடுகளுக்கு எதிராக, முழு அணியும் உயிருடன் வெளியே கொண்டு வரப்பட்டது. அதிசயமான மீட்பு பின்னர் ஆவணப்படங்கள் மற்றும் ஹாலிவுட் பிளாக்பஸ்டர்கள் மற்றும் ஒரு டஜன் புத்தகங்களின் மையமாக மாறியுள்ளது, மேலும் இன்று, குகைக்கு வெளியே உள்ள காட்சி ஒரு கட்டுமான மண்டலமாக உள்ளது, ஏனெனில் தேசிய பூங்கா விரும்பும் சுற்றுலாப் பயணிகளின் வருகைக்கு தயாராக உள்ளது. தளத்தை தாங்களே பார்க்கவும். குழந்தைகளின் தலைவிதியைப் பற்றி குடும்ப உறுப்பினர்கள் ஆவலுடன் காத்திருக்கும் கூடாரப் பகுதிகள் போய்விட்டன, மேலும் குகைக்குள் கடினமான முயற்சிகளில் இருந்து மீண்டு வந்த டைவர்ஸ் தங்குமிடங்கள் கிழிந்தன. அவர்களுக்குப் பதிலாக, தொழிலாளர்கள் பார்வையாளர் மையம், சுற்றுலா வசதிகள் மற்றும் சுற்றியுள்ள மலைகளின் பெரிய பிரதி ஆகியவற்றைக் கட்டி வருகின்றனர். தாய்லாந்தில் உள்ள பான் ஜாங்கில், தாம் லுவாங் குகைக்கு அருகில் உள்ள கிராமமான உள்ளூர் விவசாயிகள் ஆகஸ்ட் 18, 2022 அன்று சோளத்தை அறுவடை செய்கிறார்கள். (லூக் டகில்பி/தி நியூயார்க் டைம்ஸ்) நீண்ட தூக்கமில்லாத மற்றும் அதிகம் பார்வையிடப்படாத தேசிய பூங்காவான தாம் லுவாங், வைல்ட் போர்ஸ் கால்பந்து அணியின் வியக்கத்தக்க வெளியேற்றத்தால் வரைபடத்தில் இடம்பிடித்துள்ளது. “இது இவ்வளவு மாறும் என்று நான் ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை, ஏனென்றால் சிறுவர்கள் குகையில் சிக்கிக் கொள்வதற்கு முன்பு, தாம் லுவாங்கைப் பற்றி யாருக்கும் தெரியாது” என்று அருகிலுள்ள பான் ஜாங் கிராமத்தின் தலைவரான 54 வயதான நபாசன் சாயா கூறினார். “அண்டை மாவட்டங்களில் உள்ள எங்கள் சொந்த மக்களுக்கு கூட குகை பற்றி தெரியாது.” மேம்பாடுகளின் முதல் அலையில், சாலைகள் புனரமைக்கப்பட்டன மற்றும் புதிய ஹோட்டல்கள், கடைகள் மற்றும் காபி கடைகள் தோன்றின. இந்த முயற்சியின் போது இறந்த தன்னார்வ நீர்மூழ்கி வீரரும், முன்னாள் தாய்லாந்து கடற்படை சீல் வீரருமான சமன் குணனின் நினைவாக, தாம் லுவாங் குன் நாம் நாங் அல்லாத தேசிய பூங்காவின் தலைமையகத்தில் 13 காட்டுப்பன்றிகளுடன் அவரது சிலை நிறுவப்பட்டது. மீட்புக்குப் பிறகு, பல சுற்றுலாப் பயணிகள் வரத் தொடங்கினர், சில சமயங்களில் பான் ஜாங்கில் 1 மைலுக்கும் அதிகமான போக்குவரத்து ஆதரிக்கப்பட்டது, வீடுகள், கடைகள், உணவுக் கடைகள் மற்றும் திறந்தவெளி உணவகங்கள் ஆகியவை பிரதான தெருவில் குவிந்தன. இருப்பினும், உள்ளூர் வணிகர்களின் திகைப்புக்கு, 2020 இல் COVID-19 இன் வருகையால் சுற்றுலா ஏற்றம் குறைக்கப்பட்டது. ஆனால் இப்போது, ​​வைரஸ் குறைந்து, இரண்டு பெரிய புதிய திரைப்படத் தயாரிப்புகள் வெளியிடப்படுவதால், மழைக்காலம் முடிந்து, அக்டோபரில் குகை மீண்டும் திறக்கப்படும்போது, ​​தாம் லுவாங் மீண்டும் பார்வையாளர்களுக்கு ஒரு காந்தமாக இருக்கும் என்று பல குடியிருப்பாளர்கள் நம்புகின்றனர். ஜூலை பிற்பகுதியில், அமேசான் பிரைம் “பதின்மூன்று உயிர்களை” வெளியிட்டது, இது ரான் ஹோவர்ட் இயக்கிய மீட்பு பற்றிய வியத்தகு மறுபரிசீலனை ஆகும். ஆகஸ்ட் மாதம், லயன்ஸ்கேட் “குகை மீட்பு” வெளியிட்டது. கடந்த வாரம், நெட்ஃபிக்ஸ் “தாய் கேவ் ரெஸ்க்யூ” ஐ வெளியிட்டது, இது சிறுவர்களின் பார்வையில் இருந்து ஆறு பாகங்கள் கொண்ட தொடராகும். 2019 ஆம் ஆண்டில் குகையிலிருந்து 3 மைல் தொலைவில் தேவா பள்ளத்தாக்கு ரிசார்ட்டைக் கட்டி, தொற்றுநோய்களின் போது அதைத் திறந்து வைத்திருந்த பன்சக் பொங்வட்னானுசோர்ன், “நான் நம்பிக்கையுடன் இருக்கிறேன். “குகையானது அதிக சுற்றுலா மற்றும் சிறந்த பொருளாதாரத்தை நகரத்திற்கு கொண்டு வருகிறது. நான் பல புதிய திட்டங்கள், புதிய வணிகங்கள், புதிய உணவகங்கள் மற்றும் கஃபேக்கள் ஆகியவற்றைப் பார்க்கிறேன். ஆகஸ்ட் 17, 2022 அன்று தாய்லாந்தின் சியாங் ராய் மாகாணத்தில் உள்ள தாம் லுவாங் குகையின் நுழைவாயில். (லூக் டகில்பி/தி நியூயார்க் டைம்ஸ்) தாம் லுவாங் கரடுமுரடான டோய் நாங் நோன் மலைகளுக்குள் அமைந்துள்ளது, இது தாய்லாந்தின் வடக்கு மாகாணமான சியாங் ராயில் மியான்மரின் எல்லையில் செல்கிறது. பல உள்ளூர் மக்களால் புனிதமாகக் கருதப்படும் மலைகள், பள்ளத்தாக்கு தளத்திலிருந்து கூர்மையாக உயர்ந்து, பசுமையான நெல் வயல்களையும் கீழே சிதறிய கிராமங்களையும் கண்டும் காணாதது போல் உள்ளது. வறண்ட காலங்களில், தாம் லுவாங் ஒரு நீண்ட, குறுகிய குகை அமைப்பாகும், இது அவ்வப்போது நிலத்தடி அறைகளால் துளைக்கப்படுகிறது. பலத்த மழையின் போது, ​​அது விரைவில் பொங்கி வரும் நிலத்தடி ஆறாக மாறுகிறது, இதனால் சிறுவர்கள் சிக்கியுள்ளனர். வெர்ன் அன்ஸ்வொர்த், தாம் லுவாங்கை ஆய்வு செய்வதில் பல வருடங்கள் செலவிட்ட குகை ஆய்வாளர் பொழுதுபோக்காளர், சிறுவர்களைக் கண்டுபிடித்து மீட்க உதவிய பிரிட்டிஷ் குகை மூழ்காளர்களை நியமித்து மீட்புப் பணியில் முக்கியப் பங்கு வகித்தார். அப்போதிருந்து, புதிய நுழைவாயில்கள் மற்றும் அறைகளைக் கண்டுபிடித்து, காலப்போக்கில் துண்டிக்கப்பட்ட பகுதிகளை இணைப்பதன் மூலம் குகை அமைப்பை விரிவுபடுத்துவதற்கான முயற்சிகளை அவர் வழிநடத்தினார். ஒரு பகுதியில், இரண்டு குகைப் பகுதிகள் மீட்டர் தடிமனான தடையால் பிரிக்கப்பட்ட நிலையில், எதிரெதிர் பக்கங்களில் இருந்து ஒரு பாதையை அழிக்கும் குழுக்கள் ஏற்கனவே குரல் தொடர்பில் உள்ளன, என்றார். அவர்கள் தங்கள் விரிவாக்க முயற்சிகளைத் தொடங்கியதிலிருந்து, குகை அமைப்பு 7 மைல் நீளத்திற்கு இரட்டிப்பாகியுள்ளது. “அடுத்த ஆண்டுக்குள், இது தாய்லாந்தின் மிக நீளமான குகை அமைப்பாக இருக்கும்” என்று அவர் கணித்துள்ளார். மீட்புக்கு கிடைத்த அனைத்து சர்வதேச கவனத்திற்கும், சிறுவர்கள் மற்றும் அவர்களின் பயிற்சியாளர் எக்கபோல் சாண்டவோங்கிடமிருந்து அதிகம் கேட்கப்படவில்லை. ஒரு காரணம் என்னவென்றால், அவர்களும் அவர்களது குடும்பத்தினரும் தங்கள் கதைகளின் உரிமையை அரசாங்கத்துடன் இணைக்கப்பட்ட நிறுவனத்திற்கு விற்றனர், அதையொட்டி அவற்றை நெட்ஃபிக்ஸ் நிறுவனத்திற்கு விற்றனர். அவர்களின் ஒப்பந்தத்தின் கீழ், சிறுவர்களும் எக்கபோல்களும் பல ஆண்டுகளாக தங்கள் கதைகளை பகிரங்கமாகச் சொல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. (நியூயார்க் டைம்ஸ் தொடர்பு கொண்ட பல சிறுவர்கள், அவர்களது பெற்றோர்கள் மற்றும் எக்கபோல் ஆகியோர் பேச மறுத்துவிட்டனர் அல்லது செய்திகளுக்கு பதிலளிக்கவில்லை.) சில சிறுவர்களும் எக்கபோலும் அவருடன் ஆராய்வதற்காக குகைக்குத் திரும்பியதாக அன்ஸ்வொர்த் கூறினார் – வானிலை வறண்டபோது – அதை அனுபவிக்கத் தோன்றியது. “என்ன நடந்தது என்பது பற்றி அவர்களுக்கு எந்த கருத்தும் இல்லை,” என்று அவர் கூறினார். “கொடுங்கனவுகள் இல்லை. அவர்கள் தங்களால் இயன்றவரை வாழ்க்கையைத் தொடர முயற்சித்தார்கள். அவர்கள் தங்களை ஒரு பீடத்தில் வைக்கவில்லை. அவை மிகக் குறைந்த விசையாகவே உள்ளன. பல சிறுவர்கள் கால்பந்தாட்டத்தில் தங்களை அர்ப்பணித்துக் கொள்கின்றனர். ஒன்று, Duangphet Promthep, சமீபத்தில் பிரிட்டனில் உள்ள ப்ரூக் ஹவுஸ் கல்லூரி கால்பந்து அகாடமிக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டார், இது சாத்தியமான தொழில்முறை கால்பந்து வாழ்க்கையை நோக்கிய ஒரு படியாகும். பிரித்தானிய டைவர்ஸ் அணியைக் கண்டுபிடித்தபோது ஆங்கிலத்தில் வாழ்த்திய அடுல் சாம்-ஆன், இப்போது நியூயார்க்கில் உள்ள டாப்ஸ் ஃபெரியில் உள்ள முதுநிலைப் பள்ளியில் படித்து வருகிறார், அங்கு அவர் முழு உதவித்தொகையைப் பெற்றார். எக்கபோலுடன் சேர்ந்து, மீட்புக்குப் பிறகு தாய்லாந்து குடியுரிமை பெற்ற மூன்று நாடற்ற சிறுவர்களில் இவரும் ஒருவர். 12 ஆம் வகுப்பு படிக்கும் அடுல், ஐந்து மொழிகளில் புலமை பெற்றவர், ஒரு காலத்தில் உள்ளூர் மருத்துவராக வேண்டும் என்று கனவு கண்டார் என்று அவரது பெரிய மாமாவும் பாதுகாவலருமான கோ ஷின் மாங் கூறினார். ஆனால் மீட்பு மற்றும் சர்வதேச கவனம் அவரது உலகக் கண்ணோட்டத்தை விரிவுபடுத்தியது, இப்போது அவர் மனிதாபிமானப் பணிகளைச் செய்ய நம்புகிறார், ஒருவேளை ஐக்கிய நாடுகள் சபையுடன்.
விழிப்புலனற்றோர் சந்திக்கும் சவால்களை எதிர் கொள்வதில் ஒலி நூல்கள் செயற்றிட்டத்தின் பங்களிப்பு -15.10.2022 சனிக்கிழமை நேரம்- 7.30 p.m - நிகழ்வுகள் - Tamil Linux Community Tamil Linux Community விழிப்புலனற்றோர் சந்திக்கும் சவால்களை எதிர் கொள்வதில் ஒலி நூல்கள் செயற்றிட்டத்தின் பங்களிப்பு -15.10.2022 சனிக்கிழமை நேரம்- 7.30 p.m நிகழ்வுகள் tshrinivasan October 13, 2022, 5:12am #1 நூலக நிறுவனத்தினால் “விழிப்புலனற்றோர் சந்திக்கும் சவால்களை எதிர் கொள்வதில் ஒலி நூல்கள் செயற்றிட்டத்தின் பங்களிப்பு” எனும் தலைப்பிலான கலந்துரையாடல் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது. திகதி- 15.10.2022 சனிக்கிழமை நேரம்- 7.30 p.m. (இலங்கை நேரம்) இணைப்பு - https://us02web.zoom.us/j/81415584070
கும்பகோணத்திற்கு நவக்கிரக கோவில் சுற்றுலா சென்றாலோ அல்லது முக்கியமான ஸ்வாமி மலை முருகன் கோவில் சென்றாலோ நாம தவறாமல் செல்ல வேண்டிய இடம் தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோவில். இக்கோவில் யுனெஸ்கோ மற்றும் தொல்பொருள் துறை பராமரிப்பில் உள்ளது. ஏனென்றால் முழுவதும் சிற்ப வேலைப்பாடுடன் இக்கோவில் உள்ளது. இக்கோவிலில் உள்ள சிற்பங்களுடன் புகைப்படம் எடுப்பதற்காகவே பல சுற்றுலா பயணிகள் இங்கு அதிகம் வருகின்றனர். கோவிலின் வெளியே அழகிய பார்க் உள்ளது. கோவிலை பார்ப்பதற்கு ரம்மியமாக உள்ளது . அழகிய சிற்ப வேலைப்பாடுகளுடன் உள்ள தூண்களில் தட்டினால் வினோத ஒலி எழும்புகிறது. நுழைவாயிலில் நந்தியினருகே உள்ள பலி பீடத்தின் படிகள் இசை எழுப்பும் படிகளாக அமைக்கப்பட்டுள்ளது. வெவ்வேறு கனங்களிலிருக்கும் இந்த தூண்கள், தட்டும்போது சரிகமபதநீ என்ற சுரங்களைக் கொடுக்கின்றன. இரண்டாம் ராஜராஜனால் இக்கோவில் கட்டப்பட்டது. கங்கை கொண்ட சோழபுரத்தில் இருந்து தனது தலைநகரை இங்கு மாற்றிய இரண்டாம் ராஜராஜன் இங்கேயே இந்த கோவிலை அமைத்தான். இங்கு ஐராவதேஸ்வராக சிவபெருமான் காட்சி தருகிறார். ராஜராஜவரமுடையார் என முதலில் வைக்கப்பட்ட ஸ்வாமி பெயர் பிறகு ஐராவதேஸ்வரராக மாற்றப்பட்டது. இங்கு அம்பாள் தெய்வநாயகி அம்மன். இங்கு சென்று வந்தால் அமைதியான ஆன்மிகமும் மனதுக்கு இனிய சுற்றுலாவும் சென்று வந்தது போல் ஒரு அமைதி நிலவும். சிறு குழந்தைகளை அழைத்து செல்ல ஏற்ற அருமையான இடம் இது. கும்பகோணம் அருகில் உள்ள ஸ்வாமி மலை அருகில் இக்கோவில் உள்ளது. தஞ்சாவூரில் இருந்து கும்பகோணம் செல்லும் தனியார் பேருந்துகள் மற்றும் சில பேருந்துகள் தாராசுரம் ஊருக்குள் சென்றுதான் கும்பகோணம் செல்லும். Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
கோவையில் திடீரென்று ஐஎஸ்ஐஎஸ் ஆதரவு கொண்ட 100 இளைஞர்களை கண்டு பிடித்து விட முடியுமா? தொடர்ந்து ஏன் கண்காணிக்கப் படவில்லை? (2) நவம்பர் 7, 2022 கோவையில் திடீரென்று ஐஎஸ்ஐஎஸ் ஆதரவு கொண்ட 100 இளைஞர்களை கண்டு பிடித்து விட முடியுமா? தொடர்ந்து ஏன் கண்காணிக்கப் படவில்லை? (2) ஐஎஸ் ஆதரவு இளைஞர்களுக்கு உளவியல் ஆலோசனை: இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘கோவை மாநகரில் கார் வெடிப்பு தினத்தில் இருந்து தீவிர பாதுகாப்பு மற்றும் வாகன தணிக்கையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். உக்கடம் சங்கமேஸ்வரர் கோயில், கோனியம்மன் கோயில் உள்ளிட்ட கோயில்களில் தற்போது வரை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். உயர் அதிகாரிகளின் உத்தரவு படி, உளவுத்துறை போலீசார் தீவிரமாக பலரை கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில், கோவை மாநகரில் ஐ.எஸ். அமைப்பின் மீது ஈடுபாடு கொண்ட 60க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளனர்[1]. அவர்களது பட்டியலை தயார் செய்து வைத்துள்ளோம்[2]. அவர்களுக்கு கவுன்சலிங் கொடுக்க முயற்சி செய்து வருகிறோம். மேலும் மருத்துவ குழு சார்பில், அவர்களுக்கு உளவியல் ஆலோசனை வழங்கவும் திட்டமிட்டு வருகிறோம். அவர்களை நல்வழிப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்………[3] மேலும் உலாமாக்கள், உளவியல் நிபுணர்கள் மூலம் அவர்களுக்கு தவறான செயல்களில் ஈடுபடக்கூடாது, ஐ.எஸ். இயக்கத்தின் மோசனமான செயல்பாடுகள் உள்ளிட்டவை குறித்து எடுத்து கூறி, நல்ல கருத்துகளை போதித்து அவர்களை நல்ல குடிமகனாக மாற்றும் திட்டம் செயல்படுத்த உள்ளோம். இதற்காக அனுபவம் வாய்ந்த உளவியல் நிபுணர்களை தயாராக உள்ளோம்[4]…………..…………..…,’’ என்றார். தீவிரவாதம் வளர்ந்து இந்நிலை அடைந்தது எப்படி?: கீழ்கண்ட நிகழ்வுகளிலிருந்து, அத்தகைய நிலை, நிச்சயமாக ஒரே நாளில் உருவாகி விட முடியாது: போலீஸார் கோவை மாநகரில் ஐ.எஸ். அமைப்பின் மீது ஈடுபாடு கொண்ட 60க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளனர். அவர்களது பட்டியலை தயார் செய்து வைத்துள்ளனர். அவர்களுக்கு கவுன்சலிங் கொடுக்க முயற்சி செய்து வருகின்றனர். மேலும் மருத்துவ குழு சார்பில், அவர்களுக்கு உளவியல் ஆலோசனை வழங்கவும் திட்டமிட்டு வருகிறது. அவர்களை நல்வழிப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்……… மேலும் உலாமாக்கள், உளவியல் நிபுணர்கள் மூலம் அவர்களுக்கு தவறான செயல்களில் ஈடுபடக்கூடாது, ஐ.எஸ். இயக்கத்தின் மோசனமான செயல்பாடுகள் உள்ளிட்டவை குறித்து எடுத்து கூறி, நல்ல கருத்துகளை போதித்து அவர்களை நல்ல குடிமகனாக மாற்றும் திட்டம் ……….செயல்படுத்த முடிவு. இதற்காக அனுபவம் வாய்ந்த உளவியல் நிபுணர்களை தயாராக்க உள்ளோம்….. அதனால், பல நாட்களாக, ஆண்டுகளாக நடந்து வரும் நிகழ்வுகளை எப்படி, ஏன், எவ்வாறு கவனிக்கப் படாமல் இருக்கிறது, என்பதும் நோக்கத்தக்கது. உளவியல் ஆலோசனை எப்படி, யாரால், எவ்வாறு எங்கே நடக்கும்?: இதுவரை வெளிவந்துள்ள செய்திகளை கூர்மையாகப் படித்து, திரட்டி, அதில் உள்ள அம்சங்களை கீழ் கண்டவாறு கொடுக்கப் படுகிறது: கவுன்சலிங் கொடுக்க முயற்சி செய்தல் உலாமாக்கள், உளவியல் நிபுணர்கள் மூலம் அவர்களுக்கு தவறான செயல்களில் ஈடுபடக்கூடாது ஐ.எஸ். இயக்கத்தின் மோசனமான செயல்பாடுகள் உள்ளிட்டவை குறித்து எடுத்து கூறி, நல்ல கருத்துகளை போதித்து அவர்களை நல்ல குடிமகனாக மாற்றும் பிரத்யேகமான திட்டம் அத்திட்டத்தை செயல்படுத்துதல் பொதுவாக தமிழக ஊடகங்கள், பிரச்சினைகளை அலசுவதில்லை, பல்லாண்டுகளாக இத்தகைய தீவிரமான சிக்கல்கள் மற்றும் தொடரும் கேள்விக்குரிய விஷயங்கள் இருந்தாலும், ஏதோ காரணங்களுக்காக செய்திகளாக வெளியிட்டு அமைதியாகி விடுகின்றனர். 06-11-2022 அன்று கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணனை அவரது அலுவலகத்தில் ஜவஹிருல்லா சந்தித்தார். பின்னர், அவர் கூறியபோது[5], “…கடந்த, 1998ல் நடந்த குண்டு வெடிப்பால், கோவை மக்கள் பாதிக்கப்பட்டு, மீண்டும் சகஜநிலை திரும்ப பல ஆண்டுகளானது. கார் வெடிப்பு போல், வேறு சம்பவங்கள் நடக்க கூடாது. இச்சம்பவத்தில் ஈடுபட்ட ஒற்றை நபரை இயக்கியது யார், இவ்வளவு பெரிய சம்பவத்தை நடத்துவதன் பின்னணி என்ன, என்பது குறித்து உண்மை வெளிக்கொண்டு வரவேண்டும். ஐ.எஸ்.ஐ.எஸ்., அமைப்பே இஸ்லாமிய சமூகத்தை சீர்குலைக்க கூடிய நோக்கில் செயல்படக்கூடியது[6]. அதன் ஆதரவாளர்களாக இருப்பவர்கள், அமைதியை சீர்குலைக்கும் நோக்கில் செயல்படுகின்றனர்[7]. இதுபோன்ற மன நிலையில் உள்ளவர்களுக்கு உளவியல் ரீதியான கவுன்சிலிங் கொடுக்க போலீஸ் தயாராக உள்ளது[8]. போலீசார் சிறப்பாக செயல்படுகின்றனர்[9]. கார் வெடிப்பு சம்பவத்தை என்.ஐ.ஏ., எப்படி விசாரிக்கப் போகிறது என்பது கேள்விக்குறிதான். தமிழக போலீசாரே விசாரிக்க வேண்டும்,” இவ்வாறு அவர் கூறினார்[10]. பயங்கரவாதம், தீவிரவாதம் மற்றும் அழிப்புவாதம் என்றால் என்ன?: பயங்கரவாதம் எனும்பொழுதே சில மனிதர்கள் குறிப்பிட்ட அடிப்படைவாத சித்தாந்தம், கொள்கைகள் மற்றும் ஏற்றுக்கொள்ளப் பட்ட திட்டம், ஆணை மற்றும் உந்துதல், அவற்றின் மூலம் குறிப்பிட்ட மனிதர்கள், மனித குழுமங்கள் மற்றும் நாடுகளைத் தாக்குதல், குண்டுவெடிப்புகள் நடத்துதல், பீதியை உண்டாக்குதல் என்றாகிறது. இவையெல்லாம் ஒரே நாளில் வந்து விடாது. சிறு வயதிலிருந்தே சில அறிவுரைகள், போதனைகள், சித்தாந்தங்கள் முதலியவை படிப்படியாக கற்பிக்கப் படவேண்டும். உலகிலுள்ள மக்களை “ஏற்றுக் கொள்ளப் பட்டவர்கள்” மற்றும் “ஏற்றுக் கொள்ளப் படாதவர்கள்” என்று பிரித்து, அவ்வாறே அந்த பேதம், வித்தியாசம் மற்றும் வேறுபாடுகளை அறிய-புரிய வைத்து வெருப்பை மனங்களில் வளர்ப்பது முதல் பணியாக அமைகிறது. பிறகு, “நாம் உயர்ந்தவர்கள்” ஆனால், அவர்கள் “தாழ்ந்தவர்கள்” எனவே, அவர்கள், “நம்முடன் வாழத் தகுதியற்றவர்கள்” என்று பிரித்து அடையாளம் காண வைப்பது. இல்லை, தங்களை குறிப்பிட்ட சின்னங்களுடன் இணைத்து, பிரித்து அடையாளம் காண வைப்பது என்பதிலும் முடியலாம். வேதபிரகாஷ் 07-11-2022 [1] தினகரன், கோவை மாநகரில் ஐ.எஸ். தீவிரவாத ஈடுபாடு வாலிபர்கள் கண்டுபிடிப்பு: உளவியல் ஆலோசனை வழங்க திட்டம், 2022-11-05@ 14:48:42. [2] https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=811771 [3] தினத்தந்தி, ஐ.எஸ். இயக்கத்தால் ஈர்க்கப்பட்ட 100 பேர் கண்டுபிடிப்பு, நவம்பர் 6, 12:15 am (Updated: நவம்பர் 6, 12:15 am). [4] https://www.dailythanthi.com/News/State/is-discover-100-people-inspired-by-movement-830407 [5] தினமலர், ஒற்றை நபரை இயக்கியது யார்: கோவையில் ஜவஹிருல்லா கேள்வி, Updated : நவ 07, 2022 07:06 | Added : நவ 07, 2022 07:04 [6] https://www.dinamalar.com/news_detail.asp?id=3164210 [7] மின்னம்பலம், இஸ்லாமிய சமூகத்தை சீர்குலைக்கும் ஐ.எஸ்.ஐ.எஸ்: ஜவாஹிருல்லா, நவம்பர் 6, 2022. 21:41 PM IST. [8] https://minnambalam.com/political-news/isis-will-disrupt-the-islamic-community-jawahirullah/ [9] தமிழ்.ஏசியாநெட்.நியூஸ், இஸ்லாமிய சமூகத்தை சீர்குலைக்கும் ஐஎஸ்ஐஎஸ்..! ஜமீஷா முபீனை இயக்கியது யார்..? ஜவாஹிருல்லா கேள்வி , Ajmal Khan, First Published Nov 7, 2022, 8:36 AM IST; Last Updated Nov 7, 2022, 8:36 AM IST [10] https://tamil.asianetnews.com/politics/jawahirullah-urged-to-find-out-who-is-behind-the-coimbatore-car-blast-rkyjbb பிரிவுகள்: ஃபிதாயீன், அசிடோன், அடிப்படைவாதம், அமைதி என்றால் இஸ்லாமா, அமோனியம், அல் - காய்தா, அல் - கொய்தா, அல் ஹதீஸ், அல்லா, இந்திய முஜாஹத்தீன், இந்திய முஜாஹித்தீன், இந்திய விரோதம், இந்தியத் தன்மை, இந்தியத்தனம், இந்து-முஸ்லிம், இந்து-முஸ்லிம் உரையாடல், இந்து-முஸ்லிம் ஒற்றுமை, இந்து-முஸ்லிம் சந்திப்பு-உரையாடல்கள், இந்துக்களைக் கொல்வது, இந்துக்கள், இந்துக்கள் கொடுமைப் படுத்தப்படல், இந்துக்கள் கொல்லப்படுதல், இந்துக்கள் சித்திரவதை, இலங்கை குண்டுவெடிப்பு, இஸ்லாமியத் தீவிரவாதம், இஸ்லாமியத் தீவிரவாதி, ஈழ குண்டுவெடிப்பு, உக்கடம், உள்ளூர் இஸ்லாமிய தீவிரவாதம், உள்ளூர் தீவிரவாத கும்பல், என்.ஐ.ஏ, என்ஐஏ, என்ஐஏ அதிகாரி, ஐ.எஸ், ஐ.எஸ். தீவிரவாதிகள், ஐ.எஸ்.ஐ, ஐஎஸ், ஐஎஸ்ஐஎஸ், ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள், ஐக்கிய ஜிஹாத் கவுன்சில், ஐசில், ஐசிஸ், காஃபிர் இந்தியர்கள், காஃபிர்-மோமின் கூட்டணி, காஃபிர்கள், குண்டு, குண்டு தயாரிப்பு, குண்டு நேயம், குண்டு வெடிப்பது, குண்டு வெடிப்பு, குண்டு வெடிப்பு வழக்கு, குண்டுவெடிப்பு, கேரள ஜிஹாதி, கேரள ஜிஹாதிகள், கேரள தீவிரவாதம், கேரள பயங்கரவாதம், கேரள போலீஸார், ஜமாஅத், ஜமாஅத்தார், ஜமேசா முபின், ஜமேஷா முபின், ஜமேஷா முபீன், ஜிஹாதி, ஜிஹாதி குருரக் குணம், ஜிஹாதி கொலைக்காரர்கள், ஜிஹாதி நேயம், ஜிஹாதி வெறியாட்டம், ஜிஹாதி-ஆதரவு மனப்பாங்கு, ஜிஹாதிகளுக்கு சம்பளம், ஜிஹாதிகளுக்கு பணம், ஜிஹாதித்தனம், ஜிஹாதித்துவம், ஜிஹாத், ஜிஹாத் கையேடு, டெட்டனேட்டர், டெட்டனேட்டர்கள், தமிழ்நாடு தவ்ஹீத், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், தீவிரவாதி, தீவிரவாதிகளுக்கு பணம், தீவிரவாதிகள் Tags: ஆலோசனை, இஸ்லாம் ஜிஹாதி, உக்கடம், கவுன்சிலிங், கார் கேஸ் சிலிண்டர், கார் கேஸ் சிலிண்டர் வெடிப்பு, கார் கேஸ் சிலின்டர், கார் கேஸ் சிலின்டர் வெடிப்பு, கேரள ஜிஹாதி, கேஸ் சிலிண்டர் வெடிப்பு, கேஸ் சிலின்டர் வெடிப்பு, ஜமேசா முபின், ஜமேஷா முபின், ஜமேஷா முபீன், ஜிஹாதி, ஜிஹாதி குண்டு, ஜிஹாதி குண்டுக்கொலை, ஜிஹாதி கொலைக்காரர்கள், ஜிஹாதி தீவிரவாதம், ஜிஹாதிகள், ஜிஹாதின் ஆயுதங்கள், ஜிஹாத் Comments: Be the first to comment ஜமேஷாமுபின் – ஜிஹாதியானது, ஐஎஸ் பாணியில் தற்கொலை வெடிகுண்டாக மாறியது, கொலையுண்டது– தெரிய வரும் பின்னணி (3) நவம்பர் 5, 2022 ஜமேஷா முபின் – ஜிஹாதியானது, ஐஎஸ் பாணியில் தற்கொலை வெடிகுண்டாக மாறியது, கொலையுண்டது – தெரிய வரும் பின்னணி (3) சமய இலக்கியங்கள் அனைத்தும் தமிழில் உள்ளன: விசாரணையின் போது மீட்கப்பட்ட ஆதாரங்களைப் பற்றி அறிந்த ஒரு உயர்மட்ட அதிகாரிகள் வட்டாரம் கூறுகையில், கோவை, உக்கடத்தில் உள்ள ஜமேஷா முபீனின் வீட்டில் இருந்து மீட்கப்பட்ட புத்தகங்கள் மற்றும் வாசகங்கள் உள்ளிட்ட குறிப்பேடுகளில் ஒரு பகுதி டைரிகள் எனக் கூறினர்[1]. “ஜமேஷா முபீனின் நாட்குறிப்பு பதிவுகள் பெரும்பாலும் மற்ற மதங்கள், குறிப்பாக இந்து மதம் மற்றும் கிறித்துவம் பற்றிய அவரது பார்வையை வெளிப்படுத்துகின்றன. அவர் அந்த மதங்களின் கடவுள்களின் பெயர்களை மேற்கோள் காட்டியுள்ளார். மேலும், ஒருவரையொருவர் இணைக்கும் அம்புகளுடன் கையால் எழுதப்பட்ட சார்ட் விளக்கப்படத்தில் அவற்றை சித்தரித்துள்ளார். சி.ஏ.ஏ ஹிஜாப் சர்ச்சை, உணவு மீதான கட்டுப்பாடுகள், மாட்டிறைச்சி காரணமாக நடந்த கொலைகள் போன்ற சம்பவங்கள் இந்திய முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளாக குறிப்பிடப்பட்டுள்ளன. முஸ்லிம்கள் இரண்டாம் தர குடிமக்களாக மாறி வருகின்றனர். இந்தச் பிரச்னைகளை எப்படிச் சமாளிப்பது என்றும் அவர் திகைத்தார்,” என்று வட்டாரங்கள் தெரிவித்தன[2]. மேலும் சமய இலக்கியங்கள் அனைத்தும் தமிழில் உள்ளன என்று தெரிவித்தனர். அனைத்து தரப்பு மக்களுடனும் ஒரு நல்லிணக்கத்தோடு வாழ்வதையே நாங்கள் விரும்புகிறோம்: மனிதர்களை காபிர், மோமின் எனப் பிரித்து, ஜிஹாதி [புனித போரில்] புரிந்து காபிர்கள் கொல்லப் பட வேண்டும் என்று எழுதியிருப்பது,இப்படி குண்டுவெடிப்புகள் நடத்திக் கொண்டிருந்தால், மனித இனம் என்னாவது என்று யோசிக்காமல், மதவெறியுடன் இருந்தது, முதலியவற்றை கவனிக்கும் பொழுது, எங்கிருந்து மனித நேயம், மனிதத்துவம், அமைதி எல்லாம் வரும் என்பது ஆராய வேண்டியுள்ளது. இந்நிலையில், கோவையில் கார் சிலிண்டர் வெடிப்புச் சம்பவம் நிகழ்ந்த பகுதியில் உள்ள சங்கமேஸ்வரன் கோயில் நிர்வாகிகளை கோட்டைமேடு பகுதியைச் சேர்ந்த ஜமாத் நிர்வாகிகள் சந்தித்து உரையாடினர்[3]. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள், “அனைத்து தரப்பு மக்களுடனும் ஒரு நல்லிணக்கத்தோடு வாழ்வதையே நாங்கள் விரும்புகிறோம்” என்று தெரிவித்துள்ளனர்[4]. பிறகு, எப்படி, முஸ்லிம் இளைஞர்கள் அவ்வாறு சேர்ந்து திட்டமிடுவார்கள், என்றெல்லாம் தெரியவில்லை. பெற்றோர், உறவினர், மற்றோர் முதலியோர்களுக்குத் தெரியாமல் தான், ஒவ்வொரு தடவையும் இவ்வாறு நடைபெறுகிறது. அதேபோல சொல்லப் படுகிறது. ஆனால், மறுபடியும் ஏதோ ஒன்று வெடிக்கத்தான் செய்கிறது. தவிர இந்த செய்தி வந்த பிறகு தான், பென்டிரைவ், அதில் எஐஎஸ் வீடியோக்கள் போன்ற செய்திகள் வர ஆரம்பித்துள்ளன. தமிழ்.இந்துவில் இன்று தான் (04-11-2022) அச்செய்தியே வருகின்றது ஜமாத்துகளின் சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம்: கோவை உக்கடம் பகுதியில் சம்பவ நிகழ்விடத்தின் அருகே உள்ள கோட்டை ஈஸ்வரன் கோயிலுக்கு ஜமாத் நிர்வாகிகள் இன்று சென்று பார்வையிட்டனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள் கூறியது: “3 ஜமாத்களின் சார்பாக கோட்டை சங்கமேஸ்வரன் கோயில் நிர்வாகிகளை சந்தித்து உரையாடினோம். கடந்த வாரம் இந்த பகுதியில் நடந்த சம்பவம் பல்வேறு சமூகங்களுக்கு இடையே ஒரு பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது. இஸ்லாமியர்களான நாங்கள் 7 தலைமுறைகளாக இந்த கோட்டைமேட்டில் வாழ்ந்து வருகிறோம். இந்தப் பகுதியில் நாங்கள் ஒற்றுமையுடன், அண்ணன் தம்பிகளாக கடந்த 200 ஆண்டுகளாக வாழ்ந்து வருகிறோம். இந்த சூழலில் இங்கு நடைபெற்ற கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தை கோட்டைமேட்டில் உள்ள ஜமாத்துகளின் சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம். இஸ்லாம் ஒருபோதும் வன்முறையைத் தூண்டும் மார்க்கம் அல்ல. நாங்கள் அமைதியை போதிக்கிறோம். அனைத்து தரப்பு மக்களுடனும் ஒரு நல்லிணக்கத்தோடு வாழ்வதையே நாங்கள் விரும்புகிறோம். எந்தவிதமான மத பூசல்களுக்கும், அரசியலுக்கும் நாங்கள் ஆட்பட்டு விடக்கூடாது என்பதில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம்,” என்று அவர்கள் தெரிவித்தனர். 100-க்கும் மேற்பட்ட வீடியோக்கள்: முன்னதாக, கோவை மாநகர தனிப்படை போலீசார் கைதான 6 பேர் வீட்டில் சோதனை நடத்தினர். கிடைத்த பொருட்களில், ஒரு பென் டிரைவ் இருந்தது. சோதனை செய்த போது அதிர்ச்சி அடைந்தனர், ஏனெனில், அந்த பென் டிரைவ்வில் 100-க்கும் மேற்பட்ட ஐ.எஸ். அமைப்பின் சித்தாந்தங்கள் அடங்கிய வீடியோக்கள் இருந்துள்ளது. இதில், 6 பேரில் ஒருவரது வீட்டில் பென் டிரைவ் ஒன்று பறிமுதல் செய்யப்பட்டது[5]. அதனை போலீசார் ஆய்வு செய்த போது அதிர்ச்சி ஏற்பட்டது. அதில், ஐஎஸ் தீவிரவாதத்துக்கு ஆதரவான ஏராளமான வீடியோக்கள் இருந்தன[6]. தீவிரவாதிகளின் செயல்பாடுகள் எப்படி இருக்கும் என்பது போன்ற வீடியோக்கள் மற்றும் கழுத்தை அறுத்து கொலை செய்வது, பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்துவது போன்ற வீடியோக்கள் இருந்தன[7]. இதுதவிர இலங்கை குண்டு வெடிப்பை நிகழ்த்திய நபரின் பேச்சு அடங்கிய வீடியோவும் இருந்துள்ளது[8]. இதனை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இவ்வளவு தெளிவாக இருந்தாலும், இப்பிரச்சினை ஏதோ மழைகாலத்தில் இதுவும் ஒரு செய்தி என்பது போல கருதுவது போலத் தோன்றுகிறது. ‘கோட்டை ஈஸ்வரன் கோவிலில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் வாயிலாக, கார் குண்டு வெடிப்பு வழக்கில் துப்பு துலக்க முக்கிய தகவல்கள் கிடைத்தன‘: ‘கோட்டை ஈஸ்வரன் கோவிலில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் வாயிலாக, கார் குண்டு வெடிப்பு வழக்கில் துப்பு துலக்க முக்கிய தகவல்கள் கிடைத்தன’ என, போலீசார் தெரிவித்தனர்.கோவையில், அக்., 23ல் கோட்டை ஈஸ்வரன் கோவில் முன் நடந்த கார் குண்டு வெடிப்பில், பயங்கரவாதி ஜமேஷா முபின் பலியானார். இந்த குண்டு வெடிப்பை விசாரித்த போலீசார் சந்தித்த சிரமங்கள் பற்றி தகவல்கள் வெளியாகியுள்ளன. சம்பவத்தன்று அதிகாலை, 4:00 மணிக்கு வந்த கார், கோட்டை ஈஸ்வரன் கோவில் முன் ஒன்றரை நிமிடம் நிற்பதை கண்காணிப்பு கேமரா காட்சிகளில் காண முடிந்தது. அதன் பிறகே கார் வெடித்துள்ளது. கார் காத்திருந்த ஒன்றரை நிமிடத்தில், ஜமேஷா முபின் தான் கொண்டு வந்திருந்த வெடிபொருட்களை வெடிக்கச் செய்வதற்கான முயற்சியில் ஈடுபட்டிருக்கலாம் என, போலீசார் சந்தேகிக்கின்றனர். கார் வெடித்தவுடன், அந்த அதிர்ச்சியில், பூட்டப்பட்டிருந்த கோட்டை ஈஸ்வரன் கோவில் கதவு தானாக திறந்தது. கண்காணிப்பு கேமரா காட்சிகளை கேட்டுச் சென்றபோது, பள்ளிவாசல் ஒன்றின் நிர்வாகி கடும் எதிர்ப்பு தெரிவித்து, போலீசாரிடம் வாக்குவாதம் செய்தது: கோவிலுக்குள் வசிக்கும் குடும்பத்தினர், அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள், போலீசார் ஓடி வந்துள்ளனர்.குண்டு வெடிப்பால் ஏற்பட்ட அதிர்ச்சியில், கோவில் கண்காணிப்பு கேமராவில் அடுத்த இரண்டரை நிமிடங்களுக்கு காட்சிகள் எதுவும் இல்லை. அதன் பிறகே காட்சி பதிவாகியுள்ளது.’கோவிலில் இருந்த கேமராவில் பதிவான காட்சிகள் தான் வழக்கில் துப்பு துலக்க பேருதவியாக இருந்தன’ என்கின்றனர் போலீசார்.’சம்பவத்தை சற்று தொலைவில் இருந்து பார்த்த போலீஸ் அதிகாரி, கோவில் அருகே இருக்கும் டிரான்ஸ்பார்மர் வெடித்து விட்டதாக கருதி, தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தபடி ஓடி வந்துள்ளார். ‘அருகே வந்த பின் தான், கார் வெடித்தது அவருக்கும் தெரியவந்தது’ என, அதிகாரிகள் தெரிவித்தனர்.கார் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்த கோவிலுக்கும், ஜமேஷா முபின் வசித்த வீட்டுக்கும் வெகு துாரம் இல்லை. அதிகபட்சம், 300 மீட்டர் தான் இருக்கும். ஆனால், இறந்தவர் யார் என்றும், கார் யாருடையது என்றும், அப்பகுதி பொதுமக்கள் யாரும் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கவில்லை.எந்த ஒரு தகவலும் தெரியாமல், கோட்டைமேடில் போலீசார் வீதி வீதியாக அலைந்தும் விபரம் கிடைக்காமல் தடுமாறினர். கார் வந்த வழித்தடம் கண்டறிவதற்காக, கண்காணிப்பு கேமரா காட்சிகளை கேட்டுச் சென்றபோது, பள்ளிவாசல் ஒன்றின் நிர்வாகி கடும் எதிர்ப்பு தெரிவித்து, போலீசாரிடம் வாக்குவாதம் செய்ததும் நடந்துள்ளது[9]. தற்போது வழக்கு விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், பள்ளிவாசல் நிர்வாகிகளிடம் இது பற்றி விசாரணை நடத்தவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர்[10]. வேதபிரகாஷ் 05-11-2022 [1] தமிழ்.இந்தியன்.எக்ஸ்பிரஸ், கோவை கார் சிலிண்டர் வெடிப்பில் பலியான ஜமேஷா முபீன்; இலக்கை நோக்கி பயணித்த சுயமான தீவிரவாதி! , Written by WebDesk, Updated: October 30, 2022 3:34:14 pm [2] https://tamil.indianexpress.com/tamilnadu/coimbatore-blast-jamesha-mubeen-killed-he-was-self-radicalised-on-way-to-target-533273/ [3] தமிழ்.இந்து, அனைவருடனும் நல்லிணக்கத்தோடு வாழ விரும்புகிறோம்: கோவையில் ஜமாத் நிர்வாகிகள் பேட்டி, செய்திப்பிரிவு, Last Updated : 03 Nov, 2022 02:51 PM. [4] https://www.hindutamil.in/news/tamilnadu/891704-we-want-to-live-in-harmony-coimbatore-jamaath-officials.html [5] தினகரன், கார் வெடிப்பில் பலியான ஜமேஷா முபின் தற்கொலை படை தாக்குதல் நடத்த திட்டம்? பென்டிரைவில் சிக்கிய வீடியோ ஆதாரம்; பரபரப்பு தகவல்கள், 2022-11-05@ 00:31:23 [6] https://www.dinakaran.com/news_detail.asp?Nid=811657 [7] தினத்தந்தி, ஐ.எஸ். வீடியோக்கள் அடங்கிய ‘பென் டிரைவ்‘ பறிமுதல், நவம்பர் 5, 12:15 am (Updated: நவம்பர் 5, 12:15 am) [8] https://www.dailythanthi.com/News/State/is-pen-drive-containing-videos-seized-829642 [9] தினமலர், கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கில் துப்பு துலக்க உதவியது கோவில் கேமரா, Updated : நவ 05, 2022 01:32 | Added : நவ 05, 2022 01:30 [10] https://www.dinamalar.com/news_detail.asp?id=3162429 பிரிவுகள்: ஃபிதாயீன், ஃபேஸ்புக், அடிமை, அடிமைத்தனம், அடையாளம், அல் - உம்மா, அல் - காய்தா, அல் - கொய்தா, அல்-உம்மா, இந்திய முஜாஹத்தீன், இந்திய முஜாஹித்தீன், இந்திய விரோதத் தன்மை, இந்திய விரோதம், இந்தியத் தன்மை, இந்தியத்தனம், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக், இந்து-முஸ்லிம், இந்து-முஸ்லிம் உரையாடல், இந்து-முஸ்லிம் ஒற்றுமை, இந்து-முஸ்லிம் சந்திப்பு-உரையாடல்கள், இந்துக்களின் உரிமைகள், இந்துக்களைக் கொல்வது, இந்துக்கள், இந்துக்கள் கொடுமைப் படுத்தப்படல், இந்துக்கள் கொல்லப்படுதல், இறைத்தூதர், இலக்கியம், இலங்கை, இலங்கை குண்டுவெடிப்பு, இஸ்லாமிய இறையியல், இஸ்லாமிய தீவிரவாதம், இஸ்லாமிய நாடு, இஸ்லாமிய பிரச்சினை, இஸ்லாமியத் தமிழன், இஸ்லாமியத் தீவிரவாதம், இஸ்லாமியத் தீவிரவாதி, இஸ்லாமிஸ்ட், இஸ்லாமும் இந்தியாவும், இஸ்லாம், ஈழம், உக்கடம், உருது ஜிஹாதி, உருது மொழி, உள்ளூர் இஸ்லாமிய தீவிரவாதம், உள்ளூர் தீவிரவாத கும்பல், என்.ஐ.ஏ, என்ஐஏ, என்ஐஏ அதிகாரி, ஐ.எஸ், ஐ.எஸ். தீவிரவாதிகள், ஐ.எஸ்.ஐ, ஐஎஸ், ஐஎஸ்ஐஎஸ், ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள், ஐசில், ஐஸில், காஃபிர், காஃபிர் இந்தியர்கள், காஃபிர்-மோமின் கூட்டணி, காஃபிர்கள், கிலாபத், கிலாபத் இயக்கம், குண்டு, குண்டு தயாரிப்பு, குண்டு நேயம், குண்டு வெடிப்பது, குண்டு வெடிப்பு, குண்டு வெடிப்பு வழக்கு, குண்டுவெடிப்பு, குப்ரு, கேரள ஜிஹாதி, கேரள ஜிஹாதிகள், கேரள தீவிரவாதம், கேரள பயங்கரவாதம், சகிப்புத் தனம், சகிப்புத் தன்மை, சகிப்புத்தனம், சகிப்புத்தன்மை, சமத்துவம், சமரசம், சிரச்சேதம், சிரியா, ஜமாஅத், ஜமாஅத்தார், ஜமாத், ஜமேசா முபின், ஜமேஷா முபின், ஜமேஷா முபீன், ஜிஹாதி, ஜிஹாதி கொலைக்காரர்கள், ஜிஹாதி நேயம், ஜிஹாதி வெறியாட்டம், ஜிஹாதி-ஆதரவு மனப்பாங்கு, ஜிஹாதிகளுக்கு சம்பளம், ஜிஹாதிகளுக்கு பணம், ஜிஹாதித்தனம், ஜிஹாதித்துவம், ஜிஹாத், ஜிஹாத் கையேடு, ஜிஹாத் தன்மை, தப்லீக், தப்லீக் ஜமாஅத், தமிழகத்து ஜிஹாதி, தமிழகத்து தீவிரவாதி, தமிழ் ஜிஹாதி, தமிழ் முஸ்லிம், தமிழ்நாடு சுன்னத் ஜமாஅத், தமிழ்நாடு சுன்னத் ஜமாத், தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை, தமிழ்நாடு தவ்ஹீத், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், தமிழ்நாடு தௌஹீத் ஜமாத், தற்கொலை, தற்கொலை குண்டு வெடிப்பு, தலைவெட்டி, தீவிரவாத திட்டம், தீவிரவாதம், தீவிரவாதி, தீவிரவாதிகளுக்கு பணம், தீவிரவாதிகள், துருக்கன், துருக்கர், மனித நேயம், மனித வெடிகுண்டு, முஸ்லீம்களின் வெறித்தனம், வெடி, வெடி மருந்து, வெடிகுண்டு, வெடிகுண்டு பொருட்கள், வெடிகுண்டுகள், வெடிக்கச் செய்யும் கருவிகள், வெடிபொருள் வழக்கு, வெடிப்பொருட்களைப் பதுக்கி வைத்தல் Tags: இலங்கை குண்டுவெடிப்பு, ஈழ குண்டுவெடிப்பு, கார் கேஸ் சிலிண்டர், கார் கேஸ் சிலிண்டர் வெடிப்பு, கார் கேஸ் சிலின்டர், கார் கேஸ் சிலின்டர் வெடிப்பு, காஸ் குண்டு, குண்டு, குண்டு வெடிப்பு, குண்டு வெடிப்பு கைதி, குண்டு வெடிப்பு வழக்கு, குண்டுவெடிப்பு, கேஸ் சிலிண்டர் வெடிப்பு, கேஸ் சிலின்டர் வெடிப்பு, கோயம்புத்தூர், கோவை, கோவை குண்டு, ஜமேசா முபின், ஜமேஷா முபின், ஜமேஷா முபீன், ஜிஹாதி, ஜிஹாதி குண்டு, ஜிஹாதி குண்டுக்கொலை, ஜிஹாதி கொலைக்காரர்கள், ஜிஹாதி தீவிரவாதம், ஜிஹாதிகள், ஜிஹாத், தற்கொலை குண்டு வெடிப்பு, வெடி, வெடி மருந்து, வெடிகுண்டு பொருட்கள், வெடிகுண்டுகள், வெடிபொருள் வழக்கு Comments: Be the first to comment ஜமேஷாமுபின் – ஜிஹாதியானது, ஒத்திகைப் பார்த்தது, தற்கொலை வெடிகுண்டாக மாறியது (1) நவம்பர் 5, 2022 ஜமேஷா முபின் – ஜிஹாதியானது, ஒத்திகைப் பார்த்தது, தற்கொலை வெடிகுண்டாக மாறியது (1) கோவை ஆர் காஸ் சிலிண்டர் வெடிகுண்டு சோதனை: என்.ஐ.ஏ மற்றும் தமிழக போலீஸார் கோவை குண்டு வெடிப்பு பற்றி ஆய்ந்து வருகின்றனர், விசாரணை நடத்துகின்றனர் மற்றும் வீடுகளில் சோதனைகள் நடக்கின்றன. கைதானவர்களிடமிருந்து வாக்குமூலங்களும் பெறப் படுகின்றன. செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. ஆங்கில ஊடகங்களில் அதிகமாக வரும் பொழுது, தமிழக ஊடகங்கள் அமுக்கி வாசிக்கின்றன. ஜமேஷா முபின் ஏதோ சுயமாக இந்த தீவிரவாதச் செயலில் ஈடுபட்டான் என்றும் தலைப்பிட்டு செய்திகள் வருகின்றன. திராவிடத்துவ வாதிகள், தலைக்கு வந்தது, தலைப்பாகையோடு போய்விட்டது, என்று பெருமூச்சு விட்டு அமைதியாகின்றனர். ஆனால், அரசியல் செய்பவர்கள், செய்து கொண்டு தான் இருக்கின்றனர். திமுகவினர், “தேசத் துரோகி” என்றெல்லாம் ராணுவ அதிகாரியை டிவி செனலில், கோடிக்கணக்கில் பொது மக்கள் கவனிக்கும் நிலையில் பலமுறை விளிப்பதும் திகைப்பாக இருக்கிறது. அந்த செனல் நிகழ்ச்சி அமைப்பாளர், அத்தகைய பேச்சுகளை “மூட்” கூட செய்யாமல் இருந்ததை கவனிக்க முடிந்தது. ஜமேஷா முபின் வீட்டில் கைப்பற்றப்பட்ட 109 பொருட்கள்[1]: ஜமேசா முபினின் வீட்டில் நடந்த சோதனையில் 109 பொருட்கள் கைப்பற்றப்பட்டதாகவும், ஜிகாத் மற்றும் இஸ்லாமிய சித்தாங்கம் தொடர்பான புத்தகங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைப் பற்றி பலவிதமான செய்திகள் கடந்த ஒரு வாரமாக நாளிதழ்கள் வெளியிட்டு வருகின்றன. ஆனால், எந்த எய்தி தாளோ, ஊடகமோ ஐந்தாறு-ஏழெட்டு பொருட்களைத் தவிர, மற்றதை சொல்ல காணோம். ஆகவே, தமிழ், ஆங்கிலம் மற்றும் இதர ஊடகங்களில் உள்ள எல்லாவற்றையும் தொகுத்து ஒரு லிஸ்ட் தயாரிக்கப் படுகிறது. – அதில் பொட்டாசியம் நைட்ரேட் [Potassium Nitrate], நைட்ரோ கிளசரின் [Nitro Glycerin], சிவப்பு பாஸ்பரஸ் [Red Phosphrous], அலுமினியம் பவுடர் [Aluminium powder], பிஇடிஎன் பவுடர் (பென்டா எரித்திரிடால் டிரை நைட்ரேட், Penta Erythrital tri-nitrate), சல்பர் பவுடர் [Suplphur powder], ஆணிகள் [Balrus, nails], கருப்பு பவுடர் [Black powder], 2 மீட்டர் நீளமுள்ள திரி [Gelatin wires], இண்டன் கியாஸ் [Indane gas cylinder] பொட்டாசியம் நைட்ரேட் சிலிண்டர் [Potassium Nitrate cylinder], ஆக்சிஜன் சிலிண்டர் [Oxygen cylinder] கையுறை [hand glouses], ஓஎக்ஸ்ஒய் 99 [YXY99], அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் பிளேடு [Surgical blades], கண்ணாடிகள் [Glass pieces], 9 வாட்ஸ் பேக்டரி [9 watts battery], 9 வாட்ஸ் பேட்டரி கிளிப் [9 watts Battery clips], வயர் [wires], சுவிட்ச் [switches], சிலிண்டர் [cylinders], ரெகுலெட்டர் [regulators], டேப் [tapes] இஸ்லாமிய மதம் கொள்கைகள் தொடர்புடைய புத்தகங்கள் [Islamic literature including Jihadi category],– உள்ளிட்ட 109 பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு வாரமாக இச்செய்திகள் வந்துகொண்டிருந்தாலும், முழு விவரங்கள் வெளியிடாமல் இருப்பதும் திகைப்பாக இருக்கிறது. ஜமேஷ் முபீனின் குடும்பம், பின்னணி: கார் வெடிப்பு சம்பவத்தில் இறந்த முபின் மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்துள்ளார். படித்து முடித்ததும் பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்தார். அப்போது வீட்டில் அவருக்கு திருமணத்திற்கு பெண் பார்த்த போது, ஒரு மாற்றுத்திறனாளி பெண்ணையே நான் திருமணம் செய்து கொள்வேன் என்றார். அதன்படி கடந்த 4 வருடங்களுக்கு முன்பு கோவை அல் அமீன் காலனியை சேர்ந்த மாற்றுத்திறனாளி பெண்ணான நஸ்ரத்தை (23) முபின் திருமணம் செய்து கொண்டார். பின்னர் கோட்டைமேடு பகுதியில் மனைவியுடன் வசித்து வந்த அவர் அங்குள்ள புத்தக கடையில் வேலைக்கு சேர்ந்தார். இவருக்கு 2 மற்றும் 4 வயதில் 2 குழந்தைகள் உள்ளனர். திருமணத்திற்கு பிறகு முபின் தனது தாய், தந்தை மற்றும் உறவினர்கள் யாரிடமும் பேசுவதில்லை. இந்த நிலையில் திடீரென தான் வேலை பார்த்து வந்த புத்தக கடை வேலையை முபின் விட்டு விட்டார். இதுகுறித்து நஸ்ரத் கணவரிடம் கேட்டதற்கு, தனக்கு நெஞ்சுவலி இருப்பதாகவும் தன்னால் வேலை பார்க்க முடியவில்லை என்றும் தெரிவித்து வீட்டில் இருந்தார். கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே வீடு பார்த்து குடி பெயர்ந்தது: கோட்டைமேடு பகுதியிலிருந்து, திடீரென்று கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகில் வீடு பார்த்து இடம் பெயர்ந்தார். வேலைக்கு செல்லாமல் இருந்தார். ஆனால் கடந்த சில மாதங்களாக முபின் வீட்டில் இருக்காமல் வெளியில் சென்றதால் ஏதாவது வேலை பார்க்கிறீர்களா என விசாரித்துள்ளார். அப்போது தான் தேன் மற்றும் நறுமண பொருட்கள் விற்பனை செய்வதாகவும், நாட்டு மருந்து கடையில் வேலை பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார். கார் வெடிப்பு சம்பவம் நடப்பதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு முபின் தனது மனைவியிடம் நாம் வேறு வீட்டிற்கு செல்லலாம் என கூறியுள்ளார். அதன்படி கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே வீடு பார்த்து மனைவி, குழந்தைகளுடன் குடியேறி உள்ளார். அப்போது முபின் வீட்டிற்குள் 4 பெட்டிகளை எடுத்து வந்தார். இதனால் நஸ்ரத்துக்கு சந்தேகம் ஏற்படவே எதற்காக இந்த 4 பெட்டிகள். அதில் என்ன உள்ளது என கேட்டுள்ளார். அதற்கு முபின், இந்த பெட்டிகளில் பழைய துணிகள் தான் உள்ளது என கூறியுள்ளார். ஆனால் கார் வெடிப்பு சம்பவம் நடந்த பிறகே அந்த பெட்டிகளில் வெடி மருந்து இருந்த தகவல் நஸ்ரத்துக்கு தெரிய வந்துள்ளது. 20-10-2022 அன்று மனைவி குழந்தைகளுடன் தாய் வீட்டிற்கு சென்று விடுதல்: கடந்த மாதம் 20-ந்தேதி, முபினின் மனைவி நஸ்ரத்துக்கு வயிற்றுவலி ஏற்பட்டதால் குழந்தைகளுடன் தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். முபின் எப்போதும் யாரிடமும் பேசாமல் தனியாகவே இருப்பார். மேலும் எந்நேரமும் செல்போனில் ஏதாவது பார்ப்பதை வாடிக்கையாக வைத்துள்ளார். ஆனால் சம்பவம் நடப்பதற்கு 2 நாட்களுக்கு முன்பு நஸ்ரத்தின் வீட்டிற்கு சென்ற முபின் வழக்கத்திற்கு மாறாக அனைவரிடமும் சகஜமாக பேசியுள்ளார். மேலும் குடும்பத்தினர் அனைவருடன் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டும் உள்ளார். அன்று மாலையே தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வெளியில் சென்று உள்ளார். அப்போது குழந்தைகளுக்கு பிடித்த ஐஸ்கிரீம் உள்ளிட்டவற்றையும் வாங்கி கொடுத்துள்ளார். பின்னர் மனைவியை அவரது தாய் வீட்டில் விட்டு, முபின் மட்டும் தனது வீட்டிற்கு வந்துள்ளார். சம்பவம் நடப்பதற்கு 3 நாட்களுக்கு முன்பு தண்ணீரை சேமிப்பதற்கு டிரம் ஒன்றையும் வாங்கி கொடுத்துள்ளார். 22-10-2022 அன்று மனைவியுடன் பேசியது: அப்போது 3 நாட்களுக்கு தண்ணீரை சேமித்து வைத்துக் கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார். 22-ந் தேதி இரவு நஸ்ரத் கணவருக்கு எப்போது வீட்டிற்கு வருவாய் என மெசேஜ் அனுப்பினார். அதற்கு நாளை வருவதாக கூறியுள்ளார். அப்போது நஸ்ரத் குழந்தைகள் உன்னை தேடுகின்றனர். வீடியோ காலிலாவது பேசு என மெசேஜ் அனுப்பியதாக தெரிகிறது. ஆனால் அதன்பின்னர் முபின் போனை எடுக்கவில்லை. தொடர்ந்து முயற்சி செய்தும் முபினை தொடர்பு கொள்ள முடியவில்லை என தெரிகிறது. இதுவே முபின் அவரது மனைவியிடம் கடைசியாக பேசியது. ஆனால் தற்போது வரை முபினுக்கு என்ன நடந்தது என்று அவரது குழந்தைகளுக்கு தெரியவில்லை. வேதபிரகாஷ் 05-11-2022 [1] ஒவ்வொரு நாளிதழும், செய்தியும் விதவிதமாகக் குறிப்பிடுகின்றன (ஐந்து-ஆறு என்று….), அவற்றைத் தொகுத்து, இங்கு பட்டியலிடப் பட்டுள்ளது. பிரிவுகள்: ஃபிதாயீன், அடிமை, அடையாளம், அமைதி, அல் - உம்மா, அல் - காய்தா, அல் - கொய்தா, அல் ஹதீஸ், அல்-முஜாஹித்தீன், அழிப்பு, அழிவு, ஆதரவு, ஆதாரம், ஆர்.எஸ்.எஸ், இந்திய முஜாஹத்தீன், இந்திய முஜாஹித்தீன், இந்திய விரோதம், இந்தியத் தன்மை, இந்தியத்தனம், இந்து-முஸ்லிம், இந்து-முஸ்லிம் உரையாடல், இந்து-முஸ்லிம் ஒற்றுமை, இந்து-முஸ்லிம் சந்திப்பு-உரையாடல்கள், இந்துக்களைக் கொல்வது, இந்துக்கள், இந்துக்கள் கொடுமைப் படுத்தப்படல், இந்துக்கள் கொல்லப்படுதல், இறை தூதர், இறைதூதர், இறைத்தூதர், இலங்கை குண்டுவெடிப்பு, இஸ்லாமியத் தீவிரவாதம், இஸ்லாமியத் தீவிரவாதி, இஸ்லாம், ஈழ குண்டுவெடிப்பு, உக்கடம், உயிர் பலி, உருது ஜிஹாதி, உரையாடல், உளவு, உள்ளூர் இஸ்லாமிய தீவிரவாதம், என்.ஐ.ஏ, என்ஐஏ, என்ஐஏ அதிகாரி, ஐ.எஸ், ஐ.எஸ். தீவிரவாதிகள், ஐ.எஸ்.ஐ, ஐஎஸ், ஐஎஸ்ஐஎஸ், ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள், ஐஸில், ஓட்டு, ஓட்டுவங்கி, கழுத்தறுப்பு, காஃபிர், காஃபிர் இந்தியர்கள், காஃபிர்-மோமின் கூட்டணி, காஃபிர்கள், காபிர், குண்டு, குண்டு தயாரிப்பு, குண்டு நேயம், குண்டு வெடிப்பது, குண்டு வெடிப்பு, குண்டு வெடிப்பு வழக்கு, குண்டுவெடிப்பு, கேரள ஜிஹாதி, கேரள ஜிஹாதிகள், கேரள தீவிரவாதம், கேரள பயங்கரவாதம், சகிப்புத் தனம், சகிப்புத் தன்மை, சகிப்புத்தனம், சிவன் கோவில் தாக்கப்பட்டது, ஜமாத், ஜமேசா முபின், ஜமேஷா முபின், ஜமேஷா முபீன், ஜிஹாதி, ஜிஹாதி நேயம், ஜிஹாதி வெறியாட்டம், ஜிஹாதி-ஆதரவு மனப்பாங்கு, ஜிஹாதிகளுக்கு சம்பளம், ஜிஹாதிகளுக்கு பணம், ஜிஹாதித்தனம், ஜிஹாதித்துவம், ஜிஹாத், ஜிஹாத் கையேடு, ஜிஹாத் தன்மை, டெட்டனேட்டர், டெட்டனேட்டர்கள், தமிழகத்து ஜிஹாதி, தமிழகத்து தீவிரவாதி, தமிழ் ஜிஹாதி, தமிழ்நாடு தவ்ஹீத், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், தலைவெட்டி, தீவிரவாதம், தீவிரவாதி, தீவிரவாதிகளுக்கு பணம் Tags: கார் கேஸ் சிலிண்டர், கார் கேஸ் சிலிண்டர் வெடிப்பு, கார் கேஸ் சிலின்டர், கார் கேஸ் சிலின்டர் வெடிப்பு, காஸ் குண்டு, கேஸ் சிலிண்டர் வெடிப்பு, கேஸ் சிலின்டர் வெடிப்பு, கோட்டைமேடு, கோவ குண்டுவெடிப்பு, கோவை குண்டு, ஜமேசா முபின், ஜமேஷா முபின், ஜமேஷா முபீன், ஜிஹாதி, ஜிஹாதி குண்டு, ஜிஹாதி கொலைக்காரர்கள், ஜிஹாதி தீவிரவாதம், ஜிஹாதி பெண் தீவிரவாதிகள், ஜிஹாத் Comments: Be the first to comment 2022 கோவை கார் குண்டு விபத்து, குண்டு வெடிப்பு ஆகி, தற்கொலை குண்டு வெடிப்பாகி மாநிலங்களை தாண்டியதால் என்ஐஏவுக்கு ஒப்படைக்கப் பட்ட நிலை (4) ஒக்ரோபர் 29, 2022 2022 கோவை கார் குண்டு விபத்து, குண்டு வெடிப்பு ஆகி, தற்கொலை குண்டு வெடிப்பாகி மாநிலங்களை தாண்டியதால் என்ஐஏவுக்கு ஒப்படைக்கப் பட்ட நிலை (4) எஸ்.ஐ., உட்பட 27 பேருக்கு வெகுமதி: கோவை, கோட்டை ஈஸ்வரன் கோவில் முன், அக்., 23ல் நடந்த கார் குண்டு வெடிப்பில், சதிச்செயலுக்கு திட்டமிட்ட ஜமேஷா முபீன் பலியானார். வழக்கு விசாரணையில் சிறப்பாக பணியாற்றிய, 27 பேருக்கு, நேற்று டி.ஜி.பி., சைலேந்திரபாபு பாராட்டு சான்றிதழ், வெகுமதி வழங்கினார்[1], என்று ஊடகங்கள் கூருகின்றன.. சம்பவம் நடந்த நாளன்று, உக்கடம் எஸ்.ஐ., செல்வராஜன், ஏட்டு தேவக்குமார், காவலர் பாண்டியராஜா ஆகியோர், வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். காவல் ஆய்வாளர்கள், காவல் உதவி ஆய்வாளர்கள், தலைமை காவலர்கள், முதல் நிலைக் காவலர், மூத்த புகைப்படக் கலைஞர் ஒருவர் என மொத்தம் 34 பேருக்கு விருது வழங்கப்பட்டது[2]. இந்த பட்டியலில் உள்ளவர்கள் உளவுப்பிரிவு சைபர் கிரைம் சிறப்பு பிரிவு ஆகிய பிரிவுகளை சார்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது[3]. அதன் காரணமாகவே, ஜமேஷா முபீன், காரில் தொடர்ந்து செல்ல வாய்ப்பின்றி போயிருக்கலாம் என, போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. பெரியளவில் ஏற்பட இருந்த பாதிப்பை தடுக்க உதவியதாக, வாகன தணிக்கையில் ஈடுபட்ட எஸ் .ஐ., ஏட்டு, காவலருக்கு பாராட்டு சான்றிதழ், வெகுமதி வழங்கப்பட்டது. பந்தை குறிவைப்பது அரசியலாகிறது: வரும், 31ம் தேதி கோவை மாநகரில் அறிவிக்கப்பட்டுள்ள பந்த்தை முன்னிட்டு, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைக்கும், வாகன போக்குவரத்துக்கும், அத்தியாவசிய பொருட்களின் வினியோகத்துக்கும் எந்தவித குறைபாடும் நேராமல் இருக்க, அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும் என்று, மாநகர போலீசார் தெரிவித்துள்ளனர். நிச்சயமாக பொறுப்புடன் வேலை செய்த போலீஸாரை எல்லோருமே பாராட்ட வேண்டிய நிலையில் தான் உள்ளார்கள். இங்கு கூட, அந்த குண்டுவெடிப்பு செயல் அரைகுறையாக முடிந்ததால், யார் நடத்த வேண்டும் என்று நினைத்தானோ, அவன் மட்டும் பலியாகியுள்ளான் என்பது நோக்கத் தக்கது. மத்திய உளவுத்துறையும், தமிழக போலீஸாரும்: தென்னிந்தியாவில், தீவிரவாதம் பரவி, சிறந்த முறையில், தொழிற்நுட்பத்துடன், பாண்டித்தியத்துடன் நடந்து கொன்டிருப்பதால், வழக்குகள் தொடர்ந்து நடந்து கொன்டிருக்கின்றன. மேலும், அரசியல்வாதிகளின் தொடர்பு மற்றும் இதர பணப் போக்குவரத்து, சட்டமீறல் போக்குவரத்துகளுடன் திறமையாக செயல் பட்டு வருவதால், வழக்குகளும் இழுத்தப் படுகின்றன. இதனால் தான், காவல்துறை இந்த தகவலை தெரிந்தவுடன், பாதுகாப்பை உஷார் செய்தவுடன், இவர் திடீரென மாயமாகிவிட்டார் என்றும் கூறப்படுகிறது. மத்திய உளவுத்துறை காவல்துறையினர் ஜமிஷா தொடர்பான பல்வேறு தகவல்களுடன் அவரை கண்காணிக்க வேண்டும் என்று தெரிவித்து தமிழக அரசுக்கு 2018ம் ஆண்டு முதன் முதலில் தகவல் தெரிவித்ததாக சொல்லப்படுகிறது[4]. தமிழக காவல்துறையினர் இதனை பெரிதாக கருதவில்லை என்று கூறப்படுகிறது[5]. தேசிய புலனாய்வு முகமை 2019ம் ஆண்டு ஜமேஷா முபினை நேரடியாகவே விசாரணைக்கு அழைத்தது. தேசிய புலனாய்வு முகமை நடத்திய விசாரணையில் இந்தியாவிலும், இலங்கையிலும் நடைபெற்ற பல்வேறு வெடிகுண்டு சம்பவங்களில் அவருக்கு இருக்கின்ற தொடர்பு சம்பந்தமான வலுவான ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை. ஆனாலும் அவரை தமிழக காவல்துறையினர் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். தமிழகத்தை நாசமாக்கும் எண்ணத்துடன் பயங்கரவாத செயல்களில் ஈடுபட 96 பேர் தயாராக இருக்கின்றன என்ற பட்டியலை மத்திய உளவுத்துறை தமிழக அரசுக்கு அனுப்பி வைத்தது என்றும், அதில் இவர் இடம்பெற்றிருந்தார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது[6]. இதனை தமிழக அரசு எப்படி கோட்டைவிட்டது என்று கேள்வி எழுந்துள்ளது[7]. சம்பவம் நடந்த பிறகு தமிழக அரசு சார்பில் விளக்க அறிக்கை உட்பட பல்வேறு தகவல்கள் சரியாக பொதுமக்களிடையே சொல்லப்படவில்லை என்று கூறப்படுகிறது. அந்த பட்டியலில் 89 ஆவது நபராக ஜமேஷா முஃபின் இடம்பெற்றுள்ளார். இந்த நிலையில் தான் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பை மத்திய அரசு தடை செய்தது. இதற்கு எதிர்வினை இருக்கும் என்று மத்திய அரசு ஏற்கனவே எதிர்பார்த்து இருந்ததாக சொல்லப்படுகிறது. ஆகவே இனி வரும் காலங்களிலாவது மத்திய உளவுத்துறை எச்சரிக்கைகளை தமிழக அரசு தன்னுடைய முழு கவனத்தில் எடுத்துக் கொண்டு செயல்பட வேண்டும் என்று பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அரசியலமயமாக்கப் படும் தீவிரவாதம்: திமுக ஆட்சியில்லாமே “பாஸ்ட் ஃபுட்” ரேஞ்சில், வேகத்தில், அதிரடியாகத்தான் நடக்கும் போலிருக்கிறது. கார் காஸ் சிலிண்டர் விபத்து, தீவிரவாத கார் காஸ் சிலிண்டர் வெடிப்பாகி, கார் குண்டு வெடிப்பாகியுள்ள நிலையில், அமைதிகாத்த திராவிடிய ஸ்டாக் முதலமைச்சர், திடீஎன்று கூட்டம் கூடி, இந்த விபத்து வழக்கை என்.ஐ.ஏ.க்கு ஒப்படைக்க அறிவித்து விட்டார். போலீஸ் துறைக்கும் அவர் பொறுப்பேற்றுள்ளதால், இவ்வழக்கின் பாரத்தை, தீவிரவாதத்தை அறிந்து, மாற்றி விட்டார் என்று தெரிகிறது. அதுமட்டுமல்லாது, சம்பந்தப் பட்ட போலீஸ் அதிகாரிகளுக்கு வெகுமதி அளிக்கப் பட்டு பாராட்டும் தெரிவிக்கப் பட்டது. கோவையில் புதியதாக மூன்று காவல் நிலையங்களும் உருவாக்கப் பட்டுள்ளன. டிவி செனல்களிலேயே வாதவிவாதங்கள் படுஜோர். பேச்சாளர்கள், நேரிடையாக அரசியலாக்கி, அரசியல் மயமாக்கி, திராவிட மாடலா- குஜராத் மாடலா ரேஞ்சில் இறங்கி விட்டனர். திமுக-பிஜேபி நேரிடையாக இந்த மோதலில் ஈடுபட்டுள்ளன எனலாம். தமிழகத்தில் முதன்முதலாக என்.ஐ.ஏ. செய்துள்ள வழக்கு: முதன்முதலாக என்.ஐ.ஏ. ஏஜென்சி சென்னையில் அலுவலகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது போலீஸ் நிலையத்திற்கு சமமாகும். இது போன்ற மற்ற நிறுவனங்கள் இதனுடன் சேர்ந்து ஒத்துழைத்து செயல்பட வேண்டும். தீவிரவாதம், பயங்கரவாதம் போன்றவை சமூக, பொருளாதார, மற்றவற்றை பெரிதும் பாதிப்பதால், இது மனித வாழ்க்கைக்கு எதிராக செயல்படுகிறது. மேலும், எல்லைகளைக் கடந்து, இவை செயல் படுவதால், மற்ற நாடுகளும் இவற்றை கடுமையாக எதிர்க்கிறார்கள். பதிவு செய்துள்ள இந்த முதல் வழக்கே தமிழகத்தின் இறுதி வழக்காக இருக்க வேண்டும் என்பதே பொது மக்களின் எதிர்பார்ப்பு, விருப்பமாகும், எனும் நிலையில், இத்தகைய கும்பல்கள் வேறருக்கப் பட வேண்டும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.. © வேதபிரகாஷ் 29-10-2022 [1] தினமலர், எஸ்.ஐ., உட்பட 27 பேருக்கு வெகுமதி, Added : அக் 28, 2022 04:31.. https://www.dinamalar.com/news_detail.asp?id=3156201 – :~:text=%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%88%2C%20%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%20%E0%AE%88%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D,%E0%AE%9A%E0%AF%88%E0%AE%B2%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%81%20%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%20%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1% E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D%2C%20%E0%AE%B5%E0%AF%86%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%20%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D. [2] தமிழ்.ஏசியாநெட்.நியூஸ், கோவை கார் வெடிப்பு விவகாரம்… சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு டிஜிபி பாராட்டு!!, Narendran S, First Published Oct 27, 2022, 6:00 PM IST, Last Updated Oct 27, 2022, 8:42 PM IST. [3] https://tamil.asianetnews.com/tamilnadu-coimbatore/dgp-praises-the-policemens-for-their-excellent-work-in-covai-car-blast-case-rkew2t [4] தமிழ்.ஏசியாநெட்.நியூஸ், உளவுத்துறை ‘அன்றே’ கொடுத்த சிக்னல்!.. கிடப்பில் போடப்பட்டதா ? கோவை கார் குண்டு வெடிப்பு சம்பவம், Raghupati R, First Published Oct 28, 2022, 7:56 PM IST; Last Updated Oct 28, 2022, 8:34 PM IST. [5] https://tamil.asianetnews.com/tamilnadu/coimbatore-car-bomb-blast-tn-police-ignored-central-intelligence-agency-warning-rkgw4i [6] நியூஸ்.4.தமிழ், கோவை கார் குண்டுவெடிப்பு சம்பவம்! மத்திய உளவுத்துறை எச்சரித்தும் அலட்சியம் காட்டிய தமிழக காவல்துறை!, Sakthi by SAKTHI October 28, 2022 [7] https://www.news4tamil.com/coimbatore-car-bombing-incident-tamil-nadu-police-ignored-the-central-intelligence-agencys-warning/ பிரிவுகள்: இஸ்லாமியத் தமிழன், இஸ்லாமியத் தீவிரவாதம், இஸ்லாமியத் தீவிரவாதி, இஸ்லாமிஸ்ட், கார், குண்டு, குண்டு தயாரிப்பு, குண்டு நேயம், குண்டு வெடிப்பது, குண்டு வெடிப்பு, குண்டு வெடிப்பு வழக்கு, குண்டுவெடிப்பு, கேரள ஜிஹாதி, கேரள ஜிஹாதிகள், கேரள தீவிரவாதம், கேரள பயங்கரவாதம், கோவை, ஜமா அத், ஜமா மஸ்ஜித், ஜமாஅத், ஜமாஅத்தார், ஜமாத், ஜிஹாதி, ஜிஹாதி குருரக் குணம், ஜிஹாதி கொலைக்காரர்கள், ஜிஹாதி நேயம், ஜிஹாதி-ஆதரவு மனப்பாங்கு, ஜிஹாதிகளுக்கு சம்பளம், ஜிஹாதிகளுக்கு பணம், ஜிஹாதித்தனம், ஜிஹாதித்துவம், ஜிஹாத், ஜிஹாத் கையேடு, ஜிஹாத் தன்மை, தமிழகத்து ஜிஹாதி, தமிழகத்து தீவிரவாதி, தமிழ் ஜிஹாதி, தமிழ் முஸ்லிம், தமிழ் முஸ்லீம், தமிழ்நாடு சுன்னத் ஜமாஅத், தமிழ்நாடு தவ்ஹீத், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், தமிழ்நாடு தௌஹீத் ஜமாத், தீவிரவாத திட்டம், தீவிரவாத நிதியுதவி, தீவிரவாதத்திற்கு துணை போவது, தீவிரவாதம், தீவிரவாதி, தீவிரவாதிகளுக்கு பணம், தீவிரவாதிகள், துருக்கன், துருக்கர், துருக்கி, தேசவிரோதம், தேசிய ஜிஹாதி தீவிரவாதம், தேசிய புலனாய்வு இயக்குனர், தேசிய புலனாய்வு துறை, தௌவீத் ஜமாத், தௌஹித் ஜமாத், தௌஹீத், பாபுலர் பிரென்ட் ஆப் இந்தியா, பாப்புலர் ஃபரென்ட் ஆஃப் இன்டியா, பாப்புலர் பரென்ட் ஆப் இந்தியா, பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா, பாப்புலர் பிரென்ட், பாப்புலர் பிரென்ட் ஆப் இந்தியா, பாப்புலர் பிரென்ட் ஆப் இன்டியா, முகமது அசாருதீன், முகமது இஸ்மாயில், முகமது தல்கா, முகமது நவாஸ் இஸ்மாயில், முகமது ரியாஷ், முகமது ரியாஸ், முஸ்லிம், முஸ்லிம் அடிப்படைவாதம், முஸ்லீம் ஓட்டு வங்கி, முஸ்லீம் ஓட்டுவங்கி, முஸ்லீம் லீக், முஸ்லீம்களின் அடிப்படைவாதம், முஸ்லீம்களின் தீவிரவாதம், முஸ்லீம்களின் வெறித்தனம், முஸ்லீம்களில் சிறுபான்மையினர், வெடி, வெடி மருந்து, வெடிகுண்டு, வெடிகுண்டு பொருட்கள், வெடிகுண்டுகள், வெடிக்கச் செய்யும் கருவிகள், வெடிபொருள் வழக்கு, வெடிப்பொருட்களைப் பதுக்கி வைத்தல் Tags: இஸ்லாமயமாக்கல், இஸ்லாமிய இறையியல், இஸ்லாமிய தீவிரவாதம், இஸ்லாமியத் தமிழன், இஸ்லாமியத் தீவிரவாதம், இஸ்லாமியத் தீவிரவாதி, இஸ்லாம், இஸ்லாம் ஜிஹாதி, உள்ளூர் இஸ்லாமிய தீவிரவாதம், ஐ.எஸ். தீவிரவாதிகள், சையது நிசார் அகமது, ஜமேசா முபின், ஜமேஷா முபின், ஜிஜாதி தீவிரவாதம், ஜிஹாதி தீவிரவாதம், தீவிரவாதம், தீவிரவாதி, தீவிரவாதிகள், மற்ற மதங்களை அவமதிக்கும் இஸ்லாம், முகமதியர், முகமது இஸ்மாயில் Comments: Be the first to comment 2022 கோவை கார் குண்டு விபத்து, குண்டு வெடிப்பு ஆகி, தற்கொலை குண்டு வெடிப்பாகி மாநிலங்களை தாண்டும் நிலை (3) ஒக்ரோபர் 29, 2022 2022 கோவை கார் குண்டு விபத்து, குண்டு வெடிப்பு ஆகி, தற்கொலை குண்டு வெடிப்பாகி மாநிலங்களை தாண்டும் நிலை (3) 26-10-2022 (புதன் கிழமை): தலைமை செயலகத்தில் ஆய்வு கூட்டம் நடந்தது. எல்லைக் கடந்த தீவிரவாத இணைப்புகளால், தமிழக முதல்வர் வழக்கை என்.ஐ.ஏக்கு மாற்ற பரிந்துரைத்தார். என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். வின்சென்ட் சாலையில் உள்ள அப்சல்கான் வீட்டுக்கு சென்றனர். லாப்டாப்பைக் கைப்பற்றினர். இந்த நிலையில், கார் வெடிப்பு சம்பவத்தில் 6-வது நபராக அப்சர்கான் என்பவரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். கார் வெடித்த போது உயிரிழந்த ஜமேஷா முபினின் உறவினர் அப்சர்கான் என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 5 பேரிடமும் 3 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. 27-10-2022 (வியாழன் கிழமை): தமிழகம் இந்த வழக்கை, என்.ஐ.ஏவிடம் (NIA) ஒப்படைத்தது. வழக்கு தொடர்பாக என்.ஐ.ஏ. விசாரணை அதிகாரியாக காவல் ஆய்வாளர் விக்னேஷ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்[1]. என்.ஐ.ஏ எப்.ஐ.ஆர் (FIR) போட்டது. என்.ஐ.ஏ பதிவு செய்து விசாரித்து வரும் இந்த வழக்கு பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளது[2]. கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்துள்ளது. அதில் அபாயகரமான 109 பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 28-10-2022 (வெள்ளிக் கிழமை): கைது செய்யப்பட்டுள்ளவர்களில் ஒருவன் – பெரோஸ் இஸ்மாயில் தான், ஈஸ்டர் குண்டுவெடிப்பில் சம்பந்தப் பட்டு கைதாகி, கேரளா சிறையில் இருக்கும் மொஹம்மது ஹஸாருத்தீன் மற்றும் ரஷீத் அலி இருவரையும் சந்தித்தாக ஒப்புக் கொண்டான். இவர்களுக்கு ஐசிஸுடனும் [Islamic State of Iraq and Syrai (ISIS),] தொடர்பு உள்ளது[3]. 109 பொருட்கள் பறிமுதல் – அவற்றின் எடை 60, 70 கிலோவா, 100 கிலோவா?: முதலில் எச்சரிக்கையாக அமுக்கி வாசித்த ஊடகங்கள், பிறகு, பெரிய “துப்பறியும் சாம்பு” ரேஞ்சில் செய்திகளை வெளியிட ஆரம்பித்து விட்டன[4]. 109 ஐட்டங்களை பட்டியல் போடவில்லை என்றாலும், எடை போட ஆரம்பித்த விட்டன. ஹராசு சரியில்லையா, நிருபர்களுக்கு எடை பார்க்கத் தெரியவில்லையா என்று தெரியவில்லை. 60, 70, 100 என்று குறிப்பிடுகின்றன[5]. பலியான ஜமேஷா முபின் மற்றும் முகமது தல்கா, முகமது அசாருதீன், முகமது ரியாஸ், பெரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில், அப்சர்கான் ஆகிய 7 பேர் மீதும் 120 பி, 153 ஏ., உபா சட்டப்பிரிவு 16 மற்றும் 17 ஆகிய 4 பிரிவுகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கின் முதல் தகவல் அறிக்கை தற்போது வெளியாகியுள்ளது[6]. இதில், வெடி விபத்தை ஏற்படுத்த ஜமேஷா முபின் திட்டமிட்டதாகவும், அவரின் வீட்டில் இருந்து 76.5 கிலோ பொட்டாசியம் நைட்ரேட், பிளாக் பவுடர், ஆக்ஸிஜன் சிலிண்டர், அலுமினியம் பவுடர், சிவப்பு பாஸ்பரஸ், 2 மீட்டர் நீளம் உள்ள திரி, கண்ணாடி துகள்கள், சல்பர் பவுடர், பேட்டரிகள், வயர், பேக்கிங் டேப், கையுறை, நோட்டு புத்தகம், ஜிஹாத் தொடர்பான குறிப்பு அடங்கிய டைரி, கியாஸ் சிலிண்டர் உள்பட 109 பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது[7]. மொத்த வெடிப்பொருட்களின் எடையை 65, 75, 100 கிலோ என்று பலவிதமாக ஊடகங்கள் வெளியிட்டு வருகின்றன[8]. 76.5 கிலோ பொட்டாசியம் நைட்ரேட் என்றால், மீதி 33.5 கிலோ மற்றப் பொருட்கள் இருக்க வேண்டும், ஆக மொத்தம் 100 கிலோ என்று கணக்குப் போட்டிருக்க வேண்டும்[9]. கார்கள் பறிமுதல்: கோவையில் வெடி விபத்து ஏற்பட்ட பகுதியைச் சுற்றியுள்ள இடங்களில் கடந்த ஒரு வாரமாக நின்றிருந்ததாக கூறப்படும் 12 கார்களை போலீசார் பறிமுதல் செய்து எடுத்துச் சென்றனர்[10]. வின்சென்ட் சாலையில் உரிய ஆவணங்கள் இல்லாமல் நீண்ட நாட்களாக நிறுத்தப்பட்டிருந்த 7 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சதி வேலைகளுக்காக காரை பயன்படுத்தியது போல இரு சக்கர வாகனங்களையும் பயன்படுத்தலாம் என்ற கோணத்தில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது[11]. இதில், 7 கார்களின் உரிமையாளர்கள் நேரில் ஆஜராகி உரிய ஆவணங்களை சமர்ப்பித்ததையடுத்து அந்த கார்கள் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. மீதமுள்ள 5 கார்களின் உரிமையாளர்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் கோவையில் கரும்புக்கடை, சுந்தராபுரம் மற்றும் கவுண்டம்பாளையம் ஆகிய பகுதிகளில் புதிதாக 3 காவல் நிலையங்கள் உருவாக்கப்பட முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். கோவையில் குண்டு வெடிப்பு, கோவையில் கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தின் எதிரொலியாக, திருச்சியில் கேட்பாரற்று சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்து 10 கார்கள் மற்றும் 2 இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்[12]. விழிப்புணர்வு அதிகமாகவே இருக்கிறது போலும்[13]. எல்லா நகரங்களிலும், எல்லா இடங்களிலும், இவ்வாறு வாகனங்கள் நிறுத்தப் பட்டுள்ளன. ஆனால், கார் வெடித்தால் இவ்வாறான, அதிரடி நடவடிக்கை வேற்கொள்வார்களா என்று தெரியவில்லை. போலீஸார், திடீரென்று, இவ்வளவு எச்சரிக்கையாக இப்பொழுது செயல்படுவது தான் ஆச்சரியமாக இருக்கிறது. இருப்பினும், அவர்களது முயற்சிகளை பாராட்டலாம். நம்மை போன்று அவர்களும் கடமையுடன் செயல்படுகிறார்கள். கோவை கார் காஸ் சிலிண்டர் வெடிப்பு முதல் கார் குண்டு வெடிப்பு வரை: “கோவை கார் சிலிண்டர் வெடிப்பு விபத்து…….” என்று ஆரம்பித்து, ஊடகங்கள், “கோவை காரில் காஸ் சிலிண்டர் வெடிப்பு விபத்து..”, மற்றும், “கோவை காரில் இரண்டு காஸ் சிலிண்டர்களில் ஒன்று வெடித்து விபத்து………”, .“கோவை மாருதி காரில் காஸ் சிலிண்டர் வெடித்த விபத்து………”, “கோவை மாருதி காரில் காஸ் சிலிண்டர் வெடித்த வழக்கு” என்றெல்லாம் குறிப்பிடப் பட்டு, “கோவை கார் குண்டு வெடிப்பு வழக்காக” மாறியுள்ளது. போலீஸாருக்கு விருது, பாராட்டு………………ஊடகங்களுக்கு, மெத்தப் படித்து, தமிழகத்தில் ஊறிப்போன நிருபர்களுக்கு, இதெல்லாம் தெரியாதது போல தலைப்பிட்டு செய்திகளை போடுவதிலிருந்து, ஒன்று அவர்களும் விசயங்களை மறைக்கிறார்கள் அல்லது யாருக்கோக் கட்டுப் பட்டு, அவ்வாறான செய்திகளை வெளியிடுகிறார்கள் என்றாகிறது. பிறகு, அவர்களது நடுநிலைத் தன்மை, ஊடக தருமம், பத்திரிக்கா தொழில் நியாயம், செக்யூலரிஸ சித்தாந்தம் முதலியவை பற்றி சந்தேகங்கள் எழத்தான் செய்யும். © வேதபிரகாஷ் 29-10-2022 [1] மாலைமலர், கோவை கார் குண்டு வெடிப்பு சம்பவம் – என்.ஐ.ஏ. விசாரணை அதிகாரி நியமனம், Byமாலை மலர்28 அக்டோபர் 2022 4:53 PM [2] https://www.maalaimalar.com/news/state/coimbatore-car-blast-incident-nia-appointment-of-investigating-officer-529573?infinitescroll=1 [3] Police sources, on Friday, October , said that one of the six accused in the Coimbatore blast case, confessed during interrogation that he met two men in a Kerala prison who had links with terror group Islamic State of Iraq and Syrai (ISIS), who were involved in the Easter bombings in Sri Lanka. Feroz Ismail confessed that he had met Mohammed Azharuddin and Rashid Ali, lodged in a prison in the neighbouring state and further questioning is on to ascertain the motive behind the meeting, they said. Azharuddin and Ali are in jail in connection with a case against them in Kerala. [4] தமிழ்.இந்து, கோவை | ஜமேஷா முபின் வீட்டில் 60 கிலோ வெடிமருந்து பறிமுதல்? – போலீஸ் கண்காணிப்பால் மிகப்பெரிய நாசவேலை தவிர்ப்பு, செய்திப்பிரிவு, Published : 26 Oct 2022 06:50 AM; Last Updated : 26 Oct 2022 06:50 AM [5] https://www.hindutamil.in/news/tamilnadu/887653-60-kg-of-ammunition-seized.html [6] தினத்தந்தி, கார் வெடிப்பில் பலியான ஜமேஷா முபின் வீட்டில் இருந்து 109 பொருட்கள் பறிமுதல், அக்டோபர் 29, 4:47 am [7] https://www.dailythanthi.com/News/State/109-items-seized-from-car-blast-victim-jamesha-mubins-house-824772 [8] மாலை மலர், ஜமேஷா முபின் வீட்டில் இருந்து 100 கிலோ வெடிப்பொருட்கள் பறிமுதல், By மாலை மலர்,27 அக்டோபர் 2022 9:40 AM [9] https://www.maalaimalar.com/news/state/tamil-news-100-kg-explosives-seized-from-jamesha-mubins-house-528818?infinitescroll=1 [10] இ.டிவி.ப்சாரத்,கார் வெடிப்புச்சம்பவம் எதிரொலி: கேட்பாரற்று நிற்கும் வாகனங்கள் பறிமுதல், [11] https://www.etvbharat.com/tamil/tamil-nadu/state/coimbatore/after-car-blast-incident-in-coimbatore-police-seized-unattended-two-wheeler-and-cars-parked-on-the-roads/tamil-nadu20221028160747877877082 [12] தமிழ்.இந்தியன்.எக்ஸ்பிரஸ், கோவை சம்பவம் எதிரொலி: திருச்சியில் அனாதையாக நின்ற10 கார்கள் பறிமுதல், Written by WebDesk, Updated: October 28, 2022 3:10:41 pm [13] https://tamil.indianexpress.com/tamilnadu/coimbatore-incident-reverberates-10-orphaned-cars-seized-in-trichy-532243/ பிரிவுகள்: ஃபிதாயீன், ஃபேஸ்புக், அடிமைத்தனம், அடையாளம், அனைத்து இந்திய முஸ்லிம் முன்னேற்ற கழகம், அமாவாசைக்கும் அப்துல் காருக்கும் என்ன சம்பந்தம்?, அமாவாசையும் அப்துல்காருக்கும், அல் - உம்மா, அல் - காய்தா, அல் - கொய்தா, அல்-முஜாஹித்தீன், அல்-முஹாஜிரோன், அழிவு, இந்திய முஜாஹத்தீன், இந்திய முஜாஹித்தீன், இந்திய முஸ்லிம் முன்னேற்ற கழகம், இந்திய யுனீயன் முஸ்லீம் லீக், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி, இந்திய யூனீயன் முஸ்லீம் லீக், இந்திய விரோதத் தன்மை, இந்திய விரோதம், இந்தியத் தன்மை, இந்தியத்தனம், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக், இந்து-முஸ்லிம், இந்து-முஸ்லிம் உரையாடல், இந்து-முஸ்லிம் ஒற்றுமை, இந்து-முஸ்லிம் சந்திப்பு-உரையாடல்கள், இஸ்லாமிய தீவிரவாதம், இஸ்லாமிய நாடு, இஸ்லாமிய பிரச்சினை, என்.ஐ.ஏ, என்ஐஏ, என்ஐஏ அதிகாரி, ஐ.எஸ், ஐ.எஸ். தீவிரவாதிகள், ஐ.எஸ்.ஐ, ஐஎஸ், ஐஎஸ்ஐஎஸ், ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள், ஐக்கிய ஜிஹாத் கவுன்சில், ஐசில், ஐசிஸ், ஓட்டு, ஓட்டுவங்கி, கேரள ஜிஹாதி, கேரளா, சகிப்பு, சகிப்புத் தனம், சகிப்புத் தன்மை, சகிப்புத்தனம், ஜமா அத், ஜமாஅத், ஜமாஅத்தார், ஜமாத், ஜமேசா முபின், ஜமேஷா முபின், ஜிஹாதி, ஜிஹாதி குருரக் குணம், ஜிஹாதி கொலைக்காரர்கள், ஜிஹாதி நேயம், ஜிஹாதி வெறியாட்டம், ஜிஹாதி-ஆதரவு மனப்பாங்கு, ஜிஹாதிகளுக்கு சம்பளம், ஜிஹாதிகளுக்கு பணம், ஜிஹாதித்தனம், ஜிஹாதித்துவம், ஜிஹாத், ஜிஹாத் கையேடு, ஜிஹாத் தன்மை, தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை, தமிழ்நாடு தவ்ஹீத், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், தமிழ்நாடு தௌஹீத் ஜமாத், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம், தற்கொலை, தற்கொலை குண்டு வெடிப்பு, தவ்ஹீத், தவ்ஹீத் ஜமாஅத், தீவிரவாதம், தீவிரவாதி, தீவிரவாதிகளுக்கு பணம், தீவிரவாதிகள், தேச விரோதம், தேசவிரோத செயல்கள், தேசவிரோதம், தேசிய புலனாய்வு இயக்குனர், தேசிய புலனாய்வு துறை, தௌவீத் ஜமாத், தௌஹித் ஜமாத், தௌஹீத், தௌஹீத் ஜமாத், பிதாயீன், மதவாதம், மதவெறி, மனித வெடிகுண்டு, முகமது தல்கா, முகமது ரியாஷ், முகமது ரியாஸ், முகம்மது தாசிம், முஸ்லிம், முஸ்லிம் அடிப்படைவாதம், முஸ்லிம் கழகம், முஸ்லிம் காலனி Tags: அவமதிக்கும் இஸ்லாம், இஸ்லாமயமாக்கல், இஸ்லாமிய தீவிரவாதம், இஸ்லாமியத் தீவிரவாதம், இஸ்லாமியத் தீவிரவாதி, இஸ்லாம், இஸ்லாம் ஜிஹாதி, உக்கடம், உள்ளூர் இஸ்லாமிய தீவிரவாதம், கார் கேஸ் குண்டு, கார் கேஸ் சிலிண்டர், கார் கேஸ் சிலிண்டர் வெடிப்பு, கார் கேஸ் சிலின்டர், கார் கேஸ் சிலின்டர் வெடிப்பு, கார் வெடிகுண்டு, கேஸ் சிலிண்டர் வெடிப்பு, கேஸ் சிலின்டர் வெடிப்பு, கோயம்புத்தூர், கோவை, சிறுபான்மையினர், ஜமேசா முபின், ஜமேஷா முபின், ஜிஹாதி, ஜிஹாதி கொலைக்காரர்கள், ஜிஹாதி தீவிரவாதம், ஜிஹாதிகள், ஜிஹாத், முகமதியர், முகமது, முகமது இஸ்மாயில், முகமது நபி Comments: Be the first to comment 2022 கோவை கார் குண்டு விபத்து, குண்டு வெடிப்பு ஆகி, தற்கொலை குண்டு வெடிப்பாகிய நிலை (1) ஒக்ரோபர் 29, 2022 2022 கோவை கார் குண்டு விபத்து, குண்டு வெடிப்பு ஆகி, தற்கொலை குண்டு வெடிப்பாகிய நிலை (1) 22-10-2022 (சனிக்கிழமை) முதல் 24-10-2022 (திங்கட் கிழமை) வரை நடந்துள்ளவை என்ன?: 24-10-2022 அன்று தீபாவளி என்பதால், துணிமணி, பட்டாசு, ஸ்வீட் வாங்க வேண்டும், எல்லோருமே ஊருக்குச் செல்ல வேண்டும், வாங்கியதை குடும்பத்தோடு பகிர்ந்து கொள்ள வேண்டும், சந்தோஷமாக கொண்டாட வேண்டும், என்று லட்சக்கணக்கில் மக்கள் வாகனங்களில், பேருந்துகளில், ரெயில்களில் சென்று கொண்டிருந்தனர். அவரவர் பொருளாதார நிலைக்கு ஏற்ப, பட்ஜெட்டில் தீபாவளி கொண்டாட திட்டத்துடன் இருப்பர், சென்று கொண்டிருந்தனர். ஆனால், அப்பொழுது, கோயம்புத்தூரில் சிலர் வேறு விதமாக திட்டம் போட்டிருந்தனர் போலும். வெகுஜன மக்கள் மகிழ்ச்சியுடன் தீபாவளியை நினைத்துக் கொண்டிருக்கும் பொழுது, ஊடகங்களில் வழக்கம் போல, தீபாவளி எதிர்ப்பு, பட்டாசு மறுப்பு, நாத்திக-நராகாசுரன் ஆதரவு செய்திகள் வந்து கொண்டிருந்தன[1]. பட்டாசு வெடிக்க வேண்டாம், குறிப்பிட்ட நேரங்களில் தான் வெடிக்க வேண்டும், மீறினால், வழக்கு, புகார், தண்டனை என்றெல்லாம் பெரிய போலீஸ் அதிகாரிகள் மிரட்டியதாக செய்திகள்[2]. அதே நேரத்தில் பட்டாசு விற்பனை பெருக்க வேண்டும் போன்ற பிரச்சாரமும் இருக்கிறது. இன்னொரு பக்கமோ, கடைகளில் மக்கள் கூட்டம் அலை மோதியது போன்ற செய்திகள். இந்நிலையில் தான் கோவை கார் குண்டு வெடிப்பு சம்பவம்–செய்திகள் வர ஆரம்பித்தன: 22-10-2022 (சனிக்கிழமை) முதல் 24-10-2022 (திங்கட் கிழமை) வரை நடந்துள்ள நிகழ்ச்சிகளை கூர்ந்து கவனித்தால், இந்த கோவை கார் குண்டு வெடிப்பு திட்டமிட்டு நடந்துள்ள-நடத்தப்பட்ட செயல் என்று அறிந்து கொள்ளலாம். பிறகு, மற்ற செய்திகள் எல்லாம் வெளிவர ஆரமித்துள்ளன. ஊடகங்களின் பாரபட்சமிக்க, செய்தி வெளியீட்டுப் போக்கும், “ஆபத்திலிருந்து” மெதுவாக, “குண்டு வெடிப்பு” என்று முடிந்துள்ளது. இருப்பினும் இந்த தீவிரவாதிகள், பயங்கரவாதிள் எல்லோருமே மரியாதையுடன் தான் குறிப்பிடப் படுகிறார்கள். மத்திய உளவுத்துறை காவல்துறையினர் ஜமிஷா தொடர்பான பல்வேறு தகவல்களுடன் அவரை கண்காணிக்க வேண்டும் என்று தெரிவித்து தமிழக அரசுக்கு 2018ம் ஆண்டு முதன் முதலில் தகவல் தெரிவித்ததாக சொல்லப்படுகிறது[3]. தமிழக காவல்துறையினர் இதனை பெரிதாக கருதவில்லை என்று கூறப்படுகிறது[4]. 22-10-2022 (சனிக்கிழமை இரவு): சனிக்கிழமை இரவு 11.25 மணிக்கு ஜமேஷா முபின் வீட்டில் இருந்து அவர் உட்பட 5 பேர் மர்மபொருளை தூக்கி செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளது. முதற்கட்ட விசாரணையில், முபின் தன்னுடைய வீட்டை காலி செய்ய வேண்டும் என்று கூறியதாகவும், அந்தப் பெட்டியில் ஸ்கிரேப் பொருள்கள் இருந்ததாக முபின் விளக்கம் அளித்ததாக கூறியுள்ளனர். அந்த சிசிடிவி காட்சிகளில் உள்ள மற்ற நபர்கள் 4 பேர் யார் என்பது குறித்து பிறகு தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர், என்றெல்லாம் செய்திகள் பிறகு வெளி வந்தன. அப்படியென்றால், இவர்களும் முன்னமே இக்காரியங்களில் ஈடுபட்டுள்ளனர். சுற்றியுள்ளவர்கள், இவர்களது நடவடிக்கைகளில் சந்தேகம் கொண்டு, எச்சரித்திருக்கலாம், புகார் கொடுத்திருக்கலாம். ஆனால், முஸ்லிம்கள் எனும் போது, அமைதியாக இருந்து விட்டனர் போலும். ஒரு ஊடகத்தால், அங்கு செய்தி-விவரங்கள் சேர்க்கச் சென்றபோது, ஜன்னல் கதவுகளை அடைத்துக் கொண்டனர், யாரும் பேச முன்வரவில்லை என்று குறிப்பிட்டுள்ளது. 23-10-2022 (ஞாயிற்றுக் கிழமை): அதிகாலை சுமார் 4:45 மணி அளவில், கோட்டை ஈஸ்வரன் கோயில் முன்பு பெரும் வெடிச் சத்தம் கேட்டதையடுத்து, அப்பகுதி மக்கள் அங்கு வந்து பார்த்துள்ளனர். முதலில், ஏதோ பட்டாசு சத்தம் என்று கூட நினைத்திருக்கலாம். அந்த பரபரப்பு சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது. அதிகாலை 4 மணி அளவில் சாலையில் கார் செல்வது, கார் நிற்பது பின்பு வெடித்து சிதறும் காட்சிகள் வெளியாகி உள்ளது. விடியற்காலை காரில் உள்ள காஸ் சிலிண்டர் வெடித்து ஒரு ஆள் இறந்தான். செல்போன் உதவியுடன் இறந்தவன் அடையாளம் காணப் பட்டான். வெடித்து சிதறிய காரில் இன்னொரு வெடிக்காத சிலிண்டர் மற்றும் சுற்றிலும் ஆணிகள், பால்ரஸ் போன்றவையும் சிதறிக் கிடந்ததை போலீஸார் கண்டுபிடித்தனர். சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்ட தடயவியல் துறையினர் காரிலிருந்து 2 முதல் 3 கிலோ 1.5 இன்ச் ஆணிகள் மற்றும் பால்ரஸ் குண்டுகளைக் கண்டறிந்துள்ளனர். ஆணி, பால்ரஸ் வேறு பணிக்காக கொண்டு செல்லப்பட்டதா அல்லது வெடி விபத்தை நிகழ்த்தும் நோக்கத்துடன் கொண்டு வரப்பட்டவையா என்பதை நிபுணர்கள் ஆராய்ந்து வருகின்றனர். ஆக, நிச்சயமாக கோவை போலீஸார் சென்னை உயர் அதிகாரிகளுக்கு தெரியப் படுத்தி, விசயம் முதலமைச்சருக்குச் சென்றிருக்கும். பிற்பகல் – 23-10-2022 (ஞாயிற்றுக் கிழமை): தொடக்கத்தில் சம்பவம் நடைபெற்ற இடத்தை கோவை மாநகரக் காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார். இதையடுத்து, சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி தாமரைக் கண்ணன் ஆய்வு மேற்கொண்ட நிலையில், இந்தச் சம்பவத்தின் நிலைமை அறிந்து சென்னையிலிருந்து டி.ஜி.பி சைலேந்திர பாபு விமானம் மூலம் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் கோவைக்கு வந்தார். வெடி விபத்து நிகழ்ந்த பகுதியை ஆய்வு செய்தார். அதாவது, விசயம் சாதாரணமானது அல்ல என்பது தெரிந்து விட்டது. பிரசித்தி பெற்ற உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோயில் முன்பு மட்டுமின்றி, தீபாவளியையொட்டி, இப்பகுதியில் துணி எடுப்பதற்காக அதிக அளவில் மக்கள் கூடும் நிலையில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது கோவை மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும், அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க கோவை மாவட்டம் முழுவதும் உள்ள மசூதிகள் முன்பு போலீஸார் பாதுகாப்புப்பணிக்காக குவிக்கப்பட்டுள்ளனர். கார் குண்டு வெடித்தலில் இறந்தவன் ஜமேசா முபின்: போலீஸார் செல்போன், கார் எண் முதலியவற்றை வைத்துக் கொண்டு விவரங்களை சேகரித்தனர். ஜமேசா முபின் என்பவன் தான் இறந்திருக்கிறான் எனூ முடிவானது. அவன் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் முடித்தவர். அப்பா இல்லை. அம்மா மட்டும் தான். அவர் மனைவிக்கு செவி மற்றும் பேச்சுத்திறன் இல்லை. இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். ஜமேசாவுக்கும் இதயம், கண் ஆகியவற்றில் சில பிரச்னைகள் உள்ளன. முன்பு பழைய புத்தகக் கடை நடத்தி வந்தவர், பிறகு துணி வியாபாரம் செய்து வந்திருக்கிறார். ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் ஆதரவாளர். அதனால்தான் கடந்த 2019ம் ஆண்டு இலங்கை குண்டு வெடிப்புச் சம்பவத்துக்கு பிறகு ஜமேசா முபினிடம் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர். இந்த கார் வெடிப்புச் சம்பவத்துக்குப் பிறகு போலீஸ் அவர் வீட்டில் நடத்திய சோதனையில் சில முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அதில் ஒரு கடிதத்தில் சுற்றிப் பார்க்கவுள்ள சுற்றுலா தலங்கள் என எழுதி ஆட்சியர் அலுவலகம், ரயில் நிலையம், ஆணையர் அலுவலகம், ரேஸ்கோர்ஸ், விக்டோரியா ஹால் (மாநகராட்சி அலுவலகம்) ஆகிய பகுதிகளை குறிப்பிட்டுள்ளனர். இதன் மூலம், இந்தப் பகுதிகளை குறி வைத்து தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது. இப்படி செய்திகள்…… வாட்ஸ்–ஆப் பதிவு, இறப்பு உண்மை என்றால், அது தற்கொலை குண்டு வெடிப்பு ஆகிறது: விபத்து நடந்தக் காரை ரூ.10,000க்கு தல்காவிடம் இருந்து வாங்கியுளளார். இப்படி கைது செய்யப்பட்ட அனைவரும், இந்த சதித் திட்டத்தில் ஒவ்வொரு பணியைச் செய்துள்ளனர். ஜமேசா அவ்வபோது கேரளா சென்று, அங்கு ஏற்கெனவே என்.ஐ.ஏவால் கைது செய்யப்பட்டுள்ள அசாருதீன் என்பவரைச் சந்தித்து வந்துள்ளார். ஆங்காங்கே சிறுக சிறுக சேகரித்து 75 கிலோ வெடி மருந்துக்கான வேதிப் பொருள்களை வாங்கியுள்ளனர். வெடி பொருள் தயாரிப்பது எப்படி என்பதை யூ-ட்யூபில் தேடிப் பார்த்திருக்கிறார். கைது செய்யப்பட்டவர்கள் இல்லாமல், இதில் மேலும் சிலருக்கு தொடர்பு இருக்கிறது.” என்றனர். …….’வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸில், என்னுடைய இறப்பு செய்தி உங்களுக்கு தெரியும் போது எனது தவறை மன்னித்து விடுங்கள், குற்றங்களை மறந்துவிடுங்கள் எனது இறுதி சடங்கில் பங்கேறுங்கள். எனக்காக பிரார்த்தனை செய்யுங்கள்,” என்று பதிவிட்டு உள்ளார். இதற்கான புகைப்படத்தை அவர் பதிவேற்றி இருக்கிறார். இதை பற்றி விசாரிக்க வேண்டும். இது ஐஎஸ்எஸ் தொடர்புடைய வாசகம். அவர்கள்தான் தற்கொலை தாக்குதல்களுக்கு முன்பாக இப்படி எல்லாம் போஸ்ட் செய்வார்கள்…..இப்படியும் செய்திகள்! வாட்ஸ்-ஆப் பதிவு, இறப்பு உண்மை என்றால், அது தற்கொலை குண்டு வெடிப்பு ஆகிறது, “சூஸைட் பாம்பர்” என்றாகிறது! © வேதபிரகாஷ் 29-10-2022 [1] திக-திமுகவினர் தொடர்ந்து தங்களது ஊடகங்களில் இத்தகைய பிரச்சாரங்களை செய்து கொண்டிருக்கிறார்கள். ஆனால், உலகம் முழுவதும் கொண்டாடப் பட்டு, உலக தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துக் கொண்டிருந்தார்கள். [2] சுவாசிக்கும் காற்று மாசு படுகிறது என்ற கோணத்தில் உச்சநீதி மன்றமே வரையறை கொடுத்திருப்பதால், அதன் மீது, மாநில அரசுகள் மற்றும் இதர நிறுவனங்கள், இயக்கங்கள் இதை பெரிது படுத்தி, பிரச்சாரம் செய்கின்றன. [3] தமிழ்.ஏசியாநெட்.நியூஸ், உளவுத்துறை ‘அன்றே’ கொடுத்த சிக்னல்!.. கிடப்பில் போடப்பட்டதா ? கோவை கார் குண்டு வெடிப்பு சம்பவம், Raghupati R, First Published Oct 28, 2022, 7:56 PM IST; Last Updated Oct 28, 2022, 8:34 PM IST. [4] https://tamil.asianetnews.com/tamilnadu/coimbatore-car-bomb-blast-tn-police-ignored-central-intelligence-agency-warning-rkgw4i பிரிவுகள்: ஃபிதாயீன், அத்வானி, அரசியல்வாதிகள், அல் - உம்மா, அல் - காய்தா, அல் - கொய்தா, அல்-உம்மா, அழிப்பு, அழிவு, அஹிம்சை, ஆதாரம், ஆயுதப்படை, ஆராய்ச்சி செய்யும் போலீஸார், ஆர்.எஸ்.எஸ், இந்தி ஜிஹாதி, இந்திய ஊடகங்கள், இந்திய முஜாஹத்தீன், இந்திய முஜாஹித்தீன், இந்திய முஸ்லிம் முன்னேற்ற கழகம், இந்திய யுனீயன் முஸ்லீம் லீக், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி, இந்திய யூனீயன் முஸ்லீம் லீக், இந்திய விரோதத் தன்மை, இந்திய விரோதம், இந்தியத் தன்மை, இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக், இந்தியப் பிரச்சினை, இந்து-முஸ்லிம், இந்து-முஸ்லிம் உரையாடல், இந்து-முஸ்லிம் ஒற்றுமை, இந்து-முஸ்லிம் சந்திப்பு-உரையாடல்கள், இஸ்லாமிக் ஸ்டேட், இஸ்லாமிய இறையியல், இஸ்லாமிய தீவிரவாதம், இஸ்லாமிய நாடு, இஸ்லாமிய பிரச்சினை, இஸ்லாமியத் தமிழன், இஸ்லாமியத் தீவிரவாதம், இஸ்லாமியத் தீவிரவாதி, இஸ்லாமிஸ்ட், இஸ்லாமும் இந்தியாவும், இஸ்லாம், உக்கடம், உளவாளி, உள்துறை அமைச்சகம், உள்ளூர் இஸ்லாமிய தீவிரவாதம், உள்ளூர் தீவிரவாத கும்பல், ஊடுருவல், எச்சரிக்கை, எதிர்ப்பு, என்.ஐ.ஏ, என்ஐஏ, என்ஐஏ அதிகாரி, ஐ.எஸ், ஐ.எஸ். தீவிரவாதிகள், ஐ.எஸ்.ஐ, ஐ.டி.தீவிரவாதி, ஐஎஸ், ஐஎஸ்ஐஎஸ், ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள், ஐசில், ஐசிஸ், ஐஸில், ஒற்றன், காஃபிர், காஃபிர் இந்தியர்கள், காஃபிர்-மோமின் கூட்டணி, காஃபிர்கள், காபிர், கிலாபத், கிலாபத் இயக்கம், குண்டு, குண்டு தயாரிப்பு, குண்டு நேயம், குண்டு வெடிப்பது, குண்டு வெடிப்பு, குண்டு வெடிப்பு வழக்கு, குண்டுவெடிப்பு, கேரளா, சகிப்பு, சகிப்புத் தனம், சகிப்புத் தன்மை, சகிப்புத்தனம், சகிப்புத்தன்மை, சட்டம், சட்டம் மீறல், சட்டவிரோதம், சமத்துவம், ஜிஹாதி, ஜிஹாதி குருரக் குணம், ஜிஹாதி கொலைக்காரர்கள், ஜிஹாதி நேயம், ஜிஹாதி வெறியாட்டம், ஜிஹாதி-ஆதரவு மனப்பாங்கு, ஜிஹாதிகளுக்கு சம்பளம், ஜிஹாதிகளுக்கு பணம், ஜிஹாதித்தனம், ஜிஹாதித்துவம், ஜிஹாத், ஜிஹாத் கையேடு, ஜிஹாத் தன்மை, தப்லீக், தப்லீக் ஜமாஅத், தமிழக அரசு, தமிழகத்து ஜிஹாதி, தமிழகத்து தீவிரவாதி, தமிழ் ஜிஹாதி, தமிழ் முஸ்லீம், தமிழ்நாடு சுன்னத் ஜமாஅத், தமிழ்நாடு சுன்னத் ஜமாத், தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை, தமிழ்நாடு தவ்ஹீத், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், தமிழ்நாடு தௌஹீத் ஜமாத், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம், துருக்கன் Tags: இஸ்லாமிய தீவிரவாதம், இஸ்லாமியத் தீவிரவாதம், இஸ்லாமியத் தீவிரவாதி, உக்கடம், உள்ளூர் இஸ்லாமிய தீவிரவாதம், ஊடகத் தீவிரவாதிகள், ஐ.எஸ். தீவிரவாதிகள், கார், கார் கேஸ், கார் கேஸ் குண்டு, கார் கேஸ் சிலிண்டர், கார் கேஸ் சிலிண்டர் வெடிப்பு, கார் கேஸ் சிலின்டர், கார் கேஸ் சிலின்டர் வெடிப்பு, கேஸ் சிலிண்டர் வெடிப்பு, கேஸ் சிலின்டர் வெடிப்பு, கோயம்புத்தூர், கோவை, ஜிஜாதி தீவிரவாதம், ஜிஹாதி தீவிரவாதம், தீவிரவாதம், தீவிரவாதி, தீவிரவாதிகள், தீவைப்பு Comments: Be the first to comment மயிலாடுதுறையில் நடப்பது என்ன, என்.ஐ.ஏ சோதனை ஏன், முஸ்லிம்கள் கைது செய்யப் படுவது ஏன், இந்தியாவை துண்டாடும் இந்திய கிலாபா கட்சி, இந்திய கிலாபா முன்னணி தேவையா? (2) மே 11, 2022 மயிலாடுதுறையில் நடப்பது என்ன, என்.ஐ.ஏ சோதனை ஏன், முஸ்லிம்கள் கைது செய்யப் படுவது ஏன், இந்தியாவை துண்டாடும் இந்திய கிலாபா கட்சி, இந்திய கிலாபா முன்னணி தேவையா? (2) அக்டோபர் 2021ல் அப்துல்லா மீது குற்றப் பத்திரிக்கைத் தாக்கல்: இஸ்லாமிய தேசம் ஒன்றை இந்தியாவில் தனியாக உருவாக்க வேண்டும் என்று சமூக வலைதளங்களில் மதுரையை சேர்ந்த அப்துல்லா (என்ற) சரவணகுமார் (31), என்பவர் ஆதரவு திரட்டியதாகக் கூறப்படுகிறது[1]. இவர் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்ததாக மதுரை போலீசாரால் சில மாதங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார். பின்னர் இந்த வழக்கு தேசிய புலனாய்வு சிறப்பு போலீசாருக்கு (என்ஐஏ) மாற்றப்பட்டது. இந்த வழக்கு பூந்தமல்லி தேசிய புலனாய்வு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சரவணகுமார் மீது என்ஐஏ அதிகாரிகள், 5 வது செஷன்ஸ் நீதிபதி முன்பு நேற்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்[2]. அப்துல்லா, அப்துல்லாவாகத்தான் செயல்படுகிறான், சரவணன் என்பதால், இந்தியாவை ஆதரிக்கவில்லை. மற்ற இந்துபெயர்கள் கொண்டவர்களும், தமிழகத்தில், இந்தியவிரோதிகளாகத் தான், பேசியும், எழுதியும் வருகின்றனர். பிறகு, இவ்விரு கூட்டங்களுக்கு எந்த வித்தியாசமும் இல்லை. இஸ்லாமிய அடிப்படைவாதம் தூண்டும் துண்டு பிரசுரங்கள்: சாதிக் பாஷா மற்றும் அவரது கூட்டாளிகள், ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்ததற்கான சில ஆதாரங்கள் கிடைத்து இருப்பதாக, என்.ஐ.ஏ., வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மயிலாடுதுறை, திருச்சி, கோவை என, பல இடங்களில் ரகசிய கூட்டங்கள் நடத்தி, துண்டு பிரசுரங்களை வழங்கி உள்ளனர். இவர்களிடம் எப்போதும் துப்பாக்கி இருக்கும். அதேபோல, ஒரு கைவிலங்கு, அதற்குரிய இரண்டு சாவிகளும் வைத்திருப்பர். காரில் மடிக்கணினி, ‘பவர் பாங்க், வீடியோ பேனா’ உள்ளிட்ட பொருட்களையும் வைத்திருப்பர். இவர்கள், பயங்கரவாத அமைப்புக்கு, சமூக வலைதளம் வாயிலாக, ஆட்களை திரட்டும் பணியில் ஈடுபட்டு வந்தனர் என்பதும் தெரிய வந்துள்ளது. இவர்களுக்கு நிதியுதவி செய்து வந்த நபர்கள் யார், அவர்கள் பின்னணி என்ன, ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்புக்கு நேரடி தொடர்பு உள்ளதா என்பதற்கான ஆதாரங்களை, என்.ஐ.ஏ., அதிகாரிகள் திரட்டி வருகின்றனர். இத்தனையும் தமிழக போலீஸாருக்குத் தெரியாமல் நடக்கின்றனவா அல்லது முஸ்லிம்கள் என்றதால், கண்டுகொள்ளாமல் இருக்கப் படுகிறதா? கிலாபத் இயக்கம் நடத்தும் அடிப்படைவாத முஸ்லிம்கள்: ஐ.எஸ் இயக்கத்தில் தொடர்புடையதாக கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், தஞ்சாவூரில் மூன்று பேரின் வீடுகளில் என்ஐஏ அதிகாரிகள் 12-02-2022 அன்று சோதனை நடத்தினர்[3]. கிலாபத் இயக்கத்தைச் சேர்ந்த மதுரை அப்துல்காதர் என்பவருக்கு ஐ.எஸ் இயக்கத்துடன் தொடர்பு இருப்பதாகவும், இந்துக்கள் குறித்து சமூக வலைதளங்களில் தவறான கருத்துகளைப் பரப்பியதாகவும் ஓராண்டுக்கு முன்புதேசிய புலனாய்வு அமைப்பினரால் (என்ஐஏ) கைது செய்யப்பட்டு, சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார்[4]. இதேபோல, மன்னார்குடியைச் சேர்ந்த பாபா பக்ருதீன் என்பவரும் நான்கு மாதங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டார். அவர்களிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில், கிலாபத் இயக்கத்தில் உள்ள – தஞ்சாவூர் மகர்நோன்புசாவடி கீழவாசல் தைக்கால் தெருவைச் சேர்ந்த மெக்கானிக் அப்துல்காதர் (49), அதே பகுதியை சேர்ந்த முகமதுயா சின் (30), காவேரி நகரைச் சேர்ந்த அகமது (37) இதனை தொடர்ந்து, தஞ்சை மகர்நோன்புசாவடியில் உள்ள அப்துல்காதர், முகமதுயாசின் மற்றும் காவேரி நகர் முகமது ஆகியோர் வீட்டுக்குள் என்.ஐ.ஏ. அதிகாரிகள் குழுவாக பிரிந்து சென்றனர். ஆகியோரின் வீடுகளில் என்ஐஏ அதிகாரிகள் நேற்று திடீர் சோதனை நடத்தினர். வீட்டில் இருந்து யாரும் வெளியே செல்ல அனுமதிக்கவில்லை. வீட்டை பூட்டி சோதனை நடத்தினர். என்.ஐ.ஏ சோதனை எதிர்த்து ஆர்பாட்டம் செய்த முஸ்லிம்கள்: இந்த சோதனை அதிகாலை 5.30 மணிக்கு தொடங்கி காலை 10 மணி வரை நடைபெற்றது. அப்போது, மூன்று பேரின் செல்போன்கள், ஆதார், பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள், பிப்.16-ல் சென்னையில் உள்ள என்ஐஏ அலுவலகத்தில் மூன்று பேரையும் விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி நோட்டீஸ் கொடுத்துவிட்டு, புறப்பட்டுச் சென்றனர். இதற்கிடையே மகர்நோன்புசாவடியில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள், உறவினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்[5]. ஆதாரம் இன்றி சோதனை நடந்து வருவதாகவும், அவர்கள் மூன்று பேருக்கும் தொடர்பு இல்லை என்றும் கோ‌ஷமிட்டனர். இதையடுத்து போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்[6]. அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து அதிகாரிகள் சோதனையும், பொதுமக்கள் ஆர்ப்பாட்டமும் நடப்பதால் பாதுகாப்புக்காக கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தால் தஞ்சையில் பதட்டமான சூழல் நிலவுகிறது. போலீஸாரை மிரட்டும் அளவுக்கு முஸ்லிம்களுக்கு தைரியம் கொடுப்பது எது, யார்?: இந்த அளவுக்கு முஸ்லிம்களுக்கு தைரியம் கொடுப்பது யார்? என்,ஐ,ஏ.வையே எதிர்த்து ஆர்பாட்டம் செய்வது, கேள்விகள் கேட்பது எல்லாம் எந்த அளவுக்கு மோசமானது, ஏன் ஆபத்தானது என்பதனை அறிந்து கொள்ளலாம். முஸ்லிம்கள் ஓட்டு கிடைக்கும், மறைமுகமாக வேறு பலன்கள் கிடைக்கும் என்றெல்லாம் அரசியல் கட்சிகள் செயல் படலாம். ஆனால், அவையெல்லாம் தேசவிரோதமாகத்தான் முடியும். இவ்வாறு, முஸ்லிம்களுக்கு தகுந்த நடவடிக்கைகள் எடுக்காமல் இருப்பதே, ஊக்கம் கொடுப்பதற்கு சமம் ஆகும். மேலும் “தொப்புள் கொடி உறவுகள்” என்றெல்லாம் பேசும் போது, எங்களை ஒன்றும் செய முடியாது, அரசே ஆதரவாக உள்ளது என்ற தொரணையும் வரும். அதுதான், மயிலாடுதுறை போலீஸாரைப் பார்த்து அந்த முஸ்லிம்கள் திமிருடன் கேட்டது. போலீஸார் உதவியுடன் என்.ஐ.ஏ சோதனை: முன்னதாக, அப்துல்காதர் மற்றும் முகமது யாசின் வீடுகளில் என்ஐஏ சோதனை நடத்துவதை கண்டித்து அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் உள்ளிட்ட முஸ்லிம்கள் 50-க்கும் மேற்பட்டோர் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அங்கு பரபரப்பான சூழல் நிலவியது. தஞ்சாவூர் ஏடிஎஸ்பி பிருந்தா தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். சோதனை முடிந்து வெளியில் வந்த என்ஐஏ அதிகாரிகளை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சூழ்ந்துகொண்டு, முழக்கம் எழுப்பினர். அவர்களை போலீஸார் கலைந்து போகச் செய்தனர். இதேபோல, காரைக்கால் நகராட்சி சந்தைத் திடலுக்கு எதிரே உள்ள ராவணன் நகர் பகுதியில் வசிக்கும் உணவக உரிமையாளரான அப்துல்அமீன் என்பவரின் வீட்டிலும் என்ஐஏஅதிகாரிகள் 12-02-2022 அன்று அதிகாலை 5மணி முதல் பகல் 1 மணி வரை சோதனை நடத்தினர். 14-03-2022 அன்று, கீழ்கண்டவர்கள் மீது வழக்குத்தொடரப் பட்டது[7]. பாவா பஹ்ருத்தீன் என்கின்ற மன்னார் பாவா, சம்சுதீன் மகன், வயது 41, மன்னார்குடி, தஞ்சாவூர் ( Bava Bahrudeen @ Mannai Bava s/o Samsudeen,aged 41 yrs, r/o Mannargudi, Tiruvarur District, Tamil Nad) மற்றும் ஜியாவுத்தீன் ஜாகுபார் மகன், வயது 40, கும்பகோணம், தஞ்சாவூர் ( Ziyavudeen Baqavi, s/o Jagubar, aged 40 yrs, r/o Kumbakonam, Thanjavur Dt), இசமா சாதிக் எனப்படுகின்ற சாதிக் பாட்சா இத்தகைய தேசவிரோத நடவடிக்கைகளுடன், மனித நீதி பாசறை என்ற அமைப்பின் உறுப்பினருமாகவும் உள்ளார். அது இப்பொழுது போப்புலர் பிரென்ட் ஆப் இன்டியரேன்றழைக்கப் படுகிறது. எப்.ஐ.ஆர்,ன் படி இந்த ஐந்து நபர்களும், இஐசிஸ் சித்தாந்தத்தைப் பரப்பி, தேசவிரோதத்தை வளர்த்து வருகின்றனர். இந்தியாப் பகுதிகளைத் துண்டாடி அவற்றை இந்தியாவிலிருந்து பிரிக்க வேண்டும் அல்லது “பிரச்சினை உள்ள பகுதி” என்று அறிவிக்கப் படும் வகையில் தீவிரவாதத்தை உண்டாக்கவேண்டும் என்று, “இந்திய கிலாபா கட்சி (Khilafah Party of India),” “இந்திய கிலாபா முன்னணி (Khilafa Front of India),” “இந்திய அறிவிஜீவி மாணவர் (Intellectual Students of India),” “இந்திய மாணவர் கட்சி (Student Party of India),” என்றெல்லாம் உருவாக்கி, செயல்பட திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது. © வேதபிரகாஷ் 11-05-2022 [1] தினகரன், ஐஎஸ்ஐஎஸ் ஆதவாளர் மீது என்ஐஏ குற்றப்பத்திரிகை, 2021-10-07@ 01:03:24. [2] https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=710564 [3] தமிழ்.இந்து, 3 பேருக்கு ஐ.எஸ் உடன் தொடர்பு? – தஞ்சையில் என்ஐஏ சோதனை: முஸ்லிம்கள் போராட்டத்தால் பரபரப்பு, செய்திப்பிரிவு, Published : 13 Feb 2022 11:22 AM; Last Updated : 13 Feb 2022 11:22 AM [4] https://www.hindutamil.in/news/tamilnadu/767041-nia-raid-in-tanjore-1.html [5] மாலைமலர், தஞ்சையில் 3 பேரின் வீடுகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் திடீர் சோதனை, பதிவு: பிப்ரவரி 12, 2022 13:02 IST.. [6] https://www.maalaimalar.com/news/district/2022/02/12130227/3480787/Tamil-News-NIA-raid-three-houses-in-Tanjore.vpf [7] NIA Files Charge Sheet against Two Operatives of Hizb-ut-Tahrir in Madurai Iqbal HuT case (RC-08/2021/NIA/DLI) dated 14-03-2022. பிரிவுகள்: அடிப்படைவாதம், அடையாளம், அமைதி, அமைதி என்றால் இஸ்லாமா, அல்-முஜாஹித்தீன், அவமதிக்கும் இஸ்லாம், ஆர்பாட்டம், இந்திய முஜாஹத்தீன், இந்திய முஜாஹித்தீன், இந்திய விரோதத் தன்மை, இந்திய விரோதம், இந்தியத் தன்மை, இந்தியத்தனம், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக், இந்தியர்களை ஏமாற்றுதல், இஸ்லாமிக் ஸ்டேட், இஸ்லாமியத் தீவிரவாதம், இஸ்லாமியத் தீவிரவாதி, இஸ்லாமிஸ்ட், இஸ்லாமும் இந்தியாவும், உள்ளூர் இஸ்லாமிய தீவிரவாதம், உள்ளூர் தீவிரவாத கும்பல், என்.ஐ.ஏ, என்ஐஏ, என்ஐஏ அதிகாரி, ஐ.எஸ், ஐ.எஸ். தீவிரவாதிகள், ஐ.எஸ்.ஐ, ஐஎஸ், ஐஎஸ்ஐஎஸ், ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள், ஐக்கிய ஜிஹாத் கவுன்சில், ஐசிஸ், காலிப், கிலாபத், கிலாபத் இயக்கம், குற்றம், சட்டமீறல், சட்டம் மீறல், சட்டவிரோதம், ஜிஹாதி நேயம், ஜிஹாதி வெறியாட்டம், ஜிஹாதி-ஆதரவு மனப்பாங்கு, ஜிஹாதிகளுக்கு சம்பளம், ஜிஹாதிகளுக்கு பணம், ஜிஹாதித்தனம், ஜிஹாதித்துவம், ஜிஹாத், ஜிஹாத் கையேடு, ஜிஹாத் தன்மை, தடை, தமிழகத்து தீவிரவாதி, தமிழ் ஜிஹாதி, தமிழ் முஸ்லிம், தமிழ்நாடு சுன்னத் ஜமாத், தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை, தமிழ்நாடு தவ்ஹீத், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், தமிழ்நாடு தௌஹீத் ஜமாத், தலிபான், தீவிரவாத நிதியுதவி, தீவிரவாதத்திற்கு துணை போவது, தீவிரவாதம், தீவிரவாதி, தீவிரவாதிகளுக்கு பணம், தீவிரவாதிகள், பாபுலர் பிரென்ட் ஆப் இந்தியா, பாப்புலர் ஃபரென்ட் ஆஃப் இன்டியா, பாப்புலர் பரென்ட் ஆப் இந்தியா, பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா, பாப்புலர் பிரென்ட், பாப்புலர் பிரென்ட் ஆப் இந்தியா, பாப்புலர் பிரென்ட் ஆப் இன்டியா Tags: இஸ்லாமிய தீவிரவாதம், இஸ்லாமிய தேசம், இஸ்லாமிய நாடு, இஸ்லாமியத் தீவிரவாதம், இஸ்லாம் ஜிஹாதி, என்.ஐ.ஏ, என்.ஐ.ஏ சோதனை, என்ஐஏ, என்ஐஏ அதிகாரி, கிலாபத், கிலாபத் இந்தியா, கிலாபத் இயக்கம், சிறுபான்மையினர், சோதனை, தஞ்சாவூர், தஞ்சை, தடை செய்யப்பட்ட துப்பாக்கி, துப்பாக்கி, துப்பாக்கிக் காட்டி மிரட்டுவது, போலீசாரை மிரட்டுதல், போலீஸாரை மிரட்டுதல், போலீஸார், போலீஸ், மதுரை, மயிலாடுதுறை Comments: Be the first to comment தில்லி நிஜாமுத்தீன் மசூதியில் கலந்து கொண்டு திரும்பிய துலுக்கர் மூலம் தென் மாநிலங்களில் கோவிட்-19 பரவிய நிலை [1] மார்ச் 31, 2020 தில்லி நிஜாமுத்தீன் மசூதியில் கலந்து கொண்டு திரும்பிய துலுக்கர் மூலம் தென் மாநிலங்களில் கோவிட்-19 பரவிய நிலை [1] மார்ச் 21 முதல் 23 வரை மூன்று நாட்கள் மாநாடு: டில்லியில் நிஜாமுதீன் பகுதியில் தவுஹித் ஜமாத் அமைப்பின் சார்பில் நடந்த இஸ்லாமிய மாநாட்டில் தாய்லாந்து, இந்தோனேசியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்ற மாநாடு நடைபெற்றது. இதில் பல மாநிலத்தவர்கள் கலந்து கொண்டுள்ளனர், ஆனால், முன்னர் தெரிவிக்கவில்லை. இதில் பங்கேற்ற, தமிழகத்தைச் சேர்ந்த, 1,500 பேரில், 16 பேருக்கு, ‘கொரோனா’ வைரஸ் தாக்கியிருப்பது உறுதியாகி உள்ளது[1]. அதாவது குறிப்பிட்ட 17 பேரில் 16 பேர் டெல்லியில் நடைபெற்ற இஸ்லாமிய மாநாட்டில் பங்கேற்றவர்கள் என தெரிய வந்துள்ளது[2]. அதில் 16 பேருக்கு கொரோனா இருப்பது ஏற்கனவே உறுதியாகி இருக்கிறது[3]. அதனால், மாநாட்டில் பங்கேற்க, டில்லி சென்று வந்தவர்களும், அவர்களின் குடும்பத்தினரும், அருகில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பதிவு செய்து, தங்களை சுய தனிமைப்படுத்தும்படி, அரசு தரப்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டு உள்ளது[4]. மாநாட்டில் பங்கேற்ற 519 பேரை அதிகாரிகள் வலைவீசி தேடி வருகின்றனர்[5]. திருச்சி, பெரம்பலூர், அரியலூர், ஈரோடு, புதுக்கோட்டை, நாகப்பட்டினம் மாவட்டங்களை சேர்ந்த 1,500 பேர் மாநாட்டில் பங்கேற்றனர். மாநாட்டில் பங்கேற்றவர்களில் 981 பேரின் விவரங்கள் கண்டறியப்பட்டுள்ளது[6]. மாநாட்டில் பங்கேற்று திரும்பிய 519 பேர் எங்கு இருக்கிறார்கள் என்று தெரியவில்லை[7]. 519 பேரை அடையாளம் காண தமிழ்நாடு முழுவதும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்[8]. தமிழகத்திலிருந்து 1500 பேர் கலந்து கொண்டனர்: கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த, 21 நாட்கள் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது[9]. இந்நிலையில், தமிழகத்தில் திடீரென கொரோனா வைரஸ் பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது[10]. அதற்கு, டில்லியில் நடந்த இஸ்லாமிய மாநாட்டுக்கு சென்று வந்தவர்களும் காரணமாக இருப்பது தெரிய வந்துள்ளது. ‘தப்லீக் ஜமாத்’ என்ற, இஸ்லாமிய பிரசார குழு சார்பில், டில்லியில், மார்ச், 21 முதல் 23 வரை மூன்று நாட்கள் மாநாடு நடந்தது[11]. இந்த மாநாட்டில், தமிழகத்தை சேர்ந்த, 1,500 பேரும் பங்கேற்றனர். அவர்கள் ஊரடங்கு அமலாவதற்கு முன்தினம், சென்னைக்கு ரயிலிலும், விமானத்திலும் வந்துள்ளனர்[12]. பின், தங்களின் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர். இதே மாநாட்டில் பங்கேற்ற சிலர், அந்தமானை சேர்ந்தவர்கள். அவர்கள் அந்தமானுக்கு விமானத்தில் சென்று, அங்கு தனிமை பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது, கொரோனா வைரஸ் பாதித்திருப்பது உறுதியானது. ஆனால், இவர்கள் யாருமே, அதிகாரிகளுக்கு எந்த தகவல்களையும் கொடுக்கவில்லை. மத்திய அரசு, 09-03-2029 அன்றே, கோவிட்-19 பரவுதல் ஆபத்தினால், எல்லாவித கூடுதல்கள்- மாநாடு, கருத்தரங்கம், பட்டறை முதலியவை ரத்து செய்யப் படவேண்டும் என்று சுற்றறிக்கை No.PS/AMS/SJH/2020 dated 09-03-2020 மூலம் எச்சரித்துள்ளது[13]. ஆகவே, இது போன்ற கூட்டங்கள் நிறுத்தப் பட்டிருக்க வேண்டும். குறிப்பாக, தில்லியில், இது நன்றாகவே தெரிந்திருப்பதால், நிறுத்தப் பட்டிருக்க வேண்டும். ஆனால், நடந்திருக்கிறது. 981 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர், மீதம் 519 தெரியவில்லை: அவர்களிடம் நடத்திய விசாரணையில், டில்லி மாநாட்டில், பங்கேற்றதை உறுதி செய்துள்ளனர். மேலும், ஈரோட்டுக்கு வந்த தாய்லாந்து குழுவினர், ஏற்கனவே டில்லிக்கு போய் வந்தது தெரியவந்துள்ளது. ஈரோட்டில் புதிதாக நோய் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் சிலர், டில்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள். மொத்தத்தில், டில்லி மாநாட்டில் பங்கேற்ற, தமிழகத்தைச் சேர்ந்த, 1,500 பேரில், 16 பேருக்கு கொரோனா வைரஸ் பாதித்திருப்பது உறுதியாகி உள்ளது. அதனால், மாநாட்டில் பங்கேற்க டில்லி சென்று வந்த அனைவரும், அவர்களது குடும்பத்தினரும், அருகில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பதிவு செய்து, தங்களை சுய தனிமைப்படுத்திக் கொள்ளும்படி, அரசு தரப்பில் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மேலும், இஸ்லாமிய மாநாட்டிற்காக, டில்லி சென்று வந்தவர்களில், 981 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். மீதமுள்ளவர்களை – 519 அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது. மாநாட்டில் பங்கேற்றவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் யாராவது, தாமாகவே முன்வந்து, சுகாதாரத் துறையிடம் பதிவு செய்து, தனிமைப்படுத்திக் கொள்ளவில்லை எனில், அவர்களைப் பற்றிய விபரம் அறிந்த மற்றவர்கள், அரசுக்கு தகவல் தெரிவிக்கலாம் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர். பிப்ரவரியில் வந்தவர்களின் பிரச்சினைகள், வோவிட்-19 பாதிப்பு, இறப்பு முதலியவை தெரிந்திருக்கின்ற நிலையில், அவர்கள் சென்று வந்ததையே மறைத்துள்ள நிலையில், அந்த 519 ஆட்களும் எப்படி வலிய வந்த தகவல்களைக் கொடுப்பார்கள் என்று தெரியவில்லை. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மறுப்பும், தில்லி அமைச்சர் உறுதி செய்தலும்: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் தில்லியில் நடந்த மாநாட்டில் யாரும் கலந்து கொள்ளவில்லை என்று அதன் சார்பில் அறிக்கை வெளியிடப் பட்டுள்ளது[14]. வெளிவரும் செய்திகள் பொய் என்றும் கூறுகிறது[15]. ஒரு வாரமாக, இத்தனை செய்திகள் வந்தும், இறப்புகள் நேர்ந்தும், இவ்வாறு மறுத்து சாதிப்பது ஏன் என்று தெரியவில்லை. ஒருவேளை அவர்கள் எல்லோரும், எங்களது உறுப்பினர் இல்லை என்று சாதிக்கலாம். ஆனால், துலுக்கர் சென்றது, கலந்து கொண்டது, திரும்பி வந்தது, மஹாராஷ்ட்ரா, தெலிங்கானா, முதலிய மாநிலங்களில் இறந்தது, மருத்துவ மனைகளில் அடைப் பட்டு கிடப்பவர், மற்றும் சம்பந்தப் பட்டவர் பாதிப்பு, குவாரென்டைன் செய்யப் பட்டுள்ளது, முதலியவை எல்லாமே பொய்யாகாது. ஆகவே, இதில் ஏதோ ஒரு உண்மை மறைக்கப் படுகின்றது என்றாகிறது. துலுக்கர்களுக்கு, இதில் வேறு ஒரு திட்டம் உள்ளது என்றால், அதை மறைக்கக் கூடும். இது வரை நடந்த போராட்டங்களுக்கு, இவர்கள் தூண்டுதலாக இருக்கலாம். இல்லை, இப்பொழுது ஒரு சந்தேகத்தை எழுப்புகின்ற நிலையில், இது ஒரு வகையான ஜிஹாதா, தற்கொலை ஜிஹாதா என்று கூட நினைக்கலாம். இதைப் பற்றி முந்தைய பதிவுகளில் எடுத்துக் காட்டியுள்ளேன். ஆகவே, துலுக்கர் உண்மையினை சொல்ல வேண்டும், இல்லையெனில், இன்னொரு பெரிய பிரச்சினை உருவாகும் நிலையுள்ளது. © வேதபிரகாஷ் 31-03-2020 [1] தினமலர், டில்லி மாநாட்டில் பங்கேற்ற 16 பேருக்கு கொரோனா, Updated : மார் 30, 2020 21:24 | Added : மார் 30, 2020 19:02. [2] தினகரன், தமிழகத்தில் புதிதாக கொரோனா பாதித்த 17 பேரில் 16 பேர் டெல்லியில் மாநாட்டில் பங்கேற்றவர்கள்: மீதமுள்ள 519 பேரை தேடும் பணி தீவிரம், 2020-03-30@ 20:45:26. [3] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=575564 [4] https://www.dinamalar.com/news_detail.asp?id=2512218 [5] தினகரன், டெல்லியில் நடைபெற்ற இஸ்லாமிய மாநாட்டில் பங்கேற்ற 519 பேருக்கு வலைவீச்சு, 2020-03-30@ 18:51:43 [6] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=575545 [7] தினமணி, தில்லி மாநாட்டில் பங்கேற்ற 16 பேருக்கு கரோனா உறுதி, By DIN | Published on : 30th March 2020 08:10 PM [8] https://www.dinamani.com/tamilnadu/2020/mar/30/corona-has-confirmed-the-16-participants-in-the-delhi-conference-3391464.html [9] புதிய தலைமுறை, டெல்லி மாநாட்டில் பங்கேற்ற 1500 தமிழர்கள் : 16 பேருக்கு கொரோனா ?, Web Team, Published :30,Mar 2020 06:50 PM [10] http://www.puthiyathalaimurai.com/newsview/67387/1500-Tamils-participate-in-Delhi-Conference—16-got-positive-in-COVID-19 [11] தினகரன், டெல்லி மாநாட்டில் கலந்துகொண்ட 16 பேருக்கு கரோனா… சுகாதாரத்துறை அறிவிப்பு, கலைமோகன், Published on 30/03/2020 (18:52) | Edited on 30/03/2020 (19:08). [12] https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/india-corona-tamil-nadu-health-department-announces-16-participants-delhi [13] The GOI issued a circular No.PS/AMS/SJH/2020 dated 09-03-2020, warning that, “In wake of COVID-19 outbreak going on in the country, all the functions including seminars, workshops, conferences are to be cancelled. This is for urgence and necessary compliance.” So, all the organizations, institutions and others who arrange such gatherings, where, more than 50 / 100 people assemble must have cancelled considering the prevailing conditions. [14] புதிய தலைமுறை, டெல்லி மாநாட்டில் யாரும் பங்கேற்கவில்லை – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் விளக்கம், Web Team, Published :30,Mar 2020 07:29 PM [15] http://www.puthiyathalaimurai.com/newsview/67389/Tamil-Muslims-not-participate-in-Delhi-Conference—Jamath-Explain பிரிவுகள்: அச்சம், அடிப்படைவாதம், அடையாளம், அத்தாட்சி, அழிவு, கந்தசாமி தெரு, கரோனா, கரோனா தொற்று, கொங்கலம்மன் கோவில், கொரோனா, கொல்லம்பாளையம், சுல்தான்பேட்டை, ஜிஹாதி, தமிழ் முஸ்லிம், தமிழ்நாடு தவ்ஹீத், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், தமிழ்நாடு தௌஹீத் ஜமாத், துலுக்கர், தெலிங்கானா, தெலுங்கானா, தொத்து வியாதி, நோய்கொள்ளி, பள்ளிவாசல், பெருந்துறை, பெருந்துறை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, மசூதி, மனித கொல்லி, முஸ்லிம், முஸ்லிம் தெரு, வைரஸ், Uncategorized Tags: அமெரிக்கா, இஸ்லாம், ஈரோடு, கரோனா, கரோனா ஜிஹாத், கரோனா தொற்று, கிரிகிஸ்தான், கோவிட்-19, ஜிஹாத், தர்கா, தாய்லாந்து, தில்லி, துலுக்கன், துலுக்கர், தொத்து, தொத்து நோய், நிஜாமுத்தீன், பரப்புதல், பெருந்துறை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, வியாதி, வைரஸ் Comments: Be the first to comment வண்ணாரப் பேட்டை முஸ்லிம் ஆர்பாட்டம், அரங்கேற்றப் பட்ட நாடகமா, ஆதரவு, செயல்படும் சக்தி மற்றும் பின்னணி எது-யார்? எதிர்கட்சிகள் பொய்மையுடன் வேலை செய்வது ஏன் [2] பிப்ரவரி 21, 2020 வண்ணாரப் பேட்டை முஸ்லிம் ஆர்பாட்டம், அரங்கேற்றப் பட்ட நாடகமா, ஆதரவு, செயல்படும் சக்தி மற்றும் பின்னணி எது-யார்? எதிர்கட்சிகள் பொய்மையுடன் வேலை செய்வது ஏன் [2] உயிரிழப்புக்குக் காரணமான காவல்துறை அதிகாரிகள் மீது கொலை வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்: திருமா வளவன் அறிக்கைக் கூறுவது, “கைது செய்யப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டது மட்டுமின்றி அவர்கள் மீதான வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்துகிறோம். அமைதியான போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது வன்முறை தாக்குதல்களை நடத்தி ஒரு உயிரிழப்புக்குக் காரணமான காவல்துறை அதிகாரிகள் மீது கொலை வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் வலியுறுத்துகிறோம். நடைபெற்று வரும் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் தேசிய மக்கள்தொகைப் பதிவேடு நடவடிக்கையை மேற்கொள்ள மாட்டோம் என்று தமிழக முதல்வர் அறிவிக்க வேண்டும். தமிழ்நாட்டில் அமைதி நிலவுவதற்கு அதுதான் உகந்த வழியாக இருக்கும் என்பதை சுட்டிக்காட்டுகிறோம்” என்று வலியுறுத்தியுள்ளார். இந்த அளவுக்கு திருமாவளவன் வக்காலத்து வாங்கியுள்ளது, எஸ்.சிக்களுக்கு அவர் தொடர்ந்து செய்து வரும் துரோகம் எனலாம். அவர் முஸ்லீமாக மாறி, அவர்களுக்கே உழைக்கலாம், எஸ்.சிக்களை ஏமாற்றி அரசியல் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. தமுமுக–வினர் எடப்பாடி பழனிச்சாமி வீட்டின் முன் மோடி அமித்ஷா ஆகியோரின் படங்களை எரித்தது [18-02-2020]: குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை எதிர்த்து நாடு முழுவதும் மாணவர்களும், பல்வேறு அரசியல் அமைப்புகளும் போராடிவரும் நிலையில் மசோதாவிற்கு அதிமுக ஆதரவு அளித்தது[1]. இதனைக் கண்டித்து தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகத்தின் சார்பாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் வீட்டை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்பட்டது. பட்டினப்பாக்கத்திலிருந்து பேரணியாக சென்ற தமுமுக-வினர் எடப்பாடி பழனிச்சாமி வீட்டின் முன் மோடி அமித்ஷா ஆகியோரின் படங்களை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்[2]. இதற்கெல்லாம் எப்படி அனுமதி கொடுக்கப் பட்டது என்பது எல்லாம் தெரியவில்லை. 14-02-2020 லிருந்து போராட்டம் நடைபெறுகிறது என்றால், எப்படி?: குடியுரிமை திருத்த சட்டம், தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றை கண்டித்து வண்ணாரப்பேட்டை ரவுண்டானா அருகில் கடந்த 14-ம் தேதி முதல் முஸ்லிம்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்[3]. போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்தியதை கண்டித்தும், தமிழக சட்டசபையில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தியும் முஸ்லிம்கள் அங்கு தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். வண்ணாரப்பேட்டையில் இன்று 7-வது நாளாக தொடர் போராட்டம் நீடித்து வருகிறது. இதில் ஏராளமான முஸ்லிம் பெண்கள் போராட்டத்தில் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோ‌ஷங்களை எழுப்பினார்கள். ஜே.என்.யூ, அலிகர் முஸ்லிம் ஸ்டைலில், தமிழில் கோஷங்கள் இட்டு, ராப் பாடினர்[4]. மத்திய அரசு குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறும் வரை போராட்டம் நீடிக்கும் என்று போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் தெரிவித்தனர். 7-வது நாளாக முஸ்லிம்கள் போராட்டம் நீடித்து வருவதால் அப்பகுதியில் உள்ள கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. பாதுகாப்புக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். சிறுவர்கள், பெண்களை வைத்துக் கொண்டு ஆர்பாட்டம் செய்வது: முஸ்லிம்கள் பொதுவாக பெண்களை பர்கா உடுத்த வைத்து, வீட்டிற்குள் அடைத்து தான் வைத்திருக்கிறார்கள். சில பெண்கள் தாம், வெளியே வந்து மால்களுக்கு, கடைகளுக்கு வந்து செல்கிறார்கள். அந்நிலையில். பெண்களை வெளியே அழைத்து ஆர்பாட்டம் செய்ய வைத்தது, அவர்களுக்கு உத்வேகமாக இருந்தது போலும். உணர்ச்சிப்பூர்வமாக, ஆவேசமாகக் கத்துகிறார்கள். தண்ணீர், உணவு எல்லாம் சரியாகக் கிடைக்கப் பெறுவதால், ஜாலியாக வந்து உட்கார்ந்து கொண்டு, பொழுது போக்குகிறார்கள். போராட்டம் செய்ன்றனர். ஆனால், இதெல்லாம் பாலஸ்தீனம்-காஷ்மீரம் திட்டம், வழிமுறை, அரசை எதிர்ப்பது, போலீஸாரை மதிக்காமல் இருப்பது போன்றவற்றை கடைப்பிடிப்பது தெரிகிறது. தொடர்ந்து, ஊடக-செய்திகளை கவனித்து வருவர்கள், இதையெல்லாம், சுலபமாகக் கண்டு கொள்கிறார்கள். அப்பொழுடு தான், அவர்களுக்கு, முஸ்லிம்கள் ஏதோ உள்நோக்கம் வைத்துக் கொண்டு நடத்துகிறார்கள் என்று தெரிந்து விட்டது. முதல் அமைச்சர் சட்டசபையில் பேசியதற்கு, “வண்ணாரப்பேட்டையிலிருந்து ஒரு சாமானியன்” என்று, விகடன் வக்காலத்து வாங்கி இருப்பது, அப்பட்டமான, முஸ்லிம்-ஆதரவு என்பது தெரிந்தது[5]. ஏனெனில், இந்த அளவுக்கு, யாரும் அத்தகைய அரசு-எதிர்ப்பு, பொய்மை கலந்த விசயங்களின் தொகுப்பை யாரும் வெளியிட முடியாது. முஸ்லிம்களின் மௌத் பீஸ் என்பார்களே, அப்படி செயல்பட்டுள்ளது[6]. முஸ்லிம் அரசியல் கட்சியினரும் சேர்ந்து கொண்டு ஆர்பாட்டத்தை நடத்துவது. மாநில அரசை எதிர்க்கிறேன் என்று மத்திய அரசை எதிர்ப்பது, மோடியை வசைப் பாடுவது முதலியன. மாநில அரசை எதிர்க்கிறேன் என்று மத்திய அரசை எதிர்ப்பது, மோடியை வசைப் பாடுவது முதலியன. உருவ பொம்மை எரிப்பு என்பதற்கு பதிலாக படத்தை செருப்பால் அடிப்பது. மாநில அரசை எதிர்க்கிறேன் என்று மத்திய அரசை எதிர்ப்பது, மோடியை வசைப் பாடுவது முதலியன. உருவ பொம்மை எரிப்பு என்பதற்கு பதிலாக படத்தை எரிப்பது எல்லாமே நகல் போன்று தான் காணப்படுகின்றது: இப்போராட்டம், ஏதோ ஏற்கெனவே தெரிந்த பாடலை வேறு விதமாக பாடும் போது, இதை எங்கேயோ கெட்டது போல உள்ளதே, ஏற்கெனவே கேட்டு விட்டோமே, என்ற உணர்வு ஏற்படுகின்றது. ஆமாம், ஜே.என்.யூ, அலிகர் முஸ்லிம் பல்கலை, கன்னூர் IHC, ஹைதராபாத், பெங்களூரு என்று பார்த்தவர்களுக்கு, கேட்பவர்களுக்கு, இதில் உள்ள உற்றுமையை காண முடியும். அது தான் முஸ்லிம்களின் ஏற்பாடு, ஆதாவு, ஆசியல் முதலியன. இங்கு, தமிழகத்தில் முஸ்லிம்கள் தான் செய்கின்றனர் என்று வெளிப்படையாக உள்ளதால், அப்பிரச்சினையே இல்லை. பிறகு, தமிழக முஸ்லிம்களுக்கு, இதில் என்ன அத்தகைய அக்கரை என்ற கேள்வி எழுகின்றது. விகடன் மற்றும் அதன் நிருபர்கள், ஏதோ ஒடு மொத்தமாக, இவர்களுக்கு ஆதரவு தெரிவிப்பது போல, செய்திகளை வெளியிட்டு வருகிறார்கள். அதாவது அந்த அளவிற்கு, முஸ்லிம்களின் ஊடக பலம் உள்ளது என்று தெரிகிறது. பிபி.தமிழ், ஐ.இ.தமிழ், தி.இந்து என்று எல்லாமே இவர்களை ஆதரித்து செய்திகளை வெளியிட்டு வருகின்றன. ஆனால், சென்னையில் வழக்கம் போல எல்லாமே நடந்து கொண்டிருக்கின்றன. முஸ்லிம்கள் மற்றும் ஊடகக்காரர்கள் எண்ணுகின்றது போல அல்ல திட்டம் போடுவது போல, எந்த கலவரமும் நடக்கவில்லை. ஆனால், முஸ்லிம்களும், எதிர்கட்சியினரும், தூண்டிவிட்டி, மோடி, அமித் ஷா, பழனிச்சாமி, பன்னீர்செல்வம் முதலியோர்களின் படங்களை எரித்து, மத்திய மாநில அரசுகளை வன்மையாக விமரித்து, ஆர்பாட்டம்-போராட்டம் என்று கலாட்டா செய்து வருகின்றனர். எல்லாமே சட்டமீறல்கள் என்று தெரிந்தும், நடவடிக்கை எடுக்காமல் இருப்பதால், முஸ்லிம்களுக்கும் அலுத்து போன நிலை ஏற்பட்டுள்ளது. © வேதபிரகாஷ் 21-02-2020 [1] நக்கீரன், முதல்வர் வீட்டை முற்றுகையிட தமுமுக நடத்திய பேரணி.! (படங்கள்), Published on 19/12/2019 (15:23) | Edited on 19/12/2019 (15:35)., குமரேஷ் [2] https://www.nakkheeran.in/24-by-7-news/politics/tmmk-protest [3] ஐ.இ.தமிழ், ராப் பாடல்; வீதியில் களமிறங்கிய குழந்தைகள் – சென்னை சிஏ.ஏ. போராட்டம் 7வது நாள் ஹைலைட்ஸ், WebDeskFebruary 20, 2020 03:43:52 pm [4] https://tamil.indianexpress.com/tamilnadu/chennai-caa-protest-7th-day-highlights-vannarapettai-170786/ [5] விகடன், சட்டமன்றத்தில் கொந்தளித்த எடப்பாடிக்கு வண்ணாரப்பேட்டையில் இருந்து ஒரு சாமானியனின் கடிதம்!, ர.முகமது இல்யாஸ் Published:Yesterday at 11 AMUpdated:Yesterday at 11 AM. [6] https://www.vikatan.com/news/politics/a-letter-to-edappadi-palanisamy-from-a-common-man-on-caa-protests பிரிவுகள்: இந்திய விரோதத் தன்மை, இந்திய விரோதம், இஸ்லாமிய தீவிரவாதம், ஊடுருவல், எஸ். ஹைதர் அலி, எஸ்.டி.பி.ஐ, எஸ்டிபிஐ, ஐஎஸ், ஐஎஸ்ஐஎஸ், ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள், ஐக்கிய ஜிஹாத் கவுன்சில், கல்லடி ஜிஹாத், கல்லூரி தகர்ப்பு, கல்லெரிந்து கலவரம், கல்லெறி வெறிக்கூட்டம், கல்வீச்சு, கிழக்கு பாகிஸ்தான், கொண்டாட்டம், சிறுபான்மையினர், சிறுவரை முன் நிறுத்துவது, செக்யூலரிஸ ஜீவி, ஜமா அத், ஜவாஹிருல்லா, தமிழகத்து ஜிஹாதி, தமிழ் முஸ்லிம், தமிழ் முஸ்லீம், தமிழ்நாடு சுன்னத் ஜமாத், தமிழ்நாடு தவ்ஹீத், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், தமீமுன் அன்சாரி, துலுக்கர், தூண்டிவிடும் எழுத்துகள், தேச விரோதம், தேசவிரோத செயல்கள், தேசவிரோதம், தேசிய ஜிஹாதி தீவிரவாதம், பங்களா ஹுஜி, பங்களாதேச தீவிரவாதம், பங்காள தேசம், பங்காளதேசம், பாகிஸ்தான், பாபுலர் பிரென்ட் ஆப் இந்தியா, பாப்புலர் ஃபரென்ட் ஆஃப் இன்டியா, பாப்புலர் பரென்ட் ஆப் இந்தியா, பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா, பாப்புலர் பிரென்ட், பாப்புலர் பிரென்ட் ஆப் இந்தியா, பெண், பெண் உரிமை, பெண்களை முன் நிறுத்துவது, போலீஸார், மக்கள் போராட்டக் குழு, முஸ்லிம், முஸ்லிம் அடிப்படைவாதம், முஸ்லிம்கள் ஆர்பாட்டம், முஸ்லீம் பெண்கள் வேலை, முஸ்லீம் பெண்கள் வேலை செய்வது, முஸ்லீம் முன்னேற்றக் கழகம், முஸ்லீம் லீக், முஸ்லீம்களின் தீவிரவாதம், முஸ்லீம்களின் வெறித்தனம், முஸ்லீம்கள், மேற்கு பாகிஸ்தான், மைனாரிட்டி, மோசடி, ரோஹிங்க, ரோஹிங்கர், ரோஹிங்கா, ரோஹிங்கிய, ரோஹிங்கியா, ரோஹிங்ய, ரோஹின்ய, ரோஹின்யா, வங்காள தேசம், வங்காளதேசம், வண்ணாரப் பேட்டை, வண்ணாரப்பேட்டை, வண்ணாறப் பேட்டை, வன்முறை, வன்முறையில் ஈடுபடுவது, வாக்குறுதி, விடுதலை சிறுத்தை, ஸ்டாலின், ஹைதர் அலி Comments: Be the first to comment ஶ்ரீலங்கை குண்டுவெடிப்பு – ஐஎஸ் தொடர்புகளில் கேரளா, கர்நாடகா, தமிழகம் – ஜிஹாதித்துவத்தின் வலை பெரிதாவது [2] மே 31, 2019 ஶ்ரீலங்கை குண்டுவெடிப்பு – ஐஎஸ் தொடர்புகளில் கேரளா, கர்நாடகா, தமிழகம் – ஜிஹாதித்துவத்தின் வலை பெரிதாவது [2] எச்சரித்தும் இலங்கை தகுந்த நடவடிக்கை எடுக்கவில்லை: இலங்கையில் குண்டு வெடிப்பு நடைபெற வாய்ப்பு இருப்பதாக இந்திய உளவுத்துறையினர் எச்சரிக்கை விடுத்தும் அதனை இலங்கை அரசு கண்டு கொள்ளாமல் விட்டதே குண்டு வெடிப்புக்கு முக்கிய காரணமாக அமைந்தது. இலங்கையை போன்று இந்தியாவிலும் பயங்கரவாதிகள் நாசவேலைக்கு சதி திட்டம் தீட்ட திட்டமிட்டு இருப்பதாக உளவுத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதையடுத்து நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. தமிழகத்தில் கடந்த ஆறு மாதத்துக்கு முன்பு கோவையில் பிடிபட்ட ஐ.எஸ். ஆதரவாளர்கள் சிலரிடம் தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) அமைப்பினர் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் இலங்கையில் குண்டு வைப்பதற்கு சில பயங்கரவாத அமைப்புகள் திட்டமிட்டுள்ளதாக திடுக்கிடும் தகவலை தெரிவித்தனர். இந்த எச்சரிக்கையையும் உளவுப்பிரிவு அதிகாரிகள் இலங்கையிடம் தெரிவித்து இருந்தனர். அதன்பின்னர் தமிழகத்திலும் உஷாராக இருக்கும்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது. இலங்கை குண்டு வெடிப்புக்கு பின்னர் தமிழகம் முழுவதும் போலீசாரும் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். இந்த நிலையில் இலங்கை குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு மூளையாக செயல்பட்டு தற்கொலைபடை தாக்குதலில் உயிரிழந்த பயங்கரவாத தலைவன் ஜக்ரன் ஹசீம் என்பவனின் உறவினர்கள், நண்பர்கள் யார்-யார் என்பது பற்றிய விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது. இது தொடர்பாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் நாடு முழுவதும் விசாரணையை முடுக்கி விட்டனர். ஐ.எஸ், கேரள தொடர்புகள்: அப்போது பயங்கரவாதி ஜக்ரன் ஹசீமின் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் தென் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பதுங்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களை பிடிக்க கடந்த 10 நாட்களாக அதிரடி வேட்டை நடத்தப்பட்டது. கேரளா மாநிலம் பாலக்காட்டில் ஜக்ரன் ஹசீமின் நெருங்கிய ஆதரவாளரான ரியாஸ் என்பவர் பதுங்கி இருப்பது தெரியவந்தது. கடந்த ஞாயிற்றுக்கிழமை பிடிபட்டார். இலங்கை குண்டு வெடிப்பு பயங்கரவாதியான ஜக்ரன் ஹசீமின் பேச்சால் கவரப்பட்ட ரியாஸ் பயங்கரவாத செயல்பாடுகள் தொடர்பான நடவடிக்கையிலும் அதிக ஆர்வம் காட்டி வந்துள்ளார். அவரிடம் நடத்திய விசாரணையில் சென்னையிலும் ஜக்ரன் ஹசீமின் ஆதரவாளர்கள் பதுங்கி இருப்பது அம்பலமானது. இது தொடர்பாக நேற்று இரவு 30-04-2019 சென்னையில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி வேட்டையில் ஈடுபட்டனர். மண்ணடியில் சந்தேகத்துக்கு இடமாக ஒருவரை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் அளித்த தகவலின்படி பூந்தமல்லியில் பெங்களூர் நெடுஞ்சாலையில் உள்ள கோல்டன் அடுக்குமாடி குடியிருப்பில் இலங்கையை சேர்ந்த சிலர் வசித்து வருவது கண்டுபிடிக்கப்பட்டது. பூந்தமல்லியில் பதுங்கியிருந்தவர்கள்- என்.ஐ.ஏ சோதனை: இதைத் தொடர்ந்து அங்கு போலீஸ் அதிகாரிகள் மற்றும் என்.ஐ.ஏ. படையினர் முகாமிட்டனர். இந்த அடுக்குமாடி குடியிருப்பில் மொத்தம் 800 குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இதனால் போலீசாரால் அங்கு தங்கியிருக்கும் இலங்கையை சேர்ந்தவர்கள் யார்? என்பது உடனடியாக கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள நிர்வாகிகளிடம் ரகசியமாக விசாரணை நடத்திய என்.ஐ.ஏ. அதிகாரிகள் இலங்கையை சேர்ந்தவர்கள் தங்கியிருந்த வீட்டை கண்டுபிடித்தனர். இதன்பின்னர் அந்த வீட்டை சுற்றி வளைத்த போலீஸ் படையினர் அங்கு தங்கியிருந்த தாலுகா ரோசன் என்ற வாலிபரை மடக்கி பிடித்தனர். அவரது கூட்டாளிகளான முகமது ரப்பூதீன், லபேர் முகமது ஆகியோரும் பிடிபட்டனர். நேற்று மாலையில் அடுக்குமாடி குடியிருப்புக்கு சென்ற போலீஸ் அதிகாரிகள் நள்ளிரவிலேயே மூன்று பேரையும் சுற்றி வளைத்து பிடித்தனர்[1]. பின்னர் பலத்த பாதுகாப்புடன் அவர்களை ரகசிய இடத்துக்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினர்[2]. இவர்களில் தாலுகா ரோசன் இலங்கை குண்டு வெடிப்பு பயங்கரவாதியான ஜக்ரன் ஹசீமின் நெருங்கிய நண்பர் என்பது தெரிய வந்தது. கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பே இவர் சென்னைக்கு வந்தது தெரியவந்தது. இலங்கையில் இருந்த போது ஜக்ரன் ஹசீமின் செயல்பாடுகளால் ரோசன் ஈர்க்கப்பட்டிருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது. ஆவணங்கள் இல்லாமல் தங்கியிருந்த ரோஷன் கைது: தாலுகா ரோசன் தங்கியிருந்த வீட்டில் சோதனை நடத்தினர். அங்கு அவர் பூந்தமல்லி முகவரியில் போலியான சில அடையாள அட்டைகளை வாங்கி வைத்திருந்தது தெரியவந்தது. அவரிடம் பாஸ்போர்ட், விசா எதுவும் இல்லை. இதையடுத்து போலீசார் தாலுகா ரோசனை கைது செய்தனர். உரிய ஆவணங்கள் இன்றி வெளிநாட்டில் இருந்து தப்பி வந்து அனுமதியின்றி தங்கியதாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இன்று போலீசார் தாலுகா ரோசனை கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைக்க உள்ளனர். இலங்கை வாலிபர் தாலுகா ரோசன் சென்னையில் தங்கியிருந்து இலங்கை குண்டு வெடிப்புக்கு சதி திட்டம் தீட்டினாரா? குண்டு வெடிப்பு பயங்கரவாதிகளுடன் அவருக்கு தொடர்பு உள்ளதா? என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது. இலங்கையிலிருந்து வந்து பூந்தமல்லியில் ஏன் தங்க வேண்டும்?: என்.ஐ.ஏ. அதிகாரிகளிடம் தாலுகா ரோசன் பிடிபட்டதும் ‘கியூ’ பிரிவு போலீசாரும் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். அதே நேரத்தில் முகமது ரப்பூதீன், லபேர் முகமது ஆகியோரிடம் பாஸ்போர்ட், விசா உள்ளிட்ட ஆவணங்கள் இருந்தன. இதனைத் தொடர்ந்து இருவரையும் முறைப்படி அந்த நாட்டுக்கு திருப்பி அனுப்ப இலங்கை தூதரக அதிகாரிகள் மூலமாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவர்கள் இலங்கை சென்றதும் அந்நாட்டு போலீசார் இரண்டு பேரிடமும் விசாரணை நடத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கையில் நடைபெற்ற குண்டு வெடிப்பு பீதி அடங்கும் முன்னர் அதில் தொடர்புடைய பயங்கரவாதிகளிடம் நெருக்கமாக இருந்ததாக கருதப்படும் இலங்கை வாலிபர்கள் சென்னையில் பிடிபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனைத் தொடர்ந்து சந்தேகத்துக்கு இடமாக இலங்கையை சேர்ந்த வேறு யாரும் தங்கியிருக்கிறார்களா? என்பது பற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மாநிலம் முழுவதும் கடலோர பாதுகாப்பு படையினரும் போலீசாரும் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். 31-05-2019 அன்றைய செய்தி: இலங்கையில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பு தாக்குதல் தொடர்பாக ஆராய்வதற்காக, இந்தியாவின் தேசிய விசாரணை முகமையான, என்.ஐ.ஏ அமைப்பின் அதிகாரிகள் குழு இலங்கை சென்றடைந்தனர்[3]. ஆலோக் மிதாலின் தலைமையிலான இந்த குழுவினர், இலங்கையில் தாக்குதல் நடத்திய, பயங்கரவாதிகள் இந்தியாவுடன் கொண்டிருந்த தொடர்பு குறித்து விசாரணை செய்வதற்காக, இந்த குழுவினர் இலங்கைக்கு வருகைத் தந்துள்ளதாக தெரியவந்துள்ளது[4]. தமிழக, கேரள, இலங்கை தீவிரவாத குழுக்கள், வேண்டுமென்றே, இந்திவாவின் மீது கெட்ட பெயர் களங்கத்தை ஏற்படுத்த, இவ்வாறு செயல்பட்டு வருகின்றனர். காஷ்மீர கூட்டங்களும் இதற்கு பாகிஸ்தான் மூலம் உதவி வருகின்றன. கேரள-பெங்களூர் தொடர்புகள் ஐ.எஸ்.க்கு ஆட்களை அனுப்பி வைப்பதில் தீவிரமாக உள்ளன. இப்பொழுது எல்.டி.டி.ஈ இல்லாததால், முஸ்லிம் தீவிரவத கும்பல் அவர்களின் இடத்தைப் பிடித்து செயல்பட ஆரம்பித்துள்ளது. இதனால், மாலத்தீவு, மொரிஸியஸ் தொடர்புகளும் சேர்கின்றன. இவ்வளவையும் எதிர்த்து, இந்தியா லாவகமாக ச்யல்பட வேண்டியுள்ளது. © வேதபிரகாஷ் 31-05-2019 [1] மாலைமலர், இலங்கை குண்டுவெடிப்பு– சென்னையில் பதுங்கிய இலங்கை வாலிபர் கைது, பதிவு: மே 01, 2019 13:26 [2] https://www.maalaimalar.com/News/District/2019/05/01132614/1239547/Srilankan-youth-arrest-at-chennai.vpf [3] தினத்தந்தி, தொடர் குண்டு வெடிப்பு சம்பவம் : இலங்கை சென்ற இந்தியாவின் தேசிய விசாரணை முகமை அதிகாரிகள், பதிவு : மே 31, 2019, 07:26 AM [4] https://www.thanthitv.com/News/World/2019/05/31072621/1037269/Srilanka-Easter-Bombing-Indian-NIA-Visit-Srilanka.vpf பிரிவுகள்: அழுக்கு, இஸ்லாமியத் தீவிரவாதம், இஸ்லாமியத் தீவிரவாதி, ஈழ குண்டுவெடிப்பு, ஈழம், உளவாளி, உளவு, உள்துறை சூழ்ச்சிகள், உள்ளூர் இஸ்லாமிய தீவிரவாதம், உள்ளூர் தீவிரவாத கும்பல், ஐ.எஸ், ஐ.எஸ். தீவிரவாதிகள், ஐ.எஸ்.ஐ, ஐ.டி.தீவிரவாதி, ஐஎஸ், ஐஎஸ்ஐஎஸ், ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள், ஐக்கிய ஜிஹாத் கவுன்சில், ஐசில், ஐசிஸ், கிருத்துவர், கிருஸ்துவர், குண்டு, குண்டு தயாரிப்பு, குண்டு வெடிப்பது, குண்டு வெடிப்பு, குண்டு வெடிப்பு வழக்கு, குண்டுவெடிப்பு, கேரள ஜிஹாதி, கேரள தீவிரவாதம், கேரள பயங்கரவாதம், சிறுபான்மையினர், சொந்த வீட்டில் வளர்க்கப்பட்ட தீவிரவாதம், சொந்தமண்ணின் ஜிஹாதி, ஜிஹாதி வெறியாட்டம், ஜிஹாதி-ஆதரவு மனப்பாங்கு, ஜிஹாதித்தனம், ஜிஹாதித்துவம், ஜிஹாத், ஜிஹாத் கையேடு, ஜிஹாத் தன்மை, தமிழ்நாடு தவ்ஹீத், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், தீவிரவாதத்திற்கு துணை போவது, தீவிரவாதம், தீவிரவாதி, தீவிரவாதிகளுக்கு பணம், தீவிரவாதிகள், வெடிகுண்டு, வெடிகுண்டு பொருட்கள், வெடிகுண்டுகள், வெடிக்கச் செய்யும் கருவிகள் Tags: இலங்கை குண்டுவெடிப்பு, இஸ்லாம் ஜிஹாதி, ஈழ குண்டுவெடிப்பு, ஈழ ஜிஹாதி, ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள், காஷ்மீர், கேரள ஜிஹாதி, கேரளா, சர்ச், சிரியா, சூபி-ஜிஹாத், தற்கொலை குண்டு வெடிப்பு, தவ்ஹீத் ஜமாத், நாசவேலை, பெங்களூரு, ஶ்ரீலங்க குண்டுவெடிப்பு, ஶ்ரீலங்க ஜிஹாதி, ஶ்ரீலங்கை ஜிஹாதி Comments: Be the first to comment « பழையவை அண்மைய பின்னூட்டங்கள் சென்னை உருது போதிக்கும் மதரஸா,… இல் vedaprakash திருக்குறள் விற்று ரூ.65 கோடி… இல் திருக்குறள் விற்று ர… ஆர்எஸ்எஸ் அமைப்பின் முஸ்லிம்கள… இல் vedaprakash துருக்கம், துருக்கர், துலுக்கர… இல் துக்காச்சி சிவன் கோவ… துருக்கம், துருக்கர், துலுக்கர… இல் துக்காச்சி சிவன் கோவ… அண்மைய பதிவுகள் பத்ருதீன் அஜ்மல்: இந்துக்களும் முஸ்லிம்கள் போல லவ்ஜிஹாத் செய்யலாம், எங்கள் வீட்டுப் பெண்பிள்ளைகளைத் தூக்கிச் செல்லுங்கள்…. பலம் என்னதான் என்று பார்ப்போமே! (2) பத்ருதீன் அஜ்மல்: இந்துக்களும் முஸ்லிம்கள் போல லவ் ஜிஹாத் செய்யலாம், எங்கள் வீட்டுப் பெண்பிள்ளைகளை தூக்கிச் செல்லுங்கள்…. பலம் என்னதான் என்று பார்ப்போமே! (1) சென்னை உருது போதிக்கும் மதரஸா, பீகாரிலிருந்து கொண்டு வரப் பட்ட சிறார்கள், சரியாகப் படிக்கவில்லை என்பதால் சித்ரவதை, புகார், கைது முதலியன! இஸ்லாம் மதம் மாறிய இந்துவை பிசி முஸ்லிம் ஆக கருத முடியாது: உயர்நீதி மன்றம் உத்தரவு (2) இஸ்லாம் மதம் மாறிய இந்துவை பிசி முஸ்லிம் ஆக கருத முடியாது: உயர் நீதிமன்றம் உத்தரவு (1) காப்பகம் காப்பகம் மாதத்தை தேர்வுசெய்க திசெம்பர் 2022 (5) நவம்பர் 2022 (11) ஒக்ரோபர் 2022 (4) செப்ரெம்பர் 2022 (4) ஓகஸ்ட் 2022 (1) மே 2022 (3) மார்ச் 2022 (3) ஒக்ரோபர் 2021 (1) ஓகஸ்ட் 2021 (1) ஜூலை 2021 (1) ஜூன் 2021 (1) மே 2021 (1) பிப்ரவரி 2021 (2) ஓகஸ்ட் 2020 (3) ஜூலை 2020 (1) ஜூன் 2020 (1) மே 2020 (1) ஏப்ரல் 2020 (6) மார்ச் 2020 (6) பிப்ரவரி 2020 (2) நவம்பர் 2019 (2) ஒக்ரோபர் 2019 (1) ஜூலை 2019 (1) ஜூன் 2019 (3) மே 2019 (2) ஜூலை 2018 (2) ஜூன் 2018 (1) மே 2018 (8) பிப்ரவரி 2018 (1) திசெம்பர் 2017 (12) நவம்பர் 2017 (6) செப்ரெம்பர் 2017 (1) ஓகஸ்ட் 2017 (3) ஜூலை 2017 (3) ஜூன் 2017 (3) மே 2017 (2) ஏப்ரல் 2017 (12) மார்ச் 2017 (5) பிப்ரவரி 2017 (5) ஜனவரி 2017 (5) திசெம்பர் 2016 (5) நவம்பர் 2016 (7) ஒக்ரோபர் 2016 (7) செப்ரெம்பர் 2016 (4) ஓகஸ்ட் 2016 (9) ஜூலை 2016 (18) ஜூன் 2016 (1) ஏப்ரல் 2016 (7) மார்ச் 2016 (3) பிப்ரவரி 2016 (8) ஜனவரி 2016 (8) திசெம்பர் 2015 (3) நவம்பர் 2015 (18) ஒக்ரோபர் 2015 (6) செப்ரெம்பர் 2015 (7) ஓகஸ்ட் 2015 (10) ஜூலை 2015 (3) மே 2015 (6) ஏப்ரல் 2015 (2) மார்ச் 2015 (4) பிப்ரவரி 2015 (1) ஜனவரி 2015 (4) திசெம்பர் 2014 (3) நவம்பர் 2014 (4) ஒக்ரோபர் 2014 (7) செப்ரெம்பர் 2014 (1) ஜூன் 2014 (1) மே 2014 (3) ஏப்ரல் 2014 (6) மார்ச் 2014 (8) பிப்ரவரி 2014 (7) ஜனவரி 2014 (5) திசெம்பர் 2013 (9) நவம்பர் 2013 (4) ஒக்ரோபர் 2013 (8) செப்ரெம்பர் 2013 (8) ஓகஸ்ட் 2013 (6) ஜூலை 2013 (7) ஜூன் 2013 (3) மே 2013 (8) ஏப்ரல் 2013 (6) மார்ச் 2013 (20) பிப்ரவரி 2013 (6) நவம்பர் 2012 (1) ஒக்ரோபர் 2012 (1) ஓகஸ்ட் 2012 (10) ஜூன் 2012 (2) ஏப்ரல் 2012 (2) பிப்ரவரி 2012 (1) ஜனவரி 2012 (7) திசெம்பர் 2011 (7) நவம்பர் 2011 (5) ஒக்ரோபர் 2011 (6) செப்ரெம்பர் 2011 (2) ஜூலை 2011 (2) மே 2011 (6) ஏப்ரல் 2011 (1) மார்ச் 2011 (7) பிப்ரவரி 2011 (4) ஜனவரி 2011 (7) திசெம்பர் 2010 (4) நவம்பர் 2010 (8) ஒக்ரோபர் 2010 (11) செப்ரெம்பர் 2010 (12) ஓகஸ்ட் 2010 (15) ஜூலை 2010 (30) ஜூன் 2010 (6) மே 2010 (21) ஏப்ரல் 2010 (25) மார்ச் 2010 (22) பிப்ரவரி 2010 (16) ஜனவரி 2010 (22) திசெம்பர் 2009 (20) நவம்பர் 2009 (29) ஒக்ரோபர் 2009 (6) ஃபத்வா அல்லா அழகிய இளம் பெண்கள் அவமதிக்கும் இஸ்லாம் ஆப்கானிஸ்தான் இந்திய முஜாஹித்தீன் இந்துக்கள் இமாம் இஸ்லாமிய தீவிரவாதம் இஸ்லாமியத் தீவிரவாதம் இஸ்லாம் இஸ்லாம் ஜிஹாதி உள்ளூர் இஸ்லாமிய தீவிரவாதம் ஊடகத் தீவிரவாதிகள் ஐ.எஸ் ஐ.எஸ்.ஐ ஐ.எஸ். தீவிரவாதிகள் ஐஎஸ் ஐஎஸ்ஐஎஸ் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் ஐசில் ஐசிஸ் ஐதராபாத் கற்பழிப்பு கலவரம் காபிர் காஷ்மீரம் காஷ்மீர் குண்டு குண்டு வெடிப்பு குண்டுவெடிப்பு குண்டு வெடிப்பு வழக்கு குரான் கைது கொலை சிரியா சிறுபான்மையினர் சுன்னி செக்யூலரிஸம் செக்ஸ் சென்னை ஜிஜாதி தீவிரவாதம் ஜிஹாதி ஜிஹாதிகள் ஜிஹாதி குண்டு ஜிஹாதி குண்டுக்கொலை ஜிஹாதி கொலைக்காரர்கள் ஜிஹாதி தீவிரவாதம் ஜிஹாத் தர்கா தலாக் தாலிபான் தீவிரவாதம் துருக்கி துலுக்கர் நிக்கா பங்களாதேசம் பரவும் தீவிரவாதம் பலி பாகிஸ்தான் புனிதப்போர் மசூதி மதுரை மற்ற மதங்களை அவமதிக்கும் இஸ்லாம் மிதிக்கும் இஸ்லாம் முகமதியரின் இந்தியாவின் மீதான தாக்குதல்கள் முகமதியர் முஜாஹித்தீன் மும்பை முஸ்லிம் முஸ்லிம்கள் முஸ்லீம்கள் லவ் ஜிஹாத் ஷியா ஹிஜாப் பிரிவுகள் பிரிவுகள் பரிவொன்றை தெரிவுசெய் 1528ம் வருடத்தைய தஸ்ஜாவேஜ் (4) 1909 (2) 1971 (3) 1993 (1) 2008 குண்டு வெடிப்பு (14) 2014 (3) 24 பர்கானாஸ் (1) 786 (23) Ansar Ghazwat-ul-Hind (1) ஃபத்வா (85) ஃபாத்திமா முஸப்பர் (1) ஃபாத்திமா ரோஸ் (3) ஃபிதாயீன் (52) ஃபேஷன் ஷோ (1) ஃபேஸ்புக் (26) ஃபைஜா அவுதல்ஹா (2) ஃப்ரோனொகிராஃபி (1) அ‌ப்து‌ல் அஜி‌த் (2) அஃறிணை (1) அகழ்வாய்வு (1) அகிம்சை (6) அகில இந்திய முஸ்லிம் சட்ட வாரியம் (7) அகில இந்திய முஸ்லிம் பெண்கள் தனி சட்ட வாரியம் (1) அகிலேஷ் (4) அகிலேஷ் யாதவ் (1) அக்பர் (2) அக்பர் பாஷா (3) அசன் (1) அசன் அலி (1) அசாதுதீன் (7) அசாதுதீன் ஒவைஸி (6) அசாம் (9) அசிங்கப்படுத்திய முகமதியர் (17) அசிடோன் (3) அசோக் மிட்டல் (1) அச்சம் (30) அஜதாரி (1) அஜித்தோவல் (1) அஜிராபானு (3) அஜீஜா அல்-யூசுப் (1) அஜ்மத் அலி (1) அடி (4) அடி உதை (24) அடி வைத்தியம் (2) அடி வைத்திய்ம் (2) அடித்து சித்ரவதை (13) அடிப்படைவாதம் (105) அடிப்பது (2) அடிமை (19) அடிமைத்தனம் (11) அடையாளம் (91) அணைக்கட்டு (1) அண்ணல் நபி (1) அண்ணாதுரை (2) அதிக வட்டி (1) அதிமுக (18) அதிரா பானு (2) அதிலா பானு (2) அது (1) அத்தாட்சி (30) அத்வானி (9) அந்நியசெலாவணி (2) அனீஸ் இப்ராஹிம் (3) அனுமதி (3) அனைத்து இந்திய முஸ்லிம் முன்னேற்ற கழகம் (3) அன்சர்-உல்-தவ்ஹீத் (1) அன்சாரி (10) அன்சார் (11) அன்சார் மீரான் (1) அன்பழகன் (3) அன்வருல் ஹக் (1) அன்வர் கஸ்மன் (1) அன்வர் பிஸ்மி (1) அன்ஸார் கஜ்வத்-உல்-ஹிந்த் (1) அபக் உசேன் (1) அபக் ஹுசைன் (1) அபக் ஹுஸைன் (1) அபதல்ஹமீது அபௌத் (1) அபவர்கானந்தர் (1) அபின் (1) அபு சலீம் (8) அபு ஜிண்டால் (14) அபு பகர் அல்-பாக்தாதி (2) அபுசாத்கர் (1) அபூபக்கர் முசலியார் (1) அப்சல் (5) அப்சல் குரு (19) அப்தாப் (1) அப்துர் ரஹ்மான் (1) அப்துல் அஜீஸ் (2) அப்துல் ஆஜீஸ் (1) அப்துல் கனில் லோன் (6) அப்துல் கபூர் (1) அப்துல் கயூம் (2) அப்துல் கய்யூம் சேய்க் (4) அப்துல் கரீம் அப்துல் முஹ்சீன் அல்ஜமீன் (1) அப்துல் கரீம் துண்டா (1) அப்துல் காதர் (5) அப்துல் காதர் சுலைமான் (1) அப்துல் குட்டூஸ் (1) அப்துல் நாஸர் மதானி (6) அப்துல் பசித் (2) அப்துல் பாசித் (2) அப்துல் ரகுமான் (2) அப்துல் ரஷீத் (2) அப்துல் வஹீத் கிஸ்தி (1) அப்துல் ஷகில் பாஷா (1) அப்துல் ஹட்வானி (1) அப்துல்லா (10) அப்துல்லா அப்துல் காதர் சுலைமான் (1) அப்துல்லா புகாரி (1) அப்பீல் (3) அப்ரஹாம் (1) அப்ஸல் (3) அமர் சிங் (3) அமர்நாத் யாத்திரை (7) அமாவாசைக்கும் அப்துல் காருக்கும் என்ன சம்பந்தம்? (27) அமாவாசையும் அப்துல்காருக்கும் (19) அமிர் குஷ்ரு (3) அமிர் குஸ்ரு (3) அமிலம் (1) அமீது சுல்தான் (1) அமீனுத்தீன் (2) அமீன் (3) அமீர் குஷ்ரு (3) அமீல் (1) அமெரிக்க இஸ்லாம் (4) அமெரிக்க இஸ்லாம் ஜிஹாத் (3) அமெரிக்க ஜிஹாதி (10) அமெரிக்க ஜிஹாதி கூட்டுசதி (5) அமெரிக்க ஜிஹாத் (7) அமெரிக்க-ஜிஹாத் கூட்டு (2) அமைதி (62) அமைதி என்றால் இஸ்லாமா (17) அமைதி டிவி (9) அமைதி தூதுவர் (5) அமைத்-உல்-அன்ஸார் (3) அமோனியம் (4) அம்பத்தூர் (4) அம்பேத்கர் (8) அம்மணம் (4) அம்மா அரிசி (1) அம்மாவுக்குத் தெரியாதா முஜாஹித்தீன்கள் (2) அம்மோனியம் (3) அயோத்தியா (3) அயோத்யா (3) அரக்கான் (1) அரசாங்கத்தை மிரட்டல் (8) அரசியல் விபச்சாரம் (8) அரசியல்வாதிகள் (9) அரசு நிதி (11) அரசு முத்திரை (1) அரிசி (2) அரிசி அரசியல் (2) அரிப்பு (1) அருவம் (3) அரேபிய குடி (1) அரேபிய ஷேக்கு (9) அரேபியத்துவம் (1) அரேபியா (41) அர்ஷி குரேஷி (1) அறுப்பு (4) அலங்காநல்லூர் (1) அலர்ஜி (2) அலஹாபாத் தீர்ப்பு (4) அலாவுத்தீன் கில்ஜி (2) அலி (13) அலி அக்பர் (3) அலி குரேஷி (1) அலி சகோதரர்கள் (5) அலி ஷா கிலானி (3) அலி ஷா ஜிலானி (4) அலிகர் (3) அலீத் அப்தல் ரஸாக் (1) அல் (1) அல் – உம்மா (88) அல் – காய்தா (82) அல் – கொய்தா (83) அல் அர்பி (35) அல் முஹம்மதியா (45) அல் ஹதீஸ் (33) அல்- பதர் (14) அல்-இமாம் அலி அல்-அரிதி (3) அல்-உஜ்ஜா (1) அல்-உம்மா (18) அல்-ஜரௌனி (1) அல்-திர்ஹம் (1) அல்-பர்மவியாஹ் (3) அல்-மனத் (2) அல்-மம் அலி பின் அல்-தாலிப் (2) அல்-முஜாஹித்தீன் (13) அல்-முஹாஜிரோன் (4) அல்-லத் (2) அல்ஜமீன் (6) அல்டேப் உசேன் (2) அல்மாஸ் எலெக்ட்ரானிக்ஸ் (1) அல்லா (101) அல்லா என்ற வார்த்தை உபயோகம் (14) அல்லா சொன்னதால் சுட்டேன் (3) அல்லா பெயர் (25) அல்லா பெயர் உபயோகம் (8) அல்லாஹூ அக்பர் (4) அல்லாஹ் (10) அல்வலீது பின் தலால் (1) அழகிய இளம் பெண்கள் (36) அழிப்பு (33) அழிவு (40) அழுகிய நிலையில் (5) அழுகை (6) அழுக்கு (31) அவதூறு (28) அவன் (1) அவமதிக்கும் இஸ்லாம் (75) அவள் (3) அவுட் லுக் (2) அவூலியா (3) அஷ்ரப் அலி (1) அஷ்ரப் அலி கான் (1) அஸதுல்லா அக்தர் (5) அஸ்ரப் அலி (4) அஸ்லாம் பாஷா (2) அஸ்ஸாம் (6) அஹமதியா (18) அஹமது ஷா புகாரி (4) அஹம்மதியா (5) அஹிம்சை (6) அஹ்மதியா (8) அஹ்மதியாக்கள் (8) அஹ்மது ஒமர் சையீது செயிக் (2) அஹ்மது ஒமர் சையீது செயிது (1) ஆகா சைது ஹஸான் (1) ஆக்சிஜன் (1) ஆக்ரா (1) ஆசம் கான் (2) ஆசாத் ராவுப் (1) ஆசிக் (1) ஆசிக் மீரா (2) ஆஜாதிதான் ஒரே வழி (1) ஆஜாத் ரௌப் (1) ஆஜிரா பேகம் (1) ஆஜ்மீர் (4) ஆடி (1) ஆடித் திருவிழா (1) ஆடித்திருவிழா (2) ஆடியோ (1) ஆடு (3) ஆட்கொல்லி (2) ஆட்டம் (5) ஆணல்ல (1) ஆணவக் கொலை (1) ஆணை (2) ஆண் உறுப்பு (2) ஆண்குறி (2) ஆண்குறி சதை (1) ஆண்குறி சதை அறுப்பு (1) ஆண்டவனின் எச்சரிக்கை (7) ஆண்பால் (2) ஆண்மை (3) ஆதரவு (10) ஆதாரம் (8) ஆதி திராவிடர் (1) ஆதி திராவிடர் துறை (1) ஆதிரா பானு (2) ஆதிலா பானு (2) ஆத்திகம் (2) ஆந்திரா (3) ஆபக் உசேன் (1) ஆபாசமான வார்த்தை (2) ஆபாசம் (7) ஆபு சலீம் (1) ஆப்கன் (2) ஆப்கானிஸ்தான் (21) ஆமென் (2) ஆம் ஆத்மி கட்சி (1) ஆம்பூர் (10) ஆயிஷா (3) ஆயிஷா இந்திரா பீ (1) ஆயிஷா சித்திக் (7) ஆயிஸா தகியா (1) ஆயுதச் சட்டம் மற்றும் வெடிமருந்து சட்டம் (4) ஆயுதப்படை (9) ஆராய்ச்சி செய்யும் போலீஸார் (4) ஆர்.எஸ். சம்சுதீன் பள்ளிவாசல் (1) ஆர்.எஸ்.எஸ் (11) ஆர்.எஸ்.சர்மா (3) ஆர்குட் (2) ஆர்த்தி சாப்ரா (2) ஆர்பாட்டம் (11) ஆறு மனைகள் (1) ஆற்காடு (4) ஆலி ஷா கிலானி (1) ஆலிஃப்-லம்-மிம் (4) ஆளுமை (1) ஆவி (3) ஆஸம் கான் (7) ஆஸ்கார் (1) ஆஸ்கார் பிலிம்ஸ் (1) இ.அகமது (2) இக்பால் (2) இசை (5) இச்சை (14) இட ஒதுக்கீடு (7) இடிப்பு (3) இடுப்பு (3) இணைதள ஜிஹாத் (38) இத்தத் (2) இந்தி ஜிஹாதி (6) இந்திய ஊடகங்கள் (4) இந்திய கொடி (2) இந்திய முஜாஹத்தீன் (69) இந்திய முஜாஹித்தீன் (75) இந்திய முஸ்லிம் முன்னேற்ற கழகம் (9) இந்திய யுனீயன் முஸ்லீம் லீக் (31) இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி (4) இந்திய யூனீயன் முஸ்லீம் லீக் (35) இந்திய விரோதத் தன்மை (70) இந்திய விரோதம் (47) இந்திய விரோதி ஜிலானி (15) இந்தியத் தன்மை (64) இந்தியத்தனம் (63) இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் (7) இந்தியப் பிரச்சினை (5) இந்தியர்களை ஏமாற்றுதல் (71) இந்தியா (110) இந்தியாவின் மேப் (41) இந்தியாவின் வரைப்படம் (34) இந்திரா (2) இந்து எழுச்சி முன்னணி (1) இந்து காதலனும் முகமதிய காதலியும் (8) இந்து காதலியும் முகமதிய காதலனும்! (9) இந்து கோவில்கள் தாக்கப்படுவது (21) இந்து தமிழன் (2) இந்து-முஸ்லிம் (14) இந்து-முஸ்லிம் உரையாடல் (54) இந்து-முஸ்லிம் ஒற்றுமை (51) இந்து-முஸ்லிம் சந்திப்பு-உரையாடல்கள் (44) இந்துக்களின் உரிமைகள் (38) இந்துக்களைக் கொல்வது (39) இந்துக்கள் (78) இந்துக்கள் கொடுமைப் படுத்தப்படல் (32) இந்துக்கள் கொல்லப்படுதல் (34) இந்துக்கள் சித்திரவதை (18) இந்தோனேசியா (3) இன்பம் (5) இன்ஸிமாம்-உல்-ஹக் (2) இன்ஸ்பெக்டர் (2) இபின் பதூதா (1) இப்தார் (3) இப்ராஹிம் (2) இப்ராஹிம் அப்சலம் (1) இப்ராஹிம் மௌல்வி (1) இமயமலை (1) இமயம் (2) இமாம் (51) இமாம் அலி (11) இமாம் கவுன்சில் (5) இமாம் செக்ஸ் (3) இமாம் ஹுஸாஇன் (1) இமாம்கள் (9) இம்தியாஜ் பஜாஜ் (1) இம்ரான் கான் (1) இம்ரான் ஹஸன் (1) இரட்டை இலை (3) இரட்டை வேடம் (26) இரண்டாம் பெண்டாட்டி (6) இரண்டாம்மனைவி (7) இரவு தொழுகை (1) இரவு விடுதி (1) இராக் (9) இரான் (5) இராம கோபாலன் (2) இருக்கின்ற நிலை (8) இருக்கின்றது என்ற நிலை (5) இருக்கும் தெய்வங்கள் (2) இருட்டு (1) இர்ஃபான் ஹபீப் (2) இறப்பு (4) இறுதி ஊர்வலம் (1) இறை தூதர் (7) இறைதூதர் (9) இறைத்தூதர் (9) இறைவன் (2) இலக்கியம் (3) இலங்கை (3) இலங்கை குண்டுவெடிப்பு (5) இலவச அரிசி (1) இலா (1) இலாஹி (2) இல் (1) இல்யாசி (1) இல்லாத தெய்வங்கள் (2) இல்லாத நிலை (7) இல்லாதது என்ற நிலை (4) இளைய ராஜா (1) இஸ்மாயில் (3) இஸ்ரத் ஜஹான் (2) இஸ்லாமாபாத் (3) இஸ்லாமி தெரிக் பாகிஸ்தானி (2) இஸ்லாமிக் சேவக் சங் (2) இஸ்லாமிக் ஸ்டூடன்ஸ் மூவ்மென்ட் (2) இஸ்லாமிக் ஸ்டேட் (4) இஸ்லாமிய இறையியல் (49) இஸ்லாமிய சாதி (16) இஸ்லாமிய ஜாதி (15) இஸ்லாமிய திருமணச் சட்டம் (2) இஸ்லாமிய தீவிரவாதம் (29) இஸ்லாமிய நாடு (48) இஸ்லாமிய பிரச்சினை (8) இஸ்லாமிய மாநாடு (1) இஸ்லாமிய வங்கி (13) இஸ்லாமியத் தமிழன் (16) இஸ்லாமியத் தீவிரவாதம் (117) இஸ்லாமியத் தீவிரவாதி (104) இஸ்லாமியர்களை கொல்லும் முறை (7) இஸ்லாமிஸ்ட் (8) இஸ்லாமும் இந்தியாவும் (85) இஸ்லாம் (109) இஸ்லாம் செக்ஸ் (5) இஸ்லாம் நகர் (2) இஸ்லாய மாநாடு (1) ஈ. வே. ரா (6) ஈட்டிக்காரன் (1) ஈத் (2) ஈத் இ மீலாதுன் நபி (1) ஈத் இ மீலாத்-உந் நபவி (1) ஈரான் (2) ஈரோடு (4) ஈழ குண்டுவெடிப்பு (5) ஈழம் (4) உக்கடம் (13) உக்கா (1) உடலின்பம் (7) உடலுறவு (10) உடலுறவுக் காட்சிகள் (5) உடல் (7) உடைப்பு (3) உதய சூரியன் (4) உதவி (2) உதவியாள் (2) உதை (1) உபவாசம் (1) உபி (3) உமர் ஃபரூக் (5) உமர் அப்துல்லா (1) உமர் மாடீன் (1) உமையாத் (1) உயித்தெழுதல் (5) உயிர் (3) உயிர் பலி (16) உயிர்கொல்லி (3) உரிமை (3) உருது (1) உருது ஜிஹாதி (5) உருது மொழி (21) உருவ வழிபாடு (14) உருவம் (3) உரூஸ் (5) உரையாடல் (2) உறவினர் (7) உறுப்பினர் நியமனம் (1) உலமா வாரியம் (9) உலமாக்கள் (17) உல்லாசம் (6) உளவாளி (7) உளவு (4) உள் ஒதுக்கீடு (8) உள்துறை அமைச்சகம் (20) உள்துறை சூழ்ச்சிகள் (55) உள்ளாடை (1) உள்ளூர் இஸ்லாமிய தீவிரவாதம் (84) உள்ளூர் தீவிரவாத கும்பல் (39) உள்ளே நுழைவது (28) ஊடக வித்தைகள் (8) ஊடல் (4) ஊடுருவல் (3) ஊரடங்கு உத்தரவு (10) ஊர்வலம் (7) எச்சரிக்கை (10) எதிர்ப்பு (7) என்.ஐ.ஏ (9) என்ஐஏ (9) என்ஐஏ அதிகாரி (9) என்கவுன்டர் (4) என்டிடிவி (2) எபிடிரின் (1) எம். எஃப். ஹுஸைன் (6) எம்ஜிஆர் (1) எரித்தல் (1) எரிப்பு (12) எரியூட்டல் (4) எரியூட்டு (3) எலி கொல்லி (3) எலி மருந்து (3) எலி விசம் (3) எலோஹிம் (1) எல் (1) எல். முருகன் (1) எல்லை (7) எழுப்பும் நோக்கம் (1) எஸ். தமிழ்வாணன் (1) எஸ். ஹைதர் அலி (2) எஸ்.எம்.எஸ் (5) எஸ்.எம்.எஸ்கள் (1) எஸ்.எஸ். முஹம்மது இப்ராஹிம் (1) எஸ்.ஐ சூபி (1) எஸ்.சி (2) எஸ்.டி.பி.ஐ (5) எஸ்.வி. பட்டனம் (1) எஸ்.ஸி (2) எஸ்சி (4) எஸ்டிபிஐ (5) ஏ. கே. கான் (8) ஏ.ஆர்.ரஹ்மான் (1) ஏ.கே.அந்தோணி (1) ஏமாற்று வேலை (1) ஏர் இந்தியா (1) ஏர்வாடி (5) ஏர்வாடி காசிம் (4) ஏர்வாடி தர்கா (1) ஐ.எஸ் (47) ஐ.எஸ். தீவிரவாதிகள் (46) ஐ.எஸ்.ஐ (41) ஐ.டி.தீவிரவாதி (5) ஐஎஸ் (35) ஐஎஸ்ஐஎஸ் (49) ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் (46) ஐக்கிய ஜிஹாத் கவுன்சில் (13) ஐசில் (27) ஐசிஸ் (40) ஐதராபாத் (14) ஐபிஎல் கொச்சி அணி (1) ஐமுமுக (4) ஐஸில் (20) ஒசாமா பின் லேடன் (14) ஒசாமா பின்லேடன் (9) ஒட்டக பால் (2) ஒட்டகம் (1) ஒபாமாவின் யுத்தம் (2) ஒப்பாரி (1) ஒப்பியம் (1) ஒமர் இஸ்மயில் மொஸ்தபி. (1) ஒமர் மாடீன் (2) ஒருதலை காதல் (1) ஒருவழி இந்து-முஸ்லீம் காதல் கதை! (6) ஒருவழி இந்து-முஸ்லீம் திருமணங்கள்! (8) ஒற்றன் (3) ஒற்றுமை (1) ஒழிப்பு (1) ஒழுங்கு (1) ஒவைஸி (6) ஒஸாமா பின் லேடன் (13) ஓட்டு (28) ஓட்டுவங்கி (30) ஓம் (2) ஓரின சேர்க்கை (1) ஔரங்கசீப் (12) கங்கணா (2) கங்கையம்மன் கோவில் (1) கசாப் (9) கசாப்புக்காரத்தனம் (6) கஜல் (1) கஜினி (2) கஞ்சா (3) கஞ்சி (9) கஞ்சி அரிசி (1) கஞ்சி குல்லா (5) கடத்தல் (1) கடத்தல் மிரட்டல் (3) கடலூர் (1) கடவுள் (4) கடார் (1) கடை (3) கடையநல்லூர் (3) கட்சிமாறி (1) கட்ட சாகுல் (1) கட்டப் பஞ்சாயத்து (2) கட்டப்பஞ்சாயத்து (2) கட்டி வைத்தல் (1) கட்டுக்கதை (3) கட்டுப்பாடு (3) கட்டை அவிழ்த்தல் (2) கணிப்பு (1) கண்ணூர் (1) கதறல் (1) கத்தி (8) கந்தசாமி தெரு (4) கந்தூரி (1) கனிமொழி (2) கன்னட ஜிஹாதி (2) கன்னட பிரபா (1) கன்னட ரக்ஸன வேதிகே (1) கன்னி (2) கன்னிக்கழிப்பு (3) கன்னித்தன்மை (3) கன்ன்ட ஜிஹாதி (1) கமல் செனாய் (1) கமால் ஃபரூக் (1) கம்பி (1) கம்பீர் (1) கம்யூனிசம் (4) கம்யூனிஸ-காங்கிரஸின் “செக்யூலரிஸக் கூட்டுத் விளையாடல்கள் (9) கம்யூனிஸம் (3) கராச்சி (3) கராச்சி திட்டம் (34) கரீம் காம்பவுண்ட் (1) கரு (2) கரு தரித்தல் (1) கருணா ஃபௌண்டேஷன் (1) கருணாநிதி (21) கருணை (3) கருணை மனு (1) கருணைக் கொலை (1) கருதரிப்பு (1) கருத்து (4) கருத்துச் சுதந்திரம் (8) கருத்துரிமை (4) கருப்பு ஆடு (1) கரேழி (1) கரோனா (6) கரோனா ஜிஹாத் (3) கரோனா தொற்று (6) கர் வாபசி (1) கர் வாபஸி (1) கர்நாடகா (1) கர்பலா (9) கர்பலா உயிர்த் தியாகம் (4) கர்ப்ப தானம் (1) கர்ப்பமாக்கல் (1) கர்ப்பம் (3) கறை (1) கற்களை வீசி தாக்குவது (10) கற்பழிக்கும் பாபா ஷேக் (1) கற்பழிக்கும் ஷேக் (2) கற்பழிப்பாளி (3) கற்பழிப்பு (30) கற்பழிப்பு ஜிஹாத் (15) கற்பு (26) கற்ப்பழிப்பாளி (1) கலவரங்கள் (44) கலவரம் (63) கலவி-சரச வீடியோ (4) கலாட்டா (11) கலிமா (5) கலை (2) கல் (6) கல் வீச்சு (8) கல்யாண அகதிகள் (2) கல்யாணம் (4) கல்யாணம் செய்தல் (1) கல்லடி ஜிஹாத் (24) கல்லறை (1) கல்லூரி தகர்ப்பு (4) கல்லெரிந்து கலவரம் (28) கல்லெறி வெறிக்கூட்டம் (28) கல்வத் (9) கல்வீச்சு (40) கல்வெட்டு (2) களஞ்சியம் (1) கள்ள உறவு (4) கள்ள நோட்டுகள் (16) கள்ளக் காதல் (4) கள்ளக்காதல் (3) கள்ளக்குடியேறி (1) கள்ளநோட்டுகளை அச்சடிக்கும் பாகிஸ்தான் (14) கள்ளநோட்டுகள் (5) கழுத்தறுப்பு (5) கழுத்து (1) கவுனி (2) கவுன்சிலர்-ஜெனரல் (1) கவுரவக் கொலை (1) கவுஸ் பாஷா (1) கவுஸ் யாகூப் ஹுசைன் (1) கவ்வாலி (1) கஸ்தூரி (1) காஃபிர் (155) காஃபிர் இந்தியர்கள் (114) காஃபிர்-மோமின் கூட்டணி (51) காஃபிர்கள் (122) காக்ரகார் (1) காங்கிரசுக்கு எச்சரிக்கை (13) காங்கிரஸ் (20) காசர்கோடு (2) காசிம் அன்சாரி (1) காஜா (1) காஜா மொஹிதீன் (1) காஜா ரோடு (2) காஜா ரோட் (2) காஜி (2) காஜி சட்டம் (1) காஜியா நாஷிகா (1) காட்யம் (1) காதர் பாட்சா (1) காதர் மொகிதீன் (4) காதர் மொய்தின் (4) காதர் மொஹ்தீன் (3) காதர்பாஷா (1) காதர்மொய்தின் (5) காதலன் (3) காதலி (4) காதலிப்பது போல் நடித்து ஏமாற்றி மதம் மாற்றூவது! (6) காதலில் போரா காதலன்-காதலி போரா? (8) காதல் (15) காதல் ஜிஹாத் (43) காதல் புனித போர்! (25) காதல் மந்திரக் கட்டு (4) காதல் மந்திரக் கட்டை அவிழ்த்தல் (3) காதிம் (1) காதியா (1) காதியான் (2) காதியான்கள் (4) காந்தஹார் (14) காந்தாரம் (14) காந்தி (2) கானா (1) கான் (2) காபத்துல்லாஹ் (3) காபா (13) காபிர் (20) காமம் (9) காமரூன் (2) காயல்பட்டினம் (3) காயிதே மில்லத் (7) காரைக்கால் (3) கார் (2) கார்டூன் (5) கார்த்திகாயினி (2) காலனி (1) காலிப் (3) காலிஸ்தான் (1) கால் (1) கால்பேடா (1) காளியம்மன் கோவில் (1) காவடி (1) காவலர் (3) காவி (1) காஷ்மீர் (53) காஷ்மீர் கலாட்டா (31) காஷ்மீர் சட்டசபை கலாட்டா (14) காஸா ரோடு (2) காஸா ரோட் (2) கிக் மெஸஞ்சர் (1) கிச்சன் (2) கிச்சன் புகாரி (1) கிச்சன் புஹாரி (1) கிச்சான் (3) கிச்சிப் பாளையம் (2) கிச்சிப்பாளையம் (2) கிடார் (1) கிண்டி மசூதி (1) கினியா (2) கிரக்கம் (2) கிரிக்கெட் விளையாட்டு (3) கிரிஷ் கானார்ட் (1) கிரிஸ் கானார்ட் (2) கிரிஸ் கார்னாட் (1) கிரிஸ்டினா (1) கிரிஸ்தவர் (2) கிருத்துவர் (3) கிருஷ்ணகிரி மலை (1) கிருஸ்துவர் (3) கிரேஸி (1) கிறிஸ்தவ மருத்துவமனை (1) கிலானி (5) கிலாபத் (16) கிலாபத் இயக்கம் (14) கிலாபஹ்.இ.எப்.எக்ஸ் (1) கில்கிட் (1) கிளினிக் (2) கிளைடோரிடெக்டோமி (1) கிளைடோரிஸ் (1) கிழக்கு பாகிஸ்தான் (10) கிழக்கு மித்னாப்பூர் (2) கிஸ்த்வார் (2) கீ-போர்ட் (1) கீழக்கரை (4) கீழுள்ளாடை (1) குக்கர் குண்டு (1) குக்கர் வெடிகுண்டு (2) குஜராத் (11) குஞ்சி (1) குடகு (1) குடல் (1) குடி (1) குடிசைத் தொழிலான கல்வீச்சு (2) குடிப்பிரிவு (2) குடிமகன் (3) குடிமகன்கள் (3) குடியுரிமை (1) குடியுரிமை சட்டம் (1) குடியேறுதல் (2) குடும்ப திவிரவாதம் (2) குடும்பம் (2) குடை (2) குட்டப்பா (1) குட்டு (1) குண்டா (3) குண்டி (5) குண்டு (32) குண்டு தயாரிப்பு (55) குண்டு நேயம் (21) குண்டு வெடிப்பது (68) குண்டு வெடிப்பு (18) குண்டு வெடிப்பு வழக்கு (49) குண்டுவெடிப்பாளி ஜஹ்ரன் ஹாஷிம் (2) குண்டுவெடிப்பு (36) குதா (1) குதாமுல் இஸ்லாம் (2) குதிரை (1) குத்து வைத்தியம் (1) குந்தலீன் பலோச் (2) குன்டலீன் பலூச் (2) குன்னங்குளம் (1) குன்னம்குளம் (1) குன்னின்புரா (1) குன்றம் (1) குன்ஹாலங்குட்டி (1) குப்ரு (2) குமார் விஸ்வாஸ் (1) கும்ப மேளா (1) கும்பமேளா (2) கும்பல் (2) கும்மாளம் (2) குரானா-குறளா (2) குரானில் அரசமரம் (1) குரான் (40) குரான் எரிப்பு (3) குரு (2) குருமா (1) குரூரம் (17) குரோதம் (6) குர்பானி (2) குர்ரம் (1) குறளா-குரானா (2) குறள் (2) குறிச்சி (1) குற்ற மனப்பாங்கு (1) குற்றச்சாட்டு (1) குற்றஞ்சாட்டப்படக்குடிய ஏற்புடையதாக பல ஆவணங்கள் (1) குற்றப் பழக்கம் (1) குற்றம் (5) குலாம் அப்துல் ரஹ்மான் காதரியா (1) குலாம் நபி ஆசாத் (1) குலாம் நபி பய் (1) குலாம் ரசூல் மாலிக் (1) குலுக்கல் (2) குல்லா (11) குல்லா கஞ்சி (3) குல்ஷன்குமார் (2) குளத்துப்புழா (1) குளம் (1) குழந்தை இல்லாததால் பல திருமணம் (1) குழந்தை கற்பழிப்பாளி (2) குழந்தை கற்ப்பழிப்பாளி (2) குழந்தை நரபலி (3) குழந்தை பலி (1) குழந்தை பாலியல் (4) குழந்தை பெற்றெடுத்தல் (1) குவைத் (7) குவைத்தில் விபசார கும்பல் (1) குவைத்தில் வீட்டு வேலை (1) குஷித் ஆலம் கான் (5) கூடல் (2) கூடாரம் (1) கூட்டணி (11) கூட்டணி சித்தாந்தம் (7) கூட்டணி தர்மம் (7) கூட்டம் (2) கூட்டுக் குடும்பம் (1) கூர்க் (1) கூழ் (1) கூழ் அரிசி (1) கெம்ப கௌடா (1) கேக் (1) கேச்சேரி (1) கேணிக்கரை (1) கேணிக்கரை போலீஸ் ஸ்டேஷன் – குற்றங்கள் அதிகம் பதிவு (1) கேன்ஸர் (1) கேப் (1) கேரள ஜிஹாதி (26) கேரள ஜிஹாதிகள் (26) கேரள தீவிரவாதம் (30) கேரள பயங்கரவாதம் (29) கேரள போலீஸார் (9) கேரள முஸ்லீம் சேவை சங்கம் (6) கேரளா (9) கேல் (1) கேவலப்படுத்திய முஸ்லீம்கள் (2) கை (1) கை-உன்–நாஸ் இன்டர்நேஷனல் டிரஸ்ட் (1) கைதி (4) கைது (26) கைபேசி (3) கையெறி குண்டுகள் (12) கொக்கி (1) கொக்கோகப் பேச்சு (3) கொக்கோகம் (7) கொங்கலம்மன் கோவில் (5) கொடகு (1) கொடி (10) கொடி எரிப்பு (7) கொடிய நோய் (1) கொடியேறி பாலகிருஷ்ணன் (1) கொடியேற்றம் (6) கொடியை அவமத்தித்த கிலானி (1) கொடுக்கு வைத்தியம் (1) கொடுங்கலூர் (1) கொடுங்கல்லூர் (1) கொடூரம் (6) கொடை (1) கொண்டாட்டங்கள் (1) கொண்டாட்டம் (5) கொரியர் (1) கொரியர் கம்பனி (1) கொரோனா (4) கொரோனா ஜிஹாத் (1) கொரோனா பாதிப்பு (1) கொரோனா வைரஸ் (1) கொற்கை (1) கொலை (31) கொலை குண்டுவெடிப்பாளி ஜஹ்ரன் ஹாஷிம் (1) கொலை சடங்கு (1) கொலை செய்வது (6) கொலை மிரட்டல் (3) கொலை வழக்கு (12) கொலை வெறி (9) கொலைகாரர்கள் (5) கொலைவெறி (11) கொல் (1) கொல்கொத்தா (1) கொல்லம்பாளையம் (3) கொளத்தூர் மணி (1) கொள்ளை (1) கொள்ளையடி (1) கொழுக்கொட்டை (1) கோகர்ணம் (1) கோக்கைன் (1) கோஜா (1) கோட்டக்குப்பம் (1) கோபுரம் (1) கோரிப்பாளையம் (1) கோலீன் ல ரோஸ் (1) கோழி (1) கோழை (1) கோவிட்-19 (1) கோவில் (1) கோவில் இடிப்பு (1) கோவை (6) கோவை கார் (1) கோவை கார் குண்டு (1) கோவை குண்டுவெடிப்பு (1) கௌதம் கம்பீர் (1) கௌதம் நவல்கா (1) கௌதாரி (2) கௌரவக் கொலை (1) கௌரவம் (2) கௌஹாத்தி (2) க்ஃப் வாரிய சிறப்பு நிர்வாக அதிகாரி (1) சகஜமாக இருந்து வரும் நிலை (1) சகிப்பு (5) சகிப்புத் தனம் (8) சகிப்புத் தன்மை (10) சகிப்புத்தனம் (9) சகிப்புத்தன்மை (9) சகேதன் விழா (1) சகோதரர் (2) சகோதரி (1) சங்கப் பரிவார் (2) சங்கம் (2) சங்கராச்சாரி (2) சசி தரூர் (1) சச்சிதானந்த பாரதி (1) சஜித் (1) சஜ்ஜத் லோன் (2) சஞ்சய் (1) சஞ்சய்தத் (2) சடங்குகள் (2) சட் (3) சட்கா (1) சட்ட வாரியம் (1) சட்டசபை (3) சட்டத்துறையினர் (1) சட்டத்தை வளைப்பது! (6) சட்டமீறல் (19) சட்டம் (19) சட்டம் மீறல் (19) சட்டவிரோதம் (4) சண்டை (4) சண்டை போடுவது (3) சதி (2) சதை (2) சத்திய சரணி (1) சத்திய சரனி (1) சத்தியாகிரகம் (1) சந்தனகூடு (1) சந்தனம் பூசும் உரூஸ் வைபவம் (1) சந்தனம் பூசும் நிகழ்ச்சி (2) சந்தேகம் (7) சனிக்கிழமை (1) சன்னி (8) சன்னி ஜமைதுல் உல்மா (3) சபி அர்மார் (1) சமத்துவ ஞானிகள் (1) சமத்துவம் (6) சமரசப்பேச்சு (10) சமரசம் (5) சமஸ்கிருதம் (3) சமஸ்தா (1) சமாதி (2) சமில் பஸேவ் (1) சமீம் (1) சமீரா பானு (1) சமீராபானு (1) சம்சுதின் (1) சம்சுதீன் (5) சம்பள உயர்வு (1) சம்பளம் (2) சம்ஸ்கார வேதி (2) சயீத் நூரி (1) சரசமான பேச்சு (1) சரசம் (1) சரவணன் (1) சரஸ் (1) சரித்திர ஆதாரம் (2) சரித்திரம் (2) சரீயத் (73) சரீயத் சட்டம் (58) சர்கோதா (1) சர்தார் உசேன் (1) சலஹ் அப்துல் ரஸாக் (1) சலாபிசம் (8) சலாபிஸம் (8) சலாமியா பானு (2) சலாவுத்தீன் (3) சல் (1) சல்மான் குர்ஷித் (1) சவ ஊர்வலம் (1) சவிகுர் ரஹ்மான் பர்க் (1) சவுதி (17) சவுதி அரேபியா (12) சவுதி மந்திரவாதி (2) சவூ‌தி அரே‌பியா (11) சஹாபுத்தீன் (4) சாகுல் (2) சாகுல் அமீத் (3) சாகுல் ஹமீது (1) சாட்சி (3) சாதர் (4) சாதி (1) சாத்தான் (2) சாத்தான்குளத்தினர் (1) சாத்தான்குளம் (1) சானவாஸ் (2) சானியா மிர்சா (9) சான்றிதழ் (2) சான்ஹோ (1) சாப்பாடு (3) சாயிரா பேகம் (1) சாயோப்ரயா பாதை (1) சாய்ஜி (1) சாரதா (1) சாராயம் காய்ச்சுபவர்கள் (1) சார்லி ஹெப்தோ (1) சாலைகளில் தடைகளை ஏற்படுத்துவது (1) சாவு (4) சாஸ்தாம்கோட்டா (3) சிகரம் (1) சிகிச்சை (1) சிகை (2) சிகை அறுப்பு (2) சிகையறுப்பு (2) சிங் (1) சிட்டகாங் (7) சிதம்பர ரகசியங்கள் (18) சிதம்பரம் (2) சிதம்பரம் கோவில் உழைவு போராட்டம் (1) சிதைப்பு (3) சித்தராமய்யா (2) சித்தராமையா (3) சித்தராமைய்யா (2) சித்திக் அலி (2) சித்திரவதை (4) சித்தூர் (5) சித்ரவதை (1) சிந்து (4) சிந்த்-ஹிந்த் ஹிந்த்-சிந்த் (11) சினிமா (1) சின்ன பசங்க (1) சின்னம் (7) சிபிசிஐடி (2) சிமி (24) சிமுலியா (1) சிம் (7) சிம் கார்ட் (9) சியாசத் (7) சிரச்சேதம் (3) சிரியா (8) சிருங்கேரி (2) சிறுபான்மையினர் (36) சிறுபான்மையினர் நலத்துறை (7) சிறுமி (3) சிறுமிகளின் திருமணத் தடுப்புச் சட்டம் (1) சிறுவரை முன் நிறுத்துவது (1) சிறுவர் கற்பழிப்பு (3) சிறுவர் பாலியல் (5) சிறை (5) சிறை காவலர் (2) சிறைச்சாலை (2) சிறையில் அடைப்பு (6) சிற்பம் (2) சிற்றின்பம் (1) சிலந்தி (1) சிலை (1) சிலை வழிபாடு (6) சில்மிசம் (3) சில்மிஷம் (4) சிவன் கோவில் தாக்கப்பட்டது (4) சீக்கியர் (1) சீட்டாட்டம் (1) சீட்டு (1) சீதக்காதி (1) சீனிக்கட்டி (1) சீரிய குணங்கள் மற்றும் பாவத் தடுப்பு கமிஷன் (1) சுஜயா (1) சுஜயா சந்திரன் (1) சுதந்திரதினம் (1) சுதந்திரம் (3) சுத்தம் (4) சுத்தம் செய்தல் (1) சுத்தி (2) சுந்தர பாண்டியன் (3) சுந்தரி (3) சுனாமி (1) சுனாமி வருவது (1) சுனில் தத் (1) சுன்னத் (19) சுன்னத் ஜமாஅத் (2) சுன்னத் ஜமாத் (2) சுன்னி (31) சுன்னி – இகே மற்றும் ஏபி குழுக்கள் (3) சுன்னி சட்ட போர்ட் (6) சுன்னி சட்டம் (11) சுன்னி முஸ்லீம் சட்டம் (8) சுன்னி வக்ஃப் போர்ட் (8) சுன்னி வாரியம் (6) சுன்னி-ஷியா (16) சுபஹனி மொய்தீன் (2) சுபஹனி மொஹித்தீன் (2) சுபைதத் (1) சுபைதா சொர்னேவ் (1) சுபையா (1) சுமதி (1) சுமோ (1) சுயமரியாதை (3) சுரணை (2) சுரேந்திரன் (1) சுற்றல் (1) சுலைமான் (6) சுலைமான் சேட் (1) சுல்தான் (6) சுல்தான்பேட்டை (5) சுல்பிகர் அலி (2) சுவாமி விவேகானந்தர் (1) சுஷ்மிதா (1) சுஷ்மிதா பானர்ஜி (1) சுஹானி சாந்த் (1) சூஃபி (9) சூஃபி நம்பிக்கையாளர் (4) சூஃபித்துவம் (4) சூடான் (1) சூடு (2) சூடு வைத்தியம் (1) சூடு வைப்பது (1) சூதாட்டம் (1) சூது (2) சூனியம் (3) சூபி (7) சூபித்துவம் (8) சூரத்கல் கடற்கரை (1) சூரையாடு (1) சூளைமேடு (2) சூழ்ச்சி (4) செக்யூலரிஸ கம்பனி (2) செக்யூலரிஸ ஜீவி (14) செக்யூலரிஸ வித்வான்கள் (2) செக்யூலார் அரசாங்கம் (15) செக்ஸ் (10) செக்ஸ் அடிமை (2) செக்ஸ் தொல்லை (5) செக்ஸ்-உறுப்புகளின் படங்கள் (1) செக்ஸ்-ஜிஹாத் (5) செங்கன்னூர் (1) செட்டிப் பல்லக்கு (2) சென்ட்ரல் (2) சென்னை (8) செம்மொழி மாநாடு (1) செயிக் மொஹம்மது ஹஸன் (1) செயிக் ஷமீம் (1) செல் (5) செல்போன் (13) செல்வ காளியம்மன் (1) செல்வ காளியம்மன் கோவில் (1) சேக் தாஹாசத் (1) சேதம் (2) சேர்ந்து வாழும் (1) சேலம் (2) சைக்கிள் குண்டு (1) சைனா மொபைல் (1) சைபர்வெளி ராணுவம் (2) சைப்புன்னிஸா காஜி (1) சைப்புன்னிஸா காத்ரி (1) சையது (2) சையது அப்துல்லா புகாரி (1) சையது இக்பால் (1) சையது சஹாபுத்தீன் (1) சையது பானர்ஜி (1) சையது மன்சூர் (2) சையது முகமது அலி (1) சையத் ஷாநவாஸ் ஹுசைன் (1) சைரா பேகம் (1) சைவம் (2) சொத்துக்கள் (1) சொந்த வீட்டில் வளர்க்கப்பட்ட தீவிரவாதம் (5) சொந்தமண்ணின் ஜிஹாதி (7) சொரணை (1) சொர்க்கம் (3) சொர்னேவா (1) சோட்டானிக்கரா பகவதி அம்மன் கோவில் (1) சோதனை (2) சோதிடம் (1) சோயப் மாலிக் (9) சோர்வுடன் காணப்பட்ட வீரர்கள் (1) சோறு (1) சோவியத் யூனியன் (1) சோஹைப் இக்பால் (1) சௌகான் (1) சௌத்ரி (2) ஜகன்மோகன் (1) ஜகிர் (2) ஜஞ்சீர் (1) ஜட்டி (1) ஜனநாயகம் (3) ஜமா அத் (13) ஜமா மஸ்ஜித் (3) ஜமாஅத் (19) ஜமாஅத்தார் (9) ஜமாதே-இ-முஸ்தபா (8) ஜமாத் (61) ஜமாத் உலிமா-இ-ஹிந்த் (2) ஜமாத்-உத்-தாவா (30) ஜமாத்-உல்-தாவா (2) ஜமாயத்-உல்-உலமா (29) ஜமிலாபாத் (5) ஜமேசா முபின் (8) ஜமேஷா முபின் (8) ஜமேஷா முபீன் (6) ஜமைத் உல் முஜாஹித்தீன் (1) ஜமைத்-உக்-ஃபர்கன் (7) ஜமைத்-உல்-முஜாஹித்தீன் (6) ஜம்மு-காஷ்மீர் (32) ஜல்ஸா (2) ஜவாஹிருல்லா (17) ஜஹல்லியா (16) ஜஹித் ஹமீது (1) ஜஹ்ரன் ஹாஷிம் (1) ஜாகியா சொமன் (1) ஜாகிர் உசேன் (1) ஜாகிர் நாயக் (20) ஜாகிர் ஹுஸைன் (1) ஜாகீர் (5) ஜாதகம் (1) ஜாதி (1) ஜான்பாஸ் கான் (1) ஜாமியத்-இ-அஹ்லெ ஹடித் (1) ஜாமியா நிஜாமியா (1) ஜாமீன் மறுப்பு (2) ஜார்கெண்ட் (1) ஜார்கென்ட் (1) ஜார்ஜ் வூலின்ஸ்கி (1) ஜாலி (1) ஜாவத் மியான்டட் (1) ஜி-டிவி (2) ஜி. எம். ஷேக் (1) ஜின்னா (12) ஜிப்ராயில் (2) ஜியோஃப் லாவ்சன் (1) ஜிலானி (1) ஜிஷான் ஜோஹர் அப்துல் கனி (2) ஜிஹாதி (54) ஜிஹாதி அமெரிக்கக் கூட்டு (4) ஜிஹாதி அமெரிக்கர் (3) ஜிஹாதி அமெரிக்கர்கள் (4) ஜிஹாதி குருரக் குணம் (29) ஜிஹாதி கொலைக்காரர்கள் (49) ஜிஹாதி ஜேன் (6) ஜிஹாதி நேயம் (46) ஜிஹாதி வெறியாட்டம் (61) ஜிஹாதி-ஆதரவு மனப்பாங்கு (72) ஜிஹாதிகளுக்கு சம்பளம் (70) ஜிஹாதிகளுக்கு பணம் (75) ஜிஹாதித்தனம் (100) ஜிஹாதித்துவம் (101) ஜிஹாத் (179) ஜிஹாத் கையேடு (77) ஜிஹாத் தன்மை (75) ஜீனத் சவுகத் அலி (2) ஜீன் காபு (1) ஜீப் (2) ஜீவானாம்சம் (6) ஜீஹாதிகள் (3) ஜும்மா மசூதி (1) ஜெகத் கஸ்பர் ராஜ் (1) ஜெட் (1) ஜெட் ஏர்வேஸ் (1) ஜெத்தா (1) ஜெயக்குமார் (2) ஜெயந்தி (3) ஜெயபிரதா (2) ஜெயலலிதா (8) ஜெயா மேனன் (1) ஜெயித் ஹமீத் (1) ஜெயினுல் ஆபிதீன் (2) ஜெயிலர் (5) ஜெயில் (8) ஜெயில் உடைப்பு (1) ஜெயில் பூட்டு (1) ஜெய்பூர் (2) ஜெய்ப்பூர் (3) ஜெய்ஸ்-இ-மொஹம்மது (2) ஜெலட்டின் குச்சிகள் (6) ஜெலேட்டின் குச்சி (1) ஜேம்ஸ் லெஸ்லி லூயிஸ் (1) ஜேவித் ஷேய்க் (2) ஜைனபா (2) ஜைனம் (2) ஜைனுல் ஆபிதீன் (3) ஜைப்புன்னிஸா காஜி (1) ஜைப்புன்னிஸா காத்ரி (1) ஜைஸ்-உல்-மொஹம்மது (1) ஜோதிடம் (2) ஜோத்பூர் (1) ஞானம் (1) டாக்கா (3) டாக்கா தாக்குதல் (3) டான்பிட் (1) டிடோனேடர் (3) டிரம் (1) டிரை-அசிடோன் டிரை-பெராக்ஸைட் (1) டிவிட்டர் (3) டீசல் (1) டீனா (1) டுனிசியா (2) டுனிஸியா (1) டுவென்டி-20 (2) டூனிஸ் (1) டெட்டனேட்டர் (12) டெட்டனேட்டர்கள் (15) டெட்டா ஷூ (1) டெரிக்கிங் (1) டெலிகிராம் (1) டெலேவார் சையிதீ (1) டெலேவார் ஹொஸைன் (1) டெலேவார் ஹொஸைன் சையிதீ (1) டெல்டா ஷூ (1) டெஹ்ரான் (1) டேட்டிங் (2) டேவிட் ஹெட்மேன் கோல்மென் (3) டைகர் மேமன் (2) டைகர் மேமம் (1) டைமர் (2) டைம் (5) டொமினிகா (1) டோகு உம்ரோவ் (1) த.மு.மு.க (10) தகவல் தொழில்நுட்பம் (1) தகியா (1) தக்காண முஜாஹித்தீன் (23) தக்தீர் (1) தங்கக் கட்டி (2) தங்கக்கட்டி (2) தங்கம் (2) தசை (1) தச்சநல்லூர் (1) தஞ்சாவூர் (1) தடியடி (2) தடியன்டவிடே நசீர் (4) தடுக்கப்பட்டது (3) தடுப்பது (2) தடை (11) தடை செய்யப்பட்ட துப்பாக்கி (2) தடை செய்யப்பட்ட ரகம் (3) தண்டனை குறைப்பு (1) தண்ணீர் குடித்தால் அடி (2) தண்ணீர் குடித்தால் உதை (2) தந்தம் (1) தந்தை மதம் (1) தனி நாடு (1) தனிமைப் படுத்துதல் (1) தனிமைப்படுத்துதல் (1) தனியாக ஆணுடன் இருப்பது (2) தன்னாட்சி (4) தன்யா (1) தப்பான ஆட்டம் (1) தப்பான தீர்ப்பு (1) தப்பித்தல் (2) தப்லீக் (4) தப்லீக் ஜமாஅத் (4) தமாம் (1) தமிமும் அன்சாரி (1) தமிமுல் அன்சாரி (2) தமிழக அரசு (2) தமிழக அரசு வேலை (1) தமிழக அரசு வேலை ஆணை (1) தமிழகத்து ஜிஹாதி (15) தமிழகத்து தீவிரவாதி (14) தமிழ் இந்து (4) தமிழ் ஜிஹாதி (17) தமிழ் நாத்திகன் (5) தமிழ் முஸ்லிம் (10) தமிழ் முஸ்லீம் (23) தமிழ்நாடு சுன்னத் ஜமாஅத் (5) தமிழ்நாடு சுன்னத் ஜமாத் (6) தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை (5) தமிழ்நாடு தவ்ஹீத் (11) தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (11) தமிழ்நாடு தௌஹீத் ஜமாத் (13) தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் (3) தமிழ்நாடு வக்பு வாரியம் (1) தமிழ்நாடு ஹஜ் கமிட்டி (4) தமீமுன் அன்சாரி (2) தமுமுக (18) தயாநிதி மாறன் (1) தருமம் (1) தரை வாடகை (1) தர்கா (14) தர்ஜி (1) தர்பங்கா (1) தர்மம் (2) தற்காலிக மனைவி (1) தற்கொலை (5) தற்கொலை குண்டு வெடிப்பு (7) தலாக் (24) தலாக்-தலாக்-தலாக் (7) தலித் (4) தலித் போர்வை (2) தலித் முஸ்லீம் (7) தலித் முஸ்லீம்கள் (6) தலிபான் (24) தலிபான் அமைப்பினர் தண்டனைகள் (17) தலை (4) தலையோலபரம்பு (1) தலைவெட்டி (6) தவ்ஹீத் (2) தவ்ஹீத் ஜமாஅத் (2) தஸ்லிமா (7) தஸ்லிமா நஸ்.ரீன் (5) தஸ்லிமா நஸ்ரின் (1) தஹவ்வூர் ஹுஸைன் ரானா (11) தஹவ்வூர் ஹுஸ்ஸைன் ரானா (5) தானியல் (3) தானியா தாஷிபா (1) தாய் (2) தாய் புகார் (1) தாய் மதம் (1) தாய்மதம் (1) தாய்லாந்து (3) தாய்வான் (1) தாரகேஷ்வரி பிரசாத் (1) தாருல்-இஸ்லாம் (2) தாருல்-ஹராப் (2) தார்-உல்-இஸ்லாம் (1) தாலி (1) தாலிபன் நீதிமன்றங்கள் (16) தாலிபான் (26) தாளம் (1) தாவுத் இப்ராஹிம் (12) தாவூதின் காதலி (5) தாவூத் இப்ராஹிம் (14) தாவூத் சையது ஜிலானி (4) தாவூத் ஜிலானி (19) தாவூத் ஜிலானியின் மனைவிகள் (3) தாவூத் மியான் கான் (1) தாஹிர் ஷைஜாத் (2) தி இந்து (2) திக்விஜய் சிங் (2) தினமணி (1) தினமலர் (1) திப்பு (8) திப்பு சமாதி (1) திப்பு சுல்தான் (8) திப்பு ஜெயந்தி (3) திப்புவின் கத்தி (1) திமுக (4) தியாகப் பலி (10) தியாகம் (10) தியாகி (1) திராவிட நாத்திகர்கள் (5) திரி (1) திரிணமூல் (1) திரிணமூல் காங்கிரஸ் (1) திரிபு (1) திரிபுரா (1) திருக்குறள் (3) திருடு (1) திருட்டு (2) திருட்டு சிடி பதுக்கல் (1) திருநங்கை (1) திருப்பதி (2) திருப்பரக்குன்றம் (3) திருப்பரங்குன்றம் (3) திருமணத் தடுப்புச் சட்டம் (1) திருமணத்திற்கு முன்பாக சேர்ந்து வாழ்வது (4) திருமணம் (12) திருமா (5) திருமா வளவன் (5) திருமாவளவன் (5) திருவிடைச்சேரி (1) திருவிழா (2) திறக்க (1) திறனாய்வு (1) திறப்பு (1) திலீப் பட்கோங்கர் (1) தில்லி இமாம் (1) தில்ஷுக் (1) தில்ஷுக் நகர் (2) தீ வைப்பு (2) தீக்குழி (2) தீட்டு (2) தீண்டாமை (3) தீநுண்மி (1) தீனா (1) தீய சக்திகளை விரட்டுவது (4) தீவிரவாத திட்டம் (12) தீவிரவாத நிதியுதவி (9) தீவிரவாதத்திற்கு துணை போவது (12) தீவிரவாதம் (29) தீவிரவாதி (30) தீவிரவாதிகளுக்கு பணம் (28) தீவிரவாதிகள் (19) தீவைப்பு (2) துக்கம் (2) துக்தரன்-இ-மில்லத் (1) துணை மேயர் (1) துண்டா (1) துண்டு (1) துன்புருத்தல் (1) துன்புறுத்தல் (1) துபாய் (15) துப்பாக்கி (15) துப்பாக்கிக் காட்டி மிரட்டுவது (1) துப்பாக்கிச் சூடு (8) துப்ரோவ்கா (1) தும்மநாயக்கன்பட்டி (1) துருக்க (7) துருக்கன் (14) துருக்கர் (16) துருக்கி (10) துருஷ்க (5) துருஷ்கா (7) துரோகம் (7) துர்கேஸ்வரி (1) துர்க்கம் (3) துறக்க (1) துலாகர் (5) துலுக்க (12) துலுக்கன் (15) துலுக்கப்பட்டி (2) துலுக்கர் (12) துலுக்கி (5) துல் கிஃபில் (1) தூக்கிச் செல் (1) தூக்கு (1) தூண்டிவிடும் எழுத்துகள் (2) தூண்டு (5) தூது-அஞ்சல் (1) தூய்மை (3) தூய்மையான கற்பு (3) தூஷணம் (2) தென் கொரியா (2) தெய்வம் (1) தெரிக்-இ-தாலிபான் பாகிஸ்தான் (3) தெரிந்தோ அல்லது தெரியாமலோ (4) தெலிங்கானா (3) தெலுங்கானா (3) தெலுங்கு ஜிஹாதி (1) தெஹ்ரீக் –இ-லபைக் யா ரஸூல் அல்லா (1) தெஹ்ரீக்-இ-கடம்-இ-நபுவத் (1) தேங்காய் (1) தேச கொடி (9) தேச விரோதம் (21) தேசவிரோத செயல்கள் (5) தேசவிரோதம் (14) தேசிய ஜிஹாதி தீவிரவாதம் (29) தேசிய புலனாய்வு இயக்குனர் (10) தேசிய புலனாய்வு துறை (12) தேசிய மனித உரிமைகள் ஆணையம் (2) தேசியக் கொடி (7) தேசியவாதி (3) தேனி (1) தேர்தல் (10) தேவிபட்டினம் (1) தேவேந்திரன் (1) தைவான் (2) தொகை (1) தொடாதே (1) தொடு (1) தொடுதல் (1) தொடை (4) தொத்து வியாதி (5) தொந்தரவு (3) தொப்பி (3) தொறக்க (1) தொற்று (1) தொற்று மருந்து (1) தொலைபேசி (2) தொல்துறை (1) தொழிற்சாலை (1) தொழுகை (13) தோபி (1) தோல் (4) தோள் (4) தௌகீர் ராஸா கான் (1) தௌவீத் ஜமாத் (8) தௌஹித் ஜமாத் (7) தௌஹீத் (8) தௌஹீத் ஜமாத் (6) நக்மா (2) நங்க பர்வதம் (1) நடனம் (2) நடவடிக்கை (2) நட்பு (3) நதிராபானு (1) நதீம் சைஃபீ (3) நத்தர்ஷா பள்ளிவாசலில் (1) நநஸ்ரியா (1) நந்தினி (1) நன்னடத்தை நிபந்தனை (3) நபி (2) நபீக் (1) நம்பர் (1) நம்பிக்கை (1) நம்பிக்கையில்லாதோர் மீதான போர் (12) நரகம் (4) நரபலி (5) நரம்பு (1) நரேந்திர மோடி (3) நர்கீஸ் தத் (1) நல்ல மொஹம்மது களஞ்சியம் (1) நல்லிணக்க நாயகர் (1) நவபாஷாணம் (1) நவாப் அலி (1) நவாப்வாலாஜா (1) நவாஸ் (2) நஷீர் (1) நஸ்ரியா (1) நாகராஜன் (1) நாகூர் (4) நாகூர் அனீபா (3) நாகூர் தர்கா (4) நாகூர் ஹனீபா (3) நாகூர் ஹூசைன் (1) நாகை நாகராஜன் (1) நாசம் (2) நாடகம் (2) நாட்டுக் குண்டு (1) நாட்டுப் பற்று (7) நாணம் (4) நாத்திக இந்து (4) நாத்திக காஃபிர் (7) நாத்திக முஸ்லீம்! (9) நாத்திகத் தமிழன் (8) நாத்திகம் (2) நான் தான் கடவுள் (1) நான்காம் பெண்டாட்டி (5) நான்காம் மனைவி (6) நான்கு பெண்டாட்டிகள் (5) நாயுடு அரிசி (1) நாளம் (1) நிகாப் (15) நிக்கா (19) நிக்கா நாமா (4) நிக்கா ஹலால (1) நிக்கா ஹலாலா (1) நிக்காஹ் (10) நிக்காஹ் நாமா (1) நிஜ தெய்வங்கள் (1) நிஜாமுத்தீன் (2) நிஜாமுத்தீன் ஜமாத் (1) நிஜாமுத்தீன் ஜமாத் மர்கஸ் (1) நிதி (1) நிதிநிறுவனம் (1) நிதியுதவி (2) நிதிஷ்குமார் (1) நிந்தனை (1) நியூ காலேஜ் (1) நியூயார்க் (1) நிர்மலகேரி (1) நிர்மலா (1) நிர்வாகம் (1) நிர்வாண ஓவியர் (4) நிர்வாண வைத்தியம் (1) நிர்வாணம் (4) நிஸார் அஹமது (1) நிஸ்ஸார் அஹமது (1) நீக்ரோ (2) நீடூர் (1) நீதி (2) நீதி மன்றம் (3) நீதிமன்றம் (3) நீலாங்கரை (1) நூதன முறை (1) நூருல் ஹூடா (3) நூரூல் ஹமீது (1) நூர் ஜியபுத்தீன் (1) நூர் ஹுஸைன் (1) நெருப்பு (3) நெல்பேட்டை (1) நெல்லூர் (3) நெல்லை (2) நேபாளம் (5) நேயம் (1) நேரம் (1) நேரு (2) நேர்த்திக் கடன் (2) நைஜர் (2) நைஜீரியா (4) நைட் கிளப் (1) நைட்ரேட் (2) நோக்கம் (2) நோன்பு (2) நோன்பு அரிசி (1) நோய்கொள்ளி (4) பகவத் (2) பகீர் (1) பகுத்தறிவற்ற மதம் (1) பகுபா (1) பகுப்பு (1) பகை (1) பக்ஃப் வாரிய சிறப்பு நிர்வாக அதிகாரி (1) பக்கிரியம்மாள் (1) பக்ரீத் (1) பக்ருதீன் (2) பங்க பந்து (4) பங்களா ஹுஜி (2) பங்களாதேச தீவிரவாதம் (2) பங்களூரு வெடிகுண்டு (4) பங்காள தேசம் (4) பங்காளதேசம் (3) பங்காஸ் குடியினர் (1) பசு (1) பசு இறைச்சி (1) பசு மாமிசம் (1) பசு வதை (1) பச்சோந்தி (2) பஜரங் தள் (1) பஜார் (1) பஞ்சாயத்து (2) பஞ்யாத்து (1) படகு கவிழ்ந்தது (1) படம் (1) படுக்க வா (1) பட்கல் (7) பட்டகல் (6) பட்டக்கல் (5) பட்டி (1) பட்டினி (1) பணப்பரிமாற்றம் (1) பணமும் பரிசு பொருட்களும் கிடைக்கும் (1) பணம் (1) பணி (1) பண்டிகைகள் (1) பண்ணா (1) பத்தான் (1) பத்ருதீன் அஜ்மல் (2) பத்வா (3) பந்து (2) பன்னா (2) பன்னா இஸ்மாயில் (1) பன்றி (1) பயங்கரவாத செயல்களை தேசிய விசாரணை ஆணையம் (2) பயங்கரவாத செயல்பாடுகள் குறித்த விசாரணை குழு (3) பயம் (2) பயிர்ப்பு (2) பயிற்சி (1) பய்ஹான் அல் கம்தி (1) பரங்கிப்பேட்டை (2) பரமக்குடி (1) பரிசோதனை (1) பர்கா (30) பர்கா போராட்டம் (3) பர்தா (41) பர்தா அணிவது (26) பர்தா காக்கும் உடையா? (10) பர்தா மத-அடையாளமா? (12) பர்துவான் (4) பர்த்வான் (9) பர்மா (11) பர்மா பஜார் (2) பர்வானா (2) பர்வீன் (4) பர்ஹான் வனி (1) பறவை பாட்சா (1) பற்ற வைக்கும் திரிகள் (1) பல திருமணம் ஏன்? (13) பலமணம் (7) பலி (9) பலி ஆடு (2) பலிக்கடா (7) பலிஸ்தான் (1) பலுச்சிஸ்தானம் (6) பலுச்சிஸ்தான் (6) பலூச்சிஸ்தான் லிபரேஷன் ஆர்மி (2) பல்லாவரம் (1) பள்ளி கொண்டா (1) பள்ளி தகர்ப்பு (1) பள்ளி வாசல் (13) பள்ளிகள் (2) பள்ளிகொண்டா (3) பள்ளிவாசல் (16) பழங்குடி (1) பழனி (5) பழமைவாத கோட்பாடு் (36) பழமைவாதம் (50) பவித்ரா (6) பவுல் (1) பஷீர் (1) பஸ்மந்தா (1) பஹாய் (1) பஹாய்க்கள் (2) பாகிஸ்தானின் சைபர்வெளி ராணுவம் (1) பாகிஸ்தானின் தாலிபான் (5) பாகிஸ்தானியப் பெண்கள் (4) பாகிஸ்தான் (30) பாகிஸ்தான் கொடி (1) பாகிஸ்தான் சுன்னி தெஹ்ரீக் (1) பாகிஸ்தான் தீவிரவாதம் (34) பாகிஸ்தான் மக்கள் கட்சி (2) பாகிஸ்தான் முஸ்லீம் லீக் (1) பாக்தாத் (1) பாஜக (4) பாடி (1) பாட்டம் (2) பாட்டி (2) பாட்னா (1) பாட்ரிக் மாத்யூஸ் (1) பாண்டியன் (4) பாதியாக உடைக்கப்பட்ட மசூதி (1) பாத்திமா (4) பாத்திமா முசாபர் (1) பாத்திமா முஸப்பர் (1) பாத்திமுத்து (2) பாத்தியா (1) பானர்ஜி (2) பானு (2) பாபர் (2) பாபுலர் பிரென்ட் ஆப் இந்தியா (7) பாப் வுட்வார்ட் (1) பாப்புலர் ஃபரென்ட் ஆஃப் இன்டியா (14) பாப்புலர் பரென்ட் ஆப் இந்தியா (18) பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா (12) பாப்புலர் பிரென்ட் (11) பாப்புலர் பிரென்ட் ஆப் இந்தியா (10) பாப்புலர் பிரென்ட் ஆப் இன்டியா (10) பாமிய புத்தர் சிலை (1) பாம்பே (1) பாரத் மாதா கி ஜெய் (1) பாரபட்சம் (1) பாரா ரபியுல் அவ்வல் (1) பாராமவுன்ட் மார்க்கெட்டிங் (1) பாராமவுன்ட் மார்க்கெட்டிங் கார்ப்பரேஷன் (2) பாராளுமன்றம் (2) பாரிஸ் (2) பாரூக் (3) பார்த்தோ அல்லது பார்க்காமலோ (2) பார்பேடா (1) பாலம் (1) பாலியல் (4) பாலியல் அடிமை (2) பாலியல் குற்றம் (12) பாலியல் தொல்லை (7) பாலியல் வன்முறை (11) பால் காவடி (1) பாவத் தடுப்பு (2) பாவத் தடுப்பு கமிஷன் (1) பாவப் பணம் (2) பாவப்பணம் (2) பாவம் (1) பாவி (1) பாஷா (3) பாஷாவின் மகன் (2) பாஷிர் (1) பாஸ் வார்டுகளைத் திருடுவது (1) பி. அப்துர் காதர் (1) பி.என்.பாண்டே (1) பி.எப்.ஐ (4) பிக்ரிக் (1) பிக்ரிக் அமிலம் (1) பிசாசு (1) பிச்சை (1) பிஜேபி (10) பிஜேபி-முஸ்லிம் (2) பிஜ்நோர் (2) பிஜ்னோர் (2) பிஞ்சு குழந்தைகள் (1) பிடி (1) பிடோபைல் (2) பிண ஊர்வலம் (3) பிணை-விடுதலை (1) பிணைத்து வைத்தல் (1) பிண்டம் (1) பிதாயீன் (4) பின்தங்கிய முஸ்லீம்கள் (1) பின்லேடனின் குடும்பம் (2) பின்லேடனின் மனைவி (2) பியூஸ் ஒயர் (1) பிரசர் குக்கர் (2) பிரசாரம் (5) பிரச்சாரம் (5) பிரஜை (2) பிரன்னாய் ராய் (1) பிரபல சரித்திர ஆசிரியர்கள் (1) பிரபாகரன் (1) பிரஸர் குக்கர் (2) பிராணேஷ் பிள்ளை (1) பிரான்ஸ் (1) பிராயசித்தக் கொலை (1) பிராயசித்தம் (1) பிரார்த்தனை (1) பிரிப்யூஸ் (1) பிரியாணி (2) பிரிவினை (2) பிரிவினைவாதம் (3) பிரிவினைவாதி ஜிலானி (1) பிருந்தா காரத் (1) பிரேம் (1) பிரேம் ராஜ் (2) பிரேம்ராஜ் (1) பிரோஸ் இஸ்மாயில் (1) பிர்பும் (1) பிறந்த நாள் (3) பிறப்பு (1) பிலால் (1) பில்லி (4) பிளேட் (1) பிள்ளை (1) பிள்ளைக்கறி (1) பீ.ஜே.மீர் (1) பீகார் (4) பீடி (1) பீடித்தல் (1) பீதி (1) பீபி ஆயிஷா (2) பீரங்கி (2) பீர் (2) பீலா ராஜேஷ் (1) பீவி (3) பீஸ் டிவி (3) புகட் (1) புகழேந்தி (1) புகாரி (9) புகார் (2) புகெட் (1) புகையிலை (1) புது கல்லூரி (1) புதைத்தல் (4) புத்த மதம் (2) புத்தகங்கள் எரிப்பு (3) புத்தகம் (9) புத்ததேவ் பட்டாச்சார்ஜி (1) புத்தர் (2) புத்தாண்டு (1) புத்தூர் (1) புனிதப் போர் (51) புரளி (2) புர்ஹான் வனி (1) புர்ஹான் வானி (1) புலி (1) புலியூர் ஜும்மா பள்ளிவாசல் (1) புலியூர் மசூதி (1) புளூஃப்ளிம் (2) புழக்கத்தில் விடும் ஜிஹாதிகள் (1) புழல் (5) புழல் சிறை (1) புழல் ஜெயில் (1) புஹாரி (1) பூஜை (1) பூமி பூஜை (1) பூர்வீக இந்து (1) பெங்களூரு (2) பெட்டிங் (1) பெட்ரோல் (2) பெட்ரோல் குண்டு (1) பெண் (7) பெண் உரிமை (8) பெண் உறுப்பு (1) பெண் கடமை (4) பெண் சுன்னத் (1) பெண் தலைவர் (1) பெண்களின் சுன்னத் (6) பெண்களின் பிரச்சினை (2) பெண்களை முன் நிறுத்துவது (2) பெண்கள் சுன்னத் (9) பெண்டாட்டி (2) பெண்ணல்ல (3) பெண்ணியம் (12) பெண்ணுரிமை (9) பெண்ணுறுப்பு (1) பெண்ணுறுப்பு சிதைப்பு (1) பெண்பால் (1) பெண்மை (7) பென்டா எரித்ரிடோல் டிரைநைட்ரேட் (2) பெய்ரூட் (1) பெரியகுளம் (2) பெரியபாளையம் (1) பெரியப் பட்டு (1) பெரியப் பட்டு ஏரி (1) பெரியப்பட்டு (1) பெரியப்பட்டு ஏரி (1) பெரியார் (2) பெரியார்தாசன் (1) பெருந்துறை (5) பெருந்துறை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை (5) பெருமாள் (2) பெருமாள் கோவில் (2) பெர்னார்ட் டிக்னஸ் வெரியாக் (1) பெர்விஸ் (1) பெல்ஜியம் (1) பெஷாவர் (1) பெஸ்லான் (1) பெஸ்லான் பள்ளி (1) பேகம் (3) பேசுவது (2) பேச்சு வார்த்தை (1) பேச்சுவார்த்தை (1) பேட்டரி (3) பேட்டரி கட்டைகள் (4) பேண்ட் (1) பேத்தி (1) பேன்டி (1) பேன்ட் (1) பேயோட்டு (1) பேயோட்டுதல் (1) பேய் (1) பேரணி (2) பேஷன் ஷோ (2) பேஸ்புக் (3) பைசூல் (3) பைசூல் மன்னார் (1) பைத்தியம் (2) பைபிள் (3) பைப் (3) பைப் குண்டு (2) பைப் வெடிகுண்டு (6) பொகோ ஹராம் (3) பொட்டாசியம் நைட்ரேட் (1) பொது சிவில் சட்டம் (3) பொன்விளைந்த களத்தூர் (1) பொம்மிநாயக்கன்பட்டி (1) பொம்மிநாயக்கம்பட்டி (1) பொய்மை (2) பொய்மைக் கதை (1) போகோ ஹராம் (3) போக்குவரத்து (1) போங்கு (1) போட்டி (1) போதை (6) போதை மருந்து (5) போபால் (2) போபுலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா (3) போபையா (1) போரா (2) போராட்டம் (7) போராளி (7) போர் (2) போர் குற்றம் (1) போர்ஹா (5) போலி (2) போலி சிம் கார்டுகள் (2) போலீசாரை மிரட்டுவது (2) போலீஸாரை மிரட்டுவது (2) போலீஸார் (1) போலீஸ் (3) போஸ் (1) போஹ்ரா (3) பௌத்தம் (3) பௌத்தர் (4) பௌத்தர்கள் (3) பௌல் (1) ப்ரேம்ராஜ் (1) மகளிர் கோர்ட் (2) மகள் கற்பழிப்பு (1) மகாலட்சுமி (1) மக்கள் ஜனநாயகக் கட்சி (2) மக்கள் போராட்டக் குழு (2) மக்கா (6) மங்கள வாத்தியங்கள் (3) மங்களூரு (1) மங்களூர் (1) மங்கள் குடியினர் (1) மங்காத்தா (2) மசூதி (31) மசூதி இடிப்பு (8) மசூதி எரிப்பு (3) மசூதி சாவு (7) மசூதி தெரு (4) மசூதி தொழுகை (8) மசூதி நிர்வாகி (2) மசூதி வளாகத்தில் நினைவிடம் (4) மசூதியில் குண்டு தயாரிப்பது (4) மசூதியில் கொலை (3) மசூதியை இடித்தல் (3) மஜீத் மஜீதி (1) மஜ்லிச்துல் முஸ்லிமீன் (2) மஞ்சப்ப ஷெட்டி (1) மடம் (3) மடிகரே (1) மணலி (1) மணிகண்டன் (1) மணிப்பூர் (2) மணிமண்டபம் (3) மண்குழி (1) மண்டபம் யூனியன் (1) மண்டபம் யூனியன் தலைவர் (1) மண்டையோடு (1) மண்ணடி (5) மத தண்டனை (1) மத நல்லிணக்க விருது (2) மத நல்லிணக்க விருது வழங்கும் விழா (1) மத-அடிப்படைவாதம் (43) மத-போலீஸார் (7) மதகலவரம் (25) மததுரோகி (2) மதத்தின் பெயரால் நாட்டை எதிர்த்தல் (36) மதனி (2) மதபோதனை (1) மதமா மணமா? (8) மதமா மனமா மணமா? (9) மதமாறிய பெண்கள் (7) மதமாற்றம் (6) மதம் (3) மதம் மாற்றம் (2) மதரசா (6) மதரஸா (14) மதரஸா செக்ஸ் (1) மதரஸாக்கள் (10) மதவாதம் (17) மதவிமர்சனம் (7) மதவிரோதி (5) மதவெறி (18) மதானி (4) மதானி குடும்பம் (1) மதினா (2) மதுக்கடைகள் (1) மதுரை (10) மதௌனி (5) மத்ரஸா (6) மந்திரக் கட்டை அவிழ்த்தல் (3) மந்திரத் தொழிலில் (3) மந்திரம் (5) மன நோயாளி (1) மனச்சிதைவு (2) மனநலக் காப்பகம் (1) மனநிலை (6) மனநோய் (4) மனம் (1) மனல் அல்-செரீப் (1) மனித உயிர் (2) மனித உரிமைப் போராளிகள் (1) மனித கொல்லி (5) மனித நீதி பாசறை (3) மனித நேய மக்கள் கட்சி (5) மனித நேயம் (9) மனித வெடிகுண்டு (10) மனிதநேய மக்கள் முன்னேற்ற கழகம் (4) மனிதநேய விற்பன்னர்கள் (2) மனிதர்கள்-மிருகங்கள் புனைவது (1) மனுதாரர் (2) மனைவி (2) மன்னிப்பு (1) மம்தா (5) மம்தா பானர்ஜி (4) மயக்கம் (1) மயன்மார் (2) மரக்காயர் (2) மரண தண்டனை (1) மரமணு (1) மரியம் (1) மரியம் சாண்டி (1) மரியம் பிச்சை (2) மரியம் பீவி (1) மருத்துவக் கல்லூரி (1) மருந்து (2) மருந்து அடித்தல் (1) மருந்து தெளித்தல் (1) மரைக்காயர் (3) மர்கஸ் (1) மர்மமான வியாபாரம் (1) மறுமணம் (5) மறைப்பு (4) மற்ற மதங்களை அவமதிக்கும் இஸ்லாம் (15) மலபார் (3) மலப்புரம் (2) மலர் போர்வை வைத்து மரியாதை (1) மலேசிய குடியுரிமை (1) மலேசியன் தூதரகம் (1) மலேசியப் பத்திரிக்கைகள் (1) மலேசியா (4) மலேசியா போலீஸ் (1) மலைமேல் (1) மலைமேல் ஸ்ரீ செல்வ காளியம்மன் கோவில் (1) மலையாள ஜிஹாதி (2) மலையேறுதல் (2) மல்லபுரம் (2) மல்லைய்யா (3) மஸ்ஜித்-உர்-ரஹ்மான் (1) மஸ்ஜித்-ஏ-இப்ராஹிம்-கலீலுல்லாஹ் (1) மஸ்த கேரளா ஜமாயத்-உல்-உலமா (3) மஹர் (2) மஹல்லு கமிட்டி (1) மாடு (2) மாட்டிறைச்சி (3) மாட்யூல் (1) மாந்திரீக நரபலிகள் (1) மாந்திரீகம் (2) மானிய அரிசி (1) மான் வேட்டை (1) மாப்பிள்ள (1) மாப்பிள்ளை (1) மாமிசம் (1) மாயா (1) மாயாவதி (1) மாயை (2) மாரடி (1) மாரடி நோன்பு (1) மாரடித்தல் (1) மாரல் போலிஸிங் (1) மாருதிராஜ் (2) மார்க்கண்டேய கட்ஜு (1) மார்டின் (2) மார்டின் பிரேம்ராஜ் (2) மார்ட்டின் பிரேம்ராஜ் (1) மார்பு (2) மாற்றம் (2) மாற்று வைத்திய முறை (1) மாலிகாபூர் (5) மாலிக் (2) மாவேலிக்கரா (2) மாவோயிஸத் தீவிரவாதி (1) மாஸ்கோ (1) மிதிக்கும் இஸ்லாம் (15) மினாரெட் (4) மினாரெட் விழுதல் (3) மின்சாரம் (1) மின்னணு ஜிஹாதி (3) மின்னணு ஜிஹாத் (4) மியன்மார் (8) மிரட்டல் (8) மிலாடி நபி (4) மில்லத்-இ-இஸ்லாமியா பாகிஸ்தான் (3) மீட்டர் (1) மீனா சதீஷ் (1) மீனாக்ஷி (3) மீனாக்ஷி கோவில் (3) மீனாக்ஷி சுந்தர்ராஜன் (1) மீனாக்ஷி பஜார் (1) மீனாட்சி பஜார் (1) மீனாட்சிபுரம் (2) மீரா (2) மீரான் (1) மீர்வாயிஸ் உமர் பரூக் (2) மீர்வாயிஸ் மௌல்வி (2) மீலாது நபி (3) மீலாதுநபி (6) மீலாதுன் நபி (1) மீலாத் (2) முஃப்டி முஹம்மது சையத் (5) முகமதியரின் இந்தியாவின் மீதான தாக்குதல்கள் (25) முகமது (7) முகமது அசாருதீன் (2) முகமது அலி (5) முகமது அலி ஜின்னா (3) முகமது அஸ்லம் (1) முகமது ஆசிப் (6) முகமது இக்பால் (3) முகமது இஸ்மாயில் (4) முகமது கனி உஸ்மான் (1) முகமது சலீம் (1) முகமது சானு (1) முகமது சோஹ்ராப் மிர்சா (1) முகமது ஜியாஉல்ஹக் (2) முகமது தல்கா (3) முகமது தாசிம் (1) முகமது நபி (9) முகமது நவாஸ் இஸ்மாயில் (2) முகமது ரியாஷ் (4) முகமது ரியாஸ் (3) முகமது ஷானு (1) முகமது ஷேக் தாவூத் (1) முகமது ஹர்ஷத் (1) முகமதுக்கு முந்தைய அரேபியா (1) முகம்மது தாசிம் (2) முகரம் (1) முக்தி வாஹினி (2) முசலியார் (1) முசிரி (1) முஜாஹித்தீன் (42) முஜிபுர் (3) முஜிபுர் ரஹ்மான் (3) முண்டம் (2) முதலீடு (1) முதல் பெண்டாட்டி (3) முதல் மனைவி (3) முதா (1) முதுகு வலி (1) முதுகுளத்தூர் (1) முதுகுளத்தூர் பள்ளி (1) முதுகுளத்தூர் பள்ளிவாசல் பள்ளி (1) முதுகை தடவுதல் (1) முத்தலாக் (1) முத்தாரம் (1) முத்துச்சாமி (1) முத்துப்பேட்டை (1) முனஹம்மது தாரிக் அன்சாரி (1) முனி (2) முனியசாமி (1) முனீஸ்வரன் (1) முனீஸ்வரர் (1) முன்னா (1) முன்னாள் தலைவர் (2) முன்னேறிய முஸ்லீம்கள் (1) முப்தி (5) மும்தாஜ் (3) மும்பை (7) மும்பை குண்டு (1) மும்பை குண்டு வெடிப்பு (5) மும்பை குண்டுவெடிப்பு (1) முருடீஸ்வர் (1) முர்ஸித் (1) முறையீடு (2) முற்றுகை (2) முலாயம் (3) முலை (4) முலைப்பால் (2) முலைப்பால் ஊட்டுவது (2) முலைப்பால் பந்தம் (2) முல்லா (3) முல்லா உமர் (1) முல்லாயம் (4) முஸ்தரி (1) முஸ்திரி (1) முஸ்லிமுக்கு மட்டும் (1) முஸ்லிமுக்கு வீடு (1) முஸ்லிம் (24) முஸ்லிம் அடிப்படைவாதம் (14) முஸ்லிம் கழகம் (4) முஸ்லிம் காலனி (5) முஸ்லிம் சாமி (3) முஸ்லிம் சாமியார் (3) முஸ்லிம் செக்ஸ் (1) முஸ்லிம் தெரு (8) முஸ்லிம் நகர் (2) முஸ்லிம் பார்முலா (1) முஸ்லிம் பிரச்சினை (11) முஸ்லிம் பெண்கள் (37) முஸ்லிம் பெண்கள் உரிமை (20) முஸ்லிம் பெண்கள் மாநாடு (4) முஸ்லிம் மாந்திரீகம் (1) முஸ்லிம் மாந்திரீகர்கள் (1) முஸ்லிம் முன்னேற்ற கழகம் (3) முஸ்லிம்-சோதிடம் (2) முஸ்லிம்-மாந்திரிகம் (2) முஸ்லிம்கள் ஆர்பாட்டம் (9) முஸ்லிம்கள் முற்றுகை (5) முஸ்லீமின் மனப்பாங்கு (8) முஸ்லீம் (34) முஸ்லீம் அல்லாத பெண்கள் (3) முஸ்லீம் இளைஞர்கள் (9) முஸ்லீம் ஓட்டு வங்கி (26) முஸ்லீம் ஓட்டுவங்கி (26) முஸ்லீம் கம்யூனிஸ்ட் (2) முஸ்லீம் கல்வி சங்கம் (3) முஸ்லீம் சட்டம் (26) முஸ்லீம் சாதி (9) முஸ்லீம் ஜாதி (8) முஸ்லீம் தன்மை (24) முஸ்லீம் தேசிய மன்றம் (1) முஸ்லீம் நரபலிகள் (5) முஸ்லீம் நாத்திகவாதி (1) முஸ்லீம் பெண்கள் தனியாக இருப்பது (5) முஸ்லீம் பெண்கள் வேலை (6) முஸ்லீம் பெண்கள் வேலை செய்வது (9) முஸ்லீம் மந்திரவாதி (1) முஸ்லீம் மாந்திரீக நரபலிகள் (1) முஸ்லீம் மாவோயிஸ்ட் (2) முஸ்லீம் முன்னேற்றக் கழகம் (6) முஸ்லீம் ராஷ்டிரிய மஞ்ச் (1) முஸ்லீம் லீக் (15) முஸ்லீம்களிடம் ஊடல் (7) முஸ்லீம்களிடம் கொஞ்சல் (8) முஸ்லீம்களின் அடிப்படைவாதம் (30) முஸ்லீம்களின் தீவிரவாதம் (28) முஸ்லீம்களின் வெறித்தனம் (29) முஸ்லீம்களில் சிறுபான்மையினர் (11) முஸ்லீம்களுக்கு விடிவு காலம் (2) முஸ்லீம்களை தாஜா செய்வது (7) முஸ்லீம்கள் (31) முஸ்லீம்கள் என்றால் தாஜா செய்வது (3) முஸ்லீம்தனம் (14) முஹமது ஆசிப் (1) முஹமது ஆஸிப் (1) முஹமது இக்பால் (2) முஹமது இம்தியாஸ் அன்சாரி (1) முஹமது சலீம் (1) முஹமது நபி மசூதி (1) முஹம்மது (10) முஹம்மது அப்துல் ஆஜீஸ் (3) முஹம்மது அல்-அமீன் பின் கத்தாரி (1) முஹம்மது அஹமது சித்திபாபா (5) முஹம்மது கான் (3) முஹம்மது கார்ட்டூன் (1) முஹம்மது சலீம் (1) முஹம்மது தாரிக் அன்சாரி (1) முஹம்மது தௌபீக் அன்சாரி மற்றும் முஹம்மது நோமன் (1) முஹம்மது நபி வாழ்ந்த வீடு (1) முஹம்மது நோமன் (1) முஹம்மது புஹாரி அப்துல் காதர் (1) முஹம்மது மௌதூத் கான் (3) முஹம்மது யூசுப் முஸ்ரூக் (1) முஹம்மது ஹனிஃப் கான் (2) முஹம்மத் அபூபக்கர் (1) முஹரம் (1) முஹ்சீன் அல்ஜமீன் (1) மூசா (1) மூணாறு (1) மூதா (4) மூத்தா (3) மூத்ஹா (1) மூன்றாம் பெண்டாட்டி (2) மூன்றாம் மனைவி (2) மூன்று முட்டாள்கள் (1) மூரத் (1) மூர்சிதாபாத் (1) மூர்ஷிதாபாத் (1) மூல்தான் (2) மூளை சலவை (15) மூளை சலவை செய்வது (10) மூளைசலவை (15) மூளைச்சலவை (1) மூவாட்டுபுழா (2) மூவ்லீத் (1) மெகபூபா முப்தி (1) மெக்-கோனெ (1) மெக்கா (4) மெதினா (1) மெத்தை (2) மெத்தைக் கடை (1) மெஹந்தி (2) மெஹர் (1) மெஹ்பூபா (1) மெஹ்பூபா முஃதி (4) மெஹ்பூபா முஃப்தி (8) மேனகா (1) மேப் (1) மேமன் (3) மேயர் (1) மேற்கு பாகிஸ்தான் (8) மேலப்பாளையம் (2) மேலூர் (1) மேல் உள்ளாடை (1) மேல் முறையீடு (1) மேல்விஷாரம் (1) மேளம் (1) மேவ்லீத் (1) மைக்கேல் விட்செல் (1) மைக்கேல் விட்செல்-முஸ்ஸரஃப் சந்திப்பு (1) மைக்கேல் விட்செல்லும் முஸ்ஸரஃபும் (1) மைசூரு (3) மைசூர் (2) மைனாரிட்டி (5) மைலாப்பூர் (1) மொகரம் (1) மொஜாமெல் ஹக் (1) மொம்பாஸா (1) மொய்தீன் (1) மொரொக்கோ (2) மொரோகோ (1) மொஹமது ஆஸிப் (1) மொஹமது இக்பால் (1) மொஹமது சலீம் (1) மொஹம்மது (4) மொஹம்மது அக்தர் (1) மொஹம்மது அத்தஹுல்லாஹ் செயிக் (1) மொஹம்மது அஸ்கர் (1) மொஹம்மது அஹம்மது கான் (1) மொஹம்மது இக்பால் (1) மொஹம்மது கமருஸ்ஸாமன் (1) மொஹம்மது களஞ்சியம் (1) மொஹம்மது சலீம் (1) மொஹம்மது தாய்யப் ஜியா (1) மொஹம்மது நபி (2) மொஹம்மது மௌதூத் கான் (1) மொஹம்மது ரியாஸ் (1) மொஹம்மது ஷானு (1) மொஹம்மது ஸ்வாலி (2) மொஹரம் (3) மொஹர்ரம் (2) மொஹித்தீன் (1) மோகன் பகவத் (3) மோகம் (1) மோசடி (6) மோசம் (4) மோடி (6) மோடி அரிசி (1) மோதல் (4) மோதிரம் (1) மோனிகா (2) மோப்ளா (1) மோமின் (3) மோஹன் பகவத் (2) மௌதனி (7) மௌதானி (6) மௌனிகா (1) மௌலானா (1) மௌலானா அஹமது ஷா புகாரி (1) மௌலானா சௌகத் ஷா (1) மௌலானா புகாரி (3) மௌலானா மதனி (3) மௌலானா மதானி (2) மௌலானாவை பெண்கள் அடித்தது (1) மௌலித் (1) மௌல்வி (3) மௌல்வி அப்பாஸ் அன்சாரி (1) யஜீத் (1) யதீம் கானா (1) யாகுப் (1) யாகுப் மேமன் (4) யாகூப் (3) யாகூப் மேமன் (4) யாசின் பட்கல் (4) யாசின் பட்டகல் (1) யாசிர் அப்துல்லா (1) யாதவ் (2) யாத்திரிகர்கள் (4) யாத்திரை (3) யாத்திரைக்குப் பாதுகாப்பு (3) யானை (1) யுத்த பலிகள் (1) யுத்ததருமம் (1) யுத்ததர்மம் (2) யுத்தம் (4) யுனானி (2) யுனானி மருத்துவர் (1) யுவன்சங்கர் ராஜா (4) யூசஃப் (1) யூசுப் (1) யூசுப் செயிக் (1) யூசுப் ராஜா (1) யோக்கியகர்த்தா (1) யௌம்-இ-அலி (1) ரகசிய சர்வே (3) ரகமத்துல்லா (1) ரக்சால் (1) ரக்ஸால் (1) ரஜபுனிசா (1) ரஜபுனிசா பேகம் (1) ரஜபுனிசாபேகம் (1) ரஜினி (2) ரண்டா அல்-கலீப் (1) ரத்த சடங்கு (1) ரத்தக் காட்டேரி (3) ரத்தக் காட்டேரிகள் (7) ரத்தத்தினால் ஹோலி (7) ரத்தப் பணம் (1) ரத்தப்பணம் (1) ரத்தம் (15) ரத்தம் குடித்தல் (4) ரபி அல்-அவ்வல் (1) ரப் (1) ரப்பர் புல்லட் (1) ரப்பானி (1) ரமதான் (4) ரமலான் (7) ரமழான் (7) ரமஷான் (6) ரமீலா (1) ரமேஷ் தௌரானி (1) ரம்ஜான் (10) ரம்ஜான் அரிசி (3) ரம்ஜான் கஞ்சி (2) ரம்ஜான் கஞ்சி அரிசி (2) ரம்ஜான் தாராவீஹ் (4) ரம்ஜான் நோன்பு (3) ரம்ஜான் நோன்பு அரிசி (2) ரவிச்சந்திரன் (2) ரஹமத்துல்லா (1) ரஹீமா (1) ரஹீல் செயிக் (2) ரஹ்மான் (4) ரஹ்மான் கான் (2) ராகுல் (2) ராக்கெட் (1) ராக்கைன் (1) ராஜ துரோகம் (1) ராஜநீதி-வேசித்தனம் (1) ராஜஸ்தான் (1) ராஜாஜி மருத்துவமனை (1) ராஜிந்தர் சச்சார் (1) ராணிப்பேட்டை (1) ராணுவத்துறை ரகசியங்கள் (1) ராதா (4) ராதிகா ராய் (1) ராமநாதபுரம் (2) ராமேஸ்வரம் (2) ராம் (1) ராவல்பிண்டி (2) ராவுப் (1) ராஷ்டிரிய மஞ்ச் யோகா (1) ராஷ்ட்ரிய சுயம்சேவக் சங் (1) ராஸா (1) ராஸா அகடெமி (2) ராஸ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங் (1) ரிசானா (1) ரிசானா நபீக் (1) ரிஸ்வானா (1) ரீடா மான்சந்தா (1) ருபையா (1) ருபையா சையது (1) ருபையா சையத் (4) ருஷ்டி (2) ரூபாய் நோட்டுகள் (1) ரெங்கநாத் மிஸ்ரா கமிஷன் (1) ரெஜினா (1) ரெண்டஸ்வஸ் நிறுவனம் (1) ரேகா (2) ரேசன் கார்டு (1) ரேப் (2) ரேப் விடியோ (1) ரேப் வீடியோ (1) ரேஷ்மா தாவூத் (1) ரோமிலா தாபர் (2) ரோஸா (1) ரோஹிங்க (4) ரோஹிங்கர் (3) ரோஹிங்கா (3) ரோஹிங்கிய (4) ரோஹிங்கியா (3) ரோஹிங்ய (3) ரோஹிங்யா (2) ரோஹிஞ்ச (3) ரோஹிஞ்சா (2) ரோஹின்ய (3) ரோஹின்யா (3) ரோஹிப்க்கியா (1) றமலான் (2) றமழான் (2) லண்டன் (2) லப்பை (2) லலித் மோடி (1) லல்லு பிரச்சாத் யாதவ் (1) லவ் ஜிஹாத் (22) லவ்ஜிஹாத் (5) லஷ்கர்-இ-தொய்பா (12) லஸ்கர்-இ-ஜாங்வி அல்-ஆல்மி (6) லஸ்கர்-இ-டொய்பா (1) லஸ்கர்-இ-தொய்பா (8) லாகூர் (3) லாஹூர் (7) லிங்கம் (1) லிவ்-இன் (1) லீனா (3) லீனா கபூர் (1) லீலைகள் (4) லெபனான் (1) லெப்பை (5) லேபியாபிளாஸ்டி (1) வக்ஃப் போர்ட் (3) வக்ஃப் வாரிய சிறப்பு நிர்வாக அதிகாரி (3) வக்ஃப் வாரியம் (3) வக்கார் யூனிஸ் (1) வக்பு வாரியம் (3) வக்ப் (6) வக்ப் கம்பனி (3) வக்ப் கம்பெனி (3) வக்ப் மேம்பாடு (3) வக்ப் வாரியம் (3) வங்காள தேசம் (20) வங்காள மொழி (8) வங்காளதேசம் (7) வங்காளப் பிரிவினை (6) வங்காளம் (7) வங்கி மோசடி (2) வங்கி மோசடி வழக்கு (1) வசூல் (2) வஞ்சகம் (3) வஞ்சிநாடு எக்ஸ்பிரஸ் (1) வடபழனி (2) வட்டி (2) வட்டிக்குக் கடன் (2) வணிக வளாகம் (1) வண்ணாரப் பேட்டை (1) வண்ணாரப்பேட்டை (2) வண்ணாறப் பேட்டை (1) வதந்தி (2) வதை (1) வத்தலகுண்டு (1) வந்தே மாதரம் (14) வந்தே மாதரம் எதிர்ப்பது (9) வன்புணர்ச்சி (2) வன்முறை (16) வன்முறையில் ஈடுபடுவது (5) வயநாடு (1) வயர் துண்டுகள் (2) வயிற்றில் கடத்தல் (1) வரதராஜ் (1) வரதராஜ் மஞ்சப்ப ஷெட்டி (1) வருத்தம் (1) வருத்து (1) வலிஹுல்லாஹ் (1) வல்லாளன் (2) வளர்த்த கடா (1) வளைகுடா (3) வழக்கு (8) வழிபாடு (7) வாக்குறுதி (5) வாசல் (1) வாசிம் அக்ரம் (3) வாசிம் அக்ரம் மாலிக் (3) வாடகை (2) வாடகை வீடு (2) வாடகைக்கு (1) வாடகைக்கு வீடு (1) வாடியா (1) வாட்ஸ்அப் (3) வாணியம்பாடி (3) வாதிப்பது (1) வாபஸ் (2) வாரங்கல் (1) வாரணசி குண்டுவெடிப்பு (3) வார்டன் (4) வாலாஜா மசூதி (1) வாழ்க்கை (1) வாஹாபி (4) வாஹாபி இயக்கம் (4) வி.எஸ். ரவி (1) விக்கிரகம் (2) விசா விதி (1) விசாரணை (8) விஜய் (1) விஞ்ஞான முன்னேற்றம் (1) விடுதலை (3) விடுதலை சிறுத்தை (3) விடுதி (1) விண்ணப் பங்களின் எண்ணிக்கை (1) விந்து (1) விமர்சனம் (4) விமானம் (2) வியாபாரம் (6) விரதங்கள் (1) விரதம் (1) விருத்த சேதனம் (1) விரோதம் (4) விலக்கிவைத்தல் (2) வில் ஹியூம் (3) விளக்கு (3) விளம்பரம் (1) விழா (1) விழாக்கள் (1) விவாக ரத்து (14) விவாகம் (6) விவேகானந்தர் (1) விஷாரம் (1) விஷ்வ ஹிந்து பரிஷத் (1) விஸ்டெம் அகடெமி (1) விஸ்வ இந்து பரிஷத் (1) வீடியோ (2) வீடு (2) வீடு இல்லை (1) வீடு திரும்புதல் (1) வீட்டு வேலை (1) வீட்டுக்கு வா (1) வீணா (4) வீணா மாலிக் (5) வீர பாண்டியன் (4) வீரகநல்லூர் (1) வீரியம் (2) வெஜினோபிளாஸ்டி (1) வெடி (18) வெடி மருந்து (17) வெடிகுண்டு (27) வெடிகுண்டு பொருட்கள் (25) வெடிகுண்டுகள் (28) வெடிக்கச் செய்யும் கருவிகள் (18) வெடிபொருள் வழக்கு (14) வெடிப்பொருட்களைப் பதுக்கி வைத்தல் (9) வெடியுப்பு (1) வெட்டிக் கொலை (1) வெப்சைட்டுகளை உடைப்பது (1) வெறி (5) வெறிநாய்கள் (1) வெள்ளிக் கிழமை (6) வெள்ளிக்கிழமை (6) வேடம் (3) வேட்டை (1) வேட்பாளர் (1) வேத பஸின் (1) வேலூர் (9) வேலை (5) வேலை மோசடி (1) வேல் காவடி (1) வேவு (2) வைகாசி (1) வைகாசித் திருவிழா (1) வைணவம் (1) வைத்தியம் (2) வைரஸ் (8) வைரஸ் கொரோனா (4) வைரஸ் ஜிஹாத் (1) ஶ்ரீரங்கப்பட்டினம் (1) ஶ்ரீராம் சேனா (1) ஶ்ரீலங்க குண்டுவெடிப்பு (3) ஶ்ரீலங்கா (3) ஶ்ரீலங்கை தற்கொலை குண்டு (2) ஶ்ரீலங்கை தற்கொலை குண்டுவெடிப்பாளி ஜஹ்ரன் ஹாஷிம் (1) ஷகிர் (1) ஷபி அர்மார் (1) ஷபிர் ஷா (2) ஷபீர் (1) ஷமில் அஹமது (2) ஷமீரா பானு (1) ஷமீராபானு (1) ஷமீல் (2) ஷரியத் (10) ஷரீயத் (16) ஷலாஷன் (1) ஷலோ தாங்கி (1) ஷஹீதுகள் என்றெல்லாம் யார்- யார் என்று தெரியாதா என்ன? (1) ஷஹீத் (3) ஷா பானு (2) ஷாகுல் ஹமீத் (1) ஷாஜஹான் (2) ஷாநவாஸ் ஹுசைன் (1) ஷானு ஷேக் (1) ஷாபானு (3) ஷாபாஸ் பட்டி (1) ஷார்ஜா ஷரியா கோர்ட் (1) ஷாஹி இமாம் (3) ஷியா (25) ஷியா சட்ட போர்ட் (6) ஷியா சட்டம் (14) ஷியா முஸ்லீம் சட்டம் (11) ஷியா வாரியம் (10) ஷியா-சுன்னி (21) ஷிர்க் (19) ஷெட்டி (1) ஷெரி ரெஹ்மான் (1) ஷேக் (6) ஷேக் அப்துல்லா (1) ஷேக் அஸினா (1) ஷேக் தாவூத் (1) ஷேக் முஜிபுர் ரஹ்மான் (3) ஷேக் மைதீன் (4) ஷேக் ரஹமத்துல்லா (1) ஷேவாக் (1) ஷைஸ்டா அம்பர் (1) ஷ்யாம் (1) ஸஜியா (1) ஸல் (1) ஸ்டாலின் (5) ஸ்டாலின் வாழ்த்து (1) ஸ்டிங் ஆபரேஸன் (1) ஸ்னூப்பிங் (1) ஸ்ரீ ராம நவமி (5) ஸ்ரீ ராமநவமி (6) ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸ் (1) ஹகிம் (1) ஹக் (1) ஹக்கனி (2) ஹக்கானி (4) ஹக்கிம் (1) ஹஜரத் அலி (3) ஹஜரத் இமாம் அலி (2) ஹஜரத் இமாம் ஹுஸைன் (1) ஹஜ் (9) ஹஜ் கமிட்டி (4) ஹஜ் பயணம் (5) ஹஜ் மானியம் (5) ஹஜ் யாத்திரை (4) ஹட்டி (1) ஹதீஸ் (12) ஹனுமந்த ஜெயந்தி (5) ஹபீப் (1) ஹம்சத்நிஷா (1) ஹம்ஸா (1) ஹம்ஸா தலிபான் (1) ஹராம் (7) ஹரிந்தர் பவேஜா (1) ஹரிஸ் காரே (1) ஹர்கத்-உல்-ஜிகாத்-அல்-இஸ்லாமி (4) ஹர்கத்-உல்-ஜிஹாத்-அல்-இஸ்லாம் (1) ஹர்கத்-உல்-முஜாஹித்தீன் (3) ஹலால் (6) ஹவாலா (4) ஹஸன் (3) ஹாஜா பக்ருதீன் (1) ஹாஜி அலி தர்கா (1) ஹார்வார்ட் (1) ஹாவிஸ் மொல்லாஹ் (1) ஹாஷிம் அன்ஸாரி (1) ஹிஜாப் (21) ஹிஜ்புல் முஜாஹித்தீன் (4) ஹிஜ்லி ஷரீப் (1) ஹிம்சை (3) ஹீரா பேரி (1) ஹுஜி (4) ஹுஜி பங்களா (3) ஹுஸைன் (5) ஹூஜி (4) ஹெராயின் (1) ஹேரம் (1) ஹைஜேக் (1) ஹைட்ரெஜன் பெராக்ஸைட் (1) ஹைதர் அலி (3) ஹொய்சளர் (1) ஹொஸைன் சையிதீ (1) ஹோலி (1) ஹௌரா (3) bernama (2) clitoridectomy (1) Clitoris (1) haj (2) IED (2) kafir (2) Ken Haywood (1) KhilafahGFX (1) kulalumpur (1) Labia majora) (1) Labia minoria (1) labiaplasty (1) malaysia (1) Masjid-e-Ibrahim-Khaleelullah (1) momin (2) Outlook (1) Prepuce (1) Princeton Survey Research Associates (1) SMS (1) subsidy (2) Taylor Nelson Sofres-India (1) Uncategorized (163) Urethra (1) Vagina (1) vaginoplasty (2) X மற்ற மதங்களை அவமதிக்கும் இஸ்லாம் (7)
நேற்றை தினத்தில் திருப்பூர் மாவட்டம் திருமுருகன்பூண்டியில் செயல்பட்டு வரும் விவேகானந்தா சேவாலயம் என்ற தனியார் காப்பகத்தில் தங்கியிருந்த 14 குழந்தைகளுக்கு திடீரென வாந்தி மயக்கம் ஏற்பட்டது. இந்நிலையில் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனில்லாமல் 3 சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. சுருக்கு வலை விவகாரம்; போராட்டத்தில் குதித்த மீனவர்கள்!!! இந்த சூழலில் தனியார் காப்பகத்தில் 3 சிறுவர்கள் உயிரிழந்த விவகாரத்தில் சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன், பாதுகாப்புத்துறை இயக்குனர் வளர்மதி நேரில் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில் ஆதரவற்ற காப்பகம் முறையாக நடைப்பெறவில்லை என்று தெரிவித்தார். அதோடு காப்பகத்தில் இருக்கும் குழந்தைகள் ஈரோடு அரசு இல்லத்தில் தங்க வைக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். உதவி செய்வது போல் மோசடி!! போண்டா மணியிடம் பணத்தை சுருட்டிய நபர் கைது!! அதே போல் விவேகானந்தா சேவாலயம் காப்பக நிர்வாகி மீது சட்டப்படி குற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்தார். Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
"நாடி, நரம்பு, ரத்தம் எல்லாம் கிரிக்கெட் வெறி ஊறிப்போன ஒருத்தராலதான் இப்படி போட்டு அடிக்க முடியும்னு எக்ஸ்பெர்ட்ஸ் சொல்றாங்க.. சொல்லுங்க.. சொல்லுங்க.. சொல்லுங்.. பாம்பேல நீங்க என்ன பண்ணிட்டு இருந்தீங்க..." "அங்கனயா.. மும்பை இந்தியன்ஸ்னு டீம்ல அடிவாங்கிட்டு இருந்தோம்.. ஏன்யா நல்ல நாள் அதுவுமா அதை ஞாபகப்படுத்திக்கிட்டு..." "பாஸு.. தலையில கை வைக்காதப்பா.. ஹலோ.. அப்பால நிக்குற பிரதர், கன்னத்துல கையை எடுப்பா.. நானே என்னைக்காச்சும் ஃபார்ம்ல இருக்கேன்.." "தாலி கட்டுற நேரத்துல பெண்ணோ பையனோ காணாம போனா மண்டபத்துல மாட்டுனவங்களை மணமேடையில உட்கார வைக்கிற மாதிரி நம்மளை கூப்பிட்டவே யோசிச்சிருக்கனும்.. இப்பல்ல புரியுது ஏன் வெஸ்ட் இண்டீஸ் நைட்டோட நைட்டா எஸ் ஆனாங்கன்னு... " "ரன் மழை.. ரன் மழைம்பாய்ங்களே... இவ்ளோ அடிச்சும் ஒரு துளி கூட விழ மாட்டேங்குது..." "அவ்ளோதாம்யா.. பத்து பதினைஞ்சு மேட்ச்ல வச்ச அரியர்ஸ்லாம் கிளியர் பண்ணியாச்சு.." "நாங்க முதல் பெஞ்ச்ல மாசக்கணக்கா உட்கார்ந்து கஷ்டப்படுவோம்... கடைசி பெஞ்ச்ல உடகார்ந்து எல்லா கிளாஸ்லயும் தூங்குற நீங்க.. என்னைக்காவது ஒருநாள் படிச்சுட்டு வந்துட்டு படுத்துற பாடு இருக்கே.. அய்யோய்யோ..." "நீங்கலாம் இருக்கீங்கற நம்பிக்கையிலதான வந்தோம்... என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா.. " "என்னைக்கும் இல்லாம கேக் வெட்ட கூப்பிட்டப்பவே புரிஞ்சிருக்கனும்.. அடுத்தது சிக்குன ஆட்டை வெட்ட போறாங்கன்னு.. " "அடேய் ரோஹித்தா.. நான் இருவது செஞ்சுரிடா.." "நான் இரண்டு டபுள் செஞ்சுரிண்ணே.. நூறு பெருசா.. இருநூறு பெரிசா..." "ஹாங் வோர்ல்ட் கப்புக்கு டிக்கெட் போட்ருங் மணி... சோழர் பரம்பரையில் ஒரு எம்.எல்.ஏ" Posted by Sukumar 3 comments: Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest Labels: கிரிக்கெட், நகைச்சுவை, போட்டோ கமெண்ட்ஸ் Wednesday, November 12, 2014 வலைமனை | ஃபீலிங்ஸ் 12 11 14 கும்பகோணம் அருகே உள்ள நாச்சியார்கோயில் நான் பிறந்த ஊர். கடந்த வார இறுதியில் அங்கு ஒரு திருமண நிகழ்ச்சி. எல்லாம் முடிந்து, சென்னைக்கு கிளம்புவதற்கு முன் சித்தப்பா வயலைப் பார்த்துவிட்டு வரலாம் என சென்றேன். வயலுக்கு போகும் வழியில் முன்பெல்லாம் ஒரு கடை இருக்காது. இப்போது ஆச்சரியமாய் ஒரு டாஸ்மாக் முளைத்திருந்தது. பஸ் ஸ்டாண்ட் அருகில் முக்கிய இடத்தில் டாஸ்மாக் இருந்ததால் அதை மாற்றக் கோரி ஊர் மக்கள் சாலை போராட்டங்கள் செய்திருக்கிறார்கள். அதனால் இங்கே மாற்றப்பட்டுள்ளதாம். தற்போது இதன் விளைவாய், குளக்கரையில் பட்டப்பகலில் ரசனையாய் அமர்ந்து மிக்ஸிங் செய்து குடித்துக் கொண்டிருந்தவர்களை பார்க்க முடிந்தது. டாஸ்மாக்கை சுற்றி நான்கைந்து சிக்கன் தள்ளுவண்டிகள், மிக்சர் பாக்கெட்டுகள், வாட்டர் பாக்கெட் சகிதம் ஒரு சைக்கிள் கடை என ரம்மியமாய் இருந்த வயல் பகுதிகள் ரம்மாய் காட்சியளிக்கிறது. ஆறு இருந்த இடத்தை சுற்றி நாகரிகம் வளர்ந்தது போல இனி ஆட்களே இல்லாத எந்த பகுதியாவது டெவலப் ஆக வேண்டும் என்றால் அதில் ஒரு டாஸ்மாக்கை வைத்து விட்டால் போதும் போல. எந்த ஆங்கிளில் அழகாக தெரிகிறேனோ அதில் ஒரு கிளிக் பண்ணிடுங்க என்றால், இந்த ஷாட்லதான் மாப்ள பார்க்கிற மாதிரி இருக்க என எடுத்து தருகிறார்கள் நண்பர்கள். எவ்வளவு பயிற்சி இருந்தாலும் ஊர் பசங்க கிண்டலை சமாளிப்பது கஷ்டம். ••• ஊருக்கு கிளம்ப வேண்டி இருந்ததால் இன்டர்ஸ்டெல்லார் காலை 9 மணி காட்சி வில்லிவாக்கம் ஏ.ஜி.எஸ் திரையரங்கில் பார்க்க வேண்டிய நிலை. பேஸ்புக் பேஜில் அவர்கள் சொன்னதுபோல் சப் டைட்டில் காண்பிக்கப்படவில்லை. சப் டைட்டில் கூட பரவாயில்லை. மெயின் டைட்டிலையே காண்பிக்கவில்லை. ஏதேதோ டிரைலர்கள் ஓடிக் கொண்டிருக்க படாரென கதாநாயகன் அவரது குழந்தைகளுடன் காரோட்டிக் கொண்டு செல்லும் காட்சியில் படம் ஆரம்பித்தது. டென்ட்டுக் கொட்டகையில் கூட எனக்குத் தெரிந்து இப்படி நடந்தது இல்லை. என்னம்மா இப்படி பண்ணிட்டீங்களேம்மா என அவர்களது பேஸ்புக் கணக்கிற்கு கேள்வி அனுப்பினால் இதுவரை பதில் இல்லை! மற்றபடி படம் சுமாராக புரிந்தது. வீட்டிற்கு வந்து கதையை தேடி படித்த பின்தான் பரவாயில்லை படம் நல்லாத்தான் இருக்கு என்ற முடிவுக்கு வர முடிந்தது. ஆனால் இன்னமும் எனக்கு ஸ்பேஸ் பிக்ஷன் என்றால் எண்டமூரி வீரேந்திரநாத் எழுதிய கண்சிமிட்டும் விண்மீன்கள் நாவல்தான். அதற்கு முன்னால் இன்டர்ஸ்டெல்லார் எல்லாம் சுமார்தான். ••• சரக்கடிக்கிறவங்களுக்கு கூட சங்கம் இருக்கு. ஆனா எங்க ஆளுங்களைத்தான் ரத்தம் குடிக்கிற காட்டேரி கணக்கா ஓட்டுறாங்க. இதுக்கெல்லாம் ஒரே தீர்வு 'கேண்டி கிரஷ் விளையாட்டு மேம்பாட்டு மையம்' ஆரம்பிக்கிறதுதான். இருள் விலகட்டும்! ••• டாங்கா மாரின்னு அனேகன்ல ஹாரிஸ் போட்ட பாட்டு கேட்டுட்டு இருந்தேன். "கொஞ்ச நாளா இந்த நாக்க முக்க பாட்டை போட்டு அலற விடாம இருந்த.. மறுபடியும் ஆரம்பிச்சிட்டியா...?" என கிச்சனில் இருந்து அம்மா உடனே கத்துறாங்க. # சாரிங்க பாஸ் வழக்கம்போல எல்லா தரப்பு சாட்சியும் உங்களுக்கு எதிராவே இருக்கு. ••• கோபியின் வீடியோ வெளியான பின்னர் இனியும் கத்தி தானே செய்த இட்லி என முருகதாஸ் சொன்னால் அதை சட்னி கூட நம்பாதுதான். அதற்காக இன்னமும் அவரை துவைத்து தொங்கப் போட்டு கொண்டிருப்பது நியாயமாக படவில்லை. இதற்கு முன்னால் அவரே யோசித்து சமூகத்திற்கு சொல்லியிருக்கும் கருத்துக்களையும் அதனால் மக்கள் அடைந்த பலனையும் யோசித்து பாருங்கள். உதாரணத்திற்கு துப்பாக்கியில் கூட தண்ணீர் மேலாண்மை குறித்து அவர் ஒரு கருத்தை முன்வைத்திருக்கிறார். ஒரு இரவு கடற்கரையில் படுத்து தூங்கி எழுந்ததும் மறுநாள் காலை டீ ஷர்ட்டை உள்புறம் வெளிபுறமாய் திருப்பி மாற்றி போட்டுக் கொள்வார் விஜய். இதனை நாம் அனைவரும் பின்பற்றுவதன் மூலம் துவைப்பதற்காக ஆகும் தண்ணீர் எவ்வளவு சேமிக்கப்படும் என யோசித்து பாருங்கள்.! நான் சின்ன வயசுல இருந்தே இப்படித்தான் பனியன் போடுறேன். என் ஐடியாவை தாஸ் சார் சுட்டுட்டாருன்னு யாராச்சும் கிளம்புனீங்க அப்புறம் அவ்ளோதான் சொல்லிட்டேன். ••• 'Chill morning.. Enjoying hot coffee @Cafe day' என மொபைலில் ஸ்டேட்டஸ் போடுகிறார் ஷேர் ஆட்டோவில் அருகில் இருக்கும் இளம்பெண். இல்ல... நான் கேக்குறேன்.. என்ன இது? பேஸ்புக்குக்குன்னு ஒரு தர்மம், நியாயம் இல்ல..? Withனு போட்டு பக்கத்துல இருக்க என் பேரை டேக் பண்ண வேணாம்?
Afrikaans Azərbaycan Dili Bisaya Bosanski Dansk Deutsch English Español Estonia Euskara Français Gaeilge Galego Indonesia Italiano Kiswahili Kreyòl Ayisyen Latviešu Valoda Lietuvių Kalba Magyar Malti Melayu Nederlands Norsk Oʻzbekcha Polski Português Română Shqip Slovak Slovenščina Suomi Svenska Tagalog Tiếng Việt Türkçe isiXhosa Íslenska Čeština Ελληνικά Башҡортса‎ Беларуская Мова Български Македонски Јазик Русский Српски Українська Мова Қазақша עִבְרִית اَلْعَرَبِيَّةُ اُردُو فارسی नेपाली मराठी मानक हिन्दी বাংলা ਪੰਜਾਬੀ ગુજરાતી தமிழ் తెలుగు ಕನ್ನಡ മലയാളം සිංහල ไทย ລາວ မြန်မာ ქართული ენა አማርኛ ភាសាខ្មែរ ᠮᠣᠩᠭᠣᠯ ᠬᠡᠯᠡ ᮘᮞ ᮞᮥᮔ᮪ᮓ 日本語 繁體中文 ꦧꦱꦗꦮ 한국어 அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் என்ன GayPeopleGames? GayPeopleGames ஒரு பெரிய விளையாட இலவச ஆபாச விளையாட்டுகள் சுற்றி ஒரு சிறந்த விளையாட்டு சமூகங்கள் துவக்க! ஒவ்வொரு நாளும், ஆயிரக்கணக்கான மக்கள் வந்து GayPeopleGames ஆராய நமது பல்வேறு காட்சிகள், தனிப்பயனாக்க தங்கள் செக்ஸ் எழுத்துக்கள் மற்றும் முடிக்க முயற்சி அனைத்து எங்கள் இலவச கவர்ச்சியாக தேடல்கள். நான் பணம் விளையாட GayPeopleGames? GayPeopleGames உள்ளது விளையாட இலவச மற்றும் எப்போதும் இருக்கும். எங்கள் அணி உள்ளது, என்று உறுதி உறுதி எங்கள் தலைப்பு முற்றிலும் கருப்பொருள் சுற்றி ஒரு ஃப்ரீமியம் மாதிரி, ஆனால் அனைத்து கொள்முதல் இருப்பது முற்றிலும் விருப்ப. எனவே, குறுகிய காலத்தில், நீங்கள் எதையும் வாங்க வேண்டும், ஆனால் நீங்கள் எங்களுக்கு ஆதரவு வேண்டும் என்றால். ஏன் நீங்கள் செய்ய வேண்டும் என் கடன் அட்டை விவரங்கள்? நாம் கடமைப்பட்டிருக்கிறோம் மூலம் பல்வேறு விளையாட்டு உரிமம் உடல்கள் உலகம் முழுவதும் ஒரே வழங்க எங்கள் விளையாட்டு யார் மக்கள் 18 வயதுக்கு மேல். எதிர்த்து வராத தனிநபர்கள் அணுக முயற்சி GayPeopleGames, நாம் பயன்படுத்த ஒரு தனிப்பட்ட கடன் அட்டை அங்கீகாரம் அமைப்பு சரிபார்க்க வயது அனைத்து வீரர்கள். அங்கு உண்மையான வீரர்கள் உள்ளே GayPeopleGames? நீங்கள் விளையாட முடியும் GayPeopleGames இருவரும் ஒரு மல்டிபிளேயர் மற்றும் ஒற்றை வீரர் வடிவம்! பெரும்பாலான நம் கவனம் செலுத்தப்பட்டுள்ளது ஒற்றை வீரர் அனுபவம், ஆனால் நாம் வெளியிட திட்டமிட்டுள்ளது புதிய அம்சங்களை ஒரு கொத்து மற்றும் கருவிகள் அதிகரிக்க multiplayer gameplay மிக தொலைவில் இல்லை எதிர்காலத்தில் காத்திருங்கள்! நான் விளையாட முடியும் iOS மற்றும் மேக் சாதனங்கள்? ஆமாம். அத்துடன் ஆதரவு iOS மற்றும் Mac, GayPeopleGames திறன் உள்ளது மக்கள் Android சாதனங்களில் விளையாட. எனவே நீண்ட நீங்கள் அணுக வேண்டும் குரோம், சபாரி அல்லது Firefox, நீங்கள் எந்த பிரச்சினைகள் வரை ஏற்றும் GayPeopleGames பயன்படுத்தி என்ன சாதனம், நீங்கள் மிகவும் ஆசை. அது அற்புதமான விஷயங்கள் – அது உண்மையில் ஆகிறது! என்ன பற்றி விருப்ப செக்ஸ் டிப்ஸ்? நாம் விரிவான ஆதரவு அனைத்து வகையான மாற்றங்களை, அதே போல் ஒரு கருவி மற்றும் வழிகாட்டி என்று கூட உறவுகள் உருவாக்குநர்கள் சுற்றி விளையாட முடியும் எங்கள் இயந்திரம் மற்றும் வெளியே முயற்சி வெவ்வேறு விஷயங்கள். PMM நேசிக்கிறார் modding சமூகம் மற்றும் நாம் கூட ஒரு அமைப்பு குழு அவர்களை. நான் என்ன செய்ய வேண்டும் ஒரு இணைய இணைப்பு விளையாட? நீங்கள் விரும்பினால் பயன்படுத்த எங்கள் உலாவி பதிப்பு, நீங்கள் வேண்டும் ஒரு செயலில் இணைய இணைப்பு வரை ஏற்ற அனைத்து கோப்புகளை, ஆனால் பின்னர் நீங்கள் செல்ல முடியும் ஆஃப்லைன். எனினும், நாம் ஒரு முழுமையான வாடிக்கையாளர் விண்டோஸ் மற்றும் மேக் ஒரு உண்மை ஆஃப்லைன் அனுபவம் உங்கள் சொந்த கணினியில். நான் இந்த விளையாட்டு விளையாட பல சாதனங்களில்? மேலே குறிப்பிட்டுள்ள, GayPeopleGames தற்போது அனுமதிக்கிறது யாரையும் இணைக்க விளையாட்டு என்றால், அவர்கள் பயர்பாக்ஸ், சபாரி அல்லது குரோம் எந்த சாதனத்தில். அது பாதுகாப்பான மற்றும் ஆகும்? ஆமாம். இணைப்பு GayPeopleGames வழங்கப்படும் வழியாக HTTPS. நாங்கள் மட்டும் வைத்து உங்கள் மின்னஞ்சல் முகவரி, பயனாளர் பெயர் மற்றும் கடவுச்சொல்லை புல பதிவு – அது தான். நான் நிறுவ வேண்டும் எதையும் விளையாட GayPeopleGames? இல்லை. நீண்ட நீங்கள் வேண்டும் என ஒரு பயர்பாக்ஸ், சபாரி அல்லது குரோம் உலாவியில், நீங்கள் விளையாட முடியும் GayPeopleGames எதையும் பதிவிறக்கி இல்லாமல் உங்கள் சாதனம். நான் ஏன் அனுப்பி வேறு பிறகு உள்ளிடல் என் பதில்கள்? நாம் வேலை பல பங்காளிகள் வழங்க நீங்கள் சிறந்த விளையாட்டு அனுபவிக்க முடியும். இந்த சில நேரங்களில் தேவைப்படுகிறது மூன்றாம் தரப்பு விளையாட்டு சொத்து ஏற்றுதல்.
Afrikaans_wiki | Arabic_wiki | Assamese_wiki | Basque_wiki | Bengali_wiki | Bulgarian_wiki | Catalan_wiki | Chinese_wiki | Czech_wiki | Dhivehi_wiki | Divehi_wiki | Dutch_wiki | English_wiki | Estonian_wiki | Finnish_wiki | French_wiki | Gallegan_wiki | German_wiki | Greek_wiki | Gujarati_wiki | Hausa_wiki | Hebrew_wiki | Hindi_wiki | Hungarian_wiki | Indonesian_wiki | Italian_wiki | Japanese_wiki | Kannada_wiki | Kazakh_wiki | Korean_wiki | Page=Main Page | Malayalam_wiki | Malay_wiki | Marathi_wiki | Nepali_wiki | Norwegian Bokmal_wiki | Norwegian_wiki | Oriya_wiki | Panjabi_wiki | Persian_wiki | Polish_wiki | Portuguese_wiki | Romanian_wiki | Russian_wiki | Serbian_wiki | Sindhi_wiki | Sinhalese_wiki | Slovak_wiki | Somali_wiki | Spanish_wiki | Swedish_wiki | Tagalog_wiki | Tajik_wiki | Tamil_wiki | Telugu_wiki | Thai_wiki | Tibetan_wiki | Turkish_wiki | Ukrainian_wiki | Urdu_wiki | Vietnamese_wiki | Zulu_wiki முதல் பக்கம் செல்க கட்டுரை அனுப்புக | | | | [+] [-] | உங்கள் தளத்தில் askislampedia தேடல் சேர்க்க முஹம்மது நபி ஒரு மிகச் சிறந்த¬ முன்மாதிரி முஹம்மது நபியவர்கள் மனித குலம் முழுமைக்கும் மிகச் சிறந்த முன்மாதிரியாக இருக்கிறார்கள். அவருடைய தனித்துவமான குணங்களில் ஒன்று, அவரொரு சிறந்த கணவராக, தந்தையாக, தாத்தாவாக பரிணமித்துள்ளார்கள். இன்னொரு புறம், அவரொரு மகத்தான ஆட்சியாளர், நீதிபதி, ஆன்மிகத் தலைவர். அவரை மற்றவர்களிலிருந்து வித்தியாசப்படுத்துகிற ஒன்று, அவர் அனைவருக்குமான அருளாக இறைவனிடமிருந்து அனுப்பப்பட்டுள்ளார். அவரது சொல்லும் செயலும் மனிதகுலத்திற்கு அருளாக அமைந்துள்ளது. தம்மைச் சுற்றியிருந்த அனைவரிடமும் அவர் நீதியை, அன்பை, கண்ணியத்தை வெளிப்படுத்தினார். அவரைப் போல் சகோதரத்துவத்தைப் பரப்பியவரை மனித வரலாற்றில் பார்க்க முடிவதில்லை. இப்படிப்பட்ட மகத்தான சிறப்புகளை அவருக்கு வழங்கியது அல்லாஹ்தான். அவனே அவரைத் தன் தூதராக நியமித்து சத்திய மார்க்கத்தின் பக்கம் அழைப்பு விடுக்குமாறு பணித்தான். இது இறைநம்பிக்கையின் ஓர் அங்கமாக ஆகிவிட்டது. பொருளடக்கம் குர்ஆன் சிறுவர்கள் மீது கருணை பெண்கள் மீது கருணை அநாதைகள், விதவைகள், ஏழைகள் மீது கருணை உழைப்பாளிகள் மீது கருணை விலங்குகள் மீது கருணை ஆதாரம் குர்ஆன் நபிகளார் தம்மை நம்பிக்கைகொண்டவர்கள் மீது மிகவும் அன்பும் கருணையும் உடையவராக இருப்பார்கள் என்கிறது குர்ஆன். அல்லாஹ் கூறுகிறான்: ஒரு தூதர் நிச்சயமாக உங்களிடம் வந்திருக்கின்றார்; அவர் உங்களிலுள்ளவர்தான். (உங்களுக்கு ஒரு துன்பம் ஏற்பட்டு) நீங்கள் சிரமத்திற்குள்ளாகி விட்டால், அது அவருக்கு மிக்க வருத்தமாகவே இருக்கும். (அவர் உங்கள் மீது அவ்வளவு அன்புடையவர்.) மேலும், உங்களுடைய நன்மையையே பெரிதும் விரும்புகின்றவராகவும், அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டவர்(களாகிய உங்)கள் மீது மிக்க கருணையும் அன்பும் உடையவராகவும் இருக்கின்றார்.(அல்குர்ஆன் 9.128) நபியே, உங்களை எல்லா உலகங்களுக்கும் ஓர் அருட்கொடையாகவே அனுப்பியுள்ளோம். (அல்குர்ஆன் 21.107) சிறுவர்கள் மீது கருணை ஒரு முறைஅனஸ் இப்னுமாலிக்(ரலி) அவர்கள் சிறுவர்களைக் கடந்து சென்றபோது அவர்களுக்கு சலாம் சொன்னார்கள். மேலும், "நபி (ஸல்) அவர்கள் இவ்வாறுதான் செய்துவந்தார்கள்'' என்று கூறினார்கள். (புகாரீ6247) இப்னு அப்பாஸ் எனும் நபித்தோழர் கூறுகிறார்: நபியவர்களிடம் பேரீச்சங்கனிகளின் முதல் அறுவடை கொண்டு வரப்பட்டால், அவற்றைத் தமது கண்களின் மீது வைத்தவர்களாக, “அல்லாஹ்வே, இதன் ஆரம்பத்தை எப்படிக் காண்கிறோமோ அப்படியே இதன் இறுதியையும் காணச் செய்வாயாக” என்று பிரார்த்தனை செய்வார்கள். பிறகு தம்மோடு உள்ள குழந்தைகளுக்கு அவற்றைக் கொடுப்பார்கள். (தபரானீ 11059) நபியவர்களைச் சந்திக்க வருபவர்கள் குழந்தைகளுடன் வந்தால் அக்குழந்தைகளைத் தம் பக்கம் அழைத்து மடியில் அமர்த்திக்கொள்வார்கள். ஒரு முறை ஒரு குழந்தை அவர்களின் மீது சிறுநீர் கழித்துவிட்டது. அப்போது அதன் மீது தண்ணீர் தெளித்துக்கொண்டார்கள். ஆடையைக் கழுவவில்லை. (அக்குழந்தை பால்குடிப் பருவத்தில் இருந்ததால் அப்படிச் செய்தார்கள் என்பதை நினைவில்கொள்க.) (புகாரீ) பெண்கள் மீது கருணை சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:ஒருமுறைஅல்லாஹ்வின் தூதரிடம் (அவர்களுடைய மனைவிமார்களான) குறைஷிப் பெண்கள் பேசிக் கொண்டிருந்தார்கள். அந்தப் பெண்கள் நபி (ஸல்) அவர்களிடம் (ஜீவனாம்சத் தொகையை) அதிகமாகத் தரும்படி தம் குரல்களை உயர்த்தி கேட்டுக் கொண்டிருந்தார்கள். அப்போது உமர் (ரலி) அவர்கள் வந்து (உள்ளே வர) அனுமதி கேட்டார்கள். உமர் (ரலி) அவர்கள் அனுமதி கேட்ட போது அப்பெண்கள் அவசர அவசரமாகத் தங்கள் பர்தாக்களை அணிந்தபடி எழுந்துகொண்டனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சிரித்தபடியே உமர் (ரலி) அவர்களுக்கு (உள்ளே வர) அனுமதி கொடுத்தார்கள். உமர் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதரே! தங்களை ஆயுள் முழுதும் அல்லாஹ் சிரித்தபடி (மகிழ்ச்சியாக) இருக்கச் செய்வானாக'' என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள், "என்னிடமிருந்த இந்தப் பெண்களைக் கண்டு நான் வியப்படைகிறேன். (என்னிடம் சகஜமாக அமர்ந்திருந்தவர்கள்) உங்கள் குரலைக் கேட்டவுடன் அவசர அவசரமாகப் பர்தா அணிந்து கொண்டார்களே'' என்று சொன்னார்கள். உமர் (ரலி) அவர்கள், "எனக்கு அஞ்சுவதை விட அதிகமாக அஞ்சத் தாங்கள்தாம் தகுதியுடையவர்கள் அல்லாஹ்வின் தூதரே!'' என்று கூறிவிட்டு, (அப்பெண்களை நோக்கி) "தமக்குத் தாமே பகைவர்களாகிவிட்ட பெண்களே! அல்லாஹ்வின் தூதருக்கு அஞ்சாமல் எனக்கா நீங்கள் அஞ்சுகிறீர்கள்?'' என்று கேட்டார்கள். அதற்கு அந்தப் பெண்கள், "ஆம், அல்லாஹ்வின் தூதருடன் ஒப்பிடும்போது நீங்கள் கடின சித்தமுடையவராகவும் அதிகக் கடுமை காட்டக்கூடியவராகவும் இருக்கின்றீர்கள்'' என்று பதிலளித்தார்கள்.அப்போதுஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "என் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீது சத்தியமாக! (உமரே!) நீங்கள் ஒரு பாதையில் சென்றுகொண்டிருக்கையில் உங்களை ஷைத்தான் கண்டால் உங்களுடைய பாதையல்லாத வேறொரு பாதையில்தான் அவன் செல்வான்'' என்று கூறினார்கள்.(புகாரீ 3294) ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:அபூபக்ர் (ரலி) அவர்கள்ஒரு முறைஎன்னிடம் வந்தார்கள். அப்போது இரண்டு சிறுமிகள் என்னிடம் (தஃப் எனப்படும்) சலங்கைகள் இல்லாத கஞ்சிராவைத் தட்டி பாடிக்கொண்டிருந்தார்கள். அது, மினாவில் தங்கும் (காலமான துல்ஹஜ் 10, 11, 12, 13ஆகிய) நாட்களில்ஒன்றாகஇருந்தது. நபி (ஸல்) அவர்கள் (படுக்கையில் படுத்தபடி முகத்தைத் திருப்பிக் கொண்டு) தம் துணியால் போர்த்திக் கொண்டிருந்தார்கள். ஆகவே, அபூபக்ர் (ரலி) அவர்கள் இரு சிறுமிகளையும் அதட்டினார்கள். நபி (ஸல்) அவர்கள் தமது முகத்தி-ருந்து (ஆடையை) நீக்கிவிட்டு, "அவ்விருவரையும் விட்டு விடுங்கள், அபூபக்ரே! ஏனெனில், இவை பண்டிகை நாட்கள்'' என்று கூறினார்கள். அந்த நாட்கள் மினாவில் தங்கும் நாட்களாயிருந்தன.(புகாரீ 3529) மேலும் நபியவர்கள் கூறுகிறார்கள்: உங்களில் மிகச் சிறந்த குணமுடையவரே, இறைநம்பிக்கையால் மிகச் சிறந்த முஸ்லிமாவார். உங்களில் சிறந்தவர் உங்கள் மனைவியரிடம் சிறந்தவரே. (திர்மிதீ 3895) மேலும், “யார் இரண்டு பெண்குழந்தைகளை அவர்கள் பருவமடையும் வரை வளர்த்துப் பராமரிக்கிறாரோ, அவர் மறுமை நாளில் என்னுடன் இந்த இரண்டு விரல்களைப்போல் இருப்பார்” என்று கூறிவிட்டு அவற்றைச் சேர்த்துக் காட்டினார்கள். (முஸ்லிம் 2631) மேலும் கூறினார்கள்: அல்லாஹ்வை நம்பிக்கைகொண்ட ஓர் ஆண், அல்லாஹ்வை நம்பிக்கைகொண்ட தம் மனைவியை வெறுக்க வேண்டாம். அவளது ஒரு குணத்தை அவர் வெறுத்தாலும் மற்றதில் அவர் திருப்தி அடைவார். (முஸ்லிம் 1469) அவர்கள் கூறினார்கள்:நான் நீண்ட நேரம் தொழுவிக்கும் எண்ணத்துடன் தொழுகையில் நிற்பேன். அப்போது (பின்னால் தொழுது கொண்டிருக்கும் பெண்களின்) குழந்தை அழுவதைக் கேட்பேன். அந்தக் குழந்தையின் தாய்க்கு சிரமமளிக்கக் கூடாது என்பதற்காக நான் எனது தொழுகையை சுருக்கமாக முடித்துவிடுகிறேன்.(புகாரீ 868) அநாதைகள், விதவைகள், ஏழைகள் மீது கருணை நபியவர்களது கருணை மனம் எப்போதும் விதவைகளையும் வறியவர்களையும் தேவையுள்ளவர்களையும் நோக்கியே இருந்துள்ளது. அவர்களைப் புறக்கணித்ததே இல்லை. முஸ்லிம்களில் பலவீனர்களையும் நோயாளிகளையும் சந்திப்பார்கள். அம்மக்களின் மரணச்சடங்குகளில் பங்குகொள்வார்கள். அநாதைகளை நல்லமுறையில் நடத்தினார்கள். அவர்களுக்குத் தர்மங்கள் செய்வதுடன், மக்களையும் அவர்களுக்காக உதவுமாறு ஏவுவார்கள். அவ்விசயத்தில் ஆர்வமூட்டுவார்கள். "நானும் அநாதையின் காப்பாளரும் சொர்க்கத்தில் இப்படி இருப்போம்'' என்று கூறியபடி தம் சுட்டுவிரலையும் நடுவிரலையும் இணைத்து அந்த இரண்டுக்குமிடையே சற்று இடைவெளிவிட்டு சைகை செய்தார்கள்.(புகாரீ 5304) கூறினார்கள்:ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமின் சகோதரன் ஆவான். அவனுக்கு அநீதியிழைக்கவும் மாட்டான்; அவனை (பிறரது அநீதிக்கு ஆளாகும்படி) கைவிட்டு விடவும் மாட்டான். எவர் தன் சகோதரனின் தேவையை நிறைவு செய்வதில் ஈடுபட்டிருக்கின்றாரோ அவரது தேவையை நிறைவு செய்வதில் அல்லாஹ்வும் ஈடுபட்டிருக்கின்றான். எவர் ஒரு முஸ்லிமின் ஒரு துன்பத்தை நீக்குகின்றாரோ அவரை விட்டு அல்லாஹ்வும் மறுமை நாளின் துன்பங்களில் ஒரு துன்பத்தை நீக்குகின்றான். எவர் ஒரு முஸ்லிமின் குறைகளை மறைக்கின்றாரோ அவரது குறைகளை மறுமை நாளில் அல்லாஹ்வும் மறைக்கின்றான்.(புகாரீ 2442) கணவனை இழந்தகைம்பெண்ணுக்காகவும் ஏழைக்காகவும் பாடுபடுகின்றவர், "அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரிபவரைப் போன்றவர் ஆவார்' அல்லது "இரவில் நின்று வணங்கிப் பகலில் நோன்பு நோற்பவரைப் போன்றவர் ஆவார்'. (புகாரீ 5353) உழைப்பாளிகள் மீது கருணை ஒரு மனிதர் நபியவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே, எத்தனை முறைதான் என் அடிமைகளை நான் மன்னிப்பது?” என்று கேட்டார். நபியவர்கள் அமைதியாக இருந்தார்கள். அந்த மனிதர் இக்கேள்வியை மூன்று முறை திரும்பக் கேட்டார். மூன்றாவது முறையாக அவர் கேட்டபோது, “அவர்களை ஒரு நாளுக்கு எழுபது முறை மன்னியுங்கள்” என்றார்கள் நபியவர்கள். (அபூதாவூது 5164) ஒருவர் தமக்கு இரண்டு அடிமைகளை வைத்திருந்தார். ஆனால் அவர்களால் அவர் மகிழ்ச்சியாக இல்லை. அவர் அந்த அடிமைகளை அடிப்பார், திட்டுவார். எனினும் அவர்கள் தங்கள் போக்கை மாற்றிக்கொள்ளவில்லை. அவர் நபியவர்களிடம் இது குறித்து முறையிட்டு தமக்கு அறிவுரை கூறும்படி கேட்டார். அதற்கு நபியவர்கள், அந்த மனிதர் அவ்வடிமைகளின் தவறுகளுக்குச் சரியான அளவில் அவர்களைத் தண்டித்திருந்தால் அது சரியானது என்றும், அவர்களின் தவறுகளுக்குரிய தண்டனையையும் தாண்டிய அளவில் அவர்களைத் தண்டித்திருந்தால் அதற்காக அல்லாஹ் அவரைத் தண்டிப்பான் என்றும் கூறினார்கள். இதைக் கேட்ட அந்த மனிதர் கவலையில் மூழ்கியவராக அழத் தொடங்கினார். நபியவர்கள் அவரிடம், “மறுமை நாளில் சரியான தராசுகளையே நாம் நாட்டுவோம். எந்த ஓர் உயிருக்கும் (நன்மையைக் குறைத்தோ, தீமையைக் கூட்டியோ) அநியாயம் செய்யப்படாது. (நன்மையோ தீமையோ) ஒரு கடுகின் அளவு இருந்தபோதிலும், அதனையும் (நிறுக்கக்) கொண்டு வருவோம். கணக்கெடுக்க நாமே போதும்” எனும் குர்ஆன் (21.47) வசனத்தை ஓதிக்காட்டினார்கள். அப்போது அவர், “அல்லாஹ்வின் தூதரே, நான் அவர்களை விடுதலை செய்வதே சிறந்தது என்று நினைக்கிறேன். அவர்கள் இப்போது விடுதலையானவர்கள்” என்றார். (திர்மிதீ 3165) விலங்குகள் மீது கருணை ஆயிஷா (ரலி) அவர்கள் ஒரு முறை ஒரு குதிரையின் மீது சவாரி செய்தார்கள். அக்குதிரை அவர்களுக்குச் சிரமத்தை அளித்தது. அதற்காக அவர்கள் அதனுடைய கடிவாளத்தைத் திரும்பத் திரும்பப் பிடித்து இழுத்துக்கொண்டே இருந்தார்கள். அதைக் கண்ட நபியவர்கள், ‘நீ அதனிடம் மென்மையாக நடந்துகொள்’ என்றார்கள். (முஸ்லிம் 2598) ஒரு முறை நபியவர்கள் ஓர் ஒட்டகத்தைக் கடந்து சென்றார்கள். அது பசியால் வயிறு ஒட்டிப்போய் மெலிந்திருந்தது. அப்போது நபியவர்கள், “உங்கள் கால்நடைகள் குறித்து அல்லாஹ்வுக்கு அஞ்சிக்கொள்ளுங்கள். அதற்குத் தீனி கொடுங்கள். அது நல்ல நிலையில் இருக்கும்போது சவாரி செய்யுங்கள்” என்றார்கள். (அபூதாவூது 2548) ஒரு முறை நபியவர்கள் அன்சாரித் தோழர் ஒருவரின் தோட்டத்தினுள் நுழைந்தார்கள். அங்கு ஓர் ஒட்டகம் இருந்தது. அதை நபியவர்கள் கண்டபோது அது அவர்களிடம் முறையிட்டது; அதன் கண்களிலிருந்து நீர் வடிந்தது. நபியவர்கள் அதனை நெருங்கிச் சென்று அதன் கண்ணீரைத் துடைத்து ஆறுதல்படுத்தினார்கள். பிறகு, “யார் இந்த ஒட்டகத்தின் எஜமான்? யாருடையது இது?” என்று கேட்டார்கள். ஓர் அன்சாரி முன் வந்து, “அல்லாஹ்வின் தூதரே, அது என்னுடையதுதான்” என்றார். அப்போது நபியவர்கள், “அல்லாஹ் உனது அதிகாரத்தில் கொடுத்துள்ள இந்த விலங்கைக் குறித்து நீ அல்லாஹ்வுக்கு அஞ்ச வேண்டாமா? இதனை நீ பட்டினியில் போடுவதாகவும், அதன் சக்திக்கும் மேலாக வேலை வாங்குவதாகவும் என்னிடம் முறையிடுகிறது” என்றார்கள். (அபூதாவூது 2549) ஒரு முறை மக்கள் சிலர் தங்கள் கால்நடைகள் மீது உட்கார்ந்துகொண்டு பேசிக்கொண்டிருப்பதை நபியவர்கள் பார்த்துவிட்டு, “இவற்றை நீங்கள் பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாகவும் வைத்து சவாரி செய்துகொள்ளுங்கள். பிறகு அதை விட்டுவிடுங்கள். உங்கள் தெருவோரங்களிலும் சந்தைகளிலும் அதனை இருக்கைகளாக ஆக்கி உட்கார்ந்துகொண்டு பேசாதீர்கள். சவாரி செய்யப்படும் பிராணி, அதன் மீது சவாரி செய்பவரைக் காட்டிலும் சிறந்ததாக இருக்கலாம். அவரை விட அது தன் இறைவனை நினைவுகூர்ந்துகொண்டிருக்கலாம். (முஸ்னது அஹ்மது 15629) நபிகளார் கூறினார்கள்: ஒரு பெண் ஒரு பூனையின் காரணமாக நரகில் நுழைந்தாள். அவள் அதைச் சிறைப்படுத்தி வைத்திருந்தாள். அதற்கு உணவு கொடுக்கவும் இல்லை. அது பூமியில் திரிந்து தன் உணவைத் தேடிக்கொள்ளவும் அவள் விடவில்லை. (முஸ்லிம் 904) சிலர் தாய்ப்பறவையிடமிருந்து அதன் குஞ்சுகளைப் பிரித்து தவிக்கச் செய்ததைப் பார்த்த நபியவர்கள் அச்செயலைக் கண்டித்தார்கள். ஒருவர் ஒரு பறவையின் இரண்டு குஞ்சுகளை எடுத்துக்கொண்டுவிட்டார். தாய்ப்பறவை தன் குஞ்சுகளைத் தேடித் தவித்தது. அதைக் கண்ட நபியவர்கள், “யார் அதன் குஞ்சுகளை எடுத்துக்கொண்டு அதற்குத் துன்பம் கொடுத்தது?” என்று கேட்டுவிட்டு, அக்குஞ்சுகளை அதனிடமே விட்டுவிடுமாறு கூறினார்கள். (அபூதாவூது 2675) ஒரு முறை நபியவர்கள் எறும்புப் புற்றினைக் கடந்து சென்றார்கள். அதை யாரோ எரித்திருந்தார்கள். அதைக் கண்ட அவர்கள், “யார் இதை எரித்தது?” என்று கேட்டார்கள். இன்னார் அதைச் செய்தார் என்று கூறப்பட்டது. “நெருப்பின் இறைவன்தான் நெருப்பைக்கொண்டு தண்டிப்பதற்கு உரிமையுள்ளவன்” என்று கூறினார்கள். (அபூதாவூது 2675) குறிப்பிட்ட தேவை ஏதுமின்றி ஒரு பறவையைப் பொழுதுபோக்குக்காக வேட்டையாடுவதை நபியவர்கள் தடை செய்தார்கள். “யாரேனும் ஒரு பறவையைக் காரணமின்றி கொன்றால், அது மறுமை நாளில் ‘அல்லாஹ்வே, இந்த மனிதன் தன் மகிழ்ச்சிக்காக என்னைக் கொன்றான். அவனது தேவைக்காக அல்ல’ என்று முறையிடும் எனக் கூறினார்கள். (சுனன் நசாயீ 4446) ஒருவர் ஆடு ஒன்றை அறுப்பதற்காக அதனைக் கிடத்திவிட்டு கத்தியைப் பதப்படுத்திக்கொண்டிருந்தார். அதைக் கண்ட நபியவர்கள், “நீ அந்த ஆட்டை இரண்டு முறை கொல்ல விரும்புகிறாயா? அதனைக் கிடத்துவதற்கு முன்பே நீ கத்தியைப் பதப்படுத்திக்கொள்ள வேண்டும்” என்றார்கள். (தபரானீ 4.53)
3 தம் நாவினால் புறங்கூறார்; தம் தோழருக்குத் தீங்கிழையார்; தம் அடுத்தவரைப் பழித்துரையார். 4 நெறிதவறி நடப்போரை இழிவாகக் கருதுவர்; ஆண்டவருக்கு அஞ்சுவோரை உயர்வாக மதிப்பர்; தமக்குத் துன்பம் வந்தாலும், கொடுத்த வாக்குறுதியை மீறார். பல்லவி 5 தம் பணத்தை வட்டிக்குக் கொடார்; மாசற்றவருக்கு எதிராகக் கையூட்டுப் பெறார்; இவ்வாறு நடப்போர் என்றும் நிலைத்திருப்பர். பல்லவி pallavi: aanndavarae, um koodaaraththil thangidath thakuthiyullavar yaar? 2 maasattavaraay nadapporae! – innor naeriyavattaைch seyvar; ulamaara unnmai paesuvar. pallavi 3 tham naavinaal purangaூraar; tham tholarukkuth theengilaiyaar; tham aduththavaraip paliththuraiyaar. 4 nerithavari nadapporai ilivaakak karuthuvar; aanndavarukku anjuvorai uyarvaaka mathippar; thamakkuth thunpam vanthaalum, koduththa vaakkuruthiyai meeraar. pallavi 5 tham panaththai vattikkuk kodaar; maasattavarukku ethiraakak kaiyoottup peraar; ivvaatru nadappor entum nilaiththiruppar. pallavi
புராண சாத்திர நூல்கள் கூறும் கருத்துக்கள் அல்ல நம்பிக்கை நமது அறிவின் தன்மை பற்றியதாகும் அதாவது சில பொருட்களின் தோற்றம் முடிவு ஆகியவற்றை நம்மால் அறியவியலாது என்பது சித்தாந்த சாத்திரங்கள் மட்டுமன்றி இக்கால அறிஞர்கள் எழுத்துக்களிலும் காணப்படுகிறது. அடி முடி தேடுவதும் ஒரு பொருளின் காரண காரியத்தை அறிவதும் தொடர்புடையது ஆகவே அடி முடி தேடுவது ஆகாது என்பது காரண காரியத்தை அறிவதும் கூடாது என்பதாகும் மேலெழுந்தவாரியாக புராணக் கட்டுக்கதைகள் என்று பகுத்தறிவின் பெயரால் எள்ளி நகையாடுவதும் புராணங்களில் காணும் இன் நம்பிக்கைக்கு பலியாகி இருப்பதைக் காணலாம். ஒரு தனிப்பட்டவரின் குறைபாடு என்று கூறுவதில் அர்த்தமில்லை அத்தகைவரை குறை கூறியும் பயனில்லை. நமது சமூகத்தில் ஆழப் பதிந்துள்ள ஒரு தத்துவத்தின் உலக நோக்கின் வெளிப்பாடு இதுவென கொள்ளுவது சாலப்பொருந்தும் அவ்வாறு விளக்கம் கண்டாலே அர்த்தத்தின் அடியையும் முடியையும் ஆராய்வதற்கு வழி பிறக்கும். ஒரு தனிப்பட்டவரின் திரிப்புணர்ச்சி அல்லது மருள்(illusion) அச்சமூகத்தவருக்கு மாத்திரமல்லாது பிறருக்கும் பேரபத்தை இரங்கத்தக்க தாயெனும் அதிகம் அஞ்ச வேண்டியது ஒன்று அல்ல ஆனால் ஒரு கூட்டத்தை அவரது அல்லது ஒரு சமூகத் விளைவிக்க கூடியதாகும். ஜெர்மானியர் ஆரியர் என்றும் உலகை ஆளப் பிறந்தவர் என்றும் இரண்டு ஒரு எழுத்தாளர் வெற்றி மயக்கம் மொழிகள் நாஜிக்களின் அபூர்வமான தத்துவமாகிய பொழுது சாதாரணமான ஜெர்மானியர் மக்கள் பல்லாயிரக்கணக்கானோர் அதை நம்பினர். விஞ்ஞானிகள் சிலரும் அதை உண்மை என ஏற்றுக்கொண்டனர் அதன் விளைவு உலகம் நன்கு அறிந்ததே. அதைப்போலவே இரண்டாம் உலகப் போருக்குப் பல ஆண்டுகள் முன்னிருந்த ஜப்பானிய ஆளும் . ஆளும் வர்க்கத்தினர் அந்நாட்டு அரசர் கடவுளின் குமாரர் என்று ஐதீகத்தை தேசத் தத்துவமாக காத்து பேணி வந்தனர் இது மாபெரும் பொய்யாகும் ஆயினும் அதை நம்பிய பல்லாயிரக்கணக்கான சாதாரண போர் வீரர்கள் தாம் கடவுளுக்காக இறப்பதாக எண்ணிக் கொண்டு இறுதிவரை போரிட்டு மடிந்தனர் போன்ற உதாரணங்கள் ஏராளம் உண்டு. இத்தகைய அமைப்பில் உள்ள பேராபத்து யாதெனில் ஒத்துப்போதல் எனும் கொள்கையின் அடிப்படையில் எதிரான அல்லது மாறுபட்ட சிந்தனைகளை அடக்கி ஒடுக்குவது அமெரிக்காவில் பொதுவுடைமைக் கட்சி சட்டவிரோதமாக பட்டு இவ்வடிப்படையில் சில நம்பிக்கைகள் இடைவிடாத பிரசாரத்தின் விளைவாக தேசிய உண்மைகளை அமைக்கப்பட்டு விடுகின்றன பகுத்தறிவின் அடிப்படையில் சமய சடங்குகள் மறுக்கப்படும் அதே வேளையில் புதிய ஐயங்கள் நிலைநாட்ட படுகின்றன.
அருப்புக்கோட்டை அருகே அரசுப் பேருந்தில் பயணம் செய்த கல்லூரி மாணவர் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள வெள்ளையாபுரம் கிராமத்தில் வசித்து வருபவர் சுரேஷ்குமார். இவரது மகன் மாதேஸ்வரன் (19). இவர் விருதுநகரில் உள்ள செந்தில்குமார் நாடார் கல்லூரியில் பிஎஸ்சி 2-ம் ஆண்டு படித்து வந்தார். தினமும் மாதேஸ்வரன் அரசு பேருந்தில் கல்லூரிக்கு சென்று வருவது வழக்கம். இந்த நிலையில் இன்று காலை வழக்கம்போல் கல்லூரிக்கு செல்வதற்காக அருப்புக்கோட்டையில் இருந்து கூட்டம் அதிகமாக இருந்த அரசு பேருந்தில் மாதேஸ்வரன் ஏறினார். ஆனால் அவரால் பேருந்திற்குள் செல்ல முடியவில்லை. இதன் காரணமாக பேருந்தின் படியில் கைப்பிடியை பிடித்துக் கொண்டு மிகுந்த சிரமத்துடன் பயணம் செய்தார். அப்போது பாலவநத்தம் மெயின் ரோட்டில் அரசு பேருந்து சென்றபோது படியில் நின்றிருந்த மாதேஸ்வரன் எதிர்பாராதவிதமாக தவறி நடுரோட்டில் விழுந்தார். இதில் அவரது தலையில் பின்புறம் பலத்த காயம் ஏற்பட்டு துடிதுடித்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அருப்புக்கோட்டை தாலுகா போலீசார் மாணவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் ஓட்டுநர் மற்றும் நடத்துனரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கல்லூரிக்கு சென்ற மாணவர் விபத்தில் சிக்கி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பயணம் செய்பவர்களுக்கு நோன்பை விட்டுவிட அனுமதியுள்ளது. பயணம் முடிவுக்கு வந்த பின்னர் விடுபட்ட நோன்புகளை நோற்க வேண்டும். “… فَمَن شَهِدَ مِنكُمُ الشَّهْرَ فَلْيَصُمْهُ وَمَن كَانَ مَرِيضًا أَوْ عَلَى سَفَرٍ فَعِدَّةٌ مِّنْ أَيَّامٍ أُخَرَ يُرِيدُ اللّهُ بِكُمُ الْيُسْرَ وَلاَ يُرِيدُ بِكُمُ الْعُسْرَ وَلِتُكْمِلُواْ الْعِدَّةَ وَلِتُكَبِّرُواْ اللّهَ عَلَى مَا هَدَاكُمْ وَلَعَلَّكُمْ تَشْكُرُون “… உங்களில் அம்மாதத்தை அடைபவர், அம்மாதம் முழுதும் நோன்பு நோற்க வேண்டும். எவரேனும் நோயாளியாகவோ பயணத்திலோ இருந்தால் (நோய்/பயணம் முடிவுக்கு) வரும் பின்னாட்களில்(விடுபட்ட நோன்பை) நோற்க வேண்டும். அல்லாஹ் உங்களுக்கு எளிதான முறையை விரும்புகின்றானேயன்றி, உங்களுக்கு இடரளிக்கும் முறையையன்று. இச்சலுகை, (ரமளானில் விடுபட்ட) நாட்களை நிறைவு செய்ய வாய்ப்பளித்ததற்கும் உங்களுக்கு நேர்வழி காட்டியதற்கும் அல்லாஹ்வின் மேன்மையை நீங்கள் போற்றி, நன்றி செலுத்த வேண்டும் என்பதற்காகத்தான் (அல்குர்ஆன் 2:185). நபி (ஸல்) அவர்கள் ரமளானில் மக்காவை நோக்கிப் பயணம் புறப்பட்டார்கள். அப்போது அவர்கள் நோன்பு வைத்திருந்தார்கள். ‘கதீத’ என்னும் இடத்தை அடைந்ததும் நோன்பை விட்டு விட்டார்கள். அவர்களுடன் பயணித்தவர்களும் நோன்பை விட்டுவிட்டனர். (அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ் (ரலி); நூல்: புகாரி 1944). சில நாட்களில் நீங்கிவிடும் என்று எதிர்பார்க்கப்படும் நோயாக இருந்தால் அந்த நோயின் காரணமாகவும் நோன்பை விட்டுவிட அனுமதியுள்ளது. நோய் நீங்கிய பின் விடுபட்ட நோன்புகளை நோற்க வேண்டும். “… فَمَن كَانَ مِنكُم مَّرِيضًا أَوْ عَلَى سَفَرٍ فَعِدَّةٌ مِّنْ أَيَّامٍ أُخَرَ وَعَلَى الَّذِينَ يُطِيقُونَهُ فِدْيَةٌ طَعَامُ مِسْكِينٍ فَمَن تَطَوَّعَ خَيْرًا فَهُوَ خَيْرٌ لَّهُ وَأَن تَصُومُواْ خَيْرٌ لَّكُمْ إِن كُنتُمْ تَعْلَمُونَ “… உங்களில் எவரேனும் நோயாளியாகவோ, பயணத்திலோ இருந்தால் (நோய்/பயணம் முடிவுக்கு) வரும் பின்னாட்களில் (விடுபட்ட நோன்பை) நோற்க வேண்டும். எனினும் நோன்பு நோற்பதற்கு வலுவிருந்து/வலுவிழந்து நோன்பை விட்டவர்கள் ஒரு நோன்பிற்கு ஈடாக ஓர் ஏழைக்கு உணவளிக்க வேண்டும். மனமுவந்து அதிகமாகக் கொடுப்பவருக்கு நன்மையும் அதிகமாகும். எத்துணை அதிகம் கொடுத்தாலும் – (ரமளான்) நோன்பின் சிறப்பை நீங்கள் அறிவீர்களாயின் – நோன்பு நோற்பதே உங்களுக்குப் பெருநன்மை பயக்கும் செயலாகும் (அல்குர்ஆன் 2:184). ‘ஃபித்யா’ (பரிகாரம்): முதுமை மற்றும் நீங்காத நோயின் காரணத்தினால் நோன்பு நோற்க முடியாதவர்கள் நோன்பை விட்டுவிட்டு ‘ஃபித்யா’ (பரிகாரம்) கொடுக்க வேண்டும். ஒவ்வொரு நோன்பிற்கும் பகரமாக ஓர் ஏழைக்கு உணவளிக்க வேண்டும் என்பது மேற்காணும் வசனத்தின் மூலம் தெளிவாக்கப் பட்டுள்ளது. இதை வாசித்தீர்களா? : கொடுங்கள்.. பெறுவீர்கள்!.. (நற்சிந்தனை) மாதவிடாய்ப் பெண்கள்: மாதவிடாய் அல்லது பிரசவ இரத்தம் வந்துவிட்டால் நோன்பை விட்டுவிட பெண்களுக்கு அனுமதி உள்ளது. இரத்தம் நின்ற பிறகு விடுபட்ட நோன்புகளை நோற்க வேண்டும். “…ஒரு பெண்ணிற்கு மாதவிடாய் ஏற்பட்டுவிட்டால் அவள் தொழுகையையும் நோன்பையும் விட்டு விடுவதில்லையா?” என நபி (ஸல்) கேட்டார்கள். (அறிவிப்பவர்: அபூஸயீதுல் குத்ரீ (ரலி), புகாரி 304). “நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் இருக்கும் போது எங்களுக்கு மாதவிடாய் ஏற்பட்டு, தூய்மையடைவோம். அப்போது விடுபட்ட நோன்பைக் களாச் செய்யுமாறு நபி (ஸல்) அவர்கள் எங்களுக்குக் கட்டளையிடுவார்கள். விடுபட்ட தொழுகைகளைக் களாச் செய்யுமாறு கட்டளையிட மாட்டார்கள்” (அறிவிப்பவர்: அன்னை ஆயிஷா(ரலி); நூல்:புகாரி). கர்ப்பிணிகளும் பாலூட்டும் தாய்களும்: ரமளான் மாதத்தின் நோன்பை, கர்ப்பிணிகளும் பாலூட்டும் தாய்களும் தற்காலிகமாக விட்டுவிட சலுகை அளிக்கப்பட்டு உள்ளார்கள். விடுபட்ட நாட்களை அவர்கள் களாச் செய்ய வேண்டும். ‘கர்ப்பிணிகளுக்கும் பாலூட்டுவோருக்கும் நோன்பிலிருந்து நபி (ஸல்) சலுகையளித்தனர்” (அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி); நூல்கள்: திர்மிதி, அபூதாவூத், நஸயீ, அஹ்மத், இப்னுமாஜா) ரமளானில் நாம் பெற்ற நோன்பு எனும் பயிற்சியை நமது இறுதி மூச்சுவரை செயல்படுத்தி இம்மையிலும் மறுமையிலும் வெற்றி பெற்றவர்களாக ஆகவும் நாமும் நாம் நேசிக்கும் நம் குடும்பத்தினரும், நம் உறவினர்கள், நண்பர்கள் என்று அனைவரும் நேர்வழியில் உண்மை முஸ்லிம்களாக வாழ்ந்து உண்மை முஸ்லிம்களாகவே மரணித்து ஜன்னதுல் பிர்தவ்ஸ் எனும் உயர்ந்த சுவனத்தில் நுழையும் பாக்கியத்தைப் பெறுவதற்கும் அல்லாஹ்விடம் பிராத்திப்போமாக. நமது எல்லாப் பிழைகளையும் மன்னித்து நமது அமல்களையும் துவாக்களையும் அந்த வல்ல நாயன் ஏற்றுக் கொள்வானாக! ஆமீன்!
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாட் சம்பளமாக ஆயிரம் ரூபாவை வழங்குவதற்கான உடன்படிக்கை கைச்சாத்திடும் நிகழ்வு நாளை (13) நடைபெறும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது. கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்க பிரதிநிதிகள் , பெருந்தோட்டக் கம்பனிகளின் பிரதிநிதிகள் , அரசாங்க தரப்பினர் என மூன்று தரப்புகளும் நிகழ்வில் கலந்து கொள்ளவிருந்தனர். இந்நிலையிலேயே நிகழ்வு திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு மார்ச் மாதம் முதல் குறைந்தபட்ச வேதனமாக ஆயிரம் ரூபா வழங்கப்பட வேண்டும் என்ற கட்டளையை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அண்மையில் பிறப்பித்திருந்தார். இதன்படி பெருந்தோட்டக்கம்பனிகளின் பிரதிநிதிகளுக்கும், பெருந்தோட்டத்துறை அமைச்சருக்கும் இடையில் பல சுற்றுப் பேச்சுகள் நடைபெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படம் ‘The Devotion of Suspect X’ என்ற ஜப்பானிய நாவலைத் தழுவி எடுக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்துள்ளார் அதன் இயக்குநர் ஆண்ட்ரு லூயிஸ். படம் வெளியாகவுள்ள இந்த நிலையில், அதில் இடம்பெற வேண்டிய ஒரு ஸ்லைடு விடுபட்டு விட்டதாக ட்வீட் செய்துள்ளார் இயக்குநர். “அன்பான ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் கவனத்துக்கு, படத்தின் ஆரம்பத்தில் இந்த ஸ்லைடு இடம்பெறத் திட்டமிட்டிருந்தோம். ஆனால், ஃபைனல் பிரின்டில் இது விடுபட்டுவிட்டது. ஒரு இயக்குநராக நான் இதை ஒப்புக் கொள்கிறேன். ‘கொலைகாரன்’ படத்தை தியேட்டரில் பார்த்து ரசியுங்கள்” எனத் தெரிவித்துள்ளார் ஆண்ட்ரு லூயிஸ். #Vijay-Antony #Arjun_Sarja #tamilcinemaking Related Posts tamil cinema news Post a Comment Popular Posts `` அப்பாவின் பெருமைக்கு உலகப்புகழோ அல்லது அவரது இசையோ காரணம் அல்ல`` - ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதிஜாவின் உருக்குமான பேச்சு ஸ்லம்டாக் மில்லினியர் திரைப்படம் ஆஸ்கர் விருது பெற்று 10 ஆண்டுகள் நிறைவு செய்ததையொட்டி மும்பை தராவி பகுதியில் நிகழ்ச்சி ஒன்று நடந்தது. ஏ.ஆர்... விமர்சகர்களுக்கு தக்க பதிலடி கொடுத்த ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதிஜா அண்மையில் மும்பையில் இடம்பெற்ற '10 இயர்ஸ் ஆஃப் ஸ்லம் டாக் மில்லினியர்' விழாவில் ஏ.ஆர். ரஹ்மான் அவரின் மூத்த மகள் கதிஜா கலந்துக... புத்திசாலித்தனமாக கூட்டணி சேர்க்கும் ரஜினி சட்ட மற்ற தேர்தல் எப்போது நடந்தாலும் நான் தயாராக இருக்கிறேன் என்று ரஜினி கூறியதற்கு பிறகு அவரது வேட்பாளர்கள் குறித்த விஷயங்களில் பிசியா... கமல் கட்சியின் முதல் வெற்றி இதுவே கமல் கட்சி தமிழகத்தில் மூன்றாம் இடத்தில் இருக்கிறது. மேலும் பொள்ளாச்சி, மத்திய சென்னை, தென் சென்னை, வடசென்னை, ஸ்ரீபெரும்புதூர், சேலம், ... சற்று முன் உறுதியான பிக் பாஸ் 3-யின் 16 பிரபலங்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு தான் அதிக வரவேற்பு கிடைக்கும். தமிழில் அடுத்த சீசன் எப்போது தொடங்கும் என்று அனைவரும... ரஜினியா? கமலா? மக்கள் யாரை தேர்வு செய்வார்கள் இம்முறை நடந்த லோக் சாப தேர்தலில் மத்தியில் பாஜகவும் தமிழகத்தில் திமுகவும் வெற்றியைருசித்துள்ளது. அடுத்த நடக்கவிருக்கும் பாராளுமன்ற தேர்... கமலை அசிங்கப்படுத்திய பாஜக! கமலின் பதில் என்ன? கமல் ஹாசன் மோடியின் பதவி ஏற்பு விழாவிற்கு அழைத்ததாக கூறப்பட்டது முழுவதும் மிக பெரிய பொய் என்று தெரியவந்துள்ளது. மேலும், இந்த விஷயத்தை B... சிம்புவின் திடீர் பேங்காக் பயணம் - காரணம் வெளியாகியது தமிழ் சினிமாவின் மிக முக்கியமான நடிகர் சிம்பு. சிம்பு தனது அடுத்த படமாக மாநாடு படத்தில் நடிக்க ரெடியாகி வருகின்றார், ஆனால், இந்த படத்தின் ப... ஏமாற்றிய வேட்பாளர்களுக்கு கமலின் தண்டனை மக்கள் நீதி மய்யம் கட்சியின் தேர்தல் முடிவுகள் அந்த கட்சிக்கு சாதகமாக தான் வந்துள்ளது. வெறும் 14 மதங்களான கட்சிக்கு இந்த வரவேற்பு கிடைக...
பாப் ரஃபெல்சன், ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட மேவரிக் திரைப்படத் தயாரிப்பாளர், செவன்டிஸ் கிளாசிக் போன்றவற்றை இயக்கியவர். ஐந்து எளிதான துண்டுகள் மற்றும் மார்வின் கார்டன்ஸ் மன்னர் இணை உருவாக்கம் கூடுதலாக குரங்குகள்தனது 89வது வயதில் காலமானார். இரண்டும் ஹாலிவுட் நிருபர் மற்றும் வெரைட்டி கொலராடோவின் ஆஸ்பெனில் உள்ள அவரது வீட்டில் ரஃபெல்சன் சனிக்கிழமை இயற்கையான காரணங்களால் இறந்தார் என்று தெரிவித்தார். ஹாலிவுட்டில் ஒரு மூத்த தொலைக்காட்சி தயாரிப்பாளரான அவர் திரைப்படத் தயாரிப்பாளராக இருப்பதற்கு முன்பு, நியூயார்க் நகரில் பிறந்த ராஃபெல்சன், பிரிட்டிஷ் படையெடுப்பின் மத்தியில் அறுபதுகளின் முற்பகுதியில் கற்பனையான பாப் இசைக்குழுவைப் பற்றி ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியை உருவாக்கும் எண்ணம் கொண்டிருந்தார்; பீட்டில்ஸின் வெளியீட்டிற்குப் பிறகு இந்த யோசனை இறுதியாக நிறைவேறியது ஒரு கடினமான பகல் இரவுராஃபெல்சன் மற்றும் அவரது தயாரிப்பு பங்குதாரரான பெர்ட் ஷ்னீடர் ஆகியோர் குரங்குகள் என்னவாக மாறும் என்பதற்கான காஸ்டிங் அழைப்பை வெளியிட்டனர். இந்தத் தொடர் இரண்டு சீசன்களுக்கு மட்டுமே ஓடியது என்றாலும், “லாஸ்ட் ட்ரெயின் டு கிளார்க்ஸ்வில்லே”, “நான் ஒரு விசுவாசி” மற்றும் “டேட்ரீம் பிலீவர்” போன்ற சிங்கிள்களுடன் “பேண்ட்” ஒரு வெற்றியை உருவாக்கும் இயந்திரமாக மாறியது. சிட்காம் ரத்துசெய்யப்பட்ட பிறகு, 1968 இன் இப்போது-கல்ட் கிளாசிக்கில் மோன்கீஸ் நடித்தார் தலைராஃபெல்சன் இணைந்து எழுதி இயக்கியுள்ளார். “[Head] குரங்குகளின் மறுகட்டமைப்பு பற்றி அதிகம் இல்லை, ஆனால் அது ஹாலிவுட் திரைப்படத் துறையின் மறுகட்டமைப்பிற்கான உருவகமாக குரங்குகளின் மறுகட்டமைப்பைப் பயன்படுத்துகிறது,” என்று Monkees’ Micky Dolenz கூறினார். ரோலிங் ஸ்டோன் 2016 இல். “இது 17 மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு கட்டுப்படுத்தப்பட்டதாக நான் நினைக்கிறேன். எங்கள் ரசிகர்களில் பலரால் உள்ளே நுழைய முடியவில்லை. வணிகக் கண்ணோட்டத்தில், இது முற்றிலும் தவறான திரைப்படம். ஆனால் Monkees TV நிகழ்ச்சியின் 90 நிமிட எபிசோடை உருவாக்க நாங்கள் விரும்பவில்லை. மேலும், இவர்கள்தான் போய் உருவாக்கப் போகிறவர்கள் சுலபமான பயணி மற்றும் ஐந்து எளிதான துண்டுகள். உண்மையில் இங்கே நீட்டிக்க அவர்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. குரங்குகளின் வருத்தம் அதிகம் – “நான் LA இல் வாழ்ந்து, பாப் மற்றும் பெர்ட் மற்றும் அவர்களின் எல்லா பணத்தையும் பார்த்திருந்தால், அது என்னை பைத்தியமாக ஆக்கியிருக்கும்” என்று டோலென்ஸ் கூறினார். ரோலிங் ஸ்டோன் – ராஃபெல்சன் மற்றும் ஷ்னீடரின் ரேபர்ட் புரொடக்ஷன்ஸ் இசைக்குழுவிலிருந்து பெற்ற வருவாய் நான்கு உறுப்பினர்களுக்கு திருப்பி அனுப்பப்படவில்லை; அதற்கு பதிலாக, தயாரிப்பாளர்கள், ஸ்டீபன் ப்ளூசருடன் சேர்ந்து, பிபிஎஸ் புரொடக்ஷன்ஸ் என்ற ஒரு சுயாதீன திரைப்பட நிறுவனத்தை நிறுவினர், இது திரைப்படங்களை தயாரிப்பதில் கவனம் செலுத்துகிறது. தலை – அந்த நேரத்தில் ஹாலிவுட்டில் தயாரிக்கப்பட்டதற்கு எதிரானது. பிபிஎஸ் புரொடக்‌ஷன்ஸ் நான்கு வருடங்கள் மட்டுமே வணிகத்தில் இருந்த போதிலும், இது தலைமுறை தலைமுறையாக சுயாதீன திரைப்பட தயாரிப்பாளர்கள் மீது அளவிட முடியாத தாக்கத்தை ஏற்படுத்தியது: எதிர்கலாச்சார வெற்றியைப் பெற்ற பிறகு சுலபமான பயணிநிறுவனம் பீட்டர் போக்டனோவிச் போன்ற இளம் இயக்குனர்களுக்கு வாய்ப்புகளை வழங்கியது (கடைசி பட நிகழ்ச்சிசிறந்த படம் உட்பட எட்டு ஆஸ்கார் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டது), ஹென்றி ஜாக்லோம் (ஒரு பாதுகாப்பான இடம்), மற்றும் ஜாக் நிக்கல்சன், BBS இன் 1970 வெளியீட்டை இயக்கி இணை எழுதியவர் ஓட்டுங்கள், என்றார். நிக்கல்சனின் சூப்பர் ஸ்டார் வாழ்க்கையைத் தொடங்க உதவியதற்காக ரஃபெல்சன் பெருமைப்படுகிறார், ஏனெனில் அவர்கள் ஏழு படங்களில் ஒன்றாக வேலை செய்தனர். அந்த நேரத்தில் போராடும் நடிகராக இருந்த நிக்கல்சன், எழுதுதல் மற்றும் இயக்குவதில் கவனம் செலுத்தினார், முதலில் ரஃபெல்சனுடன் இணைந்து பணியாற்றினார். தலை, இந்த ஜோடி இணைந்து எழுதியது. அடுத்த ஆண்டு, 1969 இல் நிக்கல்சன் தனது நடிப்பு முன்னேற்றத்தை சுத்த அதிர்ஷ்டத்தால் பெற்றார் சுலபமான பயணிராஃபெல்சன் தயாரித்தார். “பெர்ட் ஷ்னீடர் மற்றும் பாப் ராஃபெல்சன் நான் ஒரு நல்ல நடிகர் என்று நினைத்தார்கள், ஆனால் என்னை அவர்களுடன் எல்லா நேரங்களிலும் இருப்பிடங்களில் அழைத்துச் சென்றார்கள், முதன்மையாக தயாரிப்புக்கு உதவுவதற்காக” என்று நிக்கல்சன் கூறினார். ரோலிங் ஸ்டன்இ 1986 இல் அவரது சுலபமான பயணி பங்கு. கேமராவுக்குப் பின்னால் ரஃபெல்சனுடன், அவர் நிக்கல்சனை நடிகராகவும், நட்சத்திரத்தை உருவாக்கும் பாத்திரத்திலும் நடித்தார் ஐந்து எளிதான துண்டுகள், இது சிறந்த படம் மற்றும் சிறந்த நடிகர் ஆகிய இரண்டிற்கும் அகாடமி விருது பரிந்துரைகளைப் பெற்றது. இயக்குனரும் நடிகரும் பின்னர் 1972 இல் மீண்டும் இணைந்தனர் மார்வின் கார்டன்ஸ் மன்னர்1981 நோயர் தபால்காரர் எப்போதும் இரண்டு முறை ஒலிக்கிறார்1992 கள் மனிதன் பிரச்சனை மற்றும் 1996கள் இரத்தம் மற்றும் மது. நிக்கல்சன் திரைப்படங்களைத் தவிர, ரஃபெல்சன் 1976-களையும் இயக்கியுள்ளார் பசியுடன் இருங்கள் (அவரது ஆரம்பகால பாத்திரங்களில் ஒன்றில் அர்னால்ட் ஸ்வார்ஸ்னேக்கர் நடித்தார்), 1987 கருப்பு விதவை, மற்றும் லியோனல் ரிச்சியின் “ஆல் நைட் லாங்” இசை வீடியோ. இயக்குனராக அவரது கடைசி திரைப்படம் 2002 இல் இருந்தது நல்ல செயல் இல்லை.
Afrikaans Arabic Bengali English French German Gujarati Hindi Indonesian Kannada Marathi Malayalam Nepali Punjabi Sinhala Spanish Telugu Urdu Vietnamese Unknownfacts இப்படிதான் வாழ்கிறார்களா ஆப்ரிக்காவின்மாசாய் இன மக்கள் ByKarthik Sep 30, 2022 இப்படிதான் வாழ்கிறார்களா ஆப்ரிக்காவின் மாசாய் இன மக்கள் இப்படிதான் வாழ்கிறார்களா ஆப்ரிக்காவின்மாசாய் இன மக்கள் Africa- வின் மிகவும் பிரபலமான இனக்குழு, Masai. வடக்கு, மத்திய மற்றும் தெற்கு Kenya, மற்றும் வடக்கு Tanzaniaவின் எல்லையில் காணப்படும், மாசாய் மக்கள், தங்கள் கால்நடைகளுடன், மேய்ச்சல் நிலப்பகுதிகளில் வாழும், நாடோடி மக்கள் ஆவர். மாசாய் மக்களின் தனித்துவமான மரபுகள், பழக்கவழக்கங்கள் மற்றும் உடைகள் மற்றும் முக்கிய தேசிய பூங்காக்களுக்கு, அருகாமையில் இருக்கும், அவர்களின் குடியிருப்புகள் காரணமாக, கிழக்கு Africaவின், நன்கு அறியப்பட்ட இனக்குழுவாக உள்ளனர். மா எனும் மொழிய பேசும், மாசாய் மக்களின் வாழ்க்கை முறை, பழக்க வழக்கங்கள் மற்றும் கலாச்சாரத்தை பற்றிய, ஏழு சுவாரசியமான விஷயங்களை, இப்போது பார்ப்போம். மாசாய் houses, மாசாய் மக்கள், மணியாட்டா எனப்படும் குடிசைகளில் வாழ்கின்றனர். பாரம்பரிய மாசாய் வீடுகள், வட்ட வடிவிலோ அல்லது ரொட்டி வடிவிலோ, மண், குச்சிகள், புல், மாட்டு சாணம் மற்றும் பசுவின் சிறுநீர் ஆகியவற்றால் ஆனது. இந்த வீடுகளை கட்டும் பொறுப்பு, பெண்களுடையது. இது போன்ற பல உள்ளடக்கிய ஒரு கிராமத்தை சுற்றி, என்காம் எனப்படும் வேலியை கட்டமைக்கின்றனர். வேலி அமைக்கும் பொறுப்பை, ஆண்கள் ஏற்றுக் கொள்கின்றனர். இந்த வேலியானது, மாசாய் மக்களின் கால்நடைகளை, இரவு நேரத்தில், காட்டு விலங்குகளிடம் இருந்து பாதுகாக்கிறது. மாசாய் மக்கள், நாடோடிகள் என்பதால், அவர்களது வீடுகள், நிலையற்றவை. மற்றும், எளிதில், சேதமாக கூடியவையாக, இருக்கின்றன. மாசாய் சமூகம் : மாசாய் சமூகம், ஆணாதிக்க இயல்புடையது. மூத்த மாசாய் ஆண்கள்தான், மாசாய் பழங்குடியினருக்கான, முக்கிய விஷயங்கள தீர்மானிக்கிறார்கள். பாரம்பரிய வாழ்க்கை முறைய வாழும், மாசாய் மக்களுக்கு, ஒரு முறையான இறுதிச்சடங்கு இல்லாமலேயே, வாழ்க்கை முடிவடைகிறது. மேலும், இறந்தவர்களை, மாமிசம் உண்ணும் பறவைகள், விலங்குகளுக்காக, வயல்களில் செல்கின்றனர். இறந்த உடலை அடக்கம் செய்வது, மண்ணுக்கு தீங்கு விளைவிக்கும் என்று, மாசாய் மக்கள் நம்புவதால், பெரும்பாலான சடலங்களை, மாசாய் மக்கள், அடக்கம் செய்வதில்லை. அதே நேரத்தில், சமூகத்தின் மிக முக்கியமான தலைவராக இருப்பவர், இறந்து போனால் மட்டுமே, அடக்கம் செய்கின்றனர். பாரம்பரிய மாசாய் மக்களின் வாழ்க்கை முறையானது, அவர்களின் முதன்மையான உணவு ஆதாரமாக விளங்கும், கால்நடைகள் மீது கவனம் செலுத்துகிறது. மாசாய் சமூகத்தில், ஒரு மனிதனின் செல்வத்தின் அளவு, அவன் பெரும் குழந்தைகள் மற்றும் வைத்திருக்கும் கால்நடைகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் உள்ளது. எனவே, ஏராளமான கால்நடைகள் இருந்தாலும், அதிக குழந்தைகள் இல்லாத ஒரு மனிதன், ஏழையாக கருதப்படுகிறான். அதே போல, அதிக குழந்தைகள் இருந்தாலும், குறைவான கால்நடைகள் வைத்திருக்கும் மனிதனும், ஏழையாக கருதப்படுகிறான். ஒரு மாசாய் புராணம், பூமியில் உள்ள அனைத்து கால்நடைகளும், மாசாய் மக்களுக்கு மட்டுமே சொந்தம் என்று சொல்கிறது. இந்த நம்பிக்கையின் விளைவாக, மாசாய் மக்களில் சிலர், பிற பழங்குடி மக்களின் கால்நடைகளும், தங்களுக்கே உரிமையானது என திருடி விடுவதும் உண்டு. இருப்பினும், இந்த நடைமுறை, இப்போது, மிகவும் குறைவாகவே உள்ளது. மாசாய் மக்களின் கடவுள் : Mazai மக்கள், ஏகத்துவவாதிகள். என்ங்கை என்பது, அவர்களின் கடவுள். மாசாய் மக்கள், தங்களது கடவுள், மிகவும் இரக்கம் உள்ளவர், மற்றும், அவர் அனுபவிக்கும் உணர்வுகளுக்கு ஏற்ப, வெவ்வேறு வண்ணங்களில், தன்னை வெளிப்படுத்துபவர் எனவும் நம்புகின்றனர். அதன்படி, கருப்பு மற்றும் அடர் நீறம் என்பது, கடவுள், மனிதர்களிடம், நல்ல மனநிலையில் இருப்பதை, குறிக்கிறது. சிவப்பு நிறம் மனிதர்களிடத்தில், எரிச்சலுடன் இருப்பதை, அடையாளப்படுத்துகிறது. எங்கள் கடவுளுக்கு, இரண்டு அவதாரம் உண்டு. ஒன்று, என்ங்கை நோராக். இவர், கருப்பு நிறத்தில் இருப்பார். நன்மை செய்பவர், அன்பானவர். நிலத்தில், அதிகம் புற்களை வளர செய்பவர் மற்றும் செழிப்படைய செய்பவர். இவர் இடி மற்றும் மழையில் காணப்படுகிறார். மற்றொரு அவதாரம், என்ங்கை நான் நியோகி. இவர் சிவப்பு நிறத்தில் இருப்பவர். இவர் பழிவாங்கும் கடவுள். பஞ்சம் மற்றும் பசியை கொண்டு வருபவர். மின்னலிலும் அடையாளம் காணப்படுகிறார். இன்று, மாசாய் மக்களில் பெரும்பாலானோர், கிறிஸ்தவர்களாகவும், சொற்ப அளவிலானவர்கள், முஸ்லிமாகவும் உள்ளனர். மாசாய் உணவுப் பழக்கம் : பாரம்பரிய மாசாய் உணவில், ஆறு அடிப்படை உணவுகள் உள்ளன. அவை, இறைச்சி, இரத்தம் , பால், கொழுப்பு, தேன் மற்றும் மரப்பட்டை ஆகியவை, பால் மற்றும் தயிரை விரும்பி குடிக்கின்றனர். சில சமயம், பாலில் கால்நடை ரத்தத்தையும் கலந்து குடிக்கின்றனர். கால்நடையின் கழுத்து நரம்பை, சிறிய அளவில் வெட்டுவதன் மூலம், பச்சை ரத்தத்தை பெறுகின்றனர். ரத்தம் கலந்த பால், பெரும்பாலும், ஒரு சடங்கு பணமாகவும், நோய்வாய்ப்பட்டவர்களுக்கு, உணவாகவும் பயன்படுத்தப்படுகிறது. காளைகள், எருதுகள் மற்றும் ஆடுகள், விசேஷ நிகழ்வுகள், மற்றும் விழாக்களில், இறைச்சிக்காக, வெட்டப்படுகின்றன. விலங்குகள் வெட்டப்படும் போது கிடைக்கும் துணை பொருட்களான தோல், ரோமங்கள் போன்றவை படுக்கை தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது. மாட்டுச்சாணம் வீடு கட்ட பயன்படுத்தப்படுகிறது. மாசாய் மக்களின் முழு வாழ்க்கை முறையும், அவர்களின் கால்நடைகளை சுற்றியே உள்ளது. சமீப காலமாக, மாசாய் மக்கள், தங்கள் உணவு தேவைக்கு, மக்காச்சோளம், அரிசி, முட்டைகோஸ் போன்ற, விவசாய பயிர்களையும், பயன்படுத்துகின்றனர். மாசாய் மக்களின், பாரம்பரிய ஆடை: மாசாய் மக்களின், பாரம்பரிய ஆடை, வண்ணமயமானது. பாலினம், வயது மற்றும் இடம் ஆகியவற்றின் அடிப்படையில் மாறுபடுகிறது. விருத்த சேதனத்திற்கு பிறகு, பல மாதங்களுக்கு இளைஞர்கள், கருப்பு நிற ஆடையை அணிகின்றனர். மாசாய் மக்களின் மத்தியில், சிவப்பு ஒரு விருப்பமான நிறமாகும். கருப்பு, நீலம், கட்டங்கள் மற்றும் மற்றும் கோடுகளைக் கொண்ட, பல வண்ண ஆப்பிரிக்க ஆடைகளும், அணியப்படுகின்றன. ஆயிரத்து தொள்ளாயிரத்து அறுபதுகளில், செம்மறை ஆட்டுத் தோல், கன்றுக்குட்டி தோல், மற்றும், பிற விலங்குகளின் தோலால் ஆன, ஆடைகளை அணிந்திருந்த, மாசாய் மக்கள், பின்னர், துணியால் ஆன ஆடைகளுக்கு, மாறினர். உடலை, கொள்ள பயன்படும் துணி, மாசாய் மக்களின் மொழியில், சுக்கா என்று அழைக்கப்படுகிறது. மாசாய் பெண்கள், மணிகளால் ஆன நகைகளை செய்யும் வழக்கத்தை கொண்டுள்ளனர். இது அவர்களின் உடல் அலங்காரத்தில், முக்கிய பங்கு வகிக்கிறது. காது குத்துதல் மற்றும் காது மடல்களை நீட்டுதல் ஆகியவை, மாசாய் அழகின் ஒரு பகுதியாகும். மேலும், ஆண்கள் மற்றும் பெண்கள் இருபாலருமே, தங்கள் காது மடல்களில், உலோக வளையங்களை அணிகிறார்கள். மசாய் மரபுகள் : மாசாய் மக்களில், ஆண்கள் மற்றும் பெண்கள், இருபாலருமே, சேதனம் மற்றும் திருமணம் போன்ற சடங்குகளை கொண்டாட, தங்களது தலையை மொட்டை அடித்துக் கொள்கின்றனர். இது வாழ்க்கையின் அத்தியாயங்களை, ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு கடந்து செல்லும், ஒரு புதிய தொடக்கத்தை பிரதிபலிக்கிறது. மெல்லிய ஜடைகள் போல பின்னப்பட்டு, நீண்ட கூந்தலை, மாசாய் வீரர்கள் மட்டுமே அணிய அனுமதிக்கப்படுகிறார்கள். மொட்டை அடிப்பதும், வித்தியாசமான styleலில், முடி வளர்ப்பதும், மாசாய் மக்களின் கலாச்சாரத்தில், மிக முக்கிய அம்சமாகும். கடந்த பல தசாப்தங்களாக, மாசா இளைஞர்கள், ஒரு வீரனாக நிரூபிக்க, தனியாகவோ அல்லது குழுவாகவோ சென்று, சிங்கத்தை கொள்ள வேண்டும். தங்களிடம் இருக்கும், இரும்பு ஈட்டியை மட்டுமே பயன்படுத்தி, சிங்கத்தை கொள்ள வேண்டும் என்பது, இந்த சடங்கின் முக்கிய விதி. மேலும், இந்த சடங்கில், குறிப்பாக, ஆண் சிங்க தான் கொள்ள வேண்டும். பெண் சிங்கங்கள் வாழ்க்கையின் புனிதமான மூதாதையர்களாக கருதப்படுவதால், பெண் சிங்கங்கள் வேட்டையாடப்படுவதில்லை. தற்போது கிழக்கு ஆப்பிரிக்காவில், இந்த சிங்க வேட்டை சடங்கு தடை.
யாழ்ப்பாணம் கோண்டாவில் கே.கே.எஸ் வீதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று காலை கே.கே.எஸ் வீதி கோண்டாவில் உப்புமடம் சந்திக்கு அருகாமையில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. குறித்த மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் அதிஸ்டவசமாக தப்பியுள்ளார். இரு மோட்டார் சைக்கிள்கள் சந்தியில் திரும்ப முற்பட்ட வேளையில் ஏற்பட்ட விபத்தில் நபர் பயணித்த மோட்டார் சைக்கிள் கால்வாய்க்குள் பாய்ந்தது. காயமடைந்த இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் .குறித்த வீதியில் சில மணி நேரம் போக்குவரத்து ஸ்தம்பிதம் அடைந்ததமை குறிப்பிடத்தக்கது. Related posts: தேயிலை உற்பத்தியில் சென்ற வருடம் 5 வீத வளர்ச்சி! சீன வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு விஜயம் - ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிற்கு சீன ஜனாதிபதியிடமிருந்தும... விரைவில் நாட்டை மீளக் கட்டியெழுப்பும் வேலைத் திட்டங்கள் உள்ளடங்கிய வரவு செலவுத் திட்டம் - அமைச்சர் ப... Tweet விவசாய நிலங்களை பாதுகாப்பதற்கு மழைநீரைத் தேக்கிவைக்கத் திட்டம்! கிளிநொச்சியில் பாடசாலையில் இருந்து இடைவிலகும் சிறார்களின் எண்ணிக்கை அதிகரிப்பு - நடவடிக்கை எடுக்குமா... மனித தேவைகளைப் பூர்த்தி செய்வதோடு, பூமியின் ஆரோக்கியத்தை பேணுவதற்கும் அனைவரும் முன்னுரிமை அளிக்க வேண...
மேம்போக்காப் பார்த்தா நமது எல்லாச் செயல்களுக்கும் மனம்தான் காரணம் என்று சொல்வார்கள். மனசைக் கேட்டு செய்வதுதான் சரி என்பார்கள். உண்மையிலேயே நாம நம்ம மனசைக்கேட்டு மட்டும் செய்தால் என்ன ஆகும்? ரொம்ப சிரமம்தான். முடிவு எடுக்கவிடாது. “இரண்டு மனம் வேண்டும், இறைவனிடம் கேட்டேன் …” இந்தப் பாட்டைத்தான் பாடனும். ஆன்மீகத்தில் இருப்பவர்களைக் கேட்டால் மனம் என்பது ஒரு குப்பைத்தொட்டி. பல எண்ணப்பதிவுகளைச் சேர்த்து வைத்துக் கொள்ளும். எந்த நிகழ்வு நடந்தாலும் அந்த குப்பைத்தொட்டியிலே போய் தோண்டிப் பார்க்கும். பார்த்துட்டு ‘எனக்குத் தெரிந்தவரையில், இது தப்பு அது தப்பு’ன்னு சொல்லும். இதுதான் சரின்னு அடம் பிடிக்கும். மனசை அழிக்கனும் என்பார்கள். உண்மை அறிவுன்னு நமக்குஎல்லாம் ஒன்று இருக்கும். அது இயற்கையோட இயைந்ததாக இருக்கும். இணைந்ததாக இருக்கும். நாம வளர, வளர அந்த இணைப்பைத் துண்டித்துக் கொள்கிறோம். இருந்தாலும் அது நம்ம அடிமனதில் அந்த உண்மை அறிவின் பதிவுகள் இருக்கும். அதுதான், ஒரே நிகழ்வுக்கு, ஒவ்வொருவரின் அனுபவங்களை வேறுபடுத்தும். உணர்ச்சிகள் வேறுபடும். நாம எல்லாம் அன்றாட வாழ்க்கையிலே ஈடுபட்டு இருப்பதாலே நாம் சார்ந்திருக்கும் கூட்டத்தின் தாக்கம் நமது எண்ணப்பதிவுகளை ஏற்படுத்தும். இதிலே என்ன ஒரு சிறப்பு என்றால், அந்த கூட்டத்தை விட்டு விலகிட்டா அந்தத் தாக்கம் முற்றாகப் போயிடும். காந்தத்தோட இரும்பு சேர்ந்தால் அதுவும் காந்தம் போலச் செயல்படும். காந்தத்தை விட்டு விலகிட்டா இரும்பு இயல்பு நிலைக்குத் திரும்பிடும். நம்ம பேராசான் இல்வாழ்வில் இருப்பவர்களுக்குச் சொல்கிறார். அதைத்தான் நம்ம ஔவைப் பெருந்தகை “சேரிடம் அறிந்து சேர்”ன்னு சொல்றாங்க. “மனத்தானாம் மாந்தர்க்கு உணர்ச்சி இனத்தான்ஆம் இன்னான் எனப்படும் சொல்.” --- குறள் 453; அதிகாரம் – சிற்றினம் சேராமை மக்களுக்கு உணர்வு என்பது தன் ஆழ்மனத்தாலே அமையும். ஆனால் இவன் இப்படித்தான் இருப்பான் என்பது அவன் சார்ந்திருக்கும் கூட்டத்தப் பொறுத்ததுதான். அவனின் எல்லச் செயல்களுக்கும் அவன் மனம் மட்டுமே காரணமாக இருக்காதுன்னு அடித்துச் சொல்கிறார் நம் பேராசான். மாந்தர்க்கு உணர்ச்சி மனத்தானாம் = மக்களுக்கு உணர்வு என்பது தன் ஆழ்மனத்தாலே அமையும்; இனத்தான்ஆம் இன்னான் எனப்படும் சொல் = (ஆனால்) இவன் இப்படித்தான் இருப்பான் என்பது அவன் சார்ந்திருக்கும் கூட்டத்தைப் பொறுத்ததுதான்.
காங்கிரஸ் கட்சி எம்.பி-யான ராகுல்காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை மேற்கொண்டு வரும் நடைபயணத்தில் சோனியா காந்தி மற்றும் பிரியங்கா காந்தி நாளை பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. -இதுகுறித்து அகில இந்திய காங்கிரஸ் கட்சி சார்பாக தெரிவிக்கப் பட்டதாவது: காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்காக ராகுல் காந்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை ”ஒற்றுமைக்கான பயணம்” என்ற பெயரில் மொத்தம் 150 நாட்கள் பாத யாத்திரை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் ராகுல் காந்தி இன்று காலை மைசூரில் நடைபயணத்தில் தொடங்கி ஸ்ரீரங்கப்பட்டணா வழியாக மண்டியாவுக்கு நடைபயணம் செல்கிறார். ராகுல் காந்தியின் இந்த நடைபயணத்தில் ஒருநாள் மட்டும் சோனியா காந்தி, மற்றும் பிரியங்கா காந்தி கலந்து கொள்கின்றனர். அதற்காக சோனியா மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் நாளை டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் மைசூருவுக்கு வரவுள்ளனர். அதையடுத்து வருகிற வியாழன் கிழமை (ஆக்டோபர் 6) அவர்கள் இருவரும் ராகுல் காந்தியின் நடைபயணத்தில் கலந்து கொள்வார்கள்.
அதானி எண்டர்பிரைசர்ஸ், அதானி க்ரீன், அதானி போட்ர்ஸ் என நிறுவனங்களையும், பல வர்த்தகத் துறையில் தனது வணிகத்தையும் விரிவாக்கம் செய்துள்ள அதானி குழுமத்தின் தலைவரான கௌதம் அதானியின் மொத்த சொத்து மதிப்பு 77 பில்லியன் டாலராக உயர்ந்து இந்தியாவிலும், ஆசியாவிலும் 2வது இடத்தைப் பிடித்தார். உலகளாவிய பணக்காரர்கள் பட்டியலில் 14வது இடத்தில் உள்ளார் கௌதம் அதானி. 2021ஆம் ஆண்டில் மட்டும் அவரின் சொத்து மதிப்பு 43.2 பில்லியன் டாலர் வரையில் உயர்ந்தது. இச்சூழலில் கௌதம் அதானியின் நிறுவன பங்குகளில் அதிக முதலீடு செய்திருக்கும் 3 வெளிநாட்டுக் கணக்குகளை தேசிய பங்குகள் வைப்பு நிறுவனமான NSDL முடக்கியுள்ளதாக செய்தி வெளியானது. இச்செய்தி வெளியானதில் இருந்து அதானி குழும பங்குகள் தொடர்ந்து சரிந்து வருகிறது. இதனால் அதானி நிறுவன பங்குகளின் விலை குறைந்துள்ளது மட்டுமல்லாமல், கௌதம் அதானியின் சொத்து மதிப்பு சரிந்து வருகிறது. அதானியின் 2-ம் இடத்தை ‘நொங்பூ ஸ்பிரிங்’ எனும் பாட்டில் குடிநீர் தொழிலில் ஈடுபட்டுள்ள சீன தொழிலதிபர் ஷுங் ஷன்ஷன் மீண்டும் பிடித்துள்ளார். என்.எஸ்.டி.எல்., எனப்படும் தேசிய பங்குகள் வைப்பு நிறுவனம் அதானி நிறுவனங்களில் அதிக முதலீடுகளை கொண்ட மூன்று வெளிநாட்டு முதலீட்டாளர்களின் கணக்குகளை முடக்கியதாக வெளியான செய்தியே அதானியின் சொத்து மதிப்பு சரிய காரணம் ஆகும். இவ்வார தொடக்கத்தில் 7,700 கோடி டாலர்களாக இருந்த அதானியின் நிகர சொத்து மதிப்பு, கடந்த சில நாட்களில் 6,300 கோடி டாலர்களாக குறைந்துள்ளது. கடந்த 3 நாட்களில் மட்டும் அவர் 900 கோடி டாலர்களை இழந்துள்ளார். பங்குசந்தைகளின் இன்றைய வர்த்தகத்தின் போது அதானி நிறுவனங்கள் மேலும் ஆட்டம் காணக்கூடும் என்கின்றனர். பெருந்தொற்று தொடங்கியதிலிருந்து அதானியின் சொத்து மதிப்பு பல மடங்கு உயர்ந்துள்ளது. இப்பிரச்னைக்கு முன்னர் அவரது 6 நிறுவனங்களின் பங்குகள் புதிய உச்சத்தில் இருந்தன. ஏப்ரல் 2021-ல் அதானி குழுமம் 10 ஆயிரம் கோடி டாலர்கள் சந்தை மதிப்பு கொண்ட ஆசியாவின் 3-வது குழும நிறுவனமாக மாறியது. தற்போது அதில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
ஒரு நெருக்கமான வெப்கேம் நிகழ்ச்சியைப் பார்ப்பதன் மகிழ்ச்சியை அனுபவித்திராதவர்களுக்கு, அதைச் செய்ய பலர் ஏன் நல்ல பணத்தை செலவிடத் தயாராக இருக்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்வது கடினமாக இருக்கும், குறிப்பாக ஆன்லைனில் பல இலவச கேம் தளங்கள் கிடைக்கும்போது. ஆனால் Megan_dreams1 இல் பார்த்தவர்கள் Chaturbate மேகன்_ட்ரீம்ஸ்1 தனது சிற்றின்ப அசைவுகள் மற்றும் குறும்பு ஆடைகளைப் பயன்படுத்துவதால், தனது ஆடைகளைக் களைந்து ஒவ்வொரு அங்குலத்தையும் காட்டும்போது அவர்கள் தன்னுடன் இருப்பதைப் போல் பார்வையாளர்களை உணர வைப்பதால், நடிகைக்கு கவனம் செலுத்துவது செலவை விட அதிகமாக இருக்கும் என்பதை அறிந்து கொள்ளுங்கள். அவளுடைய ரம்மியமான உடல். நிர்வாண கேம் மாடலான Megan_dreams1 பற்றி தெரிந்து கொள்ளுங்கள்! Megan_dreams1 என்பது டெக்சாஸைச் சேர்ந்த 25 வயதுடைய அழகான கேம் மாடல். அவள் நீண்ட பழுப்பு நிற முடி, அழகான பச்சை நிற கண்கள் மற்றும் கொலையாளி வளைவுகளுடன் ஒரு நம்பமுடியாத உடல். மேகன் தனது ரோல்பிளே ஷோவிற்கு பெயர் பெற்றவர், அங்கு அவர் உங்கள் குறும்பு கற்பனைகளை வெளிப்படுத்துகிறார்; நீங்கள் அவருடன் இலவச அரட்டையிலும் பேசலாம், அங்கு நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பதை உறுதிசெய்ய அவர் கோரிக்கைகளை எடுப்பார். கீழே உள்ள மேகனின் இந்த இலவசப் புகைப்படங்களைப் பார்க்கவும், அரட்டையில் நீங்கள் என்ன பார்க்கலாம். Megan_dreams1, கேம் நிகழ்ச்சிகளைப் பாருங்கள்! Megan_dreams1 பற்றிய எண்ணம் உங்களை உற்சாகப்படுத்துகிறது, இல்லையா? பல ஆண்கள் அவள் மீது ஏன் பைத்தியம் பிடிக்கிறார்கள் என்பதைப் பார்க்க அவரது நேரடி கேம் நிகழ்ச்சிகளைப் பாருங்கள். அவளிடம் ஏதோ ஒரு தனித்தன்மை இருக்கிறது, அது உடனடியாக உங்களை ஈர்க்கிறது. ஒருவேளை அவள் உங்கள் முழு கவனத்தையும் பெற்றிருக்கிறாள் என்பதை அறிந்தால் அவள் எப்படி உங்கள் கண்களில் புன்னகைக்கிறாள், அல்லது அவளுடைய பார்வையாளர்கள் அனைவரிடமும் அவள் எவ்வளவு அன்பாகவும் உண்மையாகவும் இருக்கிறாள். அவரது அறை நிகழ்ச்சிகள் சூடாகவும் கவர்ச்சியாகவும் இருக்கும், அதே போல் நெருக்கமாகவும் இருக்கும்; அவற்றில் இருப்பது உங்களை ஒரு பார்வையாளராகக் காட்டிலும் நிஜ வாழ்க்கை பங்கேற்பாளராக உணர வைக்கிறது. வெப்கேமரா அல்லது ஆஃப்-கேமராவில் இருந்தாலும், மேகன் வெறுமனே காந்தமாக இருக்கிறார்; அவளைச் சந்திக்கும் ஒவ்வொருவரும் அடிக்கடி அவளைச் சுற்றி இருக்க விரும்புகிறார்கள், ஏனென்றால் அவள் எல்லா இடங்களிலும் நல்ல ஆற்றலைப் போல உணர்கிறாள் - அத்தகைய குணத்தை வேறு எந்த வார்த்தை விவரிக்கும்?
கடற்கரையில், பூல் பெஞ்சில் லீஷராக கால் நீட்டி அமர்ந்தபடி, ரகம் ரகமாக பியர் குடிக்கலாம் என்று கனவு கண்டிருந்தேன். முதல் அடி, வர்கலாவில் கோவாவில் அமைந்திருப்பது போல கடற்கரைக்கு நெருக்கமாக குடில் உணவகங்கள் இல்லை. (கீழே கடல்; குன்றின் மேலே உணவகங்கள்). இரண்டாவது அடி, பியரின் ரகங்கள். கடந்த பதிவின் இறுதியில் விஜய் சேதுபதி மாடுலேஷனில் ஒரு அண்ணா, “அங்க இருக்குற எல்லா கடைலயும் கிடைக்கும்டா” என்று சொன்னார் என்று முடித்திருந்தேன். அப்புறம்தான் தெரிந்தது – அத்தனை கடைகளும் மது விற்க லைசன்ஸ் இல்லாத கடைகள். லைசன்ஸை விட்டுத் தொலையுங்கள். அத்தனை கடைகளிலும் KF தவிர வேறொன்றும் கிடைக்கவில்லை. அதை பழைய இங்க்லீஷ் பேப்பரில் சுற்றிக் கொண்டு வந்து மேஜையின் கீழ் வைக்கிறார்கள். கமுக்கமாக குடித்துக்கொள்ள வேண்டும். விலை மட்டும் இரண்டு மடங்கு. இங்கிருந்து மாநிலம் கடந்து போய் அங்கேயும் ஒரு மனிதனுக்கு KF தான் கிடைக்கும், அதையும் அவன் திருட்டுத்தனமாகத்தான் குடிக்க வேண்டும் என்பது எவ்வளவு பெரிய அவலம். வர்கலாவில் குடித்த முதல் பியர் அன்று மாலையே பெவ்கோவிற்கு கிளம்பினேன். Beverages Corporation என்பதின் சுருக்கம்தான் பெவ்கோ. பெவ்கோ என்பது கேரளாவின் டாஸ்மாக். ஆனால் டாஸ்மாக் மாதிரி கலீஜாக இருக்காது. கேரள பெவ்கோக்களில் பார் வசதி கிடையாது. வாங்கிக்கொண்டு வீட்டுக்கு போய்தான் குடிக்க வேண்டும். அதே சமயம் யாரும் அங்கேயே வாங்கி முட்டுச்சந்துகளில் நின்று குடிப்பதில்லை. அப்படியென்றால் கேரளர்கள் எங்கே போய்தான் குடிக்கிறார்கள் ? அநேகமாக, கேரளர்களுக்கு அவரவர் வீடுகளிலேயே குடிக்கும் சுதந்திரம் இருக்கும் என்று நினைக்கிறேன். மலையாள சினிமாக்களில் வரும் மது அருந்தும் காட்சிகளைப் பார்க்கும்போது இதனை நம்மால் யூகிக்க முடிகிறது. வர்கலாவில் ஒரேயொரு பெவ்கோ, டவுன் பகுதியில் உள்ளது. அதாவது கடற்கரை பகுதியில் இருந்து 2 – 3 கி.மீ. வெளியே வர வேண்டும். அங்கே ஒரு கட்டிடத்தின் முதல் மாடியில் அமைந்திருக்கிறது பெவ்கோ. நான் சென்றபோது கீழே படிக்கட்டு வரை வரிசையில் ஆட்கள் நின்றுக்கொண்டிருந்தனர். வரிசை மெதுவாக நகர்ந்துக்கொண்டிருக்க, சில பேர் மட்டும் வரிசையில் நிற்காமல் கடந்து சென்றபடி இருந்தனர். அதே சமயம் எனக்கு முன்னால், பின்னால் நின்றிருந்த யாரும் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. கொஞ்ச நேரம் பொறுத்திருந்து, எனக்கு முன்னால் நின்றிருந்தவரிடம் கேட்டுவிட்டேன். அதாவது அந்த மதுக்கடைக்கு அந்தப்பக்கம் இன்னொரு கதவு இருக்கிறதாம். ப்ரீமியம் செக்ஷன். அங்கே நாமாகவே உள்ளே சென்று நமக்கு வேண்டியதை பார்த்து எடுத்துக்கொள்ளலாமாம். அங்கே செல்கிறவர்கள் தான் எங்களைக் கடந்து அதற்குரிய வரிசையில் போய் நின்றிருக்கிறார்கள். இதைக் கேட்டதும் நான் உடனடியாக அந்த வரிசையில் இருந்து விலகி நாமே பார்த்து எடுத்துக் கொள்ளக்கூடிய பிரிவுக்கு நகர்ந்தேன். நம்முடைய சாதாரண டாஸ்மாக், எலைட் டாஸ்மாக் மாதிரியான வேறுபாடு இது. ப்ரீமியம் செக்ஷனில் குவார்ட்டர் / ஹாஃப் கிடையாது. அதனால் தினசரி மதுப்பிரியர்களின் கூட்டம் சாதாரண பிரிவில் அம்முகிறது. பெவ்கோவில் வாங்கியவை ப்ரீமியம் செக்ஷனில் கூட்டம் குறைவு. வரிசை வேகமாக நகர்கிறது. நான்கு நான்கு பேராக கடைக்குள் அனுப்புகிறார்கள். (நான் சென்றது கோவிட் கட்டுப்பாடுகளுக்கு முந்தைய காலகட்டம்). நம் எலைட்டில் இருப்பது போலவே ஃபுல் பாட்டில்களை காட்சிப்படுத்தியிருந்தார்கள். பியர் வைத்திருக்கும் ஃப்ரிட்ஜ் மட்டும் ஒரு ஊழியரின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. நாம் எது வேண்டும் என்று கேட்கிறோமோ அதை அவர் எடுத்துத் தருகிறார். ப்ரோ கோட் (Bro Code) என்கிற Brut இங்கு கிடைக்கிறது. Brut என்பது பியரையும் வைனையும் கச்சிதமான விகிதத்தில் மிக்ஸ் செய்த பானம். அல்கஹால் அளவு பதினைந்து சதவிகிதம் வரை இருக்கும். அதிலேயே ரியோ என்கிற உள்ளூர் தயாரிப்பும் கிடைக்கிறது. அவை தவிர, பீரா, சிம்பா உட்பட அனைத்து பிரபலமான பியர் வகைகளும் கிடைக்கின்றன. ஆச்சர்யமாக பில் கவுண்டரில் ஒரு பெண் அமர்ந்திருந்தார். நம்புங்கள் அங்கே இருந்த ஊழியர் ஒரு பெண் என்பதால் எனக்கு எந்த நெருடலும் ஏற்படவில்லை. அந்த அறையின் சூழல் அப்படி அமைந்திருந்தது. இதுவே டாஸ்மாக் கவுண்டரில் ஒரு பெண் இருந்தால் அவர் எப்படி நடத்தப்படுவார் என்று நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. ஆனால் அங்கே அந்தப் பெண்ணிடம் பணம் செலுத்தி பாட்டில்களைப் பெற்றபோது எனக்கு ஒரு அரசு அலுவலகத்தில் அதிகாரியிடம் ஃபைலில் கையெழுத்து வாங்கியது போலதான் இருந்தது.கடையை விட்டு வெளியேறியதும் ஒரு அலமாரியில் பழைய செய்தித்தாள்கள் வைத்திருக்கிறார்கள். அதை வைத்து பாட்டிலை சுற்றி எடுத்துச் செல்ல வேண்டியதுதான். வர்கலா கடற்கரையில் அதிகாரப்பூர்வமாக லைசன்ஸ் பெற்ற பார் ஒன்றே ஒன்று (ஹெலிபேட் அருகே உள்ள SS பார் மற்றும் உணவகம்) மட்டும்தான் உள்ளது. அதுவும் குளிரூட்டப்பட்ட கதவடைத்த பார். அதில் உட்கார்ந்துக் கொண்டு குடிப்பது என்பது சென்னையில் ஈகிள் பாரில் உட்கார்ந்து குடிப்பதற்கு சமம். ஒரு நல்ல விஷயம் அங்குமட்டும் பியரில் மற்ற பிராண்டுகளும், ப்ரோகோடும் கிடைக்கிறது. கள்ளு விஷயத்திலும் ஏமாற்றம்தான். ஏற்கனவே காந்தளூரில் கள்ளு குடித்து அது மிகவும் பிடித்திருந்ததால் கண்டிப்பாக கள்ளு குடிக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். வர்கலாவில் கள்ளுக்கடைகள் இல்லை. கள்ளு வேண்டுமென்றால் வர்கலாவிலிருந்து ஒன்பது கி.மீ. தொலைவில் வெளிச்சக்கடவு என்கிற ஊருக்கு செல்ல வேண்டும். முதலில் நான் என் பயணத்தை ப்ளான் செய்தபோது ஒன்பது கி.மீ. என்பது எனக்கு சாதாரணமாகத் தெரிந்தது. கண்டிப்பாக போக வேண்டும் என்று குறித்து வைத்திருந்தேன். ஆனால் அங்கு சென்ற முதல் நாள் அந்திப் பொழுதில் ஏற்பட்ட திகில் அனுபவத்தின் காரணமாக அவ்வளவு தூரம் செல்ல வேண்டாம் என்று முடிவு செய்துவிட்டேன். இங்கிருந்து போகும்போது பிரச்சனையில்லை. மனதில் கள்ளை நினைத்துக்கொண்டே சந்தோஷமாக சைக்கிளை மிதித்துவிடலாம். திரும்பி வருகையில் ? அதனால் கள்ளு திட்டம் கைவிடப்பட்டது. இது தனிப்பயணத்தின் பாதகங்களில் ஒன்று. என்னுடன் துணைக்கு ஒருவர் இருந்திருந்தால் கூட நான் நிச்சயம் கள்ளுக்கடைக்கு சென்றிருப்பேன். பீஃப் மோமோஸுடன் வர்கலா பயணிகளில் பெரும்பாலானோர் வெளிநாட்டினர். அதுவும் லாங்-டெர்ம் பயணிகள். இந்தியர்களுக்கு மேலை நாட்டினர் மீது சில மூடநம்பிக்கைகள் உள்ளன. அவற்றில் இரண்டாவது பெரிய மூடநம்பிக்கை – மேலை நாட்டினர் அனைவரும் பணக்காரர்கள் என்று நினைப்பது. நீங்கள் இந்தியாவிற்கு வெளியே இருந்துகொண்டு உலகிலேயே மலிவான (லிவிங் காஸ்ட் அடிப்படையில்) நாடு என்று தேடினால் இந்தியா என்று பதில் வரும். பெரும்பாலும் இந்தியாவுக்கு பயணம் வருபவர்கள் இதன் அடிப்படையில் வருபவர்களே. குறிப்பிட வேண்டிய விஷயம் – வர்கலாவிற்கு வரும் மேலைநாட்டினர் யாரும் இவ்வுணவகங்களில் திருட்டு பியர் குடிப்பதை நான் பார்க்கவில்லை. பொதுவாக இவர்கள் ஒரு ஸ்மூத்தியை வாங்கி வைத்துக்கொண்டு நீண்ட நேரம் கதை பேசுகிறார்கள். பியரின் மீது இவர்களின் கவனம் இல்லை. அப்படியெனில் இவர்களுடைய அஜெண்டா ? இங்கு வரும் வெளிநாட்டினர் பலர் ரஷ்யர்கள். இவர்கள் அங்குள்ள கடும்குளிரிலிருந்து சிலகாலம் இளைப்பாற இங்கு வந்து சேர்கிறார்கள். இவர்களைக் குறி வைத்து வர்கலாவில் யோகா வகுப்புகள், ஸர்ஃபிங் பயிற்சிகள் போன்றவை நடத்தப்படுகின்றன. இவர்களுடைய போதைக்கு ? கிட்டத்தட்ட கோவாவின் கர்லீஸ் கதைதான். அதைப் பற்றி சற்று விரிவாக அடுத்த கட்டுரையில் பார்க்கலாம். அடுத்த பதிவு: லாஸ்ட் ஹாஸ்டல் என்றும் அன்புடன், N.R.PRABHAKARAN Post Comment உதிர்த்தவன் Philosophy Prabhakaran உதிர்த்த நேரம் 00:33:00 வயாகரா... ச்சே... வகையறா: பயணம், வர்கலா Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest 0 பேர் கருத்து சொல்லியிருக்காங்க 27 January 2021 காந்தளூரும் கள்ளுக்கடையும் அன்புள்ள வலைப்பூவிற்கு, வர்கலாவைப் பற்றி எழுதிக்கொண்டே வரும்போது இடையில் எங்களுடைய காந்தளூர் பயணம் பற்றி எழுதாமல் வர்கலாவின் சில பகுதிகளை எழுத முடியாது என்று தோன்றியதால் இந்த இடைச்செருகல் ! உடுமலைப்பேட்டையில் இருந்து அறுபது கி.மீ. தொலைவில், தமிழக – கேரள எல்லையில், கேரளாவிற்குட்பட்ட பகுதியில் அமைந்திருக்கிறது காந்தளூர். ஏதாவது ஆஃப்-பீட் தளத்திற்கு செல்லலாம் என்று முடிவு செய்து காந்தளூரைத் தேர்வு செய்திருந்தோம். சில்லென்ற தட்பநிலை. டூரிஸ்ட் கூட்டமில்லாத பகுதி. 2019 இந்திய பாராளுமன்றத் தேர்தல் நடந்துக்கொண்டிருந்தபோது நாங்கள் காந்தளூர் சென்றுவந்தோம். மிகச்சரியாக சொல்வதென்றால் தமிழ்நாட்டில் ஓட்டு போட்டுவிட்டு ஈர மையுடன் கிளம்பிச் சென்றோம். அப்போது கேரளாவில் தேர்தல் நாளுக்கு சில நாட்கள் எஞ்சியிருந்தன. தேர்தல் பரப்புரை ஊர்வலம் காந்தளூர் என்பது இடுக்கி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்டது. அங்கே கடைசிகட்ட தேர்தல் பரப்புரைகள் பரபரப்பாக நடந்துக்கொண்டிருந்தன. எங்கு பார்த்தாலும் வேட்பாளரின் முகம் அச்சிடப்பட்ட போஸ்டர்கள். ஆனால் மேற்பார்வைக்கு அத்தனையும் ஒரே முகம் போலவே இருந்ததால், போஸ்டர்களை கூர்ந்து கவனித்தேன். நான் நினைத்தது போல இல்லை. மூன்று வெவ்வேறு வேட்பாளர்களே. இயல்பில் கேரள பெண்களைப் போலவே கேரள ஆண்களும் ஒரே சாயல் கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக, மூவரும் ஒரே மாதிரியான மீசை வைத்திருந்தார்கள். கேரளாவில் கம்யூனிஸ்டும் காங்கிரஸும் பிரதான கட்சிகள். கிட்டத்தட்ட 2016க்கு முந்தைய தி.மு.க. – அ.தி.மு.க.வைப் போல. குறிப்பாக கம்யூனிஸ்டை தி.மு.க.வோடு ஒப்பிடலாம். பாரம்பரியமிக்க கட்சி, அதே சமயம் முன்பைப் போல இல்லை என்கிற சலசலப்புகள் கொண்ட கட்சி. மூன்றாவதாக பி.ஜே.பி – ஒப்புக்கு. கேரள அரசியலை கவனிக்கும்போது ஒரு விஷயத்தை புரிந்துகொள்ள முடிகிறது. தமிழகத்தில் தி.மு.க.விற்கும் அ.தி.மு.க,விற்கும் இடையே சில தொழில் உறவுகள் உண்டு. ஆனால் களத்தில் இருவரும் எதிரிகள். ஒருவரை ஒருவர் தேர்தலில் வீழ்த்த, கொள்கை சமரசங்களுடன் யாருடன் வேண்டுமானாலும் கூட்டணி வைத்துக் கொள்வார்கள். கேரளாவில் அப்படியில்லாமல் கம்யூனிஸ்டுக்கும் காங்கிரஸுக்கும் இடையே ஒரு புரிந்துகொள்ளுணர்வு இருக்கிறது என்று யூகிக்கிறேன். இவர்கள் இருவரும் தங்களுக்குள் ஒரு உடன்படிக்கை வைத்துக்கொண்டு மதவாத சக்திகள் கேரளாவில் காலூன்ற முடியாமல் செய்வதாகத் தோன்றுகிறது. தமிழக முதல்வர் ஜெயலலிதா மறைந்தபோது கேரளத் தலைவர்கள் ஒரே விமானத்தில் வந்து அஞ்சலி செலுத்தினார்கள் என்ற செய்தி அப்போது பரபரப்பாக பேசப்பட்டது. அப்போதும் கூட கம்யூனிஸ – காங்கிரஸ் தலைவர்கள் தான் ஒன்றாக வந்தார்களே ஒழிய பி.ஜே.பி. கோமாளிகள் அல்ல. 2019 இடுக்கி தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் நேரடியாகப் போட்டியிடவில்லை. மாறாக அவர்களுடைய ஆதரவு பெற்ற சுயேட்சை வேட்பாளர் (சிட்டிங் எம்.பி.) போட்டியிட்டார். தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதும் தமிழக முடிவுகளைத் தெரிந்துகொள்ளும் அதே ஆர்வத்துடன் இடுக்கி தொகுதி நிலவரத்தை தேடினேன். ஒன்றரை லட்சத்துக்கும் மேலான வாக்கு வித்தியாசத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி பெற்றிருந்தார். ************************* நாங்கள் காந்தளூர் சென்றிருந்த சமயத்தில் இடைப்பட்ட ஒருநாள் மட்டும்தான் மதுக்கடை இயங்கியது. முன்பும் பின்பும் தேர்தல் விதிகள் காரணமாக இயங்கவில்லை. கள்ளுக்கடைகளும் அவ்விதமே. இடைப்பட்ட அந்த ஒருநாளில் கள்ளுக்கடைக்கு படையெடுத்தோம். நான் அதற்கு முன்புவரை கள்ளு குடித்ததில்லை. ஒரேயொரு முறை கல்லூரியில் படிக்கும்போது அதற்கான வாய்ப்பு வந்தபோது, உடன் பயின்றவர்கள் புதிதாக குடிப்பவர்களுக்கு கள்ளு தூக்கி விட்டுவிடும் என்று ஒரு குண்டைத் தூக்கிப் போட்டதால் அந்த ஆசையை கைவிட்டுவிட்டேன். இப்போது சூழல் கூடி வந்ததால் கள்ளு குடித்துவிட வேண்டுமென முடிவு செய்திருந்தேன். காந்தளூர் கள்ளுக்கடை கிட்டத்தட்ட ஊருக்கு ஒதுக்குப்புறமாக, குடியிருப்புகள் அற்ற பகுதியில் அமைந்திருந்தது காந்தளூர் கள்ளுக்கடை. ஒரு வயதான அம்மாளும் அவரது மகனும்தான் அக்கடையை நிர்வகித்து வருகின்றனர். கள்ளு - கப்பை - கடலைக்கறி கள்ளுடன் சாப்பிட கப்பையும், பீஃப் கறியும் இருப்பதாகச் சொன்னார்கள். கப்பை என்றால் என்னவென்றே அப்போது தெரியாததால் அதனை ஒரு பிளேட் வாங்கி, அது மரவள்ளிக்கிழங்கு என்று தெரிந்து, அதனை கைவிட்டோம். அதன்பிறகு பீஃப் கறி வாங்கி அது சில பல ப்ளேட் ரீப்பீட்டில் சென்றது. கள்ளின் ஒருவகையான புளிப்புச்சுவை, அதிலிருந்த ஃபிஸ் போன்றவை மிகவும் பிடித்துப்போய்விட்டது. தேர்தல் சமயம் என்பதால் கடையை நிர்வகித்து வந்த அம்மாள் அரசியல் குறித்து பேசத் துவங்கினார். அவருடைய பேச்சில் இருந்து அவருக்கு மற்றும் பொதுவாக அத்தொகுதி மக்களுக்கு ஸ்டாலின் மீது ஒரு ஸாஃப்ட் கார்னர் இருப்பது தெரிய வந்தது. அவரது முதலமைச்சர் வாய்ப்பு தள்ளிக்கொண்டே போகிறது என்பது மாதிரியான ஸாஃப்ட் கார்னர். மேலும் முன்பொரு முறை அப்பகுதியில் வெள்ளம் ஏற்பட்டபோது தமிழகத்தில் இருந்து நீண்ட முதல் மற்றும் ஒரே உதவிக்கரம் ஸ்டாலினுடையது என்றார். இதை நாங்கள் கேட்டுக்கொண்டிருக்கும்போதே அவரது மகன் இடைமறித்து, நான் ஒரு தகவல் சொல்கிறேன் அதைப் போய் உன் மாநில மக்களிடம் சொல் என்பது மாதிரி ஒரு விஷயத்தைச் சொன்னார். அங்கே மக்களுக்கு ஏதாவது பிரச்சனை என்றால் தொகுதி சட்டமன்ற உறுப்பினருக்கு நேரடியாக அலைபேசியில் தகவல் தெரிவிப்பார்களாம். ச.ம.உ.வும் கூப்பிட்ட குரலுக்கு வந்து நிற்பாராம். ஒருவேளை அப்படி வராவிட்டால் அடுத்தநாள் ஊரே ச.ம.உ. வீட்டுவாசலில் நிற்குமாம். இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை ஆனால் தமிழத்தில் இந்நிகழ்வில் ஒரு பத்து சதவிகிதத்தைக் கூட கற்பனை செய்து பார்க்க முடியாது என்று நினைத்துக்கொண்டேன். கேரளாவில் மட்டும் இது எப்படி சாத்தியம் ? கேரளாவில் எந்த அரசியல் கட்சியும் மக்களுக்கு ஓட்டுக்காக பணம் கொடுப்பதில்லை. மாறாக பணம் பெறுகிறார்கள். அதாவது மக்கள் அவரவர் சார்ந்த இயக்கங்களுக்கு தங்கள் ஒருநாள் ஊதியத்தை தேர்தல் செலவுகளுக்காக தருகிறார்கள். உதாரணமாக அந்த கள்ளுக்கடை உரிமையாளர் கம்யூனிஸ்ட் ஆதரவாளர். அதனால் அவரது ஒருநாள் வருமானத்தை கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் செலவுகளுக்காக வழங்கியிருக்கிறார். அதனால் அவர்களால் உரிமைக்குரல் எழுப்ப முடிகிறது. கேரளாவும் தமிழகமும் இந்தியாவின் முன்னோடி மாநிலங்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் ஒப்பீட்டளவில் நாம் இன்னும் கேரளாவை விட பல படிகள் பின்தங்கியே இருக்கிறோம்.
Colombo (News 1st) 2020 ஆம் ஆண்டு உயர்தர பரீட்சைக்கு தோற்றியவர்களில் மருத்துவ பீடத்திற்கு இணைத்துக்கொள்ளப்படும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. புதிதாக 110 மாணவர்கள் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர், சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார். அதற்கமைய, 2020 ஆம் ஆண்டில் கல்வி பொது தராதர உயர்தர பரீட்சையில் தோற்றிய உயிரியல் பிரிவு மாணவர்கள் 1,974 பேர் மருத்துவ பீடத்திற்கு இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர். 2019 ஆம் ஆண்டில் மருத்துவ பீடத்திற்கு 1,961 மாணவர்களும் 2018 ஆம் ஆண்டில் 1,480 மாணவர்களும் இணைத்துக்காள்ளப்பட்டதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 2020 ஆம் ஆண்டில் உயர்தரத்தில் தோற்றிய மாணவர்களில் பல்கலைக்கழகங்களுக்கு இணைத்துக்கொள்ளப்பட்டவர்களின் எண்ணிக்கை 43,500 வரை அதிகரிக்கப்பட்டது.
‘மதுபோதையில் மருமகன் செய்த நடுங்க வைக்கும் காரியம்’.. ‘பட்டப்பகலில் பஸ் ஸ்டாண்ட் அருகே நடந்த பயங்கரம்’.. முகப்பு > செய்திகள் > தமிழகம் By Saranya | Sep 13, 2019 03:52 PM மதுரையில் மாமனாரை நடுரோட்டில் குத்திக் கொலை செய்த மருமகனை போலீஸார் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள அலங்கம்பட்டியைச் சேர்ந்தவர் தங்கையா. இவரது மகள் தனலட்சுமிக்கும், அதே பகுதியைச் சேர்ந்த நல்லமணி என்பவருக்கும் 14 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்துள்ளது. கடந்த 4 ஆண்டுகளாக பிரிந்து வாழும் இவர்கள் விவாகரத்து கோரி குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்நிலையில் இந்த வழக்கு விசாரணைக்காக இன்று காலை மேலூர் வந்த தங்கையா பேருந்து நிலையம் அருகே நடந்து சென்றுகொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு மதுபோதையில் வந்த அவருடைய மருமகன் நல்லமணி அவரைக் கத்தியால் குத்தியதாகக் கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த தங்கையா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார் நல்லமணியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். Tags : #MADURAI #MELUR #BUSSTAND #BRUTAL #MURDER #FATHERINLAW #SONINLAW next தொடர்புடைய செய்திகள் ‘டின்னருக்கு வீட்டுக்கு வந்த நண்பனால்’... ‘இளம் தம்பதிக்கு அரேங்கேறிய கொடூரம்’... 'நெஞ்சை உலுக்கும் சம்பவம்’! ‘படுக்கையில் அரைகுறை ஆடையுடன்’.. ‘இறந்து கிடந்த மனைவி, மகன்’..‘உறைந்து நின்ற கணவர்’.. ‘அதிரவைக்கும் சம்பவம்’.. ‘கல்யாணத்த நிறுத்துங்க’.. தாலி கட்டும்போது கையில் குழந்தையுடன் வந்த பெண்..! சினிமா பாணியில் நடந்த பரபரப்பு..! 'இந்த வயசுலேயே இதெல்லாம் கேக்குதா'...'மொத்த குடும்பமும் செத்து போங்க'... நடுங்க வைத்த சிறுமியின் பிளான்! ‘அப்பா கிட்ட எவ்ளோ சொல்லியும் கேட்கல’... ‘அதனாலதான் இப்டி பண்ணினேன்’... 'மகன் கொடுத்த அதிர்ச்சி வாக்குமூலம்'! ‘விபரீதத்தில் முடிந்த வாக்குவாதம்’.. ஆத்திரத்தில் கணவர் ‘கார் பார்க்கிங்கில்’ செய்த நடுங்க வைக்கும் காரியம்.. ‘திருமண நாளில் மாப்பிள்ளை செய்த காரியத்தால்’... 'மணப்பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி’... ‘உறைந்துபோய் நின்ற உறவினர்கள்’...! 'கூவத்தில்' நைட்டியுடன் மிதந்த இளம் பெண்ணின் சடலம்'...கொலையா?...சென்னையில் பரபரப்பு! ‘கல்யாணத்துக்கு காரில் வேகமாக போன புது மாப்பிள்ளை’.. நொடியில் நடந்த விபத்து..! பரபரப்பை ஏற்படுத்திய வீடியோ..! ‘குடும்பத்துல எல்லாரும் நல்லா இருக்கணும்’.. கொலையாளியின் வாக்குமூலத்தைக் கேட்டு.. ‘அதிர்ந்துபோய் நின்ற போலீஸார்’.. ‘மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு கிடைத்த பெருமை’... ‘மகிழ்ச்சி வெள்ளத்தில் பக்தர்கள்’! 'குடும்பத்தோட வந்தோம்'...'பெசன்ட் நகர்' பீச்சில் நடந்த கொடூரம்! 'நானும் மனுஷி தான், முடியல'...'கணவனின் 'ஆணுறுப்பை வெட்டி' கொண்டுபோய்'...'மனைவி' செஞ்ச கொடூர செயல்! ‘பாடத்தை சரியாக ஒப்பிக்கவில்லை என’.. ‘ஆசிரியர் செய்த நடுங்க வைக்கும் காரியம்’.. ‘10ஆம் வகுப்பு மாணவனுக்கு நடந்த பயங்கரம்’.. School Girl Commits Suicide inside Class Room; Details Revealed! ‘ஸ்கூலுக்கு போன பொண்ணு’... ‘அங்கேயே இப்டி ஆகும்னு’... 'கதறித் துடித்த பெற்றோர்'... 'அலறிய சக மாணவிகள்'! 'மீம்ஸ் வச்சு கலாய்க்க மட்டும் தான் முடியுமா'?...'இதையும் பண்ணலாம்'...மாஸ் காட்டிய பேராசிரியர் ! ‘குடிபோதையில் பைக்கில் சென்ற இளைஞரின்’.. ‘நெஞ்சை துளைத்த கம்பி’.. ‘போராடி உயிர் கொடுத்த மருத்துவர்கள்’.. ‘இதெல்லாம் வேண்டாமென எவ்வளவு கண்டித்தும்’.. ‘தாய் கேட்காததால்’.. ‘ஆத்திரத்தில் மகன் செய்த நடுங்க வைக்கும் காரியம்’.. 'ஆசையாக மனைவி கொடுத்த உணவை'... 'நம்பி சாப்பிட்ட கணவனுக்கு'... 'கடைசியில் காத்திருந்த பயங்கரம்'! மேலும் செய்திகளுக்கு ABOUT THIS PAGE This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Madurai Man brutally murdered his father in law | Tamil Nadu News.
ஸ்ராவணியும், மேனகாவும் யோசனையுடனே அண்ணா நகர் வீட்டை அடைந்தனர். சுப்பிரமணியமும், வேதாவும் இருவருக்காக காத்திருக்க, இவர்கள் வந்ததும் கவலையை மறைத்தவர்களாய் உற்சாகமாய் காட்டிக் கொண்டனர். “வாங்கடா! உங்க அம்மா ஏதோ ஸ்பெஷலா சமைச்சிருக்கா. போய் ஒரு வெட்டு வெட்டலாம்” என்று சந்தோசத்துடன் பேசிய தந்தையை கண்டு ஸ்ராவணிக்கு வருத்தம் இன்னும் அதிகரித்தது. முகத்தைச் சோகமாய் வைத்துக்கொண்டு உள்ளே நுழைந்தவள் ஓரக்கண்ணால் மேனகாவை பார்க்க அவளோ சிந்தனை வயப்பட்டு இருந்தாள். ஆனால் சுப்பியமணியமும் அவரது மனைவியும் தங்களின் வருத்தத்தை குழந்தைகளிடம் காட்டக்கூடாது என்று முதலிலேயே பேசி வைத்து விட்டதால் அவர்கள் கேலியும் கிண்டலுமாக பேசியபடி இரவுணவை முடிக்க ஸ்ராவணி வராண்டாவில் உட்கார்ந்திருந்த தந்தையிடம் வந்து அமர்ந்தாள். மகளைப் பார்த்து அவர் புன்னகைக்க அவளோ “என்னால தானே இன்னைக்கு நம்ம வீடு அந்த மாதிரி ஒருத்தன் கிட்ட போயிடுச்சுப்பா” என்று சொல்லி அவர் தோளில் சாய்ந்து அழத் துவங்க சுப்பிரமணியம் பதறிப்போனார். அவருக்கு தெரிந்தவரை அழுவது மகளின் இயல்பு அல்லவே! அவளை தேற்ற முயல அவளோ “நீங்க ஒவ்வொரு விஷயத்தையும் அந்த வீட்டுக்காக பாத்து பாத்து பண்ணுனிங்களேப்பா! என்னால அதை தான் தாங்கிக்கவே முடியல” என்றாள் அழுகையினூடே. அவர் பாசக்கார தந்தையாயிற்றே! மகள் அழுவதை பொறுக்காதவராய் “என்னோட பெரிய சொத்தே நீங்க நாலு பேரும் தான்டா வனி. வீடு என்னம்மா வீடு? வெறும் செங்கல்லும், சிமெண்டும் சேத்து கட்டுனது தானே! போனா போகுது! அதுக்காக எதுக்கும் கலங்காத என்னோட பொண்ணு கண்ணீர் விடலாமா? இப்போ உன்னை பாக்க எனக்கு ஸ்ராவணி மாதிரியே தெரியலை. கண்ணைத் துடைச்சுக்கோ” என்று அவளின் கண்ணீரை துடைத்துவிட்டார் சுப்பிரமணியம். “எதுக்கும் அழக்கூடாது. என் பொண்ணு தைரியமா இருந்தா தான் எனக்குப் பெருமை. இனி வனிம்மா அழ மாட்டா தானே” என்று கேட்க அவள் அழுகையில் சிவந்த முகத்துடன் ஆமென்று தலையாட்டினாள். “சரி! மனசை போட்டுக் குழப்பிக்காம போய் தூங்கு!” என்று அவளை அனுப்பிவைத்தவர் மீண்டும் ஆகாயத்தைப் பார்த்தபடி சாய்வு நாற்காலியில் சாய்ந்து கொண்டார். யாரோ வரும் அரவம் கேட்க யாரென்று திரும்பி பார்த்தார் அவர். மேனகா தான் அவர் பின்னே நின்றிருந்தாள். அவளைப் பார்த்து புன்னகைத்தவர் பக்கத்து நாற்காலியில் அமருமாறு சொல்ல அவள் அமர்ந்தாள். அமைதியாக சுப்பிரமணியத்தை பார்த்தபடி அவரின் கையை ஆதரவாய் பிடித்துக் கொண்டாள் மேனகா. “எனக்கு தெரியும் மாமா, உங்க மனசு எவ்ளோ கஷ்டப்படுதுனு! நாங்க கஷ்டப்படக்கூடாதுனு நீங்களும் அத்தையும் ரொம்ப திறமையா உங்க கண்ணீரை மறைக்க முயற்சி பண்ணுறிங்க. ஆனா நாங்க நீங்க வளர்த்த பொண்ணுங்க மாமா. அந்த வீட்டுக்குப் போனப்போ உங்க முகத்துல உலகத்தையே ஜெயிச்ச ஒரு சந்தோசம் இருந்துச்சு. எல்லா மிடில் கிளாஸ் அப்பாக்கும் வர்ற சந்தோசம் தான் அது. அதை என்னால மறக்கவே முடியாது மாமா. இன்னைக்கு சொல்லுறேன், இதை உங்க மனசுல வச்சுக்கோங்க. அந்த வீடு எப்பிடி நம்ம கையை விட்டு போச்சோ அதே மாதிரி திரும்ப வரும். அதுவும் வனியே அதை திரும்ப வாங்கி உங்க கிட்ட ஒப்படைப்பா. இது கண்டிப்பா நடக்கும்” என்று சொல்ல அவர் ஆதுரத்துடன் தங்கை மகளின் தலையை வருடிக் கொடுக்க அந்தப் பாசத்தில் கண் கலங்கிய மேனகா அவரின் தோளில் சாய்ந்து கொண்டாள். அவளின் மனதில் இன்னும் இரண்டு நாட்களில் பத்திரப்பதிவு என்ற ஸ்ராவணியின் வார்த்தை வேறு பூகம்பத்தை உருவாக்க மாமாவின் வருத்தத்தை எப்படி போக்குவது என்று குழம்பி போனாள். மறுநாள் காலை ஜன்னல் வழியே வந்த சூரிய ஒளி முகத்தில் பட ஸ்ராவணி திரும்பி படுக்க முயன்றவள் வேதாவின் சுப்பிரபாதத்தில் விழித்துக் கொண்டாள். அதற்குள் மேனகா எழுந்து வேதாவுக்கு கிச்சனில் உதவிக் கொண்டிருக்க ஸ்ராவணி மெதுவாக எழுந்து சோம்பல் முறித்தாள். ஜன்னல் வழியே பார்த்ததில் பக்கத்து வீட்டுப் பெண்மணிகள் ஒன்று கூடி பேசுவது கண்ணில் பட “வருசம் ரெண்டு ஆச்சு! இன்னும் இதுங்க மாறலை” என்று சொல்லி உதட்டைச் சுழித்துவிட்டு பிரஷ் செய்ய சென்றாள். அவள் பல்லை துலக்கிவிட்டு ஹாலில் அமர வேதா “அப்பிடியே குளிச்சிட்டு வரலாம்ல வனி! இப்பிடி நைட் டிரஸோட சுத்துவியா?” என்று கேட்க ஸ்ராவணி அலட்சியமாக “மா! என்னமோ என்னை பொண்ணு பார்க்க யாரோ வர்ற மாதிரி பேசுறிங்க? இன்னைக்கு சண்டே தானே. இன்னைக்கு ஒரு நாள் குளிக்கிறதுக்கு லீவ் விடலாம்னு இருக்கேன்” என்று சொல்ல அவள் பேசியதற்கு வேதாவின் முகம் போன போக்கைக் கண்டதும் மேனகா சிரிக்க ஆரம்பித்தாள். ஸ்ராவணி சாதாரணமாக “உங்க ஃபேஸ் ஏன் இப்பிடி போகுதுமா? இப்போ ஆடு மாடெல்லாம் டெய்லியா குளிக்குது?” என்று கேட்க வேதா இடுப்பில் கை வைத்து முறைக்க ஆரம்பித்தார். “என்னை மட்டும் சொல்லுறீங்க, அவ மட்டும் காத்தால எழுந்து குளிச்சிட்டாளாக்கும்?” என்று கேட்க அவர் “ஆமா! அவ எழுந்து குளிச்சு எனக்கு சமையல்ல ஹெல்ப் பண்ண வந்துட்டா. மேடம் இப்போ தான் ஹாயா சோம்பல் முறிச்சு காபி குடிக்கிற!” என்று சொல்லிவிட்டு சமையலறைக்குள் சென்றார். ஸ்ராவணி மேனகாவை பார்த்து “அடியே துரோகி! ஏன்டி சீக்கிரமா எழுந்து என்னையும் மாட்டி விட்ட? உன்னை…..” என்று சொல்லி விட்டு துரத்த ஆரம்பிக்க அவள் கையில் மாட்டாமல் தப்பி ஓடினாள் மேனகா. சுப்பிரமணியம் இரு பெண்பிள்ளைகளின் விளையாட்டைப் பார்த்து சிரித்தபடி செய்தித்தாளை வாசிக்கத் தொடங்க அந்நேரம் வாயிலில் நிழலாட நிமிர்ந்தவர் அங்கே நின்றவர்களை கண்டு திகைத்தார். மேனகாவும், ஸ்ராவணியும் ஓடி பிடித்து விளையாடியவர்கள் அவர்களைச் கண்டு சிலையாக “என்ன நடந்தாலும் கலங்காம இப்பிடி ஓடி பிடிச்சு விளையாடுறீங்களே அங்க தான் நீங்க நிக்கிறீங்க ரிப்போர்ட்டர் மேடம்” என்றபடி வாசல் நிலையை தன் உயரத்தால் அடைத்தபடி நின்றவன் அபிமன்யூ. ஸ்ராவணி முகத்தில் கேள்வியுடன் அவனைப் பார்க்க மேனகா “நாங்க தான் வீட்டை குடுக்கிறோம்னு சொல்லிட்டோமே சார். இன்னும் ஏன் எங்களை டிஸ்டர்ப் பண்ணுறிங்க?” என்று கூறியபடி அவன் பின்னே நின்ற அஸ்வினையும் கூறுபோட தவறவில்லை. அஸ்வின் அதை கண்டுகொள்ளவில்லை. அபிமன்யூ மேனகாவிடம் “வீட்டை குடுக்கிறோம்னு வாயால சொன்னா போதுமா சின்ன ரிப்போர்ட்டர்? போய் பேப்பர்ஸை எடுத்துட்டு வாங்க. கரெக்டா இருக்கானு நான் பாக்கணும்” என்று சொல்ல மேனகா அவர்களின் அறைக்குச் சென்று பத்திரங்களை எடுத்து வந்தாள். அவன் அதை ஒரு முறை புரட்டி பார்த்துவிட்டு அஸ்வினின் கையில் கொடுக்க அவனும் சரி பார்த்துவிட்டு “வில்லங்கம் எதுவும் இருக்கானு செக் பண்ணனும் அபி! நம்ம நல்ல டாக்குமெண்ட் ரைட்டரா பாக்கணும் ஃபர்ஸ்ட்” என்று அடுக்க இடைமறித்தவள் “ஹலோ ஹலோ! நீங்க சொல்லுற டாக்குமெண்ட் ரைட்டர் கிட்டல்லாம் எங்களால நம்பி பேப்பர்சை குடுக்க முடியாது. அண்ட் ஒன் மோர் திங் இந்த டாக்குமெண்ட் நம்பரை நோட் பண்ணி என்கம்ப்ரென்ஸ் சர்டிபிகேட் பாருங்க” என்று கடுப்புடன் முகத்தை தூக்கி கொண்டாள். அபிமன்யூ “அதுக்கு ஏன்மா இவ்ளோ கோவப்படுற நீ? உன் ஹைட்டை விட அதிகமா கோவப்படுறீயே?” என்று அவளை வெறுப்பேற்றிவிட்டு அஸ்வினுக்கு ஹைஃபை கொடுத்தான். ஸ்ராவணி இவ்வளவு நேரம் அமைதி காத்தவள் கடுப்புடன் “உனக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாதா? பனைமரத்துக்கு பாதி வளர்ந்திருக்க, வீட்டுக்குள்ள வர்றப்போ வரலாமானு கேட்டுட்டு வரணும்னு தெரியல? வீட்டுல ரெண்டு பெரியவங்க இருக்காங்க, அவங்க முன்னாடி கால் மேல கால் போட்டு உக்காரக் கூடாதுனு தெரியல? நீ எல்லாம் என்ன லண்டன்ல போயி படிச்சு கிழிச்ச?” என்று ஒட்டுமொத்த கோபத்தையும் அள்ளிக் கொட்ட அவன் காதில் விரலை வைத்து அடைத்துக்கொண்டான். சாவகாசமாக அங்கே திகைப்புடன் நின்ற சுப்பிரமணியத்துக்கும், கையில் கரண்டியுடன் கலங்கிப் போன முகத்துடன் நின்ற வேதாவுக்கும் வணக்கத்தைப் போட்டவன் “ஓகே! கட்சிப்பணிகள் என்னை அழைக்குது! சோ ஐ ஹேவ் டு கோ! ரிப்போர்ட்டர் மேடம், உங்களுக்கு தெரிஞ்ச டாக்குமெண்ட் ரைட்டரையே பாருங்க. ஆனா ஒரு கண்டிசன், கண்டிப்பா நாளைக்கு ஈவ்னிங் அந்த வீடு என் பேருக்கு மாறியிருக்கணும். அண்ட் அதோட உங்க வீட்டு கும்பலுக்கும் அந்த வீட்டுக்கும் எந்தச் சம்மந்தமும் கெடயாது” என்று ஆணவத்துடன் சொல்ல சுப்பிரமணியத்தால் தன் வீட்டை யாரோ சொந்தம் கொண்டாடுவதை கேட்க முடியவில்லை. நெஞ்சை பிடித்தபடி வேதாவுடன் அவரின் அறைக்குச் செல்ல மேனகா நீர் நிரம்பிய விழிகளுடன் அவர்களை பார்த்தாள். அபிமன்யூ பத்திரத்துடன் வெளியேற ஸ்ராவணி பதற்றத்துடன் “அடேய் அது ஒரிஜினல் டாக்குமெண்ட்” என்றபடி அவன் பின்னே ஓடினாள். வெளியே அவன் காரில் ஏறுவதற்குள் அபிமன்யூவின் கையைப் பிடித்தவள் “டாக்குமென்டை குடுத்துட்டு போ” என்று சொல்ல பக்கத்துவீட்டு ஆல் இந்தியா ரேடியோக்கள் அதை வைத்த கண் வாங்காமல் பார்த்து கொண்டிருந்தன. மேனகா அவள் பின்னே வந்தவள் அதை கவனித்து “வனி! அந்த ஆன்ட்டிஸ் உங்களை தான் பாக்குதுங்க” என்று சொல்ல ஸ்ராவணி பதறிப் போய் கையை விலக்கிக்கொண்டாள். அபிமன்யூ பத்திரத்தை அவள் வசம் கொடுத்துவிட்டு “நாளைக்கு ரிஜிஸ்டர் ஆபிஸ்ல சந்திப்போம்” என்று சொல்ல அந்தப் பக்கத்துவீட்டு பெண்மணிகள் ஆர்வத்துடன் “தம்பி! ரிஜிஸ்டர் ஆபிஸ்ல எதுக்கு சந்திக்க போறிங்க?” என்று கேட்டுவிட்டு ஸ்ராவணியை ஒரு பார்வை பார்த்து வைத்தனர். அபிமன்யூ நக்கலாக “ரிஜிஸ்டர் ஆபிஸுக்கு எதுக்கு போவாங்க ஆன்ட்டி? எல்லாம் எங்க மேரேஜ் விஷயமா தான்” என்று சொல்லிவிட்டு ஸ்ராவணியை பார்த்து கண் சிமிட்டிவிட்டு காரில் ஏற அவள் கடுப்புடன் பக்கத்தில் கிடந்த செங்கல்லை அவனது கார் கண்ணாடியில் எறியப் போனாள். அதற்குள் மேனகா வந்து அவளை தடுத்து உள்ளே அழைத்து செல்ல அபிமன்யூ அந்தக் காட்சியை கண்டு நகைத்தவனாய் அஸ்வினுடன் காரில் அங்கிருந்து கிளம்பினான். மேனகா ஸ்ராவணியைச் குளிக்கச் சொல்லி அனுப்பியவள் வராண்டா சாய்வு நாற்காலியில் அமர்ந்து நகம் கடித்தபடி யோசிக்க ஆரம்பித்தாள். அவள் தலைக்குள் ஆயிரம் யோசனைகள். அனுராதாவின் பேச்சு, அபிமன்யூவின் பேச்சு எல்லாமே சேர்ந்து அவள் மண்டையைக் குழப்ப இறுதியாக அவள் மனக்கண்ணில் வந்த காட்சி நெஞ்சை பிடித்தபடி சுப்பிரமணியம் வேதாவுடன் சென்ற காட்சி தான். அந்த இரண்டு காட்சிகளையும் மனதில் போட்டு அலசி ஆராய்ந்தவளுக்கு திருமணம், விவாகரத்து என்ற இரு வார்த்தைகள் மட்டுமே மனதில் நிற்கப் பிரச்சனைகளுக்கு ஒரு தீர்வு கிடைத்தது என்னவோ உண்மை. ஆனால் இந்த தீர்வு தலையைச் சுற்றி மூக்கைத் தொடுவது போல் இருப்பதாக அவளுக்குத் தோன்றவே நேரே ஸ்ராவணியிடம் சென்றாள். அவள் குளித்துவிட்டு தலையை உலர வைத்துக் கொண்டிருக்க “வனி! நான் ஒன்னு கேப்பேன்! நீ கோச்சிக்க கூடாது” என்று பீடிகை போட அவள் ஓரக்கண்ணால் மேனகாவை கவனித்தபடி “அது நீ கேக்கிற கேள்வியை பொறுத்தது” என்று சொல்லிவிட்டு கண்ணாடியை பார்த்தபடி நின்று கொண்டிருந்தாள். மேனகா மெதுவாக “சப்போஸ் உனக்கு தெரியாமலே உனக்கு கல்யாணம் ஆச்சுனா நீ என்ன பண்ணுவ?” என்று கேட்க ஸ்ராவணி கடுப்பானவள் சிரமப்பட்டு சிரித்து “அடியே இனிமே இந்த கேள்வியை கேட்டேனு வை, அத்தை மகள்னு கூட பாக்க மாட்டேன். நானே உன்னை கொன்னுடுவேன்” என்று சொல்லி கண்ணை மூடித் திறந்து தன்னுடைய கோபத்தைத் தணிக்க முயன்றாள். “இல்லடி…” என்று அவள் இழுக்க அதற்குள் அவள் வாயை மூடுமாறு சைகை காட்டிய ஸ்ராவணி “அப்பிடி ஒரு நிகழ்வு நடந்துச்சுனா நான் அவனை டிவோர்ஸ் பண்ணிடுவேன்” என்றாள் உறுதியாக. மேனகா அமைதியாக அந்த அறையை விட்டு வெளியேறினாள். இருவரும் காலையுணவை முடித்துவிட்டு டாக்குமெண்ட் ரைட்டரிடம் சென்று விவரத்தை கேட்க அதற்குள் ஸ்ராவணிக்கு போன் வர அவள் வெளியே சென்றாள். மேனகா அவசரமாக “சார்! ரிஜிஸ்ட்ரேசனுக்கு தேர்ட்டி டேய்ஸ் ஆகும்னு வனி கேட்டா சொல்லிடுங்க. நான் காரணத்தை அப்புறமா சொல்லுறேன். பிளீஸ் சார்” என்க அவரோ இவளை வினோதமாக பார்த்தபடி தலையாட்டினார். அதற்குள் ஸ்ராவணியும் வர டாக்குமெண்ட் ரைட்டர் மேனகா சொன்னபடி பத்திரப்பதிவுக்கு முப்பது நாட்கள் ஆகுமென்று சொல்ல ஸ்ராவணி யோசனையுடன் போன் செய்து அபிமன்யூவிற்கு விவரத்தை தெரிவித்தாள். அவன் அதெல்லாம் முடியாது என்று சொல்ல ஸ்ராவணியின் கையிலிருக்கும் போனை வாங்கிய மேனகா “இங்க பாருங்க சார்! உங்களுக்கு இந்தியன் ரிஜிஸ்ட்ரேசன் புரொஜிசர் எதுவும் தெரியாது. சோ பிளீஸ் நீங்க கொஞ்சம் வெயிட் பண்ணுங்க. தேர்ட்டி டேய்ஸ்னு சொன்னா அவங்க ஆற அமர பேப்பர்சை ரெடி பண்ணுவாங்க. எங்களை நம்புங்க சார்” என்று சொல்ல அவனுக்குமே கட்சிப்பணியில் மூழ்கியிருக்கையில் இந்த பத்திரபதிவையும் தன் தலையில் தூக்கிவைத்து கொள்ளும் விருப்பம் இல்லை. மேனகா ஸ்ராவணியிடமும் இதே கதையை கூறியவள் அவளே வீட்டின் பத்திரப்பதிவு சம்மந்தப்பட்ட அனைத்து வேலைகளையும் கவனித்து கொள்வதாக கூறிவிட்டாள். அதற்கு இடையில் சுப்பிரமணியமும், வேதாவும் அமெரிக்கா செல்ல மீண்டும் ஸ்ராவணியும், மேனகாவும் மட்டுமே வீட்டில் லூட்டியடித்தனர். அந்த முப்பது நாட்களுக்குள் தான் யோசித்து வைத்திருந்த திட்டத்தைச் செயல்படுத்தாமல் தங்கள் வீட்டை அபிமன்யூ வசம் செல்லாவண்ணம் தடுக்க என்னென்ன முயற்சிகள் செய்ய வேண்டுமோ அவ்வளவையும் செய்தாள் மேனகா. முதலில் விஷ்ணுவிடம் விஷயத்தைத் தெரிவிக்கலாமா என்று எண்ணியவளுக்கு அவனும் நாராயணனும் டெல்லிக்கு முக்கியமான விஷயமாகச் சென்றிருப்பது நினைவுக்கு வந்தது. அதன் பின் காவல்துறைக்கு புகார் அளிக்கவும் முயன்றாள். ஆனால் அவளது புகார் மனு தான் கேட்பாரற்றுப் போனது. காவல் நிலையத்தில் விசாரித்தால் பெரிய இடத்தில் கை வைக்க முடியாது, வீடு தானே விட்டு விடுங்கள் என்ற இலவச அறிவுரை தான் அவளுக்கு கிடைத்தது. பேசாமல் தங்கள் தொலைக்காட்சியில் இதை ஒரு செய்தியாகப் போட்டு விடுவோமா என்ற சிந்தனையும் அவளுக்கு வந்தது. ஆனால் அவளது மனசாட்சி “நீ நியூஸ் போட்டுட்டா மட்டும் அவன் அப்பிடியே வீடு வேண்டானு சொல்லிடுவான் பாரு! அவனோட வீடியோ லீக் ஆனதுக்கே அவன் வருத்தப்படலை. அவனோட டார்கெட் வீடு இல்லை. அவனுக்கு வனியை கஷ்டப்படுத்தணும். அவ்ளோ தான். ஆனா நீ போட்ட பிளான்படி வனி நினைச்சா அவனை இஷ்டத்துக்கு ஆட்டி வைக்கலாம். ஒழுங்கா உன் பிளானை செயல்படுத்து மேகி” என்று அவளை அதட்டியது. இதற்கிடையில் அஸ்வினை வைத்து அபிமன்யூவின் மனதை மாற்றலாமா என்ற கோணத்தில் யோசித்தவள் இருவரும் அறியாவண்ணம் அவர்களைப் பின் தொடர்ந்து கூடப் பார்த்துவிட்டாள். அபிமன்யூவும் அஸ்வினும் எப்போதும் ஒருவரை விட்டு ஒருவர் எங்கும் செல்வதில்லை. அதைக் கண்டவள் “ஒட்டிப் பிறந்த இரட்டைச் சகோதரர்கள் மாதிரி ஒன்னாவே சுத்துதுங்க” என்று பொருமிக் கொண்டாள். அவர்களைப் பற்றி கட்சி வட்டாரத்தில் விசாரித்ததற்கு அபிமன்யூ கிழித்த கோட்டை அஸ்வின் தாண்ட மாட்டான் என்ற அளவுக்கு அவர்கள் இருவரும் நெருக்கமான நண்பர்கள் என்று அறிந்தவள் வேறு வழியின்றி தனது திட்டத்தைச் செயல்படுத்த முனைந்தாள். பத்திரப்பதிவுக்கு அபிமன்யூவின் அடையாளச்சான்று மற்றும் சில சான்றுகள் தேவைப்பட அஸ்வினிடம் வாங்கிக் கொண்டு மறுநாள் முத்திரைத்தாள்களுடன் வருவதாக கூறிவிட்டுக் கிளம்பினாள். அவள் வாங்கி சென்ற சில நாட்களில் டாக்குமெண்ட் ரைட்டர் பத்திரத்தை தயாரித்து முடித்து அவள் கையில் கொடுத்து நாளை காலை ரிஜிஸ்ட்ரேசன் இருப்பதாக கூற சரியான நேரத்துக்கு வந்துவிடுவோம் என்று சொல்லிவிட்டு கிளம்பினாள் அவள். எப்படியோ பத்திரப்பதிவை ஒரு மாதத்துக்கு இழுத்த திருப்தியுடன் தான் நினைத்த வேலையும் இனி சிக்கலின்றி நடக்கும் என்ற நம்பிக்கையும் மனதில் எழ அதன் பின் மேனகா செய்த முதல் காரியம் அஸ்வினுக்கு போன் செய்தது தான். “ஹலோ! பேப்பர்ஸ் எல்லாம் ரெடி. நான் அபிமன்யூ கிட்ட கையெழுத்து வாங்கணும். எங்கே வந்தா அவரை பாக்கலாம்?” என்று கேட்க மறுமுனையில் அஸ்வின் “ஈ.சி.ஆர் ரிசார்ட்டுக்கு வாங்க” என்று சொல்லி முகவரியைக் கொடுக்க சில மணி நேரப்பயணத்தில் அந்த ரிசார்ட்டினுள் நுழைந்தாள் மேனகா. உள்ளே நுழைந்தவள் அஸ்வினிடம் சென்று பேப்பர்களை காட்ட அவன் திருப்தியடைந்ததும் அவன் கையிலிருந்து வாங்கிக் கொண்டாள். பேக்கிலிருந்து பேனா எடுத்தவள் இருவரில் யாரும் தன்னை கவனிக்கிறார்களா என்று நோட்டமிட்டபடி இன்னும் சில பேப்பர்களை அதனுடன் சேர்த்துவைத்துக் கொண்டாள். அதில் மட்டும் அபிமன்யூ படிக்காமல் கையெழுத்திட்டால் போதும் என்று கடவுளிடம் வேண்டிக் கொண்டபடி அவனிடம் அவற்றைச் சேர்த்து வைத்து நீட்டினாள் மேனகா. அவன் கண்களை குறுக்கி அவளை பார்க்கவும் “உங்க ஃப்ரெண்ட் கிட்ட காட்டிட்டு தான் கையெழுத்து வாங்குறேன். சோ நம்பி போடுங்க” என்று சாதாரணமாக உரைக்க அவன் அஸ்வின் படித்துவிட்ட நம்பிக்கையில் பேப்பரை வாசிக்காமல் ஏன் பார்க்க கூடச் செய்யாமல் கையெழுத்து போட்டு முடித்து கொடுத்தான். அந்த ஒரு கையெழுத்து அவனது தலையெழுத்தை முற்றிலுமாக மாற்றப் போகிறது என்பதை அறியாதவனாய் “நாளைக்கு மார்னிங் லெவன் டு ட்வெல்வ் ரிஜிஸ்ட்ரேசன். சோ கரெக்ட் டைமுக்கு வந்துடுங்க” என்று சொல்லிவிட்டு கிளம்பினாள். நேரே வீட்டுக்கு வந்தவள் ஸ்ராவணியிடம் வேலை முடிந்தது என்று சொல்ல அவள் அமைதியாக “நாளைக்கு காலையோட நமக்கும் அந்த வீட்டுக்கும் உள்ள சம்மந்தம் முடிஞ்சு போச்சுல்ல” என்று அவள் தளுதளுத்த குரலில் சொல்ல மேனகா அவளை அணைத்து ஆறுதல் சொல்லி உறங்க வைத்தாள். முகத்தில் வருத்தத்தின் ரேகைகள் ஓட உறங்கிக் கொண்டிருந்தவளை பார்த்தபடியே “அப்பிடில்லாம் நடக்காது வனி. அந்த வீடு என்னைக்கும் உனக்குச் சொந்தமானது தான்” என்று சொல்லிவிட்டு போர்வையை மூடிவிட்டாள் தோழிக்கு. ************ மறுநாள் காலை அமர்க்களமாக விடிய ஸ்ராவணி கவலை தோய்ந்த முகத்துடன் மேனகா ஸ்கூட்டி ஓட்ட பத்திரபதிவு அலுவலகத்தை அடைந்தாள். அதற்கு முன்னர் டாக்குமெண்ட் ரைட்டர் தயாராய் நிற்க அஸ்வினும், அபிமன்யூவும் ஆடி அசைந்து வந்து சேர்ந்தனர். சார்பதிவாளர் அழைத்ததும் உள்ளே நுழைந்தவர்களை பார்த்தவர் பதிவேட்டில் கையெழுத்து போடச்சொல்லிவிட்டு ஆன்லைனில் விவரங்களை சரி பார்த்தார். பின்னர் பத்திரங்களை சரிபார்த்துவிட்டு அவர்கள் வசம் ஒப்படைத்தார். மேனகா டாக்குமெண்ட் ரைட்டரிடம் கண் காட்ட அவர் பதிவாளர் காதில் ஏதோ சொல்ல பதிவாளர் கிளம்ப முயன்ற ஸ்ராவணியையும் அபிமன்யூவையும் தடுத்து நிறுத்தியவர் “என்ன புரொஜிசர் கம்ப்ளீட் பண்ணாம கிளம்புறிங்க? இன்னும் கொஞ்சம் பாக்கி இருக்கு” என்றுச் சொல்லி இன்னும் சில இடங்களில் கையொப்பம் போடச் சொன்னார். ஸ்ராவணி வீடு கைவிட்டுப் போன சோகத்தில் என்னவென்று கூட அதைப் படிக்காமல் கையெழுத்திட அபிமன்யூவோ அவள் சோகம் நிறைந்த முகம் அளித்த கண் மண் தெரியாத சந்தோசத்தில் என்னவென்று கவனிக்காமல் கையெழுத்திட்டு முடித்தான். மேனகாவுக்கு அவர்கள் கையெழுத்திட்டு முடிக்கும் வரை அவள் உயிர் கையில் இல்லை என்றே கூறலாம். “ஓகே நீங்க கிளம்பலாம்” என்று சார்பதிவாளர் சொல்ல அவர்கள் கிளம்பியதும் மேனகா பதிவாளரிடம் “சார் மீதி விஷயங்களுக்கு நானே வந்தா போதும்ல” என்று உறுதிப்படுத்திக் கொண்டு அங்கிருந்து வெளியேறினாள். வெளியே வந்ததும் அபிமன்யூ பத்திரத்தை ஸ்ராவணியின் முன் ஆட்டிக் காட்டியபடியே “இனிமே அது என்னோட வீடு! மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கா ரிப்போர்ட்டர் மேடம்? நமக்கு நெருக்கமான மனுஷங்களோ பொருளோ நம்மளை விட்டு போனா எவ்ளோ கஷ்டமா இருக்கும்னு இப்போ உனக்கு புரிஞ்சிருக்குமே” என்று நக்கலாகச் சொல்ல ஸ்ராவணி வீடு போன வருத்தத்தில் இருந்தாலும் “உங்க அப்பா ஜெயிலுக்கு போனதோட காரணம் உனக்கு நல்லாவே தெரியும். அவர் ஒன்னும் சுதந்திர போராட்ட தியாகி இல்ல, நீ தலையில வச்சு கொண்டாடுறதுக்கு. ஹி இஸ் அன் அக்யூஸ்ட். இதுல தலையிட்டதுக்காக நான் எப்போவுமே வருத்தப்பட மாட்டேன். பிகாஸ் அவர் அங்க இருக்கிறது தான் அவருக்கு நல்லது. இதை புரிஞ்சிக்காத நீ நம்பர் ஒன் முட்டாள்” என்று சொல்லிவிட்டு மேனகாவுடன் இடத்தை காலி செய்தாள். சென்றவர்களை பார்த்து கொண்டிருந்த அஸ்வினிடம் வந்த அபிமன்யூ “அச்சு! இன்னைக்கு நான் ரொம்ப சந்தோசமா இருக்கேன்டா. கையெழுத்து போடுறப்போ ரிப்போர்ட்டர் கண்ணுல ஒரு செகண்ட் அந்த வீட்டை விக்கிற வலி தெரிஞ்சுது. எனக்கு அதை பாக்கிறப்போ அப்பிடியே காத்துல பறக்கிற மாதிரி ஒரு ஃபீலிங். இதுக்கு இன்னைக்கு நைட் பார்ட்டி குடுத்தே ஆகணும்டா” என்று சொல்ல அஸ்வின் அவன் தோளில் கைவைத்து “எல்லாம் ஓகேடா. ஆனா இனி அந்த ரிப்போர்ட்டர்…” என்று அவனிடம் ஏதோ சொல்ல வர அவனை தடுத்தவன் “இனிமே அவளுக்கும் எனக்கும் எந்தச் சம்மந்தமும் இல்லடா. அவ இன்னொரு தடவை என்னோட சம்மந்தப்பட்டவங்களை சீண்டாத வரைக்கும்” என்று சொல்லிவிட்டு அஸ்வினுடன் சேர்ந்து காரில் அமர்ந்தான். அவளுக்கும் தனக்குமான உறவை கவனக்குறைவால் போட்ட ஒரு கையெழுத்தின் மூலம் இருவரும் சட்டப்படி பதிந்துவிட்டு வந்ததை அறியாமல் அவளை பழி வாங்கிவிட்டதாகச் சந்தோசப்படுபவனைப் பார்த்து விதி கைகொட்டிச் சிரித்தது.
12.5 கிலோ எடை கொண்ட லிட்ரோ எரிவாயு சிலிண்டர் நாளை விநியோகிக்கப்படாது என முதன்மை எரிவாயு வழங்குநர் தெரிவித்துள்ளார். லிட்ரோ கேஸ் லங்கா நிறுவனம் இன்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை இடைநிறுத்தியுள்ளது. எரிவாயு சிலிண்டர்களைப் பெறுவதற்காக வரிசையில் நிற்க வேண்டாம் என அந்நிறுவனம் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. 3500 மெட்ரிக் தொன் திரவப் பெற்றோலிய வாயு (LPG) ஏற்றுமதி வியாழக்கிழமை இலங்கைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுவதால் விநியோகம் இடைநிறுத்தப்பட்டுள்ளது. இலங்கையில் தற்போது கடும் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், எரிவாயு சிலிண்டர்களை பெற்றுக் கொள்வதற்காக பொதுமக்கள் பல மணிநேரம் வரிசையில் நிற்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். (யாழ் நியூஸ்) Share Previous News Next News யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.
ஜன்னல் வழியே நுழைந்த சூரிய கதிர்கள், செல்லமாக முத்தமிட, எழ மனம் இல்லாத குழந்தையை போல், சிணுங்கிக் கொண்டே விழித்தான் ஹரி. கண்ணிமைகள் திறப்பேனா என்று வாதம் செய்ய, சோம்பல் முறித்தபடி எழுந்தவன், கைப்பேசியில் நேரம் பார்க்க, மணி எட்டாகிவிட்டதே என்று திடுக்கிட்டான். அறையின் கதவை திறந்து வெளியே வந்தவனின் கண்கள் முதலில் தேடியது, அரவிந்தனை தான். அவன் இல்லை என்றதும், ‘என்ன விட்டுட்டு நீ மட்டும் ஜாக்கிங்க் போயிருக்கியா’ மனதில் சொல்லிக்கொண்டான். இருபது நிமிடங்களில் தன் காலை வழக்கங்களை முடித்துவிட்டு வந்தவன், சமையல் அறைக்குள் புகுந்தான். ஜாக்கிங்க் செய்துவிட்டு திரும்பும் நண்பன் பசியாய் வருவான் என்று, காலை உணவு சமைக்க தொடங்கினான். “ம்ம்ம்…. உருளைகிழங்கு மசாலா வா? வாசம் மூக்க துளைக்குதே!” ஜாக்கிங்க் சென்று திரும்பியவன், நேராக, சமையல் அறையில் நுழைய, “உன் வியர்வை நாற்றம் தாங்க முடியல டா! முதல்ல போய் குளி!” நண்பனை விரட்டிவிட்டான் ஹரி. கால் மணி நேரத்தில் குளித்துவிட்டு, டி-ஷர்ட் ஷார்ட்ஸ்ஸில் வந்தான் அரவிந்தன். தோசை வார்த்து கொடுக்கும் தோழனை பார்க்க ஏதுவாய், மேடையில் அமர்ந்தான். “சரி சொல்லுடா! மீரா ஏதாவது சொன்னாளா?” டேப் ரெக்கார்டரில், பாஸ் பட்டனை (Pause Button) விடுவித்ததை போன்று, நேற்று விட்டயிடத்திலேயே தொடங்கினான். ஹரியும் இதை பற்றி தெளிவாக பேசி ஒரு முடிவுக்கு வர வேண்டும் என்று தீர்மானமாக இருந்தான். ஆனால் அதற்கு முன் அவன் சாப்பிடவேண்டும் என்று அன்புகட்டளையிட்டு, சுட சுட மசால் தோசையும், தேங்காய் சட்னியும் பரிமாறினான். சாப்பிட்டு முடித்த நண்பர்கள், கோப்பையில் இஞ்சி டீயுடன், பால்கனியில் வந்து அமர, “உன் கிட்ட மூணு கேள்வி கேட்க போறேன். ஆமாம், இல்லன்னு ஒரு வார்த்தைல பதில் சொல்லணும், புரியுதா? பலமான குரலில் பேச, அரவிந்தன், அவனை ஆழ்ந்து பார்த்தான். ‘பில்ட் அப் எல்லாம் பயங்கரமா இருக்கு; கண்டிப்பா மீரா இவன்கிட்ட பதில சொல்லி அனுப்பியிருப்பா ‘உறுதியாய் நம்பியவன், சம்மதம் என்று தலையசைத்தான். “மீராவுக்கு நீ என் ஸிஸ்டம் ஆக்ஸஸ் கொடுத்தியா?” திடமாக கேட்டான் ஹரி. “ஆமாம்…. அது…. அது!” அவன் தடுமாற, “விளக்கம் எதுவும் வேண்டாம்னு சொன்னேன்!” நினைவூட்டி, அடுத்த கேள்விக்கு வந்தான். “இரண்டாவது கேள்வி!” தொண்டையை சரி செய்து கொண்டு, “என் கதை புத்தகத்த, அவகிட்ட படிக்க சொல்லி கொடுத்தியா?” கேட்டான். ‘கிராதகி, எல்லாத்தையும் இவன் கிட்ட சொல்லியிருக்காளே’ மனதில் அவளை திட்டிக்கொண்டே, விதிமுறைகளுக்கு உட்பட்டு, “ஆமாம்” என்று மட்டும் பதிலளித்தான். “உம்! சரி” என்று தலையாட்டியவன், “போன திங்கட்கிழமை, நீ உன் காதல அவகிட்ட சொன்னியா?” கண்கொட்டாமல் அவனை பார்த்து கொண்டே கேட்க, அரவிந்தன் முகம் காதலில் ஜொலித்தது. “அவ முடிவ சொல்லிட்டாளா?” மெல்லிய குரலில் கேட்டு, தேர்வு முடிவுக்கு காத்திருக்கும் மாணவனை போல் ஆவலாய் காத்திருந்தான். “ம்ம்…. சொல்லிட்டா!” அரவிந்தன் கண்களில் இருந்த ஆவல், அவனை மேலும் பேசவிடாமல் கட்டிப்போட்டது. இரண்டு நிமிடங்களுக்கும் மேல் ஹரி மௌனம் சாதிக்க, காத்திருந்தவனுக்கு ஒரு யுகம் போல் தோன்றியது. “சொல்லு டா; அவ என்ன சொன்னா?” நண்பனின் தோள்களை போட்டு உலுக்கினான் அரவிந்தன். “இங்க பாரு அரவிந்தா…. இதுல…. இதுல என் தப்பு ஒண்ணும் இல்ல…. இதுக்கு முழு பொறுப்பு நீ தான்….” சுற்றிவளைத்து பேச, “சரி சொல்லுடா! எஸ் ஆர் நோ?” பொறுமை இழந்தான் அரவிந்தன். அவன் குரல் உசத்தி கேட்க, சற்று, கலங்கியவன், “அவ…. அவ…. அவ என்ன விரும்பராளாம் டா!” ஒரு வழியாக உண்மையை உடைத்தான். “என்னடா சொல்லற?” புருவங்கள் உயர்த்தி கேள்வியாய் நோக்கினான். “எல்லாம் உன்னால தான் அரவிந்தா. நீ ஏன் அவகிட்ட என் கதைய படிக்க சொல்லி கொடுத்த?” தன் மீது தவறில்லை என்பதை அவனுக்கு புரிய வைக்க முயன்றான். ஆனால் அவன் மனதில் வேறொரு கேள்வி ஓடிக்கொண்டிருந்தது. “உன்ன பிடிச்சியிருந்தா, அன்னைக்கே என்கிட்ட சொல்லியிருக்கலாமே. அதுக்கு ஏன் ஒரு வாரம் காத்திருக்க சொன்னா?” கலங்கிய கண்களை துடைத்துக்கொண்டு, “உங்கள என்ன தப்பாவா நினைப்பேன்?” விரக்தியில் கேட்டான். மனம் நொந்து பேசும் நண்பன் அருகில் வந்து மண்டியிட்டு அமர்ந்தான் ஹரி. அவன் கைகளை இறுக்கி பிடித்து, “அப்படியில்ல டா. அவளுக்கு என் மேல வந்த திடீர் உணர்வு என்னன்னு புரியாததுனால தான் உன்ன வர சொல்லியிருக்கா. நீ உன் காதல் சொன்னதும், அவ சொல்ல வந்தத மறச்சிட்டா.” விளக்கியும், அவன் மௌனமாகவே இருந்தான். “அவளுக்கு என் மேல தோன்றிய உணர்வு வெறும் பரிதாபம் தான். நீ என்ன பற்றி சொன்னது, அவ என் கதைய படிச்சது, ஒண்ணோட ஒண்ணு போட்டு குழம்பி போயிருக்கா. அவ்வளவுதான். உன் காதல் தான் நிஜம்; நீ தான் அவளுக்கு சரியான ஜோடி!” கடைசி வார்த்தைகளை அழுத்தமாக சொல்லி, அங்கிருந்து எழுந்தான். தனிமையில் நிதானமாக யோசிக்கட்டும் என்று எண்ணி, ஹரி வெளியே சென்றான். நடந்ததை எல்லாம் மனதில் அசைப்போட்டான் அரவிந்தன். ‘அவளுக்கு வந்தது திடீர் உணர்வுன்னா, அப்போ எனக்கு வந்ததுக்கு பேர் என்ன? குழப்பம் அவளுக்குக் மட்டும் தானா? எனக்கும் அவ மேல என்ன உணர்வுன்னு தெளிவா தெரியாமதானே ப்ரபோஸ் பண்ணேன். அப்போ யார் காதல் நிஜம்?’ நிதானமாக சிந்தித்தான். ‘எனக்கு மனசுல பட்டத உடனே சொல்லிடேன். ஆனா மீரா, நிதானமா இருந்திருக்கா. ஒரு வாரம் பொறுமையா சிந்திச்சு முடிவெடுத்திருக்கா.’ யோசித்து பார்க்க, ஒரு வாரமாய் அவள் தன்னிடம் சகஜமாக பழகியதும், ஹரியை விட்டுதான் விலகி இருந்தாள் என்றும் கவனித்தான். வாரம் முழுவதும் சொற்பொழிவுக்கு ஒன்றாக வேலை பார்த்த போதும் கூட, அவள் இயல்பாகவே இருந்தாள் என்று உணர்ந்தான். இத்தனை நாளாக வராத காதல், இப்போது வந்திடுமா என்று தெளிவடைந்தான். நண்பனுக்கு யோசிக்க காலவகாசம் கொடுக்க வேண்டும், என்ற ஒரே காரணத்துக்காக வெளியே சென்றவன், மாலை ஏழு மணி அளவில் வீடு திரும்பினான். வரும் போதே உணவகத்தில் இருந்து, பரோட்டா குருமா வாங்கி வந்தான்; அரவிந்தன் மதியம் சரியாக சாப்பிட்டிருக்க மாட்டான் என்ற அக்கறையில். வீட்டிற்குள் நுழைந்தவனுக்கு சற்று ஆச்சரியமாகவே இருந்தது என்றுதான் சொல்ல வேண்டும். மிகவும் சாதாரணமாக டி.வி. பார்த்துக் கொண்டிருந்தான் அரவிந்தன். “என்னடா ஹரி? இவ்வளவு நேரம் எங்க போன?” முகத்தில் பொலிவுடன் வினவினான். “நம்ம சுந்தர் அண்ணா கடையில, டைப் செஞ்சு முடிச்ச ரெண்டு கதைய ப்ரின்ட் போட போயிருந்தேன். கரண்ட் கட். அதான் நேரமாச்சு” ஏதோ காரணம் சொல்லி, “வா சாப்பிடலாம்” என்று காலையில் எதுவும் நடக்காதது போல் அழைத்தான். “முதல்ல இங்க வந்து உட்காரு!” சோஃபாவை தட்டி ஜாடை காட்ட, அவனும் அருகில் வந்து அமர்ந்தான். “ஹரி! மீரா உன்னதான் டா விரும்பரா!” என்று அவன் தொடங்கியதும், “இல்ல இல்ல….” ஹரி மறுக்க, எதுவும் பேச வேண்டாம் என்று கையால் ஜாடை காட்டி, “அவ ஒரு வாரம் நிதானமா யோசிச்சுதான் சொல்லியிருக்கா.” என்றதும், மீரா தன்னிடம் சொன்ன எதிர்கால திட்டங்கள் தான் அவன் கண்முன் நின்றது. “உனக்கே தெரியும் அவ ஒரு விஷயத்துல இப்படிதான்னு முடிவெடுத்துட்டா, பின்வாங்கவே மாட்டா…., “என்றதும், ஹரி மீண்டும் குறுக்கிட்டான். “அதெல்லாம் ஒண்ணும் இல்ல; பத்து நாளுக்கு முன்னாடி, எனக்கு பதவி உயர்வுக்கு கூட சிபாரிசு செய்யாதவ, இப்ப கல்யாணம் பண்ணிக்கலாமான்னு கேட்கலியா?” சுட்டிக்காட்டி, மேலும் பேசினான். “உடனே இல்லாட்டாலும், கொஞ்ச நாளுல கண்டிப்பா மனச மாத்திப்பா. அது வரைக்கும் நீ உன் காதல்ல உறுதியா இரு; அது போதும்.” தீர்மானமாக சொன்னான். ‘கல்யாணம்’ அந்த ஒரு வார்த்தையிலேயே, மீராவின் மனநிலையை உறுதியாக உணர்ந்தான் அரவிந்தன். டி.வி. ஒலியை ரிமோட்டின் வாயிலாக குறைத்து, “கல்யாணம் பண்ணிக்கலாமான்னு கேட்கறவ, கண்டிப்பா மனச மாத்திக்க மாட்டா. அவ வேலையில உன்கிட்ட கண்டிப்பா இருக்கறத்துக்கும், இப்போ கல்யாணம் செய்துக்க நினைக்கறதுக்கும் பின்னால ஒரே காரணம் தான் இருக்கு. அது, உன் திறமை மேல அவளுக்கு இருக்க நம்பிக்கை. எந்த சூழ்நிலையிலும் நீ உழைத்து முன்னேறணும்னு நினைக்கரா. அதுக்கு தேவையான ஊக்கத்த ஒரு மனைவியா உனக்கு கொடுக்க ஆசைப்படறா. அவ்வளவுதான்!” என்றதும், மீரா தன்னை எழுத்தில் மட்டும் கவனம் செலுத்த சொன்னதை எண்ணி அசைப்போட்டான். அரவிந்தன் அவன் கையை அழுத்தி பிடித்து, “இன்னும் என்ன யோசிக்கிற ஹரி? அவளுக்கு சரின்னு மட்டும் சொல்லு; அப்புறம் பாரு…. நீ வெற்றியின் உச்சகட்டத்துக்கு போறது உறுதி.” அரவிந்தன் உள்ளப்பூர்வமாக சொல்ல, மீரா அரவிந்தனின் பெருந்தன்மையை பற்றி பறைசாற்றியது தான் நினைவுக்கு வந்தது. “அரவிந்தா! உனக்கு கொஞ்சம் கூட வருத்தமில்லையா?” அவன் காதலை மண்ணோடு மண்ணாக்கிய குற்றவுணர்ச்சியில் கேட்டான். அதற்கு லேசாக சிரித்தவன், “இல்ல டா! அவ வேறொருவரை கல்யாணம் பண்ணா, எங்க நட்புக்கு பங்கம் வந்துடுமோன்னு பயந்தேன். அத வெளிப்படுத்த தெரியாம, ஏதேதோ சொல்லி அவள குழப்பிட்டேன்.” என்றதும், பேச வார்த்தையின்றி போனான் ஹரி. மீரா ஒரு வரியில் அவன் மனநிலையை பற்றி சொன்னது எவ்வளவு சரி என்று புரிந்தது. இவர்கள் பரஸ்பர புரிதலுக்கு முன்னால், தான் எம்மாத்திரம் என்பது போல் தோன்றியது அவனுக்கு. ஹரி எதுவும் பேசாமல் சிந்தனையில் மிதக்க, “ஆனா இப்போ அந்த பயம் இல்ல. அவ கல்யாணம் செய்துக்க போறது, என் நண்பனை தானே!” முடிவே செய்துவிட்டான் அரவிந்தன். இதழோர சிரிப்புடன் எழுந்தவன் ஹரியின் தோளை தட்டி, “வா சாப்பிடலாம்! இன்னியோட உன் பேச்சுலர் வாழ்க்கைக்கு குட் பை சொல்லு” மனதில் எந்த ஒரு சலனமும் இல்லாமல் வாழ்த்தினான். காதலை விட்டுக்கொடுக்கும் நண்பன் ஒரு புறம்; காலத்துக்கும் துணையாய் வருகிறேன் என்று சொல்லும் தோழி மறுபுறம். இப்படிப்பட்ட நண்பர்களை பெற்ற நல்ல அதிர்ஷ்டத்தை நினைத்து வியந்தான் ஹரி. அலுவலக விழா ஏற்பாடுகளை கவனிக்க, அரவிந்தன் காலையில் சீக்கிரமே போகவேண்டியிருந்தது. அறையை விட்டு வெளியே வந்தவன், “புது சட்டை; புது காதலி; ம்ம்…. ம்ம்…. கலக்குர ஹரி!” கண்ணாடி முன்னின்று தலை வாரி கொண்டிருந்தவனை ராகம் போட்டு வம்பிழுத்தான். இனி அவனுக்கு, அந்த சட்டை ஏன் வந்தது எதற்காக வந்தது, சொல்லி தெரிய வேண்டிய அவசியமில்லை. “ஏன் டா…. நீ வேற…. எனக்கே பயமா இருக்கு…. எடுத்த முடிவு சரியான்னு தெரியல!” புலம்பினான் ஹரி. “எல்லாம் சரியாதான் இருக்கும்!” நண்பனின் தோளை தட்டி, ஆறுதலாய் பேச, “உனக்கு இதுல….” ஹரி தொடங்க, “ஒரு வருத்தமும் இல்ல” அரவிந்தன் உறுதியாய் சொல்லி முடித்தான். ஒப்புக்காக தலையசைத்து அவன் திரும்ப, “எங்கடா சட்டை இருந்த பை?” வினவினான் அரவிந்தன். “அந்த ஷெல்ஃப்ல வச்சியிருக்கேன்!” சொல்லி இருக்கும் இடத்தை சுட்டிக்காட்டினான். அதை எடுத்தான் அரவிந்தன். அதில் பழைய செய்தித்தாள் ஒன்றை மடித்து வைத்து, வெளியே தெரியதவாறு மூடினான். “என்ன டா செய்யற?” குழப்பமாய் கேட்டான் ஹரி. “ம்ம்….” இழுத்து சொல்லி, “இத கொண்டு போய் மீரா கிட்ட கொடுக்கபோறேன். நீ அவ காதலுக்கு சம்மதம் சொல்லலேன்னு வருந்துவா. அப்புறம் உன்ன நேருல பார்த்ததும் பூரிச்சு போவா…. எப்படி என் மாஸ்டர் பிளான்?” சட்டை காலரை தூக்கிவிட்டு வில்லத்தனமாக சிரித்தான் அரவிந்தன். “ஏண்டா உனக்கு இந்த விபரீத விளையாட்டு?” வேண்டாம் என்று ஹரி சொல்ல, “உன் ஆளு கொஞ்சம் நேரம் வருத்தமா இருந்தா, ஒண்ணும் ஆகாது!” மீண்டும் அவனை கிண்டல் செய்தான் அரவிந்தன். “அதுக்கில்ல டா…. அப்புறம் அவ விழாவுல ஒழுங்கா பேசலேனா?” ஹரி காரணம் சொல்ல, “அதுக்குள்ளதான் நீ வந்திடுவியே.” தர்க்கம் செய்தான் அரவிந்தன். “ரொம்ப பிளான் பண்ணற; அவ உடனே பிரிச்சு பார்த்துட்டு, உன்ன மொத்து மொத்துன்னு மொத்துவா பாறேன்.” ஹரி தன் யூகத்தை சொல்ல, அதற்கு உரக்க சிரித்தவன், “நோ சான்ஸ்” உறுதியாய் சொல்லி, “அவ சரியான ரோஷக்காரி; கண்டிப்பா தொட்டு கூட பார்க்க மாட்டா…. பச்ச மிளகா….” செல்லமாக பெயர் வைத்து தோழியை அழைக்க, “சரி! ஒரு வேள திறந்தா….” விடாமல் நச்சரித்தான் ஹரி. “சரி டா! உனக்கு அப்படி தோணுச்சுனா ஒரு காதல் கடிதம் எழுதி தா. அதையும் உள்ள வெக்கலாம். எனக்கு அடியும் மிஞ்சும்!” அரவிந்தன் யோசனை சொல்ல, “இப்போ எழுதணுமா! அடப்போடா! உனக்கு நேரமாகுது, கிளம்பு!” என்று நழுவினான் ஹரி. “உனக்கு எழுத சொல்லித்தரணுமா; சும்மா சாக்கு சொல்லாம எழுது டா!” சொல்லி அரவிந்தன், அலுவலகம் புறப்பட தயாரானான். ஹரியும், மெல்லிய சிரிப்புடன், நண்பனின் அன்புக் கட்டளைக்கு செவி சாய்த்தான். அரவிந்தன் அலுவலகம் வந்ததும், நேராக மீராவின் இருக்கைக்கு சென்றான். அவள் கணிணியில், சொற்பொழிவுக்கு தயார் செய்ததை சரி பார்த்து கொண்டிருந்தாள். விழா நாள் என்பதால், சுடிதாருக்கு பதிலாக புடவை உடுத்தியிருந்தாள். அந்த கஞ்சி போட்ட இளம் பழுப்பு நிற சேலையில், பிரம்படி கொடுக்கும் பள்ளி ஆசிரியை போலவே இருந்தாள். கையில் இருந்த பையை சாமர்த்தியமாக மறைத்து கொண்டு, “குட் மோர்னிங் மீரா! ஆடிட்டோரியம் போகலாமா?” என்று கேட்டான். ‘உம் சரி” என்று அவளும் தேவையானதை எடுத்துக்கொண்டு எழ, “ஓ! மறந்துட்டேன் மீரா…. ஹரி, இத உன்கிட்ட கொடுக்க சொன்னான்!” எதார்த்தமாய் சொல்லி, கையில் கொடுக்காமல், உஷாராக டெஸ்க்ல மேல் வைத்தான். அதை, அவள் கண்கள் பார்த்தது தான் தாமதம். துக்கம் தொண்டையை அடைத்தது. புடவையை சரி செய்வது போல், தலைகுனிந்து, முகத்தில் இருந்த சோகத்தை மறைத்தாள். அவள் படும்பாட்டை கண்கொட்டாமல் கவனித்தவன், “என்னது அது?” அப்பாவியாக முகம் வைத்து கேட்க, “ஒண்ணும் இல்ல” இடமும் வலமும் தலையசைத்து, “நீ முன்ன நட! நான் வாஷ்ரூம் போயிட்டு பத்து நிமிஷத்துல வரேன்.” தனிமையை நாடினாள். “சரி! சீக்கிரம் வா! விழா தொடங்கும் முன், வந்தவங்க கிட்ட அறிமுகம் செஞ்சிக்கலாம்.” சொல்லி அங்கிருந்து நகர்ந்தான். வாஷ்ரூம் சென்றவளுக்கு ‘ஓ….’ என்று கதறி அழ வேண்டும் போல் இருந்தது. மனதில் இருந்த சோகம் வெள்ளமாய் பெருக்கெடுக்க, கண்ணிமைகளை இறுக மூடி கண்ணீருக்கு அணை கட்டினாள். ‘இன்று முக்கியமான நாள். அரவிந்தனும், நானும், இந்த சொற்பொழிவுக்காக கடினமா பாடுபட்டிருக்கோம்.’ தனக்குத்தானே சொல்லிக்கொள்ள, “அரவிந்த்!” என்று உரக்க சொன்னாள். ‘அவன் காதலுக்குதான் ஒரு நல்ல முடிவு சொல்ல முடியல…. இந்த சொற்பொழிவாவது அவனுக்கு நல்லமுறையில செஞ்சி தரணும்’ பக்குவமாக சிந்தித்து, ஆடிட்டோரியம் நோக்கி நடந்தாள். ஆம்! இது அவர்களுக்கு மிகவும் முக்கியமான நாள். பல கிளைகளிலிருந்து, உயர் பதவியில் இருந்த ஊழியர்கள் விழாவில் பங்கெடுத்து கொள்ள வந்திருந்தனர். வங்கிகள் செயல்படும் முறையில், காலத்துக்கு ஏற்ப தேவையான மாற்றங்களை பற்றியும், நவீன தொழில்நுட்பங்கள் பற்றியும் பகிர்ந்துகொள்ள வந்திருந்தனர். இதில் மிகச்சிறந்த வகையில் சொற்பொழிவாற்றும் குழுக்கு சிறப்புபரிசுகள் கூட அறிவிருத்திருந்தனர். எல்லாவற்றிர்க்கும் மேலாக, இதில் வெற்றி பெற்றால், கிளை மேலாளர் என்ற வகையில், அரவிந்தனுக்கு பேரும் புகழும், அவர்கள் கிளைக்கு அங்கீகாரமும் கிடைக்கும். தன் சொந்த பிரச்சனையை பணியில் காட்டக்கூடாது என்று திடமாக யோசித்து, அரவிந்தனை நோக்கி நடந்தாள் மீரா. அவள் முகத்தை பார்த்தே அவளின் மனநிலை அறிந்தான் அரவிந்தன். ஏன் சீண்டினோம் என்று கூட தோன்றியது அவனுக்கு. “வா மீரா! அடையார் கிளை மேலாளரை உனக்கு அறிமுகம் செய்யறேன்!” என்று அழைத்து, விழா தொடங்கும் வரை ஏதோ ஒன்றில் அவள் கவனத்தை திருப்பினான். (விளையாடுவது ஏன்; இப்போ ஃபீல் பண்ணுவது ஏன் என்று தான் அவனை கேட்க வேண்டும்.) விழா தொடங்க அரைமணி நேரமே இருந்த நிலையில், சொற்பொழிவில் பங்கேற்போர், மேடைக்கு இடதுபுறம் வந்து அமர்ந்தனர். பார்வையாளர்கள், நிகழ்சியை பார்ப்பதற்கு வாட்டமாய் பிடித்த இடத்தில் அமர்ந்தனர். அன்று வங்கி விடுமுறை நாள் என்பதால், ஊழியர்கள், தன் சொந்த விருப்பத்தில், விழாவை காண வந்தனர். மகேஷும், கீதாவும் இது தான் சாக்கு என்று வீட்டிலே இருக்க முடிவு செய்தனர். திட்டமிட்ட நேரத்தில், கடவுள் வாழ்த்து, வரவேற்புரை என்று விழா செவ்வனே துவங்கியது. விழா நடத்துபவர், சொற்பொழிவுக்கான விதிமுறைகளை கூற, எல்லோரும் உன்னிப்பாக கவனித்தனர்…. அரவிந்தனை தவிர…. அரவிந்தன் கவனம் செலுத்தாமல், கைப்பேசியில் மூழ்கியிருந்தான். அவன் அலட்ச்சியத்தை கண்ட மீரா, எரிச்சலடைந்தாள். “அப்படியென்ன தான் இருக்கு அந்த ஃபோன்ல. அத ஸ்விட்ச் ஆஃப் பண்ணி வை! அவள் கோபமாக சொல்ல, அரவிந்தனோ, கண்களை கைப்பேசியில் இருந்து எடுக்காமல், வந்த சிரிப்பை அடக்கமுடியாமல் அடக்கி, “வாங்கி கொடுத்ததுதான் வாங்கி கொடுத்த…. சம்மதம் சொல்ல பச்சை சட்டை கொடுத்திருக்கலாமே…. இப்படியா கண்கூசும் அளவுக்கு சிவப்பு நிறத்துல எடுத்து கொடுப்ப? நக்கலாய் கேட்க, மீரா புருவங்கள் உயர்த்தி அவனை கேள்வியாய் பார்த்தாள். ஸ்தம்பித்து போனவளின் முகம் பார்த்து, “எனக்கு எல்லாம் தெரியும் டி! அங்க பாரு!” என்று கைக்காட்டி, “உன் ஆளு சிம்லா ஆப்பிள் போல ஜொலிக்கறத பாரு!” என்றான். அரவிந்தன் கைக்காட்டிய இடத்தை பார்க்க, அங்கு ஹரி அமர்ந்திருந்தான். அவள் கொடுத்த சட்டை அணிந்தவனை கண்டவளுக்கு ஈடில்லா மகிழ்ச்சி. அணையை உடைத்து, கண்கள் ஆனந்த மழையில் நனைந்தன. பார்வையாளர்கள் இருக்கையிலிருந்து அவளை பார்த்துக்கொண்டிருந்தவன், கண்சிமிட்டி, தன் சம்மதத்தை அவளுக்கு தெரிவித்தான். அரவிந்தன், தொண்டையை சரிசெய்துகொள்வது போல ஒலியெழுப்பி, “மீரா மா! நம்ம கிளையே, இந்த சொற்பொழிவ நம்பிதான் இருக்கு; சரியா பேசுவல்ல” கேலியாக அவளை பார்த்து நகைத்தான். “இதெல்லாம் உன் வேலையா?” அவனை முறைத்து, கண்களை துடைத்து கொண்டாள். “ம்ம்…. என்ன கயட்டி விட நினச்சல்ல….” அவனும் நமுட்டு சிரிப்புடன் கேலியாக பதிலளிக்க, “அடப்பாவி! விழா முடியட்டும்…. இருக்கு உனக்கு!” தோளில் தட்டி, செல்லமாக மிரட்டினாள். ஓரிரு நிமிடத்தில் சொற்பொழிவு தொடங்கியது. ஒருவர் பின் ஒருவராக பேச, இவர்கள் முறையும் வந்தது. எல்லோரையும் கவரும் விதமாக இருவரும் பேசினர். சில காலமாய் பிரபலமாகி வரும் ‘கோர் பேங்கிங்’ பற்றி, பாமர மக்களுக்கு எப்படி அதிக விழிப்புணர்வை உருவாக்க முடியும் என்பதை விவரித்தனர். தாங்களே சொந்தமாய் சிந்தித்து வடிவமைத்த சில வழிமுறைகளையும் விளக்கினர். நண்பர்களாக இருந்ததாலோ என்னமோ, இயல்பாகவே அவர்களால், ஒருவரை ஒருவர் அனுசரித்து மேடையில் பேச முடிந்தது. ரொம்ப நல்லா போச்சு மீரா! முதல் பரிசு கிடைக்க நிறைய வாய்ப்பு இருக்கு!” இருக்கைக்கு திரும்பி வந்தவன் கூற, பக்கத்தில் அமர்ந்தவள், அவன் கைகளை அழுத்தி பிடித்து, “என்ன மன்னிச்சிரு டா!” குற்றவுணர்ச்சியில் மெல்லிய குரலில் வருந்தினாள். “நீ எந்த தப்பும் செய்யல; உன் முடிவுக்கு பின்னால இருக்கும் நோக்கம் மிக உயர்ந்தது” உறுதியாய் சொல்லி, அவள் பிடியில் இருந்த தன் கரத்தினை விலக்கி, அவளுக்கு ஆறுதலாய் தட்டிக் கொடுத்தான். “உம்…” என்று தலையசைத்தவள் தன் நோக்கத்தை சரியாக புரிந்துகொண்டான் என்று நிம்மதி அடைந்தாள். “மீரா! இந்த மாதிரி அவன் முன்னாடி ஃபீல் பண்ணாத, புரிஞ்சிதா; அவன் ஏற்கனவே எடுத்த முடிவு சரியா இல்லையான்னு குழம்பியிருக்கான்.” எச்சரிக்க, அவள் கண்கள் ஹரியை தேடியது. அருகில் இருந்தும் அவன் தூரமாய் இருப்பது போன்ற உணர்வு அவளுக்கு. விழா முடிய காத்திருந்தாள். ஒரு மணி நேரத்தில் விழா நிறைவுக்கு வர, இவர்களுக்கு முதல் பரிசும் அறிவித்தனர். இந்த போட்டியில் கலந்து கொள்ள, பெரும் இலட்சியத்துடன் அயராது உழைத்தவளுக்கு, இன்று இந்த வெற்றி கொடுத்த மகிழ்ச்சியை காட்டிலும் தன் காதல் கைக்கூடிய வெற்றிதான் பெரிதாக இருந்தது. “வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்!” முகத்தில் புன்னகையுடன் அவர்களை நோக்கி வேகமாக நடந்து வந்தான் ஹரி. “உனக்கும் தான் டா மச்சான்!” வம்பிழுத்தபடி நண்பனை ஆரத்தழுவினான் அரவிந்தன். அவனை பின் தொடர்ந்து வந்தவளுக்கு, இவர்கள் சற்றுமுன் செய்த குறும்புதான் நினைவுக்கு வந்தது. ஹரி அருகே உதட்டை சுளித்துகொண்டே சென்றவள், “காலி கவர கொடுத்து ஏமாத்துற….” அழுத்தமாய் கேட்டு, அவன் கையை நறுக்கென்று கிள்ளினாள். அவள் கிள்ளியது வலித்தது போல் அவனும், “ஆ….” என்று குரல் கொடுத்து, கன்னத்தில் குழி விழ சிரித்தான். அவள் கைகளை விலக்கி, “நீ அத திறந்து பாத்திருந்தா காலியா இல்லையான்னு தெரிஞ்சிருக்கும்.” என்றதும் அவள் புதிராய் கண்களை சுருக்கினாள். இவர்கள் செல்ல சண்டையை இரசித்தவன், “ஆமாம்! கதை ஆசிரியர், உனக்கு காதல் கடிதம் எழுதி உள்ள வச்சான்…. நான் தான் உறுதியா சொன்னேன்…. நீ அத பிரிச்சு பார்க்க மாட்டேன்னு.” தன் திட்டம் வெற்றியடைந்ததை கர்வத்துடன் விளக்கினான் அரவிந்தன். “காதல் கடிதமா?” வாயை பிளந்தாள் மீரா. உனக்கு விளையாட நேரம் காலமே இல்லையா என்று அவள் ஹரியை செல்லமாய் மிரட்ட, அரவிந்தன் மேலும் சீண்டினான், “டேய்! இவள நம்பி உன் வாழ்க்கைய பணயம் வெக்க போறியா? இத்தன நாளா ஆஃபிஸ்ல மட்டும் உன்ன அதிகாரம் பண்ணவ, இனி முழு நேரம் மனைவின்ற பேருல கொடுமை படுத்த போறா டா; யோசிச்சிக்க!” அவன் விளையாட்டாய் பேசுகிறான் என்று தெரிந்தும், “அவன நம்பாத ஹரி! ஏதேதோ சொல்லி உன்ன குழப்பறான்!” அவளும் பதறுவது போல் நடிக்க, “இவ அன்புத்தொல்லையை எதிர்கொள்ள நான் தயார்!” என்று உளமாற சொல்லி, அவள் தலையில் செல்லமாக தட்டினான் ஹரி. அவன் பதிலில் நெகிழ்ந்து போனவள், “அப்படி சொல்லு ஹரி! சரி, நான் போய் அந்த காதல் கடிதத்த படிச்சிட்டு வரேன். நீங்க போய் எனக்கும் சேர்த்து சாப்பாடு எடுத்து வையுங்க.” அதிகாரமாய் சொல்லி, மகிழ்ச்சியில் துள்ளி குதித்து ஓடினாள். பக்கம் பக்கமாய் கவிதைகள் எழுதியிருப்பான் என்று எதிர்பார்த்து போனவளுக்கு, ஏமாற்றம் தான் மிஞ்சியது. மூன்றே வார்த்தைகள் எழுதி, அவள் மூளையை குழப்பினது தான் மிச்சம். “சம்மதம்! நிபந்தனைகளுக்கு உட்பட்டு!” மீண்டும் உரக்க படித்தவளுக்கு, ‘இது காதல் கடிதமா இல்லை கடன் பத்திரமா’ என்று தோன்றியது. நிபந்தனைகள் என்று பெயரில், ஹரி அவளிடம் கலந்தாலோசிக்க நினைத்த நிதர்சன உண்மைகளுக்கு செவி கொடுப்பாளா மீரா? ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து வாழ்வது தான் இல்லற தர்மத்தின் முதல் பாடம் என்று இந்த காதல் ஜோடிகள் அறிந்திருந்தார்களா….பதில் சொல்லும், அவர்கள் ஒருவர் மீது ஒருவர் வைத்த அன்பின் ஆழம்…..
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, கோவை, நாகப்பட்டினம் ஆகிய 5 மாவட்டங்களில் 45 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை படையினர் சோதனை நடத்தி வருகின்றனர். கோவை கார் வெடிப்பு தொடர்பாக கிடைத்த ரகசிய தகவல் ஆவணங்களின் அடிப்படையில் இந்த சோதனை நடந்து வருவதாக தகவல் பரவுகின்றன. கோயம்புத்தூரில் கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பாக கடந்த அக்டோபர் 23ஆம் தேதி அன்று கார் குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. இந்த கார் வெடிப்பு சம்பவத்தில் முபின் என்பவர் உயிரிழந்தார். விசாரணையில் அவர் பெரும் சதி திட்டத்துடன் செயல்பட்டதும், ஐஎஸ் பயங்கரவாதி என்பதும் கண்டறியப்பட்டது. இதன் பின்னர் முபினுடன் தொடர்புடைய ஆறு பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இதை அடுத்து இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமை விசாரித்து வருகிறது. தேசிய புலனாய்வு முகமை ஏற்கனவே விசாரணை சோதனை நடத்தி இருக்கும் நிலையில் மீண்டும் சோதனை தொடங்கி இருக்கிறது. கோவை உக்கடம் அடுத்த புல்லுக்காடு குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் போலீசார் மற்றும் என்.ஐ.ஏ அதிகாரிகள் இணைந்து வீடு வீடாக சோதனையில் ஈடுபட்டு வருகின்றார்கள் . என்.ஐ.ஏவுக்கு கிடைத்த ரகசிய தகவல் ஆவணங்களின்அடிப்படையில் இந்த சோதனை நடப்பதாக தகவல் கசிந்துள்ளன. இந்த சோதனையை முன்னிட்டு அந்தப் பகுதியில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தடை செய்யப்பட்ட இயக்கங்களின் ஆதரவாளர்களின் வீடுகள் உட்பட 20க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடந்து வருகிறது. இதே போல் தமிழ்நாட்டில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களிலும் என்.ஐ.ஏ. சோதனை நடந்து வருகிறது. மொத்தம் 45 இடங்களில் சோதனை நடந்து வருகிறது.
Published September 29, 2016 at 720 × 540 in புத்தகம்-3 வெளியீட்டு விழா படங்கள்(Book-3 Releasing Ceremony photo). ← Previous Next → www.thirukkuralmalai.org 2016 All rights reserved. Brought to you by www.pppindia.com A Historical Journey into the Universe Our goal is to create the "Thirukkural Maamalai" , Thirukkural to be recognized by the UNESCO as World Book, to make the key ideas in Thirukkural a universal law through the UN. திருக்குறள் மாமலை, திருக்குறளை யுனெஸ்கோவால் உலக நூல் அங்கீகாரம், திருக்குறளின் முக்கியக் கருத்துக்களை ஐநா மூலம் உலக சட்டம் ஆக்குவது, இவையே நமது இலக்கு...
அகிம்சை வழியில் தொடங்கிய இலங்கைத் தமிழர்கள் சுதந்திரப் போராட்டம், ஆயுதப் போராட்டமாக உருமாறிய காலத்தைப் பற்றிய, ஒரு முன்னாள் போராளியின் அனுபவப் பகிர்வு இந்தப் புத்தகம். 1972-1986 வரை பதினைந்து வருட காலம் ஈழத்தில் என்ன நடந்தது என்பதை அப்படியே பதிவு செய்துள்ளார். ஏன் தமிழ் இளைஞர்கள் ஆயுதம் தூக்கினார்கள்? ஏன் இலங்கைத் தமிழர்கள், ‘எங்களால் சிங்களர்களுடன் இணைந்து வாழ முடியாது’ என்று சொல்கிறார்கள்? போன்ற பல கேள்விகளுக்கு இந்தப் புத்தகம் பதில் சொல்கிறது. — நோய்க்கு ‘நோ’ சொல்வோம் டாக்டர் கு. கணேசன் பக்கங்கள் 104 விலை 55ரூ கல்கி பதிப்பகம் அலர்ஜி, காய்ச்சல், தலைவலி, வயிற்றுவலி… போன்ற சின்ன சின்ன உடல்நலப் பிரச்சினைகளில் இருந்து எலிக்காய்ச்சல், பன்றிக் காய்ச்சல் போன்ற ஆபத்தான நோய்கள் வரை ஒவ்வொன்றும் ஏன், எவ்வாறு ஏற்படுகின்றன? வரும் முன் காக்க நாம் செய்ய வேண்டியது என்ன? என்பதை எளிமையாக சொல்லித் தரும் புத்தகம். உடல் ஆரோக்கியத்துக்கு என்னென்ன தாதுச் சத்துக்கள் தேவை? எந்த உணவு வகைகளில் அவை உள்ளன? என்பதையும் அழகாகச் சொல்லுகிறது. வீட்டில் இருக்க வேண்டிய குடும்ப டாக்டர். — அன்னை – அரவிந்தர் – கருவூர்த்தேவர் ப்ரியா கல்யாணராமன் பக்கங்கள் 144 விலை 120ரூ குமுதம் பு(து)த்தகம் குமுதத்தில் வெளிவந்த ‘மாண்புமிகு மகான்கள்’ பக்தி தொடரில் அன்னை அரவிந்தர் மற்றும் கருவூர்த்தேவர் பற்றிய பகுதிகளின் தொகுப்பு இந்நூல். தஞ்சைப் பெரிய கோயிலை ராஜராஜசோழன் கட்டினான் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால், அங்குள்ள பிரகதீஸ்வரர் சிலை நிலைபெறக் காரணமானவர் கருவூர்த்தேவர் என்பது உங்களுக்குத் தெரியுமா? எல்லோரும் கடவுளிடம் வரம் கேட்போம். ஆனால் விநாயகப் பெருமானே பாண்டிச்சேரி அன்னையிடம் வரம் கேட்டிருக்கிறார், கேள்விப்பட்டிருக்கிறீர்களா? ஆச்சர்யமாக இருக்கிறதா? இதுபோல் பல அபூர்வத் தகவல்களைக் கொண்ட புத்தகம் இது. படிக்கவும் பாதுகாக்கவும் வேண்டியது. — மொழிக் கொள்கை இராசேந்திரசோழன் பக்கங்கள் 320 விலை 180ரூ மங்கைப் பதிப்பகம் இந்தித் திணிப்பு எதிர்ப்பு, சிதம்பரம் நடராசர் கோயிலில் தமிழில் தேவாரம் பாடுவது, தமிழ்த் திரைப்படங்களுக்கு தமிழிலேயே பெயர் வைப்பது, நீதிமன்றத்தில் வழக்காடும் உரிமை, தமிழ்ச் செம்மொழி அறிவிப்பு… என கடந்த ஐம்பது ஆண்டுகளில் பல மொழிப் போராட்டங்களை சந்தித்தது இந்தத் தமிழ்நாடு. ஏன் இத்தனை மொழிப் போராட்டங்கள்? மொழி என்பது ஏன் அவ்வளவு முக்கியம்? மொழி சார்ந்த பல்வேறு பிரச்சினைகளையும் நடைமுறைச் சிக்கல்களையும் விரிவாக ஆராய்ந்து எழுதப்பட்ட நூல் இது. நன்றி: குமுதம், 29.08.2012
ராமாயண காவியத்தை நினைவுகூர்ந்தால் ராமன், லட்சுமணன், பரதன், சத்ருக்னன், ஹனுமான், வாலி, சுக்ரீவன் எனப் பல ஆண் கதாபாத்திரங்கள் நம் மனக்கண் முன் தோன்றுவர். அதேபோல கோசலை, சுமித்திரை, கைகேயி, சீதை, மண்டோதரி, சபரி போன்ற பெண் கதாபாத்திரங்களும் நினைவுக்கு வருவர். இவர்களெல்லாம் தத்தமக்கு விதிக்கப்பட்ட செயல்களைச் செய்து, தங்கள் சாதனைகளால்- தியாகத்தால் முக்கிய கதாபாத்திரங்களாகத் திகழ்கின்றனர். ஆனால், ராமாயணத்தில் ஊர்மிளை என்ற கதாபாத்திரம் பற்றி எத்தனை பேருக்குத் தெரியும்? யார் இந்த ஊர்மிளை? அவள் என்ன சாதித்தாள்? அவளையும் மேலே குறிப்பிட்ட முக்கிய கதாபாத்திரங்களோடு சேர்த்து நாம் ஏன் நினைவுகூரவேண்டும்? இந்தக் கேள்விகளுக்கு விடை தேடுவோமா? சீதையின் சகோதரிதான் ஊர்மிளை. லட்சுமணனின் மனைவி. சீதா கல்யாணம் நிகழ்ந்தபோதே ஊர்மிளைக் கும் திருமணம் நடந்துவிடுகிறது. திருமணமான பிறகு ராமன் வனவாசம் செல்ல நேர்கிறது. ராமனுக்குத் துணையாக லட்சுமணனும் வனவாசம் சென்றுவிடுகிறான். அதற்குப்பின் ராமாயணக் கதை ராமன், லட்சுமணன், சீதை ஆகியோரைச் சுற்றியே செல்கிறது. அதனால் அயோத்தியில் அரண்மனையில் வாழ்ந்தவர்கள் பற்றிய செய்திகள் அதிகம் பேசப்படவில்லை. ஆனால், ராமன் வனவாசம் செல்லுமுன் நிகழ்ந்த சம்பவங்களை நினைவுகூர்ந்தால் ஊர்மிளை பற்றிய ஒரு முக்கியத் தகவல் தெரியவருகிறது. அதை விரிவாகப் பார்ப்போம். தனக்குப் பட்டாபிஷேகம் இல்லை; வனவாசம் மேற்கொள்ள வேண்டும் என்று முடிவானதும், தாய் கோசலையைச் சமாதானப்படுத்தி, அவள் ஆசி பெற்ற பின், சீதையிடம் அதுபற்றிச் சொல்லச் சென்றான் ராமன். சீதையோ தானும் காட்டுக்கு வருவதாகப் பிடிவாதம் செய்தாள். அதற்காக ராமனோடு வாதிட்டாள். ''ஸ்வாமி! தாங்கள் கானகம் செல்லும் செய்தி கேட்டு, தங்களை விட்டுப் பிரிய மனமில்லாத காரணத்தால், தங்கள் தாயும் தங்களுடன் கானகம் வருவதாகப் பிடிவாதம் பிடித்தால், கூட்டிச் செல்ல மாட்டீர்களா?' என்று கேட்டாள். ''ஆம் சீதா, அன்னை கௌசல்யாதேவியும் நீ கூறியபடியே என்னுடன் வருவதாகப் பிடிவாதம் பிடித்தார்கள். நான் அவர்களுக்கு ஸ்திரீ தர்மத்தை எடுத்துச் சொன்னேன். திருமணமான பெண் கணவனை விட்டுப் பிரியக்கூடாது. அதனால், என் தந்தை தசரதனுடன் அயோத்தியில்தான் தாங்கள் இருக்கவேண்டும் என்று விளக்கினேன். அவரும் அந்த நியாயத்தை ஒப்புக்கொண்டார்' என்றான் ராமன். 'நன்றாகச் சொன்னீர்கள் நியாயம்! நீங்கள் எடுத்துச்சொன்ன அந்த ஸ்திரீ தர்மம் எனக்கு மட்டும் பொருந்தாதா? என் பதிக்கு சேவை செய்ய நான் அவருடன் இருக்க வேண்டாமா?' என்று வாதிட்டு, ராமனை அவனது சொற்களாலேயே மடக்கி, அவனுடன் வனவாசம் செல்லும் அனுமதி பெற்றாள் சீதை. லட்சுமணனும் ராமனோடு தர்ம நியாய அடிப்படையில் வாதாடி, தானும் ராமனுடன் காட்டுக்கு வர அனுமதி பெற்று விடுகிறான். இந்நிலையில், சீதாதேவியும் ராமனுடன் கானகம் செல்ல முடிவெடுத்து விட்டாள் என்ற செய்தி கேட்டு, லட்சுமணனின் மனத்தில் ஒரு கலக்கம் ஏற்பட்டது. அதாவது, அண்ணனுக்கும் அண்ணிக்கும் சேவை செய்வதற்காகவே கானகம் செல்லும் தன்னோடு தன் மனைவி ஊர்மிளையும் வருவதாகப் பிடிவாதம் பிடித்தால் அவளை எப்படிச் சமாதானம் செய்வது என்பதே அவன் கவலை. இந்தக் கலக்கத்துடனேயே மனைவி ஊர்மிளையை அவளது அந்தப்புரத்தில் பார்க்கச் சென்ற லட்சுமணனுக்கு ஒரு பேரதிர்ச்சி காத்திருந்தது. ராமனின் வனவாசச் செய்தி கேட்டு நாட்டு மக்கள் அனைவரும் கண்ணீரும் கம்பலையுமாக நின்றுகொண்டிருந்த அந்த நேரத்தில், ஊர்மிளை மட்டும் சீவி முடித்து, சிங்காரம் செய்துகொண்டு, பொன்னாடைகளும் அணிகலன்களும் தரித்து மஞ்சத்தில் ஒய்யாரமாக வீற்றிருந்தாள். கோபத்தால் கண்கள் சிவந்த லட்சுமணன், 'இது என்ன கோலம் ஊர்மிளா? ஊரே அழுது கண்ணீர் வடித்துக்கொண்டிருக்கும் நேரத்தில் உனக்கு ஏன் இந்த ஆடம்பரம்?' என்று கேட்டான். அதற்கு அவள் நேரடியாக பதில் சொல்லாமல், 'ஸ்ரீராமன்தானே காட்டுக்குச் செல்ல வேண்டும்? உங்களை யாரும் போகச் சொல்லவில்லையே! நீங்கள் ஏன் மரவுரி தரித்து, அலங்கோலமாக நிற்க வேண்டும்?' என்று திருப்பிக் கேட்டாள். ஊர்மிளைக்குப் பைத்தியம் பிடித்து விட்டதோ என ஒரு கணம் பதறினான் லட்சுமணன். சமாதானமாகப் பேசி, பல நியாயங்களை எடுத்துச் சொல்லி, அவள் செய்வது சரியல்ல என்று விளக்கினான். ஆனால், ஊர்மிளை சிறிதும் அசைந்து கொடுக்கவில்லை. ''நீங்கள் கோசல நாட்டின் இளைய ராஜகுமாரன். உங்கள் ராணியாக அரச போகங்களை அனுபவிக்க வேண்டுமென்று ஆசைப்பட்டுத்தான் உங்களைத் திருமணம் செய்துகொண்டேன். அரச போகங்களைத் துறந்து செல்வது ஸ்ரீராமனின் விதி என்றால், அதில் நீங்கள் ஏன் பங்குகொள்ள வேண்டும்? நான் ஏன் என் சௌபாக்கியங்களை இழக்க வேண்டும்?'' என்று கேட்டாள். லட்சுமணனின் ரத்தம் கொதித்தது. தாடகையைவிடக் கொடிய அரக்கிபோல் அவன் கண்களுக்குத் தெரிந்தாள் ஊர்மிளை. பெண் இனத்துக்கே அவளால் அவமானம் எனக் கருதினான். அவளை மனைவியாக அடைந்த தன் துர்பாக்கியத்தை எண்ணி நொந்து கொண்டான். ''அடிப் பாவி! நீ கைகேயியைவிடக் கொடியவளாக இருக்கிறாயே! அரச போகத்திலும் ஆடம்பர வாழ்க்கையிலும் ஆசை கொண்டவள் நீ. பதிபக்தி இல்லாதவள். உன்னை மனைவி என்று சொல்வது கூடப் பாவம். இக்கணம் முதல் உன் சிந்தனையை என் மனத்திலிருந்து அகற்றிவிட்டேன். இனி நமக்குள் பந்தமில்லை; உறவில்லை; ஊர்மிளை என்ற சொல்லுக்கே அர்த்த மில்லை. இன்று முதல் நீ யாரோ, நான் யாரோ!' என்று கோபத்தில் கொந்தளித்தவன், போய்வருகிறேன் என்றுகூடச் சொல்லாமல், 'போகிறேன்’ என்று கூறிப் புறப்பட்டான். தன் உணர்ச்சிகளை எல்லாம் கொன்றுவிட்டு, அவனுடன் உரையாடிய ஊர்மிளை, கணவன் லட்சுமணனின் தலை மறைந்ததும் விக்கி விக்கி அழுதாள். கண்ணீர் வெள்ளத்தில் மூழ்கினாள். ராமனுக்கும் சீதைக்கும் 14 ஆண்டுகள் பணிவிடை செய்யப்போகும் லட்சுமணனுக்குத் தன்னைப் பற்றிய ஆசாபாசங்கள், காதல் நினைவுகள் ஏற்பட்டு, அதனால் அவர் செய்கின்ற பணிக்கு இடையூறு வராமல் இருக்கவேண்டும் என்பதற்காகவே அவள் இப்படியரு நாடகமாடி, தன் மீது அவனுக்கு முழு வெறுப்பு ஏற்படும்படியாகச் செய்துகொண்டு, கணவன் ஏற்றுக்கொண்ட கடமை எனும் யாகத் தீயில் தன்னையே நெய்யாக்கி ஆஹூதி தந்தாள் ஊர்மிளை. 14 வருடங்கள் அன்ன ஆகாரமின்றி மிக எளிமையாக, சன்யாசினியாக வாழ்ந்தாள். தான் செய்த இந்த தியாகத்தைப் பற்றி அவள் யாரிடமும் கூறவில்லை. லட்சுமணனுக்கும் ஊர்மிளை செய்த இந்தத் தியாகம் தெரியாது. வனவாசம் முடிந்து ராமன் அயோத்தி திரும்பி பட்டாபிஷேகம் செய்துகொண்டான். அப்போதும் லட்சுமணன் ஊர்மிளையை ஏறெடுத்துக்கூடப் பார்க்கவில்லை. இவர்களுக்குள் உள்ள மனபேதத்தை ஊகித் தறிந்த சீதாதேவி, ஒருநாள் ஊர்மிளையை அழைத்துக் காரணம் கேட்டாள். அப்போதும் ஊர்மிளை சொல்ல மறுத்தாள். சீதா மிகவும் வற்புறுத்த, தான் செய்த செயலையும், அதற்கான காரணத்தையும் விளக்கினாள் ஊர்மிளை. சீதை பிரமித்து நின்றாள். ''ஊர்மிளா! ஆயிரம் சீதைகளும் உனக்கு ஈடாக மாட்டார்கள். விரைவிலேயே நான் லட்சுமணனிடம் நடந்ததையெல்லாம் எடுத்துக்கூறி, உங்கள் இருவரின் பிரிவுத் துயரைத் துடைக்க வழி செய்கிறேன்' என்றாள் சீதா. இதற்கான தருணத்தை சீதை எதிர்நோக்கியிருந்தாள். அப்போதுதான் ஸ்ரீராமன், கர்ப்பிணியான சீதையை காட்டுக்கு அழைத்துச் சென்று வால்மீகி ஆஸ்ரமத்தில் விட்டு வருமாறு லட்சுமண னுக்குக் கட்டளையிட்டான். இந்தத் தகவலை சீதைக்குத் தெரிவிக்காமல் மனசுக்குள் புழுங்கியபடி, கண்ணீரோடு லட்சுமணன் தேரைச் செலுத்திக்கொண்டிருந்த வேளையில்தான் அவனிடம் ஊர்மிளையின் தியாகத்தை எடுத்துக் கூறி, அவளை ஏற்றுக் கொள்ளும்படி சொன்னாள் சீதை. ஒரு பக்கம் துயரமும், மறுபக்கம் ஊர்மிளை பற்றிப் பெருமிதமும் கொண்ட லட்சுமணன், ''அண்ணி! எனக்கொரு நல்ல செய்தியைச் சொன்னீர்கள். அதற்காக நன்றி! ஆனால், இந்தப் பாவி உங்களுக்கொரு அதிர்ச்சியான செய்தியைச் சொல்ல வேண்டிய நிலையில் உள்ளேன். என் அண்ணனின் ஆணைப்படி, தங்களை இந்தக் கானகத்திலேயே விட்டுச் செல்ல வந்திருக்கிறேன். என்னை மன்னியுங்கள்!'' என்று கூறி, கதறி அழுதான். அப்போது சீதை அதிர்ச்சியில் மனமுடைந்து சொன்னாள்... ''லட்சுமணா! ஸ்ரீராமன் எது செய்தாலும் அதில் ஒரு தர்மம் இருக்கும்; ஒரு நியாயம் இருக்கும். அயோத்தியின் ஒரு பிரஜைக்கு நியாயம் வழங்க, எனக்கு இந்த இரண்டாவது வனவாசம் தந்திருக்கிறார். பரவாயில்லை; ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் ஒரு வேண்டு கோள்; எக்காரணம் கொண்டும் எந்தக் காலத்திலும் உன் மனைவி ஊர்மிளைக்கு இதுபோல் தண்டனை எதுவும் தந்துவிடாதே! தர்மம் அதை ஒருக்காலும் தாங்காது!'' பாவம் லட்சுமணன்! தாங்க முடியாத துயரத்துடன் அயோத்தி வந்தவன், நேராக ஊர்மிளையைச் சந்தித்து, அவள் தன் மனைவி என்றும் பாராமல் அவள் கால்களில் தடாலென விழுந்து, அவள் பாதங்களைக் கண்ணீரால் கழுவினான். ராமன் இருக்குமிடமே அயோத்தி என்று கணவனின் திருவடிகளைப் பின்பற்றிக் கானகம் சென்று, பல துயரங்களை அனுபவித்து, பின்பு அக்னிப்பிரவேசம் செய்யவும் தயாரான சீதை தியாகியா? தாய் பெற்றுத் தந்த ராஜ்ஜியத்தைத் துச்சமாக மதித்து, தனயன் திருவடிகளைத் தாங்கும் பாதுகைகளை சிம்மாசனத்தில் வைத்து பூஜித்து, அயோத்தியின் சேவகனாக 14 ஆண்டுகள் வாழ்ந்த பரதன் தியாகியா? அரச போகம் அனைத்தையும் துறந்து, அண்ணன் ராமனுக்குச் சேவை செய்ய 14 ஆண்டுகள் இமைக்காமல், கானகத்தில் தொண்டு செய்த லட்சுமணன் தியாகியா? இவர்கள் அனைவரும் தியாகிகள் என்றால், கணவன் ஏற்றுக்கொண்ட தியாகப் பணி தடையின்றி நடக்க, தன்னையே அவன் வெறுத்து ஒதுக்கும் சூழ்நிலையை உருவாக்கி, அந்தத் துயரத்தைத் தன்னுள்ளேயே புதைத்துக்கொண்டு, 14 ஆண்டுகள் ஊண் உறக்கமின்றி அரண்மனைக்குள்ளேயே அக்ஞாதவாசம் செய்து வாழ்ந்த ஊர்மிளையும் இவர்களுக்கு ஈடான தியாகிதான், அல்லவா?
உலக அளவில் புகழ் பெற்றிருக்கும் ஐ.ஐ.எம்., நிறுவனங்கள் போல இன்பர்மேஷன் டெக்னாலஜி துறையில் மத்திய அரசால் நடத்தப்படும் சிறப்புக் கல்வி கல்லூரிகள் உள்ளனவா? ஐ.எப்.எஸ்., எழுத ஆசை... எப்படி விண்ணப்பிப்பது? நிதி மேலாண்மை முடித்திருக்கும் நான் அடுத்ததாக பொருட்கள் சந்தை, அதாவது கமாடிட்டி மார்க்கெட் தொடர்பான சிறப்புப் படிப்பு படிக்க விரும்புகிறேன்.எங்கு படிக்கலாம்? மெர்ச்சன்ட் நேவி பணி பற்றிக் கூறவும். மேலும் ஆசிரியர்கள் தேவை Wanted: Faculty on contract basis for Marine Engineering. Apply on or before 16-... Posted On :05-12-2022 பேராசிரியர், இணை பேராசிரியர், உதவி பேராசிரியர் தேவை Wanted: Professors in Natural Products, Assistant Professors in Natural Products... Posted On :30-11-2022 பேராசிரியர், இணை பேராசிரியர், உதவி பேராசிரியர் தேவை Wanted: Professors, Associate & Assistant Professors in the department of Archit... Posted On :29-11-2022 பேராசிரியர், இணை பேராசிரியர், உதவி பேராசிரியர் தேவை Wanted: Professors, Associate & Assistant Professors in the Department of AI & D... Posted On :26-11-2022 ஆசிரியர்கள் தேவை Wanted: Faculty for Amity Institute of Hospital Administration, Amity University... Posted On :26-11-2022
ஒரு காட்டில் வாழ்நாள் முழுக்க வேட்டையாடி அலுத்துப்போன புலி ஒன்னு ஒரு தொழிற்சாலை ஆரம்பிச்சுது. அங்கே ஒரு எறும்பு வேலை செஞ்சுது. அதுபாட்டுக்கு வரும் சுறுசுறுப்பா எல்லா வேலைகளையும் செஞ்சு முடிச்சிட்டு சாயந்திரம் ஆனா வீட்டுக்கு போயிடும். புலியாருக்கு ஏக சந்தோசம் கணிசமான லாபமும் கிடைச்சுது. நல்லாத்தான் போய்கிட்டிருந்தது, நம்ம ஆட்சியாளர்களுக்கு தோனுற மாதிரி நடு ராத்திரியில் திடீர்ன்னு புலியாருக்கு ஒரு ஐடியா தோனுச்சு. எறும்பு தனியாவே வேலை செய்யுதே அதை கண்காணிக்கற அளவுக்கு நமக்கும் போதுமான அறிவு இல்லை, நாம எறும்பை கண்காணிக்கவும் ஆலோசனை சொல்லவும் ஒரு உற்பத்தி மேலாளரை (production manager) நியமித்தால் உற்பத்தி அதிகமாகும்னு ஒரு தேனியை கொண்டு வந்தது. அந்த தேனியும் வேலையில் ஒரு புலிதான். பல கம்பெனிகளில் வேலை செய்த பழுத்த அனுபவசாலி (இப்போ அந்த கம்பெனியெல்லாம் இருக்குதான்னு கேக்காதிங்க). அந்த தேனி சொல்லுச்சு, "பாஸ் எறும்பை அதன் போக்குல விட முடியாது, அதுக்கு முறையான ஒர்க் ஷெட்யூல் போட்டுக் கொடுத்தால் இன்னும் கூடுதலா வேலை வாங்கலாம். அதுக்கு நிறைய வேலை இருக்கு எனக்கு ஒரு செக்ரட்ரி வேணும்"னுது. புலிக்கு ஏக சந்தோஷம் இந்த தேனி என்னமா யோசிக்குது நமக்கு இவ்வளவுநாளா இது தோனலையேன்னு ஒரு முயலை செக்ரட்டரியாக்குச்சு. அத்தோட புலியார் நமக்கும் கொஞ்சம் தெரியும்னு காட்டிக்க, "ஆள் போட்டாச்சு இனிமே எனக்கு தினமும் வேலை முன்னேற்றம் குறித்து ரிப்போர்ட் வரைபடமாவும் அட்டவனையாவும் கொடுக்கனும்"னுது. "ஓகே பாஸ் அதுக்கென்ன, பிரமாதமா செஞ்சிடலாம் அதுக்கு ஒரு கம்ப்யூட்டர், பிரின்டர், புராஜக்டர் எல்லாம் வேணுமே"ன்னது, அப்படியே வாங்கிகிச்சு ஒரு கம்ப்யூட்டர் டிபார்ட்மெண்டும் பூனை ஒன்றின் தலைமையில் அமைச்சாச்சு. இப்போ ஏகப்பட்ட கெடுபிடி நெருக்கடிகளால் விரக்தியடைந்த அந்த எறும்போட வேலையில் ஒரு தொய்வு வந்துச்சு. உற்பத்தி குறைந்தது. புலி நினைச்சுது, எல்லாம் சரியா இருந்தும் ஏனிப்படி? தேனியோட ஐடியாக்களை எறும்புக்கு விளக்கமா எடுத்துச்சொல்ல ஒரு தொழில்நுட்ப ஆலோசகரை போடுவோம்னு ஒரு குரங்குக்கு அந்த வேலையை கொடுத்தது. ஏற்கனவே டல்லான எறும்பை இப்போது குரங்கும் அதன் பங்குக்கு குழப்ப அன்றய தினத்துக்காக திட்டமிடப்பட்ட வேலைகளை அன்றைக்கே முடிக்காமல் போனது எறும்பு. மேலும் உற்பத்தி குறைவு நஷ்டத்தில் இயங்கியது ஃபேக்டரி. "எதைத் தின்னா பித்தம் தெளியும்" என்ற மனநிலைக்கு ஆளான புலியார் நஷ்டத்தை சரி செய்ய என்ன செய்லாம்னு ஆராய ஆந்தையை நியமிச்சது. ஆந்தை மூன்று மாத ஆராய்ச்சிக்கு பின் கடைசியா இப்படி சொன்னது. "தொழிற்சாலையில் தேவைக்கு அதிகமா ஆள் இருப்பதே காரணம் யாரையாவது வேலையை விட்டு எடுத்துட்டா நிலைமை ஓரளவு சீராகும்" "யாரை எடுக்கலாம் அதையும் நீயே சொல்லிடு" என்றது புலி. "அதிலென்ன சந்தேகம் சரியாக வேலை செய்யாத அந்த எறும்பைதான" அதிரடியாக சொன்னது ஆந்தை. இப்படித்தான் உலகெங்கும் பொதுத்துறை மற்றும் தனியார்துறைகளில் எதுவும் செய்யாமலே படம் காட்டுபவன் பிழைத்துக் கொள்கிறான். வேறெதுவும் தெரியாது வேலையை மட்டுமே செய்பவன் பாதிப்புக்கு உள்ளாகிறான்.
யாழ். புங்குடுதீவு 9ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் St.Gallen – Gossau ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தம்பிஐயா நந்தகுமார் அவர்கள் கடந்த (08.10.2021) வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் காலஞ்சென்றவர்களான தம்பிஐயா – நல்லம்மா தம்பதியரின் அன்பு மூத்த மகனும், காலஞ்சென்றவர்களான சபாரட்ணம் சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும், ராஜேஷ்வரி (ஈஸ்வரி) அவர்களின் அன்புக் கணவரும், பிரபாகரன் (சுவிஸ்), கிருஜா (சுவிஸ்), யசோதா (சுவிஸ்), தர்சினி (கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும், சசிமலர் (சுவிஸ்), ரவி (சுவிஸ்), சுரேஸ் (சுவிஸ்), சசிகரன் (கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும், நவநீதம் (கனடா), காலஞ்சென்ற லெட்சுமணன், யோகலெட்சுமி (கனடா), யோகேஸ்வரி (கனடா), செல்வராணி (ஐக்கிய அமெரிக்கா), ஞானமலர் (கனடா), சிவகுமார் (டென்மார்க்), தவகுமார் (சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும், காலஞ்சென்ற கந்தையா, பிரேமா (பிரான்ஸ்), ஜெகதீஸ்வரன் (கனடா), பேரின்பநாதன் (கனடா), றொபின்சன் (ஐக்கிய அமெரிக்கா), பரமேஸ்வரன் (கனடா), மஞ்சுளா (டென்மார்க்), காலஞ்சென்ற தவமணி, பாலாம்பிகை (இலங்கை), காலஞ்சென்ற யோகாம்பிகை, சந்திரலேகா (சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும், காலஞ்சென்றவர்களான சதாசிவம், சுப்ரமணியம், வினாயகமூர்த்தி மற்றும் சத்தியசீலன் (சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு சகலனும், பிரித்திகா, பிரவீணா, பிரணவி, காயத்திரி, கிசோத், கார்த்திகன், கீர்த்திகன், ஆதீஸ், அஜானி, காருசன், கபிசன், சுபிட்சா ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.
மயிலாடுதுறை மாவட்டம், திருமுல்லைவாசலில் வளைய வந்து கொண்டிருக்கிறது அந்த நடமாடும் மளிகைக் கடை. ‘என்னது நடமாடும் மளிகைக் கடையா?!’ என்கிறீர்களா? ஆம்... பழைய டி.வி.எஸ். எக்ஸல் 100 வண்டியில்தான் அமைந்திருக்கிறது அந்த மளிகைக் கடை. கடையின் டிரைவர், ஓனர்... 51 வயதாகும் கண்ணன். அவரிடம் கொஞ்சம் பேசுவோமா?! ‘‘திருமுல்லைவாசல்ல பெரிய மளிகைக் கடை வெச்சிருந்தேன். சுனாமி வந்து என் வாழ்க்கையவே திருப்பிப் போட்டுடுச்சு. முதலாளியா இருந்த நான் அந்தப் பேரலையால ரொம்ப நஷ்டமாகிப் போனேன். எங்க அப்பா ஒரு காலத்துல செக்கு வெச்சு எண்ணெய் வியாபாரம் பண்ணிட்டு இருந்தார். அந்தத் தடத்துல நானும், நாட்டு மரச்செக்கெண்ணெயை நேரடியா வாங்கி, டூ வீலர் வண்டியில கொண்டுபோயி விக்க ஆரம்பிச்சேன். நல்லா வியாபாரம் ஆச்சு. ‘இப்படியே வண்டியில பருப்பு, பயறு கொண்டு வந்து வித்தீங்கன்னாலும் வாங்க எங்களுக்கு வசதியா இருக்கும்’னு சில பேரு சொல்ல, சரினு மளிகை சாமான்கள வண்டியில சேர்த்தேன். இப்படித்தான் என் வண்டி நடமாடும் மளிகைக் கடை ஆச்சு. 10 வருஷமா இப்படித்தான் போகுது வாழ்க்கை. வருமானம் ஏதோ வருது. ஆனா, நான் யார்கிட்டயும் கைக்கட்டி நிக்காம, நானே முதலாளி, நானே தொழிலாளினு இருக்குற நிறைவு போதும்னு இருக்கு. இதோ என் வண்டியப் பாருங்க... இதுதான் என் சொத்து, கெத்து. என் வண்டியப் பாக்குற யாரும், ‘அட!’னு ஒரு தடவை திரும்பிப் பார்க்காம போக மாட்டாங்க. மளிகைக் கடைக்கு(!) ஏத்தமாதிரி அதை மாத்தியிருக்கேன். வெயிட்டு குறைவான பொருள்கள் முன்னாடியும், வெயிட்டு அதிகமுள்ள பொருள்கள் பின்னாடியும் வெச்சிருக்கேன். நடுவுல இந்தச் சின்ன சீட்டுதான் நமக்கு. இதை பேலன்ஸ் பண்ணுற வித்தை இருக்கே... அதை ஒரு குட்டி சர்க்கஸ்னே சொல்லலாம்ங்க. என்னைத் தவிர வேற யாராலயும் இந்த வண்டியை ஓட்ட முடியாதுல்ல! வியாபாரத்துக்குப் போகும்போது, அதுக்காக நான் பேசிவெச்சிருக்குற ஒலிப்பதிவை போன்ல போட்டு, அதை சின்ன ஸ்பீக்கர்ல ஒலிக்க விடுவேன். மளிகைப் பொருள்களை 10 ரூபாய் மதிப்புல பாக்கெட்ல பேக் பண்ணி விக்கிறதுதான் நம்ம ஸ்பெஷலு. ‘அண்ணே 10 ரூபாய்க்கு கடுகு தாங்க’, ‘10 ரூபாய்க்கு சீரகம் தாங்க’னு வாங்கிட்டுப் போவாங்க. சில பொருளுக்கு ஏற்ப விலை மாறவும் செய்யும். காலையில 7.30 மணிக்கு வியாபாரத்துக்குக் கிளம்பினா, வீடு திரும்ப ராத்திரி 7 மணி ஆகிடும். கிடைக்கிற கொஞ்ச நேரத்துலயும், வண்டியில ஏதாச்சும் பிரச்னைனா சரிசெஞ்சு வைக்கணும். பொதுவா மளிகைப் பொருள்களை 20 கிலோமீட்டர் தூரத்துல போயி வாங்கிட்டு வருவேன். அதையெல்லாம் பாக்கெட் போட நைட்டு 10 மணிக்கு உட்கார்ந்தா, முடிக்க காலையில 3 மணி ஆகிடும். வெயில், மழையில வியாபாரம் ரொம்ப சவாலாதான் இருக்கும். அப்பப்போ உடம்பு நோவும் வரும். முதுகெலும்பு தேய்மானம்தான் இப்போ படுத்துது. ‘என்னடா வாழ்க்கை இது... எதுக்கு இவ்ளோ பாடுபடணும்...’னு நான் எப்பவும் நினைச்சதே இல்ல. காரணம், என் குடும்பம். அவங்க என் உழைப்புக் களைப்பையெல்லாம் தங்க ளோட அன்பால சரி செஞ் சிடுவாங்க. என் மனைவி சகிலா, மூத்த மகன் மணிகண்டன், இளைய மகன் ஆகாஷ், மகள் கல்பனா சாவ்லானு என் வீடுதான் எனக்கான தெம்பைக் கொடுக்குற கூடு. மூத்தவன் பி.எஸ்ஸி விஷுவல் கம்யூனிகேஷனும், இளையவன் பாலிடெக்னிக் முதல் வருஷமும் படிக்கிறாங்க. பொண்ணு ஒன்பதாவது படிக்குது. அஞ்சாப்புவரை மட்டுமே படிச்ச நான், என் புள்ளைக மூணையும் பட்டதாரி ஆக்கணும். வாழ்க்கையில ஏற்ற இறக்கம், ஏமாற்றம், கஷ்ட நஷ்டம், கடன், வலினு எல்லாமும் வரும், போகும். இதையெல்லாம் தாண்டி வாழ்க்கையில நாம எவ்ளோ தூரம் போயிருக்கோம் என்கிறதுதான் முக்கியம். நான் போயிட்டே இருக்கேன் என் வண்டியில..!”
பாட்னா: பிரதமர் ஆக வேண்டும் என்ற ஆசையினால் பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் பாஜகவின் முதுகில் குத்திவிட்டதாக அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான அமித்ஷா குற்றம் சாட்டியுள்ளார். தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகி காங்கிரஸ் மற்றும் லாலுவுடன் நிதிஷ்குமார் கைகோர்த்த பின்னர் முதல்முறையாக அமித்ஷா பீகாரில் 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். குறுனியா என்ற இடத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அமித்ஷா; சட்டமன்ற தேர்தலில் நிதிஷ்குமாரின் ஜனதா தளத்தை விட பாஜக அதிக தொகுதிகளில் வென்ற போதும் பிரதமர் உறுதியளித்தது படி நிதிஷ் குமாருக்கு முதலமைச்சர் பதவி வழங்கியதாக குறிப்பிட்டார். ஆனால் பதவி மீது உள்ள மோகம் காரணமாக நிதிஷ் குமார் பாஜக மற்றும் பீகார் மக்களுக்கு துரோகம் செய்துவிட்டதாக அமித்ஷா சாடினார். பதவிக்காக தமது நிலைப்பாட்டை மாற்றுவது மட்டுமே கொள்கையாக கொண்ட நிதிஷ்குமாரிடம் லாலு பிரசாத் கவனமாக இருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். எதிர்வரும் தேர்தல்களில் பீகாரில் தாமரை மட்டுமே மலரும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இந்தநிலையில் அமித்ஷாவின் பேச்சு நகைப்பை ஏற்படுத்துவதாக அம்மாநில துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் பதிலடி கொடுத்துள்ளார். பிரதமர் உறுதியளித்தப்படி சிறப்பு அந்தஸ்து மற்றும் பொருளாதார உதவிகளை வழங்காதது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். Related Stories: சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி: இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை ரூ.5 வரை குறைக்கப்பட வாய்ப்பு மூளை வளர்ச்சி குறைபாடு உடைய 33 வார கருவை கலைக்க டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு.. மாற்றுத்திறனாளிகளின் உதவித்தொகை ரூ.1,500ஆக உயர்வு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்..!! டிச. 9ம் தேதி சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட 15 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்: வானிலை ஆய்வு மையம் தகவல்..! படை வீரர்களின் குடும்பங்களுக்குப் பாதுகாப்பான வாழ்க்கையை அமைத்துத் தருவது நம் மகத்தான கடமை: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை..! ஆபாச ஆடியோ லீக்கில் சிக்கியதால் பாஜகவில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட திருச்சி சூர்யா சிவா, கட்சியில் இருந்து விலகல் பொது விநியோக திட்டத்துக்கு பொருட்கள் வழங்கிய 5 நிறுவனங்களில் ரூ.290 கோடி வருவாய் மறைப்பு கண்டுபிடிப்பு: வருமான வரித்துறை அதிரடி தொலைதூரக் கல்வியில் படித்தவர்கள் ஆசிரியர் பணிக்கு தகுந்தவர்களோ, தகுதியானவர்களோ அல்ல: ஐகோர்ட் நீதிபதி கருத்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்து மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக இயங்கும் பல்வேறு சங்கங்களின் பிரதிநிதிகள் சந்தித்து நன்றி தயார் நிலையில் 5,093 நிவாரண முகாம்கள்; 24 மணி நேரமும் அவசரகால செயல்பாட்டு மையங்கள்: புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் ராமச்சந்திரன் விளக்கம்..! சன் பார்மா நிறுவனத்திற்கு பசுமை தீர்ப்பாயம் விதித்த ரூ.10.58 கோடி அபராதத்தை வசூலிக்க தடை விதித்தது சென்னை உயர்நீதிமன்றம்..!! ஒடுக்கப்பட்ட மக்களின் அடிமை விலங்கை ஒடிக்க புரட்சி செய்த புத்துலக புத்தர் அம்பேத்கர்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ம.நீ.ம. தலைவர் கமல்ஹாசன் புகழாரம்..!! தமிழகத்திற்கு ஆளுநர் தேவையில்லை; வாக்குக்காக அம்பேத்கர் புகழ்பாடும் பாஜக: சீமான் பேட்டி சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் நடுவே இருந்த இந்திரா காந்தி சிலை அகற்றிய காங்கிரசார்: கடும் போக்குவரத்து நெரிசல்..! சட்ட மாமேதை அம்பேத்கரின் 66வது நினைவுநாள்!: நாடாளுமன்ற வளாகத்தில் அவரது திருவுருவ படத்துக்கு அஞ்சலி செலுத்திய ஜனாதிபதி முர்மு, பிரதமர் மோடி..!! வங்கக்கடலில் நாளை உருவாகிறது புதிய புயல்: 6 மாவட்டங்களுக்கு தேசிய பேரிடர் மீட்புக் குழு விரைவு..! சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் அம்பேத்கர் சிலையை திறந்து வைத்தார் ஆளுநர் ஆர்.என். ரவி மீண்டும் சரிய தொடங்கும் நகை விலை!: சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.280 குறைந்து ரூ.40,080க்கு விற்பனை..இல்லத்தரசிகள் நிம்மதி..!!
நீர் பாசன குழாய், கிணறு, பம்புசெட் மற்றும் நீர் தேக்க தொட்டி அமைத்திட மானியம்நீர் பாசன குழாய், கிணறு, பம்புசெட் மற்றும் நீர் தேக்க தொட்டி அமைத்திட மானியம் தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் சரவணன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு. ஒட்டப்பிடாரம் வட்டாரத்தில் நடப்பு ஆண்டில் செயல்படுத்தப்படவுள்ள பிரதம மந்திரி நுண்ணீர் பாசன திட்டத்தின் உப திட்டமான துணை நிலை நீர் பாசன மேலாண்மை திட்டத்தில் நிலத்தடி READ MOREREAD MORE கீரை,காய்கறிகள் சாகுபடி சிறப்பு பயிற்சி !கீரை,காய்கறிகள் சாகுபடி சிறப்பு பயிற்சி ! கீரை, காய்கறிகள் சாகுபடி சிறப்பு களப்பயிற்சி ! சேலம் மாவட்டம், தலைவாசலில் மாதந்தோறும் இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் பவிதமான பயிற்சிகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் வருகின்ற ஜனவரி 3-ம் தேதி முதல் 3 நாட்களுக்கு கீரை, காய்கறி சாகுபடி READ MOREREAD MORE நீர்ப்பாசனத்தின் தேவைநீர்ப்பாசனத்தின் தேவை நிலையில்லாத பருவமழை இந்தியாவில் 80 சதவிகிததம் பருவ காலங்களில் பொழிகிறது. ஆனால் பருவ மழை நிலையில்லாததாக உள்ளது. எனவே பயிர்களின் வளர்ச்சிக்கு நீர்ப்பாசனம் இன்றியமையாததாகும். மழை தொடர்ச்சியின்மை மழை தொடர்ச்சியின்மை காரணமாக பயிர்களுக்கு இடைப்பாசனம் தேவைப்படுகிறது. அதிக மகசூல் தரும் பயிர்களுக்கு
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில நிர்வாகிகள் கூட்டம் மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் இன்று காலை மாநில தலைமை அலுவலகத்தில் நடந்தது. இந்த கூட்டத்திற்கு மாநில பொதுச்செயலாளர் திருவண்ணாமலை தினேஷ், மாநில சட்டஆலோசகர் வழக்குரைஞர் முத்துகிருஷ்ணன், மாநில துணைபொதுச்செயலாளர் தஞ்சை தங்கமுத்து, மாநில துணைத்தலைவர்கள் சந்திரசேகர், அன்பழகன், மேகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்திற்கு முன்னதாக தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க செய்திதொடர்பாளர் பிரேம்குமார் வரவேற்புரையாற்றினார். கீழ்கண்ட தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. விவசாய விளைபொருள்களுக்கு இரண்டு மடங்கு லாபகரமான விலை தர கோரியும், கோதாவரி – காவிரியை இணைப்பதாக உறுதிமொழி கொடுத்தார். அந்த உறுதிமொழியை இன்றுவரை நிறைவேற்றாததை கண்டித்தும், கோதாவரி – காவிரி இணைப்பை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி மார்ச் மாதம் டெல்லி சென்று போராடுவது என்றும், கர்நாடகா காவிரியில் திறந்துவடும் வெள்ள நீரை வீணாக கடலில் கலப்பதை தடுக்க தமிழக அரசு காவிரி கொள்ளிடத்தில் 50 இடங்களில் தடுப்பணைகள் கட்டியும், காவிரி – அய்யாறு இணைப்பு திட்டத்தையும் செயல்படுத்த வேண்டும் என்றும், கிராமப்புறங்களில் ஆறு மாதங்களுக்கு விவசாய வேலை கிடைக்காததால் 100 நாள் வேலைத் திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. ஆனால் தற்பொழுது 100 நாள் வேலைத்திட்டத்தை வருடம் முழுவதும் கொடுப்பதால் விவசாய வேலைகளுக்கு ஆள் கிடைக்கவில்லை. ஒன்று 100 நாள் வேலையை ஆறு மாதம் கொடுத்து, ஆறு மாதம் நிறுத்தி வையுங்கள். இரண்டு 100 நாள் வேலையாட்களை விவசாயப் பணிகளுக்கு அனுப்பினால் அவர்கள் சம்பளம் ரூ.273-ல் பாதி பணத்தை விவசாயிகள் கொடுத்து விவசாயிகள் வேலை வாங்கிக் கொள்கிறோம். இதனை மத்திய அரசு உடனடியாக செய்ய வேண்டும், இல்லையெனில் டெல்லி சென்று போராடுவது என்றும், ஒவ்வொரு DPC-யிலும் ஒவ்வொரு நாளும் குறைந்தது 3,000 மூட்டைகள் நெல் கொள்முதல் செய்ய வேண்டும். அதற்குரிய கூலியை அரசே வழங்க வேண்டும். விவசாயிகளிடம் நெல் பிடிக்கும் மூட்டைக்கு லஞ்சம் வாங்க கூடாது. நெல்லை மழையில் இருந்து காப்பாற்ற ஒரு ஒவ்வொரு DPC-க்கும் சேமிப்புக் கிடங்கு கட்ட வேண்டும் என்று தமிழக அரசை கேட்டுக் கொள்வது என்று ஏகமனதாக முடிவு செய்யப்பட்டது. கம்பெனிகளும், தனியார் முதலாளிகளும் மின் இணைப்பு கேட்டால் ஒரு மாதத்தில் வழங்குவது போல விவசாயிகளுக்கும் மின்னிணைப்பு ஒரு மாதத்தில் வழங்க வேண்டும் என்று ஏகமனதாக முடிவு செய்யப்பட்டது. 100 ஆண்டுகள் இல்லாத மழை பெய்ததால் நிறைய பயிர்கள் அழிந்துவிட்டது. மீதி உள்ள பயிர்களில் இருந்து கூட பாதி மகசூல் கிடைக்க வாய்ப்பில்லை. எனவே ஒரு ஏக்கருக்கு எல்லா பயிர்களுக்கும் ரூ.30,000 நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று ஏகமனதாக முடிவு செய்யப்பட்டது. தனியார் இன்சூரன்ஸ் கம்பெனிகள் விவசாயிகளை ஏமாற்றுவதால் மத்திய மாநில அரசுகளே இன்சூரன்சிற்கு விவசாயிகளிடம் இருந்து பெற்றுக் கொண்டு இன்சூரன்ஸ் தொகையை வழங்க வேண்டும் என்றும், இன்றளவும் இன்சூரன்ஸ் தொகை விவசாயிகளுக்கு வழங்காமல் இருக்கின்ற தனியார் இன்சூரன்ஸ் கம்பெனிகள் மீது நடவடிக்கை எடுத்து பாக்கி இன்சூரன்ஸ் தொகையை மத்திய அரசு வாங்கி விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் என்று ஏகமனதாக முடிவு செய்யப்பட்டது. கடுமையான மழையினாலும், கோமாரி நோயினாலும் உயிரிழந்து பிரேதப் பரிசோதனை செய்யப்படாத ஆடு,மாடு, கோழிகளுக்கும் இழப்பீடு தொகையை அரசு வழங்க வேண்டும் என்று ஏகமனதாக இந்த கூட்டத்தில் தீர்மானங்களாக முடிவு செய்யப்பட்டது. தமிழகத்தில் இருந்த பல்வேறு மாவட்டங்களிலிருந்து விவசாயம் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
கொல்லிமலைக்கு சுற்றுலா செல்பவர்கள் ஆகாயகங்கையை தவிர்க்கவே கூடாதென்பது என் எண்ணம். ஆனால் அனைவரும் அணுகத்தக்க வகையில் இருக்கிறதா ஆகாய கங்கை என்றால் வருத்தத்துடன் இல்லை என்றுதான் சொல்ல வேண்டியிருக்கிறது. கொல்லியின் மைய சிற்றூரான செம்மேட்டிலிருந்து 12 கி.மீ தொலைவில், மலைகளுக்கிடையே உள்ள ஓர் பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி. மலையிலிருந்து ஆயிரத்தி சொச்சம் படிக்கட்டுகள் இறங்கியபிறகே அருவியைக் காண முடியும். ஆயிரம் படிக்கட்டுகள் என்பதால் உடல் / மன உறுதி குறைபாடு கொண்டவர்களுக்கு உகந்ததல்ல. நீர்வீழ்ச்சியை சென்றடைய ரோப்-கார் சேவை வேண்டுமென்பது சுற்றுலா பயணிகளின் நீண்டகால விருப்பம். எனினும் அதன் நடைமுறை சாத்தியம் குறைவே என்று தோன்றுகிறது. நீர்வீழ்ச்சிக்கு இறங்கும் இடத்தில் முடவாட்டு கால் கிழங்கு சூப் கிடைக்கிறது. ‘முடவாட்டு கால்’ என்பது கொல்லியில் விளையும் ஒரு கிழங்கு வகை. பார்ப்பதற்கு ஆட்டின் கால்களைப் போல இருப்பதால் இப்பெயர் பெற்றது. இது மூட்டு வலிக்கு உகந்தது என்று கூறப்படுகிறது. எனவே, படிக்கட்டுகளில் இறங்குவதற்கு முன்போ அல்லது ஏறிய பிறகோ சூப் குடிப்பது நல்ல பலனை தரக்கூடும். ஒரு காலத்தில் நீர்வீழ்ச்சிக்கு இறங்கிச்செல்ல சீரான படிக்கட்டுகள் எல்லாம் இருந்ததில்லை என்று கேள்விப்பட்டிருக்கிறேன். இப்போது அப்படியில்லை முறையான படிக்கட்டுகள், பிடிப்புக்கு இரும்புக்கம்பிகள், ஆங்காங்கே இளைப்பாறுவதற்கு தோதான இடங்கள் என போதிய வசதிகள் உள்ளன. பேரலில் இலவசக் குடிநீர் கூட வைத்திருக்கிறார்கள். ஆனால் இதனை அவ்வப்போது நிரப்புவதற்காக நியமிக்கப்பட்டுள்ள பணியாளர்கள் இறங்கியேற சிரமப்படுவதால் நூறு படிக்கட்டு தொலைவிலேயே குடிநீரை வைத்துவிடுகின்றனர். எனவே கட்டாயமாக குடிநீரும், தேவைப்பட்டால் க்ளுக்கோஸ் மற்றும் முதலுதவி பொருட்களையும் கொண்டு செல்வது நல்லது. படிக்கட்டுகள் இறங்க இறங்க அருவியின் சிணுங்கல் கேட்கத் துவங்குகிறது. இதுவே நம் உடல் களைப்பை மறக்கடித்து அருவியின் மடிக்கு அழைத்துச் செல்கிறது. ஆயிரத்தில் ஒருவன் சினிமாவில் (2010) பல தடைகளை கடந்து சோழ நகரத்தை கண்டடையும் குழுவினர் பரவசமடைவார்கள், மரியான் இறுதிக்காட்சியில் கடலைக் கண்டதும் பெரும் நிம்மதியடைவார் தனுஷ். ஆகாயகங்கை நீர்வீழ்ச்சியை காணும் அந்த நொடியில் இவ்விரு உணர்வுகளும் நமக்கு ஒருங்கே கிடைக்கிறது. சுமார் நூற்றியைம்பது அடி உயரத்திலிருந்து (அவ்வளவாக) பாறைகளின் இடையூறு ஏதுமின்றி நேரடியாக பாய்கிறது அருவி ! ஏற்கனவே ஐந்தாண்டுகளுக்கு முன்பு அக்டோபர் மாதத்தில் ஆகாய கங்கைக்கு வந்திருக்கிறேன். அப்போது என்னால் அருவிக்கு அருகே கூட செல்ல முடியவில்லை. சுமார் நாற்பதடி தூரத்திலேயே அருவியின் சாரலும் கடுங்குளிரும் இணைந்து என்னை தடுத்து நிறுத்தியது. இப்போது அப்படியில்லை. அருவியின் சீற்றம் குறைந்துவிட்டதா அல்லது பருவ வேறுபாடா என்று தெரியவில்லை. இம்முறை நேரடியாக அருவியிலேயே தலைகாட்ட முடிந்தது, கொஞ்சம் சிரமப்பட்டு தான். காயமேற்படாமல் கற்களால் அடிப்பது போல பொத பொதவென்று ஊற்றுகிறது அருவி. கொல்லியில் உள்ள பல்வேறு மூலிகைகளை கடந்துவந்து பாய்வதால் அருவிக்கு மருத்துவ குணங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. சுமார் அரைமணிநேரம் அருவியோடு உறவாடிவிட்டு திரும்பினோம். படியேறும்போது தான் எவ்வளவு பெரிய சிக்கலில் மாட்டியிருக்கிறோம் என்பதே புரிகிறது. நானாவது பரவாயில்லை. அவ்வப்போது கொஞ்சம் ஓய்வெடுத்துவிட்டு ஏறினேன். சகாக்களில் ஒருவர் அவருக்கு ஏதாவது நேர்ந்துவிட்டால் அவருடைய மோஜோவிற்கு நான் வாழ்க்கை தர வேண்டுமென சொல்லிவிட்டு படுத்துக்கொண்டார். இதே போல பல நடுத்தர வயதுக்காரர்களும் ‘உஸ்ஸு, அஸ்ஸு’ என்று புலம்பிக்கொண்டு சரிவதைக் காண முடிந்தது. அதே சமயம் வயதான சிலர் கூட தெம்பாக படியேறுவதையும் காண வியப்பாக இருந்தது. நண்பரின் ஐபோனில் எடுக்கப்பட்ட ஸ்லோமோஷன் வீடியோ. கீழே லுங்கியை அட்ஜஸ்ட் செய்பவரை பொறுத்துக்கொள்ளவும் :) ஆயிரம் படிக்கட்டுகள் இறங்கி ஏறுவது சிரமம் தான். ஆனால் ஆகாய கங்கை தரும் அனுபவம் அந்த சிரமத்தை தாராளமாக ஈடு செய்துவிடுகிறது. ஆகாய கங்கை தவிர்த்து கொல்லியிலேயே வேறு சில அருவிகளும் உண்டு என்று கேள்விப்பட்டோம். அதற்கு முன் கொல்லியில் உள்ள சில கோவில்களைப் பற்றி அடுத்த கட்டுரையில் பார்க்கலாம்... அடுத்த இடுகை: அறப்பளீஸ்வரரும் கொல்லிப்பாவையும் என்றும் அன்புடன், N.R.PRABHAKARAN Post Comment உதிர்த்தவன் Philosophy Prabhakaran உதிர்த்த நேரம் 09:24:00 வயாகரா... ச்சே... வகையறா: agaya, agayagangai, gangai, height, hills, kolli, kollimalai, photos, steps, video, waterfalls, பயணம்
வியாழனன்று தென்னாப்பிரிக்காவில் உள்ள விஞ்ஞானிகள் கூறுவது “அதிக எண்ணிக்கையிலான பிறழ்வுகளுடன் ஒரு புதிய கோவிட்-19 மாறுபாட்டைக் கண்டறிந்துள்ளோம் இது தொற்று எண்ணிக்கையில் அதிகரிப்புக்கு குற்றம் சாட்டுகிறது. கடுமையாக பாதிக்கப்பட்ட ஆப்பிரிக்காவின் நாட்டில் தினசரி நோய்தொற்றின் எண்ணிக்கை மாத தொடக்கத்திலிருந்து 10 மடங்கு அதிகரித்துள்ளது. துரதிஷ்டவசமாக ஒரு புதிய பாடு பாட்டை நாங்கள் தென்னாப்பிரிக்காவில் கண்டறிந்துள்ளோம். இது தென்னாப்பிரிக்காவின் மக்களிடையே கவலையை ஏற்படுத்துகிறது”என்று வைராலஜிஸ்ட் துலியோ டி ஒலிவேரா மாநாட்டில் அவசரமாக அழைக்கப்பட்ட செய்தியைக் கூறினார். மேலும் பி.1.1.529 என்ற விஞ்ஞான வரிசை எண் மூலம் செல்லும் இந்த மாறுபாடு மிக அதிக எண்ணிக்கையிலான பிறழ்வுகளைக் கொண்டுள்ளது. வெள்ளிக்கிழமை அன்று உலக சுகாதார அமைப்பு கிரேக்கப் பெயரைக் கொடுக்கும். துரதிஷ்டவசமாக இது தொற்று நோய்களின் மறுபிறப்பை ஏற்படுத்துகிறது. போட்ஸ்வானா மற்றும் ஹாங்காங்கில் தென்னாப்பிரிக்காவில் இருந்து வரும் பயணிகளிடையே இந்த மாறுபாடு கண்டறியப்பட்டுள்ளது. டபிள்யூஹச்ஓ(WHO) அறிக்கையிட்ட மாறுபாட்டை உறுதியாக கண்காணிக்கப்பட்டு வறுகிறோம். ஒரு தொழில்நுட்ப கூட்டத்தை வெள்ளிக்கிழமையன்று கூட்டி அது ஆர்வம் அல்லது கவலை என்று குறிப்பிடப்பட வேண்டுமா? என்ற தீர்மானம் எதிர்பார்க்கப்படுகிறது. ஆரம்ப பகுப்பாய்வு காட்டுவது, அதிக எண்ணிக்கையிலான பிறழ்வுகளை இந்த மாறுபாடு கொண்டுள்ளது அவை மேலும் ஆய்வுகளுக்கு உட்படுத்தப்படும் என்று டபிள்யூஹச்ஓ(WHO) கூறியது. Categories Entertainment News Tags Corona Virus, Covid-19, South Africa, South Africa has discovered a new corona virus variant with several mutations, பல பிறழ்வுகளுடன் புதிய கொரோனா வைரஸ் மாறுபாட்டைக் கண்டறிந்துள்ளது தென்னாப்பிரிக்கா வாட்ஸ்அப்பில் மெசேஜ்களுக்கு இமோஜி மூலம் ரியாக்ட்..? ஒரே மாதத்தில் தட்டையான வயிர் வரவேண்டுமா..? Recent Posts Why is Crypto the biggest solution For our problems? United States Dollar மதிப்பு என்ன ? புஷ்பா தி ரூல் நாளை பூஜை விழாவுடன் தொடங்குகிறது:- படத்தின் இணை தயாரிப்பாளராக ரெட் ஜெயண்ட் மூவிஸ் கைகோர்த்து வரும் நிலையில், துருவ நட்சத்திரம் விரைவில் வெளிவரவுள்ளது.
முன்னாள் பிரதமர் பொறிஸ் ஜோன்சன் எதிர்பார்ப்புகளுக்கு மாறாக கட்சித் தலைமைக்கான போட்டியில் இருந்து விலகியிருக்கிறார். மீண்டும் பிரதமர் பதவிக்கு வர வேண்டும் என்று நாட்டு மக்கள் விருப்பம் கொண்டுள்ள போதிலும் கட்சிக்குள் ஒற்றுமை இல்லாத நிலையில் அதனைச் சரியான ஒரு தெரிவாகக் கருதவில்லை என்று அவர் நேற்றிரவு விடுத்த அறிக்கை ஒன்றில் தெரிவித்திருக்கிறார். பிரதமர் லிஸ் ட்ரஸ் பதவி விலகியதை அடுத்து வெற்றிடமாகிய பிரதமர் மற்றும் பழைமைவாதக் கட்சியின் தலைவர் ஆகிய பதவிகளுக்கு இந்த வாரம் தேர்தல் நடைபெறவிருப்பது தெரிந்ததே. இந்த நிலையில் விடுமுறையை இடையில் முடித்துக் கொண்டு அவசரமாக லண்டன் திரும்பியிருந்த ஜோன்சன் மீண்டும் தலைமைப் பதவிக்குப் போட்டியிட ஆயத்தமாகினார். ஆனால் அவருக்குக் கட்சியின் 56 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே ஆதரவைத் தெரிவித்திருந்தனர்.எனினும் நூற்றுக்கு மேற்பட்டோரின் ஆதரவு இருப்பதாக அவரது கட்சி ஆதரவாளர்கள் கூறியிருந்தனர். போட்டிக்கான வேட்பாளர்களாகத் தம்மை அறிவித்தள்ள முன்னாள் அமைச்சர்கள் ரிஷி சுனாக் மற்றும் பென்னி மோர்டான்ட் ஆகியோருடன் போட்டித் தவிர்ப்புக்கான இணக்கப் பேச்சுக்களில் ஜோன்சன் ஈட்பட்டார் என்று சனிக்கிழமை தகவல் வெளியாகி இருந்தது. போட்டியில் இணைந்து கொள்வதற்கு குறைந்தது நூறு உறுப்பினர்களது ஆதரவை உறுதிப்படுத்த வேண்டிய கால அவகாசம் இன்று திங்கட்கிழமை நண்பகல் முடிவடைய உள்ளது. இந்த நிலையிலேயே போட்டியிலிருந்து விலகும் முடிவை ஜோன்சன் அறிவித்திருக்கிறார். ஜோன்சன் போட்டியிடாமல் தவிர்த்திருப்பது அவரோடு மோத ஆயத்தமாகியிருந்த ரிஷி சுனாகின் வெற்றிக்கான வாய்ப்புக்களைப் பிரகாசமாக்கியிருக்கிறது. அவருக்கு 142 உறுப்பினர்களது ஆதரவு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மூன்றாவது போட்டியாளராகக் களம் புகுந்த பென்னி மோர்டான்ட் அம்மையாருக்கு நூறுக்கும் குறைந்த எம்பிக்கள் மட்டுமே ஆதரவு தெரிவித்திருப்பதால் ரிஷி சுனாக் போட்டி ஏதும் இன்றிக் கட்சித் தலைவராகவும் நாட்டின் பிரதமராகவும் தெரிவாகும் நல்வாய்ப்பு உருவாகியுள்ளது. அடுத்த பிரதமராக அவரது பெயர் இன்று அறிவிக்கப்படலாம்.
கொழும்பில் தமிழர்களை குறிவைத்து இன்னமும் ஆங்காங்கே பொலிஸ் பதிவு நடைமுறை மேற்கொள்ளப்படுவது தொடர்பில், தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசனுக்கும், பொதுமக்கள் பாதுகாப்பு பொலிஸ் துறை அமைச்சர் டிரன் அலசுக்கும் இடையில் சபையில் பலத்த வாக்குவாதம் ஏற்பட்டது. அதன்போது, “..எனது மக்கள் என்னிடம் புகார் செய்கிறார்கள். அவர்கள் என்னிடம்தான் கூறுவார்கள். நான்தான் அவர்களின் பிரதிநிதி. எனது மக்கள் என்னை பாராளுமன்றம் அனுப்பியது, தேங்காய் துருவ அல்ல! பம்பு அடிக்கவும் இல்லை! (பொல் கஹன்ன நெவெய்! பம்பு கஹன்னத் நெவெய்!) என்பதை புரிந்து கொள்ளுங்கள்.." என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் உரத்த குரலில் தெரிவித்தார். ஜனாதிபதி, பிரதமர் அலுவலகங்கள், பொலிஸ் ஆணைக்குழு உட்பட்ட சுயாதீன ஆணைக்குழுக்கள் பற்றிய வரவு- செலவு திட்ட விவாதத்தின் போது மேலும் உரையாற்றிய மனோ கணேசன் எம்பி கூறியதாவது, கொழும்பு நகரில் வீடு வீடாக சென்று, போலீசார் தனிப்பட்ட விபரங்களை பதிவு செய்கிறார்கள். இதுபற்றி ஜனாதிபதிக்கு கூறியுள்ளேன். துறைசார் அமைச்சர் உங்களுக்கு கூறியுள்ளேன். பொலிஸ் மாஅதிபருக்கு கூறியுள்ளேன். பொலிஸ் ஆணைக்குழு தலைவருக்கு கூறியுள்ளேன். அவர் இன்று இருக்கிறாரோ தெரியவில்லை அல்லது யாரையாவது வரவேற்க விமான நிலையத்துக்கு சென்று விட்டாரோ தெரியவில்லை. கீழ்மட்ட பொலிஸ் பொறுப்பதிகாரிகளிடம் கேட்டால், “மேலிடம் கூறிதான் செய்கிறோம் சார்”, என்று அவர்கள் எனக்கு கூறுகிறார்கள். யார் அந்த மேலிடம்? யுத்த காலத்தில் ஏதோ ஒரு நியாயம் இருந்தது. இன்று சமாதான காலம். இயல்புநிலை காலம் . இன்று யுத்தம் இல்லை. பயங்கரவாதம் இல்லை. அரச பயங்கரவாதம் இல்லை. ஆகவே எதற்காக வீடு வீடாக போகிறீர்கள்? கதவு கதவாக போகிறீர்கள்? கிரிமினல்கள் எங்கேயும் உள்ளார்கள். இங்கே இந்த பாராளுமன்றத்தில் இல்லையா? கொலை குற்றம் சாட்டப்பட்டவர்கள், கொள்ளை குற்றம் சாட்டப்பட்டவர்கள், வழக்கு உள்ளவர்கள் இங்கே இல்லையா? இருக்கிறார்கள். அதுபோல் பொலிசிலும் உள்ளார்கள். பொலிசுக்கு தரும் தகவல்கள் கிரிமினல்கள், பாதாள உலகத்தினர் கைகளுக்கு போயுள்ளன. கடந்த காலங்களில் இப்படி பல சம்பவங்கள் நடந்துள்ளன. ஆகவே அது வேண்டாம். எனது மாவட்ட மக்களின் தனிப்பட்ட தகவல்களை வீடு வீடாக சென்று சேகரிக்கும் நடவடிக்கைக்கு இடம் தர எனக்கு முடியாது. எனது மக்கள் என்னிடம் புகார் செய்கிறார்கள். அவர்கள் என்னிடம்தான் கூறுவார்கள். நான்தான் அவர்களின் பிரதிநிதி. எனது மக்கள் என்னை பாராளுமன்றம் அனுப்பியது, தேங்காய் திருவ அல்ல! பம்பு அடிக்கவும் இல்லை! (பொல் கஹன்ன நெவெய்! பம்பு கஹன்னத் நெவெய்!) என்பதை புரிந்து கொள்ளுங்கள் குற்றம் செய்தவர்கள் இருப்பார்களானால், அவர்களை விசாரியுங்கள். கைது செய்யுங்கள். அதில் பிரச்சினை இல்லை. நான் சட்டத்தை மதிக்கும் எம்பி. சட்டத்தின் ஆட்சியை விரும்பும் மனிதன். இங்கே, வீடு வீடாக பொதுவாக போக வேண்டாம் என்பதைதான் நான் கூறுகிறேன். இங்கே குறிப்பாக கொழும்பில் தமிழர்களை குறிவைத்து இவை நடைபெறுகின்றன. இதை நான் பொறுப்புடன் கூறுகிறேன். (இவ்விடத்தில் இடைமறித்த அமைச்சர் டிரான் அலஸ்) எம்பி அவர்களே, இது எப்போதும் நடக்கும் ஒரு கைங்கரியம். வெளியூரில் இருந்து ஒருவர் கொழும்புக்கு வருவார் என்றால் அது அறிய போலிஸ் தகவல் சேகரிக்கிறார்கள். இது இங்கே மட்டுமல்ல, நாடு முழுக்க நடக்கிறது. தமிழர்களை மட்டுமல்ல, சிங்கள, தமிழ், முஸ்லிம் என்ற எல்லோர் வீடுகளுக்கும் பொலிஸ் போகிறது. (மனோ கணேசன் எம்பி) இல்லை, இல்லை. தமிழர்களையே இது அதிகம் குறி வைக்கிறது. சும்மா இங்கே வந்து கூறுவதற்கு எனக்கு என்ன பைத்தியமா? நீங்கள் சொல்வது போல், இது நாடு முழுக்க நடக்கவில்லை. சும்மா சொல்ல வேண்டாம். இங்கே உள்ள ஏனைய 225 எம்பிகளிடம் கேட்டு பாருங்கள். நாடு முழுக்க இது நடக்கவில்லை. கொழும்பில் நடக்கிறது. இது நியாயப்படுத்த முயல வேண்டாம். உண்மையில் இங்கே மக்கள் மட்டத்தில் என்ன நடக்கிறது என உங்களுக்கு தெரியவில்லை. ஆனால், எனக்கு தெரிகிறது. ஏனெனில் நான் மக்கள் மட்டத்தில், மத்தியில் இருப்பவன். இதை நீங்கள் நியாயப்படுத்த முயல வேண்டாம். சரி, “செக்” செய்து பார்ப்பதாக, பரிசோதனை செய்து பார்ப்பதாக இப்போது கூறுகிறீர்கள். ஒலிவாங்கியை அணைத்து விட்டு கூறுகிறீர்கள். பாருங்கள். குற்றவாளியை தேடி சென்று கைது செய்யுங்கள். விசாரியுங்கள். ஆனால், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் வீடு வீடாக பொதுவாக போவதற்கு இடம் கொடுக்க முடியாது. SHARE THIS Share it Tweet Share it Share it Pin it Related Posts செய்திகள் Post a Comment No comments Subscribe to: Post Comments ( Atom ) டிப்ளோமா பாடநெறி - 6 மாத இணையவழி ஆங்கில வகுப்பு Facebook Random Posts Popular Posts முட்டாள்தனத்தைப் பரப்பும் முஸ்லிம்களை நினைத்து வெட்கப்படுகிறேன் - சிங்கள நடிகை காத்தான்குடியிலுள்ள முஸ்லிம்கள் சிலர் எனது காணொளிகளால் வருத்தம் அடைந்திருப்பதால் இதனை எழுதுகிறேன். இது எமது இலங்கை, சவூதி அரேபியா அல்ல, எனவே... தர்ஜினி சிவலிங்கம் நாடு திரும்பாதது ஏன்..? கடந்த வாரம் இடம்பெற்ற 2022ஆம் ஆண்டுக்கான ஆசியக்கிண்ண வலைப்பந்தாட்ட தொடரில் இலங்கை மகளிர் அணி வெற்றி பெற்று இலங்கைக்கு பெருமை சேர்த்தது. அன்ற... கத்தாரின் அறிவிப்பை அடுத்து படையெடுக்கும் இலங்கையர்கள் - கொழும்பில் நீண்ட வரிசையில் காத்திருப்பு (வீடியோ) கத்தார் ஏர்வேஸ் (Qatar Airways) இலங்கையர்களுக்காக பல்வேறு வெற்றிடங்களுக்கான நேர்முகத் தேர்வுகளை 2 ஆவது நாளாக நடத்தியதால் கொழும்பு தாஜ் சமுத... டுபாயில் திட்டம் - பணத்திற்காக விகாராதிபதியை கொன்ற இளம்பிக்குவும், அவரது காதலியின் பெற்றோர்களும் சீதுவை – வேத்தேவ பகுதியிலுள்ள விகாரையின் விகாராதிபதி கொல்லப்பட்ட சம்பவம் சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அ... இலங்கை கிரிக்கெட் அணி, ஆசியக் கிண்ணத்தை கைப்பற்ற நாமலே காரணம் இலங்கை கிரிக்கெட் அணியின் ஆசியக் கிண்ண வெற்றியின் பின்னணியில் முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச இருப்பதாக பொதுஜன முன்னணியின் ... Sponsor Categories - =சர்வதேசம் www.jaffnamuslim.com அறிவித்தல் ஆரோக்கியம் இஸ்லாம் உதவி கட்டுரை சர்வதேசம் செய்திகள செய்திகள் நேர்காணல் புகைப்படங்கள் முஸாபகத்து ரமழான் வினோதம் வீடியோ Blog Archive Blog Archive November 2022 (496) October 2022 (615) September 2022 (425) August 2022 (517) July 2022 (628) June 2022 (608) May 2022 (675) April 2022 (140) February 2022 (2) December 2021 (1) October 2021 (2) July 2021 (2) June 2021 (1) March 2021 (3) February 2021 (10) January 2021 (3) December 2020 (3) November 2020 (10) October 2020 (1) September 2020 (1) August 2020 (25) July 2020 (1) June 2020 (2) May 2020 (3) April 2020 (8) March 2020 (13) August 2015 (1)
வருகைக்கு நன்றி! ஒவ்வொரு பாடலுக்கான விளக்கவுரை மற்றும் மொழிப்பெயர்ப்பை காண/மேம்படுத்த பாடலின் மேல் அழுத்தவும். சித்திரம் பேசேல். Sithiram Pesael பொய்யான வார்தைகளை மெய் போல் பேசாதே Never say lie as truth © 2022 | கணையாழி ஆத்தி்சூடி முன்பு ஓலைச்சுவடிகளில் வாழ்ந்த போதிலும், பின்பு காகிதத்தில் வளர்ந்த போதிலும், அதற்கு முகவுரை தேவைப்படவில்லை. ஆனால், இன்று கணினிக்குள் காலடி பதிக்கும் போது மட்டும், அதற்கு ஒரு முகவுரை தேவைப்படுகிறது. ஏனெனில், சற்றுமுன் வரை, நம் மழலைகளுக்கு அம்புலி காட்டி அமுது ஊட்டும்போதே, ஆத்திச்சூடியால் அறிவும் ஊட்டப்பட்டது. ஆனால், இன்றோ, மழலைகளின் மடியில் கணினி - அதில் காட்டப்படுகிறது அம்புலி. கூரைமேல் உலாவரும் நிலா - அதைப் பாராமல், Google'ல் தேடும் காலம் இதுவல்லவா! நிலவிற்கே தற்போது இணையத்தில் ஒரு முகவரி தேவைப்படுவதால் - இதோ, ஆத்தி்சூடிக்கு எழுதப்படுகிறது ஒரு முகவுரை. ஔவையார் ஒருவரல்ல பலரென்றும், அவர்களில் யாரால் எப்பொழுது ஆத்தி்சூடி எழுதப்பட்டது என்பது இன்றளவும் விவாதத்திற்கு உரியதாகும். பெரும்பாலும் நம்பப்படுகிற கூற்று, பன்னிரண்டாம் நூற்றாண்டில் சோழர் காலத்தில் வாழ்ந்த ஒளவையாரால் எழுதப்பட்டது என்பதே. இன்றும் அதன் சிறப்பு குன்றாமைக்கு காரணம் - அதன்மூலம் செய்யத்தகுந்தவைகளும் செய்யத்தகாதவைகளும் (DO’s & DON’Ts) மிகவும் எளிய முறையில் ஒற்றை வரிகளில் உணர்த்தப்படுகிறது. 'தொட்டில் பழக்கம் - சுடுகாடு மட்டும்' என்பதை நன்குணர்ந்தவர் நம் ஒளவைப் பாட்டி. எனவேதான், நமக்கு குழந்தைப் பருவத்திலேயே நல்லன - தீயனவற்றை உணர்த்தி நல்ல பழக்க வழக்கங்களை நம் வாழ்வில் புகுத்திட அவரால் எழுதப்பட்ட சுவடி - ஆத்தி்சூடி. இந்நூலுக்கு மற்றொரு சிறப்பம்சமும் உண்டு. பொதுவாக, மற்ற மொழிகளை கற்பிக்கும்போது, அதன் எழுத்துக்களை மனதில் பதிய வைக்க ஏதேனும் பொருட்களோடு ஒப்பிடுவர் (A for Apple). ஆனால், ஆத்திச்சூடி மூலம் தமிழ் எழுத்துக்களை கற்பதினால், எழுத்துக்கள் மட்டுமல்ல, நல்ல எண்ணங்களையும் மழலைகள் மனதில் பதிய வைக்க இயல்கிறது. இன்று, இது இணையத்தில் இணைக்கப்படுவதன் நோக்கமும், இது உங்கள் வீட்டுக் குழந்தைகளின் மனதில் சென்றடைய வேண்டும் என்பதுதான். ஒளவையாரின் வரிகள், அவர்கள் வாழ்வில் நல்லன பயக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு மிகவும் உண்டு. நீங்களும் அதே நம்பிக்கையுடன் உங்கள் வீட்டுக் குழந்தைகளுக்கு ஆத்தி்சூடி மூலம் எளிய வழியில் தமிழும் நற்பண்புகளும் கற்றுத் தருவீர்களாக. 'அறம் செய விரும்பு' என்ற ஆத்தி்சூடியின் முதல் வரியை தன் முகவரியாகக் கொண்ட நம் இணைய தளம், ஆத்தி்சூடியையே அடித்தளமாகக் கொண்டு உலகம் முழுதுமுள்ள தமிழ் ஆர்வலர்களை இணைக்கும் இன்னொரு கருவியாகத் திகழும் என்பதில் எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியே. இதற்கு பெரிதும் உறுதுணையாக விளங்குவது இந்த இணைய தளத்தின் வடிவமைப்பேயாகும். இந்த இணைய தளத்தின் வடிவமைப்பை தமிழ் ஆர்வத்துடன் தன்னார்வத்தை கலந்திட்ட ஒரு மென்பொருள் கவிதை என்றே கூறலாம். இந்த வடிவமைப்பால், வாசகர்கள் இந்த தளத்தில் வந்து வாசித்து மட்டும் செல்லாமல், அவர்களை யோசிக்கவும் செய்து, அவர்களின் சிந்தனைச் சிதறல்களை பதிவும் செய்து, பின்வரும் வாசகர்களுக்கு மென்மேலும் சிறந்த கருத்துக்களை பல கோணங்களில் படைத்திட இயல்கிறது. ஆத்தி்சூடி மற்றும் அதன் பொருள் தேடி வரும் வாசகர்கள், எவ்வித தங்கு தடையுமின்றி எளிய முறையில் இந்த இணைய தளத்தில் பயணிக்கலாம். தாம் வாசித்த பகுதியை மேலும் மெருகேற்ற எண்ணும் தமிழ் ஆர்வலர்கள், தம்மைப்பற்றி பதிவு செய்துகொண்டு, தம்மால் திருத்தப்பட்ட பகுதியையும் பதிவு செய்யலாம். இவ்வாறு திருத்தி சீரமைக்கப்பட்ட பகுதிகள் தளப் பொறுப்பாளர்களின் ஒப்புதலோடு வாசகர்களின் பங்களிப்பாக பிரசுரிக்கப்படும். மேலும், வாசகர்கள் தாம் பயணித்த பகுதியைப் பற்றிய கருத்துக்களையும் விமர்சனங்களையும் பதிவு செய்யலாம். இவ்வாறு வாசகர்களின் பங்களிப்பின்மூலம் ஆத்தி்சூடியுடன் கருத்தாழம்மிக்க விளக்கங்களையும் விவாதங்களையும் விருந்தளிப்பதே இந்த இணைய தளத்தின் தலையாய நோக்கமாகும். இந்த நோக்கம் நிறைவேற வாசகர்களாகிய தாங்கள், தங்களின் கருத்துக்களை மறவாது பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்கள் அதிகரித்துள்ள மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது. நாடு முழுவதும் குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்கள் குறித்து 522 மாவட்டங்கள் மற்றும் 100 ரயில் நிலையங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சகம் ஆய்வு நடத்தியது. நடப்பாண்டு ஆய்வறிக்கையில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்ற வழக்குகள் பதிவான மாநிலங்களில் கேரளா முதலிடத்தில் உள்ளது. அங்கு 1742 வழக்குகள் பதிவாகியுள்ளன. 985 வழக்குகளுடன் தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது. அடுத்தப்படியாக மகாராஷ்டிர மாநிலத்தில் 436 வழக்குகள் பதிவாகின. ஆசிரியர்கள் மற்றும் உறவினர்களே குழந்தைகளிடம் அதிகம் தவறாக நடந்துக் கொண்டு இருப்பதாகவும் ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது. Published by:Yuvaraj V First published: December 26, 2019, 20:17 IST உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம். Tags: Child Abuse, Crime | குற்றச் செய்திகள் Latest Story Links Trending Tag Latest Story VijayDeathChennaiVinothUSACoimbatoreMurderPuducherryCoimbatoreuttar pradeshVinothPuducherryChinaLiveVinoth
உலகம் முழுவதிலும் கேம்ப்ரிட்ஜ் IGCSE தேர்வு முறையைப் பின்பற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகள் பங்கு பெற்ற ஏறத்தாழ 2000 பள்ளிகளின் மாணவ-மாணவியர்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பதின்மருள் ஒருவராகக் கல்வியில் வாகை சூடுவது என்பது – அதிலும் “அ” தாரகை(A Star) ஆக ஜொலிப்பதென்பது – சாதாரணச் செயலன்று. இந்த அசாதாரண சாதனையை, நாகை மாவட்டம் திட்டச்சேரியைச் சேர்ந்த செல்வி சல்மா புரிந்திருக்கிறார். ஆண்டுதோறும் கேம்ப்ரிட்ஜ் பலகலைக் கழக உலகளாவியத் தேர்வுகள்(University of Cambridge International Exams – CIE)’ மையம் நடத்தும் ‘உலகளாவிய உயர்நிலைப் பள்ளிக் கல்வி(International General Certificate of Secondary Education)’யின் 2009ஆம் ஆண்டுக்கான தேர்வுகள் கடந்த அக்டோபர் 2009இல் நடைபெற்றன. அவற்றின் முடிவுகள் கடந்த பிப்ரவரி 2010இல் வெளியாகின. உலகளாவிய ஒப்பீட்டு முடிவுகள் கடந்த வாரம் வெளியாகியுள்ளன. மேற்காணும் உலகளாவிய தேர்வுக்கு, மூலாதாரப் பாடத்திட்ட (The core syllabus) முறையில் 5 கட்டாயப் பாடங்களைத் தேர்வு செய்து “இ” படிநிலை விருதை வெல்லும் எளிய வழியையே பெரும்பாலான மாணவ-மாணவியர் தேர்ந்தெடுப்பது வழக்கம். ஆனால், “அ-தாரகைப் படிநிலை விருதை வென்றெடுப்பதற்காக ஆழமான படிப்புத் தேவைப்படும் பத்துப் பாடங்கள் அடங்கிய மீநிலைத் (Advanced syllabus) திட்டத்தை எனது தேர்வாகக் கொண்டேன்” என்கிறார் சல்மா. நினைத்தபடியே சிறப்பாகத் தேர்வெழுதி பத்துப் பாடங்களில் ஒவ்வொன்றிலும் 95+% பெற்றிருப்பதால் செல்வி சல்மா, “அ” தாரகை(A Star) விருது வழங்கப் பெற்றுள்ளார். இது சர்வதேச அளவிலான சிறப்பான விருதாகும். செல்வி சல்மாவின் பிற சாதனைகள்: ஆங்கில இலக்கியத்தில் சர்வதேச அளவில் முதலிடம். உயிரியலில் சர்வதேச அளவில் மூன்றாமிடம். புவியியலில் சர்வதேச அளவில் ஒன்பதாமிடம். செல்வி சல்மா, தம் பெற்றோருடன் செசல்ஸ் தீவில் வசித்து வருகிறார். படிப்பும் அங்கேதான். ஆண்டுக்கு ஒருமுறை பள்ளி விடுப்பின்போது தம் குடும்பதினரோடு தம் தந்தை முஹம்மது ஃபாரூக்கின் ஊரான திட்டச்சேரிக்கு வந்து போவது வழக்கம். அவ்வாறு இந்த ஆண்டு விடுப்பில் திட்டச்சேரிக்கு வந்திருக்கும் வேளையில், “எழுதுவதென்றால் எனக்குக் கொள்ளை ஆசை. எனது புதினமும் (Novel) ஒருநாள் பதிவேறும்” என்று உறுதியுடன் கூறுகிறார் காமன்வெல்த் நாடுகளுக்கான கட்டுரைப் போட்டிகளில் மும்முறை பங்குபெற்ற செல்வி சல்மா.
பிரத்யும்னனுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. அவனுக்கு ஆச்சரியமாகவும் இருந்தது. அதே சமயம் தான் வஜ்ரநபுக்கு இவ்வளவு அருகே இருந்தும், கிட்டத்தட்ட அவன் பிடியில் இருந்தும் அவன் ஏன் தன்னைக் கொல்ல இவ்வளவு தயங்குகிறான் என்பதைப் பிரத்யும்னனால் புரிந்து கொள்ள முடியவில்லை. வஜ்ரநப் அவனிடம் மெல்லிய குரலில் பேசினான். “முட்டாள், முட்டாள்! நீ ஏன் இன்னமும் பார்த்துக் கொண்டு சும்மா இருக்கிறாய்? விரைவில் என்னைக் கீழே தள்ளு! முட்டாள், முட்டாள்! இன்னமும் என்னைப் பிடித்து உன் வசப்படுத்தாமல் பார்த்துக்கொண்டே நிற்கிறாயே!” என்றான். பிரத்யும்னனுக்கு வஜ்ரநபின் நோக்கம் தெளிவாகப் புரிந்தது. வஜ்ரநப் தன்னைக் கொல்வதற்கு வந்த கொலையாளியாக இல்லாமல் தன்னிடம் சிறைப்பட்டவனைப் போல் நடிக்க விரும்புகிறான். தான் தன்னுடைய திறமையாலும், வலிமையாலும் வஜ்ரநபைப் பிடித்தது போல் காட்டிக் கொள்ளச் சொல்கிறான்! பிரத்யும்னன் தயார் ஆவதற்குள்ளாக வஜ்ரநபே தன் ஒரு கையால் பிரத்யும்னனைப் பிடித்த வண்ணமும் இன்னொரு கையால் தன் வாளைக் கீழே தள்ளிய வண்ணமும் நின்றான். பிரத்யும்னனுக்கு இந்த விளையாட்டின் தன்மை முற்றிலும் பிடிபட்டது! ஆகவே வஜ்ரநபின் வாள் கீழே விழும் முன்னரே அதைத் தன் கைகளால் பிடித்து விட்டான். வாள் இல்லை என்ற சாக்கை வைத்து வஜ்ரநப் பிரத்யும்னன் தன்னைத் தள்ளியது போல் பாவனை செய்த வண்ணம் அவனும் கீழே சாய்ந்தான். பிரத்யும்னன் அவன் மார்பில் ஏறி அமர்ந்தான். அங்கே காவலுக்கும் துணைக்கும் இருந்த அடிமைகள் கூட இதைப்பார்த்து வஜ்ரநபின் துணைக்கு வராமல் அதற்கான முயற்சிகளைக் கூடச் செய்யாமல் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். வஜ்ரநப் பிரத்யும்னனைப் பார்த்துக் கெஞ்சினான். “என்னைக் கொன்று விடாதே, பிரத்யும்னா, கொன்று விடாதே!” என்றான். பிரத்யும்னன் வஜ்ரநப் சொல்வதை மேலும் தெளிவாகப் புரிந்து கொண்டு அவனுக்குத் தன் கைகளாலும் கால்களாலும் இரண்டு உதைகள் கொடுத்துவிட்டுப் பின்னர் அவனை மெல்ல எழுந்திருக்கச் சொன்னான். வஜ்ரநபும் எழுந்து கொண்டு ஒரு கயிறைப் பிரத்யும்னன் கைகளில் கொடுத்தான். அந்தக் கயிறு ஒரு பக்கம் வஜ்ரநபின் இடுப்பைச் சுற்றிக் கட்டி இருந்தது. அதன் மறுமுனையைப் பிரத்யும்னனிடம் கொடுத்துவிட்டு வஜ்ரநப், “முட்டாள், இந்தக் கயிறை வைத்து என்னை நன்றாக இறுக்கிக் கட்டு!” என்று சொல்லிக் கொடுத்தான். அப்போது அங்கே தெரிந்த இருட்டிலிருந்து ஓர் உருவம் வெளிப்பட்டது. ஓர் காட்டுவாசிப் பெண்போல் காட்சி அளித்த அந்த உருவத்தின் கைகளில் ஓர்வாள் தென்பட்டது. பிரபாவதி அதிர்ச்சி அடைந்தாள். காட்டு வாசியைப் போல் காணப்பட்ட ஓர் வயதான பெண்மணி, தலையெல்லாம் அலங்கோலமாய்க் காட்சி தர, தன் கணவன் பிரத்யும்னனைத் தன் கைகளில் எடுத்து அணைத்ததைக் கண்டு திகைத்தாள் அந்தப் பெண்மணி பிரத்யும்னனிடம், “என் கண்ணே! கவலைப்படாதே! இது நான் தான்! சரியான சமயத்துக்கு நான் உன்னிடம் வந்துவிட்டேன்!” என்றாள். வஜ்ரநப் அப்போது குறுக்கிட்டு, “கவலைப்படாதே பிரத்யும்னா! எங்கள் மன்னாதி மன்னர் புஷ்கரவர்த்தம் சென்றிருக்கிறார். அந்தப் பகுதி முழுவதும் யாதவர்களின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. எங்கள் மன்னர் மட்ரிகோவட்டாக் கோட்டையின் பாதுகாப்பை என் பொறுப்பில் விட்டுச் சென்றிருக்கிறார். நான் பொறுப்பேற்றதும் செய்ய வேண்டிய முதல் வேலை இது தான்! அது தான் உன்னைப் பிடிப்பது!” என்றவன் சத்தமாகச் சிரித்தான். பின்னர் தொடர்ந்து, “எங்கள் மன்னாதி மன்னர் தொலைதூரத்தில் எட்ட முடியாத தூரத்தில் பத்திரமாக இருக்கட்டு. நீ இங்கிருந்து தப்பிச் செல்வதற்கான வழியைப் பார்!” என்றான். அப்போது பிரத்யும்னனைத் தேடி வந்த மாயாவதியைப் பார்த்த பிரபாவதி, “இந்தப் பெண்மணி யார்?” என்று கேட்டாள். “ஓ! இவள் தான் நான் சொன்ன என் “தாய்”! இவளைக் குறித்து நான் உன்னிடம் ஏற்கெனவே சொல்லி இருக்கிறேனே!” என்றான். அவளைப் பார்த்த பிரபாவதி, “நீ யாராக இருந்தாலும் எங்களை எங்கள் விருப்பம் போல் வாழவிட்டு விட்டுச் சென்றுவிடு!” என்று கூறிய வண்ணம் அழுதாள். அதற்கு மாயாவதி, “முதலில் அழுகையை நிறுத்து பெண்ணே! நீ இங்கே தானே நின்று கொண்டிருக்கிறாய்? உன்னை வேறெங்கும் அனுப்பவில்லையே! நீ என்ன குழந்தையா?” என்று கேட்டவண்ணம் அவள் கன்னத்தில் ஓங்கி அறைந்தாள். பிரபாவதிக்கு அவள் நடத்தையைக் குறித்தும் அவளுடைய பேச்சும் சரிவரப் புரியவில்லை. அதோடு அவளுக்கு இந்த பிரத்யும்னனின் “தாய்” பற்றிய செய்திகளும் சரி, அவளுடைய வழிமுறைகளும் சரி பிடிபடவே இல்லை. அவளுக்கு அதில் அனுபவங்களும் இல்லை. ஆகவே அவள் வாய் விட்டு அழுத வண்ணம், “நான் அவர் மனைவி!” என்று புலம்பினாள். “விரைவில் நீ என்னைப் பற்றி நன்கு புரிந்து கொள்வாய்! அது தான் உனக்கு நல்லது!” என்றாள் “தாய்” மாயாவதி! “நான் பல வருடங்களுக்கு மேலாக இவனுக்குத் தாயாக இருந்து வருகிறேன். அப்போது அவனுக்கு இவ்வுலகில் வேறு யாரும் இல்லை. நான் தான் தாய், தந்தை எல்லாமும்!” என்றாள். சற்று நேரம் நிறுத்திவிட்டு மௌனமாக இருந்தவள், “கவலைப்படாதே, பிரபாவதி! இவன் என்னையும் மணந்து கொண்டிருக்கிறான்!” என்றாள். அப்போது வஜ்ரநப் பிரபாவதியைப் பார்த்து, “பிரத்யும்னனைக் கொல்வதற்கென உனக்களிக்கப்பட்ட அரசாணையின் கதி என்ன? நான் மட்டும் சரியான நேரத்தில் வரவில்லை எனில் அவன் எப்போதோ இறந்து போயிருக்கக் கூடும். இப்போது என்ன கஷ்டம் எனில் இந்தப் பாலைவன மணல் பிரதேசத்தை விட்டு இவனை எவ்விதம் வெளியே அனுப்புவது என்பது தான்!” என்றான். அப்போது பிரபாவதி, “அப்படி அனுப்ப முடிந்தால் என்னையும் சேர்த்து அனுப்பி விடுங்கள்!” என்றாள். “நான் இந்த அரசாணையைப் பல சமயங்களில் பயன்படுத்தி இருக்கிறேன்.” என்றவன் பிரத்யும்னன் பக்கம் திரும்பி, “பிரத்யும்னா! உடனே என்னைக் கட்டிப் போடு! இறுக்கமாகவே கட்டு! என் ஆட்களில் சிலர் இந்த மலைக்குன்றின் அடிவாரத்தில் உனக்காகக் காத்திருப்பார்கள். சீக்கிரம் விரைந்து செயல்படு!” என்றான். “உங்கள் மன்னாதி மன்னரின் கட்டளைக்கு என்ன பதில்?” என்று கேட்டான் பிரத்யும்னன். “நீ இந்த அரசர்களைப் பற்றி எல்லாம் கவலைப்படாதே! அவர் தன்னைத் தானே கவனித்துக் கொள்வார்! எங்கள் பகுதியின் எல்லையைக்காப்பாற்ற வேண்டி நூற்றுக்கணக்கான ஒட்டகங்களுடனும் ஆட்களுடனும் அவர் புஷ்கர வர்த்தம் நோக்கிச் சென்று கொண்டிருக்கிறார்.” என்றான் வஜ்ரநப்! அவன் தன்னுடைய உத்திகளைத் தயாராக வைத்திருந்தான். ஓட்டகங்களுடன் ஒட்டகங்களை ஓட்டுபவர்களும் தயாராகக் காத்திருந்தனர். மட்ரிகோவட்டாவை விட்டு பிரத்யும்னனை வெளியேற்றக் காத்திருந்தார்கள். பிரபாவதி பிரத்யும்னனை இறுக்கிக் கட்டிக் கொண்டாள். “என் தாய் பிரவிசியை இங்கேயே விட்டு விட்டுச் செல்ல வேண்டுமா?” என்று கதறினாள். “பிரபாவதி, நீ ஓர் முட்டாள் பெண்!” என்றாள் மாயாவதி! “அழுவதற்கு இதுவா நேரம்? அதற்கெனத் தனியான நேரம் இருக்கிறது. அதே போல் நம் வேலையைச் செய்வதற்கும் தனியாக நேரம் உள்ளது. மௌனமாகத் துன்பத்தை அனுபவிக்கவும் நேரம் தனியாக இருக்கிறது. இப்போது இந்த மூன்றும் சேர்ந்து உன் எதிரே வந்து நிற்கவே நீ கிட்டத்தட்டப் பைத்தியமாக ஆகி விட்டாய்! நாம் எப்படிப் பட்ட பேராபத்தில் இருக்கிறோம் என்பதை நீ புரிந்து கொள்ளவில்லை! உங்கள் மன்னாதி எந்நேரமும் திரும்பி வரலாம். நாளையே கூட வந்துவிடலாம்!” என்றாள். பிரபாவதியோ செய்வதறியாது அழுது கொண்டே இருந்தாள். “இந்த யாதவன் என்னை இக்கட்டில் மாட்டி விட்டான். என் மனைவி ஒன்று விதவையாக இருக்க வேண்டும் அல்லது என் மகள் விதவையாக வேண்டும்! இந்த இரண்டில் ஒன்று நடக்க வேண்டும் என்ற கட்டாயத்துக்கு ஆளாக்கி விட்டான்!” என்றான் வஜ்ரநப்! அதைக் கேட்டப் பிரத்யும்னன் சிரித்தான். “ஆனால் உங்கள் மன்னரின் ஆணையை நிறைவேற்றுவதில் நீங்கள் தோற்றுப் போய் விட்டீர்கள்!” என்றான். அதற்கு வஜ்ரநப், “இப்போது நமக்கு நேரம் மிகக் குறைவு! நம்மை இப்போதைய பேராபத்திலிருந்து நீக்கிக் கொள்ள வேண்டும்! அதுவும் உதயத்திற்குள்ளாக! இங்கே பேசிப் பொழுதைக் கழித்தோமானால் எதற்கும் நேரம் இருக்காது! நாம் பிடிபடுவோம்! உடனடியாகக் கொல்லப்படுவோம்.” என்றான் வஜ்ரநப்! பின்னர் சற்று நேரம் கழித்து மீண்டும், “என்னால் எங்கள் மன்னரின் கொடூரத்தை எதிர்நோக்க முடியவில்லை! உன்னைக் கொல்லவும் முடியவில்லை! நான் இறக்கவும் விரும்பவில்லை! ஆகவே நீ செல்கையில் என்னையும் உன்னுடன் அழைத்துச் சென்று விடு! நாம் எல்லோரும் சேர்ந்து ஒன்றாகச் செல்வோம் அல்லது ஒன்றாக இறந்து படுவோம்!” பிரத்யும்னன் சிரித்துக் கொண்டே குறுக்கிட்டான். “எல்லோருமே ஒரே மாதிரியான கஷ்டத்தில் மாட்டிக் கொண்டிருக்கிறோம். உங்கள் மன்னரின் கொடூரத்திலிருந்து நாம் தப்பிப்போம். உயிர்வாழ்வோம். ஆனால் எனக்கு இன்னொரு முக்கியக் கடமை ஒன்று இங்கிருக்கிறது. அது தான் என் தாத்தா வசுதேவர் அவர்கள் இன்னமும் உயிருடன் இருக்கிறாரா என்று கண்டு பிடிப்பது! அவர் உயிருடன் இருந்தால் அவரைத் திரும்ப துவாரகை அழைத்துச் செல்வது! இது தான் என் முக்கியக் கடமை! நான் இங்கே வந்ததும் அதற்காகவே!” என்றான். அதற்கு வஜ்ரநப், “அவர் இங்கே இல்லை! அவர் நிச்சயமாக மன்னரின் இந்தக் கோட்டையில் இருக்க வாய்ப்பே இல்லை. மண்ணால் ஆன சிறைச்சாலைக் கோட்டையில் சிறைக்கைதியாக அவர் இருக்கலாம்!” என்றான்.
1984ல் வெளியான திரைப்படம் ஊமை ஜனங்கள். அண்மையில் ஜெயாமூவீஸ் சேனல் இப்படத்தை ஒளிபரப்பியது. ''முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் பாக்யராஜ்'' என்கிற சிறப்பு செய்தியோடுதான் படம் துவங்குகிறது. அதுவே படம் பார்க்கும் ஆர்வத்தை தூண்ட போதுமானதாக இருந்தது. பாக்யராஜ் நடித்த எல்லா படங்களிலுமே அவர் மாறுபட்ட கதாபாத்திரங்களைத்தான் எப்போதுமே செய்திருக்கிறார். மாமூல் ஹீரோவாக அவர் எப்போதும் நடித்ததில்லை (ஓரிரு படங்கள் இருக்கலாம்). பிராமண வேஷமிட்டு அக்ரகாரத்தில் வாழும் தலித்தாக, கிராமத்துக்கு கைக்குழந்தையோடு புதிதாக வருகிற வாத்யாராக, குண்டுபெண்ணை மணந்து மன உளைச்சலுக்காளாகும் காமுகனாக, நண்பர்களோடு சைட் அடிக்கிற வேலைவெட்டியில்லாத ஹீரோவாக (அனேகமாக தமிழின் முதல் வெட்டி ஹீரோ!) , வெட்டி பந்தா கிராமத்து மைனராக என எல்லாமே வித்தியாசம்தான். ஆனால் எந்தப்படத்திலும் இப்படியெல்லாம் போட்டுக்கொண்டதில்லை. அதனாலேயே அப்படி என்னதான் இருக்கு பார்ப்போமே என்று பார்க்க ஆரம்பித்தேன். படத்தில் நடித்தவர்களுடைய பெயர்களில் எழுத்தாளர் அறந்தை நாராயணனின் பெயரும் இருந்தது. படத்திற்கு வசனம் பிரபஞ்சன்! வசனம் மட்டுமல்ல படத்தின் இணை இயக்குனரும் அவர்தான். படத்தில் எக்கச்சக்கமாக இலக்கியவாதிகளின் பங்களிப்பு இருந்திருக்கும் போல.. படத்தை இயக்கியவர் ஜெயபாரதி (குடிசை,நண்பா நண்பா மாதிரி அவார்ட் படங்கள் எடுத்தவர்). டி.செல்வராஜ் எழுதிய தேனீர் என்கிற நாவலை அடிப்படையாக கொண்டு இத்திரைப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது. அப்போதே இது நிச்சயம் அட்டர் ப்ளாப்பான படமாகத்தான் இருக்கும் என்று நினைத்துக்கொண்டேன். கம்யூனிச கருத்துகள் அடங்கிய படம் என்பதை படம் தொடங்கிய சில நிமிடங்களில் தெரிந்துகொள்ள முடிந்தது. மிகவும் சுமாராகவே எடுக்கப்பட்ட இப்படத்தில் தேயிலை தோட்டத்தொழிலாளியாக தொழிற்சங்கம் தொடங்கி அதன் போராட்டத்தை முன்னெடுக்கிற தோழராக நடித்திருக்கிறார் பாக்யராஜ். வித்தியாசமான விக் வைத்திருக்கிறார் அதற்குமேல் வித்தியாசமில்லை. அவருடைய குரல்தான் அன்னியமாக இருந்தது. ஆனால் விஷயம் அதுவல்ல.. சில மாதங்களுக்கு முன்பு வெளியான பரதேசிதான் இப்படத்தை பார்க்கும்போது நினைவுக்கு வந்தது. எரியும் பனிக்காடு நாவலை அடிப்படையாக கொண்டு உருவானது என்று சொல்லிக்கொண்டாலும் அப்படத்தில் பல மிகமுக்கியமான அடிப்படை பிரச்சனைகள் சரியாக பேசப்படவில்லை என்கிற குறை பலருக்கும் உண்டு. குறிப்பாக இந்தப்படத்தில் பரதேசியில் சொல்லப்படாத பலவும் இருப்பதை கவனிக்கமுடிந்தது. குறிப்பாக பெண்கள் மீதான பாலியல் சார்ந்த கொடுமைகளை மிக அழுத்தமாக பதிவு செய்திருக்கிறது இத்திரைப்படம். கங்காணிகளாலும் வெள்ளை துரைமார்களாலும் தேயிலை தோட்டங்களில் வேலை பார்த்த பெண்கள் எவ்விதத்தில் பாதிக்கப்பட்டார்கள் என்பதை எந்த பாசாங்கும் இன்றி நேரடியாக பேசியிருக்கிறது. தேயிலை தோட்டங்களில் முதன்முதலாக முன்னெடுக்கப்பட்ட கம்யூனிச தொழிற்சங்க நடவடிக்கைகளை குறித்தும் இத்திரைப்படம் பேசுகிறது. அனேகமாக தேயிலை தோட்ட தொழிலாளர்களின் பிரச்சனையை முதன்முதலில் பேசிய தமிழ்ப்படமாக இது இருந்திருக்கும் என்று நினைக்கிறேன். மலையிலிருந்து தப்பியோடிவிடுகிற அடிமையை பிடித்துவந்து கட்டிப்போட்டு மயங்கி விழும்வரை சவுக்கால் அடித்து, அவனை தேடிப்பிடித்த செலவையும் அவன் கணக்கில் ஏற்றி மீண்டும் வேலை பார்க்க வைக்கிறார்கள். திருமணம் கூட அவனை அல்லது அவளை கல்யாணம் பண்ணிகிட்டா நல்லா உழைப்பான் நம்ம கடனும் தீரும் என்பதுமாதிரிதான் அணுகுவதாக கதை அமைக்கப்பட்டிருக்கிறது. அத்தனை துன்பங்களுக்கு நடுவிலும் அரும்புகிற ஒருகாதலும் கூட படத்தில் உண்டு (ஹீரோ ஹீரோயினுடைய காதல் அல்ல). கங்காணிகளும் அந்த அடிமை வரிசையிலேயே இடம்பெறுகிறார்கள். அவர்களும் எல்லா அடக்குமுறைகளுக்கும் ஆளாகிறார்கள். அதிகாரம் அவரவர் அளவில் இயங்குகிறது. அது துல்லியமாக இத்திரைப்படத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. பரதேசி திரைப்படத்தை விடவும் இப்படத்தில் வருகிற தேயிலைதோட்டத்தொழிலாளர்கள் சார்ந்த காட்சிகள் மிகவும் துல்லியமாக பதிவாகியுள்ளதாக தோன்றியது. தேயிலை தோட்டங்களில் மட்டுமல்ல அவற்றை ப்ராசஸ் பண்ணுகிற தொழிற்சாலைகளும் அவற்றில் பணியாற்றுகிறவர்களின் துன்பங்களும் கூட காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. முப்பதாண்டுகளுக்கு முன்பே காட்சி ரீதியாக பல விஷயங்களையும் முயற்சி செய்திருக்கிறார் படத்தின் இயக்குனரான ஜெயபாரதி. அவை இன்று பார்க்கும்போது சப்பைமேட்டராக தெரிந்தாலும் அந்த காலகட்டத்திற்கு மிகவும் புதிதாக இருந்திருக்க வேண்டும். ஆனால் பட்ஜெட் ப்ரச்சனை, காஸ்டிங் குழப்பங்கள் என பலவிஷயங்களில் சிக்கிசீரழிந்துதான் படம் வெளியாகியிருக்கிறதென்பதை பார்க்கும்போதே யூகிக்க முடிகிறது. பாக்யராஜூம் தன் பங்குக்கு ஏதோ குளறுபடிகளை செய்திருக்கிறார் போல தமுஎச தோழர் ஒருவர் இணையதளமொன்றில் புலம்பியிருந்தார். இப்படத்திற்கு முதலில் வைக்கப்பட்ட பெயர் 'தேநீர்'. டி.செல்வராஜின் நாவலை படமாக்க முடிவாகி தமுஎச தோழர்கள் ஆளுக்கு ஆயிரம் ரூபாய் முதலீடு செய்ய இப்படம் துவக்கப்பட்டிருக்கிறது. ஒரு கட்டத்தில் பட்ஜெட் கைமீறிப்போக முழுவதுமாக பாக்யராஜே படத்தை தன் கையில் எடுத்துக்கொண்டதாகவும் அதற்கு பிறகு பெயர் மாற்றம், சில எக்ஸ்ட்ரா காட்சிகள் என பலதும் சேர்க்கப்பட்டு கடைசியில் படம் எதுமாதிரியும் இல்லாமல் கொடுமையாக வெளியானதாக ஃபேஸ்புக்கில் தோழர் ஒருவர் வந்து சில விஷயங்களை பகிர்ந்துகொண்டார். இப்படத்தில் நடித்த நாயகியான ப்ரீதாவையே படத்தின் இயக்குனர் ஜெயபாரதி திருமணம் செய்துகொண்டதுதான் படத்தினால் நடந்த ஒரே பலன் என்று குறிப்பிடுகிறார் ஞாநி. இணையத்தில் படம் குறித்து ஏதாவது தகவல்கள் கிடைக்குமா என்று தேடினேன் படத்தின் போஸ்டரும் கூட கிடைக்கவில்லை. யமுனா ராஜேந்திரன் மட்டும்தான் இதைப்பற்றி சில கட்டுரைகளில் தொடர்ந்து குறிப்பிட்டு எழுதி வருகிறார். மோசமாக எடுக்கப்பட்டிருந்தாலும் தமிழில் வெளியான அரசியல் படங்களில் இது மிகமுக்கியமான படமாக தோன்றியது. இப்படத்தை பார்க்க மிகுந்த பொறுமையும் தன்னம்பிக்கையும் வேண்டும். அதோடு எதாவது சேனலில் எப்போதாவது திரையிடப்பட்டால் பார்க்கலாம்.
புதன்கிழமையன்று வடக்கு ஆப்கானிஸ்தானின் மஸார்-இ-ஷெரிப் நகரத்தில் பயணிகள் வாகனங்கள் மீது மூன்று குண்டுவெடிப்புகள் கிழிக்கப்பட்டன, குறைந்தது ஒன்பது பேர் கொல்லப்பட்டனர், ஆப்கானிஸ்தான் தலைநகரில் மற்றொரு குண்டுவெடிப்பை அதிகாரிகள் உறுதிப்படுத்தியதால் மாகாண தளபதி செய்தித் தொடர்பாளர் கூறினார். வடக்கு பால்க் மாகாணத்தில் நடந்த குண்டுவெடிப்புகளில் 15 பேர் காயமடைந்துள்ளனர் என்று பால்க் மாகாணத்தின் தளபதியின் செய்தித் தொடர்பாளர் முகமது ஆசிப் வசேரி ராய்ட்டர்ஸிடம் தெரிவித்தார். புதன்கிழமை மாலை காபூலில் உள்ள மசூதியில் மற்றொரு வெடிப்பு ஏற்பட்டது, தலைநகரின் தளபதியின் செய்தித் தொடர்பாளர் கூறினார், குறைந்தது இரண்டு பேர் காயமடைந்தனர். 🔴 #ஆப்கானிஸ்தான் #காபூல் PD4 பகுதியில் உள்ள மசூதியில் வெடிப்பு. 22 காயமடைந்தவர்கள் எங்கள் மருத்துவமனைக்கு வந்தனர், 5 பேர் ஏற்கனவே வந்திறங்கிய நிலையில் இறந்துவிட்டனர். – அவசர அரசு சாரா (@emergency_ngo) மே 25, 2022 https://platform.twitter.com/widgets.js காபூலில் உள்ள அவசர மருத்துவமனை ஒரு ட்வீட்டில், குண்டுவெடிப்பிலிருந்து ஐந்து உடல்கள் மற்றும் ஒரு டஜன் நோயாளிகள் காயமடைந்தனர். காபூல் மசூதியில் குண்டு வெடிப்பு, குறைந்தது 5 பேர் கொல்லப்பட்டனர் புதன்கிழமை மாலை ஆப்கானிஸ்தானின் தலைநகரில் உள்ள மசூதியில் ஒரு குண்டுவெடிப்பில் குறைந்தது ஐந்து பேர் கொல்லப்பட்டனர், அதிகாரிகள் மற்றும் மருத்துவமனைகள் கூறியது, அதே நாளில் வடக்கு நகரமான மசார்-இ-ஷெரிப்பில் பயணிகள் வாகனங்கள் மீது பயங்கர வெடிப்புகள் நிகழ்ந்தன. காபூலில் உள்ள மசூதியில் நடந்த குண்டுவெடிப்பில் குறைந்தது இரண்டு பேர் காயமடைந்ததாக தலைநகரின் தளபதியின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். எமர்ஜென்சி மருத்துவமனை ஒரு ட்வீட்டில், குண்டுவெடிப்பிலிருந்து ஐந்து உடல்களைப் பெற்றதாகவும், ஒரு டசனுக்கும் மேற்பட்ட காயமடைந்த நோயாளிகள் இருப்பதாகவும் கூறியது. ஊடகங்களுடன் பேசுவதற்கு தனக்கு அதிகாரம் இல்லை என்பதால் பெயர் வெளியிட விரும்பாத தலிபான் அதிகாரி ஒருவர், மசூதியின் பிரசங்கத்திற்குள் வெடிபொருட்கள் வைக்கப்பட்டிருந்ததாகவும், குறைந்தது 11 பேர் உயிரிழந்ததாகவும் கூறினார். இந்தத் தாக்குதல்களுக்குப் பின்னால் யார் இருக்கிறார்கள் என்பது உடனடியாகத் தெரியவில்லை. வெளிநாட்டுப் படைகள் வெளியேறியதால் ஆகஸ்ட் மாதம் நாட்டைக் கைப்பற்றிய தலிபான்களுக்கு சமீபத்திய மாதங்களில் அதிகரித்து வரும் வன்முறைகள் பாதுகாப்பு சவால்களை ஏற்படுத்தியுள்ளன. ஷியா சிறுபான்மையினரை குறிவைத்து இஸ்லாமிய அரசு பல தாக்குதல்களை நடத்தியது.
“அம்மா! நீ எதற்கும் பயப்பட வேண்டாம். நான் ரொம்ப தூரம் போகலை. பக்கத்துலதான் போறேன். ரொம்ப சீக்கிரம் திரும்ப வந்துருவேன். இந்த பயணம் என்னோட படிப்புக்கு ரொம்ப முக்கியம். நம்ப முன்னோர்கள் எப்படி வாழ்ந்தாங்க? எப்படி அழிஞ்சு போனாங்க? என்பதை படித்தால்தானே நம்ம தலைமுறையை காப்பாத்த முடியும் இதற்கு போய் பயப்படுறியே?” என்றாள் நிலா. “அதெல்லாம் பாடத்தில் இருக்கிறதுதானே அதை நேரில் போய் பார்க்கணுமா அந்த இடம் ரொம்ப பயங்கரமானது என்று எல்லோரும் சொல்றாங்களே!” – கவலைப் பட்டார் அம்மா. “பயப்படாமல் இரும்மா… நான் மட்டுமா தனியா போறேன் என்னோட மேலும் ரெண்டு, மூன்று மாணவர்கள் வர்றாங்க… பாதுகாப்புக்காக ஒரு ரோபோ படையே வருது. நீ என்னோட எப்ப வேண்டுமானாலும் பேசலாம்… வெறும் இரண்டரை மில்லியன் ஒளி ஆண்டு தூரம்தானே இதற்கு போய் இப்படி பயப்படறியே… நான் ஒன்றும் மனிதர்களே வசிக்காத கிரகத்துக்கு போகலை… நம்ம முன்னோர்கள் வாழ்ந்த பூமிக்குத்தானே போறேன்” என்றபடியே வீட்டைவிட்டு வெளியேறினாள் நிலா. நிலா – ஆன்ட்ரமீடா கேலக்ஸியின் வெஸ்டோ சூரிய குடும்பத்தின் நோவா கிரகத்தில் வசிப்பவள். இந்த 3016ம் ஆண்டிலும் மானுடவியல் படிக்கும் அரிய பிறவி. ஒருவகையில் இவளது இந்த படிப்புதான் இவளுக்கு பால்வீதி கேலக்ஸியில் முன்னோரு காலத்தில் மனிதர்கள் வாழ்ந்த பூமிக்கு செல்லும் வாய்ப்பை ஏற்படுத்தியது. நோவா கிரகத்திற்கு உணவுப் பொருட்களை வழங்கும் கெக் கிரகத்தில் ஏதோ பிரச்சினையாம். எனவே மனிதகுலம் தோன்றிய பூமிக்கு சென்று உணவு உற்பத்தி குறித்து ஆய்வு செய்வதற்கு நோவா கிரக அரசு நிலா தலைமையில் ஒரு குழுவை அமைத்திருக்கிறது. அக்குழுவில் ரவி, அபி, கிரி, பட் ஆகியோரும் உள்ளனர். இதில் ரவிதான் விண்கலத்தை செலுத்தப் போகும் வலவன். மற்ற மூவரும் நிலாவைப் போல ஆய்வு மாணவர்கள், ஆனால் அறிவியல் புலத்தை சேர்ந்தவர்கள். பல்கலைக் கழகத்திற்கு நிலா வரும்போது மற்றவர்கள் முன்னதாகவே வந்து நிலாவுக்காக காத்திருந்தார்கள். துறைத்தலைவர் புஷ், வழியனுப்ப வந்திருந்தார். “நீங்கள் செய்யப்போகும் பயணம் மிகவும் முக்கியமானது. நோவா கிரகத்தின் உணவுத் தேவை பெருகி வரும் நிலையில் இதுவரை உணவு வழங்கிவந்த கெக் கிரகத்தில் உணவைப் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. முன்னொரு காலத்தில் மனிதர்கள் பூமியில் செய்த தவறுகள் மீண்டும் நடக்கிறதோ என்ற சந்தேகம் கூட இருக்கிறது. அது குறித்து பின்னர் பேசலாம். இப்போது நீங்கள் பூமியில் இந்தியா என்று அழைக்கப்பட்ட நாட்டின் தென்பகுதிக்கு செல்லப்போகிறீர்கள். அதற்கும் ஒரு முக்கிய காரணம் இருக்கிறது. இந்தக் குழுவில் உள்ள ஐந்து பேரின் முன்னோர்களும் அந்தப்பகுதியில் வாழ்ந்தவர்கள். உங்கள் மரபணு அதை உறுதி செய்திருக்கிறது. எனவே அந்தப் பகுதியில் நீங்கள் ஆய்வு செய்வது பொருத்தமாக இருக்கும் என்று நோவா கிரக அரசு முடிவு செய்துள்ளது. உங்களைப் போல பல குழுக்கள் பூமியின் பல பகுதிகளுக்கும் அனுப்பப்படுகிறார்கள். நீங்கள் அதிக கவனம் செலுத்த வேண்டிய மிக முக்கியமான அம்சம், உங்கள் பாதுகாப்பு! ஏனென்றால் நிலம், நீர், காற்று என்ற அனைத்தையும் மிகமோசமான சீர்குலைவுக்கு ஆளாக்கிய ஒரு பகுதிக்கு போகிறீர்கள். விண்கலத்தை விட்டு இறங்கும்போது அனைத்து பாதுகாப்பு சடங்குகளையும் நீங்கள் மறவாமல் செய்ய வேண்டும். மேலும் பூமியில் இந்த ஆண்டு முழுவதும் பகலாக இருப்பதால் கடும் வெப்பம் நிலவுகிறது. ஆயிரம் வருடத்திற்கு முன் அப்பகுதியில் வாழ்ந்த மக்கள், சூரியனின் கதிர்கள் உடல்மேல் நேரடியாக படும்படி வாழ்ந்திருக்கிறார்கள். இப்போது அப்படி உங்கள் உடல்மேல் சூரியக்கதிர் நேரடியாக பட்டால் நீங்கள் தொலைந்தீர்கள். அதேபோல் அங்கிருக்கும் எந்தப் பொருளையும் நேரடியாக நீங்கள் வெறும் கையால் தொடக்கூடாது. பயங்கர ஆபத்தான சூழலிலும் சில உயிர்கள் அங்கே மீண்டும் உயிர்த்தெழுகின்றன. அதை ஆய்வு செய்யத்தான் நீங்கள் போகிறீர்கள். இந்த நோவா கிரகத்தில் நாம் வாழ்ந்தாலும், நமது கிரகத்தில் உயிர்களை உருவாக்க முடியவில்லை. இதற்காக அண்டை கிரகங்களுக்கு சென்று உயிர்களை உற்பத்தி செய்வதிலும் நிலைய பிரச்சினைகள் உள்ளன. ஒரு கிரகம் முழுமையாக அழிந்தபின்னரும், சூரிய ஆண்டில் ஓராண்டு முழுவதும் கடும் வெப்ப பகலாகவும் – ஓராண்டு முழுவதும் கடுங்குளிர் இரவாகவும் இருக்கும் நிலையிலும் பூமியில் உயிர்கள் துளிர்ப்பது நமக்கு நம்பிக்கையை தருகிறது. உங்கள் ஆய்வுமூலம் நமது நோவா கிரகத்திலும் உயிர்களை உற்பத்தி செய்ய முடிந்தால் நமது உணவுத்தேவைகளை இங்கேயே பூர்த்தி செய்யலாம். எனவேதான் இந்த பயணம். பாதுகாப்பாக போய் வாருங்கள். நிலா உனக்கு ஒரு கோரிக்கை. உன்னை நம்பி நான்கு ஆண்களை அனுப்புகிறோம். அவர்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லாமல் பாதுகாப்பாகவும், வெற்றியோடும் திரும்ப வருவது உன் கையில்தான் உள்ளது” என்று நீளமாக பேசி முடித்தார், பேராசிரியர் புஷ். விண்கலம் பயணத்தை தொடங்கியது. அறிவியல் நிபுணர்களான அபி, கிரி, பட் ஆகியோர் பூமியில் எதை, எப்படி ஆராய வேண்டும் என்று திட்டமிட ஆரம்பித்தனர். ஏதோ ஒரு மின்னூலை படிக்க ஆரம்பித்த நிலாவிடம், விண்கலத்தை செலுத்திய ரவி கேட்டான், “நிலா! உன் பெயருக்கு பொருள் தெரியுமா?” நிலா பதில் சொன்னாள்: “என் பெயருக்கு மட்டுமல்ல, உன் பெயருக்கு என்ன பொருள் என்பதும் எனக்குத் தெரியும். அதைவிட முக்கியமாக எனக்கு விண்கலத்தை செலுத்தவும் தெரியும். நாங்கள் ஆய்வை முடித்துவிட்டு திரும்பவும் நோவா கிரகத்திற்கு திரும்பும்போது நீயும் எங்களோடு திரும்புகிறாயா அல்லது பூமியிலேயே ஒற்றை மனிதனாக தங்கிவிடப் போகிறாயா என்பதை முடிவு செய்து கொள்!” ### அன்ட்ரமீடா கேலக்ஸியை தாண்டிய விண்கலம் பால்வீதி கேலக்ஸிக்குள் பிரவேசித்தது. பூமியை நெருங்க விண்கலத்திலிருந்து ஐந்து பேருக்கும் இனம் தெரியாத உணர்வுகள் ஏற்பட்டன. தங்களது முன்னோர்கள் பிறந்து, வாழ்ந்த இடத்திற்கு செல்லப்போகிறோம் என்ற ஆர்வம் மேலிட்டது. ஒரே இடத்தில் பிறந்து வாழ்ந்த முன்னோர்களை நினைத்து சிறிது பொறாமை ஏற்பட்டாலும், தற்போது மனிதர்களே வாழமுடியாத நிலைமையில் உள்ள பூமியை நினைத்து கவலையும், வருத்தமும்கூட ஏற்பட்டது. தற்போது நோவா கிரகத்தில் உயிர்கள் உற்பத்தி ஆகாத நிலையில் அண்டை கிரகங்களுக்கு மகப்பேறுகளுக்கு செல்லும் பெண்களையும், உணவுக்காகவும் மற்ற உயிரினங்களுக்காகவும் வேறு கிரகங்களை நம்பி இருக்க வேண்டிய தற்போதைய நிலையை நினைவு கூர்ந்த நிலா, பண்டைக்காலத்தில் பூமியில் மனிதர்கள் எப்படி வாழ்ந்திருப்பார்கள் என்ற கற்பனையில் மூழ்கினாள். இதற்குள் விண்கலம் பூமியை எட்டியிருந்தது. விண்கலத்தின் சாளரம் வழியாக பார்வையை செலுத்தினாள் நிலா. திரும்பிய பக்கமெல்லாம் மணல். அதன் மீது காட்சியளிக்கும் கானல் நீர். அப்பகுதியில் நிலவும் அனல் வெப்பத்தை விண்கலத்தின் உள்ளேகூட இலேசாக உணர முடிந்தது. விண்கலத்தில் இருந்த ஆய்வுக்கூட மானிட்டர்களை பார்த்தவாறே அபி, “ நோவா கிரகத்தைப் போல சுமார் 20 மடங்கு வெப்பம் இங்கு வீசுகிறது. இந்த வெப்பத்தில் இங்கு உயிர்கள் துளிர்க்கின்றன என்பதை நம்புவதற் கில்லை” என்றான். “பூமியில் இருக்கும் தண்ணீர் அனைத்தும் பாழாகிவிட்டது. மேலும் கொதி நிலையில் இருக்கிறது. இதில் எங்கிருந்து உயிர்கள் தோன்றும்?” என்றான் பட். “உயிர்கள் தோன்றும் முன்னால் நுண்ணுயிர்கள் தோன்ற வேண்டும். அந்த நுண்ணுயிர்களை உண்டுதான் பெரிய உயிர்கள் தோன்ற வேண்டும். இதுதான் அறிவியலின் அடிப்படை. இங்கு நுண்ணுயிர்கள் தோன்ற வாய்ப்பிருப்பதாக தோன்றவில்லை!” என்றான் கிரி. அதற்குள் குறுக்கிட்ட நிலா, “இந்த ரேடாரைப் பாருங்கள்! வேறு ஏதோ விண்கலம் இங்கு இருப்பதாக காட்டுகிறது. வேறு பகுதிக்கு செல்ல வேண்டிய யாரோ இங்கு தவறி வந்துவிட்டார்கள் போலிருக்கிறது” என்றாள். “நான் பேசலாமா” என்று அனுமதி கேட்ட ரவி, “நோவா கிரகவாசிகள் மட்டும்தான் இங்கு வரவேண்டுமில்லையே! வேறு கிரகங் களிலிருந்தும் இந்த பூமிக்கு நம்மைப் போலவே வேறு யாராவது வந்திருக்கலாமே!” என்றான். அவன் கூறுவது சரியாக இருக்கலாம் என்று மற்றவர்களும் ஆமோதித்தனர். அறிவியலின் பெயரால் ஏற்பட்ட அகந்தையும், ஆணவமுமே பூமிப்பந்தின் மனிதர்களை அழித்தது. இயற்கையை புரிந்து கொள்வதே அறிவியல் என்பதை உணராமல், முட்டாள்தனமாக இயற்கையை வெற்றி கொள்ள நினைத்து தோல்வி கண்டனர், உங்கள் முன்னோர்கள்!” வலவனாக பலமுறை பயணம் செய்த ரவியின் தொழில்நுட்ப அறிவு தன்னிடம் இல்லை என்பதை உணர்ந்தாள். எனினும் ரவி தன்னைக் கவர்வதற்காக செய்த அரதப்பழசான அந்த முயற்சியை நினைத்து அவளுக்கு சிரிப்பு வந்தது. இதற்குள் பூமிக்கு வந்திருந்த அந்த மற்றொரு விண்கலத்தை கண்டுபிடித்திருந்தான் ரவி. அது மெகல்லன் கேலக்ஸியின் டோரா கிரகத் திலிருந்து வந்திருந்தது. டோரா கிரகத்தைப் பற்றி படித்திருக்கிறாள் நிலா. அது நோவா கிரகத்தைப்போல குடியேற்ற கிரகமல்ல. டோரா கிரகத்தில் உயிர்கள் உற்பத்தி ஆகும். டோரா கிரக வாசிகள் நோவா கிரகவாசிகளைவிட உயிரியல் ரீதியாக மேம் பட்டவர்கள். அவர்களை நேரடியாக தொடர்பு கொள்ளலாமா என யோசித்தாள் நிலா. அவளது சிந்தனையை புரிந்து கொண்டவனாக ரவி தொடர்பை ஏற்படுத்தினான். டோரா கிரகத்தின் விண்கலத்திலிருந்து பதில் சிக்னல் கிடைத்தது. இவர்களது விண்கலத்திற்கு அருகே வருவதாகவும், காத்திருக்குமாறும் செய்திகள் கிடைத்தன. அபி, கிரி, பட் ஆகிய மூவரும் பாது காப்பு கவசங்களை மாட்டிக்கொண்டு விண்கலத்தி லிருந்து வெளியே செல்ல முயற்சித்துக் கொண்டிருந்தனர். ஆனால் வெளியே புயல் போல காற்று வீசத்தொடங்கியது. புயலின் காரணமாக வெப்பம் மேலும் அதிகரித்தது. எனவே விண்கலத்தின் உள்ளே இருந்தவாறே நிலைமையை கண்காணிக்க முடிவு செய்தனர் அம்மூவரும். சற்று நேரத்தில் புயல் சற்றே பலம் குறைந்து இயல்பு நிலைக்கு திரும்பியது. அப்போது அவர்களின் விண்கலம் அருகே மற்றொரு சற்று பெரிய விண்கலம் ஒன்று தரை இறங்கியது. நிலாவும் மற்றவர்களும் அதை உற்று நோக்க ஆரம்பித்தனர். தகவல் தொடர்பு சாதனம் மூலம் நிலாவையும் மற்றவர்களையும் உரிய பாதுகாப்பு கவசங்களுடன் கீழே இறங்குமாறு அந்த விண்கலம் வேண்டுகோள் விடுத்தது. சிறிது நேரத்திற்கு பின் அந்த கலத்திலிருந்து முழு பாதுகாப்பு உடை அணிந்த ஒரு மனித உருவம் இறங்கியது. அதைத் தொடர்ந்து சுமார் 25 குழந்தைகள் பாதுகாப்பு கவசத்துடன் இறங்கினர். குழந்தைகளைப் பார்த்தவுடன் நிலாவும், மற்றவர்களும் மெல்ல தங்கள் விண் கலத்தை விட்டு இறங்கினர். மெகல்லன் கேலக்ஸியின் டோரா கிரக விண்கலத்திலிருந்து இறங்கியவர் தன்னை அறிமுகப் படுத்திக்கொண்டார். “வணக்கம்! நான் மேக். மெகல்லன் கேலக்ஸி, டோரா கிரகத்தில் ஒரு பள்ளி ஆசிரியர். எங்கள் பள்ளி மாணவர்களை கல்விச்சுற்றுலாவுக்காக இந்த பூமிக் கிரகத்திற்கு அழைத்து வந்திருக்கிறேன்.” “வணக்கம்! நான் நிலா. ஆன்ட்ரமீடா கேலக்ஸி. நோவா கிரகம். பூமியில் உயிர்கள் மீண்டும் துளிர்ப்பது குறித்து ஆய்வு செய்ய வந்திருக்கிறோம். இவர்கள் என் நண்பர்கள் ரவி, அபி, கிரி, பட்” “நல்லது. நாங்கள் பார்த்தவரை உயிர்கள் ஏதும் எங்கள் கண்களில் படவில்லை. எங்கள் கண்களில் படுவதெல்லாம் மணல், கடல் மட்டுமே. ஒரு காலத்தில் நன்னீர் வளம் நிறைந்த, பசுமையான பகுதியாக இந்த பூமி வாழ்ந்திருக்கிறது என்பதை என் மாணவர்கள் நம்புவதற்கான முகாந்திரமே இல்லை” “எங்கள் முன்னோர்கள் இங்கேதான் வாழ்ந்திருக்கிறார்கள். அவர்களில் சிலர்தான் ஆன்ட்ரமீடா கேலக்ஸியின் சில கிரகங்களுக்கு குடி பெயர்ந்திருக்கிறோம். எப்படி ஏற்பட்டது இந்த பேரழிவு? எங்கள் முன்னோர்கள் எப்படி இந்த பூமிப்பந்தை சீரழித்தார்கள்?” கவலையோடு கேட்டாள் நிலா. “அகந்தை, ஆணவம்! அறிவியலின் பெயரால் ஏற்பட்ட அகந்தையும், ஆணவமுமே பூமிப்பந்தின் மனிதர்களை அழித்தது. இயற்கையை புரிந்து கொள்வதே அறிவியல் என்பதை உணராமல், முட்டாள்தனமாக இயற்கையை வெற்றி கொள்ள நினைத்து தோல்வி கண்டனர், உங்கள் முன்னோர்கள்!” வெறுப்புடன் சொன்னார், மேக். “தாம் பிறந்த பூமியை, தங்கள் கைகளாலேயை அழித்த மாபெரும் குற்றவாளிகள் இந்த பூமியின் மைந்தர்கள். இந்த பூமி மனிதர்களுக்கு மட்டுமே சொந்தமானது என்று தவறாக நினைத்த மனிதர்கள், இங்குள்ள கடலை, காற்றை, நீரை, பூமியை என்று சகலத்தையும் சீரழித்தார்கள். தங்கள் உணவை சீரழித்த ஒரே உயிரினம் பூமிப்பந்தின் மனிதர்கள்தான். வெடிமருந்துகளை உரமாக பயன்படுத்தினார்கள். ஒரு மில்லியன் வருடத்தில் நடக்கும் இயல்பான மரபணு மாற்றத்தை, அறிவியல் கூடத்தில் சில பத்தாண்டுகளில் உருவாக்கி பொதுவெளியில் விட்டார்கள். அணு அறிவியல் என்ற பெயரில் தற்கொலைக் கருவிகளை உருவாக்கினார்கள். அழிவிற்கான அத்தனை வழிகளையும் அறிவியல் என்ற பெயரில் கண்டு பிடித்தார்கள். சக உயிரிகளை கொஞ்சம், கொஞ்சமாக கொன்றார்கள். சக மனிதர்களையும் பல்வேறு பெயர்களில் கொத்துக்கொத்தாக கொன்றார்கள். இவர்களின் அகந்தையும், ஆணவமும் இங்குள்ள மொத்த மனிதர்களையும் அழித்து தீர்த்தது. இதில் தப்பிய சிலர்தான் ஆன்ட்ரமீடா கேலக்ஸியின் சில கிரகங்களின் பிழைத்திருக்கிறீர்கள்!” என்று வருத்தத்துடன் கூறினார், மேக். “சரி. வாருங்கள் எங்கள் பள்ளிக் குழந்தை களுடன் இந்தப் பூமியின் சில பகுதிகளில் நடந்து பார்ப்போம்!” என்று அழைப்பு விடுத்தார் மேக். நிலாவும் அவளது நண்பர்களும் நடக்கத் தயாராயினர். டோரா கிரகத்தின் குழந்தைகள் மிகவும் ஆர்வமாகவும், அதே நேரத்தில் மிகவும் முன்னெச்சரிக்கையுடனும் பூமியில் காலடித் தடத்தை பதித்தனர். இந்த பூமியில் தங்கள் முன்னோர்களான மனிதர்கள் வாழ்ந்தபோது எவ்வாறு இருந்திருக்கும் என்று கற்பனை செய்ய முயன்றாள், நிலா. அவளது எண்ணத்தை புரிந்துகொண்ட மேக், “பெண்ணே! உன் முன்னோர் எப்படி வாழ்ந்திருப்பார்கள் என்று கற்பனை செய்கிறாயா? அவை அனைத்தும் எங்கள் பள்ளிக்குழந்தைகளுக்கே தெரியும். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இந்த பூமியில் வசித்த மனிதர்களை நாங்கள் கண்காணித்தே வந்தோம். அவர்கள் வாழ்ந்த – அழிந்த வரலாற்றின் காட்சிப்பதிவுகள் எங்களிடம் உள்ளன. அவற்றில் சிலவற்றை இந்தக் குழந்தைகள்கூட பார்த்திருக்கிறார்கள். அறிவியல் வணிகமாகும் முன் அனைத்தும் சுகமாகவே இருந்திருக்கிறது. அறிவியல் வணிகமான பின்னர் அழிவே மிஞ்சி யிருக்கிறது. எங்கள் கிரகத்தின் அறிவியல் உங்கள் அறிவியலைவிட மிகவும் மேம்பட்டது. ஆனால் அது எக்காலத்திலும் வணிகமாகிவிடக்கூடாது என்பதனாலேயே எங்கள் மாணவர்களை நேரடியாக பூமிக்கு கூட்டி வந்து எச்சரிக்கிறோம்!” என்றார். நிலாவுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. எனினும், “நல்ல முயற்சி ஐயா! ஆனால் எங்கள் நோவா கிரகத்தில் உயிர்களை உற்பத்தி செய்ய முடியவில்லை. எனவே மனிதர் களான நாங்கள் இனவிருத்திக்காக அண்டை கிரகங்களுக்கு செல்கிறோம். உணவுக்காக முழுவதும் வேற்று கிரகங்களை நம்பியிருக்க வேண்டிய நிலையில் இருக்கிறோம். எனவேதான் இந்த பூமியில் மீண்டும் உயிர்கள் துளிர்ப்பதை கேள்விப்பட்டு ஆய்வு செய்ய வந்திருக்கிறோம்” என்றாள். அறிவியல் வணிகமாகும் முன் அனைத்தும் சுகமாகவே இருந்திருக்கிறது. அறிவியல் வணிகமான பின்னர் அழிவே மிஞ்சியிருக்கிறது. எங்கள் கிரகத்தின் அறிவியல் உங்கள் அறிவியலைவிட மிகவும் மேம்பட்டது. ஆனால் அது எக்காலத்திலும் வணிகமாகிவிடக்கூடாது என்பதனாலேயே எங்கள் மாணவர்களை நேரடியாக பூமிக்கு கூட்டி வந்து எச்சரிக்கிறோம் “நல்ல முயற்சிதான். ஆனால் அது உடனடியாக பலனளிக்கும் என்று தோன்றவில்லை. அதற் காக நீங்கள் கவலைப்பட வேண்டாம். உங்களுக்கு தேவையான உதவிகளை நாங்கள் செய்ய முடியும். ஒரே ஒரு நிபந்தனை! அது என்ன வென்றால் எங்களிடம் கற்றுக்கொள்ளும் எந்த அறிவியல் தொழில்நுட்பத்தையும் வணிக ரீதியாக பயன்படுத்த மாட்டோம் என்ற உறுதிமொழி அளிக்க வேண்டும். இதை உங்கள் நோவா கிரக அரசிடம் எடுத்துக் கூறுங்கள்! இந்த நிபந்தனை உங்கள் நோவா கிரக அரசுக்கு சம்மதம் என்றால் எங்கள் டோரா கிரகம் உங்களுக்கு உதவி செய்யும்” என்றார் மேக். ### நிலாவும் அவளது நண்பர்களும், மெகல்லன் கேலக்ஸியின் டோரா கிரகவாசியான மேக்கை சந்தித்து பேசியது குறித்து, தமது துறைத்தலைவர் பேராசிரியர் புஷ்ஷ§க்கு தகவல் தெரிவித்தனர். அவர் அரசிடம் இதுகுறித்து கூறியபோது, அரசு செவி சாய்த்தது. எனவே ஆபத்தான பூமியில் ஆய்வை மேற்கொண்டு தொடரவேண்டாம் என்றும், திரும்ப வருமாறும் பேராசிரியர் புஷ்ஷிடமிருந்து செய்தி வந்தது. இதையடுத்து டோரா கிரகத்திலிருந்து வந்திருந்த பள்ளி ஆசிரியர் மேக்கிடமும், அவரது மாணவர் களிடமும் விடைபெற்று தங்களது விண்கலத்தில் ஏறினாள் நிலா. விண்கலத்தை இயக்கிய ரவி, ஒலிபெருக்கியை மெல்ல செயல்படுத்தினான். அதில் டோரா கிரகத்தின் குழந்தைகள் பாடிய பாடல் எதிரொலித்தது. “நிலா… நிலா… ஓடி வா… நில்லாமல் ஓடி வா…!”
குடியாத்தம் பகுதிகளில் தென்னை மரங்களை வேருடன் விற்பனை செய்யப்படும்நிலை இருப்பதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். வேலூர் மாவட்டம் குடியாத்தம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் அதிகளவில் தென்னை விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. இந்தநிலையில், தற்போது தென்னை மரம் விவசாயம் அழிந்து வரும் சூழல் இருப்பதாக விவசாயிகள் கூறுகின்றனர். நிலத்தடி நீர் வெகுவாக குறைந்து, தண்ணீர் பற்றாக்குறையால் தென்னை மரங்கள் பாதிக்கப்பட்டுவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். இதன்காரணமாக தேங்காய் விளைச்சல் குறையத் தொடங்கியுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். இந்தநிலையில், பல்வேறு இடங்களில் இருந்து சில நிறுவனங்கள், தென்னை மரங்களை விற்பனைக்கு வாங்கிக் கொள்வதாக தெரிவித்தால், மரங்களை விற்பனை செய்ய விவசாயிகள் தொடங்கியுள்ளனர். தென்னை மரம் ஒன்றுக்கு ரூ.750 முதல் ரூ.1,200 வரை தரம் பிரிக்கப்பட்டுள்ளது. ஜேசிபி இயந்திரங்கள் மூலம் மரங்களை வேருடன் எடுத்து செம்மண் மூலம் பதப்படுத்தி மீண்டும் நடப்படுவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.
அரபு எண்கள் (Arabic numerals), 0 முதல் 9 வரையான பத்து இலக்கங்கள்: 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 இவற்றின் அடிப்படையில் அமைந்தவை. இவை இந்து–அரபு எண்கள் என்றும் அழைக்கப்படும். இந்து–அரபு எண் அமைப்பு இன்று உலகம் முழுவதும் பயன்படும் பொதுவானமுறையிலான எண்முறை முறை ஆகும். பூஜ்யம் என்பதனை முக்கிய அமைப்பாகக் கொண்டுள்ளது இதன் சிறப்பாகும்.[1][2][3] அரபு எண்கள் இது பண்டைய இந்தியத்துணைக்கண்டத்தில் இந்திய கணித மேதைகளினால் கி.மு 500 க்கு முன்பே கண்டறியப்பட்டதாகும்.[3] பாக்தாத் நகரில் இருந்த அரபு கணிதவியலாளர்கள் மூலம் மேற்கு உலகிற்கு அறிமுகம் செய்யப்பட்டது. அவற்றின் தற்போதைய வடிவம் வட ஆப்பிரிக்காவில் உருவாக்கப்பட்டது.அரபு கடிதங்கள் , மெக்ரப், மேற்குப் பகுதியில் அரபு உலகம்.[4] போன்ற பகுதிகளில் வளர்க்கப்பட்டது. மேலும் தற்போதைய வடிவம், கிழக்கு அரபு எண்கள் ஆகியவை வட ஆப்பிரிக்காவில் மேன்மை படுத்தப்பட்டது. அது வட ஆப்பிரிக்க நகரமான பிஜையா என்ற ஊரில் இருந்த இத்தாலிய அறிஞரான ஃபிபொனாச்சியால் ஐரோப்பாவில் அறிமுகமானது. பின்னர் ஐரோப்பிய வணிகம், நூல்கள், காலனித்துவத்தின் மூலம் உலகம் முழுவதும் பரவியது. வரலாறுதொகு தோற்றம்தொகு கிபி முதலாம் நூற்றாண்டில் இந்தியாவில் பயன்பட்ட பிராமி எண்கள் (கீழ் வரிசை) இந்தோ- அராபிய எண்முறை கி.மு 700 களில் இந்தியாவில் தோற்றுவிக்கப்பட்டது.[5] இந்த முறை மெதுவாக, உலகளாவிய அளவில் மேம்படுத்தப்பட்டாலும், முக்கிய பகுதியான பூச்சியம் பிரம்மகுப்தர் என்பவரால் கி.மு 628 ல் வழங்கப்பட்ட பின்பே முக்கிய நிலையை அடைந்தது. 0(எண்) கண்டறியப்பட்டு 10 இலக்கங்கள் வரையான எண் உருக்களைத் தாண்டி இடஞ்சார் குறியீடு, அறியப்பட்ட பின்னே இந்த எண்முறை புரட்சிகர வளர்ச்சி அடைந்தது. இதுவே கணிதத்தின் மிகமுக்கிய படிநிலை எனக்கருதப்படுகிறது. கால்புள்ளி இடும் முறையானது பொதுவாக எண்களை விரைவாகவும் எளிதாகவும் படிக்கப்பயன்படுகிறது. இது உலகின் பல்வேறு மண்டலங்களில் மாறுபாடுகளைக் கொண்டுள்ளது. இலத்தீன் எழுத்துக்கள் மற்றும் நவீன காலத்திற்கும் 0 1 2 3 4 5 6 7 8 9. ஐ இணைப்பாக்கும் முறையாக எண்அச்சு முறை பயன்படுகிறது. 0 ஐ உள்ளாடக்கிய முதல் எழுத்துமுறை 9ஆம் நூற்றாண்டில் குவாலியர் என்னும் மத்திய இந்திய நகரத்தில் கி.பி 870 ல் கண்டறியப்பட்ட கல்வெட்டுகள் மூலம் அறியப்படுகிறது. பல்வேறு செப்புத் தகடுகளில் கண்டறியப்பட்ட இந்திய ஆவணங்கள் 0(எண்) ஆனது கி.மு 6 ஆம் நூற்றாண்டு முதல் பயன்படுத்தப் பட்டு வருவதை விளக்குகிறது. . Inscriptions in இந்தோனேசியா மற்றும் கம்போடியா கண்டறியப்பட்ட கல்வெட்டுகள் இவை கி.மு 683 முதல் பயன்படுத்தப்படுவதாக தெரிவிக்கறது.[6] குறிப்புகள்தொகு ↑ Schipp, Bernhard; Krämer, Walter (2008), Statistical Inference, Econometric Analysis and Matrix Algebra: Festschrift in Honour of Götz Trenkler, Springer, p. 387, ISBN 9783790821208 ↑ Lumpkin, Beatrice; Strong, Dorothy (1995), Multicultural science and math connections: middle school projects and activities, Walch Publishing, p. 118, ISBN 9780825126598 ↑ 3.0 3.1 Bulliet, Richard; Crossley, Pamela; Headrick,, Daniel; Hirsch, Steven; Johnson, Lyman (2010). The Earth and Its Peoples: A Global History, Volume 1. Cengage Learning. பக். 192. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:1439084742. https://books.google.com/books?id=dOxl71w-jHEC&pg=PA192. "Indian mathematicians invented the concept of zero and developed the "Arabic" numerals and system of place-value notation used in most parts of the world today"
கேரட் மிகவும் மலிவாக எளிதில் கிடைக்கும் காய்களில் ஒன்றாகும். அதிக நன்மைகள் நிறைந்த கேரட் அனைவராலும் விரும்பி உண்ணும் சுவை நிறைந்த காயாகும். நாம் அனுதினமும் பயன்படுத்தும் … Read more நெல்லி பொடி நெல்லி பொடி பயன்கள் நெல்லியில் இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ் போன்ற தாதுக்கள் அதிக அளவில் நிறைந்துள்ளதால் இது இரத்த சோகைக்கு நல்ல மருந்தாகும். நெல்லியில் அறுசுவையில் உப்பு … Read more முடக்கத்தான் பொடி முடக்கத்தான் பொடி பயன்கள் முடக்கத்தான் முடக்கு அறுத்தான் என்பது நாளடைவில் முடக்கற்றான் என்றானது. கசப்புத் தன்மையுடைய முடக்கத்தான் முடக்கு வாத நோய்களை குணமாக்குவதால் முடக்கத்தான் என்று பெயர் … Read more கரிசலாங்கண்ணி பொடி கரிசலாங்கண்ணி பொடி பயன்கள் கரிசலாங்கண்ணி அதிக அளவில் மருத்துவ குணங்கள் நிறைந்த மூலிகையாகும். இதில் எக்லிப்டால், டெஸ்மீத்தைல், அக்கோண்டனால், ஹென்ட்ரை, ஸ்டிக்மாஸ்டீரால், தங்கச்சத்து, இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் … Read more ஆவாரம் பூ பொடி ஆவாரம்பூ பொடி பயன்கள் ஆவாரம்பூ துவர்ப்புத் தன்மை உடையது. இதில் தங்கச்சத்து நிறைந்துள்ளது. ஆவாரம் பூ பொடியை தினமும் ஒரு டீஸ்பூன் அளவு சாப்பிட்டு வர சர்க்கரை … Read more கஸ்தூரி மஞ்சள் பொடி கஸ்தூரி மஞ்சள் பொடி பயன்கள் கஸ்தூரி மஞ்சள் முக அழகு சாதன பொருட்களில் ஒன்றாகும். இது அனைத்து வகை சருமத்திற்கும் கேடு விளைவிக்காத அலர்ஜி எதிர்ப்பு தன்மை … Read more எலுமிச்சை தோல் பொடி பயன்கள் எலுமிச்சை தோல் பொடியினைக் கொண்டு ஃபேஸ் பேக் முதல் பாதத்திற்கு அழகு தரும் பெடிக்யூர் வரை பயன்படுத்தலாம். எலுமிச்சை தோலில் அதிக அளவு கலோரிகள், கார்ப்ஸ், நார்ச்சத்து, … Read more ஆரஞ்சு தோல் பொடி ஆரஞ்சு தோல் பொடியின் பயன்கள் ஆரஞ்சு தோலில் அதிகளவு ஆன்டி ஆக்ஸிடன்டுகள் நிறைந்துள்ளது. இது இயற்கை அழகை விரும்பும் பெண்களுக்கு மிகச் சிறந்த அழகு சாதன பொருளாகும். … Read more முருங்கை இலை பொடி முருங்கை இலை பொடி பயன்கள் முருங்கையில் விட்டமின்கள், மினரல், அமீனோ ஆசிட்கள், வைட்டமின் சி, கால்சியம், பொட்டாசியம் மற்றும் புரோட்டின் போன்ற ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளது. 10 கிராம் … Read more மருதாணி பொடி மருதாணி பொடி பயன்கள் மருதாணி பொடியானது இளநரையை தடுக்க அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். இதனுடன் அவுரி பொடியை சேர்த்து பயன்படுத்தும் போது நம் கூந்தலுக்கு ஏராளமான நன்மைகள் … Read more ரோஸ் பொடி ரோஸ் பொடியின் பயன்கள் ரோஜாவிற்கு இயற்கையாகவே சருமத்தின் நிறத்தை கட்டுப்படுத்தும் தன்மை உள்ளது. ரோஜாவில் அதிகளவு வைட்டமின் சி நிறைந்துள்ளது. இது நல்ல ஆன்டி-ஆக்ஸிடன்ட் ஆகும். ரோஜா … Read more மண் சிகிச்சை மண்ணின் மகத்துவத்தை அறிந்து அதில் உள்ள மருத்துவ குணங்களை கொண்டு மண் சிகிச்சை முறைகளை சித்த மருத்துவர்கள் கூறியுள்ளனர். பழங்காலங்களில் அனைத்து கிராமங்களிலும் மண் சிகிச்சை முறைகளை … Read more முகத்தில் உள்ள கருமை நீங்க வேண்டுமா? முக அழகு என்பது அனைவரும் விரும்பும் ஒன்றாகும். அதிலும் பெண்கள் முகத்தில் ஏதேனும் ஒரு சிறு பரு வந்தாலும் மிகவும் வேதனைப்படுவர். அநேக பெண்கள் வெள்ளை நிறத்தில் … Read more சர்க்கரை நோயில் இருந்து ஆரம்பத்திலேயே தப்பித்துக்கொள்ள… சர்க்கரைக்கேற்ற முருங்கை சர்க்கரை நோய் சர்க்கரை நோய் இன்றைய காலத்தில் அதிகளவில் காணப்படும் நோயாகும். நம் உடலில் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ … Read more உடலுக்குத் தேவையான வைட்டமின்கள் புழுக்கமான சீதோஷ்ண நிலை பெரும்பாலும் மே, ஜுனில் காணப்படுகிறது. வறட்சியான ஈரப்பதம் ஃபுளூ காய்ச்சலுக்கு ஈடான உடல் நலக் கோளாறுகளை ஏற்படுத்துகிறது. மூக்கடைப்பு, டான்சில், குரல் வளை … Read more
முதல் டெஸ்ட் போட்டி முடிந்தவுடன் நமது கைப்புள்ளைகளை கடுமையாக விமர்சித்து விட்டேன். அதற்கு அவர்கள் பதிலடி கொடுத்து விட்டார்கள். எப்படியோ இது போல வென்று அவர்களும் மகிழ்ந்து நம்மையும் மகிழ்வித்தால் சரிதான். (இப்படித்தான் இடையிடயே ஜெயிச்சு நம்மளயும் உசுப்பேத்தி விடுறாய்ங்க) இந்த போட்டியின் வெற்றிக்கு காரணங்களாக நான் கருதுவது இரண்டு. முதலில் ஜஹிர் கானின் அற்புதமான பந்து வீச்சு. இரண்டாவது நான் கடந்த இடுகையில் விமர்சித்த அதே துவக்க இணை. மேலும், இங்கிலாந்து அணியின் பலவீனமான பந்து வீச்சை நமது அணியின் முதல் ஆறு மட்டையாளர்களும் நன்றாக பயன்படுத்திக்கொண்டனர். இதை முதல் போட்டியிலேயே செய்திருக்க வேண்டும். சரி, இப்போவாவது புத்தி வந்ததே. இங்கிலாந்தை சொற்ப ஓட்டங்களுக்கு சுருட்டிய பின், நமது துவக்க ஆட்டக்காரர்கள் அமைத்து கொடுத்த அடித்தளத்தை நன்றாக பயன்படுத்திக்கொண்டனர் பின்னால் வந்தவர்கள். இரண்டு இன்னிங்ஸ்களிலும் மிகவும் அற்புதமாக பந்து வீசினார் ஜஹிர் கான். அவருக்கு கும்ப்ளே மட்டுமே சிறிதளவாவது துனை புரிந்தார். ஸ்ரீசாந்த் பந்து வீச்சும், தேவயில்லாத முறைப்புகளும் சின்னப்புள்ளத்தனமாகவே உள்ளது. காலம் அவரை பக்குவப்படுத்தட்டும். மீதமுள்ள டெஸ்ட்டை வென்றோ டிரா செய்தோ இத்தொடரை வென்றால் 20+ வருடங்களுக்கு பிறகு இந்தியா இங்கிலாந்தில் தொடர் வென்ற பெருமை(??)யை பெரும். இந்த தொடரிலும் ஸ்லெட்ஜிங் சூடு பிடித்துள்ளது. முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸின் போது கார்த்திக் பேட்டிங் செய்த போது இங்கிலாந்து விக்கெட் கீப்பரிடமிருந்து கடும் சுடும் சொற்கள் வந்து விழுந்தன. அதை மறுமுனையிலிருந்து பார்த்துகொண்டிருந்த "தாதா" (கங்குலி) இங்கிலாந்து அணித்தலைவர் மைக்கேல் வானிடம் கடுமையாக வாக்குவாதம் செய்தார். நம்ம தாதா- தாதா தான். :) பின்னர் இரண்டாவது டெஸ்ட்டில் ஸ்ரீசாந்த் தேவையில்லாமல் முறைத்து பதில் முறைத்தல்களை வாங்கி கட்டிக்கொண்டார். அதற்குப் பின்னர் நடந்ததுதான் சுவராஸ்யம். ஜஹிர் கான் பேட்டிங் செய்ய வந்த போது ஆடுகளத்தில் ஒரு ஜெல்லி பீன்ஸ் (Jelly Beans) கிடந்துள்ளது. அதை ஆடுகளத்திலிருந்து நீக்கியுள்ளார் ஜஹிர் கான். அடுத்த பந்த சந்திக்கும் முன்பு மீண்டும் ஒரு ஜெல்லி பீன்ஸ் ஆடுகளத்திற்கு புதிதாக கிடந்துள்ளது. அதைப் பார்த்த ஜஹிர் கான் கடுப்பானார். நீங்களே பாருங்கள் மீதியை. அந்த பிரச்சனைக்குரிய ஜெல்லி பீன்ஸ் இதுதான்: இந்த நிகழ்ச்சி குறித்து ஜஹிர் கான்: "When I was batting, there were some jelly beans on the crease, so I chucked one off the wicket," he said. "When I played the next ball there were again some jelly beans on the wicket. So obviously there was someone throwing it on the wicket, which I didn't like. So I just went up to them and said, 'Guys, what's this all about. I'm here to play cricket.' And they came at me. And I just sort of felt upset. And I just reacted." Surprisingly Zaheer didn't go after Alastair Cook, fielding at short leg, but directed his ire at Pietersen at gully. "I didn't know where exactly it was coming from," he said. "Maybe I picked the wrong one [Pietersen] but I was just not bothered at that time. I just felt it was insulting. It was definitely from a fielder because if it was placed unknowingly, it shouldn't have come there again when I removed it." Paul Collingwood preferred to get cheeky when asked about the incident - "I think he prefers the blue ones to the pink ones" - but Zaheer didn't think there was a comical side. It's been a series packed with such on-field action but Zaheer felt England were going one step too far. "We're here to play cricket, that's what we're looking forward to do whole series. I don't really want to go in detail. I'm here to play cricket and enjoy my cricket."
அதிபர், ஆசிரியர்கள் முன்னெடுத்த தொடர்ச்சியான போராட்டத்தின் பின் நீண்ட நாள் சம்பளப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட்டுள்ள போதிலும் முழுமையான தீர்வு இதுவரை கிடைக்கவில்லையென, இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பிரதான செயலாளர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்தார். இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் அம்பாறை மாவட்ட மாநாடு, சாய்ந்தமருது – மாளிகைக்காடு வாவா றோயலி வரவேற்பு மண்டபத்தில் நேற்று சனிக்கிழமை (24) நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே, அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், “முழுமையான சம்பளத்தை பெற்றுக் கொள்வதற்கு ஆசிரியர்கள் தொடர்ந்தும் போராட்டத்தில் ஈடுபட வேண்டும். நாம் வெற்றிகொள்ள பல்வேறு சவால்கள் உள்ளன. “எமது சம்பள உயர்வில் மிகுதியை நாம் பெற்றுக் கொள்ள வேண்டியுள்ளது. அதற்காக மீண்டும் நாம் போராடுவதற்குத் தயாராக வேண்டும். சம்பள ஆணைக்குழுவிடம் இது தொடர்பாக நாம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம். சம்பள உயர்வை உடனடியாக வழங்குவதற்கான தீர்வை வழங்க வேண்டுமென அவர்களிடம் கோரிக்கை முன்வைத்துள்ளோம். “ஆசிரியர் சேவையிலிருந்து அதிபர் சேவைக்கு தரம் உயர்த்தப்பட்டவர்களுக்கு பாரிய சம்பள முரண்பாடு காணப்படுகின்றது. இதனை 06 மாதங்களுக்குள் தீர்த்து வைப்பதாக அமைச்சரவை உப குழுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதுவரை இப்பிரச்சினை தீர்த்து வைக்கப்படவில்லை. நாட்டில் ஆசிரியர் உட்பட அரச ஊழியர்கள் பாரிய பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்துள்ளார்கள். “எதிர்காலத்தில் இலங்கை ஆசிரியர்கள் சேவை சங்கம் பாரிய தொழிற்சங்க போராட்டத்தை முன்னெடுப்பதற்கு எல்லோரும் ஒன்று சேர வேண்டுமென அறைகூவல் விடுக்கின்றேன். “ஜனநாய ரீதியாக மக்கள் போராட்டங்களை முன்னெடுக்கின்ற போது அதை அடக்குவதற்கு அரசு செயற்படுவது கண்டத்திற்குரியதாகும். நாட்டில் சுமூகமான தீர்வு எட்டப்பட வேண்டுமென்றால் நாம் எல்லோரும் ஒற்றுமையாக போராடி சகல இன மக்களும் ஒற்றுமையாக வழக் கூடிய நாட்டை உருவாக்குதற்கு நாம் எல்லோரும் முன்வர வேண்டும்” என்றார்.
அதிக கொலஸ்ட்ரால் உடலில் திடீர் மாற்றங்களை நீங்கள் சந்திக்க ஆரம்பித்தால், இந்த அறிகுறிகளை புறக்கணிக்காதீர்கள். உடலில் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்கும் போது பல ஆபத்தான அறிகுறிகள் தோன்றும். அவை என்னவென்று தெரிந்துக்கொள்வோம். அதிக கொலஸ்ட்ரால் : உடலில் நல்ல கொலஸ்ட்ரால் மற்றும் கெட்ட கொலஸ்ட்ரால் என இரண்டு வகையான கொலஸ்ட்ரால் உள்ளது. நல்ல கொழுப்பு உடலின் பல நோய்களை அகற்ற உதவுகிறது, அதே நேரத்தில் கெட்ட கொழுப்பு பல கடுமையான நோய்களை ஏற்படுத்தும். அதிக கொலஸ்ட்ராலை சரியான நேரத்தில் கட்டுப்படுத்துவதன் மூலம், பல நோய்களைத் தவிர்க்கலாம். உடலில் கொலஸ்ட்ரால் அதிகரிக்கும் போது, ​​சில அறிகுறிகள் தோன்றும். அதிக கொலஸ்ட்ராலின் அறிகுறிகள் என்ன என்பதை தெரிந்து கொள்வோம். உடல் பருமன்: உங்கள் எடை திடீரென அதிகரிக்க ஆரம்பித்தால், அவை அதிக கொலஸ்ட்ரால் பிரச்சனையின் அறிகுறியாக இருக்கலாம். இந்த வழக்கில், நீங்கள் கொலஸ்ட்ரால் பரிசோதனை செய்துக் கொள்ளலாம். அதிக வியர்வை: அதிகப்படியான வியர்வை அதிக கொலஸ்ட்ராலின் அறிகுறியாக இருக்கலாம். உங்களுக்கு அத்தகைய பிரச்சனை இருந்தால், நீங்கள் ஒரு மருத்துவரை அணுகலாம். தோல் நிறத்தில் மாற்றம் ஏற்படலாம்: அதிக கொலஸ்ட்ரால் காரணமாக தோலின் நிறத்தில் மாற்றங்கள் ஏற்படலாம். இந்த வழக்கில் கைகள் அல்லது கால்கள் மஞ்சள் நிறமாக தோன்றலாம். இதுபோன்ற அறிகுறிகள் தென்பட்டால் கொலஸ்ட்ரால் பரிசோதனை செய்துக் கொள்ளவும். நெஞ்சு வலி: சில நேரங்களில் அதிக கொலஸ்ட்ரால் நெஞ்சு வலியையும் ஏற்படுத்தும். இந்த பிரச்சனை தொடர்ந்து ஏற்பட்டால், அவை அதிக கொலஸ்ட்ராலின் அறிகுறிகளாக இருக்கலாம். கால் வலி: உடலில் கொலஸ்ட்ரால் அளவு அதிகரித்தால், கால்களில் வலி ஏற்படும். இந்த வழக்கில், கால்கள் முற்றிலும் உணர்ச்சியற்றதாக மாறும். இது போன்று உணர்வு உங்களுக்கு இருந்தால் உடனடியாக பரிசோதனை செய்துக் கொள்ளுங்கள். சாந்தெலஸ்மா: நிபுணர்களின் கூற்றுப்படி, கண்களைச் சுற்றி சில மாற்றங்கள் காணப்படும். இதில், கண்களுக்கு மேல் மஞ்சள் பூச்சு உருவாகத் தொடங்கலாம், இது சாந்தெலஸ்மா என்று அழைக்கப்படுகிறது. உடலில் கொலஸ்ட்ரால் அதிகரித்தால் இந்த அறிகுறிகள் கண்களில் தோன்றும். நீங்கள் அடிக்கடி சோர்வாக உணர்ந்தால், அவை அது அதிக கொலஸ்ட்ராலின் அறிகுறியாகவும் இருக்கலாம். Share this: RELATED POSTS வாசகர் கேள்வி: உடலுறவின் போது விந்து விரைவாக வெளியேறி விடுகிறது? இது விந்து முந்துதல் பிரச்னையா? தீர்வு கூறவும்!
வேர்ட்பிரஸ் மிகவும் பிரபலமான மற்றும் சிறந்த உள்ளடக்க மேலாண்மை அமைப்பு மற்றும் தொடக்க மற்றும் நிபுணர்களுக்கு நிகரற்ற நெகிழ்வுத்தன்மையை வழங்குகிறது. இது பயன்படுத்த எளிதானது மற்றும் அடிப்படை மற்றும் மேம்பட்ட வலைத்தளங்களை உருவாக்க பயன்படுத்தலாம். நீங்கள் ஒரு தொழில்முறை வலை உருவாக்குநராக இல்லாவிட்டாலும், தொழில்முறை தளங்களை உருவாக்க நீங்கள் வேர்ட்பிரஸ் பயன்படுத்தலாம். இதில் ஏராளமான கருப்பொருள்கள் மற்றும் செருகுநிரல்கள் உள்ளன, ஆனால் மிகவும் ஆச்சரியமான மற்றும் அவசியமான சொருகி வகைகளை செமால்ட்டைச் சேர்ந்த ரியான் ஜான்சன் கீழே விவரிக்கிறார். பாதுகாப்பு செருகுநிரல்கள்: போட்ஸ் மற்றும் ஹேக்கர்களுக்கு எதிரான பாதுகாப்பு இந்த நாட்களில் எந்த வெப்மாஸ்டரின் முன்னுரிமையாக இருக்க வேண்டும். சாதாரண தாக்குதல்களைத் தடுக்க நீங்கள் ஏதாவது ஒன்றை வைத்திருக்க வேண்டும். அதிர்ஷ்டவசமாக, இணையத்தில் உங்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்த சில அடிப்படை மற்றும் மேம்பட்ட செருகுநிரல்கள் உள்ளன. வேர்ட்ஃபென்ஸ் என்பது இன்றுவரை சிறந்த மற்றும் மிகவும் பயனுள்ள செருகுநிரல்களில் ஒன்றாகும். இது உங்கள் வலைத்தளத்தைப் பாதுகாக்க உதவுகிறது மற்றும் இலவச மற்றும் கட்டண பதிப்புகளுக்கு கிடைக்கிறது. இந்த சொருகி உங்கள் அனைவருக்கும் ஒரு பாதுகாப்பு தீர்வாக இருப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது, மேலும் தடுப்பு முரட்டுத்தனமான தாக்குதல்கள் மற்றும் நாடு சார்ந்த உள்நுழைவு முயற்சிகளை எளிதில் தடுக்கலாம். தரவு காப்பு செருகுநிரல்கள்: பெரும்பாலான ஹோஸ்டிங் நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கான காப்புப்பிரதிகளை வைத்திருக்கின்றன, ஆனால் தனியுரிமை கவலைகள் காரணமாக அவற்றை நாங்கள் நம்ப முடியாது. உங்கள் தரவை இழக்கும் நிலையில் நீங்கள் இருக்க விரும்பவில்லை என்றால், நீங்கள் விரைவில் ஒரு காப்புப்பிரதி சொருகி வேர்ட்பிரஸ் இல் நிறுவ வேண்டும். நீங்கள் முயற்சி செய்யக்கூடிய மிகவும் பிரபலமான சொருகி காப்புப் பிரதி. இது நம்பமுடியாத எளிதான கருவியாகும், இது வாராந்திர, தினசரி மற்றும் மாதாந்திர காப்புப்பிரதிகளை திட்டமிட உதவுகிறது. இது உங்கள் கோப்புகளை ஆன்லைனிலும் ஆஃப்லைனிலும் சேமிக்கும் திறனைக் கொண்டுள்ளது, மேலும் இந்த சொருகி முக்கிய நன்மை என்னவென்றால், அதன் சந்தா கட்டணம் $ 70 மட்டுமே. இது 1 ஜிபி வரை கோப்புகளை சேமிக்க உங்களை அனுமதிக்கிறது. நீங்கள் ஒரு இலவச சொருகி விரும்பினால், நீங்கள் BackWPup ஐ முயற்சி செய்யலாம். தேடுபொறி உகப்பாக்கம் செருகுநிரல்கள்: உங்கள் தளத்திற்கு நிறைய பேரை ஈர்க்க விரும்பினால், தேடுபொறி முடிவுகளுக்கு இது உகந்ததாக இருக்க விரும்பினால், நீங்கள் வேர்ட்பிரஸ் இல் தேடுபொறி உகப்பாக்கம் செருகுநிரல்களை முயற்சிக்க வேண்டும். உங்கள் வலைத்தளங்களுக்கு மக்களை ஈர்க்க எஸ்சிஓ அல்லது தேடுபொறி உகப்பாக்கம் முக்கியம், மேலும் விஷயங்களைச் செய்ய நீங்கள் வெவ்வேறு செருகுநிரல்களைப் பயன்படுத்தலாம். Yoast இன் வேர்ட்பிரஸ் எஸ்சிஓ சிறந்த மற்றும் மிகவும் துல்லியமான சொருகி. உங்கள் எஸ்சிஓ தொடர்பான அனைத்து சிக்கல்களுக்கும் இது ஒரு விரிவான தீர்வாகும். இது உங்கள் வலைப்பக்கங்களில் எஸ்சிஓ தலைப்பு, விளக்கம், முக்கிய வார்த்தைகள் மற்றும் மெட்டா குறிச்சொற்களை எளிதில் செருக உதவுகிறது மற்றும் நிறைய நேரத்தை மிச்சப்படுத்துகிறது. சமூக ஊடக செருகுநிரல்கள்: சமூக ஊடக தளங்கள் இணையத்தில் நாம் கட்டுரைகளைப் பகிர்ந்து கொள்ளும் வழிகளில் புரட்சியை ஏற்படுத்தியுள்ளன, மேலும் அவை உலகளாவிய வலையின் ஒருங்கிணைந்த பகுதியாக மாறிவிட்டன. பெரும்பாலான வலைத்தளங்களுக்கு, சமூக ஊடகங்களிலிருந்து போக்குவரத்தை இயக்குவது எளிதானது, மேலும் நீங்கள் சமூக ஊடக செருகுநிரல்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம். AddToAny இன் பகிர் பொத்தான்கள் ஒரு விரிவான மற்றும் பரவலாக பயன்படுத்தப்படும் சொருகி. இது தனிப்பயனாக்கக்கூடியது மற்றும் சமூக ஊடக தளங்களில் உள்ளடக்கத்தை எளிதாகப் பகிர உங்களை அனுமதிக்கிறது. நீங்கள் பயனடைவதற்கு டஜன் கணக்கான விருப்பங்கள் மற்றும் அம்சங்களைக் கொண்ட வேர்ட்பிரஸ் க்கான எளிதான சமூக பகிர்வு பொத்தான்களையும் முயற்சி செய்யலாம். பகுப்பாய்வு செருகுநிரல்கள்: உங்கள் வலைத்தள போக்குவரத்தின் தரத்தை நீங்கள் கண்காணிக்க விரும்பினால், நீங்கள் Google Analytics ஐப் பயன்படுத்த விரும்பலாம். இருப்பினும், நீங்கள் இன்னும் துல்லியமான மற்றும் உடனடி அறிக்கைகளை விரும்பினால், நீங்கள் ஒரு வேர்ட்பிரஸ் சொருகி விரைவில் நிறுவ வேண்டும். கூகிள் அனலிட்டிக்ஸ் இதுவரை ஆன்லைனில் சிறந்த பகுப்பாய்வு தீர்வாகும். உங்கள் வேர்ட்பிரஸ் தளத்துடன் ஒருங்கிணைப்பது இலவசம் மற்றும் உடனடி. நீங்கள் அனைத்து இணைப்புகளையும் கண்காணிக்கலாம், நிகழ்நேர நுண்ணறிவுகளைப் பெறலாம் மற்றும் இந்த நிரலைப் பயன்படுத்தி A / B சோதனை செய்யலாம்.
இதில் மிக அதிகளவு விட்டமின் இ, அதிகளவு விட்டமின் பி6 (பைரிடாக்ஸின்), பி1 (தயாமின்), பி9 (ஃபோலேட்டுகள்) ஆகியவை உள்ளன. மேலும் இதில் விட்டமின் ஏ, பி2 (ரிபோஃப்ளோவின்), பி3 (நியாசின்), பி5 (பான்டாதெனிக் அமிலம்), சி, கே போன்றவையும் காணப்படுகின்றன. இதில் மிக அதிகளவு காப்பர், மாங்கனீஸ், அதிகளவு பாஸ்பரஸ், மெக்னீசியம், இரும்புச்சத்து, துத்தநாகம் ஆகியவையும், செலீனியம், கால்சியம், பொட்டாசியம் முதலியவையும் உள்ளன. இது மிக அதிகளவு பாலி நிறைவுறா கொழுப்பு அமிலங்களைக் கொண்டுள்ளது. மேலும் இதில் கார்போஹைட்ரேட், புரதம், நார்சத்து ஆகியவையும் உள்ளன. வால்நட்டின் மருத்துவ பண்புகள் : மூளையின் ஆரோக்கிய செயல்பாட்டிற்கு இது மூளைக்கான சிறப்பு உணவாகும். ஒமேகா-3 குறைபாடு அதிக மன அழுத்தத்தையும், அறிவாற்றல் இழப்பினையும் ஏற்படுத்துகிறது. இக்கொட்டையில் உள்ள ஒமேகா-3 அமிலமானது மன அழுத்தத்தைக் குறைத்து மூளையின் நினைவாற்றலை கூட்டுவதோடு சிந்தனை செயலாக்கத்தையும் அதிகரிக்கிறது. இதனால் இதனை சீராக உணவில் சேர்த்துக் கொண்டு மூளையின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கலாம். ஆரோக்கியமான இதயத்திற்கு : இதில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலம், லினோலிக் அமிலம், ஆல்பா லினோலெனிக் அமிலம், அராச்சிடோனிக் அமிலம் ஆகியவை இதயநோய் தாக்கத்திலிருந்து பாதுகாக்கிறது. இதனை சீராக உணவில் உட்கொள்ளும்போது உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளின் அளவினைக் குறைத்து நல்ல கொழுப்பின் அளவினை அதிகரிக்கச் செய்கிறது. இதனால் நரம்புகளில் கொழுப்பு படிவது தடுக்கப்படுகிறது. மேலும் இது இதய ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கும் எண்டோடெலியல் செல் செயல்பாடுகளை பாதுகாக்கிறது. ஆரோக்கிய இதயத்திற்கு இதனை அளவோடு உண்ணலாம். எலும்புகளின் பலத்திற்கு : வால்நட்டில் உள்ள கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் எலும்புகளின் பலத்தை மேம்படுத்துகிறது. மேலும் இதில் உள்ள கொழுப்பு அமிலங்கள் எலும்புகளின் ஆரோக்கியத்தை உறுதிபடுத்துகிறது. இது உடலானது கால்சியம் உறிதலை ஊக்குவிக்கிறது. உடலின் எடையை பராமரிக்க : இதனை உட்கொள்ளும்போது வயிறு நிரம்பிய உணர்வை ஏற்படுத்துகிறது. ஊட்டச்சத்து மிகுந்த இதனை உட்கொள்ளும்போது உடலுக்குத் தேவையான வைட்டமின்கள், தாதுஉப்புகள், கொழுப்புகள் கிடைப்பதால் இடைவேளை உணவாகவும் உட்கொள்ளலாம். இதனை அதிகமாக உட்கொண்டால் இதில் உள்ள ஊட்டச்சத்துகள் உடல் எடையை அதிகரிக்கச் செய்யும். ஆதலால் இதனை அளவோடு உட்கொள்வது அவசியம். ஆன்டி ஆக்ஸிஜென்ட் மையம் : ஆன்டி ஆக்ஸிஜென்ட் அதிகமுள்ள உணவுப்பொருட்களின் பட்டியலில் இது இரண்டாவது இடத்தில் உள்ளது. மிகவும் அரிதான ஆன்டி ஆக்ஸிஜென்டுகளான குயினோன் ஜுக்லோன், டானின் டெல்லிமாக்ராண்டின் மற்றும் ஃபிளாவனோல் மோரின் ஆகியவை இக்கொட்டையில் உள்ளன. இந்த ஆன்டி ஆக்ஸிஜென்டுகள் வேதிப்பொருட்களால் கல்லீரல் பாதிப்படைவதை தடுக்கிறது. உடல் வளர்சிதை மாற்றம் மேம்பாடடைய : இதில் உள்ள பாலி நிறைவுறா கொழுப்பு அமிலங்கள் மற்றும் மாங்கனீஸ், காப்பர், இரும்புச்சத்து, செம்புச்சத்து, துத்தநாகச்சத்து போன்றவை உடலின் சீரான வளர்சிதை மாற்றத்திற்கு உதவுகின்றன. செரிமானம், நியூகிளிக் அமில தொகுப்பு உள்ளிட்ட சீரான உடலின் வளர்சிதை மாற்றத்திற்கு வால்நட்டினை உண்ணலாம். உணவுப் பாதையின் ஆரோக்கியத்திற்கு : இது உட்புற செரிமான மண்டலத்தின் நச்சுகள் மற்றும் கழிவுகளை அகற்றி சுத்தம் செய்ய உதவுகிறது. இதனை சீராக உட்கொள்ளும்போது லாக்டோபாசில்லஸ், ரூமினோகாக்கஸ் மற்றும் ரோஸ்புரியா போன்ற குடலின் ஆரோக்கியத்திற்கு காரணமான பாக்டீரியாக்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. எனவே இதனை அடிக்கடி உணவில் சேர்த்து உணவுப்பாதையின் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம். சரும பாதுகாப்பிற்கு : இதில் உள்ள விட்டமின் இ ப்ரீ ரேடிக்கல்களின் செயல்பாடுகளிலிருந்து சருமத்தினைப் பாதுகாக்கிறது. மேலும் இதனை உண்ணும் போது சருமச் சுருக்கங்கள் மற்றும் வறண்ட சருமம் உண்டாவது தடுக்கப்படுகிறது. கண்களுக்கு அடியில் கருவளையத்தை நீக்க வால்நட் உள்ள பொருட்களைப் பயன்படுத்தவும். பளபளக்கும் இளமையான சருமத்தைப் பெற இக்கொட்டையை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளலாம். ஆரோக்கியமான கூந்தலைப் பெற : இக்கொட்டையில் உள்ள விட்டமின்கள், தாதுக்கள், கொழுப்பு அமிலங்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிஜென்டுகள் மயிற்கால்களை வலிமையடையச் செய்து பொடுகு உள்ளிட்ட சருமப் பிரச்சினைகளை போக்குகிறது. மேலும் அடர்த்தியான, நீளமான, வலிமையான கூந்தலையும் வழங்குகிறது. முறையான உறக்கத்திற்கு : இக்கொட்டையினை உண்ணும்போது மெலட்டோனின் என்னும் ஹார்மோனை சுரக்கச் செய்கிறது. மெலட்டோனின் தூக்கத்தைத் தூண்டுவதோடு அதனை முறைப்படுத்துகிறது. முறையான ஆழ்ந்த தூக்கத்திற்கு இக்கொட்டையினை அடிக்கடி உணவில் சேர்க்க வேண்டும். வால்நட்டினைப் பற்றிய எச்சரிக்கை : ஒருநாளைக்கு ஏழு முதல் ஒன்பது வால்நட்டுகளை உண்ணலாம். இதனை அளவுக்கு அதிகமாக உண்ணும் போது வயிறு வலி, வயிற்றுப்போக்கு, வயிற்று பொருமல், நெஞ்சு எரிச்சல் ஆகியவை உண்டாகும். அளவுக்கு அதிகமாக உண்ணும் போது உடலின் எடையை அதிகரிக்கும்.
திரையுலகில் அதிக ஈடுபாடு கொண்ட பிரியா ஆனந்த், தனது கல்லூரி படிப்பை முடித்தவுடன், மாடலிங் செய்யத் தொடங்கினார். அதன் பின்னர் சில விளம்பர படங்களிலும் நடித்து வந்தார். இதன் மூலம் இவருக்கு திரைப்பட வாய்ப்புகள் குவியத் தொடங்கியுள்ளது. தமிழில் ஜெய் ஜோடியாக வாமனன் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் முதல் படத்திலேயே நல்ல வரவேற்பை பெற்றார். இதனைத் தொடர்ந்து, தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார். தமிழில், புகைப்படம், 180, எதிர் நீச்சல், வணக்கம் சென்னை உள்ளிட்ட திரைப்படங்கள் இவருக்கு மிகுந்த வரவேற்பை தமிழ் மக்களிடையே ஏற்படுத்தி தந்தது. அதன் பின்னர், ஒரு ஊருல 2 ராஜா, திரிஷா இல்லனா நயன்தாரா, அரிமா நம்பி, கூட்டத்தில் ஒருத்தன், LKG போன்ற திரைப்படங்களில் நடித்தார். திரைப்படங்கள் மட்டுமல்லாது சில வெப் சீரீஸ்களிலும் இவர் நடித்துள்ளார். தற்போது, தமிழ் மொழியில், சுமோ, அந்தகன், காசேதான் கடவுளடா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார். இதன் நடுவே, தனது தாறுமாறான கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டு வருகிறார்.
இந்த முறை ஊருக்குப் போனப்ப, மருதமலை அடில உள்ள ஒரு நாடிஜோசிய மையத்துக்கு அக்கா என்னை அழைச்சுக்கிட்டுப் போனாங்க. தம்பி ஆராய்ச்சி பண்ணாம இணையத்துலயே கிடக்குறானே, தேறுவானானு அவங்க கவலை..என்னடா வெளிநாட்டுல ஏதாச்சும் girl friend கிடைக்குமான்னு என் கவலை 😉 ஆக, திருமணக்காண்டம், வேலை காண்டம் இரண்டும் பார்க்குறதுன்னு முடிவு. ஏற்கனவே, அக்காவப் பத்தின விவரங்கள் எல்லாம் அந்த மையத்துல தெளிவா சொல்லி இருந்ததால, நம்மள பத்தி எப்படி சொல்லுறாருன்னு ஒரு பரபரப்பு. போன உடன என் வயசு, கட்டை விரல் ரேகை ரெண்டும் வாங்கிக்கிட்டு ஒரு disclaimer கொடுத்தாரு. அதாவது, எனக்கான ஓலை அந்த மையத்துல இல்லாட்டி அன்னிக்கு குறி சொல்ல முடியாதுன்னும் அதுனால பணமும் வாங்க மாட்டம்னும் சொன்னாரு. நேர்மை, நேர்மை! அதிர்ஷ்ட்ட வசமா 🙂 நம்ம விதி எழுதின ஓலை மருதமலை அடிவாரத்தில் துயில் கொண்டிருந்தது. தொடர்புடைய பல ஏடுகள்ள இருந்த என்னைப் பற்றின விவரங்கள் உள்ள ஏட்டைக் கண்டுபிடிச்சார். அது ஒரு knock-out round மாதிரி..எனக்கு ரெண்டு மனைவியா, எங்க அப்பாவுக்கு ரெண்டு மனைவியா, அப்பா பேர்ல சாமி இருக்கா, நான் சிறைக்குப் போயிருக்கனா, எனக்கு உடல் ஊனமா, என் பெயர்ல வடமொழி எழுத்து இருக்கா, ங் இருக்கா, ச் இருக்கான்னு அப்படின்னு வரிசையா பல கேள்விகள். எல்லாம் இல்லை, இல்லைன்னு சொல்லச் சொல்ல கழிச்சுக் கட்டிக்கிட்டே வந்தார். அதுவே, ஒரு game மாதிரி நல்லா இருந்துச்சு. கடைசியா நம்ம ஏடு சிக்கிக்குச்சு. அப்புறம், அதுல அவரு போட்ட bit என்னன்னா, அன்னிக்கு அந்த ஏடு பத்தி நான் தெரிஞ்சுக்கிணும்னு பிராப்தம் 😉 இருப்பதால் தான் அந்த ஏடு அன்னிக்குக் கிடைச்சதாம். அவர் சொல்லுற விவரங்கள் எல்லாத்தையும் ஒலிநாடாவில் வேற பதிந்தார். ரொம்ப professional தான் ! அப்புறம், என் பேர், பிறந்த நாள், மாதம், ஆண்டு, நேரம், உடன் பிறந்தவர் எத்தனை, அப்பா தொழில், என் தொழில், அப்பா பேர், அம்மா பேர், இருக்கும் இடம் எல்லாம் துல்லியமா சொன்னார் !! <<இப்ப, நான் வாயைப் பிளந்து கதை கேட்டது மாதிரி ஒரு smiley போட்டுக் கொள்ளவும்>> எனக்கு அடுத்த ஆண்டு நல்ல வேலை வாய்ப்பு ஒன்று வரும் எனவும் 29 வயதுக்குள் settle (!) ஆகிடுவேன்னும் சொன்னார். கல்யாணத்துக்குப் பிறகும் அக்காவுடன் பாசமா இருப்பேன்னு சொன்னார். <<இங்க அக்கா முகத்தில் bulb எரிவது போல் ஒரு smiley போட்டுக் கொள்ளவும்>> நான் பொறுமை இழப்பது கண்ட ஜோசியர் திருமண காண்டத்துக்கு வந்தார். அவர் அடுத்தடுத்து அடுக்கிய குண்டுகள்: * 29 வயசுல தான் திருமணம் ! (இன்னும் 4 வருசமா 🙁 !!) * அப்பா அம்மா பார்க்குற பொண்ணு தான் (ஹ்ம்ம்) * உள்ளூர்ப் பொண்ணு தான் (வெளிநாட்டு வாழ்க்கை வீணா?) * ஏகப்பட்ட பொண்ணு பார்த்துத் தள்ளிப் போய் தான் திருமணம் இறுதியாகும் (இது வேறயா??) * பொண்ணுக்கு முழங்கைல மச்சம் இருக்கும் (நல்ல வேளை முழங்கைல இருக்கு. கொஞ்சம் தேடிப் பார்க்கலாம்) அப்புறம், பொதுவா எனக்குப் பரிகாரம் பார்க்க வேண்டும் என்று சொல்லி ஒரு தொகையைக் கேட்டார். ஏற்கனவே, திருமணத்துக்குப் பிறகு அக்காவுடன் பாசமாக இருப்பேன் என்று ஒரு bit நங்கூரம் போலப் பாய்ச்சப் பட்டிருந்ததால் அக்கா ஒப்புக்கொண்டார். அப்புறம் consulting charge 250 INR+per காண்டம் @ 200 INR ஐ சாமி சாட்சியாக பவ்யமாக அவரிடம் தந்து விட்டு வந்தோம். ஜோசியத்துக்குப் பின்: – இது மூட நம்பிக்கையாகவோ ஏமாற்று வேலையாகவோ இருக்கட்டும். ஆனால், என் பிறந்த நாள் உள்ளிட்ட விவரங்களை எப்படிச் சொல்ல முடிகிறது? இது என்ன technique? mind reading என்று உண்மையிலேயே இருக்கிறதா? இருந்தால் பாராட்டத்தான் வேண்டும். – ரெண்டு மனைவிக் காரன், அது தெரியாத முதல் மனைவியுடன் ஜோதிடம் பார்க்க வந்தால் எப்படி உண்மையான பதிலைச் சொல்வது? 😉 – கடந்த காலத்தை அவர் துல்லியமாகச் சொல்வதால் எதிர் காலம் பற்றி அவர் சொல்வதிலும் ஒரு நம்பகம் கலந்த எதிர்ப்பார்ப்பு வருவது உண்மை. – என்னைப் பற்றி எனக்கு ஏற்கனவே தெரிந்த பெயர், பிறந்த தேதி உள்ளிட்ட விவரங்களை அவர் வாயால் கேட்பதற்கு நானே காசு தருகிறேன். நல்ல comedy, முட்டாள்த்தனம். ஆனா, இது ஒரு நல்ல அனுபவம். – இந்த அனுபவத்தைச் சொல்லி இன்னும் ஓரிரு நண்பர்களாவது அந்த மையத்துக்குப் போய் இருப்பார்கள். – இந்த மச்ச விவரம், மணப்பபெண் பற்றிய பல விவரங்கள் பொதுவாக பலருக்கும் ஒரே மாதிரி அடித்து விடப்படுகிறது என்று கேள்விப்பட்டேன். – திருமணம் என்று ஆனால் என்ன, என்றோ ஆவதற்கான scope இருப்பதை நினைத்து மகிழ்ச்சி கொள்ள வேண்டும் என்று சில நண்பர்கள் positive thinking உடன் ஆறுதல் சொன்னார்கள் 😉 – தமிழகத்தில் இதற்கு நல்ல craze இருக்கிறது. இதற்காக தஞ்சை கோயிலில் வைத்து ஒரு பட்டயப்படிப்பே நடத்துவதாகக் கேள்வி ! — அடுத்துப் பார்க்க விரும்பும் நபர்கள் – லாட்ஜ் மருத்துவர்கள், ஆசிரமச் சாமியார்கள் 😉 — நாடி ஜோதிடம் குறித்த விக்கிபீடியா கட்டுரை. Author ரவிசங்கர்Posted on April 18, 2007 February 21, 2008 Categories நாட்குறிப்புTags கை ஜோசியம், கை ஜோதிடம், கைஜோசியம், சாதகம், ஜாதகம், ஜோசியம், ஜோதிடம், நாடி ஜோசியம், நாடி ஜோதிடம், நாடிஜோசியம், நாடிஜோதிடம், நாட்குறிப்பு21 Comments on நாடி ஜோசியம் !
வங்கக்கடலில் உருவாக உள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக வரும் 20-ம் தேதியன்று தமிழகத்தில் ஆறு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் தெற்கு அந்தமான் பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக வங்கக்கடலில் இன்று இரவுக்குள் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் முன்னரே அறிவித்துள்ளது. அதன் விளைவாக தமிழகத்தில் நான்கு நாட்களுக்கு மழை பெய்யக்கூடும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியின் விளைவாக வரும் 20-ம் தேதியன்று தமிழ்நாட்டில் ஆறு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்றும் புதுச்சேரி, காரைக்கால் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது. "சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை நேரங்களில் ஒரு சில இடங்களில் லேசான பணி கூட்டம் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை நேரங்களில் ஒரு சில இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இன்று அந்தமான் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 நேரத்தில் தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டி உள்ள அந்தமான் கடல் பகுதியில் காற்றழுத்ததாழ்வு பகுதி உருவாக கூடும். இது அதற்கு அடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு- வட மேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தெற்கு- வங்கக்கடல் பகுதியில் வலுப்பெறும். இதனால் மீனவர்கள் இன்று முதல் வரும் 20-ம் தேதி வரை அந்தமான் கடல் பகுதியில் மற்றும் அதன் ஒட்டிய தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோமீட்டர் வேகத்தில் வீசப்படும் என்பதால் அந்த பகுதிக்கு செல்ல வேண்டாம்" என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தொகைச் சொல்: தொகைச்சொல் என்பது பல கூறுகளை உள்ளடக்கிய ஒரு சொல் ஆகும். இருவினை நல்வினை, தீவினை இருதிணை உயர்திணை , அஃறிணை முத்தமிழ் இயல், இசை, Read more இலக்கியம் தமிழ் மொழி ஓரெழுத்துச் சொற்கள்: August 12, 2017 August 12, 2017 சமரசம் ஒற்றை எழுத்துச் சொற்கள், ஓரெழுத்தொருமொழி, சொல், தமிழ், தொல்காப்பியம் தமிழ் மொழியின் மற்றொரு சிறப்பு “ஓரெழுத்தொருமொழி”. அதாவது ஒற்றை எழுத்துச் சொற்கள். இந்த ஒற்றை எழுத்துச் சொற்களும் “பெயர்ச்சொல், வினைச்சொல், இடைச்சொல், உரிச்சொல்” எனும் நால்வகை பாகுபாட்டில்
பெருந்தோட்டங்கள் தனியார் கம்பனிகளுக்கு கைமாறியதையடுத்து பெருந்தோட்டத் தொழிலாளர்கள் புறந்தள்ளி விடக்கூடாது என்பதற்காக தோட்டத் தொழிலாளர்களுக்கு பங்கு அட்டைகள் வழங்கப்பட்டன. இப் பங்கு அட்டைகளை பெற்றுக் கொண்டதன் மூலம் தொழிலார்களும், தோட்டக் கம்பனியினருடன் இணைந்து தோட்டத்தின் பங்குதாரர்கள் ஆனார்கள். இதன் மூலம் கம்பனிகளுக்கு வருடா வருடம் கிடைக்கும் இலாபப் பணத்தில் குறித்த சதவீதம் தொழிலாளர்களிடையே பகிர்ந்தளிக்கப்பட்டது. தோட்ட நிர்வாகங்களோ அல்லது கம்பனியினரோ தொழிலாளர்களிடத்தில் எதேச்சதிகாரப் போக்கினை கடைபிடிக்கும் நிலைக்கு பங்கு அட்டை முறைமை முற்றுப்புள்ளி வைத்தது. அந்த பங்கு அட்டைகளை தொழிலாளர்களிடமிருந்து ஒரு பங்கு அட்டையை 1,500 – 2,000 ரூபாவுக்கு இடைப்பட்ட தொகைக்கு ஒரு சில தோட்ட நிர்வாகங்கள் பெற்றுக்கொள்வதாக தெரியவருகிறது. எதிர்காலத்தில் பங்கு அட்டைகளின் விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. தொழிலாளர்கள் பங்கு அட்டைகளை நிர்வாகங்களிடம் விற்பதால் வருடா வருடம் கிடைக்கும் இலாப பங்கு பணம் வழங்கப்பட மாட்டாது. தோட்ட நிர்வாகங்களின் எதேச்சதிகார நடவடிக்கைகள் குறித்து தொழிலாளர்கள் சிந்தித்து செயற்பட வேண்டும் என தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன. Posted by KUMURUM MALAIKAL at 6:17 AM No comments: தொழிற்சங்கங்கள் கலந்தாலோசித்து கூட்டு ஒப்பந்தத்தை வலுவாக்க வேண்டும் வரவு செலவுத் திட்டத்தில் தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பளத்தை உயர்த்த வேண்டுமானால் முதலில் தோட்டங்களை அரசு பொறுப்பேற்க வேண்டும். இன்றைய நிலையில் இது சாத்தியமற்றதாகும் ஆதலால் கூட்டு ஒப்பந்தத்தில் ஒரு சரத்தாக வாழ்க்கை செலவுக்கேற்ப சம்பளத்தை அந்தந்த காலத்தில் உரிய வகையில் திருத்தங்களை மேற்கொள்ளும் வகையில் செய்து கொள்ளப்பட வேண்டும். 2006ம் ஆண்டுடன் முடிவடைந்த பெருந்தோட்டத் தொழிற்சங்கங்களுக்கும் கம்பனிகளுக்கும் இடையிலான கூட்டு ஒப்பந்தத்தை மாதிரியாக வைத்துக் கொண்டு இதுகாலம் வரை தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் நிர்ணயிக்கப்பட்டு வந்தது. இந்த நிர்ணயம் 2009ம் ஆண்டு மார்ச் மாதத்துடள் முடிவுக்கு வந்துள்ளதால் மீண்டும் தொழிலாளர்களின் சம்பள உயர்வு பற்றி தொழிற்சங்கங்கள் தீர்மானிக்க வேண்டியுள்ளது. முன்னெப்போதும் இல்லாத வகையில் வாழ்க்கைச் செலவு உயர்ந்துள்ளது. கடந்த சில மாதங்களாக தேயிலை விலை வீழ்;ந்துள்ளது எனக் கூறியும் வரட்சி காலங்களில் வேலையை குறைத்தும் தொழிலாளர்கள் வருமானமின்றி அவலநிலையில் இருப்பதைப்பற்றி எந்த ஒரு நிர்வாகமும் பொருட்படுத்தவில்லை. ஏப்ரல் மாதத்தைத் தொடர்ந்து இனிவரும் மாதங்களில் கொழுந்து அதிகரிக்கும் அதேநேரம் தொழிலாளர்களின் வேதனத்தை கூட்டு ஒப்பந்தத்தால் மாத்திரமே அதிகரிக்க முடியும். தொழிற் சங்கங்கள் பயனற்ற விவாதங்களில் ஈடுபடாமல் ஒருங்கிணைந்து சம்பள உயர்வுக்கு ஒரே முகமாக செயல்படுவதன் மூலமே தொழிலாளர்களுக்கு சம்பளத்தை உயர்த்த முடியும். அரசு நேரடியாக தோட்டங்களில் ஈடுபட முடியாமலேயே தோட்டங்களின் குத்தகை ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் பிரகாரம் வரவு செலவுத திட்டத்தில் தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பளத்தை உயர்த்த முடியாத நிலை உள்ளது. விலகி நின்று விமர்சிப்பவர்கள் இதை உணர்ந்து தொழிற்சங்க பலத்தை ஒருமுகப்படுத்தி தொழிலாளர்களுக்கு நன்மைபயக்கும் வகையில் செயல்பட முன்வர வேண்டும் தொழிற்சங்கங்கள் சர்ச்சைகளில் ஈடுபடுவதை விட சம்பளத்தை எவ்வாறு அதிகரிக்கலாம் என உடனடியாக கலந்தாலோசித்து கூட்டு ஒப்பந்தத்தை வலுவாக்க வேண்டும் சர்ச்சைகளில் ஈடுபடுவதின் மூலம் பெருந்தோட்டக் கம்பனிகளே இலாபமடையும். எஸ். ஜோதிவேல் ஐ.தொ.கா. நிர்வாகச் செயலாளர். Posted by KUMURUM MALAIKAL at 5:58 AM No comments: தொழிலாளர்களுக்கு நன்மையளிப்பதாக கூறப்படும் கூட்டு ஒப்பந்தம் துரோகமானது. முதலாளிமார் சம்மேளனத்திற்கும் பிரதான தொழிற்சங்கங்களுக்கும் இடையிலான செய்து கொள்ளப்பட்ட கூட்டு ஒப்பந்தத்தின் மூலம் தொழிலாளர்கள் நன்மையடைந்து வருகின்றனர் எனக் கூறுவது ஒட்டுமொத்த தொழிலாளர்களுக்கு எதிரான துரோகச் செயலாகும் ம.ம.மு வலப்பனை பிரிவு பொறுப்பாளர் கோவிந்தராஜ் தெரிவித்துள்ளார் அவர் மேலும் குறிப்பிடுகையில் தொழிலாளர்களின் ஒன்றுபட்ட போராட்ட சக்தியைச் சரியாக பயன்படுத்தி அவர்களின் தொழில் உரிமை, பாதுகாப்பு, வாழ்க்கை செலவின் உயர்விற்கேற்ற சம்பள உயர்வு மற்றும் அவர்களின் வாழ்வியல் ரீதியான தேவைகளுக்கு போதிய உத்தரவாதம் என்பவற்றைப் பெற்றுக்கொடுக்க தவறிய கூட்டு ஒப்பந்தத்துடன் தொடர்புடைய தொழிற்சங்கங்கள் அதனை நியாயப்படுத்துவது மீண்டும் வேதாளம் முருங்கை மரத்தில் ஏறும் செயலுக்கு ஒப்பாகும். இவ் ஒப்பந்தத்தால் தொழிலாளர்கள் சுரண்டப்பட்டு வறுமையின் அகோரப் பிடியில் அகப்பட்டு "திணறுவதையும்' கம்பனி நிர்வாகங்களின் சர்வாதிகார செயல்பாடுகளினால் தொழிலாளர் உரிமை நசுக்கப்படுவதையும் நன்கு அறிந்துள்ள தலைமைகள் சில இவ்வொப்பந்தம் பல நன்மைகள் பெற்றுக்கொடுத்துள்ளன எனக் கூறுவது வேடிக்கையாகும். இது தொழிலாளர் மீது பலவந்தமாக புதிய ஒப்பந்தத்தை செய்ய முற்படும் செயலாகும். மீண்டும் ஒரு கூட்டு ஒப்பந்தம் செய்யும் முன்பு கடந்தகால அனுபவங்கள், யதார்த்தபூர்வமான நடைமுறை சிக்கல்கள் மற்றும் தொழிலாளர்களின் எதிர்காலத்தில் பாதிப்பை ஏற்படுத்தப் போகும் பல்வேறு விடயங்களையும் சட்ட வல்லுநர்கள் மற்றும் புத்திஜீவிகள், பொருளியல் நிபுணர்கள் ஆகிய தரப்பினருடன் கலந்துரையாட வேண்டும். வாழ்வியல் ரீதியில் தொழிலாளர்கள் வறுமையிலிருந்து விடுபட்டு, தொழில் ரீதியிலும் உரிமைகளுக்கும் உத்தரவாதம் கிடைக்கும் வகையில் தொழிலாளர்கள் விமோசனம் பெற்று உரிமைகள், சலுகைகள், சுதந்திரம் போன்றவற்றை அனுபவிக்கும் வகையில் இவ் ஒப்பந்தம் செய்யப்பட சம்பந்தப்பட்ட தொழிற்சங்க தரப்புகள் முன்வருவது காலத்தின் கட்டாய தேவையாகும். சர்வதேச தொழிற்சங்கங்களின் மரபு ரீதியான செயற்பாடுகளுக்கு எதிராகவும் சர்வாதிகார முறையில் பலவந்தமாகவும் ஒரு நிர்ப்பந்தம் மூலம் தொழிலாளர்களுக்கு எதிராக திணிக்கப்படும் கூட்டு ஒப்பந்தத்தை செய்து வருகிறது. அவ்வொப்பந்தத்தின் மூலம் தொழிலாளர்கள் நன்மையடைந்து வருகின்றனர் என்று கூறுவது ஒட்டுமொத்தமாக தொழிலாளர்களுக்கு எதிரான துரோகச் செயலாகும். இக்கூட்டு ஒப்பந்தத்தின் சரத்துக்கள் யாவும் பல்வேறு வகையில் தொழிலாளர்களுக்கு பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளது. இதனை பல்வேறு துறையினர் சுட்டிக்காட்டியுள்ளனர். அத்துடன், 95 சதவீதம் தொழிலாளர்கள் வெளிப்படையாக தமது எதிர்ப்பினை காட்டியுள்ளனர். மேலும், கூட்டு ஒப்பந்தம் சரத்துக்கள் உள்ளடக்கப்பட்ட விடயங்கள் பலவற்றை தோட்ட நிர்வாகங்கள் அமுல்படுத்திய சந்தர்ப்பங்களில் தொழிற்சங்கப் போராட்டம் மூலம் அவற்றை எதிர்த்து வந்துள்ளதையும் எவரும் மறுக்க முடியாது. இது கடந்தகால நிகழ்வுகளின் உண்மையாகும். எனவே, தொழிலாளர்களுக்கு மீண்டும் பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அவர்கள் நன்மை பெறக்கூடிய கூட்டு ஒப்பந்தம் செய்யப்பட வேண்டும். இதனை நிராகரித்து கூட்டு ஒப்பந்தம் செய்யப்படுமாயின் கூட்டு ஒப்பந்தம் செய்யும் தொழிற்சங்கங்கள் பல விளைவுகளை சந்திக்க நேரிடும். Posted by KUMURUM MALAIKAL at 5:11 AM No comments: பெருந்தோட்டப் பகுதிகளில் மாற்றத்தினை உருவாக்க பெண் தொழிலாளர்களே முன்வரவேண்டும் மலையகப் பெருந்தோட்டப் பகுதிகளில் மது என்ற அரக்கன் ஆக்கிரமித்திருக்கும் வரை அப் பகுதிகளில் முன்னேற்றகரமான மாற்றத்தினை என்றுமே எதிர்பார்க்கமுடியாது. இம் மாற்றத்தினை இலகுவில் ஏற்படுத்தக்கூடியவர்கள் பெண் தொழிலாளர்களே எனஇவ்வாறு, முன்னாள் பதுளை மாவட்ட பா.உ, இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணித் தலைவருமான டி.வி. சென்னன் தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில் பெருந்தோட்டப் பகுதிகளில் தேர்தல் காலங்களில் மட்டுமே அரசியல் தொழிற்சங்கவாதிகள் மது போத்தல்களை தொழிலாளார்களுக்கு வழங்கிவந்தனர் ஆனால் அந்நிலை தற்போது தோட்டங்களில் தொழிற்சங்கங்களுக்கு அங்கத்துவங்களை அதிகரிப்பதற்கும் பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றது. இதுபோன்ற சூழல் மலையகப்பகுதிகளில் அதிகரித்து காணப்படுவதனால் சமூகச் சீரழிவுகள் பெருமளவில் ஏற்பட்டுக்கொண்டிருக்கின்றன. பெண்கள் ஒன்றிணைந்து மேற்கொள்ளும் துரித நடவடிக்கைகளினால் மட்டும், மலையகத்தில் மதுவினை முற்றாக ஒழிக்க முடியும். அந்நிலை ஏற்பட்டுவிட்டால் மலையகத்தின் பெரும் தோட்டப் பகுதிகளில் மாற்றம் ஏற்பட்டும் என்றார். Posted by KUMURUM MALAIKAL at 4:59 AM No comments: டிக்கோயா லெதண்டி பகுதியில் காற்றுடன் கடும்மழை; வீடுகள் சேதம் டிக்கோயா லெதண்டி கிராம சேவகர் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (05-04-2009) பிற்பகல் பெய்த பலத்த காற்றுடன் கூடிய அடைமழையினால் 22 வீடுகள் சேதமடைந்துள்ளதுடன் இவற்றுள் எட்டு வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளது. இந்த வீடுகளில் வாழ்ந்த 45 பேர் உறவினர்களின் வீடுகளில் தங்கியுள்ளனர். டிக்கோயா பிரதேசத்தின் டங்கல்ட் சமரவில், காபெக்ஸ், காசல்ரீ, ஒஸ்போன் ஆகிய தோட்டப்பகுதிகளில் மழையுடன் சுமார் 15 நிமிடங்கள் வீசிய மினிசூறாவளியினால் மேற்படி தோட்டப்பகுதிகளிலுள்ள கூரைத்தகரங்கள் பல காற்றில் அள்ளுண்டு சென்றுள்ளன. மரங்கள் பல முறிந்து விழுந்துள்ளதுடன் மின்கம்பங்கள் சரிந்து விழுந்துள்ளன. இதனால், பிரதேசத்தில் சில மணிநேரம் மின்சாரத் தடை ஏற்பட்டதோடு அட்டன் நோட்டன் பிரதான பாதையில் போக்குவரத்துகளும் தடைப்பட்டன. இச் சம்பவத்தில் டங்கல்ட் தோட்டத்தில் 4 வீடுகளும் சமர்வில் தோட்டத்தில் 2 வீடுகளும் காபெக்ஸ் கொலனியில் 2 வீடுகளும் முழுமையாக சேதமடைந்துள்ளது. மேலும் 14 வீடுகள் சிறிய அளவிலான சேதத்துக்கு உள்ளாகியதாகவும் சேதவிபரங்கள் குறித்து கினிகத்தேனை பிரதேச செயலாளரின் கவனத்துக்கு கொண்டுவந்துள்ளதாகவும் லெதண்டி பிரதேசத்துக்கான கிராம உத்தியோகஸ்தரான எஸ். டார்வின் தெரிவித்தார்.
தற்போது தமிழகத்தில் பல குழந்தைகளின் படிப்பு பாதிக்கப்பட்ட நிலையில் காணப்படுகிறது. ஏனென்றால் தமிழகத்தில் குழந்தைகளுக்கு இன்னும் பள்ளி திறக்கவில்லை. இதனால் பல குழந்தைகள் தவறான வழிக்கு செல்வதோடு மட்டுமில்லாமல் குழந்தை தொழிலாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இதனை போக்கும் வண்ணமாக தமிழக அரசால் “இல்லம் தேடி கல்வி” என்ற திட்டம் உருவாக்கப்பட்டது. தற்போது இந்த திட்டத்தில் பல புதிய அறிவிப்புகளை அரசு வெளியிட்டுள்ளது. அந்த படி இல்லம் தேடி கல்வித்திட்ட தன்னார்வலர், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் இணையதளத்தில் பதிவு செய்யவும் அரசு அறிக்கை கூறியுள்ளது. பயிற்சியில் கருத்தாளர்கள் செயல்பட அனைத்து அரசு, உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் பதிவு செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளது. இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் EMIS இணையதளத்தில் staff LOGINல் உள்ள ITK RP’s option மூலம் விருப்பம் தெரிவிக்கலாம் என்றும் கூறியுள்ளது. அக்டோபர் 28ஆம் தேதிக்குள் ஆசிரியர்கள் தங்களது விருப்பம், விருப்பமின்மை போன்ற விவரத்தை பதிவு செய்ய வேண்டும் என்றும் அரசு கூறியுள்ளது. Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
‘காதலுக்கு தேசம் முக்கியமா... ஹ்யூமானிட்டி முக்கியமா?’ என்ற விநோத கேள்விக்கு வித்தியாசமான காமெடி ட்ரீட்மென்ட்டால் சோதித்து விடை சொல்கிறான் இந்த ‘ப்ரின்ஸ்.’ பாண்டிச்சேரி பிரெஞ்சு காலனியில் வசிக்கும் பிரிட்டிஷ் பெண்ணுக்கும் கடலூர் தேவனக்கோட்டையில் வசிக்கும் இந்தியப் பையனுக்கும் ‘பார்டர்களைத் தாண்டி’ காதல். சிவகார்த்திகேயனின் அப்பா சத்யராஜுக்கு பிரிட்டிஷ் என்றால் அலர்ஜி. மரியாவின் அப்பாவுக்கு இந்தியர்கள் என்றாலே அலர்ஜி. கூடவே, பிரேம்ஜி தலைமையில் ஊரே இந்தக் காதலைப் பிரிக்கத் திட்டம்போட... சவால்களைத் தாண்டிக் காதலில் ஜெயித்தாரா சி.கா என்பதே க்ளைமாக்ஸ். சிவகார்த்திகேயனுக்கு இந்தப் படத்தில் ஸ்கூல் டீச்சராய் புரொமோஷன். ஆனால், ‘டான்’ மூடில் ஐ.டி கார்டைக் கழுத்தில் மாட்டிக்கொண்டு ஜாலியாய்க் காதலிப்பது, காமெடி பண்ணுவது என அதிகம் அலட்டிக்கொள்ளாமல் நடித்திருக்கிறார். சிங்கிள் டேக் லென்த்தான ஷாட் என டான்ஸில் பட்டையைக் கிளப்புகிறார். ஆனால், சிவாவுக்கு ஏற்ற தீனிபோடும் ஆழமான காமெடி படத்தில் மிஸ்ஸிங். ஹீரோயின் மரியா ரியபோஷப்கா, க்யூட் பார்பி பொம்மையைப் போல வந்து போகிறார். நடிப்பில் இன்னும் கொஞ்சம் முயற்சி செய்திருக்கலாம். நடனத்தில் மட்டும் சிவகார்த்திகேயனுக்கு ஈடுகொடுத்து அசத்தியிருக்கிறார். சிவகார்த்திகேயனின் அப்பாவாக சத்யராஜ். ரத்தத்தை வைத்துச் சாதி எதிர்ப்பு, மனிதநேயம் பற்றியெல்லாம் பேசும் இவர், ஒரு கட்டத்தில் நம் காதிலும் ரத்தம் வர வைக்கிறார். ஓவர் ஆக்டிங் சாரே! நண்பர்களாக சதீஷ், பிராங்ஸ்டர் ராகுல், ஃபைனலி பாரத் மூவரும் கேமராமுன் ‘கேக் வாக்’ செய்து போகிறார்கள், அவ்வளவே. ஒரே ஒரு காட்சியில் வந்தாலும் சிரிக்க வைத்துவிடுகிறார் ஆனந்த்ராஜ். பிரேம்ஜியை வைத்து ‘வில்லத்தனமான காமெடி!’ ஆனால், அவரைப் பார்த்தால் பயமோ சிரிப்போ வரவில்லை. எழுத்திலும் இயக்கத்திலும் அமெச்சூர் குறும்படம் பார்த்த உணர்வையே தந்திருக்கிறார் இயக்குநர் அனுதீப். ‘என் ரத்தம் லைட்டு பிங்க்’, ‘எலிசபத் டெய்லருன்னு குழந்தைக்குப் பேரு வைக்கிறான். ஒரு டெய்லரோட புள்ள டெய்லராத்தான் ஆகணுமா?’, ‘பாட்டில் கார்டுனா என்னான்னு எனக்குத் தெரியும்!’ என ஒரு சில இடங்களில் மட்டும் சிரிப்பு வெடிகள். மற்றதெல்லாம் ‘ஜோக்கு ஜோக்கு’ என்று யாரேனும் ஞாபகப்படுத்தினால் கொஞ்சம் சிரிக்கலாம். இசை தமன். இரண்டு பாடல்களில் ஆட்டம் போட வைப்பவர் பின்னணி இசையில் மட்டும் பின்னால் போய் ஒளிந்துகொள்கிறார். பிரவீன் கே.எல்-லின் எடிட்டிங்தான் கத்தரி போட்டுப் படத்தைக் காப்பாற்றியிருக்கிறது. இந்தத் தீபாவளிக்குப் பத்தாயிரம் வாலாவாக வெடித்திருக்க வேண்டிய ‘ப்ரின்ஸ்’, ஆங்காங்கே பிஜிலி வெடியாய் மட்டுமே வெடித்து முடிகிறான்.
பெய்யக் கூடிய சிறிதளவான மழை வீழ்ச்சியைத் தவிர நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. காற்று : நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு திசையிலிருந்து வீசக் கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 20-30 கிலோ மீற்றர் வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. புத்தளத்திலிருந்து மன்னார் ஊடாக காங்கேசந்துறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டைஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. கடல் நிலை: புத்தளத்திலிருந்து மன்னார் ஊடாக காங்கேசந்துறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளும் மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளும் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும். Videos play பிம்ஷானியை அவரது பதவியில் இருந்து நீக்க முயற்சிக்கும் பொலிஸ் மா அதிபரின் வெள்ளை மற்றும் கருப்பு மகன்கள்!
தென்னிந்திய சினிமாவில் மிகவும் பிரபலமானர் நடிகர் பிரபாஸ். இவர் பாகுபலி படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தார். இந்நிலையில் புராண கதைகளில் ஒன்றாக கருதப்படும் ராமாயணத்தை மையமாக வைத்து ஆதிபுருஷ் என்ற படம் இருவாகி வருகிறது. இந்த படத்தில் ராமர் கதாப்பாத்திரத்தில் நடிகர் பிரபாஸ் நடிக்க இருக்கிறார். அதே போல் ராவணனாக சயீப் அலிகான் மற்றும் சீதையாக கீர்த்தி சனோன் நடித்துள்ள ஆதிபுருஷ் படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில் படத்தின் டிரெய்லர் கடந்த சில தினங்களுக்கு முன் வெளியான நிலையில், சமூக ஆர்வலர்கள் மத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அதன் படி, இலங்கையை சேர்ந்த ராவணன் சிவ பக்தர் சுமாஎ 64 கலைகள் கற்றவர் என்ற நிலையில் இவருக்கு ஜாக்கெட் அணிந்து, நீல நிற கண்களுடன் சர்வாதிகாரி போல் தவறாக டிரெய்லரில் காட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இத்தகைய செயலானது வரலாற்றை மாற்றியமைக்கும் என்பதால் விவகாரம் தொடர்பாக டெல்லி கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. தற்போது பிரபாஸ் உள்ளிட்ட படக்குழுவினருக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
சில வருஷங்களுக்கு முன்னால வெயில் காலத்துல தமிழ்நாட்டுல அங்கங்க ஒரு சில தீ விபத்துக்கள் நடந்துச்சி. விபத்துக்கான காரணங்கள் சரியா தெரியல. ”வெள்ளை பாஸ்பரஸ்” அப்டிங்குற ஒரு வேதிப்பொருள் அறை வெப்பநிலையில தீப்பற்றி எரியும்ங்குற விஷயத்த சமீபத்துல படிச்சி தெரிஞ்சிக்கிட்ட நம்மூரு விஞ்ஞானி ஒருத்தன் தீப்பற்றி எரியிற குடிசைங்க வெள்ளை பாஸ்பரஸாலதான் எரியிதுன்னு கிளப்புனான். அதுமட்டும் இல்லை இத வேணும்னே ஒரு குழு செய்வதாகவும் பரப்புனான். அதாவது இந்த பாஸ்பரஸ் கொளுத்தி என்ன பன்னுவான்னா, வெள்ளை பாஸ்பரஸ்ஸ சாணில முக்கி அத வீட்டு கூரை மேல எரிஞ்சிட்டு போயிருவானாம். வெயில் அடிச்சி சாணி காஞ்சப்புறம் அதுக்குள்ள இருக்க பாஸ்பரஸ் எரிய ஆரம்பிக்குமாம். இந்த டெக்கினிக்க யூஸ் பன்னிதான் தமிழ்நாட்டுல பல குடிசைகள் எரிக்கப்பட்டதா செய்தி தீயா பரவுச்சி. வெள்ளை பாஸ்பரஸ் எப்டி இருக்கும்னே நமக்குத் தெரியாது. வெள்ளை பாஸ்பரஸ் எப்டி இருக்கும்..? வெள்ளையா இருக்கும் அவ்வளவுதான். ஏண்டா குடிசைய கொளுத்துரவன் போற போக்குல ஒரு பீடிய பத்தவச்சி கூரை மேல தூக்கிப் போட்டுட்டு போறான்னு சொன்னாலாவது ஒரு லாஜிக் இருந்துருக்கும். இல்ல வெள்ளை பாஸ்பரஸ் வச்சி கொளுத்துறவன் இப்ப எரிஞ்சிதே சென்னை சில்க்ஸ் அந்த மாதிரி ஒரு பெரிய ஆப்ரேஷனுக்கு அத யூஸ் பன்னான்னு அடிச்சி விட்டாலாவது கதைல ஒரு நியாயம் இருந்துருக்கும். அதயெல்லாம் விட்டுப்புட்டு அவன் கைக்காசயெல்லாம் போட்டு வெள்ளை பாஸ்பரஸ் வாங்கி, அத சாணியில முக்கி, அந்த சாணி காயிற வரைக்கும் காத்திருந்து கொளுத்தி… ஸ்ஸ்ஸப்பா… இப்பவே கண்ணக் கட்டுதே.... சரி யாராவது அந்த பாஸ்பரஸ் கொளுத்திய பாத்திருக்கீங்களான்னா அதுவும் இல்லை.. அவன் எப்டிடா இருந்தான்னா “ஹைட்டு சார்.. வெய்ட்டு சார்… ஒய்ட்டு சார்”ன்னு அளந்து விட வேண்டியது. இல்லன்னா இருட்டுல என் பக்கத்துலதான் சார் ஓடுனான்.. புடிக்க கை நீட்டுனேன்.. ஜஸ்டு எஸ்கேப் ஆகி ஓடிட்டான் சார்.. அதுலயும் அவன் கால்ல ஸ்பிரிங் வச்சி செம்ம ஸ்பீடா ஓடுனான்னு எங்க ஊர்ல ஒண்ணு கெளப்புனாய்ங்க பாருங்க அதெல்லாம் உச்சகட்டம். இந்த பாஸ்பரஸ் கொளுத்திக்கு கொஞ்சமும் சளைக்காத, இன்னும் சொல்லப்போனா அத விட பல மடங்கு வீரியமுள்ள ஒரு புரளிதான் ப்ளாஸ்டிக் அரிசி. போன வாரம் அலுலகத்துல நண்பர் ஒருத்தர் இந்த ப்ளாஸ்டிக் அரிசைப் பத்தி பேசிக்கிட்டு இருந்தாரு. ப்ளாஸ்டிக்ல் அரிசியா? அது எப்டிங்க? எதும் கலப்பட அரியா?ன்னேன்…. இல்லங்க.. ப்ளாஸ்டிக்லயே அரிசி வந்துருக்குன்னாரு. அவர் சொன்ன இந்த பதில்லருந்தே, ப்ளாஸ்டிக் அரிசின்னு அவர் என்கிட்ட சொன்னப்போ எனக்கு என்னென்ன கேள்விங்கல்லாம் தோணுச்சோ, அதெல்லாம் அவர்கிட்ட யாரோ ப்ளாஸ்டிக் அரிசியப் பத்தி சொன்னப்போ அவருக்குத் தோணலன்னு தெரிஞ்சிது. சரி இப்ப ப்ளாஸ்டிக் அரிசின்னா, ப்ளாஸ்டிக்ல உருவாக்கப்பட்ட போலி அரிசிகள்.. அப்டின்னா ப்ளாஸ்டிக்க கொதிகிற தண்ணில போட்டா அது எப்புடி வெந்து சோறு மாதிரி ஆகும்? அப்படியே அதிக வெப்பநிலையில சோறு மாதிரி ஆனாலும் திரும்ப வெப்பநிலை கம்மியான உடனே இறுகிய நிலைக்கு போயிருமே? அப்படியே சோறு மாதிரி பதமா இருந்தாக் கூட அத சாப்டா எப்படி ஜீரணம் ஆகும்? பல வருஷங்கள் ஆனா கூட மண்ணாலயே மக்க வைக்க முடியாத ப்ளாஸ்டிக்க நம்ம உடம்புல உள்ள அமிலங்கள் எப்படி ஜீரணிக்குது? இதெல்லாம்தான் எனக்கு தோணுன அடிப்படை கேள்விகள். சரி என்ன மேட்டர்னு இண்டர்நெட்டுல தேடிப் பாத்தா, இப்ப இந்த வதந்தி ஆரம்பிச்சது ஆந்திராவுலன்னு தெரிஞ்சிது. எவனோ ஒருத்தான் பாய் கடையில பிரியாணிய நல்லா ஃபுல் கட்டு கட்டிருக்கான். வயித்துல ஜலபுலஜங்ஸ் ஆயி ரெண்டு நாள் வயித்தப் புடிச்சிட்டே யோசிச்சிருக்கான். அப்பதான் பாய் கடையில திண்ண பிரியாணிலதான் பிரச்சனைன்னு தோணிருக்கு. இந்த ப்ளாஸ்டிக் முட்டை ப்ளாஸ்டிக் அரிசி மேட்டர எங்கயோ கேட்ட ஞாபகம் இருந்திருக்க, உடனே அந்த பிரியாணி கடையில போய் நீ ப்ளாஸ்டிக் அரிசில சமைச்சி போடுறன்னு சண்டை கட்டிருக்கான். அங்க ஆரம்பிச்ச வசந்தி தான் இப்புடி கொழுந்து விட்டு எரியிது. சரி ப்ளாஸ்டிக் அரிசின்னு எதாவது கண்டுபுடிச்சிருக்காங்களான்னு தேடிப்பாத்தா எல்லாமே நம்ம பாஸ்பரஸ் கொளுத்திய பாத்த கதைதான். புரளியக் கிளப்பிருக்கானுங்களே தவற எங்கயும் ஆதாரப்பூர்வமா புடிக்கல. ப்ளாஸ்டிக் அரிசி இல்லாம செயற்கை அரிசி தயாரிப்புகள் இருக்கு. அதாவது அரிசி அரைக்கும்போது வர்ற உடைஞ்ச அரிசிக்கள (குருனை) வச்சி, அதுகூட சில பொருட்கள சேத்து அத மறுபடியும் முழு அரிசியா மாத்துற செய்முறைகள் இருக்காம். அப்படி உருவாக்கப்படுற அரிசிக்கள் உண்மையான முழு அரிசிக்களை விட பண்புகளில் கொஞ்சம் மாறுபாடு இருக்குமாம். அவ்வளவுதான். இப்ப வாட்ஸாப், முகப்பக்கங்கள்ல உலவுல வீடியோ ஆதாரங்கள் என்னன்னா வடிச்ச சோத்த உருண்டையா உருட்டி அத பந்து மாதிரி அடிச்சி ஜம்ப் பன்ன வச்சி இதான் ப்ளாஸ்டிக் அரிசிங்குறாங்க. எனக்கு அதப் பாத்து உள்ளத்தை அள்ளித்தா காமெடிதான் ஞாபகம் வந்துச்சி. ”ஐ இவரு துள்றாரு இவருதான் காசிநாதன்.. ஐ அவரும் துள்றாரு அவருதான் காசிநாதன். ஐ நானும் துள்றேன் நாந்தான் காசிநாதன்”ங்குற மாதிரி ஐ இதுவும் ஜம்ப் பன்னுது இதான் ப்ளாஸ்டிக் அரிசி.. ஐ அதுவும் ஜம்ப் பன்னுது அதுவும் ப்ளாஸ்டிக் அரிசின்னு அள்ளி விடுறானுங்க. கடந்த ஒரு வாரமா சோத்த எவனும் திங்கிறதுல்ல. உருட்டி தரையில அடிச்சி விளையாண்டுக்கிட்டு இருக்கானுங்க. இவனுங்களாச்சும் பரவால்ல. இவங்களுக்கு விழிப்புணர்வக் குடுக்கவேண்டிய மீடியா இன்னும் ஒருபடி மேல போய் எரியிற தீயில எண்ணைய ஊத்தி அவங்க கொஞ்சம் ப்ரச்சனைய பெருசாக்கிட்டு இருக்காங்க. அதயெல்லாம் விட மீடியாக்கள்ல வர்ற “ப்ளாஸ்டிக் அரிசியைக் கண்டறிய வழிகள்தான்” தாறுமாறு. யாருமே ப்ளாஸ்டிக் அரிசியப் பாத்ததில்லை. இப்படித்தான் இருக்கும்னு ஒரு உத்தேசமா ”ப்ளாஸ்டிக்” அப்டிங்குற வார்த்தைய மட்டும் மனசுல வச்சிக்கிட்டு ஸ்க்ரிப்ட் எழுதிருக்கானுங்க. சோற வடிச்சி மூணு நாள் வச்சிருங்க.. அது கெட்டுப்போகலன்னா ப்ளாஸ்டிக் அரிசி.. கெட்டுப்போச்சுன்னா நல்ல அரிசியாம். அப்ப மூணு நாள் கண்டுபுடிக்கிற வரைக்கும் சோறு திங்காம பீஸா பர்கர்ன்னு திங்கிறதா? அப்புறம் தண்ணில போட்டா நல்ல அரிசி கீழ போயிருமாம்..ப்ளாஸ்டிக் அரிசி மேல மிதக்குமாம். அடேய்… நல்ல அரிய தண்ணில போட்டாலே எடை கம்மியா இருக்க அரிசிங்க மேல மிதக்கத்தாண்டா செய்யும்… அப்புறம் கொதிக்கிற தண்ணில போட்டா ஒரு லேயரா ஃபார்ம் ஆகுமாம்.. அரிசிய சூடு பன்னா ப்ளாஸ்டிக் அரிசி கருப்புக் கலர்ல கருகிருமாம். அதாவது பாலிதீன் பை, ப்ளாஸ்டிக் ஐட்டத்தையெலாம் எரிச்சா உருகி கருப்பாகுதுல்ல.. அத மைண்டுல வச்சி எழுதப்பட்ட பாய்ண்டு இது. அதவிட உச்சகட்ட சிரிப்பு வந்தது ஒரு ஃபோட்டோவப் பாத்து. அதுல ஒருபக்கம் வெள்ளையா கொஞ்சம் அரிசி.. இன்னொரு பக்கம் மங்கலா பழுப்பு நிறத்துல கொஞ்சம் அரிசி. மங்கலா இருக்க அரிசி நல்ல அரிசின்னும், வெள்ளையா இருக்க அரிசிய ப்ளாஸ்டிக் அரிசின்னும் குறியிட்டுக் காட்டிருந்தானுங்க. அட லூசு நாயிங்களா.. இந்தப் பக்கம் வெள்ளையா இருக்கது பச்சரிசி.. அந்தப்பக்கம் மங்களா இருக்கது புழுங்கரிசி.. பச்சரிசிக்கும் புழுங்கலரிசிக்கும் வித்யாசம் தெரியாதவன்லாம் ப்ளாஸ்டிக் அரிசியக் கண்டுபிடிக்க வழிசொல்றானே ஆண்டவா.. இதெயெல்லாம் விடுங்கப்பா.. ப்ளாஸ்டிக் அரிசியக் கண்டுபுடிக்க இதவிட இன்னொரு ஈஸியான வழி இருக்கு. அத யாருமே சொல்லலியே.. நீங்க சாப்ட சாப்பாடு, எப்புடி சாப்பிட்டீங்களோ அப்புடியே டிஸ்போஸ் ஆச்சுன்னா அது ப்ளாஸ்டிக் அரிசி. எப்பவும் போல போச்சுன்னா அது நல்ல அரிசி . அம்புட்டுதேன் மேட்டர். ஆனா ஒண்ணு… நெருப்பில்லாம புகையாது. நாம வழக்கமா வாங்கி சாப்புடுற அரிசிகள்ல கலப்பட அரிசிகள் வந்திருக்கலாம். இப்போதுதான் வந்திருக்கவேண்டும் என்ற அவசியம் இல்லை. நெடு நாட்களுக்கு முன்னரே வந்திருக்கலாம். இப்பதான் ப்ரச்சனை வந்திருக்குங்குறதால நாம எல்லாருமே சாதத்த உருட்டி உருட்டிப் பாக்குறோம். அப்படி பந்து போல உருளும் அரிசிவகை வெளிநாடுகளில் உபயோக்கிக்கப்படும் Glutinous riceஎனப்படும் ஒருவித ஒட்டும் தண்மையுடைய அரிசி வகையாக இருக்கக்கூடும் என நண்பர் ஒருவர் எழுதியிருந்தார். அப்படியும் இருக்கலாம். அல்லது பாஸ்பரஸ் கொளுத்திகளைப் போல இது முழுவதும் மிகைபடுத்தப்பட்ட ஒரு வசந்தியாகவே இருக்கலாம். எது எப்படி இருந்தாலும் புதுசா வந்திருக்குற அரிசி ப்ளாஸ்டிக்கால் ஆனதல்ல என்பது மட்டும் உறுதி. கிளப்பி விடுறதுதான் விடுறீங்க.. தயவு செய்து “ப்ளாஸ்டிக் அரிசி” ங்குறதுக்கு பதில் “கலப்பட அரிசி”ன்னாவது சொல்லுங்க. மனசுக்கு கொஞ்சம் ஆறுதலாவாச்சும் இருக்கும். பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற Posted by முத்துசிவா at Tuesday, June 13, 2017 Labels: athiradikkaran, muthusiva, plastic rice, plastic rice in tamilnadu, சினிமா, நகைச்சுவை, ப்ளாஸ்டிக் அரிசி 6 comments: Vadielan R said... சூப்பர் நண்பா இப்படி ஒரு பதிவு நகைச்சுவையுடன் ஒரு பிளாஸ்டிக் அரிசி குறித்த பதிவு மிகவும் அருமை தொடரட்டும் உங்கள் பணி சிவகாசி பசங்களுக்கு கோபம் வந்தால் பட்டாசு மாதிரி வெடிப்பார்கள் என்று அறிந்திருக்கிறேன். சந்தோசம் வந்தால் நகைச்சுவை அள்ளி வீசுறீர்களே நன்றி நண்பா June 14, 2017 at 10:24 AM Azar said... Awesome article. June 14, 2017 at 10:31 AM suthakarm80 said... நன்றி தலைவரே... June 14, 2017 at 11:16 PM Anonymous said... sema ya sonneenga anna super. ana வதந்தி nu vara vendia idamellam வசந்தி nu elutheerukeenga yaaru antha vasanthi?!!! June 14, 2017 at 11:59 PM sankar said... இப்ப வாட்ஸாப், முகப்பக்கங்கள்ல உலவுல வீடியோ ஆதாரங்கள் என்னன்னா வடிச்ச சோத்த உருண்டையா உருட்டி அத பந்து மாதிரி அடிச்சி ஜம்ப் பன்ன வச்சி இதான் ப்ளாஸ்டிக் அரிசிங்குறாங்க. எனக்கு அதப் பாத்து உள்ளத்தை அள்ளித்தா காமெடிதான் ஞாபகம் வந்துச்சி. ”ஐ இவரு துள்றாரு இவருதான் காசிநாதன்.. ஐ அவரும் துள்றாரு அவருதான் காசிநாதன். ஐ நானும் துள்றேன் நாந்தான் காசிநாதன்”ங்குற மாதிரி ஐ இதுவும் ஜம்ப் பன்னுது இதான் ப்ளாஸ்டிக் அரிசி.. ஐ அதுவும் ஜம்ப் பன்னுது அதுவும் ப்ளாஸ்டிக் அரிசின்னு அள்ளி விடுறானுங்க. கடந்த ஒரு வாரமா சோத்த எவனும் திங்கிறதுல்ல. உருட்டி தரையில அடிச்சி விளையாண்டுக்கிட்டு இருக்கானுங்க. தாறுமாறு தல நச்சுன்னு சொன்னீங்க.. ப்ளாஸ்டிக் அரிசினு நல்லா வாய்க்கு வந்தத சொல்றதும் கைக்கு வந்தத பார்வேர்ட் பண்றதும் இவனுங்க பண்ற இம்சைய நல்லா எடுத்து சொன்னீங்க தலீவா... June 16, 2017 at 4:17 PM Anonymous said... நம்ம ஜனங்க மனசுல ஒரு doubt வந்தா அத மாத்துரது ரொம்ப கஷ்டம் . இந்த 10 ரூபா coin மாதிரி. எவனோ ஒருத்தன் அந்த coin செல்லாதுனு கொளுத்தி போட்டுட்டான் மக்கள் அத இன்னும் நம்புறாங்க.
8-வது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் கடந்த மாதம் 16-ம் தேதி தொடங்கியது. கடந்த 13-ம் தேதி நடந்த இறுதி போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இங்கிலாந்து அணி இரண்டாவது முறையாக கோப்பையைக் கைப்பற்றியது. டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்தியா நிர்ணயித்த 169 ரன் இலக்கை இங்கிலாந்து அணி 16 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி எட்டிப்பிடித்தது. கோப்பையை வெல்லும் அணிகளில் ஒன்றாக கருதப்பட்ட இந்திய அணி எதிரணிக்கு நெருக்கடி அளிக்ககூட முடியாமல் சரண் அடைந்தது ரசிகர்களை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது. குறிப்பாக இந்திய அணியின் தொடக்க வீரர்கள் எதிர்பார்த்த அளவு இந்த உலகக்கோப்பை போட்டியில் செயல்படவில்லை. மேலும் உலகக்கோப்பை போட்டியில் மிகவும் நெருக்கடியான தருணங்களில் பெரும்பாலன இந்தியா வீர்ரகள் சரியாக செயல்படுவதில்லை. இந்திய அணியின் செயல்பாடு குறித்து ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கண்டபடி வசைபாடி வருகிறார்கள். இந்திய அணி வீரர்கள் தைரியமின்றி தயக்கத்துடன் ஆடியதை முன்னாள் வீரர்கள் பலரும் விமர்சித்துள்ளனர். இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியை மீண்டும் இந்திய அணியில் சேர்க்க பிசிசிஐ ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. தோனிக்கு இந்திய அணியில் மிகப்பெரிய பொறுப்பை கொடுக்க பிசிசிஐ ஆலோசனையில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் 3 வடிவிலான கிரிக்கெட் அணியிலும் பயிற்சியாளராக இருந்து வருவதால், அவரது பணி சுமை அதிகமாக உள்ளதாக பிசிசிஐ கருதுகிறது. ஐசிசி போட்டிகளில் அந்த அச்சமற்ற பிராண்ட் கிரிக்கெட்டுக்கான திறனைக் கொண்டு வர, டி20 அணியில் தோனியை இயக்குனராக சேர்ப்பது குறித்து பிசிசிஐ-யில் பேசப்பட்டு வருகிறது . கடந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பையில் இந்திய அணியின் ஆலோசகராக தோனி செயல்பட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் அடிப்படையில், தோனியை டி20 வடிவத்தில் மட்டும் இயக்குனராக ஈடுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
“முகத்தை பார்த்தால் கொலை செய்ய தோணவில்லை.. மறைந்திருந்து கொன்றேன்”- சத்யா கொலை வழக்கில் சதீஷ் வாக்குமூலம் 10 நாட்கள் பின்தொடர்ந்து அதில் 3 நாட்கள் பரங்கிமலை இரயில் நிலையத்தில் வைத்து அவரை கொலை செய்ய முயற்சித்து மனம் கேட்காததால் திரும்பிவிட்டதாக சத்தியா கொலை வழக்கில் சதீஷ் வாக்குமூலம் அளித்துள்ளார். KL Reshma Updated on : 29 October 2022, 01:22 PM சென்னையை அடுத்த ஆலந்தூர் ராஜா தெரு காவலர் குடியிருப்பில் வசித்து வருபவர் மாணிக்கம் - ராமலட்சுமி (43) தம்பதியினர். ஆதம்பாக்கம் காவல் நிலைய குற்றப்பிரிவில் காவலராக பணிபுரிந்து வரும் மாணிக்கத்திற்கு சத்தியப்பிரியா (20) என்ற மகள் இருந்தார். இவர் தி நகரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.சி.ஏ. 3ம் ஆண்டு படித்து வந்தார். சத்தியப்பிரியாவை அதே பகுதியைச் சேர்ந்த ஒய்வு பெற்ற போலிஸ் அதிகாரியின் மகனான சதீஷ்(23) காதலித்து வந்ததாகவும், அவரிடம் தனது காதலை சொல்லியும், சத்தியா புறக்கணித்து வந்ததாகவும் கூறப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த சதீஷ், கடந்த அக்டோபர் 13-ம் தேதி பரங்கிமலை இரயில் நிலையத்தில் தனது தோழிகளுடன் வந்த சத்தியாவை பின்தொடர்ந்துள்ளார். அப்போது அவரை தாம்பரத்தில் இருந்து கடற்கரை நோக்கி செல்லும் மின்சார இரயில் வரும்போது தள்ளி விட்டுள்ளார். இதில் இரயிலில் சிக்கிய சத்தியா தலை துண்டாகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரித்து வந்தனர். பின்னர் குற்றவாளி சதீஷயும் காவல்துறையினர் கைது செய்தனர். இதனிடையே தனது மகளின் இறப்பு தாங்கமுடியாத சத்தியாவின் தந்தையும் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த வழக்கு CBCID-க்கு மாற்றப்பட்டது. அவர்கள் நடத்திய முதற்கட்ட விசாரணையில் காதலிக்க மறுத்ததால் கொலை செய்ததாக சதீஷ் வாக்குமூலம் அளித்தார். இதையடுத்து கொலையை எவ்வாறு செய்தார் என்பது குறித்து விசாரிப்பதற்காக ஒருநாள் காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது தானும், சத்தியாவும் 2 ஆண்டுகள் காதலித்து வந்ததாகவும், எங்கள் காதலுக்கு சந்தியாவின் தாய் சம்மதிக்கவில்லை என்றும், மேலும் அவரது பேச்சை கேட்டு சத்தியா என்னிடம் பேசுவதை நிறுத்தியதாகவும் தெரிவித்தார். சத்தியா பேசுவதை நிறுத்தினாலும், தான் அவரின் பின்னால் சென்று முயற்சித்ததாகவும், ஆனால் அவருக்கு அவரது உறவினர் பையன் ஒருவருடன் நிச்சயம் வைக்க முடிவு செய்ததாகவும், இதனால் தான் ஆத்திரப்பட்டு கொலை செய்ய நினைத்ததாகவும் வாக்குமூலம் அளித்தார். அதன்படி தொடர்ந்து 10 நாட்கள் சத்தியாவை பின்தொடர்ந்த சதீஷ், அதில் 3 நாட்கள் பரங்கிமலை இரயில் நிலையத்தில் வைத்து அவரை கொலை செய்ய முயற்சி செய்கையில் அவர் மீது உள்ள அதீத காதலால் கொலை செய்ய மனம் ஒப்பமால் திரும்பியுள்ளார். பிறகு சம்பவத்தன்று தோழிகளுடன் பரங்கிமலை இரயில் நிலையத்திற்கு வந்த சத்தியாவை கண்ட சதீஷ், என்ன செய்வதென்று குழப்பத்திலும் சந்தேகத்திலும் சத்தியாவை மறைந்து பின்புறத்தில் இருந்து இரயில் வருகையில் தள்ளி விட்டு கொலை செய்ததாக சதீஷ் தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். சதீஷின் இந்த வாக்குமூலத்தை பெற்ற CBCID போலிசார், அவரை வரும் நவம்பர் 10-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு பெற்று தற்போது புழல் சிறையில் அடைத்துள்ளனர். இவரது வாக்குமூலம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Also Read காதலிக்க மறுத்தால் இளைஞர் செய்த வெறிச்செயல் - மகள் கொலை செய்யப்பட்ட சோகத்தில் தந்தை உயிரிழப்பு ! chennai railway murder Trending "இணைப்பு எண்ணை ஆதாரோடு இணைப்பதால் இலவச மின்சாரத்துக்கு பாதிப்பில்லை" -அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு! 360 டிகிரி சூர்யகுமாரே உங்களிடம் கத்துக்கணும்.. தமிழக வீரரை புகழ்ந்து தள்ளும் நெட்டிசன்கள் ! வீடியோ எடுத்த இளைஞர்களை தாக்கிய செவிலியர்கள்.. வெளியான பதறவைக்கும் வீடியோ.. பீகாரில் அதிர்ச்சி ! குடும்ப கஷ்டத்துக்காக வேலைக்கு சென்ற மாணவி.. தகவலறிந்து கல்விச்செலவை ஏற்றுக்கொண்ட தி.மு.க நிர்வாகி ! Latest Stories "இணைப்பு எண்ணை ஆதாரோடு இணைப்பதால் இலவச மின்சாரத்துக்கு பாதிப்பில்லை" -அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு! எல்லாம் அவளுக்காக.. ShowRoom-ல் இருந்து சொகுசுகாரை நூதனமாக திருடி சென்ற காதலன்.. இறுதியில் நேர்ந்த சோகம்! வீடியோ எடுத்த இளைஞர்களை தாக்கிய செவிலியர்கள்.. வெளியான பதறவைக்கும் வீடியோ.. பீகாரில் அதிர்ச்சி ! 3 மாத Plan.. 3 நிமிடம் வேடிக்கை பார்த்ததால் மாட்டிய திருடர்கள்: சென்னை நகை கடை கொள்ளை சம்பவத்தில் திடுக்!
நோர்வேயின் முன்னாள் அமைச்சரும், இலங்கைக்கான முன்னாள் சமாதான தூதுவருமான எரிக் சொல்ஹெய்மிற்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கியஸ்தர்களுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ சுமந்திரன் மற்றும் இரா.சாணக்கியன் ஆகியோரை சந்தித்து பேசியுள்ளதாக எரிக் சொல்ஹெய்ம் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். ‘பாராளுமன்ற உறுப்பினர்களும் பழைய நண்பர்களுமான எம்.ஏ சுமந்திரன் மற்றும் இராசமாணிக்கம் சாணக்கியன் ஆகியோருடன் கொழும்பில் சந்தித்து உரையாடியிருந்தேன்.’ என அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். இலங்கை எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடி தொடர்பில் இதன்போது கவனம் செலுத்தப்பட்டிருந்ததாக குறிப்பிடப்படுகின்றது. அத்துடன், பொருளாதார மீட்சி, பசுமையான அபிவிருத்திகள் மற்றும் அரசியல் சீர்திருத்தம் தொடர்பில் ஆராயப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
('சிறுவர் இலக்கியம்') ஆளுமைகளை அறிந்து கொள்வோம்: கவிஞர் சாரணாஹையூம் (ஜனாப் என்.எஸ்.ஏ.கையும்) - வ.ந.கி - சிறுவர் இலக்கியம் ('சிறுவர் இலக்கியம்') ஆளுமைகளை அறிந்து கொள்வோம்: கவிஞர் சாரணாஹையூம் (ஜனாப் என்.எஸ்.ஏ.கையும்) - வ.ந.கி - விவரங்கள் - வ.ந.கி - சிறுவர் இலக்கியம் 14 ஏப்ரல் 2021 அச்சிடுக - பதிவுகளின் 'சிறுவர் இலக்கியம்': இப்பகுதியில் சிறுவர் இலக்கியப்படைப்புகள் வெளியாகும். உங்கள் படைப்புகளை இப்பகுதிக்கு அனுப்பி வையுங்கள். சிறுவர் இலக்கியத்தைப் பிரதிபலுக்கும் கதை, கவிதை, கட்டுரைகளை நீங்கள் அனுப்ப வேண்டிய முகவரி: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.. - பதிவுகள் - கவிஞர் சாரணாகையூம் (இயற்பெயர் ஜனாப் என்.எஸ்.ஏ.கையூம்) பதுளையைச் சேர்ந்தவர். ஆசிரியராகப் பணியாற்றியவர். இலங்கைத் தமிழ் இலக்கியத்தில் குழந்தைகள் இலக்கியமென்றால் சோமசுந்தரப்புலவர், வேந்தனார் இவர்களுடன் என் நினைவுக்கு வரும் அடுத்தவர் இவர். என் மாணவப் பருவத்தில் ஈழநாடு மாணவர் மலரில் வெளியாகிய இவரது குழந்தைக் கவிதைகளைப் படித்து இன்புற்றதுண்டு/. இலங்கையில் வெளியான பத்திரிகைகள், சஞ்சிகைகள் பலவற்றில் இவரது கவிதைகளும் இடம் பெற்றிருக்கும். குழந்தைகளுக்காகக் கவிதைகள், கதைகள் எழுதும் பலர் அத்துறையில் சிறந்து விளங்காமலிருப்பதற்கு முக்கிய காரணங்களிலொன்று குழந்தைகளுக்கான படைப்புகளை அவர்கள் பெரியவர்களாகிய அவர்களது பார்வையில் படைப்பதுதான். குழந்தைகளாக மாறிப்படைப்புகளைத் தருவதை அவர்கள் மறந்து விட்டிருப்பார்கள். அதனால் குழந்தைகள் பலரையும் அவர்களது படைப்புகள் கவராமல் போய்விடுவதில் ஆச்சரியமில்லை. குழந்தைகளின் உளவியலை நன்கு உள்வாங்கிக் கவிதை படைத்த கவிஞர்களில் உடனடியாக நினைவுக்கு வருபவர்கள் குழந்தை அழ.வள்ளியப்பா, கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை, வேந்தனார், சோமசுந்தரப்புலவர், சாரணாகையூம். இவர்கள்தம் குழந்தைக் கவிதைகளில் இவர்கள் குழந்தைகளாகவே மாறி விடுவார்கள். குழந்தைகளுக்குத்தேவை எளிமையான சொற்கள், மீண்டும் மனத்தில் பதியும் வகையிலான எளிமையான அதே சமயம் பாடுவதற்குரிய சந்தச்சிறப்பு மிக்க வரிகள். அவற்றை வாசிக்கையில் குழந்தைகளின் உள்ளங்களில் அவை விபரிக்கும் காட்சிகள் படம் விரிக்க வேண்டும். 'ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை. ஆனந்தம் ஆனந்தம் தோழர்களே (சோமசுந்தரப்புலவர்) ', 'காலைத்தூக்கிக் கண்ணிலொற்றி கட்டிக்கொள்ளும் அம்மா' (வேந்தனார்) போன்ற கவிதைகளைப் படிக்கையில் குழந்தைகளுக்கு அக்கவிதைகள் விபரிக்கும் காட்சிகள் மனக்கண்ணில் படமாக் விரிந்து மகிழ்வினைத் தருகின்றன. இவை போன்ற குழந்தைக்கவிதைகளை எழுதியவர் கவிஞர் சாரணாகையூம். சாரணாகையூம் அவர்களின் குழந்தைக் கவிதைகளின் தொகுப்பொன்றினை 'சிறுவர் தொகுப்பு' என்னும் பெயரில் கண்டி 'தமிழ் மன்றம்' (1983) வெளியிட்டுள்ளது. அதனை நூலகம் தளத்தில் வாசிக்கலாம். அதனையும் , ஈழநாடு மாணவர் மலரில் வெளியான அவரது குழந்தைக் கவிதைகள் சிலவற்றையும் பகிர்ந்துகொள்கின்றேன்.
மலேசியாவில் பிரதமராக இருந்த போது, 2015 காலகட்டத்தில்,நஜீப் ரசாக் ,அந்நாட்டின் அரசு நிறுவனமான எம்.டி.பி. நிறுவனத்தில் 4,500 கோடி ரூபாய் மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது மலேசியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பெரும் போராட்டங்களும் நடைபெற்றன. இதையடுத்து அவருக்கு சொந்தமான சொத்துக்கள் மீது மலேசிய ஊழல் தடுப்பு பிரிவினர் நடத்திய சோதனைகளின் போது 273 மில்லியன் டாலர் பெறுமதியான நகைகள் மற்றும் பணம் கைப்பற்றப்பட்டிருந்தன. இதுகுறித்து விசாரணை நடத்திய போலீசார் அவருடைய 408 வங்கி கணக்குகளையும் முடக்கி வைத்திருந்தனர். நஜிப் மீது நம்பிக்கை மோசடி, பணமோசடி, அதிகார அத்துமீறல் உள்ளிட்ட ஏழு குற்றச்சாட்டுகளை சுமத்தி இருந்தது மலேசிய அரசு. கடந்த இரண்டு ஆண்டுகளாக இது தொடர்பான நீதிமன்ற விசாரணை நடைபெற்று வந்த நிலையில் இந்த வழக்கில் இன்று தீர்ப்பளிக்கப்பட்டது. நஜீப் ரசாக் மீதான 7 குற்றச்சாட்டுக்களும் நிரூபணம் செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ள கோலாலம்பூர் உயர் நீதிமன்ற நீதிபதி முகமது நஸ்லான் முகமது கஸாலி , 3 நம்பிக்கை மோசடி குற்றச்சாட்டுகளுக்கு தலா 10 ஆண்டுகள், மூன்று பண மோசடி குற்றச்சாட்டுகளுக்கு தலா 10 ஆண்டுகள் தண்டனை விதித்து தீர்பளித்தார். ஆனால், இந்தத் தண்டனைகளை அவர் ஏககாலத்தில் அனுபவிப்பதால் அவர் 12 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவிக்க வேண்டும் என தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.. நஜிப் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டதால் அவரது ஆதரவாளர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர். இந்த குற்றசாட்டிற்கு உரிய ஆதாரம் இல்லை என்றும்,இந்த தீர்ப்பை எதிர்த்து அவர் மேல் முறையீடு செய்வார் என அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்
தமிழில் கிராமத்துப் பின்னணியில் மண் சார்ந்த படைப்புகளைத் தருகிற இயக்குநர் என்றால் உடனே பாரதிராஜா தான் நம் எல்லோர் நினைவுக்கும் வருவார். பல ஆண்டுகளுக்குப் பிறகு அமீரின் ‘பருத்தி வீரன்’ படத்தில் அப்படி ஒரு கிராமத்து மண் வாசனையை நுகர்கிற சந்தோஷம் தமிழ்சினிமா ரசிகர்களுக்குக் கிடைத்தது. அந்த வரிசையில் மிக மிக எளிமையான பின்னணியில், முழுமையான அழகியலோடு நம் கிராமத்து ஞாபகங்களை கிளறி விடக்கூடிய பெருமைமிகு படைப்பாக வந்திருக்கும் படம் தான் இந்த ”ஒரு கிடாயின் கருணை மனு.” எந்த கார்ப்பரேட் நிறுவனங்கள் மக்களின் வாழ்க்கைக்கு எதிரான நடவடிக்கைகளை தொடர்ந்து செய்து வருகிறதோ? அதே போன்ற கார்ப்பரேட் நிறுவனங்கள் தான் இதுபோன்ற மக்களின் வாழ்வியலை, மக்களின் பிரச்சனைகளைப் பற்றிப் பேசக்கூடிய படங்களை தயாரிக்கவும் முன் வருகின்றன. தண்ணீர் பிரச்சனையைப் பற்றிப் பேசிய ‘கத்தி’ படத்தை லைகா நிறுவனம் தயாரித்தது. அதேபோல கிராமத்து வாழ்வியலை மிக அழகாக நம் மனசுக்கு நெருக்கமாகச் சொல்லும் இப்படத்தை பிரபல பாலிவுட் தயாரிப்பு நிறுவனம் ஈராஸ் இண்டர்நேஷனல் தயாரித்திருக்கிறது. முன்வந்த அந்த நிறுவனத்துக்கு முதலில் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்வோம். இன்றைக்கும் கிராமத்துப் பக்கம் போனால் படமாக்க ஆயிரம் ஆயிரம் கதைகள் இருக்கின்றன. அங்கு வாழ்கிற ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒரு கதை ஒளிந்திருக்கும். அப்படி ஒரு இளைஞனின் கதைதான் இந்தப்படம். நாயகன் விதார்த்தும், நாயகி ரவீணாவும் புதுமணத் தம்பதிகள். திருமணமான கையோடு பாட்டியின் வேண்டுதலை நிறைவேற்றும் பொருட்டு குலதெய்வக் கோவிலுக்கு கிடாவெட்டி சாமி கும்பிட உறவினர்கள், நண்பர்களோடு புடை சூழ பலி கொடுக்க ஒரு கிடாவையும் லாரியில் ஏற்றிக்கொண்டு கிளம்புகிறார். போகிற வழியில் விதார்த் ஓட்டிச் செல்லும் அந்த லாரியில் இளைஞர் ஒருவர் அடிபட்டு இறந்து விடுகிறார். இதனால் அதிர்ச்சியடையும் விதார்த்தும், அவருடைய சொந்தங்களும், நண்பர்களும் அந்தப் பிரச்சனையிலிருந்து எப்படி தப்பிக்கிறார்கள்? என்பதே கிளைமாக்ஸ். ஒரு மனித உயிருக்கு பதறித்துடிக்கும் மனித மனங்கள் என்னைப் போன்ற வாயில்லா ஜீவராசிகளை வெட்டிச் சாப்பிடத் தயங்குவதில்லையே ஏன்? என்று ஒரு கிடா மனிதர்களைப் பார்த்துக் கேட்பது போலவே அமைக்கப்பட்டிருக்கிறது திரைக்கதை. தேடி வந்ததையெல்லாம் வாரிப்போட்டுக்கொண்டு பத்தோடு பதினொன்றாக இருக்கிற ஹீரோவாக இல்லாமல் தேர்ந்தெடுக்கிற கதைக்களம் ரசிகர்களுக்கு புதுவித ரசனையைத் தர வேண்டுமென்கிற விதார்த்தின் பொறுமைக்கு இந்தப்படம் அவருக்கு இன்னொரு ‘மைனா’ என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. கிராமத்து இளைஞர் கேரக்டரில் நூறு சதவீதம் மிகச்சரியாகப் பொருந்தியிருக்கும் மனுஷன் ஒரு உயிரைக் கொன்று விட்ட குற்ற உணர்ச்சியில் புழுங்கித் தவிப்பதை மிக ஆழமாக வெளிப்படுத்தியிருக்கிறார். அதே சமயத்தில் தனது வயதைச் சுட்டிக் காட்டுகிற போதெல்லாம் காமெடியிலும் ரசிக்க வைக்கிறார். நாயகியாக வரும் ரவீணா இன்றைக்கும் கிராமத்துப் பக்கம் நாம் போனால் அங்குள்ள இளம் பெண்கள் எப்படி இருப்பார்களோ? அப்படியே ”சுமார் ரக” அழகு முகமாக பொருந்தி நம் மனசுக்குள் உட்கார்ந்து கொள்கிறார். படத்தில் வருகிற அரும்பாடு உள்ளிட்ட பல பெயர் தெரியாத கேரக்டர்களும், புதுமுகங்களும் செய்கிற சேட்டைகளும், அடிக்கிற நையாண்டிகளும், அவ்வப்போது அள்ளி விடுகிற டபுள் மீனிங் டயலாக்குகளும் எல்லை மீறாத காமெடிக்கு கியாரண்டி. நாம் பார்த்த, பழகிய பல வெள்ளந்தி கேரக்டர்களை இப்படத்தில் ஆங்காங்கே பேச விட்டிருப்பது கூடுதல் சுவாரஷ்யம். சொந்தக்காரனாகவே இருந்தாலும் தொழில் என்று வந்து விட்டால் ஒரு வக்கீல் எப்படியெல்லாம் குறுக்குப் புத்தியுடன் நடந்து கொள்வான் என்பதற்கு ஜார்ஜ் ஏற்று நடித்திருக்கும் வக்கீல் கேரக்டரே சாட்சி. முதலில் சொந்தக்காரன் என்றும் பாராமல் விதார்த்திடம் பணம் கறக்க ஆசைப்பட்டு அவர் செய்யும் செயல் பின்னர் அவருக்கே பிரச்சனையாகும் போது எப்படி அதை நேக்காக ரூட் மாற்றி விட்டு சமாளிக்கிறார் என்பது சட்டத்தில் இருக்கிற ஓட்டைகளுக்கு அடையாளம்! ரகுராமின் பின்னணி இசையும், ஆர்.வி சரணின் ஒளிப்பதிவும், கூட்டல், குறைச்சல் இல்லாத கன கச்சிதமாக எடிட்டிங்கும் படத்தின் விறுவிறுப்புக்கு எக்ஸ்ட்ரா எனர்ஜி. அதிகப் பொருட்செலவு என்பதெல்லாம் ஒரு பகட்டு என்கிற உண்மையையும் உடைத்தெறிந்து கதை தான் உண்மையான திரைக்கலைஞனின் அடையாளம் என்பதையும் வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறது இந்தப்படம். ஒரு எளிமையான கதைக்கு அதிகமாக மெனக்கிட்டு நேர்த்தியாக திரைக்கதை அமைத்து, அர்த்தமுள்ள வசனங்களுடன், உச்சக்கட்ட ரசனையோடு இயக்கித் தந்திருக்கிறார் அறிமுக இயக்குநர் சுரேஷ் சங்கய்யா!
கனடாவில் நோவா ஸ்கொட்ஷியாவின் தலைநகரான ஹலிஃபெக்ஸ்ஸில் பிராந்திய எல்லைக்குள் புகைத்தலுக்கு தடை செய்யப்பட்டுள்ளது இதனை பெருமளவான மக்கள் வரவேற்றுள்ளனர். இந்த தடையின் மூலம், சிறந்த எதிர்கால சந்ததியினை கட்டியெழுப்ப முடியுமெனவும், சுகாதாரமான சூழல், ஆரோக்கியமான வாழ்வு என ஏராளமான நன்மைகள் கிட்டும் என மக்கள் கூறுகின்றார்கள். ஹலிஃபெக்ஸ்ஸில் புகைப்பதற்கு என்று ஒதுக்கப்பட்டுள்ள இடங்களைத் தவிர, ஏனயை இடங்களில் புகைக்கும் குற்றச் செயலில் ஈடுபடுவோருக்கு 25 டொலர்களில் இருந்து 2,000 டொலர்கள் வரை அபராதம் விதிக்கப்படக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புகைக்கும் பழக்கத்தை உடையவர்களுக்கு பேரூந்து தரிப்பிடங்கள் உட்பட ஒன்பது இடங்களில் புகைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. புகைப்பதற்கு என்று ஒதுக்கப்பட்டுள்ள இடங்களைத் தவிர, ஏனைய இடங்களில் சுருட்டு உள்ளிட்ட நெருப்பில் புகையும் பதார்த்தங்கள் மட்டுமின்றி, தற்போது பயன்பாட்டுக்கு வந்துள்ள மின்சுருட்டுக்களையும் பயன்படுத்த முடியாது என்று தெரிவிக்கப்படுகிறது. நகரில் புகைப்பதற்கு என்று மேலும் 30 இடங்களில் இடம் ஒதுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் நகராட்சி மன்றம் அறிவித்துள்ளது.
சுவிட்ஸர்லாந்தில் இரு தமிழர்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதலில் ஒருவர் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம், நேற்று முன்தினம் அந்நாட்டின் சொலத்தூண் மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது. சுவிஸ்வாழ் இலங்கை தமிழர்களுக்கு இடையில் இடம்பெற்ற வாய்தர்க்கம் முற்றிய நிலையில் இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான தமிழர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழ ந்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார் கூறியுள்ளனர். வவுனியா குருமன்காடு பகுதியை சேர்ந்த 29 வயதான கார்த்திக் பாலேந்திரன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக சுவிட்ஸர்லாந்து பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன. தாயகம் மாணவர்களின் போராட்டம், தமிழில் வந்தது கடிதம். சிங்கள காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட மாணவர்கள் இருவரது விசாரணையினை நியாயமாக நடத்தக்கோரி பல்கலைக்கழக மாணவர்களால் வடமா காண ஆளுநருக்கூடாக ஜனாதிபதிக்கு வழங்கப்பட்ட மஜரினை தான் ஜனாதிபதிக்கு அனுப்பியதனை உறுதிப்படுத்தும் விதத்தில் அதன் பிரதியை ஆளுநர் றெஜினோல்ட் கூரே பல்கலைக்கழக கலைப்பீட மாணவ ஒன்றிய தலைவருக்கு சிங்களத்தில் முன்னர் அனுப்பி வைத்திருந்தார். ஆனால் இந்த சிங்கள மொழியிலான அறிக்கையினை மாணவர் ஒன்றியம் நிராகரித்த நிலையில் இன்றையதினம் தமிழில் அந்த அறிக்கையினை அனுப்பி வைத்துள்ளதாக கலைப்பீட மாணவ ஒன்றிய தலைவர் தெரிவித்துள்ளார். தாயகம் ஆனையிறவு தொடரூந்து நிலையம் இன்று திறப்பு ஆனையிறவு தொடரூந்து நிலையம் இன்று திறக்கப்படவுள்ளது. உதவியினால் கட்டி எழுப்பப்படும் வேலைத்திட்டத்தின் கீழ் இலங்கைப் பாட சாலை மாணவ மாணவர்களின் சேமிப்பு மற்றும் அர்ப்பணிப்பும் நன்கொடையாக வழங்க ப்பட்ட நிதியும் அவர்களினால் மேற்கொள்ளப்படும் தேசிய நற் பணியினை ஊக்குவிக்கும் பொருட்டு அவர்களின் ஆசிரியர்களினால் வழங்கப்பட்ட நன்கொடையினையும் சேர்த்து கல்வி அமைச்சின் நிதியுதவியுடன் அன்பின் தரிப்பிடம் என கட்டி எழுப்பப்பட்ட ஆனையி றவு புகையிரதநிலையம் நாளையதினம் திறந்து வைக்கப்பட்வுள்ளது. கல்வி இராஜாங்க அமைச்சர் வி .எஸ் .இராதாகிருஸணன் மற்றும் போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா ஆகியோரின் பங்கேற்புடன் கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவம்சம் அவர்களினால் நாளை காலை பத்துமணிக்கு புகையிரதநிலையம் திறந்து வைக்கப்படவுள்ளது. தமிழகம் போராடாவிட்டால் தமிழர்கள் கோழைகள் தமிழ் நாடு: முதல்வர் ஜெயலலிதா உடல் நலம் தொடர்பாக கருத்து தெரிவித்தால், பேசினால், பதிவிட்டால் கைது என்பது அரசியல் சாசனச் சட்டத்திற்கு விரோதமானதாகும். இதற்கு எதிராக தமிழக மக்கள் குறிப்பாக இளைஞர்கள் மாநிலம் முழுவதும் கொந்தளித்துப் போராட்டம் நடத்த வேண்டும். இல்லாவிட்டால் தமிழர்கள் வெட்டிப் பேச்சுக்குத்தான் லாயக்கு, கோழைகள் என்றுதான் நான் கூற வேண்டியிருக்கும் என்று முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு கூறியுள்ளார். முதல்வர் ஜெயலலிதா உடல் நலம் தொடர்பாக வதந்தி பரப்பினால் கைது என்று தமிழக போலீஸார் களம் குதித்துள்ளனர். அதிமுகவினர் கொடுக்கும் புகார்களை வாங்கிக் கொண்டு சரமாரியாக கைது செய்து வருகின்றனர். இதுவரை 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதில் மிகக் கொடுமையானது கோவையில் 2 வங்கி ஊழியர்கள் கைது தான். ஜெயலலிதா குறித்து பேசிய ஒரே குற்றத்திற்காக அதிமுக பெண்மணி ஒருவர் புகார் கொடுத்தார் என்று கூறி இருவரையும் கைது செய்துள்ளனர். இவர்கள் மீது கடுமையான சட்டப் பிரிவும் பாய்ந்துள்ளது. அதாவது அதிகபட்சம் 7 ஆண்டு சிறைத் தண்டனை கிடைக்கக் கூடிய அளவுக்கு கடுமையான சட்டப் பிரிவை போலீஸார் பிரயோகித்து வருகின்றனர். இதற்கு தமிழக அளவில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், கம்யூனிஸ்ட் தலைவர்கள் உள்ளிட்டோர் இந்தக் கைதுகளைக் கண்டித்துள்ளனர். இந்த நிலையில் முன்னாள் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியும் முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதியுமான மார்க்கண்டேய கட்ஜுவும் இதைக் கண்டித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விரிவான பதிவை தனது முகநூல் பக்கத்தில் போட்டுள்ளார். அதன் தொடர்ச்சியாக இன்னொரு பதிவையும் அவர் போட்டுள்ளார். அதில், உடனடியாக தமிழகம் முழுவதும் இந்த சட்டவிரோத கைதுகளைக் கண்டித்து மக்கள் போராட்டத்தில் குதிக்க வேண்டும். குறிப்பாக இளைஞர்கள் போராட வேண்டும். மிகப் பெரிய அளவில் போராட்டங்கள் நடைபெற வேண்டும். அப்படி இல்லாவிட்டால் தமிழர்கள் வெட்டிப் பேச்சுக்குத்தான் லாயக்கு. கோழைகள். அரசியல் சாசனம் தங்களுக்கு வழங்கியுள்ள அடிப்படை சிவில் உரிமையைக் கூட காக்கத் தெரியாத கோழைகள் என்றுதான் நான் கூற வேண்டியிருக்கும். இந்த சர்வாதிகாரிகளுக்கு எதிராக போராடக் கூட முடியாத கோழைகள் என்றுதான் நான் சொல்ல வேண்டி வரும் என்று கூறியுள்ளார் கட்ஜு. உலகம் ஈராக்-மெசுல் நகரைக் கைப்பற்ற படை நடவடிக்கை இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்து கொள்ளும் குழுவினரிடம் இருந்து மெசூல் நகரை மீண்டும் கைபற்றுவதற்காக, தாக்குதல் ஒன்றை இராக் படைப்பிரிவுகள் தொடங்கியுள்ளன. இந்த தாக்குதலை அறிவித்தபோது, வெற்றிக்கான நேரம் வந்துவிட்டது என்று இராக் பிரதமர் ஹைதர் அல்-அபாதி கூறியிருக்கிறார். அது முதல் பீரங்கி குண்டு தாக்குதல் ஒலி கேட்ட வண்ணம் இருக்கிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இஸ்லாமிய அரசு குழுவினர் மெசூல் நகரை கைப்பற்றினர். இப்போது இந்த குழுவினரின் கடைசி வலுவிடமாக இது விளங்குகிறது. இராக் மற்றும் அமெரிக்காவால் விமானத் தாக்குதல் நடத்தப்படும் இந்த நகரை சுற்றி, 3 லட்சம் படைப்பிரிவுகளும், ஆயுதக்குழுவினரும் நிறுத்தப்பட்டுள்ளனர். மெசூல் நகரில் 4 முதல் 8 ஆயிரம் வரை இஸ்லாமிய அரசு தீவிரவாதிகள் இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. அங்கு வாழும் 15 லட்சம் பேரின் பாதுகாப்பு பற்றி ஐக்கிய நாடுகள் அவை கவலை வெளியிட்டுள்ளது. இஸ்லாமிய அரசு தீவிரவாதிகளை தோல்வியடைய செய்கின்ற இந்த முக்கியமான நேரத்தில் இராக்கிற்கு உதவ சர்வதேச கூட்டணி படை தயாராக இருக்கும் என்று அமெரிக்க பாதுகாப்பு செயலர் தெரிவித்திருக்கிறார். அறிவியல் ஹைட்ரோஃபுளூரோகார்பன்களை ஒழிக்க ஒப்பந்தம் சுமார் இருநூறு நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள், உலக வெப்பமயமாதலுக்கு அதிக பங்களிப்பைச் செய்யும் ஹைட்ரோஃபுளூரோகார்பன்களை அகற்றுவதற்கான ஓர் ஒப்பந்தத்தை வெற்றிகரமாக எட்டியுள்ளனர். உலக வெப்பமயமாதல் குறித்து ரூவாண்டாவில் நடைபெற்ற மாநாட்டின் ஒரு பகுதிImage copyrightGETTY IMAGES உலக வெப்பமயமாதல் குறித்து ரூவாண்டாவில் நடைபெற்ற மாநாட்டின் ஒரு பகுதி ருவண்டா தலைநகர் கிகாலியில் கூடியிருந்த பிரதிநிதிகள் இரவு முழுவதும் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பின், ஹைட்ரோஃபுளூரோகார்பன் பயன்பாட்டைப் படிப்படியாக நிறுத்துவது என்ற ஒப்பந்தத்தை ஆரவாரங்களுடன் அறிவித்தனர். ஹைட்ரோஃபுளூரோகார்பன் என்பவை தான், குளிர்சாதனப் பெட்டிகள் மற்றும் குளிரூட்டிகள் ஆகிய சாதனங்கள் செயல்படத் தேவையான ஒரு முக்கியமான அம்சமாகும். கரியமிலவாயு எனப்படும் கார்பன் டை ஆக்சைடை( carbon dioxide)பசுமை வாயுக்கள் என்று அறியப்படும் கிரீன்ஹவுஸ் வாயுக்களை(greenhouse gases) போன்று ஹைட்ரோஃபுளூரோகார்பன்கள் ஆயிரம் மடங்கு சக்தி வாய்ந்தவை என்று கூறப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் கீழ், பணக்கார நாடுகளில் ஹைட்ரோஃபுளூரோகார்பன் பயன்பாடு, மூன்று ஆண்டுகளில், நிறுத்தப்படும். குறைவான வளர்ச்சியை உடைய நாடுகளில், இந்த முயற்சி பல ஆண்டுகளுக்குப் பின்னர் தொடங்கும். இலங்கை மீண்டும் களத்தில் இறங்கும் சந்திரிகா மஹிந்தவிடம் இருந்து நாட்டைமிட்ட சந்திரிக்கா சிலகாலம் ஒதுங்கி இருந்தார் ஆனால் இப்போ மீண்டும் மஹிந்தவின் அடாவடிகள் அதிகரித்துள்ள நிலையில் சந்திரிக்கா களம் இறங்கவுள்ளார்.முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் முன்னாள் கடற்படை தளபதிகளை விசாரணைக்கு உட்படுத்தியமை தொடர்பில் ஜனாதிபதி காரசாரமான முறையில் கருத்து வெளியிட்டதால், நல்லாட்சியில் கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளது. மைத்திரி- ரணில் ஆட்சியில் ஏற்கனவே சுதந்திரக் கட்சி -ஐ.தே.க வின் சில உறுப்பினர்களுக்கு இடையில் முரண்பாடுகள் ஏற்பட்டிருந்த நிலையில், கோட்டா குறித்து ஜனாதிபதி தெரிவித்த கருத்தானது இருதரப்பு முரண்பாட்டின் உச்சத்தை எட்டியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்தோடு, நிதிக்குற்ற விசாரணை பிரிவு, இலஞ்ச ஊழல் ஆணைக்குழு மற்றும் குற்றப்புலனாய்வு பிரிவு உள்ளிட்ட விசாரணை குழுக்கள் அரசியல் நோக்கம் கருதி செயற்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்க நேரிடும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டிருந்தார். இதன் வெளிப்பாடாக, தற்போது அமைச்சர் சாகல ரத்நாயக்கவின் கீழுள்ள பொலிஸ் திணைக்களம் ஜனாதிபதியின் கீழ் கொண்டுவரப்படவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், விடுமுறையின் நிமித்தம் தற்போது லண்டனில் தங்கியுள்ள சந்திரிகா தேசிய அரசிற்குள் எழுந்துள்ள பிரச்சினையை தீர்ப்பதற்காக நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை நாடு திரும்பவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இலங்கை கோத்தா கைதினை தடுக்க முயற்சி முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச கைதுசெய்யப்படுவதை தடுப்பதற்காக, அவரது விசுவாசியான இராணு வப் புலனாய்வுப் பிரிவின் தற்போதைய தலைமை அதிகாரி, ஜனாதிபதி ஊடாக சதித்திட்டங்களை அரங்கேற்றி இருப்பதாக மாதுலு வாவே சோபித்த தேரர் உருவாக்கிய நியாயமான சமூகத்திற்கான மக்கள் இயக்கம் குற்றம்சாட்டியுள்ளது. இராணுப் புலனாய்வுப் பிரிவின் தலைமை அதிகாரியான பிரிகேடியர் துவான் சுரேஷ் சாலி, மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக்கால த்திலும் எட்டு வருடங்களாக இந்தப் பதவியை வகித்தவர் என்றும் குறிப்பிட்டுள்ள நியாயமான சமூகத்திற்கான மக்கள் இயக்க த்தின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் சரத் விஜேசூரிய, குறித்த இராணுவ அதிகாரி இரகசியப் பொலிசாரால் கைது செய்யப்படுவதற்கு உள்ள நிலையிலேயே ஜனாதிபதிக்கு பிழையான தகவல்களைக் கொண்டு விசாரணைகளை முடக்க முயற்சி ப்பதாகவும் தெரிவித்துள்ளார். தாஜூடீன் படுகொலை, பிரகீத் எக்னலிகொட கடத்தப்பட்டு காணாமல் போகச் செய்யப்பட்ட சம்பவம் மற்றும் ரவிராஜ் படு கொலை உட்பட கடந்த காலங்களில் இடம்பெற்ற படுகொலைகள் உட்பட பாரதூரமான குற்றச்செயல்கள் தொடர்பில் விசாரணை நடத்திவரும் இரகசியப் பொலிசார், குழிதோண்டி புதைக்கப்பட்ட ஆவணங்களைத் தோண்டி எடுத்து, விசாரணைகளை மேற்கொண்டுள்ள விதம், ஒட்டுமொத்த நாடும் பாராட்டத் தக்கது என்றும் நியாயமான சமூகத்திற்கான மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் குறிப்பிட்டுள்ளார். அதேவேளை இந்த விசாரணைகள் 95 வீதமானவை பூர்த்தியடைந்துவிட்டதாகவும், இன்னமும் நீதிமன்றில் நிறுத்தப்பட்டு தீர்ப்பு வழங்க வேண்டியது மாத்திரமே எஞ்சியுள்ளதாகவும் கூறிய பேராசிரியர் சரத் விஜேசூரிய, இதற்கமைய முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்சவிற்கு இந்த குற்றங்களில் நேரடி தொடர்பிருப்பதாகவும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரி வித்தார். இந்த விசாரணைகளை தடுக்க ஆரம்பம் முதல் முயன்றுவந்த இராணுவப் புலானாய்வுப் பிரிவின் தலைமை அதிகாரி, இராணுவம் உட்பட முப்படையினரும் ஜனாதிபதி தொடர்பில் கடும் ஆத்திரத்துடன் இருப்பதாக பொய்யான தகவல்களை ஜனாதிபதிக்கு கூறி அவரை தனது ஆளுகைக்குள் எடுத்து அவரைக் கொண்டு இரகசிய பொலிசாரின் விசாரணைகளை கடுமையாக விமர்சித்து அதன் ஊடாக விசாரணையை முடக்க எத்தனித்துள்ளதாகவும் நியாயமான சமூகத்திற்கான அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பேரா சிரியர் சரத் விஜேசூரிய தெரிவித்தார். அத்துடன் இந்த இராணுவப் புலனாய்வு அதிகாரியின் பிழையான தகவல்கள் காரணமாகவே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன கட்ந்த 12 ஆம் திகதி இலங்கை மன்றக் கல்லூரியில் ஆற்றிய உரையின் போது ஊழல், மோசடிகள் மற்றும் பாரதூரமான குற்றங்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுவரும் இரகசிய பொலிசார், பொலிஸ் நிதி மோசடிப் பிரிவு மற்றும் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அரசியல் நிகழ்ச்சி நிர்களுக்கு அமைய செயற்படுவதாக குற்றம்சாட்டியிருந்ததாகவும் பேராசிரியர் விஜேசூரிய சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கை மஹிந்த ஆட்சியின் அராஜகம்; நீதிமன்றம்சாடல் கொழும்பை அண்மித்த புறநகர் பிரதேசமான வெலிவேரிய ரத்துபஸ்வெல பகுதியில் தமக்கான குடிநீரைக் கேட்டு போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது இராணுவத்தைக் கொண்டு அடக்கிய சம்பவம் பாரதூரமான குற்றச்செயலென கம்பஹா நீதவான் தீர்ப்பளி த்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலமான 2013 ஆம் ஆண்டு இடம்பெற்ற இந்த சம்பவத்தில், தமக்கான குடிநீரைக் கேட்டு வீதியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை இராணுவத்தைக் கொண்டு அடக்கியதுடன், அதன்போது துப்பாக்கிப் பிரயோகம் மற்றும் தாக்குதல் நடத்தியதால் இளைஞர்கள் மூவர் உயிரிழந்தனர். சர்வதேச ரீதியிலும் கடும் கண்டனங்களுக்கும், விமர்சனங்களுக்கும் உள்ளாகியிருந்த இந்த சம்பவத்தின் போது கொல்லப்பட்ட இளைஞர்களில் இருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்ததாகவும், மூன்றாவது இளைஞரின் தலையில் கூரிய ஆயுதமொன்று தாக்கப்பட்டதால் உயிரிழந்ததாகவும் கம்பஹா நீதவான் காவிந்தியா நாணயக்கார தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் ரி 56 ரக 98 இயந்திரத் துப்பாக்கிகள் நீதிமன்றம் கையகப்படுத்தியிருந்த நிலையில் அவை இரசாயன பகுப்பாய்வாளரின் பரிசோதனைக்கு உட்படுத்தியதற்கு அமைய அதில் மூன்று துப்பாக்கிகள் ரத்துபஸ்வெல இளைஞர்களின் படுகொலையுடன் தொடர்புடையமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் நீதவான் தெரிவித்துள்ளார் தமிழகம் பாரவூர்தி மோதி மாணவிகள்மூ வர் பலி- விசாரணை துவக்கம் சென்னையில் வியாழக்கிழமையன்று தண்ணீர் லாரி மோதி மூன்று மாணவிகள் கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தமிழ்நாட்டில் மோட்டார் வாகனச் சட்டத்தின்படி, விபத்துகள் நடக்கும்போது ஓட்டுனரின் உரிமத்தை ரத்துசெய்யும் நடைமுறை சரியாகப் பின்பற்றப்படாத காரணத்தால்தான் இம்மாதிரி விபத்துகள் தொடர்ந்து நடப்பதாக ஆணையம் குற்றம்சாட்டியுள்ளது. சென்னை குடிநீர் வடிகால் வாரியம், காவல்துறை, போக்குவரத்துத் துறையின் அலட்சியமே இதற்குக் காரணம் என செய்திகளிலிருந்து அறிய வருவதாக ஆணையம் தெரிவித்துள்ளது. ஆகவே இந்த விவகாரம் குறித்து நான்கு வாரங்களுக்குள் தலைமைச் செயலர், காவல்துறைத் தலைவர் ஆகியோர் விரிவான அறிக்கையை அளிக்க வேண்டுமென கோருவதாக ஆணையம் தெரிவித்துள்ளது. தண்ணீர் லாரிகளுக்கான விதிகள், ஒரு நாளைக்கு எத்தனை முறை அவை தண்ணீர் ஏற்றிச் செல்லலாம், தண்ணீர் லாரி தொடர்பான விபத்துகளில் கடந்த ஐந்து ஆண்டுகளில் இறந்தவர்கள் குறித்த விவரம், சம்பந்தப்பட்ட ஓட்டுனர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், இம்மாதிரியான விபத்துகளைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் ஆகியவை குறித்த விவரங்களையும் ஆணையம் கோரியுள்ளது. மாநில போக்குவரத்துத் துறை, காவல்துறை, பிற நிர்வாக அதிகாரிகள் விதிமுறைகளைச் சரியாக பின்பற்றாத காரணத்தினாலேயே சாலையில் நடந்து செல்லும் அப்பாவி பொதுமக்கள் பெரும் அபாயத்தை எதிர்கொள்வதாக ஆணையம் சுட்டிக்காட்டியுள்ளது.