text
stringlengths
328
398k
சுமார் 20 லட்சம் கோடி ரூபாய் அளவுக்குச் செலவு செய்தது இப்படி மோசமாக தோற்பதற்கா என கத்தாரை சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் கிண்டல் செய்து வருகின்றனர். Praveen Updated on : 21 November 2022, 12:27 PM கிட்டத்தட்ட உலகத்தின் பாதி மக்கள் ஆவலோடு எதிர்பார்த்து வரும் உலகக்கோப்பை கால்பந்து தொடர் நேற்று இரவு கோலாகலமாக மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான கத்தாரில் தொடங்கியது. ஆசியாவில் நடக்கும் இரண்டாவது கால்பந்து உலகக்கோப்பை தொடராகவும், மத்திய கிழக்கு பகுதியில் நடக்கும் முதல் கால்பந்து உலகக்கோப்பை தொடராகவும் இருப்பதால் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. கால்பந்து உலகக்கோப்பை தொடர் கத்தாரில் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டதில் இருந்தே இந்த தொடர் பல்வேறு சர்ச்சைகளை சுமந்து வருகிறது. போட்டியை நடத்த உலக கால்பந்து கூட்டமைப்பான பீபாவுக்கு (FIFA)கத்தார் லஞ்சம் கொடுத்ததாக எழுந்த குற்றச்சாட்டு தற்போது வரை கால்பந்து உலகை உலுக்கி வருகிறது. இந்த நிலையில், கோலாகலமாக தொடங்கிய இந்த தொடரின் முதல் போட்டியில் போட்டியை நடத்தும் கத்தார் மற்றும் ஈகுவடார் ஆகிய அணிகள் மோதின. உலகக்கோப்பை தொடரின் முதல் போட்டியில் போட்டியை நடத்தும் நாடு தோற்றதில்லை என்ற வரலாறு இருப்பதாலும், இந்த தொடரில் கத்தார் மற்றும் ஈகுவடார் அணிகள் சமபலம் கொண்ட அணிகள் என்பதாலும் இந்த போட்டியில் கத்தார் வெற்றிபெறும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இந்த போட்டி ஆரம்பித்ததில் இருந்தே ஈகுவடார் அணியே ஆதிக்கம் செலுத்தியது. ஆட்டத்தின் மூன்றாவது நிமிடத்திலேயே ஈகுவடார் அணி தலைவர் வாலன்சியா தலையால் முட்டி கோல் அடித்தார். ஆனால் சர்ச்சைக்குள்ளான வகையில் அதற்கு VAR-இல் ஆப் சைடு வழங்கப்பட்டது. பின்னர் கத்தார் அணி கோல் கீப்பர் செய்த தவறால் ஈகுவடாருக்கு பெனால்டி வாய்ப்பு வழங்கப்பட்டது. அந்த வாய்ப்பை எந்தப் பதற்றமும் இல்லாமல் கோலாக மாற்றினார் வாலென்சியா. அதன் பின்னரும் ஆதிக்கம் செலுத்திய ஈகுவடார் அணி 31-ஆவது நிமிடத்தில் மற்றொரு கோலை அடித்தது. அந்த அணியின் வாலென்சியா தலையால் முட்டி அணிக்கான கோலை அடித்தார். பின்னர் இரு அணிகளும் மேற்கொண்டு கோல் அடிக்காத நிலையில், போட்டியில் ஈகுவடார் அணி 2-0 என்ற கணக்கில் கத்தார் அணியை வீழ்த்தி தனது முதல் வெற்றியை பதிவு செய்தது. போட்டியை நடத்தும் கத்தார் அணி தனது அடுத்தடுத்த போட்டியில் பலம் வாய்ந்த சேனக்கல் மற்றும் நெதர்லாந்து அணியை சந்திக்கவுள்ள நிலையில், அதில் வெற்றி பெறுவது கடினமான செயலாகும். இதனால் அந்த அணி இந்த தொடரில் ஒரு வெற்றிகூட பெறாது என எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமின்றி போட்டியை நடத்தும் நாடு முதல் போட்டியில் தோல்வியே தழுவாத நிலையில், முதல் போட்டியில் தோல்வியை சந்தித்து உலக அளவில் மோசமான சாதனையை பதிவு செய்துள்ளது. கத்தார் நாடு இந்த உலகக்கோப்பைக்காக எந்த நாடும் செலவு செய்யாத வகையில் சுமார் 20 லட்சம் கோடி ரூபாய் அளவுக்குச் செலவு செய்த நிலையில், அதெல்லாம் இந்த மோசமான சாதனைக்காகதானா என சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் கிண்டல் செய்து வருகின்றனர். Also Read உலகசாதனை படைத்த தமிழ்நாடு வீரரிடம் Spark இல்லையா? ஜெகதீசனை வைத்து தோனியை விமர்சிக்கும் ரசிகர்கள் ! Qatar worldcup QATvsECU qatar lost Trending #FactCheck: 'Kashmir Files' சர்ச்சை.. நடாவ் மன்னிப்பு கேட்டதாக வதந்தி பரப்பி வரும் கும்பல்.. ஆனால் உண்மை? ஆளுநருக்கு இத்தனைகோடி செலவா ? வேலையே செய்யாதவர்களுக்கு இத்தனை செலவு ஏன் என இணையவாசிகள் ஆவேசம் ! ”கும்பல் வன்முறையில் ஈடுபட்டால் ஆயுள் சிறை” - ஜார்க்கண்ட் அரசு அதிரடி; சட்டமன்றத்தில் மசோதா நிறைவேற்றம்! மும்பை: சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து பிளேடால் அறுத்து கொன்ற சிறுவன் -காரணத்தை கேட்டு அதிர்ந்த போலிஸ் Latest Stories "இப்படி செய்தால் இந்தியா அல்ல, உலகமே நம்மை கேலிதான் செய்யும்" - பாக். அணியை விமர்சித்த முன்னாள் வீரர் ! வெற்றிமாறனின் 'விடுதலை' படப்பிடிப்பில் ரோப் கயிறு அறுந்து விபத்து.. படுகாயமடைந்த சண்டை பயிற்சியாளர் பலி ! மனித மூளைக்குள் சிப்.. எலான் மஸ்க்-ன் அடுத்த அதிரடி.. விலங்குகளுக்கு பொருத்தி சாதனை படைத்ததாக அறிவிப்பு ! கச்சா எண்ணெய் விலை 25% குறைந்தும் பெட்ரோல் விலை ஏன் குறையவில்லை ? மோடிக்கு ராகுல் காந்தி சரமாரி கேள்வி !
மிகப்பெரிய பாலியல்சந்தையாக கருதப்படும் இடம் இந்திய–நேபாள எல்லை. இங்கு விற்கப்படும் பெண்களை மீட்க அனுராதா கொய்ராலா எனும் சமூகசேவகி ‘மைத்தி நேபாள்’ என்ற தொண்டு நிறுவனத்தை நடத்தி வருகிறார். அதுமட்டுமன்றி குடும்பவன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்காகவும் போராடி வரும் இவர் 1993ஆம் ஆண்டிலிருந்து இதுவரை சுமார் பன்னிரண்டாயிரம் பெண்கள் மற்றும் சிறுமிகளைப் பாலியல் தொழிலில் இருந்தும், ஆள்கடத்தலிலிருந்தும் மீட்டுள்ளார். சஞ்சீவினிக்கு உண்ணும் உணவு தொண்டையை அடைப்பது போன்ற உணர்வு. மதியவுணவுக்காக வீடு திரும்பியவருக்கு ஹாலில் அமைதியின்றி அமர்ந்திருந்த தந்தையைப் பார்த்ததுமே வித்தியாசமாகத் தோணியது. அதுமட்டுமன்றி சஞ்சீவினியின் கார் சத்தம் கேட்டதுமே எட்டிப்பார்க்கும் அலமேலுவும் இன்றைக்கு அறையைக் காவல் காத்தபடி உள்ளே முடங்கியிருந்தது இன்னொரு ஆச்சரியம். சரி போகட்டும் என்று இரு மகள்களிடமும் திரும்பியவருக்கு அவர்களின் சுரத்தே இல்லாத முகம் தான் பதிலாய்க் கிடைத்தது. இந்த மாதிரி சந்தர்ப்பங்களில் இஷானியிடமிருந்து வார்த்தைகளை வாங்குவது சிரமம் என்பதால் அஸ்மிதாவை கேள்வியாய் நோக்கினார். அவள் இது போன்ற தருணங்களில் உணர்ச்சிவசப்பட்டுத் தடுமாறி அவர் பார்த்ததில்லை. அவர் எதிர்பார்த்தது போலவே அஸ்மிதா வாயைத் திறந்து பேச ஆரம்பித்தாள். தானும் இஷானியும் காய்கறி வாங்கச் சென்ற போது நடந்த நிகழ்வுகளை அன்னையிடம் கூற ஆரம்பித்தாள். முழுவதையும் கேட்ட பிறகு சஞ்சீவினியால் எதுவும் பேச இயலவில்லை. முகம் கறுக்க உணவுமேஜைக்குச் சென்று அமர்ந்தவருக்கு கண்ணம்மா சாதம் வைக்க ஆரம்பித்தார். மல்லிகைப்பூவாய் முன்னே சரிந்திருந்த அன்னம் கூட விழுங்குகையில் கல்லை விழுங்குவது போல இருந்தது சஞ்சீவினிக்கு. தண்ணீரைக் குடித்துச் சாதத்தை வாயில் அடைத்தவரின் கை அடுத்தக் கவளத்தை வாயில் வைக்கும் போதே அந்தரத்தில் நின்றுவிட்டது. ஏனெனில் வாயில் நிலையைத் தொட்டபடி நின்றிருந்தவன் ருத்ரா. வழக்கம் போல சாந்தமான அவனது முகத்தில் சங்கடம் கலந்திருக்க நெற்றியில் வியர்வை துளிர்த்திருந்தது. அதைத் துடைத்தபடி உள்ளே வந்தவன் தயக்கத்துடன் “சஞ்சுக்கா அஜ்ஜூ……” என்று ஆரம்பித்தவன் சஞ்சீவினியின் பார்வைவீச்சில் தலை கவிழ்ந்து கொண்டான். அந்த வீட்டில் இருந்த அனைவரும் அவனைச் சங்கடத்துடன் பார்வையிட அவனால் தலை நிமிர்ந்து யாரையும் நோக்க இயலவில்லை. அந்நேரம் பார்த்து அலமேலுவின் அறையிலிருந்து வெளியே வந்த இஷானி “மா! ஏன் இன்னும் சாப்பிடாம வெறிச்சுப் பார்த்திட்டிருக்கிங்க?” என்று சாதாரணமாகக் கேட்டபடி உணவுமேஜையின் அருகில் வந்தவள் ஹாலின் நடுநாயகமாக நின்றிருந்த ருத்ராவைக் கண்டதும் சிலையாய்ச் சமைந்தாள். இவனா என்ற திகைப்புடன் கண்களை உருட்டியவண்ணம் நின்றவளின் தோற்றம் அந்த இக்கட்டான தருணத்திலும் ருத்ராவை ரசிக்கத் தூண்டியது. ஆனால் அதை மறக்கடிக்கும் விதமாக அஸ்மிதா கடுகடுப்புடன் “பன்னிரண்டு வயசு பையனுக்கு மொபைல் ரொம்ப அவசியமோ? உங்க வீட்டுல குழந்தைக்குப் பொம்மைக்குப் பதிலா போன் வாங்கிக் குடுத்து தான் பழக்கமா?” என்று கேட்கவும் “அந்தப் போன் இருந்ததால தான் நீ என்னை கான்டாக்ட் பண்ணி அஜ்ஜூவோட நிலமையைச் சொல்ல முடிஞ்சுது அஸ்மி” என்று அவன் சொன்னது தான் தாமதம் அஸ்மிதாவின் முகத்திலிருந்த கடுகடுப்பு மறைந்து அவள் வாயடைத்துப் போய்விட்டாள். அவளால் என்றுமே அவனிடம் கடுகடுக்க முடியாது என்ற உண்மை சுடவும் அமைதியாகிவிட்டாள் அஸ்மிதா. சஞ்சீவினி பாதி சாப்பாட்டிலேயே கை கழுவிவிட்டு எழுந்தவர் “உன்னோட மருமகன் உள்ளே தூங்குறான் ருத்ரா… அவனைக் கூட்டிட்டுக் கிளம்பு” என்று அழுத்தமானக் குரலில் உரைத்துவிட்டு அங்கிருந்து நகர முயல அதற்குள் வாசலில் யாரோ இருவரின் காலடிச்சத்தம் கேட்கவும் ஹாலில் இருந்த அனைவருமே திரும்பிப் பார்க்க அங்கே நின்றிருந்தனர் சந்திரசேகர் மந்தாகினி தம்பதியர். இருவரையும் கண்டதும் வீட்டிலிருந்தோரின் முகங்கள் பலவிதமான உணர்வுகளைப் பிரதிபலித்துவிட்டு கடைசியில் வெறுப்பு என்ற உணர்ச்சியை அணிந்து கொண்டன, ருத்ராவின் முகத்தையும் சேர்த்து. சஞ்சீவினி மட்டும் உணர்ச்சியற்ற முகத்துடன் அவர்களை ஏறிட்டவர் எதுவும் பேசாமல் ருத்ராவிடம் “உன் மருமகனைக் கூட்டிட்டுக் கிளம்புனு சொன்னேன் ருத்ரா… தேவையில்லாதவங்க யாரும் என் வீட்டுக்குள்ள காலடி எடுத்து வைக்கிறதை நான் விரும்பலை” என்றார் கடினமானக் குரலில். ருத்ரா அதைப் புரிந்துகொண்டவன் அர்ஜூன் இருக்கும் அறை தெரியாது விழிக்கவும் இஷானி சிறுவன் உறங்கிக் கொண்டிருந்த அறைக்கு அவனை அழைத்துச் சென்றாள். ருத்ரா அர்ஜூனின் கன்னத்தில் தட்டவும் “அவன் டேப்லட் போட்டுட்டுத் தூங்கிட்டிருக்கான் சார்… ஏன் எழுப்புறிங்க? அப்பிடியே தூக்கிட்டுப் போங்க” என்று சொல்ல இஷானியைப் புருவம் உயர்த்தி ஆச்சரியப்பார்வை பார்த்தான் அவன். இத்தனை வருடங்களாக அஸ்மிதாவின் வெறித்தப்பார்வையை எதிர்கொண்டவன் இஷானியின் மௌனமான புறக்கணிப்புகளையும் தாங்கிக் கொண்டு தான் இருக்கிறான். அவள் பேசி நோகச் செய்தாள் என்றால் இவள் பேசாமலே வதைப்பாள் போல என எண்ணிக்கொண்டவன் “ஸ்மாஸ் கரெக்சன்… சார் இல்லை… நான் உனக்கு மாமா… சோ இனிமே நீ என்னை மாமானு கூப்பிடுறது பெட்டர்… காலேஜ் முடிச்சாச்சு, இன்னும் உறவுமுறைகள் தெரியலையே” என்று கேலி போலக் கட்டளையிட்டவனது தோரணையில் எரிச்சலுற்றாள் இஷானி. “சாரி சார்! எங்களுக்கு மாமானு யாரும் கிடையாது” என்று அழுத்தமானக் குரலில் உரைக்க அதைக் கேட்டதும் அதிர்ந்தவன் கண்ணை இறுக மூடித் திறந்து தனது அதிர்ச்சியை மட்டுப்படுத்த முயன்றான். “அஸ்மி கொஞ்சம் அவசரப்படுவா… நீ நிதானமானவனு நினைச்சேன் இஷி… நீயும் இப்பிடி எடுத்தெறிஞ்சு பேசுனா என்ன அர்த்தம்?” என்று ஆதங்கத்துடன் பேசினான் அவன். “பாருங்க மிஸ்டர் ருத்ரா… உங்களுக்கும் எங்களுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை… எங்களை ஏன் சார் உங்களோட ரிலேட் பண்ணிப் பேசுறிங்க? எதுக்கு வந்திங்களோ அந்த வேலையை மட்டும் பார்த்துட்டுக் கிளம்புங்க” என்று நுனிமூக்குச் சிவக்கப் பேசிய இஷானியைக் கண்டு திகைத்துப் போனான் ருத்ரா. இத்தனை நாட்கள் அமைதியுடன் கடப்பவளின் கோபம் அவனுக்குச் சிறுகுழந்தையின் செல்லக்கோபத்தை நினைவூட்டக் கேலியாக “நீ என்ன தான் இல்லை இல்லைனு தண்டோரா போட்டு கத்துனாலும் இது தான் உண்மை… சோ இனிமே ருத்ரானு நேம் சொல்லி கூப்பிடாம பிளீஸ் கால் மீ மாமா… டூ யூ அண்டர்ஸ்டாண்ட்?” என்று கட்டளையிட்டவனின் பாவனையில் அவள் தான் வாயடைத்துப் போனாள் இப்போது. விரைவில் சுதாரித்தவள் “உங்க கிட்ட பேசுறதே வேஸ்ட்” என்று முணுமுணுத்துவிட்டு அங்கிருந்து அகல, அவள் பின்னே அர்ஜூனைத் தூக்கித் தோளில் சாய்த்துக் கொண்டபடி வெளியேறினான் ருத்ரா. இருவரும் ஹாலுக்கு வரும் போது வாயிலில் நின்று கொண்டிருந்த மந்தாகினி மகன் தூக்கத்திலிருப்பதை அறியாதவராய் பதற்றத்துடன் வீட்டிற்குள் வந்தவர் “ஐயோ என் பையனுக்கு என்னாச்சு? நீங்க எல்லாரும் அவனுக்கு எதை குடுத்து இப்பிடி மயக்கி வச்சிருக்கிங்க? அஜ்ஜூ! எந்திரிடா” என்று அவனது முகத்தைத் தட்டிப் பார்க்க, அர்ஜூனோ மாத்திரை கொடுத்த நித்திரையின் பிடியிலிருந்ததால் விழிக்கவில்லை. மந்தாகினியின் உளறல்களைக் கேட்டு வீட்டிலிருந்த அனைவரும் முகம் சுளிக்க ருத்ராவின் பற்கள் நறநறக்கும் சத்தம் அவனருகில் நின்று கொண்டிருந்த இஷானியின் காதில் தெளிவாக விழுந்தது. ஆனால் மந்தாகினியின் உளறல் வார்த்தை அஸ்மிதாவைக் கோபத்தின் உச்சிக்கே கொண்டு செல்ல ஆத்திரத்துடன் “இங்க பாருங்க மயக்குறது, மயங்க வைக்கிறதுலாம் உங்க வேலை… உங்களை மாதிரி எங்களை நினைக்காதிங்க” என்றாள் வெடுக்கென்று. இதைக் கேட்டு சஞ்சீவினி பவனத்தார் கலங்கினாலும் சந்திரசேகரும் ருத்ராவும் கையாலாகாத்தனத்துடன் வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தனர். அவள் சொன்னது எதுவுமே பொய் இல்லை என்னும் பட்சத்தில் என்ன சொல்ல இயலும் அவர்கள் இருவராலும்? அவளது வெளிப்படையான குற்றஞ்சாட்டலில் அதிர்ந்த சஞ்சீவினி “அஸ்மி நீ உள்ளே போ” என்று அதட்ட அவளோ “முடியாதும்மா… ஏதோ இரக்கப்பட்டு இவங்க மகனை ஹாஸ்பிட்டலுக்குக் கூட்டிட்டுப் போய் டிரஸ்ஸிங் பண்ணிட்டு வந்தா இந்தம்மா என்ன வேணும்னாலும் பேசுவாங்களா? இதைலாம் கண்டும் காணாம போறதுக்கு நான் ஒன்னும் சஞ்சீவினியோ சந்திரசேகரோ இல்லை” என்று வெறுப்பு உமிழும் கண்களோடு சந்திரசேகரையும் மந்தாகினியையும் பார்க்க சந்திரசேகர் தயக்கத்துடன் “அஸ்மிமா! கோவப்படாதேடா! மந்தா அர்ஜூனுக்கு என்னவோ ஏதோனு பயந்துட்டா… அதான் டென்சன்ல பேசிட்டாடா” என்று அவளைச் சமாதானம் செய்ய முயல ராஜகோபாலனும் மற்றவர்களும் இதை வேடிக்கை மட்டுமே பார்த்தனர். “ஓ! பொண்டாட்டிக்குச் சப்போர்ட் பண்ணுறிங்களா மிஸ்டர் சந்திரசேகர்? அவங்க இஷ்டத்துக்கு வார்த்தைகளை அள்ளி வீச இது ஒன்னும் உங்களோட வீடு இல்லை… இது எங்க வீடு… அதை மனசுல வச்சுக்கோங்க… முதல்ல இங்கே இருந்து கிளம்புங்க… கண்ணம்மா! இவங்க கிளம்புனதும் ஹாலை டெட்டால் போட்டுக் கழுவி விட்டிருங்க” அஸ்மிதாவின் கடைசி வார்த்தையில் தொனித்த அருவருப்பில் மந்தாகினிக்கு ஆத்திரம் வரவே “ஏய்! சின்னப்பொண்ணாச்சேனு பார்த்தா ரொம்ப அதிகமா பேசுற? அவரு உன்னோட அப்பா… அவரு இல்லைனா நீ இந்த பூமிக்கே வந்திருக்க மாட்ட… அவரு கிட்ட மரியாதையா பேசக் கத்துக்கோ” என்று ஆவேசமாய் மொழிந்தார். அவரது அப்பா என்ற வார்த்தை அஸ்மிதாவுக்குள் பிரளயத்தை உண்டு பண்ணியது. வெறுப்புடன் சந்திரசேகரை உறுத்துவிழித்தவள் இந்த மனிதரால் தானே தானும் தன் குடும்பமும் பன்னிரண்டு வருடங்களுக்கு முன்னர் படாத அசிங்கத்தையெல்லாம் பட்டோம் என்ற கோபம் அவளுக்கு. அதே கோபத்துடன் மந்தாகினியை ஏறிட்டவள் அவள் தானே அதற்கு சூத்திரதாரி என்ற வெறுப்புடன் “அவரு என்னோட அப்பாங்கிறது பன்னிரண்டு வருசத்துக்கு முன்னாடி தனக்கு ஒரு குடும்பம் இருக்கு, பொண்டாட்டி இருக்காங்கிறதை மறந்து உங்க கூட ரிலேசன்ஷிப் வச்சிக்கிட்டாரே, அப்போ உங்களுக்குத் தெரியலையா?… கேவலமா ஒரு குடும்பத்தை உடைச்சு புறவாசல் வழியா வந்த நீங்கலாம் எனக்கு மரியாதையைப் பத்தி கிளாஸ் எடுக்காதிங்க” என்று சொன்னது தான் தாமதம் அஸ்மிதாவின் கன்னத்தில் பலமாய் இறங்கியது சஞ்சீவினியின் கரம். இமைப்பதற்குள் நடந்துவிட்ட அந்நிகழ்வில் அஸ்மிதா கலங்கிப் போய் கன்னத்தைப் பிடித்துக் கொண்டு கண்ணீருடன் அவளது அன்னையைப் பார்க்க வீட்டிலுள்ள அனைவரும் திகைத்துப் போய் நின்றனர். “தப்பு பண்ணுனது உன்னைப் பெத்தவரு… உனக்குக் கோவம் வந்துச்சுனா அதை நீ அவரு கிட்ட காட்டணுமே தவிர, இவ யாரு உனக்கு? இவ மட்டும் தான் குடும்பத்தை உடைச்சாளா? உங்கப்பாவுக்குப் பொண்டாட்டி குடும்ப நியாபகம் இருந்திருந்தா, சுயக்கட்டுப்பாடு, ஒழுக்கம் இருந்திருந்தா இப்பிடி வழி மாறிப் போயிருப்பாரா? தகாத உறவு வச்சுக்கிட்டதுக்கு எப்போவுமே சம்பந்தப்பட்ட பொண்ணையே குற்றவாளி ஆக்கிறது வழக்கமா போயிடுச்சு… அப்போ அந்த ஆண்கள் மட்டும் நல்லவங்களா? மத்தவங்க இப்பிடி பேசுனா கூட நான் பொறுத்துப்பேன்… ஆனா நீ ஒரு பொண்ணு, உனக்குப் பிடிக்காதவளாவே இருந்தாலும் நடத்தையைச் சுட்டிக்காட்டி அசிங்கப்படுத்தக் கூடாது… அப்பிடி அசிங்கப்படுத்தணும்னா உன் அப்பாவை தான் முதல்ல கேள்வி கேக்கணும் நீ” என்று அஸ்மிதாவை எச்சரித்தவர் சந்திரசேகரின் புறம் திரும்பினார். அதற்குள் அர்ஜூனின் உறக்கம் மெல்ல மெல்ல கலைந்தது. ருத்ராவின் தோளில் சாய்ந்தபடி நடப்பவற்றை அவன் வேடிக்கை பார்க்க ஆரம்பிக்கவும் இஷானிக்கு இந்தப் பேச்சை எல்லாம் கேட்டால் இச்சிறுவனின் மனம் கலங்கிவிடுமே என்ற தவிப்புடன் சந்திரசேகரைப் பார்க்கவும், அவர் ருத்ராவிடம் அர்ஜூனுடன் இங்கிருந்து செல்லும்படி கூற அவனும் கிளம்பினான். இன்று அஸ்மிதா கேட்ட கேள்விகளால் அவனுக்கும் சற்று மனநிம்மதி. தன்னால் கேட்க முடியாதக் கேள்விகளை ஒரு சின்னப்பெண் கேட்டுவிட்டாள் என்ற மகிழ்ச்சியுடன் கிளம்பினான் அவன். மந்தாகினியோ அஸ்மிதாவின் வார்த்தைகளில் கூனிக்குறுகி நின்று கொண்டிருந்தார். தம்பியோ கணவரோ தனக்காகப் பரிந்து பேசுவர் என்றெல்லாம் அவர் எதிர்பார்க்கவில்லை. இருவருமே இவ்விஷயத்தில் மௌனம் காப்பது இன்று நேற்று அல்ல, பன்னிரண்டு ஆண்டுகளாக நடந்து வருகிற வழக்கமான விஷயம் தான். ஆனால் இம்முறை அஸ்மிதாவின் ‘புறவாசல் வழியாக வந்தவள்’ என்ற வார்த்தையில் பூமிக்குள் புதையுண்டது போல அவமானம் அவருக்கு. என்றைக்கும் போல அன்றைக்கும் சஞ்சீவினி தனக்காக நடுநிலையோடு பேசியது ஒன்றே மந்தாகினிக்கு ஆறுதல். அதே நேரம் சஞ்சீவினியின் பார்வை தன் புறம் திரும்புவதை உணர்ந்த சந்திரசேகர் அவரது வெறுப்பைத் தாங்கும் சக்தியற்று “அஸ்மி பேசட்டும் சஞ்சு… நான் பண்ணுனது தப்பு தான்… அதை என்னைக்குமே நான் மறுத்துப் பேசமாட்டேன்” என்று நலிந்த குரலில் கூறும்போது ஹாலுக்கு வந்தார் அலமேலு. அவரது விழியில் தெரிந்த விரக்தியில் சந்திரசேகரும் மந்தாகினியும் தலை குனிய, மந்தாகினி மெதுவாக “பெரியம்மா” என்று அழைக்கவும் பட்டென்று கையெடுத்துக் கும்பிட்டார் அலமேலு. “போதும்மா தாயே! பெரியம்மா, அக்கானு சொல்லி சொல்லியே என்னையும் என் பொண்ணையும் ஏமாத்துனது போதும்… நீ நல்லா இருப்ப, மறுபடி என் கண்ணுல பட்டுடாதே! இல்லைனா என் தங்கச்சிக்குச் செஞ்சு குடுத்த சத்தியத்தை மீறி நானே உன்னைச் சபிச்சிடப் போறேன்” என்று வேதனையுடன் கூற மந்தாகினியின் கன்னத்தில் நீர்க்கோடுகள். அதை எல்லாம் பார்த்துக் கலங்க அவர் ஒன்றும் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் எடுத்ததெற்கெல்லாம் பரிதாபப்படும் அலமேலு இல்லையே. அவர் எல்லாருக்கும் பரிதாபம் பார்த்து கடைசியில் பரிதாபமான நிலையில் நின்றது அவரது மகள் தானே என்ற வேதனை அவருக்கு. ஒரு சங்கடமான மௌனம் அந்த அறையைச் சூழ இஷானி அலமேலுவின் கரத்தைப் பற்றியவள் “நீங்க கோவப்படாதிங்க பாட்டி.. அதால எதுவும் மாறப்போறதில்லை” என்று மெல்லியதாக உரைத்துவிட்டுச் சந்திரசேகரிடம் “ப்ளீஸ்! இவங்களைக் கூட்டிட்டுக் கிளம்புறிங்களா?” என்று சொல்லிவிட்டு இறைஞ்சும் பார்வை பார்க்க சந்திரசேகர் அவளிடம் புன்னகைக்க முயன்று தோற்றவர் கலங்கிப் போய் நின்ற மந்தாகினியின் தோளைப் பற்றி அங்கிருந்து வெளியேறினார். இருவரும் வெளியேறுவதை வீட்டினர் அனைவரும் ஒரு வித வேதனையுடன் நோக்க, சஞ்சீவினி உணர்வற்ற முகத்தோடு அக்காட்சியை வேடிக்கை பார்த்தவர் “கண்ணம்மா! எல்லாருக்கும் சாப்பாடு எடுத்து வைங்க” என்று கட்டளையிட்டுவிட்டு உணவுமேஜையில் அமர்ந்தார். சிலையாய்ச் சமைந்த தந்தை, வேதனையுடன் நிற்கும் தாயார், கன்றிப் போன கன்னத்துடன் இன்னும் சினம் தீராமல் நிற்கும் அஸ்மிதா, கலக்கத்துடன் அலமேலுவின் கையைப் பற்றியிருந்த இஷானி என அனைவரையும் ஒரு முறை நோட்டமிட்டவர் “ஏன் எல்லாரும் பேயறைஞ்ச மாதிரி நிக்கிறிங்க? வந்து சாப்பிடுங்க வாங்க!” என்று அதட்ட, வேறு வழியின்றி அனைவரும் உணவுமேஜையில் ஆஜராயினர். அஸ்மிதாவின் கன்னத்தின் கன்றிப்போன கைவிரல் தடத்தை வருத்தத்துடன் பார்த்த அலமேலு மகளை முறைக்க, சஞ்சீவினி “மா! முருங்கயை முறிச்சு வளர்க்கணும், பிள்ளையை அடிச்சு வளர்க்கணும்னு அடிக்கடி சொல்லுவிங்கள்ல! அதை நான் அப்போ செய்யாம விட்டுட்டேன்… அதான் உங்க பேத்தி யாரை என்ன பேசணும்னு தெரியாம பேசிட்டிருக்கா… இனிமே அப்பிடி பேசுறப்போ அம்மா அன்னைக்கு அறைஞ்சாங்களேனு யோசிச்சு இவ பயப்படுவாங்கிறதுக்காக ஒன்னும் நான் அறையலை… இவளை அமைதியாக்க எனக்கு வேற வழி தெரியலை… அதுவுமில்லாம எல்லாரும் மந்தாவை மட்டுமே குறை சொல்லி என்ன பிரயோஜனம்? சந்துருவும் தப்பு பண்ணிருக்காரு தானே!” என்று நியாயத்தைச் சொல்லவும் அவர் அமைதியாகி விட்டார். ஆனால் அஸ்மிதாவோ “நீங்க என்ன சொன்னாலும் என்னால அந்த லேடி பண்ணுன தப்பை மறக்க முடியாது… என் அப்பாவை என் கிட்ட இருந்து பிரிச்சது அந்த லேடி தான்.. ஐ ஹேட் ஹெர்” என்று துவேசத்துடன் மொழிந்தவள் தட்டைத் தள்ளிவிட்டு விறுவிறுவென்று தனது அறையை நோக்கி விரைய “அஸ்மி கொஞ்சம் நில்லுடி” என்றபடி இருவரின் தட்டுகளையும் எடுத்துக் கொண்ட இஷானி “மா! நீங்க எல்லாரும் சாப்பிடுங்க… நான் அஸ்மி கூட ரூம்ல வச்சு சாப்பிட்டுக்கிறேன்” என்று உரைத்துவிட்டு தட்டுகளுடன் அகன்றாள். சஞ்சீவினி இரு பெண்களையும் பற்றி நினைத்தபடி பெருமூச்சு விட்டவர் சாப்பாட்டில் கண் பதித்தார். அவரது மனமோ மந்தாகினியின் தோளைப் பற்றிக் கொண்டு வெளியேறிய அவரது முன்னாள் கணவரிடம் நிலைத்திருந்தது. முன்னாள் கணவர் என்ற இவ்வார்த்தை தான் எவ்வளவு சங்கடமானது. அந்த வார்த்தைக்குரிய நபரைச் சொந்தம் கொண்டாடவும் முடியாது; அவரை முழுவதும் வெறுத்து ஒதுக்கவும் முடியாது. இந்த இரண்டுகெட்டான் மனநிலை இன்னும் ஒரு வாரத்துக்குத் தனக்கு நீடிக்கும். அதன் பின்னர் வழக்கமானப் பணிகளில் தான் அந்த வார்த்தைக்குரிய நபரை மறந்துவிடப் போகிறோம் என்று பலவாறான சிந்தனைகளுடன் மதியவுணவை முடித்தார் சஞ்சீவினி. மகளின் முகம் கண்ணாடி போல அவர் மனவுணர்வுகளைப் பிரதிபலிக்க ஆரம்பிக்கவுமே ராஜகோபாலனும் அலமேலுவும் கண்டுபிடித்துவிட்டனர். இந்த வயதிலும் தாங்கள் இருவரும் ஒருவருக்கு ஒருவர் துணையாய் இருக்க மகள் மட்டும் தனியாய் நிற்கும் நிலை அவர்களுக்கு எப்போதும் போல நெஞ்சில் வலியை உண்டாக்கியது. ஆனால் இது அவர்களுக்குப் பழகிப் போய்விட்டது.
கந்தையா நடேசன் என்ற இயற்பெயர்கொண்டவரும், இலக்கிய ஊடகத்துறைகளில் தெணியான் என அழைக்கப்பட்டவருமான ஈழத்தின் மூத்த இலக்கிய ஆளுமை நேற்று 22 ஆம் திகதி தமது 80 வயதில் வடமராட்சி கரவெட்டி கரணவாய் இல்லத்தில் மறைந்தார். 06-01-1942 ஆம் திகதி வடமராட்சி பொலிகண்டியில் கந்தையா – சின்னம்மா தம்பதியருக்கு பிறந்த நடேசன் , இலக்கியஉலகில் பிரவேசித்ததும் தெணியான் என்ற பெயரில் எழுதத்தொடங்கி, அதுவே நிலைத்துவிட்டது. தான் கல்வி கற்ற கரவெட்டி தேவரையாளி இந்துக்கல்லூரியிலேயே நீண்டகாலம் ஆசிரியராக பணியாற்றி ஓய்வுபெற்றவர். மற்றும் ஒரு மூத்த எழுத்தாளர் கே. டானியலின் வாரிசு எனவும் அவர் வர்ணிக்கப்பட்டவர். நூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகளும் பல நாவல்களும் சில விமர்சனக்கட்டுரைத்தொகுதிகளையும் தமிழ் இலக்கியத்திற்கு வரவாக்கியிருக்கும் தெணியானின் பாதுகாப்பு என்ற சிறுகதை யாழ்ப்பாணத்திலிருந்து வெளியாகும் ஜீவநதியில் வெளிவந்தது. இச்சிறுகதை தற்போது இலங்கைப்பாடசாலைகளில் 11 ஆம் ஆண்டு மாணவர்களுக்கான தமிழ் பாட நூலிலும் சேர்த்துக்கொள்ளப்பட்டிருக்கிறது. யாழ்ப்பாணத்திலிருந்து முன்னர் வெளியான விவேகி இதழில் 1964 இல் தெணியானின் முதல் சிறுகதை பிணைப்பு வெளியாகியது. அதனைத்தொடர்ந்து, மல்லிகை, ஞானம், யாழ். முரசொலி, வீரகேசரி, தினக்குரல் உட்பட பல இதழ்களில் அயராமல் எழுதியிருப்பவர். இவருடைய கழுகுகள் (நாவல்) சொத்து (சிறுகதைத்தொகுதி) குடிமைகள் ( நாவல்) என்பன தமிழ்நாட்டில் பிரபல பிரசுர நிறுவனங்களான நர்மதா பதிப்பகம், என்.சி.பி.எச். மற்றும் கறுப்பு பிரதிகள் முதலானவற்றின் ஊடாக தமிழக வாசகர்களையும் சென்றடைந்துள்ளன. இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் இயங்கிய காலத்தில் யாழ்ப்பாணக் கிளையின் செயலாளராகவும் இயங்கியிருக்கும் தெணியான், தமது படைப்புகளுக்காக இலங்கை தேசிய சாகித்திய விருது, வடகிழக்கு மகாண அமைச்சுப்பரிசு, யாழ். இலக்கிய வட்டத்தின் பரிசு, இலங்கை தேசிய கலை இலக்கியப்பேரவை – தமிழ்நாடு சுபமங்களா இதழ் ஆகியன இணைந்து வழங்கிய பரிசு, மற்றும் தமிழ்நாடு கு. சின்னப்பபாரதி அறக்கட்டளை விருது, கொடகே விருது, கலாபூஷணம் விருது, இலங்கை அரசின் உயர் விருதான சாகித்திய ரத்னா விருதும் பெற்றிருப்பவர். இலங்கை வானொலிக்காக முன்னர் பல நாடகங்களும் எழுதியிருக்கும் தெணியான், பேராசிரியர் க. சிவத்தம்பி, மல்லிகை ஜீவா ஆகியோர் பற்றியும் விரிவான நூல்களை வரவாக்கியிருப்பவர். தான் கற்ற, ஆசிரியப்பணியாற்றிய தேவரையாளி இந்துக்கல்லூரியின் இரண்டு வெளியீடுகள் மற்றும், மல்லிகை ஜீவாவின் ஈழத்திலிருந்து ஓர் இலக்கியக்குரல் நூலினதும் தொகுப்பாசிரியருமாவார். கனடாவில் வதியும் தெணியானின் தம்பி நடத்திய நான்காவது பரிமாணம் இதழின் சார்பில் வெளியான மரக்கொக்கு நாவல் சிங்களத்திலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. 1964 முதல் அரைநூற்றாண்டுக்கும் மேலாக அயராமல் இலக்கியப்பிரதிகளை எழுதிவந்திருக்கும் தெணியானுக்கு கடந்த 2003 ஆம் ஆண்டில் நடந்த மணிவிழாக்காலத்தில், பல இலக்கிய ஆளுமைகள் இவர் பற்றி எழுதியிருக்கும் மணிவிழா சிறப்பு நூலை எழுத்தாளர் கொற்றை கிருஷ்ணானந்தன் தொகுத்திருக்கிறார். தெணியானின் பல்துறை இலக்கிய ஆற்றல்களை மதிப்பீடு செய்யும் ” தெணியானின் படைப்புகள் மீதான பார்வை” – ” தெணியானின் ஜீவநதிச்சிறுகதைகள் ” ஆகியனவற்றையும் யாழ். ஜீவநதி கடந்த 2013 இல் இவரது பிறந்த தினத்திலேயே விழா எடுத்து வெளியிட்டமை குறிப்பிடத்தகுந்தது. இலங்கையில் மல்லிகை, ஞானம், கனடா காலம் முதலான கலை, இலக்கிய இதழ்கள் தெணியானை அட்டைப்பட அதிதியாகவும் பாராட்டி கௌரவித்துள்ளன. பல பசுமையான நினவுகளைத் தந்துவிட்டு விடைபெற்றுள்ள எமது இலக்கியச் சகோதரன் தெணியானுக்கு சிரம்தாழ்ந்த அஞ்சலி .
ஒரு அதிர்ஷ்டசாலியான சரவாகியன் அக்டோபர் 29 அன்று RM14.3 மில்லியன் பெரும் மேக்னம் 4D ஜாக்பாட் கிராண்ட் பரிசை வென்றார். கோத்தா செந்தோசாவில் உள்ள பந்தயம் ஒன்றில் டிக்கெட் வாங்கிய 66 வயதான அதிர்ஷ்டசாலி. வழக்கமாக RM20க்கு சிஸ்டம் 5 பெட் லைன்களை வாங்குவதன் மூலம் 4D ஜாக்பாட் விளையாடினார். ஆனால் வெற்றி பெற்ற எண்களான 8239 மற்றும் 3336 எண்கள் சொல்ல ஒரு கதை உள்ளது. நான் பல வருடங்களாக டெக்னீஷியனாக வேலை பார்த்தேன், இரண்டு பக்கத்து வீடுகளும் சொந்தமாக இருக்கும் ஒரு வயதான தம்பதியரிடம் இருந்து ஒரு கம்போங் வீட்டை வாடகைக்கு எடுத்தேன். சில சமயங்களில் உதவி தேவைப்படுவதால், அவர்களை என் சொந்த பெற்றோரைப் போல் பார்த்துக் கொள்ள முடிவு செய்தேன். 8239 என்ற கார் பிளேட் கொண்ட பழைய கார் வைத்துள்ளனர். 3336 ஐப் பொறுத்தவரை, நான் சில ஆண்டுகளுக்கு முன்பு கோலாலம்பூரில் உள்ள ஒரு சீனக் கோவிலுக்குச் சென்றேன். எனது சீன ஜோதிடத்தின் அடிப்படையில் இந்த அதிர்ஷ்ட எண்ணை அவர் எனக்கு வழங்கினார். புனித தெய்வங்களால் நல்ல அதிர்ஷ்டத்தை கொண்டு வருவது சாத்தியம் என்று நாங்கள் இப்போது நம்புகிறோம் என்று நினைக்கிறேன். நான் கடந்த 40 ஆண்டுகளாக மேக்னம் 4டியின் தீவிர ஆதரவாளராக இருந்து வருகிறேன். மேக்னம் அதன் ஜாக்பாட் கேம்களை அறிமுகப்படுத்தியபோது, ​​எனது வழக்கமான கிளாசிக் 4டி எண்களை ஒவ்வொரு பந்தயத்திலும் 10 முதல் 15 எண்களுடன் இணைப்பேன் என்பதால், எனது பந்தயம் வைப்பது எளிதாக இருந்தது என்று நான் விரும்பினேன் என்று அவர் கூறினார். வரலாற்றில் மிகப்பெரிய ஜாக்பாட்களில் ஒன்றை வென்ற பிறகு, வெற்றியாளர் மிகவும் மகிழ்ச்சியடைந்தார். ஏனெனில் அவர் இதற்கு முன்பு இவ்வளவு பெரிய லாட்டரி தொகையை வென்றதில்லை.
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பான பிரபலமான சீரியல் தெய்வமகள். இந்த சீரியலில் வில்லியாக அண்ணியார் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் ரேகா. இவர் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் ஒன்றில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி ஒரு மகள் உள்ளார். - Advertisement - இவருடைய மகள் பெயர் பூஜா. தற்போது இவர் வெள்ளித்திரையில் நாயகியாக நடிக்க உள்ளார். மகள் மாடர்ன் உடையில் கலக்கலாக இருக்கும் புகைப்படங்களை ரேகா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு அவர் வெள்ளித்திரையில் நாயகியாக நடிப்பதை உறுதி செய்துள்ளார். விரைவில் இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தெரிவித்துள்ளார். - Advertisement - தெய்வமகள் அண்ணியார் ரேகாவின் மகளுடைய மாடர்ன் உடை புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை வாய்பிளக்க வைத்துள்ளது.
அங்கன்வாடியில் பல்லி விழுந்த உணவை சாப்பிட்ட 7 குழந்தைகள் உட்பட 9 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் பனையங்கால் கிராமத்தில் அங்கன்வாடியில் இன்றைய தினத்தில் குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட உணவில் பள்ளி விழுந்ததாக கூறப்படுகிறது. இதனை பார்த்த அங்கன்வாடி பணியாளர் யாரும் இந்த உணவை சாப்பிட வேண்டாம் என கூறியுள்ளார். இருப்பினும் 9-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உணவை சாப்பிட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து 7 குழந்தைகள் உட்பட 9 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதனையடுத்து அரசு மருத்துவ மனையில் சேர்த்துள்ளனர். அதே சமயம் அங்கன்வாடியை முற்றுகையிட்டதாக தெரிகிறது. மேலும், சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
கோபியிலிருந்து ஆப்பக்கூடல் செல்லும் சாலையில், கிழக்கே 23 கி.மீ. தொலைவில் ஆற்றின் கரையில் அமைந்துள்ள கோவில். 900 ஆண்டுகளுக்கு முற்பட்டது. சுந்தரபாண்டியன் கல்வெட்டுக்கள் இங்குக் கண்டறியப்பட்டுள்ளன. காஞ்சிக்கோயில் நாட்டின் ஒரு பகுதியாக விளங்கிய "அழகிய செம்மநல்லூர்" தான் இன்று மகிழீசுவரர் திருக்கோயில் அமைந்துள்ள பெருந்தலையூர். ஊரின் நான்கு எல்லைகளிலும் திரிசூலம் பொறித்த கற்கள் எல்லையாக அமைந்திருப்பதும், முற்காலத்தில் சீரும் செழிப்புகளாகத் திகழ்ந்துள்ளதைக் காட்டுகின்றன. அதன்பிறகு திருக்கோயில் முழுவதும் வர்ணம் பூசப்பட்டு 04.03.2004 அன்று திருக்குட நன்னிராட்டு விழா சிறப்பாக நடைபெற்றது. மேலும் உபயதாரர்கள் மூலம் திருக்கோயில் அடிவாரத்தில் சுமார் ரூ.35 லட்சம் மதிப்பீட்டில் திருமண மண்டபம் கட்டப்பட்டுக் கடந்த 02.09.2009 அன்று திறப்பு விழா நடைபெற்றது. இத்திருக்கோயிலில் தினமும் மூன்றுகால பூஜைகள் நடைபெற்று வருகிறது. காலை 7.30 மணிக்கு விழாக்கால பூஜையும், பகல் 12.00 மணிக்கு உச்சிக்கால பூஜையும், இரவு 7.30 மணிக்கு அர்த்தசாம பூஜையும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. திருவிழாக்கள் ஒவ்வொரு மாதமும் கிருத்திகை தினத்தன்று சுவாமி பிரமனை சிறப்பாக நடைபெறுகிறது. வருடத் திருவிழாவாகத் தைப்பூம் பங்குனி உத்திரத்திருவிழா காலங்களில் காவடி அபிஷேகம் பால் குடங்கள் சிறப்பான முறையில் அபிஷேகங்கள் நடைபெறுகிறது. சுவாமி திருவீதி உலா நடைபெறுகிறது. ஐப்பசி மாதத்தில் கந்தர் சஷ்டி சூரசம்காரத் திருவிழா திருக்கல்யாண உற்சவம் சுவாமி திருவீதி உலா மலர் பல்லாக்கில் முத்துக்குமாரன் கோபி நகருக்கு எழுந்தருள்வார். மேற்படி விழா மூன்று நாட்களுக்கு லட்சார்ச்சனையும் யாக பூஜையும் சிறந்த முறையில் நடைபெற்று வருகிறது. பிரதி வாரம் செவ்வாய்க்கிழமை தோறும் கோமாத பூஜையுடன் திரிசடை அர்ச்சனை சிறப்பாக நடைபெற்று வருகிறது. சுருங்கச் சொன்னால் ஒவ்வொரு மாதத்திலும் ஒவ்வொரு திருவிழாவும் மிகவும் சிறப்பான முறையில் இத்தலத்தில் நடைபெறுகிறது. நீங்கள் ஒரு தடவையேனும் நேரில் வந்து அதைக் காணவேண்டும்.
New Indian-Chennai News & More -> புதிய ஏற்பாடு நம்பகத் தன்மை வாய்ந்ததா? -> இயேசுவின் வம்சாவழியும்(?) பைபிளின் குளறுபடியும்! Start A New Topic Reply Printer Friendly Post Info TOPIC: இயேசுவின் வம்சாவழியும்(?) பைபிளின் குளறுபடியும்! Admin Guru Status: Offline Posts: 23904 Date: Aug 7, 2015 இயேசுவின் வம்சாவழியும்(?) பைபிளின் குளறுபடியும்! Permalink Printer Friendly இயேசுவின் வம்சாவழியும்(?) பைபிளின் குளறுபடியும்! -01 0 comments Posted by ARSHATHALATHARY at 4:45 AM உலகில் 100 கோடிக்கும் மேல் வாழும் கிறிஸ்தவர்களால் புனிதவேதமாக கருதப்படும் பைபிள், ஏக இறைவனால் - கர்த்தரால் - பரிசுத்த ஆவியின் மூலமாக - பரிசுத்த எழுத்தர்களுக்கு ஊந்தப்பட்டு எழுதப்பட்டது என்றும் - எனவே, இது இறைவனால் உலகமக்களுக்கென்று கொடுக்கப்பட்ட இறைவேதம் என்றும் நம்புகின்றனர். இதுவே கிறிஸ்தவத்தின் அடிப்படை நம்பிக்கையாகும். அதை பைபிளில் பின்வரும் வசனத்தின் மூலம் தெரிவிக்கப்படுகின்றது. 'வேதவாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது' - 2 திமோத்தேயு 3 : 16 புனித வேதம் என்று சொல்லப்படக்கூடியது, அதுவும் அனைத்தையும் படைத்த - இந்த உலகம் மற்றும் அதில் வசிக்கக்கூடிய உயிரினம், இந்த அன்டசராசரங்கள், இவ்வனைத்தையும் படைத்த - இதுவரை நடந்தவற்றையும் இனி நடக்கப்போவதையெல்லாம் அறிந்திருக்கக்கூடிய இறைவனால் ஊந்தப்பட்டு எழுதப்பட்டதாக சொல்லப்படும் ஒரு வேதம் என்பது எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு எத்தனையோ அளவு கோல்கள் இருந்தாலும், பொதுவான - அதுவும் மிக மிக முக்கியமான ஒரு அளவுகோல் 'முரண்பாடற்ற - குழப்பமில்லாத வேதமாக இருக்கவேண்டும்' என்பது. ஓரு இறைவேதத்தில் முரண்பாடு என்பது இருக்கக்கூடாது. இருக்கவும் முடியாது. அப்படி முரண்பாடானதாக இருந்தால் அது ஏக இறைவனால் - காத்தரால் - வழங்கப்பட்ட இறைவேதமாக ஒருபோதும் இருக்க முடியாது. கர்த்தரால் அருளப்பட்ட ஒரு இறைவேதத்தில் முரண்பாடு என்பது இருக்க முடியாது என்ற தகுதியை பைபிலும் ஒத்துக்கொள்கின்றது. கடவுள் குழப்பமாகவோ - முரண்பாடாகவோ எதையும் சொல்லமாட்டார் என்கிறது பைபிள் : ...God is not the author of confusion... (1 corinthians 14:33) (Revised Standard Verison) ...கடவுள் குழப்பத்தின் கடவுளல்ல... (1 கொரிந்தியர் 14:33) (ரிவைஸ்ட் ஸ்டான்டர்ட் வெர்சன் மொழிப்பெயர்ப்பு) இந்த பொதுவான அளவுகோளின் படி கிறிஸ்தவார்களின் புனித வேதமான பைபிலை ஒப்பிட்டு பார்த்தோமேயானால் நமக்கு அதிர்ச்சியும் - ஆச்சரியமுமாக இருக்கின்றது. ஏனெனில், கர்த்தரால் அருளப்பட்டதாக சொல்லப்படும் பைபிளில் ஏராளமான முரண்பாடுகளும் குழப்பங்களும் நிறைந்து காணப்படுகின்றது. உன்மையிலேயே இது கர்த்தரால் அருளப்பெற்ற ஒரு வேதமாக இருந்தால் - அவனுடைய பரிசுத்தர்களுக்கு பரிசுத்த ஆவியால் ஊந்தப்பட்டு எழுதப்பட்ட வேதமாக இருந்தால் எப்படி ஒவ்வொரு ஆகாமங்ளும், ஒவ்வொரு வசனங்களும் முரன்பாடாக இருக்கும்? இறைவேதம் என்ற தகுதியை முழவதுமாக இழந்து விட்ட பைபிளின் அனைத்து முரண்பாடுகளையும் 'முரண்பாடுகள் நிறைந்த பைபிள்' என்றத் தலைப்பில் தொடராக கொடுக்க இருக்கின்றோம் இன்ஷா அல்லாஹ்... அதன் முதல் பாகம் இதோ: இயேசுவின் வம்சாவழியும்(?) பைபிளின் குளறுபடியும்! கிறிஸ்தவர்களின் புனித நூலான பைபிளில் இரண்டு பாகங்கள் உள்ளது. ஓன்று பழைய ஏற்பாடு. மற்றொன்று புதிய ஏற்பாடு. பழைய ஏற்பாடு என்பது உலகம் படைக்கப்பட்டது முதல் இயேசுவின் பிறப்பிற்கும் முந்தியது வரை சொல்லுகிறது. புதிய ஏற்பாடு என்பது இயேசுவின் பிறப்பு முதல் துவங்கி அவரின் இறப்பு அதன் பிறகு நடக்கும் சம்பவங்கள் என்று விவரிக்கப்படுகின்றது. இதில் கிறிஸ்தவர்கள் பழைய ஏற்பாட்டைக் காட்டிலும் புதிய ஏற்பாட்டிற்கே அதிகமுக்கியத்துவம் கொடுக்கின்றனர். கடவுளால் அருளப்பட்டதாக - கிறிஸ்தவ மக்களால் நம்பப்படுகின்ற புதிய ஏற்பாட்டின் முதல் ஆகமத்தின் முதல் வசனம் முதல் 17ம் வசனம் வரையுள்ள வசனங்களில் ஏராளமான குளறுபடிகளும் முரண்பாடுகளும் நிறைந்து காணப்படுகின்றன. அதை சற்று அலசுவோம். புதிய ஏற்பாட்டில் மத்தேயு எழுதிய 1ம் ஆதிகாரம் வசனம் 1 முதல் 17ம் வசனம் வரை இயேசுவுடைய வம்சாவழியினர் பற்றி பின்வருமாறு குறிப்பிடப்படுகின்றது. 1. ஆபிரகாமின் குமாரனாகிய தாவீதின் குமாரனான இயேசுகிறிஸ்துவினுடைய வம்ச வரலாறு:2. ஆபிரகாம் ஈசாக்கைப் பெற்றான் ஈசாக்கு யாக்கோபைப் பெற்றான் யாக்கோபு யூதாவையும் அவன் சகோதரரையும் பெற்றான். 3. யூதா பாரேசையும் சாராவையும் தாமாரினிடத்தில் பெற்றான். பாரேஸ் எஸ்ரோமைப் பெற்றான். எஸ்ரோம் ஆராமைப் பெற்றான 4. ஆராம் அம்மினதாபைப் பெற்றான் அம்மினதாப் நகசோனைப் பெற்றான் நகசோன் சல்மோனைப் பெற்றான் 5. சல்மோன் போவாசை ராகாபினிடத்தில் பெற்றான் போவாஸ் ஓபேதை ரூத்தினிடத்தில் பெற்றான் ஓபேத் ஈசாயை பெற்றான் 6. ஈசாய் தாவீது ராஜாவைப் பெற்றான். தாவீது ராஜா உரியாவின் மனைவியாயிருந்தவளிடத்தில் சாலொமோனைப் பெற்றான் 7. சாலொமோன் ரெகொபெயாமைப் பெற்றான் ரெகொபெயாம் அபியாவைப் பெற்றான் அபியா ஆசாவைப் பெற்றான 8. ஆசா யோசபாத்தைப் பெற்றான் யோசபாத் யோராமைப் பெற்றான் யோராம் உசியாவைப் பெற்றான 9. உசியா யோதாமைப் பெற்றான் யோதாம் ஆகாசைப் பெற்றான் ஆகாஸ் எசேக்கியாவைப் பெற்றான 10. எசேக்கியா மனாசேயைப் பெற்றான் மனாசே ஆமோனைப் பெற்றான் ஆமோன் யோசியாவைப் பெற்றான 11. பாபிலோனுக்குச் சிறைப்பட்டுப் போகுங்காலத்தில், யோசியா எகொனியாவையும் அவனுடைய சகோதரரையும் பெற்றான். 12. பாபிலோனுக்குச் சிறைப்பட்டுப் போனபின்பு, எகொனியா சலாத்தியேலைப் பெற்றான் சலாத்தியேல் சொரொபாபேலைப் பெற்றான 13. சொரொபாபேல் அபியூதைப் பெற்றான்; அபியூத் எலியாக்கீமைப் பெற்றான் எலியாக்கீம் ஆசோரைப் பெற்றான 14. ஆசோர் சாதோக்கைப் பெற்றான் சாதோக்கு ஆகீமைப் பெற்றான் ஆகீம் எலியூதைப் பெற்றான். 15. எலியூத் எலெயாசாரைப் பெற்றான் எலெயாசார் மாத்தானைப் பெற்றான் மாத்தான் யாக்கோபைப் பெற்றான 16. யாக்கோபு மரியாளுடைய புருஷனாகிய யோசேப்பைப் பெற்றான் அவளிடத்தில் கிறிஸ்து எனப்படுகிற இயேசு பிறந்தார். 17. இவ்விதமாய் உண்டான தலைமுறைகளெல்லாம் ஆபிரகாம்முதல் தாவீது வரைக்கும் பதினாலு தலைமுறைகளும் தாவீதுமுதல் பாபிலோனுக்குச் சிறைப்பட்டுப்போன காலம்வரைக்கும் பதினாலுதலைமுறைகளும் பாபிலோனுக்குச் சிறைப்பட்டுப்போன காலமுதல் கிறிஸ்து வரைக்கும் பதினாலு தலைமுறைகளுமாம். இப்படி மத்தேயு தனது பங்குக்கு இயேசுவின் வம்சவரலாறை பற்றி தனது புத்தகத்தின் துவக்கதிலேயே எழுதியுள்ளார். இதே போன்று இயேசுவின் வம்சவரலாறை புதிய ஏற்பாட்டின் மற்றொரு எழுத்தாளரான லூக்காவும் தனது 3வது அதிகாரம் 23வது வசனத்திலிருந்து 38வது வசனம் வரை பின்வருமாறு கூறுகின்றார் : 23. அப்பொழுது இயேசு ஏறக்குறைய முப்பது வயதுள்ளவரானார். அவர் யோசேப்பின் குமாரனென்று எண்ணப்பட்டார். அந்த யோசேப்பு ஏலியின் குமாரன். 24. ஏலி மாத்தாத்தின் குமாரன். மாத்தாத் லேவியின் குமாரன் லேவி மெல்கியின் குமாரன் மெல்கி யன்னாவின் குமாரன் யன்னா யோசேப்பின் குமாரன். 25. யோசேப்பு மத்தத்தியாவின் குமாரன் மத்தத்தியா ஆமோசின் குமாரன் ஆமோஸ் நாகூமின் குமாரன் நாகூம் எஸ்லியின் குமாரன எஸ்லி நங்காயின் குமாரன். 26. நங்காய் மாகாத்தின் குமாரன் மாகாத் மத்தத்தியாவின் குமாரன் மத்தத்தியா சேமேயின் குமாரன் சேமேய் யோசேப்பின் குமாரன் யோசேப்பு யூதாவின் குமாரன் யூதா யோவன்னாவின் குமாரன். 27. யோவன்னா ரேசாவின் குமாரன் ரேசா சொரொபாபேலின் குமாரன் சொரொபாபேல் சலாத்தியேலின் குமாரன் சலாத்தியேல் நேரியின் குமாரன். 28. நேரி மெல்கியின் குமாரன்ளூ மெல்கி அத்தியின் குமாரன அத்தி கோசாமின் குமாரன் கோசாம் எல்மோதாமின் குமாரன் எல்மோதாம் ஏரின் குமாரன் ஏர் யோசேயின் குமாரன். 29. யோசே எலியேசரின் குமாரன் எலியேசர் யோரீமின் குமாரன் யோரீம் மாத்தாத்தின் குமாரன் மாத்தாத் லேவியின் குமாரன். 30. லேவி சிமியோனின் குமாரன் சிமியோன் யூதாவின் குமாரன் யூதா யோசேப்பின் குமாரன் யோசேப்பு யோனானின் குமாரன் யோனான் எலியாக்கீமின் குமாரன். 31. எலியாக்கீம் மெலெயாவின் குமாரன் மெலெயா மயினானின் குமாரன் மயினான் மாத்தாத்தாவின் குமாரன் மாத்தாத்தா நாத்தானின் குமாரன் நாத்தான் தாவீதின் குமாரன். 32. தாவீது ஈசாயின் குமாரன் ஈசாய் ஓபேதின் குமாரன் ஓபேத் போவாசின் குமாரன் போவாஸ் சல்மோனின் குமாரன் சல்மோன் நகசோனின் குமாரன். 33. நகசோன் அம்மினதாபின் குமாரன் அம்மினதாப் ஆராமின் குமாரன் ஆராம் எஸ்ரோமின் குமாரன் எஸ்ரோம் பாரேசின் குமாரன் பாரேஸ் யூதாவின் குமாரன் யூதா யாக்கோபின் குமாரன். 34. யாக்கோபு ஈசாக்கின் குமாரன் ஈசாக்கு ஆபிரகாமின் குமாரன் ஆபிரகாம் தேராவின் குமாரன தேரா நாகோரின் குமாரன். 35. நாகோர் சேரூக்கின் குமாரன் சேரூக் ரெகூவின் குமாரன் ரெகூ பேலேக்கின் குமாரன் பேலேக் ஏபேரின் குமாரன் ஏபேர் சாலாவின் குமாரன். 36. சாலா காயினானின் குமாரன் காயினான் அர்ப்பகசாத்தின் குமாரன் அர்ப்பகசாத் சேமின் குமாரன் சேம் நோவாவின் குமாரன் நோவா லாமேக்கின் குமாரன். 37. லாமேக்கு மெத்தூசலாவின் குமாரன் மெத்தூசலா ஏனோக்கின் குமாரன் ஏனோக்கு யாரேதின் குமாரன் யாரேத் மகலாலெயேலின் குமாரன் மகலாலெயேல் கேனானின் குமாரன் கேனான் ஏனோசின் குமாரன். 38. ஏனோஸ் சேத்தின குமாரன் சேத் ஆதாமின் குமாரன் ஆதாம் தேவனால் உண்டானவன். இப்படி, பைபிளின் புதிய ஏற்பாட்டில் இயேசுவின் வம்சாவழியைப் பற்றி இரண்டு ஆகாமங்களில் இரண்டு பரிசுத்தர்கள் (?) எழுதியதாக கிறிஸ்தவர்கள் நம்புகின்றனர். இது மட்டுமல்லாமல் இதே போன்ற வேறு பலருடைய வம்சாவழிப்பட்டியல்கள் பைபிளின் அனேக இடங்களில் குறிப்பாக, பழையஏற்பாட்டில் பல இடங்களில் விவரிக்கப்படுகின்றது. இப்படி பலருடைய வம்சாவளியைப் பற்றி இறைவனால் அருளப்பெற்ற ஒருவேதத்தில் சொல்லப்படுவதற்கு என்ன காரணம்? இதனால் இந்த உலகமக்களுக்கு என்ன பயன்? இதன் மூலம் இந்த உலகமக்களுக்கு கடவுள் எதைச் சொல்லவருகின்றார்? எந்த ஒரு பயனும் கிடையாது. ஒரு வாதத்திற்காக, எந்தப்பயனும் இல்லாத ஒன்றை ஏதோ கர்த்தர் (?) சொல்லிவிட்டார் என்று வைத்துக்கொள்வோம். அப்படி சொல்லப்படும் ஒன்றை தெளிவாகவும் - குழப்பமில்லாத வகையிலாவது சொல்லியிருக்க வேண்டாமா? இவ்வுலகம் மற்றும் இந்த அண்ட சராசரங்கள் அனைத்தையும் படைத்த கடவுள்தான், இந்த வசனங்களை எல்லாம் அருளினார் என்றால், தனது குமாரனுடைய (?) வம்சாவழி பட்டியல் பற்றி எப்படித்தெரியாமல் போகும்? ஆபிரகாம் முதல் இயேசு வரையில் மொத்தம் எத்தனை பேர்? மத்தேயு 1: 17ம் வசனத்தில் ஆபிரகாம் முதல் இயேசுவரை மொத்தமுள்ள வம்சாவளியினர் பற்றிய மத்தேயு சொல்லும் போது பின்வருமாறு குறிப்பிடுகின்றார்: 'இவ்விதமாய் உன்டான தலைமுறைகளெல்லாம்... (அதாவது ஆபிரகாம் முதல் இயேசுவரையிலும் உள்ள மொத்த வம்சாவழியினர் 14 + 14 + 14 = மொத்தம் 42 பேர் என்கிறார்) ஆனால் அவரே தனது முதல் அதிகாரத்தின் 2ம் வசனம் முதல் 16ம் வசனம் வரையில் கொடுத்துள்ள பட்டியலில் 41 பேரின் பட்டியல் தான் கொடுத்துள்ளார். மத்தேயு தனது ஆகாமத்தில் இயேசுவின் வம்சாவழிபற்றி கொடுத்துவிட்டு 1 : 17 ம் வசனத்தில் ஆபிரகாம் முதல் இயேசு வரையில் மொத்த வம்சாவளியினர் 42 என்று கூறுகிறார். ஆனால் அதற்கு மாற்றமாக, வேறுயாருமல்ல அவரே அவரது சொந்த ஆகாமத்தில் கொடுத்திருப்பதோ மொத்தம் 41 நபர்களின் பட்டியல்தான். மீதம் ஒருவர் எங்கே??? ஓரு கடவுளுக்கு அல்லது கடவுளின் எழுத்தாளருக்கு தான் வரிசைப்படுத்தியுள்ள நபர்களின் எண்ணிக்கை எப்படித் தெரியாமல் போகும்? இது எப்படி கடவுளால் அருளப்பட்ட வேதமாக இருக்க முடியும்? இதை சாதாரன தவறு தானே என்று நீங்கள் எண்ணலாம். ஆனால் அது மத்தேயு என்னும் தனி மனிதன் சுயாமாக எழுதியதாக இருந்தால் நாம் அதை பெரிதாக எடுத்துகொள்ள போவதில்லை. ஆனால் இவையெல்லாம் கடவுளால் ஊந்தப்பட்டு எழுதப்பட்டதாம். அப்படி கடவுளால் ஊந்தப்பட்டு எழுதப்பட்ட ஒன்று எப்படி முரணாக இருக்கும்? எப்படி கணக்கில் குளருபடி வரும்? அடுத்து பாருங்கள்.. அடுத்து நாம் கவனிக்க வேண்டிய மிக முக்கியமான விஷயம், மத்தேயு, தாவீது முதல் இயேசு வரையில் வரக்கூடிய நபர்களின் எண்ணிக்கை மொத்தமே 42 இரண்டு பேர்தான். அதற்கு மேல் இல்லை என்று மிகத்தெளிவாகவே கூறுகிறார். நன்றாக மத்தேயு எழுதியதை கவனித்தால் உன்மைப் புரியும் : 'இவ்விதமாய் உண்டான தலைமுறைகளெல்லாம் ஆபிரகாம்முதல் தாவீது வரைக்கும் பதினாலு தலைமுறைகளும், தாவீதுமுதல் பாபிலோனுக்குச் சிறைப்பட்டுப்போன காலம்வரைக்கும் பதினாலுதலைமுறைகளும், பாபிலோனுக்குச் சிறைப்பட்டுப்போன காலமுதல் கிறிஸ்து வரைக்கும் பதினாலு தலைமுறைகளுமாம்' 'So all the generations from Abraham to David are fourteen generations; and from David until the carrying away into Babylon are fourteen generations; and from the carrying away into Babylon unto Christ are fourteen generations'. மொத்தமே இவ்வளவு தலைமுறையினர்தான், அதற்கு மேல் இல்லை என்பதை தெளிவாக குறிக்கும் விதமாக - இவ்விதமாய் உண்டான தலைமுறைகளெல்லாம் - 'all the Generations' என்று மத்தேயு கடவுளின் ஊந்துதலோடு (?) எழுதியுள்ளார். ஆனால் பழைய ஏற்பாடோ இதற்கு மாற்றமாக 'மத்தேயு சும்மா சிறுபிள்ளதானமா எழுதிட்டாரு. நாங்க சொல்றது தான் சரி, அவருக்கு கணக்கே சரியா தெரியலப்பா' என்ற தோரனையில் பின்வருமாறு விளக்குகிறது. தாவீது முதல் பாபிலோனுக்கு சிறைபட்டுப்போன காலம் வரை எத்தனைப் பேர்? தாவீது முதல் பாபிலோனுக்கு சிறைபட்டு போகும் காலம் வரை மொத்தம் 14 தலைமுறையினர் தான் என்கிறார் மத்தேயு. ஆனால் பழையஏற்பாடு 1 நாளாகம் 3 : 10-16ல் மொத்தம் 14 நபர்கள் என்பது தவறு. மொத்தம் 18 பேர் என்கிறது. இதில் விடுபட்ட 4 நபர்கள் எங்கே? இது கடவுளுக்கு (?) தெரியாமல் போன மர்மம் என்ன? 1 நாளாகமம் 3:10-16 கணக்குப்படி பார்த்தால் மத்தேயுவின் (1:17) 42 நபர்கள் என்ற மத்தேயுவின் கணக்கு இன்னும் உதைக்கும். இப்பொழுதாவது புரிகிறதா பைபில் கடவுளிடமிருந்து வந்தது என்று சொல்வது அனைத்தும் கட்டுக்கதை என்று? மத்தேயு அவருக்கு தெரிந்த அளவுக்கு இயேசுவின் வரலாற்றை எழுதிவிட்டார் என்றால் கூட நாம் இதை பெரிது படுத்தப் போவதில்லை. அதை விடுத்து இவை அனைத்தும் கடவுளிடம் வந்தது - அதாவது 'வேதவாக்கியங்கள் அனைத்தும் தேவஆவியால் அருளப்பட்டது' என்று சொல்லி மக்களை நம்ப வைக்கவும், இப்படிப்பட்டவர்கள் எதை எதையோ தங்கள் மனம் போனப்பபோக்கில் எழுதியதை வைத்துக்கொண்டு உன்மைகளை மறைப்பதற்கும், வரலாறே இவர்கள் எழுதியது மட்டும் தான் என்றும், இவர்களுக்கு மாற்றமாக யார் சொன்னாலும் நாங்கள் நம்பமாட்டோம். ஏனெனில் இவர்கள் சுயமாக எழுதியதல்ல, இவை அனைத்தும் கடவுளின் பரிசுத்த ஆவியால் ஊந்தப்பட்டு எழுதப்பட்டது' என்று சொல்வதால் தான் நாம் இந்தக் கேள்விகளை வைக்கின்றோம் என்பதை கிறிஸ்தவ சகோதரர்கள் கவனத்தில் கொள்ளவும். எகொனியா யோசியாவின் பேரனா? அல்லது மகனா? இயேசுவின் வம்சத்தில் வரும் ஒருவரான யோசியாவின் மகன் தான் எகொனியா என்கிறார் மத்தேயு (மத்தேயு 1:11) ஆனால் பழையஏற்பாட்டில் வரும் 1 நாளாகமம் 3:15-16 ல் யோசியாவின் மகன் யோயாகீமாம். அந்த யோயாகீமின் மகன் தான் எகொனியாவாம். இதில் எது சரி? எகொனியா யோசியாவின் பேரனா? அல்லது மகனா? சொருபாபேலின் மகன் யார்? இயேசுவின் வம்சத்தில் வரும் சொருபாபேலின் மகன் அபியூத் வழியில் தான் இயேசு ஜனனமானார் என்று மத்தேயுவும் (மத்தேயு 1:13) சொருபாபேலின் மகன் ரேசா வழியில் தான் இயேசு வந்தார் என்று லூக்காவும் (லூக்கா 3:27) கூறுகின்றனர். உன்மையில் இயேசு சொருபாபேலின் மகன்கள் என்று சொல்லப்படக்கூடிய அபியூத் வழியில் வந்தாரா? அல்லது ரேசா வழியில் வந்தாரா? அடுத்து இதில் மிகப்பெரிய வேடிக்கை என்ன வென்றால் இதே வம்சாவலியைச் சொல்லி வரும் பழைய ஏற்பாடு 1 நாளாகமம் 3 : 19 ல் இந்த சொருபாபேலுக்கு பிறந்தவர்கள் யார் யார் என்பது பற்றி கூறப்படுகிறது. அதில் மத்தேயு சொல்லக்கூடிய சொருபாபேலின் மகன் அபியூத்தோ அல்லது லூக்கா சொல்லக்கூடிய ரேசாவே அங்கே வரவில்லை. மாறாக, அங்கே வேறு ஒரு வம்சப்பட்டியலை எழுதிவைத்துள்ளனர். இதிலிருந்து லூக்காவோ அல்லது மத்தேயுவோ கண்மூடித்தனமாக எதையோ எழுதிவைத்துள்ளனர் என்பதும், இவற்றைத்தான் கிறிஸ்தவர்கள் கடவுளின் வேதம் என்று நம்பிக்கொண்டிருக்கின்றனர் என்பது புலனாகிறதல்லவா? கிறிஸ்தவர்கள், மத்தேயு சொல்வதுதான் சரி என்றால் லூக்காவும், பழைய ஏற்பாட்டின் 1 நாளாகமும் சொல்வது பொய் என்று ஆகிவிடும். இல்லை லூக்கா சொல்வது தான் சரி என்றால் 1 நாளாகமும் மத்தேயுவும் சொல்வது தவறென்றாகிவிடும். அல்லது 1 நாளாகமம் சொல்வது தான் சரி என்றால் புதிய ஏற்பாட்டு எழுத்தாளர்கள் ஏதோ கடவுளின் பெயரால் உளறித்தள்ளிவிட்டனர் என்றாகிவிடும். எது உன்மை? எப்படியோ பைபிளின் ஆகாமங்கள் கடவுளின்பெயரால் மக்களை குழப்புகின்றது என்பது மட்டும் நிச்சயம். சொருபாபேலின் தந்தை யார்? இயேசுவின் வம்சத்தில் வரும் சொருபாபேலின் தந்தை சாலத்தியேல் என்று மத்தேயு 1 : 12 லும், லுக்கா 3 : 27லும் ஒருமனதாக சொல்லுகின்றனர். ஆனால் இந்த இருவரும் எதை ஒத்தகருத்துடன் சொல்லுகிறார்களோ அது தவறு என்று பழைய ஏற்பாடு 1 நாளாகமம் 3:19ல் சொல்லப்படுகின்றது. அதாவது சொலுபாபேலின் தந்தை பெதாயா என்கிறது. எது சரி? சாலத்தியேலின் தந்தை யார்? இயேசுவின் வம்சாவளியில் வரும் ஒருவர் சாலத்தியேல். இவரின் தந்தை 'எகொனியா' என்பவர் தான் என்று மத்தேயு 1:12 லும், இல்லை 'நேரி' என்பவர் தான் என்று லூக்கா 3:27 லும் தெரிவிக்கின்றனர். உன்மையில் எகொனியாவின் தந்தை யார்? மரியாளின் புருசன் யோசேப்பின் தந்தை யார்? இயேசுவின் தந்தை யோசேப்பு என்று மத்தேயு லூக்கா - இரண்டு சுவிசேஷக்காரர்களுமே கூறுகின்றனர். அந்த யோசேப்பின் தந்தை யாக்கோபு என்று மத்தேயுவும் (மத்தேயு 1:16) ஏலி என்று லூக்காவும் (லுக்கா 3:23) கூறுகின்றனர். இங்கே மரியாலுடைய புருஷன் யோசேப்பின் தந்தை யார்? இப்படி தந்தை விஷயத்தில் குழப்பம் வரலாமா? அதுவும் இNசுவுடைய தாய் மரியாலுடைய புருஷனின் தந்தைக்கூட தெரியதா அளவில் தான் கடவுள் இருப்பாரா? அல்லது கடவுளின் பெயரால் பைபில் வேதம் என்று புனையப்பட்டுள்ளதா? இயேசு ஜனனமானது சாலமோன் வழியிலா? நாத்தானின் வழியிலா? புதிய ஏற்பாட்டின் முதல் புத்தகமான மத்தேயு 1 : 16ல் இயேசு பிறந்தது தாவீதின் மகன் சாலமோன் வம்சத்தில் என்கிறார். ஆனால் லூக்காவோ 3 : 31ல் இயேசு தாவீதின் மகன் நாத்தானின் வம்சத்தில் பிறந்தார் என்கிறார். இது எப்படி சாத்தியமாகும். தாவீதுக்கு நாத்தான் சாலமோன் என்று இரண்டு மகன்கள் இருந்ததாக பழைய ஏற்பாடு 2 சாமுவேல் 5: 14ல் சொல்லப்படுகின்றது. அப்படியானால் எப்படி இரண்டு பேரின் வழியிலும் இயேசு வந்திருக்க முடியும்? தாவீதின் இரு மகன்களில் எந்த மகன் வழியே இயேசுவின் வம்ச வரலாறு வருகின்றது என்பதைக்கூடவா கடவுளுக்கு அறியாமல் இருக்கின்றார்? இப்படி முரண்பாடாக இருக்கும் ஒன்றை எப்படி கடவுளுடைய வேதம் என்று ஏற்க முடியும்? அல்லது கடவுள் ஒன்றும் அறியாதவர் என்று சொல்ல வருகின்றீர்களா? இதில் சில கிறிஸ்தவர்கள் இந்த முரண்பாட்டை சமாளிப்பதற்காக - தங்களைத் தாங்களே திருப்திப் படுத்திக்கொள்வதற்காக - பொருந்தாத வாதமொன்றை வைக்கின்றனர். மத்தேயு, தாவீதின் மகன் சாலமோனுடைய வழியாக மரியாலுடைய புருசன் யோசேப்பின் வம்சாவழியைச் சொல்லுகிறார் என்றும் லூக்கா, தாவீதின் மகன் நாத்தானின் வழியாக இயேசுவின் தாய் மரியாலுடைய வம்சாவழியைச் சொல்லுகிறார் என்றும் இரண்டுமே வேறுவேறான வம்சாவளி என்கின்றனர். பொதுவாகவே கிறிஸ்தவர்கள் பைபிளில் உள்ள இந்த முரண்பாடுகளை ஒத்துக்கொள்ளக்கூடாது என்பதற்காக இந்த வாதத்தை வைக்கின்றனர். இது முற்றிலும் தவறானது. இது பைபில் உள்ள மிகத்தெளிவான முரண்பாடு என்பதை நன்றாகத் தெரிந்தும் இதை ஒத்துக்கொள்ள மறுக்கின்றனர். ஆனால் அவர்கள் சொல்வது தவறு என்பதற்கான காரணங்கள் இதோ : லூக்காவும் சரி மத்தேயுவும் சரி - இருவருமே மரியாலுடைய புருஷன் சோசேப்பின் வம்சாவலியையே கூறுகின்றனர் என்பது தான் உன்மை. காரணம், மத்தேயு 1 : 16ல் 'யாக்கோபு மரியாளுடைய புருஷனாகிய யோசேப்பைப் பெற்றான்' அவளிடத்தில் கிறிஸ்து எனப்படுகிற இயேசு பிறந்தார். இங்கே இயேசுவின் தந்தை யோசேப்பு என்று மிகத்தெளிவாகச் சொல்லப்படுகின்றது. அதேபோல் லூக்கா 3: 23ல் 'அப்பொழுது இயேசு ஏறக்குறைய முப்பது வயதுள்ளவரானார். அவர் யோசேப்பின் குமாரனென்று எண்ணப்பட்டார். அந்த யோசேப்பு ஏலியின் குமாரன்.இங்கேயும் இயேசுவின் தந்தை யோசேப்பு என்றே சொல்லப்படுகின்றது. எந்த ஒரு இடத்திலும் மரியலுடைய வம்சத்தைப் பற்றி சொல்லப்படவில்லை என்பதை நன்றாக கவனிக்க வேண்டும். அடுத்து மத்தேயுவும் லூக்காவும் சொல்லக்கூடிய வம்சாவளிப்பட்டியல்களின் இடையே இயேசுவின் முன்னோர்களான சாலத்தியேல் அவரது மகன் சொருபாபேல் என்று சொல்லப்படுகின்றது. (பார்க்க மத்தேயு 1:12, லூக்கா 3:27) கிறிஸ்தவர்கள் மறுப்பது போல் இந்த இரண்டும் வேறு வேரான வம்சவராலாறு என்றால் இந்த பட்டியலில் இவ்விருவரும் வரவேண்டிய அவசியம் என்ன? லூக்காவும் மத்தேயும் சொல்வது போல் இவ்விருவரும் பெயர்களில் தான் ஒற்றுமையே யொழிய நபர்கள் தனித்தனி நபர்களே என்றும் மறுக்க இயலாது. ஏனெனில் இரு ஆகமங்களிலும் வரும் இவ்விறுவரும் ஒருவரே என்று அனைத்து ஆங்கில மற்றும் தமிழ் ரெஃபரன்ஸ் பைபிள்களில் கோடிட்டு காட்டியுள்ளனர். (உதாரனமாக : தானியேல் தமிழ் ரெஃப்ரன்ஸ் வேதாகமம், ஆங்கிலம் NIV Study bible, RSV. KJV (editod by : C.S. Scofield. இன்னும் பல...). லூக்கா சொல்வதும் மத்தேயு செல்வதும் வேறு வேரான வம்சாவளி என்றால் தந்தை மகன்களாகிய சாலத்தியேலும், சொருபாபேலும் எப்படி இரண்டு வம்சத்திலும் வருவார்கள்? அடுத்து, இவர்கள் இந்த முரண்பாட்டை சரிகட்டி பைபிள் இறைவேதம் என்று நியாயப்படுத்துவதற்காக சொல்லப்படும் காரணங்கள் திரும்பவும் பைபில் இறைவேதம் இல்லை என்பதை நிரூபிப்பதாகவே அமைந்து விடுவது தான் வேடிக்கையிலும் வேடிக்கை. இந்த முரண்பாட்டை சரிகட்ட தானியே ரெஃபரன்ஸ் வேதாகமம் சொல்லும் காரணத்தைப் பாருங்கள் : '[503] 3:24 மரியாளின் மூதாதயைர் பட்டியல் : ஏலி யோசேப்பின் மாமாவாக இருக்கவே அதிக வாய்ப்பு உள்ளது. இந்தச் செய்திகள் மரியாளிடமிருந்து லூக்காவுக்கு கிடைத்திருக்க வேண்டும். பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் லூக்கா நூல் வழங்குகிறது. அதற்கு இந்த மரியாளின் பரம்பரைப் பட்டியல் ஒரு சிறந்த சான்று' (பார்க்க : தானியேல் ரெஃபரன்ஸ் வேதாகமம் - பக்கம் 1098) இதில் என்ன சொல்ல வருகின்றார். லுக்கா சொல்லும் யோசேப்பின் தந்தை ஏலி என்பவர் உன்மையில் அவரின் தந்தை இல்லையாம். அவரின் மாமாவாக இருக்க அதிக வாய்ப்பு உள்ளதாம். இங்கே ஏன் 'அதிக வாய்ப்பு உள்ளது' என்று போட வேண்டும். அது தான் உன்மையாக இருந்தால் அதை பைபில் ஆதரங்களுடன் நிரூபிக்க வேண்டியது தானே. இப்படி சமாளிக்கும் வார்த்தைகளைப் போட்டால் தான், இந்த முரண்பாட்டைக் களைந்து இது கடவுளுடைய வேதம் என்று சொல்லாம் என்பதற்காக தங்களுக்குள்ளே செய்துக் கொள்ளும் சமாதானம். அடுத்து 'இந்த செய்திகள் லூக்காவுக்கு மரியாளிடமிருந்து கிடைத்திருக்க வேண்டும்'. என்கிறார். இவர் சொல்வது உன்மையானால் இந்தச் செய்தி மரியாளிடமிருந்து கிடைத்தது என்று லூக்காவல்லவா சொல்லவேண்டும். அதைவிடுத்து 20ம் நூற்றான்டைச் சேர்ந்த தானியேல் சொல்லவேண்டிய அவசியம் என்ன? அடுத்து இவர் 'லுக்காவுக்கு இந்தச் செய்தியை மரியால் தான் சொன்னாh'; என்று ஒத்துக்கொண்டதன் மூலம் இந்தச் செய்தி கடவுள் சொல்லவில்லை, லூக்கா, தன்னைச் சுற்றி உள்ளவர்களிடம் கேட்டுத்தான் தனது புத்தகங்களை எழுதினார் என்பதை அப்பட்டமாக ஒத்துக்கொள்கிறார்களா இல்லையா? அப்படியானால் லூக்காவால் பலரிடம் கேட்டு எழுதப்பட்ட புத்தகத்தை, கடவுளால் அவருக்கு சொல்லப்பட்டு எழுதப்பட்ட வேதமாக எப்படி ஏற்க முடியும்? இவ்வாறு, இவர்கள் இந்த முரண்பாட்டைக் களைவதற்காக எத்தனை மறுப்புக்கள் கூறினாலும், அந்த மறுப்பே வேறு ஒரு விதத்தில் முரண்பாட்டைக் கொண்டுவரும் என்பது தான் நிதர்சமான உன்மை. அடுத்து வேறு சிலர் இன்னொரு வாதத்தையும் வைக்கின்றார்கள். அதாவது 'யூதர்களிடம் ஒரு வழக்கம் இருந்தது. ஒரு நபருக்கு மகனில்லாமல் மகள் மட்டும் இருந்தால், தன் மருமகனை தன் மகனாகக் கருதி, தன் வம்ச அட்டவனையில் சேர்த்துக் கொள்வார்கள்' என்கின்றனர். எனவே லூக்கா சொல்லும் 'ஏலி' என்பவர் யோசேப்பின் மாமனார் என்று கூற வருகின்றனர். யோசேப்பின் மாமனார் 'ஏலி' என்பதற்கும், மரியாளுக்கு சகோதரார்களே இல்லை என்பதற்கும் என்ன பைபிள் ஆதாரம்? ஓன்றும் கிடையாது. பவுளும் யோசேப்பும் கூடப்பிறந்த அண்ணன் தம்பிகள் என்று இப்பொழுது 2008ல் நான் சொன்னால் அதற்கு எப்படி ஆதாரம் இல்லையோ, அதே போல் தான் இந்த கதைக்கும் ஆதாரம் கிடையாது. அடுத்து, இப்படி வம்சாவலிப் பட்டியல்களை எழுதிவைப்பது யூதர்களுடைய வழக்கம் - அதனால் தான் வம்சாவலிப் பட்டியல்கள் பைபிளில் கொடுக்கப்பட்டுள்ளது என்கின்றனர். யூதர்களுடைய பழக்கத்திற்கும் கடவுளின் வேதத்திற்கும் என்ன சம்பந்தம்? தந்தை இல்லாமல் அதியமான முறையில் பிறந்தவர் இயேசு என்று ஒருபக்கம் சொல்லிவிட்டு, அப்படிபட்டவருக்கே தந்தை வழி வம்சத்தை யாராவது எழுதிவைப்பார்களா? இப்படி அதிசயமாக பிறந்த இயேசுவுக்கு தந்தைவழி வம்சத்தை சொல்லுவதால் கடவுள் செய்த அதிசயத்தை மறுப்பதாக ஆகாதா? இப்படி எழுதி வைப்பது யூதர்களுடைய பழக்கம் என்பதால் அதே யூதர்கள் இயேசுவையும் மற்ற பரிசுத்தவான்களையும் கொடுமைப்படுத்தியதும், சிலுவையில் அறைந்ததும் சரி என்று சொல்லி விடுவீர்களா? எனவே இது தேவையற்ற வாதம் என்பதை சம்பந்தப் பட்டவர்கள் கவனத்தில் கொள்ளவேண்டும். __________________ Admin Guru Status: Offline Posts: 23904 Date: Aug 7, 2015 RE: இயேசுவின் வம்சாவழியும்(?) பைபிளின் குளறுபடியும்! Permalink Printer Friendly உலகில் 100 கோடிக்கும் மேல் வாழும் கிறிஸ்தவர்களால் புனிதவேதமாக கருதப்படும் பைபிள், ஏக இறைவனால் - கர்த்தரால் - பரிசுத்த ஆவியின் மூலமாக - பரிசுத்த எழுத்தர்களுக்கு ஊந்தப்பட்டு எழுதப்பட்டது என்றும் - எனவே, இது இறைவனால் உலகமக்களுக்கென்று கொடுக்கப்பட்ட இறைவேதம் என்றும் நம்புகின்றனர். இதுவே கிறிஸ்தவத்தின் அடிப்படை நம்பிக்கையாகும். அதை பைபிளில் பின்வரும் வசனத்தின் மூலம் தெரிவிக்கப்படுகின்றது. 'வேதவாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது' - 2 திமோத்தேயு 3 : 16 புனித வேதம் என்று சொல்லப்படக்கூடியது, அதுவும் அனைத்தையும் படைத்த - இந்த உலகம் மற்றும் அதில் வசிக்கக்கூடிய உயிரினம், இந்த அன்டசராசரங்கள், இவ்வனைத்தையும் படைத்த - இதுவரை நடந்தவற்றையும் இனி நடக்கப்போவதையெல்லாம் அறிந்திருக்கக்கூடிய இறைவனால் ஊந்தப்பட்டு எழுதப்பட்டதாக சொல்லப்படும் ஒரு வேதம் என்பது எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு எத்தனையோ அளவு கோல்கள் இருந்தாலும், பொதுவான - அதுவும் மிக மிக முக்கியமான ஒரு அளவுகோல் 'முரண்பாடற்ற - குழப்பமில்லாத வேதமாக இருக்கவேண்டும்' என்பது. ஓரு இறைவேதத்தில் முரண்பாடு என்பது இருக்கக்கூடாது. இருக்கவும் முடியாது. அப்படி முரண்பாடானதாக இருந்தால் அது ஏக இறைவனால் - காத்தரால் - வழங்கப்பட்ட இறைவேதமாக ஒருபோதும் இருக்க முடியாது. கர்த்தரால் அருளப்பட்ட ஒரு இறைவேதத்தில் முரண்பாடு என்பது இருக்க முடியாது என்ற தகுதியை பைபிலும் ஒத்துக்கொள்கின்றது. கடவுள் குழப்பமாகவோ - முரண்பாடாகவோ எதையும் சொல்லமாட்டார் என்கிறது பைபிள் : ...God is not the author of confusion... (1 corinthians 14:33) (Revised Standard Verison) ...கடவுள் குழப்பத்தின் கடவுளல்ல... (1 கொரிந்தியர் 14:33) (ரிவைஸ்ட் ஸ்டான்டர்ட் வெர்சன் மொழிப்பெயர்ப்பு) இந்த பொதுவான அளவுகோளின் படி கிறிஸ்தவார்களின் புனித வேதமான பைபிலை ஒப்பிட்டு பார்த்தோமேயானால் நமக்கு அதிர்ச்சியும் - ஆச்சரியமுமாக இருக்கின்றது. ஏனெனில், கர்த்தரால் அருளப்பட்டதாக சொல்லப்படும் பைபிளில் ஏராளமான முரண்பாடுகளும் குழப்பங்களும் நிறைந்து காணப்படுகின்றது. உன்மையிலேயே இது கர்த்தரால் அருளப்பெற்ற ஒரு வேதமாக இருந்தால் - அவனுடைய பரிசுத்தர்களுக்கு பரிசுத்த ஆவியால் ஊந்தப்பட்டு எழுதப்பட்ட வேதமாக இருந்தால் எப்படி ஒவ்வொரு ஆகாமங்ளும், ஒவ்வொரு வசனங்களும் முரன்பாடாக இருக்கும்? இறைவேதம் என்ற தகுதியை முழவதுமாக இழந்து விட்ட பைபிளின் அனைத்து முரண்பாடுகளையும் 'முரண்பாடுகள் நிறைந்த பைபிள்' என்றத் தலைப்பில் தொடராக கொடுக்க இருக்கின்றோம் இன்ஷா அல்லாஹ்... அதன் முதல் பாகம் இதோ: இயேசுவின் வம்சாவழியும்(?) பைபிளின் குளறுபடியும்! கிறிஸ்தவர்களின் புனித நூலான பைபிளில் இரண்டு பாகங்கள் உள்ளது. ஓன்று பழைய ஏற்பாடு. மற்றொன்று புதிய ஏற்பாடு. பழைய ஏற்பாடு என்பது உலகம் படைக்கப்பட்டது முதல் இயேசுவின் பிறப்பிற்கும் முந்தியது வரை சொல்லுகிறது. புதிய ஏற்பாடு என்பது இயேசுவின் பிறப்பு முதல் துவங்கி அவரின் இறப்பு அதன் பிறகு நடக்கும் சம்பவங்கள் என்று விவரிக்கப்படுகின்றது. இதில் கிறிஸ்தவர்கள் பழைய ஏற்பாட்டைக் காட்டிலும் புதிய ஏற்பாட்டிற்கே அதிகமுக்கியத்துவம் கொடுக்கின்றனர். கடவுளால் அருளப்பட்டதாக - கிறிஸ்தவ மக்களால் நம்பப்படுகின்ற புதிய ஏற்பாட்டின் முதல் ஆகமத்தின் முதல் வசனம் முதல் 17ம் வசனம் வரையுள்ள வசனங்களில் ஏராளமான குளறுபடிகளும் முரண்பாடுகளும் நிறைந்து காணப்படுகின்றன. அதை சற்று அலசுவோம். புதிய ஏற்பாட்டில் மத்தேயு எழுதிய 1ம் ஆதிகாரம் வசனம் 1 முதல் 17ம் வசனம் வரை இயேசுவுடைய வம்சாவழியினர் பற்றி பின்வருமாறு குறிப்பிடப்படுகின்றது. 1. ஆபிரகாமின் குமாரனாகிய தாவீதின் குமாரனான இயேசுகிறிஸ்துவினுடைய வம்ச வரலாறு:2. ஆபிரகாம் ஈசாக்கைப் பெற்றான் ஈசாக்கு யாக்கோபைப் பெற்றான் யாக்கோபு யூதாவையும் அவன் சகோதரரையும் பெற்றான். 3. யூதா பாரேசையும் சாராவையும் தாமாரினிடத்தில் பெற்றான். பாரேஸ் எஸ்ரோமைப் பெற்றான். எஸ்ரோம் ஆராமைப் பெற்றான 4. ஆராம் அம்மினதாபைப் பெற்றான் அம்மினதாப் நகசோனைப் பெற்றான் நகசோன் சல்மோனைப் பெற்றான் 5. சல்மோன் போவாசை ராகாபினிடத்தில் பெற்றான் போவாஸ் ஓபேதை ரூத்தினிடத்தில் பெற்றான் ஓபேத் ஈசாயை பெற்றான் 6. ஈசாய் தாவீது ராஜாவைப் பெற்றான். தாவீது ராஜா உரியாவின் மனைவியாயிருந்தவளிடத்தில் சாலொமோனைப் பெற்றான் 7. சாலொமோன் ரெகொபெயாமைப் பெற்றான் ரெகொபெயாம் அபியாவைப் பெற்றான் அபியா ஆசாவைப் பெற்றான 8. ஆசா யோசபாத்தைப் பெற்றான் யோசபாத் யோராமைப் பெற்றான் யோராம் உசியாவைப் பெற்றான 9. உசியா யோதாமைப் பெற்றான் யோதாம் ஆகாசைப் பெற்றான் ஆகாஸ் எசேக்கியாவைப் பெற்றான 10. எசேக்கியா மனாசேயைப் பெற்றான் மனாசே ஆமோனைப் பெற்றான் ஆமோன் யோசியாவைப் பெற்றான 11. பாபிலோனுக்குச் சிறைப்பட்டுப் போகுங்காலத்தில், யோசியா எகொனியாவையும் அவனுடைய சகோதரரையும் பெற்றான். 12. பாபிலோனுக்குச் சிறைப்பட்டுப் போனபின்பு, எகொனியா சலாத்தியேலைப் பெற்றான் சலாத்தியேல் சொரொபாபேலைப் பெற்றான 13. சொரொபாபேல் அபியூதைப் பெற்றான்; அபியூத் எலியாக்கீமைப் பெற்றான் எலியாக்கீம் ஆசோரைப் பெற்றான 14. ஆசோர் சாதோக்கைப் பெற்றான் சாதோக்கு ஆகீமைப் பெற்றான் ஆகீம் எலியூதைப் பெற்றான். 15. எலியூத் எலெயாசாரைப் பெற்றான் எலெயாசார் மாத்தானைப் பெற்றான் மாத்தான் யாக்கோபைப் பெற்றான 16. யாக்கோபு மரியாளுடைய புருஷனாகிய யோசேப்பைப் பெற்றான் அவளிடத்தில் கிறிஸ்து எனப்படுகிற இயேசு பிறந்தார். 17. இவ்விதமாய் உண்டான தலைமுறைகளெல்லாம் ஆபிரகாம்முதல் தாவீது வரைக்கும் பதினாலு தலைமுறைகளும் தாவீதுமுதல் பாபிலோனுக்குச் சிறைப்பட்டுப்போன காலம்வரைக்கும் பதினாலுதலைமுறைகளும் பாபிலோனுக்குச் சிறைப்பட்டுப்போன காலமுதல் கிறிஸ்து வரைக்கும் பதினாலு தலைமுறைகளுமாம். இப்படி மத்தேயு தனது பங்குக்கு இயேசுவின் வம்சவரலாறை பற்றி தனது புத்தகத்தின் துவக்கதிலேயே எழுதியுள்ளார். இதே போன்று இயேசுவின் வம்சவரலாறை புதிய ஏற்பாட்டின் மற்றொரு எழுத்தாளரான லூக்காவும் தனது 3வது அதிகாரம் 23வது வசனத்திலிருந்து 38வது வசனம் வரை பின்வருமாறு கூறுகின்றார் : 23. அப்பொழுது இயேசு ஏறக்குறைய முப்பது வயதுள்ளவரானார். அவர் யோசேப்பின் குமாரனென்று எண்ணப்பட்டார். அந்த யோசேப்பு ஏலியின் குமாரன். 24. ஏலி மாத்தாத்தின் குமாரன். மாத்தாத் லேவியின் குமாரன் லேவி மெல்கியின் குமாரன் மெல்கி யன்னாவின் குமாரன் யன்னா யோசேப்பின் குமாரன். 25. யோசேப்பு மத்தத்தியாவின் குமாரன் மத்தத்தியா ஆமோசின் குமாரன் ஆமோஸ் நாகூமின் குமாரன் நாகூம் எஸ்லியின் குமாரன எஸ்லி நங்காயின் குமாரன். 26. நங்காய் மாகாத்தின் குமாரன் மாகாத் மத்தத்தியாவின் குமாரன் மத்தத்தியா சேமேயின் குமாரன் சேமேய் யோசேப்பின் குமாரன் யோசேப்பு யூதாவின் குமாரன் யூதா யோவன்னாவின் குமாரன். 27. யோவன்னா ரேசாவின் குமாரன் ரேசா சொரொபாபேலின் குமாரன் சொரொபாபேல் சலாத்தியேலின் குமாரன் சலாத்தியேல் நேரியின் குமாரன். 28. நேரி மெல்கியின் குமாரன்ளூ மெல்கி அத்தியின் குமாரன அத்தி கோசாமின் குமாரன் கோசாம் எல்மோதாமின் குமாரன் எல்மோதாம் ஏரின் குமாரன் ஏர் யோசேயின் குமாரன். 29. யோசே எலியேசரின் குமாரன் எலியேசர் யோரீமின் குமாரன் யோரீம் மாத்தாத்தின் குமாரன் மாத்தாத் லேவியின் குமாரன். 30. லேவி சிமியோனின் குமாரன் சிமியோன் யூதாவின் குமாரன் யூதா யோசேப்பின் குமாரன் யோசேப்பு யோனானின் குமாரன் யோனான் எலியாக்கீமின் குமாரன். 31. எலியாக்கீம் மெலெயாவின் குமாரன் மெலெயா மயினானின் குமாரன் மயினான் மாத்தாத்தாவின் குமாரன் மாத்தாத்தா நாத்தானின் குமாரன் நாத்தான் தாவீதின் குமாரன். 32. தாவீது ஈசாயின் குமாரன் ஈசாய் ஓபேதின் குமாரன் ஓபேத் போவாசின் குமாரன் போவாஸ் சல்மோனின் குமாரன் சல்மோன் நகசோனின் குமாரன். 33. நகசோன் அம்மினதாபின் குமாரன் அம்மினதாப் ஆராமின் குமாரன் ஆராம் எஸ்ரோமின் குமாரன் எஸ்ரோம் பாரேசின் குமாரன் பாரேஸ் யூதாவின் குமாரன் யூதா யாக்கோபின் குமாரன். 34. யாக்கோபு ஈசாக்கின் குமாரன் ஈசாக்கு ஆபிரகாமின் குமாரன் ஆபிரகாம் தேராவின் குமாரன தேரா நாகோரின் குமாரன். 35. நாகோர் சேரூக்கின் குமாரன் சேரூக் ரெகூவின் குமாரன் ரெகூ பேலேக்கின் குமாரன் பேலேக் ஏபேரின் குமாரன் ஏபேர் சாலாவின் குமாரன். 36. சாலா காயினானின் குமாரன் காயினான் அர்ப்பகசாத்தின் குமாரன் அர்ப்பகசாத் சேமின் குமாரன் சேம் நோவாவின் குமாரன் நோவா லாமேக்கின் குமாரன். 37. லாமேக்கு மெத்தூசலாவின் குமாரன் மெத்தூசலா ஏனோக்கின் குமாரன் ஏனோக்கு யாரேதின் குமாரன் யாரேத் மகலாலெயேலின் குமாரன் மகலாலெயேல் கேனானின் குமாரன் கேனான் ஏனோசின் குமாரன். 38. ஏனோஸ் சேத்தின குமாரன் சேத் ஆதாமின் குமாரன் ஆதாம் தேவனால் உண்டானவன். இப்படி, பைபிளின் புதிய ஏற்பாட்டில் இயேசுவின் வம்சாவழியைப் பற்றி இரண்டு ஆகாமங்களில் இரண்டு பரிசுத்தர்கள் (?) எழுதியதாக கிறிஸ்தவர்கள் நம்புகின்றனர். இது மட்டுமல்லாமல் இதே போன்ற வேறு பலருடைய வம்சாவழிப்பட்டியல்கள் பைபிளின் அனேக இடங்களில் குறிப்பாக, பழையஏற்பாட்டில் பல இடங்களில் விவரிக்கப்படுகின்றது. இப்படி பலருடைய வம்சாவளியைப் பற்றி இறைவனால் அருளப்பெற்ற ஒருவேதத்தில் சொல்லப்படுவதற்கு என்ன காரணம்? இதனால் இந்த உலகமக்களுக்கு என்ன பயன்? இதன் மூலம் இந்த உலகமக்களுக்கு கடவுள் எதைச் சொல்லவருகின்றார்? எந்த ஒரு பயனும் கிடையாது. ஒரு வாதத்திற்காக, எந்தப்பயனும் இல்லாத ஒன்றை ஏதோ கர்த்தர் (?) சொல்லிவிட்டார் என்று வைத்துக்கொள்வோம். அப்படி சொல்லப்படும் ஒன்றை தெளிவாகவும் - குழப்பமில்லாத வகையிலாவது சொல்லியிருக்க வேண்டாமா? இவ்வுலகம் மற்றும் இந்த அண்ட சராசரங்கள் அனைத்தையும் படைத்த கடவுள்தான், இந்த வசனங்களை எல்லாம் அருளினார் என்றால், தனது குமாரனுடைய (?) வம்சாவழி பட்டியல் பற்றி எப்படித்தெரியாமல் போகும்? ஆபிரகாம் முதல் இயேசு வரையில் மொத்தம் எத்தனை பேர்? மத்தேயு 1: 17ம் வசனத்தில் ஆபிரகாம் முதல் இயேசுவரை மொத்தமுள்ள வம்சாவளியினர் பற்றிய மத்தேயு சொல்லும் போது பின்வருமாறு குறிப்பிடுகின்றார்: 'இவ்விதமாய் உன்டான தலைமுறைகளெல்லாம்... (அதாவது ஆபிரகாம் முதல் இயேசுவரையிலும் உள்ள மொத்த வம்சாவழியினர் 14 + 14 + 14 = மொத்தம் 42 பேர் என்கிறார்) ஆனால் அவரே தனது முதல் அதிகாரத்தின் 2ம் வசனம் முதல் 16ம் வசனம் வரையில் கொடுத்துள்ள பட்டியலில் 41 பேரின் பட்டியல் தான் கொடுத்துள்ளார். மத்தேயு தனது ஆகாமத்தில் இயேசுவின் வம்சாவழிபற்றி கொடுத்துவிட்டு 1 : 17 ம் வசனத்தில் ஆபிரகாம் முதல் இயேசு வரையில் மொத்த வம்சாவளியினர் 42 என்று கூறுகிறார். ஆனால் அதற்கு மாற்றமாக, வேறுயாருமல்ல அவரே அவரது சொந்த ஆகாமத்தில் கொடுத்திருப்பதோ மொத்தம் 41 நபர்களின் பட்டியல்தான். மீதம் ஒருவர் எங்கே??? ஓரு கடவுளுக்கு அல்லது கடவுளின் எழுத்தாளருக்கு தான் வரிசைப்படுத்தியுள்ள நபர்களின் எண்ணிக்கை எப்படித் தெரியாமல் போகும்? இது எப்படி கடவுளால் அருளப்பட்ட வேதமாக இருக்க முடியும்? இதை சாதாரன தவறு தானே என்று நீங்கள் எண்ணலாம். ஆனால் அது மத்தேயு என்னும் தனி மனிதன் சுயாமாக எழுதியதாக இருந்தால் நாம் அதை பெரிதாக எடுத்துகொள்ள போவதில்லை. ஆனால் இவையெல்லாம் கடவுளால் ஊந்தப்பட்டு எழுதப்பட்டதாம். அப்படி கடவுளால் ஊந்தப்பட்டு எழுதப்பட்ட ஒன்று எப்படி முரணாக இருக்கும்? எப்படி கணக்கில் குளருபடி வரும்? அடுத்து பாருங்கள்.. அடுத்து நாம் கவனிக்க வேண்டிய மிக முக்கியமான விஷயம், மத்தேயு, தாவீது முதல் இயேசு வரையில் வரக்கூடிய நபர்களின் எண்ணிக்கை மொத்தமே 42 இரண்டு பேர்தான். அதற்கு மேல் இல்லை என்று மிகத்தெளிவாகவே கூறுகிறார். நன்றாக மத்தேயு எழுதியதை கவனித்தால் உன்மைப் புரியும் : 'இவ்விதமாய் உண்டான தலைமுறைகளெல்லாம் ஆபிரகாம்முதல் தாவீது வரைக்கும் பதினாலு தலைமுறைகளும், தாவீதுமுதல் பாபிலோனுக்குச் சிறைப்பட்டுப்போன காலம்வரைக்கும் பதினாலுதலைமுறைகளும், பாபிலோனுக்குச் சிறைப்பட்டுப்போன காலமுதல் கிறிஸ்து வரைக்கும் பதினாலு தலைமுறைகளுமாம்' 'So all the generations from Abraham to David are fourteen generations; and from David until the carrying away into Babylon are fourteen generations; and from the carrying away into Babylon unto Christ are fourteen generations'. மொத்தமே இவ்வளவு தலைமுறையினர்தான், அதற்கு மேல் இல்லை என்பதை தெளிவாக குறிக்கும் விதமாக - இவ்விதமாய் உண்டான தலைமுறைகளெல்லாம் - 'all the Generations' என்று மத்தேயு கடவுளின் ஊந்துதலோடு (?) எழுதியுள்ளார். ஆனால் பழைய ஏற்பாடோ இதற்கு மாற்றமாக 'மத்தேயு சும்மா சிறுபிள்ளதானமா எழுதிட்டாரு. நாங்க சொல்றது தான் சரி, அவருக்கு கணக்கே சரியா தெரியலப்பா' என்ற தோரனையில் பின்வருமாறு விளக்குகிறது. தாவீது முதல் பாபிலோனுக்கு சிறைபட்டுப்போன காலம் வரை எத்தனைப் பேர்? தாவீது முதல் பாபிலோனுக்கு சிறைபட்டு போகும் காலம் வரை மொத்தம் 14 தலைமுறையினர் தான் என்கிறார் மத்தேயு. ஆனால் பழையஏற்பாடு 1 நாளாகம் 3 : 10-16ல் மொத்தம் 14 நபர்கள் என்பது தவறு. மொத்தம் 18 பேர் என்கிறது. இதில் விடுபட்ட 4 நபர்கள் எங்கே? இது கடவுளுக்கு (?) தெரியாமல் போன மர்மம் என்ன? __________________ Admin Guru Status: Offline Posts: 23904 Date: Aug 7, 2015 Permalink Printer Friendly 1 நாளாகமம் 3:10-16 கணக்குப்படி பார்த்தால் மத்தேயுவின் (1:17) 42 நபர்கள் என்ற மத்தேயுவின் கணக்கு இன்னும் உதைக்கும். இப்பொழுதாவது புரிகிறதா பைபில் கடவுளிடமிருந்து வந்தது என்று சொல்வது அனைத்தும் கட்டுக்கதை என்று? மத்தேயு அவருக்கு தெரிந்த அளவுக்கு இயேசுவின் வரலாற்றை எழுதிவிட்டார் என்றால் கூட நாம் இதை பெரிது படுத்தப் போவதில்லை. அதை விடுத்து இவை அனைத்தும் கடவுளிடம் வந்தது - அதாவது 'வேதவாக்கியங்கள் அனைத்தும் தேவஆவியால் அருளப்பட்டது' என்று சொல்லி மக்களை நம்ப வைக்கவும், இப்படிப்பட்டவர்கள் எதை எதையோ தங்கள் மனம் போனப்பபோக்கில் எழுதியதை வைத்துக்கொண்டு உன்மைகளை மறைப்பதற்கும், வரலாறே இவர்கள் எழுதியது மட்டும் தான் என்றும், இவர்களுக்கு மாற்றமாக யார் சொன்னாலும் நாங்கள் நம்பமாட்டோம். ஏனெனில் இவர்கள் சுயமாக எழுதியதல்ல, இவை அனைத்தும் கடவுளின் பரிசுத்த ஆவியால் ஊந்தப்பட்டு எழுதப்பட்டது' என்று சொல்வதால் தான் நாம் இந்தக் கேள்விகளை வைக்கின்றோம் என்பதை கிறிஸ்தவ சகோதரர்கள் கவனத்தில் கொள்ளவும். எகொனியா யோசியாவின் பேரனா? அல்லது மகனா? இயேசுவின் வம்சத்தில் வரும் ஒருவரான யோசியாவின் மகன் தான் எகொனியா என்கிறார் மத்தேயு (மத்தேயு 1:11) ஆனால் பழையஏற்பாட்டில் வரும் 1 நாளாகமம் 3:15-16 ல் யோசியாவின் மகன் யோயாகீமாம். அந்த யோயாகீமின் மகன் தான் எகொனியாவாம். இதில் எது சரி? எகொனியா யோசியாவின் பேரனா? அல்லது மகனா? சொருபாபேலின் மகன் யார்? இயேசுவின் வம்சத்தில் வரும் சொருபாபேலின் மகன் அபியூத் வழியில் தான் இயேசு ஜனனமானார் என்று மத்தேயுவும் (மத்தேயு 1:13) சொருபாபேலின் மகன் ரேசா வழியில் தான் இயேசு வந்தார் என்று லூக்காவும் (லூக்கா 3:27) கூறுகின்றனர். உன்மையில் இயேசு சொருபாபேலின் மகன்கள் என்று சொல்லப்படக்கூடிய அபியூத் வழியில் வந்தாரா? அல்லது ரேசா வழியில் வந்தாரா? அடுத்து இதில் மிகப்பெரிய வேடிக்கை என்ன வென்றால் இதே வம்சாவலியைச் சொல்லி வரும் பழைய ஏற்பாடு 1 நாளாகமம் 3 : 19 ல் இந்த சொருபாபேலுக்கு பிறந்தவர்கள் யார் யார் என்பது பற்றி கூறப்படுகிறது. அதில் மத்தேயு சொல்லக்கூடிய சொருபாபேலின் மகன் அபியூத்தோ அல்லது லூக்கா சொல்லக்கூடிய ரேசாவே அங்கே வரவில்லை. மாறாக, அங்கே வேறு ஒரு வம்சப்பட்டியலை எழுதிவைத்துள்ளனர். இதிலிருந்து லூக்காவோ அல்லது மத்தேயுவோ கண்மூடித்தனமாக எதையோ எழுதிவைத்துள்ளனர் என்பதும், இவற்றைத்தான் கிறிஸ்தவர்கள் கடவுளின் வேதம் என்று நம்பிக்கொண்டிருக்கின்றனர் என்பது புலனாகிறதல்லவா? கிறிஸ்தவர்கள், மத்தேயு சொல்வதுதான் சரி என்றால் லூக்காவும், பழைய ஏற்பாட்டின் 1 நாளாகமும் சொல்வது பொய் என்று ஆகிவிடும். இல்லை லூக்கா சொல்வது தான் சரி என்றால் 1 நாளாகமும் மத்தேயுவும் சொல்வது தவறென்றாகிவிடும். அல்லது 1 நாளாகமம் சொல்வது தான் சரி என்றால் புதிய ஏற்பாட்டு எழுத்தாளர்கள் ஏதோ கடவுளின் பெயரால் உளறித்தள்ளிவிட்டனர் என்றாகிவிடும். எது உன்மை? எப்படியோ பைபிளின் ஆகாமங்கள் கடவுளின்பெயரால் மக்களை குழப்புகின்றது என்பது மட்டும் நிச்சயம். சொருபாபேலின் தந்தை யார்? இயேசுவின் வம்சத்தில் வரும் சொருபாபேலின் தந்தை சாலத்தியேல் என்று மத்தேயு 1 : 12 லும், லுக்கா 3 : 27லும் ஒருமனதாக சொல்லுகின்றனர். ஆனால் இந்த இருவரும் எதை ஒத்தகருத்துடன் சொல்லுகிறார்களோ அது தவறு என்று பழைய ஏற்பாடு 1 நாளாகமம் 3:19ல் சொல்லப்படுகின்றது. அதாவது சொலுபாபேலின் தந்தை பெதாயா என்கிறது. எது சரி? சாலத்தியேலின் தந்தை யார்? இயேசுவின் வம்சாவளியில் வரும் ஒருவர் சாலத்தியேல். இவரின் தந்தை 'எகொனியா' என்பவர் தான் என்று மத்தேயு 1:12 லும், இல்லை 'நேரி' என்பவர் தான் என்று லூக்கா 3:27 லும் தெரிவிக்கின்றனர். உன்மையில் எகொனியாவின் தந்தை யார்? மரியாளின் புருசன் யோசேப்பின் தந்தை யார்? இயேசுவின் தந்தை யோசேப்பு என்று மத்தேயு லூக்கா - இரண்டு சுவிசேஷக்காரர்களுமே கூறுகின்றனர். அந்த யோசேப்பின் தந்தை யாக்கோபு என்று மத்தேயுவும் (மத்தேயு 1:16) ஏலி என்று லூக்காவும் (லுக்கா 3:23) கூறுகின்றனர். இங்கே மரியாலுடைய புருஷன் யோசேப்பின் தந்தை யார்? இப்படி தந்தை விஷயத்தில் குழப்பம் வரலாமா? அதுவும் இNசுவுடைய தாய் மரியாலுடைய புருஷனின் தந்தைக்கூட தெரியதா அளவில் தான் கடவுள் இருப்பாரா? அல்லது கடவுளின் பெயரால் பைபில் வேதம் என்று புனையப்பட்டுள்ளதா? இயேசு ஜனனமானது சாலமோன் வழியிலா? நாத்தானின் வழியிலா? புதிய ஏற்பாட்டின் முதல் புத்தகமான மத்தேயு 1 : 16ல் இயேசு பிறந்தது தாவீதின் மகன் சாலமோன் வம்சத்தில் என்கிறார். ஆனால் லூக்காவோ 3 : 31ல் இயேசு தாவீதின் மகன் நாத்தானின் வம்சத்தில் பிறந்தார் என்கிறார். இது எப்படி சாத்தியமாகும். தாவீதுக்கு நாத்தான் சாலமோன் என்று இரண்டு மகன்கள் இருந்ததாக பழைய ஏற்பாடு 2 சாமுவேல் 5: 14ல் சொல்லப்படுகின்றது. அப்படியானால் எப்படி இரண்டு பேரின் வழியிலும் இயேசு வந்திருக்க முடியும்? தாவீதின் இரு மகன்களில் எந்த மகன் வழியே இயேசுவின் வம்ச வரலாறு வருகின்றது என்பதைக்கூடவா கடவுளுக்கு அறியாமல் இருக்கின்றார்? இப்படி முரண்பாடாக இருக்கும் ஒன்றை எப்படி கடவுளுடைய வேதம் என்று ஏற்க முடியும்? அல்லது கடவுள் ஒன்றும் அறியாதவர் என்று சொல்ல வருகின்றீர்களா? இதில் சில கிறிஸ்தவர்கள் இந்த முரண்பாட்டை சமாளிப்பதற்காக - தங்களைத் தாங்களே திருப்திப் படுத்திக்கொள்வதற்காக - பொருந்தாத வாதமொன்றை வைக்கின்றனர். மத்தேயு, தாவீதின் மகன் சாலமோனுடைய வழியாக மரியாலுடைய புருசன் யோசேப்பின் வம்சாவழியைச் சொல்லுகிறார் என்றும் லூக்கா, தாவீதின் மகன் நாத்தானின் வழியாக இயேசுவின் தாய் மரியாலுடைய வம்சாவழியைச் சொல்லுகிறார் என்றும் இரண்டுமே வேறுவேறான வம்சாவளி என்கின்றனர். பொதுவாகவே கிறிஸ்தவர்கள் பைபிளில் உள்ள இந்த முரண்பாடுகளை ஒத்துக்கொள்ளக்கூடாது என்பதற்காக இந்த வாதத்தை வைக்கின்றனர். இது முற்றிலும் தவறானது. இது பைபில் உள்ள மிகத்தெளிவான முரண்பாடு என்பதை நன்றாகத் தெரிந்தும் இதை ஒத்துக்கொள்ள மறுக்கின்றனர். ஆனால் அவர்கள் சொல்வது தவறு என்பதற்கான காரணங்கள் இதோ : லூக்காவும் சரி மத்தேயுவும் சரி - இருவருமே மரியாலுடைய புருஷன் சோசேப்பின் வம்சாவலியையே கூறுகின்றனர் என்பது தான் உன்மை. காரணம், மத்தேயு 1 : 16ல் 'யாக்கோபு மரியாளுடைய புருஷனாகிய யோசேப்பைப் பெற்றான்' அவளிடத்தில் கிறிஸ்து எனப்படுகிற இயேசு பிறந்தார். இங்கே இயேசுவின் தந்தை யோசேப்பு என்று மிகத்தெளிவாகச் சொல்லப்படுகின்றது. அதேபோல் லூக்கா 3: 23ல் 'அப்பொழுது இயேசு ஏறக்குறைய முப்பது வயதுள்ளவரானார். அவர் யோசேப்பின் குமாரனென்று எண்ணப்பட்டார். அந்த யோசேப்பு ஏலியின் குமாரன்.இங்கேயும் இயேசுவின் தந்தை யோசேப்பு என்றே சொல்லப்படுகின்றது. எந்த ஒரு இடத்திலும் மரியலுடைய வம்சத்தைப் பற்றி சொல்லப்படவில்லை என்பதை நன்றாக கவனிக்க வேண்டும். அடுத்து மத்தேயுவும் லூக்காவும் சொல்லக்கூடிய வம்சாவளிப்பட்டியல்களின் இடையே இயேசுவின் முன்னோர்களான சாலத்தியேல் அவரது மகன் சொருபாபேல் என்று சொல்லப்படுகின்றது. (பார்க்க மத்தேயு 1:12, லூக்கா 3:27) கிறிஸ்தவர்கள் மறுப்பது போல் இந்த இரண்டும் வேறு வேரான வம்சவராலாறு என்றால் இந்த பட்டியலில் இவ்விருவரும் வரவேண்டிய அவசியம் என்ன? லூக்காவும் மத்தேயும் சொல்வது போல் இவ்விருவரும் பெயர்களில் தான் ஒற்றுமையே யொழிய நபர்கள் தனித்தனி நபர்களே என்றும் மறுக்க இயலாது. ஏனெனில் இரு ஆகமங்களிலும் வரும் இவ்விறுவரும் ஒருவரே என்று அனைத்து ஆங்கில மற்றும் தமிழ் ரெஃபரன்ஸ் பைபிள்களில் கோடிட்டு காட்டியுள்ளனர். (உதாரனமாக : தானியேல் தமிழ் ரெஃப்ரன்ஸ் வேதாகமம், ஆங்கிலம் NIV Study bible, RSV. KJV (editod by : C.S. Scofield. இன்னும் பல...). லூக்கா சொல்வதும் மத்தேயு செல்வதும் வேறு வேரான வம்சாவளி என்றால் தந்தை மகன்களாகிய சாலத்தியேலும், சொருபாபேலும் எப்படி இரண்டு வம்சத்திலும் வருவார்கள்? அடுத்து, இவர்கள் இந்த முரண்பாட்டை சரிகட்டி பைபிள் இறைவேதம் என்று நியாயப்படுத்துவதற்காக சொல்லப்படும் காரணங்கள் திரும்பவும் பைபில் இறைவேதம் இல்லை என்பதை நிரூபிப்பதாகவே அமைந்து விடுவது தான் வேடிக்கையிலும் வேடிக்கை. இந்த முரண்பாட்டை சரிகட்ட தானியே ரெஃபரன்ஸ் வேதாகமம் சொல்லும் காரணத்தைப் பாருங்கள் : '[503] 3:24 மரியாளின் மூதாதயைர் பட்டியல் : ஏலி யோசேப்பின் மாமாவாக இருக்கவே அதிக வாய்ப்பு உள்ளது. இந்தச் செய்திகள் மரியாளிடமிருந்து லூக்காவுக்கு கிடைத்திருக்க வேண்டும். பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் லூக்கா நூல் வழங்குகிறது. அதற்கு இந்த மரியாளின் பரம்பரைப் பட்டியல் ஒரு சிறந்த சான்று' (பார்க்க : தானியேல் ரெஃபரன்ஸ் வேதாகமம் - பக்கம் 1098) இதில் என்ன சொல்ல வருகின்றார். லுக்கா சொல்லும் யோசேப்பின் தந்தை ஏலி என்பவர் உன்மையில் அவரின் தந்தை இல்லையாம். அவரின் மாமாவாக இருக்க அதிக வாய்ப்பு உள்ளதாம். இங்கே ஏன் 'அதிக வாய்ப்பு உள்ளது' என்று போட வேண்டும். அது தான் உன்மையாக இருந்தால் அதை பைபில் ஆதரங்களுடன் நிரூபிக்க வேண்டியது தானே. இப்படி சமாளிக்கும் வார்த்தைகளைப் போட்டால் தான், இந்த முரண்பாட்டைக் களைந்து இது கடவுளுடைய வேதம் என்று சொல்லாம் என்பதற்காக தங்களுக்குள்ளே செய்துக் கொள்ளும் சமாதானம். அடுத்து 'இந்த செய்திகள் லூக்காவுக்கு மரியாளிடமிருந்து கிடைத்திருக்க வேண்டும்'. என்கிறார். இவர் சொல்வது உன்மையானால் இந்தச் செய்தி மரியாளிடமிருந்து கிடைத்தது என்று லூக்காவல்லவா சொல்லவேண்டும். அதைவிடுத்து 20ம் நூற்றான்டைச் சேர்ந்த தானியேல் சொல்லவேண்டிய அவசியம் என்ன? அடுத்து இவர் 'லுக்காவுக்கு இந்தச் செய்தியை மரியால் தான் சொன்னாh'; என்று ஒத்துக்கொண்டதன் மூலம் இந்தச் செய்தி கடவுள் சொல்லவில்லை, லூக்கா, தன்னைச் சுற்றி உள்ளவர்களிடம் கேட்டுத்தான் தனது புத்தகங்களை எழுதினார் என்பதை அப்பட்டமாக ஒத்துக்கொள்கிறார்களா இல்லையா? அப்படியானால் லூக்காவால் பலரிடம் கேட்டு எழுதப்பட்ட புத்தகத்தை, கடவுளால் அவருக்கு சொல்லப்பட்டு எழுதப்பட்ட வேதமாக எப்படி ஏற்க முடியும்? இவ்வாறு, இவர்கள் இந்த முரண்பாட்டைக் களைவதற்காக எத்தனை மறுப்புக்கள் கூறினாலும், அந்த மறுப்பே வேறு ஒரு விதத்தில் முரண்பாட்டைக் கொண்டுவரும் என்பது தான் நிதர்சமான உன்மை. அடுத்து வேறு சிலர் இன்னொரு வாதத்தையும் வைக்கின்றார்கள். அதாவது 'யூதர்களிடம் ஒரு வழக்கம் இருந்தது. ஒரு நபருக்கு மகனில்லாமல் மகள் மட்டும் இருந்தால், தன் மருமகனை தன் மகனாகக் கருதி, தன் வம்ச அட்டவனையில் சேர்த்துக் கொள்வார்கள்' என்கின்றனர். எனவே லூக்கா சொல்லும் 'ஏலி' என்பவர் யோசேப்பின் மாமனார் என்று கூற வருகின்றனர். யோசேப்பின் மாமனார் 'ஏலி' என்பதற்கும், மரியாளுக்கு சகோதரார்களே இல்லை என்பதற்கும் என்ன பைபிள் ஆதாரம்? ஓன்றும் கிடையாது. பவுளும் யோசேப்பும் கூடப்பிறந்த அண்ணன் தம்பிகள் என்று இப்பொழுது 2008ல் நான் சொன்னால் அதற்கு எப்படி ஆதாரம் இல்லையோ, அதே போல் தான் இந்த கதைக்கும் ஆதாரம் கிடையாது. அடுத்து, இப்படி வம்சாவலிப் பட்டியல்களை எழுதிவைப்பது யூதர்களுடைய வழக்கம் - அதனால் தான் வம்சாவலிப் பட்டியல்கள் பைபிளில் கொடுக்கப்பட்டுள்ளது என்கின்றனர். யூதர்களுடைய பழக்கத்திற்கும் கடவுளின் வேதத்திற்கும் என்ன சம்பந்தம்? தந்தை இல்லாமல் அதியமான முறையில் பிறந்தவர் இயேசு என்று ஒருபக்கம் சொல்லிவிட்டு, அப்படிபட்டவருக்கே தந்தை வழி வம்சத்தை யாராவது எழுதிவைப்பார்களா? இப்படி அதிசயமாக பிறந்த இயேசுவுக்கு தந்தைவழி வம்சத்தை சொல்லுவதால் கடவுள் செய்த அதிசயத்தை மறுப்பதாக ஆகாதா? இப்படி எழுதி வைப்பது யூதர்களுடைய பழக்கம் என்பதால் அதே யூதர்கள் இயேசுவையும் மற்ற பரிசுத்தவான்களையும் கொடுமைப்படுத்தியதும், சிலுவையில் அறைந்ததும் சரி என்று சொல்லி விடுவீர்களா? எனவே இது தேவையற்ற வாதம் என்பதை சம்பந்தப் பட்டவர்கள் கவனத்தில் கொள்ளவேண்டும். __________________ Admin Guru Status: Offline Posts: 23904 Date: Aug 7, 2015 Permalink Printer Friendly பைபிளில் உள்ள முரண்பாடுகளையும் - குழப்பங்களையும் பற்றி தொடர்கட்டுரையை வெளியிட்டு வருகின்றோம். அதன் முதல் பாகத்தை பின்வரும் தலைப்பில் படிக்கவும். இயேசுவின் வம்சாவழியும்(?) பைபிளின் குளறுபடியும்! -01 க்குசெல்ல இங்கே அழுத்தவும்... இதன் இரண்டாம் பாகத்தின் தொடர்ச்சி... சாலாவின் தந்தை யார்? லூக்கா 3:36 ல் ஆதாம் முதல் இயேசு வரை உள்ள வம்சத்தில் அர்ப்பகசாத்தின் மகன் காயினான். அவன் மகன் சாலா என்கிறார். ஆனால் ஆதியாகமம் 10:24 மற்றும் 11:12 ஆகியவை அர்ப்பகசாத்தின் மகன் சாலாதான் என்கிறது. இடையே உள்ள காயீனான் அங்கே வரமாட்டான் என்கிறது. லூக்கா சொல்வது சரியா பழைய ஏற்பாடு சொல்வது சரியா? எதை நம்புவது? ஏது கடவுள் சொன்னது? தாவீது முதல் இயேசு வரையிலும் மொத்தம் எத்தனைப் பேர்? தாவீது முதல் இயேசு வரையிலும் மொத்தம் 28 தலைமுறையினர் என்கிறார் மத்தேயு (பார்க்க மத்தேயு 1:6-16) ஆனால் லூக்காவோ மொத்தம் 43 என்கிறார் (பார்க்க லூக்கா 3:21-31) எது சரி? லூக்கா சொல்வதா அல்லது மத்தேயு சொல்வதா? மத்தேயு ஆபிரகாம் முதல் இயேசுவரையிலும் மொத்தமே 42 பேர்தான் என்கிறார். ஆனால் லூக்காவோ ஆபிரகாமுக்கும் பலதலைமுறைக்கு பிறகுள்ள தாவீதிலிருந்து இயேசுவரையிலுமே 43 பேர் வந்துவிடுகின்றனர் என்று கூடுதலாக கணக்கு காட்டுகிறார். ஒரே தலைமுறையை புதியஏற்பாட்டு எழுத்தாளர்கள் இப்படி மாற்றி மாற்றி முரண்பாடாக சொல்வதை எப்படி கடவுளின் வார்த்தை என்று ஏற்க முடியும்? எது சரி? மத்தேயு சொல்வதா அல்லது லூக்கா சொல்வதா? (இது போல் இன்னும் பல முரண்பாடுகளும், பல குழப்பங்களும் இந்த வம்சாவளிப் பட்டியல்களில் தொடர்கிறது. நாம் ஆக்கம் நீண்டுக்கொண்டே செல்வதால் தவிர்த்துள்ளோம் என்பதைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.) இயேசு விபச்சாரர்களின் சந்ததியா? இயேசுவின் வம்சத்தில் வரும் இவ்வளவு குளறுபடிகளும் ஒரு புறம் இருக்க அவரின் வம்சத்தில் வரும் பலர் விபச்சாரர்களாக இருந்ததாக பைபில் கூறுகிறது. 'யூதா பாரேசையும் சாராவையும் தாமாரினிடத்தில் பெற்றான். பாரேஸ் எஸ்ரோமைப் பெற்றான்' (மத்தேயு 1:3) இந்த தாமார், யூதா, பாரேஸ் என்பவர்கள் யார்? இந்த தாமார் என்பவள் யூதா என்பவனின் மகனுடைய மனைவி. அதாவது மருமகள். அவளுடன் யுதா கள்ளத்தனமாக உறவு கொள்கிறார். இந்த விபச்சாரத்தில் பிறந்த இரட்டைக் குழந்தைகளில் ஒருவர் தான் பாரேஸ் என்று பைபிள் சொல்கிறது. பார்க்க ஆதியாகமம்; 38 : 6 (இந்த மாமனார் மருமகள் ஆபாசக்கதையில் உள்ள குழப்பங்களை படிக்க இங்கே அழுத்தவும்) அடுத்து அவரது தலைமுறையில் வரும் தாவீது பற்றி மத்தேயு (1 : 6) சொல்லும்போது 'தாவீது ராஜா உரியாவின் மனைவியாயிருந்தவளிடத்தில் சாலொமோனைப் பெற்றான்'. இப்படி விபச்சார சந்ததிகள் மூலமாகத்தான் இயேசு பிறக்கின்றார் என்கிறார் மத்தேயு. (நவூதுபில்லாஹ்...) அதேபோல் இயேசுவின் வம்சத்தில் வரும் மற்றொருவர்'ராகாப்'. (மத்தேயு 1:5) இவள் ஒரு விபச்சாரி என்று பழைய ஏற்பாடு கூறுகின்றது.(பார்க்க - யோசுவா 2:5) இப்படிப்பட்ட விபச்சார சந்ததிகள் மூலமாக வந்தவர்தான் இயேசு என்கிறது பைபிள். இது ஒரு புறம் இருக்க இப்படிப்பட்ட விபச்சார சந்ததியில் பிறக்கக்கூடியவர்கள் எவரும் பரிசுத்தராக முடியாது, என்றும் அவர்கள் கர்த்தருடைய சபைக்கு - ஒன்றல்ல இரண்டல்ல, தலைமுறை தலைமுறையாக வர முடியாது என்றும் கூறுகிறது பைபிள். 'வேசிப்பிள்ளையும் (விபச்சார சந்ததிகள்) கர்த்தருடைய சபைக்கு உட்படலாகாது, அவனுக்குப் பத்தாம் தலைமுறையானவனும் கர்த்தருடைய சபைக்கு உட்படலாகாது' - உபாகமம் 23:2,3 இந்த வசனத்தின் படி பார்த்தால் தாவீது, சாலமோன், இயேசு இவர்களெல்லாம் ஒரு பரிசுத்தராக வரவேமுடியாது என்கிறது பைபிள். (இவர்களெல்லாம் இஸ்லாத்தைப் பொருத்தவரை மிக்க பரிசுத்தவான்கள். இது பற்றி சிறப்புக் கட்டுரை விரைவில்... இறைவன் நாடினால்) கிறிஸ்தவர்களின் நம்பிக்கைப்படி இயேசு கடவுடைய குமாரன் என்பதை விட்டுவிடுவோம். முஸ்லீம்கள் சொல்வது போல் அவர் ஒரு தீர்க்கதரிசி என்பதையும் விட்டுவிடுவோம். அவர் ஒரு பரிசுத்தராகக்கூட வரமுடியாது என்கிறது இந்த வமிசாவளிப் பட்டியலும், இந்த கிறிஸ்தவர்களின் புனித பைபிளும். இதுதான் தான் இந்த உபாகமம் 23:2,3 வசனத்தின் மூலமும் பைபிளின் எழுத்தாளர்கள் கொடுத்துள்ள இயேசுவின் வம்சாவளிப்பட்டியல்கள் உணர்த்தும் மறுக்க முடியாத உன்மை. இது மட்டுமல்ல இப்படி விபச்சார வம்சத்தில் வந்த - தானும் விபச்சாரம் செய்த (?) தாவீது தீர்க்கதரிசி எழுதிய பழையஏற்பாட்டில் உள்ள நூல்களான சங்கீதம் என்ற புத்தகம், சாலமோன் எழுதின நீதிமொழிகள், பிரசங்கி, உன்னதபாட்டு, போன்ற புத்தகங்களெல்லாம் எப்படி புனித புத்தகங்களாகும்? காரணம் இவர்களெல்லாம் விபச்சார சந்ததிகளாயிற்றே? அதே போல் இயேசுவே பைபிளின் உபாகமம் 23:2,3ன் படி பரிசுத்தராக முடியாது எனும்போது அவரைப்பற்றி எழுதிய புதிய ஏற்பாட்டுப் புத்தகங்களெல்லாம் எப்படி புனித புத்தகங்களாகும்? இப்படி இந்த யூத எழுத்தாளர்கள், தீர்க்கதிரிகளான - நல்லோர்களான - தாவீது, சாலமோன் போன்ற இன்னும் பல பரிசுத்தவான்கள் மீது இட்டுக்கட்டி எழுதிய கட்டுக்கதைகளால் ஏற்படக்கூடிய விளைவுகளைப் பாhத்தீர்களா? சகோதரர்களே! பைபிளில் பல புத்தகங்கள் இறைவேதம் என்றத் தகுதியை இழக்கும் நிலை ஏற்படும். நீங்கள் பைபிளில் வரும் யூதா தாமார் கள்ள உறவுக் கதைகளை (ஆதியாகமம் 38:6), தாவீது உரியாவின் மனைவியோடு நடத்தியதாகச் சொல்லப்படும் விபச்சாரக்கதைகளை (2 சாமுவேல் 11:1-8) கர்த்தரால் அருளப்பட்ட வசனங்களாக நம்பினால் அது வேறு ஒரு விதத்தல் உங்கள் நம்பிக்கைகளுக்கு மிகப் பெரிய பாதகத்தை ஏற்படுத்தும் என்பதை கிறிஸ்தவ சகோதரர்கள் உணரவேண்டும். இதில் கவனிக்கப்படவேண்டிய மற்றொரு விஷயம் என்னவென்றால் இப்படி தலைமுறைத் தலைமுறையாக ஒருவருக்கு பாவம் தொடரும் என்று இஸ்லாம் ஒருபோதும் சொல்லவில்லை. அப்படி தொடராது - அது மடத்தனமான கொள்கை என்று சத்தியமார்க்கமான இஸ்லாம் போதிக்கின்றது. (பார்க்க அல்குர்ஆன் 2 : 233, 281, 286) இப்படி சொல்வது முட்டாள்தனமான வாதமும் கூட. யாரோ செய்யும் தவறுக்கு யாரையோ தண்டிப்பது என்பது மடத்தனமாக கொள்கை என்பதில் இஸ்லாம் உறுதியாக இருக்கின்றது. ஆனால் கிறிஸ்தவமோ, நம் முன்னோர்கள் செய்யும் பாவம் சந்ததி சந்ததியாக தொடரும் என்கிறது. கிறிஸ்தவத்தின் அடிப்படைக் கோட்பாடான ஆதிபாவம் - Original Sin என்பதே 'ஆதாம் செய்த பாவம் சந்ததி சந்ததியாய் தொடர்கிறது' என்பது தானே. இப்படிப்பட்ட நம்பிக்கை இவர்களிடம் இருக்கும் நிலையில், நாம் மேலே கூறியுள்ள விவரங்களையும் அதற்கு ஆதாரமாக காட்டியுள்ள உபாகமம் 23:2,3 வசனத்தையும் கிறிஸ்தவர்கள் மறுத்தார்களேயானால், அவர்கள் ஆதிபாவம் என்னும் கிறிஸ்தவத்தின் ஆணிவேரையே மறுத்தவர்களாவர்கள். ஆதிபாவம் உள்ளதா? அல்லது இல்லையா? ஆதிபாவம் என்னும் கொள்கை சரிதான் என்றால் இந்த உபாகமம் 23:2,3 வசனத்தின் படி இயேசுவும், தாவீதும், சாலமோனும் பாவிகளாகிவிடுவார். இவர்களளெல்லாம் பாவிகள் இல்லை என்றால் ஆதிபாவம் தவரானதொன்றாகிவிடும். எது சரி? தந்தை இல்லாமல் பிறந்தவருக்கு தந்தைவழி வம்சாவழி ஏன்? கிறிஸ்தாவர்களிடம் கேட்பது இது தான். தந்தை இல்லாமல் பிறந்தார் என்பதற்காக இயேசுவைக் கடவுளின் குமாரன் (?) என்றும் அதனால் அவருக்கு தனிச்சிறப்பே உள்ளது என்றும் ஒருபுறம் கூறிக்கொண்டு, மறுபுறம் தந்தையே இல்லாத ஒருவருக்கு தந்தைவழி வம்சாவழியை சொல்லுவதன் அவசியம் என்ன? வரலாற்றைச் சொல்லுகிறோம் என்றப்பெயரில் தந்தையே இல்லாத ஒருவருக்கு தந்தை வழி வம்சத்தை யாராவது சொல்வார்களா? எந்த ஒன்றுக்கும் உதவாத இந்த வம்சாவழியை சொல்லும் கடவுள் (?) முரண்பாடில்லாத வகையிலாவது சொல்ல வேண்டாமா? இந்த வம்சாவழியை சொல்லுவதால் உங்கள் பைபிள் உலகமக்ளுக்கு என்ன நல்வழிகாட்டவருகின்றது? இவைஅனைத்தும் கடவுளால் தான் அருளப்பட்டதென்றால் தனது குமாரனுடைய வம்சத்தை முரண்பாடாக சொல்லுவாரா? இந்த வம்சாவழியால் பைபிளின் பல புத்தகங்களின் புனிதம் கெடுகின்றதே இது ஏன்? ஓன்றுக்கும் உதவாக இந்த வம்சாவளிப்பட்டியல்கள் கூறும் வசனங்கள் கிட்டத்தட்ட ஆயிரக்கணக்கான வசனங்கள் பழையஏற்பாட்டிலும் புதிய ஏற்பாட்டிலும் சேர்த்து வருகின்றது. ஆங்காங்கே அவன் அவன் மகன், இவன் இவன் மகன், இவனை இவன் பெற்றெடுத்தான் அவனை அவன் பெற்றெடுத்தான் என்பது போன்ற நடையில் வரும் வசனங்கள் ஏராளம். இதனால் யாருக்கு என்ன பயன்? ஒரு பிரயோஜனமும் இல்லை. பொதுவாக வேதவாக்கியங்கள் எதற்காக அருளப்பட்டது என்பது குறித்து பொதுவான நிபந்தனைகளை சொல்வதைவீட பைபில் அது பற்றி என்ன சொல்கிறது என்பதை பார்த்தோமேயானால் இது போன்ற வம்சாவளி பற்றிய வசனங்களால் எந்த ஒரு பிரயோஜனமும் இல்லை என்பது புலனாகிவிடும். வேதவாக்கியங்கள் அருளப்பட்டிருப்பதன் நோக்கம் என்ன என்பது பற்றி பைபில் சொல்லுவதை பாருங்கள் : 'வேதவாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது. தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும், எந்த நற்கிரியையுஞ் செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படியாக, அவைகள் உபதேசத்துக்கும், கடிந்துகொள்ளுதலுக்கும், சீர்திருத்தலுக்கும், நீதியைப் படிப்பிக்குதலுக்கும் பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது.- 2 திமெத்தேயு 3:16-17 அதாவது அந்த வேதவசனங்கள் : 1. உபதேசத்திற்கும் 2. கடிந்துக்கொள்ளுதலுக்கும். 3. சீர்திருத்தலுக்கும்... 4. நீதியைப் படிப்பித்தலுக்கும்... உதவக்கூடியது என்று சொல்லுகிறது பைபில். பைபிளில் வரும் எல்லா வமிசாவளிப்பட்டியல்களை கூறும் வசனங்களை, இந்த பைபிள் வசனத்தோடு உரசிப்பாருங்கள். இதில் ஆயிரக்கனக்கான குழப்பங்களும் முரண்பாடுகளும், அசிங்கமான மரபுகளும் நிறைந்த இந்த வமிசாவளிப் பட்டியல் வசனங்களால் என்ன பயன்? இந்த நான்கு தகுதியில் எந்த தகுதிகளோடு இந்த வம்சாவளிப்பட்டியல் வசனங்கள் ஒத்துப்போகின்றது? அது மட்டுமல்ல புதிய ஏற்பாட்டின் மூலகர்த்தா பவுல் அவர்களே, இந்த வம்சவரலாறு பட்டியல்களெல்லாம் ஒன்றுக்கும் உதவாது, அதனால் எந்த ஒரு பயனும் இல்லை என்று கூறுகின்றார். புத்தியீனமான தர்க்கங்களையும், வம்சவரலாறுகளையும், சண்டைகளையும், நியாயப்பிரமாணத்தைக்குறித்து உண்டாகிற வாக்குவாதங்களையும் விட்டு விலகு. அவைகள் அப்பிரயோஜனமும் வீணுமாயிருக்கும். (தீத்து 3:9) வேற்றுமையான உபதேசங்களையுப் போதியாதபடிக்கும், விசுவாசத்தினால் விளங்கும் தெய்வீக பக்திவிருத்திக்கு ஏதுவாயிராமல் தர்க்கங்களுக்கு ஏதுவாயிருக்கிற கட்டுக்கதைகளையும் முடிவில்லாத வம்சவரலாறுகளையும் கவனியாதபடிக்கு, நீ சிலருக்குக் கட்டளையிடும்பொருட்டாக,... (1 திமோத்தேயு 1:3) இங்கே வம்சாவளிப்பட்டியல்களால் ஒரு பிரயோஜனமும் இல்லை என்று பவுல் சொன்னதும் கடவுளால் அருளப்பட்டதாம், அங்கே மத்தேயுவும் லுக்காவும் இன்னும் பழைய ஏற்பாட்டு எழுத்தாளர்கலெல்லாம் சொல்லும் அந்த வம்சாவழிப்பட்டியள்களும் கடவுளால் சொல்லப்பட்டதாம். இது பச்சை முரண்பாடாக தெரியவில்லையா? அன்புள்ள கிறிஸ்தவ சகோதரர்களே! இவ்வுலகமக்கள் அனைவருக்கும் நேர்வழி காட்டுவதற்காக இறைவன் தனது இறுதித்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் மூலமாக குர்ஆன் எனும் இறுதி இறைவேதத்தை அருளியிருக்கின்றார். இயேசுவைப் பற்றியும் அவரது முன்னோர்களான தாவீது, சாலமோன் இன்னும் பல தீர்க்கதரிசிகள் - இறைத்தூதர்கள் அனைவரும் பரிசுத்தாவன்கள் - அவர்கள் அனைவரும் நல்லடியார்கள் என்று பறைசாட்டுகிறார் இறைவன். யூதர்களும் பைபிளின் புதிய ஏற்பாட்டு எழுத்தாளர்களும் இயேசுவுக்கும் அவனது மற்ற பரிசுத்தவான்களுக்கும் எற்படுத்தியுள்ள களங்கங்களைத் துடைத்து அவர்களின் உன்மைநிலையை விளக்குவதற்காக வந்த இந்த திருக்குர்ஆனை மனதுறுகிப் படியுங்கள். கண்டிப்பாக நேர்வழி அடைவீர்கள். இறைவன் நம் அனைவரையும் நேரான வழியில் நிலைநிறுத்துவானாக. __________________ Page 1 of 1 sorted by Oldest FirstNewest First Quick Reply Please log in to post quick replies. New Indian-Chennai News & More -> புதிய ஏற்பாடு நம்பகத் தன்மை வாய்ந்ததா? -> இயேசுவின் வம்சாவழியும்(?) பைபிளின் குளறுபடியும்! Subscribe Jump To:--- Main ---திருக்குறள் சங்க இலக்கியத்தில் -விஷ்ணுரசிக்கும் நல்ல கட்டுரைகள் - தமி...அரவிந்தன் நீலகண்டன் புதிய ஏற்பாடு நம்பகத் தன்மை வாய...SCAMS & SCANDALSProf.James Tabor Articlesபைபிள் ஒளியில் இயேசு? கிறிஸ்து?...Thelogy Research Umar- Answering Islam TamilisedSenkodiChennai Economy Real EstateNEWS OF WORLD IN 2015Acta Indica- On Thomas MythPATTANAM IS NOT MUZURIS- KCHRஜோதிஜி திருப்பூர் Catholic acts of CriminalityProtestant criminal acts Silapathikaram - சிலப்பதிகாரம்Communist frauds St.Thomas MythManusmirithi in EnglishSASTHA WORSHIP ஈவேரா மறுபக்கம் - ம வெங்கடேசன்நீதிக்கட்சியின் மறுபக்கம் - ம ...EVR Tamil desiyamபண்டைத் தமிழரின் வழிபாடுCaatholic schooll atrocitiesதிருக்குறள் யாப்பியல் ஆய்வுகள்Zealot: The Life and Times of J...சைவ சித்தாந்தம் SaivamJesus never existedS.Kothandaramanகீழடி அகழாய்வும் மோசமான கூத்துக...Brahmi scriptசங்க இலக்கியம்- மூலமும் உரையும்புறநானூறுஅகநானூறுகுறுந்தொகைபரிபாடல்ஐங்குறு நூறு02. இல்லறவியல்05. அரசியல்10. நட்பியல்திருக்குறள் கடவுள் வணக்கமும் ச...Goa Inquisition - The Epitome o...Thirukkuralஇஸ்லாம்-இந்தியா- திராவிடநாத்திகம்Indian secularsimஇந்தியாவில் கிருத்துவம்சினிமாவின் சீரழவுகள்ஆரியன் தான் தமிழனாProf.Larry Hurtado ArticlesIndian Antiqity Bart D. Ehrmanதமிழர் சமயம்ஈவெரா நாயக்கர் திராவிடக் கழகத்த...ISLAMIC WORLDKalvai Venkat ஏசுவை - கிறிஸ்துவத்தை அறிவோம்தொல் காப்பியம்Andal Controversy -Vairamuthu - previous character 2004 Thirukural Confernece Anna...Brahmins and Sanskrit மணிமேகலை - Thanks முத்துக்கமலம்சங்க இலக்கியங்கள்திருக்குறள் தமிழர் மெய்யியல் சம...Tamilnadu Temple News மனுதரும சாத்திரம்நீதி இலக்கியம்ஈ.வெ.ரா யுனஸ்கோ விருது கதையும் ...தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-...DID Md EXIST? An Inquiry into I...இஸ்ரேலின் பழங்காலம் -விவிலிய பு...ANCIENT COINSIndus Saraswathiமுனைவர் கோ.ந. முத்துக்குமாரசுவாமிCSI Church Tamilnadu atrocities கலித்தொகைநற்றிணை 01. பாயிரவியல்03. துறவறவியல்06. அமைச்சியல்09. படையியல்11. குடியியல்12. களவியல்திருக்குறள் ஆய்வுBuddhism studiesNEWS -Indian-Chennai Real Estat... இஸ்லாம், முஹம்மது நபி, குர்ஆன்...ontogeny-phylogeny-epigeneticsஇலவசம்- Free- இணையத்திலுள்ள பயன...பழைய ஏற்பாடு நம்பிக்கைகுரியதா? ...Chennai Industrial Accidentsஎஸ். இராமச்சந்திரன் தென்னிந்திய...சங்க காலம் தொல்லியல் பண்பாடு - ...Pagadu - Historic Quranic resea...Prof.Thomas L Thompson Articlesபலான பாதிரியார்கள் Criminal Bis...Christian WorldArchaeology - Ancient India- Te...ஜெயமோகன் Justice Niyogi Commission Repor...Kural and VedasNuns AbusesThoma in India Fictions Devapriya போகப் போகத் தெரியும்- சுப்பு கல்வெட்டு The Myth of Saint Thomas and t...MINORITY RIGHTS CASESமுஹம்மது உண்மையில் இருந்தாரா? -...பெரோசஸ் மற்றும் ஆதியாகமம், மானெ...இயேசு கிறிஸ்து ஆக்கிரமிப்புக்கா...ஆய்வு:பதிற்றுப் பத்துதிருக்குறள் உரைகளோடு04. ஊழியல்07. அரணியல்08. கூழியல்13. கற்பியல்Nivedita Louisதிருக்குறள் ஆய்வு
மவுசாக்கலை நீர்தேக்கத்தால் மூடப்பட்ட மஸ்கெலியா பழைய நகரைச் சேர்ந்த பௌத்த விகாரை, இந்து கோவில், முஸ்லிம் பள்ளி ஆகியன வெளித்தோன்ற ஆரம்பித்துள்ளன. தற்போது மலையக பகுதிகளில் நிலவும் வெயிலுடனான காலநிலை காரணமாக ஆறுகளில் நீர் மட்டம் குறைவடைந்து காணப்படுகின்றது. இதனால் மலையகத்தில் காணப்படும் நீர்த்தேக்கங்களிலும் நீர் மட்டம் குறைவடைந்துள்ளது. மஸ்கெலியா நகருக்கு அண்மையில் அமைந்துள்ள மவுசாக்கலை நீர்த்தேக்கத்தின் நீர் மட்டம் வழிந்தோடும் நிலையில் இருந்து 40 வீதமாக குறைவடைந்துள்ளதாக லக்ஷபான நீர் மின் உற்பத்தி நிலையத்தின் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மவுசாக்கலை நீர்தேக்கத்தில் மூழ்கிய மஸ்கெலிய பழைய நகரத்தில் காணப்பட்ட கதிரேசன் கோயில் முழுமையக வெளித்தோன்றியுள்ளது. அத்துடன், அப்பகுதியிலிருந்த பௌத்த விகாரை மற்றும் முஸ்லிம் பள்ளிவாசல் போன்றனவும் வெளித்தோன்றியுள்ளன. இந்த காலநிலை தொடர்ந்து நிலவும் பட்சத்தில் இன்னும் ஒரு வார காலத்தில் கோயிலை சென்றடைவதற்கான பாதை முற்றாக பயன்படுத்தக்கூடிய நிலையை அடையும் போது அதிகளவானவர்கள் இந்த கோயிலை தரிசிப்பதற்கு செல்வது வழமை. தற்போது சிவனொளிபாதமலை யாத்திரையில் ஈடுபடும் யாத்திரர்களாலும் இந்த பழைய கோயில் பார்வையிடப்படுவதால் இது ஓர் சுற்றுலா தளமாகவும் பயன்படுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. Posted by KUMURUM MALAIKAL at 11:49 PM No comments: மலையகத்திலிருந்து அரச நிர்வாக சேவையில் உள்வாங்குவோர் எண்ணிக்கை மிகவும் குறைவு – வாமதேவன் பெருந்தோட்டத் துறையின் அபிவிருத்திக்கென ஒரு அமைச்சு ஆணை கொண்டதாக இருக்கும்போது அந்த அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட நிதி அந்ததுறைக்கென செலவழிக்கப்படும். பொதுவான அமைச்சுகளின் வரவு செலவு திட்டங்களில், வேலைத்திட்டங்கள் தோட்டப்புற பள்ளிக்கூடங்கள், தோட்ட சுகா தாரம், தோட்ட வீடமைப்பு என குறிப்பிடப் பட்டு நிதி ஒதுக்கப்பட்ட வேண்டும். உதாரண மாக நீர் வழங்கல் வடிக்காலமைப்பு அமைச்சு மற்றும் தேசிய நீர் வழங்கல் சபையில் தோட்டத்துறைக்கான தனியான ஒதுக்கீடுகள் இல்லை. இதனால் அந்த அமைச்சின் நடவடிக்கைகள் தோட்டப்புறங்களை முறையாக போய்ச் சேருவதில்லை. தோட்டத்துறையின் அபிவிருத்திக்கென ஒரு அமைச்சு இல்லாத நிலையில் ஏனைய தொடர்புடைய அமைச்சுகளின் வரவு செலவு திட்டங்களில், தோட்டத்துறைக்கென்று ஒதுக்கீடுகள் சுட்டிக்காட்டப்படவேண்டும். அப்போதுதான். தோட்டத்துறையின் சமூக அபிவிருத்திக்கு இந்த ஆண்டு இவ்வளவு ஒதுக்கப்பட்டுள்ளது என மதிப்பிடமுடியும். அமைச்சு ஒன்று இல்லாத நிலையில் பெருந்தோட்ட மனித அபிவிருத்தி நிதியம் சௌமியமூர்த்தி தொண்டமான் ஞாபகார்த்த மன்றம் ஆகியன தற்போது கால்நடை அபிவிருத்தி அமைச்சின் கீழ் செயற்படு கின்றன. டிரஸ்ட் நிதியமானது, தோட்டத் துறையின் வீடமைப்பு, நீர் சுத்திரிகரிப்பு வசதிகள், சிறுவர் பராமரிப்பு, சுகாதாரம் போன்ற விடயங்களில் அக்கறை செலுத்து கின்றது. தொலை நோக்காக தோட்டங்களில் வாழ்க்கைத் தரத்தினை தொடர்ச்சியாக முன்னேற்றுவதற்காக நிலைபேறான அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டங்களை சிறப்பான முறையில் வழங்குவதன் மூலம் தலைமை அபிவிருத்தி தாபனமாக விளங்குகிறது. தோட்ட முகாமைத்துவ தொழிற்சங்கம் அரசாங்கம் ஆகிய முத்தரப் பினரின் பிரதிநிதிகளின் வழிகாட்டலில் நிதிப்பற்றக்குறை காரணமாக மட்டுப்படுத் தப்பட்ட சேவைகளை மேற்கொள்கின்றது. 2005ம் ஆண்டின் மறைந்த அமைச்சர் தொண்டமானின் பெயர் நிலைத்திருக்க வேண்டும் என அரசாங்கம் மற்றும் அமைச்சு, தொண்டமான் குடும்பப் பிரதிநிதிகளின் மேற்பார்வையில் பாராளுமன்ற சட்ட மூலமாக ஞாபகார்த்த மன்றம் நிறுவப்பட்டது. அட் டனில் அமைந்துள்ள தொழிற்பயிற்சி நிலை யம், நோர்வூட் நகரில் அமைக்கப்பட்ட விளையாட்டு மைதானம், றம்பொடையில் அமைந்துள்ள கலாசார மண்டபம், என்பவை இம்மன்றத்தின் நிர்வாகத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. அத்தோடு அது பிரஜா சக்தி மற்றும் நவசக்தி என்ற பெயரில் செயற்றிட்டங்களை சில தோட்டங்களில் செயற்படுத்தி வருகின்றது. ஏறக்குறைய ஆண்டொன்றுக்கு 100 மில்லியன் ரூபா கால்நடை அமைச்சிலிருந்து பெறப்பட்டு, இச்செயற்றிட்டங்கள் நடைமுறைப்படுத்து கின்றன. அத்தோடு பல்வேறு சர்வதேச மற்றும் உள்ளூர் அரச சார்பற்ற நிறுவனங்கள் பல்வேறு செயற்றிட்டங்களை செயற்படுத்தி வருகின்றன. அதேபோல உள்ளூர் நிறுவனங்களான பிரிடோ, முன்பள்ளிக்கூட அபிவிருத்தி, கண்டி சமூக அபிவிருத்தி நிலையம், மற்றும் மனித அபிவிருத்தி தாபனம் போன்றவை மனித உரிமைகள், சமூக அணிதிரட்டல் மற்றும் சமூகம் சார்ந்த நிறுவனங்களை வலுவூட்டல் போன்ற செயற்றிட்டங்களை நடைமுறைப் படுத்துகின்றன. இந்த வகையில் பாம் பவுண் டேசன், மொனராகலை மக்கள் அபிவிருத்தி நிலையம் போன்ற பல்வேறு தாபனங்கள், வாழ் வாதார பயிற்சி போன்ற துறைகளில் செயல் படுகின்றன. மலையக அபிவிருத்தி மன்றம் போன்ற சமூகம் சார்ந்த அமைப்புகளும், கல்வி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன. இத்தகைய அரச மற்றும் அரசசார்பற்ற நிறுவனங்களால் பல்வேறு அபிவிருத்தி முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும் இன்றும் இந்த மக்கள் ஏனைய இனக்குழுக்களோடு சமத்துவ நிலையில் இருக்கிறார்கள் எனக் கூறமுடியாது. அபிவிருத்தி வரலாற்றில் சுதந்திரத்திற்கு பின்னைய வரலாற்றில் கிட்டத்தட்ட 30-40வருடங்களுக்கு பிந்தியே, உள்நுழைந்த காரணத்தினால், இவர்கள் குறித்து பொதுவான அபிவிருத்தி குறிக்காட்டிகளான வறுமை நிலை, போஷாக்கு, சுகாதார, கல்வி, சிறுவர் பெண்கள், பலவீனமான முதியோர் பாதுகாப்பு என பல்வேறு அம்சங்களை ஒப்பிடுகையில் ஏனைய சமூகத்தோடு இவர்கள் சமத்துவ நிலையில் இல்லை. தேயிலை இரப்பர் தோட்டங்களில் தொழிலாளர்களை பெரும்பான்மையாக கொண்ட இச்சமூகம், நாட்டின் ஏனைய பகுதிக்கு திறனற்ற தொழிலாளர்களை வழங்குகின்ற ஒரு ஒதுக்காகவே காணப்படுகிறது. உயர்கல்வியைப் பொறுத்தவரை பல்கலைக் கழக அனுமதி ஆண்டொன்றிற்கு 20- 25000 மாக அமைகையில், 5% அல்லது 7 % கொண்ட மலையக மக்கள் 200 க்கும் குறைவான எண்ணிக்கையில் 1% வீதத்திற்கு குறைவானவதாவே அமைந்துள்ளது. இலங்கை யில் தங்களுக்கென்ற ஒரு பல்கலைக்கழகம் இல்லை என்று சமூகமாக இருப்பது, இந்த மக்களே. 10 ஆண்டு திட்டத்திலே இது குறித்து ஒரு சாத்தியவள ஆய்வு மேற்கொள்ளப் படவேண்டும் என குறிக்கப்பட்டிருந்தாலும் அந்த நடவடிக்கை இன்னும் முன்னெடுக் கப்படவில்லை. இங்கு இலவச உயர் கல்விக்கு நாம் அழுத்தம் கொடுக்க வேண்டும். அதை அடைந்த இயலுமையின் குறைவு என்றே அல் லது உரிமை மறுப்பு என்ற வகையில் பார்க்க வேண்டும். இந்த மக்களுக்காக பல்கலைக்கழகம் என்ற கோரிக்கையும் ஒரு உரிமை அடிப்படை யில் அணுகப்பட வேண்டும். அரசியல் பிரதிநிதித்துவம் அதிகரித்த நிலையில், அரச நிர்வாக மட்டத்தில், இம்மக்களின் ஈடுபாடு இல்லாமலிருப்பது கவனத்திற்கும் வேதனைக்குரிய ஒன்றாகும். சில விசேட ஏற்பாடுகளின் அடிப்படையில் அரசாங்கத்துறையில் சேர்க்கப்பட்ட பெருந் தோட்ட சமூக, தொடர்பாடல் வசதிப்படுத்தும் உத்தியோகத்தர் 300 பேரும் தபால் ஊழியர் 300 பேரும் கிராம சேவை உத்தியோகத்தர் 200 பேரும் என்ற எண்ணிக்கை தவிர சாதாரணமாக, பொதுப்பரீட்சை மூலமாக அரசாங்க துறைக்கு உள்வாங்கப்படுவோர் தொகை குறைவாகவே காணப்படுகின்றது. இந்த மக்களைச் சார்ந்த உயர் அரசாங்க உத்தியோகத்தர்கள் விரல் விட்டு எண்ணக் கூடியவர்களே. அமைச்சு செயலாளர்களாக இதுவரை இலங்கை நிர்வாக சேலையில், எத்தனை பேர் என்று தேட வேண்டிய நிலை? திட்டமிடல் சேவையில் மூன்று பேர் வெளிநாட்டு சேவையில் 3 பேர் பிரேமதாசவின் ஆட்சிக்காலத்தில், இன அடிப்படையில் ஆட் சேர்ப்பு கொள்கை காரணமாக இணைத்துக் கொள்ளப்பட்டனர். அபிவிருத்தி உரிமைகளை பொறுத்தவரை முக்கியமானதும், அடிப்படையாகவும் அமைந்துள்ளமை வீட்டுரிமையும், நிலவுரிமை யுமாகும். ஏனைய மக்கள் குழுக்களோடு ஒப்பிடுகையில் வீட்டுரிமை நிலவுரிமையற்ற வர்களாக இருப்பவர்கள் எண்ணிக்கை அடிப்படையில் அதிகமானோர் இவர்களே. வீட்டுரிமை, என்பது தொழில் செய்யும் வரைக்கும் அனுபவிக்கக்கூடிய ஒன்றே. ஒரு குடும்பத்தில் ஒருவரேனும் தொழில் செய்யும் வரை வீட்டை சொந்தம் கொண்டாடலாம். ஒரு வரும் வேலை செய்யாத போது உரிமை மாற்றக் கூடிய உறுதி இல்லாமையே அடிப்படைப் பிரச் சினையாக காணப்படுகின்றது. வீட்டுக்கடன் பெற்று வீடுகளை கட்டி முடித்தவர்களுக்கும் இன்னும் உறுதிகள் வழங்காமலிருப்பது, ஓர் உரிமைப் பிரச்சினையாக சுட்டிக்காட்டப்படுகின்றது. வீட்டுரிமையோடு இணைந்தவொன்று வீடுகளை ஒட்டி ஒரு சிறிய நிலப்பரப்பு வீட்டுத்தோட்டங் களாக தொழிலாளர்கள் தொடர்ச்சியாக பாவித்து வந்தமையாகும். இத்தகைய நிலைமை உருவாகும்போது தோட்ட மக்களுக்கு கிராம மக்களை போல சமமான நிலையில் உருவாகும்போது தோட்ட மக்களும் கிராம மக்களைப் போல சமமான நிலையில் தங்களது வாழ்வாதாரத்தை பேண முடியும் என்பதே, இந்த கோரிக்கையின் தாற்பரியமாகும். 2014ம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தில் 50,000 வீட்டுத் தொகுதிகள் அமைப்பதற்கான முன்மொழிவு பற்றி சிந்திக்க வேண்டியுள்ளது. தோட்டப்புற வீடமைப்பில் பெரும்பாலும் தனி வீடுகள் விரும்பப்பட்டன. நெரிசல் மிகுந்த லயத்து வாழ்வு முறையலிருந்து தனி வீடுகளே பெரும்பாலும் மறைந்த சந்திரசேகரன் வீடமைப்பு பிரதி அமைச்சராக இருந்த காலத்திருந்து பின்பற்றப்பட்டு வந்த ஒன்றாகும். பின்னர் கைவிடப்பட்டு மீண்டும் தனி வீடுகளே மேற்கொள்ளப்பட்டன. இந்த நிலையில் மீண்டும் மாடி வீடுகள் உள்ளடக் கியதான இந்த முன்மொழிவு நில உபயோகம் மற்றும் உரிமைகள் என்பவை குறித்த அடிப் படையில் கவனம் செலுத்த வேண்டிய வொன்றாகும். மலையக மக்களின் அபிவிருத்தி நிலையில் ஏனைய சமூகங்களோடு ஒப்பிடு கையில் சமத்துவமற்ற நிலையில் இருப்பதோடு இந்த சமூகத்திற்குள்ளேயே பல பிராந்திய ரீதியாக வேறுபாடுகள் காணப்படுகின்றன. மத்திய மாகாணம் அதிலும் நுவரெலியா மாவட்டம் மக்களின் செறிவு அதனூடாக பெறப் படக் கூடிய அரசியல் பிரதி நிதித்துவம் காரண மாக உயர்நிலையில் இருக்கும் அதேவேளை தெற்கு மாகாணத்தில் குறிப்பாக காலி மாவட்டத்தில் வாழ்வோர் புறக்கணிக்கப்பட்ட நிலையில் தாழ்நிலையில் உள்ளனர். தெனியாய பகுதியிலிருந்து உயர்தர வகுப்பிற்கு செல்வதென்றால் காவத்தைக்கு செல்ல வேண்டிய துர்ப்பாக்கிய நிலை நிலவுகின்றது. இந்த மக்களின் அடிப்படை பிரச்சினைகள் இன்னும் முழுமையாக மேற்கொள்ளப்படவில்லை. சமத்துவம் எனும் போது உள்ளக சமத்துவமும் முக்கியமானவொன்று. இந்த இரண்டிற்கும் இடைப்பட்ட நிலையில் சப்ரகமுவ மாகாணம் விளங்குகின்றது. பத்தாயிரமாண்டு அபிவிருத்தி குறிக்கோள்கள். 2015ம் ஆண்டில் முடிவடைந்த நிலையில், தோட்ட சமூக அபிவிருத்தி திட்டம் 2009-2015 நிறைவேற்றப்படாமல் மூடிவைக்கப்பட்ட நிலையில், இந்த மக்களின் சமத்துவ அபிவிருத்தி 2015ற்கு பின்னர் எத்தகையதாக இருக்கும் என்று கேள்விக்கு விடை காண வேண்டியுள்ளது. தோட்டப்புற பாடசாலைகள், தோட்ட சுகாதார, தோட்ட வீடமைப்பு, தோட்டப்புற பாதைகள், தோட்ட நீர் விநியோகம், இப்படி தொடர்புடைய அமைச்சுக்களில் நிதி ஒதுக்குகள் குறித்து ஒரு வெளிப்படைத்தன்மை காணப்பட வேண்டும். அரசாங்கம் பல்வேறு அபிவிருத்தி முனைப்புகளை முன்னெடுத்து வருகின்றது. இவற்றில் திவிநெகும, மற்றும் கமநெகும போன்றவை அடிக்கடி குறிப்பிடப்படுகின்றன. மாகாண மட்டத்தில் செயற்படுகின்ற அபிவிருத்தி முன்னெடுப்புகளும் எந்தளவிற்கு தோட்டப்புறங்களுக்கு சென்றடைகின்றன என்பவை அறியப்பட வேண்டியவையாகும். இந்த முனைப்புகள் குறித்து மக்கள் பிரநிதிகள், குறித்த இடங்களில் அழுத்தம் கொடுக்க வேண்டும். இந்த செயற்பாடுகளில் சிவில் சமூகம், சமூகம்சார்ந்த அமைப்புகள், அக்கறை செலுத்த வேண்டும். அது மக்கள் பிரதிநிதிகளுக்கு வலுவூட்டுவதாக அமையும். அரசசார்பற்ற நிறுவனங்கள் அரசாங்கம் செய்யும் விடயங்களையே செய்ய முனையாமல், மேலதிகமாக செயற்பாடுகளை மேற்கொள்ளலாம். இதில் சமூகத்தினர் தனியார் துறை, சமூகம் சார்ந்த அமைப்புக்கள் தொழிற்சங்கங்கள் என்பவை அபிவிருத்தி சம்பந்தமாக கூடிய அக்கறை செலுத்த வேண்டும். தனியார் துறை எனும் போது பெருந்தோட்ட கம்பனிகள் இன்று நிறுவன சமூக பொறுப்பு கொண்டவையாக இருக்க வேண்டுமென எதிர்பார்க்கப்படுகின்றன. இதில் நிச்சயம், அபிவிருத்தி அம்சம் கலந்துள்ளது. பொருளாதார ரீதியாக தேசிய மட்டத்தில் தேயிலையின் பங்களிப்பு குறைந்து செல்கின்ற வேளை தேசிய உற்பத்தி, அந்நிய செலாவணி சம்பாதிப்பு என்ற வகையில் தேயிலையின் முக்கியத்துவம் குறைந்து செல்கின்றது. தேயிலையின் ஏற்றுமதி விலைகளை தொடர்புபடுத்தியதாக, தோட்டத்தொழிலாளர்களின் சம்பளம் அமைந்திருப்பதால் குறைவான விலை குறைவான கூலி என்ற வகையில் தோட்டத்தொழிலை மாத்திரம் தமது வாழ்வாதாரத்திற்கு தங்கியிருக்க முடியாத நிலை தோன்றியுள்ளது. உயர்கல்வி தோட்டத்தொழிலுக்கு மரபுரீதியாக இருந்த வந்த கூலி என்ற இழிவான சமூக அடையாளம் என்பவை காரணமாக கணிசமானோர் க.பொ.த சாதாரண தரத்துடன் வேறு திறனற்ற தொழில்களைத் தேடி தோட்டப்புறத்திலிருந்து அகன்று செல்கின்றனர். தோட்டத்திற்குள்ளே, தோட்டத்தொழிலில் ஈடுபடாது வாழுவோர் எண்ணிக்கை 30 சதவீதமாக அமைந்துள்ளதாக சில கணிப்பீடுகள் சுட்டிக்காட்டுகின்றன. இவர்களை முன்னர் போல, தோட்டங்களிலிருந்து அகற்றிவிட முடியாது. தோட்டக் கம்பனிகளில் தொழிலாளர் பற்றாக்குறை ஒரு அபாயமாக கருதப்படுகின்றது. உழைப்பினை பதிலீடு செய்கின்ற தொழிற்நுட்பங்கள் குறித்து இப்போது அதிகம் அக்கறை செலுத்தப்படுகின்றது. குறைந்த உழைப்பில் உயரிய உற்பத்தியை அடைவதையே கம்பனிகள் இலக்காக கொண்டுள்ளன. இவை தோட்டங்களை சிறுபகுதிகளாக்கி வெளியார்க்கு கையளித்தல் முறைக்கு இட்டுச்செல்லும் நிலை தள்ளப்படுவதை காணக்கூடியதாக உள்ளது. சமூக ரீதியாக முழுக்கமுழுக்க தொழிலாளர் குடும்பங்களாக இருந்த நிலைமாறி, தொழிலாளர் அல்லாதோரை கொண்ட சமூகமாக, மலையக சமூகம் இன்றி மாறிவருகின்றது. இந்த சமூகநிலை மாற்றம் அதிகரித்து செல்லும் போக்கு அவதானிக்க கூடியதாக உள்ளது. இதுவரை தோட்ட நிர்வாகத்தில் தங்கியிருந்த நிலைமாறி, பிரதேசசபை, போன்ற அரசாங்க நிறுவனங்களில் தங்களின் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ளும் போக்கே எதிர்காலத்தில் காணப்படலாம். அந்தவகையில் அரசியல் ஜனநாயக முறைமையில் அதிக ஈடுபாடு காட்டக்கூடிய சூழ்நிலை உருவாகலாம். அதனுடைய பிரதிபலிப்புகள், மாகாண தேசிய மாவட்டங்களில் புதிய அரசியல் தலைமைகள் - கீழிலிருந்து உருவாகக்கூடிய சாத்தியங்கள் நிலவுகின்றன. இந்த போக்கு மக்களின் அபிவிருத்தி தேவைகளை அர்த்தமுள்ள வகையில் வெளிப்படுத்துவதாக அமையும். மலையக மக்களை சார்ந்த அபிவிருத்தி நடவடிக்கைகள் குறித்து ஒரு தரவு தளம் இல்லாதிருப்பதாகும். அமைச்சு மட்டத்தில் இப்படியொன்று அமைக்கப்பட வேண்டுமென 10 ஆண்டு திட்டம் நடைமுறைப்படுத்திய போது முன்மொழிவு செய்யப்பட்டது. நாம், முன்னர் குறிப்பிட்டது போல, பல்வேறு அரச நிறுவனங்கள், அரசசார்பற்ற நிறுவனங்கள் பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுத்து வருகின்றன. இவை பற்றிய தரவுகள், மற்றும் தகவல்கள் ஓரிடத்தில் கிடைப்பதாயில்லை. இது ஒரு அமைச்சு மட்டத்திலே நிறுவப்படுவது பொறுத்தமான ஒன்று. நுவரெலியா மாவட்டத்தைப் பொறுத்தவரை கல்வித்துறை சம்பந்தமான சீடா நிறுவனத்தின் ஊடாக தரவுத்தளம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது. மலையகம் முழுவதையும் உள்ளடக்கி, அனைத்து துறைகளுக்குமான கல்வி- சுகாதாரம், வீடமைப்பு, பாதைகள் மற்றும் பல்கலைக்கழகம் செல்வோர், வேலை வாய்ப்பற்றோர் போன்றவிடயங்களுக்கென தரவுக்களம், ஒன்று அவசியமாகும். மலையக மக்கள் சமத்துவ அபிவிருத்தியை நோக்கி, எத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்? அபிவிருத்தி குறித்து நோபல் பரிசு பெற்ற இந்திய பொருளியல் அறிஞர் அமாத்தய சென் அவர்களின் கூற்றொன்றை இச் சந்தர்ப்பத்தில் குறிப்பிடுவது பொருத்தமானது என நினைக்கிறேன். “ஒரு தனிமனிதன் எத்தகைய அளவு உரித்துகளையும், இயலுமைகளையும் கொண்டிருக்கிறானோ அந்த அளவிற்கே அவன் அபிவிருத்தியை அடைந்து கொள்ள முடியும்” என்ற கருத்தை இச்சமூகத்திற்கும் பொருந்திப்பார்க்க முடியும். இங்கு சுட்டிக்காட்டப்பட்ட வரலாற்று அனுபவத்திலும் இந்த சமூகம் உரித்துக்களின் தொகுதிகளை ஏனைய சமூகங்களோடு ஒப்பிடுகையில் காலங்கடந்தே பெற்று கொண்டது. இன்னும், இந்த உரித்துக்களின் தொகுதி பெருப்பிக்கப்பட வேண்டும். இதை முழுமையாக அனுபவிக்கவேண்டுமெனில் அதற்கான இயலுமையை இந்த சமூகம் பெற்றிருக்க வேண்டும். இயலுமை குறைவே, இந்த சமூகத்திற்குரிய மிகப்பெரும் பலவீனமாகும். இதுவும் வரலாற்று நிகழ்வுகளின் விளைவுதான். இந்த இயலுமைகளின் அபிவிருத்தி மனிதவள மேம்பாட்டில் தங்கியுள்ளது கல்வி திறன் பயிற்சி என்பவை தான் இவற்றை கொண்டு வர முடியும். இத்தகைய சமூக சூழ்நிலையிலே, நேரடியாக நடவடிக்கைகள் அல்லது நேர்கணிய பாரபட்ச ஏற்பாடுகள் இந்திய, மலேசியா போன்ற நாடுகளின் யாப்புகளில் காணப்படுகின்றன. இலங்கையில் இத்தகைய இடைவெளிகள் காணப்பட்டபோது அவற்றை நீக்க நேர்கணிய பாரபட்ச நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பல்கலைக்கழக அனுமதியில் இன மற்றும் பிராந்திய தரப்படுத்தல், இனத்துவ ரீதியான ஆட்சேர்ப்பு என்பன சில உதாரணங்களை குறிப்பிடலாம். ஒரே மக்கள், ஒரே நாடு என்ற கோட்பாடு அர்த்தமுள்ளதாக இருக்கவேண்டுமெனில் ஒரே மக்கள் என்ற தொகுதிக்குள் அடங்குகின்ற இனக்குழுக்கள் சமத்துவ நிலையை அனுபவிக்க வேண்டும். இங்கு இரண்டு மேற்கோள்களை பொருத்தம் கருதி குறிப்பிடலாம். ஒன்று இந்திய பிரதம நீதிபதி ஏ. என். ரே அவர்களின் கூற்று, சமத்துவம் அற்றவர்களுக்கு, சமத்துவமான சந்தர்ப்பங்களை வழங்குதல் சமத்துவமின்மையை தீவிரப்படுத்தும் என்பதாகும் மற்றது இந்திய யாப்பை உருவாக்கிய அம்பேத்காரின் கூற்று, நாம் அரசியலில சமத்துவம் கொண்டுள்ளோம். ஆனால் சமூக, பொருளாதார வாழ்வில் சமத்துவமின்மையை காண்கின்றோம். கூடிய விரைவில் இம்முரண்பாட்டினை நீக்க வேண்டும். இல்லையெனில் சமத்துவமின்னையால் பாதிக்கப்பட்டவர்கள் கடுமையாக உழைத்து கட்டியெழுப்பிய இந்த அரசியல் ஜனநாயக அமைப்பினை உடைத்து எறிவார்கள். மலையகத்தின் காந்தி என போற்றப்படும் அமரர் கே. இராஜலிங்கத்தின் 104 ஆவது பிறந்த தினத்தையொட்டி கடந்த 3ஆம் திகதியன்று கொழும்பில் நடைபெற்ற நிகழ்வில் “மலையக மக்கள் சமத்துவ அபிவிருத்தியை நோக்கி” எனும் தலைப்பில் எம். வாமதேவன் ஆற்றிய பேருரை
ஈராக்கின் பாக்தாதில் அமைந்துள்ள முக்கிய சந்தைப்பகுதியில் இருவேறு தற்கொலை வெடிகுண்டு தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதில் 50-கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளதுடன், மேலும் 21 பேர் உடல் சிதறி பலியாகியுள்ளனர். மரண எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது எனவும் உள்விவகார அமைச்சரகம் தகவல் தெரிவித்துள்ளது. முதல் தற்கொலை குண்டுதாரி, பரபரப்பான சந்தைக்குள் நுழைந்து, தமக்கு சுகவீனமாக இருப்பதாக கூறி உதவி கோரியுள்ளார். அவரது பேச்சை நம்பிய அப்பாவி மக்கள் அவருக்கு உதவும் நோக்கில் அருகாமையில் சென்றுள்ளனர். இந்நிலையில் இன்னொருர் வெடிகுண்டை இயக்கியுள்ளார். இதில் கூடியிருந்த மக்கள் பலர் உடல் சிதறி பலியாகியுள்ளனர். கடந்த ஓராண்டில் இல்லாத மிக மோசமான தற்கொலை வெடிகுண்டு தாக்குதல் இதுவென அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
HOMEDICS PGM-1000-GB Pro Physio Massage Gun PRODUCT FEATURES The HoMedics Pro Massager is a cordless reciprocating massage device that penetrates deep into your muscle layers to relieve aching and stiff muscles, helping you feel relaxed, recharged, perfect for after sport or physical activity. INSTRUCTIONS FOR USE Screw the desired massage head into the socket on … வாசிப்பு தொடர்ந்து “HOMEDICS PGM-1000-GB Pro Physio Massage Gun Instructions” மார்ச் 5, 2022 மார்ச் 5, 2022 அனுப்புகஹோமடிக்ஸ்Tags: ஹோமடிக்ஸ், பிஜிஎம்-1000-ஜிபி, ப்ரோ பிசியோ மசாஜ் துப்பாக்கிகருத்துரை HOMEDICS PGM-1000-GB ப்ரோ பிசியோ மசாஜ் துப்பாக்கி வழிமுறைகளில் HoMEDiCS MCS-950HJ-GB 2-In-1 ஷியாட்சு மசாஜ் குஷன் மற்றும் கார்ட்லெஸ் பாடி மசாஜர் மற்றும் இனிமையான வெப்ப அறிவுறுத்தல் கையேடு HoMEDiCS MCS-950HJ-GB 2-In-1 Shiatsu Massage Cushion and Cordless Body Massager with Soothing Heat PRODUCT FEATURES: INSTRUCTIONS FOR USE: Remove the adapter from the small white box and plug into the input jack located on the side of the cushion. Plug the unit into a standard 220-240V power supply. Attach the cushion to most chairs for … வாசிப்பு தொடர்ந்து "HoMEDiCS MCS-950HJ-GB 2-In-1 ஷியாட்சு மசாஜ் குஷன் மற்றும் கார்ட்லெஸ் பாடி மசாஜர் மற்றும் இனிமையான வெப்ப அறிவுறுத்தல் கையேடு" மார்ச் 3, 2022 மார்ச் 5, 2022 அனுப்புகஹோமடிக்ஸ்Tags: 2-இன்-1 ஷியாட்சு மசாஜ் குஷன் மற்றும் தணிக்கும் வெப்பத்துடன் கம்பியில்லா பாடி மசாஜர், ஹோமடிக்ஸ், MCS-950HJ-GB, MCS-950HJ-GB 2-In-1 ஷியாட்சு மசாஜ் குஷன் மற்றும் இனிமையான வெப்பத்துடன் கம்பியில்லா பாடி மசாஜர்கருத்துரை HoMEDiCS இல் MCS-950HJ-GB 2-இன்-1 ஷியாட்சு மசாஜ் குஷன் மற்றும் கார்ட்லெஸ் பாடி மசாஜர் மற்றும் இனிமையான வெப்ப அறிவுறுத்தல் கையேடு HoMEDiCS UHE-CM180 மொத்த ஆறுதல் ஈரப்பதமூட்டி அறிவுறுத்தல் கையேடு HoMEDicS UHE-CM180 Total Comfort humidifier முக்கியமான பாதுகாப்பு வழிமுறைகள், எலக்ட்ரிக்கல் பொருட்களைப் பயன்படுத்தும் போது, ​​அடிப்படை பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகள் எப்போதும் பின்பற்றப்பட வேண்டும், பின்வருவனவற்றை உள்ளடக்கியது: ஆபத்து - மின்சார அதிர்ச்சியின் அபாயத்தைக் குறைக்க: எப்போதும் உறுதியான, தட்டையான மேற்பரப்பில் ஈரப்பதமூட்டியை வைக்கவும். ஒரு நீர்ப்புகா பாய் அல்லது திண்டு கீழ் பயன்படுத்த பரிந்துரைக்கப்படுகிறது ... வாசிப்பு தொடர்ந்து "HoMEDiCS UHE-CM180 மொத்த ஆறுதல் ஈரப்பதமூட்டி அறிவுறுத்தல் கையேடு" மார்ச் 1, 2022 மார்ச் 3, 2022 அனுப்புகஹோமடிக்ஸ்Tags: ஹோமடிக்ஸ், மொத்த ஆறுதல் ஈரப்பதமூட்டி, UHE-CM180கருத்துரை HoMEDiCS UHE-CM180 மொத்த ஆறுதல் ஈரப்பதமூட்டி அறிவுறுத்தல் கையேட்டில் HoMEDiCS AP-P60 மொத்த சுத்தமான போர்ட்டபிள் காற்று சுத்திகரிப்பு வழிமுறை கையேடு HoMEDicS AP-P60 மொத்த சுத்தமான போர்ட்டபிள் காற்று சுத்திகரிப்பு முக்கியமான பாதுகாப்பு வழிமுறைகள்: மின்சாரப் பொருட்களைப் பயன்படுத்தும் போது, ​​குறிப்பாக குழந்தைகள் இருக்கும் போது, ​​அடிப்படை பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகள், முன்னெச்சரிக்கைகள் பயன்படுத்துதல். ஆபத்து: மின்சார அதிர்ச்சியின் அபாயத்தைக் குறைக்க: எப்பொழுதும் பயன்படுத்திய உடனேயே மின் நிலையத்திலிருந்து காற்று சுத்திகரிப்பாளரைத் துண்டிக்கவும்… வாசிப்பு தொடர்ந்து "HoMEDiCS AP-P60 மொத்த சுத்தமான போர்ட்டபிள் காற்று சுத்திகரிப்பு வழிமுறை கையேடு" பிப்ரவரி 28, 2022 மார்ச் 2, 2022 அனுப்புகஹோமடிக்ஸ்Tags: காற்று சுத்திகரிப்பான், AP-P60, AP-P60 மொத்த சுத்தமான போர்ட்டபிள் காற்று சுத்திகரிப்பு, ஹோமடிக்ஸ், சிறிய காற்று சுத்திகரிப்பு, மொத்த சுத்தமான போர்ட்டபிள் காற்று சுத்திகரிப்புகருத்துரை HoMEDiCS AP-P60 இல் மொத்த சுத்தமான போர்ட்டபிள் காற்று சுத்திகரிப்பு வழிமுறை கையேடு ஹோமெடிக்ஸ் TH-SPTF2000-GB Truheat Rechargeable Shiatsu Pillow Instruction Manual ஹோமெடிக்ஸ் TH-SPTF2000-GB Truheat Rechargeable Shiatsu Pillow Instruction Manual www.homedics.co.uk/product-registration தயாரிப்பு அம்சங்கள்: பயன்பாட்டிற்கான வழிமுறைகள்: சார்ஜ் செய்யும் முறை மெயின்ஸ் அடாப்டரை மசாஜர் பவர் சப்ளை கார்டுடன் இணைக்கவும். அடாப்டரை 220-240v மெயின் அவுட்லெட்டில் செருகவும். முழு சார்ஜ் ஏறக்குறைய 3 மணி நேரம் ஆகும். ரிமோட்டில் உள்ள ஆற்றல் பொத்தான் மூன்று வினாடிகள் காத்திருந்து பின்னர் ப்ளாஷ் செய்யும் ... வாசிப்பு தொடர்ந்து “ஹோமெடிக்ஸ் TH-SPTF2000-GB Truheat Rechargeable Shiatsu Pillow Instruction Manual” பிப்ரவரி 24, 2022 பிப்ரவரி 24, 2022 அனுப்புகஹோமடிக்ஸ்Tags: ஹோமடிக்ஸ், TH-SPTF2000-ஜிபி, TH-SPTF2000-GB Truheat ரீசார்ஜ் செய்யக்கூடிய Shiatsu தலையணை, ட்ரூஹீட் ரிச்சார்ஜபிள் ஷியாட்சு தலையணைகருத்துரை ஹோமெடிக்ஸ் TH-SPTF2000-GB Truheat Rechargeable Shiatsu தலையணை அறிவுறுத்தல் கையேட்டில் HOMEDICS UHE-WM130 Total Comfort Deluxe Ultrasonic Humidifier சூடான மற்றும் குளிர்ந்த மூடுபனி வழிமுறைகள் HOMEDICS UHE-WM130 Total Comfort Deluxe Ultrasonic Humidifier வார்ம் மற்றும் கூல் மூடுபனி முக்கிய பாதுகாப்பு வழிமுறைகள் மின்சார பொருட்களை பயன்படுத்தும் போது, ​​அடிப்படை பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகள் எப்பொழுதும் பின்பற்ற வேண்டும், பின்பற்ற வேண்டும். ஆபத்து - மின்சார அதிர்ச்சியின் அபாயத்தைக் குறைக்க: எப்போதும் உறுதியான, தட்டையான மேற்பரப்பில் ஈரப்பதமூட்டியை வைக்கவும். ஒரு நீர்ப்புகா பாய் அல்லது திண்டு ... வாசிப்பு தொடர்ந்து "ஹோம்டிக்ஸ் UHE-WM130 மொத்த ஆறுதல் டீலக்ஸ் மீயொலி ஈரப்பதமூட்டி சூடான மற்றும் குளிர் மூடுபனி வழிமுறைகள்" ஜனவரி 26, 2022 ஜனவரி 26, 2022 அனுப்புகஹோமடிக்ஸ்Tags: ஹோமடிக்ஸ், மொத்த ஆறுதல் டீலக்ஸ் மீயொலி ஈரப்பதமூட்டி சூடான மற்றும் குளிர் மூடுபனி, UHE-WM130கருத்துரை இல் HOMEDICS UHE-WM130 Total Comfort Deluxe Ultrasonic Humidifier சூடான மற்றும் குளிர்ந்த மூடுபனி வழிமுறைகள் ஹோமெடிக்ஸ் ST-DRIFT செயலற்ற ஆரோக்கிய ட்ரிஃப்ட் பயனர் கையேட்டை மறுவரையறை செய்கிறது ஹோமெடிக்ஸ் ST-DRIFT ஆனது பாஸிவ் வெல்னஸ் ட்ரிஃப்ட்டை மறுவரையறை செய்கிறது, மின்சாரத் தயாரிப்புகளைப் பயன்படுத்தும் போது, ​​குறிப்பாக குழந்தைகள் இருக்கும் போது, ​​அடிப்படை பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகள், பின்பற்ற வேண்டிய தேவைகள். ஆபத்து - மின்சார அதிர்ச்சியின் அபாயத்தைக் குறைக்க: எப்பொழுதும் பயன்படுத்திய பிறகும் அதற்கு முன்பும் உடனடியாக மின் நிலையத்திலிருந்து சாதனத்தை துண்டிக்கவும். வாசிப்பு தொடர்ந்து "ஹோமெடிக்ஸ் ST-DRIFT செயலற்ற ஆரோக்கிய ட்ரிஃப்ட் பயனர் கையேடு மறுவரையறை செய்கிறது" ஜனவரி 21, 2022 ஜனவரி 21, 2022 அனுப்புகஹோமடிக்ஸ்Tags: ஹோமடிக்ஸ், Passive Wellness Drift ஐ மறுவரையறை செய்கிறது, ST-DRIFT, ST400, TG3-ST400, TG3ST400கருத்துரை இல் ஹோமெடிக்ஸ் ST-DRIFT செயலற்ற ஆரோக்கிய ட்ரிஃப்ட் பயனர் கையேட்டை மறுவரையறை செய்கிறது HoMEDiCS ST300 டிரிஃப்ட் சாண்ட்ஸ்கேப் அறிவுறுத்தல் கையேடு சாண்ட்ஸ்கேப் அறிவுறுத்தல் கையேடு மற்றும் உத்தரவாதத் தகவல் 1 ஆண்டு வரையறுக்கப்பட்ட உத்தரவாதம் தயவுசெய்து சிறிது நேரம் ஒதுக்கி இப்போது உங்கள் தயாரிப்பைப் பதிவு செய்யவும்: www.homedics.com/register இந்தத் தயாரிப்பு குறித்த உங்கள் மதிப்புமிக்க உள்ளீடு எதிர்கால தயாரிப்புகளை உருவாக்க எங்களுக்கு உதவும். IB-SANDTable L-02337, REV 1 மின்சாரப் பொருட்களைப் பயன்படுத்தும் போது முக்கியமான பாதுகாப்பு வழிமுறைகள், குறிப்பாக குழந்தைகள் இருக்கும் போது, ​​அடிப்படை பாதுகாப்பு ... வாசிப்பு தொடர்ந்து "HoMEDiCS ST300 டிரிஃப்ட் சாண்ட்ஸ்கேப் அறிவுறுத்தல் கையேடு" ஜனவரி 18, 2022 ஜனவரி 20, 2022 அனுப்புகஹோமடிக்ஸ்Tags: டிரிஃப்ட் சாண்ட்ஸ்கேப், ஹோமடிக்ஸ், ST300, ST300 டிரிஃப்ட் சாண்ட்ஸ்கேப், TG3-ST300, TG3ST300கருத்துரை HoMEDiCS ST300 டிரிஃப்ட் சாண்ட்ஸ்கேப் அறிவுறுத்தல் கையேட்டில் ஹோமெடிக்ஸ் SP-180J கம்பியில்லா இரட்டை-பேரல் உடல் மசாஜர் அறிவுறுத்தல் கையேடு பயன்படுத்தும் முன்னர் படிக்கலாம் வழிமுறைகள்: HoMedics எஸ்பி 180J கம்பியில்லா இரட்டை குழல் உடல் Massager வழிமுறை கையேடு முக்கிய பாதுகாப்பு வழிமுறைகள், மின்சார பொருட்களை பயன்படுத்தும் போது குழந்தைகள் இருக்கிறோமா குறிப்பாக, பேசிக் பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகள் எப்போதும், பின்வருவன உள்ளிட்ட வைக்கலாம். ஆபத்து - மின்சார அதிர்ச்சியின் அபாயத்தைக் குறைக்க: எப்பொழுதும் இந்தச் சாதனத்தைப் பயன்படுத்தியவுடன் உடனடியாக மின் நிலையத்திலிருந்து துண்டிக்கவும். வாசிப்பு தொடர்ந்து "ஹோமெடிக்ஸ் SP-180J கம்பியில்லா இரட்டை-பேரல் உடல் மசாஜர் வழிமுறை கையேடு" டிசம்பர் 29, 2021 டிசம்பர் 29, 2021 அனுப்புகஹோமடிக்ஸ்Tags: கம்பியில்லா டபுள்-பேரல் பாடி மசாஜர், ஹோமடிக்ஸ், SP-180Jகருத்துரை ஹோமெடிக்ஸ் SP-180J கார்ட்லெஸ் டபுள்-பேரல் பாடி மசாஜர் அறிவுறுத்தல் கையேட்டில் HOMEDICS தொடர்பு இல்லாத அகச்சிவப்பு உடல் வெப்பமானி அறிவுறுத்தல் கையேடு தொடர்பு இல்லாத அகச்சிவப்பு உடல் வெப்பமானி அறிவுறுத்தல் கையேடு HTD8816C TE-350-EU 2 ஆண்டு உத்தரவாத முன்னுரை தொடர்பு இல்லாத அகச்சிவப்பு உடல் தெர்மோமீட்டர் இயக்க வழிமுறைகள் தெர்மோமீட்டர் மாதிரியின் சரியான செயல்பாட்டிற்கு தேவையான தகவலை வழங்க விரும்புகின்றன. உடல் பயன்முறை மட்டும் மீண்டும் இருந்ததுviewed மற்றும் அறிவிக்கப்பட்ட அமைப்பால் சான்றளிக்கப்பட்டது. அகச்சிவப்பு வெப்பமானியின் பொது அறிவு மற்றும் அம்சங்கள் மற்றும் செயல்பாடுகள் பற்றிய புரிதல் ... வாசிப்பு தொடர்ந்து “ஹோம்டிக்ஸ் அல்லாத தொடர்பு அகச்சிவப்பு உடல் வெப்பமானி அறிவுறுத்தல் கையேடு” டிசம்பர் 11, 2021 டிசம்பர் 12, 2021 அனுப்புகஹோமடிக்ஸ்Tags: ஹோமடிக்ஸ், HTD8816C, தொடர்பு இல்லாத அகச்சிவப்பு உடல் வெப்பமானி, TE-350-EUகருத்துரை இல் HOMEDICS அல்லாத தொடர்பு அகச்சிவப்பு உடல் வெப்பமானி அறிவுறுத்தல் கையேடு
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 474 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று ஒன்றிய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்திய சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 474 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் இதன் மூலம் இந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,46,67,398 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் ஒருவர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,30,533 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து 800 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன்மூலம் இதுவரை 4,41,27,724 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 7,918 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 1,40,417 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டதாகவும், இதுவரை மொத்தம் 90,27,08,453 கொரோனா மாதிரிகள் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளதாகவும் என ஒன்றிய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதுவரை 219.81 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக ஒன்றிய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தின் (யூஏஇ) மீது ஹவுதி படையினர் நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாக, ஏமனில் சவுதி அரேபியா தலைமையிலான படைகள் வான்வழித் தாக்குதல்களை நடத்தியிருக்கின்றன. இந்நிலையில் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு வலு சேர்க்கும் வகையில் ஏவுகணை அழிப்பு சாதனம் கொண்ட போர்க்கப்பலையும், ஐந்தாவது தலைமுறை போர் விமானங்களையும் அனுப்புவதாக அமெரிக்கா கூறியிருக்கிறது. இதுதொடர்பாக, நேற்று அபுதாபி பட்டத்து இளவரசர் அபு பின் ஜாயித் அல் நஹ்யானிடம் தொலைபேசியில் பேசிய அமெரிக்கப் பாதுகாப்புத் துறை அமைச்சர் லாய்டு ஆஸ்டின், ஐக்கிய அரபு அமீரகத்தின் கடற்படைக்குத் துணையாக யூஎஸ்எஸ் கோல் ( USS Cole) போர்க் கப்பல் அனுப்பப்படும் என உறுதியளித்திருக்கிறார். இந்தப் போர்க் கப்பல் ஏவுகணைகளை வழிமறித்துத் தாக்கி அழிக்கும் திறன் கொண்ட சாதனங்களைக் கொண்டது. கூடுதலாக, எஃப்-22 ராப்டர் மற்றும் எஃப்-53 லைட்டிங் 2 வகை போர் விமானங்களை அனுப்பி ஹவுதிகள் மீதான தாக்குதலில் ஐக்கிய அரபு அமீரகத்துக்குக் கைகொடுக்கிறது அமெரிக்கா. இதன் மூலம், நீண்டகால நட்பு நாடான ஐக்கிய அரபு அமீரகத்துக்கு அமெரிக்கா துணை நிற்கிறது என லாய்டு ஆஸ்டின் கூறியிருக்கிறார். குறிப்பாக, ஜனவரி 31-ல் ஹவுதி படையினர் ஐக்கிய அரபு அமீரகம் மீது மூன்றாவது முறையாக ஏவுகணை தாக்குதல் நடத்திய நிலையில், இந்த அறிவிப்பை அமெரிக்கா வெளியிட்டிருக்கிறது. இந்த முறை ஹவுதிக்களின் ஏவுகணைகளை, அமெரிக்கத் தயாரிப்பான பேட்ரியாட் ஏவுகணைத் தடுப்பு சாதனத்தைக் கொண்டு இடைமறித்து அழித்திருக்கின்றன ஐக்கிய அரபு அமீரகப் படைகள். ஐக்கிய அரபு அமீரகத்துக்கும் ஏமனுக்கும் இடையில் நேரடியான நில எல்லைகள் இல்லை. சவுதி அரேபியாதான் ஏமனின் அண்டை நாடு. எனவே, சவுதி அரேபியா மீதுதான் ஹவுதிக்கள் பல முறை ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்திவந்தனர். இந்த சூழலில், ஜனவரி 17-ல் ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபியில் உள்ள மூன்று பெட்ரோல் டேங்கர்கள் மீது ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் ஹவுதிக்கள் நடத்திய தாக்குதலில் இரண்டு இந்தியர்கள், ஒரு பாகிஸ்தானியர் என மூவர் உயிரிழந்தனர். 6 பேர் காயமடைந்தனர். அபுதாபி விமான நிலையத்தின் கட்டுமானப் பகுதி மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. இதையடுத்து, ஹவுதி கிளர்ச்சி அமைப்பினருக்கு பதிலடி கொடுக்கப்போவதாக ஐக்கிய அரபு அமீரகம் அறிவித்தது. அபுதாபி தாக்குதல் நடந்த மறுநாளே சவுதி அரேபியா தலைமையிலான படையினர் ஏமன் தலைநகர் சனாவில் நடத்திய வான்வழித் தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டனர். எனினும், இந்தத் தாக்குதலில் 20-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டிருப்பதாக ஹவுதி படையினர் கூறினர். இதன் தொடர்ச்சியாக ஏமனின் இரு நகரங்கள் மீது சவுதி படைகள் ஜனவரி 21-ல் நடத்திய தாக்குதலில், குழந்தைகள் உட்பட நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். தற்போது அமெரிக்காவின் அதிநவீனப் போர் விமானங்களும், போர்க் கப்பலும் ஐக்கிய அரபு அமீரகத்துக்குச் செல்லவிருப்பதால், ஏமன் மீதான தாக்குதல்கள் அதிகரிக்கும் எனக் கருதப்படுகிறது.
கேரள மாநிலம் ஆம்பூரி கர்த்தனக்கல் பகுதியைச் சேர்ந்தவர் சோனு ஜோசப் (20). ஹோட்டல் மேனேஜ்மெண்ட் படித்துள்ள இவர், சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள அபு பேலஸ் ரெஸ்டாரண்டில் கடந்த 3 மாதங்களாக பணிபுரிந்து வருகிறார். வழக்கம்போல் நேற்று முன்தினம் இரவு இவர் பணி முடித்துவிட்டு அபு பேலஸ் ரெஸ்டாரன்ட் பின்புறம் உள்ள விடுதிக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது சுமார் 25 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் அப்பெண்ணை வழிமறித்து தகராறில் ஈடுபட்டுள்ளார். பின் கோபத்தில் தான் வைத்திருந்த மதுபான பாட்டிலால் அந்த பெண்ணின் முகத்தில் அடித்துள்ளார். இதனால் சோனு சாலையில் மயக்கம் போட்டு கீழே விழுந்துள்ளார்.பின்பு அந்த இளைஞர் மதுபான பாட்டிலை உடைத்து முகத்தில் பலமாக தாக்கியுள்ளார். மேலும், கைகளால் அந்தப் பெண்ணின் வயிறு மற்றும் கழுத்தில் ஓங்கி குத்தியுள்ளார். இதைக் கண்டு அருகில் இருந்த பொதுமக்கள் கூச்சலிட்டு ஓடி வர அந்த இளைஞர் அங்கிருந்து தப்பி ஓடினார். ரத்த வெள்ளத்தில் துடித்த அந்த இளம் பெண்ணை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு முகத்தில் 25 தையல்கள் போடப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றன. இதுகுறித்து கீழ்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்த நிலையில் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார் இளம்பெண்ணை கொலை செய்யும் நோக்கோடு மதுபான பாட்டிலால் அடித்து காயப்படுத்திய நவீன் என்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் 6 மாதத்திற்கு முன்பாக சோனு ஜோசப் உடன் ஃபேஸ்புக்கில் நட்புக் கோரிக்கை கொடுத்து பின் பேசி வந்துள்ளார் என்பதும், தான் கப்பல் படையில் வேலை செய்வதாக கூறி இருவரும் நண்பர்களாக பழகி வந்துள்ளனர். இந்நிலையில் சோனு கீழ்ப்பாக்கம் பகுதியில் உள்ள அபு பேலஸ் ஹோட்டலில் வேலைக்கு சேர்ந்திருப்பதை தெரிந்த நவீன், சோனுவிடம் தான் உன்னை காதலிப்பதாக கூறி தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதனால், நவீனை சந்திப்பதை சோனு தவிர்த்து வந்துள்ளார். இந்த நிலையில் தொலைபேசி மூலமாக சோனு ஜோசப்புக்கு, நவீன் தொல்லை மற்றும் கொலை மிரட்டல் கொடுத்து வந்துள்ளார் என போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது. தன்னை முற்றிலுமாக தவிர்த்து வந்த சோனு ஜோசப்பை கொலை செய்யும் நோக்கோடு கடந்த 14-ம் தேதி மாலை சோனு ஜோசப்புக்காக நவீன் அபு பேலஸ் வாயிலில் காத்திருந்துள்ளார். பணி முடித்துவிட்டு வெளியே வந்த சோனுவிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு தகராறு ஈடுபட்டுள்ளார். சோனு முடியாது எனக் கூறியதால் ஆத்திரமடைந்த நவீன் மதுபாட்டிலை உடைத்து சோனுவின் முகத்தை குத்தி காயப்படுத்தியதும் பின்பு அவரை கொலை செய்யும் நோக்கோடு தாக்குதல் நடத்தியதும் தெரியவந்தது. இதனையடுத்து கைது செய்யப்பட்ட நவீனிடம் போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஒரு நாட்டில் தொல்லியல் சான்றுகள் கண்டறியப்படும் போது அவை தொடர்பாக முனைப்புடன் ஆய்வுகள் மேற்கொள்ளப்படுவதும், அந்த ஆய்வுகளில் அந்த நாடுகளின் அரசாங்கங்கள் மிகுந்த ஆர்வம் காட்டுவதும் இயல்பான ஒன்று. ஆனால் இலங்கை போன்ற நாடுகள் இதற்கு விதிவிலக்கு. இலங்கையின் தமிழர் தாயகப்பகுதிகளில் அவ்வப்போது நிகழும் அகழ்வாராய்ச்சிகளும், அவ்வப்போது இயல்பாக வெளிப்படும் தொன்மங்களும், பாதியில் நின்று போன அல்லது நிறுத்தப்பட்ட ஆய்வுகளும், ஆய்வு முடிந்து தசாப்தங்களைக் கடந்தும் ஆய்வறிக்கைகள் வெளியிடப்படாத நிலைமைகளும், பாதுகாக்கப்பட வேண்டிய தொல்பொருள் சான்றுகள் பராமரிப்பின்றி அழிந்து போவதும் இயல்பாகிப் போன விடயங்கள். இவ்வாறான சூழலில் இலங்கையின் தமிழர் தாயகப் பகுதிகளில் இனங்காணப்பட்ட சில தொன்மங்களையும், தொடர் ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட வேண்டியதும் பாதுகாக்கப்பட வேண்டிய தேவையுள்ளதுமான சில பிரதேசங்களையும் இக்கட்டுரை பட்டியலிடுகிறது. 1. இரணைமடு - இலங்கையின் வடமாகாணத்தில் உள்ள மிகப்பெரிய நீர்த்தேக்கம் என்ற பெருமையையும், தமிழர்தாயகப்பகுதியில் பெரும்பான்மை விவசாயநிலங்களுக்கு நீர்வழங்கும் நீராதாரமாகவும் விளங்கும் இரணைமடுக்குளமும் அதனைச் சூழ்ந்துள்ள பகுதிகளும் தொல்லியல் ரீதியாகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. 19ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இரணைமடு, மாங்குளம், முருங்கன், முதலான பல்வேறு இடங்களில் தொல்லியல் ஆய்வில் ஈடுபட்ட அறிஞர்கள் சரசின், செலிக்மன், வேலண்ட, போல், பர்சனர்காட்லே முதலானோர் இங்கெல்லாம் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே கற்கால மக்கள் வாழ்ந்துள்ளனர் என்ற கருத்தை முன்வைத்துள்ளனர். நீண்டகாலமாக இக்கருத்துக்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படாத நிலையில் 1970 களின் பின்னர் இலங்கைத் தொல்லியல் திணைக்களத்தின் முதன்மை தொல்லியலாளர்களில் ஒருவரான கலாநிதி சிரான் தெரணியகல இப்பிரதேசத்தில் ஆய்வுகளை மேற்கொண்டு வெளிப்படுத்திய தகவல்கள் இக்கருத்துக்களுக்குப் புதுவெளிச்சத்தை ஏற்படுத்தியது எனக் கூறலாம். அவர் இங்கு மேற்கொண்ட ஆய்வுகளின் போது கிடைத்த ஆதாரங்களில் இருந்து இற்றைக்கு 1,25,000 ஆண்டுகளுக்கு முன்னரே இப்பிராந்தியத்தில் கற்கால மக்கள் (மேலைப் பழங்கற்கால மக்கள்- Upper Paleolithic People) வாழ்ந்துள்ளனர் என்று அறிவித்தார். நாடோடிகளாக மிருகங்களை வேட்டையாடியும், இயற்கையாகக் கிடைத்த பழங்களையும், கிழங்கு வகைகளையும், காய்கனிகளையும் உண்டு ஆதிமனிதர்கள் இப்பிரதேசங்களில் வாழ்ந்திருக்கின்றனர் என்பதை இங்கு கிடைத்த கல்லாயுதங்கள் மூலம் அவர் நிறுவிக்காட்டினார். விரிவான ஆய்வுகள் நிகழ்த்தப்படாத நிலையிலும், இரணைமடுக் குளத்திற்கு கிழக்காக உள்ள மேட்டு நிலப்பகுதியில் இருந்து ஆதிமனிதர்கள் வாழ்ந்ததை உறுதிசெய்யும் தாழிகளின் உடைந்த பாகங்கள், கறுப்புச்சிவப்பு நிற மட்பாண்ட ஓடுகள், கழிவிரும்புகள், கல்மணிகள், சுடுமண் உருவங்கள் என்பன கிடைத்திருக்கின்றன. 2. குஞ்சுப்பரந்தன் - கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள குஞ்சுப்பரந்தன் பிரதேசத்தில் உள்ள காணி ஒன்று 1990 அளவில் பயிர்ச் செய்கைக்காகத் திருத்தப்பட்ட போது பெருங்கற்கால ஈமத்தாழி ஒன்று மீட்கப்பட்டது. இதுபற்றிய செய்தி அப்போதைய உதவி அரசாங்க அதிபராக இருந்த கலாநிதி.க.குணராசா (செங்கைஆழியான் ) அவர்களுக்குத் தெரியப்படுத்தப்பட்ட போது அவர் நேரில் சென்று அவற்றைப் பார்வையிட்டதுடன் அத்தாழிகள் பற்றிய விரிவான கட்டுரை ஒன்றையும் எழுதியிருந்தார். வடஇலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட முதலாவது முழுமையான பெருங்கற்கால ஈமத்தாழி என்ற வகையில் இதற்குத் தனிமுக்கியத்துவம் உண்டு. நான்கடி உயரமும், எட்டடி சுற்று வட்டமும் கொண்ட இத்தாழியின் விளிம்பு ஓரங்குலத் தடிப்புடையது. தாழியின் வெளிப்புறத்தில் சில அலங்காரக் கோடுகள் காணப்படுகின்றன. தாழிக்குள் மனித எலும்புக்கூட்டின் சிலபாகங்களும், சாம்பல் போன்ற கரிய பொருள், இருமட்கலங்கள் என்பன காணப்பட்டன. இப்பொருட்கள் தற்போது யாழ்ப்பாணத்தில் உள்ள அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. 3. கந்தரோடை- இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தின் வலிகாமம் பிரிவில், உடுவில் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட ஊர் கந்தரோடை. இங்குள்ள, சுமார் 3.2 சதுரகிலோமீற்றர் பிரதேசத்தை உள்ளடக்கிய பகுதியில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வுகளில் தொன்மையான கறுப்புச் சிவப்பு மட்பாண்டங்கள், நாணயங்கள், எலும்புகள், கட்டட அழிபாடுகள், சிற்பங்கள் , சிலைகள், தமிழ்பிராமிப் பொறிப்புகள், மணி வகைகள், ஆபரணங்கள் முதலானவை கிடைக்கப்பெற்றன. இந்தியாவின் அரிக்கமேடு, ஆதிச்சநல்லூர் போன்ற இடங்களில் கண்டறியப்பட்ட தொன்மங்களோடு இவை அதிகம் ஒத்திருக்கின்றன. 1917 இல் போல்பீரிஸ் என்பவரால் மேற்கொள்ளப்பட்ட மேலாய்வுகளில் அதிகமான புராதன தொன்மங்கள் நிறைந்த பகுதியாக கந்தரோடை இனங்காணப்பட்டதோடு அனுராதபுரத்திற்கு அடுத்த புராதன குடியிருப்பு மையமாகவும் இது அடையாளபபடுத்தப்பட்டிருக்கிறது. வட இலங்கையைப் பொறுத்தவரை தொடர்ச்சியான நீண்ட அகழ்வாய்வுகளுக்கு உட்பட்ட இடமாகவும் கந்தரோடை விளங்கி வருகிறது. இரும்புக்கால, பெருங்கற்கால சின்னங்கள் 1970 இல் விமலாபேக்லே எனும் ஆய்வாளரால் இங்கு மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் கிடைத்திருக்கின்றன. கந்தரோடையில் கிடைத்த சான்றுகளை காலக்கணிப்பிற்கு உட்படுத்தியதில் கி.மு 700க்கு முன்னர் மக்கள் குடியிருப்புப் பகுதியாக விளங்கிய பகுதி இதுவென்பதும் கண்டெடுக்கப்பட்ட தொன்மங்கள் ஆதி இரும்புக்கால பண்பாட்டு சின்னங்களை பிரதிபலிப்பதும் வெளிப்படுத்தப்பட்டன. இங்கு வாழ்ந்தவர்கள் தமிழகத்தோடு நெருங்கிய ஒற்றுமை கொண்டவர்கள் என்பதை உறுதிப்படுத்தும் பல்வேறு எடுகோள்களை ஆய்வாளர் விமலாபேக்லே முன்வைத்துள்ளார். இத்தகைய குடியிருப்பு கந்தரோடை மாதோட்டம் பொம்பரிப்பு வரை பரந்திருந்ததாக பிற்காலத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் உறுதிசெய்கின்றன. இங்கு கிடைத்த தொல்லியல் சான்றுகள் மூலம், இங்கு வாழ்ந்தவர்கள் தென்னிந்திய, வடஇந்திய, உரோம , சீன உறவுகளை பேணியிருப்பது வெளிப்படுத்தப்பட்டுள்ளதனூடாக கந்தரோடை ஒரு நகர நாகரீகமாக இருந்திருக்க வேண்டும் என்ற கருத்துக்கள் முன் வைக்கப்படுகின்றன. இலங்கையில் பெளத்த மதம் பரவிய காலத்தில் அதன்தாக்கம் இப்பகுதியில் இருந்துள்ளதை கந்தரோடை ஸ்தூபியும் அதனைச் சுற்றி அமைந்த பலஸ் தூபிகள் போன்ற அமைப்புகளும் வெளிப்படுத்தி நிற்கின்றன. தமிழகத்தில் கி.பி 7 ஆம் நூற்றாண்டில் தமிழ்பௌத்தம் மேலோங்கி காணப்பட்ட காலத்தில் இவை அமைக்கப்பட்டிருக்க வேண்டுமென்பதுஆராய்ச்சியாளர்களின் கருத்து. கந்தரோடை, பாண்டியர், சோழர், பொலநறுவை, யாழ்ப்பாணம் ஆகிய அண்டை அரசுகளோடும், சீனா அரசுடனும் நெருங்கிய தொடர்பு கொண்டதாக இருந்திருக்க வேண்டும் என்பது அனுமானம். 2011 இல் தொல்லியல் திணைக்களமும் யாழ்பல்கலைக்கழக வரலாற்றுத் துறையினரும் மேற்கொண்ட அகழ்வாராய்ச்சியில் 54 கலாச்சார மண்படை அடுக்குகள் இங்கு கண்டு பிடிக்கப்பட்டன. இத்தகைய நீண்ட தொடர்ச்சியான சான்றுகள் இலங்கையில் வேறு எந்த இடத்திலும் கண்டுபிடிக்கப்படவில்லை என்கிறார் யாழ் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத்துறைத் தலைவர் முனைவர் ப.புஷ்பரட்ணம். அகழ்வாய்வுக் கிடங்கின் 30 ஆம் 31 ஆம் மண்படைகள் பெருங்கற்காலத்திற்கு முற்பட்டவையாக இருப்பதால் கந்தரோடை, குறுணிக்கற்காலப் பண்பாட்டில் இருந்து வளர்ச்சி பெற்று பெருங்கற்காலத்தில் பௌத்தத்துடன் இணைந்து நிலையான வணிக சமய பண்பாட்டுடன் முக்கியம் பெற்று நகரமயமாக்கப்பட்டிருக்க வேண்டும் என்பது யாழ்ப்பாண பல்கலைக்கழக வரலாற்றுத்துறை விரிவுரையாளர் S.கிருஷ்ணராஜின் நம்பிக்கை. காலகணிப்பீட்டின் அடிப்படையில் இது ஆதி இரும்புக்கால வழி வந்த பாரம்பரியத்தைக் கொண்டது என்பது உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. கந்தரோடையில் வாழுகின்ற தமிழ்மக்களின் பாரம்பரியம் கந்தரோடையின் தொடக்க காலப்பாரம்பரியமாக காணப்படுகிறது. பலநாட்டு வணிகர்கள் சந்திக்கும் மையமாக இருந்ததால் பிறநாட்டவரது பண்பாடுகளும் இங்கு உள்வாங்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக சீன பயணிகள் இங்கு தங்கி இருந்ததற்கான சான்றுகள் வெளிப்பட்டிருக்கின்றன. 2011ம்ஆண்டு, இலங்கைத் தொல்லியல் திணைக்களத்தால் இப்பகுதியில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் இந்த ஆய்வின் அறிக்கை இன்று வரை வெளியிடப்படவில்லை.1970 விமலாபேக்லி என்கிற ஆய்வாளரின் தலைமையில் மேற்கொண்ட ஆய்வில், ஆதி இரும்புக்கால பண்பாட்டு சின்னங்கள் கண்டறியப்பட்டன. இந்த ஆய்வில் தொல்லியல் திணைக்கள பணிப்பாளர் கலாநிதி.சிரான் தெரணியகல இலங்கை தொல்லியல் திணைக்களப் பிரதிப் பணிப்பாளார் நிமல்பெரேரா,பேராசிரியர் புஸ்பரட்ணம் போன்றோரும் பங்கெடுத்திருந்தனர். இந்த ஆய்வில் வெளிப்பட்ட தொன்மங்களைக் காலக்கணிப்பீட்டுக்கு உட்படுத்தியதில் அவை 2700 ஆண்டுகளுக்கு முற்பட்டவை என்பதுஅறிவியல் ரீதியாக நிறுவப்பட்டது. 4. ஆனைக்கோட்டை - இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண நகருக்கு வடமேற்கே ஆறுமைல் தொலைவில் நாவாந்துறை கடற்பகுதிக்கு அண்மையில் அமைந்துள்ளது ஆனைக்கோட்டை. இங்கு 1980 ஆம் ஆண்டு கார்த்திகை மாதம் மேற்கொள்ளப்பட்ட மேலாய்வொன்றில், பெருங்கற்பண்பாட்டுத் தடயங்கள் பல கண்டுபிடிக்கப்பட்டன. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சார்பில் தொடர்ந்து நிகழ்ந்த அகழ்வாய்வில் பெருங்கற்பண்பாட்டு ஈம அடக்கங்கள் யாழ்ப்பாணத்தில் முதன் முறையாக வெளிக் கொண்டு வரபட்டன. ஆய்வுக்குழியில் இருஎலும்புக்கூட்டு அடக்கங்கள் மேற்குக்கிழக்காக நீட்டிப்படுத்தவாக்கில் காணப்பட்டன. இவற்றைச் சுற்றி ஈமப்படையல்கள் பெருங்கற்காலத்திற்குரிய மட்பாண்டங்களில் இடப்பட்டிருந்தன. இரும்புக்கருவிகள், இரும்பு அகல் விளக்கு, சங்குகள், மணிவகைகள், கடல் உணவு எச்சங்கள், மாமிச உணவு எச்சங்கள், சுடு மண்ணாலான வட்டமான தாயம் போன்றதொரு விளையாட்டுக் கருவி ஆகிய பல்வேறு வகைப் பொருட்கள் ஈமப்படையல்களில் இடம்பெற்றிருந்தன. எலும்புக்கூடொன்றின் தலைமாட்டில் வைக்கப்பட்டிருந்த கறுப்புச்சிவப்பு வட்டில் ஒன்றில் பித்தளையாலான முத்திரையொன்று கிடைத்தது. இது முத்திரை மோதிரமொன்றின் பாகமாகலாம். இதில் இரு வகையான எழுத்துக்கள் இருக்கின்றன. முதலாவது வரியில் பெருங்கற்கால மட்பாண்டங்களில் வழமையாகக் காணப்படும் குறியீட்டெழுத்துக்களும் இரண்டாவது வரியில் கி.மு. 3 முதல் கி.மு 2 ஆம் நூற்றாண்டுக்குரிய பிராமி எழுத்துக்களும் காணப்படுகின்றன. இவ்விரு வகை எழுத்துக்களாலும் குறிக்கப்பட்டுள்ளது ஒரு பொருளேயென்று கொண்டால் இரண்டாவது வரியிலுள்ள பிராமி எழுத்துக்களைப் படிப்பதன் மூலம் முதலாம் வரியிலுள்ள படிக்க முடியாததாகிய பெருங்கற்காலக் குறியீட்டு எழுத்துக்களுக்கு விளக்கம் கொடுக்கலாம். இந்த அடிப்படையில் பேராசிரியர் கா.இந்திரபாலா இதன் பிராமிப் பகுதியை 'கோவேதன்' அல்லது 'கோவேந்த' எனப் படித்து இதன் மூலம் குறியீட்டு எழுத்துப் பகுதிக்கு விளக்கங் கொடுத்துள்ளார். இவ்வாசகங்களின் மொழி ஆதித்தமிழ் அல்லது ஆதிமலையாளம் என்பது இவர் கருத்தாகும். இம்முத்திரைகளின் தொல்லெழுத்தியலை அடிப்படையாகக் கொண்டு ஆனைக்கோட்டைப் பெருங்கற்பண்பாட்டின் காலம் கி.மு. 3-2 ஆம் நூற்றாண்டென நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 5. வாவெட்டிமலை - 1800 ஆம் ஆண்டுக்குரிய இலங்கையின் இறுதி மன்னர்கள் என்ற புகழுக்குரிய வன்னிய மன்னர்களில் ஏராளமான வரலாற்றுச்சின்னங்கள் முல்லைத்தீவு மாவட்டமெங்கும் விரவிக் கிடக்கின்றன. அவ்வகையில் இந்த வாவெட்டி மலைக்கும் முக்கியமானதொரு இடமுண்டு. ஒட்டுசுட்டான் தான்தோன்றியீஸ்வரர் ஆலயம் எனும் சைவர்களின் புராதன கோவிலையும் அதனோடிணைந்த வாவெட்டி மலைப் பகுதிகளிலும் பல்வேறு தொல்லியல் சான்றுகள் இருப்பதாக அவ்வப்போது பலரும் எழுதி வந்திருக்கும் பொழுதும் முறைப்படுத்தப்பட்ட எந்த அகழ்வாராய்ச்சியும் இப்பகுதிகளில் நடைபெறவில்லை. சமகாலத்தில் இலங்கைத் தொல்லியல்த் திணைக்களத்தின்ஆளுகைக்குட்பட்ட பகுதியாக இது அறிவிக்கப்பட்டுள்ள போதும், சட்டவிரோத கல்அகழ்தல் மற்றும் மலையழிப்பும் நடைபெற்று வருவதாக இப்பிரதேச மக்கள் தெரிவிகின்றனர். 6. சங்கமன் - இலங்கையின் கிழக்கு மாகாணம்- அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ளது சங்கமன். கண்டி பிரதேசத்தின் பிரதான வீதியிலிருந்து மேற்குப் புறமாக சுமார் மூன்று கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ள இப்பகுதியில் ஏராளமான புராதன சின்னங்கள் காணப்படுகின்றன. அவற்றில் சில சின்னங்கள் கிறிஸ்துவுக்கு முன்னர் இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என்றும், சில சின்னங்கள் கிறிஸ்துவுக்குப்பின்னர் எட்டாம் நூற்றாண்டை சேர்ந்தவை என்றும் வரலாற்றுத்துறைப் பேராசிரியரான எஸ்.பத்தமநாதன் உறுதிப்படக் கூறுகிறார். மலைகளிலும் மலைகள் அருகேயும் காணப்படும் இந்தப்புராதனச் சின்னங்கள், இலங்கையின் தொல்பொருள் திணைக்களத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ள போதிலும், அவற்றினைப் பாதுகாப்பதற்கான போதிய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படவில்லை என அந்தப் பிரதேச மக்கள் கூறுகின்றனர். இப்பகுதியில் அடிக்கடி சட்டவிரோதமாக புதையல் தோண்டும் நடவடிக்கைகள் இடம் பெறுகின்றமையினால், அங்கு காணப்படும் பெறுமதி மிக்க புராதன சின்னங்கள் சேதமடைந்தும், அழிவடைந்தும் செல்வதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். கல்வெட்டுக்கள், நடுகற்கள், கல்லறைகள், பாறைத்தூண்கள், மலைகளில்குடையப்பட்ட நேர்த்தியான குழிகள் நீர்த்தொட்டிகள் என்றுஏராளமான ஆய்வுக்குரிய, பாதுகாக்கப்பட வேண்டிய வரலாற்று எச்சங்களைத் தாங்கி நிற்கிறது சங்கமன். பேராசிரியர் பத்மநாதனின் கருத்துப்படி, இங்குள்ள நடுகற்கள் ஆதி இரும்புக் காலம் என்று சொல்லப்படுகின்ற - பெருங்கல் பண்பாட்டுச் சின்னங்களில் ஒன்று என்பதை அறிய முடிகிறது. பெருங்கற்கால மக்கள் தான் 'நாகர்'கள் என அழைக்கப்படுவதாகவும் 'நடுகற்கள்' இங்கு காணப்படுகின்றமையினை வைத்து, கிறிஸ்துவுக்கு இரண்டு நூற்றாண்டுகளுக்கு முற்பட்ட காலத்தில், தமிழ்மொழியைப் பேசிய பெருங்கற்பண்பாட்டு மக்கள் இங்கு பரவியிருந்தார்கள் என்பதைத் திடமாக நிறுவமுடியும் என்கிறார் பேராசிரியர் பத்மநாதன். "ஈமத்தலங்களில் அமைக்கப்பட்ட நான்குக்கும் மேற்பட்ட கல்லறைகள் இப்பகுதியில் காணப்படுகின்றன. இவை நீள் சதுரமான வடிவுடையவையாகும். அந்தக் கல்லறையை நீளமான ஒரு கல்லினைக் கொண்டு மூடி விடுவார்கள். அதனை தொப்பிக்கல் (Dollmen) என்று சொல்வார்கள். இந்த 'தொப்பிக்கல்'கள் இங்கு காணப்படுவதை வைத்தும், கிறிஸ்துவுக்கு இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்னர் இங்கு தமிழ்மொழி பேசிய மக்கள் வாழ்ந்ததை உறுதிப்படுத்த முடியும்" என்பது பேராசிரியர் பத்தமநாதனின் வார்த்தைகள். 7. பூநகரி - இலங்கையில் யாழ்ப்பாணத்தையும் வவுனியாவையும் பிரிக்கும் யாழ்ப்பாண நீரேரியின் தென்கரையில் கிளிநொச்சி மாவட்டத்தில் அமைந்துள்ளது பூநகரி பிரதேசம். போர் மற்றும் பராமரிப்பின்றி சிதைந்துள்ள ஐரோப்பியர்கள் காலத்தில் அமைக்கப்பட்டகோட்டை ஒன்று இங்கே அமைந்திருக்கிறது. இந்தக்கோட்டை தவிர, அதற்கு முந்தைய நுண்கற்கால மனிதர்கள் வாழ்ந்ததற்கான தொன்மங்கள் சிலவும் அவ்வப்போது இப்பிரதேசத்தில் கண்டறியப்பட்டிருக்கின்றன. கிராஞ்சி உறைகிணறுகள், பிராமி எழுத்து வடிவத்தைக்கொண்ட சாசனங்கள் என இங்கு கண்டெடுக்கப்பட்ட சில சான்றுகள் யாழ்ப்பாண தொல் பொருள் நிலையத்தில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. மண்டக்கல் மற்றும் மண்ணியாற்றுப் பகுதியில் 1982,1993 காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தொல்லியல் ஆய்வில் பழங்கற்கால மக்கள் பயன்படுத்திய பலதரப்பட்ட கற்கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இங்குள்ள 'பூநகரி மண்ணித்தலை சிவன் ஆலயம்' வரலாற்றுத் தொன்மையான சோழர் காலத்துக்குரிய கோயில் ஆகும். முழுமையான திராவிடக் கலை மரபை பிரதிபலிக்கின்ற மிகப்பழைமையான இக்கோவிலின் சுவர் சோழர்கால கலைமரபை பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது. இக்கோவில் மடமானது ஆரம்பகால பல்லவ, சோழ, பாண்டிய காலங்களைப் பிரதிபலிக்கின்றன. மிகமுக்கிய அம்சமாக மூன்று அடுக்குகளைக் கொண்ட வகையில் இக்கோவிலின் விமானம் அமைந்திருக்கிறது. விமானத்தின் மூன்று தளங்களும் சதுரவடிவில் அமைக்கப்பட்டிருப்பதுடன் மேலே தூபிவைக்கும் பகுதியானது வட்ட வடிவமாக அமைக்கப்பட்டுள்ளது. ஏறத்தாழ 14 அடி நீளம் கொண்ட விமானமாக இது கருதப்படுகிறது. இந்தக் கோவிலின் எச்சங்கள் 2015 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 12 ஆம் திகதியன்று பாதுகாக்கப்பட்ட தொல்பொருள் நினைவுச் சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ள போதும் முறையான பராமரிப்பு வசதிகள் செய்யப்படாமல் விரைவில் சிதைந்து போகும் நிலையிலேயே இன்றும் இவை காணப்படுகின்றன. 8. கட்டுக்கரை - மன்னார் மாவட்டத்தில் மிக அண்மையில் கண்டறியப்பட்ட புராதன குடியிருப்பு மையமாகக் கட்டுக்கரை சிறப்புப் பெறுகிறது. மன்னார் கட்டுக்கரைக்குளம், குருவில் பகுதியில் 2016 இல் நிகழ்த்தப்பட்ட அகழ்வாராய்ச்சியொன்றில்,1400 வருடங்களுக்கு முன்னர், மக்கள் வசித்ததற்கான, அடையாளங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. யாழ் பல்கலைக்கழக வரலாற்றுத்துறைத் தலைவர்முனைவர் ப.புஷ்பரட்த்தின் தலைமையில் பல்கலைக்கழகத்தின் தொல்லியல் பிரிவு மாணவர்கள் இந்த அகழ்வாராச்சியை நிகழ்த்தினர். இதில், இரண்டு வகையான குடியிருப்புக்கள் இருந்தமைக்குரிய சான்றுகள் வெளிப்பட்டிருக்கின்றன.அவற்றிலொன்று கி.பி 4 ஆம் நூற்றாண்டுக்கு முன்னதானது என்பதை கிடைத்த சான்றுகளைக் கொண்டு இலகுவாக நிறுவிவிட முடியும் என்கின்றனர் ஆய்வுக்குழுவினர். மூன்று மீட்டர் நீள அகலம் கொண்ட மூன்று குழிகளை அகழ்ந்து இந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. மன்னார் மாவட்டத்தின் மேற்குக் கரையோரத்தில் உள்ள மாதோட்டம் துறைமுகத்தில் இருந்து அனுராதபுரத்தின் புராதன இராசதானிக்கு அமைக்கப்பட்டிருந்த வீதியோரத்தில் இந்தக் குடியிருப்புக்கள் அமைந்திருப்பதாக நம்பப்படுகின்றது. இப்பண்பாட்டு மக்களால் பயன்படுத்தப்பட்டவை எனக் கருதக்கூடிய கல்மணிகள், கல்லினால் வடிவமைக்கப்பட்ட காப்புகள், சங்கு வளையல்கள் என்பன இங்கிருந்து அதிகளவில் கிடைத்துள்ளன. இப்பொருள்களுடன் இவற்றை உற்பத்தி செய்யப் பயன்படுத்தப்பட்ட கற்கள், கண்ணாடிகள், சங்குகள், மட்பாண்ட அச்சுகள், இரும்புருக்கு உலைகள் என்பனவும் கிடைத்துள்ளதன் மூலம், இரும்புருக்கு, கல்மணிகள், கண்ணாடிப்பொருட்கள், மட்பாண்டங்கள் என்பவற்றை உற்பத்தி செய்யும் சிறுதொழில் கூடங்கள் இங்கு இருந்திருப்பதாகக் கருத முடியும். இங்கு கண்டெடுக்கப்பட்டுள்ள யானைகள், காளைகள் போன்றவற்றிற்குக் கட்டுகின்ற மணிகள் இலங்கையின் எந்தப்பாகத்திலும் காணப்படாதவைகளாக இருக்கின்றன. ஐயனார் வழிபாடு மேற்கொள்ளப்பட்டுள்ள மதுரையில் கூட இந்த வகையான மணிகள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கவில்லை. அந்தவகையில் இந்தப் பிரதேசம் தனித்தன்மை வாய்ந்த ஒன்று என்றும் இப்பகுதியில் மேலதிக ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் போது ஈழத்தமிழர் வரலாற்றாய்வில் உள்ள மேலும் பல முடிச்சுக்களை அவை அவிழ்க்கும் என்கின்றனர் ஆய்வுக் குழுவினர். 9. கரியாலை நாகப்படுவான் - கிளிநொச்சி மாவடடத்திலுள்ள பூநகரி பிரதேச செயலர் பகுதிக்கு உட்பட்ட பிரதேசம் கரியாலை நாகபடுவான். யாழ்ப்பாண பல்கலைக்கழக நிதியுதவியுடனும் வடமாகாண மத்திய கலாசார நிதியம் மற்றும் தொல்லியற் திணைக்களம் ஆகியவற்றின் அனுசரணையுடனும் இப்பகுதியில் நிகழ்ந்த அகழ்வாய்வில் பூர்வீக மக்களது வழிபாட்டு மையமொன்றும் மேலும் சிலபுராதன தொன்மங்களும் வெளிப்பட்டிருக்கின்றன. அகழ்வுக் குழியின் ஒரு பகுதியில் சமய வழிபாட்டு மையத்தின் வடிவம் ஒன்றும், அவ்வாய்வுக் குழியின் நடுப்பகுதியில் சிறிய வாய்ப்பகுதியை உடைய பெரிய மண்பானையும், அதன் மேற்பகுதியில் கவிழ்ந்த நிலையில் ஒட்டி வைக்கப்பட்ட சிறிய கலசங்களும் காணப்பட்டன. இப்பானையைச் சுற்றி சுடுமண்ணாலான சதுரவடிவான மூன்று பீடங்களும், அப்பீடங்களில் அமர்ந்திருந்த தெய்வ அல்லது மனித உருவத்தின் கால்கள் இப்பானையைத் தொட்ட நிலையிலும் காணப்பட்டன. தற்போது இவ்வுருவங்களின் தலைப்பகுதிக்குரிய முடிகள், காதுப்பகுதிகள் மட்டும் கிடைத்திருப்பதால் இவ்வுருவங்கள் மனிதனா அல்லது தெய்வமா என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை. இந்த மூன்று பீடங்களை அடுத்து நான்காவதாக நடுவில் உள்ள பானையை ஒட்டி மண் சட்டியின் விளிம்பில் படமெடுத்த நிலையில் ஐந்து தலைநாகம் காணப்படுகிறது. நாக இனக் குழுவின் தொடக்ககால வழிபாட்டு மையமாக இது இருந்திருக்க வேண்டுமென்ற முடிவுக்கு ஆய்வுக்குழுவினர் வந்திருக்கிறனர். வடஇலங்கையில் இன்றும் ஊற்றுப்புலம், இரணைமடு, மானிப்பாய், நவாலி போன்ற இடங்களில் பாம்புப்புற்றுக்கு படையல் செய்து வழிபடும் மரபு காணப்படுகிறது. சில இடங்களில் பாம்புபுற்று கருவறையில் வைக்கப்பட்டு அதன் மேல் ஆலயம் கற்களால் கட்டப்பட்டுள்ளன. குறிப்பாக, புளியம்பொக்கணை நாகதம்பிரான், புதூர் நாகதம்பிரான், நயினை நாகபூசணி போன்ற நாகவழிபாட்டு முறைகளைக் கொண்ட கோவில்கள் ஈழத்தமிழர் வாழ்வியலில் பிணைந்திருக்கின்றன. நாகத்தை குல மரபு தெய்வமாகக் கொண்டுவழிபடும் மக்கள் தமது பெயர்களின் முன்னொட்டுச் சொல்லாக “நாக” என்ற பெயர் கொண்டும் அழைக்கும் மரபும் இருந்து வருகிறது. ஏற்கனவே நாகர்கள் இலங்கையில் வாழ்ந்த இனக்குழு என்பதற்கு 2200 ஆண்டுகளுக்கு முற்பட்ட கல்வெட்டுஆதாரங்கள் பலவற்றை பேராசிரியர் பரணவிதான, சிரான்தெரணியகல ஆகியோர் வெளியிட்டுள்ளனர். நாகபடுவான் என்ற பெயரே நாகத்தைக் குலமரபாக்க கொண்ட மக்கள் வாழ்ததன் அடையாளம் என்பதை இவ்வாய்வுக் குழுவில் ஒருவரான கலாநிதி இரகுபதி அடிக்கோடிட்டிருக்கிறார். 10. குசாணமலை - மட்டக்களப்பு மாவட்டத்தில், செங்கலடியில் இருந்து தெற்கே 10 கி.மீ தொலைவில் பதுளை வீதிக்கு மேற்காக அமைந்துள்ளது குசாணமலை. காடுகளும், சிறுபற்றைகளும் சூழ்ந்த இக்குசாணமலைப் பகுதியில் தற்போது குடியிருப்புக்கள் காணப்படாவிட்டாலும் முன்பொருகாலத்தில் செறிவான குடியிருப்புக்களும், மக்கள் நடமாட்டமும் இருந்ததற்கான ஆதாரங்கள் செறிவாகக் காணப்படுகின்றன. இங்கு பரவலாகக் காணப்படும் கருங்கல் தூண்களும், செங்கட்டியால் அமைக்கப்பட்ட இருப்பிடங்களின் அழிபாடுகளும், பரவலாகக் காணப்படும் மட்பாண்டங்களும், இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ள ஏழு பிராமிக் கல்வெட்டுக்களும் இங்கு புராதன குடியிருப்புக்களுடன் சமயம் சார்ந்த கட்டடங்களும் இருந்துள்ளன என்பதை உறுதி செய்கின்றன. தென்னாசியாவின் தமிழகம் தவிர்ந்த பல வட்டாரங்களில் கி.மு. 3 ஆம் நூற்றாண்டிலிருந்து கி.பி.4 ஆம் நூற்றாண்டு வரை பிராமியே கல்வெட்டு மொழியாக இருந்துள்ளது. ஆனால் குசாணமலையில் கண்டுபிடிக்கப்பட்ட இரு கல்வெட்டுக்களில் தமிழகத்தைப் போல் தமிழ்மொழிக்கே உரித்தான எழுத்துக்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. தமிழுக்குரிய தனித்துவமான இவ்வெழுத்துக்களிலிருந்து இற்றைக்கு 2000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இப்பிராந்தியத்தில் தமிழ்மொழியின் பயன்பாடு இருந்ததெனக் கூறலாம். அண்மைக்காலங்களில் மட்டக்களப்பிலுள்ள பிராமிக்கல் வெட்டுக்களை ஆய்வு செய்துவரும் பேராசிரியர் சி.பத்மநாதன் தனது களவாய்வின் போது தமிழ்மொழிக்கே சிறப்பான “ன” மற்றும் “ற” போன்ற எழுத்துக்களை அடையாளம் கண்டதாககே கூறியுள்ளார். மேலே பட்டியலிடப்பட்ட தொல்லியற் தளங்கள் சில உதாரணங்கள் மட்டுமே. இவற்றை வரிசைப்படுத்தியதில் எந்த எடுகோள்களும் பின்பற்றப்படவில்லை. ஊர்காவற்துறை, யாழ்ப்பாணம், கல்முனை, மணித்தலை, பூநகரி, மட்டுவில், கோணாவில், நாகமுனை, வீரபாண்டியன்முனை, காக்கைதீவு, மண்ணியாறு, தென்னியங்குளம், இலுப்பைக்கடைவை, குருந்தன்குளம், பனங்காமம், மன்னார், மாதோட்டம்,பல்லவராயன்கட்டு, முத்தரையன்கட்டு, அக்கராயன்குளம், பொம்பரிப்பு, வலிகாமம், நல்லூர், குடமுருட்டியாறு, முல்லைத்தீவு, அம்பலப்பெருமாள், சோழியகுளம், இப்பொத்தானை, வவுனியா, பதவியா, நிலாவெளி,கந்தளாய் என ஆய்வுக்குரியனவாக அடையாளப்படுத்தப்பட்ட பட்டியலின் நீளம் மிகப் பெரியது. இப்பிரதேசங்களில் அவ்வப்போது கண்டெடுக்கப்பட்ட தொல்லியற் சான்றுகளும் கூட பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.மூன்று தசாப்தங்களாக உள்நாட்டுப் போர்ச்சூழலில் இருந்த இப்பிரதேசங்களில், தொல்லியல் சார்ந்த ஆய்வுகள் நடத்தப்படுவதிலும், அத்தளங்களைப் பாதுகாப்பதிலும் நடைமுறைச் சாத்தியங்கள் இல்லாது இருந்தன. 2009 ஆம்ஆண்டில் உள்நாட்டுப்போர் முடிவுக்கு கொண்டு வருவதாக அறிவிக்கப்பட்ட பின்னரும் இதுவரை இவ்விடயங்களில் அடைந்த முன்னேற்றம் என்பதும்பெரும் கேள்விக்குறியாகவே இருக்கிறது. பெரும்பாலான தொல்லியல் துறையின் ஆளுகைக்குட்பட்ட பகுதிகள் இன்னும் இராணுவத்தினரால் விடுவிக்கப்படாத நிலையிலேயே இருப்பதும், இலங்கைத் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டிலுள்ள பிரதேசங்களில் 'வேலியேபயிரை மேய்வது போன்று' தொன்மங்கள் சிதைக்கப்படுவதும், திட்டமிட்ட வரலாற்றுத் திரிபுகளுக்கு ஏதுவானதாக அவை தன்மைமாற்றம் செய்யபடுவதும் கொடுமையான விடயம். இதய சுத்தியுடன் அரச இயந்திரங்கள் செயற்பட ஆரம்பித்தால் இந்ததொல்லியற்தளங்கள் உலகம் வியக்கும் பல்வேறு விடயங்களை இந்த உலகிற்கு நிறுவும். அந்த விடயங்களால் நிச்சயம் உலக அரங்கில் இலங்கையின் கீர்த்தியும் அதிகரிக்கும் என்பது திண்ணம். தொகுப்பு: வேணுதன் மகேந்திரரட்ணம் நிகழ்ச்சித் தொகுப்பாளர் CMR வானொலி& TVi தொலைக்காட்சி நிமிர்வு ஜனவரி 2020 இதழ் இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள... Related Posts சமூகம் Post a Comment 1 comment: Anonymous January 29, 2022 at 3:39 PM Good ReplyDelete Replies Reply Add comment Load more... கருத்துரையிடுக வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் : 1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள். 2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள். 3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம் நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி. Subscribe to: Post Comments ( Atom ) இறுதியாக வெளியான காணொளி நிமிர்வு இதழ்களின் தொகுப்பு நிமிர்வு காணொளிகள் பக்கம் முகநூலில் எங்கள் பக்கம் நிமிர்வு கார்த்திகை - 2022 இதழ் Twitter-Timeline Tweets by Nimirvu1 அதிகம் வாசிக்கபட்டவை கட்டிளமைப் பருவத்தினருக்கு சிறந்த முன்மாதிரிகளே தேவை “இந்தக் காலப் பிள்ளைகளிடம் நல்லொழுக்கம் இல்லை. பெரியோருக்கு மரியாதை தருவது இல்லை. எதுக்கெடுத்தாலும் வன்முறை” என்பது வளந்த... வகுப்பறை மேம்பாடும், வகுப்பறை முகாமைத்துவமும் பல்வேறு வகையான பரந்து பட்ட திறன்கள் மற்றும் நுட்பங்களை ஆசிரியர்கள் கையாள்வதன் மூலம், வகுப்பறையை சுமுகமான முறையிலும், மாணவர்களின் தே... மண்ணும் மரபறிவும் தமிழ்நாட்டின் நெய்தல் நில மக்கள், குறிப்பாக கடலோடிகள் குறித்து ஆய்வு செய்து தொடர்ந்து எழுதியும், பேசியும் வருகின்றவர் கன்னியாகுமரியில் வாழ... ஆபத்தான விளிம்பில் நிற்கும் தென்னமரவடி இலங்கையின் கிழக்கு மாகாணத்தின் திருக்கோணமலை மாவட்டத்தின் தொன்மையான கிராமங்களில் ஒன்று தென்னவன் மரபு அடி கிராமம். பாண்டியனின் மரபில் வந்தவர... தற்சார்பு உணவுப் பண்பாடு எம்மை வழிநடத்த வேண்டும் ஐப்பசி 14 உலக உணவு தினத்தை முன்னிட்டு இலங்கை விவசாயத் திணைக்கள பண்ணை ஒலிபரப்புச் சேவையின் விவசாய வானொலி சஞ்சிகை நிகழ்ச்சியான களமும் வளமும்... Powered by Blogger. பதிப்புரிமை | Copyright © 2017 - Nimirvu நிமிர்வு. SriLanka Tamil News Site. All Rights Reserved. | WeB Designed By :: Nimirvu
நாளை வெள்ளிக்கிழமை நாடளாவிய ரீதியில் அனைத்து அமைப்புக்களும் தொழிற்சங்கங்களும் ஒன்றிணைந்து ஹர்த்தால் அனுஷ்டிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் நாளை வெள்ளிக்கிழமை என்பதால் ஏறாவூர் பிரதேச வர்த்தகர்களதும், பங்களிப்பினை வழங்குவதில் சிரமம் இல்லை என்ற படியினால் குறித்த பிரதேச வர்த்தக சங்கமும் மட்டக்களப்பு வர்த்தகர்கள் சார்பில் குறித்த ஹர்த்தாலிற்கு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளது, என இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் ஏறாவூர் வர்த்தக சங்க செயலாளர் அஸ்மி தெரிவித்தார். - Advertisement - மேலும், அனைத்து வர்த்தகர்களும் நாளைய தினம் தங்களது வர்த்தக நிலையங்களை மூடி தேசிய ரீதியான போராட்டத்திற்கு ஆதரவு வழங்குமாறு வேண்டிக் கொள்கிறோம். நாளைய தினம் தங்களுக்கு தேவையான பொருட்களை இன்றைய தினமே கொள்வனவு செய்து மக்கள் வீன் அசௌகரியங்களை தவிர்ந்து கொள்ளுமாறு ஏறாவூர் வர்த்தக சங்கம் சார்பில் வேண்டிக் கொள்கிறோம் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
நினைக்க முக்தி தரும் திருத்தலமான திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் மிகப்பிரசித்தி பெற்ற திருவிழா "கார்த்திகை திருநாள்". இத்திருநாளில் திருவண்ணாமலை மலை உச்சியில் தீபமேற்றப்படும். திருக்கார்த்திகை நாளுக்கு பத்து நாள்கள் முன்னதாக இருந்தே திருவிழா தொடங்கிவிடும். கொடியேற்றத்தில் தொடங்கி, பஞ்சமூர்த்திகள் உலாவும், அண்னாமலையாரின் பவனியும், கோயிலின் மகா தேரோட்டமும் இந்தப் பத்து நாள்களிலும் நடைபெறும். இக்கொண்டாட்டங்களின் உச்ச நிகழ்வாக மகா தீபமேற்றப்படும். பக்தர்கள் மலையையே அண்ணாமலையாரின் வடிவமாய்க் கருதி இந்நாளில் கிரிவலமும் வருவர். திருக்கார்த்திகை நாளன்று அதிகாலை அண்ணாமலையார் கோவிலில் பரணி தீபம் ஏற்றப்படும். பரணி நட்சத்திர நேரத்தில் இந்தத் தீபம் ஏற்றப்படுவதால் பரணி தீபம் எனப் பெயர். படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்ற ஐந்தொழில் புரியும் இறைவனின் ஐந்து திருமுகங்களைக் குறிக்கும் விதமாக, பரணி தீபம் 5 அகல் விளக்குகளால் ஏற்றப்படும். அன்று மாலை 6 மணிக்கு மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும். திருக்கார்த்திகை நாளில் மலை உச்சியில் ஏற்றப்படும் இந்த தீபம் அடுத்த 11 நாள்களுக்கும் தொடரும். தீபமேற்றப்படும் திருவண்ணாமலை மலை 2668 அடி உயரம் கொண்டது. இந்தத் தீபத்திருவிழாவின் கொண்டாட்ட நாள்களில் பக்தர்கள் மலையேறி தீபத்தை தரிசிக்க முடியும். (கொரோனா பெருந்தொற்றுக்காலத்தில் மலையேற்றத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது.) இப்போது தீபமேற்றப்படும் கொப்பரை, இரும்பால் ஆனது. 1991-ம் ஆண்டு முதல் இக்கொப்பரை பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதற்கு முன்பு 1668-ம் ஆண்டு 'பிரதானிவேங்கடபதி ஐயர்' என்பவர் வழங்கிய வெண்கலக் கொப்பரை பயன்படுத்தப்பட்டு வந்தது. மகாதீபம் ஏற்றுவதற்கு 1000 மீட்டருக்கும் அதிக அளவுள்ள காடா துணி திரியாகப் பயன்படுத்தப்படும். 3000 கிலோவுக்கும் அதிகமாக நெய் பயன்படுத்தப்படும். புண்ணியத்தைப் பெற எண்ணினால் போதும் அண்ணாமலையாரை பக்தர்கள் நினைத்த இடத்தில் இருந்தே திருக்கார்த்திகை நாளில் அரோகரா பாடி முக்தி பெறலாம் என்பது நம்பிக்கை.
உடல்நலம் சீராக இருக்க வேண்டும் என்றால் சைவ உணவே சிறந்தது என்றும் குறிப்பாக காய்கறி, பழங்கள் அதிகம் உண்பவர்களுக்கு எந்தவித வியாதிகளும் வராது என்றும் பெரியோர்கள் கூறுவதுண்டு. அந்த வகையில் எந்தெந்த காய்கறி, பழங்களில் என்னென்ன சத்துக்கள் இருக்கின்றன? என்பதை தற்போது பார்ப்போம் தக்காளி பழத்தில் சர்க்கரை துளி அளவும் இல்லை. கொழுப்பும் குறைவாகவே இருக்கிறது. அதனால் நீரிழிவு நோயாளிகள் தயங்காமல் தக்காளியை சமையலில் சேர்த்துக்கொள்ளலாம். மேலும் எலும்பு ஆரோக்கியத்தை பராமரிக்கவும் தக்காளி உதவுகிறது. இரவில் பார்வை குறைபாடு, சரும பாதிப்பு போன்ற பிரச்சினைகளில் இருந்தும் தக்காளி பாதுகாக்கும். * பப்பாளி பழத்தில் இருக்கும் ஒருவகை ஊட்டச்சத்து செரிமான கோளாறு பிரச்சினைகளை சரி செய்ய உதவுகிறது. இதில் சோடியம் அளவும் குறைவு. அது கொழுப்பு மற்றும் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்கவும் உதவுகிறது. * கீரையில் போலேட், மாங்கனீஸ், இரும்பு மற்றும் பலவகை வைட்டமின் சத்துக்களும் அதிகம் நிறைந்திருக்கின்றன. 100 கிராம் கீரையில் 0.8 கிராம் அளவே சர்க்கரை உள்ளது. * தண்ணீர்விட்டான்கிழங்கில் சர்க்கரையும், கொழுப்பும் துளி அளவும் இல்லை. வைட்டமின்கள் ஏ, சி மற்றும் கே அதிகம் உள்ளது. இது வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்த உதவுகிறது. * கிரேப் புரூட் எனும் ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி நிறைந்திருக்கிறது. இதிலும் கொழுப்பு மற்றும் சர்க்கரை இல்லை. சளி, இருமல் பிரச்சினைக்கும் நிவாரணம் தரும். இந்த பழத்தை போதுமான அளவு சாப்பிடலாம். * முட்டைகோசில் சர்க்கரை இல்லை. வைட்டமின்களும், கால்சியம், இரும்பு, மெக்னீசியம் மற்றும் துத்தநாகம் போன்ற தாதுக்களும் நிறைந்திருக்கின்றன. * ப்ராக்கோலியில் குறைந்த அளவே சர்க்கரை கலந்திருக்கிறது. கொழுப்பு இல்லை. இதில் உள்ளடங்கி இருக்கும் ஆன்டி ஆக்சிடென்ட் உடலிலுள்ள செல்களுக்கு புத்துயிர் அளிக்கும். * நீரிழிவு நோயாளிகள் தினமும் பீட்ரூட் சாப்பிட்டு வரலாம். இதில் சர்க்கரை கிடையாது. பொட்டாசியம், இரும்பு, நார்ச்சத்துகள் அதில் நிரம்பியுள்ளன. பீட்டானின் என்றழைக்கப்படும் ஆன்டி ஆக்சிடென்டும் அதில் உள்ளது.
இந்த முறை கும்பகோணம் செல்லும்போது முன்பதிவு செய்து கொள்ள முடியவில்லை. கடைசிவரையில் கிளம்புவது நிச்சயம் ஆகாததாலேயே எதுவும் பண்ண முடியவில்லை. என்றாலும் எப்படியும் இந்த வாரம் போயிட்டு வந்துடணும்னு தான் இருந்தோம். வீட்டில் வேலைகள் சரிவர முடியாமல், எந்த நேரம் கொத்தனார் வருவார்னு புரியாமல், வெளியே எங்கேயும் போக முடியாமல், மாறி, மாறி வீட்டைக் காவல் காத்துக் கொண்டிருந்துவிட்டுக் கடைசியாய் இந்தத் திங்கள் அன்று 4-ம் தேதி,முக்கியவேலையை முடிச்சுக் கொடுத்தார் கொத்தனார். மத்ததை அப்புறமா வச்சுக்கலாம்னு அவசரம், அவசரமா குலதெய்வம் கோயிலுக்குக் கிளம்பினோம். எனக்கு இரவுப் பயணம்தான் சரியா வரும்,அதிலும் ரயில் என்றால் இன்னும் வசதி. ஆனால் என்னோட ம.பா. நேர் மாறாக பகலில் தான் போகணும்னு பிடிவாதம் பிடிப்பார். ரயில் எதுவும் இப்போ இல்லையே?? பேருந்துப் பயணம் தான் ஒரே வழி. வேறே வழியே இல்லை. புதன் இரவே போய் என்ன செய்யறது?? அனாவசியமா லாட்ஜில் போய் உட்காரணும், வாடகை கொடுத்துட்டு, (சிக்கன நடவடிக்கை :P) அதுவும் தவிர, நீ சாப்பிடத் தகராறு பண்ணுவே, வியாழன் அன்று காலையில்னா சாப்பாடு பண்ணி எடுத்துட்டுப் போகலாம்னு திட்டவட்டமான அறிவிப்பு வரவே, வியாழன் அன்று காலையில் எல்லாம் தயார் செய்துகொண்டு கிளம்பிட்டோம். 8 மணிக்குக் கிளம்பணும்னா டாணென்று 8 மணிக்கே கிளம்பினோம். ஆனால் போக்குவரத்து நெரிசலில் கோயம்பேடு போகவே 9-30 ஆகிவிட்டது. குடும்ப ஆட்டோகாரர் தான் கொண்டுவிட்டுட்டுப் போனார். இல்லைனா இது கூட முடியாது. போனதுமே, ஒரு பேருந்து கிளம்பத் தயாராக இருந்தது. ஆனால் என் மனசிலே பட்சி கூவுகின்றது இதிலே ஏறாதேனு. நான் சொல்றதுக்குள்ளே, முன்னால் வெகுவேகமாய்ப் போயிட்டு இருந்த ம.பா. அந்தப் பேருந்தில் ஏறியாச்சு. நான் சில, பல கிலோ மீட்டர் பின்னால் வரேன். அதுக்குள்ளே பஸ்ஸில் ஏறி, வெற்றிகரமாய் டபுள் சீட்டாகவும் தேர்ந்தெடுத்து, எல்லாமே டபுள் சீட்தான், அது வேறே விஷயம், சாமான்களை வச்சுட்டு, என்னைப் பார்க்க வந்தார். நல்லவேளையாக இமயமலை உயரத்தில் படிக்கட்டுகள் இல்லை. நம்ம கால் நம்மை எப்போ வாரிவிடும்னு சொல்ல முடியாது. இந்த அழகிலேயே நிஜமாவே இமயமலைக்கும் போயிட்டு வந்தாச்சு! நானே படிக்கட்டுகளில் ஏறி சீட்டில் போய் உட்கார்ந்தாச்சு. உடனே பேருந்தும் கிளம்பிவிட்டது. ஆஹா,னு நினைச்சுட்டு, கையில் கொண்டு போயிருந்து புத்தகத்தைப் பிரிச்சுப் படிக்க ஆரம்பிச்சேன். புத்தகத்தில் மூழ்கியாச்சு. பேருந்துக்குக் குளிர் ஜுரம் கண்டிருந்ததுனு நினைக்கிறேன். ஒரே உதறல். தூக்கித் தூக்கிப் போடுது. என்றாலும் பொறுத்துக் கொண்டு உட்கார்ந்திருந்தால் பேருந்து சென்ற இடமோ அதைக் கவனிக்கும் மருத்துவமனை. ஆம்! அங்கேயே பக்கத்தில் இருந்த வொர்க்ஷாப்புக்குப் போயிடுச்சு அந்தப் பேருந்து. அங்கே இன்னொரு பேருந்தை வரவழைச்சு, எங்களை எல்லாரையும் அதிலே உட்காரச் சொன்னாங்க. அங்கே எல்லாரும் முன்னாலே போயிடக் கடைசியில் இறங்கின எங்களுக்குச் சேர்ந்து உட்கார இடமே இல்லை. அது தான் போச்சுனா எல்லாருமே தனித்தனியாக ஆளுக்கு ஒரு சீட்டில் உட்கார்ந்து இருக்க, ஒவ்வொருத்தரையாக் கேட்டால் யாருமே மாறி உட்கார ஒத்துக்கலை. விடாமல் போராடி, கண்டக்டரும் வந்து சொன்னதும் முன் சீட் இரண்டும் கிடைச்சது. இரண்டு பேரும் உட்கார்ந்தோம். பேருந்தும் கிளம்பியது. தாம்பரம் போக ஆன இரண்டு மணி நேரத்துக்குப் பின்னர்,பெருங்களத்தூரில் வேகம் எடுக்க ஆரம்பிச்சு, வேகமாயே போயிட்டு இருந்தது. திண்டிவனம் நெருங்கவேண்டும், இன்னும் பத்து நிமிஷம். படார்! பட் படார்! எங்கேயோ பட்டாசு வெடிக்கிறாங்களா?? இல்லை வெடியா?? பேருந்தின் சக்கரத்தில் பொருத்தப்பட்டிருந்த ரப்பர் டயர்கள் வேகமும், கனமும் தாங்காமல் கிறீச்சிட, பேருந்து நின்றது. நல்லவேளையா நின்ற இடம், திண்டிவனம் போகும் வழியில் லாரிகள், கண்டெயினர்கள் எல்லாம் நின்று இளைப்பாறக் கட்டி இருக்கும் ரெஸ்ட் ஏரியா. அங்கே தெய்வச் செயலாக இரண்டு ஆட்டோமொபைல் வொர்க்ஷாப் இருக்க, பஞ்சர் ஆன டயரைக் கழட்டி, ஸ்டெப்னியைப் போட்டுக் கொடுத்தார்கள். கண்டக்டரும், டிரைவரும் தங்கள் கையில் இருந்து பணம் போட்டு செட்டில் பண்ணிவிட்டு, ரசீது கேட்க, ரசீது கிடைக்கவில்லை. கண்டக்டர் கொஞ்ச நேரம் போராடிப் பார்த்துவிட்டுப் பின்னர் வேறே வழியில்லாமல் வந்துட்டார். பயணிகளில் அவசரமாய் பண்ருட்டி போகவேண்டிய ஒருத்தர் தவிர, மற்றவங்க பேருந்திலேயே இருந்தோம். எங்களை வேறு பேருந்துக்கு மாறறீங்களானு கண்டக்டர் கேட்டதுக்கும் நாங்க வேண்டாம்னு சொல்லிட்டோம். பின்னர் பேருந்து கிளம்பி திண்டிவனம் போய் அங்கே இருந்தும் கிளம்பி சீரான நிதானமான வேகமாய்ப் போய்க் கொண்டிருந்தது. இன்னும் சற்று நேரத்தில் பண்ருட்டி வரவேண்டும். மறுபடியும் உலோகம் உராயும் ஒலி. இம்முறை சற்று வேகமாய்க் கேட்டதோடு அல்லாமல் பேருந்தே ஆடியதோடு இல்லாமல், யாருக்கும் சரியாக உட்கார முடியவில்லை. தூங்கிக் கொண்டிருந்த என்னோட ம.பா. முழிச்சுட்டு என்னனு பார்க்கிறார். பின்னால் வந்து கொண்டிருந்த இன்னொரு பேருந்து, கும்பகோணம் போயிட்டு இருந்தது அதுவும், நாங்க ஏறி இருந்தது தஞ்சாவூர் பேருந்து, அந்தக் கும்பகோணம் பேருந்து எங்களை முந்தறதுக்குப் பார்த்திருக்கு, அந்தக் குறுகிய சாலையிலே. ஏற்கெனவே சாலை அப்படி ஒண்ணும் நல்லா இல்லை. என்றாலும் போன முறைக்கு இந்த முறை பரவாயில்லை. ஒட்டு வேலை எல்லாம் செய்து வச்சிருக்காங்க. மழைக்குத் தாங்குமா தெரியலை. அந்தச் சாலையிலே எதிரே வர பேருந்தை இடிக்காமல் போனாலே நல்லா இருக்கும். அந்த இடத்திலே போய் இவர் ஓவர்டேக் பண்ணறார்னா??? நல்லவேளையா, எங்க பேருந்தின் ஓட்டுநர் முன் கூட்டியே கவனிச்சிருக்கார், அதனால் வேகத்தைக் குறைச்சு பேருந்தையும் நிறுத்திட்டார். அந்தப் பேருந்தின் ஓட்டுநரை எதுவும் கேட்கிறதுக்குள், அவங்க அதே உரசலுடன் வேகமாய் முன்னாலே போயிட்டாங்க. உடனேயே எங்க ஓட்டுநர் வேகமாய் ஓட்டி முன்னால் போய் அந்தப் பேருந்தை நிறுத்தினார். எங்க பேருந்தின் நடத்துனரும், அவருக்கு உதவியாய்ப் பயணிகளில் சிலரும் போய் அந்தப் பேருந்து ஓட்டுநரையும், நடத்துனரையும் என்ன இது, இப்படியா வருவாங்க? ஜன்னல் பக்கமாய் உட்காருகிறவங்களுக்குக் கை போயிருக்கும் என்று கேட்டால், அவர் எல்லாவற்றையும் கேட்டுவிட்டுத் தலையை ஆட்டி விட்டு வேகமாய்ப் போயே போயிட்டார்! போயாச்சு, போயிந்தி! சமாளித்துக் கொண்டு மறுபடியும் பேருந்து கிளம்பியது. ஆனால் மீண்டும் ஏதோ பிரச்னை. ஒரு லெதர் துண்டத்தை ஓட்டுநர் எடுத்து நடத்துனரிடம் கொடுக்க அவரும் அதை, ஸ்டியரிங் வீலின் கீழே வைக்க முயன்றார். பலமுறை முயன்றும் அவரால் முடியவில்லை. திண்டிவனத்தில் ஏறி இருந்த ஒரு பயணி ஓட்டுநரின் பின்னாலேயே உட்கார்ந்திருந்தார், அவர் ஏதோ சொல்கின்றார், ஆனால் என்னனு புரியலை, ஏதோ பிரச்னைனு மட்டும் புரிஞ்சது. என்னவோ, ஏதோனு நினைச்சுட்டு உட்கார்ந்திருந்தோம். பண்ருட்டி நெருங்கும்போது மீண்டும் ஒரு ஆட்டோமொபல் வொர்க்ஷாப் வழியில் வர, பயணி பேருந்தை அந்த இடத்தில் நிறுத்தச் சொல்லிக் கீழே இறங்கி வேகமாய் ஓடிப் போனார். பேருந்து பெரும் குலுக்கலுடன் நின்றது. நடத்துனரும் இறங்கி ஓடினார். இருவருமாய் ஒரு ஸ்பானரைக் கொண்டு வந்து ஸ்டியரிங் வீலைப் பதிய வைத்திருந்த இடத்தில், அந்த லெதர் சக்கையை மீண்டும் வைத்து இறுக்க ஆரம்பிக்க அவர்களோடு சேர்ந்து ஓட்டுநரும் முயல, அப்போத் தான் விஷயமே புரிஞ்சது. ஸ்டியரிங் வீல் கையோடு வந்திருக்கின்றது. சின்ன வயசாய் இருந்தாலும் ஓட்டுநர் சமாளித்துக் கொண்டு பல மைல்கள் வந்துவிட்டிருக்கின்றார். இனி முடியாதுங்கற நிலைமை வந்ததும் பேருந்தையும் கஷ்டப் பட்டு நிறுத்திவிட்டு இப்போ சரி பண்ணிக் கொண்டிருக்கிறார். மறுபடியும் பயணிகளில் சிலரும், வொர்க்ஷாப்பின் தொழிலாளியும் வந்து உதவ ஒரு மாதிரி ஸ்டியரிங் பொருத்தப் பட்டு பேருந்து கிளம்பியது. ஆனாலும் கும்பகோணம் வந்து சேரும்வரையில் அப்பாடானு உட்கார முடியவில்லை. சும்மாவே பேருந்துப் பயணத்தில் தூங்கி எல்லாம் போக மாட்டேன். இப்போ இன்னும் விழிப்பாய் இருக்க வேண்டி வந்தது. ஆனாலும் அரசாங்கப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளைப் பராமரிக்கும் விதத்தை நினைச்சால், பயணிகளின் நிலையை நினைச்சால் ரொம்பவே கவலையாகத் தான் இருக்கு. Posted by geethasmbsvm6 at 1:17 AM 8 comments Newer Posts Older Posts Home Subscribe to: Posts (Atom) எச்சரிக்கை பதிவுகள் என் சொந்த உழைப்பால் எழுதப்பட்டவை. இதை வேறெங்கும் காப்பி, பேஸ்ட் செய்பவர்கள் என் அனுமதியின்றி செய்யக் கூடாது என எச்சரிக்கப்படுகின்றனர்.
நடிகர் விஷால் நடிப்பில் சரவணன் இயக்கியுள்ள வீரமே வாகை சூடும் திரைப்படம் இன்று தியேட்டர்களில் மிகவும் பிரம்மாண்டமாக வெளியாகியிருக்கிறது. இந்தத் திரைப்படத்தை விஷால் தனது விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்தின் மூலம் தயாரித்துள்ளார். veeramevaagaisoodum யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ள இப்படத்தில் விஷாலுடன் இணைந்து டிம்பிள் ஹயாதி, யோகி பாபு உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். vishal-veerame-vaagai-soodum-1 உலகமெங்கும் 2000 தியேட்டர்களில் வெளியாகி உள்ள இப்படத்தை தற்போது விஷால் ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் கொண்டாடி வருகின்றனர். இந்தியாவில் மட்டும் இப்படம் 1500 தியேட்டர்களில் வெளியாகி இருக்கிறது. இதனால் படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது. vishal-veerame-vaagai-soodum-3 ஆக்ஷனுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்தில் நகைச்சுவை காட்சிகள் சொல்லிக்கொள்ளும்படி இல்லை. மேலும் பெண்கள் சம்பந்தப்பட்ட இந்த கதையில் ரவீனா ரவி கதாபாத்திரம் அனைவருக்கும் பிடித்துள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். vishal-veerame-vaagai-soodum-4 படத்தின் முதல் பாதி நன்றாக இருப்பதாகவும், இரண்டாம் பாதி கொஞ்சம் மெதுவாக நகர்வதாகவும் ரசிகர்கள் கூறுகின்றனர் மேலும் இது ஏற்கனவே பார்த்து பழகிய பழைய கதை. இந்த மாதிரி கதைகளில் விஷால் குறைந்தது 5 படங்களாவது செய்திருக்கிறார். vishal சொல்வதற்கு புதிதாக எதுவும் இல்லை என்றும் சிலர் இந்த படம் குறித்து தங்கள் கருத்துக்களை தெரிவித்துள்ளனர். மொத்தத்தில் விஷாலின் வீரமே வாகை சூடும் திரைப்படம் பல கலவையான விமர்சனங்களை பெற்று உள்ளது. Continue Reading Related Topics:சரவணன், சினிமா செய்திகள், டிம்பிள் ஹயாதி, தமிழ் சினிமா, தமிழ் படங்கள், நடிகர்கள், நடிகைகள், யுவன் சங்கர் ராஜா, யோகி பாபு, விஷால், வீரமே வாகை சூடும்
நீங்கள் எந்த ஒரு வேலையும் செய்யாமல் உங்களுடைய மொபைல் இன்டர்நெட் வழியாக மட்டும் பணத்தை சம்பாதிக்க வேண்டும் என்று விரும்புகிறீர்களா ? அவ்வாறு நீங்கள் எந்த ஒரு வேலையும் செய்யாமல் இன்டர்நெட் வழியாக மட்டும் பணத்தை சம்பாதிக்க வேண்டும் என்று விரும்பினால் நிச்சயமாக இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். எனவே இந்த வழியாக நீங்கள் பணத்தை சம்பாதிக்க வேண்டும் என்று விரும்பினால் நிச்சயமாக நீங்கள் இந்த பதிவை தொடர்ந்து முழுவதுமாக படிக்க வேண்டும். அப்போது மட்டுமே இதைப் பற்றி உங்கள் முழுவதுமாகப் புரிந்துகொள்ள முடியும். Internet Connection :- இப்போது இணையம் என்பது மிகவும் அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது என்றுதான் நான் கூறியாக வேண்டும். உலக அளவில் இணையம் என்பதன் தேவை மிகவும் அதிகமாக இருக்கிறது என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. மேலும் இப்போது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் இந்த இணையம் என்பது கட்டுக்குள் வைத்திருக்கிறது. அதாவது இந்த இணையம் என்பது அடிமைப்படுத்தி வைத்திருக்கிறது என்று தான் கூற வேண்டும். மேலும் இந்தியாவில் இணையத்தின் வளர்ச்சி என்று பார்த்தோமென்றால் இரண்டாயிரத்து 15க்கு பிறகு அபார வளர்ச்சி பெற்றுள்ளது என்று தான் கூற வேண்டும். மேலும் மொபைல் வளர்ச்சி என்பது மிகவும் அதிக அளவில் இருக்கிறது. மொபைல் வளர்ச்சியின் காரணமாக பல்வேறு தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அதிகமாக இந்தியாவில் வளரத் தொடங்கியது மேலும் அதன் அடிப்படையில் இப்போது இணையம் என்பது நாம் நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவிற்கு இந்தியாவில் வேகமாக வளர்ந்து இருக்கிறது. இந்தியாவிலேயே நீங்கள் பார்க்கும் அளவிற்கு இணையம் என்பது மிகவும் வேகமாக வளர்ந்து இருக்கிறது அப்போது வெளிநாடுகளில் எவ்வாறு இருக்கும் என்பதை சற்று யோசித்துப் பார்க்க வேண்டும். நிச்சயமாக இந்தியாவைக் காட்டிலும் அங்கு பல்வேறு மடங்குகள் அதிகமாக இணையம் என்பது வேகமாக வளர்ந்து இருக்கும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. குறிப்பாக அமெரிக்கா சீனா ஜப்பான் போன்ற நாடுகள் அனைத்தும் தொலைத்தொடர்பு மற்றும் தொழில்நுட்பத்தில் மிகவும் பெரிய அளவிலான வளர்ச்சி கண்ட நாடுகள் என்று தான் கூற வேண்டும். அந்த நாடுகளை காட்டிலும் இந்தியா என்பது தொழில்நுட்பத்தில் மற்றும் இணைய வேகத்தில் மிகவும் பின் தங்கியுள்ளது என்று தான் கூற வேண்டும். அப்படிப்பட்ட இந்தியாவிலேயே அதிகமான நபர்கள் இணையத்தைப் பயன்படுத்துகிறார்கள். Data Wasteage :- உலக அளவில் தினமும் பல்லாயிரக்கணக்கான ஜிபி டேட்டா வேஸ்ட் ஆகிறது என்றுதான் கூறியாக வேண்டும். நாம் தினமும் அனைத்து டேட்டா கலையும் நிச்சயமாக தீர்த்துவிட முடியாது. மேடம் நான் தினமும் இரண்டு ஜிபி டேட்டா பிளானில் பயன்படுத்துகிறோம் என்றால் நம்மால் தினமும் அந்த இரண்டு ஜிபி முடித்து விட முடியாது. நிச்சயமாக குறிப்பிட்ட அளவு டேட்டா என்பது வீணாகும். மேலும் நாம் ஒருவருக்கு மட்டுமே குறிப்பிட்ட அளவு தினமும் வீணாகிறது என்று வைத்தோம் என்றால் உலகளவில் பல்லாயிரக்கணக்கான மக்கள் தினமும் டேட்டாவை பயன்படுத்துகிறார்கள் அவர்களும் குறிப்பிட்ட அளவு டேட்டாவை நடிப்பார்கள். எனவே அப்போது நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் எந்த அளவிற்கு டேட்டா வீணாகிறது என்பதை பற்றி. மேலும் நீங்கள் வீணாகும் வெறும் டேட்டாக்களை வைத்து மட்டுமே பணத்தை சம்பாதிக்க முடியும் என்று சொன்னால் நம்ப முடிகிறதா ? உங்களால் நம்ப முடியவில்லை என்றாலும் கூட இதுதான் உண்மையாக இருக்கிறது. மேலும் இது எவ்வாறு உண்மை ஆகும் ? எவ்வாறு வீணாகும் டேட்டாவை வைத்து மட்டும் பணத்தை சம்பாதிக்க முடியும் ? என்பது போன்ற பல்வேறு விதமான கேள்விகளுக்கும் இந்த பதிவில் நாம் முழுவதுமாக விடையை பார்க்கலாம். Internet Connection வழியாக சம்பாதிக்க முடியும் !! இப்போது வரை நாம் இணையத்தின் பல்வேறு விதமான தகவல்களை பற்றி முழுவதுமாக பார்த்து விட்டோம். இதைத்தொடர்ந்து இணையத்தை பயன்படுத்தி அதாவது வீணாகும் இணையத்தை பயன்படுத்தி நாம் எவ்வாறு பணத்தை சம்பாதிக்க முடியும் என்பது பற்றி முழுவதுமாக இப்போது பார்க்க தொடங்கலாம். HoneyGain.com :- நீங்கள் வீணாகும் இணையத்தை மட்டுமே பயன்படுத்தி பணத்தை சம்பாதிக்க வேண்டும் என்று விரும்பினால் நிச்சயமாக இந்த வலைத்தளம் என்பது உங்களுக்கு உதவும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. மேலும் இந்த வலைத்தளத்தை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை பற்றி நாம் முழுவதுமாக பார்க்க தொடங்கலாம். முதலில் நீங்கள் இந்த வலைதளத்திற்கு செல்லவும், பிறகு இதில் கொடுக்கப்பட்டிருக்கும் செயலிகளை நீங்கள் பதிவிறக்கம் செய்ய வேண்டும். இப்போது நாம் என்னென்ன பிளாட்பார்ம்களுக்கு இந்த வலைத்தளம் செயலிகளை கொடுத்துள்ளார்கள் என்பதை பற்றி பார்ப்போம். Website Mobile Phones Android :- முதலாவதாக அதிகமாக அனைவரும் பயன்படுத்தும் ஆண்ட்ராய்ட் மொபைல் போன் பாடலுக்காக இந்த வலைதளம் செயலிகளை உருவாக்கி உள்ளார்கள். எனவே உங்களுடைய மொபைல் போன் என்பது ஆண்ட்ராய்டு மொபைல் போன் என்றால் நீங்கள் அந்த செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். iOS :- இரண்டாவதாக அதிகமாக அனைவரும் பயன்படுத்தும் Apple மொபைல் போன் பாடலுக்காக இந்த வலைதளம் செயலிகளை உருவாக்கி உள்ளார்கள். எனவே உங்களுடைய மொபைல் போன் என்பது Apple மொபைல் போன் என்றால் நீங்கள் அந்த செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். Laptop And Computer :- Windows :- முதலாவதாக கணினிகளுக்கு அதிகமாக பயன்படுத்தும் விண்டோஸ் இயங்குதளத்தில் இந்த செயலி பயன்படுத்த முடியும். எனவே உங்களிடம் ஒரு விண்டோஸ் கணினி இருக்கும் சமயத்தில் நீங்கள் இதை பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும். Mac OS :- இரண்டாவதாக கணினிகளுக்கு அதிகமாக பயன்படுத்தும் MacOs இயங்குதளத்தில் இந்த செயலி பயன்படுத்த முடியும். எனவே உங்களிடம் ஒரு MacOs கணினி இருக்கும் சமயத்தில் நீங்கள் இதை பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும். Linux :- மூன்றாவதாக கணினிகளுக்கு அதிகமாக பயன்படுத்தும் Linux இயங்குதளத்தில் இந்த செயலி பயன்படுத்த முடியும். எனவே உங்களிடம் ஒரு Linux கணினி இருக்கும் சமயத்தில் நீங்கள் இதை பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும். Step 1 :- முதலாவதாக உங்களுக்கு ஏற்ற மொபைல் சாதனத்தின் செயலிகளை பதிவிறக்கம் செய்து கொள்ளவும். மேலும் இது பாதுகாப்பானது என்று தான் இந்த நிறுவனம் கூறியுள்ளது. எனவே நிச்சயமாக நீங்கள் எந்தவித கவலையுமின்றி இந்த செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். Step 2 :- அடுத்ததாக ஒரு சில அனுமதிகள் இந்த செயலிகளுக்கு கொடுக்க வேண்டிய அவசியம் இருக்கிறது. நீங்கள் அவ்வாறு இந்த செயல்களுக்கு ஏற்ற அனுமதிகளை கொடுக்க வேண்டும். நீங்கள் இந்த செயல்களுக்கு ஏற்ற அனுமதிகளை கொடுத்தால் மட்டுமே இந்த செயலி உங்கள் மொபைல் போனில் அல்லது உங்களது கணினி சாதனங்களில் நிச்சயமாக வேலை செய்யும். Earn Money :- நீங்கள் இவைகளை முடித்து அதன் பிறகு ஒருசில சிறிய அளவிலான வேலைகளை செய்ய வேண்டும் அதை நிச்சயமாக நீங்களே செய்து முடித்து விடுவீர்கள் மேலும் அவ்வாறு நீங்கள் செய்வதன் வழியாக நிச்சயமாக உங்களால் வெறும் இணையம் வழியாக மட்டுமே எந்த ஒரு வேலையையும் செய்யாமல் பணத்தை சம்பாதிக்க முடியும். மேலும் நீங்கள் தினமும் 2 GB அவர்களுக்கு கொடுக்கிறீர்கள் என்றால் மாதம் உங்களால் 20 டாலர்கள் வரை சம்பாதிக்க முடியும் என்று கூறுகிறார்கள். Internet Connection வழியாக சம்பாதிக்க முடியும் !! Earn Money From Internet Categories Entertainment News Tags Internet, Make Money, Make Money from internet, Make Money Online, Make Money Via Online solar jobs வழியாக மாதம் 1 இலட்சம் ரூபாய் வரை சம்பாதிக்க முடியும்.. Top 5 Best Passive Income Ideas Recent Posts Why is Crypto the biggest solution For our problems? United States Dollar மதிப்பு என்ன ? புஷ்பா தி ரூல் நாளை பூஜை விழாவுடன் தொடங்குகிறது:- படத்தின் இணை தயாரிப்பாளராக ரெட் ஜெயண்ட் மூவிஸ் கைகோர்த்து வரும் நிலையில், துருவ நட்சத்திரம் விரைவில் வெளிவரவுள்ளது.
தொலைபேசி அழைப்புகளை மேற்கொள்வதும் பெறுவதும், வியக்கத்தக்க வகையில், தொலைபேசியில் தொடர்புகொள்வதற்கு குறைவாகப் பயன்படுத்தப்படும் வழிகளில் ஒன்றாக மாறியுள்ளது. கையடக்கத் தொலைபேசிகள் எங்கும் காணப்படுவதால், லேண்ட்லைன்கள் கிட்டத்தட்ட வழக்கற்றுப் போய்விட்டன, அவற்றை வைத்திருப்பவர்கள் கூட அவற்றைப் பயன்படுத்துவதில்லை. இது நீங்கள் பெறும் பெரும்பாலான அழைப்புகள் விரும்பத்தகாததாக இருக்கும் சூழ்நிலையை உருவாக்குகிறது, பொதுவாக ஒருவித சந்தைப்படுத்தல் பிரச்சாரம். ஆனால் இன்னும் விரும்பத்தகாதது, ஒரு தொல்லையாக இருக்கும் அளவிற்கு, சர்வதேச அழைப்புகள், பணத்தைப் பெறுவதற்கான ஒரு திட்டத்தைத் தவிர வேறெதுவும் இல்லை. அதிர்ஷ்டவசமாக, உங்கள் மொபைல் ஃபோனில் வெளிநாட்டு அழைப்புகளை எளிதாகத் தடுக்கலாம். இந்த சிக்கலை தீர்க்க மூன்று வழிகள் உள்ளன, அவற்றைப் பற்றி இந்த கட்டுரையில் நீங்கள் அறிந்து கொள்வீர்கள். முதலில், உங்கள் கேரியர் மூலம் மூலத்தில் வெளிநாட்டு அழைப்புகளை எவ்வாறு தடுப்பது என்பதை நாங்கள் விவரிக்கப் போகிறோம், பின்னர் உங்கள் குறிப்பிட்ட சாதனத்தில் நீங்கள் பயன்படுத்தக்கூடிய முறைகளுக்குச் செல்வோம். உங்கள் கேரியர் மூலம் வெளிநாட்டு அழைப்புகளைத் தடுப்பது பெரும்பாலான, அனைத்து இல்லாவிட்டால், கேரியர்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு தேவையற்ற அழைப்புகளைக் கண்காணிப்பதற்கான விருப்பங்களை வழங்குகின்றன. சமீபத்திய ஆண்டுகளில் மோசடி அழைப்புகளின் சிக்கல் கடுமையாக உயர்ந்துள்ளது. FCC ஆல் தானாக டயல் செய்வதைப் பற்றிய விதிகளின் சில மாற்றங்கள் இதற்குக் காரணமாகும். நல்ல செய்தி என்னவென்றால், இந்த அழைப்புகளிலிருந்து விடுபட உங்கள் கேரியர் உங்களுடன் இணைந்து செயல்படும். உங்கள் கேரியரிடமிருந்து ஆயத்த தயாரிப்பு தீர்வை நீங்கள் பெற வாய்ப்பில்லை என்றாலும் (சில கேரியர்கள் அதை வழங்குகின்றன), நீங்கள் இன்னும் எண்களைத் தேர்ந்தெடுக்கலாம் அல்லது பெரும்பாலான கேரியர்களில் ரோபோகால்களைத் தடுக்கலாம். உங்கள் விருப்பங்களைப் பற்றிய முழுமையான கண்ணோட்டத்தைப் பெற, உங்கள் கேரியரின் ஆதரவு வரியை நீங்கள் அழைக்க வேண்டும் அல்லது அவர்களின் ஆன்லைன் ஆதரவுப் பக்கத்தை அணுக வேண்டும். இங்குள்ள டூ நாட் கால் ரெஜிஸ்ட்ரியில் உங்கள் ஃபோன் எண்ணைப் பதிவு செய்யவும் முயற்சி செய்யலாம். இந்த FTC சேவை டெலிமார்க்கெட்டிங் அழைப்புகளைப் பெறுவதிலிருந்து உங்களை விலக்குகிறது. இது வெளிநாட்டு அழைப்புகளை நிறுத்தாது என்றாலும், அதைப் பயன்படுத்துவது நல்லது. சிக்கல் போதுமான அளவு மோசமாகிவிட்டால், உங்களிடம் US-அடிப்படையிலான எண் இருந்தால், FTC அல்லது FCC இல் கூட புகார் செய்யலாம். நீங்கள் லேண்ட்லைனில் இருந்தால், உங்கள் விருப்பங்கள் மிகவும் குறைவாகவே இருக்கும், எனவே தீர்வு காண இந்த முறையைப் பயன்படுத்தவும். உங்கள் சாதனத்திலிருந்து அழைப்புகளைத் தடுக்கிறது உங்கள் கேரியர் உங்களுக்கு உதவ முடியாவிட்டால் அல்லது குறைந்த பட்சம் அவர்கள் செல்ல வேண்டிய தூரமாவது செல்ல முடியாவிட்டால், உங்கள் சாதனத்தில் அழைப்புத் தடுப்பிற்கான உள்ளமைக்கப்பட்ட தீர்வுகள் இருக்கலாம். உங்கள் சாதனத்தின் இயங்குதளமானது, தளத்தைப் பொறுத்து சற்று வித்தியாசமாக இருப்பதால் நீங்கள் எடுக்க வேண்டிய படிகளை ஆணையிடும். ஒவ்வொன்றின் சுருக்கமான கண்ணோட்டம் இங்கே. அண்ட்ராய்டு உங்கள் கேரியரின் அடிப்படையில் பெயரிடல் சிறிது மாறக்கூடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள், ஆனால் ஒட்டுமொத்தமாக, இது மிகவும் நிலையானதாக இருக்க வேண்டும். உங்கள் செல்லவும் அமைப்புகள் பட்டியல். இப்போது, ​​கண்டுபிடி அழைப்பு அமைப்புகள், என்று லேபிளிடப்பட்டிருக்கலாம் அழைப்பு. உங்கள் ஃபோன் பயன்பாட்டிலிருந்து அழைப்பு அமைப்புகளை அணுக வேண்டியிருக்கலாம், ஏனெனில் இது பொதுவான அமைப்புகளில் தோன்றாது. அழைப்பு அமைப்புகளில், என்பதைத் தட்டவும் தடுஎண்கள், இது என்றும் அழைக்கப்படலாம் தடுக்கப்பட்ட தொடர்புகள். தேவையற்றது என்று உங்களுக்குத் தெரிந்த தனிப்பட்ட எண்களை இங்கே நீங்கள் தடுக்கலாம் அல்லது தெரியாத அழைப்புகள் அனைத்தையும் தடுப்பதற்கான விருப்பத்தை மாற்றலாம். iOS உங்கள் மொபைலில் புதிய தொடர்பை உருவாக்கவும். நீங்கள் தடுக்கப்பட விரும்பும் எண்களை இந்தத் தொடர்பில் சேர்க்கவும். இந்தத் தொடர்புடன் தொடர்புடைய அனைத்து எண்களும் வடிகட்டப்படும் என்பதால், உங்களுக்குத் தேவையான பலவற்றைச் சேர்க்கவும். உங்கள் மொபைலின் அமைப்புகளில், பச்சை நிற ஃபோன் ஐகானைத் தட்டவும். கீழே உருட்டி தட்டவும் அழைப்புகள் பின்னர் தடுக்கப்பட்டது. இப்போது தட்டவும் புதிதாக சேர்க்கவும் நீங்கள் முன்பு உருவாக்கிய தொடர்பைத் தேர்ந்தெடுக்கவும். இந்த தொடர்பை "சர்வதேச எண்கள்" அல்லது அவர்கள் ஏன் தடுக்கப்பட்டுள்ளனர் என்பதை நினைவில் வைத்துக் கொள்ள இது போன்ற ஏதாவது பெயரிடுவது நல்லது. அழைப்புகளைத் தடுக்க மூன்றாம் தரப்பு பயன்பாடுகளைப் பயன்படுத்துதல் உங்களிடம் உள்ள மூன்றாவது விருப்பம், அழைப்பைத் தடுப்பதற்காக வடிவமைக்கப்பட்ட பயன்பாட்டைப் பயன்படுத்துவதாகும். சில சந்தர்ப்பங்களில், நாட்டின் குறியீடுகளைத் தடுப்பது உட்பட, ஆப்ஸ் வழங்கக்கூடிய பல்வேறு அம்சங்களின் காரணமாக இதுவே சிறந்த தேர்வாக இருக்கும் என்று பல பயனர்கள் கண்டுபிடிப்பார்கள். ஆண்ட்ராய்டு சாதனங்களில் அழைப்பு மேலாண்மைக்கான சிறந்த பயன்பாடுகளில் ஒன்று கால் பிளாக்லிஸ்ட் ஆகும். பெயர் குறிப்பிடுவது போல, உங்கள் தொலைபேசியில் தடுக்கப்படும் எண்களின் "தடுப்புப் பட்டியலை" உருவாக்க இந்தப் பயன்பாடு உங்களை அனுமதிக்கிறது. குறிப்பிட்ட எண் வரிசைகளுடன் தொடங்கும் அல்லது கொண்டிருக்கும் முழு எண்கள் அல்லது எண்களை நீங்கள் உள்ளிடலாம். திறம்பட, கொடுக்கப்பட்ட நாட்டிலிருந்து எந்த அழைப்புகளையும் தடுக்க இந்த அம்சத்தைப் பயன்படுத்தி நாட்டின் குறியீடுகளைத் திரையிடலாம். பயன்பாட்டில் கடவுச்சொல் பாதுகாப்பு மற்றும் பல நிஃப்டி அம்சங்கள் உள்ளன. நீங்கள் iOS சாதனத்தில் இருந்தால், அழைப்புக் கட்டுப்பாட்டில் மிக உயர்தர விருப்பம் உள்ளது. சந்தேகத்திற்கிடமான எண்களைக் காப்பகப்படுத்த, சமூகம் நிர்வகிக்கப்படும் பட்டியல்களைப் பயன்படுத்தும் ஸ்மார்ட் பிளாக்கிங் விருப்பங்களுடன், பிளாக்லிஸ்ட்டில் உள்ள அதே அம்சங்களில் பெரும்பாலானவை இந்தப் பயன்பாட்டில் காணப்படும். தலைகீழ் தேடலை நடத்தவும், தடுக்கப்பட்ட எண்களிலிருந்து யார் அழைக்கிறார்கள் என்பதைக் கண்டறியவும் இந்த பயன்பாட்டைப் பயன்படுத்தலாம். இந்த இரண்டு பயன்பாடுகளும் அந்தந்த கடைகளில் இலவசம். சந்தேகம் இருந்தால், எண்ணைத் தடு தேவையற்ற அழைப்புகளைத் தொடர்ந்து பெறுவதற்கு எந்த காரணமும் இல்லை என்பதை இப்போது நீங்கள் உணர்ந்திருப்பீர்கள் என்று நம்புகிறோம். உங்களுக்குச் சொந்தமான சாதனத்தைப் பொருட்படுத்தாமல் உங்கள் தொலைபேசியில் எண்களைத் தடுப்பதற்கான சில எளிய மற்றும் பயனுள்ள விருப்பங்கள் இவை. அழைப்பைத் தடுப்பதற்கான விருப்பங்களைப் பற்றி கேட்க, உங்கள் கேரியரைத் தொடர்புகொள்வது உங்கள் சிக்கலைத் தீர்க்க ஒரு உறுதியான வழியாகும், மேலும் நீங்கள் லேண்ட்லைனில் இருந்தால் மட்டுமே. பெரும்பாலான மொபைல் பயனர்களுக்கு, முதல், கடைசி மற்றும் சிறந்த தற்காப்பு வரிசையானது, அழைப்புகளைத் தடுப்பதற்காக வடிவமைக்கப்பட்ட பல நல்ல பயன்பாடுகளில் ஒன்றாகும். உங்களுடைய பெரும்பாலான தேவையற்ற அழைப்புகள் எங்கிருந்து வருகின்றன? இது தேசிய அல்லது சர்வதேச எண்களா? அழைப்பைத் தடுப்பது எங்கும் நிறைந்திருக்கும் உலகில் டெலிமார்க்கெட்டிங்கின் எதிர்காலம் என்ன என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? கீழே உள்ள கருத்துகளில் உங்கள் அனுபவங்களையும் எண்ணங்களையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.
போக்குவரத்து அமைச்சின் செயலாளர் மற்றும் புகையிரத நிலைய அதிபர்கள் சங்கத்திற்கும் இடையில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடல் இணக்கப்பாடு இன்றிய நிலையில் முடிவடைந்துள்ளது. தொழிற்சங்க நடவடிக்கை தொடர்ந்து முன்னெடுக்கப்படுகிறது. காலவரையறையற்ற பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தை முன்னெடுப்பது தொடர்பான தீர்மானத்தை எட்டுவதற்கு இன்று மாலை செயற்குழு கூடும் என இலங்கை புகையிரத நிலைய அதிபர்கள் சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன தெரிவித்துள்ளார். ரயில்வே பொது முகாமையாளர் அவர்களின் கோரிக்கைகளுக்கு சாதகமான பதிலை வழங்கத் தவறியதாகவும், உண்மைகளை முன்வைக்க அவர்களுக்கு வாய்ப்பளிக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார். நேற்று நள்ளிரவில் ஆரம்பிக்கப்படவிருந்த வேலை நிறுத்தப் போராட்டம் அதிகாரிகளுடனான கலந்துரையாடலின் பலனாக ஒத்திவைக்கப்பட்டது. எவ்வாறாயினும், புகையிரத பயணச்சீட்டு வழங்குவதை இடைநிறுத்துவது மற்றும் பொதிகளை ஏற்று கொண்டு செல்வதைத் தவிர்ப்பது போன்ற தொழிற்சங்க நடவடிக்கை தொடர்ந்தது. புகையிரத நிலைய அதிபர்களால் ஆரம்பிக்கப்பட்டுள்ள தொழிற்சங்க நடவடிக்கையில் அரசியல் உள்நோக்கம் இல்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
பொதுஜன பெரமுனவில் இருந்து விலகி சுயாதீனமாக இயங்கிய குழுவொன்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியுடன் இன்று திங்கட்கிழமை கூட்டணி அமைத்தது. இதன் பிரகாரம், அனுர பிரியதர்ஷன யாப்பா, சந்திம வீரக்கொடி, சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளே, ஜோன் செனவிரத்ன, ஜயரத்ன ஹேரத், பிரியங்கர ஜயரத்ன ஆகிய பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவே இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து கொண்டது. - Advertisement - நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு ஒன்றிணைந்து செயற்படுவதற்கு இவ்வாறு முன்வந்தமைக்கு நன்றி தெரிவிப்பதாகவும், எதிர்காலத்தில் மேலும் வலுவாகவும் கூட்டாகவும் செயற்படுவதற்கு இந்த ஒற்றினைவு மிகவும் முக்கியமானது எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். நீண்டகாலமாக நடத்தப்பட்ட பல கலந்துரையாடல்களின் பிரதிபலனாக இவ்வாறு ஒன்றிணைந்துள்ளதாகவும், எதிர்காலத்தில் பலமான சக்தியாக ஐக்கிய மக்கள் கூட்டணியைக் கட்டியெழுப்புவதற்கு பங்களிப்பதாகவும் அனுர பிரியதர்ஷன யாப்பா இதன் போது தெரிவித்தார்
இதுவரை அம்மாவின் நினைவையும், அவள் தந்துவிட்டுப் போயிருக்கும் ருசியையும் சேர்த்து மீட்டெடுக்காமல் உணவைப் பற்றி என்னால் ஒரு வரியையும் எழுதிவிட முடியாது. நேரந்தவறாமல் ஒரு நாளைக்கு மூன்று வேளை உணவு, இரண்டு வேளை காபி, டீ என்ற வரையறைகள் நல்உணவிற்கு எதிரானைவை. எப்போது ஒரு ருசியான உணவின் மீது ஆர்வம் மேலிடுகிறதோ, அதன் தேவை வேண்டி நாக்கு நம்மிடம் யாசிக்கத் துவங்கும் முன் அவை நம் உணவுத் தட்டிலிருக்க வேண்டும். எப்போதும் என் அம்மா அப்படித்தான். எங்கள் முன் ருசியான உணவை வைத்தாள். பல காலம் ருசியால் எங்களை அடைகாத்து வைத்திருந்தவள் அவள். அந்த அட்சயபாத்திரத்திலிருந்து ஒரு துளியை மட்டும் இப்பொழுது நான் வெளியே எடுக்கிறேன். அது குறைந்துவிடாமல் இன்னும் பல ஆண்டுகளுக்கு என் சொந்தச் சேமிப்பு கிடங்கிலிருக்க மனம் விரும்புகிறது. நிலப்பரப்பின் பொருட்டு வேண்டுமானால் உணவை வகைப்படுத்தலாம். அந்த நிலப்பரப்பில் எதன் விளைச்சல் அதிகமோ அதுவே அப்பிரதேச உணவையும் தீர்மானிக்கிறது. எங்கள் பூமியில் மல்லாட்டை. (சரி வேர்கடலை அல்லது நிலக்கடலை) மல்லாட்டை, துவையலில் துவங்கி முருங்கைக் கீரை, கருவாட்டுக் குழும்பு வரை அதன் இருப்பின்றி ஒரு சாப்பாட்டையும் நாங்கள் ருசித்ததில்லை. இரவுச் சாப்பாடு பெரும்பாலும் மண் தரையில் பாய்ப்போட்டு தெருப்பசங்களோடு சேர்ந்து தான். சுடுசாதம் வடித்த பாத்திரத்தை அப்படியே அடுப்பிலிருந்து இறக்கி வந்து வைக்கோலால் ஆன பிரமனையின் மீது கிடத்துவாள் அம்மா. ஒரு பெரும் தாம்பாளத்தட்டில் அம்மியில் அரைத்து உருட்டப்பட்ட மல்லாட்டைத் துவையல் உருண்டை இருக்கும். அது ஒரு சிறு பூசணிக்காய் அளவிற்கானது. கழுவி முடிக்கப்பட்ட பத்திருபது எவர்சில்வர் தட்டுகள், இரண்டு மூன்று குடிநீர் சொம்புகள் அதன் அருகே இறைந்துக் கிடக்கும். அவ்வளவுதான், இரவு உணவு. லேசாக குழைக்கப்பட்ட ஆவிபறக்கும் சுடுசோறும் எவ்வளவுத் தேவையோ அவ்வளவு எடுத்துக் கொள்ளும்படியான மல்லாட்டைத் துவையலும் ஒரு ஓரமாக நல்லெண்ணெய் பாட்டில் ஒன்றும் வைக்கப்பட்டிருக்கும். மல்லாட்டைத் துவையலோடு சுடுசோற்றைச் சேர்த்து பிசையும் போது கை லகுவிற்கோ, நா வழுக்கிற்கோ நல்லெண்ணெய் தேவைப்படலாம். நான் ஒரு போதும் அதைச் சேர்த்ததில்லை. எங்கள் கொல்லை மேட்டில் மல்லாட்டையின் முதல் எதிரியே எள் தான். இப்படி நேர் எதிரிகள் இருவர் என் உணவுத்தட்டில் பகைமை பாராட்டுவதை எப்போதும் நான் அனுமதித்ததில்லை. ஒவ்வொரு பிரதேசத்திற்குமென பிரத்தியேகமான ஒரு உணவு வாய்க்கும். ஆனாலும் வீடுகளில் வாய்க்கப்பெறும் உணவே தனித்துவமானது. எங்கள் வீட்டுக் களியையும், கறிக்குõழம்பையும் தாண்டி உலகின் எத்திசையிலும் வேறொரு ருசியை இதுவரை சுவைத்ததில்லை. அம்மாவின் தனிச்சிறப்பே எதற்குமே மெனக்கிடாததுதான். பகல் பன்னிரென்டு மணிக்குதான் விறகடுப்பைப் பற்றவைப்பாள். சமைக்கும் போது அம்மாவுக்கு கூடுதலாக இரண்டு கைகள் முளைப்பதைப் பார்த்திருக்கிறேன். ஒரு அடுப்பில் கறிக்குழம்பைக் கூட்டுவாள். இன்னொரு அடுப்பில் களி கிண்டுவதற்கு சுடுத்தண்ணீர் கொதிக்கும். உதவிக்கு இன்னொரு ஆளை ஒருபோதும் அவள் அனுமதித்ததேயில்லை. உங்களின் கவிதைப் பிரவாகத்தின் போது இன்னொரு மனுஷனை உதவிக்கு அழைப்பீர்களா? முரட்டு பிடிவாதத்தோடு பல ஆண்டுகளாய் கட்டிக் காப்பாற்றும் அவளின் தனிப்பட்ட உலகத்தில் இன்னொரு ஆளுக்கு அனுமதியில்லை தாம்பாளத் தட்டில் பத்திக்க பத்திக்க களி உருண்டைகளை உருட்டி வைப்பதற்கும், கறிக்குழம்பின் குழைவிற்கு, கொஞ்சம் ‘ஏந்தல்’ கத்திரிக்காயின் முழுமையைக் கொட்டி இறக்குவதற்குமான இடைவெளி ஒரு நிமிடத்திற்கும் குறைவானது. சமையல் நிறையும் போது அம்மாவின் முகம் வியர்வையாலும் பெருமிதத்தாலும் பிரகாசிக்கும். சிற்பத்தின் கண்திறந்த வினாடி சிற்பியின் முகம் பார்த்திருக்கிறீர்களா? அதுதான் அம்மாவின் அப்போதைய முகம். தட்டில் களியின் மேடு மறையும் வரை கறிக்ழுழம்பால் நிரப்புவாள். ஒரு மழைக்கால மத்தியானத்திலோ, வெய்யிலேறிய பகல் நேரத்திலோ நீங்கள் ஒரு முறை களியையும், கறிக்குழம்பையும் சாப்பிட்டுவிட்டால் போதும். வட தமிழ்நாட்டின் ஒரே ஒரு உணவிற்கு முன் உலகின் மிகச்சிறந்த நூறு சுவையான உணவையாவது ஈட்டுகட்டிவிடலாம். இக்கேழ்வரகுக் களியோடு போட்டி போட்டுச் சேரும் இன்னொரு குழம்பு, கருவாட்டுக்குழம்பு அதற்கும் சேர்மானம் ஏந்தல் கத்திரிக்காய் தான். மொதகெண்டை, நெத்திலி, கெழங்கா, பலாப்பொடி என்ற விசித்திர பெயர்களால் எங்கள் மக்களால் செல்லங்களாக அழைக்கப்படும் இச்சிறு உலர் மீன்களின் ருசி கத்திரிக்காய்களோடு குழையும் போது அது உலகில் யாருக்கும் கிட்டாத தனி ருசியை எங்களுக்குத் தரும். ஏர் ஓட்டியோ, அண்டை கழித்தோ, நாற்று பிடுங்கியோ, மத்தியானப் பசி குடலைப் பிடுங்கும்போது நீரோடும் வாய்க்காலில் குந்தி எங்கள் சம்சாரிகள் குண்டாஞ்சோற்றை, கருவாட்டுக் குழம்போடு சேர்த்துப் பிசைந்து உள்ளே தள்ளுவதை என் சிறுவயதில் வாய் பிளந்து நின்று பார்த்திருக்கிறேன். அம்மாவின் ருசியை அவள் எங்கிருந்து அறிந்து கொண்டாள் என்பதறிய அவள் இறக்கும்வரை கேட்டுப் பார்த்தேன். ஒரு பெருமிதப் புன்னகை. அவ்வளவு மட்டுந்தான். ஆட்டுக்கால் சூப் வைத்து, பத்திக்க பத்திக்க சொம்பு, சொம்பாய் வீட்டிலிருப்பவருக்குத் தரப்படும். சொல்லி வைத்தாற்போல் என் தட்டில் மட்டும் இரண்டு மூன்று கால் துண்டுகள் அமிழ்ந்து கிடக்கும். கை துழாவாலில் கால் தட்டுப்படும்போது அப்போதுதான் முதன் முதலாய் பார்ப்பது போல நன்றியின் பொருட்டு அம்மாவை ஒருமுறை பார்த்துக் கொள்வேன். இரவு முழுக்க ரா அடுப்பில் பூக்க வைக்கப்பட்ட ஆட்டின் கால்கள், அதனோடே சேர்த்து வேறொரு பாத்திரத்தில் ஊற வைக்கப்பட்ட மொச்சைக்கொட்டைகளோடு சேரும் சேர்மானம், எல்லா மனிதர்களுக்கும் கை வரம் பெறாத பெரும் வரம். அம்மா வரம் வாங்கி வந்திருந்தாள். ஆக, ஆட்டுக்கால், மொச்சை சேர்த்து செய்யப்பட்ட குழம்பு, சோற்றுக்கும், தோசைக்கும் என பிரத்தியேகமாய் செய்யப்பட்டவை. ஒரு போதும் நாம் அவரசப்பட்டு அதனோடு இட்லியையோ, சப்பாத்தியையோ சேர்த்து அவமானப்படுத்திவிடக் கூடாது. தான் இறப்பதற்கு ஆறுமாதத்திற்கும் முன் வீட்டிற்கு வந்த எழுத்தாளர். ஜெயகாந்தன் கேட்டார். ஷைலஜா, களிக்கு கூட தொட்டுக்க எது மிகச்சிறந்த சேர்மானம்? கறிக்குழம்பு கத்திரிக்கா, கருவாட்டுக் குழம்பு இல்லை என்பது போல உதடு சுழித்தவரிடம் ஒரு நிமிடம் அதை நீடிக்கவிடாமல், பண்ணைக்கீரை ஜே.கே. என்ற போது சட்டென மலர்ந்து ‘அது’ என அவர் இடிபோல் சிரித்தது இப்போதும் நினைவிருக்கிறது. பண்ணைக் கீரையென்றால்? எங்க ஊர் கொல்லைமேடுகளில் விதைக்கப்படும் வானம் பார்த்த விதைகளில் மானாவாரி மல்லாட்டை, கம்பு, கேழ்வரகு, எள்ளு, கொள்ளு, உளுந்து, துவரையென பட்டியல் நீளும். அதன் துளிர்த்தலுக்கும் முன் ஆறேழு பேர்களில் எங்களால் அடையாளப்படுத்தப்படும் இக்கீரைகள் முளைக்கும். அதன் ஊட்டம், முதன்மைப் பயிரைப் பின்னுக்குத் தள்ளிவிடும். மல்லாட்டைக்குக் களைவெட்டிக் கொண்டே எங்கள் பெண்கள் முன் மடியில் இக்கீரைகளை ஆய்ந்து போடுவார்கள். சிறுவயது நடுவயதுப் பெண்களின் மடிகளை விட ஆயாக்களின் மடிகளில் இருமடங்கு கீரை நிறையும். அக்கீரையைக் கடைந்து வடகம் போட்டுத் தாளித்தால் எட்டூரு பகையாளியும் நம் பங்காளியாகி ஒரு கிண்ணக் குழம்புக்காக வீட்டுவாசலில் காத்திருப்பார்கள். என் ‘நீர்’ கதையில் நான் பங்குக்கறிக் குழம்பைப் பற்றி சொல்லியிருப்பேன். பெரும்பாலும் பங்குக்கறி அகாலத்தில்தான் பங்கு பிரிக்கப்படும். விபத்திலோ, குள்ளநரியின் கவ்வலிலோ அடிப்படும் ஆட்டை ஒரு கயிற்றால் மரத்தில் தலைகீழாய் கட்டித் தொங்கவிட்டு, அதன் தோல் நீக்கி, குடலெடுத்து, ஈரல் பிரித்து, பிச்சியை நீக்கி அது ஒரு அறுவை சிகிச்சை நிபுணனுக்கும் கைவராது மக்கா, ஆட்டின் எடைக்கு ஏற்ப பத்தோ, இருபதோ பங்கு பிரியல் நடக்கும். பங்குக்கறியின் சிறப்பே ஆட்டின் எல்லா உறுப்புகளும் சம விகிதத்தில் இருப்பதுதான். பிரிக்கும் கைகளில் நீரள்ளி கறிக்குவியலை உருட்டும் லாவகம், ஒரு கிரிகெட் மேட்சில் ஸ்பின் பௌலராலும் சாத்தியப்படாதது. பங்குபிரித்து முடித்தவுடன், பிரித்தவன் கண்கள் கறி உருண்டையின் மீது நிதானமாக நகரும். மேடு பள்ளங்கள் இட்டு நிரப்பப்படும். தங்கம் அளக்கும் தராசில் நிறுத்தாலும் எடை கூடுதல் குறைச்சலாக இருக்காது. அகாலத்தில் கதவு தட்டப்பட்டு கறி கைமாறும் அந்நொடியே, அது எத்தனை ராத்திரியெனினும் நாம் சமைக்கத் தொடங்கிவிட வேண்டும். நம் தாமதம், பங்குக் கறியின் கவுரதைக்கு இடப்படும் சவால். நீங்கள் கறியை ப்ரிஜீக்குள்ளோ, ப்ரீசருக்குள்ளோ வைத்தால் அது தன் ருசியை ஒரு நத்தையின் உடலைப்போல உள் நோக்கி உறிஞ்சிக் கொள்ளும். சுடுசோறும், பங்குக்கறிக் குழம்பும் பின்னிரவுகளுக்கு உகந்தவை. இதை திருட்டுக்கறி, களவாட்டு கறி என சொல்வது ஆடுகளை அவமானப்படுத்தும் சொற்கள். குழம்பு கொதித்தடங்கியதும், சுடுசோற்றோடு, தூங்கிக் கொண்டிருக்கும் வீட்டாட்களின் முகத்தில் தண்ணி தெளித்து எழுப்பி சோற்றுத்தட்டை நீட்டிப் பாருங்கள், பிறகு அவர்கள் காலத்திற்கும் ருசியின் அடிமைகள். நாம் சமைப்பதற்கு உலோக பாத்திரங்களையோ, மண் சட்டிகளையோ மட்டுந்தானே சார்த்திருக்க வேண்டியிருக்கிறது? அதெல்லாம் இல்லை. அடிப்பட்ட ஆடோ, மாடோ, மானோ மரத்தில் கட்டித் தொங்கவிடப்பட்டு கறி பிரிக்கப்படும். எலும்பையும், சதைகளையும் பிரித்தெடுத்து ஆணிணஞுடூஞுண்ண் என்ற அவமானத்தை அவ்விலங்குகளுக்கு கிராமத்து ஆட்கள் ஒரு போதும் தருவதில்லை. ஆக, சதையோடும், எலும்போடும் ஒரு அன்னக்கூடையிலோ, ஈச்சங் கூடையிலோ கழுவி அலசப்பட்டு கறி கொட்டப்படும். மசாலா சேர்த்து பிளாஸ்டிக் பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு கடைகளில் தொங்கும் பிராண்டட் மசாலாத்தூள் எங்கள் நாட்டு உணவுக்கு எதிரானவை. காய்ந்த மிளகாயும், தனியாவும், கொஞ்சம் மஞ்சளும் சேர்த்து பதமாக உலர்த்தியெடுக்கப்பட்டு அரைத்தெடுக்கப்படும் மிளகாய் சாந்து, கூட கொஞ்சம் கல் உப்பு, சரியாக நீர் கலந்து கறியில் இச்சாற்றைப் பிரட்டி எடுக்கப்பட்டு அன்னக்கூடையிலேயே சில மணிநேரம் ஊற வைக்க வேண்டும். கறி நிறைக்கப்பட்ட அன்னக்கூடையைத் தூக்கிக்கொண்டு ஒரு சுடு பாறைக்குப் போய் விடவேண்டும். கழுவி முடிக்கப்பட்ட பாறையில் காய்ந்த விறகையும் சுள்ளிகளையும் கொண்டு ஆனமட்டும் எரியூட்ட வேண்டும். இப்போது கற்பாறையே நெருப்புப் பிழம்பாக மாறிவிடும். ஊற வைக்கப்பட்ட கறித்துண்டுகளை எடுத்து பாறையில் வீச வேண்டும். நீளமான மூங்கில்க் குச்சிகளால் அவைகளை பிரட்டி விட வேண்டும். வெந்ததும் வேகாததும் தீய்ந்ததுமாய் கிடைக்கும் பொன் வருவல் துண்டங்களை மெதுமெதுவாய் சூட்டில் வாட்டி ஒன்று போல ஆக்கி எடுத்து, ஏதாவதொரு பெரு மரத்தடியில் போத்துவா சாராயம் நிரப்பப்பட்ட குவளைக்குப் பக்கத்தில் இப்பொன்னிற துண்டங்களை அடுக்கி வைத்து... மது விலக்கு இல்லையெனினும் இதற்கு மேல் இதை எழுதி விட முடியாது. எங்கள் ஊர் ஏரிகளில் பிடிபடும் சிறு மீன்களில் கெளுத்தியும் குறவையும் உளுவையும்தான் ருசியானவை. கெளுத்தி என்றாலே அது கைவிரல் கனத்துக்கும் சற்று குறைவானதுதான். பெரும்பாலும் எல்லா கெளுத்தியுமே சினையுற்றிருக்கும். அம்மா அவைகளை செனக்கெளுத்தி என கையிலெடுத்துக் காண்பிப்பாள். முட்டைகளாலான அதன் அதீத ருசி ஏழேழு ஜென்மத்துக்கும் கிட்டாத ஒன்று. நேற்றிரவே மண் சட்டியில் வைக்கப்பட்ட குழம்பில் இரவெல்லாம் மீனூறும். மூட்டப்பட்ட விறகடுப்பில் ஒரு சிறு இசை லயத்தோடு தோசை வார்க்கப்படும். குழிவிழுந்த தோசைகளை இம்மீன் குழம்பு கொண்டு மூடாக்கு போட்டுக் காத்திருந்து சாப்பிடு மகனே, வாழ்ந்ததின் ருசியை முழுவதும் உணரலாம். கோழிகளால் நிறைந்திருக்கும் வீட்டின் சுற்றுப்புரமே எனக்கும் வாய்த்த காலம் அது. எத்தனை நள்ளிரவிலும் கோணங்கியையும், எஸ். ராமகிருஷ்ணனையும் தெருமுக்கில் பார்க்கும் நேரம், அது எத்தனை அகலமாயிருப்பினும் அம்மா ரெண்டு கோழிகளின் கழுத்திற்கு கத்தியைக் கொண்டு போவாள். இப்போது போல நாட்டுக்கோழி, பிராய்லர் கோழி என்ற வகைபாடு அப்போதில்லை. கோழி என்றாலே அதுவீட்டில் வளர்க்கப்பட்டு பக்கத்து வீட்டுக்கு அத்துமீறி நுழைந்து ஊர் சண்டையை ஒட்டுமொத்தமாக இழுத்துக் கொண்டுவரும் போக்கிரிக் கோழிகள்தான். அறுக்கப்பட்ட கோழிகளை கொதிநீரில் குளிப்பாட்டி மஞ்சள் தடவி துண்டம் போட்டு, அம்மா அதைக் கூட்டுகிற அழகே அருகிலிருந்து பார்க்கும் ஒருவனின் மன உறுதியைக் குலைக்கும். குழம்பு கொதித்தடங்கும் போது, லேசாக குழம்புசட்டியின் வட்டத்திற்கு நல்லெண்ணெயைக் காட்டுவாள் அது சுவைகூட்டும், ஓரத்தில் எண்ணெய் மிதக்கும். அது இன்னும் கறியின் கவிச்சியை சுத்தமாக இல்லாமல் செய்துவிடும் என அம்மா யாருக்கோ வகுப்பெடுத்தது காதில் இப்போதும் கேட்கிறது. இதெல்லாம் ஒன்றுமில்லை. கேழ்வரகும், கம்பும் சரி சமமாய் சேர்த்து உரலில் இடிக்கப்பட்ட மாவை இரவு அம்மா அமிர்தத்தை கரைப்பது போல கைகொண்டு கரைத்து, ஒரு வெள்ளைத் துணியால் வேடு கட்டிவைத்து உறியில் தொங்கவிடுவாள். அது இரவெல்லாம் புளித்து காலையில் நுரைத்து இதுவரை மனிதகுலம் கண்டிராத ஒரு அதீத ருசியைத் தந்துவிடும் முனைப்போடு வீடெல்லாம் தன் மணம் பரப்பும். நீர்ஊற்றி கரைக்கப்பட்ட கூழில் பச்சைமல்லாட்டை பயறுகளை உறித்துப்போட்டு ரெண்டு சொம்பு குடித்துவிட்டு அதோடு செத்துபோகலாம். நிறைவான வாழ்விற்கு அது ஒன்று போதாதா மானிடா!
தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான இந்தோனேசியா ரிங் ஆப் ஃபயர் என்ற பகுதியில் அமைந்துள்ளது. எனவே, இங்கு நிலநடுக்கம், எரிமலை வெடிப்பு போன்ற நிகழ்வு அடிக்கடி ஏற்படும். உலகில் வேறு எந்த பகுதிகளைக் காட்டிலும் இந்த ரிங் ஆப் ஃபயர் பகுதியில் தான் அதிகப்படியான நிலநடுக்கம் ஏற்படும். இந்நிலையில், தற்போது அங்கு மோசமான நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டு உள்ளது. இந்தோனேசியாவின் மேற்கு ஜாவா மாகாணத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.6 ரிக்டர் பதிவாகி உள்ளது. நில நடுக்கம் ஏற்பட்டபோது, மக்கள் பதறியடித்துக்கொண்டு பீதியுடன் வீதிகளுக்கு ஓடி வந்தனர். பலர் திறந்தவெளிகளுக்கும், மைதானங்களுக்கும் பதற்றத்துடன், அலறியடித்துக்கொண்டு ஓடினர். இந்த நிலநடுக்கத்தில் சுமார் 46 பேர் பலியாகி உள்ளனர். மேலும், 700-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது. பெங்குலு என்ற பகுதியில் இருந்து தென்மேற்கே 202 கிலோமீட்டர் தொலைவில் 25 கிலோமீட்டர் ஆழத்தில் முதலில் நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இந்நிலையில் தற்போதைய நிலவரப்படி நிலநடுக்கம் காரணமாக 162 பேர் பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. நில நடுக்கம் காரணமாக ஏராளமான வீடுகள் மற்றும் கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இறந்தவர்களின் உடல்களும் மீட்கப்பட்டு வருகின்றன. மீட்புக் குழுக்களுடன் பொதுமக்களும் இணைந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தீட்சிதப் பார்ப்பனக் கும்பலின் திரைமறைவுத் தில்லுமுல்லுகள், நீதிமன்றத் தடையாணைகள் ஆகிய அனைத்தையும் மீறி முன்னேறிக் கொண்டிருக்கிறது சிற்றம்பல மேடையில் தமிழ் முழங்கும் போராட்டம். ""சிற்றம்பல மேடையில் தமிழ் பாடலாம்'' என்ற இந்து அறநிலையத்துறை ஆணையரின் உத்தரவுக்கு எதிராக, தமிழக அரசிடம் மேல்முறையீடு செய்திருக்கிறார்கள் தீட்சிதர்கள். ஆணை கிடைத்த மறுகணமே பாடத் தயாராகக் காத்து நிற்கிறார் முதியவர் ஆறுமுகசாமி. நீதிமன்றத்தில் மீண்டும் தடையாணை வாங்கத் தயாராக இருக்கிறார்கள் தீட்சிதர்கள். இந்த நெடிய போராட்டத்தின் இறுதிக் கட்டத்தைக் குறிக்கும் விதமாக ""தில்லைக் கோயிலில் தமிழ் முழங்குவோம்! தீட்சிதர் சொத்தல்ல தில்லைக் கோயில் கோயிலை அரசுக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவோம்!'' என்ற முழக்கங்களின் கீழ் மனித உரிமைப் பாதுகாப்பு மையம் சனவரி 26 அன்று சிதம்பரத்தில் மாபெரும் பொதுக்கூட்டம் ஒன்றை நடத்தியது. கூட்டத்தின் அவசியத்தையும், இதுநாள் வரை நடத்தப்பட்ட போராட்டங்களை விளக்கியும் தலைமையுரை ஆற்றினார், மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்குரைஞர் இராஜு. ""தீட்சிதர்களின் எடுபிடிகளாகச் செயல்படும் சிதம்பரம் போலீசு இனி ஆறுமுகசாமியைக் கைது செய்தால், அங்கே தமிழ் ஒலிக்கும் வரை மக்கள் கோயிலை விட்டு அகலக் கூடாது'' என்று மக்களுக்கு அறைகூவல் விடுத்தார். ""பூணூலும் குடுமியும் அறுபடாமல் இருக்க வேண்டுமானால், தமிழ் பாடுவதைத் தடுக்காதே'' என்று தீட்சிதர்களை எச்சரித்தார், முன்னாள் அறநிலையத்துறை அமைச்சர் வி.வி.சாமிநாதன். ""ஏமாளி நந்தன் எரிக்கப்பட்ட காலம் மலையேறி விட்டது. அந்த நந்தன் நுழைந்த தெற்கு வாயிலைத் தகர்க்காமல் ஓயமாட்டோம்'' என்றார் விடு தலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட் டச் செயலாளர் காவியச் செல்வன். ""ஒரு மனித உரிமை அமைப்பு தமிழுக்காகப் போராடிக் கொண்டிருக்கும்போது, தமிழ் அமைப்புகள் என்று கூறிக் கொள்வோர் முகத்துதியில் மூழ் கிக் கிடக்கிறார்கள்'' என்று சாடினார் கடலூர் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் பேராசிரியர் இராச.குழந்தைவேலனார். பு.ஜ.தொ.மு.வின் மாவட்டச் செயலர் காதர் பாஷா, ""இந்தப் போராட்டம் இறுதி வெற்றி பெறும் வரை நாங்கள் முன்னணியில் இருப்போம்'' என்று வலியுறுத்தினார். ""இது வெறும் ஆத்திகர் பிரச்சினை அல்ல, தமிழ் உரிமை குறித்த பிரச்சினை என்பதால்தான் நாத்திகர்களும் களத்தில் முன் நிற்கிறோம்'' என்றார் பகுத்தறிவாளர் கழகத்தின் மாநில இணைச்செயலர் பேரா.பு.ச.இளங்கோவன். சிறப்புரையாற்றிய ம.க.இ.க. பொதுச் செயலர் மருதையன், ""தில்லைக் கோயிலில் தமிழ் அரங்கேறுவது மட்டுமன்று, தீட்சிதர்கள் வெளியேறவும் வேண்டும். அதுவரை ஓயமாட்டோம்'' என்றார். இந்தக் கோயிலுக்குச் சொந்தம் கொண்டாட அவர்களிடம் துரும்பளவு ஆதாரம் கூட இல்லை என்பதை நிறுவியதுடன், தீட்சிதர்களின் தீண்டாமைக்கு அரசியல் சட்டம் காவல் நிற்பதையும் சுட்டிக் காட்டினார். பெரிய புராணத்திலிருந்தும், தேவாரம், திருவாசகத்திலிருந்தும் மேற்கோள் காட்டி தீட்சிதர்களின் பார்ப்பனப் புரட்டுகளை அம்பலப்படுத்தினார் பேராசிரியர் பெரியார்தாசன். ""பூசலார் நாயனார் போல மானசீகமாகத் தமிழ் பாடச் சொல்லும் திமிர் பிடித்த தீட்சிதப் பார்ப்பனர்களே, கண்ணப்ப நாயனார் போல பன்றிக் கறியைப் படையல் வைக்க வருகிறோம், அல்லது சாக்கிய நாயனார் போல இறைவனைக் கல்லெறிந்து பூசிக்க வருகிறோம். நீங்கள் தயாரா?'' என்று எள்ளி நகையாடினார். வழிபாட்டுரிமை என்ற ஜனநாயக உரிமைக்காகக் குரல் கொடுக்கும்போது அந்தக் குரல் பார்ப்பன எதிர்ப்பையும், சுயமரியாதையையும், நாத்திகத்தையும் தவிர்க்கவியலாமல் ஒலித்துத்தான் தீரும் என்பதைப் பக்தர்களுக்கு மிகவும் இயல்பாக உணர்த்தியது பெரியார்தாசனின் உரை. அந்த நாத்திகரின் உரையை மேடையில் அமர்ந்து ரசித்துச் சிரித்தபடியே கேட்டுக் கொண்டிருந்தார் சிவனடியார் ஆறுமுகசாமி. நூற்றாண்டுகளாகத் தில்லையைக் கவ்வியிருக்கும் சாதிஇருள் கலைந்து, விடியப்போகும் நேரம் நெருங்கிவிட்டது என்ற நம்பிக்கையை பெற்றார்கள் மக்கள்.
சிறிலங்காவுக்கு 10 ஆயிரம் ஏவுகணைகள் விற்பனை: ஸ்லோவோக்கியாவுக்கு ஆயுத வர்த்தக கண்காணிப்புக் குழு எதிர்ப்பு சிறிலங்காவுக்கு 10,000 இராணுவ ஏவுகணைகளை ஸ்லோவோக்கியா விற்பனை செய்துள்ளதாக "உலகப் பாதுகாப்பு" அமைப்பின் ஆயுத வர்த்தக கண்காணிப்புக் குழு எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. ஸ்லோவோக்கியாவின் இந்த செயற்பாடானது ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆயுத ஏற்றுமதி நடத்தை விதிமுறைகளை மீறியதாகும் என்றும் அந்த அமைப்பு சாடியுள்ளது. 25 ஆண்டுகளாக போர் நடந்து வரும் இலங்கையில் இந்த ஆயுதங்கள் அனைத்துமே பொதுமக்களுக்கு எதிராகத்தான் பயன்படுத்தப்பட உள்ளது என்றும் அது கவலை தெரிவித்துள்ளது. பொதுமக்களுக்கு எதிராக பயன்படுத்தக்கூடிய அபாயகரமான ஆயுதங்களை ஏற்றுமதி செய்வதற்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் நடத்தை விதிமுறைகள் தடை செய்திருக்கின்றன என்று அந்த அமைப்பின் ஆயுத வர்த்தக கண்காணிப்புக் குழுத் தலைவர் றோய் ஸ்பிஸ்டெர் தெரிவித்துள்ளார். "எங்கு மனித உரிமை மீறல்கள் எங்கு மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறதோ" அல்லது " எங்கு பிராந்திய அமைதி மற்றும் பாதுகாப்பு சீர்குலைந்திருக்கிறதோ" அப்பகுதிகளுக்கு விற்பனை செய்யக்கூடாது என்று அந்த நடத்தை விதிமுறையில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கை இன மோதல்களில் சிறிலங்கா இராணுவம் பயன்படுத்தும் ஆயுதங்களால் சில நேரங்களில் பொதுமக்கள் "பாரபட்சமின்றி" பாதிக்கப்படுகின்றனர் என்று அறிக்கைகள் வெளியாகியிருப்பதையும் றோய் ஸ்பிஸ்டெர் சுட்டிக்காட்டியுள்ளார். "சிறிலங்கா அரசாங்கமானது போர் நடைபெறும் பகுதிகளுக்கு பெரும்பாலான சுயாதீன கண்காணிப்பாளர்கள் பயணிக்க தடைவிதிக்கப்பட்டிருப்பதால் முழு உண்மை அறிய முடியாமல் என்றும் அவர் கூறியுள்ளார். இது தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் கருத்து தெரிவிக்கவில்லை. ஆனால் வெளி விவகாரங்களுக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆணையாளர் பெனிட்டா பெரிர்ரோவின் பேச்சாளர் கிறிஸ்டினா ஹோக்மான், ஒவ்வொரு ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடும் எப்படி நடத்தை விதிமுறைகளை செயற்படுத்துகிறது என்று கூறியுள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆயுத விற்பனை தொடர்பிலான நடத்தை விதிகளை மீறவில்லை என்று ஸ்லோவோக்கிய பொருண்மிய அமைச்சு கூறியுள்ளது. நன்றி: புதினம்.காம் Posted by அரியாங்குப்பத்தார் at 11:51 PM No comments: Labels: தமிழீழம் Saturday, April 5, 2008 கர்நாடகத்தின் இனவெறித் தாக்குதல்! கர்நாடகத்தின் இனவெறித் தாக்குதல் ஏன்? ஒகேனக்கல் குடிநீர்த் திட்டம் தமிழ்நாட்டின் தர்மபுரி மற்றும் கிருட்டிணகிரி மாவட்ட மக்களினது குடிநீர்த் தேவையை நிறைவு செய்வதற்காக முன்வைக்கப்பட்ட திட்டம் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டமாகும். சாதாரணமாக குடிடிநீரில் லிட்டருக்கு 1.5 மில்லி கிராம் அளவுக்குத்தான் அளவுக்குத்தான் ஃபுளோரைடு இருக்க வேண்டும். அதனைவிட அதிகமாக இருந்தால் அந்த நீர், குடிப்பதற்கு உகந்தது இல்லை. இந்த இரண்டு மாவட்டங்களில் உள்ள 80 ஒன்றியங்களில் கிடைக்கும் நிலத்தடி நீரில் ஃபுளோரைடின் அளவு, பரிந்துரைக்கப்பட்ட அளவைவிட அதிகமாக இருக்கிறது. அதாவது, ஒரு லீற்றர் நீருக்கு 8 மி.லி. முதல் 11 மி.லி. வரை இருக்கிறது. இந்த நீரைத் தொடர்ந்து குடிப்பவர்களை ஃபுளோரைசிஸ் தாக்குவது உறுதி. இதனால் இந்த மாவட்ட மக்களுக்கு உடனடியாக மாற்று நீராதாரம் வேண்டும். அதற்காகவே ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டம் உருவாக்கப்பட்டது. தர்மபுரி, கிருஷ்ணகிரி - இவை, தமிழகத்தின் முதன்மையான நீர்ப் பற்றாக்குறை உள்ள மாவட்டங்கள். ஆண்டின் 12 மாதங்களிலும் இங்கு வறட்சிதான். மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு மட்டும் தென்பெண்ணை ஆற்றிக் குறுக்கே கட்டப்பட்டுள்ள பஞ்சப்பள்ளி அணை நீரிலிருந்து தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது. 1980-களின் பிற்பகுதியில் ஒகேனக்கல் பகுதியில் உள்ள காவிரி ஆற்று நீரை வைத்து இந்த இரண்டு மாவட்டங்களுக்கும் குடிநீர் விநியோகிப்பது பற்றி யோசிக்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் நீராதாரம், காவிரி ஆறு. பிலிகுண்டுவில் இருந்து மேட்டூர் அணைக்குச் செல்லும் வழியில் ஒகேனக்கல் அருவிக்குச் சற்று மேலே சத்திரம் என்ற இடத்தில் காவிரி ஆற்றின் மேலோட்ட நீரில் இருந்து இதற்கான தண்ணீர் எடுக்கப்படும். 4 இயந்திரங்கள் மூலம் நிமிடத்திற்கு 1,18,000 லீற்றர் தண்ணீர் உறிஞ்சப்பட்டு அங்கிருந்து 6 கி.மீ. தூரத்தில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்திற்கு ஒரு மீட்டர் விட்டமுள்ள இரும்புக் குழாய்கள் மூலம் கொண்டு செல்லப்படும். இந்தச் சுத்திகரிப்பு நிலையம், சுமார் 12 ஏக்கர் நிலப்பரப்பில் அமையும். பிறகு அங்கிருந்து மீண்டும் இயந்திரங்கள் மூலம் தண்ணீர் உந்தப்பட்டு, இடைநிலை நிலையம் ஒன்றுக்கு அனுப்பப்படும். பிறகு மறுபடி இயந்திரங்கள் மூலம் உந்தப்பட்டு 3.5 கி.மீ. தொலைவில் உள்ள மடம் என்ற மேடான இடத்தில் உள்ள பிரதான குடிநீர்த் தொட்டியை அடையும். சுமார் 70 லட்சம் லிட்டர் தண்ணீரை இந்தத் தொட்டியில் தேக்க முடியும். இந்தத் தொட்டியிலிருந்து கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களின் அனைத்துப் பகுதிகளுக்கும் (ஓசூர் தவிர) புவியீர்ப்பு விசை மூலமாகவே தண்ணீர் விநியோகம் செய்யப்படும். ஓசூர் மற்றும் அதற்குச் செல்லும் வழியிலுள்ள பகுதிகள் மேடாக இருப்பதால் ஆங்காங்கே இடைநிலைத் தொட்டிகள் வைத்து, இயந்திரங்கள் மூலம் அத்தொட்டிகளில் தண்ணீர் தேக்கப்பட்டு விநியோகம் செய்யப்படும். இந்தத் திட்டத்திற்கு ரூ.1,334 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. மின்சாரம், விநியோகம், சுத்திகரிப்பு, பராமரிப்பு ஆகியவற்றுக்காக ஆண்டுக்கு ரூ.51.65 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தத் தொகையில் 85 சதவிகிதத்தைச் அனைத்துலக ஒத்துழைப்பிற்கான ஜப்பான் வங்கி கடனாக வழங்குகிறது. இந்தத் திட்டத்தின் மூலம் நகராட்சிப் பகுதிகளில் வசிக்கும் நபர்கள் ஒவ்வொருவருக்கும் தினமும் 90 லீற்றரும் பேரூராட்சிப் பகுதிகளில் வசிப்பவர்களுக்கு 70 லீற்றரும் கிராமக் குடியிருப்புக்களில் வசிப்பவருக்கு 40 லீற்றரும் கிடைக்கும். இதன் மூலம் 30 லட்சம் பேர்கள் பயன் அடைவார்கள். இந்தத் திட்டத்தால் காவிரி நதி நீரைப் பயன்படுத்தி விவசாயம் செய்பவர்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது. காவிரி ஆற்றில் ஆண்டுக்கு 192 டிஎம்சி தண்ணீர், ஒகேனக்கலைக் கடந்து செல்கிறது. இதில் வெறும் 1.42 டி.எம்.சி. தண்ணீரே இந்தத் திட்டத்திற்காக எடுக்கப்படுகிறது. திட்டத்தின் கட்டுமானப் பணிகள் 2009 வாக்கில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2011 இல் குடிநீர் விநியோகம் தொடங்கலாம் என்று குடிநீர் வாரியம் எதிர்பார்க்கிறது. இத்திட்டத்துக்கு 1988 ஆம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் இந்தியப் பிரதமராக வாஜ்பாய் பதவி வகித்த காலத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்திய மத்திய அரசின் சுற்றுப் புறச் சூழல்- வனத்துறை- ஊரக வளர்ச்சித்துறை- நீர்வள ஆதாரத்துறை ஆகியவையும் 1988 ஆம் ஆண்டிலே அனுமதி அளித்தன. இந்நிலையில் கடந்த பெப்ரவரி 26 ஆம் நாள் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்துக்கு தமிழ்நாடு முதல்வர் கலைஞர் கருணாநிதி அடிக்கல் நாட்டினார். தமிழ்நாட்டுக்குரிய தமிழ்நாட்டுப் பகுதிக்கு வந்தடைகின்ற காவிரி நீரிலிருந்து தமிழ்நாட்டின் இரு மாவட்ட மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்காக தமிழ்நாடு அரசால் மேற்கொள்ளப்படுகிற திட்டம் இது. பிரச்சினையைத் தூண்டிய கர்நாடகம் ஆனால் இந்தத் திட்டத்திற்கும் எதற்குமே தொடர்பு இல்லாத கர்நாடகத்தின் பாரதீய ஜனதா கட்சியைச் சேர்ந்த முன்னாள் முதல்வரான எடியூரப்பா கடந்த மார்ச் 16 ஆம் நாள் ஒகேனக்கல்லுக்குச் சென்று கூட்டு குடிநீர் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம் நடத்தியதோடு மட்டுமல்லாமல் ஒகேனக்கல் எங்களுக்கு சொந்தம் என்றும் உரிமை கோரிவிட்டுச் சென்றார். அதனைத் தொடர்ந்து இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்குக்கு தமிழ்நாடு முதல்வர் கருணாநிதி மார்ச் 17 ஆம் நாள் ஒகேனக்கல் கூட்டு குடிநீர்த் திட்டத்தின் நிலைமைகள் தொடர்பில் விளக்கக் கடிதம் அனுப்பினார். கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சி மற்றும் சிறிய சிறிய கன்னட அமைப்பினரும் தமிழ்நாட்டுக்கு எதிராக ஒகேனக்கல் தொடங்கி ஈரோடு, உதகமண்டலம் என பல பகுதிகளுக்கும் உரிமை கோரி அறிக்கைவிடுவதும் ஒகேனக்கல்லில் உள்ள கர்நாடகப் பகுதியில் நின்று கொண்டு ஆர்ப்பாட்டம் செய்வதுமான நடவடிக்கைகள் தொடர்ந்து இடம்பெற்றன. மேலும் இதன் உச்சகட்டமாக பெங்களுரில் உள்ள தமிழ்ச் சங்கம் மீது கன்னட வெறியர்கள் தாக்குதல் நடத்தினர். அதேபோல் பெங்களுரில் தமிழ்த் திரைப்படங்களை வெளியிட்ட திரை அரங்கங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. தமிழ்நாட்டுக்குச் சொந்தமான வாகனங்களும் அரசுப் பேருந்துகளும் அடித்து நொறுக்கப்பட்டன. இதனால் தமிழ்நாடு- கர்நாடகம் இடையேயான போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. பெங்களுரில் உள்ள "தினத்தந்தி" நாளிதழின் அலுவலகமும் நாசமாக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் மார்ச் 27 ஆம் நாள் கர்நாடகத்தின் நியாயமற்ற எதிர்ப்புக்குக் கண்டனம் தெரிவித்து அனைத்து அரசியல் கட்சிகளின் ஒப்புதல் கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதேபோல் தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் அனைத்துக் கட்சி தமிழின உணர்வாளர்கள் திரண்டு சென்று கன்னடர்கள் நடத்தி வரும் வணிக வளாகங்கள்- கன்னட சங்க அலுவலகங்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். கர்நாடகத்தின் நியாயமற்ற எதிர்ப்பைக் கண்டிக்கும் வகையில் தமிழகத்தில் செயற்படும் அனைத்து திரைப்படம் சார் சங்கங்களும் இணைந்து சென்னையில் இன்று வெள்ளிக்கிழமை மாபெரும் உண்ணாநிகழ்வுப் போராட்டத்தை நடத்தினர். தமிழகத்தின் பெரும்பாலான திரை நட்சத்திரங்கள் மற்றும் திரைப்படத்துறை சார்ந்தோர் உண்ணாநிலைப் போராட்ட நிகழ்வில் கலந்து கொண்டனர். உண்ணாநிலைப் போராட்ட நிகழ்வில் கலந்து கொண்டோரின் உரைகளில் தமிழ்த் தேசியத்தின் வீச்சு வெளிப்பட்டது. இயக்குநர்கள் சேரன், சீமான், நடிகர்கள் ராஜ்கிரண், செந்தில் உரையைத் தொடர்ந்து நடிகர் சத்தியராஜ் ஆவேசமாக ஆணித்தரமாக வெளிப்படையாக தன்னுடைய கருத்துகளைப் பதிவு செய்தார். நன்றி: புதினம்.காம் Posted by அரியாங்குப்பத்தார் at 2:52 AM No comments: Tuesday, April 1, 2008 ஈழத் தமிழர்களுக்கு இழைக்கப்படும் துன்பத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது: இந்தியப் பிரதமருக்கு பா.மக. நிறுவனர் இராமதாசு கடிதம் எங்கள் வாசற்படிக்கு அருகே தமிழர்களுக்கு இழைக்கப்படும் துன்பத்தை, நாங்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது என்று பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார். பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு நேற்று சனிக்கிழமை மருத்துவர் இராமதாஸ் எழுதிய கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: வேதனை மிகுந்த உள்ளத்துடன் நான் இக்கடிதத்தை எழுதுகிறேன். இலங்கைத் தீவில் வாழும், எங்கள் சகோதரர்களும், சகோதரிகளுமான, அப்பாவித் தமிழ் மக்களின் உயிர்களைக் காப்பாற்ற வேண்டியது உடனடித் தேவை என்பதே இக்கடிதத்தின் நோக்கம். இரக்கமற்ற இலங்கை அரசின் கொடுங்கரங்களில் அவர்கள் சொல்ல முடியாத துன்பங்களை அனுபவித்து வருகிறார்கள். தமிழர்களின் நியாயமான விருப்பங்களுக்கு இடமளிக்க இலங்கை அரசு மறுத்து வருகிறது. தமிழர்களை அடிமைப்படுத்துகிற, அழித்தொழிக்கிற திட்டத்தை மிகத் தீவிரமாக நிறைவேற்றி வருகிறது. இந்தியாவின் முன்முயற்சியில் உருவாக்கப்பட்ட 1987 ஆம் ஆண்டின் ராஜீவ் காந்தி - ஜெயவர்த்தன ஒப்பந்தம் இப்போது உயிரற்றுப் போய்விட்டது. நோர்வே நாட்டின் அமைதி முயற்சியில் உருவான போர் நிறுத்தத்திற்கு வழிவகுத்த 2002 ஆம் ஆண்டின் ரணில் விக்கிரமசிங்க - பிரபாகரன் ஒப்பந்தம், இலங்கை அரசால் இப்போது குப்பைக் கூடையில் போடப்பட்டுள்ளது. இந்த வகையில் இலங்கை அரசு வாக்குறுதிகளைக் காப்பாற்றத் தவறிய அரசாகிவிட்டது. அராஜக காட்டாட்சியாகி விட்டது. மனிதகுலத்துக்கே அது வெட்கக்கேடாகி விட்டது. தன் சொந்தத் தமிழ்க் குடிமக்களையே மிரட்டி நடுங்க வைக்கும் அரசாகி விட்டது. இந்தப் போர்வெறி நோக்கத்தில், இந்தியாவுக்கு எதிரான நாடுகளிடம் இருந்து அதிநவீன ஆயுதங்களை இலங்கை அரசு வாங்கிக் குவித்து வருகிறது. பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவு நிறுவனத்தின் முன்னாள் தலைவர்தான் இப்போது அந்நாட்டின் தூதுவராகக் கொழும்பில் இருக்கிறார். தன் போர்ப்படை நோக்கங்களுக்காக, இலங்கையில் காலூன்றுவதற்குப் பார்த்துக் கொண்டிருக்கும் இன்னொரு நாடு சீனா. இலங்கைக்கு சீனாவின் ஆயுதங்கள் சென்று கொண்டிருக்கின்றன. பயங்கரவாத எதிர்ப்புத் திட்டம் என்ற போர்வையில், இலங்கைக்கு ஆயுதங்களையும், வெடிப்பொருட்களையும், இலங்கைப் படைவீரர்களுக்கு பயிற்சியையும் அமெரிக்கா அளித்து வருகிறது. இலங்கையின் இந்த ஆயுதத் தொகுப்புக்கு, இந்திய அரசும் ஆயுதங்களை வழங்கி வருவதாக நாங்கள் அறிகிறோம். இந்த ஆயுதங்களை பயன்படுத்தி, இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக முழு மூச்சான போரை இலங்கை அரசு நடத்தி வருகிறது. இதன் இன்னொரு வெளிப்பாடாக, இந்தியக் கடல் எல்லைக்கு உள்ளே மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படை குறிவைத்துத் தாக்கி கொன்று வருகிறது. இந்தியா மட்டுமே அண்டை நாடு என்றிருக்கும் நிலையில், தேவையே இல்லாத நிலையில், சுப்பர் சொனிக் மிக் போர் விமானங்களை அண்மையில் இலங்கை வாங்கியிருப்பதாக அறிகிறோம். யாழ்ப்பாணத் தீபகற்பத்தில் ஆயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்பு, இப்போது ஏறக்குறைய தமிழ் மக்களே இல்லாத வெற்றிடம் ஆக்கப்பட்டுவிட்டது. கருகிய மனித உடல்கள், எரிக்கப்பட்ட பயிர்கள், தாவரங்கள், துப்பாக்கிக் குண்டுகள் துளைக்கப்பட்ட கட்டடங்கள், குண்டுகள் விழுந்ததால் ஏற்பட்ட குழிகள், இடிபாடுகள், சாலைப் பள்ளங்கள் ஆகியவைதான், 5 ஆயிரம் ஆண்டுக் கால தமிழ் மொழி, பண்பாட்டின் சின்னமாக விளங்கிய யாழ்ப்பாணத் தீபகற்பத்தில் இன்று எஞ்சியிருப்பவை. இது ஓர் எடுத்துக்காட்டுதான். தங்களின் இயற்கையான, மரபான சூழலில் தமிழ் மக்கள் செழித்து வாழ்ந்த திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, வவுனியா, மன்னார், புத்தளம் ஆகியவையும் இப்போது சாவும், அழிவும் மிகுந்த பகுதிகளாகிவிட்டன. 8 லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் தங்கள் தாயகத்தை விட்டு வெளியேறி, பாதுகாப்புத் தேடி வெளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்துள்ளனர். தமிழகத்தில் இலங்கையில் இருந்து வந்த ஒரு லட்சம் பேர் அகதிகளாக உள்ளனர். இலங்கை அரசின் தூண்டுதலால், அரசியல் உள்நோக்கத்துடன் மனித உரிமைகளை மீறி வருவோர், தொடர்ந்து கொலைகள் செய்வதிலும், ஆட்களைக் கடத்துவதிலும் ஈடுபட்டு வருகின்றனர். அமைதியை விரும்பும் அரசியல்வாதிகளைக் குறிவைத்துத் தாக்கி வருகின்றனர். இதுவரை தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 6 பேரை அவர்கள் படுகொலை செய்திருக்கிறார்கள். வெள்ளை நிற வான் ஆட்கடத்தல் என்று அழைக்கப்படும் ஆட்கடத்தல்கள் அரசின் உயர் தலைவர்களின் தூண்டுதலால் நடைபெறுகின்றன. இனச் சிக்கல் என்ற அரசியல் சிக்கலுக்குப் போர்ப்படை மூலம் தீர்வுகாண முயலும் இலங்கை அரசின் கொள்கைத் திட்டத்தின் ஒரு பகுதியே இந்தப் படுகொலைகளும், ஆட்கடத்தல்களும் ஆகும். தமிழர்களின் தாயகமான 20 ஆயிரம் சதுர கி.மீ. பகுதியை கைப்பற்ற வேண்டும், 50 லட்சம் மக்கள் தொகை கொண்ட தமிழர்களை அழிக்க வேண்டும், தமிழர்களை எவரேனும் எஞ்சியிருந்தால் அவர்களை அடிமைப்படுத்த வேண்டும், இலங்கைத் தீவு முழுவதையுமே சிங்களப் பெளத்தர்களின் நாடாக்க வேண்டும் என்பனவே இலங்கை அரசின் கொள்கைத்திட்டங்கள் ஆகும். இந்தியாவில் உள்ள 6 கோடி தமிழர்கள், பாக்கு நீரிணைக்கும், மன்னார் வளைகுடாவுக்கும் அப்பால், தங்கள் சொந்த சகோதரர்களும், சகோதரிகளும் அழிக்கப்படுவதை பார்த்துக் கொண்டு, பொறுத்திருக்க முடியாது. வரலாற்றுப் பெருமை வாய்ந்த கடலின் இருபுறத்திலும் வாழும் தமிழர்களுக்கு இடையிலான அன்பும், பாசமும், ஆதரவும் மிகவும் வலுவானவை, ஆழமாக வேரோடியவை. அன்புள்ள பிரதமர் அவர்களே, எங்கள் வாசற்படிக்கு அருகே தமிழர்களுக்கு இழைக்கப்படும் துன்பத்தை, நாங்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது. நாங்கள் மிகவும் கவலை அடைந்துள்ளோம். வரலாற்றில் அவர்கள் ஆழ்ந்த துன்பத்தில் இருக்கும் வேளையில், அவர்களைக் காப்பாற்றுவதற்கு நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். இப்போதே இந்தியா செயலாற்ற வேண்டும். போர் வெறியை நிறுத்துமாறு இலங்கை அரசை வலியுறுத்த வேண்டும். பேச்சுக்கான நடைமுறைகளை இலங்கை அரசு மீண்டும் தொடங்கச் செய்ய வேண்டும். பேச்சு நடைமுறைகளுக்கு ஏதேனும் பங்காற்றும்போது, தமிழகத்திலும், புதுவையிலும் உள்ள தமிழர்களின் வலுவான உணர்வுகளை இந்திய அரசு ஆழ்ந்த கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று அக்டிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வறட்சி பூமியான ராமநாதபுரத்தில் இருந்து வளர்ந்த நகரமான சென்னை வரை, உலக வெப்பமயமாதலுக்கு எதிராக மோட்டார் சைக்கிள் பிரசாரம் நடத்தியிருக்கிறது இளைஞர்கள் குழு ஒன்று. இந்தப் பயணம் குறித்த அனுபவங்களை நம்முடன் பகிர்ந்து கொண்டார் கண்ணன். ''பெருகி வரும் உலக வெப்பமயமாதலைத் தடுக்க நாமும் ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. அதன் வழியாக உருவானதுதான் இந்தப் பயணத் திட்டம். முதலில் நான் மட்டுமே பயணம் செல்லத் திட்டமிட்டிருந்தேன். இதனை அறிந்த எனது நண்பர்களும் என்னுடன் வர விரும்பினர். இந்தப் பிரசாரப் பயணத்தில் பழனிவேல், செந்தில்நாதன், சக்கரவர்த்தி, சதீஷ்குமார், விக்னேஷ்வரன், புவனேஷ், பழனிகுமார், சரவணன், தமிழரசன், பிரபு, ரவி என 12 பேர் பங்கெடுத்தனர். ஸ்ப்ளெண்டர் ப்ளஸ், பிளாட்டினா, சுஸ¨கி ஜி.எஸ், டிவிஎஸ் வீகோ உள்ளிட்ட ஏழு இரு சக்கர வாகனங்களில் எங்கள் பயணத்தைத் தொடங்கினோம். முதல் நாளில் திருச்சி வரை சென்ற நாங்கள், இடையில் உள்ள முக்கிய நகரங்களில் வெப்பமயமாதலின் பாதிப்புகள், அதனைத் தடுப்பதற்கு மரங்களை வளர்த்தல், நீர் வளம் பெருக்க வன வளத்தைக் காக்க வேண்டிய அவசியம் குறித்த துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தோம். மறுநாள் சென்னை சென்ற எங்கள் குழு கல்லூரிகள், மக்கள் கூடும் இடங்களுக்குச் சென்று எங்கள் பயணத்தின் நோக்கம் குறித்து விளக்கினோம். புதுவை முதல்வர் ரங்கசாமியும் எங்களை நேரில் சந்தித்து உற்சாகப்படுத்தினார். தொடர்ந்து நாகப்பட்டினம், வேளாங்கன்னி வழியாக 25-ம் தேதி ராமநாதபுரத்தை வந்தடைந்தோம்'' என பிரசாரப் பயணத்தை விளக்கினார். பயணக் குழுவைச் சேர்ந்த விக்னேஷ்வரன் பேசும்போது, '’எங்க டீம் லீடர் கண்ணன் சுற்றுச்சூழல் மீது அதீத ஆர்வம் கொண்டவர். கலிபோர்னியாவில் உள்ள பெர்க்லின் யுனிவர்சிட்டியில் சுற்றுச்சூழல் தொடர்பான ஆய்வை தொலைத் தொடர்புக் கல்வி மூலம் மேற்கொண்டுள்ளார். தான் ஒரு மாற்றுத் திறனாளியாக இருந்த போதிலும், வெப்பமயமாதலுக்கு எதிராகப் போராட தன்னந்தனியாகப் பயணம் மேற்கொள்ளத் துணிந்த அவரின் நம்பிக்கை எங்களையும் இதில் ஈடுபட வைத்தது. எங்கள் பயணக் குழு புதுச்சேரியை நோக்கிச் சென்றபோது, கண்ணனின் டிவிஎஸ் வீகோ பழுதடைந்து விட்டது. அதனைச் சரி செய்ய மெக்கானிக்கை அழைத்து வந்தோம். அதைச் சரி செய்த பின் பயணத்தைத் தொடங்க நினைத்தபோது, எங்களுக்கு உதவியாக வந்த இண்டிகா கார் பஞ்சராகி விட்டது. ஒரு வழியாக அதனைச் சரி செய்து புதுச்சேரியை அடைந்தோம்!'' என்றார். பயணத்தின்போது இப்படிப் பல சங்கடங்களைச் சந்தித்தாலும், நல்ல விஷயத்துக்காக நண்பர்களோடு சேர்ந்து ஊர்வலம் வந்தது உற்சாகமளிப்பதாகச் சொன்னார் கண்ணன்!
மயில் கடவுள் முருகனின் வாகனம் என்பதால், அதன் இறகை புனிதமானதாக கருதி, பலரும் தங்களது வீட்டு பூஜை அறையில் வைத்திருப்போம். மயில் இறகு என்று கேட்டதும், சிறு வயதில் மயில் இறகை புத்தகத்தினுள் வைத்து, அது குட்டி போடும் என்று நம்பி பலர் வைத்திருந்தது ஞாபகத்திற்கு வரும். இந்த மயில் இறகு பல தோஷங்களை நீக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். மூன்று மயில் இறகை ஒன்று சேர்த்து கருப்பு நிற கயிற்றினால் கட்டி, சிறிது பாக்கை நீரில் போட்டு, அந்நீரைத் தெளித்தவாறு ‘ஓம் சனீஸ்வராய நமஹ’ என்று தினமும் 21 முறை உச்சரிக்க வேண்டும் இவ்வாறு செய்தால் சனி தோஷம் நீங்கும். வீட்டின் வாஸ்து தோஷத்தை நீக்க எட்டு மயில் இறகை ஒன்று சேர்த்து, ஒரு வெள்ளை நிற கயிற்றினால் கட்டி, பூஜை அறையில் வைத்து ‘ஓம் சோமாய நமஹ’ என்ற மந்திரத்தை உச்சரித்து வர வேண்டும். நகை மற்றும் பணம் வைக்கும் அலமாரியில் ஒரு மயில் இறகை வைக்க வேண்டும். இதனால் அந்த அலமாரியில் செல்வம் அதிகம் சேர்வதோடு, நிலைக்கவும் செய்யும். மயில் இறகை வீட்டின் முன் வைப்பதால், வீட்டினுள் எதிர்மறை ஆற்றல்கள் நுழைவதைத் தடுப்பதோடு, வீட்டில் இருக்கும் எதிர்மறை ஆற்றல்களும் நீங்கும். ஒருவர் அலுவலகத்தில் தாம் அமரும் இடத்தில் மயில் இறகை வைப்பதன் மூலம், அவரது இடத்தின் அழகு மேம்படுவதோடு, உற்பத்தி திறனும் அதிகரிக்குமாம். திருமணமான தம்பதியர்கள், தங்களின் படுக்கை அறையில் மயில் இறகை வைத்திருப்பதன் மூலம், தம்பதியருக்குள் இருக்கும் பிரச்சனைகள் நீங்கி, அன்யோன்யம் மற்றும் புரிதல் அதிகரிக்கும்.
Home » sport » ஆர்.ஆர் vs சி.எஸ்.கே கணிக்கப்பட்டுள்ளது 11 ராஜஸ்தான் வலுவான ஆட்டம் xi சென்னை சூப்பர் கிங்ஸுக்கு சவால் விடும் sport ஆர்.ஆர் vs சி.எஸ்.கே கணிக்கப்பட்டுள்ளது 11 ராஜஸ்தான் வலுவான ஆட்டம் xi சென்னை சூப்பர் கிங்ஸுக்கு சவால் விடும் செப்டம்பர் 22, 2020 0 SaveSavedRemoved 0 புது தில்லி இந்த மாலை போட்டி மிகவும் வலுவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒருபுறம், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ஒரு வெற்றியுடன் தொடங்கும், மறுபுறம் முதல் போட்டியில் விளையாடப் போகும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் இருக்கும். நல்ல செய்தி என்னவென்றால், ராஜஸ்தான் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் பொருத்தமாக இருக்கிறார், இன்றைய போட்டியில் தரையிறங்குவதற்கான வாய்ப்பு உள்ளது. இது தோனி மற்றும் ஸ்மித்தின் கூர்மையான எண்ணம் கொண்ட கேப்டனின் போராக இருக்கும். சென்னையைச் சேர்ந்த அணி டாம் குர்ரானாகவும், ராஜஸ்தானின் அணி சாம் குர்ரனாகவும் உள்ளது. விளையாடும் பதினொன்றில் இருவருக்கும் இடம் கிடைத்தால், சகோதரர்கள் சண்டையிடுவதைக் காணலாம். சென்னை கேப்டன் தனது பதினொரு ஆட்டத்தில் அதிக மாற்றங்களைச் செய்ததாக அறியப்படவில்லை, எனவே அவர் மும்பைக்கு எதிராக விளையாடிய அணிக்கு எதிராக ராஜஸ்தான் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ராஜஸ்தான் தனது முதல் போட்டியை வலுவான ஆட்டமிழந்த லெவன் மூலம் களமிறக்க திட்டமிட்டுள்ளது. அணியில் ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் மற்றும் பேட்ஸ்மேன் ஜோஸ் பட்லர் இல்லை, ஆனால் இது இருந்தபோதிலும், அணி மிகவும் வலுவாக இருக்கிறது. ஐபிஎல் 2020 இன் முழு பாதுகாப்புக்கு கிளிக் செய்க அனுபவம் வாய்ந்த ராபின் உத்தப்பா, இளம் தொடக்க ஆட்டக்காரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோருடன் அணிக்கு உறுதியான மற்றும் விரைவான தொடக்கத்தை பெறுவார். கேப்டன் ஸ்மித்துடன் நடுத்தர வரிசையில் வெடிக்கும் பேட்ஸ்மேன் டேவிட் மில்லர் மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோர் வருவார்கள். பந்துவீச்சு அணிக்கு மிகவும் வலுவானது, ஜோஃப்ரா ஆர்ச்சர் மற்றும் ஜெய்தேவ் உனட்கட், வருண் ஆரோன் அல்லது அங்கித் ராஜ்புத் ஆகியோருக்கு ஒரு வாய்ப்பு வழங்கப்படலாம். ஆல்ரவுண்டர்களாக சாம் குர்ரன் மற்றும் ஸ்ரேயாஸ் கோபால் ஆகியோர் அணியில் இருப்பார்கள். சென்னை அணி தனது வென்ற அணியுடன் தரையிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மூத்த சுரேஷ் ரெய்னாவின் இடத்திற்கு அம்பதி ராயுடு அமைந்தபோது ஸ்பின்னர் பியூஷ் சாவ்லா ஹர்பஜனைக் குறைக்க விடவில்லை. மும்பைக்கு எதிரான அதிஷி பேட்ஸ்மேனுக்கு எதிரான போட்டியை அவர் திருப்பினார். வேகப்பந்து வீச்சில் இளைஞர்களான தீபக் சாஹர், சாம் குர்ரன் ஆகியோர் இடம்பெறுவார்கள். ராஜஸ்தானின் லெவன் விளையாடுவது சாத்தியம் யஷஸ்வி ஜெய்ஸ்வால், ராபின் உத்தப்பா, ஸ்டீவ் ஸ்மித் (கேப்டன்), டேவிட் மில்லர், சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), டாம் குர்ரான், ரியான் பராக், ஸ்ரேயாஸ் கோபால், ஜோஃப்ரா ஆர்ச்சர், ஜெய்தேவ் உனட்கட், அங்கித் ராஜ்புத் அல்லது வருண் ஆரோன் READ டேவிட் மில்லர்: டேவிட் மில்லர் 45 பந்துகளில் 7 சிக்ஸர்கள் மற்றும் 5 பவுண்டரிகளுடன் 85 ரன்கள் எடுத்து பாக்கிஸ்தானுக்கு எதிராக அடித்தார் - டேவிட் மில்லர் டி 20 ஐ சாதனை: டேவிட் மில்லரின் புயல் இன்னிங்ஸ், 7 சிக்ஸர்கள் மற்றும் 5 பவுண்டரிகள் சென்னையின் சாத்தியமான ஆட்டம் பதினொன்று முரளி விஜய், ஷேன் வாட்சன், ஃபஃப் டு பிளெசிஸ், அம்பதி ராயுடு, கேதார் ஜாதவ், எம்.எஸ்.தோனி (கேப்டன்), ரவீந்திர ஜடேஜா, சாம் குர்ரான், தீபக் சாஹர், பியூஷ் சாவ்லா, லுங்கி ஆங்கிடி ஜாக்ரான் பயன்பாட்டைப் பதிவிறக்கி, வேலை உலகின் அனைத்து செய்திகளுடனும் வேலை எச்சரிக்கைகள், நகைச்சுவைகள், ஷயாரி, வானொலி மற்றும் பிற சேவைகளைப் பெறுங்கள் Muhammad Shami “ஆத்திரமூட்டும் தாழ்மையான பயண வெறி. உணர்ச்சிமிக்க சமூக ஊடக பயிற்சியாளர். அமெச்சூர் எழுத்தாளர். வன்னபே பிரச்சினை தீர்க்கும் நபர். பொது உணவு நிபுணர்.” SaveSavedRemoved 0 Previous சில்லறை கடன்களை மறுசீரமைப்பதற்கான வசதியை எஸ்பிஐ அறிமுகப்படுத்துகிறது | அனைத்து வகையான கடன்களையும் 2 ஆண்டுகளுக்கு திருப்பிச் செலுத்துவதன் மூலம் நிவாரணம் வழங்கப்படும், எஸ்பிஐ இந்த திட்டத்தை கொண்டு வந்தது Next ஜோ பிடன் Vs டொனால்ட் டிரம்ப்: அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் கருத்துக் கணிப்புகள் சமீபத்திய செய்திகள் Related Articles Added to wishlistRemoved from wishlist 0 இந்த 11 வீரர்களுக்கு நீங்கள் சவால் விடலாம் ipl-2021-dream-11-team-கணிப்பு-மும்பை-இந்தியர்கள்-vs-சன்ரைசர்ஸ்-ஹைதராபாத் -9 வது போட்டி-கேப்டியன்-வைஸ்-கேப்டன்-விக்கெட்-கீப்பர்-பேட்ஸ்மேன்-பந்து வீச்சாளர்கள்-அனைத்துமே – ரவுண்டர் Added to wishlistRemoved from wishlist 0 அன்ரிச் நார்ட்ஜே தனிமைப்படுத்தலுக்கு வெளியே: தில்லி தலைநகர வேகப்பந்து வீச்சாளர் அன்ரிச் நார்ட்ஜே தவறான COVID-19 பயத்திற்குப் பிறகு தனிமைப்படுத்தலில் இருந்து வெளியேறினார்; கோவிட் -19 இன் தவறான அறிக்கையால் பாதிக்கப்பட்ட என்ரிக் நார்ட்ஜே, டெல்லியின் தோல்விக்குப் பின்னர் தனிமைப்படுத்தலில் இருந்து வெளியே வந்தார் Added to wishlistRemoved from wishlist 0 12 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என்று பயந்த ரிஷாப் பந்த், போட்டியை நிறுத்துவது குறித்து நடுவரிடம் கூறினார் – நீங்கள் எடுத்த ஒரு நிமிடம் – ஐபிஎல் 2021 ரிஷாப் பந்த் தனது அணிக்கு எதிரான விகித அபராதத்தைத் தவிர்க்க நடுவருக்கு கன்னமாக அறிவிக்கிறார் Added to wishlistRemoved from wishlist 0 ஐபிஎல் 2021 ஆரஞ்சு மற்றும் பர்பில் கேப் ரேஸ் முதல் 5 ரன் தயாரிப்பாளர்கள் பட்டியலில் இந்திய பேட்ஸ்மேன்கள் ஆதிக்கம் செலுத்துகின்றனர் ஹர்ஷல் படேல் விக்கெட் வீழ்த்துவதில் முன்னணி
'''உருபனியல் (morphology)''' என்பது [[மொழியியல்|மொழியியலின்]] துணைத் துறைகளில் ஒன்று. இது [[சொல்|சொற்களின்]] அமைப்புப் பற்றி ஆராயும் துறையாகும். பொருள் தரும் மிகச்சிறிய ஒலியக்கூறு உருபன் எனப்படுகிறது.உருபனே பொருளோடு நேரடியான தொடர்பு கொண்டது ஆகும். அன்பு,பண்பு, உலகம் ஒவ்வொன்றும் ஒவ்வொரு உருபன். இவை ஒவ்வொன்றும் தனித்தனியே பொருள் உடையன. இவற்றை மேலும் சிறு கூறுகளாகப் பிரிக்கமுடியாது. '''உருபனியல் (morphology)''' என்பது [[மொழியியல்|மொழியியலின்]] துணைத் துறைகளில் ஒன்று. இது [[சொல்|சொற்களின்]] அமைப்புப் பற்றி ஆராயும் துறையாகும். சொற்றொடரியலின் மிகச் சிறிய அலகாகக் கருதப்படுகின்ற சொல், வேறு பல சொற்களுடன் ஓர் ஒழுங்கு முறையில் தொடர்புபட்டு இருப்பதைக் காணமுடியும். எடுத்துக்காட்டாக, ''தொழில்'', ''தொழில்கள்'', ''தொழிலாளி'' என்பன ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்டவை. தமிழ் மொழி அறிந்தவர்கள் இவ்வாறான தொடர்புகளை அனுபவத்தின் வாயிலாக அறிந்திருப்பர். இந்த அனுபவத்தின் வாயிலான மொழியறிவின் மூலம் ''தொழில்'' என்பதற்குத் ''தொழில்கள்'' எப்படியோ, அதுபோல, ''போர்'' என்பதற்குப் ''போர்கள்'' என அவர்கள் அறிவார்கள். இது போலவே, ''தொழிலாளி'' என்ற சொல் உருவானது போல, ''போராளி'' என்ற சொல்லும் உருவாகும். இவ்வாறே அடிப்படையான சொற்கள் குறிப்பிட்ட ஒரு தொகுதி ஒழுங்கு விதிகளின் அடிப்படையில் பல்வேறு சொற்களாக உருவாகின்றன. இவ்வாறு ஒரு மொழியில், சொற்களின் உருவாக்கத்துக்கு அடிப்படையாக உள்ள விதிகளை ஆராய்ந்து வெளிக்கொணர்வது உருபனியலின் முக்கிய நோக்கமாகும்.▼ ▲'''உருபனியல் (morphology)''' என்பது [[மொழியியல்|மொழியியலின்]] துணைத் துறைகளில் ஒன்று. இது [[சொல்|சொற்களின்]] அமைப்புப் பற்றி ஆராயும் துறையாகும். சொற்றொடரியலின் மிகச் சிறிய அலகாகக் கருதப்படுகின்ற சொல், வேறு பல சொற்களுடன் ஓர் ஒழுங்கு முறையில் தொடர்புபட்டு இருப்பதைக் காணமுடியும். எடுத்துக்காட்டாக, ''தொழில்'', ''தொழில்கள்'', ''தொழிலாளி'' என்பன ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்டவை. தமிழ் மொழி அறிந்தவர்கள் இவ்வாறான தொடர்புகளை அனுபவத்தின் வாயிலாக அறிந்திருப்பர். இந்த அனுபவத்தின் வாயிலான மொழியறிவின் மூலம் ''தொழில்'' என்பதற்குத் ''தொழில்கள்'' எப்படியோ, அதுபோல, ''போர்'' என்பதற்குப் ''போர்கள்'' என அவர்கள் அறிவார்கள். இது போலவே, ''தொழிலாளி'' என்ற சொல் உருவானது போல, ''போராளி'' என்ற சொல்லும் உருவாகும். இவ்வாறே அடிப்படையான சொற்கள் குறிப்பிட்ட ஒரு தொகுதி ஒழுங்கு விதிகளின் அடிப்படையில் பல்வேறு சொற்களாக உருவாகின்றன. இவ்வாறு ஒரு மொழியில், சொற்களின் உருவாக்கத்துக்கு அடிப்படையாக உள்ள விதிகளை ஆராய்ந்து வெளிக்கொணர்வது உருபனியலின் முக்கிய நோக்கமாகும். == வரலாறு == கி.மூர்த்தி பயனர் கணக்கு உருவாக்குவோர், தானியக்கமாக ரோந்திடும் பயனர்கள், ரோந்திடுபவர்கள், முன்னிலையாக்கர்கள், நிர்வாகிகள்
குற்றால அருவியில் குளிக்கத் தடை; சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் kutralam rain weather kalaimohan Sat, 03/ [...] 16 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் - தமிழக அரசு உத்தரவு 16 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் - தமிழக அரசு உத்தரவு TNGovernment ias officers transfer kalaim [...] அடுத்த 3 மணி நேரத்தில் 13 மாவட்டங்களில் மழை அடுத்த 3 மணி நேரத்தில் 13 மாவட்டங்களில் மழை weather rain Tamilnadu kalaimohan Sat, 03/12/2022 - 08:0 [...]
தமிழகத்தில் இன்று முதல் கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதை அடுத்து ஏற்கனவே அறிவிக்கப்பட்டதன்படி இன்று முதல் கோவில்கள் திறக்கப்பட்டன, பேருந்துகள் இயங்கி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது இன்று காலை முதலே தமிழகத்தில் உள்ள கோவில்கள் உள்பட அனைத்து வழிபாட்டு தலங்களும் திறக்கப்பட்டன. மதுரை மீனாட்சி அம்மன் கோயில், நெல்லை நெல்லையப்பர் கோயில், திருச்சி மலைக்கோட்டை கோயில் உள்பட தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில்களும், வேளாங்கண்ணி சர்ச் உள்பட அனைத்து தேவாலயங்களும், நாகூர் தர்கா உள்பட அனைத்து மதவழிபாட்டு தலங்களும் திறக்கப்பட்டுள்ளன என்பதும் இன்று அதிகாலை முதலே பக்தர்கள் வழிபாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது அதேபோல் தமிழகம் முழுவதும் மாவட்டங்களுக்குள்ளும், மாவட்டங்களுக்கு வெளியையும் பேருந்துகள் இயங்கத் தொடங்கியுள்ளன. இன்று காலை 6 மணி முதல் தமிழகம் முழுவதும் பேருந்துகள் இயங்க தொடங்கி விட்டன என்பதும் 50 சதவீத பயணிகளுடன் இயங்கி வரும் பேருந்துகள் பொதுமக்கள் பயணம் செய்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது அதேபோல் இன்று முதல் ஜவுளி கடைகள் நகை கடைகள் உள்பட அனைத்து கடைகளும் திறக்கப்பட உள்ளன என்பதால் தமிழகம் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பி விட்டதாகவே கருதப்படுகிறது. பள்ளிகள் கல்லூரிகள் திரையரங்குகள் நீச்சல் குளங்கள் மட்டுமே இன்னும் தமிழகத்தில் திறக்கப் படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
சமீபத்தில் நண்பர் ஒருவருடன் அலைபேசியில் பேசிக் கொண்டிருந்தேன். அவர் ஒரு வீரக்கலை ஆசிரியர். சிலம்ப பயிற்சி பற்றியும் அதன் பாடங்கள் பற்றியும் யு டியூப் காணொளியில் பதி விடுபவர். சமீபத்தில் அவர் ஒரு புதிய சிலம்ப பாடத்தை யு டியூபில் பதிவிட்டிருந்தார். அதை பார்த்துவிட்டு சிலம்ப பயிற்சி செய்யும் ஒருவர் (அவர் சிலம்ப ஆசிரியரும் கூட என்று நினைக்கிறேன்) நண்பரை அலைபேசியில் அழைத்து, இந்தப் பாடம் புதியதாக இருக்கிறது, இது சிலம்பத்தில் கிடையாது என்று சொல்லியிருக்கிறார். அதற்கு நண்பர், ஆமாம் இந்த பாடம் சிலம்பத்தில் கிடையாது, ஆனால் நான் கற்றுக்கொண்டதிலிருந்து புதியதாக ஒரு பாடத்தை உருவாக்கினேன் என்று கூறியிருக்கிறார். அதற்கு அலைபேசியில் பேசியவர் அப்படி எல்லாம் புதிய பாடத்தை போட நீ யார்? சிலம்பத்தை நமது முன்னோர்கள் என்ன சொல்லிக் கொடுத்தார்களோ அதே போல் தான் செய்ய வேண்டும் புதியதாக எதையும் சேர்க்க கூடாது, அப்படி சேர்ப்பது என்பது நமது மரபை மீறும் செயலாகும். ஆசிரியர் சொல்லிக் கொடுத்ததை அப்படியே தான் சொல்லிக் கொடுக்க வேண்டும். புதியதாக சொல்லிக்கொடுக்க நீ யார்? என்று சற்று கடுமையாகவே பேசியுள்ளார். இதை என் நண்பர் என்னுடன் பகிர்ந்து கொண்டார். தமிழ்நாட்டில் அல்லது இந்திய அளவில் நிறைய பேருடைய மனநிலை இதுவாகத்தான் இருக்கிறது என்று கூட சொல்லலாம். ஒரு கலை நமக்கு எப்படி சொல்லித்தரப்பட்டதோ அல்லது எப்படி நம்மிடம் வந்து சேர்ந்துள்ளதோ அதை அப்படியே தான் மற்றவருக்கும் நாம் சொல்லித் தரவேண்டும் அதில் கூட்டவோ குறைக்கவோ கூடாது என்று. இந்த பிரச்சனைகளை முன்னிறுத்தி யோசிக்கும்போது சில கேள்விகளை நமக்கு நாமே கேட்டுக் கொள்ளலாம். நமக்கு சொல்லிக் கொடுக்கப்பட்ட பாடத்தை மட்டும்தான் நாம் செய்ய வேண்டுமா? புதிய நுணுக்கங்களையோ அல்லது வேறு பாடங்களையோ சேர்க்கக்கூடாதா? புதியவற்றை எதையும் சேர்க்காமல் காலம் காலமாக நமக்கு சொல்லி கொடுப்பவற்றை மட்டும் பயிற்சி செய்தால் அதனால் விளையும் நன்மைகள் என்ன? தீமைகள் என்ன? புதிய பாடங்களையோ நுணுக்கங்களையோ சேர்க்கும் போது எதை எதை நாம் கருத்தில் கொள்ளலாம். நமக்கு சொல்லிக் கொடுக்கப்பட்ட பாடத்தை மட்டும்தான் நாம் செய்ய வேண்டுமா புதிய நுணுக்கங்களையோ அல்லது வேறு பாடங்களையோ சேர்க்கக்கூடாதா? நண்பர்களே, நமக்கு சொல்லிக் கொடுக்கப்பட்ட பாடத்தில் பல நுணுக்கங்கள் இருக்கும், நன்மைகள் இருக்கும். அதில் எந்த சந்தேகமும் கிடையாது. அதனால் தான் அந்த பாடங்கள் காலம் காலமாக பயிற்சி செய்யப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் நாம் செய்யும் அத்தனை பாடங்களும் யாராவது ஒரு ஆசிரியரால் மொத்தமாக போடப்பட்டது இல்லை. ஆரம்பத்தில் சொல்லிக் கொடுக்கப்பட்ட பாடத்திலிருந்து, நமக்கு வந்து சேர்ந்திருக்கும் பாடத்திற்கும் எந்த வித்தியாசமும் இல்லாமல் அப்படியேதான் செய்யப்பட்டுள்ளதா என்று நமக்கு தெரியாது. நாம் கற்றுக்கொள்ளும் பாடத்தை தான் நம் முன்னோர்கள் வழிவழியாக செய்ததாக நாம் நினைத்துக் கொள்கிறோம். அப்படி செய்திருந்தால் இன்று சிலம்பக் கலையில் இத்தனை பிரிவுகள் வந்திருக்குமா? எந்த கலையாக இருந்தாலும் காலம்காலமாக பல புதிய நுணுக்கங்களும், நுட்பங்களும் சேர்ந்துகொண்டு தான் இருக்கும். அப்போதுதான் அந்தக் கலை காலத்திற்கு ஏற்ப பரிணாம மாற்றம் அடைந்து வளர்ந்து கொண்டே இருக்கும். நண்பர்களே, இந்த உலகத்தில் மனிதர்கள் வாழ்ந்த காலத்தில் இருந்து இன்று வரை கண்டுபிடிக்கப்பட்ட அனைத்துமே கண்டுபிடிக்கப்பட்ட மூலத்திலிருந்து படிப்படியாக முன்னேறி உள்ளது. மனிதனின் ஆதி கண்டுபிடிப்பான நெருப்பு கூட, இன்று விஞ்ஞான வளர்ச்சியால் பல வாயுக்களின் உதவியுடன் குறைந்த நேரத்தில் அதிக வெப்பத்தில் எரியும் அளவுக்கு முன்னேறியுள்ளது. இன்று நாம் இயற்கை விவசாயம் பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறோம். முன் காலத்தில் காட்டில் வாழ்ந்து கொண்டிருந்த மனிதன் காட்டை விட்டு வெளியே வந்து தண்ணீரை பயன்படுத்தி விவசாயம் செய்ய ஆரம்பித்தது ஒரு மிகப்பெரிய அறிவியல் சிந்தனை தான். அன்று இயற்கையிலிருந்து வேட்டையாடி மட்டுமே சாப்பிட்டுக்கொண்டிருந்த மனிதர்களுக்கு நிலத்தை பண்படுத்தி விவசாயம் செய்வது என்பது தேவையில்லாத ஒரு காரியம்தான். இவ்வளவு உணவு இயற்கையிலேயே இருக்கும்போது இதைப்போய் தேவையில்லாமல் நேர விரயம் செய்து பயிரிட்டு செயற்கையாக உற்பத்தி செய்வது இயற்கைக்கு எதிரான நியதியாக கூட சொல்லப்பட்டிருக்கும். ஆனால் இன்று நம் மனநிலை அப்படி அல்ல. அதுபோலத்தான் கலைகளும், இன்று நாம் பயிற்சி செய்யும் கலைகள், ஆதியில் நம் முன்னோர்களால் இதே வடிவங்களில் தான் உருவாகி இருக்குமா? என்று கேட்டால் அதற்கு வாய்ப்பு மிகவும் குறைவு தான். ஒரு கலை ஆரம்பத்தில் ஒரு கோட்டுச் சித்திரம் போல பல நுணுக்கங்கள் இன்றி சற்று தெளிவின்மையுடனே இருக்கும். உண்மையில் அதை கலை என்று சொல்வதைவிட ஒரு வித்தை என்றே சொல்லலாம். ஆனால் அதை பயிற்சி செய்பவர்களால் அது படிப்படியாக மெருகேற்றப்படும். தலைமுறை தலைமுறையாய் அவ்வாறு செய்யப்படும் பயிற்சியில் பல நுணுக்கங்கள் தானே கூடிவரும். நாளைடைவில் அது ஒரு சிறந்த கலையாக உருவாகி வரும். அதனால் இன்று நாம் கற்கும் எந்தக் கலையாக இருந்தாலும் அது நமக்கு முன்னர் பல தலைமுறையினரால் சிறிது சிறிதாக தரப்படுத்தப்பட்டு, மெருகேற்றப்பட்டு, செம்மை செய்யப்பட்டதுதான். அதுதான் முன்னரே தரப்படுத்தப்பட்டு, மெருகேற்றப்பட்டு விட்டதே, பிறகு நாம் ஏன் அதில் புதிதாக சேர்க்க வேண்டும் என்று கேட்பவர்கள் ஒரு கேள்வியைத் தனக்குத் தானே கேட்டுக் கொள்ளலாம். தரப்படுத்துவதற்கும், மெருகேற்றுவதற்கும், நேர்த்தியாக செய்வதற்கும் எல்லைகள் என ஏதாவது உண்டா என்ன? “கற்றது கையளவு” என்று சொன்னதும் நமது முன்னோர்கள் தானே. புதியவற்றை எதையும் சேர்க்காமல் காலம் காலமாக நமக்கு சொல்லி கொடுப்பவற்றை மட்டும் பயிற்சி செய்தால் அதனால் விளையும் நன்மைகள் என்ன? தீமைகள் என்ன? புதிய பாடங்களை சேர்க்கக்கூடாது என்றால் அது தவறு என்று சொல்லுவேன். ஏனென்றால் அது கலையை அழிக்கும். வளராமல் தேங்கி நிற்கும் ஒரு கலை நாளடைவில் அழிந்தே போகும். இன்றும் தமிழ் மரபில் அப்படி அழியும் கலைகள் ஏராளமாக உள்ளன. அரசு நிறைய பணம் செலவு செய்து பல நாட்டார் கலைகளை வளர்க்க முயன்றாலும் அவை மக்களை கவர்வதில்லை. காரணம் மக்களின் மனநிலை, தலைமுறைக்குத் தலை முறை மாறிக் கொண்டே இருக்கிறது. அதற்கு ஏற்ற மாதிரி தன்னை தகவமைத்துக் கொள்ளும் கலையே நிற்கிறது. இன்றும் சிலம்பம், குத்துவரிசை இருக்கிறது என்றால் அது தன்னை தகவமைத்துக் கொண்டு வந்ததால் மட்டுமே. புதியதாக எதையும் ஏற்காமல் புதிய நுணுக்கங்களை சேர்க்காமல் இருந்தால் நாளடைவில் அந்த கலையை நாம் அழிக்கிறோம் என்றே பொருள். ஒரு மாணவனாக ஒரு பாடத்தை முறையாக கற்றுக் கொள்வது என்பது ஒரு பயிற்சி முறைதான். ஆனால் ஒரு கலையைக் கற்றுத் தேறி ஒரு ஆசிரியராகவும் ஆனபிறகு, பல நூறு மாணவர்களுக்கு நாம் பயிற்சி கொடுக்கும் போது, நாம் சொல்லிக் கொடுக்கும் பாடத்தில் பல நுணுக்கங்கள் புதியதாக நமக்கே தோன்றி வரும், அல்லது யாருக்குமே சொல்லிக் கொடுக்காமல் நமக்கு நாமே பயிற்சி எடுத்துக் கொண்டால்கூட நாளடைவில் புதிய நுணுக்கங்கள் நமக்குத் தோன்றும். பல புதிய பயிற்சி முறைகளும் தோன்றும். இருக்கும் பாடத்திலேயே கூட பல நல்ல மாறுதல்கள் தோன்றும். அது போன்றவற்றை நாம் பாடங்களில் சேர்ப்பது நல்லது. அதே நேரத்தில் பத்து பாடம் இருக்கிறது என்றால் அந்த பத்து பாடத்திலேயே இந்த மாற்றங்களை திரும்பத் திரும்ப செய்யாமல் 11வது, 12வது பாடங்களாக கொண்டு வருவது மிகச் சிறந்தது என்றே நினைக்கிறேன். இந்த வகையில் நமது மரபு பாடங்களும் காலம் காலமாக பின்தொடர்ந்து வரும், புதியதாக சேரும் பாடங்களும் சேர்ந்து வரும். நாளடைவில் புதிய பாடங்களும் ஒரு மரபான பாடமாக அமைந்து விடும். இது ஒரு கலையின் பன்முக வளர்ச்சிக்கு மிக இன்றியமையாதது. புதிய பாடங்களையோ நுணுக்கங்களையோ சேர்க்கும் போது எதை எதை நாம் கருத்தில் கொள்ளலாம். உலகில் உள்ள அனைத்து தற்காப்பு கலைகளும் தன்னை பாதுகாத்து திரும்பத் தாக்கும் முறைகளைத் தான் சொல்லிக் கொடுக்கிறது, என்றாலும் ஒவ்வொரு கலைக்கும் ஒரு உடல்மொழி உண்டு. உதாரணத்திற்கு எல்லா தற்காப்புக் கலையிலும் பொதுவான ஒரு நுட்பமாக குத்து(punch) நுட்பம் இருக்கும். அந்த நுட்பத்தின் பாதைகளும் அடிக்கும் முறைகளும் ஒன்றுதான். ஆனாலும் அந்த நுட்பத்தை ஒருவர் செய்வதை வைத்து அவர் கராத்தே பயின்றவரா, குங்பூ பயின்றவரா அல்லது குத்துவரிசை பயின்றவரா என்பதை எளிதில் சொல்லிவிடலாம். அந்த வகையில், ஒவ்வொரு கலைக்கும் ஒரு இயல்பான உடல்மொழியும் அது சார்ந்த இலக்கணமும் அமைந்திருக்கும். அது முறையாக பயிற்சி செய்த அனைவருக்கும் தெரிந்திருக்கும். நாம் ஒரு நல்ல நுட்பத்தை நமது கலையில் சேர்க்கும்போது நமது கலையின் மரபும், தனித்தன்மையும் அழியாமல் அதை சேர்க்க வேண்டும். உதாரணத்திற்கு ஒருவர் கராத்தே கலையை 5 வருடம் பயின்று இருப்பார், பிறகு குத்துவரிசையை 2 வருடம் பயின்று இருப்பார். ஆனால் அவர் குத்து வரிசையில் ஒரு புதிய நுட்பத்தை சேர்க்கும் போது, அந்த நுட்பம் குத்து வரிசையின் நுட்பம் போல தோன்றாமல், கராத்தே நுட்பம் போலவே தோன்றும். ஏனென்றால், அவர் உடல் மொழியில் கராத்தேவின் அசைவுகள் அதிகம் கலந்திருக்கும். அதன் காரணமாக அவர் சேர்க்கும் ஒரு நுட்பம், நல்ல நுட்பமாக இருந்தாலும், அது ஒரு கராத்தே பாடம் போல தோன்றும். இந்த சிக்கலைத் தவிர்ப்பது நல்லது. நமது கலையை வளர்ப்பதற்காக தான் நாம் ஒன்றை செய்ய வேண்டுமே தவிர, அதை இன்னொரு கலையாக காட்டுவதற்காக அல்ல. சரி அப்படி சரியான முறையில் பாடங்களை சேர்க்காமல் பலர் பல புது பாடங்களை ஒரு கலையில் சேர்க்கிறார்கள் என்றால் அதை நம்மால் தடுக்க முடியுமா? இன்று யு டியூபில் காணொளிகள் அனைவரும் பார்ப்பதற்கு கிடைப்பதால் நமக்கு இவையெல்லாம் தெரிகின்றன, இல்லையென்றால் இவையெல்லாம் தனிப்பட்ட முறையில், அந்தந்த ஊரில் சொல்லிக்கொடுக்கும் ஆசிரியர்கள் தமது மாணவர்களுக்கு, இந்த புது பாடங்களை போடத்தான் செய்வார்கள். ஆனால் நான் அறிந்து யார் எந்த பாடங்களை எப்படி போட்டாலும், நல்ல பாடங்களே காலத்தை தாண்டி நிற்கும். பிற பாடங்கள் தானே அழிந்து போகும். யோசித்துப் பாருங்கள் எவ்வளவோ எழுத்தாளர்கள் நம் தமிழில் உண்டு ஆனால் எல்லா எழுத்தாளர்களின் எழுத்துக்களும் முன்னிறுத்தி பேசப்படுவதில்லை, நல்ல எழுத்துக்கள் மட்டுமே காலத்தை தாண்டி நிற்கும். நாம் பழைய இலக்கியத்தில் இருந்து, இன்று படிக்கும் நமது மரபான இலக்கியங்கள் எல்லாம் நல்ல படைப்புக்களே. ஆனால் இவைகள் மட்டும் தான் அந்த காலத்தில் எழுதப்பட்டதா என்றால் இல்லை. பல ஆயிரம் எழுத்துக்கள் எழுதப்பட்டிருக்கும். ஆனால் காலத்தை தாண்டி நல்ல எழுத்துக்களே நிற்கும். புதியதாக உருவாகும் போது தான், அதிலிருந்து சிறந்த பாடங்கள் மட்டும் அடுத்த தலைமுறைக்கு சென்று சேரும். நான் கற்ற என் மரபான கலையில் மட்டுமே உலகின் தலைசிறந்த பாடங்கள் உண்டு, மற்ற கலைகளில் எதுவுமே இல்லை என்று நினைப்பது, ஒரு பிற்போக்கான சிந்தனைதான். மாறாக பல கலைகளில் உள்ள பல நல்ல நுணுக்கங்களை நமது கலைக்கு ஏற்ப நமது மரபை சிதைக்காமல் சேர்ப்பதே நம் கலையை வளர்ப்பதாகும். யோசித்துப் பாருங்கள் இன்று நாம் எழுதிக் கொண்டிருக்கும் இந்த உரைநடை எழுத்து முறை கூட நம்முடைய மரபில் இல்லை. பழங்காலத்தில் பாடல்கள் வடிவிலும், செய்யுள்கள் வடிவிலும், கவிதை வடிவிலும் மட்டுமே எழுதப்பட்ட எழுத்துக்கள் நமக்கு கிடைக்கின்றன. உரைநடை என்பது ஐரோப்பியாவில் இருந்து வந்த ஒரு புதிய முறை. ஆனால் அங்கிருந்து வந்த அந்த உரைநடையை வைத்துக்கொண்டு நாம் அவர்கள் மொழியை வளர்க்க வில்லை, நமது தாய்மொழியான தமிழை தான் வளர்க்கிறோம். இன்று நாம் சமையலில் பயன்படுத்தும் பல காய்கறிகள் மிளகாய் உட்பட, நமது மரபில் உள்ளவை அல்ல. இவையெல்லாம் வெளியில் இருந்து வந்தவையே. ஆனால் இவையெல்லாம் பயன்படுத்தி, நாம் நமது மரபார்ந்த சமையலை தான் சமைக்கிறோம். அதுபோலத்தான் தோழர்களே, பல்வேறு தொழில்நுட்பங்கள், நுணுக்கங்கள் நமது கலையில் சேர்ந்து கொண்டே இருக்கும் வரை நமது கலை என்றுமே முன்னணியில் இருக்கும். நமது கலைகளை மேம்படுத்தி அதை உலக அளவில் கொண்டு செல்வதே நமக்கும், நமது மரபுக்கும் நாம் செய்யும் பெருமையாக இருக்க முடியும். புரூஸ் லீ தன் மரபார்ந்த கலையான குங் பு வை உலகம் அறியச் செய்தது போல். அவர் குங் பு வில் பல புதிய நுணுக்கங்களை சேர்க்கும்போது, மரபார்ந்த ஆசிரியர்கள் பலரின் எதிர்ப்பை பெற்றவர்தான். ஆனால் இன்று குங் பு என்றவுடன் நமக்கு நினைவில் வரும் முதல் பெயர் புரூஸ் லீ தான். ஒரு கலை எந்த அளவுக்கு பழைய கலை என்பது நமது மரபின் பெருமையை சொல்லும், ஆனால் அதில் சேர்க்கப்படும் புதுமைகள் தான், அதை காலத்தை தாண்டி நிற்கச் செய்யும்.
ஜமைக்காவை சேர்ந்த இளம்பெண் சட்ட விரோதமாக அமெரிக்க குடியுரிமை பெற வயதான முதியவரை திருமணம் செய்த நிலையில் கணவரை கொல்ல முயன்ற வழக்கில் அவருக்கு தண்டனை வழங்கப்படவுள்ளது. இந்த தகவலை வழக்கறிஞர் Miriam E. Rocah வெளியிட்டுள்ளார். அதன்படி Olivia Raimo என்ற ஜமைக்கா நாட்டை சேர்ந்த 30 வயது இளம்பெண் அமெரிக்கரான 74 வயது முதியவரை கடந்த 2017ல் திருமணம் செய்து கொண்டார். சட்ட விரோதமாக அமெரிக்க குடியுரிமை பெறவே முதியவரை மணந்தார் Olivia. இந்த நிலையில் அமெரிக்க குடியுரிமை மற்றும் குடிவரவுச் சேவைகளுக்கான நேர்காணலுக்குத் தயாராக கடந்தாண்டு ஒரு வழக்கறிஞரைச் சந்தித்து அவர்களின் திருமணம் முறையை நிரூபிக்க Oliviaவும் அவர் கணவரும் சென்றனர். ஆனால் இந்த விடயத்தை வைத்து குடியுரிமை பெறுவது கடினம் என Oliviaவிடம் வழக்கறிஞர் கூறினார். இதனால் Oliviaவுக்கு கோபம் ஏற்பட்டது. இந்த நிலையில் கடந்தாண்டு ஜனவரி மாதம் 24ஆம் திகதி முதியவரின் வீட்டில் இருந்த போது கழிவறையில் அவரை உட்கார வைத்து Olivia ப்ளேடால் அவர் மணிக்கட்டை அறுத்துள்ளார். அந்த சமயத்தில் பாதிக்கப்பட்டவரின் வீட்டு சுகாதார உதவியாளர் வீட்டிற்கு வந்தார். அவரை உள்ளே அனுமதிக்க Olivia மறுத்தார், பின்னர் அவர் உடனடியாக பொலிசாருக்கு தகவல் தந்த நிலையில் பொலிசார் வந்து உயிருக்கு போராடிய முதியவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு இரண்டு அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டது, இருந்த போதிலும் தாக்குதலின் விளைவாக பாதிக்கப்பட்டவர் தனது கையில் உள்ள அனைத்து செயல்பாடுகளையும் இழந்தார். இந்த கொலை முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்ட Olivia மீது நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்து வந்தது. இந்த நிலையில் தான் அவர் குற்றவாளி என கூறப்பட்டுள்ளது. Oliviaவுக்கான தண்டனை விபரம் அடுத்தாண்டு ஜனவரி 13ஆம் திகதி வழங்கப்படும்.
இந்தியாவிலுள்ள பரமஹம்ஸ யோகானந்தரின் ஆசிரமங்களுக்கு விஜயம் செய்தபொழுது (அக்டோபர் 1963 – மே 1964), ஸ்ரீ தயா மாதா மகாவதார பாபாஜியின் திருமேனியின் இருப்பினால் புனிதமடைந்த ஓர் இமாலய குகைக்கு ஒரு புனித யாத்திரை மேற்கொண்டார். அதன் பிறகு சில காலங்களுக்கு, தயா மாதா தன் புனிதயாத்திரைப் பற்றிய அனுபவங்களைப் பொதுக்கூட்டங்களில் பேசுவதற்கு மறுத்துவிட்டார். ஆனால் என்ஸினிட்டாஸ்-ல் நடந்த இந்த சத்சங்கத்தில் ஒரு பக்தர் பாபாஜியின் குகைக்கு அவருடைய விஜயத்தைப் பற்றிக் கூறுமாறு கேட்ட பொழுது, இறை சித்தம் அவரை விடையளிக்கத் தூண்டியது. எல்லோருடைய மனவெழுச்சிக்காகவும் அவருடைய அனுபவ விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. ஸெல்‌ஃப்-ரியலைசேஷன்‌ ஃபெலோஷிப் ஆசிரம மையம், என்ஸினிடஸ், கலிஃபோர்னியா, ஆகஸ்ட் 24, 1965 அன்பு மட்டுமே : மாறிக் கொண்டிருக்கும் உலகில் ஆன்மிக வாழ்க்கை வாழ்தல் -புத்தகத்திலிருந்து மறு அச்சு பரமஹம்ஸ யோகானந்தருக்கும் மகாவதார பாபாஜிக்கும் மிக விசேஷமான ஓர் உறவு உண்டு. குருதேவர் பாபாஜியைப் பற்றியும், பரமஹம்ஸர் இந்தியாவை விட்டுக் கிளம்பி இந்த நாட்டிற்கு வருவதற்குச் சற்று முன்னர், கல்கத்தாவில், மகாவதாரர் அவருக்கு முன்தோன்றிய நிகழ்ச்சியைப் பற்றியும் அடிக்கடிப் பேசுவார். குருதேவர் இந்த மகத்தான அவதாரத்தைப் பற்றி எப்பொழுது குறிப்பிட்டாலும், அது அவ்வளவு அன்புடனும், அவ்வளவு பெருமதிப்புடனும் இருந்ததால், எங்கள் இதயங்கள் எல்லாம் தெய்வீக அன்பினாலும் ஏக்கத்தினாலும் நிரம்பிவிடும். சில சமயம் என் இதயம் வெடித்து விடும் என்று நான் உணர்ந்ததுண்டு. குருதேவரின் மறைவுக்குப் பிறகு, பாபாஜியின் நினைவு என் உணர்வுநிலையில் தொடர்ந்து வலுவடைந்து வந்தது. நம்முடைய மற்ற அன்பிற்குரிய பரமகுருமார் களிடமும் அன்பும் பெருமதிப்பும் வேண்டிய அளவு இருந்தாலும், பாபாஜிக்காக ஏன் என் இதயத்தில் ஒரு விசேஷமான உணர்வு உள்ளது என்பதைப் பற்றி எனக்கு ஆச்சரியமாக இருக்கும்; இம்மாதிரியான ஒரு குறிப்பிடத்தக்க நெருக்கமான உணர்வை எனக்குள் தூண்டியிருக்கக் கூடிய தனிப்பட்ட எந்த மறுமொழியும் அவரிடமிருந்து எனக்கு வந்ததாகத் தெரியவில்லை. நான் என்னைப் பற்றி முழுமையாகத் தகுதி இல்லாதவளாக நினைத்ததினால், பாபாஜியின் புனித இருப்பைப் பற்றிய தனிப்பட்ட அனுபவம் கிடைக்கும் என ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை. ஒருவேளை ஓர் எதிர்காலப் பிறவியில் எனக்கு இந்த அருள் கிடைக்கலாம் என்று நான் நினைத்தேன். என்றுமே நான் ஆன்மீக அனுபவங்களுக்காக வேண்டியதோ அல்லது ஏங்கியதோ இல்லை. நான் இறைவனை நேசிக்கவும் மற்றும் அவனது அன்பை உணரவும் மட்டுமே விரும்புகிறேன். அவனுடன் அன்பாக இருப்பதிலிருந்து தான் எனக்கு மகிழ்ச்சி கிடைக்கிறது; நான் வாழ்க்கையில் வேறு எந்தப் பரிசையும் தேடவில்லை. நாங்கள் சென்ற தடவை இந்தியா சென்றிருந்தபோது, என்னுடன் வந்த இரு பக்தைகள் பாபாஜியின் குகைக்குச் செல்ல வேண்டும் என்ற விருப்பத்தை வெளியிட்டார்கள். முதலில் அங்கு செல்வதற்கு ஆழ்ந்த தனிப்பட்ட விருப்பம் எதையும் நான் உணரவில்லை, ஆனாலும் நாங்கள் விசாரித்தோம். அந்தக் குகை இமயத்தின் அடிவாரத்தில் ராணிகேத் என்னும் இடத்தைத் தாண்டி, நேபாள எல்லையின் அருகில் உள்ளது. டெல்லியிலுள்ள அதிகாரிகள் வட எல்லைப் பிரதேசங்கள் வெளிநாட்டவர்களுக்கு மூடப்பட்டிருப்பதாகக் கூறினார்கள்; அந்த மாதிரியான ஒரு யாத்திரை சாத்தியப்படாது என்று தோன்றியது. நான் ஏமாற்றம் அடையவில்லை. எத்தனையோ அதிசயங்களை நான் கண்டிருந்ததனால், தெய்வ அன்னை தான் விரும்பும் எதையும் நிகழ்த்தக் கூடிய சக்தி படைத்தவள் என்பதைப் பற்றி எனக்கு ஒரு சந்தேகமும் இல்லை. இந்த யாத்திரை நடத்தப்பட அவள் விரும்பவில்லையானால், அதில் எனக்குத் தனிப்பட்ட விருப்பம் எதுவும் இருக்கவில்லை. ஓரிரு தினங்கள் கழித்து, யோகாச்சாரியார் வினய் நாராயண், பாபாஜியின் குகை இருக்குமிடமான உத்திரப்பிரதேச முதன் மந்திரியுடன் தொடர்பு கொண்டுள்ளதாக என்னிடம் கூறினார். முதன் மந்திரி எங்கள் குழு அந்த இடத்திற்கு விஜயம் செய்ய விசேஷ அனுமதி அளித்திருந்தார். இரண்டு நாட்களிலேயே நாங்கள் அந்த யாத்திரைக்குத் தயாராகிவிட்டோம். எங்களிடம் மலைப்பிரதேசத்தின் குளிர்ந்த பருவநிலைக்கு ஏற்ற வெதுவெதுப்பான துணிகள் இல்லை. எங்களுடைய பருத்திப் புடவைகளும், தோள்களைச் சுற்றிப் போர்த்திக் கொள்ளும் கம்பளி சால்வைகளும் மட்டுமே இருந்தன. எங்களுக்கு இருந்த ஆவலில் நாங்கள் கொஞ்சம் அசட்டுத்தனமாகத்தான் இருந்தோம்! உத்திரப்பிரதேசத்தின் தலைநகராகிய லக்னெளவிற்கு நாங்கள் ரயிலேறி மாலை சுமார் எட்டு மணிக்கு கவர்னரின் வீட்டிற்குச் சென்றோம். நாங்கள் எங்கள் இரவு உணவை அவருடனும், முதன் மந்திரி மற்றும் இதர விருந்தினர்களுடனும் உண்டு முடித்தோம். இரவு பத்து மணிக்கு நாங்கள் காத்கோடாம் என்ற இடத்திற்குச் செல்ல முதல் மந்திரியும் உடன் சேர்ந்துவர ரயிலேறினோம். அந்தச் சிறிய ரயில் நிலையத்தை நாங்கள் அடையும் பொழுது, கிட்டத்தட்ட விடியற்காலை ஆகிவிட்டது. அங்கிருந்து நாங்கள் துவாரஹாட் எனும் மலைநகரத்திற்கு கார் மூலமாக இன்னும் செல்ல வேண்டியிருந்தது, அங்கு எங்களைப் போன்ற யாத்ரீகர்களுக்குத் தங்கும் இடவசதி இருந்தது. பாபாஜியிடமிருந்து ஒரு தெய்வீக உறுதிமொழி மகவாதார பாபாஜியின் குகையில் ஆழ்ந்த இறை தொடர்பில் ராணிகேத்திற்கு அருகிலுள்ள இமாலயத்தில், 1963 “ தெய்வீகத்தின் இருப்பைப் பற்றி மௌனத்தின் குரல் உரக்கப் பேசியது. என் உணர்வுநிலையினூடே ஞான போத அலைகள் பொங்கி வழிந்தன. மேலும் அன்று நான் செய்து கொண்ட பிரார்த்தனைகள் இன்று வரை பதிலளிக்கப்பட்டன.” “ கொஞ்ச நேரம் காத்கோடாம் ரயில் நிலையத்தில் நான் மட்டும் தனியாக அமர்ந்திருந்தேன். மற்ற பக்தர்கள் மோட்டார் வண்டிகளுக்கு காத்திருப்பதற்காக வெளியே சென்றிருந்தார்கள். ஆழ்ந்த உணர்ச்சி மற்றும் பக்தியுடன், இந்தியாவில் ஜப யோகம் என்று கூறப்படும் முறையை, அதாவது, இறைவனின் நாமத்தைத் திரும்பத் திரும்ப உச்சரித்தலை நான் பயிற்சி செய்தபடி இருந்தேன். இந்தப் பயிற்சியில் முழு நினைவும், மற்ற எல்லாவற்றையும் தவிர்த்துவிட்டு படிப்படியாக ஒரே நினைவில் ஆழ்ந்துவிடும். இம்மாதிரி நான் பாபாஜியின் பெயரை ஜபித்துக் கொண்டிருந்தேன். நான் சிந்திக்க முடிந்ததெல்லாம் பாபாஜியைப் பற்றியே இருந்தது. விவரிக்கவொண்ணாத ஒரு சிலிர்ப்பில் என் இதயம் பொங்கி வழிந்தது. திடீரென்று நான் இந்த உலக உணர்வையெல்லாம் இழந்துவிட்டேன். என் மனம் முழுவதும் வேறொரு உணர்வுநிலைக்குள் உள்வாங்கப்பட்டு விட்டது. அதிமதுர ஆனந்தப் பரவசத்தில் நான் பாபாஜியின் இருப்பைத் தரிசித்தேன். உருவமற்ற கிறிஸ்துவைக் “காணுதல்” பற்றி அவிலா-வின் புனித தெரஸா கூறியபோது என்ன பொருள்பட்டிருப்பார் என்று நான் உணர்ந்து கொண்டேன்: பரமாத்மாவின் தனித்தன்மை ஆன்மாவாக உருவெடுத்து, இருப்பினுடைய எண்ண வடிவில் மட்டுமே வெளிப்பட்டது. இந்தக் “காணுதல்” பொருட்களின் வெளி உருவ விவரங்களை விட, அல்லது தெய்வீகக் காட்சிகளை விட அதிகத் தெளிவாகவும், மிகச் சரியாகவும் இருந்த அகக் காட்சியாகும். அவரை அகத்தே வணங்கி அவரது பாதத்தூளியைத் தரித்துக் கொண்டேன். குருதேவர் எங்களில் சிலருக்கு கூறி இருந்தார்: “நீங்கள் நம் அமைப்பின் தலைமையைப் பற்றி ஒருபோதும் கவலைப்பட வேண்டியதில்லை. பாபாஜி இந்த வேலையைத் தலைமை ஏற்று நடத்த விதிக்கப்பட்டவர்களை ஏற்கனவே தேர்ந்தெடுத்துவிட்டார்.” நான் நிர்வாகக் குழுவினால் தேர்ந்தெடுக்கப்பட்ட பொழுது, “நான் ஏன்?” என்று கேட்டேன். இப்பொழுது நானே இதைப் பற்றி பாபாஜியிடம் முறையிட்டுக் கொள்வதைக்கண்டேன்: “அவர்கள் என்னைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். நான் தகுதியானவளே இல்லை. அது எப்படி முடியும்?” நான் அவருடைய திருப்பாதங்களில் உள்ளூற விம்மியபடி இருந்தேன். அவர் மிகவும் இனிமையாகப் பதிலளித்தார்: “என் குழந்தாய், நீ உன் குருவைச் சந்தேகிக்கக் கூடாது. அவர் உண்மையைத்தான் கூறினார். அவர் உன்னிடம் கூறியது உண்மைதான்.” பாபாஜி இவ்வார்த்தைகளைக் கூறும்பொழுது, ஓர் ஆனந்தமயமான அமைதி என்னைப் பற்றிக் கொண்டது. என்னுடைய முழு இருப்புமே அந்த அமைதியில் மூழ்கி இருந்தது. எவ்வளவு நேரம் அப்படி இருந்தேன் என்று எனக்குத் தெரியாது. எங்கள் குழுவில் இருந்த மற்றவர்களும் அறைக்குள் திரும்பி வந்து விட்டதை நான் மெல்ல மெல்ல உணர்ந்து கொண்டேன். என் கண்களைத் திறந்தபொழுது, நான் என்னுடைய சுற்றுப்புறத்தை ஒரு புதிய கண்ணோட்டத்தில் கண்டேன். “நான் நிச்சயமாக இங்கு இதற்கு முன்பு வந்திருக்கிறேன்!” என்று கூவியது நினைவிருக்கிறது. அக்கணமே எனக்கு எல்லாம் பழக்கப்பட்டதாகத் தெரிந்தது, முற்பிறவியின் நினைவுகள் மீண்டும் எழுப்பப்பட்டன! எங்களை மலையின் மேலே அழைத்துச் செல்லும் கார்கள் தயாராக இருந்தன. வண்டிகளில் ஏறிக்கொண்டு நாங்கள் அந்த வளைந்து மேலே செல்லும் மலைப் பாதையில் பிரயாணம் செய்தோம். நான் கண்ட ஒவ்வொரு காட்சியும், ஒவ்வொரு இடமும் எனக்குப் பழக்கப்பட்டதாகத் தெரிந்தது. காத்கோடாம் அனுபவத்திற்குப் பிறகு, பாபாஜியின் இருப்பு என்னுடன் மிக்க வலுவுடன் தங்கி இருந்ததால், நான் எங்கு நோக்கினாலும், அங்கு அவர் இருப்பதாகத் தோன்றினார். நாங்கள் ராணிகேத்தில் கொஞ்ச நேரம் தங்கினோம். எங்கள் வருகையைப் பற்றி முதன் மந்திரி அந்நகர அதிகாரிகளுக்கு ஏற்கனவே அறிவித்திருந்ததால், அங்கு அவர்கள் எங்களுக்கு வரவேற்பு அளித்தனர். கடைசியாக இமாலயத்தின் அடிவாரக் குன்றுகளில், தொலை தூரத்தில், உயரே இருந்த துவாரஹாட் என்ற சிறு கிராமத்தை நாங்கள் அடைந்தோம். நாங்கள் அரசாங்க ஓய்வு இல்லத்தில், யாத்ரீகர்களுக்கான ஓர் எளிமையான சிறிய பங்களாவில் தங்கினோம். அன்றிரவு சுற்றுவட்டார கிராமப்புறத்திலிருந்து பலர் எங்களைக் காண வந்தனர். அவர்கள் இந்தப் புனிதமான குகைக்கு விஜயம் செய்ய மேல் நாட்டிலிருந்து யாத்ரீகர்கள் வந்திருப்பதாகக் கேள்விப்பட்டிருந்தார்கள். இந்தப் பிரதேசங்களில் பலர் பாபாஜியைப் பற்றிப் பேசுகிறார்கள். அவருடைய பெயர் “வணக்கத்திற்குரிய தந்தை” என்று பொருள்படுகிறது. எங்களிடம் வினாக்களை அடுக்கினார்கள், நாங்கள் இப்பொழுது நாம் நடத்திக் கொண்டிருப்பது போலவே, ஒன்று சேர்ந்து சத்சங்கம் நடத்தினோம். அவர்களில் அனேகர் ஆங்கிலம் புரிந்து கொண்டார்கள், மேலும் அருகிலிருந்த ஒருவர், புரியாதவர்களுக்கு மொழி பெயர்த்துக் கூறினார். ஒரு தீர்க்கதரிசன தெய்வீகக்காட்சி சத்சங்கம் முடிந்து கிராமத்தார்கள் கலைந்த பின்னர், நாங்கள் தியானத்திற்கு அமர்ந்தோம். பிறகு எங்களுடைய வெதுவெதுப்பான தூங்கும் பைகளை அணிந்து கொண்டு தூங்கச் சென்றோம். நடுநிசியில் எனக்கு ஓர் உயர்உணர்வுநிலை அனுபவம் ஏற்பட்டது. மிகப்பெரிய கருமேகம் ஒன்று திடீரென்று என்னை விழுங்க முயன்ற வண்ணம், என் மேல் பரவியது. அது அவ்வாறு பரவியபொழுது, நான் இறைவனை நோக்கிக் கூவியதில், என்னுடன் அறையில் தங்கியிருந்த ஆனந்த மாதாவும், உமா மாதாவும் எழுந்து விட்டார்கள். அவர்கள் பதறி, என்ன நடந்தது என்பதைத் தெரிந்து கொள்ள விழைந்தார்கள். “நான் இப்பொழுது அதைப் பற்றிப் பேச விரும்பவில்லை. நான் நன்றாக இருக்கிறேன். திரும்பத் தூங்கப் போங்கள்,” என்று அவர்களிடம் கூறினேன். தியானத்தைப் பயிற்சி செய்வதன் மூலமாக, நம் ஒவ்வொருவருக்குள்ளும் எல்லாம்-அறியும் உள்ளுணர்வு ஆற்றல் விருத்தியடைகிறது. இந்த அடையாள அனுபவத்தின் மூலமாக இறை என்ன கூறுகிறது என்பதை நான் உள்ளுணர்வுப் பூர்வமாக புரிந்துகொண்டேன். அது சீக்கிரத்திலேயே எனக்கு ஏற்படப்போகும் ஓர் ஆபத்தான நோயைப் பற்றி முன்கூட்டி அறிவித்தது; மேலும் அனைத்து மனித இனமும் ஓர் இருண்ட காலத்தை சந்திக்கும், அப்பொழுது தீயசக்தி உலகை விழுங்க நேரலாம் என்பதையும் உணர்த்தியது. அந்த மேகம் என்னை முழுவதுமாக சூழ்ந்து கொள்ளவில்லையாதலால்–இறைவனைக் குறித்த என் எண்ணங்களால் அது விலக்கப்பட்டுவிட்டது–நான் சொந்த அபாயத்திலிருந்து மீண்டுவிடுவேன் என்பதை அக்காட்சி உணர்த்தியது, அப்படித்தான் மீண்டு விட்டேன். அதுபோலவே, உலகமும் முடிவில் அந்த அச்சுறுத்தும் கருமேகமாகிய கர்ம வினையிலிருந்து வெளிவந்துவிடும் என்பதையும் அது காண்பித்தது, ஆனால் மனித இனம் இறைவனை நோக்கி திரும்புவதன் மூலம் அதன் பங்கை முதலில் ஆற்ற வேண்டும். அடுத்த நாள் காலை ஒன்பது மணிக்கு நாங்கள் குகையை நோக்கி நடக்கத் தொடங்கினோம். பிரயாணத்தின் இந்தக் கட்டத்தில் பெரும்பான்மையான வழியை நாங்கள் நடந்தே செல்ல வேண்டி இருந்தது, ஆனால் சில சமயம் குதிரையின் மீதோ அல்லது பல்லக்கிலோ சென்றோம். கரடுமுரடான மரக்கட்டையை வெட்டிச் செய்யப்பட்ட சிறு பல்லக்கு போன்ற இது, இரு நீண்ட கழிகளில் கயிற்றினால் கட்டி தொங்கவிடப்பட்டு, நான்கு ஆண் கூலியாட்களால் தோள்களின் மீது சுமந்து செல்லப்படும். நாங்கள் மேல் நோக்கி நடந்தோம், நடந்தோம், நடந்தோம்; பல இடங்களில் வழி உள்ளபடியே மிகவும் செங்குத்தாக இருந்ததால், சில சமயங்கள் நாங்கள நிஜமாகவே தவழ்ந்து செல்ல வேண்டியிருந்தது. வழியில் நாங்கள் இரண்டு ஓய்வு விடுதிகளில் சற்று நேரத்திற்கு மட்டுமே தங்கினோம். இரண்டாவது இடம் நாங்கள் குகையிலிருந்து திரும்பி வரும்போது இரவில் தங்கப்போகும் அரசாங்க பங்களா ஆகும். கிட்டத்தட்ட பிற்பகல் ஐந்து மணிக்கு, மலைகளுக்குப் பின்னால் கதிரவன் மறையும் சமயத்தில், நாங்கள் குகையை அடைந்தோம். அது சூரிய ஒளியா, அல்லது அது வேறொரு பேராற்றலின் ஒளியா? முழு சூழ்நிலையையும், அங்கிருந்த எல்லாப் பொருட்களையும் ஒரு தங்கமயமான மின்னும் ஒளியால் திரையிட்டது. இந்தப் பிரதேசத்தில் உள்ளபடியே பல குகைகள் இருக்கின்றன. ஒரு பெரிய மலைப் பாறையிலிருந்து இயற்கையால் குடையப்பட்டிருந்த ஒன்று திறந்திருந்தது. ஒருக்கால் இதே பாறை விளிம்பில்தான் லாஹிரி மகாசயர் பாபாஜியை முதலில் பார்த்தபொழுது அவர் நின்றுகொண்டு இருந்திருக்க வேண்டும். பிறகு இன்னொரு குகை; அதனுள் செல்வதற்கு நீங்கள் கைகளாலும் கால்களாலும் தவழ வேண்டும். இந்த ஒன்றில்தான் பாபாஜி தங்கியிருந்ததாகக் கருதப்படுகிறது. அதன் வெளிக் கட்டமைப்பு, முக்கியமாக அதனுடைய நுழைவாயில், பாபாஜி அதில் தங்கியதிலிருந்து ஒரு நூற்றாண்டிற்கும் அதிகமான கால மாற்றத்தில் இயற்கைச் சக்திகளினால் மாற்றப்பட்டிருந்தது. இந்தக் குகையின் உள் அறையில் நாங்கள் வெகு நேரம் ஆழ்ந்த தியானத்தில் அமர்ந்து, நம் குருதேவருடைய எல்லா பக்தர்களுக்காகவும், எல்லா மனித இனத்திற்காகவும் பிரார்த்தனை செய்தோம். மெளனம் இதற்கு முன்னால் ஒருபோதும் இவ்வளவு பேசியதில்லை. தெய்வீகத்தின் இருப்பைப் பற்றி அந்த மெளனத்தின் குரல் உரக்கப் பேசியது. என் உணர்வுநிலையினூடே ஞான போத அலைகள் பொங்கி வழிந்தன; மேலும் அன்று நான் செய்துக் கொண்ட பிரார்த்தனைகள் இன்றுவரை பதிலளிக்கப் பட்டுவிட்டன. எங்களுடைய விஜயத்தின் ஞாபகார்த்தமாகவும், குருதேவருடைய எல்லா சிஷ்யர்களும் இந்த தெய்வீக மகாவதாரத்தின் மேல் வைத்திருக்கும் பெருமதிப்பு மற்றும் பக்தியின் அடையாளமாகவும், யோகதா சத்சங்க [ஸெல்‌ஃப்-ரியலைசேஷன்] சின்னம் பொறிக்கப்பட்ட ஒரு சிறு கழுத்துத்துண்டை நாங்கள் குகையில் வைத்துவிட்டு வந்தோம். இருட்டிய பிறகு, நாங்கள் வீட்டை நோக்கி நடக்கத் தொடங்கினோம். எங்கள் யாத்திரையில் கிராம மக்கள் பலர் கலந்து கொண்டனர். அவர்களில் பலர் மிகுந்த முன்யோசனையுடனும் புத்திசாலித்தனமாகவும் மண்ணெண்ணெய் லாந்தர் விளக்குகளை எடுத்து வந்திருந்தனர். நாங்கள் மெதுவாக மலையில் இறங்கி வரும் பொழுது, கடவுளைப் பற்றிய பாடல்களை குரலெழுப்பி பாடத் தொடங்கினர். சுமார் இரவு ஒன்பது மணிக்கு, எங்களுடன் குகைக்கு வந்திருந்த, இந்தப் பிரதேசத்திலுள்ள அதிகாரிகளில் ஒருவருடைய எளிமையான வீட்டிற்குள் வந்து சேர்ந்தோம்; நாங்கள் இங்கு இளைப்பாறுமாறு அழைக்கப்பட்டோம். அந்த வீட்டிற்கு வெளியே தகதகவென ஒளிர்ந்த ஒரு கணப்பைச் சுற்றி நாங்கள் அமர்ந்தோம். எங்களுக்கு வறுக்கப்பட்ட உருளைக்கிழங்குகளும், கருப்பு ரொட்டியும், தேனீரும் பரிமாறப்பட்டன. அந்த ரொட்டி சாம்பற்கணலில் சுடப்பட்டு கருமையிலும் கருமையாக இருந்தது. அந்தப் புனிதமான இமாலயத்தின் சிலுசிலுப்பான இரவுக் காற்றில், அந்த உணவு எவ்வளவு ருசியாக இருந்தது என்பதை நான் என்றும் மறக்க மாட்டேன். நாங்கள் குகைக்குப் போகும் வழியில் தங்கிய அரசாங்க விடுதிக்கு வந்து சேரும்போது நள்ளிரவு ஆகிவிட்டது. இங்கு நாங்கள் இரவைக் கழிப்பதாக இருந்தது– எஞ்சியுள்ள நேரத்தை! அந்த இரவில் அந்தப் பிரதேசத்தின் வழியாக எங்களை அங்கு கொண்டு வந்து சேர்த்தது வெறும் நம்பிக்கைதான் என்று பலர் எங்களிடம் பிறகு குறிப்பிட்டனர். அந்தப் பிரதேசம் பயங்கரமான பாம்புகளினாலும், புலிகள், மற்றும் சிறுத்தைகளினாலும் நிரம்பி உள்ளது. அங்கு இருட்டிய பிறகு வெளியில் நடமாடுவதைப் பற்றி யாரும் கனவுகூட காணமாட்டார்கள். ஆனால் அறியாமையே ஆனந்தம் என்று கூறப்படுகிறது, மேலும் எங்களுக்கு பயப்படவேண்டும் என்று தோன்றவே இல்லை. அந்த அபாயங்களைப் பற்றி தெரிந்திருந்தாலும் கூட, நாங்கள் பத்திரமாக இருப்பதாகவே உணர்ந்திருப்போம் என்பது நிச்சயம். ஆனால் அந்தப் பிரயாணம் இரவில் மேற்கொள்ளப்படுவதை பொதுவாக நான் சிபாரிசு செய்ய மாட்டேன்! அந்த நாள் முழுவதும், காத்கோடாமில் பாபாஜியுடன் எனக்கு ஏற்பட்ட அனுபவம் என் உணர்வுநிலையின் ஒரு பகுதியாகவே இருந்தது; மேலும் நான் கடந்த பிறவியின் காட்சிகளை மீண்டும் வாழ்வது போன்ற உணர்வு இடைவிடாது இருந்து கொண்டே இருந்தது. “அன்பே என் இயல்பு” அன்று இரவு என்னால் தூங்க முடியவில்லை. நான் தியானத்தில் அமர்ந்தபொழுது, அந்த அறை முழுவதும் திடீரென்று ஒரு பொன்மய ஒளியினால் ஓளியூட்டப்பட்டது. அந்த ஒளி ஒரு பிரகாசமான நீலமாக மாறி, அங்கு மறுபடியும் நமது அன்பான பாபாஜியின் தரிசனம் பெற்றேன்! இந்தத் தடவை அவர் கூறியது: “என் குழந்தாய், இதைத் தெரிந்து கொள்: பக்தர்கள் என்னைக் காண்பதற்காக இந்த இடத்திற்கு வந்தாக வேண்டிய அவசியமில்லை. என் மீது நம்பிக்கை வைத்து அழைத்தவண்ணம், ஆழ்ந்த பக்தியுடன் அகமுகமாகச் செல்லும் எவராயினும் அவர்களுக்கு என் பதில் கிடைக்கும்.” இதுதான் உங்களுக்கெல்லாம் அவர் கூறும் செய்தி. எவ்வளவு உண்மையானது. நீங்கள் மட்டும் நம்புவீர்களானால், உங்களுக்கு வெறும் பக்தி இருந்து, மெளனமாக பாபாஜியை அழைப்பீர்களானால், அவருடைய பதிலை நீங்கள் உணர முடியும். பிறகுநான் கூறினேன். பாபாஜி. என்பிரபுவே. நாங்கள் ஞானத்தை உணர வேண்டுமென்று விரும்பும் பொழுதெல்லாம் நாங்கள் ஸ்ரீ யுக்தேஸ்வரிடம் பிரார்த்தனை செய்ய வேண்டும், ஏனெனில் அவர் முழுதும் ஞான மயமானவர்; மேலும் நாங்கள் ஆனந்தத்தை உணர வேண்டுமென்று விரும்பும் பொழுதெல்லாம் நாங்கள் லாஹிரி மகாசயரிடம் தொடர்பு கொள்ள வேண்டும் என்று எங்கள் குருதேவர் கூறி இருக்கின்றார். உங்கள் இயல்பு என்ன?” இதை நான் கூறும்பொழுதே, ஓ. என் இதயம் அன்பால் வெடித்து சிதறுவதைப் போன்ற உணர்வை அடைந்தேன், அத்தகைய அன்பு – கோடானுகோடி அன்புகள் சேர்ந்து புரண்டு ஒன்றானது! எல்லா அன்பும் அவரே; அவருடைய முழு இயல்பும் தெய்வீகப் பிரேமைதான். சொற்களால் கூறப்படவில்லையெனினும், இதைவிட நல்ல சொல்லாற்றல் வாய்ந்த பதிலை நான் நினைத்துப்பார்க்க முடியாது; இந்தச் சொற்களை, கூறியபொழுது பாபாஜி அதை மேலும் இனிமையாகவும் அதிக அர்த்தமுள்ளதாகவும் செய்தார்: “என் இயல்பு அன்பு; ஏனெனில் அன்பு மட்டுமே இவ்வுலகை மாற்றவல்லது.” அந்த மகாவதாரத்தின் இருப்பு மங்கிக் கொண்டிருந்த நீல ஒளியில் என்னைத் தெய்வீக அன்பின் அரவணைப்பில் ஆனந்தமாக ஆழ்த்திவிட்டு மெதுவாக மறைந்தது. குருதேவர் தன் உடலை நீப்பதற்குச் சற்று நேரத்திற்கு முன்பாக என்னிடம் கூறியதை நினைவு கூர்ந்தேன். நான் அவரிடம் கேட்டிருந்தேன், “குருதேவா, பொதுவாக தலைவர் மறைந்ததும், ஒரு நிறுவனம் மேலும் வளராமல் மறையத் தொடங்குகிறது. நீங்கள் இல்லாமல் நாங்கள் எப்படி தொடர்ந்து செயல்படுவது? ஊனுடலில் நீங்கள் இங்கே இனிமேலும் இல்லாதபொழுது எது எங்களை ஒருங்கே வைத்து மனவெழுச்சியடைய வைக்கும்?” அவருடைய பதிலை நான் ஒருபோதும் மறக்கவே மாட்டேன்: “நான் இவ்வுலகை விட்டுச் சென்ற பிறகு, அன்பு மட்டும்தான் என் இடத்தை எடுத்து கொள்ள முடியும். நீ வேறு எதையுமே அறியாத அளவு இரவும் பகலும் இறை அன்பில் மிகவும் திளைத்திரு. மேலும் அந்த அன்பை எல்லோருக்கும் அளித்திடு.” பாபாஜியின் செய்தியும்கூட இதுதான் — இந்த யுகத்திற்கான செய்தி. இறைவனுக்காக அன்பு செலுத்துவதும், அனைவருக்குள்ளும் இறைவனைக் கண்டு அனைவரிடமும் அன்பு செலுத்துவதும்தான், இந்த உலகில் அவதரித்த அனைத்து ஆன்மீக பெருமக்களாலும் உபதேசிக்கப்பட்ட அழியாத அருளுரையாகும். நாம் நம் சொந்த வாழ்க்கைகளில் பயன்படுத்த வேண்டிய உண்மை இது. மனித இனம் நாளையைப் பற்றி நிச்சயம் இல்லாமல் இருக்கையில் வெறுப்பு, சுயநலம், பேராசை இந்த உலகை அழித்துவிடுமோ என்று தோன்றும் இந்த சமயத்தில் அது மிகவும் முக்கியமானது. நாம் அன்பு, கருணை, மற்றும் புரிந்துகொள்ளுதல் என்ற ஆயுதங்களைக் கொண்ட தெய்வீகப் போர் வீரர்களாக இருக்க வேண்டும்: இதுதான் மிக முக்கியமாக தேவைப்படுகிறது. ஆகையால், என் அன்பர்களே, பாபாஜி உண்மையில் வாழ்கிறார் என்று நீங்கள் தெரிந்து கொள்ளலாம் என்பதனால் இந்த அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்து கொண்டேன். அவர் மெய்யாகவே இருக்கிறார், மற்றும் அவருடைய தெய்வீக அன்பைப் பற்றிய செய்தி நிரந்தரமான ஒன்றாகும். நான் சுயநலமுள்ள, குறுகிய, தனிப்பட்ட சாதாரண மனித உறவுகளின் பந்தப்படுத்தும் அன்பைக் குறிப்பிடவில்லை. கிறிஸ்து தன் சீடர்களுக்குக் கொடுப்பது போன்ற, குருதேவர் நமக்கு கொடுப்பது போன்ற அன்பைக் குறிப்பிடுகின்றேன்: நிபந்தனையற்ற, தெய்வீக அன்பு. இந்த அன்பைத்தான் நாம் எல்லோருக்கும் கொடுக்க வேண்டும். அதற்காகத்தான் நாம் எல்லோரும் ஏங்குகிறோம். இந்த அறையில் அன்புக்காகவும், ஒரு சிறிது இரக்கத்திற்காகவும், புரிதலுக்காகவும் ஏங்காதவர்கள் நம்மில் ஒருவர்கூட இல்லை. நாம் ஆன்மாதான், மற்றும் ஆன்மாவின் இயல்பு முழுமை; எனவே பரிபூரணத்தைவிடக் குறைந்த வேறு எதனாலும் நாம் என்றும் முழுமையாகத் திருப்தி அடைய முடியாது. ஆனால் நாம் இறைவனைத் தெரிந்து கொள்ளும் வரையில் பரிபூரணம் என்றால் என்ன என்று ஒருபோதும் அறிய முடியாது. அவனே பரிபூரண அன்பு, தந்தை, தாய், நண்பன், பேரன்பன்.
திருமண பொருத்தம், கணிதம், கிரக பரிகாரம், வாஸ்து, பெயா் எண் கணிதம், ஜோதிட, ஆன்மீக ஆலோசனைகள், திருக்கணிம் லகரி, வாக்கியம், ஜாமக்கோள் ஆருடம், சோழயபிரசனம் சிறந்த முறையில் பார்க்கபடும். தொடா்புக்கு: ஸ்ரீ அகஸ்த்தியர் ஜோதிட இல்லம், சத்தி மெயின் ரோடு , அரசூர் ,சத்தி வட்டம், ஈரோடு மாவட்டம்,தமிழ்நாடு Pin-638454.Telephone: +91-9865657155, E-mail: jjagan007@gmail.com முகப்பு ஜோதிடம் ஜோதிடம் பொது மூன்றாம் பாவகம் மூன்றாம் பாவகம் சகோதரம். தைரியம். வீரியம். வெற்றி. அண்டை வீடுகள். சிறு தூரப் பயணம். கடிதப் போக்குவரத்துகள். எழுத்துத் துறை. தபால் நிலையம். முன்னேரிய அறிவியலின் அத்துனை தகவல் தொடர்பு சாதனங்களும். போன் கால்கள். வீடு விற்பனை. வேலைக்காரர்கள். செய்திகள். பேரம் பேசுதல். பாகப்பிரிவினை. ஆரம்ப கல்வித் தடை. நிருபர்கள். புரோக்கர்கள்,தொழில் தந்தி. தொலைத்தொடர்பு. கொரியர். செய்தித்தாள். எழுத்து. எடிட்டிங். புத்தகம். கல்விச்சாலை. வாகனம். நெடுச்சாலை --------உடன்பிறந்தோர், தனிப்பட்ட வீரம், குறுகிய பயணங்கள், வலது காது, நீண்ட ஆயுள். (தைரியம் மற்றும் உடன்பிறப்புகளின் எண்ணிக்கை வீடு) சகோதரர்கள், சகோதரிகள், அண்டை வீட்டார் அல்லது பக்கத்து வீட்டார், உரையாட பொது மக்கள், மன அறிவு, முழுமையான பணிகளை அடைய திறன். இது தகவல்தொடர்பு, செய்திகள், கடிதங்கள், அறிவிப்புகள், எழுத்துக்கள். சகோதரர்கள் மற்றும் சகோதரி, உதவியுடன் அல்லது அவர்களிடம் இருந்து உறவுகள் இந்த வீட்டில் இருந்து ஆராயப்படுகின்றன. மனதில் சக்தி அறிவார்ந்த முயற்சிகள், கற்பித்தல், தனிப்பட்ட எண்ணங்கள், ஆரம்ப கல்வி, குமாஸ்தாக்கள், பார்வையாளர்கள், சுரங்கப்பாதை, ஆவணங்கள், எழுத்து பாத்திரங்கள், கார்கள், உடல் பாகம் கைகள், தோள்கள், ரயில், சாலை மற்றும் ஆற்று போக்குவரத்து, உள்நாட்டு போக்குவரத்து, இடம்பெயருதல், இதழ்கள், குறுங்கால வெளியீடுகள் பன்னிரெண்டு வீடுகளுக்கும் உரிய உடற் பகுதிகள்: 3ஆம் வீடு: காதுகள், கைகள், உணவுக்குழாய், மூச்சுக் குழாய் மூன்றாம் வீட்டில் வந்தமரும் கிரகங்களுக்கான பலன்கள். 1. மூன்றில் சூரியன் இருந்தால். இங்கே வந்தமரும் சூரியனால் ஜாதகத்திற்கு அதீத வலிமை கிடைக்கும். Sun's placement in the third is a strong point to any horoscope! If the Sun is in the third, the native will be courageous and authoritative ஜாதகன் அதீத துணிச்சல் மிக்கவன். ஜாதகன் சமயோசித புத்தியுள்ளவன் எந்தக் கஷ்டத்தையும் சமாளிக்கும் ஆற்றல் மிக்கவன். எதிலும் வெற்றி பெறக்கூடியவன். இங்கே வந்தமரும் சூரியனின் மேல் சனி அல்லது ராகு அல்லது கேது போன்ற தீய கிரகங்களின் பார்வை பட்டால் அது ஜாதகனின் உடன்பிறப்புக்களுக்கு நல்லதல்ல! 2. மூன்றில் சந்திரன் இருந்தால். இந்த இடம் பத்தாம் வீட்டிற்கு, அங்கிருந்து ஆறாம் வீடு. ஆகையால் இங்கே அமரும் சந்திரனால், ஜாதகனின் வேலைகளுக்கு உபத்திரவம். மனமாற்றம் உடையவன். ஒரே வேலையில் ஒழுங்காக இருக்கமாட்டான். Jumping from one job to another job. அடிக்கடி வேலையை மாற்றுவான் அல்லது ஊரை மாற்றுவான். சுறுசுறுப்பான மனதை உடையவன். துறுதுறுவென்று இருப்பான். ஜாதகனின் மனைவி மிகவும் அழகாக இருப்பாள். இந்த இடம் ஏழாம் இடத்தில் இருந்து ஒன்பதாம் வீடு. அதை மனதில் கொள்க! ஜாதகனுக்கு எல்லா விஷயங்களிலும் அறிவு இருக்கும். If the Moon is in the third, the younger siblings of the native will be happy and prosperous இங்கே வந்தமரும் சந்திரனின் மேல் சனி அல்லது ராகு அல்லது கேது போன்ற தீய கிரகங்களின் பார்வை பட்டால் அது ஜாதகனுக்கு நல்லதல்ல! மன அமைதி என்பது இல்லாமல் போய்விடும். அதேபோல இங்கே வந்தமரும் சந்திரன், தேய்பிறைச் சந்திரனாகவோ அல்லது தனது சுயவர்க்கத்தில் பரல்கள் குறைந்த சந்திரனாகவோ இருந்தாலும் நல்லதல்ல! கொடூர சிந்தனைகள் அவ்வப்போது வந்து எட்டிப் பார்க்கும். பல பிரச்சினைகளைக் கொடுக்கும்! 3. மூன்றில் செவ்வாய் இருந்தால். காரகன் பாவ நாசம் என்பார்கள். செவ்வாய் உடன்பிறப்புக்களுக்குக் காரகன். அவன் இங்கே வந்து அமர்ந்தால் அது ஜாதகனின் உடன் பிறப்புக்களுக்கு நல்லதல்ல! This position of Mars is bad for brothers and sisters of the native! If Mars is exalted, it is bad for younger brothers. If afflicted by Saturn the native may suffer with ear trouble பொதுவாக ஜாதகன் துணிச்சல் மிக்கவனாகவும், நல்ல திறமைகள் மிக்கவனாகவும் இருப்பான். சிலருக்குக் குடும்பக் கவலைகள் சூழ்ந்திருக்கும். குடும்பத்தை உயர்த்திப் பிடிக்க வேண்டிய கடமை இருக்கும். சிலருக்குப் பயணங்களில் விபத்துக்கள் ஏற்படலாம். (இது பொதுப்பலன் சாமிகளா) இந்த அமைப்பின் மேல் தீய கிரகங்களின் பார்வை விழுந்தால், ஜாதகனுக்குத் தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் வந்து போகும் அல்லது உக்கிரமான அல்லது தீவிரமான மனப்பான்மை மிகுந்திருக்கும். மூன்றாம் வீடு செவ்வாயின் சொந்த வீடாக இருந்து அதாவது மேஷம் அல்லது விருச்சிகம் மூன்றாம் வீடாக இருந்து, அங்கே செவ்வாய் ஆட்சி பலனுடன் இருந்தால் மேற் சொன்னவைகள் எதுவும் இருக்காது. ஜாதகன் மகிச்சியுடன், பிரச்சினைகள் எதுவுமின்றி இருப்பான். மகரத்திற்கும் இதே பலன். ஏனென்றால் அங்கே செவ்வாய் உச்ச பலனுடன் இருப்பார் 4. மூன்றில் புதன் இருந்தால். ஜாதகன் நல்ல செயல்கள் பலவற்றைச் செய்து, மற்றவர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுப்பவனாக இருப்பான். ஆனால் அவன் சொந்த வாழ்க்கையில் மகிழ்ச்சி குறைவாக இருக்கும். ஜாதகன் படு கெட்டிக்காரனாக இருப்பான். படிப்பிலும் வாசிப்பிலும் அதிக ஆர்வமுள்ளவனாக இருப்பான். எடுத்த வேலையைச் சிரத்தையோடு முடிப்பான். அதில் என்ன இடர் வந்தாலும் பாதியில் விடாமல் செய்து முடிப்பான். அதற்கு உரிய ஆற்றலும் துணிவும் மேலோங்கி இருக்கும். எதையும் புத்தியால் சமாளிக்கும் ஆற்றல் பெற்றிருப்பான். இந்த அமைப்பு உள்ளவர்கள் தொழில் அல்லது வியாபாரத்தில் ஈடுபட்டு பெரும் வெற்றி பெறுவார்கள் என்பது பொதுப்பலன். சிலர் பொருள் வணிகத்தில் அல்லது பங்குச் சந்தை வணிகத்தில் ஈடுபட்டு அதீத செல்வத்தைச் சேர்ப்பார்கள். இந்த இடம் 11ஆம் இடத்திற்கு ஐந்தாம் இடம் அதை மனதில் கொள்க! இந்த அமைப்பினருக்குச் சராசரியைவிட அதிகமான உடன்பிறப்புக்கள் இருக்கும். உடன்பிறப்புக்களும், நண்பர்களும் ஜாதகனின் மேல் உயிரை வைத்திருப்பார்கள். அதாவது அந்த அளவிற்கு அவனை விரும்புவார்கள். இந்த அமைப்பில் குறையே இல்லையா? உண்டு! இந்த அமைப்பின் மேல் சனி அல்லது ராகு அல்லது கேதுவின் பார்வை பட்டால், ஜாதகனுக்கு நரம்பு சம்பந்தமான நோய்கள் ஏற்படும் அபாயம் உண்டு. 5 மூன்றில் குரு இருந்தால்: இது ஒரு நன்மைதரும் அமைப்பு. ஜாதகன் 'நடப்பது எல்லாம் நன்மைக்கே' என்று நினைக்கும் பெருநோக்கோடு இருப்பான். நல்ல உடன்பிறப்புக்கள் கிடைப்பார்கள். Jupiter: The native will be victorious and endowed with high mental strength இங்கே குரு பலவீனமாக இருந்தால், அதாவது தீய பார்வைகளுடன் அல்லது சுயவர்க்கத்தில் குறைவான பரல்களுடன் இருந்தாலும் அல்லது குரு வந்தமரும் வீடு, அவருக்குப் பகை அல்லது நீச வீடாக இருந்தாலும் நன்மைகள் இருக்காது. ஜாதகனின் உடன்பிறப்புக்கள் நன்றிகெட்டவர்களாக இருப்பார்கள். குறைவான நண்பர்களே இருப்பார்கள். நல்ல வாய்ப்புக்கள் கை நழுவிப்போகும். 6. மூன்றில் சுக்கிரன் இருந்தால்: ஜாதகனின் மனப்பாங்கு நல்ல விதமாக இருக்கும். ஆனால் உடல் அரோக்கியம் மட்டும் சுமாராக இருக்கும். ஜாதகன் எப்போதும் உற்சாகம் குன்றி இருப்பான். இசை, நடனம், நுண்கலைகள் போன்றவற்றில் ஜாதகன் ஆர்வமுடையவனாக அல்லது ஈடுபாடு உடையவனாக இருப்பான். கொடுக்கல் வாங்கல் போன்ற பணவிவகாரங்கள் சுமூகமாக இருக்காது. சிக்கல்கள் நிறைந்ததாக இருக்கும். Venus Is not good in this place. The native could get annoyed very easily. இந்த இடத்துச் சுக்கிரன் பாதிக்கப்பெற்றிருந்தால், ஜாதகன் கருமியாக இருப்பான். ஏழ்மை வாட்டும். அதிகமாக உணர்ச்சி வசப்படுவான். தொட்டாற்சிணுங்கி. சிலர் ஊழல் விவகாரங்களில் மாட்டிக் கொண்டு அவதிப்பட நேரிடும். பொதுவாக இந்த அமைப்புக்காரர்களுக்குச் சகோதரர்கள் நல்லவர்களாக இருப்பார்கள். தன் குழந்தைகளால் ஜாதகனுக்கு மகிழ்ச்சி இராது. 7 மூன்றில் சனி இருந்தால்: ஜாதகன் தையமும், துணிச்சலான செயல்பாடுகளையும் உடையவன். செல்வந்தனாக இருப்பான். சிலர் உடன் பிறப்புக்களை இழக்க நேரிடும். சிலர் கடுமையான ஆசாமிகளாக இருப்பார்கள். விபரீதமான சிந்தனைகளுக்கு ஆட்படுபவர்களாக இருப்பார்கள். உடன் பிறப்புக்க்களால் துன்பம் ஏற்படும். அரசு மரியாதை, கெளரவம் கிடைக்கும். சிலருக்கு அவர்களுடைய ஊரில் உள்ள பொது அமைப்புக்களில் தலைமை ஏற்கும் வாய்ப்புக் கிடைக்கும். ஆயுள்காரகன் சனி இங்கே இருப்பது நன்மை பயக்கும். ஜாதகனுக்கு நீண்ட ஆயுள் இருக்கும். இந்த இடம் எட்டாம் இடத்திற்கு எட்டாம் இடம் அதோடு சனியும் எட்டாம் பார்வையாக இங்கிருந்து ஆயுள் ஸ்தானத்தைப் பார்ப்பார். அதை மனதில் கொள்க! Saturn is good for longevity if he is placed in this house. Since 3rd house is the eighth house from the eighth பல ஏமாற்றங்களையும், சரிவுகளையும், சங்கடங்களையும் சந்தித்த பிறகே ஜாதகன் வெற்றிகளை அடைவான். அது இந்த அமைப்பிற்குரிய விஷேசத் தன்மையாகும். அவசரம், பரபரப்பு, தவறான அணுகுமுறை எனும் மனப்போக்கு ஏற்படும். வயதாக வயதாக அதெல்லாம் மறைந்து ஒரு சீரான நிலைமை ஏற்படும். இங்கே அமரும் சனி, பலவீனமாக இருந்தால். ஜாதகனுக்கு எப்போதும் மனக்கஷ்டங்கள் இருந்துகொண்டே இருக்கும் 8 மூன்றில் ராகு இருந்தால்: ராகு சனியைப்போலவே பலனைத் தரக்கூடியவன். இங்கே ராகு இருப்பது இதற்கு முதல் பத்தியில் சனிக்குச் சொன்னதுபோலவே சில பலன்கள் இருக்கும் அதில் முக்கியமானது ராகு இங்கே அமையப்பெற்ற ஜாதகன் நீண்ட நாட்கள் உயிர் வாழ்வான். தீர்க்காயுள். இந்த அமைப்பு சகோதர உறவுகளுக்கு நல்லதல்ல. ஜாதகன் தோற்றத்தில் மட்டுமே தைரியசாலியாக இருப்பான். 9. மூன்றில் கேது இருந்தால்: இங்கே இருக்கும் கேது செவ்வாயைப் போல பலன்களைத் தரக்கூடியவர். ஜாதகன் வலிமையானவனாகவும், துணிச்சலான சாதனைகளைச் செய்யக்கூடியவனாகவும் இருப்பான். If ketu is placed in this house, the native will be courageous, religious and wealthy The 3rd house signifies courage, hence hands, shoulders and chest The Ear, Nose and throat problems are also signified by this house. Younger siblings of a person come under his house. This house is also connected with printing, publishing, short journeys and transport business. இந்த மூன்றாம் வீட்டிற்கான பலன்கள் அதன் அதிபதியின் தசா புத்திகளிலும், அதோடு அதில் அமர்ந்திருக்கும் கிரகங்களின் தசா புத்திகளிலும் கிடைக்கும் மூன்றாம் வீட்டதிபதி இருக்கும் இடங்களை வைத்துப் பலா பலன்கள் 1 மூன்றாம் வீட்டு அதிபதி (Lord of the 3rd House) லக்கினத்தில் இருந்தால்: இந்த அமைப்பு 3ஆம் வீட்டிற்கு அதன் இடத்தில் இருந்து 11ஆம் இடமாகும். ஆகவே 3ஆம் அதிபதி இங்கே வந்து அமரும் போது பல நன்மைகளைச் செய்வார். ஜாதகன் உடல் ஆரோக்கியத்துடன் இருப்பான். யோகங்கள் நிறைந்து இருப்பான். சகோதரன், சகோதரிகளின் அதரவைப் பெற்றவனாக இருப்பான். செல்வம் செல்வாக்கு ஆகியவைகளைப் பெற்றவனாகவும் இருப்பான். ஜாதகன் தன் முனைப்பும், தன் நிறைவும் பெற்றவனாக இருப்பான். ஜாதகனின் அறிவும், புத்திசாலித்தனமும் பாராட்டும் வகையில் இருக்கும். அவனுடைய அறிவு கல்வித் தகுதியைச் சார்ந்ததாக இல்லாமல் சிறப்பாக இருக்கும். சட்டென்று கோபம் வரக்கூடியவனாக இருப்பான். அதை அடக்கும் திறமையை ஜாதகன் வளர்த்துக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் அந்தக் கோப உணர்வே அவனுடைய முதல் எதிரியாக மாறிவிடும். சிலர் தோற்றத்தில் கெச்சலாக இருப்பார்கள். ஆனால் தேவைப்படும் சந்தர்ப்பங்களில் தங்களுடைய சக்தியையும், வீரத்தையும் பயன்படுத்தி வெற்றி பெறுவார்கள். இந்த அமைப்புடையவர்கள், நடிப்பு, இசை, நடனம் என்று எல்லாவற்றிலும் ஆர்வம் உடையவர்களாக இருப்பார்கள். சிலர் நாடகம், திரைப்படம் என்று நடிக்கச் சென்று அதில் புகழ்பெறுவார்கள். இந்த அமைப்பிற்குச் ஜாதகத்தில் சுக்கிரனும் வலுவாக இருக்க வேண்டும். 2 மூன்றாம் வீட்டு அதிபதி (Lord of the 3rd House) இரண்டாம் வீட்டில் இருந்தால்: இந்த இடம் மூன்றாம் வீட்டிற்குப் பன்னிரெண்டாம் வீடாகும். அதாவது மூன்றாம் இடத்திற்கு அதனிடத்திலிருந்து மறைவிடம். ஜாதகன் தைரியம் இல்லாதவனாக இருப்பான். லொக்' லொக்குப் பார்ட்டி. அதாவது ஆரோக்கியம் குறைந்தவன். சிலர் வயதான காலத்தில் மருந்து மாத்திரைகளிலேயே உயிர்வாழ நேரிடும். சகோதரன், சகோதரிகளின் ஆதரவினால் காலம் தள்ள நேறிடும். இந்த வீட்டு அதிபதி சுபக்கிரகமாக இருந்தாலும், தீய கிரகங்களின் பார்வை இல்லாமலும் இருந்தால், சகோதரன் அல்லது சகோதரியின் சொத்துக்கள் ஜாதகனுக்குக் கிடைக்கும் அல்லது வந்து சேரும். சொத்துக்களை யார் வேண்டாம் என்று சொல்வார்கள்? கடன் வந்து சேர்ந்தால் மட்டுமே மனிதன் வேண்டாம் என்று சொல்வான் இந்த வீட்டு அதிபதி 2ல் இருக்கும் நிலைமையோடு, இந்த வீட்டின் மேல் தீய கிரகங்களின் பார்வை விழுந்தால், ஜாதகன் மிகவும் சிரமமான தாழ்மையான வாழ்க்கை வாழ்வான். அப்படி இல்லையென்றால், செல்வமான, மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்வான். சிலர் தங்கள் இள்வல்களை இழக்க நேரிடும். இழப்பது என்பது என்னவென்று சொல்லவும் வேண்டுமா? If the 3rd lord is in the 2nd, The native may be lazy or lethargic He/she do not take his/her undertakings seriously. Their image may be spoiled by their headstrong behavior They may not keep punctuality and they may not also keep up the decencies of debate. They may not have good relations with the younger co-borns. They may have hostile neighbors. 3. மூன்றாம் வீட்டு அதிபதி (Lord of the 3rd House) மூன்றாம் வீட்டிலேயே (in his own house) இருந்தால்: அப்படி இருக்கும் கிரகம், ஆட்சி அல்லது உட்ச பலத்துடன் இருந்தால், ஜாதகனுக்கு நல்ல சகோதரன் சகோதரிகள் இருப்பார்கள். அவர்கள் பெயர் சொல்லும்படி செல்வத்துடனும், புகழுடனும் இருப்பார்கள். அவர்களால் ஜாதகனுக்கு சகலவிதமான ஆதரவுகளும் கிடைக்கும். இந்த சகலவிதம் எனும் சொல்லில் எல்லாம் அடங்கி விட்டது. ஜாதகனும் அவனளவிற்கு அந்தஸ்து அதிகாரம் என்று கெளரவமாக இருப்பான். பலசாலியாகவும், போக பாக்கியங்களைப் பெற்றவனாகவும் இருப்பான். போக பாக்கியங்கள் என்றால் என்னவென்று தெரியுமல்லவா? தெரியாதவர்கள் தனி மின்னஞ்சலில் கேளுங்கள். சிலர் ஆன்மிகம், தெய்வ வழிபாடு, பக்தி என்று ஒரு மார்க்கமாக இருப்பார்கள். பொதுவாக ஜாதகன் தைரியம் உடையவனாக இருப்பான். மூன்றாம் அதிபதி 3ஆம் வீடு 6ஆம் வீடு அல்லது 11ஆம் வீட்டில் இருந்தால் ஜாதகனுக்கு நிறைய சகோதரன், சகோதரிகள் இருப்பார்கள். மூன்றாம் அதிபதி செவ்வாயாக இருந்து 3ஆம் வீட்டிலேயே இருந்தால் ஜாதகன் தன் சகோதரர்களைப் பறி கொடுக்க நேரிடும். சனியாலும் அதே பலன்தான் கிடைக்கும் If the 3rd lord is in the 3rd, the native will have the company of brothers & sisters. They view everything philosophi ராசி பலன் மேஷம்ரிடபம்மிதுனம்கடகம்சிம்மம்கன்னிதுலாம்விருச்சீகம்தனுசுமகரம்கும்பம்மீனம்சில ஆன்மீக குறிப்புகள்சூரியனின்சந்திரன் தன்மைசெவ்வாய்புதன்சனிசுக்ரன்ராகுகேதுஅபூர்வ ஆலயங்களும் அவற்றின் சிறப்புகளும்அம்புலிப் பருவம்அம்மனின் 51 சக்தி பீடங்கள்அர்ச்சனை என்ற சொல்லின் பொருள் தெரியுமா?அலுவலக வாஸ்துஅலுவலக வாஸ்துஅஷ்டலெட்சுமி யோகம்ஆயில்யம்பத்தாம் ஆம் அதிபதி 10ஆம் வீட்டில் இருப்பதல் பலன்1ஆம் வீட்டில் குரு இருந்தால் பலன்வருங்கால கணவர் இப்படித்தான்!ஜென்ம ராசி மந்திரம் யந்திரம் மூலிகைகுருவுக்கு மரியாதை செய்வோம்குழந்தை உண்டா? இல்லையாகல்வியும், தொழிலும் பெருகட்டும்ஜீவ நாடிகுலதெய்வங்கள் என்றால் என்ன ..?ஜாதகத்தில் கேள்விகள்கால பைரவர் தரிசனம் பெற்ற சுப்பாண்டி...!ஸ்ரீ தேவப்பிரசன்னம்இந்திரன் எங்கே இருக்கிறார்? தேவலோகத்திலா?மனதை வருத்தும் நிகழ்வுகள்: பரிகாரம் என்ன?சிவன் கோயிலில் திருடி விட்டால் அதற்கு என்ன பரிகாரம் செய்யலாம்?பிரம்மஹத்தி தோஷத்திற்கு பரிகாரம் என்ன?வாழ்க்கை முழுவதும் கடன்பட்ட நிலையில் இருப்பவர்களுக்கு என்ன பரிகாரம்?ஜாதகபாவகத் தொடர்பான கேள்விகள்இராஜ யோகம்பெண்களுக்கு சம உரிமை பாவகம் ஓன்றாம் பாவகம்இரண்டாம் பாவகம்நான்கம் பாவம்மூன்றாம் பாவகம்ஐந்தாம் பாவகம்ஆறாம் பாவகம்ஏழாம் பாவகம்எட்டாம் பாவகம்ஒன்பதம் பாவகம்பத்தாம் பாவகம்பதினோன்றாம் பாவகம்பன்னிரன்டாம் பாவகம் ஜோதிடம் அதிர்ஷ்டகரமான ஜாதக அமைப்புள்ள மனைவி யாருக்கெல்லாம் அமையும்ஹோம மந்திரங்களும் - ஹோமத்தின் பலன்களும்குளிர்ந்த கடலுக்கு அக்னி தீர்த்தம் என பெயர் ஏன்?ஜாதகத்தை வைத்து நல்ல காலம் எப்போது என்பதை எப்படிப் பார்ப்பதுஜீவகாருண்யத்தை கடைப்பிடித்தால் வாஸ்துக் குறைபாடு நீங்கும் என்பது உண்மையா?அரசமரத்தை சுற்றுவது எப்படி?கிரகங்களின் சிறப்பான பலன்கள்ஆதி விரதம்என்றும் இளமை தரும் திருமூலர் அருளிய கடுக்காய்!சின் முத்திரை தத்துவம்ஆயுள் தேவதை பிரார்த்தனைஅஷ்டலட்சுமி யோகம்அனுமன் பெற்ற அற்புத வரங்கள்குங்குமம் இட்டுக் கொள்வது எதற்காக?ஒரு ஜாதகனுடைய கல்வித் தகுதியை எப்படி நிர்ணயம் செய்வது?சிவன் கோயில்களில் எவ்வாறு வழிபட வேண்டும்?இந்துக்காலக் கணக்கீடு108 சித்தர்களும் அவர்களின் ஜீவ சமாதிகளும்ஜோதிடத்தில் எத்தனை பிரிவுகள் உள்ளதுசோதிட தேவர்சந்திரகிரணம்ஸ்ரீரங்கம் கோயில் பிறந்த கதை தெரியுமாவியாபாரம், தொழில் செழிக்க வாஸ்துஅதிதேவதை கிரகங்களின்ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட திவ்ய தேசங்கள்இறை வழிபாட்டு முறைஒருவருக்கு உயிர்க்கொல்லி நோய் ஏற்படும் என ஜாதகத்தில் அறிய முடியுமாஒருவருக்கு குறிப்பிட்ட தசை, புக்தி நடக்கும் போது கைரேகையில் மாற்றம் ஏற்படுமாகர்பமும் வாழ்க்கை வளமும்காயத்ரி மந்திரத்தின் முக்கியத்துவம்கும்பாபிஷேகம் : சில தகவல்கள்குழப்பமான மனநிலையில் இருந்து மீள என்ன செய்யலாம்?சந்தோஷி மாதா விரதம் மேற்கொள்ளும் வழிமுறைகள்!சன்னதியை மறைத்து நிற்கக்கூடாது என்பது ஏன்?ஜாதகத்தில் ராசியில் இருந்து அம்சம் எப்படி கணக்கிடு செய்வதுதிருமணத்தடை நீங்க வெள்ளைப்புடவை வழிபாடுதேவேந்திர யோகம்தொழில் செய்தால் வெற்றியுண்டாகுமென்பதுதொழிலதிபர்கள் கோடீஸ்வரராக வழிபாடுகள்நாடி ஜோதிடம்அப்த பூர்த்தி. ஆயுஷ்ய ஹோமம்.12. ராசிக்கேற்றபடி சொல்ல வேண்டிய கடவுளின் துதிகள்!நட்சத்திர பலன் & பரிகார ஸ்தலம்திருமண நாள் அன்று கடைபிடிக்க வேண்டிய விதிகள்கைரேகை பலன்கள்:ஸ்ரீரங்கம் கோயில் பிறந்த கதை தெரியுமா?3ம் பாவகத் தொடர்பான கேள்விகள்1 ம் பாவகத் தொடர்பான கேள்விகள்2ம் பாவகத் தொடர்பான கேள்விகள்மனித உடலில் வியாதி, தன்மை குறிக்கும், உறுப்புகள்,காரணிகள்நான்காம் இடத்து சனியால் ஏற்படும் நன்மை/தீமைகள் என்ன?ஒரு பெண் ஜாதகத்தில் புதனும், சந்திரனும் லக்னத்தில் இருந்தால் என்ன பலன்?ஒருவர் ஜாதகத்தில் 8/9வது வீடுகளில் எந்த கிரகங்கள் இருக்க வேண்டும்கண்திருஷ்டி விலக கணபதி வழிபாடு!காம உணர்ச்சி என்பது ராசிக்கு ராசி வேறுபடுமாஸ்ரீ சரஸ்வதி காயத்ரிவைகுண்ட பதவி கிடைக்க விரதம்விநாயகரை எந்த இலை கொண்டு வழிபட வேண்டும்?விநாயகர் வழிபாட்டு முறைகள்வினைதீர்க்கும் விசாக விரதம்ரஜ்ஜு பொருத்தம் இல்லாவிட்டால் என்ன பரிகாரம்?ரஜ்ஜு பொருத்தம் இல்லாவிட்டால் என்ன பரிகாரம்?பெண்கள் விரத நாள்பெண்கள் வரலட்சுமி விரதம் இருப்பது ஏன்?பெருமாள் வழிபட்ட சிவாலயங்கள்மக்கள் காளிக்கு பயந்தது ஏன்?ஐயப்பனின் தரிசனம் கிடைக்கசுபகாரியம் நடைபெற உள்ள நாளில் மரணம் நிகழ்ந்தால்சுப சகுனங்கள்சுக்ரன் காரகத்துவம்சுக்கிரவார விரதம்அவ்வையார் விரதம்அவிட்டம்இல்லம் தேடி வரும் மகாலட்சுமி விரதம்உத்திரம்கார்த்திகை தன்மைள்கேட்டை தன்மைஆர செளரி தன்மை பலன்கங்கண சூரிய கிரகணம்கட்டிட பணியை தொடங்கும் பூஜைகட்டிடங்களின் வயதை நிர்ணயிக்கும் வாஸ்துகிழமையும் பிரதோஷபலன்களும்குபேர லட்சுமி விரதம்குரு பகவானை எவ்வாறு வழிபாடுகள்கேது காரகத்துவம் பலன்கேது பகவான் விரதம் ஜாதகம்கோச்சாரத்தால் எப்போது குற்றம் வரும்ஸ்ரீ ச்யாமளா தண்டகம்ஸ்ரீ வாராஹி அம்மன்ஆண்டாள் திருப்பாவைவினைதீர்க்கும் விசாக விரதம்ஒருவருக்கு ஊனமுற்ற குழந்தை பிறக்கும் என்று ஜோதிடத்தில் கணிக்க முடியுமாபாவக தொடர்பான கேள்விகள்இயற்கை மருத்துவம்எப்படி இருந்த பழமொழி இப்படி ஆயிடுச்சே இது சரியா ?என் வாழ்க்கையில் வெற்றி, தோல்வி எப்படி இருக்கும்?திருமணப்பொருத்தம்10 ஆம் அதிபதி 10ஆம் வீட்டில் இருப்பதல் பலன்10 ஆம் அதிபதி 12ஆம் வீட்டில் இருப்பதல் பலன்10 ஆம் அதிபதி 1ஆம் வீட்டில் இருப்பதல் பலன்10 ஆம் அதிபதி 2ஆம் வீட்டில் இருப்பதல் பலன்கேமதுருமா யோகம்கோச்சாரத்தால் எப்போது குற்றம் வரும்சக்கர யோகம்சட்டைமுனி சித்தர்பழனி சற்குரு பலன்கள் 108ன் சிறப்பு தெரியுமாஅறுவைச் சிகிச்சை போன்றவற்றிற்கு நாள், கோள் பார்த்து செய்வது நல்லதா?சூரியனின்ஞாயிற்றுக்கிழமைஜீவகாருண்யத்தை கடைப்பிடித்தால் வாஸ்துக் குறைபாடு நீங்கும் என்பது உண்மையாசிவன் கோயிலில் திருடி விட்டால் அதற்கு என்ன பரிகாரம் செய்யலாம்ஏகாதசி விரதபலன்கள்அட்சய திருதியை விரதம் இருப்பது எப்படிஅடிக்கடி கருச்சிதைவு ஏற்படும் பெண்கள் என்ன பரிகாரம் செய்யலாம்அடிக்கடி சிறுநீர் கழித்தல், குறைவாக ‌சிறு‌நீ‌ர் வெளியேறுதல், சிறுநீர் கழிக்கும்போது வலியைஅடுக்குமாடிக் குடியிருப்புகளில் வசிப்பவர்களின் நிலை ஏன் ஒரே மாதிரி இருப்பதில்லைஅடுத்த ஜென்மத்தை சிறப்பாக அமைத்துக் கொள்ளும் தகுதி மனிதர்களுக்கு உண்டாஅதீத தோஷம்அதிசயகோலத்தில் அம்மன் அருள்பாலிக்கும் அற்புத ஆலயங்கள்அமாவாசையில் அன்னாபிஷேகம்!அருள் தரும் அய்யனார் வழிபாடுஅக்னி மூலையில் கிணறு உள்ள இடத்தில் வீடு கட்டலாமா
கொழும்பு: விடுதலைப் புலிகள் மறைவிடத்திலிருந்து ரசாயான ஆயுதங்கள் தொடர்பான விஷ வாயு கசிவிலிருந்து தப்ப உதவும் முகமூடிகளை கண்டுபிடித்துள்ளதாக இலங்கை ராணுவம் தெரிவித்துள்ளது. முல்லைத்தீவு மாவட்டம் உடயார்கட்டுக்குளம் பகுதியில் இவற்றை கண்டுபிடித்துள்ளதாக ராணுவம் தெரிவித்துள்ளது. பெருமளவிலான முகமூடிகள், வேதிகுண்டுகளின் தாக்கத்திலிருந்து தப்ப உதவும் உடைகள் உள்ளிட்டவை கிடைத்துள்ளதாம். இவற்றின் மூலம் பெருமளவில் ரசாயான ஆயுதங்களை ராணுவத்தினர் மீது பயன்படுத்த விடுதலைப் புலிகள் திட்டமிட்டுருக்கலாம் எனவும் இலங்கை ராணுவம் சொல்லியுள்ளது. மேலும், கடந்த இரண்டு ஆண்டுகளாக ராணுவத்தினர் மீது ரசாயன வாயுக்களையும் புலிகள் பயன்படுத்தி வருகின்றனராம். ஆனால் அவர்கள் எதிர்பார்த்த விளைவை அது தரவில்லையாம். சர்வகட்சிக் குழு சர்வகாட்சியாக மாறியுள்ளது: பா.அரியநேத்திரன் பாராளுமன்ற உறுப்பினர் இதுவரை 16 ரசாயான தடுப்பு உடைகளையும், 17 முகமூடிகளையும் பறிமுதல் செய்துள்ளதாக ராணுவம் கூறுகிறது. இதற்கிடையே, அம்பலவன்பொக்கணை என்ற இடத்தில் விடுதலைப் புலிகளின் விமானத்தின் சிதைந்த பாகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் ராணுவம் கூறியுள்ளது. Source & Thanks : /thatstamil.oneindia விநாயகமூர்த்தி முரளிதரனை (கருணா) சார்ந்தோர் தற்போது ஆயுதங்களை கையளிக்க மாட்டார்கள்: பேச்சாளர் கமலநாதன்
Aishwarya Dutta, Fashion, Celebrity, Model, Bigg Boss Tamil 30th Mar 2022 : பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும், கமல் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகச்சியின் மூலம் மிக பிரபலமானவர் நடிகை ஐஸ்வர்யா தத்தா. சமூகவலைத்தள பக்கங்களில் ஹாட்டான போட்டோஷூட் படங்களை ரசிகர்களுடன் பகிர்ந்து வரும் ஐஸ்வர்யா தத்தா, சமூகவலைத்தள பக்கங்களில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான ரசிகர்களை கொண்டுள்ளார். இவர் நடித்த படங்கள் தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், பாயும் புலி, ஆறாது சினம், சத்திரியன், மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன. ஐஸ்வர்யா தத்தாவின் வெளிவர இருக்கும் படங்கள் கெட்டவன்னு பேர் எடுத்த நல்லவன்டா, அலேகா, கன்னி தீவு. இது சமீபத்தில் ஐஸ்வர்யா தத்தா பகிர்ந்து, வைரலான படங்களின் தொகுப்பு. View this post on Instagram A post shared by Aishwarya Dutta (@aishwarya4547) Tags: Aishwarya Dutta Share on Share on Facebook Share on Twitter Share on Pinterest Share on WhatsApp Share on WhatsApp Share on Linkedin Share on Tumblr Share on Reddit
adminNovember 2, 2022Comments Off on காதலனுக்கு விஷம் கொடுத்து தப்பிக்க வழியை கூகிளில் தேடிய காதலி0105 கேரளாவில் வசதியாக வரன் அமைந்ததால் உயிருக்கு உயிராக காதலித்த காதலனை காதலி விஷம் வைத்து கொ-லை செய்துள்ள நிலையில், பொலிசில் சிக்காமல் இருப்பது எப்படி என்ற கூகுளில் தேடியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் சுவாரசியமான செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழ் டெஸ்க் அன்ட்ரொயிட் அப்பை டவுண்லோர்ட் செய்யுங்கள் கன்னியாகுமரி கேரளா எல்லையில் அமைந்துள்ள பாறசாலையைச் சேர்ந்த ஜெயராஜ் என்பவரின் மகன் ஷாரோன் ராஜ்(23). இவர் கல்லூரி படித்து வந்த நிலையில், அதே கல்லூரிில் படித்த கிரீஷ்மா என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். ஷாரோன் ராஜுக்கு கிரீஷ்மா ரெக்கார்ட் நோட்டுகள் எழுதிக் கொடுப்பது போன்ற உதவிகளையும் செய்து வந்திருக்கிறார். இந்த பழக்கமே நாளடைவில் காதலாக மாறியுள்ளது. மேலும் தனது காதலனுடன் பல டிக்டாக் காணொளிகளை வெளியிட்டு இரண்டு பேரும் மகிழ்ச்சியாக இருந்துள்ளனர். இவர் கல்லூரி படிப்பினை முடித்து வேலைக்கு சென்ற நிலையில் காதலன் மட்டும் படிப்பினை மேற்கொண்டு தொடர்ந்துள்ளார். இந்நிலையில் கிரீஷ்மாவிற்கு வசதியான இடத்திலிருந்து வரன் வந்ததால், அவரைத் திருமணம் செய்ய வேண்டும் என்ற ஆசை எழுந்துள்ளது. ஆனால் ஜாதகத்தில் முதல் கணவர் இறந்துவிடுவார் என்று காணப்பட்டதால், தான் காதலித்த ஷாரோனை தனது பெற்றோர் முன்னிலையில் திருமணம் செய்துள்ளார். பின்பு இவரைக் கொ-லை செய்துவிட்டால் இரண்டாவது கணவருடன் மகிழ்ச்சியாக வாழலாம் என்று காதலி நினைத்து, தனது வீட்டிற்கு வந்த ஷாரோனுக்கு குளிர்பானத்தில் ஸ்லோ பாய்சனை கலந்து கொடுத்துள்ளார். குளிர்பானத்தை குடித்ததும் வாந்தி எடுத்த ஷாரோனை பெற்றோர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் கடந்த 25ம் தேதி சிகிசசை பலனின்றி உயிரிழந்தார். பின்பு பிரேத பரிசோதனை அறிக்கையில் விஷம் அருந்தியிருப்பதாக தெரியவந்த நிலையில் பொலிசார் வழக்கு பதிவு செய்து காதலியிடம் விசாரணை மேற்கொண்டனர். கிரிஷ்மாவே இந்த கொலை செய்துள்ளது அம்பலமாகியுள்ளதோடு, போலீசில் சிக்காமல் கொலை செய்வது எப்படி? என கூகுளில் தேடியதும் விசாரணையில் அம்பலமாகியுள்ளது. அவ்வாறு வழக்கில் சிக்கிக்கொண்டால், எத்தனை வருடம் தண்டனை என்பதையும் முன்பே அலசி ஆராய்ந்த பின்னரே இவ்வாறான கொ-லையை செய்துள்ளார். மேலும் கிரிஷ்மாவிற்கு உடந்தையாக இருந்த தாய் மற்றும் தாய்மாமன் இவர்களையும் பொலிசார் கைது செய்துள்ளனர்.
பிறர் மீது நிறைய எதிர்பார்ப்புகளை வைத்துக் கொண்டு அதன் மீது நம் வெற்றி மாளிகையை கட்டுவது அறிவுடைமை ஆகாது. எதிர்பார்ப்பு எதிர்த்தரப்பிலும் இருக்கும் அல்லவா? அவர் இப்படி இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்க உங்களுக்கு எந்த அளவு உரிமை இருக்கிறது? ஆட்டோகாரர் நாம் அழைத்த இடத்துக்கு உடனே, குறைந்த கட்டணத்தில் வரவேண்டும் - கண்டக்டர் பை நிறைய சில்லறை வைத்திருக்கும் நேர்மையாளனாக இருக்க வேண்டும்- வங்கிகளில், அரசு அலுவகங்களில் வேலைப்பார்பவர்கள் அக்கம் பக்கம் அரட்டை அடிக்காமல் "கஸ்டமரே கடவுள்" என்று நடக்க வேண்டும். - இப்படியெல்லாம் எதிர்பார்க்கிறோம். இந்த மாற்றத்தை நிகழ்த்த நாம் உழைக்க வேண்டும். ரொம்ப சரி... அப்படியும் சமூகம் தன்போக்கில் இருந்தால் என்ன செய்வது? நண்பர்களே! ஒரு கணத்தில் (அ) நிமிடத்தில் மனிதர்கள் உண்டாக்கபடுவதில்லை. பிறப்பு, வளர்ப்பு, படிப்பு, சமூக சூழல், அனுபவங்கள் அவரை வித்தியாசமாக உருவாக்கி விடுகின்றன. எனவே ஒரு கணத்தில் எல்லோரையும் மாற்றியமைப்பது சாத்தியம் இல்லை. அது அவசியமும் இல்லை. அது நம்முடைய வேலையும் இல்லை. மன அமைதியை இழக்காமல் வாழ பழக வேண்டும். தங்களை மாற்றிகொள்கிறவர்கள் சிலர். ஓயாமல் வளருகிறவர்கள் மிக மிக சிலர். சூழ்நிலை எத்தனைத்தான் வெளியில் மாறினாலும் உள்ளுக்குள் பலர் மாறுவதே இல்லை. எல்லோரையும் மாற்ற வேண்டும் என்று நாம் துடிக்கிறோம். மாறவில்லையே என்று மன அமைதி இழக்கிறோம்.....பொங்குகிறோம்.... புலம்புகிறோம்....
மத்தியில் ஆளும் கட்சியான பாஜகவிடமிருந்தும், பாஜகவை ஆளும் ஆர்எஸ்எஸ் தலைவரிடமிருந்தும் இந்த ஒரே வாரத்தில் இரண்டு செய்திகள் வந்துள்ளன. கடந்த 18 ஆம் தேதி, ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், புதுதில்லியில் நடைபெற்ற 'ஞான உத்சவ்' நிகழ்ச்சியில் நிறைவுரையாற்றும்போது, சமூக நீதியைச் சாய்த்துவிடும் நோக்கில் ஒரு கருத்தைச் சொல்லியுள்ளார். "தாழ்த்தப்பட்ட பழங்குடிகள் பிற்படுத்தப்பட்டோர், ஆகியவர்களுக்குத் தற்போது இந்திய அரசமைப்புச் சட்டம் அளித்துள்ள உரிமைப்படி, வழங்கப்பட்டு வரும் இடஒதுக்கீட்டை நீக்கிவிட, இடஒதுக்கீடு வேண்டும் என்பவர்களும், வேண்டாம், கூடாது என்பவர்களும் சுமுகமான சூழ்நிலையில் அமர்ந்து விவாதித்து அதுபற்றி ஒரு நல்ல முடிவுக்கு வர வேண்டும்." என்கிறார் மோகன் பகவத். உள்நோக்கம் தெளிவாகப் புரிகிறது. இடஒதுக்கீடு வேண்டுமா, வேண்டாமா என்பது குறித்துப் பேச அவர் எல்லோரையும் அழைக்கவில்லை. அதனை நீக்கிட என்ன வழி என்று ஆராய்வதற்கு மட்டுமே அழைப்பு விடுக்கிறார். இன்று மோகன் பகவத் பேசியுள்ளதை, நாளை மோடி பேசுவார். ஆகமொத்தம், இடஒதுக்கீட்டை நீக்குவதே அவர்களின் அடுத்த திட்டம் என்பது புரிகிறது. அதனையும் செய்துவிட்டால், அவர்களின் நிகழ்ச்சி நிரல் பெருமளவிற்கு நிறைவு பெற்றுவிடும். ஏற்கனவே இடஒதுக்கீட்டு உரிமையை (சலுகை அன்று) இழந்து கொண்டுள்ளோம். அரசுப் பணிகளில் மட்டுமே இடஒதுக்கீடு உள்ளது. அது மொத்தமுள்ள வேலைவாய்ப்பில் 15 விழுக்காட்டிற்கும் குறைவே. மீதமுள்ள 85% வேலைவாய்ப்புகள் தனியார் வசமே உள்ளன. அங்கு இடஒதுக்கீடு இல்லை. அரசுப் பணிகளிலும், மாதம் 65000 ரூபாய் ஊதியம் பெறும் 'ஏழைகளுக்கு' 10% இடஒதுக்கீடு வழங்கப்பட்டு விட்டது. கொஞ்ச நஞ்சம் இருக்கின்ற இடஒதுக்கீட்டையும் முற்றிலுமாக ஒழித்துவிட்டால், வெறும் 3 விழுக்காடு மட்டுமே உள்ள அவர்கள், 90% விழுக்காடு அரசு வேலைகளைக் கைப்பற்றிக் கொள்வார்கள். ஏவல் வேலை, துப்புரவுப் பணி போன்ற 10% விழுக்காடு வேலைகள் நமக்குத்தான், அவர்கள் அதில் நம்முடன் போட்டிக்கு வரமாட்டார்கள். இது ஒருபுறமிருக்க, நேற்று (23.08.19) மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், நாடு கடுமையான நிதி நெருக்கடியில் இருப்பதை ஏற்றுக்கொண்டுள்ளார். வேலையில்லாத் திண்டாட்டம் என்றுமில்லாத அளவுக்குக் கூடி வருவதையும், வேறு வழியின்றி ஒப்புக் கொண்டுள்ளார். ஆம், கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத பொருளாதார நெருக்கடியை, நாடு இன்று சந்தித்து வருகின்றது. அதே போல லட்சக்கணக்கான ஊழியர்கள் தங்கள் வேலைகளை இழக்கக்கூடிய நிலையும் கண்கூடாகத் தெரிகிறது. எல்லாவற்றிற்கும் முந்தைய காங்கிரஸ் ஆட்சிதான் காரணம் என்கின்றனர். அப்படியானால், கடந்த 5 ஆண்டுகளில் பாஜக அரசு என்னதான் செய்தது? மோடி ஆட்சி கொண்டுவந்த பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி வரி போன்றவைகளே இன்றைய நிலைக்குக் காரணம் என்கின்றனர் பொருளியல் வல்லுநர்கள். செய்ய வேண்டியவைகளைச் செய்யாமலும்,செய்ய வேண்டாத மதவெறிச் செயல்களைச் செய்தும், நாட்டை அழிவுப்பாதைக்கு அழைத்துச் சென்று கொண்டுள்ளது இன்றைய மத்திய அரசு.
3. வீடு மனை என்பது லிபியாவில் மனித உரிமைகளில் ஒன்றாகக் கருதப்படுகின்றது , லிபியாவில் வாழும் அனைத்து மக்களும் வீடுகள் பெறுகின்ற வரை தனக்கோ, தனது பெற்றோருக்கோ வீடு கட்டமாட்டேன் என்று கடாபி சபதம் பூண்டிருந்ததால், அவரது பெற்றோர்கள் இறக்கும் போது அவர்கள் வீடுகள் இல்லாமல் கூடாரங்களிலேயே இறந்தனர் . 4. அந்த நாட்டில் மணம் முடிக்கும் ஒவ்வொரு புதுமணத் தம்பதியினர்களுக்கும் அந்நாட்டின் அரசு 60,000 தினார், அதாவது அமெரிக்க பணம் 50,000 டாலர் அதாவது இந்திய பணம் சுமார் 28,00,000 ரூபாய் பணத்தை இலவசமாக வழங்கியது. 5. லிபியாவில் கல்வி மற்றும் மருத்துவம் முற்றிலும் இலவசம், கடாபி அதிகாரத்தை கைப்பற்றும் பொழுது லிப்ய மக்களில் எழுத படிக்கத் தெரிந்தோர் வெறும் 25% மட்டுமே , ஆனால் அவர் ஆட்சிக்கு வந்ததன் பின் அது 83% உயர்ந்தது. 6. எந்த ஒரு லிபியனும் விவசாயம் செய்ய விரும்பினால் அவன் விவசாயம் செய்யும் இடத்தில் வாழ்வதற்கு அவசியமான ஒரு வீடும், விவசாயம் செய்வதற்கு தேவையான காணி நிலமும் விவசாய உபகரணங்களும், விதைகளும் பசளைகளும் இன்னும் இதற்கு அவசியமான அனைத்தும் முற்றிலும் இலவசம். 7. லிபியர்களுக்கு லிபியாவில் மருதுவ வசதி பெறுவதற்கோ அல்லது வெளிநாட்டில் மேற்படிப்பு தொடர்வதற்கோ வசதி இல்லை எனில் அந்த நாட்டு அரசு இலவசமாக அவர்களுக்கு உதவிகள் வழங்கும். 8. எந்த ஒரு லிபியனும் ஒரு வாகனம் வாங்கும் போதும் அதன் மதிப்பில் அரைவாசித் தொகையை அந்நாட்டின் அரசு இலவசமாக வழங்கும். 9. அந்த நாட்டில் ஒரு லிட்டர் பெற்றோலின் விலை வெறும் $0.13 மட்டுமே. 10. லிபியா உலக வங்கிகளிடம் இருந்து இதுவரை கடன் வாங்கியது கிடையாது. 11. உயர் கல்வி கற்று பட்டதாரி ஆகும் மாணவர்கள் தமக்குரிய வேலை வாய்ப்பு கிடைக்காது போகும் பட்சத்தில், அவர்களுக்குரிய தகுந்த தொழில் கிடைக்கும் வரை அந்தத் தொழிலுக்குரிய சம்பளத்தை அந்த அரசு மாத மாதம் வழங்கி வந்தது. 12. அந்த நாட்டிற்கு கிடைக்கும் எண்ணெய் வருமானத்தில் ஒரு தொகையை அந்த நாட்டு மக்களின் வங்கிக் கணக்கில் சேமிப்பில் இடும் அந்த அரசு. 13. ஒவ்வொரு குழந்தை பிரசவத்தின் போதும் அந்தத் தாயிற்கு அந்த நாட்டு அரசு 5500 அமெரிக்க டாலர் நாணயத்துக்கு பெறுமதியான லிபிய தினாரை வழங்கும் அதாவது இந்திய பணம் மூன்று லட்சத்து இருபத்தைந்தாயிரம் ரூபாய். 14. 40 ரொட்டிகள் வெறும் $ 0.15 தினார் மட்டுமே. 15. 25% லிபியர்கள் பல்கலைக்கழக பட்டதாரிகளாவர். 16. உலகிலேயே மிகப்பெரிய செயற்கை ஆறை உருவாக்கி லிபியாவின் பாலை நிலத்தை பசுமையாக்கியவர் என்ற பெருமை கடாபிக்கு உண்டு.
நம் வாழ்வின் ஒரு அங்கமாக விளங்கும் பெண் தன்மையை கொண்டாடும் நவராத்திரி திருவிழா கோவை ஈஷா யோகா மையத்தில் நேற்று (செப்.26) கோலாகலமாக தொடங்கியது. நம் கலாச்சாரத்தில் கொண்டாடப்படும் திருவிழாக்கள் அனைத்துமே தனி மனிதனின் உள்நிலை வளர்ச்சிக்கான கருவியாகவே அமைகிறது. அந்த வகையில், நவராத்திரி திருவிழா தனிச் சிறப்புமிக்க ஒரு கொண்டாட்டமாகும். ஈஷாவில் உள்ள லிங்கபைரவி தேவியின் எல்லையில்லா அருளையும் சக்தியையும் உணர நவராத்திரி நாட்கள் மிகச் சிறந்த காலகட்டமாய் உள்ளது. அந்த வகையில், நவராத்திரியின் முதல் நாளான நேற்று லிங்கபைரவி தேவி துர்கையின் அம்சத்தை குறிக்கும் விதமாக குங்கும அபிஷேகத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மாலையில் தேவியின் உற்சவ மூர்த்தி ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு நந்தியின் முன் மஹா ஆரத்தி நடைபெற்றது. இந்நிகழ்வில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். இதேபோல், லிங்க பைரவி தேவி செப்.29 முதல் அக்.1 வரை லட்சுமியின் அம்சத்தை குறிக்கும் விதமாக மஞ்சள் அபிஷேகத்திலும், அக்.2 முதல் 4 வரை சரஸ்வதியின் அம்சத்தை குறிக்கும் விதமாக சந்தன அபிஷேகத்திலும் காட்சியளிப்பார். மேலும், செப்.29 மற்றும் அக்.2 ஆகிய தேதிகளில் இரவு 7.30 மணிக்கு மஹா ஆரத்தி நடைபெறும். இதுதவிர, இவ்விழாவை மேலும் சிறப்பிக்கும் விதமாக பாரம்பரிய இசை மற்றும் நடன கலைஞர்களின் கிராமிய கலை நிகழ்ச்சிகள் தினமும் மாலை 6.30 மணி முதல் 7.45 மணி நடைபெறும். முதல் நாளான நேற்று ஈஷா சம்ஸ்கிரிதி மாணவர்கள் ‘த்ரிநயணி’ என்ற பெயரில் ஒரு அற்புதமான இசை நிகழ்ச்சியை நடத்தினர். Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள். Categories செய்திகள் Tags isha ITI FITTER படித்தவரா?. தேர்வு இல்லை.. ரூ.7700 மாத சம்பளம்.. HOCL நிறுவனத்தில் வேலை!! டிகிரி படித்தவரா?. தேர்வு இல்லை.. பல்வேறு காலியிடங்கள். ரூ.18000 மாத சம்பளம்.. கரூர் வைஸ்யா வங்கியில் வேலை!!
ஐரோப்பிய கண்டத்தில் உள்ள பின்லாந்து, நேட்டோ அமைப்பில் இணைவது குறித்து ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. உக்ரைன் போருக்கு முன்னர் 30 சதவீதம் பின்லாந்து மக்கள் மட்டுமே நேட்டோவில் இணைய ஆதரவு தெரிவித்திருந்தனர். போருக்குப் பின்னர் 60 சதவீதம் மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். சர்வதேச அரசியலில் நிலைமை வேகமாக மாறி வரும் சூழலில், தற்போதுள்ள அரசியல் சூழலைக் கருத்தில் கொண்டு முடிவு எடுக்க வேண்டும் என்று பின்லாந்து முன்னாள் பிரதமரும் நேட்டோ ஆதரவாளருமான அலெக்சாண்டர் ஸ்டப் தெரிவித்துள்ளார். - Advertisement - பின்லாந்து நாடாளுமன்றத்தில் அடுத்த வாரம் தேசியப் பாதுகாப்பு மறு ஆய்வு அறிக்கை வெளியிடப்படவுள்ளது. அதன் அடிப்படையில் விவாதம் நடத்தப்பட்டு நேட்டோ அமைப்பில் இணையலாமா வேண்டாமா என்பதைப் பின்லாந்து எம்பிக்கள் முடிவு செய்ய உள்ளனர். இதுகுறித்து பிரதமர் சன்னா மரின் மேலும் கூறுகையில், “இது குறித்து ஆழமான விவாதம் நடத்தப்படும். அதேநேரம் சீக்கிரம் இதில் முடிவு எடுத்துவிடுவோம். இன்னும் ஓரிரு வாரங்களில் இந்த விவகாரத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும்” என்றார்.
நடைபெற்றுமுடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பில் அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்று மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்ட இரா.சாணக்கியன் அமோக வெற்றிபெற்றுள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்பு மட்டக்களப்பில் இரண்டு ஆசனங்களைக் கைப்பற்றியுள்ள நிலையில் விருப்பு வாக்குகளின் அடிப்படையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் சாணக்கியன் மற்றும் கோவிந்தன் கருணாகரம் ஆகியோர் நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், தன்மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த மக்களுக்கு இரா.சாணக்கியன் நன்றி தெரிவித்துள்ளார். அத்துடன், தனது ஆயுட்காலம் முழுவதும் இலங்கை தமிழரசுக் கட்சியிலிருந்து மக்களுக்கு சேவை செய்யவுள்ளதாகவும் இரா.சாணக்கியன் இதன்போது குறிப்பிட்டிருந்தார். இதேவேளை, மட்டக்களப்பில், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சிக்கு ஒரு ஆசனமும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு ஒரு ஆசனமும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு ஒரு ஆசனமும் கிடைக்கப்பபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
துன்புறுத்தப்பட்ட பெண்களுக்கும் அவர்களின் குழந்தைகளுக்கும் பால்டவின் வீட்டு சேவை. பாதுகாப்பான தங்குமிடங்கள் மற்றும் சேவைகளை வழங்குவதன் மூலம் பாதுகாப்பான மற்றும் பாதுகாப்பான சூழல் மற்றும் புதுப்பிக்கப்பட்ட குடும்பத்திற்கு, வன்முறை மற்றும் தகாத சூழ்நிலைகளிலிருந்து மாறுதற்கு நாங்கள் உதவுகிறோம், மேலும் அவர்களின் முழு மனித ஆற்றலை உணருமாறு அவர்களை ஊக்கப்படுத்துகிறோம் விருப்பப் பட்டியல் தொடக்க மற்றும் இரண்டாம் நிலை தேவைகள் குறித்து பட்டியல் ஒழுங்குபடுத்தப்படுகிறது என்பதை நீங்கள் கவனிப்பீர்கள். முதன்மையான தேவைகள், தற்போது மிகவும் தேவைப்படுபவர்கள் மற்றும் இரண்டாம் நிலை தேவைகள், பருவகாலம் அல்லது முன்னுரிமை குறைவாக உள்ள உருப்படிகளைப் பிரதிபலிக்கும் விருப்பார்வத் தொண்டர் தன்னார்வப் பணியில் ஈடுபடுதல் மற்றும் மாசன் பால்டவின் வீட்டிற்கு உதவுவது ஒரு சிறந்த வழியாகும். நமது மையத்துடன் பல ஆதரவுப் பகுதிகளில் பல்வேறு செயல்பாடுகளுக்காக தன்னார்வலர்களின் தேவை உள்ளது. நன்கொடை கொடுத்தல் நிதி ஆதரவு என்பது மிக எளிதான மற்றும் மிகவும் நெகிழ்வான நன்கொடை வடிவமாகும், ஏனெனில் அது எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றது மற்றும் உடனடி தேவைக்கு பொருந்துகிறது என்பதை நிர்வகிக்கும் திறனை நமக்கு அனுமதிக்கிறது. தேவையை பொறுத்து, நாம் அதை எங்கள் சேவைகளின் ஒரு பகுதியில் பயன்படுத்த முடியும், அல்லது பல முக்கிய ஆதரவு பகுதிகளில் மறைக்க அதை பரப்பி.
முருகப் பெருமானுக்குரிய விரதங்களில் தலை சிறந்தது கந்த சஷ்டி விரதமாகும். 6 நாட்கள் கடைபிடிக்கப்படும் விரதம், சூரசம்ஹாரம் அன்று நிறைவடையும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் சஷ்டி விரதத்தை மேற்கொண்டால் நிச்சம் குழந்தை வரம் கிடைக்கும் என்பது ஐதீகம். 'சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும்' என்ற பழமொழிக்கு அர்த்தம், சஷ்டியில் விரதம் இருந்தால் கருப்பையில் கரு வளரும் என்பது பொருள். கணவனும், மனைவியும் சேர்ந்து வாழவும், வீட்டில் செல்வம், ஒற்றுமை, சகல பாக்கியங்களும் பெருகவும் சஷ்டி விரதம் இருப்பது வழக்கம். 6 நாட்கள் சஷ்டி விரதம் இருக்க முடியாதவர்கள் சூரசம்ஹாரம் நடைபெறும் கடைசி நாளில் விரதம் இருக்கலாம். விரதம் இருக்கும் 6 நாட்களிலும் காலை எழுந்தவுடன் குளித்து முருகப் பெருமானுக்கு பூஜை செய்யவேண்டும். சர்க்கரைப் பொங்கல், சுண்டல், கற்கண்டு அல்லது பழ வகைகள் என ஏதாவது ஒரு நைவேத்தியத்தை படைத்து பூஜை செய்ய வேண்டும். விரதம் இருப்பவர்களில் சிலர், வெறும் பால், பழம் மட்டுமே உட்கொண்டு விரதம் இருப்பதும் உண்டு. மதியம் ஒருவேளை மட்டும் தயிர் சாதம் சாப்பிட்டு விட்டு விரதம் இருப்பவர்களும் உண்டு. விரதம் இருப்பது அவரவர் உடல் நிலையை பொறுத்தது. மிகக் கடுமையாக விரதம் இருப்பவர்கள் தினமும் ஒரு மிளகு மட்டும் உண்டு விரதத்தை மேற்கொள்வார்கள். ஒருசிலர் விரதம் இருக்கும் 6 நாட்களும் திருச்செந்தூர் முருகன் கோயிலுக்குச் சென்று விரதத்தை கடைபிடிப்பதும் உண்டு விரதம் இருக்கும் நாட்களில் கந்த சஷ்டி கவசம், திருப்புகழ் உள்ளிட்டவற்றை படித்து முருகப் பெருமானின் அருளைப் பெறலாம்.
அமெரிக்காவின் நியூயோர்க் நகரிலுள்ள ப்ரோன்ஸ் வனவிலங்குப்பூங்காவில் புலி ஒன்றுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. நான்கு வயதான நடியா என்ற பெயர்கொண்ட மலையன் புலியே மனிதனின் மூலம் கொரோனா தொற்றுக்குள்ளான முதலாவது மிருகம் என நம்பப்படுகிறது. இந்தப்புலிக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதியானதையடுத்து அதற்கு அருகில் வாழ்ந்துவந்த இரண்டு சைபெரியன் புலிகள் மற்றும் ஆபிரிக்க சிங்கங்களுக்கும் அதே அறிகுறிகள் காணப்பட்டுள்ளன. அவைகளுக்கும் தற்போது கொரோனா வைரஸ் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன. குறித்த வனவிலங்குப்பூங்கா மார்ச் மாதம் 16 ஆம் திகதியன்று கொரோனா அச்சுறுத்தலால் மூடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கிருஷ்ணகிரி: என் பள்ளியானது கிருஷ்ணகிரியில் இருந்து தூரம் அதிகம் என்பதால், அங்கேயே வீடு எடுத்து தங்கி படித்தேன் என்று பிளஸ் 2 தேர்வில் மாநில அளவில் முதலிடம் பெற்ற ஊத்தங்கரை ஸ்ரீ வித்யா மந்திர் பள்ளி மாணவி சுசாந்தினி நெகிழ்ச்சியுடன் கூறினார். பிளஸ் 2 தேர்வில் 1193 மதிப்பெண்களை பெற்று மாநில அளவில் முதலிடத்தை பிடித்துள்ளார் கிருஷ்ணகிரியை சேர்ந்த மாணவி சுசாந்தினி. தனது நீண்ட நாள் கனவு நிறைவேறிய மகிழ்ச்சியில் திளைத்து கொண்டிருக்கும் மாணவி சுசாந்தினி செய்தியாளர்களிடம் கூறுகையில், "எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்விலேயே முதலிடம் பெறுவதற்கு முயற்சி செய்தேன். ஆனால் 491 மதிப்பெண்கள் மட்டுமே பெற முடிந்தது. ஆனாலும் என் முயற்சியை நழுவ விடாமல் தொடர்ந்து படிப்பில் கவனம் செலுத்தினேன். இந்த வெற்றிக்கு நான் மட்டும் கஷ்டப்படவில்லை. என்னுடைய அப்பா, அம்மா, எங்க பாட்டி அடுத்து ரொம்ப முக்கியமானவங்க எங்க டீச்சர்கள். எல்லோரும் எனக்காக கஷ்டப்பட்டாங்க. எல்லோருடைய கஷ்டத்திற்கும் பலன் கிடைத்துவிட்டது. நான் படிச்ச வித்யா மந்திர் ஸ்கூல் கிருஷ்ணகிரியில் இருந்து தூரம் அதிகம். அதனால அங்க ஒரு வீடு எடுத்து தங்கிதான் நான் படிச்சேன். என்னோட பாதுகாப்புக்கு எங்க பாட்டி இருந்தாங்க. அவங்களும் என்னோட இந்த வெற்றிக்கு ரொம்ப கஷ்டப்பட்டிருக்காங்க. அப்புற, எங்க டீச்சர்ஸ் என்னை ஒவ்வொரு விஷயத்திலும் ஊக்கபடுத்திக்கிட்டே இருந்தாங்க. எங்கிட்ட எதாவது மைனஸ் பாயிண்ட் தெரிஞ்சா உடனே அதை சுட்டிக்காட்டி சரி செஞ்சுடுவாங்க. உன் கையெழுத்து நல்லா இருக்கு. உன் ப்ரசன்ட்டேஷன் நல்லா இருக்குன்னு ஒவ்வொரு விசயத்திலும் என்கரேஜ் பண்ணிகிட்டே இருப்பாங்க. எங்க அப்பாவும், அம்மாவும் இதை பத்தாம் வகுப்பிலேயே எதிர்பார்த்தாங்க. அப்ப முடியல. ஆனா இப்ப அவுங்க ஆசைய நிறைவேத்திட்டேன். என்னுடைய லட்சியம் டாக்டராக வேண்டும் என்பதுதான். இந்த தருணத்தை என வாழ்க்கையில் மறக்க முடியாது" என்று மகிழ்ச்சியில் திளைத்தபடி கூறுகிறார் சுசாந்தினி.
சென்னை: சூப்பர் ஸ்டார்... நேத்துப் பொறந்த குட்டிப் பாப்பாவிலிருந்து பல்லு போன தாத்தாவரை இந்தப் பெயருக்கென்று ஒரு தனி மவுசு.. ரவுசு இருக்கிறது என்பதை மறுக்க முடியாது. அதுதான் ரஜினி மாஜிக்... இப்போது இந்த மாஜிக் சமூக வலைத்தளத்தில் புதிய மாஜிக்கை ஏற்படுத்தி விட்டது. அது ரஜினிகாந்த் டிவிட்டரில் சேர்ந்ததால் ஏற்பட்ட அலை.. டிவிட்டருக்குள் ரஜினி நுழைந்த நொடியிலிருந்து அவர் வழியைப் பின்பற்றி பின் தொடரும் ரசிகர்களின் எண்ணிக்கை கட்டுக்கடங்காமல் பெருகி ஓடிக் கொண்டிருக்கிறது. இதற்கு முன்பு டிவிட்டருக்குள் பிரவேசம் செய்த அமிதாப் பச்சன் போன்ற மிகப் பெரிய ஸ்டார்களுக்கு தொடக்கத்தில் கிடைத்த பாலோயர்களை விட ரஜினிக்கு மிகப் பெரிய அளவில் கிடைத்திருப்பதாக புள்ளி விவரத் தகவல் ஒன்று கூறுகிறது. அதிக அளவிலான இந்தியர்களால் நேசிக்கப்படும் ஒரு சூப்பர் ஸ்டாருக்கு இது ஒரு சின்ன புகழஞ்சலி... அருணாச்சலத்தில் ரஜினி பேசிய வசனம் இன்று அவருக்கே கூட யூஸ் ஆகிறது பாருங்கள்.. எதையுமே ரஜினி யோசித்துதான் செய்வார்.. கடவுள் விருப்பப்படியே தன் பாதை என்பதும் அவரது நம்பிக்கை.. இப்போது கூட டிவிட்டருக்கு அவர் வந்திருப்பதும் ஆண்டவன் சொல்லிய சொல்லாகவே இருக்கும் என்று நம்புவோம்... ''உனக்கு எல்லாம் இருக்காங்க-எனக்கு யார்றா இருக்கா..'' இது தளபதி பட வசனம்.. சூப்பர் ஸ்டாருக்கு எல்லாருமே இருக்காங்க.. ஆனால் டிவிட்டருக்கு யாரு இருக்காங்க - இனி ரஜினியை விட்டா.. இது கோச்சடையான் பட வசனம். உண்மைதான்.. இதுவரை டிவிட்டருக்கு வராமல் இருந்த ரஜினியே மாறி விட்டார்.. ஆனால் நிச்சயம் இனிமேல் டிவிட்டர் ரஜினியை விட்டு விலகாது என்று நம்பலாம்... எந்திரனில் எதிர்ப்புகளை டொப்பு டொப்பென்று சுட்டுத் தள்ளிய சூப்பர் ஸ்டார் இனி டிவிட்டரில் டக்கு டக்கென்று டிவிட் போட்டு அமர்க்களப்படுத்துவார் என்று நம்பலாம். மொட்டை யாரு வேண்டுமானாலும் போடலாம்.. அதேபோலத்தான் டிவிட்டரில் யார் வேண்டுமானாலும் டிவிட் செய்யலாம்.. ஆனால் ரஜினி போட்டா அது ஹிட்டு.. இனிமேல் டிவிட்டரிலும் ரஜினி மட்டுமே சூப்பர் டிவிட்டு.. ரஜினி ஒரு தடவை டிவிட் செய்தால் அது ஓராயிரம் டிவிட்டுக்கு இனிமேல் சமம்.. டிவிட்டர் என்றால் இதுவரை யாராவது திக்கு விஜய் சிங்குகள் போன்றோர் திக்கு விஜயம் செய்யும் தளமாகவே இருந்தது. ஆனால் இனிமேல்தான் இது கலக்கல் களமாக மாறப்போகிறது... வெயிட் அன்ட் வாட்ச்... ஆட்டோக்காரன் மீட்டர் போட்டா அது ஒரு மாதிரி.. ஆனால் சூப்பர் ஸ்டார் டிவிட்டைப் போட்டா.. அது வேற வேற வேற மாதிரி....
தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் கலைஞர் ஆட்சியில் நிகழ்த்தப்பட்டுள்ள கல்விப் புரட்சிபற்றி எடுத்துக் கூறி வருகிறார். அதே நேரத்தில் அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா அம்மையாரின் மனப் போக்கையும் வெளிப்படுத்துகிறார். வீட்டுக்கு நான்கு ஆடுகள் தருவதாக ஜெயலலிதா கூறுவதன் பின்னணியை அம்பலப்படுத்துகிறார். ஆடு, மாடுகள் மேய்த்துக் கிடந்த பஞ்சம, சூத்திர மக்களுக்குக் கல்வி வாய்ப்பும், உரிமையும் சட்டப்படி தேவை என்பதற்காகப் போராடி வருவது திராவிடர் இயக்கம் - நீதிக் கட்சி - திராவிடர் கழகம் தி.மு.க. போன்ற அமைப்புகள். காங்கிரசை ஒழித்தே தீருவேன் என்று சூளுரைத்து காஞ்சிபுரம் காங்கிரஸ் மாநாட்டிலிருந்து வெளியேறிய தந்தை பெரியார் அவர்கள், காமராசரைப் பச்சைத் தமிழர் என்றும், கல்விக் கண்களைத் திறந்த இரட்சகர் என்றும் போற்றிப் புகழ்ந்தார் என்றால், அதற்கு அடிப்படைக் காரணம் - ஆண்டாண்டுக் காலமாகக் கல்வி உரிமை மறுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட பார்ப்பனர் அல்லாதாருக்குக் கல்விக் கண்களைத் திறந்து நாடெங்கும் கல்வி ஓடையை அந்தப் பெருமகன் திறந்து விட்ட ஒரே காரணத்துக்காகத்தானே! உடம்பெல்லாம் மூளை என்று அக்கிரகாரம் போற்றிப் புகழ்ந்த சி.ஆர். ஆச்சாரியார் (ராஜாஜி) இரண்டு முறை சென்னை மாநிலத்தில் ஆட்சிப் பொறுப்புக்கு வந்த காலகட்டத்தில் எல்லாம் அவர் செய்த முதல் காரியம் என்ன? 1937-1939இல் 2500 கிராமப் பள்ளிகளை இழுத்து மூடினார். 1952-1954இல் 6000 கிராமப் பள்ளிகளை இழுத்து மூடி அரை நேரம் படிப்பு, அரை நேரம் அப்பன் தொழிலைச் செய்ய வேண்டும் என்ற வருணாசிரமக் குலக் கல்வித் திட்டத்தைக் கொண்டு வந்தாரே! சூத்திரனுக்கு எதைக் கொடுத்தாலும் கல்வியைக் கொடுக்காதே என்பதுதானே மனுதர்மம்? இதனை எதிர்த்துத் துவக்கப்பட்ட தந்தை பெரியார் அவர்களின் தன்மான இயக்கம் தமிழர்களுக்குக் கல்வி கிட்டச் செய்வதில் எப்பொழுதுமே கவனமாக இருந்து வந்திருக்கிறது. காமராசர் அவர்கள் எஸ்.எஸ்.எல்.சி. வரை இலவசக் கல்வியை அறிவித்தார் என்றால், அண்ணா அவர்கள் அடுத்த கட்டமாக பி.யூ.சி. வரை இலவசக் கல்வி என்று ஆக்கினார். அடுத்த கட்டமாக முதுகலை வரை இலவசக் கல்வி என்னும் பெரும் புரட்சியைச் செய்தவர் நம்முடைய முதல் அமைச்சர் மானமிகு மாண்புமிகு கலைஞர் ஆவார். இப்படி மேலும் மேலும் கல்வி வளர்ச்சி நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்தக் கால கட்டத்தில் வீட்டுக்கு வீடு நான்கு ஆடுகள் இலவசமாகத் தருவேன் என்று ஜெயலலிதா கூறுவதன் தாத்பரியம் என்ன? அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில்கூட தி.மு.க. தேர்தல் அறிக்கைக்குப் போட்டியாக +2 மாணவர்களுக்கு கம்ப்யூட்டர் கொடுக்கப்படும் என்று கூறப்பட்டதே தவிர, அதற்கு மேலாக ஒன்றும் அறிவிக்கப்பட முடியவில்லையே! 2005-2006ஆம் ஆண்டில் அ.தி.மு.க. ஆட்சியில் தொடக்கப் பள்ளிகளில் இடைநிற்றல் (னுசடியீ டிரவள) 3.81 சதவிகிதமாக இருந்தது. 2009-2010 தி.மு.க. ஆட்சியிலோ அது ஒரு சதவிகிதமாகக் குறைக்கப்பட்டதே! இடைநிலைப் பள்ளிகளில் 2005-2006ஆம் ஆண்டில் அ.தி.மு.க. ஆட்சியில் இடைநிற்றல் 7.58 சதவிகிதமாக இருந்தது. 2009-2010 தி.மு.க. ஆட்சியிலோ 1.79 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டதே! 2005-2006ஆம் ஆண்டில் அ.தி.மு.க. ஆட்சியில் கல்லூரிகளில் படித்தோர் 2 லட்சத்து 82 ஆயிரத்து 802; 2010-2011ஆம் ஆண்டில் தி.மு.க. ஆட்சியிலோ அது 6 லட்சத்து 9 ஆயிரத்து 421 ஆக உயர்ந்ததே! நுழைவுத் தேர்வை ஒழித்ததில்கூட அ.தி.மு.க.வின் அணுகுமுறை காரணமாக உயர்நீதிமன்றத்தில் அ.தி.மு.க. அறிமுகப்படுத்திய நுழைவுத் தேர்வு ரத்து தோல்வி அடைந்து விட்டதே! அதே நேரத்தில் அதே உயர்நீதிமன்றமும் அதற்கு அடுத்து உச்சநீதிமன்றமும் தி.மு.க. கொண்டுவந்த நுழைவுத் தேர்வு ரத்து செல்லும் என்று தீர்ப்பு அளித்துவிட்டதே! காரணம் என்ன? உள்ளார்ந்த உணர்வுடன், சரியான தீர்வைக் காண வேண்டும் என்ற கவலையுடன், உரிய சட்ட திட்டங்களை நுணுகி ஆய்வு செய்து தி.மு.க. செயல் பட்டதுதான். ஓர் ஆட்சியை ஆதரிப்பது - எதிர்ப்பது என்பதில் சமூக நீதியில் - கல்வி அளிப்பதில் ஓர் ஆட்சி எப்படி நடந்து கொள்கிறது என்பது திராவிடர் கழகத்திற்கு முக்கியமான பார்வையாகும். இடஒதுக்கீட்டில் பொருளாதார அளவுகோல் பற்றியெல்லாம் ஒரு காலத்தில் பேசியவர்தான் ஜெயலலிதா; திராவிடர் கழகத் தலைவரின் அணுகு முறையாலும், நிர்பந்தத்தாலும், அரசியல் சூழலாலும்தான் ஜெயலலிதா அம்மையார் சமூக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் பின்னுக்குத் தள்ளப்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீடு என்னும் பாட்டைக்கு வந்தார் என்பதை மறக்கக் கூடாது. ஜெயலலிதா மறுபடியும் ஆடு, மாடுகளை வீட்டுக்கு வீடு இலவசமாக அளிப்பேன் என்று கூறுவது ஒரு வகையான பிற்போக்குத்தனமான பார்வை என்பதில் அய்யமில்லை. ----------------”விடுதலை” தலையங்கம் 5-4-2011 Posted by புரட்சியாளர் பெரியார் at 17:37 1 comment: Labels: திராவிடர் இயக்கம் தேர்தல் அறிக்கை தேர்தலில் ஈடுபடும் அரசியல் கட்சிகள் தேர்தல் அறிக்கைகளை வெளியிடு வதுண்டு. அந்த வகையில் தி.மு.க. தேர்தல் அறிக்கை யில் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, திரா விடர் இயக்க ஒப்பற்ற தலைவர்கள் சர்.பிட்டி. தியாகராயர், டாக்டர் டி.எம். நாயர், டாக்டர் சி.நடேசன் ஆகியோரின் பெயர்கள் வரலாற்றுப் பெருமையோடு குறிப்பிடப்பட்டுள்ளன. பகுத்தறிவு நெறி பற்றி யும் பதிவு செய்யப்பட் டுள்ளது. ஆனால் அண்ணா தி.மு.க. என்னும் பெய ருள்ள ஒரு கட்சியின் தேர்தல் அறிக்கையில் எந்த இடத்திலும் அண்ணாவின் பெயரே பதிவு செய்யப்பட வில்லை என்கிற போது, பெரியார் பெயரும், திரா விடர் இயக்க முன்னோடி களின் பெயர்களும் இடம் பெறும் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்? ஜாதி பேதமற்ற சமத் துவ சமுதாயத்தை உரு வாக்க ஏற்கெனவே அமைக்கப்பட்டுள்ள 145 பெரியார் நினைவு சமத்துவ புரங்களுடன் மேலும் 95 சமத்துவபுரங்கள் உருவாக் கப்படும் என்று தி.மு.க. வின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதுபோன்ற மறு மலர்ச்சி பற்றிய எந்த அறிவிப்பும் அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் மருந் துக்கும் இடம் பெறவில்லை. அதே நேரத்தில் தமிழ் மொழி மேம்பாடு என்னும் தலைப்பின் கீழ் அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கீழ்க் கண்ட அறிவிப்பு இடம் பெற்றுள்ளது. தமிழ் மொழியின் பெருமையை மற்ற மொழி யினரும் உணர்ந்து, அதைப்பற்றி அறிய திருக் குறள், தமிழ்க் காப்பி யங்கள், இலக்கண- இலக் கியங்கள், புராண- இதி காச நூல்கள், பாரதியார், பாரதிதாசன் கவிதைகள் மற்றும் பல்வேறு வரலாற் றுப் புகழ் பெற்ற நூல் களைப் பல்வேறு இந்திய மொழிகளிலும், ஆங்கிலம், சீன, அரேபிய மற்றும் உலகில் அதிக மக்கள் பேசும் மொழிகளில், மொழி மாற்றம் செய்யப்பட்டு, இணைய தளத்தில் இடம் பெறச் செய்து, நமது தமிழ் மொழியின் பெருமை உலக மெங்கும் பரவ வழிவகை செய்யப்படும். (அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை, பக்கம் 17, 18) பெரிய புராணத்தையும், கம்ப இராமாயணத்தையும் கொளுத்த வேண்டும் என்று இரா.பி.சேதுப் பிள்ளையோடும், நாவலர் சோமசுந்தர பாரதியா ரோடும் விவாதப் போரிட்டு வென்றவர் அறிஞர் அண்ணா. அந்த அண்ணாவின் பெயரைக் கட்சியின் பெயரிலும்,உருவத்தைக் கொடியிலும் பொறித்து வைத்துள்ள அண்ணா தி.மு.க.வின் தேர்தல் அறிக் கையில் தமிழில் உள்ள புராணங்களையும், இதிகா சங்களையும் மொழி மாற் றம் செய்யப்போகிறதாம் - வெட்கக்கேடு! முதலாவதாகத் தமிழ் முன்னேற்ற மடைந்து, உலகப் பாஷை வரிசையில் அதுவும் ஒரு பாஷையாக இருக்க வேண்டுமானால் தமிழை யும், மதத்தையும் பிரித்து விட வேண்டும். தமி ழுக்கும், கடவுளுக்கும் உள்ள சம்பந்தத்தையும் கொஞ்சமாவது தள்ளி வைக்க வேண்டும். - தந்தை பெரியார் (குடிஅரசு 26-1-1936) பெரியார், அண்ணா கருத்துகள் இவ்வாறு இருக்க அதற்கு மாறாக தமிழில் உள்ள புராண, இதிகாசங்களை மொழி மாற்றம் செய்வதாகக் கூறும் அ.தி.மு.க., பெரியார், அண்ணா பெயர்களை உச் சரிக்கத் தகுதி உடையது தானா? ------ மயிலாடன் --------”விடுதலை” 5-4-2011 Posted by புரட்சியாளர் பெரியார் at 17:34 1 comment: Labels: திராவிடர் இயக்கம் Friday, April 01, 2011 சோவின் பார்வை - ஒரு பார்வை திருவாளர் சோஇராமசாமி அய்யர் தேர்தல் களத்தில் பஞ்சக் கச்சத்தை இறுக்கிக் கட்டிக் கொண்டு தனது பூணூல் மூளையை ஒரு கசக்குக் கசக்கிக் கொண்டு - விடையை முதலில் எழுதிக் கொண்டு கணக்குப் போடும் ஒரு வேலையை இந்த வார துக்ளக்கில் (6.4.2011 - பக்கம் 5,6) செய்துள்ளார். அடேயப்பா, அய்யங்கார் அம்மையாரை எப்படியும் ஆட்சிக் கட்டிலில் அமர்த்த வேண்டும் என்றால் எவ்வளவு சாதுர்யமாகவும், வக்கணையாகவும் பேனா முனையை வளைய விடுகிறார்கள் என்ப தற்கு இந்த விமர்சனக் கட்டுரை ஒன்றே போதுமானது. 1) தேர்தல் கூட்டணியில் தி.மு.க.வோடு காங்கிரஸ் போட்ட கூட்டணியில் பிரச்சினைகள் ஏற்பட்டதால் காங் கிரஸின் ஓட்டு எந்த அளவுக்குக் கழக வேட்பாளர் களுக்குக் கிடைக்கும் என்பதும், கழகத்தினரின் ஓட்டு எந்த அளவுக்கு காங்கிரஸ் வேட்பாளர்களுக்குக் கிடைக்கும் என்பதும் நிச்சயமற்ற விஷயங்கள். இந்த உறவு மட்டுமல்ல; விடுதலைச் சிறுத்தை கள்; பா.ம.க.,வின் உறவும் இப்படிப்பட்டவைதான்; தலைவர்கள் செய்து கொண்ட சமாதானத்தைத் தொண்டர்கள் செய்து கொள்ளாததால் அவர வர்கள் ஓட்டு அந்தந்தக் கட்சிகளுக்கு போகுமே தவிர மற்றவர்களுக்குக் கிட்டாமல் போகும். இப்படி தி.மு.க. கூட்டணிபற்றி வரைந்து தள்ளும் துக்ளக் அ.தி.மு.க. கூட்டணியில் நடந்த நிகழ்வு களைப்பற்றி என்ன எழுதுகிறது? யாரும் எதிர்பார்க்காத நிலையில் அ.தி.மு.க. தரப்பு, தான் போட்டியிடுகிற தொகுதிகளின் பட்டியலை வேட்பாளர்கள் பெயர்களுடன் வெளியிட்டது - அது அதிர்ச்சியைத் தந்தது என்றெல்லாம் எழுதிவிட்டு பார்ப்பனியத்துக்கே உரித்தான பம்மாத்து வேலையில் இறங்குகிறது. தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் மற்றும் தி.மு.க. வினரிடையே தொண்டர்கள் மத்தியில் தோன்றிவிட்ட கசப்புணர்வு, அ.தி.மு.க. கூட்டணியில் ஏற்படவில்லை. தி.மு.க. கூட்டணியை காங்கிரஸ் தொண்டர்கள் வெறுத்தனர். ஆனால் அ.தி.மு.க., தே.மு.தி.க. கூட்டணியை இரு கட்சி தொண்டர்களும் முழுமையாக விரும்பினர் என்று கொஞ்சம்கூட அறிவு நாணயமற்ற முறையில் எழுதுகிறது துக்ளக். தங்களைக் கலக்காமல் பேச்சு வார்த்தை ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்கும் காலகட்டத்தில் அ.தி.மு.க. வேட்பாளர்களின் பெயர்களோடு 160 இடங்களுக்கு பட்டியலை அறிவித்தபோது என்ன நடந்தது? இடதுசாரிகள் என்ன என்னவெல்லாம் பேசி னார்கள்? நடிகர் விஜயகாந்த் எப்படியெல்லாம் பேசினார்? இப்பொழுதே இந்த அம்மையார் இப்படி நடந்து கொள்கின்றாரே, தேர்தலுக்குப்பின் எப்படி நடந்து கொள்வார் என்றெல்லாம் பேசவில்லையா? கூட்டணிக் கட்சியின் தலைவரான ஜெயலலிதா அம்மையாரின் கொடும்பாவி நாடெங்கும் கொளுத்தப் படவில்லையா? சடகோபம் (செருப்படி) சாத்துபடிகள் நடக்கவில்லையா? இப்படியெல்லாம் அ.தி.மு.க. கூட்டணியில் சாங்கோ பாங்கமாக நடந்திருக்கிறது. அப்படியி ருக்கும் கூட்டணிக் கட்சிக்காரர்களிடம் ஏதும் பிரச்சினையே கிடையாதாம். ஒன்றுபட்டு தேர்தல் பணிகளைச் செய்வார்களாம் - மனம் ஒத்துப் போய் விட்டார்களாம். மனம் ஒத்துப் போக வேண்டும் என்றால் செருப்படி விழ வேண்டுமோ! தி.மு.க.வுக்கும், காங்கிரசுக்கும் இடையே பிரச் சினைகள் வெடித்தாலும் அது ஒரு விமர்சனம் என்கிற கட்டுக்குள்ளே மட்டுமே கண்ணியமாக இருந்தது. எந்தக் கட்சித் தொண்டரும் இன்னொரு கட்சித் தலைவரின் கொடும்பாவியைக் கொளுத்தவில்லை; கொடி மரத்தை வெட்டவில்லை. ஆனாலும் இந்தக் கூட்டணிக் கட்சி களின் தொண்டர்களிடத்தில் விரிசல் இருக்கிறதாம். இந்தக் கட்சிக்காரர்களின் வாக்குகள் ஒருவருக் கொருவர் கிடைக்காதாம். துக்ளக் சோவின் கருத்துப்படி ஒரு கூட்டணிக்குள் இருக்கும் கட்சிகள் மனமொத்து இருக்கின்றன என்பதற்கு அடையாளம் - அந்தக் கட்சிக்குள் மோதல் பகிரங்கமாக வெடிக்க வேண்டும் - கூட்டணிக் கட்சித் தலைவரின் கொடும்பாவியைக் கொளுத்த வேண்டும் - அசிங்கமான பொருள்களால் அபிஷேக ஆராதனைகள் நடத்த வேண்டும். புரிகிறதா? இதுதான் சோராமசாமியின் விவாதப் புத்தியின் லட்சணம். அடேயப்பா, இவர்தான் அக்கிரகார அகராதியில் அறிவுக் கொழுந்தாம்! 2) தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கிடையாது என்று கலைஞர் அறிவித்து, ஒரு போலி மிரட்டலை விடுத்தபோது - அவருக்கு அழகிரி முதல் வீரமணி வரை பலர் பாராட்டுத் தெரிவித்து - இதுதான் சரி என்று கொண்டாடினர். அ.தி.மு.க. கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டபோது, இப்படி எந்தக் கட்சியும் மகிழவில்லை. இது முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டிய வித்தியாசம். தி.மு.க. கூட்டணி வெறுப்புற்றவர்களின் ஒப்பந்தம். அ.தி.மு.க. கூட்டணி - விருப்பமுடையோரின் உறவு - என்று எழுதுகிறார் திரு. சோ. இதைவிட உண்மையைக் கவிழ்த்துப் போட்டு யாராலும் காயடிக்க முடியாது. தி.மு.க.வுக்கும் காங்கிரசுக்கும் இடையே பிரச்சினை வந்தபோது கருத்துகள் பரிமாறப்பட்டன. இன்னொரு கட்டத்தில் பிரச்சினைக்குத் தீர்வுக் காணப்பட்டுவிட்டது. ஆனால் அ.தி.மு.க. கூட்டணிக்குள் ஒன்றுமே நடக்கவில்லை என்று கோயபல்சு பாணியில் எழுதுகிறாரே - அது உண்மைதானா? நடிகர் விஜயகாந்த் இருக்கும் திக்கு நோக்கி இடதுசாரிகள் படையெடுக்கவில்லையா? திருமண நிகழ்ச்சிக்குச் சென்று இருக்கும் திரு. வைகோ விரைந்து கொண்டு இருக்கிறார் - மூன்றாவது அணி உருவாக்கப்படும் என்று பேசப்பட வில்லையா? உள்ளுக்குள் இந்தக் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பேசிக் கொண்டிருந்தபோதுதான் தே.மு.தி.க. தலைமை அலுவலகத்துக்கு வெளியில் வெளிப்புறக் காட்சிகள் (சினிமாக்காரர்கள் ஆயிற்றே) கண ஜோராக நடந்து கொண்டிருக்க வில்லையா? துக்ளக் ராமசாமி அய்யரின் கணிப்புப்படியே அ.தி.மு.க கூட்டணியில் எல்லாம் சுமுகமாக நடந் தேறிவிட்டது. தலைவர்களுக்குள்ளும், தொண்டர் களுக்குள்ளும் எவ்வித வெறுப்பும் இல்லை என்பது உண்மையானால், ஒரே ஒரு தடவையாவது அ.தி.மு.க. கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் ஓர் இடத்தில் அமர்ந்து பொது மக்களைச் சந்திக்காதது ஏன்? அம்மையார் ஜெயலலிதா தனிக்காட்டு ராணியாக யாரோ எழுதிக் கொடுத்ததை வைத்துப் படிக்கும் பிரச்சாரத்தைச் செய்வானேன்? இதுதான் இந்தக் கூட்டணி ஒற்றுமையாகச் செயல்படுகிறது என்பதற்கு அடையாளமா? அ.தி.மு.க. கூட்டணி ஒற்றுமையாகச் செயல் படுகிறது என்பதற்கு அடையாளம்தான் - தன்னை வரவேற்க அ.தி.மு.க. கொடியுடன் வந்த தொண்டர் களைப் பார்த்து தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் எரிந்து விழுந்தது - வசைமாரி பொழிந்ததும் என்று சொல்லப் போகிறாரா? தி.மு.க. கூட்டணி வெறுப்புற்றவர்களின் கூட்டணி என்பதற்கு அடையாளம் - இக் கூட்டணித் தலைவர்கள் ஒரே மேடையில் பேசுவது, பிரச்சாரம் செய்வது தான் என்கிறாரா? ஜெயலலிதா அம்மையார்மீதான பார்ப்பனப் பாசம் - சூத்திரர் கலைஞரின் மீதான துவேஷம் இந்த இரண்டும் சேர்ந்து சோ போன்ற பார்ப் பனர்களைப் படாதபாடு படுத்துவதாகத் தெரி கிறது! ஆசை, வெட்கம் அறியாது என்பதை வெளிப்படுத்துகிறது. துக்ளக்கின் விமர்சனக் கட்டுரையைப் படிக்கும்போது ஓர் உண்மை மட்டும் வலிமையாக பளிச்சென்று தெரிகிறது. அ.தி.மு.க. கூட்டணி படுதோல்வி அடையப் போவதை உணர்ந்த நிலையில், எதையாவது சப்பைக்கட்டுக் கட்டி, தமிழர்களின் கண்களில் மிளகாய்ப் பொடியைத் தூவியாவது - சுண்ணாம்பை வெண்ணெய் என்று காட்டியாவது அய்யங்கார் அம்மையாரை அரியணையில் ஏற்ற வேண்டும் என்கிற ஆத்திரத்தில் இருப்பதாகத் தெரிகிறது! பார்ப்பனர்களின் பேனாவைக் சுழற்றியடிப்பது தான் தமிழர்களின் தலையாயக் கடமை என்பதை தந்தை பெரியார் அவர்கள் நாடி நரம்பில் ஊட்டிச் சென்றாரே - 1971 தேர்தலில்தான் நாடு அதனைக் கண்டதே! யார் அதனை மறந்திருந்தாலும் திருவாளர் சோ ராமசாமி அய்யர் கண்டிப்பாக மறந்திருக் கவே மாட்டார். இப்பொழுது போல அப்பொழுதும் பூணூலை முறுக்கிக் கொண்டு எழுதியவர் அவர்தானே! வட்டியும் முதலுமாக வாங்கிக் கட்டிக்கொண்டவர்தானே அந்த அய்யர்வாள் - மறந்திருக்க முடியாதே! இந்த நாடு ஆஸ்திகர்கள் வாழத் தகுதி இழந்து விட்டது - நாட்டை விட்டு வெளியேற மகா புருஷர்கள் தயாராகிவிட்டனர் என்று ஆச்சாரி யாரை (ராஜகோபாலாச்சாரியாரை) ஒப்புதல் வாக்கு மூலம் கொடுக்க வைத்தாரே தந்தை பெரியார் - அதனை மறந்துவிட அவர்களால் முடியுமா? இன் னொரு அடியும் அவர்களுக்குத் தேவைப்படுகிறது. நாம் என்ன செய்ய! ஒன்றுபடக் கூடாதா? சந்தடி சாக்கில் கந்தப் பொடி தூவியதாகச் சொல்வார்களே, அதுபோல சன்னமாக ஓர் ஏத்துவேலையைச் செய்கிறது துக்ளக். விடுதலைச் சிறுத்தைகள்; பா.ம.க.வின் உறவும் இப்படிப்பட்டதுதான்; (காங்கிரசுக்கும் - தி.மு.க.வுக்கும் இடையே உள்ள உறவு போன்றது தானாம்!) தலைவர்கள் செய்து கொண்ட சமாதானத்தைத் தொண்டர்கள் செய்து கொள்ளாததால் அவரவர்கள் ஓட்டு அந்தந்த கட்சிகளுக்குப் போகுமே தவிர, மற்றவர்களுக்கும் கிட்டாமல் போகும் - என்கிறார் திருவாளர் சோ. இது சோவின் ஆசையே தவிர, உண்மையல்ல. இதில் சன்னமாக கந்தப் பொடி தூவுவது என்பது விடுதலைச் சிறுத்தைகள் - பா.ம.க உறவும் இப்படித்தான் என்று குறிப்பிட்டு இருப்பது விடுதலைச் சிறுத்தைகள் - பா.ம.க., சேர்வது என்பதை சமூகரீ(நீ)தி கண்ணோட்டத்தில் கைகொடுத்து வரவேற்கக் கூடியவர்கள் நாம். தமிழன் ஒற்றுமை - ஜாதியால் சிதறுண்டுப் போகக் கூடாது என்ற கவலை நமக்கு. ஆனால் துக்ளக் பார்ப்பனப் பார்வையில் அது நடந்து விடக் கூடாது என்பதுதான்; அது நடந்து விட்டதே என்கிறபோது அது தங்கள் இனத்துக்கு ஆபத்து என்று உணர்ந்த நிலையில், கிண்டலாக விடுதலைச் சிறுத்தைகள் - பா.ம.க., உறவு பற்றிச் சிலாகிக்கிறது; 2011-லும் பார்ப்பனர்களின் நிலைப்பாடு இதுதான் என்பதை ஒடுக்கப்பட்ட தமிழர்கள் உணர்வார்களாக! ம.தி.மு.க.வை மறைத்தது - ஏன்? அ.தி.மு.க. கூட்டணியின் விரிசலை மயிலிறகால் வருடும் துக்ளக் முழுப் பூசணிக் காயை பிடிசோற்றில் மறைத்ததுபோல ஒரு வேலையைச் செய்திருக்கிறது - நரியை நனையாமல் குளிப்பாட்டுவதாகச் சொல்லு வார்களே - அதுபோல! கடந்த 2006 சட்டப் பேரவைத் தேர்தலில் 35 இடங்களைக் கொடுத்து தன்வசம் வைத்துக் கொண்ட ம.தி.மு.க.வை இந்த முறை அ.தி.மு.க. தலைமை அவமானப்படுத்தி வெளியேற்றியதே - அதைப்பற்றி இந்த விமர்சனக் கட்டுரையில் ஒருவரிகூட எழுதாமல் இருட்டடித்தது ஏன்? அதில் கை வைத்தால் குளவிக் கூட்டில் கை வைத்த கதையாக, ஆகி விடுமே - அதனால் தானா? தனக்கு வசதியாக இல்லாவிட்டால் அந்தப் பக்கம் தலை வைத்துப் படுக்கக் கூடாது என்ற பார்ப்பனத் தந்திரம்தானே இது! கடந்த தேர்தலில் ஒவ்வொரு தொகுதியிலும் ம.தி.மு.க. வாக்குகளை அ.தி.மு.க. பெற்றதே - இந்தமுறை அதன் வாக்குகள் எங்கு போகும் என்று ஒரே ஒரு வரிகூட - எழுதாததன் மர்மம் என்ன? வைகோவின் பிரச்சாரம் அ.தி.மு.க.வுக்குக் கிடைக்காமல் போனதுபற்றி குறிப்பிடத் தவறியது ஏன்? இவற்றையெல்லாம் இருட்டடிப்புச் செய்து விட்டு தேர்தல் விமர்சனம் எழுதுகிறது துக்ளக் என்றால் அந்தப் பார்ப்பனத் தந்திரத்தை - யோக்கியதாம்சத்தை - துக்ளக் வாசகர்களும், வாக்காளர்களும்தான் கொஞ்சம் புத்தியைப் பயன்படுத்திக் தெரிந்து கொள்ள வேண்டும். ஆரியம், நடமாடும் நாசம் என்றார் அறிஞர் அண்ணா. அதை இந்த இடத்தில் வட்டக் கோடிட்டுத் தெரிந்து கொள்ளலாம் அல்லவா? ------ கருஞ்சட்டை 1-4-2011 -"விடுதலை” யில் எழுதிய கட்டுரை Posted by புரட்சியாளர் பெரியார் at 19:41 No comments: Labels: திராவிடர் இயக்கம் Wednesday, March 30, 2011 இடதுசாரிகளின் பரிதாபம்! இடதுசாரிகள் என்ன சொல்லுகிறார்கள்? என்ன வாக்குறுதிகளைக் கொடுக்கிறார்கள்? தி.மு.க. ஆட்சியை அகற்றி விட்டு அதற்குப் பதில் எந்த ஆட்சியை அமர வைக்கப் போகிறார்கள்? 2001 முதல் 2006 வரை தமிழ்நாட்டில் ஆட்சி புரிந்த ஜெயலலிதா அம்மையாரை அரசுக் கட்டிலில் அமர வைக்கப் போகிறார்கள். இந்த 2001-2006 ஜெயலலிதா ஆட்சியின்மீது இந்த இடதுசாரிகளின் நிலைப்பாடு என்ன? கணிப்பு என்ன? அவற்றை ஒரே ஒரு முறை ஆய்வு செய்தால், இந்த இடதுசாரிகளின் இயலா மையை, கருத்துக் குழப்பத்தை, விமர்சனச் சீர்கேட்டை - மலிவான அரசியல் பரிதாபத்தைப் பச்சையாகவே பட்டவர்த்தனமாகவே புரிந்துகொள்ளலாம். தகரம் கண்டுபிடிப்பதற்கு முன்பே உண்டியலைக் கண்டுபிடித்தவர்கள் இந்தக் கம்யூனிஸ்டுகள் என்று நிலப்பிரபுத்துவ மனப்பான்மையில் கேலி செய்தவர் இந்த ஜெயலலிதா அம்மையார்தான். எஸ்மா, டெஸ்மா என்ற சட்டங்கள் மூலம் ஒரே உத்தரவில் ஒரு லட்சத்து 76 ஆயிரம் அரசு ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பிய ஆட்சி - அரசு ஊழியர்களை ஆறலைக் கள்வர் போல நள்ளிரவில் கைது செய்து சிறைக் கொட்டடியில் நெட்டித் தள்ளிய ஆட்சி - அத்தகைய ஓர் எதேச்சதிகாரப் போக்குக் கொண்டவரை மீண்டும் முதல் அமைச்சர் சிம்மாசனத் தில் அமர்த்தி அழகு பார்ப்பதுதான் இடதுசாரி களின் நிலைப்பாடா? பத்தாயிரம் சாலைப் பணியாளர்களை - அந்த அடித்தட்டு மக்களை, ஒடுக்கப்பட்ட மக்களை அந்தப் பணியிலிருந்து சீட்டுக் கிழித்து அனுப்பிய அம்மையார் மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும்; அந்தப் பத்தாயிரம் சாலைப் பணியாளர்களை மீண்டும் பணி நியமனம் செய்த கலைஞர் தலைமையிலான ஆட்சி வீழ்த்தப்பட வேண்டும் என்பதுதான் இடதுசாரிகளின் வர்க்கப் பார்வையா? இந்தியக் கம்யூனிஸ்டுக் (மார்க்சிஸ்டு) கட்சி வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் தமிழகம் முழுவதிலும் உள்ள பஞ்சமி நிலங்களை மீட்டு தலித்திடம் மீண்டும் ஒப்படைக்கக் கட்சி போராடும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. முதலில் ஜெயலலிதா சிறுதாவூரில் ஆக்கிரமித் துள்ள தலித் நிலங்களைப் பறிமுதல் செய்யும் போராட்டம் என்னாயிற்று என்று வாக்காளர்கள் கேட்க மாட்டார்களா? தாழ்த்தப்பட்ட மக்கள் ஆவேசமாகக் குரல் கொடுக்க மாட்டார்களா? அந்தப் போராட்டத் தின் அடுத்த கட்டத்தில் இவர்கள் எகிறிக் குதிக் காதது ஏன் என்ற கேள்வி மக்கள் மத்தியில் செங்குத்தாக எழாதா? தேர்தல் அறிக்கையில் காணப்படும் இந்த வரிகள் அ.தி.மு.க. பொதுச் செயலாளரின் கவனத்தில் எட்டாத வரைக்கும் சி.பி.எம். கட்சிக்கு நல்லது. தேர்தல் அறிக்கையில் சி.பி.எம். குறிப்பிட்டுள்ள ஒரு தகவல்: வேலையின்மை பெருகி இளைஞர்கள் எதிர் காலம் கேள்விக்குறியாகி வரும் நிலையில், புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கவும், அரசு மற்றும் பொதுத்துறைப் பணிகளில் உள்ள காலியிடங்கள் அனைத்தும் நிரப்பவும் கட்சி பாடுபடும்; வேலை யில்லாத காலத்திற்கு மாதம் ரூ.1000 உதவித் தொகை வழங்கக் கட்சி வற்புறுத்தும் என்று சி.பி.எம். கட்சியின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. இவர்கள் ஆதரிக்கும் - மீண்டும் ஆட்சிப் பீடத்தில் அமர வைக்கத் துடிக்கும் - அந்த அம்மையார் தானே 5 ஆண்டு காலத்திற்கும் வேலை நியமனத்தடை ஆணை பிறப்பித்தவர்? அரசு ஊழியர்களை ஒரே ஆணை என்னும் குண்டாந் தடியால் மண்டையை உடைத்து வீட்டுக்கு அனுப்பியவர். என்.ஜி.ஜி.ஓ. சங்கப் பொறுப்பாளர்கள் சிவ. இளங்கோ, சு. அறிவுக்கரசு போன்றவர்களின் மண்டை பிளக்கப்பட்டது ஜெயலலிதா அம்மையார் ஆட்சிக் காலத்தில்தானே - இவை எல்லாம் இடதுசாரிகளுக்கு வசதியாக மறந்து போன சமாச்சாரங்களா? அதே நேரத்தில் 2006-2011 தி.மு.க. ஆட்சிக் கால கட்டத்தில் 2 லட்சத்து 33 ஆயிரத்து 169 பேர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் - 60 ஆயிரத்து 55 கோடி ரூபாய் முதலீட்டிலான 28 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டு, 13 அரசாணைகள் வெளியிடப்பட்டு, 41 புதிய தொழிற்சாலைகள் அமைக்க மேற்கொள்ளப் பட்டுள்ள நடவடிக்கைகளில் இதுவரை 13 தொழிற் சாலைகள் திறக்கப்பட்டது, இந்தத் தி.மு.க. ஆட்சியில் தானே? படித்து வேலை வாய்ப்பற்ற 4 லட்சத்து 704 இளைஞர்களுக்கு 284 கோடி ரூபாய் உதவித் தொகை வழங்கியதும் கலைஞர் ஆட்சிதானே? இவற்றையெல்லாம் மறந்துவிட்டோ அல்லது மறைத்து விட்டோ - இவற்றிற்கெல்லாம் எதிரான ஓர் ஆட்சியைக் கொண்டு வரத் துடியாய்த் துடிப்பது இடதுசாரிகளுக்கு அழகல்ல! ------------------”விடுதலை” 29-3-2011 Posted by புரட்சியாளர் பெரியார் at 05:41 No comments: Labels: திராவிடர் இயக்கம் Tuesday, March 29, 2011 பார்ப்பனர் சங்கம் யாரை ஆதரிக்கிறது? தமிழ்நாடு பிராமணர் சங்கம் எனும் பெயரில் மக்கள் குரல் ஏட்டில் (24.3.2011) கீழ்க்கண்ட விளம்பரம் ஒன்று வெளியாகியுள்ளது. முக்கிய அறிவிப்பு தமிழ்நாடு பிராமணர் சங்கம் (தாம்ப்ராஸ்) 13.04.2011 அன்று நடைபெற இருக்கின்ற தமிழக சட்டப் பேரவைத் தேர்தல்களில் அ.இ.அ.தி.மு.க. வேட்பாளர்களையும், அதன் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களையும் ஆதரிப்பது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த முடிவு எங்களது மாவட்ட அமைப்புக்களின் வழியாகவும் தமிழகம் எங்கும் இருக்கக் கூடிய எங்களது 500 கிளைகள் வழியாகவும் நடைமுறைப்படுத்தப்படும். -எம். நாராயணன், மாநிலத் தலைவர் - என்று விளம்பரம் வெளி வந்துள்ளது. இந்தத் தேர்தலில் (2011) மட்டும் அல்ல; 2006ஆம் ஆண்டுத் தேர்தலிலும்கூட இதுபோன்ற ஒரு விளம்பரம் வெளி வந்ததுண்டு. சென்னை தினமலர் ஏட்டில் (26.6.2006-7ஆம் பக்கத்தில் கீழ்க்கண்ட விளம்பரம் வெளியாகியது. தமிழ்நாடு பிராமண சகோதரர்களுக்கு ஓர் வேண்டு கோள். வருகின்ற சட்டமன்ற தேர்தலில் நமது பெருமையையும், கவுரவத்தையும் காக்கும் வகையில், நமது சமூகத்தின் அனைத்து வாக்குகளையும் தவறாமல், அ.தி.மு.க. அணிக்கு ஆதரவாக பதிவு செய்து, தமிழக முதல்வர், டாக்டர் ஜெ. ஜெயலலிதா அவர்களின் தலைமையிலான அணியை வெற்றி பெறச் செய்ய வேண்டுகிறேன் - ஜி.ஆர். ரவிச்சந்திரன் B.Com., B.L., வழக்கறிஞர் தமிழ்நாடு பிராமண சங்கத்தின் சார்பில் முன்னாள் காங்கிரசாரான முக்தா சீனிவாசன் அறிவிக்கப்பட்டு தாமரைச் சின்னத்தில் பா.ஜ.க. வேட்பாளராக நின்றார். பா.ஜ.க.வும் - பார்ப்பனர் சங்கமும் ஒன்றுதான் என்பதற்கு வேறு என்ன அத்தாட்சி தேவை? முக்தா - சீனிவாசன் என்ற பார்ப்பன பா.ஜ.க. வேட்பாளர் பேட்டி ஒன்றில் என்ன கூறினார் என்பது முக்கியமானது. அ.தி.மு.க.வில்தான் பிராமணர்களை வேட்பாளராகப் போட்டுள்ளார். தி.மு.க. போடவேயில்லை. ஜெயலலிதா வைத்தான் ஆதரிக்க வேண்டும் என்றார். இந்தத் தகவல்களையும், உண்மை நடப்புகளையும் கணக்கில் கொண்டால்தான் வரும் ஏப்ரல் 13 அன்று தமிழ்நாட்டில் நடைபெறவிருக்கும் தேர்தலின் தன்மை எந்த அச்சில் சுழலுகிறது என்பதைப் புரிந்து கொள்ள முடியும். பச்சையாக ஜெயலலிதா நான் பாப்பாத்திதான்! என்று சட்டப் பேரவையிலேயே ஆணவமாகப் பிரகடனப் படுத்தியதையும் இந்த இடத்தில் நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும். இன்றைக்கும் பார்ப்பன ஏடுகள், ஊடகங்கள் இந்த அம்மையாரை விழுந்து விழுந்து ஏன் ஆதரிக்கின்றன? சோ ராமசாமி, குருமூர்த்தி போன்ற பார்ப்பனர்கள் ஆஸ்தான ஆலோசகர்களாக இருப்பது எந்த அடிப்படையில்? 234 தொகுதிகளில் சிறீரங்கத்தை தேர்ந்தெடுத்து ஜெயலலிதா அங்குப்போய் போட்டியிட வேண்டிய அவசியம் என்ன? சிறீரங்கம் என்பது பார்ப்பனர்கள் அதிலும் குறிப்பாக அய்யங்கார்ப் பார்ப்பனர்கள் அதிக எண்ணிக்கையில் உள்ள தொகுதியாகும். 2009ஆம் ஆண்டு நடந்து முடிந்த திருச்சி மக்களவைத் தேர்தலில் (6 சட்டசபைகள் அடங்கிய தொகுதி) 5 சட்டமன்ற தொகுதிகளிலும் காங்கிரஸ் வேட்பாளர் அதிக வாக்குகள் பெற்றிருந்த நிலையிலும் சிறீரங்கம் சட்டமன்ற ஒரே ஒரு சட்டமன்றத் தொகுதியில் மட்டும் அ.தி.மு.க. வேட்பாளர் பெற்ற கூடுதல் வாக்குகள் அவரை வெற்றி பெறச் செய்தன என்றால், இந்த சிறீரங்க ரகசியத்தைத் தெரிந்து கொள்ளலாமே! அய்யங்கார் பெண்மணியான ஜெயலலிதா அம்மையார் தலைமையில் இயங்கும் கட்சிக்குத்தான் வாக்கு அளித்துத் தீருவது என்பதில் பார்ப்பனர்கள் எவ்வளவுக் கட்டுப்பாடாக, உறுதியாக இருக்கின்றனர் என்பதைத் தெரிந்து கொண்டால் பார்ப்பனர் அல்லாதார் நடக்க இருக்கும் சட்டப் பேரவைத் தேர்தலில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ற கடமையும், உண்மையும் விளங்காமற் போகாது. நாட்டில் நடப்பது வெறும் அரசியல் அல்ல; ஆரியர் - திராவிடர் போராட்டமே என்பார் பகுத்தறிவுப் பகலவனான தந்தை பெரியார். அது எத்தகைய உண்மை என்பதை நாட்டு நடப்புகள் நல்ல வண்ணம் மக்களுக்குத் தெரிவித்துக் கொண்டுதான் இருக்கின்றன. காங்கிரஸ் கட்சிக்குள்கூட காமராசர் - ராஜாஜி உள்கட்சிச் சண்டை என்பது இந்த அடிப்படையில்தான் நடந்து வந்திருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். தமிழர்கள் எந்தக் கட்சியில் இருந்தாலும் அவற்றை யெல்லாம் தூக்கி எறிந்துவிட்டு, நடக்க இருக்கும் தேர்தல் என்ற ஆரியர் - திராவிடர் போராட்டத்தில் - தந்தை பெரி யாரும், சுயமரியாதை இயக்கமும் நம் குருதியில் ஊட்டிய அந்தத் தன்மான இனவுணர்வோடு நடந்துகொள்ள வேண்டும் என்பதே நமது கனிவான வேண்டுகோள் ஆகும். Posted by புரட்சியாளர் பெரியார் at 04:47 No comments: Labels: வீரமணி Saturday, March 26, 2011 தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் தமிழர் தலைவர் கி.வீரமணி மீண்டும் ஆடு மாடுகளை மேய்க்கப் போக வேண்டுமா? அ.இ.அ.தி.மு.க, தேர்தல் அறிக்கையிலே சொல்லப்பட்டுள்ள வாக்குறுதிகள் என்ன? வீட்டுக்கு வீடு நான்கு ஆடுகளைக் கொடுப்போம் என்று ஜெயலலிதா சொல்லியிருக்கிறார். ஆடு, மாடுகளை மேய்த்துக் கிடந்த நம் மக்களுக்குக் கல்வியைக் கொடுக்கச் செய்து, உத்தியோகங்கள் கொடுக்கச் செய்து கரை ஏறச் செய்தவர் தந்தை பெரியார். கல்விக் கண் கொடுத்தவர் பச்சைத் தமிழர் காமராசர் - அறிஞர் அண்ணாவும், மானமிகு கலைஞர் அவர்களும் அடித்தட்டு மக்களை மேலே கொண்டு வரப் பாடுபட்டார்கள். ஆனால் ஜெயலலிதா அம்மையாரோ மீண்டும் நம் மக்களை ஆடு மாடுகள் மேய்க்கப் போகச் சொல்லுகிறார். மீண்டும் மனுதர்மம் கோலோச்ச வழி செய்கிறார். இன்று மனுதர்மத்துக்கும் சமதர்மத்துக்கும்தான் போராட்டம்! சமதர்மம் விரும்புவோர் கலைஞர் தலைமையிலான ஆட்சியைக் கொண்டு வர வேண்டாமா? (சென்னைத் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் தமிழர் தலைவர் கி. வீரமணி - 25.3.2011 ****************** தேர்வில் காப்பி அடித்தால் - தண்டனை! தேர்தலில் காப்பி அடித்தால் என்ன தண்டனை? இப்பொழுது எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நடந்துகொண்டு இருக்கிறது. திடீரென்று பறக்கும் படையினர் தேர்வு எழுதும் மய்யத்திற்கு வந்து பார்வையிடுகிறார்கள். தேர்வில் யாராவது மாணவர்கள் காப்பி அடித்தால் கையும், களவுமாகப் பிடித்து அய்ந்தாண்டுகள் வரை தேர்வு எழுத முடியாது என்று தண்டிக்கின்றனர் - இது தேர்வில். இப்பொழுது தேர்தலில் காப்பி அடிக்கிறார்களே! தி.மு.க. தேர்தல் அறிக்கையை அ.தி.மு.க. அப்படியே காப்பி அடித்துள்ளதே - இதற்கு என்ன தண்டனை? சம்பந்தா சம்பந்தம் இல்லாத பிரச்சினைகளில் எல்லாம் தலையிடும் தேர்வாணையம் இதுபோல காப்பி அடிப்பவர்கள் விஷயத்தில் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது? (பலத்த கை தட்டல் - சிரிப்பு!). தேர்வில் 5 ஆண்டு தண்டனை என்றால் தேர்தலிலும், தேர்தலில் நிற்கக் கூடாது என்று தண்டனை கொடுக்கலாமே! (சென்னைத் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் - 25.3.2011) *********************** கொளத்தூரில் மு.க.ஸ்டாலின் நிற்கவில்லை; தியாகப் பீடத்தின் மீது நிற்கிறார்! மு.க.ஸ்டாலினை ஆதரித்து தமிழர் தலைவர் பிரச்சாரம் சென்னை, மார்ச் 26- தி.மு.க. பொருளாளர், துணை முதல்வர் ஸ்டாலின் கொளத்தூரில் நிற்கவில்லை; தியாகத்தின் மீது நிற்கிறார் என்று அவரைப் பாராட்டி கொளத்தூர் தொகுதி மக்களிடம் வாக்கு கேட்டு பிரச்சாரம் செய்தார் திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள். தி.மு.க. பொருளாளர், தமிழக அரசின் துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து நேற்று (25.3.2011) இரவு 7 மணிக்கு கொளத்தூர் தொகுதியைச் சார்ந்த பெரம்பூர் செம்பியம் காந்தி சிலை அருகில் ராகவன் தெருவில் ஏற்பாடு செய்யப்பட்ட பொதுக்கூட்டத்தில் திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரையின் சுருக்கம் வருமாறு: ஸ்டாலினை தென்கோடியில் அழைத்தார்கள் கொள்கைக்கு முதலிடம், லட்சியத்திற்கு முதலிடம் என்ற பார்வையோடுதான் தளபதி ஸ்டாலின் அவர்கள் - நல்ல வாய்ப்பாக அவர் போட்டியிடக்கூடிய புதிதாக உருவாக்கப்பட்டி ருக்கின்ற இந்தக் கொளத்தூர் தொகுதிக்கு கிடைத்திருக்கிறதென்றால், அது நீங்கள் பெற்ற பேறு. தளபதி ஸ்டாலின் அவர்களை தேர்தலில் நிற்க வைக்க தென்கோடியில் அழைத்தார்கள். பாளையங் கோட்டைத் தோழர்கள்கூட, நீங்கள் இங்கே வந்து நில்லுங்கள் என்று அழைத்தார்கள். பாளையங்கோட்டைத் தோழர்களுக்கும், வடசென்னை மாவட்ட தி.மு.க. செயலாளர் சகோதரர் வி.எஸ். பாபு அவர்களுக்கும் ஏற்பட்ட போட்டியிலே எப்பொழுதும் வெல்லக்கூடிய பாபு இப்பொழுதும் வென்றார்; எப்போதும் வெல்வார் (கைதட்டல்). பதவிக்கான இயக்கமல்ல தி.மு.க. வெறும் பதவிக்காக இருக்கிற இயக்கமல்ல. கொள்கைப் பார்வை இருக்கிறது. இந்த இயக்கம் அறிஞர் அண்ணா அவர்களாலே தொடங்கப்பட்ட நேரத்திலே நேற்றுக்கூட தஞ்சையிலே நம்முடைய முதல்வர் கலைஞர் அவர்கள் பேசியிருக்கிறார். இது வெறும் பதவிக்காக தொடங்கப்பட்ட இயக்கம் அல்ல. தளபதி அவர்களை அழைத்து நீங்கள் இந்தத் தொகுதியில் நில்லுங்கள். நீங்கள் நின்றால் அதைவிட வேறு பெருமை எங்களுக்குக் கிடையாது என்று சொல்லி, தான் பக்குவப்படுத்தப்பட்டிருக்கின்ற இந்தத் தொகுதியை அவர்களை வலியச் சென்று அழைத்து கொளத்தூர் தொகுதி பெருமைபெற வேண்டும் என்று நினைத்து செய்கிறார்கள் என்று சொன்னால் இப்படிப்பட்ட தியாக உணர்வு யாருக்கு இருக்கும்? சுயநல மனிதர்களுக்கு இருக்காது சுயநல மனிதர்களுக்கு இருக்காது. பதவியை மட்டுமே நினைப்பவர்களுக்கு இருக்காது. இதனால் தனக்குப் பெருமை என்று கருதி அமைதியாக பணியை செய்து கொண்டிருக்கின்றார் வி.எஸ்.பாபு. அதற்குப் பெயர்தான் திராவிட முன்னேற்றக் கழகம். அதுதான் தி.மு.க! அதுதான் திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டனுடைய உணர்வு. அதுதான் கழகம் ஒரு குடும்பம் என்று சொல்லுகின்ற அளவுக்கு உண்மையான ஒரு பொருளாகும். 234 தொகுதிகளிலும் கலைஞர்தான் வேட்பாளர்! யார் வேட்பாளர் என்பது முக்கியமல்ல. நான் சொன்னேன். 234 தொகுதியிலும் திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் கலைஞர்தான் வேட்பாளர். அதில் சந்தேகமில்லை. தமிழக மக்கள் இதிலே தெளிவாக இருக்கிறார்கள். இந்தக் கொளத்தூர் தொகுதியிலே மற்றவர் களுக்கெல்லாம் கிடைக்காத வாய்ப்பு உங்களுக்குக் கிடைத்திருக்கிறது. தளபதி ஸ்டாலின் தமிழகத்தின் எதிர்கால நம்பிக்கை நட்சத்திரம். அவரை எல்லோரும் விரும்பியிருக்கிறார்கள் - ஏற்றிருக்கிறார்கள். எந்தத் தரப்பும் தளபதி ஸ்டாலின் அவர்களைக் குறை சொன்னதே கிடையாது. காரணம் அவர் எல்லோரிடத்திலும் மிக அன்பாக எளிய முறையிலே பழகக் கூடியவர். லாட்டரியால் பதவிக்கு வந்தவர் அல்ல! அவர் ஏதோ திடீரென்று அரசியலுக்கு வந்தவர் அல்ல. அவர் ஒன்றும் வரும் பொழுதே லாட்டரிச் சீட்டு வாங்கிக் கொண்டு வந்தவர் அல்ல. நான் தளபதி ஸ்டாலின் அவர்களைப் பற்றி பேசும் பொழுது நான் உணர்ச்சிப்பூர்வமாகப் பேசுகிறேன், ஏன்? காரணம் என்ன? 1976இல் நெருக்கடி காலத்தில் நாங்கள் எல்லாம் சிறைச் சாலையில் 9ஆவது வார்டு அறையில் தள்ளப்பட்டு அதுவும் தொழு நோயாளிகளுக்கு என்று ஒதுக்கப்பட்ட சாதாரணமான வசதி குறைவாக இருக்கக்கூடிய இடத்திலே அடைத்து வைக்கப்பட்டோம். சிறைக் கதவுகளைத் திறந்து சட்ட விரோதமாக, எங்களை அடித்தார்கள். அந்த அடியினால் ரத்தம் சொட்டச் சொட்ட வாங்கிக் கொண்டிருந்தோம். இரத்தம் சொட்டச் சொட்ட ஓர் இளைஞர் சற்று நேரம் கழிந்த பிற்பாடு, ஓர் இளைஞர் அடி வாங்கி இரத்தம் சொட்டச் சொட்ட என்மீதுதான் விழுந்தார். எனக்கு அது பெருமையாக இருக்கிறது. அன்றைக்கே அவர் மனப் பக்குவத்தோடு இருந்தார். தம்பி நாங்கள் எல்லாம் இந்தச் சிறைக் கொடுமைக்கு அனுபவப்பட்டவர்கள். ஆனால் நீங்கள் அந்த அனுபவத்தை முதல் முறையாகப் பெறுகிறீர்களே என்று சொன்ன பொழுது, இல்லை அண்ணே! நான் பக்குவமாக இதை ஏற்றுக் கொள்ளக்கூடிய தெம்பு உண்டு என்று சொன்னார். தியாகத் தழும்பு அன்றைக்கு அவருடைய தியாகத் தழும்பு இருக்கிறதே அந்தத் தியாகத்தின் மீதுதான் இந்த மேடையின் மீது அவர் நிற்கிறார். அதை மறந்து விடாதீர்கள்- அப்படிப்பட்ட ஒருவர் வேட்பாளராக வந்திருக்கின்றார். எனவே அவர் தியாகத்தின் மீது நிற்கிறார். என்னுடைய தளபதி நிற்பதுதான் பெருமை என்று பாபு சொன்னாரே-அதுதான் திராவிட முன்னேற்றக் கழகம். இந்த இயக்கத்தில்தான் விட்டுக் கொடுக்கின்ற தன்மை இருக்கிறது. விட்டுக் கொடுப்பவர்கள் பேரறிஞர் அண்ணா சொன்னார்-விட்டுக் கொடுப்பவர்கள், கெட்டுப்போவதில்லை; கெட்டுப் போகிறவர்கள் விட்டுக் கொடுப்பதில்லை-என்று. தளபதி ஸ்டாலின் தொகுதியில் பேச வேண்டு மென்று நானே ஆசைப்பட்டேன். ஆகவே வந்திருக்கிறேன். மீண்டும் கலைஞர் ஆட்சி! நாங்கள் எல்லாம் பேசி ஓட்டுக் கேட்டால்தான் நீங்கள் ஓட்டுப் போடுகிறவர்கள் அல்லர். நீங்கள் ஏற்கெனவே முடிவு செய்விட்டீர்கள். இங்கு மட்டுமல்ல, தமிழகத்திலே இருக்கின்ற அத்தனை மக்களும் முடிவு செய்துவிட்டார்கள். காரணம், கலைஞர் தலைமை தாங்கினால்தான் மீண்டும் கலைஞர் ஆட்சி மலர்ந்தால்தான். திராவிடம் எழுச்சி பெறும் என்பதை உணர்ந் திருக்கிறார்கள். மனுதர்மம் மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது. சமதர்மம் மலரவேண்டும். ஆரியம் அதனுடைய பொல்லாச் சிறகை விரிக்கக் கூடாது. மீண்டும் திராவிடம் எழுச்சி பெறவேண்டும் என்ற உணர்வோடு மக்கள் வந்திருக்கிறார்கள். 1971இல் ஊடகங்கள் தி.மு.க.வுக்கு எதிராகப் பிரச்சாரம் செய்தன. அப்பொழுதுதான் என்றைக் கும் இல்லாத அளவுக்கு தி.மு.க. 183 தொகுதிகளில் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. மீண்டும் திரும்பப் போவது 1971 முடிவுதான். அதில் யாருக்கும் சந்தேகமில்லை. சமுதாய புரட்சியின் விடிவெள்ளி ஏன் தி.மு.க. ஆட்சி மீண்டும் வரவேண்டும் என்றால், இதுதான் சமுதாயப் புரட்சிக்கு விடி வெள்ளியாக ஆகும். எனவே அருமை வாக்காளப் பெருமக்களே! அன்புள்ள தோழர்களே! அருமைத் தாய்மார்களே! ஏப்ரல் 13ஆம் தேதியன்று வாக்குச் சாவடிக்குச் செல்லுங்கள்! வாக்குச் சாவடியில் தளபதி மு.க.ஸ்டாலின் பெயர் இருக்கும். அதற்கு நேராக உதயசூரியன் சின்னம் இருக்கும். அந்த உதயசூரியன் சின்னத்தில் பொத்தானை அழுத்துங்கள்! ஒளிமிகுந்த வாழ்க்கை பொத்தானை அழுத்திய உடனே விளக்கு எரியும். அந்த விளக்கு எரிந்தால் உங்கள் வீட்டில் விளக்கு எரியும். அந்த விளக்கு எரிந்தால் நாட்டில் விளக்கு எரியும். ஒளி மிகுந்த வாழ்க்கையை நீங்கள் பெறக்கூடிய வாய்ப்பைப் பெற முடியும். தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் இவ்வாறு பேசி மேலும் ஏராளமான விளக்கங்களை அளித்தார். **************************** பேராசிரியரை ஆதரித்து தமிழர் தலைவர் பிரச்சாரம் கலைஞர் ஆட்சியில் எல்லா மக்களும்-கட்சியினரும் பயனடைந்தனர் ஜெயலலிதா ஆட்சியில் எலிக்கறிதான் மிஞ்சியது சென்னை, மார்ச் 26-கலைஞர் ஆட்சியில் பயன் பெறாதவர்களே கிடையாது. எலிக்கறி சாப்பிடுவது நல்லது என்று சொன்ன ஜெயலலிதாவுடன் இடது சாரிகள் கூட்டுச் சேர்ந்திருக்கிறார்கள் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறி, தேர்தல் பிரச்சார உரையாற்றினார். தி.மு.க. வேட்பாளர் பேராசிரியர் க.அன்பழகன் அவர்களை ஆதரித்து வில்லிவாக்கம் தொகுதி மேடவாக்கத்தில் நேற்று (25.3.2011) திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரை வருமாறு: இந்தியாவிலேயே ஒப்பற்ற ஆட்சி! நம்முடைய முதல்வர் கலைஞர் அவர்கள் இந்தியாவில் எங்கும் இல்லாத ஓர் ஒப்பற்ற ஆட்சியை கடந்த 5 ஆண்டுகாலமாக - பொற்கால ஆட்சி என்று அனைவரும் விருப்பு வெறுப்பு இன்றி சொல்லக்கூடிய அளவிற்கு சாதனைகளை சரித்திரத் தில் உருவாக்கி, அன்றாடம் செய்திருக்கின்ற பல நற்பணிகளைக் கொண்ட தி.மு.க. ஆட்சி தொடர வேண்டும் என்பதற்காகத்தான் வருகின்ற ஏப்ரல் .13 ஆம் தேதி நடைபெறக்கூடிய தேர்தல் ஆகும். இந்தத் தேர்தலிலே இதுவரை வேறு எந்த மாநிலத்தில் இல்லாத சாதனைகளை தமிழகத்திலே கலைஞர் ஆட்சியிலே நிகழ்த்தியிருக்கின்றார்கள். உச்சநீதிமன்றம் பாராட்டு இதை நாம் பாராட்டுவதைவிட, தோழமைக் கட்சிகள் பாராட்டுவதை விட, இதுவரை வரலாறு காணாத வகையிலே உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகள் தமிழகத்திலே நடைபெறக்கூடிய பொது விநியோகத் திட்டத்தைப் பாராட்டியிருக்கின்றார்கள். அதாவது பெரும்பாலான மக்களுக்கு வாழ்வளிக்கக் கூடிய, உயிரூட்டக் கூடிய திட்டம் - அந்தத் திட்டத்தைப் போல மற்றவர்கள் செய்ய வேண்டும் என்று பாராட்டிச் சொன்னார்கள். அது மட்டுமல்ல; மத்திய அரசையே உச்சநீதிமன்றம் கேட்டது. ஏன் நீங்களும் அதைப் பின்பற்றக் கூடாது, ஏன் மற்ற மாநிலங்களும் இதைப் பின்பற்றக் கூடாது என்று கேட்டார்கள். இதைவிட பெருமை திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிக்கு - கலைஞர் ஆட்சிக்கு வேறு சரித்திரம் இருக்க முடியாது. ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய்க்குப் போடுகின்ற திட்டம் இதுவரை இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலாவது உண்டா? கிடையாது. கம்யூனிஸ்ட்டுகள் ஆளுகின்ற மேற்கு வங்காளத் திலே கிடையாது அதே போல கேரளாவிலே கிடையாது. அண்மையிலேதான் அவர்கள் கஷ்டப்பட்டு ஒரு 40 நாள்களுக்கு முன்னாலேதான் ஒரு கிலோ அரிசி இரண்டு ரூபாய்க்குக் கொடுக்கப் படும் என்ற நிலைக்கு சொல்லியிருக்கிறார்கள். 50 ரூபாய்க்கு 10 மளிகைப் பொருள்கள் வெறும் அரிசியை மட்டும் போட்டால் போதுமா? என்று எதிர்க்கட்சித் தலைவர் - இந்த அம்மையார் கேட்டார். தாய்மார்களுக்கு, குடும் பத்திலே இருக்கிறவர்களுக்கு வசதியாக 50 ரூபாய்க்கு பத்து மளிகைப் பொருள்களை கலைஞர் ஆட்சியில் இன்றைக்கும் தந்து கொண்டிருக் கின்றார்கள். இப்படி விநியோகம் செய்த முறையைத் தான் உச்சநீதிமன்றத்திலே பாராட்டினார்கள். பட்டினிச்சாவு கிடையாது தமிழ்நாட்டிலே பட்டினிச்சாவு கிடையாது. அ.தி.மு.க. ஆட்சியில் விவசாயிகள் எலிக்கறி சாப்பிட்டார்கள். இன்றைக்கு அ.தி.மு.க.வோடு கூட்டணி சேர்ந்திருக்கின்ற கம்யூனிஸ்ட் நண்பர்கள் கூட , பட்டினிச்சாவு நடந்திருக்கிறது.; அதுவும் எங்கே நடந்திருக்கிறதென்றால் சோழவளநாடு சோறுடைத்து என்று சொல்லுகின்ற தஞ்சை மாவட்டத்திலேதான் நடத்திருக்கிறது என்று அந்த அம்மையாரிடம் சுட்டிக்காட்டினார்கள். அன்றைக்கு ஆட்சியில் இருந்த அந்த அம்மையார் எலிக்கறி சாப்பிடுவது சர்வ சாதாரணம் என்றெல்லாம் சொன்னார். ஆனால் இன்றைக்கு அந்த அ.தி.மு.க. அணியில் தான் இடது சாரிகள் கூட்டுச் சேர்ந்திருக்கிறார்கள். தி.மு.க. ஆட்சி தொடர உரிமை தி.மு.க. ஆட்சி தொடர வேண்டும் என்று கேட்பதற்கு உரிமை இருக்கிறது. காரணம் நம்முடைய பேராசிரியர் அவர்கள் இந்தத் தொகுதியிலே வேட்பாளராக இருப்பது இந்தத் தொகுதிக்கு கிடைத்த மிகப்பெரிய அரிய வாய்ப்பு. மிகப் பெரிய பெருமை. இந்தத் தொகுதியிலே பேராசிரியர் அவர்களுக்கு பெருவாரியான வாக்களித்து அவரைத் தேர்ந் தெடுக்க வேண்டும். இந்த 5 ஆண்டு காலத்திலே ஒரு முறை கூட வரி போடப்பட்ட பட்ஜெட் கிடை யாது. வரிபோடப்படாத பட்ஜெட் வரி போடாத பட்ஜெட் - மக்களுக்கு சுமை இல்லாத பட்ஜெட். நல்ல சமதர்ம ஆட்சி என்றால் உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இடம், படிக்கக் கல்வி இவை அத்தனையையும் தரக்கூடிய வாய்ப்பை கலைஞர் அவர்களுடைய தலைமை யிலேயே இருக்கக் கூடிய திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி, தோழமைக் கட்சிகளினுடைய ஒத்துழைப்போடு மிகச்சிறப்பாக நிறைவேற்றி யிருக்கிறார்கள். சொன்னதைச் செய்வோம். செய்வதையே சொல்வோம் என்ற அந்த உணர் வோடு வந்திருக்கின்ற ஆட்சி, சொன்னதை எல்லாம் செய்து முடித்து விட்டு, தேர்தல் அறிக்கையிலே எவை எவை எல்லாம் சொல்லியிருக்கிறார்களோ அதை எல்லாம் செய்து முடித்து விட்டு, சொல்லாத தையும் செய்த பெருமை இந்தியாவிலேயே திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிக்குத்தான் உண்டு - கலைஞர் ஆட்சிக்குத் தான் உண்டு - பேராசிரியர் நிதியமைச்சராக இருந்து வரலாறு படைத்த ஆட்சிக்குத்தான் உண்டு. அது மட்டுமல்ல எல்லா குடும்பங்களுக்கும் தொலைக்காட்சிப் பெட்டி; இது முடியுமா? என்று கேட்பார்கள். இன்றைக்கு முடிந்திருக்கிறது. அடுத்து நமது மகளிர் சங்கடப்படக் கூடாது என்பதற்காக ஒரு திட்டம். பெரும்பாலான வீடுகளிலே மகளிர்கள் வேலைக்குச் செல்கிறார்கள் -ஆண்களும் வேலைக்குப் போகிறார்கள். பெண் களும் வேலைக்குப் போகிறார்கள் - படித்திருக்கின்ற காரணத்தாலே. மிக்சி - கிரைண்டர் குடும்பத்தில் மாவரைப்பதற்கு சங்கடப்படக் கூடாது என்பதற்காக அவர்களுக்கு ஒரு கிரைண்டரோ அல்லது அவசரமாக அரைக்க ஒரு மிக்ஸியோ வழங்கப்படும் என்று இந்தத் தேர்தல் அறிக்கையிலே கலைஞர் அறிவித்திருக்கின்றார். உழைப்பைக் குறைக்க வேண்டும், ஓய்வைப் பெருக்க வேண்டும், தாய்மார்களுக்கு எளிதில் சிறப்பாக முடிய வேண்டும் என்ற தத்துவப்படி மிக்சி அல்லது கிரைண்டர் என்பதை அறிவித்திருக்கிறார்கள். திராவிட முன்னேற்றக் கழகத்தின் தேர்தல் அறிக்கையில் கலைஞர் அவர்கள் சொன்னது போல முன்பு கதாநாயகன் என்றால் இம்முறை கதா நாயகியான வலம் வந்து கொண்டிருக்கிறது. இதைப் பார்த்து காப்பி அடித்து - இதைக் கூட்டி, அதைப் பெருக்கி - அ.தி.மு.க. பொதுச் செயலாளர் தனது தேர்தல் அறிக்கையில் மிக்சி, கிரைண்டர், ஃபேன் கொடுக்கப்படும் என்று அறிவித்திருக்கின்றார். இலவசத்தால் நாடு அழியுமாம்! இலவசத்தால் நாடு அழியும் என்று சொன்னவர்கள் அ.தி.மு.க. கூட்டணியில் இருக்கி றார்கள். இலவசத்தால் முடியுமா? என்று கேட்டவர்கள் அங்கு இருக்கின்றார்கள். தஞ்சையில் கலைஞர் பேச்சு நேற்று தஞ்சையிலே நம்முடைய முதல்வர் கலைஞர் பேசும் பொழுது சொன்னார். நான் ஏலம் போடுவதற்காக வரவில்லை. மாறாக இந்த மக்களுக்கு ஏற்றத்தைத் தருவதற்காக ஆட்சி அமைக்க வந்திருக்கிறேன். சமுதாய வளர்ச்சிக்கு இப்படிப்பட்ட திட்டங் களைச் செய்கிறோம்; செய்து வருகிறோம் என்று சொன்னார்கள். கருவறையிலிருந்து கல்லறைவரை யிலே ஒவ்வொரு கட்டத்திற்கும் திட்டங்களை வைத்திருக்கிறார்கள். நிதி ஆதாரம் எங்கே? ஜெயலலிதா அவர்கள் அறிவித்த திட்டங்களை எப்படிச் செய்வார்? அதற்கு நிதி ஆதாரம் என்ன என்பதை அவர்கள் சொல்லவில்லை. இதைப் பற்றியும் அவர்களுக்குக் கவலை இல்லை. மக்கள் மத்தியிலே ஒன்று புரிந்திருக்கிறது-தி.மு.க. சொன்னால் செய்யும்; செய்வதையே சொல்லும் என்று புரிந்திருக்கிறார்கள். ஆனால் மற்றவர்கள் சொன்னது கிடையாது. சொன்னதற்கு மாறாகத்தான் செய்தார்கள். அ.தி.மு.க. பொதுச் செயலாளரின் ஆணவம் எந்த அளவுக்கும் மாறவில்லை. என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். ஏப்ரல் 13ஆம் தேதிக்குப் பிறகு ஆறாவது முறையாக அமையப் போவது கலைஞர் ஆட்சிதான் என்பதிலே எந்தவித சந்தேகமும் கிடையாது. கலைஞர் மீண்டும் பதவிக்கு வரவேண்டும்; பேராசிரியர் மீண்டும் பதவிக்கு வரவேண்டும் என்ற அவசியத்திற்காக அல்ல. அவர்கள் எத்தனையோ பதவிகளைப் பார்த்திருக்கிறார்கள். ஆனால் இவர்களை விட்டால் இந்தச் சமுதாயம் வாழுமா? இவர்களை விட்டால் நம்முடைய தமிழர்களுக்கு நாதி உண்டா? திராவிட இனம் வளருமா? முன்னேறுமா? அந்தக் கவலை தான் எங்களைப் போன்றவர்களுக்கு. பயன்பெறாதவர்களே கிடையாது அருமைத் தாய்மார்களே! அன்புள்ளம் கொண்ட தாய்மார்களே! அனைத்து மக்களுக்கும் வாழ்வு ரிமையை ஏற்படுத்திய ஆட்சி இந்த ஆட்சி. கலைஞ ருடைய ஆட்சியினாலே நேரடியாகவோ, மறைமு கமாகவோ பயன்பெறாதவர்கள் யாரும் கிடையாது. எந்தக் கட்சியும் கிடையாது - எல்லோரும் பயன் பெற்றிருக்கிறார்கள். நன்றி காட்டக் கூடிய வாய்ப்பு என்று கருதி நம்முடைய பேராசிரியர் அவர்களுக்கு உதய சூரியன் சின்னத்திலே நீங்கள் பொத்தானை அழுத்தினால் வெளிச்சம் தெரியும்; விளக்கு எரியும் அந்த விளக்கு எரிந்தால் உங்கள் வீட்டில் விளக்கு எரியும், நாட்டில் விளக்கு எரியும். வெற்றி திராவிட முன்னேற்றக் கழக அணிக்கே என்று சொல்லி என் உரையை முடிக்கிறேன். தமிழர் தலைவரை வரவேற்று பேராசிரியர் சால்வை அணிவித்து உரை தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களை பேராசிரியர் அன்போடு வரவேற்று சால்வை அணிவித்து உரை யாற்றினார். நேற்று வில்லிவாக்கம் தொகுதி மேடவாக்கம், 58ஆம் வட்டம் குட்டியப்பன் தெருவில் தேர்தல் பிரச்சார ஊர்வல புறப்பாட்டின் பொழுது திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்களை வரவேற்று, தி.மு.க. பொதுச் செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் ஆற்றிய உரை வருமாறு: நாம் வாக்காளர்களைச் சந்திக்கின்ற இந்த ஊர்வலத்தில் உங்கள் அனைவரையும் முதலில் நான் வரவேற்கின்றேன். எனது நீண்ட நாள் நண்பர், திராவிடர் கழகத்தினுடைய தலைவர், விடுதலை ஆசிரியர் திரு.வீரமணி அவர்கள் வாக்கு கேட்கின்ற இந்த ஊர்வலத்தைத் துவக்கி வைத்து உரையாற்ற இங்கு வந்திருக்கிறார்கள். அவர்களை நான் உரையாற்று மாறு கேட்டு அவர்களை அன்போடு வரவேற்கின்றேன். -இவ்வாறு பேராசிரியர் க.அன்பழகன் உரையாற்றினார். (மேடவாக்கம் 25.3.2011) ************************* மலையைத் தூக்கி என் தோளில் வையுங்கள், பிறகு மாற்றி வைக்கிறேன்! தி.மு.க. தேர்தல் அறிக்கையில் ஒன்றைச் சொல்லுகிறது என்றால், அதனைக் கட்டாயம் நிறைவேற்றும் என்ற நம்பிக்கை மக்கள் மத்தி யில் உண்டு. சொன்னதைச் செய்ததோடு மட்டுமல் லாமல் சொல்லாததையும் செய்த ஆட்சி கலைஞர் தலைமையிலான தி.மு.க. ஆட்சி யாகும். 2006 சட்டமன்ற தேர்தல் அறிக்கையில் 2 ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி என்று அறிவித் திருந்தார் கலைஞர். தேர்தலில் வெற்றி பெற்று, மக்கள் மன்றத் தின்முன் பதவிப் பிர மாணம் எடுத்த அந்த நிகழ்ச்சியிலேயே முதல் உத்தரவாக 2 ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி என்ற உத்தரவில் கையொப் பமிட்டவர் கலைஞர் அவர்கள். இது தேர்தலில் சொன்ன வாக்குறுதி-அதனை நிறைவேற்றிக் கொடுத்தார். ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி என்று தேர்தல் அறிக்கையிலே குறிப்பிடப்படவில்லை. அண்ணா நூற்றாண்டு விழாவின்போது முதல மைச்சர் கலைஞர் அதற்கான உத்தரவைப் பிறப் பித்தார். இதனை யாரும் எதிர்பார்க்க வில்லை- யாரும் கேட்கவும் இல்லை. இது தான் செல்லாததையும் செய்த வர் கலைஞர் என்பதற்கு அடையாளம்! கலைஞர் ஒன்றை அறிவிக்கிறார் என்றால் அதில் நிதானப் போக்கு இருக்கும். சொல்லு கிறோமே-அதனை நிறைவேற்ற முடியுமா? நிதி நிலை ஒத்துழைக்குமா என்பதை ஒரு முறைக்கு இருமுறை சிந்தித்து வாக்குறுதி அளிக்கிறார். காரணம், அவர் தந்தை பெரி யாரின் மாணவர். அதனால்தான் பெண்களின் நலன் கருதி மிக்ஸி அல்லது கிரைண்டர் தரப்படும் என்று கலைஞர் கூறு கிறார். இலவசங்களைச் கேலி செய்து வந்த ஜெயலலிதாவோ மின்விசிறி, மிக்ஸி, கிரைண்டர் மூன்றும் தரப்படும் என்று தி.மு.க.வைக் காப்பியடித்துத் தேர்தல் அறிக்கையிலே குறிப் பிட்டுள்ளார். கலைஞர் சொல்லுகிறார் என்றால் மீண் டும் ஆட்சிக்கு வரப்போகிறார், வந்து அந்தப் பொருளை உறுதியாகக் கொடுக்கப் போகிறார். அதனால்தான் பொறுப்பாக, நிதானமாக, நடைமுறை சாத்தியக் கூறுகளை உணர்ந்து வாக்குறுதிகளை அளந்து கொடுக்கிறார். இந்த அம்மாவோ ஆட்சிக்கு வரப்போவ தில்லை என்று அவருக்கே தெரியும். அதனால் வாய்க்கு வந்த வாறு வாக்குறுதிகளை அள்ளி வீசுகிறார். தி.மு.க. கூறியுள்ளதை விட அதிகமாகக் கொடுப்பதாக ஜெயலலிதா அறிவித்ததிலி ருந்து ஓர் உண்மை மட்டும் புலப்படுகிறது. தி.மு.க. சொன்னதைச் செய்துவிடும்- மக்கள் தி.மு.க.வின் நம்பகத்தன்மையை ஒப்புக்கொள்பவர்கள் என்பதை ஜெய லலிதா அறிந்த நிலையில் தான்-அந்த அச்சத்தி னால்தான் தி.மு.க.வைத் தாண்டி வாக்குறுதி களை பொய்யாக வேணும் சொல்லியாக வேண்டிய நிர்ப்பந்தம் இருக்கிறது (பலத்த கைத் தட்டல்). தந்தை பெரியார்தான் பொதுக்கூட் டத்தில் ஒரு கதையைச் சொல்லுவார். இரண்டு ஊர்களுக்கும் இடையில் ஒரு மலை இருந்தது. அந்த மலை இருப்பதன் காரணமாக ஊர் மக்கள் அடுத்த ஊருக்குச் செல்லு வதற்கு வெகுதூரம் நடந்து செல்ல வேண்டி யிருந்தது. அப்பொழுது ஒரு வழிபோக்குச் சாமியார் அங்கு வந்த சேர்ந்தார். இரண்டு ஊர் மக்க ளையும் கூட்டி, இந்த மலை இரண்டு ஊர்க ளுக்கும் நடுவே இருப்பதால்தானே வெகு தூரம் நடந்துச்செல்லுகிறீர்கள்? இந்த மலையை அப்புறப்படுத்திவிட்டால், உங்களின் வெகுநாள் கஷ்டம் நீங்கிவிடும் அல்லவா? என்றார் சாமியார். இரு ஊர் மக்களும் இப்படி ஓர் ஏற்பாட் டைச் செய்வதற்கு இது வரை யாரும் முன் வர வில்லையே- இவர் பெருஞ்சக்திவாய்ந்த மகான் போல் இருக்கிறது என்று பயபக்தி யுடன், இதற்கொரு வழி சொல்லுங்கள்! என்று கெஞ்சிக் கேட் டனர். சொல்லுகிறேன் கேளுங்கள்- இந்த மலையைத் தூக்கி வேறு இடத்தில் வைக்கும் வேலையை என்னிடம் விட்டு விடுங்கள். ஒரு மாதம் அவகாசம் கொடுங்கள். அதுவரை இரு ஊர்க்காரர்களும் எனக்கு நல்ல அளவு விருந்தளித்து என் உடல் வலி மையைப் பெருக்கிகொள்ள உதவிட வேண் டும் என்று சாமியார் சொன்னார். இரு ஊர் மக்களும் மிகவும் மகிழ்ச்சி அடைந்து, போட்டி போட்டுக்கொண்டு சாமியாரை உபசரித்தார்கள்-விருந்து படைத் தார்கள். 30 நாள்கள் ஓடி விட்டன. சாமியார் மலை யைப் புரட்டப்போகிறார், வேறு இடத்தில் வைக்கப் போகிறார் என்று நம்பி மகிழ்ச்சி யுடன் இரு ஊர் மக்களும் கூடினார்கள். எல்லோரும் வந்து விட்டீர்களா? என்று சாமியார் கேட்டுவிட்டு மலையைத் தூக்க ஆயத்தமானார். மக்கள் பரபரப்பாகக் காணப் பட்டனர். அப்பொழுது அந்தக் கெட்டிக்கார சாமியார் சொன்னார், நான் ரெடி. நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்றால் இந்த மலையைத் தூக்கி என் தோள்களில் வையுங்கள். நான் அதைத் தூக்கி மாற்றி வேறு இடத்தில் வைத்து விடுகிறேன் என்றார். ஊர் மக்களுக்கோ ஒன்றுமே புரியவில்லை. எங்களுக்கு இந்த மலையைத் தூக்கி சாமி யார் தோளில் வைக்கும் அளவுக்கு ஆற்றல் இருந்தால், இந்தச் சாமியார் எதற்கு? நாங்களே தூக்கி வேறு இடத்தில் வைத்துவிட மாட்டோமா? இந்தச் சாமியார் நம்மை ஏமாற்றி விட்டாரே! நாம் முட்டாள்களாகி விட்டோமே என்று வருத்தப்பட்டனர்-என்று தந்தை பெரியார் ஒரு கதையைக் கூறுவார். அந்தச் சாமியார் கூறிய உறுதிமொழிக் கும், ஜெயலலிதா அம்மையார் தேர்தல் அறிக் கையிலே குறிப்பிட்டுள்ள வாக்குறுதிகளுக் கும் வித்தியாசம் இல்லை. வாக்காளர்கள் ஏமாந்து விடக் கூடாது! (சென்னை தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் தமிழர் தலைவர் கி.வீர மணி -25.3.2011 **************************** Posted by புரட்சியாளர் பெரியார் at 18:37 No comments: Labels: திராவிடர் இயக்கம் Friday, March 25, 2011 இலவசங்களைக் கேலி செய்வோர் ஜெயலலிதாவின் இலவசங்கள்பற்றி எழுதுவார்களா? வறுமை அதிகரிப்பின் அடையாளமே இலவசங்கள் அதிகரிப்பு என்று அதிமுகவோடு கூட்டு வைத்திருக்கும் மார்க்ஸிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி கூறுகிறது. அக்கட்சியின் அதிகாரப்பூர்மான ஏடான தீக்கதிரில் (21.3.2011 பக்கம் 3) கூறப்பட்டுள்ளது. அதேபோல அதிமுகவின் ஆலோசகராக இருக்கக்கூடிய திருவாளர் சோ ராமசாமி இலவசங்கள்பற்றி என்ன சொல்லு கிறார்? இன்று வெளிவந்துள்ள துக்ளக் அட்டைப் படம் என்ன சொல்லுகிறது? கிரைண்டரையோ, மிக்சியையோ, லேப் டாப்பையோ கலைஞர் கொடுத்தால் அதற்குப் பெயர் வசந்த் அண்ட் கோ விளம்பரமாம் - சோ எழுதுகிறார். இப்பொழுது அவர் விழுந்து விழுந்து ஆதரிக்கும் இவர் ஆலோசகராக இருக்கும் ஜெயலலிதா இலவசங்களை அள்ளி விட்டிருக்கிறாரே - கலைஞராவது மிக்சி அல்லது கிரைண்டர் இலவசம் என்கிறார்; ஜெயலலிதாவோ மின்விசிறி, மிக்ஸி, டி.வி. மூன்றையும் இலவசமாகத் தருவேன் என்கிறாரே, 20 கிலோ அரிசி இலவசம் என்கிறாரே - இது மட்டும் வசந்த் அண்ட் கோ விளம்பரம் இல்லையோ! ஜெயலலிதாவின் தேர்தல் அறிக்கையில் கண்டுள்ள இலவசங்கள்பற்றி அடுத்த துக்ளக்கில் இதே பாணியில் கிண்டல் செய்வாரா? பதில் சொல்லுவாரா? இது அ.இ.அ.தி.மு.க.வின் அதிகாரப் பூர்வமான டாக்டர் நமது எம்.ஜி.ஆர். என்ற பத்திரிகை. இதில் ஒரு கார்ட்டூன் வெளிவந்துள்ளது. என்ன தெரியுமா? 35 கிலோ அரிசி இலவசமாகக் கலைஞர் சொல்லியிருக் கிறாராம் - அதற்காக அரிசி கடத்தல்காரர்கள் சங்கத்திலே இருந்து பெரிய மாலையைத் தூக்கிக் கொண்டு வாழ்த்த வந்திருக்கிறார்கள் என்று கார்ட்டூன் போட்டுள்ளது. இன்று காலை வந்த நமது எம்.ஜி.ஆரில் இந்தக் கார்ட்டூன் வெளி வந்துள்ளது. பாவம் - அதிமுக தேர்தல் அறிக்கையில் என்ன இருக்கிறது என்று அவர்களுக்கு என்ன தெரியும்? ஜெயலலிதா என்ன சொல்லப் போகிறார் என்று நமது எம்.ஜி.ஆர். பத்திரிகையில் உள்ளவர்களுக்கு என்ன தெரியும்? இலவசமாக அரிசி கொடுத்தால் கள்ள மார்க்கெட்காரர் களுக்கு மகிழ்ச்சி என்று கார்ட்டூன் போட்டுவிட்டது. கலைஞராவது வறுமைக் கோட்டுக்கும் கீழே உள்ளவர்களுக்கு 35 கிலோ அரிசி இலவசம் என்றார். ஜெயலலிதாவோ குடும்ப ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி தொடரும் என்ற நிலையை மாற்றி 20 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும் என்று கூறி இருக்கிறாரே - நமது எம்.ஜி.ஆர். ஏட்டின் கார்ட்டூன்படி - இது அரிசி கடத்தல்காரர்களுக்குக் கொள்ளை லாபமோ! (பலத்த கைதட்டல்; வெடிச் சிரிப்பு!) - சென்னைப் பெரியார் திடல் சிறப்புக் கூட்டத்தில் தமிழர் தலைவர் 24.3.2011 அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை காமெடி சூரியன் தேவை ஜெயலலிதா தோல்வியுடன் ஒப்புதல் தமிழர் தலைவர் தெளிவான விளக்கம் சென்னை, மார்ச் 25- அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை காமெடி அறிக்கை. சூரிய வெளிச்சம் தேவை என்று ஜெயலலிதா ஒப்புக்கொண்டது. அவரது தோல் வியையே காட்டுகிறது. தி.மு.க தேர்தல் அறிக்கையை ஈ அடிச்சான் காப்பியாக அவசரமாக அச்சடிக்கப் பட்ட ஒன்று என்று திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் கூறி விளக்கவுரையாற்றினார். சென்னை பெரியார் திடலில் தி.மு.க அணியை ஆதரிக்க வேண்டும்-ஏன்? என்னும் தலைப்பில் நேற்று (24.3.2011) சென்னை பெரியார் திடலில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரை வருமாறு: நம்பகத்தன்மை இருக்கிறதா? வருகிற ஏப்.13ஆம் தேதி 14ஆவது சட்டப் பேரவைக்கான தேர்தல் நடைபெற இருக்கிறது. மக்களிடையே யாருக்கு வாக்களிக்க வேண்டும்; யாருக்கு வாக்களிக்கக் கூடாது என்கிற கடமை தேர்தலிலே நிற்காத, சமுதாயப் புரட்சி இயக்கமான தந்தை பெரியார் உருவாக்கிய திராவிடர் கழகத்திற்கு வழிகாட்டவேண்டிய தன்மை-நம்பகத் தன்மை யாரிடம் இருக்கிறது? எந்த ஆட்சி வந்தால் சமுதாய நலன், இன நலன் காப்பாற்றப்படும் என்பதை இன்று நேற்று அல்ல; தந்தை பெரியார் அவர்களுடைய காலத்திலிருந்தே வழக்க மாக நடைமுறையிலே பின்பற்றி வருகின்ற ஓர் இயக்கமாகும். யாரை ஆதரிக்க வேண்டும்? திறந்த மனதோடு இருக்கக்கூடிய பொதுமக்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை முடிவு செய்ய வேண்டிய அளவுகோல் என்ன? பெரியார் இந்தத் தேர்தலைப் பற்றி என்ன சொல்லுகிறார்? யாரை ஆதரிக்கச் சொல்லுகிறார்? எப்பொழுதும் தமிழ்மக்கள் எதிர்பார்ப்பது வழமையான ஒன்றாகும். தந்தை பெரியார் தொடங்கிய திராவிடர் கழகத்திற்கு எந்தவித சுயநலமோ, பதவிக் கண் ணோட்டமோ, விருப்பு-வெறுப்பு என்பதோ என்றைக்கும் இருந்தது கிடையாது. நம்முடைய மக்களின் நலன் முக்கியம். மக்களின் இழிநிலையைப் போக்க எந்தக் கட்சியை ஆதரிக்க வேண்டும் என்பதை தந்தை பெரியார் சொல்லியதற்குப்பிறகு அதற்குப் பிறகு அவரைத் தொடர்ந்து பின்பற்றி வருகின்ற பெரியார் தொண்டர்களாகிய எங்களுக்கும் அந்தக் கடமை உண்டு. அடுத்த தலைமுறையைப் பற்றிக் கவலை அரசியல்வாதிகள் அடுத்த தேர்தலைப் பற்றிக் கவலைப்படுவார்கள். நாங்களோ அடுத்த தலைமுறையைப் பற்றிக் கவலைப்படக் கூடிய வர்கள். எனவே அடுத்த தலைமுறையினரின் வாழ்க்கையைப் பற்றிய கவலை திராவிடர் கழகத்திற்கு உண்டு. எவ்வளவு சோதனைகள் எங்களுக்கு ஏற்பட்டாலும் அறிவார்ந்த முறையிலே சமுதாயத் திற்குத் தேவையான, சமுதாயத்தை முன்னேற்றக் கூடிய கருத்துகளைச் சொல்லுகிறவர்கள் நாங்கள். தி.மு.க. ஆட்சியின் சாதனைகள் பற்றிய நூல் பாமர மக்கள் ஏமாந்து விடக்கூடாது. எச்சரிக்கையாக இருந்து ஓட்டுப் போட வேண்டும் என்பதற்காக தி.மு.க ஆட்சியின் சாதனைகளும் அ.தி.மு.க அணியின் வேதனைகளும் என்னும் தலைப்பில் நாங்கள் தயாரித்த நூலை நீங்கள் வாங்க வேண்டும். மற்றவர்களுக்கும் கொடுக்க வேண்டும் ஏராளமான தகவல்கள் இந்த நூலிலே உள்ளன. துளி அளவும் மாறாமல் கலைஞரின் பணி நமது முதலமைச்சர் கலைஞர் அவர்கள் ஈரோடு குருகுலத்திலே பயின்றவர். அவர் அன்றைக்கு எந்த முடிவோடு பயின்றாரோ அந்த எண்ணம் இன்றளவும், துளி அளவும் மாறாமல் அன்றைக்கு தான் ஏற்றுக்கொண்ட லட்சியம் என்னவோ அதே லட்சியத்தோடு, மாறாமல், ஆட்சி என்பது மக்களுக்குத் தொண்டாற்றக்கூடிய ஒரு வாய்ப்பு என்று கருதி, நாள்தோறும் மக்கள் நலனே முக்கியம் என்று கண்ணும் கருத்துமாகப் பணியாற்றிக் கொண்டு வருகின்ற முதல்வர் கலைஞர் அவர்களின் தகத்தகாய பொற்கால ஆட்சியில் பயன் பெறாதவர்களே கிடையாது. திருவாரூரில் கலைஞர் பேச்சு திருவாரூரில் நேற்று கலைஞர் அவர்கள் பேசும்பொழுதுகூட, நான் யாரையும் எதிர்த்துப் பேசி இங்கே போட்டியிட வரவில்லை. எல்லோரும் எனக்கு உறவினர்கள் என்ற பந்தத்தோடு, பாசத்தோடுதான் வந்திருக்கிறேன். என் மண்ணை நேசிக்கிறேன்; திருவாரூர் மக்களை நேசிக்கிறேன் என்று பண்போடு, அரசியல் நனி நாகரித்தோடு பேசினார். யார் வரக்கூடாது என்பதற்கு பதினாயிரம் காரணங்கள் தேர்தலில் யார் வர வேண்டும் என்பதற்கு ஆயிரம் காரணங்கள் உண்டு. ஆனால் யார் வரக்கூடாது என்பதற்குப் பதினாயிரம் காரணங்கள் உண்டு. ஏப்.13 அன்று நீங்கள் வாக்குச் சாவடிக்குச் சென்று பொத்தானை அழுத்தும்பொழுது ஒளிவிடுகின்ற வெளிச்சம்தான் அடுத்து 5ஆண்டுகாலம் தமிழ கத்தை ஒளிரச் செய்ய நிர்ணயம் செய்யப் போகிறது. எங்கள் பணி-எக்ஸ்ரே பணி எங்களுடைய பணி என்பது எக்ஸ்ரே போன்ற பணி. உடைந்த எலும்பை உடைந்த எலும்பாகக் காட்டுகின்ற பணி. ஃபோட்டோகிராபி பணி அல்ல - டச் செய்து அழகாகக் காட்டுவதற்கு. எக்ஸ்ரேயில் உடைந்த எலும்பை உடைந்த எலும்பாகக் காட்டினால்தான் நோயாளிக்கு அடுத்த கிசிச்சையைச் செய்ய முடியும். இந்த நாட்டிலே இப்பொழுது நடைபெறுகின்ற போராட்டம் வெறும் அரசியல் போராட்டமல்ல. இனப் போராட்டம்; ஆரியர்-திராவிடர் போராட்டம். இதைச் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என்றால், கொள்ளிக் கட்டையை எடுத்து தலையைச் சொரிந்து கொள்வது போன்ற நிலைக்குத்தான் நாம் ஆளாக நேரிடும். கதாநாயகன், கதாநாயகி 2006இல் தி.மு.க. தேர்தல் அறிக்கையை கலைஞர் வெளியிட்டார். அதை கதாநாயகன் என்று அன்றைக்குச் சொன்னார்கள். 2011இல் தி.மு.க வெளியிட்டிருக்கின்ற தேர்தல் அறிக்கையோ கதாநாயகி என்ற பெயரைப் பெற்றிருக்கிறது. நல்ல கதாநாயகனும், நல்ல கதாநாயகியும் சேர்ந்தால் நல்ல குழந்தை பிறக்கும். அது சமதர்மக் குழந்தையாக வரும். சமதர்ம ஆட்சி தமிழகத்திலே மலரும். கலைஞர் அவர்கள் 7000 கோடி ரூபாய் விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி செய்தார். கல்விக்கடன் ரத்து இப்பொழுது வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் தி.மு.க ஆட்சிக்கு வந்தால் கல்விக் கடன் முழுவதும் ரத்து என்று அறிவித்தார் (கைதட்டல்). இந்தப் பிள்ளைகளுக்கு கலைஞர் தாயுமானார், தந்தையுமானார் என்று சொல்லக்கூடிய அளவுக்கு கலைஞர் ஆட்சி இருக்கிறது. தலைசிறந்த மனிதாபிமானத்தின் உச்சமாக ஆட்சி திகழ்கிறது. முதலில் மனிதனுக்கு மூளை சரியாக இயங்க வேண்டும். அப்புறம் வயிறு இயங்க பார்க்கப்படும். கலைஞர் ஆட்சியில் மூளை சரியாக இருக்கிறதா என்று பார்த்துக்கொண்டார்கள். நமது இன எதிரிகளும் மூளைக்குத்தான் விலங்கு போட் டார்கள். எனவேதான் மூளை சரியாக இருக்கவேண்டும் என்றும், எங்கும் கல்வியைப் பரவச் செய்தார் கலைஞர். பசியாத நல்வயிறு பார்த்த துண்டோ! என்று புரட்சிக் கவிஞர் எழுதினார். பசியாத வயிறு கிடையாது. பணம் நிறைய சேர்ந்தாலும் பசியாத வயிறு இருக்கும். நோய் வந்தாலும் பசி எடுக்காது. புரட்சிக்கவிஞர் அப்படிச் சொல்லவில்லை. பசியா நல்வயிறு பார்த்ததுண்டோ என்று கேட்டார். பசியாத வயிறு இருக்கக்கூடாது என்று கருணையோடு நினைத்தார் அண்ணா. வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன் என்று வள்ளலார் சொன்னார் அல்லவா? அண்ணா சொன்னார்- ஒரு படி நிச்சயம் வறுமையாலே-பசியாலோ, பஞ்சத்தாலோ மக்கள் இருக்கக்கூடாது என்று கருதித்தான் அண்ணா அவர்கள் ஆட்சிக்கு வரும்பொழுது 1967லே சொன்னார்கள். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஒரு படி நிச்சயம் என்று சொன்னார் அன்றைக்கு. அதை எல்லாம் மனதில் வைத்துக்கொண்டு கலைஞர் செயல்பட்டார். அண்ணாவை மனதில் வைத்துக்கொண்டு செயல்பட்டார். அண்ணா ஆட்சியின் தொடர்ச்சிதானே இப்பொழுது நடைபெறுவது? முன்பாகத்தை அண்ணா எழுதினார். அடுத்த பாகத்தை கலைஞர் எழுதிக்கொண்டிருக்கிறார். ஒரு கிலோ அரிசி இரண்டு ரூபாய் ஒரு கிலோ அரிசி இரண்டு ரூபாய்க்குப் போடுவோம் என்று 2006ஆம் ஆண்டு தி.மு.க. தேர்தல் அறிக்கையிலே சொன்னார். உடனே எதிர்க்கட்சித் தலைவர், இந்த அம்மையார் சீறிப் பாய்ந்தார். உங்களால் கொடுக்க முடியுமா? இதற்கு என்ன திட்டம் வைத்திருக்கிறீர்கள்? என்று கேள்வி கேட்டார். பொறுத்திருந்து பாருங்கள். கொடுக்கிறோமா இல்லையா? என்று கலைஞர் சொன்னார். அடுத்து இந்த அம்மையார் நான்கு நாள்கள் கழித்து நாங்களும் ஆட்சிக்கு வந்தால் இலவசமாக பத்து கிலோ அரிசி கொடுப்போம் என்று சொன்னார். காப்பியடித்துச் சொன்னார் அவர் சொன்ன பிற்பாடு இந்த அம்மையார் காப்பியடித்துச் சொன்னார். அதனால் இந்த அம்மையார் மீது மக்களிடம் நம்பகத்தன்மை இல்லை என்ற நிலைதான் இன்றைக்கும் இருக்கிறது. முதலில் ஒரு கிலோ அரிசி இரண்டு ரூபாய்க்கு போட்டார் கலைஞர். அதற்குப் பிறகு அண்ணா நூற்றாண்டு விழா வந்தது. யாரும் கேட்கவில்லை. ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி வழங்கப்படும் என்றார். கலைஞர் அரசின் மக்கள் நலத்திட்டங்களைப் பார்த்து மத்திய அரசே வியப்படைந்தது. இடதுசாரி மாநிலங்களில் இல்லை ஏழைகளுக்காகவே வாழ்கிறோம் என்று இடது சாரிகள் சொல்லுகிறார்கள். கேரளாவிலோ, மேற்கு வங்காளத்திலோ ஒரு கிலோ அரிசியை 15 ரூபாய்க்கு, 18 ரூபாய்க்கு விற்றார்கள். அந்தக் காலத்திலேயே ஒரு கிலோ அரிசி இரண்டு ரூபாய் என்று போட்ட ஒரே ஆட்சி கலைஞருடைய ஆட்சிதான் என்று அவர் கையொப்பமிட்டு நிலைநாட்டினார். 1 ரூபாய்க்கு 1 கிலோ அரிசி அண்ணா நூற்றாண்டில் வெறும் வெளிச்சம் மட்டும் போட்டால் போதாது அண்ணா வினுடைய எண்ணத்திற்கு செயல் உரு கொடுக்க வேண்டும் என்று கருதி ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய்க்கு வழங்கப்படும் என்று அறிவித்தார். என்ன இப்படி அறிவித்துவிட்டாரே என்று மேடையில் இருந்தவர்களுக்கு ஒரு தேக்கநிலை இருந்தது. எங்களுக்கெல்லாம் ஓர் இன்ப அதிர்ச்சியாக இருந்தது. ஆனால் கலைஞர் அவர்கள் பெரியாரிடத்திலே பயின்றவர்-ஈரோட்டுக் குருகுலத்திலே கணக் கெல்லாம் சரியாகப் போட்டு வைத்துவிட்டு ஏற்பாடெல்லாம் பார்த்துவிட்டு-குதிர் சரியாக இருக்கிறதா என்று பார்த்துவிட்டு- நினைவுக் குதிர் தன்னுடைய நினைவுக் குதிர் அது எப்பொழுதும் குறையாத நினைவுக் குதிர்; அதையும் தெளிவாக வைத்துக்கொண்டு ரொம்ப அழகாக இந்தத் திட்டத்தை வெளியில் சொன்னார். ஒரு கிலோ அரிசி ஒரு கிலோ என்று அறிவித்தார். இது ஏதோ ஒரு வாரம் போடுவார்கள், பத்துநாள் போடுவார்கள் என்று நினைத்தார்கள். எதிர்க்கட்சித் தலைவராலே குறை சொல்ல முடிந்ததா? வரவேற்கவும் முடியவில்லை; குறை சொல்லவும் முடியவில்லை. ரசம் வைக்க வேண்டாமா? அதற்காக என்ன சொன்னார், அரிசி மட்டும் போதுமா? ரசம் வைத்து சாப்பிட வேண்டாமா? குழம்பு வைத்து வைத்து சாப்பிட வேண்டாமா என்று கேட்டார். எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு அது கலைஞருக்குத் தெளிவாகத் தெரியும். எதையும் அலட்சியப்படுத்தக் கூடியவர் அல்லர். அவ்வளவு முதிர்ச்சி அடைந்த தலைவராக இன்றைக்கு அவர் காட்சியளிக்கின்றார். அப்படியா? என்று நினைத்து, உடனே உணவு அமைச்சர் எ.வ.வேலுவை அழைத்தார். இதற்கு என்ன வழி? நாளைக்கே திட்டத்தோடு வாருங்கள் என்று சொல்லிவிட்டு, அவரே விளக்கமும் சொன்னார். அடுத்து தாய்மார்களுக்கு குழம்பு, ரசம் வைக்க 50 ரூபாய்க்கு பத்து மளிகைப் பொருள்கள் வழங்கப்படும் என்று அறிவித்தார். இன்றைக்கு ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி, 50 ரூபாய்க்கு மளிகைப் பொருள் கிடைக்கிறதா-இல்லையா? சொன்னது போல் செயல்படக்கூடிய ஆட்சி- கலைஞர் ஆட்சி போல் இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலாவது உண்டா? (பலத்த கைதட்டல்). கலைஞர் மீது நம்பகத்தன்மை மக்களுக்கு வந்திருக்கிறது. சொன்னதையும் செய்து சொல்லாததையும் கூடுதலாக செய்யக்கூடியவர் கலைஞர் என்ற பெருமையை அவர் உருவாக்கி யிருக்கின்றார். அரசு ஊழியர்கள் அம்மா ஆட்சியில் பட்டபாடு தி.மு.க தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டதைப் பாருங்கள். அரசு அலுவலர்களின் குறையை அவ்வப்பொழுது களைந்திடவும், அரசு ஊழியர் சங்கங்களின் குறைகளை கேட்டு உரிய காலத்தில் தீர்வுகாணவும் ஆணையம் ஒன்றினை அமைப்போம். -இது கலைஞருடைய அறிக்கை. அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையைப் பாருங்கள். அரசு ஊழியர்களின் நலன்கள் பாதுகாக்கப்பட்டு, அவர்களது சேவை நமக்கு முழுவதுமாக சென்றடையும் வகையில் இனிமையான (அ.தி.மு.க தேர்தல் அறிக்கை), சுமுகமான சூழல் உருவாக்கப்பட்டு, அவர்களது மனநலம் பேணப்பட்டு, தமிழக அரசு ஊழியர்கள் திறம்பட பணியாற்ற உதவிடுவோம் என்று கூறப்பட்டி ருக்கிறது. அரசு ஊழியர்களின் மனநலனையும் இனி பார்க்கப் போகிறார்கள். ஏனென்றால் சென்ற ஆட்சியிலேயே அரசு ஊழியர்களின் மன நலனைப் பார்த்தவர்கள். இந்த அம்மாவை நினைத்தாலே அரசு ஊழியர்களுக்கு மனநலம் போய்விடுகிறதே. அரசு ஊழியர் தலைவர்கள் எல்லாம் இங்கே இருக்கி றார்கள். கோ.சூரியமூர்த்தி இங்கே இருக்கிறார். படாத பாடுபட்ட அரசு ஊழியர்கள் இருக்கி றார்கள். ஜெயலலிதா ஆட்சியிலே சாலைப் பணியாளர்கள் செத்தவர்கள் எத்தனைபேர்? நினைத்துப் பார்க்க வேண்டாமா? இந்தத் தேர்தலே அவர்களுக்கு மரியாதை செலுத்துகிறது அல்லவா? புளுகுவதற்கு எல்லை வேண்டாமா? செத்துப் போன கோயபெல்ஸ் இன்றைக்கு உயிரோடு வந்தால்கூட, அ.தி.மு.க தேர்தல் அறிக்கையைப் பார்த்து தற்கொலை செய்துகொள்வான் (கைதட்டல்). கெட்டிக்காரன் புளுகே எட்டுநாள்தான் காமெடி தேர்தல் அறிக்கை இவர்களுடைய நிலைமை என்ன? நமக்கு சோர்வு ஏற்பட்டால், நமக்கு களைப்பு ஏற்பட்டால் காமெடி காட்சிகளை தொலைக்காட்சியில் பார்ப்போம். அதற்குப் பதிலாக அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையைப் படித்தாலே போதும் (பலத்த கைதட்டல்). இதைவிட நல்ல நகைச்சுவை-கிச்சி கிச்சி மூட்டுவது வேறு எதுவும் கிடையாது. (கைதட்டல்). ஆறாவது ஊதியக் குழுவால் களையப்படாமல் இருக்கும் எஞ்சிய முரண்பாடுகள் மற்றும் குறைபாடுகளை விரைவாக களைவதற்கு உரிய நடவடிக்கைகள் ஏற்படுத்துவோம் என்று சொல்கிறார். ஆறாவது ஊதியக் குழுவை மருத்துவமனையில் அறிவித்த தலைவர் கலைஞர், அவர் மருத்துவ மனையில் இருக்கிறார். உடனே அறிவித்தார். நான் அவரை மருத்துவமனையில் சந்தித்துக் கேட்டேன், என்னங்க வந்திருக்கிறது? உடல்நலம் இல்லாத நிலையில் என்ன அவசரம் - உடனே அறி விக்கிறீர்கள் என்று கேட்டேன். அய்யோ, உங்களுக்குத் தெரியாதய்யா. உடனே கம்யூனிஸ்ட் நண்பர்கள் கொடிபிடிக்கப் பார்ப்பார்கள். அவர்களுடைய கையில் இருக்கின்ற கொடியை நாம பிடுங்கிவிட வேண்டாமா? எனக்குத் தெரியும் இது என்று சொன்னார். இன்றைக்கு இடதுசாரி களுடைய நிலை என்ன? அரசு ஊழியர்கள் அனு பவித்து வரும் சலுகைகள் தற்பொழுது தொடரும் என்று அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் சொல்லப் பட்டிருக்கிறது. அரசு ஊழியர்களுக்கு ஞாபகம் வராதா? இரவு 12 மணிக்கு அவர்கள் பட்டபாடு தெரியாதா? இரவு 12 மணிக்கு அரசு ஊழியர்களை எழுப்பினால் போலீஸ் தான் வந்திருக்கிறது போலியிருக்கிறது என்று நினைக்கின்ற அளவுக்கு அரசு ஊழியர்கள் கொடுமை அனுபவித்தவர்கள் ஆயிற்றே! டெஸ்மா, எஸ்மா, அம்மா இதை இல்லை என்று யாராவது சொல்ல முடியுமா (கைதட்டல்). அரசு ஊழியர்கள் அவ்வளவு பேருக்கும் மறுவாழ்வு கொடுத்த ஆட்சி கலைஞரின் பொற்கால ஆட்சி! (கைதட்டல்). இந்த அம்மையார் காலத்தில் நிறுத்தப்பட்ட சம்பளம் உள்பட சேர்த்துக் கொடுக்கக்கூடிய அளவுக்கு கலைஞர் சாதனை நிகழ்த்தியுள்ளார். -இவ்வாறு தமிழர் தலைவர் கி.வீரமணி மேலும் பல கருத்துகளை எடுத்துக்கூறி விளக்கினார். கான மயிலாட கண்டிருந்த வான்கோழி -தமிழர் தலைவர் வருணனை காமராசர் அவர்கள் வந்ததற்குப் பிறகு, கலைஞர் அவர்கள் வந்ததற்குப் பிறகு, கல்வி நீரோடை இன்றைக்கு நாடெல்லாம் பாய்ந்திருக்கிறது. மன்னர்கள் ஆட்சி காலத்திற்கு முன்பு ஒரு விழுக்காடு இருந்த கல்வி அறிவு இன்றைக்கு 72 விழுக்காடு வளர்ந்திருக்கிறது. படித்தவர்கள் வந்திருக்கிறார்கள். தடுக்கி விழுந்தால் கலைஞர் ஆட்சியில் பொறியாளர்கள் மீதுதான் விழ வேண்டும். டாக்டர்கள் மீதுதான் விழ வேண்டும். அந்த அளவுக்கு படித்தவர்கள் வந்திருக்கிறார்கள். படிப்பு என்பதிலே முக்கியமானது தொழில் கல்வி படிப்புதான். எம்.ஜி.ஆர் ஆட்சி காலத்தில் அவர் நுழைவுத் தேர்வை கொண்டு வந்தார். அதன் விளைவு நகர்ப்புற மாணவர்கள் மட்டுமே படித்து முன்னேறி வந்தார்கள். கிராமப்புற மாணவர்களுக்கு வாய்ப்புக் கிட்டவில்லை. தி.க.வும், தி.மு.க.வும் 21 ஆண்டுகள் போராடின திராவிடர் கழகமும், திராவிட முன்னேற்றக்கழகமும் 21 ஆண்டுகளாகப் போராடி அந்த நுழைவுத் தேர்வை ஒழித்தோம். அதனால்தான் கல்விக்கண் திறக்கப்பட்டது. எங்கு பார்த்தாலும் பள்ளிக் கட்டடங்கள், பொறியியல், கல்லூரிகள், மருத்துவக் கல்லூரிகளைக் காணலாம். தேவடியாகுப்பம் நம்முடைய நிலை என்ன தெரியுமா? திருவண்ணா மலைக்கு அருகில் உள்ள ஓர் ஊருக்குப் பெயரே தேவடியாகுப்பம் என்று இருந்தது. அவ்வளவு இழிவாக நம்மை வைத்திருந்தார்கள். தஞ்சையிலே தொம்பன்குடிசை என்று ஒரு பகுதி இருந்தது. நமக்குத் தெரிந்த ஒரு ஆட்சி வந்த பிறகு தான் அந்தப் பகுதிக்கு தொல்காப்பியர்சதுக்கம் என்றே பெயர் சூட்டப்பட்டது. இன்றைக்கு சென்னை மாநகர மேயராக வந்திருக் கின்றவர் மா.சுப்பிரமணியன். அவர் ஒரு சீரிய பகுத்தறிவாளர். அவர் தளபதி ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதல்படி நடக்கக் கூடியவர். கார்ப்பரேசன் பள்ளிக் கூடங்களில் படிக்கும் பள்ளிப் பிள்ளைகளுக்கெல்லாம் இலவசமாக மடிக்கணினியை வழங்கினார். ஒரு காலத்தில் கார்ப்பரேசன் பள்ளிக் கூடம் என்றால் கீழ்த்தரமான பள்ளிக்கூடமாக நினைக்கப்பட்டது. கார்ப்பரேசன் பள்ளிகளில் மடிக்கணினி இன்றைக்கு அந்த நிலையை மாற்றி உயர்தர பள்ளிகளுக்கு ஈடாக கார்ப்பரேசன் பள்ளிகள் எந்த வகையிலும் குறைந்தவையல்ல என்று சாதனைப்படைத்து வருகிறார். திருவாரூர் பொதுக்கூட்டத்தில் பேசும்பொழுது கூட முதல்வர் கலைஞர் சொன்னார். தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவ, மாணவிகளுக்கு இலவச மடிக்கணினி வழங்கப்படும் என்று தி.மு.க. தேர்தல் அறிக்கையில் அறிவித்திருந்தோம். வேறுபாடு இல்லாமல் அதை அனைத்துப் பிள்ளைகளுக்கும் கொடுங்கள் என்று கூட்டணிக் கட்சியினர் வேண்டுகோள் விடுத்தனர். அனைவர்க்கும் அனைத்தும் பாகுபாடு இன்றி அனைத்துப் பள்ளிப் பிள்ளைகளுக்கும் மடிக்கணினி வழங்கப்படும் என்று கலைஞர் அறிவித்தாரே! அனைவர்க்கும் அனைத்தும் வழங்கக் கூடியவர்தான் கலைஞர் அவர்கள். தி.மு.க. தேர்தல் அறிக்கையை அ.தி.மு.க. பொதுச் செயலாளர் - இந்த அம்மையார் அப்படியே காப்பியடித்து வெளியிட்டிருக்கின்றார். காப்பி அடிப்பு இந்த அம்மையாரை யாராவது நம்புவார்களா? கான மயிலாட கண்டிருந்த வான்கோழி தானும் அதுவாகப் பாவித்து - தானுந்தன் பொல்லாச் சிறகை விரித்தாடினாற் போலுமே கல்லாதான் கற்ற கவி என்ற பாடலுக்கு ஏற்ப தேர்தல் அறிக்கையை இந்த அம்மையார் வெளியிட்டிருக்கின்றார். (தமிழர் தலைவர் கி.வீரமணி உரையிலிருந்து - சென்னை பெரியார் திடல் 24.3.2011) சூரியனை மூடச் சொல்லுமா தேர்தல் ஆணையம்? தமிழர் தலைவர் தர்க்கரீதியான கேள்வி தேர்தல் ஆணையம், உயர்நீதிமன்றம் கண்டித்த பிறகு தான் தனது போக்கை மாற்றிக் கொள்வேன் என்று இருக்கக் கூடாது. அதற்கு முன்னாலேயே அறிவுபூர்வமான சிந்தனை வரவேண்டும். பெரியார் சிலை, அண்ணா சிலை, காமராஜர் சிலை, எம்.ஜி.ஆர் சிலைகளை மூட வேண்டும் என்று தேர்தல் ஆணையம் சொல்வதா? அதற்கும், ஓட்டுப் போடுவதற்கும் என்ன சம்பந்தம்? அப்படிப் பார்த்தால் தேர்தல் ஆணையம் இப்படி உத்தரவு போடுகிறது என்று வைத்துக் கொள்வோம். எல்லோரும் ஏப்ரல் 13ஆம் தேதி வரை கையை கட்டிக் கொள்ள வேண்டும். ஏனென்றால் கையை நீட்டினால் அது காங்கிரஸ் சின்னம் (கைதட்டல்). சூரியன் நாளை முதல் உதயமாகக் கூடாது. தேர்தல் ஆணையத்தின் ஆணை இது. காரணம் என்ன வென்றால் சூரியன் தேர்தல் சின்னம்; ஆகவே அதை மூடி விட வேண்டும் என்று சொன்னால் அறிவுக்குப் பொருத்தமா? (கைதட்டல்). இலை இருக்கக் கூடாது, எல்லா மரத்திலும் இருக்கின்ற இலைகளையும் கழிச்சிக் கட்ட வேண்டும். மாம்பழம் எங்கேயும் இருக்கக் கூடாது, கடைகளிலும் விற்கக் கூடாது என்ற உத்தரவு போடுவார்களா? என்னய்யா அர்த்தம், அறிவுபூர்வமாக சிந்திக்க வேண்டாமா? பகுத்தறிவாளர்கள் நாங்கள். எங்களுக்கு அரசியல் கண்ணோட்டமில்லை. நாட்டு மக்கள் முன்னேற்றக் கண்ணோட்டம், விஞ்ஞானக் கண்ணோட்டம் தான் உண்டு. கேலிப்பொருளாக தேர்தல் ஆணையம் ஆகக் கூடாது. நியாயத்தை நிலை நாட்டக் கூடியவர்களாக ஆகுங்கள். மக்கள் உங்கள்மீது வைத்திருக்கின்ற நம்பிக்கையை இழக்கும்படி நடந்து கொள்ளாதீர்கள். (தமிழர் தலைவர் கி.வீரமணி உரையிலிருந்து - சென்னை பெரியார் திடல் 24.3.2011) இதுகூடத் தெரியவில்லை அம்மாவுக்கு? இது அ.தி.மு.க. தேர்தல் அறிக் கையில் சொல்லப்பட்டிருக்கிறது - கருணாநிதியின் வீட்டு வசதித் திட்டம் நடைமுறை சாத்தியம் இல்லாத வகையில் இருப்பதாகும். இதில் கொஞ்சமாவது யோசனை செய்து எழுதியிருக்கின்றனரா? நான் கடுமையான வார்த்தைகள் சொல்பவன் அல்ல. அது நமக்குத் தேவையும் அல்ல. கலைஞர் வீடு கட்டும் திட்டத்தில் வீடு கட்டி அவரவர்கள் குடிவந்து விட்டார்கள். அதுவே இந்த அம்மாவுக்குத் தெரியவில்லை (பலத்த சிரிப்பு, கைதட்டல்). வீட்டு வசதி சாத்தியம் இல்லை என்கிறார் ஜெயலலிதா. எங்கே பார்த் தாலும் வீடுகள் கட்டிக் கொடுத் திருக்கிறார் கலைஞர். ஒரு தெளிவு இருக்க வேண் டாமா? மக்கள் எதைச் சொன்னாலும் நம்புவார்கள் என்று நினைப்பதா? மக்களை எப்படி எடை போடு கிறார்கள் என்று எண்ணிப் பாருங்கள். எனவே இது அந்த அம்மாவின் அறியாமையைக் காட்டுகிறது. வாக்காளர்களை எவ்வளவு குறைத்து மதிப்பிடுகிறார் என்பதைப் பற்றி பொது மக்கள் சிந்திக்க வேண்டும். வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது தான் எங்களின் நோக்கம். கருணாநிதியின் வீட்டு வசதித் திட்டம் நடைமுறையில் இருப்பதாலும், மக்களுக்கு நிதிச் சுமையை ஏற்றக் கூடிய ஏமாற்று வேலை என்பதாலும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் நவீன பசுமைத் திட்டத்தை ஏற்படுத்தும் என்கிறது அதிமுக தேர்தல் அறிக்கை. நவீன பசுமை வீட்டுத் திட்டத்தில் எப்பொழுதும் காய்கறிகள் எல்லாம் மேலேயே தொங்கும் (பலத்த கைதட்டல்). முருங்கைக்கீரை, முளைக்கீரை எல்லாம் பக்கத்திலேயே குடி இருக்கும். நவீன பசுமை வசதித் திட்டம். அனைவருக்கும் குறைந்த விலை யில் சூரிய வெளிச்சம் மற்றும் காற்றோட்டம் உள்ள சூரியசக்தி மின்சார பயன்பாட்டோடு கூடிய நவீன பசுமை வீடுகள் கட்டித் தரப் படும் என்று தேர்தல் அறிக்கை யிலே அம்மையார் சொல்லி யிருக்கிறார். பாவம், ஒன்று தெரிந்து கொள் ளுங்கள் - இந்த அம்மாவுக்கு மேல் உதிப்பது சூரிய வெளிச்சம் தான். (கைதட்டல்). சூரிய வெளிச்சத்தை ஜெயலலிதா வால் கூடத் தடுக்க முடியாது (கை தட்டல்). கலைஞர் கட்டிய வீட்டிற்குள் சூரிய வெளிச்சம் வருகிறதோ இல்லையோ, இந்த அம்மா கட்டுகிற வீட்டில் சூரிய வெளிச்சம் வரும் என்றால் இந்த அம்மையார் தன் னுடைய தோல்வியை பெருமன தோடு ஒப்புக் கொண்டுவிட்டார்; ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்து விட்டார் (பலத்த கைதட்டல்). எழுதியவன் ஏட்டைக் கெடுத் தான். படிச்சவன் பாட்டைக் கெடுத்தான். எழுதிக் கொடுத்தவன் இஷ்டத் திற்கு எழுதிக் கொடுத்துவிட்டான். இந்த அம்மா அதைப் பார்க்கவில்லை. சூரியன் என்றாலே இந்த அம்மா வுக்கு அலர்ஜி ஆச்சே. என்னய்யா யாரோ தி.மு.க. காரன் நமது கட்சிக்குள்ளேயே புகுந்திருக்கிறான் என்று நினைக்கும். இந்த அம்மா சூரிய வெளிச்சம் - சூரிய மின்சார சக்தியைத்தானே நம்ப வேண்டியிருக்கிறது? எனவே வீடுகளைக் கட்டிக் கொடுத்தவர் களை நம்புவார்களா? கட்டப் போகிறோம் என்று சொல்கிறவர் களை நம்புவார்களா? நினைத்துப் பார்க்க வேண்டும். தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களின் உரையிலிருந்து சென்னை பெரியார் திடல் 24.3.2011 பேசு நா இரண்டுடையாய் போற்றி, போற்றி! ஆரிய மாயைபற்றி அண்ணா சொன்னது எவ்வளவு சரி என்பது புரிகிறதா? இலவச டி.வி., இலவச கியாஸ் அடுப்பு என்று தி.மு.க., தந்தது கண்டும், மேலும் சில இலவசங் களை தி.மு.க. தந்தபோது அக்கிர கார சோ இராமசாமிகளின், அவரது சீடக் கோடி வைத்திய நாதன்களின் குடுமிகள் ஆடியது கொஞ்சமா, நஞ்சமா? இலவசங்கள் மூலம் பொருளாதாரமே பாழ்பட்டு விடுகிறதே என்று அங்கலாய்த் தார்கள். இப்போது சிறீரங்கம் அய்யங் கார் அம்மையார் தி.மு.க. தேர்தலை மிஞ்ச இலவச ஏலத்தைப் போடத் துவங்கி விட்டவுடன், அவாள் அப்படிச் செய்யும்போது இவாளால் சும்மாயிருக்க முடியுமோ என்று ராகத்தை தலைகீழாக மாற்றி வாசிக்கத் துவங்கி விட்டனரே! இதுதான் ஆரியம்! இரட்டை நாக்கு பேர்வழிகளைப் புரிந்து கொண்டு, நல்லாட்சி மலர தி.மு.க. கூட்டணிக்கே வாக்களியுங்கள். ----------------”விடுதலை” 24-3-2011 தி.மு.க.வையே ஆதரிக்க வேண்டும் - ஏன்? தி.மு.க. ஆட்சியின் சாதனைகளும் - அ.தி.மு.க. அணியின் வேதனைகளும் எனும் தலைப்பில் திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்களால் உருவாக்கப்பட்டுள்ள நூல் திராவிடர் கழக வெளியீடாக வந்துள்ளது. நேற்று சென்னைப் பெரியார் திடலில் நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில் அந்நூல் வெளியிடப்பட்டது. 80 பக்கங்களைக் கொண்ட இந்நூலுக்கான நன்கொடை வெறும் பத்தே ரூபாய்தான். அடக்க விலைக்கும் குறைவாகவே வழங்கப்படுகிறது. வெளியீட்டு நிகழ்ச்சியிலேயே 960 புத்தகங்களை பொது மக்கள் பெற்றுக் கொண்டார்கள். தி.மு.க. ஆட்சி கடந்த அய்ந்து ஆண்டுகளில் எத்தகைய சாதனைகளைச் செய்துள்ளது. சொன்னதை எப்படியெல்லாம் நிறைவேற்றியுள்ளது என்பது புள்ளி விவரங்களுடனும் ஆதாரங்களுடனும் ஒரு பகுதியில் விளக்கப்பட்டுள்ளது. வேறு எந்த அரசியல் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் செய்ய நினைக்காத - செய்யத் துணியாத சமூகப் புரட்சித் திட்டங்களை தி.மு.க. அரசு நிறைவேற்றியிருக்கிறது. குறிப்பாக அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை, தமிழ் செம்மொழி, தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு, நாடெங்கும் 240 இடங்களில் ஜாதிஒழிப்பு - தீண்டாமை ஒழிப்புத் திட்டமான பெரியார் நினைவு சமத்துவப்புரங்கள், தீட்சிதர்ப் பார்ப்பனர்களின் ஆதிக்கத்தில் கொள்ளை போன சிதம்பரம் நடராசன் கோயிலை இந்து அறநிலையத்துறையின் கீழ் கொண்டு வந்தமை, வடலூரில் வள்ளல் இராமலிங்க அடிகளார் அவர்களால் உண்டாக்கப்பட்ட சத்ய ஞான சபையில் அவர் கொள்கைக்கு விரோதமாக உருவ வழிபாடு நடத்தி, பகற் கொள்ளையடித்த பார்ப்பன அர்ச்சகரை சட்ட ரீதியாக வெளியேற்றியமை - இன்னோரன்ன திட்டங்களை கலைஞர் தலைமையிலான தி.மு.க. ஆட்சியேயன்றி வேறு எந்த ஆட்சியாலும் செய்திருக்க முடியுமா என்பது காரண காரியங்களோடு இந்நூலில் விளக்கப்பட்டுள்ளது. தீண்டாமை வெறியின் காரணமாகத் தேர்தல் நடத்தப்படாமல் இருந்த பாப்பாபட்டி, கீரிப்பட்டி, நாட்டார் மங்கலம் மற்றும் கொட்டக்கச்சியேந்தல் ஆகிய ஊராட்சி களில் தேர்தலை நடத்திக் காட்டி, தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சி மன்றத் தலைவர்களை, துணைத் தலைவர்களை தலைநகரமான சென்னைக்கு அழைத்து வந்து பாராட்டு விழா நடத்திய சமூகப் புரட்சிக் கொள்கையையுடையது தான் தி.மு.க. ஆட்சியாகும். தொழிற் கல்லூரிகளில் சேர்ந்திட நுழைவுத் தேர்வு என்கிற பார்ப்பன வஞ்சகம் தி.மு.க. ஆட்சியால்தான் சட்ட ரீதியாகத் தடுக்கப்பட்டது. அ.தி.மு.க. ஆட்சியில் நுழைவுத் தேர்வை ரத்து செய்வதாகக் கூறி, உரிய முறையைப் பின்பற்றாத தால்தான் நீதிமன்றத்தில் தோல்வி காணப்பட்டது. திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் கூறிய யோசனையை அன்றைய முதல் அமைச்சர் ஜெயலலிதா ஏற்றுக் கொள்ளாததால்தான் அந்த நிலை ஏற்பட்டது. அதே நேரத்தில் சமூக நீதியில் உண்மையான அக்கறை கொண்ட கலைஞர் அவர்கள், கழகத் தலைவர் கூறிய யோசனையின் அடிப்படையில் கல்வியாளர்கள் குழு ஒன்றை ஏற்படுத்தி, அவர்கள் தந்த கருத்தின் அடிப்படையில், நுழைவுத் தேர்வை ரத்து செய்யும் சட்டத்தைச் செய்ததால் நீதிமன்றத்திலும் அச்சட்டம் செல்லுபடியாகும் என்று தீர்ப்பும் பெறப்பட்டது. இந்த நுழைவுத் தேர்வு ரத்து காரணமாக தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மற்றும் கிராமப்புறத்தைச் சேர்ந்த மாணவர்கள் ஏராளமாக மருத்துவம், பொறியியல் போன்ற தொழிற் கல்லூரிகளில் பல்லாயிரக்கணக்கில் நுழைய முடிந்தது. முதல் தலைமுறையைச் சேர்ந்த இவர்கள் தொழிற் நுட்பப் பட்டதாரிகளாகக் கம்பீரமாக வெளிவந்து, சமூக நிலையிலும் பொருளாதார நிலையிலும் தலை தூக்கி நிற்கும் ஓர் உன்னத நிலை முகிழ்த்துக் கிளம்பியது. சமூக ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்கள் வளர்த்தெடுக்கப் பட்டாலன்றி சம அந்தஸ்துடன் சமூகத்தில் வீறுநடை போட முடியாது என்னும் தந்தை பெரியார் அவர்களின் கொள்கைகளை ஏற்றுக்கொண்ட - அதனையே சுவாச மாகக் கொண்ட ஒருவர் முதல் அமைச்சராகத் தமிழ் நாட்டில் 5ஆம் முறையாகப் பொறுப்பு ஏற்றுக் கொண்டதால் இத்தகு சாதனைகள் எட்டப்பட்டன. சமூகத்தில் பெரும்பான்மையினரான தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மையின மக்கள்தான் பெரும்பாலானவர்கள் ஆவார்கள். ஆனால் அவர்கள் சமூக நிலையிலும், கல்வி ரீதியிலும் பின்னுக்குத் தள்ளப்பட்டுக் கிடந்தார்கள். அவர்களைக் கைதூக்கி விடுவதுதான் சமூக ஜனநாயகம் என்று உணர்ந்த, அந்தத் திசையில் செயல்பட்டு வரும் தி.மு.க. ஆட்சியை மீண்டும் கொண்டு வர மக்கள் தொகையில் பெரும்பான்மையினரான இந்த வெகு மக்கள் முன் வருவார்களாக! ----------------”விடுதலை” தலையங்கம் 24-3-2011 Posted by புரட்சியாளர் பெரியார் at 17:55 No comments: Wednesday, March 23, 2011 ம.தி.மு.க. - தே.மு.தி.க.பற்றி அ.தி.மு.க. கணித்தது என்ன? ம.தி.மு.க. - தே.மு.தி.க.பற்றி அ.தி.மு.க. கணித்தது என்ன? ம.தி.மு.க. தேர்தல் புறக்கணிப்பை அறிவித்துவிட்டது; 2006 ஆம் ஆண்டு தேர்தலில் அ.இ.அ.தி.மு.க.வுடன் கூட்டணி சேர்ந்து 35 இடங்களில் போட்டியிட்டு ஆறு இடங்களில் வெற்றி பெற்றது. தி.மு.க.வுக்கும் - ம.தி.மு.க.வுக்கும் இடையில் தொகுதி ஒதுக்கீட்டில் ஒரு நெருடல் ஏற்பட்டது. 22 இடங்களை அளிக்க தி.மு.க. முன்வந்தது. 25 இடங்களில் விடாப்பிடியாக நின்றது ம.தி.மு.க. இந்த நிலையில், 3 இடங்களுக்காக தி.மு.க. கூட்டணி உறவை முறித்துக்கொண்டு அ.தி.மு.க.வுடன் கூட்டணி சேர்ந்து 35 இடங்களில் தேர்லில் போட்டியிட்டது. 2011 ஆம் ஆண்டு நடக்க இருக்கும் தேர்தலில் தே.மு.தி.க., ம.தி.மு.க., இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, இந்தியக் கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்), மனிதநேய மக்கள் கட்சி, புதிய தமிழகம் போன்ற கட்சிகளுடன் அ.தி.மு.க. பேச்சுவார்த்தை நடத்தியது. இன்னொரு பக்கத்தில் காங்கிரசுடனும், அ.தி.மு.க. பேரம் பேசிக்கொண்டு இருந்தது. தி.மு.க.வுடன் காங்கிரஸ் கூட்டணி உறுதி என்ற நிலை திட்டவட்டமாகத் தெரிந்த நிலையில், அவசர அவசரமாக தே.மு.தி.க.வுக்கு 41 தொகுதிகளை அளித்து ஒப்பந்தம் செய்துகொண்டது அ.தி.மு.க. மற்ற கூட்டணிக் கட்சிகளோ அ.தி.மு.க. தலைமையைச் சந்திக்க ஊசி முனையில் தவம் கிடந்தன. இந்த நிலையில் 160 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டு, அதன் கூட்டணிக் கட்சிகளை அதிர்வுப் பள்ளத் தாக்கில் உருட்டித் தள்ளியது அ.தி.மு.க. சுயமரியாதை எரிமலைக் கட்டுத் தறியில் இருந்து அறுத்துக் கொண்டு கிளம்பிவிட்டது, அ.தி.மு.க.வின் கூட்டணிக் கட்சிகளுக்கு. சர்வதேசியம் பேசும் கம்யூனிஸ்ட் கட்சிகள் கூட விஜயகாந்த் என்ற தன்னேரில்லாத நடிகர் - தலைவரை நோக்கிப் படையெடுத்தனர். இனி அ.தி.மு.க.வுடன் பேச்சுவார்த்தை என்ற பேச்சுக்கே இடமில்லை என்று தோள் தட்டினார் தோழர் தா. பாண்டியன். மூன்றாவது அணிபற்றிக் கூடி முடிவெடுப்போம் என்று அவர்கள் சொன்ன தொனியில், நெருப்புத் துண்டுகள் சீற்றத்துடன் வெளிவந்தன. சுயமரியாதையின் வெப்பம் 24 மணிகள்வரைகூட தாக்குப் பிடிக்கவில்லை. ஜில்லிட்டு விட்டது. இடதுசாரிகளில் சி.பி.எம். கூட்டணித் தலைவரைத் தனியாக சந்தித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியைவிடக் கூடுதல் இடங்கள் பெறுவதில் மிகக் கவனமாக இருக்கும். இந்த முறையும் அதுதான் நடந்தது - அது எப்படியோ போகட்டும்! ம.தி.மு.க. கடந்த 5 ஆண்டுகாலமாக அ.தி.மு.க.வின் நகமும் சதையுமாக உடன்கட்டை ஏறும் உணர்வோடு அ.தி.மு.க.வுடன் கைகோத்து இருந்து வந்திருக்கிறது. தே.மு.தி.க.வுடன் உறவு என்றவுடன் ஜெயலலிதா அம்மையாருக்கு மற்ற கட்சிகள் எல்லாம் கடுகுகளாகத் தென்பட்டுவிட்டன. இந்த இடத்தில் மலரும் நினைவு பின் திரையில் ஓடக்கூடிய முக்கியமான தகவல் ஒன்று இருக்கிறது. 2006-களில் தே.மு.தி.க.வுக்கும், அ.இ.அ.தி.மு.க.வுக்கும் இடையே காரசாரமான வார்த்தைப் பிரயோகங்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன. ஜெயலலிதா அம்மையார் அறிக்கை ஒன்றினை வெளியிட்டார். இந்தத் தேர்தலில் தேசிய முற்போக்குத் திராவிட கழகம் சாதித்துவிட்டது என்கிறார்கள். அந்தக் கட்சி வெறும் 3 சதவிகித இடங்களில்தான் வெற்றி பெற்று இருக்கிறது. இதே 3 சதவிகித இடங்களை நமது தோழமைக் கட்சியான ம.தி.மு.க. கூடப் பெற்றிருக்கிறது (தினத்தந்தி, 24.10.2006, பக்கம் 2) என்று அறிக்கை வெளியிட்டவர்தான் ஜெயலலிதா. இதே கருத்தை இன்னும் கொஞ்சம் விலாவாரியாக அறிக்கை வாயிலாகத் தெரிவித்தவர் அன்றைய அ.தி.மு.க. தேர்தல் பிரிவு செயலாளரான ஓ. பன்னீர்செல்வம். நேற்று தோன்றிய தே.மு.தி.க. முன்னுக்கு வந்துவிட்டதாகவும், தனக்கென வாக்கு வங்கியை உருவாக்கிவிட்டதாகவும் முற்றிலும் உண்மைக்குப் புறம்பான ஒரு கருத்து விதைக்கப்பட்டு வருகிறது - தே.மு.தி.க. வெறும் 3 சதவிகித இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றிருக்கிறது. இதே வெற்றியை ம.தி.மு.க.வும் பெற்றிருக்கிறது என்று ஜெயலலிதா தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார். இதில் கவனத்தில் கொள்ளவேண்டிய அம்சம் என்னவென்றால், தே.மு.தி.க. 100 சதவிகித இடங்களில் போட்டியிட்டது, வெற்றி பெற்றது 3 சதவிகிதமாகும். ஆனால், ம.தி.மு.க.வோ 17.5 சதவிகித இடங்களில் மட்டுமே போட்டியிட்டது. 3 சதவிகித இடங்களைக் கைப்பற்றி இருக்கிறது என்பதே உண்மை. 100 சதவிகிதம் எங்கே? 17.5 சதவிகிதம் எங்கே? அந்த வகையில் பார்த்தால் ம.தி.மு.க.வின் வெற்றி மகத்தான ஒன்றாகும் (தினத்தந்தி, 27.10.2006, பக்கம் 8). அடடே, அரசியலில்தான் எத்துணை எத்துணை அந்தர்பல்டி - அசகாய குட்டிக்கர்ணம்! தே.மு.தி.க.வைவிட ம.தி.மு.க.தான் மக்களிடத்தில் செல்வாக்குடைய கட்சி - வாக்கு வங்கிக் கட்சி என்று அறிக்கை வெளியிட்ட அதே அ.தி.மு.க.தான்- தே.மு.தி.க.வுக்குப் பட்டுக் கம்பளம் விரித்து - பூர்ண கும்பம் கொடுத்துத் தோட்டத்துக்கு அழைத்து 41 இடங்களைத் தூக்கிக் கொடுத்துத் துந்துபி முழக்கத்துடன் வழியனுப்பி வைத்திருக்கிறது. தே.மு.தி.க.வைவிட மக்கள் செல்வாக்கான கட்சி என்று அ.தி.மு.க. தலைமையாலேயே ஒப்புக்கொள்ளப்பட்ட ம.தி.மு.க.வுக்கோ ஆறில் ஆரம்பித்து பன்னிரெண்டில் முற்றுப்புள்ளி வைத்து அவமானப்படுத்தி - தோட்டத்தின் கதவைத் தடார் என்ற சத்தத்துடன் சாத்திக் கொண்டது. அரசியலில் ஆயிரம் ஆயிரம் வேறுபாடுகளைக் கூட கலைஞர் அவர்களிடத்தில் காணக் கூடும். அதேநேரத்தில், அடுத்தவரை, அடுத்த கட்சியினரை இப்படியெல்லாம் அவமதித்தார் என்று ஒரு விரலை மடக்க முடியுமா? அ.தி.மு.க.வில் இப்பொழுது நேசக்கரம் நீட்டியுள்ள கூட்டணிக் கட்சிகள் எத்தனை நாள்களுக்கு ஜெயலலிதா அம்மையாருடன் தாக்குப் பிடிக்கும்? நாடு அறிந்த ஒன்றுதானே! ---------------- கருஞ்சட்டை "விடுதலை” 23-3-2011 Posted by புரட்சியாளர் பெரியார் at 18:37 No comments: Labels: திராவிடர் இயக்கம் Tuesday, March 22, 2011 கலைஞர் யார்? ஜெயலலிதா யார்? கடந்த காலத்தில் என்னென்ன சாதித்தோம்? எதிர் காலத்தில் என்னென்னவற்றை சாதிக்க இருக்கிறோம்? என்று பட்டியல் போட்டுக் காட்டிக் கம்பீரமாகத் தேர்தலில் மக்களைச் சந்திக்கும் திராணி உள்ள கட்சிதான் தி.மு.க. எதிர் அணியில் இருப்பவர்களை இந்தத் தராசில் எடை போட முடியுமா என்றால் அது முடியாது. மக்களுக்கு நலன் என்பதைவிட, மக்களைத் துச்சமாக பாதிக்கச் செய்து துன்புறுத்தும் போக்குகள்தான் எட்டுப் பங்கு அதிகமாகும். பெயரில் அண்ணாவைத் தாங்கி இருக்கும் அண்ணா தி.மு.க. ஆட்சியில் அண்ணா ஏற்றுக் கொண்ட கொள்கையின் அடிப்படையில் பணிகள் நடைபெற்று இருக்கின்றனவா? கட்சியில் திராவிட என்னும் இன பண்பாட்டுச் சொல் இடம் பெற்று இருக்கிறதே - அதன் அடிப்படையிலாவது காரியங்கள் செய்யப்பட்டுள்ளனவா? இதுபோன்ற கேள்விகளை ஜெயலலிதா தலைமையில் உள்ள அ.இ.அ.தி.மு.க.வை நோக்கிக் கேட்கவே கூடாது. கட்சியின் அடிப்படையைப் புரிந்து கொண்டு தம்மை இணைத்துக் கொண்டவர் அல்ல அவர். அதனால்தான் கட்சியின் வேட்பாளர் பட்டியலை திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோயில் சன்னதிக்கு எடுத்துச் சென்று அந்தச் சாமியின் காலடியில் கொண்டு போய் வைத்து விட்டு, வெளியிட்டனர். அப்படி வெளியிடப்பட்ட பட்டியலின் கதி என்ன? ஊரே சிரிக்கிறது! ஊருக்கு ஊர் உட்கட்சிப் போராட்டங்கள்; பட்டியலை மாற்ற வேண்டிய அவசியங்கள் எல்லாம் ஏற்பட்டதுதான் மிச்சம். திருவொற்றியூர் அம்மனின் காலடி சக்தியைப்பற்றி இதற்குப் பிறகாவது அம்மையார் சிந்தித்துப் பார்த்திருக்க வேண்டாமா? கடந்த சட்டப் பேரவைத் தேர்தலின்போதும், நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலின்போதும்கூட, அங்கு சென்று அம்மனின் காலடியில் வைத்துப் பூசித்துத்தானே பட்டியலை வெளியிட்டார்கள்? பிள்ளை பிழைத்ததா? தோல்வியின் சுமையில்தானே அழுந்திப் போனார்கள்? ஒரு நிருவாகத்தை நடத்துவதற்கு அதன் அலுவலர் கள் தான் அடிப்படை. அவர்களையே அச்சுறுத்துவதும், அடிமையாக நடத்த ஆசைப்படுவதும் சரியானதுதானா? அந்தக் கொடுங்கோன்மைகளை எதிர்த்து -உரிமைக்காகக் குரல் எழுப்பிய லட்சோப லட்ச அரசுப் பணியாளர்களின் குரல் வளையை நெரிக்கும் வகையில், எஸ்மா டெஸ்மா என்ற ரவுலட் சட்டங்களைக் கொண்டு வந்து, ஒரே ஆணையில் ஒரு லட்சத்து 76 ஆயிரம் பேர்களை வீட்டுக்கு அனுப்பினாரே, முதல் அமைச்சர் ஜெயலலிதா? அதன் விளைவு என்ன? அவர் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டதுதான் மிச்சம். அ.தி.மு.க. ஆட்சி தூக்கி எறியப்பட்டு கலைஞர் தலைமையிலான தி.மு.க. ஆட்சி அமைந்த நிலையில், பழைய ஆணையைத் தூக்கி எறிந்து, அரசு ஊழியர்களை மீண்டும் பணியில் அமர்த்தினாரே - ஒரு முதல் அமைச்சர் என்பவர் அரசு ஊழியர்களுக்குத் தந்தை என்ற நிலையில் உள்ளவர் - அந்த உணர்வோடு, ஒரு சிறு போராட்டத் துக்கும் இடமின்றி வேலைகள் வீறு நடைபோட்டு நடக்கின்றனவே, இது அல்லவோ ஆட்சி! இன்றைக்கு அரசுப் பணியாளர் அவர்தம் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தமிழ்நாட்டில் குறைந்தபட்ச ஒரு கோடி பேர் உள்ளார்களே. அந்த ஒட்டு மொத்தமான வாக்குகள் தி.மு.க.வுக்கும் அதன் அணிக்கும்தான் கிடைக்கப் போகின்றன என்பதில் எவ்வித அய்யப்பாட் டுக்கும் இடம் இல்லவே இல்லை. அரசின் மொத்த வருமானத்தில் 90 விழுக்காட்டுக்கு மேல் அரசு ஊழியர் சம்பளத்துக்கே போகிறது என்று சொன்னவர் முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா. அதாவது உண்மையா? சற்றும் நிதானமின்றிச் சீறி எழுகின்ற சினத்தினால் காரியங்கள் சீர் கெட்டுப் போய்விடுகின்றன. ஒவ்வொரு நாளும் எதிரிகளை வருந்தித் தேடிக் கொள்வதில் முதல் அமைச்சர் ஜெயலலிதாவுக்கு ஈடு அவரேதான் - வேறு யாருமிலர். முதல் அமைச்சர் என்கிற முறையில் அவரிடம் தேங்கிக் கிடந்த கோப்புகளில் எண்ணிக்கைக்கு அளவேயில்லை. காரணம், எளிதாக அவருடன் தொடர்பு கொள்ள முடியாததுதான். அரசு அலுவலர்களுக்கே இந்த நிலை என்றால் பொது மக்களின் நிலை என்ன? முதல் அமைச்சர் செல்வி ஜெயலலிதாவை நேரில் சந்தித்து மனு கொடுக்க வந்து, சந்திக்க முடியாமையால் மனம் உடைந்து, நஞ்சுண்டு தற்கொலை செய்து கொண்டவர்கள் உண்டு. அப்படி ஒரு பட்டியலைக்கூட தினமணி (23.5.2002) வெளியிட்டதுண்டு. அத்தகைய ஒரு மாஜி முதல் அமைச்சரைத்தான் தினமணி வகையறாக்கள் விழுந்து விழுந்து கற்பனைச் செய்திகள் என்கிற தூண்களைக்கொண்டு முட்டுக் கொடுத்து நிமிர்த்தப் பார்க்கின்றன. யார் மறந்தாலும் பழி வாங்கப்பட்ட லட்சோப லட்ச தமிழர்கள் இனவுணர்வோடு அ.தி.மு.க., பொதுச் செய லாளர் ஜெயலலிதாவை வீட்டுக்கு அனுப்பி வைப்பார்கள் என்பதில் அய்யமில்லை ---------------"விடுதலை” தலையங்கம் 22-3-2011 Posted by புரட்சியாளர் பெரியார் at 19:50 No comments: Labels: திராவிடர் இயக்கம் வைகோவின் அரசியல் பாதை எப்படி அமைய வேண்டும்? சகோதரர் வைகோவுக்கு தமிழர் தலைவர் திறந்த மடல் ஆரிய மாயை உங்களை வஞ்சம் தீர்த்துவிட்டது துணிந்து முடிவு எடுங்கள் தி.மு.க. உறவுதான் கொள்கை ரீதியானது! வைகோ அவர்களையும், அவர் பொதுச் செயலாளராக இருக்கக் கூடிய ம.தி.மு.க.வையும் அ.இ.அ.தி. மு.க.வின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா அம்மையார் அவமதித்து, வஞ்சம் தீர்த்த நிலையில், வைகோ அவர்களுக்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் எழுதிய திறந்த மடல் இதோ: அன்புள்ள ம.தி.மு.க.வின் பொதுச் செயலாளர் சகோதரர் மானமிகு வைகோ அவர்களுக்கும், அவரது கட்சியின் சகோதரர்களுக்கும் உங்கள் தாய்க் கழகத்தின் தாய்க் கழகமான திராவிடர் கழகத்தின் தொண்டர்களுக்குத் தொண்டன் மிகுந்த பாசத்துடன் எழுதும் உரிமை வேண்டுகோள் இது. அ.தி.மு.க. கூட்டணியிலிருந்து அதன் பொதுச் செயலாளர் ஜெயலலிதா தங்கள் கட்சியை தொகுதிப் பங்கீடு என்ற ஒரு சாக்கைப் பயன்படுத்தி, திட்டமிட்டே வெளியேற்றியது கண்டு - தங்களுக்கும், தங்களை நம்பி தொடர்ந்து பின்பற்றும் உடன்பிறப்புகளுக்கும் ஏற்பட்டுள்ள அவமரியாதை கண்டு எங்கள் மனம் வேதனைப்படுகிறது. தான் ஆடாவிட்டாலும்... தான் ஆடாவிட்டாலும் தன் சதை ஆடக்கூடிய அளவுக்கு கொள்கை லட்சிய முறையில் தந்தை பெரியார் என்ற மூல வேரிலிருந்து கிளைத்தவர்கள் அல்லவா நாம் அனைவரும்? தங்களுக்குத் தொகுதிகளைக் குறைத்துக் கொடுத்ததைவிடக் கொடுமை, தங்களை (தங்கள் என்று சொல்லும்போது உங்களுடன் உள்ள உடன்பிறப்பு, தோழர்களையும் இணைத்தே சொல்வ தாகக் கொள்ள வேண்டுகிறோம்) அக்கூட்டணி யிலிருந்து அவமானப்படுத்தி, அதன் மூலம் ஆத்திரம் கொப்பளிக்க தாங்கள் இரவெல்லாம் பேசி முடிவு எடுக்க வைத்ததன் ஆரிய மாயை பற்றி எம்மைப் போன்ற - அவரை அணுஅணுவாக உணர்ந்தவர் களுக்கு இதில் வியப்போ, அதிர்ச்சியோ ஏற்பட வில்லை. இது தங்களுக்கு என்றோ ஒரு நாள் நடைபெறும் என்பதை எதிர்பார்த்தவர்கள் நாங்கள் - விரும்பியவர்கள் அல்லர். வெளியிலிருந்து முதலாளித்துவ சக்திகள் தங்களை வெளியேற்ற எவ்வளவு முழு முயற்சி எடுத் துக் கொண்டுள்ளன என்கிற செய்திதான் மேலும் ஓர் அதிர்ச்சியாக உள்ளது! வஞ்சத்தைத் தீர்த்த அக்ரகாரம் கடந்த காலத்தில் அந்த அம்மையாரோடு தாங்கள் ஒத்துப்போன முறை - அவர்கள் கட்சிக்காரர்கள்கூட அந்த அளவுக்குச் செய்திருக்க மாட்டார்கள் என்ற அளவு பேசப்பட்ட ஒன்று. திருமங்கலத்தில் உங்கள் கட்சி சட்டமன்ற உறுப்பினர் மறைந்ததால் ஏற்பட்ட இடைத் தேர்தலில், அந்த அம்மையார் தன் கட்சிக்குக் கேட்டு வாங்கி, தான் ஏதோ வெற்றியின் முகப்பில் உள்ளதாக ஒரு படம் காட்டச் செய்த முயற்சிக்கு நீங்கள் ஒத்துழைப்புத் தந்ததோடு, தமிழக சட்டமன்றத்திலும் - அ.தி.மு.க.வோடு இணைந்தே இடைத் தேர்தல் புறக்கணிப்பு, சட்டமன்ற வெளிநடப்பு போன்றவற்றிலும் ஒன்றிய நிலையிலேயே செயல்பட்டீர்கள்! என்றாலும் ஆரியம் தனது வஞ்சகத்தைத் தங்கள் மீது சமயம் பார்த்துக் காட்டி, தங்களை அழித்துவிட தனது அஸ்திரத்தை ஏவிவிட்டு வேடிக்கை பார்க்கிறது. ஜெயலலிதாவின் கடிதம் எத்தகையது! தங்களது முடிவை மறுபரிசீலனை செய்யும்படி அந்த அம்மையார் வற்புறுத்தும் கடிதமாக அவர் எழுதிய கடிதத்தின் வாசகங்கள் அமையாது, தங்களுக்கு நிரந்தர வழியனுப்பு உபசாரப் பத்திர மாகவே காட்சி அளிப்பது - அவாளின் இயல்பின் இலக்கணத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது! அவரிடம் உள்ள அகந்தை, ஆணவம், தன் முனைப்பு இவைபற்றிக் கூறியிருக்கிறீர்கள். இது ஒன்றும் தோண்டித் துருவிக் கண்டுபிடிக்க வேண் டியதல்ல. அவரிடம் கூட்டுச் சேர்ந்திருந்த பா.ஜ.க. தலைவர்கள், இடதுசாரிகள், காங்கிரஸ் கட்சியினர் முதலிய பலரும் ஏற்கெனவே பட்டு அனுபவித்து அறிந்த செய்தியாகும். சோ - குருமூர்த்தி - ஜெயலலிதா - இனம் இனத்தோடு! அவரது தற்போதைய ஆலோசகர் சோ. இராமசாமி அய்யர்களும், சுப்ரமணிய சுவாமி அய்யர்களும்தான் - அதன் இனம் இனத்தோடு என்ற உண்மைக்கேற்ப, இவர்கள் இருவருக்கும், அம்மையாருக்கும் தங்கள் கட்சி நிலைப்பாட்டில் - குறிப்பாக ஈழத் தமிழர் பிரச்சினையில் எந்த சிந்தனைப் போக்கு என்பது உலகறிந்த உண்மையல்லவா? தங்களுக்கு அம்மையார் ஆட்சியில் இழைக்கப்பட்ட பொடா கொடுமையை தாங்கள் அரசியல் காரண மாக மறந்திருக்கலாம்; ஆனால் இன உணர்வு, நியாய உணர்வோடு நாங்கள் என்றும் மறந்ததில்லை - சகோதர பாசம் என்பது தேவை வரும்போது பீறிட்டுக் கிளம்பும் என்பதும் இயல்பானதே! எண்ணெய்யும் நீரும் கலப்பது இயல்பானதல்ல; நீரும் நீரும் கலப்பதே இயல்பு என்னும் உண்மையை அறியாததல்ல! வைகோவின் அரசியல் பாதை எப்படி அமைய வேண்டும்? அரசியலில் இன்னொரு தேர்தல் வரும்வரை நாங்கள் சும்மா இருப்போம் என்கிற நிலைப்பாடு சரியாக அமையுமா என்பதை சற்று நிதானமாக யோசியுங்கள். என்றைக்கிருந்தாலும் நாம் ஒரே வேரிலிருந்து கிளைத்தவர்கள் என்பதால் தாங்கள் தங்களது கட்சியின் எதிர்காலத்தைப்பற்றி சற்று உணர்ச்சி வயப்படாமல் யோசியுங்கள். அரசியல் கட்சி நடத்துவோர் ஜனநாயகத்தில் வாக்களிக்காமல் புறக்கணிப்பது நல்லதா? சுயமரியாதை உணர்வோடு தீர்மானம் நிறை வேற்றியுள்ளீர்கள்; என்றாலும், மேலும் தங்கள் அரசியல் பாதை எப்படி அமைந்தால் சிறப்பானதாக அமையும் என்பதற்கு தி.மு.க.வோடு ஒன்றாக இணைந்துவிட வேண்டும் என்று கூடச் சொல்ல மாட்டேன்; தனி அரசியல் கட்சியானாலும் தி.மு.க. என்ற தங்களின் தாய்க் கழகத்தின் கொள்கை, லட்சியங்களில்தான் அதிகமான ஒத்துப் போகின்ற தன்மைகள் பளிச்சிடும் நிலை உண்டு. அதை யொட்டி தாங்கள் 2004இல் நாடாளுமன்றத் தேர்தலில் கடுமையாகப் பிரச்சாரம் செய்தீர்கள். சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம் போன்றவற்றைப் பற்றி வற்புறுத் தினீர்கள். - இவைபோன்ற பல்வேறு பிரச்சினைகளில் நெருக்கமாக இருக்கும் ஒரே அரசியல் கட்சி, தி.மு.க. வாகவும் - அதன் தலைவர் கலைஞருமாகத்தான் இருப்பார்கள். ஆயிரம் கோபதாபங்கள் நமக்குள் இருப்பினும் நீரடித்து நீர் விலகாது என்னும் பழமொழிக்கொப்ப, நாம் அனைவரும் ஓர் அணியில் நிற்க லட்சிய ரீதியான உணர்வு படைத்தவர்கள். தி.மு.க. கூட்டணியை ஆதரிக்கும் நிலைப் பாட்டினை எடுங்கள். எனவே, நிதானமாக யோசியுங்கள். துணிந்து ஒரு நிலைப்பாட்டினைத் தோழர்களோடு கலந்து எடுங்கள். ஆட்சிக்கு வருமுன்னரே இப்படித் தங்களை அலட்சியப்படுத்திய ஜெயலலிதா, தப்பித் தவறி வந்தால் எப்படி விஸ்வரூபம் எடுத்து அழிக்க முற்படக் கூடும் என்பதையும் எண்ணுங்கள். தி.மு.க.தான் கொள்கை ரீதியாக உடன்படும் கட்சி! தேர்தலில் மீண்டும் கலைஞர் ஆட்சிக்கு வருவது கொள்கை ரீதியாக நமக்குத் தேவையானது. உரிமையுடன் அவரிடம் ஈழப் பிரச்சினை உள்பட அனைத்துக்கும் வற்புறுத்தி வாதாடலாம், செயல்பட வைக்கலாம். வேகாத வெயிலையும் பொருட்படுத்தாது, பல மணி நேரம் நீதிமன்றங்களில் வந்து காத்திருந்த தலைவர் கலைஞர் அவர்கள் - தங்களை அம்மையார் பொடாவில் போட்டு வதைத்தபோது! அது மட்டுமல்ல; அண்மையில்கூட அவரது ஆட்சியில் கைது செய்த நிர்ப்பந்த நிலை ஏற்பட்ட போதுகூட, தங்களை சிறையில் வைத்திருப்பதை விரும்பாது, மனிதநேயத்தோடு அரசு வழக்குரை ஞருக்கே சொல்லி, மறுப்புச் சொல்லாதீர்கள் என்று கூறிய மனித நேயத்தைக் கொட்டியவர் நமது கலைஞர். தங்களுக்குரிய மரியாதையை இந்த அணியில் எப்போதும் நீங்கள்பெற முடியும். உள்நோக்கமற்ற வேண்டுகோள் நாம் ஒன்றுபட்டு ஓரணியில் நிற்பதால் நம் தமிழினம் உலகம் முழுவதும் உரிமைக் களத்தினில் வெற்றி பெற உதவிடும். இது வெறும் அரசியல் வியூகம் அல்ல - நல்லெண்ணத்தோடும், கவலையோடும் ஒரு சகோதரரின் அறிவுப்பூர்வமான வேண்டுகோள். எந்த உள்நோக்கமோ, அரசியல் லாபங்களைக் கருதியோ அல்ல - இந்த வேண்டுகோள். மனதிற்பட்டது - தங்களது மனப் புண்ணுக்கு மருந்து என்று கருதியே இந்த யோசனை. பகுத்தறிவாளர்களாகிய நாம் தொலைநோக்குப் பார்வையோடும் சிந்திக்கக் கடமைப்பட்டவர்கள் என்பதால்தான் இந்த வேண்டுகோள். சிந்திக்க, செயலாற்றுக! -------------கி.வீரமணி தலைவர், திராவிடர் கழகம் -"விடுதலை” 22-3-2011 Posted by புரட்சியாளர் பெரியார் at 12:20 8 comments: Labels: வீரமணி Wednesday, March 16, 2011 தமிழர்களே, திராவிடர்களே, இன உணர்வாளர்களே, சிந்தியுங்கள்! சிந்தியுங்கள்!! பிராமண சங்கத்தின் ஆதரவு அ.தி.மு.க.வுக்காம் தமிழர்களே, உங்கள் கடமை என்ன? தமிழ்நாடு வாக்காளப் பெருமக்களே, தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 13-4-2011 அன்று நடைபெற விருக்கும் நிலையில் உண்மையான போட்டி 1. கலைஞர் தலைமையில் உள்ள தி.மு.க.கூட்டணிக்கும் 2. ஜெயலலிதா தலைமையில் உள்ள அ.தி.மு.க. கூட்டணிக்கும் தான் என்பது உலகறிந்த செய்தியாகும்! இதில் தமிழ்நாடு பிராமண சங்கம் கோவையில் கூடி ஜெயலலிதா கூட்டணிக்கே தங்கள் ஆதரவு என்று தெளிவாக, எவ்விதக் குழப்பமும் இன்றி, இனம் இனத்தோடு என்பதற்கொப்ப திட்டவட்டமாக தீர்மானம் போட்டு அறிவித்துவிட்டார்கள். இதோ நேற்றைய (பார்ப்பன) இனமலர்தான் என்பதை மார்தட்டிக் கூறும் வகையில் பார்ப்பன நாளேடு தினமலர் (15-3-2011) 15-ஆம் பக்கத்தில் உள்ள செய்தி இதோ: வரும் சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க.வுக்கு ஆதரவு அளிக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்று, தமிழ்நாடு பிராமணர் சங்க மாநிலத் தலைவர் ஸ்ரீராமன் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு பிராமணர் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம், 13ஆம் தேதி கோவையில் நடந்தது. மாநில தலைவர் சேலம் ஆடிட்டர் ஸ்ரீராமன் தலைமை வகித்தார். கோவை மாவட்ட தலைவர் விஜயன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில், வரும் சட்டசபைத் தேர்தலில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியை ஆதரிப்பது என்றும், அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களுக்கு ஓட்டளிப்பது எனவும் முடிவெடுக்கப்பட்டது. நிறுவனத் தலைவர் வெங்கட்ரமணன் பேசினார். தமிழகத்தின், 24 மாவட்டங்களில் இருந்து, 400-க்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப் பினர்கள் கலந்துகொண்டனர். மாநில பொருளாளர் ஆலங்குடி வெங்கட்ராமன் நன்றி கூறினார். (தினமலர், 15.3.2011, பக்கம் 15) இந்நிலையில், சூத்திர, பஞ்சம மக்களுக்காகவே உள்ள ஆட்சியான கலைஞர் ஆட்சியை ஆதரிக்கவேண்டியது உண்மைத் தமிழர்களின் உயிரினும் மேலான கடமை அல்லவா? ஆயிரம் ஊழல் குற்றச்சாற்று, வழக்குகள் எல்லாம் அவாளிடம் இருந்தபோதிலும், ஜெயலலிதாவை மீண்டும் முதல்வராக்க காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை உள்ள பார்ப்பன ஏடுகள், ஊடகங்கள் எப்படியெல்லாம் தூக்கிப் பிடிக்கின்றன பார்த்தீர்களா?
முற்றுகையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு கடன் மற்றும் நிவாரணம் வழங்குவதற்கான நடவடிக்கைகளை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வியாழக்கிழமை அறிவித்தார், இதில் 2 டிரில்லியன் டாலர் கடன் திட்டம் உட்பட 25 மில்லியன் விவசாயிகளை கிசான் கிரெடிட் கார்டுகள் மற்றும் ரூ .30,000 தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி (நபார்ட்) மூலம் கூடுதல் அவசரகால மூலதன நிதியுதவி. இதுதொடர்பாக, பிரதமர்-கிசான் வருமான உதவித் திட்டத்தின் பயனாளிகளுக்கு கிசான் கிரெடிட் கார்டுகள் மூலம் சலுகை கடன் வழங்க அரசாங்கம் ஒரு சிறப்பு முயற்சியைத் தொடங்கும். கோவிட் -19 தொற்றுநோயின் முழுமையான தகவலுக்கு இங்கே கிளிக் செய்க விவசாய நடவடிக்கைகளை அதிகரிக்க கிட்டத்தட்ட 2 டிரில்லியன் டாலர் சலுகை கடன் வழங்கப்படும். இந்த கிசான் கிரெடிட் கார்டுகள் இல்லாத 2.5 மில்லியன் டாலர் விவசாயிகளுக்கு இந்த சிறப்பு சுற்றுப்பயணம் பயனளிக்கும். தோராயமான மதிப்பீடு என்னவென்றால், 9 கோடிக்கு பி.எம். கிசானின் பயனாளிகள் இருந்தால், 2.5 கோடி விவசாயிகளுக்கு இந்த கிசான் கிரெடிட் கார்டு இருக்காது. இப்போது நாங்கள் அவர்களை அணுகி அட்டையை ஒப்படைக்கிறோம், ”என்றார் சீதாராமன். இந்த நடவடிக்கை இந்த விவசாயிகளுக்கு சலுகை வட்டி விகிதத்தில் நிறுவன கடன் பெற அனுமதிக்கும், மேலும் மீனவர்கள் மற்றும் கால்நடை வளர்ப்பில் ஈடுபடும் விவசாயிகளையும் உள்ளடக்கும். இது விவசாயத் துறையில் ரூ .2 டிரில்லியன் கூடுதல் பணப்புழக்கத்தை செலுத்தும் என்று அதிகாரப்பூர்வ அறிக்கை தெரிவிக்கிறது. கோவிட் -19 வெடித்த பிறகு, 2.5 மில்லியன் புதிய கிசான் கிரெடிட் கார்டுகள் கடன் வரம்புடன் ரூ .25,000 கோடி / சி.கே. / க்கு அனுமதிக்கப்பட்டன என்று அமைச்சர் கூறினார். பிப்ரவரி 1 ம் தேதி நபார்டுக்காக அறிவிக்கப்பட்ட ரூ .90,000 கோடியின் பட்ஜெட் ஒதுக்கீட்டிற்கு கூடுதலாக ரூ .30,000 கோடி கூடுதல் அவசர பணி மூலதனம் இருக்கும் என்று அமைச்சர் கூறினார். புது தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற செய்தி மாநாட்டில், “கூடுதல் $ 30,000.00 அவசரகால மூலதன நிதியை நபார்ட் மூன்று சிறு விவசாயிகளுக்கு வழங்க உள்ளது” என்று சீதாராமன் கூறினார். இந்த விளம்பரம் புலம்பெயர்ந்தோர், விவசாயிகள் மற்றும் பழங்குடியினருக்கான ஒன்பது புள்ளிகள் தொகுப்பின் ஒரு பகுதியாகும். இதையும் படியுங்கள்: கோவிட் -19: இன்று நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது உணவு வழங்கல் சங்கிலிகளில் இடையூறு ஏற்படுவதால் முற்றுகை காரணமாக விவசாயத் துறை அழுத்தமாக காணப்படுகிறது. பழங்கள் மற்றும் காய்கறிகளை வளர்க்கும் விவசாயிகள் தங்கள் விளைபொருட்களைக் கொட்ட வேண்டியிருந்தது, அதே நேரத்தில் அழிந்துபோகாத பயிர்களான தானியங்கள், காய்கறிகளை அறுவடை செய்தவர்கள் மொத்த சந்தைகளில் தடைசெய்யப்பட்ட செயல்பாடுகளால் தங்கள் பொருட்களை விற்க முடியவில்லை. READ புளோரிடா வீடியோவில் அவருடன் வாக்குவாதம் ஏற்பட்டதை அடுத்து நான்கு பெண்கள் ஒரு உணவகத்தின் ஊழியரை தாக்கினர் சித்தராமனின் கூற்றுப்படி, கிராமப்புற கூட்டுறவு வங்கிகள் மற்றும் பிராந்திய கிராமப்புற வங்கிகளின் (ஆர்ஆர்பி) பயிர் கடன் தேவைக்கு நபார்டு ரூ .30,000 கோடி கூடுதல் மறு நிதியளிப்பு ஆதரவை வழங்கும். இந்த திட்டம் 33 மாநில கூட்டுறவு வங்கிகள், 351 மாவட்ட கூட்டுறவு வங்கிகள் மற்றும் 43 ஆர்ஆர்பி நிறுவனங்களுக்கான கடன்களின் அடிப்படையில் குழாய் மூலம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மே மற்றும் ஜூன் மாதங்களில் 30 மில்லியன் சிறு மற்றும் குறு விவசாயிகளின் தற்போதைய ரப்பி (குளிர்காலம்) மற்றும் காரீஃப் (கோடை) தேவைகளை பூர்த்தி செய்வதற்காக இந்த திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் கூறினார். இதையும் படியுங்கள்: 1.5 பில்லியன் ரூபாய் திட்டத்திலிருந்து நிவாரணம் பெற முத்ராவின் கீழ் சிறு கடன் வாங்குபவர்கள் இருப்பினும், நிபுணர்களின் நிதியமைச்சரின் திட்டங்களுக்கு முரண்பட்ட எதிர்வினைகள் இருந்தன. “விவசாய குடும்பங்களில் சுமார் 30% மட்டுமே நிறுவன கடன்களால் பயனடைகிறார்கள்” என்று புது தில்லி ஐ.சி.ஆர்.ஐ.ஆர் சிந்தனைக் குழுவில் விவசாய பொருளாதாரம் குறித்த நிபுணர் ஸ்வேதா சைனி கூறினார். “மீதமுள்ள 70% பொதுவாக உள்ளூர் கடன் வழங்குநர்களிடமிருந்து கடன் வாங்குகிறது. கடன் அணுகல் உள்ளவர்களுக்கு கூட, இது எதிர்காலத்திற்கான உதவி என்று இன்றைய அறிவிப்பு திறம்பட கூறுகிறது, இது இன்றைய பிரச்சினைகளுக்கு தீர்வு காணவில்லை – உங்கள் தற்போதைய வருமான இழப்பு அல்லது சேமிப்பு இழப்பு, ”என்று அவர் கூறினார். நபார்டு மூலம் விவசாயிகளுக்கு கூடுதல் மூலதன நிதியமாக ரூ .30,000 கோடி தொகுப்பு சிறு மற்றும் குறு மக்களுக்கு உதவுகிறது. நிதி நிறுவனங்களிடமிருந்து கடன்களுக்கான அணுகல் அடிப்படையில் கடன் கட்டுப்பாடுகள் விவசாய நடவடிக்கைகளை கடுமையாக பாதித்திருக்கலாம் – ரபி பயிர்களுக்கு நடந்துகொண்டிருக்கும் அறுவடை சுழற்சி மற்றும் காரீஃப் சுழற்சியின் தொடக்கத்தில். அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கைகள் மற்றும் ஆர்ஆர்பி, அரசுக்கு சொந்தமான வங்கிகள் மற்றும் மாவட்ட கூட்டுறவு வங்கிகள் மூலம் விரைவாக வழங்கப்படுவது விவசாயத் துறையில் உற்பத்தி மற்றும் உற்பத்தித்திறனை அதிகரிக்க உதவும். ”டெலோயிட் இந்தியாவில் பங்குதாரர் ஆனந்த் ராமநாதன் கூறினார். Anu Priya “வலை நிபுணர். பாப் கலாச்சாரம். சிந்தனையாளர், உணவுப்பொருள்.” SaveSavedRemoved 0 Previous புதுப்பித்தல், ஆனால் பச்சை கவனம் செலுத்தி - தலையங்கங்கள் Next சீனாவுடனான அனைத்து உறவுகளையும் துண்டிக்க டிரம்ப் அச்சுறுத்துகிறார் - உலக செய்தி Related Articles Added to wishlistRemoved from wishlist 0 அறிமுகப்படுத்தப்பட்ட 48 நிமிடங்களுக்குப் பிறகு கேடிஎம்ஸின் சூப்பர் பைக் கையிருப்பில் இல்லை, முன்பதிவு எப்போது தொடங்கும் என்பதை அறிவீர்கள் Added to wishlistRemoved from wishlist 0 புதிய ஹோண்டா சிவிக் முதல் படம் வெளியிடப்பட்ட புதுப்பிப்பு விவரங்கள் Added to wishlistRemoved from wishlist 0 எலோன் மஸ்க்கின் காதலி மீண்டும் பச்சை குத்தப்பட்ட படம் சோஷியல் மீடியாவில் வைரலாகிவிட்டது – எலோன் மஸ்க்கின் காதலியின் டாப்லெஸ் புகைப்படம் தீப்பிடித்தது, பின்னால் பச்சை குத்தியது சமூக ஊடகங்களில் வைரலாகியது
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலானஅரசாங்கத்துக்கு பாராளுமன்றத்தில் நடத்தப்பட்டமற்றுமொரு பலப்பரீட்சை வெற்றியைப் பெற்றுக்கொடுத்துள்ளது. ரணில் விக்கிரமசிங்க பதில்ஜனாதிபதியாக இருந்தபோது மேற்கொண்ட அவசரகாலநிலைப் பிரகடனம் கடந்த புதன்கிழமை பாராளுமன்றத்தின்அங்கீகாரத்துக்காக விடப்பட்டது. அவசரகால நிலைமை கொண்டுவரப்பட்டமை தொடர்பில் மாறுபட்ட கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், இது தொடர்பான விவாதம் கடந்த புதன்கிழமை முற்பகல் 10.00மணி முதல் பிற்பகல் 5.20மணிவரை நடைபெற்றது. இது தொடர்பில் வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சியின் முதற்கோலாசான் லக்ஷ்மன் கிரியல்ல கோரிக்கை விடுத்திருந்தார். இதற்கமைய நடத்தப்பட்ட வாக்களிப்பில் அவசரகால நிலை பிரகடனத்துக்கு ஆதரவாக 120வாக்குகளும், எதிராக 63வாக்குகளும் அளிக்கப்பட்டிருந்தன. இதன்படி 57மேலதிக வாக்குகளால் அசரகால நிலை பாராளுமன்றத்தினால் அங்கீகரிக்கப்பட்டது. கடந்த 20ஆம் திகதி பாராளுமன்றத்தின் ஊடாக ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்காக நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் ரணில் விக்கிரமசிங்க 134வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றிருந்தார். இரகசிய வாக்கெடுப்பில் எதிர்க்கட்சியிலிருந்தவர்களும் ரணில் விக்கிரமசிங்கவுக்கு வாக்குகளை அளித்திருந்தனர் என்ற கருத்துக்கள் முன்வைக்கப்பட்ட நிலையில், அரசாங்கம் பாராளுமன்றத்தில் தனக்குக் காணப்படும் பெரும்பான்மையை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்திருந்ததுடன், அவசரகால நிலைமைப் பிரகடன வாக்கெடுப்பிலும் அவர்கள் அரசுக்கு ஒத்துழைப்பு வழங்கியிருந்தனர். அதேநேரம், விமல் வீரவன்ச உள்ளிட்ட எதிர்க்கட்சியில் உள்ள ஒரு சிலர் அவசரகால நிலைமைப் பிரகடனத்துக்கு ஆதரவாக வாக்களித்திருந்த போதும், ரணில் விக்கிரமசிங்கவுடன் ஜனாதிபதிப் பதவிக்குப் போட்டியிட்ட டளஸ் அழகப்பெரும மற்றும் அவருக்கு ஆதரவாக இருந்த பொதுஜன பெரமுனவின் தலைவர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் உள்ளிட்ட பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் சிலர் இதற்கு எதிராக வாக்களித்திருந்தனர். பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் மத்தியில் மாறுபட்ட நிலைப்பாடுகள் காணப்பட்டாலும், அரசாங்கம் என்ற ரீதியில் தனது பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான பலத்துடன் அக்கட்சி உள்ளது என்பதே நிதர்சனம். நாடு தற்பொழுது எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட சவால்களிலிருந்து மீள்வதற்கான திட்டங்களுக்குத் தலைமைத்துவத்தை வழங்கி முன்கொண்டு செல்லக் கூடிய அனுபவம் மிக்க அரசியல் தலைவர் ஒருவரின் தேவையை அறிந்தே பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது அரசியல் வேறுபாடுகளையும் மறந்து ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராகவிருந்த ரணில் விக்கிரமசிங்கவைத் தெரிவு செய்திருந்தனர். நாடு தற்பொழுது இருக்கும் நிலையில் அரசியல் வேறுபாடுகள் மற்றும் எதிர்காலத்தை அடிப்படையாகக் கொண்ட சுயலாப நோக்கங்களைக் கைவிட்டு அனைவரும் ஒன்று சேர்ந்து பயணிப்பதே காலத்தின் தேவையாகும். அதேநேரம், ஜனாதிபதியாகப் பதவி வகித்த கோட்டாபய ராஜபக்ஷ பதவியைத் துறந்து வீடு செல்ல வேண்டும் எனப் போராட்டத்தை ஆரம்பித்தவர்கள், தற்பொழுது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராகவும் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். மக்கள் தமது கருத்துகளை சுதந்திரமாக முன்வைப்பதற்கும், தமது எதிர்ப்பினை வெளிப்படுத்துவதற்கும் உரிமை காணப்படுகின்ற போதும், வெறுமனே மக்களை உருவேற்றி வீதியில் இறக்கித் தொடர்ந்தும் போராட்டங்களை முன்னெடுப்பது நடைமுறைக்குச் சாத்தியமான மாற்றங்களைக் கொண்டுவர இடமளிப்பதாக அமையாது. சவால் மிக்க சந்தர்ப்பத்தில் நாட்டைப் பெறுப்பேற்றுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு பெருத்தமான அளவு கால அவகாசத்தை வழங்கி அதற்குள் அவர் மேற்கொள்ளும் நடவடிக்கைகளில் திருப்தி அடையாவிட்டால் அதற்கு எதிராகப் போராட்டங்களை முன்னெடுத்தால் அதில் நியாயம் இருக்கும். இதனை விடுத்து, வெறுமனே அனைத்துக்கும் வீதியில் இறங்கிப் போராடுவதானது போராட்டம் குறித்து பொதுமக்கள் மத்தியில் காணப்பட்ட வரவேற்பை தற்போது இழக்கச் செய்து விட்டது என்பதே உண்மை. சவால்களிலிருந்து நாட்டை மீட்பதற்கும், அரசாங்கத்தைப் பெறுப்பெற்று முன்கொண்டு செல்வதற்கும் முன்வருமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த போதும், அவர்கள் எவரும் அதனைப் பொறுப்பேற்கத் தவறியிருந்தனர். அதேநேரம், போராட்டக்காரர்கள் எல்லைமீறி நடந்து கொண்டமைதையும் காணக் கூடியதாகவிருந்தது. அரசாங்க நிறுவனமான இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்துக்குள் நுழைந்து அங்கு பணியாற்றியவர்களை அச்சுறுத்தி, நிகழ்ச்சி நிரல்களை மாற்றுமாறு சில போராட்டக்காரர்கள் வற்புறுத்தியிருந்தனர். இதனுடன் சம்பந்தப்பட்ட ஒருவர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார். பொதுமக்களுக்கு சேவையாற்றும் அரசாங்க நிறுவனங்கள் அரசியல் நிலைப்பாடுகள் இன்றி சுயாதீனமாக செயற்பட வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடம் இல்லை என்றாலும், இவ்வாறான நிறுவனங்களுக்கு அத்துமீறி நுழைந்து அச்சுறுத்தும் வகையில் நடந்து கொள்வதை நியாயப்படுத்த முடியாது. அதேபோல ஜனாதிபதி மாளிகை, ஜனாதிபதி செயலகம், பிரதமர் செயலகம் ஆகிய அரசாங்க கட்டடங்களுக்குள் நுழைந்தவர்கள் பொதுச்சொத்துக்களுக்கு ஏற்படுத்தியுள்ள சேதங்கள் குறித்தும் சிந்திக்க வேண்டியுள்ளது. இதற்கும் அப்பால் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தனிப்பட்ட வீட்டை தீயிட்டு எரித்து, அங்கிருந்த பல பெறுமதியான சொத்துக்களைக் கொள்ளையிட்டவர்கள் உண்மையில் போராட்டக்காரர்களா என்ற கேள்வி எழாமல் இல்லை. இவ்வாறான வன்முறைச் சம்பவங்களால் போராட்டங்கள் திசைமாறிப் பயணித்து நாட்டில் பாரிய அழிவை ஏற்படுத்துவதற்கான அச்சுறுத்தல்கள் காணப்படுகின்றன. இவை போன்ற நிகழ்வுகள் நாட்டை பல வருடங்கள் பின்னோக்கித் தள்ளி விடுவதற்கான ஆபத்து இருப்பதாக ஆளும் கட்சி உறுப்பினர்கள் பலரும் பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தனர். குறிப்பாக மே மாதம் 09ஆம் திகதியின் பின்னர் நாட்டின் பல்வேறு பகுதிகளில் விசேடமாக பொதுஜன பெரமுன கட்சியின் அரசியல்வாதிகள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்களின் வீடுகளை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவங்கள் போராட்டத்தின் வன்முறை முகத்துக்கு சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்துள்ளன. அரசியலில் மோசடிக்காரர்கள் இருந்தால் அவர்களுக்கு அடுத்த தேர்தலில் பாடம் புகட்டுவதை விடுத்து அவர்களின் தனிப்பட்ட சொத்துக்களை அடித்து நொருக்கி, தீயிட்டுக் கொளுத்தி சேதப்படுத்துவதில் ஜனநாயகத் தன்மை இல்லை என்பதை போராட்டக்காரர்கள் நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு செய்வது அரசியல்வாதிகளுக்கும் பொதுமக்களுக்கும் இடையில் மென்மேலும் முரண்பாடுகளையே ஏற்படுத்தும். அது மாத்திரமன்றி நாடு தற்பொழுது பாரிய வீழ்ச்சிக்கு முகங்கொடுத்திருக்கும் சந்தர்ப்பத்தில் இவ்வாறான வன்முறைச் சம்பவங்கள் வெளிநாடுகளிலிருந்து எமக்குக் கிடைக்கக் கூடிய உதவிகளைத் தடுப்பதாகவும் அமைந்து விடலாம். விசேடமாக நாட்டை மீட்சிப் பாதைக்கு இட்டுச் செல்ல ஜனாதிபதி எடுத்திருக்கும் கடும் பிரயத்தனங்களுக்கு அனைத்துத் தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்பதுடன், ஒரே இரவில் அனைத்து விடங்களையும் சுமுகநிலைக்குக் கொண்டுவந்து விடலாம் என்றும் எதிர்பார்க்க முடியாது. உரிய காலப் பகுதியை அவருக்கு வழங்கி அனைவரும் ஒத்துழைப்பைக் கொடுத்த இந்த இக்கட்டான சூழலில் இருந்து வெளிவருவதற்கு முயற்சிக்க வேண்டும். சம்யுக்தன் Comments Your name Subject Comment * Leave this field blank Related Articles சர்வகட்சி அரசை அமைக்கும் தீவிர முயற்சியில் ஜனாதிபதி நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வு காணும் நோக்கில் பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும்... நாட்டின் மோசமான பிரச்சினைகளுக்கு சர்வகட்சி அரசாங்கமே சரியான மருந்து! அமைச்சர் விதுர விக்கிரமநாயக்கவுடன் சந்திப்பு'நாடு தற்பொழுதுஎதிர்கொண்டுள்ள மோசமான பிரச்சினைகளுக்கு சர்வகட்சி அரசாங்கம் சரியான... புலம்பெயர் தமிழர்களை அரவணைக்கும் காத்திரமான முயற்சியில் புதிய அரசாங்கம்! இலங்கை எதிர்கொண்டுள்ள பொருளாதாரசவால்களிலிருந்து மீள்வதற்குப் பல்வேறுமாற்றுவழிகள் தொடர்பில் ஆராயப்பட்டுவரும் நிலையில்,... ’அரகல’ போராட்டத்தின் எழுச்சியும் வீழ்ச்சியும்! இலங்கையின் அரசியல் களம் கடந்த சில மாதங்களாகப் பரபரப்பு நிறைந்ததாகக் காணப்படுகிறது. கடந்த ஏப்ரல் 9ஆம் திகதி காலிமுகத்திடலில்... இருளுக்கு சாபமிட்டுக் கொண்டிருப்பதால் நன்மை எதுவும் விளையப் போவதில்லை! ஒன்பதாவது பாராளுமன்றத்தின் மூன்றாவதுகூட்டத்தொடரை ஆரம்பித்து வைத்தஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கமுன்வைத்த கொள்கைப் பிரகடன... அரசியலமைப்பு ரீதியாகத் தேர்வானவர் ரணில் இன்றைய பொருளாதாரப் பிரச்சினைக்கு நாட்டில் புரையோடிப்போயிருக்கும் இனப்பிரச்சினை தான் அடிப்படைக் காரணம் என்கிறார் யாழ். மாவட்ட... ஜனாதிபதி ரணிலின் தலைமைத்துவத்தில் பாராளுமன்றம் கொண்டுள்ள நம்பிக்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலானஅரசாங்கத்துக்கு பாராளுமன்றத்தில் நடத்தப்பட்டமற்றுமொரு பலப்பரீட்சை வெற்றியைப்... நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் மக்களுக்கு நம்பிக்கையைத் தந்துள்ள அரசியல் மாற்றம்! இலங்கையின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட எட்டாவது ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தின் மூலம் தெரிவு... இலங்கையின் அரசியலில் பதற்றம் நிறைந்த நாட்கள்! இலங்கையின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட எட்டாவது ஜனாதிபதியாகப் பதவி வகித்த கோட்டாபய ராஜபக்ஷ மக்கள் எதிர்ப்புக் காரணமாக தனது... அரசியல் ஸ்திரத்தன்மை இன்றேல் சர்வதேச உதவிகள் பெறுவது ஐயம்! இலங்கை பொருளாதார ரீதியாகஎதிர்கொண்டுள்ள பல்வேறு சவால்கள்காரணமாக மக்கள் நாளுக்கு நாள்சிரமங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.... பாராளுமன்றத்தைப் பலப்படுத்துவதே இன்றைய காலத்துக்கான உகந்த தீர்வு! இலங்கையில் தற்பொழுது நிலவு கின்ற நெருக்கடிகளுக்குத் தீர்வு காணுமாறு வலியுறுத்தி பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன... பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்டெடுப்பது எவ்வாறு? நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வது தொடர்பில் அராங்கத்தின் பொருளாதார மீட்சிக் கொள்கைத் திட்டமொன்று...
KineMaster என்று சொல்லக்கூடிய இந்த செயலியை KineMaster Corporation என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. இந்த செயலி 2013 டிசம்பர் 26 ஆம் நாள் கூகுள் ப்ளே ஸ்டோரில் KineMaster Corporation நிறுவனம் வெளியிட்டது. இதுவரை இந்த செயலியை 10,00,00,000 க்கும் மேற்பட்ட நபர்கள் பதிவிறக்கம் செய்துள்ளனர். தற்போது இந்த செயலியை நீங்கள் கூகுள் ப்ளே ஸ்டோரில் 75.78 எம்பிக்கு பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த செயலிக்கு ப்ளே ஸ்டோரில் இதுவரை 5 க்கு 4.4 ரேட்டிங் பெற்றுள்ளது. இந்த செயலியின் பயன்கள் கீழே பார்க்கலாம். COMPARED TO PC SOFTWARES கணினியில் உங்களது வீடியோக்களை எடிட் செய்வதற்கு Adobe premiere Pro மிகப்பெரிய மென்பொருளாக உள்ளது. அதைப்போன்று மொபைலில் வீடியோக்களை எடிட் செய்வதற்கு முதலிடத்தில் உள்ள செயலி Kinemaster. இதை யாராலும் மறுக்க முடியாது. பிரீமியர் புரோவிலுள்ள அனைத்து அம்சங்களும் இந்த Kinemaster உள்ளது. எனவே மொபைலில் வீடியோக்களை எடிட் செய்வதற்கு இந்த செயலி மிக சிறந்த ஒன்றாக உள்ளது. HOW TO USE THIS BLACK SCREEN EFFECT இந்த வீடியோ விளைவைக் கொண்டு உங்கள் வீடியோ அல்லது புகைப்படங்களை மேலும் அழகாக வடிவமைக்க இந்த விளைவு உதவுகிறது. இதை எப்படி பயன்படுத்துவது என்று கூறுகிறேன். உங்களது புகைப்படங்கள் அல்லது வீடியோவில் மேல் இந்த விளைவை வைத்துவிட்டு வீடியோவை தேர்வு செய்த பின்னர் பிலண்டிங் என்ற ஒரு ஆப்ஷன் இருக்கும். அதில் ஸ்கிரீன் என்ற ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும் பின்னர் உங்களது வீடியோ அந்த விளைவுடன் சேர்ந்து விடும். HOW TO USE THIS GREEN SCREEN EFFECT இந்த விளைவை கொண்டு உங்களது புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை அழகாக மாற்ற முடியும். இந்த விளைவில் பல வகையான வடிவங்கள் உள்ளது. இதை எப்படி பயன்படுத்துவது என்று கூறுகிறேன். உங்களது புகைப்படத்தின் மேல் விளைவு வீடியோவை வைத்துவிட்டு குரோமோ கீ என்ற ஒரு ஆப்சன் இருக்கும் அதை தேர்வு செய்ய வேண்டும். பின்னர் விளைவில் உள்ள அனைத்தும் உங்களது புகைப்படத்தின் மேல் சேர்ந்துவிடும். HOW TO USE THIS INTRO TEMPLATE இந்த டெம்ப்ளேட்டை பயன்படுத்தி உங்களது இன்ட்ரோ வீடியோ உருவாக்க முடியும். இதில் உங்களது லோகோ மற்றும் டெக்ஸ்ட் மட்டும் சேர்த்து ஒரு இன்ட்ரோ வீடியோ உருவாக்கிக்கொள்ள முடியும். இதை மொபைல் மூலம் உருவாக்க முடியும் என்பது தனிச்சிறப்பு எனலாம். இந்த டெம்ப்ளேட்டை கையாள்வது மிகவும் எளிமையான ஒன்று. எனவே அனைவரும் இதை பயன்படுத்தி உங்களது யூட்யூப் சேனலுக்கான இன்ட்ரோ வீடியோ உருவாக்கிக்கொள்ள முடியும். KINEMASTER PREMIUM FEATURES MULTIPLE LAYERS KineMaster அப்ளிகேஷனில் உங்களது விருப்பமான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை ஒன்றன் பின் ஒன்றாக add செய்து உங்களால் எடிட் செய்ய முடியும். பல செயலிகள் இருந்தாலும் இந்த சிறப்பம்சம் Kinemaster அப்ளிகேஷனில் மட்டுமே உள்ளது. இதனால் உங்களது விருப்பமான வீடியோக்களை சரியாக எடிட் செய்துகொள்ள முடியும். BLENDING MODE கூகுள் ப்ளே ஸ்டோரில் வீடியோ எடிட் செய்வதற்காக பல செயலிகள் உள்ளது. ஆனால் அவற்றை எதிலுமே இந்த ப்லண்டிங் ஆப்ஷன் கிடையாது. இந்த செயலில் மட்டுமே உள்ளது. இந்த ப்லண்டிங் ஆப்ஷனை பயன்படுத்தி உங்களது விருப்பமான வீடியோ மற்றும் புகைப்படங்களை ஒன்றாக இணைக்க முடியும். CHROMA KEY வீடியோவின் பேக்ரவுண்ட் ஐ அளிக்க இந்த chroma key ஆப்ஷன் பயன்படுகிறது. வீடியோவின் பேக்ரவுண்ட் ஒரே கலராக இருந்தாள் சுலபமாக அளிக்கமுடியும். உதாரணமாக வீடியோவின் பேக்ரவுண்ட் பச்சை நிறத்தில் இருந்தால் ரிமூவ் செய்வதற்கு எளிதாக இருக்கும். வீடியோவில் கலர் எது என்று தெரிந்து கொண்டு ரிமூவ் செய்யும்போது கீ கலர் அதே கலராக செலக்ட் செய்ய வேண்டும். அப்போதுதான் வீடியோவின் பின்புற பேக்ரவுண்ட் ரிமூவ் செய்ய முடியும். VOICE RECORDING வீடியோவை எடிட் செய்யும்போது தேவையான இடத்தில் உங்களது குரலை பதிவு செய்ய இந்த செயலியில் அதற்கான அம்சமும் உள்ளது. குரலைப் பதிவு செய்வதற்கு கூகுள் ப்ளே ஸ்டோரில் பல செயலிகள் உள்ளது இருப்பினும் உங்களது வீடியோக்களை நீங்கள் எடிட் செய்யும்போதே வாய்ஸ் ரெக்கார்ட் செய்வதற்கு இந்த செயலியில் அம்சம் உள்ளது. HANDWRITING இந்த அம்சம் மூலம் உங்களது வீடியோக்களில் தேவையான இடத்தில் சில குறியீடுகளை அமைக்க முடியும். இதனால் உங்களது வீடியோக்களை பார்க்கும் பார்வையாளர்களுக்கு நீங்கள் கூற விரும்புவது குறியீடு மூலம் காட்டும்போது அவர்களுக்கு எளிதாக புரியும். VOICE CHANGER உங்களது உண்மையான குரலை மாற்றவும் அல்லது வீடியோவில் உள்ள பிற குரலை வேறு குரலாக மாற்ற இந்த ஆப்ஷன் பயன்படுகிறது. உதாரணமாக உங்களது குரலை ரோபோட் பேசினால் எப்படி இருக்கும் அதுபோன்று மாற்றவும் இந்த செயலியில் அம்சங்கள் உள்ளது. EQ MODES ஆடியோவில் பல விளைவுகளை ஏற்படுத்த இந்த ஆப்ஷன் பயன்படுகிறது. இதன் மூலம் உங்களது ஆடியோ கேட்பதற்கு தெளிவாகவும் அந்த ஆடியோவை கேட்டுக்கொண்டே இருக்க செய்ய பல ஆப்ஷன்ஸ் இதற்குள் உள்ளது. உதாரணமாக கூறினால் ராக் கிளாசிக் போக் இதுபோன்ற ஆடியோ பில்டர்ஸ் இதில் உள்ளது. இதை பயன்படுத்தும் போது உங்களது ஆடியோ கேட்க இனிமையாக இருக்கும். PREMIUM COLOUR FILTER வீடியோ மற்றும் புகைப்படங்களில் கலரை பிடித்த மாறி மாற்றிக்கொள்ள இந்த கலர் பில்டர் ஆப்ஷன் பயன்படுகிறது. இதன் மூலம் உங்களது வீடியோ மற்றும் புகைப்படத்தின் கலரை மாற்றுவதன் மூலம் அதன் தோற்றம் அழகாக இருக்கும். இதை பயன்படுத்திப் பார்த்தால் மட்டுமே அதன் அனுபவம் உங்களுக்கு தெரியும். EXPORT QUALITY இந்த செயலியை பயன்படுத்தி நீங்கள் எடிட் செய்யும் வீடியோக்களை 4K 60fps வரை அவுட்புட் எடுத்துக்கொள்ள முடியும். இதன் மூலம் உங்களது வீடியோக்களை பார்க்க தெளிவாக இருக்கும். பார்ப்பவர்களுக்கு வீடியோவில் உள்ள தகவல்களை எளிதாக புரிந்து கொள்ள முடியும். இதில் உங்களுக்குப் பிடித்த பார்மட்டில் வீடியோக்களை மாற்றிக் கொள்ளவும் முடியும். உதாரணமாக உங்களுக்கு 720p 30fps வரை போதும் என்றால் அந்த அளவுக்கு உங்களது வீடியோக்களை அவுட்புட் எடுத்துக்கொள்ளலாம். SPEED CONTROL உங்களது வீடியோக்களை வேகமாக மற்றும் மெதுவாக இயக்க இந்த ஸ்பீட் கண்ட்ரோல் ஆப்சன் பயன்படுகிறது. இதன் மூலம் உங்களது வீடியோவை தேவையான இடத்தில் வேகமாக இயக்கவும் அல்லது மெதுவாக இயக்கவும் முடியும். இதை பயன்படுத்தி எடிட் செய்யும்போது பார்வையாளர்களை கவர்ந்து இழுக்க முடியும். ஏனென்றால் வேகமாக நடக்கும் நிகழ்ச்சியை மெதுவாக பார்க்கும் அனுபவம் புதிதாக இருக்கும். இதை நீங்கள் பயன்படுத்தி பார்த்தால் மட்டுமே இந்த அம்சத்தின் சிறப்பை நீங்கள் உணர முடியும். VIDEO REVERSE MODE ஒரு நிகழ்வை தொடக்கத்திலிருந்து பார்க்காமல் கடைசியிலிருந்து முதல் பகுதிக்கு மாற்றி பார்க்க இந்த ரிவர்ஸ் ஆப்சன் பயன்படுகிறது. உதாரணமாக உங்களுக்குப் புரியும் படி கூறினாள் ஒரு மிதிவண்டி சென்றுகொண்டிருக்கிறது அதை அப்படியே பின்புறமாக வரச்செய்யுவும் மற்றும் பழையபடியே அதை செயல்படுத்தவும் பயன்படும் ஆப்ஷன் வீடியோ ரிவர்ஸ் மூடு ஆகும். THREE TYPE OF VIDEO RATIO உங்களது வீடியோக்களை உங்களுக்கு பிடித்த பார்மெட்டில் எடிட் செய்ய இந்த செயலியில் அம்சங்கள் உள்ளது. உதாரணமாக கூறினால் வாட்ஸ்அப் ஃபுல் ஸ்க்ரீன் வீடியோ சைஸில் எடிட் செய்யவும் யூடியூப் வீடியோ சைஸில் எடிட் செய்யவும் இன்ஸ்டாகிராம் போஸ்ட் சைஸில் வீடியோ எடிட் செய்யவும் இதில் ஆப்ஷன்ஸ் உள்ளது. இதை பயன்படுத்தி உங்களுக்கு பிடித்த வடிவத்தில் உங்களது வீடியோக்களை எடிட் செய்ய முடியும். CLIP GRAPHICS இந்த ஆப்ஷனை பயன்படுத்தி உங்களது வீடியோக்களில் நடுவில் புதிய விளைவுகளை ஏற்படுத்த முடியும். உதாரணமாக கூறினால் ஒரு வீடியோவை நடுவில் இரண்டாக கட் செய்திருந்தால் அந்த இடத்தில் ஒரு புதிய எபெக்ட்ஸ் கொடுக்க முடியும். இதன் மூலம் ஒரு வீடியோவில் இருந்து மற்றொரு வீடியோவிற்கு மாறும்பொழுது நீங்கள் ஏற்படுத்திய எபெக்ட்ஸ் நடுவில் இருக்கும். அப்பொழுது அந்த வீடியோவை பார்க்க அழகாக இருக்கும். ஏனெனில் ஒரு வீடியோவில் இருந்து மற்றொரு வீடியோ மாறும்போது நீங்கள் ஏற்படுத்திய விளைவு அந்த வீடியோவை அழகாக்கும். ROTATE AND MIRRORING OPTION வீடியோ மற்றும் புகைப்படங்களை உங்களுக்கு ஏற்றார்போல் ஏற்ற திசைக்கு மாற்றிக்கொள்ள இந்த ரோட்டைட் அண்ட் மிரர் ஆப்சன் பயன்படுகிறது. உதாரணமாக கூறினால் உங்களது வீடியோ கிழக்கு திசையை பார்த்து இருந்தால் அதை மேற்கு மற்றும் உங்களுக்கு பிடித்த திசையில் மாற்றிக்கொள்ள இந்த ஆப்ஷன் பயன்படுகிறது. இதை உங்கள் பிச்சர் மற்றும் வீடியோவில் பயன்படுத்திக் கொள்ளலாம். COLOUR ADJUSTMENT உங்களது வீடியோ மற்றும் புகைப்படங்களில் கலர் வெளிச்சம் கம்மியாக இருந்தால் உங்களது வீடியோ மற்றும் புகைப்படங்களை பார்க்கும்போது ஒரு தெளிவு இருக்காது. அப்படி இருக்கும் உங்களது வீடியோ மற்றும் புகைப்படங்களை இந்த கலர் அட்ஜஸ்ட்மெண்ட் ஆப்ஷனை பயன்படுத்தி தேவையான இடத்தில் காண்ட்ராஸ்ட் லெவல் பிரைட்னஸ் அட்ஜஸ்ட் செய்யும் போது பார்க்க ஒரு அளவுக்கு தெளிவாகவும் அழகாகவும் மாற்ற இந்த ஆப்ஷன் பயன்படுகிறது. எனவே தெளிவில்லாத மற்றும் மங்கலாக இருக்கும் பிச்சர் மற்றும் வீடியோக்களில் இந்த ஆப்ஷனை பயன்படுத்தினால் பார்க்க ஓரளவு நன்றாக இருக்கும். VOLUME ENVELOPE இந்த ஆப்ஷன் Kinemaster அப்ளிகேஷன் அடுத்த லெவலுக்கு கொண்டு செல்ல உதவியது எனலாம். ஏனெனில் இந்த ஆப்சன் கணினியில் எடிட் செய்வதற்கு மட்டுமே உள்ளது. ஆண்ட்ராய்டு செயலியில் அரிதாக காணலாம். அது இந்த இந்த செயலிலும் உள்ளது. இதன்மூலம் உங்களது வீடியோ மற்றும் ஆடியோவில் தேவையான இடத்தில் வால்யூம் அதிகப்படுத்தவும் தேவையற்ற இடத்தில் வால்யூம் முழுமையாக குறைக்கவும் முடியும். VIGNETTE MODE இதைப் பயன்படுத்தி வீடியோ மற்றும் பிச்சர் இன் கரையில் கருநீல ஷேடோ ஏற்படுத்தமுடியும். இதனால் நடுவிலுள்ள அனைத்தும் தெளிவாக பார்க்க முடியும். இதற்காக இந்த ஆப்ஷன் பயன்படுத்துகிறோம். இது வீடியோவை தனித்துவமாக காட்ட உதவுகிறது. நீங்கள் எடிட் செய்ய விரும்பும் போது இதை ஒரு முறை பயன்படுத்தி பாருங்கள் இதன் சிறப்பம்சம் உங்களுக்கு புரியும். EXTRACT AUDIO இதுவும் ஒரு சிறந்த அம்சம் எனக் கூறலாம் இந்த செயலியில் ஏனெனில் வீடியோ எடிட் செய்யும் போது அந்த வீடியோவுக்காண பாடல் உங்களிடம் இல்லை என்றாலும் அந்த ஆடியோ விற்கான வீடியோ உங்களிடம் இருந்தால் அந்த வீடியோவில் இருந்து ஆடியோவை தனியாக பிரித்தெடுக்க முடியும் எடுத்துவிட்டு நமக்குத் தேவையில்லாத வீடியோவை டெலிட் செய்து கொள்ளலாம். நீங்கள் பாடல் டவுன்லோட் செய்யாமலே உங்களுக்கு தேவையான பாடலை தனியாக எடுத்துக்கொள்ள இந்த ஆப்ஷன் பயன்படுகிறது. TRIM AND SPLIT OPTION வீடியோ ஆடியோ மற்றும் புகைப்படங்களை தேவையில்லாத இடத்தை வெட்ட இந்த ட்ரிப் அண்ட் ஸ்பிளிட் ஆப்ஷன் பயன்படுகிறது. இந்த ஆப்ஷன்ஸ் சிறப்பாக செயல்படுகிறது. ஏனெனில் கூகுள் ப்ளே ஸ்டோரில் வீடியோ எடிட் செய்வதற்கான செயலிகள் பல உள்ளது. அவற்றை ஒப்பிடும்போது இந்த செயலியில் நாம் விரும்பும் இடத்தை சரியான இடத்தில் வெட்டி மற்றொரு இடத்தை சேர்க்கவும் முடியும். PAN AND ZOOM இந்த ஆப்ஷன் மூலம் உங்களது வீடியோக்களை பார்வையாளர்களுக்கு மிக அருகாமையில் காட்ட இந்த ஆப்ஷன் பயன்படுகிறது. உதாரணமாக கூறினால் மிக பின்புறத்தில் உள்ள ஒரு சப்ஜெக்ட்டை மிக அருகாமையில் அதாவது திரைக்கு முன்பாக மிக அருகே கொண்டுவர இந்த ஆப்ஷன் பயன்படுகிறது. PREMIUM TEXT இந்தச் செயலியில் அளவுக்கு அதிகமான அகராதிகள் உள்ளது. உங்களுக்கு பிடித்த மொழியை பதிவிறக்கம் செய்து கொள்ளவும் முடியும். Kinemaster asset Store ல் உங்களுக்கு தமிழ்மொழி தேவை என்றால் தமிழ் மொழியை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இந்த செயலியில் டிபால்ட் ஆக ஆங்கில அகராதிகள் உள்ளது. இதை நீங்கள் இலவசமாக பயன்படுத்திக்கொள்ளலாம். OVERLAY AND STICKERS வீடியோ மற்றும் புகைப்படங்களை மேலும் அழகாக்க இந்த ஓவர்லே அண்ட் ஸ்டிக்கர்ஸ் ஆப்ஷன்ஸ் பயன்படுகிறது. உதாரணமாக கூறினால் உங்களது வீடியோவில் தீப்பொறி பறப்பதுபோல் விளைவை ஏற்படுத்தலாம் மற்றும் உங்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறுவதுபோல் விளைவும் ஏற்படுத்த முடியும். இதுவே ஓவர்லே அண்ட் ஸ்டிகர்ஸ் ஆப்ஷன் ஆகும். SPECIAL EFFECTS இதிலும் ஓவர்லே அண்ட் ஸ்டிக்கர்ஸ் ஆப்ஷனை போன்று உங்களுக்குப் பிடித்த விளைவுகளை உங்களது வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களில் பயன்படுத்திக் கொள்ள முடியும். இந்த ஆப்ஷனை வீடியோ மற்றும் புகைப்படங்களில் குறிப்பிட்ட இடத்தில் சரியாக பயன்படுத்த முடியும் தேவையில்லாத இடத்தில் அதை நிறுத்திக் கொள்ளவும் முடியும். இதன் மூலம் உங்களது வீடியோ மற்றவர்கள் வீடியோவிலிருந்து தனித்துவமாக தெரியும். ANIMATION AND TRANSITION EFFECTS எழுத்துக்களில் விளைவுகளை ஏற்படுத்த அனிமேஷன் எபெக்ட்ஸ் பயன்படுகிறது. Transition புகைப்படங்கள் மற்றும் வீடியோவில் விளைவுகளை ஏற்படுத்த உதவுகிறது. இதில் தொடக்கத்தில் ஒரு அனிமேஷன் ஆப்ஷனை பயன்படுத்த முடியும் முடிவில் ஒரு ஆப்ஷனை பயன்படுத்த முடியும். தெளிவாகக் கூறினால் ஒரு எழுத்துக்களின் தொடக்கத்தில் ஒரு விளைவையும் அந்த எழுத்து மறையும் பொழுது ஒரு விளைவையும் கொடுக்க முடியும். KINEMASTER TIPS: WHY DO I HAVE IMAGE INSERT OF MEDIA ? இந்த செயலியில் லேயர் ஆப்ஷனில் மீடியாவிற்கு பதிலாக இமேஜ் என்று இருந்தால் வீடியோக்களை பயன்படுத்த முடியாது. அதை எப்படி மீடியா என மாற்றுவது என்று கூறுகிறேன். Kinemaster அப்ளிகேஷனை ஓபன் செய்ததும் ரேஷியோ செலக்ட் செய்வதற்கு கீழ் ஒரு கியர் ஐகான் இருக்கும். அதை கிளிக் செய்த பிறகு பல ஆப்ஷன்ஸ் அதில் வரும் அவற்றில் மூன்றாவதாக DEVICE CAPABILITY INFORMATION என்று ஒரு ஆப்ஷன் இருக்கும் அதை கிளிக் செய்த பிறகு உங்கள் மொபைலை பற்றிய விவரங்கள் அதில் கூறப்பட்டிருக்கும். அதன்பிறகு மேலே மூன்று புள்ளிகள் இருக்கும் அதை கிளிக் செய்யுங்கள் செய்தபிறகு RUN ANALYSIS NOW என்று வரும் அதை கிளிக் செய்யுங்கள் செய்தபிறகு இரண்டிலிருந்து மூன்று நிமிடங்கள் அது பிராசசிங் ஆகும். அதுவரை வேறு எந்த ஒரு செயலிக்கும் நீங்கள் செல்லக்கூடாது. இது நீங்கள் செய்தபிறகு அப்ளிகேஷனை ஓபன் செய்து பாருங்கள் லேயரில் இமேஜ் என்று இருந்தால் அது மீடியாவாக மாற வாய்ப்பு உள்ளது. இந்த முறையைப் பயன்படுத்தி அனைவருக்கும் மாறும் என்றால் அது கிடையாது உங்களது மொபைலின் process ஐ பொருத்து மாறக்கூடும்.
பாரிஸ்: முன்னணி வீராங்கனையாக கரோலினா பிளிஸ்கோவா அறிமுக வீராங்கனையான லியோலியாவிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். பாரிசில் நடக்கும் பிரெஞ்ச் ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் போட்டியில் நேற்று மகளிர் ஒற்றையர் பிரிவு 2வது சுற்று ஆட்டங்கள் நடைபெற்றன. முன்னணி வீராங்கனையான செக் குடியரசின் கரோலினா பிளிஸ்கோவா(30வயது, 8வது ரேங்க்) நேற்று, சிறப்பு அனுமதி மூலம் போட்டியில் பங்கேற்கும் பிரான்ஸ் வீராங்கனை லியோலியா ஜீன்ஜீன்(26வயது, 227வதுரேங்க்) உடன் மோதினார். அனுபவ வீராங்கனையான பிளிஸ்கோவா எளிதில் வெற்றிப் பெறுவார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் கிராண்ட் ஸ்லாம் போட்டியில் முதல்முறையாக விளையாடும் லியோலியா அதிரடியாக விளையாடினார். அதனால் ஒரு மணி 15 நிமிடங்களில் 6-2, 6-2 என நேர் செட்களில் பிளிஸ்கோவை வீழ்த்தி 3வது சுற்றுக்கு முன்னேறினார். பிளிஸ்கோவா தொடர்ந்து 3வது முறையாக பிரெஞ்ச் ஓபனில் 2வது சுற்றுடன் வெளியேறி உள்ளார். 3வது சுற்றில் போபண்ணா ஆடவர் இரட்டையர் பிரிவு 2வது சுற்றில் நேற்று இந்தியாவின் ரோகன் போபண்ணா, நெதர்லாந்தின் மாத்யூ மிடில்கூப் இணை, ஆந்த்ரே கொலுபவ்(கஜகிஸ்தான்), ஃபேப்ரிஸ் மார்டின்(பிரான்ஸ்) இணையுடன் மோதியது. போபண்ணா இணை ஒரு மணி 6 நிமிடங்களில் 6-3, 6-4 என நேர் செட்களில் வெற்றிப் பெற்று 3வது சுற்றுக்கு தகுதிப் பெற்றது. Tags: French Open tennis Bliskova defeat debutant Leolia wins பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் பிளிஸ்கோவா தோல்வி அறிமுக வீராங்கனை லியோலியா வெற்றி மேலும் செய்திகள் மெஸ்ஸி மிரட்டலில் பணிந்தது ஆஸ்திரேலியா: காலிறுதிக்கு முன்னேறியது அர்ஜென்டினா வெஸ்ட் இண்டீசுடன் முதல் டெஸ்ட்: 164 ரன் வித்தியாசத்தில் ஆஸி. அபார வெற்றி; பந்துவீச்சில் லயன் அசத்தல் ராகுல் அரை சதம் வீண் வங்கதேசம் த்ரில் வெற்றி ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் அசத்தல்: மெஸ்சி மேஜிக்கால் காலிறுதியில் கால் பதித்தது அர்ஜென்டினா உலகக்கோப்பை கால்பந்து 2022: 2வது சுற்றில் இன்று நடைபெறும் ஆட்டங்கள்! சில்லி பாய்ன்ட்... தொடர் மழையால் அதிரும் பிரேசில்!: நீரில் அடித்து செல்லப்பட்ட வாகனங்கள்.. நிலச்சரிவில் சிக்கி 2 பேர் பலி..!! குஜராத் மாநிலம் சட்டசபை தேர்தலில் வாக்களிக்க ஆப்பிரிக்க மக்களுக்கென பிரத்யேக பூத்: உணவு, ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடிய மக்கள்..! புதுச்சேரியை அதிரவைக்கும் மக்களின் அழுகுரல்.. மணக்குள விநாயகர் கோயில் யானை உயிரிழப்புக்காக கதறும் பக்தர்கள்..!! சிற்பி திட்டத்தின் கீழ் மாணவ, மாணவியர்களுக்கான தேசப்பற்று குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி: அமைச்சர் அன்பில் மகேஷ் பங்கேற்பு
“மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்... அது முடிந்த பின்னாலும் பேச்சிருக்கும்” என்று ‘தெய்வத்தாய்’ படத்தில் வெளிப்படையாக ’கடமை’யைப் பற்றியும் உள்ளுக்குள் திமுகவை மறைத்தும் எம்ஜிஆர் (அப்போது எம்ஜிஆர் திமுகவில் இருந்தார்) பாடுவார். ஆனால் அவரது அபிமானிகளுக்கு கடமை எல்லாம் ரெண்டாம்பட்சம் தான். எம்ஜிஆர் என்ற மூன்றெழுத்துத்தான் அவர்களுக்கு மூச்சு. மறைந்து 35 ஆண்டுகள் நெருங்கினாலும்கூட இன்றும் அபிமானிகளின் மனதில் அவருக்கான இடம் அப்படியே தான் இருக்கிறது. அப்படியான அபிமானிகளில் ஒருவர் தான் கணேஷ் பாண்டியன். சாத்தான்குளத்தில் சொந்தமாக உணவகம் வைத்திருக்கும் கணேஷ் பாண்டியன், தனது உணவகத்தில் வயோதிகர்களுக்கு 40 ரூபாயில் மூன்று வேளை உணவு கொடுக்கிறார். இந்தக் காலத்தில் இப்படியும் ஒரு மனிதரா எனக் கேள்விப்பட்டு காமதேனுவுக்காக அவரைச் சந்தித்தோம். கடை வாசலில் இருக்கும் பதாகை அந்த உணவகத்தின் வாசலிலேயே ஃப்ளெக்‌ஸ் போர்டில் இருக்கும் எம்ஜிஆர் நம்மை கைகூப்பி சிரித்தபடி வரவேற்கிறார். கடை வாசலில் இருக்கும் இன்னொரு பதாகையில், ‘வசதிவாய்ப்புள்ள, உழைக்கும் திடம் உள்ள சாமானியர்களுக்கு மூன்றுநேர உணவு 130 ரூபாய்’ எனவும், ‘வயோதிகர்களுக்கு மூன்றுவேளை உணவு நாற்பது ரூபாய்’ எனவும்’ பளிச்சிடுகின்றன வாசகங்கள் கண் அறுவை சிகிச்சை செய்திருந்ததால் கறுப்புக் கண்ணாடி அணிந்து கடையில் உட்கார்ந்திருந்த கணேஷ் பாண்டியன் நம்மிடம் உற்சாகமாகப் பேசத் தொடங்கினார். ”சிறு வயதில் இருந்தே நான் எம்ஜிஆர் ரசிகன். இந்த சுற்றுவட்டாரத்துல எம்ஜிஆர் படம் எங்கே ரிலீஸானாலும் சைக்கிளை எடுத்துக்கொண்டு கிளம்பிவிடுவேன். அவர் கட்சி ஆரம்பித்தபோதும் கைக்காசை செலவு செய்து அவருக்காக வேலைசெய்தவர்களில் நானும் ஒருவன். அப்போது அதிமுகவிலும் இருந்தேன். அரசியலில் நல்ல உள்ளம் படைத்த மனிதர் என்றால் அது எம்ஜிஆர் மட்டும்தான். அவரது மறைவுக்குப் பின்பு அரசியல் தொடர்புகளையே முற்றாக அறுத்துக்கொண்டேன். அரசியல் இயக்கத்தில் இருப்பதைவிட எம்ஜிஆர் பக்தன் என்று சொல்வதே என் மனதுக்கு நிறைவைத் தருகிறது. எனக்கு மூன்று பிள்ளைகளுக்கும் திருமணம் முடித்துவிட்டேன். இரு மகன்கள் சென்னையில் வேலைசெய்கிறார்கள். வீட்டில் நானும், என் மனைவியும்தான் இருக்கிறோம். இது எங்களது சொந்தக்கடைதான். அதனால் வாடகைக் கொடுக்கவேண்டிய அவசியமும் இல்லை. எங்கள் இருவரின் வயிற்றை நிறைக்கும் அளவுக்கு வருமானம் கிடைத்தாலே போதும். எம்ஜிஆர் மறைந்துவிட்டாலும் அவரது வழியில் நம்மால் முடிந்த அளவுக்கு வறியவர்களுக்கு உதவ வேண்டும் என எனக்குள் சின்னதாய் ஒரு பொறி. அப்படி வந்ததுதான் முதியோர்களுக்கு தினசரி 40 ரூபாயில் மூன்றுவேளை உணவு வழங்கும் யோசனை” என்றார் கணேஷ் பாண்டியன். தன் உணவகத்தில் கணேஷ் பாண்டியன் கணேஷ் பாண்டியனுக்கு 67 வயதாகிறது. அதனால் சீனியர் சிட்டிசன்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை அவர் ஆழமாகவே உள்வாங்கி இருக்கிறார். அதனால் அந்த வயதுக்காரர்களை நோக்கி தனது கரிசனப் பார்வையைத் திருப்பி இருக்கிறார். முதியவர்களுக்கான நாற்பது ரூபாய் பேக்கேஜில் காலையில் 3 இட்லி, மதியம் சாப்பாடு, சாம்பார், ரசம், முட்டை, மாலையில் புரதச்சத்து நிறைந்த சுண்டல், இரவு 3 இட்லி அல்லது சப்பாத்தி ஆகியவை வழங்கப்படுகிறது. யாராவது, “பசிக்கிறது இன்னொரு இட்லி தாரேளா?” என்று கேட்டால் கூடுதல் காசு ஏதும் வாங்காமலேயே அவர்கள் கேட்டதைக் கொடுக்கிறார் கணேஷ் பாண்டியன். ஒரு வடையையும், ஆப்பத்தையும் எடுத்து வந்து நமக்கு சாப்பிடக் கொடுத்துவிட்டு தொடர்ந்து நம்மிடம் பேசிய கணேஷ் பாண்டியன், “நான் எம்ஜிஆர் ரசிகன் மட்டும் அல்ல. மூன்று பிள்ளைகளுக்கு பொறுப்புள்ள ஒரு தந்தையும்கூட. ஆரம்பத்தில் இந்த உணவகத்தை குடும்ப வருமானத்துக்காகத்தான் நடத்தினேன். இதை வைத்துத்தான் குழந்தைகளைப் படிக்க வைத்து, நல்ல நிலைக்குக் கொண்டு வந்தேன். இப்போது எனக்கு சம்பாத்தியம் முக்கியமில்லை. சம்பாதிக்கும் போதே அதை மக்கள் சேவைக்கு வாரி வழங்கியவர் எம்ஜிஆர். அவரின் ரசிகனான நானும் அவர் வழியில் இப்போது நடக்க ஆரம்பித்திருக்கிறேன். கடைக்கு வருபவர்களுக்கு மாத்திரமல்ல... சாத்தான்குளம் அரசு மருத்துவமனையின் உள்நோயாளிகளுக்கும் தினமும் நான் தான் மூன்றுவேளையும் சாப்பாடு கொடுக்கிறேன். அவர்களுக்கும் 40 ரூபாய் தான் கட்டணம். அவர்களுக்கு மட்டும் சாப்பாட்டோடு சேர்த்து 200 மிலி பால், ஒரு முட்டை, 50 கிராம் சுண்டல் இவையும் கொடுப்பேன். இதில், பால், முட்டை, சுண்டல் செலவுக்கே 20 ரூபாய் போய்விடும். மீதி 20 ரூபாய்க்கு மூன்று வேளை உணவு கொடுப்பதாகத்தான் புரிந்துகொள்ள வேண்டும். என்னைப் பொறுத்தவரை அதை வியாபாரமாக பார்க்கவில்லை. முழுக்க முழுக்க சேவையாகவே நினைக்கிறேன்” என புன்னகைக்கிறார். உணவகத்தில் வாடிக்கையாளர்கள் கடைக்கு வந்து சாப்பிட முடியாத வயோதிகர்களுக்கு தனது கடை ஊழியர்கள் மூலம் வீட்டுக்கே உணவை சப்ளை செய்கிறார் கணேஷ் பாண்டியன். கரோனா தொடக்கத்தில் பலரும் வேலையை இழந்து, ஊதிய வெட்டுக்கு உள்ளாகி, சொந்த ஊர்களுக்குத் திரும்பினர். அப்படியான காலத்தில் தான் இந்த 40 ரூபாய் உணவுத் திட்டத்தைத் தொடங்கி இருக்கிறார் கணேஷ் பாண்டியன். கடை வாட்ச் மேன்கள், ஏடிஎம் காவலாளிகள் என பலருக்கும் இவரின் சேவை அப்போது பசியாற்றியது. “பாவப்பட்ட மக்களுக்கு எம்ஜிஆர் இறுதி மூச்சு வரை இன்முகம் காட்டினார். அந்தளவுக்கு இல்லாவிட்டாலும் ஏதோ என்னால் ஆன இந்த சிறு சேவையைச் செய்கிறேன். கடந்த 15 ஆண்டுகளாக எங்கள் குடும்பத்தினர் தான் சுயேச்சையாக போட்டியிட்டு பேரூராட்சி கவுன்சிலர்களாக வென்று வருகிறோம். அதனால், யார் ஏழை, யார் வசதியானவர் என்பதெல்லாம் எங்களுக்குத் தெரியும். 40 ரூபாய் திட்டம் ஏழைகளுக்கு மட்டும் தான்” என்று சொன்ன கணேஷ் பாண்டியனிடம் “எம்ஜிஆரை நேரில் பார்த்திருக்கிறீர்களா?” என்று கேட்டோம். “ஏழெட்டு முறை பார்த்திருக்கிறேன்” என்று விழிகள் விரிய சொன்ன கணேஷ் பாண்டியன், ”எம்ஜிஆர் படத்திலேயே எனக்கு ரொம்பவும் பிடித்தது ‘நாடோடி மன்னன்’. கடையில் டிவி வைத்து, சிடியில் எப்போதுமே அவர் படம் ஓடிக்கொண்டிருக்கும். நூற்றுக்கும் அதிகமான எம்ஜிஆர் படங்களின் சிடிக்கள் வைத்திருக்கிறேன். எம்ஜிஆர் பாடல்களை ஒன்றுவிடாமல் சிடியில் பதிந்து வைத்திருக்கிறேன். எம்ஜிஆர் பெயரில் இப்படியொரு உணவகம் நடத்துவதைப் பார்த்துவிட்டு பலரும் நன்கொடை கொடுக்க முன்வருகிறார்கள். ஆனால் நான் ஏற்றுக்கொள்வதில்லை. காரணம், நன்கொடை வாங்கத் தொடங்கிவிட்டால் வாங்கும் பணத்திற்கு பதில்சொல்ல வேண்டிய பொறுப்பாளியும் ஆகிவிடுகிறோம். இது என் தலைவர், என் மனம்கவர் நாயகன் அமரர் எம்ஜிஆர் பெயரில் நான் செய்யும் என்னால் ஆன சேவை. அதை எனது வருமானத்தில் மட்டுமே கடைசிவரை செய்ய நினைக்கிறேன்” என்று முடித்தார்.
கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி முதல் பெரியவிளை வரையிலான கடல் பகுதி பச்சை நிறமாக வழக்கத்திற்கு மாறாக மாறி வரும் நிலையில் மீன்கள் உயிரிழக்க கூடும் என மீனவர்கள் அச்சமடைந்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம் மேற்கு அரபிக்கடல் பகுதியான மணவாளக்குறிச்சி முதல் பெரியவிளை வரையிலான கடல் பகுதியில் கடல் நீர் திடீரென பச்சை நிறமாக காட்சியளிக்கிறது. மேலும், வழக்கத்திற்கு மாறாக துர்நாற்றமும் வீசி வருகிறது. பொதுவாக கன்னியாகுமரி மாவட்டம் மேற்கு அரபிக்கடல், ஆழ்கடல் பகுதி என்பதால் மற்ற கடல் பகுதிகளை விட கடல் அலைகள் சற்று சீற்றமாகவே காணப்படும். நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள் தற்போது நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் இந்த பகுதியில் காற்றின் வேகமும் அதிகரித்து காற்றின் வேகத்தால் கடல் சீற்றத்துடன் காணப்பட்டு வருகிறது. இந்நிலையில், அந்த பகுதியில் எழும்பும் கடல் அலைகள் பச்சை நிறத்தில் காணப்படுவதோடு நுரையுடன் கரையில் மோதி வருகிறது. அத்துடன் குடியிருப்பு பகுதிகளில் துர்நாற்றமும் வீசி வருகிறது. இதனால் சிறிய வகை மீன்களும் உயிரிழக்க கூடும் என அச்சம் தெரிவித்துள்ள மீனவர்கள் பொதுவாக கடலில் உள்ள பூங்கோரை பாசிகளால் கடல் நீர் பச்சை நிறமாக காட்சியளிக்கும் என்றும் இதனால் சிறிய வகை மீன்களின் செதில்கள் பாதிப்படைந்து உயிரிழக்க கூடும் என கூறப்படுகிறது. ஆனால், அரபிக்கடல் போன்ற ஆழ்கடல் பகுதிகளில் இது போன்ற பாசிகள் வர அதிக வாய்ப்புகள் இல்லை. இருப்பினும், தற்போது அரபிக்கடல் பகுதியில் கடல் நீர் பச்சை நிறமாக மாற பூங்கோரை பாசிகள் தான் காரணமா? இல்லை வேறு ஏதும் ரசாயண கழிவுகள் காரணமா என தொரியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து மீன்வளத்துறையினர் ஆய்வு செய்ய வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள். Advertisement: SHARE Fishermengreen seaKanyakumariManavalakurichiPeriyavilaiunusual previous post இந்தியா – நியூசிலாந்து முதல் டி20 போட்டி இன்று தொடக்கம் – ஹர்திக் பாண்டியா தலைமையில் இந்திய அணி மோதல்
பொழிப்பு (மு வரதராசன்): சொல்லும்போது கேட்டவரைத் தன் வயப்படுத்தும் பண்புகளுடன், கேட்காதவரும் கேட்க விரும்புமாறு கூறப்படுவது சொல்வன்மையாகும். மணக்குடவர் உரை: வினாவினாரைப் பிணித்துக் கொள்ளுந் தகையவாய், வினாவாதாரும் விரும்புமாறு சொல்லுதல் சொல்லாவது. இது மேம்படக் கூறல்வேண்டு மென்றது. பரிமேலழகர் உரை: கேட்டார்ப் பிணிக்கும் தகை அவாய் - நட்பாய் ஏற்றுக் கொண்டாரைப் பின் வேறுபடாமல் பிணிக்கும் குணங்களை அவாவி; கேளாரும் வேட்ப மொழிவது - மற்றைப் பகையாய் ஏற்றுக்கொள்ளாதாரும் பின் அப்பகைமை ஒழிந்து நட்பினை விரும்பும் வண்ணம் சொல்லப்படுவதே; சொல்லாம் - அமைச்சர்க்குச் சொல்லாவது. (அக்குணங்களாவன : வழுவின்மை, சுருங்குதல், விளங்குதல், இனிதாதல், விழுப்பயன் தருதல் என்றிவை முதலாயின. அவற்றை அவாவுதலாவது: சொல்லுவான் குறித்தனவேயன்றி வேறு நுண்ணுணர்வுடையோர் கொள்பவற்றின்மேலும் நோக்குடைத்தாதல். 'அவாய்' என்னும் செய்தென்எச்சம் 'மொழிவது' என்னும் செயப்பாட்டு வினை கொண்டது. இனிக் 'கேட்டார்' 'கேளார்' என்பதற்கு 'நூல் கேட்டார் கேளாதார்' எனவும், 'வினவியார் வினவாதார்' எனவும் உரைப்பாரும் உளர். 'தகையவாய்' என்பதற்கு, எல்லாரும், 'தகுதியையுடையவாய்' என்று உரைத்தார்; அவர் அப்பன்மை, மொழிவது என்னும் ஒருமையோடு இயையாமை நோக்கிற்றிலர். இதனால் சொல்லினது இலக்கணம் கூறப்பட்டது.) கா சுப்பிரமணியம் பிள்ளை உரை: கேட்பவரது உள்ளத்தைக் கவர்ந்துகொள்ளுந் தன்மை உடையதாய்ப் பகைவருஞ் சொல்நயத்தை விரும்பும் வண்ணஞ் சொல்லப்படுவதே சிறந்த சொல் எனப்படும். பொருள்கோள் வரிஅமைப்பு: கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய் கேளாரும் வேட்ப மொழிவதாம் சொல். பதவுரை: கேட்டார்-சொல்கேட்டவர்; பிணிக்கும்-ஈர்க்கும், கட்டிப் போடும் எனவும் கொள்வர்; தகையவாய்-இயல்பினை யுடையவாய்; கேளாரும்-(அச்சொல்) கேட்காதபிறரும். பகைவர் எனவும் பொருள் உண்டு; வேட்ப-விரும்பும் வண்ணம்; மொழிவதாம்-சொல்லப்படுவதாம் அல்லது உரைக்கப்படுவதாம்; சொல்-சொல்வன்மை. கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்: இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்: மணக்குடவர்: வினாவினாரைப் பிணித்துக் கொள்ளுந் தகையவாய்; பரிப்பெருமாள்: வினாவினாரைப் பிணித்துக் கொள்ளுந் தகைமையவாய்; பரிப்பெருமாள் குறிப்புரை: கேட்டார் என்பதனைக் கேள்வியுடையார் எனினும் அமையும்; சொல்லக்கேட்டார் எனினும் அமையும்.கேளாமையும் அவ்வாறே கொள்ளப்படும். பரிதி: கேட்டவர் செவியும் மனமும் பிணிக்கவும்; காலிங்கர்: பலவகைப்பட்ட நூல்களையும் பாடம் ஓதி அவற்றின் பொருட்பயன் தெளியக் குரவரை வழிப்பட்டுக் கேட்ட குற்றமற்ற சான்றோரையும் தம்மாட்டுப் பிணித்துக் கொள்ளும் தகுதி உடையனுமாய்; பரிமேலழகர்: நட்பாய் ஏற்றுக் கொண்டாரைப் பின் வேறுபடாமல் பிணிக்கும் குணங்களை அவாவி; பரிமேலழகர் குறிப்புரை: அக்குணங்களாவன: வழுவின்மை, சுருங்குதல், விளங்குதல், இனிதாதல், விழுப்பயன் தருதல் என்றிவை முதலாயின. அவற்றை அவாவுதலாவது: சொல்லுவான் குறித்தனவேயன்றி வேறு நுண்ணுணர்வுடையோர் கொள்பவற்றின்மேலும் நோக்குடைத்தாதல். 'அவாய்' என்னும் செய்தென்எச்சம் 'மொழிவது' என்னும் செயப்பாட்டு வினை கொண்டது. 'வினாவினாரைப் பிணித்துக் கொள்ளுந் தகையவாய்' என்று மணக்குடவரும் பரிப்பெருமாளும் இப்பகுதிக்கு உரை நல்கினர். பரிப்பெருமாள் கேட்டார் என்பதற்குக் கூடுதலாக 'சொல்லக் கேட்டார்' எனவும் பொருள் கூறினார். 'கேட்டவர் செவியும் மனமும் பிணிக்கவும்' என்றார் பரிதி. 'தாம் கற்றதோடு குரவரை வழிபட்டுக் கேட்ட சான்றோரையும் பிணித்துக் கொள்ளும் தகுதி உடையனுமாய்' என்பது காலிங்கர் உரை. பரிமேலழகர் 'நண்பரைப் பிரிந்துவிடாமல் பிணிக்கும் குணங்களை அவாவி' என்றார். இவ்வாறு பல வேறுபட்ட பொருள்களைத் தந்தனர் தொல்லாசிரியர்கள். இன்றைய ஆசிரியர்கள் 'கேட்டாரைக் கவர்ந்து', 'பேசக் கேட்டவரைக் கவரும் வண்ணமும்', 'கேட்பவர்களை வசீகரிக்கக் கூடியதாகவும்', 'தாம் சொல்வதைக் கேட்டாரைத் தம் வயப்படுத்தும் இயல்பினைப் பெற்று' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர். சொற்களைக் கேட்டவர்களைத் தம் வயப்படுத்தும் இயல்பினதாய் என்பது இப்பகுதியின் பொருள். கேளாரும் வேட்ப மொழிவதாம் சொல்: . இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்: மணக்குடவர்: வினாவாதாரும் விரும்புமாறு சொல்லுதல் சொல்லாவது. மணக்குடவர் குறிப்புரை: இது மேம்படக் கூறல்வேண்டு மென்றது. பரிப்பெருமாள்: வினாவாதாரும் விரும்புமாறு சொல்லுதல் சொல்லாவது. பரிப்பெருமாள் குறிப்புரை: இது, நயம்படக் கூறவேண்டும் என்றது. பரிதி: கேளாதாரும் சத்துருக்களும் நாலு புலன்களும் விரும்பச் சொல்லுதல் சொல் என்றவாறு. காலிங்கர்: பின்னும் அங்ஙனம் பொருந்தக் கேளாது புவியிடைத் திரியும் புல்லறிவாளரும், யாமும் இவ்வாறு கேட்டு ஒன்று அறிய வேண்டும் என்னும் விருப்பம் உளதாகச் சொல்லுமது அமைச்சரது சொல்வன்மை என்றவாறு. பரிமேலழகர்: மற்றைப் பகையாய் ஏற்றுக்கொள்ளாதாரும் பின் அப்பகைமை ஒழிந்து நட்பினை விரும்பும் வண்ணம் சொல்லப்படுவதே அமைச்சர்க்குச் சொல்லாவது. பரிமேலழகர் குறிப்புரை: இனிக் 'கேட்டார்' 'கேளார்' என்பதற்கு 'நூல் கேட்டார் கேளாதார்' எனவும், 'வினவியார் வினவாதார்' எனவும் உரைப்பாரும் உளர். 'தகையவாய்' என்பதற்கு, எல்லாரும், 'தகுதியையுடையவாய்' என்று உரைத்தார்; அவர் அப்பன்மை, மொழிவது என்னும் ஒருமையோடு இயையாமை நோக்கிற்றிலர். இதனால் சொல்லினது இலக்கணம் கூறப்பட்டது. கேட்டார் என்பதற்குப் போலவே கேளாரும் என்றதற்கும், வினாவாதாரும்(மணக்குடவர், பரிப்பெருமாள்), பேச்சைக் கேளாதவர்களும் (பரிப்பெருமாள், பரிதி), பாடம் கேளாதவரும் (காலிங்கர்), பகையாய் ஏற்றுக் கொள்ளாதாரும் (பரிமேலழகர்) விரும்புமாறு சொல்வதே சொல் என்று வேறு வேறு பொருளில் பழம் ஆசிரியர்கள் உரை கூறினர். பிற்பகுதிக்கு 'விரும்புமாறு சொல்லுதல் சொல்லாவது' என்று அனைவரும் பொருள் கூறுவர். இன்றைய ஆசிரியர்கள் 'கேளாதாரையும் கேட்கத் தூண்டுவதே சொல்வன்மை', 'கேளாதவரைக் கேட்க விரும்பும் வண்ணமும் பேசுவதே சொல்லாற்றலாகும்', 'பகைவர்களும் கேட்டு மகிழ்ச்சி கொள்ளக் கூடியதாகவும் பேசுவதுதான் சொல்வன்மை எனப்படுவது', 'கேட்காமலிருப்போரும் எப்பொழுது கேட்போம் என்று விரும்பும் வண்ணம் சொல்வதே சொல்வன்மை' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர். கேளாதவரையும் கேட்க வைக்கத் தூண்டுவதே சொல்வன்மை என்பது இப்பகுதியின் பொருள். நிறையுரை: சொற்களைக் கேட்டாரைத் தம் வயப்படுத்தும் இயல்பினவாய், கேளாரையும் கேட்க வைக்கத் தூண்டுவதே சொல்வன்மை என்பது பாடலின் பொருள். கேட்டார், கேளார் யாவர்? சொற்களைக் கேட்டவர் தம் உள்ளத்தை வயப்படுத்துவதோடு அவ்வாறு கேட்க இயலாதவரும் கேட்க விரும்புமாறு சொல்வதே சொல்வன்மை ஆகும். சிறந்த சொல் எது என்று உணர்த்த, இரு தன்மைகளைக் குறிக்கிறார் வள்ளுவர். அவை கேட்டுக் கொண்டிருப்பாரைத் தன்பால் ஈர்த்து முழுக்கவனமும் செலுத்த வைக்கும் தன்மை; மற்றும் சொற்கேளாதவர்களும் அவற்றில் விருப்பம் கொள்ள அல்லது கேட்டு விரும்பிப் பின்பற்றத் தூண்டக்கூடியதாகவுள்ள சொற்திறமை என்பன. மேடைப் பேச்சு, கலந்துரையாடல், மேலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் முதலான இடங்களில் உரைக்கப்படுவனவற்றைக் குறிப்பதாக இக்குறளைக் கொள்ளலாம். சொல்வன்மை வாய்க்கப்பெற்ற ஒருவன் ஒன்றைச் சொல்லும்போது, அங்கு இருந்து கேட்டோரெல்லாரும் அவன் சொல்லில் ஈடுபட்டுப் பிணிப்புற்றிருப்பர்; அவன் பேசக் கேளாதாரும் நன்றாகப் பேசினான் என்று கேட்டார்ச் சொல்லக் கேட்டுத் தாமும் அவனது சொல் கேட்க விரும்புவது இயல்பாகும். இதுவே சொல்வன்மை எனப்படுவது. சொல்வன்மை என்ற தொடர்க்கு பொருள் வரையறை கூறும் சுவை மிகும் கவிதையாக இப்பாடல் அமைகிறது. வள்ளுவர் இங்கு கூறிய சொல்லின் இயல்புகளும் கருத்துரைக்கும் பாங்கும் அவர்தம் படைப்பிலேயே பொதிந்து கிடப்பதை நாம் அறிவோம். ஆக்கம் அளிக்கவல்ல கருத்துக்களை உரைப்போரின் சொல்வன்மை பற்றிக் குறிக்க வந்தது இது. சொல்வன்மை என்பது பொதுவாக எல்லோருக்கும் இருக்கவேண்டிய குணமே. சிறப்பு வகையில் தலைமைப் பொறுப்பிலுள்ளவர்க்குத் தன் கருத்தைக் கேட்பவர்களைத் தன் பக்கம் ஈர்த்துப் பிணிக்கும் தன்மை உடையதாயும் கேட்க வாய்ப்பற்றவர்களை விரும்பிக் கேட்க வைக்கக்கூடியதாய் சொல்திறன் இருத்தல் வேண்டும். கேட்டார், கேளார் யாவர்? கேட்டார் என்பதற்கு வினவினார், சொல்லக் கேட்டார் அல்லது கேள்வியுடையர், தாம் கற்றதோடு குரவரை வழிபட்டுக் கேட்ட சான்றோர், நட்பாய் ஏற்றுக் கொண்டார், கேட்பவர் நேரில் பேசக்கேட்டவர், காதில் கேட்கிறவர்கள் எனவும் கேளார் என்பதற்கு அவற்றிற்கு மறுதலையாக, வினவாதார், கேள்வியுடையரல்லர் அல்லது சொல்லக் கேளார், சத்ருக்களும் கேளாதவரும், பல நூல்களைப்படித்துப் பொருட்பயனை ஆசிரியனிடம் வழிபட்டுக் கேளாதவர்களாய்ப் புவியிடைத்திரியும் புல்லறிவாளர்கள், பகையாய் ஏற்றுக்கொள்ளாதார் (தம் சொல்லை உடன்படாதவர்), தமது அரசியல் சமயக் கோட்பாட்டை எதிர்ப்பவர் எனப் பலவாறாகப் பொருள் கூறினர். கேட்டார் என்றதற்கு நேரில் கேட்டவர் என்பது பொருள். அப்படிக் கேட்டவர் பேசுபவரின் சொற்சுவையை நயந்து கேட்டு பிணிப்புண்டு போவார். கேளார் என்ற சொல்லுக்கு அவையிலிருந்து கேட்காத பிறர், பகைவர் என இரு பொருள்கள் உண்டு. 'இவ்விரண்டுள் பகைமை காரணமாக எதிலும் குறைகாணும் பகைவரும் விரும்புவர் என்பதிலேயே பொருட்சிறப்பிருத்தல் காண்க' என்பார் தண்டபாணி தேசிகர். இது மாற்றாரையும் மனக்கொள்ள வைத்தல் என்பதைக் குறிக்கிறது. பகைவர்கள் மனம் மாறுபட்டு அவர் சொல்பவை அனைத்தும் சரியே என்று ஏற்கும் மனப்பக்குவத்தைப் பெறும் வகையில் கருத்துக்களைத் தக்க சான்றுகளுடன் நிறுவுதல் வேண்டும். அதனால் அவர் பகைவர்களும் பகைமை உணர்வைத் தவிர்த்து நட்புக் கொண்டாடும் நிலையை உருவாக்குவர். என்னென்ன வகையில் பேசினால் நண்பர்களாகவே இருப்பர் என்று எண்ணி ஆய்ந்து நண்பர்மாட்டுப் பேசுதலும், பகைவர் மாட்டுப் பேசுங்கால் அவர்களை நண்பராக்கும் வண்ணம் அல்லது பகைமிகா வண்ணம் செய்யும் வழிமுறைகளை ஆய்ந்து அதற்கேற்பப் பேசுதலும் வேண்டும் என்றும் விளக்குவர். 'கேட்டார்,' 'கேளார்' என்பவற்றிற்கு, வினாவினார் வினாவாதார் என்று மணக்குடவரும் பரிப்பெருமாளும் பொருள் கூறினர். கேட்டார் என்பதனைக் கேள்வியுடையார் அதாவது சொல்லக் கேட்டார் எனினும் அமையும் என்றும் உரைப்பர் பரிப்பெருமாள். வினவுதலும் விடையிறுத்தலும் ஆசிரியர் மாணாக்கர் இடையே நிகழ்வது. ஐயத்தோடு வினவுவானைத் தெளிவாக்கவும், உணர்ந்தவற்றை நுண்பொருள் அவாவத்தூண்டும் வண்ணம் ஆசிரியர் விடையிறுக்க வேண்டும். அடுத்துக் காலிங்கர் கூறுவது நூல் கேட்டார், கேளார் என்பதாகும். நூலறிவு இல்லார்க்கு மேலோட்டமாகவே சொல்லி அவரைக் ஈர்த்துவிட முடியும். சொல்வன்மை அங்குத் தேவையற்றதாகி விடுகிறது. இவற்றைவிட 'கேட்டார்,' 'கேளார்' என்ற சொற்களுக்கு நேரே பேசக் கேட்டவர், கேட்காத பிறர் அல்லது பகைவர் என்ற பொருள் சிறக்கும். கேட்டார் என்ற சொல் சொல்லக் கேட்டவர் என்ற பொருளும் கேளார் என்ற சொல் 'அவையிலிருந்து கேட்காத பிறர் அல்லது பகைவர்' என்ற பொருளும் தரும். சொற்களைக் கேட்டாரைத் தம் வயப்படுத்தும் இயல்பினதாய், கேளாரையும் கேட்க வைக்கத் தூண்டுவதே சொல்வன்மை என்பது இக்குறட்கருத்து.
பொகவந்தலாவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மோரா தோட்ட மேற்பிரிவிலுள்ள வீடொன்றில் நான்கு பிள்ளைகளின் தாயொருவர் (வயது 36) திடீரென இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கடந்த திங்கட்கிழமை (12) இடம்பெற்ற இந்தச் சம்பவம் தொடர்பில் தகவலறிந்து அவ்வீட்டுக்குச் சென்ற பொலிஸார் வீட்டிலிருந்த இரத்தகறைபடிந்த ஆடைகள் சிலவற்றை மீட்டனர். அத்துடன் ஆடையொன்றால் சுற்றப்பட்டிருந்த சுமார் 7 மாதங்கள் மட்டுமே மதிக்கத்தக்க பெண் சிசுவொன்றின் சடலத்தையும் மீட்டனர். வீட்டுக்குள் வைத்து மேற்கொள்ளப்பட்ட சட்டவிரோதமான கருக்கலைப்புக் காரணமாகவே இவ்விரு உயிரிழப்புகளும் இடம்பெற்றிருப்பதாக பொகவந்தலாவை பொலிஸார் தெரிவித்தனர். இதனையடுத்து மரணமடைந்த பெண்ணுடன் அடிக்கடி தொடர்பைப் பேணிவந்த 35 வயதான பெண்ணொருவரை சந்தேகத்தின் பேரில் பொலிஸார் கைது செய்தனர். தடயவியல் பொலிஸார் சம்பவ இடத்தில் விசாரணைகளை மேற்கொண்டதுடன் ஹட்டன் மாவட்ட நீதிமன்ற நீதவான் முன்னிலையில் மரண விசாரணைகளும் இடம்பெற்றன. பின்னர் பிரேத பரிசோதனைக்காக சடலம்இ டிக்கோயா-கிளங்கன் மாவட்ட வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டது. அதன்பின்னர் இந்தச் சம்பவம் குறித்த பின்னணியை யாரும் தேடியதாக இல்லை. இலங்கையில் நாளொன்றுக்கு 600 -1000 வரையிலான சட்டவிரோத கருக்கலைப்பு இடம் பெறுவதாகக் கூறப்படுகின்றது. இது தாய்மாருக்கு பெரும் ஆபத்தாகவும் அமைகின்றது.
திருக்குர்ஆனை நாமே அருளினோம்; அதை நாமே பாதுகாப்போம் என்று அல்லாஹ் கூறுவதாக 15:9 வசனம் கூறுகிறது. திருக்குர்ஆன் பாதுகாக்கப்பட்டது குறித்து 143வது குறிப்பில் விளக்கியுள்ளோம். இதைச் சரியாகப் புரிந்து கொள்ளாத மேற்கத்திய உலகமும், கிறித்தவ மிஷனரிகளும் குர்ஆனுடைய எழுத்துக்களில் உள்ள சில மாற்றங்களை எடுத்துக் காட்டி, குர்ஆன் பாதுகாக்கப்படவில்லை என்று பிரச்சாரம் செய்து வருகின்றனர். குர்ஆனை நாமே பாதுகாப்போம் என்று அல்லாஹ் சொல்லி இருப்பதால் அதில் எழுத்துப் பிழைகள் இருக்கக் கூடாது. எழுத்துப் பிழைகள் இருந்தால் குர்ஆன் பாதுகாக்கப்படவில்லை என்று ஆகும். குர்ஆனை ஆய்வு செய்யும்போது பல சொற்கள் பிழையாக எழுதப்பட்டுள்ளதைக் காண்கிறோம். குர்ஆன் பாதுகாக்கப்படவில்லை என்பதற்கு இதுவே ஆதாரம் என்று அவர்கள் கூறுகின்றனர். திருக்குர்ஆனின் எழுத்துக்களில் நெடில் தேவையில்லாத இடங்களில் நெடில்குறி எழுதப்பட்டுள்ளது. ஒரு எழுத்துக்குப் பதிலாக அதற்கு நெருக்கமான உச்சரிப்புடைய வேறொரு எழுத்து இடம் பெற்றுள்ளது. இது போன்றவற்றை எடுத்துக் காட்டி, குர்ஆனில் பிழை உள்ளது, குர்ஆன் பாதுகாக்கப்படவில்லை என்று கூறுகின்றனர். இத்தகைய தவறான பிரச்சாரத்திற்கு இவ்வசனம் (29:49) தெளிவாகப் பதிலளிக்கின்றது. திருக்குர்ஆனை அல்லாஹ் எழுதி, புத்தகமாகவோ, ஏடுகளாகவோ கொடுத்திருந்தால் அதில் எழுத்துப் பிழைகள் இருக்கக் கூடாது என்பது சரி தான். அல்லது ஒலி வடிவில் அருளப்பட்டதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தம் கைப்பட எழுதி, அதில் பிழை ஏற்பட்டு இருந்தால் அப்போது அதை விமர்சனம் செய்யலாம். ஆனால் திருக்குர்ஆன் எழுத்து வடிவமாக அருளப்படவில்லை. ஒலி வடிவில் அதாவது ஓசை வடிவில் தான் குர்ஆன் அருளப்பட்டது. ஒவ்வொரு வசனத்தையும் ஜிப்ரீல் எனும் வானவர் வந்து கூறுவார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அதைக் கேட்டு மனனம் செய்து கொள்வார்கள். தமது தோழர்களையும் மனனம் செய்ய வைப்பார்கள். பின்னர், பாதுகாப்புக் காரணத்திற்காக தமது தோழர்களில் எழுதத் தெரிந்தவர்களை அழைத்து, தமக்கு அருளப்பட்ட வசனங்களை எழுதச் செய்வார்கள். எழுத்து வடிவில் ஆக்கியது மனிதர்களின் செயல் என்பதால் அதில் பிழை ஏற்படுவது இறைவேதத்தில் ஏற்படும் பிழையாக ஆகாது. எனவே தான் 'கல்வியாளர்களின் உள்ளங்களில் திருக்குர்ஆன் பாதுகாக்கப்பட்டுள்ளது' என்று இவ்வசனம் கூறுகின்றது. உதாரணமாக, 37:68 வசனத்தில் 'லா இலல் ஜஹீம்' என்று எழுதப்பட்டுள்ளது. இந்த இடத்தில் 'ல இலல் ஜஹீம்' என்று குறிலாகத்தான் எழுதப்பட்டிருக்க வேண்டும். இந்த இடத்தில் நெடிலுக்கான குறி எழுதப்பட்டிருந்தாலும், உலக முஸ்லிம்கள் அனைவரும் இதை, 'ல இலல் ஜஹீம்' என்று குறிலாகத்தான் வாசிக்கிறார்கள். இப்படி மனிதர்கள் பிழையாக எழுதிய எல்லா இடங்களையும் எல்லா முஸ்லிம்களும் சரியாகவே வாசிக்கிறார்கள். வாழையடி வாழியாக முஸ்லிம்கள் தமது உள்ளங்களில் திருக்குர்ஆனை மனனம் செய்து பாதுகாத்து வருவதால் எழுத்துப் பிழைகளையும் வென்று குர்ஆன் பாதுகாக்கப்பட்டு வருகிறது. குர்ஆனுடைய ஓசையும் உச்சரிப்பும் பாதுகாக்கப்பட்டுள்ளது என்பதற்கு இதுவே சான்று. இது குறித்து, முன்னுரையில் இடம் பெற்றுள்ள 'திருக்குர்ஆன் தொகுக்கப்பட்ட வரலாறு' பகுதியில் 'எழுத்துப் பிழைகள்' என்ற தலைப்பில் மிக விரிவாக விளக்கியுள்ளோம்.
திருமணத்திற்கு வரன் தேடுகிறீர்களா? - உங்களுக்கு பிடித்த வரன்களை இலவசமாக தொடர்புகொள்ள மணமேடையில் இன்றே பதிவு செய்யுங்கள் - REGISTER NOW சோழப் பேரரசின் சாதனை மற்றும் தொழில்நுட்பத்தை நாம் சரிவர உள்வாங்கவில்லை! இந்திய தொழிலதிபர்களில் சமூகவலைதளின் செம ஆக்டிவாக செயல்பட்டு கொண்டிருப்பவர் மகேந்திரா குழும தலைவர் ஆனந்த் மகேந்திரா. அவரது சோசியல் பகிர்வுகள் அனைத்தும் எப்பொழுதும் வைரலாகி கொண்டிருக்கும். புதிய கண்டுபிடிப்புகளை அடையாளம் கண்டு வாழ்த்துவார். சில சமயங்களில் அந்த வடிவமைத்தலுக்கு அங்கீகாரம் அளித்து அதை தன் நிறுவனத்திற்காக வாங்கிக் கொள்வார். இப்பொழுது தஞ்சை பெரிய கோவில் கட்டிடக்கலையின் புகழை பற்றி வீடியோ ஒன்றை பகிர்ந்து உள்ளார். இன்டீரியர் டிசைனர் ஸ்ரவண்யா ராவ் பிட்டி என்பவர் தஞ்சை பெரிய கோவிலுக்கு நேரடியாக சென்று அதன் கட்டிடக்கலை குறித்து விளக்கம் அளிக்கும் வீடியோவை ஆனந்த் மகேந்திரா பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் "11ஆம் நூற்றாண்டில் கட்டிய சோழர் கோவிலான பிரகதீஸ்வரர் கோயில் நாம் உள்ளோம். ராஜராஜசோழன் கட்டிய கோவில் இது. யூனெஸ்கோ உலக பாரம்பரிய சின்னமாக இந்த கோவில் விளங்குகிறது. எந்த வித இயந்திரமும் இல்லாத அந்த காலத்தில் இந்த கோயிலை ஆறு கிலோமீட்டர் சாய்வு தளம் அமைத்து கோயில் கோபுரம் கட்டப்பட்டுள்ளது. படம் வரைந்து அதன் அடிப்படையில் கோயில் கட்டப்பட்டுள்ளது. பேரண்டத்தின் இடது வலது குறித்து இந்த கோயில் பேசுகிறது. ஆறு பூதங்களை தாங்கி நிற்கிறது" என ஸ்வரண்யா வீடியோ பதிவில் தெரிவித்து இருந்தார். இந்த வீடியோ பதிவை பகிர்ந்த ஆனந்த் மகேந்திரா "ஸ்வரண்யா வழங்கியுள்ள அற்புதமான தகவல் அடங்கிய வீடியோ கிளிப் இது. சோழப்பேரரசின் சாதனை மற்றும் தொழில்நுட்ப ரீதியான முன்னேற்றத்தை நாம் சரிவர உள்வாங்கவில்லை என நினைக்கிறேன். இதன் வரலாற்று சிறப்புமிக்க நம் உலகிற்கு உரக்கச் சொல்லவில்லை" என தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவு பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. பலரும் வெவ்வேறு வகையான கருத்துக்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal
?என் வாழ்க்கை சாதாரணமாகச் சென்று கொண்டிருக்கிறது. சின்னஞ்சிறு விஷயத்திற்கு கூட கடன் வாங்கி வாழ்வை நடத்தும் சூழல் உள்ளது. திருமண வாழ்வும் பிரச்னையாக உள்ளது. ஏதேனும், யோக காலம் அமைந்து முன்னேறுவேனா? - சங்கரன், விருதுநகர். நீங்கள் புனர்பூசம் நட்சத்திரம், மிதுனம் ராசி, மிதுன லக்னத்தில் பிறந்திருக்கிறீர்கள். உங்கள் வாழ்க்கையை மாற்றும் வல்லமை பெற்றவர்களாக புதன், சுக்கிரன், சனி போன்றோர் வருகின்றனர். உங்களின் ஜாதகத்தில் எத்தனை தோஷங்கள் இருந்தாலும் சரிதான். இந்த மூன்று கிரகங்கள் நினைத்தால் எல்லாமுமே சந்தோஷமாக மாறும்.உங்களின் லக்னாதிபதியான புதன், சத்ரு ஸ்தானாதிபதியான செவ்வாயோடு சேர்ந்திருப்பதால் கொஞ்சம் போராட்டமான, எதற்கெடுத்தாலும் கை ஏந்தும் நிலையில் இருக்கிறீர்கள். இதனாலேயே எதிர்மறை எண்ணங்களால் சூழப்பட்டிருக்கிறீர்கள். சின்னச் சின்ன விஷயத்திற்கெல்லாம் குழந்தைபோல கோபப்படுகிறீர்கள். திருமண வாழ்வும் நிம்மதியற்று இருக்கின்றது. உணவில் பச்சைப் பயறு, சுண்டைக்காய், பீர்க்கங்காய், வெண்டைக்காய் அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள். அடுத்ததாக சனி பகவான் உங்களுக்கு பாக்கியாதிபதியாக அதாவது ஒன்பதாம் இடத்திற்குரியவராக வருகிறார். அதே சமயம் அஷ்டமாதிபதியாகவும் இருக்கிறார். இதனால் அலைச்சலை கொடுத்து ஆதாயத்தை அதிகரிக்கச் செய்கிறார். தாமதப்படுத்தினாலும் தரமானதைத் தருவார். உங்களின் சொந்த ஜாதகத்தில் சனி பாக்கிய ஸ்தானத்தில் அமர்ந்திருக்கின்றார். அதனால் கவலை வேண்டாம். வரும் 2023ம் வருடம் மார்ச் மாதத்திலிருந்தே நல்ல நேரம் தொடங்கி விடும். உங்களுக்கு எந்த தசை நடந்தாலும் சரிதான் அதில் சனி புக்தியோ, அந்தரமோ வந்தால் பலன்களை அள்ளி வீசுவார். பூசம், அனுஷம், உத்திரட்டாதி, 8, 17, 26, சனிக்கிழமை போன்றவை உங்களுக்கு எப்போதும் அதிர்ஷ்டத்தை தரும். உங்கள் ஜாதகத்தில் சனியை பலப் படுத்த முதியோர்களுக்கு உதவுங்கள். சாலை விபத்தில் சிக்கிக் கொள்வோருக்கு இயன்ற உதவிகளை செய்யுங்கள். வேலையின்றி தவிப்பவர்களுக்கு வேலை வாங்கிக் கொடுங்கள். மாற்றுத் திறனாளிகளுக்கு வேலை கொடுங்கள். பதவி, பூர்வ புண்ணியானாம் என்பார்கள். அது நன்றாக இருப்பதற்கு பூர்வ புண்ணிய ஸ்தானம் மிகவும் முக்கியமாகும். உங்களுக்கு எப்படியாவது நல்லது செய்ய வேண்டும் என்று துடிப்பவர்களில் சுக்கிரனும் ஒருவர். உங்களுக்கு சுக்கிரனும் நன்றாக இருப்பதால் இப்போதைக்கு பிரச்னை இருப்பதாக தெரிந்தாலும் போகப்போக சரியாகும். கீழேயுள்ள அபிராமி அந்தாதி பாடலை தினமும் 11 முறை கூறுங்கள். திங்கட் பசுவின் மணம் நாறும் சீறடி சென்னிவைக்கஎங்கட் கொருதவம் எய்தியவா! எண் இறந்த விண்ணோர்தங்கட்கும் இந்தத் தவம் எய்து மோதரங் கக்கடலுள்வெங்கட்பணி அணை மேல்துயில்கூரும் விழுப்பொருளே ?நான் திரைத்துறையில் பணியாற்றிக் கொண்டிருக்கின்றேன். தற்போது ஒரு T.V. தொடர் தயாரித்து, இயக்கி உள்ளேன். கடன் உள்ளது. தொழிலில் வெற்றி பெற்று கடனை அடைப்பேனா? - விஜய்ராஜ், சென்னை. நீங்கள் கிருத்திகை நட்சத்திரம், ரிஷப ராசி. துலாம் லக்னத்தில் பிறந்திருக்கிறீர்கள். துலாம் லக்னம் என்பது சுக்கிரனுக்கு எழுச்சி வீடு. கூட்டம், மேடை, எழுத்து, திரைப்படம் என்று எது கிடைத்தாலும் வெளுத்து வாங்குவீர்கள். உங்கள் ஜாதகத்தில் எந்த கிரகங்கள் உங்களை மறந்தாலும் சனி, புதன், சந்திரன் மூவரும் மறக்காமல் நல்லதையே செய்வார்கள். மேலும் அவர் சுகாதிபதியும், பூர்வபுண்ணியாதிபதியும் ஆவார். உங்கள் ஜாதகத்திலுள்ள சனியை பலப்படுத்த எள் உருண்டையை சாப்பிடுங்கள். பறவைகளில் புறா உள்ளிட்ட இன்னபிற பறவைகளுக்கு தானியங்கள் வையுங்கள். மாற்றுத் திறனாளிகளை தேடிச்சென்று உதவுங்கள். உங்களுக்கு இப்போதுதான் குரு தசை முடிந்திருக்கிறது. துலா லக்னத்திற்கு குரு மூன்றுக்கும் ஆறுக்கும் உடையவன். அதுமட்டுமல்லாது குரு லாப ஸ்தானத்தில் பதினோராம் இடத்தில் அமர்ந்திருக்கின்றார். நீங்கள் லாபம் எதிர்பார்த்து ஒரு காரியத்தை செய்திருந்தாலும், ஆறுக்குரியவராக குரு இருப்பதால் கடனை கொண்டு வந்து கொடுத்திருக்கிறது. இப்போது குரு தசை முடிந்து இப்போதுதான், சனி தசை தொடங்கி, சுய புக்தி நடந்து கொண்டிருக்கின்றது. சனியும் உங்களுக்கு ஏழாம் இடத்தில் அமர்ந்து நீசமடைந்திருக்கின்றார். ஆனாலும், உங்களின் யோகாதிபதியே சனி பகவான்தான். மேலும், சனியை குருபகவான் ஒன்பதாம் பார்வையாக பார்க்கின்றார். அதனால், சனி கொஞ்சம் சுபத்துவம் அடைகின்றார். இப்போது கோசாரத்தில் சனி நான்காம் இடத்தில் அமர்ந்திருக்கிறார். மேலும், சுக்கிரனை பார்க்கிறார். அதுமட்டுமல்லாது கோசாரத்திலேயே குரு பகவான் மீனத்தில் அமர்ந்திருக்கிறார். கடன்களை முதலில் அடைக்க பாருங்கள். தேய்பிறை அஷ்டமியில் பைரவர் சந்நதிக்குச் சென்று தீபமேற்றி வர கடன்கள் அடையத் தொடங்கும். சனி தசை, சுயபுக்தி 2024ல் முடிவுறும். 2023 பாதி தாண்டும்போதே உங்களின் வெற்றிக் கணக்கை தொடங்குவீர்கள். சுக்கிரன் உங்களுக்கு நல்லதே செய்வார். அவர்தான் திரைத்துறை மற்றும் சின்னத்திரையில் உங்களை மிளிரச் செய்பவர். அதனால், வரும் 2023 மார்ச் மாதம் நிகழப் போகின்ற சனிப் பெயர்ச்சி உங்களுக்கு சாதகமாகவே வரும். ஏனெனில், நான்குக்கு உரிய சனி பூர்வ புண்ணியத்திற்கு வரும்போது நிச்சயம் சாதிக்க தொடங்குவீர்கள். மந்தனான சனி கொஞ்சம் மெதுவாகத்தான் செயல்படுவான். அதனால் கொஞ்சம் பல்லை கடித்துக் கொண்டு பொறுத்துக் கொள்ளுங்கள். மேலும், மீன ராசியிலிருந்து குரு பகவான் வெளியே வந்து பிறந்த சுய ஜாதகத்திலுள்ள சனியை தாண்டிச் செல்ல வேண்டும். மேலே சொன்ன காலமே மிகச் சரியாக இருக்கும். உங்களுக்கு அரசின் ஆதரவு உண்டு. ஏனெனில், பத்திலே அமர்ந்த சூரியன் அதைச் செய்வார். நீங்கள் மீனவர்கள் வசிக்கும் பகுதிக்குச் சென்று அவர்களுக்கு ஏதேனும் உதவி செய்ய முடியுமா என்று பாருங்கள். குறைந்த பட்சம் அன்னதானம் செய்யுங்கள். அந்த எண்ணிக்கை எட்டாக இருந்தால் மிகவும் நல்லது. அதுமட்டுமல்லாது சனிக் கிழமையன்று விரதம் இருந்து நவக்கிரகத்தில் சனிக்கு விளக்கு போடுங்கள். அனுமன் சாலீஸா எனும் வடமொழி நூலை கேட்கலாம். படிக்கலாம். அப்படியில்லையெனில் சுந்தர காண்டத்தை எடுத்துக் கொண்டு ஏதேனும் சில அத்தியாயங்களை படியுங்கள். 12ல் கேது கன்னி வீட்டில் அமர்ந்திருப்பதால் தனிமையில் இருக்கும்போதெல்லாம் மகாகணபதி மந்திரத்தை யாரிடமேனும் தீட்சையாக பெற்றுக் கொண்டு ஜபியுங்கள். அது உங்களை ஆன்மிகத்தில் தீர்க்கமாக கொண்டு செல்லும். உங்களின் அனைத்து தடைகளையும் அது தவிடு பொடியாக்கும். மேலும் செய்திகள் பிரச்னைகள் தீர்க்கும் பரிகாரங்கள் பிரச்னைகள் பரிகாரங்கள் பிரச்னைகள் தீர்க்கும் பரிகாரங்கள் பிரச்னைகள் தீர்க்கும் பரிகாரங்கள் பிரச்னைகள் தீர்க்கும் பரிகாரங்கள் பிரச்னைகள் தீர்க்கும் பரிகாரங்கள் மருத்துவம் முதுமையில் ஆனந்தம்! ஆயுளைக் காக்கும் ஆயுர்வேதம்! தொடங்கிய இடத்தில் மீண்டும் ஆட்டம் காட்டும் கொரோனா!: சீனாவில் ஒரே நாளில் 31,000க்கும் அதிகமானோருக்கு பாதிப்பு..!! நாம் ஒன்றாக நடக்கும்போது அடிகள் வலுவாக இருக்கும்; இந்திய ஒற்றுமை பயணத்தில் இணைந்த அண்ணன் - தங்கை..!! இருளில் தவிக்கும் உக்ரைன் மக்கள்: மின் உற்பத்தி நிலையங்களை குறி வைத்து ரஷ்யா தாக்குதல்..! சென்னை கொளத்தூரில் 1.27 கோடியில் இறகுப்பந்து விளையாட்டு அரங்கை திறந்து வைத்து வீரர்களுடன் உற்சாகமாக விளையாடிய முதல்வர் மு.க.ஸ்டாலின்..!!
அமரர் கல்கியின் பகழ் பெற்ற “பொன்னியின் செல்வன்” நாவலை அடிப்படையாகக் கொண்டு, இந்தியாவின் மிக முக்கிய டைரக்டர்களில் ஒருவரான மணிரத்னம் இயக்கியுள்ளார். சோழப் பேரரசின் அரியணைக்கு வரும் தொடர் ஆபத்துகளும், வீரர்களுக்கும் சதிகாரர்களுக்கும் இடையில் நிகழும் போராட்டங்களும், சாதனைகளும், நகைச்சுவையும், தியாகங்களும் கொண்ட விறுவிறுப்பான கதையான “பொன்னியின் செல்வன்” கதையை திரையில் காண பல கோடி ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். ராஜராஜ சோழன் ஈழத்தில் ஏன் படையெடுத்தார்? தன் தந்தை சுந்தர சோழர் மரணிப்பதை அடுத்து, சிற்றப்பா ஆதித்த கரிகாலனுக்கு அரியணை உரிமை வர, இளவரசர் ராஜ ராஜ சோழன் இலங்கைக்கு செல்கிறார், அப்போதும் இலங்கையில் சோழனின் படையெடுப்பால் மக்கள் வாழ்வு நிலைகுலைந்து, பஞ்சம் - பட்டினி உள்ளிட்ட போர் விளைவுகள் ஏற்பட்டன. அப்போது, தமிழ்நாட்டின் சோழ நிலத்தில் இருந்து எண்ணெய் வித்துக்கள், உணவு பொருட்களை கொண்டு இலங்கைக்கு கொண்டுவர உத்தரவிடுகிறார் ராஜராஜன். அப்போது அதை தடுத்து வாதம் பண்ணிய பழுவேட்டரையர், ஒரு நாட்டில் போர் தொடுத்தால், அந்த நாட்டில் இருந்துதான் நாம் செல்வங்களை கொண்டுவரவேண்டுமே தவிர, நாம் நம் செல்வங்களை அங்கு கொண்டு செல்ல கூடாது என்று கூறுகிறார். அப்போது, தமிழ்நாட்டின் சோழ நிலத்தில் இருந்து எண்ணெய் வித்துக்கள், உணவு பொருட்களை கொண்டு இலங்கைக்கு கொண்டுவர உத்தரவிடுகிறார் ராஜராஜன். அப்போது அதை தடுத்து வாதம் பண்ணிய பழுவேட்டரையர், ஒரு நாட்டில் போர் தொடுத்தால், அந்த நாட்டில் இருந்துதான் நாம் செல்வங்களை கொண்டுவரவேண்டுமே தவிர, நாம் நம் செல்வங்களை அங்கு கொண்டு செல்ல கூடாது என்று கூறுகிறார். பொன்னியின் செல்வன் கதையில் எந்த இடத்திலும் ராஜராஜன் என்று குறிப்பிடவில்லை. ஏனென்றால் பொன்னியின் செல்வன் நடைபெறும் காலத்தில் அருள்மொழிவர்மன் இளைஞராக இருக்கிறார். அவர் அரச பதவி ஏற்ற பிறகுதான் அவர் ராஜராஜனாகிறார். அதனாலேயே அவர் நாவலின் நாயகன் பொன்னியின் செல்வனாக வலம் வருகிறார்.” என்று பகிர்ந்துகொண்டார்.
🛕 தமிழ்நாட்டில் திருவாரூர் மாவட்டத்தில உள்ள கும்பகோணம் என்ற ஊரின் அருகில் இருக்கும் பிலாவடி எனும் கிராமத்தின் அருகில் உள்ள சித்தாடி என்ற தலத்தில் எழுந்தருளி உள்ளாள் அன்னை ஸ்ரீ காத்தாயி அம்மன். சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்பாக கட்டப்பட்டது இந்த ஆலயம். முடிகொண்டான் ஆற்றங்கரையில் தென் பகுதியில் உள்ள அற்புதமான சோலை ஒன்றில் அமைந்துள்ள இந்த ஆலயத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள் பாலித்து வரும் அன்னை ஸ்ரீ காத்தாயி அம்மனும் பராசக்தியின் ஒரு அம்சமே. ஆதனாலோ என்னவோ இந்த ஆலயத்தை காத்தாயி அம்மன் என்றும், காத்யாயினி அம்மன் என்றும் பலரும் நினைத்து வருகின்றனர். இந்த ஆலயம் வள்ளி என்ற காத்தாயி அம்மனின் ஆலயமே. 🛕 காத்தாயி அம்மன் மற்றும் காத்யாயினி (பச்சை வாழி அம்மன்) அம்மன் குடி கொண்டுள்ள இந்த ஆலயம் முக்கியமாக வள்ளிக் கடவுளான காத்தாயின் பெருமைக்காகவே ஏற்பட்டது. இங்கு வந்து அமர்ந்து கொண்டுள்ள காத்யாயினி (பச்சை வாழி அம்மன்) அம்மனுக்கும் இங்கு வந்ததிற்கான கதைகளை உள்ளடக்கிக் கொண்டுள்ளது இந்த வள்ளி தேவியின் காத்தாயி ஆலயம். அன்னை பராசக்தி பல்வேறு யுகங்களில், பல்வேறு ரூபங்களிலும் காட்சி தந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வந்து உள்ளாள். நாம் எந்த ரூபத்தில் அவ]ள வழி பட நினைக்கின்றோமோ அந்த ரூபத்திலேயே நமக்கு காட்சி தந்து, ஆசிகளும் தந்து, வளமான வாழ்க்கைப் பெற நமக்கு வழி காட்டிக் கொண்டு இருக்கிறாள் என்பதே உண்மை. அப்படி எடுத்த ரூபங்களில் ஒன்றாக சித்தாடியில் அவள் ஸ்ரீ காத்தாயி அம்மனாக அவதரித்து நம்மைக் காத்தருளி வருகிறாள் என்பதே உண்மை. 🛕 தஞ்சை ஸரஸ்வதி மகாலில் உள்ள ஆவணங்கள் மூலமும், திருவிடைமருதூர் ஸ்ரீ மகாலிங்கஸ்வாமி ஆலயத்திலும் காணப்படும் கல்வெட்டுக்கள் மூலமும், கி.பி 1577 ஆம் ஆண்டில் தஞ்சை நாயக்க மன்னனாக இருந்த செவ்வப்ப நாயக்கர் என்பவர் இந்த ஆலயம் அமைந்துள்ள ஆவணம், சித்தாடி என்ற கிராமத்தை துறவி ஒருவருக்குத் தானமாகக் கொடுத்து இருந்தார் எனத் தெரிய வருகின்றது. வள்ளி என்ற காத்தாயி அம்மன் எழுந்தருளிய வரலாறு 🛕 அங்கு எப்படி வள்ளி, காத்தாயி என்ற பெயரில் எழுந்தருளினாள்? அந்தக் கதை மிகவும் சுவாரஸ்யமானது. தேவலோகத்தில் திருமால் ஒரு முறை அனைவரோடும் அமர்ந்தபடி மிகவும் மகிழ்சியாக பேசிக் கொண்டு இருந்த பொழுது பேச்சின் இடையே அவர் ஆனந்தக் கண்ணீர் விட, கன்னத்தில் இருந்து வழிந்து விழுந்த அந்த நீர்த் திவலைகளில் இருந்து இரண்டு பெண் குழந்தைகள் பிறந்தனர். முதலில் பிறந்த பெண் அமுதவல்லி எனவும், இரண்டாவதாகப் பிறந்தவள் சுந்தரவல்லி என்ற பெயர்களையும் பெற்றனர். வளர்ந்து பெரியவர்களான இருவரும் ஒன்றாகவே பிறந்து விட்டதினால், என்றும் ஒன்றாகவே தாம் இருக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டு இருவருக்கும் ஒரே கணவனாக முருகப் பெருமானே அமைய வேண்டும் என விரும்பினர். 🛕 அவரை இருவரும் சேர்ந்து திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்ள, தர்பைப் புற்களால் சூழப்பட்டு இருந்த சரவணப் பொய்கை நதிக் கரைக்குச் சென்று அங்கே அமர்ந்தபடி கடும் தவம் செய்யலாயினர். அதனால் மனம் மகிழ்ந்துப் போன முருகப் பெருமானும் அவர்கள் முன் தோன்றி தான் சூரனைக் கொல்வதற்காக அவதரித்து உள்ளதால், அந்த நேரத்தில் இச்சா சக்தி, கிரியா சக்திகளின் அவதாரங்களாகப் பிறந்து உள்ள அவர்களை திருமணம் செய்து கொள்ள முடியாது என்றும், சூரனை வதம் செய்த பின் தானே வந்து அவர்களை திருமணம் செய்து கொள்வதாக வாக்குத் தந்த பின், தான் திரும்பி வரும்வரை மூத்தவள் தேவலோகத்திலும், இளையவள் பூவுலகிலும் சென்று தங்கி இருக்கும்படி அறிவுறுத்தினார். 🛕 முருகன் கூறியபடியே அமுதவல்லி ஒரு குழந்தை உருவை எடுத்துக் கொண்டு சூரனுக்கு பயந்து கொண்டு ஒளிந்து கொண்டிருந்த இந்திரனிடம் சென்று தன்னை மகளாக ஏற்றுக் கொள்ளுமாறு வேண்டினாள். அவள் வேண்டுகோளை நிராகரிக்க விரும்பாத இந்திரனும் அவளை தன் பட்டத்து யானையான ஐராவதனிடம் கொடுத்து அவளை பாதுகாத்து வரும்படிக் கூறினார். தேவலோகத்தில் இருந்த பட்டத்து யானையிடம் அவள் வளர்க்கப்பட்டு வந்ததினால் அவள் தெய்வானை என்ற பெயரைப் பெற்றாள். சுந்தரவல்லி பூலோகத்தில் பிறவி எடுக்கச் சென்றாள் அதே சமயத்தில் இந்திரனிடம் சாபம் பெற்றதின் காரணமாக பூலோகத்தில் ஒரு முனிவராகப் பிறந்திருந்த ஸ்ரீமான் நாராயணண் தவம் செய்து கொண்டு இருந்தார். அப்போது லட்சுமி தேவி மான் உருவம் எடுத்துக்கொண்டு அங்கு சென்று தன் கணவரான அந்த முனிவரை நோக்கியபடி நின்றிருக்க, கண்களை திறந்த முனிவரும் அவளை நோக்க அதனால் அவள் கர்பமுற்றாள். 🛕 அதுவே தக்க தருமணம் என்று எண்ணிய சுந்தரவல்லி மான் உருவில் இருந்து கொண்டு கர்பமடைந்திருந்த லட்சுமி தேவியின் வயிற்றில் சென்று அவள் கருவில் கலந்து விட்டாள். “ரிஷி கர்பம் ராத் தங்காது” என்பார்கள். கர்பமடைந்த லட்சுமி தேவிக்கு அங்கேயே குழந்தைப் பிறந்தது. பிறந்த குழந்தை மானாக அல்ல, மனித உரு எடுத்துப் பிறந்தது. அந்தக் குழந்தைப் பிறந்ததும் திருமால் சாப விமோசனம் பெற்று விட, மான் உருவில் இருந்த லட்சுமியும் சாப விமோசனம் பெற்ற திருமாலும் பிறந்திருந்த பெண் குழந்தையை ஒரு வள்ளிச் செடி பயிரிடப்பட்டிருந்த பள்ளத்தில் விட்டு விட்டு வைகுண்டத்திற்குத் திரும்பிச் சென்று விட்டனர். அந்தக் குழந்தை பிறந்தது வள்ளிக் குழி என்ற இடம். Kathayee Amman History in Tamil 🛕 அங்கு குழியில் கிடந்த அந்தக் குழந்தையை பார்த்த நம்பிராஜன் என்ற வேடன் அதை தானே எடுத்துச் சென்று தனது மகளாக வளர்த்தான். குழந்தை வள்ளிக் கிழங்குகள் பயிரிடப்பட்டிருந்த குழியில் பிறந்ததினால் அவளுக்கு வள்ளி எனப் பெயர் சூட்டினான். வள்ளி பருவம் அடைந்ததும் வேடர் குலப் பழக்கத்தின்படி அவளை பரணில் அமர்ந்து கொண்டு வயலுக்கு காவல் புரியும் பணியில் அனுப்பினர். வள்ளியும் அங்கு வயலில் சென்று தினைப்புனத்தை பாதுகாக்கும் பணியில் இருந்ததினால் நாளடைவில் காத்த ஆயி என்ற அடைமொழிப் பெயரில் இருந்த அவள் காத்தாயியாக மாறினாள். 🛕 அந்த சமயத்தில்தான் அந்த வயலுக்கு வந்த முருகப் பெருமான் அவளுடன் நட்பு கொண்டு தன் மனதிக்கு இசைந்தவளாக அவளை மாற்றிக் கொண்டார். அப்படி சென்று கொண்டிருந்த வாழ்க்கையில் ஒரு முறை தன்னுடைய சேனாதிபதி ஒருவனை தனது துணைக்கு அழைத்துக் கொண்டு தன் காதலியான குறத்தி வள்ளியை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து அவளைக் காண்பதற்காக வள்ளி மலைக்கு வள்ளியைக் காணச் சென்றார். அவர் அங்கு செல்வதை அறிந்து கொண்ட அவருடைய சகோதரர் வினாயகப் பெருமானும், அவருடைய பெற்றோர்களும் தங்களுடன் சப்த ரிஷிகளையும் நாரதப் பெருமானையும் அழைத்துக் கொண்டு முருகனுக்குத் தெரியாமல் அவரைப் பின் தொடர்ந்து போய், முருகனின் திருமணத் திட்டத்தை அறிந்து கொண்டனர். அதன் பின் அரங்கேறிய பல்வேறு நிகழ்சிகளின் பின் முருகன்-வள்ளித் திருமணமும் அனைவரது ஆசிகளுடன் நடந்தேறியது. 🛕 அங்கிருந்த சித்தர்களில் ஒருவரான ஸ்ரீ கஞ்சமலை சித்தர் என்பவரிடம் அந்த இடத்தில் வள்ளிக்கு ஒரு ஆலயம் அமைத்துக் கொடுக்கும்படி சிவ பெருமான் கேட்டுக் கொண்டார். ஸ்ரீ கஞ்சமலை சித்தரும் அதற்கு இணங்கிய பின், தாங்கள் சித்தர்களாக இருப்பினும் தங்களை எவரும் வழிபடுவது இல்லை என்ற தங்களுடைய மனக் குறையைக் கூறிவிட்டு, அவரிடம் ஒரு வேண்டுகோள் விடுத்தார். தங்கள் தவ வலிமைக் கொண்டு அங்கு ஒரு ஆலயத்தை மானிடர்கள் மூலமே நிறுவ முடியும் என்றும் அப்படி எழும்பும் ஆலயத்தில் பார்வதிக்கு பிரதான சன்னிதி அமைத்து, அதன் வலப்புறத்தில் ஸ்ரீ முருகனுக்கும், இடப்புறத்தில் வள்ளி என்ற காத்தாயிக்கும் சன்னதிகள் அமைத்த பின், அவர்களுடன் அங்கு வந்திருந்த இருந்த நாரத முனிவர், விஸ்வாமித்திரர் மற்றும் சப்த ரிஷிகளுக்கும் முக்கியத்துவம் தரும் வகையில் அவர்களுக்கும் அந்த ஆலயவளாகத்தில் இடம் கொடுக்க அனுமதி தர வேண்டும் என்று வேண்டினார். அதை ஏற்றுக் கொண்ட சிவபெருமானும், அவர்களுடன் கஞ்சமலை சித்தரின் பெயரிலேயே தனக்கும் அங்கு ஒரு இடம் அமையட்டும் என அருள் பாலித்துச் சென்றார். சிவ–பார்வதி தரிசனம் பெற்ற கஞ்சமலை சித்தர் சற்றும் தாமதிக்கவில்லை. 🛕 உடனேயே அந்த நேரத்தில் தூரத்தில் போய்க்கொண்டு இருந்த ஆசாரமிக்க அந்தணர் ஒருவரை அவர் கண்களில் படாத உருவில் தன்னை மாற்றி வைத்துக் கொண்டு “மகனே இங்கு வா..” எனக் கூவி அழைத்தார். குரல் வந்த திசையை நோக்கி அந்தணரும் வந்தார், ஆனால் குரல் வந்த இடத்தில் எவருமே தென்படவில்லை. எவருமே காணாததினால் திடுக்கிட்டுப் போய் திரும்பிப் போகத் துவங்கியவரிடம் ‘மகனே நீ பயப்படாதே. இந்த ஊர் எல்லையை பாதுகாக்க நான் இங்கு வந்துள்ளேன். நீயும் இங்கு வந்து தினமும் என்னை பூஜித்து வழிபடலாம்’ என்று மீண்டும் கேட்டது குரல். அதைக் கேட்டு புல்லரித்துப் போய் நின்று கொண்டிருந்த அவர் அந்த அரச மரத்தின் அடியில் ஒரு இடத்தில் குங்குமம் கொட்டிக் கிடந்ததைக் கண்டார். அங்கிருந்துதான் அசிரீரியின் குரல் வந்தது. அது தெய்வத்தின் குரலே என உணர்ந்தார். தெய்வ சக்தியான அம்பாளே அங்கு தோன்றி உள்ளாள் என்பதைப் புரிந்து கொண்டார். 🛕 பிறகு என்ன? அந்த இடத்திலேயே அந்த குங்குமக் குவியலுக்கு பூஜைகள் செய்து வழிபடத் துவங்கினார். அதன் பின் அவருக்கு ஒரு குழப்பம் எழுந்தது. குங்குமத்திற்கு எப்படி அர்ச்சனை செய்வது? அங்கு எழுந்தருளி உள்ள சக்தி தேவியை சூரிய ஒளியில் இருந்தும் காக்க வேண்டும். அப்படி எண்ணியவர் பூக்கள் மட்டுமே போட்டு அதை பூஜிக்கத் துவங்கினார். காலை வேளைகளில் தன் கைகளையே அதற்கு குடை பிடித்திருப்பது போல வைத்திருந்து வெய்யில் அதன் மீது விழாமல் பார்த்துக் கொண்டார். அந்த நிலை தொடர்ந்து கொண்டிருந்த பொழுது ஒரு நாள் மீண்டும் அசரீரீ குரல் கொடுத்தது “அந்தணா, சூரியனால் தோன்றும் வெப்பத்தை தடுக்க கைகளை குடை போல் வைத்திருந்து காவல் காக்கிறாய். ஆனால் மழை காலத்தில் எப்படி என்னை பாதுகாக்கப் போகிறாய்?” 🛕 கேள்வி நியாயம்தானே.. மனம் பதபதைக்க சிந்தனையில் ஆழ்ந்தார். முடிவாக ஒரு களிமண் பொம்மையிலான பெரிய உருவம் செய்து அதற்கு கீழே அந்த குங்குமத்தை வைத்துவிட்டுப் அதையே பூஜிக்கலானார். களிமண் பொம்மை எத்தனை காலத்திற்கு குங்குமத்தை மழையில் இருந்து காப்பாற்றும்? நானே ஒரு அழியும் உடலை பெற்று இருக்கையில் இந்த களிமண் பொம்மையும் எப்படி காலம் காலமாக நிலைத்து இருக்க முடியும் என்ற ஆத்ம ஞானம் மனதில் தோன்றியது. அதற்கு ஒரு வழி கூறுமாறு அம்பாளை மனதில் நிறுத்தி தியானத்தில் அமர்ந்தார். மெல்ல மெல்ல அவள் உருவத்தை தன் மனக் கண்களில் பார்த்துக் கொண்டு தியானித்தவர் தன் கண்களின் உள்ளே ஒரு உருவம் உருவாவதைக் கண்டார். முதலில் சில கட்டங்கள் எழுந்தன, கூடிக் கொண்டே போன அந்தக் கட்டங்கள் இணைந்து முக்கோணங்கள் ஆயின. எத்தனைக் கோணங்கள் என எண்ணினார். மொத்தம் தெரிந்தது 43 முக்கோணங்கள். அதாவது ஏழு நிலைகளில் அது அமைந்து இருப்பதைக் கண்டார். 🛕 அடுத்து காத்தாயி தோன்றினாள் அவளுடைய அற்புதமான சொரூபத்தையும் அழகையும் கண்டு ஆனந்தம் அடைந்து மயங்கி நின்றார். காட்சி தந்தவள் கூறினாள் “இந்தத் தினைப்புனத்தைக் காக்க வந்தவள் நான். ஆதியில் மூவுலகைக் காத்து நின்றதும் நானே. உன் விருப்பப்படி நானே மூன்று சுற்றுக்கள் கொண்ட முடியுடன் ஒரு உருவச் சிலையாக இந்த பக்கத்தில் உள்ள ஆற்றில் வருவேன். என்னை வெளியில் எடுத்து பிரதிஷ்டை செய்து வணங்கி வா” மனத்திரையில் கண்ட காட்சிகள் காற்று போல கரைந்து போனது. மறு நாள் காலை சூரியன் உதிக்கும் வெகு நேரத்திற்கு முன்பே ஆற்றங்கரைக்கு வந்து நின்றார் அந்த அந்தணர். அவர் மனக் கண்களில் கூறியபடி மும்முடிச்சுக்கள் கொண்ட காட்சி தென்படுமா என்று ஆற்றை நோக்கிப் பார்த்த வண்ணம் நின்று கொண்டிருந்தவர் திடீர் என எங்கிருந்தோ ஆற்று நீரில் வந்த முடியைக் கண்டார். தாமதிக்கவில்லை. ஆற்றில் இறங்கித் தேடியவருக்கு ஆற்று மணலில் புதைந்து இருந்த சிலை கிடைத்தது. ஆனந்தக் கூத்தாடிய வண்ணம் அதைத் தூக்கிக் கொண்டு நடந்தார். 🛕 அரச மரத்தடியில் மண் பொம்மையின் அடியில் வைத்திருந்த குங்குமத்தை எடுத்துக் கொண்டு போனார். தான் மேற்கே அமைத்து இருந்த சிறு மேடை ஒன்றின் மீது அதைக் கொட்டி, அதன் மீது அந்த சிலையை பிரதிஷ்டை செய்தார். அவர் மனதில் அப்பொழுது எதுவுமே தோன்றவில்லை. அந்த குங்கும் உருவில் இருந்திருந்த காத்தாயியை மழையில் இருந்து காத்து நின்றதே களிமண் பொம்மை, அதையும் எடுத்து வந்து அங்கு வைத்திட வேண்டும் எனத் தோன்றவில்லை. நினைத்த காரியம் முடிந்து விட்டதே என எண்ணியவர், மரத்தடியை சுத்தம் செய்வது போல் நினைத்து அந்த களிமண் பொம்மையை எடுத்து ஆற்று நீரில் போட்டு விட்டார். அதுவும் கரைந்து விட்டது. இப்படித்தான் சில சமயங்களில் நம்மையும் அறியாமல் நாம் பிழைகள் செய்து விடுகின்றோம். மறு நாள் காலைப் பொழுது. அங்கு வந்து எப்பொழுதும் போல ‘அம்மா…அம்மா’ என குரல் கொடுத்தார். காத்தாயி பதில் தரவில்லை. மீண்டும் மீண்டும் அழைத்தார் பதில் இல்லை. மாறாக அசரீரி ஒன்றின் குரல் கேட்டது. ‘இங்கு இருப்பது நான் அல்ல’. ‘ஏன், நான் என்ன குறையை செய்தேன்?’ என்று பதறியபடி அவர் கேட்க.. ‘நான் குடி கொண்டிருந்த பொம்மையை நீயோ ஆற்றிலே விட்டு விட்டாய். அதனால் நானும் ஆற்றோடு போய் விட்டேன்’. 🛕 அவர் மண்டையில் எவரோ சம்மட்டியால் அடித்தது போல இருந்தது. தான் அறியாமல் செய்து விட்ட தவறை உணர்ந்தார். ஆனால் என்ன செய்ய முடியும்? காலம் கடந்து விட்டது, களிமண் பொம்மையும் ஆற்றில் கரைந்து விட்டது. இனி அதை எப்படி திரும்பக் கொண்டு வர முடியும்? 🛕 ‘அம்மா, தெரியாமல் தவறு செய்து விட்டேன். இந்தப் பாவி செய்த தவறை மன்னித்து விடம்மா. நீ திரும்பவும் இங்கு வர வேண்டும். இல்லை எனில் இந்தச் சிலையை நான் இடுப்போடு கட்டிக் கொண்டு இந்த ஆற்றில் குதித்து என்னையும் இதில் கரைத்துக் கொள்வேன்’ என சிலை முன் நின்றபடி கதறினார். 🛕 ‘என் மனதாற உன்னை ஆராதித்தேன். இரு கரங்கள் போதாதென்ற அளவில் புஷபங்கள் போட்டு பூசித்தேன். ஆனாலும் அலை பாய்ந்த மனதாலும், நான் அறியாமலும் என்னை அந்த ஆற்றுக்கு அழைத்துச் செல்ல இந்த கால்கள் உதவியதாலும் முதலில் இந்தக் கால்களை முறித்துப் போடுகிறேன்’ vஎன அழுது கொண்டு தோப்புக்கரணம் போடத் துவங்கினார். தோப்புக்கரணம் போடப் போட கால்களில் இருந்த சதைகளும, நரம்புகளும் பிய்ந்து இரத்தம் கொட்டியது. என்னதான் இருந்தாலும் ஒரு தாயினால் தன் குழந்தைப் படும் அவஸ்தையை பார்த்துக் கொண்டு சும்மா இருக்க முடியாது. தன்னை பல காலம் பூஜித்த பக்தன், தன்னை இந்த இடத்தில் பாதுகாத்து நின்றவன் அல்லவா? 🛕 காத்தாயி கருணைக் கொண்டு மீண்டும் அவர் முன் தோன்றி ஆசி கூறினாள். 🛕 ‘மகனே உன் பக்தியை மெச்சினேன். அறியாமல் செய்து விட்ட உன் பிழையையும் மன்னித்தேன். உனக்கு நான் ஞானத்தைத் தரும் வகையில் முதலில் வந்ததினால் ஞானாம்பிகையாகவும், உன் மனதில் இடம் கொண்டு அந்த பீடத்தில் அமர்ந்ததால் ஒட்டிக் கொண்டவள் என்ற ஒட்டியாண ருபியாகவும், உனக்கு கருணைக் காட்டியதால் கருணைமயியாகவும் இங்கு அமர்ந்து கொண்டு இரட்சிப்பேன்’ என்றாள். 🛕 அவருக்குக் காட்சி தந்தது ‘இனி இங்கே அமர்ந்து கொண்டு காத்தருளுவேன்’ என்று அவருக்குக் கூறியபடி மீண்டும் அந்த சிலைக்குள் தன் சக்தியை செலுத்தி ஒளி ஏற்றினாள். 🛕 முதலில் குங்குமம், பிறகு மண் பொம்மை, கடைசியாக சிலை வடிவங்களில் அவதரித்தவள் ஞானாம்பிகையாக, ஒட்டியாண ருபிணியாக, கருணாமூர்த்தியாக மூன்று குணங்களும் கொண்டு, அதை பிரதிபலிக்கும் வகையில் கொண்டையில் மூன்று சுற்றுக்களும் கொண்டு அங்கு வந்து நின்றhள். முதலும், நடுவும், முடிவுமாக அனைத்தும் அவளே என அவனாகி, அவளாகி அனைத்துமாகி ஆகி நின்றாள் அந்த அன்னை. மறுநாள் தனக்கு பூஜைகளை செய்ய வந்தவரிடம் தான் நம்பிராஜனிடம் வளர்ந்ததினால் நம்பினோர்களை கை விடாமலும், பரண் மீதேறி பறவைகளிடம் இருந்து தினைகளை காத்ததினால் மக்களுடைய ஆசாபாசங்களை துரத்துவேன் என்றும் தன்னை மணமுடித்த பொழுது வந்திருந்த முருகப் பெருமானின் பெற்றோர்களான பார்வதி, சிவன் மற்றும, தன் மெய்காப்பாளனாக இருந்த வீரன், அவர்களுடன் வந்திருந்த ஜடா முனி, நாரதர், அகஸ்தியர், மற்றும் சப்த ரிஷிகளான குகை முனி வஷிஷ்டர், வேத முனி வாமதேவர், வாழு முனி விஸ்வாமித்திரர், பூ முனி கௌதமர், முத்து முனி அத்தரி, கரு முனி பிருகு, செம் முனி பாரத்துவாஜர், போன்றவர்களுக்கும் உருவச் சிலைகள் அமைத்து ஆலயத்தை உருவாக்கும்படிக் கூறினாள். 🛕 அத்தரி, கரு முனி, பிருகு, செம்முனி பாரத்துவாஜர், போன்றவர்களுக்கும் உருவச் சிலைகள் அமைத்து ஆலயத்தை உருவாக்கும்படிக் கூறினாள். இந்த ஊரில் தினைப்புவனம் காக்க வந்ததினால் காத்த ஆயியான காத்தாயி எனவும், சித்தர்கள் பலர் நிறைந்து இருந்ததினால் சித்தர்கள் ஆடிய பூமி என்ற சித்தாடியாகவும், மூன்று முடிகளுடன் ஆற்றில் தோன்றியதினால் ஆற்றின் பெயர் முடி கொண்டான் எனவும் பெயர் பெற்று பெருமைப்பட்டன. கஞ்சமலை சித்தரின் விருப்பப்படி ஆலயத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ள பல்வேறு முனிவர்களின் சிலைகள் விஸ்வாமித்திரர், பூ முனி கௌதமர், முத்து முனி அத்தரி, கரு முனி பிருகு, செம் முனி பாரத்துவாஜர், போன்றவர்களுக்கும் உருவச் சிலைகள் அமைத்து ஆலயத்தை உருவாக்கும்படிக் கூறினாள். வள்ளி என்ற காத்தாயி அம்மனின் திருவிளையாடல்கள் 🛕 வள்ளி என்ற காத்தாயி அம்மனின் திருவிளையாடல்கள் 400 ஆண்டுகளுக்கும் முற்பட்ட காலத்தில் மகனே, இங்கு வா! என்றழைத்து தனக்கு ஆலயத்தினை அமைத்துக் கொண்ட வள்ளி என்ற காத்தாயியின் சிறப்பினைப் பற்றியும், அந்த அம்பாள் செய்த திருவிளையாடல்களையும் கூற இன்றளவும் இயலாது. பலரும் பல விதமான அற்புதங்களை கண்டு களித்து, அனுபவ பூர்வமாக ஆனந்தமும், தங்களது வாழ்க்கையில் வளமும் பெற்றுள்ளனர் என்றாலும் சில முக்கியமான சம்பவங்களை கூறுவது மிவும் அவசியம். இந்த சம்பவம் நடந்தது பல ஆண்டுகளுக்கு முன்னர்தான். ஒரு நாள் இரவு வேளை. சுமார் எட்டு மணி அளவில் அந்தணர் ஒருவர் அந்த ஆலயம் இருந்த பக்கமாக நடந்து சென்றுகொண்டு இருந்தார். களைப்பு மேலிட தங்க இடம் எதுவும் இருக்குமா என அங்கும் இங்கும் பார்த்தவர் கண்களில் தெரிந்த இந்த ஆலயம் ஒரு வீடு போல அவருக்குக் காட்சி அளித்தது. அந்த இடத்தை நோக்கிச் சென்றவர் எதிரில் ஒரு பெண்மணி வந்து நின்றாள். 🛕 அவளிடம் தான் காளை மாடுகள் வாங்க பணத்துடன் சென்று கொண்டு இருப்பதாகவும், பணத்தை பத்திரமாக வைத்துக் கொண்டு அந்த இரவு மட்டும் படுத்திருக்க ஒரு இடம் கிடைக்குமா எனவும் கேட்டார். அவள் தன் வீட்டிற்கு அவரை அழைத்துச் சென்று சாப்பிட உணவு தந்த பின், தன்னிடம் அந்தப் பணத்தைத் தந்து விட்டு, தன் பிள்ளை காட்டும் இடத்தில் தங்கி இரவு பொழுதைக் கழித்த பின் காலை எழுந்து வந்து தன்னிடம் இருந்து பணத்தைப் பெற்றுக் கொண்டு போகும்படியும் கூறினாள். அவள் கூறியயபடியே அவளிடம் தன் பணப் பையைக் கொடுத்த பின் அவளுடைய மகன் வழிக்குத் துணையாக இருக்க ஓலையினால் ஆன எரியும் விளக்கு ஒளியை கையில் ஏந்திக் கொண்டு நடத்தி அழைத்துச் சென்று சித்தாடி கிராமத்தில் இருந்த ஒரு அக்ராஹாரத்தில் இருந்த ஒரு வீட்டுத் திண்ணையைக் காட்டி அங்கேயே படுத்து உறங்குமாறுக் கூறிவிட்டுச் சென்றான். மறுநாள் காலை உறங்கி எழந்த பின் துதிகள் பாடினார். 🛕 அந்த துதி சப்தத்தைக் கேட்டு வெளியில் வந்த அந்த வீட்டுக்காரர் அவரை யார் என விசாரிக்க, முன் இரவில் நடந்த விவரத்தை அந்த அந்தணர் கூற அதைக் கேட்ட அந்த வீட்டுக்காரர் பெரும் சிரிப்பை உதிர்த்தபடி “தனக்கு தெரிந்த வகையில் அந்த சுற்று வட்டாரத்தில் எந்த ஒரு வீடுமே அப்படிக் கிடையாது” என்றும், பணம் கொண்டு வந்ததாக ஏன் ஒரு பொய்யை காலையில் கூறுகிறார் என கிண்டல் செய்ய அந்தணர் பதறினார். அப்படியானால் தான் கொடுத்த பணம் எவரிடம் இருக்கும் என பயந்து அழத் துவங்கினார். அதைக் கேட்ட வீட்டுக்காரரும் ‘சரி, நீ கூறுவது உண்மையா எனப் பார்க்கின்றேன், நீ வந்த வழியைக் கூறு’ என்று அவரும் அந்த அந்தணர் நடந்து வந்ததாகக் கூறிய வழியை பின்பற்றியபடி அந்த வீட்டைத் தேடிப் போனார்கள். ஆனால் அங்கு எந்த வீடும் இல்லை. ஒரு ஆலயம் மட்டுமே இருந்தது. அதே நேரத்தில் அங்கு வந்த அர்சகர் அந்த ஆலயத்தை திறந்ததும் அவரிடம் நடந்ததைக் அந்த அந்தணர் கூறினார். அவரும் ஆச்சரியப்பட்டு அதெப்படி இங்கு ஒரு வீடு இருந்ததாகக் கூறுகிறீர்கள். வேறு எங்காவது பணத்தை வைத்துவிட்டு வந்து நீங்கள் ஒருவேளை கனவு கண்டு உள்ளீர்களோ என்னவோ. சரி உள்ளே சென்று அம்பிகையிடம் வேண்டிக் கொள்ளலாம், என அவர்களை உள்ளே அழைத்துச் சென்றவர் திடுக்கிட்டார். 🛕 மூவரும் அதிர்ச்சி அடையும் வகையில் அந்த அந்தணர் கூறிய அடையாளங்களுடனான பணப் பை அம்மனின் காலடியில் இருந்தது. அந்தப் பையை எடுத்து அதில் இருந்த தொகையை எண்ணிப் பார்க்கவும் அவர் கூறிய வித்திலேயே அனைத்துப் பணமும் இருந்தது. அன்னையின் கருணையை எண்ணி கண்ணீர் விட்டு அழுதார் அந்த அந்தணர். அன்னையின் சன்னிதியில் விழுந்து புலம்பினார்…அன்னையே என் பணத்தைப் பாதுகாதத்ததும் அல்லாமல் என் மானத்தையும் காப்பாற்றினாயே, உனக்கு நான் என்ன கைமாறு செய்ய முடியும் அம்மா.. என அழுது புலம்பினார். மாடு வாங்க எடுத்துச் சென்ற பணத்தை மாடு வாங்காமல் அந்த ஆலயத்துக்கு செலவு செய்து ஆலயத்தைக் கட்டினார். மற்றும் ஒரு கதை 🛕 சுமார் 300 ஆண்டுகள் முன் நடந்தது இது. காத்தாயி அம்மனை குல தெய்வமாக வழிபட்டுக் கொண்டு இருந்த இரு பக்தர்களின் குடும்பத்தினர் இரண்டு மாட்டு வண்டிகளில் பயணம் செய்தபடி அங்கு அம்மனை தரிசிக்க வந்தனர். பூஜைகள், படையல்கள் என எல்லாம் செய்து விட்ட பின் தங்களுடைய ஊருக்குத் திரும்பலாயினர். அவர்கள் கிளம்பிய அவசரத்தில் அவர்களுடன் வந்திருந்து ஆலய வளாகத்தில் விளையாடிக் கொண்டு இருந்த பன்னிரண்டு வயதான பெண் குழந்தையை அங்கேயே தவற விட்டுவிட்டு கிளம்பிச் சென்றுவிட்டார்கள். தாம் வந்திருந்த இரண்டு வண்டிகளில் ஏதாவது ஒரு வண்டியில் ஏறிக் கொண்டு இருப்பாள் என நினைத்து வீட்டினுள் நுழைந்து பார்த்தவர்கள் திடுக்கிட்டனர். குழந்தை எங்கே, எங்கே என தேடிய பின் அவளைக் காணாமல் மீண்டும் அந்த ஆலயத்திற்கே சென்று குழந்தையைத் தேடலாயினர். குழந்தையைக் காணவில்லை. 🛕 அப்போது திடீர் என சன்னதியில் இருந்து ஒரு அசரி கூறியது “குழந்தையை இனித் தேடாதீர்கள். இனிமேல் அவள் என்னுடன்தான் இருப்பாள். அவள் உடல் நலம் இன்றி இருந்த பொழுது நீங்கள் அவளை என்னிடம் கொண்டு விடுவதாக வேண்டிக் கொண்டீர்கள். ஆனால் அதை நீங்கள் செய்யவில்லை. ஆகவே இனி அவள் என்னுடையவள் ஆகி விட்டாள்” என்று கூறவும் வந்தவர்கள திக்கித்து நின்றனர. ஆமாம் அதற்கு பல ஆண்டுகள் முன் அந்தக் குழந்தை உடல் நலமின்றி இருந்த பொழுது அப்படி ஒரு வேண்டுதல் செய்திருந்தனர் அவர்கள். தற்போது அம்பிகையின் வலது காலடியில் காணப்படும் உருவம் அந்தக் குழந்தையின் சிலை என்று நம்புகின்றனர். இன்னொரு சம்பவம் 🛕 சுமார் 40 ஆண்டுகள் முன் கிருஷ்ணமூர்த்தி என்பவரின் மனைவியான ஜானகி அம்மாள் நான்கு குழந்தைகளுடன் இந்த ஆலயத்துக்கு வந்து தரிசனம் செய்த பின் திருநிலங்குடி என்ற கிராமத்திற்கு திரும்பிக் கொண்டு இருக்கையில் அவர்கள் சென்ற வழியில் இருந்த ஆற்றில் வெள்ளம் வந்து வண்டியும் மாடுகளும் முழுகத் துவங்கின. ஜானகி அம்மாள் …… காத்தாயி காப்பாற்று …… என்று அலறவும் எங்கிருந்தோ சைக்கிள் ஒன்றில் வந்தவன் ஆற்றில் இறங்கி மாடுகளை தட்டிக் கொடுத்தபடி ஓட்டிச் சென்று அவர்களை காப்பாற்றிக் கரை சேர்த்தான். அந்த வண்டியும் திருநிலங்குடிக்கு செல்வதாகக் கூற அவனும் தனக்கும் அங்கு வேலை இருப்பதாகக் கூறிவிட்டு அவர்களுடன் துணைக்கு சேர்ந்து கொண்டு தன் சைக்களில் வண்டியுடன் சென்றான். 🛕 திருநிலங்குடிக்கு அருகில் சென்றதும் அவனைக் காணவில்லை. அதன் பின் அதைப் பற்றி மறந்தே போய்விட்டனர். அடுத்து சில நாட்களில் காத்தாயி அம்மன் ஆலயத்தில் ஸ்ரீ துரையப்பா குருக்கள் என்பவர் மேல் சாமி வந்து ஆட, அங்கு அந்த சமயத்தில் அங்கு வந்திருந்த கிருஷ்ணமூர்த்தியிம்… “உதவிக்கு வந்தது வீரனடா, ஆற்றோடு போன உன் குடும்பத்தைக் காத்தவன் நானடா” என்று கூறவும் அப்பொழுதுதான் அவர்களுக்குப் புரிந்தது ஆற்றில் வெள்ளம் வந்த பொழுது சைக்கிளில் வந்து தங்களை காத்தது காத்தாயியே என்பது. 🛕 அது போல 1939 ஆம் ஆண்டு பால் குடத்துடன் கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்ள வந்த போற்றி கிருஷ்ணமூர்த்தியின் தாயார் பால் செம்புடன் யாக குண்டத்தில் பத்து நிமிடங்கள் நின்றிருக்க அவள் புடவைக் கூட நெருப்பில் எரியாமல் இருந்த அற்புதக் காட்சியை குருக்களும் மற்றவர்களும் கண்டனர். அதன் பின்னர் ஸ்ரீ சுந்தரேச குருக்கள் மற்றும் ஸ்ரீ துரையப்பா குருக்கள் என்பவர்கள் வேண்டுகோளை ஏற்று அந்த யாக குண்டத்தில் இருந்து எந்த விதமான காயமும் இன்றி வெளி வந்தார் அந்த அம்மையார். பச்சை வாழி அம்மன் (காத்தியாயினி) எழுந்தருளிய வரலாறு 🛕 அந்த காத்தாயி ஆலயத்தில் இன்னொரு சன்னதியில் இருப்பவளே முருகப் பெருமானின் தாயாரான பார்வதி என்ற பச்சை வாழி அம்மன்(காத்யாயினி). அவள் அங்கு பச்சை வழி அம்மன் என்ற பெயரில் அமர்ந்து உள்ளாள். முன்னொரு காலத்தில் மகா தவச்சீலரான காத்யாயன மகரிஷி சிவபெருமானை நி]னத்தபடி தவம் இருந்தார். அவர் வேண்டுகோள் என்ன என்றால் பார்வதி தேவி தனக்கு மகளாகப் பிறக்க வேண்டும். அவளை பரமேஸ்வரனுக்கு தானே கன்னிகா தானம் செய்து கொடுக்க வேண்டும். மிக வேடிக்கையான வேண்டுகோளாக இருந்தாலும் அவருடையத் தவவலிமையை மெச்சிய சிவபெருமானும் அவருடைய வேண்டுதலை ஏற்றுக் கொண்டு அவருக்கு பார்வதியை மகளாகப் பிறக்க வைத்தார். பிறந்த பெண் குழந்தைக்கு காத்யாயினி எனப் பெயர் சூட்டி பெருமையுடன் வளர்த்து வந்தார் காத்யாயன மகரிஷி. வயதிற்கு வந்த காத்யாயினியும் சிவனை எண்ணியபடி தவம் இருக்கத் துவங்கினாள். காத்யாயன மகரிஷியின் நண்பர்களான சிவ முனீஸ்வரர், தர்ம முனீஸ்வரர், வாழ் முனீஸ்வரர், புருட முனீஸ்வரர், நாத முனீஸ்வரர், யோக முனீஸ்வரர், மற்றும் மகா முனீஸ்வரர் என்ற ஏழு முனிவர்களும் காத்யாயினிக்கு உபதேசங்கள் புரிந்து அவள் தவம் வெற்றி பெற துணை நின்றனர். 🛕 பல காலம் தீவிரமாகத் தொடர்ந்த தவத்தின் வலிமையினால் சிவபெருமான் அவள் முன் தோன்றி அவளுக்கு என்ன வரம் வேண்டும் என்று கேட்க அவளும் தயக்கம் இன்றி சிவபெருமானே தனக்கு கணவனாக வரவேண்டும் எனவும் அதன் பின் திருமண வரம் கேட்டு தன்னை பிரார்த்தனை செய்ய வருபவர்களுக்கு அருள் பாலிக்கும் விதத்தில் அங்கேயே தனக்கும் ஒரு சன்னதி ஏற்பட வேண்டும் என்றும் வேண்டி நின்றாள். அதன்படி காத்யாய முனிவர் கன்னிகா தானம் செய்திட, காத்யாயினியின் மாப்பிள்ளை ஸ்வாமியாக வந்து நின்ற சிவபெருமானும் அவளுக்கும் அங்கேயே சன்னதி எழுப்ப, அங்கு காத்யாயினி விரத நோம்பிருந்தால் (பாவை நோன்பு என்பர்) தடை பெறும் திருமணங்கள் நடந்தேறும் என்ற நம்பிக்கையில் தன்னிடம் வேண்டிக் கொண்டு வருபவர்களை அருளியபடி அவள் குடி கொண்டு உள்ளாள். ஆலய அமைப்பு 🛕 ஆலயத்தின் மூல சன்னிதியில் அமர்ந்து உள்ளவள் பார்வதி தேவியான பச்சைவாழி அம்மன் என்ற காத்யாயினி. அவளுடைய வலப்புற சன்னிதியில் அழகு சொட்டும் கோலத்தில் அமர்ந்து உள்ளவளே இந்த ஆலயம் எழக் காரணமாக இருந்த காத்தாயி அம்மன். அவள் தன் வலக் கரத்தில் தாமரை மலர் ஏந்தி, இடப்புறத்தில் உள்ள திருக்கையை லாவகமாக ஊன்றி வைத்தபடி இருக்கிறாள். அன்னையின் கொண்டை முடி மூன்று முடிச்சுக்களுடன் காணப்பட, இடது கால் மடக்கி வைத்தபடியும், வலது காலை தொங்க விட்டபடியுமான நிலையில் அமர்ந்து உள்ள அந்த அன்னையின் வலது காலின் அடியில் ஒருவர் அமர்ந்தபடியும் இருக்கும் வகையில் அமைந்துள்ள அற்புதக் காட்சியை அள்ளித் தந்த வண்ணம் திருக்கோலக் காட்சி தருகிறாள். 🛕 பச்சைவாழி அம்மனின் இடப்புறத்தில் அமைந்துள்ள சன்னிதியில் முருகப் பெருமான் வீற்று இருக்கின்றர். ஆலயத்தின் வெளிப்புற மண்டபத்தில் உள்ள ஒரு தனிச் சன்னிதியில் வலது கரத்தில் தாமரை மலர் ஏந்திய நிலையில் காணப்படும் சிலையை கஞ்சமலை சிவன் என அழைக்கின்றனர். கஞ்சமலை சிவன் தன் வலது கையை ஒரு நாகத்தின் மீது வைத்துள்ளார். அதே உருவ அமைப்பில்தான் மூல சன்னிதில் உள்ள பார்வதி தேவியான பச்சைவாழி அம்மனின் உருவச் சிலையும் கையில் தாமரை மலர் ஏந்திய நிலையில் காணப்படுவது ஒரு அதிசயமான காட்சி ஆகும். ஆலயத்தின் எதிர் புறத்தில் உள்ள தனி ஆலயத்தில் வீரபாகு முனிவர் வீரமித்திரர் பொம்மி வெள்ளியம்மாள் சமேதராக காட்சி தந்தபடி அமர்ந்து இருக்கிறார். ஆலயத்தின் தென் பகுதியில் ஒன்பது மாமுனிவர்களின் சிலைகள் உள்ளன. மேற்கு புறத்தில் லாட சன்யாசி என்ற தன்வந்திரி முனிவரும், பேச்சி அம்மன் என்ற பெரியாச்சி தெற்கு நோக்கி நின்றபடியும் உள்ள நிலையில் இருக்குமாறு அவர்களுக்கு உருவச் சிலைகள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த ஆலயத்தின் ஸதல விருட்சம் வில்வ மரத்துடன் கூடிய வேம்பு மரமாகும்.
சர்வதேச நாணய நிதியத்தின் யோசனையின் பிரகாரம் 30 வீதத்தினால் மேலும் மின்சாரக் கட்டணங்களை உயர்த்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக மின்சாரசபை தொழிற்சங்கங்கள் குற்றம் சுமத்தியுள்ளன. மின்சாரக் கட்டணங்களில் சமூகப் பாதுகாப்பு வரி சேர்க்கப்பட்டுள்ளதாக தொழிற்சங்கத்தின் அழைப்பாளர் ரஞ்சன் ஜயலால் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரைக்கு அமைய ஏற்கனவே 75 முதல் 200 வீதம் வரையில் மின்சாரக் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன. இந்த நிலையில் கடந்த 15ம் திகதி முதல் சமூகப் பாதுகாப்பு வரி என்ற பெயரில் மேலும் 2.56 வீதம் அறவீடு செய்யப்படுகிறது. எனினும், இந்த வரி பற்றிய விபரங்கள் தனியாக கட்டணப் பட்டியலில் சேர்க்கப்படவில்லை. இவ்வாறான ஓர் பின்னணியில் மின்சாரக் கட்டணங்களை மேலும் 25 வீதமாக உயர்த்துவதற்கு சர்வதேச நாணய நிதியம் பரிந்துரை செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
Latest Tamil Sex Stories – அப்படியே என் கைகளை எடுத்து அவளை வளைத்து அவள் குண்டியின் ஓட்டையில் வைத்து குத்தியபோது அந்த ரூமே அதிர்வது போல கத்தினாள். அவள் உடம்பு அதிர துவங்கியது! அவள் புண்டை வாசல்கள் மேலும் இறுக்கமாக மாறியது. “ஓஓ முடியலடா!” என்று அவள் கத்த ஆரம்பித்தாள். அவள் தன் இடுப்பை மேலும் , மேலும் என்னை நோக்கி செலுத்த, நான் அவள் புண்டையின் உட்பகுதிகளை என் நாக்கால் நன்றாக துழாவ ஆரம்பித்தேன்…. “ஆஆஅ சுரேஷ் முடியலடா… என்னை போடுடா” என்று அவள் அலற ஆரம்பித்தாள். இப்போது என் தடியும் நன்றாக விறைத்துக்கொண்டு இரும்பு தூண் போல இருந்தது. அவள் பார்வை இப்போது என் தண்டையை நோக்கி சென்றது. “சுரேஷ் நல்லா இறுக்கமாயிட்டதுடா! என்னை போடுடா” என்று அவள் கத்த ஆரம்பித்தாள். அவள் அவ்வப்போது தன் நாக்கால் தன் உதடுகளை தடவிக்கொண்டது பார்க்க நன்றாக இருந்தது. அப்படியே அவள் படுக்கையில் சாய்ந்து நன்றாக படுத்தாள். கால்களை நன்றாக அகலமாக விரித்துக்கொண்டாள். “என்ன தயாரா?” “ச்சீ” என்று சிணுங்கினாள். அருகிலிருந்த தலையணகளை எடுத்து தன் குண்டி கீழ் வைத்து தன் புண்டையை மேல் நோக்கி காண்பித்தாள். அவள் புண்டை நன்றாக வீங்கி இருந்ததி. அதில் ஒரு துளி முடி கூட இல்லாததால் இன்னும் பருத்து காணப்பட்டது. “சீக்கிரம் உன் சுண்ணியால ஆப்பு அடிடா” என்று என்னை போதையாக பார்த்தாள். அவள் உச்ச கட்டத்தை அடைந்து விட்டாள் என்பதை தெரிந்துக்கொண்டேன். இனியும் காக்க வைக்கக்கூடாது என்று அவள் அருகில் சென்றேன். அவள் புண்டை வாயிலில் என் சுண்ணியை வைத்து ஓங்கி அடித்தேன். அவள் புண்டை ஏற்கனவே மதனநீரால் அபிஷேகம் செய்யப்பட்டு இருந்ததால் என் ஒரு குத்திலேயே என் சுண்ணி அவள் புண்டையை கிழித்துக்கொண்டு உள்ளே போனது! அவள் ஆஆவ்வ்வ் என்று கத்தினாள். நான் மேலும், கீழும் ஏறி அடிக்க ஆரம்பித்தேன். அவ்வப்போது குனிந்து அவள் முலைகளை கவ்விக்கொண்டே அடிக்க ஆரம்பித்தேன் “இன்னும் வேகமா! வேகமா! என்று அவள் தன் புண்டையை மேலும் தூக்கி காட்ட ஆரம்பித்தாள்…என் வேகமும் அதிகரித்தது. என் சுண்ணி மேலும் அவளின் புண்டைக்கு உள்ளே, வெளியே போய் வர ஆரம்பித்தது… “அப்படியே என் முலையை சூப்புடா” என்றாள். நான் அவள் முலையை சப்பிக்கொண்டே அவளை இடிக்க ஆரம்பித்தேன். சிறிது நேரம் கழித்து என் கைகளை அவள் முலையில் இருந்து எடுத்து அவள் குண்டியை தாங்கி பிடித்துக்கொண்டே இன்னும் வேகத்தை கூட்டினேன். “ம்ம்ம் இன்னும், இன்னும் வேகமா” என்றாள்.. நான் என் பல்லை கடித்துக்கொண்டே என் முழு பலத்தாலும் என் சுன்னியை அவள் புண்டை ஓட்டையில் வைத்து ஆட்ட ஆரம்பித்தேன். அவள் இப்போது ஏதேதா புரியாத மாதிரி உளற ஆரம்பித்தாள். நானும் இடித்துக்கொண்டே இருந்தேன். கடைசியாக என் சுண்ணி மீண்டும் விந்தை பாய்ச்ச தயாரானது. என் கடைசி குத்தில் விந்து மீண்டும் பாய்ச்சியது. இருந்தாலும் நான் என் சுண்ணியை வெளியே எடுக்காமல் என் கடைசி சொட்டு விந்தை உள்ளே பாய்ச்சினேன். அப்படியே படுக்கையில் சாய்ந்தேன். மூச்சு வாங்கியது. உடம்பிலிருந்த எல்லா சக்தியும் விந்துவாக போனது போல தோன்றியது. அவள் மெல்ல என் பக்கத்தில் வந்து அமர்ந்தாள். குனிந்து என் உதட்டில் அழுத்தி ஒரு முத்தமிட்டாள். “தாங்க்ஸ்” என்ன இப்போது பரவாயில்லையா என்று சிரித்தேன். அவள் கண்ணை பார்த்தேன்… “ம்ம்ம்ம்ம்ம்” என்றாள். “ஐ லவ் யூ” “தெரியும். அப்படியே ரிலாக்ஸ் பண்ணு! உடனே உனக்கு நான் தேவைப்படுவேன்!.” அதை கேட்டு சிரித்தேன். அவளை இழுத்து மீண்டும் இறுக்கமாக அணைத்தேன். “ஆம்.. உடனே எனக்கு தேவைப்படுவாய்” மது மயக்கம்… புதிய காதல்…முதல் அனுபவம் எல்லாம் சேர்த்து ஆளை தள்ளியது. அவளுக்கு முத்தமிட்டபடியே படுக்கையில் சாய்ந்தேன். தூக்கம் கண்களை இறுக்கியது… அப்படியே உறங்கினேன்….
போதை பயன்படுத்தும் ஆண்கள், செக்ஸ் உறவில் அதிக வலுவுடன் ஈடுபடுவார்கள் என்பது உண்மையா? (உடலுறவில் உச்சம்!! – பகுதி-14) | ilakkiyainfo ilakkiyainfo போதை பயன்படுத்தும் ஆண்கள், செக்ஸ் உறவில் அதிக வலுவுடன் ஈடுபடுவார்கள் என்பது உண்மையா? (உடலுறவில் உச்சம்!! – பகுதி-14) Admin 5 years ago ‘ஜி ஸ்பாட்’ (Spot) ஆண்களுக்கு உண்டா? உடலில் இன்பம் தரக்கூடிய அனைத்துப் பகுதிகளுமே ‘ஜி ஸ்பாட்’தான். சில ஆண்கள் ஒரு சில உடல் பகுதியை மிகவும் இன்பம் தரக்கூடியதாகச் சொல்வதும், சிலர் உடல் முழுவதும் இன்பம் தரக்கூடியதாக சொல்வதும் உண்டு. உதாரணமாக, திருமணம் முடித்த முதல் நாள், பெண்ணின் விரல் நுனிகளைத் தொட்டாலே ‘ஷாக்’ அடிக்கும் அளவுக்கு ஆணுக்கு ஆனந்தம் தருவதாக இருக்கும். அதுவே தொடர்ந்து தொட்டுப் பழகிவிட்டால் கை விரல்களில் இருந்து ஆரம்பத்தில் கிடைத்த இன்பம் கிடைக்காது. ஆனாலும், எப்போதும் இன்பம் தரக்கூடிய பகுதி என்று ஆண் உறுப்பின் நுனி மொட்டுப் பகுதியைக் குறிப்பிடலாம். ஆனால், பலர் மேற்கூறிய எதையும் ‘ஜி ஸ்பாட்’ (Men’s G Spot) என்று ஒப்புக்கொள்வதில்லை. அவர்கள், ஆசனவாய்க்கும் ஆண் குறிக்கும் இடையில் இருக்கும் பிராஸ்டேட் சுரப்பியையே ‘ஜி ஸ்பாட்’ என்று வர்ணிக்கிறார்கள். ஆசனவாய்க்கும் ஆண் விதைப்பைக்கும் இடையில் இதைத் தொட்டு உணர முடியும். ஆண்களுக்கு எழுச்சி வரும் நேரத்தில் இந்த இடத்திலும் சிறிய அளவில் புடைப்பு ஏற்படும். இதைக் கைகளால் அல்லது நாக்கால் தடவும்போது ஆண்களை உச்சகட்டம் அடைய வைக்கமுடியும். ஆண்கள் எந்த வயது வரையிலும் செக்ஸ் உறவில் ஈடுபட முடியும்? ‘மீசை நரைத்தாலும் ஆசை நரைக்காது’ என்று சொல்வது முழுவதும் அர்த்தமுள்ள வார்த்தைதான். செக்ஸுக்கு வயது எப்போதும் தடையாக இருப்பதில்லை. வயது, வீரியம், ஆசை, செக்ஸ் செயல்பாடு இவை அனைத்துக்கும் எந்த ஒரு சம்பந்தமும் கிடையாது. நாற்பது வயதைத் தாண்டிய மனைவிகள், குடும்பச்சுமை, மனக்கவலை, அதிக வேலை செய்த காரணத்தால் ஏற்படும் நோய்களால் பாதிக்கப்பட்டு, கணவனுக்குப் பணிவிடை மட்டும் செய்யும் தகுதியுடன் மட்டுமே இருக்கிறார்கள். ஆனால், ஆண்கள் அறுபது வயதிலும் உடலைக் கட்டுக்கோப்புடன் வைத்திருக்கிறார்கள். சில ஆண்கள் மட்டுமே சர்க்கரை நோய், ரத்தக் கொதிப்பு போன்ற நோய்கள் காரணமாக வீரியத்தன்மை குறைந்து காணப்படுகிறார்கள். இவர்களுக்கும் செக்ஸ் ஆசை துளிர்விட்டாலும், செக்ஸ் நடவடிக்கைகளில் ஈடுபட முடியாது. ஆனால், தொடு உணர்ச்சிகள் மூலம் தங்களது தாபத்தைத் தீர்த்துக்கொள்ள முயற்சிப்பார்கள். அதனால்தான், எழுபது வயது தாத்தா, ஏழு வயது சிறுமியைக் கற்பழித்தார் போன்ற செய்திகளை அடிக்கடி படிக்க நேரிடுகிறது. வயதான ஆண்களிடம் செக்ஸ் உறவுகொள்வதற்கு இளம் பெண்கள் அதிக விருப்பமாக இருக்கிறார்கள் என்று சொல்வது உண்மையா? என்னிடம் வந்த ஓர் இளம் பெண்ணின் வாழ்வில் நடந்த சம்பவத்தைச் சொன்னால் இந்தக் கேள்விக்குப் பதில் தெரியவரும். அவளது பெயர் வதனா. இருபது வயது. அழகும், இளமையும் பூத்துக் குலுங்கியவளைக் காதலிக்கு எத்தனையோ இளைஞர்கள் போட்டிபோட்டனர். நடுத்தர குடுப்பத்தைச் சேர்ந்த முரளியை வதனா காதலிக்கத் தொடங்கினாள். வதனாவின் வகுப்புத் தோழி கீதாவின் அண்ணன்தான் முரளி. அடிக்கடி வதனாவுக்குப் பாடத்தில் வரும் சந்தேகங்களைப் போக்கிய முரளி, தன் மனத்தில் எழுந்த காதலையும் துணிச்சலாகச் சொல்லி காதலனாகிவிட்டான். இருவரும் மனம்விட்டுப் பேசுவார்கள். வதனாவுக்கு செக்ஸ் விஷயங்களைப் பேசுவதற்கும், அதில் ஈடுபடவும் அதிக ஆசை. ஆனால், அதை முரளியிடம் வெளிப்படையாகப் பேசத் தயங்கினாள். முரளியும் காதலின்போது அதற்கெல்லாம் இடம் இல்லை என்பது போன்று மிகவும் தள்ளி நின்றே பழகிவந்தான். இந்த நேரத்தில், வதனாவுக்குப் படிப்பில் ஆர்வம் குறைவதை அறிந்த பெற்றோர்கள், ஸ்பெஷல் டியூஷன் ஏற்பாடு செய்தனர். அதற்காக, வேறு கல்லூரியில் பேராசியராக இருந்த, நடுத்தர வயதைத் தாண்டிய பாலன் என்பவரை நியமித்தனர். வதனாவின் வீட்டுக்கே வந்து பாடம் சொல்லிக்கொடுக்கத் தொடங்கினார் பாலன். வதனாவுக்குப் பாடத்தில் அதிக ஆர்வம் இல்லை என்பதை அறிந்த பாலன், முதலில் செல்லமாகக் கடிந்துகொண்டார். பிறகு, வதனாவின் காதைப் பிடித்துத் திருகுவது, முதுகில் தட்டுவது என்று இறங்கினார். அது வதனாவுக்குப் படிப்பின் மீது ஆர்வத்தைக் கொடுப்பதற்குப் பதிலான மனத்தில் சலனத்தை ஏற்படுத்தியது. அதனால், பாலன் தன்னைத் தொடும் சந்தர்ப்பங்களை அதிகமாக்கினாள். இதை அறிந்துகொண்ட பாலனும் சலனப்பட்டு தடுமாறத் தொடங்கினார். ஒருநாள், வதனா விளையாட்டுத்தனமாக அவரது பேனாவை எடுத்து தன் உடலில் மறைத்துக்கொண்டு, ‘முடிந்தால் எடுத்துக்கொள்ளுங்கள்’ என்று பாலனைத் தூண்டியிருக்கிறாள். அவ்வளவு நாள்களாக அடக்கி வைத்திருந்த தன் ஆசைகளைத் தீர்த்துக்கொள்ளும்விதமாக, வதனாவை நோக்கிப் பாய்ந்து சென்று கட்டிப்பிடித்து செக்ஸ் செயல்பாடுகளில் பாலன் இறங்கியிருக்கிறார். அவரது அசுர வேகத்தில் தன் மனத்தைப் பறிகொடுத்த வதனா, பாலனிடம் கற்பையும் பறிகொடுத்தாள். அன்றுமுதல் தன் காதலனையே அடியோடு மறந்து ஒதுக்கிவிட்டாள். வயதானவர் வேகம், ஸ்பரிசம் இப்படியா? என்று வதனாவின் மனத்தின் ஆழமாகப் பதியவே, தனது வீட்டாரை எதிர்த்துக்கொண்டு பாலனையே இரண்டாம் தாரமாகத் திருமணம் செய்துகொண்டாள். இந்த உண்மைச் சம்பவத்தை வைத்து, வயதானவர்களிடம் இளம் பெண்கள் மயங்குகிறார்கள் என்று நினைத்துவிடக் கூடாது. வயதானவர்களுடன் இளம் பெண்கள் தனியாக இருக்கும்போது, யாருக்கும் சந்தேகம் வருவதில்லை என்பதால், அதை இருவரும் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்வது உண்டு. இதுதவிர, வயதான ஆண்கள் புற விளையாட்டுகளில் அதிக ஆர்வம் காட்டுபவர்களாக இருப்பது உண்டு. ஆனால், உடலுறவு எனப்படும் புணர்ச்சியில்தான் இளைஞர்கள் அதிக ஆர்வம் காட்டுவார்கள். மேலும், பெண்களைத் திருப்திப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் இள வயதானவர்களைவிட வயதான ஆண்களிடமே அதிகம் காணப்படுகிறது. இந்த நிலைதான் பெண்களுக்கு அதிகத் திருப்தியும், அதிக எண்ணிக்கையில் உச்சகட்டமும் ஏற்படுத்துகிறது. அதனால், வயதானவர்களுடன் புற விளையாட்டுக்கும், இளைஞர்களுடன் அக விளையாட்டுக்கும் பெண் ஆர்வமாக இருக்கிறாள். இவை எல்லாவற்றையும்விட, ஒவ்வொரு பெண்ணுக்கும் சிறிய வயதில் இருந்து தன்னுடைய தந்தையே ஆதர்ச கதாநாயகனாக இருப்பது உண்டு. அதனால், அந்த வயதை ஒத்த ஒருவருடன் உறவு ஏற்படும் வாய்ப்பு ஏற்படுவதை சந்தோஷமாகவே எடுத்துக்கொள்கிறார்கள். இது அவளுக்கு ஒருவகையான பாதுகாப்பு உணர்ச்சி தருவதாக மருத்துவர்கள் கண்டறிந்திருக்கிறார்கள். இதுதவிர, வயதானவர்கள் செல்வாக்கு மற்றும் செல்வம் நிறைந்தவர்களாக இருப்பதாலும், சில பெண்கள் வயதான ஆண்கள் மீது ஆர்வமாக இருக்கிறார்கள். ஆனால். எல்லா பெண்களுக்கும் வயதான ஆண்கள் மீது மையல் என்று சொல்வது சரியல்ல. போதை பயன்படுத்தும் ஆண்கள், செக்ஸ் உறவில் அதிக வலுவுடன் ஈடுபடுவார்கள் என்பது உண்மையா? பெரும்பாலான ஆண்களுக்கும் பெண்களுக்கும், மது அருந்தினால் அதிக ஈடுபாட்டுடன் செக்ஸ் செயல்பாடுகளில் இறங்க முடியும் என்ற தவறான நம்பிக்கை இருக்கிறது. செக்ஸ் என்பது ஆண்-பெண் இருவரின் மனமொத்த மகிழ்ச்சியான அனுபவம். உடல் அளவில் பார்த்தால், ‘டெஸ்ட்ரோஜன்’ என்ற ஹார்மோன் அளவைப் பொறுத்தே அமைகிறது. இது ஆண்-பெண் இருவருக்கும் ஏறக்குறைய ஒரே வயதில் சுரக்கிறது. போதைப் பொருள்கள், உடலின் ஹார்மோன்களை வேகமாகச் சுரக்கச்செய்யும் தன்மை கொண்டவை. இயற்கைக்கு மாறாக நரம்புகளைத் தூண்டிவிடுவதால், போதை மருந்து உள்கொண்ட விளையாட்டு வீரர்களைக்கூட போட்டிக்கு அனுமதிப்பதில்லை. அதேபோல், செக்ஸ் நடவடிக்கைகளில் போதைப் பொருள்கள் சிலநேரங்களில் உணர்ச்சியைத் தூண்டினாலும் தொடர்ந்து பயன்படுத்தும்போது, உடல் தன் நிலையை மறந்துவிடத் தொடங்குகிறது. போதைப் பொருள்கள் உணர்ச்சிகளைத் தூண்டுவதுபோல் தெரிந்தாலும் மன நிறைவை ஏற்படுத்தாது. மேலும், உச்சகட்டத்தைப் பெறவும் உதவாது. சில சமயங்களில், உச்சகட்ட நிலை ஏற்படுவதையே தடுத்துவிடும் ஆற்றல் படைத்தவை. சிகரெட் பிடிக்கும் ஆண்களுக்கு அதிக வேகத்தில் செக்ஸ் செயல்பாடுகளில் ஈடுபட முடிவதில்லை. அதேபோல், சிகரெட் பிடிக்கும் பெண்களுக்கு, உறவின்போது உறுப்பில் வழுவழுப்புத் தன்மையை ஏற்படுத்தும் திரவத்தின் அளவு குறைந்து வறட்சித்தன்மை ஏற்படுகிறது. இதற்கு, சிகரெட்டில் உள்ள ‘நிகோடின்’தான் காரணம். மன உளைச்சலைக் குறைக்கும் சில மருந்துகளுக்குக்கூட இந்தத் தன்மை உள்ளது. இப்படிப்பட்ட மருந்துகளை உள்கொள்ளும்போது, செக்ஸ் உணர்வு குறைவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகக் கருதப்படுகிறது. போதைப் பொருள்களைப்போலவே மதுவும் உடலின் நரம்புகளுடன் நேரடியாகத் தொடர்புகொள்வதால், முதலில் மகிழ்ச்சியாக இருக்கும். ஆனால், நாள்கள் செல்லச்செல்ல, நரம்பு மண்டலத்தையே பாதிக்கச் செய்துவிடும். குறிப்பாக, அதிக அளவில் மதுவை உள்கொள்ளும்போது, அவர்களை மயக்கம் அடையச் செய்து என்ன நடக்கிறது என்ற உணர்வே இல்லாமல் மாற்றிவிடுகிறது. செக்ஸில் உச்சக்கட்டத்தை உண்டாக்கும் நரம்பு மண்டலத்தை மது நேரடியாகவே தாக்குகிறது. எனவே, மது அருந்தியவர்கள் செக்ஸில் ஆர்வமாக ஈடுபடமுடியும் என்பது மட்டும் உண்மை. ஆனால், செக்ஸ் செயல்பாடு முடிந்தபிறகு போதிய மகிழ்ச்சி இருக்காது. செக்ஸ் செயல்பாடுகளில் ஆண்-பெண் இருவரும் தங்கள் விருப்பங்களைத் தெளிவான முறையில் பரஸ்பரம் தெரிவித்துக்கொள்ள வேண்டியது அவசியம். ஆனால், மது அருந்திய ஆண், அவனது ஆசையை மட்டும் தீர்த்துக்கொள்ள முயற்சிப்பானே தவிர, தன்னுடைய இணையின் ஆசைகளைத் தெரிந்துகொள்ளும் மனநிலையில் இருக்க மாட்டான். அதனால், குடிகார ஆண்களிடம் இருந்து பெண்களுக்கு முழுமையான செக்ஸ் இன்பம் கிடைப்பதில்லை. குடிபோதையில் மிகச்சிறப்பான முறையில் செக்ஸ் அனுபவித்ததாக ஆண்கள் நினைத்துக்கொள்ளலாமே தவிர, உண்மையில் எதுவும் இருக்காது. அதனால், செக்ஸ் நிறைவைப் பெறவிடாமல் தடுக்கக்கூடிய காரணிகளில் ஒன்றான போதைப் பொருள்களைத் தவிர்ப்பது செக்ஸுக்கு மட்டுமல்ல, வாழ்க்கைக்கும் பயன் அளிக்கக்கூடியதாகும். செக்ஸ் இன்பத்துக்காகப் போதைப் பொருள் பயன்படுத்துவதில் இன்னொரு மாபெரும் அபாயம் இருக்கிறது. அதாவது, மது அல்லது போதைப் பொருள்களை உபயோகித்து அதன்பிறகு மட்டுமே தொடர்ந்து செக்ஸில் ஈடுபடுபவர்களால், குறிப்பிட்ட நாள்களுக்குப் பிறகு போதைப் பொருள்கள் இல்லாமல் செக்ஸ் செயல்பாடுகளில் ஈடுபடவே முடியாமல் போய்விடும். இது, உடல்நிலையை மிகவும் ஆபத்தான நிலைக்குக் கொண்டுசென்றுவிடும். -டாக்டர் டி.காமராஜ்- தொடரும்… செக்ஸில் ஆண்கள் மின்சாரம்!!: தொ ட்டாலே ஷாக் அடிக்கும்! (உடலுறவில் உச்சம்!! – பகுதி-13) ஆசை இருப்பது ஒரு நிலை என்றால், அதை அனுபவிக்கத் தூண்டுவது அடுத்த நிலை..!! : (உடலுறவில் உச்சம்!! – பகுதி-12)
`The illiterate of the 21st century will not be those who cannot read and write, but those who cannot learn,unlearn and relearn' Paulo Coelho Don’t try to innovate storytelling, tell a good story and it is magical. I see people trying to work so much in style, finding different ways to tell the same thing. It’s like fashion. Style is the dress, but the dress does not dictate what is inside the dress. பிரபலமான இடுகைகள் மாதவிடாய் மாதவிடாய் - இது பெண்களுக்கான பிரத்தியேக சலுகை. இயற்கையிலே அமையப்பெற்ற ஒரு வரன் என்றும் சொல்லலாம். காரணம் மாதவிடாய் நிற்கும்வரை ஒரு ப... விறால் மீன் விறால் மீன் பற்றிய சில தகவல்கள். விறால் மீன் பிடிப்பது கடினமான ஒரு வேலை. இருப்பினும் சுவாரிஸ்யமான ஒன்று என்கிறார்கள் அனுபவசாலிகள். ஒர... நீண்ட கூந்தல் அவசியமா? திருமணம் ஆகும் வரை எனது கூந்தல் மிக நீளமாகத்தான் இருந்தது. அடர்த்தியாக பட்டுபோல் பளபளப்பாக இருக்கும். அதே போன்று பளபளப்பாக எப்போதும் வைத்தி... அங்கோர் வாட் (சியாம் ரீப்) - பயணக்கட்டுரை நாம் ஏன் பயணம் செய்கிறோம்.? ஒன்று நமக்கு அனுபவம் கிடைக்கவேண்டும் என்பதற்காக, இரண்டாவது நாம் அனுபவித்ததை பிறரோடும் பகிர்ந்து ரசி... பிரசுரமான எனது படைப்புகள் எனது ( கிட்டத்தட்ட இருபது ஆண்டு கால அனுபவம்) எழுத்துலக பயணம், கற்கள் முட்கள் நிறைந்தவை. அப்படி என்னதான் செய்துவந்துள்ளோம்!? என எனக்குள் த... காலை சூரியன் (மாமிகதை) மாமிகதை.. தோல் எல்லாம் அரிப்புகண்டு மிக மோசமாகிவிட்டது மாமியின் உடல். எவ்வளவு அரிப்பு மருந்துகள் வாங்கியும், இலைகளைக்கொண்டு மூலிகை வைத்த... சாருவை சந்தித்தேன்.... நவம்பர் 20ஆம் தேதி, செவ்வாய்க்கிழமை, மலாயா பல்கலைக்கழகத்தில், தம்பி தயாஜி மற்றும் நவீன் அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற ஓர் அற்புத இலக்கிய ...
செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிக்கும் ‘நானே வருவேன்’ திரைப்படம் செப்டம்பர் 29, 2022 நேற்று திரைக்கு வந்துள்ளது. கலைப்புலி எஸ் தாணுவின் வி கிரியேஷன்ஸ் தயாரிப்பில், திரில்லர் படமாக உருவாகி வரும் திரைப்படம் ‘நானே வருவேன்’. படத்திற்கு சென்சார் போர்டு யு/ஏ சான்றிதழுடன் அனுமதி வழங்கியுள்ளது.இப்படத்தில் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இடைவேளைக்குப் பிறகு செல்வராகவனுடன் மீண்டும் இணைகிறார். சுவாரஸ்யமாக, படத்தில் தனுஷ் இரட்டை வேடத்தில் நடிக்கிறார் மற்றும் செல்வராகவன் தனுஷுடன் ஒரு முக்கிய பாத்திரத்தில் திரை இடத்தைப் பகிர்ந்து கொள்கிறார். நீண்ட இடைவேளைக்கு பிறகு செல்வராகவன் தனுஷ் கூட்டணியில் இணைந்த படத்திற்கு பெரிய எதிர்ப்பார்ப்பு இருக்கிறது. இந்த படத்தில் இந்துஜா ரவிச்சந்திரன், செல்வராகவன், பிரபு, யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தில் பாலிவுட் நடிகை எல்லி அவ்ராமும் தமிழில் அறிமுகமாகிறார். படத்தின் கதைக்களம் காட்டுக்குள் வசிக்கும் வேடனாக ஒரு தனுசும், அந்த காட்டுக்கு ஒரு பணி நிமித்தமாக குடும்பத்துடன் செல்லும் என்ஜினீயராக ஒரு தனுசும் தோன்றுகிறார்கள். இருவருக்கும் ஏதோ ஒரு அமானுஷ்ய தொடர்போ, அல்லது பூர்வஜென்ம பந்தமோ இருப்பதாக கதைக்களம் நகர்கிறது. படத்தின் ரன்னிங் டைம் 2 மணி நேரம் 15 நிமிடங்கள் தகவல் வெளியாகி உள்ளது.இந்நிலையில் நானே வருவேன் திரைப்படத்தின் டிஜிட்டல் உரிமையை ரூ. 25 கோடிக்கு அமேசான் நிறுவனமும், சாட்டிலைட் உரிமையை ரூ. 18 கோடிக்கும் சன் டிவியும் வாங்கியுள்ளது. தங்க நிற உடையில் தங்க சிலையாக மாறிய ராஷ்மிகா ! வைரலான போட்டோஸ்! படம் வெளியான காலை காட்சிகளில் படம் குறித்து நல்ல வரவேற்புகள் வந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் இப்படம் முதல் நாளில் ரூ. 10 கோடிக்கு மேல் வசூலித்து உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக இந்தியாவில் மட்டும் ரூ.7.30 கோடி வசூலித்துள்ளதாம். Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள். Categories பொழுதுபோக்கு Tags தனுஷின் நானே வருவேன், நானே வருவேன், நானே வருவேன் - இந்துஜா ரவிச்சந்தர், நானே வருவேன் - கலைப்புலி எஸ் தாணு, நானே வருவேன் movie, வசூல்
சிபிசிஐடி விசாரணையில் நம்பகத்தன்மை இல்லை.எனவே, எனது மகள் வழக்கு விசாரணையை தனிக்குழு ஒன்றை அமைத்து விசாரிக்க வேண்டுமென கள்ளக்குறிச்சி மாணவியின் தாய் செல்வி, டிஜிபி அலுவலகத்தில் மனு அளித்துள்ளார். கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த தனியார் பள்ளி மாணவி மர்ம மரண வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் சிபிசிஐடி விசாரணை நம்பகத்தன்மையுடன் இல்லையென்றும், தனிக்குழு அமைத்து விசாரிக்க உத்தரவிடவேண்டும் என மாணவியின் தாய் செல்வி சென்னை டிஜிபி அலுவலகத்தில் இன்று மனு கொடுத்தார். இதன் பின் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்," என் மகளின் மரணம் தொடர்பான விசாரணையை சிபிசிஐடி ஒருதலைபட்சமாக விசாரித்து வருகிறது. மேலும், சம்மன் எதுவும் அனுப்பாமல் எனது மகள் மரணத்தில் சம்பந்தமே இல்லாத எங்கள் உறவினர்களை மணிக்கணக்கில் காக்கவைத்து விசாரிக்கின்றனர். ஆனால், குற்றம் சாட்டப்பட்டவர்களை விரைந்து விசாரணை முடித்து அனுப்பி வைக்கிறார்கள்" என்று அவர் குற்றம் சாட்டினார். மேலும்," சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணையின் போது எனது உறவினர்களிடம் மகளின் மரணம் தற்கொலை என ஒப்புக்கொள்ள வற்புறுத்துகின்றனர். எனவே, குற்றம் சாட்டப்பட்டவர்களின் செல்போன்களைக் கைப்பற்றி ஆய்வுக்கு உட்படுத்தினால் பல உண்மைகள் தெரிய வரும். ஆனால், அதற்குப் பதிலாக அதிகாரிகள் எனது உறவினர்களின் செல்போன்களை பறிமுதல் செய்து எடுத்துச் சென்றுள்ளனர். இதனால் எங்களுக்கு சிபிசிஐடியின் விசாரணையில் நம்பகத்தன்மை இல்லை. எனவே, தனியாக ஒரு குழு அமைத்து நீதிமன்றத்தின் கண்காணிப்பில், மூத்த குற்றவியல் வழக்கறிஞர் ஒருவரது மேற்பார்வையில் பாரபட்சமற்ற முறையில் புலன் விசாரணை நடத்த வேண்டும்" என்றார். இது தொடர்பாக டிஜிபியிடம் மனு அளித்துள்ளதாகவும், அடுத்ததாக முதல்வர் ஸ்டாலினை சந்தித்து மனு அளிக்க உள்ளதாகவும் அவர் கூறினார்.
பிரபல பின்னணிப் பாடகர் மாணிக்க விநாயகம் தனது 78 ஆவது அகவையில் நேற்று மாலை இதய கோளாறு காரணமாக காலமானார். இதய கோளாறு காரணமாக சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வந்த மாணிக்க விநாயகம் வீட்டில் காலமானார். சென்னையில் உள்ள அவரது வீட்டில் நேற்று மாலை 6.45 மணிக்கு மாரடைப்பால் காலமானார். திருடா திருடி, சந்தோஷ் சுப்பிரமணியம், திமிரு, பேரழகன், வேட்டைக்காரன் உள்ளிட்ட பல்வேறு படங்களிலும. நடித்துள்ளார். பருத்தி வீரன், வெயில், சந்திரமுகி, தூள் உள்ளிட்ட படங்களில் பாடல்களை பாடியுள்ளார். மயிலாடுதுறை அடுத்த வழுவூர் கிராமத்தை பூர்விகமாகக் கொண்டவர். பழம்பெரும் பரத நாட்டிய ஆசிரியர் வழுவூர் ராமையாவின் மகனாவார். இதேநேரம் ஈழத் தமிழர்களின் நெஞ்சம்கொண்ட பாடலான விடை கொடு எங்கள் நாடேகடல் வாசல் தெளிக்கும் வீடேபனை மர காடே, பறவைகள் கூடேமறுமுறை ஒரு முறை பார்போமா என்னும் பாடலைப் பாடியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த வருட ஹஜ் யாத்­திரை தொடர்பில் சவூதி அர­சினால் நிய­மிக்­கப்­பட்­டுள்ள யாத்­தி­ரிகர் பரா­ம­ரிப்பு முகவர் நிறு­வ­னங்கள் தமது திட்ட வரை­பு­களை மக்கா ஆளுநர் காலித் அல்-­ப­ஸா­லிடம் கடந்த சனிக்­கி­ழமை சமர்ப்­பித்­துள்­ளன. ஹஜ் யாத்­தி­ரி­கர்­களின் தங்­கு­மிட வச­திகள், சௌக­ரி­யங்கள், நலன்கள் உயர்­த­ரத்தில் இருப்­பதை உறு­திப்­ப­டுத்தும் வகையில் மேற்­படி திட்ட வரை­புகள் அமைந்­துள்­ள­தாகக் குறிப்­பி­டப்­ப­டு­கி­றது. ஹஜ் மற்றும் உம்­ரா­வுக்­கான சவூதி அமைச்சு தமது செயற்­திட்டம் 95,000 பணி­யா­ளர்­களை வேண்டி நிற்­ப­தாக குறிப்­பிட்­டுள்­ளது. மேலும் “BE HELPFUL” எனும் தன்­னார்வ திட்டம் இதில் இணைத்துக் கொள்­ளப்­பட்­டுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. இத்­திட்­டத்தின் மூலம் மக்கா நகர் முழு­வ­து­மான யாத்­தி­ரி­கர்­க­ளுக்­கான ஒருங்­கி­ணைக்­கப்­பட்ட வழி­காட்டல் சேவை வழங்­கப்­ப­ட­வுள்­ள­தாகத் எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது. அரபு மற்றும் ஏனைய மொழி­களில் மொழி­பெ­யர்க்­கப்­பட்­டுள்ள அல்­குர்ஆன் பிர­தி­களை இல­வ­ச­மாக வழங்­குதல், பெண் யாத்­தி­ரி­கர்­க­ளுக்கு பிரத்­தி­யேக உள்­ளக வச­தி­களை ஏற்­ப­டுத்திக் கொடுத்தல், மக்கா பள்­ளி­வா­சலின் தூய்மை மற்றும் பரா­ம­ரிப்பை உயர் நிலையில் பேணுதல், ஸம் ஸம் புனித நீரை இல­குவில் பெற்றுக் கொள்ள உரிய கொட்­ட­கை­களை நிர்­மா­ணித்தல் போன்ற பல்­வேறு செயற்றிட்­டங்­க­ளுக்­கான திட்ட வரை­புகள் மஸ்­ஜிதுன் நபவி மற்றும் மக்கா பள்­ளி­வாசல் சம்­மே­ள­னத்­தினால் சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்­ளன. இது தொடர்பில் பிரத்­தி­யே­க­மாக 10,000 பணி­யா­ளர்­களை நிய­மிக்­க­வுள்­ள­தாக சம்­மே­ளனம் தெரி­வித்­துள்­ளது. மக்கா மாந­கர சபை சமர்ப்­பித்­துள்ள திட்ட வரைபின் பிர­காரம் உணவு தரக் கட்­டுப்­பாடு, பெருந்­தெ­ருக்கள், பாலங்கள், சுரங்­கப்­பாதை ஆகி­ய­வற்றின் பரா­ம­ரிப்பு உள்­ள­டங்­க­லாக பொது இடங்­களின் சுகா­தா­ரத்­தையும் தூய்­மை­யையும் உயர்­நி­லையில் பேண­வென 23,000 பணி­யா­ளர்­களை இணைத்துக் கொள்­ள­வுள்­ள­தாக தெரி­வித்­துள்­ளது. மேலும் மக்கா சுகா­தார திணைக்­களம் 12.7 மில்­லியன் சவூதி ரியால்கள் செலவில் பல்­வேறு சுகா­தார செயற்­றிட்­டங்­களை இவ்­வ­ருட ஹஜ் யாத்­திரை தொடர்பில் முன்­வைத்­துள்­ளது. தீவிர சிகிச்­சைக்­கான உயர் மருத்­துவ வச­தி­க­ளுடன் கூடிய 4,000 படுக்­கை­ய­றை­களை மருத்­து­வ­ம­னை­களில் மேல­தி­க­மாக நிர்­மா­ணிக்க உத்­தே­சிக்­கப்­பட்­டுள்­ளது. மேலும் 128 தற்­கா­லிக, நிரந்­தர மருத்­துவ முகாம்கள், கள விஜயம் செய்­வ­தற்­கான 39 மருத்­துவ குழுக்கள் மற்றும் நோயா­ளி­களை இட­மாற்­று­வ­தற்­கான 100 அம்­பி­யூலன்ஸ் வாக­னங்கள் ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளன. 10,000 முத­லு­த­வி­யா­ளர்கள், தன்­னார்­வ­லர்கள், 3 வான்­வழி அம்­பி­யூலன்ஸ் விமா­னங்கள் உள்­ள­டங்­க­லாக 1,245 தற்­கா­லிக, நிரந்­தர மருத்­துவ நிலை­யங்­களை நிர்­மா­ணிக்க சவூதி செஞ்சிலுவைச் சங்கம் உத்தேசித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. யாத்திரிகர்களின் தேவை நிமித்தம் 18,150 மில்லியன் கன மீற்றர் கொள்ளளவுடைய நீர் விநியோகம் செய்யப்படவுள்ளதாக சவூதியின் தேசிய நீர் வடிகாலமைப்பு சம்மேளனம் தெரிவித்துள்ளது. இது கடந்த ஆண்டைவிட 21 சதவீதம் அதிகம் ஆகும்.
இந்த காதலிகள் இருக்கிறார்களே காதலிகள். அவர்களுக்கு எப்போதும் செல்போனில் பேசிக்கொண்டேயிருக்க வேண்டும். நேரங்காலமே கிடையாது. பின்னணியில் 'சங்கீத ஸ்வரங்கள் ஏழே கணக்கா இன்னுமிருக்கா'' என்கிற பாடல் ஓட விடிய விடிய பேச வேண்டும் என எப்போதும் எதிர்பார்க்கிறார்கள். காதலிகளுக்கு காதலன்கள்தான் எஃப்எம் ரேடியோ, டிடிஎச் தொலைகாட்சி, நூலகம், நியூஸ்சேனல் என சகலமும்... (இவைதவிர வேறு வேலைகளும் இருக்கிறது.) காதலிக்காக எதைவேண்டுமானாலும் செய்யலாம்தான். தினமும் ஒரு இரண்டு மணிநேரம் பேசுவதில் என்ன வந்துவிடப்போகிறது என காதலிக்காதவர்கள் நினைக்கலாம். அது அவ்வளவு சுலபமில்லை பாஸ்! அந்த இரண்டரை மணிநேரம் எப்படி இருக்கும் தெரியுமா. உரையாடல் என்பது இரண்டு பக்கமும் நிகழவேண்டியது. ஆனால் நம்மூரில் அப்படி கிடையாது. காதலிகள் அனைவருமே சொல்லிவைத்ததுபோல 'அப்புறம்' 'சொல்லு' 'வேற என்னடா' என்பதைத்தவிர வேறு எதையுமே பேசுவதில்லை. அவர்களுக்கு நாம் பேசுவதை கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும். இவர்களாக எதையுமே பேசுவது கிடையாது. நாமேதான் தினமும் புதுசு புதுசாக தினுசு தினுசாக பேசுவதற்கு டாபிக் பிடிக்க வேண்டியிருக்கிறது. அதுவும் நல்ல சுவாரஸ்யமான டாபிக்காக இருக்க வேண்டியது அவசியம். போர் அடிக்கிற மேட்டராக இருந்தால் ''வேற எதுனா பேசுப்பா'' என்று கொஞ்சல் பட்டனை அமுக்கி சேனலை மாற்றிவிடுவார்கள். இதற்காக ஒவ்வொருநாளும் ஒபாமா தொடங்கி உலக நாட்டு நடப்புகள் அனைத்தையும் கரைத்து குடிக்க வேண்டியிருக்கிறது. இதில் கிரிக்கெட்,அரசியல் அறவே கூடாது, மற்ற பெண்களை பற்றி புகழ்ந்து பேசிவிடக்கூடாது. வேண்டுமானால் அவர்களை திட்டலாம். சினிமா வுக்கு அனுமதியுண்டு, அதுவும் கிசுகிசு மாதிரியானவைதான். உலக சினமாவெல்லாம் பேசினால் ப்யூஸை புடுங்கிவிடுவார்கள். இவை தவிர மெகாசீரியல், அழகுசாதனப்பொருட்கள், எதிர்கால வாழ்க்கை, நாம் வாங்கின மொக்கைகள் என பேசலாம். எது பேசுவதாக இருந்தாலும் அதை நன்றாக ப்ரீப்பேர் செய்து பேச வேண்டியிருக்கிறது. கொஞ்சம் போரடித்தாலும் 'வரவர என்கிட்ட பேச உனக்கு இஷ்டமேயில்ல.. என்ன உனக்கு பிடிக்காம போயிடுச்சு.. லவ் பண்றதுக்கு முன்னால எவ்ளோ நேரம் பேசுவ.. இப்பல்லாம் அவசர அவசரமா கடனுக்கு எதயாவது பேசிட்டு போனை வச்சிடற... இனிமே எங்கிட்ட பேசாத '' என்று அலம்பல் பண்ணி போனை கட் பண்ணி நம்மை குற்றவாளியாக்கி தூக்கில் ஏற்றி கொடுமை படுத்த ஆரம்பித்துவிடுவார்கள். இந்த உரையாடல் கண்டத்தை தாண்டமுடியாத தண்டங்கள்தான் காதலில் தோல்வியடைந்து டாஸ்மாக்கில் வரபோகிறவர்களிடமெல்லாம் பேசி பேசி குடிக்க வருகிற மற்ற குடிநோயாளிகளுக்கு டார்ச்சர் கொடுப்பவர்களாக வளர்கிறார்கள். ஆனால் நல்ல காதலன்கள் தினமும் கஷ்டப்பட்டு டாபிக் பிடித்து பேசி காதலியின் கைத்தட்டல்களை வாங்கி 'கொண்டகாதலி'ல் வெற்றி பெறுகிறார்கள். உண்மையில் காதலில் வெற்றி பெறுகிற ஒவ்வொரு காதலனும் பத்து கோபிநாத், நான்கு தென்கச்சி சுவாமிநாதன், இருபத்தைந்து சுகிசிவங்களுக்கு சமமானவர்கள்.. அவர்களை போற்றுவோம்!
முல்லைத்தீவில் இருந்து கடல்மார்க்கமாக படகொன்றில் கடத்தி திருகோணமலைக்கு கொண்டுவரப்பட்ட 140 கிலோ கிராம் கஞ்சா, நிலாவெளி பிரதேசத்தில் வைத்து இன்று அதிகாலை 2 மணியளவில் கைப்பட்டப்பட்டது. சந்தேகத்தின் பேரில் மூவர் கைதுசெய்யப்பட்டனர். திருகோணமலை பிராந்திய துர்நடத்தை ஒழிப்பு பிரிவின் பொலிஸ் குழு ஒன்று குறித்த பிரதேசத்தில் சுற்றி வளைத்து தேடுதல் நடாத்திய போது குறித்தளவு கஞ்சா கைப்பற்றப்பட்டது. இந்தச் சம்பவம் குறித்து, சுற்றிவளைப்பு குழுவுக்கு தலைமை தாங்கிச் சென்ற உதவி பொலிஸ் பரிசோதகர் ரத்னநாயக்க தெரிவிக்கையில், முல்லைத்தீவிலிருந்து கடல் மார்க்கமாக ஒரு தொகை கஞ்சா வழியாக கடத்தி வருவதாக தமக்கு கிடைத்த இரகசிய தகவல்களை அடுத்து குறித்த பிரதேசத்தில் பொலிஸ் குழுவொன்று மறைந்திருந்தது. அவ்வாறு மறைந்திருந்த வேளையில் அவ்வழியாக பயணித்த வானொன்றை அக்குழு வழிமறித்து சோதனை நடத்தியது. அந்த வானில் மூவர் இருந்ததுடன், வானிலிருந்து 140 கிலோகிராம் கஞ்சாவும் கைப்பற்றப்பட்டது. சந்தேகநபர்கள், கல்முனைப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள்; என்றும் கஞ்சா, முல்லைத்தீவில் இருந்து படகொன்றில் கொண்டுவரப்பட்டு நிலாவெளி கடற்கரையில் இறக்கப்பட்டு, அங்கிருந்து வான் ஒன்றில் ஏற்றிவரப்பட்டது. திருகோணமலை மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியேட்சகர் சந்திரக்குமாரவின் தலைமையின் கீழ் இம் மாவட்டத்தில் குற்றச் செயல்களை முற்றாக ஒழிப்பதற்கு மேற்கொண்டுவரும் பிராந்திய துர்நடத்தை ஒழிப்பு பிரிவின் நடவடிக்கைக்கு கிடைத்த வெற்றியென்றும் அவர் தெரிவித்தார்.
Chinese Simplified Chinese Traditional Albanian Arabic Belarusian Bengali Bulgarian Cambodian Croatian Czech English Esperanto Filipino French German Greek Hausa Hebrew Hindi Hungarian Indonesian Italian Japanese Korean Laos Malay Mongol Myanmar Nepal Persian Polish Portuguese Pushtu Romanian Russian Serbian Sinhalese Spanish Swahili Tamil Thai Turkish Ukrainian Urdu Vietnamese தேசிய அளவில் சீனாவின் உத்தரவாதமான பங்களிப்பு இலக்குகளைச் செயல்படுத்தும் முன்னேற்றம் பற்றிய அறிக்கை 2022-11-12 16:38:47 பகிர்க: தேசிய அளவில் சீனாவின் உத்தரவாதமான பங்களிப்பு இலக்குகளைச் செயல்படுத்தும் முன்னேற்றம் பற்றிய அறிக்கையைக் காலநிலை மாற்றம் தொடர்பான ஐ.நா.வின் கட்டுக்கோப்பு பொது ஒப்பந்தத்தின் செயலகத்திடம் நவம்பர் 11ஆம் நாள் சீனா அதிகாரப்பூர்வமாக ஒப்படைத்தது. 2020ஆம் ஆண்டில் புதிய பங்களிப்பு இலக்குகளைச் சீனா முன்வைத்த பிறகு தொடர்புடைய பணிகளின் நிலைமையை இந்த அறிக்கை பிரதிபலிக்கிறது. தொழில்துறை, நகர மற்றும் கிராமப்புறக் கட்டுமானம், போக்குவரத்து, வேளாண்மை, தேசிய நடவடிக்கை முதலிய முக்கிய துறைகளில் பசுங்கூட வாயுவின் வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்துவதில் புதிய முன்னேற்றங்கள் இவ்வறிக்கையில் விவரிக்கப்பட்டன.
லத்தீன் அமெரிக்க அரசாங்கங்களுக்கு சீனாவின் பல மில்லியன் டாலர் கடன்கள் நின்றுவிட்டன. கடந்த இரண்டு ஆண்டுகளாக புதிய மாநிலத்திற்கு மாநில கடன் வழங்கப்படவில்லை. இருப்பினும், வல்லுநர்களின் கூற்றுப்படி, சீனா அதற்குப் பதிலாக பிராந்தியத்தில் தனது நிறுவனங்களின் திட்டங்களுக்கு வணிகக் கடன்களுக்கு முன்னுரிமை அளித்துள்ளது. 2005 முதல், சீனாவின் கொள்கை வங்கிகள் லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் நாடுகளில் உள்ள நாடுகளுக்கு கடன் வழங்குகின்றன, முதல் மூன்று பெறுநர்கள் பிரேசில், ஈக்வடார் மற்றும் வெனிசுலா, பெரும்பாலும் அந்த நாடுகளின் இயற்கை வளங்களை பெய்ஜிங் அணுகுவதற்கு உத்தரவாதம் அளிக்கும் நிபந்தனைகளுடன். சீனாவின் வளர்ச்சி வங்கி மற்றும் சீனாவின் ஏற்றுமதி-இறக்குமதி வங்கி (எக்சிம்) ஆகியவற்றிலிருந்து இப்பகுதி $138 பில்லியன் கடன் பெற்றது, 117 கடன்களில் விநியோகிக்கப்பட்டது. பிராந்தியம் முழுவதும். 2008 இல் ஏற்பட்ட உலகளாவிய நிதி நெருக்கடியுடன் இந்த போக்கு துரிதப்படுத்தப்பட்டது, இது வளர்ந்து வரும் சந்தைகளுக்கான நிதி விருப்பங்களை குறைத்தது. அர்ஜென்டினா, ஈக்வடார் மற்றும் வெனிசுலா போன்ற நாடுகள் மேற்கத்திய நிறுவனங்களுடன் ஆழமான கடனில் இருந்ததால் பெய்ஜிங்கிற்கு திரும்பியது. லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் அரசாங்கங்களுக்கு சீனாவின் கடன்கள் 2010 இல் $34.5 பில்லியன் உச்சத்தை எட்டியது; இருப்பினும், நிதியுதவி நிபந்தனைகளுடன் வந்தது. ஸ்டீபன் கப்லானின் புத்தகத்தின்படி, நோயாளிகளின் மூலதனத்தை உலகமயமாக்குதல்: அமெரிக்காவில் சீன நிதியின் அரசியல் பொருளாதாரம், அந்த நிபந்தனைகளில் கடன் பெறும் நாடுகள் தங்கள் கடனில் ஒரு பகுதியை எண்ணெய் மூலம் திருப்பிச் செலுத்த வேண்டும்; இயந்திரங்கள் போன்ற சீன பொருட்களை வாங்குவதற்கு; அல்லது சீன நிறுவனங்களுக்கு தொலைத்தொடர்பு மற்றும் எரிசக்தி உள்ளிட்ட தொழில்களுக்கான அணுகலை வழங்க வேண்டும். மிக சமீபத்தில், சீன வங்கிகள் பிராந்தியத்தில் செயல்படும் சீன நிறுவனங்களுக்கு நிதியளிப்பதில் கவனம் செலுத்துகின்றன. மார்ச் அறிக்கையின்படி இன்டர்-அமெரிக்கன் டயலாக் மற்றும் பாஸ்டன் யுனிவர்சிட்டி குளோபல் டெவலப்மென்ட் சென்டர் மூலம். இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர், சீன நிறுவனங்களுக்கு “இந்த பிராந்தியத்துடன் எந்த தொடர்பும் இல்லை. அவர்களுக்கு யாரையும் தெரியாது. அவர்கள் இயக்க சூழல்களை புரிந்து கொள்ளவில்லை [or] முதலீட்டுச் சூழல்கள்,” என்று வாஷிங்டனில் நடந்த இண்டர்-அமெரிக்கன் உரையாடலில் அறிக்கையின் ஆசிரியர்களில் ஒருவரும் ஆசியா மற்றும் லத்தீன் அமெரிக்கா திட்டத்தின் இயக்குநருமான மார்கரெட் மியர்ஸ் கூறினார். எனவே, நாடுகளுக்கு நிபந்தனைக்குட்பட்ட கடன் வழங்குவதற்கான முந்தைய மூலோபாயம் “சீன நிறுவனங்களை நிறுவ உதவும் ஒரு வகையான இயற்கை வழிமுறையாகும்.” இப்போது, ​​சீன நிறுவனங்களுக்கு “நெட்வொர்க் இருக்கிறது, சரி, எனவே, அவர்களுக்கு இனி அந்த உதவி தேவையில்லை. அவர்கள் தங்கள் சொந்த ஒப்பந்தங்களைச் செய்யலாம். அவர்கள் தங்களுடைய சொந்த வாய்ப்புகளைக் கண்டுபிடிக்க முடியும், இப்போது, ​​அவை அனைத்தையும் செய்ய அவர்களுக்கு நிதி தேவை. எனவே, இது மிகவும் வித்தியாசமான பொறிமுறையாகும். சீனாவின் கொள்கை வங்கிகள் 2020 இல் லத்தீன் அமெரிக்க அரசாங்கங்களுக்கு புதிய கடன்களை வழங்குவதை நிறுத்திவிட்டன. மாறாக, பிராந்தியத்திற்கான புதிய சீன நிதி அணுகுமுறை ஆற்றல், சுரங்கம் மற்றும் உள்கட்டமைப்புத் துறைகளில் தனியார் நிதியளிப்பு முயற்சிகளில் கவனம் செலுத்துகிறது. 2020 மற்றும் 2021 இல், சீனாவின் தொழில்துறை மற்றும் வணிக வங்கியை உள்ளடக்கிய சீன அரசுக்கு சொந்தமான வணிக வங்கிகள் அர்ஜென்டினா, பிரேசில், கொலம்பியா, மெக்சிகோ மற்றும் பெருவில் 12 கடன்களை வழங்கியுள்ளன. இந்த கடன்கள் உள்ளூர் நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்து பணிபுரியும் சீன நிறுவனம் போன்ற சீனக் கூறுகளைக் கொண்ட திட்டங்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளன. முந்தைய கடன் மூலோபாயம் சீன நிறுவனங்களை லத்தீன் அமெரிக்க மற்றும் கரீபியன் சந்தைகளில் நிலைநிறுத்த உதவியது, கடன் வாங்கிய அரசாங்கங்கள் பெரும் கடனில் மூழ்கின. கப்லான் தனது புத்தகத்தில், நாடுகளின் திருப்பிச் செலுத்தும் திறனைப் பொருட்படுத்தாமல் கடன்கள் வழங்கப்பட்டதாக வாதிடுகிறார், இது “எதிர்கால கடன் பிரச்சினைகளை ஊக்குவிப்பதன் மூலம் அவர்களின் சக்திக்கு அப்பாற்பட்ட செலவு செய்ய” ஊக்குவித்திருக்கலாம். ஈக்வடாருக்கு ‘சாதகமற்ற’ சீன கடன்கள் ஈக்வடார் சீனாவிற்கு 5 பில்லியன் டாலர் கடன்பட்டுள்ளது, அதன் மொத்த வெளி கடனில் 11%க்கு சமம். அந்தக் கடனில் நாற்பத்தி இரண்டு சதவீதம் 2024க்குள் எண்ணெய் மூலம் திருப்பிச் செலுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பெப்ரவரியில் ஈக்வடார் ஜனாதிபதி கில்லர்மோ லாஸ்ஸோ சீனாவிற்கு விஜயம் செய்தபோது, ​​எண்ணெயில் இருந்து கடனைத் துண்டிப்பதற்கான சாத்தியக்கூறுகள் மற்றும் அதைத் திருப்பிச் செலுத்துவதற்கான காலத்தை நீட்டிப்பது பற்றி விவாதித்தார். 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் ஈக்வடாரின் நிதி மந்திரி மொரிசியோ போசோ, குறுகிய கடன் விதிமுறைகள் மற்றும் அதிக வட்டி விகிதங்கள் காரணமாக சீனாவின் கடன்களின் நிலைமைகள் மிகவும் “பாதகமாக” இருப்பதாகக் கூறினார். ஈக்வடார் மாநில எண்ணெய் நிறுவனமான Petroecuador சீனாவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் ஒவ்வொரு பீப்பாய் எண்ணெய்க்கும் பணத்தை இழப்பதாக அறிவித்தது. Petroecuador இப்போது எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனமான PetroChina உடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தி எண்ணெய் விலையைக் கணக்கிடும் சூத்திரத்தை மாற்றவும் மற்றும் திறந்த சந்தையில் சில எண்ணெயை விற்க ஒப்பந்தங்களின் விதிமுறைகளை நீட்டிக்கவும். சீன அதிபர் ஜி ஜின்பிங்குடனான லாசோவின் சந்திப்பைத் தொடர்ந்து, சீன அரசு செய்தி நிறுவனமான சின்ஹுவா, “சீன நிறுவனங்கள் ஈக்வடாரில் முதலீடு செய்வதற்கும் செயல்படுவதற்கும் நியாயமான மற்றும் வசதியான வணிகச் சூழலை ஈக்வடார் தொடர்ந்து வழங்கும்” என்று ஷி நம்புவதாகத் தெரிவித்துள்ளது. இந்த கதைக்காக ஈக்வடார், வெனிசுலா மற்றும் வாஷிங்டனில் உள்ள சீன தூதரகங்களுக்கு VOA பல விசாரணைகளை அனுப்பியது ஆனால் பதில் கிடைக்கவில்லை. பிராந்திய அரசாங்கங்களுக்கு கடன் வழங்குவதில் சீனாவின் தடையானது அந்த அரசாங்கங்கள் தங்கள் கடனைத் திருப்பிச் செலுத்தும் திறன் குறித்த கவலைகளால் ஒரு பகுதியாக இயக்கப்பட்டிருக்கலாம் என்று மியர்ஸ் கூறினார். “தொற்றுநோய்க்கு முன்னர் சீனா இந்த சிக்கலை எதிர்கொண்டது, மேலும் தொற்றுநோய்களின் போது இது ஒரு சவாலாக மாறியுள்ளது,” என்று அவர் கூறினார். “வெனிசுலாவிலும் ஈக்வடாரிலும் ஒரு சில கடன் தவணைகளின் விதிமுறைகளை மறுசீரமைக்க சீனாவின் முயற்சிகளை நாங்கள் பார்த்தோம்.” பாஸ்டன் பல்கலைக்கழகத்தின் உலகளாவிய மேம்பாட்டுக் கொள்கை மையத்தில் உள்ள சீனா குளோபல் முன்முயற்சியின் உறுப்பினரான ஜார்ஜ் ஹெய்ன், VOA இடம், சீனா வெனிசுலாவுடன் “தனது விரல்களை எரித்தது” என்று கூறினார், அங்கு அரசாங்கம் “சீனாவிற்கு $19 பில்லியன் கடனைத் தொடர்கிறது … மற்றும் பணம் நிச்சயமற்றது.” வெனிசுலாவின் எண்ணெய் உற்பத்தி 2015 முதல் 2021 வரை சரிவைச் சந்தித்தது. கடனுக்கான வட்டியை வெனிசுலா செலுத்துவதால், அசல் கொடுப்பனவுகளுக்கு சீனா சலுகைக் காலங்களை வழங்கியது. லத்தீன் அமெரிக்க மொழியில் சீனா தனது கடன்களை அரசாங்கங்களிலிருந்து நிறுவனங்களுக்கு மாற்றியதற்கு மற்றொரு காரணத்தை ஹெய்ன் பரிந்துரைத்தார், அதனால் பெய்ஜிங் “அதிக கவனம் செலுத்த முடியும்.” [domestic] வரும் ஆண்டுகளில் வளர்ச்சி மற்றும் உள் முதலீடு.” சீன நிறுவனங்கள் இனி கட்டுமான ஒப்பந்தங்களைப் பெறுவதற்கு நிபந்தனைக்குட்பட்ட கடன்களை நம்பியிருக்காது என்று ஹெய்ன் மேலும் கூறினார். இப்போது, ​​சிலி, கொலம்பியா, மெக்சிகோ அல்லது பெரு போன்ற சீனாவிடமிருந்து அரசாங்கங்கள் கடன் வாங்காத நாடுகளில் ஒப்பந்தங்களுக்கு வெளிப்படையாக போட்டியிட முடிகிறது. “லத்தீன் அமெரிக்காவில் உள்ள திட்டங்களில் பங்கேற்க அவர்கள் திறந்த டெண்டர்கள், திறந்த போட்டிகள் ஆகியவற்றில் வெற்றிபெற வேண்டும் என்பதை சீன நிறுவனங்கள் உணர்ந்துள்ளன, ஏனெனில், இல்லையெனில், அவர்கள் திட்டங்களை அணுக முடியாது,” ஹெய்ன் VOA இடம் கூறினார். சமீபத்திய கடன் உத்திகளில் மாற்றங்களுடன் கூட, ஆய்வாளர்கள் சீனா லத்தீன் அமெரிக்காவுடன் உறவுகளைத் தொடர வேண்டும், பிராந்தியத்திற்கு அதிக தயாரிப்புகளை விற்பனை செய்து புதிய எண்ணெய் ஆதாரங்களை அணுக வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.
முன்னணி தமிழ் சேனல்களில் ஒன்றான ஸ்டார் விஜய், இளைஞர்களுக்கான பிரத்யேகமான புதிய சேனல் ஒன்றை அறிமுகம் செய்ய உள்ளது. ‘ஸ்டார் டக்கர்’ என்ற பெயரில் ஆரம்பமாகும் இந்த புதிய சேனல் தமிழக மண்ணின் இளைஞர்களை கவரும் வகையிலான பல அட்டகாசமான உள்ளடக்கத்தை கொண்டிருக்கும். புதிய இளமை எனும் டேக் லைனுடன் இளைஞர்களுக்கான புதிய சேனலாக இது வருகிறது. விஜய் டக்கர் சேனல் இன்றைய இளைஞர்களுக்கான ஒரு பொழுது போக்கு பிராண்டாக இருக்கும். பொழுதுபோக்கு துறையில் டிரெண்ட்செட்டராக செயல்படும் சேனலாக இது இருக்கும். அதற்கு ‘விஜய் டக்கர் - இனி இதுதான் ட்ரெண்ட் செட்டர்’ என்ற டேக்லைன் மிகப் பொருத்தமானதாக இருக்கும். ‘விஜய் டக்கர்’ Non Fiction வகையில், திரைப்படங்கள் மற்றும் இசை என இளைஞர்களுக்கான முழுக்கலவையை கொண்டுள்ளது. Non Fiction வகையில் இன்றைய இளைஞர்களின் வாழ்வை பிரதிபலிக்கும் வகையில், தினமும் தொடர்ச்சியாக பல்வேறு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளைக் ஒளிப்பரப்பவுள்ளது. விஜய் டக்கர் பின்வரும் நிகழ்ச்சிகளைக் கொண்டிருக்கும்: காலேஜ் டா - தமிழகத்தின் 2k கிட் என்று அழைக்கப்படும் புது தலைமுறை gen z குழந்தைகளின் கல்லூரி வளாகத்தில் அவர்களின் வாழ்வை காட்சிபடுத்தும் நிகழ்ச்சி. சினிமா காரம் காஃபி - ஒரு கபேயில் 3 இளைஞர்களுடன் ஒரு நகைச்சுவையான அரட்டை நிகழ்ச்சி, சமூகத்தின் அனைத்து நிகழ்வுகளையும் கிசுகிசுக்கும் ஒரு நிகழ்ச்சி. டிரக் மேல லக்கு - முழுத்திரை கொண்ட ஒரு விளையாட்டு டிரக்கில் அசத்தும் பொழுதுபோக்குடன் அற்புதமான கேம் ஷோ ஸ்டைல் ஸ்டைல் தான் - மேக்கப் மேன், மேக்கப் கலைஞர் மற்றும் பேஷன் போட்டோகிராபர் ஆகியோர் இணைந்து சாதாரண பொது மக்களை அழகுப்படுத்தும் அழகான நிகழ்ச்சி. ஸ்டாருடன் ஒரு நாள் - தங்கள் வீடு, நண்பர்கள், குடும்பம் மற்றும் பொழுதுபோக்குகளை உள்ளடக்கிய பிரபலங்களின் வாழ்க்கையில் ஒரு நாளை புகுந்து காணும் ஒரு மாறுபட்ட பொழுதுபோக்கு நிகழ்ச்சி. சம்திங் சம்திங் - ஒரு டேட்டிங் ஷோ, ஒவ்வொரு வாரமும் பொதுமக்களில் சிலர் தங்களுக்கு சரியான பொருத்தத்தை தேடி அடையும் நிகழ்ச்சி. மேற்கண்ட நிகழ்ச்சிகள் அனைத்தும் தமிழ் இளைஞர்களின் வாழ்க்கை முறையை ஒட்டி உருவாக்கப்பட்டது. கவர்ச்சியான மற்றும் மனதை ஈர்க்கும் கேம் ஷோக்கள் தவிர, தமிழ்நாட்டின் வேறு எந்தச் சேனலும் வழங்காத உள்ளடக்கத்தை இந்த சேனல் வழங்கும். இசை மற்றும் திரைப்படங்களையும் இந்த சேனல் கொண்டிருக்கும். கற்பனை செய்து பார்க்க முடியாத வேடிக்கை மற்றும் பொழுதுபோக்குடன் பார்வையாளர்களுக்கு பல வகை நிகழ்ச்சிகளை வழங்க விஜய் டக்கர் தயாராக உள்ளது. இது நிச்சயமாக இளைஞர்களின் இதயங்களை கவரும் வகையில் இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
சென்னை: தி.நகர் அபிபுல்லா சாலையை சேர்ந்தவர் லட்சுமி (40). இவரது தாய் வட்டிக்கு பணம் கொடுத்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த சுப்ரமணி என்பவருக்கு வட்டிக்கு ரூ2 லட்சம் கொடுத்துள்ளார். கடன் கொடுத்து பல மாதங்களுக்கு பிறகு சுப்ரமணி வாங்கிய கடனில் ரூ1 லட்சத்தை திரும்ப கொடுத்துள்ளார். ஆனால் மீதமுள்ள ரூ1 லட்சத்தை திரும்ப கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் தனது தாய் கொடுத்த கடனை திரும்ப பெற லட்சுமி, தி.நகர் பிள்ளையார் கோயில் தெருவில் உள்ள சுப்ரமணி வீட்டிற்கு அடிக்கடி சென்று பணத்தை கேட்டுள்ளார். இது கடன் வாங்கிய சுப்ரமணியன் மகன் விக்னேஷ் (எ) விக்கி (29) என்பவருக்கு பிடிக்கவில்லை. கடந்த 27ம் தேதி விக்னேஷ் கடன் கொடுத்த லட்சுமியின் வீட்டிற்கு சென்று மிரட்டியதுடன் சேலையை பிடித்து இழுத்து பாலியல் ரீதியாக தொந்தரவு செய்து மிரட்டிவிட்டு சென்றுள்ளார். புகாரின்படி, பாண்டிபஜார் போலீசார் விக்னேஷ் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். Tags: பெண் மானபங்கம் வாலிபர் கைது மேலும் செய்திகள் பேஸ்புக் மூலம் ஏற்பட்ட பழக்கத்தில் காதலியுடன் குடும்பம் நடத்திவிட்டு மற்றொரு பெண்ணுடன் திருமணம்: வாலிபர் சிறையில் அடைப்பு காட்டில் மாடு மேய்க்க சென்றபோது 17 வயது சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்த இளைஞர்கள் 5 பேர் சிக்கினர்: உதவி கேட்டு வீடியோவில் உருக்கம் மூதாட்டியை கொன்று பலாத்காரம்: வாலிபருக்கு சாகும் வரை சிறை ஒரத்தநாடு அருகே பட்டியல் இனத்தவர்களுக்கு பொருட்கள் இல்லை எனக் கூறுவதாகவும், இரட்டைகுவளை முறை பின்பற்றப்படுவதாகவும் புகார்: போலீசார் விசாரணை பல்லாவரம் பகுதிகளில் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்ற 2 பேர் கைது: 2.25 கிலோ கஞ்சா, 2 பைக் பறிமுதல் செம்மரக்கட்டை கடத்த முயற்சி: இருவர் கைது: 300 கிலோ பறிமுதல் குஜராத் மாநிலம் சட்டசபை தேர்தலில் வாக்களிக்க ஆப்பிரிக்க மக்களுக்கென பிரத்யேக பூத்: உணவு, ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடிய மக்கள்..! புதுச்சேரியை அதிரவைக்கும் மக்களின் அழுகுரல்.. மணக்குள விநாயகர் கோயில் யானை உயிரிழப்புக்காக கதறும் பக்தர்கள்..!! சிற்பி திட்டத்தின் கீழ் மாணவ, மாணவியர்களுக்கான தேசப்பற்று குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி: அமைச்சர் அன்பில் மகேஷ் பங்கேற்பு
Posted on July 25, 2020 July 25, 2020 By admin No Comments on லாக்கப் திரைப்படம் ஆகஸ்ட் 14 அன்று ZEE5 வெளியாகிறது!!! லாக்கப் திரைப்படம் ஆகஸ்ட் 14 அன்று வெளியாகிறது. நடிகர் நித்தின்சத்யா தயாரிக்கும் இரண்டாவது படமான ‘லாக்கப்’ படத்தின் சிலிர்க்க வைக்கும் டீஸர் வெளியானது முதலே எதிர்பார்ப்பு ஏகத்துக்கும் எகிறியுள்ளது. தற்போது இப்படம் ஆக்ஸ்ட் 14 அன்று ZEE5 தளத்தில் வெளியாக தயாராகவுள்ளது. மிகப்பெரிய கான்டெக் நிறுவனமான ZEE5, பல்வேறு மொழிகளைச் சேர்ந்த, பல வகையான சிறந்த படைப்புகளை தொடர்ச்சியாக பார்வையாளர்களுக்கு வழங்கி வருகிறது. ZEE5-ன் சமீபத்திய ஒரிஜினல் திரைப்படமான ‘லாக்கப்’ மிகச்சிறந்த, சிலிர்க்க வைக்கும் திரில்லருடன் சீட்டின் நுனிக்கு பார்வையாளர்களை கொண்டுவரும் அனுபவங்களை உள்ளடக்கியதாக இருக்கும். இந்த த்ரில்லர் படத்தில் இதற்கு முன் பார்த்திராத ஒரு கதாபாத்திரத்தில் இயக்குநர் வெங்கட் பிரபு நடிக்கிறார் என்ற செய்தி வெளியானது முதலே இப்படத்துக்கான எதிர்பார்ப்பு எகிறிவிட்டது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. அறிமுக இயக்குனரான S.G.சார்லஸ் இயக்கியுள்ள இப்படத்தில் முதன்மை கதாபாத்திரங்களில் நடிகர் வைபவ் மற்றும் வாணி போஜன் நடித்துள்ளனர். அவர்களை தவிர்த்து, இப்படத்தில் பூர்ணா மற்றும் ஈஸ்வரி ராவ் உள்ளிட்ட பல பிரபலமான நடிகர்களும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தை நித்தின்சத்யாவின் ஸ்வேத் – எ நித்தின்சத்யா புரோடக்‌ஷன் ஹவுஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது. முன்னணி இசையமைப்பாளரான அரோல் கொரேலி இப்படத்துக்கு இசையமைத்துள்ளார். திறன்மிகு ஒளிப்பதிவாளரான சந்தானம் சேகரின் ஒளிப்பதிவில் படமாகியுள்ள ‘லாக்கப்’ திரைப்படத்தை ஆனந்த் ஜெரால்ட் எடிட்டிங் செய்துள்ளார். இப்படத்தில் ஆனந்த மணி கலை இயக்குநராக பணிபுரிந்துள்ளார். Cinema News Tags:லாக்கப் திரைப்படம் ஆகஸ்ட் 14 அன்று வெளியாகிறது Post navigation Previous Post: Rashmika’s Green india Challenge Next Post: Actor AshokKumar Latest pic Related Posts First Look Out: Vijay Deverakonda, Samantha’s Romantic Comedy Titled Khushi, To Release On 23 December Cinema News வதந்தி – தி ஃபேபிள் ஆஃப் வெலோனி தொடர் பிரைம் வீடியோவில் 240 க்கும் மேற்பட்ட நாடுகளில் ஒளிப்பரப்பாகவுள்ளது Cinema News Hansika Motwani starrer Maha Audio Launch Cinema News Kichcha Sudeep’s ‘Vikrant Rona’ receives a whopping amount from the International distributors, A RECORD BREAKER FOR OVERSEAS DISTRIBUTION Cinema News
2 நாள், 3 நாள் மற்றும் 5 நாள் என்ற வகையில் சொகுசு கப்பலின் பயணத்திட்டங்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. தமிழகத்தில் முதல்முறையாக சுற்றுலா பயணிகளுக்காக சொகுசு கப்பல் திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.சென்னை... Comments closed 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் ஆப்சென்டான மாணவர்களுக்கு மறுதேர்வு- முதன்மை கல்வி அலுவலர்கள் உத்தரவு By murugan தேர்வு எழுதாத மாணவர்களை மீண்டும் பள்ளிக்கு அழைத்து உடனடி தேர்வில் பங்கேற்க நடவடிக்கை எடுக்கும்படி அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 10-ம் வகுப்பு, 11-ம் வகுப்பு மற்றும்... Comments closed சட்டம், ஒழுங்கு குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் By murugan தலைமைச் செயலாளர் இறையன்பு, டிஜிபி சைலேந்திர பாபு, சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உள்ளிட்டோர் ஆலோசனையில் பங்கேற்றனர். சென்னை தலைமைச் செயலகத்தில் சட்டம், ஒழுங்கு நிலை குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில்... Comments closed பா.ஜனதாவை ஓரம் கட்ட முடிவு- புதிய அணியை உருவாக்க அன்புமணி முயற்சி By murugan 2026 சட்டமன்ற தேர்தலில் பா.ஜனதா இருக்கும் கூட்டணியே ஆட்சி அமைக்கும் கூட்டணியாக இருக்க வேண்டும் என்ற திட்டத்தோடு அரசியல் பாதையை பா.ஜனதா வகுத்து வருகிறது. சென்னை:தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள திடீர் திருப்பங்கள் வரப்போகும் (2024)... Comments closed விவாகரத்தை எளிமைப்படுத்தும் நிபுணர்கள் – என்ன செய்வார்கள் இவர்கள்? By Nila Raghuraman on Oct 3, 2022 7 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Getty Images விவாகரத்து மிகுந்த மன அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடியது. அதற்கான நடைமுறையும், உணர்வுபூர்வமாக அதைக் கையாளுவதும் மிகவும் கடினம். விவாகரத்து கோருபவர்களின் அந்தச் சுமையை குறைக்க உதவுகின்றனர் புதிய நிபுணர்கள் குழு. 60 வயதான கேட்டிக்கு, தன்னுடைய கணவருக்கு வேறு ஒரு பெண்ணுடன் இருக்கும் தொடர்பு தெரியவந்ததும் அடுத்த ஆறு மாத வாழ்க்கைத் தெளிவற்றதாக இருந்தது. அவர் விவாகரத்து செயல்முறையை, ‘நெருங்கிய ஒருவர் உயிரிழந்த துக்கத்துடன்’ ஒப்பிடுகிறார். இங்கிலாந்தின் பாத் அருகே வசிக்கும் கேட்டி, தனது 35 வருட திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்தபோது மிகவும் மனமுடைந்திருந்தார். வழக்கறிஞராக இருந்த அவரது உடன்பிறந்தோரின் தோழி அவருக்கு ஒரு யோசனை கூறினார். “நான் விவாகரத்து பயிற்சியாளரின் உதவியைப் பெற முடிந்தால், அது என்னுடைய சிறந்த முதலீடாக இருக்கும் என்று அவர் என்னிடம் கூறினார்” என்கிறார் கேட்டி. பிரிஸ்டலைச் சேர்ந்த விவாகரத்து பயிற்சியாளரைத் தொடர்பு கொண்ட கேட்டி, அதன் பிறகு தனக்கு ஏற்பட்டதை, வாழ்வை மாற்றிய அனுபவமாக விவரிக்கிறார். முன்னாள் வழக்கறிஞரான அவரது பயிற்சியாளர், விவாகரத்தைக் கையாள்வதில் உணர்வுபூர்வமான விஷயங்களில் அதிக கவனம் செலுத்தியுள்ளார். அது, புதிய வாழ்க்கையை ஒரு வாய்ப்பாகப் பார்க்க தனக்கு உதவியதாக கேட்டி கூறுகிறார். தனது திருமணத்தை நினைவூட்டும் பொருட்களை வீட்டிலிருந்து அகற்றிய கேட்டி, உலகம் முழுவதும் பயணம் செய்ய ஒரு வருட இடைவெளி எடுக்க முடிவு செய்தார். இந்த விவாகரத்து என்னை வரையறுக்கப் போவதில்லை என்று தான் உறுதியாக நினைத்ததை கேட்டி நினைவுகூருகிறார். “எனக்கு ஓர் அமர்வு நினைவிருக்கிறது, எனது விவாகரத்து பயிற்சியாளர் அலைகளில் பயணம் செய்வது பற்றி பேசினார். அலைகள் கடலில் கரடுமுரடானதாக பெரியதாக இருக்கலாம். ஆனால் நீங்கள் கரையை அடையும்போது என்ன நடக்கிறது என்பதுதான் மிகவும் முக்கியம்” என்கிறார் கேட்டி. வெவ்வேறு வாழ்க்கை நிகழ்வுகளால் ஏற்படும் மன அழுத்தத்தை அளவிடும் ஹோம்ஸ் மற்றும் ரஹே ஸ்ட்ரெஸ் ஸ்கேல் கூற்றுப்படி, மனிதர்களுக்கு அதிக மன அழுத்தத்தை தரும் நிகழ்வுகளில் விவாகரத்து இரண்டாவது இடத்தில் உள்ளது. முதலிடத்தில் வாழ்க்கைத் துணையின் மரணம் உள்ளது. ஆனால், விவாகரத்து பயிற்சியாளர்கள் விவாகரத்து நடைமுறையை சற்று எளிதாக்குவதாக உறுதியளிக்கின்றனர். திருமண உறவை முறித்துக்கொள்வது தொடர்பாக வழிகாட்ட விவாகரத்துப் பயற்சியாளரை நாடும் தம்பதிகள் மற்றும் தனிநபர்கள் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர். பல விவாகரத்து வழக்கறிஞர்கள் தங்கள் வாடிக்கையாளர்களை திருமண வாழ்வை முறித்துக் கொள்வதில் உள்ள உணர்ச்சி, நிதி மற்றும் பொருளாதார சவால்களைக் கையாள விவாகரத்து பயிற்சியாளரிடம் அனுப்புவதாகவும் நிபுணர்கள் கூறுகிறார்கள். பட மூலாதாரம், Getty Images யாருக்கு விவாகரத்து பயிற்சியாளர் தேவைப்படும்? டொராண்டோவைச் சேர்ந்த விவாகரத்து பயிற்சியாளரான நடாலியா ஜுவரெஸுக்கு, இத்தகைய உதவிகள் வழங்குவது மிகவும் தனிப்பட்டதாக இருந்தது. அவர் தனது 20 வயதில் நிச்சயதார்த்த வாழ்க்கை முடிவுக்கு வந்த பிறகு, இந்தப் பயிற்சி சேவையைத் தொடங்கினார். தற்போது நிச்சயதார்த்த மற்றும் திருமண வாழ்வு முடிக்கு வந்தவர்களுக்கு வழிகாட்டுகிறார். ஜுவரெஸ் நீண்ட செயல்முறையைக் கடைப்பிடிக்கிறார். முதற்கட்டமாக விவாகரத்துக்கு வழிவகுத்த பிரச்னையக் கண்டறிவதை உள்ளடக்கிய வாராந்திர அமர்வு நடத்துகிறார். அதனைத் தொடர்ந்து, மூன்று மாதப் பயிற்சியை அவர் பரிந்துரைக்கிறார். தன்னுடைய வாடிக்கையாளர்களில் பாதி பேர் ஆரம்பக்கட்ட அமர்விற்குப் பிறகும் அவருடன் தொடர்ந்து பயணிப்பதாக ஜுவரெஸ் கூறுகிறார். அவர் ஒரு முழுமையான அமர்வுக்கு 300 அமெரிக்க டாலர் கட்டணமாக வசூலிக்கிறார். மூன்று மாதப் பயிற்சிக்கு 3000 அமெரிக்க டாலர் வரை வசூலிக்கிறார். “மக்கள் விவாகரத்துப் பயிற்சியை நாடுவதற்கு பொதுவான காரணம், அவர்கள் உணர்ச்சி ரீதியாகவும் மனரீதியாகவும் அதிகமாகப் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்” என்கிறார் ஜுவரெஸ். “அவர்கள் பல சிக்கலான உணர்ச்சிகளை எதிர்கொள்கிறார்கள். தங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரின் உதவியை எதிர்பார்த்து அவர்களுக்கு சுமையாக இருக்க விரும்பவில்லை” என்றும் அவர் கூறுகிறார். விவாகரத்து பயிற்சிக்கான கட்டணம் வசதியான நபர்களுக்கு உரியதாகவே உள்ளது. விவாகரத்து செயல்முறையின் போது ஏற்கெனவே மக்கள் பெரும் நிதி நெருக்கடியை எதிர்கொள்கின்றனர். தனது வாடிக்கையாளர்கள் 30 முதல் 50 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என்றும், அவர்களில் 60% ஆண்கள் என்றும் ஜுவரெஸ் கூறுகிறார். இது விவாகரத்தின்போது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரிடமிருந்து பெண்களுக்கு அதிக ஆதரவு கிடைப்பதைக் காட்டுவதாக அவர் கூறுகிறார். பட மூலாதாரம், Getty Images அவருடைய 80 சதவிகித வாடிக்கையாளர்கள் தனிநபராக இருந்தாலும், ஜோடிகளாக அவரை அணுகுபவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக உள்ளது. தங்களுக்கு ஒரு மூன்றாம் தரப்பு தேவை என்பதை உணரும்போது அவர்கள் ஜோடிகளாக வருவதாக ஜுவரெஸ் கூறுகிறார். அவர்களுக்கு இடையே தகவல் தொடர்பு பிரச்சனை இருந்தாலோ, கடினமான உரையாடல்களால் சங்கடம் ஏற்படும் என்று உணர்ந்தாலோ அல்லது இருவரில் ஒருவர் விவாகரத்து வேண்டாம் என்று நினைத்தாலோ அவர்கள் ஜோடியாக வருவதாகவும் ஜுவரெஸ் கூறுகிறார். இணக்கமான பிரிவுகளில் கூட தம்பதிகள் விவாகரத்து மேற்கொள்ள ஒரு பயிற்சியாளரைப் பயன்படுத்தலாம் என்று கூறும் ஜுவரெஸ், பயிற்சியாளருடன் இணைந்து செயல்படுவது தனிப்பட்ட முறையில் அதை எடுத்துக்கொள்ளாமல் விவாகரத்துக்கான செயல்முறையில் கவனம் செலுத்த உதவும் என்கிறார். விவாகரத்து பயிற்சியாளர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது, திருமண உறவை முடிக்கும் செயல்முறையை முடிந்தவரை நேரடியானதாக மாற்ற மக்கள் எவ்வாறு முதலீடு செய்ய அதிக அளவில் தயாராகி வருகின்றனர் என்பதைக் காட்டுகிறது. “விவாகரத்து விகிதங்கள் அதிகரித்ததால், விவாகரத்து சாதாரணமாகிவிட்டது” என்கிறார் மருத்துவ உளவியலாளரும் நியூயார்க் நகரத்தில் உள்ள மேடிசன் பார்க் உளவியல் சேவைகளின் நிறுவனருமான யாஸ்மின் சாட். “நிபுணத்துவத்தைத் தேடுவதில் நாம் மேலும் மேலும் வசதியாகி விட்டோம். இனி விவாகரத்து குணத்தின் குறைபாடாகவோ அல்லது ஒருவரது சொந்த வாழ்க்கைத் தோல்வியாகவோ பார்க்கப்படாது. இது உங்கள் பணத்தை முதலீடு செய்வதற்கு முன் நிதி ஆலோசனை நாடுவது போன்றது. இந்த விஷயத்தில், வேறொரு வாழ்க்கை முறைக்கு மாறுவதற்கு முன் சட்ட, உணர்ச்சி மற்றும் நடைமுறை ஆலோசனை நாடுகிறார்கள்” என்கிறார் யாஸ்மின் சாட். அமெரிக்காவைச் சேர்ந்த குடும்ப சட்ட வழக்கறிஞரான நிக்கோல் சோடோமா, தன்னிடம் விவாகரத்து கோரி வரும் தம்பதிகளைப் பயிற்சியாளர்களின் உதவியையும் நாடச் சொல்கிறார். “ஒரு விவாகரத்து பயிற்சியாளர் உங்களை அடையாளம் காணவும், நீண்ட காலத்திற்கு உங்களுக்குத் தேவைப்படும் விஷயங்கள் குறித்து ஆராயவும் நேரத்தை செலவிடுவார். அதே நேரத்தில் தற்போது நீங்கள் சந்திக்கும் சவால்களையும் எதிர்கொள்ள உதவுவார்” என்று நிக்கோல் சோடோமா கூறுகிறார். தற்போது, சோடோமா போன்ற பல வழக்கறிஞர்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு விவாகரத்துப் பயிற்சியாளர்களைப் பரிந்துரைக்கின்றனர். சில தருணங்களில் அவர்களே பொருத்தமான பயிற்சியாளருடன் வாடிக்கையாளர்களை இணைக்கின்றனர். இது விவாகரத்து நடைமுறைக்கும், இந்த முறையை பிரபலப்படுத்துவதற்கும் உதவுகிறது. ஆனால் விவாகரத்து செயல்முறைக்குள் மூன்றாம் தரப்பினரைக் கொண்டுவருவதில் சில ஆபத்துகளும் உள்ளன. “விவாகரத்துப் பயிற்சியாளர்கள் உரிமம் பெறாதவர்கள் மற்றும் அவர்களின் நிபுணத்துவம் பரவலாக வேறுபடுகிறது” என்கிறார் சாத். நீங்கள் நல்ல விவாகரத்துப் பயிற்சியாளரை அணுகியிருக்கிறீர்கள் என்பதை உறுதிப்படுத்த உங்கள் பயிற்சியாளரின் பின்னணியை சரிபார்ப்பது மிகவும் முக்கியம்” என்றும் சாத் கூறுகிறார். “விவாகரத்து என்னை வரையறுக்காது“ பயிற்சியாளரைப் பயன்படுத்தியது விவாகரத்துக்குப் பிந்தைய தனது வாழ்க்கைப் பாதையை முற்றிலும் மாற்றியதாக கேட்டி நம்புகிறார். விவாகரத்தான சில காலங்களிலேயே அவர் புதிய துணையை தேர்ந்தெடுத்தார். புதிய உறவில் நுழைவதற்கான சக்தி, நம்பிக்கை மற்றும் மீண்டுவரும் தன்மையை பயிற்சி அமர்வுகள் தனக்கு ஏற்படுத்தியதாக அவர் பாராட்டுகிறார். விவாகரத்துப் பயிற்சியாளரை நியமிப்பது விலை உயர்ந்ததாக இருந்தாலும், அது பயனுள்ள முதலீடு என்று கேட்டி நம்புகிறார். ஒரு தனிநபராக தன் மீது ஏற்படுத்திய தாக்கம் காரணமாக விவாகரத்துப் பயிற்சியாளரில் முதலீடு செய்ததற்கு தான் மிகவும் நன்றிக்கடன்பட்டிருப்பதாக அவர் கூறுகிறார். “நீங்கள் மனமுடைந்திருக்கலாம் அல்லது காயப்பட்டிருக்கலாம், ஆனால் இறுதியில் தகுதியான மாற்றத்திற்கு நீங்கள் தயாராக இருக்கும்போது, இந்தப் பயிற்சியானது உங்களுக்கு உதவும் எனக் கூறும் கேட்டி, விவாகரத்து தன்னை வரையறுக்கவில்லை என்றும் எதிர்காலம் பிரகாசமாக இருப்பதாகத் தான் உணர்வதாகவும் கூறுகிறார்.
தமிழர்களின் நாகரீகம் மற்றும் பண்பாடு குறித்த அறியப்படாத பல்வேறு தகவல்கள் இன்னும் 6 மாத காலத்தில் வெளியாகுமென மதுரை காமராசர் பல்கலைக்கழக பேராசிரியர் குமரேசன் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம், சிவகளையில் கடந்த பிப்ரவரி மாதம் 26ம் தேதி தமிழக தொல்லியல் துறை சார்பில் தொல்லியல் அகழாய்வு பணிகள் துவங்கின. இதுவரை 40 முதுமக்கள் தாழிகள், 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையான கல்வட்டங்கள், பிராமி எழுத்துக்கள் கண்டுப்பிடிக்க பட்டுள்ளன. நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள் இதையடுத்து அகழாய்வு பணியில் கண்டுபிடிக்கப்பட்ட முதுமக்கள் தாழியில் உள்ள பொருட்களை எடுத்து மரபணு பரிசோதனை செய்வதற்காக மதுரை காமராசர் பல்கலைக்கழக மரபியல் துறை பேராசிரியர் குமரேசன் மற்றும் அவரது குழுவினர் வருகை தந்தனர். இதனையடுத்து பரிசோதனைக்கான மண் மற்றும் எலும்புகளை பெற்றுக் கொண்ட குமரேசன் செய்தியாளர்களிடம் பேசுகையில், இரண்டாம் கட்டமாக நடைபெற்று வரும் அகழாய்வு பணியில் கிடைத்த பொருட்கள் ஆய்வுக்கூடத்தில் வைத்து ஆய்வு செய்யப்படும் என்றும் இந்த பணிகள் சுமார் 6 மாத காலத்தில் நிறைவடையும் என்றும் தெரிவித்தார். சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
விதிகளை மீறியதற்காக அதிபர் ட்ரம்பின் @realDonaldTrump பக்கத்தை டுவிட்டர் நிறுவனம் தற்காலிகமாக முடக்கியுள்ளது. அடுத்த 12 மணி நேரம் @realDonaldTrump டுவிட்டர் பக்கத்தை டிரம்ப் பயன்படுத்த முடியாத நிலைக்கு முடக்கப்பட்டுள்ளது என டுவிட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் தெரியவருவதாவது, அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற ஜனநாயக கட்சி வேட்பாளரான பைடனின் வெற்றியை அங்கீகரிக்கும் வகையில் அதற்கான சான்றை வழங்கும் நடைமுறை வாஷிங்டன்னில் உள்ள பாராளுமன்ற கட்டிடத்தில் நேற்று நடைபெற்றது. அப்போது, திடீரென பாராளுமன்ற கட்டிடத்திற்கு வெளியே டிரம்ப் ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கானோர் திரண்டனர். இது ஒரு புறமிருக்க வெள்ளைமாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த டிரம்ப் தேர்தலில் முறைகேடு நடந்துள்ளதாகவும், முடிவுகளை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை எனவும் பேசினார். டிரம்பின் பேச்சால் உணர்ச்சிவசப்பட்ட அவரது ஆதரவாளர்கள் பாராளுமன்ற கட்டிடத்திற்குள் நுழைய முற்பட்டனர். இதனால், பாதுகாப்பு பணியில் இருந்த பொலிசார் அவர்களை தடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். அப்போது பாதுகாப்பு படையினருக்கும் டிரம்ப் ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் பெரும் பதற்றம் ஏற்பட்டது. தனது ஆதரவாளர்களை ஊக்குவிக்கும் வகையிலும், வன்முறையை தூண்டும் வகையிலும் பேசிய டிரம்ப் தான் பேசிய வீடியோக்களை டுவிட்டரில் பதிவேற்றம் செய்தார். அதேபோல், டிரம்பின் பேச்சு பேஸ்புக், யூடியூப் உள்ளிட்ட சமூகவலைதளங்களிலும் வேகமாக பரவியது. இதையடுத்து, வன்முறையை தூண்டும் வகையில் இருந்த அந்த வீடியோக்களை டுவிட்டர், பேஸ்புக், யூடியூப் ஆகிய நிறுவனங்கள் தங்கள் பக்கங்களில் இருந்து உடனடியாக நீக்கினர். குறிப்பாக, தேர்தலில் முறைகேடு நடந்துள்ளதாக பேசிய வீடியோவை டுவிட்டரில் டிரம்ப் பதிவிட்டிருந்தார். அவர் தனது அதிகாரப்பூர்வ தனிப்பட்ட டுவிட்டர் பக்கமான @realDonaldTrump பக்கத்தில் இருந்து சில டுவிட்டுகள் செய்தார். இந்த டுவிட்டுகள் வன்முறையை தூண்டும் வகையில் இருந்ததால் அவற்றை டுவிட்டர் நிறுவனம் உடனடியாக நீக்கியது. மேலும் தொடர்ந்து டிரம்ப் வன்முறை மற்றும் தேர்தல் தொடர்பான தவறான தகவல்களை பரப்பினால் அவரின் @realDonaldTrump பக்கம் நிரந்தரமாக நீக்கப்படும் என டுவிட்டர் நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
Thennakam Admin 24th February 2018 Current Affairs – 24 February 20182018-02-24T10:24:41+05:30 நடப்பு நிகழ்வுகள் இந்தியா 1.ஒடிசா மாநிலம் அருகே வங்க கடல் பகுதியில் உள்ள பரதிப் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த கப்பலில் இருந்து அணு ஆயுதங்களை தாங்கிச் செல்லும் தனுஷ் ஏவுகணை நேற்று காலை 10:52 மணிக்கு சோதனை செய்யப்பட்டது. இந்த ஏவுகணை 350 கி.மீட்டர் தூரத்தில் உள்ள இலக்கை தாக்கி அழிக்கவல்லது. உலகம் 1.பெண் உதவியாளருடன் நெருக்கமாக பழகி அவரை கர்ப்பிணியாக்கிய குற்றச்சாட்டுக்கு இலக்காகி இருக்கும் ஆஸ்திரேலிய துணை பிரதமர் பர்னபி ஜாய்ஸ் தனது பதவியை ராஜினாமா செய்கிறார். 2.துபாயில் இருந்து அபுதாபிக்கு வெறும் 12 நிமிடங்களில் செல்லும் வகையிலான அதிவேக ஹைபர்லூப் போக்குவரத்துக்கான ஹைபர்லூப் பெட்டி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.மணிக்கு 560 கி.மீ. முதல் 1200 கி.மீட்டர் வேகத்தில் பயணம் செய்யக் கூடிய வகையில் இந்த பெட்டி தயாரிக்கப்பட்டுள்ளது. விளையாட்டு 1.கொரியாவிற்கு எதிராக ஐந்து போட்டிகள் கொண்ட ஹாக்கி தொடரில் விளையாட இருக்கும் இந்திய கேப்டனாக ராணி ராம்பால் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
பத்தொன்பதாம் நூற்றாண்டில் யாழ்ப்பாண வழுக்கியாற்றின் தீரத்தில் தேவதாசி அவதாரத்தில் வாழ்ந்த ஒரு கடற்கன்னியின் காதல் கதை 1 நிலவு உதிக்கிற ஒரு கூதிர் காலத்தில் தான் ஆறுமுகன் முதன்முதலாக கனகியைக் கண்டான். ஊரெல்லாம் ஆறு ஓடுகிற அழகிய யாழ்ப்பாணப் பருவகாலம். இரவும் பகலும் உரசிக்கொள்ளும் அந்திப்பொழுதில் அவள் தன்னந்தனியே குளத்தில் குளித்துக்கொண்டிருந்தாள். கூதிர் காற்றையும் நிலவையும் அனுபவித்து நடந்து கொண்டிருந்த ஆறுமுகன் குளத்தங்கரையில் அரசமரக்கிளையில் தொங்கிய ஒரு பெண்ணின் சேலையைகண்டு அதிசயித்து எதிர்க்கரையில் ஒரு ஆலமர மறைவிலிருந்து எட்டிப்பார்த்தான். குறுக்குக்கட்டோடு ஒரு கட்டிளம் பெண் குளத்தின் நடுவில் தன்னந்தனியாக நீந்திக்கொண்டிருந்தாள். இரவோ நிலவோ என்ற பயமேதுமின்றி ஓர் அப்சரஸ் போல அவள் நீச்சலாடும்போது எழும் ஒலி பாற்கடலின் அலை சத்தம்போல ஆறுமுகனின் காதில் வந்தோதியது. விதிர்விதித்தவன் குளத்தை ஒருதடவை கண்மூடிவிட்டுப் பார்த்தான். இப்போது பகல்போய் நிலவு வந்துவிட்டது. அது பாற்கடலே தான். ஆறுமுகனுக்கு வியர்த்தது. உடம்பை போற்றியிருந்த சால்வையை இடுப்பில் கட்டினான். அவள் நடுக்குளத்தில் சில நிமிடங்கள் மல்லாக்க மிதந்தாள். பின் மல்லாக்க படுத்தபடியே back stroke ஆக நீச்சலாடிவந்து கரையை அண்மித்ததும் உடம்பை திருப்பி தவளையைப்போல நீச்சலாடி வந்தாள். தரை தட்டியதும் நடந்து வந்தாள். அந்த நிலவொளியில் ஈரக் குறுக்குக் கட்டுப் புடவையில் அவள் ஊர்வசி, ரம்பை, மேனகா போல கரையேறியபோது அவளது உயரத்தையும் அங்க அளவுகளையும் கணிப்பதில் ஆறுமுகனுக்கு சிரமமேதுமிருக்கவில்லை. அப்சரசுகளைப்போல நிர்வாணமாகி காய்ந்த சேலையால் தன் ஈரம் துவட்டுவதை தன் நெஞ்சு துடிக்க எதிர்பார்த்துக் காத்திருந்தான் ஆறுமுகன். அப்படி எதுவும் நடக்கவில்லை. எங்கிருந்தோ ஒரு நாய் ஓடிவந்து அரசமரக்கிளையில் தொங்கிய அவளது சேலையை கவ்விவந்து அவளிடம் கொடுத்தது. "நயினார் எங்க ஊர் மேயப்போயிருந்தாயா" என்று செல்லமாகக் கடிந்துகொண்டாள். அந்நாய் செந்நாய் இக்கால லாப்ரடோர் நாய் போல குரைக்கவே இல்லை. அவளைச் சுற்றிச் சுற்றி வந்தது. இடுப்பு வரை நீண்ட தன்னுடைய நீண்ட முடியின் ஈரத்தை பிழிந்தாள். குளக்கரைப் புற்தரையில் அவள் பிழிந்து விழுந்த நீர்த்துளிகளை செந்நாய் முகர்ந்தது. பிறகு தன் முகத்தையும் கழுத்தையும் தோளையும் கைகளையும் துடைத்தபின் கேசத்தின் ஈரம் காய சேலையை தலையைச்சுற்றி முடிந்தாள். ஈரக்குறுக்குக்கட்டோடு நடக்கத் தொடங்கினாள். செந்நாய் அவளுக்கு முன்னுக்கு போகவுமில்லை. பின்னுக்கு போகவுமில்லை. அவளின் ஈரக் குறுக்குக்கட்டிலிருந்து தரையில் விழும் தண்ணீர்த்துளிகளை முகர சில அடிகள் பின்னோக்கி போகும். பிறகு அவள் போகும் பாதையில் முட்கள் ஏதாவது இருக்கிறதா என்பதை உளவு பார்க்க முன்னொக்கி சில அடிகள் போகும். குளத்தின் மறுகரையிலிருந்த ஆறுமுகன் தன் அடிகளை கவனமாக எடுத்துவைத்து பின் தொடர்ந்தான். அக்கணங்களில் செந்நாயின் ஒலிகளைவிட அவளின் கேசத்தின் நறுமணத்தை முகர்ந்தே அவளை அவன் வசதியான இடைவெளியில் பின்தொடர்ந்தான். நிலவொளியில் தன்னை யாரும் இனங்கண்டு கொள்ளக்கூடாது என்பதற்காக தன் சால்வையை முக்காடாகப் போட்டுக்கொண்டான். ஒரு 5 நிமிடத்தில் அவள் கண்ணை கைத்தீஸ்வரர் கோயிலண்டையிலுள்ள தன் வீட்டுப்படலையைத் திறந்து உள்ளே போக நாயும் பின்தொடர்ந்தது. வீட்டில் மேலுஞ்சில நாய்கள் சிநேகபூர்வமாகக் குரைத்து இவர்களை வரவேற்றன. சில நிமிடங்கள் தரித்திருந்துவிட்டு ஆறுமுகன் தொடர்ந்து நடந்தான். அந்தப்படலையை அவன் கடந்து செல்லும்போது அவள் ஒரு தேவதாசி என்பதையறிந்தான். அக்கணத்திலிருந்து ஆறுமுகனின் நெஞ்சு துடிக்கத்தொடங்கியது. அப்சரஸை புணரத்துடிக்கும் துடிப்பு அது. அந்நிலவொளியில் நல்லூரில் உள்ள அவன் வீட்டுக்கு நடந்துவரும் அரைமணித்தியாலமும் அவன் நெஞ்சு துடித்துக்கொண்டிருந்தது. வீட்டில் இரவு ஆகாரம் சாப்பிட அவன் அண்ணன்கள் காத்திருந்தார்கள். ஆறுமுகன் தனக்கு பசிக்கவில்லை என்றவாறு ஒரு செம்பு பாலை மட்டும் குடித்துவிட்டுப் படுத்துவிட்டான். இக்கதை நடக்கிற காலம் பத்தொன்பதாம் நூற்றாண்டு. 1847. 1848. அப்போது ஆறுமுகனுக்கு வயது 24. பேர்சீவல் என்கிற மெதடிஸ்ற் பாதிரியாரின் கீழ் யாழ் மத்திய கல்லூரியிலேயே படித்து அங்கு ஆங்கில ஆசிரியராக வேலை செய்துகொண்டிருந்தான். அப்போது பேர்சீவல் பாதிரியார் வேதாகமத்தை தமிழில் மொழி பெயர்த்துக்கொண்டிருந்தார். அவருடைய மொழிபெயர்ப்பை செம்மைப் படுத்தும் பணி ஆறுமுகனுடையது. சனி ஞாயிறுகளில் பெருமளவு நேரங்களை பாதிரியாரின் வீட்டிலேயே ஆறுமுகன் செலவளித்தான். ஆறுமுகன் பாதிரியாரோடு எவ்வளவு நெருக்கமோ அதைவிட நெருக்கம் கைத்தீஸ்வரச் செட்டியாரோடு. செட்டியாருக்கு அப்போது 85 வயது. பார்த்தால் ஒரு 65 வயது இளைஞன் போலவே இருப்பார். பெரும் வணிகரான பூபாலச் செட்டியாரின் மகன் கைத்தியலிங்கன். பூபாலச் செட்டியாரின் வணிகத்தால் அவர் அப்போதைய ஈழ ஒல்லாந்து தேசாதிபதியோடு நெருக்கமானார். பிள்ளைச் செல்வமில்லாத தேசாதிபதியின் மனைவி கைத்தியலிங்கனை தன் மகனாக்கி பராமரித்தார். தேசாதிபதியின் மாளிகையிலேயே கைத்தியலிங்கன் தன் பதின்ம பருவப் பெரும் பொழுதுகளைப் போக்கினான். தேசாதிபதியம்மா அவனுக்கு ஒல்லாந்த மொழியைக் கற்றுக்கொடுத்தார். அவரே அவன் வளர்ந்து சொந்தமாக வணிகம் தொடங்கியபோது மிக லாபமீட்டும் முத்துக்குளிக்கும் குத்தகையை எடுத்துக்கொடுத்தார். இவ்வணிகத்தில் செல்வமீட்டி யாழ்ப்பாணத்தில் பெருஞ்செல்வரானவரே கைத்தீஸ்வரச் செட்டியார். செட்டியார் தனது உயர் ஒல்லாந்த தொடர்புகளால் தேசாதிபதியின் அனுமதிபெற்று ஆரம்பித்த கோயிலே கண்ணார் பண்ணை கைத்தீஸ்வரன் கோயில். போர்த்துக்கீசர் யாழ்ப்பாண அனைத்து இந்துக்கோயில்களையும் அழித்தபின் யாழ்ப்பாணத்தில் முதலில் உருவான சிவன்கோயில். பிறகு ஒல்லாந்தர் ஆட்சிபோய் ஆங்கில ஆட்சிவந்தபோது செட்டியாருக்கு மொழிப்பிரச்சனையும் பல வணிகப்பிரச்சனைகளும் வந்தன. ஒல்லாந்த மொழி தெரிந்த செட்டியாருக்கு ஆங்கிலம் தெரியாது. ஆறுமுகன் தன் இருபது வயதில் முதலில் செட்டியாரின் மொழிபெயர்ப்பாளராகவே சேர்ந்தான். செட்டியார் அன் கோ அப்போது ஈழத்தில் ஒரு பெரிய முறைசாரா வங்கியாக இருந்தது. வட்டிக்கு கடன்கொடுத்து இலாபமீட்டுவது. ஆங்கிலேயர் செட்டியார்களின் வட்டித்தொழிலை உடைத்து முறையான தங்களது ஆங்கில வங்கிகளை படிப்படியாக உருவாக்க முயன்றபோதுதான் செட்டியாரின் வணிக ஏகபோகம் பாதிக்கப்படத் தொடங்கியது. ஆங்கில கவர்னர்கள், நீதிபதிகள், அரசாங்க அதிபர், பொலிஸ் அதிகாரி இவர்களுக்கெதிரான பெட்டிசன்களை செட்டியாரின் சார்பில் விக்ரோறியா மகாராணிக்கு எழுதுவது ஆறுமுகனின் இரண்டாவது தொழில். அடுத்தடுத்த ஆண்டுகளில் ஆறுமுகன் செட்டியாரின் அரசியல் பொருளாதார மதியுரைஞராகவே மாறிவிட்டான். அதைவிட செட்டியாரின் புலனாய்வுக் காரனும் அவனே. தான் கூப்பிட்ட மாத்திரத்தில் ஆறுமுகன் வரக்கூடியவாறு இருக்கவேண்டும் என்பதற்காக செட்டியார் அவனுக்கென்று ஒரு குதிரை வண்டியையும் வண்டில் காரனையும் ஏற்பாடு செய்தார். வீதியில் ஆறுமுகனின் குதிரை வண்டியைக்கண்டால் குதிரையில் வரும் யாழ் ஆங்கில பொலிஸ் அதிகாரியே ஒதுங்கி நின்று வழிவிடுவான். பேர்சீவல் பாதிரியாருக்கு ஆங்கிலேயரின் பொருளாதார அரசியல் நலன்களில் நாட்டமில்லை. மதம் பரப்புவது மட்டுமே அவரது ஒரே நோக்கம். ஆக வஞ்சகமில்லாமல் ஆங்கிலேயரின் அரசியல் பொருளாதார புலனாய்வுத் தகவல்களை அவர் ஆறுமுகனிடம் சொல்வார். பதிலுக்கு ஆறுமுகனிடமிருந்து சைவமத மீள் எழுச்சி பற்றிய புலனாய்வுத் தகவல்களை எதிர்பார்ப்பார். ஆறுமுகன் கயிற்றில் நடக்கிற ஒரு டபிள் ஏஜண்ட் போல தனக்கும் செட்டியாருக்கும் பாதகமில்லாமல் சில சைவமத உளவுத் தகவல்களை கசிய விடுவான். தேவதாசி கனகியைப் பற்றிய புலனாய்வு அறிக்கையை மிக இலகுவாகவே ஆறுமுகன் பெற்றிருக்கலாம். கைத்தீஸ்வரச் செட்டியாரிடம் கேட்டிருந்தால் அவர் உடனேயே சொல்லியிருப்பார். ஆறுமுகன் செட்டியாருக்கு தெரியாமல் தனக்கு நம்பகரமான இரு நண்பர்களிடமிருந்து சுற்றி வளைத்து தகவல் சேகரித்தான். அதன்படி கனகிக்கு இப்போது 20 வயது. கைத்தீஸ்வரச் செட்டியார்தான் அளவெட்டி என்கிற ஊரிலிருந்து இவர்களின் இசைவேளாளக் குடும்பங்களை கைத்தீஸ்வரக் கோயிலில் குடியேற்றினார். கனகியின் இசைவேளாளர் குடும்பம் மிக வசதியானது. அக்குடும்பத்தில் பரம்பரைத்தொழில் செய்து சேவிக்கவேண்டியிருக்காத செல்வம் மிக்க பலர் அக்கால ஈழ ஆங்கில மிசனறிப்பள்ளிகளில் சேர்ந்து படித்தார்கள். கனகி உடுவில் மகளிர் கல்லூரியில் சேர்ந்து படித்தாள். கனகியின் மச்சான் நட்டுவச் சுப்பைனார் வட்டுக்கோட்டை செமினறியில் சேர்ந்து படித்தான். 1844ம் ஆண்டில் சேர் ஜேம்ஸ் ரெனன்ற் என்கிற ஒரு ஆங்கில உயர்பிரபு, ஆங்கில சிவில் அதிகாரி வட்டுக்கோட்டை செமினறியின் உலகப்புகழ் அறிந்து குதிரையில் அக்கல்லூரிக்கு விசயம் செய்தார். அவரது பாதுகாப்புக்கு பொறுப்பாக யாழ் கோட்டை பொலீஸ் அதிகாரியான ஆங்கிலேயன் ஜேம்ஸ் ரெய்லரும் தன் சிறிய குதிரைப்படையோடு அங்கு போனான். அன்றுதான் கனகியின் விதி மாறியது. கனகிக்கு கடல் நீலக்கண்கள். யேசப்பாவின் மத்தியகிழக்கு பொன்னிற ஒலிவ் தோல். .கறுப்பு கேசம். இந்த வரலாறு போர்த்துக்கீசர்களின் காலத்திலிருந்து தொடங்குகிறது. கனகியின் மூன்றாவது மூப்பாட்டியை சங்கிலிய மன்னன் காலத்தில் மாவிட்டபுரத்தில் ஒரு போர்த்துக்கீசிய ஜெனரல் வைத்திருந்தான். கனகியின் அம்மாவின் வாடிக்கையாளர்களாக சில ஒல்லாந்தர்கள் இருந்திருக்கிறார்கள். யாழ்ப்பாணம் பச்சைப்பசேலென இருந்த ஒரு தைமாதப் பகலில் ரெனன்ரின் குதிரைப்பரிவாரம் வட்டுக்கோட்டை செமனறிக்குள் புகுகின்றபோது ஒருபுறம் உடுவில் மகளிர் கல்லூரி மாணவிகளும் மறுபுறம் வட்டுக்கோட்டை செமினறி மாணவர்களும் சீருடையில் நின்று ஒரு இராணுவ அணிவகுப்பு மரியாதைபோல வரவேற்றார்கள். அங்கிருந்த ஒவ்வொரு மாணவன் மாணவியினதும் திறமைகளை குதிரையிலிருந்தபடியே சோதித்தார் சேர் ஜேம்ஸ் எமர்சன் ரெனற். கனகி அவரோடு ஆங்கிலத்தில் பேசினாள். அக்காலத்தில்தான் வேதாகமம் தமிழில் மொழிபெயர்க்கப் பட்டுக்கொண்டிருந்த காலம். கனகி வேதாகம சாலமனின் பாடல் சிலவற்றை தான் தமிழில் கர்நாடக சங்கீத ராகத்தில் பாடுகிறேன் என்று சொல்லிவிட்டு பாடினாள். ஒரு கடற்கன்னியின் குரலைப்போலிருந்த கனகியின் பாடலைக் கேட்டு இத்தனை மைல் தூரம் கடலால் வந்த எமர்சன் குதிரையிலிருந்து குதித்திறங்கி கனகியை வணங்கினார். அன்று கனகியில் கண் வைத்தவன் தான் அந்த ஆங்கில பொலிஸ் அதிகாரி ரெய்லர். அவளது மாமனைப்பிடித்து அவளை அடைத்து விட்டான். கனகியின் கெட்டகாலம் இரு வருடங்களுக்கு முதல்தான் கனகியின் தாய் இறந்திருந்தாள். யாழ்ப்பாணக் கோட்டையிலிருந்த பொலீஸ் நிலையத்திலிருந்து முழு யாழ்ப்பாணத்துக்குமான பொலீஸ் அதிகாரியாக இயங்கியவன் ஜேம்ஸ் ரெய்லர். அந்தக்காலத்தில் இப்போது போல இந்தியர்களும் ஈழத்தவர்களும் பிழைப்பதற்காக ஐரோப்பாவுக்கு போவதில்லை. ஐரோப்பியர்களும் பிருத்தானியர்களும்தான் பிழைக்க இந்தியாவுக்கும் ஈழத்திற்கும் வந்தார்கள். அப்படி அதிகாரத்தோடு வந்தவன்தான் ரெய்லர். அவன் மகா குடிகாரன். இரவுமுழுக்க குடிப்பதிலும் வேசையாடுவதிலுமே செலவழிப்பான். பகலில் யாழ் மக்களை கொடுமைப்படுத்துவான். அவனின் கெடுபிடிகளைப்பற்றி ஆங்கிலேய மகாராணிக்கும் ஆங்கில கவர்னருக்கும் யாழ்ப்பாணப் பிரதானிகள் முறையிட்டதால் இங்கிலாந்துக்கு வரவழைத்தார்கள். வருமானம் இழந்த கனகியின் மாமன் அவளை கைத்தீஸ்வரன் கோயிலண்டைக்கு தன் சொந்தக்காரர்களோடு அவளைக் கொணர்ந்து குடியேற்றினான். இப்போது ஒரு இந்திய நாட்டுக்கோட்டை செட்டியாரும் ஒரு வெள்ளாள முதலியாரும் அவளை வைத்திருக்கிறார்கள். ஒவ்வொரு வெள்ளி இரவும் கண்ணை கைத்தீஸ்வரன் கோயிலில் கனகி சதிராட்டம் ஆடுவது கைத்தீஸ்வச் செட்டியாரின் ஏற்பாடு. இதனால் கோயிலின் வருமானம் கணிசமாக அதிகரித்தது. அடுத்த வெள்ளிக்கிழமை தனது வழமையான கண்ணை கைத்தீஸ்வரன் கோயில் பிரசங்கம் முடிந்தபின் ஆறுமுகன் கோயிலிலேயே தங்கியிருந்து கனகியின் சதிராட்டத்தைப் பார்த்தான். ஆறுமுகன் இந்த சிறப்பு பிரதானிகளுக்கு மட்டுமான தனிப்பட்ட மூடிய மண்டபத்துள் வரும்போது சில இரகசிய முணுமுணுப்புக்கள் கேட்டன. சதிராட்டத்தைப் பார்க்கும் பிரதானிகள் ஐம்பது வயதுக்கு மேற்பட்டவர்கள். ஆறுமுகன் வெறும் 24 வயதிலேயே யாழ்ப்பாணப் பிரதானி ஒருவனாகிவிட்டான். கனகிக்கும் பேரதிர்ச்சியும் பயமும். ஆட்டத்தில் பெருமளவு நேரம் அவள் ஆறுமுகனை பார்த்ததை சபையும் பார்த்தது. சனி, ஞாயிறு ஆறுமுகன் பாதிரியாரிடம் போகவில்லை. அவனுக்கு மனசு சரியில்லை. இரண்டு நாட்களாக அவன் தூங்கவில்லை திங்கட்கிழமை அதிகாலை கிணற்று பச்சைத் தண்ணீரில் குளித்துவிட்டு கைத்தீஸ்வரன் கோயிலுக்குப் போனான். உதய காலப் பூசையில் சனங்கள் அதிகமிருக்கமாட்டார்கள். கால் கழுவும் கோயில் கிணற்றடியில் காத்திருந்தான். கும்மிருட்டு. கனகி தனியே வந்துகொண்டிருந்தாள். அவளது உயரத்தையும் நடையையும் வைத்தே கணித்தான். அப்போதுதான் வந்தவன்போல கிணற்றில் தண்ணீர் அள்ளி தன் காலை நனைத்தபின் இன்னொரு வாளி தண்ணீர் அள்ளி அவள் கால் கழுவ உதவும்போது “ பிள்ளை கனகி நான் யாரெண்டு தெரியுதா? “ “ உங்களை தெரியாதா சுவாமி? எத்தனை தடவை உங்கள் பிரசங்கத்தைக் கேட்டிருக்கிறன்” “ பிள்ளை போன கிழமை அந்திசாயும் நேரம் குளத்தில் நீ நீராடுவதைப் பார்த்தேன். வெள்ளிக்கிழமை இரவு உன் சதிராட்டத்தைப் பார்த்தேன். இரண்டு நாள் தூக்கமில்லை எனக்கு. நான் எத்தனை பொன் கொடுத்தும் உன்னை அடைய விரும்புகிறேன். நான் என்ன செய்யவேண்டும்” “ சுவாமி, நீங்களுமா? இது செட்டியாருக்கு தெரிந்தால்.... என்று சிணுங்கத் தொடங்கினாள் கனகி. அவள் சிணுங்கியபடியே ஓடத்தொடங்கினாள். ஆறுமுகன் அவளைத் துரத்திச் சென்று அவள் முன்பக்கம்போய் அவளை மறித்து கரங்கூப்பியபடி அவளின் காலில் விழுந்து அவள் இரும் காற்சலங்கைகளை பிடித்தபடி அழுதபடி சொன்னான். “ செட்டியாருக்கு தெரியாமல் நான் உன்னிடம் இரவில் நடந்தே வருகிறேன்.” “ என் அம்மானிடம் பேசுங்கள்” என்று கனகி சிணுங்கியபோதுதான் ஆறுமுகன் தன் பிடியை விட்டான். ஆறுமுகன் தருணம் பார்த்து கனகியின் மாமனை அவரது ஊரான அளவெட்டி பெருமாள்கடவை கோயிலில் சாட்டோடு சாட்டாகச் சந்தித்தான். கனகியின் மாமனுக்கு ஆறுமுகன் யார், அவன் எவ்வளவு செட்டியாருக்கு வேண்டப்பட்டவன் என்பது தெரியும். ஆறுமுகன் மாமனுக்கு புரிகிற பொன்னின் மொழியிலேயே பேசினான். அந்த நாட்டுக்கோட்டை செட்டியாரும் வெள்ளாள முதலியாரும் தருகிறதை விட இருமடங்கு பொன் மாதாமாதம் நான் தருவேன். அவர்களை விட்டுக்கலை. இனி நான் மட்டுமே கனகிக்கு உபயம்” என்றான். மாமன் “ தம்பி நீ எனக்கு மகன் மகன் மாதிரி. உனக்கு கனகியை ஏற்பாடு செய்வதில் எனக்கு ஒரு பிரச்சனையும் இல்லை. ஆனால் செட்டியாருக்கு தெரியாமல் என்னால் ஒன்றும் செய்யமுடியாது.” என்று கைவிரித்து விட்டான். ஆறுமுகன் தன் வண்டிக்காரனிடம் செட்டியார் வீட்டுக்கு வண்டியை வேகமாக ஓட்டு என்று உத்தரவிட்டான். செட்டியார் வீட்டில் இல்லை. செட்டியாரம்மா ஆறுமுகனுக்காகக் காத்திருந்த மாதிரி இருந்தாள். தாயைத் தின்னியான ஆறுமுகனின் சிற்றன்னை போலவே செட்டியாரம்மா ஆறுமுகனோடு வாரப்பாடு கொண்டிருந்தவள். வெள்ளிக்கிழமை கனகியின் சதிராட்டத்தை ஆறுமுகன் பார்த்ததை செட்டியார் கவலையோடு செட்டியாரம்மாவிடம் சொல்லியிருந்தார். அம்மா பரிமாறிய அன்னம், பாசிப்பயறு, வெள்ளைக் கத்தரிக்காய், பயத்தங்காய் கீரை, வடை, வாழைக்காய்ப் பொரியல், அப்படம், ரசம் என்பவற்றை ஆறுமுகன் சாப்பிடுவதை ரசித்துப் பார்த்துக்கொண்டிருந்த செட்டியாரம்மா அவனாகவே சொல்லட்டும் என்று காத்திருந்தார். அவாவே ஒரு வெற்றிலை எடுத்து சுண்ணாம்பு தடவி பாக்கு சீவிப்போட்டு சுருட்டி பெறாமகன் வாயில் செருகிய கணத்தில் செட்டியாரின் குதிரை வண்டில் வரும் சத்தம் கேட்டது. ஆறுமுகன் சுருக்கமாக முழு உண்மையையும் சொல்லி அம்மாவின் உதவியைக் கேட்டான். அன்றிரவு செட்டியாரம்மா செட்டியாரைக் கடிந்துகொண்டாள். “இருபது வயதிலேயே உங்கள் கடைசி மகனுக்கு சோழநாட்டிலிருந்து ஒரு செட்டிச்சியை கட்டிக்கொடுத்த உங்களுக்கு தாயைத்தின்னி ஆறுமுகனுக்கு திருமண வயசாகிவிட்டது என்பது தெரியவில்லையா? பாவம் ஆறுமுகன் இப்ப ஒரு தேவதாசியில் வேட்கை கொண்டுவிட்டான். நம் சொல்லுக்கேட்க மாட்டாத வயசு அவனது. ஏற்பாடு செய்து கொடுங்கோ. ஒரு வருசத்தில் அவன் ஆசை அடங்கிவிடும். பிறகு அவனுக்கு ஒரு நல்ல செட்டிச்சியை பார்த்து கட்டிக் கொடுக்கலாம். செட்டியார் அடுத்தநாள் காலையே கூப்பிடு தூரத்திலிருந்த கனகியின் மாமனை வரவழைத்தார். வெள்ளாள ஆறுமுகனை நம்ம பையன் உன் பொண்ணில் ஆசை வைத்துவிட்டான் என்றார். 50 வயதிலிருந்த கனகியின் வாடிக்கையாளர்களான செட்டியையும் வெள்ளாள முதலியையும் விட்டுக்கலைப்பது தன் பொறுப்பு என்றார். ஆறுமுகன் இரவில் முக்காடு போட்டுக்கொண்டு நல்லூரிலிருந்து நடந்தே வருவான். அவன் வரும்போது உன்வீட்டு நாய்கள் எதுவும் குரைக்கக்கூடாது. ஒரு ஈ, காக்காய் கூட சத்தம் போடக்கூடாது. இதோ இம்மாதக் கூலி என்று சொல்லி தன் சங்கிலியை கழற்றி கனகியின் மாமன் கழுத்தில் போட்டார். 2 ஆறுமுகன் கனகியைச் சந்தித்த முதலிரவு 1848 முன்பனிக்காலம். கனகி படலையில் நட்சத்திரங்களுக்குக் கீழ் காத்திருந்தாள். அந்த செந்நாய் குரைக்காது ஆறுமுகனின் பாதங்களை நக்கி வரவேற்றது. கனகியின் மண் குடிசை பனை ஒலை சுவர்களாலும் கூரையாலும் வேயப்பட்டிருந்தது. பனிக்குளிரிலும் காமத்திலும் துடித்துக்கொண்டிருந்த ஆறுமுகனை கனகி குடிசைக்குள் அழைத்துப்போய் பாய் விரித்தாள். இருவருக்குமே என்ன பேசுவது என்பது தெரியவில்லை. தேவதாசிகளின் சடங்குகளுக்கேற்ப கனகிதான் முதலில் மௌனத்தை கலைத்தாள். “ சுவாமி கள்ளு அருந்துகிறீர்களா” என்றவாறு ஒரு கள்ளு முட்டியை பாயில் சும்மாடு போட்டு அதில் வைத்தாள். ஒரு சிரட்டையில் கள்ளு மொண்டு ஆறுமுகனின் கைகளில் வைத்தாள். அவன் ஒரு வாய் குடித்தான். புளித்தது. “ சுவாமிக்கு பழக்கம் இல்லையோ. தேவதாசியான என் காலில் விழுந்து காற்சாலம்பை பிடித்து அழுதது பழக்கத்தாலா வந்தது சுவாமி” என்று கணீரென்று சிரித்தாள். அந்தக்காலத்தில் Bra இல்லை. சேலை Blouse/ ஜாக்கெட் இல்லை. யங்கி இல்லை. கனகி ஒரு சிவப்பு காஞ்சிபுரப் பட்டுப் புடவையை மட்டுமே கணுக்காலுக்கும் முழங்காலுக்கும் இடைப்பட்ட உயரத்தில் அணிந்திருந்தாள். தன் கொங்கைகளையும் சேலையை தோள் மேல் போட்டு மறைத்திருந்தாள். “சுவாமி சுடச்சுட வடை கள்ளுக்கு நல்லாயிருக்கும். வடை வேணுமா “ என்றபோது ஆறுமுகன் தலையாட்டினான். அவள் வெளியே போய் பின் திண்ணையில் நின்றபடி அடுப்பு மூட்டினாள். ஆறுமுகனும் வெளியே எழுந்துபோய் கனகி பின்னால் பேசாமல் நின்றான். கனகி பின் நகர்ந்து ஆறுமுகனின் தேகத்தில் இடித்து “ செட்டியாரே ஆமோதித்தது நம் ஒறவு. எனக்கு பயமேதுமில்லை. உங்க பிரியத்துக்கேற்ப ஒட்டுங்க. ஒறவாடுங்க. கட்டிப்பிடியுங்க, கடியுங்க, கசக்குங்க. நான் கத்தமாட்டேன்” என்றாள். ஆறுமுகன் பின்னிருந்து வடை சுட்டுக்கொண்டிருந்த கனகியின் பின் கழுத்தில் முத்தமிட்டு சேலைக்குள்ளிருந்த அவள் கொங்கைகளை தன் இருகரங்களாலும் பிடித்தபடி அவளைக் கட்டிப்பிடித்தான். கனகியின் செந்நாய் அதை வைத்தகண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தது. “சுவாமி என் செந்நாய்க்கு உங்களை ரொம்ப பிடிச்சு போச்சு. அந்த கிழச் செட்டியும் வெள்ளாள முதலிக் கிழவனும் ஒவ்வொரு தடவையும் வரும்போதும் எந்நாய் குரைத்து ஊரைக்கூட்டும். நீங்க வந்ததிலிருந்து இதுவரை ஒரு தடவைகூட எந்நாய் குரைக்கவே இல்லையே?” வடை சுட்டபின் அவள் குந்தியிருந்து அம்மியில் சம்பல் அரைத்தாள். ஆறுமுகனும் பக்கத்தில் அமர்ந்தான். அரைக்கும்போது சேலை இடைவெளியில் அவளது தனங்கள் ஆடுவதை ஆறுமுகன் கண்டான். கள்வெறியில் ஆசை துளிர்க்க அவன் வலக்கை சேலைக்குள் புகுந்து அவளின் தனங்களை வருடியது. அவர்கள் குடிசைக்குள் போனார்கள். ஒரு வாழை இலையில் வடைகளையும் பச்சை மிளகாய் சம்பலையும் அவள் பரிமாறினாள். மேலும் சில சிரட்டைகளில் ஆறுமுகன் கள்ளருந்தினான். “ சாமிக்கு நான் சதிராடவா” என்று கேட்டுவிட்டு கனகி தன் மார்புகளை மறைத்த சேலையை விலக்கி இடுப்பைச் சுற்றிக்கட்டினாள். விளக்கு வெளிச்சத்தில் அவள் பெரிய கட்டழகான தனங்களை பார்த்ததும் ஆறுமுகனின் நெஞ்சு துடிக்கத்தொடங்கியது. ஆறுமுகனுக்கு மட்டுமே கேட்கக்கூடிய குரலில் எப்போ வருவாரோ எந்தன் கலிதீர.... என்ற பாடலைப் பாடியவாறு அவள் சதிராடினாள். அவளது பொங்கிய தனங்கள் ஆட அதில் அவள் நெற்றி வியர்வைத்துளிகள் விழுந்தன. கச்சைக்குள் ஆறுமுகனின் ஆணுடம்பு புடைத்து கச்சையை ஈரமாக்கியது. ஆறுமுகன் எழுந்துசென்று தன் பொன் சங்கிலியை அவள் கழுத்தில் போட்டான். அவள் தனங்களை கசக்கியபடி அவன் அவள் கீழ் உதட்டை சுவைக்க அவள் உதடுகளும் நாக்கும் அத்துமீறி ஆறுமுகனின் நாக்கை சுவைத்தது. அவன் அவள் சேலையை துகிலுரிந்தபடி அடுத்த சதிராட்டத்தை ஆடையின்றியே ஆடு கனகி என்றான். அப்போது அவள் ஆறுமுகனின் கவிட்டுக்குள் கைவிட்டு அவனின் வெள்ளைக் கச்சையை உருவி அதன் ஈரத்தை முகர்ந்தனுபவித்துவிட்டு அதனை தனது கழுத்தில் கட்டினாள். இன்னொரு முட்டி கள்ளை பிறந்தமேனியோடு கொணர்ந்து வைத்துவிட்டு அவள் ஆடினாள். ஆறுமுகன் கைகள் நடுங்க நடுங்க கள்ளருந்தியபடி அவளை ரசித்தான். அவளது தனங்கள், சிறிய தொந்தியிலுள்ள தொப்புள், அவள் அல்குல் மயிர்கள், அல்குல், பெரிய கட்டிறுக்கமான பிருஷ்டங்கள், தொடை எல்லாவற்றையும் மாறி மாறி அனுபவித்துக்கொண்டிருந்தவன் வெறிகொண்டவன் போல எழுந்து அவள் கவட்டுக்குள் ஒருகையும் தோளில் மறுகையும் போட்டுத் தூக்கிவந்து பாயில் போட்டான். கனகி அவன் உதட்டில் முத்தமிட முனைந்தபோது அதை விலக்கி விட்டு அவள் தொடைகளை விலக்கி அவள் ஈரமான அல்குல்லை நக்கிச் சுவைத்தான். கனகி முனகிக்கொண்டிருந்தாள். பிறகு புணர்ந்தான். கனகி தன் கால்களால் அவனுக்கு பூட்டுப்போட்டாள். அந்தப் முன்பனிக்குளிரிலும் இருவருக்கும் மூச்சு வாங்கியது. வியர்த்தது. காமாட்டத்தின் முடிவில் இருவரும் மூச்சுவாங்கியபடி படுத்திருந்தார்கள். கனகி அவனை பல தடவைகள் முத்தியபடி “ சுவாமி நீங்கள் தந்த இன்பம்போல வேறு யாரும் தந்ததில்லை. என் கன்னி கழித்த அந்த ஆங்கிலப் பொலீஸ்காரனும் 40 வயது முரடன். என் தனங்களை கடித்து காயப்படுத்துவதில் அவனுக்கு குரூர ஆசை. செட்டியும் வெள்ளாள முதலியும் கிழவர்கள். எனக்கு நாக்குப்போட்டு என்னை கூச வைத்ததே கிழவன்கள் செய்தது.” என்றாள். அவர்கள் மேலுஞ் சில தடவைகள் புணர்ந்தார்கள். “சாமிக்கு பசிக்குமில்லையா” என்றவள் எழுந்து சேலையை அணிந்துகொண்டாள். ஆறுமுகனும் வேட்டியை அணிந்தான். பின் திண்ணையில் நொடியில் சமைத்தாள். கனகி. அப்போது பின்நிலவு எழுந்துகொண்டிருந்தது. பருப்புக்கறியும் கத்தரிக்காய் வதக்கலோடும் கீரைக்கடையலோடும் பின் திண்ணை நிலவொளியில் அன்னம் பரிமாறினாள். ஆறுமுகன் அவளுக்கும் ஊட்டிவிட்டான். பாயாசத்திற்கு பதிலாக கனகி தேன், பலாப்பழம், மாதுளை முத்துக்கள், பால், தயிர் கலந்து தயாரித்த பஞ்சாமிர்தத்தை ஆறுமுகனுக்கு ஒரு சிரட்டையில் விட்டுக் கொடுத்தாள். ஆறுமுகன் இன்னொரு முறை அவள் சேலையை உரிந்து அவள் கால்களை விரித்தான். ஒரு பாதி பலாப்பழச்சுளையால் பஞ்சாமிர்தத்தை அள்ளி கனகியின் அல்குலில் ஊற்றினான். அதே சுளையால் அவளின் அல்குலை விரித்து தடவிவிட்டு தன் நாக்கால் அல்குலிலிருந்த பஞ்சாமிர்தத்தை நக்கிச்சுவைத்தான். ஒரு மாதுளை முத்தை கனகியின் யோனிப்பருப்பிலிருந்து தன் நாக்கால் ஆறுமுகன் எடுக்கமுயன்ற போது கனகி இன்பவலியில் முனகினாள். அவர்கள் அதன்பிறகு மேலுமொரு முறை புணர்ந்தபின் பிறந்த மேனியோடு கட்டிப்பிடித்தபடியே தூங்கிவிட்டார்கள். கண்ணை கைத்தீஸ்வரன் கோயில் உசத் காலப்பூசை மணி அடித்தபோது ஆறுமுகன் கனகிக்கு விடைகொடுத்தான். மங்கிய நிலவொளியில் முக்காடு போட்டுக்கொண்டு நல்லூரிலுள்ள தன் வீட்டுக்கு நடக்கத் தொடங்கினான். அந்த அரைமணித்தியால நடையில் அவன் தன் வாழ்வின் மிகப்பெரிய சந்தோசத்தை உணர்ந்தான் பிறகென்ன? வாரத்தில் மூன்று நாலு நாட்களின் இரவை ஆறுமுகன் கனகியின் குடிசையிலேயே வாழ்ந்தான். கனகியின் இரவுத் தூக்கம் பாதிக்கப்படக்கூடாது. அடுத்தநாள் தானும் வேலைக்குப் போகவேண்டும் என்பதற்கமைய இரவு எட்டுமணிக்கே ஆறுமுகன் வந்துவிடுவான். இரவு ஆகாரம் அருந்தியபின் சில தடவைகள் புணர்ந்துவிட்டு அந்த புணர்ச்சிக் களையில் நள்ளிரவுக்கு முதல் இருவரும் ஒரே பாயில் தூங்கிவிடுவார்கள். வைகறை தூக்கத்திலிருக்கும் கனகியை எழுப்பி ஒரு கடைசித்தடவை புணர்ந்துவிட்டு ஆறுமுகன் போய்விடுவான். அதிகாலைப் புணர்ச்சியின்பத்தின் பின் மேலுஞ்சில நாழிகள் அனுபவித்துத் தூங்குவாள் கனகி. ஆறுமுகன் செட்டியாரிடம் சொல்லி கனகி கோவிலில் சதிராடுவதையும் மறித்தான். வெள்ளிக்கிழமை மாலை கைத்தீஸ்வரன் கோயிலில் ஆறுமுகன் வழங்கும் பிரசங்கத்தில் பெண்கள் சபையில் கனகி முதல் வரிசையிலிருப்பாள். அவளை இப்போது வைத்திருப்பது ஆறுமுகன் என்பது ஊரே அறிந்த ரகசியம். அது அவளுக்கு மிகப்பெரிய கௌரவமும் சந்தோசமும். ஆறுமுகன் அவன் கால்களில் அணிவித்த விலை மதிப்பற்ற காற் சிலம்புகளின் ஒலி கைத்தீஸ்வரன் கோயில் உட்பிரகாரத்தில் கேட்கிற போதெல்லாம் பக்தர்கள் ஒதுங்கி நின்று அவளுக்கு வழிவிட்டார்கள். வெள்ளிக்கிழமை பிரசங்கம் முடிந்தபின் முதலில் கலைவது பெண்கள் சபைதான். கனகியும் அவர்களோடு வீட்டுக்குப் போய் ஆறுமுகனுக்கு ஆகாரம் சமைக்கத் தொடங்கிவிடுவாள். பிரசங்கம் முடிந்தபின் பல பிரமுகர்களும் வணிகர்களும் ஆறுமுகனை மொய்த்து கேள்வி கேட்பார்கள். உரையாடுவார்கள். ஆறுமுகன் இவர்களை ஓரிரு மணித்தியாலங்களில் வெட்டிவிட்டு இரவானதும் சொற்ப தூரத்திலிருக்கிற கனகியின் வீட்டுக்கு நடந்தே போவான். வெள்ளி இரவுகள் ஆறுமுகனுக்கும் கனகிக்கும் மிக இனியவை. இரவு முழுக்க அவர்களுக்கானது. இருவருமே தீவிரமான காதலில் விழுந்துவிட்டார்கள். ஆறுமுகன் கையிலிருந்த பாதிரியாரின் வேதாகம மொழிபெயர்ப்பை செம்மைப்படுத்திக் கொடுத்து விட்டு கனகியோடு கடல் கடந்து வடநாட்டுக்கு ஓடத் தீர்மானித்துவிட்டான். ஆறுமுகன் வெள்ளி இரவுகளில் பாதிரியாரின் மொழிபெயர்ப்புப் பிரதிகளுடன் வருவான். காதல் செய்வதற்கிடைகளில் கனகியோடு சேர்ந்து மொழிபெயர்ப்பை செம்மைப்படுத்துவான். 17 வயது வரையும் உடுவில் மகளிர் கல்லூரியில் ஆங்கில மூலம் கற்ற கனகி ஆறுமுகன் எது நல்ல தமிழ்ச்சொல் என்று தடுமாறும்போது கனகியின் தமிழ்ச்சொல் மிக உகந்ததாக இருக்கும். வேதாகமத்தின் சாலமனின் பாடல் அத்தியாயத்தின் பாதிரியாரின் மொழிபெயர்ப்பை ஆறுமுகனும் கனகியும் சேர்ந்து முற்றாகவே மாற்றி புதிதாக மொழிபெயர்க்க வேண்டியிருந்தது. அப்போதுதான் அவர்களின் காதல் முற்றியது. பாதிரியாரின் சாலமன் பாடல் மொழிபெயர்ப்பு மிக வரண்ட தூய்மையான மொழியிலிருந்தது. காமக்கடலில் திளைத்துக் கொண்டிருந்த, இந்தச் சோலியை முடித்துவிட்டு கனகியோடு ஓட அவசரப்பட்ட ஆறுமுகனின் மொழி ஆபாசமாக இருந்தது. கனகிதான் இரண்டிற்கும் இடையில் காமரசமான பெயர்ப்பை மொழிந்தாள். ஆறுமுகனின் நீண்டநாளைய ஆசை தான் கனகியை முதல் முதலில் கண்ட குளத்தில் அவளோடு நிர்வாணமாக நீந்தவேண்டும். நீராடவேண்டும் என்பது. சாலமனின் பாடல் அத்தியாயத்தை செம்மையாக்கிய இளவேனிற்கால அமாவாசை இரவு வெள்ளிக்கிழமை கனகி ஆறுமுகனின் ஆசையை நிறைவேற்றத் துணிந்தாள். செந்நாய் முன்செல்ல யாமத்திற்கும் வைகறைக்கும் இடைப்பொழுதில் காதலர்கள் குளத்திற்கு சென்றார்கள். செந்நாய் குரைக்கவில்லை. ஆனால் கனகிக்கு மட்டும் கேட்கக்கூடிய ரகசியமாக உறுமியது. ஆறுமுகனுக்கு நீந்தத்தெரியாது. ஆடைகள் களைந்து இருவரும் நீரில் இறங்கினார்கள். கும்மிருட்டு. யாருக்கு யாருமே தெரியாத கும்மிருட்டு. இளவேனில் இறுதி நாட்களின் வெப்பத்தில் குளிர் தண்ணீரில் இந்த சாகசத்தில் கழுத்து தண்ணீரில் நின்ற காதலர்கள் பரசவப்பட்டார்கள். உதடு, நாக்கு கடித்து முத்தமிடும்போது ஆறுமுகன் தன் நடு இரண்டு விரல்களயும் கனகியின் அல்குலில் போட கனகி அவனின் ஆண்குறியை தன் கைவிரல்களால் ஆட்டிவிட்டாள். பரஸ்பர சுயமைதுனம். சடங்கை விட ஒரு சாகசம் போலிருந்தது. கனகி குளத்தின் நடுவரை நீந்திப்போனாள். கழுத்தளவு தண்ணீரில் நின்ற ஆறுமுகனுக்கு நீச்சல் சத்தம் மட்டுமே கேட்டது. கனகி மீண்டு வருவதற்கு முதல் செந்நாய் குளத்தில் பாய்த்து கனகியைநோக்கி நீந்திவரும் ஒலியைக் கேட்டான் ஆறுமுகன். கனகி கழுத்தளவு தண்ணீரில் நின்ற ஆறுமுகனை சந்திக்கும்போது நட்சத்திரங்களின் ஒளியில் ஆறுமுகன் அவளுக்கு போட்ட பொன் தோடுகளும் அவள் கண்களும் மின்னின. கனகி பதட்டமாக ஆறுமுகனின் காதை வலியும் ரத்தமும் வருகிற அளவுக்கு கடித்து ரகசிய குரலில் “ ஆபத்து வந்துவிட்டது சாமி. என்றைக்குமில்லாதவாறு இன்று என் செந்நாய் அரசமரக்கிளையிலிருந்து என் சேலையையும் உங்கள் வேட்டியையும் வாயில் கௌவி என்னிடம் நடுக்குளம் வரை நீந்தி வந்திருக்கிறது. யாரோ நம்மை அவதானித்துக் கொண்டிருக்கிறார்கள்” என்றாள். கழுத்தளவு தண்ணீரிலேயே காதலர்கள் செந்நாய் கொணர்ந்த தம் ஆடைகளை அணிந்துகொண்டார்கள். அவர்கள் கரையேறியபோது செந்நாய் குரைத்து அவர்களைச் சுற்றிச் சுற்றி ஓடியது. செந்நாயின் குரைப்பை நிறுத்த கனகி அதைப்பிடித்து தன் கைகளில் தூக்கி நடந்தாள். அந்த சனிக்கிழமை பகல் முழுக்க ஆறுமுகன் கனகி வீட்டு குடிசையிலேயே ஒளிந்திருந்தான். தனது உயிருக்குப்பயந்து ஒளித்திருக்கவில்லை. அவன். கனகியின் உயிருக்குப் பயந்தே அவளோடிருந்தான். அந்தக்காலத்து யாழ்ப்பாணத்தில் அழகான தாசிகளுக்காக வாடிக்கையாளர்களுக்கிடையே நடக்கும் சண்டையில் கொல்லப்படுவது போட்டியிடும் வாடிக்கையாளர்கள் அல்ல. அந்த தாசியே. வைகறையில் யாரும் வருவதற்கு முதலில் குளத்திற்கு சென்று நீராடுவது தேவதாசிகளே. அவர்கள் நீராடும்போது பாதுகாப்புக்கு வந்த மாமனை, வாடிக்கையாளனை, நாயை மரத்தில் கட்டிவைத்துவிட்டு போட்டி வாடிக்கையாளன் அவளை வன்புணர்ந்துவிட்டு நீரில் மூச்சடக்கி கொன்றுவிட்டு சடலத்தில் சேலையைக்கட்டி குளத்தில் மூழ்கிச் செத்தமாதிரி தாசியை நடுக்குளத்தில் போட்டுவிடுவார்கள். அன்று பின்னேரம் குடிசையில் காதலர்கள் தூங்கியெழுந்த பின் கனகியின் மாமன் வந்தான். மாமனுக்கு நாட்டுக்கோட்டை செட்டியிலும் வெள்ளாள முதலியிலுமே சந்தேகம். கைத்தீஸ்வரச் செட்டியாரிடம் இவ்விடயத்தை முறையிடுவோம் என்றான் மாமன். ஆறுமுகன் இந்தக்கதை செட்டியாருக்கு தெரியவே கூடாது என்றான். கனகியை இனி இரவில் குளத்தில் குளிக்க விடக்கூடாது. காலையில் ஒளி வந்தபின் மட்டும் குளிக்க ஏற்பாடு செய்யவும் என்று உத்தரவிட்டு விட்டு தன் பொன் சங்கிலியை மாமனின் கையில் வைத்துவிட்டு இரவில் நடந்து வீட்டுக்குப் போய்விட்டான். 3 அவ்விரவில் காதலர்களை பின்தொடர்ந்து குளத்தங்கரைக்கு போனது கனகியின் முறை மச்சான் நட்டுவச் சுப்பையன். சுப்பையன் தந்தை யாழ்ப்பாணத்தில் பேர்பெற்ற நாதஸ்வரச் சக்கரவர்த்தியான ருத்ரமூர்த்தி. செல்வந்தர். கனகியின் தாசித்தாய் தன்னைப்போல மகள் ஒரு தாசி ஆகக்கூடாது என்று அவளை ஆங்கிலப் பாடசாலைக்கு அனுப்பி படிப்பித்தபோது போட்டிபோட்டு சுப்பையனையும் அவன் தந்தை சகோதர ஆங்கிலப்பாடசாலைக்கு அனுப்பினார். அப்போதிருந்தே சுபபையன் கனகியைக் காதலித்து வந்தான். கனகியையை அதிகாரத்தால் ஆங்கிலப் பொலீஸ்காரன் அடைந்தபோது மனமுடைந்த சுப்பையன் தகப்பனோடு கொழுவிக்கொண்டு தூத்துக்குடிக்கு ஓடிப்போனான். ஆங்கிலக் கப்பல் கம்பனியொன்றில் எழுத்தராக வேலைக்குச் சேர்ந்து ஒன்றரை ஆண்டுகள் வேலைசெய்து திரவியம் தேடிக்கொண்டு ஊருக்கு திரும்பினான். தன் திரவியத்தைக் காட்டி கனகியை மீட்டு திருமணஞ்செய்துகொண்டு தூத்துக்குடிக்கு போகலாம் என்ற நம்பிக்கையோடு வந்திருந்தவனுக்கு பெருத்த ஏமாற்றம். கனகியை அப்போது செல்வாக்கான ஒரு நாட்டுக்கோட்டை செட்டியாரும் இன்னொரு வெள்ளாள முதலியாரும் வைத்திருந்தார்கள். சுப்பையன் கொஞ்சம் பெண்தன்மை கொண்டவன். அவன் குரல் பெண்குரல் போலவே இருக்கும். பெற்றோருக்கு ஒரே குழந்தையான சுப்பையன் பிறந்து ஆறு வயது வரையும் பேசவே இல்லை. நாதஸ்வர வித்துவான் ருத்ரமூர்த்தி தமிழக திருத்தலங்களுக்கெல்லாம் போய் வணங்கி வந்த பின் ஆறாவது வயதில் சுப்பையன் குயிலின் கூவலைக் கேட்டு கூவினான்.அதிகாலையில் சேவலைப்போலக் கூவினான். கிளிக்குரலைக்கேட்டு கிளியானான். காகம் போலக்கரைந்தான். அவன் எட்டு வயசில் பெண் குரலில் பேசத்தொடங்கியபோது ருத்ரமூர்த்த்தி அவனை வட்டுக்கோட்டை செமினறி ஆங்கிலப்பாடசாலையில் சேர்த்தார். வீட்டுக்கு வந்து அந்த அமெரிக்கன் மிசனறி ஆங்கில இளம்பெண் ரீச்சரின் பெண்குரலிலும் அமெரிக்க உச்சரிப்பிலும் பேசினபோது ருத்ரமூர்த்தி தம்பதிகள் பரவசப்பட்டார்கள். வடநாட்டிலிருந்து திரும்பிவந்தபின் சுப்பையன் கனகியைச் சந்தித்து தன்னைத்திருமணஞ் செய்துகொள்ளும்படியும் அவளைக் கூட்டிக்கொண்டு தூத்துக்குடிக்குப் போய் குடித்தனம் செய்வோம் என்றும் கெஞ்சி மண்டாடினான். கனகி அவனைக்கண்டு கொள்ளவே இல்லை. மனமுடைந்த சுப்பையன் நாள் முழுக்க கள்ளுக்கடைகளில் தன் பொழுதுகளைப் போக்கினான். போதை ஏறியதும் கணிகை கனகியைப்பற்றி காமரசப் பாடல்கள் இயற்றி கர்நாடக சங்கீத ராக தாளங்களுக்கேற்ப பாடுவான். கனகி மீதான காதலில் பொறாமைத்தீயில் அவன் போதையில் பாடிய காமப்பாடல்களைக் கேட்கவே பல குடிகாரர்கள் ஆனைக்கோட்டை கள்ளுக்கொட்டிலுக்கு வரத்தொடங்கினார்கள். கனகிக்கு இதுவரை நூறு வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள். கனகிக்கு பொல்லாத பாலியல் நோய்கள் எல்லாமிருக்கின்றன. வாடிக்கையாளர்களுக்கு நோய்கள் முற்றுகின்றன என்றெல்லாம் கனகியைச் சபித்துப் பாடுவான். கள்வெறியில் வக்கிரமான இக்காமப் பாடல்களை குடிகாரர்களும் பாடத்தொடங்கினார்கள். ஊருக்குள் எடுத்துச்சென்றும் பாடினார்கள். இந்த வாய்மொழி இலக்கியம் யாழ்பாணத்தில் பிரபல்யமானது. சுப்பையனது நப்பாசை தன் பாடல்களால் கனகியயை வைத்திருந்த செட்டியாரும் வெள்ளாள முதலியும் அவளைவிட்டு அவமானத்தால் விலகுவார்கள். அப்போது அவளை தான் அடைந்து அவளோடு வடநாட்டுக்கு ஓடிப்போகலாம் என்பதே. அவன் எதிர்பார்க்காதவாறு நிலமை மாறியபோது, அப்போதைய யாழ்ப்பாணத்தின் மிகச் செல்வாக்கான இளைஞன் ஆறுமுகன் அவளது ஒரே வாடிக்கையாளனான போது சுப்பையன் நடக்கப்போவதை அறிந்து துடித்தான். ஆறுமுகன் கனகியோடு வடநாட்டுக்கு ஓடுவான் என்றே சுப்பையன் பயந்தான். அவனுக்கு அப்போது இருந்த ஒரே நம்பிக்கை கைத்திலிங்கச் செட்டியார்தான். அந்த அமாவாசை இரவில் சுப்பையன் காதலர்களைப் பின் தொடர்ந்தது அவர்களின் உரையாடல்களைக் கேட்டால் செட்டியாரரை நம்பவைக்கக்கூடிய உளவுத்தகவல்கள் ஏதாவது கிடைக்கும் என்பதால்தான். செந்நாயின் பிரசன்னத்தால் அது சாத்தியமாகவில்லை. கனகி பிறகு ராக்காலத்தில் குளத்துக்கு போகவில்லை. இந்ந தகவல் மட்டுமே செட்டியாரை நம்பவைக்க போதுமானது என்பதையறிந்து சுப்பையன் கைத்திலிங்கச் செட்டியாரை அணுகி அனைத்தையும் சொன்னான். கனகியும் ஆறுமுகனும் காதலர்களாகி அப்போது ஆறு மாதமாகியிருக்கும். செட்டியாரும் ஆறுமுகனின் நடத்தைகளையிட்டு பயந்து கொண்டிருந்த காலம். செட்டியார் கூப்பிட்ட போதெல்லாம் ஆறுமுகன் வருவதில்லை. முதுவேனிற்கால காற்றுவீசாது அனல் தெறிக்கும் வெய்யில். செட்டியார் வீட்டு கொல்லைப்புறத்தில் பெரிய ஆலமரத்தின் நிழலிலிருந்த முற்றிலும் வைக்கோலால் மூடப்பட்ட செட்டியாரின் அலுவலக குடிசையில் செட்டியார் கட்டிலிலிருந்தார். சுப்பையன் கீழேயிருந்த பாயிலிருந்தான். விடயம் ஆறுமுகனையும் கனகியையும் பற்றியது என்று சுப்பையன் விக்கிக்கொண்டு சொன்னபோது செட்டியார் உசாரானார். வழமையாக வீட்டுக்கு வருபவர்களுக்கு பாலோ மோரோ தான் அதிரச பணியாரத்தோடு கொடுப்பார். செட்டியார் தன் வேலைக்காரனைக் கூப்பிட்டு அவனது காதில் ஏதோ ஓதினார். சில நிமிடங்களில் வேலைக்காரன் ஒருமுட்டி கள்ளையும் சிரட்டையையும் செட்டியாரின் காலடியில் கொணர்ந்து வைத்தான். செட்டியார் தானே சிரட்டையில் கள்ளைவிட்டு சுப்பையிடம் கொடுத்தார். “சுப்பையா நீ என்னட்ட வந்திட்டாய் இனிப்பயப்படாதை” என்று சொல்லவும் சுப்பையன் பல சிரட்டைகளை அருந்தியபடி முழுவதையும் உளறினான். ஆறுமுகன் தன்னை மீறிப்போவதை அறிந்து செட்டியார் பெருங்கோபங்கொண்டார். கண்ணை கைத்தீஸ்வரப் பெருமாள் தான் சுப்பையனை தன்னிடம் அனுப்பிவைத்திருக்கிறார் என்று நம்பினார். அன்றிரவே கனகியின் மாமனுக்கு ஆள் அனுப்பினார் செட்டியார். மாமன் பயந்தபடி வந்தான். “ நீ எனக்கே துரோகஞ்செய்யத் துணிந்தாயா அற்ப நட்டுவனே. ஆறுமுகனின் நடத்தை மாற்றங்கள் உனக்குத்தெரியவில்லையா? மாதாமாதம் பொன் பெறமட்டும் வந்துபோகும் நீ ஒரு சொல் சொன்னாயா?” என்று கோபத்தில் விக்கி மூச்செடுக்கத் தடுமாறி செட்டியார் வைதபோது மாமன் நடுங்கி செட்டியாரின் காலில் விழுந்து அழுதான். செட்டியாருக்கே தான் கட்டுமீறிச் சினங்கொண்டது தெரிந்தது. அவர் சுதாரித்து தன் நிலைக்கு மீள சில நிமிடங்கள் தேவைப்பட்டது. வேலைக்காரனைக் கூப்பிட்டார். அந்த நம்பகரமான வேலைக்காரனுக்கு செட்டியாருக்கு கோபம் வந்தால் என்ன பரிமாறுவது என்று தெரியும். அவன் ஒரு இலண்டன் சீமை விஸ்கிப்போத்தலோடும் ஒரு கண்ணாடிக் கிளாசோடும் வந்தான். செட்டியார் தன் கட்டிலில் போத்தலை வைத்து மூடியைத் திறந்து கிளாசில் விட்டு ஒரு வாய் பருகினார். அப்போதும் கனகியின் மாமன் அவரது காலடியில் விழுந்தபடியே இருந்தான். செட்டியார் மேலுஞ்சில வாய் பருகிய பின்னரே அவனை கண்களால் பாயில் போய் அமரும்படி பணித்தார். “ நட்டுவா நிலமை என் கைமீறிப் போகமுதல் ......(தன் இரண்டு விரல்களை காட்டுகிறார்) இரண்டே இரண்டு வாரங்கள் தான் உனக்கு நான் தருவேன். இந்த இரண்டு வாரங்களில் நீ என்ன செய்வாயோ ஏது செய்வாயோ எனக்குத் தெரியாது. கனகியின் மனசை மாற்றி அவள் மச்சான் சுப்பையனுக்கு வடநாட்டுக்குக் கூட்டிச்சென்று திருமணஞ்செய்து வைக்கவேண்டும். கனகியை வைத்து நீ உன் ஆயுட்காலத்தில் ஈட்டும் பொன்னை நான் ஒரே தடவையில் உனக்குத்தருவேன். திருமணச் செலவும் புதுமணத்தம்பதியர் வாழ்வைத் தொடங்கவும் நானே பொன்னும் பவுணும் தருவேன். ஆறுமுகனின் மனசை மாற்றுவது என் வேலை. பாவம் கனகிச் சிறுமி. இந்த சின்ன வயசிலேயே இவ்வளவு காயப்பட்டுவிட்டாள். அவள் இனியும் ஒரு தாசியாக வேசியாக அல்லற்பட வேண்டாம். சுப்பையன் வடநாட்டில் ஆங்கிலக் கப்பல் கொம்பனியில் நல்ல வேலையிலிருக்கிறான். அவளை நல்லபடி பார்த்துக்கொள்ளுவான்” கனகியின் மாமனுக்கு எதுவுமே பரிமாறப்படவில்லை. கனகி சுப்பையனை கட்ட இணங்கவே மாட்டாள் என்பது மாமனுக்கு நன்கு தெரியும். அவன் பீதியோடு நடுங்கிக்கொண்டிருந்தான். அரிய ஆங்கில விஸ்கி செட்டியாரின் மனசை இன்னுந் தெளிவாக்கியது. ரகசியக் குரலில் சொன்னார். “ நட்டுவா ஆறுமுகனை விட்டுத்தான் பிடிக்கவேணும். அவன் அந்தப் பரதேசிப் பாதிரியாரின் செல்லப்பிள்ளை வேறு. அடுத்தவாரம் அவன் கனகியிடம் போய் வருவதை நாம் தடுக்கவேண்டியதில்லை. தடுத்தால் அவன் உசாராகிவிடுவான். இரண்டாம் வாரம் நான் ஆறுமுகனை ஏதோ ஒரு சாட்டுச்சொல்லி வடநாட்டுக்கு ஒரு வணிக விவகாரமாக அழைத்துச் செல்வேன். அவ்வாரமே நீ கனகியை இணக்கியோ இணங்கவைத்தோ வடநாட்டுக்கு தூத்துக்குடிக்கு கொண்டுவரவேண்டும். இன்னும் 3 நாளில் விபரங்களை நான் உனக்குச் சொல்லியனுப்புவேன்” கனகியின் மாமன் பெரிய சங்கடத்தோடு வீட்டுக்குப் போனான். “செட்டியார் என்ன மசிர் கதை கதைக்கிறார். கனகி இணங்கவே மாட்டாள். நான் அவளின் வாயைக்கட்டி கைகால்களைக் கட்டி அவளைக் கடத்திக்கொண்டா தூத்துக்குடிக்கு போகவேணும்? செட்டி சொன்னபடி பொன்னும் பொருளும் தருவான். ஆனால் என்னால் இதைச் செய்யமுடியுமா” இப்படி நினைத்தபடி வீட்டுக்குப்போன கனகியின் மாமன் தன் மனைவியிடம் நடந்தவைகளைச் சொன்னான். மனைவியும் முன்னர் தேவதாசியாக இருந்தவள். வீட்டில் அடுத்த அறையில் படுத்திருந்த மனைவியின் தங்கை பொன்னம்மா இதனை ஒட்டுக் கேட்டுவிட்டாள். பொன்னம்மாவையும் கனகியின் மாமனே திருமணஞ்செய்து வைத்திருந்தான். அவளும் தாசியாக இருந்து வந்தவள்தான். பொன்னம்மா கனகிக்கு மிக நெருக்கமானவள். கனகிக்கும் பொன்னம்மாவுக்கும் ஒரே வயதுதான். அன்றிரவுதான் கனகியின் செந்நாயும் காணாமல் போனது. கனகி தனது உறவினச் சிறுவர்களையெல்லாம் ஊர்முழுக்கச் சென்று தேடவைத்தாள். நாள்முழுக்க அன்ன ஆகாரம் இல்லாமல் தன் குடிசைக்குள் அழுதபடியேயிருந்தாள். நாயைத்தேடி கனகியின் மாமனும் ஊர்முழுக்க அலையச்சென்றநேரம் ஒரே வளவுக்குள் இருந்த கனகியின் குடிசைக்குள் அவளைத்தேற்றும் சாட்டில் அவளுக்கு அன்னம் சமைத்து எடுத்துச்சென்ற பொன்னம்மா அவளிடம் தான் ஒட்டுக்கேட்டதைச் சொன்னாள். கனகியின் மேல் இரண்டாவது பேரிடியும் விழ பேச்சுவராமல் திக்பிரமை பிடித்தவள் போனாளாள். அடுத்த இரவு வெள்ளிக்கிழமை. ஆறுமுகன் கனகியிடம் வந்தபோது படலையைத் திறக்க கனகியும் இல்லை. ஆறுமுகனின் பாதங்களை நக்க செந்நாயும் இல்லை. மாமனே படலையைத்திறந்து ஆறுமுகனிடம் கனகி அன்னம் தண்ணீரில்லாமல் படுத்திருப்பதைச் சொன்னான். ஆறுமுகன் குடிசைக்குள் போனதும்தான் கனகிக்கு பேசச்சக்தி வந்தது. செந்நாயினதும் பொன்னம்மாவினதும் செய்திகளைச் சொல்லி அன்றிரவே வடநாட்டுக்கு தன்னை கூட்டிக்கொண்டு ஓடிப்போகுமாறு அழுதாள். ஆறுமுகன் அடுத்தநாள் சனிக்கிழமை இரவே கனகியோடு ஓடிப்போக முடிவெடுத்தான். சனிக்கிழமை காலையில் அளவெட்டி பெருமாள் கடவை பிள்ளையார் கோவிலில் கனகியின் உறவினர் திருமணம் ஒன்றுக்கு கனகி போவாள். அது முடிந்து சாயங்காலம் அவள் வீடு வந்தபின் ஓடிப்போக தயார் பண்ணவேண்டும். நள்ளிரவில் காதலர்கள் பேர்சிவல் பாதிரியாரின் வீட்டுக்கு ஓடிப்போவதே போட்ட திட்டம். திருமணத்திற்கு தான் போகமாட்டேன். போக மனமில்லை. சக்தியில்லை என்றாள் கனகி. நீ அழுதுகொண்டு அன்னம் தண்ணீரில்லாமல் படுத்திருந்தால் மாமன் பயப்படுவான். உன்னை தனியேவிட்டு விட்டுப்போனால் நீ ஓடிப்போய்விடுவாய் என்று உன்னைவிட்டுப் போகமாட்டான். நாம் ஏதாவது திட்டத்தோடிருக்கிறோம் என்று சந்தேகப்படுவான் என்றெல்லாம் சொல்லி அவளைத் தெம்பேற்றியது ஆறுமுகன்தான். பிறகு பொன்னம்மா சமைத்துகொணர்ந்த ஆகாரத்தை கனகிக்கு ஊட்டமுயன்றான் அவன். அவள் பசியே இல்லை என்று சாதித்தாள். சரி இன்றிரவு நானே உனக்காகச் சமைக்கிறேன். எனது கைப்பக்குவத்தையும் நீயே சாப்பிடாவிட்டால் நீ சாப்பிடும்வரை நானும் சாப்பிடாமலிருப்பேன் என்று சொன்னவாறு ஆறுமுகன் வெளியே போய் அடுப்பு மூட்டி உலை வைத்தான். இதை கனகி எதிர்பார்க்கவில்லை. எங்கிருந்து அவளுக்கு சக்தி வந்ததோ தெரியவில்லை. சுவாமி உங்களை நான் சமைக்க விடமாட்டேன் என்று எழுந்தாள். முகங்கழுவி விட்டு வந்து இருந்து அரிவாளில் வெங்காயம் வெட்டத்தொடங்கினாள். நீங்கள் எனக்குச் சமைத்துத்தருவேன் என்று சொன்னதைக்கேட்க என் செந்நாய்க்கு கொடுத்து வைக்கவில்லையே.. இன்றிரவு செந்நாய்க்கு யார் ஆகாரம் போடுவார்கள். எந்தக் காட்டிலோ கரம்பையிலோ அது இப்போதிருக்கும். எங்கு அதன் வாயைக்கட்டி வயிற்றைக்கட்டி வைத்திருக்கிறார்களோ. லோகத்தில் எங்கள் காதலை அங்கீகரித்த ஒரே சீவன் என் செந்நாய் ஏன் என்னைவிட்டு ஓடவேண்டும் என்றவாறு சிணுங்கிச்சிணுங்கி சினத்தில் வேகமாக வெட்டத் தொடங்கினாள். அப்போது ஆறுமுகன் அடுப்பில் பாசிப்பயறு வறுத்துக்கொண்டிருந்தான். கனகி ஐயோ என்று முனகினபோது ஆறுமுகன் திரும்பிப்பார்த்தான். கனகியின் பெருவிரலிலிருந்து ரத்தம் வடிந்துகொண்டிருந்தது. “தேவடியாச் சிறுக்கி” என்றவாறு அவள் கன்னத்தில் ஆறுமுகன் குனிந்து அறைந்தான். பிறகு அவளது பெருவிரலை தன் வாயில் வைத்தான். அதிர்ச்சியில் கனகி விம்மிக்கொண்டிருந்தாள். ரத்தம் கசிவது நின்றபிறகே அவளது விரலை வாயிலிருந்து விடுவித்தான். ஒரு மூன்று வயதுப்பெண் குழந்தையை தந்தையொருவன் தூக்குவதுபோல அவளைத்துக்கி தன் இடுப்பில் வைத்தான். அவள் விம்மலை அடக்க தன் வலத்தோளில் அவள் தலையை வைத்து அழுத்தினான். அடுப்பை நிறுத்திவிட்டு குழந்தையை தூங்கவைக்கிற ஒரு தகப்பன்போல குடிசையைச் சுற்றிச் சுற்றி நடந்தான். கனகி பேசவே இல்லை. “என்னை தேவடியாச் சிறுக்கியாம். தேவடியாச் சிறுக்கியின் காலில் விழுந்ததே இவர்தான். தேவடியாச் சிறுக்கியை கூட்டிக்கொண்டு ஓடத்துணிந்தவரும் இவர்தான். நாங்களெல்லாம் தாசிகள். எங்களுக்கெல்லாம் காதலிக்க உரிமை இல்லை. நயினார்தான் எனக்கு காதல் பாடம் சொல்லித் தருவாராம். பிறகு என்னை தேவடியாச்சிறுக்கி என்று வைவாராம். மவனே உன்னை எப்படி உயிரோடே கொல்லுவது என்று எனக்குத்தெரியும். நான் ஆகாரமில்லாமல் இறந்தால் நீயும் ஆகாரமில்லாமல் இறப்பாயல்லவா? ஆறுமுகனின் தோளில் சிறுமியைப்போல உறங்குவதாக பாசாங்கு பண்ணிக்கொண்டிருந்தாள் கனகி. உண்மையில் இந்த வன்காதலை கனகி உளமூர ரசித்தாள். செந்நாய் தொலைந்துபோன துயரை அவள் அக்கணத்தில் மறந்துவிட்டாள். ஆறுமுகன் அவள் காதலன்/கணவன் என்பதையும் மறந்துவிட்டாள். தன் தந்தை யாரென்றே தெரியாத அவளுக்கு கைத்தீஸ்வரப் பெருமாள் இவ்விரவில் அருளிய தந்தை ஆறுமுகன். 20 வயதில் தந்தையின் தோளில் உறங்கும் பேறு தேவதாசிகளுக்கு மட்டுமே கிடைக்கும்.பேறாம். கனகி அதன்பிறகு பேசவே இல்லை. தன் மௌனத்தால் ஆறுமுகனைக் கொன்றபடியிருந்தாள். ஆறுமுகன் அவளை பின் திண்ணையில் பாயில் உட்காரவைத்துவிட்டு தொடர்ந்து சமைத்தான். எளிமையான ஒரு பருப்புக்கறியோடு அன்னத்தை குடிசைக்குள் ஒரு வாழையிலையிலிட்டான். கனகியை தன் இடுப்பில் வைத்துக்கொண்டு “ நீ எத்தனை வாய் அன்னம் சாப்பிடுகிறாயோ நானும் அத்தனை வாய்தான் சாப்பிடுவேன்” என்றவாறு முதல் வாயை கனகிக்கு ஊட்டினான். அடுத்தவாய் ஆறுமுகனுக்கு. கனகி வெறும் பத்து வாய்தான் உண்டாள். ஆறுமுகனும் பத்துவாய்களின் பின் வாழையிலையை மடித்துவைத்துவிட்டு கையலம்பினான். செந்நாயை சுப்பையன்தான் கடத்திச்சென்று கொன்றிருப்பான் என்பதை ஆறுமுகன் ஊகித்தான். நேற்றிரவு ஒரு காட்டுமுயலை பொறிவைத்து சுப்பையன் பிடித்தான். பிறகு சாமத்தில் அதனைக்கொணர்ந்து கனகி வீட்டு வேலியில் ஒரு பொட்டுவைத்து காட்டு முயலின் மூக்கில் ஒரு காஞ்சோண்டி செடியை வைத்தான். அம்முயல் தும்மியது. முயலின் தும்மலையும் நாற்றத்தையும் முகர்ந்துகொண்ட செந்நாய் வெறியில் உறுமியபடி பொட்டுக்குள்ளால் வெளியில்வர தயாராக வைத்திருந்த சாக்குக்குள் செந்நாயைப் பிடித்தான். ஈனஸ்வரத்தில் நாய் கத்த முன்னரே சாக்குக்குள் இருந்த நாயின் கழுத்தை திருகி கொன்றுவிட்டான். பிறகு காட்டுக்குள் போய் அதனைப் புதைத்துவிட்டான். செந்நாயை இழந்த கனகி மனமுடைந்து போவாள். அப்போது அவளின் மனதை மாற்ற மாமனுக்கு வசதியாக இருக்கும் என்பதே சுப்பையன் போட்ட கணக்கு. வைகறையில் கனகியைப் புணர ஆசைகொண்டான் ஆறுமுகன். அவளை முத்தமிட அவன் முயன்றபோது “சுவாமி நான் தேவடியாச் சிறுக்கி. என்னைத்தொடாதீர்கள். செட்டியார் சோழமண்டலத்திலிருந்து நல்ல செட்டிக் கன்னியை உங்களுக்கு கட்டிவைப்பார்” என்று அழுதபடி அவனிடமிருந்து தன்னை விடுவித்து பாயில் குப்புறப்படுத்துவிட்டாள். ஆறுமுகன் பெருஞ்சினக்காமம் கொண்டான். வெறிப்பலத்தோடு அவள் சேலையை மேலே உருவி அவள் இரு குண்டிகளிலும் கடித்தான். பிறகு அவள் குண்டிகளை விலக்கி அவள் ஆசனவாயை நாக்கால் நக்கி முத்தமிட்டான். முதல்முறையாக அவன் கனகியின் ஆசனவாயில் இட்ட முத்தம் கனகியின் கல்லான அல்குல்லை கரைத்தது. அவளே இடுப்பைத்தூக்கி எழுந்து தன்கைகளால் தாங்கியபடி ஆறுமுகனுக்கு வழிவிட்டாள். அவன் அவள் அல்குலின் ஈரத்தை நாக்குபோட்டு நக்கி முத்தமிட்டபின் தன் ஆணுடம்பை இறக்கி நாயைப்போலப் புணர்ந்தான். அன்றிரவு கனகி கர்ப்பமானாள். சுவர்கத்துக்கோ நரகத்துக்கோ போகாமல் கனகியிடமே மீண்டுவர வழிதொலைந்து அந்தரத்தில் அலைந்துகொண்டிருந்த செந்நாயின் மறுபிறப்பு அது. 4 சனிக்கிழமை காலை பத்துமணி. தன் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த ஆறுமுகனை அவன் அண்ணன்மார் “ டேய் செட்டியார் வந்திருக்கிறார். எழுந்து ஸ்நானம் செய்துவிட்டு வா உடனே” என்றார்கள். ஆறுமுகன் செட்டியாரைச் சந்திக்க விரும்பவில்லை. ஆனாலும் வேறு வழியில்லை. வழமையைவிட இருமடங்கு நேரம் எடுத்து கிணற்றில் நீராடினான். அக்கால யாழ்ப்பாணத்தில் செட்டியார்கள் வெள்ளாள வீடுகளில் தண்ணீர் கூட குடிக்கமாட்டார்கள். வெள்ளாள வீடுகளுக்கும் வரமாட்டார்கள். செட்டியார் ஆறுமுகனை மீட்பதற்காக எல்லா மரபுகளையும் உடைத்து வந்திருந்தார். ஆறுமுகனின் தந்தை செய்வதறியாது செட்டியாரை வணங்கி வரவேற்றார். 85 வயது செட்டியார் பெரிய ராசதந்திரத்தோடு தானே குதிரை வண்டியை ஓட்டி வந்திருந்தார். அவரே உள்வீட்டுக்குள் போய் கட்டிலில் உட்கார்ந்தார். “தாகமாயிருக்கிறது. பருக ஏதாவது கிடைக்குமா” என்றார். செய்வதறியாது தயக்கத்தோடு செம்பில் மோர் கொணர்ந்து கொடுத்தார் ஆறுமுகனின் தந்தையார். அதனை அப்படியே அருந்தி முடித்தார் செட்டியார். ஆறுமுகன் மிகத் தாமதமாக வந்தான். அக்கால யாழ்ப்பாணத்தில் செட்டியாரின் கண்களைப்பார்த்து கதைக்கும் அதிகாரம் பெற்றிருந்தவன் ஆறுமுகன் மட்டுமே. ஆறுமுகன் அன்று செட்டியாரின் முகத்தைக்கூட பார்க்காமல் சாதித்தான். இது செட்டியாரைவிட ஆறுமுகனின் அண்ணன்களையும் தந்தையையும் கலவரப்படுத்தியது. செட்டியாரே எழுந்துவந்து ஆங்கில முறையில் ஆறுமுகனுக்கு கைகொடுத்தார். பிறகு அவர் அவன் தோளில் கைபோட்டு அழைத்துச்சென்று அவனுக்கு கட்டிலில் சரியாசனம் கொடுத்தார். “ ஆறுமுகா உன் சிற்றன்னை செட்டியம்மா நீ இப்போது வருவதில்லை என்று கவலையோடிருக்கிறாள். அதைவிட தூத்துக்குடியில் ஆங்கில வியாபாரக் கம்பனியோடு மிக நல்ல ஒரு வியாபார ஒப்பந்தம் வந்திருக்கிறது. அடுத்தவாரம் நான் அங்குபோய் ஒப்பத்தங்களில் கைச்சாத்திட வேண்டும். என் ராசகுரு நீதானே. நீதான் என்னோடு வந்து பத்திரங்களைப் படித்து எனக்கு உதவவேண்டும். இருவாரங்களில் திரும்பிவிடலாம். இன்று இப்போது நீ என் வீட்டுக்கு வரவேண்டும். ஒரு முக்கிமான பெட்டிசன் ஆங்கில மகாராணிக்கு எழுதவேண்டும். அவசரம். அதுதான் நானே வந்தேன்” என்றார். ஆறுமுகனுக்கு செட்டியாரின் கபடம் புரிந்தாலும் இன்றிரவு தான் கனகியோடு ஓடிப்போக இருப்பதால் செட்டியாருக்கு சந்தேகம் ஏதும் வராமல் அவரோடேயே போக உடன்பட்டான். செட்டியாரே வண்டியைப் பூட்டினார். அவரே ஓட்டினார். வழக்கத்துக்கு மாறாக மிக மெதுவாக வண்டியை ஒட்டினார் “ ஆறுமுகா ஆசை அறுபதுநாள். மோகம் முப்பதுநாள். நீ கொஞ்சம் அதிக காலமெடுத்து கனகியோடு உறவாடுகிறாயா? நான் இன்னும் அதிக காலம் உயிரோடிருக்கமாட்டேன். நான் கண் மூடுவதற்கு முதல் உனக்கொரு விவாகஞ்செய்து வைக்க ஆசைப்படுகிறேன். செட்டியம்மாவின் அண்ணன் மகள் ஒருத்தியை உன் சிற்றன்னை அவள், உனக்கு கட்டிவைக்க ஆசைப்படுகிறாள்.” “.................” ஆறுமுகா உன் பிரகாசமான எதிர்காலம் உனக்கு தெரியவில்லையா? ஆங்கிலேயத் துலுக்கர்களுடன் நாங்கள் அவர்களின் மொழியில் தானே பேசிச் சாதிக்கவேண்டும். நளவன், பள்ளன், பறையன், அம்பட்டன், வண்ணான், எல்லோருக்கும் வாக்குரிமை கொடுத்து ஆங்கிலேயத் துலுக்கர் ஏதோ சனநாயகம் பண்ணப் போறாங்களாம். ஆயிரம் ஆண்டுகளாக நாம் கடைப்பிடித்த சனாதன தர்மத்தை இந்த ஆங்கில சனநாயகம் சிதைப்பதை நாம் அனுமதிக்கலாமா?” “.............” “ஆறுமுகா! நீதானே என் ராசகுரு. நீதானே என் ஒற்றன். கைத்தீஸ்வரப் பெருமாள்தானே என்னிடம் உன்னை அனுப்பினார். நீ ஆங்கிலேயரின் மந்திர தந்திரங்களை பின்பற்றி சட்டசபை அங்கத்தவராக அவர்களின் சனநாயகமோ நாய் நாயகமோ வழியிலேயே வரக்கூடாதா, கனகி ஒரு தேவதாசி. செட்டியம்மா உனக்காக கேட்டதால் ஏற்பாடு செய்து கொடுத்தேன். ஒரு தேவதாசியிடம் போகும் உனக்கு யாழ்பாணத்தில் யார் வாக்குப் போடுவார்கள்? ஆறுமுகா உன்னைவிட நான் பெரிய காமுகன். என் இளமைக்காலத்தில் நான் அனுபவிக்காத போர்த்துக்கேசியப் பெண்களா? டச்சுப் பெண்களா? பிரெஞ்சுப் பெண்களா? ஆங்கிலப் பெண்களா? இந்தியப்பெண்களா? பொம்பேயிலும் கல்கத்தாவிலும் புதுச்சேரியிலும் நான் வாரக்கணக்காக ஐரோப்பியப் பெண்களை அனுபவித்திருக்கிறேன். விருந்தும் மருந்தும் மூன்று நாள் ஆறுமுகா. உன் சின்னம்மா செட்டியம்மாதான் என் தையல் நாயகி. இன்று வரையும் அவள்தான் என் வணிகத்தை, அதிகாரத்தை தைத்துக்கொண்டிருக்கிறாள். 27 வயதில் நான் அவளைக் கட்டியிருக்காவிட்டால் பொம்பாயில் ஒரு வேசைவீட்டில் நான் மேக நோயால் செத்திருப்பேன்” “.............” ஆறுமுகா காமத்தைவிடப் பெரிய வரம் அதிகாரம். அதிகாரம் கால தேச வர்த்தமானங்களைக் கடந்த வரம். அதிகாரம் காமத்தைவிட நிரந்தரமானது. இளமையிலும் அதிகாரம் வரம். முதுமையிலும் அதிகாரம் வரம். காமம் இளமையின் வரம் மட்டுமே. ஒரு பறவையின் செட்டையைப்போல மரத்தின் இலையைப்போல தம் தலைமுடிபோல உதிர்ந்து விடுவது காமம்” “ .............” “ என்ன ஆறுமுகா நான் மட்டுமே பேசிக்கொண்டிருக்கிறேன். நீ பேசமாட்டாயா. நீ கனகியைக் காதலிக்கிறாயா? அவளைவிட்டுப் பிரிய முடியாதா? உண்மை சொல் ஆறுமுகா” இதற்கு மேலும் செட்டியாரின் பிரசங்கத்தை தாங்கமுடியாத ஆறுமுகன் “ செட்டியாரே எனக்கு அதிகாரமும் வேண்டாம். ஒரு மயிரும் வேண்டாம். நான் கனகியின் கணவனாக ஆயிரம் காலம் வாழவிரும்புகிறேன்” என்றான். செட்டியார் இதனை எதிர்பார்க்கவில்லை. தன்னையறியாது கோபத்தில் “என்னைப்பகைத்துக் கொள்ள துணிந்துவிட்டாயா” என்று கத்திக்கொண்டு சாட்டையால் தன் குதிரைக்கு மிகப்பலமாக அடித்தார். குதிரை வண்டி மிகவேகமாக ஓடத்தொடங்கியது. அதே கணத்தில் ஆறுமுகன் வண்டியிலிருந்து குதித்து இறங்கினான். விறுவிறுவென்று தன் வீட்டுப்பக்கமாக நடக்கத்தொடங்கிய ஆறுமுகனுக்கு அப்போதுதான் தான் அவசரப்பட்டுவிட்டேன் என்பது உறைத்தது. அக்கணத்தில் கனகியின் பாதுகாப்புத்தான் அவனை கலவரப்படுத்தியது. முதுவேனிற்கால உச்சிவெய்யில் சுட்டெரித்தது. கனகியை இப்போதே போய் மீட்டுக்கொண்டு ஓடத்தீர்மானித்தான். சால்வையை முகத்தையும் தலையையும் மறைக்க முக்காடாகப் போட்டுக்கொண்டு அளவெட்டி பெருமாள் கடவைப் பிள்ளையார் கோயிலைநோக்கி நடக்க ஆரம்பித்தான். பிரதான வண்டில் பாதைகளைத்தவிர்த்து தோட்டம், துரவு, குளம், காடு, கரம்பை, சுடுகாடு, வயல்வெளி பனஞ்சோலைகள் வழியாக நடந்தான். சரியாக மூன்று மணித்தியாலங்களில் ஒரு காததூரங்கடந்து அளவெட்டி பெருமாள் கடவை கோயில் நல்லதண்ணீர்க் குளக்கரையை அடைந்தான். சில சிறுமிகள் தண்ணீர்க்குடத்தோடு வந்தார்கள். அவர்கள் நட்டுவச்சிறுமிகளே என்பதை அறிந்த ஆறுமுகன் அவர்களில் ஒருத்தியிடம் தாகத்துக்கு தண்ணீர் வாங்கிக் குடித்தான். பிறகு “கனகி அக்காவை உனக்குத்தெரியுமா” என்றான். அவள் ஆமென்று தலையாட்ட தன் மோதிரத்தைக் கழற்றி அவளிடம் கொடுத்து இதை உடனடியாகச் சென்று கனகியிடம் கொடுத்து அவளுக்காக இங்கு நான் காத்திருக்கிறேன் என்று சொல். இந்தப் பெரிய உபகாரத்துக்கு கனகி உனக்கு நல்ல பரிசு தருவாள்” என்றான். சில நிமிடங்களில் கனகி அங்கு அதே சிறுமியோடு வந்தாள். ஆறுமுகன் ஆங்கிலத்தில் இப்போதே ஓடவேண்டும் என்ற செய்தியைச் சொன்னான். இதே இப்போதே வருகிறேன் சுவாமி என்றுவிட்டு கனகி குடத்தில் நீரெடுத்துக் கொண்டு மீண்டாள். காலையிலிருந்து சாப்பிடாத ஆறுமுகனின் பசிக்களையைப் போக்கவே அவள் மீண்டாள். கோயிலுக்குப்போய் ஒரு வாழையிலையில் திருமண விருந்தை பொட்டலமாகக் கட்டி தன் சேலைக்குள் மறைத்தபடி வந்தாள். காதலர்களுக்கு அப்போது எங்கு ஓடிப்போவது என்று தெரியவில்லை. ஆறுமுகனிடம் அப்போது ஒரு பொற்காசும் இல்லை. ஆறுமுகன் கனகிக்கு அணிவித்த தங்கத்தாலான சங்கிலிகள், மோதிரங்கள், தோடுகள், கைவளையல்கள், அட்டியல்கள் காற்சிலம்புகள் எல்லாவற்றையும் அணிந்து வந்திருந்த நீலக்கண்ணி கனகி இளநாவல் காஞ்சிபுரப்பட்டுப் புடவையில் அப்போதுதான் திருமணமான பெண் போல ஜொலித்தாள். “ எல்லாமே நீங்கள் அருளிய பொன்கள் சுவாமி, இவையே நம் வாழ்வைத்தொடங்கப் போதும்” என்றாள். கோயிலில் இருந்து ஒடும் வழுக்கி ஆற்றங்கரை வழியாக அவர்கள் நடந்தார்கள். பினாக்கைப் பெருங்குளக்கரையில் இருந்த பனஞ்சோலை யாருமற்ற மயானமாயிருந்தது. கனகி தன் சேலைக்குள் வைத்திருந்த விருந்தை எடுத்து விரித்து ஆறுமுகனுக்கு ஊட்டினாள். சில வாய்கள் உண்ட ஆறுமுகன் பேசவே இல்லை. மிச்ச அன்னத்தை தன் சேலையில் கனகி முடிந்தாள். அந்த ஆற்றங்கரை வழியாக தொடர்ந்து நடந்தார்கள். யாழ்ப்பாணத்தின் ஒரேயோரு ஒரு காததூர ஆறு அது. வழுக்கியாறு. முதுவேனிலிலும் ஆறு ஓடிக்கொண்டிருந்தது. உரல் இடிக்கிற சத்தம் கேட்டதால் பூக்காத பாலை மரங்கள், மருதமரங்கள், முள் முருக்குகள், வாகை மரங்கள், நாவல் மரங்கள், தேத்தா மரங்கள், பூவரசுகள், ஆல் அரசுகள் எல்லாம் ஆற்றங்கரை நெடுக இருந்தன. காய்ந்த காட்டு மல்லிகையின் வாசம் வீசிக்கொண்டிருந்தது. காய்ந்து உதிரும் முல்லைக்கொடிகள் கனகியின் இளநாவல் பட்டுப்புடவையில் சறுக்கி விழுந்தன. காதலர்கள் பயந்து கொண்டுதான் நடந்தார்கள். தங்களை யாரும் கண்டுகொள்ளக்கூடாது என்று. வெறும் பாதத்தோடு நடக்கும் போது நிலம் சுட்டது. ஆறு கணுக்காலளவு ஓடிக்கொண்டிருந்தாலும் ஆற்றில் நடக்காமல் ஆற்றங்கரைக் காட்டோரமாகவே நடந்தார்கள். காட்டோரத்தில் இடுப்புக்கு மேலே வெக்கையில்லை. இடுப்புக்கு கீழே வெக்கை. கனகிதான் முன்னுக்கு போய்க்கொண்டிருந்தாள். முகத்தில் விழும் சிலந்தி வலைகளை கடக்கிறபோதெல்லாம் யாரும் இன்னமும் போகாத பாதை என்று அவளுக்கு துணிவு வரும். ஆறுமுகனுக்கு வெறும் வேட்டியும் சால்வை முக்காடும் தான். கனகிக்கு உடலைச் சுற்றி மறைத்த சேலை. கனகிக்குத்தான் அதிகம் வியர்த்தது. கற்பூர வாசனையைவிட ஆறுமுகனுக்கு கனகி சதிராடும்போது வரும் அவளின் வியர்வை நாற்றம்தான் பிடிக்கும். அந்நறுமணம் அவனைக் கட்டிப்போடும். அவனுக்கு மகா சக்தியையும் மகா நிம்மதியையும் கொடுக்கும். ஆனால் இன்றோ ஆறுமுகனுக்கு கனகியின் வியர்வை நறுமணம் பீதியைக் கொடுத்தது. இப்பெண் நாற்றத்தை தேடி ஒரு பெருங்காமுகன் வருலாம் என்று பயந்தான். முதுவேற்கால வெக்கையில் இறந்த ஒரு பொன்வண்டு கனகியின் சேலையில் உரசியபடி நிலத்தில் விழுந்தபோது ஆறுமுகன் உசாரானான். கனகியை காட்டுப்புதருக்குள் இழுத்துச் சென்று அவள் கமக்கட்டுகளை தன் நாக்கால் நக்கினான். அவள் கண்ணிமைகளில் வடிந்த வியர்வையை நக்கினான். கழுத்தைச் சுற்றி நக்கினான் பிறகு முழங்காலிலிருந்து நிற்கும் அவளின் சேலைக்குள் தன் முகத்தை புகுத்தி அவள் பின் முழங்காலிலிருந்து வியர்வையை நக்கத் தொடங்கினான். அப்போது காற்றால் விழுந்த ஒரு முழுச் சிலந்திவலை முக்காடு போல கனகியின் முகத்தில் விழுந்தது. ஆறுமுகன் அவளின் பின் முழங்காலை நக்கி, பின் தொடைகளை நக்கி அவள் குண்டிகளை நக்கினான். பின் முழங்காலை நக்கி முன் தொடைகளை நக்கினான். அவள் அல்குல்லை நக்கினான். அந்திசாயும் நேரம் அவர்கள் களையோடை கண்ணகிகோயில் மலைக்காட்டுக்குள் ஒதுங்கினார்கள். மீதி அன்னத்தை உண்டபின் சாமம் வரும்வரை அங்கேயே ஒளித்திருந்தார்கள். சாமத்தில் வழுக்கியாறு முடியும் கடற்கரையை அடைந்ததும் ஆறுமுகனுக்கு திக்குத் திசை தெரிந்தது. கடற்கரை வழியாக நட்சத்திரங்களின் ஒளியில் தெற்காக அவர்கள் நடந்தார்கள். யாழ் மத்திய கல்லூரி அண்டையிலிருந்த பேர்சிவல் பாதிரியாரின் தகர கதவை அவர்கள் தட்டியபோது அதிகாலை இரண்டுமணி. பாதிரியாரே எழுந்துவந்து கதவைத்திறந்தார். பாதிரியாருக்கு ஆறுமுகனின் காதல் கதை தெரியும். ஒரு பெண்ணோடு அவன் பரதேசியைப்போல வந்ததைக்கண்ட அவர் எதுவும் பேசவில்லை. உள்ளே அழைத்துப்போய் தாகத்துக்கு அருந்த தண்ணீர் கொடுத்தார். சாப்பிட்டீர்களா என்று கேட்டார். பிறகு தானே அடுப்புமூட்டி சுடச்சுட தேநீர் வைத்துக்கொடுத்தார். ஆறுமுகன் “சேர், நீங்களே இப்போது எனது ஒரே தஞ்சம்” “ஆறுமுகா நான் பார்த்துக்கொள்கிறேன். பயமேதுமில்லை. ஒரு தேசத்தையே நடந்து வந்த களையிலிருக்கிறீர்கள் நீங்கள். இப்போது உங்களுக்கு தேவை உறக்கம்” பாதிரியார் தன்வீட்டு விருந்தினர் அறையில் அவர்களைத் தூங்கவிட்டார். காலை ஒன்பது மணிக்கு தேநீரோடு பாதிரியார் கதவைத் தட்டினார். கனகிதான் முதலில் விழித்து ஆறுமுகனை எழுப்பினாள். மூன்று காததூரங்களை ஒரு முதுவேனிற்காலத் தினத்தில் நடந்த களையில் ஆறுமுகன் ஆழ்ந்த நித்திரையிலிருந்தான். பாதிரியார் மாற்றுடைகளைக்கொடுத்து அவர்களை நீராடி வரப்பணித்தார். காலை உணவாக பாதிரியாரின் சமையல்காரன் அவர்களுக்கு அப்பமும் பாலப்பமும் சம்பலும் பரிமாறினான். அப்போதுதான் பாதிரியார் முதல்நாள் இரவு ஆறுமுகனின் அண்ணன்கள் பாதிரியாரிடம் வந்து ஆறுமுகனை தேடிய கதையைப் போட்டுடைத்தார். அப்போது பாதிரியாரின் வேதாகம தமிழ்மொழிபெயர்ப்பு முக்கால்வாசி ஆறுமுகன், கனகியின் செம்மையாக்கலில் முற்றாகிவிட்டது மீதி கால்வாசியை அவர்களின் செம்மையாக்கல் இல்லாமல் தனது மொழிபெயர்ப்பில் மட்டுமே வந்தால் தான் இலக்கியத்திருட்டு செய்தவன் என்று அம்பலப்படுவார் என்பது பாதிரியாருக்கு தெளிவாகத் தெரியும். ஆகவே துணிந்து காதலர்களுக்கு தஞ்சம் கொடுக்க முடிவு செய்துவிட்டார். காலை ஆகாரத்தின் பின் பாதிரியார் ஆறுமுகன் தம்பதியரை வெளியே தலைகாட்டாமல் இருக்கும்படி எச்சரித்துவிட்டு சமையல்காரனும் தன் உதவியாளனுமான வடநாட்டுத் தெலுங்கனுக்கு இரகசிய உத்தரவுகளை வழங்கிவிட்டு தனது குதிரைவண்டியில் வெளியே போனார். கனகி பயத்தில் மிரண்டபடியேயிருந்தாள். ஆறுமுகன் அவள் பயத்தைப்போக்க அவளது மனத்தை வேறு திசையில் செலுத்த வேதாகமத்தில் பாதிரியாரின் தமிழ் மொழிபெயர்ப்பில் ஒரு புதிய அத்தியாயத்தை எடுத்து அவளோடு சேர்ந்து செம்மைப்படுத்தத் தொடங்கினான். பாதிரியார் சொன்னபடியே அவரது நூலக அறைக்குப்போய் அடுக்கிவைக்கப்பட்டிருந்த வேதாகமப் புத்தகங்களில் ஓசியாவின் புத்தகம் ஒரு அதிகாரமாக இருந்தது. அதனை எடுத்து இருவரும் படித்து ஆங்கில மூல King James Version உடன் ஒப்பிட்டு வரிக்கு வரி வசனத்துக்கு வரி செம்மைப்படுத்தி புதிய தாள் புத்தகமொன்றில் செம்மைப்படுத்தி எழுதினார்கள். ஆறுமுகன்தான் ஒவ்வொரு வசனத்தையும் கனகியோடு சம்பாசித்து இறுதிவரியை முடிவு செய்தபின் இருதடவை படித்துக்காட்டியபின் கனகி தலையாட்டி இறுதி உடன்பாடு எட்டிய வசனத்தை எழுதினான். இப்படி சில பக்கங்கள் எழுதி முடித்துக் கொண்டிருக்கும்போது மதியம் ஒருமணிபோல் பாதிரியார் திரும்பினார். பல காததூரம் சென்றுவந்தவர் போல வியர்வையோடும் களைப்போடும் உள்ளே வந்தார். உதவியாளன் கொடுத்த ஈரத்துணியால் முகத்தையும் தலையையும் துடைத்தபின் கையலம்பி சாப்பாட்டு மேசையில் வந்தமர்ந்தார். ஆறுமுகனையும் கனகியையும் மேசைக்கு அழைத்தார். உதவியாளன் வண்டியிலிருந்து சில துணிப்பொட்டலங்களை கொணர்ந்து உள்ளே வைத்தான். உதவியாளன் மூவருக்கும் உடன்பிழிந்த மாதுளம்பழச்சாறு பரிமாறினான். ஆறுமுகன் அதுவரை தாம் செம்மைப்படுத்திய ஓசியாவின் புத்தகங்களின் பக்கங்களை பாதிரியாரிடம் காண்பித்தான். பாதிரியார் சிறிது நேரமெடுத்து தன்மூல மொழிபெயர்ப்போடு ஒப்பிட்டு படித்தார். பரவசப்பட்டு தலையாட்டியபடியே படித்தார். கனகி வாங்கிலில் ஆறுமுகனை ஒட்டியபடியேயிருந்தாள். ஆங்கிலத்தில் தான் பாதிரியார் பேசினார். இடையிடையே தமிழில் செம்மையாக்கல் நன்றாக வந்திருக்கிறது என்பதைச்சொல்ல வசனங்களையும் சொற்களையும் தமிழில் சொன்னார். “கனகித்தங்கா, ஆறுமுகா நான் இன்று மெனைக்கெட்டு மானிப்பாய்க்குப் போயிருந்தேன். காதலர்கள் உங்களுக்காக ஒரு கூடை மாதுளம்பழங்கள் வாங்க. ஏன் தெரியுமா? ஆறுமுகா நீ வாயைப் பொத்து. தங்கா நீயே பதில்சொல்” கனகி அக்கணத்தில் தன் பயம் மறந்து ஆறுமுகனின் தன் தோளில் தன் தலை வைத்தபடி “ஆதியாகமத்தில் சொன்ன ஏழு பயிர்களில் ஒன்று மாதுளை” “And" “.......” பாதிரியார் உடனே எழுந்து தன் நூலக அறைக்குப்போய் ஆறுமுகனும் கனகியுமும் செம்மைப்படுத்தி எழுதிய சாலமனின் பாடல் புத்தகத்தை எடுத்து வந்து “தங்கா ஆறுமுகனை விட ஸ்மாட் நீ. ஆறுமுகன் அனைத்தும் பறைந்தான். இந்த வரிகள் உன்னுடையவைதானே?” என்றுவிட்டு அவ்வரிகளை தேடிப்படித்தார். “ உன் கவிடு மருதாணி பூசிய நறுமணம் வீசும் மாதுளம்பழச் சுவர்க்கத் தோட்டம்” “...........” நேற்றிரவு நீங்கள் என் தகரப்படலையைத் தட்டும்போது நான் இவ்வரிகளைப் படித்துக்கொண்டிருந்தேன். தேவனுடைய செய்தியை பரப்புவதே என் ஊழியம். இலத்தீனிலும் ஆங்கிலத்திலும் வந்த சில வேதாகம மொழிபெயர்ப்புகளோடு உங்கள் தமிழ் மொழிபெயர்ப்பையும் ஒப்பிட்டுப் படித்தேன். மொழிகளின் இரும்புத் திரைகளுக்கப்பால் தேவனுடைய உண்மையான செய்தி உங்கள் தமிழிலேயே இருந்தது. மெதடிஸ்த ஊழியனாக நான் திருமணஞ்செய்து கொள்ளலாம். இப்போதும் என் லண்டன் சீமைக் காதலி எனக்காகத் திருமணஞ் செய்யாதிருக்கிறாள். அவள் முகம் முழுக்க மாதுளம்பழ விதைகள் போல செந்தேமல். இன்றும் எனக்கு கடிதத்திற்கு மேல் கடிதமாக காதல் கடிதங்கள் எழுதிக்கொண்டிருக்கிறாள். தங்கா உன் மொழிபெயர்ப்பு அவளுடைய காதல் கடிதங்களை நினைவுபடுத்தியது. ஊருக்குப்போய் அவளைத்திருமணஞ்செய்து அவளோடு இங்கு வந்து தேவனுடையை செய்தியைப் பரப்ப முடிவுசெய்துவிட்டேன்.” பாதிரியார் எழுந்துபோய் ஒரு துணிப்பொட்டலத்தை எடுத்துவந்தார். இரண்டு சோடி ஆண் பெண் பாதிரியார் உடைகள். உடனேயே ஒன்றை அணிந்துவரப் பணித்தார். ஆறுமுகனும் கனகியும் தூயவெள்ளை ஆண் பெண் பாதிரி உடைகளில் வந்தபிறகே உதவியாளன் உணவு பரிமாறினான். முற்றிலும் அந்தக்கால யாழ்ப்பாண சைவ உணவு மேசையில் பரிமாறப்பட்டது. பாதிரியார் ஆறுமுகனுக்கு ஜோசப் என்றும் கனகிக்கு றீபெக்கா என்றும் புதிய நாமங்களை சூட்டினார். விருந்தின் முடிவில் பாதிரியார் தன் இரகசிய திட்டத்தை சொல்லிவிட்டு காதலர்களை அறைக்குள் சென்று உறங்கப் பணித்தார். யாமம் ஒருமணிக்கு பாதிரியாரின் உதவியாளன் வெளியே போய் உளவுபார்த்து வந்தான். பிறகு அவன் முன்னே செல்ல பாதிரியாரும் வெண் பாதிரி உடைகளிலிருந்த ஆறுமுகனும் கனகியும் குருநகர் இறங்குதுறைக்கு தமது பயணப்பொதிகளைக் காவிக்கொண்டு நடந்துபோனார்கள். அவ்வப்போது இரகசியமாக ஆங்கிலத்தில்தான் உரையாடிக்கொண்டார்கள். இறங்குதுறையில் பாதிரியார் ஏற்பாடு செய்து வைத்திருந்த நாலு வடநாட்டுப் படகோட்டிகள் காத்துக்கொண்டிருந்தார்கள். பாதிரியார் தன் உதவியாளனுக்கு விடைகொடுத்தபின் பாய்க்கப்பல் நெடுந்தீவு நோக்கிப் பயணப்பட்டது. காற்று அவர்களின் பயணத்திற்கு ஆதரவாக வீசிக்கொண்டிருந்த அருமையான கடல் இரவு அது. கனகி விண்மீன்களை எண்ணிக்கொண்டிருந்தாள். இரண்டு மணித்தியாலத்தில் நெடுந்தீவு மாவலித்துறையில் வத்தை கரைதட்டியது. பாதிரியாரும் ஆறுமுகனும் கனகியும் கடற்கரை வழியாக வடக்காக முக்கால் மணிநேரம் நடந்தார்கள். ஆறுமுகன் தன்னையும் கனகியையும் திருப்பெருந்துறை ஆவுடையார் கோயிலுக்கு செல்ல பாய்க்கப்பல் ஏற்பாடு செய்து தரும் உதவியையே பாதிரியாரிடம் கேட்டிருந்தான். வேதாகம மொழிபெயர்ப்பை முற்றாக மெய்ப்புப்பார்த்துக் கொடுக்க தனக்கும் கனகிக்கும் இன்னும் இரண்டே வாரங்கள் தான் தேவை என்றும் தனக்கு வேண்டப்பட்ட ஆவுடையார் கோயில் மடம் ஒன்றிலிருந்து இதனைச்செய்து தருவேன் என்றும் சொன்னான். பாதிரியாருடைய திட்டம் வேறொன்றாக இருந்தது. அப்போது மெதடிஸ்த சபை நெடுந்தீவில் ஒரு புதிய கல் தேவாலயம் ஒன்றை கட்டிக்கொண்டிருந்தது. இதற்கு பொறுப்பாக பாதிரியார் தான் இருந்தார். முற்றிலும் வைக்கோலால் மூடிக்கட்டப்பட்ட ஒரு குடிசை விடுதி கட்டப்படும் தேவாலய வளவுக்குள்ளேயே இருந்தது. அங்கு கனகியும் ஆறுமுகனும் தேவனுடைய ஊழியர்களாக மாறுவேடத்திலிருந்து வேதாகமத்தை முடித்துத்தரலாம். கட்டட வேலைசெய்து கொண்டிருக்கும் மேஸ்திரிகளும் கூலிக்காரர்களும் வடநாட்டைச் சேர்ந்தவர்கள். மாலையில் வேலை முடிந்ததும் அவர்கள் சிறிது நடைத்தூரத்திலிருக்கும் அவர்களுடைய கொட்டில் வசிப்பிடத்திற்குப் போய்விடுவார்கள். பாதிரியாருடைய குடிசையைப் பார்த்துக்கொள்ளும் தெலுங்கு கிழவரே பாதிரியார் இருவாரங்களுக்கொரு முறை தேவாலய கட்டட வேலையை மேற்பார்வை செய்ய வருகிறபோது பாதிரியாருக்கு உணவு சமைத்துக்கொடுப்பவர். அவர் இந்த இரு வாரங்களும் ஆறுமுகனுக்கும் கனகிக்கும் மூவேளை உணவு சமைத்துக்கொடுப்பார். உடைகளையும் சலவைசெய்து கொடுப்பார். குடிசையை விட்டு வெளியே எங்கு போனாலும் ஆறுமுகனும் கனகியும் வெண்ணிற பாதிரியார் பாதிரியாரம்மா உடைகளிலேயே இருக்கவேண்டும். ஆங்கிலத்திலேயே பேசிக்கொள்ளவேண்டும். நெடுந்தீவில் யாருக்குமே ஆறுமுகனையும் கனகியையும் தெரியாது. நெடுந்தீவில் கனகியைப்போல நீலக்கண்களும் ஒலிவ் தோலுங்கொண்ட பெண்கள் புதினமுமல்ல. போர்த்துக்கேசியர் வம்சாவளி வந்த சில உள்ளூர் நெடுந்தீவுப்பெண்களே அங்கிருக்கிறார்கள். மூன்றாம் வாரத்தொடக்கத்தில் பாதிரியார் காதலர் ஆவுடையார் கோயிலுக்கு போக ஏற்பாடு செய்வார். அதிகாலை நாலு மணிபோல அவர்கள் அந்த கடற்கரை குடிசையை அடைந்தபோது வயதான ஒரு தெலுங்கு கிழவர் ஓடிவந்தார். பாதிரியார் அவரோடு தெலுங்கில் பேசினார். கிழவர் உடனேயே அடுப்பு மூட்டி இவர்களுக்கு தேநீர் தயாரித்து பரிமாறினார். ஒரு சீப்பு இரதை வாழையையும் தட்டில் வைத்தார். பாதிரியார் இரண்டு பழங்கள் சாப்பிட்டார். ஆறுமுகனும் கனகியும் ஒரே பழத்தை பகிர்ந்து கொண்டார்கள். வைக்கோல் குடிசையில் இரண்டு அறைகள் இருந்தன. காதலர்கள் ஒரு அறையிலும் பாதிரியார் மற்ற அறையிலுமாக படுத்தார்கள். தெலுங்கு கிழவர் சமையல் செய்யும் வெளியே தள்ளியிருந்த சமயலறைக் குடிசையில் படுத்தார். அடுத்தநாள் திங்கட்கிழமை பத்துமணிபோல் தான் பாதிரியாரும் காதலர்களும் நித்திரையிலிருந்து மீண்டார்கள். யாழ் மத்திய கல்லூரி தலமை ஆசிரியர் பாதிரியாரும் ஆசிரியன் ஆறுமுகனும் அன்று பள்ளிக்கு போகவில்லை. மூவரும் கிணற்றில் நீராடியபின் வளவிலிருந்த ஓர் அசுரப்பெரிய காட்டுப்பூவர மரத்தின் கீழிருந்த மேசையிலிருந்து காலை ஆகாரம் உண்டார்கள். பாதிரியாருக்கு புட்டும் சங்குவான் நண்டுப் பிரட்டலும்..கனகிக்கும் ஆறுமுகனுக்கும் பிட்டும் பலாப்பழமும். கனகிக்கு இது கனவா நனவா என்பது தெரியவேயில்லை. மாவிட்டபுரம், அளவெட்டி, உடுவில், வட்டுக்கோட்டை, கண்ணார் பண்ணை, நல்லூர் ஆகிய ஆறு ஊர்களை விட அவளுக்கு யாழ்ப்பாணத்தில் வேறு ஊர்கள் தெரியாது. வேறு ஊர்களுக்கு ஒரு தடவையும் அவள் பயணித்ததில்லை. வாழ்வில் முதல்முறையாக அவள் தான் அறிந்த ஊர்களை விட்டு பயணித்தது ஆறுமுகனோடு ஓடியபோதுதான். முதுவேனிற்கால வெய்யிலில் ஒரேயொரு காததூரம் ஓடும் அரிய யாழ்பாண குறுநதி வழுக்கியின் கரையில் காட்டில் நடந்த போதுதான். அவ்விரவில் பிறகு நட்சத்திரங்களுக்கு கீழே கடற்கரையில் தன் காதலனோடு நடந்தபோதுதான். அவள் முதல் முறை கடல் கடந்து பயணித்தது யாமத்தில் பாதிரியாரோடும் ஆறுமுகனோடும் நெடுந்தீவுக்கு வந்ததுதான். தேவதாசியான அவளுக்கு கனவுகள் புதியவையல்ல. ஆயிரம் கனவுகள். கண்டிருப்பாள். அதில் ஒரு நூறு இன்பக்கனவுகளை அவளால் இப்போதும் நினைவு மீட்டமுடிகிறது. கனகி தான் ஒரு கனவு தேவதை என்று நம்புமளவுக்கு கனவுகள் அவளுக்கு வரும். சாதாரணமான பெண்களுக்கு கனவு வருகிறபோது அது கனவா நனவா என்பது தெரியாது. கனகிக்கு இன்பக்கனவுகள் வருகிறபோது அது கனவு என்று தெரிந்துகொண்டே அனுபவிக்கும் அசாத்திய சக்தி இருந்தது. கனகியின் இன்ப இரவுக்கனவுகளை மனிதரின் பகல் கனவுபோல கட்டுப்படுத்தும் சக்தியும் அவளுக்கிருந்தது. கடைசியாக கனகி கண்ட துன்பக்கனவு அவளின் செந்நாய் தொலைந்துபோன இரவில்தான். அவளுடைய கனவொன்றில் முதலும் கடைசியுமாக செந்நாய் வந்ததும் அப்போதுதான். ஓர் இளவேனிற்கால நிலவு நாளில் செந்நாய் கனகியோடு பேசமாட்டேன். கண்ணைக் கட்டிக் கோபம், பாம்பு வந்து கொத்தும், கண்ணாடி வந்து வெட்டும், செத்தாலும் கோபம் என்று சாதிக்கிறது. கனகி செந்நாயை தன் இடுப்பில் வைத்து என்னோடு பேசு செந்நாயே என்று கெஞ்சுகிறாள். “ உனக்கென்ன நாச்சியாரே ஆறுமுகன் என்றொரு அருமையான காதலனை நீயடைந்துவிட்டாய். இனி என்னை நீ மறந்து விடுவாய். எனக்கும் ஒரு காதலி இருக்கிறாள். எனக்கும் திருமண வயசாகிவிட்டது என்பது உனக்குத் தெரியாதா என்கிறது செந்நாய். உன் காதலியைக் காட்டு. நானே திருமணஞ்செய்து வைக்கிறேன் என்கிறாள் கனகி. செந்நாய் அவளை அந்நிலவில் ஓர் ஆற்றங்கரையோரம் கூட்டிச்செல்கிறது..கனகிக்கு அது வைகையா, பொன்னியா வெள்ளாறா என்று தெரியவில்லை. ஒரு காத தூர நடைமுடிவில் ஒரு ஆற்றங்கரை மாளிகைகையை அவர்கள் அடைகிறார்கள். செந்நாய் சொல்கிறது. “ நாச்சியாரே இது நாய்களுக்கிடையிலான போராட்டம். மாமன், மச்சான், தாய், தேப்பன், சித்தப்பன், சித்தி, என்று ஒரு பத்து என் காதலியின் சொந்தக்கார நாய்களோடு போராடப்போகிறேன். மனித உறவுகள் வேறு. நாய்களின் உறவுகள் வேறு. நான் வென்றால் பூனை தன் குட்டியை பின் கழுத்தில் கௌவிக்கொண்டு வருவதுபோல என் காதலியைக் கௌவி வருவேன். நாச்சியாரே நாய்களின் இந்தப் போரில் நீ தலையிடாதே. நான் தோற்றால் உன்னுடைய மகனாகப் பிறப்பேன்” கனவில் செந்நாய் “பாதிக்கனவில் மறையும் பறவைப்போல” திரும்பவில்லை. கனகியின் துன்பக்கனவு அவள் கனவையும் மறந்துவிட்டாள். இப்போது நெடுந்தீவு காட்டுப்பூவரசின் கீழ் கனகியும் அவள் காதலன் ஆறுமுகனும் பாதிரியாரும் இருக்கிறார்கள். கொடிய முதுவேனில் வெக்கையை கடற்காற்றும் காட்டுப் பூவரசும் கொல்கின்றன. கடல் மணக்கின்றது. அலையோசை கேட்கிறது. ஆனால் இது கனவா நனவா? இப்படியொரு பிரமையில் இருக்கிறாள் கனகி. நல்லதண்ணிக் குளத்தில் ஆறுமுகனை சந்தித்த கணத்திலிருந்து இப்போது காட்டுப்பூவரசின் கீழ் புட்டும் பலாப்பழமும் சாப்பிடும் கணம் வரையான தருணங்கள் கனவா நனவா என்பது கனகிக்கு தெளியவேயில்லை. கனகியின் பிரமையை பாதிரியார் உணர்ந்தார். நிலமைக் கட்டுப்படுத்த சில மஞ்சள் பூவரசப் பூக்களை கொய்து பூமாலை கட்டினார். ஒரு பூமாலையை ஆறுமுகனிடம் கொடுத்து றீபெக்கா என்ற நாமம் சூடிய கனகிப்பாதிரியம்மாவுக்கு மாலை சூடக்கொடுத்தார். வெண்ணிற ஆடையில் ஆறுமுகன் போட்ட பூவரசம் பூமாலையில் நீலக்கண்ணி கனகி தேவதையைப்போல ஜொலித்தாள். பாதிரியார் ஒரு குழந்தையாகி ஒரு பூவரசம் இலையை சுருட்டி நாதஸ்வரம் வாசித்தார். அந்த நாதஸ்வர இசையில் கனகி கொஞ்சம் தேறினாள். பிறகு கனகியின் கைகளை ஆறுமுகனை பிடிக்கச்சொல்லிவிட்டு காதலர்கள் நீங்கள் மொழிபெயர்த்த ஒரு சாலமனின் பாடல் என்றுவிட்டு தன் கண்களை மூடி அந்தப் பாடலை அவர்களுக்கும் கேட்கக்கூடியவாறு ஜெபித்தார். “என்னை உமதருகில் வைத்துக்கொள்ளும் உம் இதயத்தின்மேல் ஒரு முத்திரையைப்போல் கையில் அணிந்துகொள்ளும் நேசமானது மரணத்தைப்போன்று வலிமையானது. நேச ஆசையானது(Jealousy) கல்லறையைப்போன்று வலிமையானது அதன் பொறிகள் சுவாலை ஆகின்றன பின் அது பெரிய நெருப்பாக வளர்கின்றது ஒரு வெள்ளத்தால் காதலை அழிக்க முடியாது ஒரு நதியால் அன்பை இழுத்துச் செல்லமுடியாது” - உன்னதப் பாட்டு 8:6-7 வேதாகமம். கனகியை எப்படி சாந்தப்படுத்துவது என்பது ஆறுமுகனுக்கு தெரியும். பாதிரியாருடைய வேதாகம மொழிபெயர்ப்புச் செம்மையாக்கல் தான் காதலர்கள் ஓடிப்போவதை தாமதப்படுத்திக் கொண்டிருந்தது. வேதாகமத்தின் ஒவ்வொரு அத்தியாயத்தையும் செம்மைப்படுத்தி ஆறுமுகனோடு சேர்ந்து முடிக்கும்போது கனகி தன் வாழ்வின் ஒரு கண்டம் முடிந்ததாக ஆறுதலடைவாள். ஆறுமுகன் இறுதி அத்தியாயங்களிலொன்றை இப்போது பாதிரியாரோடு சேர்ந்தே செம்மைப்படுத்துவோமே என்றான். பாதிரியார் குடிசைக்குள் போய் தன் வேதாகம மொழிபெயர்ப்பு பிரதிகளை எடுத்துவந்தார். கடற்காற்று வீச காட்டுப்பூவரசின் கீழிருந்து மூவரும் உரையாடி ஒரு அத்தியாயத்தை செம்மைப்படுத்தினார்கள். கனகியியின் முகத்தில் கல்யாணக்களை வந்தது. பாதிரியாரும் ஆறுமுகனும் அதையிட்டு சந்தோசப்பட்டார்கள். தெலுங்கு கிழவர் அவர்களுக்கு தேநீர் பரிமாறினார். பாதிரியாருடைய சுருட்டுப் பெட்டியையும் கிழவர் பாதிரியாரிடம் கொடுத்தார். பாதிரியார் ஒரு சுருட்டை எடுத்து ஆறுமுகனிடம் நீட்டினார். ஆறுமுகன் கனகியைப்பார்த்தான். கனகி “ வாங்கிக்கொள்ளுங்கள் சுவாமி. உங்கள் குருச்சுவாமி தருகிறார்” என்றாள். ஆறுமுகன் அதனை வாங்கி தன் வாயில் வைத்ததும் பாதிரியார் அதனைப் பற்றவைத்து விட்டு தனதையும் பற்றவைத்தார். முதல் புகை ஆறுமுகனை சாந்தப்படுத்தியது. பயங்களைப்போக்கி பரவசமாக்கியது. “ கனகித்தங்கா, ஆறுமுகா, நீங்கள் இருவருமில்லாவிட்டால் என் வேதாகமம் தமிழில் வந்திருக்காது. வந்திருந்தாலும் யாரும் கண்டுகொண்டிருக்க மாட்டார்கள். மிக்க நன்றி. தம்பதிகளே. நீங்கள் வாழ என் உயிரைக்கொடுத்தேனும் அனைத்து உதவியும் செய்வேன்” என்று பாதிரியார் சொன்னபோது கனகியும் ஆறுமுகனும் ஒருவரை ஒருவர் பார்த்து பரவசப்பட்டார்கள். இரண்டாவது புகையிழுப்பில் ஆறுமுகன் இன்னும் இருவாரங்களில் தானும் கனகியும் திருப்பெருந்துறையில் நடப்பதாக பகல் கனவுகண்டான். அவளுக்கு மேலும் பல காஞ்சிபுரப் பட்டுப்புடவைகள் வாங்கிக்கொடுக்கவேண்டும். ஆனால் தன்னோடு ஓடிவரும்போது கட்டிவந்த இளநாவல் பட்டுப்புடவையில் தான் அதே நகைகளோடு கனகி தன்னோடு திருப்பெருந்துறையில் நடக்கவேண்டும். அவளுடைய புடவை சரசரப்பையும் காற்சிலம்பு திருப்பெருந்துறையில் ஒலிப்பதையும் ஆறுமுகன் அப்போது கேட்டான். புகைத்து முடிந்து தேநீர் அருந்தி மேலும் ஒரு அத்தியாயத்தை மூவரும் செம்மையாக்கியபின் கிழவர் மதிய உணவு பரிமாறினார். அப்போது நெடுந்தீவில் பின்னேரம் நாலுமணி. சாப்பிட்டபின் ஒரு முவரும் குடிசைக்குள் போய்த்தூங்கப்போனார்கள். ஆறுமுகனுக்கும் பாதிரியாருக்கும் நல்ல தூக்கம் வந்தது. ஆறுமுகனின் அருகில் படுத்திருந்த கனகிக்கு தூக்கம் வரவேயில்லை. பாதிரியார் இன்றிரவே யாழ்ப்பாணத்திற்கு திரும்பவேண்டும். செவ்வாய்க்கிழமை தன் பாடசாலைக்கு போகவேண்டும். ஐந்தரை மணிபோல் பாதிரியார் எழும்பி முகம் கழுவி வந்த ஒலிகள் கனகிக்கு கேட்டது. அவள் ஆறுமுகனை எழுப்பினாள். காதலர்களும் முகம் கழுவி வந்தார்கள். காட்டுப் பூவரசின் கீழ் மூவருக்கும் தேநீரும் ஆதியாகமத்தில் சொன்ன ஏழு பயிர்களில் ஒன்றான அத்திப்பழம் போட்டு சுட்ட இனிப்பான குரக்கன் ரொட்டியும் பரிமாறினார் கிழவர். பாதிரியார் தம்பதிகளை மறுபடியும் எச்சரித்தார். “எக்காரணம் கொண்டும் குடிசையை விட்டு பாதிரி உடைகள் இல்லாமல் வெளியே வராதீர்கள். விடிவதற்கு முதலே இருளிலேயே காலைக்கடன் முடித்து குளித்துவிடுங்கள். மாவலித்துறைக்கு ஒருபோதும் போகாதீர்கள். அந்தி சாய்ந்தபின் நடைத்தூரத்திலிருக்கிற கடற்கரையில் மட்டும் நீங்கள் பாதிரி உடையில் காலாற ஒருமணிநேரம் நடக்கலாம். குடிசைக்கு வெளியே வந்ததும் எப்போதும் ஆங்கிலத்திலேயே பேசுங்கள். நீங்கள் கடற்கரையில் நடக்கும் போது எப்போதும் இந்த தெலுங்கு கிழவன் கூடவே வருவான். அவனுக்கு கொஞ்சம் ஆங்கிலம் தெரியும். உள்ளூர் மீனவர்களோ வேறு யாரோ உங்களோடு பேச்சுக்கொடுத்தால் உங்களுக்கு தமிழே தெரியாது என்று நடியுங்கள். கிழவர் உங்கள் மொழிபெயர்ப்பாளராக நடிப்பார். கிழவர் என் நம்பிக்கைக்குரியவர். அவருக்கு உங்கள் கதை தெரியும். அவர் முன்னிலையில் இரகசியமாக நீங்கள் தமிழில் கதைக்கலாம். அவருக்கு தெலுங்கை விட தமிழ் அத்துப்படி. ஆனால் யாழ்ப்பாணத் தமிழை முழுமையாக புரிவதில் அவருக்கு சிரமமிருக்கிறது. தேவாலய கட்டுமானப்பணிகளில் ஈடுபடும் மேஸ்திரி, கூலியாட்களுடன் எந்தக்கதையும் வைத்துக்கொள்ளாதீர்கள். எப்போதாவது ஒரு கூலியாள் உங்கள் முன் முழங்காலிலிருந்து தனக்காக ஜெபிக்கும்படி உங்களைக் கேட்பான். அவங்கள் எல்லோருமே தெலுங்கர்கள். தமிழ் கொஞ்சம் புரியக்கூடியவங்கள். அப்போதும் என் சமையல் கிழவனை கூப்பிட்டுத்தான் ஆங்கிலத்தில் உரையாடுங்கள். அவனுக்கு தெரிந்த பாதி ஆங்கிலத்தை வைத்து நீங்கள் சொல்லாததையும் விட புதினமான மொழிபெயர்ப்பை கிழவர் வழங்குவார். அதையிட்டு சிரித்துவிடாதீர்கள்.” ஏழு மணிக்கு இருட்டில் பாதிரியார் காதலர்களுக்கு விடைகொடுத்தார். கனகிக்கு அழுகை வந்தது. பாதிரியார் கனகியின் இருகைகளையும் தன் கண்களில் ஒற்றியபடி நின்றபடியே ஜெபித்தார். ஆறுமுகனுக்கு கைகொடுத்தார். அடுத்த வெள்ளிக்கிழமை முன்னிரவில் வருவேன் என்றார். பிறகு தெலுங்கு கிழவனோடு பாதிரியார் மாவலித்துறை நோக்கி நடக்கத்தொடங்கினார். 5 செட்டியார் தன் குதிரையைச் சவுக்கிய கணத்தில் ஆறுமுகன் குதிரை வண்டியிலிருந்து இறங்கிய கணத்தில் இருந்து இரு நிமிடத்தில் செட்டியாரின் குதிரை வண்டி கண்ணை கைத்தீஸ்வரன் கோயிலண்டையிலிருக்கும் அவரின் மாளிகையை வந்தடைந்து விட்டது. எவ்வளவு முயன்றும் செட்டியாரால் தன் குதிரையின் வேகத்தை நிறுத்த முடியவில்லை. செட்டியாரின் கிழட்டுக் குதிரையின் பெயர் செங்கரப்பிள்ளை. ஆறுமுகனுக்கும் செங்கரப்பிள்ளைக்கும் ஒரே வயதுதான். 24. இருபது வருடங்களாக செட்டியார் வைத்திருந்த குதிரை. ஒரு தடவைகூட சவுக்கால் இவ்வளவு கடுமையாக அடித்ததில்லை. செட்டியாரின் குதிரைக்காரனையும் அடிக்க அனுமதித்ததில்லை. செங்கரப்பிள்ளைக்கு தான் அடித்தில் கூட கோபமில்லை என்பது செட்டியாருக்கு தெரியும். ஆறுமுகனை கடுந்தொனியில் வைததுதான் குதிரைக்கு கோபம். மூச்சிரைக்க செட்டியார் வீட்டில் வந்திறங்கும் போது குதிரைக்காரன் வாயிலில் காத்திருந்தான். ஏதோ அசம்பாவிதம் நடந்துவிட்டது என்பதை அறிந்தவன் செட்டியார் வண்டியைவிட்டு இறங்க உதவினான். பெருங்குற்ற உணர்ச்சியோடு வண்டியை விட்டிறங்கினார் செட்டியார். செட்டியாரம்மா ஒரு செம்பு மோரோடு வீட்டு வாசலில் நின்றார். செட்டியார் புறங்கையால் உள்ளே போ என்று சைகை செய்துவிட்டு கொல்லைப்புறத்திலிருந்த தன் வைக்கோல் குடிசை அலுவலகத்திற்கு விறுவிறுவென நடந்துபோனார். அவரது உதவியாளனும் அதே வேகத்தில் பின்தொடர்ந்தான். குடிசையில் தன் சால்வையை உதவியாளனிடம் “ வேசைமோன் ஆறுமுகன்” என்றவாறு கோபத்தில் உடலும் குரலும் நடுங்க வீசிவிட்டு அவன் தந்த ஈரச்சால்வையால் தன் மொட்டை மண்டையையும் முகத்தையும் துடைத்துவிட்டு அவனிடமெறிந்தார். உதவியாளனிடம் கண்ணாடி கிளாஸ் என்ற அர்த்தம்பட்ட சைகையைக் காட்டிவிட்டு கட்டிலில் போய் அமர்ந்தார். உதவியாளன் கொணர்ந்த ஸ்கொச் விஸ்கியை ஒரு வாய் மட்டுமே பருகினார். சினத்தில் அந்த விஸ்கி மிகக் கசப்பாக இருந்தது. அதற்கு மேல் அவரால் பருகமுடியவில்லை. ஆறுமுகன் அவருக்கு செய்த அவமானமும் துரோகமும் 85 வயது ஜீவிய வந்தரான செட்டியாரைக் கொன்றுகொண்டிருந்தது. தன் வர்த்தக சாம்ராச்சியத்தின் அழிவு அவர் மனக்கண் முன் வந்தது. தான் சாகப்போகிறேன் என்ற பயம் வந்தது. கட்டிலிலேயே விழுந்து படுத்தார். களைப்பிலும் சினத்திலிருந்தும் மீள தூங்க விரும்பினார். தூக்கம் வந்தது. அது வந்த வேகத்திலேயே விழிப்பும் வந்து கொண்டிருந்தது. ஆறுமுகனுடைய தூரோகக் கிளர்ச்சியை அவரால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. என்னுடைய பெறாமகனாக அவனை நான் வளர்த்தேனே. என்ன குறைவைத்தேன் அவனுக்கு? என்னுடைய மகன்கள் என்னைப்போன்ற கெட்டிக்காரர்கள் இல்லையே என்பதால் அவனிடம் என் மகன்களை விடப் பாசம் கொண்டாடினேனே. கடைசியில் ஒரு தேவடியாச் சிறுக்கி எனது வளர்ப்பு மகனையே எனக்கெதிராகத் தூண்டிவிட்டாளே செட்டியாரம்மா கேட்டு செட்டியார் கனகியை ஆறுமுகனுக்கு ஏற்பாடு செய்து கொடுத்திருக்காவிட்டால் இப்போது அவர் திட்டமிட்டபடி காசிப் புனித யாத்திரையில் ஆறுமுகனோடிருந்திருப்பார். ஆறுமுகனுக்காக ஒரு வருடம் தன் புனித யாத்திரையை செட்டியார் ஒரு வருடம் பின்போட்டிருந்தார். தன் யாழ்பாண வர்த்தக சாம்ராஜ்யத்தை தன் இரு மகன்களிடமும் ஆறுமுகனின் மேற்பார்வையில் கொடுத்துவிட்டு காசியில் தன் 85 வயதில் சமாதி அடையவேண்டும் என்பதே செட்டியாரின் இறுதி ஆசை. இப்போது யாழ்ப்பாணத்தில் ஒரு கோழையைப்போல இவ்விரவிலேயே தூக்கத்தில் செத்துவிடுவேனோ என்றுதான் செட்டியார் பயந்தார் ஆறுமுகன் உண்மையிலேயே யார்? இவன் ஆங்கிலத் துலுக்கரின் ஒற்றனா? இவன் ஒரு யாழ்ப்பாண சைவ வேளாளனாம். யாழ்ப்பாண வெள்ளாளர்கள் அசல் சோழ சேர பாண்டி நாட்டு வெள்ளாளரா? டச்சுக்காலத்தில் பொன்னும் பொருளுமிருந்த கள்ளர் மறவர் அகம்படியார் முதலிய எல்லோரும் வெள்ளாளர் எனப்பதிந்து வந்தவர்களே. இந்த வேசைச் சாதியில் பிறந்து வந்த வேசைமோன் ஆறுமுகன். இவனையே கொன்று விடாவிட்டால் என் வர்த்தக சாம்ராஜ்யத்தின் பலவீனத்தை ஆங்கிலத் துலுக்கர் கண்டுவிடுவார்களே. ஆறுமுகனையே கொல்லாவிட்டால் நான் வீழ்ந்துவிடுவேனே என்று கூட கோபத்தில் யோசித்தார். ஆனால் செட்டியாருக்கு இந்த ஆங்கிலேயர் ஆட்சியில் பிரித்தானியப் பிரபுக்கள் சபையும் அறிந்த ஆறுமுகனை கொல்லமுடியாது என்பது தெரியும். ஆறுமுகன் எங்கு ஓடுவான்? அவன் ஓடமுதல் கனகியை இன்றிரவே கொன்றுவிட்டால் ஆறுமுகன் எங்கு போவான். கடைசியில் என்னிடம் திரும்பிவரத்தானே வேண்டும். நான் தான் ஆள்வைத்து கனகியைக்கொன்றேன் என்பது தெரிந்து அவன் ஆங்கிலத்துலுக்கரோடும் பாதிரியாரோடும் நெருக்கமானாலும் பரவாயில்லை. ஆறுமுகனுக்கு என்னை எதிர்க்க சக்தி எங்கிருந்து வருகிறது. அந்தத் தேவடியாச் சிறுக்கி மீதான காதலால்தானே. அவளை ஒழித்துவிட்டால் ஆறுமுகன் மனமுடைந்து பழையபடி மனந்தேறி நம் சனாதன தர்ம நியாயங்களை நம்பித்தானே ஆகவேண்டும். அப்போது பேர்சிவல் பாதிரிக்கும் ஆங்கிலத்துலுக்கருக்கும் யாழ்ப்பாணத்தில் என் பலம் என்னவென்று தெரியவருமில்லையா? இப்படி யோசித்துக்கொண்டு செட்டியார் புரண்டு புரண்டு படுத்தார். செட்டியார் வீடு கலவரப்பட்ட நாள் அது. செட்டியம்மாவும் பட்டினி கிடந்துகொண்டிருந்தாள். செட்டியாரின் உதவியாளன் செட்டியாரின் வைக்ககோல் குடிசைக்கும் மாளிகைக்குமிடையில் ஓடிக்கொண்டிருந்தான். கனகி ஆறுமுகனோடு ஓடிப்போன அந்த கோயில் திருமணத்துக்கு சுப்பையனும் போயிருந்தான். கூட்டத்தில் மறைந்துகொண்டு கனகியையை அவதானித்தபடியே இருந்தான். நல்லதண்ணீர்க் குளத்தில் தண்ணியள்ளப் போன கனகி மீண்டுவரவில்லை. காணாமல் போய்விட்டாள் என்பதையறிந்து அறிவித்தவன் அவனே. ஊரே திரண்டு கனகியைத் தேடத்தொடங்கியது. அப்போது பொறாமைத் தீயில் வதங்கிக்கொண்டிருந்த சுப்பையனுக்கு ஞானம் வந்தது. கனகி இனி எக்காலத்திலும் அவனுக்கு உரிமையாக மாட்டாள். செட்டியாரின் அதிகாரத்தின் சூனியத்தை அக்கணத்தில் உணர்ந்த சுப்பையன் தன் வாழ்வின் இலட்சியமாக கனகியைக் கொல்லச் சபதமெடுத்தான். சுப்பையனுக்கு மதுத் தாகமெடுத்தது. அவன் ஓடத் தொடங்கினான். ஆனைக்கோட்டை கள்ளுக் கொட்டிலுக்கு ஓடினான். இரண்டு முட்டி கள்ளருந்திக் கொண்டு கனகியின் கொலையைத் திட்டமிட்டான். பிந்நேரம் ஆறுமணிக்கு செட்டியாரின் தகரப்படலையை நிறைவெறியில் சுப்பையன் தட்டியபோது செட்டியாரின் உதவியாளன் உசாரானான். அவன் செட்டியாரம்மா சொன்னதையும் அசட்டை செய்து செட்டியாரின் வைக்கோல் குடிசைக்குச்சென்று அறிவித்தான். மிகக் குறுகிய கெட்ட கனவொன்றின் உபாதையிலிருந்து விழித்த செட்டியார் “அவனை உடனே உள்ளே அனுப்பு” என்றார். செட்டியாரைப் பார்த்ததும் சுப்பையனுக்கு வெறி இறங்கினமாதிரி இருந்தது. கனகியைக் காணவில்லை. ஓடிப்போய்விட்டாள் போலுள்ளது. இனி எனக்கு ஒருபோதும் அவள் கிடைக்கப்போவதில்லை. என்று அழத்தொடங்கினான். செட்டியாருக்கு அதிர்ச்சியாக இருந்தது. ஆறுமுகன் தன் வண்டியிலிருந்து குதித்த கணத்திலிருந்தே பெருமாள் கடவை கோயிலுக்கு நடந்தே போய் அவளைக் கூட்டிக்கொண்டு ஓடிப்போன புதிரை அவிழ்ப்பதில் அவருக்கு சிரமமிருக்கவில்லை. ஆறுமுகன் இப்படி விரைவாக காரியஞ்சாதிப்பான் என்பது அவர் எதிர்பார்க்காதது. “கனகியைக் கொல்லவேண்டும் என்ற வெறி எனக்குவருகிறது. வடநாட்டில் எங்கு ஓடிப்போனாலும் அவளைக்கண்டுபிடித்து கொல்லாமல் விடமாட்டேன்” என்று சுப்பையன் சொல்லிக்கொண்டிருக்கும் போது செட்டியாரின் உதவியாளன் வந்து ஆறுமுகனின் இரண்டு அண்ணன்மாரும் செட்டியாரைப் பார்க்க வந்திருக்கிறார்கள் என்று அறிவித்தான். செட்டியார் உசாரானார். உற்சாகமானார். அவர்களை தன் மாளிகையின் கூடத்தில் அமரவைக்குமாறு சொன்னார். பிறகு சுப்பையனிடம் “நீ இங்கே வந்திருப்பது அவர்களுக்கு தெரியக்கூடாது. மூச்சுவிடாமல் இங்கேயே இரு. கொஞ்சநேரத்தில் அவர்களைப் பேசி அனுப்பிவிட்டு வருகிறேன்” என்றார். செட்டியார் மாளிகைக்குள் போனபோது ஆறுமுகனின் அண்ணன்கள் கட்டிலிலிருந்து எழுந்து தலை குனிந்தபடி நின்றார்கள். அவர்கள் என்ன செய்தி கொண்டு வந்திருப்பார்கள் என்பதுதான் செட்டியாருக்கு ஏற்கெனவே தெரியுமே. அவர்களை இருக்குமாறு பணித்துவிட்டு எதிர்க்கட்டிலிலிருந்து செட்டியாரம்மாவிடம் மூன்று செம்பு மோர் கொண்டுவா என்றார். ஆறுமுகனின் மூத்த அண்ணன் எழுந்து சென்று செட்டியாரின் காதில் இரகசியமாக ‘செட்டியாரய்யா மிக்க அவமானமான செய்தி. ஆறுமுகன் கனகியோடு ஓடிப்போய் விட்டான் என்று கேள்விப்பட்டோம். கனகியின் மாமன் வீட்டுக்கு வந்து நம் தந்தையிடம் இந்த செய்தியைச் சொல்லி அழுதான். அவன் உங்களைச் சந்திக்க பயப்படுகிறான். நாங்கள் இப்போது என்ன செய்யவேண்டும் என்பதை நீங்கள்தான் எங்களுக்கு அருளவேண்டும். “ செட்டியாரம்பா தட்டில் மூன்று செம்புகளை கொண்டு வரும்போது ரகசியம் பறையும் இந்தக்காட்சியைப் பார்த்தாள். செட்டியாரைவிட மிக விவேகமான செட்டியாரின் தையல் நாயகி அவள். ஆறுமுகன் கனகியோடு ஓடிப்போய்விட்டான் என்பதுதான் இரகசியம் என்பதை அவள் தன் ஞானக் கண்களால் அறிந்தாள். ஆறுமுகனுடைய துரோகம் பேரிடிபோல் அவள் தலையில் விழுந்தது. ஆறுமுகா என்று கத்திக்கொண்டு மயங்கிவிழுந்தாள். மூன்று செம்பு மோர்கள் கங்கை நதிபோல செட்டியாரின் மாளிகை நிலத்தில் ஓடியது. செட்டியார் செய்வது அறியாது திகைத்தார். ஆறுமுகனின் முத்த அண்ணன்தான் சமயலறைக்கு ஓடிப்போய் ஒரு செம்பு தண்ணீர் கொணர்ந்து மூதாட்டி செட்டியாரம்மாவின் முகத்தில் தெளித்து அவளை விழிப்பித்தான். தட்டிலிருந்து செம்புகள் விழுந்த சத்தம் கேட்டு உதவியாளன் ஓடிவந்தான். அண்ணன்களும் உதவியாளனும் சேர்ந்து செட்டியாரம்மாவை சயன அறைக்கு தூக்கிச்சென்று கட்டிலில் படுக்க வைத்தார்கள். இவ்வளவு நடக்கும்போதும் எழும்ப சக்தியின்றி திக்பிரமை பிடித்தவர் போல செட்டியார் கட்டிலிலேயே உட்கார்ந்திருந்தார். ஆறுமுகனின் துரோகத்தை அவர் இக்கணத்தில் மறந்துவிட்டார். ஆறுமுகனை தன் சொந்த மக்களைவிட செட்டியாரம்மா நேசித்ததுதான் செட்டியாருக்கு வலித்தது. பிறகு ஆறுமுகனின் அண்ணன்களிடம் “ஆறுமுகனை கனகியிடமிருந்து பிரித்து மீட்டு உங்களிடம் சேர்க்க முயல்கிறேன். இந்த முயற்சியில் நான் வெல்வேனோ தோற்பேனோ தெரியாது. நீங்கள் வெள்ளாளர்கள். தைரியமாக இருங்கள். உங்கள் தந்தையிடமும் தைரியமாக இருக்கச் சொல்லுங்கள். இப்போதே நீங்கள் பேர்சிவல் பாதிரியாரிடம் போய் விசாரியுங்கள். அவர் மட்டுமே இப்போது ஆறுமுகனுக்கும் அவன் தேவடியாச் சிறுக்கிக்கும் அடைக்கலம் கொடுக்கக்கூடியவர். ஆறுமுகன் கனகியோடு இப்போது எங்கிருக்கிறான் என்பதை அறிந்தால் எனக்கு உடனே அறிவிக்கவேண்டும். ஆறுமுகனுக்கு நான் அருளிய குதிரை வண்டியையும் வண்டிக்காரனையும் இப்போது இந்த முயற்சிக்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள்” அண்ணன்களை தன் வீட்டு வாசல்வரை வந்து வழியனுப்பிவிட்டு செட்டியார் சயன அறைக்குப்போய் தன் தையல் நாயகியைப் பார்த்தார். அவள் ஆறுமுகா ஆறுமுகா என்று பிதற்றிக்கொண்டிருந்தாள். “என் தையல் நாயகியே நீ தளரக்கூடாது. நான் யார் நீ யார். நாங்கள் செட்டியார்கள். எங்கள் பெயரில் கடவுளர்களுக்கு கோயில் அமைத்தவர்கள். நாங்கள் கடவுளர்கள். இந்த ஆறுமுகனும் அவன் குடும்பமும் அற்ப வெள்ளாளர்கள். அற்ப மனிதர்கள். கைத்தீஸ்வரப்பெருமாள் மீது சத்தியம். நான் ஆறுமுகனை மீட்டு உன்னிடம் கொண்டுவருவேன்” “உண்மையாகவா சுவாமி” என்று அக்கணத்திலேயே கட்டிலிலிருந்து எழுந்து உட்கார்ந்தாள் செட்டியாரம்மா. “ எனக்குப் பசிக்கிறது” என்றார் செட்டியார். எங்கிருந்து சக்தி செட்டியாரம்மாவுக்கு வந்ததோ தெரியாது. அவள் எழுந்து மதியம் சமைத்த விருந்தை அடுப்பில் போட்டு சூடாக்கினாள். ஒரு இலை போதும் என்றார் செட்டியார். கைத்தீஸ்வரனுக்கு தையல் நாயகி ஊட்டிவிட்டாள். தையல் நாயகிக்கு கைத்தீஸ்வரன் ஊட்டிவிட்டான். ஒரு எண்பத்தைந்து வயது செட்டியாரும் எழுபத்தைந்து வயது செட்டியாரம்மாவும் சோறு தீத்தும் சடங்கை பார்த்து செட்டியாரின் உதவியாளன் பரவசப்பட்டான். செட்டியார் கேட்காமலேயே செட்டியாரம்மா சுப்பையனுக்கு வாழையிலையில் போட்டு ஒரு விருந்துப் பொட்டலம் கட்டிக்கொடுத்தாள். தன் மாளிகையிலிருந்து தன் வைக்கோல் குடிசைக் காரியாலயத்திற்கு நடக்கும்போது “சுப்பையன் தான் என் Assassin” என்று டச்சு மொழியில் சொன்னார். செட்டியார் எனக்கும் பசிக்கிறது என்றான் சுப்பையன். செட்டியார் விருந்துப் பொட்டலத்தை பிரித்து அவனுக்கு பரிமாறினார். அவன் அபக் அபக் என்று சாப்பிடுவதை ரசித்தபடி தன் கிளாசில் ஒரு பெக் ஸ்கொச் விஸ்கி அனுபவித்தார். அவன் உண்டபின் இன்னொரு கிளாசில் ஸ்கொச் விஸ்கி அவனுக்கும் பரிமாறிவிட்டு செட்டியார் சுப்பையனை சோதித்தார். “நீ உண்மையிலேயே கனகியைக் காதலித்தாயா? அப்படியாயின் நீ ஆறுமுகனை அல்லவா கொல்லவேண்டும். ஏன் உனக்கு கனகியையைக் கொல்லும் வெறி வருகிறது” “செட்டியார் உங்களுக்கு காதல் தெரியாது. அதிகாரம் மட்டுமே தெரியும். காதலின் விதிகள் வேறு. அதிகாரத்தின் விதிகள் வேறு. காதலின் முக்கியமான விதி Jealousy. உங்களுக்கு தெரியாத ஆங்கில வார்த்தையில் சொல்வதையிட்டு மன்னிக்கவேண்டும். ஏனெனில் தமிழில் இச்சொல்லுக்கு இன்றும் சரியான சொல் கிடையாது. அழுக்காறு, பொறாமை என்ற தமிழ்ச் சொற்கள் Jealousy க்கான சரியான அர்த்தத்தை வெளிப்படுத்தாதவை. நானும் கனகியும் ஆறுமுகனும் ஆங்கில மொழியில் படித்தவர்கள். எங்களுக்கு தமிழையும் ஆங்கிலத்தையும் ஒப்பிட்டு ஆராயத் தெரியும்” “ஆறுமுகனை நீ கொன்றால் வேறு வழியின்றி கனகி உன்னை கட்டலாம் என்ற நம்பிக்கை உனக்கு இல்லையா? கனகியை உனக்கு கட்டிவைக்க நானும் கனகியின் மாமனுடன் பேசினேனே” “செட்டியாரே நான் ஆண்மகன். எனக்கு பெண்களைப் புணரத்தான் ஆசை, நான் ஓர் ஆணுடலில் உள்ள ஆண். நான் அலி அல்ல. ஆனால் கடவுள் எனக்கு பெண்குரலை தவறிப்படைத்து விட்டார். கனகி என்னை வெறுப்பதற்கான பிரதான காரணம் என் பெண்குரல்தான். நீங்கள் போட்ட திட்டத்தை உடைத்து இப்போது கனகி ஆறுமுகனோடு ஓடிவிட்டாள். இனி உங்களின் அதிகாரத்தால் நீங்கள் என்னை கனகிக்கு கட்டிவைத்தாலும் அந்த காமத்திலும் காதலிலும் உயிர் இருக்காது. கனகி ஒரு தேவடியாச் சிறுக்கி. வேசை. வேசைகளைப் புணரும்போதும் இன்பம் அனுபவிக்கலாம். ஆனால் என்னை வெறுக்கிற கனகியைப் புணர்வது செத்த பிணத்தோடு புணர்வதற்கொப்பானது. அந்த கனகியைக்கொன்றால் என் மனம் சாந்தியடையும். நான் இன்னொரு பெண்ணோடு புதிய வாழ்வைத் தொடங்கலாம்” “சரி, பொறாமை, அழுக்காறு என்கிறாய்.. உனக்கு ஆறுமுகனை கொல்லும் ஆசை, வெறி இல்லையா? அவர்கள் வடநாட்டுக்கு ஓடிப்போனாலும் தேடி கனகியைக் கொல்லுவாய் என்கிறாய்..கனகி ஆறுமுகனோடுதானே இருப்பாள்? கனகியைக் கொல்லும்போது உனக்கு ஆறுமுகனையும் கொல்ல வாய்ப்பு கிடைக்குமே” “ செட்டியார், என் குரல் பெண்குரல்தான். ஆனால் நான் பேயன் அல்ல..ஆறுமுகனுடைய பலமும் செல்வாக்கும் எனக்குத் தெரியும். தூத்துக்குடியில் நான் கப்பல் கம்பனியில் வேலைக்கு சேரும்போது எனக்கு யாழ்ப்பாண ஆறுமுகனை தெரியுமா என்று கேட்டார்கள். அவன் என் சமகாலத்தவன் என் வயதுதான் அவனுக்கும் என்றுசொல்லி அவனைப்பற்றிய அவர்களுக்குத் தெரிந்த விபரங்களை நான் சொன்ன பின்னரே என்னை வேலைக்கு சேர்த்தார்கள் ஆறுமுகன் லேசுப்பட்ட ஆள் அல்ல. ஆங்கில சாம்ராஜ்யத்திற்கு முறைப்பாட்டு காகிதம் எழுதுபவன், யாழ்ப்பாணத்தின் மிகப்பெரிய பணக்கார வணிகரான கைத்தீஸ்வரச் செட்டியார் ஆகிய உங்களின் தலமை மந்திரி என்பது தென்னகம் எங்கும் தெரியும். அவன் கொல்லப்பட்டால் ஆங்கில மகாராணியே ஒரு விசாரணைக்கு உத்தரவிடுவாள்” சுப்பையன் கெட்டிக்காரன் என்பதை செட்டியார் உணர்ந்த அக்கணத்தில் கனகியைக் கொல்லும் ஒப்பந்தத்தை செய்ய இவனைவிடச் சிறப்பான யாரும் கிடைக்கமாட்டார்கள் என்பதை முடிவுசெய்தார். செட்டியாருக்கு நிம்மதி வந்தது. நல்ல தூக்கமும் வந்தது. அப்போது இரவு பதினொரு மணி. “சுப்பையா கள்வெறியில் கொலைசெய்ய முடியாது. இங்கே வா என்றழைத்தார். எழுந்து வந்த சுப்பையனை கன்னத்தில் அறைந்தார். “கனகி கொல்லப்படும் வரை குடிக்க மாட்டேன் என்று சத்தியம் செய்” என்றார். சுப்பையன் முழங்காலிலிருந்து செட்டியாரின் பாதங்களை முத்தமிட்டு சத்தியம் செய்தான். செட்டியார் நூறு பவுண் காசுகள் சுப்பையனுக்கு கொடுத்தார். “இது கொலைச்செலவுக்கு. தகவல்கள் எடுக்க, பயணம், கடல் பயணம் எல்லாவற்றுக்கும் தாராளமாக செலவழிக்க வேண்டிவரும். தயங்காமல் செலவிடு. நீ கொலையைச் செய்தபின் புதிய மனைவியோடு உன் புதுவாழ்வைத் தொடங்க வேண்டிய அளவு பொன்னும் பவுணும் தாராளமாக வழங்குவேன்” என்றார். “பாதிரியாருடைய நடமாட்டங்களையே நீ இப்போது உளவுபார். வடநாட்டுக்கு ஆறுமுகன், கனகி ஓடியிருந்தால் அந்த தகவல்கள் நமக்கு வர காலமாகும். நான் என் வட்டாரங்களை வைத்து விசாரிக்கிறேன். எனக்கு கிடைக்கும் தகவல்களை உனக்குச் சொல்லுவேன். உனக்குத்தெரியும் தகவல்களை உடனுக்குடன் எனக்கு நீ சொல்லு. இனி என் வீட்டுக்கு வராதே. இனி அனுதினமும் உசத் காலைப்பூசைக்கு கைத்தீஸ்வரன் கோயிலுக்கு வருவேன். மெருமாள்தான் எனக்கு இப்ப ஒரே துணை. தெப்பக்குளத்தில் இருட்டில் சந்திப்போம்” என்று விடை கொடுத்தபின் தன் மாளிகைக்கு தூங்கப்போய்விட்டார். சுப்பையன் அன்றிரவு செட்டியாரின் குடிசையிலேயே தூங்கினான். அதிகாலை மூன்று மணிக்கு அவன் விழித்தான். செட்டியாரின் உதவியாளன் வாயில் கதவைத் திறந்துவிட்டான். சுப்பையன் நேரே தன் வீட்டுக்குப் போனான். அதிகாலையில் அவன் தன் வீட்டுக்குப்போன போது அவன் அன்னை திருமதி ருத்திரமூர்த்தி விழித்தார். கனகி ஆறுமுகனோடு ஓடிய கதை அவளுக்கு தெரியும். நிறையக் குடித்துவிட்டு வந்திருப்பான் என்று ஊகித்து சாப்பிட்டாயா என்று தன் மகனைக் கேட்டாள். இலை போடு என்றான் சுப்பையன். தனக்குப் பசி மாதிரி நடித்தபடி கொஞ்சம் அன்னம் உண்டான். “மகனே அந்தத் தேவடியாச் சிறுக்கியை இனி மறந்துவிடு. எட்டாப்பழம் புளிக்கும். நீ எங்களோடு இருக்காவிட்டாலும் பரவாயில்லை. எங்கிருந்தாலும் சந்தோசமாக இரு. தூத்துக்குடிக்கே போய் வேலையில் சேர்ந்துவிடு. இனி இந்த ஊரில் நீ சந்தோசமாக இருக்கமாட்டாய்” என்றாள் தாய். அடுத்த அறையில் படுத்திருந்த திரு உருத்திரமூர்த்தி தானும் இதைக் கேட்டுக்கொண்டிருக்கிறேன் என்பதைக் காட்ட இருமுறை இருமிச் செருமினார். தந்தைக்கு கேட்கக் கூடியவாறு “அம்மா நான் இரண்டு நாளில் தூத்துக்குடிக்கு போகிறேன். போய்க் காகிதம் போடுகிறேன்” என்று உரத்த குரலில் சொன்னான். பிறகு தூங்குகிறமாதிரி ஒரு அரைமணித்தியாலம் நடித்தான். மாதா பிதா தூங்கியதை உறுதிப் படுத்தபின் தன் அறையில் பலமான தன் பட்டு வேட்டியை விரித்தான். அதில் தாயினுடைய இரண்டு பட்டுப்புடவைகளை எடுத்துப்போட்டான். ஆங்கிலக் கப்பல் கப்பல் கொம்பனியில் அவன் வேலைசெய்யும் போது வைத்திருந்த இரண்டு லோங்ஸ், இரண்டு சேட்டுக்களையும் எடுத்துப்போட்டான். இரண்டு பட்டு வேட்டிகள், தூத்துக்குடியில் ஒரு முஹம்மதிய நண்பன் பரிசளித்த ஒரு தொழுகைத்தொப்பி, சில சால்வைகள். தன்னுடைய சில கச்சைகள் என்பவற்றைப் போட்டான். பட்டுவேட்டியை ஒரு பொட்டலமாக முடிந்தான். பொட்டலத்தை காவிச்செல்லும் மூன்றடித் தடி எடுத்தான். தன் வேட்டியை உரிந்துவிட்டு தாயின் இன்னொரு புடவையை எடுத்து அணிந்து பெண்வேடம் பூண்டான். செட்டியார் கொடுத்த நூறு பவுண் நோட்டுக்களையும் சேலைக்குள் முடிந்தான். தூத்துக்குடியில் அவன் வாங்கிய ஒரு கிறீஸ் கத்தியை தோல் உறையோடு எடுத்து தன் இடுப்புச் சேலைக்குள் செருகினான். சுப்பையனுக்கு அப்போது தனது ‘புனிதப்பணி’ தோல்வியிலும் முடியலாம். என்பது உறைத்தது. கனகிக்குக்கு பதிலாக கூட இருக்கிற ஆறுமுகனால் தானே கொல்லப்படலாம். . கடைசியாக ஒரு தடவை தன் மாதா பிதாவைப்பார்க்க ஆசைகொண்டு அவர்களின் அறையருகே சென்றான். முழு இருட்டு. அந்த மரக்கதவைத்திறக்கும் துணிவு சுப்பையனுக்கில்லை. கதவோரம் நின்று ஒட்டுக்கேட்டான். மாதாவும் பிதாவும் மகத்தான ஒத்திசைவில் மூச்சுவிட்டு அந்த முதுவேனிற்கால இரவில் தூங்கும் ஒலிகள் கேட்டன. தடியில் பொட்டலத்தை தாங்கிக்கொண்டு பெண்வேடத்தில் சுப்பையன் பாதிரியாரின் யாழ் மத்திய கல்லூரி அருகிலுள்ள வீட்டுக்கு வந்தபோது அதிகாலை ஐந்தரை மணி. அன்று ஞாயிற்றுக்கிழமை .குதிரைகள், குதிரை வண்டிகள் ஒலிகள் எதுவுமில்லை. சுப்பையனுக்கு யாழ் நகரத்திலுள்ள சிறுகாடுகள் புதர்கள், பற்றைகள் எல்லாம் தெரியும். அவன் குடிக்காத நேரங்களில் மிருகங்கள் பறவைகளின் குரலில் அவற்றோடு உரையாடியபடி காடுகளில் திரிபவன். ஒரு புதருக்குள் தன் துணிப்பொட்டலத்தை மறைத்து வைத்துவிட்டு பெண்வேடத்தில் பாதிரியாரில் வீட்டைச்சுற்றி அலைந்தான். பாதிரியார்தான் வீட்டில் இல்லையே. பகல்முழுக்க பெண்வேடத்தில் திரிபவன் இரவானதும் முஸ்லீம் வியாபாரியின் வேடம் பூணுவான். அன்று நள்ளிரவில் பாதிரியார் நடந்தே தன் வீட்டுக்கு வருவதைக்கண்டான். அடுத்தநாள் குதிரைவண்டியில் பாதிரியார் யாழ் மத்திய கல்லூரிக்கு போகும்போது ஓட்டமும் நடையுமாக பின்தொடர்ந்தான். அவர் பாடசாலையில் இருக்கும் பகல் நேரத்தில் மட்டும் அருகிலுள்ள சிறுகாட்டுக்குள் போய் பெரிய காட்டுப்பூவரச மரத்தின் கிளையில் நித்திரை கொண்டான். பாடசாலை முடிகிறநேரம் மறுபடியும் பாதிரியாரின் குதிரை வண்டியைத்தொடர்ந்து அவர் வீட்டடிக்கு போனான். சத்திரங்களிலும் கோயில்களிலும் உணவுண்டான். இரவில் விழித்திருந்து உளவுபார்ப்பதற்காக கஞ்சா புகைத்தான். வெள்ளிக்கிழமை வரையும் அவனுக்கு துப்பு எதுவும் கிடைக்கவில்லை. வெள்ளிக்கிழமை நள்ளிரவு அவன் கஞ்சா புகைத்துக் கொண்டிருக்கும்போது பாதிரியாரும் உதவியாளனும் வீட்டைவிட்டு நடையில் வெளியேறுவதைக் கண்டான். அவர்களைப் பின்தொடர்ந்தான். குருநகர் துறைமுகத்தில் பாதிரியார் படகேறுவதைக் கண்டான். சுப்பையனிடம் படகு வசதிகள் எதுவும் அப்போது இல்லாதிருந்தால் அவனால் கடலில் அவரைப் பின்தொடர முடியவில்லை. உடனே கைத்தீஸ்வரன் கோயிலுக்கு ஓடினான். உசத் காலப்பூசையில் செட்டியாரைச் சந்திக்க தேர்முட்டியருகில் படுத்திருந்தான். வெள்ளிக்கிழமை செட்டியாருக்கும் ஒரு முக்கியமான துப்பு கிடைத்திருந்தது. நெடுந்தீவில் மெதடிஸ்த திருச்சபை கட்டும் தேவாலயத்தின் மேற்பார்வையாளராக பாதிரியாரே இருக்கிறார் என்பதே அது. அந்தக்கால நெடுந்தீவு ஈழ ஆங்கில ஆளுனரின் ஆளுகைக்குட்பட்டிருந்தாலும் நெடுந்தீவு ஒரு சர்வதேச தீவு. நெடுந்தீவு மக்கள் ஈழத்தைவிட வடநாட்டு ராமேஸ்வரத்தையும் ஆவுடையார் கோயிலையுமே தங்கள் திருத்தலங்களாக வழிபட்டார்கள். வேதாகம மொழிபெயர்ப்பு பணி முடியாததால் காதலர்கள் நெடுந்தீவிலேயே ஒளித்திருக்க வாய்ப்பு உண்டு என்று செட்டியாரின் உள்ளுணர்வு சொன்னது. சுப்பையனின் புலனாய்வுத் தகவலைக்கேட்ட செட்டியார் சுப்பையனை நெடுந்தீவுக்கே போ என்று உத்தரவிட்டார். சனிக்கிழமை நண்பகலில் பாதிரியார் ஏற்பாடு செய்த நாலு வடநாட்டு கடலோடிகளோடு சுப்பையன் ஒரு முஸ்லீம் வியாபாரி வேடத்தில் குருநகர் துறைமுகத்திலிருந்து படகேறினான். கடலும் காற்றும் அவர்களுக்கு வாய்ப்பாக இல்லை. நெடுந்தீவு மாவலித்துறையை அடைய அவர்களுக்கு ஏழு மணித்தியாலங்கள் சென்றது. சுப்பையனுக்கு கடல் பயணங்கள் புதிதல்ல. தன்னுடைய கஞ்சாவை படகோட்டிகளோடு பகிர்ந்து கொண்டான். அந்திசாயும் நேரம் அவர்கள் மாவலித்துறையை அடைந்தார்கள். செட்டியாரின் ஏற்பாட்டின்படி சுப்பையனுக்காக பாய்க்கப்பலும் நாலு படகோட்டிகளும் எப்போதும் காத்துக்கொண்டிருப்பார்கள். தலமை ஓட்டியுடன் சுப்பையன் தீவுக்குள் புகுந்தான். அறபி, ஹிந்தி, உருது, திராவிட மொழிகள் எல்லாம் அறிந்த அந்த படகோட்டி மாவலித்துறையிலிருந்த உள்ளூர் மீனவர்களிடம் எதுவும் விசாரிக்கவில்லை. அங்கிருந்த பரதேச கடலோடிகளிடமே புதிதாகக் கட்டப்படும் தேவாலயம் எங்கிருக்கிறது என்று விசாரித்தான். அதற்கேற்ப சுப்பையனை நடத்திக் கூட்டிக்கொண்டுபோய் தூரத்திலிருந்து புதிதாகக் கட்டப்படும் தேவாலயத்தை காட்டிவிட்டு மாவலித்துறைக்கு திரும்பினான். சுப்பையன் அவ்விடத்தை நெருங்கும் போது இரவு எட்டுமணியிருக்கும். முதுவேனிற்கால நெடுந்தீவு கடற்காற்று யாரையும் பரவசப்படுத்தக்கூடியது. காதோரம் இரகசியம் பேசும் ஒரு காதலியின் காதலனின் குரலைப்போல உரசிச்செல்லும். சுப்பையன் தூரத்தில் நின்றுகொண்டே ஒரு கஞ்சா புகைக்க ஆசைகொண்டு பற்றவைத்தான். இரண்டு தம் இழுத்திருப்பான். கஞ்சாவின் சுகந்த மணம் கடற்காற்றில் தேவாலயம் நோக்கிப்போகுமே என்று எச்சரிக்கையாகி காலடியில் போட்டு அதனை அணைத்தான். அப்போது அந்தக்காட்டுப்பூவரச மரத்தின் கீழிருந்து பாதிரியாரும் ஆறுமுகனும் கனகியும் இரவு ஆகாரம் உண்டு கொண்டிருந்தார்கள். பாதிரியாருக்கு கூனி இறால் பொரியலும் அரிசிப்புட்டும் . ஆறுமுகனுக்கும் கனகிக்கும் அரிசிப்புட்டும் தேங்காய்ப்பால் கத்தரிக்காய் குழம்பும். அறியாத ஒரு தீவில் தன் காதலன் ஆறுமுகனோடு கனகி இப்போது ஐந்து நாட்கள் வாழ்ந்துவிட்டாள். பயமும் காதலும் கலந்த அவளது நாட்கள் அவை. இப்போது பாதிரியார் திரும்பி வந்தபின் அவளுக்கு பயம் போய்விட்டது. அவளுக்கு சகோதரன் இல்லை. சகோதரி இல்லை. பாதிரியாரை தன் சொந்த அண்ணனைப்போல உணர்ந்தாள். பயம் என்பதை முதன்முதலில் கனகி அறிந்தது தனது கன்னி கழித்த அந்த வெள்ளைக்கார ஆங்கிலப் பொலீஸ்காரனிடம் தான். அவன் தன்னை கெடுத்த இரவில்தான். அவனது வியர்வை நாற்றம் கனகி அறியாதது. அவளுக்கு குமட்டியது. வாந்தியெடுத்தாள். அவளைக் கெடுத்தபின் அவள் வாந்தியெடுத்த அதே வாயில் தன் ஆண்குறியை விட்டுப் புணர்ந்தான் ஆங்கிலேயப் பொலீஸ்காரன். கனகிக்கு மூச்செடுக்க முடியவில்லை. மயங்கி விழுந்தாள். அடுத்தநாள் வந்தும் அதே கொடுஞ் சடங்குகளைச் செய்தான் அந்தப் பொலீஸ்காரன். கனகிக்கு தன் அம்மா இறந்தபின் தன் ஆங்கிலப்படிப்பை முறித்து தன்னை தேவதாசியாக்கிய மாமனில் கோபமிருக்கிறது. அதேயளவுக்கு அவனில் மதிப்புமிருக்கிறது. மாமன் அவளை ஒரு தடவையும் வன்புணர்ந்து அவளைக் கொடுமைப் படுத்தவில்லை. அந்தக்கால யாழ்ப்பாணத்தில் மாமன் புணர்ந்தபின்னரே தன் மருமகளை தேவதாசியாக்குவான். அதையொரு சடங்கு போலச்செய்வான். முதல்முறையாக வேற்று ஆடவன், கிழவனொருவன் தன் சகோதரியின் மகளை புணரவருகிறபோது அவள் அதனை வன்மமாக எதிர்த்தால் காயமடையும் அல்லது கொல்லப்படும் ஆபத்து இருதரப்பிலும் ஏற்படுவதைத் தடுப்பதே இச்சடங்கின் நோக்கமாம். காமுகனொருவன் எப்படி ஒரு தேவதாசியை அணுகுவான் அதை எப்படி எதிர்கொள்ளுவது என்பதை மாமன் நடைமுறையில் வாடிக்கையாளன் போல புணர்ந்து செய்து காட்டுவானாம். அவளுடைய எதிர்ப்பு மிக வன்மமாக இருந்தால் சில நாட்கள் விட்டுத்தொடர்வான். சில கடுமையான வாடிக்கையாளர்களை அவளின் வார்த்தைகளால் செயல்முறைகளால் எப்படிக் கட்டுப்படுத்தலாம் என்பதை நடைமுறை காம உத்திகளின் மூலம் செய்து காட்டுவானாம். பாதிரியாருக்கும் அந்த வெள்ளைக்கார பொலீஸ் காரரின் வெள்ளைத் தோல்தான். ஆனால் பாதிரியாரின் நாற்றத்தில் குற்றமெதுவுமில்லை. தனக்கொரு அண்ணன் இருந்திருந்தால் அவனும் பாதிரியார் சாப்பிடும் கடலுணவுகள், மாமிசம் எல்லாம் இரகசியமாக உண்டிருப்பான். அவனிடத்திலிருந்தும் பாதிரியாரின் அதே மூச்சு, தோல் நாற்றம் வந்திருக்கும். இப்படியெல்லாம் யோசித்துக்கொண்டு கனகி அவ்விரவில் சந்தோசமாக இருந்தாள். சுப்பையன் இரவு முதிரட்டும் என்று காத்திருந்தான். ஊர் அடங்க இன்னும் இரண்டு மணிநேரம் சென்றது. ஊர் அடங்கியபின் தான் கடல் ஆர்ப்பரிக்க தொடங்கியது. சுப்பையன் தேவாலய வளவை நோக்கி நடந்தான். தேவாலய வளவைச் சூழ முருகைக்கல் வேலி அமைக்கப்பட்டிருந்தது புதிய வேலி. தள்ளினால் விழும்போல இருந்தது.. சுப்பையன் கல்வேலியையும் தாண்டி வளர்ந்திருந்த காட்டுப்பூவரசின் கிளையில் தொங்கி உள்ளே புகுந்து ஓசைப்படாமல் குதித்தான். இரவு பத்து மணிக்கு பாதிரியாரும் காதலர்களும் வைக்கோல் குடிசைக்குள் போய்விட்டார்கள். சுப்பையன் பூனையைப்போல ஓசைப்படாமல் வளவைச்சுற்றி நடந்து வேவு பார்த்தான். சமையலறைக் குடிசைக்கு கதவு இருக்கவில்லை. உள்ளே புகுந்தான். கிழவனொருவன் தூங்கிக்கொண்டிருந்தான். பாதி கட்டப்பட்ட தேவாலயத்தினுள் போய்ப்பார்த்தான். யாருமில்லை. பிறகு பெரிய குடிசையை நெருங்கினான். முற்றிலும் அடைக்கப்பட்டு வைக்கோல் கதவுபோட்டு மூடப்பட்டிருந்தது. குடிசையினுள் சில குரல்கள் கேட்டது. வைக்கோல் சுவரில் காது வைத்து ஒட்டுக்கேட்டான். பாதிரியார் நிறையக் களைத்திருந்தார். தன்னறையில் பாயில் விழுந்ததும் தூங்கிவிட்டார். ஆறுமுகனுக்கும் தூக்கம் கண்ணைக்கட்டியது. காதலர்களின் அறையில் கனகி ஓடிப்போன நாளிலிருந்து இன்றுதான் பயமின்றி மிகப்பரவசமாக இருந்தாள். கடந்த ஒருவாரகாலமாக அவர்கள் புணரவில்லை. புணரும் வேட்கை எழவில்லை ஆறுமுகனின் உதடுகள் நாக்கை வன்முத்தமிட்டு விட்டு முழங்காலிலிருந்து ஆறுமுகனின் பாதிரியார் ஆடைக்குள் புகுந்து அவனுடைய ஆண்குறியையும் விதைகளையும் சுவைத்து நக்கி ஊம்பினாள். ஆறுமுகனுக்கு தயக்கம். குரு பாதிரியார் இருக்கும்போது தாங்கள் புணருவது அவரை அவமரியாதை செய்வதாகும் என்று ஆறுமுகன் நினைத்தாலும் அவன் ஆணுடம்பு அவன் சொற்கேளாமல் புடைத்தது. கனகியின் வசியத்தால் ஆறுமுகன் பாயில் மல்லாக்க விழுந்தான். கனகி தன் பாதிரி உடைகளைக் களைந்துவிட்டு ஆறுமுகனின் பாதிரி உடைகளையும் களைந்தாள். அப்போதும் ஆறுமுகன் தன் வாயில் விரலை வைத்து பாதிரியிருக்கு கேட்குமே என்று எச்சரித்தான் “சுவாமி டேய் நான் முனகமாட்டேன் சத்தமில்லாமல் செய்யடா” என்று ரகசியம் பறைந்தபடி அவன் மேல்விழுந்து புணரத்தொடங்கினாள். காமத்தின் உச்சத்தில் அவள் ஆறுமுகனை உரிமை எடுத்து டேய் போட்டது ஆறுமுகனின் ஆணுடம்பை இன்னும் விறைப்பாக்கியது. அவனும் பயம் மறந்து புணர்ந்தான். நல்லாயிருக்கடா சாமி என்று தன்னை மறந்து இன்னும் வேகவேகமாய்ப் புணர்ந்தாள் கனகி. இருவருக்கும் ஓர்கசம் ஒருங்கே வந்த அக்கணத்தில் பாதிரியாரின் குறட்டை ஒலி கேட்டது. கலவியின் ஒலிகளையும் காதலர்களின் குரலையும் மிகத்தெளிவாகக் கேட்டான் சுப்பையன். அவனுக்கு பொறாமையும் திருப்தியும் கலந்த விநோத உணர்வு வந்தது. தனக்கேயுரியவள் ஆறுமுகனை அனுபவித்து புணருவதைக்கேட்டு பொறாமை. காதலர்களைக் கண்டுபிடித்துவிட்டான் என்பதால் திருப்தியும் வெற்றிக்களிப்பும். இனி கனகியைக் கொல்லவேண்டியது தான் பாக்கி. இப்போது பாதிரியாரும் கிழவனும் இருக்கும்போது கொல்லமுடியாது. என்று யோசித்துக்கொண்டு தேவாலய வளவை விட்டு அதே பூவரச மரத்திலேறி அதன் கிளை வழியாக வெளியேறினான். நட்சத்திரங்களுக்கு கீழே கஞ்சா புகைத்துக்கொண்டு கடலோடிகள் இருக்கும் வாடியை நோக்கி நடக்கத் தொடங்கினான். மேலும் சில இரவுகள் வேவு பார்த்துவிட்டு கொலை இரவை அவன் திட்டமிடவேண்டும். வாடியில் தலமைக் கடலோடி எழுந்து அவனுக்கு அன்னமும் பருப்புக்கறியம் பரிமாறினான். ஒன்றுமே பறையாமல் தூங்கிவிட்டான். ஞாயிற்றுக் கிழமை காலை அதிகாலையிலேயே பாதிரியாரும் காதலர்களும் எழுந்து காலைக்கடன்களை முடித்து நாள் முழுக்க காட்டுப் பூவரசின் கீழிருந்து வேதாகம மொழிபெயர்ப்பை செம்மைப் படுத்தினார்கள். கடைசி அத்தியாயம் மட்டுமே இன்னமும் செம்மைப் படுத்தவேண்டியிருந்தது. சுப்பையன் நாள் முழுக்க வாடியில் தூங்கினான். அந்திப்பொழுதில் எழுந்து காலைக்கடன்களை முடித்து இரவானதும் தேவாலயத்தை நோக்கி நடந்தான். இரவு 7 மணிபோல பாதிரியாரும் காதலர்களும் காட்டுப்பூவரச மரத்தின் கீழிருந்து உணவருந்திக் கொண்டிருந்தார்கள். கல்வேலியின் கீழ் குனிந்திருந்து அவர்களின் பேச்சை ஒட்டுக்கேட்டான் சுப்பையன். பாதிரியார் இந்த வெள்ளிக்கிழமை இரவு வருவார். ஞாயிற்றுக்கிழமை இரவு காதலர்களை வடநாட்டுக்கு படகேற்றிவிட்டு அவ்விரவே அவர் யாழ்ப்பாணத்திற்கு திரும்புவார் என்பதே அவர்களின் உரையாடலிலிருந்து சுப்பையன் அறிந்தது. சிறிது நேரத்தில் பாதிரியார் அவர்களுக்கு விடைகொடுத்துவிட்டு மாவலித்துறை நோக்கி நடந்தார். சுப்பையன் பின்வாங்கி ஒரு புதரில் சிலமணிநேரம் ஒளித்திருந்தான். பத்து மணிபோல் குடிசையில் சத்தங்கள் அடங்கியபின் வளவுக்குள் புகுந்தான். காதலர்கள், கிழவன் எல்லோருமே தூங்கிக்கொண்டிருந்தார்கள். ஆறுமுகனும் கிழவனும் அருகிலிருக்கும்போது கனகியை தன்னால் கொல்லமுடியாது என்பது சுப்பையன் அறிந்தது. அவ்விரவு முழுக்க அங்கேயே ஒளித்திருந்து உளவு பார்த்தான். சுப்பையனுக்கு சோதிடம் தெரியும். நட்சத்திரங்களைப் பார்த்து துல்லியமாக நேரங்கணிக்க தெரியும். அதிகாலை மூன்று மணிக்கு நெடுந்தீவு மீனவர்கள் கடலுக்கு போகும் ஒலிகள் கேட்டது. அதிகாலை நாலுமணிக்கு சேவல் கூவியது. சேவல் கூவுஞ்சத்தம் கேட்டு ஆறுமுகன் குடிசையில் சத்தம் கேட்டது. ஆறுமுகன் மலம்கழித்து கிணற்றில் நீராடிவிட்டு நாலரை மணிபோல் கடற்கரைநோக்கி நடக்கத்தொடங்க சுப்பையனும் பின்தொடர்ந்தான். கடற்கரை இருட்டில் கடற்கரையில் நட்சத்திரங்களின் ஒளியில் ஆறுமுகன் யோகாசனம் செய்வதைக் கண்டான். குடிசைக்கு மறுபடியும் ஓடிவந்தான் சுப்பையன். அப்போது ஐந்து மணியாகிக்கொண்டிருந்தது. கனகி தூங்கிக்கொண்டிருந்தாள். சரியாக ஐந்து மணிக்கு கிழவன் சமயலறைக் குடிசையிலிருந்து வெளியே வந்து காலைக்கடன்களை முடித்து நீராடினான். ஐந்தரை மணிக்கு ஆறுமுகன் குடிசைக்கு திரும்பும்போது விடியத்தொடங்கியது. சுப்பையன் ஒரு பிசாசைப்போல அவ்விடத்தை விட்டு மறைந்தான். சுப்பையன் அடுத்த செவ்வாய், புதன் இரவுகளில் வளவிலேயே ஒளித்திருந்து உளவுபார்த்தான். ஆறுமுகன், தெலுங்கு கிழவன் விழிக்கும் நேரங்களில் ஒரு மாற்றமுமில்லை. வெள்ளி அதிகாலை கனகியைக்கொல்ல நாள் குறித்தான் சுப்பையன். வெள்ளிக்கிழமைகளில் நெடுந்தீவு மீனவர்கள் கடலுக்கு போகமாட்டார்கள். அதிகாலையில் ஊரடங்கியிருக்கும். வெள்ளி அதிகாலை மூன்று மணிக்கு சுப்பையன் வளவுக்கு வெளியேயிருந்து சேவலைப்போலக் கூவினான். பல சேவல்களின் குரலில் கூவினான். விடிந்துவிட்டது என்று ஆறுமுகன் எழுந்து கிணற்றில் நீராடிக்கொண்டிருக்கும்போது சுப்பையன் காட்டுப்பூவரச மரத்திலிருந்து அவதானித்துக் கொண்டிருந்தான். மூன்றரை மணிக்கு ஆறுமுகன் கடற்கரைக்கு செல்லும்போது கிழவனின் குடிசையை நெருங்கி நோட்டம் பார்த்தான். கிழவன் அயர்ந்து தூங்கிக்கொண்டிருக்கும் ஒலி கேட்டது. வைக்கோல் கதவைத்திறந்து ஓசைப்படாமல் கனகியின் குடிசைக்குள் போனான். கனகியின் அறையில் அவள் பாயில் மல்லாக்கப்படுத்து தூங்கிக்கொண்டிருந்தாள். இருட்டில் அவள் சேலையில் அவளறியாது தடவிப்பார்த்தான். சேலை விலகியிருந்ததால் அவள் தொடைகளிலும் தொட்டுவிட்டான். அவளைப்புணரும் வேட்கை சுப்பையனுக்கு வந்தது. புணர்ந்துவிட்டு கொல்வோமே என்று அவள் சேலையை விலக்கி தொடைகளை விலக்கி அவள் அல்குலை முகர்ந்தான். பெருவெறி வந்து சுப்பையனின் ஆணுடம்பு புடைத்தது. அப்போது கனகி ஆறுமுகன் தன்னை திருப்பெருந்துறையில் புணர்வதாகக் கனவு கண்டுகொண்டிருந்தாள். ஆவுடையார் கோயில் வெள்ளாற்றின் தீரத்திலிருந்த ஒரு பொய்கைக்கரை. இளவேனிற்கால நிலவு கருமேகங்களுக்கிடையில் அவ்வப்போது எட்டிப்பார்க்கிறது. மழை தூவானமாகப் பெய்கிறது. மயில்கள் அகவும் ஒலி கேட்கிறது. ஒரு முள்முருக்க மரத்தின் கீழ் அவர்கள் புணர்கிறார்கள். அப்போது சிவப்பு முள்முருக்கு பூக்கள் உதிர்கின்றன. நனவுக்கும் கனவுக்கும் வித்தியாசம் தெரியாத கனகியை புணரத்தொடங்கினான் சுப்பையன். ஆறுமுகன் தான் தன்னைப் புணருகிறான் என்று நினைத்து அவள் முனகிக்கொண்டு தன் கால்களால் சுப்பையனுக்கு பூட்டு போட்டாள். சுப்பையனுக்கு கொலை வேட்கையை விட, காம வேட்கையை விட பயம் அதிகமிருந்த இரவு அது. கனகி சுப்பையனை விட உயரமானவள் பலமானவள். வேற்று ஆடவன் என்றறிந்து தன்னைத் திருகிக்கொல்லவே கனகி பூட்டு போடுகிறாள் என்ற பயத்தில் அக்கணமே தன் சால்வையை கனகியின் கழுத்தில் திருகி அவளை முச்சடக்கி கொன்றான் சுப்பையன். அவள் மூச்சடங்கிய கணத்தில்தான் சுப்பையன் உண்மையை உணர்ந்தான். சேலையை உருவிட்டு இருட்டில் சடலமான அவளின் பருத்த கொங்கைகளையும் ஈரமான அல்குலையும் தன் விரல்களால் வருடும்போதுதான் கைக்கெட்டியது வாய்க்கெட்டவில்லை என்று பெரும் குற்ற உணர்ச்சிகொண்டான் சுப்பையன். அப்போது சுப்பையனின் ஆணுடம்பு சுருங்கியிருந்தது. சுப்பையன் ஒரு கஞ்சா புகைத்துக்கொண்டு அவளின் உடலை வருடினான். பிறகு சடலமான கனகியின் உடல் முழுக்க நக்கினான். அவன் ஆணுடம்பு மறுபடியும் புடைத்தது. இறக்கும் தருணத்தில் அவள் கால்களால் போட்ட பூட்டு அப்படியே இருந்தது. அதற்குள் புகுந்து வன் வெறியோடு கனகியின் பூத உடலைப் புணர்ந்தான். அவள் முலைக்காம்புகளை இரத்தம் வரும்வரை கடித்தான். வெற்றிக்களிப்பிலும் குற்ற உணர்ச்சியிலும் ஒரு பிசாசைப்போல சுப்பையன் காட்டுப் பூவரசமரத்திலேறி கல்வேலியைக் கடந்தபோது அதிகாலை நாலு மணி. நாலரை மணிக்கு ஆறுமுகன் வந்து வன்புணரப்பட்டு கொல்லப்பட்ட கனகியைக்கண்டு தன்னை மறந்து கத்தினான். கிழவர் ஓடிவந்தார். ஆறுமுகன் அவளின் நிர்வாண உடலை தன் இடுப்பில் வைத்திருந்திருந்து அழுது கொண்டிருந்தான் கிழவர் கனகியை தன் மகள்போல நேசித்தவர். அவருக்கு குமட்டி சத்தியெடுக்க வந்தது. அருகிலிருந்த அவளின் சேலையை எடுத்து ஆறுமுகனிடம் கொடுத்தார். ஆறுமுகன் அவளுடலைச் சுற்றி சேலை அணிந்தான். கிழவரும் ஆறுமுகனும் எவ்வளவு முயன்றும் இறக்கும்போது அவள் பூட்டுப்போட்ட விறைத்த கால்களை நேராக்க முடியவில்லை. ஆறுமுகன் அன்று பகல் முழுக்க கனகி அருகிலிருந்து அழுதுகொண்டிருந்தான். கிழவருக்கும் ஆறுமுகனுக்கும் பசிக்கவேயில்லை அன்று. கிழவர் ஆறுமுகனிடம் யாழ்ப்பாணத்துக்கு படகில் போய் பாதிரியாரை கூட்டி வரட்டுமா என்றார் ஆறுமுகன் எப்படியோ இன்றிரவு அவர் வந்துவிடுவார் காத்திருப்போம் என்றான். பேர்சிவல் பாதிரியார் இரவு ஒன்பது மணிக்கு வந்தார். கனகியின் சடலத்தைப் பார்த்து மயங்கி விழுந்தார். கிழவன் தண்ணீர் தெளித்து எழுந்ததும் இப்போது தான் மனமுடையாது இருக்கவேண்டும் ஆறுமுகனுக்காக என்ற ஞானம் அவருக்கு வந்தது. ஆறுமுகன் தன்னைக் கேட்டபடி கனகியையும் ஆறுமுகனையும் வடநாட்டுக்கு அனுப்பியிருந்தால் கனகி இன்றும் உயிரோடிருந்திருப்பாள் என்ற குற்ற உணர்ச்சி அவரை மிக வருத்தியது. கனகியின் கொலைக்கு நீதி கேட்கமுடியாது என்பது ஆறுமுகனுக்கு தெரியும். விசாரணையில் ஓடிவந்த காதலர்களுக்கு பாதிரியார கட்டப்படும் தேவாலய வளவில் அடைக்கலம் கொடுத்தது அம்பலமாகும். பாதிரியாரின் இங்கிலாந்து சபை அவர்மீது நடவடிக்கை எடுத்து அவரை இங்கிலாந்துக்கு திருப்பி அழைத்து அவரை அவமானப்படுத்தும் என்பது ஆறுமுகனுக்கு நன்கு தெரியும். நீதி கிடைத்தால் மட்டும் என் கனகி என்னிடம் திரும்பி வருவாளா? அவள் வேதாகம தமிழ் மொழிபெயர்ப்பிலாவது வாழட்டும் என்று ஆசுவாசப்பட்டான் ஆறுமுகன். பாதிரியாரும் ஆறுமுகனும் நீதி விசாரணையைப் பற்றி பேசவே இல்லை. இரவு பத்து மணிக்கு பாதிரியாரும் ஆறுமுகனும் கனகியின் சடலத்தை காவிச்சென்று கிணற்றடியில் வைத்து குளிப்பாட்டினார்கள். கிழவர் தண்ணீர் அள்ளிக் கொடுத்தார். ஆறுமுகன் அவள் உடுத்தியிருந்த சேலையோடு அவளை பாயில் கிடத்தினான் பாதிரியார் அறையை விட்டு வெளியேறினார். ஆறுமுகன் அவள் ஈர சேலையை உருவிவிட்டு அவளுடலின் ஈரத்தை தன் சால்வையால் துடைத்தான். அவளின் ரத்தக் காயங்களை துடைக்கும்போது அவன் விம்மினான் பிறகு தன்னோடு வழுக்கியாறு வழி அவள் ஓடிவரும்போது கட்டிய இளநாவல் காஞ்சிபுரப் பட்டுப்புடவையை அவளுக்கு அணிவித்தான். அப்போது அவள் அணிந்திருந்த அனைத்து ஆபரணங்களையும் அவளில் சூடினான். பாதிரியாரரும் கிழவரும் உள்ளே வந்தார்கள். கனகிக்கு திருப்பொற்சுண்ணம் இடிக்க இப்ப வசதியில்லை. அதையுணர்ந்து பாதிரியார்தான் திருவாசக பொற்சுண்ணம் பாடல்களை பாடுமாறு ஆறுமுகனைப் பணித்தார். ஆறுமுகன் மனமுருகிப் பாடினான். திருவாசகம் அவனைக் கொஞ்சம் தேற்றியது. பிறகு பாதிரியார் தன் கனகித் தங்காவுக்காக முழங்காலிலிருந்து ஜெபித்தார. பிறகு கனகியின் சடலத்தை ஒரு சாக்கில் போட்டுக்கட்டினார்கள். கனகியின் ஆபரணங்களை பாதிரியார் கழற்ற முனைந்தபோது ஆறுமுகன் அதனை மூர்க்கமாக எதிர்த்தான். பாதிரியார் அவன் வேண்டுகோள் படியே ஆபரணங்களுடன் சாக்கில் கட்ட அனுமதித்தார் சாக்கில் புத்தகங்களே இருக்கின்றன எனக்காட்ட பாதிரியார் சில ஆங்கில வேதாகமப் பிரதிகளையும் கிழித்து உள்ளே போட்டார். சில பக்கங்களை வெளியே எட்டிப்பார்க்குமாறு சாக்கை கட்டினார். ஆறுமுகன் அப்போது கனகி தன் அழகிய பொன் கையெழுத்தால் நீல ஊற்றுப்பேனாவால் எழுதிய அத்தனை தமிழ் மொழிபெயர்ப்பு வேதாகமப் பிரதிப் புத்தகங்களையும் பாதிரியாரிடம் எடுத்துவந்தான். ஆறுமுகனுடைய கையெழுத்தை விட அழகானது கனகியுடையவை. ஆறுமுகனுடைய கையெழுத்திலிருந்த அத்தனை வேதாகம செம்மைப்பிரதிகளையும் கனகி இந்த இருவாரத்திலும் தன் அழகிய கையெழுத்தில் புதிய பிரதிகளாக எழுதியிருந்தாள். பாதிரியாருக்கு இது புதினம். ஒவ்வொரு வேதாகமப் புத்தகங்களாகத் தேடி சாலமனின் பாடல் புத்தகத்தை எடுத்தார். “இது கனகி உனக்காக எழுதியது ஆறுமுகா. கனகியின் நினைவாக இதை மட்டும் நீ வைத்துக்கொண்டு உன் கையெழுத்தில் எழுதிய சாலமனின் பாடலைக் கொடு” என்றார். ஆறுமுகன் அப்படியே செய்தான். பாதிரியார் ஆறுமுகன் கொடுத்த அனைத்து வேதாகம மொழிபெயர்ப்பு புத்தகங்களையும் ஒரு ட்றங்குப் பெட்டியில் போட்டுப் பூட்டியெடுத்தார். 6 நள்ளிரவில் கனகியின் சாக்கு சடலத்தை ஒரு நீளத்தடியில் போட்டு காவிக்கொண்டு ஆறுமுகனும் பாதிரியாரும் படகுத்துறை நோக்கி நடந்தார்கள். பாதிரியாரின் ஏற்பாட்டின் படி 5 வடநாட்டுப் படகோட்டிகள் காத்துக்கொண்டிருந்தார்கள் கிழவருக்கு விடை கொடுத்தபின் படகு ராமேஸ்வரம் நோக்கிப் பயணப்பட்டது நடுக்கடலில் கனகியின் பூதவுடலை அடக்கம் செய்தார்கள். தவறாக அச்சிடப்பட்ட வேதாகப் புத்தகங்கள் கடலில் இடப்படவேண்டியவை என்று கடலோடிகளுக்கு கேட்கக் கூடியவாறு தமிழில் பாதிரியார் சொன்னார். ஆறுமுகனும் பாதிரியாரும் கனகியைக் கடலில் போடும்போது தன்னையறியாது குழந்தைகளினதும் திருமணமாகாத பெண்களினதும் சவப்பெட்டிகளே பாரமானவை என்ற பழைய இலத்தீன் சொலவடையை பாதிரியார் தன்னைமறந்து ஆங்கிலத்தில் உதிர்த்துவிட்டார். ஆறுமுகன் உடைந்துவிட்டான். கனகி அப்போது இருவாரக் கர்ப்பிணி என்பது ஆறுமுகனுக்குப் தெரியாது பாதிரியாருக்கும் தெரியாது. இராமேஸ்வரத்திற்கும் நெடுந்தீவுக்கும் இடைப்பட்ட நடுக்கடலில் கனகி என்கிற கடற்கன்னி பாடுவது இன்றும் மீனவர்களுக்கும் கடலோடிகளுக்கும் கேட்கும். பூவுலகில் ஒரு தேவதாசியாக(1827 – 1848) இக்கடற்கன்னி வாழ்ந்தது வெறும் 21 வருடங்கள் மட்டுமே. ஆறுமுகன்(1822 – 1879) பிறகு திருமணமே செய்து கொள்ளவில்லை. தன்னுடைய 56 வயதில் ஆறுமுகன் ஆறுமுக நாவலராக இறந்தான். ஆறுமுகனின் இரகசிய உயிலின் படி அவனுடைய பூதவுடலும் அவன் எப்போதும் வைத்துப்பேணிய கனகியின் தமிழ் கையெழுத்துப் பிரதியான சாலமனின் பாடல் புத்தகத்தோடு ஒரு வெள்ளிக்கிழமை இரவு கனகியை அடக்கம் செய்யப்பட்ட ராமேஸ்வரத்திற்கும் நெடுந்தீவுக்குமிடைப்பட்ட அதே நடுக்கடலில் அடக்கம் செய்யப்பட்டது. 🧜‍♀️ நட்சத்திரன் செவ்விந்தியனின் சிறுகதைகள் 0. கொள்ளி 1. முள்ளும் மலரும் 2. முகாமுகம் 3. கர்னலின் காமம் Get link Facebook Twitter Pinterest Email Other Apps Comments Post a Comment Popular posts from this blog பிரபாகரனின் இறுதி 3 நாட்கள் - May 10, 2022 By Maj. Gen. Kamal Gunaratne தமிழில் Rajh Selvapathi (முன்னாள் ஐ. நா. சபை உத்தியோகத்தர், கிளிநொச்சி) (முன்) கதைச்சுருக்கம் 800x800 சதுர மீற்றர் நிலப்பரப்புக்குள் மூன்றுபக்கமும் இராணுவத்தினரால் சூழப்பட்ட நிலையில் தப்பிப்பதற்காக மூர்க்கத்தனமாக முயன்று கொண்டிருந்த பயங்கரவாதிகளின் கடைசி மணித்துளிகளை மீட்டி பார்ப்பது முக்கியமானது என நான் நம்புகின்றேன். முன்பே கூறியது போல் மே 17 விடிகாலை பொழுதில் நந்திகடல் நீரேரியின் மேற்கு கரையோரத்தில் இருந்த முன்னரங்க நிலைகள் மீதுகடற்புலிகளின் 06 தற்கொலை படகுகளின் உதவியுடன் அவர்கள் தாக்குதலை தொடங்கினார்கள். அதில் அவர்கள் வெற்றி பெற்றிருந்தால் முல்லைத்தீவு காடுகளுக்குள் அவர்களால் சென்றிருக்க முடியும். அங்க மறைத்து வைக்கப்பட்டிருந்த உணவு, வெடிபொருட்கள், ஆயுதங்களின் துணையுடன் பல மாதங்கள் தாக்குபிடித்திருக்க முடியும். போரும் தொடர்ந்து கொண்டிருக்கும். எப்படியிருந்தாலும் தைரியமும் தளம்பல் இல்லா போராடும் உத்வேகத்தையும் கொண்ட எமது படையினர் அவர்களின் முயற்சியை நாசமாக்கிவிட்டனர். ஆகையால் அவர்கள் வேறு ஒரு திட்டடம் போட வேண்டி இருந் Read more இலக்கிய திருடன் சாரு நிவேதிதா - September 06, 2021 இணையத்தில் வளைய வரும் நண்பர்கள் இந்தத் தலைப்பை பார்த்து அதிர்ச்சியடையக் கூடும் . அல்லது எதிர்மறையாக தலைப்பை வைத்து இந்தப் பதிவு புகழ் அடைய நினைப்பதாக கருதவும் கூடும் . அப்படியெல்லாம் எதுவுமில்லை . இது அக்மார்க் உண்மை . தகவல் பிழைகளுடன் தப்பும் தவறுமாக சாருவுக்கு ‘ பத்தி (?)’ எழுத வருமே தவிர புதினத்துக்கும் அவருக்கும் 7 கடல் , 7 மலை தூரம் . உதாரணத்துக்கு அவரது சிறுகதை தொகுப்பை எடுத்துக் கொள்வோம் . இந்த 2009 ம் ஆண்டின் மிகச் சிறந்த நகைச்சுவை எதுவென்றால் , அது சாரு நிவேதிதாவின் ‘ முழு (?)’ சிறுகதைகள் அடங்கிய தொகுப்பான ‘ மதுமிதா சொன்ன பாம்புக் கதைகள் ‘ தொகுப்புதான் ( உயிர்மை வெளியீடு ). ‘ சாரு நிவேதிதா ‘ எழுதிய ‘ சிறுகதைகளின் முழு தொகுதி இது ‘ என தொகுப்பின் பின் அட்டை சொல்கிறது . உண்மையிலேயே சாருவின் முழு சிறுகதைகளும் அடங்கிய தொகுப்பா இது ? சத்தியமாக இல்லை . அந்த ‘ தொகுப்பில் ‘ குறிப்பிட்டு சொல்லும்படியாக இருகதைகள் மிஸ்ஸிங் . ஒன்று ‘ இந்தியா டுடே ‘ இதழில் வெளியாகி ‘ இலக்கிய சிந்தனை ‘ பரிசு பெற்றது . இன்னொன்று ‘ குமுதம் ‘ குறுநாவல் போட்டியில் தேர்ந்தெடு Read more யாழ்ப்பாண காமக்குற்றவாளி இளங்குமரன் - January 18, 2021 செல்லையா இளங்குமரன் By நட்சத்திரன்செவ்விந்தியன் (புலனாய்வு பத்திரிகையாளர், கவிஞர், எழுத்தாளர், இலக்கிய அரசியல் விமர்சகர்) இலங்கைப் பல்கலைக்கழகங்களில் நீண்டகாலமாக அதிகளவில் பல்கலைக்கழக மாணவிகளை தொடர்ச்சியாக பாலியல் துஸ்பிரயோகத்துக்கோ பாலியல் வல்லுறவுக்கோ உட்படுத்தியவர் செல்லையா இளங்குமரன் . 1985ம் ஆண்டிலிருந்து இன்றுவரை யாழ் பல்கலைக்கழக புள்ளிவிபரவியல் விரிவுரையாளராக இருந்த இவர் இன்று அதே பல்கலைக்கழகத்தில் புள்ளிவிபரவியல் பேராசிரியராக இருக்கிறார். முகநூலில் இளங்குமரன் இளங்குமரன் பாலியல் பலாத்காரங்களை தன் மாணவிகள்மீது செய்யத்தொடங்கிய எண்பதுகளின் நடுப்பகுதி சிவில் நிர்வாகம் சீரழிந்திருந்த போர்க்காலம். கிழக்கு மாகாண காரை தீவைச்சேர்ந்த இளங்குமரன் 1980ல் யாழ் பல்கலைக்கழக மாணவராக யாழ்ப்பாணத்துக்கு வருகிறார். 1985ல் அதே பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளரானதிலிருந்து 40 வருடங்களுக்கு மேலாக அவர் வசிப்பது யாழில்தான். (1999 இலிருந்து 2002 வரை நியூசிலாந்து Massey university ல் Ph.d செய்த காலம் தவிர). பாதிக்கப்பட்ட மாணவிகள் வஞ்சினத்தில் இளங்க
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் அரேபிய விஞ்ஞானி ஒருவர் இருந்தார்! அவர் ஒளியியல், வானியல், கணிதம் ஆகியத் துறைகளில் நூற்றுக்கும் மேற்பட்ட அறிவியல் கண்டு பிடிப்புகளை அவர் செய்திருக்கிறார்.ஆனால் அவருடைய பெயர் நாம் அதிகம் கேள்விப்படாத பெயர்களுள் ஒன்றாகவே இப்போது வரை இருக்கிறது! ஒளி விலகல் (refraction), ஒளி வண்ணங்களாக நிறப்பிரிகை அடைவது (dispersion)போன்ற வற்றை கண்டுப்பிடித்தது யார்? இதை ஐசக் நியூட்டன் கண்டு பிடித்தார் என்றுத்தானே இன்று வரை பாடப்புத்தகங்களில் படிக்கிறோம் ! அல் ஹசன் அல்லது அபு அலி அல்ஹசன் என்கிற பெயரைக்கொண்ட அவருடைய பின் பாதிப் பெயர் இப்னு அல் ஹேதம். கி.பி.965 ல் இராக் நகரமான பாஸ்ராவில் பிறந்தார். பண்டைய ஈராக்கில் அவர்பிறந்தாலும், தற்போது எகிப்தில் உள்ள கெய்ரோவில் தான் அவர் பெரும்பாலும் வாழ்ந்தார். ஐரோப்பியர்கள் இருண்ட காலத்தில் தளர்ந்து போயிருந்தார்கள் அப்போது அரேபியரர்கள் பொற்காலத்தில் இருந்தார்கள்.அக்காலத்தில் பெரிதும் போற்றப்பட்ட இஸ்லாமிய விஞ்ஞான சிந்தனையாளர் தான் #அல்ஹாசன். இஸ்லாமிய நாகரீகத்தின் பொற்காலம் என்றழைக்கப்படும் காலகட்டத்தில் அறிவியல்,தொழில் நுட்பம்,மருத்துவம் போன்ற துறை சார்ந்த ஆராய்ச்சிகள் உச்சத்தில் இருந்தன. ஸ்பெயினிலிருந்து சீனாவரை பரவியிருந்த நிலபரப்பில் அந்தகாலத்தில் பல்வேறு புதிய கண்டுபிடிப்புகள் உருவாகின. அவற்றில் பல இன்றைக்கும் நமக்குப் பயனளிக்கின்றன.ஆனால் அவை அபுல் ஹசனுக்கு பாராட்டையோ அங்கீகாரத்தையோ பெற்றுத் தரவில்லை. ஒளி நம்முடைய கண்ணுக்குள் ஊடுருவுவதால் தான் நம்மால் பார்க்க முடிகிறது. இதை முதன் முதலில் கண்டுபிடித்து சொன்னவர் அல் ஹாசன். ஒளி ஊடுருவும் தன்மையை நம்கண் இழக்கும் போது பார்வையை இழந்து விடுகிறோம்.! அதற்கு முன்னதாக விஞ்ஞானிகள் யூக்ளிடும்,தாலமியும் கண்ணிலிருந்து ஒளி வெளிப்படுவதாகவே கூறியிருந்தார்கள். நமது கண் செயல்படும் முறையையும் அவர் விளக்கியுள்ளார் . ஒரு ஊசித்துளை கேமராவைப் போலவும் (Pinhole camera) இருட்டறையில் போடப்படும் ஒரு துளை எதிற்புறம் உள்ள காட்சியை அப்படியே பிரதிபலிப்பதைப் போல (Camera abscura) நமது கண் செயல்படுவதை அல் ஹாசன் விளக்கினார். இந்தத் தத்துவத்தின் அடிப்படையிலேயே பிற்காலத்தில் ஒளிப்படக் கருவிகள் (Camera) கண்டறியப்பட்டன.!! இன்றைக்கு நாம் ஒவ்வொருவரும் வைத்திருக்கும் கைபேசியில் செயல்படும் கேமராவை அல் ஹாசன் விளக்கிய் தத்துவத்தின் அடிப்படையிலேயே உருவாக்கப்படுகின்றன. இப்படியாக நம்முடைய பார்வை, பார்வையியல், ஒளியியல் (Optics) போன்றவற்றை அல் ஹாசன் விரிவாக ஆராய்ந்து அறிவித்தார். தண்ணீர், எண்ணை போன்ற அடரத்தியான ஊடகங்களில் ஒளி மெதுவாக நகர்வதால் தான் ஒளிவிலகல் (refraction) ஏற்படுகிறது என்று மிகச்சரியாக அல் ஹாசன் விளக்கியிருந்தார். நன்றி தி இந்து (தமிழ் நாளிதழ் 28.12.2016) #தகவல் பசுமை ஹாஜி Source - mohamed Basheer 1 திருச்சி சகோதரர்களின் கவனத்திற்கு: சோழ இளவரசி குந்தவை நாச்சியார் சோழ இளவரசி குந்தவை நாச்சியார் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை முனைவர் பட்டதுக்கான ஆய்வுத் தலைப்பாக எடுத்து மிக விசாலமாக ஆய்வுசெய்து அதை அதிகாரப்பூர்வ வரலாறாக பதிவாக்கிட வேண்டும். 2 இஸ்லாமிய வங்கி இயலின் தந்தை மறைந்தார்! உலகப் புகழ் பெற்ற இஸ்லாமியப் பொருளாதார நிபுணர் டாக்டர் நஜாத்துல்லாஹ் சித்தீகீ அவர்கள் இயற்கை எய்தினார் என்பதே அது! 3 உணரப் படாத தீமை சினிமா தன்னை ஒரு முஸ்லிம் என்று சொல்லக் கூடியவர் வீட்டில் என்ன நடக்கிறது? குழந்தைகளை கூட வைத்துக் கொண்டு, பெற்றோரும், உற்றாரும் குடும்ப சகிதமாக, தொழுகை நேரம் என்றில்லாமல், சினிமாவை ரசித்துக் கொண்டிருக்கிற காட்சியை பரவலாக காண முடிகிறது (விதிவிலக்காக இருப்பவர்களைத் தவிர்த்து). கடைசியில் தன் குழந்தை, படத்தில் வருவது போல யாரையாவது இழுத்துக் கொண்டு ஓடிய பிறகுதான் பெற்றோர்கள் விழித்துக் கொள்வார்கள். 4 நான் ஏன் முஸ்லிம் ஆனேன்? - முன்னாள் கன்னியாஸ்திரி! நான் குர்ஆனைப் படித்த போது, அது குறிப்பாக இறைவன் ஒருவனே! ஒரே ஒருவன் தான் என்று வலியுறுத்தியது. அது நான் கிறிஸ்தவ தேவாலயங்களில் பயின்ற திரித்துவக் கடவுள் கொள்கைக்கு (Trinity of God) முற்றிலும் மாற்றமானதாக இருந்தது. 5 ஆறுதல் சொல்லச் சென்றோர் ஆறுதல் பெற்றுத் திரும்பிய அதிசயம்! செய்தி கேள்விப்பட்ட டாக்டர் அப்துல்லாஹ்வுக்கு கடும் வருத்தம் இருந்தாலும், அனைவருக்காகவும் இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறார். அவரே அனைவரையும் அடக்கம் செய்ய ஏற்பாடு செய்கிறார்.
இந்த பதிவில் நாம் ய வரிசையில் அழகான புதுமையான பெண் குழந்தை தமிழ் பெயர்கள் | Y Baby Girl Names இன்று பார்போம். பெயரின் முதல் எழுத்து ஒரு பெண்ணின் வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இது ஆண் மற்றும் பெண்ணின் இயல்புக்கும் தொடர்புடையது. பெயரின் முதல் எழுத்து ஆண் மற்றும் பெண்ணின் வாழ்க்கையில் நேர்மறையான விளைவைக் கொண்டுள்ளது. உங்கள் பலம் அல்லது பலவீனம் என்ன, இதெல்லாம் உங்கள் பெயரின் முதல் எழுத்தில் இருந்து தெரிந்து கொள்ளலாம். பெயரின் முதல் எழுத்தின் வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் தெரியும். இந்த காரணத்திற்காக, குழந்தைக்கு பெயரிடுவதற்கு முன்பு பெற்றோர்கள் மிகவும் கவனமாக இருக்கிறார்கள். பெண் பெயரின் முதல் எழுத்து தொடர்பாக, அவர்கள் நன்றாக விவாதித்து, பெயரிடுவதைச் செய்கிறார்கள். Y Letter Girl Baby Tamil Names | ய எழுத்து பெண் குழந்தை பெயர்கள் யஷிகா யக்ஷினி யமுனா யஷினி யஷோதவல்லி யமுனாதேவி யக்ஷிகமித்ரா யஷோதா ஆண் குழந்தை பெயர்கள் அ எழுத்து ஆண் குழந்தை ஆ எழுத்து ஆண் குழந்தை இ எழுத்து ஆண் குழந்தை ஈ எழுத்து ஆண் குழந்தை உ எழுத்து ஆண் குழந்தை ஊ எழுத்து ஆண் குழந்தை எ எழுத்து ஆண் குழந்தை ஏ எழுத்து ஆண் குழந்தை ஐ எழுத்து ஆண் குழந்தை ஒ எழுத்து ஆண் குழந்தை ஓ எழுத்து ஆண் குழந்தை க எழுத்து ஆண் குழந்தை ச எழுத்து ஆண் குழந்தை த எழுத்து ஆண் குழந்தை ந எழுத்து ஆண் குழந்தை ய எழுத்து ஆண் குழந்தை ர எழுத்து ஆண் குழந்தை ல எழுத்து ஆண் குழந்தை வ எழுத்து ஆண் குழந்தை ம எழுத்து ஆண் குழந்தை ப எழுத்து ஆண் குழந்தை பெண் குழந்தை பெயர்கள் அ எழுத்து பெண் குழந்தை ஆ எழுத்து பெண் குழந்தை இ எழுத்து பெண் குழந்தை ஈ எழுத்து பெண் குழந்தை உ எழுத்து பெண் குழந்தை ஊ எழுத்து பெண் குழந்தை எ எழுத்து பெண் குழந்தை ஏ எழுத்து பெண் குழந்தை ஐ எழுத்து பெண் குழந்தை ஒ எழுத்து பெண் குழந்தை ஓ எழுத்து பெண் குழந்தை க எழுத்து பெண் குழந்தை ச எழுத்து பெண் குழந்தை த எழுத்து பெண் குழந்தை ந எழுத்து பெண் குழந்தை ய எழுத்து பெண் குழந்தை ர எழுத்து பெண் குழந்தை ல எழுத்து பெண் குழந்தை வ எழுத்து பெண் குழந்தை ம எழுத்து பெண் குழந்தை ப எழுத்து பெண் குழந்தை
சென்னை: குடியரசுத் தலைவர் தேர்தலில் ஓட்டளிப்பது தொடர்பாக தேதர்தல் ஆணையம் கொடுத்த குளறுபடியான விளக்கத்தால், அதிமுக எம்.எல்.ஏக்கள் அவர்களாகவே ஆலோசித்து, அவர்களாகவே முடிவு செய்து வாக்களித்துள்ளனர் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா விளக்கம் அளித்துள்ளார். குடியரசுத் தலைவர் தேர்தலை 3வது அணி புறக்கணிக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் திடீரென அதிமுக மற்றும் மதிமுக எம்.எல்.ஏக்கள் இன்று ஓட்டு போட்டு பரபரப்பை ஏற்படுத்தினர். இந்நிலையில் வாக்குப் பதிவு முடியும் தருவாயில், ஜெயலலிதாவிடம் ஒரு விளக்க அறிக்கை வெளியாகியுள்ளது. அதில் ஜெயலலிதா கூறியிருப்பதாவது, கடந்த 17ம் தேதி தேர்தல் ஆணையம் வெளியிட்ட உத்தரவில், குடியரசுத் தலைவர் தேர்தலில் ஓட்டளிப்பது அனைவரின் கடமை. இருப்பினும் ஓட்டளிப்பதும், ஓட்டளிக்காமல் இருப்பதும் அவரவர் இஷ்டம். மேலும், தேர்தலில் ஓட்டளிப்பதை கட்சித் தலைமையால் கட்டுப்படுத்த முடியாது என்றும் கூறியிருந்தது. இந்த விவாதத்தை அடிப்படையாகக் கொண்டு அதிமுகவைச் சேர்ந்த எம்.எல்.ஏக்கள் மற்றும் மதிமுக எம்.எல்.ஏக்கள் அவர்களாகவே ஆலோசனை நடத்தி இறுதியில் தேர்தல் ஆணையத்தின் விளக்கத்தை அடிப்படையாக் கொண்டு ஓட்டளித்துள்ளனர் என்று சுற்றி வளைத்து விளக்கம் அளித்துள்ளார் ஜெயலலிதா. ஜெயலலிதாவின் இந்த அறிக்கை படு குழப்பமாகவும், வித்தியாசமாகவும் உள்ளது. அதிமுக உறுப்பினர்களை தன்னால் கட்டுப்படுத்த முடியாமல் போய் விட்டது என்று கூறியுள்ளாரா அல்லது தன்னுடன் ஆலோசிக்காமல், அவர்களாகவே முடிவெடுத்து விட்டனர் என்று அதிமுக எம்.எல்.ஏக்கள் மீது பழியைப் போடுகிறாரா என்பது தெளிவாகத் தெரியவில்லை. மொத்தத்தில் அதிமுக இன்று அடித்த பல்டி சாதாரண பல்டி அல்ல. டபுள் அந்தர் பல்டி என்பது மட்டும் தெளிவாகத் தெரிகிறது.
கூகிள் அபராதங்களை கையாள்வதற்கான முதல் விதி என்ன? உங்கள் தளம் அதைப் பெறும் இடத்திற்கு ஒருபோதும் செல்ல வேண்டாம். இருப்பினும், அபராதங்கள் நடக்கின்றன, பின்னர், தரவரிசை மற்றும் போக்குவரத்து வீழ்ச்சி. மிக தாமதமாகிவிடும் வரை பெரும்பாலும் இது கவனிக்கப்படாமல் நடக்கும். இரண்டிலும், இந்த சிக்கல்கள் வணிக உரிமையாளர்களை பேரழிவிற்கு உள்ளாக்குகின்றன. முதல் விஷயம், தள உரிமையாளரின் மனதில் வரும் "இது முடிவு". கூகிள் தேடல் முடிவுகளின் அடிப்பகுதியைத் தாக்குவது என்பது எல்லாவற்றையும் புதிதாகத் தொடங்க வேண்டும் என்பதாகும், இது ஒரு சராசரி வெப்மாஸ்டரைக் காட்டிலும் அதிக நேரத்தையும் பணத்தையும் எடுக்கும்.மேலும், அவை தவறல்ல. கூகிள் அபராதங்களிலிருந்து மீட்டெடுப்பது ஒரு நீண்ட செயல்முறையாகும், ஏனெனில் நீங்கள் உங்கள் தரவரிசைகளை உயர்த்த வேண்டும் மற்றும் சிறந்த தேடல் முடிவுகளுக்கு உங்கள் நீண்ட வழியை மீண்டும் செய்ய வேண்டும். இந்த கட்டத்தைத் தவிர்ப்பதற்கு எந்த வழியும் இல்லை: இறுதியில் மற்றொரு Google அபராதத்தைப் பெற விரும்பினால் அல்ல. அபராதங்களிலிருந்து மீள்வது சாத்தியம் என்றாலும், ஐரோப்பிய எஸ்சிஓ நிறுவனமான செமால்ட் , ஒவ்வொரு பயனருக்கும் இறுதி மூலோபாயம் அல்லது வெற்றிகரமான தந்திரம் இல்லை என்று எச்சரிக்கிறது, இது தள நிலைகளை விரைவாக இயல்பு நிலைக்கு கொண்டு வரும். ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், பலவீனமான மற்றும் தவறான பக்கங்களை அகற்றுவதில் கவனம் செலுத்தும் ஒரு தனிப்பட்ட மூலோபாயத்தை நீங்கள் உருவாக்க வேண்டும், இது தளத்தை அதன் வீழ்ச்சிக்கு கொண்டு வந்தது, மேலும் தேடல் முடிவுகளின் பாறை அடியில் இருந்து வலை மூலத்தை இழுக்க அதன் வலுவான அம்சங்களை மேம்படுத்துகிறது. தள உரிமையாளர்களுடன் பணிபுரியும் செமால்ட் எஸ்சிஓ நிபுணர்களின் அனுபவம் பெரும்பாலும் செமால்ட்டுக்கு மாறுவதற்கு முன்பு அவர்கள் பணியாற்றிய மோசடி, கருப்பு-தொப்பி எஸ்சிஓ ஏஜென்சிகளால் பாதிக்கப்பட்ட நபர்களின் வழக்குகளைச் சுற்றியே உள்ளது. தரவரிசை வீழ்ச்சியடைந்து செமால்ட்டின் முயற்சியால் எட்டப்பட்ட அனைத்து தற்காலிக முன்னேற்றங்களையும் அழிக்கத் தொடங்கும் வரை இத்தகைய தள உரிமையாளர்கள் பிளாக் ஹாட் எஸ்சிஓ பயிற்சியாளர்களால் ஏற்பட்ட சேதத்தைப் பற்றி முழுமையாக அறிந்திருக்கவில்லை. நிலைமை உண்மையிலேயே வெறுப்பாகத் தெரிந்தாலும், திரும்பிச் செல்ல ஒரு வழி இருக்கிறது என்று நிபுணர்கள் உறுதியளிக்கிறார்கள். ஒரு நீண்ட, சிக்கலான, ஆனால் உண்மையான வழி. பிரச்சினையின் வேரைப் பெறுங்கள் கூகிளின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு அதிகம் தெளிவுபடுத்தவில்லை என்றால், கூகிள் உங்களைத் தடைசெய்த காரணத்தைப் பற்றி மேலும் அறிய கூகிளின் வெப்மாஸ்டர் வழிகாட்டுதல்களைச் சரிபார்க்கவும். உங்களுக்கு எந்த அறிவிப்புகளும் கிடைக்கவில்லை எனில், கூகிள் அல்காரிதம் மாற்று வரலாற்றிற்குச் சென்று, தரவரிசை இழப்பை நீங்கள் அனுபவிக்கத் தொடங்கிய நேரத்தில் வழிமுறையில் ஏதேனும் மாற்றங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதா என்பதைப் பாருங்கள்: இது போக்குவரத்து மற்றும் தரவரிசை வீழ்ச்சிக்கான பொதுவான காரணங்களில் ஒன்றாகும். மோசமான தரமான பின்னிணைப்புகளைப் பயன்படுத்துவது கூகிள் வழிகாட்டுதல்களை மிகவும் பொதுவான மீறலாகும், மேலும் பல தள உரிமையாளர்கள் பெரும்பாலும் அதை முற்றிலும் மறந்துவிடுவதால் சீமால்ட்டின் தனிப்பட்ட பரிந்துரை உங்கள் தளத்திற்கு வழிவகுக்கும் பின்னிணைப்புகளை சரிபார்க்க வேண்டும். குறைந்த தரமான பின்னிணைப்புகளை அகற்று பெங்குயின் வழிமுறை ஒன்றாகும், இது மோசமான பின்னிணைப்புகளைக் கண்டறிந்து வலைத்தளங்களை தண்டிக்கிறது, அவை அவற்றை விநியோகிக்கின்றன. Google வெப்மாஸ்டர் கருவிகள் மூலம் உங்கள் பின்னிணைப்புகளை அணுகலாம். அவர்களுக்கான பாதை தேடல் போக்குவரத்து வழியாக உள்ளது your உங்கள் தளத்திற்கான இணைப்புகள் → யார் அதிகம் இணைக்கிறார்கள் the சமீபத்திய இணைப்புகளைப் பதிவிறக்குக . அங்கிருந்து, உங்கள் வலை மூலத்தைக் குறிக்கும் அனைத்து இணைப்புகளையும் நீங்கள் காண முடியும். இங்கிருந்து, வலைத்தளங்களை சரிபார்க்கும் சலிப்பான செயல்முறை தொடங்குகிறது. இதனால்தான் பல பயனர்கள் அந்த பணியை தொழில்முறை எஸ்சிஓ நிபுணர்களிடம் விட்டுவிட விரும்புகிறார்கள் அல்லது ஒவ்வொரு இணைப்பையும் பற்றிய கூடுதல் தரவை வழங்கும் பின்னிணைப்பு கண்காணிப்பு கருவிகளின் உதவியைப் பயன்படுத்த விரும்புகிறார்கள். இணைப்பு சாற்றின் அழுகிய பகுதி பொதுவாக பின்வருவனவற்றைக் கொண்டுள்ளது: Google இலிருந்து வலை ஆதாரங்கள் தடைசெய்யப்பட்டுள்ளன; உங்கள் தளத்தின் முக்கிய இடத்துடன் தொடர்புடைய தளங்கள்; ஸ்பேமி தளங்கள்; முதிர்ந்த அல்லது கிராஃபிக் உள்ளடக்கம் கொண்ட தளங்கள்; கதவு பக்கங்கள்; உறை நுட்பங்களைப் பயன்படுத்தும் தளம்; நகல் உள்ளடக்கம் கொண்ட வலைத்தளங்கள். பின்னிணைப்பு பகுப்பாய்வை இயக்கி, குறைபாடுள்ளவற்றை வரையறுத்த பிறகு, நீங்கள் உடனடியாக மோசமான பின்னிணைப்புகளை உயர் தரமான பின்னிணைப்புகளுடன் மாற்றியமைக்க வேண்டும். ஒரு தொழில்முறை இணைப்பு உருவாக்கும் நிபுணரின் உதவியுடன் செய்யப்படுவது நல்லது. இருப்பினும், நீங்கள் மாற்று நடைமுறையைத் தொடர முன், கருப்பு ஆடுகளை அகற்றுவது முக்கியம். இதை நீங்கள் எப்படி செய்கிறீர்கள். வெப்மாஸ்டருக்கு மின்னஞ்சல் எழுதுங்கள் வழக்கமாக, எந்தவொரு வெப்மாஸ்டரும் எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள் அல்லது எங்களைப் பற்றி தங்கள் தொடர்புத் தரவைக் கொண்டுள்ளனர், எனவே அவர்களுக்கு ஒரு கண்ணியமான மின்னஞ்சலை அனுப்புகிறீர்கள், அதில் நீங்கள் அவர்களின் இணைப்புகளை அகற்றி, எந்தப் பக்கத்தில் இணைப்பு உள்ளது என்பதைத் துல்லியமாகக் காட்டும்படி கேட்கிறீர்கள், இது ஒரு பிரச்சனையாக இருக்காது. எவ்வாறாயினும், பல கோரிக்கைகளை அனுப்ப வேண்டாம் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள் அ) முதல்வருக்கு வெப்மாஸ்டர் பதிலளிக்கவில்லை என்றால், அடுத்தவை அனைத்தும் பயனளிக்காது, ஆ) இது உங்களை நேராக ஸ்பேம் வடிப்பானுக்கு தரையிறக்கும். உங்கள் நிறுவனத்தின் வலைத்தளம் பாதிக்கப்பட்டிருந்தால், உங்கள் நிறுவனத்தின் மின்னஞ்சல் முகவரியைப் பயன்படுத்தவும், உங்கள் கோரிக்கையை அதிக எடை கொடுக்க @ gmail.com அல்ல. உங்கள் வருமான பெட்டிகளை சரிபார்க்கும் ஏகபோகத்திலிருந்து உங்களை விடுவிக்க, மின்னஞ்சல் கண்காணிப்பு கருவிகள் மற்றும் கூகிள் செருகுநிரல்களைப் பயன்படுத்தி உங்கள் வேலையை மின்னஞ்சல் கோரிக்கைகளுடன் ஒழுங்கமைக்கவும், நேரத்தை மிச்சப்படுத்தவும் உதவுங்கள். உங்கள் மின்னஞ்சல்களை எத்தனை வெப்மாஸ்டர்கள் திறக்கிறார்கள், அவர்களில் எத்தனை பேர் பதிலளிப்பதில் கவலைப்படுவதில்லை என்பதை நீங்கள் தெளிவாகக் காணலாம், விரைவில் நீங்கள் மறுப்பு அறிக்கைகளுடன் தொடரலாம். குறிப்பு, வெப்மாஸ்டர் இணைப்புகளை அல்லது கட்டணத்தைச் செய்வதற்கான சலுகைகளை அகற்றவில்லை என்றால், அவற்றைப் புறக்கணித்து, மறுப்பு நடைமுறையைத் தொடங்கவும். மோசமான களங்களை மறுக்கவும் மறுப்பு அறிக்கையில் பின்னிணைப்புகளை சேகரிக்க உங்கள் பின்னிணைப்பு கண்காணிப்பு கருவியைப் பயன்படுத்தவும். கண்காணிப்பு பின்னிணைப்புகள் போன்ற கருவிகள் இணைக்க குறிச்சொற்களைச் சேர்க்க அனுமதிக்கின்றன, பின்னர் அவற்றை ஒன்று, ஒற்றை வகையாக முறைப்படுத்துகின்றன. குறிக்கப்பட்ட அனைத்து பின்னிணைப்புகளையும் ஒரு அறிக்கையில் ஏற்றுமதி செய்ய கருவி உதவுகிறது, இது இணைப்புகள் கருவியை மறுக்க பதிவேற்றலாம். அடுத்து, இணைப்புகளை அனுமதி என்பதைக் கிளிக் செய்க. நினைவில் கொள்ளுங்கள்: மறுப்பு இணைப்புகள் கருவி உங்கள் கடைசி வழியாகும். மற்ற எல்லா நடவடிக்கைகளையும் நீங்கள் தீர்ந்துவிட்டால் மட்டுமே இதைப் பயன்படுத்தவும், தரமற்ற பின்னிணைப்புகளிலிருந்து விடுபடுவதற்கு வேறு வழியில்லை. மேலும், இந்த கருவி விரைவான முடிவுகளை உறுதிப்படுத்தாது: குறியீட்டில் மாற்றங்களைச் சேர்ப்பதற்கு நேரம் எடுக்கும், இதற்குப் பிறகு, போட் இந்த மாற்றங்களையும் அங்கீகரிக்க வேண்டும். நகல் உள்ளடக்கம் இது கூகிள் தடைக்கு மற்றொரு காரணம், மற்றும் மோசமான தரமான எஸ்சிஓ ஏஜென்சிகளுடன் பணிபுரிந்ததன் விளைவாகும், இது பிற வலைத்தளங்களிலிருந்து உள்ளடக்கத்தை நகலெடுக்கிறது, தங்கள் வாடிக்கையாளர்கள் ஒருபோதும் ஆராய்ச்சி செய்யவோ அல்லது உள்ளடக்கத்தின் தனித்துவத்தை சரிபார்க்கவோ கவலைப்பட மாட்டார்கள் என்று நம்புகிறார்கள். இந்த விஷயத்தில், கூகிளின் நல்ல கிருபையில் திரும்பப் பெறவும் தரவரிசை வளர்ச்சியைப் புதுப்பிக்கவும் தளத்தின் மோசமான நகல் மற்றும் விளக்கங்கள், கட்டுரைகள் மற்றும் இடுகைகளை மாற்ற உங்கள் எழுத்தாளர்கள் 100% அசல் உள்ளடக்கத்தை எழுத வேண்டும். முக்கிய வார்த்தைகள் சுமை தள உள்ளடக்கம், மெட்டா குறிச்சொற்கள், பட ALT பண்புக்கூறுகள், தலைப்புகள், தளம் மற்றும் பக்கங்களின் URL ஆகியவற்றிலிருந்து அதிக எண்ணிக்கையிலான முக்கிய வார்த்தைகளை சுத்தம் செய்வது ஒரு உன்னதமான பணியாகும், அதன்பிறகு முக்கிய சொற்றொடர்களின் சரியான விகிதத்தை உரையில் செருகுவதற்கான மற்றொரு துல்லியமான பணி. பல சந்தர்ப்பங்களில், தளத்திற்கு ஒரு புதிய தொடக்கத்தை வழங்க செமால்ட் முற்றிலும் புதிய சொற்பொருள் கர்னலை உருவாக்க வேண்டியிருந்தது. சில நேரங்களில், சில சொற்களை பழைய சொற்பொருள் கர்னலில் இருந்து மீட்டெடுக்கலாம் (ஒன்று உள்ளது), ஆனால் பெரும்பாலும் எல்லாமே செல்ல வேண்டும். பிற நடவடிக்கைகள் கூகிள் அபராதத்தின் முக்கிய காரணங்களை நீக்குவது முழு மீட்புக்கு ஒருபோதும் போதாது. இது ஒரு அத்தியாவசிய சுத்திகரிப்பு நிலை, அதன் பிறகு ஆழ்ந்த ஆன்-சைட் மற்றும் ஆஃப்-சைட் தேர்வுமுறை பணிகள் பின்பற்றப்பட வேண்டும்: இணைப்பு கட்டிடம். மோசமான பின்னிணைப்புகள் இல்லாவிட்டாலும் கூட, இழந்த தரவரிசைகளால் தளம் இன்னும் பலவீனமடைந்துள்ளது, எனவே அதற்கு அது பெறக்கூடிய வயதான அதிகார ஆதாரங்களின் அனைத்து ஆதரவும் தேவை. எஸ்.எம்.எம். சமூக ஊடக செயல்பாடு தளத்தின் போக்குவரத்து மற்றும் நம்பிக்கை தரத்தை உறுதிப்படுத்துகிறது, மேலும் இது அபராதம் விதிக்கப்பட்ட தளத்திற்கு பெரிதும் தேவைப்படுகிறது. ட்விட்டர், இன்ஸ்டாகிராம் அல்லது பேஸ்புக்கிற்கான நன்கு வளர்ந்த பிரச்சாரம் தளத்தை மேம்படுத்தவும் விசுவாசமான பார்வையாளர்களுக்கு வழங்கவும் உதவும். பழைய தளத்தின் முழுமையான மறுகட்டமைப்பு. கருப்பு தொப்பி எஸ்சிஓ "தொழில் வல்லுநர்கள்" செய்த தொழில்நுட்ப சிக்கல்கள் மற்றும் பிழைகளை முற்றிலுமாக அகற்ற நீங்கள் அதை செய்ய வேண்டும். சில நேரங்களில் சேதம் மிகவும் விரிவானது, எனவே தளத்தை மீண்டும் உருவாக்குவது பாதுகாப்பான விருப்பமாக மாறும், இது பிழைகள் அல்லது சிக்கல்கள் எதுவும் ஏற்படாது என்பதை உறுதி செய்கிறது. ஆன்லைன் சந்தைப்படுத்தல் பிரச்சாரங்கள். உங்கள் தளத்தை நம்பகமற்றது என்று கூகிள் கருதும் போது, அந்த நம்பிக்கையை மீண்டும் பெறுவதே உங்கள் நேரடி கடமை. தளம் மற்றும் அதன் தயாரிப்பு குறித்த விழிப்புணர்வை நீங்கள் பரப்ப வேண்டும். உங்கள் நம்பிக்கையை எழுப்பவில்லை. இந்த படிகள் அனைத்தும் உங்கள் வலைத்தளம் மீண்டும் வடிவம் பெறும் என்பதற்கு உத்தரவாதம் அளிக்கிறது. இருப்பினும், அவர்கள் அதை விரைவாகச் செய்வார்கள் என்று அவர்கள் உத்தரவாதம் அளிக்கவில்லை. ஒரு வாரம் அல்லது இரண்டு நாட்களில் உறுதியான முடிவுகளை எதிர்பார்க்க வேண்டாம்: நீங்கள் ஏமாற்றத்திற்கு வருவீர்கள். கூகிள் தடையின் விளைவுகளிலிருந்து விடுபடுவது உங்களுக்கு மாதங்கள் மற்றும் மாதங்கள் கடின உழைப்பு, பின்னிணைப்புகள் மற்றும் முக்கிய பகுப்பாய்வு, பராமரிப்பு மற்றும் ஆதரவு ஆகியவற்றை நீங்கள் பெருமையுடன் சொல்லும் முன் எடுக்கும்: "நாங்கள் இதை செய்தோம்!". இருப்பினும், இது இறுதியில் இன்னும் சாத்தியமாகும். மேலும், எல்லா நல்ல விஷயங்களும் போராட்டத்திற்கு மதிப்புள்ளவை, இல்லையா?
“13ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக நாளை மறுதினம் தமிழ் பேசும் கட்சிகள் பொது உடன்படிக்கையில் கைச்சாத்திடவுள்ள கூட்டத்துக்கு தமிழ் அரசுக் கட்சி சமுகமளிக்கும்” என்று அந்தக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் தெரிவித்தார். நேற்று சனிக்கிழமை தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் ‘சிதைந்து போகிற தமிழ்த் தேசியமும் சிந்திக்காத தலைமைகளும்’, என்ற தலைப்பில் யாழ்ப்பாணம் திருமறைக் கலாமன்றத்தின் கலைத்தூது மண்டபத் தில் இடம்பெற்ற கருத்தாடல் நிகழ்வில் பங்கேற்று பேசிய போதே அவர் இதனைத் தெரிவித்தார். தொடர்ந்து அங்கு கருத்துரைத்த அவர், வடக்கு, கிழக்கில் – தமிழர் தாயகத் தில் சீனா செல்வாக்கு நிலைபெறுவதை நாம் விரும்பவில்லை. சிலர் சீனாவை ஏன் எமக்கு ஆதரவாக சேர்க்கக்கூடாது என்று கேட்கின்றனர். சீனர்களின் செல்வாக்கை வடக்கு, கிழக்கில் நாம் இரு காரணங்களுக்காக விரும்பவில்லை. அதில் ஒன்று – எமது அரசியல் விடிவுக்காக நாம் செய்யும் போராட்டம் ஜனநாயகம் மற்றும் மனித உரிமைக் கோட்பாட்டில் தங்கியுள்ளது. இது இரண்டுமே சீனாவுக்கு தெரியாது. இரண்டாவது – இலங்கை தென் சீனக் கடலில் தீவாக இருந்திருந்தால், சீனாவின் கடலில் இருந் திருந்தால், அது அந்தப் பிராந்தியத்தில் சீனாவின் நியாயமான கரிசனையாக இருந்திருக்கும். ஆனால், இலங்கை இந்தியாவுக்கு அருகில் உள்ள ஒரு தீவு. இந்தியாவின் நியாயமான பாதுகாப்பு கரிசனையை நாம் உள் வாங்கியிருக்கிறோம். அதுவும் இந்தியாவுக்கு மிக அண் மையில் உள்ள பகுதியில் சீனாவின் ஆதிக் கத்தை நாம் விரும்பவில்லை. இப்படி சீனாவின் ஆதிக்கத்தை நாம் இங்கு விரும்பவில்லை என்பதைச் சொல் லித்தான் – சீனர்களின் இந்து சமுத்திரத்தின் ஆதிக்கத்தில் மிகவும் கரிசனை கொண் டுள்ள அமெரிக்காவுடனும் பேசினோம், இந்தியாவுடனும் பேசினோம். அதாவது உலக வல்லரசும், பிராந்திய வல்லரசும் இதனை (சீன ஆதிக்கத்தை) விரும்ப வில்லை. இதன்போதே வடக்கு, கிழக் கில் சீனா நிலைகொள்ளாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்ற கேள்வி இரு நாட்டிடமும் உண்டு. அதற்கு நாங் கள் கேட்கின்றோம் அந்த இடத்தில் இருப் பது நாங்கள், எனவே சட்ட அதிகாரம் எங்களிடம் இருந்தால், அது நாங்கள் கேட்கும் வடிவில் கொடுக்கப்படுமாக இருந்தால், எங்கள் நிலம் மீதான சட்ட அதிகாரம் எங்கள் கைகளில் இருக்கு மானால், நீங்கள் அந்தப் பயத்தைகொள் ளத் தேவையில்லை என்கின்றோம். சட்டம், ஒழுங்கு எங்களுடைய கையில் இருக்குமானால், இவை தொடர் பில் அவர்கள் பயம்கொள்ளத் தேவையில்லை என்றோம். அநேகமாக எல்லா நாடும் தமது நலனை முன்னிறுத்தியே செயல்படுவார்கள். அதில் வியப்பில்லை. சிலவேளை ஒரு பிரதேசத்தில் குழப்பம் இருந்தால்தான் அங்கே தமது தலையீட்டை தொடர முடியும் என்ற எண் ணம்கூட அவர்களுக்கு இருக்கலாம். நாம் அது குறித்தும் விளக்கிக் கூறியுள் ளோம். இங்கே தொடர்ச்சியாக குழப்ப நிலை இருந்தால், இலங்கை அரசிடமே நிலஅதிகாரம், பாதுகாப்பு அதிகாரம் எல்லாம் இருக்கப் போகின்றன. அது உங்களுக்கும் சாதகம் இல்லை. இதனைத் தீர்த்து வைத்தால் மட்டுமே உங்களிற்கு சாதகம் என்றோம். தற்போதும் சந்திப்புக் கள் தொடர்கின்றன. இவை படம் எடுத்து முகநூலில் போடும் சந்திப்புகள் அல்ல. அப்படியும் சில இங்கு இடம்பெறுகின்றன. சிலர் செய்கின்றனர். அப்படி அவர்கள் என்ன பேசுகின்றார்கள் என்று தெரியவில்லை. இதேநேரம் ஜனவரியில் முக்கிய விடயங்கள் இடம்பெறவுள்ளன. அவை இடம்பெறும்போது தெரியும்’’ என்றார்.
திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர் என பரவலாக அறிமுகமாகி இருந்தாலும் கவிஞர் எனும் அழகிய முகம் கொண்டவர் என்.லிங்குசாமி. 2001-ஆம் ஆண்டில் ‘ஆனந்தம்’ திரைப்படத்தின் மூலமாகத் தமிழ்த் திரையுலகிற்குள் காலடி எடுத்து வைத்தவர். ரன், பையா, சண்டைக்கோழி என பல வெற்றிப்படங்களைத் தந்தவர். கடந்த 30ஆண்டுகளாக ஹைக்கூ கவிதைகளை வாசித்துக்கொண்டும், ஹைக்கூ கவிதைகளில் மனம் தோய்ந்து எழுதி வருகிறார். லிங்கூ, செல்ஃபி எடுத்துக்கொள்கிறது மரம், என இரு ஹைக்கூ நூல்களைப் படைத்துள்ளார். இவரது கவிதைகள் பல மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன. கல்லூரிப் பாடத் திட்டத்திலும் இடம்பெற்றுள்ளன. ஹைதராபாத்தில் ‘தி வாரியார்’ படத்திற்கான வேலைகளில் இருந்தவர், விடிகாலை நேரத்தில் உரையாடிய கணங்களே கவிதையாக இருந்தன. இனி, கவிஞரும் ஹைக்கூம் நீங்களும்... உங்களுக்குள் ஒரு கவிஞன் இருப்பதை எப்போது கண்டுகொண்டீர்கள்? நம் உடலுக்குள் உயிர் இருப்பது மாதிரி, நமக்குள் எந்த கணத்தில் கவிதை வந்தது என்று பிரித்து ஆராய்ச்சியெல்லாம் செய்யவே முடியாது. நாள், நட்சத்திரம் குறித்து வைத்துக்கொண்டு இந்த நாளில் கவிஞனானேன் என்று யாராலும் சொல்ல முடியாது. நாம் பிறந்தது முதலே நம்முடைய பேச்சு, நமது இயல்பு, ரசனை, வாசிப்பு எல்லாமே சேர்ந்துதான் நம்மைக் கவிஞனாக்குகிறது. சிறுவயதில் எங்கள் உறவினர் வீட்டில் தங்கி, நான் படித்துக்கொண்டிருந்த சமயமது. அப்போது நான் எது பேசினாலும் ‘இவன் என்ன எடக்கு மடக்கா பேசுறானே..!’ என்று சொல்வார்கள். நான் பேசுவதன் தன்மை புரியாமல் அப்படிச் சொல்வார்கள். அப்பவே நாம ஏதோ புதுசா பேசியிருக்கோம்னு தானே அர்த்தம். கவிதை உணர்வும் தூண்டுதலும் ஒருவனுக்கு இயல்பாகவே பிறப்பிலிருந்தே இருந்திருக்க வேண்டும். அம்மாவின் கருவிலிருக்கும்போதே கவிதை விதை நமக்குள் ஊன்றப்பட்டு விடுகிறது என்று நான் உணர்கிறேன். நான் கவிதை என்று எழுதி, அது ஒரு பத்திரிகையில் பிரசுரமான காலம் என்றால் 1991என்று சொல்வேன். பிறப்பிலேயே ஒருவன் கவிஞனாக இருந்தால் மட்டுமே ஒரு வரியாவது எழுத முடியுமென்று நம்புகிறேன். தொடக்கக் காலத்தில் புதுக்கவிதைகள் எழுதிக்கொண்டிருந்த உங்களை ஹைக்கூ ஈர்த்தது எப்போது? நான் ஆரம்பத்தில் கூட நீண்ட கவிதைகளை நிறைய எழுதியதில்லை. முதன்முதலாக ‘செருப்பு’ எனும் தலைப்பில் நீண்ட கவிதையொன்றினை எழுதினேன். சில பிரசுரமாகாத நீண்ட கவிதைகளும் என்னிடம் இருந்தன. ஆனால் - ‘இஸ்திரி போடும் தொழிலாளி வயிற்றில் சுருக்கம்’ எனும் கவிதையை எழுதிய பிறகு, சுருக்கமான ஹைக்கூ கவிதை வடிவம் மனசுக்கு ரொம்ப நெருக்கமாச்சு. கவிக்கோ அப்துல்ரகுமான் அய்யா, அறிவுமதி அண்ணன், எழுத்தாளர் சுஜாதா இவர்களெல்லாம் அதுக்கு முக்கியமான காரணம்னு சொல்லலாம். நீங்கள் எழுதிய முதல் ஹைக்கூ எது? அது இதழில் வெளியானபோது உண்டான பரவசத்தைப் பகிர்ந்துகொள்ளலாமா? இப்போது நினைத்தாலும் அந்த நாள் எனக்குப் பரவசத்தைத் தருவதாக இருக்கிறது. எனது முதல் கவிதை வெளியான ‘ஆனந்த விகடன்’ இதழில் இருந்த விளம்பரங்களையும் கூட வாசித்து முடித்தேன். அந்த இதழைப் பூஜை அறையில் வச்சாச்சு. படிக்கத் தெரியாதவங்க கிட்டேக்கூட காட்டியாச்சு. படத்தோட பாட்டு ஒன்றில் சொல்கிற மாதிரி, வீட்டிலுள்ள ஆடு, மாடு, கோழி எல்லார்க்கிட்டேயும் சொல்லியாச்சு. அந்தப் பரவசம் சொல்லில் அடங்காதது. ‘உங்கள் கவிதை பிரசுரமாகியிருக்கிறது’ என்று வந்த கடிதமும், கூடவே வந்த 30ருபாய் மணியார்டரும் என் வாழ்வில் மறக்கவே முடியாதது. அந்தப் பகுதியிலிருந்த பல கவிஞர்களும், ‘கவிதையை நீ லட்டர்ல எழுதி அனுப்பினீயா இல்லை இன்லேண்ட் கவர்ல எழுதி அனுப்புனீயா?’ன்னு கேட்டாங்க. நானும் ஒரு பெரிய கவிஞரா என்னை நினைச்சுக்கிட்டு, “எதுல அனுப்புறோம்ங்கிறது முக்கியமில்லை; எதை அனுப்புறோம்ங்கிறது தான் முக்கியம்” சொன்னேன். லவ் பண்ணின பொண்ணுக்கிட்டே நேரடியாக கொடுக்க தைரியமில்லாம, அவகூட வர்ற தோழி கிட்டே புக்கை கொடுத்தது எல்லாமே பரவச நிலைதான். என்னோட முதல் படம் ‘ஆனந்தம்’ வெளியான போது என்ன பரவசத்திலே இருந்தேனோ, அதே நிலைதான் என்னோட முதல் கவிதை பிரசுரமான அன்றும் இருந்தது. நெருக்கடிமிக்க திரைத்துறையில் இயக்குநராக, தயாரிப்பாளராக இருக்கும் உங்களுக்கு ஹைக்கூ எழுதும் அமைதியான மனநிலை எப்படி வாய்க்கிறது? ஹைக்கூ எழுதும் மனநிலையை நான் என்னுள் தக்க வைத்து இருப்பதினால்தான் என்னால் இவ்வளவு வேலைகளையும் பார்க்க முடிகிறது என்பேன். அதுதான் ஆதாரமாக இருக்கிறது. ஹைக்கூவின் கிளை வடிவங்களான சென்ரியு, லிமரைக்கூ, லிமரிக்சென்ரியு , ஹைபுன் ஆகிய வடிவங்களில் நீங்கள் எழுதுவதில்லையே... ஏன்? நான் இரண்டு வரிகளில், மூன்று வரிகளில் எழுதிவிட்டால் அது ஹைக்கூ என்று இன்னமும் நம்பிக் கொண்டிருக்கிறேன். நான் எழுதிய கவிதைகளில் ஹைக்கூவின் பல வடிவ கவிதைகளும் இருக்கக்கூடும். பெயர் தான் மாறுபடுகிறதேயொழிய எல்லாமே கவிதைகள்தான். இன்னும் சொல்லப்போனால் ஜப்பானிய ஹைக்கூவின் உண்மையான இலக்கணத்தோடு யாருமிங்கே ஹைக்கூ எழுதுவதில்லை. நான் எழுதியிருக்கும் இந்த நூறு கவிதைகளில் யாராவது ஹைக்கூ அளவுகோலை வைத்துப்பார்த்தால், இரண்டு, மூன்று ஹைக்கூ தேறலாம். ஆனால், நமக்கு நாம் எழுதுவது ஹைக்கூ தான். அந்த நம்பிக்கையோடுதான் எழுதிக் கொண்டிருக்கிறோம். ஜென் தத்துவத்தில் மனம் ஒன்றிப்போகிறவராக இருக்கிறீர்கள். இந்த மனநிலைக்கு வர உங்களுக்குத் தூண்டு தலாக இருப்பது எது? தியானம் தான். தமிழ்ச்சூழலில் இன்றைக்கு எழுதப்படும் ஹைக்கூ கவிதைகளைப் பற்றிய தங்களின் மதிப்பீடு என்ன? தொடர்ந்து ஹைக்கூ கவிதைகளை வாசித்துக் கொண்டிருப்பவன் நான். தற்போது நடத்திய கவிக்கோ நினைவு ஹைக்கூப் போட்டியில் 50ஹைக்கூ கவிதைகளைத் தேர்வுசெய்ய வாசித்த போது ஒரு நம்பிக்கை வந்தது. நிறைய கவிஞர்கள் சிறந்த ஹைக்கூ கவிதைகளை எழுதப் போகிறார்கள் என்ற எண்ணமும் உண்டானது. மிக அற்புதமா சில கவிஞர்கள் எழுதியிருக்காங்க. இன்றைய சூழல் நல்லாவே இருக்கு. அதை இன்னும் பெரிதாகக் கொண்டு செல்வதற்கான வேலைகளைச் செய்ய வேண்டுமென்கிற ஆசை எனக்குள்ளிருக்கிறது. ஹைக்கூவில் வெளிப்படும் காட்சிப்பூர்வ மான அழகியல் பதிவுகள், உங்களின் திரைப்ப டக் காட்சி அமைப்புகளிலும் வெளிப்படும் கணங்கள் குறித்து சொல்லுங்களேன்? என் படத்தில் வரும் பாடல்களில் இடம்பெறும் மேண்ட்டேஜ்கள், குட்டிக்குட்டி டயலாக்குகள் எல்லாமே ஹைக்கூவா இருக்கும். என்னோட டயலாக் பேட்டன் கூட சின்னதா நறுக்குன்னு ஹைக்கூ வடிவத்திலே தான் வருது. ‘ரன்’ படத்தில் வரும், ‘விட்ற மாட்டியே; விட்டா உசிரை விட்டுருவேன்’ டயலாக் மாதிரி நிறையவே என்னோட படங்கள்ல வரும். ஹைக்கூ எழுதிறதாலே எனக்கு அந்த மாதிரியான பேட்டன் தான் வருதுன்னு நம்புறேன். ஹைக்கூ நமக்குள்ளே இருக்கிறதுனாலே என்னோட டயலாக்லேயும் அதுதான் வெளிப்படுது. ஒரு ஆக்‌ஷன் படத்தைக்கூட ஒரு லவ்வப்பிலா, எல்லாரும் உட்கார்ந்து பார்க்கிற மாதிரி எடுக்கிறது, ஒரு புக்குக்குள்ளே அரிவாள் வைச்சு எடுக்கிற ஒரு ஷாட் வைக்க ஹைக்கூ எழுதிறவங்களால மட்டும்தான் முடியும்னு நம்புறேன். முகநூல் குழுக்களில் ஹைக்கூ எனும் பெயரில் எழுதப்படும் கவிதைகளைப் படிக்கும் சூழல் எப்போதாவது அமைந்திருக்கிறதா? பேஸ்ஃபுக்ல நான் ஆக்டிவ்வா இல்லே. அதனால அவற்றை படிப்பதற்கான சந்தர்ப்பம் அமையவில்லை. தங்களின் முதல் ஹைக்கூ நூலான ‘லிங்கூ’வுக்கு கிடைத்த வரவேற்பு எப்படியிருந்தது? 2013-இல் என்னோட முதல் ஹைக்கூ நூலான ‘லிங்கூ’வை ‘ஆனந்த விகடன்’தான் வெளியிட்டது. அந்த நூல் ஆங்கிலம், மலையாளத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது, கல்லூரிப் பாடத் திட்டத்தில் இடம்பெற்றுள்ளது. ரொம்ப முக்கியமான நண்பர்கள், அந்த ஹைக்கூ நூலைப் பயணங்களில் படிச்சிட்டுப் போறதா சொல்வாங்க. ஹைக்கூவில் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கிற மு.முருகேஷ் தொடங்கி, ஹைக்கூவில் ஈடுபடுகிற முக்கியமான பலர் பேசினாங்க. அறிவுமதி அண்ணன், கலாப்ரியா, வைரமுத்து, கே.பாலசந்தர், ஷங்கர் மாதிரியான ரொம்பவே முக்கியமானவங்க அந்த நூலைப் பாராட்டிப் பேசியிருக்காங்க. முதல் நூல் எனக்கும் மறக்க முடியாத நூல். கேள்விகள்: கவிஞர் மு.முருகேஷ் Comments Your name Subject Comment * Leave this field blank Related Articles 'பாசப் பிரவாகம்'; அமரர் நீர்வை பொன்னையனின் இறுதிச் சிறுகதை தொகுதி தனது 90ஆவது வயதில் 26/03/2022ல் அமரர் ஆன நீர்வை பொன்னையன் தான் இறப்பதற்கு இருபதே நாட்களின் முன் வெளியிடுவதற்காக... “உணர்வுகளின் சங்கமம்” கவிதை நூல் வெளியீட்டு விழா மட்டக்களப்புத் தமிழ்ச்சங்கத்தின் வெளியீட்டில் இளையதம்பி அரியநாயகத்தின் “உணர்வுகளின் சங்கமம்” கவிதை நூல் வெளியீட்டு விழா... இதழியல் வேந்தருக்கு இலண்டனில் விழா! இதழியல் வேந்தர் கனடா உதயன் வார இதழின் பிரதம ஆசிரியர் ஆர்.என். லோகேந்திரலிங்கத்துக்கு இலண்டன் வாழ் தமிழ்ச் சமூகம்... சாரல்நாடனின் 'வானம் சிவந்த நாட்கள்' நாவல் வெளியீடும் நினைவேந்தலும் அமரர் சாரல்நாடனின் “வானம் சிவந்த நாட்கள்” நாவல் வெளியீடும் நினைவேந்தலும் கொட்டகலை தமிழ் மகா வித்தியாலயத்தில்... திருச்சியில் நடைபெற்ற உலகத் தமிழ் ஹைக்கூ மாநாடு ஜப்பானிய கவிதை வடிவமான ஹைக்கூ கவிதை தமிழ்நாட்டில் கால்பதித்து ஒரு நூற்றாண்டை கடந்துவிட்ட நிலையில் ஹைக்கூ கவிதைகளுக்கான முதல்... கனடா உதயன் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் நாகலிங்கம் லோகேந்திரலிங்கத்தின் ஊடக, இலக்கியப் பணிகளை பாராட்டும் நிகழ்வு கனடா உதயன் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் நாகலிங்கம் லோகேந்திரலிங்கத்தின் 50ஆண்டு கால ஊடக மற்றும் இலக்கியப் பணிகளை பாராட்டும்... காற்றேணி ஏறி கடல் மீதாடி நிலா பிடிக்கும் கவிதைகள்.. கடல் கடந்து ஒருநாள் என் காதுக்கோர் அழைப்பு வந்தது. கனத்த இரவு அது.அப்போது கண் பூக்கும் ஒரு... கவிதை உணர்வும் தூண்டுதலும் பிறப்பிலிருந்தே இருக்கவேண்டும் திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர் என பரவலாக அறிமுகமாகி இருந்தாலும் கவிஞர் எனும் அழகிய முகம் கொண்டவர் என்.... ஈழத்து இலக்கியப் பரப்பில் பிரகாசித்தவர் நாவேந்தன்..! 'நற்றமிழுக்கு ஒரு நாவேந்தன்' எனப் புகழ்பெற்றவர் நாவேந்தன். ஈழத்து இலக்கியப் பரப்பில் ஐந்து தசாப்தங்களுக்கு மேலாகச்... கார்மேகத்தின் வாழ்வினை எழுத்தில் பதிவு செய்தமை​ ஈழத்தின் முன்னோடி இலக்கியச் செயற்பாடாகும்' 'எழுத்தையே தொழிலாக, வாழ்வாகக் கொண்ட பத்திரிகையாளர்கள் நமது சமூகத்தில் கவனிப்பாரற்றுப்... சமூக உணர்வும், நற்பண்புகளும் கொண்ட ஒரு நல்ல நண்பன் "இளநெஞ்சன்"முர்ஷிதீன் -மாளிகாவத்தைஅன்பு நண்பர் "போரத்தோட்டை ரிஸ்மி" இறையடி சேர்ந்துவிட்டார் என்ற தகவலின் அதிர்ச்சியிலிருந்து... சரித்திரங்களை மீட்டிச் செல்லும் மைக்கல் கொலினின் கவிதைகள் வெளியீட்டு விழாவில் யாழ். அரசாங்க அதிபர் மகேசனின் நயவுரையிலிருந்து.... காதலும் மனிதாபிமானமும் கலந்து படைக்கப்பட்டுள்ள கவிஞர்...
அன்னூர் தொழிற்பேட்டைக்கு விவசாய நிலங்களை கையகப்படுத்த கடும் எதிர்ப்பு : விவசாயிகளுக்கு ஆதரவாக அன்னூரில் அண்ணாமலை தலைமையில் பா.ஜ.க. ஆர்ப்பாட்டம் சென்னை ரிச்சி தெருவில் 90 கடைகளுக்‍கு மாநகராட்சி அதிகாரிகள் சீல்... நீண்ட காலமாக தொழில்வரி செலுத்தாமல் நிலுவையில் வைத்ததால் நடவடிக்கை வங்கக் கடலில் மாண்டஸ் புயல் - சென்னை பெசன்ட் நகர், பட்டினப்பாக்‍கம் பகுதிகளில் கடல்சீற்றம் மாண்டஸ் புயல் எச்சரிக்‍கை - வேலூர் மாவட்டத்தில் இன்று மதியம் மற்றும் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு சென்னைக்‍கு தென்கிழக்‍கே 580 கிலோமீட்டர் தொலைவில் மாண்டஸ் புயல் மையம் - 6 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வருவதாக வானிலை மையம் தகவல் ஹிமாச்சல் தேர்தல்... முன்னாள் முதலமைச்சர் வீர்பத்ரசிங்கின் மகன் விக்‍ரமாதித்ய சிங் சிம்லா புறநகர் தொகுதியில், 7 ஆயிரத்து 233 வாக்‍குகள் முன்னிலை இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் - பா.ஜ.க. இடையே இழுபறி.... வெற்றி அறிவிப்பு வந்தவுடன் எம்.எல்.ஏ.க்‍களை ராஜஸ்தான், சத்தீஸ்கருக்‍கு அழைத்துச் செல்ல பிரியங்கா காந்தி திட்டம் குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல்.. கிரிக்‍கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா மனைவி ரிவாபா முன்னிலை குஜராத்தில் இம்முறையும் காங்கிரசுக்‍கு பெரும் பின்னடைவு... 20க்‍கும் மேற்பட்ட தொகுதிகளில் மட்டுமே அக்‍கட்சி வேட்பாளர்கள் முன்னிலை குஜராத்தில் 140க்‍கும் மேற்பட்ட சட்டமன்றத் தொகுதிகளில் பா.ஜ.க. முன்னிலை... விறுவிறுப்பாக நடைபெற்று வரும் வாக்‍கு எண்ணிக்‍கை
முறைதவறிய காதலால் கோவை கிணத்துக்கடவு பகுதியில் இளைஞரை ஆட்டோ டிரைவர் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பகுதியை சேர்ந்தவர் தினேஷ்குமார்(22) அதே பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் மணிகண்டன் (18) என்பவரது தங்கையை காதலித்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் உறவினர்கள் என்றாலும், சகோதரர் முறை என்பதால் இந்த காதலை விட்டுவிடுமாறு மணிகண்டன், தினேஷ்குமாரை கண்டித்து இருக்கிறார். ஆனால் தினேஷ்குமார, மணிகண்டன் அறிவுரையை ஏற்கவில்லை. சமீபத்தில் பழனிக்கு இரு குடும்பத்தினரும் பாதயாத்திரை சென்றபோது தினேஷ்குமார், மணிகண்டனின் தங்கைக்கு குறுஞ்செய்தி அனுப்பி இருக்கிறார். இதைப்பார்த்து மணிகண்டன் மீண்டும் தினேஷை கண்டித்து இருக்கிறார். ஆனால் அவர் கேட்கவில்லை என்று தெரிகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் மணிகண்டன், தினேஷை வெளியில் அழைத்துச்சென்று மீண்டும் இதுதொடர்பாக பேசியிருக்கிறார். இருவருக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த மணிகண்டன் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து தினேஷை சரமாரியாக குத்திவிட்டு அங்கிருந்து ஓடிவிட்டார். இதைப்பார்த்த அக்கம், பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் அளிக்க விரைந்து வந்த போலீசார் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த தினேஷை ஆம்புலன்சில் ஏற்றி பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார், தலைமறைவாக இருந்த மணிகண்டனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். Tags : #POLICE #MURDER next தொடர்புடைய செய்திகள் Highway, Alcohol Bottles and Burnt Woman Body; Police Investigation Begins ‘1 லட்சம் ரூபாய்’ பரிசு... ‘இத’ மட்டும் சொன்னா வாங்கிக்கலாம்... ‘பிரபல’ ஆன்லைன் நிறுவனத்தின் பெயரில் ‘அதிர்ச்சி’ கொடுத்த ‘மோசடி’ கும்பல்... கோயிலுக்குமுன் தனியாக அழுதுகொண்டிருந்த ‘சிறுமி’.. ‘ஆட்டோவில் கடத்தி 6 மாதமாக..!’.. வெளியான பகீர் தகவல்..! ‘என்ன அரெஸ்ட் பண்ணுங்க.. இல்லனா அவ்ளோதான்’.. ‘அதிகரிக்கும் போதை ஆசாமிகளின் தொல்லை’.. ஆக்‌ஷனில் இறங்கும் காவல்துறை! ‘மனைவி, மகளை துப்பாக்கியால் சுட்ட தந்தை’.. அடுத்து 13 வயது மகனை சுட முயன்றபோது நடந்த பயங்கரம்..! இன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்...! போலீசிடமிருந்து தப்பிக்க '25 அடி' உயரத்திலிருந்து 'குதித்த ரவுடி'... காலில் 'மாவுக்கட்டு'... எங்கள ஏன்யா 'முறைச்சு' பாக்குறீங்க... 'சத்தியமா' இந்த மாவுக்கட்டுக்கு நாங்க 'பொறுப்பில்லை'... 2-வது 'திருமணத்துக்கு' தயாரான மருமகன்... மகளுடன் சேர்ந்து தந்தை செய்த 'விபரீத' காரியம்... அதிர்ச்சியில் 'உறைந்த' ஊர் மக்கள்! ‘தனியாக வீட்டில் இருந்த செவிலியருக்கு’... ‘நிகழ்ந்த பயங்கரம்’... 'மகளிர் நீதிமன்றம் கொடுத்த'... 'அதிகபட்ச தண்டனை'! VIDEO: ‘சாப்பிட்ட Puffs-க்கு காசு கேட்ட பேக்கரி ஊழியர்’.. கண்மூடித்தனமாக தாக்கிய இளைஞர்கள்.. பரபரப்பு வீடியோ..! 'திடீரென' வந்த போன் கால்... வேகமாக ஓடிச்சென்று, 5-வது மாடியில் இருந்து குதித்து... 'தற்கொலை' செய்துகொண்ட 'பெண்' என்ஜினீயர்! ‘தாய் வீட்டுக்கு விருந்துக்குப் போன புதுமணதம்பதி’.. ‘நீண்ட நேரமாக பூட்டியிருந்த கதவு’.. திருமணம் ஆன 3 நாளில் நடந்த சோகம்..! 'ஃபேஸ்புக் மூலம்... நிதி திரட்டி... ஒரு உயிரைக் காப்பாற்றிய காவலர்கள்... குவியும் பாராட்டுகள்!' பிசியாக இருந்த மனைவியின் செல்ஃபோன்... கேள்வி கேட்ட கணவனுடன் தகராறு.. கத்திரிகோலை எடுத்து கணவன் செய்த வெறிச் செயல்... 'ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது... 'மூன்றாம் கண் திட்டம்' என்றால் என்ன?... 'பிக் பாஸ்' ஆக மாறிய சென்னை காவல்துறை!' இனி பேசி பிரயோஜனமில்லை என்ற முடிவுக்கு வந்த தந்தை... பெற்ற மகன் என்றும் பாராமல்... ஆத்திரத்தில் செய்த வெறிச் செயல்... வீட்டை எதிர்த்து 'காதல்' திருமணம்... கண்டுகொள்ளாத பெற்றோர் ... கணவரது 'உடலுடன்' தெருவில் நின்ற பெண்! 'இது என்னோட குழந்தை இல்ல'... 'தாய் செய்த அதிர்ச்சிக் காரியம்'... 'கடைசியில் நடந்த பயங்கரம்'! ‘2 தடவ மதுவில் விஷம் கலந்தும் சாகல’.. ‘அதான்..!’.. கணவனை கொலை செய்த மனைவியின் பகீர் வாக்குமூலம்..! ‘நள்ளிரவில் காவல்துறை உதவி ஆய்வாளருக்கு நேர்ந்த பயங்கரம்’.. மெட்ரோ சிட்டியை நடுங்க வைத்த சம்பவம்! மேலும் செய்திகளுக்கு ABOUT THIS PAGE This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Youth Killed Near Coimbatore Police arrested one person | Tamil Nadu News.
உள்ளூராட்சி மன்றங்களின் எல்லை நிர்ணய அறிக்கையை எதிர்வரும் 27 ஆம் திகதி மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சர் பைஸர் முஸ்தபாவிடம் கையளிக்கவுள்ளதாக எல்லை நிர்ணயக் குழுவின் தலைவர் அசோக பீரிஸ் தெரிவித்துள்ளார். எனவே அவ்வறிக்கைகிணங்க உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக முழு நாடும் 4 ஆயிரத்து 833 தொகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளதுடன் அத்தொகுதிகளூடாக 5 ஆயிரத்து 92 பிரதிநிதிகள் தெரிவுசெய்யப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். இதேவேளை உள்ளூராட்சி மன்றங்களின் எல்லை நிர்ணயத்திற்காக நியமிக்கப்பட்டுள்ள அசோக பீரிஸ் தலைமையிலான குழு தனது பணிகளை நிறைவுசெய்து விரைவில் அதன் இறுதியறிக்கையை அமைச்சர் பைஸர் முஸ்தபாவிம் கைளிக்கவுள்ளது. எனினும் அரசாங்கம் அவ்வறிக்கைக்கு இணங்க தேர்தலை நடத்தாது குறித்த அறிக்கையினை அரசியல் கட்சிகளின் பரிசீலனைக்கு அனுப்பவுள்ளதாக கூட்டு எதிர்க்கட்டசியில் அங்கம் வகிக்கும் பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அளகப் பெரும குற்றம்சாட்டியுள்ளார். மேலும் அவ்வறிக்கையினை அரசியல் கட்சிகளின் பரிசீலனைக்காக அனுப்ப வேண்டிய அவசியம் இல்லை. ஏனெனில் அசோக பீரிஸ் தலைமையிலான எல்லை நிர்ணய ஆணைக்குழுவில் அரசியல் கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்கள் அங்கம் வகிக்கின்றனர். ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் சட்டத்ரணி மிஸ்பா, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய மெத்திவ், மக்கள் விடுதலை முன்னணி சார்பில் சட்டத்தரணி உபுல் குமரப்பெரும உள்ளடங்கலாக அரசியல் கட்சிகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் அங்கம் வகிக்கின்றனர் எனவும் அவர் மேலும் தெரிவித்தார். எனவே தேர்தலை நடத்தாமல் பிற்போடுவதற்கே அரசாங்கம் அவ்வறிக்கையினை கட்சிகளின் பரிசீலனை்க்கு அனுப்புவதற்கு எதிர்பார்ப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். Related posts: ஏப்ரல் 21 தாக்குதலுக்கு காரணமானவர்களை கண்டறிந்து தண்டிக்க அரசாங்கம் துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டு... நல்லூர் கந்தசுவாமி ஆலய திருவிழா எதிர்வரும் 13 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பம்!! ஸ்கொட்லாந்து சென்றடைந்தார் ஜனாதிபதி - ஐ.நா சபையின் காலநிலை மாற்றம் தொடர்பான மாநாடு இன்றுமுதல் ஆரம்பம... Tweet Dialog சேவை வாடிக்கையாளர்களுக்கு வாய்ப்பு! அதி சொகுசு பஸ் சேவைகள் விரைவில் ஆரம்பம்! விடுமுறை காலத்தில் வேட்பு மனுத் தாக்கல் செய்யப்பட்டமை சட்டரீதியானதா? - விளக்கம் கோரி சட்ட மா அதிபரி...
லுணுகல, உடகிருவ வனப் பகுதியில் உள்ள உடகிருவ பிரதேசத்தில், பொலிஸாரும் விசேட அதிரடிப்படையினரும் இணைந்து நேற்றைய தினம் மேற்கொண்ட சுற்றிவளைப்பை அடுத்து, குறைந்த வயதுடைய சிறுமியைக் கடத்திய குற்றச்சாட்டின் பேரில் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். லுனுகல பிரதேசத்தைச் சேர்ந்த 14 வயதுடைய சிறுமி ஒருவர் கடந்த ஆகஸ்ட் மாதம் 3ஆம் திகதி சந்தேகநபர்களால் கடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். சந்தேகநபர்கள் லுணுகல மற்றும் பேருவளை பகுதியைச் சேர்ந்த 18 மற்றும் 53 வயதுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். சிறுமியை கடத்திச் சென்று 08 நாட்களாக உடகிருவ வனப்பகுதியில் மறைத்து வைத்திருந்த சந்தேக நபர்களை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர். சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக லுனுகல பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக ஒப்படைக்கப்படவுள்ளார். (யாழ் நியூஸ்) Share Previous News Next News யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.
Pei Kadhaigal-Ghost Story for Kids-ஊஞ்சலாடிய பேய்:- ஒரு ஊருல ஒரு அழகான குடும்பம் இருந்துச்சு ,அவுங்க ஒரு புது வீடு வாங்கி அங்க குடிபோனாங்க. அந்த வீட்டுல இருக்குற மரத்துல குழந்தைகளுக்கு ஒரு ஊஞ்சல் கட்டி விட்டாரு அந்த அப்பா ,உடனே குழந்தைகள் அங்க அழகா விளையாட ஆரம்பிசிச்சாங்க ஒரு நாள் அந்த பையனுக்கு ஏதோ சத்தம் கேட்டுச்சு உடனே வெளிய எட்டி பாத்தான் யாரோ ஊஞ்சல் ஆடுறது மாதிரி இருந்துச்சு ,மறுநாள் பக்கத்துல இருக்குற குளத்துல யாரோ விளையாடுற மாதிரி இருந்துச்சு இந்த விஷயத்தை தங்களோட அப்பா அம்மா கிட்ட சொன்னாங்க அந்த பையனும் பாப்பாவும் அப்ப அந்த அப்பா சொன்னாரு உங்களுக்கு தைரியம் இருந்துச்சுன்னா பேய கூட நாம விரட்டிடலாம் ,நீங்க தைரியமா இருக்கீங்களானு கேட்டாரு நாங்க எப்பவும் தைரியமா இருப்போம்னும் அந்த பாப்பாவும் பையனும் சொன்னாங்க உடனே பேயே பேயே எங்க கண்முன்னாடி வானு கூப்பிட்டாங்க அந்த அம்மா உடனே ஒரு குழந்தை ரூபத்துல இருக்குற ஒரு பேய் அவுங்க கண்முன்னாடி வந்துச்சு நீ எதுக்கு இங்க இருக்குறன்னு கேட்டாரு அந்த அப்பா ,நான் நல்லா படிக்கிற பையன் எனக்கு கணக்கு பரீட்சை ரிசல்ட் வர்ற அன்னைக்கு ஒரு விபத்துல இறந்து போய்ட்டேன் , எனக்கு எங்க அம்மாகிட்ட நான் வாங்குன மார்க்க காமிச்சு நல்ல பேர் வாங்கணும்னு ஆச அது நிறைவேறாததால நான் இங்க பேயா சுத்திகிட்டு இருக்கேன்னு சொன்னான் உடனே அங்க இருந்த எல்லாரும் பக்கத்துல இருந்த ஸ்கூலுக்கு போய் கணக்கு டீச்சரை பாத்து அவனோட மார்க் பேப்பர வாங்கி பாத்தாங்க அதுல அந்த பையன் அதிக மார்க் வாங்கி இருந்தான் , அந்த பையனோட வீட்டு முகவரியை வாங்கிகிட்டு அங்க போய் அவுங்க அம்மா கிட்ட அந்த மார்க்க காமிச்சாங்க உடனே அவுங்க கண்முன்னாடி அந்த பேய் வந்து அவுங்களுக்கு நன்றி சொல்லிட்டு மறைஞ்சு போய்டுச்சு குழந்தைகளா பேய்ங்கிறது நம்மள நல்வழி படுத்த கற்பனையா சொல்ல படுற கதை,ஒரு ஆபத்தான இடத்துக்கு நீங்க போக கூடாதுன்னு சின்ன பிள்ளைகளான ஒங்களுக்கு புரிய வைக்கிறது கஷ்டம் ,இது மாதிரி சூழ்நிலையில அங்க பேய் இருக்குன்னு சொல்லி அங்க போக விடாம தடுப்பாங்க பெரியவங்க ,அதனால வீணா பேய நினச்சு பயப்படாம ,பெரியவங்க சொல்படி சமத்தா நடந்துக்கிட்டா கதைகள்ல சொல்ல படுற பேய்கள் எல்லாம் எங்களுக்கு ஒரு பொழுதுபோக்குக்கு சொல்ல படுறதுன்ற உண்மை உங்களுக்கே புரியும்
ரோஹா, மகாராஷ்டிரா: மகாராஷ்டிராவில் பயணிகள் ரயில் தடம் புரண்டதில் நான்கு பெட்டிகள் கவிழ்ந்தன. இதில் 15 பேர் பலியானார்கள். திவா - சவந்த்வாடி இடையிலான இந்த பயணிகள் ரயில், நாகோதானே, ரோஹா இடையே தடம் புரண்டு கவி்ழ்ந்தது. இதில் நான்கு பெட்டிகள் கவிழ்ந்து விழுந்தன. இதில் 15 பேர் உயிரிழந்தனர். ரயில் என்ஜினும் கவிழ்ந்து விழுந்தது. விபத்தில் 87 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை நடந்த இந்த விபத்தால் அப்பகுதியில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மகாராஷ்டிராவில் ரயில் தடம்புரண்டு விபத்து.. 15 பேர் பலி நிதி கிராமத்திற்கு அருகே உள்ள சுரங்கப் பாதை வழியாக ரயில் சென்றபோது விபத்து நேரிட்டது. இந்த விபத்தில் பலர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் ரோஹா கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. மீட்புப் பணிகளும் முடுக்கி விடப்பட்டன. இப்பாதையில் தற்போது ரயில் சேவையை கொங்கன் ரயில்வே நிர்வாகம் நிறுத்தி வைத்துள்ளது. விபத்துக்கான காரணம் தெரியவில்லை. ரூ. 2 லட்சம் இழப்பீடு விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்குத் தலா ரூ 2 லட்சம் இழப்பீடு வழங்க ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. படுகாயமடைந்தோருக்கு தலா ரூ. 50,000 நிதியும், காயமடைந்தோருக்கு ரூ. 10,000 நிதியுதவியும் அளிக்கப்படும். சுரங்கத்துக்குள் பயணிகள் சிக்கியுள்ளனரா..? இதற்கிடையே விபத்து நடந்த இடம் சுரங்கப் பாதை என்பதால் அங்கு பயணிகள் சிலர் சிக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் அதை அதிகாரிகள் மறுத்துள்ளனர்.
இனி போலீஸ் வீடுகளுக்குப் பால் விநியோகம் செய்யப்படாது எனப் பால் முகவர்கள் சங்கம் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. மாநிலம் முழுவதும் சுமார் ஒன்றரை லட்சப் பால் முகவர்கள் உள்ளனர். ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதிலிருந்தே போலீசார் ஏற்படுத்தும் சிக்கல்கள் காரணமாக பால் விநியோகம் செய்வதில் பல சிக்கல்கள் நீடித்து வருவதாகக் கூறப்படுகிறது. இந்த சூழலில் பால் முகவர்கள் சங்கம் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “பால் முகவர்களுக்கும், போலீசுக்கும் ஏற்படும் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு ஏற்படும் வரை போலீஸ் வீடுகளுக்குப் பால் விநியோகம் செய்யப்படாது. தடுத்து நிறுத்தப்படும்” எனக் கூறப்பட்டுள்ளது. இந்த அறிக்கையைப் பால் முகவர்கள் சங்கத்தின் தலைவர் பொன்னுசாமி வெளியிட்டுள்ளார். மேலும் அந்த அறிவிப்பில் கூறியிருப்பதாவது: "கொரோனா பேரிடம் காலத்தில் மக்கள் அனைவருக்கும் தடையின்றி பால் கிடைக்க வேண்டும் என நாங்கள் பால் விநியோகத்தில் ஈடுபட்டு வருகிறோம். அத்தியாவசிய பொருள் என்பதால் எங்கள் பணிக்கு அரசும் தடை விதிக்கவில்லை. ஆனால் இந்த நேரத்தில் எங்களை போலீஸ் பல்வேறு விதத்தில் சித்திரவதை செய்து வருகிறது. குறிப்பாக பால் முகவர்களின் வாகனங்களை பறிமுதல் செய்வது, பால் விற்பனை மையங்களை மூடச் சொல்லி மிரட்டுவது என அத்துமீறி சில செயல்களை செய்து வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக பால்வளத்துறை அமைச்சர், போலீஸ் கமிஷ்னர் உள்ளிட்டோருக்கு தகவல் தெரிவித்தும் எந்த பலனும் இல்லை. இதனால் போலீஸ் வீடுகளுக்கு பால் விநியோகம் செய்வதை நிறுத்த முடிவு செய்துள்ளோம். இந்த பிரச்சினை தீரும் வரை இந்த நிலை தொடரும். என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. OTT Streaming Dates on Amazon Prime, Netflix & Others. Tags : #POLICE #MILK AGENTS #NO DISTRIBUTION #DAIRYAGENTS மற்ற செய்திகள் "ஸ்மார்ட்போன் மூலமா ஆன்லைன் வகுப்பு!".. 'இப்படி ஒரு' சூழ்நிலையால்.. 'பள்ளி மாணவர்' எடுத்த சோக 'முடிவு'! 'அமெரிக்கா' அதிகாரப்பூர்வமாக 'அறிவித்ததை விட...' '7 மடங்கு அதிகம்...' 'உண்மையான' கொரோனா 'பாதிப்பை...' 'அம்பலப்படுத்தியது சுகாதாரத்துறை...' சிவப்பு நிறத்தில் பெரிய வடிவில் பேரீச்சம் பழம்!.. தேடித் தேடி வாங்கி உண்ணும் மக்கள்!.. அப்படி என்ன ஸ்பெஷல்? 'சீனாவை' சுற்றி வளைக்க அமெரிக்கா திட்டம்... 'படைபலத்தை' ஒன்று திரட்ட 'முடிவு...' 'மைக் பாம்பியோ' 'மாஸ்டர் பிளான்...' "பிரசவ வலியில் குழந்தை பெற்றுக் கொண்டிருக்கும்போது".. சுட்டுக் கொல்லப்பட்ட இளம் தாய்க்கும் குழந்தைக்கும் நடந்த கொடூர சம்பவம்! 'டுவிட்டரில்' சூடு பிடிக்கும் 'சாத்தான் குளம்' சம்பவம்... 'இந்திய' அளவில் 'முதலிடம் பிடித்த'... ’JusticeForJeyarajAndFenix' ஹேஸ்டேக்... மேலும் செய்திகளுக்கு தொடர்புடைய செய்திகள் '12 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த கான்ஸ்டபிள்...' 'அம்மா, அந்த அங்கிள் என்ன கூப்பிட்டு...' விஷயம் வெளிய தெரிஞ்சா கொன்ருவேன்...! ‘அந்த QRcode-அ ஸ்கேன் பண்ணுங்க’.. பழைய கட்டிலை விற்க முயன்ற சென்னை இன்ஜினீயரை அதிரவைத்த ‘ஆன்லைன்’ மோசடி..! 'சென்னை காவல்துறையில்...' கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியது...! குவைத் காதல், 2-வது திருமணம்... பட்டப்பகலில் 'தஞ்சை'யை பதறவைத்த படுகொலை... 'தலைமறைவான' மனைவி? 2 வருட பிரிவு... இடையில் புகுந்த 'இளைஞர்'... கண்மண் தெரியாத ஆத்திரத்தில்... 'கணவன்' செய்த கொடூரம்! 3 மணி நேரத்திற்கும் மேலாக நீண்ட 'பிரேத' பரிசோதனை... 'அம்மா'வுக்கு ஒடம்பு சரியில்ல... ஆனாலும் நம்பிக்கை இருக்கு! "தலையை காலால் அழுத்தி மிதிச்சு.. தரதரனு இழுத்துட்டு போய்".. 'பெண் போலீஸால் மாணவிக்கு நேர்ந்த கொடூரம்'!.. சிசிடிவியில் பதிவான உறையவைத்த காட்சிகள்! 'சார்வாள் பொண்ணுங்கள கூட்டிட்டு சுத்துறது 'பிஎம்டபிள்யூ' கார்ல'... 'காசிக்கே காட்பாதர் தினேஷ்'... 'ஆடிப்போன போலீசார்'... வெளியான அதிர்ச்சி தகவல்! Tuticorin Custodial Death: "Victims Tortured, Private parts damaged and Killed by Police!" - Video of Family meeting press மீண்டும் ஒரு ‘விசாரணை கைதி’ மருத்துவமனையில் அனுமதி.. ‘கோவில்பட்டியில்’ அடுத்த அதிர்ச்சி..! 'தனக்கு என்ன நடக்குதுன்னே தெரியாத பொண்ணு'... 'அப்பாவும், மகனும் மாத்தி மாத்தி'... ஈரக்கொலையை நடுங்க வைக்கும் சம்பவம்! ‘பின்பகுதியை முழுமையா சிதைச்சிருக்காங்க’!.. குடும்பத்தினர் சொன்ன அதிர்ச்சி தகவல்...! 3 of Indian-origin Family in US found Dead in Swimming Pool: Neighbours, Police recall Horror! - VIDEO வெளில போன 'மாப்பிள்ளைய' இன்னும் காணோம்... 'சல்லடை' போட்டு தேடிய உறவினர்கள்... 'கற்பூர' மரத்தில் காத்திருந்த அதிர்ச்சி! "உடம்பெல்லாம் ரத்தம்.. தம்பி நெஞ்சு முடியெல்லாம் பிச்சு..".. சாத்தான்குளம் சம்பவம்.. கதறித்துடித்த பெண்!.. வீடியோ! மரணத்திற்கான 'காரணம்' இதுதான்... சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் 'இறுதி'... பிரேத பரிசோதனை அறிக்கை வெளியானது! அப்பா-மகன் தரையில் 'புரண்டதால்' காயம்... அதிரவைத்த எஃப்.ஐ.ஆர் அறிக்கை! Video: யாருகிட்ட என்ன பேசுற?... வங்கியில் புகுந்து 'பெண்' ஊழியரை சரமாரியாக 'தாக்கிய' கான்ஸ்டபிள்... வைரலாகும் வீடியோ! IAS Officer Vijay Shankar Accused In IMA Ponzi Scam, Dies By Suicide: Report! 'சிறையில் தந்தை மகன் உயிரிழந்த வழக்கு...' 'உயர்நீதிமன்ற கிளை தானாக முன்வந்து விசாரணை...' விரிவான தகவல்கள்...! மேலும் செய்திகளுக்கு ABOUT THIS PAGE This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Milk will not be distributed to police houses-Dairy Agents | Tamil Nadu News.
இது என் மஹா அண்ணியுடன் ஏற்பட்ட அனுபவத்தின் தொடர்ச்சி, மறக்காமல் மற்ற பாகங்களையும் படித்துவிட்டு வாருங்கள். நான் என் ரூமுக்கு சென்று என் சாமானை வெளியே எடுத்து ஆட்ட ஆரம்பித்தேன். ஒரு அதீத உணர்ச்சியில் என் கதவை பூட்ட மறந்துவிட்டேன். அவளை நினைத்து நான் என் சுன்னியை ஆட்ட திடீர் என்று என் அண்ணி கதவை தட்டிவிட்டு உள்ளே வந்தால். நான் கதவுக்கு நேராக தான் நின்று இருந்தேன். அவள் என்னை பார்பதற்குள் என் சுன்னியை உள்ளே போட்டுவிட்டு கால் சட்டையில் இருந்து கையை எடுத்தேன். அவள் புத்திசாலி அவளால் பார்க்க முடியவில்லை என்றாலும் நான் என்ன செய்து இருப்பேன் என்று ஊகித்து இருக்க முடியும். அவள் கண்டிப்பாக கண்டு பிடித்து இருப்பாள், ஆனால் வெளியே காட்டிக்கொள்ளாமல் இருக்க எனக்கு என்ன செய்வது என்று புரியவில்லை. பின் என் அம்மா வந்தார்கள். அண்ணியிடம் தையல் காரனிடம் அளவு கொடுத்தியா என்று கேட்டார்கள். அவளும் ஆமா கொடுத்துவிட்டேன் என்றால். என் முன்னாள் தான் அளவு கொடுத்தேன் என்று அம்மாவிடம் சொல்லவில்லை. இதை ரகசியமாக வச்சிக்க அவள் விருப்ப படுகிறாளோ என்று நான் நினைத்தேன். அடுத்த வாரம் எங்க சொந்தகாரங்க திருமணம் ஒன்று இருந்தது அதற்க்கு அவளை அழைக்க திட்டமிட்டு இருந்தால் என் அம்மா, அந்த திருமணத்தில் எங்கள் குடும்ப உறவினரிடம் மஹா அண்ணியை அறிமுக படுத்த நினைத்தார்கள். அவளும் எங்களுடன் வருகிறேன் என்று சொன்னால். திருமணம் செல்ல இரவு நேரத்தில் நாங்கள் புறப்பட்டோம், அவள் எங்களுடன் வருவதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. காரில் எங்கள் பயணம் ஆரம்பித்தது. அவள் சுடிதார் அணிந்து இருந்தால். பார்க்க அழகாக இருந்தால். நாங்கள் குவாலிஸ் கார் வைத்து இருந்தோம். பெற்றோர் முன்னாள் அமர்ந்துகொள்ள நானும் அண்ணியும் பின் சீட்டில் அமர்ந்துகொண்டோம். இரவு ஏழு இருக்கும் கிளம்பும்போது. மறுநாள் காலை தான் அந்த இடத்துக்கு சென்று அடைய முடியும். நன்றாக பேசிக்கொண்டு எங்கள் பயணத்தில் இருந்தோம், பதினோரு மணிக்கு ஒரு ஹோடேலில் வண்டியை நிறுத்திவிட்டு சாப்பிட்டு முடித்தோம். அப்போது நான் சிகரட் அடிப்பேன் ஆனால் என் பெற்றோருக்கு தெரியாது, அதனால் ஹோட்டல் பின்னால் சென்று சிகிரட் அடித்தேன். பவுர்ணமி வெளிச்சம் நன்றாக தெரிந்தது. அண்ணி அந்த பக்கம் வருவது தெரிந்து நான் ஒரு மரத்தடியில் ஒளிந்துகொண்டேன். ஹோட்டல் பின் பக்கம் இருந்த பாத்ரூமுக்கு சென்றால், உள்ளே சென்ற வேகத்தில் உடனே மூக்கில் கை வைத்துகொண்டு வெளியே வந்தால். நான் உடனே என் சிகரட்டை தூக்கி போட்டேன். நான் அங்கு இருப்பதாய் அவள் கவனக்கவில்லை. பின் நான் நினைத்து பார்க்காததை அவள் செய்தால். அந்த பாத்ரூமுக்கு பின் பக்கம் வந்தால், அது எனக்கு நேரே இருந்தது, அவள் அங்கும் இங்கும் பார்த்துவிட்டு தன சுடிதாரை தூக்கிவிட்டு தன பேண்டை கழட்டினால், அவள் சூத்து நல்லாவே தெரிந்தது. செமையான அந்த சூத்தை நான் பார்த்தேன், இப்போது என்ன நடக்க போகிறது என்று எனக்கு தெரியும், நானும் தயாராக என் சுன்னை பேண்டுக்கு வெளியே எடுத்து தடவ ஆரம்பித்தேன். பின் அப்படியே அமர்ந்து ஒன்னுக்கு அடித்தால், அவள் ஒனுக்கு அடிக்கும் சத்தம் நல்லாவே கேட்டது. அவள் புண்டையை பார்க்க நினைத்தேன் ஆனால் அந்த இரவு நேரத்தில் சரியாக பார்க்க முடியவில்லை. ஆனால் அவள் சூத்து அழகை நன்றாக ரசித்தேன். என் சுன்னியை வேகமாக ஆட்டி உச்சம் அடைந்தேன். பின் அவள் எழுந்து ஆடையை சரி செய்துகொண்டு அங்கிருந்து சென்றால். ஹ்ம்ம் நான் எவ்வளவு லக்கி. அவள் சென்ற பின்பு நான் மேலும் ஒரு சிகரட் அடித்துவிட்டு காரில் ஏறினேன். அவள் காரில் தான் இருந்தால் ஆனால் என் பெற்றோர் இன்னும் ஹோட்டலில் தான் இருந்தார்கள். அவள் என்னை பார்த்து “என்ன தம் அடிச்சியாச்சா” என்று கேட்டால். நான் ஆச்சிர்யத்துடன் “உங்களுக்கு தெர்யுமா அண்ணி?” என்றேன். அவள் சிரித்தபடி “நான் உன் ஆசிரியை என்பதை மறந்து விடாதே” என்றால். ஆமாம் இந்த ஹோட்டலில் எங்க போயிட்டு சிகரட் அடிச்சிட்டு வர என்று கேட்டால். இப்போது என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் முழித்தேன், “அண்ணி நான் பாத்ரூம் பின்னால் தான் தம் அடித்தேன்” என்றேன், இதை கேட்டு அவள் முகம் சாக்கில் இருந்தது. “எங்க, பாத்ரூம் பின்னாடியா?” என்று மீண்டும் கேட்டால். நானும் சிரித்தபடி ஆமாம் எதுக்கு கீகிரிங்க என்றேன். அவள் இப்போது கொஞ்சம் தயக்கத்துடன் இருந்தால். “இவ்வளவு நேரம் அங்கேயா இருந்தாய்” என்று கேட்டால். நான் சிரித்துகொண்டு ஆமாம் அண்ணி எதுக்கு கேக்குறிங்க என்றேன். அவளை கொஞ்சம் சுண்டி பார்க்க நினைத்தேன். அவள் கொஞ்சம் அசிங்கத்துடன் எதுவும் இல்லை சும்மா தான் கேட்டேன் என்றால். அவள் லேசாக சிரிக்க எங்கள் இருவருக்கும் அதன் அர்த்தம் புரிந்தது, ஏன் என்றால் எங்கள் இருவருக்கும் என்ன நடந்தது என்று தெரிந்துவிட்டது. “இந்த ரகசியத்தை உனக்குள்ளே வச்சிக்கோ என்றால். நானும் “என்ன அண்ணி சொல்றிங்க, என்ன ரகசியம்?” என்று கேட்டேன். அவள் என் கையில் கிள்ளிவிட்டு “நடிக்காத, யார் கிட்டயும் சொல்லாத” என்றால். நான் சிரிக்க என் பெற்றோர் வந்தனர். இருவருமே நன்றாக நெருக்கமாக பழக ஆரம்பித்தோம். நான் என்ன செய்தாலும் அவள் வெளியே சொல்ல மாட்டாள் என்று தோன்றியது. அதனால் அங்கிருந்து வண்டி புறப்பட நல்ல வேகத்தில் போய்க்கொண்டு இருந்தோம். அம்மா தூக்கத்தில் அப்படியே சாய்ந்து படுத்தார்கள். முன்னாள் இருந்து பின்னால் என்ன நடக்கிறது என்று தெரியாது. மஹா அன்னிக்கும் தூக்கம் வர தூக்கத்தில் ஜன்னல் பக்கம் தலை வைத்து தூங்க முயற்ச்சித்தால். “அண்ணி, நீங்க இப்படி படுத்துக்கோங்க நான் கடைசி சீட்டுக்கு போய்விடுகிறேன்” என்றேன். இல்லை இல்லை வேண்டாம் நான் இங்கயே படுத்துக்குறேன் என்றால். அண்ணி தன தலையை ஜன்னல் பக்கம் வைத்துகொண்டு அவள் காலை சீட்டில் வைத்து படுத்துகொண்டாள். ஒரு கையால் அவள் கண்களை மூடிக்கொண்டால். கொஞ்சம் நேரத்தில் அவள் தூங்கஈவ்ட்டால். நான் அவளை பார்த்தேன், அவள் சுடிதார் இடுப்பு வரை உயர்ந்து இருந்தது. அவள் இறுக்கமான பேன்ட் அவள் தொடைகளை நன்றாக கான்பித்ஹ்டன. சாதரணமாக அவள் தொடை மீது கை வைத்தேன். அப்படியே அங்கு கை வைத்து இருக்க அவள் ஏதாவது செய்கிறாளா என்று பார்த்தேன். எந்த அசைவும் இல்லை. என் ஆள் காட்டி விரலால் அவள் தொடையில் லேசாக தடவ ஆரம்பித்தேன். எனக்கு மூடு ஏற ஆரம்பித்தது, மெதுவாக அவள் தொடை மீது என் கையை எடுத்து செல்ல அவள் ஜட்டி பாடரை என் விரல் தொட்டது. ஹ்ம்ம்ம் என்ன ஒரு அனுபவம் அது. அவள் முகத்தை பார்த்துக்கொண்டே இருந்தேன் அவளிடம் இருந்து ஏதாவது அசைவு இருக்கிறதா என்று. அவள் தொடைகளுக்கு இடையே ஜட்டிக்கு மேலே என் கையை எடுத்து சென்று தடவிக்கொண்டே இருந்தேன். இப்போது என் கை அவள் சூத்து பக்கம் சென்றது, நல்லா இறுக்கமாக இருந்தது அந்த தர்பூசணி சூத்து. என் கைகளில் இருக்கும் முடிகள் தூக்கிட்டு டிங் என்று நின்றது. அவள் சூத்து வட்ட வடிவில் சதையுடன் இருந்தன. கார் ஆடுவதில் என் கையும் அவள் சூத்தை ஆட்டி ஆட்டி பார்த்தது. என் கை அவள் இரு தொடைக்கு நடுவே மீண்டும் சென்றது. ஹ்ம்ம் என்ன சுகம். அவள் புண்டைக்கு மிக அருகே அது இருக்க என்னால் மூடை அடக்க முடியவில்லை, என் சுன்னி புடைத்துக்கொண்டு நின்றது. நான் அமைதியாக என் ஜிப்பை கழட்டிவிட்டு என் சுன்னிக்கு மசாஜ் கொடுத்தேன். அவள் கால் மூடி இருந்ததால் அதற்க்கு மேலே என் கையை எடுத்ஹ்டு செல்ல முடியவில்லை.