text
stringlengths
328
398k
கோவை மாவட்டம் பொள்ளாட்சியில் காவல்நிலையத்திற்கு கடிதம் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நிலையில் 3 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை மாவட்டம் பொள்ளாட்சி குமரன் நகரில் இந்து முன்னணி நிர்வாகிகள் மற்றும் பாஜக நிர்வாகிகள் உள்ளிட்ட வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன. இது தொடர்பாக பாப்புலர் பிரண்ட் அமைப்பில் இருந்து சுமார் 6 பேர் கைது செய்யப்பட்டன. இந்நிலையில் பொள்ளாட்சி மேற்கு காவல் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து தபால் ஒன்று வந்தது. அதில் பொள்ளாட்சியில் 16 இடங்களில் பெட்ரோல் குண்டு வீசப்படும் அல்லது கையெறி குண்டு வீசப்படும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. அதே போல் காவல்துறை எங்களுக்கு எதிரியல்ல என்றும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதனிடையே கடிதத்தின் உண்மைத்தன்மை மற்றும் இதனை அனுப்பியது யார்? என்பது குறித்து 3 தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
By Sufi Manzil 0 Comment March 13, 2011 ibn e arabi, saifudeen alim, soofi hazrath, sufi, vahdathul wujud அத்தஸவ்வுபு-ஸூபிஸம் (التّصوّف) தொகுப்பாளர்: மௌலானா மௌலவி அல்ஹாஜ் அஷ்ஷெய்கு S.M.H.. முஹம்மதலி ஸைபுத்தீன் ஆலிம் ரஹ்மானி பாகவி ஸூபி காதிரி அவர்கள். என்னுரை அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹுத்தஆலாவின் திருநாமத்தால் துவக்கம். உஜூதாலும்-உளதாலும், தாத்து – தத்சொரூபத்தாலும் ஒன்றாகிய பரம்பொருளான ஏகனாகிய ஒருவனுக்கே சர்வ புகழும். மிக்க சம்பூரணத்துவமாக வெளிஜயான அல்லாஹுதஆலாவின் பேரொளியான, காருண்யமான, மெஞ்ஞானப் பட்டினமான நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும், அவர்களது குடும்பத்தினர்கள், தோழர்கள், இறைநேசர்கள், ஷெய்குமார்கள் அனைவர்கள் மீதும் கருணையும், ஈடேற்றமும் உண்டாவதாக! اوّلُ الدّين معرفةُ الله அவ்வலுத் தீனி மஃரிபத்துல்லாஹ் – மார்க்கத்தில் முதன்மையானது அல்லாஹுத்தஆலாவை அறிவது' என்ற திருவாக்கின்படி முதல்கடமை அல்லாஹுதஆலாவை அறிவதாகும். இதுவே எல்லா விதி விலக்குகளுக்கும் அடிப்படையாகும். இது இன்றி எதுவும் சரியாக அமையாது. ஆதலால் ஆரிபீன்களான மெஞ்ஞானிகள் இக்கலைக்கு அத்தஸவ்வுபு-ஸூபிஸம் என்றும், இது உடையோர்களுக்கு ஸூபிகள் என்றும் பெயர் வைத்துள்ளார்கள். இதற்காக முழு ஊக்கத்தை செலவளித்து மக்களுக்கு அதிலும் முரீதீன்கள், முஹிப்பீன்களுக்கு இதன் எதார்த்தமான மெஞ்ஞான வஹ்தத்துல் வுஜூது –உளது ஒன்று என்பதை வாய் மூலமாகவும், செயல் மூலமாகவும், நூற்கள் மூலமாகவும் வெளிப்படுத்தியுள்ளார்கள். அவர்கள் தம்தமக்கு தவ்கு – அனுபவ அறிவினாலும் கஷ்பு – உதிப்பு வெளிப்பாடு அறிவினாலும் ஏற்பட்டதை அடிப்படையாக வைத்து குர்ஆன் ஹதீதுகளின் வெளிச்சத்தில் நூற்கள் பல எழுதி நிலையான அழியா பொக்கிஷமாக விட்டுச் சென்றுள்ளார்கள். அல்லாஹு தஆலா அவர்களுக்கு நற்கூலியை பெரிதாக்குவானாக. வாழையடி வாழையாக அதன் தொடர் ஷெய்குமார்கள் மூலம் வந்துக் கொண்டிருப்பது வெள்ளிடைமலை. 'அத்தஸவ்வுபு-ஸூபிஸம்' என்பது இமாம் கஸ்ஸாலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் சொல்வது போல், அல்லாஹ்வுக்காக இருதயத்தை தனிமைப்படுத்துவதும், அவனல்லாதவற்றை (நீக்கி) அற்பமாக கருதுவதாகும். இம்மெஞ்ஞான கலைக்கு 'அத்தஸவ்வுபு – ஸூபிஸம்' என்று பெயர் வைப்பதற்கு நான்கு காரணங்களை கோடிட்டு காட்டியிருக்கிறார்கள். 1. இக்கலையுடையவர்களான ஸூபிய்யாக்களின் அஸ்ரார் – இரகசியங்கள் தெளிவானதாகவும், அவர்களது அடிச்சுவடுகள் சுத்தமாகவும் இருக்கின்றன. இதனால் 'அத்தஸவ்வுபு' என்பதின் மூலம் ஸபா-சுத்தம் என்பதிலிருந்து எடுக்கப்பட்டது போலாகும். 2. இவர்களது ஊக்கம் உயர்வாகவும், அல்லாஹுதஆலா அளவில் அவர்களது இருதயம் முன்னோக்கி இருப்பதினாலும் அல்லாஹு தஆலாவின் சன்னிதானத்தில் الصّفّ الاوّل அஸ்ஸப்புல் அவ்வல் – முதல் வரிசையில் இருக்கிறார்கள். இதனால் அத்தஸவ்வுபு என்பதின் மூலம் அஸ்ஸப்புல் அவ்வல் -முதல் வரிசை என்பதிலிருந்து எடுக்கப்பட்டது போலாகும். 3. இவர்களது குணாதிசியங்கள், நபி நாயகத்தின் திண்ணை தோழர்களான அஹ்லுஸ்ஸுப்பாக்களின் குணாதிசியங்களுக்கு நெருக்கமாக اهل الصّفّةஇருப்பதினாலாகும். இதனால் அத்தஸவ்வுபு என்பதின் மூலம் ஸுபு;பத் -திண்ணை என்பதிலிருந்து எடுக்கப்பட்டது போலாகும். நம் சங்கைக்குரிய ஷெய்கு நாயகம் கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஜீஸ் அவர்கள் ஸூபி மன்ஸில்களின் திறப்பு விழா வாழ்த்துப் பாடல்களில், نُسمّي بصوفي منزل للتّبرّك . بمنزل اصحاب النّبي اهل الصّفّة நாம் நாயகத் தோழர்களான அஹ்லுஸ்ஸுப்பத்-வராந்தைகாரர்களுடைய ஸ்தலத்தைக் கொண்டு பரகத்தை நாடி இதற்கு 'ஸூபி மன்ஸில்' என்று பெயர் வைத்திருக்கிறோம் என்று பாடியுள்ளார்கள். 4. இவர்கள் ஸூப்-கம்பளி ஆடைகளை தேர்ந்தெடுத்து உடுத்தி வந்ததினாலாகும். இதனால் அத்தஸவ்வுபு என்பதின் மூலம் 'ஸூப்-கம்பளி'என்பதிலிருந்து எடுக்கப்பட்டது போலாகும். ஸூப் – கம்பளி ஆடை அல்லாஹு தஆலாவுக்கும், அவனது ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கும் உகப்பானதாக இருந்ததினால் 'யாஅய்யுஹல் முஸ்ஸம்மில், யா அய்யுஹல் முத்தத்திர் (கம்பளி) ஆடை போர்த்தியவரே! என்று நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை அழைத்திருக்கிறான். ஸுப்ஹானல்லாஹ்! இக்காரணங்களை மனதில் கொண்டு இவ்வடியேன் இந்நூலுக்கு 'அத்தஸவ்வுபு-ஸூபிஸம்' என்று பெயர் வைத்துள்ளேன். இந்நூலில் எழுதப்பட்டது அனைத்தும், இத்துறையில் தேர்ச்சி பெற்ற வல்லுனர்களான மகான்களின் நூற்களிலிருந்தே சுருக்கி எழுதியுள்ளேன். அதிலும் குறிப்பாக சங்கைக்குரிய மகான் அஷ்ஷெய்கு முஹம்மது இப்னு பள்ளுல்லாஹி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் எழுதிய 'அத்துஹ்பத்துல் முர்ஸலா, அல்ஹகீகா நூலிலிருந்தும், அல் அல்லாமா காதிரு லெப்பை இப்னு அப்தில் காதிர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் எழுதிய 'அத்தரீஆ' நூலிலிருந்தும், இம்மூன்று நூற்களுக்கும் மொத்தமாக தமிழில் சங்கைக்குரிய மகான் எங்கள் ஷெய்குநாயகம் அவர்கள் மொழிப் பெயர்த்த நூலிலிருந்தும், சங்கைக்குரிய மகான் அஷ்ஷாஹ் முஹம்மது அப்துல் காதிர் ஹைதராபாத் ஸூபி ஹழ்ரத் அவர்கள் எழுதிய 'அல்ஹக், அஸ்ஸுலூக் என்ற நூற்களின் மொழிப்பெயர்ப்பில் இருந்தும் (மொழிபெயர்ப்பு நம் ஷெய்கு நாயகம் ஸூபி ஹழ்ரத் அவர்கள் செய்துள்ளார்கள்) 'அல்ஹகீகா' என்ற நூலிலிருந்தும் (மொழிபெயர்ப்பு நம் சங்கைக்குரிய கலீபா செய்யிது முஹம்மது ஜலாலுத்தீன் பூக்கோயா தங்கள் அவர்கள் செய்துள்ளார்கள்) மகான் அஷ்ஷெய்கு அலி இப்னு அஹ்மதல் மஹாயிமி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் எழுதிய 'இறாஅத்துத்தகாயிகி' என்ற நூலை மொழிபெயர்த்;து 'அகமியக்கண்ணாடி' என்ற பெயரில் நம் ஷெய்கு நாயகம் அவர்கள் வெளியிட்ட நூலிலிருந்தும் அவர்கள் தொகுத்த 'இள்ஹாறுல் ஹக் – சத்தியப் பிரகடனம்' என்ற நூலிலிருந்தும் சுருக்கி தொகுத்துள்ளேன். அடியேனின் சில குறிப்புகளை தவிர்த்து வேறு எந்த சொந்தக் கருத்தையும் எழுதவில்லை. முரீதீன்கள், முஹிப்பீன்கள் பலரும் நம் மகான்களான ஷெய்குமார்களின் நூற்களின் கருத்துக்கள் மனதில் விளங்க முடியாமல் இருக்கின்றனவே என்று மனச்சோர்வடைந்து அங்கலாய்ந்துக் கொண்டு இருக்கும் போதெல்லாம் மிக சுருக்கமாகவும், விளக்கமாகவும் இது சம்பந்தமான ஒரு நூல் வெளியிட வேண்டுமென்று நீண்ட காலமாக இருந்த அபிலாசை இப்போதுதான் கைகூடி உங்கள் கரங்களில் தவழ்கின்றது. அல்ஹம்துலில்லாஹ். எல்லோர்களும் இதை வரவேற்று படித்து பயன் பெறுவதே எமது குறிக்கோள்! மூல நூற்களைக் கொண்டு பயனடைந்தது போல இந்நூலைக் கொண்டும் பயனடைந்து இவ்வடியேனுக்கு துஆ செய்யுங்கள். நம் ஷெய்குமார்களின் பொருட்டால் மேலும் பல நூற்கள் எழுத உங்களது துஆக்களில் இணைத்துக் கொள்ளுங்கள். ஞான வழிப்பாட்டையில் வெற்றி நடைப்போட்டு சித்தியடைந்து, நல் மகான்களின் கூட்டத்தில் எல்லாம் வல்ல அல்லாஹுதஆலா சேர்த்து வைப்பானாக! ஆமீன். சமுதாய ஊழியன், S.M.H. முஹம்மதலி ஸைபுத்தீன் அத்தஸவ்வுபு-ஸூபிஸம் சுருதி, யுக்திப் பிரமாணத்தாலும் இறைவனை அறிந்த மெஞ்ஞானிகளான ஆரிபீன்களின் 'தவ்கு' எனும் அனுபவ அறிவினாலும் அறியப்பட்டது. எதார்த்தத்தில் பரம்பொருளான அல்லாஹுதஆலாவும் அவனுடைய செயல்களுமேயல்லாது வேறொன்றுமில்லை. வாஜிபுல் உஜூதான – எப்போதும் உளதாக இருப்பது அவசியமான மெய்ப்பொருளான அல்லாஹுhஆலாவுக்கு உருவமும், காலதேச எல்லைகளும் வேறெவ்விதக் கட்டுப்பாடுகளும் இல்லை. அப்படி இருந்தும் அந்த அரூபியான வாஜிபுல் உஜூதான அல்லாஹுதஆலாவில் அரூபத் தன்மை கெடாமல் மும்கினுல் உஜூதான – உளது, இலது இவை இரண்டும் அவசியமில்லாத சிருஷ்டிகள் தோன்றுகின்றன. அவன் தனது இல்மில் – அறிவில் இருந்ததை ஒன்றன்பின் ஒன்றாகவும் ஒன்றன் வழியாகவும் வெளிப்படுத்துகிறான் – படைக்கிறான். முந்தின சிருஷ்டி இரண்டாவது சிருஷ்டிக்கு ஸபபு – காரணமாகவும், இரண்டாவது சிருஷ்டி முந்தின சிருஷ்டிக்கு முஸப்பபு – காரியமாகவும் இருந்த போதிலும் முந்தையது இரண்டாவதைப் படைக்கவில்லை. முந்தியதை எப்படி அல்லாஹுதஆலா படைத்தானோ அதைப்போல் இரண்டாவதையும் அவனேதான் படைத்தான். முந்தியது எப்படி அவனுடைய தத்துவம் எனும் கரத்தில் அகப்பட்டிருக்கிறதோ அதைப்போல் பிந்தியதும் அவனுடைய தத்துவக்கரத்திலேயே அகப்பட்டிருக்கிறது. அவனன்றி ஓர் அணுவும் ஆடவோ அசையவோ முடியாது. இப்படி ஒன்றன் பின்னொன்று அதன் பின் மற்றொன்றாக இப்படியே சங்கிலித் தொடரைப் போன்று வெளியாகிக் கொண்டிருக்கிற அகில உலகத்தின் சகல சிருஷ்டிகளும் அந்த மெய்ப்பொருளான ஹக்குத்தஆலாவைக் கொண்டே நிலைத்திருப்பதினால் அவை அனைத்தும் 'அஃராளு – ஆதேயம் எனவும், 'ளில்லு – நிழல்' எனவும், இன்னும் இதே கருத்தைக் கொண்டு அவைகள் 'கியால்-கற்பனை' எனவும் ஸூபிய்யாக்களான மெஞ்ஞானிகள் சொல்லுகிறார்கள். இவை அனைத்திற்கும் நிலைக்களம் ஹக்குத்தஆலாவின் உஜூதேயாகும். மேலும் இரண்டாவது சிருஷ்டி முந்திய சிருஷ்டிக்குப் பிற்பாடு வருவதினாலும், அதைச் சார்ந்திருப்பதினாலும் முந்தியதை இரண்டாவதற்கு 'ஹகீக்கத்து தாத்து –தற்சொரூபம்' – 'ஜௌஹர்- ஆதாரம்' என்றும், இரண்டாவதை முந்தியதின் 'அறளு – ஆதேயம்' என்றும், 'ஸிபத்து – இலட்சணம்' பிஃலு-செயல்' என்றும் சொல்லுவார்கள். ஆகவே உலகம் பூராவும் 'அஃறாள் -ஆதேயங்களும்' ஜவாஹிறு – ஆதாரங்களுமாகும். ஹக்குத்தஆலாவைக் கொண்டு நிலைத்திருப்பதால் சகல வஸ்த்துகளும் அவனைக் கொண்டு தரிபாடாக இருக்கின்றன. இதனால் 'ஹகாயிகுல் அஷ்யாயி தாபிதுன் – வஸ்த்துக்களின் எதார்த்தம் தரிபாடானது' என்று சொல்லுவார்கள். ஸூபஸ்த்தாயிகள் என்பவர்கள் 'ஆலம் – அகிலம்' என்பது கனவு அதற்கு நிலைக்களம் மனிதனின் கற்பனையேயாகும் என்று சொல்கிறார்கள். இது சுத்த தவறான கொள்கையாகும். 'வஹ்தத்துல் உஜூது – உஜூது ஒன்று' என்று சொல்பவர்களிடத்தில் நகலிய்யத் -சுருதி பிரமாணத்தாலும் அகலிய்யத் -யுக்தி பிரமாணத்தாலும், கஷ்பிய்யத் -காட்சி அனுபவப் பிரமாணத்தாலும் உஜூதாக-உளதாக இருப்பது ஹக்கு ஸுபுஹானஹு வதஆலாவின் உஜூதாகவே இருக்கும். அவனுடைய தாத்தானது –தற்சொரூபமானது அவனுடைய உஜூதுக்கு ஐனானதாக-தானானதாகவே ஆகும். வேறானது அல்ல. முதகல்லிமீன்களான உஸூலுடைய உலமாக்கள் அவனது தாத்தாகிறது அவனுடைய உஜூதுக்கு வேறானதும், அதை வேண்டுவதுமாகும் என்று சொல்கிறார்கள். சரியான சொல் முந்தினதுவேயாகும். உஜூது ஒன்று, தாத்து இரண்டு-பலது என்று சொல்வதும் பிழையானதுவாகும். معرفةُ الله மஃரிபத்துல்லாஹ்-அல்லாஹுதஆலாவை அறிவது. அல்லாஹுதஆலாவை அறிவதற்கு மூன்று வழிகளாகும். تنزيه 1. தன்ஸீஹின் படி அறிவதாகும். அதாவது – அவனுடைய தாத்து, சிபத்துகளின் புறத்தினால் அவனுக்கு இலாயிக்கல்லாதவைகள் அடங்கலை விட்டும் பரிசுத்தமானவன் என்று அறிவதாகும். இவ்வழி குறைவான வழியாகும். 2. தஷ்பீஹின் تشبيه படி அறிவதாகும். அதாவது متشابه முதஷாபிஹான – நேர் பொருள் பொருந்தாத திருக்குர்ஆன் வசனங்களை அவைகளின் நேரடியான பொருள்களிலேயே சுமத்தாட்டுவதும், இன்னும் அவனுடைய தாத்து, சிபாத்துகளின் புறத்தினால் சிருஷ்டிகளுடைய உருவங்களையும் உறுப்புகளையும் அவனுக்கு தரிப்படுத்துவதாகும். இவ்வழி குப்ரான வழியாகும். அல்லாஹு தஆலா இவைகளை விட்டும் மிக உயர்வாகி பரிசுத்தமாகிவிட்டான 3. தன்ஸீஹுக்கும் தஷ்பீஹுக்கும் இடையில் சேகரமாக்கிய படியும், பின்பு கலப்பற்ற தன்ஸீஹின் படியும் அறிவதாகும். تنزيه محض ليس كمثله شييٌ அதாவது:- லைஸக மித்லிஹி ஷைவுன்' –அவனைப் போன்று ஒரு வஸ்த்துவுமில்லை (42:11) என்று அவன் சொன்னது போல் அவனுடைய தாத்தின் புறத்தினால் எவ்விதமான எல்லையும், கட்டுப்பாடும், கோலமும் இல்லை என்று நம்புவதும், வலஹு குல்லு ஷையின் وله كلّ شي – அவனுக்கு எல்லா வஸ்த்துவும் உண்டு (27:91) என்று அவன் சொன்னது போல் அவனுக்கு அவனுடைய சிபாத்தின் புறத்தினாலும் தஜல்லியாத்தின் تخلّيات -தோற்றங்களின் புறத்தினாலும் முன்பு மறுக்கப்பட்டவைகள் எல்லாம் உண்டு என்று நம்புவதும்,அல்லாஹு தஆலாவுக்கு வேறொரு பொருள் அறவே இல்லாததினால் வேறொன்றைக் கொண்டு ஒப்பானவனில்லை என்றும் 'தஸ்பீஹ்' உடைய கோலங்களில் வெளியானவனாக இருப்பதுடன் அவன் முன் இருந்த 'தன்ஸீஹ்'யை விட்டும் பேதகமாகவுமில்லை என்று நம்புவதும்,இன்னும் 'தன்ஸீஹானது' அவனுக்கு அவனுடைய தாத்தைப் பொருத்ததாகும். 'தஷ்பீஹானது' அவனுடைய மள்ஹரை-வெளியாகும் ஸ்தானத்தைப் பொருத்ததாகும் என்று நம்புவதும், ஸுபுஹான ரப்பிக ரப்பில் இஸ்ஸத்தி அம்மா யசிபூன் سبحان ربّالعزّة عماّ يصفونசிறப்புடைய உம்முடைய போஷகன், அவர்கள் வர்ணிக்கும் வர்ணிப்பை விட்டும் பரிசுத்தமானவன்' (37:180) என்று சொன்னதுபோல் அவன் தன்ஸீஹ், தஷ்பீஹ் இவை இரண்டிலேயும் கட்டுப்பட்டவனில்லை என்று நம்புவதுமாகும். இவ்வழிதான் பரிபூரண வழியாகும். அல்லாஹு தஆலாவின் உஜூதிற்கு கோலமில்லை, எல்லையுமில்லை, கட்டுப்பாடுமில்லை. அப்படி தன்ஸீஹாக இருப்பதுடன் கோலத்திலும், குணப்பாட்டிலும், எல்லையிலும் வெளியானது – தோன்றினது கோலமின்மை, எல்லையின்மையில் நின்றும் அது எதன் பேரில் இருந்ததோ அதை விட்டும் பேதகப்படவுமில்லை. ஆதியில் எதன் பேரில் இருந்ததோ அப்படியே இப்போதும் இருக்கிறது. சங்கைக்குரிய ஷெய்குல் அக்பர் முஹ்யித்தீன் இப்னு அரபி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் 'புஸூஸுல் ஹிகம்' எனும் நூலில் சொன்ன கவிகளின் கருத்தும் இதுவேதான். فانْ قلت بالتّنزيه كنْت مقيّدًا وان قلت با لتّشْبيه كنت محمدّدًا وان قلت بالامرين كنت مسدّدًا وكنت اماما فيامعارف سيدًا فمن قال بالاشفع كان مشرّكًا ومن قال بالافراد كان موحّدًا فايّاك والتّشبيه ان كنت ثنيًا واياك واتّنويه ان كنت مفردًا 'நீன் தன்ஸீஹை கொண்டு (மட்டும் தஷ்பீஹ் இல்லாமல்) சொன்னால் நீன் (அவனை தன்ஸீஹ் உடைய சூரத்தை-கோலத்தைக் கொண்டு) கட்டுப்பாட்டுகு;குள் ஆக்கிவிட்டாய். நீன் 'தஷ்பீஹ்' கொண்டு (மட்டும் 'தன்ஸீஹ்' இல்லாமல்) சொன்னால் நீன் (அவனை 'தஷ்பீஹ்' உடைய கோலத்தைக் கொண்டு) எல்லைக்குள் ஆக்கி விட்டாய். நீன் (தன்ஸீஹ், தஷ்பீஹ் எனும்) இரண்டு கருமங்களையும் கொண்டு சொன்னால் நேரான வழியில் ஆனவனாகவும், மஃரிபாவில் -மெஞ்ஞானங்களில் இமாமாகவும் தலைவனாகவும் ஆகுவாய் ஆகவே எவன் (ஒன்றாகிய ஹக்கை அவனோடு கல்கை –சிருஷ்டியை தரிபடுத்துவது கொண்டு) இரண்டாக்கி சொல்வானேயானால் அவன் (உஜூதில் கல்கை ஹக்கோடு) கூட்டாக்கியவனாகுவான். எவன் ஒன்றாக்கி சொல்வானேயானால் அவன் (ஹக்கை உஜூதில் ஒன்றாக்கி ஒன்றென்று தரிபடுத்தி அவனோடு அவனல்லாததை தரிபடுத்தாததினால்)முவஹ்ஹிதாக (ஒன்றாக்கியவனாக) ஆகுவான். ஆகையினால் நீன் (ஹக்கையும், கல்கையும் இரண்டு என்று சொல்லி) இரண்டாக்குவாயானால்(கல்கை ஹக்கோடு தரிபடுத்தி அவனை அதைக் கொண்டு) ஒப்பாக்குவதை பயந்து கொள்! தவிர்த்து கொள்!! (எனினும் கல்கை ஹக்குடைய தஜல்லியாத்தின் சூரத்து –வெளிப்பாட்டின் கோலம் என்றும், அது தன்னிலே மவ்ஜூது –உளதானது அல்ல என்றும் தரிபடுத்துவது அவசியமாகும்.) நீன் ஒன்று என்று சொன்னால் தன்ஸீஹ் செய்வதை தவிர்ந்து கொள்! இன்னும் அந்த உஜூதாகிறது ஒன்றேயாகும். ஆனால் உடைகளாகிறது பலதாக இருக்கும். உஜூதில் பலது என்பது மள்ஹருடைய –வெளியாகும் ஸ்தானத்தினுடைய புறத்தினாலேயே ஆகும். وماالوجه الّا واحدٌ غير انّه اذاانت اعددتّ المراياتعدّدا 'முகம் ஒன்றையல்லாதில்லை. எனினும் நீ கண்ணாடிகளைப் பலதாக்குவாயானால் அது பலதாகிவிடும்.' சகல சிருஷ்டிகளும் அந்த உஜூதான – உளதான ஹக்குதஆலாவை விட்டும் நீங்கி இருக்காது. ஆகவே சிருஷ்டிகளை உண்டாக்குவதற்கு முன்பும், பின்பும் அந்த உஜூது ஹக்குதஆலா ஒருவனுக்கு மட்டுமேயாகும். உலகமாகிறது அதன் சகல பாகங்களுடன் அஃராளு- ஆதேயங்களாகும். ஆதாரமாகிறது அந்த உஜூதேயாகும். انّما الكون خيال فهو حقٌ في ال حقيقة . كلّ من يفهم هاذا حاز اسرار الطّريقة 'நிச்சயமாக கௌன் -சிருஷ்டிகள் கற்பனையானதாகும். எதார்த்தத்தில் அவனே ஹக்கானவனாகும். இதை விளங்கிய ஒவ்வொருவரும் தரீகத்தின் இரகசியங்களை சேகரித்துக் கொண்டார்' என்று சங்கைக்குரிய மகான் முஹ்யித்தீன் இப்னு அரபி அவர்கள் பாடிய கவியின் கருத்தும் இதுவாகும். உலகம் கற்பனையானதாகும். எதார்த்தத்தில் அதற்கு உஜூது இல்லை. கண்ணாடியில் பதியும் கோலத்தைப் போன்றும், தாகித்தவன் கானல் நீரை பார்த்து தண்ணீர் என்று எண்ணுவது போன்றாகும். மெய்ப்பொருளான ஹக்கான ஒருவனான அல்லாஹ்வின் உஜூதைத் தவிர வேறொன்றுமில்லை. மற்தபாக்கள் – படித்தரங்கள். مرتبة ரபீவுத்தரஜாதرفيع الدّرخات;-படித்தரங்கள் உயர்த்தியானவன்' என்று திருக்குர்ஆனில் 40:15 சொன்னதுபோல் அவனது உஜூது வெளியாவதை தேடிய கமாலாத்து –பூரணத்துவமான மற்தபாக்களில் இறங்குகிற புறத்தில் அனேகமான மற்தபாக்கள் அவனது உஜூதுக்கு உண்டு. மெஞ்ஞானிகளான ஸூபியாக்கள் பலரும் பலவிதமாக எண்ணிக் காட்டியுள்ளார்கள். சங்கைக்குரிய மகான் அஷ்ஷெய்கு அப்துல் கரீம் அல்ஜியலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தங்களது 'அல்கஹ்பு வற்றஹீம். الكهف والرّقيم – எனும் நூலில் நாற்பது படித்தரங்களை எண்ணிக் காட்டியுள்ளார்கள். எங்களது ஷெய்கு நாயகம் ஸூபி ஹழ்ரத் கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஸீஸ் அவர்களின் அத்துஹ்பத்துல் முற்ஸலாவின் மொழிப் பெயர்ப்பு நூலை காண்க!) அத்துஹ்பத்துல் முர்ஸலா எனும் நூலாசிரியர் அஷ்ஷெய்கு முஹம்மது இப்னு பழ்லுல்லாஹ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ஏழு மற்தபாக்களாக – படித்தரங்களாக சுருக்கி எழுதியுள்ளார்கள். அதனை மிக சுருக்கமாக கீழே தருகிறோம். 1. அல் அஹதிய்யத்- الاحديّة தனித்தன்மையானது. அல்லாதஅய்யுனு –குறிப்பில்லாதது அல்இத்லாகு-குறிப்பை விட்டும் பொதுப்படையானது. அத்தாதுல் பஹ்து-கலப்பற்ற தத்சொரூபம். ஜம்வுல்ஜம்வு-சேகரத்தின் சேகரம். ஹகீகத்துல் ஹகாயிகி-எதார்த்தங்களின் எதார்த்தம். அல்அமா-விபரமில்லாதது. அத்தாத்துல் ஸாதஜ்-கலப்பற்ற தாத்து. அல்மஸ்கூத்து அன்ஹு-அதைத் தொட்டும் வாய் பொத்தப்பட்டது. இதற்கு மேலால் வேறொரு மர்த்த்தபா இல்லை. சகல மர்தபாக்களும் இதற்கு கீழே உள்ளதாகும். 2. அல் வஹ்தத்-தனியாக இருப்பது. அத்தஅய்யனுல் அவ்வல்-முதலாவது குறிப்பு. அல்ஹகீகத்துல் முஹம்மதிய்யா-முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் எதார்த்தம். மகாமு அவ்அத்னா- நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு மட்டும் சொந்தமான, அரி, பெரிய பாக்கியமான மிஃராஜில் இங்கு வரை ஏற்றம் கிடைத்ததினால் 'அதை விட இன்னும் மிக நெருக்கமான இடம்' என்று சொல்லப்பட்டது. அல்பற்ஸகுல் குப்றா-மிக பெரிய மத்திபமானது. 3. அல்வாஹிதிய்யத்-ஒன்றாக இருப்பது. அத்தஅய்யுனத்தானி-இரண்டாவது குறிப்பு அல்ஹகீகத்துல் இன்ஸானிய்யா-மானுஷீகத்தின் எதார்த்தம். காப கௌஸைனி-இரு வில்லின் நாண். மற்தபத்துல் அஸ்மா-பெயர்களின் படித்தரம். இம் மூன்று படித்தரங்களும் பூர்வீகமானதாகும். துவக்கமில்லாததாகும். முந்தியது பிந்தியது என்று ஆனது புத்தியினாலாகும். காலத்தினால் அல்ல. காலமும், ஸ்தலமும் இல்லாத போது எப்படி இருந்தானோ அப்படியே இப்போதும் இருக்கிறான். 4. ஆலமுல் அர்வாஹ்-ரூஹுகளின் உலகம். ஆலமுல் ஜபரூத் -பொருந்தும் உலகம். ஆலமுல் கியாலுல் முத்லக்-கட்டுப்பாடாகாத கற்பனை உலகம். 5.ஆலமுல் மிதால்-மாதிரி உலகம் (சூட்சும உலகம்) ஆலமுல் கியாலில் முகய்யத்-கட்டுப்பாடான கற்பனை உலகம். 6. ஆலமுல் அஜ்ஸாம்- சடங்கள் உலகம். ஆலமுஷ்ஷஹாதத்-சாக்கிர உலகம். ஆலமுல் முல்க்- ஆட்சி அதிகார உலகம். 7. அல்இன்ஸான் -மனிதன். இதுதான் கடைசியான தஜல்லி-தோற்றமும் உடையுமாகும். ஒவ்வொரு படித்தரங்களின் பெயர்களுக்குரிய காரணங்கள், குணங்கள் பற்றி தக்க விளக்கமாக 'அத்துஹ்பத்துல் முற்ஸலா' எனும் நூல் போன்றவைகளில் எழுதப்பட்டுள்ளது. ஆசையுள்ளவர்கள் அவைகளில் காண்க! ஒரு மற்தபாவில்-படித்தரத்தில் இருந்து வேறொரு படித்தரத்திற்கு வருவதற்கு தஜல்லி- தோற்றம், தனஸ்ஸுல்-இறக்கம் என்று சொல்வார்கள். உதாரணமாக:- பாலாக இருக்கும் தன்மையிலிருந்து தயிரின் தன்மைக்கு வந்தால் அப்போது பால், தயிரின் கோலத்தில் தஜல்லியானது-தோன்றியது, வெளியானது, அல்லது தனஸ்ஸுல்-இறங்கியது என்று சொல்வார்கள். மெழுகு வர்த்தியின் எண்ணெய் உறைந்து மெழுகின் தன்மையில் வந்தால் அப்போது மெழுகுவர்த்தியின் எண்ணெய் மெழுகின் கோலத்தில் தஜல்லியானது- தோன்றியது, வெளியானது அல்லது தனஸ்ஸுல்-இறங்கியது என்று சொல்வார்கள். முதல் தன்மைக்கு நிலைமைக்கு திரும்பினால் உறூஜ்-ஏறுவது என்று சொல்வார்கள். மேற்கூறப்பட்ட 'அஹதிய்யத்' என்ற முதல் படித்தரம் அல்லாத ஏனை படித்தரங்களில் ஏறி, கூறப்பட்ட படித்தரங்களில் இருப்பது அனைத்தும் மனிதனில் வெளியானால் அவனுக்கு 'அல் இன்ஸானுல் காமில்' –சம்பூரண மனிதன் என்று சொல்லப்படும். இவ்வகையான ஏற்றம் சம்பூரணமாக நமது நபி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களில்தான் ஆனது. இதனாலேயே 'அக்மலுல் காமிலீன்-பூரணமானவர்களில் மிக சம்பூரணமானவர்'களாக ஆனார்கள். 'பாத்திஹுல் உஜூத்'-உஜூதுக்கு (உலகிற்கு) திறவு கோலாக, ஆரம்பமானவர்களாக இருப்பது போல், 'காத்தமுன் னபிய்யீன்'-நபிமார்களுக்கெல்லாம் கடைசியாக, முத்திரங்கமானவர்களாக ஆனார்கள். ஸல்லல்லாஹு அலா முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம். ஸல்லல்லாஹு அலா முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஸல்லல்லாஹு அலா முஹம்மத் யாரப்பி ஸல்லிஅலைஹி வஸல்லிம். படித்தரங்களுக்கிடையில் பாகுபடுத்துவது: بر مر تبة ازوجودحكم دارد . كر فرق مراتب نه كني زنديقي ஹர்மற்தபா அஸ் உஜூதே ஹுக்மு தாரத் கர்பர்கே மறாத்திப் ந குனி ஸிந்தீகி. 'உஜூதுடைய ஒவ்வொரு படித்தரங்களுக்கும், ஒரு (தனிமையான) ஹுக்மு –சட்டம் இருக்கிறது. நீ, படித்தரங்களுக்கிடையில் பாகுபாடு வைக்கவில்லையானால், ஸிந்தீக்காய் -காபிராகி விடுவாய்' என்று பாரஸீக கவிஞர் சொன்னது போல் உலூஹிய்யத்தின்-தெய்வீகத்தின் படித்தரங்களின் பெயர்களை சிருஷ்டிகளின் படித்தரங்களில் நடத்தக் கூடாது. எவனாவது அக்லையோ-அறிவையோ, அல்லது நப்ஸையோ அல்லது தபீஅத்தை- இயற்கையையோ அல்லது நட்சத்திரங்கள், அனாஸிருகள்-பூதங்கள், ஜமாதாத்து-நிரஸப் பொருள்கள், நபாதாத்து-தாவரப் பொருள்கள், ஹயவானாத்-ஜீவப் பொருள்கள் இவைகள் ஹக்குத் தஆலாவின் மள்ஹராக இருப்பதைக் கவனித்து தெய்வமென்று – அல்லாஹ்வென்று சொல்வானேயாயால் நிச்சயமாக அவன் பிழை செய்து விட்டான். ஸிந்தீக்காகி விட்டான் -காபிராகி விட்டான். ஜைது என்பவனின் கையைப் பார்த்து அது ஜைது என்று சொன்னால் பிழை செய்தவன் போலாகுவான். சகலத்திலும் உஜூது ஒன்றுதான் என்று சொன்னாலும் சரி, ஒவ்வொரு வஸ்துவும் இலாஹு -தெய்வம் என்று சொல்வதற்கு அனுமதியில்லை. இவ்விடம் கால் சருகி ஷிர்க்கில் வீழ்வதற்கான அபாயகரமான இடம். கவனம்! கவனம்!! الوجود الحقيقي – الوجود الاضافي – العينيّة – الغيريّة அல் உஜூது ஹகீகி, அல் உஜூதுல் இளாபி-எதார்த்தமான உள்ளமை, சேர்மானமான உள்ளமை. அல் ஐனிய்யத், அல் ஙைரியத்-தானானது, வேறானது பற்றிய விளக்கம்: ஐஸும், தண்ணீரும் இரண்டும் மற்றது தானாகவேயாகும். எது தண்ணீரோ அதுவே ஐஸாகும். எது ஐஸோ அது தண்ணீராகும். ஆனால் தண்ணீரின் ஓடுகின்ற உருவம் இப்போது மாறி ஐஸின் உறைகின்ற உருவம் உண்டாகிவிட்டது. மேலும் இந்த ஐஸின் உருவத்துடைய ஹுக்முகளும், குணபாடுகளும், அதாவது:- இயற்கை சுபாவமும், குணமும் கூட தண்ணீரை விட்டும் அலாதியாகிவிட்டது. ஆனால் ஐஸின் உருவத்துடைய உஜூது-உள்ளமையாகிறது ஹகீகிய்யா-எதார்த்தமானதாக இல்லை. என்றாலும் எந்த உள்ளமை தண்ணீருக்கு இருந்ததோ அதே உள்ளமைதான் இந்த ஐஸுக்குமாகும். ஐஸின் உருவம் சுயமான உள்ளமையின் வாடையையும் கூட நுகரவில்லை. வெறும் பார்வையிலும், கவனிப்பிலும், கனவிலும், கற்பனையிலுமே அதன் தோற்றமிருக்கிறது. பாருங்கள்! ஒரு கிலோ உடையுள்ள தண்ணீரை எடுத்துக் கொள்ளுங்கள். அதை ஐஸின் உருவத்தில் உறைய வையுங்கள். பின்னர் எடை போட்டுப் பார்த்தீர்களேயானால் கூடுதல், குறைதல் இல்லாது ஒரு கிலோ ஐஸே இருக்கும். பின்னர் அந்த ஐஸை உருக வைத்தால் தண்ணீரின் முந்திய உருவம் திரும்பவும் வந்து விடும். பின்னர் இந்த தண்ணீரை எடைபோட்டால் அதே எடைதானிருக்கும். அதாவது கூடுதல் குறைதல் இல்லாது ஒரு கிலோ தண்ணீரே இருக்கும். இதேபோல் ஒரு கிராம் தங்கத்தில் மோதிரம் செய்யுங்கள். பின்னர் எடைபோட்டுப் பாருங்கள். ஒரு கிராம் தங்கமே இருக்கும். உருக்கி விடுவீர்களேயானால் அந்த ஒரு கிராம் தங்கமே இருக்கும். மோதிரம் வரவும் இல்லை. போகவும் இல்லை. ஐஸ் தண்ணீரின் ஒரு நிலையும், கோலமும் ஆகும். மோதிரம் தங்கத்தின் ஒரு நிலையும் கோலமும் ஆகும். ஐஸும், மோதிரமும் எதார்த்தமான உள்ளமையின் வாடையை நுகரவில்லை. குமுளியும், அலையும், பனி கட்டியினால் உண்டாக்கப்பட்ட கூஜாவும் ஹகீகத்தின் -எதார்த்தமான புறத்தினால் இவை அனைத்தும் தண்ணீர் தானாகும். நாம ரூபங்களான குறிப்புகளின் படி தண்ணீருக்கு வேறானதாகும். இதைப் போல கானல் நீரும் ஹகீகத்தின் புறத்தினால் ஆகாயம்தானாகும். குறிப்பின் புறத்தினால் ஆகாயத்திற்கு வேறானதாகும். كلّ شيي هالك الاّ وجهه குல்லு ஷெய்யின் ஹாலிகுன் இல்லா வஜ்ஹஹு'-சகல வஸ்த்துக்களும் அழிந்ததாகும். (இல்லாமலானது ஆகும்.) அவனுடைய வஜ்ஹை(தாத்தை)தவிர' –அல்-குர்ஆன் (28:88) என்பதின் கருத்தும் இதுதான். ஐஸைப் பார்த்து தண்ணீர் என்றோ, அல்லது தண்ணீரைப் பார்த்து ஐஸ் என்றோ, தங்கத்தைப் பார்த்து மோதிரம் என்றோ, மோதிரத்தைப் பார்த்து தங்கம் என்றோ குமிழி, அலை, கூஜாவைப் பார்த்து தண்ணீர் என்றோ சொல்லக் கூடாது. ஐஸ் தண்ணீர்தான். தண்ணீர்தான் ஐஸ். மோதிரம் தங்கம்தான். தங்கம்தான் மோதிரம். குமிழி, அலை, கூஜா தண்ணீர்தான். தண்ணீர்தான் குமிழி, அலை, கூஜா. என்றாலும் அது அது எந்தக் கோலத்தில் இருக்கிறதோ அந்தக் கோலத்தின் ஹுக்மை-சட்டத்தை நடத்தாட்ட வேண்டும். இது ஷரீஅத் சட்டமாகும். ஆகவே எல்லா மற்தபாக்களிலும்-படித்தரங்களில் பேதகமாகாமலும், மாறாமலும், பிளாமலும், உலையாமலும், எதார்த்தமாக உண்டானதாக இருக்கக் கூடியது கலப்பற்ற உஜூது- பரம்பொருள் மட்டுமெயாகும். இதுவே ரப்புடைய வஜ்ஹு-தாத்தாகும். சுகங்கள், துன்பங்கள், வேதனைகள் பற்றி உஜூதானது தாத்தாலும் ஒன்றே. சிபத்துகளாலும் ஒன்றே. அதற்கு அறவே எண்ணிக்கை இல்லை என்று சரியான ஆதாரங்களைக் கொண்டு தரிப்பட்டிருக்க, விதிவிலக்குகளைக் கொண்டு வருத்தப்படுவது ஏன்? அவ்விதி விலக்குகளுக்கு கட்டுப்பட்டு நடந்தால் சுகம் கிடைக்குமென்றும், விரோதம் செய்தால் வேதனை கிடைக்குமென்றும், ஈருலக சம்பந்தமான பலவகையான நோய் நொம்பலங்களைக் கொண்டு சோதிப்பது ஏன்? தன்தனக்கே சுகத்தைக் கொடுப்பதும், வேதனை படுத்துவதாக ஆகாதா? என்ற கேள்விகள் மனதில் வந்தால் அதற்கான பதில்களை அறிந்துக் கொள்ளுங்கள்:- وما خلقت الجنّ والانس الاّ ليعبدون வமா கலக்துல் ஜின்ன வல் இன்ஸ இல்லாலி யஃபுதூன். 'ஜின்களையும், மனுக்களையும் என்னை வணங்குவதற்காகவேயல்லாது நான் படைக்கவில்லை' என்று அல்லாஹுதஆலா குர்ஆனில் (51:56) சொல்வது போன்று வணக்கம் புரிவதும், வருத்தங்களும், சுகங்களும் வேதனைகளும், துன்பங்களும் இவை அடங்கலும் சிருஷ்டிகளான குறிப்புகள் அளவில் மீளுவதாகும். அவனது உஜூது இவை அனைத்தை விட்டும் தூய்மையானதாகும். குறிப்பு:- சிருஷ்டியான குறிப்பு எனும் உணர்வு இவனில் இருக்கும்போதுதான் இவை அனைத்துமாகும். இவனது சிருஷ்டி என்ற உணர்வு அழிந்து போகி, அல்லாஹுதஆலா அளவில் போகிவிட்டால் அல்லாஹுதஆலாவின் உஜூதே அன்றி வேறு எதுவும் இல்லை. அஷ்ஷுஹூது – இறைவனை காட்சி காண்பது ஷுஹூது- காட்சி காண்பது இருவகை: 1. அஹ்லுல் ஜம்யி- சேகரமானவர்கள் எனும் வகுப்பினர்களிடத்தில், ஏதாவதொரு வஸ்துவை பார்த்தார்களேயானால் இது ஹக்குதஆலா தனது அஸ்மாக்களை-பெயர்களைப் பூண்டவனாக 'அஃயானுதாபிதா' எனும் கண்ணாடியில் அதைக் கொண்டு வெளியான வெளிப்பாடாகும் என்று தங்களது ஹிருதயத்தைக் கொண்டு காணுவதாகும். இவர்களிடத்தில் ஹக்குதஆலா ளாஹிராக-வெளியானவனாகவும், உலகம் பாதினாகும்-உள்ளானதாகும். சகல வஸ்த்துகளிலும் முதலாவது எட்டிக் கொள்வது அந்த உஜூதாகும். 2. அஹ்லுல் பர்க் – பிரிவினையானவர்கள் எனும் வகுப்பினர்களிடத்தில், ஏதாவது ஒரு வஸ்துவைப் பார்த்தார்களேயானால் இந்த வஸ்த்து அஃயானு தாஃபிதாவின் நிழல்களில் நின்றுமொரு நிழலாகும். அதை ஹக்குதஆலா தனது உஜூது எனும் கண்ணாடியில் வெளியாக்கியிருக்கிறான் என்று தங்களது இருதயத்தைக் கொண்டு காணுவதாகும். இவர்களிடத்தில் ஹக்குதஆலா பாதினாகும்-உள்ளானவனாகவும், உலகம் ளாஹிராக-வெளியானதாகும். இவ்விரண்டு காட்சிகளை நீ அறிந்துக் கொண்டு இவை இரண்டையும், அல்லது இதில் ஒன்றையாவது பற்றிப் பிடித்துக் கொள்! குறிப்பு:- அல்லாஹு தஆலாவின் இல்முல் இஜ்மாலியில்- தொகுப்டபான அறிவிலவ் தன்னையுமத் சிருஷ்டிகளையும் அறியும் பொழுது அறியப்பட்டதற்கு 'ஷஃனு' என்றும், இல்முத்தப்ஸீலில்-வகுப்பான அறிவில் அறியும் போது 'அஃயானு தாபிதா' என்றும், சிருஷ்டியான வெளியிலான உலகத்திற்கு 'அஃயானுல் காரிஜிய்யா' என்றும் சொல்வார்கள். காட்சி காண்பதளவில் சேர்த்து வைக்கும் வழிகள் சிருஷ்டிகளாகிய மள்ஹருகளில்-வெளியாகும் ஸ்தானங்களில் காட்சி காண்பதளவில் சேர்த்து வைக்கும் வழிகள் பல. அவைகளில் மூன்று வழிகளை ஆரிபீன்களான மெய்ஞ்ஞானிகள் தேர்ந்தெடுத்துள்ளார்கள். 1. قل الله ثمّ ذرهمகுலில்லாஹ் தும்ம தர்ஹும் 'அல்லாஹ் என்று சொல்லும், பின்னர் அவர்களை விட்டுவிடுங்கள்'- அல்குர்ஆன்(61:91)என்ற திருவசனத்திற்கு இணங்க, நீ ஜாமிஆன இஸ்மாகிய – அனைத்தையும் சேகரமாக்கிய பெயரான 'அல்லாஹ்' எனும் அச்சரங்களை 'பிக்ரு-சிந்தனை' எனும் பேனாவைக் கொண்டு இருதயமெனும் பலகையில் சூரிய ஒளியான சாயத்தைக் கொண்டு எழுத வேண்டும். அதாவது:- இப்படி ஒளியாக மனதில் எழுதப்பட்டிருப்பதாக சிந்திக்க வேண்டும். இந்த கோலமும் அல்லாஹுதஆலாவின் வெளிப்பாடுகளில் ஒரு வெளிப்பாடு. இதில் அவன் ஹுலூஸ்-விடுதி விடுதல், இத்திஹாது-ஒன்றாக சேர்தல் இன்றி வெளியாகி இருக்கிறான் என்று நீ நிர்ணயம் கொள்வதாகும். குறிப்பு: பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றினால் ஹுலூல்-விடுதிவிடுதல், இறங்குதல் என்றும், தண்ணீரும் சீனியும் ஒன்றாய் சேர்ந்தால் இத்திஹாது-ஒன்றாக சேர்தல் என்றும் சொல்லப்படும். இவைகளுக்கு இரண்டு பொருள்கள் வேண்டும். இங்கு அல்லாஹுதஆலாவும், அவனுடைய தோற்றங்களுமே அல்லாது வேறொன்றும் இல்லை. ஐஸில் தண்ணீர் வெளியானது போலும், தங்க நகைகளில் தங்கம் வெளியானது போலும் வெளியாகி இருக்கிறான் என்று நிர்ணயம் செய்து கொள்ள வேண்டும். 2. اقرأ كتابك كف بنفسك اليوم عليك حسيبا இக்ரஃ கிதாபக கபா பிநப்ஸிகல் யவ்ம அலைக்க ஹஸீபா 'உன்னுடைய கிதாபை ஏட்டை ஓது. இன்று நீனே உன்பேரில் கேள்வி கேட்கிறவனாக போதும்; -அல்-குர்ஆன் (17:14) என்ற திருவசனத்திற்கிணங்க உன்னுடைய 'ஐனுத்தாபிதா –வகுப்பான அல்லாஹ்வின் அறிவில் உள்ளதையும்' 'ஐனல் காரிஜா-சிருஷ்டியான வெளிரங்கமான உஜூதையும்' திடப்படுத்திக் கொண்டு இரண்டையும் ஒன்றாக ஆக்கி உன்னுடைய ஐனகாரிஜா, அல்லாஹ்வின் வெளியாகும் தானங்களில் ஒரு வெளியாகும் தானம், அதில் ஹுலூல், இத்திஹாது இல்லாமல் வெளியாகி இருக்கிறான் என்று நிர்ணயம் கொள்வதாகும். 3. قل ان كنتم تحبّون الله فاتبعوني يحببكم الله குல் இன்குன்தும் துஹிப்பூனல்லாஹ பத்தபிவூனி யுஹ்பிபுகுமுல்லாஹ்-'நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பவர்களாக இருப்பீர்களேயானால் என்னை பின்பற்றுங்கள்' என்று (நபியே) சொல்லுங்கள் -அல்குர்ஆன் (3:31) என்ற திருவசனத்திற்கிணங்க, ஆலமுல் கபீர் – (முழு சிருஷ்டியான) பெரிய உலகத்தையும், ஆலமுஸ்ஸகீர் -(மனிதனான) சிறிய உலகத்தையும், நிச்சயத்துக் கொண்டு பின் பெரிய உலகத்தை எடுத்துக் கொண்டு இது அல்லாஹுத் தஆலாவின் மள்ஹறுகளில் சம்பூரணமானது என்றும், இதில் ஹக்குதஆலா ஹுலூல்-விடுதி விடுதல், இத்திஹாது –ஒன்றாக சேருதல் இன்றி வெளியாகி இருக்கிறான் என்று நீ நிர்ணயம் கொள்வதாகும். இம்மூன்று வழிகளையும் அறிந்துக் கொண்டால் உன்னுடைய காமிலான ஷெய்குடைய உத்தரவின்படி மூன்றில் ஒன்றைப் பற்றிப் பிடித்துக் கொண்டு அல்லாஹ்வின் அருள் உன்னை இரண்டாவது பனாவின் ஸ்தானத்தளவில் சேர்த்து வைக்கிற வரையிலும் உன் அகக் கண்ணை கொண்டு அதை முஷாகதா-தியானித்துக் கொண்டு இருக்கவும். குளிப்பாட்டுகிறவனின் கையில் மைய்யித்தைப் போல், உன் நப்ஸை காமிலான ஷெய்கிடத்தில் ஒப்படைத்து அவருக்கு நீன் தொண்டு செய்வதைக் கொண்டேயல்லாது உனக்கு அது எளிதாகாது. அல்லாஹுதஆலாவின் பக்கம் நெருங்குவது பற்றிய விளக்கம். அல்லாஹ்தஆலாவின் பக்கம் நெருங்குவது இரு வகையிலாகும். 1. குற்புன்னவாபில்-நபிலான வணக்கங்களைக் கொண்டு நெருங்குவது:- لا يزال عبدي يتقرّب اليّ بانّوافل حتّي احبّه فاذا احببته كنت سمعه الّذي يسمع به وبصره الّذي يبصره به ويده الّتي يبطش بها ورجله الّتي يمشي بها – رواه البخري 'என்னுடைய அடியான் நபிலான வணக்கங்களைக் கொண்டு என்னளவில் நெருங்கிக் கொண்டே இருக்கிறான். நான் அவனை உகக்கிற வரையிலும், நான் அவனை உகந்து விட்டால் அவன் கேட்கின்ற கேள்வியாகவும், அவன் பார்க்கின்ற பார்வையாகவும், அவன் பிடிக்கின்ற கையாகவும், அவன் நடக்கின்ற காலாகவும் ஆகி விடுகின்றேன்.' (அல்ஹதீது குத்ஸி) அறிவிப்பு: புகாரி, மிஷ்காத் ஹதீது எண்:2260. 'குற்புன்னவாபில்' என்பது மனிதனுக்கு அல்லாஹுதஆலாவினால் இரவலாக கொடுக்கப்பட்ட, கட்டுப்பாடான, மானுஷீகத்துவ இலட்சணங்களில் கட்டுப்பாடுகள் அழிந்து அதற்கு பகரமாக கட்டுப்பாடுகள் இல்லாத அல்லாஹுதஆலாவின் இலட்சணங்கள் மனிதனில் வெளியாவதாகும். அப்போது அல்லாஹுதஆலாவின் உத்தரவு கொண்டு அல்லாஹுதஆலா செய்வது போன்று இவனும் செய்வான். 'மனித சிபாத்துகள் -இலட்சணங்கள் அல்லாஹுதஆலாவின் பூர்வீகமான இலட்சணங்களில் பனாவாகிறது-நாஸ்தியாகிறது' என்று சொன்னதின் கருத்து இதுவாகும். இது நப்லான வணக்கங்களை நிறைவேற்றி வந்ததன் பயனாகும். 2. குற்புல் பறாயில்-கடமையான வணக்கங்களைக் கொண்டு நெருங்குவது. ما تقرّب الي عبدي بشيي احبّ الي ممّا افترضت عليه என்னுடைய அடியான் என்னளவில் அவன் மீது நான் கடமையாக்கியதைவிட எனக்கு உகப்பான எப்பொருளைக் கொண்டும் நெருங்குவதில்லை. நூல்: புகாரி, மிஷ்காத் ஹதீது எண் 2260 'குற்புல் பறாயில் என்பது அடியான் சகல சிருஷ்டிகளின் உணர்வையும், தன்னை உணர்வதையும் கூட விட்டு விட்டு ஹக்குதஆலாவின் உஜூது ஒன்றைத் தவிர மற்றவை ஒன்றும் அவன் பார்வையில் ஷுஹூதில் தரிப்பாடாகாத விதமாக முழுவதுமாக ஐக்கியமாக அல்லாஹுதஆலாவில் பனாவாகிவிடுவதாகும். 'அடியானுடைய தாத்து, அல்லாஹு தஆலாவின் தாத்தில் பனாவாகிறது-நாஸ்தியாவது' என்று சொன்னதின் கருத்து இதுவாகும். இது பர்ளான வணக்கங்களை நிறைவேற்றி வந்ததன் பயனாகும். அடியான் தன் நப்ஸை விட்டும் இல்லாமலாகி மானுஷீக உஜூது உரியப்பட்டு அடிமைத்தனத்தின் ஒளி நூர்ந்து போகி சிருஷ்டியான ரூஹு பனாவாகிவிடுமானால் அப்போது அடியான் அல்லாஹுதஆலாவின் தாத்திய்யான தஜல்லிக்கும், சரிபாத்தியான தஜல்லிக்கும் தகுதியாகிவிடுகிறான். இவன் பேரில் அல்லாஹு தஆலா தாத்தைக் கொண்டு அல்லது சிபத்துக்களைக் கொண்டு தஜல்லியாக நாடினால் இவனை விட்டும் உரியப்பட்டதற்கு பகரமாக தன்னுடைய தாத்தில் நின்றும் ஒரு 'லதீபா'-அதி நுட்பமானதை, ஒன்றாய் சேராமலாகவும் அடியானின் ஹைக்கலில்-கோலத்தில் வைக்கிறான். அதற்குத்தான் 'ரூஹுல் குத்ஸு'(படைப்பினங்களை விட்டும்) பரிசுத்தமான ஆன்மா என்று பெயர் சொல்லப்படும். ஆகவே ஹக்குதஆலா தனது தாத்தைக் கொண்டோ அல்லது சிபத்துக்களில் ஒரு சிபத்தைக் கொண்டோ தஜல்லியானால் எதார்த்தத்தில் அவனும், அவனுடைய சிபத்தும் அவன் தன்பேரிலேயே வெளியானான். அடியானின் பேரில் அல்ல. இந்நேரத்தில் அடியானை அல்லாஹுதஆலா என்று சொல்லிவிடக் கூடாது. முறாக்கபா செய்யும் முறை குற்புன்னவாபிலும், குற்புல் பறாயிலும் சொல்லப்பட்ட அல்லாஹுதஆலா அளவில் நீ, நெருங்குவதை நாடினால் முதலாவதாக நபி நாயகம் ஸல்லல்லாஹ} அலைஹி வஸல்லம் அவர்களை சொல்லாலும், செயலாலும் வெளிரங்கத்திலும், உள்ரங்கத்திலும் பின்பற்றி நடப்பதை பற்றிப் பிடித்துக் கொள். உன் வெளிரங்கம் உள்ரங்கத்திற்கும், உள்ரங்கம் வெளிரங்கத்திற்கும் மாற்றமாக ஆகுவதை பயந்து கொள்! அது உனது அமல்களை அழித்து விடும். அல்லாஹுதஆலாவை விட்டும் தூரப்படுத்திவிடும். இரண்டாவதாக கலிமத்துத் தய்யிபா (லாஇலாஹ இல்லல்லாஹ்)வின் பொருள் தானாகவே இருக்கிற வஹ்தத்துல் உஜூதின்-உஜூது உன்றாக இருப்பதின் முறாக்கபாவை அதற்கு உளு இருக்க வேண்டும் என்ற விதியில்லாமல் (உளு இருந்தால் உத்தமம்தான்) இன்ன நேரத்தில்தான் செய்ய வேண்டுமென்றில்லாமல் எல்லா நேரத்திலும், மூச்சு போவது வருவது பற்றி கவனிக்காமலும், கலிமத்துத் தய்யிபாவின் அட்சரங்களை நோட்டமிடாமல் அதன் உட்கருத்தை மட்டுமே அல்லாது வேறொன்றையும் நோட்டமிடாது நீ நின்றவனாய், உட்கார்ந்தவனாய், நடக்கின்றவனாய், படுத்திருக்கிறவனாய், சகல நிலைமைகளிலும் செய்து வர வேண்டும். முறாக்கபா செய்யும்போது, முதலாவதாக உன்னுடைய ஹகீகத்தும், அந்தரங்கமும் ஹக்குதஆலாவுக்கு வேறாக இருப்பதான 'அன்னிய்யத்தை –நான் என்ற உணர்வை நீக்க வேண்டும். இதுதான் 'லாயிலாஹ' என்று நீக்குவதின் பொருளாகும். இரண்டாவதாக உன் கல்பில் ஹக்கு ஸுப்ஹானஹுவதஆலாவின் உஜூதை தரிப்படுத்துவதாகும். இதுதான் 'இல்லல்லாஹ்' என்று தரிபடுத்துவதின் பொருளாகும். சங்கைக்குரிய எங்களது தாதாபீர் அஷ்ஷாஹ் முஹம்மது அப்துல் காதிர் ஹைதராபாத் ஸூபி ஹழ்ரத் கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஸீஸ் அவர்கள் தங்களது 'அஸ்ஸுலூக்-இறைவழி நடை' எனும் உர்து நூலில், எல்லா தரீக்காக்களையும் ஆராய்ந்து தேர்ந்தெடுத்து எழுதிய முறாக்கபாவை அவர்களது கலீபா சங்கைக்குரிய எங்களது ஆன்மீக குருநாதர் அஷ்ஷாஹ் ஷெய்கு அப்துல் காதிர் ஸூபி ஹழ்ரத் கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஸீஸ் அவர்கள் மொழி பெயர்த்துள்ள அந்த அஸ்ஸுலூக் வாசகத்தை அப்படியே தருகிறேன். மிகச்சுருக்கமான, சக்தி வாய்ந்த, மிக்க நம்பிக்கையான, எதார்த்தமான முறாக்கபாவாகிறது:- ஒரே அடியாக கண்ணை மூடிக் கொண்டு ஹக்குதஆலாவின் தாத்தாகிய தன்னுடைய கல்பு இருதயமெனும் சமுத்திரத்தில் தன்னை மூழ்க வைத்து விட்டு உப்பு சமுத்திரத்தில் கரைந்து போவது போல் தன்னை அழித்து விட வேண்டும். தன்னோடு சகல உலகத்தையும் அழித்து விட வேண்டும். மனிதன் தானே உலகமாகும். எப்பொழுது மனிதன் அழிந்து விடுகிறானோ, அப்போது அவனோடு உலகம் அனைத்தும் அழிந்து விடுகிறது. உலகத்தில் எத்தனை சூறத்துகள் (கோலங்கள்) இருக்கின்றதோ அத்தனையும் மனிதனுடைய சூறத்துகளேயாகும். உலகம் ஒரு கண்ணாடி வீடாகும். மனிதனுடைய சூறத்துகள் அதில் காட்சியளிக்கிறது. எப்பொழுது மனிதன் கண்ணாடி வீட்டை விட்டும் வெளிப்பட்டு விடுவானோ ஒரு சூறத்தும் எந்த கண்ணாடியிலும் எஞ்சியிராது. இதே விதமாகவே மனிதனுக்கு அவசியம். அதாவது:- ஒவ்வொரு அணுக்களுடைய சூறத்துக்களையும் தன்னுடைய சூறத்தின் பிரதிபிம்பம் என்று உணர வேண்டும். இன்னும் உலகத்திலுள்ள ஒவ்வொரு அணுவின் உசும்புதல், ஒடுங்குதலும், என்னுடைய உசும்புதல், ஒடுங்குதலோடு கட்டுண்டதாகும் என்று உறுதிக் கொள்ள வேண்டும். இன்னும் எப்பொழுது கண்ணை மூடி விடுகிறானோ அப்போது உறுதி கொள்ள வேண்டும். அதாவது:- நான் எந்த சூறத்தின் காரணமாக தாத்தை விடடும் பிரிந்திருந்தேனோ அந்த என்னுடைய இன்ஸானிய்யத்தான சூறத்து-மனித உருவம் அழிந்து விட்டது. இப்பொழுது நான் தாத்து தானாகிவிட்டேன். வானம், பூமி இன்னும் சகல உலகமும் என்னோடு அழிந்து விட்டது. இப்போது நான் சூறத்தும், நிறமுமில்லாது சுத்தமாகயிருக்கிறேன். நான் உருவம், நிறமில்லாத, கரையில்லாத சமுத்திரமாக இருக்கும். எதுவரையிலும் என்றால் நான் சமுத்திரiமாக இருக்கும் என்ற நினைப்புங்கூட அழிந்து விட வேண்டும். இன்னும் இந்த நானும், சமுத்திரத்தின் நானும் தாத்து தானாக ஆகிவி;ட வேண்டும். ஆண்டவா! உனது நேசர் தீர்க்;கதரிசிகளுக்கெல்லாம் நாயகமான எங்கள் அருமை நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது பொருட்டினால் எங்களுக்கு இந்த வலுப்பமான வாழ்வைக் கொடுத்தருள்வாயாக! ஆமீன்!! குறிப்பு:- இந்த முறாக்கபாவை அடிப்படையாக வைத்துதான் நம் ஷெய்குநாயகம் கத்தஸல்லாஹு சிர்ரஹுல் அஸீஸ் அவர்கள் பைஅத் எடுக்கும் போது முரீதீன்களுக்கு இதை உபதேசித்தும், ஸில்ஸிலாவில் இணைத்தும் இருக்கிறார்கள். அல்ஹம்துலில்லாஹ். اسّير الباطنஅஸ்ஸய்றுல் பாதின்- அகமிய (இறைவழி) நடை: அகமிய இறைவழி நடை ஆறு வகை: 1. அஸ்ஸய்று லில்லாஹிاسّير لله- அல்லாஹ்வுக்காக அறியாமையில் இருந்து அறிவளவில் நடப்பது. 2.அஸ்ஸய்று இலல்லாஹிاسّير الي الله-அல்லாஹ் அளவில் அறிவிலிருந்து அமல்(வணக்கம்) அளவில் நடப்பது. 3.அஸ்ஸய்று குபில்லாஹிاسّير في الله- அல்லாஹ்வில் நடப்பது- அவனில் பனாவாகுவது-மாயுவுவது. 4. அஸ்ஸய்று மினல்லாஹிاسّير من الله- அல்லாஹ்வில் நின்றும் நடப்பது. மஹ்வில்-அழிவில் இருந்து ஸஹ்வு-தெளிவு அளவில் மீள்வது கொண்டு பகாவாகும்-நிலைப்பதுவாகும். 5. அஸ்ஸய்று பில்லாஹிاسّير باالله -அல்லாஹ்வைக் கொண்டு நடப்பது அல்லாஹ் உடைய சிபத்துகள், அஸ்மாக்களைக் கொண்டு பூணுவதாகிய பகாவுல் பகாவாகும்.-நிலைப்பதிலும் நிலைப்பதுவாகும். 6. அஸ்ஸய்று மஅல்லாஹிاسّير مع الله-அல்லாஹ் உடன் நடப்பது மேலுலகத்திலும், கீழுலகத்திலும் ஆட்சி, அதிகாரம் செய்வதாகும். வஹ்தத்துல் உஜூதின் பேரில் அறிவிக்கின்ற அல்குர்ஆன் ஆதாரங்கள் ولله المشرق والمغرب فاينما تولّوا فثمّ وجه الله கிழக்கும், மேற்கும் அல்லாஹ்வுக்குரியது. எப்பக்கம் (புலனால் அல்லது புத்தியால்) முன்னோக்கினாலும் அங்கு அல்லாஹ்வின் முகம் (தத்சொரூபத்தின் வெளிப்பாடு) இருக்கிறது (2:115) ونحن اقرب اليه من حبا الوريد நாம் அவனளவில் (அவனுடைய சக்திகளின் அந்தரங்கமாக இருக்கிறவிதத்தில்) அவனுடைய பிடரி நரம்பை விட மிக நெருக்கமாக இருக்கிறோம். (50:16) وهو معكم اينما كنتم நீங்கள் எங்கிருந்தாலம் (சகலத்திலும் அவனது உஜூது ஊடுறுவி இருக்கிற விதத்தில்) அவன் உங்களுடன் இருக்கிறான். (57:4) ونحن اقرب اليه منكم ولاكن لا تبصرون (மரண தருவாயிலிருக்கிற) அவன் அளவில் (அவனுடைய உறுப்புகளாகவும், சக்திகளாகவும் வெளிப்பாடாக இருக்கிற விதத்தில்) உங்களை விட நாம் மிக நெருக்கமாக இருக்கிறோம். என்றாலும் நீங்கள் (அதன் அந்தரங்கத்தை) பார்த்தறிய மாட்டீர்கள். (56:85) انّ الّذين يبا يعونك انّما يبايعون الله يد الله فوق ايديهم (நபி நாயகமே!) உங்களிடத்தில் (வெளிரங்கத்தில் கை கொடுத்து) பைஅத்து செய்கிறவர்கள் (எதார்த்தத்தில்) அல்லாஹ்விடத்தில்தான் பைஅத்து செய்கிறார்கள். (குறிப்புகளை விட்டும் பொதுவான) அல்லாஹ்வின் கை (வெளிப்பாடுகளில் நின்றுமுள்ள குறிப்பான) அவர்களது கைகளின் மீது இருக்கிறது.(48:10) هو الاوّل والآخر والضاهر والباطن وهو بكلّ شيي عليم அவனே (சகல சிருஷ்டிகளைக் காண) முந்தியவன்,(மள்ஹறு-வெளிப்பாடு ஸ்தானங்களில் வெளிப்படுவதில்) பிந்தியவன், (சிருஷ்டிகளின் கோலங்களைக் கொண்டு) வெளியானவன், (சிருஷ்டிகளின் வெளிப்பாடுகளை விட்டும்) உள்ளானவன். அவன் சர்வ பொருள்களைக் கொண்டும் அறிந்தவன். அவன் சர்வ பொருள்களைக் கொண்டும் அறிந்தவன். (57:3) وفي انفسكم افلا تبصرون உங்களது நப்ஸுகளிலேயே (வஹ்தத்துல் உஜூதுடைய அத்தாட்சிகள்) இருக்கிறது. நீங்கள் பார்க்க வேண்டாமா? (51:21) واذا سئلك عبادي عنّي فانّي قريب (நபியே!) என்னைப் பற்றி என்னுடைய அடியார்கள் உங்களிடம் கேட்டால் நான் (ஹகீகத்தை-எதார்த்தத்தைக் கொண்டு) சமீபமாக இருக்கிறேன் (என்று சொல்வீராக!) (2:186) وما رميت اذ رميت ولاكنّ الله رمي (நபியே! காபிர்கள் மீது மண்ணை) நீங்கள் வீசியபோது(வெளியில் உங்களில் நின்றும் வீசும் கோலம் உண்டானாலும்) நீங்கள் வீசவில்லை. எனினும் (உள்ளாகவும், அந்தரங்கமாகவும் இருக்கிற) அல்லாஹ் வீசினான். (8:17) وكان الله بكلّ شيي محيطا அல்லாஹு தஆலா (ஒரு அணுவும் கூட விடாது சகலத்திலும் ஊடுறுவிருக்கிற விதத்தில்) சகல பொருள்களையும் சூழ்ந்தவனாகிவிட்டான். (4:126) الا انّه بكلّ شيي محيطஅறிந்து கொள்! நிச்சயமாக அவன் ஒவ்வொரு பொருளைக் கொண்டு சூழ்ந்திருக்கிறான். (41:54) வஹ்தத்துல் உஜூதின் பேரில் அறிவிக்கின்ற அல்ஹதீது ஆதாரங்கள். اصدق كلمة قالها الشاعر كلمة لبيد— الا كلّ شيئ ما خلا الله باطل. (متفق عليه) (அறபி) கவிஞர் சொன்ன வார்த்தைகளில் உண்மையான வார்த்தை லுபைது கவிஞரின் 'அறிந்து கொள்! அல்லாஹ் அல்லாத அனைத்து பொருள்களும் பாதிலாகும் – தரிபாடாகாத இல்லாமையாகும்' என்று சொன்னதாகும். -புகாரி, முஸ்லிம், மிஷ்காத் ஹதீது எண் 4778 فماذا بعدالحقّي الّا الضّلال மெய்ப்பொருளுக்கு (அல்லாஹு தஆலாவின் உஜூதுக்கு) பின்னால் (வழிகேடான) பொய்யே அல்லாதில்லை (10:32) என்ற திருக்குர்ஆன் வசனத்தில் இருப்பது போன்று சிருஷ்டிகளுக்கு ஹக்கு சுபுஹானஹுவதஆலாவின் உஜூது பைழான் -உலிப்பதினால் அன்றி அறவே உஜூது இல்லை. انّ احدكم اذا قام الي الصّلوة فانّما يناجي ربّه بينه وبين القبلة உங்களில் ஒருவன் தொழுகைக்கு நின்றால் அவன் தன் ரப்பு-போசகனோடு வசனிக்கிறான். ஆகவே அவனுடைய ரப்பு (தஜல்லியின் புறத்தினால்) அவனுக்கும் கிப்லாவுக்குமிடையில் இருக்கிறான். (அல்ஹதீது) لا يزال عبدي يبقرّب اليّ لا لنّوافل حتي اُحبّه فاذا احببته كنت سمعه الّذي يسمع له ولصره الّذي يبصر به ويده الّتي يبطش بها ورجله الّتي يكسي بها رواهالبخاري 'என்னுடைய அடியான் நபிலான வணக்கங்களைக் கொண்டு என்னளவில் நெருங்கிக் கொண்டே இருக்கிறான். நான் அவனை உகக்கிற வரையிலும் நான் அவனை உகந்து விட்டால் (بالقوّةபில்குவ்வத்தி-அமைப்பில் இருந்ததைப் போல் بالفعلபில் பிஃலி-வெளியிலும்) அவன் கேட்கின்ற கேள்வியாகவும், அவன் பார்க்கின்ற பார்வையாகவும், அவன் பிடிக்கின்ற கையாகவும் அவன் நடக்கின்ற காலாகவும் நான் ஆகிவிடுகின்றேன்.' நூல்: புகாரி, மிஷ்காத் ஹதீது எண் 2260 عن ابي هريرة رضي الله عنه قال قال رسوالله صلّي الله عليه وسلّم انّ الله يقول يوم القيامة يا ابن آدم مرضت فلم تعدني……استطعمتك فلم تطعمني………..استسقيتك فلم تسقني…………رواع مسلم நிச்சயமாக அல்லாஹுதஆலா கியாமத் நாளில் சொல்வான்:- ஆதமின் மகனே! (மனிதனே!) நான் (சிருஷ்டியான மற்தபாவில்-படித்தரத்தில் இறங்கின புறத்தில்) வியாதியஸ்தனாக இருந்தேன். என்னை சுகம் விசாரிக்க வரவில்லை. உணவளிக்க தேடினேன். எனக்கு உணவளிக்க வில்லை. தண்ணீர் புகட்டத் தேடினேன். எனக்கு தண்ணீர் புகட்டவில்லை…(நீண்டதொரு ஹதீதின் சுருக்கம்) -மிஷ்காத் ஹதீது எண்:1523 والّذي نفس محمّد بيده لو انّكم تدلّيتم بحبل الي الاض لهبط علي الله ثمّ قرأعليه الصّلاوة والسلام هو الاوّل والآاخر والباطن وهو بكلّ شيي عليم முஹம்மதுடைய ஆன்மா எவன் கைவசம் இருக்கிறதோ அவன் மீது ஆணையாக தண்ணீர் மொள்வதற்கு கயிற்றுடன் வாளியை பூமியில் இறக்குவீர்களேயானால் அது அல்லாஹ்வின் மேல் விழும். பின்பு நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனே முன்னவன், அவனே பின்னவன், அவனே வெளியானவன், அவனே உள்ளானவன், அவன் சகல பொருள்களையும் அறிந்தவன் என்ற (57:3) திருவசனத்தை ஓதினார்கள். நூல்: திர்மிதி இறைவா! எங்களது அகத்தையும் புறத்தையும் மஃரிபத் எனும் ஞான ஜோதியைக் கொண்டு பிரகாசிக்கச் செய்வாயாக! எங்கள் ஷெய்குமார்களின் அத்தஸவ்வுபு-ஸூபிஸம் மெஞ்ஞான நூற்களைப் படித்து விளங்கி அதன்படி செயல்படுத்தி, சித்தி, முக்தியடைந்து அவர்களுக்கு கிடைத்த பைளு-அருள் கடாட்சியத்தை போன்று எங்களுக்கும் கிடைத்து இம்மையிலும், மறுமையிலும் திரு லிகா-தரிசனத்தை பெற்று அவர்களுடன் உயர் சுவனபதியில் ஒன்று சேர்;ந்து வாழ எல்லாம் வல்ல பரம்பொருளான அல்லாஹு தஆலா நம்மனைவர்கட்கும் நல்லருள் புரிவானாக! ஆமீன்.
பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட்டில் (BEL) Trainee Engineer – I பணிக்கு என 80 பணியிடங்களும், Project Engineer – I பணிக்கு என 70 பணியிடங்களும் காலியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்வி விவரம்: Trainee Engineer – I மற்றும் Project Engineer – I பணிகளுக்கு AICTE அனுமதி பெற்ற பொறியியல் கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் B.Sc, B.E அல்லது B.Tech Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். அனுபவ விவரம்: இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பணிக்கு சம்பந்தப்பட்ட துறைகளில் குறைந்தது 06 மாதம் முதல் அதிகபட்சம் 02 ஆண்டுகள் வரை பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருந்தால் முன்னுரிமை கொடுக்கப்படும் என கருதப்படுகிறது. வயது விவரம்: Trainee Engineer – I பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு 01.08.2022 அன்றைய தினத்தின் படி, அதிகபட்சம் 28 வயது என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. Project Engineer – I பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு 01.08.2022 அன்றைய தினத்தின் படி, அதிகபட்சம் 32 வயது என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. SC / ST – 05 ஆண்டுகள், OBC – 03 ஆண்டுகள் மற்றும் PwBD – 10 ஆண்டுகள் என வயது தளர்வுகளும் தரப்பட்டுள்ளது. ஊதிய விவரம்: Trainee Engineer – I பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.30,000/- முதல் அதிகபட்சம் ரூ.40,000/- வரை மாத ஊதியமாக வழங்கப்படும். Project Engineer – I பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.40,000/- முதல் அதிகபட்சம் ரூ.55,000/- வரை மாத ஊதியமாக வழங்கப்படும். தேர்வு முறை: இப்பணிகளுக்கு தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு (Written Test) மற்றும் நேர்காணல் (Interview) மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள். விண்ணப்ப கட்டணம்: Project Engineer-I பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களிடம் ரூ.472/- விண்ணப்பக் கட்டணமாக வசூலிக்கப்படும். Trainee Engineer-I பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களிடம் ரூ.177/- விண்ணப்பக் கட்டணமாக வசூலிக்கப்படும். விண்ணப்பிக்கும் முறை: இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பம் மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள இணையதள இணைப்பில் இப்பணிகளுக்கு என கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். 03.08.2022 என்பது இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் ஆகும்.
பொழிப்பு (மு வரதராசன்): இன்பம் வந்த காலத்தில் அந்த இன்பத்தை விரும்பிப் போற்றாதவன், துன்பம் வந்த காலத்தில் அந்தத் துன்பத்தை அடைவதும் இல்லை. மணக்குடவர் உரை: இன்பம் நுகரு மிடத்து அதனை விரும்பாதவன், அதனால் வருந்துன்பம் நுகருமிடத்து வருத்த முறுதலிலன். இன்பம் நுகரு மிடத்து அதனை விரும்பாமையாவது அவ்விடத்துத் தான் அழிந்து நில்லாமை. இது காமத்தால் வருந்துன்பத்திறகு அழியாதாரைக் கூறிற்று. பரிமேலழகர் உரை: இன்பத்துள் இன்பம் விழையாதான் - வினையால் தனக்கு இன்பம் வந்துழி அதனை அனுபவியாநின்றே மனத்தான் விரும்பாதான்; துன்பத்துள் துன்பம் உறுதல் இலன் - துன்பம் வந்துழியும் அதனை அனுபவியாநின்றே மனத்தான் வருந்தான். (துன்பம் - முயற்சியான் வரும் இடுக்கண். இரண்டையும் ஒரு தன்மையாகக் கோடலின், பயன்களும் இலவாயின.) நாமக்கல் இராமலிங்கம் உரை: நன்மை வருகின்றபோது மகிழ்ச்சியில் மயங்கி விடாமல் இருக்கக்கூடியவன் தீமை வரும்போது தீமையினால் மனம் நொந்து போகமாட்டான். பொருள்கோள் வரிஅமைப்பு: இன்பத்துள் இன்பம் விழையாதான் துன்பத்துள் துன்பம் உறுதல் இலன். பதவுரை: இன்பத்துள்-மகிழ்ச்சியுள்; இன்பம்-மகிழ்ச்சி; விழையாதான்-விரும்பாதவன்; துன்பத்துள்-இடுக்கணில்; துன்பம்-துயரம்; உறுதல்-அடைதல்; இலன்-இல்லாதான்(ஆவன்). இன்பத்துள் இன்பம் விழையாதான்: இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்: மணக்குடவர்: இன்பம் நுகரு மிடத்து அதனை விரும்பாதவன்; பரிப்பெருமாள்: இன்பம் நுகரு மிடத்து அதனை விரும்பாதவன்; பரிதி: இன்பம் வந்தால் இன்பப்படாதவன்; காலிங்கர்: இன்பம் வந்து எய்திய இடத்து அவ்வின்பத்தை ஒரு பொருளாகக் கொண்டு விரும்பாத வேந்தனானவன்; பரிமேலழகர்: வினையால் தனக்கு இன்பம் வந்துழி அதனை அனுபவியாநின்றே மனத்தான் விரும்பாதான்; 'இன்பம் வந்தால் இன்பப்படாதவன்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர். இன்றைய ஆசிரியர்கள் 'மகிழ்ச்சியில் மகிழ்ச்சி அடையாதவன்', 'இன்பம் வந்த காலத்தில் இன்பத்தை விரும்பாதவன்', 'இன்பத்தை நுகருங் காலத்திலே அதனை மனத்தால் விரும்பாதவன்', 'இன்பம் வருங்கால் இன்பம் என்று கருதி அதனை விரும்பாதான்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர். மேலும் மேலும் இன்பம் நாடிச் சொல்லாதிருப்பவன் என்பது இப்பகுதியின் பொருள். துன்பத்துள் துன்பம் உறுதல் இலன்: இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்: மணக்குடவர்: அதனால் வருந்துன்பம் நுகருமிடத்து வருத்த முறுதலிலன். மணக்குடவர் குறிப்புரை: இன்பம் நுகரு மிடத்து அதனை விரும்பாமையாவது அவ்விடத்துத் தான் அழிந்து நில்லாமை. இது காமத்தால் வருந்துன்பத்திறகு அழியாதாரைக் கூறிற்று. பரிப்பெருமாள்: அதனால் வருந்துன்பம் நுகருமிடத்து வருத்த முறுதலிலன். பரிப்பெருமாள் குறிப்புரை: இன்பம் நுகரு மிடத்து அதனை விரும்பாமையாவது அவ்விடத்துத் தான் அழிந்து நில்லாமை. இது காமத்தால் வருந்துன்பத்திறகு அழியாதாரைக் கூறிற்று. பரிதி: துன்பம் வந்தாலும் துன்பம் கெடுப்பன் என்றவாறு. காலிங்கர்: ஏனைத் துன்பம் வந்து எய்திய இடத்தும் தான் சிறுதும் துயர் உறுதல் இலன்; இவ்விரண்டும் இயல்பு என்னும் திட்பம் உடையவன் என்றவாறு. பரிமேலழகர்: துன்பம் வந்துழியும் அதனை அனுபவியாநின்றே மனத்தான் வருந்தான். பரிமேலழகர் குறிப்புரை: துன்பம் - முயற்சியான் வரும் இடுக்கண். இரண்டையும் ஒரு தன்மையாகக் கோடலின், பயன்களும் இலவாயின. 'துன்பம் வந்து எய்திய இடத்தும் தான் சிறுதும் துயர் உறுதல் இலன்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர். இன்றைய ஆசிரியர்கள் 'கவலையில் கவலை அடையான்', 'துன்பம் வந்த காலத்தில் அத்துன்பத்தைப் பெறுவது இல்லை', 'துன்பம் வருங்காலத்தும், அதனை உடம்பால் துய்த்தாலும் மனத்தால் வருந்த மாட்டான்', 'துன்பம் வந்தவிடத்தும் துன்பம் என்று துன்பம் அடையான்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர். துன்பம் வந்த காலத்தில் துன்பம் அடையான் என்பது இப்பகுதியின் பொருள். நிறையுரை: மேலும் மேலும் இன்பம் நாடிச் சொல்லாதிருப்பவன், துன்பம் வந்த காலத்தில் துன்பம் அடையான் என்பது பாடலின் பொருள். 'இன்பத்துள் இன்பம் விழையாதான்' குறிப்பது என்ன? இன்பத்தையே எப்பொழுதும் தேடி களியாட்டம் விரும்பாதவன் துன்பத்துள் உள்ள துயரினை நினைத்து வருந்தமாட்டான். இன்பத்திலேயே திளைத்து மேலும் மேலும் பெருமகிழ்வுக்காக ஏங்கிக் கிடப்பவன் கடமையில் நாட்டம் இல்லாதிருப்பான். அதற்கு மாறாக கடமையை செய்து நிம்மதியடைந்து வாழ்வு நடத்துபவன் இன்பம் வந்தபோது அதைத் துய்ப்பான் ஆனால் அதையே எண்ணிக் கொண்டிருக்கமாட்டான். இவனே இன்பத்துள் இன்பம் விழையாதான் ஆவான். அப்படிப்பட்டவன் துன்புற்றவிடத்து, இழந்துவிட்டோமே என்று துயருறவும் மாட்டான். அவனால் துன்பம் வந்தபோதும் கடமையைச் செய்துகொண்டு துன்புறாமல் இருக்க முடியும். இன்பம் துன்பம் இவை இரண்டும் இயற்கை என்று கருதும் திட்பம் உடையவன் துன்பம், இடுக்கண் அனைத்தையும் எளிதாகக் கையாள்வான். அறம், பொருள், இன்பம் என்ற மூன்றுமே வாழ்க்கையின் குறிக்கோள்களாக இருக்கவேண்டும் என்று கருதுபவர் வள்ளுவர். இன்பம் விலக்கப்படவேண்டுவதன்று. மாந்தர் அனைவரும் வாழ்க்கையில் நற்பொருள்களைப் பயன்படுத்திக் கொள்வதற்கும் அறத்தொடு பொருந்திய இன்பத்தை நுகர்வதற்கும் உரியவர்களே. இக்குறளிலுள்ள இன்பம் வீட்டின்பத்தையும், துன்பம் நரகத் துன்பத்தையும் குறிப்பன என்றனர் சிலர். இவை பொருந்தாப் பொருள்கள். மணக்குடவர் 627-க்கான தனது உரையில், நன்மையால் தவஞ் செய்யுங்கால் வரும் துன்பத்திற்கு அழியாதாரைக் கூறிற்று எனவும், 628ம் குறளுரையில் பொருட்கேட்டினால் வருந்துன்பத்திற்கு அழியாதாரைக் கூறிற்று எனவும் கூறினார். எனவே இங்கு சொல்லப்பட்டது துன்பம் காமத்தால் வரும் துன்பத்திற்கு அழியாதாரைக் கூறிற்று எனல் பொருந்துவதாகும் என்பர். துன்பத்துள் துன்பம் (குறள் 369) என்பதற்குப் பரிமேலழகர் ஏனைத் துன்பங்கள் எல்லாம் இன்பமாக வரும் துன்பம் என உரை கண்டார். அதே பொருள் இங்கும் ஏற்றால் இன்பத்துள் இன்பம் என்பதற்கும் மேலான இன்பம் எனப் பொருள் கிடைக்கும். இன்மையுள் இன்மை (குறள் 153) கற்றாருட் கற்றார் (குறள் 722) இன்பத்துள் இன்பம் (குறள் 854) என்பனவும் இதே நடையில் அமைந்த தொடர்கள் ஆகும். இங்ஙனம் ஒன்றனுள் ஒன்றைப் பொதிந்து சுட்டும் நடை வள்ளுவரின் விருப்பமான, தனித்த கூறாக நூலுள் காணப்படுகிறது. துன்பம் உறுதல் இலன் என்ற சொற்றொடர் இதற்கு முந்தைய பாடலிலும் (குறள் 628) ஆளப்பட்டுள்ளதை அறியலாம். 'இன்பத்துள் இன்பம் விழையாதான்' குறிப்பது என்ன? 'இன்பத்துள் இன்பம் விழையாதான்' என்றதற்கு இன்பம் நுகரு மிடத்து அதனை விரும்பாதவன், இன்பம் வந்தால் இன்பப்படாதவன், இன்பம் வந்து எய்திய இடத்து அவ்வின்பத்தை ஒரு பொருளாகக் கொண்டு விரும்பாத வேந்தன், வினையால் தனக்கு இன்பம் வந்துழி அதனை அனுபவியாநின்றே மனத்தான் விரும்பாதான், இன்பம் வந்த காலத்தில் அந்த இன்பத்தை விரும்பிப் போற்றாதவன், இன்பத்துள்ளிருந்து கொண்டு, அதை அனுபவிக்கும்போதே மனத்தால் அதை விரும்பாதவன் (அதனோடு ஒட்டாதவன்), மகிழ்ச்சியில் மகிழ்ச்சி அடையாதவன், இன்பம் வந்த காலத்தில் இன்பத்தை விரும்பாதவன், நன்மை வருகின்றபோது மகிழ்ச்சியில் மயங்கி விடாமல் இருக்கக்கூடியவன், இன்பம் வரும் போதில் இன்பம் என்று அதனை விரும்பாதவன், இன்பத்தை நுகருங் காலத்திலே அதனை மனத்தால் விரும்பாதவன், இன்பம் வருங்கால் இன்பம் என்று கருதி அதனை விரும்பாதான், இன்பத்தில் உள்ள இனிமையினை நினைத்து இன்புற விரும்பாதவன், இயற்கை யாகவோ தன் முயற்சியாலோ தனக்கு இன்பம் வந்த விடத்து அதை நுகர்ந்தும் உள்ளத்தால் இன்புறாதவன் என்றபடி உரையாசிரியர்கள் பொருள் கூறினர். நாம் "இன்பமானவை” என நம்பும் சில காலந்தோறும் உருவாக்கப்பட்டு நம் எண்ணங்களில் நிலைத்து வருகின்றன. அப்படிப்பட்டவை நமக்கு நேரும்போது, அவற்றில் மகிழ்ச்சி காண்கிறோம். இன்பம் என்பதற்குப் பொருள் வரையறை செய்து கூறுவது முடியாத ஒன்று. இன்பம் பல நிலைகளில் அறியப்படுவது. இன்பம் துய்த்தல் கூடாது என வள்ளுவர் கூறமாட்டார். ஆனால், இன்பம், அதனினும் இன்பம், இன்னும் மேலான இன்பம் என்று தேடித்தேடி அலைபவன் செயலாற்றமாட்டான் என்பதால் இன்பத்தை 'வென்றுவிடும்' ஒரு நுட்பமான நிலையை இங்கு குறிக்கிறார். அந்நிலையைக் கடந்த மனநிலையில் தன்னை நிலைநிறுத்திக்கொள்ளும் ஆற்றல் கொண்டவன் இன்பத்துள் இன்பம் விழையாதான் ஆவான், இன்பமே குறியாக உள்ளவன் தன் உணர்வு கெட்டு மயங்கிச் சோர்வடைந்து அழிந்துபடுபவன். அப்படிச் சோர்வடையாதவன் 'இன்பத்துள் இன்பம் விழையாதான்' ஆவான். மேலும் மேலும் இன்பம் நாடிச் சொல்லாதிருப்பவன், துன்பம் வந்த காலத்தில் துன்பம் அடையான் என்பது இக்குறட்கருத்து.
கேரட் மிகவும் மலிவாக எளிதில் கிடைக்கும் காய்களில் ஒன்றாகும். அதிக நன்மைகள் நிறைந்த கேரட் அனைவராலும் விரும்பி உண்ணும் சுவை நிறைந்த காயாகும். நாம் அனுதினமும் பயன்படுத்தும் … Read more நெல்லி பொடி நெல்லி பொடி பயன்கள் நெல்லியில் இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ் போன்ற தாதுக்கள் அதிக அளவில் நிறைந்துள்ளதால் இது இரத்த சோகைக்கு நல்ல மருந்தாகும். நெல்லியில் அறுசுவையில் உப்பு … Read more முடக்கத்தான் பொடி முடக்கத்தான் பொடி பயன்கள் முடக்கத்தான் முடக்கு அறுத்தான் என்பது நாளடைவில் முடக்கற்றான் என்றானது. கசப்புத் தன்மையுடைய முடக்கத்தான் முடக்கு வாத நோய்களை குணமாக்குவதால் முடக்கத்தான் என்று பெயர் … Read more கரிசலாங்கண்ணி பொடி கரிசலாங்கண்ணி பொடி பயன்கள் கரிசலாங்கண்ணி அதிக அளவில் மருத்துவ குணங்கள் நிறைந்த மூலிகையாகும். இதில் எக்லிப்டால், டெஸ்மீத்தைல், அக்கோண்டனால், ஹென்ட்ரை, ஸ்டிக்மாஸ்டீரால், தங்கச்சத்து, இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் … Read more ஆவாரம் பூ பொடி ஆவாரம்பூ பொடி பயன்கள் ஆவாரம்பூ துவர்ப்புத் தன்மை உடையது. இதில் தங்கச்சத்து நிறைந்துள்ளது. ஆவாரம் பூ பொடியை தினமும் ஒரு டீஸ்பூன் அளவு சாப்பிட்டு வர சர்க்கரை … Read more கஸ்தூரி மஞ்சள் பொடி கஸ்தூரி மஞ்சள் பொடி பயன்கள் கஸ்தூரி மஞ்சள் முக அழகு சாதன பொருட்களில் ஒன்றாகும். இது அனைத்து வகை சருமத்திற்கும் கேடு விளைவிக்காத அலர்ஜி எதிர்ப்பு தன்மை … Read more எலுமிச்சை தோல் பொடி பயன்கள் எலுமிச்சை தோல் பொடியினைக் கொண்டு ஃபேஸ் பேக் முதல் பாதத்திற்கு அழகு தரும் பெடிக்யூர் வரை பயன்படுத்தலாம். எலுமிச்சை தோலில் அதிக அளவு கலோரிகள், கார்ப்ஸ், நார்ச்சத்து, … Read more ஆரஞ்சு தோல் பொடி ஆரஞ்சு தோல் பொடியின் பயன்கள் ஆரஞ்சு தோலில் அதிகளவு ஆன்டி ஆக்ஸிடன்டுகள் நிறைந்துள்ளது. இது இயற்கை அழகை விரும்பும் பெண்களுக்கு மிகச் சிறந்த அழகு சாதன பொருளாகும். … Read more முருங்கை இலை பொடி முருங்கை இலை பொடி பயன்கள் முருங்கையில் விட்டமின்கள், மினரல், அமீனோ ஆசிட்கள், வைட்டமின் சி, கால்சியம், பொட்டாசியம் மற்றும் புரோட்டின் போன்ற ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளது. 10 கிராம் … Read more மருதாணி பொடி மருதாணி பொடி பயன்கள் மருதாணி பொடியானது இளநரையை தடுக்க அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். இதனுடன் அவுரி பொடியை சேர்த்து பயன்படுத்தும் போது நம் கூந்தலுக்கு ஏராளமான நன்மைகள் … Read more ரோஸ் பொடி ரோஸ் பொடியின் பயன்கள் ரோஜாவிற்கு இயற்கையாகவே சருமத்தின் நிறத்தை கட்டுப்படுத்தும் தன்மை உள்ளது. ரோஜாவில் அதிகளவு வைட்டமின் சி நிறைந்துள்ளது. இது நல்ல ஆன்டி-ஆக்ஸிடன்ட் ஆகும். ரோஜா … Read more மண் சிகிச்சை மண்ணின் மகத்துவத்தை அறிந்து அதில் உள்ள மருத்துவ குணங்களை கொண்டு மண் சிகிச்சை முறைகளை சித்த மருத்துவர்கள் கூறியுள்ளனர். பழங்காலங்களில் அனைத்து கிராமங்களிலும் மண் சிகிச்சை முறைகளை … Read more முகத்தில் உள்ள கருமை நீங்க வேண்டுமா? முக அழகு என்பது அனைவரும் விரும்பும் ஒன்றாகும். அதிலும் பெண்கள் முகத்தில் ஏதேனும் ஒரு சிறு பரு வந்தாலும் மிகவும் வேதனைப்படுவர். அநேக பெண்கள் வெள்ளை நிறத்தில் … Read more சர்க்கரை நோயில் இருந்து ஆரம்பத்திலேயே தப்பித்துக்கொள்ள… சர்க்கரைக்கேற்ற முருங்கை சர்க்கரை நோய் சர்க்கரை நோய் இன்றைய காலத்தில் அதிகளவில் காணப்படும் நோயாகும். நம் உடலில் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ … Read more உடலுக்குத் தேவையான வைட்டமின்கள் புழுக்கமான சீதோஷ்ண நிலை பெரும்பாலும் மே, ஜுனில் காணப்படுகிறது. வறட்சியான ஈரப்பதம் ஃபுளூ காய்ச்சலுக்கு ஈடான உடல் நலக் கோளாறுகளை ஏற்படுத்துகிறது. மூக்கடைப்பு, டான்சில், குரல் வளை … Read more
அருள் மிகும் நெல்லையப்பர். ஓம் நமசிவாய... நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க கோகழி ஆண... ஆங்கிலப்புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் வணக்கம் நட்புறவுகளே! உடன் பிறவாவிடினும்., உடன் பிறந்த பாசங்களுக்கு. நிகராக அன்பை பகிர்ந்தளித்து வந்த வலைபுலக சகோதர சகோதரிகளே, அனைவர... நேர்மறை எண்ணங்கள். அன்பார்ந்த வலைத்தள சகோதர சகோதரிகள் அனைவருக்கும் வணக்கம். நடப்பவை அனைத்தும் நலமாக அமையட்டும் . நல்லது நடந்தால் எப்போதுமே மளது சந்தோஷம... முருகனருள் முன்னிற்பதாக..!! கணபதித்தாழினைப்போற்றிடுவோம் ..! கற்பதனைத்தையும் அவருக்கே படைத்திடுவோம் .! முழுமுதற்க்கடவுளை பணிந்திடுவோம் .! ... வாழ்த்துகளுடன், படித்ததும் பார்வைக்கு.... இப்போதுதான் 2018 ம் ஆண்டின் துவக்கம் மாதிரி இருந்தது. அதற்குள் இவ்வருட கடைசி மாதத்தில் இருக்கிறோம். காலம் நம்முடன் போட்டி போட்டு கொண்டு ... நாம் வாங்கி வந்த வரம்.....சிறுகதை 2) கதையினுள் உட்கதை "கடவுள் எல்லா பிறவியையும் படைத்து அதற்குரிய திறமைகளையும் வகைபடுத்தி வைத்தான். அதன்படி அனைத்தும் தத்தம் திறன்படி... உப்பிட்டவரை (ரவை) உடன் நினை சமையலில் ஒவ்வொன்றிருக்கும் ஒவ்வொரு பெயர் . அதன் காரணத்தை ஆராய்ந்தால் ஆயிரம் விளக்கங்கள் ஒவ்வொருவரிடமிருந்தும் புறப்ப... அரிசி சேவை...... நான்கு டம்ளர் இட்லி அரிசியை சுத்தப்படுத்தி ஆறுமணி நேரம் ஊறவைத்து கொள்ளவும். அவ்வாறு ஊறவைத்த அரிசியுடன் ஒருசின்ன தேங்காய் உடைத்து துருவி ... பாட்டி சொல்லை தட்டாதே.. அந்த காலத்தில் கூட்டுக் குடும்பம் என்பது ஒவ்வொரு வீட்டிலும் தப்பாமல் இருந்தது. குடும்பமென்றால் மூத்தவர்கள், அனுபவ அறிவு நிரம்பியவர்கள் ... குறும் (ஹைக்கூ.) கவிதைகள் - 6 கண்கள் ஏழ்மையும் , பசியும் வறுமையின் முகத்தில் இரு கண்கள் … பரிசல் வாழ்க்கைக் கரைகளை கடக்க இன்பம் துன்பம் என்ற நீண்ட ...
எனக்கு திருமணமாகி ஏழு ஆண்டுகள் ஆகிறது. அன்பான கணவர், அழகான இரண்டு குழந்தைகள் என்று வாழ்க்கை ஜோராக செல்கிறது. ஆனால், இதிலுள்ள ரகசியம் என்னவென்றால், என் இரண்டு குழந்தைகளில் ஒன்றுதான் என் கணவர் மூலம் எனக்கு பிறந்த குழந்தை. இன்னொன்று..? அதைத்தான் இங்கு சொல்லப்போகிறேன். சுமார் பத்து வருடங்களுக்கு முன், நான் கல்லூரியில் இறுதியாண்டு படித்துக்கொண்டு இருக்கும் நேரம், என் அப்பா, அம்மா என்னை பக்கத்துவீட்டில் தங்க சொல்லிவிட்டு, சொந்தக்காரர் ஒருவரின் மகள் நிச்சயதார்த்தத்திற்கு சென்றுவிட்டனர். என்னை கல்யாணத்துக்கு அழைத்துப்போவதாக சொல்லி, அப்போது என்னை பக்கத்து வீட்டில் விட்டுச் சென்றார்கள். பக்கத்து வீட்டு மாமா மிகவும் நல்லவர். அவர் கொஞ்சம் கருப்புதான் இருந்தாலும் நல்ல கலையாக இருப்பார். அவர்கள் வீட்டில், அவர் மற்றும் அவர் மனைவி இரண்டு பேர்தான். அவர்களுக்கு குழந்தை இல்லை. அம்மா அப்பா கிளம்பியதும், அன்றிரவு நான் அவர் வீட்டில் சென்றேன். மாமா என்னை, “வா மாலினி..” என வரவேற்று, “அப்பா சொன்னாங்க. இங்க நீ தாராளமா, உன் வீடுமாதிரி நினச்சு இருக்கலாம்..!!” என்று சொன்னார். பின், “சாப்டியா..?” என்று விசாரித்தார். நான், “சாப்பிட்டேன் மாமா..” என்று சொன்னேன். அவரின் மனைவிக்கு அன்று உடம்பு சரியில்லை. அதனால் சீக்கிரமாக மாத்திரை போட்டுவிட்டு தூங்க சென்றுவிட்டாள். ஆனால் எனக்கு தூக்கம் வரவில்லை. மாமாவுக்கும் அப்படியிருக்க, நாங்கள் இரண்டு பேரும் பேசிக்கொண்டு இருந்தோம். தீடிரென மாமா, செக்ஸ் பற்றி பேச ஆரம்பித்தார். நான் என் தோழிகளுடன் கல்லூரியில் செக்ஸ் பற்றி அரட்டை அடித்திருக்றேன். என் தோழி ஒருத்தி அவள் காதலனுடன் ஓத்த கதையை அவ்வப்போது எனக்கு சொல்லி, என் புண்டையை பொங்க வைப்பாள். அப்போதெல்லாம் எனக்கும் அவள்போல ஓக்க வேண்டும் என்று ஆசையாக இருக்கும். ஆனால், “எக்குத்தப்பாக எதாவது நடந்தால் என் வாழ்க்கை என்னவாகும்..?” என்று என் அரிப்பை அடக்கிக்கொண்டு இருந்தேன். ஆனால், அன்று மாமா பேசிய பேச்சு எனக்கு கிளுகிளுப்பை ஏற்றியது. அதனால் நானும் அவரிடம் அதுபற்றி சகஜமாக பேச ஆரம்பித்தேன். அரை மணி நேரம், எங்கள் ஆசைகளை ஒருவருக்கொருவர் பகிர்ந்துகொண்டபின், மாமா, “மாலினி நான் வெட்கத்தைவிட்டு சொல்கிறேன். நான் என் மனைவிடம் செக்ஸ் வைத்து இரண்டு மாதம் ஆகிறது. எனக்கு எவ்வளவு ஆசை இருக்கும்..?” என்றவர், உடனே அவர் லுங்கியை தூக்கிக் காண்பித்தார். அவர் ஜட்டி போடவில்லை. அதனால் அவர் சுண்ணி விரைத்து, ஆடியபடி இருந்தது. அதுவரை ஒரு ஆணின் பூளை நேரில் பார்க்காத நான், முதல்முறையாக அவர் பூளை பார்த்தவுடன், எனக்கு காமம் தலைக்கேறியது. பெரிய வாழைப்பழம் போல நட்டுக்குத்தலாக நின்றுகொண்டிருந்த மாமாவின் பூளை ஊம்ப எனக்கு ஆசை வந்தது. அப்போது மாமா, “மாலினி, இன்று நான் உன்னை ஓக்க வேண்டும். எனக்கு உன் மேல் ரொம்ப நாளாக ஆசை..!!” என்று கூறினார். எனக்கும் ஆசைதான்..!! ஆனாலும் தயங்கினேன். அதைப் புரிந்துகொண்ட மாமா, “இது யாருக்கும் தெரியாது. நமக்குள்ளதான் இருக்கும். உன்ன அடிக்கடி தொந்தரவு பண்ணமாட்டேன். அப்புறம் உன் இஷ்டம்..!!” என்றார். நான் சம்மதித்தேன். பின், “மாமா, எனக்கு இதுபற்றி ஒன்றும் தெரியாது. நீங்கள்தான் எனக்கு கற்றுத்தர வேண்டும்..!!” என்று கூறினேன். மாமா உடனே, எனது கைகளை பிடித்து அவர் கன்னத்தில், என் கைகளை வைத்தார். என்னை இறுக்கி அணைத்து, எனது துடிக்கும் உதடுகளை அவர் சுவைத்தார். அன்று நான் தாவணி அணிந்திருந்தேன். என் உதட்டில் முத்தமிட்டபடியே, மாமா அதை உருவினார். ஜாக்கெட்டின் மேல் இரண்டு கொக்கிகளை கழட்டியதும், என் முலைகள் வெளியே பிதுங்கிக்கொண்டு இருந்தது. அவர் என் உதடுகளை கடித்துக்கொண்டு இருக்கும்போதே, என் முலைகளை ஜாக்கெட்டோடு சேர்த்து அமுக்கினார். என் முலையின் உள்ள காம்புகளை, ஜாக்கெட்டின் மேலாக திருகினார். நான் அவர் லுங்கியை அவிழ்த்தேன். மாமாவின் சுண்ணி நீளமாக தடியாக இருந்தது. நன்றாக விரைத்து நீட்டிக்கொண்டிருந்தது. நான் அவர் சுண்ணியை ஆட்டிவிட்டேன். எனக்கும் அவருக்கும், அது இன்பமாக இருந்தது. மாமா என் ஜாக்கெட்டை முழுவதுமாக கழட்டி, என் முலைகளை பிசைந்துவிட்டார். பின்பு பாவாடையையும் கழட்டி, என் ஜட்டிக்குள் கைவிட்டு என் புண்டையை வருடினார். நான் பலமுறை என் புண்டையை தடவியிருந்தாலும், அவர் தடவும்போது ரொம்பவும் சுகமாக இருந்தது. அவர் என் புண்டை பிளவில் விரல் போட்டு வருடினார். அப்போது என் உடம்பு முழுவதும் சிலிர்த்தது. என் கண்கள் சுகத்தில் மூடியது. உடம்பு முழுவதும் சந்தோச அலை பரவியது. பின்னர், “மாலினி, வா ஓக்கலாம்..!!” என்று என்னை கட்டிலுக்கு கூட்டிப்போனார். போகும்போது அவர் மனைவி படுத்திருந்த அறையே வெளிப்பக்கமாக பூட்டிவிட்டு வந்தார். என்னை கட்டிலில் படுக்க வைத்த மாமா, என்னை ஆவலாக பார்த்தார். மாமாவின் பூளை ஊம்ப, என் வாய் துடித்துக்கொண்டு இருந்தது. உடனே, “மாமா, உங்க சாமான நான் சப்பட்டுமா..?” என்று கேட்டேன். அவர், “சரி..” என்றபடி கட்டிலில் படுத்துக் கொண்டார். நான் அவர் சுண்ணியை வாய் வைத்து சூப்பினேன். என் நாக்கால் அவர் சுண்ணியை கோன்-ஐஸ் போல நக்கினேன். அவர் சுண்ணி மொட்டில் உதட்டை வைத்து சூப்பினேன். அவருடைய இரண்டு கோலி குண்டுகளை பிசைந்து விளையாடியபடி, அவர் சுண்ணியை தொண்டைவரை விட்டு ஊம்பினேன். நான், அவர் சுண்ணியை வாய்வைத்து உறிஞ்ச, பின்பு அவர் என் புண்டையை நாக்குபோட ரெடியானார். என்னை படுக்கவைத்து காலை விரிக்கச் சொல்லி, என் கன்னிப் புண்டையில் நாக்குபோட ஆரம்பித்தார். நாக்கை சுழற்றி சுழற்றி என் புண்டைக்குள் நாக்குபோட்டார். நான் சுகத்தில் மிதந்தேன். எனக்கு முதல் முறையாக உச்சம் வந்து தண்ணியை விட்டேன். அப்புறம், மாமா என் புண்டைக்குள் அவர் பூளை கொஞ்சம் கொஞ்சமாக சொருவினர். அவர் சுண்ணி என் கன்னித் திரையை கிழித்துக்கொண்டு, என் புண்டைக்குள் சென்றது. எனக்கு சீல் உடைந்து ரத்தம் வர, மாமா அதை ஒரு துணியை எடுத்து துடைத்துவிட்டு, மறுபடியும் என் புண்டைக்குள் சுண்ணியை நுழைத்தார். நான் வலியில் கத்த கத்த, என் வாயை பொத்திக்கொண்டு, அவர் சுண்ணி முழுவதையும் என் கூதிக்குள்விட்டு, மெதுவாக மேலும் கீழும் குத்தினார். என் முலைகளை வாய்வைத்து கவ்விக்கொண்டே, இடுப்பை வேக வேகமாக அசைத்து, என் கூதியை குத்திக் கிழித்தார். அவர் ஓக்க ஓக்க, எனக்கு வலி மறைந்து சுகம் பரவ ஆரம்பித்தது. நான் சுகத்தில் நெளிந்தேன். மாமாவும் கொஞ்சம் கொஞ்சமாக வேகத்தை கூட்டிக்கொண்டே யோனார். கொஞ்ச நேரத்தில் அவர் என் புண்டைக்குள்ளேயே கஞ்சியை வடித்தார். மறுநாள் காலைவரை, அவர் நான்கு முறை என்னை ஓத்து என் புண்டையைக் கிழித்தார். அப்போதிருந்து, நான் மாமாவின் சுண்ணி தரும் சுகத்திற்கு அடிமையாகிப்போனேன். என் புண்டை அரிப்பும் அதிகமானது. அதனால் சமயம் கிடைக்கும் போதெல்லாம், நான் அவரின் பூளை ஊம்பி, என் புண்டைக்குள் விட்டுக்கொள்வேன். அவரும் என்னை நன்றாக ஓத்து, கஞ்சியை என் புண்டையில் வடிப்பார். ஆனால், எனக்கு கருபிடிக்காமல் இருக்க சில மாத்திரைகளை கொடுப்பார். எனக்கு கல்யாணமான பின், ஒருமுறை ஊருக்கு வந்தபோது மாமாவுடன் ஓலாட்டம் போட்டேன். அவரும் என் கூதியை இரண்டு முறை ஓத்து, கஞ்சியை என் கூதியில் கொட்டினார். மறுமாதமே எனக்கு கருபிடித்தது. அடுத்த பத்தாவது மாதத்தில் மாமாவின் குழந்தையை பெற்றெடுத்தேன். ஆனால் அதற்குப்பின் மாமாவுக்கு ஹார்ட் ப்ராப்ளம் வந்ததால், அவரால் என்னுடன் ஆட்டம்போட முடியவில்லை. அப்போது நான் என் கணவருடம் ஓலாட்டம்போட்டு, இரண்டாம் முறை கர்ப்பமாகி, இன்னொரு குழந்தையை பெற்றெடுத்தேன். அதன்பிறகு மாமா, அவர் மனைவியுடன் வேறு ஊருக்கு சென்றுவிட்டார். அதன்பிறகு அவருடன் எனக்கிருந்த இருந்த தொடர்பு முற்றிலுமாக அறுந்துபோனாலும், அவர் என் வயிற்றில் விதைத்துச் சென்ற, அவர் வாரிசின் மூலம், இன்னும் என் நினைவில் வாழ்ந்துகொண்டே இருக்கிறார். Tags: anni tamil sex story, Aunty, Best Tamil Sex Stories, Family, Husband and wife, kaama kathaikal, kama kathaikal, kamakalangiyam, kamakathai, purusan thambi sex, sex kathai, sex stories tamil, sex video, Tamil adult stories Tamilsex stories, tamil anni kathai, tamil dirty stories, Tamil Girl, Tamil Kama Kathaigal with photos, tamilsex.com, tamilsexs, wife
நகுலன் தங்கமானவன், ஏன் இப்படிச்செய்தான். எல்லோரிடத்திலும் எழுந்த கேள்வி இதுதான். அமைதியானவன் அனைவரோடும் அன்பாகப் பழகும் நகுலன் ஏன் இப்படி ஒருமுடிவு எடுத்தான். எல்லோரும் அவன் மேல் இரக்கப்பட்டனர். இன்று அதிகாலை நகுலன் மேற்கோண்ட தற்கொலை முயற்சிதான். அக் கிராமத்தில் அன்று பேசுபொருள். நகுலனின் கிராமத்துக்கு மட்டக்களப்பு களுவாஞ்சிகுடியில் இருந்து மேற்கில் பதினைந்து கி.மீ பயணத்தில் போய்ச் சேர முடியும். நகுலன் பதினைந்து வயதாக இருக்கும் போது செல் வீச்சு ஒன்றில் தந்தையை கண் முன்னால் பறி கொடுத்தவன். போர் விமானம் வீசிய எறிகணை வீச்சில் அந்த கிராமத்தில் மரணம் அடைந்தவர்களில் நகுலனின் தந்தையும் ஒருவர். நகுலனும், தாய், தங்கை தம்பியுமாக நால்வரும் தவித்துப் போயினர். இவர்களைப் பராமரிக்க வேண்டிய பொறுப்பு நகுலனின் தோளில் சுமையானது. பத்தாம் வகுப்போடு அவனது பள்ளிவாழ்க்கை பாதியிலே நின்றது. நகுலன் பாடசாலை வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்ததும், பதினைந்து வயதிலேயே கல்முனை பலசரக்கு கடை ஒன்றில் வேலைக்குப் போய்விட்டான். தாய்க்கும், தம்பி, தங்கைக்கும்.. உதவியாக இருந்தவன் தனது பத்தொன்பதாவது வயதில், “அம்மா.. தங்கை, தம்பியப் படிக்க வைக்க வேணும். இந்த ஓலை குடிசையில் எத்தனை நாளைக்கு அம்மா இருப்பது. ஒரு வீட்டை நல்ல படியாக கட்ட வேணும். நான் கட்டாருக்கு போகப் போறன் என்று சொல்லிய போது வெளி நாட்டுக்கா.. என ஆச்சரியப்பட்டாள் தாய். “என்னால முடியும்.. நான் கட்டாருக்கு போகத்தான் போறன். அம்மா என் சினேகிதன் குமரன் உதவிசெய்வதாக சொல்லி இருக்கான். கொஞ்சம் காசு வேணும். சிவலிங்கம் வட்டிக்கு காசு கொடுக்கிறவன். அவனிடம் கேட்டிருக்கன். நான் கட்டார் போனபின் வட்டியோட திருப்பிக் கொடுக்கவேணும். இனி என்னை தடுக்கவேணாம்.. அம்மா.” என்றவன் வெளி நாடு போவதில் சுறுசுறுப்பானான். கட்டார் போன நகுலன். பத்து வருடங்கள் கஷ்டப்பட்டு உழைத்தான். சிவலிங்கத்தின் பணத்தை வட்டியோடு ஒரு வருடத்திலேயே கொடுத்து முடித்தான். தங்கை குமுதினியை கலைவாணி மகாவித்தியாலத்தில் ஏ.எல் வரை படிப்பித்து பல்கலைக்கழகம் அனுப்பி பட்டதாரியாக்கி அழகு பார்த்தான். விரலுக்கேற்ற வீக்கம் என்று சொல்வது போல அழகான அளவான ஒரு கல் வீட்டை கட்டி முடித்தான். தன் தம்பி குமரனுக்கு ஏ.எல் முடித்த பின் பல்கலை அனுமதி கிடைக்காமல் போக வெளிவாரி பட்டத்தை பெற்றுக் கொள்ள வழி செய்தான். தங்கைக்கு முகாமைத்துவ அதிகாரி பதவி கிடைத்ததும் பூரித்துப் போனான். விடுமுறையில் வீடு வந்த நகுலன்.. தங்கைக்கு திருமண பேச்சு எழுந்தபோது “அம்மா மூணு மாதம் லீவு இருக்கு. நீங்க கவலைப் படாதிங்க. அதை எல்லாம் நான் பார்க்கிறன். அம்மா.” என்று கூறினான். மூன்று மாதத்திற்குள் தங்கள் உறவினன் நவநீதன் ஆசிரியர் வீடு சென்று பேசி திருமணமும் செய்து வைத்தான். நகுலன் படித்தது பத்தாம் வகுப்புத்தான். என்றாலும் அவனது செயற்பாடுகள் அவனுக்கு அந்த சமூகத்தில் தனிப் பெறுமானத்தைப் பெற்றுக் கொடுத்திருந்தது. நகுலனின் நல்லொழுக்கம்.. அவனின்குடும்பப் பொறுப்புணர்வு கண்டு அவருக்கு பெண் கொடுக்க பலர் முன்வந்தனர். ஆனால் நகுலன் அதைக் கண்டு கொள்ள வில்லை. திருமணத்துக்கு அம்மா நச்சரித்துக் கொண்டே இருந்தாள் “அம்மா எனக்கு இப்ப கல்யாணம் செய்யும் எண்ணமே இல்ல. வெளிநாட்டில் உழைச்ச காசு எல்லாம் செலவாப் போயிற்று.இனி வெளிநாடு போகும் எண்ணம் எனக்கு இல்ல.இப்ப கொஞ்சம் கையில் காசு இருக்கு. அதை வைச்சுக் கொண்டு ஒரு தொழில்செய்ய வேணும்.நானும் கல்யாணம் செய்யப் போய்..கையில் இருக்கும் காசும் இல்லாமல் போய் கடைசியில் கஷ்டப்பட வேண்டி வரும்.. அம்மா. இப்ப கல்யாணக் கதையை எடுக்க வேணாம்.” என்றான் ஒரே போடாக. பின்னர் கல்முனை நகரில் வாடகைக் கட்டிடத்தில் பலசரக்கு கடையை ஆரம்பித்து நகுலன் கடந்த ஐந்து ஆண்டுகளாக நடத்தி வருகிறான். இப்போது நகுலனுக்கு நாற்பது வயது. எனினும் ஐந்து வருடமாக கடையில் கிடைத்த இலாபம் நகுலனை பெரும் முதலாளியாக மாற்றி விட வில்லை. போட்டி நிறைந்த வியாபாரத்தில் ஈடுகொடுக்க முடியாது அவனது வியாபாரம் சுமாராக.. போய்க் கொண்டிருந்தது. அதனால் அவன் கல்யாணமும் கைகூடாமல் தள்ளிக் கொண்டே போனது. “மச்சான் நகுலா என்னடா.. இப்படி எத்தனை நாளைக்கு ஒண்டிக் கட்டையாக இருக்கப் போறாடா.” நகுலனின் பள்ளிக்கால நண்பன் கண்ணன் கடைக்கு வந்தபோது உரிமையோடு பேசினான். எப்போது கடைக்கு வந்தாலும் கல்யாணக்கதையைக் கதைக்காமல் போக மாட்டான் அவன். நகுலனின் வயது தான் திருமணமாகி இப்போ மூன்று பிள்ளைகளுடன் இருக்கான். “அந்தக் கதைய விடுடா.. எனக்கு நாற்பது வயது இப்ப. இனி என்னடா.. கல்யாண ஆசை என்போன்றவர்களுக்கு வரக் கூடாதுடா.” “உன்னைப் பார்த்தா இப்பதான் இருபத்தைந்துவயசு போல இருக்கு..”என்று ஆரம்பித்தவன், “மச்சான் எனக்கு தெரிஞ்ச ஒரு கல்யாணப் புறோக்கர்.. தான் கல்யாணம் விடயமாக கதைத்தவர். உனக்கு அவர் சொன்ன அத்தனை தகுதிகளும் பொருந்தி வருகுதடா. அதுதான் நான் உன்னிடம் கதைக்க வந்தன். எனக்கும் அது நல்லதாகப் பட்டது. வயதைப் பற்றியே பிரச்சினையே இல்லடா. நீ..ஓ.கே சொன்னால் கல்யாணம் முடிந்து ஒரு மாதத்தில சுவீஸ் போகலாம்.” “என்னடா சொல்லுறா...?” “மச்சான் நகுலா.. உன்னிடம் சர்வதேச பாஸ்போர்ட் இருக்காடா சொல்லு. இல்லாவிட்டால் நீ உடனே ‘சர்வதேச' பாஸ்போர்ட எடுக்க வேணும்.” “என்னிடம் அதுதான் இருக்கு. அதுசரி..என்னடா நீயே கதைத்துக் கொண்டு போகிறாய். எனக்கு தலை கால் எதுவும் புரியல்ல.” “சரிடா..இப்ப சொல்லறன் கேள்.. வடிவான பெட்டையாம். அவளுக்கு வயது 38, நீண்ட காலமாக அவள் பெற்றாரோடு வசிக்கிறாள். அவளது சொந்தங்கள் எல்லாருமே சுவீஸில் தானாம். கல்யாணம் முடிந்து ஒரு மாதத்தில் நீ சுவீஸ் போகலாம். தாலி கூறை உள்ளிட்ட கல்யாணச் செலவுகளுக்கு அவர்களே பொறுப்பு. உனக்கும் கல்யாண செலவுகளுக்கு காசு தருவார்கள். இவ்வளவுதான் புறோக்கர் என்னிடம் சொன்ன விடயங்கள்.” மூச்சு விடாமல் சொன்னான் கண்ணன். “மச்சான் நகுலா இப்ப புரியுதா. உனக்கு விருப்பம் எண்டால் சொல்லு. ஆனால் உன் சாதகம் வேணும். பின்னேரம் நான் ஊரில் சந்திக்கிறன். எனக்கு அவசரமாக போக வேணும்.” கண்ணன் கிளம்பிப்போய் விட்டான். கல்யாணமே வேண்டாம் என்றிருந்த நகுலனுக்கு சுவீஸ் போகும் கனவு இருந்தது என்னவோ உண்மைதான். ஆனால் காசுப் பிரச்சினையால் அவன் கனவு கனவாகவே இருந்தது. இப்போது அவனது சுவீஸ் கனவு கல்யாண வடிவத்தில் வர மனம் சலனப் படத் தொடங்கியது. மகிழ்வான எண்ணங்கள் வந்து வந்து போனது.. மாலை வீடு சென்றவனுக்கு அங்கு புறோக்கரும் கண்ணனும் அவனது தாயுடன் கதைத்த படி அவனை எதிர்பாத்துக் கொண்டிருந்தனர். “இவர்தான் நான் சொன்ன சம்பந்தம்கொண்டு வந்த புறோக்கர். எல்லாமே அம்மாவிடம் சொல்லியாச்சு. உனக்கு விருப்பம் எண்டா அம்மாவுக்கும் சம்மதமாம்.. என்னடா நீ சொல்லுறா.” “தம்பி நகுலா.. நேரடியாகவே நான் சொல்லுகிறன்.” “பிள்ளையின் போட்டோ இருக்கு.. இந்தாங்க அம்மா நீங்களும் பாருங்க.” போட்டோவில் பிள்ளை நல்ல வடிவாக இருந்தாள். நகுலனும் பார்த்தான். அவனுக்கு பிடித்துப் போனது. “என்னடா நகுலா பிடிச்சிருக்காடா?” கண்ணன் கேட்டான். நகுலன் எதுவும் பேசல்ல. வீட்டார் கூறியதை சொல்லிப் போட்டன். தம்பி உங்க வீட்டுக்கு செலவுக்கும் இரண்டு லட்சம் தருவார்கள். தம்பி உங்க போண் நம்பரை தாங்க பிள்ளை கேட்டாள். தம்பியோடு கதைக்க வேணுமாம். வீடியோ மூலம் கதைப்பாள். தம்பியின் சாதகத்த தாங்க நான் சுவீஸ்க்கு மெயில் பண்ண வேணும். எல்லாம் ஓ. கே. என்றால் மற்றவற்றைப் பற்றி அவங்க சொல்லுவினம்.” மறு நாள் இரவு சுவீஸ்சில் இருந்துவீடியோ கோல் நகுலனுக்கு வந்தது. வீடியோவுக்குள் வந்தான் நகுலன். அழகான பெண்..தான் வீடியோவில்வந்தாள். “ஹலோ.. நீங்க நகுலன் தானே.” “ஓ மோம்.. நகுலன்தான் கதைக்கிறன். நீங்கள்..?” “ஓ.. நான் முதலில் சொல்லி இருக்கவேணும். சொரி.. நான் வனிதா.. கதைக்கிறன். என்னுடைய திருமண விடயமாகத்தான்.. நேற்று உங்கள் வீடு வந்த புறோக்கர் கந்தையா அங்கிள் உங்கள் போண் நம்பரை எனக்கு அனுப்பியவர்.” “ஓ..அப்படியா... என்னுடன் அம்மாவும் இரு தங்கைகளும் இருக்கின்றனர். அப்பா இல்ல. நான் வங்கியில் வேலை பார்க்கிறன். மற்றைய கல்யாண விடயங்கள் எல்லாவற்றையும் உங்களுக்கு புறோக்கர் சொல்லியிருப்பார். உங்கள் சாதகம் என் சாதகத்துடன் நன்றாக பொருந்தியிருக்கு..நகுலன்.” “ஓ.கே. வனிதா.. சொல்லுங்க.” “பல வரன்கள் எனக்கு பார்த்தும் சாதகம் பொருந்தி வரல்ல. உங்கசாதகம் பொருந்தி வந்தது மட்டுமல்ல உங்களை வீடியோவில் பார்த்த பின் இப்போ உங்களையும் எனக்குப் பிடிச்சிருக்கு. சரி உங்களுக்கு என்னைப் பிடிச்சிருக்கா..?” வீடியோவில் வந்த வனிதா பார்க்க நல்ல அழகியாக இருந்தாள். சற்று பருமன்தான்..எனினும் பார்ப்பவர்களை சுண்டியிழுக்கும் அழகு.. அவளிடம் இருந்தது. அவள் அழகில் நகுலனும் மயங்கி விட்டான். “உங்கள யாருக்காவது பிடிக்காமல்போகுமா? நீங்கள் அழகாகவும் இருக்கிறீர்கள்.. போட்டோவில் கூட அதை விட அழகாகாக இருந்தீர்கள். நான் உங்கள் போட்டோவை முன்பே பார்த்தேன் வீடியோவில் இன்னும் அழகுதான் நீங்க.. எனக்கும் ஓகேதான்.” “நகுலன்.. இனி கல்யாண ஒழுங்குகள் செய்வதில் பிரச்சினை ஏதும் இல்லைஎன நினைக்கிறன்.” “ஓம் வனிதா..இனி பிரச்சினை எதுவும் இல்ல.நீங்க ஒழுங்குகள செய்யுங்க.” கல்யாண காரியங்கள் எல்லாம் துரிதமாக நடை பெற்றன. நகுலனை அடிக்கடி புறோக்கர் வந்து சந்தித்தார். வனிதாவும் அடிக்கடி வீடியோவில் வந்து நகுலனோடு கதைத்தாள். “நாங்கள் சுவீஸ்சில் இருந்து இந்த மாதம் ஐந்தாம் திகதி சிறிலங்கா வாறம். இருபது நாட்கள் அங்கு நாங்கள் இருப்போம்..வரும் இருபதாம் திகதி தீர்மானித்த படி திருமணம் நடக்கும். புறோக்கர் மூலம் எல்லா ஏற்பாடுகளும் செய்தாயிற்று நகுலன் சரிதானே. புறோக்கர் உங்கள சந்திப்பார். உங்களுக்கு எல்லா உதவிகளும் ஒத்தாசைகளும் செய்வார்.நாங்கள் அங்கு வரும் போது திருமணப் பத்திரிகையையும் கொண்டு வருகிறோம். வனிதா எல்லாவற்றையும் சொல்லி முடித்தாள். நகுலனைச் சந்தித்த புறோக்கர் கந்தையா, "கல்யாணம் கல்முனை சிவகாமி மண்டபத்தில் நடக்கும். கல்முனை பிள்ளையார் ஆலயத்தில் திருமாங்கல்யம் நிகழ்வு நடைபெறவும் ஒழுங்கு செய்தாயிற்று. தம்பி இந்த கவரில் பணமிருக்கு. வனிதா மேடம் சொன்னபடி அனுப்பி இருந்தாங்க. இது உங்கள் செலவுக்கு” சொல்லி முடித்தார் கந்தையா. வனிதா சொன்னது போலவே சிறிலங்கா வந்தனர் வனிதா குழுவினர். வனிதாவின் தாயும் கூடவே அவளது இருதங்கைகளும் வந்தவர்களில் அடங்குவர். அன்று மாலை கல்முனையில் உள்ள நகுலனின் சித்தியின் இல்லத்தில் வந்தவர்கள் சந்தித்து கதைத்தனர். நகுலனின் தாய் உள்ளிட்டோரும் உறவுகளும் கலந்து கொண்டனர்.‘அத்தை..’ என உரிமையுடன் நகுலனின் தாய் பூமணியை அழைத்த வனிதா. .“தாலி,கூறைப் புடவை எல்லாமே இந்தப் பெட்டியில் இருக்குது அத்தை.முறைப்படி நீங்கள் கோயிலுக்கு கொண்டு வாருங்கள் என்றாள். திட்டமிடபடியே கோயிலில் திருமணம் நடைபெற்றதோடு.. சிவகாமி மண்டபத்தில் விருந்துபசாரங்களும் நிறைவாக நடந்து முடிந்தன. நகுலன் வனிதா திருமணம் முடிந்து இரு நாட்கள் கடந்தன. அவர்கள் கல் முனையில் உள்ள உறவினர் வீடொன்றில் தங்கியிருந்தனர். “சரி வனிதா.. கல்யாணம் முடிந்த உடனே முதலில் எங்கள் வீட்டுக்கு போய் இருக்க வேணும். நேரமும்நாளும் சரிவரல்ல. இன்றைக்கு வீட்டுக்கு வருவதாக தகவல் சொல்லிவிட்டன். நாளும் நல்லா இருக்குவனிதா.” “இன்றைக்கு நல்ல நாள்தான் நகுலன். நாம் போவதற்கு வேன் வரும்.” “சரி வனிதா நான் சுவீஸ் வரும்.. ஒழுங்குகள் பற்றி ஒன்றும் இன்னும் சொல்லவே யில்லையே.” “அது ஒரு பிரச்சினையுமில்ல. நேற்றுடன் நாங்கள் வந்து பதினைந்து நாட்கள் முடிந்து விட்டன. 25ந் திகதி நாங்க ‘பிளைட்’. நாங்கள் சுவீஸ் போன பிற்பாடு, அடுத்த மாதம் முடிவதற்குள் நீங்களும் அங்கு வந்து விடலாம். விஸா..டிக்கட் எல்லாமே உங்களுக்கு ஒரு வாரத்துக்குள் அனுப்பி விடுவோம்.” “ஓ.கே. வனிதா. சுவீஸ் போகும் எனது கனவும் நம்திருமணம் மூலம் கிடைத்திருப்பது மகிழ்ச்சிதான்.” “நீங்கள் குடும்பதுக்காக வாழ்ந்தது பற்றி.. எல்லாமே புறோக்கர் சொன்னவர் நகுலன்.இனி உங்கள் குடும்பமும் என் குடும்பம்தான். நீங்க சுவீஸ் வந்த பின்னர் இன்னமும் நிறையவே குடும்பத்துக்கு செய்யலாம். இனி கவலைப்பட வேணாம்.” நகுலனின் வீடு சென்ற தம்பதியினர் பெரும் வரவேற்பு கண்டு மகிழ்ந்து போயினர். மதிய விருந்து முடிந்து நகுலன் உறவுகளுடன் அவர்கள் உறவாடி பிற்பகல் ஐந்து மணிக்குப் பின்னரே கிராமத்திலிருந்து கல்முனை வீடு வந்து சேர்ந்தனர். வனிதா சுவிஸ் புறப்படுவதற்கான நாளும் வந்தது. “நாளைக்குநானும் உங்கள வழியனுப்ப கொழும்பு வாறன் வனிதா.” என்றதும், “நகுலன்..நீங்க வந்து திரும்புவது எல்லாம் உங்களுக்கு கஷ்டமாக இருக்கும்.நீங்கள் கொழும்பு வர வேண்டாம்." என்றாள் வனிதா. அது சரியெனப் பட்டது நகுலனுக்கு அன்று மாலை வனிதா குழுவினர்.. நகுலனிடமிருந்து விடை பெற்றுக் கொண்டு கொழும்பு போய் அன்று அதிகாலையில் சுவீஸ் பயணமாகினர். வனிதா மகிழ்வோடு காணப்பட்டாள். கழுத்தில் தாலி, நெற்றியில் குங்குமம் புதுப்பெண்ணாக பயணமானாள். சுவீஸ் போனவுடன் வீடியோ கோலில் கதைத்தாள். “நகுலன் நீங்க சுகமா. நாங்க சுவுஸ் வந்து சேர்ந்து விட்டோம்.” “ஓ.கே..வனிதா நான் சுகமாக இருக்கன்." "சரி நகுலன் எனக்கும் வேலை அதிகமாய் இருக்கு. இரவுக்கு கோல் எடுக்கன்.” அன்று.. இரவு வனிதாவிடமிருந்து அழைப்புசிறுகதைவரும் என நடு இரவு வரை விழித்து இருந்தான். அழைப்புவரவில்லை. காத்திருந்தான் நகுலன்.. ஒரு வாரம் கழிந்தது. அழைப்பு வரவேயில்லை. ஒரு மாதம் உருண்டோடியது. வனிதா அழைப்பு எடுக்கவேயில்லை. நம்பிக்கை இழந்தவனாக நகுலன் வனிதாவுக்கு அழைப்புஎடுத்தான். ரிங்..போய்க் கொண்டிருந்தது. வனிதா.. எடுக்கவே இல்லை. பலதடவை முயற்சித்தான். பயனற்றுப் போனது. நண்பன் கண்ணனுடன் புறோக்கர் கந்தையாவை தேடிப் போனான் நகுலன். கந்தையனை கண்டு பிடிக்கவே முடியவில்லை. ஆறுமாதங்களாகின.. வனிதாவிடம் இருந்து எந்தத் தகவலும் இல்லை. நகுலன் இன்னும் நம்பிக்கையோடு காத்திருந்தான். நல்ல பதில் வரும் என்று. ஆனால் மாதங்கள் தான் கடந்து கொண்டிருந்தன. நகுலனின் நம்பிக்கை கொஞ்சம் கொஞ்சமாக கரையத் தொடங்கியது. ஒரு மாதத்தில் சுவீஸ் பயணம்.. அதற்காக ஒரு திருமணம். அவன் ஏமாந்து போனான். ஊரில் பலரின் கேலிப் பேச்சுக்கள்.. தாங்க முடியல்ல. விவாகரத்து பெற்றிருந்த வனிதா.. அவளது தேவைக்காக நகுலனை கல்யாணம் செய்து ஏமாற்றி விட்டதாக அறிந்த நகுலன்.. தன்னையே முடித்து விட உறுதி பூண்டான். அதன் விளைவுதான் அவனது தற்கொலை முயற்சி. ஆண்கள்தான் இதுமாதிரி ஏமாற்று நாடகம் ஆடுவார்கள்.. பெண்களும் இப்படியா செய்வார்கள்! உடைந்துபோனான் நகுலன். அன்று அதிகாலை தன் வீட்டு கொல்லைப் புறத்தில் இருந்த வேம்பு மரத்தில் சுருக்கிட்டு உயிரை மாய்க்க முனைந்த நகுலனை உறவுகள் துரிதமாக வைத்தியசாலைக்கு கொண்டு சென்றதால் மயிரிழையில் காப்பாற்றப்பட்டான். தன்னுடைய பூட்டப்பட்டு இருக்கும் பழைய கடையை மீண்டும் திறந்து தன் வியாபாரத்தை மேற் கொள்ளும் உறுதியுடன் கலைந்த கனவுகளோடு நகுலன் தன் மிதி வண்டியில் அங்குதான் போகிறான். வெல்லாவெளி விவேகானந்தம் Comments Your name Subject Comment * Leave this field blank Related Articles முள்ளு முருங்கை மரம் படித்துக்கொண்டிருந்த கணேசன் யோசனை வந்தவனாக,”அம்மா இஞ்ச பாரேன். இந்த முள்ளு முருங்கை மரத்தை வெட்டாமல், இவ்வளவு மொத்தமாய்... தரணியின் தாரகை தந்தையே! பதினெட்டு வயது இளைஞன் போல, அவர் உடற் கட்டமைப்பு தூரப்பார்வைக்குக் காட்சியளித்தாலும் அவரின் சவரம் செய்யாத முகமும் கரடுமுரடான... தடைப்பட்ட பயணம் இவவாண்டு ஹஜ் தியாகத் திருநாள், காலண்டர் கணிப்பின்படி எதிர்வரும் 10ஆம் திகதி. அதற்கு ஒரு கிழமை முன்னதாக இச்சிறப்புச்... தொலைந்த தோழமை... காலை எட்டு மணிக்கு வழமை போன்ற எழுந்து கொண்டான் ராபி. வீட்டில் யாருமே அவனைப் பற்றி அலட்டிக்கொள்வதில்லை. ஏழு ஆண்டுகளாக அவன்... அப்பாவின் பேனா மழை சட சடவென பெய்துகொண்டிருந்தது. அகல்யா வீட்டையே இரண்டாக்கி எதையோ தேடிக்கொண்டிருந்தாள். பல மணித்தியாலங்கள் தேடியும்... அறியாமை இதமான காலைப் பொழுது. அந்த அகன்ற பாதையின் இருமருங்கிலும் அமைந்திருந்த பசுமையான புற்தரையில் பனித்தூறல்கள் படர்ந்து புத்தொளி... உருத்திராட்ச பூனை 'ஹி.. ஹி.. ஹி.... எல்லாருக்கும் வணக்கம். நான் தான் சோமநாதன். எப்பிடியும் சம்பாதிக்கலாம். எப்பிடியும் வாழலாம். உந்தப்... தெரு பனிப்புகார்க் காலை தவளைகள் கத்தும்மலர்களைக் கொய்துமுகர்ந்து மூச்சிழுத்தபுழுதிமண் தினங்கள்மீளவும் ஜனிக்குமா?“அம்மா... கோழிப்பண்ணை (கடந்தவாரத் தொடர்) புழுவை சொண்டுக்குள் எடுத்துக் கொண்ட சிறிய குஞ்சின் பின்னால் 10, 12குஞ்சுகளும் சிறகுகளை இரு பக்கமும்... கோழிப்பண்ணை நிலத்தின் இருள் படிப்படியாக அகன்ற வண்ணமிருந்தது. ஓரிரு காகங்கள் ஜோடி ஜோடியாக ஆகாயத்தில் பறக்கத் தொடங்கின. இளம் சூரியன்... “அவளுக்கும் ஒரு லெஹெங்கா” தேவையோடு காத்திருந்த குடும்பமொன்றுக்கு துணை செய்து. அவர்களும் நோன்புப் பெருநாளை மகிழ்வோடு கொண்டாட துணை புரிந்த... வெளிச்ச விடியல்... நோன்புப் பெருநாள் சிறுகதைவலது கை ஆட்காட்டி விரலில் மீத மிருந்த சுண்ணாம்பை மின்கம்பத்தில் தேய்த்து விட்டுப் பெயர் தெரியாத...
சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்தவர் ரவிக்குமார்-உஷாராணி தம்பதி. இவர்களுக்கு 3 மகன்கள் மற்றும் பிரியா (17) என்ற மகள் உள்ளனர். இவர்களில் பிரியா ராணிமேரி கல்லூரியில் விளையாட்டு துறையில் படித்து வந்தார். பிரியா மிகச்சிறந்த கால்பந்து வீராங்கனை. 6-ம் வகுப்பிலேயே பயிற்சி எடுத்து வந்த பிரியா மாவட்ட அளவிலும், மாநில அளவிலும் விளையாடி வந்தார். கடந்த மாதம் 20-ந்தேதி பயிற்சியில் ஈடுபட்டிருந்த பிரியாவுக்கு வலது காலில் தசை பிடிப்பு போல் வலி ஏற்பட்டுள்ளது. வலியால் துடித்த பிரியாவை பெரியார் நகர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் சிறு அறுவை சிகிச்சை செய்துள்ளார்கள். அறுவை சிகிச்சை முடிந்து காலில் கட்டு போட்டு இருக்கிறார்கள். அதன் பிறகும் வலி குறையாததால் 2 நாட்களுக்கு பிறகு மேல் சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்துள்ளார்கள். அங்கு காலில் போடப்பட்டிருந்த கட்டுக்களை பிரித்து பார்த்த டாக்டர்கள் ரத்தக்குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு ரத்த ஓட்டமும் தடைபட்டு தொற்றுக்கள் உருவாகி இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து காலை துண்டிப்பதை தவிர வேறு வழியில்லை என்ற நிலை ஏற்பட்டது. காலை துண்டித்தால் மட்டுமே தொற்றுக்கள் மேற்கொண்டு பரவாது என்று முடிவு செய்தனர். அதன்படி கால் மூட்டின் மேல் பகுதியில் இருந்து கால் துண்டித்து அகற்றப்பட்டது. அதை தொடர்ந்து ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரியில் தொடர் சிகிச்சையில் இருந்து வந்தார். அவரது உடல்நிலையை டாக்டர்கள் தீவிரமாக கண்காணித்து வந்தனர். இருப்பினும் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. சிறுநீரகம், கல்லீரல் ஆகியவற்றிலும் தொற்று பரவியதால் உடல்நிலை மிகவும் மோசம் அடைந்தது. சிகிச்சை பலன் அளிக்காமல் இன்று அதிகாலையில் பிரியா பரிதாபமாக இறந்தார். அவர் இறந்ததை அறிந்ததும் பெற்றோர்களும், சகோதரர்களும் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது. டாக்டர்களின் கவனக்குறைவான சிகிச்சை ஒரு அப்பாவி மாணவியின் உயிரை பலிவாங்கி இருக்கிறது. குறிப்பிட்ட ஆபரேசனை செய்ததும் கட்டு போட்டிருக்கக்கூடாது என்று கூறப்படுகிறது. ஆனால் மருத்துவர்கள் கவனக்குறைவால் மிகவும் இறுக்கமாக கட்டு போட்டுள்ளார்கள். இதனால் ரத்த நாளங்களில் ரத்த ஓட்டம் தடைபட்டுள்ளது. இதனால் கால் அழுகி தொற்று உருவாகி இருக்கிறது. இதுவே பிரியாவின் உயிரை பறித்து இருக்கிறது. மாணவி பிரியாவின் மரணம் பலரையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. தகவல் அறிந்ததும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆஸ்பத்திரிக்கு விரைந்தார். அங்கு வைக்கப்பட்டிருந்த மாணவியின் உடலை பார்த்து கண்கலங்கினார். பின்னர் பெற்றோருக்கும் அவரது சகோதரர்களுக்கும் ஆறுதல் கூறினார். ஏற்கனவே மாணவி பிரியாவை நேரில் பார்த்து தைரியம் சொல்லி பேட்டரியால் இயங்கும் செயற்கை காலுக்கு ஏற்பாடு செய்வதாகவும் கூறி இருந்தார். இந்த நிலையில் பிரியாவின் இழப்பு மிகப்பெரிய துயரத்தை தருவதாக அவர் கூறினார். கால்பந்து வீராங்கனை பிரியா குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். பிரியாவின் சகோதரருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். பணியிட மாற்றம் செய்யப்பட்ட மருத்துவர்கள் இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்படுகின்றனர். தவறான சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
1971 ஏப்ரல் புரட்சி பற்றிய பலர் மத்தியிலும் வேறுபட்ட கருத்துகள் நிலவுகின்ற போதிலும் அதில் பங்கு கொண்டவர்கள் செய்த அர்ப்பணிப்பு, தியாகம், பிரக்ஞை என்பவற்­றையும் அதன் கார­ணமாக அவர்கள் பட்ட துன்பங்களையும், அவலங்களையும் எவரும் குறைத்து மதிப்பிட மாட்டார்கள் என்பது மாத்­திரம் உண்மை. கட்சி­க்குள் மாத்திரமல்ல, கட்சிக்கு வெளியிலும் பலர் ஆதரவாளர்க­ளாகவும் செயற்பாட்­டாளர்களாகவும் இருந்து வந்துள்ளனர். அந்த வகை­யில் அன்றைய நெருக்கடி மிக்க காலப்பகுதியில் தாய்மாரினதும் தந்தைமாரினதும் பங்களிப்பு, தியாகம் என்பவையும் சாதாரணமா­னவையல்ல. சென்ற இதழில் ஏப்ரல் புரட்சியின் தலைவ­ர்களில் ஒருவரான ஒஸ்மன்ட் டி சில்வாவின் நேர்காணல் பிரசுரமானது. அவரது தாயார் சீலவத்தி டி சில்வா பற்றி தமிழ் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்துகின்ற நோக்கில் அவர் பற்றிய அறிமுகமும் சிறு உரையாடலும் இவ்விதழில் பிரசுரமாகிறது. அவர் இப்போது இல்லை என்றே பரவலான கதை நிலவி வந்தது. ஆனால் ஒஸ்மன் டி சில்வாவிடம் நேர்காணலொன்றை செய்வதற்­குச் சென்றிருந்த வேளை அவரது தாயார் இன்ன­மும் இருக்கின்ற தகவலை அறிய முடிந்தது. வயது முதிர்ந்த நிலையிலும் ”இது தகர்த்தெறி­யப்பட வேண்டிய சமூக அமைப்புமுறை” என உறுதியாகக் கூறுகிறார் அவர். அன்று தொடக்கம் இன்று வரை ஜே.வி.பி.யினர் மத்தியிலும் இடதுசாரிப் பெண்கள் மத்தியிலும் மதிப்பு மிக்கவராக விளங்கிவரும் தோழர் சீலவத்தியை வடகொரிய புரட்சிகரத் தலைவரின் தாயார் ”கம்பொங்ஷொக்” என்ற பெயரில் ஜே.வி.பி.யினர் அழைத்து வந்தனர். 1923 டிசம்பர் 24ஆம் திகதி கொழும்பு-பொரல்­லையில் பிறந்த இவரின் பெற்றோர், ஏ.ஈ.குணசிங்கவின் தொழிற் கட்சியின் ஆதரவாளர்கள். 1940இல் தள்ளு வண்டிகளை சொந்தமாக வைத்து வாடகைக்கு கொடுத்து வந்த வில்பிரட் சில்வாவை இவர் மணந்தார். 30களில் மலேரியா காய்ச்சல் பரவியபோது, மலேரியா ஒழிப்பு செயற்பாடுகளில் ஈடுபட்டு வந்த சமசமாஜக் கட்சியினரின் பிரச்சாரத்தால் கவரப்பட்டு தம்பதியர்கள் இருவரும் அரசியலில் ஈடுபாடு காட்டினர். இரண்டாம் உலக மகா யுத்தக் காலப் பகுதியில் சமசமாஜக் கட்சி பிரித்தானிய ஏகாதிபத்தியத்தினால் தடை செய்யப்பட்டிருந்தது. சம சமாஜக் கட்சியின் செயற்பாடுகள் அனைத்தும் இரகசியமாகவே மேற்கொள்ளப்பட்டு வந்தன. இரகசியப் பிரச்சார வேலைகளிலும் கட்சியின் உத்தியோகபூர்­வமான ஏடான ”சமசமாஜய” பத்திரிகையை இரகசியமாக விநியோகிப்பது போன்ற வேளைலகளில் தோழர் சீலவத்தி ஈடுபட்டு வந்தார். கால்களில் பத்திரிகைகளை சுற்றி வைத்து இரப்பர் போட்டு விழாதபடி வைத்துக்கொண்டு வெளித் தெரியாதபடி சேலைய­ணிந்து செல்வாராம் இவர். 1942 இல் இவர் கொம்யூனிஸ்ட் கட்சியுடன் இணைந்து கொண்டார். உள்ளுராட்சித் தேர்தல்களின் போது பீட்டர் கெனமனின் வெற்றிக்காக கடுமையாக உழைத்தார். பேர் பெற்ற டிராம் வண்டித் தொழிலாளர்­களின் வேலை நிறுத்தப் போராட்டத்தின்போது வீதி மறியல் செய்தனர் பெண்கள். அப்பெண்களுக்கு தலைமை தாங்கியவர்களில் சீலவத்தி, மல்லிகா, சோமா போன்றவர்கள் முக்கியமான­வர்கள். இரண்டாம் யுத்த காலப்பகுதியின் பின் சமசமாஜக்கட்சியின் தலைவர்கள் விடுத­லையாகி வந்தனர். அதன் பின் கட்சியின் வேலைகளைப் பகிரங்கமாக நடத்த முடிந்­ததால், சீலவத்தி தனது பிரதேசமான வனாத்தமுல்ல பகுதியில் ல.ச.ச.க.வின் மாபெரும் பகிரங்கக் கூட்ட­த்தை நடத்துகின்ற ஒழுங்குகளை மேற்கொண்டார். பின்னர் ல.ச.ச.க. தலைமை தாங்கிய லிப்டன் கம்பனி, பொஸ்டட் கம்பனி, கொமர்ஷல் கொம்பனி போன்ற வேலை நிறுத்தப் போராட்டங்க­ளிலெல்லாம் முக்கிய பங்காற்றியிருக்கிறார். 1953 ஹர்த்தால் போராட்டத்தின் போது பெண்களின் பங்களிப்பு என்பது வரலாறு காணாத ஒன்று என்பதை யாரும் அறிவர். வீதிகளை மறித்து மறியல் போராட்டம் செய்த போது அரசாங்கம் வலுக்கட்டா­யமாக வாகனங்களை செலுத்தி­யது. அதனை தடுப்பதற்கென வீதிகளில் கிடையாக குழி தோண்டுதல், மற்றும் வாகனங்­களை சேதப்படுத்துதல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளத் திட்டமி­டப்­­பட்­டிருந்தது. அதற்காக வெடி குண்டுகள் கூட தயார் படுத்தப்ப­ட்டிருந்தது. அப்படியான தயாரிப்புகளில் தோழர் சீலவத்திக்கும் பங்கிருந்தது. சீலவத்தி அரசியல் ரீதியில் நிறைந்த அனுபவங்­களைப் பெற்றிருந்த வேளை 1963, 1964களில், இடதுசாரிக் கட்சிகள் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து ஐக்கிய முன்னணி கட்டுவது குறித்து தீர்மானம் நிறை­வேற்றிய போது லெஸ்லி குணவர்தனவுடன் சேர்ந்து நடுநிலைமை வகித்தார். ஆனால் அது எவ்வளவு தவறான நிலைப்பாடு என்பதை பிற்காலத்தில் உணர்ந்ததாகத் தெரிவிக்கி­றார். படிப்படியாக தான் சார்ந்த கட்சியிலிருந்து நம்பிக்கையிழ­ந்தார். ஜே.வி.பி. செயற்படத் தொடங்­கிய போது அது வரை காலம் ல.ச.ச.க.வில் செயற்பட்டு வந்த தனது மகன் ஜே.வி.பி.யில் இணைந்து அதில் தீவிரமாக செயற்படத் தொடங்கி, தனது வீடும் ஜே.வி.­பி.யின் கட்சிக் காரியாலயமாக செயற்படத் தொடங்­கிய போது அதில் படிப்படியாக ஈடுபடத் தொடங்கினார். அவரால் முடிந்த வேலைகளை பொறுப்பெடுத்து செய்து வந்தார். 1971 ஏப்ரல் கிளர்ச்சியின் பின்னர் ஏப்ரல் 18ஆம் திகதி கைது செய்யப்பட்டார். சமூக விடுதலைக்காக எந்த அமைப்பில் தீவிரமாக ஆரம்பத்திலிருந்து தன்னை அர்ப்பணித்து வந்தாரோ, அதே கட்சியின் தலைமையிலான கூட்டணி அரசாங்கம் தான் இவரை கைது செய்து கடுமையான சித்திரவதைக்குள்ளாக்­கியது. தோள்பட்டையில் பட்ட அடி காரணமாக தோள்பட்டை எலும்பு முறிந்து நீண்ட காலம் சிகிச்சை பெற்று வந்தார். தோழர் சீலவத்திக்கு மொத்தம் எட்டுப் பிள்ளைகள் (ஆண்கள் ஐந்து பேர், பெண்கள் மூவர்). புரட்சியின் போது அவரது மூன்று பிள்ளைகளும் (ஒஸ்மன்ட், சிட்னி, நெந்தொல்) கைது செய்யப்பட்டனர். எல்லோரும் நான்கு வருடங்களுக்கு குறையாத சிறைவாசத்தை அனுபவித்தனர். ஒரு மகன் 1987-89 காலப்பகுதியில் கொல்லப்பட்டார். படையினரால் கொல்லப்பட்டவர் என்றே இன்றும் நம்பப்படுகிறது. 71 ஏப்ரல் புரட்சியைத் தொடர்ந்து இவரது வீடு பொலிஸாரால் அழித்து தீக்கிரையாக்கப்­பட்டது. சூழ இருந்தவர்களால் பொருட்கள் சூறையாடப்பட்டன. வீட்டில் இருந்த ஏனைய பிள்ளைகள், மருமக்கள்மார், பேரன் பேத்தி என எல்லோருமாக எல்லாவற்றையும் பறிகொடுத்த நிலையில் வீட்டை விட்டு வெளியேறி சில வருடங்கள் தலைமறைவாக இருக்க நேரிட்டது. போகுமிடங்களிலெல்லாம் ஒரு பயங்கரவாதக் குடும்பம் என்று பார்க்கப்பட்டதே இதற்கான காரணம். ”சொந்­தக்காரர்கள் கூட எங்களுடன் நெருங்க அஞ்சினர். எங்களுக்கு உதவி செய்ய மறுத்தனர். வீட்டில் இருந்த ஆண்கள் எல்லோ­ரும் கைது செய்யப்பட்ட நிலையில் பெண்கள் நாங்கள் வறுமையிலும், பயத்திலும் காலத்தை கடத்தினோம். அந்த துன்பங்களையும், அவலத்தையும் இன்று நினைத்துப் பார்க்கவும் நடுங்குகிறது” என்கிறார் சீலவத்தியின் மகள். இப்படிப்பட்ட கொடுர அனுபவங்களின் மத்தி­யிலும் புரட்சியில் நம்பிக்கை கொண்டவரா­கவும், சமூகப் புரட்சியொன்றை எதிர்பார்த்த வண்ணமும் இருக்கின்ற இந்த தாய் வரலாற்று நினைவுகளில் பதிந்து விட்டவர். லங்கா சமசமாஜக்கட்சியின் தீவிர உறுப்பினராக செயற்பட்ட நீங்கள் எப்படி ஜே.வி.பி.யின் செயற்பாட்டாளராக ஆனீர்கள்? எமது வீட்டில் தான் ஜே.வி.பி.யின் சகல அந்தரங்க கூட்டங்களும் நடத்தப்பட்டன. ஆரம்பத்தில் மகன் கூட எனக்கு விபரங்களை மறைத்தான். வீட்டில் நடத்தப்­படும் கூட்டங்களின் போது அந்த பிள்ளைகளுக்கான உதவிகளை நான் செய்து வந்த போதும் கூட ஒரு மனித குலத்துக்கு விடிவு தேடித்தரும் ஒரு புரட்சிக்கான தயாரிப்புகளை செய்து வருகிறார்கள் என்பதை நான் விளங்கிக் கொள்ள தாமதமாகவி­ல்லை. புரட்சிக்கான சகல ஒத்துழைப்புகளை­யும் நான் செய்ய தீர்மானித்தேன். இதேவேளை ஜே.வி.பி. குறித்து போலிப் பிரச்சாரங்களை ல.ச.ச.க. மற்றும் கொம்யூனி­ஸ்ட் கட்சியும் செய்து வந்த போது அது வரை காலம் அதன் உறுப்பினராக இருந்து செயற்பட்டு வந்த என்னால், அந்தக் கட்சிகளை விமர்சிக்காமல் இருக்க முடியவி­ல்லை. எனவே படிப்படியாக ல.ச.ச.க.வின் செயற்பாடுகளிலிருந்து விலகிய அதே வேளை ஜே.வி.பி.யுடனான செயற்பாடுகளை அதிகரித்துக் கொண்டேன். 71இல் யாழ்ப்பாணத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த விஜேவீரவை சந்தித்து தாக்குதலை நடத்துகின்ற செய்தியை அவரிடமிருந்து நீங்கள் தான் பெற்று வந்தீர்கள் என்று கூறப்படுகிறதே உண்மையா? இயக்கத்தின் இளைஞர்கள் கைது செய்யப்படும் போதெல்­லாம் அவர்களை சிறைக்குச் சென்று சந்திப்­பது மற்றும் ல.ச.ச.க.வைச் சேர்ந்த -வழக்கறிஞர்க­ளாக இருந்த- எனது நண்பர்களின் உதவியோடு விடுவிப்பது, சிறையிலிருக்கும் கட்சி உறுப்பினர்களிடம் தகவல்க­ளைக் கொண்டு செல்வது, அவர்களிடமிரு­ந்து தகவல்களை கொண்டு வருவது போன்ற கடமை­களை செய்து வந்தேன். யாழ்ப்பாணத்துக்குச் சென்று தோழர் விஜேவீரவை சந்திக்க நானும் தோழர் குமநா­யக்கவும் சென்றிருந்தோம். தாக்குதலை மேற்கொள்­ளும் தீர்மானம் பற்றிய தகவல் என்னிடம் அனுப்பப்­படவில்லை. அத்தக­வல் குமநாயக்கவி­னூடாக அனுப்பப்பட்டதாக கூறப்பட்டது. புரட்சிக்கு முன்னரேயே உங்கள் மகன் உட்பட பல இளைஞர்களை கைது செய்யும் பணிகள் தொடங்கப்பட்டுவிட்டன. அப்போது ஆட்சியிலிருந்த ல.ச.ச.க.வினரை சந்தித்து உரையாட சந்தர்ப்பம் கிடைத்ததா? தோழர் என்.எம்.பெரேராவை கட்சித் தலைமைக் காரியாலயத்தில் வைத்து நானும் குமநாயக்கவும் சென்று சந்தித்து இது குறித்து உரையாடினோம். ”இந்நாட்டின் புரட்சிகர இளைஞர்கள் தங்களது செயற்பாடுகளை தொடர்ந்து செய்வதை தடுக்க எவராலும் முடியாதே தோழர், அவர்களை கைது செய்து அடைத்து அடக்கு­முறையை பிரயோகிப்பது இடதுசாரிக் கட்சிகளின் கூட்டணி அரசாங்க­மொன்றில் எப்படி நிகழ முடியும்? நீங்கள் கூறிவருவதைப் போல இடதுசாரிக் கட்சிகளை நாசம் செய்ய வந்த சீ.ஐ.ஏ. இயக்­கமென்பது கட்டுக்கதை. முடிந்தால் அவர்க­ளுடன் சேர்ந்து ஒத்து­ழையுங்கள்” என்று கேட்டேன். அவர் இதற்கு செவிமடுக்கவில்லை. அலட்சியமாக நடந்து கொண்டார். ”இப்படி சென்றால் செக்கோஸ்ல­வேக்­கியாவில் நடந்ததைப் போல் தான் ஆகும். உங்­களது மகன் ஒஸ்மன்டை வேண்டுமென்றால் விடுதலை செய்கிறேன். மற்றவர்களைப் பற்றி என்னோடு ஒன்றும் பேச வேண்டாம்” என்று கூறிவிட்டார். அப்படிப்பட்ட ஒரு விடுதலை எனது மகனுக்கு மட்டும் தேவை இல்லை என்று வந்து விட்டேன். அப்போதைய ல.ச.ச.க.வினர், அரசாங்கத்துடன் சேர்வதென்ற முடிவை எடுத்த போது நீங்கள் என்ன முடிவு செய்தீர்கள்? ஐ.தே.க தோற்கடிக்குமுகமாக ஐக்கிய முன்ன­ணியொன்றை கட்டியெழுப்புவதற்கு ல.ச.ச.க., ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்ற பிரேரணை குறித்து ஒரு முறை நகர சபை மண்டபத்தில் நடத்தப்பட்ட கூட்டத்தில் ஒரு பெரிய விவாதம் நடந்தது. ஏறத்தாழ 700க்கும் மேற்பட்ட வாக்குகள் அப் பிரேரணைக்கு ஆதரவாக அளிக்கப்பட்டது. அந்த விவாதத்தின் போது பாலா தம்பு, எட்மன்ட் சமரக்கொடி போன்ற தோழர்கள் கடுமையாக எதிர்த்து தாங்கள் வெளியேறுவதாக அறிவித்தார்கள். லெஸ்லி குணவர்தன, கொல்வின் ஆகியோர் இதன் போது தாங்கள் நடுநிலை வகிப்பதாக அறிவித்தார்கள். அவர்களோடு சேர்ந்து நானும் நடுநிலை வகித்தேன். பிற்காலத்தில் அப்படியொரு நிலைப்பாட்டை எடுத்திருக்கக் கூடாது என்பதை உணர்ந்து கொண்டேன். நீங்கள் கைது செய்யப்பட்டது எப்போது? ஏப்ரல் 18ஆம் திகதியன்று நான் கைது செய்யப்பட்டேன். ஒஸ்மன்ட்டை எங்கு வைத்தி­ருந்தார்கள் என்பது தெரியாதிருந்தது. நான் தேடியலைந்து கொண்டிருந்தேன். அப்படியான ஒரு வேளையில் தான், இடையில் வைத்து பொலிஸார் என்னைக் கைது செய்தார்கள். நான்கு வருடங்கள் எவ்வித வெளியுறவுகளும் இல்லாமல் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்­தேன். ஆரம்பத்தில் நான் கடும் தாக்கு­தலுக்கு உள்ளாகியிருந்தேன். தோளில் கடும் தாக்கு­தலால் குறிப்­பிட்ட காலம் வரை சிகிச்சை பெற்று வந்தேன். 5ஆம் திகதி தாக்குதல் பற்றிய செய்தியை விஜேவீரவிடமிருந்து நான் தான் பெற்று வந்தேன் என வாக்குமூலமளித்தால் என்னை விடுதலை செய்வதாக கூறினா­ர்கள். நான் இறுதி வரை ஒப்புக்கொள்ள மறுத்தேன். அதன் விளைவா­கவே நான்கு வருடங்கள் சிறையில் கழித்தேன். மதிலுக்கு அப்பால் எனது மகன்மார் மூவரும் தடுத்து வைக்கப்பட்டிருந்­தும் கூட அவர்க­ளைச் சந்திக்க அனுமதி தரப்படவி­ல்லை. ஒரு முறை ஒஸ்மன்ட் என்னை சந்திக்க வேண்டுமென விசாரணையாளர்களிடம் கோரி­யதைத் தொடர்ந்து ஆணைக்குழுவிலிருந்த ஒரு மனித நேயமிக்க ஒரு விசாரணையாளர் தனது சொந்த முயற்சியின் பேரில் பல இடங்க­ளிலிருந்து உத்தரவு பெற்று ஒரே ஒரு முறை சந்திக்க வழி செய்தார். சிறையில் பெற்ற அனுபவங்களை விளக்குங்களேன்? வெலிக்கடை சிறையில் எங்களில் பலர் தடுத்து வைக்கப்பட்­டிருந்தனர். ஜே.வி.பி.யின் பெண் தோழர்­கள் பலர் அதில் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர். சிறைக்குள் நாங்கள் முகம் கொடுத்த முக்கிய பிரச்­சினை, சாதாரண சமூக விரோத குற்றங்களுக்காகத் தண்­டனை பெற்ற கைதிகளையும் எங்களைப் போன்ற அரசியல் கைதிகளையும் ஒன்றாக போடப்பட்டிருந்தது தான். பாதாள உலக செயற்­பாடுகளில் கொலை, கொள்ளை போன்ற செயல்களில் ஈடுபட்ட பலரும் எங்களுடன் சேர்த்து போடப்பட்டிருந்தனர். சிறைக்குள் அவர்களுக்கு, பல சலுகைகள் சிறை அதிகாரிகளால் வழங்கப்பட்டு வந்தன. உணவு, இருப்பிடம், சீருடை என பல விடயங்களில் அவர்களுக்கு விசேட வசதிகள் இருந்தன. அரசியல் கைதிகளான நாங்கள் நியாய­மான வசிதிகளோ அற்று இருந்த அதே வேளை கிரிமினல் குற்றவாளிகள் சலுகை பெற்றவர்களாகவும், சிறைக்குள் அதிகாரம் நிறைந்தவர்­களாகவும் இருந்­தார்கள். அது மட்டுமன்றி அக் கைதிகள் எங்களை இம்சித்தார்கள். எனவே, சிறைக்குள் அடிக்கடி இரு சாராருக்குமி­டையில் சண்டைகள் நடப்பதுண்டு. நாங்­கள் எமது எதிர்ப்பை அவ்வப்போது வெளிப்படுத்தும் வகையில் சிறைச் சாலைக்குள்ளும் போராடி­னோம். ஏற்கெனவே சித்திரவதைக்குள்ளாகி, விரக்தியுற்ற நிலையில் சிறைவாசத்தை அனுபவித்து வந்த பெண் தோழர்களுக்கு ஏற்பட்ட இவ்வகையான நிலைமைகள் ஒரு வகையில் சித்திரவ­தைகளே. உண்மையில், சிறைச்­சாலை என்பது இன்னொரு அரசியல் வகுப்பு மாத்திரமன்றி இன்னொரு போராட்டக்களமும் கூடத்தான்.
தங்கம் விற்கிற விலையில் மொத்தமாகப் பணம் தந்து வாங்க முடியாதவர்கள், தங்க நகைச் சீட்டு திட்டத்தில் சேர்ந்து கொஞ்சம் கொஞ்சமாக தங்கம் வாங்கி வந்தனர். ஆனால், புதிய கம்பெனி சட்டத்தின் மூலம் சாதாரண மனிதர்களின் இந்த ஆசைக்கும் உலை வைத்திருக்கிறது மத்திய அரசாங்கம். புதிய கம்பெனி சட்டத்தின் விதிமுறைகளைத் தொடர்ந்து, சில நகைக் கடைகள் தங்க நகைச் சீட்டு திட்டங்களை நிறுத்தி இருக்கிறது அல்லது அதன் கால அளவை மாற்றி யிருக்கிறது. புதிய கம்பெனி சட்டத்தில் என்ன சொல்லியிருக்கிறார்கள், நகைக் கடைகள் ஏன் சீட்டுத் திட்டங்களை மாற்றி வருகின்றன என்கிற கேள்விகளை சென்னையைச் சேர்ந்த கம்பெனி செகரட்டரி எம்.தாமோதரனிடம் கேட்டோம். ‘’சிறிய மற்றும் பெரிய கடைகள் அனைத்தும் தங்க நகை சேமிப்புத் திட்டங்களை நடத்தி வருகிறது. இதில் சில நகைக் கடைகள் வாடிக்கையாளர் களைக் கவரும்விதமாக சீட்டுத் திட்டத்தில் சேர்ந்தால் சுமார் 36 சத விகிதம் லாபம் கிடைக்கும் என அறிவிக்கிறது. ஆனால், வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் டெபாசிட்டுக்கு தரும் வட்டி விகிதத்தைவிட நகைக் கடைகள் அதிக லாபம் தரக்கூடாது என புதிய கம்பெனி சட்டத்தில் கூறபட்டுள்ளது. வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் வாங்கும் டெபாசிட்டுக்கு அதிகபட்சமாக 12.5 சதவிகிதம் மட்டுமே வட்டி தரப்படுகிறது. நகைக் கடைகள் பொதுமக்களிடம் இருந்து டெபாசிட் வசூலிக்க முடியாது. ஆனால், வாடிக்கையாளர்கள் நகை வாங்குவதற்கான தொகையை முன்கூட்டியே அட்வான்ஸாகச் செலுத்தலாம். இந்தப் பணத்தை அதிகபட்சமாக ஒருவருடத்துக்கு மட்டுமே வைத்துக்கொள்ள முடியும். இதற்கு மேற்பட்ட காலத்துக்குப் பணம் வசூலிக்க வேண்டுமெனில் ரிசர்வ் வங்கியிடம் தனியாக அனுமதி வாங்க வேண்டும். சில வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் இதற்கான அனுமதியைப் பெற்று, டெபாசிட் வாங்கி வருகின்றன. அதாவது, மொத்தமாகத் தங்கம் வாங்குவதற்குப் பணம் இல்லை. அதனால் சிறுக, சிறுக சேமித்து தங்கத்தை வாங்குகிறோம் என்கிற வகையில் ஒரு வருடத்துக்்கு மட்டுமே இந்தத் திட்டங்களை நடத்த வேண்டும் எனவும் கம்பெனி சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. பொதுமக்களிடம் இருந்து ஒரு வருட காலத்துக்குமேல் வசூலிக்கப்படும் தொகையை, தொழில் தேவைகளுக்காக கடன் வாங்கியதாக மட்டுமே எடுத்துக்கொள்ளப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்களிடம் இருந்து ஒரு வருடத்துக்்கு மேற்பட்ட காலத்துக்்கு வசூலிக்கப்பட்ட தொகையை வருகிற மார்ச் 2015-க்குள் திரும்ப ஒப்படைத்துவிட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. சில நகைக் கடைகள் நீண்ட காலத்துக்கு நகைச் சீட்டுத் திட்டங்களை நடத்தி, அந்தத் தொகையை மக்களுக்குச் சரியாகத் தரவில்லை என புகார்கள் வந்துள்ளன. இதனால்தான் அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. அடுத்து, இந்தப் புதிய கம்பெனி சட்டம் ஏப்ரல்1, 2014-லிருந்துதான் அமலுக்கு வந்துள்ளது. அதற்குமுன் ஆரம்பிக்கப்பட்ட திட்டங்களை என்ன செய்வது என்பதற்கு எந்தவிதமான விளக்கமும் புதிய கம்பெனி சட்டத்தில் இல்லை. புதிய கம்பெனி சட்டத்தில் சொல்லப்பட்டுள்ள விதிமுறைகள் பிரைவேட் லிமிடெட், பப்ளிக் லிமிடெட் நிறுவனங்களாகச் செயல்படும் நகைக் கடைகளுக்குதான் பொருந்தும். ஆனால், தனிப்பட்ட உரிமையாளரின் கீழ் இயங்கும் தங்க நகைக் கடைகளுக்கு எந்தச் சிக்கலும் இல்லை என நினைக்கிறார்கள். ஆனால், அந்தக் கடைகள் ஆர்பிஐ-ன் நேரடி பார்வையின்கீழ் வந்துவிடும்" என்றார். மேலும், சில தங்க நகைக் கடைகள் பொதுமக்களிடம் இருந்து வசூலிக்கும் தொகையை தொழில் தேவைகளுக்குப் பயன்படுத்திக் கொள்வதாகவும் ஆர்பிஐக்கு புகார் வந்துள்ளது. அதோடு சில முறைப்படுத்தப் படாத அல்லது பதிவு செய்யப்படாத கடைகளும் நகைச் சீட்டுத் திட்டங்களை நடத்துகின்றன. இதனால் கணக்கில் வராத பணம் நகைச் சீட்டு என்கிற பெயரில் அதிகம் புழங்க வாய்ப்பிருப் பதாகவும், இதனைத் தடுப்பதற்கான வழிமுறைகள்தான் இப்போது புதிய கம்பெனி சட்டத்தின் மூலம் கொண்டுவரப்பட்டிருப்பதாகவும் சொல்கிறார்கள். புதிய கம்பெனி சட்டத்தில் கொண்டுவரப்பட்டிருக்கும் விதிமுறை கள் பற்றி சென்னையைச் சேர்ந்த பிரபல நகைக் கடைகாரர்களிடம் கேட்டபோது, ‘தனிஷ்க் போன்ற பப்ளிக் லிமிடெட் கம்பெனிகள் மட்டும் நகைச் சீட்டுத் திட்டத்தை நிறுத்திவிட்டன. ஆனால், நாங்கள் அப்படிச் செய்யாமல், நகைச் சீட்டுத் திட்டங்களின் காலத்தைக் குறைத்துக் கொண்டோம். அதாவது, 15, 18 மாதங்கள் நடத்தப்பட்ட நகைச் சீட்டுத் திட்டங்களை இப்போது 11 மாத திட்டங்களாக மாற்றியமைத் திருக்கிறோம். மேலும், கம்பெனி சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களுக்குதான் இந்தச் சட்டம் பொருந்தும். நாங்கள் பார்ட்னர், தனி உரிமையாளர்கள் கொண்ட நிறுவனமாகவே செயல்படுகிறோம். இதனால் எங்களுக்கு நகைச் சீட்டு நடத்துவதில் எந்தச் சிக்கல் இல்லை’’ என்றார்கள். பொதுமக்கள் அக்கறையோடு கட்டிய பணம் பாதுகாப்பாக கிடைக்கும் தரமான கடைகளை தேர்ந்தெடுத்து முதலீடு செய்ய வேண்டும்!
இலங்கை மக்களுக்கு உதவிகளை வழங்குவதற்கு மத்திய அரசிடம் அனுமதி கோரி தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தமிழ்நாடு சட்டபேரவையில் முன்வைக்கப்பட்ட தனிநபர் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தத் தீர்மானத்தை முன்வைத்து உரையாற்றிய முதலமைச்சர் ஸ்டாலின் தமிழக அரசு இலங்கை மக்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவிகளை வழங்க முன்வந்துள்ளதாக தெரிவித்தார். அதற்கமைய, 80 கோடி ரூபா பெறுமதியான 40,000 மெட்ரிக் டன் அரிசி, 137 மருந்து பொருட்கள் (28 கோடி ரூபா) மற்றும் குழந்தைகளுக்காக 500 டன் பால்மா 15 கோடி ரூபா) என்பவற்றை வழங்க தமிழக அரசு தீர்மானித்துள்ளது. இதேவேளை, இலங்கை மக்களுக்கு உதவி செய்வதற்காக தனது சொந்த நிதியிலிருந்து 50 இலட்சம் ரூபாவை வழங்குவதற்கு தீர்மானித்துள்ளதாக தமிழக எதிர்க்கட்சியின் துணைத்தலைவர் ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். இந்நிலையில், தனது தீர்மானத்துக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றிதெரிவித்த முதல்வர் ஸ்டாலின் தற்போது, தாம் வழங்க முன்வந்திருப்பது முதற்கட்ட உதவி என்றும், தேவையேற்படின், அடுத்தகட்டமாக உதவுவதற்கும் தமிழ்நாடு அரசு தயாராக உள்ளதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 000 Related posts: 16 விமானங்களைக் கொள்வனவு செய்ய நடவடிக்கை! திடீர் உயர் அழுத்த மின் காரணமாக பழுதடைந்த பொருள்களுக்கு இழப்பீடு வழங்கக்கோரி மக்கள் மின்சார சபைக்கு... அதிகபட்ச இழப்பீட்டுத் தொகையை அதிகரிக்க தீர்மானம்! Tweet ஏப்ரல் மாதம் 8 முதல் 10 திகதிகளில் தபால் மூல வாக்களிப்பு - தேர்தல்கள் ஆணைக்குழு! ஜனாதிபதியின் நிலையான சூழல் பாதுகாப்பு கொள்கையை நிறைவேற்றுவதே நோக்கம் - அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல! சர்வதேச நாணய நிதியத்துடனான அதிகாரிகள் மட்டப் பேச்சுவார்த்தை இவ்வாரத்துக்குள் ஆரம்பம் – நிதி அமைச்சர்...
வேட்பாளர் வேட்புமனு தாக்கலின்போது படிவம் 3 (வேட்புமனு) மற்றும் படிவம் 3-A (உறுதிமொழி ஆவணம்) ஆகியவற்றுடன் சேர்த்து தாக்கல் செய்த வேட்பாளர்களின் தகவல் குறித்த சுருக்கம் (09.12.2019 முதல் 16.12.2019 வரை பெறப்பட்ட வேட்புமனுக்களை ஸ்கேன் செய்யப்பட்டு இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட மொத்த வேட்புமனுக்களின் எண்ணிக்கை) Captcha-வை தட்டச்சு செய்யவும் பார்வையாளர்களின் எண்ணிக்கை: 24684419 The information published through this website has been entered by the Returning Officer, and is subject to change.
ஜூன் மாதத்துக்கான 5000 ரூபா கொடுப்பனவை வழங்க வேண்டாம் என்று, அரசாங்கத்திடம் தேர்தல்கள் ஆணைக்குழு கூறியதாக, வெளியாகும் செய்திகள் உண்மைக்கு புறம்பானவை என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். தேர்தல்கள் ஆணைக்குழு ஜூன் மாதத்திற்கான 5000 ரூபா கொடுப்பனவை வழங்க வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளதால், அந்த கொடுப்பனவை நிறுத்துவதற்கு அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் அமைச்சரவை பேச்சாளரான அமைச்சர் பந்துல குணவர்தன கூறியிருந்தார். எனினும், தாம் அவ்வாறான எந்தக் கடிதத்தையும் அனுப்பவில்லை என்று, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். ஜனாதிபதி செயலாளர் மற்றும் பிரதமரின் செயலாளர் உள்ளிட்ட அமைச்சுக்களின் செயலாளர்களுக்கு அனுப்பிய கடிதத்தில், 5000 ரூபா நிவாரணம் வழங்கலில் பிரதேச மற்றும் கிராம உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களை ஈடுபடுத்த வேண்டாம் என்றே தாம் கோரியதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஜூன் மாதத்திற்கான நிவாரண தொகை வழங்குவதை பரிசீலிக்குமாறும், உண்மையாகவே அவ்வாறு வழங்க வேண்டிய அவசியம் ஏற்பட்டால் அது குறித்து கரிசனை கொள்ள வேண்டும் என்றுமே, அந்த கடிதத்தின் மூலம் தாம் கோரியதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய கூறியுள்ளார்.
பொதுத்தேர்தலுக்கான வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குப்பெட்டிகளை எடுத்துச் செல்லும் பணிகள் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெறவுள்ளன. இதற்கமைய குறித்த பணிகள் இன்று காலை 8 மணிக்கு ஆரம்பமாகவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலரின் கண்காணிப்பின் கீழ் இந்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக அந்த ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. 2020 பொதுத்தேர்தலுக்கான வாக்களிப்பு நாளை காலை 7 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. இந்த முறை பொதுத்தேர்தலில் 22 மாவட்டங்களில் அங்கிகரிக்கப்பட்ட 20 அரசியல் கட்சிகளும் 34 சுயேட்சைக்குழுக்களும் போட்டியிடவுள்ளன. அவற்றில் 7 ஆயிரத்து 452 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அத்துடன் குறித்த பொதுத்தேர்தலில் நாடளாவிய ரீதியில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள 12 ஆயித்து 984 வாக்களிப்பு நிலையங்களில் ஒரு கோடியே 62 இலட்சத்து 63 ஆயிரத்து 885 பேர் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றுள்ளனர். இதேவேளை, நாளை வாக்களிப்புகள் இடம்பெறவுள்ள நிலையில், அனைத்து வாக்களிப்பு நிலையங்களிலும் தொற்று நீக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
முறைகேடான முறையில் நடந்து கொண்ட குற்றச்சாட்டில், 100 இள வயது ஜோடிகளை பொலிஸார் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை கைது செய்துள்ளனர். அனுராதபுரம் புனித பூமியில், பெரும்பாலான இள வயதுடைய ஜோடிகள் முறைகேடான முறையில் நடந்து கொள்வதாக பொதுமக்களினால் பொலிஸாருக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கமைய குறித்த பகுதியில் திடீர் சுற்றிவளைப்பினை மேற்கொண்ட பொலிஸார், முறைகேடாக நடந்து கொண்ட குற்றச்சாட்டுக்கு அமைவாக இள வயதுடைய 100 ஜோடிகளை இவ்வாறு செய்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர், கல்வி நிலையங்களுக்கு செல்வதாக வீடுகளில் கூறிவிட்டு வந்து, இங்குள்ள ரயில் நிலையங்கள் மற்றும் பூங்காக்கள் ஆகிய பொது இடங்களில் முறைகேடாக நடந்து கொள்வதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். மேலும், கைது செய்யப்பட்டுள்ள பிள்ளைகளை அவர்களது பெற்றோரிடம் ஒப்படைப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
கல்முனை சமூக மேம்பாட்டுக்கான பழைய மாணவர்கள் செயல் வலையமைப்பின் ஏற்பாட்டில் அமைப்பின் தலைவர் மெளலவி எஸ்.எம்.நிம்ஸாத் மன்பயி தலைமையில் நூலக திறப்பு விழாவும் மர்ஹும்களான உலமாக்களை நினைவு கூறல் நிகழ்வும் கல்முனை மஸ்ஜிதுல் பலாஹ் பள்ளிவாசலில் மிக சிறப்பாக அண்மையில் நடைபெற்றது. இந்நிகழ்வில், நூலகத்திற்குரிய கிதாபுகளை சங்கைக்குரிய மெளலான மெளலவி அஷ்ஷெய்யிது எஸ்.எம். மஸ்ஹூர் தங்கள் ( அஸ்ஸகாபி அர்ரிபாயி) கரத்தினால் கிதாபுகள் அடுக்கிவைத்து ஆரம்பித்து வைக்கப்பட்டது. - Advertisement - அதனைத்தொடர்ந்து, உலமாக்கள், நூல்கள் அன்பளிப்பாளர்கள் மற்றும் நிகழ்வில் கலந்து கொண்டவர்களினால் நூல்கள் அடுக்கி வைக்கப்பட்டதுடன் மேலும் சங்கைக்குரிய மெளலானாவினால் நூலக பதிவேட்டில் நினைவு குறிப்பும் பதிவு செய்யப்பட்டது. அமைப்பின் தலைவரினால் அமைப்பின் வளர்ச்சி பற்றியும், எதிர்கால திட்டங்களை செயல்படுத்துவது பற்றியும் உரை நிகழ்த்தப்பட்டது. இந்நிகழ்வில் உலமாக்கள் புத்தீஜீவிகள், பள்ளிவாசல் நிர்வாகிகள், பொதுமக்கள் மற்றும் நலன்விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
முதலாளித்துவத்துடன் ஒப்பிடுகையில், சோவியத் ஒன்றியத்தின் பொதுவுடைமை அடிப்படையிலான திட்டமிட்ட பொருளாதாரம், குறிப்பிடத்தக்க வகையில் சிறப்பாகச் செயல்பட்டது. பொதுவுடைமை அடிப்படையிலான திட்டமிட்ட பொருளாதாரம் எதையெல்லாம் உருவாக்கமுடியும் என்பதற்கு, சோவியத் ஒன்றியம் ஒரு நிலையான உதாரணமாகும். முழு நேர வேலைவாய்ப்பு, உத்தரவாதப்படுத்தப்பட்ட ஓய்வூதியம், ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு, வேலை நேர உச்சவரம்பு, இலவச மருத்துவம் மற்றும் கல்வி (உயர்கல்வி உட்பட), மானியத்துடன் கூடிய விடுமுறைகள், கட்டுப்படியாகும் விலையில் வீடுகள், குறைவான குழந்தை பராமரிப்புச் செலவுகள், குறைந்த செலவில் பொதுப் போக்குவரத்து மற்றும் ஏறத்தாழ சமமான வருமானம். நம்மில் பெரும்பாலானோர் இந்த வசதிகளை விரும்புகிறோம். ஆயினும், இவற்றை நிரந்தரமாக அடைய முடியுமா? சோவியத் ஒன்றியம் இந்த வசதிகளை உருவாக்கியது. சோவியத் ஒன்றியத்தில் பொதுவுடைமை அடிப்படையிலான திட்டமிட்ட பொருளாதாரம் நடைமுறையிலிருந்தபோது, 1928 முதல் 1989 வரை, போர்க்காலம் தவிர பிற சமயங்களில், நம்பிக்கையளிக்கும் விதத்தில் பொருளாதாரம் ஆண்டுதோறும் வளர்ச்சி அடைந்தது. தெளிவாகக் கூறுவதென்றால், முதலாளித்துவப் பொருளாதாரங்கள் ஒவ்வொரு சில ஆண்டுகளுக்கு ஒருமுறை பின்னடைவை தவறாது சந்தித்து, பெரிய மந்தநிலையில் மூழ்கியிருந்த போதும், சோவியத் பொருளாதாரம் இடையறாது வளர்ந்து, அனைவருக்கும் எப்பொழுதும் வேலைவாய்ப்புகளை வழங்கியது. சோவியத் ஒன்றியத்தின், பொதுவுடைமை அடிப்படையிலான திட்டமிட்ட பொருளாதாரமானது, செயல்பட முடியாதது என்ற முதலாளித்துவ பிரச்சாரத்தை பொய்ப்பித்து, குறிப்பிடத்தக்க வெற்றியை ஈட்டியது. மாறாக, பெருவாரியான மக்களுக்கு வேலையின்மை மற்றும் உச்சக்கட்ட வறுமையை அளித்த, பொருளாதார மந்தம் மற்றும் பின்னடைவுகளை வழக்கமாகக் கொண்டிருந்த, முதலாளித்துவ பொருளாதாரம்தான் செயல்பட முடியாததாக உள்ளது. இன்று, எல்லாவற்றிற்கும் மேலாக, முதலாளித்துவம் சுருங்கி, சுணக்கமடைந்து, எண்ணற்ற மக்களை செயலற்ற நிலைக்குக் கட்டாயமாகத் தள்ளியுள்ளது என்பது தெளிவு. சோவியத் வீழ்ச்சியில் ஏகாதிபத்தியத்தின் பங்கு உண்மையில் சோவியத் ஒன்றியத்தின் அழிவுக்கு வழிவகுத்தவை எவையெனில், சோவியத்தின் பொருளாதாரத்தை அழிப்பதற்கு திட்டமிட்டவகையில் தொடர்ந்த மேற்குலகின் முயற்சிகள்; ரீகன் நிர்வாகத்தின் கூர்மைப்படுத்தப்பட்ட பனிப்போர்; இந்த இக்கட்டான சூழலில் இருந்து வெளிவர ஒரு வழி கண்டுபிடிக்கத் தெரியாத சோவியத் தலைமையின் இயலாமை ஆகியவையே ஆகும். 1980களில் பனிப்போரின் பாதிப்புகள் சோவியத் ஒன்றியத்தில் தெரிய ஆரம்பித்தன. தனது தத்துவார்த்த எதிரியான அமெரிக்க ஐக்கிய நாடுகளுக்கு எதிராக, சோவியத் மேற்கொண்ட இராணுவப் போட்டி பலவகையிலும் அதன் பொருளாதார வளர்ச்சியைப் பாதித்தது. பொருளாதாரம் வளர்ந்து கொண்டிருந்த போதிலும், கடந்த காலத்தைவிட மெதுவான வேகத்திலேயே வளர்ச்சி இருந்தது. முதலாவதாக, ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிக்கான அதன் சிறந்த வளங்கள் இராணுவத்தால் ஏகபோகமாக்கிக் கொள்ளப்பட்டன. குடிமக்களின் பொருளாதார முன்னேற்றத்திற்கான சிறந்த விஞ்ஞானிகள், பொறியியலாளர்கள் மற்றும் இயந்திரக் கருவிகளின் பயன்பாடு, இராணுவத்திற்கு மட்டுமானதாக ஆக்கப்பட்டது. இரண்டாவதாக, சோவியத்தின் பொருளாதாரத்தை முடக்குவதற்காக ரீகன் நிர்வாகத்தால் வெளிப்படையாகவே ஆயுதப் போட்டி புதுப்பிக்கப்பட்டது. இதற்கு ஈடுகொடுக்க, சோவியத்தின் இராணுவச் செலவினங்கள் உயர்த்தப்பட்டன. அமெரிக்க ஆக்கிரமிப்பை தடுப்பதற்காக, சோவியத் ஒன்றியம் தனது தாங்கும் சக்தியை மீறி, அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மிகப்பெரிய சதவிகிதத்தை, இராணுவத்திற்காக செலவழித்தது. அதே நேரத்தில், அமெரிக்கர்களும் இராணுவத்திற்காக ஒரு பெரும் தொகையை செலவழித்தபோதிலும், அமெரிக்காவின் மிகப்பெரிய பொருளாதாரத்தின் மொத்த தேசிய வருமானத்தில் அது சமாளிக்கக்கூடிய அளவுக்கே இருந்தது. மூன்றாவதாக, முக்கியமான மூலப் பொருட்களுக்காக, சோவியத் ஒன்றியம் வெளிநாட்டு இறக்குமதியை நம்பியிருந்தது. தன் நாட்டை மண்டியிடச் செய்வதற்காக மற்ற நாடுகள் விநியோகத்தைத் தடை செய்யும் அபாயங்களிலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ள, சோவியத் ஒன்றியம் தனது பரந்துபட்ட சொந்த எல்லைக்குள்ளிருந்து மூலப்பொருட்களை அகழ்ந்து எடுக்க முடிவு செய்தது. இது, நாட்டைத் தன்னிறைவு அடையச்செய்த அதே வேளையில், உள்நாட்டு ஆதாரங்களை மட்டுமே நம்பியிருக்கச் செய்தது. எளிதில் கிடைத்துவந்த வளங்கள் தீர்ந்துவிட்டதால், கடினமான வழிகளில், புதியதாக மூலப் பொருட்களைத் தேடவேண்டிய தேவை ஏற்பட்டது. இது உற்பத்தி செலவை அதிகரித்தது. நான்காவதாக, நாட்டின் பாதுகாப்பிற்காக சோவியத்துகள், கிழக்கு ஐரோப்பாவுடனும் மூன்றாம் உலக நாடுகளுடனும் நட்பை நாடினர். ஆனால் நட்பு பாராட்டிய நாடுகளைவிட சோவியத் ஒன்றியம் பொருளாதார பலத்துடன் இருந்தது. எனவே, அது தன்னுடன் இணைந்த சோஷலிச நாடுகளையும், மேற்கத்திய சக்திகளின் ஆக்கிரமிப்பிலிருந்து தங்களை விடுவித்துக்கொள்ளப் போராடிய பிற நாடுகளின் விடுதலை இயக்கங்களையும் பாதுகாக்க, அந்த நாடுகளுக்கு அச்சாணியாகவும், அவற்றிற்குப் பொருளாதார நலன்களை வழங்கக் கூடியதாகவும் மாறியது. எனவே, அதன் கூட்டாளிகளின் எண்ணிக்கை அதிகரித்தது. ஆனால், வாஷிங்டன், கம்யூனிச எதிர்ப்புக் கிளர்ச்சிகளுக்கு ஆதரவாக சூழ்ச்சி செய்து, ஆயுதம் மற்றும் நிதி உதவி செய்தது. இதனால் மாஸ்கோ தன் கூட்டாளிகளுக்காகச் செய்யும் செலவுகள் அதிகரித்தன. இதன் காரணமாக, சோவியத் ஒன்றியத்தின் பாதுகாப்பு செலவுகள் தொடர்ந்து அதிகரித்து, அதன் பொருளாதார வளர்ச்சியை தீவிரமாக பாதித்தன. நாட்டின் கடைசித் தலைவரான மைக்கேல் கோர்பச்சேவ் நட்பு நாடுகளிடமிருந்து இராணுவ தளங்களைத் திரும்பப்பெற்று, பனிப்போரை முடிவுக்குக் கொண்டுவந்து, அமெரிக்காவுடன் ஒத்துழைக்க உறுதியளித்தார். பொருளாதாரத்தைப் பொறுத்தவரை, மேற்கத்திய பாணி சமூக ஜனநாயகத்திற்கு சோவியத் ஒன்றியத்தை மாற்ற முனைந்தார். ஆனால், அவரது பொருளாதார மற்றும் அயலுறவு சரணாகதிக் கொள்கைகள், பொருளாதார தேக்கத்திலிருந்து நாட்டை மீட்பதற்கு பதிலாக பேரழிவிற்கே வழிவகுத்தன. சோவியத் ஒன்றியத்தின் பாதுகாப்புக் கரங்கள் விலக்கப்பட்ட நிலையில், அமெரிக்கா, ஈராக்கில் தொடங்கி யூகோஸ்லாவியா, ஆப்கானிஸ்தான், மீண்டும் ஈராக், பின் லிபியா என சிறியதும் பெரியதுமாக உலகம் முழுவதும் தொடர்ச்சியான ஆக்கிரமிப்புகளில் இறங்கியது. கோர்பச்சேவ் பொருளாதாரத் திட்டமிடலைக் கைவிட்டு, சந்தைப் பொருளாதாரத்தை செயல்படுத்துவதற்கான வழியை அகலத் திறந்துவிட்டதானது, நாட்டை நெருக்கடிக்குள் தள்ளியது. ஐந்து ஆண்டுகளுக்குள் ரஷ்யாவில், வேலையின்மை, வீடில்லாமை, சுரண்டல், பொருளாதார பாதுகாப்பின்மை ஆகியவை வன்மத்துடன் மீண்டும் குடியேறின. 1991 ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் தினத்தன்று, சோவியத் ஒன்றியம் என்பது அதிகாரப்பூர்வமாக இல்லாது ஒழிந்த நிலையில், கோர்பச்சேவ், “நாம் ஒரு புதிய உலகில் வாழ்கிறோம். பனிப்போர் முடிவுக்கு வந்துவிட்டது. நமது பொருளாதாரம் மற்றும் சமூக விழுமியங்களைச் சிதைத்த இராணுவமயமாக்கல் மற்றும் வெறித்தனமான ஆயுதப் போட்டி முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. உலகப்போரின் அச்சுறுத்தல் நீக்கப்பட்டது” என்று கூறினார். (ராபர்ட்ஸ், 1999). இதனால் மேற்குலகில் கோர்பச்சேவின் புகழ் பரவியது. ஆனால் ரஷ்யர்கள் சோர்வுற்றிருந்தனர். முதலாளித்துவத்திற்கு மாற்றாக, உலகில் முதன்முதலில் உருவான முயற்சி ஏன் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது என்பதற்கான உண்மையான காரணங்கள் கோர்பச்சேவின் வார்த்தைகளுக்குள் அடங்கியிருந்தன. சோவியத் பொருளாதார அமைப்பு செயல்படமுடியாது என நிரூபிக்கப்பட்டதால் அல்ல. உண்மையில் அது முதலாளித்துவத்தை விட சிறப்பாகச் செயல்பட்டது. இரண்டாம் உலகப்போரின் முடிவில் தொடங்கி, ரீகன் ஆட்சிக்காலத்தில் வீரியத்துடன் வளர்ந்த ஆயுதப் போட்டியால், சோவியத் ஒன்றியத்தின் பொருளாதாரத்தை வீழ்த்த முயன்ற பகையாளியான அமெரிக்காவிற்கு, சோவியத்தின் தலைமை அடிபணிந்ததே அதன் அழிவுக்கான உண்மையான காரணம். நாட்டின் 99 சதவீதம் பேருக்கு செழிப்பை அளித்த சோவியத் பொருளாதாரம் போற்றி வளர்க்கப்பட்டிருந்தால், மேல்மட்டத்தில் உள்ள ஒரு சதவீதம் பேருக்கு மட்டுமே பயன்தரும் தனியார்மய சந்தைப் பொருளாதாரங்களை அது மதிப்பிழக்கச் செய்திருக்கும். சுதந்திரச் சந்தைப் பொருளாதாரத்தில், மேல் மட்டத்தில் இருக்கும் ஒரு சதவீதத்தினரின் தனி உரிமையாக சொத்துக் குவிப்பு, சமூகப் பாதுகாப்பு, சொகுசு வாழ்க்கை அமைய, பெருவாரியான மக்களின் வேலையின்மை, வறுமை, பசி, கீழ்மை மற்றும் பொருளாதார பாதுகாப்பின்மை ஆகியவை இன்றியமையாதவையாக உள்ளன. தோழர் ஸ்டாலின் ஒலித்த எச்சரிக்கை பொதுவுடைமை அடிப்படையில் திட்டமிட்ட பொருளாதாரம், ஸ்டாலினின் வழிகாட்டுதலின் கீழ் கட்டியெழுப்பப்பட்டது. அவர் ஒருமுறை தீர்க்க தரிசனத்தோடு, “சோவியத் குடியரசைத் தகர்ப்பதில் முதலாளித்துவம் வெற்றி பெற்றால், அனைத்து முதலாளித்துவ மற்றும் காலனி நாடுகளிலும் ஓர் இருண்ட சகாப்தம் அரங்கேறும். ஒடுக்கப்பட்ட மக்களின், தொழிலாளி வர்க்கத்தின் குரல்வளை நெறிக்கப்படும். கம்யூனிசத்தால் அடைந்த முன்னேற்றங்களை இழக்க நேரிடும்”, என எச்சரித்தார். (ஸ்டாலின், 1954). “நம் நாடு தாக்குதலை எதிர்கொள்ளத் தயாராவதற்கு 10 ஆண்டுகள் மட்டுமே உள்ளன”‘ என நாஜிப் படையெடுப்பு ‘ஆபரேஷன் பார்பரோசா’விற்குப் பத்து ஆண்டுகளுக்கு முன்பு ஸ்டாலின் துல்லியமாகக் கூறியதுபோலவே, முதலாளித்துவத்தினால் வீழ்த்தப்படுவதன் பின்விளைவுகளையும் துல்லியமாகக் கணித்தார். உண்மையாகவே நாம் தற்போது இருண்ட சகாப்தத்தில் உள்ளோம். இராணுவ வலிமையைப் பயன்படுத்தி, வாஷிங்டனுக்கு தன்னுடைய பிற்போக்குத்தனமான நிகழ்ச்சி நிரலைத் தொடர பரப்பளவு அதிகரித்துள்ளது. கியூபாவும் வடகொரியாவும் பொதுவுடைமையை மையப்படுத்தி திட்டமிடுகின்றன. ஆனால் அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் பொருளாதாரத் தடைகள், தந்திரமாகத் தனிமைப்படுத்தல் மற்றும் இராணுவ ரீதியான துன்புறுத்தல்கள் (சோவியத் பொருளாதாரத்திற்கு செய்ததுபோலவே) ஆகியவற்றைப் பயன்படுத்தி அப்பொருளாதாரங்களை நாசம் செய்துவருகின்றன. இதன் மோசமான விளைவுகளை, பொதுவுடைமை அடிப்படையிலான திட்டமிடலின் குறைபாடுகள் என போலியாகக் குற்றம் சுமத்திவிடலாம். உண்மையில் அவை முறையாகத் திட்டமிடப்பட்டு, இரகசியமாக நடத்தப்படும் போரின் விளைவுகளாகும். சோவியத் பொருளாதார அமைப்பு தோல்வியுற்றது என்று திட்டமிட்டு பரப்பப்பட்டதானது, கம்யூனிஸ்ட் ஆதரவாளர்கள், எதிர்ப்பாளர்கள் உட்பட பலரையும், பொதுவுடைமை அடிப்படையிலான திட்டமிடல் அமைப்பு உள்ளார்ந்த குறைபாடுடையது என்ற முடிவுக்கு இட்டுச்சென்றது. கம்யூனிஸ்டுகள், சமூக ஜனநாயகக் கட்சிகளுக்குத் தாவினர்; அல்லது தீவிர அரசியலை முற்றிலுமாகக் கைவிட்டனர். சமூக ஜனநாயகக் கட்சிகளோ வலதுசாரிகளாக மாறி, சீர்திருத்தங்களைத் தவிர்த்து, புதிய தாராளமயத்தைத் தழுவின. எனவே, மேற்கத்திய அரசுகளுக்கு, பொதுவுடைமைக்கான கோரிக்கைகளை மழுங்கடிக்கவேண்டிய அவசியம் இல்லாது போயிற்று. அனைவருக்கும் வேலைவாய்ப்பு என்ற இலக்கை முழுவதுமாகக் கைவிட்டு, இனி பொது சேவைகள் மக்களுக்குக் கட்டுப்படியாகும் விலையில் கிடைக்காது என்று அறிவித்தன (கோட்ஸ், 2001). அதே நேரத்தில் முன்னாள் சோவியத் ஒன்றியம் மற்றும் கிழக்கு ஐரோப்பிய கம்யூனிஸ்ட் நாடுகளில் கொண்டுவரப்பட்ட தனியார்மயமானது கூலித் தொழிலாளர்களின் எண்ணிக்கையை அதிகரித்தது. அது, முன்னரே கணித்தபடி, ஊதிய மட்டத்தில் உலகளாவிய தாக்கத்தை ஏற்படுத்தியது. சோவியத் ஒன்றியம் தோல்வியைத் தழுவிய நாள், மூலதனத்திற்கு ஒரு நல்ல விடியல் நாளாகும். ஆனால் மற்றவருக்கோ, ஸ்டாலின் எச்சரித்தபடி, அது குரல்வளையை நெறித்த நாளாகும். நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் முதலாளித்துவம் உலகின் மிகப்பெரிய முதலாளித்துவப் பொருளாதாரங்கள் 2008லிருந்து நெருக்கடியில் சிக்கித் தவிக்கின்றன. சில, சிக்கன நடவடிக்கை எனும் மரணச் சுழலில் அகப்பட்டுள்ளன. இன்னும் சில, மெல்ல மெல்ல வளர்ந்துவரும் மந்த நிலையின் பிடியில் சிக்குண்டுள்ளன. சிக்கனம் என்ற பெயரில் பொது சேவைகளை அகற்றுவது என்பது, பரிந்துரைக்கப்பட்ட போலியான தீர்வு. உண்மையான தீர்வு கண்ணுக்கெட்டிய தூரம்வரை தெரியவில்லை. அதிகாரப்பூர்வ அறிக்கைகளின்படி, ஐரோப்பாவின் சில பகுதிகளில் வேலைவாய்ப்பின்மை இரட்டை இலக்கத்தைத் தொட்டுள்ளது. இளைஞர்களின் வேலையின்மை இன்னும் அதிகமாக உள்ளது. ஒரு கோடியே 10 லட்சம் மக்கள் வசிக்கும் கிரீஸில் 37 இலட்சம் பேர் மட்டுமே வேலை செய்கிறார்கள் (வாக்கர் மற்றும் ககௌனகி 2012). மேலும், அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளும் சோவியத் ஒன்றியத்தை சிதைக்க, திட்டமிட்டு செயல்பட்டதுபோல், இந்த நெருக்கடியும் ஏதோ வெளிப்புற சக்திகளால் திட்டமிடப்பட்டு முதலாளித்துவத்திற்கு அழிவைக் கொண்டு வருவதாகக் கூற முகாந்திரம் இல்லை. அப்படி யாரும் திட்டமிட்டு அதை மூச்சுத்திணற வைக்காத போதிலும்கூட, முதலாளித்துவம் செயல்படவில்லை என்பதை சிலர் சுட்டிக்காட்டுகின்றனர். ஆனால் இதற்கு நேர்மாறாக, தொடங்கப்பட்டதிலிருந்தே குறிவைக்கப்பட்டு பழிக்கு இலக்கான சோவியத் ஒன்றியத்தின் திட்டமிட்ட பொருளாதாரம், இரண்டாம் உலகப்போர் ஆண்டுகளைத் தவிர பிற சமயங்களில், ஒருபோதும் மந்தநிலையில் தடுமாறவில்லை; முழுமையான வேலைவாய்ப்பு வழங்கத் தவறவில்லை. ஆனாலும், சோவியத் ஒன்றியத்தின் முன்னாள் ஆதரவாளர்கள் உட்பட பலரும், இது செயல்பட முடியாது என்றே கருதுகின்றனர். இது, முற்றிலும் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்ட கருத்து. பொதுவுடைமை அடிப்படையில் திட்டமிட்ட பொருளாதாரத்தில் உள்ளார்ந்த பலவீனம் இருந்ததாலேயே அது தோல்வியடைந்தது என்பதாக சோவியத் ஒன்றியத்தின் அனுபவம் நமக்குக் காட்டவில்லை. மாறாக, நீடித்த பொருளாதார வளர்ச்சி, அனைவருக்கும் வேலைவாய்ப்பு, இலவச மற்றும் கட்டுப்படியாகும் விலையில் அளிக்கப்பட்ட பொதுச் சேவைகளின் விரிவான பட்டியல், ஏறத்தாழ சமத்துவமான வருமானம் என முதலாளித்துவத்தால் செய்ய முடியாததை பொதுவுடைமை செய்யமுடியும் என்பதை நிரூபித்தது. ஒரு வருடம் இரு வருடமல்ல; தொடர்ந்து ஆண்டுக்கு ஆண்டு சோவியத் ஒன்றியத்தின் தலைமை பொதுவுடைமையிலிருந்து பின்வாங்கும்வரை இது நடந்தது. உயர்மட்டத்தில் இருக்கும் தனிவுடைமையைப் பாதுகாக்கும், ஒரு சதவிகிதத்தினர், தங்களுக்கு எதிரான இப்பொருளாதார அமைப்பை நசுக்க, அரசியல், இராணுவ, பொருளாதார மற்றும் கருத்தியல் ரீதியான அனைத்து வழிகளையும் பயன்படுத்துவார்கள் என்பதைக் கண்கூடாகக் காணமுடிந்தது. ஆனாலும், கீழ்மட்டத்தில் உள்ள 99 சத மக்களுக்காக அது நின்றது. (இன்று கியூபா மற்றும் வட கொரியாவிற்கு எதிராக இதே முயற்சி தொடர்கிறது). சோவியத் ஒன்றியத்தின் தோல்வி ஓர் இருண்ட காலத்திற்குள் நம்மைத் தள்ளியுள்ளது. ஆயினும், அதை இழிவுபடுத்தி அழிக்க நினைப்பவர்களுக்கு எதிராகப் போராட, பொதுவுடைமை சிறப்பாக செயல்பட்டதை வெளிப்படுத்தும், 1928 முதல் 1989 வரையிலான சோவியத்தின் அனுபவம், நமக்கு உள்ளது. பொதுவுடமைப் பொருளாதார சாதனைகள் வேலையில்லாத் திண்டாட்டம், பணவீக்கம், பொருளாதார மந்தம், ஒருபுறம் செல்வக்குவிப்பு, மறுபுறம் வறுமை மற்றும் சுரண்டல் ஆகிய முதலாளித்துவத்தின் தீமைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்ததிலும், பரந்த இலவசப் பொது சேவைகளை வழங்கியதிலும் சோவியத் பொருளாதார அமைப்பு முறையின் நன்மைகள் அறியப்பட்டன. வேலையின்மை ஒழிப்பு, சோவியத் பொருளாதார அமைப்பின் மிக முக்கியமான சாதனைகளில் ஒன்று. சோவியத் ஒன்றியம் அனைவருக்கும் வேலை வழங்கியது மட்டுமல்லாது, வேலை ஒரு சமூகக் கடமையாகக் கருதப்பட்டு, அரசியலமைப்பு சட்டத்தில் பொறிக்கப்பட்டது. 1936-ஆம் ஆண்டு அரசியலமைப்புச் சட்டம், சோவியத் ஒன்றியத்தின் குடிமக்களுக்கு வேலை செய்யும் உரிமையை அடிப்படை உரிமையாக்கியது. அதாவது, அவர்களது வேலையின் அளவு மற்றும் தரத்திற்கு ஏற்ப பணம் பெறுவதற்கான உத்தரவாதம் அளிக்கப்பட்டது. மறுபுறம், வேலை செய்யாமல் வேறு வழிகளில் வாழ்க்கை நடத்துவது தடை செய்யப்பட்டது. வட்டி, கருப்புச் சந்தை, ஊக வணிக இலாபம் ஆகியவற்றின் மூலம் வருமானம் பெறுவது சமூக ஒட்டுண்ணித்தனம் என்று கருதப்பட்டு சட்டவிரோதமாக்கப்பட்டது (சைமன்ஸ்கி, 1984). உழைப்பு, பற்றாக்குறையாக இருந்ததால் வேலை தேடுவது எளிதாக இருந்தது. இதன் வெளிப்படையான பலன்களாக, தொழிலாளர்களின் வேலைப் பாதுகாப்பு மற்றும் நிர்வாகம் பணியாளர்களின் நலனில் அதிக கவனம் செலுத்துவது ஆகியவற்றில் அவர்களது பேரம் பேசும் ஆற்றல் அதிகமானது (கோட்ஸ், 2003). சோவியத் அரசியலமைப்பு சட்டம், 1977-இன் 41வது பிரிவு ஒரு வாரத்திற்கான வேலை நேரத்தை 41 மணி நேரம் என வரையறுத்தது. இரவுநேரப் பணியில் உள்ள தொழிலாளர்கள், 7 மணி நேரம் வேலை செய்தால், முழு ஊதியம், அதாவது 8 மணி நேரத்திற்கான ஊதியம் பெற்றனர். சுரங்கம் போன்ற ஆபத்தான வேலைகளில் ஈடுபடுவோர் அல்லது தொடர்ந்து விழிப்புடன் இருக்கவேண்டிய மருத்துவர்கள் ஆகியோர், 6 அல்லது 7 மணி நேரம் வேலை செய்தால், முழு ஊதியம் பெற்றனர். சிறப்பு சூழ்நிலைகள் தவிர, பிற சமயங்களில் கூடுதல் நேரம் வேலை செய்வது தடைசெய்யப்பட்டது (சைமன்ஸ்கி, 1984). 1960இல் இருந்து ஊழியர்களுக்கு, சராசரியாக ஒரு மாதம் விடுமுறை கிடைத்தது (கீரன் மற்றும் கென்னி, 2004; சைமன்ஸ்கி, 1984). மானியத்துடன் கூடிய ஓய்வு விடுதிகளில், விடுமுறையைக் கழிக்க வசதி ஏற்படுத்தப்பட்டது (கோட்ஸ், 2003). 60 வயதில் ஆண்களுக்கும் 55 வயதில் பெண்களுக்கும் என, அனைத்து சோவியத் மூத்த குடிமக்களுக்கும் ஓய்வூதியம் வழங்கப்பட்டது (லெரூஜ், 2010). அரசியலமைப்புச் சட்டம், 1977, பிரிவு 43இன் படி ஓய்வூதிய உரிமை மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான நலன்கள் உத்திரவாதம் செய்யப்பட்டன. இது, முதலாளித்துவ நாடுகளில் உள்ளதைப்போல், அரசியல்வாதிகளின் தற்காலிக விருப்பங்களின்பாற்பட்டதல்ல; மாறாக திரும்பப் பெறப்பட முடியாதது. சோவியத்தின் அரசமைப்பு சட்டம் 1936, பிரிவு 122-இன் படி, பெண்களுக்கு, பல சலுகைகளுடன், முழு ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பும் உத்தரவாதப்படுத்தப்பட்டது. மேலும், 1936-ஆம் வருட அரசியலமைப்புச் சட்டம் மகப்பேறு இல்லங்கள், குழந்தைகள் காப்பகங்கள் மற்றும் மழலையர் பள்ளிகள் இணைந்த, பரந்த கட்டமைப்பை ஏற்படுத்த ஏற்பாடு செய்தது. திருத்தப்பட்ட அரசியலமைப்புச் சட்டம், 1977இன் பிரிவு 53, ஒவ்வொரு குழந்தைப் பிறப்பிற்கும் மானியம்; பெரிய குடும்பங்களுக்கு, குழந்தைகளுக்கான பணப்பயன்கள், நிதிச் சலுகைகள் ஆகியவற்றை வழங்குவதன் மூலம் குழந்தைப் பராமரிப்பில் குடும்பங்களுக்கு உதவுவதற்காக ஒரு பரந்த கட்டமைப்பை ஏற்படுத்துவது அரசாங்கத்தின் கடமை என வரையறுத்தது. குழந்தைப் பராமரிப்பிற்கான ஒரு பொதுக் கட்டமைப்பை உருவாக்கிய முதல் நாடு சோவியத் ஒன்றியம்தான் (சைமன்ஸ்கி, 1984). அதேபோல் அரசியலமைப்புச் சட்டத்தின் சட்டப்பிரிவு 122-இன் படி சோவியத் ஒன்றியத்தில் பெண்களுக்கு பொருளாதாரம், ஆட்சியதிகாரம், பண்பாடு, சமூக மற்றும் அரசியல் வாழ்க்கையின் அனைத்துத் தளங்களிலும், கல்வி, வேலைவாய்ப்பு, ஓய்வு, பொழுதுபோக்கு, சமூகக் காப்பீடு உட்பட அனைத்திலும் ஆண்களுக்கு நிகராக சம உரிமை வழங்கப்பட்டது. சோவியத் ஒன்றியத்தின் பல முதன்முதல்களில் ஒன்று, கருக்கலைப்பை சட்டப்பூர்வமாக்கி, அதற்கான மருத்துவ சேவை இலவசம் என அறிவித்ததாகும் (ஷெர்மன் 1969). பெண்களை அரசின் உயர் பதவிகளில் அமர்த்திய முதல் நாடும் இதுதான். மத்திய ஆசியப் பகுதியிலிருந்த சோவியத்தின் பகுதிகளில், இஸ்லாத்தின் பழமைவாத பெண் ஒடுக்குமுறையில் இருந்து அவர்களை விடுவிக்க, தீவிரப் பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டது. இது, இப்பகுதிகளில் பெண்களின் வாழ்க்கை நிலையில் ஓர் அடிப்படை மாற்றத்தை உருவாக்கியது (சைமன்ஸ்கி, 1984). 1977 அரசியலமைப்பு சட்டப்பிரிவு-44, வீட்டுவசதி உரிமையை உறுதி செய்தது. ஆயினும், ஆஸ்திரியா மற்றும் மேற்கு ஜெர்மனியை ஒப்பிடும்போது, ஒரு நபருக்கு நகர்ப்புற வீட்டு வசதிக்கான இடம் பாதியளவே இருந்தது. ஏனெனில், ஜார் மன்னர் ஆட்சிக்காலத்தில் போதிய அளவு கட்டிடங்கள் இல்லை. மேலும் இரண்டாம் உலகப் போரின் போது பெருமளவில் வீடுகள் இடிக்கப்பட்டன. இதுபோக, சோவியத் ஒன்றியம் கனரகத் தொழில் வளர்ச்சிக்கே முக்கியத்துவம் அளித்தது. அக்டோபர் புரட்சிக்கு முன்பு, சாதாரண மக்களுக்கு, நகர்ப்புறத்தில், போதுமான வீடுகள் கட்டப்படவில்லை. புரட்சிக்குப் பிறகு புதிய வீடுகள் கட்டப்பட்டன. ஆனாலும் வீட்டு வசதி போதுமானதாக இல்லை. தொழில்துறைக் கட்டுமானத்திற்கு மூலதனம் தேவையாக இருந்ததால், வீடு கட்டுவதற்காக பெரும் பணம் செலவழிக்க இயலவில்லை. இரண்டாம் உலகப் போரின்போது கூடுதலாக, நாஜிப் படையெடுப்பினால், சோவியத் குடியிருப்புகளில் மூன்றில் ஒரு பங்கில் இருந்து பாதிவரை அழிக்கப்பட்டிருந்தது (ஷெர்மன் 1969). நகரவாசிகள், பொதுவாக தாங்கள் பணிபுரியும் நிறுவனத்திற்கு அல்லது உள்ளாட்சி அமைப்புகளுக்குச் சொந்தமான அடுக்குமாடிக் கட்டிடங்களில் வசித்தனர். சட்டப்படியான வாடகை மிக மிகக் குறைவு. மொத்த குடும்ப நுகர்வுச் செலவு நாலு முதல் ஐந்து சதவீதம் இருந்தபோது, வாடகை சுமார் 2 அல்லது 3 சதவீதம் மட்டுமே இருந்தது (சைமன்ஸ்கி, 1984; கீரன் மற்றும் கென்னி, 2004). அமெரிக்காவை ஒப்பிடும்போது, இது கடுமையாக வேறுபட்டது. அங்கு, ஒரு சராசரிக் குடும்பத்தின் வரவு செலவுத் திட்டத்தில், கணிசமான பங்கை வாடகை எடுத்துக்கொண்டது (சைமன்ஸ்கி, 1984). இன்றும் கூட நிலைமை அப்படியே உள்ளது. உணவு மற்றும் பிற அடிப்படை அத்தியாவசிய தேவைகள் மானிய விலையிலும், ஆடம்பரப் பொருட்கள் அவற்றின் மதிப்பை விட மிக அதிகமான விலைக்கும் விற்கப்பட்டன. பொதுப் போக்குவரத்து மிகப் பரவலான இடங்களை உள்ளடக்கி, திறமையாகவும் அதே நேரத்தில் மிகக் குறைவான கட்டணத்துடனோ இலவசமாகவோ வழங்கப்பட்டது. 1930-களில் இருந்து 1970-கள் வரை சுரங்கப்பாதைக் கட்டணம் வெறும் எட்டு சென்ட்களாக மாறாமல் இருந்தது (சைமன்ஸ்கி, 1984). முதலாளித்துவ நாடுகளில், இதனோடு ஒப்பிடக் கூடியதாக எப்பொழுதும் எதுவுமே இருந்ததில்லை. காரணம் என்னவெனில், திறமையான, மலிவான, விரிவான பொதுப் போக்குவரத்தானது, ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள், பெட்ரோலிய நிறுவனங்கள் மற்றும் கட்டுமான நிறுவனங்களின் இலாபம் ஈட்டும் வாய்ப்பை கடுமையாகப் பாதிக்கும். எனவே, இந்நிறுவனங்கள் தங்கள் இலாபத்தைப் பாதுகாப்பதற்காக, தங்களுக்குள்ள செல்வாக்கை, செல்வத்தை, தொடர்புகளைப் பயன்படுத்தி, தனியார் போக்குவரத்திற்கு மாற்றாக, சிறந்த, மலிவான, பொதுப் போக்குவரத்து வளர்வதைத் தடுக்கின்றன. தனியார்துறை தொடர்ந்து வேலைவாய்ப்பை வழங்கவேண்டும் என எதிர்பார்க்கும் அரசாங்கங்கள், தனியார் தொழில்துறையை மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டியுள்ளது. இதை மாற்றுவதற்கான ஒரே வழி, மூலதனத்தை பொதுச் சொத்தாக ஆக்குவதே. அப்பொழுதுதான், மக்களுக்காக எனத் திட்டமிடப்பட்ட இலக்குகளை அடையமுடியும். சோவியத் ஒன்றியம் தனது முதலாளித்துவப் போட்டியாளர்களை விட சுகாதாரப் பாதுகாப்பிற்கு அதிக முக்கியத்துவம் அளித்தது. வேறு எந்த நாட்டிலும், சோவியத் ஒன்றியத்தைவிட அதிக மருத்துவர்களோ, மருத்துவமனைகளோ இல்லை. 1977-இல் சோவியத் ஒன்றியத்தில் 10,000 பேருக்கு 35 மருத்துவர்களும் 212 மருத்துவமனைப் படுக்கைகளும் இருந்தன. இது அமெரிக்காவில், 18 மருத்துவர்கள் மற்றும் 63 படுக்கைகளாக இருந்தது (சைமன்ஸ்கி, 1984). மிக முக்கியமாக, சுகாதாரம் சோவியத் ஒன்றியத்தில் இலவசமாக இருந்தது. ஆனால் அமெரிக்க குடிமக்கள் இதற்காகப் பணம் செலுத்தவேண்டும் என்பது சோவியத்தில் காட்டுமிராண்டித்தனமாகக் கருதப்பட்டது. சோவியத் குடிமக்கள், இந்த விஷயத்தை நம்ப முடியாமல், அமெரிக்க சுற்றுலாப் பயணிகளிடம், மீண்டும் மீண்டும் கேள்வி எழுப்பினர் (ஷெர்மன் 1969). பல்கலைக்கழகக் கல்வியும் இலவசம். முதுகலை மாணவர்களுக்கு, பாடப்புத்தகங்கள், தங்கும் அறை, உணவு மற்றும் பிற செலவுகளுக்கும் போதுமான அளவு உதவித்தொகைகள் கிடைத்தன (ஷெர்மன் 1969, சைமன்ஸ்கி, 1984). சோவியத் ஒன்றியத்தில், முதலாளித்துவ நாடுகளை ஒப்பிடும்போது, வருமான ஏற்றத்தாழ்வு மிகவும் குறைவு. அதிகபட்ச வருமானத்திற்கும் சராசரி வருமானத்திற்கும் இடையேயான வித்தியாசம், ஒரு மருத்துவருக்கும் சராசரி தொழிலாளிக்கும் இடையேயான வருமான வேறுபாடு, அமெரிக்காவில் சோவியத் ஒன்றியத்தைவிட 8 முதல் 10 மடங்கு அதிகமாக இருந்தது (சைமன்ஸ்கி, 1984). படித்த உயர் வர்க்கத்தினரின் அதிக வருமானம் என்பது, ஒரு சாதாரண வீடு அல்லது கார் வாங்கக்கூடியதை விட அதிக சிறப்புரிமையை வழங்கவில்லை (கோட்ஸ், 2000). கனடாவுடன் ஒப்பிடுகையில், 2010இல் அதிக ஊதியம் பெறும் நிறுவனங்களின் தலைமை அதிகாரிகளில், முதல் 100 நபர்களின் வருமானம், சராசரி முழுநேர ஊதியத்தை விட 155 மடங்கு அதிகமாக இருந்தது. சராசரி முழுநேர ஊதியம் 43,000 டாலர்களாகும் (மாற்றுக் கொள்கைகளுக்கான கனடிய மையம், 2011). கார்ப்பரேட் உயர்வர்க்கத்தினர் ஒரே வாரத்தில் இதைவிடப் பத்து மடங்கு அதிகமாக, அதாவது 4,30,000 டாலர்கள் வருமானம் ஈட்டினர். சோவியத் ஒன்றியத்தில் வருமான வித்தியாசம் குறைவாக இருந்ததற்கான காரணம் என்னவென்றால், அனைத்து சோவியத் குடிமக்களுக்கும் எந்தக் கட்டணமும் இன்றி அல்லது மிகக் குறைந்த கட்டணத்தில் அத்தியாவசியச் சேவைகள் கிடைத்ததாகும். எனவே, வருமான வித்தியாசத்தைவிட வாழ்க்கைக்குத் தேவையான பொருட்கள் கிடைக்காத தன்மையின் அளவு மிகக் குறைவாக இருந்தது (சைமன்ஸ்கி, 1984). பல உலக நாடுகளின் தலைநகரங்களில் உள்ள, ஜனாதிபதிகள், பிரதம மந்திரிகள், மற்றும் மன்னர்களின் ஆடம்பரமான மாளிகைகள் போன்ற வீடுகளில் சோவியத் தலைவர்கள் வசிக்கவில்லை (பேரன்டி, 1997). உதாரணமாக, கோர்பச்சேவ், நான்கு குடும்பங்கள் இருந்த ஓர் அடுக்குமாடிக் கட்டிடத்தில் வசித்துவந்தார். லெனின்கிராட் கட்டுமானத்துறையின் தலைமை அதிகாரி, ஒரு படுக்கையறை கொண்ட குடியிருப்பிலும், மின்ஸ்கில் ஓர் உயர்மட்ட அரசியல் அதிகாரி, மனைவி, மகள், மருமகனுடன் இரு படுக்கையறைகள் கொண்ட குடியிருப்பிலும் வசித்துவந்தனர் (கோட்ஸ் & வேய்ர், 1997). ஆளும் உயர்வர்க்கத்தினரை, சோவியத் ஒன்றியத்தின் விமர்சகர்கள், சுரண்டுபவர்கள் என குற்றம் சாட்டினர். ஆனால், அவர்களது மிதமான வருமானம் மற்றும் பொருட்கள் பயன்பாடு, இந்த மதிப்பீட்டின் மீது கடுமையான சந்தேகத்தை எழுப்புகின்றது. உண்மையில் சோவியத்தின் ஆளும்வர்க்கம் சுரண்டும் தன்மையது என்று கூறுவது மனிதகுல வரலாற்றில் மிக வினோதமானது. தமிழில்: சோபனா Posted in சோசலிசம்Tagged அமெரிக்கா கோவன்ஸ் சாதனைகள் சோசலிசம் சோபனா சோவியத் ஒன்றியம் சோவியத் சாதனை ஜனநாயகம் நவம்பர் புரட்சி போர் ரஷ்ய சாதனை ரஷ்யா லெனின் ஸ்டாலின்Leave a comment உக்ரைன் போர்: மானுடத்தின் புறந்தள்ளப்பட்ட சிக்கல்கள் ! Posted on November 3, 2022 October 28, 2022 by Editorial விஜய் பிரசாத் திடுக்கிடும் தலைப்புடன் ஒரு புதிய செய்தி வெளியாகிறது. ஆயுதங்களுக்காக உலகம் மேற்கொள்ளும் ஆண்டு செலவுத்தொகை 2 லட்சம் கோடி டாலர்களை கடந்துள்ளது. இந்த பட்டியலில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. பட்டியலில் அடுத்து உள்ள பத்து நாடுகளின் ஒட்டுமொத்த செலவீனத்தை விட அமெரிக்காவின் செலவீனம் அதிகமாக இருக்கிறது. அமெரிக்காவின் உளவுத்துறை செலவீனங்களையும், அணு ஆயுத பராமரிப்பு செலவீனங்களையும் சேர்த்து கணக்கிட்டால் வரும் தொகை மட்டுமே 1 லட்சம் கோடி டாலர்களை கடக்கும். இது மிக மிக அதிகமான தொகை ஆகும். மனித உழைப்பையும் அறிவையும் வீணடிக்கும் கடும் செயல். இன்னொரு செய்தி. சட்டவிரோத வரி ஏய்ப்புக்கு வழிவகுக்கும் நாடுகளில் குவிந்திருக்கும் செல்வத்தின் மதிப்பு 37 லட்சம் கோடி டாலர்களை கடந்திருப்பதாக ஒரு கணிப்பு வெளியாகியுள்ளது. பெரும் செல்வந்தர்கள், மனித வளத்தை சூறையாடிச் சேர்த்த செல்வம் இப்படிப்பட்ட நாடுகளில் பணமாகவும், தங்கமாகவும், வைப்பு நிதியாகவும் சேர்த்து வைக்கப்பட்டிருக்கும் மொத்த தொகையில் ஒரு சிறு பகுதி மட்டுமே. மேற்சொன்ன கணிப்பில் நிலம், விலை உயர்ந்த கலை பொருட்கள், நகைகள் போன்றவை உள்ளடங்காது. அவற்றையும் சேர்த்தால், கையளவு மனிதர்களிடம் குவிந்துள்ள செல்வத்தின் அளவு மிகக் கொடுமையானது. உலகின் முதல் 22 செல்வந்தர்கள் கையில் உள்ள சமூக வளத்தின் மதிப்பு, ஆப்ரிக்காவில் மொத்தம் உள்ள 3.25 கோடி பெண்களிடம் உள்ள ஒட்டுமொத்த செல்வத்தை விட அதிகம் ஆகும். உலகில் நிலவும் ஏழ்மை, பட்டினி மற்றும் எழுத்தறிவின்மை போன்ற சிக்கல்களுடைய அவல நிலைமை குறித்தும், கால நிலை மாற்ற பிரச்சனையால் எழும் அதிபயங்கர தாக்கங்கள் குறித்தும் தொடர்ந்து அறிக்கைகள் வந்து கொண்டே இருக்கின்றன. இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்காக செலவிடப்பட வேண்டிய நம்முடைய சமூக வளத்தின் பெரும் பகுதியை, ஆயுதங்களை குவிக்க செலவிடுவதுடன், வெளிநாடுகளில் பதுக்கியும் வைக்கிறார்கள். ஐக்கிய நாடுகள் சபையின் 17 நிலைத்த நீண்டகால வளர்ச்சிக் குறிக்கோள்களை – பட்டினியை ஒழித்து அமைதியை நிலைநாட்டும் இலக்கினை – எட்டுவதற்கு ஆண்டுக்கு 2.5 லட்சம் கோடி டாலர்கள் செலவிட வேண்டியுள்ளது. இப்போது இந்த குறிக்கோள்களை எட்டுவதற்கு மிகச் சிறிய தொகை மட்டுமே செலவிடப்படுகிறது. பெருந்தொற்றுக் காலத்திலும், அதன் பிறகு அதிகரித்து வரும் விலைவாசி உயர்வுக் காலத்திலும், இந்த செலவினங்களில் மென்மேலும் வெட்டு ஏற்படும். நாம் இந்தக் குறிக்கோள்களை விட்டு மென்மேலும் விலகிச் செல்வோம். மானுடத்தின் மிக முக்கியமான சிக்கலான பட்டினியை ஒழிக்கும் பாதையில் நாம் நெடுந்தொலைவு செல்லவேண்டியுள்ளது. (மக்கள் சீனம் தவிர. அங்கு 2021இல் கடும் ஏழ்மை ஒழிக்கப்பட்டுவிட்டது). உலக மக்களில் 300 கோடிபேர் ஏதோ ஒரு வித பட்டினியால் அவதிப்படுவதாக கணிக்கப்படுகிறது. விடுதலைக்கு பதிலாக ஆதிக்கம் மானுடத்தின் இந்த சிக்கல்களை தீர்க்கும் உலகு தழுவிய ஒரு சமூக – அரசியல் திட்டத்தை உருவாக்குவதற்கு பதிலாக, அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளான ஜி7 நாடுகளும், தங்களின் உலக ஆதிக்கத்தை நீடிப்பதற்கான உத்தியை நோக்கியே செல்கின்றன. சோவியத் ஒன்றியமும், கிழக்கு ஐரோப்பிய சோசலிச நாடுகளும் வீழ்ந்த 1991 ஆம் ஆண்டுக்கு பின், மூன்றாம் உலக நாடுகள் கடன் வலையில் சிக்க வைக்கப்பட்டதில் இருந்து இந்த ஆதிக்க போக்கு தொடங்கியது. இந்த ஆதிக்கம் கால வரம்பின்றித் தொடரும் என்றும், அமெரிக்காவுக்கு எதிரான ஒரு அணியின் வரலாறு முடிந்து போனது என்றும், அமெரிக்க அறிவுஜீவிகள் மார் தட்டினார்கள். ஆனால் அமெரிக்காவும், ஜி7 நாடுகளும் “உலக பயங்கரவாதத்திற்கு எதிரான போர்” என்ற பெயரில் எல்லை மீறி சென்றதாலும், (குறிப்பாக சட்டவிரோதமாக ஈராக் மீது 2003இல் போர் தொடுத்தது) 2007-08இல் ஏற்பட்ட பெரும் பொருளாதார நெருக்கடியின் காரணமாகவும், அந்நாடுகளின் ஆதிக்கம் நிலை குலைய துவங்கியது. அமெரிக்கா மற்றும் ஜி7 நாடுகளில் வறண்டு போன வங்கி அமைப்பிற்கு நிதியளிக்க இந்தியா, சீனா, இந்தோனேசியா போன்ற நாடுகளை அணுகின. அதனால், ஜி7 கூட்டமைப்பை மூடிவிட்டு, உலகளாவிய சட்ட-திட்டங்களை தீர்மானிப்பதை ஜி20 என்ற கூட்டமைப்பின் கீழ் கொண்டு வந்து, அதில் நிதி அளிக்கும் இந்த புதிய நாடுகளையும் சேர்க்க உறுதி அளித்தது. ஆனால் மேற்கத்திய வங்கிகள் மீண்டு வந்த பின்னர், ஜி20 ஒதுக்கப்பட்டு, முந்தைய ஜி 7 ஆதிக்கம் நிலைநாட்டப்பட்டது. இதர சக்திகளை எதிரியாக பார்க்காமல், மானுட சிக்கல்களை தீர்ப்பதில் கூட்டாளியாக பார்க்கலாம் என்ற முன்மொழிவை ஏற்க அமெரிக்கா மறுத்தது. இந்த கூட்டு சக்தியாக ஜி 20 அமைப்பில் பங்கு வகித்த சில நாடுகள் சேர்ந்து BRICS (பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்ரிக்கா) கூட்டமைப்பு 2009 இல் துவங்கப்பட்டது. இந்நாடுகள் ஒன்றிணைந்து, மேற்கத்திய நாடுகளால் கட்டுப்படுத்தப்படாத, ஐ.எம்.எஃப்-பின் சிக்கன அஜெண்டாவிற்கு அப்பாற்பட்ட, வளர்ச்சி திட்டங்களுக்கு வழி வகுக்கும் நிறுவன அமைப்பை ஏற்படுத்த முன் வந்தன. BRICS கூட்டமைப்பு துவங்கப்படுவதற்கு முன், ரஷ்யாவின் விளாடிமிர் புதின் (அதுவரை பல விஷயங்களில் மேற்கத்திய நாடுகளுடன் நெருங்கி இருந்தார்) முனிச் பாதுகாப்பு மாநாட்டில் பங்கேற்று ஒரு முக்கிய உரையாற்றினார். “ஒரு துருவ உலகம் என்றால் என்ன?” என புதின் கேட்டார். “இந்த வார்த்தையை எவ்வளவு அழகு படுத்தி காட்டினாலும், அதன் அர்த்தம் ஒரே அதிகார புள்ளி, ஒரே ஒரு ஆதிக்க மையம் மற்றும் ஒற்றை ஆண்டான்” என்பதுதான். அந்த ஒற்றை அதிகார புள்ளி என்பது அமெரிக்காவையே குறிக்கிறது என்று அனைவரும் அறிந்திருந்தனர். மேற்கத்திய நாடுகளின் “சர்வதேச உறவுகளில் அதீதமாக பயன்படுத்தப்படும் கட்டுக்கடங்காத தாக்குதல் ” குறித்து புதின் கடுமையாக விமர்சித்தார். மேலும் “சர்வதேச சட்டம்” மேற்கத்திய நாடுகளை அவை மேற்கொள்ளும் போர் குற்றங்களிலிருந்து பாதுகாப்பதை குறிப்பிட்டார். “யாரும் பாதுகாப்பாக உணர்வதில்லை. ஏனெனில் யாரும் சர்வதேச சட்டம் தங்களை பாதுக்காக்கும் அரண் என்பதாக உணரவில்லை. இப்படிப்பட்ட சூழல் ஆயுத குவியலை ஊக்குவிப்பதில் ஆச்சரியம் இல்லை”. அமெரிக்கா ஐரோப்பாவை சுற்றி ஏவுகணை வளையத்தை உருவாக்குவதை நிறுத்திவிட்டு, 2002இல் அது கைவிட்டுவிட்ட “அணு ஆயுத ஏவுகணைக்கு எதிரான ஒப்பந்த”-த்திற்கு திரும்பிச் செல்ல வேண்டும் என புதின் குறிப்பிட்டார். அன்றைய அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் இந்த முன்மொழிவை ஏற்க மறுத்தார். அச்சுறுத்தல்கள் 21ஆம் நூற்றாண்டில் தங்களின் ஆதிக்கத்தை நிலைநாட்ட அமெரிக்காவும் அதன் ஆதரவு நாடுகளும் எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டனர். லிபியாவின் மீது 2011 ஆம் ஆண்டு நேட்டோ முன்னெடுத்த தாக்குதல் மேற்கத்திய நாடுகள் தம் ஆதிக்கத்தை நிலைநாட்ட எடுத்த முன்னெடுப்புகளுக்கான குறியீடாக அமைந்தது. இதுவே தெற்கு சீன கடல் பகுதி முதல் கரீபிய கடல் பகுதி வரை உலகளாவிய நேட்டோ ஆதிக்கம் தொடர்பான வாதங்களுக்கு முன்னோட்டமாக அமைந்தது. 30 நாடுகள் மீதான பொருளாதார தடை விதிப்பு மூலம் அமெரிக்காவையும், அதன் கூட்டாளி நாடுகளையும் எதிர்ப்பவர்களை ஒழுங்கு படுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இது மட்டுமல்லாமல் ஐ.எம்.எஃப் அமைப்பின் புதுப்பிக்கப்பட்ட சிக்கன திட்டத்தின் காரணமாக, பல ஏழை நாடுகள் கொரோனா காலத்தில் கூட, தங்களுக்கு கடன் கொடுத்த செல்வச் செழிப்பு மிக்கவர்களுக்கு வழங்க வேண்டியிருந்த பணம், தங்கள் நாட்டு மக்களை காக்க சுகாதாரத்திற்கு மேற்கொண்ட செலவினை விடவும் அதிகம். 2018இல் “தீவிரவாதத்திற்கு எதிரான போர்” நிறைவுற்றதாக அமெரிக்கா அறிவித்தது, அதன் தேச பாதுகாப்பு உத்தியில், சீனாவும் ரஷ்யாவும் அடைந்துவரும் எழுச்சியே மிகப்பெரும் ஆபத்தாக குறிப்பிட்டது. அமெரிக்கா பாதுகாப்பு செயலாளர் ஜிம் மாட்டிஸ் அமெரிக்காவை “நெருங்கி வரும் எதிரி நாடுகளை” கட்டுப்படுத்துவது என்று வெளிப்படையாகவே பேசினார். சீனா மற்றும் ரஷ்யாவை இவ்வாறு தம் எதிரி நாடுகளாக குறிப்பிட்ட அவர், அமெரிக்காவின் மொத்த ஆதிக்கத்தையும் பயன்படுத்தி இந்நாடுகளை அடிபணிய வைப்பது என்று பேசினார். ஐரோப்பா மற்றும் ஆசியாவை சுற்றி அமெரிக்காவின் பல ராணுவ தளங்கள் (மொத்தம் 800) உள்ளதோடு, ஜெர்மனி முதல் ஜப்பான் வரை ரஷ்யா மற்றும் சீனாவை முன் நின்று தாக்கும் பல கூட்டாளி நாடுகளை அமெரிக்கா கொண்டிருக்கிறது. அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளி நாடுகளின் கடற்படைகள், “பயணிப்பதற்கான சுதந்திரம்” என்ற பெயரில் ரஷ்யா (ஆர்டிக் பகுதி) மற்றும் சீனாவிற்கு (தெற்கு சீன கடல் பகுதி) எதிராக மிக அச்சுறுத்தலான படைப் பயிற்சிகளில் ஈடுபட்டன. இப்படிப்பட்ட செயல்பாடுகளோடு, 2014 ஆம் ஆண்டில் அமெரிக்கா உக்ரைன் நாட்டின் அரசியலில் தலையிட்டதும், 2015இல் தைவானிற்கு பெருமளவு ஆயுதங்கள் அளித்ததும், ரஷ்யாவையும், சீனாவையும் மேலும் மிரட்டுவதாக அமைந்தது. மேலும் 2018இல் அமெரிக்கா தன்னிச்சையாக “இடைநிலை தூர அணு-ஆயுத சக்திகள்” ஒப்பந்தத்திலிருந்து விலகியதன் காரணமாக, சர்வதேச அணு-ஆயுத கட்டுப்பாட்டு கட்டமைப்பை நலியச் செய்தது. ரஷ்யாவுக்கும், சீனாவுக்கும் எதிரான போர்க்கள அணு ஆயுத உத்தியை அமெரிக்கா வகுத்துவருகிறது என்பதுதான் இந்த பின்வாங்கலின் வெளிப்பாடு. அமெரிக்காவின் தேச பாதுகாப்பு உக்தியில் சீனாவையும், ரஷ்யாவையும் கட்டுப்படுத்துவது பற்றி குறிப்பிட்டிருப்பதும், “இடைநிலை தூர அணு-ஆயுத சக்திகள்” ஒப்பந்தத்திலிருந்து விலகியதும், ரஷ்யாவுக்கும், சீனாவுக்கும் அமெரிக்காவால் உள்ள அச்சுறுத்தல் கற்பனையானது அல்ல என்பதை தெளிவாக்குகிறது. இதுவரை, ஆசிய பகுதியில் அமெரிக்காவின் நட்பு நாடுகளான தென் கொரியாவும், ஆஸ்திரேலியாவும் இடைநிலை தூர அணு-ஆயுதங்களை அனுமதிக்க தயாராக இல்லை. ஆனால் குவாம் மற்றும் ஒக்கினாவா-வில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களில் ஆயுதங்களை குவிக்க வாய்ப்பு உண்டு. பல ஆண்டுகளாக இவ்வாறு கட்டமைக்கப்பட்டு வரும் அமெரிக்க அச்சுறுத்தலை ரஷ்யா உணர்ந்ததன் விளைவாகவே உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதலை முன்னெடுக்கிறது. நேட்டோ அமைப்பில் உக்ரைன் சேர்ந்தாலும், இல்லாவிட்டாலும் அமெரிக்கா உக்ரேனில் அணு ஆயுதங்களை குவிக்க வாய்ப்பு உள்ளது என்ற கவலை எழுந்துள்ளது. உக்ரைனில் நடந்துவரும் போர் பற்றிய வாதங்களுக்கு பின் ஒரு முக்கியமான கேள்வி உள்ளது: இயற்கையாகவே யூரேசியா (ஆசிய-கிழக்கு ஐரோப்பிய) நாடுகள் நெருங்கி வரும் போக்கை அமெரிக்காவும் அதன் ஆதரவு நாடுகளும் அனுமதிக்குமா? இல்லையேல் இதை தடுக்க ஐரோப்பிய மற்றும் சில ஆசிய நாடுகளில் தலையிடும் முயற்சிகளை தொடருமா? ஐரோப்பிய நாடுகளை ஆங்கிலேய-அமெரிக்க-ஆர்டிக் கூட்டமைப்பினுள் கொண்டு வந்து, ஐரோப்பிய-ஆசிய நாடுகள் இணைப்பை, குறிப்பாக ரஷ்யா மற்றும் சீனா உடனான இணைப்பை தடுக்கும் அமெரிக்காவின் முயற்சியும் உக்ரைன் மீதான போரில் ஒரு பங்கு ஆற்றியுள்ளது என்பதை நிராகரிக்கவே முடியாது. இந்த நிலையில் மானுடத்தின் மிக முக்கிய சிக்கல்கள் கண்டுகொள்ளப் படாமல் போகின்றன. பட்டினியும் போர்களும் பூமியை வாட்டுகின்றன. அன்றாட வாழ்வின் நிதர்சன பிரச்சனைகளை தீர்ப்பதற்காகச் செல்ல வேண்டிய சமூக வளங்களோ, ராணுவ ஆதிக்கத்திலும் போர்களிலும் வீணடிக்கப் படுகின்றன. தமிழில்: அபிநவ் சூர்யா Posted in உலகம்Tagged அணு ஆயுதப் போர் அபிநவ் சூர்யா உக்ரைன் போர் ரஷ்யா விஜய் பிரசாத்Leave a comment 2022 ரஷ்ய – உக்ரைன் போர்:ஒரு பார்வை! Posted on March 28, 2022 March 26, 2022 by Editorial அன்வர் உசேன் ரஷ்யா- உக்ரைன் இடையிலான போர் உலகம் முழுவதும் பல விவாதங்களை உருவாக்கியுள்ளது. ஒரு புறம் புடின் இட்லருக்கு இணையாக விமர்சிக்கப்படுகிறார். இன்னொரு புறம் அவரது நடவடிக்கைகள் அனுதாபத்துடன் பார்க்கப்படுகின்றன. போர் என்பது எப்படியாக இருந்தாலும், எங்கே நடந்தாலும், அது மனித உயிர்களைப் பலி வாங்குகிறது. அரும்பாடுபட்டு உருவாக்கிய உற்பத்தி சாதனங்களும் வளங்களும் இமைப்பொழுதில் அழிக்கப்படுகின்றன. போரில் ஈடுபடும் தேசங்களில், உழைக்கும் மக்களே கடும் இழப்புக்கு ஆளாகின்றனர். இது வெற்றி பெற்ற, தோல்வி அடைந்த இரு தேச உழைப்பாளிகளுக்கும் பொருந்தும். ஆனால், சுரண்டும் வர்க்கங்கள் போர்களுக்கு ஆதரவான கருத்துக்களை கட்டமைப்பதில் தொடர்ந்து ஈடுபடுகிறார்கள். அவற்றில் இருந்து விலகி நின்று போர்களை ஆய்வுக்கு உட்படுத்திட வேண்டும். இப்போதைய சூழலில், நாம் ஒரு முக்கியமான உண்மையை கணக்கிலெடுப்பது அவசியம். சமீபத்தில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் 42% பேர் ரஷ்யாவை இன்னமும் அதுவொரு கம்யூனிஸ்ட் நாடு என்று எண்ணுவதாக தெரியவந்துள்ளது. இந்தியாவிலும் பலர் அவ்வாறு நினைக்க வாய்ப்பு உண்டு. ஆனால், இன்றைய ரஷ்யா ஒரு சோசலிச நாடு அல்ல. அங்கு நடக்கும் ஆட்சி முதலாளித்துவ ஆட்சியே. விளாடிமிர் புடின் அந்த முதலாளித்துவ நாட்டின் தலைவரே. வரலாற்று பின்னணி: 1917ம் ஆண்டு சோவியத் புரட்சி வெற்றியடைந்த பிறகு, வெவ்வேறு காலகட்டங்களில் அதனோடு 14 குடியரசுகள் இணைந்துகொண்டன. அவை: 1. உக்ரேனியா 2. பைலோரஷ்யா 3. உஸ்பெகிஸ்தான் 4. கஜகஸ்தான் 5. ஜார்ஜியா 6. அஜர்பைஜான் 7. லிதுவேனியா 8. மால்டோவா 9. லத்திவியா 10. எஸ்தோனியா 11. கிர்கிஸ்தான் 12. தஜிகிஸ்தான் 13. துர்க்மெனிஸ்தான் 14. அர்மீனியா இதுவே பின்னர் ‘சோவியத் ஒன்றியமாக’ அமைந்தது. ரஷ்ய மொழியோடு சேர்த்து, மேற்சொன்ன 14 தேசங்களின் மொழிகளும் அதிகாரப்பூர்வ மொழிகளாக அங்கீகரிக்கப்பட்டன. 15 தேசிய இனங்களை உள்ளடக்கியிருந்ததால் அவ்வப்பொழுது சில முரண்பாடுகள் ஏற்பட்டாலும், பொதுவாக, சோவியத் குடி மக்கள் எனும் அடையாளம் உருவானது. மேலும், சோவியத் யூனியனின் அரசியல் சட்டம் சுயநிர்ணய உரிமையை உள்ளடக்கியிருந்தது. இதன் பொருள் என்னவெனில், எந்த ஒரு குடியரசும் தாம் விரும்பினால் ஒன்றியத்திலிருந்து பிரிந்து செல்லலாம். இந்த உரிமையை உருவாக்க லெனினும், ஸ்டாலினும் கடுமையாக பாடுபட்டனர். இந்த பிரச்சனையில் லெனினுக்கும், ஜெர்மன் கம்யூனிஸ்டு ரோசா லக்சம்பர்குக்கும் இடையே கடும் விவாதங்கள் நடைபெற்றன. தேசிய இனப்பிரச்சனைகளில் கம்யூனிஸ்டுகளின் நிலையை புரிந்து கொள்ள முயல்பவர்களுக்கு லெனின்-ரோசா லக்சம்பர்க் விவாதங்கள் ஒரு புதையல் எனில் மிகை அல்ல. சோசலிச சமூக அமைப்பின் நன்மைகளான வேகமான தொழில் வளர்ச்சி/ விவசாய முன்னேற்றம்/ இலவச கல்வி மற்றும் மருத்துவம்/ உழைக்கும் மக்களின் உரிமைகள் அனைத்தையும் இந்த 14 குடியரசுகளும் பெற்றன. எனினும், 1970களில் சோவியத் ஒன்றியத்தில் அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி தேக்கமுற்றது. 1980களில் முதலாளித்துவ உலகுடன் ஒப்பிடும் பொழுது அது பின் தங்கியிருந்தது. மின்னணு புரட்சி/ கணிணி மயம் என முதலாளித்துவம் தனது உற்பத்தி சக்திகளை வேகமாக வளர்த்தெடுத்தது. இதனால், கிட்டத்தட்ட ஒரே சமயத்தில் சோவியத் ஒன்றியம் இரு சவால்களை சந்தித்தது. ஒன்று, அதன் பொருளாதாரம் கடுமையாக பின்னடைவை எதிர் கொண்டது. இன்னொருபுறம், சோசலிச ஜனநாயகம் சிதைவுகளுக்கு உள்ளானது. ஏகாதிபத்தியமும் தனது தொடர் தாக்குதல்களை பல முனைகளில் முன்னெடுத்தது. இந்தச் சூழலில் சோசலிசம் பின்னடைவை சந்திப்பதற்கு சற்று முன்னதாக லிதுவேனியா/லத்திவியா/எஸ்தோனியா ஆகிய மூன்று குடியரசுகளும் பிரிந்து போயின. சோசலிசம் பின்னடைவை சந்தித்த பொழுது, அனைத்து குடியரசுகளும் சோவியத் யூனியனிலிருந்து பிரிந்து, தம்மை தனி சுதந்திர தேசங்களாக அறிவித்து கொண்டன. இதில் உக்ரைனும் அடங்கும். எனினும், இந்த நிகழ்வு வேறு ஒரு பிரச்சனையை உள்ளடக்கியிருந்தது. சோவியத் ஒன்றியம் இருந்த பொழுது, ரஷ்ய மக்கள் வேறு குடியரசுகளுக்கு புலம்பெயர்வதும், ஏனைய குடியரசு மக்கள் ரஷ்யாவுக்குள் வருவதும் பரவலாக நடந்தது. குறிப்பாக, இந்த பரஸ்பர புலம்பெயர்வு ரஷ்யா/உக்ரைன்/பைலோரஷ்யா ஆகிய மூன்று குடியரசுகளிடைய வலுவாக நடந்தது. இதன் விளைவுதான், இன்றைய உக்ரைனின் கிழக்கு பகுதியில் சுமார் 20% பேர் ரஷ்ய மொழி பேசுபவர்களாக உள்ளனர். வாக்குறுதி மீறிய ஏகாதிபத்தியம் அந்த சமயத்தில், சோவியத் ஒன்றியத்திலிருந்து பிரிந்த எந்த தேசத்தையும் நேட்டோ எனும் ராணுவ அமைப்புக்குள் இணைக்கக்கூடாது எனவும், ரஷ்யாவின் எல்லை நாடுகளில் நேட்டோ ராணுவத்தையோ அல்லது ஆயுதங்களையோ நிறுத்தக் கூடாது எனவும், ரஷ்யா அமெரிக்காவிடம் முன்வைத்தது. அன்றைய அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜேம்ஸ் பேக்கர் “ரஷ்யா இருக்கும் கிழக்கு நோக்கி ஒரு இன்ச் கூட நேட்டோ விரிவாக்கம் செய்யப்பட மாட்டாது” என வாக்குறுதி அளித்தார். ஆனால் ஏகாதிபத்தியத்தின் பல வாக்குறுதிகள் போல் இதுவும் காற்றில் விடப்பட்டது. நேட்டோ என்ற அமைப்பு இரண்டாம் உலகப்போர் முடிந்த ஆண்டுகளில் (1949) அமெரிக்கா/ பிரிட்டன்/ பெல்ஜியம்/ கனடா/ டென்மார்க்/ பிரான்ஸ்/ ஐஸ்லாந்து/ இத்தாலி/ லக்ஸம்பர்க்/ நெதர்லாந்து/ நார்வே/ போர்ச்சுகல் ஆகிய நாடுகள் சேர்ந்து உருவாக்கிய ராணுவ கூட்டமைப்பு ஆகும். அமெரிக்காவே இந்த அமைப்பின் தலைமை என்பதை கூறத் தேவையில்லை. பின்னர் 1950களில், நேட்டோவுடன் மேற்கு ஜெர்மனி/கிரீஸ் ஆகிய நாடுகளும் 1982இல் ஸ்பெயினும் இணைக்கப்பட்டன. கம்யூனிஸ்ட் நாடுகளிடமிருந்து தம்மை பாதுகாத்து கொள்ளவே இந்த கூட்டமைப்பு என்று நேட்டோ கூறியது. எனவே அதன் எதிர்வினையாக சோவியத் யூனியன்/ கிழக்கு ஜெர்மனி/ அல்பேனியா/ போலந்து/ செக்கோஸ்லேவாகியா/ ஹங்கேரி/ பல்கேரியா/ ருமேனியா ஆகிய சோசலிச நாடுகள் தங்களுக்குள் வார்சா ஒப்பந்த அமைப்பு எனும் கூட்டமைப்பை உருவாக்கின. எனினும், இந்தியா/எகிப்து/யுகோஸ்லவியா/கியூபா/வியட்நாம் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகள் இந்த இரு அமைப்பிலும் சேராமல் அணிசேரா நாடுகளின் அமைப்பை உருவாக்கின. 1991இல் சோவியத் யூனியனும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளும் சோசலிசத்தை கைவிட்ட பிறகு வார்சா ஒப்பந்த அமைப்பும் இல்லாமல் ஆகியது. நாளடைவில் அணிசேரா அமைப்பும் செயலிழந்துவிட்டது. ஆனால் நேட்டோ தொடர்ந்து விரிவடைந்தது. முதலாளித்துவ நாடுகள், குறிப்பாக அமெரிக்கா, தாங்கள்தான் உலக அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் மேலாதிக்கம் பெற வேண்டும் என்று கொண்டிருந்த பேராசையின் வெறிதான் இதற்கு அடிப்படையான காரணம். இந்த வெறியின் ராணுவ முகம்தான் நேட்டோ. எனவே, கிட்டத்தட்ட அனைத்து முன்னாள் சோசலிச நாடுகளையும் நேட்டோ தனது வளையத்திற்குள் கொண்டு வந்தது. பின்னர் எஸ்தோனியா/லத்திவியா/லிதுவேனியா ஆகிய முன்னாள் சோவியத் குடியரசுகளையும் சேர்த்தது. இறுதியாக 2008ஆம் ஆண்டு உக்ரைன் மற்றும் ஜார்ஜியாவை இணைக்கும் விருப்பத்தை வெளிப்படுத்தியது. அன்றிலிருந்துதான் ரஷ்யாவுக்கும் நேட்டோ நாடுகளுக்கும் ஆழமான பிரச்சனைகள் உருவாயின. இந்த பிரச்சனைகளின் மையமாக உக்ரைன் உருவெடுத்தது. நேட்டோவை நாங்கள் விரிவாக்கம் செய்ய மாட்டோம் என ஒரு போதும் உறுதி அளிக்கவில்லை என இப்பொழுது அமெரிக்கா கூறுகிறது. ஆனால் இது வடிகட்டிய பொய் ஆகும். 1991ஆம் ஆண்டே போலந்து நேட்டோவில் சேர விண்ணப்பித்தது. ஆனால் ஜெர்மனி இதனை கடுமையாக எதிர்த்தது. இது குறித்து அமெரிக்கா/ ஜெர்மனி/ பிரான்சு/பிரிட்டன் ஆகிய நாடுகளின் உயர் அதிகாரிகள் கலந்து கொண்ட கூட்டம் 06.03.1991இல் பான் நகரில் நடந்தது. அதில் ஜெர்மனியின் பிரதிநிதியான ஜுர்கன் ஸ்ரோபோக் கீழ்கண்டவாறு கூறினார்: “ஜெர்மனியின் எல்பே நதிக்கு அப்பால் நேட்டோவை விரிவாக்குவது இல்லை எனும் உறுதிமொழியை நாம் ரஷ்யாவுக்கு தந்துள்ளோம். எனவே போலந்தின் கோரிக்கையை நாம் ஏற்க இயலாது”. 1992ஆம் ஆண்டிலிருந்தே பல அமெரிக்க அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் நேட்டோவை கிழக்கே விரிவாக்கம் செய்வது ரஷ்யாவை போருக்கு தள்ளிவிடும் என எச்சரித்துள்ளனர். அந்த எச்சரிக்கைகளில் சில: 1997ஆம் ஆண்டு அமெரிக்காவின் முன்னாள் ராணுவ அமைச்சராக இருந்த ராபர்ட் மக்னமாரா சி.ஐ.ஏ. இயக்குநர் ஸ்டேன்ஸ் டர்னர் உட்பட 12க்கும் அதிகமானவர்கள் இணைந்து பில் கிளிண்டனுக்கு எழுதிய கடிதத்தில் “நேட்டோவை கிழக்கு நோக்கி விரிவாக்கம் செய்வது வரலாற்று பிழையாக மாறி விடும்” என எச்சரித்தனர். பனிப்போர் காலத்தில் அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கைகளை வகுத்தவர்களில் ஒருவரான ஜார்ஜ் கேனன் 1990களிலேயே கீழ்கண்டவாறு கூறுகிறார்: “கிழக்கு பகுதியில் நேட்டோவை விரிவாக்கம் செய்வது பனிப்போரின் பிந்தைய காலகட்டத்தின் மிகப்பெரிய தவறான கொள்கையாகும். இது பல விரும்பத்தகாத விளைவுகளை உருவாக்கும். அமெரிக்க-ரஷ்யா உறவை சீர்குலைத்துவிடும். ரஷ்யா நிரந்தர எதிரியாக ஆகிவிடும்” ரஷ்ய விவகாரங்கள் குறித்த ஆய்வாளர் ஸ்டீபன் கொஹேன் 2014ஆம் ஆண்டு கூறினார்: “நாம் நேட்டோவை ரஷ்யாவை நோக்கி விரிவாக்கம் செய்வது என்பது பிரச்சனையை ராணுவமயமாக்கிவிடும். ரஷ்யா பின்வாங்காது. வாழ்வா-சாவா போராட்டமாக ரஷ்யா இதனை பார்க்கும்” அமெரிக்காவின் பிரபல வெளியுறவு கொள்கை நிபுணர் ஹென்ரி கிசிங்கர் 2014இல் கூறினார்: “உக்ரைனை நேட்டோவில் சேர்க்க கூடாது. அவ்வாறு சேர்த்தால் உக்ரைன் கிழக்கு- மேற்கத்திய நாடுகளின் போர்க்களமாக மாறிவிடும். ரஷ்யா நிரந்தரமாக எதிர் தரப்பில் நிற்கும் ஆபத்து உருவாகும்.” 2008ஆம் ஆண்டில் சி.ஐ.ஏ.வின் இயக்குநர் வில்லியம் பர்ன்ஸ் அமெரிக்க தலைமையகத்துக்கு அனுப்பிய ஒரு குறிப்பில் கீழ்கண்டவாறு கூறுகிறார்: “உக்ரைனை நேட்டோவில் இணைப்பது குறித்து உக்ரைன் மக்களிடையே செங்குத்தான பிளவுபட்ட கருத்து நிலவுகிறது என ரஷ்யா கவலை அடைந்துள்ளது என நமது நிபுணர்கள் கூறுகின்றனர். குறிப்பாக உக்ரைனில் உள்ள ரஷ்ய இன மக்கள் இதற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இத்தகைய பிளவு கடும் விளைவுகளை உருவாக்கும். மோசமான சூழலில் இது உள்நாட்டு போருக்கும் வழிவகுக்கலாம். அப்படிப்பட்ட நேரத்தில் உக்ரைனில் தலையிடும் முடிவு எடுக்க வேண்டி வரும் என ரஷ்யா கவலைப்படுகிறது. அத்தகைய சூழலை ரஷ்யா விரும்பவில்லை.” இவ்வளவு எச்சரிக்கைகளையும் அறிவுறுத்தல்களையும் மீறித்தான், நேட்டோ விரிவாக்கம் திட்டமிடப்பட்டது. அமெரிக்க அரசியல் தலைமை தனது மேலாதிக்கத்தை ஐரோப்பாவில் நிறுவுவதற்காக, ரஷ்யாவை போருக்கு தள்ளினால் தவறு இல்லை எனும் முடிவுக்கு வந்தது என்பதையே இது காட்டுகிறது. அமெரிக்க ஏவுகணைகள் ஐரோப்பிய நாடுகள் பலவற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளன. உக்ரைன் எல்லையிலும் படைகள் நிறுத்தப்படும் என்றால், அது தனது பாதுகாப்பிற்கு ஆபத்து என்று ரஷ்யா கருதுகிறது. உக்ரைன் எல்லையிலிருந்து ஏவுகணைகள் 10 முதல் 15 நிமிடங்களுக்குள் மாஸ்கோவை தாக்கிவிடும். 2008ஆம் ஆண்டு உக்ரைனையும் ஜார்ஜியாவையும் நேட்டோவில் இணைக்கும் அமெரிக்காவின் விருப்பம் ரஷ்யாவிடம் கடும் எதிர்ப்பை விளைவித்தது. அதே போல் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி சமீபத்தில் அணுஆயுதங்களை நிறுவ உக்ரைன் முனைப்புடன் உள்ளது என பேசினார். இவையும் ரஷ்யாவின் அச்சத்தை அதிகரித்தன. உக்ரைன் அரசியலில் அமெரிக்க தலையீடு உக்ரைன் நாட்டின் உள் அரசியலில் ஒரு திருப்புமுனையாக 2014ஆம் ஆண்டினை பார்க்கலாம். அதற்கு முன்பாக, 2010இல் நடந்த தேர்தலில் விக்டர் யோனுகோவிச் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போதே உக்ரைன் மேற்கு பகுதியும் கிழக்கு பகுதியும் பல்வேறு பண்பாடு, அரசியல் அம்சங்களில் பிளவுபட்டிருந்தன. கிழக்கு பகுதியில் வாழும் மக்கள் ரஷ்ய மொழியும், மேற்கு பகுதி மக்கள் உக்ரைன் மொழியும் பெரும்பான்மையாக பேசுகின்றார்கள். எனவே, கிழக்கு பகுதி மக்கள் ரஷ்யாவின் ஆதரவாளர்களாகவும், மேற்கு பகுதி மக்கள் ரஷ்ய எதிர்ப்பாளர்களாகவும் மாறும் வகையில் பல கருத்துகள் கட்டமைக்கப்பட்டன. இதில் அமெரிக்காவின் பங்கு மிக முக்கியமானது. ஜனாதிபதி யோனுகோவிச் தொடக்கத்தில் அமெரிக்காவுடன் நட்பு பாராட்டினார். ஆனால் அவர் எதிர்பார்த்தபடி அமெரிக்க முதலீடுகள் உக்ரைனுக்கு வரவில்லை. எனவே அவர் ரஷ்யாவுடன் முதலீடுகளுக்காகவும், பொருளாதார ஒத்துழைப்புக்காகவும் ஒப்பந்தம் போட்டார். உக்ரைன் தனது பிடியிலிருந்து நழுவுகிறது என்பதை உணர்ந்த அமெரிக்கா, மேற்கு உக்ரைன் மக்களை யோனுகோவிச்சுக்கு எதிராக தூண்டியது. 2014ஆம் ஆண்டில் ஏராளமான கலவரங்கள் நடைபெற்றன. இந்த கலவரங்களை உருவாக்குவதில் உக்ரைன் நாட்டில் இயங்கும் நாஜி ஆதரவாளர்கள் முக்கிய பங்கை ஆற்றினார்கள். “மைதான் புரட்சி” என ஊடகங்களால் அழைக்கப்பட்ட இந்த கலவரங்களின் காரணமாக யோனுகோவிச் பதவி விலகினார். பின்னர் பதவியேற்ற ஜனாதிபதிகள் கிழக்கு உக்ரைன் மக்களுக்கு எதிராக விஷம் கக்கினார்கள். ரஷ்யா மீது வன்மத்தை வெளிப்படுத்தினார்கள். இப்படியான பின்னணியில் கிரீமியா தீவினை ரஷ்யா தன்னோடு இணைத்து கொண்டது. ஏனெனில் ரஷ்யாவின் முக்கிய கப்பற்படை தளம் அங்கு இருந்தது. டோன்பாஸ் எனப்படும் பகுதியில் உள்ள லுகான்ஸ்க் மற்றும் டோன்டெஸ்க் ஆகிய மாநிலங்களில் உள்ள ரஷ்ய மொழி பேசும் மக்கள் தங்களுக்குள் பொது வாக்கெடுப்பு நடத்தி தங்களை சுயாட்சி பிரதேசங்களாக அறிவித்து கொண்டன. உக்ரைனில் வாழும் ரஷ்ய மொழி பேசும் மக்கள் தாக்கப்படுவது ரஷ்யாவில் பெரிய தாக்கத்தை உருவாக்கியது. அவர்களுக்கு ரஷ்ய அரசாங்கம் உதவ வேண்டும் எனும் கருத்து மக்களிடையே இருந்தது. இதுபோன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு காண 2015ஆம் ஆண்டு மின்ஸ்க் நகரில் உக்ரைன்/ரஷ்யா/பிரான்ஸ்/ஜெர்மனி ஆகிய நாடுகளுக்கு இடையே பேச்சு வார்த்தைகள் நடந்தன. இறுதியில் ஒரு ஒப்பந்தம் போடப்பட்டது. அதன் முக்கிய அம்சங்கள்; லுகான்ஸ்க் மற்றும் டோன்டெஸ்க் பகுதிகளுக்கு உக்ரைன் அரசாங்கம் சுயாட்சி வழங்குவது. ரஷ்ய மொழியை அங்கீகரிப்பது. லுகான்ஸ்க் மற்றும் டோன்டெஸ்க் மக்கள் பிரிவினை எண்ணத்தை கைவிடுவது. உக்ரைனின் ஒன்றுபட்ட தன்மையை பாதுகாப்பது. எனினும் இந்த ஒப்பந்தம் அமலாக்கப்படவில்லை. நடைமுறையில் ரஷ்ய மொழி உதாசீனப்படுத்தப்பட்டது. லுகான்ஸ்க் மற்றும் டோன்டெஸ்க் மக்கள் மீது தாக்குதல்களும் தொடர்ந்தன. அன்றிலிருந்து கிழக்கு உக்ரைன் பகுதி மக்கள் மீது உக்ரைன் ராணுவமும், நாஜி சித்தாந்தவாதிகளும் ஏராளமான தாக்குதல்களை நடத்தினர். கடந்த 7 ஆண்டுகளில் சுமார் 18,000 பேர் கொல்லப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. நாஜிக்களை ஊக்கப்படுத்திய நேட்டோ உக்ரைனில் கடந்த 10 ஆண்டுகளாக வலதுசாரி பயங்கரவாதிகளும் நாஜி சித்தாந்தவாதிகளும் பெரும் எண்ணிக்கையில் உருவாகியுள்ளனர். இவர்களை ஆதரிப்போர் உக்ரைன் நாடாளுமன்ற உறுப்பினர்களாகவும் உள்ளனர். நேட்டோவின் ஆய்வு அமைப்பான “அட்லாண்டிக் கவுன்சில்” இவர்களை ஆதரித்தும் புகழ்ந்தும் பல கட்டுரைகளை வெளியிட்டுள்ளது. நாஜி அமைப்புகளில் முக்கியமானது “அசோவ் பட்டாலியன்” என்ற அமைப்பாகும். அசோவ் பட்டாலியன் கோட்பாடுகள் என்ன? உக்ரைன் மக்கள் பரிசுத்த வெள்ளை இனத்தை சேர்ந்தவர்கள். கிழக்கு உக்ரைனில் வசிக்கும் ரஷ்யர்கள் அசுத்தமான ரத்தம் உடையவர்கள். அவர்கள் உக்ரைனின் பரிசுத்த ரத்தத்தை மாசுபடுத்த முயல்கின்றனர். எனவே கிழக்கு உக்ரைன் மக்களை அடிமைப்படுத்த வேண்டும். தேவை எனில் அவர்களை படுகொலை செய்ய வேண்டும். இட்லரின் பல்வேறு நாஜி அடையாளங்களை இந்த அமைப்பு பயன்படுத்துகிறது. இத்தகைய கோட்பாடுகளை கொண்ட அமைப்பை நேட்டோ அமைப்பு ஆதரித்தது; இன்றும் ஆதரிக்கிறது. அசோவ் பட்டாலியன் என்ற இந்த அமைப்புதான் 2014ஆம் ஆண்டில் நடந்த கலகங்களில் முக்கிய பங்கை ஆற்றியது. பின்னர் உக்ரைன் ராணுவத்தின் ஒரு பகுதியாக அது இணைக்கப்பட்டது. டோன்பாஸ் பகுதியில் வாழும் ரஷ்ய மொழி சிறுபான்மையினரை கொன்று குவித்ததும் இந்த அமைப்புதான். இந்த அமைப்பின் கொடூரங்கள் அனைத்தும் நேட்டோ அமைப்புக்கு நன்றாக தெரியும். சில அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த அமைப்பை பயங்கரவாத அமைப்பாக வகைப்படுத்த வேண்டும் என தீர்மானம் கொண்டு வந்தனர். அமென்ஸ்டி மனித உரிமை அமைப்பும் இந்த அமைப்பு தடை செய்யப்பட வேண்டும் என கோரியது. அமென்ஸ்டி தனது அறிக்கையில் கூறியது: “பயங்கரவாத அமைப்புகள் செயல்படுத்தும் கட்டுப்படுத்தப்படாத வன்முறையில் உக்ரைன் சிக்கி மூழ்கி கொண்டுள்ளது. கொடூரங்களை நிகழ்த்தும் இந்த அமைப்புகள் எவ்வித தண்டனைக்கும் உள்ளாக்கப்படுவது இல்லை.” ஆனால், “அசோவ் பட்டாலியன்தான் நாம் ரஷ்யாவுக்கு தரும் பரிசு” என அட்லாண்டிக் கவுன்சில் கருத்து தெரிவித்தது. எத்தகைய வன்மம் நேட்டோவுக்கு உள்ளது என்பதை இதிலிருந்து நாம் அறியலாம். அமெரிக்க செனட் நாடாளுமன்ற உறுப்பினர் பாப் மெனென்டஸ் உக்ரைனுக்கு 500 மில்லியன் டாலர் அதாவது சுமார் 3,800 கோடி ரூபாய் அளவுக்கு ஆயுதங்களை வழங்கிட தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றினார். இந்த ஆயுதங்கள் நாஜிக்களின் கைகளுக்கு செல்வதை தடுக்க என்ன வழிமுறைகள் உள்ளன என அவரிடம் கேட்ட பொழுது “நாம் ஏன் அதைப்பற்றி கவலைப்பட வேண்டும்?” என பதில் கூறினார். புடினின் தேசிய வெறி ரஷ்யாவை நேட்டோ சுற்றி வளைப்பதையும் உக்ரைனில் உள்ள ரஷ்ய மொழி சிறுபான்மையினரை பாதுகாப்பதும் முக்கியம்! இது குறித்த புடினின் கவலை நியாயமானது; அது ரஷ்ய மக்களின் கவலையை பிரதிபலிக்கிறது. ஆனால் தனது போர் நடவடிக்கைகளை நியாயப்படுத்த லெனின் மற்றும் ஸ்டாலின் முன்னெடுத்த தேசிய இனக் கொள்கைகளை புடின் இழிவுபடுத்துகிறார். உக்ரைன் எனும் நாடு வரலாற்றில் இருந்ததே இல்லை எனவும், அதனை உருவாக்கியது லெனினும் ஸ்டாலினும்தான் எனவும் புடின் கூறுகிறார். சுயநிர்ணய உரிமை தந்தது மிகப்பெரிய தவறு எனவும், அதனால்தான் சோவியத் ஒன்றியம் சிதறுண்டது எனவும் குற்றம் சாட்டுகிறார். “மகா ரஷ்யா” எனும் கோட்பாட்டையும் வலியுறுத்தும் புடின், உக்ரைன் ஒரு தேசமாக நீடிக்க உரிமை இல்லை எனவும் கூறுகிறார். புடின் போன்ற முதலாளித்துவ அரசியல்வாதிகளுக்கு, தேசிய பிரச்சனையில் கம்யூனிஸ்டுகள் முன்வைக்கும் கோட்பாடுகள் பிடிக்காமல் போவதில் ஆச்சர்யம் இல்லை. ஜார் மன்னனின் ரஷ்ய சாம்ராஜ்யம் பல தேசிய இனங்களை அடிமைப்படுத்தியிருந்தது. எனவேதான் “ரஷ்யா தேசிய இனங்களின் சிறைச்சாலை” என லெனின் வர்ணித்தார். சுயநிர்ணய உரிமை வழங்கப்படாவிட்டால் எந்த ஒரு குடியரசும் சோவியத் ஒன்றியத்தில் இணைந்திருக்காது. சோவியத் ஒன்றியம் வெறும் ரஷ்யாவாகவே இருந்திருக்கும். தற்போது, “மகா ரஷ்யா” எனும் சாம்ராஜ்யத்தை உருவாக்கும் எந்த வாய்ப்பும் இல்லை என்பதை புடின் உணர மறுக்கிறார். சோவியத் ஒன்றியம் சிதறுண்டது மனித குலத்திற்கு ஏற்பட்ட பின்னடைவுதான். ஆனால் அதற்கு காரணம் சுயநிர்ணய உரிமை அல்ல. ரஷ்யாவின் ராணுவ பாதுகாப்பு மற்றும் உக்ரைனில் உள்ள ரஷ்ய மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு எனும் இரு நோக்கங்களுக்கு அப்பாற்பட்ட வேறு எந்த இலக்கையும் உக்ரைன் படையெடுப்பு மூலம் சாதிப்பதற்கு புடின் முயன்றால், அது விரும்பத்தகாத விளைவுகளையே தோற்றுவிக்கும். உலகின் இரு மிகப்பெரிய தேசங்களான சீனாவும், இந்தியாவும் மற்றும் சில நாடுகளும் ரஷ்யாவின் நியாயமான கவலையை ஏற்கிறார்கள். அதே சமயம், புடினின் நோக்கம் குறிப்பிட்ட எல்லையைத் தாண்டி நீளுமானால், உலக நாடுகளின் எதிர்ப்பையே அவர் சம்பாதிக்க நேரிடும். பாசிச எதிர்ப்பு போரில் உலக மக்களின் ஆதரவை பெற்றார் ஸ்டாலின். ஆனால் புடின் ஸ்டாலின் அல்ல. உக்ரைனில் ஒருவேளை ரஷ்யா வெற்றியடையுமானால், அதுவும் ஆபத்தான விளைவுகளையே ஏற்படுத்தும். முதலாளித்துவ ஜனநாயகத்தின் உண்மை முகம் ரஷ்ய படைகள் உக்ரைனில் நுழைந்ததுமே பல முதலாளித்துவ நாடுகளும் பொருளாதாரத் தடைகளை விதித்தன. இது எதிர்பார்த்த ஒன்றுதான். எனினும், அதன் மூர்க்கத்தனம் எல்லையில்லாமல் விரிவடைந்தது. ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவுடனான எண்ணெய் ஒப்பந்தங்களை திரும்ப பெற்றன. ரஷ்யாவில் செயல்பட்ட ஷெல் போன்ற நிறுவனங்கள் தமது செயல்பாட்டை நிறுத்தின. ஆப்பிள் நிறுவனம்/சாம்சங்/வால்வோ இப்படி பலநிறுவனங்கள் வெளியேறின. ரஷ்ய வங்கிகள் ‘ஸ்விப்ட்’ எனப்படும் நிதி பரிவர்த்தனையை பயன்படுத்த முடியாத அளவுக்கு தடைகள் விதிக்கப்பட்டன. ஐரோப்பா மற்றும் அமெரிக்க வான்வெளிகளில் ரஷ்ய விமானங்களுக்கு தடை விதிக்கப்பட்டன. தன்னுடன் முரண்பட்டால் எந்த ஒரு நாட்டையும் மண்டியிட வைக்க முடியும் என முதலாளித்துவ உலகம் முயல்கிறது. கால்பந்து/ஹாக்கி/மோட்டார் பந்தயம்/மாற்று திறனாளிகள் ஒலிம்பிக் போட்டிகள் என அனைத்து விளையாட்டு போட்டிகளிலுமிருந்து ரஷ்யா வெளியேற்றப்பட்டுள்ளது. ரஷ்யாவின் பூனைகளுக்கும் யோக் மரங்களுக்கும் கூட தடை விதிக்கப்பட்டுள்ளன. இந்த தடைகளால் பாதிக்கப்படப்போவது புடின் அல்லது பிற அரசியல்வாதிகள் அல்ல; ரஷ்ய மக்கள்தான். ரஷ்ய ஊடகங்கள் முழுவதும் ஐரோப்பா/அமெரிக்காவில் தடை செய்யப்பட்டுள்ளன. தொலை காட்சி விவாதங்களில் ரஷ்யாவை சிறிதளவு ஆதரித்து பேசுவோரும் வெளியேற்றப்படுகின்றனர். டோன்பாஸ் பகுதியில் 5 ஆண்டுகளாக ரஷ்ய மொழி பேசும் மக்கள் அடைந்த துன்பங்களை ஆய்வு செய்த ஒரு ஃபிரான்சு பத்திரிக்கையாளர் தனது அனுபவத்தை சொன்னதற்காக நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார். பி.பி.சி./கார்டியன் போன்ற புகழ்பெற்ற ஊடகங்கள் கூட பொய்ச் செய்திகளை தாராளமாக பரப்பின. முதலாளித்துவ ஊடகங்கள் தமது அரசுகளின் கருத்துகளை மட்டுமே மக்கள் கேட்க வேண்டும் என எண்ணுகின்றன. எதிர்த்தரப்பு கருத்துகளை மக்கள் கேட்க கூடாது என கங்கணம் கட்டிக் கொண்டுள்ளன. இது முதலாளித்துவ ஜனநாயகம். இந்த ஜனநாயகத்தில் மாற்று கருத்துக்கு இடமில்லை. எல்லாவற்றுக்கும் மேலாக, இந்தப் போர் முதலாளித்துவத்தின் நிறவெறியை வெளிப்படுத்தியுள்ளது. ஒரு தொலைகாட்சி செய்தியாளர் கூறினார்: “இது சிரியாவோ அல்லது ஆப்கானிஸ்தானோ அல்ல; நாகரிக ஐரோப்பா. இங்கு தாக்குதல் நடக்கிறது” அப்படியானால் சிரியாவும் ஆப்கானிஸ்தானும் நாகரிகமற்ற காட்டுமிராண்டி தேசங்களா? இன்னொரு செய்தியாளர் கூறினார்: “நெஞ்சம் பதைக்கிறது. ஊதா கண்களும் பொன் நிறத்திலான முடியையும் உடைய மக்கள் தாக்கப்படுகின்றனர்.” அப்படியானால் மற்றவர்கள் தாக்கப்பட்டால் பரவாயில்லையா? ஆம். அப்படிதான் அந்த ஊடகங்கள் முன்வைக்கின்றன. உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்த அதே நாளில் அமெரிக்க விமானங்கள் சோமாலியா மீது குண்டு பொழிந்தன. அமெரிக்க ஆதரவுடன் சவூதி படைகள் ஏமன் மீது தாக்குதலை நடத்தின. இஸ்ரேல் விமானங்கள் பாலஸ்தீனம் மீது தாக்குதல்கள் நடத்தின. இஸ்ரேல் ராணுவத்தினர் 15 வயது பாலஸ்தீன் பெண்ணை சித்திரவதை செய்து கொன்றனர். இது குறித்த காணொளி பரவலாக வலம் வந்தது. அமெரிக்காவின் ஆசியோடு ஏமன் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 3,00,000 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதில் 70% பேர் குழந்தைகள். ஆனால் இவை குறித்து முதலாளித்துவ ஊடகங்களில் ஒரு விவாதம் கூட இல்லை. மேற்கத்திய ஊடகங்களின் செய்தி மற்றும் கட்டுரைகள் வெளியிடப்பட்டதில் பாரபட்சத்தை பாருங்கள்: உக்ரைன் மீது ரஷ்ய தாக்குதல்- 1400 சவூதி ஏமன் மீது தாக்குதல்-0 இஸ்ரேல் சிரியா மீது தாக்குதல்- 5. சிறிது நாட்கள் முன்புவரை அரேபிய அல்லது ஆப்பிரிக்க அகதிகளுக்கு அனுமதியில்லை என கூறிய போலந்து போன்ற நாடுகள் இன்று உக்ரைன் அகதிகளை இரு கரம் கூப்பி வரவேற்கின்றன. ஆஸ்திரேலியாவில் உள்ள ரஷ்ய தூதரகத்துக்கு வெடி பொருட்கள் பார்சல் அனுப்பப்பட்டன. நெதர்லாந்தில் ரஷ்யர்களுக்கு சொந்தமான உணவுவிடுதி தாக்கப்பட்டது. அமெரிக்க செனட்டர் லிண்ட்சே கிரஹாம் ரஷ்யாவை சேர்ந்த எவராவது புடினை கொன்று விடுவது ரஷ்யாவின் எதிர்காலத்துக்கு நல்லது என பகிரங்கமாக கூறியுள்ளார். இவையெல்லாம் முதலாளித்துவ ஜனநாயகத்தின் உண்மை முகத்தை தோலுரித்து காட்டுகிறது. முதலாளித்துவம் கைவிட்ட முதலாளித்துவ குழந்தை ரஷ்யா சோசலிசத்தை கைவிட்ட பொழுது அதன் ஒரே கனவு முதலாளித்துவ உலகம் தன்னை சம பங்காளியாக கருதி அரவணைத்து கொள்ளும் என்பதுதான். அந்த விருப்பத்துடனேயே அனைத்து அரசு நிறுவனங்களும் தனியார்மயமாக்கப்பட்டன. கம்யூனிச கருத்துகளும் அவற்றை கடைப்பிடிப்போரும் வேட்டையாடப்பட்டனர். லெனின் மற்றும் ஸ்டாலின் சிலைகள் உடைக்கப்படடன. தாராளமய பொருளாதார கொள்கைகள் அமலாக்கப்பட்டன. அந்தோ பரிதாபம்! முதலாளித்துவ உலகம் ரஷ்யாவை தனது சம பங்காளியாக பார்க்கவில்லை. மாறாக தனக்கு அடிபணிந்து இருக்கும் ஒரு நாடாக ரஷ்யா இருக்க வேண்டும் என்றே கருதியது. மார்க்சிய ஆய்வாளர் டேவிட் ஹார்வி ஒரு சுவையான ஒப்பீட்டை முன்வைக்கிறார். இரண்டாம் உலகப்போரில் துவம்சம் செய்யப்பட்ட நாடுகள் ஜப்பானும் ஜெர்மனியும். ஆனால் இந்த இரு நாடுகளையும் மறுநிர்மாணம் செய்ய ஏராளமான நிதி உதவிகளை முதலாளித்துவ உலகம் செய்தது. அதற்கு “மார்ஷல் திட்டம்” எனவும் பெயரிட்டது. ஆனால் சோசலிசத்தையே தூக்கி எறிந்த ரஷ்யாவுக்கு எந்த உதவியும் செய்யப்படவில்லை. குறைந்தபட்சம் ஐரோப்பிய நாடுகள் கூட ரஷ்யாவை அரவணைக்க முன்வரவில்லை. அதே சமயத்தில் சோவியத் ஒன்றியத்தின் ஒரு வலிமையே ரஷ்யாவை தொடர்ந்து பாதுகாத்தது. அதுதான் ராணுவ வலிமை. புடினை பார்த்து ஓரளவு முதலாளித்துவ நாடுகள் அச்சப்படுகின்றன என்றால் அதற்கு முக்கிய காரணம் ராணுவ வலிமைதான்! இதற்கு புடின் ஸ்டாலினுக்கும் அவருக்கு பின்னால் ஆட்சியிலிருந்த ஏனைய கம்யூனிஸ்டு தலைவர்களுக்கும் நன்றி செலுத்தக் கடமைப்பட்டவர். “சமாதானத்துக்கு சமாதானம்! ஏவுகணைக்கு ஏவுகணை” என முழக்கமிட்ட யூரி ஆண்ட்ரோபோவ் போன்றவர்கள்தான் இந்த ராணுவ வலிமையை உருவாக்கினர்; பாதுகாத்தனர். இப்போது இந்த ராணுவ வலிமையைதான் முதலாளித்துவ நாடுகள் சிதைக்க முயல்கின்றன. இந்த போர் எப்படி முடியும் என்பது இக்கட்டுரை எழுதப்பட்ட சமயத்தில் தெளிவற்றதாகவே இருந்தது. எனினும், ஏற்கெனவே இரு தரப்பிலும் ஏராளமான உயிர்கள் பலியாகியுள்ளன. உக்ரைனின் ஆலைகளும் கட்டடங்களும் கடும் சேதத்தை சந்தித்துள்ளன. உலக அளவில் கம்யூனிஸ்டுகள் ஒரே குரலில்தான் ஒலிக்கிறார்கள்: போர் தொடர்வதில் எந்த நியாயமும் இல்லை. போர் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். நேட்டோ தனது விரிவாக்கத்தை கைவிட வேண்டும். ஐரோப்பாவில் உள்ள அணு ஆயுதங்கள் அகற்றப்பட வேண்டும். உக்ரைனில் ரஷ்ய மொழி பேசும் மக்களின் வாழ்வும் பண்பாடும் பாதுகாக்கப்பட வேண்டும். உக்ரைன் சமாதான வழியில் பயணிப்பதை உத்தரவாதம் செய்யவேண்டும். இதுதான் சரியான பார்வையாக இருக்க முடியும். ஆதாரங்கள்: Consortiumnews/ Fair.org/davidharvey.org/Mint Press/MR online/ Newsclick/ RT.com/ Tricontinental newsletter/multipolarista. Posted in உலகம்Tagged அன்வர் உசேன் அமெரிக்கா உக்ரைன் கம்யூனிஸ்ட் நேட்டோ போர் மார்க்சிஸ்ட் ரஷ்யாLeave a comment ஏகாதிபத்திய தாக்குதலும், உழைக்கும் வர்க்க எதிர்ப்பும் Posted on May 11, 2019 August 20, 2019 by Editorial (ஏ ஆர் சிந்து, மத்திய குழு உறுப்பினர், சி பி எம்) தமிழில்: ஜி.பாலச்சந்திரன் உலகெங்கிலும் உள்ள தொழிலாளர் வர்க்கம், வாழ்வின் நாள்தோறுமான மூலதனத்தின் தாக்குதலையும், அரசியல் ரீதியான ஏகாதிபத்திய தாக்குதலையும் தீவிரமான வர்க்க போராட்டத்தால் எதிர்கொண்ட வளமான அனுபவத்துடன் இந்த மே தினத்தை – சர்வதேச தொழிலாளர் தினத்தை – மிகுந்த உற்சாகத்துடனும், வர்க்க பெருமிதத்துடனும் கொண்டாடிக்கொண்டிருக்கிறது. ஏகாதிபத்திய தாக்குதலும், உலகளாவிய எதிர்ப்பும்: முதலாளித்துவ அமைப்பின் நெருக்கடியின் பின்புலத்தில் ,சிஐடியு 2018 நவம்பரிலேயே கீழ்வருமாறு குறித்து வைத்தது: “அரசியல், பொருளாதார ,மற்றும் ராணுவ முனைகள் என அனைத்திலும் ஏகாதிபத்தியத்திய சக்திகளின் மேலாதிக்க தலையீடு அதிகமான ஆக்கிரமிப்பு பரிமாணத்தை அடைந்துள்ளது. வளரும் நாடுகளின் சந்தையையும், இயற்கை வளங்கள் அதிகமான பகுதிகளையும் தனது மேலாதிக்கத்தின் கீழ் தக்க வைத்து, விரிவுபடுத்துவதே அதன் நோக்கம். மிகவும் குறைவாக இருப்பினும், ஏகாதிபத்திய சக்திகளுக்கு இடையேயான முரண்பாடு மெல்ல தலைதூக்குகிறது அதேசமயம், வளரும் நாடுகள் தங்களின் சந்தையை, இயற்கை வளத்தை, மற்றும் பொருளாதாரத்தை பன்னாட்டு நிறுவனங்கள் சுரண்டிட அனுமதிப்பதின் வாயிலாக, அந்த நாடுகளின் தேசீய நலனை சரணடைய செய்ய ஏகாதிபத்திய சக்திகள் பல வழிகளில் அவற்றிற்கு அழுத்தம் தருகின்றன.” அதன் விளைவாக, லாபத்தை அதிகரிக்க உழைப்பாளர் மீதான தாக்குதல் தீவிரப்படுத்தப்பட்டது .நவீன தாராளமயக் கொள்கைகளை கடைப்பிடிக்கும் அனேக வளர்ந்த, வளரும் நாடுகள் அதிகளவில் சிக்கன நடவடிக்கைகளை மேற்கொள்வது, தொழிலாளர்களின் உரிமைகளை குறைப்பது, பொதுசேவைகளை நீக்குவது, விலைகளை உயர்த்துவது போன்றவற்றை அமுல் படுத்துகின்றன. பெட்ரோலிய பொருளிற்கான அதிக வரி உயர்வை எதிர்த்து சென்ற ஆண்டு நவம்பரில், பிரான்சில் துவங்கிய தொழிலாளார் வர்க்கத்தின் போராட்டமான “எல்லோ வெஸ்ட் “’இயக்கம் (மஞ்சள் மேலங்கி இயக்கம்—அதில் ஈடுபடுபவர்கள் மஞ்சள் மேலங்கி அணிந்திருப்பர்) இன்னும் தொடர்கிறது இதனால், குறைந்தபட்ச ஊதியத்தில் 100 யூரோ அதிகரிக்கவும், குறைந்த ஊதிய ஓய்வூதியதாரர்களுக்கும், ஊழியர்களின் கூடுதல் கால ஊதியம், போனஸ் ஆகியவற்றிற்கும், திட்டமிட்ட வரி உயர்வினை கை விடவும், வலதுசாரி மக்ரோன் அரசு நிர்பந்திக்கப்பட்டது. ஐரோப்பாவிலேயே சிறந்ததான, பிரான்ஸ் தேசீய ரெயில்வேயை தனியார் மயமாக்குவதற்கும், ஊழியர்களின் பணிநிலைகளில் மாற்றம் கொணர்வற்கும், ஊழியர் எண்ணிக்கை குறைப்பிற்கு எதிராகவும் பிரான்சின் ரெயிவே தொழிலாளார்கள் ஏற்கனவே போராட்டத்தில் உள்ளனர். “ஓய்வூதிய சீர்திருத்தம்”என்று பெயரில் வருவதை ரஷ்ய தொழிலாளர்கள் எதிர்த்து போராடி வருகின்றனர்; கிரீஸில், சிரிஸா அரசின் சிக்கன கொள்கைகளுக்கு எதிராக, வேலைநிறுத்தம் உள்ளிட்ட போராட்டங்களில் தொழிலளர் வர்க்கம் ஈடுபட்டு வருகிறது. ருமேனியாவில், குறைந்தபட்ச கூலியையும், ஜெர்மனியில் ஊதிய உயர்வையும் கோரி வருகிறார்கள். பயணிகள் பாதுகாப்பை அச்சுறுத்துவதும், 6000 நடத்துனர் பணிகளை நீக்கிட வழி வகை செய்யும் ‘ஓட்டுனர் மட்டும்’ என்ற முறையில் ரயில் இயக்குவதை விரிவாக்குவதற்கு எதிராக வட இங்கிலாந்தில் ரயில்வே தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் இறங்கினர். பணிநிலைகளின் மீதான தாக்குதலுக்கு எதிராக சுவிட்சர்லாந்து கட்டுமான தொழிலாளர்கள் பணிமுடக்கம் செய்தனர். மேம்பட்ட ஊதியத்திற்காகவும், பணிநிலைமைகளுக்காகவும் போராடி வருகின்றனர். பெல்ஜியம், இத்தாலி, நெதர்லாந்து, போர்ச்சுகல், ஸ்பெயின் ஆகிய ஐந்து நாடுகளின் ஐரோப்பிய விமான பணியாளர்கள் மேம்பட்ட பணிநிலைமைகளுக்காக போராடினர். கல்விக்கான அதிக நிதி ஒதுக்கீடு, ஊதிய உயர்வு ஆகியவை கோரி போராடிய அமெரிக்க ஆசிரியர்களின் போராட்டம், அந்த நாட்டின் பல மாநிலங்களுக்கு பரவியது. அதே போன்ற கோரிக்கைகளுக்காக, அர்ஜெண்டினா, இங்கிலாந்து, மற்றும் ஈரான் ஆசிரியர்கள் போராடுகின்றனர். நெகிழி தொழிற்சாலை தொழிலாளர்கள், போக்குவரத்து தொழிலாளர்கள், தீயணைப்பு வீரர்கள், முனிசிபல் தொழிலாளர்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பல்வேறுபட்ட தொழிலாளர்கள் ஊதியம் மற்றும் மேம்பட்ட பணிநிலைமைகளுக்காக வேலை நிறுத்தம் செய்தனர். குறைந்த பட்ச ஊதிய விகித்ததை உயர்த்த வேண்டி ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் ஒரு லட்சம் ஊழியர்கள் அணிவகுத்தனர். வேளாண் வர்த்தக பெரு நிறுவனங்களின் கொள்கைகளை விவசாயிகளும் பல நாடுகளில் எதிர்த்தனர். ஏகாதிபத்தியம் ஏற்பாடு செய்யும் உள் நாட்டு போர் மற்றும் அரசியல் ஆதாயத்திற்கெதிராக உழைக்கும் மக்கள் தெருக்களுக்கு வரத் துவங்கி விட்டனர். ஜனாதிபதி லூலாவின் விடுதலை வேண்டி நடந்த பெரும் ஆர்ப்பாடங்களை பிரேசில் கண்டது. அது போலவே, மதுரோ அரசிற்கு ஆதரவாக வெனிசுலாவின் உழைக்கும் வர்க்கம் வெளி வந்தது. இந்தியாவில்: எதேச்சதிகார,வகுப்புவாத நரேந்திர மோடி அரசின் முன்னெப்போதையும் இல்லாத தாக்குதல்களை இந்தியத் தொழிலாளி வர்க்கம் கண்டது. பொறுப்பேற்ற ஐந்தே நாட்களுக்குள்ளாக மோடி அரசு பயிற்சி பருவ ஊழியர்களை எந்த வரையரையுமின்றி பணியாற்றும் வகையில் பயிற்சி பருவ (Apprenticeship Act) சட்டத்தினை திருத்தியது.பாராளுமன்ற் தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு சில நாட்கள் முன்னர், குறைந்தபட்ச ஊதியத்தை குறைக்க முயற்சித்தது, பெரு நிறுவனங்கள் ‘எளிதாக தொழில் செய்ய’ என்ற பெயரில், இந்திய தொழிலாளி வர்க்கம் போராடி பெற்ற உரிமைகளை ‘ இல்லாதாக்கிட மோடி ஆட்சி தீவிரமாக முயற்சித்தது. முதலாளிகளுக்கு சலுகையாக, படிவ சமர்பிப்பு, குழந்தை தொழிலாளர் ஒழிப்பு சட்டம், தொழிற்சாலை சட்டம் ஆகியவை திருத்தப்பட்டன. ”குறிப்பிட்ட கால பணி” என ( ஒப்பந்த தொழிலாளர் முறை போன்ற ஒன்று) ஒரு ஆணை நிர்வாக ஆண வழி நிறைவேற்றப்பட்டது., வருங்கால வைப்பு நிதி, தொழிலாளர் காப்புறுதி திட்டம் போன்ற சமூக பாதுகாப்பு திட்டங்கள் பல வழி முறைகளில் தகர்க்கப்பட்டன, உற்பத்தி திறன் பல மடங்கு அதிகரித்த பொழுதே,உண்மை ஊதியம் குறைந்தது. மதிப்பு உருவாக்க செலவில் ஊதியத்தின் பங்கு 9 சதவீதமாகக் குறைந்தது. அதே சமயம் லாபத்தின் பங்கு 60 சதவீதமாக உயர்ந்து அசைந்து கொண்டிருந்தது. சர்வ தேச தொழிலாளர் அமைப்பின் இந்திய ஊதிய அறிக்கை 2018 ன் படி நாட்டில் 82 சதவீத ஆண் தொழிலாளர்களும் 92 சதவீத பெண் தொழிலாளர்களும் மாதத்திற்கு ரூ.10000/= ற்கும் குறைவாக ஊதியம் பெறுகிறார்கள்.. இந்தியாவில், 67 சதவீத வீடுகள் மாத ஊதியம் ரூ 10000/= ற்கும் குறைவாக உள்ளதென கூறியதாக அஸிம் பிரேம்ஜி பல்கலை கழக அறிக்கை 2018 சொல்கிறது. 2015-16 வரை மொத்த தொழிலாளார்களில் 46 சதவீதமான 57 சதவீத சுய தொழில் புரிவோர் மாதந்தோறும் ரூ 7000/= மும், மொத்த தொழிலாளார்களில் 50 சதவீதமான பேர் வெறும் ரூ 5000/= மாதம் பெறுவதாக தொழிலாளர் செயலகம் அறிவிக்கிறது. இதெல்லாம் சராசரி எண்களே. பெரும்பான்மை உழைக்கும் பணியாளர் திரளிற்கு உண்மை ஊதியம் மிகவும் கீழே இருக்கும். அதுவும் தொடர்ச்சியாக ஒவ்வொரு மாதமும் கிடைக்காது. அதே சமயம் முதலாளிகளுக்கு வரி தள்ளுபடிகளும், விலக்குகளும் ஒவ்வொரு வருடமும் ரூ 5 இலட்சத்திற்கும் மேலாக கிடைக்கிறது. மேலும் பெரு நிறுவனங்களின் வரி செலுத்தாத தொகை மட்டும் ரூ 7.31 இலட்சம் கோடி. (2016-17). கிராமப்புற தபால்காரர்கள், மத்திய மாநில அரசு ஊழியர்கள், ரெயில் ஓட்டுனர்கள், பாதுகாப்பு துறை ஊழியர்கள், ஆசிரியர்கள், வங்கி ஊழியர்கள், ஒப்பந்த, வெளி நிறுவன ஊழியர்கள், பி எஸ் என் எல் ஊழியர்கள், சாலை போக்குவரத்து தொழிலாளர்கள், மின் ஊழியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், ஆஷா(ASHA-அங்கீகாரம் பெற்ற சமூக சுகாதார ஆர்வலர்கள்) மற்றும் மதிய உணவு ஊழியர்கள், துப்புரவு மற்றும் முனிசிபல் தொழிலாளர்கள், மருந்து மற்றும் விற்பனை பிரதிநிதிகள், பன்னாட்டு நிறுவனங்களின் நவீன ஆட்டோமொபைல் உற்பத்தியில் வேலை செய்யும் தொழிலாளர் உள்ளிட்ட ஆலைத்தொழிலாளர்கள், தேயிலை தோட்ட தொழிலாளர்கள், ஏன், தகவல் தொழில் நுட்ப ஊழியர்கள் உட்பட அனைவரும் அவரவர் கோரிக்கைகளுக்காக போராட்டத்தில் இறங்கினர். இந்த துறைகள் பலவற்றில் தொழிலாளார்களின் முழு பங்களிப்போடு வேலை நிறுத்தம் முழுமையாக நடைபெற்றது. ஓய்வூதிய திட்டங்களின் மீதான தாக்குதலால் ஓய்வூதியதாரர்களும் அதனை எதிர்த்து போராட்டத்திற்கு வந்து கொண்டிருக்கின்றனர். அண்மையில் நடந்த அனைத்து போராட்டங்களிலும், பெண் தொழிலாளர்களின் பெரும் பங்களிப்பும், அணி சேர்க்கையும், அவர்களின் தலைமைப்பண்பும் முக்கிய அம்சமாகும். பிரச்சனை சார்ந்த போராட்டங்களில் முன்னெப்போதும் இல்லாத ஒற்றுமையை இக்காலத்தில் காண முடிந்தது. இத்தகைய தாக்குதல்களுக்கெதிராக, 20 கோடி தொழிலாளர்களுக்கு மேல் பங்கேற்ற, 2 செப்டம்பர் 2015, 2 செப்டம்பர் 2016 மற்றும் 8, 9 ஜனவரி 2019 உள்ளிட்ட பொது வேலை நிறுத்தத்தில் பி எம் எஸ் நீங்கலாக மற்ற அனைத்து மத்திய தொழிற்சங்கங்களுடான ஒற்றுமை பலப்படுத்தப்பட்டது. விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், வாலிபர், மாணாவர், மாதர், தலித், பழங்குடியினர் என சமுதாயத்தின் பல்வேறுபட்ட பகுதியினரும் அரசாங்கத்தின் கொள்கைகளுக்கெதிராக போராடினர் வளர்ந்துவரும் தொழிலாளர்-விவசாயி ஒற்றுமை: இந்தியாவில் தொழிலாளார் வர்க்க இயக்கங்கள் பிரச்சனைகளை கையிலெடுப்பதில் மேன்மேலும் பக்குவமடைவதோடு, விவசாயிகளின் போராட்டங்களோடு இணைந்து கொள்கின்றன என்பது தற்போதைய இயக்கங்களின் குறிப்பிடத்தக்க அம்சமாகும். 2015 பொது வேலை நிறுத்த கோரிக்கைகளில் எழுப்பப்பட்ட முக்கிய கோரிக்கைகளில் நிலம் கையகப்படுத்தும் பிரச்சனை ஒன்றாகும். தொழிற்சங்க இயக்கம் தீவிரமாக விவசாயிகளின் நலன்களை ஆதரித்தது. 9 ஆகஸ்ட் 2018 சிறை நிரப்பும் போராட்டம்,14, ஆகஸ்ட் சமுஹிக் ஜாக்ரண்,( கூட்டான விழிப்புணார்வு), மற்றும் சரித்திர முக்கியத்துவமான 5 செப்டம்பர் 2018 மஸ்தூர் கிஸான் சங்கர்ஷ் பேரணி (தொழிலாளர் விவசாயி போராட்ட திரளணி) ஆகியவற்றில் அமைப்பு ரீதியாக மேலிருந்து கீழ் வரை படிப்படியாக திரட்ட அ இ வி சங்கம் மற்றும் அ இ வி தொ சங்கம் ஆகியவற்றுடன் இணைந்து தொழிலாளர் விவசாயிகள் கூட்டணி என்ற திசையில் உருவாக்க சி ஐ டி யூ முன்முயற்சி எடுத்தது. விவசாயிகளின் போராட்டங்கள் சி ஐ டி யூ வினால் முழுமையாக ஆதரிக்கப்பட்டன. மத்திய தொழிற்சங்கங்களால் ஏற்று கொள்ளப்பட்ட தொழிலாளர் கோரிக்கை சாசனம், அனைத்து மக்களின் கோரிக்கைகளை உள்ளடக்கியதாகும். பல்வேறு பட்ட மக்களின் தொடர்ச்சியான இயக்கங்கள்தான், வர்க்க அமைப்புக்களின் பலமான அடித்தளத்துடன், வர்க்க, வெகுஜன, சமூக அமைப்புக்களின் கூட்டு மேடையாக ஜன் ஏக்தா, ஜன் அதிகார் அந்தோலன் (மக்கள் ஓற்றுமை மக்கள் அதிகாரம் இயக்கம்) அமைய உதவியது. நாட்டின் உழைக்கும் மக்களின் சில முக்கிய பிரச்சனைகளை நடை பெற்று கொண்டிருக்கும் பாராளுமன்ற தேர்தலில் பிரதான அரசியல் விவாதமாக்கியது இந்த இயக்கங்களின் பலனே ஆகும்.. முன்னோக்கிய பாதை: நவீன தாராளமயமாக்கலின் தோற்றுவாய்க்குப் பின், முதன் முறையாக அரசியலும், அடிப்படை வர்க்கங்களான தொழிலாளர் வர்க்கம், விவசாயத் தொழிலாளர் மற்றும் ஏழை விவசாயிகளின் இயக்கங்களும் மையப்புள்ளியாக வெளிப்பட்டுள்ளன. வாலிபர், மாணாவர், மாதர், சூழலியலாளர்கள், தலித், பழங்குடியினர், சிறுபான்மையினர், அனைத்து ஒதுக்கப்பட்ட பிரிவினர்களின் முற்போக்கு சமூக இயக்கங்கள் இந்த நீரோட்டத்தில் இணைகிண்றனர். ஆயினும், சி ஐ டி யூ வின் செயற்குழு சுட்டிக்காட்டுவது வருமாறு: “ நவீன தாராளமய முதலாளித்துவ ஒழுங்குமுறை அமைப்பின் உள்ளார்ந்த நெருக்கடியானது, பல நாடுகளில், தீவிர வலதுசாரி சக்திகள் அரசியல் அரங்கில் தலை தூக்கும் நிகழ்வோடு சேர்ந்தே நடக்கிறது. நவீன தாராளமய கொள்கைகளின் தாக்கம் மக்களின் வாழ்வில் மற்றும் வாழ்வாதாரத்தில் ஏற்படுத்தும் பிரச்சனைகளினால் அவர்களின் மத்தியில் வளர்ந்து வரும் அதிருப்தியை, அமைதியின்மையை வலதுசாரி சக்திகள் தங்களின் அரசியல் ஆதாயத்திற்கு பயன்படுத்த முடிகிறது. உழைக்கும் மக்களின் பரந்துபட்ட போராட்டங்கள் நடந்த போதிலும், பல நாடுகளில் வலதுசாரிகள் தலை தூக்க காரணம், சமூக ஜனநாயகவாதிகளின் துரோகங்களும் மற்றும் மாற்று பொருளாதார முறையை தராத, தொடர்சியாக வர்க்க பார்வையோடான போராட்டங்களாய் அவற்றை கொண்டு செல்லாத பலகீனப்பட்டுள்ள இடதுசாரிகளின் தோல்வி அல்லது இரு போக்குகளுமேயாகும். அரசியல் அரங்கில் இந்தியாவும் வலது மாற்றத்தை எதிர் கொண்டு வருகிறது. நாட்டின் மதச்சார்பற்ற, ஜனநாயக இழை தீவிரமான தாக்குதலுக்குள்ளாகிறது. பாஜக மட்டுமல்ல, இடதுசாரிகள் தவிர்த்த மற்றெல்லா முக்கிய அரசியல் கட்சிகளும் நவீன தாராளமயக் கொள்கைகளுக்காக வாதிடுபவர்களே. அரசியல் விவாதத்தில் சில அடிப்படை பிரச்சனைகளை வர்க்க, வெகுஜன இயக்கங்கள் கொண்டு வரமுடிந்தாலும், தேர்தலிற்கு பின்னர் கூட உழைக்கும் மக்களுக்கு ஆதரவாக அரசின் கொள்கைகளில் அதிக மாற்றமிருக்கப் போவதில்லை. மாறாக, முதலாளித்துவ அமைப்பின் உள்ளார்ந்த நெருக்கடி இன்னும் தீவிரமாவதால், உழைப்பவர் மீதான தாக்குதலும் மிக அதிகமாகப் போகிறது. எவ்வாறு உழைக்கும் மக்களின் போராட்டங்களை முன்னெடுப்பது மற்றும் அதனை பலப்படுத்துவது என்பதும், ஜனநாயகத்தை காத்திடவும், அவ்வப்போது அரசை மாற்றுவது மட்டுமேயின்றி கொள்கைகளில் மாற்றம் கொணர அவ்வாறான போராட்டங்களை எப்படி அரசியல் சக்தியாக மாற்றுவது என்பதும்தான் தொழிற்சங்க இயக்கத்தின் முன்னால் உள்ள சவாலாகும். பரந்து விரிந்த பலமான தொழிற்சங்க இயக்க அடித்தளம் இவ்வாறன இயக்கத்திற்கு அஸ்திவாரமாகும். விவசாயிகளின் இயக்கம் இணைவதால் இந்த வர்க்க அணி சேர்க்கை, பொருளாதார தாக்குதலுக்கு எதிரான அடித்தளமாக மட்டுமில்லாமல், கிராமப்புறங்களின் சமூக ஒடுக்குமுறை, மற்றும் வகுப்புவாத பிரிவினை அரசியலிற்கு எதிரான சக்தியாகவும் விளங்கும். வரும் நாட்களில், தாக்குதலுக்கு எதிரான, மக்களுக்கான மாற்றை முன்னெடுப்பதாக, அனைத்து வகையான சுரண்டலுக்கும் முடிவுகட்டி, எழும் இந்தியாவை வடிவமைப்பதில் வர்க்க அரசியல் ஒர் தீர்மானகரமான பங்கினை வகித்திடும்.. தமிழாக்கம்: ஜி.பாலசந்திரன் Posted in உலகம்Tagged அரசியல் ஏகாதிபத்தியம் கம்யூனிசம் கார்ல் மார்க்ஸ் சோசலிசம் சோசலிஸ்ட் பிடல் காஸ்ட்ரோ பெண்ணியம் போராட்டம் போர் மார்க்சியம் முதலாளித்துவம் வட கொரியா வரலாறு வர்க்கம் capitalism Fidel Castro imperialism MarxismLeave a comment அமெரிக்க போர் முரசும், அல்லல்படும் சிரியாவின் மக்களும் Posted on September 10, 2013 by Editorial மீண்டும் அமெரிக்கா போர் முரசு கொட்டுகிறது. எண்ணெய் வள அரபு நாடுகளில் ஒன்றான சிரியாவின் அதிபர் ஐ.நா நெறிகளை மீறி வைத் திருக்கும் பேரழிவு ரசாயன ஆயுதங்களிலிருந்து உலக மக்களை காக்க படையெடுக்கப் போவதாக வும் மேலும் இந்த நடவடிக்கை சர்வதேச சட்டங் களுக்கு உட்பட்டே இருக்கும் என்றும் ஒபாமா ஓசை எழுப்பியுள்ளார். இந்த போர்முரசின் நோக்கம் எந்த சோற்றாலும் மறைக்க முடியாத மலையாகும்.. தனது மேலாதிக்கத்திற்கு ஆபத்து ஏற்பட்டதாக பயந்து ஆயுத பலத்தை உலகிற்கு காட்டவும் எண்ணெய் வள நாடுகளை கிடுக்கிப்பிடி போட்டுவைக் கவும் இந்த போர் முரசு கொட்டப்படுகிறது. ரசாயன ஆயுதங்கள் ஸ்டாக் வைத்திருப்பது குற்றமென்றால் முதல் குற்றவாளி அமெரிக்காதான். ராசாயன ஆயுதத்தை பயன்படுத்தி மக்களை கொன்ற முதல் குற்றவாளியும் அமெரிக்காதான்.40 ஆண்டுகள் கடந்த பிறகும் வியட்நாம் மக்களும் மண்ணும் காடுகளும் அமெரிக்க ராணுவம் வீசிய ரசாயன விஷத்திலிருந்து இன்னும் மீளவில்லை.. இப்பொழுதும் சிரியாவில் ரசாயன ஆயுதத்தை ஏவியதும் அமெரிக்காவின் உதவியுடன் செயல்படும் பயங்கர வாத குழுதான் என்று ஐ.நா நிபுணர்கள் குழு கண்டறிந்து விட்டது. வேதனை என்னவெனில் மேலை நாட்டு செய்தி சேகரிப்பு நிறுனங்கள் அமெரிக்காவும் அல்கொய்தாவும் கூட்டணி வைத்து சிரியாவிறகுள் பயங்கர.த்தை விதைத்து மக்களை கடந்த இரண்டு வருடமாக அகதிகளாக ஆக்குவதை பூசி மொழுகி காட்டுவதுதான். இன் னொரு பக்கம், ஐ.நா அகதிகளின் கமிஷனர் வேதனை தரும் புள்ளிவிவரத்தை உலக மக்களின் பார்வைக்கு வைத்துள்ளார். இரண்டேகால் கோடி மக்கள் தொகை கொண்ட சிரியாவில் ஆயுதம் தாங்கிய மோதல் தொடங்கியதிலிருந்து சுமார் 20 லடசம் மக்கள் அகதிகளாக அண்டை நாடுகளுக்கு சென்றுள்ளனர். அண்டைநாடுகளான லெபனா னில் 716,000, ஜோர்டன்னில் 515,000, துருக்கியில் 460,000, ஈராக்கில் 169,000, எகிப்தில் 111,000, சிரியா விற்குள் குடியிருப்பைவிட்டு வெளியேறியவர்கள் 42,50,000.இந்த புள்ளி விவரத்தை கொடுத்த ஐ.நா. அகதிகள் கமிஷனர், அண்டை நாடுகள் மட்டும் அகதிகளை பராமரிக்க இயலாது உலக நாடுகள் உதவ வேண்டுமென வேண்டுகோளும் விட்டுள்ளார். (ஆதாரம் யு. என். எச். ஆர்.சி) அகதிகளில் பெரும் பகுதி 12 வயதிற்கும் குறைந்த குழந்தைகளே, ரத்தம் சிந்தும் காயங்களுடன் குழந்தைகளும், பெண்களும் ஆண்களும் உடுத்திய ஆடை தவிர வேறு எதுவுமில்லாமல் வருவது கல் நெஞ்சங்களையும் இளக்கிவிடும் என்று பத்திரிகை கள் எழுதுகின்றன. சில மேலைநாட்டு தன்னார்வக் குழுக்களும் நிதி, பொருட்கள் திரட்டி உதவுகின்றன. பத்திரிகை களும் ஊடகங்களும் சிரிய மக்கள் படுகிற வேதனை களை படம் பிடித்து காட்டுகின்றன. வேதனை என்னவெனில் அமெரிக்க படையெடுப்பே சரியான தீர்வு என்ற கருத்தை பலப்படுத்துகிற முறையில் செய்திகள் வழங்கப்படுகின்றன. அதாவது அமெ ரிக்கா ஆயுதங்கள் கொடுத்து ஆதரிக்கிற பயங்கர வாத குழுக்களின் கொடுமைகளை தற்காப்பு நட வடிக்கை போல் பூசியே எழுதுகின்றன. அரசியல் தீர்வை முன் மொழியும் நாடுகளை சர்வாதிகாரி ஆசாத்திற்கு ஆதரவு தருபவைகள் என்று சித்தரித்து சிறுமைப்படுத்துகின்றன. உள்நாட்டு பயங்கரவாத குழுக்கள்,அரசின் அடக்குமுறை இவைகளிலிருந்து மக்களை காக்கும் அரசியல் தீர்வை பிரபல ஊட கங்கள் விவாதிப்பதே இல்லை. வரலாறு கூறுவதென்ன? முதல் உலக யுத்தம் நடக்கும் தருணத்தில் (1916). பிரிட்டனும் பிரான்சும் ரஷ்யாவும் வெற்றிவாகை சூட நேர்ந்தால் ஓட்டாமன் சாம்ராஜ்யத்தை பல நாடுகளாக பிரித்து பங்கு போட ஒரு ஒப்பந்தம் செய்து கொணடனர்.. அந்த ஒப்பந்தபடி ஒட்டாமன் சாம்ராஜ்யத்தின் (இன்றைய துருக்கி) பகுதியாக இருந்த ஆசியா மைனர் மற்றும் வட ஆப்பிரிக்க பகுதியை நாடுகளாக பிரித்து பிரிட்டனும், பிரான்சும் பங்கு போட்டுக்கொண்டனர். இதனை .அதிகாரப்பூர்வமாக ஆசியா மைனர் ஒப்பந்தம் என்று அழைப்பர். அந்த ஒப்பந்தப்படி சிரியா பிரான்சின் காலனியானது முதலாம் உலகப் போர் முடிந்த தருவாயில் உருவான சோவியத் அரசு ஜார் மன்னன் காலத்திய ரஷ்ய காலனிகளுக்கு சுயநிர்ணய உரிமை வழங்கியது. 1916ல் காலனிகளை மறு பங்கீடு செய்து ரஷ்ய உட்பட ஏகாதிபத்தியவாதிகள் போட்ட ரகசிய ஒப்பந்தங்களை லெனின் வெளியிட்டு காலனிகளாக ஆன ஆசிய, ஆப்பிரிக்க மக்களிடையே விடுதலைக்கான போராட்டத்திற்கு விவேக மூட்டினார் அதன் விளைவாக பல நாடுகளில் விடுதலைப்போர் வீறு கொண்டு எழுந்தது. அக்காலத்தில் விடுதலை இயக்கங்களுக்கு சோவியத் ஆசானாக இருந்தது என்பதை யாராலும் மறுக்க முடியாது. சோவியத் உதயமான பின் விடுதலை இயக்கங்களை முன்பு போல் காலனியவாதிகளால் நசுக்க முடிய வில்லை . அந்த வழியில் 1946ல் சிரியா விடுதலை பெற்ற நாடானது. சிரியாவில் வாழ்கிற மக்கள் பல பண்பாட்டுடன் வாழ்கிறவர்கள் குர்திஷ் மொழி பேசுகிற மக்கள், அர்மினியர்கள் அசிரியன்கள் துருக்கர்கள், கிருத்து வர்கள், துருஸ், அலாவைத், ஷியா, அரபுசன்னிஸ். என்று வேற்றுமையில் ஒற்றுமையில் வாழ்பவர்கள். பல மதங்கள் அதன் உட்பிரிவுகள் உள்ள ஒரு நாட்டில் மதச்சார்பற்ற அரசாக இருந்தால்தான் அமைதியாக ஆளமுடியும் என்று கருதிய. விவேக முள்ள ஆட்சியாளரகள் மதச்சார்பற்ற ஆட்சியை கண்டனர். அந்த வகையில் சிரியாவிலும் அரசு மதச்சார்பற்றே இருந்துவருகிறது ஒட்டாமன் சாம் ராஜ்ய காலத்திலேயே மதச்சார்பற்ற அரசு என்ற கோட்பாடு பின்ப்பற்றபட்டதால் இது பண்பாட்டு அம்சமாக அங்கு இருக்கிறது என்று வரலாற்று நிபுணர்கள் கூறுகின்றனர். அந்த சிரியா இன்று மதவாத பயங்கர வாதக் குழுக்களின் போர்க்களமாக உள்ளது. விஷவாயு ஆயுதமாக்கப்பட்டு மக்கள் கொல்லப்படுகின்றனர், முடமாக்கப்படுகின்றனர் இந்நிலையில் ரசாயன ஆயுத ஆபத்திலிருந்து உலக மக்களை காப்பாற்ற அமெரிக்கா படையெடுக்கப் போவதாக அறிவித்துள்ளது. 5110 கடல் மைல்களுக்கு அப்பால் இருக்கும் சிரியாவை நோக்கி கடற்படையை அனுப்பி ஆள் இல்லா விமானங்களையும் ஏவுகனைகளையும் ரசாயன ஆயுத கிடங்குகள் நோக்கி ஏவ எடுத்த அமெரிக்கா வின் முடிவு விவேகமானதா? ஏற்கனவே உள்நாட்டு கலவரத்தால் லட்சக்கணக்கில் அகதிகளாகி உள் நாட்டிலும் அண்டை நாடுகளிலும் குடி பெயர்ந்து அல்லலுறும் அம்மக்களை ஒபாமா ஏவப்போகும் டோரோன்சும், குருயிஸ் மிசைல்களும் காப்பாற்றுமா? சிரியாவில் உள்நாட்டு ஆயுத மோத லுக்கு காரணமென்ன? எது தீர்வு? இன்று அமெ ரிக்கா, இந்தியா உட்பட ஸ்டாக் வைத்திருக்கும் ரசாயன ஆயுதம் மற்றும் அது போன்ற பேரழிவு ஆயுதங்களை ஒழிக்கும் காலம் வருமா? இதற்கான பதிலை முடிந்தவரை தேடுவோம். கடந்த சில ஆண்டுகளாக அரபு நாடுகளில் மக்கள் எழுச்சியுற்று மக்களுக்கான ஜனநாயக அரசை நிறுவ முயற்சிப் பதையும் உள்நாட்டு சுரண்டும் கூட்டத்தில் ஒரு பகுதி மேலை நாடுகளின் உதவியுடனும் ராணுவ தளபதிகளின் ஆதரவுடனும் சுரண்டும் வர்க்கத்திற்கு தில்லு முல்லு செய்ய வாய்ப்பளிக்கும் அரசிய லமைப்பை திணிக்க முயற்சிப்பதையும், இன்னொரு பகுதி பழமைவாத பார்வையோடு. இஸ்லாமிய அரசை நிறுவ முயற்சிப்பதையும். கண்டுவருகிறோம். இதே காட்சி இப்பொழுது சிரியாவிலும் அரங்கேறியுள்ளது சிரியாவிலும் மக்களுக்கான ஜனநாயகத்திற்காக 2011ல் மக்கள் எழுச்சியுற்றனர். துவக்கத்தில் அதிபர் ஆசாத் ராணுவத்தை கொண்டு மக்களை அடக்க எடுத்த நடவடிக்கைகளே, அவரை சிக்கலில் தள்ளிவிட்டது. மக்கள் மீது சுட ஒரு பகுதி ராணுவம் மறுத்தது. மறுக்கும் ராணுவ வீரர்களை சுட்டுத்தள்ளவே ஒரு கட்டத்தில் ராணுவம் பிளவுபட்டு அரசை எதிர்த்தது. மக்கள் ஒதுங்க ஆயுதம் தாங்கிய மோதலாகிவிட்டது. ஆசாத்தின் அடக்கு முறை இரண்டு சக்திகளை உசுப்பிவிட்டது. அரபு நாடுகளிலே இஸ்லாமிய அரசை நிறுவ கனவு காணும் சாவூதி மன்னருக்கும் அவரது கூட்டாளி களுக்கும், சன்னி மத அல்கொய்தா போன்ற அமைப்புகளுக்கும் அது வாய்ப்பு கொடுத்துவிட்டது. இன்று அல்நுஸ்ரா பிரன்ட் என்ற பெயரில் அல்கொய்தா சவூதி மன்னரின் உதவியுடன் சிரியாவில் ஆசாத்தை எதிர்க்கும் ராணுவத்திற்கு உதவியாக இயங்குகிறது. இந்த அமைப்பு சன்னி மத பிரிவை சார்ந்த சகிப்புத் தன்மையற்ற தலிபன் பாணி பயங்கரவாத பிரிவாகும். இதற்கு எதிராக ஹிஸ்புல்லா அரசியல் இயக்கத்தின் ஆயுதம் தாங்கிய குழு அரபு நாடுகளில் உள்ளது. லெபனானில் அது ஆளும் அணியில் ஒன்று.. சிரியாவிற்குள். பயங்கரவாத குழுக்களுக்கு எதிராக இதுவும் லெபனானில்லிருந்து வந்துள்ளது சிரியா என்ற போர்களத்தில் அமெரிக்கா அல்கொய்தா அரபு மன்னரகள் ஒரு பக்கமும் இவர்களது ஆதிக்கத்தை எதிறகும் அரபு நாடுகளின் அரசியல் இயக்கங்கள் எதிர்ப்பக்கமும் மோதுகின்றன. . உலக அரசியலில் தங்கள் கொடி தவிர வேறு கொடிகளை பறக்கவிடக் கூடாது என்ற ஆவேசத்துடனும் நீண்ட கால திட்டத்துடனும் செயல்படும் முன்னாள் காலனியவாதிகளான பிரான்ஸ், பிரிட்டன் அமெரிக்கா தங்களுக்கு அனுசரனையான அரசாக சிரியாவில் அமைய தலையிடும் வேளை வந்துவிட்டதாகக் கருதி அவர்களும் நடவடிக்கையில் இறங்கிவிட்டனர். இதன் விளைவாக மக்கள் எழுச்சி சுருங்கி மக்கள் பங்கேற்க இயலாத ஆயுதங்கள் மட்டுமே மோதுகிற போர்க்களமாக சிரியா ஆனது. மக்கள் அகதிகளாகி வருகிறார்கள்.. நட்பு நாடுகளின் நிர்பந்தம் சர்வாதிகாரி ஆசாத்தை 2012 மே மாதத்தில் நாடாளுமன்ற தேர்தலை நடத்திட வைத்தது.. ஆசாத் தலைமையில் தேசிய முற்போக்கு கூட்டணி என்ற பெயரிலும், ஆசாத் குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்ட உருவான பாப்புலர் பிரண்ட் பார் சேன்ஞ் அன்ட் லிபரேஷன் எதிரணியும் போட்டியிட்டன.250 இடங்களுக்கு 7195 வேட்பாளர்கள் அதில் 710 பெண்கள் களத்தில் நின்றனர். 12 விதமான அரசியல் கட்சிகள் எதிரும், புதிருமாக இரண்டு அணி அமைத்து தேர்தலில் போட்டியிட்டன. ஒருபக்கம் தேர்தல் நடந்தாலும் ஆங்காங்கு பயங்கரவாதக் குழுக்களும் ஆசாத்தின் விசுவாச ராணுவமும் மோதி சிரியாவை போர்களமாக ஆக்குவது தொடர்ந்தது. இரு தரப்புமே தேர்தலை அமைதியான சூழ்நிலையில் நடத்தி மக்கள் விரும்புகிற ஆட்சியை உருவாக்க விரும்பவில்லை என்பது வெளிப்படையாகத் தெரிந்தது. தேர்தலும் நடந்தது 14.8 மில்லியன் வாக்காளர்களில் 51.26 சத வாக்காளர்கள் வாக்களித்து ஆளும் கூட்டணி பெரும்பான்மை இடங்களை பிடித்து ஆட்சியை தக்கவைத்துக் கொண்டது. எதிரணி தேர்தல் முடிவை ஏற்க மறுத்து. 19,மார்ச் 2013 அன்று எதிரணியின் ஆயுதம் தாங்கிய பயங்கர வாத குழுக்கள் ரசாயன ஆயுதங்களை பிரயோகித்து கான் அன் அசால் நகரில் ராணுவத்தையும் மக்களை யும் கொல்லத் தொடங்கியது. அதே தேதியில் (19,மார்ச் 2013) ஆசாத் ஐ.நா. பொதுச் செயலாளருக்கு புகார் அணுப்பி நிபுணர்களை அனுப்பி ஆய்வு செய்யக் கோருகிறார்.. அமெரிக்க ரசாயன ஆயுதங்களை ஸ்டாக் வைத்திருக்கும் ஆசாத் அரசுதான் மக்களை கொல்வதாக குற்றம் சாட்டி சிரியாமீது தாக்குதல் தொடுக்கப் போவதாக இப்பொழுது அறிவித்துள்ளது. அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் மூன்று நாடுகளும் ஆசாத்தை குற்றம் சாட்டியது. ஐ.நா.வின் பொதுச் செயலாளர் எந்தெந்த இடங்களில் என்ன வகையான விஷவாயு? உயரிழப்பு, காயம்பட்டோர் இவைகள் பற்றி ஆய்வு செய்ய 21 பேர் கொண்ட நிபுணர் குழுவை அனுப்பினார். அது தயாரித்த அறிக்கையில் விஷவாயுவை ஏவியது யார் என்பதை முடிவு செய்யாது என்றும் தெரிவித்தார் ரசாயன ஆயுதம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்பதை கள ஆய்வு உறுதி செய்தாலும். அதனை ஏவியது யார் என்பதை ஐ.நா நிபுணர் குழு. தெறிவிக்கவில்லை. இதற்கிடையில் அமெரிக்கா ஆசாத் மீது குற்றம் சாட்டி ராணுவ தலையீட்டிற்கு முடிவு செய்துள்ளது. இதனை உலக நாடுகள் வேடிக்கை பார்க்க முடி யாது.. அதற்காக அமெரிக்காவின் படையெடுப்பை கண்டும் காணாமல் விடமுடியாது. அதனை உலக நாடுகள் தடுக்க வேண்டும்.. அமெரிக்காவின் படை யெடுப்பு திட்டத்தை எதிர்க்கும் சீனாவும், ரஷ்யாவும் கண்ணை மூடிக் கொண்டோ.அல்லது அரசியல் ஆதயத்திற்கோ ஆசாத்தை ஆதரிப்பதாக கூறுவது ஒரு பிரச்சார கற்பனையே… கடந்தகால பிரச்சினைகளில் அந்த நாடுகள் எடுத்த நிலைபாட்டை உலகமறியும்.கடந்த காலத்தில் ஈராக் மீது ராணுவ நடவடிக்கை கூடாது என்று பாதுகாப்பு கவுன்சி லில் சீனாவும், ரஷ்யாவும் வீட்டோ செய்தது சரி என்பதை இன்று உலக மறியும்., லிபியாவில் கடாபி மக்கள் மீது விமானத்தாக்குதல் நடத்த முயற்சித்தால் அதனை தடுக்க நாட்டோ ராணுவத்தை அனுமதிக்க ஏகமனதான தீர்மானம் நிறைவேற்ற இந்த இரு நாடுகளும் சம்மதித்தன. அதனை பிரெஞ்சு ராணுவம் தவறாகப் பயன்படுத்தி விமானத் தாக்குதல் நடத்தி மக்களை கொன்றதையும் உலகமறியும். அதனை இந்த நாடுகள் கண்டித்தன என்பதையும் உலகமறியும்.. அமெரிக்காவை சார்ந்து நிற்கவே விரும்பும் மன்மோகன் சிங் அரசு அமெரிக்க நடவடிக்கையை ஏற்கவில்லை என்பதை தெளிவாகவே கூறிவிட்டது.. இன்று பயங்கரவாத கும்பல் கள் சிரியாவை ரணகளமாக்குவதை அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் சவூதி அரேபியா, சிரியாவின் அண்டை நாடுகள் நினைத்தால் அங்கே அமைதியை கொண்டுவர முடியும். அமைதியான சூழலில் தேர்தலையும் நடத்த முடியும். ஆளுக்கொரு அரசியல் நோக்கத்திறகாக ஆட்சியை சிரிய மக்கள் கையில் கொடுக்க இவர்கள் விரும்பவில்லை என் பதே உண்மை. இங்கே மக்கள் கையில் அதிகாரம் போகுமானால் பழமையான மதவாத அரசுகள் நிலவும் நாடுகளில் ஆயுதக்குழுக்களை நம்பாமல் சோவியத் பாணியில் மக்கள் ஆங்காங்கு தேர்தல் மூலம் நிர்வாக அமைப்பை ஏற்படுத்தி அதிகாரத்தை எடுத்துக் கொள்வர் என்ற பயமே இவர்களை ஆட்டிப்படைக்கிறது. டாலரைக் கொண்டும், எரி பொருள் எண்ணெய் வர்த்தக ஆதிக்கத்தைக் கொண்டும் உலகை ஆளும் முன்னாள் காலனிய வாதி களுக்கு அந்த மேலாண்மைக்கு ஆபத்து என்ற பயம் பிடித்தாட்டுகிறது. இந்த பயமே ஆளுக்கொரு பயங்கரவாத குழுக்களை பராமரிக்க தள்ளியுள்ளது. ஆசிய கண்டத்தில் காலனி ஆதிக்கத்திலிருந்து விடுபட்ட பல நாடுகளில் மக்களுக்கான ஜனநாயகம் என்பது கேள்விக்குறியாகவே நீடிக்கிறது. அந்த வகையில் சிரியாவும் விதி விலக்கல்ல. உள் நாட்டில் பழமையான சுரண்டல் கும்பலும், மேலைநாட்டு உறவால் உருவான நவீன சுரண்டல் கும்பலும் மக்கள் கையில் அதிகாரத்தை கொடுக்க தயாரில்லை. இந்த எதார்தத்தை முன்னாள் காலனியவாதி கள் பயன்படுத்தி பழைய சுரண்டலை தொடர எடுக்கிற முயற்சிகளே இன்றைய உலக அரசியலின் இழுபறி சக்தியாக உள்ளது. எனவே ராணுவ நட வடிக்கை என்பதின் நோக்கம் வேறு… ஐரோப்பிய, அமெரிக்க பிரச்சாரகர்கள் அனைவரும் யுத்தம் வருமா? வராதா? என்று தலையைப் பிய்த்துக் கொண்டு நிற்கின்றனரே தவிர, ராணுவ நடவடிக் கையின் நோக்கத்தை விவாதிக்க மறுக்கின்றனர்.. ஒரு காலத்தில் அமெரிக்க பொருளாதாரத்திற்கு போர் என்பது ஒரு டானிக்காக இருந்தது.இப்பொழுது நிலைமை வேறு. அது டானிக்கா? விஷமா? என் பதை உறுதியாக சொல்ல முடியாது. எனவேதான் தர்ம சங்கடம். முஸ்லீம் உலகோடு நல்லிணக்கம் கண்டவர் என்பதற்காகவே நோபள் பரிசு பெற்ற ஒபாமாவிற்கு இதைவிட வேதனை தருவது வேறு எதுவும் இருக் காது என்று சிலர் எழுதுகினறனர். ஜனாதிபதி ஒபாமா தர்ம சங்கடத்தில் இருப்பதாக சொல்லப் படுகிறது. பெரும்பான்மை அமெரிக்க பாமரமக் களின் யுத்த எதிர்ப்புணர்வு அவரைத் தடுப்பதாகவும்.. மறுபக்கம் உலக அரசியலில் அமெரிக்காவின் மேலாண்மையை நிலைநாட்ட செனட்டர்கள். கார்ப்பரேட் நிறுவனங்கள். போர் தொடுக்கத் தள்ளுவதாகவும் எழுதுகினறன.. பிரிட்டனின் நாடாளுமன்றம் சிரியா மீது ராணுவ நடவடிக்கை கூடாது தடுத்துவிட்டது. பிரான்சிலும் நாடாளு மன்றத்தில் விவாதிக்காமல் ராணுவத்தை அனுப்பக் கூடாது என்ற குரல் எழுந்துள்ளது. ஒபாமா அமெரிக்க ஜனாதிபதி என்ற வகையில் புஷ் போல் தான்தோன்றித்தனமாக முடிவெடுக்க அமெரிக்க அரசியல் சட்டம் அனுமதிக்கிறது. ஒபாமாவின் முடிவு எதுவாக வந்தாலும் சிரியாவின் துயரம் நீங்க நெடுநாளாகும். பேரழிவு ஆயுதமில்லா உலகு, ஐ.நாவின் மூலம் தீர்வு தேடுவது என்பவைகளோடு அது இணை க்கப்பட்டுள்ளது அதோடு அரபு நாடுகளை பிடித்தாட்டும் பழைய மற்றும் நவீன மூட நம்பிக்கைகள் அகல்வதை பொறுத்துள்ளது. Posted in வரலாறுTagged அமெரிக்கா அல்கொய்தா உலகப்போர் ஐ.நா ஒபாமா சவூதி அரேபியா சிரியா ஜார் மன்னன் துருக்கி பிரான்ஸ் பிரிட்டன் போர் ரஷ்யா ராணுவம்Leave a comment
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள கொட்டையூர் கிராமத்தில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு டீ கடைகளில் இரட்டை கிளாஸ் முறை பயன்படுத்தப்பட்டு வந்தது. மேலும், செருப்பு அணிந்து செல்வதற்கும், கோயிலுக்குள் நுழைவதற்கும் பல ஆண்டுகளாக அனுமதி மறுக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் வாலிபர் சங்கம் மற்றும் அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தினர், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான இந்த அநீதியை எதிர்த்து 30.12.2009 அன்று கொட்டையூர் கிராமத்தில் ஆலய நுழைவோம் என்றும் இரட்டை டம்ளர் உள்ளிட்ட இழிவை அகற்றுவோம் என்றும் அறிவித்திருந்தனர். இந்நிலையில் செவ்வாயன்று துறையூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் தலைமையில் நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில் சுமூக தீர்வு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து தாழ்த்தப்பட்ட மக்கள், வாலிபர் சங்கம் மற்றும் விவசாயத் தொழிலாளர் சங்கத்தினருடன் அப்பகுதியில் உள்ள கோயிலுக்குள் சென்று வழிபட்டனர். அதேபோல டீ கடைகளிலும் பொதுக் கிளாசில் டீ குடித்தனர். முன்னதாக நடந்த முத்தரப்பு பேச்சுவார்த்தையில் தாசில்தார் நந்தகுமார், துறையூர் இன்ஸ்பெக்டர் ராமலிங்கம், சப்-இன்ஸ்பெக்டர் ஜெய்சித்ரா மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகரச் செயலாளர் அண்ணாதுரை, ஒன்றியச் செயலாளர் எம்.காசிராஜன், துறையூர் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் எம்.சங்கிலிதுரை, எஸ்.மருதமுத்து, உப்பிலியபுரம் ஒன்றியச் செயலாளர் எஸ்.முத்துசரம், வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் வெற்றிச்செல்வன், ஒன்றியச் செயலாளர் எம்.ஆனந்தன், மாவட்டத் தலைவர் எ.சசிகுமார் மற்றும் முத்துகுமார், அசோக், சுரேஷ், அழகுமலை, பாக்கியராஜ், சக்திவேல், அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.சந்திரன் உள்பட ஏராளமான கொட்டையூர் கிராம மக்கள் கலந்து கொண்டனர். இடுகையிட்டது ஆதிகபிலன் நேரம் பிற்பகல் 12:04 லேபிள்கள்: ஆலயநுழைவு, இரட்டை டம்ளர், கொட்டையூர், வாலிபர், விவசாயத் தொழிலாளர் மார்க்சிஸ்ட் கட்சியின் தலைமையில் நெறிக்குறவர்கள் ஆர்ப்பாட்டம் குடிமனைப்பட்டா மற்றும் பல்வேறு வாழ்வாதாரக் கோரிக்கைகளை வலியுறுத்தி, திருத்துறைப்பூண்டியில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில், நெறிக்குறவர் சமூகத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். 29.12.2009 செவ்வாயன்று நகராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு நகரச் செயலாளர் எம்.பி.கே.பாண்டியன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் ஐ.வி.நாகராஜன் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.தங்கராசு, பி.என்.தங்கராசு, மாவட்டக்குழு உறுப்பினர்கள் டி.சுப்பிரமணியன், எஸ்.நவமணி, ஒன்றியச் செயலாளர் ஜோதிபாசு, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் டி.வடிவேல், கே.பி.ஜோதிபாசு, மாதர் சங்க ஒன்றியச் செயலாளர் பவானி, வாலிபர் சங்க மாவட்டக்குழு உறுப் பினர் டி.வி.காரல் மார்க்ஸ், நகரக்குழு உறுப்பினர்கள் டி.வி.பன்னீர் செல்வம், கே.பசுபதி, ஆர்.எம்.சுப்பிரமணியன், எஸ்.சாமிநாதன், கே.கோபு, ஜி.முனியப்பன், கே.ஜி.ரகுராமன் (வாலிபர்), கலைச்செல்வி (மாதர்), நகர்மன்ற உறுப்பினர் ஜி.ரேவதி ஆகியோர் ஊர்வலத் தில் பங்கேற்றனர். முன்னதாக தோழர் பி.சீனிவாசராவ் நினைவு மண்டபம் அருகிலிருந்து நெறிக்குறவர் சமூகத் தலைவர்கள் கே.நாகூரான், வீரமணி, இராஜேந்திரன், காளிமுத்து ஆகியோர் தலைமையில் நூற்றுக்கணக்கான ஆண்கள் மற்றும் பெண்கள் தங்கள் கைக்குழந்தைகளுடன் கோரிக்கைகளை முழங்கி ஊர்வலமாக வந்தனர். நீடாமங்கலம் நகரச் செயலாளர் சி.டி.ஜோசப் ஆர்ப்பாட்டத்தை வாழ்த்திப் பேசினார். நிறைவாக நகராட்சி ஆணையர் (பொறுப்பு) திருமலைவாசன் கோரிக்கை மனுவை பெற்று நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இடுகையிட்டது ஆதிகபிலன் நேரம் முற்பகல் 11:57 லேபிள்கள்: ஆர்ப்பாட்டம், திருத்துறைப்பூண்டி, நெறிக்குறவர்கள், பட்டா மாத்தூரில் தலித் மக்கள் ஆலயத்திற்குள் நுழைந்தனர் நாகை மாவட்டம், செம்பனார் கோவில் ஒன்றியம்- மாத்தூரில் உள்ள மாரியம்மன் கோயிலில் நீண்டகால மாகவே தலித் மக்கள் உள்ளே செல்லவோ, வழிபாடு செய்யவோ உரிமை மறுக்கப்பட்டிருந்தது. இக்கொடுமை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் நடத்திய கள ஆய்வின் மூலம் வெளிச்சத்திற்கு வந்தது. இதையடுத்து, வாலிபர் சங்கத்தின் தலைமையில், டிசம்பர் 30 அன்று தலித் மக்கள் ஆலயம் நுழைவார்கள் என்று அறிவிக்கப்பட்டது. பேச்சுவார்த்தை இந்நிலையில் 26.12.2009 அன்று மயிலாடுதுறை கோட்டாட்சியர் முன்னிலையில் நடந்த அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. அடுத்தகட்டமாக 28-ம் தேதி, செம்பனார்கோயில் காவல்நிலையத்தில் கோட்டாட்சியர், காவல்துறைத் துணைக் கண்காணிப்பாளர், வட்டாட்சியர், மண்டலத் துணை வட்டாட்சியர், வாலிபர் சங்கத் தலைவர்கள், மாத்தூர் தலித் மக்களின் தலைவர்கள், சாதி ஆதிக்க சக்தியினரின் பிரதிநிதிகள், கோயில் நிர்வாகிகள் ஆகியோர் பங்கேற்ற அமைதிப் பேச்சுவார்த்தை மீண்டும் நடைபெற்றது. இதில், அன்று மதியமே அரசு - காவல்துறை அதிகாரிகள் முன்னிலையில் தலித் மக்கள் ஆலயம் நுழைந்து, வழிபாடும் நடத்துவார்கள் என்றும், தலித் மக்களின் வழிபாட்டு உரிமையை எவரும் தடுத்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஒப்பந்தம் ஏற்பட்டது. ஆலய நுழைவு அதன்படி மதியம் 2 மணிக்கு மாத்தூர் மாரியம்மன் கோயிலில் ஆர்டிஓ, டிஎஸ்பி மற்றும் அரசு, காவல்துறை அதிகாரிகள் முன்னிலையில் 75 பெண்கள் உள்பட தலித் மக்கள் 150 பேர் ஆலயத்துக்குள் நுழைந்தனர். அப்போது கோயில் கருவறை, சாதி ஆதிக்க சக்திகளால் பூட்டப்பட்டிருந்தது. அதிகாரிகள் பூட்டை உடைத்துக் கருவறையைத் திறந்து விட்டனர். தலித் மக்கள் அமைதியாகவும், உரிமை பெற்ற வெற்றிப் பூரிப்போடும் வழிபாடு செய்தனர். அதன்பின், காலனித் தெருவில் வாலிபர் சங்கத்தின் ஒன்றியச் செயலாளர் மார்க்ஸ் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் ஜி.ஸ்டாலின், நிர்வாகிகள் பி.ஏ.ஜி.சந்திரசேகரன், கிருஷ்ணமூர்த்தி, கணேசன், சரவணன், கண்ணன் ஆகியோர் உரையாற்றினர். இடுகையிட்டது ஆதிகபிலன் நேரம் முற்பகல் 11:54 லேபிள்கள்: ஆலயநுழைவு, நாகப்பட்டினம், மாத்தூர், வாலிபர் சங்கம் தலித் தெருவுக்கு வராத தேர் : திமுக பிரமுகரைக் கண்டித்து மறியல் மதுரை- மேலூர் சாலையில் உள்ள உத்தங்குடி அய்யப்பன் கோயில் மண்டல பூஜை சனிக்கிழமையன்று (26.12.09) நடைபெற்றது. இந்த பூஜையையொட்டி அனைத்துத் தெருக்களிலும் கோயில் தேர் உலா வந்தது. ஆனால் தலித் மக்கள் வசிக்கும் தெருவிற்குள் மட்டும் தேர் வரவில்லை. இதனிடையே, கோயில் அலங்காரக் குடையைத் தலித் இளைஞர்கள் கையால் தொட்டார்கள் என்பதற் காக, தலித் மக்கள் தாக்கப்பட்டனர். இதில் தலித் கர்ப்பிணிப் பெண் லட்சுமி, வினோத்குமார், பி.கண்ணன், பிரதாப் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். உத்தங்குடி ஊராட்சித் தலைவரான தனலட்சுமியின் கணவரும், துணைத் தலைவர் ரவிச்சந்திரன், கவுன்சிலர் மணிமாறன், அம்பிகாபதி ஆகியோரும் இத்தாக்குதலில் ஈடுபட்டதாக தலித் மக்கள் குற்றம் சாட்டினர். இத்தாக்குதல் சம்பவத்தால் உத்தங்குடியில் காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். காவல்துறையிடம் தலித் மக்கள் சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டது. ஆனாலும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்த நிலையில், தலித் மக்கள் மீது தாக்குதல் நடத்திய திமுக ஊராட்சித் துணைத் தலைவர் ரவிச்சந்திரன் உள் ளிட்டோரை கைது செய்ய வலியுறுத்தி உத்தங்குடியில் தேசிய நெடுஞ்சாலையில் ஞாயிறன்று மறியல் போராட்டம் நடை பெற்றது. விடுதலைச்சிறுத்தைகள் அமைப்பின் மாநில நிர்வாகி செல்லப்பாண்டியன், தமிழர் தேசியப்பேரவை துணைத்தலைவர் ஆறுமுகம், உழவர் இயக்க மாவட்டத்தலைவர் மலைச்சாமி உள்ளிட்ட ஏராளமானோர் மறியல் போராட் டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து ஸ்தம்பித்தது. மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர்கள் அளித்த உறுதிமொழியின் பேரில் மறியல் கைவிடப்பட்டது. தாக்குதலுக்குள்ளான கர்ப்பிணி பெண் லட்சுமி, வினோத்குமார், பி.கண்ணன், பிரதாப் ஆகியோர் அரசு ராஜாஜி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டனர். சம்பவம் குறித்து தகவலறிந்ததும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட அமைப்பாளர் எம்.தங்கராஜ் உள்ளிட்ட தலைவர்கள் நேரில் சென்று விவரங்களை கேட்டறிந்தனர். போராட்டத்துக்கு துணை நிற்பதாக உறுதி கூறினர். தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன் தலித் மக்கள் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்குகளை வாபஸ் வாங்கவேண்டும் என வலியுறுத்தினர். சாதி, மத வேறுபாட்டுக்கு சந்தனம் பூசுவது யாராயினும் அவர்களை சட்டம் அனுமதிக்காது என கடந்த மூன்று நாட்களுக்கு முன்புதான் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான கருணாநிதி அறிக்கை விட்டார். ஆனால், அவருடைய கட்சியைச் சேர்ந்தவர்களே மதுரையில் தலித் மக்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர் என்பதும், தலித்துக்களின் புகார் மீது வழக்கு பதிவு செய்யக்கூட காவல்துறை மறுக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இடுகையிட்டது ஆதிகபிலன் நேரம் முற்பகல் 11:52 லேபிள்கள்: உத்தங்குடி, திமுக, தீண்டாமை, தேர், முன்னணி, வி.சிறுத்தைகள் மயிலாடுதுறையில் இரத்ததானம் வெண்மணி தியாகிகள் தினத்தை முன்னிட்டு, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் இரத்ததான கழகம் சார்பில் மயிலாடுதுறை அரசு பெரியார் மருத்துவமனையில் 25 யூனிட் இரத்ததானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு சங்கத்தின் நகரத் தலைவர் டி.கே.ஆர்.கதிரவன் தலைமை தாங்கினார். நகரச் செயலாளர் ஏ.பிரகாஷ் வரவேற்றார். நிகழ்ச்சியில் ஒன்றியச் செயலாளர் சி.மேகநாதன், ஒன்றியத் தலைவர் எம்.இளைய ராஜா, ஒன்றியப் பொருளாளர் ஜி.வைரவன், துணைச் செயலாளர் எஸ்.ஜெயராஜ், துணைத் தலைவர் டி.அலெக்சாண்டர், ஒன்றியக் குழு உறுப்பினர்கள் சதீஸ், சி.ராஜா, எஸ்.ஆம்ஸ்ட்ராங் மற்றும் இளம்பெண்கள் மாவட்ட கன்வீனர் எம்.சிவரஞ்சனி, இரத்ததானக் கழக நிர்வாகிகள் பா.குமரவேல், ஏ.சரவணன், பொருளாளர் எம்.கார்த்தி, செயற்குழு உறுப்பினர் சி.ஸ்டாலின் ஆகியோர் கலந்து கொண்டனர். மயிலாடுதுறை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ராஜ்குமா, நகர்மன்றத் துணைத்தலைவர் தம்பி சத்தியேந்திரன் ஆகியோர், இரத்ததானம் செய்த கொடையாளர்களுக்கு அரசின் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினர். சங்கத்திற்கு கேடயமும் வழங்கப்பட்டது. அரசு மருத்துவமனை தலைமை அதிகாரி கே.சந்திரசேகரன், இரத்த வங்கி அதிகாரி ஆர்.மகேந்திரன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். இரத்த தான கழகத்தின் செயலாளர் ஏ.ஆர்.விஜய் நன்றி கூறினார்.
உக்ரைன் பிராந்தியங்களை ரஷ்யாவுடன் இணைப்பதற்கான ஒப்பந்தங்களில் புடின் கையெழுத்திட்டதைத் தொடர்ந்து, ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்கா புதிய பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. உக்ரைனின் நான்கு பிராந்தியங்களை ரஷ்யாவுடன் இணைக்கும் வகையில் சுய பாணியிலான வாக்கெடுப்பை நடத்தியதற்காக ரஷ்யாவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 278பேர் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. மேலும் அதன் பாதுகாப்புத் துறையோடு தொடர்புடைய 14 பேரையும் குறி வைத்துள்ளது. ரஷ்யாவிற்கு வெளியிலும் அதன் இராணுவத்தையோ அல்லது உக்ரைனிய பிரதேசங்களை அதனுடன் இணைத்துக் கொள்வதையோ ஆதரிக்கும் அமைப்புகளையும் குறி வைப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. ஐரோப்பிய ஆணையம் உருவாக்கப்பட்ட புதிய சுற்று தடைகள், உயர் தொழில்நுட்ப பொருட்கள் உட்பட அதிகமான பொருட்களை ரஷ்யாவுக்கு ஏற்றுமதி செய்வதிலிருந்து தடை செய்யவும் ரஷ்ய இறக்குமதிகளுக்கு மேலும் தடை விதிக்கவும் முன்மொழிகிறது. அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், பிரித்தானியா மற்று பிற நாடுகள், தன்னலக் குழுக்கள் என்று அழைக்கப்படுபவை உட்பட 1,000க்கும் மேற்பட்ட ரஷ்ய தனிநபர்கள் மற்றும் வணிகங்களுக்கு தடைகளை விதித்துள்ளன.
உங்களுடைய கவனக்குவிப்பை மிகச் சிறப்பாக நிர்வகிப்பதற்கும், உங்களுடைய படைப்பாற்றலை அதிகரித்துக் கொள்வதற்கும், அர்த்தமுள்ள ஒரு வாழ்க்கையை வாழ்வதற்கும் உங்களுக்கு உதவக்கூடிய ஒரு நடைமுறைக் கையேடு இது. இதில் நீங்கள் கீழ்க்கண்டவற்றைக் கற்றுக் கொள்வீர்கள்: குறைவான நேரம் வேலை செய்வது எப்படி நம்முடைய உற்பத்தித்திறனை உயர்த்துகிறது? நாம் நம்முடைய வேலையை எளிதாக்கிக் கொள்ளாமல் அதைக் கடினமாக்கிக் கொள்வது எப்படி நாம் அதிகமான வேலைகளைச் செய்து முடிப்பதைச் சாத்தியமாக்குகிறது? நாம் களைப்பாக இருக்கும்போது எப்படி நம்மால் படைப்பாற்றல்மிக்க வேலைகளைச் செய்ய முடிகிறது? ஒன்றின்மீது நம்முடைய கவனத்தைக் குவிக்க இதற்கு முன்பு ஒருபோதும் நாம் இவ்வளவு திணறியதில்லை. நாம் எப்போதும் ஏதாவது ஒன்றில் மும்முரமாக ஈடுபட்டிருந்தாலும்கூட, நாம் சாதிப்பது என்னவோ குறைவாகவே இருக்கிறது. கிறிஸ் பெய்லி, நம்முடைய கவனக்குவிப்பை நம்மால் முடிந்த அளவு சிறப்பாக நிர்வகிப்பதற்குத் தேவையான அபாரமான உள்நோக்குகளை இந்நூலில் நமக்கு வழங்குகிறார். நம்முடைய மூளை, ‘சிதறா கவனக்குவிப்பு’ என்று அழைக்கப்படுகின்ற ஆழமான கவனக்குவிப்பு நிலைக்கும், ‘சிதறுகின்ற கவனக்குவிப்பு’ என்று அழைக்கப்படுகின்ற படைப்பாற்றல்மிக்க நிலைக்கும் இடையே தாவிக் கொண்டிருக்கிறது என்பதை அவர் இதில் வெளிப்படுத்துகிறார். இவை இரண்டையும் செம்மையான விகிதத்தில் கலந்து வேலை செய்வது எப்படி நம்முடைய உற்பத்தித்திறனையும் படைப்பாற்றல் திறனையும் வெகுவாக உயர்த்தும் என்பதையும் அவர் இதில் நமக்குக் காட்டுகிறார். About the Author(s) கிறிஸ் பெய்லி ஓர் உற்பத்தித்திறன் மேம்பாட்டு வல்லுநர், பிரபல நூலாசிரியர். அவருடைய முதல் நூலான, ‘த புரட்க்டிவிடி புராஜெக்ட்’ சர்வதேச அளவில் சிறப்பாக விற்பனையானதோடு, 11 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டும் உள்ளது. கிறிஸ் தன்னுடைய வலைத்தளத்தில் உற்பத்தித்திறன் பற்றித் தொடர்ந்து எழுதி வருகிறார். உற்பத்தித்திறனை மேம்படுத்துவது குறித்து உலகெங்கிலுமுள்ள பல நிறுவனங்களில் அவர் சொற்பொழிவாற்றி வருகிறார். உற்பத்தித்திறன் குறித்து அவர் எழுதியுள்ள நூற்றுக்கணக்கான கட்டுரைகள், நியூயார்க் டைம்ஸ், வால் ஸ்டிரீட் ஜர்னல், நியூயார்க் மேகசீன், ஹார்வர்டு பிசினஸ் ரிவ்யூ, டெட், ஃபாஸ்ட் கம்பெனி, லைஃப்ஹேக்கர் ஆகியவற்றில் வெளிவந்துள்ளன. கிறிஸ் தன் மனைவி ஆர்டைனுடன் கனடாவிலுள்ள ஒன்டாரியோவில் வசித்து வருகிறார்.
புதுக்கோட்டையில் நடைபெற்ற தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநாட்டில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். புதுக்கோட்டையில் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்ற மாநில மாநாட்டில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தலைவராக பி.சம்பத், பொதுச்செயலாளராக கே.சாமுவேல்ராஜ், பொருளாளராக ஆர்.ஜெயராமன் ஆகியோர் தேர்வு செய்யப் பட்டுள்ளனர். அமைப்பின் துணைத்தலைவர்களாக என்.வரதராஜன், இரா.அதியமான், ஏ.லாசர், பெ.சண்முகம், எஸ்.கே.மகேந்திரன், கு.ஜக்கையன், ஜி.லதா, ஆர்.சிங்காரவேலு, கோவை ரவிக்குமார், நிக்கோலஸ், ஞானப்பிரகாசம், எஸ்.திருநாவுக்கரசு, ஜி.ஆனந்தன், எம்.சின்னதுரை, நாகை மாலி, உ.நிர்மலா ராணி, சுப்பு ஆகியோரும், செயலாளர்களாக க.சுவாமிநாதன், கே.ஆர்.கணேசன், எஸ்.கண்ணன், பி.சுகந்தி, ஆர். கிருஷ்ணன், பி.இசக்கிமுத்து, யு.கே.சிவஞானம், ஆதவன் தீட்சண்யா, கே.ராமசாமி, பி.இராமமூர்த்தி, ஜி.பெருமாள், கணேஷ், எஸ்.பொன்னுத்தாய், பழனிச்சாமி, தங்கராஜ், எம்.ஜெயசீலன், ராஜ்மோகன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இத்துடன் 98 மாநிலக்குழு உறுப்பினர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இடுகையிட்டது ஆதிகபிலன் நேரம் பிற்பகல் 6:50 லேபிள்கள்: தீண்டாமை ஒழிப்பு முன்னணி புதிய நிர்வாகிகள் வரலாற்றுச் சிறப்புமிக்க மாநாடு சாதிய முறையை தகர்த்து சமூகப் புரட்சி காண அனைவரையும் அணி திரட்டுவோம்- புதுக்கோட்டை மாநாட்டில் பிரகாஷ்காரத் அறைகூவல் தீண்டாமைக் கொடுமையின் அனைத்து வடிவங்களையும் அகற்ற வேண்டு மென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் பிரகாஷ்காரத் கூறினார். புதுக்கோட்டையில் நடைபெற்ற தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில மாநாட்டின் இரண்டாவது நாள் நிகழ்வில் கலந்து கொண்டு பிர காஷ்காரத் பேசியதாவது:- கடந்த 3 ஆண்டுகளில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி தமிழ் நாட்டில் நிலவுகின்ற அனைத்து வகையான தீண் டாமைக் கொடுமைகள் மற்றும் சாதிய வேறுபாடுகளை எதிர்த்து மகத்தான இயக்கங்கள் நடத்தியுள்ளது. இன்று தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் நடவடிக்கைகள் தமிழ்நாட்டின் பிறபகுதியின் கவனத்தை ஈர்த்துள்ளது. சமூக ஒடுக்குமுறைக்கு எதிராகவும், ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காகவும் இயக்கங்களை நடத்த அவர்களுக்கு உத்வேகத்தை தந்துள்ளது. உத்தப்புரம் போராட்டத்திற்கு கிடைத்த பாராட்டு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு உத்தப்புரத்தில் இருந்த தீண்டாமை சுவரை உடைத்தெறியும் போராட்டத்தை தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி நடத்தியது. அப்போராட்டத்தில் பங்கேற்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. இந்த போராட்டத்தில் பங்கெடுத்துவிட்டு நான் தில்லி சென்ற போது அன்றைய சமூக நலத்துறை மற்றும் சமூகநீதிக்கான மத்திய அமைச்சரும், தற்போதைய நாடாளுமன்ற அவைத் தலைவருமான மீரா குமார் எனக்கு ஒரு கடிதம் எழுதி யிருந்தார். உத்தப்புரம் போராட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் உளமார வாழ்த்துத் தெரிவிப்பதாக அக்கடிதத்தில் அவர் எழுதியிருந்தார். சாதிய அமைப்பு முறையில் தீண்டாமை என்பது ஒரு கொடுமையான வடிவ மாகும். சாதிய முறையை ஒழிப்பதற்கான முதல் கட்டமாக இப்போது நீங்கள், தீண்டாமையின் அனைத்து வடிவங்களையும் ஒழிப்பதற்கான பணியை மேற் கொண்டுள்ளீர்கள். சாதிய அமைப்பை ஒழிப்பதுதான் தீண்டாமை கொடுமைக்கு நிரந்தர தீர்வாக இருக்க முடியும் என சட்டமேதை அம்பேத்கர் கூறினார். ஒடுக்கப்படுகிற மக்களை மட்டும் சாதிய முறை கொச்சைப்படுத்தவில்லை. ஒடுக்குமுறை செய்பவர்களையும் கூட அது மனிதத் தன்மையற்றவர்களாக மாற்றி விடுகிறது. இதனால்தான் நம்பூதிரி குடும்பத்தில் பிறந்த இ.எம்.எஸ்.நம்பூதிரிபாட் முதலில் மனிதத் தன்மையுள்ளவர்களாக்கும் போராட் டத்தை தான் துவக்கியதாக அறிவித்தார். அப்படி ஆக்குவதன் மூலம்தான் தீண் டாமைக்கொடுமைகளை கைவிட செய்யமுடியும் என்றார். எனவேதான் தீண் டாமை முடிவுக்கு வரவிரும்பும் அனைவரையும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி தன்னகத்தே அரவணைக்க வேண்டும். அனைத்து சாதிய வேறுபாடுகளையும் ஒழிக்க வேண்டும் என்று விரும்புபவர் களையும், சாதிய ஒடுக்குமுறைதான் அனைத்து வளர்ச்சிக்கும் தடையாக இருக்கிறது என கருதுபவர்களையும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன் னணியில் இணைத்து தீண்டாமைக் கொடுமைக்கு முடிவு கட்ட வேண்டும். இந்தியா சுதந்திரம் அடைந்து 62 ஆண்டுகள் முடிந்து விட் டது. அரசியல் சட்டம் அனைவரும் சமம் என்று பிரகடனப்படுத்துகிறது. ஆனாலும், சாதிய வேறு பாடுகள் இன்னும் தொலைந்தபாடில்லை. நிலப்பிரபுத்துவ சமுதாயத்தில்தான் சாதியம் வேர் பிடித்து வளரும் என்றும், முதலாளித்துவ வளர்ச்சியில் அது தொலைந்து போகும் என்றும் கருதப்படுகிறது. ஆனால், இன்று நாட்டில் சாதியானது எல்லா வர்க்கங்களையும் கடந்து சமுதாயத்தில் நிலவிக்கொண்டி ருக்கிறது. கட்டப்பஞ்சாயத்தை ஆதரிக்கும் எம்.பி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் நாடா ளுமன்ற உறுப்பினர் ஒருவர் மிகப்பெரிய தொழிலதிபர். 2 ஆயிரம் கோடி ரூபாய் மூலதனம் போடப்பட்ட எஃகு தொழிற்சாலையின் அதிபர். காப் பஞ்சாயத்து எனச் சொல்லப்படும் சாதிய கட் டப்பஞ்சாயத்து முடிவுகளை அவர் ஆதரிக்கிறார். ஒரே கோத்திரத்தில் பிறந்த ஆணும், பெண்ணும் திருமணம் செய்து கொள்ளக் கூடாது என்ற சாதிய கட் டப்பஞ்சாயத்தை மீறுபவர்கள் மீறி, திருமணம் செய்து கொள்ளும் தம்பதிகள் கொலை செய்யப்படும் அளவிற்கு நடைபெறும் கொடூரத்தை அந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஆதரிக்கிறார். எனவே, வர்க்க பொருளாதார போராட்டத்துடன் சமூக ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தையும் இணைந்தே நடத்த வேண்டியுள்ளது. அவ்வாறு செய்யாவிட்டால் புரட்சிக்கு சாத்தியமில்லை. கம்யூனிஸ்ட்டுகள் பொருளாதார ஒடுக்குமுறைகளுக்கு எதிராகத்தான் போராடுவார்கள். சமூக ஒடுக்குமுறைகளுக்கு எதிராக போராட மாட்டார்கள் என்ற கருத்து நிலவி வருகிறது. காரல் மார்க்ஸ் புரட்சி என்று சொல்லும் போது, அதை பொருளாதார புரட்சி என்றோ, அரசியல் புரட்சி என்றோ சொல்ல வில்லை. அவர் எப்போதும் சமூகப் புரட்சி என்றுதான் கூறுவார். இந்தியாவில் சாதிய முறையை ஒழித்துக் கட்டாமல் புரட்சி நடைபெறாது. மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் உறுப்பினர்களாகிய நாம், சமூகப் புரட்சியில் நம்பிக்கை கொண்டிருப்போம் என்பது உண்மையானால், அனைத்து சமூக மற்றும் சாதிய ஒடுக்குமுறைகளை எதிர்த்த போராட்டத்தில் முன்னணியில் நிற்கிறோம் என்பதை நடைமுறையில் எடுத்துக்காட்ட வேண்டும். சமூக மாற்றத்திற்கான கருவி தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஒரு சமூக மாற்றத்தைக் கொண்டு வருவதற்கான தீர்மானகரமான கருவியாக, உண்மையில் தகுதிவாய்ந்த கருவியாக திகழும் என்பதில் எனக்கு உறுதியான நம்பிக்கை உள்ளது. இந்த மாநாடு ஒரு வரலாற்று சிறப்புமிக்க மாநாடாகும். மகத்தான நிகழ்வுகளை தமிழகத்தில் தோற்றுவிக்கப்போகிற மாநாடு என பிரகாஷ்காரத் கூறினார். அவரது ஆங்கில உரையை அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாநிலப் பொதுச்செயலாளர் உ.வாசுகி தமிழாக்கம் செய்தார். மாநாட்டின் நிறைவாக பிர கடனம் வெளியிடப்பட்டது. இடுகையிட்டது ஆதிகபிலன் நேரம் பிற்பகல் 6:42 லேபிள்கள்: தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில மாநாடு- பிரகாஷ்காரத் தலித் மக்கள் சமத்துவம் காண இணைந்து போராடுவோம்- கே.வரதராசன் தலித் மக்களின் சமத்து வத்திற்கான போராட்டத்தை தலித் மக்களுக்கு அப்பாற் பட்டு இருக்கக்கூடிய மக்கள் தங்கள் கடமையாகக் கருதி போராட்டக்களத்தில் இறங்க வேண்டும் என அகில இந்திய விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் கே.வரதராசன் கூறினார். புதுக்கோட்டையில் நடைபெற்ற தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில மாநாட்டினை துவக்கி வைத்து அவர் பேசியதாவது: பகுத்தறிவு பங்காளிகளின் மன்றமாக உள்ள தமிழ்நாட்டில், டீக் கடைகளில் தலித்துகளுக்கு இரட்டை கிளாசில் டீ தரப்படும் நிலை இன்னும் தொடர்கிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் தலித் வீடுகளில் நாய் வளர்க்கக்கூடாது என்று ஊர்க்கட்டுப்பாடு விதிக்கப்படுகிறது. தலித் வீட்டு நாய் ஆண் குட்டிப்போட்டால் என்ன செய்வது என்றால், அதற்கு குடும்பக்கட்டுப்பாடு செய் எனச்சொல்லும் வகையில் சாதியக்கொடுமை தலைவிரித்தாடுகிறது. நாய்க்கும் சாதி கற்பிக்கும் நிலை இருப்பது வெட்கக்கேடான செயலாகும். தமிழகத்தில் தீண்டாமை ஒழிப்புக்காக பல ஆண்டுகளாக போராட்டம் நடத்தி வருகிறோம். 148 தீண்டாமை வடிவங்கள் இருப்பதாக ஆந்திராவில் நடத்தப்பட்ட ஆய்வு கூறுகிறது. தமிழகத்தில் 80 வகையான தீண்டாமை வடி வங்கள் இருப்பதாகக் கூறப் பட்டாலும், மேலும் இக்கொடு மையின் வடிவங்கள் இருக்கக் கூடும். கூலி உயர்வு பற்றி பேசும் நீங்கள், எதற்கு சாதியைப் பற்றிப் பேசுகிறீர்கள் என நம்மைப் பார்த்து கேள்வி எழுப்புகிறார்கள். சாதிய ஒடுக்கு முறை மட்டுமின்றி, பொருளாதார ஒடுக்குமுறைக்கும் எதிராக போராட வேண்டியது காலத்தின் கட்டாயம் ஆகும். ஏனெனில் வர்க்கமும் சாதியமும் இணைந்து கிடக்கிறது. வெண்மணியில் துவங்கிய போராட்டம் என்பது தொடர்ந்து கொண்டிருக்கிறது. பொருளாதாரப் போராட்டத்தை சமுதாயப் போராட்டத்துடன் இணைத்து நடத்த வேண்டும். சாதிப்பிரச்சனையால் அமைதி கெடுவதாக ஆட்சியாளர்கள் புகார் கூறுகிறார்கள். இருக்கும் இழிவுகள் அப்படியே இருக்கட்டும் என்று இருப்பது ஒரு வகையான அமைதி. சாதிக்கொடுமைக்கு எதிராக அரசும், அரசு அதி காரிகளும் தலையிட்டு செய்வது ஒரு வகை அமைதி. முதல் அமைதி என்பது சுடுகாட்டில் நிலவும் மயான அமைதியாகும். அதை நாம் ஏற்கமுடியாது. சமத்துவ ரீதியான அமைதி நிலவ போராட்டம் தான் வழியாக இருக்க முடியும். அத்தகைய சமத்துவத்திற் கான போராட்டத்தை வலுவாக, அழுத்தமாக நடத்த வேண்டும். அதற்கு தலித் மக்களுக்கு அப்பாற்பட்டு இருக்கக்கூடிய மக்கள் தங்கள் கடமையாக கருதி போராட்டக்களத்தில் இறங்க வேண்டும் என அவர் கூறினார். இடுகையிட்டது ஆதிகபிலன் நேரம் பிற்பகல் 6:30 லேபிள்கள்: தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில மாநாடு- கே.வரதராசன் புதுக்கோட்டையில் எழுச்சிக் கோலம் தீண்டாமைஒழிப்பு முன்னணி முதல் மாநில மாநாடு துவங்கியது கொழுந்துவிட்டெரியும் சாதியத்திற்கு எதிராக தமிழகத்தில் பல்வேறு கள இயக்கங்களை வீறு கொண்டு நடத்திவரும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் முதல் மாநில மாநாடு புதுக்கோட்டையில் வெள்ளியன்று மிகுந்த எழுச்சியுடன் துவங்கியது. புதுக்கோட்டையில் தோழர் பி.எஸ்.தனுஷ்கோடி நினைவரங்கத்தில் துவங்கிய இம்மாநாட்டின் முதல் நிகழ்வாக பல்வேறு மாவட்டங்களில் இருந்து எடுத்துவரப் பட்ட தியாகிகள் ஜோதி பெற்றுக் கொள்ளப்பட்டது. நாகை மாவட்டத்தில் இருந்து வெண்மணி நினைவாக கொண்டு வரப்பட்ட தீண்டாமை ஒழிப்பு - வர்க்க ஒற்றுமை ஜோதியை அகில இந்திய விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் கே.வரதராசன் பெற்றுக் கொண்டார். திருப்பூர் இடு வாய் ரத்தினசாமி நினைவாக கொண்டுவரப்பட்ட தீண்டாமை ஒழிப்பு - மக்கள் ஒற்றுமை ஜோதியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் என்.வரதராஜன் பெற்றுக் கொண்டார். மதுரை மாவட்டம் மேல வளவு முருகேசன் நினைவாக கொண்டுவரப்பட்ட தீண்டாமை ஒழிப்பு ஜோதியை சட்டமன்ற உறுப்பினர் ஜி.லதா பெற்றுக் கொண்டார். அதிர்வேட்டுகள் முழங்க ஜோதிப் பயணக்குழுவிற்கு வரவேற்பளிக்கப்பட்டது. தியாகிகள் நினைவு ஸ்தூபிக்கு தலைவர்கள் மற்றும் மாநாட்டு பிரதிநிதிகள் மலரஞ்சலி செலுத்தினர். மாநாட்டிற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச்செயலாளர் பெ.சண்முகம், சட்டமன்ற உறுப்பினர்கள் ஜி.லதா, எஸ்.கே.மகேந்திரன் மற்றும் பி.சுகந்தி ஆகியோர் தலைமை வகித்தனர். வரவேற்புக்குழுத் தலைவர் எல்.பிரபாகரன் வரவேற்றார். அகில இந்திய விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் கே.வரதராசன் மாநாட்டைத் துவக்கி வைத்துப் பேசினார். பஞ்சமி நில மீட்புக்குழுத் தலைவர், ஓய்வு பெற்ற மாவட்ட ஆட்சியர் வி.கருப்பன், சாட்சியம் இயக்குநர் கதிர் ஆகி யோர் வாழ்த்துரை வழங்கினர். தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில அமைப்பா ளர் பி.சம்பத் அறிக்கை சமர்ப்பித்தார். இம்மாநாட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் என்.வரதராஜன், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாநிலப்பொதுச்செயலாளர் உ.வாசுகி, அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்க மாநிலத் தலைவர் ஏ.லாசர், மார்க்சிஸ்ட் கட்சியின் புதுக்கோட்டை மாவட்டச் செயலாளர் எம்.சின்னத்துரை, இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாநிலச் செயலாளர் எஸ்.கண்ணன், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் -கலைஞர்கள் சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் ச.தமிழ்ச்செல்வன், ஆதித்தமிழர் பேரவையின் நிறுவனர் இரா.அதியமான், தமிழ்நாடு அருந்தமிழர் விடுதலை இயக்கத்தின் மாநிலத்தலைவர் கு.ஜக்கையன், தமிழ்நாடு அருந் ததியர் சங்க தலைவர் அரு.சி.நாகலிங்கம், அருந்ததியர் மகாசபை தலைவர் மரியதாஸ், களம் அமைப்பாளர் பரதன், ஆதித்தமிழர் ஜனநாயகப் பேரவை ஏ.எஸ்.பௌத்தன், புதுச்சேரி தலித்சுப்பையா உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். மாநாடு தொடர்ந்து இரண்டாவது நாளாக சனிக்கிழமையன்றும் நடைபெறு கிறது. இடுகையிட்டது ஆதிகபிலன் நேரம் பிற்பகல் 6:24 லேபிள்கள்: தீண்டாமைஒழிப்பு முன்னணி முதல் மாநில மாநாடு புதன், 5 மே, 2010 சுக்கிலநத்தம் அம்பேத்கர் காலனிக்கு அடிப்படை வசதி செய்க! அரசுக்கு உத்தரவு அருப்புக்கோட்டை சுக்கில நத்தம் ஊராட்சி அம்பேத்கர் காலனிக்கு அடிப்படை வசதிகளை உடனடியாக செய்ய வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ளது சுக்கிலநத்தம் கிராமம். இங்கு 1997ம் ஆண்டு 17 தொகுப்பு வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட் டன. அம்பேத்கர் காலனி என பெயரிடப்பட்ட இக்குடியிருப்பு பகுதிக்கு அரசின் இலவச டிவி, கேஸ் அடுப்புகள் உள்ளிட்ட அரசின் உதவிகள் வழங் கப்பட்டு வந்தது. ஊராட்சி மன்றத் தலைவராக ராமநாதன் என்பவர் உள்ளார். இந்நிலையில் 2007ம் ஆண்டு ஊராட்சியில் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. அந்தத் தீர்மானத்தில், அம்பேத்கர் காலனியை சுக்கில நத்தத்தில் இருந்து நீக்கிவிடுவது என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்தத் தீர்மானம் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஊராட்சியின் இந்த தீர்மானத்தை கண்டித்தும், தீர்மானத்தை வாபஸ் பெற வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஆகியவை பல்வேறு போராட்டங்களை நடத்தின. இது குறித்து மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அனைத்து அதிகாரிகளுக்கும் மனுக்களும் அளிக்கப்பட்டன. ஏப்ரல் 14ம் தேதி அருப்புக்கோட்டையில் நடைபெற்ற பொதுவிசாரணையில் பங்கேற்றவர்கள், இப்பிரச்சனை குறித்து நீதிமன்றத்தை அணுகலாம் என சுட்டிக்காட்டினர். இதையடுத்து தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் விருதுநகர் மாவட்ட அமைப்பாளர் சாமுவேல்ராஜ், அம்பேத்கர் காலணி பிரச்சனை குறித்து உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுதாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை வெள்ளியன்று நீதிபதிகள் இப்ராஹிம் கலிபுல்லா, வாசுகி முன்னிலையில் வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் உ.நிர்மலாராணி ஆஜரானார். மனுவை விசாரித்த நீதிபதிகள் இடைக்கால உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளனர். அதில் அருப்புக்கோட்டை ஒன்றியம் சுக்கிலநத்தம் கிராம ஊராட்சிக்குட்பட்ட அம்பேத்கர் காலனிக்கு கடந்த இரண்டு ஆண்டுகாலமாக நிறுத்தப்பட்டிருந்த குடிநீர் உள்ளிட்ட அரசுத்திட்டங்களை, விருதுநகர் மாவட்ட ஆட்சியர், ஊராட்சி ஒன்றிய ஆணையாளர், உதவி இயக்குநர் (பஞ்சாயத்துகள்) உடனடியாக செயல்படுத்த வேண்டுமென கூறியுள்ளனர். இடுகையிட்டது ஆதிகபிலன் நேரம் பிற்பகல் 3:03 லேபிள்கள்: அம்பேத்கர் காலனி, உயர்நீதிமன்றம், சுக்கிலநத்தம், விருதுநகர் செவ்வாய், 20 ஏப்ரல், 2010 அருந்ததியர் உள்ஒதுக்கீடு: ஆணையத் துணைத் தலைவர் கருத்து ஏற்கத்தக்கதல்ல! -பி.சம்பத் சாதியமைப்பு என்ற ஒன்றுக்கு மேல் ஒன்றாக அடுக்கப்பட்ட மூட்டைகளில் அடிமூட்டையாக இருப்பவர்கள் அருந்ததிய மக்கள். பார்ப்பனருக்கு மேல் சாதியில்லை, சக்கிலியருக்கு கீழ் சாதியுமில்லை என்பது பழமொழி. மலம் அள்ளுவது, பாதாளச் சாக்கடைப் பணி உள்ளிட்ட இழிவானத் தொழில்களை காலம் காலமாக ஆதிக்க சக்திகள் இவர்கள் தலையில் சுமத்தி விட்டார்கள். தமிழகத்தின் மேற்குமாவட்டங்களில் நிலமோ, இதர எந்த உடைமையோ இல்லாத விவசாயக் கூலித் தொழிலாளர்களாகவும், செருப்பு தைக்கும் தொழிலாளர்களாகவும் இவர்கள் வாழ்கிறார்கள். தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி திண்டுக்கல் மாவட்டத்தில் நடத்திய ஆய்வு ஒன்றில் 10 ஓ 8 அடி குடிசைகளில் தந்தை, தாய், 4 மகன்கள், மருமகள், 2 பேரக் குழந்தைகள் உள்பட 9 பேர் கொண்ட குடும்பம் வாழும் நிலை கண்டறியப்பட்டது. ஒன்றல்ல; பல்லாயிரம் அருந்ததியர் குடும்பங்கள் தமிழகத்தில் இத்தகைய வருந்தத்தக்க நிலையில் வாழ்கின்றனர். இவர்களின் சமூகப் பொருளாதார நிலை காரணமாக கல்வி, அரசு வேலைவாய்ப்பு போன்றவை அருந்ததியர் குழந்தைகளுக்கு எட்டாக் கனியாகவே உள்ளன. இவர்களையும் இதர தலித் மாணவர்கள், இளைஞர்களையும் கல்வி - வேலைவாய்ப்பில் கைதூக்கி விடுவதற்காக தீண்டாமை ஒழிப்பு முன்னணியும், அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கமும் இணைந்து கல்வி - வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தை கோவை மாநகரில் உருவாக்கி செயல்படுத்தி வருகின்றன. இதர தொழிற்சங்க இயக்கங்களின் உதவியோடு தமிழகத்தின் பல நகரங்களில் இத்தகைய மையங்களை உருவாக்கும் முயற்சிகளில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி இறங்கியுள்ளது. மிக மிக இழிவான நிலையில் அருந்ததியர் மக்களின் வாழ்க்கை தள்ளப்பட்டுள்ளதால் தலித் மக்களின் பொது இடஒதுக்கீட்டில் இவர்களுக்கு உரிய வாய்ப்பு கிடைக்கவில்லை. கல்வி - வேலைவாய்ப்பின் பல தளங்களில் இவர்கள் இல்லவே இல்லை. சில துறைகளில் இவர்களின் மக்கள்தொகையை விட மிகச் சொற்பமாகவே, அதாவது ஒரு சதவீதத்திற்கும் குறைவாகவே இவர்களின் பிரதிநிதித்துவம் உள்ளது. இப்பின்னணியிலேயே இவர்களின் உள்ஒதுக்கீடு கோரிக்கை எழுந்தது. அருந்ததியர் அமைப்புகள் பலவும் இதற்காக 25 ஆண்டுகளுக்கும் மேலாக போராடி வந்துள்ளன. இப்போராட்டங்கள் ஆளும் வர்க்கங்களாலும் ஆதிக்க சக்திகளாலும் கண்டு கொள்ளப்படவேயில்லை. இதைப் பரிசீலித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியும் 3 ஆண்டுகளாக மாநாடுகள், பேரணி, மறியல், தர்ணா போன்ற பல கட்ட இயக்கங்களை நடத்தின. தமிழ்நாடு அரசும் இதன் நியாயத்தை ஏற்றுக் கொண்டு, பல கட்ட முயற்சிகளை மேற்கொண்டு, சட்டப்பூர்வமான வழிமுறைகளை கையாண்டு, வெற்றிகரமாக அருந்ததியர்களுக்கான உள்ஒதுக்கீடு சட்டத்தை சட்டமன்றத்தில் அனைத்து அரசியல் கட்சிகளின் உதவியோடு நிறைவேற்றியது. இந்நிலையில் தமிழ்நாட்டுக்கு வருகை தந்த தாழ்த்தப்பட்ட மக்களுக்கான தேசிய ஆணையத்தின் துணைத் தலைவர், அருந் ததிய மக்களின் சமூகப் பொருளாதார வாழ் நிலைகளையும் தமிழக அரசு மேற் கொண்ட சட்டப்பூர்வமான வழிமுறைகளையும் அறிந்து கொள்ளாமல் அல்லது புரியவும் முயற்சிக்காமல் “வாய் புளித்ததோ - மாங்காய் புளித்ததோ” என்பதைப் போல, அருந்ததியர் மக்களுக்கான உள்ஒதுக்கீடு சட்டம் அரசியல் சட்டத்திற்கு மாறானது என அங்கலாய்த் திருக்கிறார். இது ஏற்றுக் கொள்ளத்தக்க கருத்தல்ல. அருந்ததியர் உள்ஒதுக்கீடு பற்றிய பிரச்சனையில் சட்டப்பூர்வமாக தமிழக அரசு மேற்கொண்ட முயற்சிகளைப் பற்றி தமிழக முதல்வர் அளித்துள்ள விரிவான விளக்கம் ஆணையத்தின் துணைத்தலைவர் கூற்றுக்கு சரியான பதிலாகும். இதனை முழு மனதோடு வரவேற்கிறோம். இந்தியா முழுவதும் தீண்டாமைக் கொடுமைகள் தலைவிரித்தாடுவது யாராலும் மறுக்க முடியாத உண்மை. தாழ்த்தப்பட்ட மக்கள் கொல்லப்படுவதும், இழிவுபடுத்தப்படுவதும், தலித் பெண்கள் பாலியல் தொல்லைகளுக்கு ஆளாக்கப்படுவதும், நிலமோ இதர பொருளாதார உரிமைகளோ இன்றி பொருளாதார ஒடுக்குமுறைகளுக்கு வேறு எந்த பிரி வினரையும் விட அதிகமாக ஆட்படுவதும் அனைவரும் அறிந்த அன்றாட நிகழ்ச்சிகளாகும். ஆனால் தாழ்த்தப்பட்ட மக்களின் தேசிய துணைத் தலைவரான என்.எம்.காம்ப்ளேக்கு இது எப்படித் தெரியாமல் போயிற்று என நமக்கு விளங்கவேயில்லை. எனவேதான் 18.02.2010ல் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் தீண்டாமை இந்தியா முழுவதும் சட்டப்பூர்வமாக ஒழிக்கப்பட்டு விட்ட நிலையில், தீண்டாமை ஒழிப்பு முன்னணி போன்ற அமைப்புகள் செயல்படுவதன் தேவை என்ன என்ற விநோதமான கேள்வியை எழுப்பினார். இவரது கூற்று பங்கேற்ற அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. தாழ்த்தப்பட்ட மக்களுக்கான தேசிய ஆணையத்திடம், ஏராளமான புகார்கள் அனுப்பப்பட்டதாகவும் அவற்றில் பல இதுவரை ஆணையத்தால் கண்டு கொள்ளப்படவில்லை என்றும் 18.02.2010ல் நடந்த கூட்டத்தில் பலரால் புகார்கள் தெரிவிக்கப்பட்டது. அதற்கு எந்த பதிலையும் இவர் தெரிவிக்கவில்லை. ஒரு கருத்தைத் தெரிவிப்பதற்கு முன்னதாக இந்தியா முழுவதும் தாழ்த்தப்பட்ட மக்களின் அவல நிலைமைகளையும், தீண்டாமைக் கொடுமைகளையும், தமிழ் நாட்டில் அருந்ததியர் மக்களின் அவல நிலையையும் அதனை மாற்றுவதற்கு தமிழக அரசும், இதர அமைப்புகளும் எடுத்துக்கொண்ட சட்டப்பூர்வமான முயற்சிகளையும் அறிய முயற்சித்து ஆழ்ந்த ஞானத்துடன் கருத்துச் சொல்வதே தேசிய ஆணையத்தின் உபதலைவர் போன்ற பொறுப்புமிக்க பதவி வகிப்பவருக்கு பெருமையளிப்பதாக இருக்கும். அவ்வாறில்லாமல் அரைகுறை விபரங்களுடன் கருத்து தெரிவிப்பது தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் மிகவும் ஒடுக்கப்பட்ட அருந்ததிய மக்களுக்கும் நியாயம் வழங்க உதவிகரமாக இருக்காது என்பதை தேசிய ஆணையத்திற்கு வலியுறுத்த விரும்புகிறோம். இடுகையிட்டது ஆதிகபிலன் நேரம் பிற்பகல் 5:20 லேபிள்கள்: என்.எம்.காம்ப்ளே, தாழ்த்தப்பட்டோர், தேசிய ஆணையம், பி.சம்பத் புதன், 24 மார்ச், 2010 தாழ்த்தப்பட்டோர் புள்ளி விவரங்கள் இல்லை: தேசிய ஆணையம் தகவல் “தாழ்த்தப்பட்டோர் குறித்த புள்ளி விவரங்கள் தமிழக அரசிடம் இல்லை” என்று தாழ்த்தப்பட்டோ ருக்கான தேசிய ஆணையம் புகார் தெரிவித்துள்ளது. தேசிய ஆணையத்தின் துணைத்தலைவர் என்.எம்.காம்ப்ளே, உறுப்பினர் மகேந்திரபோத் ஆகியோர் அடங்கிய குழு வியாழக்கிழமை சென்னை வந்தது. தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலாளர் கே.எஸ்.ஸ்ரீபதி, பல்வேறு துறைகளின் செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினர். பின்னர், செய்தியாளர்களிடம் கூட்டாக அவர்கள் அளித்த பேட்டி: “தாழ்த்தப்பட்டோருக்கு அதிக அளவில் நிதி ஒதுக்கி பல்வேறு நலத் திட்டங்களைச் செயல்படுத்தி வருவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. ஆனால், அவற்றை செயல்படுத்தும் விதம் குறித்து மாவட்ட அளவிலோ அல்லது துறை ரீதியிலோ புள்ளி விவரங்களை வைத்திருக்கவில்லை. மாநில அரசுத் துறையில் பணியாற்றும் ஊழியர்கள் எத்தனை பேர், அவர்களில் எத்தனை பேருக்குப் பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது என்ற தகவல்கள் இல்லை. அரசுத் துறைகளில் பணியாற்றும் தாழ்த்தப்பட்டோர் ஊழியர்களுக்கான சங்கங்களுக்கும், அரசுக்கும் இடையே கருத்துப் பரிமாற்றம் மேற்கொள்ள துணைச்செயலாளர் அளவிலான தொடர்பு அதிகாரியை நியமிக்க வேண்டும். ஆனால், தமிழகத்தில் அதுபோன்ற அதிகாரி நியமிக்கப்படவில்லை. பின்னடைவு காலிப் பணியிடங்களை சிறப்பு வேலை நியமனத்தின் மூலம் நிரப்ப வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அரசுத் துறைகளில் பின்னடைவுக் காலிப்பணியிடங்கள் ஏதுமில்லை என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. கல்வித் துறையில் குறிப்பாக தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஆசிரியர்கள் எத்தனை பேர் பணிபுரிகின்றனர் என்ற தகவல் அரசிடம் இல்லை. கல்வித் துறையில் மொத்தமாக 5 சதவீதம் பின்னடைவு காலிப் பணியிடங்கள் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த, முற்போக்கான மாநிலமாக கருதப்படும் தமிழகத்தில் தாழ்த்தப்பட்டோர் குறித்த புள்ளி விவரங்கள் இல்லாதது வருத்தம் அளிக்கிறது. தாழ்த்தப்பட்டோருக்கு வழங்கப்பட்ட நிலங்களில் ஆதிக்க சாதியினர் ஆக்கிரமிப்புச் செய்துள்ளனர். அவற்றை அகற்றி உரியவர்களுக்கு நிலங்களை வழங்கும் பணியில் அரசு அக்கறை காட்டவில்லை. ஆக்கிரமிப்பு தொடர்பாக, இதுவரை 8 ஆயிரம் புகார்கள் உள்ளன. சம்பந்தப்பட்டவர்கள் நீதிமன்றங்களையும் நாட முடியாமல் உள்ளனர். தாழ்த்தப்பட்டோர் நலன் தொடர்பாக முதல்வர் தலைமையில் விழிப்பு மற்றும் கண்காணிப்பு கமிட்டி அமைக்கப்பட்டுள்ளதாக அரசுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்தக் கமிட்டி ஆண்டுக்கு இருமுறையாவது கூட வேண்டும். ஆனால், சம்பந்தப்பட்டவர்களை தனித்தனியாக முதல்வர் சந்திப்பதாக அதிகாரிகள் கூறுகின்றனர். இதிலிருந்து, ஏற்கெனவே அமைக்கப்பட்ட கமிட்டி செயல்படாமல் இருப்பது தெரிகிறது. மனிதக் கழிவை மனிதனே அள்ளும் நிலை இல்லை என்று தமிழக அரசு தெரிவிக்கிறது. ஆனால், அந்த நிலைமை தமிழகத்தில் இருப்பதற்கான புகைப்பட ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன”. இவ்வாறு அவர்கள் கூறினர். இடுகையிட்டது ஆதிகபிலன் நேரம் பிற்பகல் 6:18 லேபிள்கள்: காம்ப்ளே, தமிழக அரசு, தேசிய ஆணையம் குற்றச்சாட்டு சலவைத்தொழிலாளர்கள் கோட்டை நோக்கி பேரணி தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் தங்களைச் சேர்க்க வலியுறுத்தி, சலவைத் தொழிலாளர்கள் வெள்ளிக்கிழமையன்று (19.2.2010) கோட்டை நோக்கி பேரணி நடத்தினர். தமிழ்நாடு சலவைத் தொழிலாளர் சங்கம் (சிஐடியு), தமிழ்நாடு சலவைத் தொழிலாளர் முன்னேற்ற சங்கம், தமிழ்நாடு சலவைத் தொழிலாளர் மத்திய சங்கம், தமிழ்நாடு சலவைத் தொழிலாளர் பேரவை, அண்ணா சலவைத் தொழிலாளர் சங்கம் உள்ளிட்ட 10 அமைப்புகள் இணைந்து தமிழ்நாடு சலவைத் தொழிலாளர் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுவை உருவாக்கி உள்ளன. இந்தக்குழு சார்பில், இந்தியாவில் 17 மாநிலங்களிலும், தமிழகத்தில் கன்னியாகுமரி, நெல்லை மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும் சலவைத் தொழிலாளர்கள் தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர். அதே போன்று தமிழகம் முழுவதும் உள்ள சலவைத் தொழிலாளர்களை தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும்; நலவாரிய பதிவுக்கு வருவாய்த்துறை ஆய்வு செய்வதை கைவிட வேண்டும்; புதிய உறுப்பினர்களை பதிவு செய்வதோடு, அடையாள அட்டை வழங்க வேண்டும்; பழைய சலவைத்துறைகளை புதுப்பிக்க வேண்டும்; புதிதாக சலவைத்துறைகள் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இப்பேரணி நடைபெற்றது. பேரணியில் வி.கருப்பையா, பாபு (சிஐடியு), சுப்பிரமணி, சக்கரை (மத்திய சங்கம்) உள்ளிட்ட பல்வேறு சங்கங்களின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த கோரிக்கையை வலியுறுத்தி மார்ச் 11- அன்று, தில்லியில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது என்றும் ஒருங்கிணைப்புக் குழு நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். இடுகையிட்டது ஆதிகபிலன் நேரம் பிற்பகல் 6:17 லேபிள்கள்: கோட்டை நோக்கிப் பேரணி, சலவைத் தொழிலாளர்கள், தாழ்த்தப்பட்டோர் பட்டியல் தமிழகத்தில் தீண்டாமைக் கொடுமைகள்: தேசிய ஆணையத்திடம் முறையீடு தமிழகத்தில் தீண்டாமைக் கொடுமைகள் குறித்து தாழ்த்தப்பட்ட மக்களுக்கான தேசிய ஆணையத்திடம் தீண் டாமை ஒழிப்பு முன்னணி முறையீடு செய்தது. பூட்டாசிங் தலைமையிலான தாழ்த்தப்பட்ட மக்களுக்கான தேசிய ஆணையம் வியாழனன்று (18.2.2010) சென்னைக்கு வருகை தருவதாக அறிவித்திருந்தது. பூட்டா சிங் வர இயலாத நிலையில், அதன் துணைத்தலைவர் தலைமையில் ஆணையம் வருகை தந்தது. பல தலித் அமைப்புகளின் தலைவர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், முன் னாள் நாடாளுமன்ற-சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட ஏராளமானவர்கள் ஆணையத்தை சந்திக்க வந்திருந்தனர். தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சார்பில் மாநில அமைப்பாளர் பி.சம்பத், சட்டமன்ற உறுப் பினர்கள் எஸ்.கே.மகேந்திரன், பி.டில்லிபாபு, ஜி.லதா ஆகியோர் சென்றனர். பல அமைப்புகள் சார் பாக ஆணையத்திடம் ஏராளமான முறையீடு களும், மனுக்களும் அளிக் கப்பட்டன. ஆலோசனை யை வரவேற்றுப் பேசிய ஆணையத்தின் உபதலைவர் இந்தியாவில் தீண்டாமை சட்டப்பூர்வமாக ஒழிக்கப்பட்டு விட்ட நிலையில், “தீண்டாமை ஒழிப்பு முன்னணி” போன்ற அமைப்புகள் செயல்படுவது பற்றி வியப்புடன் வினவினார். தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் ஆணையத்திடம் விரிவான மனு அளிக்கப்பட்டது. அப்போது பேசிய மாநில அமைப்பாளர் பி.சம்பத், “தமிழ்நாட்டில் ஏராளமான வடிவங்களில் பல்லாயிரம் கிராமங்களில் தீண்டாமைக் கொடுமைகள் நீடிப்பதாகவும், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மற்றும் தலித் அமைப்புகள், ஜனநாயக அமைப்புகள் அவற்றை ஒழிப்பதற்காகவும், அரசை நிர்ப்பந்திப்பதற்காகவும் போராட்டங்களை நடத்த வேண்டிய தேவை இருப்பதாகவும் குறிப்பிட்டார். ஜி.லதா சட்டமன்ற உறுப்பினர் ஜி.லதா பேசும்போது, “விழுப்புரம் மாவட்டம் காங்கியனூர் திரௌபதியம்மன் கோவிலுக்கு தலித் மக்களை அழைத்துச் செல்லும் போது மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அமல்ராஜ் தலைமையிலான காவல்துறையினர் தன்னை கொடூரமாகத் தாக்கி காயப்படுத்தியதையும், இதர தலித் மக்கள் தாக்கப்பட்டதையும் உணர்ச் சிப்பூர்வமாக எடுத்துக்கூறி, அமல்ராஜ் மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என வற்புறுத்தினார். தலித் மக்கள் தொகைக்கு ஏற்ப இடஒதுக்கீட்டை 18 சதவீதத்திலிருந்து 19 சதவீதமாக உயர்த்துவது, தலித் - பழங் குடி மக்களுக்கான ஆணையம் ஒன்றை தேசிய ஆணையம் போல உரிய அதிகாரம் வழங்கி அமைப்பது, தமிழக அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் பல்லாயிரம் பின்னடைவுக் காலியிடங்களை நிரப்புவது, தலித் உப திட்டத்திற்கு மத்திய, மாநில அரசுகள், மக்கள் தொகைக்கு ஏற்ப நிதி ஒதுக்காதது, ஒதுக்கிய நிதியில் மாநில அரசு முறை யாகச் செலவிடாதது, உத்தப்புரத்தில் ஆதிக்க சக்திகள் நிர்ப்பந்தம் காரணமாக டி.கே.ரங்கராஜன் எம்.பி., நிதி ஒதுக்கியும், தமிழக அரசு பேருந்து நிறுத்த நிழற்குடை அமைத்துத்தர மறுப்பது, உத்தப்புரத்தில் தலித் மக்களை அரசமர வழிபாட்டிற்கு அனுமதி மறுக்கும் நிலை தொடர்வது, அருந்ததியர் உள்ஒதுக்கீடு உத்தரவை வேலை வாய்ப்பில் முழுமையாக தமிழக அரசை அமல்படுத்தக் கோருவது, மனித மலத்தை மனிதன் அள்ளும் கொடுமைக்கு தமிழகத்தில் முடிவு கட்டுவது, வன்கொடுமைத் தடுப்புச் சட்டங்களை தமிழகத்தில் உறுதியுடன் அமல்படுத்தக் கோருவது, திண்டுக்கல் மாவட்டம் பாலசமுத்திரம் கிராமத்தில் தலித் மக்கள் சுடுகாட்டிற்கு பாதை இல்லாததால், பிணத்துடன் ஆற்றில் நீந்தி அடக்கம் செய்யப்படும் கொடுமைக்கு முடிவு கட்டி, பாலம் அமைத்துக் கொடுப்பது அல்லது மாற்று சுடுகாடு ஏற்பாடு செய்து தருவது போன்ற கோரிக்கைகள் மனுவாகவும், நேரடியாகவும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியால் ஆணையத்திடம் அளிக்கப்பட்டது. .இப்பிரச்சனைகள் மீது உரிய நடவடிக்கைகள் எடுப்பதாக ஆணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இடுகையிட்டது ஆதிகபிலன் நேரம் பிற்பகல் 6:17 லேபிள்கள்: தீண்டாமை ஒழிப்பு முன்னணி, தேசிய ஆணையத்திடம் முறையீடு ஆண்டுகள் எட்டானாலும் அழுகிப் போகாதாம் ‘மனைப்பட்டா’ “இப்போ என்ன கெட்டா போச்சு, காசு கப்புத் தந்தாத்தானே கத நடக்கும். சும்மா வெறுங்கையிலேயே முழம் போட முடியுமா, என்ன? ஒன்னும் கவலப்படாதீங்க, உங்க பட்டா ஒன்னும் அழுகிப் போயிறாது” என்று ஓர் உடன்பிறப்பு உபதேசித்திருக்கிறார் கோவை இருகூரில். தலைமுறை கடந்த போராட்டம் என்றாலும் தளராத நம்பிக்கையோடு பட்டாக்களை கையில் வைத்துக் கொண்டு காத்திருக்கிறார்கள் பாமர தலித் மக்கள். ஆம். இடத்தைக் கண்டுபிடிக்கப் போராட்டம், அதைக் கையகப்படுத்த போராட்டம், அதை மனைப்பட் டாக்களாகப் பெறப் போராட்டம் என்று 1984 முதல் போராடி, ஒரு வழியாக 2002ம் ஆண்டில் 294 பட்டாக் களைப் பெற்றிருக்கிறார்கள் இருகூர் தலித்மக்கள். அதன் பின்னர் எட்டு ஆண்டுகளாக ‘என் பட்டாவுக்கான இடம் எங்கே?’ என்று அல்லாடிக் கொண்டிருக்கிறார்கள் அவர்கள். இதற்கிடையில் திருப்பூர் வருவாய் மாவட்டம், கோவை வருவாய் மாவட்டமாகி, பல்லடம் தாலுகாவை சூலூருக்கும் மாற்றியாகி விட்டது. மாதம் ஒரு தாசில்தார், வருடம் ஒரு கலெக்டரிடம் மனு, இடையில் வழக்கு, தகவல் அறியும் உரிமைச் சட்டம் என்று அல்லாடிக் கொண்டுள்ள மார்க்சிஸ்ட் கட்சியின் கிளைச் செயலாளர் தே.செந்தில்ராஜ் கூறுகிறார். இருகூர் ஈஸ்வரன் கோயில் மானிய பூமியை கோவில் குருக்கள் ராமானுஜ ஐயரும் அவரது சகோதரர்களும் தான் அனுபவித்து வருகிறார்கள் என்று 1984ல் அறிந்தோம். அதனை வீடில்லாத ஏழை தலித் மக்களுக்கு வழங்குன்னு அரசிடம் கோரிக்கை வச்சோம். மானிய பூமி அரிஜன நத்தமா வகை மாற்றமாச்சு, அறநிலையத் துறையிலிருந்து ஆதிதிராவிடர் நலத்துறைக்கு மாற்றமாச்சு, 4(1) அறிவிக்கை வெளியிட்டு நிலத்தையும் எடுத்தாச்சு. அப்போ ராமானுஜ ஐயர் கோர்ட்டுக்குப் போனார், அரசாங்கத்துக்கே சாதகமாகத் தீர்ப்பாச்சு. ஆனால் ஆட்சி மாறுனதால 1994ல் இருந்த பட்டியல மாத்திட்டு, 1996ல் புதுப்பட்டியில் போட்டாங்க அதிமுக காரங்க. 2002ல திமுக ஆட்சியல இன்னொரு மனைப்பட்டா குடுத்தாங்க. அரிஜன சேவா சங்கம் மூலமா போட்ட கேசுல 15 பேரை சேர்த்துக்கனும்னு உயர்நீதிமன்றமும் சொல்லியிருக்கு. ஆனா அரசு அதிகாரிங்க காலதாமதப்படுத்திட்டே இருந்ததால ‘1994 பட்டியல ஒத்துக்கணும்னு’ அதிமுக பிரமுகர் பழனிச்சாமி கேஸ் போட, அதையே காரணமா வச்சு, எட்டு வருசமா இடத்த அளந்து தர மாட்றாங்க. மொத்தம் 8.5 ஏக்கரா பூமி ஒன்னத்துக்கும் உதவாம இருக்கு. கருவேல மரந்தான் தோப்பா வளர்ந்திருக்கு என்று ஆவேசமாய் வெடிக்கிறார் செந்தில்ராஜ். ஆதிதிராவிடர், பள்ளர், பறையர், வள்ளுவர், அருந்ததியர் என 294 மனைப் பட்டாக்கள் பெற்ற தலித் மக்கள் இன்னும் பலர் வாடகை வீடுகளிலேயே வசிக்கிறார்கள். இதனிடையே 1984ல் கோரிக்கை வைத்த போது இருந்த எண்ணிக்கையை விட இந்த 26 ஆண்டுகளில் இன்னுமொரு பங்கு பட்டா கோரிக்கை வேறு எழுந்துள்ளது. பல்லடம் ஆதிதிராவிடர் நலத்துறை தாசில்தார் ‘வழக்கில் தடையாணை ஏதுமில்லை என்பதால் பட்டாதாரர் குடியேறத் தடையேதுமில்லை’ என்று பதிலளிக்கிறார். கோவை ஆதிதிராவிடர் நலத்துறை வெங்கடேஷ் சமீபத்தில் அளித்துள்ள பதிலில், ‘பழனிச்சாமி என்பவர் தொடுத்த வழக்கில் தீர்ப்பு வந்த பின்தான் நில அளவை செய்ய முடியும்’ என்கிறார். ஆனால் பட்டாக்களைப் பெற்ற மக்களுக்கோ சொந்தமாய் ஒரு குடிசை அமைக்கும் கனவுகூட கைகூடவில்லை. இதனிடையே இப்பிரச்சனையைத் தீவிரமாக கையிலெடுத்து களமிறங்கியுள்ளது தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி. முதற்கட்டமாக மக்களைச் சந்தித்து, பின்னர் கோரிக்கை மனு ஒன்றை மாவட்ட ஆட்சியர் பு.உமாநாத்திடம் அளித்து பேசியுள்ளனர். அவர்களிடம், பிரச்சனையை விசாரித்து ஒரு வாரத்தில் பதிலளிப்பதாக ஆட்சியர் உறுதியளித்துள்ளார். உறுதியான நடவடிக்கை ஏதுமில்லாத பட்சத்தில் தீவிரமாக களமிறங்க தீண்டாமை ஒழிப்பு முன்னணி முடிவு செய்துள்ளது. பட்டா வைத்துள்ள மாகாளியம்மன் கோவில் வீதி ராதிகா மற்றும் மதுரை வீரன் கோவில் வீதியில் சிலரைச் சந்தித்த போது, கைக்கெட்டிய பட்டா கவைக்கு உதவாத கையறு நிலையை ஆதங்கத்தோடு தெரிவித்தனர். எது எப்படியிருந்தாலும் பல்லாயிரம் பேருக்கு பட்டாக்கள் அளித்ததாகக் கூறும் அரசு, வழங்கிய பட்டாக்களின் நிலை என்ன என்பதையும் ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். தாளில் ‘சர்க்கரை’ என்று எழுதி விட்டாலே இனித்து விடும் என்ற போக்கில் நடந்து கொள்வது ஏழைகளுக்கு நீதி வழங்குவது ஆகாது. (ந.நி) இடுகையிட்டது ஆதிகபிலன் நேரம் பிற்பகல் 6:16 லேபிள்கள்: அழுகிப் போகாது, இருகூர், கோவை, மனைப்பட்டா பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால் கொட்டைப்பாக்குக்கு விலை சொல்வதா? - கருணாநிதிக்கு மார்க்சிஸ்ட் கட்சி கேள்வி குடிசை மக்களுக்கு குடிமனைப் பட்டா வழங்கவில்லை என்றால் சட்டமன்றம் முன்பு வருகிற ஏப்ரல் 19-ஆம் தேதியன்று ‘பட்டினிப்போராட்டம்’ நடைபெறும் என 14-02-2010 அன்று நடைபெற்ற கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி அறிவித்துள்ளதை கடுமையாக விமர்சித்து முதல்வர் கலைஞர் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். போராட்டம் ஏன் என்பதை தெளிவுபடுத்திட வேண்டிய அவசியம் உள்ளது. இக்கட்டுரையாளரை, கட்சியின் மாநிலக்குழு மாநிலச்செயலாளராக தேர்ந்தெடுத்தமைக்காக கலைஞர் வாழ்த்து தெரிவித்திருந்தார். தமிழகத்திலுள்ள மூத்த தலைவர்களில் முக்கியமானவரிடமிருந்து வாழ்த்துச் செய்தி கிடைத்தது மிகுந்த மகிழ்ச்சிக்குரியது. எனவே, உடனடியாக என் சார்பிலும், கட்சியின் மாநிலக்குழு சார்பிலும் கலைஞருக்கு நன்றி தெரிவித்தோம். பல ஆண்டுகளாக குடியிருக்கும் குடிசை வாசிகளுக்கு பட்டா கோரி பல கட்ட இயக்கங்கள் நடத்திய பிறகும் பட்டா கிடைக்காததால்தான் ஏப்ரல் 19-ல் போராட்டம் நடத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. கடைசியாக நடந்து முடிந்த சட்டமன்ற கூட்டத்தொடரின் இறுதி நாளில், மார்ச் 13-ஆம் தேதியன்று புதிய சட்டமன்ற வளாகம் திறக்கப்படும் என முதல்வர் அறிவித்தார். நாங்கள் போராட்டம் நடத்தப்போவது ஏப்ரல் 19-ம் தேதியன்று. அதாவது வளாகம் திறக்கப்பட்டு ஒரு மாதத்திற்குப் பிறகுதான் போராட்டம் நடைபெறும். இந்நிலையில், போராட்டத்தால் வளாகத் திறப்பு விழாவிற்கு இடையூறு உள்ளது போல் கலைஞர் சொல்வதின் உள்நோக்கம் என்ன? போராட்டத்தை திசை திருப்புவதா? போராட்டத்தின் நோக்கம் என்ன? கோயில் நிலத்தில் குடியிருப்போர், அரசு புறம்போக்கு இடத்தில் குடியிருப்போர், மாநில அரசு மற்றும் மாநகராட்சி இடத்தில் குடியிருப்போர், நத்தம் புறம்போக்கில் குடியிருப்போர், தனியார் டிரஸ்ட் நிலத்தில் குடியிருப்போர் என சுமார் 10 லட்சம் குடும்பங்கள், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சொந்த வீடில்லாமல் உள்ளனர். இவர்களின் வாழ்வாதாரமான வீட்டுமனைபட்டா கோரிதான் ஏப்ரல் 19-ம் தேதி அறிவிக்கப்பட்டுள்ள பட்டினிப்போர். இவர்கள் கோரிக்கைகளுக்காகத்தான் ஏப்ரல் 19-ல் பட்டினிப்போர். இந்த 10 இலட்சம் பேரின் கோரிக்கைகளை பகுதிவாரியாக விளக்குவதற்கு ஏடு இடம் தராது என்றாலும், உதாரணத்திற்கு ஓரிரு பகுதிகளைப் பரிசீலிப்போம். மேலே இருக்கின்ற படத்தை உன்னிப்பாகப் பாருங்கள். அந்தக் கட்டிடத்தில் மூவர் ணக்கொடியின் கீழ் ஆதிதிரா விடர் பொதுநலச்சங்கம் என்ற வாசகங்களைப் பார்க்கலாம். அந்த வாசகத்திற்கு மேல் தோற்றம் 1947 என்று உள்ளது. சங்கம் உருவாகி சுமார் 62 ஆண்டுகள் ஆகின்றன. இது அம்பத்தூர் நகராட்சிக்குட்பட்ட சர்வே எண்.72க்குட்பட்ட மங்களபுரம். 10-2-2010 அன்று, நானும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வடசென்னை மாவட்டச் செயலாளர் டி.கே.சண்முகம், அம்பத்தூர் நகரச் செயலாளர் லெனின் சுந்தர் ஆகியோர் அப்பகுதி மக்களை சந்தித்தோம். தங்களுக்கு பட்டா வழங்கப்பட வேண்டுமென்ற கோரிக்கை மனுவை அவர்கள் அளித்தனர். மங்களபுரத்தில் சுமார் 780 குடும்பங்கள் உள்ளன. மக்கள்தொகை சுமார் 3 ஆயிரம். இதில் 97 சதவிகிதம் தலித் மக்கள். இது கிராமநத்தம் பகுதி. கால்கடுக்கச் சென்று அதிகாரிகளை சந்தித்தது தான் மிச்சம். சுமார் நூறாண்டுகளுக்கு மேல் வசிக்கும் மங்களபுரத்தில் உள்ள குடும்பங்களுக்கு இதுநாள் வரையிலும் பட்டா வழங்கப்படவில்லை. பாடிப்புதுநகர் அம்பத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட (சர்வே எண். 253/14) பாடிப்புதுநகரில் சுமார் 900 குடும்பங்கள் வசிக்கின்றன. இவர்களுக்கு குடிசை மாற்று வாரியம், மனை ஒதுக்கீடு செய்து கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகிறார்கள். தொடர்ச்சியாக தங்களுக்கு பட்டா வேண்டுமென்று வலியுறுத்துகிறபோது, குடிசை மாற்று வாரிய அதிகாரிகள், பாடிப்புதுநகர் இடம் வருவாய்த்துறைக்கு சொந்தமானது. வருவாய்த்துறை எங்களிடம் ஒப்படைக்காமல் பட்டா வழங்க முடியாதென கூறுகிறார்கள். வருவாய்த் துறைக்கு குடிசை மாற்று வாரிய தலைவர் பலமுறை கடிதம் எழுதியும் எதுவும் நடக்கவில்லை. இவ்வாறு ஒவ்வொரு பகுதியிலும் பட்டா கிடைக்காத பல சோகக்கதைகள் உண்டு. இதற்கு கலைஞரின் பதில் என்ன? இவ்வாறு சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பட்டா கிடைக்காத அவல நிலை உள்ளது. இதைப்போலவே கோயில் இடத்தில் குடியிருப்போருக்கு அரசாணை 456-ன் படி தரை வாடகை விதிக்கப்பட்டு, குடியிருப்போர் விழி பிதுங்கி நிற்கின்றனர். அதிகமான வாடகை விதிக்கப்பட்டு, வாடகை கட்ட முடியாமல் சிரமப்படுவோர் மேல்முறையீடு செய்ய வேண்டுமென்றால், வாடகை பாக்கியை செலுத்திட வேண்டும். வாடகை பாக்கி பல லட்சம் வருவதால் வாடகை செலுத்த முடியவில்லை. ஆனால் கோயில் நிர்வாகம் 456 அரசாணைப்படி 70-80 ஆண்டுகள் அங்கேயே வசித்து வரும் இவர்களை ஆக்கிரமிப்பாளர்கள் என அறிவித்து வெளியேற்றிட முயற்சித்து வருகிறது. தோழர் மணலி கந்தசாமி, தனது அரசு உத்தரவிட்டதை பாராட்டினார். ஆனால் மார்க்சிஸ்ட்கள் பாராட்ட மறுப்பது மட்டுமன்றி போராட்டம் வேறு நடத்துகிறீர்களே என்ற ஆதங்கம் முதல்வரின் அறிக்கையில் பளிச்சென தெரிகிறது. பாராட்டத்தக்க காரியங்களை கலைஞரின் அரசு மேற்கொண்ட போதெல்லாம் - அந்த நடவடிக்கையை சிபிஐ(எம்) பாராட்டத் தவறியதில்லை. ஆனால் இன்றைக்கும் பல லட்சம் குடும்பங்கள் பட்டா இல்லாமல் அனுதினமும் அஞ்சி அஞ்சி வாழும் நிலையில், பொறுப்பு வாய்ந்த எந்த இயக்கமும் ஏழை மக்களை பாதுகாத்திட அரசை நிர்ப்பந்திக்க போராட்டம் நடத்துவது தவிர்க்க இயலாது என்பது அறிந்த ஒன்றே. இந்த அடிப்படை அரசியல் கடமையைத்தான் சிபிஐ(எம்) மேற்கொண்டு வருகிறது என்பதை தெரிவிக்கிறேன். 1946-ஆம் ஆண்டு இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் இந்தியாவிற்கு சுதந்திரம் தர வேண்டுமென்று, அட்லி பிரதமராக இருந்தபோது முடிவெடுத்தார்கள். இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்தது. சுதந்திரத்திற்காக போராடிய கண் ணீரும் செந்நீரும் சிந்திய காந்திக்கும், நேருவிற்கும், கம்யூனிஸ்ட்டுகளுக்கும் பெருமை சேராது. இந்தியாவிற்கு சுதந்தி ரம் கிடைத்ததன் பெருமை இங்கிலாந்து பிரதமர் அட்லிக்கே போய்ச்சேரும் என்றால் கலைஞர் ஏற்றுக் கொள்வாரா? கீழத்தஞ்சையில் பண்ணையடிமையை ஒழிக்க 1952-ஆம் ஆண்டு ராஜாஜி முதலமைச்சராக இருந்தபோது பண்ணையாள் பாதுகாப்புச்சட்டம் கொண்டு வந்தார். பண்ணையடிமையை ஒழிப்பதில் உயிர்த்தியாகம் செய்த களப்பால் குப்புவுக்கோ, வாட்டாக்குடி இரணியனுக்கோ, சிவராமனுக்கோ, இவர்களுக்கெல்லாம் தலைமை தாங்கிய பி.சீனிவாசராவுக்கோ எந்த பங்கும் இல்லை. பண்ணையடிமையை ஒழித்த பெருமையெல்லாம் இராஜாஜியை சாரும் என்றால் யாராவது ஏற்றுக் கொள்வார்களா? கீழத் தஞ்சையில் தலித் மக்கள் குடியிருக்கும் மனைகளை குடியிருக்கும் விவசாயிகளுக்கே சொந்தமாக்க வேண்டுமென்று கம்யூனிஸ்ட்டுகள் நடத்திய போராட்டம், அவர்கள் செய்த தியாகம், அதுதான் அன்றைய திமுக அரசு சட்டம் கொண்டு வர நிர்ப்பந்தமாக அமைந்தது. தமிழகத்தில் குடிசை மக்களுக்கு மனைப்பட்டா கேட்டால் வங்கத்தையும், கேரளத்தையும் காட்டுகிறார். திமுக வுக்கு வாக்களித்து ஆட்சியில் அமர்த்திய மக்களுக்கு இது தான் கலைஞர் தரும் பதிலா? பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால் கொட்டை பாக்குக்கு விலையைச் சொல்வதா? - ஜி.ராமகிருஷ்ணன், மாநிலச் செயலாளர், சிபிஐ(எம்) தமிழ்நாடு மாநிலக்குழு இடுகையிட்டது ஆதிகபிலன் நேரம் பிற்பகல் 6:15 லேபிள்கள்: கருணாநிதிக்குப் பதில், கொட்டைப்பாக்குக்கு விலை, ஜி.ராமகிருஷ்ணன் மார்ச் 1- விவசாயிகள் மறியலில் மலைவாழ் மக்களும் பங்கேற்கின்றனர் அனுபவ நிலத்திற்கு பட்டா - மனைப்பட்டா உள்ளிட்ட கோரிக்கை களை வற்புறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மார்ச் முதல் தேதி தமிழகம் முழுவதும் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடத்த உள்ள மறியல் போராட்டத்தில் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கமும் பங்கேற்பது என சங்கத்தின் மாநிலக்குழு முடிவு செய்துள்ளது. இம்மறியல் போராட்டத்தில் ஆயிரக்கணக்கான மலைவாழ் மக்களை ஈடுபடச் செய்திட முயற்சிகளை மேற்கொள்வதென சங்கத்தின் மாநிலக்குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநிலக்குழு கூட்டம் எஸ்.பழனிச்சாமி தலைமையில் அரூரில் நடைபெற்றது. கூட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் கே.பாலகிருஷ்ணன், மாநில பொதுச்செயலாளர் பெ.சண்முகம், மாநில துணைத் தலைவர் பி.டில்லிபாபு எம்.எல்.ஏ, மாநிலப் பொருளாளர் எம்.அழகேசன் உட்பட மாநிலக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு: மலைப் பகுதிகளில் பட்டா வழங்க விதிக்கப்பட்டுள்ள தடை ஆணை 1168-ஐ ரத்து செய்து பட்டா வழங்க வேண்டும்; வன உரிமைச் சட்டத்தை நடைமுறைப்படுத்த தமிழக அரசு தீவிர முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்; ஆதிவாசி மக்களுக்கு நில உரிமையும் - வன உரிமையும் வழங்க வகை செய்யும் வன உரிமைச் சட்டம் 2006-ஐ நடைமுறைப்படுத்த தமிழக அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்; சென்னை உயர்நீதிமன்றம் இச் சட்டத்தின் கீழ் பட்டா கொடுக்க விதித்துள்ள தடை உத்தரவை ரத்து செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்; மலையடிவாழ் பகுதிகளில் வனவிலங்குகளால் வேளாண் உற்பத்தி அழிக்கப்படுவதும், மனித உயிரிழப்புகள் ஏற்படுவதும் தொடர்கதையாகி வரும் நிலையில், இத்தகைய பாதிப்புகளுக்கு இழப்பீடு வழங்குவதிலும் அதிகாரிகள் மெத்தனப் போக்குடன் நடந்து கொள்கின்றனர்; வனவிலங்குகள் வனத்தை விட்டு வெளியேறாமல் தடுக்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்; மரபணு மாற்ற தொழில்நுட்பத்தை உணவுப் பயிர்களில் பயன்படுத்துவதற்கு மத்திய அரசு நிரந்தர தடை விதிக்க வேண்டும். குறுமன்ஸ் சான்றிதழ் பெறுவதில் சிக்கல் நீடிப்பு தமிழ்நாட்டில் குறுமன்ஸ், காட்டு நாயக்கன், மலைவேடன், கொண்டாரெட்டி ஆகிய பழங்குடியின மக்களுக்கு இனச்சான்றிதழ் வழங்கப்படுவது இல்லை. இதுகுறித்து அனைத்து மாவட்ட அதிகாரிகளிடமும் நேரில் புகார் செய்தும், பல கட்ட போராட்டங்களை நடத்தியும் தீர்வு காணப்படுவதற்குப் பதிலாக கோட்டாட்சியர்கள் சிக்கலான உத்தரவுகளை தொடர்ந்து பிறப்பித்து வருகின்றனர். வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் கோட்டாட்சியர் மாவட்ட விழிப்புணர்வு குழுவால் மெய்த்தன்மை உறுதி செய்யப்பட்ட 21 நபர்களின் வாரிசுகளுக்கு குறுமன்ஸ் சான்றிதழ் தர மறுத்து உத்தரவு வெளியிட்டுள்ளார். சிவகாசி கோட்டாட்சியர், காட்டு நாயக்கன் சமுதாயத்தை சார்ந்த 15 நபர்களின் மனுக்களை நிராகரித்து நிரந்தர உத்தரவு பிறப்பித்துள்ளார். சென்னை மாநகரில் பல தலை முறைகளாக வசித்துவரும் பழங்குடியினத்தவருக்கு கூட சான்றிதழ் மறுக்கப்படுகிறது. கல்வியாண்டு முடியும் நிலையில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 முடித்து வெளியே வரும் மாணவர்களின் எதிர்காலம் இருண்ட நிலைக்கு தள்ளப்படும் ஆபத்து இதனால் ஏற்பட்டுள்ளது. மேற்குறித்த பிரச்சனையில் தமிழ்நாடு அரசு உடனடியாக தலையிட்டு பொருத்தமான உத்தரவுகளை பிறப்பிக்குமாறு தமிழக அரசை மலைவாழ் மக்கள் சங்க மாநிலக்குழு கோருகிறது. இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிர்வாகிகள் மாற்றம் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநிலத் தலைவராக பெ.சண்முகம், மாநில பொதுச்செயலாள ராகபழனிச்சாமி, துணைச் செயலாளர்களாக ஆ.பொன்னுசாமி, அண்ணாமலை ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இடுகையிட்டது ஆதிகபிலன் நேரம் பிற்பகல் 6:13 லேபிள்கள்: குறுமன்ஸ், கோரிக்கைகள், பட்டா, மலைவாழ் மக்கள் சங்கம் ஆற்றில் நீந்தி சென்று பிணங்களை புதைக்கும் துயரம் பழனி அருகேயுள்ள பாலசமுத்திரத்தில் ஆற்றை நீந்திக் கடந்து, பிணங்களை புதைக்கும் அருந்ததிய மக்களின் துயரத்தைக் கேள்விப்பட்டு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் தூதுக்குழு அம்மக்களை சந்தித்தது. அது பற்றிய விபரம் வருமாறு: பழனி அருகேயுள்ளது பாலசமுத்திரம் பேரூராட்சி. இந்த ஊரில் 1-வது வார்டில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட அருந்ததிய மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு சுதந்திரம் பெற்ற காலத்திலிருந்து இன்று வரை தீர்க்க முடி யாத பிரச்சனையாக உள்ளது மயான பிரச்சனை. ஊரில் யாராவது இறந்து போனால் அந்த பிணத்தை அருகில் உள்ள ஆற்றில் நீந்திச் சென்றுதான் ஆற்றின் அக்கறையில் உள்ள சுடுகாட்டில் அடக்கம் செய்வார்கள். இந்த ஆற்றில் எப் போதும் கழுத்தளவு தண்ணீர் இருந்து கொண்டே இருக்கும். இதே போல அருகேயுள்ள குரும்பபட்டியில் வசிக்கும் அருந்ததிய மக்களும், இராமநாதநகர் மக்களும், குறவன்பாறை ஆகிய பகுதி மக்களும் நீந்திச் சென்றுதான் இந்த மயா னத்தில் பிணங்களை அடக்கம் செய்வார்கள். இது சம்பந்தமாக இப்பகுதி அருந்ததிய மக்கள் பல முறை அரசு அதிகாரிகளிடம் மனுக் கொடுத்தும் யாரும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் சில ஆங்கில மற்றும் தமிழ்ப் பத்திரிகைகளில் செய்தி வந்தது. இந்த செய்தியைக் கேள்விப்பட்டவுடன் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில அமைப்பாளர் பி.சம்பத், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் என்.பாண்டி, பழனி ஏரியாச் செயலாளர் கே. அருள்செல்வன், பழனி நகர்மன்றத் தலைவர் வி.ராஜமாணிக்கம் ஆகியோர் கொண்ட தூதுக்குழுவினர் 1-வது வார்டு பாலசமுத்திரம் மக்களை நேரில் சந்தித்து இந்தப் பிரச்சனை சம்பந்தமாக விசாரித்தனர். இதனையடுத்து ஆற்றின் அக்கறையில் உள்ள சுடுகாட்டையும் சென்று பார்வையிட்டு வந்தனர். பின்னர் இப்பிரச்சனை, தீண்டாமை ஒழிப்பு முன்னணி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என்று தலைவர்கள் கூறினர். அதனடிப்படையில், அருந்ததிய மக்களுக்கு மயானம் கிடைத்திட அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, பி.சம்பத் அரசை வலியுறுத்தியுள்ளார். (18.2.2010 தீக்கதிர் செய்தி) இடுகையிட்டது ஆதிகபிலன் நேரம் பிற்பகல் 6:12 லேபிள்கள்: ஆற்றைக் கடக்கும் அவலம், பாலசமுத்திரத்தில் நேரில் ஆய்வு சிபிஎம் தொடர் முயற்சியால் தலித் மக்களுக்கு மின்சாரம் கிடைத்தது தமிழ்நாடு ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் தமிழரசியின் தொகுதிக்கு உட்பட்ட பூதகுடியில், அரசின் இலவச வண்ணத் தொலைக்காட்சி பெற்றும், மின் வசதியில்லாததால் அதைப் பயன்படுத்த முடியாத நிலையில் ஒரு பகுதி தலித் மக்கள் இருந்தனர். இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இப்பிரச்சனை தொடர்பாக மின்வாரிய அதிகாரிகளையும், மாவட்ட நிர்வாகத்தையும் அணுகி தொடர்ந்து முறையிட்டதன் அடிப்படையில், ஓராண்டாக தவித்த மக்களுக்கு, ஒரு வழியாய் மின்சாரம் கிடைத்துள்ளது. மின்வாரிய அதிகாரி கள் புதனன்று மின்கம்பங்களை நட்டு, மின்சார இணைப்பு வழங்கினர். இதில், இலவச மின்சாரம் பெற்ற தலித் மக்கள் மார்க்சிஸ்ட் கட்சிக்கும், மின்வாரிய அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்தனர். இடுகையிட்டது ஆதிகபிலன் நேரம் பிற்பகல் 6:11 லேபிள்கள்: இலவச மின்சாரம், சிபிஎம் முயற்சி, தலித் மக்கள், நன்றி கொடுவாயில் தலித்துக்களுக்கு முடிவெட்டிவிட மறுக்கும் கொடுமை பொங்கலூர் ஒன்றியம் கொடுவாயில் தலித்துகளுக்கு முடிதிருத்த மறுக்கும் தீண்டாமையைக் கைவிட வலியுறுத்தி பொதுக் கூட்டம் நடைபெற்றது. திங்களன்று (15.2.2010) தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் நடந்த இப்பொதுக் கூட்டத்துக்கு சிஐடியு பனியன் சங்கச் செயலாளர் ஜி.சம்பத் தலைமை தாங்கினார். தலித் மக்களுக்கு எதிராக தீண்டாமையைக் கடைப்பிடிப்பது சட்டப்படி குற்றம். குறிப்பாக கொடுவாயில் ராகம் சலூன் என்ற முடிதிருத்தும் கடையில் தலித் இளைஞர்களுக்கு முடிதிருத்த கடை உரிமையாளர் மறுப்பதற்கு எதிராக கடந்த டிசம்பர் 25, 2009 அன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. மறுபுறத்தில், இந்த தீண்டாமையை நியாயப்படுத்தி, கொடுவாயைச் சேர்ந்த வியாபாரிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து அவிநாசிபாளையம் காவல் நிலையத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், மூன்றே நாட்களில் இந்த பிரச்சனைக்கு தீர்வு காணப்படும் என்று திருப்பூர் வட்டாட்சியர் உறுதியளித்தார். எனினும் 50 நாட்கள் கடந்த பின்னும் பழைய நிலை நீடிக்கிறது. முடிதிருத்த மறுக்கும் தீண்டாமைக்கு முற்றுப்புள்ளி வைக்க அரசு நிர்வாகமும், காவல்துறையும் வாக்குறுதி அளித்தபடி நடவடிக்கை எடுக்காமல் இழுத்தடித்து வருகின்றன. இனியும் இதே நிலை தொடர்ந்தால் போராட்டம் தொடரும் என்று பொதுக்கூட்டத்தில் தலைவர்கள் கடுமையாக எச்சரித்தனர். மேலும் தீண்டாமை கொடுமைக்கு எதிராக- ஜனநாயகத்தை நேசிக்கும் அனைத்து மக்களும் ஒன்று சேர்ந்து குரல் எழுப்ப வேண்டும் என்றும் தலைவர்கள் கேட்டுக் கொண்டனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கே.தங்கவேல், திருப்பூர் எம்.எல்.ஏ. சி.கோவிந்தசாமி, மார்க்சிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்டச் செயலாளர் கே.காமராஜ், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் எஸ்.கண்ணன், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட அமைப்பாளர் பி.ராமமூர்த்தி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் பி.மோகன், விவசாயிகள் சங்க மாவட்டத் துணைச் செயலாளர் எஸ்.லோகநாதன், முன்னாள் ஒன்றியக் கவுன்சிலர் எஸ்.கந்தவேல் ஆகியோர் பொதுக்கூட்டத்தில் உரையாற்றினர். இடுகையிட்டது ஆதிகபிலன் நேரம் பிற்பகல் 6:10 லேபிள்கள்: கொடுவாய், தீண்டாமை, பொங்கலூர், பொதுக்கூட்டம், முடிவெட்ட மறுப்பு பின்னடைவுப் பணியிடங்களை நிரப்பாமல் தலித் மக்களுக்கு தமிழக அரசு அநீதி! - எஸ்.கே.மகேந்திரன் எம்எல்ஏ குற்றச்சாட்டு பின்னடைவு பணி யிடங்களை நிரப்பாமல் தலித் மக்களுக்கு தமிழக அரசு அநீதி இழைத்து வருகிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.கே.மகேந்திரன் எம்எல்ஏ குற்றம் சாட்டினார். அருந்ததியருக்கான உள்ஒதுக்கீட்டை அனைத்து அரசுத்துறைகளிலும் அமல்படுத்த வலியுறுத்தி திருச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஆகியவற்றின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்று எஸ்.கே.மகேந்திரன் எம்எல்ஏ மேலும் பேசியதாவது: அருந்ததியருக்கான உள்இடஒதுக்கீடு அரசாணை வெளியிட்ட பின்னரும் பல துறைகளில் இன்னும் அருந் ததியருக்கான உள்இடஒதுக்கீடு அமலாக்கப்படவில்லை. குறிப்பாக கடந்த ஆண்டு இடைநிலை ஆசிரியர் பணிநியமனம் நடந்த போது ஒதுக்கீடு வழங்காததால் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, நீதிமன்றம் தலையிட்ட பின்புதான் அருந்ததியர்களுக்கான இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. மாநில அரசுகள் சட்டத்தை போடுவதுடன் அதை முறையாக அமலாக்குவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாட்டில் தாழ்த்தப்பட்டவர்களுக்கான இடஒதுக்கீடு எந்த துறையிலும் முறையாக அமலாக்கப்பட வில்லை. சமீபத்தில் தமிழகத்தில் உள்ள 71 துறைகளில் மட்டும் ஆய்வு செய்தபோது தாழ்த்தப்பட்டவர்களுக்கான பின்னடைவு பணியிடங்கள் 21 ஆயிரம் என கண்டறியப்பட்டது. மீதமிருக்கக் கூடிய துறைகளில் ஆய்வு செய்தால் 50 ஆயிரத்தை தாண்ட வாய்ப்பு உள்ளது. இது தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இழைக்கப்பட கூடிய சமூக அநீதி. தமிழ்நாடு மின்சார வாரியத்தில் மட்டும் 7ஆயிரத்து இருநூறு பின்னடைவு பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. இதுபோன்ற பின்னடைவு பணியிடங்களை முழுமையாக நிரப்பும் போதுதான் தாழ்த்தப்பட்டவர்களுக்கும், அருந்ததியர்களுக்கும் சமூக நீதி வழங்கப்பட்டதாக அர்த்தம். இவ்வாறு எஸ்.கே.மகேந்திரன் எம்எல்ஏ பேசினார். இடுகையிட்டது ஆதிகபிலன் நேரம் பிற்பகல் 6:09 லேபிள்கள்: எஸ்.கே.மகேந்திரன், குற்றச்சாட்டு, திருச்சி, பின்னடைவுப் பணியிடங்கள் சாதிவெறியர்களை கைதுசெய்யக் கோரி மார்க்சிஸ்ட் கட்சி மறியல்- 150 பேர் கைது ஒட்டன்சத்திரம் அருகே உள்ளது கொசவபட்டி. இப்பகுதி சிபிஎம் கிளைச் செயலாளராக இருப்பவர் பி.செல்வராஜ். இவர் தலித் வகுப்பைச் சேர்ந்தவர். காப்பிளியபட்டியில் தண்ணீர் வழங்குவது சம்பந்தமாக ஏற்பட்ட பிரச்சனையில் ஊராட்சித் தலைவர் இளங்கோவன் மற்றும் ஆதிக்க சாதியினர் இவரை அழைத்து கடுமையாக தாக்கியுள்ளனர். இதனால் படுகாயமடைந்த பி.செல்வராஜ் ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, 10 நாட்கள் சிகிச்சை பெற்றார். ஆனால், காவல்துறையினர் சம்பந்தப்பட்ட ஊராட்சித் தலைவர் இளங்கோவன் மற்றும் ஆதிக்க சாதியினர் மீது வழக்குப் பதிய மறுத்து விட்டனர். மாறாக, புகார் கொடுத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளைச்செயலாளர் மீதே பொய்வழக்கு போட்டனர். இதையடுத்து, போலீசாரின் இந்த அராஜக நடவடிக்கையைக் கண்டித்து செவ்வாயன்று(16.2.10) ஒட்டன்சத்திரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மறியல் நடைபெற்றது. தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட அமைப்பாளர் கே.ஆர்.கணேசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயற் குழு உறுப்பினர்கள் வி.குமரவேல், எம்.கருணாகரன், தாலுகா செயலாளர் சின்னக்கருப்பன், தாலுகா குழு உறுப்பினர்கள் எஸ்.பி.இராமசாமி, பழனியப்பன், பெருமாள் உள்ளிட்ட 150 பேர் மறியலில் கலந்து கொண்டனர். கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினரும், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில அமைப்பாளருமான பி.சம்பத், மாவட்டச் செயலாளர் என்.பாண்டி ஆகியோர் மறியலை ஆதரித்துப் பேசினர்.இந்த மறியலில் கலந்து கொண்ட 150 பேரையும் ஒட்டன்சத்திரம் போலீசார் கைது செய்தனர் . இடுகையிட்டது ஆதிகபிலன் நேரம் பிற்பகல் 6:08 லேபிள்கள்: ஒட்டன்சத்திரம், கைது, கொசவபட்டி, சாதிவெறியர்கள், தாக்குதல், மறியல் வெள்ளத்தாலும் பாதிக்கப்படும் தலித்துகள்! சமூக ரீதியான ஒடுக்குமுறைகளை காலம் காலமாக சந்தித்து வரும் தலித் மக்கள், இயற்கைப் பேரழிவுகளாலும் அதிகம் பாதிக்கப்படுபவர்களாக இருக்கின்றனர். இது தொடர்ந்து வெளிவரும் ஆய்வுகளில் உறுதிப்படுத்தப்படுகிறது. உ.பி. மற்றும் பீகார் மாநிலங்களில் ஆண்டுதோறும் ஏற்பட்டு வரும் வெள்ளப்பெருக்குகள் தலித்துகளையே அதிகமாகப் பாதிக்கிறது என்பதும், நிவாரண நடவடிக்கைகளிலும் சமூக ரீதியான பாகுபாடுகள் உள்ளன என்பதும் பழைய செய்திகள். கடந்த ஆண்டு ஆந்திராவை உலுக்கி எடுத்த வெள்ளம் தலித்துகள் வாழும் பகுதிகளில் கடுமையான சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. அக்டோபர் 2009ல் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு கர்நூல், மகபூப்நகர், குண்டூர் மற்றும் கிருஷ்ணா ஆகிய மாவட்டங்களைக் கடுமையாகத் தாக்கியது. பலநாட்கள் கடுமையான இருட்டில் ஆந்திர மக்கள் பொழுதைக் கழித்தனர். இந்த நான்கு மாவட்டங்களில் மட்டும் சுமார் இரண்டு லட்சம் மக்கள் தங்கள் வீடுகளை இழந்தனர். எக்கச்சக்க மான ஏக்கர்களில் இருந்த பயிர்கள் நாசமாகின. கடந்த நூறு ஆண்டுகளில் இவ்வளவு பயங்கரமான வெள்ளத்தை ஆந்திரா பார்த்ததில்லை. ஆந்திர மாநிலம் உருவானபிறகு இதுதான் பெரும் சேதத்தை ஏற்படுத்திய இயற்கைப் பேரழி வாகும். பாதிக்கப்பட்ட மக்களில் பெரும்பாலானவர்கள் இன்னும் நிவாரணத்தைப் பெறவில்லை. இந்தப் பிரச்சனைகள் பின்னுக்குப் போகும் வகையில் தனித் தெலுங்கானா கோரும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் தர வேண்டும் என்று கோரி மக்களைத் திரட்டும் வகையில் கர்நூல் மாவட்டத்தில் மக்கள் சந்திப்பு இயக்கத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்தியுள்ளது. மற்ற மாவட்டங்களில் அத்தகைய இயக்கங்கள் நடைபெறவுள்ளன. மற்ற அனைத்து கட்சிகளுமே தெலுங்கானா விவகாரத்தில் மக்களின் உணர்வுகளைத் தூண்டிவிடும் பணியை மேற்கொண்டுள்ளன. இந்நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் நிலை குறித்த ஆய்வுகள், அதிர்ச்சிக்குரிய விபரங்களை வெளிக்கொண்டு வந்துள்ளது. ஏழைகளை, குறிப்பாக தலித்துகளைத்தான் வெள்ளம் கடுமையாகப் பாதித்துள்ளது என்பதுதான் அந்த விபரங்கள். ஆந்திர வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட 308 கிராமங்களில் 1,090 குடியிருப்புப் பகுதிகளில் ஆய்வு நடத்தப்பட்டது. பல்வேறு தலித் அமைப்புகள் உள்ளிட்ட 13 தொண்டு நிறுவனங்கள் இணைந்து இந்த ஆய்வை நடத்தின. தலித்துகளுக்கு ஏற்பட்ட இழப்பு, சமமான இழப்பீடு விநியோகம், நிவாரண நடவடிக்கைகளின்போது மரியாதை மற்றும் பாரபட்ச அணுகுமுறை ஆகிய அம்சங்களைக் கண்டறிய இந்த ஆய்வு முயன்றது. தலித்துகள் எந்தவகையிலாவது நிவாரணத்தைப் பெற்றுள்ளார்களா என்பதைத்தான் அந்த ஆய்வு கண்டறிய விரும்பியது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களில் 38 விழுக்காடு குடும்பங்கள் தலித்துகளின் குடும்பங்கள்தான். வெள்ளத்தில் பலியானவர்கள் மற்றும் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்ததாகக் கருதப்படுபவர்கள் ஆகியோரில் 55 விழுக்காட்டினர் தலித்துகளாவர். வெள்ளம் தாக்கும்முன்பே மோசமான வீடுகளில்தான் தலித்துகள் வாழ்ந்து வந்தார்கள். அந்த வீடுகளையும் வெள்ளம் விட்டுவைக்கவில்லை. வெள்ளத்தின் தாக்குதலால் வீடுகளை இழந்தவர்களில் பாதிப்பேர் தலித்துகள்தான் என்று ஆய்வு கூறுகிறது. நிலங்களில் பயிர்களை இழந்தவர்களில் குறைவான அளவில்தான் தலித்துகள் பாதிக்கப்பட்டார்கள். பயிர்ச் சேதத்தால் பாதிக்கப்பட்டவர்களில் 28 விழுக்காடுதான் தலித்துகள். அவர்கள் கைகளில் நிலங்கள் இல்லை என்பதுதான் இவ்வளவு குறைவாக அவர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பதற்குக் காரணமாகும். தாழ்வான பகுதிகளில்தான் பொதுவாக தலித்துகள் வாழ்கின்றனர் என்பதுதான் அதிகமான பாதிப்புகளுக்குக் காரணம் என்கிறார் தொண்டு நிறுவனமொன்றைச் சேர்ந்த ஜி.நரசிம்மா. நிவாரணப் பணிகளில் தலித்துகளுக்கு முன்னு ரிமை தர வேண்டும். இருப்பிடங்களுக்கான மனையிடங்களை அவர்களுக்கு முதலில் வழங்கிட வேண்டும் என்று நாங்கள் கோரி வருகிறோம் என்கிறார் அவர். முன்னுரிமை பெற வேண்டிய இவர்கள், பல கிராமங்களில் கடைசியாகத்தான் நிவாரணம் பெறும் அவலம் உள்ளது. இதில் கொடுமை என்னவென்றால், பல தொண்டு நிறுவனங்களே இதர பகுதியினரைப் பார்த்து நிவாரணம் வழங்கிவிட்டுதான் தலித் பகுதிகளுக்கு சென்றிருக்கிறார்கள். பாதிக்கப்பட்ட தலித் குழந்தைகளில் பெரும்பாலானவர்கள் இன்னும் பள்ளிக்கூடங்களுக்கு திரும்பவில்லை. பள்ளிக்கூடங்களுக்கு திரும்பிய குழந்தைகளுக்கும் படிப்பதற்கு போதிய வசதி இல்லை. அவர்களுக்கு இந்த ஆண்டு இறுதித்தேர்வில் கூடுதல் மதிப்பெண்களை வழங்க வேண்டும் என்றும் பல்வேறு அமைப்புகள் கோரிக்கை வைத்துள்ளன. அதோடு, இத்தகைய பேரழிவுகள் ஏற்படும்போது நிவாரண நடவடிக்கைகளில் சாதிப்பாகுபாடு பார்க்காமல் இருப்பதற்கான வழிகாட்டுதல்களை மத்திய, மாநில அரசுகள் உருவாக்க வேண்டும் என்றும் ஆய்வின் முடிவாக தெரிவித்துள்ளனர். இடுகையிட்டது ஆதிகபிலன் நேரம் பிற்பகல் 6:07 லேபிள்கள்: ஆந்திரா, தலித் மக்கள், பாதிப்பு, வெள்ளம் வெண்மணி தியாகிகள் நினைவிட நிதி: ரூ.1 லட்சம் வழங்கிய சாலைப் பணியாளர்கள் சாலைப்பணியாளர்கள் சங்கத்தின் மாநில மாநாட்டு நிறைவுப் பொதுக்கூட்டம் திருப்பூர் டவுண் ஹாலில் நடை பெற்றது. மாநிலத் தலைவர் மா.சண்முகராஜா தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தருமபுரி மாவட்டச் செயலாளரும்- அரூர் சட்டமன்ற உறுப்பினருமான டில்லிபாபு, சிஐடியு மாநிலச் செயலாளர் பா.விக்ரமன், தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க மாநிலத் தலைவர் ஆர்.தமிழ்ச்செல்வி ஆகியோர் சிறப்புரையாற்றினர். அப்போது அவர்களிடம் வெண்மணி தியாகிகள் நினைவக கட்டட நிதியாக ரூ. 75 ஆயிரம் வழங்கப்பட்டது. ஏற்கெனவே வழங்கப்பட்ட ரூ. 25 ஆயிரத்துடன் சேர்த்து, சாலைப்பணியாளர் சங்கம் சார்பில் இதுவரை ரூ. 1 லட்சம் நிதி வழங்கப்பட்டு உள்ளது. இடுகையிட்டது ஆதிகபிலன் நேரம் பிற்பகல் 6:06 லேபிள்கள்: சாலைப்பணியாளர்கள், நிதி, நினைவிடம், வெண்மணி ஆதிதிராவிட மாணவிகளுக்கு விடுதி: ஜி.லதா எம்எல்ஏ கோரிக்கை ஏற்பு வேலூர் மாநகரத்தில் ஊரிஸ், முத்துரங்கம், டி.கே.எம், ஆக்சீலியம் மற்றும் கல்லூரிகளில் ரெகுலர், மாலை நேர கல்லூரிகளில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள், இளங்கலை, முதுகலை பட்டப்படிப்பும், பொறியியல் கல்லூரிகளில் பொறியியல் படிப்பும் படித்து வருகின்றனர். இதில் ஆயிரக்கணக்கான ஆதிதிராவிட மாணவர்களுக்கு விடுதி வசதி கிடையாது. இவர்கள் தங்களுக்கு அரசு விடுதி துவங்க வேண்டும் என்று நீண்ட காலமாக வலியுறுத்தி வருகின்றனர். இதுபற்றி குடியாத்தம் எம்.எல்.ஏ., ஜி.லதா, சட்டமன்றத்திலும் ஆதிதிராவிட நலத்துறை அமைச்சரிடமும் கோரிக்கை விடுத்து இருந்தார். இக்கோரிக்கையை ஏற்ற தமிழக அரசு, வேலூர் மாநகரில் கல்லூரி மாணவிகளுக்கு விடுதி அமைக்க இடம் தேர்வு செய்தது. பல இடங்களில் பார்வையிட்டும் இடம் இல்லாததால் வேலூர் முத்துரங்கம் அரசு கலை கல்லூரியில் இடம் உள்ளது எனவும் தஞ்சாவூர் அரசு கல்லூரியிலும், கரூர் அரசு கல்லூரியிலும் மற்றும் வாலாஜா அரசு கல்லூரியிலும் மாணவிகளுக்கான விடுதி உள்ளதைபோல் வேலூரிலும் விடுதி அமைக்க வேண்டுமென ஜி.லதா எம்எல்ஏ, மாவட்ட ஆதிதிராவிட அலுவலரிடம் எடுத்துக் கூறினார். இக்கோரிக்கையை ஏற்று முத்துரங்கம் அரசு கலைக்கல்லூரியில் மாணவிகளுக்கு விடுதி தேர்வு செய்ய மாவட்ட வருவாய் அலுவலர் சரவண வேல்ராஜ், மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலர் சொர்ணலதா, வேலூர் தாசில்தார் அருண் ஆகியோர், ஜி.லதா எம்எல்ஏ-வுடன் சென்று, முத்துரங்கம் அரசு கல்லூரி வளாகத்தில் 1 ஏக்கர் 10 சென்ட் இடத்தை தேர்வு செய்தனர். இதில் கல்லூரி முதல்வர் ராஜேந்திரன் உடன் இருந்தார். இடுகையிட்டது ஆதிகபிலன் நேரம் பிற்பகல் 6:05 லேபிள்கள்: கோரிக்கை ஏற்பு, தலித் மாணவியர், விடுதி, வேலூர், ஜி.லதா மனிதனை மிருகமாக்கும் சாதிவெறி: பி.சம்பத் அருந்ததிய மக்களுக்கு அரசு அறிவித்த உள்இடஒதுக்கீட்டை வேலைவாய்ப் பில் முழுமையாக அமலாக்கக் கோரி தமிழகம் முழுவதும் திங்களன்று (15.2.10) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதனொரு பகுதியாக ஈரோட்டில் தலைமை மின்வாரிய அலுவலகம் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட அமைப் புக்குழு உறுப்பினர் கே.குப்புசாமி தலைமை வகித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் தீண் டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில அமைப்பாளர் பி.சம்பத் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- அருந்ததியர் உள் இடஒதுக்கீட்டைக் கல்வித் துறையில் மட்டுமல்லாமல் வேலைவாய்ப்புகளிலும் அமலாக்க வேண்டும் என்பதற்காக தமிழ்நாட்டில் 30 இடங்களில் இன்றைய தினம் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்துள்ளது. அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த 56 பேர் மருத்துவக் கல்லூரியிலும், 1165 பேர் பொறியியல் கல்லூரியிலும், சேர வாய்ப்புக் கிடைத்ததை மட்டுமே அடிக்கடி சுட்டிக்காட்டி முதல்வர் கலைஞர் பேசுகிறார். அதைநாம் மறுக்கவில்லை, ஆனால் மின்வாரியம், இடைநிலை ஆசிரியர், கல்லூரி ஆசி ரியர், பட்டதாரி ஆசிரியர் என பல்லாயிரம் பேருக்கு வேலை கிடைக்கக் கூடிய வேலைவாய்ப்புகளில் அருந்ததிய இளைஞர்களுக்கு உரிய இடஒதுக்கீடு வழங்கப்படவில்லை. உள்ஒதுக்கீடு குறித்த அரசின் உத்தரவு வெளியாவதற்கு முன்பே வேலை நியமன தயாரிப்புகள் துவங்கி விட்டதாக கலைஞர் கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. சட்டம் வெளியான தேதியிலிருந்துதான் இது அமலாக வேண்டும். உயர்நீதிமன்றம் இத்தகைய தீர்ப்பு வழங்கிய பிறகும் தமிழக அரசுக்கு இதுவரை தீர்ப்பு உறைக்கவில்லை. தந்தை பெரியார் பிறந்த ஈரோடு மாவட்டத்தில் நிலவும் தீண்டாமைக் கொடுமைகளை இங்கு பட்டியலிட்டார்கள். பல கிராமங்களில் அருந்ததியர் மக்களுக்கு மயானமோ அல்லது மயானப் பாதையோ இல்லை. திண்டுக்கல் மாவட்டம், பழனி தாலுகா வாலசமுத்திரம் என்ற கிராமத்தில் அருந்ததியர் சடலத்தை வறட்டாறு நதி வெள்ளத்தில் இறக்கி கொண்டு செல்லும் கொடுமை வெளிவந்துள்ளது. தூத்துக்குடி மாவட்டம் வேலாயுதபுரம் என்ற கிராமத்தில் தலித் மக்கள் ஆண் நாய் வளர்க்கக் கூடாதாம். வளர்த்தால் அந்த நாய் ஆதிக்க சாதித் தெருக்களில் பெண் நாயுடன் உறவு கொண்டு குட்டி போடுமாம். அந்தக் குட்டி பெண் நாயுடன் சுற்றித் திரிந்து தெருவே தீட்டாகிவிடுமாம். எனவே தலித் தெருவில் உள்ள ஆண் நாய்களை அடித்துக் கொன்றார்கள். சாதிவெறி மனிதருள் மிருக வெறியை ஏற்படுத்த, தற்போது மிருகங்களுக்கும் சாதி ஏற்படுத்தி ஒடுக்குகிறார்கள். தீண்டாமை ஒழிப்பு முன்னணியும் மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்ட் கட்சியும்தான் இந்தக் கொடுமைக்கு அந்த கிராமத்தில் முடிவு கட்டியது. இப்படி எண்ணற்ற கொடுமைகளைப் பட்டியலிட முடியும். ஈரோடு மாவட்டத்தில் புனிதா என்ற தலித் சிறுமி படுகொலை செய்யப்பட்டு பல ஆண்டுகளாகியும் குற்றவாளிகள் கைது செய்யப்படாமல் சுதந்திரமாக வீதிகளில் உலா வருகிறார்கள். பல சாதனைகளைச் செய்ததாகப் பட்டியலிடும் தமிழக முதல்வர் இத்தகைய தீண்டாமைக் கொடுமை களுக்கு முடிவு கட்ட ஏன் முழுமையான நடவடிக்கை எடுக்கவில்லை? தொழிலாளி வர்க்கத்தின் பிரிக்க முடியாத அங்கம் தலித்துக்கள் ஆவர். குறிப்பாக அருந்ததியர் மக்கள். எனவே, தொழிலாளி வர்க்கத்தின் எந்த அங்கமும் செயல்படாமல் இருப்பதை செங்கொடி இயக்கம் ஏற்காது. அது போல உழைப்பாளிகளான தலித் மக்கள் சமூக ரீதியாக ஒடுக்கப்படுவதற்கு எதிராகவும் தீண்டாமைக் கொடுமைகளுக்கு எதிராகவும், உறுதியாகப் போராடுவோம். தீண்டாமை ஒழிப்பு தொழிலாளி வர்க்க ஒற்றுமைக்கு அவசியமானதாகும். இப்பார்வையோடு சமூக, பொருளாதார ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடுவோம். இவ்வாறு பி.சம்பத் பேசினார். இடுகையிட்டது ஆதிகபிலன் நேரம் பிற்பகல் 6:04 லேபிள்கள்: ஈரோடு, பி.சம்பத் பேச்சு, மிருகமாக்கும் சாதிவெறி சுடுகாட்டை அடைய ஆற்றைக் கடக்கும் அருந்ததியர்கள் 1993 ஆம் ஆண்டு, திண்டுக்கல் மாவட்டம் பாலசமுத்திரத்தைச் சேர்ந்த ஆர்.முருகேசன் என்பவர் மரணமடைகிறார். அவரது உடலை எடுத்துக் கொண்டு வழக்கம் போல வரட்டாற்றைத் தாண்டி செல்ல முற்படுகிறார்கள் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள். அப்போது நீர்வரத்து அதிகமாக இருந்ததால் முருகேசனின் இறந்த உடல் ஆற்றில் அடித்துச் செல்லப்படுகிறது. அவரது உடலை சுமந்து சென்று கொண்டிருந்தவர்களோ தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள போராட வேண்டியிருந்தது. தங்கள் பகுதியிலிருந்து சுடுகாட்டிற்கு வேறு பாதை இல்லாததால் சாலை வசதி அமைத்துத் தாருங்கள் என்ற அருந்ததியர்களின் கோரிக்கை இதுவரை நிறைவேற்றப்படவில்லை. இதர சாதியினருக்கு அந்தக் கிராமத்தில் மயானம் உள்ளது. தனி மயானம் உள்ள தலித்துகளோ அதற்குப் போகும் பாதை இல்லாததால் ஆற்று நீரில் இறங்கி மயானத்திற்கு சென்று கொண்டிருக்கின்றனர். பாலம் அமைத்துத் தருகிறோம் என்று நிர்வாகம் கொடுத்த உறுதிமொழி, உறுதிமொழியாக மட்டுமே இருக்கிறது. பாலசமுத்திரம் பேரூராட்சியில் மொத்தம் 700 குடும்பங்கள் உள்ளன. அதில் அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் 250 குடும்பங்கள். இந்தப்பிரச்சனை முப்பது ஆண்டுகளுக்கு மேலாக உள்ளது என்கிறார் அப்பகுதியைச் சேர்ந்த எம்.வேலுசாமி. மேலும் கூறிய அவர், இதற்கு முன்பாக பட்டா நிலமொன்றில் அருகிலிருந்த சாலையை நாங்கள் பயன்படுத்தி வந்தோம். ஆனால் அந்த நிலத்திற்குச் சொந்தமானவரோ, சாலையின் நடுவில் சாமிசிலை ஒன்றை வைத்துள்ளார். பிணங்கள் அந்த வழியாகப் போக முடியாது என்றும் கூறிவிட்டார். அப்போதிருந்து ஆற்றில் இறங்கிதான் செல்கிறோம் என்றார். 2003 ஆம் ஆண்டில் வருவாய் அதிகாரி மற்றும் தாசில்தார் ஆகிய இருவரும் இந்த பகுதிக்கு வந்து சென்றுள்ளார்கள். ஆற்றின் குறுக்கே பாலம் கட்டுகிறோம் என்றார்கள். ஆனால் ஒன்றும் நடக்கவில்லை. பலமுறை பிணங்கள் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. மழை காரணமாக மயானத்திற்கே செல்லாமல் பல பிணங்கள் ஆற்றின் கரையிலேயே எரிக்கப்பட்டன. மீண்டும் பிரச்சனை எழுந்துள்ளது. வழக்கம் போலவே மாவட்ட நிர்வாகம், இந்தப் பிரச்சனை பற்றி வருவாய்த்துறை அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். செய்தி ஆதாரம் - டைம்ஸ் ஆப் இந்தியா. இடுகையிட்டது ஆதிகபிலன் நேரம் பிற்பகல் 6:03 லேபிள்கள்: ஆற்றை கடக்கும் கொடுமை, டைம்ஸ் ஆப் இந்தியா, திண்டுக்கல், பாலசமுத்திரம் உள் ஒதுக்கீட்டை அமல்படுத்தக்கோரி எழுச்சி ஆர்ப்பாட்டம் இடைநிலை ஆசிரியர், கல்லூரி ஆசிரியர், மின்வாரிய தொழில்நுட்ப உதவியாளர் பணியிடங்களில் அருந்ததியருக்கு உள் ஒதுக்கீடு வழங்காததை கண்டித்தும், அனைத்து அரசுத் துறைகளிலும் அருந்ததியருக்கு உள்ஒதுக்கீட்டை அமலாக்க வேண்டும்; பின்ன டைவு பணியிடங்களை நிரப்பவேண்டும்; அருந்ததியர்களுக்கு சாதிச் சான்றிதழை முறையாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து தீண்டாமை ஒழிப்பு முன்னணி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில், 15.2.2010 அன்று தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. விருதுநகர் அதனொரு பகுதியாக விருதுநகரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தமுஎகச மாவட்டத் தலைவர் தேனிவசந்தன் தலைமை வகித்தார். அருந்தமிழர் விடுதலை இயக்கத்தின் மாநில அமைப்பாளர் கு.ஜக்கையன் துவக்கவுரை ஆற்றினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் பி.சுகந்தி சிறப்புரை ஆற்றினார். அருந்ததியர் ஜனநாயக விடுதலை முன்னணியின் மாநில அமைப்பாளர் கௌதமன், எம்.ஊர்க்காவலன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகரச்செயலா ளர் ஜே.ஜெ.சீனிவாசன், மா.பாண்டியன், பெருமாள்சாமி, விஜயபாண்டி, முருகன் உட்பட பலர் பங்கேற்றனர். முத்துக்குமார் நன்றி கூறினார். திருவில்லிபுத்தூர் திருவில்லிபுத்தூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தமுஎகச-வின் மாவட்டக்குழு உறுப்பினர் மரியடேவிட் தலைமை வகித்தார். சிஐடியு மாவட்டச் செயலாளர் ஆர்.முத்துவேலு துவக்கவுரை ஆற்றினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகரச் செயலாளர் எம்.திருமலை கண்டன உரையாற்றினார். விநாயகமூர்த்தி, ரேணுகாதேவி, முனியப்பன், பி.முருகேசன் ஆகியோர் உட்பட பலர் பங்கேற்றனர். காரியாபட்டி காரியாபட்டியில் சிவபாக்கியம், ஆறுமுகம் ஆகியோர், ஆர்ப்பாட்டத்திற்கு தலை மை வகித்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.சேகர் பேசினார். தாலுகா செயலாளர் வி.முருகன் கண்டன உரையாற்றினர். இதில், தமிழ்ப்புலிகள் மாவட்டத்தலைவர் கே.தமிழரசிகனி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ஒன்றியச் செயலாளர் கு.பாண்டியராசு, தமிழ்ப்புலிகள் சார்பில் பழனிமுருகன், வாலிபர் சங்கத் தின் நிர்வாகிகள் சுரேஷ், ரமேஷ், மாதர்சங்க செயலாளர் பஞ்சு ஆகியோர் உட்பட பலர் பங்கேற்றனர். திருத்தங்கல் திருத்தங்கல்லில் சிஐடியு கன்வீனர் எஸ்.மாடசாமி, ஆர்ப்பாட்டத்திற்குத் தலைமை வகித்தார். விவசாயிகள் சங்க தாலுகா செயலாளர் ராமமூர்த்தி துவக்கவுரை ஆற்றினார். மாதர் சங்க மாவட்டத் தலைவர் சி.ஜோதிலட்சுமி கண்டன உரையாற்றினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் பி.பாண்டி, வாலிபர் சங்கம் சார்பில் கே.ஆர். பாண்டி ஆகியோர் உட்பட பலர் பங்கேற்றனர். ஆலங்குளம் ஆலங்குளத்தில் முனியசாமி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தைத் துவக்கி வைத்து, கரிசல் இயக்குநர் முனியாண்டி பேசினார். தீண்டாமை ஒழிப்பு முன் னணியின் மாவட்ட அமைப்பாளர் கே.சாமுவேல்ராஜ், ஒன்றியச் செயலாளர் எம்.சுந்தர பாண்டியன், அருந்ததியர் ஜனநாயக முன்னணியின் மாவட்டச் செயலாளர் பரமசிவம், எழுத்தாளர் பெருமாள்சாமி, சிஐடியு கன்வீனர் சேர்வை ஆகியோர் உட்பட பலர் பங் கேற்றனர். இராஜபாளையம் இராஜபாளையத்தில் சிஐடியு கன்வீனர் சக்திவேல் தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகரச் செயலாளர் ஜி.கணேசன் துவக்கவுரை ஆற்றினார். மாதர் சங்கம் சார்பில் கனகமுத்து, ஆர்.முருகன், பொன்ராஜ், சுப்பிரமணியன், அம்மாசி, பால்ராஜ், பொன்னுச்சாமி, அருந்தமிழர் விடுதலை இயக்கத்தின் பெருமாளம்மாள் ஆகியோர் உட்பட பலர் பங்கேற்றனர். இராஜபாளையம் மேற்கு ஒன்றியத்தில் ஏ.கருப்பையா தலைமை வகித்தார். விவசாயிகள் சங்க மாவட்ட துணைத் தலைவர் டி.நீராத்திலிங்கம் துவக்கவுரை ஆற்றினார். வாலிபர் சங்க மாநில துணைத் தலைவர் என்.முத்துராஜ் நிறைவுரை ஆற்றினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் ஏ.ராமர், கந்தசாமி ஆகியோர் உட்பட பலர் பங்கேற்றனர். வத்திராயிருப்பு வத்திராயிருப்பில் ஜீவானந்தம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. துவக்கி வைத்து என்.ஏ.சிங்கராஜ் பேசினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ்.பாலசுப்பிரமணியன் கண்டன உரையாற்றினார். ஒன்றியச் செயலாளர் சி.ஜெயக்குமார், சின்னத்தம்பி, அமலன், கன்னியம்மாள் ஆகியோர் உட்பட பலர் பங்கேற்றனர். சாத்தூர் சாத்தூரில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் கே.சுப்பாராஜ் தலைமை தாங்கினார். மாதர் சங்க மதுரை புறநகர் மாவட்டச் செயலாளர் எஸ்.கே.பொன்னுத்தாய் கண்டன உரையாற்றினார். மாதர் சங்க வட்டச் செயலாளர் சரோஜா, அருந்தமிழர் விடுதலை இயக்கத்தின் மாவட்டச் செயலாளர் தமிழ்ச்செல்வன், சீனிவாசன், விஸ்வநாத் ஆகியோர் உட்பட பலர் பங்கேற்றனர். அருப்புக்கோட்டை அருப்புக்கோட்டையில் மாரி, சந்திரன், இளங்கோ ஆகியோர், ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை வகித்தனர். ராஜாராம் துவக்கவுரை ஆற்றினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகரச் செயலாளர் எம்.தாமஸ் கண்டன உரையாற்றினார். இதில் கணேசன், ளகாளிமுத்து, மகராசி, நாச்சியார் ஆகியோர் உட்பட பலர் பங்கேற்றனர். பந்தல்குடி பந்தல்குடியில் எம்.ஞானப்பிரகாசம், ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கினார். விவசாயிகள் சங்க தாலுகா செயலாளர் ஆர்.அண்ணாத்துரை துவக்கவுரை ஆற்றினார். தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் எஸ்.ஞானகுரு கண்டன உரையாற்றினார். மாதர் சங்க மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.பூங்கோதை, தமிழ்ப் புலிகள் ஒன்றியச் செயலாளர் சரவணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் சந்திரமோகன் ஆகியோர் உட்பட பலர் பங்கேற்றனர். எரிச்சநத்தம் எரிச்சநத்தத்தில் விவசாயிகள் சங்க வட்டச் செயலாளர் பி.நேரு, ஆர்ப்பாட்டத்திற்குத் தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் எம்.முத்துக்குமார் துவக்கவுரை ஆற்றினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.சேகர் கண்டன உரையாற்றினார். கோவிந்தராஜ், மாரியப்பன், தமிழ்ப்புலிகள் சார்பில் முத்தையா, ஆதித் தமிழர் பேரவையின் சார்பில் வேல்முருகன் ஆகியோர் உட்பட பலர் பங்கேற்றனர். ஆர்.ஆர்.நகர் ஆர்.ஆர்.நகரில் கே.குமார் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் எம்.சி.பாண்டியன் துவக்கி வைத்துப் பேசினார். விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் ஏ.விஜயமுருகன் சிறப்புரை ஆற்றினார். இதில் பாலமுருகன், ஆரோக்கியராஜ் ஆகியோர் உட்பட பலர் பங்கேற்றனர். வன்னியம்பட்டி வன்னியம்பட்டி விலக்கில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு விவசாயிகள் சங்க வட்டத் தலைவர் ராமமூர்த்தி தலைமை வகித்தார். துவக்கி வைத்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் கே.பால்கண்ணன் பேசினார். விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் ஏ.குருசாமி கண்டன உரையாற்றினார். புரட்சிப் புலிகள் சார்பில் கோவிந்தன், சந்திரன், இருளப்பன், இசக்கி ஆகியோர் உட்பட பலர் பங்கேற்றனர். சிவகாசி சிவகாசியில் எஸ்.மாடசாமி, ஆர்ப்பாட்டத்திற்குத் தலைமை வகித்தார். புரட்சி புலிகள் அமைப்பின் மாநில அமைப்பாளர் எஸ்.கே.பழனிச்சாமி துவக்கவுரை ஆற்றினார். நகரச் செயலாளர் பி.என்.தேவா கண்டன உரையாற்றினார். சிஐடியு சார்பில் ஜே.லாசர், வாலிபர் சங்க நகரத் தலைவர் கே.முருகன் ஆகியோர் உட்பட பலர் பங்கேற்றனர். தேனி மாவட்டம் தேனியில் ஸ்டேட் பேங்க் திடலில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தீண்டாமை ஒழிப்பு முன்னணி அமைப்பாளர் டி.வெங்கடேசன் தலைமை வகித்தார். தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலப் பொறுப்பாளர் ஏ.லாசர் சிறப்புரையாற்றினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் கே.ராஜப்பன், அருந்ததியர் மக்கள் முன்னேற்ற இயக்க மாவட்ட அமைப்பாளர் எம்.ராஜேந்திரன், ஆதித் தமிழர் பேரவை மாவட்டச் செயலாளர் வி.வீரபாண்டியன், தமிழ்ப்புலிகள் மாவட்டச் செயலாளர் சி.ஆதிநாகராஜ், ஏஎச்ஆர்எப் ஒருங்கிணைப்பாளர் பி.முருகேசன், எஸ்.எம்.சுரேஷ்குமார், மாதர் சங்க தேனி மாவட்டச் செயலாளர் எம்.விஜயா, சி.மஞ்சுதா உட்பட நூற்றுக்கும் மேற்பட்ளடோர் பங்கேற்றனர். திருச்சிராப்பள்ளி மாவட்டம் திருச்சி ஜங்ஷன் காதி கிராப்ட் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, கட்சியின் மாநகரச் செயலாளர் கே.அண்ணாதுரை தலைமை வகித்தார். கிளைச் செயலாளர்கள் என்.நாகராஜ், சி.குமார், சி.சந்திரபிரகாஷ், எம்.வள்ளுவன், ஏ.வெங்கடாசலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.கே.மகேந்திரன் எம்எல்ஏ, மாவட்டச் செயலாளர் எஸ்.ஸ்ரீதர் ஆகியோர் சிறப்புரையாற்றினர். மாவட்டக் குழு உறுப்பினர்கள் கே.வி.எஸ்.இந்துராஜ், ஆர்.சம்பத், அன்வர் உசேன், பகுதிச் செயலாளர்கள் வீரமுத்து, குமார், ஜெயபால், ராஜேந்திரன், கார்த்தி, வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் வெற்றிச்செல்வன், மாவட்டத்தலைவர் சசிகுமார், மாதர் சங்க நிர்வாகிகள் சித்ரா, ரேணுகா உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். திருநெல்வேலி மாவட்டம் நெல்லை- பாளையங்கோட்டை ஜவஹர் மைதானத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட அமைப்பாளர் ஆர்.கிருஷ்ணன் தலைமை வகித்தார். அருந்ததியர் மகாசபை தலைவர் மரியதாஸ் முன்னிலை வகித்தார். எஸ்.சி. எஸ்.டி., நலச்சங்க மாவட்டச் செயலாளர் பூ.கோபாலன் ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்துப் பேசினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் வீ.பழனி, சிஐடியு மாவட்டத் தலைவர் ம.ராஜாங்கம், மாவட்டச் செயலாளர் ஆர்.கருமலையான், எஸ்.சி., எஸ்.டி. மத்திய - மாநில அரசு ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலா ளர் அம்பேத்கர், மாவட்டத் தலைவர் ஹரிராம், மக்கள் கண்காணிப்பகம் மாவட்ட நிர்வாகி கணேசன் ஆகியோர் பேசினர். மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் என்.நன்மாறன் எம்எல்ஏ நிறைவுரையாற்றினார். இடுகையிட்டது ஆதிகபிலன் நேரம் பிற்பகல் 6:02 லேபிள்கள்: 15.2.10 ஆர்ப்பாட்டம், ஆதித்தமிழர் பேரவை, கண்காணிப்பகம், தமிழ்ப்புலிகள், மகாசபை கீரிப்பட்டி ஊராட்சியை புறக்கணிப்பதா? ஊராட்சித் தலைவர் பால்ச்சாமி வேதனை தமிழகத்தில் பாப்பாபட்டி, கீரிப்பட்டி, நாட்டாமங்கலம், விருதுநகர் மாவட்டம் கொட்டக்காச்சியேந்தல் கிராம ஊராட்சிகளுக்கு இடதுசாரிகளின் தொடர் முயற்சி மற்றும் தமிழக முதல்வர் கருணாநிதியின் உரிய தலையீடுகள் காரணமாக வெற்றிகரமாக தேர்தல் நடைபெற்று தலித் தலைவர்கள் அங்கு பொறுப்பிலே உள்ளனர். குறிப்பாக இந்த ஊராட்சிகளில் தேர்தல் நடத்த வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினரும் வலியுறுத்தினர். வெற்றிபெற்ற ஊராட்சித் தலைவர்களுக்கு சென்னை கலைவாணர் அரங்கில் 13.11.2006 அன்று தமிழக முதல்வர் தலைமையில் சமத்துவப் பெருவிழா நடைபெற்றது. பாப்பாபட்டி, கீரிப்பட்டி, நாட்டாமங்கலம், கொட்டக்காச்சியேந்தல் ஊராட்சிகளில் அண்ணா மறுமலர்ச்சி திட்டப் பணிகளிலிருந்து அரசின் எந்த ஒரு நலத்திட்டப்பணியும் தொய்வின்றி நடைபெற வேண்டும் என தமிழக முதல்வர் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். ஆனால் இன்றைக்கு கீரிப்பட்டி ஊராட்சியில் செயல்படுத்த வேண்டிய பல்வேறு பணிகளுக்கு நிர்வாக ஒத்துழைப்பு இல்லை என கவலை தெரிவிக்கிறார் ஊராட்சித் தலைவர் பாலுச்சாமி. இதுகுறித்து பல்வேறு விஷயங்களை சுட்டிக் காட்டியுள்ள பாலுச்சாமி, 2008-2009ம் ஆண்டில் தாம் கையெழுத்திட்டு 80 பயனாளிகளுக்கு முதியோர் உதவித்திட்டத்திற்கு பரிந்துரை செய்ததாகவும், அதில் ஒருவருக்குக் கூட இன்று வரை உதவித்தொகை கிடைக்கவில்லை என்கிறார். மேலும் அவர் கூறியதாவது: தலித்மக்கள் வசிக்கும் தெருவிற்கு மேல்நிலை குடிநீர் தொட்டி கட்டித்தர வேண்டுமென மாவட்ட ஆட்சியராக இருந்த ஜவஹரிடம் வலியுறுத்தியும், அது இன்றும் நிறைவேறவில்லை; இங்கு அரசின் சார்பில் கட்டப்பட்டுள்ள சமுதாயக்கூடம் மணமகன், மணமகள் அறைகள் இல்லாமல் வெறுமனே விடப்பட்டுள்ளது; சமையல் அறை இல்லை; மழையின் போது நனைந்து கொண்டே சமைக்கும் அவலம் உள்ளது. அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் மூலம் கழிப்பறை ஒன்று 2006-2007ம் ஆண்டு கட்டிக்கொடுக்கப்பட்டது. இன்று வரை அது பூட்டப்பட்டே உள்ளது. இதற்கு மின்வசதி செய்து தரவில்லை. ரேசன் கடைக்கு மின் வசதி செய்துதரவில்லை. புதிதாக கட்டப்பட்ட ஊராட்சி அலுவலகத்திற்கும் மின்வசதி செய்துதரவில்லை. அண்ணா மறு மலர்ச்சி திட்டப்பணிகள் சம்பந்தமாக ஊராட்சித் தலைவர் என்ற முறையில் என்னிடம் கலந்தாலோசிப்பதில்லை. வேலை முடிந்த பிறகு, அந்த வேலை நடந்துள்ளது, இந்த வேலை நடந்துள்ளது என்கிறார்கள். இலவச கேஸ் அடுப்பு எத்தனை பயனாளிகளுக்கு வழங்கவேண்டும் என்று, லெட்டர் பேடில் எழுதிக் கொடுங்கள் போதும் என்றார்கள். கிட்டத்தட்ட 700 பயனாளிகளுக்கு வழங்க வேண்டுமென எழுதிக் கொடுத்தேன்; இன்னும் கேஸ் அடுப்பு கிடைக்கவில்லை. இவ்வாறு பாலுச்சாமி தனது குமுறலை அடுக்கிக் கொண்டே போனார். இடுகையிட்டது ஆதிகபிலன் நேரம் பிற்பகல் 6:00 லேபிள்கள்: ஊராட்சித்தலைவர், கீரிப்பட்டி, பால்ச்சாமி, பேட்டி சாதிவெறியர்கள் அராஜகம்: சிபிஎம் ஊழியர் மீது தாக்குதல் ஒட்டன்சத்திரம் அருகே உள்ளது கொசவபட்டி. இப்பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளைச் செயலாளராக பி.செல்வராஜ் உள்ளார். இவர் தலித் ஆவார். காப்பிளியபட்டியில் தண்ணீர் வழங்குவது சம்பந்தமாக ஏற்பட்ட பிரச்சனையில் இவரை, ஊராட்சித் தலைவர் இளங்கோவன் கடுமையாக தாக்கியுள்ளார். அதனால் செல்வராஜுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு- செல்வராஜ், 10 நாட்கள் சிகிச்சை பெற்றுள்ளார். ஆனால் காவல்துறையினர் இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்ய மறுத்துள்ளனர். இதுசம்பந்தமாக தீண்டாமை ஒழிப்பு முன்னணி தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளதுடன், பிப்ரவரி 16-ம் தேதி ஒட்டன்சத்திரத்தில் மறியல் போராட்டத்தையும் அறிவித்துள்ளது. இப்போராட்டத்தில் முன்னணியின் மாவட்ட அமைப்பாளர் கே.ஆர். கணேசன் உள்ளிட்டோர் கலந்து கொள்கிறார்கள். இடுகையிட்டது ஆதிகபிலன் நேரம் பிற்பகல் 5:59 லேபிள்கள்: ஒட்டன்சத்திரம், கொசவபட்டி, சாதிவெறியர்கள், தாக்குதல் வாலிபர் சங்கத்திற்கு அம்பேத்கர் பாசறை நன்றி கடலூர் மாவட்டத்தில், அரசமைப்புச் சட்ட சிற்பி அம்பேத்கர் சிலையை மீண்டும் நிறுவப்போராடிய வாலிபர் சங்கத்திற்கு புரட்சியாளர் அம்பேத்கர் விழிப்புணர்வு பாசறை பாராட்டும் நன்றியும் தெரிவித்தது. இதுதொடர்பாக இந்த அமைப்பின் பொதுச்செயலாளர் கோ.நீலமேகம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறப்பட்டிருந்ததாவது: கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் தாலுகா பழையபட்டிணம் கிராமத்தில் பொது இடத்தில் வைக்கப்பட்ட அண்ணல் அம்பேத்கர் சிலையை அகற்றியே தீருவோம் என திட்டம் போட்டு தீண்டாமைத் தீயை மூட்டும் செயலில் சில மத பழமைவாதிகள் இறங்கியபோது, சகோதரர்களாக இணைந்து வாழ வேண்டிய தலித்-முஸ்லிம் மக்களிடையே மோதல் நடக்க இருந்த நிலையில் ஒருசில தலைவர்களே சிலையை அகற்ற ஒப்புதல் அளித்து சாதிவெறிக்கு துணைபோனது வேதனைக்குரியது. துரோகத்தால் தலித் மக்கள் நிலை குலைந்தபோது, சாதி வெறியரோடு கூட்டு சேர்ந்து வருவாய் துறையும், காவல்துறையும், தலித் மக்களுக்கு எதிராக களம் இறங்கியபோது ஒடுக் கப்பட்ட மக்களின் உரிமை தோழன் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கிவரும் வாலிபர் சங்கத் தோழர்கள் டி.அமிர்தலிங்கம் தலைமையில் அணிதிரண்டு, பல கட்ட போராட்டங்கள் நடத்தி தலித் மக்களின் சுயமரியாதை காக்கவும், அம்பேத்கர் புகழுக்கு பெருமை சேர்க்கும் வகையிலும் ஈடுபட்டதைப் பாராட்டுகிறோம். தலைவர்களின் சிலையை அவமரியாதை செய்வோர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாயும் என தமிழக அரசு அறிவித்த நிலையிலும் இத்தகைய செயல் தொடர்கிறது. சமூக மாற்றத்திற்காக தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி இளைஞர்களை எழுச்சி பெற செய்யும் வாலிபர் சங்கம் சரியான நேரத்தில் தலையீடு செய்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து அம்பேத்கர் சிலைக்கு சட்ட பாதுகாப்பு ஏற்படுத்தியதோடு அவரின் புகழுக்கு பெருமை சேர்த்தது. தலித் மக்களுக்காக போராட்டங்கள் நடத்தி சுயமரியாதை ஏற்படுத்தி தந்த இடதுசாரி பாதையில் அணி வகுக்கும் வாலிபர் சங்கத் தலைவர்களுக்கும் தோழர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றியை புரட்சியாளர் அம்பேத்கர் விழிப்புணர்வு பாசறை தெரிவித்துக் கொள்கிறது. இவ்வாறு நீலமேகம் கூறியுள்ளார். இடுகையிட்டது ஆதிகபிலன் நேரம் பிற்பகல் 5:58 லேபிள்கள்: அம்பேத்கர் பாசறை, நன்றி, நீலமேகம், பழையபட்டினம், வாலிபர் சங்கம் தீண்டாமை ஒழிப்பு விருந்தல்ல, மருந்து! - பி.சம்பத் பாப்பாபட்டி, கீரிப்பட்டி, நாட்டார்மங்கலம், கொட்டக்கச்சியேந்தல் ஆகிய 4 ஊராட்சிகளில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு, தலித் பிரதிநிதிகள் ஊராட்சித் தலைவர்களாக தேர்வு செய்யப்பட்டமை, உத்தப்புரம் தீண்டாமைச் சுவர் உடைப்பு, கோவை பெரியார் நகர் தீண்டாமைச்சுவர் உடைப்பு, அருந்ததியர் மக்களுக்கு 3 சதவீத உள்இடஒதுக்கீடு போன்றவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, தலித் மற்றும் அருந்ததியர் அமைப்புகளின் வற்புறுத்தல் - போராட்டங்களால் கலைஞர் தலைமையிலான தமிழக அரசு ஏற்றுக்கொண்டு நிறைவேற்றப்பட்டவையாகும். இவ்வாறு தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகளை சிபிஐ(எம்) மற்றும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி வரவேற்கவே செய்தன. இவ்வாறு வரவேற்றதை அவ்வப்போது ‘முரசொலி’ பத்திரிகையும் மேற்கோள் காட்டி பல கட்டுரைகளை வெளியிடவும் செய்தது. ஆனால் 11-02-2010 தேதிய முரசொலியில் ‘மனிதநேயமும், மாசற்ற அரசியல் நாகரிகமும்’ என்ற தலைப்பிட்டு கலைஞர் அவர்கள் உடன் பிறப்புக்கு மடல் எழுத, அதனை பரவலாக பல பத்திரிகைகளும் வெளியிட்டுள்ளன. அதன் உள்ளடக்கத்திலும், வார்த்தை ஜாலத்திலும் நளினம் மட்டுமல்ல, இடதுசாரிகளுக்கு எதிரான வெறுப்பும் சேர்ந்தே வெளிப்படுவதை படிப்பவர்கள் உணர முடியும். சமீப காலமாக அருந்ததியர் மக்களும், அருந்ததியர் அமைப்புகளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலையீடுகளை வரவேற்று நடத்திவரும் விழாக்கள் கலைஞருக்கு உறுத்தலை ஏற்படுத்தியுள்ளன என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. கலைஞருக்கு ஒன்றைச் சொல்லிக்கொள்வோம். சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கலைஞருக்கு நடத்தப்பட்ட பாராட்டு விழாவில் “அருந்ததியர் உள்ஒதுக்கீடு கோரிக்கையை என்னிடம் யாரும் முன்வைக்கவில்லை, நானே என்னிடம் கோரிக்கை வைத்து நானே அதை நிறைவேற்றினேன்” என தன்னைத் தானே பாராட்டிக் கொண்டாரே அத்தகைய விழாக்கள் அல்ல இவை. 25 ஆண்டு கால அருந்ததிய மக்கள் மற்றும் அமைப்புகளின் போராட்டங்களை அங்கீகரித்து, அவர்களின் கோரிக்கைகளுக்காக மார்க்சிஸ்ட் கட்சி கடந்த 3 ஆண்டுகளாக நடத்திய போராட்டங்களை அம்மக்கள் வரவேற்று நடத்தப்படும் விழாக்கள் இவை. அருந்ததியர் மக்கள் - அமைப்புகள்- மார்க்சிஸ்ட் கட்சி - தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி இணைப்பை வலுப்படுத்தும் விழாக்கள் இவை. கலைஞர் சொல்வது போல இந்த விழாக்கள் தமிழக அரசின் செயலை இருட்டடிப்பு செய்யவுமில்லை. பிறகு ஏன் விருந்திட்டோருக்கு நன்றி கூறாமல் விருந்தை அருந்தியவர்களுக்கு நன்றியும் பாராட்டுமா என கலைஞர் சாடுகிறார்? இதன் நோக்கம் ஒன்றே ஒன்றுதான். தலித் மற்றும் அருந்ததியர் மக்களின் சமீபகால வெற்றிகளில், சிபிஐ(எம்) தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி உள்ளிட்ட இடதுசாரிகளுக்கு எந்த பங்கும் இல்லை- எல்லாமே தன் சாதனைதான் - தானே அறிந்து புரிந்து தலையிட்டு தீர்வு கண்டவைதான் என மக்களிடம் தம்பட்டமடித்து அரசியல் ஆதாயம் தேடத்தான். எனவேதான் “பல ஆண்டு காலமாக நடைபெறாமல் இருந்த, நடைபெற்றாலும் உயிருடன் இருக்க முடியாத ஊராட்சிமன்ற தேர்தல்களை பாப்பாபட்டி, கீரிப்பட்டி, நாட்டார்மங்கலம், கொட்டக்கச்சி யேந்தல் ஆகிய ஊர்களில் நடத்த முன்வந்த ஆட்சி எது? இருபதாண்டு காலமாக இருந்த தீண்டாமைச்சுவர் என திகழ்ந்த தீய சுவர்களை இடித்து எறிந்தது எந்த ஆட்சி - யார் துணையோடு? கோரிக்கை வைத்தவர்களின் துணையோடா? அல்லது இந்த ஆட்சியின் அதிகாரிகளைக் கொண்டு நடத்தப்பட்ட நிகழ்வா?” என கேள்விக்கணைகளைத் தொடுக்கிறார். இதன் மூலம் தீண்டாமைக் கொடுமைகளை ஆய்வுசெய்து கண்டறிந்து அம்பலப்படுத்தி, அரசின் கவனத்திற்கு கொண்டு வந்து, மக்களைத் திரட்டி இயக்கம் நடத்திய இடதுசாரி அமைப்புகளின் பங்கை உதாசீனப்படுத்துகிறார். கலைஞரிடம் நாம் சில கேள்விகளை முன் வைக்க விரும்புகிறோம். 5 முறை முதல்வராக இருந்தீர்களே? -அதிகாரிகள், காவலர்கள் புடைசூழ ஆட்சி நடத்துகிறீர்களே - தமிழகத்தின் பெரிய அரசியல் கட்சியாக திமுக இருக்கிறதே? உங்களால் ஏன் தமிழ்நாட்டில் பல்லாயிரம் கிராமங்களில் இன்றளவும் நிலவும் தீண்டாமைக் கொடுமைகளுக்கு முடிவு காண முடியாமல் போயிற்று. உத்தபுரம், பெரியார் நகர் தீண்டாமைச்சுவர்களை 20 ஆண்டுகாலத்தில் நீங்களே கண்டறிய முடியாமலும், அல்லது தமிழக அரசு நிர்வாகத்தின் கவனத்திற்கு சில ஆண்டுகள் முன்பே புகாராக வந்தும், தகர்த் தெறிய முடியாமலும் போயிற்று? அருந்ததியர் உள்ஒதுககீடு கோரிக்கையை உங்களது கடந்த கால ஆட்சியில் ஏன் நிறைவேற்ற முடியாமல் போயிற்று? தமிழகக் கிராமங்களில் பல நூறு கோவில்களில் தலித்துகள் இன்றளவும் நுழைய முடியவில்லை என்பது உண்மைதானே? இரட்டைக்குவளை முறை, பொதுப்பாதை மறுப்பு, மயான உரிமை இல்லாமை, மயான பாதை இல்லாமை என பல ஒடுக்கு முறைகள் உள்ளனவே, இவற்றை ஒழிக்க என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்? தலித் மக்களின் சமூக, பொருளாதார உரிமைகளை நிலை நாட்ட பெரியார் பாதையை உறுதியுடன், ஏன் கடைப்பிடிக்கவில்லை - காங்கியனூர்-உத்தபுரம் போன்ற கிராமங்களில் தலித் மக்கள் மீது போலீஸ் தடியடி நடத்தியது? பலரையும்சிறையில் அடைத்தது ஏன்? இவை எல்லாம் வெறும் கேள்விகள் அல்ல. உண்மைகள். ஆக, கடந்த 42 ஆண்டுகால திராவிட இயக்கக் கட்சிகள் ஆட்சிக்காலத்தில் தமிழ் நாட்டில் தீண்டாமைக் கொடுமைகளை ஒழிக்க முடியவில்லை என்பது மட்டுமல்ல; 20 ஆண்டுகால உத்தபுரம், பெரியார்நகர் தீண்டாமைச் சுவர்கள் போல பல ஒடுக்கு முறைகள் வெளித்தெரியாமல் மறைத்து வைக்கப்பட் டுள்ளன என்பதை கலைஞர் மறுக்க முடியாது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி போன்ற இடது சாரி இயக்கங்கள் பல்லாயிரம் கிராமங்களில் ஆய்வு செய்து, அமுக்கப்படும் தீண்டாமைக் கொடுமைகளை வெளிக்கொணர்ந்து, தலித் மக்களின் சமூக - பொருளாதார உரிமைகளுக்காகப் போராடி வருகின்றன. பல தலித் மற்றும் அருந்ததியர் அமைப்புகளையும் இப்போராட்டத்தில் இணைத்துக் கொள்கின்றன. இப்போது நடை பெறும் இயக்கங்களும், விழாக்களும் இதன் ஒருபகுதிதான். பெரியார் பாதையில் நடைபோடுவதாகக் கூறும் திமுக அரசு இப்பிரச்சனைகளில் தலையிட்டு தலித் மக்களின் உரிமைகளை நிலை நாட்ட முன்வருவது அதன் சட்டபூர்வமான கடமையாகும். தீண்டாமை ஒழிப்பு என்பது கலைஞர் சொல்வது போல விருந்து அல்ல. சமூகப் பிணிபோக்கும் மருந்து. தமிழ்நாட்டின் இன்றைய நிலையில் தீண்டாமை ஒழிப்பு என்ற மருத்துவம் பெரிய அளவில் சமுதாயத்தை சீர்படுத்த தேவைப்படுகிறது. இடதுசாரி இயக்கங்கள் இதற்கான பங்களிப்பை மேலும் வலுப்படுத்தும். தமிழக அரசும் தனக்குரிய சட்டபூர்வமான கடமையை நிறைவேற்ற முன்வரவேண்டும். மாநில அளவில் முதல்வர் தலைமையில் அமைக்கப்பட்ட தீண்டாமை ஒழிப்புக்குழு ஒரு முறைகூட கூடவில்லை என்பது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி வெளிவந்த ஒரு தகவலாகும். மாவட்ட அளவில், தமிழக அர சால் சம்பிரதாயமாக அமைக்கப்பட்டுள்ள தீண்டாமை ஒழிப்புக்குழுக்கள் செயல்படவில்லை என்பதை உணர்ந்து, தீண்டாமை ஒழிப்பில் அக்கறையுள்ள அமைப்புகளையும், ஆர்வலர்களையும் உள்ளடக்கி ஆய்வுக்குழுக்களை அமைத்து தமிழகத்தில் பரவலாகக் காணப்படும் தீண்டாமைக் கொடுமைகளை வெளிக்கொணர வேண்டும். கலைஞர் கூறுவது போல இவை அங்கொன்றும் இங்கொன்றுமாக இல்லை என்பதை உணர வேண்டும். இக்கொடுமைகளுக்கு முடிவு கட்ட உருப்படியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, தமிழக அரசிடம் வலியுறுத்தியபடி சட்டபூர்வமான அந்தஸ்தும், அதிகாரமும் கொண்ட தேசிய ஆணையம் போல தமிழ்நாடு தலித்-பழங்குடி ஆணையம் ஒன்றை அமைக்க வேண்டும், வன்கொடுமைத் தடுப்புச் சட்டங்களை உறுதியாக அமல்படுத்த வேண்டும், அருந்ததியர் மக்கள் பிரச்சனைகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தீண்டாமை ஒழிப்பு முன்னணியிடம் முதல்வர் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்ற வேண்டும். கட்டுரையாளர்: மாநில அமைப்பாளர், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி இடுகையிட்டது ஆதிகபிலன் நேரம் பிற்பகல் 5:57 லேபிள்கள்: கட்டுரை, பி.சம்பத், மருந்து, விருந்தல்ல தீண்டாமைச் சுவர் அகற்றம்: மார்க்சிஸ்ட் கட்சிக்கு திருமண அமைப்பாளர்கள் நன்றி கோவையில், தீண்டாமைச் சுவரை அகற்ற நடவடிக்கைகள் மேற்கொண்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு, அனைத்து இன திருமண அமைப்பாளர்கள் ஒருங்கிணைப்புக்குழு நன்றி தெரிவித்தது. இதுகுறித்து அச்சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் தமது அறிக்கையில் குறிப்பிட்டு இருந்ததாவது: கோவை வரதராஜபுரம் பெரியார் நகரில், 21 ஆண்டுகாலமாக இருந்த தீண்டாமைச் சுவரை அகற்ற துணை நின்ற மார்க்சிஸ்ட் கட்சிக்கும், தீண்டாமை ஒழிப்பு முன்னணிக்கும் எங்கள் சங்கத்தின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் தீண் டாமைக்கு எதிரான பணிகள் தொடரவும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது. இடுகையிட்டது ஆதிகபிலன் நேரம் பிற்பகல் 5:56 லேபிள்கள்: கோவை, திருமண அமைப்பாளர்கள், தீண்டாமைச் சுவர், நன்றி வியாழன், 4 மார்ச், 2010 அகற்றப்பட்ட அதே இடத்தில் அம்பேத்கார் சிலையை நிறுவ வேண்டும்- வாலிபர் சங்கம் தொடுத்த வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு! கடலூர் மாவட்டம், பழையபட்டினம் கிராமத்தில் அகற்றப்பட்ட அதே இடத்திலேயே டாக்டர் அம்பேத்கரின் சிலையை மீண்டும் நிறுவ வேண்டும் என்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் தொடுத்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. கடலூர் மாவட்டம், விருத்தாசலம் வட்டத்தில் உள்ளது பழையபட்டினம் கிராமம். இக்கிராமத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்கச் சென்றவர்கள் கைது என்று தினசரி பத்திரிகைகளில் செய்திகள் வந்த வண்ணம் இருந்தன. இதனையடுத்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் பழையபட்டினம் கிராமத்திற்கு விசாரித்தனர். அப்போது அந்த கிராம மக்கள் தெரிவித்த விவரங்கள் வருமாறு: - பல்வேறு சமூகத்தை சேர்ந்த மக்கள் பழையபட்டினம் கிராமத்தில் வசித்து வந்தாலும், தலித் மக்கள்தான் பெரும்பான்மையாக இருக்கிறோம். இந்நிலையில், கடந்த 2008-ம் ஆண்டு கிராமத்தின் பொது இடத்தில்- நூலகம், ஊராட்சி மன்ற கட்டிடம் உள்ள இடத்தில்- அம்பேத்கர் சிலை நிறுவப்பட்டது. அதுவரை பொதுமையாக இருந்த ஒரு தரப்பினர் (முஸ்லிம்கள்) அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்கக் கூடாது என்றும், அந்த சிலையை அகற்ற வேண்டும் என்றும் குரல் எழுப்பி வந் தனர். இவர்களுக்கு ஆதரவாக அரசு எந்திரம் செயல்பட்டது. மேலும், விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் தொல்.திருமாவளவனை சந்தித்த அந்த சமூக மக்கள், அம்பேத்கர் சிலையை அகற்ற வேண்டும் என்றும் கூறவே, அவரும் சிலையை அகற்றி வேறு இடத்தில் வைக்க சம்மதம் தெரிவித்து எழுத்துப் பூர்வமாக கடிதம் கொடுத்தார். இது எங்கள் தலித் மக்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து, எந்த தரப்பிற்கும் இடையூறு இன்றி பொது இடத்தில் உள்ள சட்டமேதை அம்பேத்கர் சிலையை அப்புறப்படுத்தக் கூடாது என்றும், அவர் சிலைக்கு மாலை அணிவிக்கும் போராட்டத்தையும் வாலிபர் சங்கம் அறிவித்தது. அதன்படி கடந்த டிசம்பர் மாதம் 25ம் தேதி வெண்மணி தியாகிகள் நினைவு தினத்தன்று தீண்டாமை ஒழிப்பு தினமாக கடைப்பிடித்து போராட்டத்தை நடத்தியது. இதற்கு அந்த கிராம மக்களும் ழுழு ஆதரவும் தெரிவித்தனர். அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்கச் சென்ற வாலிபர் சங்கத்தினர் 200 பேரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதோடு கைது செய்தனர். மேலும் ஏராளமான காவல்துறையினரை குவித்து பதட்டத்தை ஏற்படுத்தியதோடு கிராமத்திற்குள் யாரையும் நுழைய விடாமல் அராஜகத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையில் அந்த சிலையை அகற்றி வேறு இடத்தில் வைப்பதற்கான முயற்சியில் காவல்துறையும், வருவாய்த் துறையும் ஈடுபட்டு வந்தது. இதனால் வாலிபர் சங்கத்தின் பழையபட்டினம் கிளைச் செயலாளர் டி.அமிர்தலிங்கம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடர்ந்தார். அந்த வழக்கில் அம்பேத்கர் சிலை யை அகற்ற தடை விதிக்க வேண்டும் என்று அவர் கோரியிருந்தார். இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கோகலே, நீதிபதி சசி தரன் ஆகியோர் 2010 ஜனவரி மாதம் 20ம் தேதி வரை தடை ஆணையை பிறப்பித்தனர். இதனை அறிந்த காவல்துறையும், வருவாய்த்துறையும் கடந்த ஜனவரி மாதம் 20-ம் தேதி நள்ளிரவில் நீதி மன்றத்தின் உத்தரவை மீறி சிலையை அகற்றி, தலித் மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள குளத்தை சமப்படுத்தி அம்பேத்கர் சிலையை நிறுவிவிட்டுச் சென்றனர். இந்த சம்பவத்தின் போது பழையபட்டினம் கிராமத்திற்குச் சென்று தலித் மக்களை வீட்டிலிருந்து வெளியே வர விடாமல் காவல் துறையினரை குவித்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். காவல்துறையினரின் இந்த அராஜகச் செயல் தலித் மக்களிடையே மேலும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனால் வாலிபர் சங்கத்தின் கிளைச் செயலாளர் அமிர்தலிங்கம் நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கை தொடர்ந்தார். இம்மனுவை ஏற்றுக்கொண்ட உயர் நீதிமன்றம் பல கட்ட சாட்சியங்களை விசாரணை செய்தது. பின்னர் குழு ஒன்றையும் அமைத்தது. உயர்நீதிமன்ற பதிவாளர் விஜயன் தலைமையில் 5 வழக்கறிஞர்கள் பழையபட்டினம் கிராமத்திற்கு நேரில் சென்று ஆய்வறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். இந்த வழக்கிற்காக கிராம மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் 2 முறை சென்னை சென்று சாட்சி யம் கூறினார்கள். இதேபோல் காவல்துறையினர், வருவாய்த்துறையினர் சாட்சியம் அளித்தனர். இந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கோகலே, நீதிபதி சசிதரன் ஆகி யோர் வியாழனன்று தீர்ப்பளித்தனர். அதில் மிகப்பெரிய தலைவர்களின் சிலைகளை அவமதித்த காவல்துறை, வருவாய்த்துறையினரை இந்த நீதிமன்றம் வன்மையாக கண்டிக்கிறது என்றனர். நீதிமன்றத்தின் தடை உத்தரவையும் மீறி இரவு 11 மணிக்கு மேல் சிலையை அப்புறப்படுத்திய தையும் கண்டிக்கிறது. அம்பேத்கர் சிலையை ஏற்கனவே இருந்த பொது இடத்திலேயே மீண்டும் நிறுவ வேண்டும். பிப்ரவரி 20 இறுதிக்குள் மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் திறப்பு விழா நடத்த வேண்டும் என்றும், சிலையை அப்புறப்படுத்திய வட்டாட்சியர், காவல்துறை துணைக் கண்காணிப்பாளர், ஆய்வாளர் ஊதியத்தில் இருந்து ரூ. 20 ஆயிரம் பிடித்தம் செய்து மனுதாரர் அமிர்தலிங்கத்துக்கு வழங்க வேண்டும் என்றும் நீதிபதிகள் அந்த தீர்ப்பில் உத்தரவிட்டனர். மனுதாரர் சார்பில் உயர்நீதி மன்ற வழக்கறிஞர்கள் திருமூர்த்தி, தியாகு, புருஷோத்தன் ஆகியோர் ஆஜரானார்கள். இந்த தீர்ப்பு குறித்து வாலிபர் சங்க கடலூர் மாவட்ட தலைவர் என்.அசோகன் கூறுகையில், இது வாலிபர் சங்கத்தின் தொடர் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என்றும் நீதி நியாயம் வென்றுள்ளது என்றும் தெரிவித்தார். நீதிமன்ற தீர்ப்பை தலித் மக்கள் வரவேற்றுள்ளதோடு வாலிபர் சங்கத்திற்கு பாராட்டுகளை தெரிவித்தனர். இடுகையிட்டது ஆதிகபிலன் நேரம் பிற்பகல் 6:59 லேபிள்கள்: அம்பேத்கர் சிலை, உயர்நீதிமன்றம் உத்தரவு, பழையபட்டினம், வாலிபர் சங்கம் தோளோடு தோள்நின்று போராட ரவிக்குமார் அழைப்பு கோவை பெரியார் நகரில் நடைபெற்ற பாராட்டு விழாவில், ஆதித்தமிழர் விடுதலை முன்னணியின் மாநில அமைப்பாளர் கோவை இரவிக்குமார் பேசியதாவது: 25 ஆண்டுகாலமாக அருந்ததியர் உள்இடஒதுக்கீட்டு கோரிக்கை சமூகத் தளத்தில் இருந்தது. அதனை பொதுத்தளத்தில் எதிரொலித்து வெற்றியை ஈட்டித்தந்தது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிதான். தீண்டாமை ஒழிப்பு முன்னணி உருவான போது மற்ற கட்சிகளில் உள்ளது போன்று தலித் மக்களுக்கு பதவி தந்து கவுரவப்படுத்தும் ஓர் அமைப்பு என்றே நினைத்தோம். ஆனால் தலித் அல்லாதோரும் பொறுப்பேற்று, உருவான நான்காண்டு காலத்தில் எங்கு அநீதி நடந்தாலும் அருந்ததியர் இயக்கங்களுடன் இணைந்து களம் காண்கிறது. கத்தியின்றி, ரத்தமின்றி பெரும் போராட்டங்களின்றி தீண்டாமைச்சுவர் வெற்றிகரமாக அகற்றப்பட்டது. நாங்கள் போராடிய போதும், முறையிட்ட போதும் அரசு கேட்கவில்லை. உத்தப்புரத்தை ‘உத்தமபுரமாக’ மாற்றுவதாகச் சொன்ன முதல்வர், மார்க்சிஸ்ட் கட்சி தலையிட்டதும் நடவடிக்கை எடுத்தார். ஆதித்தமிழர் விடுதலை முன்னணி சார்பில் மார்க்சிஸ்ட் கட்சிக்கு எங்கள் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேற்கு மாவட்டங்களில் இதேபோன்ற சமூக ஒடுக்குமுறைகளுக்கு எதிராக எங்களுடன் தோளோடு தோள் நின்று போராட வாருங்கள் என்று கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு ரவிக்குமார் பேசினார். இடுகையிட்டது ஆதிகபிலன் நேரம் பிற்பகல் 6:58 லேபிள்கள்: கோவை, பாராட்டு விழா, ரவிக்குமார் பேச்சு தீண்டாமைக்கு எதிரான போரில் அனைவரும் இணைய என்.வரதராஜன் அழைப்பு தீண்டாமைக்கொடுமைக்கு எதிரான போராட்டத்தில் யாரையும் வேறுபடுத்தி பார்க்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விரும்பவில்லை. ஜனநாயக, சமூகநீதி சக்திகள் இந்த போராட்டத்தில் இணைந்திட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் என்.வரதராஜன் குறிப்பிட்டார். கோவை 10-வது வட்டம் தந்தை பெரியார் நகரில் 21 ஆண்டுகாலமாக நீடித்த தீண்டாமைச் சுவரை அகற்ற போராடியதற்காக புதனன்று நடைபெற்ற நன்றி பாராட்டு விழாவில் பேசுகையில் அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் பேசியதாவது: தீண்டாமைக் கொடுமை கண்டு வெகுண்டெழுந்து வைக்கம் வரை சென்று போராடியவர் தந்தை பெரியார். ஆனால் இங்கு பெரியார் நகர் அருந்ததியர் மக்களை பொது வழியில் செல் லவிடாமல் வழிமறித்து 21 ஆண்டுகளாக தீண்டாமை சுவர் நீடித்துள்ளது. சுவருக்கு அந்தப்பக்கமும் இந்தப்பக்கமும் உள்ளவர்கள் பஞ்சாலைத் தொழிலாளர்கள்தான். அங்கு ஒன்றாக கூலிப் போராட்டத்தை நடத்த வேண்டியவர்கள்தான். இங்குள்ள தீண்டாமைச் சுவரை அகற்றியதற்காக தமிழக முதல்வரைப் பாராட்டுகிறோம். கார் டிரைவருக்கு முக்கிய பணி கார் ஓட்டுவது. அதற்காக அவரை யாரும் பாராட்டிக் கொண்டிருப்பதில்லை. இருந்தாலும் விபத்தில்லாமல் லாவகமாக கார் ஓட்டியதற்காகப் பாராட்டுவோம். அதை விடுத்து நேரெதிர் திசையில் வந்தால் விபத்து தான் ஏற்படும். தமிழகத்தில் 50 இடங்களில் புதைகுழிச் சாக்கடைகள் உள்ளன. அவற்றில் இறங்கி அப்புறப்படுத்துவது யார்? அருந்ததிய இளைஞர்கள்தானே. தமிழகம் முழுவதுமுள்ள சுடுகாடுகளில் பிணம் எரிப்பது, புதைப்பதும் யார்? தலித் மக்கள்தானே. சென்னையில் மட்டும் சாக்கடை அள்ள இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. அதேபோல் அங்கு மட்டும் தான் 173 மயானப் பணியாளர்கள் அரசு ஊழியர்கள் ஆக்கப்பட்டுள்ளனர். இதனைத் தமிழகம் முழுவதும் விரிவுபடுத்திக் கொண்டுவர வேண்டும் என்கிறோம். தரிசு நில, புறம்போக்கு நில விநியோகம் என்றால், தொகுப்பு வீடுகள் கட்டித்தருவது என்றால், அதில் முதல் நபராக அருந்ததியருக்குக் கொடு என்கிறோம். 63 ஆண்டுகால சுதந்திர வாழ்வில் அருந்ததியர் வாழ்நிலை இன்னும் நிமிரவில்லையே? கட்டுவதற்குத் துணியின்றி, குந்தக் குடி சையின்றி பரிதவிக்கிறார்களே. இந்த அவலத்தைப் போக்க அனைவரும் எழுந்து போராட வேண்டும், தீண்டாமையை ஒழிக்க பாடுபட வேண்டும். இதில் நாங்கள் யாரையும் வேறுபடுத்திக் பார்க்கவில்லை. இந்தியப் பணம் ரூ. 90 லட்சம் கோடி சுவிஸ் வங்கியில் உள்ளதே. இதற்கும் விலைவாசி உயர்வுக்கும் தொடர்பு இல்லையா? தாங்கமுடியாத விலைவாசியால் பல குடும்பங்கள் நொறுங்கிப் போயிருக்க, ஆன்-லைன் வர்த்தக அனுமதியால் பெருமுதலாளிகள் கொள்ளையடிக்கிறார்கள். அதை எதிர்த்த போராட்டத்திலும் அனைவரும் ஒன்றுபட வேண்டும். இவ்வாறு என்.வரதராஜன் பேசினார். இடுகையிட்டது ஆதிகபிலன் நேரம் பிற்பகல் 6:58 உத்தப்புரத்தின் உந்துசக்தியே கோவை வெற்றி உத்தப்புரத்தின் தீண்டாமைச்சுவரை அகற்றியதில் பெற்ற உந்துசக்தியால்தான் கோவை தீண்டாமைச் சுவரும் உடனடியாக அகற்றப்பட்டு வெற்றி கிட்டியது என்று கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் கூறினார். கோவை தந்தை பெரியார் நகர் மக்களின் சார்பில் நடந்த நன்றி பாராட்டு விழாவில் அவர் கலந்து கொண்டு பேசியதாவது: இங்கு பேசிய இரவிக்குமார் தீண்டாமைச்சுவர் உடனடியாக அகற்றப்பட்டது என்றார். இது சும்மா நடக்கவில்லை. மதுரை மாவட்டம் உத்தப்புரத்தில் இருந்த தீண்டாமைச் சுவரை அகற்றியதால் பெற்ற உந்து சக்தியால்தான் இது நடந்தது. உத்தப்புர தீண்டாமைச் சுவரை அகற்றுவதற்கு மார்க்சிஸ்ட் கட்சியின் நெடிய போராட்டமும், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டதும், உத்தப்புரம் மக்களின் பல நாள் சிறைவாசமும் காரணமாக இருந்தன. உத்தப்புரம் ஒரு கிராமம். ஆனால் கோவை நகர்ப்புறம். கடந்த காலத்தில் இதை கவனிக்கவில்லை. தெரியவந்தவுடன் அதிரடி நடவடிக்கையில் இறங்கினோம். இவ்வாறு பி.ஆர்.நடராஜன் பேசினார். விழாவில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச்செயலாளர் யு.கே.வெள்ளிங்கிரி, மாநிலக்குழு உறுப்பினர் கே.சி.கருணாகரன், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் கோவை மாவட்ட அமைப்பாளர் யு.கே.சிவஞானம், சிபிஎம் சிங்கை நகரச் செயலாளர் கே.மனோகரன் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர். நூற்றுக்கணக்கான பொதுமக்கள் விழாவில் பங்கேற்றனர். இடுகையிட்டது ஆதிகபிலன் நேரம் பிற்பகல் 6:57 லேபிள்கள்: கோவை, பாராட்டு விழா, பி.ஆர்.நடராஜன் எம்.பி பேச்சு, பெரியார் நகர் சுவரை உடைத்தது மக்களை ஒன்றுபடுத்தத்தான்! பஞ்சாலைகளில் மகத்தான கூலிப்போராட்டங்களை நடத்திக் காட்டியவர்கள் கோவை மக்கள். அவர்களை ஒன்றிணைப்பதற்காகவே தீண்டாமைச் சுவர் உடைக்கப்பட்டது என்று தமிழ்நாடு தீண் டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில அமைப்பாளர் பி.சம்பத் பேசினார். கோவை சிங்காநல்லூரில், தந்தை பெரியார் நகர் அருந்ததிய மக்கள் சார்பில் நடந்த பாராட்டு விழாவில் அவர் மேலும் பேசியதாவது: உடைக்கப்பட்ட தீண்டாமைச்சுவரைப் பார்வையிடுவதற்காக நான் இப்பகுதிக்கு வந்த போது, இம்மக்களின் ஏக்கத்தைக் கண்டேன். சாதியைக் காக்கவும் ஒரு பிள்ளையாரா என்று நெஞ்சம் கலங்கியது. இது ஒடுக்குமுறை அல்லவா? 2007-ம் ஆண்டு மே மாதம் உத்தப்புரம் தீண்டாமைச் சுவரைக் கண்டறிந்து அகற்றக் கோரிய போது முதலில் தமிழக அரசு செவிசாய்க்கவில்லை. மனித உரிமை மறுக்கப்பட்ட தலித் மக்கள் ஆயிரம் பேருடன் பிறபகுதிகளைச் சேர்ந்த மக்கள் ஆயிரம் பேரும் திரண்டு மதுரையில் மாபெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்தினார்கள். பின்னர் பிரகாஷ்காரத் நேரில் வருவதாக அறிவித்தவுடன் உடனடியாக அரசு, சுவரின் ஒரு பகுதியை மட்டும் இடித்து வழி ஏற்படுத்தியது. காலம் தாழ்த்தினாலும் சுவரை இடித்த தமிழக அரசைப் பாராட்டினோம். கோவை நகரின் இந்த தீண்டாமைச்சுவர் பிரச்சனையிலும் அரசுக்கு உத்தப்புரம் ஞாபகம் வந்திருக்கும். ‘சுவரை இடி, இல்லாவிட்டால் இடிப்போம்,’ என்று நாம் நிர்ப்பந்திப்போம் என்று அறிந்துதான் தமிழக அரசே சுவரை இடித்துள்ளது. இதற்கும் தமிழக முதல்வரைப் பாராட்டுகிறோம். இச்செயலை விரைவாகச் செய்தார்கள் என்பதற்காக ‘நானல்லவோ விருந்து படைத்தேன். விருந்து படைத்தோரை விடுத்து, விருந்துண்டோரைப் பாராட்டலாமா?’ என்கிறார் முதல்வர். அடுக்கப்பட்ட மூட்டைகளில் அடிமூட்டையாக உள்ள அருந்ததியர்களுடன் இணைந்து விருந்துண்பதற்காக மகிழ்கிறோம். ஒற்றுமைப்படுத்திப் பேசிய கலைஞரைப் பாராட்டுகிறோம். சுவரை இடித்தபோது நானும், என்.வரதராஜனும் திண்டுக்கல்லில் இருந்தோம். தகவலறிந்த ஒரு மணி நேரத்தில் முதல்வரைப் பாராட்டினோம். நாங்கள் சொன்னோம், நீங்கள் செய்தீர்கள். அதனால் பாராட்டுகிறோம். ஆனால் திமுக ஐந்து முறை தமிழகத்தை ஆண்டுள்ளது. கடந்த 40 ஆண்டு கால திராவிட ஆட்சியில் இதுபோன்ற தீண்டாமைச்சுவர்களைக் கண்டறிந்தீரா? தமிழகம் முழுவதும் தீண்டாமை தலைவிரித்தாடுகிறதே? அரசு நிர்வாகத்தில் ஆட்சியர், எஸ்.பி., ஆணையர், தாசில்தார் என்று எத்தனை அதிகாரிகள், நிர்வாக அமைப்புகள்? அதனைக் கொண்டு ஏதேனும் நடவடிக்கை எடுத்தீரா? அந்தப் பொறுப்பேதும் அரசுக்கு இல்லையா? நீங்கள் உங்கள் கடமையைத்தான் செய்தீர்கள். இருந்தாலும் உடனே செய்தீர்கள் என்பதால் பாராட்டினோம். பிறகு ஏன் எரிச்சல்படுகிறீர்கள்? இங்கு வரும்போது சில பெண்கள் சொன்னார்கள், ‘நாங்கள் ஒரு பாவமும் செய்யவில்லை,’ என்று. நமது வாழ்வை நொறுக்கும் விலைவாசி உயர்வை எதிர்த்துப் போராட விடாமல் தீண்டாமை, சாதிய வேறுபாடுகளைக் காட்டி நம்மைப் பிரிக்கப் பார்த்திருக்கிறார்கள். தற்போது உடைபட்ட சுவர்கள் இந்தியா முழுவதும் அதிர்வை ஏற்படுத்தும். ஆதிக்கச் சுவர்கள் இப்போதே அதிர்ந்துதான் போயுள்ளன. தீண்டாமை அவலம் ஜனநாயகத்திற்கே மிகப்பெரும் சவால். இவ்விழா, மகத்தான போராட்டங்களுக்கான கால்கோள் விழா. அரசியல் சட்டத்தின் சிற்பி அம்பேத்கர் சொன்னார்: நான் உருவாக்கிய அரசியல் சட்டம் அமலாகும் போதும் தலித் மக்கள் தீண்டாமைக் கொடுமைக்கு ஆட்படுகிறார்கள். நீங்கள் இச்சட்டங்களை மட்டும் நம்பி நிற்காதீர்கள். ஜனநாயக சக்திகளுடன் ஒன்றுபட்டு போராடுங்கள் என்று அறைகூவி அழைத்தார். அதன்படி மார்க்சிஸ்ட் கட்சி மக்களை ஒன்றுபட்டு நிறுத்தி வென்று காட்டும். இவ்வாறு பி.சம்பத் பேசினார். இடுகையிட்டது ஆதிகபிலன் நேரம் பிற்பகல் 6:57 லேபிள்கள்: கோவை பெரியார் நகர், பாராட்டு விழா, பி.சம்பத் பேச்சு கோவை பெரியார் நகர் மக்கள் சார்பில் என்.வரதராஜனுக்கு உணர்ச்சிமிகு வரவேற்பு கோவை தந்தை பெரியார் நகருக்கு வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் என்.வரதராஜனை, தாரை தப்படையுடன், வாண வேடிக்கை முழங்க ஆரத்தி எடுத்து அருந்ததியர் மக்கள் வரவேற்றனர். கோவை, சிங்கை 10-வது வட்டம் தந்தை பெரியார் நகரில் 21 ஆண்டுகாலமாக நீடித்த தீண்டாமைச் சுவர், மற்றும் அதனைக்காக்க வைத்திருந்த பிள்ளையார் சிலை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி, ஆதித்தமிழர் விடுதலை முன்னணி ஆகியவற்றின் தொடர் தலையீட்டிற்குப் பின் தமிழக அரசால் அகற்றப்பட்டது. அருந்ததியர் மக்களின் பயன்பாட்டுக்கு முழுமையாக பொது வழி கிடைத்தது. இதையடுத்து, தீண்டாமைச் சுவரை அகற்ற பாடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தீண்டாமை ஒழிப்பு முன்னணிக்கு நன்றி பாராட்டு விழாவை பெரியார் நகர் அருந்ததியர் மக் களும், ஆதித்தமிழர் விடுதலை முன்னணியினரும் நடத்தினர். இப்பாராட்டு விழாவிற்கு, விழாவிற்கு புதனன்று (10.2.2010) மாலை வருகை தந்த என்.வரதராஜன், பி.சம்பத் ஆகியோருக்கு, காமராசர் சாலை முகப்பிலிருந்து அருந்ததிய மக்கள் வரவேற்பளித்தனர். ஜீவா வீதி முதல் பெரியார்நகர் வரை வாழ்த்து தட்டிகள், வாழை மரங்கள் கட்டப்பட்டிருந்தன. திரளான பெண்கள் குலவையிட்டும் ஆரத்தி எடுத்தும் வரவேற்றனர். பட்டணம் சங்கே முழங்கு குழுவினரின் ஜமாப் மேளம் மற்றும் பறைகளும் அதிர அதிர முழங்கின. சர வெடிகளை வெடித்து மகிழ்ச்சி ஆரவாரத்துடன் இளைஞர்கள் நடனமாடியபடியே தலைவர்களை வரவேற்று அழைத்துச் சென்றனர். விழாவிற்கு பெரியார் நகர் பகுதி பிரமுகர் தண்டபாணி தலைமை வகித்தார். 1989ல் மற்றுமொரு பொதுவழிக்காக போராடிய துடியலூர் வேலுச்சாமி உள்ளிட்டோரை என்.வரதராஜன் சால்வைகள் அணிவித்துப் பாராட்டினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை மாவட்டச் செயலாளர் யு.கே.வெள்ளிங்கிரி, கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், மாநிலக்குழு உறுப்பினர் கே.சி.கருணாகரன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட அமைப்பாளர் யு.கே.சிவஞானம், மாநிலக்குழு உறுப்பினர் வி.பெருமாள், தீக்கதிர் துணை ஆசிரியர் கே.கணேஷ், வழக்கறிஞர் வெண்மணி, மார்க்சிஸ்ட் கட்சியின் சிங்கை நகரச் செயலாளர் கே.மனோகரன், மாவட்டக்குழு உறுப்பினர் வி. தெய்வேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். விழாவில் தலைவர்களுக்கு பொதுமக்கள் சார்பில் சால்வைகளும், நினைவுப்பரிசாக புத்தகங்களையும் அளித்து பெரியார் நகர் மக்கள் கவுரவித்தனர். நூற்றுக்கணக்கான பொதுமக்களும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னணி ஊழியர்களும் பெருந்திரளாக கலந்து கொண்டனர். இடுகையிட்டது ஆதிகபிலன் நேரம் பிற்பகல் 6:56 லேபிள்கள்: உணர்ச்சிமிகு வரவேற்பு, கோவை, பாராட்டு விழா, பெரியார் நகர் பழங்குடியினர் பட்டியல் விவகாரம்: முதல்வர் தலையிட கோரிக்கை பழங்குடியினர் பட்டியல் தொடர்பான விவகாரத்தில் தமிழக முதல்வர் தலையிட வேண்டும் என்று தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க பொதுச்செயலாளர் பெ.சண்முகம் கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக, தமிழக முதல்வருக்கு எழுதியுள்ள கடிதத்தில் பெ.சண்முகம் மேலும் குறிப்பிட்டிருப்பதாவது: ஈரோடு மாவட்ட மலையாளி, நரிக்குறவர், குறுமன்ஸ் இனத்தின் உட்பிரிவினர், குறவன் இனத்தின் உட்பிரிவினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பது தொடர்பாக, அவர்களின் வாழ்வியல் சூழல் குறித்து அறிக்கை அனுப்புமாறு, கடந்த 2001-ஆம் ஆண்டு மத்திய அரசு கேட்டுக் கொண்டது. அதன் அடிப்படையில், பழங்குடியினர் ஆராய்ச்சி மையத்தின் ஆய்வுக்கு தமிழக அரசு உத்தரவிட்டது. தமிழக பழங்குடியினர் ஆராய்ச்சி மையம் தமிழகம் முழுவதும் விரிவான ஆய் வினை மேற்கொண்டு அரசுக்கு அறிக்கை அளித்தது. அதன் அடிப்படையில், மேற்கண்ட மக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பதற்கான பரிந்துரையை, 2006ம் ஆண்டு மத்திய அரசுக்கு தமிழக அரசு அனுப்பியது. தற்போது இந்தியப் பதிவாளர் குறுமன்ஸ் இனத்தில் “குறுமன்” என்பதை மட்டும் ஏற்றுக் கொண்டு, இதர உட்பிரிவுகள் அனைத்தையும் ஏற்கத்தக்கதல்ல என்று தமிழக அரசுக்கு தெரிவித்து விட்டதாக அறிகிறோம். பழங்குடியினர் பட்டியலில் சேர்த்தல் - நீக்கல் குறித்து மத்திய அரசால் உருவாக்கப்பட்டுள்ள வழி முறைகளில் ஒன்றான மூன்று முறை திருப்பி அனுப்பப்பட்டு விட்ட பரிந்துரையை மீண்டும் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை என்ற வழிமுறையைக் காட்டி தள்ளுபடி செய்திருப்பது எந்த விதத்திலும் சரியானதல்ல என்பதை தங்களின் மேலான கவனத்திற்கு கொண்டு வருகிறேன். மேற்படி இனமக்கள் அனைவருமே கடந்த 30 ஆண்டு காலமாக பல்வேறு காலகட்டங்களில் தமிழக அரசால் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க பரிந்துரைக்கப்பட்டு நிலுவையில் வைக்கப்பட்டுள்ளவர்கள், ஒவ்வொரு முறையும் கிடப்பிலே போடுவது அல்லது புதிது புதிதாக விளக்கம் கேட்பது என்ற அணுகுமுறையைத்தான் இந்தியப் பதிவாளர் மேற்கொண்டு வருகிறார். எனவே, இந்தப் பிரச்சனையில் தாங்கள் உடன் தலையிட்டு இந்தியப் பதிவாளர் கேட்டுள்ள விளக்கங்களையும், விபரங்களையும் உடன் அனுப்ப ஏற்பாடு செய்வதுடன், தள்ளுபடி செய்யப் பட்டுள்ள குறுமன்ஸ் இனத்தின் உட்பிரிவினரை மீண்டும் பரிசீலிக்க தகுந்த நடவடிக்கை எடுத்து மேற்படி இனமக்கள் அனைவரையும் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க தங்களின் மேலான தலையீட்டை வேண்டுகிறேன். இவ்வாறு அந்த கடிதத்தில் பெ.சண்முகம் வலியுறுத்தியுள்ளார். இடுகையிட்டது ஆதிகபிலன் நேரம் பிற்பகல் 6:55 லேபிள்கள்: இந்திய பதிவாளர், குறுமன்ஸ் உட்பிரிவு, பெ.சண்முகம் கடிதம், முதல்வர் வாச்சாத்தி வழக்கு பிப்.26-க்கு ஒத்திவைப்பு தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் வாச்சாத்தி கிராமத்தில் 1992-ம் ஆண்டு மலைவாழ் மக்களைச் சேர்ந்த 18 பெண்களை வனத்துறையினர் பாலியல் கொடுமைப்படுத் தினர். இதுதொடர்பாக வனம், காவல், வருவாய் ஆகிய துறைகளைச் சேர்ந்த 269 பேர் மீது வழக்கு தொடரப்பட்டது. பின்னர் இந்த வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து கடந்த 16 ஆண்டுகாலமாக கிருஷ்ணகிரி அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்தது. பிறகு, கடந்த ஆண்டு ஜூன் மாதம் தருமபுரி அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றப் பட்டது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 18 பெண்கள் குறுக்கு விசாரணையில் சாட்சியமளித்தனர். அதன் பின்பு சிறைக்காவலர் லலிதாபாய் சாட்சியம் அளித்தார். மாவட்ட அமர்வு நீதி மன்றத்தின் நீதிபதி எஸ்.குமரகுரு தலைமையில் வியாழக்கிழமை(11.2.2010) அன்று மீண்டும் வழக்கின் விசாரணை நடந்தது. சிபிஐ சார்பில் ஏடிஎஸ்பி(ஓய்வு) சாட்சியம் அளித்தார். வனத்துறையினருக்காக வழக்கறிஞர்கள் ஆர்.வெங்கடேசன், விஜயராகவன், அன்பு ஆகியோர் வாதாடினர். பிறகு இந்த வழக்கின் அடுத்த விசாரணையை இம்மாதம் 26ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார். இடுகையிட்டது ஆதிகபிலன் நேரம் பிற்பகல் 6:55 லேபிள்கள்: ஒத்திவைப்பு, தருமபுரி, நீதிமன்றம், பிப்ரவரி 11, வழக்கு, வாச்சாத்தி விடுதலைச் சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம் நரிக்குடி ஒன்றியம், உளுத்திமடை கிராமத்தில் ஆலய நுழைவுப் போராட்டம் நடத்திய தலித் மக்களைத் தாக்கிய ஆதிக்கசாதியினர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், பாதிக்கப்பட்ட தலித் மக்கள் மீதே வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதைக் கண்டித்தும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். நரிக்குடியில் நடைபெற்ற இப்போராட்டத்திற்கு அக்கட்சியின் மாவட்டச் செயலாளர் தேவி தலைமை வகித்தார். கலைவேந்தன் துவக்கவுரை ஆற்றினார். போராட்டத்தை ஆதரித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி.முருகேசன் பேசினார். மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர்கள் வி.முருகன், எஸ்.ஞானகுரு, ஒன்றியச் செயலாளர் ஏ.பி.கண்ணன், பூமிநாதன், அன்புச்செல்வன் ஆகியோர் உட்பட பலர் பங்கேற்றனர். இடுகையிட்டது ஆதிகபிலன் நேரம் பிற்பகல் 6:54 லேபிள்கள்: உளுத்திமடை, வி.சி.ஆர்ப்பாட்டம், விருதுநகர் வன்கொடுமைகள் மீது நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம்: சிவகங்கை ஆட்சியரை இடம்மாற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல் தலித்துக்களுக்கு இழைக்கப்படும் வன்கொடுமைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்காத சிவ கங்கை மாவட்ட ஆட்சியரை மாற்ற வேண்டும் என்று, தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சிவகங்கை மாவட்டக்குழு கூட்டம் வி.சௌந்த ரபாண்டியன் தலைமையில் நடைபெற்றது. இதில், இக்கோரிக்கையை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. அத்தீர்மானத்தில் இதுபற்றி மேலும் குறிப்பிட்டு இருப்பதாவது: தீண்டாமை மற்றும் வன்கொடுமைகளுக்கு ஆளாகி பாதிக்கப்படுகிற தலித் மக்கள் கொடுக்கிற புகார்கள் மீது உரிய வழக்குகள் பதிவு செய்யப்படுவதில்லை. பதிவு செய்யப்பட்ட வழக்குகளும் கூட அடுத்த சில மாதங்களில் எம்எஃப் (பொருண்மைத் தவறு) என்று தள்ளுபடி செய் யப்படுகிறது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மீதான வன்கொடுமைத்தடுப்புச் சட்ட அமலாக்கத்தின் கண்காணிப்பு மற்றும் விழிப்புக்குழுவின் தலைவர் என்ற முறையில் மாவட்ட ஆட்சியர் சிறப்புக் கவனம் செலுத்துவதில்லை. வன்கொடுமை நிகழ்ந்த இடங்களை நேரில் பார்வையிடுவது, வன்கொடுமைக்கு ஆளாகி இறந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவது, தலித் மக்களுக்குப் பாதுகாப்பு வழங்குவது உள்ளிட்ட நடவடிக்கைகளில் மாவட்ட ஆட்சியர் ஈடுபடுவதில்லை. கடந்த 26.01.2010 குடியரசு தினத்தன்று கிராமசபைக் கூட்டத்திற்கு சென்று கொண்டிருந்த திருப்புவனம் ஒன்றியம் டி.ஆலங்குளம் ஊராட்சி மன்ற (தலித்) பெண் தலைவர் மனோன்மணி என்பவரையும், அவரது கணவரையும் ஆதிக்க சாதியைச்சேர்ந்த ஊராட்சி எழுத்தர் கத்தியால் குத்தி கொலைமுயற்சியில் ஈடுபட்டுள்ளார். இந்த சம்பவத்தில் காவல்துறை உரிய வழக்கும் பதிவு செய்யவில்லை, குற்றவாளியையும் இதுவரை கைது செய்யவில்லை. அதேபோல மானாமதுரை ஒன்றியம் வேம்பத்தூர் ஊராட்சி மன்ற (தலித்) தலைவர் முருகன் குடும்பத்தினர் மீது ஆதிக்க சாதியினர் தாக்கியதில் அவரது தம்பி முத்துக்கிருஷ்ணன் என்பவர் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவத்திலும் காவல்துறை உண்மைக் குற்றவாளிகளை விட்டு விட்டதாகத்தெரிகிறது. இத்தகைய தலித் ஊராட்சி மன்றத் தலைவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் மீதான வன்கொடுமை தாக்குதல்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க, வன்கொடுமைத் தடுப்புச் சட்டப்படியான கடமைகளை மாவட்ட ஆட்சியர் ஆற்றிடவில்லை. எனவே சிவகங்கை மாவட்டத்திற்கு செயல்துடிப்புள்ள, ஐஏஎஸ் அதிகாரியை மாவட்ட ஆட்சியராக நியமித்திடுமாறு தமிழக முதல்வரையும், தலைமைச் செயலாளரையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சிவகங்கை மாவட்டக்குழு கேட்டுக்கொள்கிறது. இவ்வாறு தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டு இருந்தது. கூட்டத்தில் மாவட்டச் செயலாளர் எம்.அர்ச்சுணன், செயற்குழு உறுப்பினர்கள் எ.ஆர்.கே.மாணிக்கம், ஆர்.கே. தண்டியப்பன், எம்.கந்தசாமி, ஆர்.மணியம்மா, ஒன்றியச் செயலாளர்கள் எஸ்.பாண்டி யன், ஏ.ஆர்.மோகன், வி.கருப் பச்சாமி, எ.கிருங்கைச்செல் வன், எஸ்.எம்.பூபதி, கே.அழ கர்சாமி, ஏ.ஜெயராமன், ஏ.சேது ராமன், பி.செல்வராஜ் மற்றும் சாந்தி, ஷேக்முத்து ஆகியோர் கலந்து கொண்டனர். இடுகையிட்டது ஆதிகபிலன் நேரம் பிற்பகல் 6:53 லேபிள்கள்: ஆட்சியர், இடமாற்றம், சிபிஎம் கோரிக்கை, சிவகங்கை, வன்கொடுமை வங்கிக்கடன் கேட்டு நெறிக்குறவர்கள் மனு திருவாரூர் மாவட்டம் குடவாசல் வட்டம் பெரும் பண்ணையூரில் வசிக்கும் நெறிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த 14 குடும்பத்தினர், தொழிற்கடன் கேட்டு மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனுவை அளித்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வழிகாட்டுதலுடன், மாவட்ட ஆட்சியர் எம்.சந்திரசேக ரனை சந்தித்த நெறிக்குறவர் சமூகத் தலைவர் சொ.காளிமுத்து, வங்கிகள் தங்கள் வாழ்க்கை மேம்பாட்டிற்கு உதவ நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர். மாவட்ட ஆட்சியர் அச்சமூகத்தினரின் கோரிக்கையை அக்கறையுடன் ஏற்று உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இடுகையிட்டது ஆதிகபிலன் நேரம் பிற்பகல் 6:53 லேபிள்கள்: ஆட்சியர், திருவாரூர், நெறிக்குறவர்கள், மனு, வங்கிக்கடன் தீண்டாமையால் பாழடைந்த திருப்பூர் தொழிற்பேட்டை ! திருப்பூர் முதலிபாளையம் அருகே சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் தாட்கோ தொழிற்பேட்டை அமைந்துள்ளது. இதில் 99 தொழிற்கூடங்கள் இயங்கிவருகின்றன. முழுக்க ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களின் தொழில் முன்னேற்றத்திற்காக அமைக்கப்பட்ட இந்த தொழிற்பேட்டை தற்போது பாழடைந்த நிலையில் உள்ளது. பெரும்பாலான இளைஞர்கள் தொழிற்கூடத்தை கைவிட்டுவிட்டனர். தொழிற்கூடங்களை இயக்கி வரும் சிலரும் குறைந்த வேலைவாய்ப்பு சூழலில் தத்தளித்து வருகின்றனர். இதுகுறித்து அப்பகுதி தொழில் முனைவோர் கூறுகையில் , “இங்கு தொழில் நடத்தும் இளைஞர்கள் பலர் திறமையானவர்களே, இருந்தாலும் வேலை செய்ய போதுமான ஆர்டர்கள் (வாய்ப்புகள்) கிடைக்கவில்லை. வாய்ப்பு வழங்கக் கூடிய பெரும் தொழில்கள் எல்லாம் ஆதிக்க சாதியினர் வசமே இருக்கின்றன. இதனால் தலித் இளைஞர்கள் ஒருவகை “தொழில் தீண்டா மைக்கு” ஆளாகின்றனர். இதனால் திறமையிருந்தும் சாதியின் காரணமாக தலித் இளைஞர்கள் இழப்பை சந்திக்கின்றனர்” என்று குறிப்பிட்டனர்.
Dating in different cultures possesses its own unique pair of traditions. In Egypt, women are required to walk behind males and cover their fronts mailorderbrideguide.net blog while going out. These … Read More Search for: Recent Posts புஷ்ப வனம் குப்பு சாமி மகள் களை பார் த்து உள்ளீ ர்களா .??அவ ரே வெளி யிட்ட அவ ரின் மக ளின் புகை ப்படம்.!! இணை யத்தில் வைர லாகும் புகை ப்படம் உள் ளே.!! 7ஜி ரெயி ன்போ கா லனி படத் தில் நடி த்த இவரை ஞாப கம் இரு க்கா.?? இவர் யாரு ன்னு தெரி யுமா .??இவ ரின் தற் போதைய நிலை என் னன்னு தெரி யுமா.?? லொ ள்ளு சபா மனோ கருக்கு சந்தா னம் செய்த துரோ கம் .!!அப் படி என்ன செய் தார் தெரி யுமா.?? பரிதாப மான நிலை யில் மனோ கர் கூ றிய உண் மை.!! நாய கன் பட த்தில் நடி த்த இந்த குழந் தையை ஞா பகம் இரு க்கா.?? பிற்கா லத்தில் பல மொழி களிலும் அசத் திய நடி கை.!! அவ ரின் தற்போ தைய நிலை என்ன தெரி யுமா?? இந்த புகைப் படத்தில் இருக் கும் குழந் தை யார் தெரி யுமா.?? தற் போது வரை திரை உலகை கலக் கிக் கொண் டிருக்கும் முன்னனி நடி கர்.!! யாரு ன்னு நீங் களே பாரு ங்க.??
தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வலம் வருபவர் யோகிபாபு. ரஜினி, விஜய், சிவகார்த்திகேயன் என முன்னணி நடிகர்களுடன் நடித்த இவர் கோலமாவு கோகிலா, ஜாம்பி மற்றும் மண்டோலா போன்ற படங்களில் கதாநயகனாக நடித்தார். அதே சமயம் அடுத்த பட வாய்ப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. கோலிவிட்டில் கிட்டத்தட்ட 30 படங்களுக்கு மேல் நடித்த இவர் தனக்கென ரசிகர் பட்டாளத்தையே கொண்டுள்ளார். வேற லெவல்! கெத்து காட்டும் விக்ரமின் தங்கலான்… வைரலாகும் வீடியோ!! இந்த சூழலில் கடந்த 2020-ம் ஆண்டு இவருக்கு பார்கவி என்ற பெண்ணுடன் திருமணம் நடைப்பெற்றது. அதோடு யோகிபாபுவுக்கு விசாகன் என்ற ஆண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில் தீபாவளி தினத்தில் யோகிபாபு – பார்கவி தம்பதிக்கு இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்துள்ளதாக சினிமா வட்டாரங்களில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்ற ஆடவர் ஹாக்கி போட்டியில் இந்தியா அணிக்கு 41 ஆண்டுகளுக்கு பிறகு வெண்கல பதக்கம் கிடைத்துள்ளது. இதில் ஜெர்மனி அணியை எதிர்கொண்ட இந்திய அணி தொடக்கத்தில் சற்று தடுமாறியது. ஆட்டத்தின் முதல் நிமிடத்திலே ஜெர்மனி தனது கணக்கை தொடங்கி முன்னிலை வகித்தது. ஆனால் இரண்டாவது கால் ஆட்டத்தில் சுதாரித்துக் கொண்ட இந்திய அணி 16 ஆவது நிமிடத்தில் முதல் கோல் போட்டது. அதன் பின்னரே ஆட்டம் விறுவிறுப்படைந்தது. 26 ஆவது நிமிடத்தில் இந்தியா அணி மேலும் ஒரு கோல் போட்டது. இதனால் இரண்டாம் கால் பாதியில் ஜெர்மனி 3 இந்தியா 2என்ற நிலையில் இருந்தபோது இந்தியாவின் ஹர்மன்பிரீத் சிங் மேலும் ஒரு கோல் அடிக்க ஆட்டம் 3 க்கு 3 என்று சமன் ஆனது. 31 மற்றும் 34 ஆவது நிமிடத்தில் இந்திய அணி அடுத்தடுத்து இரண்டு கோல்களை போட்டது இந்தியா 5 க்கு 3 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. ஆனால் கடைசி கால் ஆட்டத்தின் 47 ஆவது நிமிடத்தில் பெனால்டி கார்னர் மூலமாக ஜெர்மனி நான்காவது கோல் அடித்தது. இருப்பினும் கடைசி ஐந்து நிமிடத்தில் கோல் அடிக்க முடியாமல் ஜெர்மனி 5 க்கு 4 என்ற கோல் கணக்கில் வெண்கலப் பதக்கத்தை தன் வசப்படுத்தியது. இதன் மூலமாக 41 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணி பதக்கம் பெற்று சாதனை படைத்துள்ளது. இதன் மூலம் டோக்கியோ ஒலிம்பிக்கில் தற்போது வரை இந்தியா ஒரு வெள்ளி, 3 வெண்கலம் என 4 பதக்கங்களை வென்றுள்ளது. ஒலிம்பிக் போட்டியில், 41 ஆண்டுகளுக்கு பிறகு வெண்கலம் வென்ற இந்திய அணிக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். Share Article: Tags: bronze medal cinema news tamil covid 19 google tamil news Indian men's hockey team Japan latest news in tamil latest tamil news Lifestyle live news tamil Men's hockey team Men's hockey team win bronze medal news in tamil news live tamil news tamil news tamil live news tamil today Olymbic games tamil cinema news tamil news Tamil news live tamil news paper tamil news today tamil video today gold prize today news in tamil today news tamil today tamil news todays news in tamil Tokyo
மெட்ரோ, மாநகர பேருந்து, புறநகர் ரயில்களில் பயன்படுத்தும் வகையில் பொது பயண அட்டை - சென்னையில் டிசம்பர் மாதம் முதல் அறிமுகப்படுத்தப்படுமென அறிவிப்பு மகாராஷ்டிராவின் பல்லர்ஷா ரயில் நிலையத்தில் நடைமேம்பாலம் இடிந்து விழுந்த விபத்தில் ஒருவர் பலி - மேம்பாலத்தில் இருந்து தண்டவாளத்தில் விழுந்த சுமார் 15-க்கும் மேற்பட்டோர் படுகாயம் ராஜஸ்தானில் இந்திய - ஆஸ்திரேலிய ராணுவத்தினர் கூட்டுப்பயிற்சி - இன்று தொடங்கி டிசம்பர் 11-ம் தேதி வரை நடைபெறுமென அறிவிப்பு சீன வெளியுறவுத்துறை அமைச்சகம் நடத்திய சி.ஐ.டி.சி.ஏ. மாநாட்டை புறக்கணித்தது, இந்தியா - கூட்டத்தில் பங்கேற்கவில்லை என மாலத்தீவு, ஆஸ்திரேலியாவும் அறிவிப்பு கட்டாய மதமாற்றத்திற்கு எதிரான பொது நல வழக்கு - உச்ச நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணை திருச்சியில் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேருவின் உறவினருக்கு சொந்தமான மருத்துவமனையில் கட்டணக் கொள்ளை - நோயாளியிடம் காப்பீடு மூலம் பணம் செலுத்தலாம் என கூறிவிட்டு சிகிச்சைக்கு பிறகு மருத்துவக்காப்பீடு செல்லாது என அடாவடி... மதுரையில் உதயநிதி ஸ்டாலினை வாழ்த்தி ஒட்டப்பட்ட போஸ்டர்களை கிழித்தெறிந்த திமுகவினர் - நிதியமைச்சர் பிடிஆரின் தொகுதியில் ஒட்டப்பட்ட போஸ்டர்கள் அனைத்தும் கிழிப்பு... அசோக் நகர், கே.கே.நகர், வடபழநி, கோயம்பேடு பகுதியில் மிகக் கடுமையான போக்குவரத்து நெரிசல் மதுரை அருகே பேக்கரி கடையில் சிலிண்டர் வெடித்து விபத்து - சத்தம் கேட்டு குடியிருப்புவாசிகள் அலறி அடித்து ஓட்டம் இந்தியாவுக்கு கிடைத்த ஜி20 தலைமை பதவியை சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று பிரதமர் மோடி பேச்சு - வாய்ப்பை பயன்படுத்தி உலக நலனில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் வேண்டுகோள்
மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான கூட்டு எதிரணி, பெரும்பாலும் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படும் உள்ளூராட்சித் தேர் தலைக் குறிவைத்து காய்களை நகர்த்தி வருகிறது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை உடைத்து, புதிய கட்சி ஒன்றை உருவாக்குவதற்கான தருணத்தை எதிர்பார்த்து மஹிந்த ராஜபக்ஷ காத்திருக்கிறார். புதிதாக உருவாக்கப்படவுள்ள கட்சியின் பெயர், சின்னம், நிறம் என்பன தீர்மானிக்கப்பட்டு விட்டதாகவும் ஆனாலும், அவை பற்றிய தகவல்களை இரகசியமாக வைத்துக் கொள்ளுமாறும் கூட்டு எதிரணியின் உறுப்பினர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகின்றன. எது எவ்வாறாயினும், அடுத்த உள்ளூராட்சித் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கை சின்னத்தில் போட்டியிடவுள்ளதாகவும் ஐ.தே.க யானைச் சின்னத்தில் போட்டியிடவுள்ளதாகவும் அறிவித்துள்ள நிலையில், மூன்றாவது பெரிய தரப்பாக களத்தில் குதிக்கவுள்ளது கூட்டு எதிரணி. உள்ளூராட்சித் தேர்தலில் தனித்துக் களமிறங்குவது என்று கூட்டு எதிரணி எப்போதே அறிவித்து விட்டது. ஆனால் எந்தக் கட்சியில்? எந்தச் சின்னத்தில்? களமிறங்கப் போகிறது என்பதை அறிவிக்கவில்லை. கூட்டு எதிரணியில் அங்கத்துவம் வகிக்கும் ஏதாவதொரு கட்சியின் சின்னத்தில் அல்லது புதிய கட்சியை உருவாக்கி, அதன் சின்னத்தில் போட்டியிடும் தெரிவுகள் தான் மகிந்த அணிக்கு இருக்கிறது. கூட்டு எதிரணியில் மஹிந்த ராஜபக்ஷ இருந்தாலும், அதன் தலைவராக அவர் இல்லை. தினேஸ் குணவர்த்தன தான் தலைவராக இருக்கிறார். எனினும், மஹிந்த ராஜபக்ஷவை மையப்படுத்தியே அவரது ஆலோசனைகளின் படியே கூட்டு எதிரணி செயற்படுகிறது. எதற்காக மஹிந்த ராஜபக்ஷ கூட்டு எதிரணியின் தலைவராகச் செயற்படத் தயங்குகிறார்? ஏன் அவர் அதன் தலைமைப் பதவியை ஏற்கவில்லை? என்ற கேள்விகளுக்கான விடை இந்தப் பத்தியின் இறுதியில் கிடைக்கும். உள்ளூராட்சித் தேர்தலில் கூட்டு எதிரணி போட்டியிடப் போகும் கட்சியின் பெயரையோ? சின்னத்தையோ? வெளியிட முடியாத நிலையில் தான் மஹிந்த அணி இருக்கிறது. புதிய கட்சி ஒன்றை ஆரம்பிப்பதானால், இப்போது அது நடக்காது. தேர்தல் அறிவிப்பு வெளியிட்ட பின்னர் தான் புதிய கட்சிகளின் பதிவுகள் இடம்பெறும். அதனால், புதிய கட்சியையோ அதன் சின்னத்தையோ வெளியிடாமல் மறைத்து வைத்திருக்கலாம். புதிய கட்சி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் தொடங்கப்படும் என்று விமல் வீரவன்ச போன்றவர்கள் கூறினாலும், புதிதாக உருவாக்கப்படும் கட்சியில் மஹிந்த ராஜபக்ஷவின் பங்கு எத்தகையதாக இருக்கும் என்ற கேள்விகள் இருக்கின்றன. இதுவரையில் கூட்டு எதிரணியின் தலைமைப் பதவியை ஏற்றுக்கொள்ளாத மஹிந்த ராஜபக்ஷ, புதிதாக உருவாக்கப்படும் கட்சியின் தலைமைப் பதவியை ஏற்றுக் கொள்வாரா என்ற சந்தேகங்கள் இருக்கின்றன. மஹிந்த ராஜபக்ஷவுக்கு இன்னமும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைக் கைப்பற்றும் கனவு இருக்கிறது. மஹிந்த ராஜபக்ஷ புதிய கட்சி ஒன்று உருவாக்கப்படுவதன் அவசியத்தைப் பற்றிப் பேசியிருக்கிறார். புதிய கட்சியை உருவாக்குவதற்கு நாட்டில் உள்ள அனைவருக்கும் இருக்கின்ற உரிமைகளைப் பற்றிப் பேசியிருக்கிறார். ஆனாலும், புதிய கட்சி ஒன்றைத் தான் உருவாக்கப் போவதாகவோ, தனக்கு அத்தகைய உரிமை இருப்பதாகவோ கூறவில்லை என்பது கவனிக்கத்தக்க விடயம். அதாவது புதிய கட்சியை உருவாக்கும் விடயத்தில் மஹிந்த ராஜபக்ஷ மிக நிதானமாகவே இருக்க முனைகிறார். தன்னை மையப்படுத்தியே புதிய கட்சியை உருவாக்கினாலும், அதனை விட்டு விலகி இருக்கவே ஆசைப்படுகிறார். மஹிந்த ராஜபக்ஷ ஏற்கெனவே பொது அரங்கில், சில வாக்குறுதிகளை அளித்திருக்கிறார். அதில் முக்கியமானது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைத் தான் பிளவுபடுத்த மாட்டேன் என்பதாகும். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை உடைத்துக் கொண்டு வெளியே போய், தனிக்கட்சி தொடங்குவதன் மீது உள்ள நம்பிக்கையீனத்தினால் இந்த வாக்குறுதியை அவர் கொடுத்தாரா? அல்லது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியே தன்னைப் பிடித்து வெளியே தள்ளிவிடும் என்ற நம்பிக்கையில் இந்த வாக்குறுதியைக் கொடுத்தாரா? என்று தெரியவில்லை. மஹிந்த ராஜபக்ஷவைப் பொறுத்தவரையில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை விட்டு வெளியே வருவதற்கு நிறையவே பயம் இருக்கிறது. இலங்கையின் அரசியல் வரலாற்றில், ஐ.தே.கவில் இருந்து விலகி, புதிதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை ஆரம்பித்த எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கவைத் தவிர, வேறெவரும் கட்சியைப் பிளந்து, புதிய கட்சியை உருவாக்கி ஆட்சியைப் பிடித்த வரலாறு இல்லை. ஐ.தே.கவில் இருந்து காமினி திசநாயக்க, லலித் அத்துலத் முதலி போன்ற வலுவான தலைவர்கள் தனித்துச் சென்று, ஜனநாயக ஐக்கிய தேசிய முன்னணி என்ற புதிய கட்சியை உருவாக்கினர். ஆனால், அவர்களால் வெற்றி பெற முடியவில்லை. அதிகாரத்தைப் பிடிக்க முடியாமலே லலித் அத்துலத் முதலி சுட்டுக் கொல்லப்பட்டார். வேறு கதியின்றி மீண்டும் ஐ.தே.கவில் இணைந்து, 1994 இல் சந்திரிகா குமாரதுங்கவை எதிர்த்து, ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட காமினி திசநாயக்கவும் குண்டுத் தாக்குதலுக்குப் பலியானார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் இருந்து காலத்துக்குக் காலம் பிரிந்து சென்றவர்களாலும் கூட,அரசியலில் நிலைத்து நிற்க முடியவில்லை. அந்தளவுக்கு அரசியலில் மோசமான நிலையில் உள்ளவராக மஹிந்த ராஜபக்ஷ இல்லாது போனாலும், அதிகாரத்தைக் கைப்பற்றும் கனவு நிறைவேறாது போனால் எல்லாமே பாழாகி விடும் என்ற கலக்கம் அவருக்கு இருக்கிறது. மஹிந்த ராஜபக்ஷ கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாகத் தனித்துச் செயற்படவும் முடியாமல், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணங்கிச் செயற்படவும் முடியாமல் திண்டாடிக் கொண்டிருப்பதற்கு அவரது இந்தக் குழப்பமான மனநிலையே காரணம். தனதும், தனது குடும்பத்தினதும் அரசியல் எதிர்காலத்தை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி என்ற தளத்தில் இருந்து மேலும் வளப்படுத்திக் கொள்ளலாம் என்பதில் மஹிந்தவுக்கு இன்னமும் உறுதியான நம்பிக்கை இருக்கிறது. தற்போதைய சூழல் அதற்குச் சாதகமானதாக இல்லா விட்டாலும், ஒரு குறிப்பிட்ட காலத்துக்குப் பின்னரேனும் தனக்கு வாய்ப்பான சூழல் உருவாகலாம் என்ற நப்பாசையும் நம்பிக்கையும் அவரிடம் இருக்கிறது. அந்த நம்பிக்கை தான், மஹிந்த ராஜபக்ஷவை இன்னமும் தனிக் கட்சியைத் தொடங்க விடாமல் தடுத்துக் கொண்டிருக்கிறது. தனித்து வெளியே சென்று விட்டால், தனதும், தனது குடும்பத்தினதும் அரசியல் எதிர்காலம் பாழாகி விடும் என்பதால்த்தான் அவர் ஆகக்கூடுதலான பொறுமையைக் கடைப்பிடிக்கிறார். அதேவேளை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தன்னைப் பிடித்து வெளியே தள்ளி விட்டால், அந்த அனுதாப அலையை வைத்துப் பிழைத்துக் கொள்ளலாம், புதிய கட்சியை ஆரம்பித்தாலும் ஆதரவு அதிகம் கிடைக்கும் என்று அவர் எதிர்பார்த்திருந்தார். அதற்காக அவர் சுதந்திரக் கட்சித் தலைமைக்கு பலமுறை சவால் விட்டுப் பார்த்தார்; அதனுடன் முரண்பட்டார்; போட்டிக் கூட்டங்கள், பேரணிகளை நடத்தினார். ஆனாலும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சித் தலைமையோ அவர் எதிர்பார்க்கும் முடிவை எடுக்கத் தயாராக இல்லை. மஹிந்த ராஜபக்ஷவின் திட்டத்தைப் புரிந்து கொண்டு நழுவலாகச் செயற்பட்டு வருகிறார் மைத்திரிபால சிறிசேன. மஹிந்த ராஜபக்ஷவின் திட்டங்களை செயற்படுத்த விடாமல் மைத்திரிபால சிறிசேன தடுத்து வருகின்ற நிலையில், எப்படியாவது உள்ளூராட்சித் தேர்தலில் தனது பலத்தைக் காட்டி விட வேண்டும் என்பது மஹிந்த ராஜபக்ஷவின் ஆசையாக இருக்கிறது. உள்ளூராட்சித் தேர்தலில் பெரும்பான்மையான சபைகளைக் கைப்பற்றுவது கூட மஹிந்த ராஜபக்ஷவின் திட்டமல்ல. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைத் தோற்கடிப்பது தான் அவரது திட்டம். அதாவது ஐ.தே.கவிடம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தோல்வியடைந்தால், அதற்கான பொறுப்பு மைத்திரிபால சிறிசேனவே என்று அவரால் நம்ப வைக்க முடியும். தான் உள்ளே இருந்திருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்காது என்ற கருத்தை, சுதந்திரக் கட்சியினர் மத்தியில் ஏற்படுத்த முடியும். அது சுதந்திரக் கட்சிக்குள் மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் வலுவான நிலையை அடைவதற்கு துணையாக இருக்கும். உள்ளூராட்சித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ அணியினர் தனியாகப் போட்டியிடுவதற்கான முயற்சிகளை முன்னெடுத்தாலும், புதிய கட்சியின் தலைமைப் பதவியை மஹிந்த ராஜபக்ஷ ஏற்றுக் கொள்ளும் வாய்ப்புக் குறைவு. ஏனென்றால், அவ்வாறு புதிய கட்சியை அவர் உருவாக்கினால், மீண்டும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் அவரால் நுழைய முடியாது போகும். மஹிந்த மீண்டும் சுதந்திரக் கட்சியில் தொற்றிக் கொள்ளும் கனவில்த்தான் இருக்கிறார் என்றால், அவர் ஒருபோதும் புதிதாக ஆரம்பிக்கும் கட்சியின் தலைமைப் பதவியை ஏற்கத் துணியமாட்டார். அந்தப் புதிய கட்சிக்காகப் பிரசாரங்களைச் செய்வார்; அதன் வெற்றிக்காகவும் பாடுபடுவார். எனினும், ஒருபோதும் அந்தக் கட்சியின் தலைமையை ஏற்கமாட்டார். ஏனென்றால், அவ்வாறு தலைமைப் பதவியை மஹிந்த ஏற்றுக் கொண்டால், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தளத்தைப் பயன்படுத்தி அரசியல் செய்யும் வாய்ப்பை அவர் இழந்து விடுவார். எனவே, உள்ளூராட்சித் தேர்தல் மஹிந்தவின் அரசியல் நிலையை தெளிவாகவே எடுத்துக் காட்டப்போகிறது. அவர் எங்கே நிற்கப் போகிறார் என்பதை அதுவே வெளிப்படுத்தப் போகிறது.
மக்கள் அறிந்திராத பல உண்மைகளை உள்ளடக்கிய நூல் ஒன்றை தாம் எழுதியுள்ளதாகவும், அதனை எதிர்வரும் ஜனவரி மாதம் வெளியிட உள்ளதாகவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும், முன்னாள் அதிபருமான மைத்திரிபால சிறிசேன இன்று (20) தெரிவித்தார். ராஜபக்ச அரசாங்கத்தில் இருந்து தாம் வெளியேறியதாக பல்வேறு தரப்பினர் குற்றம் சுமத்திய போதும் தாம் இவ்வாறானதொரு தீர்மானத்தை எடுப்பதற்கு பல நிகழ்வுகள் காரணமாக இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இது வரை மக்கள் அறியாத உண்மைகளுடன் புத்தகம் வெளியான பிறகு தனக்கு என்ன நடக்கும் என்று தெரியவில்லை என்றும் அவர் கூறினார். நெருக்கடி, வரவு செலவுத் திட்டம் மற்றும் நாட்டின் எதிர்காலம் என்ற தலைப்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தொழில் வல்லுநர்கள் சங்கம் கொழும்பு மகாவலி கேந்திர நிலையத்தில் நடத்திய மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே முன்னாள் அதிபர் மேற்கண்டவாறு தெரிவித்தார். கடந்த 2007ஆம் ஆண்டு சுற்றாடல் அமைச்சராக இருந்த போது தான் முதல் சம்பவத்தை எதிர்கொண்டதாகவும், அண்மைய நாட்களில் இலங்கையில் இல்லாத குறிப்பிட்ட நபரின் டெண்டரில் கையொப்பமிட மறுத்ததால் தான் முதல் சம்பவத்தை எதிர்கொண்டதாகவும், அதன் பின்னர் தனக்கும், ராஜபக்ச அரசுக்கும் இடையே முரண்பாடு எழுந்ததாகவும் அவர் குறிப்பிட்டார். அப்போது பிரதமராக இருந்த டி.மு ஜயரத்ன தலைமையில் நடைபெற்ற ஆளுங்கட்சி உறுப்பினர்களின் கூட்டத்தில், நெடுஞ்சாலைகள் அமைப்பதில் இடம்பெற்ற மோசடி மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் பேசியதாகவும் அவர் கூறினார். மறுநாள் அமைச்சரவைக்கு அழைத்து வரப்பட்ட தான், அங்கு வழக்கத்தை விட வெறித்தனமான முகத்தைக் கண்டதாகவும் மோசடி மற்றும் ஊழல் பற்றி பேசினால் அதே முகத்துடன் தான் கேள்வி எழுப்பப்பட்டதாகவும் முன்னாள் அதிபர் கூறினார். அரசாங்கத்தில் இடம்பெறும் ஊழல் மோசடிகள் குறித்து பேசக்கூடாது எனவும், அவ்வாறு பேசினால் பதவிகளை வகிக்க முடியாது எனவும் கட்சியின் செயலாளர் மற்றும் அமைச்சர் ஒருவர் தமக்கு கூறியதாக மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
அது ஒரு சோழப் பேரரசின் காலம். (விக்கிரமச் சோழன் அல்லது அவருடைய பேரனான இரண்டாம் ராஜராஜன் காலமாக இருக்கலாம்) திருவாரூர் தியாகேசர் ஆலயத்தில் 'இச்சா சக்தியாக வணங்கப்படுபவள் கொண்டி அம்மன். இந்தக் கொண்டி அம்மனின் பெயரைக்கொண்டு, பிற்காலத்தில் பரவை நாச்சியார் வம்சாவளியில் பிறந்தவள் இந்தக் கொண்டி... ருத்ர கணிகை. ஆரூர் பெருமானுக்கு சேவை செய்து வாழ்ந்து வந்தார் கொண்டி. காலையில் திருப்பள்ளியெழுச்சி தொடங்கி பால் அன்னம் சமர்ப்பிப்பது, மரகதலிங்க அபிஷேகம், முதற் காலம், உச்சிக்காலம், சாயரட்சை, அர்த்தஜாம பூஜை வரை ஆரூர் பெருமானுக்குச் செய்யப்படும் அத்தனை சேவைகளிலும் ஆத்மார்த்தமாகக் கைங்கர்யம் செய்து மகிழ்பவள், கொண்டி. இவள் பாட்டுப்பாடி, அபிநயம் பிடித்து ஆடினால் அன்றைய பூஜை களைகட்டும். ஆரூர் பெருமானுக்கு இவள் அலங்கரித்துத் தைத்த வஸ்திரங்களே சாத்தப்படும். இவள் கொடுத்த மாலைகளே சூட்டப்படும். ஆரூர் பெருமானையே சிந்தையில் வைத்து வாழ்ந்து வந்த கொண்டியின் வாழ்விலும் ஒரு சோதனை வந்தது. திருவாரூர் காவல் அதிகாரியாக வந்த ஒருவன் கொண்டியின் மீது ஆசை கொண்டான். ஆரூர் ஆலய வளாகத்துக்குள்ளேயே அத்து மீறினான். 'என்னைத் துன்புறுத்தினால், குத்துவாளால் தாக்குவேன்' என்று சீறினாள். சிறுமதி கொண்ட அந்தக் கொடியவன் உணரவில்லை. வீண்பழி சுமத்தி, கொண்டியை ஆலயத்தைவிட்டே நீங்கச் சொன்னான். நடந்ததை அறிந்த ஆலய அர்ச்சகர்கள் செய்வதறியாமல் திகைத்தனர். ஆரூர் பெருமானை விட்டு நீங்க கொண்டி மறுத்தாள். 'ஐயனே, வன்மீகநாதா இந்த அபலையைக் கைவிடலாமா' என்று கதறினாள். தியாகேசனோ அமைதி காத்தார். இனி எந்தப்பயனுமில்லை என்ற நிலையில் 'நீதிநெறி இல்லாத இடத்தில் ஈசன் இருக்க வேண்டியதில்லை; ஈசனே வந்து என்னை அழைக்காமல் மீண்டும் இங்கு வந்து தொழப் போவதுமில்லை' என்று சத்தியம் செய்து விட்டுக் கிளம்பினாள்,கொண்டி. ஆரூரானைப் பிரிந்தவள், ஒளியை இழந்த தீபமானாள். ஒவ்வொரு வேளையும் புலம்பித் வித்தாள். 'இந்நேரம் பெருமானுக்கு நைவேத்தியம் நடக்குமே... என்ன படைத்தோர்களோ... இந்நேரம் ஸ்வாமி புறப்பாடு ஆகுமே...யார் பாடினார்களோ, யார் இன்று பூமாலை தொடுத்தார்களோ... என்றெல்லாம் ஒவ்வொரு நிமிடமும் தவித்தாள்.அவள் தவிக்கத் தவிக்க, ஈசனுக்குப் பொறுப்பு கூடியது. கொண்டியை உலகமே வியக்கும் வண்ணம் ஆட்கொள்ள வேண்டும் என்று உறுதி கொண்டது சிவம். **** திருவாரூரில் அந்த ஆண்டு பங்குனி உத்திரப் பெருவிழா. உத்திரத் திருநாளில் ஆழித்தேர் புறப்பாடு தயார் நிலையில் இருந்தது. அந்த ஆழித்தேர் 10 தேர்க்கால்கள், 9 லட்சம் கிலோ எடை கொண்டதாக பிரம்மாண்டமாக இருந்தது. வேதமந்திரங்கள் முழங்க ,விண்முட்டும் கோஷங்கள் எழும்ப, தேர் இழுக்கப்பட்டது. தேரை 20000 கரங்களும்,யானைகளும், குதிரைகளும் இழுக்கத் தொடங்கின. ஆனால் அந்தப் பிரமாண்டத் தேர் சிறிதும் அசையவில்லை. சோழ மன்னன் திடுக்கிட்டான். அவனும் அவன் பரிவாரங்களும் இணைந்து இழுத்தும் அசையவில்லை. ஐம்பொன் சிலையாக ஆரூரான் கொள்ளைச் சிரிப்பில் இந்த விளையாட்டை ரசித்துக் கொண்டிருந்தான். முசுகுந்த சக்கரவர்த்தியால் நிறுவப்பட்ட இந்த ஆழித்தேர்பல நூறு ஆண்டுகளாக அசைந்தாடி திருவாரூரை வலம் வந்து மண்ணகத்தின் புகழ்க் குறியீடாக இருந்தது. அந்த வேளையில், அந்த ஆண்டு பங்குனி உத்திரத்தில் மட்டும் நகர மறுக்கிறது. 'ஏன் இப்படி ஆனது?' என்று எல்லோரும் கலங்கித் தவித்தனர். என்ன செய்வது என்று சோழ மன்னனுக்கும் ஒன்றும் புரியவில்லை. 'பரிகாரம் ஏதாவதிருக்கிறதா?' என்று ஆலய நிர்வாகிகளைக் கடுகடுத்தான். 'சோழத் திருநாட்டில் எல்லோரும் கூடி ஒரு தேரை இழுக்க முடியவில்லை என்றால்,எதிரிகள் என்னநினைப்பார்கள்?இது என்ன சோதனை' என்று வாய்விட்டுப் புலம்பினான். அந்த நேரத்தில் ஆரூர் பெருமானே ஒரு முதியவராக மன்னன் முன் தோன்றினார். 'இந்தத் தேர் நகர வேண்டுமானால், கொண்டி என்ற பெண் இங்கு வந்து தேர் மீது ஏறி , கவரி வீச வேண்டும்' என்று கூறிவிட்டு மறைந்தார். மன்னன் கொண்டி வீடு சென்று, 'அந்த ஈசனே அடையாளம் காட்டி உன்னை அழைத்து வரச்சொன்னார்' என்று விளக்கி, வணங்கி அழைத்தான். 'ஓடாத தேர் நகர இந்த அடியாளை அழைத்து வரச் சொன்னாரா என் ஸ்வாமி...'என்று வியந்த கொண்டி, ஓடோடி வந்தாள். கண்ணீர் மல்க திருவாரூர் மலர் அம்பலத்தானை வணங்கினாள். தேரை ஓட வைக்க வேண்டிய பெரும் பொறுப்பை எண்ணிக் கசிந்தாள. இனி பெருமான் தன்னை ஆட்கொள்ளப் போகிறான் என்பதை உணர்ந்த கொண்டி, மன்னனிடம் ஒரு உறுதிமொழியை வாங்கிக்கொண்டு தேரினை நோக்கி நடந்தாள். கொண்டி ஆழித்தேர் நிற்கும் இடம் வந்து தேர் முன்னால் நடனமாடத் துவங்கினாள். தான் ஈசனோடு இரண்டறக் கலந்து விட்டதாக எண்ணி ஆனந்த நடனமாடினாள். திமிலை,மத்தளம்,இந்தளம்,உடுக்கை,கொம்பு, குடமுழா,துந்துபி, பாரி நாயனம்,சங்கு, பிரம்ம தாளம்,குட்டத்தாரை,எக்காளம், திருச்சின்னம்,நெடுந்தாரை,தாரை,கொம்புத்தாரை,உடுக்கை,சேமக்கலம்,தப்பு,கர்ணா, குழித்தாளம், உறுமி, கொக்கரை, தவண்டை,கொடுகொட்டி, நகரா,யாழ், உயிர்த்தூம்பு, குறும்பரந்தூம்பு,மொந்தை,தகுணிதம்,தாளம்,வீணை,கரடிகை,சச்சரி,தக்கை என ஈசனுக்கு விருப்பமான 70 வகை இசைக்கருவி களும் இசைக்க, அவற்றின் அதிர்வுகளுக்கேற்ப கொண்டி ஆடிக் கொண்டிருந்தாள். ஆரூர் மக்களும்,சோழப் பேரரசனும்அவள் ஆடுவதை அச்சத்தோடும், ஆச்சரியத்தோடும் பார்த்துக்கொண்டிருந்தார்கள். ஒரு பெண் நடனமாடினால் ஆழித்தேர் அசைந்து விடுமா என்ன... ஆவல் மேலோங்க எல்லோரும் நடனத்தையும், ஆழித்தேரையும் மாறி மாறிப் பார்த்தபடி இருந்தார்கள். அந்த பிரம்மாண்டத் தேர் கொஞ்சமும் அசையாமல் இருந்தது. அதன் தொம்பைகள் கூட மந்திரத்தில் கட்டுண்டாற்போல அப்படியே கிடந்தன. கொண்டியின் மனதில் எந்த வன்மமும் இல்லை. தன்னை அவமானப்படுத்தியவர்களை மன்னித்து விட்டாள்.காற்றின் திசைக்கேற்ப ஆடும் தீபம் போல் ஆடினாள். 'தேர் ஓட வேண்டும்; அப்போதே என் உயிரும் பிரிய வேண்டும்! இது ஈசன் மீது ஆணை, அமர்ந்தாடும் எங்கள் ஆரூர்க்கூத்தன் மேல் ஆணை...தியாகராஜா... தேவரகண்டப் பெருமானே...' உள்ளுக்குள் மனதார வேண்டியபடி ஆடினாள். தியாகேசப் பெருமான், தம் பக்தையின் விருப்பத்தை உணர்ந்து கொண்டார். கொண்டியின் பக்தியை உலகறியச் செய்ய திருவுளம் கொண்டார். ஆழித்தேர், தானே மெதுவாக அசைந்தது. அதிர்ந்து போன மக்கள் கூட்டம் விண்ணதிர 'ஆரூரா...தியாகேசா...' என முழக்கம் எழுப்பியது. வாத்தியங்கள் நிசப்தமாகின. கொண்டியின் சலங்கையும் அமைதியானது. சோழ மன்னன் பெருங்குரலெடுத்து விம்மி அழுதான். சோழர் குலப்பெண்டிர் ஆனந்தம் மேலோங்க, தேரை நோக்கி நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங்கினர். கொண்டி , தேரின் வடத்தைப் பிடித்தாள். மக்கள் கரங்களும் இணைந்தன. தேர் விரைவாக நகர ஆரம்பித்தது. பூமாரி பொழிய சிவச்சின்னங்களும், திருக்குடைகளும், கொடிகளும் முன்னே செல்ல,பதிகம் பாடும் ஓதுவார்கள் பின் செல்ல தேர் நகர்ந்தது. சிவ வாத்தியங்கள் முழங்க,சிவ கைங்கர்யங்கள் செய்யும் அடியார் ககூட்டம்முன் செல்ல, அவர்களுக்குப் பின்னே மன்னனும் , அவன் பரிவாரங்களும் சென்றன. இருபுறமும் தேரை இழுத்த மக்கள் கூட்டம் விண்ணதிர சிவகோஷம் எழுப்பி வந்தனர். இப்போது வடத்தை விட்டு விட்டு, இரு கரங்களிலும் சாமரத்தை ஏந்திக் கொண்டு தேரில் ஏறினாள் கொண்டி. மன்னன் உள்ளிட்ட சகலரும் ஈசனோடு கொண்டியையும் வணங்கினார்கள். அவள் எதையும் கண்டு கொள்ளும் நிலையிலில்லை. சிந்தையெல்லாம் சிவனில் ஊறிக்கிடந்தது. சிவபதத்தை அடையப்போகும் நேரத்திலேயே மனம் ஆழ்ந்திருந்தது. "ஐயா தியாகேசா,இந்த எளியவளுக்கு இத்தனை பாக்கியமா... எளியோர்க்கு எளியோனே, எந்த ஊரில் நான் அவமானப்பட்டேனோ அந்த ஊரிலேயே என்னைத் தேரேறி வரச்செய்து ஆட்கொண்டாயே, இதற்கு மேல் நான் மண்ணில் இருக்கலாமா... உன்னருகில் அமர்ந்து ஊர்வலம் வந்த நான், இனி தரையிறங்கி நடக்கலாமா... இதோ என் உயிர். எடுத்துக்கொள். உயிரற்ற என் சடலம்தான் தேர்விட்டு இறங்க வேண்டும். இது கமலேசர் மீது ஆணை. எங்கள் தியாக சிந்தாமணி மேல் ஆணை " என்று பிரார்த்தித்தாள். ஊரை வலம் வந்த தேர், நிலை வந்து சேர்ந்தது.பழுத்த பழம் காம்பை விட்டு நீங்கியது. ஆம், சிவத்தை நோக்கி கொண்டியின் ஆன்மா விரைந்தது. மக்கள் கூட்டம் கதறியது. மன்னன் , தான் கொடுத்த சத்தியத்தின்படி திருவாரூரிலிருந்து மயிலாடுதுறை காவிரிக் கரைக்கு, கொண்டியின் சடலத்தைக் கொண்டு சென்றான். தகனம் செய்தான். வழியெங்கும் விநாயகர் ஆலயங்கள் அமைத்தான். அவை இன்றும் கொண்டியின் தியாகத்தை நினைவு கூர்கின்றன. 'இனி ஆழித்தேரை அலங்கரிக்கும் உரிமை கொண்டியின் வம்சாவளியினருக்கே.. அதுமட்டுமல்ல, தேரின் வடத்தை முதலில் பிடித்திழுக்கும் முதல் மரியாதையும் அவர்களுக்கே...' என்றும் அறிவித்தான் சோழராஜன். அது 19-ம் நூற்றாண்டு வரை நடைபெற்று வந்தது. கொண்டியின் வம்சாவளியினருக்கு சோழன் அளித்த நிலமும், 'கொண்டித்தோப்பு' என்று திருவாரூர் அருகே இன்றும் இருக்கிறது. திருவாரூர் அருகே ஓடும் நதிக்கு 'கொண்டி' என்றே பெயர். திருவாரூர் செல்லும் பக்தர்கள் இனி தியாகேசனுக்கு அருகில் இருக்கும் கொண்டியையும் கொஞ்சம் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். ஆழ்ந்த பக்திக்கு கொண்டி ஓர் அழுத்தமான அடையாளம்.
மத ஸ்தாபகர்களைக் குற்றம் சொல்வதைப் பற்றி தண்டிக்க என்னும் பேரால் ஒரு புதிய சட்டம் வேண்டுமென்றும் இப்போது எங்கும் ஒரே கூச்சலாயிருக்கிறது. இந்த சந்தர்ப்பத்தை நமது நாட்டுப் பார்ப்பனர்கள் தங்களுக்கு அனுகூலமாய் உபயோகப்படுத்திக் கொண்டு தங்களுடைய அக்கிரமங்களை நிலைக்க வைத்துக் கொள்ள எண்ணி அவர்களும் கூடவே கோவிந்தா போடுகிறார்கள். இம்மாதிரி ஒரு சட்டம் ஏற்படுத்துவதானது மனித உரிமையை அடக்குவதாகுமேயல்லாமல், மனித தர்மத்திற்கு நீதி செய்ததாகாது என்பதாக நாம் வலியுறுத்துவோம். மதம் என்று சொல்வது ஒரு மனிதனுடைய கொள்கை அல்லது அபிப்பிராயமாகுமேயல்லாமல், அது உலகத்திலுள்ள மனித கோடிகள் அத்தனை பேரும் கட்டுப்பட்டு நடந்துதான் ஆகவேண்டுமென்று கட்டாயப்படுத்தக் கூடியதல்ல. அப்படி எல்லோரையும் கட்டாயப்படுத்தப்பட்ட விஷயம் இந்த உலகத்தில் ஒன்றுகூட இல்லையென்பதே நமது அபிப்பிராயம். உலக மனிதர்களில் 100 - க்கு 99 3/4 பேர்களால் ஒப்புக்கொள்ளுவதாகச் சொல்லப்படும் கடவுளையும் அவரது தத்துவங்கள் என்பதையும் மறுப்பதற்கே எல்லா மனிதனுக்கும் உரிமை அளிக்கப்பட்டிருக்கிறது. கடவுள் செய்ததாகச் சொல்லுவதையும், சொன்னதாகச் சொல்லுவதையும் பற்றிய தர்க்கங்களும் மறுப்புகளும் அறிவு உலகத்தில் தினமும் தாண்டவமாடிக் கொண்டிருக்க உலகம் அனுமதிக்கப்பட்டிருக்கிறது. ஒன்றை எதிர்பார்த்து அடையாமல் போனவர்களில் பலர் கடவுளையுங்கூட தூஷிப்பதையும் உலகம் பார்த்துக்கொண்டும் அனுமதித்துக் கொண்டுந்தான் வருகிறது. கடவுளைப் பற்றியே இவ்வளவு அனுமதிக்கப்பட்டவர் கடவுள் பக்தர்கள் என்று சொல்லுபவர்களைப் பற்றி, கடவுளை அடைய வழிகாட்டிகள் என்று சொல்லுபவர்களைப் பற்றி கேட்கவும் வேண்டுமா? எனவே இவ்விஷயங்கள் ஒருவனுடைய அபிப்பிராயமாகுமேயல்லாமல் அதுவே சத்தியமாய் விடாது. உலகத்தில் எதாவது சீர்திருத்தம் என்பது ஏற்பட வேண்டுமானால் ஒருவர் அபிப்பிராயத்தை ஒருவர் கண்டிப்பதும் மறுப்பதும், ஒருவர் கொள்கையை ஒருவர் கண்டிப்பதும் மறுப்பதும் அனுமதிக்கப்பட்டுத்தான் ஆகவேண்டும். அதற்குச் சட்டம் போட்டு தடுத்துவிட்டால் அது மனிதனின் அறிவு வளர்ச்சியை தடுத்ததாகுமேயொழிய மற்றபடி அது எந்த விதமான நன்மையையும் செய்ததாக ஆகாது. அன்றியும் இம்மாதிரியாக ஒரு சட்டமியற்றுவது அநாகரீகமும் காட்டுமிராண்டித்தனமுமேயாகும். இப்பேர்பட்ட விஷயங்களில்தான் மக்களுக்கு விசாரணை செய்ய தாராளமாக இடம் கொடுக்கப்படவேண்டும். அதற்கு இடையூறாய் உள்ளவைகளையெல்லாம் களைந்தெறிய வேண்டும். ஒவ்வொரு காலத்திலுள்ள மக்கள் அறிவுநிலைக்கேற்றவாறு ஒவ்வொரு கொள்கைகள் பரப்பப்படுவதும், அது நிலைபெறுவதும், அதற்கு கோடிக்கணக்கான மக்கள் பின்பற்ற ஏற்படுவதும் சகஜமானதேயல்லாமல் அதில் ஒன்றும் அதிசயமில்லை. அதுபோலவே தற்காலம் உள்ள மக்கள் அறிவு நிலைக்குத் தக்கபடி மாறிக்கொண்டே வருவதும் இயற்கையே ஒழிய அதிலும் ஒன்றும் அதிசயமில்லை. எனவே மக்கள் வெறும் அரசியல் சமூக இயலில் மாத்திரம் முற்போக்கடைய வேண்டியது பாக்கியாயில்லை. அறிவிலும் ஆத்மார்த்த விஷயத்திலும் மனிதனுக்குள் இன்னமும் என்ன என்ன சக்தி இருக்கிறது என்பதைக் கண்டுபிடிப்பதிலும் முற்போக்கடைய வேண்டிய விஷயங்கள் எவ்வளவோ பாக்கியிருக்கிறது. அவைகளை கவனிக்கும் போது இந்த அரசியலும் சமூக இயலும் வெகு சிறியதேயாகும். ஆனால் அப்பேர்ப்பட்ட முயற்சிகளுக்கு சமூக இயல் முதலியவைகள் அடிகோலிகள் என்பதை மாத்திரம் ஒப்புக்கொள்ளலாம். ஆதலால் இம்மாதிரி அறிவு வளர்ச்சிக்கு ஏதுவாகிய பிறப்புரிமையான சுதந்திர உணர்ச்சிகள் சட்டத்தின் மூலமாய் அழிக்கப்பட்டால் உலகம் காட்டுமிராண்டித்தனத்திற்கு ஆளாக நேரிடும் என்பதை அறிவாளிகளுக்கு எச்சரிக்கை செய்கிறோம்.
பிரிட்டனில் நடந்துமுடிந்துள்ள தேர்தல்களில் பிரதான எதிர்க்கட்சியான தொழிற்கட்சி பெரிய அளவில் சோபிக்கத் தவறியுள்ளது. கட்சியின் புதிய தலைவராக ஜெரமி கார்பின் கடந்த ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர், அந்தக் கட்சி சந்தித்துள்ள முதலாவது அரசியல் சோதனையாக இந்தத் தேர்தல்கள் பார்க்கப்பட்டன. ஸ்காட்லாந்து நாடாளுமன்றத் தேர்தலில் மிகப் பெரிய பின்னடைவாக தொழிற்கட்சி மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. ஸ்காட்லாந்தில் ஒருகாலத்தில் செல்வாக்கு பெற்ற கட்சியாக தொழிற்கட்சி இருந்துள்ளது. வேல்ஸ் சட்டசபைக்கான தேர்தலில் தொழிற்கட்சி முன்னணியில் இருக்கின்றது. பெரும்பான்மை பலத்தை பெறத்தவறியுள்ளது. இங்கிலாந்து உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலிலும் தொழிற்கட்சி பெரும் பின்னடைவை சந்திக்கும் என்று எதிர்வுகூறல்கள் இருந்தபோதிலும், தொழிற்கட்சி சில தொகுதிகளை இழந்தாலும் முக்கிய கவுன்சில்களை தக்கவைத்துக் கொண்டுள்ளது. லண்டன் மேயருக்கான போட்டியில், தொழிற்கட்சியின் சாதிக் கான் முன்னணியில் உள்ளார். வெற்றி பெற்றவராக சாதிக் கான் அறிவிக்கப்பட்டால், அவர் தான் ஐரோப்பிய தலைநகர் ஒன்றில் முதலாவது முஸ்லிம் மேயராவார்
""நமக்கு எதிர்காலத்தைக் காணும் திறமை இல்லை. இடைவிடாது ஆராயும் மனிதனுடைய மனக்கண் முன் இன்னும் என்னென்ன அதிசயங் கள், என்னென்ன தெய்வீகக் காட்சி கள் தோன்றப் போகின்றன என்பதை நாம் கூற முடியாது. ஆனால் ஒன்று மட்டும் நிச்சயமாகக் கூறலாம். எந்தப் புதிய வழிகளை எதிர்காலத் தத்துவ ஆராய்ச்சி கண்டுபிடித்தாலும் உப நிஷதங்கள் கூறும் "தத்வமஸி', "அஹம் பிரும்மாஸ்மி' என்னும் பேருண்மையை ஒரு நாளும் அசைக்க முடியாது. அதில் சிறிதேனும் மாறுதல் ஏற்படுத்த இயலாது. இவ்வுலக இயற்கையானது விடுவிக்க முடியாத ஒரு புதிர் போன்றது. நமது அறிவு வளர வளர இந்தப் புதிர் எவ்வளவு கடினமானது என்பதுதான் தெளிவுபடுகிறது. இதற்கு ஒரு விடை கண்டுபிடிக்க வேண்டு மானால் அதற்குரிய திறவுகோலை, அது ரகசியமாக வைக்கப்பட்டுள்ள இடத்தில் தேட வேண்டும். அந்த இடம் நமது உள்ள மாகிய கோவில். அதைத் திறந்து பார்த்தால் இயற்கையின் ரகசியத்துக்கான திறவுகோலைக் காண முடியும். இங்குதான் முதன் முதலில் உபநிஷத ரிஷிகள் அதைக் கண்டுபிடித்து ஆத்மதரிசனம் பெற்று அழியாப் புகழ் அடைந்தனர்.'' நாம் குறியீடுகளுக்கே முதலிடம் தருகி றோம். அந்தக் குறியீடு எதைக் குறிக்கிறதோ அதைப் புறக்கணித்து விடுகிறோம். "கடவுள்' என்ற சொல்லை ஆராய்கிறோம். கடவுளின் உண்மையை அலட்சியப்படுத்துகிறோம். ஒருவர் கதவை மூடிக்கொண்டு பூஜை செய்கிறார். கதவு தட்டப்படுகிறது. "யார்' என்று கேட்கிறார். "நான்தான் கடவுள்' என்று பதில் வருகிறது. "சற்று நேரம் இருங்கள். நான் பூஜையை முடித்துக்கொண்டு வந்து கதவைத் திறக்கிறேன்' என்கி றார் அவர். எவரைக் குறித் துப் பூஜை செய்கி றோமோ அவரை விட்டுவிட்டு புற பூஜையைத்தான்- குறியீட்டு முழக்கத்தை தான் நிஜமாகக் கருதி உண்மையை மறக்கிறோம். வார்த்தைக்கு முக்கியத்துவம் தரும் நாம் வார்த்தை கள் உணர்த்தும் உண்மையை மறக்கிறோம். வார்த்தை ஜாலங்களிலேயே நாம் சண்டை போடுகிறோம். புத்த பகவான் சொல்லும் ஒரு கதை... ஓரிடத்தில் வெள்ளம் வந்துவிட்டது. மக்கள் தவிக்கின்றனர். அங்கு ஒரு படகு வருகிறது. மக்கள் படகில் ஏறி அமர்ந்து வெள்ளத்தைக் கடந்து கரை சேர்கின்றனர். கரை சேர்ந்ததும் அந்தப் படகைத் தலையில் சுமந்து கொண்டு திரிகிறார்கள். கரை சேர்ந்தபின் படகு தேவையில்லை; படகையே தூக்கி வைத்துக்கொண்டு திரிவது மடைமை. தூண்டில்மேல் கவனம் செலுத்த வேண்டும். எதுவரை? மீன் தூண்டிலில் சிக்கும்வரை. மீன் பிடித்ததும் தூண்டிலைச் சுமந்து திரிவது மடைமை. "வார்த்தைகள்' தெய்வத்தை உணர்வதற்கே... உணர்ந்தவுடன் வார்த்தைகள் இல்லாமல் இருக்கும் நிலையே சிறந்ததாகும். பகவான் ரமண மகரிஷியை ஒரு ஜெர்மானிய அறிஞர் பார்க்க வந்தார். அவர் ரமண மகரிஷி யிடம், ""பகவானே! நான் நிறைய கற்றுள்ளேன். இல்லற ஞானம் பெற்றுள்ளேன். நிறைய ஆராய்ச்சி களைச் செய்துள்ளேன். உங்களிடம் புதிதாய் நான் எதைக் கற்றுக்கொள்ளப் போகிறேன்'' என்று கேட்டார். அதற்கு பகவான் ரமணர், ""நீ கற்றதனைத்தையும் மறந்துவிட வேண்டும். அதுவே நீ இங்கு கற்க வேண்டுவது'' என்றார். உணரும் வரைதான் பேச்சு, வார்த்தைகள். உணர்ந்தபின் பேச்சற்ற நிலை. பகவான் ராமகிருஷ்ணர் சொல்கிறார்: ""வண்டு பூவின்மேல் அமர்ந்து மதுவை உறிஞ்சி ருசிக்கும் வரைதான் சிறகுகளை அடித்து ரீங்கார சப்தமிடும். தேனை ருசிக்க ஆரம்பித்துவிட்டால் சிறகடிப்பது ஓய்ந்துவிடும்; சப்தம் இருக்காது.'' "சும்மாயிரு சொல்லற' என்கிறார் அருணகிரி நாதர். சீடன் ஒருவன் குருவை நாடிச் சென்று தனக்கு உபதேசம் செய்ய வேண்டினான். தான் பல நூல்களைக் கற்றவனென்றும் கூறினான். அதற்கு குருநாதர், ""உனக்கு உபதேசிக்க வேண்டுமானால் மற்ற சீடர்கள் தருவதைவிட இரண்டு மடங்கு குரு தட்சிணையை நீ தர வேண்டும்'' என்றார். ""ஏன் குருநாதா, நான் பல விஷயங்களைக் கற்றவன். இவர்களோ ஒன்றும் அறியாதவர்கள். அவர்களைவிட என்னிடம் அதிகமாக தட்சிணை கேட்கிறீர்களே...'' என்று கேட்டான். ""நீ கற்றவற்றை மறக்கச் செய்ய ஒரு மடங்கு; புதிதாய்க் கற்பிக்க ஒரு மடங்கு. ஆக இரண்டு மடங்கு தட்சிணை'' என்றார் குருநாதர். ஒரு நாத்திகர் தலைவராக உள்ள நாட்டில், ஒரு விண்வெளி விஞ்ஞானி, விண்வெளியில் ஆய்வு செய்தார். அங்கு அவர் இறையின் பெருமையை உணர்ந்தார். பின் பூமி திரும்பி, நாட்டுத் தலைவரிடம் வந்தார். தலைவர், ""நீ விண்வெளிப் பயணத்தில் என்ன கண்டாய்?'' என்று கேட்டார். ""இறைவனின் மாண்பை'' என்றார் விஞ்ஞானி. ""என்னிடம் சொன்ன இறைமாண்பு பற்றி வேறு யாரிடமும் சொல்லி விடாதே... நான் நாட்டில் இறைவன் இல்லை என்று கூறி, நிரீச்வர வாதத்தை விதியாகக் கூறி வந்துள்ளேன். நீ உணர்ந்த இறைவன் பற்றிய உண்மை உன்னுடனே இருக்கட்டும்'' என்றார். அந்த விஞ்ஞானியை ஒரு சமயப் பாதிரியார் சந்தித்தார். அவர், ""நீ இறைவனைக் கண்டாயா?'' என்று கேட்டார். ""இல்லை'' என்றார் விஞ்ஞானி. அதற்குப் பாதிரியார், ""நீ இதை வெளியில் யாரிடமும் சொல்லிவிடாதே. நானும் இறைவன் இல்லை என்பதை அறிவேன். ஆனால் நான் இறைவன் உண்டு என்று பிரசாரம் செய்து வருகிறேன். இறைவன் இல்லையென்று நீ உணர்ந்ததை வெளியில் சொல்லிவிடாதே'' என்றார். ஆகவே இறையுணர்வு என்பது அவரவர் உணர்வைப் பொறுத்தது. புறத் தர்க்கத்தால்- புறத்தூண்டுதலால் ஏற்படுவதல்ல இறையுணர்வு. ஒரு அருமையான கலைச்சின்னத்தை அதன் பெருமை தெரிந்த ஒருவர் இருபது வெள்ளிக் காசுகள் கொடுத்து வாங்கினார். அதைப் பார்த்த ஒருவன், ""இவ்வளவு அரிய கலைச்சின்னத்தை வெறும் இருபது வெள்ளிக் காசுக்கு விற்று விட்டானே'' என்றான். இன்னொருவன், ""இந்த அற்பமான கல்லுக்கு இருபது வெள்ளிக்காசு கொடுத்து வாங்குகி றானே. இவன் எவ்வளவு பெரிய மடையன்'' என்றான்.
Colombo (News 1st) கனேடிய உயர்ஸ்தானிகரும் நோர்வே, நெதர்லாந்தின் தூதுவர்களும் மட்டக்களப்பு மற்றும் யாழ்ப்பாணத்திற்கு இன்று (12) விஜயம் செய்துள்ளனர். இலங்கைக்கான நோர்வே தூதுவர் Trine Joranli Eskedal மற்றும் நெதர்லாந்து தூதுவர் Tanja Gonggrijp ஆகியோர் மட்டக்களப்பில் இன்று சந்திப்புகளில் கலந்துகொண்டிருந்தனர். இரு நாடுகளினதும் தூதுவர்கள், இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் மற்றும் அரசாங்க அதிபர் கே.கருணாகரன் ஆகியோரை சந்தித்து கலந்துரையாடினர். இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனை மட்டக்களப்பிலுள்ள அமைச்சின் அலுவலகத்தில் சந்தித்து இவர்கள் கலந்துரையாடினர். கிழக்கு மாகாண மக்களின் பல்வேறுபட்ட தேவைகள், பிரச்சினைகள் குறித்து இதன்போது அவர்களுடன் கலந்துரையாடியதாகவும் அரசாங்கத்தினூடாக மேற்கொள்ளப்படுகின்ற அபிவிருத்தி சார்ந்த செயற்பாடுகளை எடுத்துக்கூறியதாகவும் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்தார். இதனிடையே, நோர்வே மற்றும் நெதர்லாந்து தூதுவர்கள், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரனையும் மட்டக்களப்பு மாநகர மேயர் தியாகராஜா சரவணபவனையும் சந்தித்து கலந்துரையாடினர். 13 ஆம் திருத்த சட்ட அமுலாக்கம், மட்டக்களப்பின் பரம்பல் நிலையை மாற்றியமைப்பதற்காக அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படுகின்ற குடியேற்றத் திட்டங்கள் குறித்து தூதுவர்களுடன் கலந்துரையாடியதாக மட்டக்களப்பு மாநகர சபை மேயர் தியாகராஜா சரவணபவன் குறிப்பிட்டார். மேலும், தமிழர்களின் அரசியல் நகர்விற்கான ஏற்பாடுகளை செய்து கொடுக்குமாறு அவர்களிடம் கோரியதாகவும் தெரிவித்தார். இதனிடையே, இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் David McKinnon, யாழ். மாநகர மேயர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணனை இன்று சந்தித்து கலந்துரையாடினார். இதன்போது, கனடாவின் டொரன்டோ மாநகர சபைக்கும் யாழ். மாநகர சபைக்கும் இடையில் இருக்கின்ற ஒப்பந்தம் தொடர்பாக David McKinnon உடன் கலந்துரையாடியதாக யாழ். மாநகர சபை மேயர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் தெரிவித்தார். அரசியல் தீர்வு தொடர்பாகவும் தமிழ் மக்களுக்கு எதிராக நடைபெற்ற அழிப்புகள் தொடர்பாகவும் அவருக்கு தௌிவூட்டியதாக மணிவண்ணன் மேலும் குறிப்பிட்டார்.
இயற்கை உணவுகள் எப்பொழுதும் நமக்கு நன்மைகளை வழங்கக்கூடியது. பொதுவாக நாம் காலையில் குடிக்கும் டீ, காபி போன்றவை நமக்கு சில நன்மைகளை வழங்கினாலும் அவற்றை அதிக அளவு எடுத்துக்கொள்ளும்போது பல பக்கவிளைவுகள் ஏற்படுகிறது. இந்த சூழ்நிலையில் நாம் அதற்கு மாற்றாக வேறு பானங்களை நோக்கி நகர வேண்டியது அவசியம். அவசியம் மட்டுமல்ல அதுதான் ஆரோக்கியமும் கூட. அந்த வகையில் நமக்கு ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை வழங்கக்கூடிய ஒரு அற்புத மூலிகைதான் ஜின்செங் அல்லது குணசிங்கி. இதில் டீ தயாரிக்க எந்த இலைகளும் இல்லை என நீங்கள் நினைக்கலாம். ஆனால் அதன் வேறை வைத்து டீ தயாரிக்கலாம். இந்த டீ உங்களுக்கு உங்களுக்கு எடை குறைப்பு முதல் ஆண்மை அதிகரிப்பு வரை அனைத்து நன்மைகளையும் வழங்கும். ஜின்செங் டீ தயாரிக்கும் முறையையும் அதன் பலன்களையும் பார்க்கலாம். தயாரிக்கும் முறை ஜின்செங் டீ தயாரிப்பது மிகவும் எளிமையான ஒன்று. சில வேர்களை எடுத்து நனவு சுத்தம் செய்து விட்டு இரண்டு ட்மளர் நீரில் அதனை போட்டு நன்கு கொதிக்க வைக்கவும். இது ஒரு ட்மளர் ஆகும் வரை குறைந்தவுடன் இறக்கவும். பின்னர் இதில் சிறிது தேன் சேர்த்து குடிக்கவும். உயர் இரத்த அழுத்தம் உயர் இரத்த அழுத்தத்தை குறைக்க உதவும் ஒரு அற்புதமான இயற்கை மருத்துவம் ஜின்செங் டீ ஆகும். சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு இடையே நடத்தப்பட்ட ஆய்வில் தொடர்ச்சியாக ஜின்செங் டீ குடிப்பது அவர்களின் இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. ஹார்மோன் சமநிலை ஜின்செங் டீ குறிப்பாக பெண்களுக்கு அதிக நன்மைகளை வழங்கக்கூடியது. இது ஹார்மோன் சமநிலை இன்மையால் பெண்களுக்கு ஏற்படும் மார்பக புற்றுநோய். எண்டோமெட்ரோசிஸ் போன்ற நோய்களை சரிசெய்ய உதவுகிறது. ஏனெனில் இதில் உள்ள ஜின்செனோசிஸ் என்னும் வேதிப்பொருள் பெண்களின் ஹோர்மோன்களை போலவே செயல்படக்கூடியது. இது அவர்களுக்கு ஏற்படும் ஹார்மோன் இழப்பை சரிசெய்ய உதவுகிறது. உடல் மற்றும் மூளையின் புத்துயிர் ஜின்செங் டீ குடித்த பலரும் தங்கள் மூளையின் ஆற்றல் மற்றும் செயல்திறன் மற்றும் கவனம் போன்றவை அதிகரிப்பதாக தெரிவித்துள்ளனர். இதில் உள்ள அடாப்டஜன் அனைத்து விதமான மனஅழுத்தத்தையும், பதட்டமான சூழ்நிலையையும் சமாளிக்கவும் இழந்த ஆற்றலை மீண்டும் பெறவும் உதவும். இதய ஆரோக்கியம் ஜின்செங் டீயை அதிக ஆன்டிஆக்சிடன்ட் நிறைந்த பொருளாகும், இது உங்கள் இதய ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவுகிறது. ஜின்செங் டீ இதய துடிப்பை சீராக்குவதுடன் இதயத்திற்கு தேவையான ஆக்சிஜனை வழங்குகிறது. ஜின்செங் வேரானது இதய தசைகளின் ஆரோக்கியத்தை அதிகரிப்பதுடன் இதயத்தில் ஏற்படும் மையோபதி என்னும் நோயை குணமாக்குகிறது. சரும ஆரோக்கியம் ஆன்டிஆக்சிடன்ட் அதிகமுள்ள இந்த இயற்கை மூலிகை சருமத்திற்கு பல நன்மைகளை வழங்கக்கூடியது, இதற்கு காரணம் இதிலுள்ள எதிர் அழற்சி பண்புகள் மற்றும் சக்திவாய்ந்த வேதிப்பொருட்களும் ஆகும். இதில் உள்ள டாதியான் வயதாவதை தாமதப்படுத்த கூடிய பண்புகளை கொண்டது. மேலும் இது உடலில் உள்ள நச்சுப்பொருட்களை வியர்வை வழியாக வெளியேற்றக்கூடியது. நோயெதிர்ப்பு சக்தி ஜின்செங் டீ பழங்காலம் முதலே சளி மற்றும் காய்ச்சலை குணப்படுத்துவதில் முக்கியப்பங்கு வகிக்கிறது. மேலும் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் கூடும். மேலும் ஜின்செங் டீ தொடர்ந்து குடிக்கும்போது அது பாக்டீரியா மற்றும் வைரஸ் தொற்றுகளில் இருந்து பாதுகாக்கிறது. எடை குறைப்பு ஜின்செங் டீ உங்களுக்கு எடை குறைப்பில் அதிக உதவிகள் புரிகிறது. இது இயற்கை பசியை அடக்குவது என்று அழைக்கப்படுகிறது. இந்த டீ குடிப்பது மட்டுமின்றி தொடர்ச்சியான உடற்பயிற்சிகளும் செய்ய வேண்டியது அவசியம். பாலியல் ஆரோக்கியம் பல நாடுகளில் ஜின்செங் டீ மற்றும் வொயின் பாலியல் ஆரோக்கியத்தை அதிகரிப்பதற்காக ஆண்களால் குடிக்கப்படுகிறது. ஜின்செங் டீ உங்கள் உடலில் டெஸ்டெஸ்ட்ரோனின் அளவை அதிகரிக்க உதவுகிறது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ச்சியாக குடித்து வர உங்கள் உடலில் பாலியல் ஹார்மோன்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதுடன் உங்களுக்கு இருக்கும் விறைப்பு பிரச்சனையையும் குணப்படுத்தக்கூடும். உறவில் ஈடுபடுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன் இதனை குடிப்பது உங்களை புத்துணர்ச்சியாக உணர செய்வதுடன் உங்கள் ஆணுறுப்பிற்கு செல்லும் இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதால் உங்களால் நீண்ட நேரம் உறவில் ஈடுபட முடியும். சுருக்கமாக சொல்லப்போனால் இது ஒரு இயற்கை வயகரா ஆகும்.
இங்கிலாந்து துடுப்பாட்ட அணியுடனான தொடர்புகளைத் துண்டித்த இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர், ஸ்காட்லாந்து 1994 ஆம் ஆண்டில் பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின் (ஐ.சி.சி) இணை உறுப்பினரானது.[7] அப்போதிருந்து, அவர்கள் மூன்று கிரிக்கெட் உலகக் கோப்பைகளிலும் (1999, 2007 மற்றும் 2015) மற்றும் மூன்று ஐசிசி உலக இருபதுக்கு 20 போட்டிகளிலும் (2007, 2009 மற்றும் 2016) விளையாடியுள்ளனர். இருப்பினும், இந்த இரண்டு நிகழ்வுகளிலும் அவர்களின் முதல் வெற்றி 2016 உலக இருபது -20 போட்டியில் ஹாங்காங்கை வீழ்த்தும் வரை வரவில்லை. [8] ஸ்காட்டிய துடுப்பாட்ட அணி கிரிக்கெட் ஸ்காட்லாந்தால் நிர்வகிக்கப்படுகிறது. செப்டம்பர் 2014 முதல் அணியின் தலைவராக இருந்த பிரஸ்டன் மாம்சென் பதவி விலகிய பின்னர், கைல் கோட்ஸர் 2016 நவம்பரில் அணியின் தலைவரானார். பயிற்சியாளராக தென்னாப்பிரிக்காவின் ஷேன் பர்கர் ஜனவரி 2019 இல் பொறுப்பேற்றுக் கொண்டார். [1] ஏப்ரல் 2018 இல், ஐ.சி.சி தனது அனைத்து உறுப்பினர்களுக்கும் முழு இருபது -20 சர்வதேச (டி 20 ஐ) அந்தஸ்தை வழங்க முடிவு செய்தது. எனவே, ஜனவரி 1, 2019 க்குப் பிறகு ஸ்காட்லாந்து மற்றும் பிற ஐ.சி.சி உறுப்பினர்களிடையே விளையாடிய அனைத்து இருபதுக்கு -20 போட்டிகளும் முழு டி 20 ஐ ஆகும். [9] மேற்கோள்கள்தொகு ↑ 1.0 1.1 "Scotland appoint Shane Burger as Head Coach". International Cricket Council. 15 January 2019 அன்று பார்க்கப்பட்டது. ↑ "ICC Rankings". International Cricket Council. ↑ "ODI matches - Team records". ESPNcricinfo. ↑ "ODI matches - 2019 Team records". ESPNcricinfo. ↑ "T20I matches - Team records". ESPNcricinfo. ↑ "T20I matches - 2019 Team records". ESPNcricinfo. ↑ Scotland at CricketArchive ↑ Muthu, Deivarayan (12 March 2016). "Scotland end win drought at ICC global events". ESPNcricinfo. 13 March 2016 அன்று பார்க்கப்பட்டது. ↑ "All T20 matches between ICC members to get international status". International Cricket Council. 26 April 2018. 1 September 2018 அன்று பார்க்கப்பட்டது. "https://ta.wikipedia.org/w/index.php?title=ஸ்காட்லாந்து_துடுப்பாட்ட_அணி&oldid=2901067" இருந்து மீள்விக்கப்பட்டது
Home / SLIDESHOW / சமூகம் / பொருளாதாரம் / இயற்கை வளங்களின் நல்லாட்சியும் விவசாயத் துறையின் மீள் எழுச்சியும் இயற்கை வளங்களின் நல்லாட்சியும் விவசாயத் துறையின் மீள் எழுச்சியும் July 31, 2020 SLIDESHOW, சமூகம், பொருளாதாரம் சில வாரங்களின் முன் ஒரு ஞாயிறு மாலை நேரம். குப்பிளான் கிராமத்தில் வாழும் விவசாயப் பெருமக்களில் ஒரு பகுதியினரையும் வடபுலத்தில் இயங்கி வருகின்ற இயற்கைவழி இயக்கத்தினரில் ஒரு பகுதியினரையும் சந்திக்கும் அரிய வாய்ப்பு எனக்குக் கிட்டியிருந்தது. அவ்விடத்தில் நான் நிறையவே கற்றுக்கொண்டேன். அவற்றை எல்லாம் அசைபோட்டுக் கொண்டிருந்தேன். அப்பொழுது தான் கோவிட் வைரசு தொற்று நோயைக் கட்டுப்படுத்தும் முயற்சி நெருக்கடியாக மாறியது. அடுத்தடுத்த இருநாட்களும் விடுமுறையாகவும் அறிவிக்கப்பட்டன. நானும் திரும்பப் பயணமாகி விட்டேன். அதேவார இறுதியளவில் நோய் பரவுவதைத் தவிர்ப்பதற்கு மக்கள் நடமாட்டம் தவிர்க்கப்பட வேண்டியதாகி விட்டது. ஊரடங்கு நிலையும் அறிவிக்கப்பட்டது. அந்நேரத்தில் வயல்களிலும் பண்ணைகளிலும் தேங்கி நிற்கப் போகும் காய்கறி மற்றும் தானிய உணவுப் பொருட்கள் பற்றி எண்ணிப் பார்த்தேன். ஊரடங்கு நிலை முடியும் போது மக்கள் எல்லோரும் சந்தை நோக்கி ஓடப் போகிறார்கள் அதனால் வைரசு நோய் தொற்றும் நிலை மோசமாகலாம் என்பது பற்றியும் அதிகம் யோசித்தேன். மக்களுக்கு உணவு கிடைக்க வேண்டும். அதற்காக உணவுவகைகளை நேரடியாகவே நுகர்வோர் பெறக்கூடிய வசதிகளை எவ்வாறு சமூக செயற்பாட்டாளர்கள் ஏற்படுத்திக் கொடுக்க முடியும் என்பதை அவர்களிடம் கேட்டிருந்தேன். அவர்களே தொடர்பாளர்களாக இடையில் செயற்பட்டால் உணவுத் தேவை உள்ளோர் தமக்கு முடிந்த வழிகளில் பண்ணைகளுக்கு நேரில் போய் விரும்பியதைப் பெறமுடியும். அத்துடன் மக்கள் பெருங் கூட்டமாக சந்தையில் வந்து நேரடித் தொடர்பு கொள்வதும் தவிர்க்கப்படும் என்றேன். ஓரிரு நாட்களினுள் நான் குறிப்பிட்டவையெல்லாம் அங்கு நடக்கத் தொடங்கியுள்ளன என்றும் தொண்டு மனப்பான்மை கொண்டோர், விவசாயத் திணைக்களத்தினர் இம்முயற்சிகளை முன்னெடுத்துள்ளார்கள் என்றும் தெரிவித்தார்கள். ஊரடங்கு நிலை மேலும் நீண்டு கொண்டு போக வெவ்வேறு இடங்களிலிருந்தும் வணிகர்கள் அதற்கான அனுமதியைப் பெற்றுக்கொண்டு பண்ணை உற்பத்தியை தாமே நேரில் எடுத்து வந்து நகரப்பகுதிகளில் வீடுகளுக்கு வழங்கல் செய்வது பற்றியும் அறிந்து கொண்டேன். ஆறுதல் அடைந்ததோடு மகிழ்ச்சியும் பெற்றேன். சிலசமயங்களில், இவ்வாறான நெருக்கடிகள் தான் நல்ல புதிய வாய்ப்புக்களுக்கும் பழையனவற்றை மீளுருவாக்குவதற்கும் காரணமாக அமைகின்றன என்ற உண்மை இவ்விடத்தில் அவதானிக்கப்பட வேண்டியது அல்லவா? உணவை உற்பத்தி செய்யும் விவசாயி தனது பொருட்களை முடிந்த அளவு நேரடியாக விற்பனைப்படுத்துவதன் மூலம் பொருளுக்கேற்ற விலையைப் பெறுகிறார் வாங்குவோர் அவ் உணவுப்பொருளினது உண்மையான பெறுமதிக்கு ஏற்ற விலையைக் கொடுக்கிறார்கள். இதில் எதைப் புதிய வாய்ப்பாகப் பார்க்கிறோம்? அதைத் தானே காலங்காலமாக எமது மூதாதையர் பின்பற்றினார்கள்? அதைத்தானே உலகெங்கும் பாரம்பரிய முறையில் கமத்தொழில் செய்த விவசாயிகளும் பின்பற்றினார்கள்? அது எப்படி இன்று புதுமையாக உங்களுக்குத் தெரிகிறது என நீங்கள் என்னைக் கேட்கலாம். இவ்விடத்தில் தான் நான் மீளவும் குப்பிளான் சந்திப்பில் நடந்த உரையாடலுக்குச் செல்கிறேன். மார்ச் மாதம் 15ஆம் தேதி குறிஞ்சிக்குமரன் சனசமூக நிலையத்தினர் அச்சந்திப்பை ஏற்பாடு செய்திருந்தனர். என்னை அழைத்ததோடு நிற்காமல் எனது ஆர்வத்தையும் எமது தேவையையும் ஒன்றிணைத்து பொருத்தமான தலைப்பு ஒன்றினையும் தெரிவு செய்திருந்தார்கள். எல்லாமாக 25 பேர் கலந்து கொண்டனர். எனது சிறுவயதில் என்னூர் ஆதாரப் பள்ளியில் எனக்கு கற்பித்த ஆசிரியை விசுவாம்பா விசாலாட்சி மாதாஜி குப்பிளானைச் சேர்ந்தவர். அதனைவிட வேறெதுவும் அவ்வூர் பற்றித் தெரியாதவனாக அங்கு சென்றேன். கூட்டம் துவங்க முதல் சனசமூகநிலையத்துடன் இணைந்த நிலப்பரப்பையும் அண்டிய கன்னிமார் ஆலயத்தின் வரலாற்றையும் தெரிந்து கொண்டது சிறப்பான அறிமுகமாக அமைந்தது. முற்றிலும் விவசாயத்துடன் இணைந்த ஒரு சாதாரண கிராமமாக இருந்த அவ்வூர் பின்னர் யுத்தத்தின் போது அடங்கிப் போனது. ஊர்வாசிகளில் ஒருபகுதியினர் மேற்கு நாடுகளுக்குப் புலம் பெயர்ந்ததைத் தொடர்ந்து இன்று புதிய மினுமினுப்புடன் மீளவும் ஒரு நவீன பணப்பயிர் (cash crops) செய்கைக்கான வகையில் அது உருமாற்றம் பெற்றிருப்பதும் தெளிவாகியது. நிகழ்வுக்கு வந்திருந்த ஊரவர் அனைவரும் விவசாயத்தில் ஏதோ ஒருவகையில் ஈடுபடுவோராக இருந்தது சிறப்பு. சனசமூக நிலையத்தை நிர்வகிப்போர் இருந்தனர். வந்தோரை நிறைகுடம் வைத்து வரவேற்கவும் சிற்றுண்டி தந்து உபசரிக்கவுமென பள்ளி செல்லும் சிறுமியர் உட்பட ஓர் இளையவர் குழாமே இருந்தது. தாய்மார் இருந்தனர். குரக்கன் சாமை தானியங்களை நெடுங்காலமாகச் சிறப்புப் பயிர்களாகச் செய்து வரும் லலிதா அம்மா இருந்தார். ஆரோக்கிய உணவகம் மூலம் இலைக்கஞ்சியை ஊரறிந்த உணவாக அறிமுகம் செய்து வரும் அல்லை விவசாயி கிரிசன் எமக்கென சூடான கஞ்சிப் பாத்திரத்தோடு வந்திருந்தார். தாராப் பண்ணை புகழ் செல்வி ஸ்ராலினி கலந்து கொண்டார். இயற்கை வழி விவசாய உற்பத்திப் பொருட்களையும் பாரம்பரியம் மிக்க பண்டங்களையும் உணவாய்ப் பதனிட்டு விலைப்படுத்திப் பெயர் பெற்ற ஊக்கமுள்ள விவசாயி செம்புலம் மூர்த்தி அவர்களும் இருந்தார். வந்திருந்த அனைவரையும் உரையாடலில் இணைக்கும் வகையில் இளையோர் ஒரு வட்டமாகவும் மிகுதிப்பேர் நான்கு வட்டங்களாகவும் அமர்ந்து விடயங்களைப் பேச இடம் உண்டாக்கிக் கொண்டோம். இந்த வட்டங்களில் வெளிவந்த கருத்துக்களை பின்னர் பெரிய வட்டத்தில் அலசியதோடு பதிவும் செய்து கொண்டோம். அத்தனை பரபரப்புடன் உரையாடலில் பங்குபற்றிய சிறுவர் வட்டத்தின் கருத்துக்களை முதலில் உள்வாங்கி அவர்களின் ஆர்வம்மிக்க ஈடுபாட்டுக்கு மதிப்பளிப்பது எனது கடமையாகியது. தங்கள் உணவுத் தேவைகளை ஊருக்குள்ளேயே நிரப்பவல்ல வளமும் செழிப்பும் மிக்க தமது ஊரின் விவசாயச் சிறப்பைக் அவர்கள் குறிப்பிட்டார்கள். குப்பிளான் கிராமத்தின் கல்விப் பாரம்பரியத்தையும், கலை, பண்பாட்டு அம்சங்களுடன் பண்டைய கால விழாக்களையும், விளையாட்டுக்களையும் பேணும் மரபையும், அதற்காக இயங்கும் பல்வேறு சமூகக் கட்டமைப்புக்களையும் கழகங்களையும் கொண்டுள்ள தம்மூரின் பெருமை பேசி அமர்ந்தார்கள். அங்கு கொரோனா வைரசு கொண்டுவரவிருக்கும் இடர் பற்றியோ நீண்டுகொண்டே போகவிருந்த ஊரடங்குநிலை பற்றியோ யாரும் எண்ணவுமில்லை. அவ்விடயம் பற்றி நாங்கள் பேசிக் கொள்ளவுமில்லை. அது பற்றிக் கடைசியில் எழுதுகிறேன். இப்போதைக்கு உரையாடலுக்கு மீளவும் வருகிறேன். மூத்தோரிடையே குப்பிளான் ஊரின் விவசாயத்தின் சிறப்பு என்ன என்பதைக் கணிக்க முற்பட்டேன். ஊரோடு சேர்ந்த வளம் மிக்க மண். 30 அடி ஆழத்திலேயே பெறக்கூடியதான நிலத்தடி நீர் வளம். அவ்வளங்களை திரட்டிக் காலங்காலமாகச் செய்யப்பட்ட பயிர்ச்செய்கையும் கால்நடை வளர்ப்பும் ஒன்றிணைக்கப்பட்ட விவசாயம். பின்னர் வெங்காயம், மிளகாய், கரட், பீற்றூட், உருளைக் கிழங்கு, புகையிலை என்பவை பணப்பயிர்களாக முன்னேற்றம் பெற்றமை. ஊரின் மக்களிடையே படித்த இளைஞரும், அரச தொழில் செய்தோரும்கூட பரம்பரை பரம்பரையாக விவசாயத்தில் ஈடுபட்டமையும் குறிப்பிடத்தக்கவையாயின. அண்மைக் காலத்தில் பயிர்ச்செய்கையின் அளவும் தீவிரமும் அதிகரித்திருப்பது உண்மையென்றால் செயற்கை உரங்களின் வருகை அதற்கு ஒரு முக்கிய காரணியாக இருக்கிறது. அதன் பெறுபேறாக கால்நடை வளர்ப்பு குறைவடைந்துள்ளது. அதுபோலவே பணப்பயிர்கள் முன்னுரிமை பெற்றுள்ளன. குரக்கன், சாமை போன்ற பாரம்பரிய சிறு தானியங்கள் பயிர்செய்வது குறைவடைந்துள்ளது. இவை கண்கூடாகத் தெரிந்தன. இவற்றோடு சேர்த்துத்தான் இன்று இத்தகைய உற்பத்தியின் விலை சரிவடைவதும், விற்பனையில் சிரமம் ஏற்படுதலும் கூடவே அவதானிக்கப்படுகின்றன. இனிவரும் பத்து ஆண்டுகளில் குப்பிளான் விவசாயிகளும் அவர்களது விவசாயமும் எதிர்கொள்ளவுள்ள அச்சுறுத்தல்கள் எவையாயிருக்கும் என வினாவினேன். இயற்கை தரவிருக்கும் கால நிலை மாற்றம், நிலத்தடி நீர் பற்றாக்குறை என்பன பரந்த சூழலியல் அம்சங்களாக தெரிவிக்கப்பட்டன. தொடரும் வெளிநாடு செல்லும் வாய்ப்புகள், அதனால் ஏற்படுத்தக்கூடிய வேலைக்கான ஆள் பற்றாக்குறை, கூலி செலவு அதிகரிப்பு என்பன மனித வளம் சார்ந்த சவால்களாக பட்டியலிடப்பட்டன. சந்தைப்படுத்தலின் போது இன்று காணப்படும் பத்துக்கு ஒன்று கழிவு என்ற நடைமுறையும் அச்சுறுத்தலாக முன்வைக்கப்பட்டது. இவை எல்லாவற்றுக்கும் மேலாக, இப்பகுதி நிலப்பரப்பின் அதியுயர் வளமான செம்மண் பிரதேசம், குறிப்பாகப் பயிர் நிலங்கள் குடிமனையாதலும், அபிவிருத்தி என்ற பெயரில் நிகழவுள்ள நகரமயமாதலும், இறக்குமதிகளின் வருகையும், சரியான திட்டமிடல், கொள்கை வகுப்பு இல்லாத நிலையில், குப்பிளான் போன்ற கிராமங்களது விவசாயத்தின் சிறப்பம்சங்கள் மழுங்கடிக்கப்படும் என்பதை வந்திருந்தோர் நன்கு தெரிந்து குறிப்பிட்டிருந்தார்கள். அலையாக வந்த ஒரு பெரு விவசாயப் புரட்சியின் வரலாற்றையே பதிவாக்கும் வகையில் அமைந்த இவ் உரையாடல் எதனை வெளிப்படுத்துகிறது? இத்தனை தெளிவாக நாம் எடுத்துசொல்லக் கூடிய வகையில் எமக்குத் தெரிந்த எமதூரின் வரலாற்றையும், நாமே ஏற்படுத்திய இம் மாற்றத்துக்கு உந்துதலாக அமைந்த புறச் சூழற் காரணிகளையும் மீளத் திரும்பிப் பார்த்திருக்கிறோமா? இப்படியே தொடர்ந்தால் எம் சமூகத்தையும், எமது நிலபுலங்கள், நீர் வளங்களையும் இந்தப்பாதை எங்கே இட்டுச் செல்லக் கூடும்? இது பற்றி எமது அக்கறை எவ்வளவு? இவ் விடயங்கள் பற்றிக் கூடிப் பேசியிருக்கிறோமா? பெருமளவில் இல்லை என்பது தான் எல்லாவற்றுக்கும் பதிலாகிறது. இங்கு பேசப்பட்டவை குப்பிளான் என்ற ஒரு ஊரின் கதை மட்டுமா அல்லது இங்குள்ள ஓராயிரம் ஊர்களின் கதையா? என்று என்னைக் கேட்டீர்களானால் இங்கு மட்டுமல்ல, இந்திய தேசத்தில் உள்ள ஆறரை இலட்சம் கிராமங்களில், ஏன் உலகளாவிய வகையில் உள்ள 25 இலட்சம் கிராமங்களில் இது தான் கதை. தங்களது விவசாயத் துறையினை நவீனமயமாக்கவும், அதனை மேம்படுத்தி உற்பத்தியைப் பெருக்கவும் வெளிக்கிட்ட அத்தனை நாடுகளின் ஊர்களிலும் இதே தான் நடந்து வருகிறது என்று தான் நான் சொல்வேன். இதே கேள்விகள் தான் அங்கெல்லாம் கூட கேள்விகளாக உள்ளன. இப் பதிவின் துவக்கத்தில் புதிய வாய்ப்புகள், புதுமையான விற்பனை முயற்சிகள் பற்றி எழுதிய இடத்துக்கு இப்போது திரும்பிப் போகலாம். ஒரு விவசாயக் கிராமத்தில் நடந்தேறிய உரையாடல் தந்த பாடங்களையும், அது போன்ற மற்றைய கிராமிய, சமூக சூழ்நிலைகளில் இனி நடக்க வேண்டியவையாக, நடக்கும் சாத்தியம் உள்ளவையாக நான் காண்பவற்றை இவ்விடத்தில் பதிவு செய்வதோடு ஒரு சிலவற்றை மேலும் அலசிப்பார்ப்பது தான் எனது நோக்கமாக இருந்தது. ஆனால் இன்று நாம் எதிர்கொண்டுள்ள நெருக்கடியினைப் பார்த்தால், இது நாம் ஆரம்பத்தில் எண்ணிக் கொண்டது போல எல்லாவற்றையும் போன்ற ஒரு காய்ச்சல் மட்டுமல்ல. மாறாக, இதை எழுதுகின்ற எனக்கும், வாசிக்கும் உங்களுக்கும், முழு மானிட இனத்தின் இருப்புக்குமே அச்சுறுத்தலாக வந்துவிட்ட ஓர் உலகளாவிய தொற்றுநோயாக (pandemic ) உருவெடுத்துள்ளது. எவருமே எதிர்பார்த்திருக்காத வகையில் எமது வாழ்க்கைமுறை, பொருண்மியம், எமக்கான எதிர்காலத் திட்டங்களாக நாம் எண்ணி வைத்திருக்கும் எல்லாவற்றையுமே பெருமளவில் உலைத்துத் தான் நிற்கப்போகின்றது என்பதும் தெளிவாகி வருகிறது. இந்த நோய்க்கான வைரசின் வீரியம் தணிந்து, அதன் அச்சுறுத்தலும் தாக்கமும் அகன்று போகவும், அதே வேளையில் அதற்கான தடுப்பு மருந்து (vaccine) எல்லோருக்கும் கிடைக்கவும் எடுக்கப் போகும் காலம் மாதங்கள் பலவாகலாம். அதுவரை நாம் நடமாட்டத்தைக் குறைத்தும், வெளியே உலவும் போது நெருக்கமாகப் போகாமலும், பாதுகாப்போடு நம் ஒவ்வொருவருக்கும் இடையே குறிப்பிட்ட அளவு தூரத்தைக் கையாண்டும் தான் இச் சிக்கலில் இருந்து மீள முடியும் என்று உலகளாவிய வகையில் கடந்த நான்கு மாத காலமாகத் திரட்டிய அனுபவமும் நோயியல் அறிவும் தெரிவிக்கின்றன. இப்படியானவொரு சூழ்நிலையில் எம் ஒவ்வொருவருக்கும் தேவையான அடிப்படை உணவு ஏதோ ஒருவகையில் எமக்குக் கிடைத்தாக வேண்டும். அவ்வுணவை நாம் உற்பத்தி செய்பவர்களாக இல்லையென்றால் வேறு யாரோ அப்பொருட்களை, பயிரென்றால் விளைவித்தும், கால்நடையென்றால் அவற்றைப் பராமரித்தும் எமக்கு கிடைக்கப் பண்ண வேண்டும். அந்த விவசாயப் பெருமக்களுக்கும் நுகர்வோராகிய எங்களுக்கும் இடையே ஓடித் திரிந்து அவற்றை எமக்கு கொண்டு வந்து சேர்க்கும் வியாபாரிகள், கடைக்காரர், சமூக ஆர்வலர்கள், தொண்டமைப்புக்கள் உள்ளடங்கிய ஒரு மூன்றாம் பகுதி அங்கு இருக்க வேண்டும். இவற்றை எல்லாம் சரியாக ஒழுங்கமைக்கவும், அறிவுரை வழங்கவும், விதிகள் வகுத்து மேற்பார்வை செய்யவும் நியமிக்கப்பட்டுள்ள விவசாயத் திணைக்களம் உட்பட்ட அரச அமைப்புக்கள் நான்காவது பகுதியாக இருக்க வேண்டும். இந்த நான்கு பிரிவினரும் உணவுத் தொகுதியில் அடங்குகிறார்கள் அல்லவா? இத்தனை பேரும் ஒருமுகமாக ஊரடங்குக் காலத்தின் போது தாமாக முன்வந்து உழைத்ததனால் தான் ஏதோ ஒரு வகையில் ஓரளவுக்கேனும் இந்த நெருக்கடி நிலை கையாளப்பட்டுள்ளது தெளிவு. இதன்போது உள்ளூர் மட்டத்தில் கண்டும் கேட்டும் பட்டறிந்தும் பெற்ற பாடங்கள், அதைவிட யுத்த காலம் தந்த அனுபவங்கள், ஒப்பீடாக இன்று எமது கையிலுள்ள புதிய தொழில் நுட்பக்கருவிகள், தொடர்பாடல் மற்றும் போக்குவரத்து வசதிகள் ஏற்படுத்தித் தந்த நன்மைகள் எல்லாவற்றையும் இப்போதே ஓரளவுக்கேனும் ஒன்று திரட்டிப் பார்க்க வேண்டிய தேவையும் வெளிப்படுகிறது. இயற்கைவழி இயக்கம், சிறகுகள் போன்ற ஒரு சில வட்டங்கள் அதில் ஒருபகுதியை ஏற்கெனவே செய்து வருகிறார்கள். பொறுப்புமிக்க இளையோர், அரச பணியாளர்கள் பலரும் அக்கறையுடன் ஊரடங்கு காலத்தில் வேலைசெய்து வரும் செய்தி உற்சாகம் தருகின்றது. தொடரும் நெருக்கடி நிலையை இனியும் சமாளிப்பதற்கு இந்தப் பாடங்களும், அவை பற்றிய சமூக மட்டத்திலான அக்கறை, புதிய விழிப்புணர்வு, நெடுங்காலப் பார்வை, பொறுப்புணர்வு, அறம் மிக்க நடத்தை என்பனவும் அடிப்படையானவை. விவசாய நிலங்களும் அவற்றுடன் இணைந்த இயற்கை வளங்களும் எவ்வாறு சிதையாமல் பேணப்பட வேண்டுமோ, அதையும் விடக் கூடிய அக்கறையோடு அந்நிலங்களைப் பண்படுத்திப் பயிர் செய்யும் விவசாயிகள் இக்கொடிய நோயில் சிக்காமல் பாதுகாக்கப்பட வேண்டியதும் இந்நேரத்தில் அவசியமானது. நீண்டுகொண்டே போய்விட்ட உணவு வழங்கல் சங்கிலி (supply chain) அவசியமற்றது என்பதும், அநியாய விலைக்குத் தான் அது வழிவகுக்கிறது என்பதும் உணவுத் தற்சார்பு என்ற தலைப்பின் கீழ் இந்நேரத்தில் அதிகம் பேசப்படுவதை இப்போது கண்டுள்ளோம். அந்தத் தெளிவு நிலைத்து நிற்குமேயானால் ஒவ்வொரு மாகாணத்திலும் விவசாயிகள் நீதியான விலையையும் நியாயமான வருமானத்தையும் பெறுவார்கள். நஞ்சற்ற பயிர்களையும் ஆரோக்கியமான உணவுப் பண்டங்களையும் உள்ளூரிலேயே உற்பத்தி செய்து தருவார்கள். ஒருபகுதித் தேவையை வீட்டுத் தோட்டங்களும் நிரப்பிக் கொள்ளும். பெரும் வணிகம் அன்றாட உணவு விநியோகத்தில் வரவும் தேவையில்லை என்பதை ஊரடங்குக் காலம் நிரூபித்துள்ளது. இன்னும் சொல்லப்போனால், கோப்பாயில் விளையும் காய்கறிகள் பல கைகள் மாறி தம்புள்ளை வரை ஏற்றிச் செல்லப்பட்டு, அங்கு விலைகூறி விற்கப்பட்டபின் அதில் ஒருபகுதி மீண்டும் வண்டியிலேறி சுன்னாகம் சந்தைக்கு வருவது உண்மை என்றால் அதன் நியாயத் தன்மை தான் என்ன? அல்லது முல்லைத்தீவில் மேயும் பசுக்களின் பால், அதுவும் 87 சதவிகிதம் நீர்ப்பதன் இயல்பாகக் கொண்ட பசுப்பால், நீண்ட தாங்கியில் பயணம் செய்து அங்கு நீர் நீக்கி உலர்த்தப்பட்டபின் பால்மாவாக வடக்கு நோக்கி வருவதன் விண்ணாணம் தான் என்ன? அதிகம் கேட்கப்படாத இக்கேள்விகளும், இவ்வகை முரண்பாடுமிக்க உணவுத் தொகுதியினை வளர்த்தெடுத்த பொருண்மிய சந்தைப்படுத்தல் கோட்பாடுகளும் அதிகம் பேசப்படுவதற்கு கொரோனா தொற்றுநோய் ஏற்படுத்திய நெருக்கடி இங்கு வாய்ப்பளித்துள்ளது தெரிகிறது. எமது உரையாடலின் இறுதியில் அன்று குப்பிளானில் முன்வைக்கப் பட்ட பிரச்சனைகளான கூலிச் செலவு, சந்தையின் நெருக்கடி, அதனால் ஏற்படும் விலைச் சரிவு, உற்பத்தி முயற்சிக்கும் பொருளின் பெறுமதிக்கும் (value) பொருத்தமான விலை எமக்குக் கிடைக்காமை, கூட்டுறவு காலத்தில் எமக்கிருந்த பலமும் எம் குரலுக்கிருந்த வலிமையையும் அற்றுப் போனமை எல்லாமே பண்ணைக்கு வெளியே நிகழும் நடைமுறைகள் சார்ந்தவை. பாரம்பரியப் பயிர்வகைகளுடனும் அவரவர் பண்பாட்டுடனும் ஒன்றிணைந்த தற்சார்பும் (self reliance) தன்னிறைவும் (self sufficiency) மிக்க ஒரு கிராமிய பொருளாதாரத்தின் அச்சாக இருந்த வேளாண் தொழில் புது யுகத்தில் ஒரு ஆலைத்தொழில் (industrialisation) சிந்தனைக்குள் புகுத்தப்பட்டதன் விளைவாக இம்மாற்றங்களைப் பார்க்கலாம். அப்பாதையில் விவசாய உற்பத்தி பெருக்கப்படத்தான் வேண்டுமென்பதில் ஐயம் ஒருபோதும் இருந்ததில்லை. இன்றும் இல்லை. ஆனால் அந்தப் பெருக்கத்தை அடைய என்ன விலை கொடுத்தாக வேண்டும்? கண்ணை விற்று கைலாய தரிசனம் தேடுவதா என்பதுதான் இவ்விடத்தில் கேள்வி. மேற்கு நாடுகளில் விவசாயத்தை ஆலைத்தொழில்மயப்படுத்தும் பாதையில் பயணித்து நெடுந்தூரம் போனவர்களில் ஒரு பகுதியினர், அதன் பாரதூரமான விளைவுகளைக் கண்டு, அவற்றைத் தவிர்க்கவென மீண்டும் இயற்கை வழி வேளாண்மையைக் கையில் எடுக்கத் தலைப்பட்டு இன்று அரை நூற்றாண்டு ஆகிறது. மண்ணில் வாழ்ந்து பயிர்நிலத்தைப் பண்படுத்தும் மண்புழுக்கள், உக்க வைக்கும் பூச்சியினங்கள் தவிர, எம் கண்ணுக்குத் தெரியாத கோடிக்கணக்கான நுண்ணுயிரிகள் இரசாயன உரங்களால் அழிக்கப்படுவதை அறிந்து 'வாழும் மண்' என நூல் எழுதிய ஆங்கில மூதறிஞர் Lady Balfour அம்மையார் இங்கிலாந்தில் சேதன விவசாயம் செய்ய வெளிக்கிட்டு 77 ஆண்டுகள் ஆகிவிட்டன. அதே அறிவையும் இயற்கையின் அபூர்வமான தன்மைகளையும் நேற்றுவரை நன்கறிந்திருந்த எங்கள் ஊர் மக்கள், மண்ணையும் மலடாக்கி மக்களுக்கும் நஞ்சூட்டும் அளவுக்கு இரசாயனப் பதார்த்தங்களுக்கு எவ்வாறு இன்று பழக்கப்பட்டார்கள், அடிமையாகினார்கள் என்பது சிந்தனைக்குரியது. ஆனாலும் இவ் விடயத்தில் நாங்கள் ஒன்றும் தனித்தவர்கள் இல்லை என்று ஏற்கெனவே சொல்லிவிடடேன். வளம் குறைந்த நாடுகளில் நிலவிய வறுமை போக்கவும், இந்தியா, இலங்கை போன்று தானிய உற்பத்தியில் தன்னிறைவு இன்றி தத்தளித்த நாடுகளுக்கு உதவவும் என்ற பரந்த நோக்குடன் தரமான ஆய்வுகளை நிகழ்த்திய தலை சிறந்த விவசாயத் துறை அறிஞர்களின் ஆலோசனையுடன் தான் பசுமைப் புரட்சி (Green Revolution) என்ற சீரிய முயற்சி ஐம்பது ஆண்டுகளின் முன் இங்கும் வந்தடைந்தது. சிக்கல் என்னவென்றால் காலப் போக்கில் சனத் தொகைப் பெருக்கம் ஒருபுறம் தள்ள, நாமும் நவீன உற்பத்திரக விவசாயம் என்ற பெயரில், எம்மக்களது தேவைகளுக்காக ஏதோவொரு அக்கறையோடு செய்து வந்த விவசாய முயற்சியை, காலப்போக்கில் மேலே கூறியதுபோல முகம் தெரியாத யார் யாருக்கோவென, எங்கேயோ அனுப்பவென பெருக்கி வந்திருக்கிறோம். இவற்றை அறிமுகம் செய்த அரசுகளும், அறிவுசார் சமூகமும் இவ்விடயத்தில் தமது பொறுப்புகளைப் படிப்படியாக நழுவ விட்டதோடு மட்டுமில்லாமல், ‘பயிர் விதை முதல் இரசாயனப் பொருள் வரை விவசாயியின் அத்தனை தேவைகளையும் ஒரே பொட்டலமாக நானே தருகிறேன், நீ வளர்த்து முடிய நானே உன்னிடம் அதை நான் கூறும் விலைக்குப் பெற்றுக் கொள்கிறேன், உனது வாழ்க்கையை இலேசாக்குவது தான் எனது விருப்பம், என்னை விட்டால் உனக்கு யார் வரப்போகிறார்கள’; என்னும் அளவுக்கு வணிகம் (Agri business) அந்தப் பொறுப்புக்களை எடுத்து வந்துள்ளது. உணவு உற்பத்தியைப் பொறுத்த வரையில் உலகமயமாக இயங்கும் பெருவணிக உணவுத் தொகுதி (corporate food system) ஏற்றுமதிக்கான உற்பத்தி, திறந்த சந்தை, பெரிதாகிக் கொண்டே வரும் பண்ணைகள் என்ற பாதையில் கொண்டு செலுத்திய நாடுகள் தந்த பாடம் என்ன? விலை வீழ்ச்சி, உணவு பற்றாக்குறை, மண்வளம் சீரழிதல், வருமானம் இழப்பு, பெருங்கடன், நிலத்தை விட்டு வேறு தொழில் தேடுதல், ஏன் தனது சொந்தப் பண்ணையிலேயே தொழிலாளியாகும் இழி நிலை என்ற சோகக்கதைத்தான். இந்திய மண்ணில் பசுமைப் புரட்சியின் முன்னோடியான பஞ்சாப் மாநிலத்தில், ஓர் அற்புதம் என்று விபரிக்கப்பட்ட நீர்ப் பாசனத்துடனான கோதுமை உற்பத்தியை நிகழ்த்திக் காட்டிய பஞ்சாபிய விவசாயப் பெருமக்களிடையே இன்று மண்ணையும் நச்சாக்கி, நிலத்தைத் துளைத்தெடுத்த நீரும் வரண்டுபோக, சமூகக் கட்டமைப்பு சீர் குலைந்து கடனாளியாகிய பின் கடந்த 15 ஆண்டுகளில் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் எண்ணிக்கை மட்டும் ஏழாயிரம் பேர் என அம்மாநில விவசாயப் பல்கலைக் கழகம் தெரிவிக்கிறது. வழி தவறிப் போன பசுமைப் புரட்சி பற்றிய இந்தப் பார்வையையும் கையில் எடுத்துக்கொண்டு, நாம் ஏறியிருந்த இரசாயனக் குதிரையை விட்டு இறங்கவேண்டிய நேரத்தில் குதித்திறங்கத் தெரிந்தவர்களாக எம்மை மாற்றிக்கொண்டு, எம்மையெல்லாம் அக் குதிரையில் ஏற்றிவிட்டு இலாபம் பெற்றவர்களையும் அவதானத்தில் வைத்துக் கொண்டு, இன்று குப்பிளான் உரையாடல் வெளிப்படுத்திய எமது சஞ்சலங்களைத் தாண்டிய ஓர் எதிர்காலத்தைக் கற்பனை பண்ண முடியுமா? நாம் கையில் வைத்திருக்கும் பாரம்பரிய அறிவையும், நவீன விஞ்ஞான அறிவையும் ஒருங்கிணைத்து, எமது மண்ணுடன் சேர்ந்த இயற்கை வளங்களைப் பேணுகின்ற அதே நேரத்தில் ஒவ்வொரு பரப்பு நிலத்தினதும் மொத்த விளைச்சல், உற்பத்தி குன்றாத வகையில் விவசாயம் செய்வது சாத்தியமா? அந்தக் கேள்விகட்குரிய எனது பதில் திடமான ஒரு ‘ஆம், சாத்தியம் தான’ என்பது மட்டுமல்லாமல், நாம் இவ்விடயத்தில் கற்றுக் கொள்வதற்குத் தாராளமாக உதாரணங்கள் உண்டென்றும் சொல்லிக் கொள்வேன். பசுமைப் புரட்சியை ஒதுக்கி வைத்துவிட்டு, புரட்சியையே பசுமையாக்குவோம் எனத் தமக்கு 1991இல் ஏற்பட்ட நெருக்கடியின் மத்தியில் வெளிக்கிட்ட கியூபா நாடு முழுத் தேசத்தையும் இயற்கை வழி விவசாயம் நோக்கி இட்டுச் சென்றது ஒரு உதாரணம். IFOAM என்ற பெயருடன் 50 ஆண்டுகளாக உலக நாடுகளில் எல்லாம் Organic Agriculture எனும் முத்திரையுடன் இயற்கைவழி விவசாயத்தை இயக்கி வளர்க்கும் இந்த பன்னாட்டு முயற்சியும், அவர்களால் மிகத் தெளிவாக வரைவிலக்கணம் செய்யப்பட்டுள்ள கோட்பாடுகளும் மாற்றுவழி வேளாண்மைக்கு வழிகாட்டும் மற்றுமோர் உதாரணம். கடைசியாக வெளிவந்த புள்ளி விபரங்களின் படி இன்று 180 நாடுகளில் மூன்று மில்லியன் விவசாயிகளால் அண்ணளவாக 70 மில்லியன் ஹெக்டயர் நிலப் பரப்பில் இயற்கை வழி விவசாயம் மேற்கொள்ளப்படுகிறது. மக்களது உடல்நலத்தையும் பாதுகாப்பான வாழ்க்கையையும் விட முக்கியமானதாக தனது இலாபத்தை முதலிடத்தில் வைக்கும் விவசாயம் நிறுத்தப்பட்டு அதற்குப் பதிலாக இயற்கையோடு இசைவானதாயும், சமூக நீதியை நிலை நாட்டுவதுமான விவசாயமே தெரிவு செய்யப்படவேண்டும் என்கிறார்கள் Agroecology என்ற பெயரில் இயங்கும் செயற்பாட்டாளர்கள். விவசாயிகளிடையே உள்ளூர் மட்ட தன்னாட்சி நிலவும்போது உணவு உற்பத்தி, விலை நிர்ணயித்தல், சந்தைப்படுத்தல் சார்ந்த முடிவுகளைத் தாமே எடுக்குமளவுக்கான வாய்ப்புகள் உறுதியாகும். உணவு உற்பத்தி முயற்சியினை இயற்கையுடன் எதிர்த்து நின்று நடத்தும் போராட்டமாகக் கொள்ளாமல் இயற்கையின் அறிவுத் திறனை (nature’s intelligence) உள்வாங்கும் வகையில் நடத்தும்போது, நிலம் நீர் வளங்களைப் பேணுவதான நல்லாட்சியும், பல்வகையான பயிர்களைப் பயிரிடவல்ல விவசாயத்தின் மீள் எழுச்சியும் நிதர்சனமாகும். அத்தகைய கோட்பாடுகளுக்கு உள்ளடங்கிய இயற்கை வழிவிவசாயம் குப்பிளான் கிராமத்தில் அதிகம் இன்றில்லை என்றாலும், இந்த உரையாடலின் பெறுபேறாகவும் ஒரு பரீட்சார்த்த முயற்சியாகவும் அது இக்கிராமத்தில் பெருமளவில் முன்னெடுக்கப்பட்டால், அதுவும் இன்றைய கொரோனா வைரசுத் தொற்றுநோய் நெருக்கடி வெளிப்படுத்தியுள்ள புதிய தேவைகளை நிரப்பும் வகையில் புத்தம் புது நேரடி விற்பனைக்கும் வழி செய்து கொடுத்தால் எமது முதல் சந்திப்பின் தலைப்பும் பொருள் நிறைந்ததாய் அமையும். மேற்கூறியவாறு குப்பிளான் முன்னுதாரணமாக விளங்கும்போது செம்புலம் எங்கும் இயற்கை வழியில் விவசாயம் மீள் எழுச்சி பெறும். சிறப்பு மிக்க செம்மண் கிராமங்கள் பல சிதைவுறாமல் காப்பாற்றப்படும். சீர் சேர்க்கவல்ல சிவப்பு மண்ணை சீமெந்தால் மூடிவிடும் சிற்றறிவு நீங்கிப் போகும். அனைவருக்குமான தற்சார்பு உணவு வழங்கல் தானாகவே வந்தடையும். அதுவே நேர்த்தியான விவசாயத்தோடு நிலைபேறான சமூகத்தையும் தக்கவைக்கும் என்பதை அன்றைய உரையாடல் மீளவும் எனக்கு உணர்த்தி நிற்கிறது. பேராசிரியர் நடராஜா சிறிஸ்கந்தராஜா- நிமிர்வு வைகாசி- ஆனி - 2020 இதழ் இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள... Related Posts பொருளாதாரம் Post a Comment No comments கருத்துரையிடுக வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் : 1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள். 2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள். 3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம் நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி. Subscribe to: Post Comments ( Atom ) இறுதியாக வெளியான காணொளி நிமிர்வு இதழ்களின் தொகுப்பு நிமிர்வு காணொளிகள் பக்கம் முகநூலில் எங்கள் பக்கம் நிமிர்வு கார்த்திகை - 2022 இதழ் Twitter-Timeline Tweets by Nimirvu1 அதிகம் வாசிக்கபட்டவை கட்டிளமைப் பருவத்தினருக்கு சிறந்த முன்மாதிரிகளே தேவை “இந்தக் காலப் பிள்ளைகளிடம் நல்லொழுக்கம் இல்லை. பெரியோருக்கு மரியாதை தருவது இல்லை. எதுக்கெடுத்தாலும் வன்முறை” என்பது வளந்த... மண்ணும் மரபறிவும் தமிழ்நாட்டின் நெய்தல் நில மக்கள், குறிப்பாக கடலோடிகள் குறித்து ஆய்வு செய்து தொடர்ந்து எழுதியும், பேசியும் வருகின்றவர் கன்னியாகுமரியில் வாழ... வகுப்பறை மேம்பாடும், வகுப்பறை முகாமைத்துவமும் பல்வேறு வகையான பரந்து பட்ட திறன்கள் மற்றும் நுட்பங்களை ஆசிரியர்கள் கையாள்வதன் மூலம், வகுப்பறையை சுமுகமான முறையிலும், மாணவர்களின் தே... தற்சார்பு உணவுப் பண்பாடு எம்மை வழிநடத்த வேண்டும் ஐப்பசி 14 உலக உணவு தினத்தை முன்னிட்டு இலங்கை விவசாயத் திணைக்கள பண்ணை ஒலிபரப்புச் சேவையின் விவசாய வானொலி சஞ்சிகை நிகழ்ச்சியான களமும் வளமும்... ஆபத்தான விளிம்பில் நிற்கும் தென்னமரவடி இலங்கையின் கிழக்கு மாகாணத்தின் திருக்கோணமலை மாவட்டத்தின் தொன்மையான கிராமங்களில் ஒன்று தென்னவன் மரபு அடி கிராமம். பாண்டியனின் மரபில் வந்தவர... Powered by Blogger. பதிப்புரிமை | Copyright © 2017 - Nimirvu நிமிர்வு. SriLanka Tamil News Site. All Rights Reserved. | WeB Designed By :: Nimirvu
நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி முதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி மேல்-நிலை கள / இணைய குறி ஸ்வால்பார்ட் நாட்டின் அல்லது மேல்-நிலை களம் பெயரை உள்ளிடுக: -லிருந்து அங்கியுலாஅங்கேரிஅங்கோலாஅசர்பைஜான்அசென்சன் தீவுஅந்தோராஅன்டிகுவா பர்புடாஅமெரிக்க ஐக்கிய நாடுகள்அமெரிக்க சமோவாஅயர்லாந்துஅருபாஅர்கெந்தீனாஅல்சீரியாஅல்பேனியாஆசுதிரியாஆப்கானித்தான்ஆர்மீனியாஆஸ்திரேலியாஇசுரேல்இத்தாலிஇந்தியாஇந்தோனேசியாஇலங்கைஈராக்ஈரான்உகாண்டாஉக்ரைன்உசுபெக்கிசுத்தான்உருகுவைஉருசியாஎகிப்துஎக்குவடோரியல் கினிஎக்குவடோர்எசுத்தோனியாஎசுப்பானியாஎதியோப்பியாஎயிட்டிஎரித்திரியாஎல் சால்வடோர்ஐக்கிய அரபு அமீரகம்ஐசுலாந்துஓமான்கசக்ஸ்தான்கத்தார்கனடாகமரூன்கம்போடியாகயானாகாங்கோ மக்களாட்சிக் குடியரசுகானாகாபோன்காம்பியாகினிகினி-பிசாவுகிரிபட்டிகிரெனடாகிரேக்ககிர்கிசுத்தான்கிறீன்லாந்துகிழக்குத் திமோர்குக் தீவுகள்குரோவாசியாகுவாதலூப்பேகுவாத்தமாலாகுவைத்கூபாகென்யாகேப் வர்டிகேமன் தீவுகள்கொக்கோசு (கீலிங்) தீவுகள்கொங்கோ குடியரசுகொசோவோகொமொரோசுகொலொம்பியாகோட் டிவார்கோஸ்ட்டா ரிக்காசமோவாசவூதி அரேபியாசாகோசு ஆர்சிபெலகோசாட்சான் மரீனோசாம்பியாசாவோ டொமே மற்றும் பிரின்சிப்பிசிங்கப்பூர்சிபூட்டிசிம்பாப்வேசியார்சியாசியேரா லியோனிசிரியாசிலிசிலோவாக்கியாசீசெல்சுசீனாசுரிநாம்சுலோவீனியாசுவாசிலாந்துசுவிட்சர்லாந்துசுவீடன்சூடான்செக் குடியரசுசெனிகல்செயிண்ட் எலனாசெயிண்ட் கிட்சும் நெவிசும்செயிண்ட் மார்டென்செயிண்ட் லூசியாசெயிண்ட். வின்செண்ட் கிரெனேடின்ஸ்செயின்ட் பியர்ரே மற்றும் மிக்குயலான்செர்பியாசைப்பிரஸ்சொலமன் தீவுகள்சோமாலியாஜப்பான்ஜிப்ரல்டார்ஜெர்மனிஜோர்தான்டிரினிடாட் மற்றும் டொபாகோடென்மார்க்டொமினிக்கன் குடியரசுடொமினிக்காடோகோடோக்கெலாவ்தஜிகிஸ்தான்தன்சானியாதாய்லாந்துதாய்வான்துனீசியாதுருக்கிதுருக்மெனிஸ்தான்துவாலுதென்கொரியாதென்னாப்பிரிக்காதெற்கு சூடான்தொங்காநமீபியாநவூருநிக்கராகுவாநியுவேநியூ கலிடோனியாநியூசிலாந்துநெதர்லாந்துநெதர்லாந்து அண்டிலிசுநேபாளம்நைஜர்நைஜீரியாநோர்போக் தீவுநோர்வேபகாமாசுபகுரைன்பனாமாபப்புவா நியூ கினிபரகுவைபரோயே தீவுகள்பலத்தீன் நாடுபலாவுபல்காரியாபாக்கித்தான்பார்படோசுபிஜிபிட்கன் தீவுகள்பின்லாந்துபிரான்சுபிரெஞ்சு கயானாபிரெஞ்சு பொலினீசியாபிரேசில்பிலிப்பைன்ஸ்புருண்டிபுரூணைபுர்க்கினா பாசோபூட்டான்பெனின்பெரிய பிரித்தானியா மற்றும் வட அயர்லாந்தின் ஐக்கிய பெருபெர்மியுடாபெலருஸ்பெலீசுபெல்ஜியம்பொசுனியா எர்செகோவினாபொலிவியாபோக்லாந்து தீவுகள்போட்சுவானாபோர்த்துகல்போலந்துமக்காவுமங்கோலியாமடகாசுகர்மத்திய ஆபிரிக்கக் குடியரசுமர்தினிக்குமலாவிமலேசியாமல்தோவாமார்சல் தீவுகள்மாலிமாலைத்தீவுகள்மால்ட்டாமியான்மர்மூரித்தானியாமெக்சிக்கோமைக்கிரோனீசியக்மொசாம்பிக்மொண்டெனேகுரோமொனாக்கோமொரிசியசுமொரோக்கோயமேக்காயெமென்ரீயூனியன்ருமேனியாருவாண்டாலக்சம்பர்க்லாத்வியாலாவோஸ்லித்துவேனியாலிபியாலீக்டன்ஸ்டைன்லெசோத்தோலெபனான்லைபீரியாவங்காளதேசம்வடகொரியாவடக்கு மரியானா தீவுகள்வடமாக்கடோனியக்வத்திக்கான் நகர்வனுவாட்டுவலிசும் புட்டூனாவும்வியட்நாம்வெனிசுவேலாஹொங்கொங்ஹொண்டுராஸ்
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads By Category: எழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம் சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும் December 2005 Issue ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | இலக்கியம் | முன்னோடி | நிதி அறிவோம் | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | நூல் அறிமுகம் குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | தமிழக அரசியல் | பயணம் | அஞ்சலி | பொது | சினிமா சினிமா | Events Calendar எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | புதுமைத்தொடர் | புழக்கடைப்பக்கம் | வார்த்தை சிறகினிலே Tamil Unicode / English Search அஞ்சலி < Prev | Index | Next > கே. ஆர். நாராயணன் - | டிசம்பர் 2005 | Share: முன்னாள் குடியரசுத் தலைவர் கே.ஆர். நாராயணன் நவம்பர் 9, 2005 தேதியன்று தில்லியில் காலமானார். அவருக்கு வயது 85. நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்ட கே.ஆர். நாராயணன் தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பலனின்றிக் காலமானார். நாராயணனுக்கு மனைவி உஷா, மகள்கள் அம்ரிதா, சித்ரா ஆகியோர் உள்ளனர். இவரது மகள் சித்ரா துருக்கி நாட்டின் இந்தியத் தூதராகப் பணியாற்றி வருகிறார். நேர்மையாளர், கல்வியாளர், பண்பாளர் என்ற பெருமை கொண்ட நாராயணன் 1927-ம் ஆண்டு அக்டோபர் 27-ம் தேதி கேரளத்தில் உள்ள பெரும்தனம் கிராமத்தில் ராமன் வைத்யன் என்கிற தலித் சமூகத்தைச் சேர்ந்தவருக்கு மகனாகப் பிறந்தார். பல்வேறு சமூக, பொருளாதாரத் தடைகளை மீறி கல்வி, வேலைவாய்ப்புகளில் முன்னேறியது மட்டுமல்லாமல் நாராயணன் உயர்பதவிகளை அடைந்தார். கல்லூரி விரிவுரையாளர், பத்திரிகையாளர் எனப் பல்வேறு பணிகளையாற்றிய பெருமை இவருக்கு உண்டு. 1945-ல் இங்கிலாந்து சென்று லண்டன் பொருளாதாரப் பள்ளியில் அரசியல் அறிவியல் பட்டம் பயின்ற நாரயணனுக்கு 1949-ல் இந்தியப் பிரதமர் ஜவஹர்லால் நேரு தூதர் பதவியை ஏற்கும்படி அழைப்புவிடுத்தது குறிப்பிடத்தக்கது. அப்பதவியை நாராயணன் ஏற்றுக்கொண்டார். ரங்கூன், டோக்கியோ, ஹனோய், கான்பெரா, லண்டன் போன்ற இடங்களில் உள்ள இந்தியத் தூதரங்களில் பணியாற்றிய அனுபவமும் நாராயணனுக்கு உண்டு. அதுமட்டுமல்லாமல் தாய்லாந்து (1967-69), துருக்கி (1973-75), சீனா (1976-78) மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் இந்தியத் தூதராகப் பணியாற்றியவர் என்கிற பெருமையும் இவருக்கு உண்டு. முதன்முதலாக 1984-ல் நாராயணனின் அரசியல் பிரவேசம் தொடங்கியது. கேரளாவில் உள்ள ஒத்தப்பாலம் (ரிசர்வ்) மக்களவைத் தொகுதியில் 1984, 1989, 1991 ஆகிய ஆண்டுகளில் அகில இந்தியக் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நாராயணன் 1992-ம் ஆண்டு முதன்முதலாகக் குடியரசுத் துணைத்தலைவராகத் தேர்வானார். இதனைத் தொடர்ந்து 1997 ஜூலை 17-ம் தேதி குடியரசுத் தலைவராக தேர்வு செய்யப்பட்டு தொடர்ந்து 2002-ம் ஆண்டுவரை அந்தப் பதவியில் இருந்தார். நாட்டின் குடியரசுத் தலைவர் என்ற உயர்ந்த பதவிக்கு தலித் சமூகத்திலிருந்து வந்த முதல் தலைவர் என்கிற பெருமையைப் பெற்றார் கே. ஆர். நாராயணன். 356-வது பிரிவின் கீழ் மாநில அரசுகளைக் கலைக்க மத்திய அமைச்சரவை பரிந்துரைத்தபோது, அந்த யோசனையை மீண்டும் பரிசீலிக்குமாறு இருமுறை திருப்பி அனுப்பியவர் நாராயணன் என்பது குறிப்பிடத்தக்கது. கே.ஆர். நாராயணன் மறைவையொட்டி மத்திய அரசு ஏழு நாட்கள் தேசிய துக்கம் அறிவித்தது. முழு ராணுவ மரியாதையுடன் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.
தாது மணல் இயற்கையிலேயே கதிரியக்கத்தன்மை கொண்டது. அதை முறையின்றி தோண்டி எடுக்கும் போது கதிரியக்கம் இன்னும் அதிகரிக்கும். மேலும் தாது மணல் பிரிப்பாலைகளில் இருந்து வெளியேறும் தூசு நுரையீரல் நோய்களையும், கதிரியக்கம் புற்றுநோயையும் ஏற்படுத்தும். சேகர் வில்லா… ருத்ரா அன்று இரவு தாமதமாகத் தான் வீடு திரும்பினான். ஏனெனில் சீக்கிரமாக வீட்டுக்கு வந்தால் இஷானியை எதிர்கொள்ளும் சங்கடத்தை தவிர்க்க அவனால் முடிந்த முயற்சி அது தான். ஆனால் அவனது முயற்சியை முறியடிக்கும் விதமாக சத்தமின்றி வீட்டினுள் நுழைந்து அரவமின்றி இரவுணவை முடித்தவன் அறைக்குள் நுழைந்த போது பகல் போல விளக்கெரிந்து கொண்டிருந்தது. அறையின் வலதுபக்க மூலையில் கிடந்த மேஜை மீது அவனது சிறுவயது ஆல்பம் கிடந்தது. இஷானியின் முகம் இன்னும் குழப்பத்துடன் இருப்பதைக் கவனித்தபடி உடை மாற்றும் அறைக்குள் சென்று டிசர்ட்டுடன் திரும்பியவன் “இன்னும் தூங்கலையா இஷி?” என்று மெதுவாக கேட்க இஷானி அவனை வெட்டுவது போல பார்த்துவிட்டு “என் மனசுக்கு நிம்மதி இல்லைனா என்னால தூங்கமுடியாது மாமா” என்றாள் வெடுக்கென்று. ருத்ரா வந்த உடனே வாக்குவாதமா என்று பெருமூச்சுவிட்டவன் “உன் மனசு நிம்மதி இல்லாம போற அளவுக்கு இப்போ என்ன நடந்து போச்சு?” என்று நிதானமாக கேட்க “உங்களுக்கு எதுவுமே தெரியாதா மாமா? அந்த ஜெயதேவ் கல்யாணமானவன்னு தெரிஞ்சு ஏன் அவனுக்கும் அஸ்மிக்கும் கல்யாணம் நடக்க விட்டிங்க? நீங்க நினைச்சிருந்தா அதை தடுத்திருக்கலாம்” என்று குற்றம் சாட்டினாள் இஷானி. ருத்ரா மொபைல் போனை நோண்டியபடியே “ஏன் தடுக்கணும்? அவன் பொண்டாட்டி இறந்து நாலு வருசம் ஆகுது… இன்னைக்கு வரைக்கும் அவன் வேற எந்தப் பொண்ணையும் திரும்பிப் பார்க்கல” என்று சொல்லவும் இஷானியால் அவனைப் போல சாதாரணமாக எடுத்துக்கொள்ள இயலவில்லை. “வாட்? செத்துப் போன பொண்டாட்டியோட கனவுக்காகத் தான் ஷேரை எழுதி வாங்கினேனு அந்தாளு சொல்லுறான்… அப்போ எவ்ளோ டீப்பா அவன் ஃபர்ஸ்ட் ஒய்பை காதலிச்சிருப்பான் அவன்? அப்போ எதுக்கு என் அஸ்மியை அவன் கல்யாணம் பண்ணுனான்?” என்று பொங்கியெழ ருத்ரா கடுப்புடன் போனை படுக்கையின் மீது வீசியவன் “அப்போ காலம் முழுக்க அவன் சாமியாரா இருக்கணுமா? ஏன் பத்தாம்பசலித்தனமா பேசுற இஷி? நல்லா கேட்டுக்கோ தேவ்வோட ஃபர்ஸ்ட் ஒய்ப் மானசா மேல அவனுக்கு இருந்தது ஒரு பிரமிப்பு கலந்த காதல்… அதுல காதலை விட பிரமிப்போட சதவிகிதம் அதிகம்னு தேவ் என் கிட்ட அடிக்கடி சொல்லுவான்… டூ யூ அண்டர்ஸ்டாண்ட்?” என்று புருவம் உயர்த்தி வினவ “ஃபர்ஸ்ட் ஒய்ப் மேல அவ்ளோ லவ் இருந்தா தேவ் ஏன் செகண்ட் மேரேஜ் பண்ணிக்கணும்? ஷேருக்காக அஸ்மியை கல்யாணம் பண்ணிக்கலனா அப்போ அவரு அஸ்மியை லவ் பண்ணுறாரா? எப்பிடி ஒரு மனுசனால ரெண்டு பொண்ணுங்களை காதலிக்க முடியும்?” என்று கேட்டவளுக்குத் தெரிய வேண்டிய விசயத்தை கடைசி கேள்வியில் கேட்டுவிட்டாள். ருத்ரா அழுத்தமாக அவளைப் பார்த்தவன் “லிசன்! ஒரே நேரத்துல ஒரு மனுசனால ரெண்டு பொண்ணுங்களை காதலிக்க முடியாது தான்… ஆனா காதலிச்சப்பொண்ணு இல்லைனு ஆனதுக்கு அப்புறமும் அவன் வாழ்க்கையை வாழாம இருக்கணுமா? அப்பிடி இருந்தா தான் உங்க டிக்ஸ்னரில அவன் நல்ல மனுசனா? இது நிதர்சனத்துக்கு ஒத்து வருமா இஷி? நல்லா கேட்டுக்கோ! மானசா மேல தேவ்வுக்கு வந்தது அவங்களோட போராடுற குணத்தால வந்த பிரமிப்போட கலந்த காதல்… அதோட மானசாவை அவன் கல்யாணம் பண்ணுனது தேவ், மானசா, ரிஷி., மானசாவோட அப்பா இந்த நாலு பேருக்கு மட்டும் தான் தெரியும்… அவங்களோட இறப்புக்குக் காரணமானவங்களைப் பழிவாங்க தேவ் செஞ்ச முயற்சியில தான் அவன் அஸ்மியை மீட் பண்ணுனான்… உனக்கு ஒரு விசயம் தெரியுமா? நாலு வருசமா வேற எந்தப் பொண்ணையும் கல்யாணம் பண்ணிக்க நினைக்காதவன் அஸ்மியை மட்டும் தான் கல்யாணம் பண்ணிக்க தயாரானான்… அஸ்மி மேல அவனுக்கு இருக்கிற ஃபீலிங்குக்கு என்ன பேருனு எனக்குத் தெரியல… ஆனா அவளோட அவன் பழகுன தருணம் எல்லாமே உண்மைனு மட்டும் சொன்னான்… சொன்னப்போ தேவ் கண்ணுல பொய் இல்ல இஷி… அவளைப் பார்த்ததுக்கு அப்புறமா வாழ்க்கையை வாழணும்னு ஒரு பிடிப்பு வந்ததா சொன்னான்… ஒரு பொண்ணோட மனசு பொண்ணுக்குத் தான் தெரியும்னு நீங்கலாம் டயலாக் பேசுவிங்களே… அதே மாதிரி தான் அவனோட மனசுல அஸ்மி மேல இருக்கிற ஃபீலிங்கை என்னால புரிஞ்சுக்க முடிஞ்சுது… அதான் நான் சப்போர்ட் பண்ணுனேன்… இனியும் பண்ணுவேன்…” என்று தீர்மானமாக உரைத்தவனை இஷானியால் நம்பாமல் இருக்க முடியவில்லை “அப்போ தேவ் அஸ்மியை லவ் பண்ணுறாரா?” என்று கண்ணை விரித்துக் கேட்டவளை உறுதியாகப் பார்வையிட்டபடியே “அதை தேவ் கிட்ட கேட்டுக்கோ.. இப்போ எனக்கு தூக்கம் வருது…” என்றபடி படுக்கப் போனவனை தூங்க விடாமல் அவனது தலையணையை இஷானி படக்கென்று எடுத்துக்கொள்ள ருத்ரா அவளை முறைக்க ஆரம்பித்தான். அவளோ “நான் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லாம நீங்க எப்பிடி தூங்க போகலாம்?” என்று பதிலுக்கு முறைத்தாள். “தேவ்வுக்கு அஸ்மி மேல ஏதோ ஒரு ஃபீலிங் இருக்கு… அவனுக்குக் கொஞ்சம் டைம் குடுத்தா அவனே இதை அஸ்மி கிட்ட சொல்லிடுவான்.. அதை விட்டுட்டு இவ்ளோ சொல்லியும் சும்மா லவ் பண்ணுறானா, லவ் பண்ணுறானானு கேட்டா மனுசனுக்கு காண்டாகாதா இஷி?” என்றவன் அவள் கையிலிருந்த தலையணையைப் பிடுங்கியவன் அதில் தலைவைத்துக் கண்ணை மூடிக்கொண்டான். அதாவது அவன் தூங்க தயாராகிவிட்டானாம். இதற்கு மேல் அவனை முறைப்பது வீணென உணர்ந்த இஷானி விளக்கை அணைத்துவிட்டுத் தானும் ஒரு புறம் படுத்துக்கொண்டவள் நேற்றைய தினம் போலன்றி இன்று சற்று நிம்மதியுடன் உறங்கத் தொடங்கினாள். ************* சோபாவில் தலையில் கைவைத்தபடி அமர்ந்திருந்த ஜெயதேவ்வின் தோற்றம் ரிஷிக்குப் பரிதாபமாக இருந்தது. அவனது தலையெழுத்தில் அமைதியான குடும்பவாழ்க்கை என்பது எழுதப்படவில்லையோ என்று மனதளவில் வருந்தியவன் தேவ்வின் தோளை ஆறுதலாகத் தட்டிக் கொடுத்தான். “ஏன் சார் வீணா டென்சன் ஆகிறிங்க? அவங்க சின்னப்பொண்ணு… நம்ம சொன்னாலும் விவரம் புரியாது… அவங்களே உங்களைப் புரிஞ்சிப்பாங்க” தேவ் ரிஷியின் குரலில் நிமிர்ந்தவன் “ஒருவேளை நான் தான் தப்பானவனா ரிஷி? ஃபர்ஸ்ட் ஒய்பை காதலிக்கிறேனு சொல்லிட்டு இன்னைக்கு ரெண்டாவது கல்யாணம் பண்ணிட்டு நிக்கிறேனே! நான் தப்பு பண்ணிட்டேனா ரிஷி?” என்று தவிப்பாய் கேட்க “என்ன சார் பேசுறிங்க? அவன் அவன் பொண்டாட்டி செத்ததும் புதுமாப்பிள்ளை ஆகுறானுங்க.. நீங்க நாலு வருசம் மானசாவ தவிர வேற யாரையாச்சும் நினைச்சுப் பார்த்திருப்பிங்களா? உங்களுக்கு அஸ்மிதா மேல உண்டான ஃபீலிங்கை நீங்க என் கிட்ட சொன்னப்போ கூட அது என்னனு இப்போ வரைக்கும் புரியல ரிஷினு தானே சொன்னிங்க…” என்றான் அவனை சமாதானம் செய்யும் நோக்கத்துடன். “இப்போவும் எனக்குப் புரியல ரிஷி.. அவ காதலை சொன்னப்போ, எனக்காகப் படிச்சுக் கூடப் பார்க்காம கையெழுத்து போட்டப்போ, என் கூடவே எப்போவும் இருப்பேனு என்னை ஹக் பண்ணுனப்போ எனக்குள்ள உண்டான உணர்வுகளுக்கு என்ன பேருனு இப்போ வரைக்கும் எனக்குப் புரியல… இப்பிடிலாம் யோசிச்சு நான் மனுவுக்கு துரோகம் பண்ணுறேனா ரிஷி?” என்று கலக்கத்துடன் கேட்டான் ஜெயதேவ். இது ஒன்றும் முதல் முறை இல்லையே. துளி நிறுவனத்தில் ஜெய் என்ற பெயரில் அஸ்மிதாவை முதல் முறை கண்ட தினத்திலிருந்து, அவளது காதலை உரைத்தபோதிலிருந்து அவன் இதே கேள்வியைத் தான் ரிஷியிடம் கேட்டுக் கொண்டிருக்கிறான். ரிஷி என்ன தான் சமாதானம் சொன்னாலும் அஸ்மிதாவிடம் இருந்து விலகியே இருந்தவன் தனக்காக அவள் யோசிக்காமல் கையெழுத்திட்ட கணத்தில், இதயத்தில் அஸ்மிதாவின் மீதான உணர்வுகள் சற்று அதிகமான அழுத்தத்தை ஏற்படுத்துவதை உணர்ந்தான். ரிஷி அதையெல்லாம் நன்கு அறிந்திருந்ததால் “தேவிய நீங்க மேரேஜ் பண்ணுனது நீங்க சொல்லலைனா யாருக்குமே தெரிஞ்சிருக்காது… இன்னொரு விசயம் என்னன்னா ரெண்டாவது கல்யாணம் பண்ணுன ஆண்கள் எல்லாருமே முதல் மனைவிக்குத் துரோகம் பண்ணுறவங்கனு அர்த்தம் இல்ல… நீங்க நாலு வருசம் மானசாவ மட்டும் தானே மனசுல நினைச்சிருந்திங்க… துரோகம் பண்ணுறவரு நாலு வருசம் காத்திருந்து ஏன் துரோகம் பண்ணனும்? உங்களுக்கு இப்போவாச்சும் வாழ்க்கையோட்டத்துல கலக்கணும்னு தோணுச்சேனு நான் சந்தோசப்படுறேன் சார்… அதுக்கு காரணம் அஸ்மிதா தான்… அவங்களை நீங்க உங்களோட மனைவியா முழு மனசோட ஏத்துக்கோங்க… உங்க மன நிலையை அவங்களுக்குப் புரியவைங்க… அதுக்கு முன்னாடி அவங்களுக்கும் கொஞ்சம் யோசிக்க டைம் குடுங்க” என்று சொல்லவும் தேவ் தலையாட்டி வைத்தான். ரிஷி அவனது முகத்தை ஒரு கணம் நோக்கியவன் “எங்கம்மா சின்ன வயசுல சொல்லுவாங்க சார், நம்ம பிறக்கிறப்போவே நம்ம வாழ்க்கைத்துணையோட பேரை கடவுள் நம்ம தலையெழுத்துல எழுதிடுவாராம்… உங்க தலையெழுத்துல தேவியோட நேம் இல்ல… அஸ்மிதாவோட நேம் தான் அழுத்தமா எழுதப்பட்டிருக்கு சார்… தேவியோட கனவை நிறைவேத்திட்டு அஸ்மிதாவோட ஒரு அழகான வாழ்க்கையை நீங்க ஆரம்பிக்கணும்.. இது தேவியோட அண்ணனா என்னோட ஆசை” என்று தன் மன எண்ணத்தை வெளிப்படுத்திவிட்டு தேவ் எப்படி உணர்கிறான் என்பதை அவன் முகத்திலிருந்தே படிக்கத் தொடங்கினான். ரிஷியின் பேச்சைக் கேட்ட ஜெயதேவ்வின் முகத்தில் சிந்தனை ரேகைகள் படரவும் இனி அவன் யோசிக்கட்டும் என்று ரிஷி அவனைத் தொந்தரவு செய்யவில்லை. ஜெயதேவ் அவனிடம் இன்னும் சிறிதுநேரம் பேசிவிட்டு வீட்டுக்குக் கிளம்பினான். அவன் வீட்டுக்குத் திரும்பிய போது நேரம் நள்ளிரவைக் கடந்திருந்தது. சத்தமின்றி கதவைத் திறந்துவிட்டு மாடிப்படியேறியவன் தங்களின் அறையைக் கடக்கும் போது சற்று நிதானித்தான். கதவில் கைவைத்தவன் அது உட்புறமாகப் பூட்டியிருக்கவும் அஸ்மிதா தூங்கிவிட்டாள் போக என்ற யோசனையுடன் தனது அலுவலக அறையை நோக்கிச் சென்றான். உள்ளே சென்றவனுக்கு தனது மனபாரத்தை இறக்கிவைத்த நிம்மதியுடன் இத்தனை நாட்கள் மனதைப் பாடாய்ப்படுத்திய விசயங்களை ரிஷியிடம் பகிர்ந்ததால் உண்டான தெளிவும் சேர்ந்துகொள்ள நீண்ட நாட்களுக்குப் பின்னர் ஜெயதேவ்வுக்கு நிம்மதியான ஆழ்ந்த நித்திரை வாய்த்தது. மறுநாள் விடியல் குழப்பமற்று தெளிவான மனநிலையுடன் எழுந்தவன் தனக்கு எதிர்புறச்சுவரில் சிரித்த மானசாவிடம் “குட் மார்னிங் மனு! இன்னும் பத்தே நாள் தான்…. அதுக்கு அப்புறம் உன்னோட கனவை படிப்படியா நிறைவேத்திக் காட்டுறதை யாராலயும் தடுக்க முடியாது… உன்னையும் சாரையும் இந்த உலகத்தை விட்டு அனுப்புனவனுக்கு நான் சரியான தண்டனையா வாங்கிக் குடுப்பேன் மனு” என்று சொல்லிவிட்டு எழுந்தவனுக்கு நேரம் ரெக்கை கட்டிக் கொண்டு பறந்தது. அன்று ஞாயிறு என்பதால் பெரிதாய் எந்த வேலையும் இல்லை தான். ஆனால் அவனது கவனம் இப்போது ஆர்.எஸ்.கெமிக்கல் நிறுமத்தின் ஆண்டு பொதுக்கூட்டத்தின் மீதே இருந்தது. அதைப் பற்றி யோசித்தபடியே கீழே சென்றவனுக்கு அங்கே தாத்தாவுடன் உரையாடியபடி இருந்த அஸ்மிதாவைக் கண்டதும் மீண்டும் அலுவலக அறைக்கே திரும்பிவிடலாமா என்ற எண்ணம். ஆனால் அதற்குள் சங்கரராமன் அவனைப் பார்த்துவிடவே வேறு வழியின்றி அவர்களின் உரையாடலில் அவனும் கலந்துகொண்டான். தாத்தாவுக்கும் பேரனுக்குமான வழக்கமான உரையாடல்களே. ஆனால் இம்முறை அஸ்மிதாவையும் அவர் உள்ளே இழுத்துவைக்க இருவரும் அவருக்காகவேனும் ஒருவரை ஒருவர் முறைக்காமல் சாதாரணமாகப் பேசத் தொடங்கினர். விஸ்வநாதனும் சாந்தினியும் இதைக் கண்டும் காணாமல் நடந்துகொண்டனர். தெரிந்ததாக காட்டிக் கொண்டால் இளையவர்கள் மீண்டும் திக்குக்கு ஒன்றாகச் சென்றுவிடுவர் என்ற அச்சம் தான் அதற்கு காரணம். அஸ்மிதாவின் முகத்தில் நேற்றைய இரவு நடந்த பிரச்சனையின் கலக்கம் சிறிது மிச்சமிருக்க ஜெயதேவ்வோ இன்னும் பத்து நாட்களில் நடக்கப்போகிற ஆண்டுப்பொதுக்கூட்டம் பற்றி தாத்தாவிடம் விவாதித்துக் கொண்டிருந்தான். இதை தூரத்திலிருந்து கணவருடன் சேர்ந்து பார்த்துக் கொண்டிருந்த சாந்தினி விஸ்வநாதனிடம் “ஏன் உங்க பையன் இப்பிடி இருக்கிறான்? மாமா அவனும் அஸ்மியும் கொஞ்சமாச்சும் பழகட்டும்னு தான் சின்ன வயசு பேச்சை நினைவு படுத்துனாரு…. இப்போவும் இவனுக்கு ஏ.ஜி.எம் பேச்சு தானா? உங்க பையன் தானே… உங்களை மாதிரி தானே இருப்பான்” என்று நொடித்துக் கொள்ள விஸ்வநாதன் “ச்சே! ச்சே! தப்பே செஞ்சாலும் அதை ஒத்துக்கவோ அதுக்காக மன்னிப்பு கேக்கவோ சின்னதா கூட முயற்சி பண்ணாதப்போவே தெரியலையா, அவன் உன்னோட ஜெராக்ஸ் காப்பினு” என்று சொல்லி மனைவியின் காலை வாரிவிட்டுத் திருப்திப்பட்டுக் கொண்டார். அதன் பலனாய் சாந்தினியின் முறைப்பையும் வாங்கிக் கட்டிக்கொண்டார். அதே நேரம் அவர்களின் இந்தச் செல்லச்சண்டைக்குக் காரணாமானவன் மனைவி அருகில் இருந்து தனது பேச்சைக் கவனிக்கிறாள் என்ற உணர்வின்றி தாத்தாவிடம் தனது எதிர்காலத் திட்டங்களை விளக்கிக் கொண்டிருந்தான்.
தென் த‌மிழீழம் மட்டக்களப்பு மாவட்டத்தை சேர்ந்த ஐந்து பெண் பிள்ளைகளின் தந்தை தங்கராசா - வசந்தகுமார் (வயது48) அவுஸ்திரேலியாவில் உயிரிழந்ததாக மட்டக்களப்பிலுள்ள அவரது மனைவிக்கு உயவினர்களால் அறிவிக்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவில் NO;152 Rock State, bathurst, new South wel 2795 என்ற முகவரியில் வசித்து வந்த தனது கணவர் இறந்து விட்டதாக ஒக்டோபர் 28 அதிகாலை அவுஸ்திரேலியாவில் உள்ள உறவினர் ஒருவரின் தொலைபேசியூடாக தகவல் கிடைத்ததாக வாழைச்சேனை கிண்ணையடியை சேர்ந்த உயிரிழந்தவரின் மனைவி ரஞ்சிதமலர் தெரிவித்தார். அவுஸ்திரேலியாவில் தனது ஒரு மகளும் கணவரும் வசித்து வந்ததாகவும், நான்கு மகள்களுடன் தான் வாழைச்சேனை கிண்ணையடியில் வசித்து வரும் நிலையில் தனது கணவர் உயிரிழந்த தகவல் அதிர்ச்சியை தருவதாகவும் அவர் கவலையுடன் தெரிவித்தார். ஐந்து பெண் பிள்ளைகளின் தந்தை தங்கராசா - வசந்தகுமார் (வயது48) அவுஸ்திரேலியாவில் உயிரிழந்ததாக மட்டக்களப்பிலுள்ள அவரது மனைவிக்கு உயவினர்களால் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா தாய்மாரை கெளரவப்படுத்திய டோனியும் கோலியும் நியுஸிலாந்து அணிக்கெதிரான 5 ஆவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில் 190 ஓட்டங்களால் இந்திய அணி வெற்றிபெற்று தொடரை கைப்பற்றியது. இந்த போட்டியில் சுவாரஷ்யமான சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. டோனி மற்றும் கோஹ்லி தங்களது அணி ஜேர்சியில் பெயர்களை மாற்றியவாறு போட்டியில் பங்குகொண்டனர். இந்த போட்டியில் டோனியின் ஜேர்சியில் “தேவகி” எனவும்,கோஹ்லியின் ஜேர்சியில் “சரோஜ்” எனவும் பெயரிடப்பட்டிருந்தது. இதுபற்றி மேலும் தெரியவருவதாவது தங்களது தாயாரின் பெயர்களை ஜேர்சியில் அச்சிட்டவாறு நேற்று போட்டியில் கலந்துக்கொண்டுள்ளனர். தாயகம் வன்னியில் இருந்து கடத்தப்படும் மரக்குற்றிகள் வன்னிப்பிரதேசத்தில் இருந்து களவாக தென் இலங்கைக்கு கொண்டு செல்லப்பட்டுக்கொண்டிருந்த ஒருதொகை பெறுமதிமிக்க மரக்குற்றிகள் கிளிநொச்சி அக்கராயன்குளம் பொலிஸ் பிரிவினரால் மீட்கப்பட்டுள்ளது. குறித்த மரக்குற்றிகளை வன்னேரிக்குளம் பகுதியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி நேற்று கொண்டு செல்லப்பட்ட வேளையிலேயே அவை பொலிஸாரினால் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த மரக்குற்றிகளை ஏற்றிசென்ற பார ஊர்தி பொலிஸாரால் மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும். விசாரணைகளின் பின்னர் கிளிநொச்சி நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர். இலங்கை தமிழ் இணையத் தளம் ஒன்றிற்கு தடை “வடக்கில் நீதித்துறையின் முடிவுகள் குறித்து பொய்யான பரப்புரைகளை மேற்கொண்டு வருவதாகவும், நீதிபதிகள், சட்டவாளர்கள் குறித்து அவதூறான செய்திகளை வெளியிடுவதாகவும், வடக்கில் பொதுமக்களைத் தூண்டி விடும் வகையில் செயற்படுவதாகவும், இந்த இணையத்தளம் மீது முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பிட்ட இணையத்தளம் சிறிலங்கா ரெலிகொம் இணைய வழங்கி சேவையைப் பயன்படுத்தி வந்துள்ளது. முறைப்பாடுகள் தொடர்பாக பாதுகாப்பு அமைச்சு மற்றும் ஊடக அமைச்சு ஆகியன மேற்கொள்ளும் விசாரணைகள் முடியும் வரை குறித்த இணையத்தளம். தடைசெய்யப்பட்டுள்ளது. ” என்றும் அவர் தெரிவித்தார். இலங்கையில் புதிய அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர் தடை செய்யப்பட்ட முதலாவது இணையத்தளம் இது என்பது குறிப்பிட த்த க்கது. உலகம் டொனால்ட் ட்ரும்பிற்கு சார்பானவரா F.B.I இயக்குனர் அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு இரண்டு வாரங்களுக்கு குறைவாக இருக்கும் தற்போது, இந்த புதிய மின்னஞ்சல்களின் இருப்பு குறித்து வெளிப்படுத்த எஃப்.பி.ஐ அமைப்பின் இயக்குனரான ஜேம்ஸ் கோமி முடிவெடுத்தது அரசியல் நோக்கங்களுக்காக பயன்படுத்தப்பட்டு வருவதாக ஜனநாயக கட்சியின் செனட் உறுப்பினர்கள் வாதிட்டுள்ளனர். இந்த விவகாரம் குறித்து மீண்டும் விசாரிக்க எஃப்.பி.ஐ முடிவு எடுத்தது முன்னெப்போதும் இல்லாத வகையில் உள்ளதாகவும், ஆழ்ந்த கவலையளிப்பதாகவும் ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளர் ஹிலரி கிளிண்டன் தெரிவித்துள்ளார். எஃப்.பி.ஐ-யின் இந்த முடிவு குறித்து அதன் இயக்குனர் ஜேம்ஸ் கோமியிடம் அமெரிக்க நீதி துறை அதிகாரிகள் எச்சரித்தாகவும் தகவல்கள் கூறுகின்றன. அறிவியல் பாதுகாப்பாக பூமிக்கு திரும்பிய விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து ரஷ்யா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளை சேர்ந்த மூன்று விண்வெளி வீரர்கள் பூமிக்கு பாதுகாப்பாக திரும்பியுள்ளனர். விண்வெளியில் 4 மாதங்கள் தங்கியிருந்த இவர்கள் மூவரும் தற்போது கசக்ஸ்தானை அடைந்துள்ளனர். எதிர்காலத்தில் வணிக ரீதியாக பயன்படுத்தப்படவுள்ள விண்வெளி வாகனங்களுக்கு ஒரு தளத்தை நிறுவுதல் மற்றும் விண்வெளியில் டிஎன்ஏ மரபணு வரிசைமுறையை முதல் முறையாக பயன்படுத்துவது ஆகியவை இந்த விண்வெளி வீரர்களின் பணிகளில் உள்ளடங்கும். விண்வெளியில் இருந்த காலத்தில் தான் பணிச்சுமையுடன் மிகவும் பரபரப்பாக இருந்ததாகவும், இக்காலகட்டத்தில் பூமியில் என்ன நடந்தது என்பது தனக்கு தெரியாது என்று கூறிய இந்த விண்வெளி வீரர்களின் தலைவரான ரஷ்யாவின் அனாடோலி இவானிஷின், இக்காலகட்டத்தில் பூமியில் நடந்த நிகழ்வுகள் நல்லதாகவே நடந்திருக்கக் கூடும் என்று நகைச்சுவையுடன் குறிப்பிட்டார். உலகம் விமானத்தில் தீ, பயணிகள் உயிர்தப்பினர் சிக்காக்கோ விமான நிலையத்தில் தரையிறங்க முற்பட்ட விமானம் ஒன்று தீப்பாற்றியுள்ளது.அமெரிக்க விமான சேவைக்கு சொந்தமான விமானமே தரையிறக்கும் போது தீப்பிடித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன. இச் சம்பவத்தில் விமானத்தில் பயணித்த 7 பயணிகள் மற்றும் விமான சிப்பந்தியொருவரும் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கை ஜீ லம்ப்பார்ட் குழு கொழும்பு விஜயம்: ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை மீளாய்வு ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தின் தென்னாசிய நாடுகளுக்கான தொடர்பாளர் ஜீன் லெம்பர்ட் தலைமையிலான குழுவொன்று நாளை கொழும்பு வருகின்றது. இந்தக்குழ்வினர் மூன்று நாட்கள் இலங்கையில் தங்கி இருந்து ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை மீள வழங்குவது தொடர்பான சாத்தியக்கூறுகளை அவதானிப்பர்.. அத்துடன் இந்தக் குழுவினர் கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஆகிய பகுதிகளுக்கும் விஜயம் செய்ய விருப்பதோடு, நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரச மற்றும் அரச சார்பற்ற அமைப்புக்களின் பிரதிநிதிகளையும் சந்தித்து கலந்து ரையாடுவார்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. தாயகம் விக்னேஸ்வரன் அரசியக் சட்டத்தை மீறியுள்ளாராம் முதலமைச்சர் சி.வீ. விக்னேஸ்வரன் இலண்டனுக்கு சென்றமை தொடர்பில் அரசியல் சட்டத்தை மீறியுள்ளதாக சிங்கள அரசு கூறியுள்ளது. இதேபோன்று, தற்பொழுது பதில் முதலமைச்சராக கடமையாற்றுபவரும் வடக்கு ஆளுநர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொள்ளவில்லையெனவும் ஆளுனர் செயலகம் கூறுகின்றது. வட மாகாண முதலமைச்சர் கடந்த 14 ஆம் திகதி முதல் 29 ஆம் திகதியான இன்று வரை வெளிநாட்டுப் பயணத்தில் ஈடுபட்டுள்ளார். இவரது விஜயம் முடியும் வரை பதில் முதலமைச்சர் ஒருவர் நியமிக்கப்படாதுள்ளதனால், கடந்த 15 ஆம் திகதி கூடிய வட மாகாண சபைக் கூட்டத்தின் போது சபைத் தலைவர் சி.வி.கே. சிவஞானமினால், கல்வி அமைச்சர் ரி. குருகுலராஜா பதில் முதலமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ள இவர், இதுவரை வட மாகாண ஆளுநர் முன்னிலையில் பதில் முதலமைச்சராக பொறுப்புக்களைப் பாரமெடுக்காதுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது. அரசியலமைப்பின் 154 ஆம் உறுப்புரையில், முதலமைச்சர் ஒருவர் வெளிநாடு செல்வதாயின், ஆளுநரின் அனுமதியைப் பெற்று, பதில் ஒருவரை நியமித்து விட்டு, அவ்வாறு நியமிக்கப்பட்டதனை வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டதன் பின்னர் தான் வெளிநாடு செல்ல முடியும். இருப்பினும், இந்த நடைமுறைகளை வடக்கு முதலமைச்சர் மீறியுள்ளதாக ஆளுனர் செயலகம் கூறியுள்ளது. இலங்கை ரணில்-மைத்திரி ஆகியோரின் ஊழல் அம்பலம் கோப் குழுவின் அறிக்கை நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டுள்ள நிலையில் மத்திய வங்கியின் பிணை,முறி மோசடி விவகாரத்தில் சிக்கியுள்ள முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன் மற்றும் அதற்குத் துணைசென்ற பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தொடர்பில் நாட்டு மக்களே தீர்மானம் எடுக்க வேண்டும் என்று ஒன்றிணைந்த எதிர்க்கட்சி குற்றம் சுமத்தியுள்ளது. ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் ஊடகவியலாளர் சந்திப்பு இன்றைய தினம் நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றிய அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கெஹலிய ரம்புக்வெல இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்தார். “முதலில் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரனின் நியமனமானது அரசியல் யாப்பு சபையின் அனுமதியின்றி மேற்கொள்ளப்பட்டது. அவர் முறையாக பதவி யேற்கவில்லை. இது நடைமுறை யாப்பிற்கு எதிரானது. இது திட்டமிடப்பட்ட ஒரு கொள்ளைச் சம்பவம். இதில் சந்தேகம் இல்லை. இது தவறுதலாகவோ தெரியாமலோ நடந்த விடயமல்ல. ஜனவரி 8ஆம் திகதி ஜனாதிபதி பதவியேற்கின்றார், 9ஆம் திகதி பிரதமர் பதவியேற்கின்றார். ஒருசில தினங்களில் மத்திய வங்கி பிரதமரின் கட்டுப்பாட்டிற்குள் வருகிறது. இந்த நாட்டின் பிரஜையல்லாதவர் ஆளுநராக பதவியேற்கின்றார். நல்லாட்சி அரசாங்கம் தற்போது நான்முனை சந்தியில் ஆடையின்றி நிற்கின்றது. நல்லாட்சி லேபலை ஒட்டிக்கொண்டுதான் ஊழலில் ஈடுபட்டனர். கடந்த 40 வருட அரசியல் வாழ்வில் இரண்டு விடயங்கள ஊடாகவே பயணிக்கின்றார். ஒன்று பொருளாதாரத்தை மிகவிரைவாக அபிவிருத்தி செய்வதாக கூறுவார். மூன்று முறை பிரதமரானார் என்ன நடந்தது என்று உங்களுக்குத் தெரியும். இரண்டாவது காரணம் கொலைகளுடன் தொடர்புடைய குற்றச்சாட்டுகள் அவர் மீது இருந்தது. எனினும் அவர் ஒரு நாளும் ஊழலில் ஈடுபடமாட்டார் என நீங்கள் தெரிவிக்கலாம். எனினும் இந்த மிகப்பெரிய கொள்ளையுடன் மக்கள் ஒரு தீர்மானத்திற்கு வர முடியும். இது தவறுதலாக நடந்த விடயமல்ல. நாங்கள் கொள்ளையர்கள் என தொடர்ச்சியாக கூறி வருகின்றார். எனினும் இதுவரை நிரூபிக்கப்படவில்லை. எனினும் அவருடன் இணைந்திருக்கும் அர்ஜுன மகேந்திரன் கொள்ளையில் ஈடுபட்டுள்ளமை உறுதியாகியுள்ளது. ஆகவே இது தொடர்பில் மேலும் சிந்திக்க வேண்டிய அவசியம் இல்லை. வரலாற்றில் இடம்பெற்ற மிகப்பெரிய கொள்ளையே இது” - என்றார்.
அன்று ஞாயிறு என்பதால் பொறுமையாக எழலாம் என்று தூக்கத்தை தொடர்ந்த ஸ்ராவணியை உறக்கத்திலிருந்து எழுப்பியது அவளது போன் ரிங்டோன். அவள் காதை கைகளால் மூடியவள் அதை மீறியும் சத்தம் கேட்க வெறுப்புடன் போனை எடுத்து “ஹலோ உனக்குலாம் தூக்கமே வராதாடா அண்ணா? வினி கிட்ட சொல்லி உனக்கு ரெண்டு மிதி குடுக்க சொல்லுறேன்” என்றாள் தூக்கம் கலைந்த கடுப்பில். மறுமுனையில் சத்தமாக நகைத்த ஸ்ரவன் “ஓ! சாரிடா வனி. பட் என்ன பண்ணுறது? கொஞ்சம் முக்கியமான விஷயம். என்னோட ஃப்ரெண்ட் ஹாரியோட சிஸ்டர் இருக்கால்ல, உனக்கு கூட நான் இன்ட்ரோ குடுத்தேனே! அவ நேம் நான்ஸி” என்க ஸ்ராவணி தூக்க கலக்கத்துடன் “அதுக்கு என்னடா இப்போ?” என்றாள் குழறலாக. “அவ இந்தியா வர்றா. சென்னையில ஏதோ இண்டர்நேசனல் லா கான்ஃபரன்ஸாம். அதுல கலந்துக்க வர்றா. நீ மார்னிங் அவளை ஏர்ப்போர்ட்டுல போய் கூட்டிட்டு வந்து நம்ம ஃப்ளாட்டுல தங்க வச்சுக்கோ. ஒன் வீக் கழிச்சு அவ யூ.கே போயிடுவா” என்றான் விளக்கமாக. அதன் பின் அவள் ஞாயிறு அன்றும் தன்னை வேலை வாங்குவதாக குறைபட தங்கையை தாஜா செய்து ஒத்துக்கொள்ள வைத்தான். ஸ்ராவணி மெதுவாக எழுந்து கூந்தலை கோதிக்கொண்டபடி அமர்ந்தவள் இன்னும் உறக்கம் கலையாமல் இருந்த மேனகாவை பார்த்து “நான் மட்டும் எழுந்திருக்கணுமாம், இவ தூங்குவாளாம். இருடி” என்றபடி ஒரு தலையணையை அவள் மீது வீச மேனகா பதறியடித்துக் கொண்டு எழுந்தாள். கண்ணைத் தேய்த்தபடி பக்கத்து மேஜையிலிருந்த கண்ணாடியை எடுத்து போட்டுக் கொண்டாள். பின்னர் இன்னொரு தலையணையை எறிய தயாராக இருந்த ஸ்ராவணியை கடுப்புடன் பார்த்தபடி “ஏன்டி பில்லோவ தூக்கி எறிஞ்ச?” என்று இரவுடையின் முழுநீளக்கையை மடித்து விட ஸ்ராவணி உஷாராகி விட்டாள். ஏனென்றால் அவள் அவ்வாறு செய்தால் சண்டைக்கு தயாராகிவிட்டாள் என்று அர்த்தம். ஸ்ராவணி மெதுவாக படுக்கையிலிருந்து எழுந்து “என்னோட பில்லோ தூசியா இருந்துச்சு மேகி! அதை தட்டி விடுறப்போ உன் மேல தெரியாம விழுந்துடுச்சு” என்று சொன்னபடி நழுவமுயல அதற்குள் மேனகா தலையணையை தூக்கி அவள் மீது எறிந்தாள். ஸ்ராவணி அது அவளை தாக்காவிதமாய் நகர்ந்து “மேகி! அப்புறமா சண்டை போடலாம்டி. அண்ணா நம்ம ரெண்டு பேரையும் ஏர்ப்போர்ட் போக சொல்லிருக்கான்டி. நான்ஸி இந்தியாக்கு வர்றாலாம். அவளை நம்ம கூட தங்க வச்சிக்க சொல்லுறான்” என்று விஷயத்தை சொல்ல மேனகா கண்ணாடியை சரிசெய்தபடி “ஸ்ரவன் பேரை சொன்னதால நீ இன்னைக்கு உயிர் பிழைச்ச. பட் எப்போவும் நான் இதே மாதிரி நல்லவளா இருக்க மாட்டேன்” என்று அமர்த்தலாக சொல்லிவிட்டு ஸ்ராவணியை விலக்கி விட்டு குளிக்க சென்றாள். அதற்கு பிறகு இருவரும் வழக்கம் போல வளவளத்தபடி தயாராகி ஏர்ப்போர்ட்டுக்கு செல்ல தயாராயினர். ********************************************************************************** “டேய் அச்சு! எவ்ளோ நேரம்டா ரெடியாகுவ? சீக்கிரமா வாடா. நான்ஸி பாவம்ல. அவளுக்கு வேற வெயிட் பண்ணுறது சுத்தமா பிடிக்காது” என்றபடி பரபரத்தான் அபிமன்யூ. அஸ்வின் தயாராகி வந்து நின்றவன் அபிமன்யூ வழக்கமான யூனிஃபார்மை தவிர்த்து கேஷுவலாக உடையணிந்து நின்றதை கவனித்தவாறே “என்னாச்சு இன்னைக்கு எம்.எல்.ஏவோட யூனிஃபார்முக்கு லீவா?” என்று கேட்டவாறு அவன் அருகில் வந்தான். அபிமன்யூ கூலர்ஸை போட்டவாறு “எனக்கு பிளாக் அண்ட் ஒயிட்ல சுத்தி போர் அடிச்சிடுச்சுடா. அதான் ஒரு சின்ன சேன்ஜ்” என்று சொல்லிவிட்டு அஸ்வினுடன் கீழே இறங்கினான். சுபத்ரா கீழே இறங்கியவர்களை யோசனையுடன் பார்த்துவிட்டு “சண்டே கூடவா உங்க கட்சியில வேலை இருக்கு? ரெண்டு பேரும் காலையிலேயே கிளம்பிட்டிங்க?” என்று கேட்க அஸ்வின் “ஏர்ப்போர்ட் போறோம்மா. போயிட்டு சீக்கிரமா வந்துடுவோம்” என்று சொல்லிவிட்டு அபிமன்யூவும் அதற்கு தலையாட்டினான். சுபத்ரா ஆராய்ச்சி பார்வையுடன் எழுந்து “ஏர்ப்போர்ட்டுக்கா? யாரு வர்றாங்கன்னு இவ்ளோ காலையிலேயே ஏர்ப்போர்ட்டுக்கு போறிங்க ரெண்டு பேரும்?” என்று கேட்க அஸ்வின் என்ன சொல்வதென்று தெரியாமல் அபிமன்யூவை பார்த்தான். அவன் தொண்டையை செருமியவாறு “மா! அது வந்து…என்னோட ஃப்ரெண்ட் வர்றாங்கம்மா” என்று ஒருவழியாக அந்த ஃப்ரெண்ட் ஒரு பெண் என்பதை மறைத்துவிட்டுச் சொல்லிமுடிக்க சுபத்ரா இன்னும் சந்தேகமாகவே பார்த்தார் இருவரையும். இருவரும் அவரை சமாளித்துவிட்டு கிளம்ப வீட்டை விட்டு வெளியேறியதும் தான் அபிமன்யூ மூச்சுவிட்டான். டிரைவர் சீட்டில் அமர்ந்தபடி அஸ்வினிடம் “டேய் அச்சு! எங்க நீ நான்ஸி பேரை சொல்லிடுவியோனு பயந்து போயிட்டேன்டா. அம்மாக்கு நான்ஸி பத்தி தெரிஞ்சுச்சுனா அவ்ளோ தான். இந்த ஜென்மத்துக்கு என் கூட பேசாம போயிடுவாங்க” என்று சொல்லி பெருமூச்சு விட்டபடி காரை ஸ்டார்ட் செய்தான். அஸ்வின் அவனது டிசர்ட்டை இழுத்துவிட்டபடியே “அவங்க இந்த டிவோர்ஸ் விஷயத்தால நீ மனசு ஒடஞ்சு போயிருப்பனு நினைச்சு தான் பேச ஆரம்பிச்சிருக்காங்கடா. வீணா நான்ஸியால புது பிரச்சனை எதையும் கொண்டு வந்துடாத” என்றான் அக்கறையோடு. அபிமன்யூ சாதாரணமாக “ப்ச்..என்னடா நீயுமா? அவ நம்ம நான்ஸிடா. அவளால எனக்கு என்னைக்குமே பிரச்சனை வராதுடா” என்க அஸ்வின் கிண்டலாக “அஹான்! நான்ஸி பேரை சொல்லிட்டு தான் ரிப்போர்ட்டர் மேடம் உன் லைஃப்குள்ள..ஐ மீன் அந்த பப்குள்ள வந்தாங்க! இதை மறந்துடாத மகனே” என்றான். அபிமன்யூ “நான்ஸிக்கு அவளை தெரிஞ்சிருக்காதுடா. இவ தான் என்னை வேவு பார்த்து நான் யாரு பேரை சொன்னா கேள்வி கேக்க மாட்டேனு தெரிஞ்சு நான்ஸி பேரை யூஸ் பண்ணிகிட்டா” என்றான் அலட்சியமாக. இருவரும் பேசிக்கொண்டே ஏர்ப்போர்ட் வந்தடைய காரை பார்க் செய்துவிட்டு உள்ளே நுழைந்து நான்ஸிக்காக காத்திருக்க அரை மணிநேர காத்திருப்புக்கு பிறகு நான்ஸி புன்னகை பூத்த முகத்துடன் வந்து சேர்ந்தாள். சிரித்தமுகத்துடன் வந்தவள் அஸ்வினிடம் கைகுலுக்கிவிட்டு அபிமன்யூவை அணைத்துக் கொள்ள அவன் “ஹவ் ஆர் யூ டார்லிங்?” என்று கேட்டபடி அவளை அணைத்தான். அதன் பின் அவளை அணைத்த கையை விலக்காமல் பேசிக்கொண்டிருந்தவன் மேனகாவும், ஸ்ராவணியும் வருவதை கவனிக்கவில்லை. மேனகா ஸ்ராவணியுடன் பேசிக்கொண்டே நடந்து வந்தவள் அபிமன்யூ ஒரு வெளிநாட்டு பெண்ணை அணைத்திருப்பதையும் பக்கத்தில் அஸ்வின் புன்னகை முகத்துடன் நிற்பதையும் கண்டு திகைப்பில் வாயை பிளந்தாள். ஸ்ராவணி அவளின் தலையில் தட்டி “என்னடி இப்போ எதுக்கு மண் தின்ன கிருஷ்ணன் மாதிரி வாயை ஓப்பன் பண்ணி வச்சிருக்க?” என்று கேலி செய்ய அவளது முகத்தை திருப்பி சில அடி தூர இடைவெளியில் நிற்கும் மூவரையும் காட்டஸ்ராவணி அலட்சியமாக திரும்பியவள் அங்கே நின்ற மூவரையும் கண்டு சாதாரணமாக தான் நின்றாள். மேனகா தான் கடுப்புடன் “ஏய் இவன் என்னடி இப்பிடி பப்ளிக்ல ஒரு பொண்ணை ஹக் பண்ணிட்டு நிக்கிறான்! கொஞ்சம் கூட வெக்கமே இல்ல” என்று சொல்ல ஸ்ராவணி அவள் தோளில் இடித்தவள் “அவங்க ரெண்டு பேரும் லண்டன்ல இருந்தவங்கடி. இதுல்லாம் இப்போ இந்தியாலயே சாதாரணம்” என்று சொல்லிவிட்டு அவள் கையை பிடித்து இழுத்து சென்றாள் அவர்கள் மூவரை நோக்கி. அபிமன்யூ எதேச்சையாக திரும்பியவனின் கண்ணில் ஸ்ராவணி வருவது தெரிய இவள் ஏன் இங்கே வந்திருக்கிறாள் என்ற யோசனையுடன் நிற்க அஸ்வின் அவன் கையை இடித்து அவன் காதில் “நான்ஸியை விட்டு தள்ளி நில்லுடா. எனக்கு என்னவோ இன்னைக்கு பெரிய சம்பவம் நடக்கும்னு மனசுக்குள்ள பட்சி சொல்லுது அபி” என்றுச் சொல்ல அவன் யோசனையுடன் அஸ்வினைப் பார்த்தபடி நான்ஸியை விட்டு விலகி நின்றான். அதற்குள் நான்ஸியை நெருங்கிய ஸ்ராவணி “ஹாய் நான்ஸி!” என்றவாறு அவளை அணைத்துக் கொள்ள இப்போது குழம்பி நின்றது அபிமன்யூவும், அஸ்வினும் தான். நான்ஸி ஸ்ராவணியை பார்த்து “வாவ் வனி! யூ ஆர் லுக்கிங் கார்ஜியஸ். தட்ஸ் ஒய் ஹாரி இஸ் ஈகர்லி வெயிட்டிங் டு சீ யூ” என்று சொல்ல மேனகா நக்கலாக அபிமன்யூ, அஸ்வினை பார்த்தபடியே நான்ஸியிடம் “ஓ யா நான்ஸி. ஐ ஹேவ் நோட்டிஸ்ட் தட் இன் அவர் ஸ்கைப் கால். ஹவ் இஸ் ஹாரி?” என்று ஆரம்பிக்க ஸ்ராவணியும் அதை ஆமோதித்தாள். அபிமன்யூ இவர்களின் உரையாடலை புருவம் சுருக்கியபடி முறைத்தவாறு ஏதோ அன்று தான் ஸ்ராவணியை முதல் முறை பார்ப்பது போல் தலையிலிருந்து கால் வரை பார்த்துவைத்தான். வெள்ளை நிற டாப் மற்றும் லெகின்ஸில் காதில் மட்டும் சிறு தோடு இருக்க மற்ற அணிகலன்களைத் தியாகம் செய்திருந்தாள். புருவமத்தியில் கடுகு போல சிறிய பொட்டு, அது கூட அந்த கருநிற வானவில் புருவங்களுக்கு இடையே கருப்புநிலவை ஒட்டி வைத்தது போல அம்சமாகவே இருந்தது. நான்ஸியிடம் பேசும் போது நட்பாய் சிரித்த செவ்விதழ்களும், அந்தச் சிரிப்பு ஏற்படுத்திய கன்னக்குழியும், முகத்தில் விழும் கூந்தல் கற்றையை விரல்களால் அவள் நாசூக்காக ஒதுக்கிவிட்ட விதமும் அவனுக்கே இன்று அவள் பேரழகாக இருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்த முயன்றது. “எப்போவும் போல பார்த்த உடனே சுண்டி இழுக்கிற அழகு தான். பட் அதுக்கு ஈக்வலா ஆட்டிட்டியூடும் இருக்கு. இந்த முகத்துல எப்போவும் ஒரு கோட்டிங் திமிரைப் பூசிட்டே திரியறது தான் கொஞ்சம் இரிட்டேட்டிங்கா இருக்கு” என்று தனக்குள் சொல்லிக் கொண்டான். கூடவே ஹாரி என்ற பெயர் ஏற்படுத்திய எரிச்சல் வேறு. இந்த லெட்சணத்தில் அந்த முகம் தெரியாத ஹாரிக்கு இவளை நேரில் சந்திக்க அவ்வளவு ஆர்வமா என்ற கடுப்பு வேறு அவனைப் போட்டுத் தாக்கியது. அவனது முகபாவத்தைக் கவனித்த அஸ்வின் அவன் காதுக்குள் “ஹாரி! பேரே மேன்லியா இருக்குல்ல அபி” என்று சொன்னதும் அவன் அஸ்வினை முறைக்க அஸ்வின் திரும்பிக் கொண்டான். அவர்களின் உரையாடலில் இடையிட்ட அபிமன்யூ எரிச்சல் மண்டிய குரலில் “நான்ஸி பை த வே ஹூ இஸ் தட் ஹாரி?” என்றுப் பொறுக்க முடியாமல் கேட்க நான்ஸி தோளை குலுக்கியபடி “ஹீ இஸ் மை பிரதர் அபி” என்று சொல்லவும் அதிருப்தியுடன் கையை கட்டிக் கொண்டான். ஸ்ராவணி அவனது முகத்தை பார்த்து இவனுக்கு என்னாச்சு என்று நினைத்தவாறே நான்ஸியிடம் “நான்ஸி மார்னிங் தான் ஸ்ரவன் கால் பண்ணி சொன்னான் நீ இந்தியா வர்றேனு. உனக்கு கான்ஃபரன்ஸ் எத்தனை மணிக்கு?” என்று கேட்க அபிமன்யூ இது யார் அடுத்தவன் என்று திடுக்கிட்டவனாய் மீண்டும் இடையிட்டு “ஹூ இஸ் தட் ஸ்ரவன்?” என்று கேட்டுவிட்டு ஸ்ராவணியின் புறம் திரும்பி பதிலுக்காக காத்திருந்தான். ஸ்ராவணி கையை கட்டிக் கொண்டு “ஹீ இஸ் மை பிரதர் அண்ட் ஹாரி’ஸ் ஃப்ரெண்ட். இஸ் தேர் எனிதிங் எல்ஸ் யூ வாண்ட்?” என்றாள் அவனை முறைத்தபடி. பின்னர் நான்ஸியை தங்களுடன் அழைத்து செல்லவிருப்பதாக கூற நான்ஸியும் தனக்கு கான்ஃபரன்சுக்கு நேரமாவதால் மாலை சந்திக்கலாம் என்று சொல்லிவிட்டு மேனகா, ஸ்ராவணியுடன் கிளம்பினாள். அபிமன்யூ அஸ்வினிடம் “அச்சு! நான்ஸிக்கு அண்ணன் வேற இருக்கானாடா? அவன் இந்த வனியோட அண்ணனுக்கு ஃப்ரெண்ட் வேறயாம். என்னடா நடக்குது இங்க?” என்று குழப்பத்துடன் கேட்க அஸ்வின் “என்ன நடந்தா என்ன மச்சி? இன்னும் அஞ்சு மாசம் தான். அப்புறம் தான் டிவோர்ஸ் கெடச்சிடும்ல. நீ ஏன் தேவையில்லாத விஷயத்தை பத்தி யோசிக்கிற? வா போகலாம். அம்மா வெயிட் பண்ணிட்டு இருப்பாங்க” என்றபடி அழைத்து சென்றான். ********************************************************************************** நான்ஸி கான்ஃபரன்சுக்கு சென்று விட்டு மாலையில் ஸ்ராவணியின் ஃப்ளாட்டுக்கு திரும்பும் போதே அபிமன்யூவிடம் பேசிக்கொண்டு வந்தாள். மாலையில் பப்புக்கு செல்லலாம் என்று நான்ஸி கூற அபிமன்யூ சரி என்றவன் எத்தனை மணிக்கு வர வேண்டும் என்று சொல்லிவிட்டு போனை வைத்தான். நான்ஸி வீட்டினுள் நுழையும் போதே “மேகி டார்லிங்! ஐயாம் சோ டயர்ட்” என்றபடி சோஃபாவில் வந்து விழுந்தாள். அதன் பின் ஸ்ராவணியும், மேனகாவும் அவளுடைய கான்ஃபரன்சை பற்றி விசாரிக்க அந்த பேச்சுவார்த்தை ஒரு மணிநேரத்துக்கு மேலாக நீண்டது. நான்ஸி கொஞ்சம் ரிலாக்சாக நேரம் செலவளிக்க விரும்புவதாக கூற ஸ்ராவணி அதற்கு சரியென்றதோடு சரி. இரவு ஏழு மணி போல நான்ஸி இருவரையும் தயாராக சொல்ல இருவரும் ஒரே குரலில் “எங்கே” என்று விழிவிரித்து நின்றனர். பின்னர் இன்னும் சிறிது நேரத்தில் டின்னரை முடித்துவிட்டு உறங்கலாம் என்று எண்ணியிருந்தவர்களை தயாராகும் படி சொன்னால அவர்கள் அவ்வாறு தானே விழிப்பார்கள்? நான்ஸி பப்புக்கு செல்லலாம் என்று சொல்ல ஸ்ராவணி மறுப்புடன் ஏதோ சொல்ல வந்தாள். அதற்குள் நான்ஸி “பிளீஸ் வனி! பிளீஸ் கம் ஃபார் மீ. யூ டூ மேகி” என்று இருவரின் கைகளையும் பிடித்து கொள்ள வேறுவழியின்றி இருவரும் சம்மதித்தனர். நான்ஸி ஸ்கர்ட்டுடன் தயாரானவள் மேனகாவும், ஸ்ராவணியும் டெனிம் சர்ட், ஜீன்ஸ் மற்றும் ஸ்னிக்கர்ஸ் சகிதம் தயாராகி நின்றதை கண்டதும் “சால் வீ கோ?” என்றவள் அவர்களின் உடையைக் கண்டதும் வேறு உடை மாற்றினால் கூட நன்றாக இருக்கும் என்று அவள் சொல்ல மேனகா அவசரமாக “ஓ நோ! இந்த டிரஸ் தான் எனக்கு கம்ஃபர்டபிலா இருக்கு நான்ஸி. இதுவே ஓகே” என்று சொல்லிவிட்டு கால்டாக்சிக்கு போன் செய்தாள். சிறிது நேரத்தில் டாக்சி வர மூவரும் அதில் ஏறிக் கொண்டனர். டாக்சி அவர்கள் முதலில் சென்ற கோல்டன் கிரவுன் பப் இருக்கும் கிழக்கு கடற்கரை சாலையை நோக்கி விரைந்தது.
அங்கோலாவின் முன்னாள் ஜனாதிபதி ஜோஸ் எடுவார்டோ டோஸ் சாண்டோஸ் நீண்டகாலமாக நோய்வாய்ப்பட்டதைத் தொடர்ந்து பார்சிலோனா கிளினிக்கில் வெள்ளிக்கிழமை காலமானார். அங்கோலாவின் லுவாண்டாவில் நடைபெற்ற கட்சியின் மத்திய குழு கூட்டத்தில் அங்கோலா ஜனாதிபதியும் MPLA தலைவருமான ஜோஸ் எடுவார்டோ டோஸ் சாண்டோஸ் கலந்து கொள்கிறார் (புகைப்படம்: ராய்ட்டர்ஸ்) சுமார் நான்கு தசாப்தங்களாக ஆப்பிரிக்காவின் இரண்டாவது பெரிய எண்ணெய் உற்பத்தியாளராக இருந்த அங்கோலாவின் முன்னாள் ஜனாதிபதி ஜோஸ் எடுவார்டோ டோஸ் சாண்டோஸ் தனது 79 வயதில் காலமானார் என்று அங்கோலா பிரசிடென்சி வெள்ளிக்கிழமை பேஸ்புக்கில் தெரிவித்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி ஸ்பெயின் நேரப்படி காலை 11:10 மணியளவில் பார்சிலோனா டெக்னான் கிளினிக்கில் நீண்டகால நோயைத் தொடர்ந்து இறந்ததாக ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது. அவர் சிகிச்சை பெற்ற பார்சிலோனா டெக்னான் கிளினிக்கின் செய்தித் தொடர்பாளர் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார். டாஸ் சாண்டோஸ் 2019 முதல் மருத்துவ சிகிச்சை பெற்று வந்தார். முன்னாள் ஜனாதிபதி பார்சிலோனாவில் உள்ள கிளினிக்கில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டதாக போர்த்துகீசிய செய்தி நிறுவனம் லூசா கடந்த மாதம் தெரிவித்தது. ஆப்பிரிக்காவின் நீண்ட காலம் பதவி வகித்த தலைவர்களில் ஒருவரான டாஸ் சாண்டோஸ் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு பதவி விலகினார். 2002ல் வெற்றி பெற்ற யுனிடா கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக ஏறத்தாழ மூன்று தசாப்தங்களாக நீடித்த ஒரு மிருகத்தனமான உள்நாட்டுப் போரினால் அவரது ஆட்சி குறிக்கப்பட்டது. அவருக்குப் பதிலாக 2017 ஆம் ஆண்டு ஜனாதிபதி ஜோவா லோரென்கோ நியமிக்கப்பட்டார், அவர், அங்கோலா விடுதலைக்கான மக்கள் இயக்கத்தில் (எம்பிஎல்ஏ) இருந்து வந்த போதிலும், டாஸ் சாண்டோஸ் காலத்தில், முன்னாள் தலைவரின் குழந்தைகளை குறிவைத்து, பல பில்லியன் டாலர் ஊழல் குற்றச்சாட்டுகளை விரைவாக விசாரிக்க சென்றார். .
முள்ளிவாய்க்கால் நினைவுகள் 2009 ம் ஆண்டு மனித ஓலங்கள் எங்கும் எதிரொலித்துக்கொண்டிருந்தது. அன்றையக் காலத்தில் தொலைக்காட்சிகள், இணையதளங்கள்,பேட்டிகள்,கட்டுரைகள் என பின்தொடர்ந்து வாசித்த அன்றைய காலங்களை மனிதநேயம் கொண்ட மனிதர் யாராலும் எளிதில் மறக்க முடியாது என்பது யதார்த்தமே. இழவு விழுந்து கொண்டிருந்த நிகழ்வை உணராத மனிதர்கள் அன்றைய காலத்தில் இருக்க முடியாது. முள்ளிவாய்க்கால் பகுதியெங்கும் கொத்துக் கொத்தாக மனிதர்கள் இறந்து கொண்டிருந்த காலம். சட்டரீதியான அரசு என்ற மகுடத்தை அணிந்த பெருந்தேசிய வெறியைக் கொண்ட அரசு, அலகு உரிமைக்காக போராடும் இன்னொரு பிரிவினர் மீது தொடுத்த யுத்தமாகும். போராடும் மனிதர்கள் எப்பவும் சட்டத்திற்கு முரணாவர்கள் எனவும் ஆனால் சட்டரீதியான அரசு சுதந்திரத்திற்கான யுத்தம், சமாதானத்திற்கான யுத்தம் என்ற போர்வையில் சர்வதேசத்தின் உதவியுடன் முள்ளிவாய்க்காலில் அப்பாவிமக்களை குழந்தைகள், இளையோர் முதியோர் என வேறுபாடின்றி படுகொலைகளைபுரிந்து கொண்றொழித்தது. 149000 மக்கள், ஆயிரக்கணக்கான போராளிகள் காணால் ஆக்கப்பட்டுள்ளார்கள். இவ்வாறு மக்கள் கூட்டத்தின் மீது நடைபெற்ற இனவழிப்புப் போரை இனவழிப்பு என்று பிரகடனப்படுத்த வேண்டாம் என்று வெவ்வேறு வடிவங்களில் கருத்துருவாக்கப்படுகின்றது. தமிழ் தேசத்தின் இறைமைக்காய் நடைபெற்ற போராட்டத்தினை ஒவ்வொருவரும் தமது சிந்தனையின் படி வெவ்வேறு வகையில் கருத்துக்களை முன்வைக்கின்றனர். முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நடைபெற்று ஏழு ஆண்டுகளைக் கடந்து விட்டது. உலகின் ஆட்சியாளர்கள், உள்ளூர் ஆட்சியாளர்கள், இடதுசந்தர்ப்பவாதிகள், புலியெதிர்ப்பாளர்கள், தலித்தியவாதிகள் எல்லோரும் பயங்கரவாதிகள், பிரிவினை வாதிகள் வெற்றி கொள்ளப்பட்டதாய் குதூகலித்திருந்தார்கள். அன்று மக்கள் கொத்துக் கொத்தாக கொல்லப்பட்டுக்கொண்டிருந்த போது மௌனிகளாக இருந்த இவர்கள் இன்று ஜனநாயகத்தையும் அன்பையும் மக்களுக்குப் போதிக்கும் புத்தக பகவான்களாக தங்களை காட்சிப்படுத்தி பாவனை செய்கிறார்கள். இந்த பிணந்தின்னிக் கழுகுகள் கொத்துக் கொத்தாக மக்கள் கொல்லப்பட்டுக் கொண்டிருந்த போது ஜனநாயகத்தையும், நியாயத்தைத்தையும் சித்தாத்தங்களிலும் புத்தக வரிகளிலும், தேடிக் கொண்டிருந்தார்கள் இந்த புனித ஜனநாயகவாதிகள். இவர்கள் எல்லோருக்கும் பிரச்சனையாக இருந்தது விடுதலைப்புலிகளும் அதன் தலைவரும்தான். அவர்களை அழித்தாகிவிட்டது, இப்போது தேசிய இனப்பிரச்சனைக்கான தீர்வை உயர்ந்த ஜனநாயக வடிவத்தை கொண்டதாக முன்வைக்க வேண்டிய நிலையில் அதை மறுத்துக் கொண்டு ஜனநாயகத்தையும் நியாயத்தைத்தையும் புத்தக வரிகளில் தேடிக் கொண்டிருக்கின்றார்கள். தேசத்தின் உரிமைக்காக போராடியவர்களை சர்வதேச உதவியுடன் கொண்றொழித்து தமிழ் தேசம் ஆக்கிரமிப்புக்கு உள்ளாக்கப்பட்ட வேளையில் வடமாகாணமுதலமைச்சர் – பிரபாகன் மீண்டும் தோன்றுவார் என்ற அவரது கூற்றை அரச ஒத்தோடிகளும், ஒடுக்கும் அரச இயந்திரமும் தமக்கு இசைவாக கருத்தூருவாகம் செய்கின்றது. ஆம் லங்கா என்ற ஒடுக்கும் தேசமும் அதன் அதிகார வர்க்கமும் தொடர்ந்து தமிழ் தேசத்தினை அடக்க முற்படும் போது புரட்சியாளர்களும், தேசத்திற்கான போராட்டமும் தவிர்க்க முடியாத நிகழ்வாக உருவாகவே செய்யும். ஆனால் முதலாளித்துவ- தேசிய ஜனநாயகக் கட்டத்தைப் பற்றிய புரிதல் அற்ற கருத்துருவாக்கிகள் இந்த ஒடுக்குமுறைக்கு எதிரான நீதி கேட்டு எழும் குரல்களை இனவாதமாகவும், குழப்பங்களை உண்டுபண்ணும் கருத்தாகவும் சித்திரிக்கின்றார்கள். தமிழ் தேசத்தின் உரிமை என்பது இனவாதமாக சிந்தரித்துக் கொண்டு பெருந்தேசியத்திற்கு துணையாக நிற்கின்றனர். புலிகள் அழிக்கப்பட்டார்கள் அவர்கள் மீளவும் வேண்டாம் என்று அறிவுறுத்துகின்றார்கள். இவ்வாறு பேசினால் வடக்கில் கைதுகள் அடிக்கடி இடம்பெறும், சிலர் காணாமல் போவார்கள் இராணுவ சோதனைகள் நடாத்தப்படும் ஒட்டுமொத்தத்தில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும், சர்வதேசம் மௌனம் காக்கும், இறுதியில் மக்கள்தான் அவதிப்படப் போகின்றார்கள் என்று பயத்தை ஊட்டும் செயற்பாட்டை மேற்கொள்கின்றார்கள். ஆயுதத்தால் அடக்குவது எவ்வாறு சாத்தியமோ அவ்வாறே கருத்துருவாக்கத்தின் ஊடாகவும் மக்களை பயமுறுத்தி வைக்க முடியும். இதுவும் ஒரு உளவியல் யுத்தமேயாகும். தமிழ் மக்களுக்கு ஜனநாயகத்தை உபதேசிப்பவர்கள் மாறாக ஜனநாயகத்தை மதிக்காத இலங்கை பேரினவாத அரசை அல்லவா எதிர்த்துக் குரல் கொடுக்க வேண்டும். அதன்மீது அல்லவா விமர்சனங்களை முன்வைக்க வேண்டும். இங்கு மாறாக இந்த அரச ஒத்தொடிகள் என்ன செய்கிறார்கள் என்றால்… ஆண்டைகளுக்கு (ஆளும் சிங்கள பேரினவாத அரசிற்கு) அடிமையாக இரு என்று போதிப்பது, இழப்புக்களுக்காக நீ வருந்தாதே இழப்புக்களுக்காக நீ நினைவு கூறாதே, இழப்புக்களை கடந்தகாலமாக விட்டுவிடு இழப்புக்களை இட்டு சோக கீதம் பாடிக் கொண்டிருக்காதே என்ற வகையில் அரச அடக்குமுறைக்கு எதிரான மக்கள் மனங்களை ஒன்று சேரவிடாமல் அதாவது அதை அமைப்பு வடிவம் பெறவிடாமல் கருவிலேயே சிதைப்பதுவே இவர்களது மறைமுக பணியாகும். எனவே தமிழ் தேச மக்களாகிய நாங்கள் இதற்க்கு எதிராக முன்பைவிட உரக்க குரல் கொடுக்க வேண்டிய காலகட்டத்தில் உள்ளோம். எனவே தமிழர் தேசமாகவும் முள்ளிவாய்க்கால் வீழ்ச்சியை இறுதியாகக் கொள்ளாது முன்னெழ வேண்டும். மாண்ட வீரமறவர்களே உங்கள் மரணம் முடிவல்ல தமிழ் தேசத்தின் உரிமைக்காக போராடிய உங்களை உலகவல்லரசுகள் சேர்ந்து முறியடித்தார்கள். தமிழ் தேசத்தின் இறைமைக்கான போராட்டத்தை நீங்கள் முள்ளிவாய்க்காலில் முடித்துக் கொண்டீர்கள். ஆனால் அதுவே முடிவல்ல. நீங்கள் விட்ட போராட்டத்தை தொடர வேண்டிய காலக்கட்டாயமாகும். இன்று சுயநிர்ணய உரிமைக்கான போராட்டத்தினை மக்கள் மயப்படுத்த வேண்டிய தேவையிருக்கின்றது. ஊடகவியாபாரம், களிப்பாட்டங்கள் என்ற வியாபார முனைப்பாளர்கள் தமக்கு செல்லத்தைக் கொடுக்கும் அடிமைகளாக மக்களை மடைமாற்றுகின்றார்கள். நாங்கள் போராடுகின்றோம் நீங்கள் பார்வையாளர்களாகவும், நிதியையும் தந்தால் போதும் என்று பார்வையாளர்களாக வைக்கப்பட்ட மக்களை அரசியல் ரீதியாக அணிதிரட்ட வேண்டிய தேவை உள்ளது. தமிழ் தேசத்தின் போராட்டம் எவ்வாறு வீழ்த்தப்பட்டது, அதேபோல நிலவியவுகின்ற அரை நிலமானிய (பிராமணிய, யாழ்சைவ வேளாள) சமூகச் சிந்தனையை உடைத்துக் கொண்டு முன்னேற வேண்டுமானால் எவ்வித விட்டுக் கொடுப்பும் இன்றி சமூக விஞ்ஞானப் பார்வையூடாக அறிவைப் பெறுவதன் ஊடாகவே முன்னோக்கிச் செல்லமுடியும். முள்ளிவாய்க்காலின் பின்னரான காலம் தமிழர்களின் தேசக் கட்டுமானத்தினை மறுதலித்த வகையில் முன்னொடுக்கும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றது. முன்னர் மகிந்த சிந்தனைக்கு வடிவமைத்துக் கொடுத்து தேசத்தின் அழிவில் இருந்து இன்று (1980களில் தமிழகத்தில் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் வேலையை) புலிகளின் பின்னான காலங்களில் முன்னெடுக்கப்படுகின்றது. இது இலங்கைக்கு புதிதாக இருக்கின்றது ஆனால் தன்னார்வ அரசியல் என்பது ஒன்றும் புதிதல்ல. தன்னார்வதொண்டு நிறுவனங்களும், சர்வதேச உளவு நிறுவனங்களும் அவர்களின் கருத்துக்களும் எமது சமூகத்தில் பல்வேறு தளங்களில் நுழைந்து கருத்துருவாக்கத்தினை மேற்கொள்கின்றது. இவைகள் அடையாள அரசியல், கனவான் அரசியல், அரசியல் நீக்கம், பயன்பாட்டுவாதம், கட்டமைப்பில் சீர்திருத்தவாதம், தீவிர தேசியவாதம், தமிழ் தேசிய இலக்கியவாதிகள், தமிழ் தேசிய எழுத்தாளர்கள் என்று பலவர்ண அரசியல் முலாம் பூசி மக்கள் முன் நிறுத்தப்படுகின்றது. புலியாதரவு அமைப்புகள் பல்வேறு பிரிவுகளாக இருக்கின்றனர். இவர்கள் இன்றையப் பொழுதில் பெரும்பான்மை புலியாதவர்களார்கள் இணக்க, கனவான் அரசியலை சிரமேற் கொண்டு செயற்பட்டு யார் எம்மை அழித்தார்களோ அவர்களின் தயவையும், அவர்களுக்கு நம்பிக்கைக்கு பாத்திரமானவர்களாக நடந்து கொள்வதில் போட்டி போட்டுச் செயற்படுகின்றார்கள். வருடாவரும் மாவீரர் தினம், விளையாட்டு என்று நிகழ்வுகளை நிகழ்த்தி உணர்ச்சியைப் பெருக்குவதும், புலிகளின் சின்னங்களை உள்ளடங்கிய நாட்காட்டி மற்றும் பொருட்களை விற்பனை செய்து பொருளீட்டும் முயற்சியில் தம்மை சுருக்கிக் கொள்கின்றனர். ஆடம்பரமான கூட்டங்கள், விழாக்களை நடத்துவதும், சிறார்களின் தமிழ் பள்ளிக்கூடங்களை வைத்தே சமூகத்தை தொடர்ந்தும் கூறுபோட்டுக் கொண்டிருக்கும் புலம்பெயர் அமைப்புக்களாகும். இவர்களின் இன்னொரு பகுதியினர் முள்ளிவாய்க்காலுக்கே வழிவகுத்தவர்களுக்கு தகவல் வழங்கி காட்டிக் கொடுப்பவர்களாக இருக்கின்றனர். இவர்களின் ஒரு பகுதியினர் ஆளும் வர்க்கத்துடனும் தூதரகங்களுடனான தொடர்புகள் ஒன்றும் பரமரகரியம் இல்லை. ஆனாலும் இவ்வாறான சக்திகளே புலம்பெயர்ந்த நாடுகளில் ஆழுமையைக் கொண்டுள்ளார்கள். இவை இரண்டு போக்குக்களும் பெரும் சமூக அவலமாகும். இந்த அவலத்தினைப் போக்கிக் கொள்ள மக்கள் அரசியல் ரீதியாக விழிப்புணர்பு அடைவது அத்தியாவசியமான உடனடித் தேவையாகும். தமிழ் மக்களின் உரிமை என்ன என்பது பற்றிய போதிய புரிதல் இல்லை என்பதை தமிழ் அரசியல்வாதிகளின் உரையாடலை அவதானிக்கும் போது முடிவிற்கு வரமுடிகின்றது. தமிழ் தேசம் என்பது கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கண்டுபிடித்தது போல பிரச்சாரப்படுத்தி முடிந்திருந்தார்கள். இந்தியா சென்ற சென்ற சம்பந்தர் தனித் தமிழீழமே தமிழ் மக்களின் பிரச்சனைக்கு ஒரே தீர்வு என்ற நிலைப்பாட்டை வலியுறுத்திய வட்டுக்கோட்டை தீர்மானத்திலிருந்து தாம் நகர்ந்து விட்டதாக தெரிவித்துள்ளார். இதனை இந்தியாவில் வைத்து தெரிவிக்க யார் இவருக்கு உரிமை கொடுத்தது? இவ்வாறான தன்னிச்சையான முடிவெடுக்க சம்பந்தருக்கு உரிமை இல்லை. இதனை பொதுவாக்கெடுப்பு நடத்தியே தீர்மானிக்கப்பட வேண்டும். அவர்களின் அரசியல் பாதையில் இருந்துதான் முடிவிற்கு வரமுடியும். கூட்டணியின் மிதவாதம் என்பது அடிப்படையில் மக்கள் நலன் கொண்டதல்ல. அது அன்னிய சக்திகளின் நலனுக்காக செயற்படுவதேயாகும். இவர்களின் திட்டமிட்ட அரசியல் செயற்பாடுகள் என்பது முள்ளிவாய்க்காலில் மாண்ட மனித உயிர்களுக்கு செய்யும் துரோகமாகும். முள்ளிவாய்க்காலில் நடந்து முடிந்த யுத்தம் என்பது ஒரு தேச (nation) த்தினை வெற்றி கொண்டுதான் முடிவிற்கு வந்துள்ளது. தமிழ் மக்களுக்கான தீர்வினை வெளிப்படையாக வைக்கப்பட வேண்டும். தமிழ் மக்களுக்கான குறைந்தபட்சத்தீர்வானது சுயநிர்ணயத்தின் அடிப்படையில் அமைந்தாக இருக்க வேண்டும். இதனை உறுதிப்படுத்தும் படியாக தமிழ் அமைப்புக்களுக்கு மக்கள் அழுத்தம் கொடுக்கவேண்டும். தமிழ் அரசியல்வாதிகள் மக்களுக்கு ஏதும் தெரிந்துவிடக்கூடாது என்பதில் கவனம் செலுத்துகின்றார்கள். இவர்கள் புறவுலகத்திற்கு ஒன்றும் தமிழ் மக்களுக்கு ஒன்று என்றும் மக்களின் உரிமையை விலைபேசுகின்றார்கள். மக்களின் உரிமையை விலைபேசும் அரசியல்வாதிகளின் பித்தலாட்டத்தை அம்பலப்படுத்தி ஒதுக்குவதன் ஊடாகவே தமிழ் மக்களின் உரிமையை தோல்விக்குள்ளாகாது வெற்றி கொள்ள முடியும். தமிழ் தேசத்தின் உரிமைக்கான போராட்டம் என்பது தனியே எல்லையை நிர்ணயிப்பதாக இல்லாது சமூக மாற்றத்தினை மாற்றும் வகையில் முன்னோக்கிச் செல்லப்பட வேண்டும். போராட்டம் என்றால் தனியே ஆயுதப் போராட்டம் தான் என்ற ஒற்றப் பார்வை மாற்றப்பட வேண்டும். மக்களின் ஜனநாயக உரிமையை போராட்டத்தின் ஊடாக வெற்றி கொள்ள முடியும். முள்ளிவாய்க்காலுக்கு வழிகாட்டியாக இருந்த பிற்போக்கு அரசியலை துடைத்தெறிந்து முன்னேறுவதன் ஊடாகவே வெற்றியை தமதாக்க முடியும். தமிழ் மக்களை தமிழ் தரப்பே ஏமாற்றுவது போல ஆளும் சிங்கள அதிகார வர்க்கமும் மூர்க்கத்துடன் தான் செயற்படுகின்றது. தமிழ் தேசத்தின் இருப்பை இல்லாதொழிக்க பல்வேறு நிலைகளில் செயற்படுகின்றார்கள். மொழி, காணி, அபிவிருத்தி என்றும் முள்ளிவாய்க்கால் நினைவை தமிழ் தேசத்தின் அழிவாக மக்கள் நினைவுகூர்வதை அனுமதிக்க தயாராக இல்லாது உள்ளது. இது தமிழ் மக்கள் முள்ளிவாய்க்காலின் அழிவின் ஊடாக பொது அடையாளத்தை உருவாக்கிக் கொள்ளவும், நிலைப்படுத்தவும் எப்பவும் அதிகார வர்க்கம் எதிராகவே இருக்கும். இங்கு சின்னத்தை (குறிப்பான்- symbol) உருவாக்கிக் கொள்வதற்கும், சமூகத்தின் அடுத்த கட்டத்திற்கு கடத்துவதன் ஊடாக எதிர்மறை நிகழ்வைக் கொடுக்கும் என்பது ஒடுக்குமுறையாளர்களுக்கு தெரியும். இந்த நிலையில் தேசத்தின் அடையாளத்தின் அழிப்பிற்கு அவசியமாகின்றது. இதன் அடிப்படையில் இருந்து முள்ளிவாய்க்காலின் நினைவை திட்டமிட்டு சிதைக்கின்றது. தமிழ் தரகு அணியான தமிழ் தேசிய கூட்டமைப்பு, சிங்கள தேசம் தமிழ் தேசத்தின் அடையாளத்தை மறுக்கின்றது. சிங்கள ஆளும் வர்க்கம் உரிமையை தாம்பாளத்தில் வைத்து தரப் போவதில்லை. முள்ளிவாய்காலில் தான் இறந்த மக்களின் போராளிகளின் நினைவு தூபி அமைக்கப்பட வேண்டும். புலம்பெயர்ந்த நாட்டில் அல்ல. முள்ளிவாய்க்கால் தியாகிகளின் மக்களின் உதிரத்தால் உறைந்த நாட்களை சம்பிரதாய ரீதியாக நினைவு கூர்வதல்ல. மக்களின் தியாகங்கத்தினை மதிப்பதாக இருந்தால் பிற்போக்கு அரசியலில் இருந்தும், பிற்போக்குச் சமூக அமைப்பை மாற்றுவதற்கான செயலில் இறங்குவதன் ஊடாகவே உண்மையான அஞ்சலியைச் செலுத்த முடியும்.
மௌனமாயிருந்த அரசிளங் குமரியைப் பார்த்து முதன் மந்திரி அநிருத்தர், “தாயே! ஏன் பேசாமலிருக்கிறாய்? வந்தியத்தேவனை இன்னமும் நீ நம்புகிறாயா?” என்று கேட்டார். “ஐயா! அமைச்சர் திலகமே! நான் என்ன சொல்லட்டும்? இன்னும் சற்று நேரம் தாங்கள் பேசிக் கொண்டே போனால் என்னை நானே சந்தேகிக்கும்படி செய்து விடுவீர்கள் போலிருக்கிறதே!” என்றாள் இளவரசி. “காலம் அப்படி இருக்கிறது, அம்மா! யாரை நம்பலாம், யாரை நம்பக் கூடாது என்று தீர்மானிப்பது இந்த நாளில் அவ்வளவு சுலபமில்லைதான். நாலாபுறமும் அவ்வளவு விரோதிகள் சூழ்ந்திருக்கிறார்கள்; அவ்வளவு மர்மமான சூழ்ச்சிகள் நடந்து வருகின்றன!” என்றார் முதன் மந்திரி அநிருத்தர். “ஆனாலும் தங்களுக்குத் தெரியாத மர்மமும், தாங்கள் அறியாத சூழ்ச்சியும் இராது என்று தோன்றுகிறது. நான் அனுப்பிய தூதனைப் பற்றி அவ்வளவு விவரங்களையும் எப்படித் தெரிந்து கொண்டீர்கள்?” என்று கேட்டாள் குந்தவை தேவி. “அம்மணி! நான் ஆயிரம் கண்களும், இரண்டாயிரம் செவிகளும் படைத்தவன். நாடெங்கும் அவை பரவியிருக்கின்றன. பழுவூர் அரண்மனையில் என் ஆட்கள் இருக்கிறார்கள். பழுவூர் இளையராணியின் மெய்க்காவலர்களிலே எனக்குச் செய்தி அனுப்புகிறவன் ஒருவன் இருக்கிறான். ஆழ்வார்க்கடியானைப் போல் ஊர் ஊராக அலைந்து திரிந்து செய்தி கொண்டு வருகிறவர்கள் பலர் இருக்கிறார்கள். சுற்றுப்புற நாடுகளிலோ நான் அறியாமல் எந்தக் காரியமும் நடைபெற முடியாது என்றுதான் எண்ணிக் கொண்டிருக்கிறேன். ஆயினும், யார் கண்டது? என்னையும் ஏமாற்றக் கூடியவர்கள் இருக்கலாம். நான் அறியாத மர்மங்களும் நடைபெறலாம்!” இவ்வாறு முதல் மந்திரி சொன்னபோது, பொன்னியின் செல்வன் இப்போது சூடாமணி விஹாரத்தில் இருப்பதும் இந்தப் பொல்லாத மனிதருக்குத் தெரியுமோ என்ற எண்ணம் குந்தவைக்கு உண்டாயிற்று. அதை அவள் வெளியிடாமல் மிகுந்த சிரமத்துடன் அடக்கிக் கொண்டாள். “ஐயா! நீங்கள் சொல்வதெல்லாம் உண்மையாக இருக்கலாம்; ஆனால் அந்த வாணர் குல வீரன் பழுவூர் ராணியின் ஒற்றனாயிருப்பான் என்று மட்டும் என்னால் நம்பமுடியவில்லை. அவனைத் தயவு செய்து விடுதலை செய்து விடுங்கள்!” என்றாள். “நன்றாக யோசித்துப் பார், அம்மா! அந்தப் பெண் நந்தினியிடம் மாயமந்திர சக்தி ஏதோ இருக்கிறது! சிவபக்தன் மதுராந்தகன் அவளுடைய வலையில் விழுந்து இராஜ்யத்தில் ஆசை கொண்டான். சம்புவரையரின் மகன் கந்தமாறன் அவளுடைய ஓலையை எடுத்துக்கொண்டு ஆதித்த கரிகாலனிடம் போயிருக்கிறான். பழுவேட்டரையர்களின் பரம விரோதியாயிருந்த பார்த்திபேந்திரன் இன்று பழுவூர் ராணியின் அடிமையாகி விட்டான். சோழ இராஜ்யத்தை இரண்டாகப் பிரித்து மதுராந்தகனுக்கு ஒரு பகுதியும், ஆதித்த கரிகாலனுக்கு ஒரு பகுதியும் கொடுத்து ராஜி செய்து வைக்கவும் அவன் முன் வந்திருக்கிறான்…” “இது என்ன அக்கிரமம்! இராஜ்யத்தை இரண்டாகப் பிரிக்கவாவது? எங்கள் குலத்து முன்னோர்கள் எவ்வளவு கஷ்டப்பட்டு ஒன்று சேர்த்துப் பெரிதாக்கிய மகா இராஜ்யம் இது!” “இராஜ்யத்தைப் பிரிப்பதை நீ விரும்பமாட்டாய்; நானும் விரும்பவில்லை, தாயே! பத்து நாட்களுக்கு முன் இந்த யோசனையைச் சொல்லியிருந்தால் பார்த்திபேந்திரனும் பொங்கி எழுந்திருந்திருப்பான். இப்போது அவனே இந்த ஏற்பாட்டுக்கு முதன்மையாக நிற்கிறான்…” “இது என்ன விந்தை! அந்த பழுவூர் ராணியிடம் அப்படிப்பட்ட மாய சக்தி என்னதான் இருக்கும்?” “இளவரசி! அதை நான் உன்னிடம் கேட்க வேண்டும் என்றிருந்தேன். நீ என்னைக் கேட்கிறாய். போகட்டும்; வந்தியத்தேவன் மட்டும் அவளுடைய மாய சக்திக்கு உட்படமாட்டான் என்று எதனால் நீ அவ்வளவு நிச்சயமாகச் சொல்கிறாய்?” “ஐயா! காரணங் கேட்டால் எனக்குச் சொல்லத் தெரியாது. மனதுக்கு மனதே சாட்சி என்பார்கள். வாணர்குல வீரன் அத்தகைய துரோகம் செய்ய மாட்டான் என்று என் மனத்தில் ஏனோ நிச்சயமாகத் தோன்றுகிறது.” “அப்படியானால், அதை பரீட்சித்துப் பார்த்துவிடலாம், அம்மா!” “அப்படி என்ன பரீட்சை?” “காஞ்சிக்கு ஒரு தூதனை நாம் உடனே அனுப்பியாக வேண்டும். ஆதித்த கரிகாலனுக்கு மிக நம்பிக்கையான ஆளிடம் அவசரமாக ஓலை கொடுத்து அனுப்ப வேண்டும்.” “என்ன விஷயம் பற்றி?” “சற்று முன்னால், நந்தினியை விஷநாகம் என்று நீ சொல்லிவிட்டு அதற்காக மன்னிப்புக் கேட்டுக் கொண்டாய். உண்மையில் விஷநாகத்தைவிட அவள் பன்மடங்கு கொடியவள். இந்தச் சோழ குலத்தை அடியோடு நாசம் செய்து பூண்டோ டு ஒழித்து விட அவள் திட்டமிட்டிருக்கிறாள்.” “கடவுளே! என்ன பயங்கரம்!” என்று குந்தவை கூறியபோது அவளுடைய உள்ளக் கடல் பற்பல எண்ண அலைகளினால் கொந்தளித்தது. “உன் தமையன் ஆதித்த கரிகாலனைக் கடம்பூர் அரண்மனைக்கு அழைக்கும்படி அவள் சம்புவரையரைத் தூண்டியிருக்கிறாள். சம்புவரையர் மகள் ஒருத்தியையும், பழுவேட்டரையர் குமாரி ஒருத்தியையும் கரிகாலனுக்கு மணம் செய்விப்பது பற்றிப் பேசிவருகிறாள். இராஜ்யத்தை இரண்டாகப் பிரித்து ராஜிசெய்விக்கும் விஷயத்தையும் அங்கே முடிவு செய்யப் போகிறாளாம். இவையெல்லாம் வெளிப்படையான பேச்சு. ஆனால் அவளுடைய அந்தரங்கத்தில் என்ன நோக்கம் வைத்திருக்கிறாளோ அது யாருக்கும் தெரியாது. எல்லாம் அறிந்தவன் என்று கர்வம் கொண்டிருக்கும் என்னால்கூட அவள் நோக்கத்தை அறிய முடியவில்லை.” “அதைப்பற்றி நாம் என்ன செய்யவேண்டும், ஐயா?” “ஆதித்த கரிகாலன் கடம்பூர் மாளிகைக்குப் போகாமல் எப்படியாவது தடை செய்யவேண்டும். அதற்குத்தான் நீயும் நானும் ஓலை கொடுத்து வந்தியத்தேவனிடம் அனுப்ப வேண்டும். நம்முடைய விருப்பத்தை மீறிக் கரிகாலன் கடம்பூர் மாளிகைக்குப் புறப்படும் பட்சத்தில் வந்தியத்தேவனும் அவனுடன் போக வேண்டும். உடம்பைப் பிரியாத நிழலைப் போல் அவன் உன் தமையனைத் தொடர்ந்து காவல் புரிய வேண்டும். நந்தினியைத் தனியாகச் சந்திப்பதற்குக்கூட அவன் இடந்தரக் கூடாது…” குந்தவை பெருமூச்சுவிட்டாள்; முதன் மந்திரி கூறுவது எவ்வளவு முக்கியமான காரியம் என்பதை அவள் உணர்ந்தாள். எல்லா விவரங்களும் அறிந்து அவர் சொல்கிறாரா, அல்லது இராஜாங்க நோக்கத்தை மட்டும் வைத்துக் கொண்டு சொல்கிறாரா என்று அவளால் ஊகிக்க முடியவில்லை. “ஐயா! அவர்களுடைய சந்திப்பைத் தடுப்பது அவ்வளவு முக்கியமான காரியம் என்று ஏன் கருதுகிறீர்கள்!” என்று கேட்டாள். “அம்மணி! வீரபாண்டியனுடைய ஆபத்துதவிகள் சிலர் சோழகுலத்தைப் பூண்டோ டு அழிக்கச் சபதம் செய்திருக்கிறார்கள். அவர்களுக்குப் பெரிய பழுவேட்டரையருடைய பொக்கிஷத்திலிருந்து புதிய தங்கக்காசுகள் போய்க்கொண்டிருக்கின்றன. இதைக் காட்டிலும் இன்னும் ஏதேனும் நான் இதைப்பற்றிச் சொல்ல வேண்டுமா?” “வேண்டாம்” என்று முணுமுணுத்தாள் குந்தவை. சூடாமணி விஹாரத்தில் சுரத்துடன் படுத்திருக்கும் இளவரசனின் நினைவு அவளுக்கு வந்தது. பொன்னியின் செல்வனையும் அபாயங்கள் சூழ்ந்திருக்கலாம் அல்லவா? “ஐயா! சோழநாட்டுக்கு விபத்துக்கு மேல் விபத்தாக வந்து கொண்டிருக்கும் இச்சந்தர்ப்பத்தில் தாங்கள் முதன் மந்திரியாயிருப்பது அதிர்ஷ்டவசந்தான்! என் தம்பியின் விஷயமாக என்ன ஏற்பாடு செய்தீர்கள்?” என்று கேட்டாள். “சோழ நாட்டிலுள்ள எல்லாச் சிவாலயங்களிலும், விஷ்ணு, ஆலயங்களிலும் இளவரசருடைய சுகக்ஷேமத்தைக் கோரிப் பிரார்த்தனை செய்து அர்ச்சனை அபிஷேகம் நடத்தச் சொல்லியிருக்கிறேன். அப்படியே புத்த விஹாரங்களிலும், சமணப் பள்ளிகளிலும் பிரார்த்தனை செய்யப் போகிறார்கள். நாகைப் பட்டினம் சூடாமணி விஹாரத்தில் புத்த பிக்ஷுக்கள் ஒரு மண்டலம் விசேஷப் பிரார்த்தனை நடத்தப் போகிறார்கள். வேறு என்ன செய்யலாம் என்று நீ சொல்கிறாய்?” சூடாமணி விஹாரத்தைப் பற்றிச் சொல்லும் போது முதன் மந்திரியின் முகத்தில் ஏதேனும் மாறுதல் ஏற்படுகிறதா என்று குந்தவை கவனித்தாள், ஒன்றுமே தெரியவில்லை. “ஐயா! சூடாமணி விஹாரம் என்றதும் ஒரு விஷயம் ஞாபகம் வருகிறது. சூடாமணி விஹாரத்தின்மீது பெரிய பழுவேட்டரையர் ஏதோ கோபம் கொண்டிருக்கிறாராம். இலங்கையில் பிக்ஷுக்கள் இளவரசருக்கு முடிசூட்டுவதாகச் சொன்ன செய்தி வந்ததிலிருந்து அந்தக் கோபம் முற்றியிருக்கிறதாம். இளவரசர் காணாமற் போனதற்குப் பழியைச் சூடாமணி விஹாரத்திலுள்ள பிக்ஷுக்களின் மீது சுமத்தினாலும் சுமத்துவார்கள். அதற்குத் தக்க பாதுகாப்பு, தாங்கள்தான் செய்யவேண்டும்” என்று சொன்னாள். “உடனே செய்கிறேன், அம்மா! சக்கரவர்த்தியின் கட்டளையுடன் சூடாமணி விஹாரத்தைப் பாதுகாக்க ஒரு சிறிய சைன்யத்தையே வேணுமானாலும் அனுப்பி வைக்கிறேன். வந்தியத்தேவனைக் காஞ்சிக்கு அனுப்புவது பற்றி என்ன சொல்கிறாய்?” “ஐயா! அவ்வளவு முக்கியமான காரியத்துக்கு வேறு யாரையாவது அனுப்புவது நல்லதல்லவா?” “உனக்கு மட்டும் அவனிடம் நம்பிக்கையிருந்தால் அவனையே அனுப்ப விரும்புகிறேன். அவனுடைய வீர சாகஸச் செயல்களைப் பற்றியும் தெரிந்து கொண்டிருக்கிறேன். எதற்கும் அஞ்சாத அஸகாய சூரனையே இந்தக் காரியத்துக்கு நாம் அனுப்ப வேண்டும். இன்றைக்கு நான் அரண்மனை முற்றத்துக்கு வந்து கொண்டிருந்தபோது என் கண்ணாலேயே பார்த்தேனே! அந்த வைத்தியனை என்ன பாடுபடுத்திவிட்டான். நான் குறுக்கிட்டுத் தடுத்திராவிட்டால் வைத்தியர் மகன் யமனுக்கு வைத்தியம் செய்யப் போயிருப்பான்…” இளைய பிராட்டி இதைக் கேட்டுப் பூரிப்பு அடைந்தாள். ஆயினும் சிறிய தயக்கத்துடன், “வீரனாயிருந்தால் மட்டும் போதுமா? படபடப்புக்காரனாயிருக்கிறானே? எவ்வளவு விரைவில் சண்டை தொடங்கிவிட்டான்!” “அதற்கு வேணுமானால் பின்னோடு என்னுடைய சீடன் திருமலையையும் அனுப்பி வைக்கிறேன். நிதானமான யோசனைக்குப் பெயர்போனவன் ஆழ்வார்க்கடியான்!” என்றார் அநிருத்தர். இளையபிராட்டி தன் மனத்திற்குள், இவருடைய உள்ளத்தில் இருப்பதைக் கடவுளும் அறிவாரோ, என்னமோ தெரியவில்லை; ஒற்றனுக்குத் துணையாக ஒற்றன் ஒருவனையே அனுப்பி வைக்க விரும்புகிறார் போலும்!” என்று எண்ணிக் கொண்டாள்.
ஒரு பாத்திரத்தில் சலித்த சர்க்கரைப் பொடி மற்றும் ¼ கப் எண்ணெய் சேர்த்து பசை போல நன்றாகக் கலக்க வேண்டும். அதில் மைதா மாவு, பேக்கிங் சோடா, பேக்கிங் பவுடர், உப்பு மற்றும் ¼ கப் எண்ணெய் சேர்த்துக் கிளற வேண்டும். இந்தக் கலவையில் பாலை ஊற்றி, கட்டிகள் இல்லாதவாறு நன்றாகக் கலக்க வேண்டும். இறுதியாக அதில் வெனிலா எசன்ஸ் ஊற்றி மீண்டும் ஒரு முறை நன்றாகக் கலக்கவும். இப்போது கேக் தயார் செய்யும் பாத்திரத்தின் உட்பகுதி முழுவதும் நெய்யைத் தடவவும். அதற்குள் லைன் பேப்பரை வைத்து, அதன் மேல் கேக் கலவையைப் போட்டு காற்று குமிழ்கள் இல்லாத வகையில் சமன் செய்யவும். பிரஷர் குக்கரில் மணலைக்கொட்டி, அதிக தீயில் ஐந்து நிமிடங்கள் வரை வைக்கவும். பின்பு, சிறிய பாத்திர ஸ்டாண்டை மணலில் வைத்து, அதன் மேல் கேக் பாத்திரத்தை வைத்து குக்கரை மூடவும். கேக் கலவையை குறைந்த தீயில் 45 நிமிடங்கள் வரை வேக வைத்து எடுக்கவும்.
23.05.2008 அன்று முறிகண்டி- அக்கராயன் வீதியில் பள்ளி மாணவர்கள் உட்பட 16 பேர் லலித் ஜெயசிங்க என்பவரின் தலைமையிலான சிறிலங்கா படையின் ஆழஊடுருவும் தாக்குதல் அணியினரால் கொல்லப்பட்டவர்களின் நினைவு நாள்…. சிறிலங்கா படையினரின் ஆழ ஊடுருவும் தாக்குதல் அணிகளின் ஆதிக்கம் 2008 ஆம் ஆண்டு வன்னிக்காடுகளை சூழ்ந்திருந்தது. 1998,1999 காலப்பகுதி போன்று நிலமை 2008 இல் இருந்திருக்கவில்லை. LRRP(Long Range Reconnaissance Patrol) or Deep Penetration Unit (DPU)இன் தாக்குதல்களில் பல பொதுமக்கள் கொல்லப்பட்டுகொண்டிருந்த நேரம் அது. விடுதலைப்புலிகளின் முக்கிய தளபதியான கேணல் சாள்ஸ் அவர்களின் இழப்பினை முக்கியமான குறிப்பிடலாம். இது 2008 இன் ஆரம்பம்.. விடுதலைப்புலிகளுக்கு மட்டுமல்ல பயணிகள் பேருந்து, உந்துருளியில் செல்பவர்கள் அம்புலன்ஸ் வண்டி என பலரும் இத்தாக்குதல்களில் கொல்லப்பட்டிருந்தனர். இத்தாக்குதலின் படையணியின் பொறுப்பதிகாரியாக மட்டுமல்ல நேரடியாக வன்னிக்காடுகளில் தாக்குதல்களில் ஈடுபட்ட லலித் ஜெயசிங்க என்பவர் 2008 நவம்பரில் முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் காட்டுப்பகுதியில் விடுதலைப்புலிகளின் எதிர்த்தாக்குதலின் காயமடைந்து, அடுத்தநாள் தாக்குதலின் போது கொல்லப்பட்டிருந்தார். இவரது உடலையும் ஏனைய பபடையினரையும் எம்.ஜ உலங்கு வானுூர்தி மூலம் விமானப்படையினர் காப்பாற்றியிருந்தனர். ஏற்கனவே ஏ9 கொக்காவில் பகுதியில் வீதிபாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட விடுதலைப்புலிகள் மீது தாக்கமுற்பட்ட வேளை விடுதலைப்புலிகளின் துணைப்படைப்படைவீரர் ஒருவரால் LRRP படையினர் ஒருவர் கொல்லப்பட்டிருந்தார். இவர் விடுதலைப்புலிகளின் சீருடை அணிந்திருந்தார். ஜெயசிக்குறு சண்டை நடைபெற்றுக்கொண்டிருக்கும் காலப்பகுதியில் சிறிலங்கா படையினரின் முன்னேற்றத்தினை தடுக்கும் வகையில் தொல்லைகொடுக்கும் தாக்குதல்களை (1997 க்கு நடுப்பகுதிக்கு பின்னர்)விடுதலைப்புலிகளின் கட்டளைத்தளபதிகளில் ஒருவரான பிரிகேடியர் ஜெயம் அவர்களின் தலைமையிலான அணியினர் செயற்பட்டிருந்தனர். இதில் வேறு அணிகளும் ஈடுபட்டிருந்தாலும் வவுனியா மாவட்டத்தினை மையமாக கொண்டு பிரிகேடியர் ஜெயம் அவர்களின் அணியினர் வடகாட்டு புளியங்குளம், புளியங்குளம் கண்டிவீதி, இளமருதங்குளம், சேமமடு, சின்ன பூவரசன்குளம், நைனாமடு என தொடர்ச்சியான தாக்குதல் ஈடுபட்டு இராணுவத்தினரின் முன்னேற்ற நடவடிக்கைகளுக்கு ஏதுவான விநிகோகத்தினை கட்டுப்படுத்தியிருந்தனர். மாங்குளத்தை படையினர் கைப்பற்றியிருந்த வேளை இரணைஇலுப்பைக்குளம் புலிகளின் கட்டுப்பாட்டிலேயே இருந்தது. வன்னியின் பெரும்பாலான காடுகள் புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதியிலேயே இருந்தது. இது புலிகளுக்கு பெரும் சாதகமான நிலையே அப்போதைய காலத்;தில் இருந்தது என சொல்லலாம். 1999 நவம்பர் 2 ஆம் திகதி ஓயாத அலைகள் 3 ஆரம்பிக்கும் வரைக்கும் இப்படையணியின் சிறிலங்கா படையினரின் விநியோக நடவடிக்கைகள் மீதான தாக்குதல்கள் உதிரிகளாக இடம்பெற்றிருந்தது. விடுதலைப்புலிகளைப்பொறுத்தவரை வன்னியின் பாதுகாப்பாக அமைந்திருப்பது அதன் ஆறுகளும் ஆறுகள் ஊடறுத்துச் செல்லும் காடுகளும் காடுகளைதாண்டியுள்ள குளங்களுமே. யார் கையில் ஆறுகள் இருக்கின்றதோ அவர் கையில் காடுகள் இருக்கும். யார் கையில் காடுகள் இருக்கின்றதோ அவர் கையில் குளங்கள் இருக்கும். யார் கையில் குளங்கள் இருக்கின்றனவோ அவர் கையில் நிலமும் வளமும் இருக்கும். குறிப்பாக குளங்களை அண்டியே விடுதலைப்புலிகளின் பயிற்சி முகாம்கள், விவசாயபண்ணைகள், மற்றும் களஞ்சியங்கள் அமைந்திருந்தது. இறுதி யுத்த காலப்பகுதியில் குளங்களின் அணைக்கட்டுக்கள் யாவும் சிறிலங்கா படையினரின் பாதுகாப்பு அரணாக மாறியிருந்தது. புலிகள் எவ்வாறு ஜெயசிக்குறு சமருக்கு எதிராக தாக்குதல் நடத்தினார்களோ அதேபோலவே இறுதியுத்த காலத்தில் படையினரின் உள்நுழைவுத் தாக்குதல்கள் அமைந்திருந்தன. இது 2008 ஆம் இறுதிவரைக்கும் புலிகள் பாணியிலான உள்நுழைவுத்தாக்கும் திறன் கொண்ட 8 பேர் கொண்ட அணிகள் (eight man team) மேற்கொண்டிருந்தனர். விடுதலைப்புலிகளின் விநியோகங்களை கட்டுப்படுத்துவது மட்டுமல்ல மக்களின் போக்குவரத்தினை நிறுத்தும் அளவிற்கு பல தாக்குதல்கள் அமைந்திருந்தன. அத்தோடு விடுதலைப்புலிகளின் சீருடையிலேயே படையினர் நடமாடுவதால் அடையாளம் காண்பது மிகவும் கடினம். இது வன்னிக்கே மிகப்பெரிய சவாலாக மாறிவிட்டிருந்தது. இது முள்ளிவாய்க்கால் வரைக்கும் தமிழ் பேசும் துணை இராணுவக்குழுக்கள் மக்களோடு சேர்ந்து இருந்தமையையும் குறிப்பிடலாம். பிரதான வீதி(முறிகண்டி தொடக்கம் பனிக்கன்குளம் வரை, புளியங்குளம் பிரதான வீதி, கனகராயன்குளம் பிரதான வீதி, புத்துவெட்டுவான் வீதி, முறிகண்டி-அக்கராயன் வீதி, அம்பலப்பெருமாள் -மல்லாவி வீதி, ஆனைவிழுந்தான் 8 ஆம் கட்டை, துணுக்காய்- வெள்ளாங்குளம் வீதி, நெடுங்கேணி- புளியங்குளம் வீதி, ஒட்டுசுட்டான் புதுக்குடியிருப்பு வீதி என மெல்ல மெல்ல ஆபத்தான வீதிகளாக மாற ஆரம்பித்திருந்தது. கிளைமோர் தாக்குதல்களில் பல பொதுமக்கள் கொல்லப்பட்டுகொண்டு இருந்தார்கள். பொதுமக்கள் போக்குவரத்து செய்யவே அச்சம் மிகுந்த நிலைக்கு தள்ளப்பட்டிருந்த 2008 இல் சிறிலங்கா படையினரின் விமானத்தாக்குதல்களும் அதிகரித்திருந்தது. சமாதான காலத்தின் பின் வளர்ச்சி அடைந்த கிராமங்களில் பாரதிபுரமும் ஒன்று. 23.05.2008 அன்றைய நாள் கிராமமே நொடிந்து போய்விட்டிருந்தது. சிறிலங்கா ஆழ ஊடுருவும் தாக்குதல் அணியினரின் தாக்குதல் ஒன்று அக்கராயன் முறிகண்டி வீதியில் இடம்பெற்றிருந்தது. கிளிநொச்சி பாரதிபுரம் பகுதியைச் சேர்ந்த ஆறு பாடசாலை மாணவர்கள் உட்பட 16 பேர் படுகொலை செய்யப்பட்டிருந்தனர். அச்சம்பவத்தின் ஒளிப்படங்களை இங்கே பதிவேற்றுகிறேன். அக்கராயன் பக்கத்தில் இருந்து முறிகண்டி நோக்கி வந்து கொண்டிருந்த கயஸ் வாகனத்தின் மீதே இத்தாக்குதல் இடம்பெற்றிருந்தது. பதினாறு பேரின் இறுதி வணக்க நிகழ்வு பாரதிபுரம் மகாவித்தியாலயத்தில் இடம்பெற்றிருந்தது. இந்நிகழ்வில் நானும் கலந்து கலந்துகொண்டிருந்தேன்.
"லஞ்சம் கொடுப்பதோ பெறுவதோ சட்ட விரோதமானது. லஞ்சம் தொடர்பான புகார்களை நேரிலோ அல்லது தொலைபேசி வாயிலாகவோ தெரிவிக்க வேண்டிய முகவரி: இயக்குனர், விழிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை, எண். 293, M.K.N சாலை, ஆலந்தூர், சென்னை - 16 அல்லது உள்ளூர் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலர் இணையதளம்: www.dvac.tn.gov.in தொலைபேசி எண்கள்:(044) 22310989/22321090/22321085/22342142;தொலை நகலி: 044-22321005. இத்தளத்தில் தவறான தகவல்கள் இடம்பெற்றிருந்தால் அது குறித்த விவரங்கள் மற்றும் உங்களது கருத்துக்களை dtpwebportal@gmail.com என்ற EmailIDக்கு அனுப்பவும்) Terms and Conditions இவ்வலைத்தளம் சென்னை பேரூராட்சிகளின் இயக்குநரகம் மூலம் பராமரிக்கபட்டு வருகிறது. இத்தளத்தின் உள்ளடக்கமானது, துல்லியமாகவும், நம்பத்தகுந்த வகையிலும் இருப்பதற்கு, அனைத்து வகை முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இருப்பினும், இவற்றை, சட்டம் சார்ந்த அறிக்கையாக அமைக்கவோ அல்லது எந்த ஒரு சட்டம் சார்ந்த நோக்கங்களுக்கோ பயன்படுத்தக்கூடாது. இத்தளம் குறித்து, தெளிவின்மை அல்லது ஐயம் இருப்பின், பயனாளர்கள் தொடர்புள்ள துறை(கள்)/இதர மூலங்கள் வழியாக சரிபார்க்கவும் மற்றும் தேவையான ஆலோசனைகள் பெறவும் அறிவுறுத்தப்படுகிறது. எந்த சூழ்நிலையிலும் இத்தளத்திலுள்ள தரவுகளைப் பயன்படுத்துவதால் எழும் எந்தவொரு செலவு, அளவற்ற இழப்பு அல்லது சிதைவு, மறைமுகமான அல்லது அதன் காரணமாக ஏற்படும் இழப்பு அல்லது சிதைவுகள் ஆகியவற்றுக்கு இத்துறை கட்டுப்பட்டதல்ல. This website is maintained by Directorate of Town Panchayat. Though all efforts have been made to ensure the accuracy and currency of the content on this website, the same should not be construed as a statement of law or used for any legal purposes. In case of any ambiguity or doubts, users are advised to verify/check with the Department(s) and/or other source(s), and to obtain appropriate professional advice. Under no circumstances will this Department be liable for any expense, loss or damage including, without limitation, indirect or consequential loss or damage, or any expense, loss or damage whatsoever arising from use, or loss of use, of data, arising out of or in connection with the use of this website.
புதன் கிரகத்தை ஆராய்ச்சி செய்வதற்கான ஐக்கிய அரபு இராச்சியத்தின் திட்டம் வெற்றிகரமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. புதன் கிரகத்தின் காலநிலை மற்றும் வானிலை தொடர்பில் ஆராய்வதற்காக வடிவமைக்கப்பட்ட இந்த செய்மதி ஜப்பானிலிருந்து விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது. ஜப்பானின் Tanegashima விண்வௌி தளத்திலிருந்து, H2-A ரொக்கெட் ஒன்றினூடாக இந்த செய்மதி அனுப்பப்பட்டுள்ளது. இது புதன் கிரகத்தை சென்றடைவதற்கு 500 மில்லியன் கிலோமீற்றர்கள் பயணிக்க வேண்டியுள்ளது. கடந்த வாரம் செய்மதியை அனுப்புவதற்கு மேற்கொள்ளப்பட்ட இரண்டு முயற்சிகளும் மோசமான காலநிலை காரணமாக கைவிடப்பட்டிருந்தன. 2021 பெப்ரவரி மாதம் இந்தச் செய்மதி இலக்கைச் சென்றடையுமென எதிர்பார்க்கப்படுகின்றது. ஐக்கிய அரபு இராச்சியம் உருவாக்கப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைகின்ற குறித்த மாதத்தில், இந்த மைல் கல்லை எட்டுவதற்கான முயற்சியாக இந்தத் திட்டம் அமைந்துள்ளது.
13 மாருதி தொழிலாளர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்த கொடூரமான அநியாயத்திற்கு எதிராக ஆர்பாட்டங்கள் பெருகி வருகின்ற சூழ்நிலையில் நாம் இந்த ஆண்டின் மே தினத்தை நெருங்கி வருகிறோம். மாருதி தொழிலாளர்கள் செய்த ஒரே குற்றம் என்னவென்றால் அவர்கள் தொழிலாளர்களுடைய உரிமைகளுக்காக திரண்டெழுந்ததும், ஒரு போராட்ட தொழிற் சங்கத்தை அமைக்க முன்வந்ததும் ஆகும். குர்காவூனில் உள்ள அமர்வு நீதிமன்றம் மார்ச் 18 அன்று இந்தக் கொடூரமான தீர்ப்பை வழங்கியதிலிருந்து அதற்கு எதிராக பெரும் ஆர்பாட்டங்கள் எங்கும் பெருகி வருகின்றன. வீரத் தியாகிகள் பகத் சிங், சுக்தேவ், இராஜ்குரு ஆகியோரின் நினைவு நாளாகிய மார்ச் 23 அன்று குர்காவூன்-மானேசர்-பாவால் தொழிற் கூடத்தில் ஆயிரக் கணக்கான தொழிலாளர்கள் குர்காவூன் தொழிற் சங்க கவுன்சில் என்ற பெயரில் ஒரு பேரணியை நடத்தினர். நீதிமன்றத் தீர்ப்பு மாற்றப்படும் வரையிலும், பொய்யான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வேலையிலிருந்து தூக்கியெறியப்பட்டவர்களை மீண்டும் வேலைக்கு வைக்கும் வரையிலும் போராட்டத்தைத் தொடர்வதென எல்லா துறைகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் ஒன்றுபட்டு உறுதி கொண்டிருக்கின்றனர். இதைத் தொடர்ந்து, நாடெங்கிலும் தொழிலாளி வகுப்பின் எதிர்ப்பு ஆர்பாட்டங்களை ஏப்ரல் 5 அன்று நடத்துவதென மத்திய தொழிற் சங்க கூட்டமைப்புக்கள் இணைந்து முடிவு செய்திருக்கின்றன. மாருதி தொழிலாளர்கள் மீது தொடுக்கப்பட்டுள்ள இந்தத் தாக்குதல், ஒட்டுமொத்தத் தொழிலாளி வகுப்பின் மீதும் நடத்தப்பட்டுள்ள தாக்குதலாகும். இது, மிகப் பெரிய இந்திய மற்றும் அன்னிய முதலாளித்துவ ஏகபோகங்களுடைய விருப்பத்தின் அடிப்படையில் நடத்தப்பட்டதாகும். “உங்களுடைய உரிமைகளுக்காக முன்வந்துப் போராடினால், இது தான் உங்களுக்கும் நேரும்” என எல்லா தொழிலாளர்களிடையே அச்சத்தைப் பரப்பும் நோக்கத்தோடு இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. இந்தத் தாக்குதலுக்கு கொடுத்துவரும் பதில், தொழிலாளி வகுப்பு தன்னுடைய உரிமைகளுக்காகப் போராடுவதில் உறுதியாக இருக்கிறது என்பதையும், முதலாளி வகுப்பின் அச்சுறுத்தல்களுக்கு அஞ்சி அது ஓதுங்க தயாராக இல்லை என்பதையும் காட்டுகிறது. பல்லாயிரக் கணக்கான தொழிலாளர்கள் குர்காவூனிலும், பல இலட்சக் கணக்கான, கோடிக்கணக்கான தொழிலாளர்கள் நாடெங்கிலும் ஆர்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுடைய ஒன்றுபட்ட குரல் மேலும் மேலும் அதிகரித்து வருகிறது. எல்லாத் துறைகளைச் சேர்ந்த தொழிலாளர்களும், நாட்டின் எல்லா பகுதிகளிலிருந்தும், சிறையில் அடைக்கப்பட்டுள்ள தொழிலாளர்களை உடனடியாக விடுவிக்க வேண்டுமென்றும், எல்லா மாருதி தொழிலாளர்களையும் வேலைக்கு மீண்டும் எடுத்துக் கொள்ள வேண்டுமென்றும் கோரி வருகின்றனர். தோழர்களே, இந்தியத் தொழிலாளி வகுப்பின் போராட்டம், மனிதாபிமானமற்ற முதலாளித்துவ அமைப்பிற்கு எதிரான சர்வதேச இயக்கத்தின் ஒருங்கிணைந்த அங்கமாகும். தொழிலாளி வகுப்பு மற்றும் மக்களுடைய போராட்டங்களின் எண்ணிக்கையும் அளவும் அண்மை ஆண்டுகளில் நமது நாட்டிலும், உலக அளவிலும் கண்கூடாக அதிகரித்திருக்கிறது. ஏகபோக முதலாளித்துவப் பேராசையை நிறைவு செய்வதற்காக தொழிலாளர்களுடைய உரிமைகள் மீது நடத்தப்படும் தாக்குதல்களுக்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது. இறையாண்மை கொண்ட நாடுகளின் அரசாங்கங்களை முதலாளித்துவ பெரும் நிறுவனங்களுடைய கட்டளைகளுக்கு அடிபணியச் செய்யும் வணிக மற்றும் மூலதன ஒப்பந்தங்களுக்கு எதிராக பரந்துபட்ட எதிர்ப்பு இருந்து வருகிறது. எதிரெதிரான நலன்களைக் கொண்ட இரண்டு வகுப்புகளுக்கிடையே ஒரு கடுமையான போராட்டம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஒரு பக்கத்தில் ஏகபோகக் குடும்பங்கள் தலைமை தாங்கும் முதலாளித்துவ வகுப்பு இருக்கிறது. அவர்கள் அதிகமான இலாபத்தை அறுவடை செய்வதற்காக தொழிலாளர்களை பயங்கரமாக அச்சுறுத்தி, மேலும் மேலும் தீவிர சுரண்டலுக்கு அடிபணிய வேண்டுமெனக் கட்டாயப்படுத்தி வருகிறார்கள். இன்னொரு பக்கம் தொழிலாளி வகுப்பு நிற்கிறது. நாம் மனிதர்கள் என்பதாலும், பாடுபடும் உழவர்களோடு இந்தியாவின் செல்வத்தை உருவாக்குபவர்கள் என்ற காரணத்தாலும் நமக்கு உரிய உரிமைகளைத் தொழிலாளர்கள் நாம் கோருகிறோம். மூன்றாண்டுகளுக்கு முன்னர், இந்திய மற்றும் வெளிநாட்டைச் சேர்ந்த மிகப் பெரிய ஏகபோகங்கள், பாஜக தலைமையிலான அரசாங்கத்தை அறுதிப் பெரும்பான்மையோடு தில்லி பாராளுமன்றத்தில் திட்டமிட்டு அமர்த்தியிருக்கிறார்கள். அவர்களுடைய தொழிலாளர் விரோத, உழவர் விரோத, தேச விரோத, சமூக விரோத உலகமயம், தனியார்மயம், தாராளமயத் திட்டத்தை மேலும் விரைவாக நடைமுறைப்படுத்த வேண்டுமென ஏகபோக முதலாளிகள் மோடி அரசாங்கத்திற்குக் கட்டளையிட்டிருக்கிறார்கள். “இந்தியாவில் உற்பத்தி செய்யுங்கள்”, “இந்தியாவே துவங்கு”, “தொழில் செய்வதை எளிதாக்குவது” என்ற முழக்கங்களின் கீழ், தொழிலாளர்களுடைய உரிமைகளை இந்திய அரசாங்கம் காலில் போட்டு நசுக்கி வருகிறது. கோடிக்கணக்கான தொழிலாளர்களுடைய அடிப்படை உரிமைகளைப் பறிப்பதற்காக, தொழிற்சாலைகள் சட்டமும், ஒப்பந்தத் தொழிலாளர்கள் சட்டமும் திருத்தப்பட்டு வருகிறது. இளம் தொழிலாளர்களை பயிற்சித் தொழிலாளர்களாக, துவக்கத் தொழிலாளர்களாகவும் வேலைக்கு எடுப்பதன் மூலம் அவர்கள் கடுமையாகச் சுரண்டப்படுகிறார்கள். ஆடைத் தொழில் துறையில் குறிப்பிட்ட கால ஒப்பந்தங்கள் வழக்கமாக ஆகிவருகிறது. இதன் மூலம், வேலைக்கு பாதுகாப்பை மறுக்கவும், வேலை நிரந்தரமற்ற நிலையைப் பயன்படுத்தி மேலும் கடுமையான சுரண்டலை ஒப்புக் கொள்ளுமாறு தொழிலாளர்களை நிர்பந்திக்கவும் செய்கிறார்கள். தோழர்களே, சுரண்டலையும் கொள்ளையடிப்பதையும் தீவிரப்படுத்தாமலும், எல்லா இடங்களிலும் சாவையும், அழிவையும் பரப்பாமலும் ஆளும் முதலாளித்துவ வகுப்பால் ஆட்சி நடத்த முடியாது. மாறி மாறி ஆட்சி நடத்திய முதலாளி வகுப்பின் போட்டிக் கட்சிகள், நாட்டைப் பாதுகாப்பது குறித்துப் பேசுகிறார்கள். ஆனால் உண்மையில் அவர்கள் நமது உழைப்பைச் சுரண்டவும், உழவர்களைத் திருடவும், நமது இயற்கை வளங்களை அதிக அளவிற்குக் கொள்ளையடிக்கவும் ஏகாதிபத்தியர்களோடு கூட்டாகச் செயல்படுகிறார்கள். தொழிலாளர்களையும், மனித உரிமைகளைக் கோருபவர்களையும், சுரண்டல், ஒடுக்குமுறை மற்றும் பாரபட்சத்தை எதிர்ப்பவர்களையும் “தேச விரோதிகளென” அவர்கள் முத்திரை குத்துகின்றனர். எல்லா சுரண்டப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களில், முதலாளி வகுப்பை அதிகாரத்திலிருந்து நீக்குவதன் மூலம் நமது சமுதாயத்தின் அழிவுப் போக்கை நிறுத்தி அதன் திசையை மாற்றக்கூடிய வலிமையும், திறனும் தொழிலாளி வகுப்பிற்கு இருக்கிறது. முதலாளித்துவ ஆட்சியை மாற்றி தொழிலாளர்கள் – உழவர்களுடைய ஆட்சியைக் கொண்டு வருவதற்கு போதுமான பலத்தை உருவாக்கும் கண்ணோட்டத்தோடும், குறிக்கோளோடும் நாம் நம்முடைய உடனடிப் போராட்டங்களை மேற் கொள்ள வேண்டும். தொழிலாளி வகுப்பின் அரசியல் ஒற்றுமையும், தொழிலாளி – உழவருடைய கூட்டணியை வலுப்படுத்துவதும் முன்னேறுவதற்கான பாதையாகும். நம்முடைய உரிமைகளைப் பாதுகாக்க தற்போதைய அரசின் நீதிமன்றங்களை நாம் நம்பியிருக்க முடியாதென்பதை நமது வாழ்க்கை அனுபவம் மீண்டும் மீண்டும் நமக்குக் காட்டியிருக்கிறது. தற்போதுள்ள பாராளுமன்ற சனநாயகத்தையோ, அதனுடைய அரசியல் வழிமுறையையோ நாம் சார்ந்து இருக்க முடியாது. அவையனைத்தும் முதலாளி வகுப்பின் சேவைக்கான நிறுவனங்களாகும். எதிர்காலத்தில் ஒரு புதிய அரசியல் அதிகாரத்தின் அங்கங்களாக ஆவதற்கு தயாரிப்பாக, நாம் நம்முடைய சொந்த ஐக்கியப் போராட்ட அமைப்புக்களைக் கட்டி வலுப்படுத்த வேண்டும். நம்மை எதிர் கொண்டுள்ள ஒரு முக்கியமான உடனடிக் கடமையானது, தொழிற்சாலைகளிலும், தொழிற் பேட்டைகளிலும் தொழிலாளர் ஒற்றுமைக் குழுக்களைக் கட்டி அவற்றை வலுப்படுத்துவதாகும். அப்படிப்பட்டக் குழுக்கள் ஏற்கெனவே பல இடங்களில் உருவாகியிருக்கின்றன. தொழிலாளர்களுடைய உரிமைகளுக்கு ஆதரவாக பல்வேறு தொழிற்சாலைகளைச் சேர்ந்த தொழிலாளர்களும், வெவ்வேறு தொழிற் சங்கங்களைச் சேர்ந்த தலைவர்களும், பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த கம்யூனிஸ்டுகளும் ஒன்றிணைந்து வருகிறார்கள். தொழிற் பேட்டைகளிலுள்ள எல்லாத் தொழிலாளர்களுடைய போராட்டத்திற்கு, தொழிலாளர் ஒற்றுமைக் குழுக்களும், அமைப்புக்களும் கூட்டுத் தலைமையை அளித்து வருகின்றன. தொழிலாளர் ஒற்றுமைக் குழுக்களைக் கட்டுவதற்கும், அவற்றை வலுப்படுத்துவதற்கும் அடிப்படையானது, எல்லாத் தொழிலாளர்களுடைய உரிமைகளைப் பாதுகாத்து தொடர்ந்து போராட்டங்களை மேற் கொள்வதாகும். தொழிலாளர்கள் நமக்கு, மனிதர்களாகவும், தொழிலாளர்களாகவும் உரிமைகள் இருக்கின்றன. அந்த உரிமைகளில், மாண்புடைய மனித வாழ்க்கை, நாம் விரும்பும் தொழிற் சங்கத்தை அமைக்கும் உரிமை, 8 மணி நேர வரையறை கொண்ட வேலை நாளுக்கான உரிமை, ஓய்வு, பொழுதுபோக்கு, சுகாதாரம், ஓய்வூதியம் மற்றும் சமூகப் பாதுகாப்பு உரிமைகள் ஆகியன அடங்கும். இப்படிப்பட்ட உரிமைகளுக்கான அரசியல் சட்ட பூர்வ உத்திரவாதத்திற்கான கோரிக்கை, ஒன்றுபட்ட தொழிலாளி வகுப்பின் எதிர்ப்பின் கோரிக்கைப் பட்டியலின் முன்னணியில் இடம்பெற வேண்டும். அரசை மாற்றியமைத்து, பொருளாதார அமைப்பைத் திருத்தியமைக்கும் இந்திய மறுமலர்ச்சித் திட்டத்தைச் செயல்படுத்தும் கண்ணோட்டத்தோடு நம்முடைய உரிமைகளுக்கான போராட்டத்தை நாம் மேற்கொள்ள வேண்டும். சமூக உற்பத்தியின் நோக்கமானது, தற்போது நிறைவு செய்ய முடியாத ஏகபோக முதலாளிகளுடைய பேராசையை நிறைவேற்றுவதற்காக இல்லாமல், தொழிலாளர்கள் மற்றும் உழவர்களுடைய வளர்ந்து வருகின்ற தேவைகளை நிறைவேற்றுவதாக இருக்க வேண்டும். அரசியல் அதிகாரத்தை நம்முடைய கைகளில் எடுத்துக் கொண்டு, முக்கிய சமூக உற்பத்திக் கருவிகளை தனிப்பட்டவர்களுடைய கைகளிலிருந்து பறித்து அவற்றை சமூகக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர வேண்டும். தொழிலாளர்கள், உழவர்கள், பெண்கள், இளைஞர்கள் மற்றும் எல்லா மனிதர்களுக்கும் உரிய எல்லா உரிமைகளுக்கும் அவற்றை மீறமுடியாத உத்திரவாதத்தை அளிக்கும் ஒரு புதிய அரசை நிறுவி, ஒரு புதிய அரசியல் சட்டத்தை நாம் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். வாருங்கள், 2017 மேதினத்தை இந்தியத் தொழிலாளி வகுப்பின் இதுவரை என்றுமில்லாத பலத்தோடும், ஐக்கியத்தோடும் ஏற்பாடு செய்வோம். அனைவருக்கும் வளமையையும், பாதுகாப்பையும் உத்திரவாதத்தோடு அளிக்கக் கூடிய ஒரு புதிய இந்தியாவைக் கட்டும் நோக்கத்தோடு நாம் அணி திரள்வோம்.
இருட்ட ஆரம்பித்து விட்டது. பர்மிங்கம் சப்தங்கள் மங்க ஆரம்பித்து விட்டன. அந்த மாலைப்பொழுது கனத்துக் கிடந்தது. அதன் பளுவைத் தாங்க முடியும் என்று தோன்றவில்லை. பர்மிங்கமின் குளிரில் அவளும், அவளைத் தன்னுடன் சில நாட்கள் தங்க அழைத்திருந்த லாஜ்வந்தியும் சுடச்சுடப் பேசியிருந்தனர் காலையில். விவாதத்தின் முடிவில், ''தீவாவளிக்கு விளக்கு ஏற்றியும், கோலம் போட்டும் இந்தியக் கலாச்சாரத்தை இங்குள்ள இந்தியர்களுக்கு நினைவுப்படுத்த நீ நினைக்கிறாய். ஆனால் இந்த கிரியைகள் தான் கலாச்சாரமா என்று கேள்விகள் கேட்டுத் தாண்டி வந்தாயின்று நாங்கள்'' என்றாள் பாகீரதி. ''இந்தியாவையே பார்க்காத, இந்தியர்கள் என்று அழைக்கப்படும் எங்களுக்கு வேறு எந்த வேர்கள் இருக்க முடியும் இங்கே?'' ''கலாச்சார வேர்கள் தீபாவளியிலும், ஹோலியிலும் இல்லை லாஜு''. ''அந்த உபதேசத் தொனியில் பேசாதே. நீ கடை வைத்தால் உன் கடைக் கண்ணாடியை உன் முன்னோர்கள் இந்தியர் என்பதால் உடைக்கப் போவதில்லை. உன் தபால் பெட்டியில் யாரும் மலத்தைக் கொட்டப் போவதில்லை. ஒரு வெள்ளையனைக் காதலித்து விட்டால் குற்ற மனப்பான்மையுடன் நீ ஆடிப் போக வேண்டாம். இது அத்தனையும் நாங்கள் தாங்க வேண்டியிருக்கிறது. குன்றுபதேசம் செய்யாதே. பெரிய ஏசு கிறிஸ்து மாதிரி.....'' ''கலாச்சாரத்தைச் சில விஷயங்களில் இறுக்கப் பார்க்கிறாய் நீ. அதை வளரவிடாமல் கட்டிப் போடுகிறாய்''. ''என்னை என்ன செய்யச் சொல்கிறாய்? இந்தியாவுக்கு வா என்கிறாயா? பஸ் ஸ்டாப்பிலும், ரேஷன் கடையிலும் வரிசையில் நின்று சாகு என்கிறாயா?'' என்று வீறிட்டு லாஜ்வந்தி டீக்கோப்பையை அவள்மேல் எறிந்திருந்தாள் காலையில். அதன்பின் அந்த விபத்து. லாஜுதான் காரை ஓட்டினாள். முன்னிரவு. பாகீரதிக்கான பயணச்சீட்டுப் பற்றி விசாரிக்கப் போய்க் கொண்டிருந்தனர். அவர்கள் முன்னால் ஒரு கார் வழுக்கிக் கொண்டு போய்க்கொண்டிருந்தது. சடேரென்று மின்னல் அடித்தாற்போல் ஒரு பையன் பாய்ந்தான். முன்னால் போன கார் குலுங்கி வீறிட்டு நின்றது. ஒரு வயதான வெள்ளையர் வெளியே விரைந்து வந்தார். இந்தியப் பையன். முகத்தில் சாம்பல் பூக்க ஆரம்பித்து விட்டது. ''மா....மா....'' என்று முனகினான். ''திடீரென்று கடந்தான் தெருவை. என்னால் நிறுத்த முடியவில்லை. நான் என்ன செய்வது? ப்ளீஸ், நான் என்ன செய்வது?'' என்று அரற்றினார் வெள்யைர். லாஜு, பையனின் நெற்றியைத் தடவினாள். அவன் தாத்தா பாட்டி பிறந்து வளர்ந்த கிராமம், சோள ரொட்டி சுடச்சுட, வெண்ணெய் உருக நெய் மணக்கும் கடுகுக் கீரை மசியல்..... காற்றில் ஆடும் நெற்பயிர், பஞ்சாபி ட்டப்பா பாட்டின் ஒரு வரி .....இல்லை, ஒரு வண்ண துப்பட்டா, அவன் அப்பாவின் அவிழ்ந்த முடி, அவருடைய பருத்த தொந்தியில் முறுக்கிப் படுத்திருந்த கனத்த நாடா முடிச்சு..... என்ன அவன் மனதில்? ''மா ... மேரி.... மா...'' ஆம்புலன்ஸ் வந்து அவனை ஏறூறும் போது அவன் உடல் கடைசியாக முறுக்கிக் கொண்டு துள்ளியது. யாரையோ வைதவாறே தன் 'ஸ்டீயரிங் வீலில்' அடித்தாள் லாஜு. அந்த விபத்து அவர்கள் கழித்திருந்த அந்த நாளின் தன்மையை ஒத்ததாகவே இருந்தது. சாம்பல், சாவு, அறுபடல், தனிமை இவற்றுக்கெல்லாம் குழைத்துப் பூசியதாய். அவர்கள் பேசிக் கொள்ளவில்லை. எதிர்கொள்ள ஒரு கனத்த மாலை இப்போது. இவன் ஒரு புத்தகத்துடன், லாஜு தன் தட்டச்சு இயந்திரத்தின் எதிரே வேலை செய்தவாறு. லாஜு திரும்பி, ''பியர் குடிக்கலாமா?'' என்றாள். ''இந்த குளிரில் பியர் யாரால் சாப்பிட முடியும்? ரம் இல்லையானால் வோட்கா''. எழுந்து, ''எனக்கு பியர்தான் பிடிக்கும். நான் ஒரு பைன்ட் பியர் வாங்கி வரப்போகிறேன்' என்று விசுக்கென்று கதவை நோக்கிப் போனாள், பிடி வைத்த ஒரு பாத்திரத்தைக் கையில பிடித்தபடி. ''இந்தியக் கலாசாரத்தின் முக்கியமான அம்சம் விருந்தோம்ல் தான். இது தெரியாமல் என்ன இந்தியக் கலாச்சாரத்தைப் பரப்புகிறாய்? என்று கத்தினாள் பாகீரதி அவள் முதுகைப் பார்த்து. லாஜு கதவைப் படீரென்று உதைத்தாள். மீண்டும் கதவு திறந்தபோது பாகீரதி தலை நிமிரவில்லை. லாஜு தனியாக இல்லை என்ற உணர்வு ஏற்பட்டது. தலை நிமிர்ந்தாள். லாஜு அருகே சற்றுப் பருத்த, நாற்பது வயது மதிக்கத்தக்க ஒரு பெண்மணி நின்று கொண்டு புன்னகை செய்ய ஆரம்பித்திருந்தாள். உருண்டை முகம், சுருளே இல்லாத முடி. உலர்ந்தாற்போல் உதடுகள், கூரிய செதுக்கி வைத்த மூக்கு. கறுப்புக் கண்கள். அவள் ஒரு தன்மையைத் தாங்கி வந்தாற்போல் வெளியே பனி பெய்ய ஆரமபித்தது. ஜன்னலூடே பனிப் பஞ்சு மழை. ''இவள் காப்ரியேலா. இந்தியர்களை ரொம்பப் பிடிக்கும். உன்னைப் பார்க்க அழைத்து வந்தேன்'' என்றால் லாஜு. காப்ரியேலா கதவருகே இருந்த மின்விளக்கு வெளிச்சத்தை விட்டு முன்னால் வந்து நாற்காலியில் அமர்ந்து புன்னகைத்தாள். தன் கையை நீட்டினாள். அதைப் பற்றிக் கொண்டு, ''ஹலோ, நான் பாகீரதி'' என்றாள். அந்தக் கண்கள். தாமரை பூத்த தடாகமடீ... என்று கட்டைக் குரலில் குழைந்த பாடல் மூளையில் ஒலித்துப் பரவியது. தாமரையின் தண்டைப் பற்றிக் கொண்டுவிட்டால் கீழே கீழே கீழே ஆழங்காணா இடத்துக்குக் கொண்டு போகும் உணர்வு. பியர் பாத்திரத்தை மேஜையில் வைத்த பின்னர் காப்ரியேலாவின் மேல்கோட்டைக் கழற்றி வாங்கி மாட்டிவிட்டு, ''நீங்கள் இருவரும் பேசிக் கொண்டிருங்கள். நான் கொஞ்சம் வேலை செய்ய வேண்டும்'' என்று தன் மேஜையை அடுத்த அறைக்குத் தள்ள ஆரம்பித்தாள் லாஜு. அறையை எட்டும் முன் பாகீரதியைப் பார்த்து, காப்ரியேலாவுக்கு புரியக்கூடாது என்பதற்காக ஹிந்தியில், ''விருந்தோம்பல் இந்தியப் பண்பாடு தான். ஆனால் எல்லா இந்தியர்களும் அதற்கு லாயக்கில்லை'' என்றாள். ''சர்தான் போடீ'' ''தமிழில் கெட்ட வார்த்தை கிடையாது என்று சொன்னாயோ?''. ''நீ நினைக்கும் கெட்ட வார்த்தை இல்லை இது''. லாஜு மேஜையை உந்தினாள். காப்ரியேலா இருவரையும் பார்த்தவாறிருந்தாள். பாகீரதி புன்னகைத்தாள் அவளைப் பார்த்து, ''அபிப்ராய பேதம்'' என்றாள். காப்ரியேலா கம்பளத்தில் அமர்ந்தாள். ''இந்தியர்கள் மாதிரி'' என்றவாறே. பாகீரதியும் கீழே உட்கார்ந்து கொண்டாள். அருகே குளிர்காய மின் அடுப்பு எரிந்து கொண்டிருந்தது. தன் பையைத் திறந்து ஒரு வைன் புட்டியை எடுத்தாள். ''வைன் பிடிக்குமா?'' வெள்ளை வைன். ''ரொம்ப....'' பாகீரதி மதுவை ஊற்றக் கோப்பைகளைக் கொண்டு வந்தாள். காப்ரியலோ ஊற்றினாள். இருவரும் கோப்பைகளை உயர்த்தினர். ''இந்த மாலைக்கு'' என்றாள் காப்ரியேலா. கொஞ்சம் கழித்து, ''சில மாலைப் பொழுதுகள் ரொம்ப நீண்டு போகின்றன'' என்றாள் காப்ரியேலா. நெருப்பைப் பார்த்தாள். ''என் அம்மா பியானோ வாசிப்பாள். மாலையில், சில சமயம் என் அப்பா சீட்டி அடித்துப் பாடுவார் கூட....'' ''லத்தீன் அமெரிக்காவின் எந்தப் பகுதி?'' ''சிலே.'' சூடான இறகுடன் வைன் நரம்புகளை உரச ஆரம்பித்தது இதமாக. ''அவரவர் நாட்டை விட்டு வெளியே இருப்பவர்களுக்கு ஞாபகசக்தி தான் இதம். எனக்கு ஞாபகத்தில் இருக்கிறது என்று நான் நினைக்காத விஷயங்களெல்லாம் சில சமயம் நினைவுக்கு வருகின்றன. என் அம்மாவுக்கு முனை கூம்பிய நகங்கள். பியானோவில் வைத்த அவள் விரல்களை மட்டும் திடீரென்று ஒருநாள் நினைத்துக் கொண்டேன். என் அப்பாவின் சாக்லேம் றி ஷ¥வின் முடிச்சுப் போடும் இடத்தருகே ஒரு மடங்கல் விழும்....'' ''அங்கே போவதுதானே நீ காப்ரியேலா?'' அவள் வைன் கோப்பையை வைத்து விட்டுத் தன் கைப்பையைத் திறந்தாள். தன் பாஸ்போர்ட்டை எடுத்துப் பாகீரதியிடம் வந்தாள். அது ஒரு ஐநா பாஸ்போர்ட். அவள் பிறந்த வருடத்தைப் பார்த்தாள். 1956 அவள் வயது இருபத்தைந்து தான். அவளைப் பார்த்தவுடன் சிரித்தாள். ''ஆமாம். அது சரியான வருடம் தான்'' என்றாள். ''நான் ஒரு அரசியல் அகதி'' என்று விளக்கினாள். பாஸ்போர்ட்டில், அவள் எல்லா இடங்களுக்கும் போகலாம். சிலேயைத் தவிர என்றிருந்தது. காப்ரியேலா தன் கோப்பையை நிரப்பிக் கொண்டாள். அவர்கள் கைதானது இரவு நேரத்தில். எட்டுப் பேர்கள். பதினெட்டு பத்தொன்பது வயதுக்காரர்கள். அர்ஜன்டீனாவுக்கு அவர்கள் தப்பி வந்து ஒரு மாதமாகி விட்டிருந்தது. சிலேயில் ஒரு மத்தியானம் அந்த எச்சரிக்கை அவர்களில் ஒருவர் காதில் கிசுகிசுக்கப்பட்டது. ''தப்பி ஓடுங்கள்'' கிட்டத்தட்ட ஐம்பது மாணவர்களைக் கைது செய்தாகிவிட்டது என்ற வதந்தி பரபரவென்று பரவியது. லூயிஸ¤ம் காடலீனாவும் டீ குடித்துக் கொண்டிருந்த அவளை எழுப்பிக் கொண்டு போனார்கள். பெளலா, யார்கே, யோஸே, தெரீஸா, ஆல்வாரெஸ் எல்லோரும் சற்று வெளுத்த முகங்களோடு பல்கலைக் கழகத் தெருமுனையில் நின்று கொண்டிருந்தார்கள். யோஸேயின் கண்கள் சிவந்திருந்தன. உதடுகள் துடித்தன. அழுதுவிடுவான் போலிருந்தது. ''நான் வெறும் துண்டுப் பிரசுரங்கள் தானே வினியோகித்தேன்?'' என்றான். அவன் குரல் நடுங்கியது. ''போலீஸிடம் உள்ள பட்டியலில் நம் பெயர்கள் கட்டாயம் இருக்கும். போன மாதம் போராட்டம் நடந்த போது முன் வரிசையில் நாம் எல்லோரும் இருக்கவில்லையா?'' வா, சீக்கிரம்,'' என்று சிடுசிடுத்தான் யார்கே. அவள் பெளலாவைப் பார்த்தாள். ஒரு சின்னத்தோள் பை நிரப்பப்பட்டு அவள் தோளில் தொங்கியது. அவள் வீட்டுக்குப் போய் ஒரு சின்னப் பையில் வேண்டியதை நிரப்பிக் கொண்டு கிளம்ப மொத்தம் பதினைந்து நிமிடங்கள் தான் எடுத்துக் கொள்ள முடியும் என்றார்கள். பயத்தில் விக்கித்துப் போயிருந்த அம்மாவின் சில்லிட்டுப் போன கன்னங்களில் அசரமாக முத்தமிட்டு அவள் கிளம்பிய போது அந்த மாதத்தின் ரத்தப்பெருக்கு இறங்கத் தொடங்கியது. மீண்டும் உள்ளே ஓடி அதற்கான சாமான்களைச் சேகரித்தாள். அடுத்த தெருமுனையில் மற்றவர்கள் பொறுமை இழந்திருந்தனர். அவள் அதிக நேரம் எடுத்துக் கொண்டது பற்றி விவாதித்தவாறே வேகவேகமாகப் பல தெருக்களில் பிரிந்து போயும், சேர்ந்தும் நடந்தபோது, சிலேயில் கடைசித் தடவையாக நடத்துகிறோம் என்று அவள் நினைக்கவில்லை. எல்லாத் தீர்மானங்களும் எடுத்த வேகம், அமமாவின் சில்லென்ற கன்னம், நடந்து, ஓடி, பஸ்ஸில், ரயிலில் தாவி ஏறி, தூங்கி, இறங்கி, சிலேயின் எல்லையைக் கடக்க வேண்டிய அவசரம் - இவற்றிடையே அதிகமாகச் சிந்திக்க முடியவில்லை. நான்காம் நாள் கலை அவர்கள் அர்ஜன்டீனாவை அடைந்தனர். கடைசியாக தரிசு நிலம் ஒன்றின் மூலையில் சிதிலமாகக் கிடந்த வீட்டில் குடியேறினர். தற்காலிகமாக, சிலே போலீஸாரின் நீள்கரங்கள் அவர்களை எட்டும்வரை. வேறு வேறு பிரிவுகளில் படித்த அவர்கள் இப்போது நெருக்கமானார்கள். மற்றவர்களைப் பற்றி நினைக்க, பேச, மெளனிக்கக் கற்றுக் கொண்டார்கள். யோஸேயின் சின்னத் தங்கைக்குப் பிடித்த சிகப்பில் மஞ்சள் மலர் பதித்த தலைக்குல்லாய் முதல் காடலீனாவின் நண்பன் தந்த சுவையற்ற முதல் முத்தம் வரை அந்தரங்கங்கள் பொதவாகிப் போயின. அவர்கள் வினியோகித்த துண்டுப் பிரசுரங்களின் விவரங்கள், அர்ஜன்டீனாவின் பத்திரிகைகள் எழுதியவை, எழுதாமல் விட்டவை இவற்றிலிருந்து கிரகித்த சேதிகள் பற்றிய அபிப்பிராயங்கள் என்று நிறையப் பேசிக் கொண்டனர். கைதான அன்று அவர்கள் மாணவர் தலைவன் அன்டோனியோ பற்றிப் பேசியிருந்தனர். அவர் பொறியியல் பிரிவின் கடைசி ஆண்டுப் படிப்பில் இருந்தான். யார்கேயைத் தவிர அவனை யாரும் பார்த்ததில்லை. அவன் எழுத்துக்களைப் படித்திருந்தனர். யார்கே அவனை ஒரு முறை பார்த்திருந்தான். ஒரு கூட்டத்துக்குப் பின் பலர் அன்டோனியோவின் பின்னால் அவன் அறைக்குப் போனபோது யார்கேயும் போனான். அன்டோனியோ மிக மிருதுவான குரலில் பேசினான். ''அன்டோனியோ, உன் படிப்பு முடிந்ததும் உனக்குக் கட்டாயம் அமெரிக்காவில் வேலை கிடைக்கும். ஏன் நீ இதை எல்லாம் செய்கிறாய்'' என்றான் ஒரு மாணவன். ''எனக்கு பயமில்லாமல் வாழ வேண்டும். ஒரு சாதாரண பிரஜைக்கு உரிய கெளரதையுடன் இருக்கும் அடிப்படை உரிமை எனக்குத் தேவை. அதனால் தான்'' என்று பதிலளித்தான் அன்டோனியோ. ''எனக்கு ரொம்ப பயமா இருக்கிறது. அன்டோனியோ'' என்றான் இன்னொருவன் வெளிப்படையாக. அன்டோனியோ சிரித்தான். ''நண்பனே, நான் பெரிய வீரன் இல்லை. ஒரு கூட்டத்தில் அந்தப் போலீஸ் அதிகாரி சாதாரண உடையில் வந்திருந்தார். ஒரு கணம் நான் அந்த உயிரற்ற, உணர்ச்சிகள் மழுங்கிய கண்களைச் சந்தித்தேன். நிஜமாகச் சொல்கிறேன். என் முதுகுத் தண்டு ஜில்லிட்டுப் போயிற்று. ஒரு அறையில் இவர் என் எதிரில் இருந்தால் என்ன ஆகும் என்று நினைத்தபோது வியர்வை பொங்க ஆரம்பித்தது. தலையில் பாரம் அழுத்தியது. எனக்குப் பயம் இல்லை என்று நினைக்காதே. நானும் பயப்படுகிறேன். அடிப்பட்டால், குண்டு துளைத்தால், சித்திரவதை செய்யப்பட்டால் எப்படி இருக்கும் என்று நினைத்து காதலிக்கப் பயப்படுகிறேன். அவளை ஆபத்தில் தள்ளக் கூடாதே என்று பயப்பட வேண்டிய காலத்தில் நாம் இருக்கிறோம்''. பேசியவாறே யதேச்¨யாகத் திரும்பியபோது யார்கேயின் மேல் பார்வை பட்டது. பிறகு அவன் கண் பார்வை வேறுபக்கம் திரும்பி விட்டது. அந்த ஒரு முறை தான் யார்கே அன்டோனியோவைச் சந்தித்தது. அவன் பிடிபட்டுவிட்டான் என்ற சங்கதி அவர்களை எட்டியிருந்தது. அந்த இரவு அதைப் பற்றித்தான் பேசினார்கள். பேசியவாறே தெரீஸா சுவரில் சாய்ந்து உறங்கி விட்டாள். எங்கு வேண்டுமானாலும் சுருண்டு படுத்து, உடனே உறங்கி விடுவாள் அவள். 'ஒருவேளை நாம் பிடிபட்டால் நம்மை அடித்து வதைப்பார்களா யார்கே?'' என்றான் யோஸே மெல்ல. யோஸேக்கு நிறையச் சிரிக்கப் பிடிக்கும். அடக்கமாட்டாமல் பொங்கிப் பொங்கிச் சிரிப்பான். அந்த மாதம் எல்லோர் கூந்தலையும் அவன்தான் வெட்டியிருந்தான். அவன் வீட்டுப் புல்தரையை வெட்டுவதுபோல் வெட்டித் தள்ளியிருந்தான். பதிலுக்குக் காடஸீனா அவனை மொட்டையாக்கியிருந்தாள். இப்போது அவன் கேள்வி கேட்ட போது மொட்டைத் தலையுடன் குழந்தை போலிருந்தான். அவன் புறங்கழுத்து ரோஜா வண்ணத்தில் சிறு பையனுடையது போல இருந்தது. யார்கே அவன் தலையைத் தடவினான் செல்லமாக. அந்த இரவுதான் அவர்கள் பிடிபட்டார்கள். அவர்கள் உரக்கக் கத்தி எதிர்த்தும் அவர்கள் பிரிக்கப்பட்டனர். தெரீஸாவின் அந்த அகன்ற, பயந்த தூக்கம் கலந்த கண்கள்; பெளலாவின் வெளுத்த முகம்; ஒருகணம் நடுங்கிய யோஸோவின் உடல்; இழுக்கப்படும் ஓசை, கத்தல்கள் இவை எல்லாம் அவர்கள் கடைசியாகப் பகிர்ந்து கொண்ட கணங்களின் துளிகள். அப்புறம் அந்தச் சிறு சதுர அறை. அதில் நூறு பெண்கள், விபசாரிகள், கொலைகாரிகள், திருடிகள், அரசியல் கைதிகள், உட்காரக்கூட இடம் இல்லை. நின்றவாறே உறக்கம், வீக்கம் ஏறிய கால்கள். போலீசார் பலாத்காரம் செய்த விபசாரியின் ஐந்த மாதக் கரு அந்த நெருக்கத்தில்தான் வெளிப்பட்டது சிதைந்து. வலியில் அவள் ஒருமுறை வீறிட்டாள். பின்பு அவள் இரத்தம் காப்ரியேலாவின் மேலும், அடுத்திருந்தவர்கள் மேலும பீறிட்டுப் பீச்சியடித்தது. அந்தப் பாதி உருவான கருவை காப்ரியேலா இன்னும் மறக்கவில்லை. அது கொழுகொழுவென்று இருந்தது. மாவு மாதிரி. தட்டையான வழுக்கல் தலையில் துருத்திய மூடின கண்கள். கோணலாய் நீண்ட கை போன்ற ஒன்று. அதன் பெண்குறி ஒரு சிறு கீறல். அந்தக் கேள்வி நேரங்கள். ஒரு கருணையான இன்ஸ்பெக்டர். ஒரு கொடுமைக்கார இன்ஸ்பெக்டர். மாறிக் மாறிக் கேள்விகள். அன்டோனியோவை உனக்குத் தெரியுமா? நான் அவனைப் பார்த்ததில்லை. அவன் உன் நண்பனா? இல்லை. நீ அவனுடன் படுத்திருக்கிறாயா? ......................... அவள் அவனைப் பார்த்தே இல்லையே இன்ஸ்பெக்டர், இது என்ன கேள்வி? நீ நல்ல பெண். நல்ல பையனைக் கல்யாணம் செய்து கொண்டு இருக்க வேண்டியவள். என் தங்கையின் சாயல் உனக்கு. உண்மையைச் சொன்னால் உன்னை அனுப்பி விடுவோம். முகத்தில் சுளீரென்று மின்விளக்கின் வெளிச்சம். மீண்டும் கேள்விகள். அன்டோனியோ எங்கே? அன்டோனியோ பிடிட்டான் தெரியுமா? அவன் சிறையில் இறந்து விட்டான். அவளுக்குச் சேதி வந்ததா? எப்படி? இப்போது அவர்கள் தலைவன் யார்? வெந்நீரிலும் குளிர்ந்த நீரிலும் மாறிமாறித் தலையை முக்கி எடுத்தல். கேள்விகள். யார் நல்ல, இன்ஸ்பெக்டர், யார் கொடுமைக்காரன் என்ற குழப்பம். இரண்டு ஆண்டுகள். அதன்பின், மனித உரிமைக்காகப் போராடும் ஒரு அகில உலக ஸ்தாபன முயற்சியால் விடுதலை. சிறையின் வெளியே அவள் வந்தபோது அப்பாவும், அம்மாவும் நின்று கொண்டிருந்தனர். மிலிடரி மேஜராக இருந்து ஓய்வுபெற்ற, தடித்த மீசை அப்பா குரலெடுத்து அழுததை வாழ்க்கையில் முதல் முறையாகப் பார்த்தாள். விவரங்கள் : தெரீஸா ஆரம்ப போலீஸ் பலாத்காரத்திலிருந்து மீளவில்லை. யோஸேக்குப் பயத்தில் மார்வலி ஏற்பட்டு மரணம். காடலீனாவும், பெளலாவும் தற்கொலை செய்துகொண்டார்கள் என்று கூறப்பட்டது. லூயிஸ் விடுதலை ஆகிவிட்டான். ஆனால் மனநோய் விடுதியில் இருக்கிறான். யார்கேயின் சடலம் கண்கள் தோண்டப்பட்டு, கை கால்கள் வெட்டப்பட்டு ஒரு சாக்கடையில் கிடைத்தது. நொடியில் உறங்கிப் போகும் தெரீஸா, லூயிஸின் தோளில் நினைத்த போதொல்லாம் தலைசாய்த்துக் கொஞ்சும் காடலீனா, பாப்பா என்று வேடிக்கையாக அழைக்கப்பட்ட சிரிக்கும் யோஸே, அவர்கள் வயதே ஆன, ஆனால் அப்பா போல் நடந்து கொண்ட யார்கே, எந்த இக்கட்டான நிலைமையிலும் சாப்பிட ஏதாவது எற்பாடு செய்துவிடும் ஆல்வாரெஸ் - அவர்கள் எல்லோருக்குமாக அவள் அழுதாள். லூயிஸைப் பார்க்க அவள் அனுமதிக்கப்படவில்லை. அம்மாவிடம் அவனைப் பார்க்கப் போகும்படிச் சொன்னாள். சிவப்பு ரோஜாக்கள் எடுத்துப் போகச் சொன்னாள். அவனுக்கும், காடலீனாவுக்கும் பிடித்தவை. பிறகு இங்கு அனுப்பப்பட்டாள். மொழி புரியாத உலகுக்கு. காப்ரியேலா ஏறிட்டுப் பார்த்தாள். ''சிறைக்குப் போகும் முன் நான் துப்பாக்கியைத் தொட்டதில்லை. அப்பா தனது துப்பாக்கியைச் சுத்தப்படுத்தும் போது பார்த்தது தான். யாரையும் என்னால் கொல்ல முடியும் என்று நான் நினைக்கவில்லை. சிறைக்கு வெளியே வந்தபின் நான் அடிக்கடி நினைத்தேன், அந்த இரு இன்ஸ்பெக்டர்களையும் சுட வேண்டுமென்று. அவர்கள் நெஞ்சில் குண்டு துளைக்க, அல்லது தலை வெடித்துப் போகச் சுட வேண்டும் என்று கறுவினேன்''. கண்ணாடி ஜன்ன்ல்களைப் பனி மூட ஆரம்பித்துவிட்து. லாஜு கம்பளத்தில் வந்து அமர்ந்திருந்தாள். எவ்வளவு நாழிகையாக என்று தெரியவில்லை. காப்ரியேலா சிரித்தவாறே சொன்னாள். ''என் அப்பா அமமாவைப் பார்க்க ரொம்பத் துடிக்கிறது. என் அம்மா தன் முன் தலை நரைத்து விட்டது என்று எழுதினாள் ஒரு கடிதத்தில். நான் உடனே கடைக்கு ஓடி விலை உயர்ந்த தலைச்சாயம் வாங்கி அனுப்பினேன். அவளை நான் எப்போதாவது பார்த்தால் முன்போலவே பார்க்க விரும்புகிறேன். மாறுதலே இல்லாமல், வயதாகாமல்''. சட்டென்று அவளுடைய தேன் நிற முடியைப் பார்த்தாள் பாகீரதி. கற்றை கற்றையாக நரை. வெளியே காத்து நின்ற அவளுடைய அம்மாவானாள் பாகீரதி. தேன் அருவியில் கூந்தலுடன் பியானோ அருகே செழுமைக் கன்னங்களோடு நின்ற பதினெட்டு வயதுப் பெண்ணைச் சிறைக்கு அனுப்பிய அம்மா, அவள் சிறையின் கதவில் கண் பதித்து நின்றபோது சிறையிலிருந்து முதல் அடி வெளியே வைத்த இருபதே வயதில் வயதான, உடல் கனத்துச் சிதைந்த ஒரு பெண். தேன் நிறக் கூந்தலெங்கும் வெள்ளை வரிகள். பாகீரதி அவள் கூந்தலைப் பார்த்தாள். அவள் பார்ப்பதை உணர்ந்தது போல் தன் கூந்தலில் விரல்களை விட்டு அளைந்தாள் காப்ரியேலா. புன்னகைத்தாள். (அம்பையின் இரண்டாவது சிறுகதைத் தொகுப்பான 'வீட்டின் மூலையில் ஒரு சமையலறை' என்ற சிறுகதை தொகுதியிலிருந்து......) ********** முழுவதும் படிக்க 1 கருத்துகள் விலாங்கு - நாஞ்சில் நாடன் வலையேற்றியது: Ramprasath | நேரம்: 7:47 AM | வகை: கதைகள், நாஞ்சில் நாடன் நாஞ்சில் நாடன் கள்ளிவெட்டிப் போட்டு ஒரு மணி நேரமாவது இருக்கும். துண்டு துண்டாக, இரண்டங்குல கனத்தில் திருகுக் கள்ளிகள் குட்டையாகத் தேங்கிக் கிடந்த தண்ணீரில் மிதந்தன. சில துண்டுகள் வெட்டுப்பட்ட வெள்ளை சோற்றுப் பாகத்தைக் காட்டிக் கொண்டு, சில ஜோடி ஜோடியான முள்முனை வரிசைகளை மாட்டுக் கொம்புகள் போல் நீட்டிக் கொண்டு கால்மாடு தலைமாடாக வசமில்லாமல் கிடந்து உறங்கும் பிள்ளைகள் போல் குட்டைத் தண்ணீர் முழுக்க மிதந்தன. நல்ல நடுமத்தியானம். புன்னை மரக்கிளை களின் ஊடாக நங்கூரம் பாய்ச்சிய சூரியக் கற்றைகள் தண்ணீரைச் சூடாக்கிக் கொண்டிருந்தன. கள்ளிப்பால் பரவலாக தண்ணீர் முழுக்கப் பரந்து தண்ணீருக்கு ஒரு வெளுப்பு நிறத்தைக் கொடுத்தது. கள்ளிப் பாலின் வாடையும் வெக்கையும் சுற்றுப் புறத்தில் காரமாக வீசியது. வெளியே எங்கும் நல்ல வெயில் காய்ந்தது. வற்றல், வடகம் உணக்குவதற்கு ஏற்ற வெயில். ரோட்டில் ஆள் நடமாட்டம் இல்லை. நிலம் மழைக்காகக் காய்ந்து கிடப்பதால் வரப்போரப் புல்லை, அவிழ்த்து விடப்பட்ட பசுமாடுகள் கரப்பிக் கொண்டிருந்தன... காளையும் பசுவும், கன்றுமாக... தூரத்துக் கடுக்கா மர மூட்டின் கீழே சகதிபட்டுக்கிடந்த கால்வாயில் இரண்டு எருமைகள் வசமாய்ப் புரண்டு கொடுத்தன. கொம்பில் முன் உச்சி மண்டையில் தொழி அப்புவதை அலங்காரம் நடப்பது போல் கருதிக் கொண்டு சுகம் பெற்றன. ஒன்றரை மணிக்கூருக்கு ஒரு பஸ் வீதம் வந்து போகும் கீல் ரோடு அது. ரோட்டின் தாழ பதினைந்தடி அகலமுள்ள வாய்க்கால், வாய்க்கால் தண்ணீர் ரோட்டின் அடியோடு பாய்ந்து போவதற்கு, குறுக்காகச் சிறிய பாலம். ஓராள் தலைதட்டாமல் நடந்து போகும் உயரமும் ஐந்தடி அகலமும் கொண்ட சுரங்க வழி போல, சுரங்கத்தில் ஓடிய தண்ணீர் வெளிச்சத்தில் வந்து விழும் இடத்தில் மண் பறிந்து பறிந்து சிறிய குட்டைபோல் பள்ளம் விழுந்திருந்தது. பள்ளத்தில் கரடு முரடான கருங்கல் துண்டுகள், கால்வாய்ப் பாலத்தின் இரண்டு விலாப் பக்கமும் செங்கல் மதில் சிறகுகள் சாய்வாக, எந்த ஆண்டில் கட்டப்பட்ட பாலமோ? செங்கல் வரிசைகளின் ஊடே எத்தனையோ இடுக்குகள்! புடைகள்! கால்வாயின் இருபுறமும் புன்னைமரம் சரிவாக வளர்ந்து செழித்திருந்தது. குழியின் ஆழமும், கல்இடுக்குகளும் புடைகளும், ஓரங்களில் வளர்ந்திருந்த சேம்பிலைப் புதர்களுமாய் விலங்குகளுக்கும் மற்ற சில்லறை மீன்களுக்கும் நல்ல உறைவிடம் அமைத்துத் தந்தது. நல்லமழை பெய்யும் மாதங்களானால், 'திமுதிமு' வென கால்வாயில் வெள்ளம் புரண்டு மறியும். கல்லில் மோதும், வெள்ளத்தின் வேகத்தில் பிரிந்த நீர்துளிகள் ரோட்டில் இருந்து குனிந்து பார்ப்பவரின் முகத்தில் 'சில்' லென்று தெறிக்கும். ஆனால் இது மழையற்ற மாதம். அக்கினி நட்சத்திரம் தீட்டிக்கொண்டிருந்தது. பெரிய குளத்தில் இன்னும் கால்குளம் வெள்ளம் கிடந்ததால் கால்வாயில் எப்போதும் ஒரு கசிவு உண்டு. நீர் கலங்கிக் கிடந்தாலும், ஆடுமாடுகள் இறங்கி மேய்ந்து தொழி பறிந்து நாற்றம் எடுத்தாலும் மீன்களின் துள்ளாட்டத் துக்குக் குறைவில்லை. பாலம் முடியும் இடத்தில் இருந்து இருபது முப்பது அடிநீளத்துக்கு இருகரையும் சேம்பு, கோரை, நீர் முள்ளி என ஏகமாய் சப்பும் சவறும் வளர்ந்து கிடந்தது. பாலத்தின் முன்புறம், கால்வாயின் குறுக்கே முன்னணை கட்டி கசியும் தண்ணீரைத் தேக்கி இருந்தனர் பிலிப்பும் தவசியும். நல்ல திடமான அணை. ஒரு பொட்டுத் தண்ணீரும் கீழே கசியாது. இறை வட்டி கொண்டு வத்து பாலத்துக்குக் கீழிருக்கும் குண்டில் தேக்கிக் கிடந்த தண்ணீரை இறைத்து வெளி யேற்றினர். சுமாராக ஒரு பின்னணையும் போட்டாயிற்று. தூரத்து வேலிகளில் இருந்து, தொண்டு விழாமல், பாலுள்ள இளம் திருகுக் கள்ளிகளாக வெட்டி கவையால் தூக்கி, கம்பில் வைத்து இருகரையும் தோள் போட்டு தூக்கிக் கொண்டு வந்தார்கள் பிலிப்பும் தவசியும். இடுப்பு வேட்டியில் கொளுவிப் போட்டிருந்த வெட்டுக் கத்தியால் கள்ளிக் கவிர்களைச் சீவிச்சீவி குட்டைத் தண்ணீரில் எறிந்தனர். திரட்டு வரப்பின் மேல், புன்னைமர நிழலில் அமர்ந்து உள்ளங் கையில் ஒட்டிக் கறுத்து பிசின்போல் ஆகி இருந்த கள்ளிப்பாலை நகத்தால் சுரண்டி எடுத்தான் தவசி. முந்தியில் இருந்த பீடிக்கட்டையும் தீப்பெட்டியையும் எடுத்து பீடியைப் பற்ற வைத்து ஒரு இழுப்பு புகையும் விட்டபின் ஒரு பீடியையும் தீப்பெட்டியையும் தவசியிடம் எறிந்தான் பிலிப்பு. பின்னணையை ஒட்டி இறைவட்டி, மண்வெட்டி, வெட்டுக்கத்தி, கவைக்கம்பு எல்லாம் சிதறிக் கிடந்தன. அந்தப் பக்கமாய் பாலத்தின் மேல் வழி நடந்தவர்கள் இரண்டு நிமிடம் நிழலில் நின்று வேடிக்கை பார்த்துவிட்டுப் போயினர். சிலர், ''என்னலே? விலாங்க புடிக்கேளா?" என்று ஒரு கேள்வியை கேட்டுவிட்டுப் போயினர். இரண்டு மாடு மேய்ச்சிப் பையன்கள் கையில் இருக்கும் கம்பை பாலத்துச் சுவரில் தட்டியபடியே உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருந்தனர். கோடை விடுமுறை ஆனபடியால் பள்ளியில் படிக்கும் இரண்டு சிறுவர்கள் தவசியிடம் இருந்து சற்றுத் தள்ளி குத்த வைத்து உட்கார்ந்து ஆர்வமாய் குட்டைத் தண்ணீரையே கவனித்துக் கொண்டிருந்தனர். வெயில் ஏறி தண்ணீர் சுட ஆரம்பித்தது. அசையாது நிற்கும் தண்ணீரில் திட்டாக விழுந்த கற்றைகள் கள்ளிப்பாலின் போதையோடு தகிப்பையும் மீன்களுக்கு ஏற்றிக் கொண்டிருந்தது. மணி இரண்டுக்கும் மேலிருக்கும். பால் படர்ந்திருந்த தண்ணீர்ப் பரப்பில் சிறுசிறு அசைவுகள், குமிழ்கள் தோன்ற ஆரம்பித்தன. கள்ளிப்பால் கலந்த தண்ணீர் குடித்த போதையில், கிறக்கத்தில் சின்னச் சின்ன மீன்கள் வெளியேறத் துவங்கின. வாயை தண்ணீரின் மேல் மட்டத்துக்கு உயர்த்திப் பிடித்து, மண்டையை மண்டையை ஆட்டிக் கொண்டு, திக்கும், திசையும் இழந்து, கண் பஞ்சடைந்து... பின்னணையின் கீழே, பிடிக்கும் மீன் களைப் போட்டு வைப்பதற்காக, மண் வெட்டியால் சிறிய குண்டு தோண்டினான் தவசி. தண்ணீர் சிறிது ஊறியது. பிடித்த மீன்கள் செத்துவிடாமல் இருக்க இந்த ஏற்பாடு. வெட்டுக்கத்தியால் இரண்டு புன்னைமரச் சல்லிக்கிளைகளை வெட்டி குண்டின் பக்கத்தில் வைத்தான். பிடிக்கப் பட்ட மீன்கள் துள்ளி விழுந்து வெளியேறாமல் இருக்கவும், அவற்றை வெயில் கண்டமானம் தாக்காமல் இருக்கவும் இது உதவும். தண்ணீர்ப் பாம்பு ஒன்று துள்ளி விழுந்து ஓடியது. ''பே'' என்று விளையாட்டாகக் கூச்சலிட்டுச் சாடினான் தவசி. வேடிக்கை பார்த்திருந்தவர்கள் சிரித்தனர். கள்ளிப்பால் போதையில் மீன்கள் ஒவ்வொன்றாக வெளிவர ஆரம்பித்தன. தண்ணீர் அதிகம் அலுங்காமல் உடைந்த பானையின் வயிற்றுப் பாகத்தால் தேக்கத்துக்கு பின்புறம் காட்டி கால்களை அகற்றி நின்று குனிந்து பின்னணைக்கு வெளியே தண்ணீரை இறைத்துத் தள்ளினான் பிலிப்பு. தண்ணீர் வற்ற வற்ற சிறுசிறு மீன்களின் அனக்கங்கள் தெரிந்தன. பெரிய மண்டையும் சூம்பிய உடலுமாக அசிங்கமாய் இளித்துக் கொண்டு வந்தது ஒரு உளுவை. ''கண்டார... நீயா முதமுதல்லவாறே...'' என்று ஏசிக்கொண்டு அதை அப்பிப்பிடித்து குழிக்குள் எறிந்தான் பிலிப்பு. வெளியே இறைத்த தண்ணீரோட சில மீன்கள் விழுந்து மணலில் துடித்தன. இறவையை நிறுத்திக்கொண்டு மீன்களை அரிக்க ஆரம்பித்தனர். துள்ளத் துடிக்க உளுவை, கயிலி, சிலேபியாக் கெண்டை, ஆராங்கு, சள்ளை, அயிரை, கிளாத்தி... ''தேவ்டியாவுள்ளா..'' என்று காட்டமாய் வைது கொண்டு கிளாத்தி ஒன்றின் சங்கை நெருக்கிப் பிடித்து மீசைபோல் நீட்டி நின்ற முள்ளை முறித்து குழிக்குள் எறிந்தான். இந்த ஆற்று மீன் குளத்து மீன்களிலேயே கிளாத்தி ஒன்றுதான் சண்டாள மூதி, தண்ணீரில் ஆயும் போதே மின்னல்போல் துடித்துக் கொண்டு நிற்கும். அப்பிப் பிடிக்க முயன்றால் முள்ளால் கணிசமாக ஒரு போடு. போதும் மூன்று நாளைக்கு. சிறுசிறு மீன்கள் எல்லாம் குழியினுள் நிறைந்தன. ஆனால் பிலிப்பும் தவசியும் பதினோரு மணியில் இருந்து மெனக்கெடுவது இவற்றுக்காக அல்ல. பத்தரை மணிக்கு பாலக்கலுங்கில் உட்கார்ந்து தவசி பல்லைக் கிளைத்துக் கொண்டிருந்த போது அங்கு வந்த பிலிப்புதான் கேட்டான். ''என்ன மாப்பிளே? சோலி ஒண்ணும் இல்லையா? சொகமா பல்லு குத்தலு ஆகு...'' 'ஒண்ணுங் கோளு இல்லடே...'' ''பாக்கியம் பிள்ளைக்கு ஒரு பின்னைமரம் தறிக்கணுமாம். போவமா?'' ''அந்த நசுநாறிக்கு சோலிசெய்யதைவிட எங்கிணயாம் தேனை வாங்கீட்டு போலாம்..'' ''ஏம்லே? பணம் தரமாட்டாரா?'' ''பண்ணிக்குப் பொறந்த பய, மனுசனா அவன்? மூணு ரூவா பேசிக்கிட்டு ரெண்டரைதான் தருவான். மத்தியானம் தாற கஞ்சியை மாடுகூட குடிக்காது... நொளு நொளுண்ணு மொரைச்சுகிட்டு நிக்கும்... கேட்டா நக்கித் தாயளிக்கு வாற கோவத்தைப் பாக்கணுமே...'' ''சரி பின்ன விடு. இங்கிண பாலத்துக்குக் கீள கள்ளி வெட்டிப் போட்டா என்னா? மொறட்டு விலாங்கு ஒண்ணு கெடக்கு பாத்துக்கோ... அண்ணைக்கு எனக்க தூண்டி முள்ள அத்துக்கிட்டுப் போயிட்டு...'' ''அண்ணைக்கு யாரோ அணை போட்டிருந் தாளே?'' ''அதா? மேல தெவக்கம் ஒண்ணு ஒடச்சு வந்து எல்லாம் போச்சி..'' ''அப்பம் வெட்டுக்குத்தி, மம்பெட்டி, கவக்கம்பு, எறவட்டி எல்லாம் வேணும்லா?'' ''நீ அவுரு முடுக்கு வேலப்பன் கிட்டே போயி மம்பெட்டியும் வெட்டுக்குத்தியும் வாங்கீட்டு வா.. நம்ம ஆவரான் சித்தப்பா கிட்டே எறவட்டி கெடக்காண்ணு பாக்கியேன்...'' மற்ற மீன்களோடு சுண்டுவிரல் கனமும் இளஞ்சிவப்பு நிறமும் உள்ள சில விலாங்குக் குட்டிகளும் நீந்தின. கரையிலிருந்த பையன்களில் ஒருவன், ''அண்ணா ஓடுகு...'' அண்ணா ஓடுகு... என்று விரல் தூண்டிக் காட்டினான். தவசியும் பிலிப்பும் விலாங்குக் குட்டிகளை கருணையோடு விட்டனர். பருவட்டாகப் பார்த்து மற்ற மீன்களைப் பிடித்த பிறகு, வெள்ளத்தை வேகமாக இறைத்து வெளியேற்றினான் தவசி. கையில் சிறு கம்பினால் சேம்பிலை, நீர் முள்ளிப் புதர்களைக் கலைத்தான் பிலிப்பு. முழுநீளமும் முழங்கைக் கனமும் கொண்ட விலாங்கு ஒன்று தள்ளாட்டம் போட்டு வெளியே வந்தது. கையால் கோரிக் கரையில் எறிந்தான் பிலிப்பு. மணலில் விலாங்கு புரளும் போது மேலும் மணல் புரட்டி தோல் மீதுள்ள வழுவழுப்பைப் போக்கி பழைய பானை ஒன்றில் போட்டு மூடி வைத்தான் தவசி. பிலிப்பு வேறொரு விலாங்கோடு போராட்டம் நடத்திக் கொண்டிருந்தான். கையில் அகப்படாமல் வளைந்தும் வழுக்கியும் ஓடியது அது. பிலிப்புக்கு - இந்த வேடிக்கை பார்க்கும் கூட்டத்தின் முன்னிலையில் தன்னை அவமானப்படுத்தும் விலாங்கின் மீது கேபாம் வந்தது. கேவலமான கெட்டவார்த்தை சொல்லி ஏசிவிட்டு வெட்டுக்குத்தியை கையில் எடுத்தான். வாக்கான இடத்தில் நின்று கொண்டு தண்ணீருக்குள் வெட்டுக்குத்தியை சாய்வாகப் பாய்ச்சிக் கோரி விலாங்கைக் கரையில் எறிந்தான். முழங்கால் பருமனும் இரண்டு முழம் நீளமும் இருக்கும். நல்ல ஏந்தின வெட்டு. சப்பையான வாலை மண்ணில் போட்டு அடித்துக் கொண்டி ருந்தது விலாங்கு. ஒருவேளை பிலிப்பின் தூண்டில் முள்ளைக் கவ்வித் துண்டித்த விலாங்கு இதுவாகக்கூட இருக்கும். அன்று நல்ல கணிசமான வேட்டை. இறைவட்டி நிறைய உளுவை, கிளாத்தி, ஆராங்கு, கயலி, சிலேபியாக் கெண்டை... வாட்டமான பத்துப் பன்னிரண்டு விலாங்குகள். வெட்டுப்பட்ட பெரிய விலாங்கு ஒன்றே இரண்டு ரூபாய்க்குப் போகும். சாமான்களை எல்லாம் ஒதுக்கிக் கரையேற்றி, மேலணையும் கிழணையும் உடைத்துவிட்டு கை கால்களில் இருந்த தொழியைக் கழுவினர் இருவரும். கழுவிய கையை முகர்ந்து பார்த்து பிலிப்பு முகத்தைச் சுளித்தான். சுருட்டி வைத்திருந்த வேட்டியை எடுத்து அன்டர்வேருக்கு மேல் கட்டிக்கொண்டு பீடி பற்ற வைக்கும் போது ஊர்காவல் தேவர் வந்து எட்டிப்பார்த்தார். ''என்னலே? எல்லாம் உங்க மனம் போலத்தான்... எவன் வேலியையாம் வெட்டிப் பிரிச்சுக் கள்ளி வெட்டி மீது புடிக்கது...'' ''இல்லே பாண்டியரே...'' ''என்ன இல்லே... சொள்ளமுத்துப் பிள்ளை நாக்கைப் புடுங்குக மாதிரி கேப்பாரே... அம்மா ஆத்தாண்ணு... நீயா வந்து பதிலு சொல்லுவே...?'' ''தொண்டு விளாமத்தன் அஞ்சாறு கள்ளி வெட்டினோம் பாத்துக்கிரும்...'' ''அஞ்சாறு வெட்டினேயாக்கும்... இனி அவருக்க எளவிலே நிண்ணு முடியாதே... சரி... சரி... ரெண்டு விலாங்கு எடு இப்படி...'' ''விலாங்கு மூணோ நாலோதான் கெடச்சு பாண்டியரே... இனி எறவட்டிக்காரனுக்கு குடுக்கணும். மம்பெட்டிக் காரனுக்கு குடுக்கணும்... அஞ்சாறு கயிலி சேம்பிலைலே பொதிஞ்சு தாறேன்...'' ''கயிலி ஒங்க அம்மைக்கு கறி வச்சுக் குடு... தாயோளி எனக்கு முன்னால கோமண மில்லாம அலஞ்ச பய எங்கிட்டேயே வேலை வைக்கான்... மீசை வச்சிட்டாலே பெரிய ஆளாயிருவியாலே?'' பாலத்திலிருந்து இறங்கி வந்த ஊர்க்காவல் தேவர், இருந்ததில் பெரியதான இரண்டு விலாங்குகளைத் தேடி எடுத்து வாலைப் பிடித்துத் தூக்கிக் கொண்டு போனார். ******* முழுவதும் படிக்க 0 கருத்துகள் Feb 27, 2010 தலித் இலக்கியம் பற்றி... - சுந்தர ராமசாமி வலையேற்றியது: Ramprasath | நேரம்: 5:33 PM | வகை: கட்டுரை, சுந்தர ராமசாமி சுந்தர ராமசாமி தலித் இலக்கியம் பற்றி எனக்குத் தெளிவில்லை. தமிழில் மாதிரி படைப்புகள் - முக்கியமாக ஒரு நாவல் - தென்படவில்லை.படைப்பு மொழி சார்ந்து நிற்கிறது; மொழி தாண்டிப் பேசுகிறது. ஆக, தலித் இலக்கியம் பற்றி அனுபவம் பெற, உணர்வுகள் பெற எனக்கு வாய்ப்பு அதிகம் இல்லை. ஆங்கிலம் வழி சிறிய அளவில் தலித் ஆக்கங்கள் என்று கருதப்படுபவை படிக்கக் கிடைத்திருக்கின்றன. அவற்றில் தார்மீகக் கோபம் வலுவாகவும் கதை வலு பலவீனமாகவும் இருந்தன. படைப்பு பட்டென்று பல விஷயங்களைத் தெளிவுபடுத்தக் கூடியது. முழு வாழ்க்கையில் அரசியலுக்கு அகப்படுபவற்றை மட்டுமே பார்ப்பவர்கள், இப்போது படைப்புகள் அற்ற நிலையில், படைப்புகளுக்குரிய விதிகளைப் பொருட்படுத்தாது தலித் இலக்கியம் பற்றிப் பேசிக்கொண்டு போகலாம். தலித் கலைஞன் இந்த வாய் வீச்சுக்களை அப்படியே ஏற்றுக் கொள்பவனாக இருக்க மாட்டான். ஆழமான அனுபவங்கள் ஆழமான படைப்புகளுக்கு வழிகோலும் உத்தரவாதமில்லை. ஆனால் படைப்புக்குள் ஆழங்கள் இருக்குமென்றால் அவற்றின் பின் ஆழமான அனுபவங்களும் இருந்தாக வேண்டும். இந்த அனுபவ ஆழம் இல்லையென்றால் கற்பனை பயன் இல்லை. அனுபவ ஆழம் இருக்கும்போது சாராம்சத்தை கண்டடைய உபயோகப்படும் கற்பனை, அனுபவ ஆழம் இல்லாத நிலையில் மேலோட்டமான பரப்பில் பரந்து தத்தளிக்கிறது. மேல்தட்டு வாழ்க்கையைப் பற்றி பல்வேறுபட்ட பிரிவுகளைச் சேர்ந்த எழுத்தாளர்கள் எழுதியிருக்கிறார்கள். தன் பின்னணியைச் சார்ந்து இயங்குவது படைப்பாளிக்கு இயற்கையாக இருப்பது போலவே தன் பின்னணியைத் தாண்டும் சாவாலை மேற்கொள்வதும் படைப்பாளிக்குரிய இயற்கையில் ஒன்றாகவே இருக்கிறது. படைப்பாளி தன் ஜாதியையும் தன் மதத்தையும் தன் வளர்ப்புப் பின்னணிகளையும் தன் தேசத்தையும் மொழியையும் தாண்டிச் சென்று வெற்றி பெற்றிருக்கிறான், தன்னுடைய அனுபவத்தைப் பிறருடைய அனுபவமாக மாற்றும் ஆற்றலையே வெற்றி என்கிறேன். இலக்கிய வரலாறு இந்தத் தடையங்களைத் தந்த பின்பும் இன்றைய மேல்தட்டுப் படைப்பாளிகளால் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை முன்வைத்துப் படைக்க முடியும் என்று எனக்குத் தோன்றவில்லை. இந்த சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகள் உறுதிப்பட்டுக் கிடக்கின்றன. சமத்துவம் அற்ற நிலையில் வாழ்க்கையில் பிணைந்து கிடக்கும் விதி ஒன்றே இங்கு சமத்துவமாக இருக்கிறது. மேல்தட்டு மக்கள் தங்களுக்குள் கொண்டிருக்கும் ஏற்றத் தாழ்வுகளுக்கும் அடித்தட்டு மக்களின் ஏற்றத்தாழ்வுகளுக்கும் இடையே மிகப்பெரிய கருஞ்சுவர் எழுப்பப்பட்டிருக்கிறது. ஜாதியின் இருள் இது. இந்த இருளின் இரு பக்கங்களிலும் முற்றிலும் வேறுபட்ட வாழ்க்கை கிளர்ந்தெழுந்திருக்கிறது. ஒரு பக்கம் உழைத்து நாகரிகத்தை உருவாக்கியவர்கள். மறுபக்கம் அவர்கள் உருவாக்கிய நாகரிகத்தின் மேல் தங்கள் வாழ்க்கையைக் கட்டி எழுப்பி, அவர்களுடைய உழைப்பைச் சுரண்டி தங்கள் ஆளுமைகளை வளர்த்துக் கொண்டவர்கள். அப்படி அவர்கள் வளர்த்துக் கொண்ட ஆளுமைகள் உழைப்பாளிகளின் நாகரிகத்தை அவமதிப்பது என்பது எண்ணெயைச் சுடர் இழிவுபடுத்துவது போல் ஆகும். சுடரின் பிரகாசம் எண்ணெயின் சக்தியே அன்றி வேறு அல்ல. ஜாதியின் பிளவைத் தாண்டி மேல்தட்டுப் படைப்பாளியால் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையைப் பற்றிப் பேசமுடியும் என்று எனக்குத் தோன்றவில்லை. இதுகாறும் அவர்களைப் புறக்கணித்துச் சுரண்டியதுபோல இனி அவர்களைப் பொருட்படுத்திப் பேசிச் சுரண்ட சிலர் முன்வரலாம். பேச்சின் தளங்களில் இருந்து பெரிய படைப்புகள் உருவாவதில்லை. தலித் மக்கள் தங்கள் மொழியில் தங்களை முன்வைக்கும் காலம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. இன்று வரையிலும் மேல்தட்டு அறிஞர்கள் சொல்லியிருப்பவையே அவர்களைப் பற்றி அறிய நமக்கு அடிப்படையாக இருந்திருக்கிறது. தலித் மக்கள் தங்களைப் பற்றிச் சொல்லிக்கொள்ள முற்படும்போது இந்த அடிப்படைகள் தகர்ந்து போகலாம். மேல்தட்டுக் கற்பனைகளின் அபத்தங்கள் இனி வெளிப்படலாம். ஒடுக்கப்பட்ட மக்கள் வித்தியாசமான மக்கள் மட்டுமல்ல, முற்றிலும் வேறுபட்டவர்களாகவே இருக்கிறார்கள். அவர்களுடைய நீதிகள், ஒழுக்கங்கள், மதிப்பீடுகள் நாகரிகங்கள் மேல்தட்டினர் பிடித்து வைத்திருப்பதை ஆமோதிப்பவையாக இருக்கவேண்டும் என்பதில்லை. தாங்கள் அனுசரித்து வரும் நாகரிகத்தை ஒடுக்கப்பட்டவர்களும் அனுசரிக்கும் சமூகத்தை உருவாக்குவதே ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலை என்று கற்பனை செய்து கொள்ள மேலதட்டு சிந்தனையாளர்களுக்கு இனி உரிமை இல்லை. சமூகப் பாகுபாடுகளைப் புரிந்துகொள்ளப் பிரிவுகள் உபயோகப்படுகின்றன. ஜாதி மதம் கலாச்சாரம் சார்ந்த பிரிவுகளைப் படைப்பு பிரதிபலிக்கிறது. வேற்றுமைகளை முன் நிறுத்துகிறது. தாழ்வின் கொடுமைகளைப் பதிவு செய்கிறது. மிகப் பெரிய வெப்பங்கள் தலித் இலக்கியத்தின் உள்ளுரையாக அமையலாம். அது மிகவும் இயற்கையான காரியம். ஆனால் தலித் கலைஞன் தன் கலையை படைத்தாக வேண்டும். தன்னிடமே பேசிக் கொள்வதைத் தாண்டி, தன் அயலானிடம் பேசிக் கொள்வதைத் தாண்டி, மனித குலத்துடன் அவன் பேசியாக வேண்டும். அபோது மட்டுமே அவன் கலைஞன். தன் துக்கம், தன் ஜாதியின் துக்கங்கள், தன் மதத்தினரின் துக்கங்கள், தன் இழிவுகளின் அவலங்கள் இவை எந்தப் பின்னணியில் இருந்து கிளம்பினாலும் சரி, என்ன என்ன கோலங்கள் கொண்டாலும் சரி, மனித துக்கம் என்ற பெரிய தடாகத்தில் அவை வந்து கலந்தாக வேண்டும். வேற்றுமைகளின் அவலத்திலிருந்து ஒற்றுமைகளின் அழகுகளுக்கு அவை வந்தாக வேண்டும். இவை படைப்பின் நியதிகள், தன் வாழ்க்கையைச் சார்ந்து அவன் படைக்காமல், தன் வாழ்க்கையை வைத்து அவன் ஜோடனை செய்தால் காலத்தின் முன் அந்த னோடனைகள் உதிரும். வாழ்க்கையைப் பற்றி அறிய முழு வாழ்க்கையை உள்ளடக்கும் படைப்புகள் தேவை. இதுகாறும் நாம் அறிந்திருக்கும் வாழ்க்கை பெரிதும் மேல்தட்டு வாழ்க்கையே. விடுபட்டுப் போன மிகப்பெரிய பகுதி ஒன்று அதன் சுவடுகளைப் படைப்பில் பதிக்கும் காலம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. அப்படைப்புகள் முன் வைக்கும் பார்வை வாழ்க்கையைப் பற்றிய நம்முடைய பார்வையை விரிவு படுத்தி நம் அடிப்படைகளையே மறு பரிசீலனை செய்ய நம்மை வற்புறுத்தலாம். தலித் மக்களிடையே எழுத்துக் கலைஞர்கள் தோன்றி அவர்கள் கலை வெற்றியை சாத்தியமாக்கும் போது, தலித் கலை என்ற அடை மொழிகள் உதிர்ந்து, அவர்கள் உருவாக்கும் படைப்புகள் பேரிலக்கியங்களுடன் இணைந்து காலத்தை தாண்ட முன்னும். காலத்துடன் இணைய வலுவற்றவை தலித் வாழ்க்கையை அரசியல் நோக்கில் எந்திர ரீதியாகப் பிரதிபலித்து, பிரச்சாரத் தளத்தில் மூழ்கி, மேடைப் பேச்சுகளில் அடிபட்டுக் காலத்தின் முன் உதிரும். சாராம்சத்தைக் கண்டடைவதுதான் கலை என்ற நியதியிலிருந்து படைப்பாளி ஒருபோதும் தாண்டிப் போக முடியாது. சிலேட், 1992 ********* முழுவதும் படிக்க 1 கருத்துகள் தெரியாமலே - கந்தர்வன் வலையேற்றியது: Ramprasath | நேரம்: 9:43 AM | வகை: கதைகள், கந்தர்வன் கந்தர்வன் இந்த அலுவலகத்தில் வேலைக்குச் சேர்ந்த அன்று திருதிருவென்று சுற்றுமுற்றும் கவனித்ததில் பலதும் கண்ணில் பட்டன. அதில் முக்கியமானது எல்லோரும் சில குறிப்பிட்ட நேரங்களில் தேநீர் அருந்தப் போய் வந்தார்கள் என்பது. அடுத்த சில தினங்களில் அவர்கள் யாரும் தனியாய்ப் போகவில்லையென்றும் குழுக்களாய்ப் போய் வருவதையும் பார்த்தேன். என் பக்கத்து சீட் சாமிநாதன் இடம்பெற்ற குழுதான் இந்தக் குழுக்களிலேயே பெரியது என்று அவனோடு சிநேகமாகி அந்தக் குழுவோடு கேன்டானில் நின்றபோது தெரிந்தது. தேநீர் அருந்தியதும் குழுக்கள் உடன் நாடு திரும்பியதில்லை. கேன்டானுக்கு எதிரே உள்ள மைதான வெளியில் மூன்று நான்கு மரங்கள் பெரிது பெரிதாய் நிற்கின்றன. ஆஸ்திரேலியாவிலிருந்து கொண்டு வந்து பரப்பப்பட்ட மர இனம் என்று அவைகளின் உயரத்தை அண்ணாந்து பார்த்து ஒருவர் சொன்னார். அந்த மரத்தடிக்குப் போய் நின்று முதல் நாள் மாலை தாங்கள் பிரிந்த பின்பிருந்து அந்த நிமிடம் வரை அவரவர் வீடுகளிலும் வெளியிலும் நடந்தவைகளை செய்திகளாகவும் அதிசயங்களாகவும் கதைகள் போலவும் பேசுவார்கள். எதையும் வெகு சுவையாகச் சொல்பவர்கள் என்று எங்கள் குழுவில் இரண்டு மூன்று பேர் உண்டு. பெரும்பாலும் அவர்களே கூட்டத்தை ஆக்ரமித்துக் கொள்வார்கள். கேட்கவும் பார்க்கவும் ஆசையாயிருக்கும். விதிக்குப் புறம்பாக வந்த பில்லை எப்படிக் கண்டுபிடித்துத் திருப்பி அனுப்பினார் என்று சொல்லி யாராவது ஒருவர் தனது அறிவு மற்றும் சூட்டிகைகளை விளக்கிப் பேசுவதுதான் வழக்கமான மாநாட்டுத் துவக்கமாக இருக்கும். அதன் பின் அதிகாரி பற்றி அவர் குடும்பம் பற்றி பத்திரிக்கைகளில் வந்த செய்திகள் பற்றி கண்ட காட்சிகள் பற்றி என்று மாநாட்டில் பேசுவதற்கென்றே தயாரித்து வந்த உரைகள் போல வரிசைக் கிரமமாகவோ முண்டியடித்துக் கொண்டோ பலரிடமிருந்து வெளிவரும். பெரும்பாலும் இந்த மரத்தடி மாநாடு வட்டவடிவிலும் நின்றபடியேயும் நிகழும். மூன்றாம் நாளே கவனித்தேன். எங்கள் வட்டம் தாண்டி ஒரு கிராமத்துக்காரர் மஞ்சள் பை ஒன்றைக் கையில் தொங்க விட்டபடி நாங்கள் பேசுவதைக் கூர்மையாகக் கேட்டபடிநின்றார். முகத்தில் கவலை அதிகமாயிருந்தும், நாங்கள் பேசிவிட்டு உரக்கச் சிரிக்கும் நேரங்களில் அவர் உதட்டிலும் பொசுங்கலாய் ஒரு புன்னகை வந்து போனது. ரகசியமான சங்கதிகளை நாங்கள் மெது குரலில் பேசுகையில் அவர் எங்கள் வட்டத்தை நோக்கி இரண்டு எட்டு எடுத்து வைத்துக் காதோரம் கை வைத்துக் கேட்டு விட முயற்சிப்பார். நாங்கள் நாடு திரும்பிய ஒரு நாள் முற்பகலில் திரும்பிப் பார்த்தேன். அவர் பக்கத்திலிருந்த கோர்ட் கட்டிடம் நோக்கிப் போய்க் கொண்டிருந்தார். அப்போது அவர் தாட்டியாயிருந்தார். பிற்பகலில் எங்கள் கூட்டம் ஆரம்பிக்கும் நிமிடத்தில் எங்கள் பேச்சைக் கேட்க வாயைத் திறந்தபடி மேற்கிலிருந்து வேகம் வேகமாய் வந்துநின்று கொண்டார். நாங்கள் முடித்துத் திரும்பிய ஒவ்வொரு வேளையிலும் எங்களை விட்டுப் பிரிந்து அவர் ஒருசமயம் கலெக்டர் அலுவலகப் பக்கமாய்ப் போய்க் கொண்டிருப்பார்; ஒரு நேரம் வக்கில் ஒருவரின் பின்னாடி பரிதாபமாய் நடந்து கொண்டிருப்பார். எனது ஊகம் என்னவெனில் கர்ணன் உடம்பின் கவச குண்டலம் போல் அவர் கையில் தொங்கிய மஞ்சள் பைக்குள் ஏதோ முக்கிய ஆவணங்கள் அல்லது விண்ணப்பங்களின் நகல்கள் ரசிதுகளென்று நிறைத்து வைத்திருந்தார் என்பதே ஆகும். எங்கள் குழு கூடும் மரத்தடி விரிந்த நிழல் கொண்டது. மஞ்சள் பூ மரம் அது. அதன் கிளைகள் அருகில் உள்ள வக்கீல்கள் கூடத்தின் மேற்கூரையில் பாதியை மூடியிருக்கும். இந்தப் பக்கம் கேன்டானின் தென்னங் கீற்றுகளின் மேல் அசையும் கோடையில் வெல்வெட் விரிந்து கிடப்பது போல் தரையெங்கும் பூக்கள் உதிர்ந்திருக்கும். வதங்கிய பூக்களிலிருந்து வாசம்வரும். பேசிக் கொண்டிருக்க ரம்மியமாயிருக்கும். அடிக்கடி பேச்சுகளில் ஊடாடுவது, காலம் முன்பு போய் மெதுவாய் நகர்வதில்லை என்பதும் வெகு வேகமாய்ப் போய்க் கொண்டிருக்கிறது என்பதுதான். நேற்றுதான் திங்கட்கிழமை வந்தது போலிருக்கிறது. அதற்குள் வெள்ளிக்கிழமை வந்துவிட்டது என்று அநேகமான வெள்ளி மாலைகளில் பேசுவதுண்டு. பேச்சில் அடிக்கடி வரும் இன்னொன்று காலம் மாறிக்கொண்டிருக்கிறது. 'பெரிய சங்கதிகளை விடு. டிபன் பாக்ஸைச் சொல்லு. அதுகளை வரிசையா மேலெ மேலெ அடுக்கி மாலை மாதிரி ஒண்ணை மேலெ வைச்சு இதுலெ மாட்டி அதுலெ மாட்டிக் கடைசியா ஒரு கெட்டியான ஸ்பூன் ஒண்ணை மூணு துவாரத்திலெயும் சட்டுனு எவனாவது நொழைச்சிருப்பானோ; அதுதான் நொழைஞ்சிருமா ? ஸ்பூன் இல்லாம டிபன் பாக்ஸ் வரும்னு நெனைச்சிருப்பமா முந்தியெல்லாம். 'எங்க தெருவுலெ புதுசா ஒரு கேபிள்காரன் வந்திருக்கான். அம்பது சானல் தரப் போறானாம். நெனச்சிருப்பமா பத்து வருசத்துக்கு முன்னெ ? ' 'பஸ் ஸ்டாண்டுக்கு அப்பாலெ காலெஜ் வரை ஜனநடமாட்டமே இருந்ததில்லெ முன்னெயெல்லாம். இப்ப வீடுகளும் கடைகளும் பஸ்ஸ்உம் காரும் ஸ்கூட்டருமா ஜெக ஜோதியாயிருச்சு. ' 'விடு கம்ப்யூட்டர் சங்கதியை ஆரம்பிச்சா கதை பத்து நாளைக்கு நீளும். நம்ம ஆபிஸ்லெ பத்து கம்ப்யூட்டர்கள் பிரிண்ட்டர், ஏர் கண்டிஷனர் எல்லாம் அடுத்த வருசம் வந்து எறங்கப் போகுது. அம்பது நூறு வருசமா தலையைப் போட்டு பிறாண்டி மாசாமாசம் கணக்கு அனுப்புற வேலையெல்லாம் இனி இல்லை. மிஷினலெருந்து வந்து கையிலெ விழுந்திரும் கோடி ரூபாய் கணக்கு. பேசிவிட்டு நாடு திரும்பும்போது பார்த்தேன். மஞ்சள் பைக்காரர் வெகு சுவாரஸ்யமாய் இவைகளைக் கேட்டுக் கொண்டிருந்தவர் காக்கித் துணி மூடிய ஜீப்பில்லாமல் நவீனமான மாருதி ஜீப்பில் வந்து கொண்டிருந்த தாசில்தாரை நோக்கி ஓடினார். தாசில்தார் ஜீப்பிலிருந்து இறங்கும்போது அவர் தலைக்கு மேல் கைகளை உயர்த்திக் கும்பிட்டுக் கொண்டிருந்ததைக் கவனிக்க நேரமில்லாமல் விறுவிறுவென்று கலெக்டர் ஆபீஸின் படிகளில் ஏறினார். டவாலி முன்னால் ஓடிக் கொண்டிருந்தார். சில நிமிடங்களுக்குப்பின் மஞ்சள் பைக்காரர் கோர்ட் பக்கம் பார்த்து நடந்து கொண்டிருந்தார். ஒருநாள் எங்கள் மரத்தடியிலிருந்து சற்று தூரத்தில் செங்கல்லும் மணலும் லாரிகளில் வந்து இறங்கிக் கொண்டிருந்தன. நவீன வசதிகளுடன் பலமாடிக் கட்டிடம் ஒன்று கட்டப் போவதாகச் சொன்னார்கள். பல துறை அரசு அலுவலகங்களும் இயங்கி வரும் இந்த வளாகத்திற்குள் இன்னும் நிறைய அலுவலகங்கள் வந்து சேரப்போவது குறித்து மகிழ்ந்தும் வியந்தும் நாங்கள் மரத்தடியில் பேசிக் கொண்டிருந்த பலநாட்களில் மஞ்சள் பைக்காரரும் நின்று கேட்டுக் கொண்டிருந்தார். எங்கள் அலுவலக வளாகம் நூறு ஏக்கர் பரப்பளவில் விரிந்து கிடக்கிறது. மொத்தக் கட்டிடங்களும் நாலு அல்லது ஐந்து ஏக்கர்களுக்குள் என்றால் மீதி தொண்ணூற்றைந்து ஏக்கர்களில் செடிகளும் புதர்களும் காட்டுக் கொடிகளும் பேர் தெரியா மரங்களும் தான். வெள்ளைக்காரன் காலத்திற்கு முந்தைய அரசர் அல்லது சிற்றரசர் கால வளாகம் இது. திசைக் கொன்றாய் எட்டு பிரம்மாண்ட வாசல்கள். தர்பாராகவோ அந்தப் புரங்களாகவோ இருந்ததையெல்லாம் கலெக்டர் அமரும் அறையாகவோ விவசாயத்துறைக் கிடங்குகளாகவோ மாறியிருந்தன. வளாகத்தின் வடகிழக்கில் இரண்டாள் உயரத்திற்குக் கரையான் புற்றும் சுற்றிலும் இடுப்பளவிற்குக் குத்துச் செடிகளும் அடர்ந்து கிடந்தன. தெற்கே காம்பவுண்டுச் சுவருக்கு மேலும் அடியிலும் மயில் கூட்டம் திரியும் வடதிசையில் சூரிய வெளிச்சம் படாது அடர்ந்த மரங்களிலிருந்து பறவைகளின் சப்தம் காதைப் பிளக்கும் ஆடைக்கும் கோடைக்கும் புல் மண்டிக் கிடக்கும் இந்தப் பிரதேசமெங்கும். கட்டிட வாசல்களின் நிழல்களில் புல் பத்தை பத்தையாய்க் கிடக்கும். அதனால் இந்த வளாகத்தில் கால் நடைகளின் புழக்கம் அதிகம். வளாகத்தைச் சுற்றி வீடுள்ளவர்கள் இங்குள்ள புள் படுகைகளை நம்பி மாடு ஆடு வளர்த்து வருகிறார்கள். இந்தக் கால்நடைகள் பெரும்பாலும் அலுவலக வாசல்களிலும் கேன்டான் ஓரங்களிலும் மனிதர்கள் நடமாடும் பகுதியாகப் பார்த்துத்தான் மேய்ந்து கொண்டும் உலாவிக் கொண்டும் திரியும். வெளி மாநிலக்கார ஒரு ஐ.ஏ.எஸ் இங்கு கலெக்டராக வந்தவர் பி.ஏ.வைக் கூப்பிட்டுக் கோபமாய் இரண்டு தகவல்களைச் சொன்னாராம். முதலாவது இந்த வளாகத்தினுள் அலையும் மனிதர்களை விடவும் கால்நடைகளின் எண்ணிக்கை அதிகம். இரண்டாவது அவர் காருக்குக்கூட இடம் தராமல் அந்த ஒல்லித் தார் ரோடின் குறுக்கே வரிசையாய்ப் படுத்துக்கொண்டு ஆரன் ஒலிகளுக்கு மதிப்புத் தராமல் அசை போட்டபடி படுத்துக் கிடந்தன என்றாராம். அந்தக் கோபத்தோடு பல உத்தரவுகளையும் போட்டார். அந்த உத்தரவுகளின் படி ஆடு மாடு எதுவும் வளாகத்திற்குள் வரமுடியாதவாறு வாசல்களில் இரும்புக் குழாய்கள் பதிக்க வேண்டும். மீறி நுழையும் கால் நடைகளைப் பவுண்டில் அடைக்க வேண்டும். கால்நடை சொந்தக் காரர்கள் அபராதம் செலுத்திய பின்னர் தான் விடுவிக்க வேண்டும். மேற்கண்ட உத்தரவுகள் போர்க்கால வேகத்தில் அமுல் படுத்தப்பட்டன. சரியாக ஒரு மாதங்கழித்து மாடுகளும் ஆடுகளும் உள்ளே ராஜநடை போட்டன. வாசலில் பதித்த கம்பிகளின் மேல் நடக்கப் பயின்று விட்டனவாம். ஒரு கோர்ட்டிலிருந்து இன்னொரு கோர்ட்டிற்கு நடந்து செல்லும் நீதிபதிகளுக்கு பத்தடி முன்னால் ஆள்களை விலகச் சொல்லி அதட்டிக்கொண்டு ஓடும் டவாலிகளுக்கு இந்த ஆடுகளும் மாடுகளும் பெரும் இடையூறாயிருந்தன. அதிகாரிகள் காரிலிருந்து இறங்கி சட்டென்று அலுவலகப் படிகளில் ஏற முடியாதவாறு இவை பலநேரம் வழி மறித்தன. எங்களது ஒரு மரத்தடிக் கூட்டத்தின் போது சம்பள உயர்வு உட்பட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து வரப் போகும் மாதங்களில் நாங்கள் நடத்தவிருந்த வேலை நிறுத்தம் பற்றி உரக்க விவாதித்துக் கொண்டிருந்தபோது மஞ்சள் பைக்காரர் வெகு அக்கறையோடு எங்களைப் பார்த்துக்கொண்டு நின்றார். அந்த மாதத்தில் ஒரு திங்கட்கிழமையன்று கலெக்டர் அலுவலக வாசலில் மக்கள் குறைதீர்க்கும் கூட்ட வரிசையில் அவர் நிற்பதைப் பார்த்தேன். அன்று நாங்கள் மரத்தடிக்கு வரும் நேரத்தில் அவரும் திரும்பிவிட்டார். முகத்தில் எவ்வித உணர்ச்சியுமில்லை. வேலை நிறுத்தம் ஆர்ப்பாட்டம் என்று மறுபடி மறுபடி மூர்க்கமாய்ப் பேசியவைகளைக் கேட்டுக்கொண்டிருந்து விட்டுப் போனார். அலுவலகங்களையெல்லாம் மூடிவிட்டு நாங்களும் பள்ளிகளையெல்லாம் மூடிவிட்டு ஆசிரியர்களும் கலந்து நின்று வளாக முகப்பில் ஆர்ப்பரித்ததை தினமும் நின்று பார்த்துச் சென்றார். அப்போது மஞ்சள் பையில் ஒரு காது அறுந்து இன்னொரு காதோடு முடிந்திருந்தார். சட்டை வேட்டி நைந்து போயிருந்தது. பலநாள் போராடிவிட்டு உச்சகட்டமாய் சென்னை முற்றுகைக்காகக் கிளம்பும் கூட்டம் வெகு உக்கிரமாய் நடந்து கொண்டிருந்தபோது அவர் தலைப்பாக்கட்டி தூரத்தில் நின்று பார்த்துக்கொண்டிருந்தார். போராட்டம் முடிந்து நாங்கள் அலுவலகங்களைத் திறந்து உள்ளே போய் உட்கார்ந்துவிட்டு உற்சாகமாய் மரத்தடிக்கு வந்த போது அவர் எங்கிருந்தோ வந்துவிட்டார். இத்தனை நாட்களாய் அவர் இந்த மஞ்சள் பையோடு எங்கே இருந்திருப்பாரென்று எங்களில் யாரும் நினைத்துப் பார்க்கவில்லை. மாறாக அங்கு கூடுகிற எல்லோருக்கும் அவர்மேல் ஒருவித வெறுப்பு வந்திருந்தது. அவர் எல்லாவற்றிலும் மூக்கை நுழைக்கிறார். எங்களுக்கென்று எந்த அந்தரங்கமும் இல்லாமல் ஆக்கி விடுகிறார். எங்கள் ஆசைகள், தவறுகள், தேவைகள், குளறுபடிகள் எல்லாமே அவருக்குத் தெரிந்து விடுகின்றன. அவரோடு சண்டை உருவாக்கி அவரை எங்கள் கூட்டங்களின் போது வந்து நிற்பதைத் தடுக்கவும் எங்களால் முடியவில்லை. எவ்வித சண்டைக்கும் கோபத்திற்கும் இயலாத தேகமும் முகமும் அவருக்கு. பல அலுவலகங்களின் வாயில்களில் தலையில் சிவப்பு விளக்கோடு கார்களும் ஏராளமான ஜீப்களும் தடபுடலாய்த் தெரியும். முந்தைய வாரத்திலோ மாதத்திலோ நடந்த வேலைகள் பற்றி அடிக்கடி ரெவ்யூ மீட்டிங்குகள் நடக்கும். சிமிண்டுக் கலர் சபாரி அணிந்து கனத்துப் போன அதிகாரிகள் உடம்புகளைத் தூக்கிக்கொண்டு வேகம் வேகமாய்ப் படி ஏறுவார்கள். இந்த ஜீப்புகளுக்கு நடுவில் மஞ்சள் பைக்காரர் அலுவலக முகப்புகளை வெறித்து பார்ப்பதை சில தடவைகள் அந்தப்பக்கமாய்ப் போகும் போது வரும்போது பார்த்திருக்கிறேன். வரவர அவர் வெகுவாய் மெலிந்து கொண்டு வந்தார். தலைத் துண்டை எடுத்துஅடிக்கடி முகத்தைத் துடைத்தார். மரத்தடிக் கூட்டத்திற்கு வருவது மட்டும் நிற்கவில்லை. ஒருநாள் மரத்தடியில் நின்று கொண்டிருக்கையில் ஒரு ஆடு சுவரருகில் அடுக்கியிருந்த செங்கல் குவியலில் ஏறியது; அப்படியே சுவர்மேல் நடந்தது. அடுத்த வக்கீல்கள் கூடத்து ஓட்டு மேல் நின்று அங்குப் பரவிக்கிடந்த மரக்கிளைகளில் புத்தம் புதிதாய்ப் பூத்திருந்த மஞ்சள் பூக்கள் ஒவ்வொன்றாய் தின்று கொண்டிருந்தது. 'இதுக அக்ரமம் தாங்கலைப்பா. இங்க பாரு ஆட்டுக்கு ரெக்கை முளைச்சு மேலே போய் ஓட்டிலே நிக்கிறதெ ' என்றார் ஒருவர். ஒரு சினை ஆடு மேலே நின்ற ஆட்டை ஆர்வமாய்ப் பார்த்தபடி ஓரத்தில் வளர்ந்து கிடந்த புல் கத்தையைக் கடித்துக்கொண்டு நின்றது. மாநாடு முடிந்து கூட்டமாய் வரும்போது கீழே நின்ற சினை ஆடு எங்கள் முன்பாக திணறியபடி நடந்தது. சுற்றிச் சுற்றி வந்தது. எங்கள் கூட்டம் அதை நெருங்குமுன் ஆட்டின் பின்புறத்தில் பச்சைக் குட்டியின் தலை தெரிந்தது. பேண்ட்டும் சட்டையும் கடிகாரமுமாய் நின்ற எங்கள் கூட்டத்திற்கு என்ன உதவி செய்ய வேண்டுமென்று தெரியவில்லை. வேறு திசையில் ஒரு வக்கீல் பின்னால் பேசியபடி போய்க் கொண்டிருந்த மஞ்சள் பைக்காரர் ஆடு நின்ற நிலையைப் பார்த்து விட்டு ஓடி வந்தார். தலைப்பாவை இறுக்கக் கட்டிக் கொண்டார். குட்டி வெளியில் வர உதவினார். குட்டியின் மேலிருந்த திரவத்தை வழித்துவிட்டு குட்டியின் நான்கு கால்களிலுமிருந்த குளம்பைக் கிள்ளி எறிந்து தரையில் விட்டார். குட்டி ஆடியது. விழுந்து எழுந்தது. எழுவது விழுவதுமாயிருந்தது. ஆடு குட்டியை நக்கிக் குடுத்தது. மஞ்சள் பைக்காரர் ஆட்டின் கனத்த மடியில் குட்டியை விட்டார். சிறிது நேரமானதும் குட்டியைத் தூக்கிகொண்டார். ஆடு நடந்த திசையில் குட்டியைக் கையிலேந்திக் கொண்டு நடந்தார். யார் வீட்டு ஆடோ வீடு வரை கொண்டு போய் விட்டு வருவாரென்று பேசிக் கொண்டோம். மஞ்சள் பை முழங்கையில் ஒற்றைக் காதோடு ஆடிக்கொண்டே போனது. எங்கள் கூட்டத்தில் பதினோரு ஆண்டுகளுக்குப் பின் ஒருவர் யாருக்கும் கேட்டுவிடாத மெல்லிய குரலில் முதன்முதலாய் வாய் திறந்து சொன்னார். 'ஆட்டுக்கு என்ன செய்யணும்னு இந்தாளுக்குத் தெரியுது. இந்தாளுக்கு என்ன வேணும்னு யாருக்குமே தெரியலை. ' *************** முழுவதும் படிக்க 0 கருத்துகள் Feb 26, 2010 கலையின் பிறப்பு - க. நா. சு. வலையேற்றியது: Ramprasath | நேரம்: 8:10 PM | வகை: க.நா.சு, கட்டுரை, கவிதைகள் க. நா. சு. கவிதை எனக்கும் கவிதை பிடிக்காது, மனிதன் எத்தனையோ எட்டுக்கள் எடுத்துவைத்துவிட்டான்; இவற்றில் எத்தனை எட்டுக்கள் கவிதையால் சாத்தியமாயின என்று யார் தீர்மானித்துச் சொல்ல இயலும்? பின் எதற்காகத்தான் கவிதை தோன்றுகிறது? மொழியின் மழலை அழகுதான். ஆனால் அது போதவே போதாது. போதுமானால் கவிதையைத் தவிர வேறு இலக்கியம் தோன்றியிராதே. போதாது என்றுதான், ஒன்றன்பின் ஒன்றாக இத்தனை இலக்கியத் துறைகள் தோன்றின - நாடகமும் நாவலும் நீள் கதையும் கட்டுரையும் இல்லாவிட்டால் தோன்றியிராது; ஆனால் அவையும்தான் திருப்தி தருவதில்லையே! அதனால் தான் நானும் கவிதை எழுதுகிறேன். மனிதனுக்குக் கலை எதுவும் திருப்திதராது மேலே, மேலே என்கிற ஏக்கத்தைத்தான் தரும். கலையின் பிறப்பு இந்த அடிப்படையில் ஏற்படுவது. கடவுளே இன்னமும் உயிர்வைத்துக்கொண்டிருப்பது இந்த அடிப்படையில்தான் சாத்தியம் என்று சொல்லலாம். “எளிய பதங்கள், எளிய சந்தம்” என்றும் “தெளிவுறவே அறிந்திடுதல், தெளிவு தர மொழிந்திடுதல்” என்றும் சுமார் ஐம்பது வருஷங்களுக்கு முன் சுப்பிரமணிய பாரதியார் புதுக்கவிதைக்குரிய லக்ஷணங்களை எடுத்துச் சொன்னார். எளிமை, தெளிவு என்கிற இரண்டு லக்ஷணங்களையும் பின்பற்றிப் பின்னர் கவிகள் சிலர் எழுதினார்கள். செய்யுள் சிறப்பாக அமைந்த இவற்றிலும் கூடப் புதுக்கவிதை பிறந்துவிடவில்லை. “பாரதிக்குப் பின் இவர்தான் மேலான கவி, உயர்ந்த கவி” என்று அழுத்தமாகச் சுட்டிக்காட்டும்படியாக ஒரு கவியும் தோன்றிவிடவில்லை. தமிழ்க் கவிதை ஊற்றே வறண்டு போய்விட்டதோ என்று சொல்லும்படியாக இருந்தது. சிறந்தது என்பதெல்லாம் பழசை அப்படியே நகல் எடுப்பதாக, பாரதியாரின் அடியையொற்றியே வந்ததாக இருந்தது. இன்றைய சமூக, ஆன்மீகச் சூழ்நிலையைச் சித்தரிக்க முயன்ற கவிகளும்கூட இன்றைக்கென்று உண்மையாகி, நாளைக்கும் நிலைக்கக்கூடிய கவிகளைச் செய்து தரவில்லை. தோன்றிய கவிதைகளில் பெரும்பாலானவை ஊமையாகவும் குருடாகவும் நொண்டி முடமாகவும் இருந்தது என்று சொல்வது மிகையேயாகாது. பாரதியாருடைய கவிதையிலே தெளிவு, எளிமை இரண்டுக்கும் மேலாக ஒரு வேகம் இருந்தது. இந்த வேகம் எப்படி வந்தது என்று ஆராய்ந்து பார்க்கும்போது தான் உயர் கவிதை எப்படித் தோன்றுகிறது என்பது தெரியவரும். உள்ளத்தில் உள்ள உண்மை ஒளி, வாக்கினிலும் வந்ததனால் ஏற்பட்டதொரு வேகம் இது. எப்படி வந்தது என்பதுதான் கலை ரகசியம். எப்படியோ வந்தது - பாரதியார் உயர்ந்த கவியானார். இப்படித் தோன்றிய வேதத்தால்தான் கம்பனும் இளங்கோவடிகளும் காரைக்காலம்மையாரும் ஆண்டாளும் மாணிக்க வாசகரும் பட்டினத்தடிகளும் ஜெயங்கொண்டாரும் கோபால கிருஷ்ணபாரதியாரும் தாயுமானவரும் அவரவர் அளவில் உயர்கவிகள் ஆகிறார்கள். இந்தக் கவிதை உண்மையை அலசிப் பிய்த்து எடுத்துப் பார்க்க முடியாது - ஆனால் சூக்ஷமமாக இது இருப்பது என்பது நிதரிசனமாகவே தெரிகிறது. உயர் கவிதையின் உயிர்இது. இந்தக் கவிதை உண்மைக்கு, இன்றைய வாரிசாக, புதுக்கவியும் புதுக்கவிதையும் தோன்ற வேண்டும். பாரதியார் காலத்தில் பொது வாழ்க்கை சிக்கலானதாகி விட்டது என்று சொன்னால் சுலபமாக ஏற்றுக்கொண்டு விடலாம்போலத் தோன்றும். பாரதியார் மக்களிடையே பொதுவாகவும் தனித்தனியாகவும் கண்ட குறைகளுக்கு எல்லாம் சுதந்திரமின்மையே காரணம் என்று நம்பினார். சுதந்திரம் வந்துவிட்டால் அக்குறைகள் தானாகவே நீங்கிவிடும் என்றும் நம்பினார். சுதந்திரம் வந்துவிட்டது, ஆனால் தனிமனிதர்களின் குறைகள் பன்மடங்காக அதிகரித்துவிட்டதுபோல் இருக்கிறது. பொதுவாழ்வு, சமுதாயம் பற்றியோ கேட்கவே வேண்டாம். பொருளாதார, சமூக, அரசியல் துறைகளில் மட்டுமல்ல; நல்லது தீயது அடிப்படையிலும் ஆன்மீகப் பாமார்த்திகத் துறைகளிலும் போலிகளும் மோசடிகளும் மலிந்துவிட்டன. குறைகள் நிறைந்து நிற்கின்றன. கவிதை மனிதனின் குறைகளைப் பற்றி மட்டும்தான் சொல்ல வேண்டுமா என்று கேட்கலாம். குறையைச் சொல்வதும் நிறையைச் சொல்வதும் ஒன்றுதான். ஒன்றைச் சொல்லி ஒன்றைவிட முடியாது. இலக்கியத் துறைகள் எல்லாமே சமுதாயம், தனிமனிதன் என்கிற இரண்டு பிரிவிலும் குறைகளையும் நிறைகளையும் சொல்லியும் சொல்லாமலும் அறிவுறுத்துகின்றன என்பது தப்ப முடியாத நியதி. இந்தக் காலத்துக்கான கவிதை உண்மையை இந்தக் காலத்துக்கேற்ற சிக்கலான வார்த்தைச் சேர்க்கைகளில், நிரந்தரமாக்குவதற்கு, அழியாத இலக்கிய உண்மையாக்குவதற்கு, புதுக்கவிதை தேவை. அப்போதுதான் சங்க காலத்தின் சிறந்த கவிதைச் சிருஷ்டிகளையும், சிலப்பதிகாரம், கம்பராமாயணம் போன்ற நூல்களின் தனித்தன்மையை நாமும் இன்று எட்ட முடியும். (இலக்கியரீதியாகத்தான் சொல்லுகிறேன்) இன்றும் ஒரு புதுச் சிலப்பதிகாரமும் ஒரு கம்ப ராமாயணமும் தோன்ற முடியும். (அது கவிதை ரூபத்தில் இருக்கக் கூடாது என்று விதி ஒன்றும் கிடையாது. நச்சுப்போன, நைந்து நொந்த செய்யுள் உருவத்தில் புதுக்கவிதை இருக்க முடியாது என்பது தெளிவு. இது சாத்தியமாவதற்கு நம்மிடையே புதுக்கவிதைக்கானதோர் இலக்கணம் வேண்டும்.) இலக்கியத்தில் இது கவிதை யுகம் அல்ல - கவிதை யுகம் கடந்துவிட்டது - என்றுதான் பெருவாரியான மொழிகளில் கருதப்படுகிறது. காவியங்களும் சிறுகவிதைகளும் ஒரு காலத்தில் சாதித்து வந்த கலைச் சாதனையைச் சிறுகதைகளும் நாவல்களும் வசனத்தில் சாதித்துவிட முடியும் என்று சென்ற நூறு ஆண்டுகளில் உலகமெங்கும் ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்டது. எனினும் கவிதை அநாவசியம் என்றோ, இனி அதற்கு ஒரு காலம் தோன்றாது என்றோ யாரும் கருதுவதில்லை. மீண்டும் இலக்கியத்தில் கவிதை யுகம் தோன்றலாம். இதற்கு அரணாக ஜெர்மன் மொழியில் ரில்கேயின் கவிதைகளும் ப்ரெஞ்சு மொழியில் பாதலெர், ரிம்போ, மல்லார்மே, வாலேரி இவர்களின் கவிதைகளும் ஆங்கில மொழியில் யேட்ஸ், எலியட், டைலன் தாமஸ், எஸ்ரா பவுண்டு இவர்களின் கவிதைகளும் சுட்டிக்காட்ட உபயோகிக்கப்படும். தமிழைப் பற்றியவரையில், தமிழ்க் கவிதை செத்துவிட்டது என்று நிச்சயமாகவே சொல்லிவிடலாம். செய்யுளியற்றுபவர்களின் எண்ணிக்கை நம்மிடம் இன்று அதிகம் என்றாலும், செய்யுள் எல்லாம் கவிதையாகி விடாது என்பதில் என்ன சந்தேகம்? யாப்பு, இலக்கணம், அணி என்றும் அசைக்க முடியாத சட்டங்கள் இட்டு, எதுகை, மோனை, சீர், தளை என்றெல்லாம் நைந்துபோன செய்யுள் வார்த்தைகளுக்கு மீண்டும் மீண்டும் உயிர் தந்து, நைந்துபோன சிந்தனைகளை எடுத்து எடுத்து அளித்து வந்த தமிழ்க் கவிதைக்குக் கோபாலகிருஷ்ண பாரதியாரும் சுப்பிரமணிய பாரதியாரும் ஓரளவுக்குப் புத்துயிர் தந்தார்கள். கவிதையொடு இசை என்னும் உயிர் சேர்த்துக் கவிதை செய்தார்கள் அவர்கள். பக்தி விசேஷம், இசை முதலியவற்றினால் முந்திய பாரதியாரும் சமூக வெறி சுதந்திர வேகத்தினால் பிந்திய பாரதியாரும் தமிழ்க் கவிதைக்குப் புதுமை தர முயன்றார்கள். இருவருக்கும் இசை நயமும் ஓரளவுக்குத் தனிக் கவிதை நயத்தைத் தீர்த்துக்கட்ட உதவியது என்றும் அதே மூச்சில் சொல்லலாம். தமிழோடு இசை பாடுகிற மரபு இருக்கலாம். ஆனால் சங்க நூல் சிலப்பதிகார (இசையற்ற அகவல், சொல்லளவு) மரபு ஒன்றும் தமிழுக்கு உண்டு என்று ஏற்றுக்கொள்ளத்தானே வேண்டும்! தமிழில் புதுக்கவிதை இலக்கணமாக இடைக்கால இலக்கண அணி மரபுகள் ஒழிந்து மிகப் பழைய மரபுகளைத் தேட வேண்டும் என்பது ஒரு விதத்தில் தெளிவாகிறது என்றே சொல்லலாம். தமிழை விட்டுவிட்டு, வேறு மொழியில் புதுக்கவிதை செய்தவர்களின் நிலைமையைச் சற்று நோக்கினால், விஷயம் புரியும். பல ஐரோப்பிய மொழிகளில் கவிதையைச் சாகவிட்டுவிடுவதில்லை என்று பல புதுக்கவிகள் பிடிவாத மாகவே புதுக்கவிதை செய்துவருகிறார்கள். இந்தப் புதுக்கவிதையிலே புதுசாக இன்றைய வாழ்க்கைச் சிக்கலும் பூரணமாகப் பிரதிபலிக்கும் ஒரு வார்த்தைச் சிக்கலும் இன்றைய புதுமைகளை எல்லாம் தொட்டு நடக்கும் ஒரு நேர் நடையும் அகவல் சந்தம் என்று நாம் சொல்லக்கூடிய ஒரு பேச்சுநடை அடிப்படைச் செய்யுள் வேகமும் எல்லாவற்றிற்கும் மேலாக இடைக்காலப் பழமைக்கு மேலாக, பண்டைக்கால, ஆதிகாலப் பழமையைப் போற்றும் ஒரு திறனும் காணக் கிடக்கின்றன. உதாரணமாகப் பார்த்தால் - டி.எஸ். எலியட் என்பவர் புதுக்கவிதை ஆங்கிலத்தில் எழுதுகிறார் என்றால், அவர் இன்றைக்குரிய ஒரு கோணத்தில், ஒரு கோணத்தில் நின்று இன்றைய வசன - கவிதை நடையை மேற்கொண்டு, அதற்கிலக்கணமாக நானூறு வருஷங்களுக்கு முன் எழுதிய ஆங்கில ஆதிகால நாடகாசிரியர்களின் அகவல் பாணியை மேற்கொண்டு பேச்சுச் சந்தத்துக்கிசைய கவிதை செய்கிறார். இடைக்கால மரபுகளைப் புறக்கணித்துவிடுகிறார். ஆனால் பழைய இலக்கண மரபை அவர் அப்படியே கொள்வதும் இல்லை. இன்றையப் பேச்சு வேகத்துக்கேற்ப சொல் என்று மக்களின் வாயில் வழங்குவதின் அடிப்படையில் கவிதை செய்கிறார். அதேபோல எஸ்ரா பவுண்டு என்கிற ஆங்கிலக் கவிஞர் ப்ரோவான்ஸ் கீதங்களையும் சீனத்துக் கவிகளையும் ஜப்பானிய ஹெய்க்குகளையும் தன் மரபாக்கிக்கொண்டு புதுக்கவிதை செய்கிறார். அவருடைய கவிதைப் பாணி இன்று ஆங்கிலத்தில் கவிதை எழுதுகிற எல்லோரையும் பாதித்திருக்கிறது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலே கவிதை செய்த வால்ட் விட்மன் வசனத்தையே கவிதையாக்கி, வசனத்தையே வரிவரியாக வெட்டிக்காட்டி, விஷய அமைதி தந்து கவியாக வெற்றிபெற்றார். இன்றைய மொழிகள் பலவற்றிலுள்ள புதுக்கவிதைக்குப் பொதலெர், ரிம்போ, மல்லார்மே முதலிய பிரெஞ்சுக் கவிகளையும் வால்ட் விட்மனையும்தான் ஆதாரமாகச் சொல்லுவார்கள். இவர்களையெல்லாம் பற்றி நான் இங்கு குறிப்பிடுகிறேனே தவிர, விவாதிக்கவில்லை. ஏனென்றால் தமிழில் புதுக்கவிதை என்கிற விஷயத்துக்கு இவர்கள் புறம்பானவர்கள். ஆனால் இவர்கள் செய்திருப்பது என்னவென்றால், அன்று ஆட்சி செலுத்திய மரபைத் தகர்த்தெறிந்துவிட்டு ஒரு மிகப் பழைய கவிதை மரபை ஆதாரமாகவைத்து, இன்றைய பேச்சு வள அடிப்படையிலே புதுக்கவிதை செய்ய முயன்றிருக்கிறார்கள். அவரவர்கள் மொழியிலே அவர்களுடைய புதுக்கவிதை முயற்சிகள் வெற்றியும் பெற்றிருக்கின்றன. ஐரோப்பிய மொழிகள் பலவற்றிலே இப்போது புதுக்கவிதை திடமான ஒரு இலக்கியக் குழந்தையாகக் காட்சி தருகிறது. தமிழில் புதுக்கவிதையின் அவசியத்தைப் பற்றிய வரையில் எனக்குச் சந்தேகமில்லை. மரபுக் கவிதை செத்துவிட்டது. (அல்லது செத்துக்கொண்டிருக்கிறது. இன்று கவிகள் எழுத வருகிறவர்கள் சொல்லடுக்குப் பாடை கட்டிக்கொண்டிருக்கிறார்கள்) புதுக்கவிதை தோன்றியே தீரும். ஆனால் அது எந்த உருவம் எடுக்கும் என்று இப்போது யாரும் திட்டவட்டமாகச் சொல்ல முடியாது. ஏனென்றால் பலரும் பலவிதமான முயற்சிகள் செய்து பார்த்து வெற்றி தோல்விகள் ஓரளவுக்காவது நிர்ணயமான பின்தான் புதுக்கவிதை உருவாகி இலக்கியப் பூரணத்வம் பெற்று விமரிசனத்தைத் தாங்கள் கூறிய விஷயமாக முடியும். தேவையை உணர்ந்து பலரும் சமீபகாலத்தில் இந்தப் புதுக்கவிதைச் சோதனையைச் செய்து பார்த்திருக்கிறார்கள் என்றுதான் சொல்லவும் வேண்டும். அகவலுக்கே ஒரு புதுவேகம் தந்து இசைக்கவி சுப்பிரமணிய பாரதியார், வசன கவிதை என்று பெயரைக் காட்டிக் குற்றம் சாட்டி ஒதுக்கிவிடச் சிலர் முயலுகிற முயற்சிகளை மேற்கொண்டு செய்து பார்த்தார் பாரதியார். கவிதை மரபை ஒடித்து வெளியேற வேண்டிய அவசியத்தை அவரும் உணர்ந்திருந்தார் என்பதற்கு அவருடைய வசன கவிதைகளே போதுமான சான்று. பாரதியாரைப் பின்பற்றி இரண்டொருவர் -முக்கியமாகக் காலஞ்சென்ற கு. ப. ராஜகோபாலன் - வசனகவிதை செய்து பார்த்தார்கள். புதுமைப்பித்தன் தன் கிண்டலுக்கும் கேலிக்கும் வாகனமாக, சித்தர் பாடல்களில் ஆதாரம் தேடிய ஒரு செய்யுள் உருவத்தைக் கையாண்டு பார்த்தார். எழுதியுள்ள அளவில் அவர் வெற்றிகண்டார் என்றே சொல்ல வேண்டும். மாகாவியம் என்றே அவருடைய கவிதை முயற்சி பாரதியாருக்குப் பிந்திய கவிதை முயற்சிகளிலே சிறந்தது என்பது என் அபிப்ராயம். ரகுநாதன் புதுமைப்பித்தனின் முயற்சியைப் பின்பற்றி சிறிதளவு வெற்றிபெற்றிருக்கிறார். நாட்டுப்புறத்தான் மெட்டிலே நாகரிகக் கவிதை செய்யப் பார்த்த, இன்றையப் புகழேந்தி கொத்தமங்கலம் சுப்பு. இவருடைய கவிதை முயற்சிகளும் ஓரளவுக்கு வெற்றிபெற்றன. இன்னும் சிலரும் புதுக்கவிதை முயற்சிகள் செய்திருக்க லாம். அவை என் கண்ணில் பட்டதில்லை என்பது அவர்கள் குற்றமாகாது. என் படிப்புக்கெட்டிய வரையில் இவைதான் புதுக்கவிதை நோக்கி இன்றுவரை செய்யப்பட்டிருக்கும் புது முயற்சிகள். நான் தமிழில் எழுத ஆரம்பிக்கத் தொடங்கிய நாட்களிலேயே, அதாவது இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னரே, தமிழில் புதுக்கவிதை பற்றிய சோதனைகளில் ஈடுபட்டு செய்து பார்க்க முற்பட்டதுண்டு. புதுமைப்பித்தன் நடத்திய மலர்களில் ஒன்றிரண்டில் என் கவிதைச் சோதனைகள் வெளியாகியும் இருக்கின்றன. ‘சூறாவளி’யிலும் ஏதோ கொஞ்சம் செய்து பார்த்தேன். ஆனால் தொடர்ந்து முறையாகச் செய்து பார்க்கவும் செய்து முடித்ததை வெளியிடவும் சமீபக்காலத்தில் ‘சரஸ்வதி’ மூலம்தான் முடிந்தது. ‘மயன்’ என்கிற புனைபெயரில் என் புதுக்கவிதை முயற்சிகள் சிலவற்றை வெளியிட்டு வந்திருக்கிறேன். இந்தக் கவிதை முயற்சிக்கு இலக்கணத்தை முன்கூட்டியே தீர்மானித்துவைத்துக்கொண்டு அவ்விலக்கணத்துக்கு ஒப்ப நான் கவிதை எழுதவில்லை. என் புதுக்கவிதைக்கு ஒரு இலக்கணம் உண்டானால் இலக்கணம் இருக்கத்தான் வேண்டும். ஏனென்றால் அதை இலக்கியமாக உணர்ந்தே நான் எழுத முற்படுகிறேன் - அதைப் பின்னர் நிர்ணயித்துக்கொள்ளலாம். இப்போது கவிதையில் நான் செய்ய முயற்சித்ததெல்லாம் விஷயத்தையும் வார்த்தைகளையும் உள்ளத்து உண்மையிலே குழைத்து, காதும் நாக்கும் சொல்லுகிற கட்டுபாடுகளுக்கும் கண் தருகிற கட்டுபாடுகளுக்கும், உட்பட்டு எழுதுவது என்கிற காரியம்தான் இன்றைய உண்மையை நிரந்தரமாக்குகிற காரியம்தான் என் முயற்சி. இன்றைய என் அனுபவத்தை வார்த்தைகளால், பேச்சு வழக்கு வார்த்தைகளால் பேசும் சத்தத்தில் இலக்கியமாக்க, கவிதையாக்க முயலுகிறேன். பயன் கழுதையா குதிரையா வசனமா கவிதையா இலக்கியமா பிதற்றலா என்று சிலர் கேலிசெய்பவர் இருக்கலாம். சோதனை என்று சொல்லும்போது இதற்கெல்லாம் பயப்பட்டுக் கட்டாது. இலக்கியச் சோதனைகள் பலவும் ஆரம்பத்தில் கேலிக்கிடமாகவேதான் காட்சியளித்தன. புதுக்கவிதை தோன்றுகிறதா என்பதுதான் தீர்மானமாக வேண்டிய விஷயம். தோன்றாவிட்டால் முயற்சியையே மறந்துவிடலாம். தோன்றிவிட்டால் நல்லதுதான். புதுத்தமிழ் இலக்கியம் மேலும் வளம்பெறும். என் புதுக்கவிதை முயற்சிகள் கவிதையாகவும் இலக்கணமாகவும் உருவெடுக்க, வாசகர்கள் ரசிகர்கள் உள்ளத்தில் எதிரொலித்துப் பலன் தரப் பல காலமாகலாம் என்பதையும் அறிந்தேதான் நான் இந்தக் கவிதைச் சோதனையைச் செய்து பார்க்கிறேன். நம்முடைய இன்றைய தினசரி வாழ்விலே இடம்பெறுகிற விஷயங்கள் எல்லாமே உவமைகள், உருவகங்கள், ஏக்கங்கள், ஆசைகள், வார்த்தைகள், மௌனம் எல்லாமே என் கவிதைக்கு விஷயம். வாழ்க்கை சிக்கல் நிறைந்ததாக இருப்பது போலவே என் கவிதையும் சிக்கலும் சிடுக்கும் நிரம்பியதாக இருக்க வேண்டும் என்பதே என் ஆசை. தெளிவு தொனிக்க வேண்டும். ஆனால் சிக்கல் விடுவிக்கக் கூடாததாகவும் இருக்க வேண்டும். கவிதை நயம் எது என்று எடுத்துச் சொல்லக் கூடாததாக இருக்க வேண்டும். புரியவில்லைபோல இருக்க வேண்டும். அதே சமயம் பூராவும் புரியாமலும் இருந்துவிடக் கூடாது. திரும்பத் திரும்பப் படித்துப் பார்க்க ஒரு தரம் படிப்பவருக்கும் ஒரு வேகம் ஒரு எதிரொலிக்கும் தன்மை, விடாப்பிடியாக உள்ளத்தைப் பிடித்துக்கொள்ளும் ஒரு குணம் இருக்க வேண்டும். இந்தப் புதுக்கவிதையிலே என்றுதான் எண்ணுகிறேன். இலக்கணம் என்று எதையும் சொல்லிக் கட்டுப்படுத்தப்படக் கூடாதது கவிதை - அது தூர விலகிப் போய்விட வேண்டும். பிறகு பார்த்துக்கொள்ளலாம். இலக்கண அமைதிகள் பற்றி சிருஷ்டி சமயத்திலே இலக்கணத்துக்கோ அதன் இடர்ப்பாடுகளுக்கோ இடமே கிடையாது. பொதுவாக ஒரு நான்கு விஷயங்கள் சொல்லலாம் - புதுக்கவிதைக்கும் பழங்கவிதைக்கும் பொதுவான விஷயங்கள் இவை. வார்த்தைச் சேர்க்கைகள் காதில் ஒருதரம் ஒலித்து, உள்ளத்தில் மீண்டும் எதிரொலி எழுப்புகிறதா என்பது முதல் கேள்வி. இரண்டாவதாக -எந்தக் காலத்திலுமே வாழ்க்கை எந்தக் காலத்து மனிதனுக்கும் சிக்கலானதாகத்தான் இருந்து வந்திருக்கிறது. அந்தந்தக் காலத்துக் கவிதை - நல்ல கவிதை -அந்தக் காலத்துச் சிக்கலை அப்படியே தருகிறது நமக்கு. அப்படி இன்றையப் புதுக்கவிதை இன்றைய வாழ்க்கைச் சிக்கல் தொனிக்க அமைந்திருக்கிறதா என்பது இரண்டாவது கேள்வி. இன்றைய வாழ்க்கைச் சிக்கலையும் புதிரையும் போலவே முதலில் புரியாததுபோல இருந்து படிக்கப் படிக்கப் புரியத் தொடங்குகிறதா என்பது மூன்றாவது கேள்வி. கடைசியாகக் கேட்டுக்கொள்ள வேண்டிய நான்காவது கேள்வி இது. நள்ளிரவில் விழித்துக்கொள்ளும்போது, இந்தக் கவிதையில் ஒரு அடியாவது திடுதிப்பென்று காரணகாரியமேயில்லாமல் மனசில் தானே தோன்றிப் புது அர்த்தம் தருகிற மாதிரி இருக்கிறதா? எந்தக் கவிதையைப் படித்துவிட்டு இந்த நான்கு கேள்விகளுக்கும் ஆம், ஆம், ஆம், ஆம் என்று பதிலளிக்க முடிகிறதோ, அந்தக் கவிதை நல்ல கவிதை - உயர்கவிதை என்று நாம் முடிவுகட்டிவிடலாம். சிலப்பதிகாரத்தில் இந்த அடிக்கு இன்னார் இன்ன உரை எழுதினார் என்பதோ கம்பராமாயணத்தில் எந்தப் பாடபேதம் சரியானது என்பதோ குறளில் இந்த வார்த்தைக்கு அன்று அந்த அர்த்தம், இன்று வேறு அர்த்தம் என்ன என்பதோ புலமைக்குச் சான்றாகலாம். கவிதையை ரசித்ததற்குச் சான்றாகாது. கவிதைக்கு உரை அவசியமே இல்லை; எந்தக் கவிதையையுமே அர்த்தப்படுத்திக்கொண்டாக வேண்டும் என்பதில்லை. அனுபவித்தால் போதுமானது. ஆம், ஆம், ஆம், ஆம் என்று மேலே குறிப்பிட்ட நான்கு கேள்விகளுக்கும் பதில் கூறிக் கொள்வதுதான் நல்ல கவிதை. ரசிகன் தன் கவிதை அனுபவத்துக்கு ஆதாரமாகக்கொள்ள வேண்டிய காரியம். ‘புதுக்கவிதை’ மட்டும்தான் புதுக்கவிதை என்பதில்லை. பழங்கவிதையும் இன்று நான் வாசித்து அனுபவிக்கும்போது புதுக்கவிதைதான். கவிதைக்கு, எல்லா நல்ல கவிதைக்குமே தன்னையே புதுப்பித்துக் கொள்ளும் சக்தி உண்டு என்பது எல்லா மொழி இலக்கியங்களிலுமே நிதரிசனமாகக் காணக்கிடக்கிற உண்மை. சிலப்பதிகாரம் அதன் காலத்தில் மட்டுமல்ல; இன்றும் புதுக்கவிதை தான். அத்தோடு ஒப்பிடக்கூடிய கவிதை இன்று தோன்ற வேண்டுமானால் புதுக்கவிதை முயற்சிகள் மிகமிக அவசியம். அவை வரவேற்றுப் பாராட்டப்பட வேண்டும். இலக்கியச் சோதனைகளில் எப்போதுமே வெற்றி தோல்விகள் பூரணமானவை. என் புதுக்கவிதை முயற்சி வெற்றிபெறும் என்றே நான் எண்ணிச் செய்கிறேன். சோதனைகளின் தன்மையே இதுதானே! செய்து, செய்து பார்க்க வேண்டும். அவ்வளவுதான். (சரஸ்வதி ஆண்டுமலர் 1959இல் வெளிவந்த கட்டுரை) முழுவதும் படிக்க 3 கருத்துகள் ஆனந்த விகடனில் “அழியாச் சுடர்கள்” வலையேற்றியது: Ramprasath | நேரம்: 7:00 AM | படம் உதவி : தமிழ் மகன் S.Senthilathiban முழுவதும் படிக்க 10 கருத்துகள் Feb 25, 2010 அக்ரகாரத்தில் பூனை – திலீப் குமார் வலையேற்றியது: Ramprasath | நேரம்: 10:08 PM | வகை: கதைகள், திலீப் குமார் திலீப் குமார் ”இந்த கிழட்டுமுண்டைக்கு ஒரு சாவு வர மாட்டேன் என்கிறது. இதோடு இது ஏழாவது தடவை!” பப்லிப் பாட்டி அசூயையுடன், தாழ்ந்த குரலில் குஜராத்தியில் கறுவினாள். சமையற்கட்டிலிருந்து வெளியே வந்த மதூரி பாய் பார்த்ததும் புரிந்துகொண்டாள். “குடித்துவிட்டுப் போய்விட்டதா, மறுபடியும்!” “பீடை, ஒரு நிமிஷம் இந்த வீட்டில் இப்படி அப்படி நகர முடிகிறதா”… என்ற பப்லிப் பாட்டி சட்டென்று, “அது சரி மகாராணி, திறந்த வீட்டில் பூனை நுழைந்ததுகூடத் தெரியாமல் அப்படி என்ன செய்துகொண்டிருந்தீர்களோ!” என்று தன் மருமகளைப் பார்த்து இலக்கணச் சுத்தமாக வக்கணை செய்தாள். கிழவிக்கு இதற்குப் பதில் சொல்ல வேண்டியதில்லை என்று மதூரிக்குத் தெரியும். ‘நான் பூஜை முடிப்பதற்குள் கடலை மாவு பிசைந்து முருங்கைக்காய் கறியைச் செய்து முடித்துவிடு’ என்று அவள்தான் சற்றுமுன் கூறியிருந்தாள். கடலை மாவு ‘கமகம’ என்று வறுபட்ட வாசனையைக் கிழவி மோப்பம் பிடிக்காமலா இருந்திருப்பாள். சமையலறைக் கதவருகே, தன் முக்காட்டை நழுவவிடாமல் இரு விரல்களாள் பிடித்தபடி, வழக்கமான கோணத்தில் வழக்கம்போல் அமைதியாக நின்றாள் மதூரி. “சரி, சரி என்ன பார்க்கிறாய், போ, இன்னொரு கிண்ணம் பால் எடுத்துக்கொண்டு வா!… இன்று நட்டூ வந்ததும் இந்தப் பூனைச் சனியனுக்கு ஏதாவது வழிசெய்ய வேண்டும்” என்றாள் பப்லிப் பாட்டி. பப்லிப் பாட்டி வீட்டில் சலசலப்புக் கேட்டதும், அந்த முதல் மாடி முற்றத்தில் ஜட்டி அலசிக்கொண்டிருந்த கோபால் பாயும், பாத்திரம் விளக்கிக்கொண்டிருந்த சாரதா பெஹ்னும் வந்து எட்டிப்பார்த்தார்கள். “கெட்டிக்காரப் பூனைதான்! நான் பார்க்கப்பார்க்க நொடியில் மாயமாக மறைந்துவிட்டதே” என்று தாடையில் கைவைத்து நாசூக்காய் அங்கலாய்த்தாள் சாரதா பெஹ்ன். பப்லிப் பாட்டி பதில் சொல்லாமல் பூஜை அலமாரிப் பக்கம் திரும்பினாள். தங்கசாலைத் தெருவில் ஏகாம்பரேஸ்வர் கோயிலுக்குப் பின்புறம் தெப்பக்குளத்தைச் சுற்றி ஏகாம்பரேஸ்வர் அக்ரஹாரம் ‘ப’ வடிவில் இருந்தது. பொதுவாக ஏகாம்பரேஸ்வரர் அக்ரஹாரத்தில் பூனைகளே நுழைவதில்லை. கடந்த ஐம்பது, அறுபது ஆண்டுகளில் அக்ரஹாரத்தில் ஒரு பூனைகூட நுழைந்ததில்லை என்றுதான் சொல்ல வேண்டும். அக்ரஹாரவாசிகளும் பூனைகளை அவ்வப்போது தங்கசாலைத் தெருவிலோ கோவிந்தப்ப நாயக்கன் தெருவிலோ அல்லது கொண்டித்தோப்பிலோதான் பார்க்க நேரிட்டது. ஏகாம்பரேஸ்வரர் அக்ரஹாரத்தில் பூனைகள் நுழையாததற்குச் சூழலியல் காரணங்கள் என்பதைவிடவும் தத்துவார்த்தக் காரணங்கள்தான் ஏதாவது இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. ஏனென்றால் அக்ரஹாரவாசிகளில் பெரும்பாலோர் புஷ்டி மார்க்கி வைஷ்ணவர்கள். தென்கலை வைஷ்ணவர்களுக்குப் பூனைகளின்மீது இருக்கக்கூடிய அபிமானம் புஷ்டி மார்க்கிகளிடம் இருக்க வேண்டிய கட்டாயம் கிடையாது. ‘பாலகிருஷ்ண’ பிரதானமான புஷ்டி பார்க்கத்திலும் பஷு பட்சிகளிடம் அன்பு என்ற உப கோட்பாடு இருப்பது வாஸ்தவம்தான். ஆனாலும், பாலித்தின் பைகளையும், சினிமாப் போஸ்டர்களையும் தின்று, கண்ட இடத்தில் சாணி போடும் மாடுகளுக்குத்தான் முக்கியத்துவம் அதிகம். கிருஷ்ண பரமாத்மனே ஒரு மாட்டுக்காரந்தானே! பூனைகளின் உள்ளுணர்வு இந்தப் பேருண்மையைச் செம்மையாக விளக்கிக்கொண்டிருந்தது போலும் — அஃதாவது சென்ற ஏப்ரல் மாதம்வரை. மே மாதம், மேற்கூறிய கிழட்டுப் பெட்டைப் பூனை எதேச்சையாக அக்ரஹாரத்தில் நுழைந்ததை யாரும் எதேச்சையாகக்கூடக் கவனிக்கவில்லை. அக்ரஹாரத்தின் 24 மத்தியவர்க்கக் குஜராத்திக் குடும்பங்கள் வாழும் 25-ஆம் எண் கட்டடத்தில், முதல் மாடியில் 9ஆம் எண் வீட்டின் முன்னறையில் பப்லிப் பாட்டி பூஜைக்குப் பால் எடுத்துவைத்துவிட்டு பாலகிருஷ்ணனுக்காக பீடா தயாரிக்க வெற்றிலையைக் கழுவ உட்கட்டுக்குச் சென்ற ஓரிரு நிமிடங்களில் துல்லியமாகப் பிரசன்னமாகி, தயக்கமின்றி உள்ளே புகுந்து ஒரு முழுக் கிண்ணப்பாலை நக்கித்தீர்த்துவிட்டு எதுவுமே நடக்காததுபோல் அது திரும்பிக்கொண்டிருந்தபோதுதான் முதல்முறையாகக் கண்ணில் பட்டது. பூனையைப் பார்த்ததும் பப்லிப் பாட்டிக்கு முதலில் கையும் ஓடவில்லை, காலும் ஓடவில்லை. “அரே… அரே… பிலாடி., பிலாடி. மதூ பிலாடி… மதூ பிலாடி.”(பிலாடி - பூனை மதூ - மதூரி) என்று சத்தமாக குஜராத்தியில் உளறினாள். சத்தம் கேட்ட பூனை திரும்பிப் பார்த்துச் சலனமின்றி ஓரிரு கணங்கள் நடுக்கூடத்தில் நின்று, பாட்டியைக் கண்ணுக்கு கண் பார்த்தது. பிறகு அலட்சியமாக நடந்து சென்றது. கதவருகே இருந்த மடிக்கோலைப் பாட்டி சட்டென்று எடுத்துப் பூனையை நோக்கித் தாறுமாறாக எறிந்தாள். பூனை லாவகமாக நகர்ந்து மறைந்தது. குழாயடியிலிருந்து ஈரக்கையுடன் ஓடிவந்த மதூரிக்குத் தன் மாமியாரின் கலவரமடைந்த முகத்தைப் பார்த்ததும் முதலில் சிரிப்புதான் வந்தது. ஆனால் சிரிக்கவில்லை அவள். பப்லிப் பாட்டி உதட்டை மடித்து ஆதங்கத்துடன் நின்று கொண்டிருந்தாள். “போனால் போகிறது விடுங்கள் பா, வாயில்லா ஜீவன்” என்ற மதூரியை, “ச்சீ வாயை மூடு, மலட்டுக் கழுதை” என்று வன்மத்துடன் இரைந்தாள். சிறுமைப்பட்டு நின்றாள் மதூரி. பப்லிப் பாட்டிக்கு பாரியான சரீரம். நரைதிட்டான சிறு கொண்டை. நீண்ட பெரிய மூக்கு. மெலிதான எஃகு பிரேம் போட்ட மூக்குக்கண்ணாடி. கழுத்தில் துளசிமாலை. செக்கச்செவேலென்று பழம்போல் இருப்பாள். அதிகாலையில் நான்கு மணிக்கு எழுந்து குளித்து, வெள்ளைப் புடவை அணிந்து, பாழும் நெற்றியோடு, ஐந்து கட்டடம் தள்ளியிருந்த ஹவேலிக்குச் (புஷ்டி மார்க்கிகளின் கோயில்) சென்றால் 10 மணிக்குத்தான் திரும்பிவருவாள். வந்தபின், தன் குடும்ப விக்ரஹங்களுக்கு விஸ்தாரமாகப் பூஜை செய்யத் துவங்குவாள். சமையலைறைக் கதவருகே இருக்கும் கண்ணாடிச் சட்டமிட்ட ஒரு தேக்கு அலமாரிமுன் உட்கார்ந்துகொள்வாள். அலமாரியைத் திறந்தால் சின்னச்சின்ன விக்ரஹங்கள் ஜரிகைத் துணி அணிவிக்கப்பட்டுக் குட்டிக்குட்டி மெத்தைகள்மேல் உட்கார்ந்திருக்கும். பாட்டி எல்லாவற்றையும் முறையாக வெளியே எடுப்பாள். ஜரிகை உடைகளைக் கழற்றிவிட்டு, விக்ரஹங்களுக்கு ஸ்நானம் செய்விப்பாள். வெல்வெட் துணியால் அவற்றைத் துடைத்து, பிறகு பெரிய பிஸ்கட் டப்பாவிலிந்து புதிய வஸ்திரங்களை எடுத்து நிதானமாக அணிவிப்பாள். பிரதான விக்ரஹமான பாலகிருஷ்ணனுக்குக் கட்டைவிரல் சுற்றளவில் ஒரு ஜரிகைத் தொப்பியும் இருக்கும். குங்குமப்பொட்டு வைத்து முடித்தபின் மீண்டும் அவற்றைக் குட்டிக்குட்டி மெத்தைகள் மேல் உட்காரவைப்பாள். பிறகு, அலமாரிக்குமுன் ஒரு பலகைமேல், ஒரு பெரிய தாம்பாளத்தில் அன்றைய உணவு வகைகள் எல்லாவற்றையு, சிறுசிறு கிண்ணங்களில் வட்டமாக அடுக்கிவைப்பாள். ஒரு கிண்ணத்தில் சின்னச்சின்ன பீடாக்கள்கூட இருக்கும். சற்றுக் கழித்து தீபாராதனை காட்டி, மணி அடித்து, ஜெய ஜெகதீஸ்வர ஹரே மெட்டில் ஒரு பஜனை பாடி அலமாரியை மூடிவிடுவாள். அதற்குப் பிறகுதான் பச்சைத் தண்ணீர்கூடக் குடிப்பாள். பப்லிப் பாட்டியை முன்னிட்டு ஏகாம்பரேஸ்வரர் அக்ரஹாரத்திற்க்கு அபார பிரக்யாதி ஏற்பட்டிருந்தது. ஆன்மீக விஷயங்களில் கரைகண்டவள் என்று பெயரெடுத்திருக்கிறாள். அதிலும் குறிப்பாகப் புஷ்டி மார்க்க நியம நிஷ்டைகளில் அவள் பேச்சுக்கு மறுபேச்சு கிடையாது. என்ன பிரச்சினைக்கு என்ன விரதம், என்ன பூஜைக்கு என்ன பலன், சிரார்த்தத்திர்ற்கு, திருமணத்துக்கு, வளைகாப்புக்கு, நவராத்திரிக்கு, நலங்குக்கு என்று எல்லா வைபவ விதிமுறைகளும், பரிகார உப விதிமுறைகளும் அவளுக்கு அத்துபடி. பாகவதத்தை தலைகீழாக ஒப்பிப்பாள். தத்துவ விசாரத்தில்கூட அதன் நுட்பமான எல்லைகள்வரை சென்று வாதிடுவாள். (சில வாரங்களுக்கு முன்பு, புஷ்டி பார்க்கம் குறித்து முனைவர் பட்ட ஆய்வுசெய்துகொண்டிருந்த ஒரு மாணவி பரோடாவிலிருந்து வந்து இவளுடன் பேசிக் தெளிந்துவிட்டுப் போனாள்.) ஒரு விசேஷத்திற்கு அவள் வந்திருக்கிறாள் என்றால் அங்கு மந்திரம் சொல்ல வந்திருக்கும் பிராமணர்கள்கூட உஷாராக இருப்பார்கள். பப்லிப் பாட்டி இவ்வளவு அருமை பெருமைகளுடன் திகழ்ந்து கொண்டிருந்தாலும் அவளது மாட்டுபெண்ணான மதூரி அவற்றைப் பிடிவாதமாக ஏற்க மறுத்தாள். மதூரியைப் பொறுத்தவரை “கிழவி லேசுபட்டவள் இல்லை” என்ற எண்ணமே இருந்தது. என்றாலும், தன் மாமியாரின் பூஜைக்கு இப்படி அடிக்கடி பங்கம் ஏற்படுவது குறித்து அவளுக்கும் வருத்தம்தான். சென்ற ஆறு முறையும் இப்படித்தான் நிகழ்ந்தது. விளக்குத் திரி எடுக்க, பருப்பு சாதம் பிசைய, பழங்கள் நறுக்க, தீப்பெட்டி எடுக்க என்று பப்லிப் பாட்டி உட்கட்டுக்குள் மறைந்த ஓரிடு நிமிடங்களில் சொல்லிவைத்தாற்போல் வந்து கண் இமைக்கும் நேரத்தில் காரியத்தை முடித்துவிட்டுப் போய்விடும் அந்தக் கில்லாடிப் பூனை. அன்று மாலை, பப்லிப் பாட்டியின் மகன் நட்டூ(என்கிற நட்வர்லால்) அலுவலகம் முடிந்து வீடு திரும்பியதும் அவனிடம் பாட்டி பூனையைப்பற்றிப் புகார்செய்தாள். “நட்டூ, நீ என்ன செய்வாயோ ஏது செய்வாயோ எனக்குத் தெரியாது. ஆனால் அந்தக் கிழட்டுப் பீடையை எப்படியாவது ஒழித்துக்கட்டிவிடு.” நட்டூ பார்ப்பதற்க்குத்தான் போலீஸ்காரன் போல் வாட்டசாட்டமாக இருப்பானே ஒழிய சரியான அசமாந்தம். சத்தம்போட்டு பேசக்கூடப் பயப்படுவான். செம்புதாள் தெருவில் ஒரு மார்வாடி வியாபாரிக்கு 2-ஆம் நம்பர் கணக்கு எழுதுகிறான். நட்டூ 1-ஆம் நம்பரில் ஆயிரமும் 2ம் நம்பரில் ஆயிரமும் சம்பளம் வாங்குகிறான். வம்புதும்பு, பீடி சிகரெட், சினிமா-டிராமா எதுவும் கிடையாது. அவன் உண்டு. அவன் வேலையுண்டு. அலுவலகம் விட்டு வீடு திரும்பியதும் உடைமாற்றி, டீ சாப்பிட்டுவிட்டு ஹவேலிக்குப் போய்விடுவான். இரவு எட்டு மணிக்கு மேல்தான் திரும்புவான். சனிக்கிழமை மட்டும் இரவு பத்து மணிக்கு பஜனைக்குப் போவான். குஜராத்தி வருஷப்பிறப்பு அன்று மதூரியை சினிமாவுக்கோ பீச்சுக்கோ அழைத்துச்செல்வான். “என்ன பா சொல்கிறாய்! பூனையைக் கொல்வது பாவமில்மையா?” என்று பதறினான் நட்டூ. ”அட உப்பில்லாதவனே, பூனையைக் கொல்லவா சொன்னேன். அந்தக் கழுதையை எங்காவது விரட்டிவிட்டு வா என்கிறேன். பூனையைக் கொல்வது பாவம் என்று எனக்குத் தெரியாதா…. பேசிகிறான் பார்.” ”எங்கேயென்று போய் விரட்டுவது, பா. விரட்டுவதற்கு முதலில் அது கண்ணில் பட்டால்தானே. எல்லாம் உன் அஜாக்கிரதையினால்தான். பூஜை பண்ணுகிறேன் என்று, ஊருக்கு முன்னால் பால் கிண்ணத்தை எடுத்து வந்து நடுக்கூடத்தில் வைத்துவிட வேண்டியது. அப்புறம், ஹாய் ஹாய் என்று அலற வேண்டியது.” (ஹாய்=அய்யோ) “போதும் போதும்”, ரொம்ப சமர்த்தாகாதே. பூஜை எப்படிப் பண்ணுவது என்று இனி நான் உன்னிடம்தான் கற்றுக்கொள்ள வேண்டும்போல் இருக்கிறது.” “சரி சரி, விடு. சூரியிடம் சொல்கிறேன். அவந்தான் இந்த மாதிரி வேலைக்கு லாய்க்கு.” “உன் மூளை பிசகித்தான்விட்டது! போயும் போயும் அந்த துஷ்டப் பயலா. அந்த அக்கிரமி பூனையை நிஜமாகவே கொன்றாலும் கொன்ருபோட்டுவிடுவான். ஜாக்கிரதை.” “நீ அதைப்பற்றிக் கவலைப்படாதே. எல்லாம் நான் பார்த்துக்கொள்கிறேன்” என்றான் நட்டூ தீர்மானமாக. சூரி - பப்லிப் பாட்டியின் தம்பி ரஞ்சித்சிங்கின் மூத்த மகன் சுரேந்திரன். வேலைவெட்டி இல்லாதவன். ‘பளிச்’சென்று உடைகள் அணிந்து நண்பர்கள் புடைசூழ, கல்கத்தா பீடாவை ஓயாமல் குதப்பிக்கொண்டு உற்சாகமாகத் திரிந்துகொண்டிருப்பான். குஜராத்தி மற்றும் தமிழ் மொழிகளின் எல்லாம் கெட்டவார்த்தைகளையும் சரளமாகப் பயன்படுத்துவான். கடவுளையும் பணக்காரர்களையும் அவனுக்குப் பிடிக்காது. ஆனால் அன்புக்குக் கட்டுப்பட்டவன். அக்ரஹாரத்தில் எல்லாத் தப்பு-தண்டாவுக்கும் அவன்தான் கட்டைப் பஞ்சாயத்து. ‘நீதிக்குப் பின்தான் சாதி’ என்ற அடிப்படையில் சில நாட்களுக்கு முன்பு, அக்ரஹாரத்திற்க்குப் பூ விற்க வந்த பெண்ணிடம் வம்புசெய்த ஒரு குஜராத்தி நடுவயதுக்காரர்களின் சைக்கிளைச் சேறும் பாசியும் படிந்த கோயில் தெப்பக்குளத்திற்குள் தூக்கிக் கடாசிவிட்டான். சமையலறையில் சப்பாத்திக்கு மாவு பிசைந்துகொண்டிருந்த மதூரிக்குத் தாயும் மகனும் பேசிக்கொண்டது காதில் விழுந்தது. அவள் அந்த வெள்ளைப் பூனையை நினைத்துக்கொண்டாள். அந்த வயதான பூனை முகம் தளர்ந்து, தோல் சுருங்கி, ரோமம் உதிர்ந்து சாகக் காத்திருக்கும் பாவனையில் பரிதவித்துக் காணப்படும். அது உற்றுப்பார்த்தபோது திடீரென்று ஏதாவது பேசத்துவங்கிவிடும் என்றுகூடத் தோன்றும் அவளுக்கு. பப்லிப் பாட்டி வீட்டில் இல்லாத சமயங்களில் அது முன்கதவருகே வந்து களைத்துப்போன குரலில் ‘மியாவ்’ என்று வாயைப் பிளந்து காட்டும். தவறாமல் ஒவ்வொரு முறையும் அதற்குப் பால் கொடுத்திருக்கிறாள் மதூரி. ஒரு வகையில் தனக்கும் அந்த பூனைக்கும் அதிக வித்தியாசமில்லை என்று நினைத்தாள். அந்தப் பூனைபோலவே தானும் பதுங்கிப் பதுங்கி வாழ்வதாகப் பட்டது. அந்தப் பூனைக்குக் குட்டிகள் இருக்குமா? நிச்சயம், அதன் பருவத்தில் அது ஓரிரு குட்டிகளையாவது ஈன்றிருக்கும். அல்லது ஒருவேளை அதுவும் தன்னைப்போல் மலடுதானா. அதன் நிராதரவான சின்ன வாழ்க்கையின் சின்ன சாகஸங்களைப்போல்தான் தன் வாழ்க்கையிலும் என்று நினைத்தாள் மதூரி. பூனைக்கு ஒரு கிண்ணம் பால் என்பது தனக்கு ஒரு புடவை அல்லது கடற்கரையில் ஒரு மாலை அல்லது ஒரு இந்திப் படம். அந்த பூனையைப் போலவே தானும் ஒரு நாள் முதிர்ந்து சிதைந்துவிடுவோம் என்று தோன்றியது. அந்த பூனையைப்போலவே தன்னையும் ஒரு நாள் தனிமை வாட்டும். அன்புக்கான சந்தர்ப்பம் வயோதிகத்தில் நிச்சயம் இருக்காது. செலுத்துவதற்காக மண்டியா கிடக்கிறது அன்பு. அப்படியானால் யாருடைய இதயத்தில். பப்லிப் பாட்டியின் இதயத்திலா. தன் கணவன் நட்டூவின் இதயத்திலா. எங்கே… எங்கே பதுங்கிக் கிடக்கிறது அன்பு என்ற அபத்தம். அந்த கிழட்டுப் பூனையின் பழுப்பு நிறக் கண்களிலா? பிசைந்த சப்பாத்தி மாவைத் திரட்டித் தட்டில் ஓங்கி அறைந்தாள் மதூரி. நட்டூவுக்குப் பூனை விஷயம் பெரியதாகப் படவில்லை. அவன் அதை உடனே மறந்துவிட்டான். ஹவேலியிலிருந்து திரும்பும்போது சூரியைப் பார்த்ததும்தான் ஞாபகம் வந்தது. ”மனே கயி தீத்துந்தே நட்டூ பாய்! சம்ஜோ தமாரு காம் தய் க்யூந்.”(என்னிடம் சொல்லிவிட்டீர்கள் அல்லவா, நட்டூ அண்ணா. உங்கள் காரியம் ஆகிவிட்டது என்று வைத்துக்கொள்ளுங்கள்.) சூரி உற்சாகமாகக் கூறினான். “நீங்கள் சொன்னால் அந்தப் பூனையை அக்ரஹாரத்தைவிட்டு என்ன, அமெரிக்காவிற்கேகூட ‘பாக்’ செய்யமாட்டேனா என்ன?” நட்டூ கலவரத்துடன், “அதெல்லாம் வேண்டாம். 25-ஆம் நம்பர் பக்கம் வராமல் செய்துவிடு. அது போதும்” என்றான். “டன், நட்டு அண்ணா டன்” என்று ஆங்கிலத்தில் உறுதி அளித்தான் சூரி. மறுநாள் காலை பாட்டியின் மாப்பிள்ளை ஹன்ஸ்ராஜ் வேலை விஷயமாகக் கொச்சியிலிருந்து வந்து இறங்கினார். அவர் எப்போதும் இப்படித்தான். சொல்லாமல்கொள்ளாமல் திடுதிப்பென்றுதான் வருவார். பப்லிப் பாட்டி தன் மாப்பிள்ளையை ரொம்பவும் உயர்வாகத்தான் மதித்தாள். அவரிடம் அவளுக்குப் பிடிக்காத விஷயம் அவர் பொடிப் போடுவார் என்பதுதான். ஹன்ஸ்ராஜூக்கு முப்பத்தெட்டு வயதுதான். பாகவதர் கிராப்போடு முகத்தை மறைக்கும் அடர்ந்த தாடி மீசையுடன் பேண்ட் போட்ட சாமியார்போல் இருந்தார். கல்யாணத்திற்குப் பிறகுதான் இப்படி ஆகிவிட்டார் என்று எல்லோரும் சொல்லிக்கொண்டார்கள். பப்லிப் பாட்டியின் மகள் நிம்மு, கல்யாணத்திற்கு முன் சாதாரணமாக இருந்தவள், கல்யாணம் ஆனவுடன் திடீரென்று உடல் பருக்க அரம்பித்துவிட்டாள். முதலில் ஏதோ கல்யாணமான சந்தோஷத்தில் தான் உடல் பருக்கிறது என்று நினைத்தார்கள். பிறகு, கொஞ்சம்கொஞ்சமாக அவ்ள் ரொம்பவும் குண்டாகிப்போனபோதுதான் அது எதோ வியாதி என்று தெரிந்தது. ஹன்ஸ்ராஜுக்குப் பூர்வீகச் சொத்தும் இருந்ததோடு அவரும் நிறையச் சம்பாதித்தார். தன் மனைவிக்காகப் பணத்தைத் தண்ணீராகச் செலவழித்தார். பயன் இல்லை. நிம்மு முப்பது வயதில் அசாத்திய குண்டாகிவிட்டாள். ஜாக்கட் தைக்க 2 1/4 மீட்டர் துணி தேவைப்பட்டது. ஆட்டோவில் அவள் ஒருத்திதான் உட்கார முடியும். பத்து அடி நடப்பதற்குள் மூச்சுவாங்கும். வீட்டில் கூட அவள் உட்கார்ந்தோ தவழ்ந்தோதான் காரியங்களைச் செய்வாள். அவளது உடல்வாகிற்கு அனுகூலமான வகையில் சமையல்கட்டையே மாற்று அமைத்திருந்தார். ஹன்ஸ்ராஜ். நிம்மு தன் பருமனைபற்றி அதிகம் கவலைப்படமாட்டாள். சிரிக்கச் சிரிக்க எல்லோரிடமும் அன்பு பாராட்டுவாள். அவளுடன் பத்து நிமிடம் பழக நேர்பவர்கள்கூட நெகிழ்ந்து துடித்துவிடுவார்கள். விருந்தினர்கள் வரும்போது, சமையலைறைக்குள் ஒரு சிறு குழந்தையைப்போல் தவழ்ந்து தவழ்ந்து காரியங்கள் செய்து உபசரிப்பாள். அதிகம்போனால் அவள் இன்னும் பத்து ஆண்டுகள்தான் உயிர்வாழ்வாள் என்று டாக்டர்கள் கூறிவிட்டார்கள். “நான் செத்தால் என்னைத் தூக்குவதற்குப் பதினாறு பேர் வரவேண்டும் என்று சொல்லி ‘கெக்கெ கெக்கெ’ என்று சத்தமாக சிரிப்பாள் நிம்மு. ஹன்ஸ்ராஜூக்கு தன் நிம்முமீது உயிர். ஹன்ஸ்ராஜ் தங்கியிருந்த ஒரு வாரமும் பூனை பப்லிப் பாட்டி வீட்டுப்பக்கம் வரவில்லை. மாப்பிள்ளைக்கு உபசரணை செய்யும் மும்மரத்தில் பாட்டிகூட அதை மறந்துவிட்டிருந்தாள். ஹன்ஸ்ராஜ் ஊருக்குக் கிளம்பும்போது நிம்முக்குப் பிடித்த பட்சணங்களை ஒரு பெரிய டப்பாவில் போட்டுக் கொடுத்தாள். “இந்தக் தீபாவளியிலிக்காவது நிம்முவை அழைத்துவர முடியுமா என்று பாருங்கள்,” என்றாள். “அவள் நிலைமைதான் உங்களுக்குத் தெரியுமே. அவள் வருவதென்றால் வேன் வைத்துத்தான் அழைத்துவர வேண்டும். அதற்கு நீங்களே பேசாமல் கொச்சிக்கு வந்து ஒரு வாரம் தங்கிவிட்டுப் போங்களேன். உங்களுக்கும் மாறுதலாக இருக்கும்.” ”என்ன மாறுதல் போங்கள். நீங்கள் சொன்னால் ஆகிவிட்டதா? நான் கிளம்பிவிட்டால் வீட்டை யார் பார்த்துக்கொள்வார்கள்? இவளுக்கு துப்பிக் கிடையாது. கவர்னர் பட்வாரிக்குக் கூட நேரம் கிடைத்துவிடும். எனக்கு எங்கே?” என்று மருகினாள் பாட்டி. வாசல் பக்கம் நட்டூவைப் பார்த்ததும், “சரி நீங்கள் கிளம்புங்கள். நட்டூ ரிக்‌ஷாக்கூடக் கூட்டிவந்துவிட்டான்.” வாசல்வரை வந்து வழியனுப்பிய பாட்டி, தன் மகளை நினைத்து, அந்த அழுகையை அடக்கிக்கொண்டாள். “போய்வருகிறேன் சகோதரி” என்று மதூரியைப் பார்த்துச் சொல்லிவிட்டுக் கிளம்பினார் ஹன்ஸ்ராஜ். பத்து நாட்கள் கழித்து தீடீரென்று ஒரு ஞாயிற்றுக்கிழமை காலை 25-ஆம் எண் கட்டடத்திற்குச் சூரி வந்தான் அந்த கிழட்டுப் பூனையுடன். பப்லிப் பாட்டு வீட்டுக் கதவருகே வந்ததும் குழந்தைகளும் பெரியவர்களும் அவனைச் சூழ்ந்துகொண்டார்கள். சூரியின் மடக்கிய இடது கைக்குள், அவன் மார்பில் தலைசாய்ந்து ஒரு குழந்தையைப்போல் ஒடுங்கிக்கொண்டிருந்தது பூனை. ”என்ன ஜாலம்டா இது! திருட்டுச் சனியன் உன்னிடம் இப்படிக் குழைகிறதே” என்று வியந்தாள் பப்லிப் பாட்டி. “அதுதான் சூரி! தெரிந்துகொள்ளுங்கள். இந்தப் பத்து நாட்களில் ஐந்து லிட்டர் பாலையும் எட்டு டபுள் ஆம்லெட்டுகளையும் விழுங்கியிருக்கிறது இது. பூனையை வசியம்செய்வது என்றால் சும்மாவா! கொண்டுபோய் விடுவதற்குமுன் உங்களிடம் காண்பித்துவிட்டுப் போகலாம் என்று வந்தேன். சொல்லுங்கள் அத்தை, எங்கே கொண்டுபோய் விடட்டும்…. திருவொற்றியூரிலா திருவான்மியூரிலா?” சூரி தன் வலது கையால் அதன் முதுகைத் தடவிக் கொடுக்கக் கொடுக்க, பூனை புதுப்பெண்போல் கூச்சத்துடன் நெளிந்து நெளிந்து காட்டியது. பூனையையே உற்றுப் பார்த்துக்கொண்டிருந்த பப்லிப் பாட்டி, ஏதோ தீர்மானித்தவள்போல், “டேய் சூரி, போய்விடாதே, இதோ வருகிறேன்” என்று உள்ளே சென்றாள். தன் மாப்பிள்ளை மறந்துவிட்டுச் சென்ற பொடி டப்பியைத் தேடினாள். அவசரமாகத் திரும்பி வாசலுக்கு வந்தாள். ரகசிய பாவத்துடன் கையசைத்துச் சூரியை அருகே வரச்சொன்னாள். பின் தாழ்ந்த குரலில் பூனையைத் தன்னருகே கொண்டுவரும்படி சொன்னாள். சூரி பூனையின் வயிற்றைப் பிடித்தபடி அதை பாட்டிக்குமுன் நீட்டினான். பாட்டி, சட்டென்று இடுப்பில் வைத்திருந்த மூடிய கையைப் பூனையின் முகத்தருகே கொண்டுவந்து, அதேநொடியில் உள்ளங்கையைத் திறந்து அதிலிருந்த மூக்குப்பொடி முழுவதையும் பூனையின் மூக்கில் வைத்து அழுத்தித் தேய்த்துவிட்டாள். மறுகணம், மின்சாரம் தாக்கியதுபோல் பூனை சூரியின் கைகளிலிருந்து எகிறி மல்லாக்கக் கீழே விழுந்தது. அதற்குப் பொறி கலங்கியிருக்க வேண்டும். பூனை எழுந்து நிற்க முனைந்ததும் மறுபடியும் எம்பித் தாறுமாறாக விழுந்தது. முற்றத்தின் குழாயடி, சாக்கடை, கழிவறைக் கதவு என்று மாறி மாறி மோதி விழுந்தது. அது எழுப்பிய வினோதமான குரல் பயங்கரமாக இருந்தது. ஒவ்வொரு முறையுமது சமாளித்து எழுந்து நடக்க யத்தனித்தபோது கால்கள் குழைந்து விழுந்தன. தன் சிறிய தலையை இப்படியும் அப்படியுமாகத் திருப்பிப் பரிதாபமாகத் தும்மித்தும்மி விழிந்தது. பப்லிப் பாட்டி கையை உதறினாள். பூனைக்குப்போக, எஞ்சியிருந்த மூக்குப்பொடி காற்றில் பறக்க, குழுமி இருந்தவர்கள் பலரும், சூரி உட்படத் தும்ம ஆரம்பித்தார்கள். தள்ளி நின்றுகொண்டிருந்த சில ஆண்களும் சிறுவர்களும் பூனை தும்மி விழுவதைப் பார்த்துக் குலுங்கிக்குலுங்கிச் சிரித்தார்கள். பூனை அந்த முதல் மாடி விளிம்பின் ஒற்றைக்கல் சுவரில் ஏறி, மீண்டும் தும்மி, சத்தத்துடன் கீழ்த்தளத்தில் விழுந்தது. பிறகு மெல்ல எழுந்து கட்டடத்தை விட்டு ஓடியது. சிரிந்துக்கொண்டிருந்தவர்களைப் பார்த்து மிக மிக ஆபாசமான ஒரு வசையைக் கத்திவிட்டுச் சூரி பூனையைத் தொடர்ந்து கீழே ஓடினான். திடீரென்று அங்கு ஒரு நிசப்தம் படர்ந்தது. ஒவ்வொருவராக எல்லோரும் கலைய ஆரம்பித்தார்கள். பாட்டி, வீட்டின் உட்புறம் திரும்பியதும், நடுக்கூடத்தில் மதூரி நின்றுக்கொண்டிருந்தாள். பாட்டி சட்டென்று தலைகுனிந்து முன்னே நகர்ந்து அவளைக் கடந்தாள். அன்று மாலை பாட்டியைப் பார்க்க யாரோ வந்தார்கள். பப்லிப் பாட்டி ஆரம்பித்தாள் : “புஷ்டி மார்க்கம் என்ன சொல்கிறதென்றால்……..” ******** இந்தச் சிறுகதை ‘க்ரியா பதிப்பகம்’ வெளியீடாக வந்த ‘கடவு’ என்ற திலீப்குமாரின் சிறுகதைத் தொகுதியில் இடம்பெற்றது. இந்தச் சிறுகதையின் ஆங்கில மொழிபெயர்ப்பு The Leeds University Journal-இல் 2005-ஆம் ஆண்டு வெளிவந்தது. முழுவதும் படிக்க 5 கருத்துகள் முதல் பிடில் - ந.பிச்சமூர்த்தி வலையேற்றியது: Ramprasath | நேரம்: 7:48 AM | வகை: கதைகள், ந.பிச்சமூர்த்தி ந.பிச்சமூர்த்தி நடு நிசி, ஒரு சின்னக்குரல் - குழந்தை கத்துவது போல, ஒரு நீண்ட எதிர் குரல் - சமாதானம் சொல்லுவது போல, சின்னக் குரல் பழுத்து வேதனை அடைந்தது. எதிர் குரல் ஏங்கிக் கனிந்து ஓலமாயிற்று. தெருவாசிகளின் தூக்கம் கலைந்தது. ஒவ்வொருவராக எழுந்து மாடியிலிருந்து இருளில் கூர்ந்து பார்த்தனர். முதலில் ஒருவர் கண்ணிலும் ஒன்றும் படவில்லை. அதனால் திகிலை விளைவிக்கும் அந்த ஓலம் மட்டும் நிதானமாய் போகப் போக உயர்ந்து கொண்டு போயிற்று. கடைசியில் அந்த குற்றவாளிகள் தட்டப்பட்டார்கள். இரு காதலர்கள்! ஒரு வீட்டின் கூரையின்மேல் உட்கார்ந்து காதலியைக் கூவி அழைத்துக் கொண்டிருந்தது ஆண் பூனை. நாலு அடி தூரத்தில் ஒரு ஜன்னலின் உட்புறத்திலிருந்து பெண் பூனை ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தது. அந்தக் காதலர்களுக்கு இனிப்பான அந்த சல்லாபம், தெருவாசிகளுக்கு கர்ண கொடூரமாய் இருந்தது. "சூ... சூ" என்று ஒருவர் மாத்தி ஒருவராக கத்தினார்கள். காதலுக்கு கண் மட்டுமல்ல, காது கூட கிடையாது போல் இருக்கிறது. பூனைகள் இருந்த இடத்தை விட்டு நகரவுமில்லை, காதல் தீ மூளப் பாடுவதை நிறுத்தவுமில்லை. நிமிஷத்திற்கு நிமிஷம் பாட்டு ஓங்கி, இரவின் நிசப்தத்தில் பயங்கரத்தின் பிரத்யக்ஷ உருவாயிற்று. வந்த ஆத்திரத்தில் தெருவாசி ஒருவர், எதையோ எடுத்து பூனையைப் பார்த்து விட்டெறிந்தார். அதற்குப் பிறகு எழுந்த குரல் ஒரு நீண்ட ஓலம் மாதிரியிருந்தது. அவ்வளவு தான், அப்புறம் ஆண்பூனையின் குரல் கேட்கவில்லை. மீளவும் நடுநிசியின் மோனம்... மறுநாள் காலை மாடியில் ஒரு ஆண் பூனை செத்துக் கிடந்தது. வீட்டுக்காரர் அதை தூக்கிக் கொல்லை மைதானத்தில் எறியச் சொன்னார். பூனையின் சவம் மெத்தென்ற பொருள்மீது வந்து விழுந்தது. "என்ன மேலே வந்து விழுகிறாய்" என்றது அந்த மெத்தென்ற பொருள். "கோபித்துக் கொள்ளாதே நான் வேண்டுமென்று செய்யவில்லை. பிசகு அந்த வீட்டு மனுஷன் மேலே" என்று சமாதானம் சொல்லிவிட்டு, பூனையின் உடல், மேலே கேட்டது. "அது போகட்டும், என்னைப் போல நீயும் ஏதாவது செய்துவிட்டு இந்த மாதிரி தண்டனை அடைந்திருக்கிறாயா என்ன - மைதானத்திலே ஈ மொய்த்துக் கிடக்கிறாயே?" அங்கே கிடந்தது செத்துப்போன பந்தயக் குதிரை ஒன்று. "என் எஜமான் ஒரு இந்தியன், பந்தயப் பித்து. எனக்கு முந்தி எத்தனையோ குதிரையை வாங்கி வளர்த்து, பந்தயம் ஓட்டியிருக்கிறான். ஆனால் அவனைப் பிடித்த துரதிருஷ்டம் ஒரு தடவை கூட ஜயிக்கவில்லை. ஜயம் தான் கிட்டவில்லையே, இந்த விஷயத்தை அடியோடு மறந்துவிடக் கூடாதா? அதுதான் இல்லை. கடைசித் தடவை என்று சபதம் கூறிக் கொண்டு தன் சொத்து முழுவதையும் விற்று என்னை வாங்கினான். எனக்காக அவ்வளவு கஷ்ட நஷ்டப்பட்ட மனிதனுக்கு நான் துரோகம் செய்யவில்லை. பந்தயத்தில் முதலாவதாகவே வந்து கொண்டிருந்தேன். ஜனங்களுடைய உற்சாகத்தையும் என் எஜமானருடைய கர்வத்தையும் வர்ணிக்கத்தரமல்ல. பந்தயம் முடியும் இடம் வந்தது. என்ன காரணத்தாலோ என் கால் தடுமாறி, கீழே விழுந்துவிட்டேன். முன்னங்கால் இரண்டும் என்னாயிற்றோ. எழுந்திருக்க முடியவில்லை. நான் கீழே விழுந்ததும் இரண்டாவதாக வந்து கொண்டிருந்த இரும்பு வர்ணக் குதிரை ஜயித்து வெற்றி மாலை சூடிற்று. என் எஜமானன் பந்தய வெறியன் அல்லவா? என் மீது பிறந்த வெறுப்பில் கைத்துப்பாக்கியால் அந்த இடத்திலேயே சுட்டுப் போட்டுவிட்டு திரும்பிப் பார்க்காமல் போய்விட்டான். அதுமுதல் அவனுக்குப் பித்துபிடித்து விட்டதாம். இந்த மைதானத்தில் என்னைத் தூக்கி எறிந்துவிட்டார்கள். ஒரு வாரமாக இங்கே கிடக்கிறேன் கேட்பாரற்று. இப்பொழுது நீ வந்து சேர்ந்திருக்கிறாய் தோழனாக" என்று சொல்லி நிறுத்திற்று குதிரையின் சவம். "அப்பொழுது சரிதான். என்னைக் கொன்றவன் மீது பழிவாங்க வேண்டுமென்று நினைத்துக் கொண்டேன். நீ சொல்வதைப் பார்த்தால் மனித ஜாதியையே பழிவாங்க வேண்டுமென்று தோன்றுகிறது - எப்படிப் பழிவாங்குவோம் சொல்லு" என்றது பூனை. "நான் பழிவாங்க யோசிக்க வேண்டாம். தானாக நடக்கும் பார்! மனிதன் மண் மீது இருக்குமட்டும் நம்மை மறக்க முடியாமல் ஆகிவிடும் பாரேன்." "எனக்கென்னவோ இதில் நம்பிக்கை இல்லை. வசவுக்கு வசவு, பிறாண்டலுக்கு பிறாண்டல், கொலைக்கு கொலை இது தான் நான் அறிந்த சட்டம்." "பின்னொரு சட்டமும் உண்டு. மரத்தை வெட்டுகிறார்களே, அதற்காக, கோடாலிக்காரனுக்கு நிழல் தர மாட்டேன் என்கிறதா?" "இதெல்லாம் மனிதன் சொல்லுகிற கட்டுக்கதை. எனக்குப் புரியாது. என் கருத்தை அப்பொழுதே சொல்லிவிட்டேன். பிறகு உன்னிஷ்டம். ஆனால் ஒன்று. நான் மாத்திரம் தனித்து நின்றால் என்ன செய்யமுடியும்? நீ சொல்கிறபடி கேட்கிறேன்." "வா வழிக்கு. நாம் இருவரும் மனம் ஒத்து சும்மா கிடந்தால் அதுவே பழி வாங்குவதற்கு மேல் பலனளிக்கும் பாரேன்..." இரண்டு மூன்று நாளைக்குப் பிறகு அந்த மைதானத்தின் வழியாக வந்தான் ஒரு பித்துக்குளி இந்தியன். வாய் ஓயாமல் குதிரைகளைப் பற்றி பாடிக்கொண்டிருந்தான். மைதானத்து ஓடத்தில் ஒரு பெரிய மரம் வளர்ந்திருந்தது. அதன் அடிபாகத்தில் போய் நின்று கொண்டு, குதிரைகளைப் பற்றி ஒரு ஆவர்த்தம் வைதுவிட்டு, ஒரு பத்து கஜம் விழுந்தடித்து ஓடினான். குதிரையின் சிதைந்த உடல் கண்ணில் தட்டுப்பட்டது. அதன் அடர்ந்த வெள்ளைவால் மயிர் அவன் கவனத்தை இழுத்தது. ஒரு பிடிமயிரை உருவி எடுத்துக்கொண்டு ஓடினான் பூனையண்டை. கம்பிகள் போல் இறைந்து கிடந்த நரம்புகள் தடுக்கிவிட்டன. அவற்றில் நாலைந்தைப் பொறுக்கி எடுத்துக் கொண்டான். நடு வழியிலே, பொன்வர்ணத்தில் ஒரு பிரம்பு கிடைத்தது. அதை எடுத்து குதிரை வால் மயிரால் நடுவில் கட்டினான். நான்கு கஜத்திற்கப்பால் ஒரு காய்ந்த மரமொன்றிருந்தது. அதனடிப்பாகத்தில் ஒரு பொந்து. அங்கு போய் உட்கார்ந்தான். கை விஷமம் செய்ய ஆரம்பித்தது. கையிலிருந்த நரம்பை எடுத்து பொந்தின் வாயில் நெடுக்காகக் கட்டினான். வில்லை எடுத்துக் குறுக்காக இரண்டு தரம் இழுத்தான். சுத்தமான ஸ்வரங்கள் எழுந்தன. அனாயாசமாக பிறந்தது ஒரு புதிய சங்கீத வாத்யம். அது தான் முதல் பிடில்! ***************** முழுவதும் படிக்க 0 கருத்துகள் Feb 24, 2010 கவிதை - புதுமைப்பித்தன் வலையேற்றியது: Ramprasath | நேரம்: 11:37 PM | வகை: கட்டுரை, புதுமைப்பித்தன் புதுமைப்பித்தன் கவிதை, கவிதை என்று சொல்லுகிறார்களே அதைப் பற்றி எழுத வேண்டும் என்று எனக்கு வெகு நாளாக ஆசை. இன்றைக்குத்தான் முடிந்தது. 'பேனா எங்கேயடா ? அடே ராசா நீ யெடுத்தையா ? குரங்குகளா ஒன்றை மேஜை மேல் வைக்க விடாதீர்கள். அது பேனாவாகவா இருக்கிறது ? இருந்தாலும், இந்தக் குழந்தைகள் இருக்கிறதே, சனியன்கள். மழலையாம், குழலாம், யாழாம்! அதைவிட ஒரு ஓட்டை கிராமபோனை வைத்துக்கொண்டு காதைத் துளைத்துக் கொள்ளலாம் '. குழந்தைகளால் என்ன பிரயோஜனம் ? சுத்தத் தமிழ் பேசத் தெரியுமா ? அவைகளுக்குத்தான் என்ன ஒரு கூட்டத்திலே பழகத் தெரியுமா ? இன்னும் அழாமல் இருக்கத் தெரியுமா ? எங்கள் வீட்டு ராஜாவைப் பற்றிச் சொல்லவா ? சோற்றுக்குத் தாளம் போட்டாலும், வீட்டுக்கொரு ராஜாவிற்குக் குறைவில்லை. அதில் மட்டும், பாரதி சொன்னதிற்கு ஒரு படி மேலாகவே யிருக்கிறோம். எல்லாரும் இன்னாட்டு மன்னர்களின் தகப்பன்மார்! எங்கள் வீட்டு ராஜா இருக்கிறானே அவன் பேச்செல்லாம் பாட்டு; பாட்டெல்லாம் அழுகை. அதுதான் கிடக்கிறது. அவனிடத்தில் என்ன அதிசயம் இருக்கிறது ? அவனுக்கு இருக்கும் அசட்டுத்தனத்திற்கு என்ன சொல்லுகிறது ? என்னுடைய கைத்தடியை எடுத்துக் கொண்டான், அதுதான் அவனுக்குக் குதிரையாம்! குதிரைக்கும் தடிக்கம்பிற்கும் வித்தியாசம் தெரியாத அசட்டைப் பார்த்து யாரால் உத்ஸாகப்பட முடியும் ? அதற்கும் ஒரு பிரகிருதி இருக்கிறது. அதுதான் அவன் தாயார். குதிரை மட்டுமா ? காராக மாறுகிறது, மோட்டார் சைக்கிள், இரட்டை மாட்டு வண்டி, இன்னும் என்ன வேண்டும் ? அதுதான் கிடக்கிறது தமிழைத் தமிழாகப் பேசத் தெரிகிறதா ? இலக்கணம் தெரியுமா ? தொல்காப்பியம் படித்திருக்கிறதா ? இந்தக் குழந்தைகளினால் என்ன பிரயோஜனம் ? உங்களுக்குத் தெரியுமா அவைகளினால் என்ன பிரயோஜனம் ? ... ஓஹோ ? கவிதையா ? இன்னொரு தடவை பார்த்துக் கொள்ளலாம். (நன்றி : புதுமைப்பித்தன் கட்டுரைகள் - மீனாட்சி புத்தக நிலையம், மதுரை - பிப்ரவரி, 1954) *** முழுவதும் படிக்க 0 கருத்துகள் Feb 23, 2010 சுந்தர ராமசாமி - நேர்காணல் வலையேற்றியது: Ramprasath | நேரம்: 10:09 PM | வகை: சுந்தர ராமசாமி, நேர்காணல் நீங்கள் எழுத்தாளனாய் வாழ்வைத் தொடங்கி, இத்தனை காலம் எழுத்து வாழ்வில் பயணம் செய்து நிறைய அனுபவங்களைப் பெற்ற பின்பும் இன்று உங்கள் எழுத்து வாழ்வை எப்படிப் பார்க்கிறீர்கள்? நான் எழுதத் தொடங்கிய பின் ஐம்பது வருடங்கள் ஓடிவிட்டன. கனவுபோல் நழுவி விட்டிருக்கிறது காலம். எப்போதும் என் எழுத்து வாழ்க்கை சீராகவோ ஒழுங்காகவோ இருந்தது என்று சொல்ல முடியாது. நிறைய மேடு பள்ளங்கள். தத்தளிப்புகள். அவதூறுகளை மௌனத்தைக் கடைப்பிடித்து எதிர்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம். அவமானம். இவையெல்லாம் இருந்திருக்கின்றன. சூழல் கழுத்தை நெரித்தபோது ஒருசில வருடங்கள் எழுதாமலும் இருந்திருக்கிறேன். எழுத்தை விட்டு விடுவோமா என்றும் யோசித்திருக்கிறேன். பிழைப்புக்கான வேலை நிர்ப்பந்தங்கள் எழுத்துக்கான நேரத்தை ஒழித்துக் கட்டிவிட்ட காலமும் உண்டு. எழுத்தைக் குறைந்த பட்ச வாசகர்களிடம்கூடக் கொண்டு போக முடியாத திணறல் தொடர்ந்து இருந்து வந்திருக்கிறது. என் எழுத்துகள் பலவும் ஐநூறு அல்லது ஆயிரம் பிரதிகள் அச்சேற்றப்படும் சிற்றிதழ்களில்தான் வெளிவந்தன. இப்போது நிலைமையில் சில மாற்றங்கள். முழு நேரமும் எழுத்து அல்லது வாசிப்புத்தான். வேறு பொறுப்புகள் இல்லை. மன ஆரோக்கியம், உடல் ஆரோக்கியம் முன்னைவிடவும் எவ்வளவோ மேல். வயது ஆக ஆக ஆரோக்கியம் கூடிக்கொண்டே போகிறது. ஆகச் சிறிய வயதில்தான் ஆக மோசமான நோயாளியாக இருந்தேன். எதிர்மறையான விமர்சனங்களையும் அவற்றின் சூட்சுமம் பார்த்துத் தரம் பிரிக்கக் கற்றுக் கொண்டு விட்டேன். எழுத்தாளர்களின் தலைநகரமான சென்னையிலிருந்து வெகு தொலைவில் ஒரு வித்தியாசமான பின்னணியில் வாழ்ந்து வருவதால் இலக்கிய அரசியலின் சூட்சுமங்களை வெகுவாகப் பிந்தித்தான் புரிந்துகொண்டேன். ஒவ்வொன்றையும் அதனதன் இடத்தில் வைத்துப் பார்க்க இப்போது கற்றுக்கொண்டு விட்டேன். மிகுந்த நம்பிக்கையுடன், நிறையச் செய்ய வேண்டும் என்ற ஆசையுடன் இருக்கிறேன். ஆசைகள் நிறைவேற சூழலின் ஒத்துழைப்பும் வேண்டும். நீங்கள் எழுத ஆரம்பித்த காலத்தில் இருந்த தமிழ்ச் சூழலுக்கும் பின்வந்த காலங்களில், தமிழ்ச் சூழல் அதை எதிர்கொண்ட சவால்களையும் முகம் கொடுத்து முன் சென்றிருக்கிறது என்று நம்புகிறீர்களா? மாற்றங்கள் சிறுகச் சிறுக நிகழ்ந்துகொண்டிருக்கின்றன. பெரிய பாய்ச்சல் என்று சொல்ல முடியாது. தமிழ் இனி 2000 இலக்கிய அரங்கில்கூட நீங்கள் கவனித்திருக்கலாம். யுவன் சந்திரசேகர் என்ற கவிஞர் கவிதை பற்றிய அவரது ‘விசேஷத் தத்துவத்தைப்’ பேசும்போதுகூட இருநூறு, முன்னூறு பேர் அதைக் கேட்கிறார்கள். என் சிறுவயதில் ம. பொ. சி., ஜீவா, அண்ணா போன்றவர்கள் இலக்கியத்தை அரசியலுடன் கலந்து பேசும்போதுதான் இவ்வளவு கூட்டத்தைப் பார்த்திருக்கிறேன். ஆழமான, கடினமான இலக்கியக் கட்டுரைகளின் ஜெராக்ஸ் பிரதிகளைப் பெறத்தான் ஒரே கூட்டம். எதற்கெடுத்தாலும் புரியவில்லை என்ற பேச்சு குறைந்து கடினமான விஷயங்களையும் அதிக உழைப்பைச் செலுத்திப் புரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆவல் தலைதூக்கி இருக்கிறது. நவீனத்துவத்திற்குப் பிந்திய இலக்கியப் போக்குகளைப் பற்றிய பேச்சு - அமைப்பியல், பின்னமைப்பியல், பின்நவீனத்துவம், தலித்தியம், பெண்ணியம் போன்றவை - இந்திய மொழிகளிலேயே தமிழில் அதிகமாக இருக்கலாம். அல்லது அதிகமாக இருக்கும் மொழிகளில் தமிழும் ஒன்றாக இருக்கலாம். ‘பிச்சமூர்த்தியின் கலை - மரபும் மனித நேயமும்’ என்ற படைப்பு, படைப்பாளியின் ஆளுமை பற்றிய மிகவும் குறிப்பிடத்தக்க ஆய்வு ஒன்றைத் தந்தவர் நீங்கள். இப்போது புதுமைப்பித்தனின் சிறுகதைகளைத் தொகுத்து மிகவும் கனதியான தொகுப்பொன்றை வெளிக்கொண்டு வந்துள்ளீர்கள். தமிழ்ச் சூழலில் இவ்விரு ஆளுமைகளின் தேர்வுக்கான காரணம் என்ன? புதுமைப்பித்தனின் படைப்புகளைச் சிறப்பாகப் பதிப்பித்திருப்பவர் ஆ. இரா. வேங்கடாசலபதி. நான் அதற்கு முன்னுரை மட்டுமே எழுதியிருக்கிறேன். புதுமைப்பித்தன் சிறுவயதிலேயே என்னை ஆட்கொண்டவர். இதைப் பற்றிப் பல பேட்டிகளிலும் கட்டுரைகளிலும் குறிப்பிட்டிருக்கிறேன். அவரது கதையான மகாமசானத்தைப் படித்தபோது அது தந்த எதார்த்த உணர்வு மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் என்னைப் பாதித்தது. மிகுந்த கிளர்ச்சி அடைந்தேன். எதார்த்தத்திற்கும் மொழிக்குமான உறவில் கூடிவந்த அழகியல் தந்த கிளர்ச்சி அது. ரொமான்டிசிஸத்துக்கு எதிரான ஒரு மனோபாவம் சிறுவயதிலிருந்து தொடர்ந்து எனக்கு இருந்து வருகிறது. தமிழ்ச் சூழலின் வகைமாதிரிகளைப் புதுமைப்பித்தன்போல் பதிவு செய்தவர் எவரும் இல்லை. இந்த வகைமாதிரிகளின் வீச்சும் விரிவும் எனக்கு மிக முக்கியமானவை. மேலேயிருந்து கீழே இருப்பவர்கள் வரையிலும் மேன்மைகளிலிருந்து தாழ்வுகள் வரையிலும் இலக்கியப் படைப்புக்கு உகந்த விஷயம் என்பதை அவர்தான் நிரூபித்தார். பகுதிகள் என்றில்லாமல் மொத்த வாழ்க்கையையும் முக்கியத்துவப்படுத்தினார். அவர் படைப்புகளில், ‘வாழ்க்கையை நேரடியாகப் பார்’ என்ற செய்தி இருக்கிறது. இந்தச் செய்தியும் எனக்கு முக்கியமானது. தமிழ்ச் சமூகத்தின் தாழ்வு கனவும் கற்பனையும் சார்ந்த பார்வை. நீண்ட கவிதை மரபின் பின்விளைவு இது. சமயம், புராணம் ஆகியவையும் இவற்றில் கலந்து கிடக்கின்றன. தமிழர்களின் ரொமான்டிக் மனோபாவத்தைத்தான் சகல வணிகச் சக்திகளும் - இதழ்கள், திரைப்படங்கள், அரசியல்வாதிகள், சமயத் தலைவர்கள், தொலைக்காட்சி - சுரண்டிக்கொண்டிருக்கின்றன. மொழி உருவாக்கும் ரொமான்டிசிஸம்தான் எல்லாவற்றிற்கும் அடிப்படை. புதுமைப்பித்தனின் பார்வை இன்றையத் தேவை என்று நான் நம்புகிறேன். எழுத்தாளர்கள் தங்கள் அறச் சாரங்களை இழந்துகொண்டிருக்கிறார்கள். குறுக்கு வழியில் வெற்றி என்பதுதான் இன்றைய ஸ்லோகம். புகழ் ஒளியில் சதா இருந்துகொண்டிருக்க வேண்டும். பரிசுகள் வந்து சேருபவை அல்ல; வாங்கப்படுபவை. அரசியல் சமரசங்களின் மூலம்தான் எழுத்தாளன் நிகழ்கால வெற்றிகளைப் பெற முடியும். இவ்வகையான சிந்தனைகள் தலைவிரித்தாடுகின்றன. இவற்றிற்கு நேர் எதிரான மன நிலையில் வாழ்ந்தவர் ந. பிச்சமூர்த்தி. அவரிடமிருந்த கல்ச்சர் ஒரு தமிழ் எழுத்தாளனுக்கு இன்று அவசரத் தேவையாக இருக்கிறது. தாழ்ந்து போவது அல்ல; தன்மானத்தை விட்டுக் கொடுக்காத பிடிவாதம்தான் எழுத்தாளனுக்குத் தேவை. போராட்டம்தான் அவன் வழியே தவிர சமரசம் அல்ல. கனமான புத்தகங்களைத் தொடர்ந்து படித்துக்கொண்டிருந்தவர் பிச்சமூர்த்தி. ஆனால் அவர் தன் வாசிப்பை விளம்பரப்படுத்திக் கொள்ளவேயில்லை. தான் எழுதியுள்ள படைப்புகளை முன்னிலைப்படுத்த தானே உழைப்பது எழுத்தாளனுக்கு அவமானம் என்று அவர் நம்பினார். நாளிதழ்களில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது உடன் பணிபுரிபவர்களுக்குக்கூட அவர் ஒரு கவிஞர் என்பது தெரியாது. இன்றையச் சூழலைக் கணக்கிலெடுத்துப் பார்க்கும்போது பிச்சமூர்த்தியைப் போன்ற ஒரு கலைஞர் வெகு சமீபத்தில் தமிழகத்தில் வாழ்ந்திருந்தார் என்பதை நம்பவே கஷ்டமாக இருக்கிறது. அவருடன் உறவு கொண்ருந்தவர்கள் எல்லோரும் மிகவும் சாதாரணமானவர்கள். பண்டாரங்கள், பைராகிகள், கைரேகை பார்ப்பவர்கள், ஜோசியர்கள், அரைகுறை வைத்தியர்கள், பிச்சையெடுப்பதற்காகத் துறவறம் பூண்டவர்கள், கோயில், குளம், மண்டபங்களில் உட்கார்ந்து தங்கள் வாழ்நாளைக் கழித்தவர்கள், சிறு பொருட்களை விற்பனை செய்யும் வியாபாரிகள். மரபுக் கவிதைக்கும் புதுக்கவிதைக்குமான பாலத்தை நிர்மாணித்தவர் அவர்தான். அலட்டிக்கொள்ளாமல் அதை லெகுவாகச் செய்தார். இன்று எனக்கு அவர் கவிதைகளில் பெரிய ஈடுபாடு இல்லை. ஆனால் குறிப்பிட்ட காலத்தில் அவர் ஆற்றிய பங்கு முக்கியமானது. சிறுகதை ஆசிரியர்களில் இன்றும் அவருக்கு மிக முக்கியமான இடம் உண்டு. உங்கள் படைப்பு வாழ்வில் நீங்கள் கவிதை, சிறுகதை, நாவல், உரைநடை, மொழிபெயர்ப்பு போன்றவைகளில் காலூன்றி நின்றிருக்கிறீர்கள். இவற்றில் உங்கள் சிந்தனையை மிகத் தெளிவாக வெளிப்படுத்த ஏற்ற உலகமாக எதை அதிகமாகக் கருதுகிறீர்கள்? முதலில் சிறுகதைகளை எழுதத் தொடங்கினேன். அப்போது வேறு இலக்கிய உருவம் எதுவும் சாத்தியம் என்ற நம்பிக்கை இருக்கவில்லை. அப்பா என்னை உதவாக்கரை என்று நினைத்தார். அதை நியாயமான மதிப்பீடு என்றுதான் சொல்வேன். இலக்கியத்தில் ஒன்றைச் சாதித்து, வெளி உலகத்தில் என்னை ஏற்றுக்கொள்ளும்படி செய்து, அப்பாவைத் தோற்கடிக்க வேண்டும் என்று ந¤னைத்துத்தான் சிறுகதைகள் எழுத ஆரம்பித்தேன். இடதுசாரி இயக்கத் தொடர்பும் அவர்களுடைய தத்துவங்களில் நான் கொண்டிருந்த நம்பிக்கையும் படைப்புக்கு ஒரு சமூக நியாயத்தை உருவாக்கித் தந்திருந்தன. அதன் பின் ‘ஒரு புளியமரத்தின் கதை’ நாவலை எழுதினேன். க. நா. சு. வின் தூண்டுதலால்தான் கட்டுரைகளும் கவிதைகளும் எழுதத் தொடங்கினேன். இலக்கிய உருவங்கள் சார்ந்த நம்பிக்கைகள் எனக்கு முக்கியமானவை. ஒரு உருவத்தை மற்றொரு உருவத்துடன் பொறுப்பின்றிக் குழப்பியடிப் பதில் விருப்பமில்லை. ஒவ்வொரு உருவத்திற்கும் ஒரு நோக்கம் இருக்கிறது. அழுத்தம் இருக்கிறது. ஒரு முன்னுரிமை இருக்கிறது. ஆனால் எந்த உருவத்தில் அதிக நம்பிக்கை என்று கேட்டால் என் குறிக்கோள் சார்ந்து எல்லா உருவங்களிலும் என்றுதான் சொல்வேன். தெரிந்தோ தெரியாமலோ நோக்கம் அல்லது விஷயம்தான் உருவத்தைத் தேர்ந்தெடுக்கிறது. இருப்பினும் வாழ்வின் புதிர்களை ஆராய நாவல் தரும் வசதியைப் பிற உருவங்கள் தராததால் நாவல்மீது தனியான மரியாதை வைத்திருக்கிறேன். தமிழில் நீண்டகாலமாக ஒரு எதார்த்தவாதப் பண்பு இருந்து வந்திருக்கிறது. ஆனால் இப்போது இந்த எதார்த்தவாதப் பண்பு தொடர்பான கேள்விகள் எழுப்பப்படுகின்றன. தமிழில் ஒரு எழுத்தாளன் தான் நினைத்ததை முற்று முழுதாக எழுதவுமில்லை, சொல்லவுமில்லை என்கிறார்கள். இந்த எதார்த்தவாதம் என்பது ஒரு தேர்வுக்கு உட்பட்ட அல்லது சமூக மனோபாவத்தை ஏற்று சுத்திகரிக்கப்பட்ட இலக்கிய முயற்சிகள்தானா? படைப்பில் புறத்தைப் பற்றிய பேச்சு எல்லாம் அகத்தை ஊடுருவத்தான். தோற்றம் சாரத்துக்கு இட்டுச் செல்ல வேண்டும். எதார்த்தவாதம் என்பது ஒரு தளத்தின் பொதுப்பெயரே தவிர ஒரு படைப்பின் குணத்தைத் தீர்மான¤க்கக்கூடியது அல்ல. ஒரு எதார்த்தத்தளத்தைச் சேர்ந்த ஒரு எழுத்து நம்மை ஆட்கொள்ளும்போது அதே தளத்தைச் சேர்ந்த மற்றொன்று மிகுந்த சலிப்பைத் தருகிறது. ஊடுருவல்தான் முக்கியம். எதார்த்தத்தளம் சார்ந்த ஊடுருவல் தமிழ் வாழ்வின் ஸ்திதிக்கு இன்று பொருந்தி வருகிறது. அதன்மீதான என் விருப்பம் தமிழ் வாழ்வைக் கடுமையாகப் பாதிக்க வேண்டும் என்ற குறிக்கோள் சார்ந்தது. தமிழில் எதார்த்தவாதிகள் எவரும் அதையே பிடித்துத் தொங்கிக்கொண்டிருக்கவும் இல்லை. ‘ஆறில் ஒரு பங்கு’, ‘சின்னச் சங்கரன்’ போன்ற கதைகளை எழுதிய பாரதிதான் ‘ஞானரத’த்தையும் எழுதியிருக்கிறான். ‘பொன்னகரம்’, ‘கவந்தனும் காமனும்’ போன்ற கதைகளை எழுதிய புதுமைப்பித்தன் தான் ‘ஞானக்குகை’, ‘பிரம்மராக்ஷஸ்’ போன்றவற்றையும் படைத்திருக்கிறான். கு. ப. ரா., ந. பிச்சமூர்த்தி போன்றவர்களும் எதார்த்தவாதத்தைத் தாண்டிப் பல கதைகளை எழுதியிருக்கிறார்கள். மௌனி எதார்த்தவாதத்துக்குள் நுழையவே இல்லை. எதார்த்தம் தாண்டிய படைப்பு நம்பிக்கைகளைப் புதிய கண்டுபிடிப்புகள்போல் இப்போது சிலர் பேசுவது உண்மை அல்ல. என் ‘பல்லக்குத் தூக்கிகள்’ தொகுப்புகூட எதார்த்தவாதக் கதைகளைச் சேர்ந்தது அல்ல. இப்போதைய என் கதைத் தொகுப்பின் தலைப்பான ‘காகங்கள்’ கதையையும் ஒரு எதார்த்தவாதக் கதை என்று சொல்ல முடியாது. இவையெல்லாம் மேல்நாட்டுத் தத்துவங்களைப் படித்துவிட்டுப் போலி செய்தவையும் அல்ல. இந்திய மரபில் இல்லாத மாந்த்ரீக எதார்த்தம் வேறு எந்தத் தேசத்திலும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. எதார்த்தவாதத்தின் பாதிப்பைப் பெற்ற ஒரு மூளையால்தான் அமைப்பியல்வாதம், பின்னமைப்பியல் வாதம், பின்நவீனத்துவம் போன்ற தத்துவங்களைச் சரிவரப் புரிந்துகொள்ள முடியும் என்று நான் நம்புகிறேன். எதார்த்தவாதம் வழியாகத்தான் நீங்கள் அவற்றைத் தாண்டிச் செல்லும் தத்துவங்களுக்கும் போக வேண்டும். நம் வாழ்வின் ஸ்திதியைக் கணக்கில் எடுத்துக்கொள்ளாத, மிகச் சிக்கலான தத்துவங்களைப் பேசுவதன் மூலம் பேசுபவர்களுக்கு உபயோகப்படும் அதிகார மையங்களை உருவாக்கலாம். தமிழ் வாழ்க்கையில் எந்தப் பாதிப்பையும் நிகழ்த்த முடியாது. தமிழ்ச் சூழலில் அரசியல் சார்ந்த இன்டெலச்சுவல் வர்க்கத்தின் அதிகபட்ச எல்லை பாரதிதாசன். புதுமைப் பித்தன் இன்றும் அவர்களுக்கு ஒரு புதிர். இவையெல்லாம் தமிழ் எதார்த்தங்கள். புதிய சிந்தனை களின் அறிமுகங்களை நான் வரவேற்கிறேன். அந்தச் சிந்தனைகளை நாம் அறிந்துகொள்ள வேண்டும். அவற்றின் பாதிப்பையும் பெற வேண்டும். அந்தச் சிந்தனைகளுக்கு முற்பட்டவை யெல்லாம் காலாவதியாகிவிட்டன என்ற பாவனை உண்மையில்லை. ஆசிரியர் ‘இறந்துவிட்டார்’ என்று கூறுகிறவர்கள் ஆசிரியருக்கு மட்டுமே முக்கியத்துவம் தரும் விமர்சனங்களைத்தான் இப்போதும் உருவாக்கிக்கொண்டிருக்கிறார்கள். படைப்பாளி அதீத முக்கியத்துவம் பெற்று வருகிறான் என்றுகூடச் சொல்லலாம். எல்லாப் பிரதியும் ஒன்று என்று சொன்னவர்கள் பாரதியைப் பற்றியும் புதுமைப்பித்தனைப் பற்றியும் இன்றையப் படைப்பாளிகளில் பொருட்படுத்தத் தகுந்தவர்களைப் பற்றியுமே பேசுகிறார்கள். தமிழ் நாவல் வெளிப்பாட்டு முறையில் உங்கள் ‘ஜே. ஜே : சில குறிப்புகள்’ ஒரு முக்கியமான திருப்பம். இது இயல்பாக நடந்ததா அல்லது முற்கற்பிதத்துடனான எழுத்துச் செயல்பாடா? பெருமளவு இயல்பாக நடந்தது என்றுதான் சொல்ல வேண்டும். அதை எழுதி முடித்த நிலையில் தமிழ் நாவல் மரபில் அது வித்தியாசமானது என்ற உணர்வு மட்டும்தான் எனக்கு இருந்தது. நண்பர்களும் முன் பின் தெரியாத வாசகர்களும் சாதகமான அபிப்பிராயங்களைக் கூறத் தொடங்கிய போது நான் எதிர்பாராத காரியம் நடந்திருப்பதாக உணர்ந்தேன். விமர்சகர்கள் அதைக் கடுமையாகக் கண்டிக்க ஆரம்பித்தார்கள். வாசகர்களின் வரவேற்பு வழக்கத்திற்கு மாறாக இருந்தது. அபிப்பிராயங்களை விமர்சனம் சிறிய அளவில்கூடப் பிரதிபலிக்கவில்லை என்பது என் அனுபவம். மொழியையோ சிந்தனையையோ தமிழில் யாரும் இப்படி கைகொண்டு வெளிப்படுத்தவில்லை. நாம் இதனைத் தமிழில் செய்வோம் என்றாவது நினைக்கவில்லையா அல்லது தமிழ் நாவல் வெளிப்பாட்டு முறையில் இது ஒரு புதுக் காலடி என்றாவது எண்ணவில்லையா? பிறர் செய்து வைத்திருக்கும் காரியங்களையோ நான் செய்து முடித்துவிட்ட காரியங்களையோ திரும்பச் செய்யக்கூடாது என்பதில் எப்போதும் உறுதியாக இருந்திருக்கிறேன். படைப்பு என்பது புதிது. இதற்கு முன் இல்லாதது. கோடிக்கணக்கான குழந்தைகள் பிறந்திருக்கின்றன. ஆனால் இப்போது பிறந்திருக்கும் குழந்தை இதற்கு முன் பிறந்ததே இல்லை. இயற்கையிலேயே படைப்பு இப்படி. நிகழ்த்தியதை மீண்டும் நிகழ்த்திக் காட்டுவது பழக்கம் அல்லது சகஜம். ‘ஒரு புளியமரத்தின் கதை’ வெளிவந்தபோது குடும்பங்களுக்கு வெளியே உருவாக்கப்பட்ட நாவல் என்று எதுவும் இருக்கவில்லை. மனிதனுக்கும் கருத்துகளுக்குமான உறவு வலுமையானது. உணர்ச்சித் தளங்களில் வேர் விட்டு நிற்பது. அதனால்தான் கருத்துகள் சார்ந்த முறிவு மனிதனை மிக மோசமாகப் பாதிக்கிறது. ‘ஜே. ஜே : சில குறிப்புகள்’ மனிதனுக்கும் கருத்துகளுக்குமான உறவைப் பற்றிச் சொல்கிறது. ‘குழந்தைகள் பெண்கள் ஆண்கள்’ நாவல் குடும்பத்துக்கும் மனிதனுக்குமான உறவைச் சொல்கிறது என்று வைத்துக்கொள்ளலாம். குடும்பம் ஒரு நிறைவான அமைப்பு தானா? அதன் தோற்றத்திற்கும் உள்ளார்ந்த செயல்பாடுகளுக்கும் இசைவு உண்டா? குறையுணர்ச்சியுடன்தான் மனிதன் குடும்பத்துக்குள் தத்தளித்துக் கொண்டிருக்கிறானா? இதுபோன்ற பல கேள்விகள் இருக்கின்றன. உள்ளூர இருந்த ஆவேசம்தான் புதிய படைப்புகளைப் பார்க்கத் தூண்டிக்கொண்டே போயிருக்கிறது. பெரிய திட்டங்கள் என்று இல்லை. புதுமைக்காகப் புதுமை என்பதும் இல்லை. சிறிய அளவிலான யோசனைகள்தான். படைப்புத் தொடர்பான தீவிர ஆவேசம் தெரிகிறதே உங்களிடம். . . அந்த ஆவேசம் எப்போதும் இருந்து இப்போதும் இருப்பதுதான். ஒரு மாற்றத்தை நிகழ்த்த வேண்டும் என்ற ஆசையிலிருந்து பிரிக்க முடியாத ஆவேசம் அது. உலக இலக்கியப் படத்தில் சிறிய நாடுகள், சிறிய மொழிகள்கூட அவற்றுக்குரிய இடத்தைப் பிடித்துக்கொண்டிருக்கின்றன. தமிழ் மரபும் செழுமையும் கொண்ட மொழி. இங்கும் பெரிய காரியங்கள் நடக்க வேண்டும். அதற்கான சூழல் உருவாக வேண்டும். எழுத்தாளன் சமூக மதிப்பைப் பெற வேண்டும். எழுதுவது மட்டுமே படைப்பு என்று நான் நினைக்கவில்லை. படைப்புக்கு வெளியே சக மனிதனிடம் நாம் வெளிப்படுத்தும் சிந்தனைகள், வாசிப்பில் நாம் கொண்டிருக்கும் ஆர்வம், சுயப்பரிசோதனை, சொல்லையும் செயலையும் இயன்ற அளவு இணைப்பதற்கான முயற்சி, ஜீவராசிகள் அனைத்தின்மீதும் கொள்ளும் பரிவு எல்லாமே படைப்பு மனத்திலிருந்து தோன்றுபவைதான். உங்கள் எழுத்தை வாசிக்கும்போது முரண்பாடுகள்மீதான உணர்வுகளையே காண முடிகிறது. தனிமனிதர்கள்மீதான முரண்பாடு, தத்துவங்கள்மீதான முரண்பாடு. உங்களுக்குத் தனி மனிதன், சமூகம், சமூக நிறுவனங்கள், தத்துவங்கள் எதுவுமே திருப்தியைத் தரவில்லையா? சமூக வாழ்க்கையில் எனக்குத் திருப்தி இல்லை. தத்துவங்கள் சார்ந்தும் சமூக ஒழுக்கங்கள் சார்ந்தும் மனிதன் போடுகிற வேஷம் மிகப் பெரிய சீரழிவை உருவாக்குகிறது. உயர்வானவையும் மனித ஸ்பரிசம் படும்போது கீழிறக்கம் கொள்கின்றன. பதவியைப் பிடிக்கத் தத்துவங்களைப் பயன்படுத்தும்போது உபயோக மதிப்பு உள்ளார்ந்த சாரத்தை அரித்து விடுகிறது. பார்வையற்றோர் பள்ளிக்கு வெளிநாட்டிலிருந்து வரும் உணவை ஆசிரியர்கள் திட்டமிட்டுத் திருடுகிறார்கள். மனிதன் மேலானவன் என்பதை ஒரு ஸ்லோகமாக்க நான் விரும்பவில்லை. மனிதநேயம் படைப்பாளி நம்பித் தீர வேண்டிய ஒரு நிர்ப்பந்தம் அல்ல. படைப்பாளியிடம் அனுபவம் சார்ந்த பார்வைதான் வலிமையாக இருக்க வேண்டும். சகல பாதிப்புகளும் அந்த அனுபவத்துக்குள் இருக்கின்றன. மனித ஸ்திதியை அது எவ்வளவு கேவலமாக இருக்கும் நிலையிலும் புரிதல் சார்ந்து மேலெடுத்துச் சென்றுவிட முடியும். பிரக்ஞைபூர்வமான வேஷதாரிகளைத் திருத்துவது மிகக் கடினம். வேஷதாரி களால் அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் சமூகம் தமிழ்ச் சமூகம். கபடமற்ற ஜனங்களின் சரிவு அல்ல பிரச்சினை. திட்டமிட்டு ஏமாற்றும் சக்திகளின் கூட்டு ஒப்பந்தம்தான் பெரிய பிரச்சினை. நீங்கள் உணர்ச்சிபூர்வமாக இருந்தாலும் உங்கள் மொழி ஆளுகையில் அறிவின் மொழியினூடாக உங்கள் சிந்தனை வெளிப்படுவது எப்படி சாத்தியமாகிறது? தமிழ்ச் சூழலில் உணர்ச்சியின் பீறிடல்களைச் சிறுவயதிலிருந்தே கவனித்துக் கொண்டிருக்கிறேன். புகழும் பணமும் பதவியும் தேடித் தர ஏற்ற விற்பனைப் பண்டமாகவே உணர்ச்சியின் பீறிடல் தமிழ்ச் சமூகத்தில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அரசியல் மேடைக் கத்தல்கள், தமிழ்த் திரைப்படங்களில் கண்ணீரின் பிரவாகம், வணிக எழுத்தாளர்களின் நெகிழ்ச்சிகள் எல்லாவற்றிற்கும் எதிராக நான் என் உணர்ச்சியைச் செம்மை செய்துகொள்ள விரும்பினேன். வாசகர்களைச் சிந்திக்கச் செய்ய வேண்டும். அப்போதுதான் அவர்களிடம் சுயமான விமர்சனம் உருவாகும். இந்த விழிப்புநிலையிலிருந்துதான் ஜனநாயகத்தை வலிமைப்படுத்தும் செயல்பாடுகள் தோன்றுகின்றன. அறிவு சார்ந்த மொழி உருவாகும்போது இன்னும் ஆரோக்கியமான விவாதங்களை நடத்த முடியும். இப்படியெல்லாம் யோசிக்கிறேன். மதங்களில், தத்துவங்களில் நம்பிக்கை இழந்துவிட்டோம் என்பது உங்கள் குரலாக உள்ளது. மனிதர்கள் பற்றிப் பிடிப்பதற்கு ஏதாவது ஒரு ஆதாரம் தேவையில்லையா? உங்கள் அனுபவம் சார்ந்து இதனை எப்படிப் பார்க்கிறீர்கள்? மனிதர்களின் சமய நம்பிக்கைகளுக்கு எதிராக நான் எதுவும் சொல்ல விரும்புவதில்லை. அவன் விரும்பும் சமயத்தில் அல்லது தத்துவத்தில் அல்லது சிந்தனைகளில் நம்பிக்கை கொள்ளட்டும். எவற்றினூடாகவும் மனித வாழ்க்கை சார்ந்த விமர்சனமும் கனவும் ஒருவனுக்கு இருக்குமென்றால் அவனுடன் விவாதம் செய்ய எனக்கு ஒரு சந்தர்ப்பம் இருக்கிறது. ஆனால் எந்தத் துறையைச் சேர்ந்த போலிகளுடனும் நான் விவாதத்தில் ஈடுபட முடியாது. அது என்னையே அழித்துக் கொள்வதாகும். முற்போக்கு, பிற்போக்கு சார்ந்த பழைய இலக்கணங்கள் எல்லாம் சுக்கு நூறாகத் தெறித்துவிட்டன. சங்கராச்சாரி ஜாதி புத்தி கொண்ட பிற்போக்குவாதி என்பது என் எண்ணம். ஜெயலலிதா பக்தி கொண்ட வீரமணி எந்த விதத்தில் முற்போக்குவாதி? பொதுவுடைமைவாதிகள் - இவர்களில் பலர் முக்கியமான தமிழ் எழுத்தாளர்கள் - கால் நூற்றாண்டேனும் சகல மனித ஒடுக்கல்களையும் அறிந்த நிலையில் சோவியத் சர்வாதிகாரத்துக்குத் துணை போனவர்கள். தங்கள் கடந்த கால வாழ்க்கையைப் பற்றிய விளக்கம் எதுவும் அளிக்காமலே அவ்வாழ்க்கை புதைந்துபோய்விட்ட திருப்தியில் இப்போதும் ஜனநாயகம் பற்றியும் சமூக முன்னேற்றம் பறஞறியும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஒரு தனிமனிதன் எந்த அளவுக்குச் சமூக மனிதனாகவும் இருக்கிறான் என்பது எனக்கு முக்கியம். எந்த அளவுக்கு வெளிப்படையாகவும் பகிர்ந்துகொள்கிறவனாகவும் இருக்கிறான்? சமூகப் பிரக்ஞையுடன் செயல்படுகிறானா அல்லது ஏமாற்றுவதற்காகச் செயல்படுகிறானா? படைப்பாளியின் எழுத்து எந்தவிதமான வாழ்க்கையைச் சென்றடைய அவன் கனவு காண்கிறான் என்பதைக் காட்டுகிறது. மனித சாரத்தைப் பேண முற்படுகிறவர்களுடன் நான் மானசீக உறவு வைத்துக்கொண்டிருக்கிறேன். என் ஊரையும் உலகத்தையும் தழுவிய உறவு இது. நீங்கள் முதல் எழுதத் தொடங்கிய நாவல் ‘குழந்தைகள் பெண்கள் ஆண்கள்’. 38, 40களில் அக்கதை நடக்கிறது. ஆனால் இடையில் உங்களுடைய இரு நாவல்கள் வெளிவந்தன. மூன்றாவது நாவலாகத்தான் ‘குழந்தைகள் பெண்கள் ஆண்கள்’ வெளிவந்தது. தமிழ்ச் சூழலில் ஏன் அந்த நாவல் அதிகக் கவனம் பெறாது போய்விட்டது. இதுவே உங்கள் முதல் வெளிவந்த நாவலாக இருந்தால் நீங்கள் தமிழில் அதிகக் கவனத்துக்குரிய படைப்பாளியாக ஏற்கப்பட்டிருப்பீர்களா? நான் 1978, 79 காலங்களில்தான் ‘குழந்தைகள் பெண்கள் ஆண்கள்’ நாவலை எழுதத் தொடங்கி னேன். (இப்போது வெளிவந்திருப்பது அதிலிருந்து வெகுவாக விலகிவந்த ஒரு எழுத்துருவம்.) ஆகவே இது என் முதல் நாவல் அல்ல. முதல் நாவலாக வந்திருந்தால் அதிகக் கவனம் பெற்றிருக்கும், மூன்றாவது நாவலாக வந்ததால்தான் கவனம் பெறாது போய்விட்டது என்பது உண்மை என்றால் அது கவனம் பெறாமல் போனது நல்லதுதான். ஏனென்றால் அதன் உயிர்ப்பு சார்ந்து அது வாழ வேண்டும் என்ற எதிர்பார்ப்புதான் எனக்கு இருக்கிறதே தவிர அதன் வரிசை சார்ந்து அது வாழ வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இல்லை. என் மூன்று நாவல்களில் மிக முக்கியமான நாவலாக நான் கருதுவது ‘குழந்தைகள் பெண்கள் ஆண்கள்’தான். அதுதான் வாழ்க்கையை அதன் முழுமையான தளத்திற்கு விரித்துப் பார்க்க முயல்கிறது. அது காட்சியளிக்கும் வகையிலேயே எடுத்துக்கொள்ளப்பட்டுவிட்டால் அது எனக்கு ஒரு இழப்புத்தான். அந்த நாவலில் வரிகளுக்குப் பின்னால் இருக்கும் வரிகள் மிக முக்கியமானவை என்று நம்புகிறேன். அவற்றைத் தொகுத்துப் பார்க்க வேண்டும். அவ்வாறு தொகுத்துப் பார்க்க சிரத்தையான, ஆழமான வாசிப்புத் தேவை. அதை ஊடுருவி வாசித்த பின்பும் ஏற்கவில்லையென்றால் அதை நான் மதிக்கிறேன். இதற்கு மேல் செய்ய எதுவும் இல்லை. மோஸ்தர் சார்ந்த புறக்கோலங்கள் இல்லை என்ற காரணத்திற்காக அது உதாசீனப்படுத்தப்பட்டால் வாசகனுக்கு அது ஒரு இழப்பு என்றே சொல்வேன். உங்கள் எழுத்துக்களின் பின்னால் ஒரு தொனி இருக்கிறது. இப்போது இருப்பவன் புரிந்துகொள்ளா விட்டாலும் எதிர்காலத்தில் என்னைப் புரிந்துகொள்ளும் ஒரு வாசகன் வருவான். அவனுக்காகவே நான் எழுதுகிறேன் என்கிறீர்கள். அப்படியான வாசகன் வந்துவிட்டானா? திட்டவட்டமாக அப்படி சொல்ல முடியாது. வாழும் காலத்தில் அங்கீகாரம் பெற முடியாத எழுத்தாளன் தன் உயிர்ப்பைத் தக்கவைத்துக்கொள்ள எவ்வளவோ வாக்கியங்களை உருவாக்க வேண்டியிருக்கிறது. அதில் ஒன்றுதான் ‘இன்று இல்லையென்றாலும் நாளை ஒளி வரும்’ என்பது. சமூக ஸ்திதி¬யும் எழுத்தாளனின் ஆதங்கத்தையும்தான் இவ்வரிகள் வெளிப்படுத்துகின்றன. பலருக்கு ஒளி வராமல் போயிருக்கிறது. புல் முளைத்து மண்டியிருக்கிறது. எதிர்மறையான சூழலில் நம்பிக்கை கொண்டு செயல்பட பல மந்திரங்கள் தேவையாக இருக்கின்றன. போன நூற்றாண்டு முழுக்கப் பல படைப்பாளிகள் வெவ்வேறு வகைகளில் இந்த மந்திரங்களை உருவாக்கியிருக்கிறார்கள். சிலருக்குக் காலம் துணை நின்றும் இருக்கிறது. உங்கள் ‘காற்றில் கலந்த பேரோசை’யில் ஜீவாவைப் பற்றி எழுதியுள்ளீர்கள். பெரியார் உங்களைப் பாதிக்கவில்லையா? இத்தேர்வுக்கு அரசியலும் ஒரு காரணமாக இருக்குமோ? ஜீவா எங்கள் ஊரைச் சேர்ந்தவர். பத்து வயது வாக்கில் நான் அவரைப் பார்த்தாயிற்று. பின்பு அவரது மறைவு வரையிலும் அந்தத் தொடர்பு நீடித்தது. எங்கள் ஊருக்குப் பெரியார் வந்துபோகக் கூடியவர் என்றாலும் என் குடும்பப் பின்னணியில் அவர் பெயர் அடிபடவே இல்லை. சிறுவயதில் நான் மலையாள எழுத்தாளர்களைத்தான் அதிகம் படித்தேன். எம். கோவிந்தன், சி. ஜே. தாமஸ், தகழி, பஷீர் போன்றவர்களை. எங்கள் பகுதி தமிழகத்துடன் இணைந்த பின்புதான் எனக்குப் பெரியார்மீது கவனம் வந்தது. அவருடைய உண்மை உணர்ச்சியை நான் ஏற்றுக்கொண்டேன். அந்த உண்மைகளை அவர் முன்வைக்கும் முறைகளை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதில் ஈரமோ, அழகியலோ, அரவணைப்போ இல்லை. பெரியாரை நீங்கள் நிராகரிப்பது அரசியலுக்கு அப்பாற்பட்ட மொழி சம்பந்தமாக மட்டும்தானா? பெரியாரை நான் நிராகரிக்கவில்லை. அவருடைய கருத்துகளில் பெரும்பான்மையானவை நான் ஏற்றுக்கொள்ளக்கூடியவைதான். சொல்முறை பற்றிச் சொன்னேன். மொழிக்கும் கருத்துக்குமான உறவு எனக்கு மிக முக்கியம். அவரது இயக்கத்தில் அவர் ஒருவர்தான் சொல்லோடு செயலை இணைத்திருந்தவர். பின்னால் வந்தவர்கள் எவரையுமே அப்படி சொல்ல முடியாது. அரசியல் தளத்தில் ஆகப் பெரிய அநாகரீகங்களை உருவாக்கியவர்கள் அவர்கள். அந்த இயக்கத்தின் இன்றையச் சரிவு கொடுமையானது. நீங்கள் மார்க்ஸிய சித்தாந்தத்தில் ஈடுபாடு உள்ளவராக இருந்திருக்கிறீர்கள். பின்னால் ஒரு இடைவெளி ஏற்படுகிறது. இவ் இடைவெளி மார்க்ஸியத்தின் போதாமை காரணமாக ஏற்பட்டதா அல்லது மார்க்ஸிய நிறுவனங்களின் பலவீனங்களின் அடிப்படையில் ஏற்பட்டதா? மார்க்ஸியம் ஒரு தத்துவம்தான். சமய நெறி அல்ல. தத்துவங்கள் காலத்தின் போக்குக்கு ஏற்ப மறுபரிசீலனை செய்ய இடம் தருபவை. அந்த வாசலை இங்கு சாத்திவிட்டார்கள். குறுகிய நோக்கங்களுக்காக தத்துவங்கள் பயன்படுத்தப்படும்போது அவை இறுகி அதன் சாராம்சத்தை இழந்து அடையாளங்களாக மாறிவிடுகின்றன. அடையாளங்கள் சார்ந்து நம்பிக்கை மதிப்பிடப்படுகிறது. இந்த விஷயங்களைத்தான் நான் ‘ஜே. ஜே : சில குற¤ப்புக’ளில் சொல்ல முயல்கிறேன். தத்துவத்துடன் நான் நேரடியாக மோதவில்லை. மிகப் பெரிய நாகரீகத்தை உருவாக்க முற்படுகிறவர்கள் கருத்துச் சுதந்திரம், ஜனநாயகப் பண்பு ஆகியவற்றில்கூட நம்பிக்கையற்ற அதிகாரிகளாக மாறுவதுதான் என் பிரச்சினை. எல்லா அரசியல் கட்சிகளிலும், சமய அமைப்புகளிலும் இந்த நிலை இருக்கிறது. சுந்தர ராமசாமி என்ற படைப்பாளியை, ஆளுமையை உருவாக்குவதில் மலையாளச் சூழலுக்கு எந்தவிதமான பங்களிப்பு உள்ளது? பெரிய அளவில் பங்களிப்பு இருக்கிறது என்று சொல்ல முடியாது. இடதுசாரிச் சிந்தனைகளில் கவனம்கொள்ள என்னைத் தூண்டியவை மலையாள எழுத்துகள்தான். மார்க்ஸிய பார்வை கொண்ட சிறுகதைகளை நான் ஆரம்பகாலத்தில் எழுதத் தூண்டுதல் பெற்றதும் மலையாளப் படைப்பிலக்கியத்தின் பாதிப்பாக இருக்கலாம். ஈழத்து தமிழ்ச் சூழலில் மேற்கு நாடுகளுக்கான தமிழ் புலம் பெயர்வு அதிகமாக நடந்திருக்கிறது. அங்கு போய் தமிழில் எழுதுகிறார்கள். தமிழில் புலம் பெயர் இலக்கியம் என்ற ஒரு அம்சம் ஏற்பட்டுள்ளது. இதனை எப்படிப் பார்க்கிறீர்கள்? என்னை மிகவும் பாதித்த விஷயம் இது. இருபத்தைந்து வருடங்களாகவே எனக்கு ஈழத்து எழுத்தாளர்கள் பலர் நெருக்கமான நண்பர்களாக இருக்கிறார்கள். அங்கு நிகழ்ந்த எல்லாப் பிரச்சினைகளையும் இவர்களைப் பற்றிய என் ஞாபகங்கள் வழியாகத்தான் பார்க்கிறேன். புலம் பெயர்ந்த தமிழர்களையும் அவர்கள் வசிக்கும் இடங்களையும் ஓரளவுக்குப் பார்க்க முடிந்தது. கசப்பான பல உண்மைகள் இருக்கின்றன. அவர்களுடைய வாழ்க்கை அங்கு நீடிக்கும் என்றால் அவர்கள் குடும்பங்களிலிருந்து தமிழ் வெளியே போய்ச் சூழலில் இருக்கும் மொழி உள்ளே வந்து விடும். குழந்தைகளால் தமிழைக் காப்பாற்ற முடியாது. இது வரலாற்றின் கட்டாயம். இந்தத் தலைமுறையில் ஏதேனும் தமிழ் எழுத்துகள் வந்தால்தான் உண்டு. படைப்பு உருவாவதற்கு மொழியறிவு மட்டும் போதாது. மொழி சார்ந்த வாழ்க்கையும் வேண்டும். பின் நவீனத்துவக் கோட்பாட்டைத் தமிழ்ச் சூழலுடன் எப்படி பொருத்திப் பார்க்கிறீர்கள்? பின் நவீனத்துவக் கோட்பாடும் தமிழ்ச் சூழலும் இன்றுவரையிலும் பொருந்தாமல்தான் இருக்கிறது என்று நினைக்கிறேன். படைப்புகள் வழியாக அதன் பாதிப்பு குறிப்பிடும்படி நிகழ்ந்ததாகவும் தெரியவில்லை. சகல முனைகளிலும் சுதந்திரத்தின் எல்லைகளை விரிக்க வேண்டும் என்றாலும் கூட நடைமுறையில் பாலியல் விவரணைகளில் மட்டும்தான் விரிக்கப்படுகிறது. இது அதிர்ச்சி மதிப்புக்குத் தரும் முகஞகியத்துவம் தவிர வேறு அல்ல. பின் நவீனத்துவக் கோட்பாட்டைத் தமிழ்ச் சூழலுடன் இணைத்துக் காட்டும் படைப்புச் சிந்தனை தோன்றும் என்றால் அந்தச் சிந்தனை இன்னும் அதிகக் கௌரவத்தைப் பெறும். படைப்பிலக்கியத்தையும் பாதிக்கும். தமிழ் சிற்றிதழ் வரவில் காலச்சுவடு மிக முக்கியமானது. அச்சிற்றிதழ் வருகைக்கான குறிக்கோள்கள் எட்டப்பட்டு விட்டனவா? இப்போது எங்கே நிற்கிறது? இப்போது காலச்சுவடை உருவாக்குவதில் எனக்கு எந்தப் பங்களிப்பும் இல்லை. கண்ணனும் மனுஷ்ய புத்திரனும் அவர்களது நண்பர்களின் உதவியுடன் செய்து வரும் காரியம். நான் நடத்தி வந்த காலச்சுவடின் எல்லைகள் இப்போது பெரிய அளவுக்கு விரிந்திருக்கின்றன. குறிக்கோளைச் சென்றடைந்துவிட்டோம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை. தமிழ் வாசகர்களிடையே மிகப் பெரிய விழிப்புநிலையையும் சுதந்திர உணர்வையும் உருவாக்க வேண்டும். வாழ்க்கையை மதிப்பிடவும் மறுபரிசீலனை செய்யவும் புதியவற்றை ஏற்கவும் பழையவற்றைக் கழிக்கவும் அவர்களால் சாத்தியப்பட வேண்டும். தமிழ் இனி 2000 சந்திப்பில் எதைச் சாதிக்க வேண்டுமென விரும்பினீர்கள்? தமிழ் இனியை உருவாக்கியவர்களின் நோக்கம் எல்லோரும் கூடி கடந்து வந்த பாதையைப் பற்றியும் இனி நடக்க வேண்டிய பாதையைப் பற்றியும் ஆழமாகச் சிந்திப்பது என்பதுதான். அதன் நோக்கம் ஓரளவு நிறைவேறிற்று என்று ந¤னைக்கிறேன். இதன் மூலம் பல நல்ல விளைவுகள் கூடி வரவேண்டும். அண்மைக்காலமாக ஈழத்துடன் உங்களுக்கான தொடர்பு அதிகரித்திருக்கிறது. இன்றைய ஈழத்துத் தமிழ் இலக்கியம் தொடர்பாக உங்கள் மனநிலை என்ன? ஈழத்து இலக்கியம் பற்றிச் சொல்வதென்றால் கவிதைப் படைப்புகளிலும் விமர்சனச் சிந்தனைகளிலும் அவர்கள் கொண்டிருக்கும் அக்கறையைத்தான் முன்னிலைப்படுத்த வேண்டியிருக்கிறது. சமீப காலங்களில் ஈழத் தமிழர்களுக்கு நிகழ்ந்த வாழ்க்கை நெருக்கடிகள் மிகப் பெரிய நாவலுக்கான களத்தை விரிப்பவை. அவ்வகையான முயற்சிகள் தோன்றாமல் இருப்பது புரிந்து கொள்ள முடியாத கேள்வியாகவே இருக்கிறது. தங்களைப் பற்றித் தாங்களே உருவாக்கிக்கொள்ளும் மிகையான அபிப்பிராயங்களையும் பிறர் உருவாக்கும் மிகையான அபிப்பிராயங்களையும் மறுபரிசீலனை செய்ய அவர்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன். எதிர்காலத்தில் படைப்புகளைத் தரும் உத்தேசங்களில் உங்களை ஈடுபடுத்தியிருக்கிறீர்களா? நிச்சயமாக. ஒருசிலவேனும் கூடி வரும் என்று நம்புகிறேன். மூன்றாவது மனிதன் இதழ் 10 ஜனவரி - மார்ச் 2001 முழுவதும் படிக்க 3 கருத்துகள் Subscribe to: Posts (Atom) நன்றி.. இணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன் அழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன் Subscribe Get new posts by email: Subscribe நூறு சிறந்த சிறுகதைகள் - எஸ்.ராமகிருஷ்ணன் தேர்வு நன்றிகள்: சென்ஷி மற்றும் நண்பர்களுக்கு 1. காஞ்சனை : புதுமைப்பித்தன் 2. கடவுளும் கந்தசாமி பிள்... ஒரு லட்சம் புத்தகங்கள்-சுஜாதா சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம் -மகாகவி Welcome to delegates of Bharathi International நீல வண்ணத்தில் எழுத்துக்கள் வெள்ளைத் ... மரி என்கிற ஆட்டுக்குட்டி - பிரபஞ்சன் "தமிழ் சார்… அந்த அற்புத மரிக்கு டி.சி கொடுத்து அனுப்பிடலாம்னு யோசிக்கறேன்." என்றார் எச்.எம். "எந்த அற்புத மரி?" என்றே... காஞ்சனை - புதுமைப்பித்தன் 1 அன்று இரவு முழுவதும் எனக்குத் தூக்கம் பிடிக்கவேயில்லை. காரணம் என்னவென்று சொல்ல முடியவில்லை. மனசுக்குக் கஷ்டமும் இல்லை, அளவுக்கு மிஞ... எஸ்தர் - வண்ண நிலவன் முடிவாகப் பாட்டியையும் ஈசாக்கையும் விட்டுச் செல்வதென்று ஏற்பாடாயிற்று. மேலும், பிழைக்கப் போகிற இடத்துக்குப் பாட்டி எதற்கு? அவள் வந்து என்ன க... ஆளுமைகள் பற்றிய கவிஞர் ரவிசுப்பிரமணியனின் ஆவணப்படங்கள் தளத்தில் தேட புதையல் தொடர்புக்கு.. உங்களுடைய மேலான கருத்துகள், ஆலோசனைகள், எழுத்தாளர்களின் படைப்புகள், எதிர்வினைகளை hramprasath@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.
பிரதமர் நரேந்திர மோடி அண்மையில் ஐந்த துப்புரவுப் பணியாளர்களின் பாதங்களைக் கழுவி, நன்றி கூறி அவர்களை கவுரவப்படுத்தினார். இந்த தருணத்தை வாழ்நாள் முழுவதும் நினைவில் வைத்திருப்பேன் எனப் பின்னர் இது பற்றி டிவிட்டரில் செய்தி வெளியிட்டார். இந்தச் செயல் பலரால் விமர்சிக்கப்பட்டது. இது சரியானதும்கூட. “எங்கள் பாதங்களை அல்ல உங்கள் மனதை தூய்மையாக்கிகொள்ளுங்கள், திருவாளர் பிரதமரே! என சபாய் கர்மாசாரி அண்டோலன் அமைப்பின் தேசிய ஒருங்கிணைப்பாளர் ட்விட்டரில் கூறியிருந்தார். இந்தச் செயல்முறை முழுவதும் அவமானகரமானது என அவர் கூறினார். உண்மையைச் சொல்வது என்றால், துப்புரவுப் பணியாளர்கள் பாதங்களை சுத்தம் செய்வதன் மூலம் மோடி அவர்களை கவுரவிக்கவில்லை. தூய்மைப்படுத்தும் செயல் இந்த விடியோ காட்சியை அலசுவதில் இருந்து துவங்கலாம். மோடி வரும்போது ஐந்து துப்புரவுப் பணியாளர்கள் காத்திருக்கின்றனர். அவர் அமர்வதற்கு முன்னரே அவர்களை டிரேயில் பாதங்களை வைக்குமாறு கூறுகிறார். இது பொறுமையின்மையின் அடையாளம். ஒருவர் பாதங்களைக் கழுவியதும் மோடி, இரண்டாவது நபருக்குச் செல்கிறார். டிரேவில் உள்ள தண்ணீரை மோடியோ அல்லது அவரது உதவியாளர்களோ அகற்றாததால், அந்தப் பெண்மணி கால்களை எப்படி வைத்திருப்பது எனத்தெரியாமல், சங்கடமாக கால்களை தொங்க விட்டிருக்கிறார். இரண்டாவது நபரிடமும் இதே போல நிகழ்கிறது. மேலும், பணியாளர்கள் பிளாஸ்டிக் நாற்காலிகளில் அமர்ந்திருக்க, மோடி குஷன் வைத்த மர ஸ்டூல் மற்றும் தாமிரப் பாத்திரங்களைப் பெற்றிருப்பதை கவனிக்கவும். கவுரவம் அல்ல அவமானம் கும்பமேளா பகுதியைத் தூய்மையாக வைத்திருப்பதற்காகவும், அதன் மூலம் தூய்மை இந்தியா திட்டத்திற்கு உதவுவதற்காகவும், இந்தத் துப்புரவுப் பணியாளர்களை கவுவரவிப்பதாகத் தனது செயலுக்கு மோடி விளக்கம் கூறினார். “கும்பமேளாவில் இந்தப் பணியாளர்கள் செய்யும் உழைப்பை யாரும் அறிய மாட்டார்கள். கும்பமேளாவின் அடையாளம் சுத்தம்” என்று மோடி கூறினார். ஆனால், ஐந்து துப்புரவுப் பணியாளர்களின் பாதங்களைக் கழுவுவது இவர்கள் சமூகத்திற்கு எதுவும் செய்துவிடாது. இந்த மக்களுக்கு அதிகாரம் அளிக்க மோடி அரசிடம் எந்த திட்டம் இல்லை என்பதால் இது அவமானப்படுத்தும் செயலே ஆகும். பாதங்களைக் கழுவுவது என்பது சாதிய முறையை மேலும் கவுரவிக்கவே செய்கிறது. அதன் இருப்பை நியாயப்படுத்துகிறது. இது பணியை உயர்த்தி, பணியாளர்களுக்கு அவர்கள் அடையாளத்தை நிராகரிக்கிறது. இந்தியாவில் கழிவுகளை அள்ளுவது தொடர்பாக நீடிக்கும் பிரச்சினை இது. துப்புரவுப் பணியாளர்களைப் பற்றிப் பேசும்போதெல்லாம் கழிவுகளுடன்தான் அவர்கள் காட்டப்படுகிறார்கள். அல்லது இந்த வீடியோவில் இருப்பதுபோலத் துப்பறவுப் பணிக்கான சீருடையுடந்தான் அவர்கள் காட்டப்படுவார்கள். துப்புரவுப் பணியாளர்கள் தொடர்பான தனது அணுகுமுறையில் மோடி சீராக இருக்கிறார். பணி மூலமே அவர்களை வரையறுக்கிறார். குஜராத் முதல்வராக இருந்தபோது, துப்புரவு செய்வது வால்மீகி சமூகத்திற்கு ஆன்மிக அனுபவம் என அவர் எழுதினார். இது வால்மீகி சமூகத்தை அவர்கள் செய்யும் பணியாகச் சுருக்கி, சாதியப் படிநிலையை மீண்டும் வலியுறுத்துவதாகும். மேல் சாதி மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படும் அதே சமயத்தில், மற்றவர்களின் பாதங்கள் கழுவப்படுகின்றன. அவர்களுடைய பணி ஆன்மிகமானது எனக் கூறப்படுகிறது. ஸ்வச் பாரத் நாயகர்கள் தூய்மை இந்தியா கனவை நிறைவேற்றுவது என்று வரும்போது துப்புரவுப் பணியாளர்கள் முன்னே நிற்பதாக அவர் கூறினார். இதில் கொஞ்சமும் உண்மை இல்லை. தூய்மை இந்தியா திட்டத்தின் தூதர்களாக, நடிகர்கள், விளையாடு வீரர்கள் மற்றும் அதிகாரிகள்தான் இருந்துள்ளனரே தவிர, துப்புரவுப் பணியாளர்கள் அல்ல. இந்தத் திட்டம் சக்தி படைத்தவர்களுக்கான புகைப்பட வாய்ப்பாக இருக்கிறது. இவர்கள் எல்லாம் தங்கள் வீடுகளைச் சுத்தம் செய்ய நேரம் கிடைக்காத பிரபலங்கள். பொது இடங்களையும், கழிவுகளையும் மறந்தவர்கள். 2014இல் ஆட்சிக்கு வந்ததும், மோடி கையில் துடைப்பத்தை எடுத்துக்கொண்டு, 2019 அக்டோபர் 2இல் தூய்மையை இந்தியாவை அடைவோம் என்று கூறினார். அப்போதும் துப்புரவுப் பணியாளர்கள் கவனத்தில் வரவில்லை. தூய்மை இந்தியா திட்டம் துப்புரவுப் பண்யாளர்களை விடுவிக்கவில்லை. மாறாக அவர்கள் இப்போது அரசு மேற்பார்வையாளர்களால் கட்டுப்படுத்தப்படுகின்றனர். அதைவிட முக்கியமாக, இந்த திட்டம், துப்புரவுப் பணியாளர்கள் வீடு வீடாகச் சென்று குப்பைகளைச் சேகரிக்கும் பழைய வழக்கத்தை வலியுறுத்துகிறது. . துப்புரவுப் பணியாளர்கள், குப்பை அள்ளுபவர்களுக்குச் சீரான பணி நேரமோ வார விடுமுறையோ கிடையாது. அவர்கள் சார்ந்திருக்கும் நிறுவனம் அல்லது மேற்பார்வையாளர்களைப் பொறுத்து இது அமையும். அவர்கள் அரசுப் பணியாளர்கள் என்றாலும், இந்த வேலையை மட்டும்தான் அரசு, பணியாக அல்லாமல் சமூக சேவையாகக் கருதுகிறது. இது சமூக சேவை என்பதால் அரசு துப்புரவுப் பணியாளர்களின் உரிமைகள் பற்றிக் கவலைப்படுவதில்லை; அல்லது இந்தத் துறையில் இயந்திர அறிமுகம் பற்றியும் யோசிப்பதில்லை. மோடியின் கொள்கை ஒருபோதும் துப்புரவுப் பணியாளர்களை மேம்படுத்தும் வகையில் இருந்ததில்லை. மற்ற அரசியல் கட்சிகள் பாஜக சாதியத் தன்மை கொண்ட கட்சி என்றால், மற்ற கட்சிகளும் இந்தப் பிரச்சினையைத் தீர்க்கவில்லை. நீண்ட காலமாக ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சி சுகாதாரத் துறையில் எந்த சீர்திருத்தமும் கொண்டுவரவில்லை. உதாரணமாக, இந்தியாவில் தண்ணிர் பயன்படுத்தும் கழிவறைகள் 19ஆம் நூற்றாண்டில் அறிமுகமாயின. ஆனால் அதிகாரபூர்வமாகத் தடை செய்யப்படும் வரை 1993 வரை அரசு உலர் கழிவறைகளைப் பயன்படுத்தியது. இன்றும் இது தொடர்வதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. காங்கிரஸ் கட்சி சுகாதாரத் துறையைச் சீர்திருத்துவதற்குப் பதிலாக, இந்தப் பணியாளர்கள் வாழ்க்கை நிலையை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தியது. துப்புரவுத் தொழிலாளர்கள்தான் பிரச்னையே தவிர, துப்புரவுப் பணி அல்ல. கேரளாவில் மார்க்சிஸ்ட் அரசு, சாக்கடைகளில் கழிவுகளை அகற்ற மனிதர்களுக்கு பதிலாக இயந்திரங்களைப் பயன்படுத்த அனுமதித்தது. தமிழகத்தில் திமுக, துப்புரவுப் பணியாளர்களுக்கு நல வாரியம் அமைத்து, அவர்களுக்குத் தனி ஒதுக்கீடும் அளித்தது. இது, இந்தச் சமூகத்தினர் தங்கள் பிரச்சனையை பொதுவெளியில் பேச வழி வகுத்தது. ஆனால், இந்தக் கட்சிகள் துப்புரவுப் பணி தொடர்பான இழிவான எண்ணத்தை அகற்ற எதுவும் செய்யவில்லை. இதைச் செய்வது தொலைதூரக் கனவாக இருக்கிறது. அந்தக் கனவு நிறைவேறும்வரை இதுபோலப் புகைப்பட வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொண்டிருக்க வேண்டியதுதான். பி.ரவிச்சந்திரன், தலித் கேமிரா@dalitcamera நிறுவனர் நன்றி: தி ப்ரின்ட் https://theprint.in/opinion/by-washing-feet-pm-narendra-modi-was-honouring-himself-not-safai-karamcharis/197909/ Share $('#twitter').sharrre({share: {twitter: true },template: ' ',enableHover: false,enableTracking: true,buttons: { twitter: {via: ''}},click: function(api, options){api.simulateClick();api.openPopup('twitter');}});$('#facebook').sharrre({share: {facebook: true },template: ' ',enableHover: false,enableTracking: true,buttons:{layout: 'box_count'},click: function(api, options){api.simulateClick();api.openPopup('facebook');}}); // Scrollable sharrre bar, contributed by Erik Frye. Awesome! var $_shareContainer = $(".sharrre-container"),$_header = $('#header'),$_postEntry = $('.entry'),$window = $(window),startSharePosition = $_shareContainer.offset(),//object contentBottom = $_postEntry.offset().top + $_postEntry.outerHeight(),topOfTemplate = $_header.offset().top,topSpacing = _setTopSpacing();//triggered on scroll shareScroll = function(){var scrollTop = $window.scrollTop() + topOfTemplate,stopLocation = contentBottom - ($_shareContainer.outerHeight() + topSpacing);$_shareContainer.css({position : 'fixed'});if( scrollTop > stopLocation ){$_shareContainer.css( { position:'relative' } );$_shareContainer.offset( {top: contentBottom - $_shareContainer.outerHeight(),left: startSharePosition.left,});}else if (scrollTop >= $_postEntry.offset().top - topSpacing){$_shareContainer.css( { position:'fixed',top: '100px' } );$_shareContainer.offset( {//top: scrollTop + topSpacing,left: startSharePosition.left,});} else if (scrollTop < startSharePosition.top + ( topSpacing - 1 ) ) {$_shareContainer.css( { position:'relative' } );$_shareContainer.offset( {top: $_postEntry.offset().top,left:startSharePosition.left,});}},//triggered on resize shareMove = function() {startSharePosition = $_shareContainer.offset();contentBottom = $_postEntry.offset().top + $_postEntry.outerHeight();topOfTemplate = $_header.offset().top;_setTopSpacing();}; setTimeout( function() {contentBottom = $_postEntry.offset().top + $_postEntry.outerHeight();}, 2000);function _setTopSpacing(){var distanceFromTop = 20;if( $window.width() > 1024 ) {topSpacing = distanceFromTop + $('.nav-wrap').outerHeight();} else {topSpacing = distanceFromTop;}return topSpacing;}//setup event listeners $window.on('scroll', _.throttle( function() {if ( $window.width() > 719 ) {shareScroll();} else {$_shareContainer.css({top:'',left:'',position:'' }) }}, 50 ) );$window.on('resize', _.debounce( function() {if ( $window.width() > 719 ) {shareMove();} else {$_shareContainer.css({top:'',left:'',position:'' }) }}, 50 ) ); }); Tags: #PackUpModi seriessavukkusavukkuonlineதுப்புறவாளர் பாதங்களை கழுவுதல்நரேந்திர மோடிநாடகம்பாஜகபிஜேபிபேக் அப் மோடி
பொழிப்பு (மு வரதராசன்): அன்பு இல்லாதவர் எல்லாப் பொருளையும் தமக்கே உரிமையாகக் கொண்டு வாழ்வர்; அன்பு உடையவர் தம் உடம்பையும் பிறர்க்கு உரிமையாக்கி வாழ்வர். மணக்குடவர் உரை: அன்பிலாதார் எல்லாப் பொருளையுந் தமக்கு உரிமையாக வுடையர்: அன்புடையார் பொருளேயன்றித் தம்முடம்புக்கு அங்கமாகிய வெலும்பினையும் பிறர்க்கு உரிமையாக வுடையர். அன்புடையார்க்கல்லது அறஞ்செய்த லரிதென்றாயிற்று. பரிமேலழகர் உரை: அன்பிலார் எல்லாம் தமக்கு உரியர் - அன்பிலாதார் பிறர்க்குப் பயன்படாமையின் எல்லாப் பொருளானும் தமக்கே உரியர்; அன்புடையார் என்பும் பிறர்க்கு உரியர் - அன்புடையார் அவற்றானே அன்றித் தம் உடம்பானும் பிறர்க்கு உரியர். (ஆன் உருபுகளும் பிரிநிலை ஏகாரமும் விகாரத்தால் தொக்கன. 'என்பு' ஆகு பெயர். என்பும் உரியராதல் 'தன்னகம் புக்க குறுநடைப் புறவின் தபுதி அஞ்சிச் சீரை புக்கோன்' (புறநா.43) முதலாயினார் கண்காண்க.) இரா சாரங்கபாணி உரை: அன்பில்லாதவர் எல்லாப் பொருள்களையும் தமக்கே பயன் கொள்வர். அன்புடையார் அப்பொருள்களே அன்றித் தம் உடம்பாலும் பிறர்க்குப் பயன்படுவர். பொருள்கோள் வரிஅமைப்பு: அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்பும் பிறர்க்கு உரியர். பதவுரை: அன்பிலார்-அன்பு இல்லாதவர், தொடர்புடையார் மாட்டு உள்ள நெகிழ்ச்சி இல்லாதவர்; எல்லாம்-அனைத்தும்; தமக்குரியர்-தமக்கு உரியனவாகக் கொள்வர், தங்களுக்கு உரிமையுடையார்; அன்புடையார்-அன்புடையவர்; என்பும்-எலும்பும், உடம்பும்; உரியர்--உரிமையுடையார்; பிறர்க்கு-மற்றவர்க்கு. அன்பிலார் எல்லாம் தமக்குரியர்: இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்: மணக்குடவர்: அன்பிலாதார் எல்லாப் பொருளையுந் தமக்கு உரிமையாக வுடையர்: பரிதி: மனத்தில் அன்பில்லாதார் எல்லாவற்றாலும் தமக்குரியர். காலிங்கர்: ஒருவர்மாட்டும் தன்நெஞ்சில் அன்பிலாதவர் யாவரே அவரே தம் உடம்பைப் பேணி பிறர்க்கும் ஈயாது பின்பும் நகைப்புக்கு உரியராவர்; . பரிமேலழகர்: அன்பிலாதார் பிறர்க்குப் பயன்படாமையின் எல்லாப் பொருளானும் தமக்கே உரியர்; 'அன்பிலாதார் எல்லாப் பொருளையும் தமக்கு உரிமையாக உடையர்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர். இன்றைய ஆசிரியர்கள் 'அன்பிலார் எல்லாம் தமக்கே கொள்வர்', 'அன்பில்லாதவர்கள் எல்லாப் பொருள்களும் தமக்கே உரிமை தாமே அநுபவிக்க வேண்டுமென்று எண்ணுவார்கள்', 'அன்பில்லாதவர்கள் தம்பொருட்டே எல்லாவற்றையுந் தேடித் தமக்கே உரியதாக்கிக் கொள்ளுவர்', 'அன்பில்லாதார் எல்லாவற்றையும் தமக்கே உரிமையாக்கிக் கொள்வர்' என்ற பொருளில் உரை தந்தனர். அன்பு இல்லாதவர்கள் எல்லாவற்றையும் தமக்கே உரியதாக்கிக் கொள்ளுவர் என்பது இப்பகுதியின் பொருள். அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு.: இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்: மணக்குடவர்: அன்புடையார் பொருளேயன்றித் தம்முடம்புக்கு அங்கமாகிய வெலும்பினையும் பிறர்க்கு உரிமையாக வுடையர். மணக்குடவர் குறிப்புரை: அன்புடையார்க்கல்லது அறஞ்செய்த லரிதென்றாயிற்று. பரிதி: அன்புடையர் என்பும் பலர்க்கும் பிரயோசனப்படும் என்றவாறு. காலிங்கர்: மற்று இவ்வாறு அன்றிப் பிறர்மாட்டு அன்புடையார் தமது பொருள் எல்லாம் கொடுப்பதும் அன்றித் தமது உடம்பு தானும் பிற உயிர்க்கு ஓர் இடுக்கண்வரின் ஈந்துப் புகழினைப் பெறுவர் என்றவாறு. பரிமேலழகர்: அன்புடையார் அவற்றானே அன்றித் தம் உடம்பானும் பிறர்க்கு உரியர். பரிமேலழகர் குறிப்புரை: ஆன் உருபுகளும் பிரிநிலை ஏகாரமும் விகாரத்தால் தொக்கன. 'என்பு' ஆகு பெயர். என்பும் உரியராதல் 'தன்னகம் புக்க குறுநடைப் புறவின் தபுதி அஞ்சிச் சீரை புக்கோன்' (புறநா.43) முதலாயினார் கண்காண்க. 'அன்புடையார் பொருளேயன்றித் தம் உடம்பானும் பிறர்க்கு உரியர்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர். இன்றைய ஆசிரியர்கள் 'அன்பினர் உடம்பையும் பிறர்க்கு வழங்குவர்', 'அன்புடையவர்கள் தம்முடைய உடலையும் பிறருக்கு உதவியாகத் தந்துவிடுவார்கள்', '.அன்புடையோர் தம்முடைய எலும்பையும் மற்றவர்களுக்கு உரியதாக்குவர்', 'அன்புடையார் தம் உடலையும் பிறர்க்கு உரிமையாக்குவர்.' என்றபடி பொருள் உரைத்தனர். அன்புடையார் தம் உடம்பாலும் பிறர்க்குப் பயன்படுவர் என்பது இப்பகுதியின் பொருள். நிறையுரை: அன்பு இல்லாதவர்கள் எல்லாவற்றையும் தமக்கே உரியதாக்கிக் கொள்ளுவர்; அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு என்பது பாடலின் பொருள். 'என்பும் உரியர் பிறர்க்கு' என்றால் என்ன? அன்புள்ளம் கொண்டவர் தன்னலம் கருதாதவராயிருப்பர். அன்பில்லாதவர் எல்லாப் பொருள்களும் தமக்கு உரியனவென்று கொள்வர். அன்புடையார் தமது உடம்பையும் பிறர்க்கு உரிமை ஆக்குவர். உலக மக்களுள் அன்புள்ளம் கொண்டவரும் இருக்கிறார்கள்; அன்பில்லாதவரும் உண்டு. அன்பிலார் தன்னலமே பேணுவோராய் எல்லா வகையாலும் எல்லாமே தமக்கு மட்டுமே உரியது என்று எண்ணி மற்றவர்களோடு எதையும் பகிர்ந்து கொள்ளாத இயல்புடையவர்களாக இருப்பர். அவருடைய பொருள், செல்வாக்கு, அறிவு, திறமை யாவும் தன்னலத்திற்கே பயன்படும். ஆனால் அன்புடையாரோ தம் என்பாலும் பிறர்க்குரியவராயிருப்பர்; அவர்தம் உடைமை, நேரம், உழைப்பு யாவற்றாலும் பிறர்க்குப் பயனளித்தல் மட்டுமன்றித் தம் உடம்பையும் அவர்களுக்காகக் கொடுக்க முன் வருவர். 'எல்லாம்' என்றது எல்லாப்பொருளையும் குறிக்கும். தம் பொருள், பிறர் பொருள், தம் உழைப்பால் வந்தன, பிறர் உழைப்பால் வந்தன எல்லாம் அடங்கியது அது. இல்லறத்திற்குச் சிறந்த இலக்கணமாக அன்பைக் கொள்கிறார் வள்ளுவர். அன்பு என்பது உறவு, நட்பு போன்ற தொடர்புடையாரிடையே உள்ள நெகிழ்ச்சியைக் குறிப்பது. அன்பு உள்ளம் கொண்டவர், தாம் அன்பு செலுத்துபவர்களுக்கு இடுக்கண்வரும் நேரத்தில் உதவியாக, ஊன்றுகோலாக, அவர்களது நலம் விரும்பி செயலாற்றுபவராக இருப்பர். அன்பு நெஞ்சம் எதையும் கொடுத்து விட முந்தும். அன்புடைமையின் உச்சம் அன்பு செய்யப்பட்டார்க்கு உதவி செய்யத் தன்னிடத்திலுள்ள எதையும் கொடுத்துவிடத் தயங்காத நிலையாகும். இப்பாடல் அன்பின் இயல்பை அன்பிலார் வழியும் அன்புடையார் வழியும் விளக்குகிறது. அன்பின்மையின் சிறுமை முதலில் கூறப்பட்டு, அதன்பின் உடன்பாட்டில் அன்பின் பெருமை சொல்லப்படுகிறது. அன்பு இல்லாதவர்கள் எல்லாமே தமக்கு மட்டுமே உரியது என்ற எண்ணம் கொண்ட தன்னலம் மிகுந்தவர்கள். இவர்கள் எல்லாப் பொருள்களும் தம் நன்மைக்காகவே இருப்பதாகக் கொள்வார்கள். பொருட்களின்பால் மிகுந்த பற்றுக் கொள்வோர் நெஞ்சத்தில் அன்பு வற்றிப்போகிறது. அன்புள்ள நெஞ்சம் கொண்டவர்கள். தம் உடம்பு கூட பிறர் நன்மைக்காக இருப்பதாகக் கருதுவார்கள் என்கிறது பாடல். பழம் பாடலில் தோன்றும் ஒரு காட்சி இக்குறட்கருத்துக்கான காட்டாக அமையும். காட்டில் வாழும் மான் இணைகள் தங்களுக்குக் கிடைத்த சிறிதளவு நீரையும் ஒன்று மற்றொன்றிற்காக விட்டுக் கொடுப்பதைக் காட்டும் அப்பாடல்: சுனை வாய்ச் சிறு நீரை, ‘எய்தாது’ என்று எண்ணி பிணை மான் இனிது உண்ண வேண்டி, கலைமா தன். கள்ளத்தின் ஊச்சும் சுரம் என்பர், காதலர். உள்ளம் படர்ந்த நெறி. (ஐந்திணை ஐம்பது 38) (பொருள்: காதலர் தமது மனத்தினாலே விரும்பிச் சென்ற வழியானது ஆண்மான் ஆங்குள்ள சுனையினது தண்ணீரை (பெண்மான்) குடிக்கப் போதாது என நினைத்தும் தன்னுடைய பெண்மான் நன்றாக குடிக்க விரும்பியும் பொய்யாக (குடிப்பதுபோல்) உறிஞ்சும் பாலை நிலவழியாகு மென்று சொல்லுவர்.) 'இக்குறளில் உள்ள தமக்குரியர், பிறர்க்குரியர் என்ற இரண்டு தொடர்களில் முன்னது ஒரு சீராக அமையப் பின்னது இரண்டு சீராக அமைந்து, பயனிலை முன்னிறுத்த மாற்றமும் பெற்றுக் கூடுதல் ஒலிநிறுத்தமும் பொருள் அழுத்தமும் பெற்றுள்ளன. எழுத்து மொழியிலும் இட இடைவெளி (Space) அதிகம் பெற்றுள்ளது. அந்த நிலையினால் பின்னது பரந்த மனப்பான்மையைக் குறிப்பதற்கு ஏற்பப் பரந்த இடம் என்றும், தமக்குரியர் என்பது குறுகிய மனப்பான்மைக்கு ஏற்ப குறுகிய இடம் என்று கூட விளக்கலாம்' (செ வை சண்முகம்). ஒரு கருத்து நன்கு தெளிவுற உடன்பாடு எதிர்மறை என்னும் இருவகை நடைகளையும் பயன்படுத்துவது வள்ளுவரின் உத்திகளில் ஒன்று. இங்கு அந்நடைகள் இரண்டையும் பொருத்தி இருப்பதைக் காணலாம். . 'என்பும் உரியர் பிறர்க்கு' என்றால் என்ன? எலும்பு என்பதன் மரூஉவான 'என்பு' சினையாகுபெயராக எலும்போடு கூடிய உடம்பு குறித்தது. பிறர்க்கு என்ற சொல் அன்பு செய்யப்பட்ட தொடர்புடையாரைக் குறிக்கும். 'என்பும் உரியர் பிறர்க்கு' என்ற தொடர்க்கு 'அன்புடையார் தமது உடம்பையும் பிறர்க்கு உரியதாக்குவர்' என்பது பொருள். .தனது எலும்பையோ அல்லது உயிரையோ தருவது என இதை விளக்குவர். அன்பு செய்யப்பட்டார் துயர் நீக்க, தங்கள் உடம்பின் துன்பத்தையும் கருதாது, தம் உழைப்பு முழுவதையும் அன்புடையார் தரத் தயங்கமாட்டார்கள் என்பது கருத்து. என்பும் உரியர் என்று சொல்லப்பட்டதற்கு தொன்மக் கதையில் வரும் ததீசியை மேற்கோள் காட்டுவர். தேவர்களுடைய துன்பங்களை நீக்க- விருத்தாசூரனை வெல்ல- வச்சிராயுதஞ் செய்வதற்காக, இந்திரனுக்குத் தன் முதுகெலும்பைக் கொடுத்த முனிவர் ததீசி. அதுபோல தன்னிடம் அடைக்கலம் புகுந்த புறாவிற்காகத் தன் தசையையும் உடம்பையும் அளித்த சிபியையும் உரையாளர்கள் எடுத்துக்காட்டினர். இப்பாடல் அன்புடையார் அன்பு செய்யப்பட்டார்க்கு உடலையும் தந்து உதவுவதைச் சொல்வது. அன்புடைமை அதிகாரத்தில் சொல்லப்பட்டுள்ள அன்பு இல்லறம் மேற்கொண்டோர் தம் தொடர்புடையாரிடம் செலுத்தும் அன்பு பற்றியது. மேலே கண்ட, புறாவின் இறப்பினை அஞ்சித் தன்னையே வழங்கிய சிபியின் செயல் போன்றவை அருளுடைமை காரணமாக அமைந்தவை. எனவே அவை இக்குறட்கருத்துக்கான பொருத்தமான காட்டுகள் ஆகா. இன்று மருத்துவ உலகில், உடல் உறுப்புகளில் பலவற்றைக் கொடையாக அளிக்க முடியும். இரத்தம், கண், சிறுநீரகம், இதயம் போன்ற பல உடல் உறுப்புக்களை அன்புடையார் கொடையாக தாம் வாழும்போதோ அல்லது இறந்த பிறகோ பிறர்க்குக் கொடையாக வழங்குகின்றனர். 'என்பும் பிறர்க்கு உரியர்' என்ற தொடர், உறுப்புக்கொடையையும் எண்ண வைக்கிறது. அன்பு இல்லாதவர்கள் எல்லாவற்றையும் தமக்கு உரியதாக்கிக் கொள்ளுவர்; அன்புடையார் தம் உடம்பாலும் பிறர்க்குப் பயன்படுவர் என்பது இக்குறட்கருத்து.
மன்ஹாட்டன் (PIX11) – மேசியின் நன்றி தின அணிவகுப்பு ஆறாவது அவென்யூவில் வியாழன் அன்று இறங்கியது. ஒவ்வொரு ஆண்டும் போலவே, இது மிகைப்படுத்தப்பட்ட வரை வாழ்ந்தது. இது மகிழ்ச்சிக்கான நேரம், புதிய நண்பர்களை உருவாக்குவதற்கான நேரம் மற்றும் நன்றி சொல்லும் நேரம். சமீபத்திய செய்திகள், விளையாட்டு, வானிலை மற்றும் நிகழ்வுகளை உங்கள் இன்பாக்ஸில் நேரடியாகப் பெறுங்கள்! கூடுதல் NYPD அதிகாரிகள் தயார் நிலையில் பாதுகாப்பு பலமாக இருந்தது. அவர்கள் அணிவகுப்பைப் பாதுகாக்கவில்லை, NYPD அணிவகுப்பு இசைக்குழுவும் விழாக்களில் பங்கேற்றது. அணிவகுப்பில் 16 ராட்சத பலூன்கள், 28 மிதவைகள், 40 புதுமை மற்றும் பாரம்பரிய ஊதப்பட்டவை, 12 அணிவகுப்பு இசைக்குழுக்கள், 700 கோமாளிகள், 10 செயல்திறன் குழுக்கள், பிரபல விருந்தினர்கள் மற்றும் ஒரே ஒரு சாண்டா கிளாஸ் ஆகியோர் இடம்பெற்றனர். நவம்பர் 24, 2022, வியாழன் அன்று நியூயார்க்கில் நடந்த மேசிஸ் தேங்க்ஸ்கிவிங் டே பரேட்டின் போது, ​​மிசோரி பல்கலைக்கழக அணிவகுப்பு இசைக்குழுவின் சியர்லீடர்கள் சென்ட்ரல் பார்க் தெற்கில் நடந்து செல்கின்றனர். (AP புகைப்படம்/ஜீனா மூன்) நியூயார்க்கில் நவம்பர் 24, 2022, வியாழன் அன்று மேசியின் நன்றி தின அணிவகுப்பின் போது டாம் டர்க்கி ஃப்ளோட் சென்ட்ரல் பார்க் மேற்கில் செல்கிறது. (AP புகைப்படம்/ஜீனா மூன்) நியூயார்க்கில் நவம்பர் 24, 2022, வியாழன் அன்று மேசியின் நன்றி தின அணிவகுப்பின் தொடக்கப் புள்ளியிலிருந்து பார்வையாளர்கள் பார்க்கிறார்கள். (AP புகைப்படம்/ஜூலியா நிகின்சன்) நவம்பர் 24, 2022, வியாழன் அன்று நியூயார்க்கில் மேசிஸ் தேங்க்ஸ்கிவிங் டே பரேட்டின் போது சியர்லீடர்கள் சிக்ஸ்த் அவென்யூவில் இறங்கினர். (AP புகைப்படம்/ஜீனா மூன்) வியாழன், நவம்பர் 24, 2022, நியூயார்க்கில், மேசிஸ் தேங்க்ஸ்கிவிங் டே பரேட்டின் போது, ​​ரேடியோ சிட்டி மியூசிக் ஹால் மீது அடா ட்விஸ்ட், சயின்டிஸ்ட் பலூன் மிதக்கிறது. (AP புகைப்படம்/ஜீனா மூன்) நவம்பர் 24, 2022, வியாழன் அன்று நியூயார்க்கில் நடந்த மேசியின் நன்றி தின அணிவகுப்பின் போது மேசிஸ் சிங்கிங் கிறிஸ்மஸ் ட்ரீயின் கலைஞர்கள் பார்வையாளர்களை அலைக்கழித்தனர். (AP புகைப்படம்/ஜீனா மூன்) நியூயார்க்கில் நவம்பர் 24, 2022, வியாழன் அன்று, மேசிஸ் தேங்க்ஸ்கிவிங் டே பரேட்டின் போது, ​​கிறிஸ்மஸ் ட்ரீ உடையில் அணிவகுப்பு கலைஞர் ஆறாவது அவென்யூவில் நடந்து செல்கிறார். (AP புகைப்படம்/ஜீனா மூன்) நியூயார்க்கில் நவம்பர் 24, 2022, வியாழன் அன்று, மேசியின் நன்றி தின அணிவகுப்பின் போது மிசோரி பல்கலைக்கழக அணிவகுப்பு இசைக்குழு, சென்ட்ரல் பார்க் வெஸ்டுக்கு கீழே செல்கிறது. (AP புகைப்படம்/ஜூலியா நிகின்சன்) நியூயார்க்கில் நவம்பர் 24, 2022, வியாழன் அன்று மேசிஸ் தேங்க்ஸ்கிவிங் டே பரேட்டின் போது ஹேண்ட்லர்கள் ஸ்மோக்கி பியர் பலூனை ஆறாவது அவென்யூவில் இழுத்தனர். (AP புகைப்படம்/ஜீனா மூன்) வியாழன், நவம்பர் 24, 2022, நியூயார்க்கில், மேசிஸ் நன்றி தின அணிவகுப்பின் போது, ​​ஹேண்ட்லர்கள் ரொனால்ட் மெக்டொனால்டு பலூனை ஆறாவது அவென்யூவில் செலுத்தினர். (AP புகைப்படம்/ஜீனா மூன்) நவம்பர் 24, 2022, வியாழக்கிழமை, நியூயார்க்கில், மேசிஸ் நன்றி தின அணிவகுப்பின் போது, ​​ஆறாவது அவென்யூவில் மிதவைகள் மற்றும் பலூன்கள் கடந்து செல்வதை பார்வையாளர்கள் பார்க்கிறார்கள். (AP புகைப்படம்/ஜீனா மூன்) நியூயார்க்கில் நவம்பர் 24, 2022, வியாழன் அன்று மேசியின் நன்றி தின அணிவகுப்பின் போது ரெட் டைட்டன் பலூன் சென்ட்ரல் பார்க் வெஸ்டில் இறங்குகிறது. (AP புகைப்படம்/ஜூலியா நிகின்சன்) நியூயார்க்கில் நவம்பர் 24, 2022, வியாழன் அன்று, மேசியின் நன்றி தின அணிவகுப்பின் போது, ​​கோகு பலூன் சென்ட்ரல் பார்க் வெஸ்ட் வழியாகச் சென்றது. (AP புகைப்படம்/ஜூலியா நிகின்சன்) நியூயார்க்கில் நவம்பர் 24, 2022, வியாழன் அன்று, மேசிஸ் தேங்க்ஸ்கிவிங் டே பரேட்டின் போது, ​​பாஸ் பேபி பலூன் சென்ட்ரல் பார்க் வெஸ்டில் இறங்கியது. (AP புகைப்படம்/ஜூலியா நிகின்சன்) நியூயார்க்கில் நவம்பர் 24, 2022, வியாழன் அன்று, மேசிஸ் நன்றி தின அணிவகுப்பின் போது, ​​பில்ஸ்பரி டஃப்பாய் பலூன் சென்ட்ரல் பார்க் வெஸ்டில் இறங்கியது. (AP புகைப்படம்/ஜூலியா நிகின்சன்) நியூயார்க்கில் நவம்பர் 24, 2022, வியாழன் அன்று, மேசியின் நன்றி தின அணிவகுப்பின் போது, ​​PAW ரோந்து பலூன் சென்ட்ரல் பார்க் வெஸ்ட் வழியாகச் செல்கிறது. (AP புகைப்படம்/ஜூலியா நிகின்சன்) நியூயார்க்கில் நவம்பர் 24, 2022, வியாழன் அன்று மேசிஸ் தேங்க்ஸ்கிவிங் டே பரேட்டின் போது, ​​சியர்லீடர்கள் சென்ட்ரல் பார்க் வெஸ்டில் இறங்கினர். (AP புகைப்படம்/ஜூலியா நிகின்சன்) நியூயார்க்கில் நவம்பர் 24, 2022, வியாழன் அன்று, மேசியின் நன்றி தின அணிவகுப்பின் போது, ​​கலைஞர்கள் சென்ட்ரல் பார்க் வெஸ்டில் இறங்கினர். (AP புகைப்படம்/ஜூலியா நிகின்சன்) ப்ளூஸ் க்ளூஸ் ஹோஸ்ட் ஜோஷ்வா டெலா குரூஸ் ப்ளூஸ் க்ளூஸ் & யூவிலிருந்து அலைகள்! நியூயார்க்கில் நவம்பர் 24, 2022, வியாழன் அன்று, மேசியின் நன்றி தின அணிவகுப்பின் போது, ​​சென்ட்ரல் பார்க் வெஸ்டுக்கு கீழே செல்லும் போது மிதக்கிறது. (AP புகைப்படம்/ஜூலியா நிகின்சன்) பெரும்பாலும் தெளிவான வானம் மற்றும் லேசான காற்று, இந்த ராட்சத பலூன்களுக்கு ஏற்ற வானிலையாக இருந்தது. பழைய பிடித்தவை மற்றும் புதிய பலூன்களும் இருந்தன, இதில் ஸ்ட்ரைக்கர் தி யுஎஸ் சாக்கர் ஸ்டார், FIFA உலகக் கோப்பையின் கொண்டாட்டத்தில் ஒரு சின்னமான சைக்கிள் கிக்கை இயக்கினார், மற்றும் ஆஸ்திரேலிய கால்நடை குட்டியான ப்ளூய் தனது அணிவகுப்பில் அறிமுகமானார். ஆனால் அது ஒரு ஸ்னூபி தான் குழந்தைகளை உற்சாகப்படுத்தியது. இந்த வருடாந்திர பாரம்பரியம் கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டுக்கு முந்தையது, அமைப்பாளர்களின் கூற்றுப்படி, 3 மில்லியன் பார்வையாளர்களை ஈர்க்கிறது. அந்த அற்புதமான உணர்வைப் பகிர்ந்து கொள்ளவும், விடுமுறையை அனுபவிக்கவும் இது சரியான நேரம். Related Post navigation ← Previous Post Next Post → Leave a Comment Cancel Reply Your email address will not be published. Required fields are marked * Type here.. Name* Email* Website Save my name, email, and website in this browser for the next time I comment. Δ Search Search Recent Posts குளிர்கால சாலைகளில் உங்கள் வாகனம் இழுவை இழந்தால் என்ன செய்வது ட்ரம்ப் வெள்ளை மேலாதிக்கவாதியான நிக் ஃபியூன்டெஸை யேவுடன் மார்-ஏ-லாகோவில் சந்தித்தார் கருப்பு வெள்ளி ஷாப்பிங் இந்த ஆண்டு குறைவான குழப்பமாக உள்ளது ஹோச்சுல் விடுமுறை நாட்களில் தடுப்பூசிகளை வலியுறுத்துகிறார் ஜனநாயகக் கட்சியினர் 2024 க்கு கவனம் செலுத்துவதால் கருக்கலைப்பில் கவனம் செலுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது
முழங்கால் காயத்தால் அவதிப்பட்டு வரும் இலங்கை டி20 அணியின் முன்னாள் தலைவர் மலிங்கா பாகிஸ்தான் சூப்பர் லீக்கின் 2வது சீசனில் ஆடவுள்ளார். இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளரான மலிங்கா காலில் செய்து கொண்ட அறுவை சிகிச்சை மூலம் ஏற்படும் தொடர் வலியால் அவதிப்பட்டு வருகிறார். இதனாலே டி20 உலகக்கிண்ண தொடரின் போது தலைவர் பதவியில் இருந்து விலகியது மட்டுமல்லாமல், டி20 உலகக்கிண்ண தொடரில் இருந்தும் விலகினார். அவர் தொடர்ந்து போட்டிகளில் இருந்து விலகி ஓய்வு பெற்று வரும் நிலையில், ஆகஸ்ட் மாதம் நடக்கவுள்ள 2வது பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டியில் கலந்து கொள்ளவுள்ளார். இவருடன் அல்பி மோர்கல், நியூசிலாந்து அணியின் முன்னாள் தலைவர் பிராண்டன் மெக்கல்லம், இங்கிலாந்து ஒருநாள் மற்றும் டி20 அணியின் தலைவரான இயன் மோர்கன் ஆகியோரும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். 221 டி20 போட்டிகளில் ஆடியுள்ள மலிங்கா 299 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அதே போல் அல்பி மோர்கலும் டி20 போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டுள்ளார். அவர் 287 போட்டிகளில் 3,767 ஓட்டங்கள், 230 விக்கெட்டுகள் எடுத்துள்ளார்.
மிருகம், உயிர், சிந்து சமவெளி படத்தை இயக்கியவர் இயக்குனர் சாமி. இவர் இயக்குனராக முதன் முதலில் அடியெடுத்து வைக்கும் போது ஏகப்பட்ட கஷ்டங்களை பார்த்ததாக தெரிவித்தார். இவர் தற்போது ”அக்கா குருவி” என்ற குழந்தைகளுக்கான படத்தை இயக்கியுள்ளார். சிந்து சமவெளி படத்தை இயக்கிய பின் என் மார்க்கெட்டே ஒரு பத்து வருடமாக கிடப்பில் போடப்பட்டது. ஏனெனில் அந்த படத்தின் கதை அப்படி. மொத்தமா க்ளோஸ் ஆயிட்டேன். அதன் பிறகு வேறு எதாவது படம் பண்ணலாம் என்று எண்ணி நிறைய கதைகளை எழுதினேன். அப்படி எழுதிய கதைகளில் உயிர் படத்தின் கதை பிடித்து போனது தயாரிப்பாளர்களுக்கு.ஆனாலும் அதிலும் ஏதாவது ஒரு சிறிய மாற்றத்தைக் கொண்டு வந்தால் நன்றாக இருக்கும் என கூறினார்கள். இதையும் படிங்கள் : ஐய்யோ எத பாக்குறதுன்னே தெரியலயே!…இளசுகளை தவிக்க விட்ட தமன்னா… பின் என்னுடைய அசிஸ்டெண்ட் “சார் இந்த படத்தில் அண்ணி கேரக்டரை நெகட்டிவ் ரோலா மாத்திரலாம்” என்று கூறினார். அதன்படி முதலில் அது பாஸிட்டிவ்வான கதாபாத்திரமாகத் தான் இருந்தது. பிறகு தான் நெகட்டிவாக மாற்றி படத்தை எடுத்தோம். அதோடு முடியல, வடிவேலு சார் ஒரு படத்தின் ஆடியோ லாஞ்சில் உயிர் படத்தை பற்றி கேவலமாக பேசினார். “அது ஒரு படமா? படத்தை எடுத்தவன ஓடவிட்டு கல்லால அடிக்கனும்” என்று கூறினார். அவர் பேசிய வீடியோ ரொம்ப வைரலானது. ஆனால் படம் ஹிட் ஆனது.2.50 கோடியில் எடுத்த படம் 4.50 கோடி வரை வசூல் செய்தது. இந்தப் படத்தில் சங்கீதா அண்ணியாகவும் ஸ்ரீகாந்த் ஹீரோவாகவும் நடித்திருப்பார். Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
காலை வேளையின் பரபரப்போடு இருந்தது அந்த தனியார் மருத்துவமனை.மருத்துவரை பார்க்க டோக்கன் வாங்கிக் கொண்டு காத்திருப்பவர்கள்,ரத்த பரிசோதனைக்காக வந்திருக்கும் நோயாளிகள்,ஸ்கேனுக்கான வரிசையை கண்டு ஊரை ஒருமுறை சுற்றி வரலாம் என்ற அலுப்போடு அமர்ந்திப்பவர்கள் என்று திருவிழா போல காட்சியளித்தது அந்த மருத்துவமனையின் ரிசெப்ஷன் இடம். அதன் எதிரே வரிசையாக விதவிதமான பிரிவு மருத்துவர்களின் அறைகள் இருக்க அதில் பொது சிகிச்சை மருத்துவரின் அறையில் டாக்டர் வருவதற்கு முன்பு அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்த அவரின் பொருட்களை சரிசெய்துக் கொண்டிருந்தாள் சசிரேகா.அப்போது உள்ளே வந்த நர்ஸ் அமலா, “சசிம்மா எமெர்ஜென்ஸி வார்ட்ல ஒரு பேஷன்ட் கைல காயம்!ப்ளீஸ் நீ கொஞ்சம் பாக்கறீயா எனக்கு திடிர்னு ஆப்ரஷன் ட்யூட்டி போட்டுட்டாங்க இப்ப அங்க ஒரு நர்ஸும் இல்ல “என்று தயங்கிக் கொண்டு கேட்க, “அச்சோ என்னக்கா நீ போ அங்கன்னு சொன்னா போதாதா எதுக்கு கெஞ்சறீங்க “என்று புன்னகைத்தபடி கூறியவள் அவசர சிகிச்சை பிரிவிற்கு விரைந்தாள்.அங்கே அவள் அதன் வாயிலில் வந்தப் போது உள்ளேயிருந்து ஒரு ஆண்குரல், “அடேய் இத்தாதண்டி காயத்துக்கு போய் இவ்வளோ பெரிய ஆஸ்பத்திரிக்கு எதுக்குடா கூட்டிட்டு வந்தே! வீட்டுக்கு போய் மஞ்சளை வைச்சு அழுத்தினா போதாது”என்று அவன் கூற, “போதவே போதாது!காயம் எப்படிப்பட்டதுன்னு உங்களுக்கு எப்படி தெரியும்!இப்ப சாதாரணமா உங்களுக்கு தெரியறது பின்னாடி செப்டிக் ஆகி கையையே எடுக்கற நிலைமை வந்துட்டா அதுக்குதான் சரியான முறைல சிகிச்சை செய்ய தான் நாங்க இருக்கோம்”என்று அவனுக்கு புரியும்படி கூறிக் கொண்டே உள்ளே நுழைந்தவள் அவன் கையை பரிசோதிக்க முயல, “ஏய் நர்ஸம்மா நீ வேணாம் போய் ஆம்பிள கம்போன்டரை வர சொல்லு!”என்று கையை அவளுக்கு கொடாமல் இழுத்துக் கொள்ள, “ஏன் நான் பண்ணா என்ன?நானும் நர்ஸிங் படிச்சிட்டு பட்டம் வாங்கிட்டுதான்யா இங்க வேலை பாக்குறேன் “என்று அவள் புரியாமல் கேட்க, “அதெல்லாம் வேணா நீ முதல்ல ஆம்பிள கம்போன்டரை அனுப்பு அவுரே எனக்கு கட்டுப் போடட்டும்”என்று அடம்பிடிக்க இவனுக்கென்ன பைத்தியமா என்று பார்க்க, “நர்ஸக்கா அண்ணே ஆஞ்சனேய பக்தரு!பொம்பளை தொட்டா ஆகாது அவருக்கு!”என்று பக்கத்தில் இருந்தவன் காரணம் கூற, “இங்க நாங்க நோய்ன்னு வரவங்களுக்கு மருத்துவம் பாக்குறோம் எங்களுக்கு ஆண் பெண் பேதமெல்லாம் இல்ல நீங்கதான் பிரிச்சு பாக்குறீங்க எங்களுக்கு நீங்க பேஷண்ட் நாங்க நர்ஸ் அவ்ளோதான்!அது மட்டுமில்லாம இங்க நாங்க வெறும் லேடி நர்சுங்க மட்டும் தான் இருக்கோம்!உங்களை மட்டுமே பாத்திட்டு இருக்க முடியாது! இன்னும் நிறைய பேஷண்ட் இருங்காங்க மரியாதையா கையை கொடுங்க “என்று அவனின் கையை வலுக்கட்டாயமாக இழுத்தவள் பஞ்சை வைத்து சுத்தம் செய்து மருந்தை வைத்து கட்டினாள். அதன்பின் ஊசியை எடுத்து அதில் மருந்தை ஏற்றியவள், “ம் படுங்க!”என்றதும் அவன் படுக்க, “ஒருகளிச்சு படுங்க!”என்றதும் அவளுக்கு முதுகு காட்டிப் படுத்துக் கொண்டான்.அவன் மேல் சட்டையை தள்ளி இடுப்பில் இருந்த வேட்டியை கீழ்புறமாக தள்ள துள்ளி எழுந்தவன், “இந்தா புள்ள என்னா பண்ற நீயி இதெல்லாம் சரியில்ல ஆமா!”என்று எகிற, ” ஊசி போடத்தான்”என்று அவள் தலையில் அடித்துக் கொள்ள, “ஏன் அதை கைல போட்டா ஆவாதா!” “இந்த ஊசி கைல போட முடியாதுய்யா இடுப்புல தான் போடனும்”என்று பொறுமை மீற அவள் கத்த, “நெசமாத்தான் சொல்லுறியா?”என்று சந்தேகத்தோடு அவன் கேட்க, “ஐயோ கடவுளே யோவ் மரியாதையா படு இல்ல கண்ட இடத்துல குத்திருவேன் “என்று ஊசியை ஓங்கிக் காட்ட அவள் செய்தாலும் செய்துவிடுவாள் என்று பயம் பற்றிக் கொள்ள வேண்டா வெறுப்பாக படுத்துக் கொண்டான்.அவள் கை இடுப்பில் பட்டதும் அவன் நெளிய அவனை அடித்தவள், “நெளியாம இருய்யா”என்று திட்டி எப்படியோ ஊசியைப் போட்டு முடித்து அப்பாடா என்று நிமிர்ந்தவள் அவனோடு வந்தவனிடம் மருந்து சீட்டை கொடுத்து, “இதுல இருக்கிற மருந்தை தினம் இரண்டு வேளை கொடுக்கனும் இரண்டு நாளு பொறுத்து கைகட்ட அவுத்து மருந்தோட கொடுக்கற ஆயின்மெண்டை பூசி மறுபடியும் கட்டனும் ஒருவாரம் காயத்துல தண்ணி படாம பாத்துக்கனும் ஆ கடைசியா இனிமே இந்தாளை இங்க கூட்டி வராதே!மீற வந்தா விஷ ஊசி போட்டு கொன்றுவேன் “என்று மிரட்டியவள் அவனை நன்றாக முறைத்துவிட்டே சென்றாள். “அண்ணே வாங்கண்ணே சீக்கிரம் போய்டலாம் அந்த புள்ள திரும்பி வந்து இன்னும் ஏன் இங்கேயே இருக்கீங்கன்னு நெசமாவே விஷ ஊசிய போட்ற போவுது”என்று பயமுறுத்த, “அடேய் முருகேசு!தி கிரேட் ஆளுங்கட்சியோட முக்கிய தொண்டனான இந்த அறிவழகனுக்கு விஷ ஊசி போட ஒருத்தன் இனிமே பொறந்துதாண்டா வரனும்”என்று கெத்தாகக் கூற, “ஐயோ நர்ஸம்மா வருதுண்ணே! “என்று அவன் கூறியதும், “ஐய்யோ வாடா போயிறலாம்”என்று அவன் மிரண்டு ஓட சத்தமில்லாமல் சிரித்தபடி அவனை பின்பற்றினான் முருகேசன். அன்று காலை கண்விழித்ததுமே மீனாட்சி, “இந்தா மீரா!நாளனிக்கி சித்தப்புது திதி வருது!அங்க வூட்டுல சோலி குவிஞ்சுக் கெடக்கும்!பாவம் பவி புள்ள ஒத்தயில கிடந்து தவிக்கும் நீ செத்த போயி கூடமாட உதவி பண்ணிட்டு வா!”என்று கூற கண்ணா லட்டு திங்க ஆசையா ஆகிவிட்டது மீராவிற்கு. இரண்டு நாட்களுக்கு முன்பு பவித்ரா பேசும்போது கிரிதரன் அன்று வருவதாகக் கூறியிருந்ததால் எதை கூறிக் கொண்டு அங்கே செல்வது என்று அவள் யோசித்துக் கொண்டிருக்க அவள் அன்னையே போய்வா என்றதும் சந்தோஷத்தில் தையதக்கா ஆட வேண்டும் போல் இருந்தது.ஆனால் அதன்பின் மீனாட்சியின் கேள்வி கணைகளிலிருந்து எப்படி தப்புவது!அதனாலையே, “அட என்னம்மா நீயி! இன்னிக்கி வேலைக்கு ஆள வரச் சொல்லியிருக்கேன் நீ என்னடான்னா அங்க போங்குற”என்று பொய்யாக அவள் சலிக்க, “எவடி நீ கூறுகெட்ட சிறுக்கியா இருக்க!சின்னம்மா பாவம் வயசாளி அந்த புள்ள பவித்ரா சின்ன புள்ளங்களை வச்சிக்கிட்டு திண்டாடும்!ஆத்திர அவசரத்துக்கு உதவுவாங்களா இல்ல உன் வேலைத்தா பெரிசும்பியா…எல்லா ரெண்டு நாளைக்கு உன் வயல யாரும் தூக்கிட்டு போய்ற மாட்டாங்க!போ போ குளிச்சு நல்ல துணி கட்டிட்டு போ”என்று அவர் அவசரப்படுத்த வேகவேகமாக குளித்தவள் அவளிடம் இருக்கும் நல்ல புடவை ஒன்றை உடுத்திக் கொண்டு தன் மனங்கவர்ந்தவன் வீட்டை நோக்கி விரைந்தாள். அங்கே அவள் உள்ளே நுழைந்த நேரம் பவித்ரா கங்காதரனின் பிள்ளை செல்வங்கள் இரண்டும் சண்டையில் மும்மரமாக இருந்தது தான் முதலில் அவள் கண்ணில் பட்டது.அருகில் சென்று இருவரையும் பிரித்து விட்டவள், “அட புள்ளகளா!என்னடா இப்படி அடிச்சுக்கிறீங்க?”என்று கேட்க, “மீராக்கா!நீயே தீர்ப்பு சொல்லு!அந்த கார்டூன் தினமும் போட்டதையே போட்றான்! அதுக்கு நான் பாக்கற டிஸ்கவரிய பாத்தா எவ்ளோ விஷயம் தெரிஞ்சுக்கலாம்!சொன்னா கேக்க மாட்றா”என்று அர்ஜுன் கூறைபட, “போடா எனக்கு டோரா தான் வேணும் அக்கா நீ சொல்லு அவனுக்கு”என்று அர்பிதா அழ, “அடேய் இருங்கடா ஒரு நிமிஷம் இரண்டு பேத்துக்கும் சமமா ஒரு தீர்ப்பை சொல்லுறேன் தா அர்ஜுனா நீ இப்ப போய் வீட்டு பாடத்தை எழுதிட்டு வா அதுவரைக்கும் அர்பி புள்ள டோரா பாக்கும் நீ வந்ததும் அது பாடம் எழுத போன மேல நீயி அது என்ன?…ஆ டிஸுகவரி பாரு சரியா இப்ப சமமா தீர்ப்பு கொடுத்தாச்சு!தீர்ப்பு கொடுத்த தலைவிக்கு கும்பிடு வச்சிட்டு போய் வேலைய பாருங்க”என்று மீரா சண்டையை முடித்துவைக்க, “எதே கும்பிடா அதெல்லாம் முடியாது!”என்று அர்ஜுன் கூற, “ஆமா கும்புடெல்லாம் வைக்க முடியாது”என்று அர்பிதாவும் ஒத்து ஊத இருவரும் கைகோர்த்துக் கொண்டு ஓடி விட்டனர். “அடப்பாவிகளா!இத்தன நேரம் போட்ட சண்டையென்ன இப்ப கைகோத்துக்கிட்டு ஓட்றத பாரு! இருக்கட்டும் மறுபடியும் பஞ்சாயத்து பண்ண எங்கிட்டாதானே வருவீங்க அப்ப பாத்துக்கறேன் உங்களை”என்றாள் மோவாயில் கைவைத்தபடி. இத்தனை நேரம் இதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த பவித்ரா கலகலவென சிரிக்க,”அக்கா!என்னை கேலி செஞ்சு சிரிக்கறீங்களா!போங்க உங்க பேச்சு டூ!”என்று மீரா முகத்தை தூக்கி வைக்க, “பின்னே என்ன அதுங்கள பத்தி தெரிஞ்சும் நீயும் விடாம பஞ்சாயத்துக்கு தீர்ப்பு சொல்ல வர”என்று மேலும் சிரித்தவள் மீராவின் கன்னத்தை கிள்ளி, “என்ன திடிர்னு காத்து இந்த பக்கம் வீசுது”என்று கேலியாகக் கேட்க, “ஒன்னுமில்யே நா சும்மா உங்களைப் பாத்துட்டு போலாம்னு தான் வந்தேன்”என்று வாய் கூறினாலும் அவளின் வேல்விழிகள் தன் மன்னவன் எங்கே என்று தேடி அங்குமிங்கும் சுழன்றது. “ஏய் ஃபிராடு எங்கிட்டியேவா!உங்காளு இன்னும் வரல “என்றதும் அவளின் பூ முகம் வாடிப் போனது. “அவருக்கு ஏதோ திடீர் வேலையாம் அதான் இன்னிக்கி ராத்திரி கிளம்பி நாளை காலைல வருவாரு!”என்று கூற ஐயோ நாளை வரை காத்திருக்க வேண்டுமே என்று அவளின் தளிர் உள்ளம் தவியாய் தவித்தது. உலகிலேயே மீராவின் உள்ளத்தை கண்டுக் கொண்ட ஒரே ஜீவன் பவித்ரா தான்.கங்காதரனோடு காதல் வாழ்வை வாழ்பவளுக்கு மீராவின் கண்கள் கிரிதரனை காணும் போது காதல் கரைப்புரண்டோட மின்னுவதைப் புரிந்துக் கொள்ள முடியாதா என்ன?ஆனால் அதையும் அந்த கள்ளி உடனே ஒத்துக் கொள்ளவில்லை.அதட்டி உருட்டி கடைசியாக கிரியிடம் சொல்லி விடுவேன் என்று பவித்ரா மிரட்டியப் பின்தான் ஒப்புக் கொண்டாள்.அதிலிருந்து மீராவை கண்டப் போதெல்லாம் கேலி செய்து ஒருவழி ஆக்கிக் கொண்டிருந்தாள் அவள். அன்று வந்ததிற்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்துவிட்டு சென்றாள் மீரா.அதிலும் அதை செய் இதை எடு என்று அதிகாரம் செய்து அவள் பெண்டை நிமிர்த்தினார் கலைவாணி.அவரின் சொந்த அக்கா மகள் தான் மீனாட்சி.ஆனாலும் ஏழை என்று அவர்களை கண்டால் சிறிது அலட்சியம் தான்.முதலில் எல்லாம் எந்த விசேஷம் என்றாலும் மீனாட்சியை அழைத்து சரியாக வேலை வாங்கி விடுவார். மீனாட்சியின் கணவர் இறந்து அவரும் உடல்நலம் குன்ற இப்போதெல்லாம் மீரா தான் அவருக்கு சம்பளம் இல்லாத வேலையாள்.ஆனால் உண்ண குடிக்க என்று அதில் எந்த குறையும் வைக்க மாட்டார்.செய்ததில் வீட்டிற்கும் கட்டிக் கொடுப்பார்.ஆனால் அந்த செயல்கள் எல்லாம் அவர்களை ஏதுமற்றவர்கள் என்பதை எடுத்துக் காட்டாமல் இராது.ஆனால் பவித்ராவிற்கு அது போல ஏற்ற தாழ்வுகள் இல்லை.மீரா சசி இருவரையும் தன் சொந்த தங்கைகளாகத் தான் பார்த்தாள்.அதனால் தான் மீரா கிரியை விரும்புவது தெரிந்து விரைவில் அவள் தன் ஓரகத்தி ஆகிவிடுவாள் என்று மகிழ்ந்துப் போனாள்.ஆனால் மனிதர்கள் ஒரு கணக்கு போட தெய்வம் வேறு ஒன்றை செய்து மனிதர்களை திகைக்க வைக்கும். மறுநாள் மாலை வருவதாகக் கூறி சென்றுவிட்டாள் மீரா தன் கண்ணன் வராத ஏக்கத்தோடு. ஆனால் அவளின் மனகவர்ந்தவனோ தன் காதலியின் நாடகத்தை அறியாமல் ஊருக்கு போவதை ஒருநாள் தள்ளிப் போட்டுவிட்டான்.கிரிதரன் ஊருக்கு கிளம்ப தயாராகிக் கொண்டிருந்தப் போது வாயிற் கதவு தட்டப்பட வேகமாக சென்று அவன் திறக்க அவனை இறுக அணைத்து, “ஓ கிரண் உங்களை வழியனுப்ப நானே வந்திட்டேன்”என்று அவன் உதட்டில் முத்தமிட முயல முகத்தை திருப்பிக் கொண்டவன், “ம்ப்ச் சமி!என்ன இது யாராவது பார்த்தா என்ன நினைப்பாங்க?அண்ட் கல்யாணத்துக்கு முன்னாடி கிஸ் எல்லாம் வேண்டாம்னு எத்தனை வாட்டி சொல்றது உனக்கு!”என்று அவளை அதட்ட சுத்த பட்டிக்காட்டான்! என்று மனதில் திட்டியவள் வெளியே, “ஓ டியர் கல்யாணம் பண்ணத்துக்கு அப்புறம் கிஸ் பண்ணத்தானே போறோம் அதை இப்பவே பண்ணா என்ன தப்பு!இவ்வளோ படிச்சு வேலை பார்த்தும் நீங்க இன்னும் உங்க வில்லேஜ் மென்டாலிட்டி விட்டு வெளியவே வரல”என்று சிணுங்க, “நாம எவ்ளோ படிச்சு பெரிய வேலை பார்த்தாலும் நம்ம வேரை மறந்திடக் கூடாது! சுதந்திரம் இருக்குன்னு அதை தவறா யூஸ் பண்ண கூடாது!அதுனால விபரீதம் தான் ஆகும் “என்று அவன் கூற மானசீகமாக தலையில் அடித்துக் கொண்டவள் “சரி சரி நீங்க எல்லாம் பேக் பண்ணியாச்சா?நா ஏதாவது ஹெல்ப் பண்ணுமா”அவன் இத்தனை நேரம் முடித்திருப்பான் என்று தெரிந்தே அவள் கேட்க, “இல்ல நா எல்லா முடிச்சிட்டேன்!ஆட்டோ வந்ததும் கிளம்ப வேண்டியது தான்”என்று அவன் கூற, ‘உனக்காக எது வேணா செய்வானான்னு அக்கா கேட்டதுக்கு செய்வான்னு சொல்லி இன்னிக்கி அவன் கிளம்பறத நிப்பாட்டி காட்றேன்னு சவால் விட்டேனே இப்ப என்ன பண்றது ‘என்று அவளின் கிருமினல் மூளையை கசக்கி யோசித்தவள் அவன் ஆட்டோ வந்ததும் அவனுடனே நடந்து வந்தவள் திடிரென படியில் மடங்கி அமர்ந்து, “ஐயோ கால் மடங்கிடுச்சு!ஹோ கிரண் என்னால வலி தாங்க முடியலையே!ப்ளீஸ் ஏதாவது பண்ணுங்க “என்று ஹோவென கத்தி அழ, “சமி! டோண்ட் வொரி!சின்ன ஸ்ப்ரைனா தான் இருக்கும்”என்று அவன் அவள் காலை பரிசோதிக்க, “ஓ கிரண் உங்களுக்கு பஸ்ஸுக்கு லேட் ஆச்சு நீங்க கிளம்புங்க!நா எப்படியாவது வீட்டுக்கு போயிடுவேன் “என்று காலை பிடித்துக் கொண்டு கண்ணீர் விட அந்நிலையில் அவளை விட்டு போக மனமில்லாமல் தன் பயணத்தை மறுநாளைக்கு ஒத்திப் போட்டுவிட்டான்.சவாலில் வென்றதிற்கு அக்காவிடமிருந்து ஐந்தாயிரத்தை அவள் பெற்றத்தை அந்த அப்பாவி எப்படி அறிய முடியும். மறுநாள் மாலையே கிளம்பிவிட்டவன் இரண்டு மணி அளவில் தன் வீட்டிற்கு வந்துவிட்டான்.சத்தமிடாமல் பின்புறம் இருந்த மாடிப்படி வழியே ஏறி அவனுக்காகவே செய்யப்பட்ட கதவின் பூட்டை தன் கையிலிருந்த சாவியால் திறக்க அங்கே மாடி ஹால் இருந்தது.அங்கிருந்து அவன் அறைக்கு சென்று அவன் கைகால் கழுவி வேறு உடை உடுத்தி வந்தப் போது அவனுக்காக சூடான பாலோடு அறை வாயிலில் நின்றிருந்தாள் பவித்ரா. “எதுக்கு மதனி இந்த நேரத்துல எழுந்திட்டு! உங்களுக்கு சிரமம் வேண்டாம்னு தானே இந்த கதவே போட்டேன் அப்படியும் பாலோடு வந்து நிக்கிறிங்க உங்களை என்னத சொல்றது”என்று அலுத்துக் கொள்ள, “இந்த வெடவெடக்கற குளுருல வந்ததுக்கு சுடா பால் குடிச்சா நல்லாயிருக்காதா தம்பி!கண்முளிச்சு உங்களுக்கு செய்யறதுல நான் ஒன்னும் கொறஞ்சுற மாட்டேன் பேசாம இதை குடிச்சிட்டு படுங்க”என்று அவன் கையில் திணித்தவள் புன்னகையோடு சென்றுவிட்டாள். மதனியின் உருவத்தில் இன்னொரு தாயைக் கண்டவன் சமிகாவும் இதே போல தன்னை தன்னவரையும் அன்போடுப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று விரும்பியது அவன் உள்ளம்.
மதுரை: சிவகங்கை மாவட்டம், திருப்புத்தூரைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த பொது நல மனுவில், ‘‘திருப்புத்தூர் நகரில் 6.52 ஏக்கர் நிலம் பள்ளிவாசல் மானியம் என்ற பெயரில் நிலபதிவேடுகளில் வகைப்படுத்தப்பட்டுள்ளது. இதில், 1.14 ஏக்கர் நிலம் திருப்புத்தூர் வர்த்தக சங்க செயலாளர் பெயரில் பட்டா மாற்றம் செய்து போலி ஆவணங்கள் மூலம் வழங்கியுள்ளனர். மோசடியில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார். மனுவை நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஆர்.ஹேமலதா ஆகியோர் விசாரித்தனர். வர்த்தக சங்கத்தின் சார்பில், ‘‘சிவில் வழக்கில் வர்த்தக சங்கத்திற்கு ஆதரவாக தீர்ப்பு கிடைத்துள்ளது’’ என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள், மனுவை தள்ளுபடி செய்து ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளனர். Tags: Case Rs.10 000 fine iCourt வழக்கு ரூ.10 000 அபராதம் ஐகோர்ட் மேலும் செய்திகள் இந்துக்கள் நடத்திய ஆலயத் திருவிழா: சப்பரத்தை சுமந்து செல்லும் ஐயப்ப பக்தர்கள் திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்திருவிழா கோலாகலம் பக்தர்கள் வெள்ளத்தில் மகா ரதம் பவனி: லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் டைரிகள் விலை 30 சதவீதம் உயர்ந்தது: ‘‘வாசனை டைரி’’ புதிதாக அறிமுகம் சென்னையில் இருந்து நெல்லை திரும்ப தென்மாவட்ட ரயில்களில் அலைமோதும் கூட்டம்: ரூ.3900 டிக்கெட் கூட கிடைப்பதில்லை ராணிப்பேட்டை நகராட்சியில் வாடகை செலுத்தாத 4 கடைகளுக்கு சீல் ரூ.56.30 லட்சத்தில் நூலகம், நியாயவிலை கடை திறப்பு: நல்ல திட்டங்களை தந்து தமிழகத்தில் சிறப்பான ஆட்சி செய்கிறார் முதல்வர்: அமைச்சர் காந்தி பேச்சு தொடர் மழையால் அதிரும் பிரேசில்!: நீரில் அடித்து செல்லப்பட்ட வாகனங்கள்.. நிலச்சரிவில் சிக்கி 2 பேர் பலி..!! குஜராத் மாநிலம் சட்டசபை தேர்தலில் வாக்களிக்க ஆப்பிரிக்க மக்களுக்கென பிரத்யேக பூத்: உணவு, ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடிய மக்கள்..! புதுச்சேரியை அதிரவைக்கும் மக்களின் அழுகுரல்.. மணக்குள விநாயகர் கோயில் யானை உயிரிழப்புக்காக கதறும் பக்தர்கள்..!! சிற்பி திட்டத்தின் கீழ் மாணவ, மாணவியர்களுக்கான தேசப்பற்று குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி: அமைச்சர் அன்பில் மகேஷ் பங்கேற்பு
நாட்டை இப் பொருளாதார புதைச் சேற்றில் இருந்து மீட்கும் வகையில் சகல அரசியல் கட்சிகளும் இணைகின்ற சர்வகட்சி ஆட்சி ஒன்று அமைக்கப்பட வேண்டும் என்ற அரசின் அழைப்புக்கு மலையக் கட்சிகள் சாதகமாக பதிலை அளித்தால் என்ன என்ற கேள்விக்கு மூன்று மலையக பிரதிநிதிகள் தமது கருத்துக்களை தெரிவித்தனர். அவற்றைத் தொகுத்து தருகிறோம். இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினருமான ஏ.பி. சக்திவேலை அணுகி இதுபற்றிக் கேட்டோம். இந்த நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஒரு தேசிய அரசாங்கத்தை அமைப்பதற்கு பகிரங்க அழைப்பொன்றை விடுத்துள்ளார். இஸ்லாமியர்கள், பெரும்பான்மை சிங்களவர்கள் தமக்கு கிடைக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் பயன்படுத்தி தங்களுக்கு தேவையான அமைச்சு பொறுப்புக்களைப் பெற்று தமது சமூகங்களைச் சார்ந்த மக்களுக்கு பாரிய சேவைகளை செய்து வருகின்றனர். அவர்கள் பெற்றுக் கொள்கின்ற பல்வேறு அமைச்சுகள் சமூகத்திற்கு சேவையாற்றக்கூடிய அமைச்சுக்களாக இருக்கின்றன. இந்த சந்தர்ப்பத்தை மலையக மக்களும் முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். மலையகத்தை பிரதிநிதித்துவப் படுத்துகின்ற மலையகப் பிரதிநிதிகள், கட்சித் தலைவர்கள் பல்வேறு கட்சிகளுக்கு தங்களது ஆதரவை தெரிவித்திருந்தாலும் தேசிய அரசு ஒன்றில் இணைவதில் அனைத்து மலையக பிரதிநிதிகளும் தலைவர்களும் கருத்து வேறுபாடுகளை களைந்து முடிந்தளவு அதிகமான அமைச்சுகளைப் பெற்று மலையக சமூகத்தின் குறைபாடுகளை நீக்கும் வகையில் முன்வர இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்த வேண்டும். அவ்வாறு அவர்கள் பெறுகின்ற அமைச்சுகளில் இருந்து இந்த மக்களுக்கு எல்லாவித சேவைகளும் கிடைக்க வேண்டும். குறைந்தது மூன்று அல்லது நான்கு அமைச்சரவை அந்தஸ்து அமைச்சுக்களை மலையக தலைமைத்துவங்கள் பெறவேண்டும் என்பது என் விருப்பம். எனவே, நான் அந்தக் கட்சி இந்தக் கட்சி என அடையாளப்படுத்தாது கட்சிப் பேதங்களை மறந்து அனைவரும் அமைச்சுப் பதவிகளைப் பெற்று இந்த அரசாங்கத்தை வலுப்படுத்தி மக்களின் குறைபாடுகளை நீக்க ஒன்றுபடுவது காலத்தின் தேவை என்கிறார் இவர். மத்திய மாகாணசபை முன்னாள் உறுப்பினரும் மலையக மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளருமான ஆர். இராஜாராமிடம் சர்வகட்சி அரசு தொடர்பாகக் கேட்டோம். "அமைச்சுப் பதவிகள் வழங்குவது ஒரு கண்துடைப்பாகும். அமைச்சு பதவி வழங்குவதால் மக்களின் அபிலாஷைகள் நிறைவேறாது" என்றார் ஒரே போடாக! நாட்டில் அமைச்சுப் பதவிகள் வழங்குவதைவிட நாட்டில் தற்பொழுது நிலவும் பொருளாதார நெருக்கடிக்கும் மக்கள் தங்களது தொழிலை இழந்து இரவும் பகலுமாக எரிபொருள் பெற்றுக்கொள்ள வரிசையில் நிற்பதை நிறுத்த முதலில் நடவடிக்கை எடுக்க வேண்டும். எந்தவொரு ஜனநாயக நாட்டிலும் எடுத்தேன் கவிழ்த்தேன் என்ற ஆட்சிமுறை நிலைத்ததில்லை. மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்தால் இத்தகைய ஆட்சியை விரட்ட முடியும் என்பதை கொழும்பு காலிமுகத் திடலில் இடம்பெற்ற பொதுமக்களின் ஆர்ப்பாட்டம் ஒரு எடுத்துக்காட்டு. நாட்டில் தற்பொழுது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு காரணமானவர்கள் தங்களது ஆட்சிப் பதவிகளை விட்டு விலக வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தே எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நாட்டின் முதுகெலும்பாக இருக்கும் இளைஞர்களை அரசாங்கம் அடக்கி ஒடுக்க முடியாது. இளைஞர்கள் இந்த நாட்டின் சொத்துக்கள் அவர்களைப் பாதுகாக்க வேண்டும். இந்த நாட்டில் அமைச்சர்களுக்கு ஒரு சட்டம் சாதாரண மக்களுக்கு ஒரு சட்டமென இரண்டு இருக்க முடியாது. நாட்டில் தற்பொழுது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு புதிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்வு பெற்றுத்தர வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். பதிலாக அமைச்சுப் பதவி வழங்குவதாலோ அமைச்சு பதவிகள் வழங்கி பாராளுமன்ற உறுப்பினர்களை திருப்திப்படுத்துவதாலோ நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார பிரச்சினைக்கு தீர்வுகாண முடியாது. எனவே, மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாப்பதற்கும் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இன்றைய தேவை என்பது இராஜாராமின் கருத்தாக இருக்கிறது. இந்த நாட்டில் தடை செய்யப்பட்டிருந்த புலம்பெயர்ந்தோர் சமூக அமைப்புகளின் தடையை நீக்கி அவர்களுக்கென காரியாலயம் அமைத்து அவர்களை அழைக்கும் இந்த அரசாங்கம் மலையக சமூகத்தையும் தேசிய நீரோட்டத்தில் இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏனெனில் கடந்த 200வருடங்களாக தேயிலை ஏற்றுமதி மூலம் இலங்கைக்கு டொலர் வருமானம் பெற்றுக்கொடுத்து வரும் மலையக சமூகத்தையும் தேசிய நீரோட்டத்தில் இணைத்துக்கொள்ள தயங்கக்கூடாது. இவர்களை தேசிய நீரோட்டத்தில் இணைத்துக்கொள்வதுடன் அவர்களின் அடிப்படைத் தேவைகளையும் உரிமைகளையும் இந்த அரசாங்கம் பெற்றுக்கொடுக்க வேண்டும். நாடு முடக்கப்பட்டிருந்தபோது பெருந்தோட்டங்களில் தேயிலை உற்பத்தி வழமைபோல் நடைபெற்றதன் மூலம் அந்நிய செலாவணி வருமானம் உறுதி செய்யப்பட்டது. எனினும் தோட்டத் தொழிலாளர்களை இரண்டாம் பிரஜைகளாகவே பார்க்கும் மனப்பான்மை அப்படியேதான் நீடிக்கிறது. ஏனையோருக்கு போலல்லாது பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு மாத்திரம் சம்பளம் அதிகரிக்கப்படுவதில்லை. தோட்டத் தொழிலாளர் சமூகத்தை எந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும் இவர்களின் வாழ்வாதாரத்தைப் பற்றி சிந்திப்பதில்லை. மலையக பெருந்தோட்ட சமூகத்தை இந்த நாட்டில் ஆட்சி செய்த ஆட்சியாளர்கள் உழைக்கும் இயந்திரமாகவும் தேர்தல்களில் வாக்களிக்கும் இயந்திரமாகவும் பயன்படுத்துகிறார்களே தவிர அவர்களை மனிதர்களாக மதிப்பதில்லை. எனவே மலையக சமூகத்தை தேசிய நீரோட்டத்தில் இணைத்துக்கொண்டு அவர்களின் அடிப்படை உரிமைகளைப் பெற்றுக்கொடுக்க இந்த அரசாங்கம் நடவடிக்ைக எடுக்க வேண்டும் என்று கூறி முடித்தார் ராஜாராம். அடுத்ததாக, நாம் சந்தித்தது இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் பொதுச் செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சுப்பையா சதாசிவத்தை. அண்மையில் நாவலப்பிட்டி பிரதேசத்தில் இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மலையகத் தொழிற்சங்க அரசியல்வாதிகள் எவரும் நேரில் சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை செய்து கொடுக்கவில்லை என்று கவலை வெளியிட்டார். எமது மக்களுக்கு பாதிப்பு ஏற்படும்பொழுது அதிகாரத்தில் உள்ளவர்கள் பொறுப்புடன் செயல்பட்டு எமது மக்களுக்கு தேவையான உதவிகளை பெற்றுக்கொடுக்க வேண்டும். இயற்கை அனர்த்தத்தால் நாவலப்பிட்டி பிரதேச தோட்ட மக்கள் பெரும் பாதிப்புக்குள்ளானதோடு உயிர்ச் சேதங்களும் ஏற்பட்டன. இந்த மக்களை மலையக தொழிற்சங்க அரசியல்வாதிகள் நேரில் சென்று பார்வையிடாமல் நாட்டு மக்களைப் பற்றியும் சர்வதேச ரீதியில் இலங்கைக்கு வரும் சீனா கப்பலைப்பற்றியும் பேசிவருகிறார்கள். இதனை பார்க்கும்போது வேதனையாக இருக்கிறது. மேலும் ஆயிரம் ரூபா சம்பள விவகாரத்தில் முதலாளிமார் சம்மேளனம் தாக்கல் செய்த வழக்கில் தொழிலாளர்களுக்கு சாதகமாக தீர்ப்பு கிடைத்துள்ளது. இனிமேலாவது கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களின் தொழில் உரிமையைப்பற்றி தோட்ட நிர்வாகங்களிடம் தொழிற்சங்கங்கள் பேசுவதற்கான உரிமையை பெற்றுக்கொடுக்க வேண்டும். இன்று இந்த நாட்டில் என்றுமில்லாதவாறு வாழ்க்கைச் செலவு தொழிலாளர்களின் வாழ்க்கையை கடுமையாகப் பாதித்துள்ளது. கோதுமை மாவை அதிகம் உபயோகிக்கும் இச் சமூகம் கிலோ மாவின் விலை 350என உயர்த்தப்பட்டுள்ளதால் அவர்களின் வாழ்க்கை மேலும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது. எனவே தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை அவர்களின் வாழ்க்கைச் செலவுப் புள்ளிக்கேற்ப சம்பள உயர்வை பெற்றுக்கொடுக்க கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கத் தலைமைகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். உணவிற்காக பயன்படுத்தப்படும் கோதுமை மாவை மானிய விலையில் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து தோட்டங்களிலும் கூட்டுறவு சங்க கடைகள் அதை்து மானிய விலையில் மண்ணெண்ணெய் மற்றும் கோதுமை மா வழங்குவதுடன் உணவுப் பொருட்களையும் நியாய விலையில் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நகரங்களில் சதொச நிறுவனம் மூலம் நியாய விலையில் உணவுப் பொருட்கள் விற்பனை செய்வது போல தோட்டப் பகுதியில் கூட்டுறவு சங்கக்கடைகள் அமைத்து தொழிலாளர்களுக்கு நியாய விலையில் உணவுப் பொருட்கள் விற்பனை செய்யும் வகையில் தோட்டங்களில் கூட்டுறவு சங்க கடைகளை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டு ஒரு தலைமைத்துவம் இல்லாத வேளையில் துணிந்து நாட்டின் தலைமைத்துவத்தை பொறுப்பேற்ற ரணில் விக்கிரமசிங்கவிற்கு அனைத்து கட்சி தலைமைகளும் ஆதரவு வழங்கி அவர் மேற்கொள்ளும் அபிவிருத்திப் பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டியது அவசியம். நூரளையூரான் Comments Your name Subject Comment * Leave this field blank Related Articles தோட்ட சேவையாளர்கள் சங்கத்தின் கூட்டு ஒப்பந்தம் தோட்ட சேவையாளர்கள் சங்கத்தின் கூட்டு ஒப்பந்தம் இன்று பாரிய சிக்கலுக்குள்ளாகியுள்ளது. தோட்ட சேவையாளர்கள் சங்கமும் முதலாளிமார்... மலையக மக்களின் எழுச்சியில் நீங்கா நினைவுகளை கொண்ட அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் உலகிலேயே ஒடுக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுத்தவர்கள், வழிகாட்டியவர்கள் என்றுமே போற்றப்படுபவர்கள். இந்த வரிசையில் மேற்குலக... இராகலை ரொக்லெண்ட் (மாவுசா) தோட்டம்; தன்னெழுச்சி முடக்கப்பட்டு அபிவிருத்தியில் அநாதைகளாக்கப்பட்ட தொழிலாளர்கள் இந்திய வம்சாவளி மக்கள் என்ற நாமத்தில் இந்த நாட்டில் மூன்றாம் பரம்பரையை தாண்டி வாழ்ந்து வரும் பெருந்தோட்ட சமூக மக்களில் தோட்ட... காலனித்துவ காலத்தில் கைவிடப்பட்ட பல திட்டங்கள் புதிய திட்டங்களால் வீணாக்கப்பட்ட நிதி எமது நாடு இன்று கடும் பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுத்துள்ளது. அதற்காக பல காரணங்கள் கூறப்பட்டு வரும் சூழலில் நாம் அதற்கு... பெருந்தோட்ட மக்களுக்கு 1987ஆம் ஆண்டு காணி, வீட்டுரிமை பத்திரங்கள் இல்லை மலையகத்தில் 1987ஆம் ஆண்டுக்கு பின் பெருந்தோட்ட மக்களுக்கு கட்டிக் கொடுக்கப்பட்டுள்ள வீடுகளுக்கான காணி மற்றும்... தொழிலாளர் இடைவிலகலால் பாரிய சிக்கலில் தோட்டங்கள் நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடி பெருந்தோட்ட துறையில் பெரும் பாதிப்பை வருங்காலத்தில் ஏற்படுத்துவதற்கான சாதக... அற்புத அனுபவங்கள், திகில் தகவல்களை தரும் ஹற்றன் சிங்கமலை சுரங்கவழிப் பாதை இலங்கை புகையிரத பாதைகளில் மிகவும் விசாலமானதும் அற்புதமான திகில் அனுபவங்களை தரும் சிங்கமலை சுரங்கம் உலகில் பேசப்படும் ஒரு... பெருந்தோட்ட குடியிருப்புகளில் மின் ஒழுக்குகளால் தீ மலையக பெருந்தோட்ட குடியிருப்புகளுக்கு மின்சாரம் வழங்கப்பட்டு 25வருடங்கள் கடந்து விட்டன. இன்றைய நிலையில் 99சதவீத... கண்டுகொள்ளப்படாத சமூகமாக பெருந்தோட்ட சேவையாளர்கள் இலங்கைக்கு 200வருடங்களாக அன்னியச் செலாவணியை ஈட்டித்தரும் பெருந்தோட்டத்துறையில் தோட்டத் தொழிலாளர்களை தவிர்த்து பெருந்தோட்ட... அரச ஊக்குவிப்பு இல்லாததால் நுவரெலியாவில் அருகிவரும் கால்நடை வளர்ப்பும் பால் உற்பத்தியும் பால் உற்பத்தியாளர்களை ஊக்குவிக்க அரசாங்கம் தவறியதால்தான இன்று வெளிநாட்டு பால் மாவை எதிர் பார்த்திருக்க வேண்டிய சூழ் நிலைக்கு... மலையக கட்சிகள் கொள்கை அடிப்படையில் ஒன்றுபடும் சாத்தியக்கூறு கடந்த வார இறுதியில் காற்று வாக்கில் ஓர் குளிர்ச்சியான செய்தி காதுகளை வந்தடைந்தது. மலையக அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும்... அபிவிருத்தியில் அநாதையாக்கப்பட்ட உடப்புஸ்ஸலாவை நகரம் வலப்பனை பிரதேச சபைக்குட்பட்ட உடப்புஸ்ஸலாவை நகரில் காணப்படும் உட்கட்டமைப்பு மற்றும் ஏனைய அபிவிருத்தி குறைப்பாடுகளை...
அனைத்துலகத் தமிழ் ஆய்வு மன்றம் (IATR) 1964-ஆம் ஆண்டு புது டெல்லியில் உலகெலாம் அறிந்த தமிழ்ப் பேரறிஞர், மறைந்த தனிநாயக அடிகளாரின் பெரும் முயற்சியால் நிறுவப்பட்டது. அந்த ஆண்டு உலகக் கீழக்கலை அறிஞர்கள் (Orientalists) மாநாடு புது டெல்லியில் நடந்தது. அதற்குப் பிரான்சை சேர்ந்த அறிஞர் முனைவர் பீலீயோசா, செக்கசுலோவிக்கியா அறிஞர் பெருமான் சுவெல்லபில், அறிஞர்கள் ஆசர், இங்கிலாந்திலிருந்து வந்திருந்த அறிஞர் பெருமக்கள் பரோ, எமனோ, தமிழகத் தமிழ் அறிஞர்கள் தே.போ.மீனாட்சி சுந்தரனார், முனைவர் வி.ஐ.சுப்ரமணியன் ஆகியோர் தனிநாயக அடிகளோரோடு இணைந்து இந்த ஆய்வு மன்றத்தைத் தொடங்கினர்.இது ஒரு அரசியல் சார்பற்ற, ஊதியம் கருதாத ஆய்வு மன்றம் ஆகும். இதன் தலைசிறந்த நோக்கம்: “பொதுவாகத் திராவிடம் பற்றியும் குறிப்பாகத் தமிழ் பற்றியும் செய்யப்படும் ஆய்வுகளைப் பல்வேறு துறைகளில் அறிவியல் முறையில் செய்ய ஊக்குவித்தலும், இவற்றோடு தொடர்புடைய பிறதுறைகளில் ஆய்வுகள் செய்துவரும் அறிஞர்களோடும் உலக நிறுவனங்களோடும் நெருங்கிப் பங்குகொள்ளுதலும் ஆகும்.” இது வரை ஆய்வு மன்றம் நடத்திய மாநாடுகள்: ஆய்வு மன்றத்தின் அமைப்பாளரும், அப்போது மலேயாப் பல்கலைக் கழகத்தின் இந்திய ஆய்வியல் துறையின் தலைவராகவும் இருந்த தனிநாயக அடிகளார் 1966-ஆம் ஆண்டு, முதல் உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாட்டை கோலாலம்பூரில் நடத்தினார். இரண்டாம் மாநாடு 1968-ஆம் ஆண்டு சென்னையில் அன்றைய தமிழக முதல் அமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் தலைமையில் சிறப்பாக நடத்தப்பட்டது. தொடர்ந்து பின் வந்த மாநாடுகள் பாரிசு நகர் (1970), யாழ்ப்பாணம் (1974), மதுரை (1981), கோலாலம்பூர் (1987, 2015), போர்ட் லூயிசு (1989), தஞ்சாவூர் (1995) ஆகிய நகரங்களில் நடைபெற்றன. ஆய்வு மன்றத்தின் நோக்கத்திற்கு இணங்க, இம் மாநாடுகள் தமிழ் பேரறிஞர்கள் பலரை வரவழைத்து, தமிழ் மொழி, இலக்கியம், நாகரிகம் ஆகியவற்றைப் பற்றி அவர்கள் செய்த ஆய்வுகளை மாநாட்டில் படைக்க வாய்ப்பளித்தன. 10-ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு: இம்மாநாடுகளை, அரசியல் தலையீடு இன்றி, தமிழ் ஆராய்ச்சிக்கு முதல் இடம் கொடுத்து நடத்துதல் சிறந்தது என மன்றத்தின் அலுவலர்களும், தமிழ் அறிஞர்கள் பலரும் பல காலம் எண்ணி வந்தனர். இக்கருத்தை முன்னெடுத்துச் சென்று, இனி வரும் ஆராய்ச்சி மாநாடுகளைத் தமிழ் ஆராய்ச்சிக்கு முதல் இடம் கொடுத்து நடத்த வேண்டும் என்று துணிந்து ஊக்கம் அளித்தவர், முன்னாள் அனைத்துலகத் தமிழ் ஆய்வு மன்றத்தின் துணைத் தலைவரும், சிறந்த விஞ்ஞானியும், பெரும் தமிழ் அறிஞரும், கவிஞரும் ஆன மறைந்த உயர்தனித் தமிழ்மகன், முனைவர் வி.சி.குழந்தைசாமி அவர்கள். அவரே அமெரிக்காவாழ் தமிழ்மக்கள் ஒன்று சேர்ந்து அடுத்த ஆராய்ச்சி மாநாட்டை இந்தப் புது வகையில் நடத்த வேண்டும் என்று ஊக்கம் அளித்தார்; இக்கருத்தை உலகளாவிய ஆய்வு மன்ற அலுவலர்களிடமும் தெரிவித்தார். அவர் உந்துதலாலும் அளித்த ஊக்கத்தினாலும் அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையும், சிகாகோத் தமிழ்ச்சங்கமும் அடுத்த மாநாட்டை புதுமுறையில் நடத்த முன்வந்தனர். 2015-ஆம் ஆண்டு கோலாலம்பூரில் நடந்த 9-ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் பங்கு கொண்ட தமிழ் ஆர்வலர் மருத்துவர் சோமா இளங்கோவன் உதவியோடு, மாநாட்டில் ஆராய்ச்சிக் கட்டுரை வழங்கியும், தலைமை தாங்கியும் பங்கு கொண்ட தமிழ்ப் புலவர் முனைவர் பிரான்சிசு ச. முத்து அவர்கள், அடுத்த மாநாட்டை வட அமெரிக்காவில் நடத்த வேண்டும் என்றும் அதற்கு அனைத்துலகத் தமிழ் ஆய்வு மன்றம் ஒப்புதலும் ஊக்கமும் அளித்தல் வேண்டும் என்று அழைப்பு விடுத்தனர். இந்த அழைப்பை அனைத்துலகத் தமிழ் ஆய்வு மன்றமும், அதன் தலைவர் முனைவர் மாரிமுத்தும், துணைத் தலைவர் முனைவர் பொன்னவைக்கோவும் ஏற்றுக்கொண்டனர். இப்போது 2023 ஆம் ஆண்டு சிங்கப்பூரில் நடைபெற உள்ள 11-ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டுக்கு ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
Tamil Kadhal Kavithaigal is the most among people search the internet for all times. As a matter of fact love is the great and joyful feeling in the world. if you are seeking love poems in Tamil language, then this page is the best suitable for all of you. In general Kadhal is the Tamil meaning word of love. So here it’s called as Kadhal kavithaigal in Tamil instead of love poems in English. By the same token here I have classified into Tamil Kadhal Kavithai for many different categories such as Photos of Kadhal Kavithaigal, Kadhal Kavithaigal Tamil Lyrics, Tamil Kadhal Images, Love Feeling Tamil Kavithai Words. Tamil Love Kavithai SMS , Tamil Love Failure Kavithaigal, Kadhal Pirivu Kavithai etc. Best Tamil Love Feeling Kavithaigal Tamil love feeling kavithaigal provides the best impressive way of expressing their love poems in Tamil font. Those Kadhal Kavithaigal Images common to all peoples this will helps to send your crush/lover for any time. If you feel missing your lover or some misunderstanding in your relationship, then this post will definitely help to convince your partner while send this love images for your favorite one. Tamil Kadhal Tholvi Kavithaigal (Tamil Love Failure Poems) Love failure is commonly called as Tamil words “Kadhal Tholvi”. In fact Successful Love gives as much as happiness at the same time if you are a love failure guy then it will hurt so much of a pain for your heart. Of course I know love failure feeling is not really control and healing easily. so I hoped that this Kadhal Tholvi kavithaigal images surely helps to your mindset to be relaxed and your heart feeling full of calmness. Search for: Categories Categories Select CategoryEnglish Version (19) love quotes and sayings (18) Womens Quotes (1)Friendship Kavithaigal (1)happy birthday wishes greetings (2)love feeling kavithai (106)love kavithai images (100)natpu kavithaigal in tamil (1)sad love kavithai (2)Tamil Independence Day Wishes (1)tamil kadhal kavithaigal (109)tamil kavithai about amma (2)tamil kavithai about rain (11)Tamil Kavithai Images (1)tamil kavithai love (95)Tamil Kavithaigal (3)Tamil Love Failure Images (1)Tamil Love Feeling Images (1)tamil love kavithai (103)tamil pirivu kavithai (2)Tamil SMS Lines (1)Tamil Suthanthira Thinam Nal Valthukal (1)Tanglish Version (157) Amma Kavithaigal (3) Annai Kavithaigal (1) Appa Kavithaigal (1) friendship kavithaigal (1) Happy Birthday Wishes Images (2) Iyarkai Kavithaigal (1) Kadhal Kavithaigal (114) Kadhal Pirivu Kavithaigal (3) Kadhal Tholvi Kavithaigal (3) Kanavu Kavithaigal (1) Malai Kavithaigal (12) Manathu Kavithaigal (1) Natpu Kavithaigal (2) natpu pirivu kavithaigal (1) Nila Kavithaigal (1) Pathivugal (1) Pen Kavithaigal (1) Pen Kodumai kavithaigal (2) Pirantha Naal Kavithaigal(Birthday Greetings) (4) Pothuvaana Pathivugal (2) tamil love failure kavithaigal (1) Tamil Love Kadhal Kavithaigal (1) Thagappan Kavithaigal (1) Thai Kavithaigal (1) Thannambikai Kavithaikal (4) Thanthai Kavithaigal (1) Ulaipu Kavithaigal (1) Uravu Kavithaigal (1) Vazhkai Kavithaikal (2)WhatsApp (3)அன்னை கவிதைகள் (1)அன்பு கவிதைகள் (1)அப்துல் கலாம் (1)அப்பா கவிதைகள் (1)அம்மா கவிதைகள் (6)இயற்கை கவிதைகள் (3)இரவு கவிதைகள் (1)இரவு வணக்கம் வாழ்த்துக்கள் (1)உயிர் நட்பு கவிதை (1)உறவு கவிதைகள் (1)உழைப்பு கவிதைகள் (1)கனவு (2)காதல் உணர்வு தமிழ் கவிதை வரிகள் (2)காதல் கவிதைகள் (159)காதல் சோகம் கவிதைகள் (5)காதல் தோல்வி கவிதை படங்கள் (3)காதல் தோல்வி கவிதை வரிகள் (3)காதல் தோல்வி கவிதைகள் (5)காதல் பிரிவு கவிதைகள் (5)காலை வணக்கம் வாழ்த்துக்கள் (1)தகப்பன் கவிதைகள் (1)தந்தை கவிதைகள் (1)தனிமை கவிதை (1)தன்னம்பிக்கை கவிதைகள் (12)தன்னம்பிக்கை தத்துவங்கள் (9)தமிழ் இயற்கை மழை கவிதைகள் (13)தமிழ் எஸ் எம் எஸ் வரிகள் (1)தமிழ் கண்ணீர் கவிதைகள் (1)தமிழ் கவிதைகள் (5)தமிழ் காதல் கவிதைகள் வரிகள் (140)தமிழ் பீலிங் கவிதைகள் (1)தமிழ் புது கவிதைகள் (1)தமிழ் ஸ்வீட் காதல் கவிதை (1)தாய் கவிதைகள் (1)தாய் பாசம் கவிதைகள் (5)திருமண நாள் வாழ்த்து கவிதைகள் (3)தீபாவளி வாழ்த்துக்கள் (1)நட்பு கவிதைகள் (4)நட்பு பிரிவு கவிதைகள் (1)நண்பன் கவிதை (2)நண்பர்கள் கவிதைகள் (1)நிலா கவிதைகள் (3)பல்லி விழும் பலன்கள் (1)பிறந்த நாள் வாழ்த்துக்கள் கவிதைகள் (16)பிறந்த நாள் ஹைக்கூ கவிதைகள் (5)பெண் கவிதைகள் (1)பெண் கொடுமை கவிதைகள் (3)பொதுவான பதிவுகள் (5)மதிய வணக்கம் வாழ்த்துக்கள் (1)மனது கவிதைகள் (2)மனதை தொடும் தமிழ் கவிதைகள் (1)மழை கவிதைகள் (14)மாலை வணக்கம் வாழ்த்துக்கள் (1)வாசகர் கவிதைகள் (37)வாழ்க்கை கவிதைகள் (6)வாழ்க்கை தமிழ் கவிதைகள் (1)வெட்கம் கவிதைகள் (2)ஹைக்கூ காதல் கவிதைகள் (75) Archives Archives Select Month November 2022 (1) January 2022 (5) July 2021 (1) June 2021 (3) May 2021 (1) April 2021 (1) January 2021 (1) December 2020 (2) October 2020 (1) August 2020 (4) July 2020 (10) April 2020 (11) March 2020 (1) February 2020 (1) January 2020 (1) December 2019 (3) September 2019 (2) August 2019 (3) June 2019 (3) May 2019 (2) April 2019 (4) March 2019 (4) January 2019 (1) December 2018 (6) November 2018 (11) October 2018 (2) September 2018 (8) August 2018 (13) July 2018 (5) June 2018 (18) May 2018 (2) April 2018 (23) March 2018 (26) February 2018 (143) January 2018 (69) December 2017 (89)
ஒரு கிராமத்துக் கதை சொல்லவா? கச்சரம்னு ஒரு சிறிய கிராமம். அந்த கிராமத்துல மொத்தமே 40 குடும்பம். எல்லாமே சொந்தக்காரங்கதான். இதுல ஒரு குடும்பம் மட்டும் மத்தவங்களோட ஒட்டு உறவில்லாம தனியா இருந்தது. அப்போ ஒரு நாள் ஒரு பெரிய திருட்டு கும்பல் அவங்க வீட்டுக்குள்ள நுழைஞ்சிது. பயந்து போன குடும்பம் உடனே சொந்தக்காரங்களை உதவிக்கு அழைச்சாங்க. அந்த ஊருக்கே பெரிய தலக்கட்டு உடனே ஒதவி செய்யறேன்னு ஆளுங்களையெல்லாம் அனுப்பி திருட்டுப் பசங்களைத் துரத்தி அடிச்சாரு. ஆனாலும் அந்தக் குடும்பத்தோட சொத்து, ஆடு மாடுகள் அப்புறம் கொஞ்சம் நில புலன் இதையெல்லாம் திருட்டு கும்பல் ஆட்டையப் போட்டுடுச்சி. அதுக்கப்புறம் கிராமத்துல இருக்க எல்லா குடும்பமும் ஒண்ணா சேந்து பேசினாங்க. தனியா இருக்க குடும்பத்தைப் பாத்து தம்பீ நீங்க இனிமேலும் தனியா இருந்தீங்கன்னா எங்களால ஒண்ணும் செய்ய முடியாது. நீங்களும் எல்லாரோடயும் சேந்து வாழ்ந்தாதான் நாங்க இனிமே உதவி செய்ய முடியும்னு சொன்னாங்க. அந்த தனி குடும்பமும் ஒத்துக்கிச்சு. ஆனாலும் அந்தக் குடும்பத்துல இருக்க சில சில்லுண்டிப் பசங்க தகறாரு செஞ்சாங்க. அப்போ என்ன செஞ்சிருக்கணும்? மூத்த தலக்கட்டும் அந்தக் குடும்பத்தோட மூத்த தலைவரும் ஒண்ணா சேந்து அடே சில்லுண்டிப் பயலுவளா, பெரியவங்க சொல்றதைக் கேட்டு வாயப் பொத்திக்கிட்டு இருன்னு அதட்டல் போட்டிருக்கணும். இல்லையா? ஆனா அந்த ஊருலே இருந்த மூத்த தலக்கட்டு ஒரு சரியான சோப்ளாங்கி. அது என்னா செஞ்சிடுச்சின்னா அந்தக் குடும்பத்துக்கு மட்டும் சில சலுகைகளை குடுத்திடுச்சி. என்ன சலுகைகள்னா — கிராமத்துல இருக்க மத்த குடும்பங்கள்லாம் சம்பாதிக்கறதுல ஒரு பங்கை அந்தக் குடும்பத்துக்காக செலவு செய்யணும். ஆனா அந்தக் குடும்பத்தோட சம்பாத்தியத்தை யாரும் தொட முடியாது. கிராமத்துல இருக்க நெலத்தை அந்தக் குடும்பம் நெனச்சா வாங்கலாம், ஆனா அந்தக் குடும்பத்தோட நெலத்தை மத்த யாரும் வாங்க முடியாது. கிராமத்துல இருக்க நிலங்கள்லே அந்தக் குடும்பத்தை சேந்தவங்க எப்போ வேணும்னாலும் வேலை செஞ்சி கூலி வாங்கலாம், ஆனா அந்தக் குடும்பத்தோட நிலத்துல கிராமத்துல இருக்க மத்தவங்க வேலை செய்ய முடியாது. கிராமத்துல இருக்க மத்த குடும்பத்தோட பொண்ணுங்களை அந்தக் குடும்பத்தோட ஆம்பிளைங்க கல்யாணம் செஞ்சிக்கலாம், அவங்க சொத்துக்களை அனுபவிக்கலாம், ஆனா அந்தக் குடும்பத்தோட பொண்ணுங்களை கிராமத்துல இருக்க மத்த ஆம்பிளைங்க கல்யாணம் செஞ்சிக்கிட்டா அவங்களோட சொத்துக்களை அனுபவிக்க முடியாது. ரொம்ப காலமா இதை யாருமே கேள்வி கேக்கல. சும்மா இருந்தாலே மத்த குடும்பங்களோட சம்பாத்தியத்துல நல்லா அனுபவிச்சாங்க அந்தக் குடும்பம். அத்தோட விட்டுதா அந்தக் குடும்பம்? இந்த கிராமத்துக்கும் பக்கத்துல இருக்க கிராமத்துக்கும் ஏகப்பட்ட வாய்க்காத் தகறாரு. அந்தக் குடும்பம் என்னா செஞ்சிதுன்னா பக்கத்து கிராமத்தோட சேந்து மத்த குடும்பங்களைக் கொல்ல கொளத்துல வெஷம் வெக்கறது, வைக்கப்போரை கொளுத்தறதுன்னு கலாட்டா பண்ண ஆரம்பிச்சாங்க. என்னா சொன்னாலும் கேக்கல. அத்தோட விட்டாங்களா? எங்க குடும்பத்து நிலத்தை வேற குடும்பத்துக்கு விட மாட்டோம்னு சொன்னவங்க, எங்கிருந்தோ வந்த திருட்டுப் பசங்களையெல்லாம் அவங்க வீட்டுல கூட்டி வெச்சிக்கிட்டாங்க. ஏண்டா இப்படி செய்யறீங்க? நம்ம குடும்பத்துல இருக்கவங்களை உள்ளே விட மாட்டேங்கறீங்க. திருட்டுப் பசங்களையெல்லாம் சேத்து வெச்சிக்கறீங்கன்னு கேட்டா நாங்க அப்படித்தான் செய்வோம். ஏன்னா இதுக்கெல்லாம் எங்களுக்கு இதுக்கு முன்னாட தலக்கட்டா இருந்த பெரிய மாமா அனுமதி குடுத்திருக்காருன்னு நக்கல் செய்யறானுங்க. இத்தனை வருஷம் கழிச்சு தலக்கட்டா வந்த நாமகிரி மாமா பாத்தாரு. இவனுங்களை இப்படியே விட்டா நம்ம எல்லா குடும்பத்தையும் இவனுங்க ஒழிச்சு கட்டிடுவானுங்க அப்டீன்னு ஆளுங்களையெல்லாம் கூட்டிட்டுப் போய் இனிமே உனக்கு சலுகையும் கிடையாது, அதனால எங்களுக்கு சங்கடமும் கிடையாது. நீ உழைச்சாதான் இனிமே சாப்பாடு. ஓசியிலே மங்களம் பாடறதெல்லாம் இனிமே நடக்காதுன்னு சொல்லிட்டு பக்கத்து கிராமத்துலேர்ந்து வாலாட்டிக்கிட்டிருந்த திருட்டுப் பசங்களையெல்லாம் செம்மையா மொத்தி அனுப்பினாரு. சும்மா இருப்பாங்களா சில்லுண்டிப் பயலுவ. பக்கத்து கிராமத்துக்காரன்கிட்டே வாங்கித் தின்னவனுக்கு பொறுக்கல. அய்யய்யோ எங்க குடும்பத்தை நசுக்கப் பாக்கறாங்களே. எங்களைக் காப்பாத்த ஆளே இல்லையான்னு பொலம்பினாங்க. நம்ம நாமகிரி மாமா சும்மா இருப்பாரா? திருட்டுப்பசங்களா இத்தனை வருஷமா மத்த குடும்பங்களை மட்டுமில்லாம உங்க குடும்பத்தையே ஆட்டையப் போட்டு யாருக்கும் தெரியாம திருட்டுத்தனமா பணத்தைப் பதுக்கி வெச்சிருக்கவனுக்கு வாயப் பாருன்னு வாய்மேலயே நாலு போட்டாரு. அத்தோட அடங்கினானுவ. இது வெறும் கற்பனைக் கதைதாங்க. வேற உள்குத்து எதுவுமே இல்லே. நீங்களா எதாச்சும் நினைச்சிக்கிடீங்கன்னா அதுக்கு வானரம் பொறுப்பில்லே.
தமிழகத்தில், குறிப்பாக சென்னையில் கடந்த ஒரு வாரமாக நிகழ்ந்து வரும் பெட்ரோல் டீசல் தட்டுப்பாடு என்பது, மத்திய மாநில அரசுகளின் பொறுப்பற்ற தன்மையின் உச்சக்கட்டத்தை வெளிப்படுத்துகிறது. சென்னை பெட்ரோலியம் நிறுவனம் மற்றும் மங்களுர் பெட்ரோகெமிக்கல் நிறுவனம் ஆகிய இரண்டும், தங்கள் செயல்பாடுகளை பராமரிப்புப் பணிக்காக நிறுத்தியதால் இந்தத் தட்டுப்பாடு ஏற்பட்டதாக சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் அறிவித்துள்ளன. டீசலுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு, கோடைக்காலத்தில் ஜெனரேட்டர்கள் பயன்படுத்துவதால் அதிகரித்த தேவை காரணமாக என்ற காரணமும் கூறப்படுகிறது. ஆனாலும், இந்தத் தட்டுப்பாடு செயற்கையாக ஏற்படுத்தப்பட்டவை என்று பெரும்பாலானவர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள். சென்னை நகரில் கடந்த ஒரு வாரமாக இரு சக்கர வாகன ஓட்டிகளும், கார் வைத்திருப்பவர்களும் பட்டுக் கொண்டிருக்கும் பாடு சொல்லி மாளாது. சென்னை நகரெங்கும், பல்வேறு பெட்ரோல் பங்குகள் மூடிக் கிடக்கும் நிலையில், திறந்திருக்கும் ஒரு சில பங்குகளில் நிற்கும் நெடிய வரிசைகள், மத்திய மாநில அரசுகள் இம்மக்கள் மீது வைத்திருக்கும் அக்கறையைக் காட்டுகின்றன. இந்தியன் ஆயில் கார்பரேஷன், பாரத் பெட்ரோலியம் போன்ற பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் பொறியாளர்கள் மற்றும் மேலாண்மை பிரிவுகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு கிடைக்கும் ஊதியம், அதிக லாபம் ஈட்டக்கூடிய தனியார் நிறுவனங்களுக்கு கொஞ்சமும் சளைத்தவை அல்ல. பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு இவ்வளவு ஊதியத்தை வழங்குவதன் பொருள், அவர்கள் தங்கள் பணிகளை திறம்படச் செய்ய வேண்டும் என்பதற்காகவே. இந்த நிறுவனங்களில் உயர்பதவிகளில் இருப்பவர்களின் வேலை தட்டுப்பாடின்றி பெட்ரோல் மற்றும் டீசல் கிடைக்க வேண்டியதை உறுதி செய்வதே. ஒவ்வொரு நாளும், சென்னை மற்றும் இதர பகுதிகளுக்கு தேவையான பெட்ரோல் மற்றும் டீசல் தங்கு தடையின்றி கிடைப்பதற்கு ஏற்கனவே உள்ள நடைமுறை மாறாமல் செவ்வனே நடைபெறுவது உறுதி செய்யப்பட்டிருக்க வேண்டும். லாரி வேலைநிறுத்தம், அல்லது எண்ணை சுத்திகரிப்பு ஆலைகளில் பழுது ஏற்பட்டதால் சப்ளையில் தட்டுப்பாடு ஏற்படுமென்றால், மாற்று ஏற்பாடுகளைச் செய்ய வேண்டிய பொறுப்பும் இந்நிறுவனத்தில் உள்ள அதிகாரிகளையே சாரும். ஒரு நாள் தட்டுப்பாடு ஏற்படலாம். இரண்டு நாள் ஏற்படலாம். மூன்றாவது நாள் என்ன ஆகும் என்பதை ஊகித்து மாற்று ஏற்பாடுகளைச் செய்திருக்க வேண்டும். மாறாக, இந்தத் தட்டுப்பாடு மேலும் வலுவாகி, சென்னை நகரம் ஸ்தம்பிக்க வேண்டும் என்பதற்காக இத்தட்டுப்பாட்டை அமைதியாக இருந்து இந்த அதிகாரிகள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். கடந்த ஒரு வாரமாக சென்னை மற்றும் தமிழகத்தின் இதர பகுதிகளில் நிகழ்ந்து வரும் இந்தத் தட்டுப்பாட்டை நீக்கத் தவறிய இவர்கள் பணி நீக்கம் செய்யப்படுவதற்கு தகுதியானவர்களே. அடுத்தபடியாக, டீசலின் தேவை அதிகரித்திருக்கிறது என்று இவர்கள் சொல்லும் காரணமும் ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல. டீசல் போடாமல் பெட்ரோல் மட்டும் போடும் பல்வேறு பங்குகள் சென்னையில் உள்ளன. ஆனால் இந்த பங்குகளும் இரண்டு நாட்களாக மூடப்பட்டுள்ளன. டீசல் தேவை அதிகரித்தாலேயே இத்தட்டுப்பாடு என்பது முழுமையான பொய். மத்திய அரசை குறை சொல்வதற்கே அலுப்பாக இருக்கிறது. அரசு என்று ஒன்ற இருந்தால்தானே குறை சொல்வது. எவன் எக்கேடு கெட்டுப் போனால் என்ன என்று எதைப்பற்றியுமே கவலைப்படாத ஒரு அரசு இது. பொருளாதாரம் அதள பாதாளத்தில் வீழ்ச்சி அடைந்து கொண்டிருக்கிறது. டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடுமையாக வீழ்ந்து கொண்டிருக்கிறது. நாளுக்கு நாள் புதிது புதிதாக ஊழல் குற்றச்சாட்டுகள் புற்றீசல் போல புறப்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஆனால், இது எதைப்பற்றியும் கவலைப்படாமல், பிரதமர் வெளிநாட்டுச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார். மத்திய அமைச்சரவையில் உள்ள அமைச்சர் பாராளுமன்ற விவகாரங்களுக்கான இணை அமைச்சர் ராஜீவ் சுக்லா அமைச்சராக இருந்து கொண்டே, ஐபிஎல்லின் தலைவராகவும் இருந்து கொண்டு, தன் அமைச்சர் பதவியை விட, ஐபிஎல் நடத்தி முடிப்பதே முக்கியம் என்று அலைந்து கொண்டிருக்கிறார். இவரைப் போன்ற எந்த மந்திரியையும், ஏன், எண்ணை நிறுவனத்தின் தலைவரைக் கூட கட்டுப்படுத்த முடியாத ஒரு கையாலாகாத பிரதமர், மவுனச் சாமியாராய் உட்கார்ந்து கொண்டிருக்கிறார். ஆகையால் மத்திய அரசை குறை கூறி, குறை கூறி சலித்து விட்டது. சரி.. இந்தத் தட்டுப்பாட்தைடத் தவிர்ப்பதற்கு மாநில அரசு என்ன செய்ய முடியும் என்று கேட்கலாம். ஒரு மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு உள்ளிட்ட பிரச்சினைகளை அந்தந்த மாநில அரசுகளே பேண வேண்டும். தமிழகத்தில் இப்படி ஒரு தட்டுப்பாடு ஏற்படுவது தெரிந்ததும், உடனடியாக சம்பந்தப்பட்ட எண்ணை நிறுவன அதிகாரிகளோடு கலந்து பேசி, மாற்று ஏற்பாடுகளைச் செய்ய அவர்களை நிர்பந்திப்பது தமிழக அரசின் கடமை. தமிழக அரசின் தலைமைச் செயலாளர், பொதுத்துறைச் செயலாளர், உள்துறைச் செயலாளர் ஆகியோர், இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு பொறுப்பானவர்கள். நான்கு நாட்களாக கடும் தட்டுப்பாடு நிலவிய பின்னர், திங்கட்கிழமை அன்று, தமிழக அரசின் அதிகாரிகள் எண்ணை நிறுவன உயர் அதிகாரிகளோடு பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார்கள். இந்தப் பேச்சுவார்த்தை வெள்ளியன்றே நடைபெற்றிருக்க வேண்டும். சென்னையின் தீராத எரிபொருள் தேவை என்னவென்பதை மற்றவர்களை விட, நன்கு அறிந்திருக்க வேண்டியவர்கள் இந்த அதிகாரிகள். இந்த அதிகாரிகள் இவ்வளவு மெத்தனமாக இருப்பதற்கு காரணம், இந்த அதிகாரிகளுக்கு வழங்கப்படும் பெட்ரோலுக்கோ அல்லது டீசலுக்கோ எவ்விதத் தட்டுப்பாடும் இல்லை என்பதுதான். அரசு வாகனங்கள் நம்மைப் போல பெட்ரேல் பங்கில் சென்று, வரிசையில் நின்று எரிபொருள் நிரப்ப வேண்டிய அவசியமே இல்லை. அரசு வாகனங்களுக்கென்று தனியாக பங்குகள் உள்ளன. காவல்துறை வாகனங்களுக்கென்று தனியாக பங்குகள் உள்ளன. சராசரியாக நமக்கு கிடைக்கும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை விட, ஒன்றிரண்டு ரூபாய் குறைவாகவே அரசு வாகனங்களுக்கு பெட்ரோல் மற்றும் டீசல் வழங்கப்படுகிறது. சென்னையில் பெட்ரோல் கிடைக்கும் ஒவ்வொரு பங்குகளிலும் அடிதடி நடந்து கொண்டிருக்கும் வேளையில், இந்த அரசு அதிகாரிகள், குளிர்சாதன வசதி உள்ள தங்கள் சொகுசு கார்களுக்கு எவ்விதத் தட்டுப்பாடும் இல்லாமல் எரிபொருள் நிரப்பிக் கொண்டு கடந்த ஒரு வாரமாக நகரை வலம் வந்தபடிதான் உள்ளார்கள். இந்த அரசு பங்குகளில் எவ்விதத் தட்டுப்பாடும் இல்லை என்பது தெரிய வந்திருக்கிறது. சாமான்ய மக்களுக்கு கிடைக்கும் எரிபொருளுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு, இந்த அரசு பங்குகளுக்கும்தானே ஏற்பட்டிருக்க வேண்டும் ? ஆனால் இந்த அரசு பங்குகளுக்கு மட்டும் தங்கு தடையின்றி எரிபொருள் எப்படி கிடைத்து வருகிறது ? இந்த உயர் உயர் அதிகாரிகளின் சொந்த தனியார் வாகனங்களுக்குக் கூட எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது. அரசு வாகனங்களுக்காக, அரசு பங்குகளில் நிரப்பப்படும் எரிபொருள், அதிகாரிகளின் தனியார் வாகனத்துக்கு மாற்றப்பட்டு அரசு வாகனத்துக்கு அரசு பங்குகளில் மீண்டும் எரிபொருள் நிரப்பப்படும். இதனால் இந்தத்தட்டுப்பாடு இந்த உயர் உயர் அதிகாரிகளை எந்த விதத்திலும் பாதிக்கப்போவதில்லை. சாமான்ய மக்களின் சிரமம் இந்த எருமைமாட்டுத் தோல் படைத்த அதிகாரிகளுக்கு உரைப்பதில்லை. இதனால்தான், நாட்டில் எவன் குடி கெட்டு குட்டிச் சுவராய்ப் போனாலும், நெற்குன்றம் வீட்டு வசதி வாரியத்திட்டத்தை நீதிமன்றத்தில் உள்ள வழக்கிலிருந்து எப்படி பாதுகாப்பது… .. வழக்கு தொடர்ந்த புகழேந்தியை எப்படி வளைப்பது…. அல்லது, வழக்கை விசாரிக்கும் நீதிபதியை எப்படி வளைப்பது என்ற முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். தற்போது சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபியாக உள்ள ஜார்ஜ், லஞ்ச ஒழிப்புத் துறை இணை இயக்குநராக இருந்த போது, அவரது பெரிய மேசையில் மேல் வைப்பதற்கு மேசை முழுவதையும் கவர் செய்யும் வகையில் ஒரு கண்ணாடி வேண்டும் என்றார். அந்தக் கண்ணாடியெல்லாம் வாங்குவதற்கு அரசு விதிகளில் இடமில்லை என்பதால், ரகசிய நிதியிலிருந்து வாங்க முடிவெடுத்து, அந்தக் கண்ணாடிக்கு சாம்பிள்களை கொண்டு வரச் செய்து பார்த்து, பல சாம்பிள்களிலிருந்து ஒரு இன்ச் உயரம் உள்ள கண்ணாடியை தேர்வு செய்தார். இவை நடந்து கொண்டிருந்த போது, தமிழகத்தில் ஒன்றரை லட்சம் அரசு ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டு தமிழகமே கொந்தளிப்பில் இருந்தது. அப்போது, ஜார்ஜின் இந்த நாடகத்தைப் பார்த்த ஒரு உயர் அதிகாரி, ஒரு நாள் மக்கள் புரட்சி ஏற்பட்டு, சேரிகளில் உள்ள மக்கள், அரசு அலுவலகங்களில் புகுந்து, ஜார்ஜ் போன்ற அதிகாரிகளை அந்தக் கண்ணாடியாலே அடிக்க வேண்டும் என்றார். இந்தத் தற்கால நீரோக்களைப் பார்க்கையில் அந்த ஆத்திரமே வருகிறது. நடவடிக்கை எடுக்க வேண்டிய இந்த அதிகாரிகள்தான் இப்படி பொறுப்பற்று இருக்கிறார்கள் என்றால், இந்த அதிகாரிகளை மேய்க்க வேண்டிய ஜெயலலிதா, ரோமானிய சாம்ராஜ்யத்தை விட சிறந்த நிர்வாகம் வழங்கியது அதிமுக அரசு என்பது போன்ற தோற்றத்தை உருவாக்கும் தன் புகைப்படத்தோடு வரும் ஓராண்டு சாதனை விளம்பரங்களை நாள்தோறும் கண்டு களித்து வருகிறார். அரசியல்வாதிகளையும், அதிகாரிகளையும் இப்படி குறை சொல்கிறோமே, நாம் யோக்கியமா என்று விரலை நம்மை நோக்கித் திருப்பினால் ஏற்படும் வேதனை கொஞ்ச நஞ்சமல்ல. நேற்று காலை அண்ணா நகரில் ஒரு பங்கில் பெட்ரோல் போடச் சென்ற போது, பல சுவையான காட்சிகளைப் பார்க்க முடிந்தது. அந்த பங்கில் இருந்த நெருக்கடி காரணமாக, பங்கில் நுழையும் முன்பு சிறிது நேரம் தடுத்து கொஞ்சம் கொஞ்சமாக உள்ளே விட்டனர். அந்த பங்கில் தட்டுப்பாடு இல்லாமல் பெட்ரோல் உறுதியாக கிடைக்கும் என்ற நிலைதான் இருந்தது. ஆனால் வரிசையில் நின்றவர்கள் நடந்து கொண்டதைப் பார்த்த போது, நமக்கு அரசியல்வாதிகளையும் அதிகாரிகளையும் குறை சொல்வதற்கு என்ன தகுதி இருக்கிறது என்றே தோன்றியது. பத்து நிமிடம் நிற்கும் அந்த வரிசையில் எப்படி அடுத்த வண்டியை முந்தி குறுக்கே செல்லலாம் என்று பெரும்பாலானோர் நடந்து கொண்ட விதம் இருக்கிறதே… அவ்வளவு அருவருப்பாக இருந்தது. இரண்டு வாகனங்களுக்கு இடையே இரு சக்கர வாகனத்தின் முன் சக்கரத்தை நுழைத்து முன்னேற முயற்சி செய்வது, இல்லை நான்தான் உங்களுக்கு முன்னால் வந்தேன் என்று அடாவடி செய்வது, பெட்ரோல் போடும் ஊழியரைப் பார்த்து, எவ்ளோ நேரம்யா போடுவ என்று அதிகாரம் செய்வது, பெட்ரோல் போட்டு முடித்தவர்கள், டேங்க்கை மூடுவதற்குள் வண்டிய எடுங்க சார் என்று திமிர்த்தனமாக பேசுவது என்பதைப் பார்த்தால், ஒரு வரிசையில் நிற்பதற்குக் கூட குறைந்தபட்ச நேர்மை இல்லாத நாம் யாரைக் குறை சொல்ல முடியும் என்றே தோன்றியது. சென்னை பெட்ரோல் பங்கில் நடந்த ஒரு சண்டைக் காட்சி (நன்றி தி இந்து) இந்தத் தட்டுப்பாட்டை பயன்படுத்திக் கொண்டு, கள்ளச்சந்தையில் பெட்ரோலையும் டீசலையும் விற்றவர்களுக்கும் குறை இல்லை. ஆந்திராவிலிருந்து கேன்களில் டீசலை வாங்கி வந்து சென்னையில் கூடுதல் விலைக்கு விற்றவர்களும் உண்டு. கள்ளச்சந்தையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 200 ரூபாய் வரை விற்றதாகவும் சொல்கிறார்கள். இந்த அளவு எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் அளவுக்கு இதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கும் மத்திய மாநில அரசுகளும், அதிகாரிகளும் நடந்து கொள்வது பொறுப்பின்மையின் உச்சக்கட்டம். இந்தத்தட்டுப்பாட்டிலும் ஒரே ஆறுதல் என்ன தெரியுமா ? பங்குகளில் பெட்ரோல் போடும் அந்த ஊழியர்களுக்கு திடீரென்று கிடைத்த அதிகாரம்தான். இவ்வளவு நாள் பெட்ரோல் போடச் செல்பவர்கள், அந்த பங்கின் ஊழியர்களை அதிகாரம் செய்து கொண்டிருப்பார்கள். “என்னய்யா இவ்வளவு நேரம்… ஒழுங்க செட் பண்ணுய்யா…. பில் குடுய்யா….” என்று ஏக வசனத்தில் பேசிக் கொண்டிருப்பார்கள். ஆனால் நேற்று பெட்ரோல் போட்ட போது அந்த பங்கின் ஊழியர்கள் செய்த அதிகாரம் இருக்கிறதே… “சார்…. ஒழுங்கா வரிசையா நிக்கலன்னா நிறுத்திடுவேன்…. வரிசையா வாங்க… சீக்கிரம் டேங்க ஓபன் பண்ணுங்க சார்.. வண்டிய எடுங்க சார். அந்தப் பக்கம் போய் மூடிக்கங்க…. சார் கேஷை எடுத்து கையில வச்சுக்கங்க சார்… சேஞ் கரெக்டா வச்சுக்கங்க….” என்று அவர்களுக்கு திடீரென்று கிடைத்த அதிகாரத்தை அவர்கள் நன்றாகவே பயன்படுத்திக் கொண்டார்கள். ஆளாளுக்கு அதிகாரம் செய்யும் போது, அந்த ஊழியர்கள் ஒரு நாள் அதிகாரம் செய்தால்தான் என்ன ? Share $('#twitter').sharrre({share: {twitter: true },template: ' ',enableHover: false,enableTracking: true,buttons: { twitter: {via: ''}},click: function(api, options){api.simulateClick();api.openPopup('twitter');}});$('#facebook').sharrre({share: {facebook: true },template: ' ',enableHover: false,enableTracking: true,buttons:{layout: 'box_count'},click: function(api, options){api.simulateClick();api.openPopup('facebook');}}); // Scrollable sharrre bar, contributed by Erik Frye. Awesome! var $_shareContainer = $(".sharrre-container"),$_header = $('#header'),$_postEntry = $('.entry'),$window = $(window),startSharePosition = $_shareContainer.offset(),//object contentBottom = $_postEntry.offset().top + $_postEntry.outerHeight(),topOfTemplate = $_header.offset().top,topSpacing = _setTopSpacing();//triggered on scroll shareScroll = function(){var scrollTop = $window.scrollTop() + topOfTemplate,stopLocation = contentBottom - ($_shareContainer.outerHeight() + topSpacing);$_shareContainer.css({position : 'fixed'});if( scrollTop > stopLocation ){$_shareContainer.css( { position:'relative' } );$_shareContainer.offset( {top: contentBottom - $_shareContainer.outerHeight(),left: startSharePosition.left,});}else if (scrollTop >= $_postEntry.offset().top - topSpacing){$_shareContainer.css( { position:'fixed',top: '100px' } );$_shareContainer.offset( {//top: scrollTop + topSpacing,left: startSharePosition.left,});} else if (scrollTop < startSharePosition.top + ( topSpacing - 1 ) ) {$_shareContainer.css( { position:'relative' } );$_shareContainer.offset( {top: $_postEntry.offset().top,left:startSharePosition.left,});}},//triggered on resize shareMove = function() {startSharePosition = $_shareContainer.offset();contentBottom = $_postEntry.offset().top + $_postEntry.outerHeight();topOfTemplate = $_header.offset().top;_setTopSpacing();}; setTimeout( function() {contentBottom = $_postEntry.offset().top + $_postEntry.outerHeight();}, 2000);function _setTopSpacing(){var distanceFromTop = 20;if( $window.width() > 1024 ) {topSpacing = distanceFromTop + $('.nav-wrap').outerHeight();} else {topSpacing = distanceFromTop;}return topSpacing;}//setup event listeners $window.on('scroll', _.throttle( function() {if ( $window.width() > 719 ) {shareScroll();} else {$_shareContainer.css({top:'',left:'',position:'' }) }}, 50 ) );$window.on('resize', _.debounce( function() {if ( $window.width() > 719 ) {shareMove();} else {$_shareContainer.css({top:'',left:'',position:'' }) }}, 50 ) ); });
தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Programmer பணிக்கென ஒரே ஒரு பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்வி தகுதி: பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் M.Sc./ M.Tech./M.C.A. / M.E என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊதிய விவரம்: இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.40,000/- மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்படும் முறை : இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும். விண்ணப்பிக்கும் முறை: ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 05.08.2022ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram WhatsApp Previous Articleஎதுவும் சாப்பிடாமல் இருப்பது.. அதிகமாக சாப்பிடுவது.. இரண்டுமே உடல்நலக் கோளாறுகளை ஏற்படுத்தும் – மருத்துவ நிபுணர்கள்!
பாகுபலி என்ற ஒற்றை படம் மூலம் உலகையே தென்னிந்திய சினிமா பக்கம் திரும்பி பார்க்க வைத்த இயக்குனர் தான் ராஜமெளலி. இப்படத்தை தொடர்ந்து இவரின் அடுத்தடுத்த படங்கள் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரிக்கத் தொடங்கியது. அந்த வரிசையில் தற்போது ராஜமெளலி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் தான் ஆர்ஆர்ஆர். ராம் சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர், அஜய்தேவ்கான், ஆலியா பட் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள இப்படம் கடந்த பொங்கல் அன்று நாடு முழுவதும் வெளியாக இருந்தது. ஆனால் கொரோனா பரவல் மற்றும் ஊரடங்கு காரணமாக படத்தின் வசூல் பாதிக்கப்படும் என்ற காரணத்தால் படக்குழுவினர் படத்தின் வெளியீட்டை தள்ளி வைத்தனர். இதனையடுத்து படம் ஏப்ரல் மாதம் வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இதற்கிடையில் படத்தின் வெளியீடு தள்ளி சென்ற சமயத்தில் ஆர்ஆர்ஆர் படத்தை நேரடியாக ஓடிடியில் வெளியிட பிரபல ஓடிடி நிறுவனம் ஒன்று இயக்குனர் ராஜமெளலியிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. மேலும் படத்திற்கு சுமார் 500 கோடி ரூபாய்க்கு மேல தருவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். ஆனால் அவர்களின் ஆஃபரை மறுத்த ராஜமெளலி ஆர்ஆர்ஆர் படம் நிச்சயமாக தியேட்டரில் தான் வெளியாகும் என திட்டவட்டமாக கூறி விட்டாராம். ஏனெனில் பாகுபலி அளவிற்கு பிரம்மாண்டமாக உருவாக்கியுள்ள ஆர்ஆர்ஆர் படத்தை தியேட்டரில் பார்த்தால் தான் சிறப்பாக இருக்குமாம். மேலும் ஆர்ஆர்ஆர் படம் ஓடிடியில் வெளியாகும். ஆனால் படம் தியேட்டரில் வெளியாகி குறைந்தது 90 நாட்கள் கழித்தே ஓடிடியில் வெளியாகும் என கூறப்படுகிறது. அதன்படி ஆர்ஆர்ஆர் படத்தின் தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழி டிஜிட்டல் உரிமையை ஜீ5 நிறுவனமும், ஹிந்தி, ஆங்கிலம், கொரியன், ஸ்பானிஷ், ஆகிய மொழிகளின் டிஜிட்டல் உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனமும் கைப்பற்றி உள்ளதாக கூறப்படுகிறது. OTT தளத்தில் கொடுத்தால் நூற்றுக்கணக்கில் வேலை பார்த்தவர்கள் உழைப்பு வீணாகிவிடும் அதைத்தவிர ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றம் என்பதால் மட்டுமே இதுபோன்ற முடிவுகளை எடுத்திருப்பதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். அதைத் தவிர இது போன்ற பெரிய பட்ஜெட் படங்கள் OTT தளத்திற்கு சென்று விட்டால் கண்டிப்பாக தியேட்டருக்கு கும்பிடு போட்டு விடுவார்கள். Continue Reading Related Topics:ஆர்ஆர்ஆர், இராஜமௌலி, சினிமா செய்திகள், ஜூனியர் என்டிஆர், தமிழ் சினிமா, தமிழ் நடிகைகள், தமிழ் படங்கள், நடிகர்கள், நடிகைகள், ராம் சரண்
முன்பெல்லாம் பாம்பு அல்லது விஷப்பூச்சிகள் கடித்தால், உடனே அருகில் உள்ள தோட்டத்திற்கு சென்று, மூலிகைச் செடியை பறித்து, அதில் உள்ள சாறு பிழிந்து கொடுப்பார்கள். பாம்பு கடித்தவர் உயிருடன் மீண்டு விடுவார். விஷக்கடியில் இருந்தும் தப்பித்து விடுவார். இதெல்லாம், முந்தைய காலத்திலும், திரைப்படங்களில் நாம் கண்ட காட்சிகள். இப்போது, சாதாரண காய்ச்சலுக்கே மருத்துவர்களையும் மருத்துவமனைகளையும் தேடி அலைகின்ற நிலை வந்து விட்டது. நம் குடியிருப்புக்கு அருகில் யாரோ ஒருவர் வைத்திருந்த அபூர்வ மூலிகைகளின் அருமை பெருமைகளெல்லாம் ஆபத்துகள் நேரும்போதுதான் தெரிகின்றது. இப்போது, பார்த்தீர்களேயானால், பெரும்பாலான மூலிகைகள் அபூர்வ மூலிகைகளாகி விட்டன. எது அரிதாகின்றதோ அதன் மதிப்பும், அதுகுறித்தான தேடலும் அதிகரிக்கும். தொழில் துறையில், மூலிகை வளர்ப்பு மற்றும் சந்தைப்படுத்துதல் என்பது பல்வேறு வகைளில் விரிவாக்கம் செய்யப்பட்டு வருகின்றன. நம் மூரில் கிழவில் விற்றுக் கொண்டிருந்த கீரைகளை கூட, பெரிய பெரிய நிறுவனங்கள் விற்று பெரிய அளவில் லாபம் ஈட்டக் கற்றுக் கொண்டு விட்டன. பேருந்துகளில் லேகியம் விற்பவர் முதல் பொதுஇடங்களில் தலைவலி தைலம் விற்பவர்கள் வரையில், மூலதனமான தொழிலாக நம்புவது இந்த மூலிகை வளர்ப்பு மற்றும் விற்பனையைத்தான். மூலிகைத் தோட்டம்… நிலம் இருந்தால் மூலிகைத் தோட்டம் தாராளமாக அமைக்கலாம். அப்படியில்லையென்றால், வீட்டின் மாடியில் அல்லது வீட்டிற்கு அருகில் இருக்கும் சொந்த இடத்தில், மூலிகைத் தோட்டங்கள் அமைக்கலாம். மூலிகைத் தோட்டங்களை அமைக்கும் போது, வேளாண்துறை அதிகாரிகளிடம் அதுகுறித்தான ஆலோசனைகளைப் பெற்று மூலிகைத் தோட்டம் அமைக்க வேண்டும். எந்த மண்ணில் எந்த மூலிகைச் செடி வளரும், எந்த மூலிகைச் செடிக்கு என்னென்ன உரம் போட வேண்டும். எப்படி பராமரிக்க வேண்டும் என்று அனைத்து விஷயங்களையும் அறிந்து கொண்ட பின்னரே இந்த தொழிலில் இறங்க வேண்டும். இந்தியாவில் மட்டும் 15,000 அபூர்வ மூலிகைகள் இருப்பதாக வேளாண்துறை புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. அவற்றில், நீங்கள் என்னென்ன மூலிகைகளை பயிர் செய்ய விரும்புகிறீர்கள் என்று நன்கு சிந்தித்து பயிர் செய்ய வேண்டும். நல்ல லாபம் ஈட்டலாம்.. மூலிகைத் தோட்டம் வளர்ப்பதற்கு அரசு மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களில் இருந்து நிதியுதவி மற்றும் வழிகாட்டுதல் செய்யப்பட்டு வருகின்றன. மூலிகைத் தோட்டம் அமைப்பதற்கு முதலில் நீங்கள் மனதளவில் தயாராகிக் கொள்ள வேண்டும். பின்னர், தேவையான வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். மூலிகைத் தோட்டம் அமைத்த பின்னர், மூன்று மாதம் முதல் நீங்கள் லாபம் பார்க்க ஆரம்பித்து விடலாம். ஏதோவொரு தொழிலை செய்து பணம் மட்டுமே சம்பாதிக்காமல், மருத்துவ உலகிற்கு பங்காளிப்பாக இருக்கும் மூலிகைத் தோட்ட தொழிலை நீங்கள் மேற்கொண்டால், இந்த உலகம் உங்களை தலை வணங்கும்.
இந்தோனேசிய கெரெதேக் வகை சிகரட்டுகளுக்கு தனி தன்மை உண்டு. மலேசிய சந்தைகளில் மலிவாகவும் சுலபமாகவும் கிடைக்ககூடிய சிகரட்களில் கெரெதேக் வகையும் அடங்கும். கெரெதேக் இந்தோனேசியாவின் பாரம்பரிய அடையாளமாகவும் திகழ்கிறது. ஆரம்ப காலங்களில் கெரெதேக் சிகரட்டுகளை உடல் நலனுக்காக பிடித்திருக்கிறார்கள் என்றால் நம்ப முடிகிறதா? அரட்டைக் கலாச்சாரத்திற்கும், ஆஸ்துமா நோய்க்கும் கெரெதெக் முக்கிய பங்காற்றி உள்ளது. ஆனால் இன்றய நிலையில் அனைத்து வகை சிகரட்டுகளும் உடல் நலத்திற்கு தீங்கு விளைவிப்பவையே என அச்சிடப்பட்டு வெளியிடப்படுகிறது. கெரெதேக் சிகரட்டுக்கு ஏற்ற இணைப்பாக கூறப்படுவது கொட்டை வடிநீர். கொட்டை வடிநீர் அல்லது காப்பி கலாச்சாரம் டச்சு காலனியாதிக்கத்தின் போது இந்தோனேசியாவில் காலூன்றியது. கருப்புக் காப்பியும் கெரெதேக் சிகரட்டும் கொடுக்கும் ‘கிக்’ ஆளாதியென கருதுகிறார்கள். வானிலை மாற்றத்திற்கு ஏற்ப கருப்புக் காப்பியை காருப்புத் தேநீருக்கு மாற்றிக் கொள்கிறார்கள். கெரெதேக் சிகரட்டுகள் மற்ற சிகரட்டுகளை காட்டினும் எப்படி மாறுபடுகின்றன? கெரெதேக் சிகரட்டுகளில் புகையிலையும் மூன்றில் ஒரு பங்கிற்கு கிராம்பும் சேர்க்கிறார்கள். அது போக சுவைக்காக செயற்கை முறை புகயிலைச் சாறையும் சேர்க்கிறார்கள். இதன் தயாரிப்பு முறை ஒவ்வொரு பிராண்டுக்கும் மாறுபாடுகிறது. கெரெதேக் புகையின் வாடை மற்ற சிகரட் புகையை விட மாறுபாடு கொண்டிருக்கும். சிகரட் கேர்ல்/ காடிஸ் கெரெதேக் எனும் இந்நாவல் பேசும் கதை என்ன? இந்த நாவல் மூன்று தலைமுறைகளின் கதையை பேசுகிறது. காதல், வன்மம், பகை மற்றும் அரசியலின் ஊடாக கெரெதேக் சிகரட்டின் பரிணாம வளர்ச்சியை நமக்குக் காட்டுகிறது. இந்த நாவல் 2012-ல் வெளீயீடு கண்டு பெரும் கவனம் பெற்றது. கெரெதேக் சிகரட்டுகளின் பாரம்பரியம், வரலாற்றுப் பின்னணி, தொழில் முறை, வணிகம் என இந்தோனேசிய சிகரட் சாம்ராஜியத்தின் மொத்த வடிவமாக இந்த நாவல் அமைந்துள்ளது. இந்த நாவலில் இரண்டு கதைச் சொல்லிகள் உள்ளனர். ஒன்று நாவலாசிரியர் வழியாகச் சொல்லப்படுகிறது. முதல் இரு தலைமுறைகளின் கதையும் பெரும்பான்மையாக நாவலாசிரியரே சொல்கிறார். அடுத்தபடியாக லெபாஸ் எனும் காதாபார்த்திரம் நிகழ்கால கதை சொல்லியாக இருக்கிறார். லெபாஸ் இந்தோனேசியாவின் முதல் நிலையில் இருக்கும் கெரெதேக் சாம்ராஜிய சக்ரவர்த்தியின் மகன். லெபாஸுக்கு இரண்டு அண்ணன்கள். உடல் நலம் குன்றி மரணப் படுக்கையில் இருக்கும் லெபாஸின் தந்தை (சௌராஜா) அடிக்கடி ‘ஜெங் யா’ எனும் பெண் பெயரைச் செல்லி பிதற்றுகிறார். சௌராஜாவுக்கு மரணிப்பதற்குள் ஜெங் யாவை பார்த்துவிட வேண்டும் எனும் விருப்பம் இருக்கிறது. மகன்கள் ஜெங் யாவை தேடி புரப்படும் பயணமும் சௌராஜா மரணிக்கும் முன் அந்த பெண்மணியை பார்க்கும் வாய்ப்புக் கிடைத்ததா எப்பதே நாவலின் சாரம். கதையின் ஒரு வரி தகவல் மிகச் சாதாரனமாக இருபினும் நாம் யூகிக்க முடியாத ஒரு கோணத்தில் கதையை நகர்தி இருப்பது இந்நாவலின் பலம். ஆரம்பத்தில் லெபாஸ் மட்டுமே ஜெங் யாவை தேடிச் செல்க்கிறார். போகும் வழியில் அவரைப் போல் ’போப் மார்லே’காலாச்சார ஈடுபாடு கொண்ட நண்பரை சந்திக்கிறார். இசைக் கொண்டாட்டத்தில் கெரெதேக் சிகரட்டோடு கஞ்சாவையும் சேர்த்து அடித்து மட்டையாகிவிடுகிறார். லெபாஸ் கதாபாத்திரத்தின் வடிவமைப்பு ஓர் இளமை துள்ளல் மிகுந்த இளைஞனாக காட்டப்படுகிறது. இவருக்கு குடும்ப தொழிலில் ஈடுபடும் நோக்கம் இல்லை. அமேரிக்காவுக்கு வணிக மேலாண்மை படிக்க குடும்பத்தார் இவரை அனுப்பி வைக்கிறார்கள், இசையில் ஆர்வம் கொண்டு ஜமாய்க்கா வரை போய் இசை ஞானத்தை வளர்த்துக் கொள்கிறார். அதிலும் மனநிறைவு இல்லாமல் சினிமா பக்கம் திரும்புகிறார். சொல் பேச்சு கேட்காத பிள்ளையாக குடுப்பத்தாரிடம் எப்போதும் ஒரு கெட்ட பெயர் உண்டு. லெபாஸை பொருத்த வரை அவர் தன் விரும்பபடி தன் சுய முயற்சியில் வாழ்க்கையை நகர்த்திச் செல்கிறார். ஷங்கரை போல் பெரிய பட்ஜெட் படம் எடுக்கும் ஆசை இருந்தாலும் அவருக்கு அமைவெதெல்லாம் சோப்பு விளம்பரமும், பேய்க் கதைகளை எடுக்கும் வாய்ப்புகள் தான். இந்நாவல் ஜாவ மக்களின் வாழ்வியலை மிக அழகாக பதிவு செய்துள்ளது. முக்கியமாகா ஜகார்த்தா, கூடுஸ் (Kudus) மற்றும் M Town போன்ற இடங்களில் பிரதான கதை நடக்கிறது. குடுஸ் தற்சமயம் கெரெதேக் சிகரட்டுகளின் தொழில் நகரமாக விளங்குகிறது. இங்கு வசிக்கும் மக்களில் மூன்றில் ஒரு பக்கினர் கெரெதேக் சிகரட் தொழில்துறை சார்ந்தே தங்களின் வாழ்வாதாரத்தை தேடிக் கொள்கிறார்கள். வியாபார விருத்தியின் ரீதியாக தொழிற்சாலைகள் தங்கள் வேலையாட்களை கவனித்துக் கொள்ளும் முறையும், பாரம்பரை பெருமை காக்க சில கம்பெனிகள் நகரர்தப்படுவதையும் ஆசிரியர் பதிவு செய்கிறார். அது போக அந்த தொழில்துறை சுற்று வட்டாரத்தில் இயங்கும் வட்டி முதலைகள் அங்கு பணி புரியும் தொழிலாளர்களையும் முக்கியமாக இளம் பெண்களை கடன் கொடுத்து தங்கள் அடிமையாக்கிக் கொள்வதையும் அறியமுடிகிறது. நிகழ்காலத்தில் நடக்கும் கதை திடீரென மூன்றாம் அத்தியாயத்தில் டச்சு காலனியாத்திக்க காலத்தில் தொடங்குகிறது. இந்தோனேசியர்கள் ஜப்பானியர்களின் வருகையை பெரிதும் நம்பிக்கையோடு எதிர்ப்பார்க்கிறார்கள். ஆனால் கழுதை தேய்ந்த கதையாக டச்சு ஆட்சியை விட ஜப்பானியர்களின் ஆட்சி குறுகிய காலத்தில் வெறுப்பை சம்பாத்தித்துக் கொள்கிறது. ஏகபட்ட உள்ளூர் வாசிகள் சூரபாயா (Surabaya) நகருக்கு சிறைபிடித்துக் கொண்டுச் செல்லப்படுகிறார்கள். அங்கு கட்டாய தொழில் முகாம்களில் கடுமையாக வேலை வாங்கப்படுகிறார்கள். நாவலின் இப்பகுதி இட்ரோஸ் மொரியா (IDROES MOERIA) எனும் காதாபாத்திர்த்தை மையப்படுத்தி சொல்லப்படுகிறது. இக்காலகட்டத்தில் கெரேதேக் என்பது கொலொபோட் (Klobot) எனும் வடிவில் உள்ளது. அதாவது பீடி அளவிலேயே அதன் பரிணாமம் உள்ளது. சோள மட்டைகளை சமன் செய்து வெட்டி, இஸ்திரி போட்டு காய வைத்து இப்படியான பீடிகளை செய்கிறார்கள். அதை மருத்து கடைகளில் விற்பனைக்கு வைக்கிறார்கள். ஆஸ்துமா நோயாளிகளே அச்சயம் கொலோபோட்களை அதிகம் பயன்படுத்தி இருக்கிறார்கள். இரண்டாம் உலகப் போரின் போது புகையிலை பணமாகவும் செயல்பட்டுள்ளது. ஆக பொதுமக்களிடம் புகையிலை இருக்காதபடி ஜப்பானிய இராணுவம் அனைத்தையும் பரிமுதல் செய்கிறது. தற்செயலாக சிறை போக நேரிடும் இட்ரோஸ் அங்கு சீனர்களிடம் புலங்கிய சிலிண்டர் வகை வெண்சுருட்டுகளின் பயன்பாட்டை பார்க்கிறார். கொலொபோட் (பீடி) வடிவத்தில் இருந்து கெரெதேக் சிகரட்டாக மெறுகேற்றும் ஐடியாவை வித்திடுகிறார். இட்ரோஸ் மொரியா மற்றும் சௌஜாகாட் எனும் இரு நண்பர்களும் தங்களது இளமை பருவத்தில் பீடி மடிக்கும் வேலையில் ஈடுபடுகிறார்கள். இருவரும் ரௌமாயிஸா எனும் பெண் மீது காதல் கொள்கிறார்கள். சௌஜாகாட்டின் காதலை நிராகரிக்கும் ரௌமாயிஸா இட்ரோஸ் மொரியாவை திருமணம் செய்து கொள்கிறார். இதுவே இந்த இரு நண்பர்களின் தொழில் மற்றும் குடும்ப பகையின் காரணமாகிறது. இட்ரோஸ் மோரியா மற்றும் சௌஜாகாட் இரு குடும்பத்தின் வழி கதை மூன்று தலைமுறைகளில் நம்மிடம் சமர்பிக்கப்படுகிறது. ஆரம்ப அத்தியாயங்களில் இட்ரோஸ் மோரியா பார்வையில் வைக்கப்படும் கதை கடைசி சில அத்தியாயங்களில் சௌஜாகாட் பார்வையில் வைக்கப்படுகிறது. ஒரே நிகழ்வு இரு வேறு தரப்பினருக்கு வேறு விதமான கோணத்தில் தங்களை எதிரிகளாக பாவித்துக்கொள்ள வைக்கிறது. இதில் யார் சொல்வது சரி? அது வாசகனின் தேர்வுக்கு விடப்படுகிறது. இந்தோனேசிய அரசியல் மாற்றத்தை பொருத்த வரை இரண்டு காலகட்டங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஒன்று காலணியாதிக்க காலம். மற்றொன்று G30S எனும் இயக்கத்தின் நிகழ்வு. சில இராணுவ ஜெனரல்களின் கொலையை காரணம் காட்டி இந்தோனேசிய கம்யூனிஸ்ட் கட்சி முற்றிலுமாக ஒழித்துக்கட்டப்படுகிறது. இச்சம்பவமும் இட்ரோஸ் மோரியாவின் கெரெதேக் தொழிலோடு மிக நேர்த்தியாக கோர்க்கப்படுகிறது. இந்நாவலில் கூறப்படும் சிகரட் கேர்ல் அல்லது காடிஸ் கெரெதேக் யார்? இட்ரோஸ் திருமணம் செய்துக் கொண்ட ரௌமாயிஸா அல்ல. சிகரட் கேர்லை கண்டு பிடிக்கும் சுவாரசியத்தை வாசகனிடம் விட்டுவிடலாம். இந்த நாவல் ஆசிரியர் ராதே குமாலா கெரெதேக் சிகரட் சார்ந்த ஏகபட்ட செய்திகளை நமக்குக் கடத்திக் கொடுத்துள்ளார், புகையிலை பயிர் செய்யும் நடைமுறை, இலைகளின் தேர்வு, கிராம்பு வகைகளின் சேர்க்கை, அதன் விளம்பர உலகம், தொழிற்சாலைகள், தொழிலாளர்கள், பயனர்கள் என அனைத்து அம்சங்களையும் நாம் காண்கிறோம். இந்த நாவலை எழுத நிச்சயமாக மிகவும் சிரமம் கொண்டு தகவல்களை திரட்டி இருக்க வேண்டும். வாசிக்கும் ஒவ்வொரு வாக்கியமும் நமக்கு தகவல் கசிவை கொடுக்கின்றன. -முற்றும்- பதிவை சமர்பித்தவர் VIKNESHWARAN ADAKKALAM at 2:04 PM 0 மறுமொழிகள் குறிச்சொற்கள் BOOK REVIEW, Cigarette Girl (Gadis Kretek), நாவல் Wednesday, July 17, 2019 NOTHING TO ENVY – ORDINARY LIVES IN NORTH KOREA - இரகசிய தேசம் I AM SUN MU எனும் ஆவணப்படம் தொடர்பாக இதற்கு முன் எழுதி இருந்தேன். சுன் மூ ஓரு வடகொரிய அகதி. தொன் கொரியாவில் தஞ்சமடையும் அவர் நெடுநாட்களுக்கு பின் பெய்ஜிங்கிற்கு தனது ஓவிய கண்காட்சியை அரகேற்ற வருகிறார். அச்சமயம் அவர் பதிவு செய்யும் வார்த்தைகளில் சில பின்வருமாறு ஒலிக்கும், “இந்த இரவுகள் எனக்கு புதுமையாக இருக்கின். நான் தப்பி ஓடும் வரையினும் இரவில் இவ்வளவு விளக்குகளின் வெளிச்சத்தைக் கண்டதில்லை. வடகொரியாவை பொறுத்தவரை இது விரையம்”. ஆவணப் படத்தில் சுன் மூ பேசியது எனக்கு கொஞ்சம் வியப்பைக் கொடுத்தது. Nothing to Envy நூலினை வாசிக்கும் போது இதற்கான விடையுடனே அந்த நூல் தொடங்குகிறது. இரு துண்டுகளாக உடைந்துக் கிடக்கும் கொரியாவின் இரவை செயற்கைக்கோளின் துணை கொண்டு காண்போம் என்றால் தெற்கே வெளிச்சம் மிகுதியோடும், வடக்கே ஒரு சில பொட்டுகளைப் போன்ற வெளிச்சமும் தெரியும். மிகுந்திருக்கும் இருள் அந்த மக்களை கவ்வியதோடு, அவர்களை அறிந்துக்கொள்ளவும் முட்டுக்கட்டையாகிறது. அதிதீவிர கம்யூனிச பத்தர் கூட வடகொரியாவுக்கு அகதி தஞ்சம் போக தன்னை ஒப்புக் கொடுக்கமாட்டார். அந்நாட்டிற்கு தஞ்சம் போவதாக கூறிக் கொள்ளும் ஒரு சில ஊதி பெருக்கப்பட்ட செய்திகளை பகிர்ந்து மகிழ்ச்சி கொள்ள முடியும். உண்மையில் அங்கிருந்து தப்பி ஓடுவோரின் பட்டியலே மிக அதிகம். இதன் காரணமாகவே சீனாவை ஒட்டி இருக்கும் டூமன் நதி நெடுகினும் மின்சார தடுப்பு வேலிகளை அமைக்க கட்டளை இட்டுள்ளார் அந்நாட்டின் தற்போதைய ’பேரரசரான’ கிம் ஜொங் உன். Barbara Demick எழுதி இருக்கும் Nothing to Envy ஒரு நாவலைப் போலவே பயணிக்கிறது. ஆறு வெவ்வேறு மனிதர்களின் சுயசரிதத்தை நோன்-லீனியர் முறையில் பதிவு செய்துள்ளது. அதன் ஒவ்வொரு பக்கங்களிலும் நாம் அறிந்திராத இன்னொரு உலகை நமக்காக படம் பிடித்துக் காட்டியுள்ளார் நூல் ஆசிரியர். வடகொரியாவை கம்யூனிசத்தின் கண்ணாடி எனக் கருத்துவோருக்கு இதற்கு பிறகான வரிகள் கசக்கவே செய்யும். 1990-களின் முற்பகுதியில் சோவியத் யூனியனின் பிளவு வடகொரியாவை பாதிக்கச் செய்தது. அதற்கு பிறகு நிகழ்த அந்நாட்டு அதிபரின் மறைவும் அங்கிருக்கும் சூழலை மோசமாக்கியது. சுதந்திரம் முதல் இன்று வரை வாரிசு அரசியலை சந்தித்து வரும் நாடு அது. தலைமைத்துவ பண்பை வாரிசு ரீதியாகக் கொண்டுச் செல்ல முடியுமா என்பது கேள்வியே. ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு தனித்திறனும் விருப்பமும் இருக்கக்கூடும். தந்தை செய்த தொழிலையே மகனும் செய்தாக வேண்டும் என நிர்பந்திப்பதும் இயற்கை விதிக்கு எதிரானதே. வடகொரியாவின் முதல் அதிபரின் பெயர் கிம் இல் சுங். நாட்டின் தலைமை பொறுப்பை ஏற்க அவரது மகனான கிம் ஜொங் இல்--லை பலமாகவே தயார் செய்தார். கிம் ஜொங் இல்-லின் கவனம் அரசியலில் இல்லை. அவர் சினிமாவில் மிகுந்த ஈடுபாடு கொண்டவராக இருந்தார். எந்த அளவுக்கான ஈடுபாடு என்றால் சினிமாவுக்காக புத்தகம் எழுதினார், தென் கொரிய இயக்குநரையும் நடிகையையும் கடத்திக் கொண்டு வந்து எக்கச்செக்கமான படங்களை எடுத்தார் அது போக டைடானிக் திரைப்படத்தில் ஈர்ப்புக் கொண்டு வடகொரியர்களுக்கு ஏற்ற டைடானிக் திரைப்பட்த்தையும் எடுத்தார். அவர் எழுதிய புத்தகத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பு On the Art of Cinema என வெளியீடு கண்டது. தென் கொரிய சினிமாக்காரர்களை கடத்திய பின்னணி ‘The Lovers & The Despot” எனும் ஆவணப் படமாக்கப்பட்டுள்ளது. Nothing to Envy எனும் வாசகம் வடகொரிய துதிப்பாடலில் இருக்கும் வரிகளாகும். ’எங்கள் தேச பிதா எங்களை காப்பார், இவ்வுலகில் எதன் மீதும் எங்களுக்கு பொறாமை இல்லை’ என்பதாக அப்பாடல் அமைந்துள்ளது. இந்த வரிகளை தொடர்ந்து பாடி தங்களது அதிபரை கடவுள் நிலையில் வைக்க கற்பிக்கப்படுகிறார்கள். வட கொரியா தந்தை தேசம் என்றே குறிப்பிடப்படுகிறது. இந்த நூல் ஆசிரியர் நூற்றுக்கும் அதிகமான வட கொரிய அகதிகளை பேட்டி எடுத்திருக்கிறார். அவற்றில் குறிப்பிட தக்க வெகு சிலரின் வாழ்வியலே இதில் படம் பிடித்துக் காட்டப்பட்டுள்ளது. அவர்கள் வெவ்வேறு வாழ்வியல் தளங்களைக் கொண்டவர்கள். சமூக படிநிலைகளில் மேன்மையாகவும் தாழ்மையாகவும் பார்க்கப்படுபவர்கள். பொது வெளியில் வடகொரியா தொடர்பாக அந்நாட்டின் அரசியல் சூழல், அதன் தலைவர்கள் மற்றும் வரலாறு தொடர்பான செய்திகளை மட்டுமே வாசித்தும் கண்டும் இருப்போம். இந்நூல் அவற்றை தாண்டி அங்குள்ள மக்களை பற்றியும், அவர்களின் வாழ்வியல், காதல், பட்டினி மற்றும் தப்பி ஓடும் படலங்களையும் பேசுகிறது. வெளி உலகிற்கு வடகொரியாவின் தலைநகரான பியோங்யாங் மற்றும் அங்கு அழைத்துச் செல்லப்படும் அளங்கரிக்கப்பட்ட சுற்றுப்பயணங்களே காட்டப்பட்டுள்ளன. பியோங்யாங்கை தவிர்த்து பிற நகரங்களும் உண்டு. அப்படியாக இந்நூல் சோங்ஜின் (Chongjin) எனும் சிறு நகர வாசிகளின் கதைகளை பேசுகிறது. இந்நகரம் வடகொரியாவின் சீனா, ரசிய எல்லையில் அமைந்துள்ளது. மீ-ரான் எனும் இளம் பெண்ணின் காதல் கதையில் இந்த நூல் தொடங்குகிறது. மீ-ரானின் அப்பா தென் பகுதிக்காக போர் புரிந்து வட பகுதியில் சிக்கிக் கொண்டவர். போருக்கு பிறகான அவர் போன்றவர்களின் வாழ்க்கை பாதிப்புக்கு உள்ளாகிறது. சமூக ரீதியில் கீழ்மையாக பார்க்கப்படுகிறார்கள், அவர்களின் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகளும் மறுக்கப்படுகிறது. இந்த சமூக தண்டனை தலைமுறை ரீதியாக கடத்தப்பட்டு, கறைபடிந்த தலைமுறையாக அவர்கள் அடையாளப்படுத்தப்படுகிறார்கள். 1990-களின் மத்தியில் வடகொரியாவில் பஞ்சம் அத்கரித்த போது மீ-ரான் பாலர் பள்ளி ஆசிரியராக நியமிக்கப்படுகிறார். ஊதியமற்ற ஊழியம். சுமார் 50 பிள்ளைகளுக்கு பாடம் போதித்த நிலை குறுகிய காலத்தில் 15-ஆக மாறுகிறது. பஞ்சம் காரணமாக அதிகமாக இறந்தது குழந்தைகளும், சிறார்களும் அடுத்தபடியாக முதியோர்களுமே. ஊட்டச் சத்துக் குறைபாட்டால் சிறுவர்கள் தலை பெருத்தும் உடல் மெலிந்தும் காணபட்டார்கள். பள்ளியில் கொடுக்கப்படும் ஒரு வேளை சூப் (உப்பும் + இலை + சுடுநீர்)உணவுக்காக மட்டுமே மாணவர்கள் வந்து கொண்டிருப்பதாக மீ-ரான் குறிப்பிடுகிறார். உணவின்றி தவிக்கும் பிள்ளைகள் சிரமம் கொண்டே ‘தேச பிதா எங்களை காப்பார்’ எனும் பாடலையும், எதிரி நாட்டினர் மீதான வெறுப்பினை போதிக்கும் பாடங்களையும் படித்துள்ளனர். பள்ளி வரும் அக்குழந்தைகளின் கண்கள் ‘நாங்கள் மரணத்தை நோக்கி பயணிப்பதை நீ இரசித்துக் கொண்டிருக்கிறாய் அல்லவா’ எனக் கேட்பதாக இருந்ததென குறிப்பிடுகிறார் மீ-ரான். உணவு போதாமை இந்த நூல் நெடுகினும் வெவ்வேறு வடிவங்களில் நமக்குக் காட்டப்படுகிறது. அடுத்ததாக ஜுன் - சாங்கின் வாழ்வியல் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒப்பீட்டளவில் ஜுன் - சாங்கின் குடும்பம் வசிதி மிக்க குடும்பம். இரண்டாம் உலகப் போரின் போது அதிகமான கொரியர்கள் ஜப்பானுக்கு இடம் பெயர்ந்தார்கள். இன்றளவிளும் ஜப்பானில் மூன்றாவது சிறுபான்மை இனமாக கொரியர்கள் வசிக்கிறார்கள். கொரிய பிறிவினைக்குப் பின் வடகொரியாவிற்கு இடம் பெயர்ந்து வசிக்கிறது ஜுன் - சாங்கின் குடும்பம். ஜுன் சாங்கின் முன்னோர் அக்காலகட்டத்தில் வடகொரியாவுக்கு போக காரணம் என்ன? இரண்டாம் உலகப் போர் முடிந்த நிலையில் ஜப்பான் பலம் இழந்த நாடாக இருந்தது. நாடு திருப்பும் அவர்கள் வட கொரியாவுக்கு போக நேர்கிறது. பிறிவினைக்கு பின் தென் கொரியா வட கொரியாவை விட பின் தங்கிய நாடாகவே இருந்துள்ளது என்பதையும் இங்கு பதிவு செய்துள்ளார்கள். ஜுன் - சாங் பியோங்யாங்கில் இருக்கும் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படிக்கிறார். அவர் அறிவியலாளராக நாட்டிற்கு சேவகம் செய்ய வேண்டும் என்பது குடும்பத்தின் விருப்பம். பள்ளி பருவத்தின் போதே ஜுன் - சாங்கிற்கும் மீ- ரானுக்கும் காதல் மலர்கிறது. அந்தக் காதலில் அவர்கள் தமது நாட்டின் நிலை பற்றியோ அல்லது அரசியல் பார்வையையோ பகிர்ந்துக் கொண்டதில்லை. அதன் பின் விளைவுக்கான பயமே அப்படி பேசமல் இருக்கச் செய்துள்ளது. மீ-ரான் மற்றும் ஜுன் சாங் இருவரும் வெவ்வேறு காலகட்டத்தில் தப்பி ஓடி அகதி தஞ்சம் கோறுகிறார்கள். மீ-ரான் ஜுன் சாங்கிடம் சொல்லாமலே முதலில் ஓடிவிடுகிறார். இவர்களின் காதல் எப்படியாக நிறைவடைந்தது என்பதை புத்தகம் வாசிப்போர் அறிய முடியும். திருமதி சோங் மற்றும் அவருடைய மகள் ஹொக்-ஹீயின் சுய ஒப்புதல் மற்றுமொரு தளத்தை பதிவு செய்கிறது. சோங் தொழிலாளர் கட்சியின் அதி தீவிர நம்பிக்கையாளராவார். வடகொரியர்களின் வீடுகளில் கிம் அதிபர்களின் படங்களை வைத்திருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு குடிமகனும் காலையில் எழுந்ததும் அச்சுவர் படங்களை துடைத்து சுத்தம் செய்ய வேண்டும். அவற்றை மக்கள் எவ்வாறு பாதுகாக்கிறார்கள் என்பதை பறிசோதிக்க ஒரு தனி இலாக்கா சோதனை நடத்தும். திருமதி சோங் ஒரு தொழிற்சாலையில் பணியாற்றுகிறார். அதே வேளை தன் குடில் வாசிகளின் தலைவியாகவும் இருக்கிறார். காலையில் எழுந்து சுவர் படங்களை சுத்தம் செய்வது முதல் இரவு படுக்கும் வரை ஓயாது பணி செய்கிறார். இவர் ஊடாக சொல்லப்படும் செய்திகள் பல. ஹொக்-ஹீ க்கு அவர் செய்து வைக்கும் திருமணம், திருமண முறை, அதற்கான செலவு, குளிர் காலத்தில் நிகழும் ’கிம்-சீ’ ஊறுகாய் திருட்டு, தினமும் தொழிலாளர்களின் முன்னிலையில் ஒவ்வொருவராக தன்னை சுய விமர்சனம் செய்து தன்னிடம் குறை இருப்பதாக முடிவுரை செய்வது, வார இறுதிகளில் தொலை தூர காடுகளில் உணவிற்காக குறுத்துகளை சேகரிப்பது, மனித மலங்களை பட்டியல் முறையில் அவர்கள் சுத்திகரிப்பு நிலையம் கொண்டுச் செல்வது என நேரடி விளக்கங்கள் நம் மனதை பிசையச் செய்கிறது. 1990-களின் மத்தியில் வடகொரியாவில் பஞ்சம் அதிகரித்த போது தொழிற்சாலைகள் மூடபட்டன, விவசாயமும் பாதிப்படைந்தது. உணவு பற்றாக் குறையை மறைக்க அதிக உணவு சாப்பிட்டால் தொப்பை விழும் என்பதை போன்ற விளம்பரப் படங்கள் நாடு முழுக்க எழுப்பப்பட்டது. மக்களுக்கான உணவு விநியோகம் குறைக்கப்பட்டது. அதே வேளை, தென் கொரியர்கள் அபரிமித வளர்ச்சியை நோக்கிச் சென்று கொண்டிருந்தார்கள். ஒவ்வொருவரும் வகனம் வைத்திருக்கிறார்கள் எனும் செவி வழிச் செய்தியை ஆரம்பத்தில் நம்ப மறுத்தனர் வட கொரிய மக்கள். பஞ்சத்தின் போது கள்ளச் சந்தை விரிவடைந்தது. சீனாவின் வழி தனியங்களும் தொழில்நுட்ப பொருட்களும் வட கொரியாவின் எல்லை ஓர கள்ளச் சந்தையில் நுழைந்தன. அப்படியாக தென் கொரிய வானொலியையும் அவர்கள் கேட்க ஆரம்பிக்கிறார்கள். கொஞ்சம் வசதி இருந்தவர்களுக்கு தொலைக்காட்சி, சீடி மற்றும் டிவீடி பார்க்கும் வாய்ப்பும் ஏற்பட்டது. இது மக்களிடையே அதிர்வை உண்டாக்கியது. வடகொரியாவில் இது தேச துரோகத்திற்கு ஒப்பானதாகும். பிடிபட்டவர்களை சிறை மற்றும் லேபர் கேம்-களில் அடைத்தார்கள். பஞ்ச காலத்தில் ஏராளமான சிறார்கள் கைவிடப்பட்டார்கள். அவர்களின் சாவல்களை கிம்- ஹயுக் எனும் சிறுவனின் வழி நமக்கு சொல்லப்படுகிறது. அது போக டாக்டர் கிம் எனும் பெண்மணியின் வழி நிபுணர்களின் வாழ்வும் எந்த அளவுக்கு வடகொரியாவில் பாதிப்படைந்தது என்பதையும் விளக்குகிறது இந்நூல். பெரும்பான்மையான வடகொரியர்களின் தப்பிக்கும் படலம் சீனாவின் வழியே நிகழ்ந்துள்ளது. டூமன் நதியை கடந்து அகதிகளாக சீனாவில் நுழைகிறார்கள், முயற்சி எடுத்து அதில் சிலர் தென் கொரியாவை சென்றடைகிறார்கள். இந்நிகழ்வுகள் எளிமையான செயல்பாடக அமைவதில்லை. சீனாவிற்குள் நுழையும் வடகொரியர்கள் இங்குள்ள தென்கொரிய தூதரகத்தில் அகதி தஞ்சம் கேற முடியாது எனும் சட்டம் அமலில் உள்ளது. ஆக அவர்கள் இங்கிருந்து தரை வழி பயணமாக மங்கோலியா சென்று அங்கிருக்கும் தென்கொரிய தூதரகத்தை அடைகிறார்கள். இது ஆபத்தான வழியாகவும் அறியப்படுகிறது. காரணம் அவர்கள் ‘கோபி’ பாலைவனத்தை கடந்து போக வேண்டும். அப்படி பயணம் மேற்கொள்ளும் பலர் இறந்தும் போகிறார்கள். அடுத்ததாக குன்மிங்கில் இருந்து மியன்மார் சென்று தாய்லாந்தை அடைந்து அங்கிருந்து தென் கொரியா செல்கிறார்கள். இதற்கான செலவு மிக அதிகம். பணம் இல்லாத வடகொரிய அகதிகள் எப்படியாக இந்த பயணத்தை மேற்கொள்கிறார்கள்? அங்கும் ஒரு மோசடி நிகழ்கிறது. தென்கொரியாவை சென்றடையும் வடகொரியர்களுக்கு ஒரு சில மாதங்களுக்கு மறுவாழ்வு பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சி முடிந்த பின் அவர்களின் மறுவாழ்விற்காக 20-ஆயிரம் அமேரிக்க டாலர்கள் வரையினும் பணம் கொடுக்கப்படுகிறது. இந்த அமேரிக்க டாலர்களை குறி வைத்து ஒரு சில மனித கடத்தல் குழுக்கள் இயங்கி வருகின்றன. சீனாவில் நுழைவது முதல் சீயோல் தலைநகரை அடைவது வரை இந்த கடத்தல் குழுக்கள் திறப்பட செயல்படும். அதற்கு கைமாறாக மறுவாழ்வு தொகையில் பெரும் பகுதியை அவர்கள் எடுத்துக் கொள்வார்கள். இந்தக் கடத்தல் குழுக்களை தவிர்த்து எம்.எல்.எம் செய்யும் ஆசாமிகளும் ஆசை வார்த்தைகளைக் கூறி பணம் பறித்துவிடுகிறார்கள். அரசினால் பகிர்ந்து கொடுக்கப்படும் நிலையில் இருந்து பண நிர்வாக வாழ்க்கை முறைக்கு மாறுவது மறுவாழ்வை மேற்கொள்ளும் கொரியர்களுக்கு சிக்கலாக அமைகிறது. திசைகளில் மாறுபட்டிருந்தாலும் வடக்கில் இருந்து வருபவர்களும் கொரியர்களே. தெற்கில் இருப்பவர்களும் கொரியர்களே. இருந்தும் சமூக அமைப்பில் அவர்களின் ஏற்பு எத்தகையது? இரு நிலப் பகுதியினருக்குமான கால இடைவெளி சுமார் 60 ஆண்டுகளென கணக்கிடுகிறார்கள். மொழி, காலாச்சாரம், பண்பாடு என சமூக செயல்படுகளின் முக்கிய அம்சங்களில் இரு கொரியர்களுக்கும் அதீத மாறுபாடுகள் ஏற்பட்டுவிட்டது. தன்னை முழு தென் கொரியனாக கருதும் பலராலும் புதியவரை முழுமையாக ஏற்க முடியாத சிக்கலும் அங்கே உண்டாகிவிட்டது. அரசியல், பொருளாதரம், சமூகம் என பல நிலைகளிலும் புதிய குடியேற்றம் கண்டவர்கள் சிக்கலை சந்தித்ததை பதிவு செய்கிறார்கள். தற்போதைய நிலையில் டூமன் நதி படுகை நெடுகினும் காவல் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த நூல்கொரிய பிறிவினை முதல் 2009-ஆம் ஆண்டு வரையிலான நிகழ்வுகளை பதிவு செய்து 2009-ன் இறுதியில் வெளியீடு கண்டது. கிம் ஜொங் இல் மரணித்த ஆண்டு 2011. இந்நூலை எழுதும் சமயத்தில் வடகொரிய ’அரியனை’ பிரச்சனையையும் பதிவு செய்கிறார் இந்நூல் ஆசிரியர். கிம் ஜோங் உன் அடுத்த வாரிசாக தயாராகி கொண்டிருந்த நிலை ஒரு இடத்தில் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளது. 2008-ஆம் ஆண்டு கிம் ஜொங் இல் சிறுநீரக பாதிப்பால் கடுமையாக உடல் நலம் குன்றினார். ஐக்கிய நாட்டு சபை முக்கிய எல்லை பகுதிகளில் தனது செயல்பாடுகளை அமல்படுத்த விண்ணப்பம் வைத்தது. சீனா அதற்கான அனுமதியை மறுத்தது. வட கொரிய அகதிகளுக்காக தன்னார்வளர்களாக செயல்பட்ட சில கிருஸ்துவ மிஸனரிகளின் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு, வீடமைப்பு பகுதிகளில் நிறுவப்பட்ட தற்காலிக தேவாலயங்களும் மூடப்பட்டன. அதற்கு எதிர்மறையாக வடகொரிய இராணுவத்தினர் சீன எல்லை பகுதிகளில் அனுமதிக்கப்பட்டனர். ஒற்றாடவும் வடகொரியர்களை கைது செய்து கொண்டுச் செல்லவும் அனுமதிக்கப்பட்டனர். இந்த நூல் வாசிக்க மிக இலகுவாகவே அமைந்துள்ளது. விவாத பொருளுக்கான மிகப் பெரும் வெளியையும் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. -முற்றும்- பதிவை சமர்பித்தவர் VIKNESHWARAN ADAKKALAM at 12:20 PM 0 மறுமொழிகள் குறிச்சொற்கள் NOTHING TO ENVY, ORDINARY LIVES IN NORTH KOREA, கொரிய அகதிகள், வட கொரியா Wednesday, June 12, 2019 நிலங்களின் நெடுங்கணக்கு – மங்கோலியர்களின் கணிதப் பிழையும் அதன் பின் விளைவுகளும் இந்நாவலின் ஆறாம் அத்தியாயம் முக்கியமான வரலாற்றுப் பின்னணியை பேசுகிறது. அதுவே நெடுங்கணக்கின் தொடக்கப் புள்ளியும் கூட. மங்கோலியர்களின் சீன படையெடுப்பின் போது சீனத்தின் அதற்கு முந்தைய ஆட்சியான சொங் பேரரசு தென் பகுதியை நோக்கி குறுகியது. அதை முழுதுமாக அழிக்க முடியாமல் தினறிக் கொண்டிருந்தார் குப்ளாய் கான். சீனப் பெருஞ்சுவரைப் போன்ற மதில் சுவர்களை தகர்த்து சோங் பேரரசை முறியடித்து வெற்றி கண்டதும். அவ்வரசின் 5 அல்லது 6-வயதே நிறம்பிய அரசனை கொன்று காட்சி படுத்தியதும் வேறு கதைகள். குப்ளாய் கான் சீனத்து அரசரா அல்லது மங்கோலிய அரசரா எனும் கேள்வி எழும் நிலையில் தன்னை இவ்வுலகின் பேரரசனென பிரகடனப் படுத்திக் கொண்டார். அதுவே இன்றளவிலும் சீனத்தில் யூவான் பேரரசாக (Yuan Dynasty) அறியப்படுகிறது. மார்க்கோ போலோ சுமர் 17 ஆண்டுகள் குப்ளாய் கானிடம் பணியாற்றினார். மார்க்கோ போலோவின் பயணக் குறிப்புகள் 1270-களுக்கு பிறகான சீனாவை மட்டுமின்றி சாவகம் என அறியப்படும் ஜாவாவை அறித்துக் கொள்ளவும், மலாய்காரர்களின் அசாதரனமான போர்,வாழ்வியல் மற்றும் ஆட்சிகளை அறிந்துக் கொள்ளவும் வழி செய்கிறது. மார்க்கோ போலோ தொடர்பான செய்தியை பிறிதொரு பதிவில் விரிவாக பார்க்கலாம். மங்கோலியர்கள் நுசாந்தாராவின் மாபெரும் பேரரசை கைப்பற்றி மலாய் தீவுகளில் தமது ஆதிக்கத்தை செலுத்த திட்டமிட காரணம் என்ன? குப்ளாய் கானுக்கு ஜாவாவை சேர்ந்த கிளத்தியர்களும் அவர்கள் வழிப் பிள்ளைகளும் இருந்துள்ளார்கள். ஆக, ஜாவா படையெடுப்பிற்கு முன்பாகவே மங்கோலியர்களுக்கு ஜாவாவோடு நல்லிணக்கம் இருந்துள்ளது. ஜாவாவை நோக்கிய குப்ளாய் கானின் பார்வையும் நெடுங்கணக்கில் அடங்கிய ஒரு குறுங்கணக்கென உணர முடிகிறது. பண்டைய காலத்தில் இரண்டு முக்கியமான வணிகப் பாதைகள் இருந்தன. இந்த வணிகப் பாதைகள் ஐரோப்பாவுக்கும் கிழக்காசியாவுக்குமான முக்கிய வழித் தடங்களாக அமைந்தன. இந்தியாவின் மசாலாப் பொருட்களும் சீனத்துப் பட்டும் அன்றைய வணிகத்தின் முக்கிய அம்சங்கள். இந்தப் பொருட்களின் அடிப்படையிலேயே அப்பாதைகள் பெயரிடப்பட்டன. ஒன்று பட்டுப் பாதை எனக் கூறப்படும் சில்க் ரோட் (Silk Road). பட்டுப் பாதை நில வழி பாதை. துர்க்கி, ஈரான், இந்தியா, தட்ஜ்கிஸ், கிர்கிஸ் எனத் தொடங்கி சின்ஜியாங் வழியாக சீனாவை வந்தடைகிறது. மற்றொன்று நறுமணப் பாதை எனப் படும் ஸ்பைஸ் ரோட் (Spice Road). ஸ்பைஸ் ரோட் கடல் வழிப் பாதை. ஸ்பைஸ் ரோட் வெனீஸில் தொடங்கி அரேபியா, ஆப்ரிக்கா, தென் இந்தியா, நுசாந்தாரா வழியாக சீன தேசத்தை வந்தடைகிறது. பட்டுப் பாதை முழுவதுமாக குப்ளாய் கானின் ஆட்சியின் கீழ் இருந்தது. அதன் வழி அதீதமான வரி வசூல் செய்து கொடுத்துக் கொண்டிருந்தார் குப்ளாய் கானின் நிதி அமைச்சரான அஹமத். சீனாவை முழுமையாக கவர்ந்தப் பின் குப்ளாய் கானின் எண்ணம் ஸ்பைஸ் ரோட்டை அபகரிப்பதில் குவிந்தது. அப்படி கடல் வழி வணிகப் பாதை குப்ளாய் கான் வசம் போயிருந்தால் மேலும் பெரும் நிலப் பகுதியினை தன் ஆட்சியில் இணைத்திருப்பார். நுசாந்தாராவின் வரலாறு வேறு விதமாய் அமைந்திருக்கும். யுவான் பேரரசின் தென் பகுதியில் இருந்த மற்றுமொரு அரசு சம்ப்பா (இன்றைய வியட்நாம்). இந்திரபுரா, அமராவதி, விஜயா, பாண்டுரங்கா என சில பெருநகரங்களை கொண்ட அரசு அது. சம்ப்பா முதல் தெற்காகவும் கிழக்காகவும் பெரும் நிலப்பகுதி நூசாந்தாரா எனும் அடையாளத்தில் மலாய் அரசுகளின் கீழ் இருந்தது. மங்கோலியர்களின் படையெடுப்பின் போது மாஜாபாகித் அவர்களுக்கு உதவுவதாகக் கூறி மங்கோலிய கூட்டணியில் இருந்தது. ஜாவாவின் முன்னால் அரசன் வீழ்ந்ததும் கூட்டணியில் இருந்த மாஜாபகித் மங்கோலியர்ளுக்கு எதிராக அவர்களை அடித்து விரட்ட ஆரம்பித்தது. காரணம் குப்ளாய் கானின் நிதி அமைச்சர் அஹமத் அதீத வரிகளை விதித்து சிற்றரசுகளை பெருமூச்சிரைக்கச் செய்தது தான். யூவான் பேரரசின் சிற்றரசாக இருக்க விரும்பாத மாஜாபாகித் சுயாட்சியை அமைத்தது. குப்ளாய் கானுக்கு வரிக் கட்ட வேண்டிய அவசியமும் இல்லாமல் போனது. ஜாவாவை வெற்றி கொள்வதில் மங்கோலியர்கள் தோற்றுப் போகிறார்கள். மங்கோலியர்களுக்கு ஜாவாவில் நிகழ்ந்த தோல்வி முதல் அல்ல. அவர்கள் மேலும் சில போர்களில் வெற்றி வாய்ப்பை இழந்துள்ளனர். உண்மையில் சூது கவ்வும் திரைப்படத்தில் இடம்பெறும் 5-வது கடத்தல் விதிமுறை ஜெங்கிஸ் கான் அவரது பேரனான குப்ளாய் கானுக்கு உரைத்தது. ‘ஒரு வேள சொதப்பிட்டா கூச்சமே படாம பின் வாங்கிடனும்’ என்பதுதான் அந்த விதிமுறை. ஆக மங்கோல்கள் தோல்விகளை படிப்பினையாகவே எடுத்துக் கொண்டார்கள். மாஜாபாகித் மங்கோல்களின் வாயில் வடையை வைப்பார்கள் என்பதை அவர்களும் எதிர்பார்த்திருக்கவில்லை. அதன் பின் மாஜாபாகித் தனது பேரரசின் ஆற்றலை அபரிமிதமாக வளர்த்துக் கொண்டது. அதற்கு துணையாக இருந்தது காஜா மாடா எனும் தோப்பேங் இரகசியக் குழுக்களின் மூதாதை. பாகுபலிக்கு கட்டப்பாவை போல், சோழர்களுக்கு பழுவேட்டரையரை போல், மாஜாபாகித்துக்கு காஜா மாடா. காஜா மாடா எடுத்துக் கொண்ட சத்தியத்தை அவர்களின் வம்சாவழியினர் இன்றும் காட்டிக்காக்க போராடுவதாக கூறப்படும் ஒரு புனைவின் பின்னணியில் மறைக்கப்படும் அல்லது அதிகம் அறிந்திராத சரித்திர சுவடுகளை நோக்கி பயணிக்கிறது இந்த நாவல். காஜா மாடா வம்சாவழியினர் புதைந்து போன மாஜாபாகித் அரசுக்கு விசுவாசமாக இதைச் செய்கிறார்களா? நிச்சயமாக இல்லை. அவர்களின் விசுவாசம் காஜா மாடாவிற்கும் அவர் உரைத்த சூளுரைக்குமே ஆகும். அந்த விசுவாசம் காஜா மாடாவின் பிரியத்திற்கு உரிய முகமூடியின் ஊடாக காலம் காலமாக கடத்திக் கொண்டு வரப்படுகிறது. தான் ஒரு ஜாவாவின் வம்சாவழியினன் எனும் பெருமிதத்தில் அந்த முகமூடி வெளிப்படுகிறது. அது வெளி உலகிற்கு அப்பட்டமாக தெரிந்துவிடாமல் இருக்கவும் இரகசியம் காக்கப்படுகிறது. இன்றைய தேசிய மயமாக்களில் அனைவரும் மலாய்காரர்கள், இந்தோனேசியர், இஸ்லாமியர் என பொதுவில் பார்க்கப்பட்டாலும் அவர்களுக்குள் இருக்கும் ஜாவா, பூகிஸ், சூலுக், சுந்தா, மீனாங்காபாவ், பஞ்சார் எனும் இன பாகுபாடு இன்னமும் அகலவில்லை என்பதையும் ஆசிரியர் முன் வைக்கிறார். முகமூடியை வைத்திருக்கும் ஜாவாக்களின் எதிரிகள் யாவர்? நிச்சயமாக காஜா மாடா தனது சூளுரையில் குறிப்பிடும் இடங்களே. அந்த சூளுரையில் மொத்தம் பத்து வெவ்வேறு ஆட்சிகளை மஜாபாதித் பேராட்சியின் கீழ் கொண்டு வருவதாக காஜா மாடா சத்தியம் எடுக்கிறார் அவை முறையே குரூன், செரான், தஞ்சோங்புரா, ஹாரு, பகாங், டொம்போ, பாலி, சுந்தா, பலேம்பாங் மற்றும் துமாசேக். காஜா மாடா சூளுரை எடுத்த சமயம் இந்த மலாய் அரசுகள் ஆட்சி புரிந்தன. கால ஓட்டத்தின் முன் பின்னாக அந்த இடங்களின் பெயர்கள் மாற்றம் அடைந்தன. நாவலில் செல்லத்துரைத் தேடிச் சென்றுள்ளது ஸ்ரீவிஜயா மற்றும் கூத்தாய் பேரரசின் இடங்களாயிற்றே, காஜா மாடா தமது சூளுரையில் அவற்றைக் குறிப்பிடவில்லையே என நினைப்போமானால் அவர் குறிப்பிடும் தஞ்சோங்புராவில் கூத்தாய் பேரரசும், பலேம்பாங் என்பதில் ஸ்ரீவிஜய பேரரசும் அடங்கிவிடுகிறது. ஆக, பத்து இடங்களில் இரண்டு இடங்களின் சுவடுகளை மட்டுமே ஆசிரியர் இந்நாவலில் எழுதி இருக்கிறார் என்றால் மேலும் இருக்கும் எட்டு இடங்களுக்கும் சேர்த்து நிலங்களின் நெடுங்கணக்கை இன்னும் ஒரு இருபது பாகங்களுக்கு எழுதுவார் என எதிர்ப்பார்க்கலாம். காஜா மாடா முகமூடியின் சரித்திர சுவடுகளை பின் நோக்கி காண்கையில், பேரரசுகளின் காலகட்டத்தில் இவர்கள் சைவ மதத்தையும், புத்த போதனையையும் பின் பற்றி இருக்கிறார்கள். இன்று கூறப்படும் இந்து மதம் அப்பொழுது பரிட்சயத்தில் இல்லை. பிற்காலத்தில் காஜா மாடாவின் முகமூடி ஒரு வழிபாட்டு பொருளாகி போனது. பாலியில் இருக்கும் சிவன் ஆலயத்தில் அதை வைத்து வழிபட்டு இருக்கிறார்கள். 1960-களில் அந்த முகமூடி களவு போனது. அது வரலாற்று பொருட்கள் சேகரிப்போரின் திருட்டுச் செயலாக இருக்கும் என நம்பப்பட்டது. அந்த முகமூடி இன்றளவிலும் கண்டுபிடிக்க முடியாமல் போனது. ஆசிரியர் ‘ஒரிஞினல்’ முகமூடியை மடகாரிபுற குடும்பம் வைத்திருப்பதாக கூறி நமது கவனத்தை கோத்தா கெலாங்கியின் பக்கம் கொண்டு போகிறார். கோத்தா கெலாங்கி தொடர்பாக நான் அறிந்துக் கொண்டது அமரர் டாக்டர் ஜெயபாரதியின் வழி தான். அவருடைய விஸ்வா காம்ப்லேக்ஸ் வலைதளத்தில் கேத்தா கெலாங்கி தொடர்பான தகவல்களை சில கட்டுரைகளில் பகிர்ந்து இருந்தார். அவர் கோத்தா திங்கி மருத்துவமனையில் பணியாற்றிய சமயம் சேகரித்த தகவல்கள் அவை என்பதை அறிய முடிகிறது. கோத்தா கெலாங்கி 2005-ஆம் ஆண்டு தொல்பொருளாய்வு தளமாக அரசினால் அறிவிக்கப்பட்டது. டாக்டர் ஜெயபாரதியின் குறிப்புகள் அதற்கும் முந்தியவையாகும். இக்கதையில் டாக்டர் மணிசெல்வம் வரும் காதாபாத்திரத்தின் இடங்களில் டாக்டர் ஜேபியை நினைவு கூறுவதை தவிர்க்க முடியவில்லை. கோத்தா கெலாங்கி தொடர்பான அறிமுகத்தைக் கொடுக்கும் ஆசிரியர் மேலாதிக தகவல் தேடல்களை நம்மிடமே விட்டுவிடுகிறார். இது வரை கண்டடைந்த சரித்திர ஆய்வுகளை உரையாடலின் போக்கில் நம்மிடம் கடத்திவிடுகிறார். இது ஒரு குறைபாடாகவே தெரிகிறது. ஜாவா முகமூடிக்காரர்கள் கோத்தா கெலாங்கியில் இருக்கும் ஸ்ரீவிஜய பேரரசின் சரித்திர சுவடுகள் வெளி தெரியாமல் இருக்கச் செய்கிறார்கள் என்பதை இன்னும் பலமாக நிறுவி இருக்கலாம். சரித்திரத்தில் இந்த இனக் குழுக்களுக்குள் நடந்த போர் மற்றும் நில ஆக்கிரமிப்பு சம்பவங்களை சேர்த்திருந்தால் இதன் சுவாரசியம் பன்மடங்காகி இருக்கும். ஜெகூர் பாருவில் இன்று ஜப்பானிய கல்லறை எனும் பெயரளவில் மட்டுமே ஓர் இடம் உள்ளது. அதன் பின்ணணி புத்த பிக்குவாக மாறிய ஜப்பானிய இளவரசனின் நினைவாக அமைக்கப்பட்டுள்ளது என்பதை இந்நாவலில் அறிகிறோம். கோத்தா கெலாங்கியில் இளவரசர் தக்காவோ மரணித்திருக்கக் கூடும் என நம்பும் ஜப்பானிய இராணுவம் இரண்டாம் உலகப் போரின் போது அவருக்கான நினைவிடத்தை எழுப்புகிறார்கள். ஆக, ஜப்பானியர்களிடம் அந்நாளய கோத்தா கெலாங்கி தொடர்பான தகவல் குறிப்புகள் இருப்பதற்கான சாத்தியம் உண்டு. அதை நோக்கிய தேடல்கள் ஏற்பட்டிருக்கின்றனவா என்பதன் தகவல்கள் நம்மிடம் இல்லை. சோழர்களுக்கு முன்பாக பல்லவர்களும் பாண்டியர்களும் நுசாந்தாரா பிராந்தியத்தில் தமது ஆதிக்கத்தை செலுத்தியதாக ஆசிரியர் குறிப்பிடுகிறார். அந்த ஆதிக்கம் என்பது மொழி, மதம் மற்றும் பண்பாட்டால் ஆனது. இனத்தால் அவர்கள் இம்மண்ணின் குடிகளாகவே விளங்கி உள்ளனர். இதை உணர்த்தவே பரமேஸ்வராவின் கதையை இதில் இணைத்திருக்கிறார் என்பதை உணர முடிகிறது. மலாக்கா பேரரசை நிறுவிய பரமேஸ்வரா தமிழன் எனும் மூடநம்பிக்கை தமிழ் மக்களிடையெ வேறூன்றி உள்ளது. செவிவழிச் செய்திகளாலும் தேடல்கள் அற்ற ’பிம்பலக்கி’ தனத்தாலும் இந்த மூட நம்பிக்கையை தமக்குள் வலுவாக்கிக் கொண்டவர்கள் ஏராளம். அதன் வெளிப்பாடாகவே பாடல் எழுதி இசை அமைத்து குதூகளித்துக் கொள்கிறார்கள். இப்படிப்பட்டவர்களுக்கு உரைப்பதற்காகவே “கையில் ஏதாவது திறந்தால் உன் மண்டையை திறந்திட போகிறேன். பரமேஸ்வரா தமிழனா உனக்கு” எனும் வசனத்தை இந்நாவலில் இணைத்திருக்கிறார் ஆசிரியர். இது ஒரு பக்கம் இருக்க, சுமார் 500 ஆண்டுகளுக்கு முன் உள்ள சரித்திரத்தை ஏற்றுக் கொள்ளும் அளவுக்கு அதற்கு முந்தைய சுவடுகள் ஏற்றுக் கொள்ளப்படவில்லை என்பதையும் குறிப்பிடுகிறார். உதாரணமாக திரங்கானுவின் சிறுகல்வெட்டிற்கு இருக்கும் பிரபலம் கோத்தா கெலாங்கி எனும் பெருநகரம் இருந்த இடத்திற்கு இல்லை. இதற்கு வலுவாக வேறுன்றிய இஸ்லாமியமும் காரணி ஆகிறது. புத்த மதம் உச்சத்தில் இருந்த போது சீனாவிலும், ஜப்பானிலும் அது பல பிரபலமான புத்த பிக்குகளை உறுவாக்கியது. இவர்களின் தத்துவங்களும், பயணக் குறிப்புகளும் இன்றும் பேசப்படுகிறது. அவர்களின் காஞ்சி மற்றும் நாளந்தா பல்கலைக்கழக பயணத்தில் நுசாந்தாரா தீவுகளை கடந்துச் சென்றுள்ளார்கள். ஸ்ரீவிஜய பேரரசும் புத்த ஆதிக்கத்தை ஏற்றுக் கொண்டுள்ளது. அப்படி இருக்க இப்பிராந்தியத்தில் புத்த மதத்தை போற்றிய பிக்குகள் யாரையும் நாம் அறிய முடியவில்லை. மத மாற்றமும் பண்பாட்டு மாற்றமும் வரலாற்று ஏற்பில் பலமான தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளன. போர்னியோவில் இருக்கும் கூத்தாய் பேரரசு குறித்த தகவல்களும் நம்மிடம் மிகக் குறைவாகவே உள்ளது. இந்நாவலை தவிர்த்து தமிழில் அப்பேரரசு தொடர்பான செய்தியை மலாக்கா முத்துக்கிருஷ்ணன் தமது கட்டுரயில் எழுதி இருந்தார். அது போக கோத்தா கிலாங்கி தொடர்பாகவும் ஆராய்ச்சியில் ஈடுபட்ட தகவல்களை அவரது முகநூலில் பதிப்பித்திருந்தார். நாவலில் 2005-ஆம் ஆண்டு செல்லத்துரையின் புகைப்படத்தின் வழி கோத்தா கிலாங்கி பொது மக்களின் பார்வைக்கு சென்றதாக ஆசிரியர் குறிப்பிடுகிறார். அரசாங்கம் அதை அதிகாரபூர்வமாக தெல்பொருள் ஆய்வு தளமாக அறிவித்த ஆண்டும் அதுவே. ஆசிரியர் கதையை புனைந்திருக்கும் நூதனம் பாராட்டுதலுக்கு உரியது. செல்லத்துரையின் தேடல்கள் வழியும், செல்லத்துரையை தேடுவதின் வழியும் இந்நாவல் நுசாந்தாரா எனும் இப்பிராந்தியத்தின் கவனம் பெறாத வரலாற்றுத் தடங்களை நமக்கு விளக்குகிறது. அதே சமயம் சமகாலத்தில் நிகழும் அரசியல் மற்றும் சமூக மாற்றத்தையும் பதிவு செய்ய தவறவில்லை. வரலாற்றுத் திரிபுகளை உறுவாக்காமல் அதன் போக்கிலேயே சரித்திர தடங்களை பதிவு செய்திருப்பினும் அதன் தேடல்கள் முடிவடையவில்லை. அதனால் செல்லத்துரையை நாம் கண்டடையவில்லை. சிக்கலான வரலாற்றுத் தகவல்களை மிகவும் இலகுவான எழுத்து நடையில் வாசகர்களிடம் கொண்டு சேர்த்திருக்கிறார் மதியழகன். இதற்காகவேனும் அமேரிக்க ஏகாதிபதியம் அவருக்கு பாராட்டு விழா நடத்தி இலக்கிய பரிசளிக்க வேண்டும். ஆசிரியரின் தொடர் படைப்புகளுக்காக வாசக தேன்’ஈ’களாக காத்திருப்போம். பதிவை சமர்பித்தவர் VIKNESHWARAN ADAKKALAM at 9:35 AM 1 மறுமொழிகள் குறிச்சொற்கள் A Mathialagan Thriller, Nilangalin Nedungkanakku, நிலங்களின் நெடுங்கணக்கு, மதியழகன் முனியாண்டி Tuesday, March 19, 2019 கசாக் எனும் கழுகுக் குலத் தோன்றல்கள் குதிரையில் கசாக் சீனாவின் நெடு விடுமுறை நாட்களில் பயணங்களை மேற்கொள்வது பணத்திற்கும், மனதிற்கும் கேடு விளைவிக்கும். இந்த நெடு விடுமுறை நாட்களை ‘கோல்டன் வீக்’ என அழைப்பார்கள். அவை முறையே வசந்த விழா எனப்படும் சீனப் புத்தாண்டு மற்றும் சுதந்திர தின வாரங்களாகும். இந்த விடுமுறை காலங்களில் சீனர்கள் சுமார் ஏழு முதல் பத்து நாட்களுக்கு விடுமுறை எடுத்துக் கொண்டு கிராமங்களுக்கும், சுற்றுப்பயணம் மேற்கொள்ளவும் சென்றுவிடுவார்கள். பொது போக்குவரத்து தளங்களிலும், சுற்றுளாத் தளங்களிலும் மனிதத் தலைகள் மட்டுமே நெறுக்கி அடித்துக் கொண்டு காண முடியும். இவற்றைக் கணக்கில் கொண்டு கடந்த பொது விடுமுறையின் போது சீனாவின் தன்னாட்சி பிரதேசத்துக்கு பயணம் மேற்கொள்ள முடிவெடுத்தேன். அங்கே மனித நெறிசல்கள் குறைவு. தூதரக பணி கடப்பிதழ்களை வைத்திருப்போர் திபெத்துக்குச் செல்ல முடியாது. பொது கடப்பிதழ்களை வைத்திருப்போர் கூட சீனாவின் பொது நுழைவிசைவு (VISA) மற்றும் திபெத்துக்கான சிறப்பு நுழைவிசைவையும் பெற்றுக் கொண்ட பின்னரே திபெத் செல்ல முடியும். பெய்ஜிங்கில் இருந்து திபெத் தலைநகரான லாசா செல்லும் 48 மணி நேர இரயில் பயணம் மிகவும் பிரசித்தி பெற்றது. உலகின் அதி இரம்யமான காட்சிகளை இரசித்தபடியே செல்ல முடியும். திபெத் கடல் மட்டத்தில் இருந்து மிக உயரமான இடத்தில் அமைந்துள்ளதால் அங்கே காற்றழுத்தம் மிகக் குறைவு. புதிதாகச் செல்வோர் உரக்கப் பேசுவதாலோ, விரைவாக நடப்பதாலோ மயக்கமடையக் கூடும். கடைகளில் விற்கும் துரித ஆக்சிஜன்களை வாங்கி சுவாசம் பிடித்துக் கொள்ள முடியும். அப்படி இருந்தும் பூலோக ஏற்புகளை தாங்கிக் கொள்ள முடியாத பயணிகள் மருத்துவ மனைகளில் விடுமுறைகளை கழித்துவிட்டும் வந்திருக்கிறார்கள். திபெத் எனக்குத் ’தடா’ போட்டதால் அந்தப் பக்கம் தலை வைக்காமல் அதற்கு வடக்கே அமைந்துள்ள சின்ஜியாங் போக முடிவு செய்தேன். சின்ஜியாங் உய்ஹூர் மக்களின் தன்னாட்சி பிரதேசமாக விளங்குகிறது. இதுவே சீனாவின் மிகப் பெரும் மாநிலம். ஒன்பது நாடுகளின் எல்லை இதன் நிலப்பகுதியை ஒட்டி இருக்கிறது. பண்டைய சீனத்தில் பட்டுப் பாதையை கடக்கும் வழியாக இப்பகுதி அமைந்தது. இஸ்லாமியர்கள் அதிகமாக இங்கே வசிக்கிறார்கள். சில பல அரசியல் காரணங்களால் இப்பகுதி முழுவதும் போலிஸ் கட்டுப்பாட்டில் உள்ளது. போலிஸ் ஸ்டேட் என்றும் இவ்விடத்தை அழைப்பார்கள். இங்குச் செல்ல சிறப்பு நுழைவிசைவு தேவை இல்லை. இருந்தும் பயணங்களின் போது கடுமையான சோதனைகளுக்கு உள்ளாக நேர்கிறது. அந்த சோதனைகள் வெளிநாட்டினருக்கு மட்டும் இல்லை. உள்நாட்டு பிரஜைகளுக்கும் தான். மொழி தெரியாத வெள்ளையர்கள் அதிகமான நேரத்தை இச்சோதனைகளுக்காகப் பரி கொடுத்ததையும் காண முடிந்தது. இம்மாநிலத்தில் அமைந்திருக்கும் மிக அழகிய காட்சிகளை இரசிப்பதற்கும் சுவை மிக்க உணவுகளுக்காகவும் பல் வேறு சிறுபான்மை இன மக்களின் கலாச்சாரங்களை பார்தறியவும் இந்த காவல் சோதனைகளை பொருத்துப் போகலாம். யுரூமுச்சி -சின்ஜியாங் தலைநகரம் தியன் ஷான் எனும் மலைத் தொடர் நான்கு நாடுகளை கடந்து போகிறது. சீனா, கசாக்ஸ்தான், கிர்கிஸ்தான் மற்றும் உஸ்பேக்கிஸ்தான் என இதன் புவியியல் அமைந்துள்ளது. கனாஸ் (Kanas), தியன்ச்சீ (Tianchi), போன்ற பகுதிகளில் மனதை மயக்கும் இந்த மலைப் பகுதி, துர்பான் போகும் பகுதிகளில் பொட்டல் மலைகளாக தெரிகிறது. செடி கொடிகள் ஏதும் இல்லாமல் உள்ளது. அதன் சாலையோர பகுதிகளில் வேளி போட்டு மக்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஆட்களை விழுங்கும் புதை மணல் பகுதிகளாக அவ்விடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. சர்வ தேச அரசியல் பார்வை உய்ஹூர் மக்களின் மீது விழக் காரணம் வெளிநாடுகளில் அவர்கள் அரசியல் தஞ்சம் கோருவதால் தான். ஆனால் சின்ஜியாங்கில் கசாக் சீனர்களும், கிர்கிஸ் சீனர்களும், ஹன் சீனர்களும் வசிக்கிறார்கள். தியன் ஷான் போகும் வழிகளில் அதிகமாக கசாக் மக்களின் குடியிடங்களைக் கண்டேன். அவர்களின் வாழ்விடங்களில் மிகப் பெரிய கழுகுச் சிலைகளையும், சுவர் படங்களையும், சின்னங்களையும் வைத்திருக்கிறார்கள். மங்கோலியர்கள் தங்களை ஓநாயின் குலத் தோன்றலாக கருதுவது போல் கசாக் மக்கள் தங்களை கழுகின் குலத் தோன்றலாக கருதுகிறார்கள். கசக் மக்கள் 1920-களின் பிற்பகுதியில் ஏற்பட்ட பஞ்சத்தால் கடுமையாக பாதிப்படைந்தார்கள். ஜனத்தொகை அதிக வீழ்ச்சி அடைந்தது. பிழைப்பிற்கா பிற நாடுகளுக்கு போக ஆரம்பித்தார்கள். இன்றய நிலையில் உலகின் 9-வது பெரிய நாடாக இருக்கும் கசாக்ஸ்தான் வம்சாவழியினர் சீனாவிலும் இன்னும் பிற நாடுகளிலும் வசிக்கிறார்கள். சின்ஜியாங்கில் இருந்து நில வழி பாதையாக (வாகனம்/ இரயில்) கசாக் எல்லைபுர நகரங்களுக்குச் செல்ல முடியும். மலேசிய கடப்பிதழை வைத்திருப்போருக்கு கசாக் செல்ல நுழைவிசைவு தேவை இல்லை. கசாக்கின் தலைநகரம் அஸ்தானா, இருப்பினும் சீனர்கள் வியாபாரம் பொருட்டு அல்மாய்த்தி எனும் பெருநகரத்திற்கே அதிக பயணம் மேற்கொள்கிறார்கள். அல்மாய்த்தி காசாக்ஸ்தான்-கிரிகீஸ்தான்-சீனா என ஒரு முக்கோன பகுதியில் அமைந்துள்ளது. சீனாவின் ”பெல்ட் & ரோட் இனிசியேடிவ்’ திட்டத்தில் இந்நாடும் முக்கியப் பங்கு வகிப்பதால் மேம்பாடுகள் அதிகம் நடந்து வருகின்றன. உய்ஹூர் மற்றும் கிர்கீஸ் சீன பிரஜைகளை பற்றி வேறு ஒரு சமயம் பார்க்கலாம். இப்போது கசாக் மக்களின் வாழ்வியலை காண்போம். சின்ஜியாங் தியன் ஷான் மலைப் பகுதிகளில் இவர்களின் பல் வேறு வகையான வாழ்வியலைக் காண முடிகிறது. மலையில் அமைந்திருக்கும் நிர்நிலை பகுதிக்குச் செல்ல சீன அரசின் பிரத்தியோக வகனத்தை மட்டுமே பயன்படுத்த முடியும். அப்பகுதிகளில் அதிகமான கசாக் மக்களே பணி புரிகிறார்கள். கசாக் மக்கள் இசை பிரியர்கள். சிறப்பாக தம்பூரா வாசிக்கிறார்கள். நான் சென்ற பேருந்தின் உதவியாளர் அவருக்கு மூன்று மனைவிகள் இருப்பதாகக் கூறினார். இவர் இசைப் பாடுவதை அவர்கள் இரசித்துக் கேட்பதாகக் பெருமையடித்துக் கொண்டார். மிக அரிதாகவே வேற்று நாட்டினரை இவர்கள் அங்கு காண்கிறார்கள். இஸ்லாமிய முறையில் முகமன் கூறி, நான் பாக்கிஸ்தானில் இருந்து வருகிறேனா என்றே அவர்களில் பலரும் கேட்டார்கள். கசாக் மக்களில் பொரும்பான்மையானோர் இஸ்லாமிய பெயர்களைக் கொண்டிருந்தாலும் இவர்களில் இறை மறுப்பாளர்களையும் காண முடிகிறது. நான் பயணித்த போது அங்கு குளிர் காலம் தொடங்க ஆரம்பித்திருந்தது. சின்ஜியாங் தலைநகரான யுருமுச்சியில் அதிகாலை 5 மணிக்கு விடிந்துவிடுகிறது. இரவு 8.30 மணி வரை சூரியனைக் காண முடிகிறது. கோடை காலங்களில் பகல் நேரம் இன்னும் அதிகமாக இருக்கக் கூடும். உணவு விடுதிகள் பெரும்பான்மையாக மதுக் கடைகளைப் போலவே உள்ளன. ஆண் பெண் என பகலில் இருந்து இரவு வரை குடித்துக் கொண்டிருக்கிறார்கள். உணவகங்களில் சிகரட்டு கட்டுபாடுகள் இல்லாததால் குளிரூட்டியோடு கலந்த புகைச்சல் அசௌகரியத்தை ஏற்படுத்துகிறது. தியன் ஷானில் பகுதியில் இருக்கும் கசாக்குகள் குடியிருப்பில் பயணிகளுக்கு உணவு சமைத்துக் கொடுத்து சிறு வியாபரம் செய்கிறார்கள். தியன் ஷான் மலை கால ஓட்டத்தில் பலரும் நிரந்தர குடி இருப்புகளுக்கு நகர்ந்துவிட்டாலும் மலை அடிவாரங்களில் இன்னும் சிலர் கூடாரங்களில் வாழ்வதைக் காண முடிகிறது. கசாக் மக்களின் கூடாரங்கள் மங்கோலியர்களின் கூடாரங்களைப் போலவே உள்ளன. அதிக மாறுபாடுகள் கிடையாது. இக்கூடாரங்கள் நீர்நிலை பகுதிகளுக்கு அருகாமையில் அமைக்கப்பட்டுள்ளன. மேய்ச்சல் நில கால மாற்றங்களுக்கு ஏற்ப கூடாரங்களை இடம் மாற்றி அமைந்துக் கொள்வார்கள். இப்படியானவர்கள் இன்னும் நாடோடி வாழ்வை மேற்கொள்கிறார்கள். ஆடுகளை அதிகமாக வளர்க்கிறார்கள், அதன் இறைச்சி சுவை மிக அருமையாக உள்ளது. அது போக குதிரைகளையும், அடர் ரோமங்கள் கொண்ட ஒட்டகங்களையும் வளர்க்கிறார்கள். ஒட்டக பால், தயிர், இறைச்சியையும் விற்பனை செய்கிறார்கள். ஒட்டக தயிர் அதீத புளிப்பு கொண்டதாக உள்ளது. அதன் இறைச்சி மஞ்சள் கொழுப்பு கொண்டதாகவும் மிருது தன்மை குறைவாகவும் உள்ளது. குதிரைப் பாலையும் சிறு சீசாக்களில் அடைத்து விற்கிறார்கள். கசாக்குகள் தங்கள் கூடாரங்களுக்கு வரும் விருந்தினருக்கு வெண்ணை தேநீர் (Butter Tea) கொடுக்கிறார்கள். இதே உபசரிப்பு முறையை மங்கோலியர்களிடத்திலும் கண்டிருக்கிறேன். பட்டர் டீ குடிப்பதற்கு தேநீர், வெண்ணை மற்றும் உப்பு சுவை கலந்ததாக இருக்கும். கசாக் மக்கள் வேட்டை விருப்பம் கொண்டவர்கள். கழுகுகள் இவர்களின் வேட்டை ஆயுதமாக செயல்படுகின்றன. கழுகுகளை வேட்டைக்கு பழக்குவது சுலபமல்ல. அதற்கு பிரத்தியோக திறமைகள் வேண்டும். இந்த கழுகுகள் அவர்களின் குடும்ப நண்பனும் கூட. மலைகளில் இருக்கும் கழுகு கூடுகளை நோட்டம் விட்டு பிடிப்பார்கள். கழுகு அதன் மூர்க்க வாசனையை இழக்க அதன் உடலையும், முக்கியமாக வயிற்றுப் பகுதியையும் பல முறை நீரில் கழுவி சுத்தம் செய்வார்கள். இரண்டு வாரங்களுக்கு இப்படிச் செய்து அதை சாந்தப் படுத்துவார்கள். அடுத்ததாக உணவளித்து வசப்படுத்துவார்கள். தடித்த கை உறைக் கொண்டே கழுகிற்கு உணவளிக்க முடியும். நாளுக்கு நாள் உணவளிக்கும் போது கழுகோடு அவர்கள் நிற்கும் தூரத்தை அதிகரித்துக் கொண்டே செல்வார்கள். கழுகு எஜமானர் நிற்கும் திசையை நோக்கி பறக்கப் பழக்குவார்கள். கழுகு எஜமானரின் வாசனையை அறிய இறைச்சியோடு அவரின் எச்சிலை துப்பி பிசைந்து கொடுப்பார்கள். கச்சிதமாக பறந்து கையில் அமர்ந்து இறைச்சியை சுவைக்கும் பக்குவம் பெறும் வரை குடிலின் உள்ளேயே அவை வைத்திருக்கப் படும். அதன் பின் வெளியே கொண்டு வந்து பயிற்சி கொடுப்பார்கள். வேட்டை கழுகுகளுக்கு கொஞ்சமாகவே உணவளிப்பார்கள். அவை எப்போதும் பசி உணர்வோடு இருக்கும்படி பார்த்துக் கொள்வார்கள். இப்படியாக அதன் வேட்டைப் பயிற்சிகள் சில ஆண்டுகளுக்கு தொடரும். வேட்டைக்குக் கொண்டுச் செல்லும் போது அவற்றிக்கு உணவளிக்க மாட்டார்கள். அதன் வேட்டை மூர்க்கம் அதிகரித்து இருக்கப் பார்த்துக் கொள்வார்கள். அதற்கு தலைக்கவசம் இட்டு கண்களை மறைந்து, கால்களில் சங்கிலி போட்டு வேட்டை இடத்திற்கு கொண்டுச் செல்வார்கள். கசாக்குகள் குளிர் காலத்தில் அதிகம் வேட்டையில் ஈடுபடுவதாக கூறுகிறார்கள். மங்கோலியர்கள் நாடு பிடிக்கும் படலத்தின் போது போர்கலங்களில் வேட்டைக் கழுகுகளை பயன்படுத்தினார்கள். அவற்றை விலைமதிப்பற்ற பொக்கீஷமாக அடையாளப்படுத்தினார்கள். வேட்டையாடும் கசாக் குதிரையில் அமர்ந்திருக்க கழுகு வேட்டை பிராணியை தாக்க ஆரம்பித்தவுடன் வேட்டை நாய்கள் அப்பிராணியை சுற்றி வளைத்துவிடும். பிறகு வேட்டை பிராணியைக் கொன்று எடுத்து வருவார்கள். கசாக்குகள் தங்களின் சரித்திர சுவடுகளை பாடல்களின் வழி சேமித்து வைத்துள்ளார்கள். இன்றும் அவற்றை பாடி மகிழ்கிறார்கள். அவர்களின் இசையில் அதிகபடியாக தம்பூரா வாத்தியங்கள் இடம் பெற்றுள்ளன. திருமணத்திற்காக குதிரைப் பந்தய சடங்குகளை மேற்கொள்வதாக கூறுகிறார்கள். Kyz Kuu எனப்படும் அச்சடங்கை முத்தச் சடங்காகவும் குறிப்பிடுகிறார்கள். திருமணத் துணையை தேர்வு செய்ய பெண்களுக்கே முன் உரிமை கொடுக்கப்படுவதாகக் கூறுகிறார்கள். சீனர்களோடு அவர்கள் நாட்டு அரசியல் தொடர்பாக பேசக் கூடாது என்பது பாலபாடம். இருந்தும் நான் சந்திந்த கசாக் நண்பர் அவராகவே மனமுவந்து சில கருத்துகளைப் பரிமாறிக் கொண்டார். அரசியல் பார்வை அவரவர் விருப்பம் கொண்டது. சின்ஜியாங்கில் உள்ள கசாக் மக்கள் கசாக், உய்ஹூர் மற்றும் சீனம் என மும்மொழிகளில் பேசுகிறார்கள். அவர்களுடை சீன உச்சரிப்பு மிக அடர்த்தியாக உள்ளது. தொடர்ந்து நடந்து வந்த குண்டு வெடிப்புகளாலும், கலவரங்களாலும் சின்ஜியாங் பகுதியில் 2014ங்கு முதல் கட்டுபாடுகள் அதிகரிக்கப்பட்டது. தங்கும் விடுதி, பேரங்காடி, உணவகம் என எங்குச் சென்றாலும் போலிஸ் காவல்கள் நீக்கமற நிறைந்துள்ளன. 2014-ல் அதிகபடியான மீள்கல்வி பாடசாலைகள் (Xinjiang re-education camps) சின்ஜியாங்கில் தொடங்கப்பட்டன. அவை இருக்கும் இடமும் அவற்றில் கம்யூனிச போதனைகளை பயின்று வருவோரின் எண்ணிக்கையும் அறிவார் இல்லை. ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒருவர் விகிதம் இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. அந்த ஆண்டில் பலரும் சின்ஜியாங்கில் இருந்து வெளியேறி தஞ்சம் கோரினர். தற்சமயம் சின்ஜியாங்கில் கலவர புகைச்சல்கள் இல்லாமல் பயணிகள் சென்று வர அச்சூழலில் இறுக்கம் தளர்ந்துள்ளது. மனதைக் கவரும் இயற்கை வளம் இங்கு நிறைந்துள்ளது. கசாக் மக்கள் சின்ஜியாங் தவிர்த்து சீனாவின் கான்சூ, சிங்ஹாய் மற்றும் திபெத் மாநிலங்களிலும் சிறுபான்மையாக வசிக்கிறார்கள். திபெத்தியர்களோடு பிணக்கு ஏற்பட்டு பிரச்சனைகள் உண்டானதாகவும் தகவல் உண்டு. கசாக் மக்களின் Golden Eagle Festival இலையுதிர் காலத்தில் கொண்டாடப்படும் பண்டிகை ஆகும். மங்கோலியாவில் மிக விமரிசையாக கொண்டாடப்படுவதோடு தற்சமயம் அது சுற்றுளா மயமாக்கப்பட்டுள்ளது. The Eagle Huntress எனும் திரைப்படம் மங்கோலியாவில் வாழும் கசாக் சிறுபான்மை மக்களின் வாழ்வியலை பதிவு செய்துள்ளது. தரவுகள் தொடர்பான சர்ச்சைகள் இருப்பினும் அப்படம் நாடோடிகள் வாழ்க்கை முறையை குறிப்பிட தவறவில்லை. கழுகு போட்டிகள் இன்னும் பிற கசாக் வசிப்பிடங்களிலும் நடத்தப்படுகின்றன. இயற்கையோடு இயந்து வாழும் இவர்கள் பறவையை கொடுமைச் செய்வதாக நாகரீக உலகம் இன்னும் சீண்டி பார்க்கவில்லை. -முற்றும். பதிவை சமர்பித்தவர் VIKNESHWARAN ADAKKALAM at 11:18 AM 2 மறுமொழிகள் குறிச்சொற்கள் China, Khazkh Nomad, Tianshan, Urumuqi, Xinjiang, கசாக் மக்கள், கழுகு வேட்டை Wednesday, March 06, 2019 மீகாமன் செங் ஹோவும் காணாமல் போன சுல்தானும் Source of picture: cimsec.org சீனாவின் நான்ஜிங் நகரில் பண்டைய சுல்தான் ஒருவரின் கல்லறை உள்ளது. தற்சமயம் அவ்விடம் சுற்றுலாத் தளமாக விளங்குகிறது. சுல்தான் கர்ணா/ அப்துல் மஜிட் ஹசான் (Abdul Majid Hassan) எனும் ’போனி’ நாட்டு சுல்தானின் கல்லறை தான் அது. இவர் வாழ்ந்த காலகட்டம் 1380-1408 வரை. அவர் அந்நாளில் ’போனி’ என அழைக்கப்பட்ட இந்நாளய புருணை பிராந்தியந்தின் சுல்தானாக இருந்துள்ளார். இதற்கான சான்று மிங் பேரரசின் குறிப்புகளில் சீனாவிலும், ஜப்பானிய தோக்கியோ பல்கலைக்கலகத்திலும் சேமித்து வைக்கப்பட்டுள்ளது. இந்த சுல்தானின் பயணத்திற்கும் மீகாமன் செங் ஹோவின் கடல் பயணத்திற்கும் தொடர்பு உண்டு. 1408-ஆம் ஆண்டு குளிர்காலத்தின் போது சீன பயணம் மேற்கொண்ட சுல்தான் கர்ணா உடல் நலம் குன்றி நான்ஜிங்கில் (Nanjing) இறந்தார். இறக்கும் போது அவருக்கு 28 வயது. இவருக்கு ஒரு மகன் இருந்துள்ளார். அந்த இளவரசருக்கு நான்கு வயது. இளவரசரின் பெயர் ஷியாவ் வாங் என சீனத்தில் குறிப்பிடப்படுகிறது. ஷியாவ் வாங் ஆட்சியை எடுத்துக் கொள்ள வேண்டும் என்பது மிங் பேரரசரின் விருப்பம். இருந்தும் புருணை வரலாற்றில் சுல்தான் கர்ணாவின் பெயரும் அவரது மகனின் பெயரும் இடம் பெறவில்லை. இவர் ஆட்சி செய்த காலகட்டமும் புருணை சுல்தான்களின் பட்டியலில் விடுபடுகிறது. சுல்தான் கர்ணா ஆட்சி செய்த காலம் 1402-1408 ஆகும். இந்த காலகட்டத்திற்கான ஆட்சி அதிகார தடத்தை புருணை இன்றளவிலும் வெளியிடவில்லை. சீனக் குறிப்புகளை ஏற்கும் அவசியம் இல்லை எனக் கூறுகிறார்கள். சுல்தான் கர்ணா மிங் பேரரசுடன் நட்பு பாராட்டி இருக்கிறார். வணிகம், திருமணம் என பல வழிகளில் இரு நாட்டின் நட்புறவு வளர்ந்துள்ளது. இவரது சகோதரி ரத்னா தேவி, ஓங் சம் பிங் (Ong Sum Ping) எனும் சீனரை திருமணம் செய்து கொண்டார். இன்றளவிலும் புருணையில் ஓங் சம் பிங் பெயரில் ஒரு வீதி உள்ளது. நான்ஜிங்கில் சுற்றுளாத் தளமாக விளங்கும் சுல்தானின் கல்லறை 17 ஹெக்டர் பரப்பளவைக் கொண்டது. இங்கு China Brunei Friendship Hall அமைந்துள்ளது. சுல்தான் கர்ணாவின் விருப்பத்திற்கு இணங்கவே அவரை சீனாவில் அடக்கம் செய்து இருக்கிறார்கள். அவரது இறுதிச் சடங்கு சீன அரச மரியாதை முறைப்படி செய்யப்பட்டுள்ளது. சீன அரசர்களின் கல்லறை போல் பிருமாண்டமாக இருப்பினும் சமாதி இஸ்லாமிய பாணியில் அமைக்கப்பட்டுள்ளது. அப்படி பின்னாட்களில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எது எப்படியாகினும் இவருக்கு புருணை சரித்திரத்தில் இடம் இல்லை. இது ஒரு அடையாளச் சிக்கலும் கூட. 19-ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டின் அடிப்படையிலேயெ புருணை சுல்தான்களின் பட்டியல் இருப்பதாக புருணையின் அதிகாரப் பூர்வ வரலாற்றுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சுல்தான் கர்ணா கல்லறை- நான்ஜிங் செங் ஹோ தொடர்பான செய்திக்கு திரும்புவோம். பண்டைய சீனாவில் காழ்கடிதல் எனும் சடங்கு அமலில் இருந்தது. அந்தபுரம், பல்லக்குத் தூக்குவோர், அரச குல பெண்டிர்களுக்கு சேவகம் செய்யும் ஆண்கள் என அனைவருக்கும் விதை (விந்து கொள்பை) நீக்கம் செய்துவிடுவார்கள். இந்த சடங்கு முறை சீனாவின் 5000 ஆண்டு எழுத்துவடிவ வரலாறு நெடுகினும் பதியப்பட்டுள்ளது. ஆரம்ப காலங்களில் விதை நீக்கம் மட்டுமே செய்யப்பட்டு வந்தது. கடைசி பேரரசான ச்சிங் இராஜியத்தின் போது அது குறி நீக்கச் சடங்காக அமல்படுத்தப்பட்டது. இப்படி விதை நீக்கம் செய்யப்பட்ட ஆண்களை திருநங்கைகள் என குறிப்பிட முடியாது. இவர்கள் பெண் குணாதிசங்களை கொண்டவர்கள் அல்ல. நாட்டின் முதல் மந்திரிகளாகவும், அமைச்சர்களாகவும், படைத் தளபதிகளாகவும், இராணுவ வீரர்களாகவும் வாழ்ந்திருக்கிறார்கள். காழ்கடியும் சடங்கு நிகழ்த்தப்பட முக்கியக் காரணம் சேவகர்களின் இரத்தம் அரச குலத்தில் கலந்துவிடக் கூடாது என்பதற்காக மட்டும் அல்ல. அப்படிச் செய்வதின் வழி ஆண்களின் ஆற்றலை அது வலிமையாக்கும் எனும் நம்பிக்கை இருந்ததாலும் தான். 1912-ல் சீன பேரரசு வழக்குடைந்து போனப் பின் அதில் மிஞ்சிய காழ்கடிஞர்களின் கடைசி நபர் 1996-ஆம் ஆண்டு இறந்தார். அட்மிரல் செங் ஹோ தனது கடல் பயணத்தில் வழி பல நாடுகளோடு நட்புறவை ஏற்படுத்தினார். அவரது ஏழு பயணங்களும் மலாய் தீவுக் கூட்டத்தை கடந்துச் சென்ற பயணங்களாக அமைந்துள்ளன. லங்காசுக்கா, போனி, சம்பா, அயூத்யா (தாய்லாந்து), சாவகம் (ஜாவா), தெமாசிக் (சிங்கை), மலாக்கா, விஜயநகரம், இலங்கை, ஏடன், மொசாம்பிக், மெக்கா என இவரின் பயணங்கள் விரிவடைந்துள்ளன. 1405 முதல் 1433 வரை 28 ஆண்டுகள் செங் ஹோ கடற்படை தளபதியாக இருந்துள்ளார். அதில் 14 ஆண்டுகள் முழுமையாக கடல் பயணத்தில் செலவு செய்திருக்கிறார். 1433-ஆம் ஆண்டு அந்நாளில் விஜயநகரம் என அழைக்கப்பட்ட தென் இந்திய பகுதியின் பயணத்தின் போது இறந்தார். அவர் உடல் கடலில் வீசப்பட்டது. நான்ஜிங் அருங்காட்சியகம் செங் ஹோ என்பது அரசவை பெயராகும். செங் ஹோவின் இயற்பெயர் மா சான்போ. மா என்பது அவரது குடும்பப் பெயர் அது குதிரையை குறிக்கும் சொல். சான் என்றால் மூன்று, போ என்பது பொக்கிஷம். செங் ஹோ யூனான் மாநிலத்தின் இன்றைய குன்மிங் பகுதியில் உள்ள இஸ்லாமியக் குடும்பத்தைச் சேர்ந்தவர். செங் ஹோவின் அப்பாவும் தாத்தாவும் மெக்கா பயணம் மெற்கொண்டுள்ளார்கள். செங் ஹோ தமது ஏழாவது பயணத்தின் போது மெக்கா சென்று திரும்பும் வழியில் காலமானார். மிங் பேரரசு ஆட்சியைக் கைபற்றும் முன் சீனா மங்கோலியர்களின் வசம் இருந்தது. மங்கோலியர்களின் ஆட்சி யுவான் பேரரசு என குறிப்பிடப்படுகிறது. அது குப்லாய் கான் அரசனால் தேற்றுவிக்கப்பட்டது. மங்கோலியர்களின் ஆட்சியின் போது சீனர்கள் மீது அவர்கள் மொழி அல்லது இன அழிப்புக் கொள்கையை மேற்கொள்ளவில்லை. ஆனால் அரசமைப்பில் ஹன் சீனர்களை மிகவும் தழ்வான நிலையில் வைத்திருந்தார்கள். செங் ஹோவின் அப்பா யுவான்-மிங் பேரில் இறந்தார். செங் ஹோ அவரது 12-வது வயதில் காழ்கடியபட்டு அரண்மனையில் ஷு டீ இளவரசருக்கு சேவகம் செய்ய அமர்ந்தப்பட்டார். Gavin Menzies எனும் இங்கிலாந்துக்காரர் தமது பெய்ஜிங் பயணத்தின் போது Forbidden City அரண்மனை நெடுகினும் 1421 எனும் எண்கள் பொறிக்கப்பட்டுள்ளதை காண்டார். 1421-ஆம் ஆண்டு நிச்சயமாக முக்கியதுவம் வாய்ந்த ஆண்டாக இருக்கக் கூடுமென கருதிய அவர் அவ்வாண்டில் நடைபெற்ற உலக நிகழ்வுகளை ஆய்வு செய்து நூலாக வெளியிட முடிவு செய்தார். அவரது ஆய்வு சுமார் 1500 பக்கங்களை எட்டியது. Gavin Menzies கடற்படையில் பணியாற்றியவர். வரலாற்று ஆய்வாளர் கிடையாது, அவரது எழுத்தும் சுவாரசியமாக இல்லை எனக் கூறி எந்த பதிப்பகமும் அவருடைய நூலை வெளியிட முன்வரவில்லை. ஒரு பதிப்பாளர் மட்டும் அவர் செங் ஹோ தொடர்பாக எழுதிய குறிப்புகளை மறுசீரமைத்து வெளியிட ஒப்புக் கொண்டார். அப்படியாக 1421: The Year China Discovered the World எனும் நூல் வெளியீடு கண்டது. ஆனால் அது வரலாற்று ஆசிரியர்களின் கடும் கண்டனத்துக்கு உள்ளானது. அதற்கு முன்பாக ஃபோர்பிடன் சிட்டி அரண்மனையில் இருக்கும் 1421 எண்ணுக்கான காரணத்தைக் காண்போம். சீன வரலாற்றில் மொத்தம் 8 இடங்கள் தலைநகரமாக விளங்கின. பெய்ஜிங்கின் (பெக்கிங்) ஃபோர்பிடன் சிட்டி அரண்மனை 1406-1420 வரை நிர்மாணிக்கப்பட்டு, 1421 முதல் 1911 வரை அரண்மனையாகவும் அரசவையாகவும் இருந்தது. பெய்ஜிங்கிற்கு முன் நான்ஜிங் தான் தலைநகரம். மிங் ஆட்சியின் போது ஷூ டீ அரசாட்சியை அபகரித்துக் கொண்ட பின் ஃபோர்பிடன் சிட்டிக்கு அரசவையை மாற்றினார். Gavin Menzies தனது நூலில் கொலம்பஸ், வஸ்கோ டா காமா, ஃபெர்டினட் மெகெலன் மற்றும் ஜேம்ஸ் குரூக் போன்றவர்கள் சீனத்து வரைபடங்களைக் கொண்டே அவர்களது கடல் பயணங்களை மேற்கொண்டதாக குறிப்பிடுகிறார். செங் ஹோ தமது கடல் பயண அனுபவ அடிப்படையில் தூர அளவுகளை குறிப்பிட்டு வரைபடங்களைத் தயாரித்தார். அவை Nautical Chart of Zheng He என அறியப்படுகிறது. நௌடிகல் அளவீடுகளைக் கொண்டு உலக அரங்கில் பதிவாகி இருக்கும் ஆரம்ப கால கடல் பயண வரைபடம் செங் ஹோவால் உருவாக்கப்பட்டது. செங் ஹோ தனது வரைபடத்தில் அமேரிக்க கடல்படுகையயும், கெரீபியன் தீவுகளையும் குறிப்பிட்டுள்ளார். ஆக, கொலம்பஸுக்கு முன்பாகவே சீன கடலோடிகள் அமேரிக்க நிலபரப்பினை கண்டறிந்ததாக Gavin Menzies தனது கருத்தை முன் வைத்ததும் வரலாற்று அறிஞர்கள் கொதித்துப் போனார்கள். வரலாற்றுத் திரிபு செய்வதாக குற்றம் சுமத்தி அவருடைய நூலை புறம்தள்ளினார்கள். செங் ஹோவின் கடல் பயண வரைபடத்தை Mao Kun Map என்றும் குறிப்பிடுவார்கள். அது இராணுவ அருங்காட்சியகத்தில் இடம்பெற்றுள்ளது. பல்கலைக்கழக ஆய்வுகளில் இந்த வரைபடம் தொடர்பாக அறிக்கைகள் எழுதப்பட்டுள்ளன. வெள்ளையர்களைப் போல் செங் ஹோ நாடு பிடிக்கும் நாட்டத்தில் தமது கடல் பயணத்தை மேற்கொள்ளவில்லை. சீனத்தின் கலாச்சாரத்தையும் வியாபாரத்தையும் விருத்தி செய்வதே அவரின் முதன்மை நோக்கமாக இருந்தது. அட்மிரல் செங் ஹோ தமது பயணத்திற்காக ஏகபட்ட மரக்கலங்களை தயாரித்திருக்கிறார். அவர் பிரத்தியோகமாக பயன்படுத்திய கப்பல் 147 மீட்டர் நீளமும் 60 மீட்டர் அகளமும் கொண்டது. சுமார் 30 நாடுகளை இந்த கப்பல் படை வளம் வந்துள்ளது. ஜப்பான் (வூகோவ்) மற்றும் சுமாத்ரா பகுதிகளில் கடல் கொள்ளையர்களோடு போர் புரிந்துள்ளார்கள். பண்ட மாற்று முறையில் சீனத்து தங்கம், வெள்ளி, பீங்கான் மற்றும் பட்டு பொருட்களைக் கொடுத்து யானை தந்தம், மசாலா பொருட்கள், தாவரங்கள், மிருகங்கள் என சீனாவிற்கு வாங்கிச் சென்றிருக்கிறார்கள். அப்படிக் கொண்டுச் சென்றவற்றில் சிங்கம், ஒட்டகச் சிவிங்கி, நெருப்புக் கோழி, காண்டா மிருகம், வரிக் குதிரை போன்றவையும் அடங்கும். செங் ஹோவின் நட்புறவு பயணத்தால் பல நாடுகள் சீனாவுக்கு தங்களது தூதுவர்களை அனுப்பி வைத்தன. அரசர்களும், சுல்தான்களும் மிங் அரசரை சந்திக்க வந்தனர். அப்படி பயணம் மேற்கொண்டு இறந்து போன இரு சுல்தான்களுக்கு மட்டுமே சீனாவில் கல்லறை அமைக்கப்பட்டுள்ளது. ஒருவர் மேலே குறிப்பிடப்பட்டுள்ள சுல்தான் கர்ணா, மற்றொருவர் பிலிப்பின்ஸ் நிலபரப்பை சேர்ந்த சுல்தான் சூலு. செங் ஹோவின் பெயரை உலகில் பல நாடுகளிலும் இன்றும் காணலாம் . மலாக்கா மாநிலத்தில் இவர் பெயரில் அருங்காட்சியகம் உள்ளது. அது போக வியட்நாம், தாய்லாந்து மற்றும் இந்தோனேசிய நாடுகளில் சான்போ எனும் பெயரில் கோவில்களும், வீதிகளும், கோபுரங்களும், மசூதி மற்றும் கட்டிடங்களும் உள்ளன. இலங்கையில் இருக்கும் Galle Trilingual Inscription (15.02.1409) தமிழ், பாரசிகம் மற்றும் சீனம் என மும்மொழியில் பொறிக்கப்பட்டுள்ளது. தமது மூன்றாவது பயணத்தின் போது நான்ஜிங்கில் அந்தக் கல்வெட்டைத் தயார் செய்து கையுடன் இலங்கைக்கு கொண்டுச் சென்றுள்ளார். தேனாவரை நாயனார் எனும் சிவன் கோவிலுக்கு இவர் அளித்த தானங்களின் பட்டியலும் வேண்டுதலும் இக்கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளன. பின்னாட்களில் போர்த்துகீசியர்களின் ஆக்கிரமப்பின் போது இக்கோவில் முற்றிலுமாக அழிக்கப்பட்டது. அக்கல்வெட்டும் காணாமல் போனது. 1911-ஆம் ஆண்டு அதை மீட்டெடுத்து இலங்கை அருங்காட்சியகத்தில் வைத்தார்கள். செங் ஹோ- கல்லறை நான்ஜிங் செமாராங் மற்றும் ஜாவாவில் செங் ஹோவின் நினைவிடங்கள் எழுப்பப்பட்டுள்ளன. இவரின் பெரும் பயணத்திற்கு பின் Luzon (பிலிப்பைன்ஸ்) பகுதியில் 20 ஆயிரம் சீனர்களும் ஜாவா பகுதிகளில் 30 ஆயிரம் சீனர்களும் குடியேறி இருக்கிறார்கள். சீனத்து செப்பு காசுகள் அந்நாடுகளின் வணிகத்தில் அமலுக்கு வந்தன. கலாச்சார ரீதியாக போர்னியோ, சுமாத்திரா, ஜாவா பகுதிகளில் வாழை இலை சாப்பாட்டு முறை வழக்குடைந்து பீங்கான்கள் ஆக்கிரமித்துக் கொண்டன. மலாய் தீவுக் கூட்டத்தில் இருந்த இராஜியங்கள் மிங் அரசருக்கு அளித்த பரிசுகள் இன்று ஃபோர்பிடன் சிட்டியின் Wenhua Hall-லில் காட்சி படுத்தப்பட்டுள்ளன. அட்மிரல் செங் ஹோவின் ஆறாவது கடல் பயணத்தின் போது ஃபோர்பிடன் சிட்டி கட்டி முடிக்கப்பட்டிருந்தது. 1421-1422 வரை பத்து நாடுகளைச் சேர்ந்த 1200 பிரமுகர்களை அழைத்துக் கொண்டு சீனா வந்தடைந்தார். மிங் அரசருக்கு மரியாதை செய்யும் நிமித்தம் அப்பயணம் அமைந்தது. அவர்களில் சில சுல்தான்களும் அரசர்களும் வந்திருந்தனர். மாலி தேசத்து அரசர் இப்பயணத்தின் போது ஃபூஜியன் (Fujian) நகரின் காலமானார். அவருக்கு கல்லறைகள் ஏதும் அமைக்கப்படவில்லை. செங் ஹோ தமது 62-வது வயதில் மரணமடைந்தார். உடல் கடலில் வீசப்பட்டதால் நான்ஜிங்கில் இவருக்கு உடலற்ற வெற்றுக் கல்லறை எழுப்பப்பட்டது. பண்டைய சீன முறைபடி அமைக்கப்பட்ட அக்கல்லறை இன்று அவரின் நினைவிடமாக உள்ளது. 1985-ஆம் ஆண்டு அக்கல்லறை இஸ்லாமிய முறையில் மறுசீரமைப்பு செய்யப்பட்டது. செங் ஹோவின் கால்லறை சுல்தான் கர்ணாவின் கல்லறையைவிட மிகச் சிறியது. காரணம் அவர் ஒரு படைத் தளபதி எனும் மதிப்பை மட்டுமே பெற்றிருந்தார். கால பெருவெள்ளத்தில் செங் ஹோவிற்கு கிடைத்திருக்கும் செல்வாக்கு சுல்தான் கர்ணாவிற்கு கிடைக்கவில்லை. செங் ஹோவிடம் நாம் கற்றுக் கொள்ள வேண்டியது அயராத உழைப்பும், நல்லுறவு நூதனமும் (diplomatic skills). அதை இலங்கை கல்வெட்டின் வேண்டுதல் வாசகங்கள் நமக்கு பறைசாற்றுகின்றன. பதிவை சமர்பித்தவர் VIKNESHWARAN ADAKKALAM at 11:45 AM 2 மறுமொழிகள் குறிச்சொற்கள் Abdul Majid Hassan, History of China, Zheng He, மீகாமன் செங் ஹோ Tuesday, February 26, 2019 சீனாவின் ஹேஷென் எனும் பழங்குடி மக்கள் சீனாவின் ஹெய்லோங்ஜியாங் எனும் மாநிலம் ரஷ்யாவை ஒட்டி அமைந்துள்ளது. கடுமையான குளிர் நிலவும் மாநிலங்களில் ஒன்று. ஆண்டு தோறும் வெண்பனி மற்றும் ஐஸ்கட்டி விளக்குகளின் கண்காட்சிகள் இங்கு நடைபெறுகின்றன. யூத தேவாலயங்களையும் கத்தோலிக்க தேவாலயங்களையும் ஆங்காங்கு காண முடிகிறது. இரஷ்ய குடியிருப்புகள் இங்கு இருந்துள்ளன. சில குடியிருப்புகள் சுற்றுப் பயணிகளின் பார்வைக்குத் திறந்துவிடப்ப்பட்டுள்ளன. இரஷ்ய வணிக தளங்கள் இன்றும் பிரபலமாக இயங்கி வருகின்றன. இரஷ்யன் சாலை அருகே கணிசமான இரஷ்ய மக்களை காண முடிகிறது. வணிகத்தின் பொருட்டு அடிக்கடி அம்மாநிலத்தின் தலைநகரான ஹார்பினுக்கு வந்து போவதாக கூறுகிறார்கள். வணிக நலன் பொருட்டு இங்குள்ள சீனர்களும் இரஷ்ய மொழியை கற்று வைத்திருக்கிறார்கள். டிரான்ஸ் சைபீரியன் தொடர்வண்டி (Trans Siberian Train) பயணங்களின் வழி இங்கு வணிகம் உயிர்த்துள்ளது. ஆறு மாதங்களுக்கு குளிர் நீடிப்பதால் இங்குள்ள ஆறுகளும் குளங்களும் பல அடிகளுக்கு இறுகி விடுகின்றன. நவம்பர் முதல் பிப்ரவரி வரையிலும் கனரக வாகனங்கள் மிக இலகுவாக ஆறு, குளம், ஏறி என அனைத்தின் மீதும் ஓடுகின்றன. மண் அல்லும் கனரக இயந்திரத்தைக் கொண்டு சொங்ஹூவா (Songhua) ஆற்றின் நெடுகிலும் படிந்திருக்கும் வெண்பணிகளை சேகரிக்கிறார்கள். அதனைக் கொண்டு வெண்பனி சிற்பங்களை செதுக்குகிறார்கள். அதன் அடியின் இருக்கும் ஆற்று நீர் பனி கட்டியாக உறைந்திருக்கும். இயந்திரத்தைக் கொண்டு வடிவாக வெட்டி எடுத்து மற்றொரு பக்கம் கொண்டுச் சென்று பனிக்கட்டி விளக்கு விழாவிற்கு அலங்காரம் செய்கிறார்கள். வெண்பனி சிற்பங்கள் பகலில் காண வேண்டியவை. அவை விளக்கொளியில் பிரதிபலிப்பதில்லை. பனிகட்டிகள் நேர்மாறானவை. அந்தியில் பனிக்கட்டிகளுக்குள் இருக்கும் வண்ண விளக்குகள் மாயா ஜால உலகமாக தோற்றமளிக்கிறது. இக்கண்காட்சிகள் உறைந்திருக்கும் குளங்களின் மீது நடத்தப்படுகின்றன. நாம் குளங்களின் மீது லஹிமா சக்தியைப் பிரயோகித்து நடக்கின்றோம் எனும் பிரக்ஞை இல்லாமல் இக்கண்காட்சிகளை குளிரில் நடுங்கி இரசித்து மகிழலாம். ஹேஷென் (Hezhen) எனப்படும் சீனாவின் அறுதி சிறுபான்மை இனத்தவர்கள் இம்மாநிலத்தில் வசிக்கிறார்கள். இவர்கள் பழங்குடி மக்களும் கூட. இம்மக்கள் ஹேலோங்ஜியாங்கில் சுமார் 4500 பேரும் இரஷ்யாவில் 10 ஆயிரம் சோச்சம் எண்ணிக்கைகளில் வாழ்வதாகவும் கூறப்படுகிறது. ஹேஷென் மக்கள் ஆற்றின் கரையோரங்களில் தமது குடில்களை அமைத்துக் கொண்டு வசிக்கிறார்கள். நீரும் மீனும் இவர்களின் வாழ்வின் அங்கங்கள். இந்த நீர்நிலைகளை விட்டு அவர்கள் வெகு தூரம் பயணிப்பதில்லை. மீன் பிடிப்பது இவர்களின் பிரதான தொழில். வலை, தூண்டில் மற்றும் திரிசூலம் போன்ற ஈட்டிகளை வைத்து மீன் வேட்டையில் ஈடுபடுகிறார்கள். ஆண் பெண் என அனைவரும் மீன் வேட்டை நடத்துகிறார்கள். பாரம்பரியமாக மீன் பிடிக்கும் கலை அவர்களுக்கு கற்றுக் கொடுக்கப்படுகின்றது. இப்பிரதேசங்களில் மிகக் குறுகிய கோடை காலமே ஏற்படுகிறது. அவ்வேளைகளில் மீன்களையும், மீன் தோல்களையும் நன்றாக உலர விடுகிறார்கள். மீன் பிடி கருவிகளையும், படகுகளையும் பழுதுபார்த்துக் கொள்கிறார்கள். இளையுதிர் காலத்தில் டாமாஹாயூ (Damahayu) எனும் ஒரு வகை சல்மன் மீன்களை பிடிக்கும் சடங்கு நடைபெறுகின்றது. அது போக ஒரு வகையான கோழி மீன்களையும் (Sturgeon) இலையுதிர் காலத்தில் பிடிக்கிறார்கள். டாமாஹாயூ மீன்களை சமைக்காமல் உண்பது அவர்களின் ஆயுளை நீடிப்பதாக நம்புகிறார்கள். ஹேஷென் மக்கள் அவர்களின் வீட்டிற்கு விருந்தினரகா வருபவர்களுக்கு சமைக்காத மீன் இறைச்சியை கொடுப்பார்கள். வாசலில் பச்சை இறைச்சியை வாயருக்கே நீட்டுவார்கள். அதை உண்பவரே ஹேஷென் வீடுகளுக்குள் அனுமதிக்கப்படுவார்கள். புதிதாக பச்சை மீன்களை சாப்பிடுவர்கள் வினிகரை சற்று அதிகமாக சேர்த்துக் கொள்ளலாம். அது மீன் சதையை கொஞ்சம் வெந்த பதத்தில் உண்டு செய்யும். வெள்ளை மற்றும் மால்ட் சேர்க்கப்பட்ட கருப்பு வினிகர் வகைகளையும், உப்பு, பூண்டு, உருலைக் கிழங்குகளோடும் சேர்த்து சாப்பிடுவார்கள். சமைத்த மீன் வகைகள் படகுகளுக்கு ஒப்பானதாக கருதுகிறார்கள். ஆகவே அவற்றை திருப்பிப் போட்டு அடி சதையை பியித்து சாப்பிடுவதில்லை. மீனின் மேல் பக்க சதையை சாப்பிட்டு முடிந்ததும் அடி சதையை குச்சிகளை வைத்து நோண்டி சாப்பிடுவார்கள். ஹேஷென் மக்கள் சைபீரியன் ஹஸ்க்கி (Siberian Husky) நாய்களை அதிகம் வளர்க்கிறார்கள். குளிர்காலத்தில் நீர்நிலைகள் உறைந்ததும் இந்த நாய்களே வாகனங்களாக பயன்படுகின்றன. சறுக்கும் படகுகளை இழுக்க இவ்வகை நாய்கள் பயிற்றுவிக்கப்படுகின்றன. நன்கு பழக்கப்படுத்தப்பட்ட ஒரு ஹஸ்க்கி சராசரியாக 40 கிழோ வரையிலான பலுவை இழுத்துச் செல்லும் பலம் கொண்டது. இவ்வகையான சறுக்கும் படகுகளில் சுமார் 12 நாய்கள் வரையினும் கட்டி இழுக்க வைக்கிறார்கள். அது போக, வெள்ளை நிற ஓநாய்களையும் வளர்க்கிறார்கள். இவ்வகை ஓநாய் குட்டிகள் பஞ்சு போன்ற தோலைக் கொண்டுள்ளன. சுற்றுப் பயணிகள் இந்த வெள்ளை ஓநாய் குட்டிகளோடு புகைப்படம் எடுத்துக் கொள்ள பணம் வசூலிக்கிறார்கள். இவர்கள் மீன் தோலில் ஆன உடைகளைப் பயன்படுத்துகிறார்கள். இது ஆச்சரியமாக உள்ளது. இதற்கு பெரிய வகை மீன்களை தேர்வு செய்து அதன் தோல் பகுதியை செதுக்கி எடுத்து உலர்த்துகிறார்கள். நன்றாக காய்ந்த தோல்களை ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கி இடித்து லேசான பெரிய துணி போல் உருவாக்குகிறார்கள். அதில் வண்ணப் பூக்களின் கலவையைக் கொண்டு பல வகை நிறத்தை தீட்டுகிறார்கள். மீன் தோலில் காலணியையும் உற்பத்தி செய்கிறார்கள். அவை நீடித்த கதகதப்பையும், நீர் புக தன்மை கொண்டது என்றும் கூறப்படுகிறது. மீனின் எலும்புகளில் இருந்து பித்தான்களை உற்பத்தி செய்துக்கொள்கிறார்கள். மீன் பிடித்தல் போக சில வேலைகளில் அருகே இருக்கும் மலைகளில் வேட்டைக்குச் செல்கிறார்கள். அதற்கும் சைபீரியன் ஹஸ்க்கி நாய்களை பயன்படுத்துகிறார்கள். காடுகளில் அவை சுமை வண்டிகளை இழுக்கவும் ஓடவும் பழக்கப்படுத்தப்படுகின்றன. சில மான்களையும் இந்த வண்டிகளை இழுக்க பழக்கப்படுத்தி இருக்கிறார்கள். சுற்றுப்பயணிகளின் சுமை வண்டிகளுக்கு மான்களையே அதிகம் பயன்படுத்துகிறார்கள். காட்டில் வேட்டைக்கு கொண்டு செல்லப்படும் ஹஸ்க்கிகளுக்கு காயம் படாமல் இருக்க கால் கவசங்களை அணிவிக்கிறார்கள். ஹேஷென் மக்கள் இசை நாட்டம் கொண்டவர்கள் அவர்களின் மொழியில் பாட்டிசைக்கிறார்கள். கொங்காங்ஜி (kong kang ji) எனப்படும் ஒரு வகை வாயிசைக்கருவியை பயன்படுத்துகிறார்கள். சீனா, இரஷ்யா, ஜப்பான் என மூன்று நாடுகளும் மஞ்சூரியாவில் கோர தாண்டவ போர் நடத்திய போது இம்மக்கள் இங்கும் அங்கும் என பல திசைகளில் சிதறிப் போனார்கள். இவர்கள் பேசும் மொழியும் தேசியமயத்தில் கரைந்துக் கொண்டுள்ளது. பதிவை சமர்பித்தவர் VIKNESHWARAN ADAKKALAM at 3:21 PM 9 மறுமொழிகள் குறிச்சொற்கள் China, Heilongjiang, Hezhen, Tribes, சீன பழங்குடிகள் Friday, February 22, 2019 சீனாவின் மோனாலிசா ஓவியம் Along The River During Pure Brightness Day என்பது சீனாவின் மோனாலிசா ஓவியம் என்றும் அழைக்கப்படுகிறது. Pure Brightness Day என்பதை கல்லறைத் திருநாளாகவும் குறிப்பிடுவார்கள். சீனர்கள் கொண்டாடும் பண்டிகைகளில் ஒன்று. இந்த ஓவியத்தின் வயது சுமார் 930 ஆண்டுகள். பெய்ஜிங் வருவோர் காண விரும்பும் இடங்களில் Forbidden City எனப்படும் அரண்மனையும் அடங்கும். ஒரு நாளில் சுற்றி முடிக்க முடியாத பெரும் கோட்டையான ஃபோர்பிடன் சிட்டியில் இருந்த முக்கிய அம்சங்களில் ஒன்று இந்த 5 மீட்டர் ஓவியம். ஓவியத்தின் உயரம் 25 செண்டிமீட்டர். அந்த அரண்மனையில் வசித்த கடைசி ராஜாவன பூயிக்கு இந்த ஓவியம் மிக பிடித்திருக்க வேண்டும். கூட்டணி நாடுகளின் படையெடுப்பின் சமயம் அரண்மனையை விட்டு போகும் போது இவ்வோவியத்தையும் எடுத்துச் சென்றுவிட்டார். 1945-ஆம் ஆண்டு இவ்வோவியம் மீண்டும் சீன அரசாங்கத்தால் மீட்கப்பட்டது. இந்த ஓவியத்தில் மிக சொற்பமான சேதமே ஏற்பட்டுள்ளது. (Northern Song Dynasty) வடக்கு சோங் பேரரசின் (960-1127) Zhang Zeduan எனும் ஓவியரால் மிக நேர்த்தியாக வரையப்பட்ட இந்த ஓவியம் காலம் கடந்த புதையல். இதன் வழி பண்டைய சீன நகரத்தை நம் கண் முன் நிறுத்துகிறார் இக்கலைஞர். இந்த நெடும் ஓவியம் மூன்று பாகங்களை கொண்ட சுருள்களாக இருந்துள்ளது. பியன்ஜிங்கில் (Bianjing) ஒரு பொழுதில் நடக்கும் காட்சிகள் ஓவியமாகப்பட்டுள்ளன. பியன் என்பது நதியின் பெயர், ஜிங் என்பது தலைநகரை குறிக்கும் சொல். இந்த இடம் தற்சமயம் கைஃபெங் என பெயரிடப்பட்டுள்ளது. நெழிந்து ஓடும் ஆற்றுப் படுகை, அதைக் கடக்க பாலம், படகுகள், புரப்பட தயாராகும் மனிதர்கள், வணிகர்கள், சாமானியர்கள், கல்லறையை சுத்தம் செய்துவிட்டு வரும் மனிதர்கள், விலங்குகள், மத போதகர்கள், யாசகம் கேட்போர், கதை கேட்கும் சிறுவர்கள், குடி போதையில் இருக்கும் இளைஞர்கள், தேநீர் கடையில் அரட்டையடிக்கும் ஆண்கள், குடில்கள் என எக்கச் செக்கமான தகவல்களை எழுதலாம். பிரமிக்க வைக்கும் உயிர் ஓவியம் இது. இதில் மொத்தமாகவே 20 சொச்சம் பெண்கள் வரையப்பட்டுள்ளார்கள். அவர்களில் பெரும்பாலானோர் ஆண் துணையோடு இருக்கிறார்கள். உடை அம்சத்தை கொண்டு அவர்கள் மேட்டுக் குடி பெண்கள் அல்ல என்பதாக குறிப்பிடப்படுகிறது. கொண்டாட்ட நாட்களில் கூட பெண்கள் சுதந்திரமாக வெளியே உலாவ முடியாததை இது மறைமுகமாக காட்டுக்கிறது. சுமார் 550 மனிதர்களும் 60 விலங்குகளும் பல பாவனைகளில் காட்டப்பட்டுள்ளது. காலம் யாருக்கும் காத்திருப்பதில்லை. அந்த Bian நதி அடித்துச் செல்வதைப் போலவே மனித வாழ்க்கையை காலம் கொண்டு செல்வதாக அந்த ஓவியம் அமைந்துள்ளது. ஒவ்வொரு காலகட்டத்திலும் சீனாவின் கட்டிட கலைகள் சற்று மாறுபட்டது. இதில் சோங் பேரரசின் வளர்ச்சியையும் கலையம்சங்களையும் காண முடிகிறது. இதே போன்ற ஓவியத்தை பல்வேறு காலகட்டங்களில் வரைந்துள்ளார்கள். அவை அளவிலும், மக்கள் தொகை, கட்டிட கலை என அந்தந்த கால பேரரசுகளின் அம்சத்தோடு தீட்டப்பட்டுள்ளன. கல்லறை திருநாள் ஓவியம் பல நாடுகளிலும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்த ஓவியம் கலை பொக்கீஷமாக பார்க்கப்படுவதால் அதை மிக பதுகாப்பாக ஒவ்வொரு இடங்களுக்கும் கொண்டுச் செல்கிறார்கள். அதற்கான செலவு சில மில்லியன் டாலர்களை விழுங்குகிறது. சமீபத்தில் இதன் வடிவமைப்பை 3D/4D வடிவமைப்புகளில் அசையும் சித்திரமாக திரையிடுகிறார்கள். சீனாவின் பல மாநிலங்களிலும் கல்லறைத் திருநாள் ஓவியம் நீண்ட சுவர் பகுதிகளில் வடிவமைக்கப்பட்டுள்ளன. சீனர்கள் இந்த ஓவியத்தைக் கொண்டாடும் மன நிலையை அது காட்டுகிறது. சோங் பேராட்சி சுமார் 160 ஆண்டுகள் நீடித்துள்ளது. அது ஆட்சியை கையில் எடுத்த போது சோழ நாட்டில் ஆதித்த கரிகாலனின் ஆட்சி நடைபெற்று வந்தது. முதலாம் இராஜேந்திர சோழனின் கடார படையெடுப்பின் போதும் சீனாவில் சோங் பேரரசின் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. சோழர்களோடு இவர்களுக்கு வணிக தொடர்பு இருந்துள்ளது. இராஜேந்திரன் ஆட்சியின் 58-ஆண்டுகளுக்கு பின் அரியணை வந்தவர் முதலாம் குலோதுங்க சோழன். இளவரசராக இருந்த சமயம் குலோந்துங்கன் சுமார் மூன்று ஆண்டு காலம் சோங் தேசத்தில் வசித்திருக்கிறார். ஆட்சிக்கு வந்த பின் சுங்கம் தவிர்த சோழனாக வணிகத்தை பாலி, பர்மா, கம்போடியா (முன்காலத்தில் வேறு பெயர்) என பல நாடுகளுக்கு விரிவு செய்திருக்கிறார். சோங் தேசத்தின் வணிக செழிப்பை இவ்வோவியத்தில் இருக்கும் வணிக படகுகளின் வழியும், வரி வசூழ் செய்யும் சுங்க சாவடியின் வழியும் அறிய முடிகிறது. கலை கலாச்சாரத்தில் வலுத்திருந்தாலும் சோங் பேரரசின் இராணுவம் செழித்த நிலையில் இல்லை. இராணுவத்தை விரிவாக்கும் முயற்சியில் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி கண்டது. வீரர்கள் அதிகம் போராடமல் சரணடைந்தார்கள். Huizong அரசரும் Qinzong இளவரசனும் Jin இராணுவத்தால் சிறையெடுக்கப்பட்டனர். மஞ்சள் நதி பகுதி எதிரிகளால் அபகரிகப்பட்டு சோங் சாம்ராஜியம் முடிவுக்கு வந்தது. மாற்று அரசியல் கருத்து கொண்டவர்களை மரண தண்டனைக்கு உற்படுத்துவதையும் சோங் பேரரசு தவிர்தது. சீன வரலாற்றில் அரசியல் மரண தண்டனை விதிக்காத ஒரே பேரரசும் இதுவே ஆகும். இந்த ஓவியத்தில் உள்ள இடங்களை இன்றும் காணலாம். மேம்பாடு கண்டிருப்பினும் சில புராதன இடங்கள் காலத்தை கடந்து நிற்கின்றன. பதிவை சமர்பித்தவர் VIKNESHWARAN ADAKKALAM at 2:32 PM 0 மறுமொழிகள் குறிச்சொற்கள் Along The River During Pure Brightness Day, சீன ஓவியம், சீன தேசம், சீன வரலாறு, வடக்கு சோங் பேரரசு Wednesday, February 20, 2019 I AM SUN MU - ஒரு வட கொரிய அகதியின் ஓவியக் கலை உலகின் தனிமைப் படுத்தப்பட்ட நாடாக அறியப்படுவது வட கொரியா ஆகும். அந்த நாட்டை வட கொரியா என அடையாளப் படுத்துவதைக் கூட அவர்கள் விரும்புவதில்லை. கொரிய ஜனநாயக மக்கள் குடியரசு (Democratic Peoples Republic of Korea) எனக் குறிப்பிடும்படியே கேட்டுக் கொள்கிறார்கள். இந்த சொல் பிரயோகம் குறிந்து தென் கொரிய மக்களுக்கு மிகுந்த கருத்து முரண்பாடு உண்டு. தீவிர கம்யூனிசத்தை பின்பற்றுவதாக கூறிக்கொள்ளும் நாடு எதற்காக இப்படி ஒரு பெயரை வைத்துக் கொள்ள வேண்டும் என்பதாக கேள்வியை முன் வைக்கிறார்கள். நான் சுன் மூ (I AM SUN MU) எனும் ஆவணப் படம் வட கொரிய அகதி ஒருவரின் கலையை படம் பிடித்துக் காட்டுகிறது. இதில் சுன் மூ யார் என்பதை நாம் கடைசி வரை அடையாளம் காண முடியவில்லை. தனது அடையாளத்தை வெளிக்காட்டும் பட்சத்தில் இன்னமும் வட கொரியாவில் வசிக்கும் தனது குடும்ப உறுப்பினர்களுக்கு ஆபத்தாக கூடும் என குறிப்பிடுகிறார். அதனால் படம் முழுக்க அவரின் முகம் காட்டப்படவில்லை. இந்த டாக்குமெண்டரி மொத்தமும் சுன் மூவின் கலை படைப்பை பற்றி பேசுகிறது. அவர் வாழ்வில் நடந்த சம்பவங்கள் ஓவியத்தின் ஊடாக பல கதைகளை நமக்குச் சொல்கின்றன. இந்த டாக்குமெண்டரி தென் கொரியாவில் தொடங்குகிறது. வட கொரியாவில் வசிக்கும் பாட்டி ஏன் தன்னை வந்து பார்ப்பதில்லை என சுன் மூவின் குழந்தைகள் கேட்கிறார்கள். பாட்டிக்கு கடிதங்களை எழுதுகிறார்கள் அந்த குழந்தைகள். அது நிச்சயமாக சென்றடையாத கடிதங்கள் எனினும் குழந்தகள் கடிதம் எழுதுவதை சுன் மூ தடுக்கவில்லை. இரு குழந்தகளுக்கு முன் இருக்கும் முள் வேளியாக அச்சம்பவம் ஓவியமாகிறது. வட - தென் கொரியாவின் பிரிந்த குடும்பங்களை பற்றியும் அது பேசுகிறது. கையில் சென்றடையாத கடிதத்தோடு இருக்கும் ஓவியம் இரு நாடுகளுக்கிடையே இருக்கும் பேசிக் கொள்ள முடியாத குடும்ப உறவின் வலிகளை நமக்குச் சொல்கிறது. வட கொரியாவின் அண்ணன் தேசமாக இருப்பது சீனா. அப்படி இருக்க பெய்ஜிங்கை தனது ஓவிய கண்காட்சிக்கு தேர்ந்தெடுத்தது ஏன் என்பது கேள்விக்குறியாகிறது. ஓவிய கண்காட்சியை ஒருங்கிணைக்கும் சுன் மூவின் சீன நண்பர் அதில் இருக்கும் ஆபத்துகளை உணர்ந்தே கையில் எடுத்திருக்கிறார். “சீனாவில் ஏராளமான வட கொரிய ஓவியர்கள் இருக்கிறார்கள். அவர்கள் வட கொரியாவின் அரசியல் பிரச்சார ஓவியங்களை மட்டுமே வரைகிறார்கள். அது 1970-களின் சீனாவின் கலாச்சார புரட்சியின் போது வரையபட்ட ஓவியங்களை போலவே உள்ளன. சுன் மூவின் ஓவியங்கள் வேறு ஒரு தளத்தை பேசுகின்றன. அது சீனாவின் பரவலாக அறியப்பட வேண்டும் என விரும்புகிறேன்.” எனக் கூறுகிறார். 1989-ஆம் ஆண்டு தியான்மென் சதுக்கத்தின் முன் நடந்த மாணவர் போராட்ட மரணங்களை நினைவு கூர்ந்து உணர்ச்சிவச படுகிறார். கவன ஈர்ப்புக்காகவும் இதைச் செய்திருக்கக் கூடும். இன்றய நிலையில் சுன் மூ ஓவியங்களின் விலை 20 ஆயிரம் டாலர் வரையினும் எட்டி உள்ளன. டைம்ஸ் இதழில் சுன் மூவின் ஓவியங்கள் இடம் பெற்றுள்ளன. சிட்னி, அம்ஸ்தெர்டம், நியூ யார்க், பெர்லின் என பல இடங்களின் இவரின் ஓவியக் கண்காட்சி இடம் பெற்றுள்ளன. கண்காட்சியின் சில வாரங்களுக்கு முன் பெய்ஜிங்கின் புறநகர் பகுதியில் தமது ஓவிய வேலையில் ஈடுபடுகிறார் சுன் மூ. அவருக்கு தெரிந்த வட கொரிய அகதிகள் சுன் மூவை தொடர்பு கொண்டு அவரின் ஆபத்தான வேலையை கேள்வி கேட்கிறார்கள். சுன் மூ தன்னை நேரடியாக அடையாளப்படுத்திக் கொள்ள போவதில்லை எனக் கூறுகிறார். இருந்தும் பெய்ஜிங்கில் அவர் பிடிபடுவதற்கான வாய்ப்புகள் மிக பிரகாசமாக இருந்தன. நீங்கள் வரைவது சமகால அரசியலை பேசும் ஓவியங்களா எனும் கேள்வியை கேட்கிறார்கள். நீங்கள் கூறும் பதத்தின் தெளிவு எனக்கில்லை. எனது நினைவில் இருக்கும் சம்பங்களின் கோர்வைகளாக இந்த ஓவியங்கள் வெளிபடுகின்றன என விளக்குகிறார். இந்த ஓவிய வேலைபாடுகளின் பேதே பல சம்பங்களை நம்மோடு பகிர்ந்துக் கொள்கிறார் சுன் மூ. ”நீங்கள் வட கொரியாவில் இருக்கும் போது உங்கள் கற்பனை வளத்தைக் கட்டிப் போட்ட தடைகள் இருந்துள்ளனவா?” ”ஓவியங்களுக்கான தடைகள் இருந்துள்ளன. பெண்களை உடையின்றி வரைய கூடாது. அது போக எமது அரசியல் தலைவர்களை வரைய கூடாது. அது அவமாரியாதையான செயல். ஒரு முறை கிம் தலைவரின் ஓவியத்தை வரைந்துப் பார்தேன். அரசு ஓவியர்களை விட மிகச் சிறப்பாக வரைந்திருந்தேன். யார் கண்ணிலும் படாமல் அதன் ஈரம் காய்வதற்குள் எரிந்துவிட்டேன்.” வட கொரிய மக்கள் அனைவருமே கட்டாய இராணுவ சேவையில் ஈடுபட வேண்டும். சுன் மூ இராணுவ சேவைக்குச் செல்லும் போது, “உனக்கு எழுத அல்லது ஓவியம் தீட்டும் திறமை உள்ளதா?” எனக் கேட்கிறார்கள். தன்னால் சிறப்பாக ஓவியம் தீட்ட முடியும் எனக் கூறுகிறார் சுன் மூ. அவரை பரிசோதித்து திருப்தியானவுடன் வட கொரிய அரசியல் பிரச்சார ஓவியங்களை தீட்டும் பணிக்கு நியமித்தார்கள். வட கொரிய இராணுவம் நன்றாக எழுதுவோரையும் ஓவியம் தீட்டுவோரையும் அரைவணைத்துக் கொள்வதாக கூறுகிறார் சுன் மூ. மூன்று நாடுகளைக் கடந்து ஓடுகிறது டூமன் ஆறு (Duman River). இதுவே வட கொரியா, சீனா மற்றும் ரஷ்யா என மூன்று நாடுகளின் எல்லையை பிரித்துக் காட்டுகிறது. ஒரு மலை முகட்டில் ஏறி இந்த ஆற்றைப் பார்க்கிறார் சுன் மூ. மனதில் ஓர் உந்துதல். ஆற்றில் இறங்கி நீச்சல் அடித்து கடந்து சீனவிற்குள் நுழைந்துவிடுகிறார். இதைக் கூறும் போது ஓவியங்கள் வழியே பேசுகிறார். அந்த ஓவியத்தில் சாங் பாய் (Chang Bai) எனும் இடமும் வேறு சில சீன மாநிலங்களும் பிற நாடுகளும் தீட்டப்பட்டுள்ள. சாங் பாய் மிக இரம்யமான மலை. அங்கே இருக்கும் ஆற்றை நிச்சயமாக குளிர் காலத்தில் கடந்து இருக்க முடியாது. அவர் தப்பி ஓடி இருப்பது நிச்சயமாக ஒரு திட்டமிட்ட செயல் தான். சீனாவிற்குள் நுழைந்த பின் தென் கொரியா போக நினைக்கிறார். அதற்காக அவர் மேற்கொள்ளும் பயணம் மிக தூரம். Kunming வழியாக லாவோஸ் போகிறார், அங்கிருந்து மியன்மார் சென்று தாய்லாந்தில் நுழைந்து பேங்காக்கில் சேர்கிறார். பேங்காக்கில் இருந்து தென் கொரியா சென்றடைந்த மாயத்தை நமக்கு விளக்கவில்லை. அது அரசியல் தஞ்சமடையும் வழியாகவோ அல்லது போலி கடப்பிதழ் வழியாகவோ கூட இருக்கலாம். சுன் மூவின் ஓவியங்கள் வரைந்து முடிந்த பின் நாளிதழில் செய்தி கொடுக்கிறார்கள். கண்காட்சிக்கு பலரும் வர வேண்டும் என்பதற்காகவே அதை விளம்பரம் செய்கிறார்கள். சுன் மூ ஒரு மாபெரும் கால் துடைப்பானை ஓவியமாக தீட்டுகிறார். அதில் கிம் தலைவர்களின் பெயர்கள் உள்ளன. “இங்கே ஏகபட்ட வட கொரிய அரசியலை பிரச்சங்கம் செய்வோரும், தூதரக அதிகாரிகளும் வசிக்கிறார்கள். அவர்கள் நிச்சயமாக தங்கள் கால்களை சுத்தம் செய்து கொண்ட பின் தான் இந்த ஓவியக் கண்காட்சிக்குள் நுழைய வேண்டும்” என நையாண்டி செய்கிறார். இறுதியாக என்ன ஆனது? சுன் மூவின் ஓவியக் கண்காட்சி நடைபெறவில்லை. வட கொரிய தேச பக்தர்கள் காட்சி கூடத்தின் முன் கூடிவிடுகிறார்கள். போலிஸ் அனைத்து ஓவியங்களையும் அபகரித்துவிடுகிறார்கள். நிகழ்ச்சி ஏற்பாட்டாளரை விசாரனை செய்கிறார்கள். சுன் மூ தான் கூறியது போலவே நிகழ்ச்சிக்கு செல்லவில்லை. தன்னை யார் முன்னிலையிலும் அடையாளப்படுதிக் கொள்ளவிலை. அவர் மீண்டும் தென் கொரியா திரும்பும் போது இமிகிரேஷனில் பிரச்சனை ஏற்படுமோ என பயப்படுகிறார். அப்படி ஏதும் ஆகாமல் நல்லபடியாக சியோல் வந்தடைகிறார். சிந்தனையாளர்கள் ஓர் அரசாட்சியின் பரிபாலனத்துக்கு இனங்கி இருக்கும் பட்சத்தில் அல்லது அதன் சித்தாந்தங்களை கேள்வி கேட்காத வரையில் அவர்களுக்கு கேடு விளைவதில்லை. அதுவே ஒரு படைப்பாளியின் சித்தனை அரசாட்சியை கேள்விக்கு உட்படுத்தும் போது அரசு இயந்திரம் நிச்சயமாக அதனை பொருத்துக் கொள்வதில்லை. அது எவ்வளவு சுதந்திரம் மிகுந்த மக்களாட்சி நாடாக இருந்தாலும் சரி அந்த படைப்பாளியை ஒரு குற்றவாளியென்றே சாடும். சிந்தனையின் வெளிபாடுகளுக்கு தடை விதிக்க முடியும். சிந்திப்பதை அல்ல. சுன் மூவின் ஓவியங்களை http://sunmuart.com/artworks/ தளத்தில் காண முடிகிறது. தொடர்புடைய செய்திகள்: https://www.theverge.com/2014/7/30/5951013/sun-mu-north-korean-defector-artist-china பதிவை சமர்பித்தவர் VIKNESHWARAN ADAKKALAM at 11:28 AM 0 மறுமொழிகள் குறிச்சொற்கள் I AM SUN MU, North Korea, ஓவியக் கலை, கொரிய ஓவியம், வட கொரியா Tuesday, February 19, 2019 The Art of War- சான் ட்சுவின் போர்க் கலை The Art of War (போர்க் கலை) பண்டைய சீனாவின் மிக முக்கியமாக நூல்களில் ஒன்று. இந்நூலை தோற்றுவித்தவர் Sanzi எனும் போர்க் கலை நிபுணர். சான்ட்சு வாழ்ந்த காலகட்டம் கி.மு544 முதல் கி.மு496 வரை. இக்காலகட்டத்தை சீனாவின் Spring and Autumn period எனக் குறிப்பிடுகிறார்கள். சான்ட்சு போர் முறைகளை மட்டும் இன்றி பல வாழ்வியல் தத்துவங்களையும் அந்நூலில் கூறுகிறார். போரின்றி வெற்றி காண்பதே சிறந்த போர் முறை வெற்றியாக சான்ட்சு கூறுகிறார். தற்போது சீனா மும்முரமாக செயல்பட்டு வரும் Belt and Road Initiative (BRI) மாபெரும் திட்டமும் இந்த போர்க் கலை நூலின் ஓர் அம்சமென கூறும் கருத்துக் கணிப்புகள் உண்டு. சீன போர் முறைகளில் வில் எய்தல் பெரும்பாங்காற்றியுள்ளது. சீனப் பெருச்சுவர்களில் தொடர்ச்சியான அம்பெய்யும் துளைகளை காண முடியும். கோட்டை மதில்களும் காவற்கோபுரங்களும் வில் பாயும் தூரத்தை கணக்கில் கொண்டு அமைக்கப்பட்டுள்ளன. வில் எய்யும் இராணுவ படையினர் தன் கொண்டையை இடப்பக்கம் முடிந்து கட்டி இருப்பார்கள் அது முதுகின் பின் இருக்கும் அம்புகளை எடுக்க எளிதாக அமையும். சீன பேரரசு காலத்தில் அரசு தேர்வில் தேர்ச்சி பெறவும் வில் வித்தை கற்றிருக்க வேண்டும். இது வில் முறை பற்றிய சிறு தகவலே. The Art of War வில் வித்தையை மட்டும் கற்பிக்க வில்லை. அந்நூல் போர் வியூகங்களை 13 பகுதிகளாக நமக்கு விளக்குகிறது. இந்த நூல் 8-ஆம் நூற்றாண்டில் ஜப்பானிய மொழியிலும் 18-ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவிலும் மொழிபெயர்க்கப்பட்டது. இது வரை 29 மொழிகளில் இந்நூல் வெளியாகி உலக மக்களால் வாசிக்கப்பட்டுள்ளது. உறுதியான இராணுவ அமைப்பு நாட்டின் பலம். நமது நிலையின் தெளிவும், எதிரி பற்றிய தெளிவும் போர் வெற்றியின் திறவுகோல் என்கிறார் சான்ட்சு. சான்ட்சு போர் தளபதியாகவும், போர் வீயூக நிபுணரகவும் பணியாற்றி இருக்கிறார். இருந்தும் சான்சு ஒருவரால் மட்டும் இப்படிப்பட்ட போர் கலைக்களஞ்சியத்தை உருவாக்கியிருக்க முடியாது என்பது ஆய்வாளர்களின் கருத்து. பல வெறு காலகட்டங்களிலும் சூழ்நிலைகளிலும் அமைக்கப்ப்ட்ட வீயூகங்களை சான்சு தொகுத்து அமைத்ததாகவும் தகவல் உண்டு. ஆனால் இந்த போர் களஞ்சியம் அமைந்ததில் சான்சுவின் பெரும் பங்கை யாரும் மறுக்கவில்லை. பதிவை சமர்பித்தவர் VIKNESHWARAN ADAKKALAM at 12:12 PM 0 மறுமொழிகள் குறிச்சொற்கள் History of China, Sanzi, the art of war, போர் கலை Newer Posts Older Posts Home Subscribe to: Posts (Atom) வாசித்துக் கொண்டிருப்பது... Three Years in Tibet- Ekai Kawaguchi Popular Posts தமிழுக்கு நிறம் உண்டு நேற்றய தினம் கவிப்பேரரசு வைரமுத்துவின் பிறந்த நாள். இன்றைக்கு தமிழை ஆண்டுக் கொண்டிருக்கிற கவிஞராக உலகத்திலேயே உள்ள எல்லாப் பொருள்களைப் பற்றி... நீயும் என் தோழனே! –சேகுவாரா. உறுதியான, அழகான முகம். சுருள் சுருளாக ஒழுங்கு படுத்தாத தாடி, முதலில் பார்க்கும் போது கடுமையாக தெரியும் தோற்றம். புன்னகைக்க ஆரம்பித்தால் வெளி... மோனாலிசா ஒரு விபச்சாரி ‘லியோனார்டோ டா வின்சி’யின் மோனாலிசா ஓவியம் உலகப் புகழ் பெற்றது என்பதை நாம் அறிவோம். ‘டா வின்சி’யின் பெயரை சுலபமாய் நினைவு கொள்ள இவ்வோவியம் ப... சாண்டில்யனின் - மன்னன் மகள் நூல்: மன்னன் மகள் ஆசிரியர்: சாண்டில்யன் நயம்: சரித்திர நாவல் வெளியீடு: வானதி பதிப்பகம் பிறப்பின் இரகசியத்தை மர்மப் பிடியில் வைத்து கதை ... அங்கோர் வாட் - கம்போடிய பயணம் படங்களுடன் எனது பாஸ்போர்ட், இமிகிரேஷனுக்கான வெள்ளை அட்டையும், சுங்கத்துறைக்கான நீல அட்டையும் சரித்திர சுவடுகளை படித்து உணர்ந்து கொள்வதிலும், நே...
திருவரங்கம் - ரங்கநாதரின் ஆலயத்தில் கிளி மண்டபத்தில் பலரும் அமர்ந்து உரையாடும் நிமித்தம் மனைப்பலகைகள் போடப்பட்டிருந்தன. பிரதான பலகையில் கம்பர் அமர்ந்துகொண்டார். ஆலயக் காப்பாளர், வேதியர் மற்றும் திருவரங்கம்வாழ் அரங்கனடிமைகள் பலரும் அவர் எதிரில் அமர்ந்தனர். அவர்களுக்கு இடையேயான விவாதம் தொடர்ந்தது. “கவிச்சக்கரவர்த்தி அவர்களே, தங்கள் கருத்தை அறிந்தோம். தங்கள் நன்றியுணர்வைப் பாராட்டவும் விரும்புகிறோம். அதேநேரம், இதுகாறும் ஒரு பெரும் தமிழ்க் காப்பியத்தை நாங்கள் வாசித்ததில்லை. புராணங்களும் இதிகாசங்களும் வடமொழியிலேயே உள்ளன. இப்போதுதான் இனிய தமிழின் பாசுரங்கள் இங்கு பாடப்பட்டு வருகின்றன. அதற்குத் திருமங்கையாழ்வார் என்பவரே பிரதான காரணம். அவருக்கு எம்பெருமானே அனுமதியளித்துவிட்டான். ஆனால், உங்களுக்கு எப்படி அனுமதி தருவது... அவனைவிட நாங்கள் உயர்ந்தவர்கள் இல்லையே என்றே யோசிக்கிறோம்.” “எம்பெருமான் மங்கை மன்னனுக்கு அனுமதியளித்த நிலையில், எனக்குத்தானா இல்லையென்பான்...” “இப்போது முன்போன்ற நிலையில்லை. இன்று தங்களைப் போல் பலரும் பாடல்களுடன் வந்து திருச்சந்நிதியில் வைத்து உத்தரவு கேட்க விரும்புகின்றனர். காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு என்பதுபோல் அவர்களுக்கு அவர் களின் பாடல்கள் பெரிதாக இருக்கலாம். ஆனால், தமிழ்ச் சமூகம் அதை ஏற்க வேண்டியது முக்கியமல்லவா...” ரங்க ராஜ்ஜியம் “சரி... இறுதியாக உங்கள் முடிவுதான் என்ன?” - கம்பர் கேட்டார். “உங்கள் விளக்கங்களைக் கேட்ட அளவில் எங்களுக்கு எந்த ஆட்சேபமும் இல்லை. அதேநேரம், நாங்கள் மட்டுமே தமிழ்ச் சமூகம் இல்லை. தமிழாய்ந்த வல்லுநர்கள் சேர, பாண்டிய நாட்டிலும் உள்ளனர். அவர்கள் எல்லோருடைய அனுமதியிருந்தால் இன்னமும் நன்றாக இருக்கும் என்று கருதுகிறோம்.” “திருவரங்கத்துத் திருமக்களே! இதற்காக நான் நாடு நாடாகச் சென்று, உங்களைச் சந்தித்தது போல் அவர்களை எல்லாமும் சந்தித்து, என் பாடல்களைப் பாடி அவர்கள் அனுமதியைப் பெறுவது என்பது நடைமுறை சாத்தியமா... யோசியுங்கள். இந்த ராமாயணத்தில் என்னைப் பற்றியேகூட நான் எங்கும் குறிப்புகள் வைக்கவில்லை. அந்த ராமன் புகழைத்தான் ஏந்திப்பிடித்திருக்கிறேன். வேண்டுமானால் நான் பாடுகிறேன். கேட்டுவிட்டு இறுதி முடிவுக்கு வாருங்கள்.” கம்பர் மிக நைச்சியமான குரலில் சொன்ன தைக் கேட்ட வைணவர் ஒருவரின் கண்கள் கலங்கின. “எதற்காக இந்தக் கண்ணீர்?” “கம்பர்பிரானே... உங்களின் பணிவான முயற்சியும் விளக்கங்களும் எம்பெருமான்பால் உங்களுக்கிருக்கும் பக்தியும் என்னை நெகிழ்த்தி விட்டன; என்னை மட்டுமல்ல எல்லோரையும் தான். எங்களுக்கெல்லாம் ஒரே ஒரு நெருடல், தங்கள் பாடல்களில் பொருள் குற்றம் இருந்தால் அதைக் கண்டறிந்து கூற எங்களால் இயலும். சொற்குற்றமோ... இல்லை, இலக்கணப் பிழைகளோ இருந்தால், அவற்றைக் கண்டறிய வல்ல தமிழாய்ந்த வல்லுநர் இப்போது எம்மிடையே இல்லை. பாண்டிய நாட்டில் இதற்கென்றே இருந்தன பொற்றாமரைக்குளமும், சங்கப்பலகையும். இப்போது அங்கும் பெரும் மாற்றங்கள். கால மாற்றத்தால் சங்கப்பலகையின் சாந்நித்யமும் போய்விட்டது. செய்யுளில் குற்றம் காண்போர் மட்டுமே மிகுந்ததால் வந்த வினையோ... இல்லை, சங்கப்பலகை ஏற்கும்வண்ணம் ஒருவரும் எழுதவில்லை என்பது காரணமோ... தெரியவில்லை. எனவே, நீங்கள் ஒரு தமிழாய்ந்த கூட்டத்திடம் உங்கள் ராமாயணத்தைப் பாடிக் காண்பித்து ஒப்புதல் பெற்று வந்தாலே போதும். அரங்கத்து ஆலயம் தங்களை வாரியணைத்து வரவேற்கத் தயாராக உள்ளது.” அந்த வைணவர் கருத்தை அனைவரும் ஆமோதித்தனர். கம்பருக்கு அப்போதுதான் புரிந்தது, ஒரு காவியத்தைப் படைப்பதைவிட, அதை ஏற்கச் செய்யும் முயற்சியே பெரியது என்பது. அதே கூட்டத்தில் ஒரு குரல், “கம்பர்பிரானே... இம்மட்டில் இன்னொரு சிக்கலும் உள்ளது” என்று தொடங்கியது. கம்பர் அவரை ஏறிட்டார். `பார்வையாலேயே இன்னும் என்ன சிக்கலோ...' என்கிற வினா வையும் எழுப்பினார். அவரும் தொடர்ந்தார். “கம்பர் பெருமானே! தாங்கள் ராமாயண காவியத்தை எழுதி எடுத்துக் கொண்டு நேராக இங்கே வந்துவிட்டீர். ஆனால், அந்த ராமனும் அவனது ராமாயணமும் வைணவர்களுக்கு மட்டுமே உரியதன்று... அல்லவா?” “அதிலென்ன ஐயம்... இந்த ராமனும் ராமாயணமும் மனித குலத்துக்கே பொதுவானது அல்லவா. ஒரு மனிதர் எப்படி வாழவேண்டும் என்று உணர்த்தத்தானே அவன் ஏகபத்தினி விரதனாக தர்மத்தின் தலைவனாக வாழ்ந்து காட்டினான்.” “அப்படியானால் வைணவரல்லாத சைவர், சமணர், பௌத்தர் என்பாரும் வாழும் இந்தத் தமிழ் மண்ணில் அவர்களும் ஏற்க வேண்டுமல்லவா?” “சமணர், பௌத்தர் சித்தாந்தமே வேறு. அவர்கள் வேத மறுப்பாளர்கள். வேள்விகளை வெறுப்பவர்கள். ஆனால், சைவர் அவ்வாறல்லர்; அவர்கள் ஏற்பது அவசியம்.” “அப்படியானால், நம் தமிழின் அருமை அறிந்த சைவர்களின் தலங்களில் பிரதானமானதும் சைவ வைணவ ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக உள்ளதுமான சிதம்பரத்துக்குச் சென்று அங்கு வாழ்ந்துவரும் தீட்சிதர்களின் ஒப்புதல் பெற்றால்கூட போதுமே...” - கூட்டத்தில் பண்டிதர் போன்ற ஒருவர் சொன்னதை அனைவரும் ஆமோதித்தனர். கம்பர் திகைத்தார். ‘இதற்காக நான் சிதம்பரம் சென்று தீட்சிதர்களின் ஒப்பம் பெற வேண்டுமா. அவர்கள் மூவாயிரவர் ஆயிற்றே. அதில் ஒருவர் ஏற்க மறுத்தாலும் புதிதாய் ஒரு சிக்கல் உருவாகிவிடுமே’ என்று அவர் மனத்துக்குள் ஒரு சோர்வு கலந்த குரல் ஒலித்தது. ரங்க ராஜ்ஜியம் ``தாங்கள் யோசிப்பது புரிகிறது. எங்கள் வரையில் தீட்சிதர்கள் ஏற்றால் அது அந்தச் சங்கப்பலகையே ஏற்றதற்குச் சமம். அடுத்து, ஆன்மிக நெறியில் கொள்கைகள் பலவற்றில் நாங்கள் வேறுபாடும் மாறுபாடும் கொண்டிருந்தாலும், செழுந்தமிழில் இந்தத் திருவரங்கம் ஆழ்வார்களின் பாசுரங்களை ஏற்றார்போல், அந்தத் தில்லையில் அடியார் களின் பதிகங்கள், தேவாரம் என்னும் பெயரில் போற்றப்பட்டும் பாடப்பட்டும் வருகின்றன. எனவே, அனைவருக்கும் பொதுவான ராமாயணத்தை நாங்கள் ஏற்றுப் போற்றுமுன், தில்லை வாழ் தீட்சிதர்கள் ஏற்பதும் மிக முக்கியம்” என்று முடித்தார் ஒருவர். அப்போது ஆலயமணி ஒலிக்கவும் அரங்கனே உத்தரவிட்டுவிட்டதாகவும், அக்கருத்தை ஆமோதித்துவிட்டதாகவும் அனைவரும் ஒரு மனதாகக் கருதினர். கம்பர்பிரானும் திருவரங்கம் வந்தது போலவே திருச்சிற்றம்பலம் நோக்கிப் பயணமானார்! - தொடரும் தென்முகக் கடவுளின் அற்புத தரிசனம்! ஆந்திரா, அனந்தப்பூர் மாவட்டம்-ஹேமாவதி என்ற திருத்தலத்தில் உள்ள சிவாலயத்தில், சுவாமி ஐயப்பன் போல் ஆசன நிலையில் யோக மூர்த்தியாக அருள்புரிகிறார் தட்சிணாமூர்த்தி. தட்சிணாமூர்த்தி சுருட்டப்பள்ளி, உத்திரமாயூரம், திருவாய்மூர், திருக்கைச்சின்னம் ஆகிய தலங்களில், நந்தியின் மேல் அமர்ந்து அருள்புரியும் மேதா தட்சிணாமூர்த்தியை தரிசிக்கலாம். கஞ்சனூர் சிவாலயத்தில் அருள்பாலிக்கும் தட்சிணாமூர்த்தியின் பாதத்துக்கு அருகே நான்கு முனிவர்கள் இல்லை. ஹரதத்தர் உருவம் மட்டும் கைகுவித்த நிலையில் உள்ளது. திருவிடைமருதூரில் உமையம்மையுடன் கூடிய ‘சாம்ய தட்சிணாமூர்த்தி’ அருள் புரிகிறார். காஞ்சிபுரத்துக்கு தெற்கேயுள்ள திருப்புலி வலம் தலத்தில், சிம்மத்தின்மீது திருவடியை ஊன்றியிருக்கும் தட்சிணா மூர்த்தியை தரிசிக்கலாம்.
ஈழத்து இலக்கிய வரலாற்றை பொறுத்தவரையில் 1960 காலப்பகுதி மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும்.1954 இல் தோற்றம் பெற்ற இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தோடு தொடர்புபட்டிருந்த எழுத்தாளர்கள் உலகளவில் அன்;றைய காலப்பகுதியில் வியாபித்திருந்த மார்க்சிய அரசியலின் தாக்கத்திற்கு உள்ளாகி அதன் பிரதிபலிப்பு அவர்களின் படைப்புகளிலும் ஆதிக்கத்தை செலுத்தி இருந்தது.ஒரு சங்கமாக இயங்கிய அவர்களுக்கிடையில் ஏற்பட்ட கருத்துப் பரிவர்த்தனைகளின் ஊடாட்டமும் இவ்வகைப்பட்ட இலக்கியம் தோன்றுவதற்கு வழிகோலியது.அத்தோடு 1950களின் நடுப்பகுதியில் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தோடு தம்மை இணைத்துக் கொண்ட கைலாசபதி, சிவத்தம்பி ஆகியோர் தமது நெறிப்படுத்தலின் கீழ் தேசிய இலக்கியம் பற்றி கூறிய கருத்துக்களும், முன்னெடுப்புகளும் முனைப்புப் பெற்ற காலமாகவும் ஈழத்து இலக்கிய வரலாற்றில் திருப்புமுனையை ஏற்படுத்திய காலமாகவும் அது விளங்கியது.பல்கலைக்கழகத்தில் படித்து கலாநிதி பட்டம் பெற்ற காரணத்தினால் கைலாசபதி, சிவத்தம்பி ஆகியோர் கூறுவதை வேதவாக்காகக் கொண்டு முற்போக்கு அணியினர் செயற்பட்டு வந்தனர். குறிப்பாக இவ்விரு பேராசிரியர்களும் ஈழத்திலக்கியத்தின் பிதாமகர்களாகவே கொள்ளப்பட்டனர். அதிலும் அன்றைய காலப்பகுதியில் பேராசிரியர் கைலாசபதியின் அங்கீகரிப்பிற்காக அனைத்து எழுத்தாளர்களுமே முண்டியடித்துக் கொண்டிருந்த நிலையில் இருந்தனர்.இதற்கு முற்போக்கு, நற்போக்கு அணிகளுக்கெதிராக “மெய்யுள்” தத்துவத்தை உருவாக்கிய மு.தளையசிங்கத்தின் அணியினரும் விதிவிலக்கல்ல. மு.தளையசிங்கம் உயிருடன் இருக்கும் வரையில் அவர் கைலாசபதியின் அங்கீகரிப்பிற்கு ஏங்கியதில்லை.ஆனாலும் அவர் இறந்த பிற்பாடு மு.தளையசிங்கத்தின் அணியினர் கைலாசபதியின் அங்கீகரிப்பிற்காக முயற்சி மேற்கொண்டதை மட்டும் அறியக்கூடியதாக உள்ளது. இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு மு.தளையசிங்கத்தின் நினைவு மலராக ‘பூரணி’ சஞ்சிகை வெளியிட்ட இதழுக்கு அதன் ஆசிரியர்கள் கேட்டுக் கொண்டதன் பேரில் பேராசிரியர் கைலாசபதி “இலக்கியத்தில் மார்க்சீய எதிர்ப்பு : ஒரு புத்திஜீவியின் இரண்டக நிலை” என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதிக் கொடுத்திருந்தார்.இருப்பினும் விமர்சனத்திற்கு அஞ்சிய ஆசிரியர்கள் கட்டுரையை வெளியிட விரும்பவில்லையென பேராசிரியர் கைலாசபதி எழுதிய “ நவீன இலக்கியத்தின் அடிப்படைகள்” நூலில் மேற்படி கட்டுரையின் கீழ் அடிக்குறிப்பாக குறிப்பிடப்பட்டுள்ளமை போதுமானது.கைலாசபதியின் அங்கீகரிப்பிற்கு வேண்டி நாம் அவரிடம் கட்டுரை கேட்கவில்லை என்று ‘பூரணி’ ஆசிரியர்கள் கூறினால் மேற்படி கட்டுரையை பிரசுரித்திருக்கலாமே? மு.தளையசிங்கம் இறந்த பிற்பாடாவது பேராசிரியர் கைலாசபதியின் போக்கில் மாற்றம் ஏற்பட்டிருக்கலாம் என்ற நம்பிக்கையில் அணுகி இருக்கலாம். பேராசிரியர் கைலாசபதியின் அங்கீகரிப்பிற்கு எழுத்தாளர்கள் தவம் கிடந்தது ஒருபுறம் என்றால் மறுபுறம் பேராசிரியர் கைலாசபதியோடு வீண் மனஸ்தாபத்தை விரும்பாது அவரின் அன்புக்கு பாத்திரமானவர்கள் என்ற தோறணையில் அவரை விமர்சனத்திற்கு அப்பாற்பட்ட புனிதராகக் காட்டும் முயற்சியில் அன்று வெளிவந்த ஓரிரு சஞ்சிகைகளின் ஆசிரியர்களும் விளங்கியுள்ளனர் என்பதும் அப்பழுக்கற்ற உண்மையே. 1979 ஆடியில் வெளிவந்த ‘சமர்’ இரண்டாவது இதழில் பேராசிரியர் கைலாசபதி எழுதிய “ முற்போக்கு இலக்கியமும் அழகியல் பிரச்சினைகளும்” கட்டுரைக்கு பதிலாக அ.யேசுராசா எழுதிய “ குருக்களை மிஞ்சும் சீடப்பிள்ளை” எனும் கட்டுரையை அனுப்பி இருந்த போதிலும் ‘சமர்’ இதழின் ஆசிரியரான டானியல் அன்ரனி அதனை பிரசுரிக்க மறுத்து விட்டார்.அது பின்னர் அ.யேசுராசாவையும் ஆசிரியராக கொண்டு வெளிவந்த ‘அலை – 13’ இதழிலேயே பிரசுரமாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது. பேராசிரியர் கைலாசபதியை விமர்சித்தவர்களுள் ஈழத்தில் எஸ்.பொன்னுத்துரையும், மு.தளையசிங்கமும் தத்தமது தத்துவங்களை நிலைநாட்டுவதற்காக அவரை கடுமையாகச் சாடியிருந்தனர். இவர்களில் மு.தளையசிங்கம் “முற்போக்கு எழுத்தாளர்களினால் எழுதப்பட்ட கதைகள் எவையும் இக்காலத்தின் முக்கிய பிரச்சினையான தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினையை கருப்பொருளாகக் கொள்ளாது ஆலைத் தொழிலாளி, முதலாளி போராட்டக் கதைகள் தோன்றுவதற்கு தினகரன் ஆசிரியராக இருந்த கைலாசபதியே காரணமாக இருந்தார்” என தனது ‘ஏழாண்டு இலக்கிய வளர்ச்சி’ நூலில் குறிப்பிடுவது நோக்கற்பாலது. அவ்வாறே தமிழ்நாட்டிலும் வெங்கட் சாமிநாதன் குறிப்பிடத்தகுந்தவர். பேராசிரியர் கைலாசபதி எழுதி 1968 இல் வெளியான “தமிழ் நாவல் இலக்கியம்” நூல் குறித்து வெங்கட் சாமிநாதன் 1970 ‘நடை’ இதழில் “ மார்க்சின் கல்லறையில் இருந்து ஒரு குரல்” என்ற தலைப்பில் விமர்சனம் செய்துள்ளார்.இதற்கு பேராசிரியர் எம்.ஏ.நுஃமான் அவர்கள் மல்லிகையில் 1974ஃ75 காலப்பகுதியில் “மார்க்சியமும் இலக்கியத் திறனாய்வும்” என்ற கட்டுரைத் தொடரில் பதிலளித்துள்ளார். ஆனால் பேராசிரியர் கைலாசபதியோ தன்னை தவறுகளுக்கு அப்பாற்பட்ட அதிமானுடராக என்றும் கருதியதில்லை. இதற்கு உதாரணமாக தினகரனில் மரபுப்போராட்டம் இடம்பெற்ற போது தன்னுடன் மாற்றுக்கருத்துடைய எஸ்.பொன்னுத்துரை, மு.தளையசிங்கம் போன்றோர்களது கருத்துக்களையும் பிரசுரித்திருந்தமையை சுட்டிக்காட்டலாம். தேசிய இலக்கியமானது விதேசிய எதிர்ப்பு, சுதேசிய விருப்பு, சமுதாய நோக்கு, ஜனநாயக நாட்டம், மனிதாபிமானம் என்பவற்றை வௌ;வேறு அளவிலும், வகையிலும் ஆதாரமாய் கொண்டு படைக்கப்படும் இலக்கியமென படைப்பாளிகள் கூறினாலும் தேசிய இலக்கியக் கோட்பாட்டின் உட்கிடையாக ஈழத்தவர் என்பதற்காக மட்டும் எழுத்தாளர்களை பாராட்டுதல் கூடாது என்று பேராசிரியர் கைலாசபதி தனது “இலக்கிய சிந்தனைகள்” நூல் கட்டுரை ஒன்றில் குறிப்பிடுகின்றார்.(தடித்த எழுத்துக்கள் என்னால் இடப்பட்டவை) அந்தவகையில் முற்போக்கு இலக்கிய அணியை சேர்ந்தவர்கள் தேசிய இலக்கியக் கோட்பாட்டின் அடிப்படையில் தமது படைப்புக்களை உருவாக்கி இருந்த போதிலும் பேராசிரியர் கைலாசபதி முற்போக்கு இலக்கிய அணியை சார்ந்தவர்கள் கலைத்துவம் குறைந்த படைப்புக்களை படைத்த பொழுது தம் அணியை சேர்ந்தவர்கள் என்ற காரணத்தினால் அவற்றை உன்னதப்படுத்தி கூறியமை தேசிய இலக்கியக் கோட்பாட்டையே கேள்விக்குள்ளாக்குவதாக எனக்குப் படுகின்றது. இலங்கை தேசிய இலக்கியத்தில் பிராந்திய ரீதியான வகைப்படுத்தல்களில் ஒன்றான மலையக இலக்கியத்தை சரிவர இனங்கண்டு அதற்குரிய அந்தஸ்தை வழங்கியதிலும் அதனை நெறிப்படுத்தியதிலும் பிரதான பங்கு பேராசிரியர் கைலாசபதிக்கு உண்டு நான் முன்பு குறிப்பிட்டது போல அறுபதுகளில் முனைப்புப் பெற்ற மார்க்சிய சிந்தனைகளின் விளைவால் நமது தேசிய இலக்கியங்கள் அவற்றின் வழி உந்தப்பட்ட படைப்புக்களை சிருஷ்டித்திருந்தன. ஆனால் மலையக எழுத்தாளர்களான சி.வி.வேலுப்பிள்ளை, என்.எஸ்.எம்.இராமையா, தெளிவத்தை ஜோசப், சாரல் நாடன் போன்றவர்கள் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கைப் பின்னணியை வாலாயமாக கொண்டிருந்த போதிலும் மார்க்சிய சிந்தனைகளின் பிடிப்பிற்கு ஆளாகாமலே தமது படைப்புக்களை படைத்ததான குற்றச்சாட்டும் உள்ளது. மேற்கூறப்பட்ட மலையக எழுத்தாளர்கள் அனைவருமே மார்க்சிய சிந்தனைகளின் தாக்கத்துக்கு உள்ளாகாமல் இருந்த போதிலும் பேராசிரியர் கைலாசபதி சி.வி.வேலுப்பிள்ளைக்கு கொடுத்த முக்கியத்துவத்தினையோ அல்லது என்.எஸ்.எம்.இராமையா, சாரல் நாடன் போன்றவர்களை தட்டிக்கொடுத்தமையை போன்றோ தெளிவத்தை ஜோசப்பை ஊக்கப்படுத்தாதமை கவனிப்புக்குரிய விடயமாகிறது. சி.வி.வேலுப்பிள்ளையின் மலைநாட்டு தலைவர்கள் பற்றிய பேனா சித்திரங்கள் (1958 -1959) அவரின் தொடர் நாவல்களான “வாழ்வற்றவாழ்வு”, “எல்லைப்புறம”;, “பார்வதி” ஆகியன கைலாசபதி தினகரன் ஆசிரியராக இருந்த காலத்திலேயே வெளிவந்தன.அத்தோடு சி.வி எழுதிய இறுதி நாவலான “இனிப்படமாட்டேன்” நாவலின் அவசியத்தை வலியுறுத்தி அதனை வுhந ர்ழடழ ஊயரளவ - யு ளவழசல ழக வாந 1981 நுவாniஉ ஏழைடநnஉந என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் எழுத வைத்த பெருமையும் கைலாசபதிக்கே உரியதாகும். அவ்வாறே சி.வியால் தொகுக்கப்பட்ட “மலையக நாட்டார் பாடல்” நூலுக்கும் முன்னுரை வழங்கிய கைலாசபதி, சி.வி அவர்களுக்கே அதனை தொகுக்கும் தகுதி உண்டென குறிப்பிடுகின்றார்.சி.வி.வேலுப்பிள்ளை மலையகத்தின் மூத்த படைப்பாளி என்பதும் கைலாசபதியின் கணிப்புக்கு ஆளாகியிருக்கக் கூடும். அதுபோலவே சாரல் நாடன் எழுதிய ‘எவளோ ஒருத்தி’ என்ற சிறுகதையை பிரசுரித்த கைலாசபதி அவரது ஆற்றலை இனங்கண்டு தொடர்ந்து எழுதும்படி தனது கைப்பட கடிதம் எழுதினார். என்.எஸ்.எம்.இராமையாவும், சாரல் நாடனும் மலையக இலக்கியத்தின் நம்பிக்கைகள் என்று சி.வி.வேலுப்பிள்ளையிடம் கூறியுள்ளார். அதேசமயம் கைலாசபதி தனது இறுதிக்காலத்திலும் மலையக இளந்தலைமுறையினரான தேசிய கலை இலக்கியப் பேரவையின் முக்கியத்துவம் மிக்க உறுப்பினர்களான இ.தம்பையா, சி.இராஜேந்திரன் முதலானவர்களை வளர்ப்பதிலும் கவனஞ்செலுத்தி இருந்ததனை அறியக்கூடியதாக உள்ளது. ஆனால் இவ்வாறானதொரு நிலை தெளிவத்தை ஜோசப்பிற்கு ஏற்படவில்லை. இதற்கான காரணத்தை ஆராய்வோமானால் “தீ ” “சடங்கு” போன்ற நாவல்களில் பாலியலை வெளிப்படையாக எழுதிய எஸ்.பொவையே கைலாசபதி ‘இந்திரிய எழுத்தாளர்’ என்று முத்திரை குத்தி கருத்தில் எடுக்காத போது செக்ஸ் கதைகளை தான் எழுதியிருப்பதாக தெளிவத்தை ஜோசப்பே ஒப்புக்கொண்ட நிலையில் கைலாசபதி அவரை கவனத்தில் கொள்ளாதது ஒன்றும் ஆச்சரியமல்;ல என்றே தோன்றுகிறது. அத்தோடு நிறுவன ரீதியான இயங்கங்களை கிண்டல் செய்தும் மலையகத் தொழிலாளர்களின் எதிர்ப்பையும் சம்பாதித்த தெளிவத்தை ஜோசப்பின் படைப்புக்கள் குறித்து பாட்டாளி வர்க்க சர்வதேச நெறியில் தேசிய இலக்கியம் உருவாக உழைத்த கைலாசபதி மௌனம் காத்ததும் நியாயமானதே. இது குறித்து தெளிவத்தை ஜோசப் “ஈழத்து எல்லா இலக்கியங்களிலும் யாழ்ப்பாணத்து ஈழநாடு, கலைச்செல்வி, சிரித்திரன் உட்பட தமிழகத்தின் கலைமகளில் கூட எனது படைப்புகள் இடம்பெற்றுள்ளன. ஆனால் ஈழத்து இலக்கியத்துக்கு செழுமையும் வலுவும் சேர்த்ததாக பேசப்படும் தினகரனில் என்னுடைய ஒரு படைப்புத்தானும் வரவில்லை என்பது எதைக்காட்டுகிறது?” - ‘மூன்றாவது மனிதன்’ நேர்காணல் - ஒக்ரோபர் ஃ டிசம்பர் 2001 என்று குறிப்பிடுகின்றார். பேராசிரியர் கைலாசபதி தினகரனில் ஆசிரியராக இருந்த 1959 – 1961ம் ஆண்டுக் காலப்பகுதியே தினகரன் வரலாற்றில் பொற்காலமாக கருதப்படுகிறது. ஆனால் தெளிவத்தை ஜோசப் 1950களின் பிற்பகுதியில் எழுத்துலகினுள் நுழைந்தாலும் அவரது முதற்படைப்பு வெளிவந்தது 1963ம் ஆண்டே. தினகரன் ஆசிரியராக இருந்த பேராசிரியர் சி.தில்லைநாதன் அவர்கள் “பன்முக ஆய்வில் கைலாசபதி” நூலில் “தினகரனில் நான் சேர்ந்த ஒரு சில வாரங்களில் கைலாஸ் பல்கலைக்கழகத்திற்கு விரிவுரையாளராக சென்று விட்டார். அவர்கீழ் பணியாற்றிய சில நாட்களுக்குள் பத்திரிகை தொழிலின் நெளிவுசுழிவுகளை வெகு ஆர்வத்துடன் சொல்லிக்கொடுத்தார் …………………………..அவர் தினகரனை விட்டு நீங்கி வி;ட்ட போதிலும் அடிக்கடி சந்தித்தபோது ஆலோசனைகளை அள்ளி வழங்கி உற்சாகப்படுத்தினார்.மரபுப்போராட்டம் தினகரனில் இடம்பெற்ற காலத்தில் அவர் எனக்களி;த்த ஆலோசனைகளும் குறிப்புகளும் பல” என்று பதிவு செய்கின்றார். இதை ஏன் நான் இங்கு குறிப்பிடுகின்றேன் என்றால் பேராசிரியர் கைலாசபதியின் பங்களிப்பு தினகரனை விட்டு அவர் நீங்கிய பின்னும் இருந்துள்ளது என்பதை சுட்டிக்காட்டவே.இந்தப்பின்னணியின் அடிப்படையிலேயே தெளிவத்தை ஜோசப்பின் மேற்படி கூற்றை ‘அவலை நினைத்து உரலை இடித்த கதையாவே’ அணுக வேண்டியுள்ளது. 1974இல் வெளியான தெளிவத்தை ஜோசப்பின் “காலங்கள் சாவதில்லை” நாவல் கலைச்செல்வி ஆசிரியரான சிற்பி அவர்களால் சாகித்திய மண்டலப் பரிசுக்கு தெரிவு செய்யப்பட்ட போதும் பேராசிரியர் கைலாசபதி தலைமையிலான முற்போக்கு அணியினரின் கருத்து முரண்பாடுகளால் பரிசீலனையின் பின் பரிசு பெறும் வாய்ப்பை இழந்ததாகக் கூறப்படுகிறது. சாகித்திய மண்டலப் பரிசு மாத்திரம் அல்ல எந்தவொரு அமைப்பினராலும் வழங்கப்படும் விருதாக இருந்தாலும் பெரும்பாலும் தனியொரு நபரால் எதேட்சாதிகாரமாக வழங்கப்படுவதில்லை. அதற்கென நியமிக்கப்பட்ட நடுவர் குழுவினரால் பரிந்துரை செய்யப்பட்ட முடிவுகளின் அடிப்படையிலேயே வழங்கப்படுவது.நடுவர்குழுவில் இடம்பெறும் அத்தனை பேரும் ஏகமனதாக ஒரு நூலினையே தெரிவு செய்வார்கள் என்று எதிர்பார்ப்பது அபத்தமானது.சாகித்திய மண்டலத் தேர்வில் சிற்பி அவர்கள் மாத்திரமே இருந்திருப்பாரேயானால் அவரது தெரிவின்படி பரிசு கிடைத்திருக்கும்.ஆனால் அங்கும் நடுவர் குழாம் ஒன்று இருந்திருக்கின்றது.எனவே அவர்களோடு கலந்து இறுதி முடிவெடுக்காமல் சிற்பி அவர்கள் தன்னிச்சையாக அதிகாரபூர்வமற்ற முடிவை அறிவித்தமை ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒன்றல்ல. “காலங்கள் சாவதில்லை” நாவல் குறித்து முற்போக்கு அணியினரால் மலையக மக்களின் வாழ்க்கையை சொல்லும் அந்நாவலில் தொழிற் சங்க அரசியல் பேசப்படவில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.இது குறித்து தெளிவத்தை ஜோசப் கூறுவது கவனத்தி;ற்குரியது. “பாட்டாளி வர்க்க உணர்வு, பூரணமாக கருக்கட்டாத ஒரு நிலையில் இம்மக்களின் போராட்ட உணர்வுகளை நான் பதிவு செய்யவில்லை என்று குறைகூறுவதில் என்ன நியாயம் இருக்கிறது?” - ‘மூன்றாவது மனிதன்’ நேர்காணல் - ஒக்ரோபர் ஃ டிசம்பர் 2001 ஆனாலும் 1964 – 1970 ஆம் ஆண்டுக் காலப்பகுதிக்குள் மலையகத் தொழிலாளர்களிடையே மூன்று முக்கிய வேலை நிறுத்தப் போராட்டங்கள் நிகழ்ந்துள்ளன. ஒன்று அட்டன் பகுதியில் அமைந்துள்ள மேபீல்ட் தோட்ட வேலை நிறுத்தம், இரண்டாவது தலவாக்கொல்லைக்கு அண்மித்த மடக்கம்புற தோட்டப் போராட்டம், மூன்றாவது பதுளை மாவட்டத்தில் கீனாகலைத் தோட்டத்தில் நடைபெற்ற போராட்டம் என்பன. இவற்றுள் கீனாகலைத் தோட்டத்தில் நடைபெற்ற போராட்டத்தில் பி.இராமையா, லெ.அழகர்சாமி ஆகிய தொழிலாளர்கள் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி தம் உயிரை தியாகம் செய்திருந்தனர்.இதனால் தான் சி.கா.செந்திவேல் தனது “இலங்கை இடதுசாரி இயக்கத்தின் 50 ஆண்டுகள்” நூலில் “1939 - 40களில் சமசமாஜக்கட்சி, தோட்டத் தொழிலாளர்கள் மத்தியில் முன்னெடுத்த போராட்டங்களை விட இப்போராட்டங்கள் பல முனைகளில் வளர்ச்சி பெற்றது” என குறிப்பிடுவதும் மனங்கொள்ளத்தக்கது. எந்தவொரு படைப்பாளிக்கும் எரிகின்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதோடு மட்டுமல்லாமல் வருங்காலத்தில் எவ்வாறான பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்க வேண்டியிருக்கும் என்பதனையும் தீர்க்கதரிசனமாக கூற வேண்டிய தார்மீகப் பொறுப்பு உள்ளது. அந்தவகையில் மலையகத்தில் வர்க்கரீதியான அடக்குமுறை தலைவிரித்தாடியதை கருத்தில் எடுக்காதோடு பாட்டாளி வர்க்க உணர்வு, பூரணமாக கருக்கட்டாத நிலையில் என்று தெளிவத்தை ஜோசப் கூறுவது முரண்நகையாகவே தோன்றுகிறது. ‘ரோம் நகர் பற்றி எரிந்த பொழுது நீரோ மன்னன் பிடில் வாசித்தது’ போன்றே தெளிவத்தை ஜோசப்பின் ‘காலங்கள் சாவதில்லை’ நாவல் காணப்படுகிறது. 1974ம் ஆண்டுக்கான சாகித்திய மண்டலப்பரிசு ‘காலங்கள் சாவதில்லை’ நாவலுக்கு வழங்கப்படாமல் அருள் சுப்ரமணியத்தின் “அவர்களுக்கு வயது வந்துவிட்டது” நாவலுக்கே வழங்கப்பட்டிருந்தது.அந்த நாவல் வெளிவந்த பிற்பாடே தமிழ்நாட்டில் இலங்கையின் நாவலுக்கு வயது வந்து விட்டது எனும்படியான ஆரோக்கியமான கணிப்புக்கு ஆளாகியிருந்தமை அந்த நாவலின் தரத்தினையே எடுத்துக்காட்டுகின்றது. அத்தோடு அருள் சுப்ரமணியமும் முற்போக்கு அணியை சேர்ந்தவரல்ல என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் 1974ம் ஆண்டு ‘காலங்கள் சாவதில்லை’ நாவல் பற்றி ‘அலை’ இதழில் எழுதிய செ.யோகராசா அவர்கள் “ இது ஒரு சினிமாத்தனமான நாவல் என்றும், சில நல்ல எழுத்தாளர்களின் மோசமான படைப்புக்களை வரிசைப்படுத்தினால் தெளிவத்தை ஜோசப்பின் படைப்புக்களில் இது முதன்மையானது” என்றும் கூறுகின்றார். அதற்கு முன்னரே 1962ம் ஆண்டுக்கான சாகித்திய மண்டலப்பரிசு இளங்கீரனின் “ நீதியே நீ கேள் ” நாவலுக்கு கிடைக்கும் என்ற பேச்சு பரவலாக அடிபட்ட நிலையிலும் இறுதியில் வ.அ.இராசரத்தினத்தின் “தோணி” சிறுகதை தொகுப்பிற்கே அது கிடைத்திருந்தது.இதன் வெளிப்பாடே யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற சாகித்திய விழாவில் முற்போக்கு அணியினர் முட்டை எறிந்த விவகாரம்.எனவே சாகித்திய மண்டலப் பரிசு குறித்து இவ்வாறான சர்ச்சைகள் காலத்திற்கு காலம் நிகழ்வது ஒன்றும் புதிதல்ல. 1974ம் ஆண்டு சிறுகதைக்கான சாகித்திய மண்டலப்பரிசு டானியலின் “ உலகங்கள் வெல்லப்படுகின்றன” சிறுகதைத்தொகுதிக்கும், அ.யேசுராசாவின் “தொலைவும் இருப்பும் ஏனைய கதைகளும்” சிறுகதைத் தொகுதிக்கும் கிடைத்திருந்தன. தெளிவத்தை ஜோசப் கூறுகின்ற அதே கைலாசபதி தலைமையிலான முற்போக்கு அணியினர் நினைத்திருந்தால் கைலாசபதியோடு கருத்தியல் ரீதியாக முரண்பாடு கொண்டிருந்த அ.யேசுராசாவின் நூலுக்கு பரிசு கிடைக்காமல் செய்திருக்கலாம். அதேசமயம் 1979ம் ஆண்டு தெளிவத்தை ஜோசப்பின் “நாமிருக்கும் நாடே” சிறுகதை தொகுதி குறித்து பேராசிரியர் கைலாசபதி சற்று கடுமையாக விமர்சித்திருந்தாலும் அந்த வருடம் அந்நூலே சாகித்திய மண்டலப்பரிசினை பெற்றுக்கொண்டதும் குறிப்பிடத்தக்கது.இதிற்கூட முற்போக்கு அணியினர் நினைத்திருந்தால் பரிசு கிடைக்காமல் செய்திருக்கலாம் அல்லவா? எனவே முற்போக்கு அணியை சாராதவர்கள் பேராசிரியர் கைலாசபதி தம்மை ஒதுக்கிவிட்டதாக கூறினாலும் அ.முத்துலிங்கம் போன்று தெளிவத்தை ஜோசப் அவர்களும் தற்கால இலக்கிய ஆளுமைகளில் தவிர்க்க முடியாத ஒருவராக திகழ்கிறார் என்பது உண்மையே.இன்று அதே முற்போக்கு அணியை சேர்ந்த பேராசிரியர் கா.சிவத்தம்பி அவர்களே “தெளிவத்தை ஜோசப்பின் எழுத்துக்கள் இல்லையேல் மலையகத்து மக்களின் வாழ்க்கை பற்றிய எமது அறிவு குறைவு பட்டதாகவே இருக்கும்” என்று ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.அவ்வாறே முற்போக்கு அணியை சார்ந்த டொமினிக் ஜீவா,முருகையன், டானியல் போன்றவர்களும் இவரின் படைப்புக்களை சிலாகித்து கூறியுள்ளனர்.அப்படியானால் இவரின் படைப்பை நிராகரித்த முற்போக்கு இலக்கியவாதி யார்? இதற்கான விடையாக 36 வருடங்களுக்கு முற்பட்ட “காலங்கள் சாவதில்லை” நாவல் பிரச்சினையை தற்போது கையில் எடுத்து அதனை பூதாகரமாக்கி பேராசிரியர் கைலாசபதி மீது தெளிவத்தை ஜோசப்பின் சேறுபூசும் செயலின் ஊடாக அறிந்து கொள்ளலாம். உசாத்துணை நூல்கள்; 1. பன்முக ஆய்வில் கைலாசபதி - தேசிய கலை இலக்கிய பேரவையுடன் இணைந்து சவுத் ஏசியன் புக்ஸ் வெளியீடு 2. இலங்கை இடதுசாரி இயக்கத்தின் 50 ஆண்டுகள் - சி.கா.செந்திவேல் 3. ஈழத்து இலக்கியம் : பல்துறை நோக்கு - சோமகாந்தன் 4. நவீன இலக்கியத்தின் அடிப்படைகள் - க.கைலாசபதி 5. குறிப்பேட்டிலிருந்து - அ.யேசுராசா 6. மூன்றாவது மனிதன் - ஒக்ரோபர் ஃ டிசம்பர் 2001 7. இலக்கிய சிந்தனைகள் - க.கைலாசபதி 8. திறனாய்வு சார்ந்த சில பார்வைகள் - மு.பொன்னம்பலம் இடுகையிட்டது விமலன் நேரம் முற்பகல் 6:41 3 கருத்துகள்: இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Twitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர் நவீன இலக்கிய புனைவுகளில் உருவ உள்ளடக்க சொல்லாடல்கள்” - சில அவதானிப்புக்கள் - - சின்னராஜா விமலன் - இலக்கியம் என்பது சமூக மாற்றத்தினை ஏற்படுத்துவதற்கான விளைபொருள். அதன் ஊடுபாவாக சமூகத்தில் நிலவுகின்ற பிரச்சினைகளை இனங்காட்டி அவற்றிற்கான தீர்வையும் மக்களை இலகுவில் சென்று அடையக் கூடியவகையில் முன்வைக்கும் சந்தர்ப்பத்தில் அவ்விலக்கியமானது தான் எட்ட நினைத்த இலக்கினை அடைந்த திருப்தியை அதைப் படைத்தளித்த இலக்கியகர்த்தாவுக்கு ஏற்படுத்துகின்றது. குறிப்பாக புனைவு இலக்கியத்தைப் பொறுத்தவரையில் “கலை கலைக்காகவே” என்ற கோட்பாட்டின் வழியான புரிதலை நிராகரித்து “கலை மக்களுக்காகவே” என்ற கொள்கை ரீதியிலான அணுகுமுறையை கையாளும்போதே அது பரந்த வாசகர் மட்டத்தை எட்டுவதற்கான திறவுகோலாக அமையும். அவ்வாறானதொரு நிலை நோக்கி புனைகதை இலக்கியத்தை நகர்த்திச் செல்வதற்கான மூலோபாயங்களில் மக்களை இலகுவில் கவர்ந்திழுக்கும் படியான வடிவ உத்திகளை கையாளுதல் தலையாய விடயம். அந்நியக் கலை இலக்கியத் தாக்கத்தின் விளைவுகளாக எமக்கு கிடைத்தவையே நாவல், சிறுகதை போன்ற புனைகதை இலக்கிய வடிவங்கள்.உண்மையில் புனைகதை இலக்கியத்தில் வடிவம் குறித்த சில அடிப்படை சந்தேகங்களே இன்னும் தீர்க்கப்படாமல் உள்ளன. அதாவது நவீன புனைவு இலக்கியத்தில் வடிவம் என்பது கவிதை, சிறுகதை,நாவல் போன்றவற்றை குறித்து நிற்கின்றதா? அல்லது ஒரு சிறுகதை யையோ,நாவலையோ எழுதி முடிப்பதற்காக ஒரு எழுத்தாளரால் கையாளப்படும் உத்திமுறைத் தெரிவான எடுப்பு,தொடுப்பு,முடிப்பு என்பவற்றின் முழுமையையும் உள்ளடக்கிய வெளிப்படுத்துகையினை குறித்து நிற்கிறதா? இது ஒரு விரிசிந்தனை க்கான தளத்தில் தனியே ஆராயப்பட வேணண்டிய விடயம். இக்கட்டுரை யானது வடிவம் என்பது கவிதை, சிறுகதை,நாவல் போன்றவற்றை குறிப்பதான பார்வையில் எழுதப்படுகிறது. ஒரு கலைப்படைப்பின் வடிவ நிர்ணயிப்பில் பங்காற்றும் அம்சங்களாக கீழ்வரும் ஆறினை குறிப்பிடுகின்றார் “தமிழ் சிறுகதைகளில் உருவம்” என்ற நூலின் ஆசிரியரான கோ.கேசவன். 1. கலைப்படைப்பின் உள்ளீடு திறன்கள், அதாவது அதன் உள்ளடக்கம். 2. வர்க்க மனநிலை, அதாவது கலைஞனின் வர்க்க மனநிலை, கலைஞன் காட்டும் பாத்திரங்களின் மனநிலை. 3. அந்நியக் கலை இலக்கியத்தின் தாக்கம். 4. பண்டைய மரபுகளின் செல்வாக்கும் அவற்றிலிருந்து விடுபடத்துடிக்கும் முயற்சியும். 5. கலைஞனின் பயிற்சி – பழக்கம், அவனது ஆழ்ந்த மனக்கிளர்ச்சி. 6. நுகர்வோர் தளத்தின் தரவேறுபாடு. இதில் கேசவன் கூறும் பண்டைய மரபுகளின் செல்வாக்கும் அவற்றிலிருந்து விடுபடத் துடிக்கும் முயற்சியும் என்பதனை வகைமாதிரிக்கு எடுத்து நோக்குவோமாயின் பண்டிதர்களிடம் சிறைப்பட்டிருந்த தமிழ் கவிதை பாரம்பரியத்தை சிந்து, தெம்மாங்கு, காவடி முதலான இலகுநிலை வடிவமாற்றங்களின் மூலம் மக்களின் இருப்பிடம் நோக்கிய ஒரு அசைவியக்கமாக நிகழ்த்திக் காட்டினான் பாரதி. இவ்விடத்தில் எந்த வடிவமும் அதற்கு முந்தைய எந்த வடிவத்திற்கும் மாற்று என்று எண்ணாமல் அம்மொழி வடிவங்களுள் இன்னொன்றான புதிய வரவு எனக்கொண்டால் மரபுவாதிகளும், நவீனத்துவவாதிகளும் தேவையற்ற முரண்பாட்டு உருவாக்கங்களை தவிர்த்துக்கொள்ள முடியும். இவ்வாறே கவிதை தவிர்ந்த நவீன இலக்கிய புனைவுகளில் “கல்கி” போன்றவர்கள் பரந்துபட்ட மக்களுக்கும் புரியும்படியான வடிவமொன்றை கைவரப் பெற்றாலும் அவரின் உள்ளடக்கம் சார்ந்த அம்சங்களில் விமர்சகர்களின் பார்வை ஒருவித நிராகரிப்பின் அடியான, சாடல் மிகுந்ததாகவே இருந்து வந்துள்ளது. இதன் நீட்சி இன்றுவரை பல்வேறு பரிமாணமாய் படைப்பாளிகளுக்கும் விமர்சகர்களுக்கும் இடையே இருவேறுபட்ட கருத்து முரண்வெளிகளை அதிகரித்துக் கொண்டிருக்கின்றமை கண்கூடு. அதாவது சொல்ல வந்த விடயத்தை எவ்வடிவத்தின் ஊடாக வெளிப்படுத்த வேண்டும் என்பதிலும் இஸங்;களின் வழியான உள்ளடக்கத்தை வெளிக்கொணர்வதில் ஏற்பட்ட புரிதல் இன்மைகள் மற்றும் முரண்பாடுகள் என்பவை சர்ச்சைகளை தோற்றுவித்து உருவ உள்ளடக்க விவாதங்களை இன்றும் அரங்கேற்றிய வண்ணமே உள்ளன. படைப்பாளிகளை மட்டுமல்லாமல் உருவ உள்ளடக்கத்தின் வகிபங்குகள் சிற்றிதழ்களிலும் தாக்கத்தை உண்டுபண்ணத் தவறவில்லை. இவ்வகைப்பட்ட சிற்றிதழ் போக்கிற்கு உதாரணமாய் சி.சு.செல்லப்பாவின் “எழுத்து” இதழ் உருவத்திற்கு முக்கியத்துவம் கொடுத்ததால் உருவவாத இதழாக முத்திரை குத்தப்பட்டதாகக் கூறுவர். ஒருவகையில் நவீன இலக்கியப் புனைவு சம்பந்தமான உருவ, உள்ளடக்க சர்ச்சைகள் இலக்கிய உலகில் புதுப்பொலிவைப் பெற உதவியது என்பது வாஸ்தவமே. இதனை உள்வாங்கி படைப்பாளிகள் நவீன இலக்கியப் புனைவுகளில் புதியதோர் திருப்புமுனையை ஏற்படுத்தியதை வரமாகக் கொண்டாலும், நேர்கோட்டில் ஒற்றைப் பரிமாணமாய் கதை சொல்வதை விரும்பாத எழுத்தாளர்கள் படிமத்தை குவியலாகப் பயன்படுத்தி வாசக நுகர்வுத் தளத்தை அல்லாட வைப்பதை சாபம் என்பதைத் தவிர வேறு எப்படி கூற முடியும்? இலக்கிய உலகில் இன்றும் புரியாத புதிராக விளங்கும் மௌனியின் சிறுகதைகளை க.நா.சு, வெங்கட் சாமிநாதன், பிரமிள் போன்றவர்கள் உச்சமெனக் கொண்டாடி இருந்தாலும்;, பெரும்பான்மையான வாசகர்களின் மனங்களில் இருண்மைத்தன்மையின் இருப்பிடமாகவே அவரின் படைப்புக்கள் குடிகொண்டிருந்தன. அ.மார்க்ஸ் “மௌனியிடம் எப்போதுமே என்னால் ஒன்ற முடிந்ததில்லை” எனக்கூறுவதற்கும் மௌனியின் சிறுகதைகளில் கையாளப்பட்ட உள்ளடக்கமே காரணமாகிறது. எழுத்தாளர் நகுலன் “எழுத்தாளர்களின் எழுத்தாளர்” என்று அழைக்கப்படுவதற்கும் அவருடைய படைப்பின் உள்ளடக்கம் சீரிய எழுத்தில் ஆர்வம் கொண்டோரால் மாத்திரம் அணுகப்படுவதன் பிரதிபலிப்பினால் ஆகும். அதேசமயம் கோணங்கி போன்றவர்கள் வாக்கிய வடிவங்கள் நேரடியானதாக இல்லாமல் அது சிதையும் போதுதான் ஒரு கவிதைக்கான சாத்தியப்பாடு ஏற்படுகிறது என்று கருதினார்கள். இதனால் புரியாமலே போய்விடக்கூடிய எழுத்து உருவாகிற ஆபத்து அதில் இருந்தாலும்கூட அந்த ஆபத்தை எதிர்கொண்டு பயணிக்கலாம், அதுதான் உண்மையான இலக்கியம் என்றும் சொன்னார்கள். இவ்விடத்தில் “ஏழiஉiபெ கழடமடழசந”இ “குழடமடழசந யள னளைஉழரசளந” ஆகிய நூல்களின் ஆசிரியரான எம்.டி முத்துக்குமாரசாமி; வடிவம் என்பதை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும் என்பதனை கீழ்வருமாறு குறிப்பிடுவது கவனிப்புக்குரியது. “ஒரு ஒட்டுமொத்த வடிவங்களாக மட்டுமல்ல, அதை ஒரு வாக்கியத்தினுடைய வடிவமாகக்கூட நீங்கள் எடுத்துக்கொள்ளலாம். ஒரு வாக்கியத்தினுடைய வடிவமாக இருந்தாலும்சரி, ஒரு சொற்கோர்வையினுடைய வடிவமாக இருந்தாலும்சரி, ஒரு முழுப்படைப்பினுடைய வடிவமாக இருந்தாலும் சரி அந்த வடிவம் என்பது ரொம்ப முக்கியமானது. வாக்கிய அளவில் செய்யக்கூடிய சிதைவு இருக்கிறதே அது ஓர் அளவுக்குத்தான் உண்மையாக இருக்க முடியும்.அது கவிதையினுடைய வடிவத்திற்கு மட்டுமே சரியானது. சிறுகதைக்கோ, நாவலுக்கோ அது சரியானதல்ல. - தீராநதி, ஜூலை 2007 - ஆனாலும் இன்றைய காலப்பகுதியில் பின் நவீனத்துவத்தின் கட்டுடைப்பால் வடிவம் சார்ந்த பிரக்ஞையில் பின் நவீனத்துவவாதிகள் அதிகம் கவலை கொள்வதில்லை என்கிற யதார்த்த ரீதியான பிரசன்னத்தை அட்டவணைகள், புள்ளிவிபரங்கள் மூலமான புனைகதை வெளிப்படுகை முறைகள் எடுத்துக்காட்டுகின்றன. வித்தியாசமான வாசிப்பனுபவத்தை தருவதான எண்ணப்பாங்கில் வரன் முறையான தளத்திலிருந்து விலகி இன்றைய நவீன புனைவு இலக்கியம் தறிகெட்டு போவதான உணர்வை இது வாசகர்கள் மத்தியில் வலுப்பெற வைத்துள்ளது. ஒரு படைப்பாளி ஒரேயொரு நவீன இலக்கியப் புனைவுத்துறையில் மட்டும் அது கவிதையாகட்டும், சிறுகதையாகட்டும், நாவலாகட்டும் ஒன்றில் துறைபோர்ந்தவராக மிளிரும் சந்தர்ப்பத்தில் வடிவநிலைத் தெரிவு குறித்த சமுசயத்திற்கு இடமில்லாது போய்விடுகின்றது. ஆனால் ஒரு பல்துறை சார்ந்த இலக்கியகர்;த்தா படைப்பூக்க உந்தலினாலான மனோநிலைக்கு இயைபடைந்து வருகின்ற பொழுது அந்த விடயத்தை எந்தவொரு வடிவத்தினூடாக வெளிக்கொணர்ந்தால் படைப்பின் முழுமையும் பாதிப்புறாவண்ணம் சிருஷ்டிக்க முடியும் என்பதனை ஆளுமை மிக்க படைப்பாளியினால் அதனை இலகுவாக உய்த்துணர முடியும். இதற்கு அவருடைய எழுத்துலக அனுபவம் கைகொடுக்கின்றது. இருப்பினும் சிறுகதை படைப்பொன்றை சிருஷ்டித்த ஓர் எழுத்தாளன் பிற்பட அதனை ஒரு குறுநாவலாகவோ அல்லது நாவலாகவோ வடிவ மாற்றத்திற்கு உட்படுத்தும் பொழுது வடிவத்தை தீர்மானிப்பதில் அந்தப் படைப்பாளி தவறு செய்து விட்டாரா என்றதொரு முடிவுக்கு வர முடியுமா? ஏற்கனவே படைத்தளித்த சிறுகதையின் கருவைக் கொண்டு அதனை திறம்பட வளர்த்திச்செல்லும் லாவகமும், புதிய உருவார்ப்பும் அதன் ஊடாட்டமாக வாசகர் மத்தியில் ஒரு அனுபவத்தொற்றலை ஏற்படுத்த முடியுமாக அந்தப் படைப்பாளி கருதுமிடத்து சிறுகதையொன்று குறுநாவலாகவோ, நாவலாகவோ பரிமாணம் பெறுவதை தடுக்க முடியாது என்றே தோன்றுகின்றது. அவ்வாறே ஒரு கவிஞரால் எழுதப்படும் சில கவிதைகள் ஒரே தலைப்பில் ஐஇ ஐஐஇ ஐஐஐ என வௌ;வேறுபட்ட காலப்பகுதியில் வெளிவருகின்ற பொழுதும் வடிவம் பற்றிய சர்ச்சை எழுகின்றது. தமிழக கவிஞரான சுகுமாரன் தான் “ஒரு பாடுபொருளில் ஒரு கவிதை எழுதினால் திரும்பவும் அப்பாடுபொருளில் கவிதை படைக்க மாட்டேன்” என்று கூறியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. இது விவாதத்திற்குரியதொன்றாகவே படுகின்றது. ஒரு வகையில் இது அவரின் பாடுபொருள் பற்றாக்குறையின்மை தன்மையை வெளிப்படுத்துவதாக கருதினாலும் இன்னொரு புறம் மாற்றம் ஒன்றே மாறாதது என்ற நியதிக்கிணங்க காலப்போக்கில் பாடுபொருளின் இயல்புகளும் மாறக்கூடும். அத்துடன் கவிஞனும் தன்னை சுயவிமர்சனத்திற்கு உட்படுத்தும் சமயத்தில் அப்பாடுபொருள் மீதான பார்வையும் பன்முகப்படுத்தப்படலாம். பா. அகிலனின் “தேனீரின் இறுதித்துளியை பகிர்ந்தாய்” எனத் தொடங்கும் யாத்திரை ஐஇ “அச்சத்தால் தறையப்பட்டிருந்தேன்” எனத்தொடங்கும் யாத்திரை ஐஐ, “சொப்பனத்துள்ளும் அச்சம்” எனத்தொடங்கும் யாத்திரை ஐஐஐ ஆகிய கவிதைப் பிரதிகளை படிக்கும் பொழுது லா.ச.ரா சொன்னாரே “ஒரே கதையைத்தான் நான் திரும்பத் திரும்ப சொல்கிறேன்” என்பது போல பா. அகிலனும் “பலவேளைகளில் ஒன்றையே திரும்பத் திரும்ப நான் எழுதுவதாகப்படுகிறது” என அவரின் “பதுங்குகுழி நாட்கள்” கவிதைத் தொகுப்பில் ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருப்பது இக்கட்டுரையின் மையத்தை நோக்க்pய பயணிப்புக்கு துணைபுரிகிறது. மறுதலையாய் நோக்கும் போது ஒரு பாடுபொருள் பற்றி ஒரு கவிதை எழுதிய பின்னர் அந்தப் படைப்பை இன்னும் செழுமைப்படுத்தியிருக்கலாமோ என்றதொரு ஆதங்கம் படைப்பாளியிடம் மேலிடும் பொழுது இவ்வாறான கவிதைகள் தோற்றம் பெறக்கூடும். திருப்தியின்மைக்கும் கலைக்குமான தொடர்பு என்றும் போராட்டம் மிகுந்ததாகவே காணப்படுவது இதற்கு அடிப்படையாய் விளங்கலாம். ஆனாலும் ஒரு படைப்பு என்பது காலம் காலமாக ஒவ்வொரு காலகட்டத்திற்கும் வௌ;வேறு விதமான அர்த்தங்களை தரக்கூடியதாக இருப்பதனால் இவ்வாறான கவிதைகளின் தொடர்வருகை விவாதத்தின் ஊற்றுக்கண்ணாக இருந்து கொண்டே இருக்கும். எது எவ்வாறிருப்பினும் இன்றைய காலகட்டத்தில் ஒரு கவிஞரைப் பின்பற்றி ஏனைய கவிஞர்களும் அவரை ஆதர்ஸமாக கொண்டு அவரின் பாணியில் இவ்வாறான கவிதைகளைப் படைப்பதும் வழக்கமாகி விட்டது. சமூகத்தில் தன்னை பாதித்த விடயங்களை, பதிவு செய்ய விரும்புபவற்றை ஒரு எழுத்தாளன் தனக்கு வாய்த்த மொழியில் எழுத முற்படுகின்றான். இதன்போது ஒரே அனுபவத்தை இருவேறு வடிவங்களில் வெளிக்கொணரும் போது அது படைப்பாளியின் பலவீனத்தை வெளிச்சம் போட்டு காட்டுவதாகவே கருத வேண்டியுள்ளது. அண்மையில் ஞானம் இதழில் வெளியான வீ. ஜீவகுமாரன் என்பவர் எழுதிய “கிராமத்து பெரிய வீட்டுக்காரி” சிறுகதை தந்த வாசிப்பு அனுபவமும், ஏற்கனவே அவரால் வெளியிடப்பட்ட “யாவும் கற்பனை அல்ல” தொகுப்பில் வெளிவந்த “கிராமத்து வீடும் என் முதல் காதலியும்” கவிதை தந்த வாசிப்பு அனுபவமும் ஒன்றாக இருப்பதை தேர்ந்த வாசகனால் உணரமுடியும். இவற்றை தொகுத்து பார்க்கின்ற பொழுது ஒரு சமயம் “ஈழத்திலக்கியம்” பற்றி ஜெயமோகன் கூறிய “தவறான கருவியால் (யதார்த்த வாதத்தால்) இலங்கை வாழ்வையள்ள படைப்பாளிகள் முயலும் போது திரும்பத்திரும்ப ஒரே மாதிரியான பௌதீகவாழ்வே அகப்படுகின்றது. விளைவாக பல படைப்புகள் முதல் சில பக்கங்களிலேயே அலுப்புத்தருகின்றன” என்ற கலாநிதி ந. ரவீந்திரன் உட்பட பலரின் விமர்சனத்திற்கும் ஆளான கூற்று நினைவுக்கு வருகின்றது. வௌ;வேறு ஈழத்துப் படைப்பாளிகளின் படைப்புக்களை படிக்கும்போதே ஒரேவிதமான அனுபவத்தொற்றலுக்கு உள்ளாகி அலுப்பு ஏற்படுகையில், ஒரு படைப்பாளியின் இரண்டு வௌ;வேறு வடிவநிலைப் புதினங்களில் ஒரே அனுபவம் கருப்பொருளாகும் பொழுது ஜெயமோகனின் கூற்றை ஆமோதிக்க வேண்டியது தவிர்க்க முடியாததாகவே எனக்குப் படுகின்றது. இடுகையிட்டது விமலன் நேரம் முற்பகல் 6:31 1 கருத்து: இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Twitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர் இலக்கிய நண்பர்களுக்கு வணக்கம் நானும் இணைய உலகில் உங்களுடன் பயணிக்க விரும்புகிறேன். எனது எண்ணங்களையும் எழுத்துக்களையும் 'அற்றைத்திங்கள்' வலைப்பதிவில் தொடர இருக்கிறேன்.
பொலிஸ் ஆணைக்குழுவின் கடமைகளில் இருந்து பொலிஸ் அதிகாரிகளை நீக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், குறித்த அதிகாரிகள் தமது கடமைகளை செய்யும் வரை பொலிஸ் ஆணைக்குழு சுயாதீனமாக செயற்படாது என பாராளுமன்ற உறுப்பினர் பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார். பொலிஸ் ஆணைக்குழுக்கள் உரிய முறையாக செயற்படாதமைக்கான காரணங்கள் தொடர்பிலும் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் மான்னப்பெருமவும் கருத்துக்களை வெளியிட்டார். Hizam A Bawa See author's posts Tags: bbc news bbc tamil BBC Tamil Sri Lanka guru news guru tamil news guru tamil news in sri lanka guru tv guru tv news gurutv.lk jvp tamil news sri lanka sri lanka news sri lanka news tamil sri lanka parliament sri lanka parliament news sri lanka tamil news tamil news in sri lanka Continue Reading Previous: HIV மற்றும் சிபிலிஸ் தொற்றுக்களை தடுத்தல் எனும் தொனிப்பொருளில் வருடாந்த மாவட்ட மீளாய்வுக் கூட்டம் கல்முனையில்!
நாட்டில் கட்டாய மதமாற்றம், சூனியம், மூடநம்பிக்கை ஆகியவற்றிற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டுள்ளது. இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இந்த வழக்கிற்கு தீர்ப்பளித்தது பற்றி விரிவாக பார்ப்போம். கட்டாய மதமாற்றம்: நாட்டில் கட்டாய மதமாற்றம், சூனியம் ஆகியவை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் ஈடுபடுபவர்களுக்கு சில மாநிலங்களில் தண்டனைகளும் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கர்நாடகா, மத்திய பிரதேசம், ஹரியானா, உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்கள் இதற்கு எதிராக சட்டங்களை இயற்றியுள்ளன. அதன்படி கட்டாய மதமாற்றம் செய்ய வைப்பவர்களுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்படுகிறது. ஆனாலும் சில மாநிலங்களில் அவ்வப்போது இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெற்று வருகிறது. Follow our Instagram for more Latest Updates இதனை தடுக்கும் விதமாக மாநில மற்றும் மத்திய அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு ஒன்று உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவை இன்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் விசாரித்த நிலையில், நாட்டில் கட்டாய மதமாற்றம் நாட்டு மக்களின் மதச் சுதந்திரத்தை பாதிக்கிறது அத்துடன் நாட்டின் பாதுகாப்பையும் பாதிக்கிறது. அதனால் மத்திய அரசு கட்டாய மத மாற்றத்திற்கு எதிராக உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழக பள்ளி ஆசிரியர்களுக்கு பறந்த உத்தரவு.. நடவடிக்கைகள் தீவிரம் – அரசு உத்தரவு! Exams Daily Mobile App Download மேலும் மத்திய அரசு இந்த விவகாரம் தொடர்பாக தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும் எனவும் கட்டாய மத மாற்றத்திற்கு எதிராக கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் கூறியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக வருகிற 22ம் தேதிக்குள் மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு எதிர் பிரமாண பத்திரிக்கை தாக்கல் செய்யவும் அறிவுறுத்தியுள்ளது.
மதுரை: நெல்லை மாவட்டத்தில் குவாரி ஒன்றில் கடந்த மே மாதம் நடந்த விபத்தில் 4 பேர் பலியாகினர். இதையடுத்து மாவட்டத்தில் உள்ள எல்லா குவாரிகளையும் மூட அரசு உத்தரவிட்டது.விதிகளை மீறி செயல்பட்ட குவாரிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், ‘‘அபராதம் விதித்ததை எதிர்த்து குவாரிகள் அரசிடம் முறையிடலாம். அதன் மீது நடவடிக்கை எடுக்கும் வரை குவாரிகள் செயல்படலாம் என்று உத்தரவிட்டார். Tags: Nellai District Quarries Icourt Branch நெல்லை மாவட்ட குவாரிகள் ஐகோர்ட் கிளை மேலும் செய்திகள் நாட்டுக்கோழி, பாக்கு தட்டு தயாரிப்பில் லாபம் ஈட்டும் பழங்குடியின மக்கள் கிண்ணக்கொரை சாலையில் காட்டு மாடுகள் நடமாட்டம் அதிகரிப்பு உடுமலையில் அதிமுக ஆட்சியில் அமைக்கப்பட்ட மக்கள் பயன்படுத்த தகுதியற்ற லிப்ட் நடைபாலம்: ரூ.1.75 கோடி நிதி வீணடிப்பு: சமூக ஆர்வலர்கள் வேதனை ஆண்டிபட்டி பகுதி பூக்களை சந்தைப்படுத்த ெசன்ட் தொழிற்சாலை அமைக்க வேண்டும்: அதிக வருவாய் ஈட்ட வழிவகை செய்ய வேண்டும் சேலத்தில் நடக்கும் புத்தகத் திருவிழாவிற்கு வந்த 3 லட்சம் பார்வையாளர்கள்: இதுவரை ரூ.2.60 கோடிக்கு புத்தகங்கள் விற்பனை சின்னமனூர் சந்தையில் மூட்டை மூட்டையாக காய்கறிகள் தேக்கம்: விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலை குஜராத் மாநிலம் சட்டசபை தேர்தலில் வாக்களிக்க ஆப்பிரிக்க மக்களுக்கென பிரத்யேக பூத்: உணவு, ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடிய மக்கள்..! புதுச்சேரியை அதிரவைக்கும் மக்களின் அழுகுரல்.. மணக்குள விநாயகர் கோயில் யானை உயிரிழப்புக்காக கதறும் பக்தர்கள்..!! சிற்பி திட்டத்தின் கீழ் மாணவ, மாணவியர்களுக்கான தேசப்பற்று குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி: அமைச்சர் அன்பில் மகேஷ் பங்கேற்பு
பேட்டில்ஃபிரண்ட் II முன்கூட்டிய ஆர்டர் ஊக்கத்தொகை ரே மற்றும் கைலோ ரென் மீது ஒரு பார்வை அளிக்கிறது, ஏனெனில் அவை ஸ்டார் வார்ஸில் தோன்றும்: கடைசி ஜெடி ரெட்டிட் பேட்டில்ஃபிரண்ட் II க்கான முன்கூட்டிய ஆர்டர் ஊக்கத்தை கண்டுபிடித்தார், இது ரே மற்றும் கைலோ ரென் ஆகியோரை ஸ்டார் வார்ஸ்: தி லாஸ்ட் ஜெடியில் தோன்றும் என்பதால் ஒரு பார்வை அளிக்கிறது. கிங்ஸ்லைவில் ஆரோன் பால் மற்றும் சீன் பீன் ஸ்டார்: இறுதி பேண்டஸி எக்ஸ்வி டிரெய்லர், ஆகஸ்டில் ஹிட் தியேட்டர்கள் காரணமாக சீன் பீன், ஆரோன் பால் மற்றும் லீனா ஹேடி ஆகியோர் சிஜி திரைப்படமான கிங்ஸ்க்ளேவ்: ஃபைனல் பேண்டஸி எக்ஸ்வி படத்தின் சமீபத்திய ட்ரெய்லரில் மிகப்பெரிய கற்பனை போரில் சிக்கியுள்ளனர். அற்புதமான ரசிகர் கலையில் குடியுரிமை ஈவில் கிராமத்தின் உயரமான பெண்மணி காங் மற்றும் காட்ஜில்லாவை எடுத்துக்கொள்கிறார் ஒரு வதிவிட ஈவில் கிராம ரசிகர், விளையாட்டின் வில்லத்தனமான லேடி டிமிட்ரெஸ்கு ஒரு கட்டிட அளவிலான அசுரன் என்று கற்பனை செய்துள்ளார். ரியான் ரெனால்ட்ஸ் கிட்டத்தட்ட இரண்டு வெவ்வேறு சந்தர்ப்பங்களில் ஃப்ளாஷ் விளையாடியுள்ளார் கிரீன் லான்டர்ன் என அவர் பொருந்துவதற்கு முன்பு, ரியான் ரெனால்ட்ஸ் கிட்டத்தட்ட தி ஃப்ளாஷ் மற்றும் ஒன்றுக்கு மேற்பட்ட சந்தர்ப்பங்களில் - ஒரு திரைப்படம் மற்றும் வீடியோ கேம் இரண்டிலும் நடித்தார். தானோஸ் டேக்ஸ் ஆன் காட் ஆஃப் வார்ஸ் க்ராடோஸ் இன் அற்புதமான அவென்ஜர்ஸ்: எண்ட்கேம் ஆர்ட் இன்ஸ்டாகிராம் பயனர் அபெக்ஸ்ஃபார்ம் மார்வெல் பேடி தானோஸ் மற்றும் காட் ஆஃப் வார்ஸ் க்ராடோஸுக்கு இடையிலான மோதல் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்துள்ளார். சோனிக் தி ஹெட்ஜ்ஹாக் ரசிகர்கள் பென் ஸ்வார்ட்ஸ் பாத்திரத்தை ஏற்க விரும்புகிறார்கள் நீண்டகால சோனிக் தி ஹெட்ஜ்ஹாக் குரல் நடிகர் ரோஜர் கிரேக் ஸ்மித் பதவி விலகினார் என்ற செய்தியைத் தொடர்ந்து, ரசிகர்கள் ஏற்கனவே ஒரு மாற்றீட்டை மனதில் கொண்டுள்ளனர். பேட்மேன் தினத்திற்கான திட்டங்களை டிசி வெளிப்படுத்துகிறது 2020 செப்டம்பர் 19 ஆம் தேதி பேட்மேன் தினத்திற்கான அனைத்து சிறப்பு நிகழ்வுகளையும் டிசி அறிவித்துள்ளது, மேலும் சில சிறப்பம்சங்களை நாங்கள் பார்ப்போம். ஒரு திரைப்படம் ஏன் ஒருபோதும் நடக்கவில்லை என்பதை இயக்குனர் விளக்குகிறார் கிளாசிக் விளையாட்டின் திட்டமிட்ட திரைப்பட பதிப்பு ஏன் விலகிவிட்டது என்பதை லாஸ்ட் ஆஃப் எஸ் இயக்குனர் நீல் ட்ரக்மேன் விளக்குகிறார். பங்கி ஐபிகளில் இருந்து திரைப்படங்களை உருவாக்க சோனி திட்டமிட்டுள்ளது 'சோனிக் ஹெட்ஜ்ஹாக் 2' நட்சத்திரம் பென் ஸ்வார்ட்ஸ், இட்ரிஸ் எல்பா நக்கிள்ஸ் போல் 'அற்புதம்' என்கிறார் 'இட் டேக்ஸ் டூ' கேம் டெவலப்பர்கள், டிவி/திரைப்படத்திற்கு கேமை மாற்றியமைக்க பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர் #BlackoutStarWarsEclipse மீண்டும் ட்ரெண்ட் ஆனது, ரசிகர்கள் லூகாஸ்ஃபில்ம் குவாண்டிக் ட்ரீம் உடனான உறவுகளை குறைக்க கோருகின்றனர் ருஸ்ஸோ சகோதரர்கள் தங்கள் தயாரிப்பு நிறுவனத்தில் $400 மில்லியன் பங்குகளை விற்கிறார்கள் ரஸ்ஸோ சகோதரர்கள் தங்கள் AGBO தயாரிப்பு நிறுவனத்தில் $400 மில்லியன் பங்குகளை கேம் டெவலப்பர்கள் Nexon க்கு விற்றுள்ளனர்.
தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, 9 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. இந்நிலையில் தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. விடுதலையான 4 பேர் இலங்கைக்கு அனுப்பப்படுவர் – கலெக்டர் பேட்டி! அதே போல் நாளைய தினத்தில் தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என கூறியுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதியில் அடுத்த 48 மணிநேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என கூறப்பட்டுள்ளது. Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
ஆயுர்வேதத்தில் நாள்பட்ட இருமல், ஆஸ்துமா மற்றும் ஆஸ்துமா தொடர்புடைய அறிகுறிகளை நிவர்த்தி செய்வதற்கு சீந்தில் கொடி பயன்படுத்தப்படுகிறது. சீந்தில் கொடி மூலிகையை ஒவ்வாமை எதிர்ப்புக்கு பயன்படுத்தலாம். ஆயுர்வேதத்தில் அம்ருதவல்லியை அஜீரணம் மற்றும் வயிறு வீக்கத்திற்கு மருந்தாக பயன்படுத்துகின்றனர். இதை ஆயுர்வேத நூல்களில் அம்ரிதா, சின்னரூஹா, மதுபானி, தந்திரிகா, குண்டலினி என்கிற பெயரால் குறிப்பிடுகிறார்கள். இலை, தண்டு, வேர் அனைத்தும் மருந்தாகிப் பயன்தரக்கூடிய குணம் கொண்டது சீந்தில். செரிமானமின்மை, வலி, சோர்வு ஆகியவற்றை குணமாக்கும் தன்மையுடையது. வயிற்றுப்போக்கை வற்றச் செய்வது. சீத பேதியைக் குணப்படுத்தக்கூடியது. ஆயுர்வேத மருத்துவ நூல்கள் உலர்ந்த சீந்திலை மஞ்சள் காமாலையை குணமாக்கவும், இரத்த சோகையைப் போக்கவும், அடிக்கடி சிறுநீர் கழிப்பதைத் தவிர்க்கவும், சரும நோய்களை குணமாக்கவும் பரிந்துரை செய்கிறது. சீந்தில் பொடியை நான்கு டம்ளர் நீர் விட்டு காய்ச்சி, பாதி அளவாக சுண்டிய பிறகு காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் பசியின்மை, வயிற்றுவலி, செரிமானமின்மை மற்றும் காய்ச்சலுக்கும் இது நல்ல மருந்து. சீந்தில் சர்க்கரையை ஒரு கிராம் முதல் நான்கு கிராம் வரையில் வாயிலிட்டு நீர் அருந்துவதால் கடும் ஜுரத்துக்கு பின் ஏற்படும் உடல் இளைப்பு, மண்ணீரல் வீக்கம், இருமல், மூர்ச்சை, வாந்தி, ஆஸ்துமா ஆகியன குணமாகும். மேலும் இதனால் நாட்பட்ட சிறுநீர்ப்பை நோய்களுக்கும் தீர்வு கிடைக்கும். சீந்தில் இலையை அனலில் இட்டு வாட்டி, இளஞ்சூட்டோடு புண்களின் மேல் போட்டுவர வீக்கம் கரைந்து வலி குறையும். புண்களும் ஆறிவிடும்.
ஹாங்ஜோ மற்றும் நிங்போ நகருக்கு இடையே உள்ள ஷாக்சிங் நகரின் ஷாங்யு மாவட்டத்தில் அமைந்துள்ளதால், போக்குவரத்து மிகவும் வசதியானது. க்லைட் அனைத்து வகையான உட்புற விளக்குகளையும் உருவாக்குதல், உற்பத்தி செய்தல் மற்றும் சந்தைப்படுத்துதல் ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்றது.எங்கள் தயாரிப்பு வரம்புகள் 5 முக்கிய தொடர்களை உள்ளடக்கியது: மேசை விளக்கு, தரை விளக்கு, LED விளக்கு, பதக்க விளக்கு மற்றும் சுவர் விளக்கு, இவை 8 ஆண்டுகளாக ஐரோப்பா, வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. தொடர்பு பெறவும் எங்கள் தயாரிப்புகளில் பெரும்பாலானவை சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்றுள்ளன: CE, RoHS, ETL, Erp மற்றும் BSCI.உயர் தரம், சிறந்த விலை மற்றும் நல்ல சேவை ஆகியவை KLIGHT இன் வணிகக் கோட்பாடு ஆகும்.எனவே, பிரான்ஸ், போலந்து, யுகே, அமெரிக்கா போன்ற நாடுகளைச் சேர்ந்த எங்கள் முக்கிய வாடிக்கையாளர்களுடன் நீண்ட கால வணிக உறவுகளை நாங்கள் உருவாக்கியுள்ளோம். தொடங்குங்கள் பிரகாசமான எதிர்காலத்திற்காக எங்களுடன் இணைய உலக வாடிக்கையாளர்களை அன்புடன் வரவேற்கிறோம்.உங்கள் வெற்றி எங்கள் வெற்றி!
நேற்று தனது பேரப்பிள்ளைகள் மற்றும் மகளுடன் தீபாவளியை ரஜினிகாந்த் கொண்டாடிய புகைப்படங்கள் வெளியாகி வாழ்த்து பெற்று வருகிறது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மக ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் பிரபல நடிகர் தனுஷும் 18 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்டனர். இவர்களது காதல் திருமணத்தின் பரிசாக யாத்ரா, லிங்கா என இரு பிள்ளைகள் உள்ளனர். மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்த இவர்களது திருமண வாழ்க்கை சமீபத்தில் பிரிவை சந்தித்தது. தோளுக்கு மேல் வளர்ந்த பிள்ளைகள் இருக்கையில் இருவரும் விவாகரத்து பெறுவது குறித்து பலரும் அதிருப்தி தெரிவித்திருந்தனர். ஆனாலும் யாருடைய பேச்சையும் கேட்பதாக இல்லை இவர்கள். ஆனாலும் பிள்ளைகளுக்காக அவ்வப்போது ஒரே இடத்தில் கூடி வந்தனர் ஐஸ்வர்யாவும், தனுஷும். பிள்ளை மீது அலாதியான அன்பு கொண்ட இவர்களின் புகைப்படங்கள் அவ்வப்போது வெளியாவது வழக்கமாகிவிட்டது. aishwarya rajinikanth சமீபத்தில் ரஜினிகாந்தின் வீட்டில் இவர்கள் மீண்டும் இணைவது குறித்து பேச்சு வார்த்தை நடைபெற்றதாகவும் .அதற்கு இந்த தம்பதிகள் ஓரளவு சம்மதம் தெரிவித்ததாகவும் தகவல் வெளியாக இருந்தது . aishwarya rajinikanth முன்னதாக ப்ரோமோஷன் விழாக்களுக்கு மற்றும் இசை விழாக்களுக்கு தனது மகன்களுடன் வந்த தனுஷ் மற்றும் தன் பிள்ளைகளுடன் விநாயகர் சதுர்த்தி போன்ற விழாக்களை கொண்டாடும் ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் புகைப்படங்கள் வெளியாகி வந்தது. aishwarya rajinikanth இந்நிலையில் நேற்று கொண்டாடப்பட்ட தீபாவளியை ரஜினிகாந்த் தனது பேரப்பிள்ளைகள் மற்றும் மகளுடன் கொண்டாடிய புகைப்படங்கள் வெளியாகி வாழ்த்து பெற்று வருகிறது. Follow Us: Download App: RELATED STORIES தயாரிப்பாளர் G. தனஞ்ஜெயன் மகள் ரேவதி- அபிஷேக் திருமணத்திற்கு 100க்கும் மேற்பட்ட பிரபலங்கள் நேரில் வாழ்த்து! இரண்டே நாளில் காதலை சொன்ன மஞ்சிமா மோகன்..! செய்தியாளர்கள் முன்னிலையில் உண்மையை உடைத்த கெளதம் கார்த்திக்! அனைத்து திரைப்படங்களையும் ரெட்ஜெயண்ட் கட்டாயப்படுத்தி வாங்குகிறதா? விஷ்ணு விஷால் விளக்கம்!! 'எதிர் நீச்சல்' சீரியலில் இருந்து விலகிய முக்கிய பிரபலம்? கமிட்டான 'பாரதி கண்ணம்மா' சீரியல் நடிகர்! பலரின் பாவத்தை சம்பாதித்தால் இப்படி ஆகிடுச்சுனு தோணுது? உடல் நலம் குறித்து முதல் முறையாக பேசிய வேணு அரவிந்த்! Top Stories அரசுப் பேருந்துகளில் 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுத்தால் நடவடிக்கை... போக்குவரத்து கழகம் எச்சரிக்கை!! தயாரிப்பாளர் G. தனஞ்ஜெயன் மகள் ரேவதி- அபிஷேக் திருமணத்திற்கு 100க்கும் மேற்பட்ட பிரபலங்கள் நேரில் வாழ்த்து! இரண்டே நாளில் காதலை சொன்ன மஞ்சிமா மோகன்..! செய்தியாளர்கள் முன்னிலையில் உண்மையை உடைத்த கெளதம் கார்த்திக்! வட்டி தள்ளுபடியுடன் கடன் வசதி பெறும் திட்டம்... பயன்பெறுவது எப்படி? வேளாண்மை உழவர் நலத்துறை விளக்கம்!! அனைத்து திரைப்படங்களையும் ரெட்ஜெயண்ட் கட்டாயப்படுத்தி வாங்குகிறதா? விஷ்ணு விஷால் விளக்கம்!! Recent Videos Watch : சென்னை மாநாகர் பேருந்துகளில் ஆபத்தான முறையில் பயணம் செய்யும் மாணவர்கள்! Watch : தாரம்பரம் அருகே சிக்னல் கோளாறு! - மின்சார ரயில்கள் நிறுத்தம்! Watch : கோவையில் பட்டப்பகலில் வீடு புகுந்து பெண்ணிடம் தங்க நகையை பறித்துச் சென்ற நபர்! சிசிடிவி காட்சிகள்!
அதிசயம் (24) அரசியல் (21) இஸ்லாம் (80) உடல் நலம் (49) எச்சரிக்கை (16) சமூக பார்வை (84) சொதப்பல் (14) பயனுள்ள-தகவல் (12) பெண்கள் (49) மருத்துவம் (6) வரலாறு (9) Comedy (14) Job opportunities (13) Technology (8) திங்கள், அக்டோபர் 31, 2011 குடும்பத்தை பிளவுபடுத்தும் பாவிகள்1 ஏகஇறைவனின் திருப்பெயரால் குடும்பத்தை பிளவுபடுத்தும் பாவிகள் فَيَتَعَلَّمُونَ مِنْهُمَا مَا يُفَرِّقُونَ بِهِ بَيْنَ الْمَرْءِ وَزَوْجِهِ ٌ ‘…..அவர்களிடமிருந்து கணவன் மனைவியரிடையே பிரிவை உண்டாக்கும் செயலை கற்றுக் கொண்டார்கள்’. (அல்குர்ஆன் 2:102) குடும்ப வாழ்க்கையின் அவசியம் குறித்து நாம் நன்றாகவே அறிந்து வைத்திருக்கிறோம். நமது குடும்பத்தில் எப்போதும் மகிழ்ச்சியும் நல்லுறவும் நீடிக்க வேண்டும் என்றெல்லாம் ஆசைப்படுகிறோம். ஆனால் மற்றவர்களின் குடும்பங்களைப் பற்றி நமக்கு இத்தகைய நல்லெண்ணம் இருப்பதில்லை. ஒரு ஆணைப் பற்றியோ பெண்ணைப் பற்றியோ ஏதேனும் சிறு குறை நமக்குத் தெரியவந்தால் நம்மால் இயன்ற அளவுக்கு அதைப் பெரிதாக்குகிறோம். கணவனின் குறையை மனைவியிடமும் மனைவியின் குறையைக் கணவனிடமும் பன்மடங்கு அதிகப்படுத்தி பற்ற வைக்கிறோம். இருக்கின்ற குறைகளை மட்டுமின்றி இல்லாத வதந்திகளையும் கூட உண்மை போல சித்திரித்து அதனைப் பரப்புவதில் இன்பம் காண்கிறோம். இதனால் நமக்கு கிடைக்கும் லாபம் என்ன? நன்மை என்ன? ஒன்றுமே இல்லை. ஆனாலும் இச்செயலில் ஈடுபடுவதில் அளவிலாத ஆனந்தம் அடைகிறோம். நமது குடும்பத்தைப் பற்றிப் பரப்பப்படும் வதந்திகளால் நமது நிம்மதி குறைந்தால் நமது நிலை என்ன? அதே நிலையைத் தானே மற்றவர்களும் அடைவார்கள் என்றெல்லாம் நாம் சிந்திப்பதில்லை. இந்த விஷயத்தில் ஆண்களைவிட பெண்கள் பலபடிகள் மேலே உள்ளனர். ஒரு பெண்ணின் குறைகளைப் பெரிதுபடுத்துவதிலும் வதந்திகளைப் பரப்புவதிலும் இவர்களுக்குக் கிடைக்கும் ஆனந்தமே அலாதியானது. மற்றவர்கள் இவ்வாறு நடந்து கொள்வதில் ஆச்சரியம் ஏதுமில்லை. ஆனால் மறுமை வாழ்க்கையைப் பூரணமாக நம்பக்கூடியவர்கள் இந்தச் செயலின் பயங்கர விளைவுகளைப் பற்றி அறிந்து கொண்டால் குடும்பங்களைப் பிரிக்கின்ற கொடுஞ்செயலில் இறங்க மாட்டார்கள். இத்தகைய மக்களுக்கு இந்த வசனத்தில் போதுமான எச்சரிக்கை இருக்கிறது. குடும்பங்களுக்கிடையே பிளவு ஏற்படுவது ஷைத்தானின் செயல்பாடுகள் என்று இவ்வசனம் கூறுகிறது. இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோருக்கு மறுமையில் எந்தப் பாக்கியமும் கிடையாது என்று இவ்வசனம் கடுமையாக எச்சரிக்கிறது. மனிதர்கள் செய்யும் காரியங்களில் மகா கெட்ட காரியம் இது எனவும் இவ்வசனம் அறிவுறுத்துகிறது. எந்தச் செயலில் ஷைத்தான் அதிகமாக திருப்தியடைகிறானோ அந்தச் செயல் அல்லாஹ்வின் கடும் கோபத்திற்குரியதாகும் என்பதை நாம் அறிவோம். ஷைத்தான்கள் மிகமிக மகிழ்ச்சியடையும் காரியங்களில் முதலிடம் தம்பதியருக்கிடையே பிளவை ஏற்படுத்தும் இந்தச் செயலுக்கே உள்ளது. இதைப் பின்வரும் நபிமொழியிலிருந்து நாம் அறிந்து கொள்ளலாம். (ஷைத்தான்களின் தலைவனாகிய) இப்லீஸ் தனது சிம்மாசனத்தை தண்ணீரில் அமைத்துக் கொள்கிறான். அங்கிருந்து கொண்டு (மக்களை வழி கெடுப்பதற்காக) தனது படையினரை அனுப்புகிறான். பெரிய அளவில் குழப்பம் ஏற்படுத்துபவரே அவனுக்கு நெருக்கமானவர்களாக இருப்பார்கள். ஒரு ஷைத்தான் வந்து நான் இன்னின்ன காரியங்களைச் செய்தேன் என்று இப்லீசிடம் கூறுவான். அதற்கு இப்லீஸ் ‘நீ ஒன்றுமே செய்யவில்லை’ எனக் கூறுவான். மற்றொரு ஷைத்தான் வந்து ‘நான் கணவன் மனைவிக்கிடையே பிரிவை ஏற்படுத்தி விட்டேன்’ என்பான். அதைக் கேட்ட இப்லீஸ் அவனைத் தன்னருகில் நிறுத்திக் கொள்வான். நீயே சிறந்தவன் எனவும் கூறுவான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி), நூல்: புகாரி) இப்லீஸ் மிகவும் மகிழ்ச்சியடையும் காரியம் செய்பவர்கள் கணவன் மனைவியரிடையே பிரிவை ஏற்படுத்துவோர் தான் என்பதைவிட கடுமையான எச்சரிக்கை வேறு என்ன இருக்க முடியும்? இத்தகைய காரியத்தில் ஈடுபடுவோர் தாங்கள் ஷைத்தானுக்குத் துணை செய்கின்றனர் என்பதை உணர வேண்டும். மற்றொரு நபிமொழியைப் பாருங்கள்! ‘அல்லாஹ்வின் அடியார்களில் மிகவும் கெட்டவர்கள் கோள் சொல்லித் திரிபவர்களும் நேசமாக இருப்பவர்களிடையே பிரிவை ஏற்படுத்துபவர்களும் தான்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துர்ரஹ்மான் பின் கனம் (ரலி), நூல்: அஹ்மத் அன்னியோன்யமாக இருப்பவர்களைப் பிரிப்பது தான் அல்லாஹ்வுக்கு மிகவும் வெறுப்பூட்டும் என்பதை இதிலிருந்து உணரலாம். மேலும் கோள் சொல்லித் திரிபவர்கள் சொர்க்கத்தில் நுழைய முடியாது என்றும் நபி (ஸல்) அவர்கள் எச்சரித்துள்ளார்கள். (புகாரி) அன்னியோன்யமாக இருப்பவர்கள் என்பது பலதரப்பினரைக் குறிக்கும் என்றாலும் கணவன் மனைவியர் தான் இதில் முதலிடம் வகிப்பவர்கள். அவர்களுக்கிடையே உள்ள நெருக்கம் வேறு எவருக்கிடையேயும் இருக்க முடியாது. மேலும் இல்லாத குற்றங்களைக் கற்பனை செய்து வதந்திகளைப் பரப்பி குடும்பங்களைப் பிரிப்பதையும் நபி (ஸல்) அவர்கள் வன்மையாகக் கண்டித்துள்ளனர். கற்பனை செய்வதை விட்டும் உங்களை எச்சரிக்கிறேன். கற்பனை செய்வது தான் மிகப் பெரிய பொய்யாகும். மேலும் பிறர் குறைகளைத் துருவித் துருவி ஆராயாதீர்கள் என்பதும் நபிமொழி. (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: அஹ்மத்) நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பெண்களாகிய எங்களிடம் உறுதிமொழி எடுத்தனர். நாங்கள் இட்டுக் கட்டி அவதூறுகளைப் பரப்புவது கூடாது என்பதும் அந்த உறுதி மொழியில் அடங்கும். (அறிவிப்பவர்: உமைமா பின்த் ரகீகா, நூல்: அஹ்மத்) குடும்பங்களில் பிரிவை ஏற்படுத்துவதில் முக்கியப்பங்கு அவதூறுக்கு உண்டு. கற்பொழுக்கமுள்ள பெண்களைப் பற்றி அவதூறு கூறுவது எந்த அளவுக்கு குற்றமாகக் கருதப்படுகிறது என்றால் அவ்வாறு அவதூறு கூறுவோர் ஆண்களாக இருந்தாலும் பெண்களாக இருந்தாலும் அவர்களுக்கு 80 கசையடிகள் அளிக்கப்பட வேண்டும் என்று திருக்குர்ஆன் (24:04) கூறுவதிலிருந்து புரிந்து கொள்ளலாம். ஒரு பெண் மீது களங்கம சுமத்துவோர் இதற்கு நான்கு நேரடி சாட்சிகளைக் கொண்டு வந்து நிறுத்த வேண்டும் எனவும் அந்த வசனம் (24:04) கூறுகிறது. ஒரு பெண்ணின் தவறான நடத்தையை ஒருவர் அல்லது இருவர் அல்லது மூவர் நேரடியாகக் கண்டால் கூட அதை அவர்கள் பகிரங்கப்படுத்தினால் அவர்கள் அவதூறு கூறியவர்களாகவே கருதப்படுவார்கள். அவதூறின் காரணமாக ஒரு பெண்ணின் வாழ்க்கை பாதிக்கும். குடும்பம் பிளவுபடும். அதை அறவே தவிர்ப்பதற்காகத் தான் இதற்கு மட்டும் நான்கு சாட்சிகள் தேவை என்று குர்ஆன் கூறுகிறது. ஏனைய எந்தக குற்றச் செயலுக்கும் இரண்டு சாட்சிகள் போதும் எனக்கூறும் இஸ்லாம் இந்த விஷயத்தில் மட்டும் நான்கு சாட்சியம் தேவை எனக் கூறுவது ஏன் என்பதை நாம் சிந்திக்க கடமைப்பட்டுள்ளோம். நேருக்கு நேர் கண்ட நடத்தை கெட்ட செயலைக் கூட பரப்பக்கூடாது. குறைந்த பட்சம் நான்கு பேருக்கு முன்னிலையில் நடந்தால் மட்டுமே அது குறித்துப் பேசவேண்டும் என்று இஸ்லாம் கூறுகிறது. ஒரு பெண்ணிடம் நாம் கண்ட இழிசெயலையே கூறக்கூடாது என்றால் இல்லாத ஒன்றைக் கற்பனை செய்து கூறி பெண்ணின் வாழ்க்கையைப் பாழாக்குவது எவ்வளவு பெரிய குற்றம் என்பதை சொல்லத் தேவையில்லை. ஒரு வீட்டிலிருந்து ஒரு ஆண் வெளியே வருவதைக் காண்கிறோம். அவன் எதற்குச் சென்றான் என்பது நமக்குத் தெரியாது. உள்ளே வேறு யாரெல்லாம் இருந்தார்கள் என்பதும் நமக்குத் தெரியாது. ஆனால் இந்தக் காட்சிக்கு கண், காது, மூக்கு வைத்து ஊரெல்லாம் பரப்பி விடுகிறோம். இஸ்லாமிய ஆட்சி நடந்தால் நமக்கு 80 கசையடி வழங்கப்பட்டிருக்கும். இவ்வளவு பெரிய குற்றத்தை சர்வ சாதாரணமாக நாம் செய்து வருகிறோம். தன் மீது இப்படி ஒரு பழி சுமத்தப்பட்டால் தனது நிலை என்ன என்று எந்த பெண்ணும் சிந்திப்பதில்லை. தன் குடும்பத்துப் பெண்கள் மீது இத்தகைய அவதூறு பரப்பப்பட்டால் தனது நிலை என்ன என்பதை எந்த ஆணும் உணர்ந்ததாகத் தெரியவில்லை. இன்னும் சொல்வதாக இருந்தால் தம்பதியரிடையே மனக்கசப்பு இருந்தால் அதை நீக்கி இருவருக்கிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதே முஸ்லிம்களின் பணியாக இருக்க வேண்டும். இந்தப் பணிக்காக பொய் கூட கூறலாம் என்று இஸ்லாம் கூறுகிறது. மனிதர்களிடையே நல்லிணக்கம் ஏற்படுத்துவதற்காக ஒருவர் எதைக் கூறினாலும் அவர் பொய்யரல்ல என்பது நபிமொழி. அறிவிப்பவர்: உம்மு குல்சூம் (ரலி), நூல்கள்: அஹ்மத், புகாரி பிரிந்து கிடப்பவர்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்துவதற்காக பொய்களைக் கூட கூறலாம் என்றால் இணக்கம் ஏற்படுத்துவது எந்த அளவு இறைவனுக்கு உகந்தது என்பதை அறிந்து கொள்ளலாம். இறைவன் தனக்குப் பிடிக்காத பொய்யைக் நட நல்லிணக்கம் ஏற்படுத்துவதற்காக அனுமதிக்கிறான். இந்த நல்ல நோக்கத்திற்காகத் தான் நாம் கற்பனை செய்யலாம். கசப்பை நீக்க உதவும் எத்தகைய பொய்யையும் கூறலாம். ஆனால் நாமோ பிரிப்பதற்காக இதைச் செய்து கொண்டிருக்கிறோம். தொழுகை, நோன்பு, தர்மம் ஆகிய காரியங்களை இறைதிருப்திக்காக நாம் செய்கிறோம். மறுமையில் நல்ல நிலையைப் பெறுவதற்காக இந்தக் காரியங்களில் ஏற்படும் சிரமங்களைச் சகித்துக் கொள்கிறோம். இதை விட சிறந்த காரியம் ஏதும் இருக்க முடியுமா? இருக்கிறது அதுதான் குடும்பத்தார்களிடையே நல்லுறவை ஏற்படுத்துவது. நோன்பு, தொழுகை, தர்மம் ஆகியவற்றுக்காக கிடைக்கும் மதிப்பை விட சிறந்த மதிப்பைப் பெற்றுத் தரும் ஒரு காரியத்தை நான் உங்களுக்குக் கூறட்டுமா என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். நபித்தோழர்கள் ஆம் என்றனர். அது தான் குடும்பத்தில் நல்லிணக்கம் ஏற்படுத்துதல் என்று நபி (ஸல்) அவர்கள் விளக்கம் அளித்தனர். மேலும் குடும்பங்களில் பிளவை ஏற்படுத்துவது நல்லறங்களை அழித்து விடக்கூடியது எனவும் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபுத்தர்தா (ரலி), நூல்கள்: திர்மிதி, அபூதாவூத்) ஆகவே பிரிந்தவர்களைச் சேர்த்து வைப்போம். நல்லறங்களைப் பாழாக்கும் குடும்பப் பிரிவினை செய்வதைத தவிர்ப்போம். இதப்பற்றி விளங்கியவர்கள் கருத்துத் தெரிவிக்கவும் நன்றி;;http://islamthalam.wordpress.com இடுகையிட்டது PMsyed நேரம் 10/31/2011 12:49:00 பிற்பகல் 11 கருத்துகள்: இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Twitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர் லேபிள்கள்: சமூக பார்வை திருமணத்தில் பெண்களின் உரிமைகள் ஏகஇறைவனின் திருப்பெயரால் ‘நம்பிக்கை கொண்டவர்களே! பெண்களைக் கட்டாயப்படுத்தி அவர்களுக்கு வாரிசாக ஆவது உங்களுக்கு ஹலால் (அனுமதி) இல்லை. அவர்கள் பகிரங்கமாக மானக்கேடான செயலில் ஈடுபட்டால் தவிர அவர்களுக்கு நீங்கள் கொடுத்ததில் சிலவற்றை எடுத்துக் கொள்வதற்காக அவர்களைத் தடுத்து வைத்துக் கொள்ளாதீர்கள்! அவர்களுடன் நல்ல முறையில் இல்லறம் நடத்துங்கள்! நீங்கள் அவர்களை வெறுத்தால் நீங்கள் வெறுக்கும் ஒன்றில் அல்லாஹ் ஏராளமான நன்மைகளை ஏற்படுத்தி விடக் கூடும்’ (அல்குர்ஆன் 4:19) பெண்களின் உரிமைகள் குறித்து மூன்று கட்டளைகள் இவ்வசனத்தில் அடங்கியுள்ளன. இம்மூன்று கட்டளைகளையும் இக்கட்டளைகள் பிறப்பிக்கப்பட்ட காரணத்தையும் அறிந்து கொண்டால் பெண்களின் உரிமையைக் காப்பதில் இஸ்லாம் காட்டும் அக்கறையைப் புரிந்து கொள்ளலாம். முதலாவது கட்டளைக்குள் இரு செய்திகள் அடங்கியுள்ளன. இதன் நேரடியான பொருளைப் பார்க்கும் போது பெண்களைக் கட்டாயப்படுத்தி மணந்து கொள்ளக் கூடாது என்ற கருத்தை அது கூறுகிறது. இவ்வசனம் எந்த சந்தர்ப்பத்தில் அருளப்பட்டது என்பதைப் பார்க்கும் போது மற்றொரு செய்தியையும் சேர்த்துச் சொல்கிறது. எந்த ஒரு வசனமாக இருந்தாலும் அதன் நேரடியான பொருளையும் எது குறித்து அருளப்பட்டதோ அந்தக் கருத்தையும் அவ்வசனம் சேர்த்துக் கூறுவதாகத் தான் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தச் சந்தர்ப்பத்தில் இவ்வசனம் அருளப்பட்டது என்பதைப் பார்க்கும் முன் இதன் நேரடியான பொருளை ஆய்வுக்கு எடுத்துக் கொள்வோம். இஸ்லாம் மார்க்கம் அருளப்படுவதற்கு முன்னால் உலகில் எந்தச் சமுதாயத்திலும் எந்தப் பகுதியிலும் திருமணத்தின் போது பெண்களின் விருப்பம் கேட்கப்படுவதில்லை. கவனத்தில் கொள்ளப்படுவதில்லை. இந்த நாகரீக உலகில் கூட பல பகுதிகளில் பெண்களின் சம்மதம் பெறப்படாமல் கட்டாயக் கல்யாணம் நடத்தி வைக்கப்படுவதைக் காண்கிறோம். இருபதாம் நூற்றாண்டில் கூட பெண்களுக்கு இந்த உரிமை வழங்கப்படவில்லை என்றால் ஆயிரத்தி நானூறு ஆண்டுகளுக்கு முன்னால் இது யாராலும் கற்பனை கூட செய்து பார்க்க முடியாததாகத் தான் இருந்திருக்கும். இத்தகைய காலகட்டத்தில் பெண்களைக் கட்டாயப்படுத்தி மண்ந்து கொள்வது ஹலால் இல்லை. அனுமதி இல்லை என்று திருக்குர்ஆன் பிரகடனம் செய்கிறது. இவ்வாறு பிரகடனம் செய்யப்பட வேண்டும் என்று பெண்கள் தரப்பிலிருந்து கோரிக்கையோ போராட்டமோ நடத்தப்படாத கால கட்டத்தில் இஸ்லாம் தன்னிச்சையாக – உலகிலேயே முதன் முறையாக – இந்த உரிமையை வழங்குகிறது. திருமறைக் குர்ஆனுக்கு விளக்கமாக வாழ்ந்து காட்டிய நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஏராளமான பொன்மொழிகளும் இந்த உரிமையை வலிமையுடன் வற்புறுத்தும் வகையில் அமைந்துள்ளன. விதவைப் பெண்ணாக இருந்தாலும் அவளது சம்மதம் பெற வேண்டும். கன்னிப் பெண்ணாக இருந்தாலும் அவளது சம்மதம் பெற வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம், அபூதாவூத், திர்மிதி, நஸயீ, அஹ்மத், தாரிமி, தாரகுத்னீ, தப்ரானீ) புகாரியின் மற்றொரு அறிவிப்பில் ‘அல்லாஹ்வின் தூதரே! கன்னிப் பெண்ணிடம் எவ்வாறு அனுமதி பெறுவது? என்று நபித்தோழர்கள் கேட்டனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள் அவளது மௌனமே சம்மதமாகும் என விடையளித்தார்கள். கன்னிப் பெண் தனது சம்மதத்தைத் தெரிவிக்க வெட்கப்படுவாள். அதே சமயம் தனக்குப் பிடிக்கவில்லை என்றால் அதைச் சொல்வதற்கு வெட்கப்படமாட்டாள். பெண்களின் இந்த இயல்பைக் கவனத்தில் கொண்டுதான் கன்னிப் பெண்ணின் மௌனத்தைச் சம்மதமாக எடுத்துக் கொள்ளுமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வழிகாட்டுகிறார்கள். பெண்களுக்கு ஆன்மா இருக்கிறதா என்று விவாதம் நடத்திக் கொண்டிருந்த காலத்தில் தான் இந்தப் புரட்சியை இஸ்லாம் நிகழ்த்திக் காட்டியது. இதைவிடவும் வலிமையாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வலியுறுத்துவதைக் கவனியுங்கள்! ‘கணவன் இல்லாதவள் (திருமணம் ஆகாதவள், கணவனால் விவாகரத்துச் செய்யப்பட்டவள், கணவனை இழந்தவள் ஆகிய மூவரையும் இவ்வார்த்தை உள்ளடக்கும்) தனது பொறுப்பாளனை விட தன் விஷயமாக முடிவு செய்ய அதிக உரிமை படைத்தவளாவாள். கன்னிப் பெண்ணிடமும் சம்மதம் பெறப்பட வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: முஸ்லிம்) ஒவ்வொரு பெண்ணும் தனது விஷயத்தில் தானே அதிக உரிமை படைத்தவள். பெற்றவர்களை விட அவளே தன் விஷயமாக முடிவு செய்யும் அதிகாரம் படைத்தவள் என்று இருபதாம் கூற்றாண்டில் கூட சொல்ல முடியவில்லை – என்பதை நினைத்துப் பார்க்கும் போது முஸ்லிம் பெண்களின் உரிமை பற்றி நீலிக்கண்ணீர் வடிக்கும் தறுதலைப் பெண்டிரின் தீய நோக்கத்தை நாம் புரிந்து கொள்ள முடியும். இதை விடவும் வலிமையாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இந்த உரிமையை எப்படி வலியுறுத்துகிறார்கள் என்பதைப் பாருங்கள். ‘அவள் மறந்து விட்டால் அவள் மீது வரம்பு மீறுதல் யாருக்கும் கிடையாது’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: அபூதாவூத்) ஒரு பெண்ணுக்கு விருப்பமில்லாதவருடன் அவரது பெற்றோர் மணமுடித்து வைத்து விட்டால் அந்தத் திருமணம் செல்லாது என்று உலகின் முதன் முதலாகப் பிரகடனம் செய்த மார்க்கம் இஸ்லாம் மட்டுமே. கன்ஸா என்ற விதவைப் பெண்ணை அவரது தந்தை கிதாம் என்பாருக்கு மணமுடித்து வைத்தார். ஆனால் கன்ஸாவுக்கு இதில் விருப்பமில்லை. அவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து முறையிட்டார். உடனே நபி (ஸல்) அவர்கள் அவரது திருமணத்தை ரத்துச் செய்தார்கள். (அறிவிப்பவர்: அப்துர்ரஹ்மான், நூல்: புகாரி) என்னிடம் ஒரு இளம் பெண் வந்தார். ‘என் தந்தை தனது சகோதரர் மகனுக்கு என்னை மணமுடித்து விட்டார். அதில் எனக்கு விருப்பமில்லை’ என்று என்னிடம் முறையிட்டார். நபி (ஸல்) அவர்கள் வரும் வரை இங்கேயே அமர்வாயாக என்று நான் கூறினேன். நபி (ஸல்) அவர்கள் வந்ததும் அவரது தந்தையை அழைத்து வரச் செய்தார்கள். (விசாரித்த பின்) அந்தப் பெண்ணிடமே முடிவெடுக்கும் அதிகாரத்தை அளித்தார்கள். (அதாவது உனக்கு விருப்பமிருந்தால் அவருடன் வாழலாம். விருப்பமில்லா விட்டால் திருமணம் ரத்தாகிவிடும் என்றார்கள்.) அதற்கு அப்பெண் ‘அல்லாஹ்வின் தூதரே! என் தந்தையின் முடிவை நான் ஏற்றுக் கொள்கிறேன். பெண்களுக்கு இந்த விஷயத்தில் அதிகாரம் உள்ளது என்பதை மற்றவர்களுக்கு அறிவிக்கவே நான் வந்தேன் என அப்பெண் கூறினார். (அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: நஸயீ) இந்தச் சான்றுகளிலிருந்து இரண்டு செய்திகளை நாம் அறிந்து கொள்ளலாம். பெற்றோர்கள் தங்கள் மக்களை ஒரு உணர்வற்ற பொருளாகக் கருதக் கூடாது. அவர்கள் இஸ்லாமிய வட்டத்துக்கு உட்பட்டு எந்த மணமகனை விரும்பினாலும் அவருடன் மண முடித்து வைக்க வேண்டிய கடமை அவர்களுக்கு இருக்;கிறது. பிடிக்காதவனுடன் வாழ்க்கை நடத்துவதால் மகிழ்ச்சியும் தொலைந்து போய்விடும். பெண்கள் வழி தவறிச் செல்லவும் இது பாதையை ஏற்படுத்தும் என்பதைப் பெற்றோர்கள் புரிந்து கொள்ள வேண்டும். இஸ்லாம் வழங்கியுள்ள உரிமையைப் பறிக்கும் அதிகாரம் தங்களுக்குக் கிடையாது என்பதை அவர்கள் உணர வேண்டும். விருப்பமில்லாதவனுக்கு ஒரு பெண் முடிக்கப்பட்டால் அவள் சமுதாயப் பெரியவர்களிடம் ஊர் ஜமாஅத்துகளிடம் அதை தெரிவிக்கும் நிலைமை ஏற்படுத்தப்பட வேண்டும். அதிகாரத்தைப் பயன்படுத்தி நடந்த திருமணத்தை ரத்துச் செய்து உத்தரவிட வேண்டும். பெண்களின் உரிமையைப் பெற்றோர் பறிக்கும் போது சமுதாயம் அதை மீட்டுக் கொடுக்க வேண்டும். இந்த இடத்தில் ஒரு விஷயத்தைப் பெண்கள் தங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். யார் தனக்கு வாழ்க்கைத் துணைவனாக வர வேண்டும் என்பதையும் யார் வரக்கூடாது என்பதையும் முடிவு செய்யும் அதிகாரத்தை இஸ்லாம் பெண்களுக்கு வழங்கினாலும் தாமாக ஓடிப்போய் மணந்து கொள்ளக் கூடாது. அந்த உரிமையைப் பெற்றோர் வழியாகவும் அவர்கள் மறுத்தால் பெரியோர்கள், சமுதாய இயக்கம் வழியாகத் தான் பெற வேண்டும். ஏனெனில் பொறுப்பாளர் இன்றி ஒரு பெண் திருமணம் செய்யக் கூடாது என்றும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டுள்ளார்கள். (இது குறித்து மற்றொரு இடத்தில் விரிவாக விளக்கப்படும்.) பெண்களை மணந்து கொள்வதாக ஏமாற்றி அனுபவித்து விட்டு வீதியில் வீசி எறிந்து விட்டு செல்லக்கூடிய மனநிலை தான் பெரும்பாலான ஆண்களுடையது. பொருப்பாளர் முன்னிலையில் அவர் நின்று நடத்தும் போது ஏமாற்றி விடாமல் இருக்க தக்க ஏற்பாடுகளைச் செய்து கொள்வார். இது பெண்களின் எதிர்காலத்துக்கு பாதுகாப்பாக அமையும். இதைக் கவனத்தில் கொள்ளாது வாழ்க்கையை நாசமாக்கிக் கொண்ட அபலைகள் ஏராளம் உள்ளனர் என்பதைப் பெண்கள் எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும். பெண்களைக் கட்டாயப் படுத்தி அவர்களுக்கு வாரிசாகுவது ஹலால் இல்லை என்ற ஒற்றை வரியில் இவ்வளவு செய்திகள் அடங்கியுள்ளன. இவ்வசனம் எந்தச் சமயத்தில் அருளப்பட்டது என்பதை அறிந்து கொண்டால் இந்த வரியில் அடங்கியுள்ள மற்றொரு அறிவுரையையும் நாம் விளங்கிக் கொள்ளலாம். ஒருவர் மரணித்து விட்டால் இறந்தவரின் குடும்பத்தார் தான் அவரது மனைவி விஷயத்தில் அதிகாரம் படைத்தவர்களாக இருந்து வந்தனர். கணவனின் உறவினர்கள் விரும்பினால் தாமே அவளை (வலுக்கட்டாயமாக) மணந்து கொள்வர். விருப்பமில்லா விட்டால் அவளுக்கு வேறு யாரையும் மணமுடிக்க மாட்டார்கள். அவளது குடும்பத்தினரை விட கணவனின் குடும்பத்தினரே பெண் விஷயத்தில் உரிமை படைத்தவர்கள் என்ற நிலை இருந்தது. இதை மாற்றவே இவ்விசனம் அருளப்பட்டது என்று இப்னு அப்பாஸ் (ரலி) கூறினார்கள். (அறிவிப்பவர்: இக்ரிமா, நூல்: புகாரி) கணவன் இறந்த பிறகு கூட பெண் கணவனின் உடமையாகத் தான் அன்று கருதப்பட்டாள். அவள் அழகானவளாக இருந்தால் கணவனின் உறவினரில் யாராவது அவளை அவளது சம்மதமின்றி மணந்து கொள்ளலாம். அவள் அழகில்லாதவளாக இருந்து விட்டால் அவளை வேறு யாருக்கும் மணமுடித்து வைக்க மாட்டார்கள். வீட்டிலேயே அடைத்து வைப்பார்கள். இவ்வாறு செய்வதற்குக் காரணம் கணவன் மனைவிக்கு மஹர் கொடுக்கும் வழக்கம் அந்த அறியாமைக் காலத்திலும் இருந்து வந்தது. மஹராகப் பெற்ற அந்தச் சொத்து அவளுக்கே உரிமையாக இருந்து வந்தது. கணவன் இறந்த பின் அவன் கொடுத்த மஹரைத் திரும்பிப் பெறுவதற்காக கணவனின் குடும்பத்தார் அவளை அடைத்து வைத்துக் கொள்வார்கள். அவனது மஹரைத் திருப்பிக் கொடுத்தால் அவளை விட்டு விடுவார்கள். அவள் மஹரைத் திருப்பிக் கொடுக்கா விட்டால் அவள் மரணிக்கும் வரை தங்கள் கட்டுப்பாட்டிலேயே வைத்துக் கொண்டு அவள் இறந்ததும் அந்தச் சொத்தை தமதாக்கிக் கொள்வார்கள். (அந்த விபரங்கள் அபூதாவூத் உள்ளிட்ட பல நூல்களில் இடம் பெற்றுள்ளது.) இந்தக் கொடிய வழக்கம் முழுவதையும் அடியோடு தடை செய்யவே இவ்வசனம் அருளப்பட்டது. ஒருவன் இறந்த பின் அவனது மனைவியும் அவளது உடைமைகளும் கணவனின் குடும்பத்தாரைச் சேரமாட்டார்கள். அந்தப் பெண் தனது சொத்துக்களை எடுத்துக் கொண்டு தனது குடும்பத்தாரிடம் செல்லலாம். கணவன் இறந்து விட்ட காரணத்தினால் அவனது குடும்பத்தைச் சேர்ந்தவர்களை மணந்து கொள்ள வேண்டும் என்ற கட்டாயம் ஏதுமில்லை. அந்தப் பெண் தனக்குப் பிடித்தமான வாழ்க்கைத் துணையை தேர்வு செய்யலாம். கணவன் திருமணத்தின் போது தோட்டத்தையோ நகையையோ, பெரும் தொகையையோ மஹராகக் கொடுத்திருக்கலாம். கணவன் இறந்து விட்டால் அந்தச் சொத்துக்கு மனைவி தான் உரிமையானவளே தவிர கணவனின் குடும்பத்தாருக்கு அதில் முழு அளவுக்கோ, சிறு அளவுக்கோ உரிமை கிடையாது. இவை யாவும் மேற்கண்ட வசனத்திலிருந்து பெறப்படும் வழி காட்டுதலாகும். இது இருபதாம் நூற்றாண்டுக்கும் தேவையான இஸ்லாத்தின் போதனையாகும். பெண்ணுரிமை என்று காட்டுக் கூச்சல் போட்டு இஸ்லாத்தைக் கொச்சைப்படுத்த விரும்புவோர் கூட இன்னும் பெற முடியாத உரிமைகளை இஸ்லாம் எந்தக் கூச்சலும் போடாமலேயே பெண்களுக்கு அளித்துள்ளது என்பதை உணர வேண்டும். முஸ்லிம் பெற்றோர்களும் முஸ்லிம் ஜமாத்துகளும் இத்தகைய விமர்சனத்திற்கு இடமளிக்காமல் அல்லாஹ்வும் அவனது திருத்தூதரும் பெண்களுக்கு வழங்கிய உரிமைகளை அப்படியே வழங்க வேண்டும். இதை மறுத்து அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் எதிராகப் போர் செய்யத் தூண்டக் கூடாது. அப்படியானால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆயிஷாவை பாலிய வயதிலேயே திருமணம் செய்தது ஏன் என்பதையும் இவ்வசனத்தின் இறுதிப் பகுதியில் கூறப்படும் இனிய நல்லறத்தின் முழு இலக்கணத்தையும் அடுத்த இதழில் பார்ப்போம். from;;http://islamthalam.wordpress.com இடுகையிட்டது PMsyed நேரம் 10/31/2011 12:45:00 பிற்பகல் கருத்துகள் இல்லை: இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Twitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர் லேபிள்கள்: பெண்கள் ஹஜ்-உம்ரா பெண்களுக்கான சட்டங்கள் ஏகஇறைவனின் திருப்பெயரால் ஒவ்வொரு வருடமும் ஹஜ் கடமை நிறைவேற்றப்படுவது இஸ்லாமிய உம்மாவின் மீது விதியாக்கப்பட்ட கடமையாகும். உம்மத்தின் அங்கத்தவனான வசதி படைத்த ஒரு முஸ்லிம், ஆயுளில் ஒரு முறையேனும் ஹஜ்ஜை நிறைவேற்றக் கடமைப்பட்டுள்ளான். இஸ்லாத்தின் அர்கான்கான்களில் ஒன்றான ‘ஹஜ்’ கிரிகை பெண்களுக்கான ‘ஜிஹாத்’ என்ற அந்தஸ்துப் பெற்றதொரு கடமையாக இருக்கின்றது. ஒரு முறை ஆயிஷா(ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களிடம் ‘அல்லாஹ்வின் தூதரே! பெண்களுக்கும் ஜிஹாத் உண்டா?’ எனக் கேட்டார்கள். அதற்கு நபியவர்கள், ‘ஆம்! போராட்டமற்ற ஜிஹாத் அவர்களுக்குண்டு. அதுதான் ஹஜ்ஜும், உம்ராவும்’ என்றார்கள். (அஹ்மத் இப்னுமாஜா) புகாரி கிரந்தத்தில் பின்வரும் அறிவிப்பொன்றுள்ளது. ஆயிஷா(ரலி) அவர்கள் நபியவர்களிடம், ‘அல்லாஹ்வின் தூதரே! அமல்களில் சிறந்ததாக நாம் ஜிஹாதைக் காண்கிறோம். நாமும் ஜிஹாத் செய்ய வேண்டாமா?’ எனக் கேட்ட போது, நபியவர்கள் ‘ஏற்றுக்கொள்ளப்பட்ட ஹஜ்ஜே சிறந்தது’ என விடையளித்தார்கள். (புகாரி) இஸ்லாத்தின் அடிப்படைக் கடமைகளில் ஒன்றாக இருப்பினும், பெண்களுக்கான ஜிஹாதுக்கான பிரதியீடாக நபியவர்கள் சுட்டிக் காட்டியிருப்பது பெண்களுக்கு ஹஜ் செய்வதன் முக்கியத்துவத்தை எடுத்துக் காட்டுகின்றது. ஆண்கள் ஹஜ் செய்வது கடமை. அதனை நிறைவேற்றினால் அவர்களுக்கு அக்கடமை நீங்குவதோடு, அதற்கான கூலியும் கிடைக்கும். ஆனால், பெண்கள் ஹஜ்ஜை நிறைவேற்றினால் இரண்டு கடமைகள் நீங்குவதோடு, இரண்டு கடமைகளின் கூலிகளும் கிடைக்கும் என நபியவர்கள் கூறியிருப்பதால் பெண்கள் ஹஜ் செய்வதில் அதிக நாட்டம் கொள்வது சாலச் சிறந்தது. இந்த வகையில், பெண்களோடு மட்டும் தொடர்புபட்ட சில சட்டதிட்டங்களை விளக்கலாம் என நினைக்கிறோம். (1) மஹ்ரம்: ஹஜ் கடமை நிறைவேறுவதற்கு ஆண்களுக்கும், பெண்களுக்குமான பொதுவான சில ஷர்த்துக்கள்-நிபந்தனைகள் காணப்படுகின்றன. முஸ்லிமாயிருத்தல், புத்தி சுவாதீனம், அடிமையற்ற நிலை, பருவ வயது, பொருளாதார சக்தி என்பனவே அவை. இவற்றோடு பெண்களுக்குப் பிரத்தியேகமாக, மஹ்ரமான-திருமணம் செய்துகொள்ளத் தடுக்கப்பட்ட ஆண்களின் பிரயாணத் துணை நிபந்தனையாக விதிக்கப்பட்டுள்ளது. (கணவன், தந்தை, மகன், சகோதரன், பால் குடிச் சகோதரன், தாயின் கணவன், கணவனின் மகன் என்பவரே பயணத்தில் கூட்டிச் செல்ல அனுமதிக்கப்பட்ட துணைகளாவர்.) இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களின் அறிவிப்பைப் பாருங்கள்! ‘எந்தவொரு ஆணும் மஹ்ரமில்லாமல் இருக்கும் பெண்களோடு தனிமையில் இருக்க வேண்டாம்! எந்தவொரு பெண்ணும் மஹ்ரமில்லாமல் பிரயாணிக்க வேண்டாம்!’ என நபியவர்கள் கூறிய போது, ஒரு மனிதர் ‘அல்லாஹ்வின் தூதரே! எனது மனைவி ஹஜ்ஜுக்காகச் சென்று விட்டார். நான் சில யுத்தங்களுக்காகப் பெயர் கொடுத்துள்ளேன். (நான் என்ன செய்வது?) எனக் கேட்டார். அதற்கு, நபி(ஸல்) அவர்கள் ‘நீரும் உமது மனைவியோடு சென்று ஹஜ்ஜை நிறைவேற்றுவீராக!’ என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்) இப்னு உமர்(ரலி) அவர்களின் பின்வரும் அறிவிப்பை அவதானியுங்கள்! ‘எந்தவொரு பெண்ணும் தன்னுடன் மஹ்ரம் துணையில்லாமல் மூன்று நாட்களுக்குப் பயணிக்க வேண்டாம்.’ (புகாரி, முஸ்லிம்) மஹ்ரமின்றி ஒரு நாள் கூட பயணிக்கக் கூடாது என்ற தடையைக் கொண்டுள்ள பல ஹதீஸ்கள் புகாரி, முஸ்லிம் கிரந்தங்களில் காணப்படுகின்றன. ஒரு பெண்ணின் ஹஜ் பிரயாணத்திற்குத் துணையாகச் செல்பவர் பின்வரும் தகுதிகளைக் கொண்டிருக்க வேண்டும். புத்தி சுவாதீனம்-சீரிய சிந்தனை, பருவ வயது, இஸ்லாம். பொருளாதார ரீதியான வசதிகள் கிடைக்கப் பெற்ற ஒரு பெண் மஹ்ரமில்லாவிட்டால் எவ்வாறு ஹஜ் செய்வது? என்ற கேள்வி எழலாம். இந்தக் கேள்விக்கு இன்றைய ஹஜ் முகவர்கள் வித்தியாசமான விளக்கங்கள் கொடுத்து, பெண்களை ஹஜ்ஜுக்கு அழைத்துச் சென்று விடுகின்றனர். ஒரு இபாதத் நிறைவேறுவதற்கு அதன் ஒழுங்கு விதிகள் சரியாகப் பின்பற்றப்பட வேண்டும். நிபந்தனைகள்-ஷர்த்துக்கள் முழுமையடைய வேண்டும். இல்லாவிடில் அந்த இபாதத் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. அது ஒரு புறமிருக்க, நபியவர்களின் தடையை மீறிய குற்றத்திற்கு ஆளாக நேரிடும் என்பதையும் கவனத்திற்கொள்ள வேண்டும். குளிக்கப் போய்ச் சேறு பூசிக் கொண்ட கதையாய் எமது இபாதத் அமைந்து விடக் கூடாது. அப்படியாயின், மஹ்ரம் துணையற்ற பெண்களது ஹஜ்ஜின் நிலைப்பாடு என்ன? இஸ்லாம் அதற்கும் வழிகாட்டியே உள்ளது. குறிப்பிட்ட அந்தப் பெண்கள் தமக்காகப் பிரதிநிதிகளை நியமித்து அவர்களினூடாக ஹஜ் செய்துகொள்ளலாம். பெண்ணின் பிரயாணத்தில் மஹ்ரம் துணை இருப்பது ஜிஹாதுக்குச் செல்வதை விட முதன்மையானது என்பதனை முன்னர் நாம் பார்த்த இப்னு அப்பாஸ்(ரலி) அறிவிக்கும் ஹதீஸ் தெளிவாகவே எடுத்துரைக்கின்றது. நபியவர்களின் அந்த முடிவுக்கு மேலாக முடிவெடுப்பதற்கு எமக்கு எந்த அதிகாரமும் கிடையாது. (2) கணவனின் அனுமதி: ஆயுளில் ஒரு ஹஜ்ஜே கடமையானது. அதற்கு மேலதிகமாகச் செய்வது நஃபிலானது-விரும்பத்தக்கது. இவ்வாறு நஃபிலான ஹஜ் செய்ய விரும்புகின்ற ஒரு பெண் தனது கணவனின் அனுமதியைப் பெற்றுக்கொள்ள வேண்டும். ஹக்குஸ் ஸவ்ஜ்-கணவனுக்குச் செய்ய வேண்டிய கடமைகள் ஒரு மனைவிக்கு வாஜிபாகும். எனவே, நஃபிலானதை விட வாஜிபான செயலே முற்படுத்தப்படல் வேண்டும் என இப்னுல் முன்திர் போன்ற இமாம்கள் விளக்கமளிக்கின்றனர். (3) ஆண்களுக்குப் பிரதிநிதியாகச் சென்று பெண்கள் ஹஜ் நிறைவேற்றல்: ஷைகுல் இஸ்லாம் இப்னு தைமிய்யா(ரஹ்) அவர்கள், மஜ்மூஉ பதாவா என்ற தனது நூலில், ஒரு பெண் இன்னொரு பெண்ணுக்காகப் பிரதிநிதி என்ற வகையில் ஹஜ் செய்ய முடியும் எனக் குறிப்பிடுகின்றார். இவ்வாறு பிரதிநிதியாக நியமிக்கப்படுபவர் மகளாகவோ, ஏனைய பெண்களாகவோ இருக்க முடியும் என்கிறார். அத்தோடு ஒரு ஆணுக்காகவும் பெண் ஹஜ் செய்ய முடியும் என நான்கு இமாம்கள், மற்றும் பெரும்பாலான அறிஞர்களும் கருதுகின்றனர். இமாம்களின் இக்கருத்துக்கு வலுவூட்டும் ஹதீஸும் ஆதாரமாக முன்வைக்கப்படுகிறது. ‘ஹத்அமிய்யா என்ற பெண்ணின் கேள்விக்கு விடையளிக்கும் போது அவளது தந்தைக்காக ஹஜ் செய்ய நபியவர்கள் அனுமதியளித்தார்கள்.’ (புகாரி, நஸஈ) (4) இஹ்ராம் கட்டத் தயாராகும் போது பெருந்தொடக்கு ஏற்படல்: ஹஜ்ஜுக்காகப் பயணித்துக்கொண்டிருக்கும் ஒரு பெண், வழியில் ஹைழ்-மாதவிடாய், நிபாஸ்-பேறு காலத் தீட்டு போன்ற உபாதைக்குள்ளானால் ஏனைய சுத்தமான பெண்களைப் போன்று இவள் இஹ்ராம் கட்டிக்கொள்ளலாம். இஹ்ராம் ஆடை உடுத்துவதற்குச் ‘சுத்தம்’ ஒரு நிபந்தனையாகக்கொள்ளப்படவில்லை. இமாம் இப்னு குதாமா அவர்கள்: ‘இஹ்ராம் அணியும் போது ஆண்களைப் போலவே பெண்களும் குளித்துக்கொள்ள வேண்டும். ஹைழ், நிபாஸ் போன்ற உபாதைக்குள்ளான பெண்களுக்கும் விதிக்கப்பட்ட கடமையே ஹஜ்ஜாகும்.’ இது பற்றி ஜாபிர்(ரலி) அவர்களது பின்வரும் அறிவிப்பு விளக்குகிறது. ‘…நாங்கள் துல்ஹுலையாவை அடைந்த போது அஸ்மா பின்த் அமீஸ், முஹம்மத் இப்னு அபீபக்ர் அவர்களைப் பெற்றெடுத்தார்கள். உடனே, தான் என்ன செய்வது எனக் கேட்டு நபியவர்களிடம் தூதனுப்பினார்கள். அதற்கு நபியவர்கள், ‘குளித்துக் கொள்வீராக! ஆடையை மாற்றிக் கொண்டு, இஹ்ராம் அணிந்துகொள்வீராக!’ எனக் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம் 2334) இது சம்பந்தமாக இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் அறிவிக்கும் செய்தி இவ்வாறு கூறுகிறது: ‘பிரசவத் தீட்டு மற்றும் மாதவிடாய் உபாதைக்குள்ளான பெண்கள் கஃபாவைத் தவாப் செய்வதை மட்டும் விடுத்து ஏனைய அனைத்து கிரியைகளையும் இஹ்ராம் கட்டிக் கொண்டு நிறைவேற்றுவார்கள்.’ (அபூதாவூத், முஃனி 3/293-294, முஸ்லிம் 2307) இங்கு ஹைழ்-நிபாஸ் உபாதைக்கு உள்ளானோரைக் குளிக்கச் சொல்லியிருப்பது சாதாரண சுத்தத்தையும், கெட்ட வாடைகளற்ற நிலையையும், நஜீஸின் தன்மையைக் குறைத்துக் கொள்ளவும்தான் என விளங்கிக்கொள்ளலாம். எனவே, இவ்விரு உபாதைக்குள்ளான பெண்களின் இஹ்ராமுக்கு எவ்விதப் பாதிப்பும் இல்லை. இஹ்ராம் நிலையிலேயே அவர்கள் தொடர்ந்திருப்பார்கள். இஹ்ராம் கட்டியவர்களுக்குத் தடை விதிக்கப்பட்ட எச்செயலிலும் ஈடுபடக் கூடாது. தொடக்கிலிருந்து சுத்தமாகிக் குளிக்கும் வரை அவர்கள் கஃபாவைத் தவாப் செய்யக் கூடாது. ஒரு வேளை அரஃபா தினம் வரை அவர்களால் சுத்தமாக முடியவில்லை என்றிருக்குமானால், உம்ராவுக்காக அவர்கள் இஹ்ராம் கட்டியிருந்தால், அதிலிருந்து விடுபட்டு ஹஜ்ஜுக்காக இஹ்ராம் கட்டிக்கொள்வார்கள். பின்னர் உம்ராவைச் செய்துகொள்ளல் வேண்டும். இதனால் இவர்கள் ‘காரின்’ என்ற நிலையை அடைவார்கள். இமாம் இப்னுல் கையிம்(ரஹ்) அவர்கள் இக்கருத்தை ஆதரித்துள்ளார்கள்: இது பற்றிப் பின்வரும் ஹதீஸ் தெளிவுபடுத்துகிறது: ஆயிஷா(ரலி) அவர்கள் கூறியதாவது: ‘நாங்கள் (ஹஜ்ஜுக்காக) நபி(ஸல்) அவர்களுடன் புறப்பட்டோம். அப்போது நாங்கள் ஹஜ்ஜை மட்டுமே நிறைவேற்றும் எண்ணத்துடன் சென்றோம். நாங்கள் ‘சரிஃப்’ எனுமிடத்தில் அல்லது அதற்கு அருகில் இருந்த போது எனக்கு மாதவிடாய் ஏற்பட்டு விட்டது. நபி(ஸல்) அவர்கள் நானிருந்த இடத்திற்கு வந்தார்கள். அழுதுகொண்டிருந்த என்னிடம், ‘உனக்கு மாதவிடாய் ஏற்பட்டு விட்டதா?’ என்று கேட்டார்கள். நான் ‘ஆம்!’ என்றேன். அதற்கு அவர்கள், ‘இந்த மாதவிடாய்ப் பெண்கள் மீது அல்லாஹ் விதியாக்கிய (இயற்கையான) ஒன்றாகும். எனவே, நீ குளிக்கும் வரை இறையில்லத்தைச் சுற்றித் (தவாஃப்) வருவதைத் தவிர, ஹாஜிகள் செய்கின்ற மற்றெல்லாக் கிரியைகளையும் செய்துகொள்!’ என்றார்கள். மேலும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் துணைவியர் சார்பாக மாட்டைக் குர்பானி கொடுத்தார்கள்.’ (5) இஹ்ராம் அணியும் போது செய்ய முடியுமானவை: ஆண்கள் போன்றே பெண்களும் குளித்துச் சுத்தமாக இருந்துகொள்ள வேண்டும். களைய வேண்டிய முடிகளைக் களைந்துக் கொள்ளல், நகம் வெட்டுதல், கெட்ட வாடைகளை நீக்குதல் போன்ற விடயங்களைச் செய்துகொள்ளலாம். இஹ்ராம் கட்டிய நிலையில் செய்யக் கூடாதவைகளைச் செய்யாதிருக்க முற்கூட்டியே அவற்றைச் செய்துகொள்ளல் வேண்டும். இத்தேவைகள் இல்லாவிட்டால் அதனை இஹ்ராமுக்கான ஏற்பாட்டுக் காரியமாக நிறைவேற்றத் தேவையில்லை. இஹ்ராமுக்கான செயற்பாடுகளில் அவை உள்ளடங்க மாட்டாது. வாசம் வெளிப்படாத வகையில் மணம் பூசிக்கொள்வதும் அனுமதிக்கப்பட்டுள்ளது. ‘நாம் நபி(ஸல்) அவர்களோடு ஹஜ்ஜுக்காகச் சென்ற போது எமது நெற்றியில் கஸ்தூரியைப் பூசியிருந்தோம். எமக்கு முகம், வியர்த்து வடிந்த போது அதனை நபியவர்கள் கண்டார்கள். எனினும் அதனைத் தடுக்கவில்லை’. (ஆயிஷா(ரலி), அபூதாவூத்) (6) முகம் மறைக்கக் கூடாது: இஹ்ராம் கட்டியதும் பெண்கள் முகம் மறைக்கக் கூடாது. வழமையாக முகத்தை மறைத்து ஆடை அணியும் வழக்கமுள்ளவர்களாக இருந்தாலும் முகத்தைத் திறக்க வேண்டும். ‘பெண்கள் (ஹஜ்ஜின் போது) முகத்தை மறைத்துக்கொள்ள வேண்டாம்!’ (புகாரி) கைகள், கால்கள், முகம் ஆகிய உறுப்புக்களோடு ஒட்டிய நிலையில் Gloves, Socks, Burka (Face Cover) என்பன அணிவது தடை செய்யப்பட்டுள்ளது. எனினும், சாதாரண ஆடைகள் மூலம் அவை அன்னிய ஆண்களின் பார்வைக்குப் படாதவாறு ஆடை அணிவதில் குற்றமில்லை என்பது இமாம்களின் கருத்தாகும். (7) விரும்பிய ஆடையை அணிந்துகொள்ளல்: இஹ்ராமின் போது கவர்ச்சியற்ற தாம் விரும்பிய ஆடைகளை அணிந்துகொள்ளப் பெண்களுக்கு அனுமதியுண்டு. குறிப்பாகப் பெண்களுக்குரிய ஆடைகளாக அவை இருக்க வேண்டும். ஆண்களின் ஆடைகளுக்கு ஒப்பானவையாக இருக்கக் கூடாது. உடல் உறுப்புக்களின் அமைப்புக்கள் விளங்குமாறு இறுக்கமானதாய் அமையக் கூடாது. உடலுறுப்புக்களை மறைக்காத மெல்லியதாய் இருக்கக் கூடாது. கைகள், கால்கள் தெளிவாக வெளிப்படும் தன்மை கொண்ட கட்டை ஆடைகளாக இருக்கக் கூடாது. பொதுவாகப் பெண்களின் ஆடைகள் விசாலமானதாகவும், தடித்ததாகவும், தாராளமானதாகவும் அமைந்திருக்க வேண்டும். பெண்களுக்கென்று தனியானதொரு நிற ஆடை அணிய வேண்டும் என்று எந்த விதியும் இஸ்லாத்தில் கூறப்படவில்லை. ஒவ்வொருவரும் தமக்கு விருப்பமான நிற ஆடைகளை அணிந்துகொள்ளலாம். (8) தனக்குள் மட்டும் தல்பியா சொல்தல்: ஹஜ்ஜுக்காக இஹ்ராம் அணிந்து கொண்டவர்கள் ‘தல்பியா’ சொல்வது கடமையாக்கப்பட்டுள்ளது. எனினும், தனது சத்தம் தனக்கு மட்டும் கேட்குமாறு தல்பியாவை மொழிவது சுன்னத்தாகும். எனவே, பெண்கள் தமது குரல்கள் வெளிப்படுத்தப்பட்டு அதனால் ஏனைய ஆண்களின் கவனம் ஈர்க்கப்படாதிருப்பதில் கவனமாக இருக்க வேண்டும். (9) தவாப் செய்யும் போது: தவாப் செய்யும் போது பெண்கள் தம்மை முழுமையாக மறைத்துக்கொள்ள வேண்டும்; சத்தத்தைத் தாழ்த்திக்கொள்ள வேண்டும்; பார்வையைத் தாழ்த்திக்கொள்வதோடு, ஆண்களோடு முட்டி மோதும் நிலையைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும். கஃபாவில் ஆண்கள்-பெண்கள் வேறுபாடின்றிக் கலந்துகொள்ளும் நிலை காணப்படுவதால், இவ்விடயத்தில் பெண்கள் கவனமாக நடந்துகொள்ள வேண்டும். ஹஜருல் அஸ்வத், ருக்னுல் யமானீ போன்ற இடங்களில் ஆண்களோடு முட்டி, மோதி நெருக்கடிக்கப்பட்டு அவற்றை நிறைவேற்ற வேண்டும் என்ற கடமை கிடையாது. தவாபுக்காகவும் நெருக்கடிக்குள் செல்ல வேண்டிய தேவையில்லை. தவாபின் ஓடுபாதையில் ஓரங்களில் ஒடுவது நல்லது. ‘ஹஜருல் அஸ்வத்’ கல்லை முத்தமிடுவது ஒரு ஸுன்னா. ஆனால், ஆண்களோடு பெண்கள் நெருக்கடிக்கப்படுவது ஹராம். எனவே, ஸுன்னாவை விட ஹராம் பெரியது என்பதைக் கவனத்திற்கொள்ளல் வேண்டும். இமாம் நவவி(ரஹ்), இப்னு குதாமா போன்ற இமாம்கள் இக்கருத்தையே முன்வைக்கின்றனர். (10) தவாப் செய்யும் முறை: பெண்கள் க’அபாவைத் ‘தவாப்’ செய்யும் போதும், ஸஃபா-மர்வாவுக்கிடையில் ‘ஸஈ’ செய்யும் போதும் நடந்தே செல்ல வேண்டும். ஆண்கள் ஓடும் இடங்களில் இவர்கள் ஓடத் தேவையில்லை. (11) மாதவிடாய் பெண் செய்யக் கூடியவை: மாதவிடாய்க்குட்பட்ட இஹ்ராம் அணிந்த பெண்கள் சுத்தமாகும் வரை எவற்றைச் செய்யலாம்? எவற்றைச் செய்யக் கூடாது? என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். ஹஜ்ஜோடு சம்பந்தப்பட்ட அனைத்துக் கிரியைகளையும் செய்யலாம். (இஹ்ராம், அரஃபாவில் தரித்தல், முஸ்தலிஃபாவில் தரித்தல், கல்லெறிதல்) ஆனால், கஃஅபாவைத் ‘தவாப்’ செய்வது கூடாது. இங்கு இன்னொரு விடயத்தைக் கவனத்திற்கொள்ள வேண்டும். அதாவது, தவாப் செய்த பின் ஸஈயின் போது மாதவிடாய் ஏற்பட்டு விட்டால், அவள் தொடர்ந்து ஸஈ செய்யலாம். தவாப் முடிவதற்கு முன்னர் மாதவிடாய் ஏற்பட்டு விட்டால் ஸஈ செய்ய முடியாது. ஏனெனில், தவாபுக்குப் பின்னரே ஸஈ செய்ய வேண்டும் என்பது கவனிக்கத்தக்கது. கஃஅபாவைத் தவாப் செய்வதற்குப் போன்று ‘ஸஈ’ செய்வதற்குச் சுத்தம் நிபந்தனையாகக் கொள்ளப்படவில்லை. (12) தலைமுடி கத்தரித்தல்: ஹஜ்ஜையும், உம்ராவையும் நிறைவேற்றி விட்ட பெண்கள் ஆண்களைப் போன்று தலைமுடியை மழிக்க வேண்டிய கடமை கிடையாது. ஆண்கள் தமது தலைமுடியை முழுமையாக மழிக்க, பெண்கள் தமது கொண்டையின் கூந்தலில் சிறு பகுதியைக் கத்தரித்தால் போதுமானது. பெண்கள் தலைமுடியை மழிப்பதை நபியவர்கள் தடை செய்துள்ளார்கள். இது பற்றி இப்னு அப்பாஸ்(ரலி) பின்வருமாறு அறிவிக்கிறார்கள்: ‘பெண்களுக்கு முடி மழிப்பது கடமையில்லை. அவர்கள் கத்தரித்தால் மட்டும் போதுமானது’ என நபியவர்கள் கூறினார்கள். (அபூ தாவூத்) அலி(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்; ‘பெண்கள் தலையை முழுமையாக மழிப்பதை நபியவர்கள் தடை செய்தார்கள்’. (திர்மிதி) (13) தவாபுல் இபாழாவுக்குப் பின்னர் மாதவிடாய் ஏற்பட்டால்: ‘தவாபுல் இபாழா’ என்பது ஹஜ்ஜுக்காக நிறைவேற்றப்படும் கடமையாகும். இதன் பின்னர் மாதவிடாய் ஏற்பட்டு விட்டால், அவள் ‘தவாபுல் வதா’ (பிரியாவிடை தவாப்) நிறைவேற்ற வேண்டிய தேவை இல்லை. இது பற்றி அயிஷா(ரலி) இனால் அறிவிக்கப்பட்டுள்ள பல செய்தி விளக்குகிறது. (புகாரி, முஸ்லிம், அஹ்மத்) (14) மஸ்ஜிதுன் நபவியைத் தரிசித்தல்: ஹஜ்ஜுக்குச் சென்ற பெண்கள் கடமை முடிந்த பிறகு விரும்பினால் மதீனாவில் அமைந்துள்ள மஸ்ஜிதுன் நபவிக்குச் சென்று தொழலாம். எனினும், கபுறுகளைத் தரிசிப்பதற்கென்றே பயணிப்பதற்கு அனுமதி கிடையாது. நபியவர்கள் கபுறடிக்குச் சென்று ‘பரகத்’ தேட நினைக்கக் கூடாது. அவ்வாறு எண்ணுவது முழு ஹஜ்ஜையும் பாழாக்கி விடும். மஸ்ஜிதுன் நபவிக்குச் சென்று அதன்பின் நபியவர்களதோ, ஏனைய நல்லடியார்களினதோ கபுறுகளை ஸியாரத் செய்வதற்கும், அதன் மூலம் மரணத்தை நினைவு கூர்ந்து அவர்களுக்காக துஆச் செய்வதற்கும் அனுமதியுண்டு. இது வரை விளக்கிய விடயங்களைக் கவனத்திற்கொண்டு எமது ஹஜ்ஜை நிறைவேற்றி அன்று பிறந்த பாலகனைப் போன்று வீடு திரும்ப எம் அனைவருக்கும் அல்லாஹ் அருள் பாலிப்பானாக! from islamthalam.wordpress.com இடுகையிட்டது PMsyed நேரம் 10/31/2011 12:41:00 பிற்பகல் கருத்துகள் இல்லை: இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Twitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர் ஞாயிறு, அக்டோபர் 30, 2011 இன்டர்நெட் இணைப்பு இல்லாமலே ஜிமெயிலை முழுமையாக பயன்படுத்த கூகுளின் ஜிமெயிலை அனைவரும் உபயோகிக்கிறோம் நாளுக்கு நாள் புது புது வசதிகளை அறிமுக படுத்துவதால் அனைவரும் ஜிமெயிலை பயன்படுத்துகிறோம். அதில் ஏதாவது ஒரு நேரத்தில் நமக்கு ஏதேனும் முக்கியமான ஈமெயில் வந்துள்ளதா என சோதிக்க வேண்டும் அல்லது யாருக்கேனும் முக்கிமாக ஒரு மெயில் அனுப்ப வேண்டும் சரியாக அந்த நேரம் பார்த்து நம்முடைய கணினியில் இணைய இணைப்பு துண்டிக்க பட்டிருக்கும் அல்லது நாம் வேறு எங்காவது வெளியில் இருப்போம் லேப்டாப்பில் இணைய இணைப்பு இருக்காது அது போன்ற சமயங்களில் நமக்கு உதவி செய்யவே கூகுள் ஒரு அருமையான வசதியை வெளியிட்டுள்ளது. ஆப்லைனில் நம்முடைய ஜிமெயிலுக்கு வந்துள்ள மெயில்களை பார்க்கலாம் மற்றும் நாம் மற்றவர்களுக்கும் மெயில் அனுப்பலாம் மற்றும் ஆன்லைனில் செய்யும் அனைத்து வேலைகளையும் நாம் இன்டர்நெட் கனெக்சன் இல்லாமலே செய்யலாம். இதற்க்கு நீங்கள் கூகுள் குரோம் உலவியை பயன்படுத்த வேண்டும். அடுத்து இந்த லிங்கில் Offline Google Mail சென்று நீட்சியை உங்கள் உலவியில் இன்ஸ்டால் செய்யுங்கள். இந்த நீட்சியை உங்கள் உலவியில் இணைத்தவுடன் ஒரு புதிய டேப்(tab) உருவாகும் அல்லது நீங்களே ஒரு New tab உருவாக்குங்கள். இப்பொழுது புதிய டேபில் நீங்கள் தற்பொழுது இணைத்த Offline Google Mail ஐகானும் இருக்கும் அதில் கிளிக் செய்யுங்கள். உங்களுக்கு இன்னொரு விண்டோ ஓபன் ஆகும் அதில் Allow Offline Mail என்பதை தேர்வு செய்யவும். இந்த விண்டோவில் கீழே பகுதியில் உங்களின் ஈமெயில் ஐடி காட்டும் அதில் எந்த ஐடிக்கு நீங்கள் ஆப்லைனில் பார்க்க வேண்டுமோ அதை தேர்வு செய்து கொண்டு Continue பட்டனை அழுத்துங்கள். அவ்வளவு தான் Continue அழுத்தியவுடன் உங்களின் ஈமெயில் திறக்கும் அந்த ஐடிக்கு வந்த அனைத்து மெயில்களும் காட்டும். இதில் உங்கள் இன்பாக்ஸில் உள்ள அனைத்து மெயில்களும் காட்டும் அந்த மெயிலுக்கு நீங்கள் Reply போடலாம், அல்லது அந்த மெயிலை அப்படியே Forward செய்யலாம் அல்லது புதியதாக நீங்களே ஒரு மெயிலை Compose பட்டனை அழுத்தி அனுப்பலாம் மற்றும் ஏதாவது ஒரு பைலை attachment செய்து அனுப்பும் வசதியும் உள்ளது அனைத்தும் இணைய இணைப்பு இல்லாமலே. மற்றும் ஆன்லைனில் உள்ள Move, Label, Mute, Report Spam,Print, Mark as Read போன்ற இதர முக்கியமான வசதிகளும் நீங்கள் ஆப்லைனில் பயன்படுத்தி கொள்ளுங்கள். மேலும் Menu பட்டனை அழுத்தினால் இன்னும் பல வசதிகள் உள்ளது கீழே பாருங்கள். இதன் மூலம் Chat History கூட பார்த்து கொள்ளலாம் என்பது கூடுதல் சிறப்பு. இவ்வாறு ஒட்டுமொத்த வசதிகளையும் நாம் இணைய இணைப்பு இல்லாமேலே பயன்படுத்தி கொள்ளலாம். ; : அனுப்பியது ; இறைநேசன் இடுகையிட்டது PMsyed நேரம் 10/30/2011 01:01:00 பிற்பகல் 4 கருத்துகள்: இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Twitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர் லேபிள்கள்: பயனுள்ள-தகவல், Technology உங்கள் இணையத்தின் வேகம் !!!!! பிராட்பேண்ட் இன்டர்நெட் இணைப்பு தரும் நிறுவனங்கள் பல்வேறு கட்டணங்களுடனும், விதம் விதமாய் Condition-களுடனும் நமக்கு இணைப்பு தருகின்றன. மற்ற எதனைப் பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை என்றாலும், நம்மிடம் வாங்கும் கட்டணத்திற்கேற்ற வேகத்தில் இணைப்பு கிடைக்கிறதா என்று இன்டர்நெட் இணைப்பின் வேகத்தை நாம் கணக்கிட்டுப் பார்த்து அறிய வேண்டும். இதனை எந்த வழியில் அறியலாம் என்று பார்க்கலாம். உங்கள் இன்டர்நெட் இணைப்பின் வேகத்தை அறிய www.speedtest.net என்ற தளத்திற்குச் செல்லுங்கள். அங்கு வேகத்தைச் சோதனை செய்வதற்கான தொடர்பில் கிளிக் செய்தால், உடனே உங்கள் பிராட்பேன்ட் இணைப்பிற்கான Router-ருக்கும் கம்ப்யூட்டருக்குமான வேகத்தையும், இன்டர்நெட் டவுண்லோட் ஸ்பீடையும் அது அளந்துகாட்டும். கீழாக உங்களுக்கு இன்டர்நெட் இணைப்பு தரும் நிறுவனத்தின் பெயருடன், இணைப்பின் தன்மையை நட்சத்திரக் குறியிட்டுக் காட்டும். அதிலேயே வரைபடம் ஒன்று காட்டப்பட்டு அதில் இணைய இணைப்பினை நீங்கள் பெறும் நகரம் சுட்டிக் காட்டப்படும். தளத்திற்கு சென்றவுடன் Begin Test என்பதை Click செய்யவும் உங்கள் இணைய வேகம் அடங்கிய தகவல்கள் இப்படி கிடைக்கும் அடுத்ததாக, நீங்கள் இன்டர்நெட் இணைப்பு பெற்று சில ஆண்டுகள் கழிந்திருந்தால், உங்களிடம் முதன் முதலில் கொடுத்த பிராட்பேண்ட் மோடம் தான் இருக்கும். இணைப்பு தரும் நிறுவனத்திடம், தற்போது அதிக வேக இணைப்பு மோடம் இருந்தால், ஒன்று உங்கள் இணைப்பிற்கென கேட்டுப் பெறவும். இன்டர்நெட் சர்வீஸ் தரும் நிறுவனங்கள் அடிக்கடி தங்களின் அடிப்படை இயக்க சாதனங்களை புதுப்பித்துக் கொள்கின்றன. ஆனால் வாடிக்கையாளர்களுக்கு அது போல புதுப்பித்துத் தருவதில்லை; அது குறித்த தகவல்களைக் கூடத் தருவதில்லை. இடுகையிட்டது PMsyed நேரம் 10/30/2011 12:56:00 பிற்பகல் கருத்துகள் இல்லை: இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Twitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர் லேபிள்கள்: பயனுள்ள-தகவல், Technology நேர மாற்றம் ஏன்,எதற்கு? ஆக்கம். இ.சொ. லிங்கதாசன் இன்றைய தினம் (30.10.2011) ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3.00 மணிக்கு ஐரோப்பாவிலும், எதிர்வரும் நவம்பர் மாதம் 6 ஆம் தேதி அமெரிக்கக் கண்டத்திலும்(அமெரிக்கா, கனடா), அவுஸ்திரேலியாவின் தெற்குப் பகுதியில் கடந்த அக்டோபர் 2 ஆம் தேதியிலும் கடிகாரங்களில் நேரம் ஒரு மணித்தியாலம் பின் நகர்த்தப்பட்டு,நேரம் குறைக்கப் படுகிறது. இதேபோல் வசந்த காலம் தொடங்கும் மாதமாகிய மார்ச் மாதத்தில் வரும் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமையில் கடிகாரங்களில் நேரம் ஒரு மணித்தியாலம் முன் நகர்த்தப்பட்டு நேரம் கூட்டப்படுகிறது. இது ஏன்? என்று ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும். சுருக்கமாக இரண்டு வரிகளில் இக்கேள்விக்கு விடையளிப்பதாயின், இம்முயற்சி இரண்டு நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டது என்று கூறி விடலாம் அவையாவன, சூரிய ஒளியின் உச்சப் பயன்பாடு. மின்சாரம் மற்றும் எரிபொருள்களைச் சேமித்தல். இந்தப் பகல் ஒளியை அதிகமாகப் பயன் படுத்துவதை நோக்கமாகக் கொண்ட, நேர மாற்றம் பற்றிய திட்டம் முதல் முதலாக, இரு அறிஞர்களால் இரு வேறு நாடுகளுக்கு, ஒரே தருணத்தில் பரிந்துரை செய்யப்பட்டது. முதலாவதாக அறிஞர் பெஞ்சமின் பிராங்க்ளின் அவர்களால் பிரெஞ்சு அரசுக்கு முன்மொழியப்பட்டபோது, அரசுப்பதவியில் இருந்தவர்களால் அவர் ஏளனம் செய்யப்பட்டார். இரண்டாவதாக 1907 ஆம் ஆண்டில் பிரித்தானிய அறிஞராகிய வில்லியம் வில்லெட் என்பவர் அப்போதிருந்த பிரித்தானிய அரசுக்கு பரிந்துரை செய்தபோது, இது ஒரு 'முட்டாள் தனமான' திட்டம் என்று பிரித்தானிய அரசும், உடனடியாக நிராகரித்தது. இவ்விரு அறிஞர்களும் 'பகல் ஒளியை' அதிகமாகப் பயன்படுத்துவதற்காக, நேரத்தை மாற்றும் தமது திட்டத்தினால் கிடைக்கும் நன்மைகள் என்று பின்வருவனவற்றைப் பட்டியலிட்டனர். முன்தூங்கி, முன்னெழுவதால் மக்களின் செல்வம், அறிவு, நலம் ஆகியவை அதிகரிக்கும். ஐரோப்பாமுழுவதும் பகல் குறைவாகவும், இருட்டு அதிகமாகவும் இருக்கும் காலப் பகுதியாகிய சுமார் ஆறு மாதங்களிலுள்ள ஏறக்குறைய 183 இரவுகளிலும் ஐரோப்பாமுழுவதும் உபயோகிக்கப்படும், மெழுகுவர்த்திகள், மண்ணெண்ணெய் போன்ற எரிபொருட்கள்(அக்காலத்தில் இவையே பெரும்பாலான மக்களால் பயன்படுத்தப்பட்டன) கோடிக்கணக்கான அளவில் சேமிக்க அல்லது மிச்சப்படுத்த முடியும், செல்வந்த மக்கள் பயன்படுத்திய மின்சாரத்தையும் கோடிக்கணக்கான அலகுகள் சேமிக்க முடியும். ஆனால் இவர்களது திட்டமானது பிரித்தானிய, பிரெஞ்சு அரசுகளால் 'உதாசீனம்' செய்யப்பட்டுத் தூக்கி வீசப்பட்டது. மேற்படி இரண்டு அறிஞர்களும் பிரெஞ்சு, இங்கிலாந்து அரசுகளுக்குப் பரிந்துரை செய்தபோதும் அவை அரசுப்பதவிகளில் அமர்ந்திருந்தவர்களால் ஏளனம் செய்யப்பட்டுத் தூக்கி வீசப் பட்டது என்று கடந்த அத்தியாயத்தில் குறிப்பிட்டேன் அல்லவா? ஆனால் ஆச்சரியப்படத்தக்க விதத்தில் ஒரு சில வருடங்களின் பின்னர், 'முதலாம் உலகப் போரின்போது' ஜேர்மனி இச்செயற் திட்டத்தைக் கையில் எடுத்துக் கொண்டது. முதல் உலகப் போர் தொடங்கிய ஒரு சில வருடங்களுக்குள் 30.4.1916 தொடக்கம் 1.9.1916 வரையுள்ள காலப் பகுதியில் இத்திட்டத்தை மக்கள்மத்தியில் அறிமுகம் செய்தது. இத்திட்டத்தினால், மக்களைக் குறைந்த அளவில் எரிபொருட்களையும், மின்சாரத்தையும் உபயோகிக்க வைக்கும் மறைமுகத் திட்டமே இது. ஆனால் இந்த மறைமுகத் திட்டம் பற்றிக் குறிப்பிடத் தக்க அளவில் புரிந்து கொள்ளாத 'ஜெர்மானிய மக்கள்' அப்போதைய அரசு அறிவித்த 'தாரக மந்திரங்களாகிய' "நாட்டுக்கு உதவுவோம், நாட்டைக் காப்போம்" என்ற வாசகங்களில் மெய்மறந்து, இத்திட்டத்திற்குப் பூரண ஆதரவு நல்கினர். இதன்மூலம் மக்களின் எரிபொருள், மின்சாரப் பாவனையைக் கணிசமான அளவில் குறைக்க முடிந்த ஜேர்மனி அரசினால் அவ்வாறு சேமிக்கப்பட்ட எரிபொருள் மற்றும் மின்சாரத்தைக் கொண்டு போதிய அளவில் இராணுவத் தளவாடங்களை உற்பத்தி செய்ய முடிந்தது, எரிபொருட்களைப் படைத்துறை வாகனங்களுக்குப் பற்றாக்குறையில்லாமல் வழங்க முடிந்தது. தனது 'எதிரி' இத்தகைய திட்டமொன்றின் மூலம் பயனடைகின்றான் என்பதை அறிந்த 'பிரித்தானியா' விடுமா என்ன? உடனடியாகவே இத்திட்டம் பிரித்தானியாவிலும் அதன் ஆட்சிக்குக் கீழ் இருந்த குடியேற்ற நாடுகளிலும், அமெரிக்காவிலும் அறிமுகப் படுத்தப் பட்டது. அக்காலத்தில் இலங்கை, இந்தியா உட்பட பல ஆசிய நாடுகள் 'பிரித்தானியப் பேரரசின்' ஆட்சிக்குட்பட்டிருந்ததால், வரலாற்றில் முதல் தடவையாக இலங்கை, இந்திய மக்கள் தாம் விரும்பியோ, விரும்பாமலோ இத்திட்டத்திற்கு ஒத்துழைக்க வேண்டியவர்களானார்கள். ஆனாலும் ஒரு சில 'சோதிடர்கள்' இத்திட்டத்தினை எதிர்த்துக் குரலெழுப்பவும் தயங்கவில்லை. இருப்பினும் ஆளும் வர்க்கத்தினால் அவர்களின் வாய்களுக்குப் 'பெரிய பூட்டு' போடப் பட்டது. இரண்டாம் உலகப் போரின்போது இத்திட்டம் பலவருடங்கள் நீடித்ததால், இலங்கை, இந்திய மக்கள் இத்திட்டத்தின் பாலும், பிரித்தானிய அரசின்மீதும் கடும் வெறுப்பையும் கொண்டிருந்தனர். இவ்வெறுப்பு சுதந்திரப் போராட்ட இயக்கத்தினருக்கு சாதகமான அம்சமாக மாறியிருந்ததையும் குறிப்பிட்டே ஆகவேண்டும். அக்காலத்தில் இலங்கை, இந்தியா உட்பட பல ஆசிய நாடுகள் 'பிரித்தானியப் பேரரசின்' ஆட்சிக்குட்பட்டிருந்ததால், வரலாற்றில் முதல் தடவையாக இலங்கை, இந்திய மக்கள் தாம் விரும்பியோ, விரும்பாமலோ இத்திட்டத்திற்கு ஒத்துழைக்க வேண்டியவர்களானார்கள். ஆனாலும் ஒரு சில 'சோதிடர்கள்' இத்திட்டத்தினை எதிர்த்துக் குரலெழுப்பவும் தயங்கவில்லை. இருப்பினும் ஆளும் வர்க்கத்தினால் அவர்களின் வாய்களுக்குப் 'பெரிய பூட்டு' போடப் பட்டது. இரண்டாம் உலகப் போரின்போது இத்திட்டம் பலவருடங்கள் நீடித்ததால், இலங்கை, இந்திய மக்கள் இத்திட்டத்தின் பாலும், பிரித்தானிய அரசின்மீதும் கடும் வெறுப்பையும் கொண்டிருந்தனர். இவ்வெறுப்பு சுதந்திரப் போராட்ட இயக்கத்தினருக்கு சாதகமான அம்சமாக மாறியிருந்ததையும் குறிப்பிட்டே ஆகவேண்டும். அடுத்து வந்த காலப் பகுதியாகிய 1947 மற்றும் 1948 ஆண்டுகளில் இந்தியாவும், இலங்கையும் படிப்படியாகப் பிரித்தானியாவிடமிருந்து சுதந்திரமடைந்ததன் பின்னர், இவ்வாறு ஐரோப்பியர்கள் போன்று கோடையிலும், குளிர்காலத்திலும் நேரத்தை மாற்றவேண்டிய தேவை இலங்கை, இந்திய அரசுகளுக்கு இருக்கவில்லை. ஆனால் எரிபொருள் பற்றாக்குறையோ, மின்சாரத்தைச் சிக்கனப் படுத்தவேண்டிய தேவையோ இவ்விரு அரசுகளுக்கும் ஒருபோதும் ஏற்படவில்லை என்று கூறமுடியாது. ஏனெனில் இந்திய அரசானது தனது நாட்டில் கிடைக்கின்ற சிறிய அளவு பெற்றோலியத்தைத் தவிர முழு நுகர்வுக்காக பெரும்பாலும் ஈராக் நாட்டின்மீதே தங்கியிருந்தது. ஆனால் 80 களின் ஆரம்பத்தில் ஏற்பட்ட ஈரான், ஈராக் யுத்தம் மற்றும் 90 களின் தொடக்கத்தில் ஈராக் அதிபர் சதாம் ஹுசைன் அவர்கள் 'குவைத்' என்ற தனது சிறிய அண்டை நாட்டைக் கைப்பற்றியதன் விளைவாக ஏற்பட்ட அமெரிக்க(நேட்டோ), ஈராக் யுத்தம் போன்றவற்றால் இந்தியாவிலும் எரிபொருட் பற்றாக்குறை ஏற்பட்டது. இருப்பினும் இந்திய அரசு இதனைச் சமாளிக்க சில சிறிய உத்திகளைக் கையாண்டது. முதலாவதாக எரிபொருட்களின் விலையைச் சற்று உயர்த்தியது, அதேபோல் பேருந்து, தொடரூந்துக் கட்டணங்களை உயர்த்தியது, இரவில் சிறிய நகரங்களிலிருந்து சாதாரண கிராமங்களுக்குப் பயணிக்கும் பேருந்துகளின் எண்ணிக்கையை அரைவாசியாகக் குறைத்தது, ஏழை விவசாயிகளுக்குப் பயிர்ச்செய்கையின் பொருட்டு வழங்கிவந்த 'இலவச மின்சாரத்தினை' நிறுத்தியது. இவ்வாறாக எரிபொருள் பற்றாக்குறை, மின்சாரத் தட்டுப்பாடு போன்றவற்றை இந்திய அரசு சமாளித்துக் கொண்டது. இந்திய அரசானது ஒருபோதும் இத்தகைய நிலைமைகளில், ஐரோப்பியர்களைப்போல் 'நேரத்தை மாற்றுகின்ற' நடவடிக்கையில் ஈடுபடவில்லை. இதேபோலவே இலங்கை அரசும் இரண்டாவது உலக மகா யுத்தத்திற்குப் பின்னர் ஏற்பட்ட பல நெருக்கடிகளையும் ஒருவாறு சமாளித்தது. இதற்குக் காரணம் இலங்கை மக்களில் 10% மக்களே வாகனம் வைத்திருப்பவர்களாகவும், 15% மக்களே மின்சாரத்தை உபயோகிப்பவர்களாகவும் இருந்தனர். ஆனால் 1995 ஆம் ஆண்டில் இலங்கையில் ஏற்பட்ட நிலைமையானது, இலங்கை அரசாங்கத்தை நெருக்கடிக்கு உள்ளாக்கியதுடன், ஐரோப்பியர்களைப்போல் சிந்திக்கவும் வைத்தது. post by;இறைநேசன் இடுகையிட்டது PMsyed நேரம் 10/30/2011 12:53:00 பிற்பகல் 2 கருத்துகள்: இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Twitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர் கோபத்திலும் நிதானம் தவறாமை. ஏகஇறைவனின் திருப்பெயரால் فَبِمَا رَحْمَةٍ مِّنَ اللّهِ لِنتَ لَهُمْ وَلَوْ كُنتَ فَظًّا غَلِيظَ الْقَلْبِ لاَنفَضُّواْ مِنْ حَوْلِكَ فَاعْفُ عَنْهُمْ وَاسْتَغْفِرْ لَهُمْ وَشَاوِرْهُمْ فِي الأَمْرِ فَإِذَا عَزَمْتَ فَتَوَكَّلْ عَلَى اللّهِ إِنَّ اللّهَ يُحِبُّ الْمُتَوَكِّلِينَ 3:159. (முஹம்மதே!) அல்லாஹ்வின் அருள் காரணமாகவே அவர்களிடம் நளினமாக நீர் நடந்து கொள்கிறீர். முரட்டுத்தனம் உடையவராகவும் கடின உள்ளம் உடையவராகவும் நீர் இருந்திருந்தால் அவர்கள் உம்மை விட்டு ஓடியிருப்பார்கள். அவர்களை மன்னிப்பீராக! அவர்களுக்காகப் பாவமன்னிப்புத் தேடுவீராக! காரியங்களில் அவர்களுடன் ஆலோசனை செய்வீராக! உறுதியான முடிவு செய்து விட்டால் அல்லாஹ்வையே சார்ந்திருப்பீராக! தன்னையே சார்ந்திருப்போரை அல்லாஹ் நேசிக்கிறான். கோபத்திலும் நிதானம் தவறாமை. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... கடந்தக் கட்டுரையில் யூனுஸ்(அலை)அவர்களுக்கு ஏற்பட்ட கோபத்தின் மூலம் நமக்கும் உண்டானப் படிப்பினைகளைப் பார்த்தோம். அருளாலன் அல்லாஹ்வின் அருள் மட்டும் யூனுஸ்(அலை)அவர்களின் மீது அருளப்பட்டிருக்க வில்லை என்றால் அவர்களுடைய நிலை இவ்வுலகிலும் மறுஉலகிலும் படுதோல்வி அடைந்திருக்கும். உலக மக்களுக்கு படிப்பினையாக்குவதற்காக கடைசி நேரத்தில் யூனுஸ்(அலை) அவர்களை காப்பாற்றி தவ்பா செய்ய வைத்து அதன் பின்னர் அவர்களுக்கு உதவியும் செய்து அதற்கு முந்தைய நபித்துவப் பொறுப்பையும் வழங்கி கண்ணியப் படுத்தினான். ஒரு வருடமோ அல்லது ஆறு மாதமோ விலக்கி வைத்து விட்டு அதன் பிறகு நபித்துவப் பொறுப்பை ஒப்படைக்கலாம் என்று நினைக்காமல் மன்னிக்கப்பட்ட அடுத்த கனமே முந்தைய நபித்துவப் பொறுப்பை ஒப்படைத்து லட்சத்திற்கு மேற்பட்ட மக்களுக்கு மீண்டும் தூதராக நியமித்தான் இதனால் தான் அவனை அளவற்ற அருலாளன் நிகரற்ற அன்புடையோன் என்று அழைக்கின்றோம் அவனுடைய அன்புக்கும், அருளுக்கும் எல்லை இல்லை. மேற்காணும் சம்பவத்தைக் கூறி நீங்களும் அவரைப்போன்று ஆகிவிடாதீர்கள் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்களை அல்லாஹ் எச்சரிக்கை செய்து கொண்டே இருந்ததுடன் அவர்கள் மீதும் அல்லாஹ் தன் அருளை இறக்கி தொடர்ந்து பாதுகாத்து வந்தான். அல்லாஹ்வின் அருள் அண்ணல் நபி(ஸல்)அவர்களை பேராபத்துகளிலிருந்து மட்டும் பாதுகாத்ததுடன் நில்லாமல் பெரும் கோபங்களிலிருந்தும் தடுத்து வந்தது அதனால் அண்ணல் அவர்கள் மிருதுவானத் தன்மை உடையவர்களாக இருந்தார்கள். அவர்களுடன் இணைந்திருந்த மக்களிடம் அன்பு செலுத்தி அரவனைத்துக் கொண்டார்கள், அவர்கள் செய்யும் சிறு தவறுகளுக்காக பெரிய அளவில் பிடித்து தண்டனைக் கொடுக்காமல் அவற்றை அலச்சியம் செய்தார்கள், அவர்கள் விளங்கிக் கொள்ளும் விதம் அவர்களுடைய தவறுகளை மிக இலகுவாக எடுத்துக் கூறினார்கள் அந்த விளக்க உரைகள் அவர்களை மீண்டும் அந்த தவறுகளை செய்ய விடாமல் அரணான நின்று கொண்டது. யார் மீதும் அண்ணல் நபி(ஸல்) அவர்கள் கோபம் கொண்டது கிடையாது, கடு கடுத்தது கிடையாது, முகத்தைத் திருப்பிக் கொண்டது கிடையாது. உலக ரட்சகன் அல்லாஹ் தன் அருளால் அவர்களை சூழ்ந்து கொண்டதே இதற்கு காரணமாகும். 3:159. (முஹம்மதே!) அல்லாஹ்வின் அருள் காரணமாகவே அவர்களிடம் நளினமாக நீர் நடந்து கொள்கிறீர். முரட்டுத்தனம் உடையவராகவும் கடின உள்ளம் உடையவராகவும் நீர் இருந்திருந்தால் அவர்கள் உம்மை விட்டு ஓடியிருப்பார்கள். அவர்களை மன்னிப்பீராக! அவர்களுக்காகப் பாவமன்னிப்புத் தேடுவீராக! காரியங்களில் அவர்களுடன் ஆலோசனை செய்வீராக! உறுதியான முடிவு செய்து விட்டால் அல்லாஹ்வையே சார்ந்திருப்பீராக! தன்னையே சார்ந்திருப்போரை அல்லாஹ் நேசிக்கிறான். இப்படிப்பட்ட ஒரு கட்டமைப்பை பார்த்துக்கொண்டு ஷைத்தான் சும்மா இருப்பானா ? அவனால் சும்மா இருக்க முடியுமா ? இந்த கட்டமைப்பை எப்படி சிதைப்பது ? இவர்களை எப்படி பாவத்தாளிகளாக ஆக்குவது ? இவர்கள் இணைவைக்க மாட்டார்கள், பொய் சொல்ல மாட்டார்கள், புறம் பேச மாட்டார்கள், கொலை செய்ய மாட்டார்கள், கொள்ளை அடிக்க மாட்டார்கள், விபச்சாரம் செய்ய மாட்டார்கள், கொடிய வட்டியில் வீழ மாட்டார்கள். அதனால் ஆதம், ஹவ்வா(அலை) அவர்களை மடக்கியதுப் போன்றே இவர்களையும் மடக்குவது என்ற முடிவுக்கு வந்து செல்வந்தர்களும், உயர்ந்த குலத்தவர்களுமாகிய சிலருடைய சிந்தனையில் இஸ்லாம் சரி தான் ஆனால் முஹம்மதுடன் இணைந்திருக்கும் ஆட்கள் நமக்கு நிகரானவர்களாக இல்லை அவர்களுக்கும், நமக்கும் மத்தியில் சிறிது ஏற்றத் தாழ்வை முஹம்மது ஏற்படுத்தினால் இஸ்லாத்தில் இணைவதில் நமக்கு ஆட்சேபனை இருக்காது என்றுத் தூண்டுகிறான். முஹம்மது(ஸல்)அவர்கள் அவர்களின் சபைக்கு அழைக்கப்பட்டு பேச்சு வார்த்தையும் நடைபெறுகிறது அவ்வேளை அண்ணல் அவர்களின் தோழர்களில் ஒருவரான கண் தெரியாத அப்துல்லாஹ் இப்னு மக்தூம் (ரலி) அவர்கள் அவ்விடத்தைக் கடக்க நேரிடுகிறது அந்த தோழருடைய கால்கள் அண்ணல் அவர்களின் குரலைக்கேட்டதும் அங்கிருந்து நகர மறுத்து விடுகிறது. நெஞ்சில் நிறைந்த நபியின் உருவத்தை கண்களால் பார்க்க முடியவில்லை என்றாலும் அவர்களின் குரலை செவிகளால் கேட்டு குதூகலமடையும் கண் தெரியாத தோழர்கள் பலர் அன்றாடம் அண்ணல் அவர்களை சூழ்ந்து கொள்வது அக்கால வழக்கம். அதனால் அல்லாஹ்வின் தூதர் அவர்களே உங்கள் மீது அல்லாஹ்வின் சாந்தி உண்டாகட்டும் என்ற ஸலாமை உரக்கக் கூறுகிறார் அவரை அவ்விடத்தில் கண்டதும் விவகாரமே இது தான் என்பதால் இந்த இடத்தில் இவர் வந்து விட்டாரே என்று அண்ணல் அவர்களுக்கு கோபம் ஏற்படுகிறது முகத்தை சுளிக்கிறார்கள் அவர்கள் மீது கடு கடுக்க ஆரம்பித்து விட்டார்கள். அந்த ஆருயிர் தோழர்களை அண்ணல் அவர்கள் காணவில்லை என்றாலும், அன்பே உருவான அண்ணல் அவர்களை அந்த ஆருயிர் தோழர்கள் காணவில்லை என்றாலும் அந்தப் பொழுது அவர்களை விட்டு மறைவது கடினமாக இருக்கும் அப்படிப்பட்டப் பாசம் அது, நட்புக்கு இலக்கனம் வகுத்தளித்த தோழமை அது. அண்ணல் அவர்களுக்கு முந்தைய தீர்க்கதரிசிகள், மஹான்கள் எல்லாம் தங்களைச் சுற்றி இருந்தவர்களை சீடர்களாக ஆக்கி வைத்திருந்தனர் அண்ணல் அவர்கள் மட்டும் விதி விலக்காக தங்களுடன் இணைந்திருந்தவர்களை தோழர்கள் என்ற அந்தஸ்த்தை வழங்கி சிறிதளவும் இடைவெளி இல்லாத நெருக்கத்தை ஏற்படுத்தினார்கள். சகோதரத்துவத்திற்காகவும், சமத்துவத்திற்காகவும் எழுப்பபட்ட இஸ்லாம் எனும் கோட்டையை சரிப்பதற்கான ஷைத்தானின் சூழ்ச்சியை அல்லாஹ் அறிந்துகொண்டு கண் தெரியாத தோழர் மீது அண்ணல் அவர்கள் கோபம் கொண்டதற்காக அவர்களை அல்லாஹ் கண்டிக்கிறான். 1, 2. தன்னிடம் அந்தக் குருடர் வந்ததற்காக 168 இவர் (முஹம்மது) கடுகடுத்தார். அலட்சியம் செய்தார். 26 ஆரம்ப காலத்திலேயே மதீனாவுக்கு ஹிஜ்ரத் செய்தவர்களில் அப்துல்லாஹ் இப்னு உம்மு மக்தூத்(ரலி)அவர்கள் முதன்மையானவர்கள் அத்துடன் அல்லாஹ்வின் புனித சொற்களாகிய திருமறைக்குர்ஆனை உள்ளத்தில் பூட்டி வைக்காமல் அதை பலருக்கும் எத்திவைப்பதில் மதீனாவில் இரவு பகலாக பாடுபட்டவர். நபித்தோழர்களில் (நாடு துறந்து மதீனாவிற்கு 'ஹிஜ்ரத்' செய்து) எங்களிடம் முதலில் வந்தவர்கள் 'முஸ்அப் இப்னு உமைர்'(ரலி) அவர்களும், 'இப்னு உம்மி மக்தூம்'(ரலி) அவர்களும் தாம். அவர்களிருவரும் (மதீனாவாசிகளான) எங்களுக்குக் குர்ஆனைக் கற்றுத் தந்தார்கள். பராஉ இப்னு ஆஸிப்(ரலி) அறிவித்தார். நூல்: புகாரி 4941. இப்படிப்பட்ட அல்லாஹ்வின் திருப்பொருத்தத்திற்குரிய ஒருவர் அலச்சியம் செய்யப்ட்டால் அல்லாஹ் பார்த்துக்கொண்டிருப்பானா ? உடனே திருவசனத்தை இறக்கி அவர் அலச்சியம் செய்யப்படுவதை கண்டித்து கண்ணியப்படுத்த வைத்தான். இது முஹம்மது(ஸல்) அவர்களுக்கும் நன்றாகத் தெரியும் ஆனாலும் கோபம் வந்து விட்டதால் அது மறக்கடிக்கப்பட்டு விட்டது. கோபம் கண்ணை மறைத்து விடும் என்று கூறுவது அனைவருக்குமே பொருந்தி விடுவதற்கு இதுவும் சான்றாகும். செல்வந்தர்களின் கோரிக்கையை ஏற்று ஒப்பந்தம் செய்யும் நோக்கில் அண்ணல் அவர்கள் அங்கு சென்றிருக்க மாட்டார்கள் மாறாக விளக்கமளித்து தூய இஸ்லாத்தின் எந்த கொள்கையையும் விட்டுக் கொடுக்காமல் பேசி தஃவா செய்து இஸ்லாத்திற்குள் எடுப்பதற்கே சென்றிருப்பார்கள். ஆனாலும் அவர்களுடனான ஆலோசனையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது அவ்விடத்தை விட்டு அப்துல்லாஹ் இப்னு உம்மு மக்தூம்(ரலி) அவர்கள்; நகராத காரணத்தால் அந்த சிறு இடைவெளியில் ஷைத்தான் அண்ணல் அவர்களுக்கு கோபத்தை விதைத்து விட்டான். அண்ணல் அவர்களின் கோபம் நீடித்த நிலையில் அப்துல்லாஹ் இப்னு உம்மு மக்தூத்(ரலி) அவர்கள் அலச்சியம் செய்த நிலையில் இந்த பெருங் கூட்டம் இஸ்லாத்திற்குள் வரவேண்டிய அவசியமில்லை இது ஷைத்தானின் முயற்சியால் சமத்துவத்திற்கு சாவு மணி அடிக்கும் வேலை என்பதை ஷைத்தானின் மறைவான சூழ்ச்சியை அறிந்த அல்லாஹ் ரப்புல் ஆலமீன் ஷைத்தானின் முயற்சியை முளையிலேயே கிள்ளி எறிந்து சமத்துவத்தை மேலோங்க செய்து விடுகிறான். இவர் அலச்சியம் செய்யப்பட்டுத்தான் அவர்கள் உள்ளே வர வேண்டும் என்றால் அவர்களை விட உள்ளம் இறைநம்பிக்கையால் நிறைந்திருக்கும் பிறரால் இழிவாக கருதப்பட்ட இந்த கண் தெரியாதவர் மேல் என்று நபியிடம் கூறி நீதியை நிலை நாட்டினான் நீதியாளன் அல்லாஹ். 80: 5, 6. யார் அலட்சியம் செய்கிறானோ அவனிடம் வலியச் செல்கிறீர். 80: 7. அவன் பரிசுத்தமாக ஆகாவிட்டால் உம் மீது ஏதும் இல்லை. 80: 8, 9, 10. (இறைவனை) அஞ்சி உம்மிடம் யார் ஓடி வருகிறாரோ அவரை அலட்சியம் செய்கிறீர். அதன் பிறகு அண்ணல் அவர்கள் அவர்களுடைய வாழ்நாளிலும் அதுப்போன்று யாரிடமும் கோபம் கொண்டு கடு கடுத்ததேக் கிடையாது. நிதானம் இழக்க வில்லை அமைதியே உருவான அண்ணல் நபி(ஸல்) அவர்களுக்கு கோபம் வந்தது என்றதும் அது எப்படிப்பட்டக் கோபமாக இருந்திருக்கும் ? அங்கு என்ன நடந்திருக்கும் ? என்ன மாதிரி திட்டி இருப்பார்கள் ? என்ற எண்ணம் பலருக்கும் ஏற்படலாம். அண்ணல் அவர்களின் முகம் தான் கோபத்தால் சிவந்ததே தவிர வாய் வார்த்தைகளைக் கொட்ட வில்லை. கோபத்திலும் கூட நிதானம் காத்தது அண்ணல் அவர்களைப் போன்று உலகில் எவரையும் அன்றும், இன்றும், என்றும் எவராலும் கோடிட்டுக் காட்டவே முடியாது. அருள் அகற்றப்ட்டவர்கள் கோபம் யாரையும் விட்டு வைக்காது அது யாரை ஆக்ரமித்து விட்டதோ விடை பெறும் பொழுது பெரிதாக இல்லை என்றாலும் சிறிய அளவிலேனும் பாதிப்பை ஏற்படுத்தாமல் விலகிச் செல்லாது யார் மீது அல்லாஹ்வின் அருள் உள்ளதோ அவர்களைத் தவிர. யாருடைய உச்சந் தலையில் கோபம் குடி கொண்டு கடைசிவரை இறங்க வில்லையோ அவருடைய உச்சி முடி ஷைத்தானின் கையில் இருக்கிறது என்பதாக விளங்கிக் கொண்டு துஷ்டனை கண்டால் தூர விலகிக் கொள்வது போல் விலகி கொள்ள வேண்டும். அவனருடைய உச்சி முடியை பிடித்துக்கொண்டு ஷைத்தான் அவரை வழி நடத்துவான் அவரிடமிருந்து அல்லாஹ்வின் அருள் அகற்றப்பட்டு விடும் அவன் ஷைத்தானின் அடிமையாகி விடுவான். அல்லாஹ்வின் அருளைப் பெற்ற நன்மக்களாக நாம் நம்மை ஆக்கிக் கொண்டால் மட்டுமே கோபம் அதிகம் வராது வந்தாலும் பாதிப்பை ஏற்படுத்தாது பாதிப்பை ஏற்படுத்துவதற்கு முன் அல்லாஹ் நம்மை அதிலிருந்து மீட்டெடுத்து விடுவான். அல்லாஹ்வின் அருளைப் பெற்ற நன் மக்களாக வல்ல அல்லாஹ் நம் அனைவரையும் ஆக்கி அருள் புரிவானாக! கோபம் ஷைத்தானின் தூண்டுதல் தான் என்பதை பற்றியும், அதன் கொடிய விளைவுகளைப் பற்றியும் அல்லாஹ் நாடினால் இன்னும் எழுதுவோம். وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ 3:104. நன்மையை ஏவி தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர். அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.... அன்புடன் அதிரை ஏ.எம்.பாரூக் இடுகையிட்டது PMsyed நேரம் 10/30/2011 03:44:00 முற்பகல் கருத்துகள் இல்லை: இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Twitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர் ஹஜ் மாதத்தின் முதல் 10 நாட்களின் சிற‌ப்பு mp3 part 2 ஏகஇறைவனின் திருப்பெயரால் Hosted by kiwi6.com file hosting. Download mp3 - Free File Hosting. இடுகையிட்டது PMsyed நேரம் 10/30/2011 03:42:00 முற்பகல் கருத்துகள் இல்லை: இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Twitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர் ஹஜ் மாதத்தின் முதல் 10 நாட்களின் சிற‌ப்பு mp3 part 1 ஏகஇறைவனின் திருப்பெயரால் Hosted by kiwi6.com file hosting. Download mp3 - Free File Hosting. இடுகையிட்டது PMsyed நேரம் 10/30/2011 03:39:00 முற்பகல் கருத்துகள் இல்லை: இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Twitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர் லேபிள்கள்: இஸ்லாம் சனி, அக்டோபர் 29, 2011 அன்னா ஹாசரேவாக இல்லாமல் இருக்க விரும்புகிறேன். அருந்ததி ராய் அவரது வழிமுறைகள் காந்தியமாக இருக்கலாம், ஆனால் அவரது கோரிக்கைகளில் கண்டிப்பாக காந்தியம் இல்லவே இல்லை.. தொலைக்காட்சியில் எதைப் பார்க்கிறோமோ, அவைகள்தான் உண்மையில் புரட்சிகரமானதென கருதினால், அதுதான் சமீபத்தில் நடந்ததில் மிகவும் தர்மசங்கடமானதாகவும் புத்திசாலிதனமற்றதாகவும் இருந்திருக்கும்.. இப்போது ஜன் லோக்பால் மசோதா பற்றி, நீங்கள் என்ன கேள்வி யாரிடம் கேட்டிருந்தாலும், அந்த கேள்வி கீழ்கண்ட கட்டங்களில் ஏதாவது ஒரு பதிலைதான் சரியென அவர் 'டிக்' செய்திருப்பார்கள் (அ) வந்தே மாதரம்! (ஆ) பாரத அன்னைக்கு ஜே! (இ) இந்தியா என்றால் அன்னா, அன்னா என்றால் இந்தியா! (ஈ) இந்தியாவுக்கு ஜே! முற்றிலும் வெவ்வேறு காரணங்களுக்காக, முற்றிலும் வெவ்வேறு வழிகளில், மாவோயிஸ்டுகளும் ஜன் லோக்பால் மசோதாகாரர்களும் ஒரே பொதுவான அம்சத்தை வலியுறுத்தி வருகின்றனர் என்று நம்மால் கண்டிப்பாகச் சொல்ல முடியும். இருவருமே இந்திய அரசைத் தூக்கி எறிய முயல்கிறார்கள். ஒருவர், ஏழைகளிலும் ஏழைகளான ஆதிவாசிகளினால் உருவாக்கப்பட்ட இராணுவத்தின் துணை கொண்டு, ஆயுதப் போராட்டத்தின் மூலம், கீழிருந்து தூக்கி எறிய முயல்கிறார். மற்றொருவர் மேலிருந்து, நகரம் சார்ந்த ஆனால் நிச்சயமாக நல்ல பொருளாதாரப் பின்புலம் கொண்டவர்களால் உருவாக்கப்பட்ட இராணுவத்தைக் கொண்டு, புத்துணர்வு கொண்ட ஒரு சாதுவின் தலைமையின் கீழ், இரத்தம் சிந்தாத காந்திய ஆட்சிக்கவிழ்ப்பு மூலம், அரசைத் தூக்கி எறியப் பார்க்கின்றனர். (இந்த முறையில் அரசு நிர்வாகமும் தன்னைத் தானே தூக்கி எறிந்து கொள்ள, அனைத்தையும் செய்து உடந்தையாக உள்ளது) 2011ம் வருடம் ஏப்ரல் மாதம் அன்னா ஹசாரே முதலாவது "சாகும் வரை உண்ணாவிரதத்தை" சில நாட்கள் இருந்தார். அப்போது எழுந்த பெரும் ஊழல்கள், இந்திய அரசின் நம்பிக்கைத் தன்மையையே சிதைத்திருந்தது. அதிலிருந்து மக்கள் கவனத்தைத் திசைதிருப்ப, அரசு நமது சிவில் சமூகத்தால் "அன்னா அணி" என்று அழைக்கப்பட்ட இந்த அணியினரைப் பேச்சுவார்த்தைக்கு அழைத்தது. அந்தக் குழுவை ஊழல் ஒழிப்பு சட்ட வரைவு கமிட்டியில் கூட்டு உறுப்பினராகச் சேர்த்துக் கொண்டது. சில மாதங்கள் கடந்ததும் அரசு இந்த முயற்சியைக் கைவிட்டு, புதிய வரைவு மசோதாவைப் பார்லிமெண்டில் முன்வைத்தது. அந்த வரைவு மசோதா பலவித குறைபாடுகளுடன் இருந்ததால், விவாதிப்பதற்கே தகுதியற்றதாக அது இருந்தது. பிறகு ஆகஸ்டு 16ம் தேதி காலையில் தனது இரண்டாம் "சாகும்வரை போராட்ட"த்தை அன்னா ஹசாரே துவங்கினார். அவர் தனது உண்ணாவிரதத்தைத் துவங்கும் முன்னர் அல்லது அவர் எந்தவித சட்டரீதியான குற்றத்தைச் செய்வதற்கு முன்னரே, கைது செய்யப்பட்டு சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார். விளைவாக ஜன் லோக்பால் மசோதாவை நடைமுறைப்படுத்தும் போராட்டம் என்பது எதிர்ப்புத் தெரிவிப்பதற்கான போராட்டம், ஜனநாயகத்திற்கான போராட்டம் என மாற்றப்பட்டு ஒருங்கிணைக்கப்பட்டது. இந்த இரண்டாம் சுதந்திர போராட்டத்தைத் துவங்கிய சில மணி நேரத்திற்குள், அன்னா விடுவிக்கப்பட்டார். ஆனால் புத்திச்சாதுரியத்துடன், அன்னா சிறைச்சாலையை விட்டு வெளியேற மறுத்து விட்டார்; விளைவாக தான் உண்ணாவிரத்தைத் துவங்கிய இடத்திலேயே, கெளரவம்மிக்க விருந்தாளியாகத் தொடர்ந்து இருந்தார். தனக்குப் பொதுவிடத்தில் உண்ணாவிரதம் இருக்கும் உரிமையைத் தரவேண்டுமென கோரிக்கையை விடுத்தவாறு, தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்தார். அந்த மூன்று நாட்களும் கூட்டமும் தொலைக்காட்சி வண்டிகளும் சிறைச்சாலைக்கு வெளியே கூடி நிற்க, அன்னா அணியின் உறுப்பினர்கள் திகாரில் என்ற உயர்காவல் சிறைச்சாலைக்கு உள்ளேயும் வெளியேயும் காற்றைக் கிழித்துக் கொண்டு அங்குமிங்கும் பறந்து சென்று கொண்டு இருந்தார்கள். அவர்கள் உள்ளேயிருந்து கொண்டு வந்த விடியோ செய்திகளை, அனைத்துத் தேசிய மற்றும் மற்றும் அனைத்து தனியார் தொலைக்காட்சி ஊடகங்களில் வெளியிட கொடுத்து வெளியிட்டனர். (இந்த மாதிரியான ஆடம்பரம், வேறு நபருக்கு அங்கு அனுமதிக்கப் பட்டதில்லை.) இதற்கிடையில் தில்லி முனிசிபல் கமிஷனின் 250 ஊழியர்கள், 15 லாரிகள் மற்றும் 6 மண் புரட்டிப் போடும் இயந்திரங்களின் உதவியுடன், சகதியாகக் கிடந்த ராம்லைலா மைதானத்தில் நாள் முழுக்க வேலைப் பார்த்து, அடுத்த வாரம் அரங்கேறப் போகும் தமாஷாவுக்கு, அதைத் தயார் செய்து கொண்டிருந்தார்கள். முடிவே இல்லாமல் காத்திருந்து விட்டு, கிரேனில் தொங்கவிட்ட காமிராக்களையும் உற்சாக கோஷமிட்டுக் கொண்டிருந்த கூட்டத்தையும் அவதானித்து விட்டு, இந்தியாவில் மிகவும் விலைகூடுதலான மருத்தவர்களின் மருத்துவ உபசரிப்புடன், அன்னாவின் மூன்றாவது கட்ட "சாகும் வரை உண்ணாவிரதம்" துவங்கியது. உடனே பல தொலைக்காட்சி தொகுப்பாளர்கள், “காஷ்மீரில் இருந்த கன்னியாகுமரி வரை, இந்தியா ஒன்றுதான்” என்று முழக்கமிட ஆரம்பித்து விட்டார்கள். அவரது வழிமுறை வேண்டுமானால் காந்தியமாக இருக்கலாம், ஆனால் அவரது கோரிக்கைகளில் கண்டிப்பாக காந்தியம் எதுவும் இல்லை. அன்னாவின் கருத்துக்கு மாறாக, காந்தி அதிகாரத்தை மையப்படுத்துவதற்கு எதிராக நின்றார். அதிகாரக் குவியலை எதிர்த்து, அதை அமத்தியத்துவப் படுத்த காந்தி விரும்பினார். லோக்பால் மசோதாவோ காந்தியத்துக்கு ஒவ்வாத அதிகாரம் மத்தியத்துவப்படுத்தப்பட்ட ஒரு கொடுமையான ஊழல் எதிர்ப்புச் சட்டம். இந்த வரைவுச்சட்டத்தின் படி, ஜாக்கிரத்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சிலர், ஆயிரக்கணக்கான ஊழியர்களைக் கொண்டு, ஒரு அதிகார மையத்தை நிர்வகிப்பார்கள். அம்மையத்திற்குக் காவல்துறையினருக்கு உள்ள அதிகாரம் உண்டு, அவர்கள் பிரதம மந்திரியில் இருந்து, நீதித்துறையைச் சார்ந்தவர்களில் இருந்து, பாராளுமன்ற உறுப்பினர்களிருந்து, அதிகார மட்டத்திலுள்ள கீழ்மட்ட அரசு அதிகாரிகள் வரை, அனைவரையும் கண்காணிக்கலாம். லோக்பாலுக்கு ஒன்றை ஆய்வு செய்து துப்புத் துலக்கவும், கண்காணிக்கவும், அவர்கள் மேல் வழக்குத் தொடரவும் அதிகாரம் உண்டு. லோக்பாலிடம் சிறைச்சாலை மட்டும்தான் இல்லை. அதைத் தவிர அது ஒரு தனிப்பட்ட நிர்வாக அமைப்பாகக் கணக்கில் அடங்காமல் சொத்து வைத்திருப்பவர்களையும், அளவுக்கு அதிகமாக ஊதிப் பெருத்தவர்களையும், ஊழல் பேர்வழிகளையும் எதிர்கொள்ளும் வகையில் செயற்படும். அரசு நிர்வாகம் என்பதே இதற்காகதானே ஏற்படுத்தப்பட்டுள்ளது. இப்போது அரசு நடுத்தும் சிறு குழுவினரின் ஆட்சி போதாதென்று, மற்றொரு சிறுகுழு ஆட்சியை லோக்பால் மசோதா ஏற்படுத்தித் தருகிறது. ,இதன் மூலம், இரண்டு சிறு குழு ஆட்சிக்கு வழிவகுப்பதாக இந்த லோக்பால் மசோதா அமைகிறது. இந்த மசோதா பயன் தருமா இல்லை தராதா என்பது, நாம் ஊழலை எப்படிப் பார்க்கிறோம் என்பதைப் பொறுத்தே உள்ளது. ஊழல் என்பது வெறுமனே சட்ட சம்பந்தப்பட்டப் பிரச்சினையா? ஊழல் என்பது வெறுமனே நிதி மோசடியும் லஞ்ச லாவண்யமும் உள்ள பிரச்சினையா? அல்லது அதிகாரம் என்பது மிகச் சிறுபான்மையினரின் கையில் குவிந்து கிடக்கும் இந்தச் சமத்துவமற்ற சமுதாயத்தில், ஊழல் என்பது சமூக பட்டுவாடாவுக்கான கரன்சி நோட்டா? ஒரு உதாரணத்திற்கு நான் சொல்வதைச் சிந்தித்துப் பாருங்கள்! பெரிய பெரிய ஷாப்பிங் மால் உள்ள ஒரு நகரத்தில், வீதிகளில் கூவி விற்கும் சில்லறை வியாபராம் தடை செய்யப்பட்டுள்ளது என்று எடுத்துக் கொள்ளுங்கள். இருப்பினும் இந்தச் சில்லறை வியாபாரி இந்த ஷாப்பிங் மாலின் விலைக்கு ஈடு கொடுத்து வாங்க முடியாத வாடிக்கையளர்களுக்கு, தனது பொருளை விற்க வேண்டுமானால் கண்டிப்பாகச் சட்டத்தை மீறிதான் செயற்பட வேண்டும். அதற்காக அங்குள்ள போலிஸிக்கும் முனிசிபாலிடி ஆளுக்கும் அவர் சிறு தொகையைக் கொடுக்கிறார் என்று வைத்துக் கொள்ளுவோம். அப்படிச் செய்வது ரொம்ப மோசமான செயலா? எதிர்காலத்தில் இந்தச் சில்லறை வியாபாரி தனது வணிகத்தைச் செய்ய இந்த லோக்பால் பிரதிநிதகளுக்கும் கொஞ்சம் பணம் கொடுக்க வேண்டுமா? சாதாரண மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கான தீர்வு என்பது அமைப்புரீதியான சமத்துவமின்மைக்குத் தீர்வு காண்பதிலேயே உள்ளது. அப்படிச் செய்யாமல், அதற்குப் பதில், மக்கள் இன்னுமொரு அதிகார மையத்தை எதிர்கொள்ளட்டும் என்று விட்டு விடுவது எப்படி ஞாயமாக இருக்கும்? இதற்கிடையில் அன்னாவின் புரட்சிக்கான கட்டமைப்பும் நடன இயக்கமும், அதற்கான உக்கிரமான தேசியவாதமும் கொடி அசைத்தலும், இடஒதுக்கீடு எதிர்ப்பாளர்களின் எதிர்ப்பு போராட்டத்தில் இருந்தும், உலகக்கோப்பை வெற்றி அணிவகுப்பிலிருந்தும், அணுச்சோதனை கொண்டாட்டத்தில் இருந்தும் கடன் வாங்கப்பட்டுள்ளது. அவர்களது உண்ணாவிரதத்தை நீங்கள் ஆதரிக்கா விட்டால், அவர்கள் உங்களை "உண்மையான இந்தியன் இல்லை" என்று அடையாளப் படுத்துவர்கள். அது போலவே இந்த 24 மணிநேர ஊடகங்களும், இந்த நாட்டில் இந்தச் செய்தியை விட்டால், வெளியிடுவதற்கு உருப்படியான வேறு செய்தியே இல்லாத போல, மாயையை உருவாக்கி வருகின்றன. இந்த உண்ணாவிரதம் ஐரம் சர்மிளாவின் பத்து வருட உண்ணாவிரதத்திற்கு எந்த விதத்திலும் அர்த்தமும் வழங்கவில்லை. சந்தேகத்தின் பேரிலேயே யாரையும் கொல்லலாம் என மணிப்பூரில் வழங்கப்பட்டிருக்கும் அப்ஸ்பா சட்டத்திற்கு எதிராக AFSPA (Armed Forces [Special Power] ACT) பத்து வருடமாக உண்ணாவிரதம் இருந்து (அவருக்கு வலுகட்டாயமாக உணவு புகட்டப் பட்டாலும்) தனது எதிர்ப்பைப் பதிவு செய்திருக்கிறாரே ஐரம் சர்மிளா, அவரை இப்போராட்டம் எந்த அர்த்தமும் இல்லாமல் கைவிட்டு விட்டது. அணு ஆலை வரக்கூடாது என்று பத்தாயிரம் கணக்கான கிராமத்துவாசிகள் கூடங்குளத்தில் தொடர் உண்ணாவிரதம் இருக்கிறார்களே, அந்த உண்ணாவிரத்திற்கு இந்த அன்னாவின் உண்ணாவிரதம் எந்த அர்த்தத்தையும் வழங்கவில்லை. அன்னாவின் போராட்டத்தில் மக்கள் என்பவர்கள் யார்? ஐரம் சர்மிளாவின் உண்ணாவிரத்தை ஆதரித்த மணிப்பூரிகள் மக்கள் இல்லையா? ஜகத்சிங்பூரிலும், கலிங்காநகரிலும், நியாம்கிரியிலும், பஸ்தாரிலும், செய்தாபூரிலும், சுரங்கக் கொள்ளைக் குண்டர்களுக்கு எதிராகவும், குண்டாந்தடிப் போலிஸ்காரர்களுக்கு எதிராகவும், திரண்ட ஆயிரக்கணக்கானவர்கள் மக்கள் இல்லையா? போபால் வாயு கசிவில், முடமானவர்கள், இறந்தவர்கள், மக்கள் இல்லையா? அல்லது நர்மதா பள்ளத்தாக்கில் கட்டப்பட்ட அணையால் இடம்பெயர்ந்தவர்கள் மக்கள் இலலையா? தனது நிலத்தை எடுத்துக் கொள்ளக்கூடாதென எதிர்ப்புத் தெரிவித்த, நோயிடா அல்லது புனே அல்லது ஹரியானாவைச் சார்ந்த விவசாயிகள் மக்கள் இல்லையா? அன்னாவின் போராட்டத்திற்கான மக்கள் இவர்கள் இல்லை. பின்னர் அன்னாவின் போராட்டத்திற்கான மக்கள் யார்? தான் கோரும் லோக்பால் மசோதா பார்லிமெண்டில் விவாதத்திற்கு வைக்கப்பட்டு, சட்டமாக மாற்றப்படா விட்டால், உணவருந்தாமலேயே உயிரை மாய்த்துக் கொள்வேன் என்று கோரும், அன்னா என்ற 74 வயது மனிதனை, ஊடகத்தில் பார்க்கும் இந்த பார்வையாளர்கள்தான், அன்னாவின் போராட்டத்திற்கான மக்கள் ஆவர். எப்படி பசித்தவர்கள் புசிப்பதற்காக இயேசு கிறிஸ்து மீன்களையும் உணவுத் துண்டங்களையும் பல மடங்குகளாக ஆக்கினாரோ, அது போலவே தொலைக்காட்சி ஊடகங்கள் பல மடங்குப் பார்வையாளர்களைப் பெருக்கி, இந்த மக்களை பன்மடங்காக்கியது. "ஒரு பிலியன் குரல்கள் ஒலித்து விட்டன,” என்று நமக்குச் சொல்லப்பட்டு விட்டது. "இந்தியா என்றால் அன்னாதான்.” மக்களின் குரலான இந்தப் புதிய சாது உண்மையிலேயே யார்? உடனடி அவசர தேவையான மக்கள் விசயங்கள் குறித்து, இவர் எதுவும் போதுமான அளவுக்கு பேசியதாக நாம் கேட்டதே இல்லை. நமது பக்கத்தில் நடந்த விவசாயிகளின் தற்கொலை குறித்தோ, அல்லது நக்சலைட்டுக்கு எதிராக நடந்த பச்சை வேட்டை ஆபரேசனைக் குறித்தோ, இவர் ஒரு வார்த்தை கூட உகுத்தது கிடையாது. சிங்கூர் பற்றியோ, நந்திகிராம் பற்றியோ, லால்கார்க் பற்றியோ, போஸ்கோ பற்றியோ, விவசாயிகள் போராட்டம் பற்றியோ, அல்லது விசேச பொருளாதார மண்டலத்திலுள்ள பிரச்சினைப் பற்றியோ, இவர் எதுவும் பேசியதில்லை. மத்திய இந்தியாவிலுள்ள காடுகளில் இந்திய இராணுவத்தை நிறுத்தி வைக்க திட்டமிட்டிருக்கும் அரசின் திட்டங்கள் குறித்து, அவருக்கு எந்த அபிப்பராயமும் இருப்பதாகத் தெரியவில்லை. அவர் மராத்தியராக இல்லாதவர்கள் மேல் கடும் வெறுப்பை உமிழ்ந்து வரும் ராஜ் தாக்கரேயின் அரசியலை ஆதரித்தவர். 2002ம் ஆண்டு முஸ்லிம்களுக்கு எதிரான திட்டங்களைத் நேரடியாக நிர்வகித்த குஜராத் முதலமைச்சரின் "வளர்ச்சி மாதிரி"யை மனமார புகழ்ந்தவர். (இதைச் சொன்னதும் ஏற்பட்ட மக்கள் எதிர்ப்பைக் கண்டு அன்னா, தனது வார்த்தைகளை திரும்பப் பெற்றுக் கொண்டாலும், மோடி மீதான தனது உவப்பை என்றுமே வாபஸ் பெற்றதில்லை) இந்த மாதிரியான கும்மாளத்திற்குப் பிறகும், சில அமைதியான பத்திரிகையாளர்கள், பத்திரிகையாளர்கள் செய்ய வேண்டிய வேலையைச் செய்துள்ளார்கள். ஆர் எஸ் எஸ்சுடன் அன்னாவுக்குள்ள பழைய உறவுகள், தற்போது அம்பலத்துக்கு இப்பத்திகையாளர்கள் மூலமாக வந்துள்ளது. அன்னாவின் கிராம குழுமமான ரலேகன் சித்தியில் பயின்ற, முகுல் சர்மாவைப் பற்றி நாம் இப்போது கேள்வி படுகிறோம். அங்கோ கடந்த 25 வருடமாக ஒரு கிராம பஞ்சாயத்தோ அல்லது கூட்டுறவு சொசைட்டியோ கிடையாது என்பது தெரிகிறது. ஹரிஜன் குறித்து அன்னாவின் கருத்தை அவரது வார்த்தைகள் மூலமாகவே வந்தடையலாம்: “இந்த மகாத்தமா காந்தியின் பார்வையையே ஒவ்வொரு கிராமமும் கொண்டிருக்க வேண்டும். ஒவ்வொரு கிராமத்திலும், ஒரு சமார், ஒரு சுனார், ஒரு கும்ஹர் இருக்க வேண்டும். அவர்கள் தங்களது பாத்திரம் அறிந்து, தங்களது வேலைகளைச் செய்ய வேண்டும். அப்படிச் செய்தால்தான், ஒரு கிராமம் சுயசார்புள்ளதாக இருக்கும். இதைதான் நாங்கள் ரலேகன் சித்தியில் நடைமுறைப்படுத்தி வருகிறோம்.” இப்படிப் பேசும் அன்னாவின் அணியில் இருக்கும் உறுப்பினர்கள், "சமத்துவத்திற்கான இளைஞர்கள்" என்ற இடஒதுக்கீட்டுக்கு எதிரான அமைப்பில் அங்கம் வகித்தவர்கள் என்றால், அதில் ஆச்சரியப்பட என்ன உள்ளது? கோகோ கோலாவில் இருந்தும், லெக்மென் பிரதர்ஸில் இருந்தும் தாரளமாய் நிதி வாங்கிக் கொண்ட அரசு சாரா நிறுவனங்களை நடத்துபவர்கள்தான், அன்னாவின் கிளர்ச்சிப் பிரச்சாரத்தை முன்னின்று கையெடுத்து நடத்தியவர்கள். அன்னா அணியில் முக்கியப் பிரமுகர்களான அரவிந்த கெஜிர்வாலும் மணிஜ் சிசோடியாவும் நடத்தும் கபீர் நிறுவனம், போர்ட் பெளன்டேசனிடம் இருந்து மூன்று வருடங்களுக்கு முன்பு, 4 லட்சம் டாலர்களைப் பெற்றுள்ளது. "ஊழலுக்கு எதிரான இந்தியா" பிரச்சாரத்திற்கு நன்கொடை அளித்தவர்களில் அலுமினியம் ஆலைகளுக்குச் சொந்தமான கம்பெனிகளும் பெளன்டேசன்களும், பல துறைமுகங்களைக் கட்டிய கம்பெனிகளும் பெளன்டேசன்களும், பல விசேச பொருளாதார பகுதிகளைக் கட்டிய கம்பெனிகளும் பெளன்டேசன்களும், அரசியல்வாதிகளுடன் நெருங்கிய தொடர்புடைய ரியல் எஸ்டேட் கம்பெனிகளும் பெளன்டேசன்களும் அடக்கம். பல கோடிக் கணக்கிலான நிதி சாம்ராஜ்யத்தை நடத்துபவர்களே அந்த அவர்கள். அவர்களுக்கு நன்கொடை கொடுத்தவர்களில் பலர் ஊழலில் ஈடுபட்டதற்காக கண்காணிப்பில் இருப்பவர்களாகவும் மற்றும் பலவித பாதகக் கிரிமினல் செயற்களில் ஈடுபட்டவர்களாகவும் உள்ளார்கள். இவர்கள் அனைவரும் ஏன் அன்னாவுடன் இவ்வளவு உற்சாகத்துடன் பங்கெடுக்கிறார்கள்? எப்போது ஜன் லோக்பால் மசோதாவிற்கான பிரச்சாரம் உச்சகட்டமடைகிறது என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள்! 2G ஸ்பெட்ரம் உள்ளிட்ட பெரும் ஊழல்களும் பெரும் மோசடிகளும் விக்கிலீக் மற்றும் வெவ்வேறு மூலங்களின் வழியாக அம்பலமான போது, பல முக்கியமான கார்பரேசன்களும் மூத்த பத்திரிகையாளர்களும் காங்கிரஸ் மற்றும் நேச கட்சிகளின் மந்திரிகளும், காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதாவைச் சார்ந்த அரசியல்வாதிகளும் ஒவ்வொருவருடன் அனுசரித்து பல நூற்றுக்கணக்கான ஆயிரங்கோடி ரூபாய் பணத்தைப் பொது கருவூலத்தில் இருந்த கரந்து கொண்டு சென்றனர் என்பது தெரிந்தது. இவ்வளவு நாட்களிலும் முதன் முறையாக பத்திரிகையாளர்களும் பரிந்துரையாளர்களும் பெரும் அவமானப் பட்டார்கள். இந்தியாவிலுள்ள பெரும் கார்பரேட் தலைவர்கள் பலர், சிறைச்சாலையில் வாசம் செய்ய வேண்டிய அளவுக்குச் சிக்கிக் கொண்டுள்ளார்கள். இதுதானே மக்களின் ஊழல் எதிர்ப்புப் பிரச்சாரத்திற்கு மிகவும் அவசியமான நேரமாகும், இல்லையா? அரசு தனது வழக்கமான கடமைகளைக் கைக்கழுவி வரும் போது, கார்பரேசன்களும் அரசு சாரா அமைப்புகளும் அரசின் கடமைகளைத் (நீர் விநியோகம், மின்சார விநியோகம், போக்குவரத்து, தொலைத்தொடர்பு, சுரங்கம், சுகாதாரம், கல்வி) தங்களது கரங்களில் எடுத்துக் கொண்டுள்ள காலமிது. கார்பரேட்டிற்குச் சொந்தமான ஊடகங்கள் பொது மக்களது எண்ணங்களைத் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ள காலகட்டமிது. ஆகவே தற்போது இந்த கார்பரேசன்களும் ஊடகங்களும் அரசுசாரா அமைப்புகளும் இந்த ஏதாவது ஒரு லோக்பால் மசோதாவின் அதிகாரத்திற்குள் தங்களை இணைத்துக் கொள்ள முயலும். அதற்குப் பதில், தற்போது பரிந்துரைக்கப் பட்டுள்ள மசோதா, அவர்களை முழுவதுமாய் நிராகரித்து விட்டது. தற்போது மற்றவர்களைக் காட்டிலும் அதிகம் கூச்சல் போடுவதின் மூலமும், கேடுகெட்ட அரசியல்வாதி என்றும் அரசின் ஊழல் என்ற சங்கதியை அழுத்திப் பிரச்சாரமாகக் கொண்டு போவதின் மூலமும், தங்களை ஊழலின் கொடுக்குப் பிடியிலிருந்து விடுவித்துக் கொள்ள அவர்கள் முயல்கிறார்கள். அவர்கள் உருவாக்கிய தர்மாபோதச மேடையான அரசையே கொடூரமாகச் சித்தரித்து, அரசை பொதுவெளியில் இருந்த இன்னும் அகற்ற வேண்டுமென கோருவது, கண்டிப்பாக இரண்டாம் கட்ட சீர்திருத்தத்தை கொண்டுச் செல்வதற்காகதான். இதன் மூலம் இன்னும் தனியார் மயமாக்குதலை ஊக்குவிப்பதுவும், பொது கட்டுமானத்திலும் இந்தியாவின் இயற்கையான வளங்கைள இன்னும் அதிகமாக அணுகும் வாய்ப்பை மேம்படுத்திக் கொள்வதற்காகவும் செய்யும் முயற்சிகளே இவையாகும். இதன் மூலமாக கார்பரேசன் ஊழல்கள் சட்டப்பூர்வமாக்கப்பட்டு, அதற்குப் பரிந்துரைக்கும் கட்டணம் என்று பெயர் சூட்டப்படும். இந்தியாவின் 83 கோடி மக்கள் இன்னும் ஒரு நாளைக்கு இருபது ரூபாய்க்கும் குறைவான வருமானத்துடன்தான் வாழ்ந்து வருகிறார்கள். அவர்களை இன்னும் பராதிகளாக்கும் கொள்கைகளை வலுவாக்குவதின் மூலம், நாம் நமது நாட்டை ஒரு சிவில் சண்டைக்குள் முண்டித் தள்ளுகிறோம் என்றுதானே பொருள்? இந்த அவலமான பிரச்சினை இந்தியாவின் பிரதிநிதித்துவ ஜனநாயகத்தின் கையாலாகாதத் தன்மை மூலம் ஏற்பட்டுள்ளது. இதில் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தாதவர்களான கிரிமினல்களும் கோடிஸ்வரர்களும் பாராளுமன்றவாதிகளாக ஆக்கப்படுகிறார்கள். இவ்வமைப்பில் உள்ள எந்தவொரு ஜனநாயக அமைப்பும், சாதாரண மக்களால் அணுக முடியாததாக உள்ளது. அவர்கள் கொடியாற்றுவதைப் பார்த்து ஏமாந்து விடாதீர்கள்! நாம் நமது உள்நாட்டு இறையாண்மையை அதீதபிரபுக்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு நடத்தப் போகும் ஒரு போருக்குள் இழுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறோம். அப்போர் ஆப்கானிஸ்தானத்தின் போர்கிழார்கள் நடத்தும் சண்டையைப் போல் உக்கிரமாக இருக்கும். அதுதான் நமக்கு விதிக்கப் பட்டதாக இருக்கும் வாய்ப்புகள் உள்ளன. ஆங்கிலத்தில் : அருந்ததி ராய் (21/08/2011, தி இந்து) தமிழில் : சொ.பிரபாகரன் http://www.palanibaba.in/ இடுகையிட்டது பானுப இடுகையிட்டது PMsyed நேரம் 10/29/2011 01:47:00 பிற்பகல் கருத்துகள் இல்லை: இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Twitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர் லேபிள்கள்: அரசியல் லிபியா: இன்னொரு ஈராக் உருவாகின்றது! ஏகஇறைவனின் திருப்பெயரால் லிபியாவில் கிளர்ச்சிப் படையினர் கட்டுப்பாட்டில் உள்ள பெங்காசி நகரம். லிபியாவின் இரண்டாவது பெரிய நகரமான பெங்காசியின் இராணுவ ஆயுதக் களஞ்சியம், கிளர்ச்சியாளர்களின் ஆயுத விநியோக மையமாக செயற்பட்டு வந்தது. லிபிய இராணுவத்தை விட்டோடி, கிளர்ச்சிக் குழுவில் சேர்ந்தவர்கள், பத்திரிகையாளர்களை அழைத்து வந்து காட்டுகிறார்கள். ஆயுதக் களஞ்சியம் இருக்கும் முகாமுக்குள் புதிய படையணிகளுக்கு நடக்கும் பயிற்சி எல்லாம் காட்டுகிறார்கள். நுழைவாயிலில் பாதுகாப்புக்காக ஒரு சிறுவன் நிறுத்தி வைக்கப் பட்டிருக்கிறான். வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் அதையும் படம் பிடிக்கிறார்கள். அன்றிரவு நடுநிசி, இரண்டு கார்கள் முகாமுக்குள் வருகின்றன. வந்தவர்கள் கிளர்ச்சிக் குழுவை சேர்ந்தவர்களாக இருக்கலாம், என்று முகாமில் தங்கியவர்கள் நினைத்துக் கொள்கின்றனர். எப்படியும் வேறுபாடு கண்டுபிடிப்பது மிகவும் கடினம். திடீரென பயங்கர வெடியோசை பெங்காசி நகரை உலுக்கியது. குண்டுவெடிப்பில் ஆயுதக் களஞ்சியம் முற்றாக எரிந்து நாசமாகியது. முகாமில் தங்கியிருந்த முப்பது வீரர்களும் பலியானார்கள். மீட்புப் பணியாளர்களால் எதையும் மீட்க முடியவில்லை. அங்கே எதுவுமே மிஞ்சவில்லை. கிளர்ச்சியாளர்கள் போன்று நடித்த கடாபியின் ஆதரவாளர்கள், கிளர்ச்ச்சிப் படைக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி விட்டிருந்தனர். மேற்கத்திய தொலைக்காட்சி கமெராக்களுக்கு முன்னால் கிளர்ச்சிக்குழு தலைவர் கூறுகிறார். "எங்களுக்கு எந்தவொரு அந்நிய உதவியும் தேவையில்லை. லிபிய மக்கள் பார்த்துக் கொள்வார்கள். சம்பவம் நடந்து அடுத்தடுத்த நாள், லிபியாவுக்குள் புகுந்த சில பிரிட்டிஷ் படை வீரர்களை, கிளர்ச்சிக் குழு கைது செய்கின்றது. மேற்கத்திய நாடுகளின் தலையீடு, கிளர்ச்சியாளர்கள் சந்தித்த மிகப் பெரிய நெருக்கடி. "லிபியாவில் ஏகாதிபத்திய தலையீடு. கிளர்ச்சியாளர்களுக்கு மேலைத்தேய நாடுகள் ஆயுத, நிதி உதவி வழங்குகின்றன." இவையெல்லாம் நிரூபணமானால், லிபிய மக்கள் கிளர்ச்சிக்கு ஆதரவு வழங்குவதை நிறுத்தி விடுவார்கள். யாரின் சர்வாதிகாரத்திற்கு எதிராக கிளர்ச்சி வெடித்ததோ, அதே கடாபியின் பக்கம் மக்கள் ஆதரவு சாய்ந்து விடும். துனிசியா, எகிப்து போன்ற வெற்றியடைந்த புரட்சிகளைக் கண்ட நாடுகளை தனது அருகாமையில் கொண்டுள்ள லிபியாவுக்கு, மக்கள் எழுச்சி சற்று தாமதமாகத் தான் வந்தது. "அவர்களுக்கு (லிபியர்களுக்கு) குறை ஏதும் இல்லை. எங்களைப் பார்த்து பின்பற்றுகிறார்கள்." என்றார்கள் எகிப்திய மக்கள் எழுச்சியில் பங்குபற்றிய ஆர்வலர்கள். ஆயிரக்கணக்கான எகிப்தியர்கள், எகிப்தில் கிடைப்பதை விட மூன்று மடங்கு அதிக ஊதியத்திற்கு லிபியாவில் வேலை பார்த்து வந்தார்கள். லிபிய பாடசாலைகளில், பெரும்பாலும் எகிப்திய ஆசிரியர்களே பணியில் அமர்த்தப்பட்டனர். லிபிய மக்கள் எழுச்சி விரைவில் உள்நாட்டுப் போராக மாறியதில், எகிப்திய தொழிலாளர்கள் அனைவரும் வேலையிழந்து நாடு திரும்ப நேரிட்டது. முழு ஆப்பிரிக்க கண்டத்திலும், லிபியர்களின் தனிநபர் வருமானம் அதிகம். அவர்கள் பெரும்பாலும் உடல்சார்ந்த உழைப்பில் ஈடுபடுவதில்லை. கட்டுமானப் பணிகளில், துப்பரவுப் பணிகளில் எந்தவொரு லிபியப் பிரஜையும் வேலை செய்ய விரும்புவதில்லை. அத்தகைய அசுத்தமான, கடினமான பணிகளை செய்வதற்கு வெளிநாட்டுத் தொழிலாளர்கள் ஒப்பந்தக் கூலிகளாக அமர்த்தப்படுகின்றனர். சுருக்கமாக சொன்னால், துபாய் போன்ற வளைகுடா அரபு நாடுகளின் நிலையுடன் ஒப்பிட்டுப் பார்க்கத் தக்கது. கடாபி, நாற்பதாண்டுகளுக்கு முன்னர், அதிக இரத்தம் சிந்தாத சதிப்புரட்சி மூலம் ஆட்சிக்கு வந்தார். அன்றிருந்த மன்னர் மீது அரச படையினர் மத்தியிலேயே அதிருப்தி நிலவியதால், கடாபியின் ஆட்சிக் கவிழ்ப்பு நடவடிக்கையை எதிர்க்க ஆளிருக்கவில்லை. ஆட்சியைக் கைப்பற்றிய கடாபி, நாட்டின் முக்கிய ஏற்றுமதி வருமானத்தை ஈட்டித்தரும் எண்ணெய் உற்பத்தியை தேசிய மயப்படுத்தினார். எண்ணெய் விற்று கிடைத்த பணத்தை மக்கள் நலன் பேணும் திட்டங்களில் செலவளித்தார். அப்போது இரண்டு மில்லியன் சனத்தொகையைக் கொண்ட லிபியா, இலாபப் பணத்தை மக்களுக்கு பகிர்ந்து கொடுப்பதில் சிரமமேதும் இருக்கவில்லை. இதனால் நாடு துரித கதியில் அபிவிருத்தியடைந்தது. கடாபியின் புரட்சிக்கு முன்னர், பெரும்பான்மை லிபியர்கள் வறுமையில் வாடினார்கள். பாலைவன ஓரங்களில் கூடாரங்களில் கூட்டுக் குடும்பமாக வாழ்ந்தார்கள். பொருளாதார அபிவிருத்தி காரணமாக, இன்று எந்தவொரு லிபியரும் பாலைவனக் கூடாரத்தில் வாழ்வதில்லை, கடாபியைத் தவிர. தலைநகர் திரிபோலியில் கடாபியின் மாளிகை இருந்தாலும், தான் இன்றும் மரபு வழி கூடாரத்தில் வாழ்வதாகக் காட்டுவது கடாபியின் வெகுஜன அரசியல். வெளிநாடுகளுக்கு விஜயம் செய்யும் பொழுதும், அந்தக் கூடாரத்தை தன்னோடு எடுத்துச் செல்வார். எந்த நாட்டிலும், ஹோட்டலில் தங்காமல் கூடாரத்தில் தங்கும் ஒரேயொரு தேசத் தலைவர் அவராகத் தான் இருப்பார். கால்நடைகளை மேய்க்கும் ஏழைக் குடும்பமொன்றில் பிறந்த கடாபி, அதிகாரம் கையில் வந்தவுடன் குடும்ப அரசியலில் ஈடுபட்டு செல்வம் சேர்த்தமை, லிபிய மக்களின் எதிர்ப்புணர்வுக்கு முக்கிய காரணம். கடாபியின் குடும்பத்தினர் மட்டுமல்ல, அவரது "கடாபா" கோத்திரமும் அரசியல்- பொருளாதாரத்தில் ஆதிக்கம் செலுத்தினர். பிற அரேபியர்கள் போல, லிபிய அரேபியரும் பல கோத்திரங்களாக அல்லது இனக்குழுக்களாக பிரிந்துள்ளனர். ஒரு குறிப்பிட்ட கோத்திரத்தை சேர்ந்தவர் அரசில் பதவி வகித்தால், "நமது ஆட்கள்" சிலருக்கு வேலை எடுத்துக் கொடுப்பது அந்த சமூகத்தில் சர்வ சாதாரணம். கடாபி லிபியாவின் சர்வ அதிகாரம் பெற்ற அதிபரானதும், அவரது கடாபா கோத்திரத்தை சேர்ந்தவர்களுக்கே அரசுப் பதவிகள் கிடைத்தன. இதனால் பிற கோத்திரங்களை சேர்ந்தவர்கள் மத்தியில், கசப்புணர்வும் பொறாமையும் காணப்பட்டது. "லோக்கர்பீ" நீதிமன்ற விசாரணையில் குற்றம் சாட்டப்பட்ட சந்தேகநபரை ஒப்படைக்கும் விஷயத்தில், இந்த முறுகல் நிலை வெளிப்பட்டது. அந்த சந்தேக நபர் வேறொரு கோத்திரத்தை சேர்ந்தவர் என்பதாலேயே கடாபி அவரை ஒப்படைக்க முன்வந்தார் என்று பேசிக் கொண்டனர். இதை விட, கடாபியின் பிள்ளைகளின் திருவிளையாடல்கள் உலகப் பிரசித்தம். அதிகார மமதையும், பணத்திமிரும் உள்நாட்டு மக்களை முகம் சுழிக்க வைத்தன. பிரான்சில் மதுபோதையில் காரோட்டிய மகன், சுவிட்சர்லாந்தில் நட்சத்திர விடுதியில் கைகலப்பில் ஈடுபட்டு கம்பி எண்ணிய மகன். தனது தறுதலைப் பிள்ளைகளின் நடத்தையை கண்டிக்காத தகப்பனான கடாபி, பதிலுக்கு இராஜதந்திர சர்ச்சைகளை கிளப்பி விட்டார். கடந்த காலங்களில் லிபியா, எந்த வித உள்நாட்டுக் குழப்பமும் இல்லாதவாறு அமைதியாகக் காட்சியளித்தது. அதாவது, அங்கே நடந்த சம்பவங்கள் எதுவும் சர்வதேச ஊடகங்களின் கவனத்தைப் பெறவில்லை. கடாபியின் அதிகாரத்தை எதிர்ப்போர் அன்றும் கிழக்கு லிபியாவில் தான் தோன்றினார்கள். பண்டைய ரோமர்களின் மாகாணமான சிரேனிகா பகுதியில் இருந்து தான், காலனியாதிக்க எதிர்ப்புப் போர் ஆரம்பமாகியது. பாலைவனச் சிங்கம் என்று அழைக்கப்பட்ட ஒமார் முக்தார் தலைமையில், இத்தாலியருக்கு எதிராக வீரஞ் செறிந்த விடுதலைப் போர் நடந்தது. போராட்டம் தோல்வியடைந்த போதிலும், அவர்கள் ஸ்தாபித்த மதப்பிரிவு இன்று வரை நிலைத்து நிற்கின்றது. முன்னாள் போராளிகளும், ஆதரவாளர்களும், அவர்களின் குடும்பங்களும் "சானுசி" என்ற மத அமைப்பாக, தம்மைத் தாமே தனிமைப் படுத்திக் கொண்டனர். இன்றைய அரசியல் புரிதலின் பிரகாரம் "இஸ்லாமிய கடும்போக்காளர்கள்" அல்லது "மத அடிப்படைவாதிகள்" என்று அழைக்கலாம். இருப்பினும் அன்று காலனியாதிக்கத்தை எதிர்த்த ஒமார் முக்தார் போன்ற பல தேசிய நாயகர்கள், இஸ்லாமிய கோட்பாடுகளை உயர்த்திப் பிடிப்பவர்களாக இருந்துள்ளனர். இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர், பிரிட்டிஷாரால் முடி சூட்டப்பட்ட இடிரிஸ், சானுசி சமூகத்தை சேர்ந்தவர். இதனால் அவரது ஆட்சிக் காலம் முழுவதும், சானுசி சமூகத்தை சேர்ந்தோரின் ஆதரவு கிடைத்து வந்தது. குறிப்பாக கிழக்கு லிபிய பிரதேசம், இடிரிஸ் ஆதரவுத் தளமாக இருந்தது. 2011, பெப்ரவரி, கடாபிக்கு எதிராக கிளர்ந்தெழுந்த ஆர்ப்பாட்டக் காரர்கள், மன்னர் இடிரிசின் உருவப்படத்தையும், அவரது கொடியையும் தாங்கியிருந்தனர். பெங்காசி போன்ற, கிளர்ச்சியாளர்களால் விடுதலை செய்யப்பட்ட பகுதிகளில் சிவப்பு, கருப்பு, பச்சை வர்ணங்களில் பிறைச்சந்திரன் பதித்த கொடி பறக்க விடப்பட்டது. மன்னராட்சியைக் கவிழ்த்த கடாபியின் சதிப்புரட்சி வரை, அதுவே லிபியாவின் தேசியக் கொடியாக இருந்தது. இருபது வருடங்களுக்கு முன்னரே, சானுசி மதப்பிரிவை சேர்ந்த போராளிகள் பலர், ஆப்கானிஸ்தானில் அல்கைதாவுடன் இணைந்து செயற்பட்டு வந்தனர். நாடு திரும்பிய போராளிகள், லிபியாவிலும் ஒரு ஆயுதக் குழுவை ஸ்தாபித்து சில தாக்குதல்களை நடத்தியுள்ளனர். லிபிய அரசின் இரும்புப் பிடி, தீவிரவாத நடவடிக்கைகளை தொடர விடவில்லை. இன்று வரை பலர் அறியாத செய்தி என்னவெனில், முதன்முதலாக இன்டர்போல் மூலமாக பின்லாடனை குற்றவாளியாக அறிவித்து பிடியாணை பிறப்பித்தது அமெரிக்காவல்ல! மாறாக லிபியா!! 2001, அமெரிக்கா அறிவித்த பயங்கரவாதத்திற்கு எதிரான போர்க் காலத்தில், கடாபி இதனைக் குறிப்பிட்டு பல தடவை பேசியுள்ளார். ஆனால் அது சர்வதேச கவனத்தை பெறவில்லை. கடாபி ஒருகாலத்தில் அரபு சர்வதேசியத்தில் நம்பிக்கை வைத்திருந்தார். ஏகாதிபத்திய எதிர்ப்பு போராளியாக இருந்தார். சோஷலிசம் பேசினார். இருந்தாலும் இஸ்லாமிய மதத்திலும் பற்றுறுதியுடன் இருந்தார். கடாபி மார்க்சியம் கலந்த புதுமையான இஸ்லாம் ஒன்றை போதித்தார். சானுசி மதப்பிரிவினர் தூய்மைவாதிகள் அல்லது கடும்போக்காளர்கள். அதற்கு மாறாக கடாபி ஒரு தாராளவாதி. கடாபியின் ஷரியா சட்டமும் பல திருத்தங்களைக் கொண்ட, மென்மையான தண்டனைகளைக் கொண்டிருந்தது. அரபு நாடுகளில் லிபியாவில் தான் பெண்களுக்கு அதிக சுதந்திரம் வழங்கப்பட்டது. குறிப்பாக சொத்துரிமைச் சட்டத்தில், ஆணுக்கே அதிக உரிமை வழங்கும் சட்டமே அரபு நாடுகள் எங்கும் அமுலில் உள்ளது. லிபியாவில் பெண்களும் சொத்தில் உரிமை கொண்டாடலாம். கடாபியின் காலத்தில் தான், பெண்கள் அதிகளவில் உயர் கல்வி கற்றனர். அரசிலும், தனியார் நிறுவனங்களிலும் உயர் பதவிகளை அலங்கரித்தனர். கடாபியின் மகளிர் மெய்க்காவலர் படையணி, சர்வதேச மட்டத்தில் பலர் கவனத்தை ஈர்த்தது. நிச்சயமாக, இஸ்லாமிய கடும்போக்காளர்கள் அத்தகைய மாற்றங்களை விரும்பவில்லை. தாலிபான்களைப் போல பெண்களை வீட்டுக்குள் பூட்டி வைக்க விரும்பும் பழமைவாதிகளுக்கு, கடாபியின் செயல்கள் எரிச்சலூட்டின. அந்த எதிர்ப்புகளை கணக்கெடுக்காத கடாபி, தனது "தாராளவாத இஸ்லாமிய மார்க்கம்" சிறந்தது என்று லிபியாவுக்கு வெளியேயும் பிரச்சாரம் செய்தார். நீண்ட காலமாக உலகின் மிகத் தீவிரமான ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளியாக காட்டிக் கொண்ட கடாபியை, அமெரிக்கா அடக்க விரும்பியதில் வியப்பில்லை. 1986 ம் ஆண்டு, திரிபோலி நகரின் வான் பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்த அமெரிக்க விமானங்கள், கடாபியின் மாளிகையை இலக்கு வைத்து குண்டுவீசின. விமானத் தாக்குதலில் கடாபி அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினாலும், அயலில் குடியிருந்த பொது மக்கள் பல கொல்லப்பட்டனர். ஏகாதிபத்திய எதிர்ப்பு போரின் பங்காளிகள் என்ற அடிப்படையில், இஸ்லாமியரல்லாத தேசியவாத, இடதுசாரி இயக்கங்களுக்கும் ஆதரவு வழங்கினார். அயர்லாந்தின் ஐ.ஆர்.ஏ., ஜெர்மனியின் செம்படை போன்ற ஆயுதபாணி அமைப்புகளின் உறுப்பினர்களுக்கு லிபியாவில் இராணுவப் பயிற்சி வழங்கப்பட்டது. லோக்கர்பீ விமானக் குண்டு தாக்குதலில் கடாபியை வேண்டுமென்றே சம்பந்தப் படுத்திய சர்வதேச சமூகம், ஐ.நா. பொருளாதாரத் தடையை கொண்டு வந்தது. (அந்தத் தாக்குதலில் லிபியாவுக்கு தொடர்பில்லை என்பதும், ஈரானின் பங்களிப்பும் அன்று வேண்டுமென்றே மறைக்கப் பட்டன.) 1993 லிருந்து 2003 வரையிலான பொருளாதாரத் தடை லிபியாவை மோசமாகப் பாதித்தது. சர்வதேச விமானப் பறப்புகள் துண்டிக்கப்பட்டன. எண்ணெய் அகழும் தொழிலகங்களில், பழுதடைந்த உபகரணங்களை திருத்த முடியாமல், உற்பத்தி குறைந்தது. இருப்பினும், லிபியா ஆப்பிரிக்க கண்டத்தை சேர்ந்தது என்பதால், கடத்தல் வியாபாரிகள் உணவு, மற்றும் அத்தியாவசியப் பொருட்களை கொண்டு வருவதில் தடை இருக்கவில்லை. 2003 ல் பொருளாதாரத் தடை விலத்திக் கொள்ளப்பட்ட பிறகு, கடாபி முற்றிலும் மாறியிருந்தார். சோஷலிச, அல்லது தேசியவாத பொருளாதாரத்தைக் கைவிட்டு விட்டு, முதலாளித்துவத்திற்கு தாராளமான சுதந்திரம் வழங்கினார். கடாபியின் குடும்பத்தினரும், கடாபா இனக்குழுவை சேர்ந்த முதலாளிகளும் செல்வம் திரட்டியது இந்தச் சந்தர்ப்பத்தில் தான். கடாபியின் குடும்ப நிறுவனம், இத்தாலியில் இரண்டு உதைபந்தாட்டக் கழகங்களை வாங்கியது லிபியாவை காலனிப் படுத்திய நாடான இத்தாலி, பிரதான வர்த்தகக் கூட்டாளியாகும். லிபியாவின் எண்ணெய் வயல்களிலும், பிற துறைகளிலும் இத்தாலியின் முதலீடுகள் அதிகம். நெதர்லாந்தின் ஷெல் நிறுவனமும் எண்ணெய் உற்பத்தியில் குத்தகைகளை பெற்றிருந்தது. இருப்பினும் அமெரிக்க நிறுவனங்களின் வரவு மிகக் குறைவாகவே இருந்தது. தற்போது லிபியா பிரச்சினையில் அமெரிக்கா மிகத் தீவிரமான அக்கறை செலுத்துவது ஒன்றும் தற்செயலல்ல. சதாம் ஹுசைன் கால ஈராக்கிலும், ரஷ்யர்களும், சீனர்களும், எண்ணெய் உற்பத்தியை பார்த்துக் கொண்டிருந்த சமயத்தில் தான் அமெரிக்கா படையெடுத்தது. அதற்குப் பிறகு ஈராக்கின் எண்ணெய் உற்பத்தி முழுவதையும் அமெரிக்க நிறுவனங்கள் கைப்பற்றிக் கொண்டன. தற்போது லிபியாவிலும் அது போன்ற நிலைமை காணப்படுகின்றது. கடாபிக்கு ஆதரவான லிபியப் படைகள் முன்னேறிச் சென்று, கிளர்ச்சியாளரின் கட்டுப்பாட்டில் உள்ள நகரங்களை கைப்பற்றி வருகின்றன. இதனால் கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதம் வழங்குமாறு, சவூதி அரேபியாவை அமெரிக்கா கேட்டுள்ளது. லிபியா முழுவதும் கிளர்ச்சியாளர்கள் வசம் வந்திருந்தால், அவர்களுடன் எண்ணெய் உற்பத்தி ஒப்பந்தங்களை செய்து கொண்டிருக்கலாம். கிளர்ச்சியை வழிநடத்திக் கொண்டிருக்கும், "லிபியா தேசிய மீட்பு முன்னணி" புகலிடத்தில் இயங்கிய பொழுது, சி.ஐ.ஏ. தொடர்பை ஏற்படுத்தி இருந்தது. ஆனால் கிளர்ச்சியாளர்கள் தோற்கடிக்கப்பட்டு, லிபியா முழுவதும் கடாபியின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தால், அடுத்த நடவடிக்கை பற்றி யோசிக்க வேண்டியிருக்கும். லிபிய வான் பரப்பை நேட்டோ படைகள் கட்டுப் படுத்துதல், பொருளாதாரத் தடை என்பன, ஐ.நா. பெயரில் கொண்டு வரப்படும். ஊடகங்கள் பல தடவை செய்தி அறிவிப்பதை விட பிரச்சாரம் செய்வதற்கே பெரிதும் உதவுகின்றன. ஆரம்பத்தில் இருந்தே லிபிய மக்கள் அனைவரும் கடாபிக்கு எதிராக கிளர்ந்தெழுந்து விட்டதாகவே காட்டிக் கொண்டிருந்தனர். இராணுவத்தை விட்டோடியவர்களை சுட்டிக் காட்டி, லிபிய இராணுவம் மக்கள் மீது தாக்குதல் நடத்த மறுக்கிறது என்றும் கூறிக் கொண்டிருந்தன. அவ்வாறு தாக்குதல் நடத்துபவர்கள் எல்லோரும் பிற ஆப்பிரிக்க நாடுகளை சேர்ந்த கறுப்பினக் கூலிப் படைகள் என்று செய்தி வாசித்தன. கிளர்ச்சியாளர்களால் விடுதலை செய்யப்பட்ட பகுதிகளின் மக்களும் அவ்வாறான தகவல்களை தெரிவித்தனர். ஆனால் அங்கே நிலவும் நிறவெறிப் பாகுபாட்டை ஊடகங்கள் வேண்டுமென்றே மறைத்தன. லிபியாவின் தென் பகுதியில் கறுப்பின மக்கள் வாழ்கின்றனர். அவர்களும் லிபியப் பிரஜைகள் தான். அதே நேரம் லிபியாவில் லட்சக் கணக்கான ஆப்பிரிக்க குடியேறிகள், அகதிகள் வசித்து வருகின்றனர். லிபிய நிறவெறியர்கள் அவர்களை தாக்குவது, அங்கே அடிக்கடி நடக்கும் நிகழ்வு. ஒரு தடவை, லிபிய காடையர்கள் நூற்றுக்கணக்கான ஆப்பிரிக்கர்களை இனப்படுகொலை செய்யுமளவிற்கு, அங்கே நிறவெறி உச்சத்தில் இருந்துள்ளது. இன்றும் கிளர்ச்சியாளர்கள் விடுதலை செய்த பகுதிகளில் வாழ்ந்த ஆப்பிரிக்கர்கள் தாக்கப்பட்டனர். அனைத்து வெளிநாட்டவர்களும் மோசமான விளைவுகளை எதிர்பார்த்து வெளியேறி விட்டனர். இடுகையிட்டது PMsyed நேரம் 10/29/2011 01:44:00 பிற்பகல் கருத்துகள் இல்லை: இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Twitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர் வியாழன், அக்டோபர் 27, 2011 சுகமான பிரசவமும் சீரழிக்கும் சிசேரியன்களும் சுகமான பிரசவமும் சீரழிக்கும் சிசேரியன்களும் டாக்டர் A. ஷேக் அலாவுதீன் MD., (Chin.Med), A.T.C.M (CHINA) Zhejiang University, Hangzhou, (China) (Chinese Traditional Medicine). சம்பவம் 1: தமிழ்நாட்டில் நாமக்கல் நகரையடுத்த கொல்லிமலையில் சித்தா டாக்டர்கள் மற்றும் சித்தா பயிலும் மாணவர்கள் கூட்டத்தில் கலந்துகொள்ளும்படியும் பேசவும் அழைத்திருந்தார்கள். பேசிமுடிந்து கலந்துரையாடலின் போது சித்தா டாக்டர் ஒருவர் என்னிடம் கூறினார், அவரது சகோதரி திருபணத்திற்கு, பிரசவம் பார்ப்பதற்காக சிறப்பு படிப்பு பயின்ற பெண் டாக்டர் வந்திருக்கின்றார். அவரை திருமணம் முடிந்த பிறகு அனைத்து நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டுவிட்டு செல்லும்படி நிர்பந்தம் செய்திருக்கின்றார், அதற்கு அப்பெண் மருத்துவர் ‘நான் உடனடியாக என் மருத்துவமனைக்கு செல்ல வேண்டும், அங்கே பிரசவத்திற்காக ஒரு பெண் அட்மிட் ஆகியிருக்கின்றாள் நான் அங்கு சென்று சிசேரியன் செய்ய வேண்டும், நான் போக தாமதமானால் அப்பெண்ணுக்கு சுகப்பிரசம் ஆகிவிடும்’ என்றிருக்கின்றார். இதனைக்கேட்ட அந்த நண்பர் அதிர்ச்சியோடு அந்த பெண் டாக்டரை வழி அனுப்பிவைத்துவிட்டார். சம்பவம் 2: தஞ்சையிலுள்ள எனது ‘தி ஹெல்த் ரிசோட்’ மருத்துவமனைக்கு, திருச்சியைச் சேர்ந்த பிரபல மருத்துவமனையை நிறுவிய டாக்டரும் அவருடைய சக நண்பர்; டாக்டரும் வந்திருந்தனர். நான் அவர்களிடத்தில் சீன மருத்துவத்தின் சிறப்புக்களை விளக்கி சொன்னபோது அதனை ஆச்சரியத்தோடு கேட்டு வியந்தார்கள், வந்திருந்த மற்ற டாக்டர் கூறினார் இதை இறைவன் உலகக்கு வழங்கிய மருத்துவமாகத்தான் இருக்க முடியும், மனிதனால் உருவாக்கியிருக்க முடியாது என்று சொல்லி வியந்தார். பிறகு சுகப்பிரசவத்திற்கான எளிய முறைகள் என்னவென்பதை விளக்கினேன், இதைக் கேட்டவுடன் டாக்டர் அவர்கள் தன் உடன் வந்திருந்த சக டாக்டரிடம் நீங்கள் உங்கள் மனைவியிடம் இதையெல்லாம் சொல்லி கொடுங்கள், ஆனால் சிசேரியனே செய்ய சொல்லுங்கள் அப்போதுதான் அதிக வருமானம் கிடைக்கும் என்று சிரித்துக்கொண்டே கூறினார். அப்போதுதான் எனக்கு தெரிந்தது உடன் வந்திருந்த டாக்டரின் மனைவி (Obstetric Gynaecologist) பிரசவ சம்பந்தமான படிப்பு படித்த பெண் டாக்டர் என்று, மேற்சொன்ன சம்பவங்கள் சில கசப்பான உண்மைகளை நமக்கு உணர்த்தும். சுமார் 30, 40 வயது நிரம்பிய பலரை விசாரித்து பாருங்கள், அவர்கள் பெரும்பாலும் சுகப்பிரசவம் ஆனவர்களாகவும் அதிலும் வீட்டிலேயே பிறந்தவர்களாக இருப்பார்கள். வீட்டிலேயே பிறந்த பலருக்கு, அவர்கள் பிரசவத்திற்கு உறுதுணையாக இருந்தவர்கள் தமது அக்கம்பக்கத்து வீட்டுகாரர்களே! சில ஊர்களில் படிக்காத வயதான அனுபவமிக்க மூதாட்டிகளே உதவி செய்திருப்பார்கள். இப்படித்தான் பல்லாயிரக்கணக்கான பிரசவங்கள் அன்று கத்தியின் சுவடுயின்றி பிறந்தன. ஆனால் இன்றைய நவீன உலகில் சுகப்பிரசவம் என்பது அறிதான ஒன்றாகிவிட்டது. படிக்காதவர்கள் பாமரர்கள் எல்லாம் சுகப்பிரசவம் செய்தபோது அதிகம் படித்த அறிவாளிகள்(?), வெளிநாடு சென்று சிறப்பு பட்டம் பெற்றவர்கள் எல்லாம் சிசேரியன் அதிகம் செய்கின்றார்களே ஏன்? உலகெங்கும் உள்ள பலக் கோடிக்கணக்கான உயிரினங்கள் சுகப்பிரசவத்திலேயே பிறக்கின்றன, சிறிய பூச்சியிருந்து பெரிய யானை போன்ற மிருகம் வரை சுகப்பிரசவம் ஏற்படுகின்றபோது மனிதனுக்கு மட்டும் ஏன் இந்த அவல நிலை? டாக்டர்கள் தான் பணத்துக்காக இதை செய்கின்றார்கள் என்றால் மக்களாகிய நாம் ஏன் இதற்காக ஒத்துழைக்க வேண்டும்? என்ற கேள்வி எழலாம். கர்ப்பிணியை பிரசவத்திற்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றவுடன் அங்குள்ள அதிகம் படித்த டாக்டர்கள் கர்ப்பிணியின் உறவினரிடம் நிலைமை மோசமாக இருக்கின்றது, சிசேரியன் செய்யாவிட்டால் உயிருக்கு ஆபத்து என்ன சொல்கிறீர்கள்? என்று மிரட்டும் போது சிசேரியனுக்கு சம்பதிப்பதை தவிர வேறு என்ன செய்ய முடியும். டாக்டர்களும் வந்த கணவர் அல்லது உறவினர்களிடம் கையெழுத்து வாங்கி கொண்டு சட்ட பாதுகாப்போடு சிசேரியன் செய்து தங்களது பொருளாதார நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்கின்றார்கள். சட்டம் ஓர் இருட்டறை என்பது இந்த பிரசவ அறைக்கும் பொருந்தும், பிறந்தாலும் இறந்தாலும் ஒன்றுமே செய்ய முடியாது! காரணம் நாம்தான் கையெழுத்து போட்டு கொடுத்துவிட்டோமே. அப்படியானால் சிசேரியன் தேவையே இல்லையா? என்று கேட்டால் அதற்கு பதில் இடுப்பு எலும்பு யாருக்கு பிறவியிலேயே மிக குறுகலாக இருக்கின்றதோ அவருக்குத்தான் தேவைப்படும். இதுபோன்ற நிலைமை பல ஆயிரத்தில் ஒருவருக்குத்தான் ஏற்படும், சில விபத்துக்கள் ஏற்பட்டாலும் தேவைபடலாம். மற்றபடி எல்லோரும் சுகப்பிரசவம் ஆகக் கூடியவர்களே. தற்போது டாக்டர்கள் தரும் தேவையில்லாத மருந்துகளும் வேறு சில காரணங்களும் சுகபிரசவத்தையே மாற்றுகின்றன. தேவையில்லாத இரசாயன பொருட்கள்: கர்ப்பம் ஆனவுடன் டாக்டர்கள் கொடுக்கும் தேவையில்லாத மருந்துகள் உடலின் இயக்கத்தன்மையை மாற்றிவிடுகின்றது. இரும்புச்சத்து மாத்திரைகள் சுகப்பிரசவத்திற்கு முதல் எதிரி, தேவையில்லாமல் கண்ட சத்து மாத்திரைகளை எழுதி கொடுக்கின்றார்கள், இயற்கையான முறையில் இந்த சத்துக்களை பெற பல வழிகள் இருக்கும்போது அவற்றை இவர்கள் சொல்லுவதில்லை. கர்ப்பிணிகளுக்கு கொடுக்கும் மருந்துகள் (இரசாயன மருந்துகள்) இயற்கையாக பெரும் முறைகள் கால்சியம் மாத்திரைகள் பால், மோர், பால்கட்டி, முட்டை மஞ்சள் கரு, முளைக்கீரை, வெந்தயக் கீரை, பருப்பு வகைள், கிழங்குகள், எள், கேழ்வரகு, மக்காச்சோளம், கோதுமை, கைகுத்தல் அரிசி, இறைச்சி இரும்புச் சத்து மாத்திரைகள் பேரீச்சம்பழம், அரைக்கீரை, தண்டுக்கீரை, இறைச்சி, கல்லீரல், முட்டை மஞ்சள் கரு, வெல்லம், பச்சை காய்கறிகள், சுண்டைக்காய், உருளைக்கிழங்கு, கருவேப்பிலை அயோடின் மீன் எண்ணெய், கடல் மீன்கள், கீரைகள், பழங்கள் குளோரின் உப்பு, பச்சை கீரைகள், தக்காளி, அன்னாசி பழம், வாழைப்பழம், பேரிச்சம்பழம். பாஸ்பரஸ் பால், மோர், முட்டை, வெள்ளரிக்காய், பசலைக்கீரை, கேரட், முள்ளங்கி, இறைச்சி, மீன், கைகுத்தல் அரிசி, எண்ணெய்வித்துக்கள் மக்னீசியம் பீன்ஸ், பட்டாணி, பருப்புகள். சிறுதானியங்கள் பொட்டாசியம் வாழைப்பழம், உருளைக்கிழங்கு, கீரைகள் சோடியம் இது பழங்களைத் தவிர மற்ற எல்லா உணவுகளிலும் கிடைக்கின்றன குரோமியம், செலினியம், மாங்கனீஸ் எல்லா வகை உணவுகளிலும் குறைவாக இருக்கிறது. விட்டமின் ஏ (ரெட்டினால்) மீன் எண்ணெய், (காட்லீவர் ஆயில் மற்றும் சார்க் லிவர் ஆயில்) கொழுப்புள்ள கடல் மீன்கள், ஈரல், வெண்ணெய், முட்டை, பால், பச்சை நிற கீரைகள், கேரட், மாம்பழம் விட்டமின் டீ (கால்சிடெரால்) கொழுப்புள்ள மீன்கள், மீன் எண்ணெய், ஈரல், முட்டை, பால், பால் பெருட்கள், வெண்ணெய், மாலை சூரிய ஒளி விட்டமின் ஈ (டோகோபெரால்) தாவர எண்ணெய், கோதுமை எண்ணெய், முட்டையின் மஞ்சள் கரு, பச்சைநிறக்கீரைகள், காய்கறிகள், ஆட்டு ஆண் விதைகள், கிட்னி விட்டமின் கே (ஆன்டி ஹெமரேஜ்) புதிய பச்சை நிறக் காய்கறிகள், கீரைகள், பழங்கள், தக்காளி, சோயா எண்ணெய் விட்டமின் பி 1 (தயாமின்) கைகுத்தல் அரிசி, தவிடு, பருப்புவகைகள், கோதுமை, எள், நல்லெண்ணெய், வேர்கடலை, இறைச்சி, பால், முட்டை, ஈரல், ஈஸ்ட்டு விட்டமின் பி 2 (ரிபோபிளேவின்) ஈரல், இறைச்சி, முட்டை, பால், கீரைகள், பருப்பு வகைகள், தானியங்கள் விட்டமின் பி 3 (நியாசின்) ஈரல், இறைச்சி, முட்டை, பால், மீன், இரால், பருப்பு வகைகள், வேர்கடலை, சோளம், கோதுமை விட்டமின் பி 6 (பைரிடாக்ஸின்) ஈரல், இறைச்சி, மீன், தானியங்கள் (பட்டாணி கடலை) விட்டமின் போலிக் ஆசிட் ஈரல், முட்டை, கீரைகள் விட்டமின் பி 12 (சயனகாபாலமைன்) ஈரல், இறைச்சி, முட்டை, பால் (அசைவ உணவுப் பொருட்களில் மட்டுமே பி 12 கிடைக்கின்றன), தாவரங்களில் இவை இல்லை விட்டமின் சி (அஸ்கார்பிக் ஆசிட்) நெல்லிக்காய், கொய்யாப்பழம், எலுமிச்சை, ஆரஞ்சு, தக்காளி, பருப்புவகைகள், முட்டைகோஸ், முருங்கைக்கீரை, கத்திரிக்காய், முள்ளங்கி, உருளைக்கிழங்கு, காலிபிளவர், அமர்நாத்காய், பச்சைநிற கீரைவகைகள், காய்கறிகள், முளை வந்த பட்டாணி சவுதி அரேபியாவில் என்னிடம் சிகிச்சைக்கு வந்த எகிப்து நாட்டைச்சேர்ந்த கர்ப்பிணி பெண்ணுக்கு அவரின் பெண் மருத்துவர் எழுதிக் கொடுத்த இரும்புசத்து மாத்திரைகளை எல்லாம் நிறுத்திவிட செல்லிவிட்டு பேரீச்சம் பழங்களை சாப்பிட சொன்னேன். மீண்டும் அந்த பெண் அவரின் பெண் மருத்துவரை சந்தித்தபோது இந்த பேரீச்சம்பழம் விஷயத்தை கூறியிருக்கின்றார்;, அதற்கு அந்த பெண் டாக்டர் 3 பழத்திற்கு மேல் அதிகம் சாப்பிடாதே அது ஆபத்து என்று கூறியிருக்கின்றார், இதனை அந்த எகிப்து நாட்டு பெண் என்னை மீண்டும் சந்தித்தபோது கூறினார். தேவையற்ற கட்டுபாடுகள்: கர்ப்பம் அடைந்தவுடன் எப்போதும் இருப்பது போல் முடிந்த வேலைகளை செய்தாலே போதுமானது, சில டாக்டர்கள் தேவையில்லாமல் கட்டுபாடுகளை விதிப்பது சுகப்பிரசவத்தை பாதிக்கிக்றது. வேலைகள் செய்ய வேண்டாம் என்பது படுக்கையில் அதிகம் ஓய்வெடுக்க சொல்லுவது இதுபோன்ற சில கட்டுப்பாடுகளை கூறி மனரீதியாக அச்சம் கொண்ட நோயாளிகளாக மாற்றிவிடுகின்றார்கள். கிராமங்களில் நாம் பார்த்திருப்போம், கர்ப்பிணி பெண்கள் தலையிலும், இடுப்பிலும் தண்ணீர் சுமந்து செல்வதையும், எத்தனையோ மலைப் பகுதிகளில் பெண்கள் விறகு வெட்டி எடுப்பதையும் அதனை மாலை நேரங்களில் விற்பதற்கு தலையில் சுமந்து எடுத்துச் செல்வதையும். சந்தோஷமான செய்தி என்னவென்றால், அவர்களுக்கு எல்லாம் சுகப்பிரசவம்தான்! காரணம் புரிகின்றதா? திட்டமிட்ட சதியா? பல வருடங்களாக பலதரப்பட்ட மக்களிடம் இந்த விஷயம் பேசபட்டு வருகின்றது, மக்கள் தொகையினை கட்டுபடுத்துவதற்காக இவ்வாறு சிசேரியன் செய்கின்றார்கள் என்று, இரண்டாவது முறை சிசேரியன் செய்யும் போதே குடும்பக் கட்டுபாடு ஆப்ரேசனையும் செய்து விடுகின்றார்கள், அவர்களுக்கு சில தவறான ஆலோசனைகளை கூறி, அதிகப்பட்சம் மூன்று சிசேரியன் வரை செய்கின்றார்கள், அதற்கு மேல் சிசேரியன் செய்தால் உயிருக்கு ஆபத்து என்று சொல்லி கட்டாய குடும்ப கட்டுபாடு ஆப்ரேசனையும் செய்து விடுகின்றார்கள். சிசேரியன் மோசடிகள் அதிகபட்சம் மூன்று சிசேரியன் மட்டுமே செய்ய முடியும் என்பதை பல டாக்டர்களும் கிளிபிள்ளை சொல்வதை போல் சொல்வார்கள், நம்நாட்டில் சுய அறிவை அடகுவைத்து மனப்பாடம் செய்து மருத்துவம் பார்ப்பவர்களிடம் வேறு என்ன பதிலை எதிர்பாக்க முடியும்?. உண்மை தெரிந்தால் நீங்கள் அதிர்ச்சி அடைவீர்கள். சவுதி அரேபியாவில் நான் பணிபுரியும் மெடிக்கல் கன்சல்டன்ட் மருத்துவமனைக்கு டிரீட்மெண்டுக்காக சவுதி பெண்மணி வந்திருந்தார், அவருக்கு சிகிச்சை அளிக்கும்போது அவரின் உடல் தழும்புகளை வைத்து சில கேள்விகள் கேட்டேன், அதற்கு அவர் ஐந்து சிசேரியனகள்; செய்திருப்பதாக கூறினார், இதை கேட்டவுடன் ஆச்சரியம் அடைந்தேன். என் காதிலும் பல வருடங்களாக மூன்று சிசேரியன்களுக்கு மேல் செய்ய முடியாது என்ற புளித்துபோன வார்த்தைகளை கேட்டு பழகி போனதால் இந்த செய்தி எனக்கு அதிர்ச்சியை கொடுத்ததில் வியப்பில்லை. அந்த பெண்மணி சிகிச்சை முடிந்து போன பிறகு நான் உடனே என் மருத்துவமனையிலிருக்கும் பாலஸ்த்தீனைச் நாட்டைச் சேர்ந்த லேடி டாக்டர் திருமதி மனால் என்பரின் அறைக்கு சென்று அவரிடம் ‘ஆச்சரியமான செய்தி ஐந்து சிசேரியன் செய்த சவுதி பெண்மணிக்கு சிகிச்சை அளித்துவிட்டு வருகின்றேன்’ என்றேன். அவர் உடனே இதில் என்ன ஆச்சரியம் உங்களுக்கு ஒன்பது சிசேரியன் செய்த பெண்மணியை காட்டவா? என்றதும் நான் வியந்தே போனேன், உங்களுக்கும் ஆச்சரியமாக இருக்கிறதல்லவா? அதேபோல் முதல் பிரசவம் சிசேரியன் என்றால் அடுத்த பிரசவமும் சிசேரியன்தான் செய்ய வேண்டும் என்று சொல்வதும் உண்மைக்கு புறம்பானது. சிசேரியன் செய்த பிறகும் அதற்கு அடுத்து சுகபிரசவத்திற்கு எவ்வளவோ வாய்ப்பிருக்கின்றது, எத்தனையோ பேருக்கு இதுபோல் குழந்தை பிறந்திருக்கின்றது. தேவையில்லாத மருத்துவ செயல்கள்: விஞ்ஞான வளர்ச்சியை தேவைப்பட்டால் தேவைக்கேற்று பயன்படுத்துவதில் தவறில்லை, ஆனால் இன்றோ அவைகளை பயன்படுத்துவது கட்டாய நடைமுறையாகிவிட்டது. உதாரணத்திற்கு ஸ்கேன் எடுப்பதை சொல்லலாம். நகர்புறங்களில் ஸ்கேன் எடுக்காத கர்ப்பிணி பெண்கள் கிடையாது என்ற அளவிற்கு வளர்ந்து விட்டது, இதனால் தேவையில்லாத பொருளாதார நஷ்டம். தாயிக்கும் குழந்தைக்கும் உடல் நிலையில் தேவையில்லாத பிரச்சனைகள் உருவாகும். தேவையில்லாத ஸ்கேன், டெஸ்டுகள், மருந்துகளை தவிர்ப்பதே சுகப்பிரசவத்தை எளிதாக்கும். சிசேரியன் செய்வதால் உண்டாகும் நோய்கள்: சிசேரியன் செய்யும்போது உடலில் எந்த இடத்தில் ஆப்ரேசன் செய்கின்றார்களோ அதற்கேற்றார்போல் உடலில் புதிய பிரச்சனைகள், பதிய நோய்கள் உண்டாகும். தொப்புளிலிருந்து நேர் கீழ்நோக்கி செய்யப்படும் சிசேரியன்களால் உண்டாகும் நோய்கள்:- மாதவிடாய் கோளாறுகள் (Irregular Menstruction) வெள்ளைப்படுதல் (Leokorrhea) அடிக்கடி நிறுநீர் போகுதல், சிறுநீர் கசிவு, படியேறும்போதும் சிரிக்கும்போதும் சிறுநீர் வெளியேறுதல், கர்பப்பை இறங்குதல், அடிவயிறு வீங்கி போகுதல். தொப்புளிலிருந்து 0,5,2,4 இஞ்சு தூரத்தில் வலது அல்லது இடது பக்கம் நேர்கீழ் செய்ய்ப்டும் சிசேரியன்களால் உண்டாகும் நோய்கள்:- வயிற்றுவலி, அதிகமான மாதவிடாய், குடல் இறக்கம், கட்டிகள் உருவாகுதல், கற்பபை இறங்குதல், சீதபேதி, சிறுநீரக நோய்கள் அதிகமான வெள்ளைப்படுதல், வயிற்று போக்கு, சிறுநீருடன் இரத்தம் வெளியேறுதல், மலச்சிக்கல், குடல் வீக்கம், செரிமான கோளாறு, விலாவலி, தொப்புளிலிருந்து கீழ்பக்கம் இடமிருந்து வலமாக சிசேரியன் செய்யும்பொது மேலே கூறிய இரண்டு பிரிவுகளில் உள்ள நோய்களும் வர வாய்ப்பிருக்கின்றது. சிசேரியன் செய்த இடத்தை பொருத்து நோய்கள் வரும், இதனால் பல பெண்கள் வாழ்வில் முழு ஆரோக்கியமும் தலைகீழாக மாறிவிடுகின்றது. சுகப்பிரசவத்திற்கு என்ன செய்ய வேண்டும்?: கர்ப்பமானவர்கள் தற்போது என்ன செய்து கொண்டிரிருக்கின்றீர்களோ அதை செய்யாமல் இருந்தாலே போதும். நீங்கள் சாப்பிடும் தேவையில்லாத இரசாயன டானிக்குகள், விட்டமின் மாத்திரைகள் வேறு சில தேவையில்லாத மாத்திரைகள், அவசியமில்லா ஓய்வுகள், வேலை செய்யமல் இருப்பது, அவசியமில்லாத ஸ்கேன், அர்த்தமற்ற பரிசோதனைகள் இவற்றை முதலில் நிறுத்துங்கள். கர்ப்பமாக இருக்கும் நீங்கள் ஒரு கிராமத்தில் இருந்தால் எப்படி இருப்பீர்களோ? ஒரு இயற்கையான காட்டு பகுதியில் ஆதிவாசி பெண் எப்படி இருப்பாளோ? அதே போன்று இயற்கையான காய்கறி, கீரை, பழங்கள் சாப்பிட்டு தங்களால் இயன்ற வேலைகளை செய்து வந்தாலே போதும் உங்களுக்கு சுகப்பிரசவம்தான். ஆதிவாசிகள், குக்கிராமத்தில் வாழும் பெண்கள் இதுபோல பல கோடிக்கணக்கான மக்களும் மருந்து மாத்திரையின்றி இயற்கையான முறையில் சுகமான வாழ்க்கை வாழ்கின்றார்கள், சுகப்பிரசவத்தில் குழந்தைகளை பெற்று மகிழ்ச்சியோடு வாழ்ந்து வருகின்றார்கள். அவர்களுக்கு ஸ்கேன், விட்டமின் மாத்திரை, டானிக், டெஸ்டு இவையெல்லாம் என்னவென்றே தெரியாது. இனிப்பு நீரும் இரத்த அழுத்தமும்: கர்ப்பமாகும் போது ஆரோக்கியமாகயிருந்து அதன் பிறகு தங்கள் உடலில் சர்க்கரை (Diabetic) அதிகமாகியிருக்குமானால் அதற்காக கவலைபட தேவையில்லை, பிரசவம் ஆனவுடன் அது இயல்பு (Normal) நிலைக்கு வந்து விடும். அதேபோல் இரத்த அழுத்தம் (Blood Pressure) இருக்குமானால் அதற்காக பயப்பட தேவையில்லை, உடலில் எங்கோ பிரச்சனையிருக்கின்றது, அதனை சரிசெய்யவே இரத்த அழுத்தம் உண்டாயிருக்கின்றது. இது தேவையான இரத்த அழுத்தம். சம்பந்தப்பட்ட பிரச்சனை உடலில் சரியானவுடன் இரத்த அழுத்தமும் நார்மல் ஆகிவிடும், சரி செய்ய வேண்டியது உடல் பிரச்சனைகளை இரத்த அழுத்தத்தை அல்ல. வலி இல்லா சுகப்பிரசவத்திற்கு சிகிச்சை அளிக்கும் முறைகள்: கால் சுண்டுவிரலில் வெளிபக்க ஓரத்தில் நகமும் சதையும் சேருமிடத்தில் கைவிரலினால் அழுத்தி தேய்த்து (மஸாஜ்) விட வேண்டும், பிரசவ நேரம் நெருங்கியவுடன் இதை செய்ய வேண்டும். குழந்தை இக்கட்டான நிலையில் இருந்தால் கூட இதை செய்தால் குழந்தையின் நிலை பிரசவத்திற்கேற்ப சரியாகி சுகப்பிரசவமாகிவிடும். சாதாரண நிலையில் 1 அல்லது 2 நிமிடம் கசக்கி விட்டாலே போதும், பிரசவம் சிரமம் என்று தெரிந்தால் அடிக்கடியும் செய்துவிடலாம். பிரசவ நேரத்தில்தான் இதை செய்ய வேண்டும் மற்ற நேரத்தில் இதை செய்தால் தாய்க்கும் குழந்தைக்கும் ஆபத்து ஏற்படும். பிரசவ நேரத்தில் வலி அதிகமாக தெரியமலிருக்க வெளிப்புற கணுக்கால் மூட்டு எலும்பின் மத்திய பாகத்திற்கும் குதிகால் நரம்புக்கும் இடைப்பட்ட பாகத்தின் மத்தியில் உள்ள பகுதியில் விரலால் அழுத்தம் கொடுத்து மசாஜ் செய்ய வேண்டும் . கர்ப்பத்திலிருந்து குழந்தைக்கு நோய் வராமல் தடுக்க: கணவன், மனைவிக்கு சாதாரண நோய்களோ அல்லது தீராத நோய்களோயிருந்தால் அது கர்பத்திலிருக்கும் குழந்தைக்கு பரவாமல் தடுக்கும் சிகிச்சை சீன மருத்துவத்தில்தான் இருக்கின்றது. படத்தில் உள்ள குறிபபிட்ட இடத்தில் 3வது மாதத்தில் ஒரு முறை, 6வது மாத்தில் ஒருமுறை விரலால் லேசாக அழுத்தம் கொடுப்பதன் மூலம் பெற்றோர்களின் நோய்கள் குழந்தைக்கு பரவாமல் காப்பாற்றிவிடலாம். உட்புற கணுக்கால் மூட்டுக்கம் குதிகால் எலும்புக்கும் இடையில் உள்ள மத்திய பகுதியிலிருந்து நேர் மேலே உங்கள் ஆட்காட்டி விரல் அளவுபடி 5வது இஞ்ச் (cun) அந்த இடம் அமைந்துள்ளது (பார்க்க படம் ). ஓர் உண்மையை மனதில் பதியவைத்துக்கொள்ளுங்கள், கர்ப்பமாகும் யாரும் தன் வயிற்றில் வளரும் குழந்தைக்கு கண் இப்படி வேண்டும், காது இப்படி வேண்டும், கை இப்படி வேண்டும், முகம் இப்படி வேண்டும் என்று யாரும் முயற்சி செய்வதும் இல்லை, அதற்காக யாரும் இறைவனுக்கு யோசனை சொல்வதும் இல்லை (நவூதுபில்லாஹ்), எல்லாம் இறையருளால் இயற்கையாக நலமாக அமைகின்றது. அதுபோலவே பிரசவமும் சுகமாக அமையும், தேவையில்லாத தொல்லைகள், மருந்துகள் கொடுக்கமலிருந்தாலே போதுமானது. எனவே நாம் இயற்கையோடு இணைந்து வாழ்ந்து நம்மையும் நம் சந்ததிகளையும் மருந்துகள் மாத்திரைகள் என்னும் கொடிய இரசாயன விஷங்களிலிருந்து காப்பாற்ற முயற்சிப்போம், அதற்காக பாடுபடுவோம்..வெற்றி பெறுவோம்;..இன்ஷா அல்லாஹ்.. நன்றி: http://naturecuredr.com/articles/cesarean.htm Posted by மு.ஜபருல்லாஹ் இடுகையிட்டது PMsyed நேரம் 10/27/2011 02:18:00 பிற்பகல் 2 கருத்துகள்: இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Twitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர் லேபிள்கள்: எச்சரிக்கை, சமூக பார்வை, மருத்துவம் புதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு இதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom) மொத்தப் பக்கக்காட்சிகள் PMsyed எனது முழு சுயவிவரத்தைக் காண்க பிரபலமான இடுகைகள் பைய்யத் ரகசியம் தெள்ளத் தெளிவாக குர்ஆனுக்கும், நபி(ஸல்) அவர்களின் நடைமுறைக்கும் முரணாக மார்க்கத்தின் பெயரால் முஸ்லிம்களிடையே பிர்- முரீது வியாபாரம் நடந்த... பெர்முடா முக்கோணமும் இஸ்லாமிய சிந்தனையும்.. மதுரையில் வசித்துவரும் இந்த முதியவர் 1953 ஆம் ஆண்டு இந்தியாவில் இருந்து அமெரிக்காவிற்கு வியாபாரத்திற்கு கப்பலில் அடிக்கடி சென்றுவருவாராம். ... பரீட்சை எழுத இருக்கும் மாணவர நீங்கள் ? கட்டயாம் இதை படியுகள் ? அல்லாஹ்வின் திருப்பெயரால் . . . அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! (அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) இறைவனின் சாந்தியும், சமாதானமும் தங்கள் மீது என்றெ... பிஜேயை கண்மூடித்தனமாகப் பின்பற்றும் முகல்லிதுகள் விழி பிதுங்கிப் போனார்கள். அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரக்காத்துஹு...! 3 shares குடும்பங்களில் பிரிவை ஏற்படுத்துவதில் முக்கியப்பங்கு அவதூறுக்கு உண்டு. கற்பொழுக்கமுள்ள பெண்களைப் பற்றி அவதூறு கூறுவது எந்த அளவ... இப்படியுமா மனிதர்கள்?// முகவை சேக் விட்டால் காலையும் நக்குவான் போல:)) பெண் அடிமைத்தனம் அந்த காலம் ...ஆண் அடிமைத்தனம் இந்த காலம் :)) Abdur Rahman ulagam aliya... இஜ்மா கியாஸ் என்றால் என்ன? அவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம்' 'ஷைத்தானிடமிருந்து அல்லாஹ்விடம் நான் பாதுகாப்புக் கோருகிறேன்'' ''என் இறைவா! ஷைத்தான்களின் தூண்டுதல்களை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்'' என்றும் கூறுவீராக! திருக்குர்ஆன்.23:97. ... அவசியம் கற்றுகொள்ள வேன்டிய துஆக்கள் தூங்குவதற்கு முன் அல்லாஹும்ம பிஸ்மி(க்)க அமூ(த்)து வஅஹ்யா இறைவா உன் பெயரால் மரணிக்கிறேன், உன் பெயரால் உயிர் பெறுகிறேன். நூல்: புகாரி... இஸ்லாத்தின் பார்வையில் மன்னிப்பு மன்னிப்பு இஸ்லாத்தின் பார்வையில் மனிதன் என்பவன் தவறிழைப்பவனாகவே இருக்கின்றான். சில நேரங்களில் அவன் யோசிக்காமல் அல்லது எந்த ஒரு உள்நோக்கமும...
‘அப்பாடி! சம்மர் லீவு விட்டுட்டாங்க, நாளைக்கே கிராமத்துல இருக்கிற தாத்தா, பாட்டி வீட்டுக்குப் போய், அங்கே இருக்கிற ஃப்ரெண்ட்ஸ்கூட ஜாலியா விளையாடுவேன்’ நகரத்தில் இருந்து கிராமத்துக்கு உற்சாகமாகச் செல்லும் சுட்டிகள், என்னவெல்லாம் விளையாடலாம்? ஆபியம்: முதுகில் கை ஊன்றித் தாண்டுதல்! எத்தனை பேர் வேண்டுமானாலும் சேர்ந்து விளையாடும் சூப்பரான விளையாட்டு. சா, பூ, த்ரி போட்டு கடைசியில் மாட்டிக்கொள்பவர், குனிந்து நிற்க வேண்டும். அவரின் முதுகில் கை வைத்து, வரிசையாக மற்றவர்கள் தாண்ட வேண்டும். முதல் ஆபியம் சொல்லித் தாண்டும்போது, குனிபவர், கால் விரல்களைத் தொட்டபடி குனிந்திருக்க வேண்டும். இரண்டாவது ஆபியத்தில் கால் விரல்களிலிருந்து ஒரு ஜாண் உயரத்திலும், மூன்றாவது தாண்டலுக்கு முட்டிகளையும், நான்காவது ஆபியத்தில் இடுப்பிலும் கை வைத்து நிற்க வேண்டும். இப்படியே 10 ஆபியம் வரை கை மேலே மேலே உயர்ந்துகொண்டே இருக்கும். யார், முதுகைத் தாண்ட முடியாமல் இருக்கிறாரோ, அவர் அடுத்ததாகக் குனிந்து நிற்க வேண்டும். கால்களை அகலமாக்குதல், கைகளால் உடம்பை உயர்த்துதல் ஆகியவற்றில்தான் வெற்றி அடங்கி இருக்கிறது. நுங்கு வண்டிப் பந்தயம் இந்த விளையாட்டில், நாம் ஓட்டப்போகும் வண்டியை நாமே உருவாக்க வேண்டும். பனை நுங்குகளைத் தோண்டி எடுத்த பின், கோம்பைகளை விட்டெறிந்துவிடுவார்கள். அதில் இரண்டை எடுத்துத் துளையிட்டு, இடையில் கம்பு செருக வேண்டும். அதைப் பிடித்துக்கொண்டு ஓட, நீளமான கவைக் கம்பால் அதைத் தள்ள வேண்டும். இதேபோல தயார்செய்திருப்பவர்களோடு பந்தயம் வைத்து, விளையாடி வெற்றி பெறுவது ஜாலியாக இருக்கும். விழாமல் விழுது தொங்கல்! ஆலமரத்தில் நிறைய விழுதுகள் தொங்கும். அதில், எல்லோரும் சேர்ந்து சத்தம் போட்டுக்கொண்டு தொங்குவதே ஜாலிதான். அதில்கூட இரு அணிகளாகப் பிரிந்து, எந்த அணி அதிக நேரம் விழுதுகளிலிருந்து விழாமல், அதிக வீச்சில் ஆடுகிறார்கள் எனப் போட்டி போட்டு விளையாடுவார்கள். குலை குலையா முந்திரிக்கா! இந்த விளையாட்டில், எத்தனை பேர் வேண்டுமானாலும் ஆடலாம். சா, பூ, த்ரி போட்டு கடைசியில் மாட்டுபவரைத் தவிர, மற்றவர்கள் வட்டமாக உட்கார வேண்டும். உதாரணமாக, பூரணி என்கிற சிறுமி மாட்டிக்கொள்கிறார் என வைத்துக்கொள்வோம். பூரணி கையில் ஒரு துண்டு வைத்துக்கொண்டு, ‘குலை குலையா முந்திரிக்கா’ என்று பாடிக்கொண்டே அந்த வட்டத்தைச் சுற்ற வேண்டும். உட்கார்ந்திருப்பவர்கள், ‘நரியே, நரியே சுத்தி வா...’ என்பார்கள். பூரணி உடனே, ‘ஓட்டு மேலே ஏறுவேன்’ என்றதும், ‘ஈட்டியாலே குத்துவேன்’ என்று பதிலடி கொடுப்பார்கள். பாட்டின் முடிவில், அந்தத் துண்டை உட்கார்ந்திருப்பவர்களில் யார் மீதாவது போட வேண்டும். பூரணி, சுந்தர் மீது துண்டைப் போடுகிறார் என்றால், சுந்தர், பூரணியைத் துரத்துவார். பூரணி, வட்டத்திலேயே ஓடி, சுந்தரின் இடத்தில் உட்கார்ந்துவிட வேண்டும். உட்காருவதற்குள் சுந்தர் பூரணியைத் தொட்டுவிட்டால், பூரணி, மீண்டும் பாட்டுப் பாடி ஓட வேண்டும். பூரணியைத் தொட முடியாவிட்டால், சுந்தர் விளையாட்டைத் தொடர வேண்டும். கிட்டி, புள் கிட்டி என்பது நீளமான குச்சி, புள் என்பது இருபுறமும் கூர்மையாகச் சீவப்பட்ட சின்னக் குச்சி. ஒரு குழியின் முனையில், புள்ளை வைத்து, கிட்டியால் கெந்திவிட்டு, கிட்டியைக் குழியின் மீது வைக்க வேண்டும். எவ்வளவு தூரம் விழுகிறதோ, அந்த இடத்திலிருந்து எதிர் அணியினர் கிட்டியைச் சரியாக அடித்துவிட்டால், கெந்தியவர் அவுட். இல்லாவிட்டால், அவர் ஆட்டத்தைத் தொடர்வார். அடுத்த கெந்தலின்போது, அந்த தூரத்திலிருந்து கிட்டியால் தடுத்து, திருப்பி அனுப்புவார். அந்த இடத்திலிருந்து குழிக்கு எவ்வளவு காலடிகள் இருக்கிறதோ, அதுவே கெந்தியவருக்கான பாய்ன்ட். இரு அணிகளில் நிர்ணயிக்கப்பட்ட ஸ்கோரை, முதலில் அடையும் அணிக்கே வெற்றி. கிச்சுக் கிச்சு தாம்பாளம்! இருவர் ஆடும் விளையாட்டு இது. இருவரும், மணலில் எதிர் எதிராக அமர்ந்துகொள்ள வேண்டும். மணலில் பாம்புபோல குவித்துக்கொண்டே போய், எதிரே இருப்பவருக்குத் தெரியாமல், சிறு குச்சியை அதற்குள் மறைத்துவிட வேண்டும். அந்தக் குச்சியை எதிரே இருப்பவர் கண்டுபிடித்துவிட்டால், வெற்றிபெற்றவராவார். இல்லாவிட்டால் தோல்விதான். கோலி அல்லது பளிங்கி கோலி விளையாட்டில், பலவிதமான ஆட்டங்கள் உள்ளன. ஒரு குழியைத் தோண்டிக்கொள்வர். குறிப்பிட்ட தூரத்திலிருந்து கோலியைத் தூக்கி எறிந்து, குழிக்குள் விழச்செய்ய வேண்டும். மூன்று முறை குழிக்குள் விழவைக்க முடியாதவர்கள் தோற்றவர்கள். இதுபோல வட்டத்தில் இருந்து கோலியை வெளியே கொண்டு வரும் ஆட்டமும் சுவாரஸ்யமாக இருக்கும். பம்பரம் அபீட் எடுக்க, கடைசியில் மாட்டுபவரின் பம்பரத்தை, ஒரு வட்டம்போட்டு அதில் வைக்க வேண்டும். மற்றவர்கள், பம்பரத்தில் குத்துவிட்டு அந்தப் பம்பரத்தை வெளியே எடுக்க வேண்டும். அப்படி எடுக்கும்போது, பம்பரம் வட்டத்துக்குள்ளே மாட்டிக்கொண்டால், அவரும் மாட்டிக்கொள்வார். பம்பரம் வெளியே வந்ததும் எல்லோரும் அபீட் எடுக்க, கடைசியில் மாட்டுபவரின் பம்பரத்தில் ஆணியால் ஆக்கர் போடுவார்கள். மெள்ள வந்து கிள்ளிப் போ! எத்தனை பேர் வேண்டுமானாலும் ஆடும் விளையாட்டு இது. வட்டமாக, கால் நீட்டியபடி உட்கார்ந்துகொள்ள வேண்டும். அதில், ஒருவரின் கண்களை மட்டும் மூடிக்கொண்டு, ‘மல்லிகையே மல்லிகையே மெள்ள வந்து கிள்ளிப்போ’ என்று பாட்டுப் பாட, வட்டத்திலிருந்து யாரேனும் ஒருவர் வந்து, சத்தம் இல்லாமல் மெள்ளக் கிள்ளிவிட்டு, பழையபடி உட்கார்ந்துகொள்வார். மூடிய கண்களைத் திறந்ததும், யார் கிள்ளியது எனச் சரியாகக் கண்டுபிடிக்க வேண்டும். எல்லோரும் கை, கால்களை ஆட்டியபடி குழப்புவார்கள். சரியாகக் கண்டுபிடித்துவிட்டால், கண்டுபிடிக்கப்பட்டவரின் கண்களை மூடி, பாட்டுப் பாட வேண்டும். இல்லையேல், மீண்டும் அவரின் கண்களைப் பொத்தியே ஆட வேண்டும். எத்துச்சில்லு! மண்ணில் ஆறு அல்லது எட்டு கட்டங்களை வரைந்துகொள்ள வேண்டும். முதல் கட்டத்தின் வெளியே ஓட்டுச் சில்லை வைத்து, காலால் எத்திக்கொண்டே மறுபுறம் கொண்டு வர வேண்டும். கட்டங்களின் கோட்டில் சில்லு மாட்டிக்கொண்டால், அவர் அவுட். இதைப் பின்புறமாக எத்திக் கொண்டும் ஆடுவர். உங்களில் யாருக்காவது கிராமத்துக்குச் செல்லும் வாய்ப்பு இல்லையா? அதனாலென்ன, இந்த விளையாட்டுகளை நகரத்து வீதிகளிலேயே விளையாடி, கிராமத்தை இங்கே கொண்டு வாருங்கள், கோடையைக் கொண்டாடுங்கள்.
மார்கழி மாதம் என்றாலே கடவுள் வழிபாட்டுக்கான உகந்த மாதமாக கருதப்படுகிறது. தமிழ் வருடத்தின் ஒன்பதாவது மாதம் மார்கழி ஆகும். இம்மாதம் தனுர் மாதம் என்றும் அழைக்கப்படுகிறது. மார்கழி மாதத்தில் தான் நம் உடலுக்கு அதிகமாக ஆக்சிஜன் கிடைக்கிறது. மார்கழி மாதத்தில் கோவில்களில் அதிகாலை வழிபாட்டில் வேதங்களுக்குப் பதிலாக திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, ஆழ்வார் பாசுரங்கள் பாடப்படுகின்றன. மார்கழி மாத சிறப்பு: மார்கழி மாதம் முழுவதும் அதிகாலை எழுந்ததும் குளிர்ந்த நீரில் பெண்கள் குளித்துவிட்டு வாசலில் வண்ணக்கோலம் இட்டு இறைவனை வழிபாடு செய்வது இன்றும் வழக்கமாக மேற்கொள்ளப்படுகிறது. மார்கழி மாதத்தை தேவர் மாதம் என்று குறிப்பிடுவர். அதாவது கடவுளை வழிபடும் மாதமாகும். இறைவனை வழிபடுவதற்காக இம்மாதம் ஒதுக்கப்பட்டுள்ளதால், இம்மாதத்தில் எவ்வித சுப நிகழ்ச்சிகளும் நடத்தப்படுவதில்லை. சைவ ஆலயங்களிலும், வைணவ ஆலயங்களிலும் சூரியன் உதிப்பதற்கு முன்பே பூஜை, ஆராதனை நடத்தப்படும். மார்கழி மாதம் தேவர்களுக்கு அதிகாலை 4 மணி முதல் 6 மணி வரையுள்ள இரண்டு மணி நேரத்தைக் குறிக்கும். சூரிய உதயத்துக்கு முன்பான இந்தக் காலம் பிரம்ம முகூர்த்தம் என்று அழைக்கப்படும். சுத்தமான காற்று: நமது உடலில் பொதுவாக 80% ஆக்சிஜனும், 20% கரியமில வாய்வும் இருக்க வேண்டும். ஆனால் இப்போது இருக்கும் நவீன காலத்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து, இரத்தத்தில் வெள்ளை அணுக்கள் குறைந்து பல நோய்களை ஏற்படுத்துகிறது. மார்கழி மாதத்தில் அதிகாலையில் ஓசோன் படலத்தில் இருந்து வரும் சுத்தமான காற்று வேறு எந்த மாதத்திலும் கிடைக்காது. அதனால் மார்கழி மாதத்தில் அதிகாலை நேரத்தில் எழுந்து குளித்து, சுத்தமான காற்றை சுவாசிக்கும் பொழுது உடலுக்கு தேவையான ஆக்ஸிஜன் முழுமையாக கிடைத்து ரத்தத்தில் வெள்ளை அணுக்கள் பெருகி, நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும். புண்ணியம்: ஒவ்வொரு மாதத்திலும் ஒவ்வொரு தானங்கள் செய்யப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அந்த வகையில் மார்கழி மாதத்தில் செய்யும் தானங்கள் உங்களுக்கு பெரிய பாக்கியத்தை கொண்டு சேர்க்கும். மார்கழி மாதம் என்றாலே அதிக குளிரை உடையதாக இருக்கும். இந்த காலத்தில் வசதி இல்லாத ஏழை எளியவர்கள் உண்பதற்கு உணவு, உடுக்க உடை, இரவு தூங்கும் பொழுது இந்த குளிரை தாங்க முடியாமல் அவதிப்படுவார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு மார்கழி மாதத்தில் குளிரை போக்க கம்பளி போர்வையை தானமாக வழங்கலாம். இந்த தானம் செய்வதன் மூலம் நிறைய புண்ணியங்கள் உங்களை தேடி வந்தடையும். இதனால் இம்மாதத்தில் உங்களால் முடிந்தவரை யாராவது ஒருவருக்காவது இது போல் கம்பளி தானம் செய்து வாருங்கள். மார்கழி கோலம் போடுவதன் நன்மை: ஒரு சிலர் மார்கழி மாதத்தில் ஏற்படும் குளிர்க்கு பயந்து விடியற்காலையில் எழுந்து வாசலில் கோலம் இடாமல் இரவு தூங்குவதற்கு முன்பே கோலம் போட்டுவிடுவார்கள். இரவு கோலம் போடுவதால் உடலுக்கு எந்த நன்மையும் கிடைக்க போறதில்லை. மார்கழி மாத அதிகாலையில் கிடைக்கும் சுத்தமான காற்றை சுவாசிப்பதற்காகவே வாசலில் கோலம் போடப்படுகிறது. பச்சரிசியில் கோலம் இடும்போது எறும்பு போன்ற சிறு உயிரினங்கள் மூலம் நமக்கு புண்ணியம் சேரும். மார்கழி மாத விழாக்கள்: மார்கழி மாதத்தில் திருவாதிரை, வைகுண்ட ஏகாதசி, அனும ஜெயந்தி, பாவை நோன்பு, திருவெம்பாவை நோன்பு, படி உற்சவம், விநாயகர் சஷ்டி விரதம், உற்பத்தி ஏகாதசி போன்ற சிறப்பான விழாக்கள் கொண்டாடப்படுகிறது.
சென்னை: பெட்டிக்கடை உரிமையாளரை கத்தியால் குத்திக் கொலை செய்த உறவினருக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சென்னை தண்டையார்பேட்டையில் உள்ள கைலாசம் தெருவில் வசித்து வந்தவர் பெருமாள். இவர், தனது குடியிருப்பு முன் சிறிய பெட்டிக்கடை நடத்தி வந்தார். கடந்த 2019ம் ஆண்டு ஜூலை 18ம் தேதி பெருமாளின் உறவினர் ஆனந்தி என்பவர் கடை அருகில் உட்கார்ந்திருந்த போது அங்கு வந்த ஆனந்தியின் தந்தை ஏழுமலை மகள் ஆனந்தியை ஆபாசமாக திட்டியுள்ளார். இதனை பெருமாள் தட்டிக் கேட்டதால் ஆத்திரமடைந்த ஏழுமலை, பெருமாளிடம் தகராறு செய்துள்ளார். அங்கிருந்து கோபமாக சென்ற ஏழுமலை, சிறிது நேரத்துக்குப் பின் மீண்டும் அங்கு வந்து, பெருமாளை தகராறுக்கு இழுத்து மறைத்து வைத்திருந்த கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார். அதை தடுக்க வந்தவர்களுக்கும் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். படுகாயமடைந்த பெருமாள் ரத்த ெவள்ளத்தில் இறந்தார். இந்த கொலை சம்பவம் தொடர்பாக தண்டையார்பேட்டை போலீசார் பதிவு செய்து, ஏழுமலையை கைது செய்தனர். இந்த கொலை வழக்கு சென்னை 18வது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி எல்.ஆபிரகாம் லிங்கன் முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் மாநகர கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் என்.ஜெயசங்கர் ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றச்சாட்டுகள் போதிய ஆதாரங்கள், சாட்சியங்களுடன் நிரூபிக்கப்பட்டதால் ஏழுமலைக்கு ஆயுள் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். Related Stories: தன் மீதான டெண்டர் முறைகேடு வழக்கை ரத்துசெய்யக்கோரி எஸ்.பி.வேலுமணி தொடர்ந்த வழக்கில் இன்று தீர்ப்பு அடையாளம் தெரியாத வாகனம் மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற முன்னாள் காவல்துறை அதிகாரி உயிரிழப்பு கோவை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு ரூ.786 கோடி நஷ்டத்தில் இயங்கினாலும் அம்மா உணவகங்கள் தொடர்ந்து செயல்படும்; மாநகராட்சி கூட்டத்தில் மேயர் பிரியா அறிவிப்பு விமான நிலைய புதிய மல்டி லெவல் பார்க்கிங் பகுதியில் 2 மணி நேரம் கார்கள் நிறுத்த ரூ.150 கட்டணம்; பலமடங்கு உயர்வால் பயணிகள் கடும் அதிர்ச்சி கிளாம்பாக்கம் நவீன பேருந்து நிலையம்; முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளன்று திறப்பு?: அமைச்சர் முத்துசாமி சூசக தகவல் ரூ.648 கோடியில் பயோ மைனிங் முறையில் கொடுங்கையூர் குப்பை கிடங்கை மீட்க திட்டம்; சென்னை மாநகராட்சியில் தீர்மானம் தாம்பரம் நீதிமன்றத்தில் 12 ஆண்டு நடந்த வழக்கில் தீர்ப்பு சாட்டிலைட் போன், போலி ஆவணம் வைத்திருந்தவருக்கு 3 ஆண்டு சிறை எவ்வளவு குடித்தும் போதை ஏறாததால் மீண்டும் மது கேட்டு ரயில்வே நடைமேம்பாலத்தில் ஏறி வாலிபர் தற்கொலை மிரட்டல்; திருவொற்றியூரில் பரபரப்பு சேலையூர் ஆய்வாளரை கண்டித்து நீதிமன்றத்தை புறக்கணித்து வழக்கறிஞர்கள் தர்ணா அண்ணா நகர் பகுதியில் நாளை முதல் 14 நாட்கள் போக்குவரத்து மாற்றம்; போக்குவரத்து காவல்துறை அறிவிப்பு செம்மஞ்சேரி காவல் நிலையத்தில் திடீர் ஆய்வு; பதிவேடுகளை முறையாக பின்பற்றிய எழுத்தருக்கு ரூ.5 ஆயிரம் வெகுமதி: டிஜிபி சைலேந்திரபாபு வழங்கினார் மாதவரம் மண்டலம், 25வது வார்டில் அரசு வழங்கிய குடியிருப்பு பகுதியை ஆக்கிரமிப்பாக அறிவித்து நோட்டீஸ்; சென்னை கலெக்டர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் முறையீடு டோலிவுட்டுக்கு போகிறார் பிரதீப் ரங்கநாதன் முகம் வீங்கிய போட்டோ வெளியிட்ட ஸ்ருதி; ரசிகர்கள் ஷாக் கோவை, மங்களூர் சம்பவங்களை தொடர்ந்து டிஜிபி சைலேந்திரபாபுவுடன் என்ஐஏ டிஜிபி தின்கர் குப்தா சந்திப்பு தமிழை 2வது மொழியாக அறிமுகம் செய்ய வடகிழக்கு மாநிலங்களில் பேச்சுவார்த்தை நடக்கிறது: ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு இந்தியாவிலேயே கல்வித்துறையில் தமிழகம் முன்னோடி மாநிலம்: அமைச்சர் பொன்முடி பேச்சு திருவண்ணாமலையில் நடக்கும் கார்த்திகை தீப திருவிழாவிற்கு சிறப்பு பஸ்கள் இயக்கம்: அமைச்சர் தகவல் தமிழக அரசு சார்பில் மாநில, தேசிய, சர்வதேச அளவிலான போட்டிகளில் பதக்கம் வென்ற வீரர்களுக்கு ஊக்கத்தொகை: டிச.15ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்
Haylihaze செயலில் இருப்பதை நீங்கள் பார்த்தவுடன், இன்று ஆன்லைனில் சிறந்த வெப்கேம் கலைஞர்களில் அவர் ஏன் ஒருவர் என்பதை நீங்கள் புரிந்துகொள்வீர்கள். நீங்கள் இன்னும் அவளைப் பற்றி அறிந்திருக்கவில்லை என்றால், ரசிகராக மாறுவதற்கும் அவளுடன் நேரடியாகப் பழகுவதற்கும் இதைவிட சிறந்த நேரம் எதுவுமில்லை! அவள் இப்போது இருக்கிறாள் Chaturbate உங்களுக்காக அவற்றைப் பார்க்கும்போது உங்களால் போதுமான அளவு பெற முடியாத நிகழ்ச்சிகளை உங்களுக்கு வழங்குவதற்காக. இந்த அழகான குழந்தை என்ன செய்ய முடியும் என்பதை கேமராவில் நீங்கள் பார்த்தவுடன், நீங்கள் வேறு யாரையும் பார்க்க விரும்ப மாட்டீர்கள் என்று நாங்கள் உத்தரவாதம் அளிக்க முடியும்! நிர்வாண கேம் கலைஞர் ஹேலிஹேஸ் Haylihaze ஏற்கனவே ஒரு நடிகராக தனக்கென ஒரு பெயரைப் பெற்றுள்ளார், ஆனால் இப்போது அவர் இன்னும் பெரிய மாற்றத்தை ஏற்படுத்த தயாராக இருக்கிறார். புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட, Haylihaze ஏற்கனவே தனது ரசிகர்களுடன் அலைகளை உருவாக்கி வருகிறார். டியூன் செய்து, நிர்வாண கேம் ஷோக்களை சரிசெய்யவும். இது உங்கள் சொந்த தனிப்பட்ட ஸ்ட்ரிப்டீஸை வீட்டிலேயே வைத்திருப்பது போன்றது. அவரது இலவச அரட்டை அறை அனைத்து பயனர்களுக்கும் திறந்திருக்கும், மேலும் கூடுதல் பதிவு அல்லது பதிவிறக்கம் தேவையில்லை. நீங்கள் எந்த சாதனத்தைப் பயன்படுத்தினாலும் (கணினி, டேப்லெட் அல்லது மொபைல்) எந்த இடத்திலிருந்தும், எந்த நேரத்திலும் நிர்வாண கேமராக்களைப் பார்க்கலாம். Haylihazeஐப் பயன்படுத்தி ஒருவரையொருவர் பார்க்க விரும்பினால், இன்றே இலவசக் கணக்கிற்குப் பதிவு செய்யவும்! நீங்கள் ஏன் நிர்வாண அரட்டை அறைக்கு வந்து பார்க்க வேண்டும்? எங்களின் புதிய நடிகராக Haylihaze என்ற அழகான மற்றும் கவர்ச்சியான மாடலைப் பெற்றதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். நீங்கள் அவருடைய வேலையைப் பற்றி நன்கு அறிந்திருக்கவில்லை என்றால், அவருடைய சில வீடியோக்களைப் பார்க்கவும் மற்றும் அவரது சில புகைப்படங்களைப் பார்க்கவும். இந்த அழகான பொன்னிற வெடிகுண்டு, அவள் உன்னைக் கிண்டல் செய்து முடித்தவுடன், உன்னை மேலும் விரும்ப வைக்கும். அவரது சுயவிவரப் பக்கத்தைப் பார்வையிடவும், அவர் ஆன்லைனில் இருக்கிறாரா என்று பார்க்கவும்! அப்படியானால், எங்களின் நிர்வாண அரட்டை அறை ஒன்றில் அவளுடன் நின்று அரட்டையடிப்பதை உறுதிசெய்யவும். புதியவர்களைச் சந்திப்பதையும், அவர்களைப் பற்றி நன்கு தெரிந்துகொள்வதையும் அவள் விரும்புகிறாள்.
Aanmeegam > Aanmeegam Posts > Blogs > Arthamulla Aanmeegam > மஞ்சமாதா வரலாறு மற்றும் பூஜை முறை | Manjamatha Arthamulla Aanmeegam மஞ்சமாதா வரலாறு மற்றும் பூஜை முறை | Manjamatha 5 years ago Add Comment ஐயப்பன் கோவிலுக்கு இடதுபுறம் சுமார் முன்னூறு அடி தூரத்தில் மஞ்சமாதா என்கிற மாளிகைபுரத்து அம்மனின் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலை பற்றி பார்க்கலாம். Manjamatha history மஞ்சமாதா என்கிற மாளிகைபுரத்து அம்மன் கோவில் ஐயப்பன் கோவிலுக்கு இடதுபுறம் சுமார் முன்னூறு அடி தூரத்தில் மஞ்சமாதா என்கிற மாளிகைபுரத்து அம்மனின் கோவில் அமைந்துள்ளது. ஐயப்பனின் தரிசனம் முடிந்ததும் கீழே இறங்காமல் மஞ்சமாதா கோவில் செல்வதற்கு நடைமேடை அமைத்திருக்கிறார்கள். மஞ்சமாதாவின் கோவில் சென்றதும் முதலில் நாம் வணங்க வேண்டியது ஸ்ரீ கடுத்தசுவாமியைத்தான். மிகுந்த சக்தி படைத்த தெய்வம். பிறகு அங்கிருந்து மணிமண்டபம் செல்ல வேண்டும். இந்த மணிமண்டபம் ரொம்ப அழகானது. இங்கே தான் மகரவிளக்கன்று வரும் திருவாபரணப் பெட்டியை இறக்கி வைப்பார்கள். ஜோதி தரிசனத்திற்கு பிறகு சபரிமலை வரும் பந்தள ராஜ பரம்பரை மன்னரும் அவர் குடும்பத்தாரும் இங்குதான் தங்குவார்கள். இந்த மஞ்சமாதா கோவிலில் மணிமண்டபத்திற்கு அருகில் நாகராஜா, அதற்கு அருகில் நவக்கிரகங்கள் உள்ளன. இவற்றை ஐயப்ப பக்தர்கள் சுற்றி வந்து வணங்குவார்கள். இதன் வலது பக்கம் சுவரை அடுத்து காட்டுத் தேவதைகள், நாகயட்சி அமைந்துள்ளன. இவற்றுக்கு மஞ்சள் தூவி வழிபடுவது வழக்கமாக உள்ளது. மஞ்சமாதா கோவில் எளிமையாகக் காணப்பட்டாலும் வெகு அழகாக நேர்த்தியாக உள்ளது. மஞ்சமாதாவின் வரலாறும் சுவையானது. மகிஷி என்ற அரக்கியை மணிகண்டன் காட்டில் வதம் செய்த உடனே அந்த மகிஷியின் உடலிருந்து லீலா என்ற தேவதை போன்ற பெண்ணொருத்தி வெளிவந்து ஐயப்பனை வணங்கி ‘நான் உங்கள் மூலம் சாப விமோசனம் அடைந்தேன். என் சாபம் நீங்குவதற்கு காரணமாக இருந்த நீங்களே என் கணவராக வரவேண்டும். என்னை ஏற்றுக்கொள்ளுங்கள்…’ என வேண்டினாள். ஐயப்பன் அவளிடம் ‘நான் இந்த ஜென்மம் முழுவதும் பிரம்மச்சாரியாய் இருப்பதாகச் சத்யப்பிரமாணம் செய்துள்ளேன்…’ என்று கூறி அந்த பெண்மணியை சபரிமலையில் பிரதிஷ்டை செய்து கோவிலின் இடப்புறம் மாளிகைபுறத்து அம்மன் என்ற பெயரில் அமர்ந்து இங்கே என்னைத் தரிசிக்க வரும் பக்தர்களுக்கு அருள்புரிந்திட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். ஐயப்பன் கேட்டுக்கொண்டபடி, அந்த பெண் சபரிமலையில் மஞ்சமாதா என்கிற மாளிகைபுறத்தம்மனாக அமர்ந்து இன்றளவும் அருள்பாலித்து வருகிறாள். பக்தர்கள் மஞ்சமாதாவிற்கு மஞ்சள் பொடி தூவியும், அவளது திருக்கோவில் பிரகாரத்தைச் சுற்றி தேங்காயை உருட்டியும் வழிபாடு செய்து அவளது அருளைப் பெற்று வருகிறார்கள். மஞ்சமாதா கோவிலில் சில ஐயப்ப பக்தர்கள் ரவிக்கைத் துண்டு வைத்தும், வெடிவழிபாடு செய்தும் வணங்குகிறார்கள். திருமணம் வேண்டிய சிலர் இரண்டு ஜாக்கெட் துண்டுகளைக் கொடுத்து, ஒன்றைத் திரும்பப் பெற்று அதை வீட்டிற்கு எடுத்துச் செல்கிறார்கள். இப்படி வேண்டுதல் செய்திட அடுத்த ஆண்டிலேயே அவர்களது திருமணம் ஏற்பாடாகி இனிதே நடைபெறுகிறது என்று சொல்லப்படுகிறது. மாளிகைபுரத்திற்கு என்று தனியாக மேல்சாந்தி ஒருவர் இருக்கிறார். மஞ்சமாதா கோவில் பூஜைகள் போன்றவற்றை இவர்தான் செய்கிறார். சபரிமலையில் நடத்தப்படும் முக்கியப் பூஜைகளில் ஒன்று பகசதி பூஜை. இதற்கு ரூபாய் நூற்றி ஒன்றை மஞ்சமாதா கோவிலில் உள்ள தேவஸ்தானம் கவுண்டரில் கட்டி ரசீது பெற வேண்டும். இப்பூஜையை மேற்குறிப்பிட்ட மேல்சாந்திதான் நடத்தி கொடுப்பார். பெண்களுக்கு ஏற்படும் சகல நோய், நொடி, பிரச்சினைகளையும், திருமணத்தடையையும் நீங்கச் செய்கிறது இப்பூஜை என்று கூறுகிறார்கள். மஞ்சமாதா கோவில் அருகே உள்ள மணிமண்டபத்தின் எதிரிலே சின்ன வாத்தியம் என்ற இசைக்கருவியைப் புள்ளுவன்கள் என்கிற வாத்தியக்காரர்கள் இசைக்கக் காணலாம். சிறுதொகையை அவர்களுக்குப் பக்தர்கள் அன்பளிப்பாக கொடுத்து வாசிக்கச் சொல்கிறார்கள். அந்த இசை கேட்டு அங்கே இருக்கும் சகல தெய்வங்களும் அருளாசி வழங்கி ஆசிர்வதிப்பதாக நம்பப்படுகிறது. ஐயப்பனைக் கண்குளிர தரிசனம் செய்த பிறகு கற்பூர ஆழிவழிபாடு என்றொரு சடங்கை நடத்துகிறார்கள் ஐயப்ப பக்தர்கள். குங்குமம், விபூதி, மஞ்சள், மிளகு, பேரீச்சம்பழம், கல்கண்டு, காணிக்கைப் பணம் போன்றவற்றைத் தனித்தனி தட்டில் ஏந்தி ஊதுபத்தி கட்டைக் கொளுத்தி, அதைக் கையில் ஏந்தியவாறு ஒருவரும், பன்னீர் தெளித்துக்கொண்டே இன்னொருவரும், கூட்டமாக குருசாமி தலைமையில் சரணம் கூறிக்கொண்டே அங்கே கண்ணுக்குத் தென்படும் ஒவ்வொரு தெய்வத்தையும் பார்த்து வழிபட்டுக்கொண்டே கோவிலைச் சுற்றி வருவதுதான் இந்த கற்பூர ஆழிவழிபாடு என்பது! இப்படி வழிபடச் செல்லும் போது விபூதித் தட்டில் சூடம் எரிய எடுத்துச் செல்கிறார்கள். கூட்டமாகக் குருசுவாமி தலைமையில் செல்பவர்கள் ஐயப்பனின் சன்னதி சென்று, கொடிமரத்துக்கு அப்பால் நின்று சூடம் தீபாராதனை காட்டி ஐயப்பனை மனதார வணங்கி விட்டு உண்டியலில் காணிக்கைப் பணத்தைப் போடுகின்றனர். பின்னர் கன்னி மூல கணபதியையும், அதன் பின் நாகராஜாவையும் வணங்கி விட்டு சரணம் கூறியபடி 18-ஆம் படிக்கு வருகின்றனர். அங்கு கருத்தசாமி, கருப்பண்ணசாமி, 18 படிகளுக்கு தீபராதனை செய்து பின்பு வாபர் சன்னதி சென்று வணங்கி விட்டு மஞ்சமாதா சன்னதிக்கும் சென்று வணங்கி விட்டு தங்களது தங்குமிடத்திற்குத் திரும்பி வந்து குருசாமி காலில் விழுந்து வணங்கி ஆசி பெற்றுக் கொள்வார்கள்.
பிரபல காமடி நடிகர் செந்திலின் வாழ்வில் நடந்த மறக்க முடியாத நிகழ்வைக் குறித்து நடிகர் காதல் சுகுமார் இந்த பதிவை வெளியிட்டுள்ளார். “எனது முதல் திரைப்படமான “காதல் சாதி”யில் செந்தில் அண்ணன் பேரனாக நடித்திருந்தேன். அப்போது அண்ணனிடம் எதாச்சும் பேசிக்கொண்டே இருப்பேன். “அண்ணே எல்லாரையும் சிரிக்க வைக்கிற உங்கள சங்கடப்படுத்துற மாதிரி எதாச்சும் இருக்காண்ணே?”… என்று கேட்டபோது ரொம்ப வருசத்துக்கு முன்னால பொள்ளாச்சிப் பகுதியில் ஒரு படப்பிடிப்பு நடக்கும்போது ஏகப்பட்ட கூட்டம் வேடிக்கை பார்க்க கூடியிருந்துச்சி… ஒரு மேடான பகுதியில நான் தரையில ரிலாக்ஸா உக்காந்துட்டு இருந்தேன். திடீர்னு கூட்டத்துல ஒருத்தன் முதுகுல உதைச்சிட்டான்.. நிலைகுலைஞ்சி மேட்டுல இருந்து உருண்டு கீழ விழுகிறேன்.. கூட்டத்துல கொஞ்சபேரு கைதட்டி சிரிக்கிறாங்க.. ஊர்மக்களும் படத்துல வேலை செஞ்சவங்களும் அவனை பிடிச்சி ரெண்டு போடுபோட்டு ஏண்டா இப்டி பண்ணேன்னு கேட்டா… ” படத்துல கவுண்டமணி உதைச்சா அண்ணே வலிக்காத மாதிரி நடிக்கிறாரு.. நான் உதைச்சாலும் அப்டித்தான் பண்றாரான்னு பார்த்தேன்னு சொல்லவும்.. அவனை திட்டி மன்னிப்பு கேட்க வைக்க அடிக்கவே .. “அதெல்லாம் ஒண்ணும் வேணாம் அவனை விட்ருங்க தெரியாம ஏதோ பண்ணிட்டான்” என்று கூறியிருக்கிறார். அந்த மனதுதான் செந்தில் அண்ணன்.!!” என்று அவர் தன் பதில் குறிப்பிட்டுள்ளார்.
1937 ஆண்டு. கல்கத்தாவில் மாயா மச்சீந்திரா என்கிற படத்தின் சூட்டிங். அப்போது எம்ஜிஆர் சாதாரண ராமசந்தராகத்தான் இருந்தார். புரட்சிதலைவரெல்லாம் கிடையாது. துடிப்பான இளைஞரான எம்ஜிஆர் அக்காலகட்டத்தில் ஏகப்பட்ட ஆங்கிலப்படங்கள் பார்க்கிறார். இத்தனைக்கும் எம்ஜிஆருக்கு அந்த சமயத்தில் ஆங்கிலம் சுத்தமாக தெரிந்திருக்கவில்லை. இருந்தாலும் சினிமாவின் மீது தீராத ஆர்வமும் குறுகுறுப்பும் துறுதுறுப்புமாக திரிந்த காலம் அது. ஒரு நாள் சில நண்பர்களுடன் ஆங்கில படம் ஒன்றை பார்க்கிறார். அப்படத்தின் பெயர் 'இஃப் ஐ வேர் ஏ கிங்''. ரொனால்ட் கால்மேன் என்கிற நடிகர் நடித்த சூப்பர் ஹிட் படம் அது. படம் முழுக்க IF I WERE A KING என்கிற வசனம் படம் முழுக்க இடம்பெறுகிறது. அந்த வசனத்துக்கும் மட்டும்தான் அர்த்தம் தெரிந்துவைத்திருந்தார் எம்ஜிஆர். படம் பார்த்துவிட்டு தன் அறைக்கு வந்து விதவிதமாக 'நான் மன்ன்னானால்' என்கிற வசனத்தை விதவிதமாக சொல்லிப்பார்க்கிறார். ஒருவேளை தான் தமிழ்நாட்டுக்கே மன்னனானால் என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்று சிந்தித்துப்பார்க்கிறார். ''அந்தகாலத்திலேயே ஏழ்மையை பற்றியும் மக்களின் நிலையைப்பற்றியும் சிந்தித்தவன் நான். சிந்தித்தவன் என்பதை விட அனுபவித்துக்கொண்டிருந்தேன் என்பதே சரியானது.. நாட்டிலே இதுபோன்ற தொல்லைகள் ஏன் இருக்க வேண்டும் என அடிக்கடி எண்ணுவேன்.. அதுதான் இந்த நாடோடியை மன்னனாக மாற்றியது'' என்கிறார் எம்ஜிஆர். பின்னாளில் எம்ஜிஆர் தமிழ்நாட்டுக்கே மன்னன் ஆனதெல்லாம் வரலாறு. அவர் நடித்து வெளியாகி சரித்திரம் படைத்த நாடோடி மன்னன் திரைப்படத்துக்கான கருப்பொருள் இப்படித்தான் உருவானது. இச்சம்பவத்தை தன்னுடைய புத்தகமொன்றில் குறிப்பிட்டு எழுதியிருக்கிறார் எம்ஜிஆர். நாடோடி மன்னன் திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றிபெற்றபோது அதற்காக வெள்ளிவிழா மலர் தயாரிக்கப்பட்டது. அதில் இப்படத்தின் பின்னணிகள் குறித்து ஏகப்பட்ட தகவல்களை பகிர்ந்திருக்கிறார் எம்ஜிஆர். 'யாருக்கு வெற்றி' என்கிற பெயரில் வெளியான இக்கட்டுரைகளை எழுத்தாளர் அஜயன்பாலாவின் நாதன் பதிப்பகம் மறுபதிப்பு செய்துள்ளது. ''எப்படி ஜெயித்தேன்'' என்கிற பெயரில் வெளியாகியிருக்கும் இந்த புத்தகத்தில், நாடோடி மன்னன் திரைப்படத்தை தயாரிக்கவும், இயக்கவும் எம்ஜிஆர் பட்ட பாட்டினை அறிந்துகொள்ள முடிகிறது. படத்தை தயாரிப்பதில் தொடங்கி அதை படமாக்குவதில் பட்ட இன்னல்களை தனக்கேயுரிய அடக்கத்துடன் பகிர்ந்துகொள்கிறார் எம்ஜிஆர். இன்று ஏகப்பட்ட ஹாலிவுட் மற்றும் உலகசினிமாவிலிருந்து கதையை சுட்டு படமெடுப்பதை பார்க்க முடிகிறது. நாடோடி மன்னனும் கூட பிரிசனர் ஆஃப் ஜென்டா என்கிற படத்தின் தழுவல்தன். ஆனால் அதை தன் படத்துக்கான முதல் விளம்பரத்திலேயே அறிவித்திருக்கிறர் எம்ஜிஆர். அதோடு ஆங்கிலக்கதையை எப்படி தமிழுக்கு ஏற்றபடி மாற்றி அமைத்தார் என்பதையும் குறிப்பிட்டு ஒரு கட்டுரையில் விளக்குகிறார். நாடோடி மன்னன் திரைப்படம் பாதி கறுப்பு வெள்ளையிலும் மீதி கலரிலும் இருக்கும். படத்தின் ஒளிப்பதிவாளரான ராமுவின் மீது எம்ஜிஆருக்கு அப்படி ஒரு மரியாதை. அதனால் படம் முழுமைக்கு அவரை ஒளிப்பதிவாளராக பயன்படுத்துவது என முடிவாகிறது. ஆனால் ராமுவோ தான் கலர் படத்தில் வேலை பார்த்த அனுபவமே கிடையாது வேறு யாராவது நல்ல நிபுணரை பயன்படுத்திக்கொள்ளுங்களேன் என்று எம்ஜிஆரிடம் கேட்கிறார். ஆனால் எம்ஜிஆரோ நீங்கள்தான் வண்ணக்காட்சியையும் படமாக்க வேண்டும்.. இல்லையென்றால் படத்தில் கலரே வேண்டாம் என்று சொல்லிவிடுகிறார். அதோடு ராமுவை வைத்து ஒருநாள் மட்டும் கலர் படமெடுக்கிற கேமராவில் டெஸ்ட் சூட்டிங் செய்து அதை மும்பைக்கு அனுப்பி சோதனை செய்கிறார். நன்றாக வந்திருக்கிறது என்று மும்பையிலிருந்து தகவல் வர.. மீதி படம் கலரிலேயே ராமுவை வைத்து எடுக்கப்படுகிறது. ராமு தவிர படத்தின் இசையமைப்பாளர்,எடிட்டர் தொடங்கி சாதாரண லைட் பாய் வரைக்கும் இப்படத்தின் வெற்றிக்காக உழைத்த ஒவ்வொருடைய பின்னணியையும் அர்ப்பணிப்பையும் உழைப்பையும் குறிப்பிட்டு எழுதியுள்ளார். தொழில்நுட்ப கலைஞர்கள் மட்டுமல்லாது படத்தின் நடிக நடிகையர் அனைவரது உழைப்பையும் விளக்கும் வகையில் சில கட்டுரைகளும் இப்புத்தகத்தில் இடம்பிடித்துள்ளன. குறிப்பாக சந்திரபாபு குறித்தும் அவருடனான எம்ஜிஆரின் தள்ளுமுள்ளுவும் சுவாரஸ்யமானது. எம்ஜிஆர் ஒரு காட்சிக்காக சில குதிரைகளை ஏற்பாடு செய்கிறார். அதில் ஒன்று முரட்டுக்குதிரை. சந்திரபாபு அந்தக்குதிரையில்தான் பயணிப்பேன் என்று அடம்பிடிக்கிறார். எம்ஜிஆர் எவ்வளவோ தடுத்தும் கேட்கமல் அதில் ஏறி.. அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் கீழே விழுந்து கைகால்களில் காயத்தோடு திரும்புகிறார். அச்சமயத்தில் எம்ஜிஆர் சந்திரபாபுவுக்கு கொடுத்த அறிவுரை சினிமா கலைஞர்கள் அனைவருமே தெரிந்துகொள்ள வேண்டிய ஒன்று. ''சந்திரபாபுவின் திறமையை மக்கள் போற்றுகிறார்கள் புகழுகிறார்கள் என்றால் அந்த சந்திரபாபு தன்னிடமிருக்கும் கலைத்திறனை எத்தனை தொல்லைகளுக்கிடையே எத்தனை எதிர்பார்ப்புகளுக்கிடையே கற்றுக்கொண்டிருப்பார். அதற்காக எத்தனை வருடங்கள் உழைப்பு தேவைப்பட்டிருக்கும். அவைகளை எல்லாம் ஒரேநாளில் நினைத்ததும் பெறமுடியாத அந்த திறமைகளையெல்லாம் ஒரே விநாடியில் இழந்துவிடும் நிலைக்கு நம்மை கொண்டு செல்வது ஒரு கலைஞன் மக்களுக்கு செய்கிற மகத்தான துரோகமில்லையா'' என்று குறிப்பிடுகிறார். இதுபோல இன்னும் ஏகப்பட்ட சுவாரஸ்யமான தகவல்கள் புத்தகமெங்கும் நிறைந்திருக்கிறது. அந்தகாலத்து சலிப்பூட்டும் எழுத்து நடைதான் என்றாலும் சம்பவங்கள் பலதும் அட போட வைக்கின்றன. அக்காலகட்டத்துக்கே நம்மை அழைத்துச்செல்கின்றன. புத்தகத்தின் இறுதியில் அறிஞர் அண்ணா இப்படத்துக்கு எழுதிய மதிப்புரை (விமர்சனம் என்று சொல்லமுடியாது) இடம்பெற்றுள்ளது. அதில் திராவிட இயக்கத்துக்கும் இப்படத்துக்குமான அரசியில் தொடர்புகளை விலாவாரியாக விளக்கி குறிப்பிட்டுள்ளார். படத்தில் இருக்கிற குறியீடுகள் குறித்தெல்லம் பேசுகிறார்! புத்தகம் முழுக்க எம்ஜிஆர் தன்னுடைய புரட்சிதலைவர் இமேஜையெல்லாம் தள்ளிவைத்துவிட்டு ஒரு சாதாரண ராமசந்தராகவே நம்மோடு உரையாடுகிறார். அந்த எளிமையும் தன்னடக்கமும்தான் ராமசந்தர் என்கிற நாடோடியை மன்னனாக்கியதோ என்னவோ! ஒரு திரைப்படத்தின் வெற்றி என்பது தனிநபருக்கு மட்டுமே சொந்தமானதல்ல. அதன் ஒவ்வொரு ஃப்ரேமுக்கு பின்னாலும் எண்ணற்ற மனிதர்களின் வியர்வையும் உழைப்பும் அடங்கி இருக்கிறது. அந்த மகத்தான உழைப்பு எப்படி பயன்படுத்தப்படுகிறது என்பதில்தான் வெற்றியின் சூத்திரம் அடங்கியிருக்கிறது. அதை தெரிந்துகொள்ள விரும்புபவர்கள் கட்டாயம் படிக்க வேண்டிய புத்தகம் இந்த எப்படி ஜெயித்தேன்!
2021 ஆம் ஆண்டில் ஐபிஎல் போட்டிகள் 29 போட்டிகள் முடிவுற்ற நிலையில் திடீரென கொரோனா பாதிப்பு காரணமாக ஒத்திவைக்கப்பட்ட நிலையில் மீண்டும் ஐபிஎல் போட்டிகள் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டில் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது அதன்படி தற்போது ஐபிஎல் போட்டிகள் தொடங்கும் தேதி குறித்த தகவல் வெளிவந்துள்ளது இதன்படி ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டில் மீண்டும் ஐபிஎல் போட்டிகள் செப்டம்பர் 19-ஆம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஐபிஎல் ஐபிஎல் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர் முதல் குவாலிஃபையர் போட்டி அக்டோபர் 10ஆம் தேதி நடைபெறும் என்றும் எலிமினேட்டர் போட்டி அக்டோபர் 11-ம் தேதி நடைபெறும் என்றும் குவாலிஃபையர் 2 அக்டோபர் 13ஆம் தேதியும் இறுதிப்போட்டி அக்டோபர் 15ஆம் தேதியும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது மேலும் செப்டம்பர் 19ஆம் தேதி மீண்டும் தொடங்கும் ஐபிஎல் போட்டியில் சென்னை மற்றும் மும்பை அணிகள் மோத உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
وَحَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، أَخْبَرَنَا عَبْدُ الْخَالِقِ بْنُ سَلَمَةَ قَالَ سَمِعْتُ سَعِيدَ بْنَ الْمُسَيَّبِ، يَقُولُ سَمِعْتُ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ يَقُولُ :‏ عِنْدَ هَذَا الْمِنْبَرِ – وَأَشَارَ إِلَى مِنْبَرِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم – قَدِمَ وَفْدُ عَبْدِ الْقَيْسِ عَلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَسَأَلُوهُ عَنِ الأَشْرِبَةِ فَنَهَاهُمْ عَنِ الدُّبَّاءِ وَالنَّقِيرِ وَالْحَنْتَمِ ‏.‏ فَقُلْتُ لَهُ يَا أَبَا مُحَمَّدٍ وَالْمُزَفَّتِ وَظَنَنَّا أَنَّهُ نَسِيَهُ فَقَالَ لَمْ أَسْمَعْهُ يَوْمَئِذٍ مِنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ وَقَدْ كَانَ يَكْرَهُ அப்துல்லாஹ் பின் உமர் (ரலி), அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் மிம்பரை நோக்கி சைகை செய்து, “இந்தச் சொற்பொழிவு மேடை அருகில், அப்துல் கைஸ் தூதுக் குழுவினர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து குடிபானங்கள் பற்றிக் கேட்டனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) சுரைக்குடுவை, பேரீச்சை மரத்தின் அடிப்பாகத்தைக் குடைந்து தயாரிக்கப்பட்ட பாத்திரம் மற்றும் மண் சாடி ஆகியவற்றை (க் குடிபானங்களுக்கு)ப் பயன்படுத்த வேண்டாமென அவர்களுக்குத் தடை விதித்தார்கள்” என்று கூறியதை நான் கேட்டேன். அறிவிப்பாளர் : இப்னு உமர் (ரலி) வழியாக ஸயீத் பின் அல்முஸய்யப் (ரஹ்) குறிப்பு : நான் ஸயீத் பின் அல்முஸய்யப் (ரஹ்) அவர்களிடம், “அபூமுஹம்மதே! தார் பூசப்பட்ட பாத்திரத்தையுமா (பயன்படுத்த வேண்டாம் எனத் தடை செய்தார்கள்)?” என்று கேட்டேன். அதை அவர்கள் மறந்துவிட்டார்களோ என்று நாங்கள் கருதினோம். அதற்கு ஸயீத் பின் அல்முஸய்யப் (ரஹ்), “அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அன்று அவ்வாறு கூறியதை நான் கேட்கவில்லை. (எனினும்,) அவர்கள் (தார் பூசப்பட்ட பாத்திரத்தை) வெறுத்துவந்தார்கள்” என்று பதிலளித்தார்கள் என்பதாக இந்த ஹதீஸின் அறிவிப்பாளரான அப்துல் காலிக் பின் ஸலமா (ரஹ்) கூறுகின்றார். ← முந்தைய ஹதீஸ்அத்தியாயம்: 36, பாடம்: 6, ஹதீஸ் எண்: 3713 அடுத்த ஹதீஸ் →அத்தியாயம்: 36, பாடம்: 6, ஹதீஸ் எண்: 3715 SatyaMargam ↓ விரும்பும் பாடம் செல்ல… ↓ விரும்பும் பாடம் செல்ல… Select Category 43.37 நபி (ஸல்) அவர்களைக் கண்ணியப்படுத்துவதும் … (8) 43.36 நபி (ஸல்) அவர்களைப் பின்பற்ற வேண்டியது (முஸ்லிம்களின்) கட்டாயக் கடமையாகும் (1) 43.35 நபி (ஸல்) அவர்களின் அல்லாஹ்வைப் பற்றிய அறிவும் அவனைப் பற்றிய கடுமையான அச்சமும் (2) 43.34 நபி (ஸல்) அவர்களின் பெயர்கள் (3) 43.33 நபி (ஸல்) மக்காவிலும் மதீனாவிலும் எத்தனை ஆண்டுகள் வாழ்ந்தார்கள்? (8) 43.32 நபி (ஸல்) இறந்தபோது அவர்களுக்கு வயது எத்தனை? (2) 43.31 நபி (ஸல்) அவர்களின் உடலமைப்பு; நபியாக அனுப்பப்பெற்றது; அவர்களின் வயது (1) 43.30 நபி (ஸல்) உடலில் நபித்துவ முத்திரை … (3) 43.29 நபி (ஸல்) அவர்களின் தலைநரைமுடி (10) 43.28 நபி (ஸல்) அவர்களின் வெண்ணிறமும் களையான முகமும் (2) 43.27 நபி (ஸல்) அவர்களின் வாய், கண்கள், குதிகால்கள் ஆகியவை (1) 43.26 நபி (ஸல்) அவர்களது தலைமுடியின் தன்மை (3) 43.25 நபி (ஸல்) அவர்களின் உருவத் தோற்றம் … (3) 43.24 நபி (ஸல்) தமது தலைமுடியை … (1) 43.23 நபி (ஸல்) அவர்களுக்கு வேத அறிவிப்பு வரும்போது … (4) 43.22 நபி (ஸல்) அவர்களது வியர்வையின் நறுமணமும் அதன்மூலம் வளம் ஏற்பட்டதும் (3) 43.21 நபி (ஸல்) அவர்களின் மேனியில் கமழ்ந்த நறுமணம் … (3) 43.20 நபி (ஸல்) பாவங்களை விட்டு வெகு தொலைவில் விலகியிருந்தது … (3) 43.19 நபி (ஸல்), மக்களுடன் நெருங்கிப் பழகியதும் அவர்களிடமிருந்து மக்கள் வளம் பெற்றதும் (3) 43.18 மனைவியர்மீது நபி (ஸல்) காட்டிய அன்பும் … (4) 43.17 நபி (ஸல்) அவர்களின் புன்னகையும் அழகிய உறவாடலும் (1) 43.16 நபி (ஸல்) அவர்களின் நாண மிகுதி (2) 43.15 நபி (ஸல்) குழந்தைகள் மீதும் குடும்பத்தார் மீதும் காட்டிய அன்பு … (5) 43.14 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வேண்டப்பட்ட எந்த ஒன்றுக்கும் அவர்கள் “இல்லை” என்று சொன்னதேயில்லை … (5) 43.13 அல்லாஹ்வின் தூதர் (ஸல்), மக்களிலேயே மிகவும் அழகான … (5) 43.12 மக்களிலேயே நபி (ஸல்), தொடர்ந்து வீசும் (மழைக்) காற்றைவிட … (1) 43.11 நபி (ஸல்) அவர்களின் வீரமும் அறப்போருக்காக அவர்கள் முன்னே சென்றதும் (2) 43.10 உஹுதுப் போர் நாளில் நபி (ஸல்) … (2) 43.9 நம் நபி (ஸல்) அவர்களுக்கு (மறுமையில் ‘அல்கவ்ஸர்’) தடாகம் உண்டு … (20) 43.8 உயர்ந்தோன் அல்லாஹ் ஒரு சமுதாயத்தின்மீது அருள் புரிய நாடினால் … (1) 43.7 நபி (ஸல்), இறுதி இறைத் தூதர் என்பது பற்றிய குறிப்பு (4) 43.6 நபி (ஸல்), தம் சமுதாயத்தார் மீது கொண்டிருந்த பரிவும் … (4) 43.5 நபி (ஸல்), நேர்வழியுடனும் ஞானத்துடனும் அனுப்பப் பெற்றதற்கான உவமை (1) 43.4 அல்லாஹ்வையே முழுமையாக நபி (ஸல்) சார்ந்திருந்ததும் … (1) 43.3 நபி (ஸல்) அவர்களின் அற்புதங்கள் (7) 43.2 எல்லாப் படைப்புகளையும்விட நம் நபி (ஸல்) அவர்களின் சிறப்பு (1) 43.1 நபி (ஸல்) அவர்களின் தலைமுறையின் சிறப்பும் … (2) 42.4 நபி (ஸல்) கண்ட கனவு (6) 42.3 கனவுக்கு விளக்கமளித்தல் (1) 42.2 ஷைத்தான் கனவில் விளையாடியது குறித்து … (3) 42.1 கனவில் என்னைக் கண்டவர் … (4) 42.01 கனவுகள் (11) 41.2 பகடை விளையாட்டு, தடை செய்யப்பட்டதாகும் (1) 41.1 கவிதைகள் (9) 40.5 நறுமணப் பொருட்களில் மிகவும் சிறந்த கஸ்தூரியைப் பயன்படுத்துவது … (4) 40.4 ஒருவர், ‘கபுஸத் நஃப்ஸீ’ (என் மனம் அசுத்தமாகிவிட்டது) எனும் சொல்லை … (2) 40.3 ‘அப்து’ (அடிமை ஆண்), ‘அமத்து’ (அடிமைப் பெண்), ‘மவ்லா’/’ஸய்யித்’ (அடிமையின் உரிமையாளர்) ஆகிய சொற்களின் சட்டம் (3) 40.2 திராட்சையை, “கர்மு / கண்ணியம்” என்று பெயரிட்டழைப்பது … (7) 40.1 காலத்தை ஏசுவதற்குத் தடை (5) 39.41 விலங்குகளுக்கு நீர் புகட்டுவதின், உணவளிப்பதின் சிறப்பு (3) 39.40 பூனைகளைக் கொல்வதற்குத் தடை (2) 39.39 எறும்புகளைக் கொல்லத் தடை (3) 39.38 பல்லியைக் கொல்வது நல்லது (5) 39.37 பாம்பு போன்ற விஷ ஜந்துகளைக் கொல்வது (13) 39.36 தொழுநோயாளிகள் போன்றோரிடம் நெருக்கம் தவிர்ப்பது (1) 39.35 சோதிடர்களிடம் செல்வதும் சோதிடம் பார்ப்பதும் (5) 39.34 பறவை சகுனம், நற்குறி, துர்குறி பற்றிய பாடம் (11) 39.33 இல்லாத சகுனங்களும் தொற்றுநோய்களும் (6) 39.32 கொள்ளைநோய், பறவை சகுனம், சோதிடம் போன்றவை (8) 39.31 தேனூட்டு மருத்துவம் (1) 39.30 ‘தல்பீனா‘, நோயாளியின் மனத்துக்கு(ம் உடலுக்கும்) தெம்பு அளிக்கக்கூடியதாகும் (1) 39.29 கருஞ்சீரக மருத்துவம் (2) 39.28 இந்தியக் கோஷ்டக் குச்சியால் சிகிச்சையளிப்பது (2) 39.27 நோயாளிக்கு வற்புறுத்தி சிகிச்சையளிப்பது … (1) 39.26 ஒவ்வொரு நோய்க்கும் மருந்து உண்டு; (நோய்க்கு) மருத்துவம் செய்துகொள்வது விரும்பத் தக்கது (17) 39.25 தொழுகையில் மனம் அலைபாயச் செய்யும் ஷைத்தானிடமிருந்து பாதுகாப்புக் கோரல் (1) 39.24 பிரார்த்திக்கும்போது வலியுள்ள இடத்தில் கையை வைப்பது (1) 39.23 குர்ஆன் வசனங்கள் மற்றும் அல்லாஹ்வைத் துதிக்கும் சொற்களால் ஓதிப்பார்ப்பதற்கு ஊதியம் பெறலாம் (2) 39.22 இறைவனுக்கு இணை கற்பிதம் இல்லாத சொற்களால் ஓதிப்பார்பது தவறில்லை (1) 39.21 கண்ணேறு, சின்னம்மை, விஷக்கடி, (தீய)பார்வை ஆகியவற்றுக்காக ஓதிப்பார்ப்பது விரும்பத் தக்கதாகும் (12) 39.20 பாதுகாப்புக் கோரும் அத்தியாயங்களால் நோயாளிக்கு ஓதிப்பார்ப்பது … (2) 39.19 நோயாளிக்கு ஓதிப்பார்ப்பது விரும்பத் தக்கதாகும் (4) 39.18 விஷம் (1) 39.17 சூனியம் (1) 39.16 நோயும் மருத்துவமும் ஓதிப்பார்த்தலும் (4) 39.15 மூன்றாமவரின் ஒப்புதலின்றி இருவர் மட்டும் இரகசியம் பேசிக்கொள்வது தடை செய்யப்பட்டதாகும் (3) 39.14 … அந்நியப் பெண்ணை, வழிசெல்லும் ஒருவர் வாகனத்தில் அமர்த்திக்கொள்ளலாம் (2) 39.13 பெண்கள் இருக்கும் இடத்திற்கு அலிகள் செல்லத் தடை (2) 39.12 அமர்ந்திருந்த இடத்திற்கு உரியவர் (1) 39.11 அமர்ந்திருக்கும் ஒருவரை எழுப்பிவிடுவது தடை செய்யப்பட்டதாகும் (4) 39.10 அவைக்கு வருபவர், அமரும் ஒழுங்கு (1) 39.9 … கெட்ட எண்ணத்தை அகற்றுவது விரும்பத் தக்கதாகும் (2) 39.8 அந்நியப் பெண்ணிடம் … தனிமையில் இருப்பது தடை செய்யப்பட்டதாகும் (3) 39.7 … பெண்கள் வெளியே செல்லலாம் (2) 39.6 உள்ளே செல்ல அனுமதியாகக் கருதுவதற்கு … (1) 39.5 சிறாருக்கு(ப் பெரியவர்கள்) முகமன் கூறுவது விரும்பத் தக்கதாகும் (2) 39.4 வேதக்காரர்களுக்கு முந்திக்கொண்டு ஸலாம் கூறுவதற்குத் தடை (7) 39.3 ஸலாத்துக்குப் பதிலுரைப்பது முஸ்லிமுக்குக் கடமை (2) 39.2 நடைபாதைகளில் அமர்வதன் ஒழுங்குகளில் … (2) 39.1 முந்தி ஸலாம் சொல்ல வேண்டியவர்கள் (1) 38.10 இயல்பான பார்வை (1) 38.9 பிறர் வீட்டில் எட்டிப் பார்ப்பது தடை செய்யப்பட்டதாகும் (5) 38.8 “யார்?“ என்று கேட்டால் … (2) 38.7 அனுமதி கோருதல் (5) 38.6 “என் அருமை மகனே!“ (2) 38.5 குழந்தை பிறந்தவுடன் இனிப்பான பொருளை மென்று அதன் வாயிலிடுவதும் … (9) 38.4 மன்னாதி மன்னன் எனப் பெயர் சூட்டிக்கொள்வது தடை செய்யப்பட்டதாகும் (2) 38.3 அருவருப்பான பெயரை அழகான பெயராக மாற்றியமைப்பது … (6) 38.2 அருவருப்பான பெயர்கள் … (4) 38.1 … விரும்பத் தகுந்த பெயர்கள் (8) 37.35 வெறும் பெருமை (2) 37.34 மெல்லிய உடையணிந்து, பிறரைத் தன்பால் ஈர்க்கும் வண்ணம் தோள்களைச் சாய்த்து ஒயிலாக நடக்கும் பெண்கள் (1) 37.33 பெண்களின் பொய் அலங்காரங்காரங்களுக்குத் தடை (10) 37.32 நடைபாதைகளில் அமர்வதற்குத் தடையும் பாதைகளுக்குரிய உரிமைகளைப் பேணுவதும் (1) 37.31 தலை முடியில் பகுதி மழித்துவிட்டு, பகுதி மழிக்காமல் விட்டுவிடுவது வெறுக்கத் தக்கதாகும் (1) 37.30 ஸகாத் / ஜிஸ்யாவுக்கான கால்நடைகளில் சூடிட்டு அடை யாளமிடலாம் (4) 37.29 விலங்குகளின் முகத்தில் அடிப்பதும் அடையாளச் சூடிடுவதும் தடை செய்யப்பட்டவை ஆகும் (3) 37.28 ஒட்டகத்தின் கழுத்தில் (திருஷ்டிக்) கயிற்று மாலை அணிவிப்பது வெறுக்கத் தக்கதாகும் (1) 37.27 பயணத்தின்போது நாயும் (ஒலியெழுப்பும்) மணியும் வெறுக்கத் தக்கவை (2) 37.26 உயிரினங்களின் உருவப் படங்களை வரைவதும் … தடை செய்யப்பட்டவை ஆகும் (21) 37.25 (நரைமுடிக்கு) சாயமிட்டுக்கொள்வது யூதர்களுக்கு மாறு செய்வதாகும் (1) 37.24 நரைமுடியில் கருப்பு நிறச் சாயமிடுவது தடை செய்யப்பட்டதாகும் (2) 37.23 ஆண்கள் (மேனியில்) குங்குமப்பூச் சாயமிட்டுக்கொள்வதற்குத் தடை (1) 37.22 மல்லாந்து படுத்துக்கொண்டு கால்மீது காலைப் போட்டுக் கொள்வதற்கு அனுமதி (1) 37.21 மல்லாந்து படுத்துக்கொண்டு கால்மீது காலைப் போட்டுக் கொள்வதற்குத் தடை (3) 37.20 தடை செய்யப்பட்ட இரு நிலைகள் (2) 37.19 காலணிகளை அணிந்து கழற்றும் முறைகள் (3) 37.18 காலணி அல்லது அது போன்றதை அணிந்துகொள்வது விரும்பத் தக்கதாகும் (1) 37.17 மோதிரம் அணிவதற்குத் தடை செய்யப்பட்ட விரல்கள் (2) 37.16 கைச் சுண்டுவிரலில் மோதிரம் அணிவது (1) 37.15 அபிசீனியக் வெள்ளிக் குமிழ் மோதிரம் (2) 37.14 மோதிரங்களை(க் கழற்றி) எறிந்த நிகழ்வு (2) 37.13 நபி (ஸல்) அவர்களின் (முத்திரை) மோதிரம் (3) 37.12 ‘முஹம்மதுர் ரசூலுல்லாஹ்’ எனும் இலச்சினை பொறிக்கப்பட்ட வெள்ளி மோதிரம் (2) 37.11 ஆண்கள் தங்க மோதிரம் அணிவதற்குத் தடை (3) 37.10 ஆடைகளை எண்ணிப் பெருமை கொண்டு, கர்வத்தோடு நடப்பதற்குத் தடை (2) 37.9 பெருமைக்காக ஆடையைத் தரையில் படும்படி இழுத்துச் செல்வதற்குத் தடை (7) 37.8 தேவைக்கு அதிகமான விரிப்புகளும் ஆடைகளும் இருப்பது விரும்பத் தக்கதன்று (1) 37.7 படுக்கை விரிப்புகளைப் பயன்படுத்த அனுமதி (2) 37.6 ஆடையில் (எளிமை,) பணிவு காட்டுவது … (5) 37.5 பருத்தி ஆடை அணிவதன் சிறப்பு (2) 37.4 ஆண்கள் செம்மஞ்சள் நிறச் சாயமிடப்பட்ட ஆடை அணிவதற்குத் தடை (5) 37.3 தோல் உபாதைகள் இருந்தால் ஆண்கள் பட்டாடை அணியலாம் (3) 37.2 பொன் மோதிரம் மற்றும் பட்டாடை அணிவது ஆண்களுக்குத் தடை; பெண்களுக்கு அனுமதி (20) 37.1 பொன் / வெள்ளிப் பாத்திரங்களைப் பயன்படுத்துவது ஆண்களுக்கும் பெண்களுக்கும் தடை (2) 36.35 உணவைக் குறை சொல்லவேண்டாம் (2) 36.34 இறைநம்பிக்கையாளர் ஒரே குடலில் உண்பார்; இறைமறுப்பாளன் ஏழு குடல்களில் உண்பான் (5) 36.33 உணவு குறைவாக இருக்கும்போது … (4) 36.32 விருந்தினரை உபசரிப்பதும் முன்னுரிமை வழங்குவதன் சிறப்பும் (6) 36.31 வெள்ளைப் பூண்டு சாப்பிடக்கூடியதே … (2) 36.30 உணவுக் காடியின் சிறப்பும் … (4) 36.29 ‘அல்கபாஸ்’ பழங்களில் கருப்பு நிறப் பழத்தின் சிறப்பு (1) 36.28 உணவுக் காளானின் சிறப்பும் … (6) 36.27 மதீனத்துப் பேரீச்சம் பழங்களின் சிறப்பு (3) 36.26 குடும்பத்தாருக்காக … உணவுகளைச் சேமித்துவைத்தல் (2) 36.25 பலருடன் சேர்ந்து உண்பவர் … (2) 36.24 உணவு உண்பவர் அமரும் முறை; பணிவோடு அமர்வது விரும்பத் தக்கது (2) 36.23 பேரீச்சை செங்காய்களுடன் வெள்ளரிக்காயையும் சேர்த்து உண்பது (1) 36.22 விருந்தளிப்பவருக்காக விருந்தாளி பிரார்த்திப்பது … (1) 36.21 சுரைக் குழம்பு உண்ண அனுமதி … (2) 36.20 வீட்டு உரிமையாளரின் சம்மதம் கிடைக்கும் என்ற நம்பிக்கை இருந்தால் … (4) 36.19 விருந்துக்கு அழைக்கப்பட்டவரைத் தொடர்ந்து அழைக்கப்படாதவரும் வந்துவிட்டால் … (2) 36.18 உண்டு முடித்ததும் விரல்களைச் சூப்புவதும் உணவுத் தட்டை வழித்து உண்பதும் … (9) 36.17 வலப் பக்கத்திலிருந்து பரிமாறுதல் விரும்பத் தக்கதாகும் (4) 36.16 பாத்திரத்தினுள் (பருகும்போது) வெளியே மூன்று முறை மூச்சு விட்டுப் பருகுவது விரும்பத் தக்கதாகும் (3) 36.15 ஸம்ஸம் நீரை நின்றுகொண்டு அருந்துவது (4) 36.14 நின்றுகொண்டு அருந்துவது வெறுக்கத் தக்கதாகும் (4) 36.13 உண்பது, அருந்துவது ஆகியவற்றின் ஒழுங்குகளும் விதிமுறைகளும் (10) 36.12 இரவு நேர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் (6) 36.11 பழச்சாறுகளைப் பருகுவதும் பாத்திரங்களை மூடிவைப்பதும் (3) 36.10 (ஆட்டுப்) பால் அருந்த அனுமதி (3) 36.9 பழச்சாறுகள் (புளித்துக்) கெட்டியாகி, போதையேறாதவரை அனுமதிக்கப்பட்டவையாகும் (10) 36.8 குடிகாரன் பாவமன்னிப்புக் கோரி திருந்தாவிட்டால் … (3) 36.7 போதை தரும் ஒவ்வொரு பானமும் தடை செய்யப்பட்ட மதுவாகும் (9) 36.6 பானங்கள்-பாத்திரங்கள், தடை-தடை நீக்கம் (36) 36.5 பேரீச்சம் பழம், உலர் திராட்சைக் கலவை ஊறல் வெறுக்கத் தக்கதாகும் (14) 36.4 ‘மதுபானம்’ என்று சொல்லப்படுபவை (4) 36.3 மதுவை மருந்தாகப் பயன்படுத்துவதற்குத் தடை (1) 36.2 மதுபானத்தை (சமையல்) காடியாக மாற்றிப் பயன்படுத்துவதற்குத் தடை (1) 36.1 போதையூட்டும் ஒவ்வொன்றும் மதுவாகும் (9) 35.8 அல்லாஹ் அல்லாதவரின் பெயர் கூறிப் பிராணிகளை அறுப்பதற்குத் தடை (3) 35.7 தலைமுடியை, நகங்களைக் களைவதற்குத் தடை (5) 35.6 அல் ஃபரஉ வல் அத்தீரா (1) 35.5 பலி இறைச்சியை எவ்வளவு காலம் சேமித்து வைக்கலாம்? (14) 35.4 பல், நகம், எலும்பு ஆகியவை தவிர எந்தப் பொருளாலும் பிராணியை அறுக்க அனுமதி (1) 35.3 தாமே அறுப்பதும் அல்லாஹ்வின் பெயரோடு தக்பீர் கூறுவதும் விரும்பத் தக்கவை ஆகும் (3) 35.2 பலிப் பிராணியின் வயது (4) 35.1 பலி கொடுக்கப்படும் நேரம் (10) 34.12 விலங்குகளைக் கட்டிவைத்து அம்பெய்து கொல்வதற்குத் தடை (5) 34.11 … கத்தியைக் கூர்மையாகத் தீட்டிக் கொண்டு வதையற்ற முறையைக் கையாளக் கட்டளை (1) 34.10 … பயிற்சிகளை மேற்கொள்வது அனுமதிக்கப் பட்டதாகும். கல்சுண்டு விளையாட்டு வெறுக்கப்பட்டதாகும் (2) 34.9 முயல் கறி உண்ணத் தக்கது (1) 34.8 வெட்டுக்கிளி உண்ணத் தக்கது (1) 34.7 உடும்புக் கறி உண்ணத் தக்கது (13) 34.6 குதிரைகளின் இறைச்சியை உண்பது கூடுமா? (3) 34.5 நாட்டுக் கழுதைகளின் இறைச்சியை உண்பதற்குத் தடை (14) 34.4 கடல்வாழ் உயிரினங்களில் செத்தவற்றை உண்பதற்கு அனுமதி (5) 34.3 உண்பதற்குத் தடை செய்யப்பட்ட விலங்குகளும் பறவைகளும் (6) 34.2 வேட்டையாடிய பிராணி மறைந்து, பிறகு கிடைத்தால் … (2) 34.1 பயிற்சியளிக்கப்பட்ட நாய்கள் மூலம் வேட்டையாடுதல் (8) 33.56 பயணத்திலிருந்து திரும்புகின்றவர் … (5) 33.55 பயணம் என்பது துன்பத்தின் ஒரு பகுதியாகும் … (1) 33.54 பயணத்தில் கால்நடைகளின் நலன் காப்பதும் … (2) 33.53 “என் சமுதாயத்தாரில் ஒரு குழுவினர் எப்போதுமே உண்மைக்கு ஆதரவாளர்களாக இருப்பார்கள் … (8) 33.52 அம்பெய்வதன் சிறப்பும் … (3) 33.51 உயிர்த் தியாகிகள் பற்றிய விளக்கம் (3) 33.50 அல்லாஹ்வின் பாதையில் எல்லைக் காவல் புரிவதன் சிறப்பு (1) 33.49 கடல்வழிப் போரின் சிறப்பு (2) 33.48 போரில் கலந்துகொள்ள முடியாமல் போனவருக்கும் நன்மை … (1) 33.47 அறப்போரில் கலந்துகொள்ளாமல் இறந்துபோனவர் … (1) 33.46 அல்லாஹ்வின் பாதையில் வீரமரணத்தை வேண்டுவது விரும்பத் தக்கதாகும் (2) 33.45 “எண்ணங்களைப் பொருத்தே செயல்கள் அமைகின்றன” எனும் நபிமொழி … (1) 33.44 … போர்ச் செல்வங்களைப் பெற்றோரும் பெறாதோரும் … (2) 33.43 பிறர் பார்ப்பதற்காகவும் விளம்பரத்திற்காகவும் போரிட்டவர் … (1) 33.42 அல்லாஹ்வின் பாதையில் போரிட்டவர் … (3) 33.41 உயிர்த் தியாகிக்குச் சொர்க்கம் நிச்சயம் (6) 33.40 தகுந்த காரணம் உள்ளவர்களுக்கு அறப்போரில் கலந்து கொள்வது கடமை இல்லை (2) 33.39 அறப்போர் வீரர்களின் துணைவியருடைய கண்ணியம் … (1) 33.38 அறப்போர் வீரருக்கு வாகனம் மற்றும் பிற உதவிகள் … (6) 33.37 அல்லாஹ்வின் பாதையில் தர்மம் செய்வதன் சிறப்பும் அதற்குக் கிடைக்கும் பன்மடங்கு நன்மைகளும் (1) 33.36 இறைமறுப்பாளனை (போரில்) கொன்ற பின்னர் (மார்க்கத்தில்) உறுதியோடு இருத்தல் (2) 33.35 இரு போராளிகளில் ஒருவர் மற்றவரைக் கொன்று, பின் அவ்விருவருமே சொர்க்கத்தில் … (2) 33.34 அறப்போர் மற்றும் எல்லைக் காவலின் சிறப்பு (3) 33.33 வீரமணம் அடைந்தவர்களின் உயிர்கள் … (1) 33.32 அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டவரின் கடனைத் தவிர அனைத்துப் பாவங்களும் மன்னிக்கப்படுகின்றன (3) 33.31 அல்லாஹ் (தனது பாதையில்) அறப்போர் புரிந்தவர்களுக்காகச் சொர்க்கத்தில் வைத்துள்ள உயர்நிலைகள் (1) 33.30 அல்லாஹ்வின் பாதையில் காலையாயினும் மாலையாயினும் (போரிடச்) செல்வதன் சிறப்பு (5) 33.29 அல்லாஹ்வின் பாதையில் வீரமரணம் அடைவதன் சிறப்பு (4) 33.28 அல்லாஹ்வின் பாதையில் புறப்படுதலின், அறப்போரில் ஈடுபடுதலின் சிறப்பு (4) 33.27 குதிரையின் தன்மைகளில் விரும்பத் தகாதவை (1) 33.26 மறுமை நாள்வரை நெற்றிகளில் நன்மை பிணைக்கப்பட்டிருக்கும் குதிரைகள் (5) 33.25 குதிரைப் பந்தயமும் அதற்காகக் குதிரையை மெலிய வைப்பதும் (1) 33.24 குர்ஆன் பிரதிகளை இறைமறுப்பாளர்களின் நாட்டுக்கு எடுத்துச் செல்வது … (3) 33.23 பருவ வயது பற்றிய விளக்கம் (1) 33.22 இயன்றவரை கட்டுப்பட்டு நடப்பதாக உறுதிமொழி அளித்தல் (1) 33.21 பெண்களிடம் உறுதிப் பிரமாணம் (பைஅத்) வாங்கும் முறை (2) 33.20 மக்கா வெற்றிக்குப் பின் ஹிஜ்ரத் கிடையாது (5) 33.19 நாடு துறந்து (ஹிஜ்ரத்) சென்றவர் மீண்டும் தமது தாயகத்தில் குடியேறுவதற்குத் தடை (1) 33.18 ஆட்சித் தலைவர் படையினரிடம் உறுதி மொழி பெற்றுக்கொள்வது … (13) 33.17 ஆட்சித் தலைவர்களில் நல்லவர்களும் தீயவர்களும் (2) 33.16 ஆட்சித் தலைவர்கள் மார்க்கத்திற்கு முரணாகச் செயல்படும்போது … (2) 33.15 இரு ஆட்சியாளர்களுக்கு வாக்களிப்புப் பிரமாண நெருக்கடி ஏற்பட்டால் … (1) 33.14 முஸ்லிம்கள் (ஒரே தலைமையின் கீழ்) ஒன்றுபட்டிருக்கும்போது … (2) 33.13 குழப்பங்கள் தோன்றும்போது கூட்டமைப்போடு சேர்ந்திருப்பது கடமையாகும் … (8) 33.12 உரிமைகள் மறுக்கப்பட்டாலும் தலைமைக்குக் கட்டுப்படுதல் (1) 33.11 அதிகாரத்திலிருப்போர் அநீதியிழைக்கும்போதும் தகுதியற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கும்போதும் … (1) 33.10 கலீஃபாக்களில் முதலாமவருக்கு உறுதிப் பிரமாணம் (பைஅத்) அளிப்பது கடமையாகும் (3) 33.9 ஆட்சித் தலைவர் கேடயம் போன்றவர் … (1) 33.8 பாவமற்றவற்றில் தலைவர்களுக்குக் கட்டுப்படுவது கடமையாகும். பாவமானவற்றில் கட்டுப்படுவதற்குத் தடை (11) 33.7 அதிகாரிகளுக்கு அன்பளிப்புகள் வழங்குவதற்குத் தடை (3) 33.6 பொதுச் சொத்துகளில் மோசடி செய்வது வன்மையாகத் தடை செய்யப்பட்டது (1) 33.5 நேர்மையான ஆட்சியாளரின் சிறப்பும் … (6) 33.4 தேவையின்றி ஆட்சிப் பொறுப்பை ஏற்பது விரும்பத் தக்கதன்று (2) 33.3 ஆட்சியதிகாரத்தைத் தேடி அலைவதற்கும் அதன் மீது ஆசை கொள்வதற்கும் தடை (3) 33.2 ஆட்சித் தலைவரை நியமிக்கலாம்; நியமிக்காமல் விடலாம் (2) 33.1 ஆட்சியதிகாரம் குறைஷியரிடையேதான் இருக்கும் (10) 32.51 அறப்போர்களில் இறைமறுப்பாளரிடம் உதவி கோருவது … (1) 32.50 ‘தாத்துர் ரிக்காஉ’ (ஒட்டுத் துணிப்) போர் (1) 32.49 நபி (ஸல்) கலந்துகொண்ட அறப்போர்களின் எண்ணிக்கை (6) 32.48 அறப்போரில் கலந்துகொண்ட பெண்களுக்கு … (4) 32.47 அறப்போரில் ஆண்களுடன் பெண்களும் கலந்துகொள்வது (2) 32.46 “அவனே உங்களைத் தாக்காமல் அவர்கள் கைகளை தடுத்(து வைத்)தான்” எனும் (48:24) வசனம் (2) 32.45 ‘தூ கரத்’ போரும் பிற போர்களும் (2) 32.44 அஹ்ஸாப் போர் (அ) அகழ்ப் போர் (6) 32.43 கைபர் போர் (5) 32.42 கஅப் பின் அல்அஷ்ரஃப் கொல்லப்படுதல் (1) 32.41 அபூஜஹ்லு கொல்லப்படுதல் (1) 32.40 நபி (ஸல்) (மக்களை) இறைவன்பால் அழைத்து, துன்பங்களைப் பொறுத்துக் கொண்டது (2) 32.39 நபி (ஸல்) எதிர்கொண்ட துன்பங்கள் (7) 32.38 இறைதூதரால் கொல்லப்பட்டவன் மீது இறைவனின் கோபம் (1) 32.37 உஹுதுப் போர் (3) 32.36 கூட்டுப் படையினருக்கு எதிரான அகழ்ப் போர் (2) 32.35 வாக்குறுதியை(ப் போரிலும்) நிறைவேற்றுவது (1) 32.34 ஹுதைபிய்யா சமாதான உடன்படிக்கை’ (7) 32.33 மக்கா வெற்றிக்குப் பின் … (1) 32.32 கஅபாவைச் சுற்றிலும் இருந்த சிலைகளை அப்புறப்படுத்தியது (1) 32.31 மக்கா வெற்றி (2) 32.30 பத்ருப் போர் (1) 32.29 தாயிஃப் போர் (1) 32.28 ஹுனைன் போரில் … (5) 32.27 இறைமறுப்பு அரசர்களுக்கு நபி (ஸல்) எழுதிய கடிதங்கள் (1) 32.26 அழைப்பு விடுத்து ஹெராக்ளியஸ் மன்னருக்கு நபி (ஸல்) எழுதிய கடிதம் (1) 32.25 போரில் கிடைத்த உணவை, பகை நாட்டில் இருக்கும் போதே உண்ணலாம் (2) 32.24 முஹாஜிர்கள் தன்னிறைவு அடைந்தபோது … (2) 32.23 செயல்களுள் முன்னுரிமை அளிக்கத் தக்கது (1) 32.22 ஒப்பந்தத்தை முறித்துவிட்ட (பகை)வர்களுடன் போர் செய்யலாம் (3) 32.21 யூத கிறித்தவர்கள் அரபிய தீபகற்பத்திலிருந்து வெளியேற்றப்படுவது (1) 32.20 யூதர்களை ஹிஜாஸ் பகுதியிலிருந்து நாடு கடத்தியது (2) 32.19 கைதியை என்னென்னவெல்லாம் செய்யலாம் (1) 32.18 பத்ருப் போரில் வானவர்களின் உதவியும் … (1) 32.17 போர் வெற்றிச் செல்வத்தைப் பங்கிடும் முறை (1) 32.16 இறைத்தூதர்களுக்கு யாரும் (சொத்தில்) வாரிசாக முடியாது (5) 32.15 போர் செய்யாமல் கிடைத்த செல்வங்களின் சட்டம் (3) 32.14 … போர்க் கைதிகளைப் பரிமாறிக்கொள்வது (1) 32.13 போரில் கொல்லப்பட்ட எதிரியின் உடைமைகள் (4) 32.12 போர் வெற்றிச் செல்வங்கள் (7) 32.11 போர் வெற்றிச் செல்வங்கள் யாருக்குச் சொந்தம்? (1) 32.10 போரில் மரங்களை வெட்டுவதும் எரிப்பதும் அனுமதிக்கப்பட்டதாகும் (3) 32.9 பெண்களையும் குழந்தைகளையும் அறியாமல் கொன்றுவிட்டால் … (3) 32.8 போரில் பெண்களையும் குழந்தைகளையும் கொல்வதற்குத் தடை (2) 32.7 எதிரிகளை(ப் போரில்) எதிர்கொள்ளும்போது பிரார்த்திப்பது (2) 32.6 எதிரியை(ப் போர்க் களத்தில்) சந்திக்க ஆசைப்படுவது வெறுக்கத் தக்கது … (2) 32.5 போரில் தந்திரம் அனுமதிக்கப்பட்டது (2) 32.4 மோசடி செய்வது தடை செய்யப்பட்டதாகும் (8) 32.3 மக்களிடம் இலகுவாக நடந்துகொள்ள வேண்டும்; வெறுப்பைக் கைவிட வேண்டும் (3) 32.2 படைத் தலைவர், போர் நெறிகள் குறித்து அறிவுறுத்துவது (1) 32.1 முன்னறிவிப்பின்றித் தாக்குதல் தொடுக்கலாமா? (1) 31.5 பயணத்தில் உணவைப் பகிர்ந்துண்ணல் (1) 31.4 செல்வத்தால் பிறருக்கு உதவுவது விரும்பத் தக்கது (1) 31.3 விருந்தோம்பல் சார்ந்தவை (3) 31.2 உரிமையாளரின் அனுமதியின்றி கால் நடையில் பால் கறப்பதற்குத் தடை (1) 31.1 ஹாஜிகள் தவறவிட்டவை (2) 31.0 கண்டெடுக்கப்பட்டவை (5) 30.11 நீதிபதி சமரசம் செய்துவைப்பது விரும்பத் தக்கதாகும் (1) 30.10 ஆய்வாளர்களிடையே கருத்து வேறுபாடு (1) 30.9 சாட்சிகளில் சிறந்தவர் (1) 30.8 தவறான தீர்ப்புகளைத் தள்ளுபடி செய்வதும் (மார்க்கத்தில் இல்லாத) புதுமைகளை நிராகரிப்பதும் (2) 30.7 கோபமாக இருக்கும் நீதிபதி, தீர்ப்பளிப்பது விரும்பத் தக்கதன்று (1) 30.6 நீதிபதியின் ஆய்வுக்கு நன்மை உண்டு (1) 30.5 தடைகள் மூன்று (4) 30.4 ஹிந்த் (ரலி) வழக்கு (3) 30.3 வாதங்களின் அடிப்படையில் தீர்ப்பு அமைந்துவிடுதல் (2) 30.2 சத்தியத்தின் / சாட்சியத்தின் அடிப்படையில் தீர்ப்பளித்தல் (1) 30.1 சத்தியம் செய்து நிரூபிப்பது பிரதிவாதிமீது கடமையாகும் (2) 29.11 இழப்பீடு இல்லாத விபத்துகள் (2) 29.10 தண்டனைகள், குற்றங்களுக்கான பரிகாரமாகும் (3) 29.9 சீர்திருத்திற்காக வழங்கப்படும் சாட்டையடிகளின் (அதிகபட்ச) அளவு (1) 29.8 மது அருந்திய குற்றத்திற்கான தண்டனை (4) 29.7 மகப்பேறான பெண்ணின் தண்டனையைத் தள்ளிவைத்தல் (1) 29.6 இஸ்லாமிய அரசின் கீழ் வாழும் யூதர்கள் விபச்சாரத்தில் ஈடுபட்டாலும் கல்லெறி தண்டனை (6) 29.5 விபச்சாரம் செய்தவரின் ஒப்புதல் வாக்குமூலம் (9) 29.4 மணமானவர்கள் விபச்சாரம் செய்தால் கல்லெறி தண்டனை (1) 29.3 விபச்சாரக் குற்றத்திற்கான தண்டனை (2) 29.2 தண்டனையிலிருந்து விலக்கு அளிக்குமாறு பரிந்துரைப்பதற்குத் தடை (3) 29.1 தண்டனைக்குரிய திருட்டின் அளவுகோலும் தண்டனையும் (7) 28.11 சிசுக் கொலைக்கான இழப்பீடும் … (6) 28.10 கொலையாளி, தன் குற்றத்தை ஒப்புக்கொள்வதும் … (2) 28.9 மனிதர்களின் உயிர், தன்மானம், செல்வம் ஆகியவற்றுக்கு ஊறு விளைவிப்பது … (2) 28.8 மறுமையில் வழங்கப்படும் தீர்ப்பும் தண்டனையும் … (1) 28.7 கொலையை (உலகுக்கு) அறிமுகப்படுத்தியவர் மீதான பாவம் (1) 28.6 முஸ்லிமின் மரண தண்டனைக்கான காரணங்கள் (2) 28.5 பற்கள் போன்ற(உறுப்புகளான)வற்றில் பழிக்குப்பழி உண்டு (1) 28.4 தாக்க வந்தவனிடமிருந்து தற்காத்துக் கொள்வதற்காக … (6) 28.3 கல் மற்றும் கூராயுதங்களால் கொலை செய்தால், பழிக்குப்பழி உண்டு … (3) 28.2 வன்முறையாளர்களுக்கும் மதம் மாறியோருக்குமான தண்டனை (4) 28.1 அல்கஸாமா (4) 27.13 விடுதலைக்கு வாக்களிக்கப்பட்ட அடிமையை விற்கலாம் (2) 27.12 அடிமையில் தமது பங்கை மட்டும் விடுதலை செய்தல் (8) 27.11 ‏தன் உரிமையாளருக்கு விசுவாசமாகவும் … (4) 27.10 அடிமைக்கு எஜமானர் உண்பதிலிருந்து உணவளிப்பதும் … (4) 27.9 விபசாரம் செய்துவிட்டதாக அவதூறு கூறுவதற்கான கண்டனம் (1) 27.8 அடிமைகளுடனான நல்லுறவும் கன்னத்தில் அறைந்ததற்கான பரிகாரமும் (8) 27.7 இறைமறுப்பாளராக இருந்தபோது செய்த நேர்ச்சை… (2) 27.6 ஆகுமாக்கப்பட்டதற்கான சத்தியமாக இருந்தாலும் … (1) 27.5 இன்ஷா அல்லாஹ் என்பதை (சத்தியத்தின்போது) சேர்த்துக் கூறுதல் (4) 27.4 சொல்பவரின் எண்ணப்படியே ஒருவருடைய சத்தியம் அமையும் (2) 27.3 சத்தியம் செய்தவர், அதைவிடச் சிறந்ததாக மற்றொன்றைக் காணும்போது … (12) 27.2 ‘லாத்’ மற்றும் ‘உஸ்ஸா’வின் மீது சத்தியம் செய்துவிட்டவர் … (2) 27.1 அல்லாஹ்வைத் தவிர எவர்/எதன் மீதும் சத்தியம் செய்யத் தடை (3) 26.5 நேர்ச்சை முறிவுக்கான பரிகாரம் (1) 26.4 கஅபாவரை நடைப்பயணம் செல்வதாக நேர்ந்துகொண்டவர் (3) 26.3 இறைவனுக்கு மாறு செய்வதிலோ உரிமை இல்லாததிலோ நேர்ச்சை. (1) 26.2 நேர்ச்சை செய்வதற்குத் தடை; அது (விதியில்) எதையும் மாற்றிவிடாது (6) 26.1 நேர்ச்சையை நிறைவேற்றக் கட்டளை (1) 25.5 வசதியற்றவர் மரண சாஸனம் செய்ய முடியாது (6) 25.4 அறக்கொடை (1) 25.3 மனிதன் இறந்த பின்பும் தொடரும் நன்மைகள் (1) 25.2 இறந்துவிட்டவருக்காகச் செய்யப்படும் தர்மங்களின் நன்மை … (3) 25.1 மரண சாஸனம் 1/3 மட்டுமே (5) 25.0 மரண சாஸனம் (2) 24.4 ஆயுட்கால அன்பளிப்பு (11) 24.3 அன்பளிப்பு வழங்குவதில் பிள்ளைகளிடையே பாகுபாடு காட்டுவது … (10) 24.2 தானமும் அன்பளிப்பும் வழங்கப்பட்ட பின், திரும்பப் பெறுவதற்குத் தடை … (4) 24.1 தானமாகக் கொடுத்ததை விலைக்கு வாங்குவது விரும்பத் தக்கதல்ல (4) 23.4 ஒருவர் விட்டுச்செல்லும் செல்வம் அவருடைய வாரிசுகளுக்கு உரியதாகும் (4) 23.3 இறுதியாக அருளப்பெற்றது கலாலா வசனமாகும் (4) 23.2 ‘கலாலா’ சொத்துரிமை (5) 23.1 உரியவர்களுக்கும் உறவினருக்கும் பிரிக்கப்பட்ட பாகங்கள் (3) 23.0 ஒரு முஸ்லிம், இறைமறுப்பாளருக்கு வாரிசாகமாட்டார் (1) 22.31 பாதைக்கு நிலம் ஒதுக்குவதில் கருத்து வேறுபாடு ஏற்பட்டால் அதற்கான தீர்வு (1) 22.30 பிறர் நிலத்தை அபகரித்தல் போன்ற அநீதி இழைத்தல்களுக்குத் தடை (6) 22.29 அண்டை வீட்டாரின் சுவரில் (சாரம் கட்டுவதற்கு) மரக்கட்டை பதிப்பது (1) 22.28 பங்காளியின் இசைவு (3) 22.27 வியாபாரத்தில் (வீண்)சத்தியம் செய்வது விலக்கப்பட்டுள்ளது (2) 22.26 உணவுப் பொருட்களைப் பதுக்குவதற்குத் தடை (2) 22.25 முன்பணம் செலுத்தும் வணிகம் (2) 22.24 அடமானம் உள்ளூரிலும் பயணத்திலும் செல்லும் (3) 22.23 ஓர் உயிரினத்தை அதே இனத்திற்குப் பதிலாக ஏற்றத்தாழ்வோடு விற்கலாம் (1) 22.22 உங்களில் சிறந்தவர் கடனை அழகிய முறையில் திருப்பிச் செலுத்துபவரே (4) 22.21 ஒட்டகத்தை விற்றவர் அதில் பயணிக்க நிபந்தனை விதிப்பது (5) 22.20 அனுமதிக்கப்பட்டவற்றையும் ஐயத்திற்குரியவற்றையும் கையாளுதல் (1) 22.19 வட்டி வாங்குபவருக்கும் வட்டி கொடுப்பவருக்கும் சாபம் (2) 22.18 உணவுப் பொருளை, சரிக்குச் சரியாக விற்றல் (12) 22.17 பொன்னும் மணியும் பதித்த மாலையை விற்பது (4) 22.16 தங்கத்திற்கு வெள்ளியைக் கடனாக விற்பதற்குத் தடை (3) 22.15 நாணயமாற்று வியாபாரம்; வெள்ளிக்குத் தங்கத்தை ரொக்கத்துக்கு விற்பது (7) 22.14 வட்டி (4) 22.13 மது, செத்தவை, பன்றி, சிலைகள் ஆகியவற்றை விற்பதற்குத் தடை (4) 22.12 மதுபான வியாபாரத்திற்குத் தடை (4) 22.11 குருதி உறிஞ்சி எடுப்பதற்காகக் கூலி பெறுவது கூடும் (4) 22.10 வேட்டை, காவல், பாதுகாப்புக்காக நாய் வளர்க்கலாம் (18) 22.9 நாய் விற்ற காசு, சோதிடரின் தட்சணை, விபச்சாரியின் வருமானம் (4) 22.8 தேவைக்குப் போக மீதம் உள்ள நீரை விற்பதற்குத் தடை (5) 22.7 வசதியுள்ளவர் கடனைச் செலுத்த தாமதம் செய்யக் கூடாது (1) 22.6 கடனை அடைக்க சிரமப்படுபவருக்கு அவகாசம் அளிப்பதன் சிறப்பு (7) 22.5 திவாலானவரிடம் திரும்பப் பெற்றுக்கொள்ளும் உரிமை (4) 22.4 கடனில் தள்ளுபடி செய்வது விரும்பத் தக்கதாகும் (3) 22.3 சேதமடைந்த பழங்களுக்கான தொகைக்குத் தள்ளுபடி (5) 22.2 மரம் நடுதலின், பயிர் செய்தலின் சிறப்பு (5) 22.1 நிபந்தனையின் பேரில் தோப்பைக் குத்தகைக்கு விடுவது (4) 21.21 நிலத்தை (விளைவித்துக்கொள்ள) இரவலாக வழங்குவது (4) 21.20 ‘முஸார’ஆவும் ‘முஆஜரா’வும் (2) 21.19 பொன், வெள்ளி(நாயணங்களு)க்கு நிலத்தைக் குத்தகைக்கு விடுவது (3) 21.18 தானியத்திற்கு நிலத்தைக் குத்தகைக்கு விடுவது (2) 21.17 நிலக் குத்தகை (24) 21.16 தடை செய்யப்பட்ட வியாபார வகைகள் (6) 21.15 கனிகள் நிறைந்த பேரீச்ச மரத்தை விற்பது (4) 21.14 (மரத்திலுள்ள) செங்கனிகளை மாற்றிக் கொள்வதற்குத் தடை (14) 21.13 மரத்திலுள்ள பழங்களை முற்றுவதற்கு முன் விற்பதற்குத் தடை (10) 21.12 வியாபாரத்தில் ஏமாற்றப்படுபவர் (1) 21.11 வியாபாரத்தில் உண்மை பேசுவதும் குறைகளைத் தெளிவுபடுத்துவதும் (1) 21.10 விற்பவருக்கும் வாங்குபவருக்கும் வியாபாரத்தை முறித்துக்கொள்ளும் உரிமை (4) 21.9 அளவு தெரியாத பேரீச்சம் பழக் குவியலை விற்பதற்குத் தடை (1) 21.8 வாங்கப்பட்ட பொருள் கைக்கு வருமுன் (பிறருக்கு) விற்பது கூடாது (13) 21.7 மடி கனக்கச் செய்யப்பட்ட கால்நடைகளை விற்பனை செய்வது பற்றிய சட்டம் (5) 21.6: கிராமவாசிக்காக, நகரவாசி விற்றுக் கொடுக்கத் தடை (5) 21.5: விற்பனைக்கு வரும் சரக்குகளை இடைமறித்து வாங்கத் தடை (4) 21.4: வியாபாரத்தில் தடை செய்யப்பட்டவை (7) 21.3: ஒட்டகக் கன்று (அது பிறக்குமுன்) விற்பதற்கு தடை! (2) 21.2: கல்லெறி வியாபாரம் மற்றும் மோசடி வியாபாரம் ஆகியவை செல்லாது (1) 21.1: ‘முலாமஸா’ மற்றும் ‘முனாபதா’ ஆகிய வியாபாரங்கள் செல்லாது (3) 20.7: அடிமையான தந்தையை விடுதலை செய்வதன் சிறப்பு (1) 20.6: அடிமைகளை விடுதலை செய்வதன் சிறப்பு (4) 20.5: விடுதலை செய்த உரிமையாளரை மாற்றிக் கூறத் தடை (4) 20.4: வாரிசாகும் உரிமையை விற்பதற்கும் அன்பளிப்பாக வழங்குவதற்கும் தடை (1) 20.3: விடுதலை செய்தவருக்கே வாரிசுரிமை உரியது (9) 20.2: அடிமை (தனது முழு விடுதலைக்காக) உழைத்துப் பொருளீட்டுவது (2) 20.1: ஓர் அடிமையி(ன் விலையி)ல், ஒருவர் தமக்கான பங்கை விடுவிப்பது (1) 19.1: சுய சாபம் வேண்டுதல் (17) 18.9: கணவன் இறந்து ‘இத்தா’விலிருக்கும் பெண் துக்கம் கடைப்பிடிப்பது (11) 18.8: கர்ப்பமுற்றிருக்கும் பெண்ணின் ‘இத்தா’க் காலம், பிரசவத்துடன் முடிந்துவிடும் (2) 18.7: ‘இத்தா’விலிருக்கும் பெண் தன் தேவைக்காக வெளியே செல்லலாம் (1) 18.6: மூன்று தலாக் சொல்லப்பட்ட பெண்ணுக்கு ஜீவனாம்சம் பற்றி… (18) 18.5: ஈலாச் செய்வது, மனைவியிடமிருந்து விலகுவது, விருப்ப உரிமை அளிப்பது (5) 18.4: மனைவிக்கு (த் தம்மைப் பிரிந்துவிட) உரிமை அளிப்பது மணவிலக்கு ஆகாது (8) 18.3: மணவிலக்குச் செய்யும் நோக்கமின்றி கூறினால், அது மணவிலக்கு ஆகாது (4) 18.2: மூன்று தலாக்குகள் (3) 18.1: மாதவிடாயான மனைவியை அவளது சம்மதமின்றி மணவிலக்குச் செய்வதற்குத் தடை (14) 17.19: ஹவ்வா-வும், பெண்கள் கணவரை ஏமாற்றுதலும் (2) 17.18: மனைவியரின் நலம் நாடுதல் (4) 17.17: பயன் தரும் இவ்வுலகச் செல்வங்களுள் மிகச் சிறந்த செல்வம், நற்குணமுள்ள மனைவியே (1) 17.16: கன்னிப் பெண்ணை மணப்பது விரும்பத் தக்கதாகும் (5) 17.15: மார்க்கப் பற்றுள்ள பெண்ணை மணப்பது விரும்பத் தக்கதாகும் (2) 17.14: மனைவியருள் ஒருவர், தனது முறைநாளை மற்றவருக்கு விட்டுக்கொடுக்கலாம் (4) 17.13: மனைவியருக்கு (இரவுகளை) ஒதுக்கீடு செய்வது (1) 17.12: கன்னி கழிந்த பெண்ணுக்கும், கன்னிப் பெண்ணுக்கும் கணவன் ஒதுக்க வேண்டிய நாட்கள் (6) 17.11: சாயல் அறியும் நிபுணரின் கூற்றுப்படி, குழந்தைக்கு உரியவரைக் கண்டறிவது (3) 17.10: எஜமானரின் கீழ் வாழும் பெண்ணின் குழந்தை, அவருக்கே உரியது (2) 17.9: பெண் போர்க் கைதியுடன் உடலுறவு கொள்ளலாம் (2) 17.8: பசிக்காகத் தாய்ப்பால் அருந்தினால்தான் பால்குடி உறவு ஏற்படும் (1) 17.7: பருவ வயதை அடைந்தவருக்குப் பாலூட்டுவது (6) 17.6: ஐந்து தடவை அருந்தினால்தான் பால்குடி உறவு உண்டாகும் (2) 17.5: ஓரிரு தடவை (பெண்ணின் மார்பில்) பால் குடிப்பது பற்றிய சட்டம் (6) 17.4: மனைவியின் மகளையும் மனைவியின் சகோதரியையும் மணப்பதற்குத் தடை (2) 17.3: பால்குடிச் சகோதரரின் மகளை மணப்பது தடை செய்யப்பட்டுள்ளது (3) 17.2: பால்குடித் தந்தையின் (இரத்த பந்த) உறவினரும் மணமுடிக்கத் தகாதவரே! (6) 17.1: பிறப்பால் ஏற்படும் உறவும் பால்குடி உறவும் (2) 16.24: பாலூட்டும் மனைவியுடன் உடலுறவு கொள்ளும்போது அஸ்லுச் செய்வது வெறுக்கத் தக்கது (3) 16.23: கருவுற்றிருக்கும் பெண் போர்க் கைதியுடன் உடலுறவு கொள்வது தடை செய்யப்பட்டுள்ளது (1) 16.22: உடலுறவின்போது இடைமுறிப்பு – ‘அஸ்லு’ச் சட்டம் (12) 16.21: மனைவியுடன் நடைபெறும் உடலுறவு இரகசியங்களை வெளியே சொல்வது தடுக்கப்பட்டது (2) 16.20: ஒரு பெண், தன் கணவனின் படுக்கைக்குச் செல்ல மறுப்பதற்குத் தடை (3) 16.19: உடலுறவின் ஒழுங்குகள் (2) 16.18: உடலுறவின்போது ஓத வேண்டிய விரும்பத் தகுந்த பிரார்த்தனை (1) 16.17: மூன்று முறை மணவிலக்கு அளிக்கப்பட்ட பெண்ணின் மறுவிருப்பம் (4) 16.16: விருந்துக்கான அழைப்பை ஏற்பது பற்றிய கட்டளை (13) 16.15: ஸைனப் பின்த்து ஜஹ்ஷு (ரலி) திருமணம்; ஹிஜாப் பற்றிய வசனம்; மணவிருந்து (7) 16.14: அடிமைப் பெண்ணை விடுதலை செய்து, பின்னர் அவளை மணமுடித்துக்கொள்வதன் சிறப்பு (6) 16.13: மணக்கொடை (மஹ்ரு) என்பது … (7) 16.12: ஒருவர் தாம் மணமுடிக்க விரும்பும் பெண்ணின் முகத்தையும் இரு முன் கைகளையும் பார்ப்பது (2) 16.11 ஷவ்வால் மாதத்தில் மணமும் தாம்பத்திய உறவும் (1) 16.10: இளவயதுக் கன்னிக்கு அவளுடைய தந்தை மணமுடித்துவைத்தல் (4) 16.9: மணப் பெண்ணின் வாய் வழிச் சம்மதமும் மௌனச் சம்மதமும் (4) 16.8: திருமண (முன்) நிபந்தனைகளை நிறைவேற்றல் (1) 16.7: மணக்கொடையில்லா திருமணம் செல்லாது (5) 16.6: தம் (முஸ்லிம்) சகோதரன் கேட்டுக்கொண்டிருக்கும் ஒரு பெண்ணை, மற்றவர் கேட்கலாகாது (7) 16.5: இஹ்ராம் புனைந்தவர் திருமணம் செய்வதற்குத் தடை; அவர் பெண் கேட்பது வெறுக்கத் தக்கது (8) 16.4: மனைவியின் அத்தையை, சின்னம்மாவை மணக்கத் தடை (8) 16.3: இடைக்காலத் திருமணம், (முத்ஆ) காலாவதியானது (21) 16.2: இச்சை தூண்டப்பட்டவர், தமது இச்சையைத் தணித்துக் கொள்ளட்டும் (2) 16.1: வசதி இருந்தால் மணமுடிப்பதும் இல்லாதவர் நோன்பு நோற்பதும் (6) 15.97: குபாப் பள்ளிவாசல், அதில் தொழுவது, அதைத் தரிசிப்பது ஆகிய சிறப்புகள் (7) 15.96: இறையச்சத்தின் மீது நிறுவப்பட்ட பள்ளிவாசல் (1) 15.95: மூன்று பள்ளிவாசல்களைத் தவிர வேறெதற்கும் (புனிதப்) பயணம் கிடையாது (2) 15.94: மக்கா, மதீனாப் பள்ளிவாசல்களில் தொழுவதன் சிறப்பு (6) 15.93: ‘உஹுத்’ மலை நம்மை நேசிக்கிறது; நாமும் அதை நேசிக்கின்றோம் (3) 15.92: சொர்க்கப் பூஞ்சோலைகளுள் ஒன்று (3) 15.91: மதீனாவாசிகள் மதீனாவை விட்டு அகலும்போது அதன் நிலை (2) 15.90: மதீனாவிலேயே தங்கியிருப்பதற்கு ஆர்வமூட்டல் (2) 15.89: மதீனாவாசிகளுக்குக் கேடு நினைப்பவர்களை, அல்லாஹ் உருக்குலைத்துவிடுவான் (3) 15.88: தன்னிலுள்ள தீயவர்களை மதீனா அகற்றிவிடும் (5) 15.87: கொள்ளை நோயும் தஜ்ஜாலும் நுழைய முடியாமல் மதீனா பாதுகாக்கப்பட்டுள்ளது (2) 15.86: மதீனாவில் ஏற்படும் நெருக்கடிகளைச் சகித்துக்கொண்டு, அங்குக் குடியிருக்க ஆர்வ மூட்டல் (10) 15.85: மதீனாவின் சிறப்பு; பிரார்த்தித்ததும் புனிதமானவையும் (17) 15.84: இஹ்ராமின்றி மக்காவிற்குள் நுழைய அனுமதி (5) 15.83: அவசியத் தேவையின்றி மக்காவிற்குள் ஆயுதம் எடுததுச் செல்வதற்குத் தடை (1) 15.82: மக்காவும், அதன் புனிதமானவைகளும் (4) 15.81: முஹாஜிருக்கு மக்காவில் தக்குவதற்கு அனுமதிக்கப்பட்ட நாட்கள் (4) 15.80: ஹாஜிகள் மக்காவில் தங்குவதும் அங்குள்ள வீடுகளை வாரிசுரிமையாகப் பெறுவதும் (3) 15.79: ஹஜ், உம்ரா, அரஃபா நாள் ஆகியவற்றின் சிறப்பு (3) 15.78: இணைவைப்பவருக்கான ஹஜ் சட்டங்கள் (1) 15-77: ஹஜ் அல்லது உம்ராவிலிருந்து திரும்பும்போது துல்ஹுலைஃபாவில் தங்கித் தொழுவது (5) 15.76: பயணத்திலிருந்து திரும்பி வரும்போது ஓத வேண்டியவை (2) 15.75: பயணங்களில் வாகனத்தில் ஏறியதும் ஓத வேண்டிய துஆ (2) 15.74: மஹ்ரமான ஆணுடன் மட்டுமே பெண்ணின் ஹஜ் முதலான பயணம் (11) 15.73: ஹஜ் கடமை, ஆயுளில் ஒரு முறைதான் (1) 15.72: குழந்தையின் ஹஜ் செல்லும்; அதை ஹஜ்ஜுக்கு அழைத்துச் சென்றவருக்கும் நற்பலன் உண்டு (3) 15.71: இயலாதவருக்காகவோ, இறந்தவருக்காகவோ பிறர் ஹஜ் செய்தல் (2) 15.70: கஅபாவின் வளைந்த சுவரும் அதன் தலைவாயிலும் (1) 15.69: இறையில்லம் கஅபாவை இடித்துக் கட்டுதல் (7) 15.68: கஅபாவின் உள்ளே நுழைவதும் அதனுள் தொழுவதும் (9) 15.67: விடைபெறும் தவாஃப் மாதவிடாய் ஏற்பட்ட பெண்ணுக்குக் கடமையில்லை (8) 15.66: செல்லும் வழியில் பலிப் பிராணி பாதிப்புக்குள்ளாகிவிட்டால் … (2) 15.65: பலியிடக் கொண்டுசெல்லும் ஒட்டகத்தில், பயணம் செய்ய அனுமதி (6) 15-64: ஹரம் எல்லைக்குச் செல்லாதவர், பலிப் பிராணியை அனுப்பிவைக்கும் முறை (11) 15.63: ஒட்டகத்தை அறுக்கும் முறை (1) 15.62: பலிப் பிராணிகளுள் மாட்டிலும் ஒட்டகத்திலும் கூட்டுச் சேர்வது (8) 15.61: பலிப் பிராணிகளின் இறைச்சி, தோல், சேணம் ஆகியவை தர்மத்துக்குரியன (2) 15.60: ‘தஷ்ரீக்’ நாட்களின் இரவுகளில் மினாவில் தங்குவது கட்டாயமாகும் (2) 15.59: ‘நஃப்ரு’டைய நாளில் ‘அல்முஹஸ்ஸபி’ல் தங்குவதும் அங்குத் தொழுவதும் (9) 15.58: துல்ஹஜ் பத்தாவது நாளில் ‘தவாஃபுல் இஃபாளா’ செய்வது (2) 15.57: ஹஜ் சடங்குகளில் முன் – பின் ஆகிவிட்டால் … (6) 15.56: துல்ஹஜ் பத்தாம் நாளின் சடங்குகள் (3) 15.55: தலைமுடியை மழிப்பதும் குறைப்பதும் (6) 15.54: கற்களின் எண்ணிக்கை (1) 15.53: கல்லெறியும் நேரம் (1) 15.52: பொடிக் கற்கள் போதும் (1) 15.51: துல்ஹஜ் பிறை பத்தில் ஜம்ரத்துல் அகபாவுக்குக் கல்லெறிதல் (3) 15.50: ‘ஜம்ரத்துல் அகபா’வின் மீது கல் எறியும்போது தக்பீர் கூறுவது (4) 15.49: முஸ்தலிஃபாவிலிருந்து மினாவிற்குப் புறப்படச் செய்வது (11) 15.48: முஸ்தலிஃபாவில் ஸுப்ஹுத் தொழுகையை ஆரம்ப நேரத்தில் தொழுவது (1) 15.47: மஃக்ரிப், இஷா வை அடுத்தடுத்துத் தொழுவது (14) 15.46: அரஃபா நாளில் மினாவிலிருந்து அரஃபாவிற்குப் போகும்போது தல்பியாவும் தக்பீரும் கூறுதல் (4) 15.45: துல்ஹஜ் பத்தாவது நாளன்று கல்லெறியத் துவங்கும்வரை தல்பியாச் சொல்லிக்கொண்டிருப்பது (7) 15.44: ஸஃபா-மர்வாவுக்கிடையே ஸயீ (ஓட்டம்) ஒரே தடவைதான் (1) 15.43: ஸஃபா-மர்வாவுக்கிடையே ஸயீச் செய்வது முக்கியக் கடமையாகும் (5) 15.42: வாகனங்கள் மீதமர்ந்து தவாஃப் செய்யலாம் (6) 15.41: தவாஃபின்போது ஹஜருல் அஸ்வதை முத்தமிடுவது (5) 15.40: இறையில்லத்தில் முத்தமிடப்படும் இரு மூலைகள் (6) 15.39: தவாஃபில் விரைந்து நடப்பது விரும்பத்தக்கது (12) 15.38: மக்காவினுள் நுழையும் முன்… (4) 15.37 மக்காவினுள் நுழைவதும் வெளியேறுவதும் (3) 15.36 ரமளான் மாதத்தில் உம்ராச் செய்வதன் சிறப்பு (2) 15.35: நபியவர்களின் உம்ரா எண்ணிக்கையும் காலமும் (4) 15.34 நபியவர்களின் தல்பியாவும் பலியும் (4) 15.33: உம்ராவில் தலைமுடி குறைத்தல் (5) 15.32: இஹ்ராமின்போது பலிப் பிராணி (4) 15.31: ஹஜ்ஜுப் பருவங்களில் உம்ராச் செய்ய அனுமதி (6) 15.30: தமத்துஉ ஹஜ் (2) 15.29: இஹ்ராம் ஹாஜிக்குக் கட்டாயம் (3) 15.28: தவாஃபும் ஸயீயும் கட்டாயம் (3) 15.27: ஹஜ் உம்ரா சேர்த்தும் தனித்தும் செய்வது (3) 15.26: ஒரே இஹ்ராமில் உம்ரா ஹஜ் (3) 15.25: இஹ்ராமிலிருந்து விடுபடுதல் (3) 15.24: பலிப் பிராணியும் ஹஜ் கடமையும் (2) 15.23: தமத்துஉ ஹஜ் அனுமதிக்கப்பட்ட ஒன்றாகும் (13) 15.22: ஒருவர் வேறொருவரின் இஹ்ராமை அச்சொட்டி பூணுதல் (3) 15.21: அரஃபா பெருவெளியில் தங்கி திரும்புதல் தொடர்பான இறை கூற்று (3) 15.20: அரஃபாப் பெருவெளி முழுவதும் தங்குமிடம் (2) 15.19: நபி (ஸல்) அவர்களின் ஹஜ் (1) 15.18: உம்ராவையும் ஹஜ்ஜையும் தனித் தனியாக நிறைவேற்றி பயனடைதல் (2) 15.17: இஹ்ராமின் முறைகள் (27) 15.16: இரத்தப்போக்குடைய பெண் இஹ்ராமில் குளித்தல் (2) 15.15: இஹ்ராமிலிருந்து விடுபட முன் நிபந்தனையிட அனுமதி (5) 15.14: முஹ்ரிம் இறந்துவிட்டால் செய்ய வேண்டியவை (9) 15.13: இஹ்ராம் பூண்ட முஹ்ரிம், தம் உடலைக் கழுவிக்கொள்ள அனுமதி (1) 15.12: இஹ்ராம் பூண்ட முஹ்ரிம், தம் கண்களுக்கு மருந்திட அனுமதி (2) 15.11: இஹ்ராம் பூண்ட முஹ்ரிம், ஹிஜாமா செய்ய அனுமதி (2) 15.10: முஹ்ரிமுக்குத் தலைமுடி மழிக்க அனுமதியும் பரிகாரமும் (7) 15.09: ஹரம் எல்லைக்குள் கொல்ல அனுமதிக்கப்பட்டவைகள் (12) 15.08: இஹ்ராம் பூண்ட முஹ்ரிம் வேட்டையாடுவது குறித்து.. (9) 15.07: இஹ்ராமின்போது நறுமணம் பூசுதல் (19) 15.06: துல்ஹுலைஃபா பள்ளியில் தொழுதல் (1) 15.05: வாகனம் புறப்படுவதற்கு ஆயத்தமானவுடன் தல்பியா கூறுவது (4) 15.04: மதீனாவாசிகள் இஹ்ராம் பூண வேண்டிய இடம் (2) 15.03: தல்பியாவின் பண்பும் அதன் நேரமும் (4) 15.02: ஹஜ்/உம்ராவிற்கான இஹ்ராம் எல்லைகள் (7) 15.01: ஹஜ்/உம்ராவில் அனுமதிக்கப்பட்டவை.. (10) 14.04: துல்ஹஜ் மாதத்தின் பத்து நோன்புகள் (2) 14.02: இஃதிகாஃப் இருக்குமிடத்தினுள் நுழையும் நேரம் (1) 14.03: இறுதிப் பத்தில் வழிபாடுகளில் ஈடுபடுவது (2) 14.01: இறுதிப் பத்து நாட்களில் இஃதிகாஃப் இருத்தல் (5) 13.40: லைலத்துல் கத்ர் இரவு குறித்து.. (17) 13.39: ஷவ்வால் ஆறு நோன்பு (1) 13.37: ஷஅபான் மாத இறுதியில் நோன்பு நோற்றல் (3) 13.38: முஹர்ரம் நோன்பின் சிறப்பு (2) 13.36: சுன்னத்தான நோன்புகள் (5) 13.35: ஒரு நாள் விட்டு ஒரு நாள் நோன்பு (12) 13.34: நோன்பில்லாமல் எந்த மாதத்தையும் கடக்க விடாமலிருப்பது விரும்பத் தக்கது (9) 13.33: மறதியால் (நோன்பாளி) நோன்பு முறியாது (1) 13.32: கூடுதலான நோன்பு முடிவு செய்வதற்கும் விடுவதற்கும் அனுமதி (2) 13.31: அல்லாஹ்வின் பாதையில் செல்லும்போது சக்தி பெற்றிருப்பவர் நோன்பு நோற்பதன் சிறப்பு (2) 13.30: நோன்பின் மாண்பு (6) 13.29: நோன்பாளி, நாவைக் காப்பது (1) 13.28: நோன்பாளி விருந்துக்கு அழைக்கப்பட்டால் “நான் நோன்பாளி” என்று சொல்லிவிட வேண்டும் (1) 13.27: இறந்துபோனவரின் விடுபட்ட நோன்பை நோற்பது (5) 13.26: ரமளானில் விடுபட்ட நோன்பை ஷஅபான் மாதத்தில் ‘களா’ச் செய்தல் (2) 13.25: இறைவசனம் வேறொரு வசனத்தின் மூலம் மாற்றம் (2) 13.24: வெள்ளிக்கிழமை மட்டும் நோன்பு நோற்பது விரும்பத் தக்கதன்று (3) 13.23: அய்யாமுத் தஷ்ரீக் நாட்களில் நோன்பு நோற்பதற்குத் தடை (2) 13.22: நோன்புப் பெருநாளிலும் ஹஜ்ஜுப் பெருநாளிலும் நோன்பு நோற்பதற்குத் தடை (6) 13.20: ஆஷூரா நோன்பை எந்த நாளில் நோற்க வேண்டும்? (4) 13.19: ஆஷூரா நாளில் நோன்பு நோற்றல் (17) 13.18: அரஃபா நாளில் அரஃபாவில் தங்கும் ஹாஜிகளின் நோன்பு (4) 13.17: பயணத்தில் நோன்பு நோற்பதையோ விட்டுவிடுவதையோ தேர்ந்துகொள்ளலாம் (5) 13.16: பயணத்தில் நோன்பைக் கைவிட்டவர், பொதுப் பணியாற்றினால் கிடைக்கும் நன்மை (3) 13.15: பயணத்தில் இருப்பவர் மீதான கடமையான ரமளான் நோன்பு (11) 13.14: ரமளான் பகலில் உடலுறவில் ஈடுபடுவதற்குத் தடையும் அதன் பரிகாரமும் (5) 13.13: பெருந்துடக்குடன் வைகறைப் பொழுதை அடைந்தவரின் நோன்பு செல்லும் (6) 13.12: கட்டுப்படுத்தும் நோன்பாளிக்கு (தம் மனைவியை) முத்தமிடத் தடையில்லை (13) 13.11: தொடர்நோன்பு நோற்பதற்குத் தடை (7) 13.10: பகற் பொழுது வெளியேறி நோன்பு நிறைவடையும் நேரம் (3) 13.09: ஸஹரைத் தாமதிப்பதும் நோன்பு துறப்பதை விரைந்து செய்வதும் (6) 13.08: ஃபஜ்ரு நேரம் வந்தவுடன் நோன்பு ஆரம்பமாகிவிடும் (11) 13.07: ‘இரு பெருநாட்களின் இரு மாதங்களும் குறைவுபடாது’ நபிகளாரின் விளக்கம் (2) 13.06: (வானை) மேகம் மூடிக்கொண்டால் (மாதத்தின் நாட்கள்) முப்பதாக முழுமையாக்கப்படும் (2) 13.05: ஒவ்வோர் ஊர்க்காரர்களுக்கும் அவரவர் பார்க்கும் பிறையே பொருந்தும் (1) 13.04: மாதம் என்பது இருபத்தொன்பது நாட்களாகவும் இருக்கும் (6) 13.03: ரமளானுக்கு முந்தைய இரு நாள்களில் நோன்பு நோற்கக் கூடாது (1) 13.02: ரமளான் நோன்பு தொடக்கமும் முடிவும் (17) 13.01: ரமளான் மாதத்தின் சிறப்பு (2) 12.55: ஸகாத் வசூலிப்பவர், தடை செய்யப்பட்டதைக் கோராதவரை அவரைத் திருப்திபடுத்த வேண்டும் (1) 12.54: தர்மப் பொருள் கொண்டுவந்தவருக்காகப் பிரார்த்தித்தல் (1) 12.53: நபி (ஸல்) அன்பளிப்பை ஏற்றதும் தர்மத்தை மறுத்ததும் (1) 12.52: தர்மப் பொருள், அதன் பண்பு நீங்கி விடுதல் (5) 2.27: நாய் நக்கிய பாத்திரம் பற்றிய சட்டம் (6) 2.28: தேங்கிக் கிடக்கும் தண்ணீரில் சிறுநீர் கழிப்பதற்குத் தடை (3) 2.29: பெருந்துடக்குடையவர் தேங்கிய நீரில் இறங்கிக் குளிக்கத் தடை (1) 2.30: பள்ளிவாசலில் சிறுநீர் கழித்தால்… (3) 2.31: தாய்பால் குடிக்கும் குழந்தையின் சிறுநீரைக் கழுவும் சட்டம் (4) 2.32: விந்து பற்றிய சட்டம் (4) 2.33: மாதவிடாய் இரத்தம் கழுவும் முறை (1) 2.34: சிறுநீரைச் சுத்தம் செய்வது கட்டாயம் (1) 3.01: மாதவிடாயான மனைவியைக் கீழாடைக்கு மேல் அணைத்துக் கொள்வது. (3) 3.02: மாதவிடாயான மனைவியுடன் ஒரே போர்வைக்குள் படுத்துக் கொள்வது. (2) 3.03: மாதவிடாயான பெண் செய்ய அனுமதிக்கப்பட்டவை (11) 3.04: இச்சை நீர் (3) 3.05: உறங்கி எழுந்ததும் முகத்தையும் கையையும் கழுவுதல் (1) 3.06: பெருந்துடக்காளி செய்ய வேண்டியவை (8) 3.07: மதன நீர் வெளிப்பட்ட பெண்ணுக்குக் குளியல் கடமை. (5) 3.08: ஆண்/பெண் (விந்து-மதன)நீரிலிருந்துதான் குழந்தை உருவாகிறது. (1) 3.09: பெருந்துடக்கிற்கான குளியல் முறை (5) 3.10: பெருந்துடக்கு குளியல் தொடர்பானவை (14) 3.11: குளிக்கும் போது மூன்றுமுறை தண்ணீர் ஊற்றுதல் (4) 3.12: குளிக்கும் பெண்களின் சடைமுடி பற்றிய சட்டம் (2) 3.13: மாதவிடாய் குளியலின் போது கஸ்தூரி பயன்படுத்துதல் (2) 3.14: தொடர் உதிரப் போக்குடைய பெண்களின் தொழுகை மற்றும் குளியல் (5) 3.15: மாதவிடாய் நாட்களில் விடுபட்ட கடமைகள் (3) 3.16: குளிப்பவர் திரையிட்டுக் கொள்தல் (3) 3.17: பிறரின் மறையுறுப்பைப் பார்த்தல் (1) 3.18: தனித்துக் குளிக்கும் போது ஆடையின்றி குளித்தல் (1) 3.19: மறையுறுப்பை மறைத்துக் கொள்வதில் கவனம் (3) 3.21: (விந்து)நீர் வெளிப்பட்டாலே (குளியல்)நீர் கடமையாகும் (9) 3.22: ஆண்-பெண் குறிகள் இணைந்து விட்டால் குளியல் கடமையாகும் (3) 3.23: சமைக்கப்படவற்றை உண்டால் மீண்டும் உளூ செய்தல் (3) 3.24: சமைக்கப் பட்டவற்றை உண்டால் உளூச் செய்யும் கட்டாயம் மாற்றப் பட்டது (8) 3.25: ஒட்டக இறைச்சி உண்டால் உளூச் செய்ய வேண்டும் (1) 3.26: வாயு பிரிந்த சந்தேகம் ஏற்பட்டாலும் தொழலாம் (2) 3.27: பதனிடப்படுவதால் செத்த பிராணியின் தோல் தூய்மை ஆகும் (7) 3.28: தயம்மும் (6) 3.29: ஒரு முஸ்லிம் (பெருந்துடக்கு ஏற்பட்டதால்) அசுத்தமாகிவிட மாட்டார். (2) 3.30: பெருந்துடக்கு போன்ற நிலைகளிலும் அல்லாஹ்வைத் துதித்தல். (1) 3.31: சிறுதுடக்காளி (உளூச் செய்யாமல்) உண்ணலாம் (4) 3.32: கழிப்பிடத்திற்குச் செல்லும்போதான பிரார்த்தனை (1) 3.33: உட்கார்ந்து கொண்டு உறங்குவது உளூவை முறிக்காது. (4) 4.01: தொழுகை அழைப்பின் தொடக்கம் (1) 4.02: தொழுகை அறிவிப்பு தொடர் அமையும் விதம் (3) 4.03: தொழுகை அழைப்பு முறை (1) 4.04: ஒரு பள்ளிவாசலுக்கு இரு தொழுகை அழைப்பாளர்கள் (1) 4.05: பார்வையற்றவர் தொழுகை அழைப்பு விட நிபந்தனை (1) 4.06: போரின் போது இணைவைப்பாளர் நாட்டில் தொழுகை அழைப்பு விடுக்கப்பட்டால் (1) 4.07: தொழுகை அழைப்பைச் செவியுறுபவர் செய்ய வேண்டியவை (4) 4.08: தொழுகை அழைப்பின் சிறப்பும் ஷைத்தான் வெருண்டோடுவதும் (6) 4.09: இரு கைகளையும் தோள் புஜத்துக்கு உயர்த்துதல் (4) 4.10: அல்லாஹு அக்பர், ஸமி அல்லாஹு லிமன் ஹமிதஹ் கூறும் இடங்கள் (5) 4.11: தொழுகையில் அல்ஃபாத்திஹா அத்தியாயம் ஓதுதல் (8) 4.12: இமாமைப் பின்பற்றித் தொழுபவர் உரத்து ஓதலாகாது (2) 4.13: பிஸ்மில்லாஹ்வை(த் தொழுகையில்) உரத்து ஓதாலாகாது என்போரின் வாதம் (2) 4.14: அத்தியாயங்களின் துவக்கம் “பிஸ்மில்லாஹ்” குறித்த வாதம் (1) 4.15: தக்பீருக்குப் பின்னும் சஜ்தாவிலும் கைகளை வைக்கும் முறை (1) 4.16: தொழுகையில் அத்தஹிய்யாத் ஓதுவது (4) 4.17: இறுதி அத்தஹியாத்திற்குப் பின் ஸலவாத் கூறுதல் (4) 4.18: ஸமி அல்லாஹு லிமன் ஹமிதஹ், ரப்பனா ல(க்)கல் ஹம்து, ஆமீன் ஆகியவை கூறுவது (5) 4.19: இமாமை மஃமூம் பின்தொடர்வது (5) 4.20: இமாமை முந்துவதற்குத் தடை (4) 4.21: இமாமைப் பின்பற்றுவதில் சட்ட மாற்றம் (10) 4.22: இமாம் வருவதற்குத் தாமதமானால்… (2) 4.23: தொழுகையில் இமாமுக்கு ஏதாவது உணர்த்த விரும்பினால்… (1) 4.24: தொழுகையை முழுமையாக உள்ளச்சத்துடன் தொழல் (4) 4.25: தொழுகையில் இமாமை முந்தாமல் இருத்தல் (7) 4.26: தொழும்போது வானத்தை அண்ணாந்து பார்ப்பதற்குத் தடை (2) 4.27: தொழுகையில் ஒழுங்குகள் (3) 4.28: தொழுகையில் வரிசைகளைப் பேணுதல் (11) 4.29: ஆண்களுக்குப் பின்னால் தொழும் பெண்கள் தலை உயர்த்தும் முறை (1) 4.30: பெண்கள் பள்ளிவாசலுக்குச் செல்தல், நறுமணம் பூசுதல் (11) 4.31: தொழுகையில் அச்சநிலையில் குர்ஆன் ஓதும் முறை (2) 4.32: குர்ஆன் ஓதப்படும்போது செவிதாழ்த்திக் கேட்க வேண்டும். (2) 4.33: ஸுப்ஹுத் தொழுகையில் உரத்துக் குர்ஆன் ஓதுதல் (4) 4.34: லுஹ்ரு, அஸ்ருத் தொழுகைகளில் குர்ஆன் ஓதுதல் (8) 4.35: ஸுப்ஹுத் தொழுகையில் குர்ஆன் ஓதுதல் (13) 4.36: இஷாத் தொழுகையில் குர்ஆன் ஓதுவது (8) 4.37: தொழுகையைச் சுருக்கி, நிறைவுறத் தொழுவிப்பதற்கான கட்டளை (11) 4.38: தொழுகையின் நிலைகளை நிதானமாக, சுருக்கி, நிறைவாகச் செய்வது (4) 4.39: தொழுகையில் இமாமை முந்தி விடாமலிருத்தல் (5) 4.40: ருகூஉவிலிருந்து தலையை உயர்த்திய பின் ஓத வேண்டியவை (5) 4.41: ருகூஉவிலும் ஸஜ்தாவிலும் குர்ஆன் ஓதுவதற்குத் தடை (6) 4.42: ருகூஉவிலும் ஸஜ்தாவிலும் ஓத வேண்டியவை (9) 4.44: ஸஜ்தாவின் போது தரையில் படவேண்டிய உறுப்புகள் (7) 4.45: சீராக ஸஜ்தா செய்தல் (2) 4.46: தொழுகை முறைத் தொகுப்பு (5) 4.47: தனித்துத் தொழுபவர் தடுப்பு ஒன்றை வைத்துக் கொள்வது (13) 4.48: தொழுகையில் குறுக்கே செல்பவரைத் தடுப்பது (4) 4.49: தொழுபவர், தடுப்புக்கு நெருக்கமாக நிற்க வேண்டும் (3) 4.50: தொழுபவருக்கான குறுக்குத் தடுப்பின் அளவு (2) 4.51: தொழுபவருக்குக் குறுக்கே படுத்திருப்பது (8) 4.52: ஒரே ஆடை அணிந்து தொழும் முறை (9) 5.01: பூமியில் எழுப்பப்பட்ட முதலாவது இறையாலயம் (8) 5.02: மஸ்ஜிதுந் நபவீ கட்டப்பட்ட வரலாறு (2) 5.03: தொழுகைத் திசை(கிப்லா) கஅபாப் பள்ளிக்கு மாற்றம் (4) 5.04: மண்ணறைகளில் செய்யக்கூடாதவை (6) 5.05: மஸ்ஜிதுகள் கட்டுவதன் சிறப்பும் அதற்கான ஆர்வமூட்டலும் (2) 5.06: ருகூஉவில் உள்ளங்கைகளை வைப்பதற்கான சட்டத் திருத்தம் (5) 5.07: இரு குதிகால்கள்மீது (தொழுகை அமர்வில்) அமர அனுமதி (1) 5.08: தொழுகையில் பேசிக் கொள்ள இருந்த அனுமதி நீக்கம் (6) 5.09: தொழுகைக்கு இடையில் செய்ய அனுமதிக்கப்பட்டவை (2) 5.10: குழந்தைகளைச் சுமந்துகொண்டு தொழுவதற்கு அனுமதி (3) 5.11: தொழுகையின்போது ஓரிரு அடிகள் நடக்க அனுமதி (1) 5.12: இடுப்பில் கையூன்றிக் கொண்டு தொழுவது வெறுக்கத் தக்கது (1) 5.13: தொழும்போது மண்ணைச் சமப்படுத்துதல் வெறுக்கத் தக்கது (3) 5.14: பள்ளிவாசலில் எச்சில் துப்பத் தடை (10) 5.15: காலணி அணிந்து கொண்டு தொழுவதற்கு அனுமதி (1) 5.16: கவனத்தை ஈர்க்கும் ஆடை அணிந்து தொழுதல் வெறுக்கப்பட்டது (3) 5.17: சிறுநீர்/மலம் அடக்குதல், உணவு காக்க வைத்தல் நிலையில் தொழுதல் (4) 5.18: துர்நாற்றத்துடன் பள்ளிச்செல்லுதலும் அவரை வெளியேற்றலும் (10) 5.19: பள்ளிவாசலினுள் காணாமற்போன பொருளைத் தேடத் தடை (3) 5.20: தொழுகையில் ஏற்படும் மறதிக்குப் பரிகாரம் (17) 5.21: ஸஜ்தா திலாவத் (9) 5.22: அத்தஹிய்யாத்தில் அமரும் முறை (5) 5.23: தொழுகையை நிறைவு செய்யும்போது ஸலாம் கூறும் முறை (3) 5.24: தொழுத பின்னர் திக்ரு (3) 5.25: மண்ணறை வேதனையிலிருந்து பாதுகாப்புக் கோருதல் (3) 5.26: தொழுகையில் பாதுகாப்புக் கோரப்பட வேண்டியவை (8) 5.27: தொழுகைக்குப்பின் திக்ரு செய்தல் (9) 5.28: தொடக்கத் தக்பீருக்குப் பின் கூறவேண்டியவை (4) 5.29: தொழுகையில் கலந்துகொள்ள செல்லும் முறை (5) 5.30: தொழுகைக்காக மக்கள் எப்போது எழுந்து நிற்க வேண்டும்? (5) 5.31: கூட்டுத்தொழுகையை அடைந்துகொள்ள நிபந்தனை (5) 5.32: ஐவேளைத் தொழுகை நேரங்கள் (13) 5.33: கடுங்கோடையில் ஜமாஅத் தொழுகை (8) 5.34: கடுங்கோடையில்லா சமயத்தில் ஜமாஅத் தொழுகை (4) 5.35: அஸ்ருத் தொழுகையின் நேரம் (7) 5.36: அஸ்ருத் தொழுகையைத் தவறவிட்டால்.. (3) 5.37: அஸ்ரு நடுத்தொழுகை என்போரின் சான்று (6) 5.38: ஸுப்ஹு, அஸ்ருத் தொழுகைகளின் சிறப்புகள் (6) 5.39: மஃக்ரிபுத் தொழுகையின் ஆரம்ப நேரம் (2) 5.40: இஷாத் தொழுகையின் நேரமும் அதைத் தாமதமாகத் தொழுவதும் (12) 5.41: ஸுப்ஹுத் தொழுகையின் நேரம் மற்றும் ஓதப்படும் (குர்ஆன் வசனங்களின்) அளவு (7) 5.42: தொழுகைக்கு உரிய நேரத்தைத் தாமதப்படுத்துதல் (7) 5.43: கூட்டுத் தொழுகையின் சிறப்பும் அதைத் தவற விடுவது பற்றிய கண்டனமும் (10) 5.44: தொழுகை அழைப்பைச் செவியுறுபவர் பள்ளிவாசலுக்குச் செல்வது கட்டாயமாகும் (1) 5.45: கூட்டுத் தொழுகை என்பது நேர்வழியைச் சார்ந்தது (2) 5.46: பாங்கு கூறிய பின்னர் பள்ளிவாசலிலிருந்து வெளியேறத் தடை (2) 5.47: இஷா மற்றும் ஸுப்ஹு கூட்டாகத் தொழுவதன் சிறப்பு (4) 5.48: கூட்டுத் தொழுகையைத் தவிர்ப்பதற்கான அனுமதி (1) 5.49: நஃபில் தொழுகைகளை ஜமாஅத்தாகத் தொழுதல் (6) 5.50: கூட்டுத் தொழுகைக்காகக் காத்திருப்பதன் சிறப்பு (5) 5.51: பள்ளிவாசலுக்கு நடந்து செல்வதன் சிறப்பு (6) 5.52: தொழுகைக்கு நடந்து செல்பவருக்குக் கிடைக்கும் பலன்கள் (4) 5.53: உதயம்வரை தொழுத இடத்தில் அமர்ந்திருப்பதன் சிறப்பு (3) 5.54: தொழுகைக்குத் தலைமையேற்க அதிகத் தகுதியுடையவர் (5) 5.55: எல்லாத் தொழுகைகளிலும் குனூத் ஓதும் காலகட்டம் (15) 5.56: விட்டுப்போனத் தொழுகைகளைத் தொழுதல் (8) 6.01: பயணிகளின் தொழுகை; சுருக்கித் தொழுதல் (20) 6.02: மழையின்போது இருப்பிடங்களில் தொழுதுகொள்ளலாம் (4) 6.03: நஃபில் தொழுகைகளை வாகனத்தில் செல்பவர் தொழலாம் (10) 6.04: பயணத்தில் இரு தொழுகைகளைச் சேர்த்து தொழலாம் (7) 6.05: உள்ளூரில் இருக்கும்போது இரு தொழுகைகளை இணைத்து தொழுதல் (10) 6.06: தொழுது முடித்தபின் வலம், இடம் திரும்பி அமர்தல் (3) 6.07: இமாமுக்கு வலப்பக்க வரிசையில் நிற்பது விரும்பத்தக்கது (1) 6.08: இகாமத் கூறத் தொடங்கி விட்டால் நஃபில் தொழுவது வெறுக்கத்தக்கது (5) 6.09: பள்ளிவாசலுக்குள் நுழையும்போது கூறவேண்டிய துஆ (1) 6.10: பள்ளிக் காணிக்கை தொழுகை தொடர்பாக (4) 6.11: பயணத்திலிருந்து திரும்பியவர் இரண்டு ரக்அத் தொழுதல் (3) 6.12: முற்பகல் (ளுஹா) தொழுகை எண்ணிக்கை (11) 6.13: ஃபஜ்ருடைய இரு ரக்அத் சுன்னத் தொழுகை (15) 6.14: சுன்னத் தொழுகைகளின் சிறப்பும் எண்ணிக்கைகளும்! (3) 6.15: நஃபில் தொழுகைகளைத் தொழும் முறைகள் (14) 6.16: இரவுத் தொழுகை (18) 6.17: இரவுத் தொழுகையின் ஒருங்கிணைந்த விபரங்கள் (4) 6.18: அவ்வாபீன் தொழுகை (2) 6.19: இரவுத் தொழுகை, வித்ருத் தொழுகை ரக்அத்கள் (16) 6.20: வித்ருத் தொழுகை நேரம் (2) 6.21: தொழுகையில் மிகச் சிறந்தது (2) 6.22: இரவில் பிரார்த்தனை ஏற்கப்படும் நேரம் (2) 6.23: இரவின் இறுதி நேரத்தில் பிரார்த்தனை (5) 6.24: ‘கியாமு ரமளான்(தராவீஹ்) தொழ ஆர்வமூட்டல் (8) 6.25: இரவுத் தொழுகையில் பிரார்த்திப்பதும் நின்று வணங்குவதும் (17) 6.26: இரவுத் தொழுகையில் நீண்ட நேரம் (நின்று) குர்ஆன் ஓதுவது (2) 6.27: தொழாமல் விடியும்வரை உறங்குபவர் (3) 6.28: கூடுதலான நஃபில் தொழுகைகள் (6) 6.29: நற்செயல்களை வழக்கமாகச் செய்வதன் சிறப்பு. (4) 6.30: இபாதத் தூக்கத்தால் தடைப்பட்டால்… (5) 6.31: குர்ஆனின் தொடர்பைப் பற்றிப் பிடித்துக்கொள்ளக் கட்டளை (7) 6.32: குர்ஆனை இனிய குரலில் ஓதுவது விரும்பத் தக்கதாகும் (5) 6.33: மக்கத்து வெற்றி நாளில்… (2) 6.34: குர்ஆனை ஓதுவதால் இறங்கும் அமைதி (3) 6.35: குர்ஆனை மனனமிட்டவரின் சிறப்பு (1) 6.36: குர்ஆனை ஓதுகின்ற இருவகையினரின் தனிச் சிறப்புகள் (1) 6.37: குர்ஆனில் தேர்ந்த மேன்மக்கள் முன்னிலையில் குர்ஆன் ஓதுவது (2) 6.38: குர்ஆனைச் செவியேற்பதன் சிறப்பு (3) 6.39: குர்ஆனைக் கற்பது மற்றும் ஓதுவதன் சிறப்பு (2) 6.40: குர்ஆன் ஓதுவதன் சிறப்பும் அல்பகரா அத்தியாயத்தின் சிறப்பும் (2) 6.41: ஸூரத்துல் ஃபாத்திஹா, அல்பகரா அத்தியாயத்தின் இறுதி வசனங்களின் சிறப்பு (2) 6.42: ஸூரத்துல் கஹ்ஃப் மற்றும் ஆயத்துல் குர்ஸீ ஆகியவற்றின் சிறப்பு (3) 6.43: குல் ஹுவல்லாஹு அஹது (அத்தியாயத்தை) ஓதுவதன் சிறப்பு (4) 6.44: அல்முஅவ்விதத்தைன் (பாதுகாவல்) அத்தியாயங்களை ஓதுவதன் சிறப்பு (2) 6.45: குர்ஆனின்படி தாமும் செயல்பட்டுப் பிறருக்கும் அதைக் கற்பிப்பவரின் சிறப்பு (4) 6.46: குர்ஆன் ஏழு (வட்டார) மொழிநடையில் அருளப்பெற்றுள்ளது என்பதன் விளக்கம் (4) 6.47: குர்ஆனை வேகமாக ஓதுவதைத் தவிர்த்தல் (4) 6.48: குர்ஆன் ஓதும் முறைகளுள் சில (4) 6.49: தொழத் தடுக்கப்பட்ட நேரங்கள். (8) 6.50: அம்ரு பின் அபஸா (ரலி) இஸ்லாத்தை ஏற்றமை (1) 6.51: சூரியன் உதிக்கும் நேரத்தையும் மறையும் நேரத்தையும் தேர்ந்தெடுத்துத் தொழாதீர்கள்! (2) 6.52: நபி (ஸல்) அஸ்ருக்குப் பிறகு தொழுதுவந்த இரண்டு ரக்அத்கள் எவை? (5) 6.53: மஃக்ரிப் தொழுகைக்கு முன் இரண்டு ரக்அத்கள் தொழுவது விரும்பத் தக்கது (2) 6.54: பாங்குக்கும் இகாமத்துக்கும் இடையிலுள்ள தொழுகை (1) 6.55: அச்சச் சூழல் தொழுகை (8) 7.01: வெள்ளிக்கிழமையில் குளிப்பது வயதுவந்த ஒவ்வோர் ஆண் மீதும் கடமை (7) 7.02: வெள்ளிக்கிழமையில் பல் துலக்குவதும் நறுமணம் பூசுவதும் (4) 7.03: வெள்ளிக்கிழமை சொற்பொழிவின்போது அமைதி காத்தல் (2) 7.04: வெள்ளிக்கிழமையில் (பிரார்த்தனை ஏற்கப்படுவதற்கு) உள்ள ஒரு நேரம் (4) 7.05: வெள்ளிக்கிழமையின் சிறப்பு (2) 7.06: இந்தச் சமுதாயத்தின் (சிறப்பு வழிபாட்டு) நாள் வெள்ளிக்கிழமை (4) 7.07: வெள்ளிக்கிழமை (தொழுகைக்கு) முன்னதாகச் செல்வதன் சிறப்பு (2) 7.08: மௌனமாக (வெள்ளிக்கிழமை) உரையைச் செவியேற்பவரின் சிறப்பு (2) 7.09: சூரியன் (உச்சியிலிருந்து) சாயும்போது ஜும்ஆத் தொழுவது (5) 7.10: தொழுகையின் உரைகளும் இடையே (இமாம்) அமர்வதும் (3) 7.11: வியாபாரத்தையோ வேடிக்கையையோ கண்டால் (62:11ஆவது) இறைவசனம் (4) 7.12: ஜும்ஆத் தொழுகையை(த் தொழாமல்) கைவிடுவதற்குக் கண்டனம் (1) 7.13: (ஜும்ஆத்) தொழுகையையும் (குத்பா) உரையையும் சுருக்கமாக அமைத்தல் (11) 7.14: இமாம் (ஜும்ஆ) உரை நிகழ்த்தும்போது காணிக்கை தொழுகை (6) 7.15: பொது போதனைக்கு நடுவில் தனி போதனை (1) 7.16: ஜும்ஆத் தொழுகையில் ஓத வேண்டியவை (3) 7.17: வெள்ளிக்கிழமை (ஃபஜ்ருத் தொழுகையில்) ஓத வேண்டியவை (3) 7.18: ஜும்ஆவுக்குப் பின் தொழ வேண்டியவை (16) 8.01: பெருநாள் திடலில் பெண்கள் பங்கேற்பது (3) 8.02: பெருநாள் திடலில் தொழுகைக்கு முன்போ பின்போ தொழக் கூடாது (1) 8.03: இரு பெருநாள் தொழுகைகளில் ஓதக் கூடியவை (2) 8.04: பெருநாட்களில் பாவமில்லா விளையாட்டுகளில் ஈடுபட அனுமதி (7) 9.00: இமாம் (மழைத் தொழுகையில்) மேல்துண்டை மாற்றிப் போட்டுக் கொள்வது (4) 9.01: மழைவேண்டிப் பிரார்த்திக்கும்போது இருகைகளை உயர்த்துதல் (3) 9.02: மழைவேண்டிப் பிரார்த்தித்தல் (2) 9.03: கடும் காற்றையும் மேகத்தையும் காணும்போதும்.. மழை பெய்யும்போதும்.. (3) 9.04: கீழைக் காற்று (’ஸபா’) மற்றும் மேலைக் காற்று (’தபூர்’) பற்றிய குறிப்புகள் (1) 10.01: சூரிய கிரகணத் தொழுகை (7) 10.02: கிரகணத் தொழுகையின்போது மண்ணறை வேதனை பற்றி நினைவு கூர்வது (1) 10.03: கிரகணத் தொழுகையின்போது சொர்க்கமும் நரகமும் (6) 10.04: கிரகணத் தொழுகையில் எட்டு ருகூஉகளும் நான்கு ஸஜ்தாக்களும்.. (2) 10.05: கிரகணத் தொழுகைக்காக, “அஸ்ஸலாத்து ஜாமிஆ” அறிவிப்பு.. (8) 11.01: மரணத் தருவாயில் ‘லா இலாஹ இல்லல்லாஹ்’ (எனும் கலிமா)வை நினைவூட்டுதல் (2) 11.02: துன்பம் நேரும்போது வேண்டக்கூடிய பிரார்த்தனை (2) 11.03: நோயாளியிடமும் மரணத் தருவாயில் இருப்பவரிடமும் சொல்ல வேண்டியவை (1) 11.04: உயிர் பிரிந்தவுடன் இறந்தவருக்குச் செய்ய வேண்டியவை (1) 11.05: இறப்பவரின் பார்வை தனது உயிரை நோக்கி நிலைகுத்தி நிற்றல் (1) 11.06: இறந்தவருக்காக அழுவது (3) 11.07: நோயாளிகளைச் சந்தித்து உடல்நலம் விசாரித்தல் (1) 11.08: பொறுமை என்பது துன்பத்தின் முதல் நிலையில் கடைப்பிடிப்பதாகும் (2) 11.09: இறந்தவருக்காக ஒப்பாரி வைத்து அழுதால்.. (14) 11.10: ஒப்பாரிக்குக் கடுமையான கண்டனம் (5) 11.11: ஜனாஸாவின் இறுதி ஊர்வலத்தைப் பின்தொடர்ந்து செல்வதற்குப் பெண்களுக்குத் தடை (2) 11.12: மையித்தைக் குளிப்பாட்டுதல் (4) 11.13: மய்யித்திற்கு ‘கஃபன்’ உடை அணிவித்தல் (4) 11.14: மய்யித்தை மூடிவைத்தல் (1) 11.15: மய்யித்திற்கு அழகிய முறையில் கஃபன் அணிவித்தல் (1) 11.16: இறந்தவர் உடலைத் துரிதமாக அடக்கம் செய்தல் (2) 11.17: ஜனாஸாத் தொழுகையின் மற்றும் ஜனாஸாவைப் பின்தொடர்வதன் சிறப்பு (6) 11.18: மய்யித்துக்காக நூறு பேர் தொழுது செய்யும் பரிந்துரை ஏற்கப்படும் (1) 11.19: மய்யித்துக்காக நாற்பது பேர் பரிந்துரை (1) 11.20: இறந்தவர் குறித்துப் புகழ்ந்து, அல்லது இகழ்ந்து பேசப்படுதல் (1) 11.21: ஓய்வு பெற்றவரும் ஓய்வளித்தவரும் (1) 11.22: ஜனாஸாத் தொழுகையில் சொல்ல வேண்டிய தக்பீர்கள் (6) 11.23: மண்ணறை அருகில் (ஜனாஸாத் தொழுகை) தொழுவது (4) 11.24: ஜனாஸாவுக்காக எழுந்து நிற்பது (7) 11.25: ஜனாஸாவுக்காக எழுந்து நிற்கும் வழக்கம் மாற்றப்பட்டது (3) 11.26: இறந்தவருக்காக ஜனாஸாத் தொழுகையில் செய்யும் பிரார்த்தனை (2) 11.27: ஜனாஸாத் தொழுகையின்போது இமாம் எந்த இடத்தில் நிற்க வேண்டும்? (2) 11.28: ஜனாஸாத் தொழுகை தொழுதுவிட்டு வாகனத்தில் ஏறித் திரும்பிச் செல்லலாம் (2) 11.29: உட்குழியும் மையித்தின் மேல் செங்கற்களை அடுக்குவதும் (1) 11.30: கப்றுக் குழியினுள் போர்வையை விரித்து (மையித்தை) வைப்பது (1) 11.31: கப்றைத் தரை மட்டமாக்க உத்தரவு (2) 11.32: கப்றுகளைக் காரையால் பூசுவதோ அதன் மீது கட்டடம் எழுப்புவதோ கூடாது (2) 11.33: கப்றின்மீது அமர்வதும் அதன் மீது தொழுவதும் தடுக்கப்பட்டவை (3) 11.34: பள்ளிவாசலில் ஜனாஸாத் தொழுகை நடத்துவது (3) 11.35: மையவாடிக்குள் கூற வேண்டியதும் பிரார்த்திப்பதும் (3) 11.36: நபி (ஸல்), தம் தாயாரின் கப்றைக் காண்பதற்கு இறைவனிடம் அனுமதி கோரியது (3) 11.37: தற்கொலை செய்தவருக்கு, (ஜனாஸா) தொழுகையைக் கைவிட்டது (1) 12.00: பல வகை வள வரிகள் (5) 12.01: பத்து சதவீத ஸகாத்; அல்லது ஐந்து சதவீத ஸகாத் (1) 12.02: ஒரு முஸ்லிம் மீது அவர்தம் அடிமைக்காகவும் குதிரைக்காகவும் ஸகாத் கடமை இல்லை (3) 12.03: ஸகாத்தைச் சமர்ப்பிப்பதும் ஸகாத் கொடுக்க மறுப்பதும் (1) 12.04: பெருநாள் தர்மமாகப் பேரீச்சம் பழம், பார்லி (10) 12.05: பெருநாள் தொழுகைக்கு முன்பே பெருநாள் தர்மத்தை வழங்க கட்டளை (2) 12.06: ஸகாத் வழங்க மறுப்பது குற்றமாகும் (4) 12.07: ஸகாத் வசூலிப்பவர்களிடம் கனிவுடன் நடந்துகொள்வது (1) 12.08: ஸகாத் வழங்காதவருக்கான கடும் தண்டனை (2) 12.09: தர்மம் செய்வதற்கு ஆர்வமூட்டல் (2) 12.10: செல்வத்தைச் சேமித்தோர் பற்றிய கண்டனம் (2) 12.11: தர்மம்: ஆர்வமூட்டலும் நற்கூலி உண்டு என்ற நற்செய்தியும் (2) 12.12: செலவழிப்பதன் சிறப்பும் வழங்காதவனின் பாவமும் (4) 12.13: தமக்கும், குடும்பத்தாருக்கும், உறவினர்களுக்குமாக செலவிடுதல் (1) 12.14: இணை வைக்கும் உறவுகளுக்குச் செலவழிப்பதன் சிறப்பு (8) 12.15: இறந்தவருக்காகத் தர்மம் செய்தல் (1) 12.16: எல்லா நல்லறமும் ஸதகா எனப்படும் (5) 12.17: அறவழியில் செலவு செய்பவரும் செய்யாதவரும் (1) 12.18: தர்மம் செய்வதற்கு ஆர்வமூட்டல் (5) 12.19: தர்மம் (இறைவனிடம்) ஏற்கப்படுவதும் வளர்வதும் (3) 12.20: இன் சொல்லையேனும் தர்மம் செய்து நரகத்திலிருந்து பாதுகாப்பு பெறல் (5) 12.21: தர்மத்தின் அளவில் குறை காண தடை (1) 12.22: பாலுக்காக இரவல் வழங்கப்படும் கால்நடைகளின் சிறப்பு (2) 12.23: வள்ளலுக்கும் கஞ்சனுக்குமான உதாரணம் (3) 12.24: உரியவருக்குத் தர்மம் சேரவில்லையேனும் பலன் (1) 12.25: உரிமையாளரின் அனுமதியுடன் தர்மம் செய்தவருக்கும் பலன் (3) 12.26: ஓர் அடிமை தன் உரிமையாளரின் செல்வத்திலிருந்து (அறவழியில்) செலவழித்தல் (3) 12.27: தர்மத்தையும் இதர நற்செயல்களையும் இணைத்துச் செய்தவர் (3) 12.28: அறவழியில் தாராளமாக செலவிடலும் கணக்கு பார்ப்பது விரும்பத்தக்கதல்ல என்பதும் (3) 12.29: சிறிய அளவு தர்மம் (1) 12.30: இரகசியமாகத் தர்மம் செய்வதன் சிறப்பு (1) 12.31: மிகச் சிறந்த தர்மம் (2) 12.32: சிறந்த கை (4) 12.33: யாசிப்பதற்குத் தடை (3) 12.34: ஏழை என்பவன், அடிப்படைத் தேவைகளுக்குப் போதிய பொருளாதாரம் இல்லாதவன் (2) 12.35: மக்களிடம் யாசிப்பது வெறுக்கப்பட்டதாகும் (6) 12.36: யாருக்கு யாசிக்க அனுமதி? (1) 12.37: எதிர்பார்ப்பு இல்லாமல், யாசிக்காமல் வாழ்பவருக்கு வழங்கப்பட்டால் பெற்றுக்கொள்ளலாம் (4) 12.38: உலகாதாயத்தின் மீது பேராசை கொள்வது விரும்பத் தக்கதன்று (2) 12.39: இரு ஓடைகள் இருந்தாலும் மூன்றாவது ஓடையை எதிர்பார்த்தல் (4) 12.40: வாழ்க்கை வசதிகள் அதிகமாக இருப்பது செல்வமன்று (1) 12.41: இவ்வுலகத்தின் கவர்ச்சி குறித்து அஞ்சுதல் (3) 12.42: சுயமரியாதை மற்றும் பொறுமையின் சிறப்பு (1) 12.43: போதுமான வாழ்வாதாரமும் போதுமென்ற மனமும் (4) 12.44: அருவருப்பாகப் பேசி, கடுஞ் சொற்களால் கேட்டவருக்கும் தானம் வழங்குவது (4) 12.45: இறைநம்பிக்கை, (வறுமையால்) கேள்விக்குள்ளாக்கப்படுபவருக்கு உதவுதல் (1) 12.46: இஸ்லாத்தை ஏற்றவர்களுக்கு வழங்கலும் இறை நம்பிக்கை வலுவானவர் பொறுமை கொள்ளலும் (8) 12.47: காரிஜிய்யாக்களும் அவர்களின் தன்மைகளும் (10) 12.48: காரிஜிய்யாக்களைக் கொல்லுவதற்கு ஊக்கப்படுத்துதல் (4) 12.49: காரிஜிய்யாக்கள் படைப்பினங்களிலேயே தீயவர்கள் ஆவர் (3) 12.50: தூதரின் குடும்பத்தார் ஸகாத் பெறுவதற்குத் தடை (6) 12.51: நபி (ஸல்) குடும்பத்தாரைத் தர்மப் பொருட்கள் வசூலிக்கப் பயன்படுத்தலாகாது (1) 2.26: அசுத்தமான கையைப் பாத்திரத்தில் நுழைத்தல் (2) 2.25: ஒருநாள் தொழுகைகளை ஒரு உளூவில் தொழ அனுமதி (1) 2.24: காலுறையில் மஸஹு செய்து தொழுவதற்கான வரம்பு (1) 2.23: முன் தலை மற்றும் தலைப்பாகை மீது மஸஹு செய்தல் (4) 2.22: காலுறையில் மஸஹு செய்தல் (9) 2.21: தண்ணீரால் கழுவித் துப்புரவு செய்தல் (3) 2.20: மலம் கழிப்பதற்குத் தடையுள்ள இடங்கள் (1) 2.19: செயல்களை வலப் புறமிருந்து தொடங்குதல். (2) 2.18: வலக் கரத்தால் கழுவத் தடையானவை (3) 2.17: கழிப்பிடத்தில் துப்புரவு செய்தல் (7) 2.16: இயற்கை மரபுகள் (8) 2.15: பல் துலக்குதல் (7) 2.14: சிரமகாலங்களிலும் முழுமையாக ஒளு செய்வதன் சிறப்பு (1) 2.13: உளூவில் தண்ணீர் படும் இடங்களில் ஒளி படர்தல் (1) 2.12: உளூவில் உறுப்புகளை அதிகப்படுத்திக் கழுவுதல் (6) 2.11: உளூ செய்த நீரோடு வெளியேறும் பாவங்கள் (2) 2.10: உளூவில் உறுப்புகள் முழுவதும் கழுவுதல் (1) 2.09: இரு கால்களையும் முழுமையாகக் கழுவுதல் கட்டாயம் (6) 2.08: சுத்தம் செய்யும் போது ஒற்றைப்படையாக செய்தல் (5) 2.07: நபி (ஸல்) அவர்கள் செய்த அங்கத் தூய்மை (உளூ) (2) 2.06: அங்கத் தூய்மை (உளூ) செய்தபிறகு ஓதப்படும் பிரார்த்தனை (1) 2.05: சிறு பாவங்களுக்கான பரிகாரங்கள் (3) 2.04: அங்கத்தூய்மையின் சிறப்பும் அதன் பின் தொழுவதன் சிறப்பும் (9) 2.03: அங்கத் தூய்மை (உளூ) செய்முறையும் அதை நிறைவாகச் செய்வதும் (2) 2.02: தொழுகைக்குக் கட்டாயமான (அங்கத்) தூய்மை (2) 2.01: அங்கத்தூய்மை(உளூ)யின் சிறப்பு (1) 1.96: மறுமையில் ஆதம்(அலை) அவர்களுக்கு இடப்படும் கட்டளை (1) 1.95: சொர்க்கவாசிகளில் பாதிபேர் (3) 1.94: விசாரணையோ வேதனையோ இன்றி சொர்க்கம் செல்வோர் (7) 1.93: நட்பு கொள்ளத் தக்கவர்களும் தகாதவர்களும் (1) 1.92: இறைமறுப்பாளரின் நற்செயல்கள் பலனளிக்காது (1) 1.91: நரகவாசிகளிலேயே மிகக்குறைவான வேதனை அனுபவிப்பவர். (4) 1.90: அபூதாலிபுக்காக நபி(ஸல்) அவர்களின் பரிந்துரை (3) 1.89: நெருங்கிய உறவினருக்கு எச்சரிக்கை செய்தல் (5) 1.88: இறைமறுப்பாளருக்கு எந்தப் பரிந்துரையும் பலனளிக்காது (1) 1.87: தம் சமுதாயத்தார் மீது நபி(ஸல்) அவர்களுக்குள்ள பரிவு (1) 1.86: நபி(ஸல்) அவர்களின் பரிந்துரைப் பிரார்த்தனை! (8) 1.85: சொர்க்கத்திற்காகப் பரிந்துரைக்கும் முதல் மனிதர் (4) 1.84: சொர்க்கவாசிகளுள் ஆகக் குறைந்த பதவி (14) 1.83: இறுதியானவராக வெளியேறும் நரகவாசி. (3) 1.82: ஷஃபாஅத்(பரிந்துரை) செய்யப்படுபவர்கள் (2) 1.81: இறைவனைக் காணும் வழிமுறை (3) 1.80: இறைவனைக் காண்பதற்கான சான்று (2) 1.79: அல்லாஹ்வின் பார்வை பற்றிய விளக்கம் (2) 1.78: மிஃராஜின் போது நபி(ஸல்) கண்டது பற்றிய விளக்கம் (2) 1.77: நபி(ஸல்) அவர்கள் இறைவனைப் பார்த்தார்களா? என்பது பற்றிய விளக்கம் (5) 1.76: சித்ரத்துல் முந்தஹா(இலந்தை மரம்) பற்றிய குறிப்பு! (4) 1.75: ஈஸா(அலை) மற்றும் தஜ்ஜால் பற்றிய குறிப்புகள் (6) 1.74: விண்ணுலகப் பயணமும் தொழுகை கடமையாக்கப்படலும் (12) 1.73: வேத வெளிப்பாடு (வஹீ) தொடங்குதல் (3) 1.72: இறை நம்பிக்கை ஏற்கப்படாத காலகட்டம் (5) 1.71: ஈசா(அலை) இஸ்லாமிய நெறிப்படி நீதி வழங்குதல் (6) 1.70: தூதுத்துவம் உலக மக்கள் அனைவருக்கும் பொதுவானது (3) 1.69: இறைச்சான்றுகள் மூலம் மன அமைதி (1) 1.68: ஒருவரை இறைநம்பிக்கையாளர் என்று முடிவு செய்தல் (2) 1.67: அச்சநேரத்தில் இறைநம்பிக்கையாளர் நிலை (1) 1.66: இறுதிக் காலத்தில் இறை நம்பிக்கை (அற்றுப்) போய் விடுவது. (2) 1.65: இஸ்லாத்தின் மீளெழுச்சி. (3) 1.64: உள்ளங்களில் குழப்பங்கள் தோன்றுவது. (2) 1.63: குடிமக்களைச் சுரண்டும் ஆட்சியாளன் நரகத்திற்குரியவன் ஆவான். (3) 1.62: செல்வத்தைக் காக்கப் போராடியவர் மற்றும் பிறர் செல்வத்தைப் பறிக்க முனைந்தவர் (2) 1.61: மாற்றாரின் பொருளைக் கைப்பற்றுபவர் நிலை. (5) 1.60: இறைநம்பிக்கையில் தடுமாற்றம் ஏற்பட்டால்.. (8) 1.59: நல்ல-தீய எண்ணங்களுக்கான கூலி (5) 1.58: தீய எண்ணங்களைச் செயல்படுத்தாமல் இருத்தல் (2) 1.57: தாங்க முடியாத சுமை? (2) 1.56: இறை நம்பிக்கையின் வாய்மையும் தூய்மையும் (1) 1.55: இறைமறுப்பாளராக இருந்தபோது செய்த நல்லறங்கள் (3) 1.54: முன் செய்த பாவங்கள் (2) 1.53: அறியாமை காலத்தில் செய்த தீமைகள் (2) 1.52: இறைநம்பிக்கையாளரின் அச்சம் (1) 1.51: குழப்பங்கள் தோன்றுவதற்கு முன் நற்செயல் புரிய விரைதல் (1) 1.50: மறுமை நெருங்கும் வேளையில் வீசும் காற்று (1) 1.49: ஹிஜ்ரத்தில் தற்கொலை செய்து கொண்டவரின் நிலை (1) 1.48: கையாடல் செய்பவரும் இறைநம்பிக்கையாளரும் (2) 1.47: தற்கொலை செய்பவரும் கட்டுப்பட்டு வாழ்பவரும் (7) 1.46: மூன்று பெரும் தவறான செயல்கள் (4) 1.45: புறங்கூறுவது வன்மையாகத் தடை செய்யப் பட்டது (3) 1.44: துக்க வேளைகளில் தடை செய்யப்பட்ட செய்கைகள்! (3) 1.43: முஸ்லிம்களை வஞ்சித்தவர் நிலை! (2) 1.42: முஸ்லிம்களுக்கு எதிராக ஆயுதம் ஏந்தியவர் நிலை! (3) 1.41: “லா இலாஹ இல்லல்லாஹ்” கூறியவரைக் கொல்லத்தடை! (4) 1.40: இணைவைத்தலின் விளைவுகள் (5) 1.39: தற்பெருமை (3) 1.38: பெரும் பாவங்கள் (5) 1.37: பாவங்களில் மிகவும் அருவருப்பானது (2) 1.36: நற்செயல்களில் சிறந்தது (6) 1.35: தொழுகையை விடுதலும் குஃப்ரும் (3) 1.34: இறைநம்பிக்கை குறைவும் குஃப்ர் எனும் சொல்லும் (1) 1.33: அன்ஸாரிகளையும் அலி(ரலி)யையும் நேசித்தல் (6) 1.32: மழையும் இறைமறுப்பும் (4) 1.31: ஓடிப்போன அடிமை (3) 1.30: இறைமறுப்பின் அடையாளங்கள் (1) 1.29: இறைமறுப்பாளர்களாய் மாறுதல் (2) 1.28: முஸ்லிமோடு போரிடுதல் (1) 1.27: தந்தையை வெறுப்பவன் நிலை (4) 1.26: முஸ்லிமை நோக்கி காஃபிர் என அழைத்தல் (2) 1.25: நயவஞ்சகனின் குணங்கள். (3) 1.24: இறைநம்பிக்கையில் குறைவு ஏற்படல் (2) 1.23: மார்க்கம் என்பதே நலன் நாடுவதுதான். (4) 1.22: இறைநம்பிக்கையாளர்களை நேசித்தல் (1) 1.21: இறைநம்பிக்கையில் ஏற்படும் ஏற்றத் தாழ்வு (9) 1.20: நன்மையை ஏவுதல், தீமையைத் தடுத்தல் (2) 1.19: நல்லவற்றிற்கு ஆர்வமூட்டுதல் (3) 1.18: அண்டை வீட்டாருக்குத் தொல்லை தரக் கூடாது (1) 1.17: தமக்கு விரும்வுவதைச் சகோதரனுக்கும் விரும்புதல் (2) 1.16: தூதரை நேசிப்பது கடமை (2) 1.15: இறைநம்பிக்கையின் இனிமை (2) 1.14: இஸ்லாம் கூறும் நல்லறங்களில் சிறந்தது (4) 1.13: இஸ்லாத்தின் அனைத்துப் பண்புகளின் கலவை (1) 1.12: இறைநம்பிக்கையின் கிளைகள் (5) 1.11: இறைநம்பிக்கையைச் சுவைப்பவர் (1) 1.10: ஓரிறை கோட்பாட்டில் மரணித்தவர் நிலை (11) 1.09: இணை வைத்த நிலையில் மரணித்தவர் நிலை (3) 1.08: ஜிஸ்யா செலுத்தாதவர் மீது போர் புரிதல் (6) 1.07: இஸ்லாத்தை ஏற்க அழைப்பு விடுத்தல் (2) 1.06: அறியாதவர்களுக்கு அறிவித்தல் (4) 1.05: இஸ்லாமியக் கடமைகள் (4) 1.04: சொர்க்கம் செல்பவர் (7) 1.03: இஸ்லாத்தின் தூண்கள் (2) 1.02: தொழுகை பற்றிய விளக்கம் (2) 1.01: இறைநம்பிக்கை குறித்த விளக்கம் (7)
மாநில திரைப்பட விருதுகள் வழங்கும் விழா வரும் 4ம் தேதி நடைபெற உள்ள நிலையில், பாஜகவைச் சேர்ந்த காயத்ரி ரகுராம், தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துள்ளார். சென்னை கலைவாணர் அரங்கில் வரும் 4-ம் தேதி கடந்த 2009 முதல் 2014 ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகள் மற்றும் சின்னத்திரை விருதுகள் வழங்கும் விழா நடைபெற உள்ளது. இந்த விழாவில் விருதாளர்களுக்கு தங்கப்பதக்கம், சிறந்த படங்கள், நெடுந்தொடர் தயாரிப்பாளர்களுக்கு காசோலை, நினைவுப்பரிசு ஆகியவை வழங்கப்பட உள்ளது. தமிழக அரசின் மாநில விருதுகள் வழங்கும் விழா குறித்து செய்தி அறிக்கை இன்று (செப்டம்பர் 2) அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2017-ம் ஆண்டு அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சிக்காலத்தில் 2009-2014 ஆண்டுக்கான மாநில திரைப்பட விருதுகள் அறிவிப்பு வெளியானது. ஆனால் அப்போது அதற்கான விழா நடத்தப்படவில்லை. இதனையடுத்து திமுக ஆட்சியில் அதற்கான ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்ட நிலையில் வரும் 4ம் தேதி விருது வழங்கப்படுகிறது. காயத்ரி ரகுராமுக்கு விருது! இதில் 2014-ம் ஆண்டுக்கான சிறந்த நடனக் கலைஞர் விருது நடிகையும், நடனக் கலைஞருமான காயத்ரி ரகுராமிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. சமுத்திரக்கனி இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான நிமிர்ந்து நில் படத்தில் சிறந்த நடனத்தை அமைத்ததற்காக அவருக்கு இந்த விருது வழங்கப்பட உள்ளது. இந்த அறிவிப்பினை தொடர்ந்து பாஜகவின் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநிலத் தலைவராக இருக்கும் காயத்ரி ரகுராம் தனது டிவிட்டர் பக்கத்தில் முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துள்ளார். முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி! அவர் தனது டிவிட்டர் பக்கத்தில், ”எனக்கு மாநில விருது கிடைத்தது உணர்ச்சிகரமான தருணம். இந்த விருதை எனது தந்தை எஸ்.ரகுராம் டான்ஸ் மாஸ்டருக்கு சமர்ப்பிக்கிறேன். நீண்டகாலமாக நிலுவையில் இருந்த மாநில விருது வழங்கும் விழாவினை ஏற்பாடு செய்ததற்காக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி. எனது நண்பரின் தந்தையிடமிருந்து நான் அதைப் பெறுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். நடிகர்கள் சமுத்திர கனி, ஜெயம்ரவி மற்றும் அமலா பாலுக்கும் நன்றி” என்று தெரிவித்துள்ளார். It’s emotional moment for me receiving State award and I dedicate this award to my father S. Raghuram dance master. I will miss him on that day. Thanks to CM @mkstalin. I’m happy that I will be receiving it from my friend’s father. Thanks @thondankani @actor_jayamravi @Amala_ams — Gayathri Raguramm 🇮🇳🚩 (@BJP_Gayathri_R) September 2, 2022 மேலும், ”எனது தொழில், அரசியல் மற்றும் அரசியல் பார்வைகளிலிருந்து வேறுபட்டது. நான் வெறுப்பவள் இல்லை. நான் சரியான விஷயங்களைச் செய்ய விரும்புகிறேன்.” என்றும் தெரிவித்துள்ளார். உதயநிதி ஸ்டாலின் நண்பரா? 2019ம் ஆண்டு வரை பல்வேறு படங்களுக்கு டான்ஸ் மாஸ்டராக பணியாற்றிய காயத்ரி ரகுராம், பின்னர் 2020ல் பாஜகவில் இணைந்தார். சர்ச்சை கருத்துகளுக்கு பெயர் போன இவர், தொடர்ந்து ஆளும் கட்சியான திமுகவிற்கு எதிராக கருத்து கருத்து பதிவிட்டு வந்தார். இந்நிலையில் தற்போது மாநில விருது பெறப்போவதை அடுத்து, முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துள்ளார். மேலும் முதல்வர் விருது அளிக்கும் நிலையில், அவரது மகனும் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி எம் எல் ஏவான உதயநிதி ஸ்டாலினை நண்பர் என்றும் அவர் அழைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
குரு பார்வையில் சுக்கிரன், சூர்யன், புதன் என கோள்களின் இட அமைவு உள்ள நிலையில் அக்டோபர் 1 ஆம் தேதியில் துவங்கி 17 ஆம் தேதி வரையிலான காலகட்டம் சிறப்பானதாக இருக்கும். சனி பகவான் வக்கிர நிவர்த்தி அடைகிறார். மிதுனத்தில் வரும் செவ்வாய், கோபம் மற்றும் டென்சனை ஏற்படுத்தும். வேலைவாய்ப்பு ரீதியாக ஏற்கனவே இருந்த பளுச்சுமை ஓரளவு குறையும். பெரிய மாற்றங்கள் எதையும் எதிர்பார்க்க வேண்டாம். தொழில்ரீதியாக 11 ஆம் தேதி வரையிலான காலகட்டம் லாபம் தரும் காலமாக இருக்கும். திருமணம் சார்ந்த காரியங்களில் வரன்கள் கைகூடும் காலமாக இருக்கும். அதிலும் 17 ஆம் தேதிக்குள்ளான காலகட்டம் மனம் மகிழ்ச்சியினைக் கொடுக்கும் காலகட்டமாக இருக்கும். கணவன் – மனைவி இடையேயான உறவின் அன்பு அதிகரிக்கும், பிரிந்த காதலர்கள் ஒன்றுசேரும் காலகட்டம். 17 ஆம் தேதிக்கும் பின் கணவன் – மனைவி இடையே சண்டை சச்சரவு ஏற்படும். மாணவர்களின் கல்வி நலனில் முன்னேற்றம் இருக்கும். பெரிய அளவு உடல் நலக் குறைவு இருக்காது, இருப்பினும் உடல்நலனைப் பொறுத்தவரை அக்கறையுடன் இருத்தல் நல்லது. நெருங்கிய நண்பர்கள், உறவினர்களிடம் வீண் வாக்குவாதங்களால் மனக் கசப்புகள் ஏற்படும். Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
நுவரெலியா - வலப்பனை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட நில்தண்டாஹின்ன பகுதி இன்று (02) முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது என்று வலப்பனை சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்தார். வலப்பனை பிரதேச செயலகத்திற்குட்பட்ட நில்தண்டாஹின்ன கிராம சேவக பிரிவிற்குட்பட்ட 4 பகுதிகள் இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த பகுதிகளில் பலருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் வைரஸ் தொற்றியுள்ளது. இந்நிலையிலேயே வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்தும் நோக்கில் நில்தண்டாஹின்ன முடக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் இருந்து வெளியேறுவதற்கும், நபர்கள் உள்ளே வருவதற்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் உள்ளவர்களிடம் பி.சி.ஆர் பரிசோதனைகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.
தன் முயற்சியில் சற்றும் தளராத விக்கிரமன் மீண்டும் மரத்திலேறி அதில் தொங்கும் உடலைக் கீழே வீழ்த்தினான். பின்னர் கீழேயிறங்கி அந்த உடலைச் சுமந்து கொண்டு மயானத்தை நோக்கிச் செல்லுகையில், அதனுள்ளிருந்த வேதாளம் விக்கிரமனை நோக்கி, “மன்னா! நமக்கு உதவி செய்பவர்களுடன் நட்பு பாராட்டுவதும் அவர்களுக்கு நன்றிக்கடன் தீர்க்க நாம் பிரதியுபகாரம் செய்வதும் இயற்கை! இதை நமது சாஸ்திரங்களும் வலியுறுத்தி இருக்கின்றன. ஆனால் நான் உனக்கு இப்போது சொல்லப் போகும் கதையில் தனக்கு பேருதவி செய்தவருடன் பகைமை பாராட்டுமாறு ஒருவன் கருத்துக் தெரிவிக்க, அதை நன்கு கற்றுணர்ந்த அவனது குருவும் ஆமோதிக்கிறார். அந்தக் கதையை சற்று கேள்!” என்று வேதாளம் கதை சொல்லலாயிற்று. விஜயபுரியில் சரண்யன் என்ற பெரிய தனவந்தர் நற்குணங்கள் நிரம்பியவராகவும், தான, தர்மங்கள் செய்பவராகவும் இருந்தார். பல ஆண்டுகளாக அவருக்குப் புத்திர பாக்கியமே இல்லாமல் இருந்து அவருக்கு ஒரு மகன் பிறந்தான். அவனுக்கு நம்பி என்று பெயர் சூட்டி, அவனை நன்கு வளர்த்தார். நம்பி மற்ற சிறுவர்களைப் போல் இல்லாமல் மந்த புத்தியுடையவனாக இருந்தான். சாதாரண விஷயங்களைக் கூட, அவனால் சரியாகப் புரிந்து கொள்ள இயலவில்லை. அவனை ஒரு நல்ல பள்ளியில் சேர்த்து விட்டால், நிலைமை சரியாகும் என்று சரண்யன் நம்பினார். ஆனால் பள்ளியில் சேர்ந்த பின்னும், அவன் மந்தமாகவே இருந்தான். சோதிடத்தில் நம்பிக்கை இல்லாத போதும், அவனை ஒரு பிரபல சோதிடரிடம் அழைத்துச் சென்றார் சரண்யன். அவரிடம், சோதிடர், “உங்கள் மகனுக்கு கிரகங்கள் சரியாக அமையவில்லை. இடமாற்றம் செய்தால் சகஜ நிலைக்கு அவன் திரும்பலாம். வித்யாவனம் எனும் ஊரில் ஞானேந்திரர் எனும் குருவிடம் அழைத்துச் செல். அவருடைய குருகுலத்தில் பயின்றால், அவன் சரியாகிவிடுவான்” என்றார். அவ்வாறே, சரண்யன் நம்பியை ஞானேந்திரரின் குருகுலத்திற்கு அழைத்துச் சென்றார். நம்பியை சில கேள்விகள் கேட்டு சோதித்த ஞானேந்திரர், “உங்கள் மகன் எந்த விஷயத்தையும் தனக்கே உரிய முறையில் பொருள் கொள்கிறான். மற்றவர்களைப் போல் அவனை சிந்திக்க வைக்க என்னால் இயன்ற அளவு முயற்சிக்கிறேன். நீங்கள் அடிக்கடி வந்து என்னிடம் அவனைப் பற்றி விசாரித்துவிட்டுச் செல்லுங்கள்” என்றார். ஞானேந்திரரின் குருகுலத்தில் சேர்ந்த பின்னும், நம்பியின் நிலைமையில் முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை. ஒருநாள் அந்த குருகுலத்தில் சுகுமாரன் என்ற ஒரு விவாசாயியின் மகன் மாணவனாகச் சேர்ந்தான். மிகவும் புத்திசாலியான சுகுமாரன் சேர்ந்த சில மாதங்களிலேயே தலைசிறந்த மாணவன் என்ற பெயரைப் பெற்றுவிட்டான். சுகுமாரனுக்கு நண்பனாக ஆசைப்பட்ட நம்பி அவனிடம் நட்புரிமை பாராட்ட முயன்றபோது, சுகுமாரன் அவனை ஏற்கவில்லை. சுகுமாரன் குருகுலத்தில் சேர்ந்து ஓர் ஆண்டு சென்றபின், அவனுடைய தந்தை கடன் தொல்லையில் சிக்கித் தவிப்பதாக அவனுக்குத் தகவல் வந்தது. ஆகையால் அவன் படிப்பைப் பாதியில் நிறுத்திவிட முயன்றான். தற்செயலாக நம்பியைக் காணவந்த சரண்யனிடம் நம்பி சுகுமாரனைப் பற்றிக் கூற, சரண்யன் சுகுமாரனை சந்தித்து, “தம்பி! உன்னைப் போன்ற புத்திசாலி மாணவனின் கல்வி தடைப்படக்கூடாது. உன்னுடைய கல்விக்கான செலவுகளை நான் ஏற்கிறேன். நீ தொடர்ந்து படி!” என்றார். நம்பியின் நல்ல உள்ளத்தையும், அவன் தந்தையின் பெருந்தன்மையும் கண்டு சுகுமாரன் வெட்கித் தலைகுனிந்தான். உடனே அவன் நம்பியிடம் தானாகவே வலியச் சென்று நட்புக்கரம் நீட்டினான். “நம்பி! நீயும் புத்திசாலிதான்! தவிர, நீ மிகவும் நல்லவன்! அதனால் உன்னை நண்பனாக அடைய விரும்புகிறேன். இனி குரு நடத்தும் பாடங்களை நீ எப்படிப் புரிந்து கொள்கிறாய் என்று தெரிந்து கொள்ள முயல்வேன்” என்றான். முதன் முதலாக தன்னை புத்திசாலி என்று சுகுமாரன் சொன்னதைக் கேட்டு மகிழ்ச்சியுற்ற நம்பி, அன்று முதல் வகுப்பில் நடந்த பாடங்களைத் தான் புரிந்து கொண்டதைக் பற்றி சுகுமாரனிடம் விளக்கத் தொடங்கினாள். அவற்றை கவனமாகக் கேட்டபின், அவன் தனக்குத் தெரிந்ததை விளக்குவான். ஓராண்டு காலத்திலேயே நம்பி மற்ற மாணவர்களைப் போல் சிந்திக்கத் தொடங்கினான். நம்பியின் மாற்றத்திற்குக் காரணமான சுகுமாரைத் தன்னிடம் அழைத்த ஞானேந்திரர் “நம்பியை எப்படி மாற்ற முடிந்தது?” என்று ஆச்சரியத்துடன் கேட்டார். “குருவே! மந்த புத்திக்காரனைப் பார்த்துக் கேலி செய்வதற்கு சாமர்த்தியம் தேவை இல்லை. அவனை சராசரிக்கும் மேலான அறிவாளியாக மாற்றத்தான் அறிவும், சாமர்த்தியமும், திறமையும், முயற்சியும் தேவை! அவற்றைப் பிரயோகித்து அவனை என்னைப் போல் அறிவாளியாக மாற்றினேன்” என்றான். “ஆகா! உத்தமமான பிள்ளை நீ! சுயநலமே உருவான இவ்வுலகில், நம்பி மீது விசேஷ அக்கறை எடுத்துக் கொண்டு அவனை மாற்றிவிட்டாய்! அவனுடைய மாற்றத்திற்குக் காரணம் நீதான் என்று அவன் தந்தை அறிந்தால் அவர் இன்னும் உனக்கு அதிக உதவிகள் செய்வார்” என்றார். “வேண்டாம் குருவே!” என்ற சுகுமாரன் “அவர் எனக்கு ஏற்கெனவே செய்த உதவிகள் போதும், அதற்கு இது கைம்மாறாக இருக்கட்டும்” என்றான். சுகுமாரனின் கல்விக்கான செலவை ஏற்றுக் கொண்டது மட்டுமின்றி, நம்பியின் தந்தையான சரண்யன் சுகுமாரனின் தந்தை வசிக்கும் கிராமத்திற்கு அடிக்கடிச் சென்று அவர் பட்ட கடனை எல்லாம் தானே தீர்த்து வைத்து, பொருளாதாரப் பிரச்சினையில் இருந்து அவரை மீட்டார். அப்போது அவருக்கு சுகுமாரனின் தந்தை ஏன் கடனாளியானார் என்ற விவரம் தெரிய வந்தது. அவருடைய பங்காளிகள் பேராசையே உருவானவர்கள். புத்திசாலியான சுகுமாரன் தன் தந்தையை விட்டு அகன்று குருகுலம் சென்றவுடன், அவரை பசப்பு வார்த்தைகளால் மயக்கி, அவரை ஏமாற்றிப் பணம் பறித்துக் கடனாளியாக்கி விட்டனர். இந்த விஷயத்தை அவர் அவ்வப்போது சுகுமாரனிடமும் தெரிவித்து வந்தார். இதனால் தனது சொந்தக்காரர்கனை நினைத்து மனம் கொதித்தான். கல்வியையே நிறுத்திவிட எண்ணியபோது, நம்பியின் தந்தை குறுக்கிட்டு கல்வியைத் தொடரச் செய்தார். ஐந்து ஆண்டுகளில் சுகுமாரன், நம்பி அகியோரின் குருகுலக் கல்வி நிறைவு பெற்றதும் குருவிடம் விடைபெற்றுக் கொள்ள சுகுமாரன் வந்தபோது அவர் “சுகுமாரா! சுபாவத்திலேயே நீ மிகவும் நல்ல பிள்ளை. நீ இன்று போல் என்றும் மிக்க நல்லவனாகவே இருப்பாய்!” என்றார். அதற்கு சுகுமாரன் “குருவே! என் தந்தையின் பங்காளிகள் என் தந்தையைப் படுகுழியில் தள்ளிவிட்டதை எண்ணியெண்ணி என் மனம் கொதிக்கிறது. அதனால், அவர்களைப் பழிக்குப் பழிவாங்கிய பின் நல்லவனாக மாற முயற்சிப்பேன்” என்றான். அதற்கு ஞானேந்திரன் “மகனே! பழக்குப் பழி, வஞ்சத்திற்கு வஞ்சம் என்று பிடிவாதமாக இருந்தால் அதற்கு ஒரு முடிவே இருக்காது. நான் சொல்வதைக் கேள்! அவர்களை மன்னித்துவிடு! அப்போது தான் வாழ்க்கையை நிம்மதியாகக் கழிக்க முடியும்” என்றார். அப்போது அங்கு சரண்யன் வந்தார். நடந்த விஷயங்களைக் கேட்டபிறகு அவர் சுகுமாரனிடம், “தம்பி! உன்னை என் மகனாகவே இதுவரை நினைத்திருக்கிறேன். இனியும் அப்படியே! நீ செய்ய விரும்பும் செயல்கள் எதுவானாலும் அதற்குத் துணை புரிவேன்” என்றார். அப்போது, ஞானேந்திரர் குறுக்கிட்டு, “ஐயா! நீங்கள் சுகுமாரனுக்கு எப்படி உதவி செய்ய வேண்டும் என்பது அவனிடம் கேட்காதீர்கள். மகா மேதாவியாகி விட்ட உங்கள் மகன் நம்பியிடம் அதைப்பற்றி கேளுங்கள்!” என்றார். பிறகு அவர் நம்பியை அழைத்து நடந்ததை எல்லாம் விவரித்தபின் அவனிடம் இது குறித்து அபிப்பிராயம் கேட்டார். அதற்கு நம்பி, “என் தந்தை மேற்கொண்டு உதவி செய்ய விரும்பினால், அவர் சுகுமாரனுக்குப் பகைவராக மாறவேண்டும். இதுவே என் யோசனை!” என்றதும். மற்ற மூவரும் திடுக்கிட்டனர். “சுகுமாரா!” என்று தொடர்ந்த நம்பி, “நீ இதுவரை என் தந்தை செய்த உதவிகளை மறந்துவிட்டு, அவரை உன் பகைவராக நினை! அவரைப் பழி வாங்க முயற்சி செய்! அவரைப் பழி வாங்கியபின் உன் கவனத்தை உன் சொந்தக்காரர்களிடம் திருப்பு! அவர்களைப் பழிவாங்கு!” என்றான். நம்பி கூறியதைக் கேட்டு அவன் தந்தையும், சுகுமாரனும் அதிர்ச்சி அடைய, குரு மட்டும் அதைப் புரிந்து கொண்டவராய் புன்னகை புரிந்து அவன் யோசனையை அமோதித்தார். இந்த இடத்தில் கதையை நிறுத்திய வேதாளம் விக்கிரமனை நோக்கி, “மன்னா! நம்பி ஏற்கெனவே மந்த புத்தியுடையவன். அதனால் உதவி செய்தவரை பகைவராக நினை என்று உளறினான். அதனால் என்று நினைக்கிறேன். ஆனால் மகா புத்திசாலியான குரு ஞானேந்திரர் நம்பியின் யோசøயை எப்படி ஆமோதித்தார்? என் சந்தேகத்திற்கு விடை தெரிந்தும் நீ மௌனமாக இருந்தால் உன் தலை வெடித்து சுக்கு நூறாகும்” என்றது. அதற்கு விக்கிரமன், “சுகுமாரன் சிறந்த அறிவாளி மட்டுமின்றி மிக நல்லவனும் கூட! சுகுமாரனின் ஆத்திரத்திற்குச் காரணம் தன் சொந்தக்காரர்கள் முற்றிலும் நயவஞ்சகர்கள் என்றும், அவர்களிடம் நற்குணங்கள் எதுவுமில்லை என்று எண்ணியதுதான்! பழிவாங்கும் எண்ணத்தை சுகுமாரன் மறக்க வேண்டுமெனில், முதலில் அவன் தன் சொந்தக்காரர்களிடம் உள்ள நல்ல குணாதிசயங்களையும் ஆராயவேண்டும். அத்தகைய மனப்பாங்கு அவனுக்கு உண்டாக வேண்டும் எனில் அதற்கு சரண்யன் போல் தர்ம சிந்தனையாளர் ஒருவர் அவனுக்குப் பகைவராக வேண்டும். “சரண்யன் என்னதான் பகைவராக மாறினாலும், சுகுமாரனுக்கு அவர் மீது விரோதம் உண்டாகாது. அவர் தனக்கு செய்த உதவிகளை மட்டும் நினைவில் நிறுத்தி அவரை அவன் மன்னித்து விடுவான். அதனால் அவனுடைய பழிவாங்கும் எண்ணம் குறைந்துவிடும். அதனால்தான், நம்பி தன் தந்தை சரண்யனை விரோதியாக பாவிக்கும்படி அவனுக்கு அறிவுரை கூறினான். அவன் கூறியது அபத்தமான யோசனை அல்ல; மாறாக, நன்கு சிந்தித்தப்பின் அவன் கூறிய மிகச்சிறந்த யோசனை ஆகும்!” என்றான். விக்கிரமனின் சரியான பதிலினால் அவன் மௌனம் கலைந்ததும் வேதாளம் தான் புகுந்து இருந்த உடலுடன் பறந்து சென்று மீண்டும் முருங்கை மரத்தில் ஏறிக்கொண்டது.
யாழ். மாவட்டத்தில் அண்மித்த காலங்களில் இடம்பெற்று வரும் வாள்வெட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் நேற்றுச் செவ்வாய்க்கிழமை பிற்பகல் யாழ். குருநகரில் வைத்து ஐந்து இளைஞர்கள் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்களிடமிருந்து கூரிய வாள்கள், கோடரி, கத்தி போன்ற கூரிய ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. யாழ்.பொலிஸார் மூன்று நாட்கள் தொடர்ச்சியாக நடாத்திய தேடுதல் வேட்டையின் விளைவாகவே வாள்வெட்டுடன் தொடர்புடைய ஐந்து சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களிடமிருந்து 06 வாள்கள், இரண்டு கைக்கோடரிகள், இரண்டு கத்திகள், ஒரு மோட்டார்ச் சைக்கிள், ஒரு கைத்தொலைபேசி, ஒரு முகமூடித் தொப்பி என்பவற்றினையும் பொலிஸார் மீட்டுள்ளனர். கைதான இளைஞர்களை இன்றைய தினம் யாழ்.நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. Related posts: முச்சக்கரவண்டி விபத்தில் உயிரிழந்தால் 5 இலட்சம்!- புதிய திட்டம்! வெளிநாடுகளில் இருந்து வருகை தருபவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதிக்க யோசனை - தலைமை தொற்று நோயியல்... அமைச்சர் பசில் ராஜபக்ச, சர்வதேச நாணய நிதியத்தின் தொழில்நுட்ப ஆதரவைப் பெற்றுக்கொள்வதற்கு அமைச்சரவை அன...
Posted by கார்த்திக் சரவணன் at 6:35 PM Labels: சமூக நாவல், புரட்சியின் உச்சகட்டம், வே.பத்மாவதி 11 comments புரட்சியின் உச்சகட்டம் - வே.பத்மாவதி இந்த நாவல் பற்றி ஆசிரியர் வே.பத்மாவதி ஒரு இடத்தில் சொல்கிறார், "ஒரு பெண் வளரும்போது அண்ணனையும் திருமணம் முடிந்தவுடன் கணவனையும் சார்ந்து வாழ்ந்தவள், ஆனால் இன்றைய சூழலில் யாரையும் சார்ந்து வாழாமல் தனியே வாழப் பழகிக்கொண்டாள். அந்த தனிமை எத்தனை ஆண்டுகள் தொடரலாம், பெண் புரட்சி என்று எதைப் புரிந்துகொண்டால் டைவர்ஸ் செய்வதையா, ஆணுக்குச் சரிசமமாக புகைபிடிப்பதையா, "Boyfriend Out of Town" என்று டி-ஷர்ட்டில் எழுதி உடை அணிவதையா? இன்னும் பல அலசல்கள். இது புரட்சியின் உச்சகட்டமா அல்லது விரக்தியின் உச்சகட்டமா என்பதற்கான விடைதான் இந்நாவல்". அர்ச்சிதா! டெல்லியில் தனியாக வாழும் ஒரு பணக்காரப்பெண். இன்னும் திருமணமாகவில்லை. அவளுக்கு திருமணத்தில் நம்பிக்கையும் இல்லை. காரணம், அவளது அம்மா, அப்பா. அர்ச்சிதாவைப் பெற்ற சில வருடங்களிலேயே விவாகரத்து செய்துகொண்டு தனித்தனியாக வேறு திருமணங்களும் செய்துவிட்டு வெளிநாட்டில் வசிப்பவர்கள். இவளுடைய நலனில் அக்கறை கொண்டிருக்கிறார்களோ இல்லையோ, மாதாமாதம் பணம் மட்டும் தவறாமல் அனுப்பிவிடுவார்கள். அர்ச்சிதாவும் வீட்டிலேயே இருக்கப் பிடிக்காமல் டெல்லியிலேயே ஒரு சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை செய்கிறாள். கை நிறைய பணம், நிறைய நண்பர்கள் என்று செல்லும் அந்த அல்ட்ரா மாடர்ன் பெண்ணுடைய வாழ்வில் வருகிறான் ஸ்ரீதர் என்னும் சென்னைப் பையன். தாய் தந்தையை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ளவேண்டும், தங்கைகளுக்குத் திருமணம் செய்துவைக்கவேண்டும் என்பதற்காக சேரிப்பகுதியில் தனியாக வசிக்கிறான் ஸ்ரீதர். அவனுடைய சொந்தக் கதையைக் கேட்ட அர்ச்சிதா தன்னுடைய நான்கு படுக்கையறை கொண்ட வீட்டிலேயே அவனைத் தங்கவைத்துக்கொள்கிறாள். இந்த லிவிங் டுகதர் வாழ்க்கை அவனுக்குப் புதிதாக இருந்தாலும் போகப்போக பழகிவிடுகிறது. கூடவே அவனுக்கு அவள்மேல் காதலும் வருகிறது. அதற்கான காரணங்களை அழகாக விளக்கியிருக்கிறார் நூலாசிரியர். திருமணத்தில் கொஞ்சம்கூட நாட்டமே இல்லாத அவளிடம் தனது காதலை வெளிப்படுத்தி அர்ச்சிதாவின் கோபத்துக்கு ஆளாகிறான். வீட்டை விட்டும் வெளியேறுகிறான். அதன்பின் தனியாக வாழும் அர்ச்சிதாவுக்கு நிகழும் சில சம்பவங்கள் உறவுகள் எவ்வளவு பலம் வாய்ந்தவை என்று உணர்த்துகின்றன. இதையடுத்து அவள் ஸ்ரீதரைத் தேடிச் செல்கிறாள். பின் என்ன நடக்கிறது என்பதைப் படிக்கையில் கண்ணீர் வருகிறது. கதையின் பெரும்பகுதி இரண்டு அல்லது மூன்று கதாபாத்திரங்களுக்கிடையே நடக்கும் உரையாடலாகத்தான் செல்கிறது. நூலாசிரியர் அதிக அளவில் கதாபாத்திரங்களை அறிமுகம் செய்யாமல் கதைக்குத் தேவையான அளவில் வைத்திருப்பது கதை ஓட்டத்தை, சூழலைப் புரிந்துகொள்ள எளிதாக இருக்கிறது. அர்ச்சிதா பணக்காரி, அவளது வாழ்க்கை ஆடம்பரங்கள் நிறைந்தது என்பதற்காக ஆசிரியர் கொடுக்கும் வர்ணனைகள் கொஞ்சம் நீளமாக இருந்தாலும் முதல் மூன்று அத்தியாங்கள் கடந்ததும் இவை காணாமல் போய்விடுகிறது. இந்த நாவலின் மற்றுமோர் முக்கிய சிறப்பு ஸ்ரீதரின் பாத்திரப்படைப்பு. தன் காதலை அர்ச்சிதாவிடன் எப்படிச் சொல்வது என்று தவிக்கும் வேளையும் அவளது கழுத்தில் தங்கச் செயின் ஒன்றைக் கட்டிவிடும் சமயம் தாலியே கட்டிய பிரமிப்பில் இருப்பதையும் அழகாகச் சொல்லியிருக்கிறார். உதாரணத்துக்கு ஒன்று - "எண்பது வயசுல கணவன் மனைவி ஒண்ணா சேர்ந்து வாக்கிங் போவாங்களே, அந்த டேட்டிங் எவ்ளோ அழகு தெரியுமா? தொண்ணூறு வயசுல பொண்டாட்டி செத்துப் போயிட்டான்னு தெரியும்போது மகன், மருமகப் பேரன்னு யாரையுமே மதிக்காம, கையில் குச்சியப் பிடிச்சுக்கிட்டே தள்ளாடித் தள்ளாடி நடந்துபோய் சீக்கிரமே அவ போன இடத்துக்கு நான் போகமாட்டேனான்னு தனியா அழுகற காதல்" இக்காலத்து நவநாகரீக நங்கையர் இந்த நாவலைப் படிப்பார்களாயின் கண்டிப்பாக தாம் எந்த ரீதியில் போய்க்கொண்டிருக்கிறோம் உணர்வார்கள். ****************************************************************************************************** வெளியீடு: மதுரா பதிப்பகம், திருச்சி பக்கங்கள்: 181 விலை: ரூ.100 தினமலரில் தொடராக வெளிவந்தது. ஆசிரியரின் வலைப்பூ: http://kavingarpadmavathy.blogspot.com/ ****************************************************************************************************** Sunday, May 25, 2014 Posted by பால கணேஷ் at 8:12 PM Labels: சுபா, த்ரில்லர் 6 comments சுபாவின் விறு விறு த்ரில்லர்கள்..! சுபாவின் நாவல்கள் என்று சொன்னால் உங்களுக்கு முதலில் நினைவுக்கு வருவது எது...? கரெக்ட்! நரேந்திரனும் வைஜயந்தியும்தான். நரேந்திரனின் குறும்பும் சாகசங்களும், வைஜயந்தியின் இளமையும் புத்திசாலித்தனமும் அனைவரையும் கட்டிப் போட்ட விஷயங்கள். சுபாவின் நரேந்திரன் வைஜயந்தி துப்பறியும் கதைகளை மட்டும் தொகுத்து ஒரு புத்தகத்தில் மூன்று நாவல்கள் என்ற கணக்கில் ஐந்து தொகுதிகள் வெளியிட்டிருக்கிறார்கள் பூம்புகார் பதிப்பகத்தினர். புத்தகத்தின் பக்கங்களைப் பொறுத்து ரூ.140லிருந்து 250 வரை விலை வைக்கப்பட்டிருக்கிறது. ஆனால ஹார்ட் பௌண்டாக (கடினமான கெட்டி அட்டை) பதிப்பித்துத் தந்திருப்பதால் அதிக விலை என்ற எண்ணம் எழவில்லை. இந்த ஐந்து தொகுதிகளில் நான் வாங்கிப் படித்தது நான்காவது தொகுதியை. அதைப் பற்றி அலசுமுன் சுபா இந்த ந. வை., கேரக்டர்களை எப்படி உருவாக்கினார்கள் என்பதைப் பற்றி புத்தகத்தில் அவர்களே சொல்லி இருப்பதைக் கேளுங்கள்... படிக்கும் வாசகர்கள் குற்றவாளியின் புத்திசாலித்தனத்தையும் அதைக் கண்டுபிடிக்கும் துப்பறிவாளனின் சாதுர்யத்தையும் மாறி மாறி அனுபவிக்க வேண்டும். சிலசமயம் மர்மக் கதைகள் தவிர துப்பறியும் கதைகள் எழுதினால் இது சாத்தியம் என்று தோன்றியது, அடுத்து வரம்புகளை அமைத்துக் கொண்டோம். எங்கள் நாயகன் போலீஸ் அதிகாரியாகவோ, வக்கீலாகவே இருக்கக் கூடாது. வெறும் விசாரணை, துப்புத் துலக்குதல் என்று பேசிக் கொண்டேயிராமல் அவன் நேரடியாக களத்தில் இறங்கிச் செயல்படும் சாகச நாயகனாக இருக்க வேண்டும். வெகு சுருக்கமாகச் சொன்னால் அவன் அறிவும் ஆற்றலும் ஒருங்கே அமையப் பெற்றவனாக இருக்க வேண்டும். அப்படி ஒரு நாயகனை மனதளவில் உருவாக்கியதும் அவனுக்குப் பெயர் வைக்கும் கட்டம் வந்தது. எல்லோருக்கும் பிடித்த பொதுவான பெயரைத் தேர்ந்தெடுக்க விழைந்தோம், எங்களுடைய ஆதர்ச நாயகர்களில் மிக முக்கியமானவரான விவேகானந்தரின் இயற்பெயரான நரேந்திரன் எங்கள் நாயகனுக்குச் சூட்டப்பட்டது. பெண்மையின் அழகும், தரம் தழையாத கம்பீரமும் உள்ள நாயகியாக வைஜயந்தியை உருவாக்கினோம், துப்பறியும் நாயகன் என்பதைவிட துப்பறியும் நிறுவனம் ஒன்று அமைத்து, அதில் வெவ்வேறு திறமைகள் கொண்ட சில நாயகர்களை அதில் பணியமர்த்தலாம் என்று அடுத்த சிந்தனை வந்தது. ராணுவத்தின் மீது எங்களுக்கு இருந்த பெரும் மதிப்பால் அதன் தலைமைப் பொறுப்பை ராணுவப் பின்னணி கொண்ட ஒருவரிடம் ஒப்படைக்கத் தீர்மானித்தோம், கட்டுப்பாடும் கண்ணியமும் மிக்க, ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி ராம்தாஸ் தலைமையில் “ஈகிள்ஸ் ஐ டிடெக்டிவ் ஏஜன்ஸி” (கழுகுக்கண் துப்பறியும் நிறுவனம்) உதயமானது. அவருக்குக் கீழ் இயங்க நரேந்திரன், கருணாகரன், ஜர்ன்சுந்தர் என்று ஓர் இளைஞர் பட்டாளம் அமைக்கப்பட்டது. எழுத ஆரம்பித்த பிறகு நரேனுக்கு லட்சக்கணக்கில் ரசிகர்கள் உருவாகி விட்டார்கள். அவர்களில் நாங்களும் இருவர். ஆம், நரேந்திரன் - வைஜயந்திக்கு முதல் ரசிகர்களாக நாங்கள் இருக்கிறோம். ‘சுபாவின் நரேந்திரன் வைஜயந்தி’’ நான்காவது தொகுப்பில் 1) மதிப்பிற்குரிய மகாராணி, 2) கரையோரம் காத்திரு, 3) கண்மணி, கண்ணைத் திற ஆகிய மூன்று நாவல்கள் இடம் பெற்றுள்ளன, மூன்று கதைகளுமே விறுவிறுப்புக்குப் பஞ்சமில்லாமல், வாசக சுவாரஸ்யத்திற்குச் சரியான தீனி போடும் படைப்புகளாக அமைந்துள்ளன. அவற்றை இங்கே அலசலாம். மதிப்பிற்குரிய மகாராணி - சீஃப் பைலட் விஜயகுமார் ட்ரிப் முடிந்து வீட்டிற்கு வர மனைவி ஷீலாவையும் மகள் ஸ்வப்னாவையும் காணவில்லை. ஒரு மர்ம கும்பல் அவன் மனைவி, மகளை கடத்தி வைத்துக் கொண்டு, அவர்கள் தரும ஒரு பொருளை அடுத்த அவனுடைய நியூயார்க் ட்ரிப்பில் அங்கு ஒரு நபரிடம் ஒப்படைத்தால் திரும்பக் கிடைப்பார்கள் என்று மிரட்டுகிறது. விஜய், ஈகிள்ஸ் ஐயின் உதவியை நாட, நரேந்திரன், வைஜயந்தி மற்றும் ஜான்சுந்தர் துணையுடன் துப்பறிந்து, சில பல சாகசங்கள் செய்து அவர்கள் இருவரையும் மீட்கிறான். எத்தனையோ பைலட்கள் இருக்க, விஜயகுமாரை மட்டும் அந்தக் கும்பல் ஏன் செலக்ட் செய்து அவன் மனைவி, மகளைக் கடத்தினார்கள் என்கிற காரணத்தையும் கண்டுபிடிக்கிறான். கரையோரம் காத்திரு - விஜயநகரத்தைத் தாண்டிய ஒரு ஒதுக்குப்புறமான ஏரிக்கரையில் ஓர் இளம்பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்படுகிறது. அவள் யார், கொன்றது யார் என்கிற விசாரணையில் போலீஸ் ஈடுபட, அந்தப் பெண்ணின் தந்தை நரேந்திரனின் உதவியை நாடுகிறார், சமூகத்தில் பெரும்புள்ளியான அவர் தன் மகள் காதலனோடு ஓடிப்போய் திருமணம் செய்து கொண்டதாகவும், அவளைக் கொன்றவன் அவன்தான் என்றும் கூறி இருவரின் போட்டோக்களை தருகிறார். தன் பெயர் வெளிவராமல் அவனை நரேந்திரன் மடக்க வேண்டும் என்கிறார். நரேந்திரன் ரகசியமாகத் துப்பறிய, போலீஸின் செயல்பாடுகளில் அவன் குறுக்கிடுவதாக இன்ஸ்பெக்டர் பால்ராஜ் கொந்தளிக்கிறார். இறுதியில்... வேறென்ன.. கதாநாயகனாக லட்சணமாக அந்தப் பெண் வினரதாவைக் கொன்றவன் அவள் காதலன் அல்ல, வேறொருவன் என்பதை (அஃப்கோர்ஸ் சில சாகசங்களுக்குப் பின்) நரேந்திரன் கண்டறிந்து போலீசில் ஒப்படைக்கிறான். கண்மணி, கண்ணைத் திற - முந்தைய இரு கதைகளை விட அடுத்தடுத்து நிகழும் மர்மம் + மரணம் காரணமாக இது விறுவிறுப்பின் உச்சம் தொட்டது. ஒரு கட்டிடத்தில் திருஷ்டி பொம்மைக்கு பதிலாக சுட்டுக் கொல்லப்பட்ட இளம் பெண்ணின் பிணம் இருப்பதை வாக்கிங் செல்பவர்கள் பார்த்து போலீசில் சொல்ல, போலீஸ் விசாரித்து சந்தேகத்தின் பேரில் அவள் (மாலதி) கணவன் மணிவண்ணனை கைது செய்கிறது, அவன் போலீஸிடமிருந்து தப்பி தலைமறைவாகி நரேந்திரனின் உதவியை வேண்டுகிறான். குற்றவாளியை நரேன் கண்டுபிடித்தால் தான் சரண்டராவதாகக் கூறுகிறான். நரேந்திரன் களத்தில் இறங்கி, மாலதியின் பிணம் கண்டெடுக்கப்பட்ட கட்டிடத்தில் ஒரு சிறுவனின் ரத்தக் கைரேகை (போலீஸ் தவறவிட்ட) இருப்பதை கண்டறிகிறான். தொடரும் விசாரணைகளுக்கிடையில் மிரட்டல் எச்சரிக்கைகள் வர, தொடர்ந்து நரேந்திரன் மர்ம உருவம் ஒன்றினால் தாக்கப்படுகிறான். மணிவண்ணனின் பார்ட்னர் ராம்நாத் தான் தன்னை அடித்தது என்பதைக் கண்டறிந்து அவனை போனில் எச்சரித்து விட்டு நரேன் அவனைப் பார்க்கச் செல்ல... ராம்நாத்தின் பிணமாகக் கிடப்பதைப் பார்க்கிறான். துப்பறிதல் வேகம் எடுக்கிறது. இறுதியில் நரேந்திரன் கொலை செய்தவனைக் கண்டுபிடிக்க, அவன் போலீசில் சரண்டராக, மணிவண்ணன் விடுதலையாகிறான். க்ளைமாக்ஸில் கொலைக்காக அவன் கூறும் காரணமும் கொலை நடந்த அன்று இரவு நடந்த சம்பவங்களையும் விவரிக்கையில் படிப்பவருக்கு திடுக் உணர்வை ஏற்படுத்துவது சுபாவின் வெற்றி. மூன்றில் சிறந்தது எதுவெனக் கேட்டால் இதைக் கூறலாம். 237 பக்கங்கள் கொண்ட இந்தப் புத்தகத்தை 235 ரூபாய் விலையில் பூம்புகார் பதிப்பகம் (127, ப,எண்,63, பிரகாசம் சாலை, பிராட்வே, சென்னை/600 108. போன்: 044/25267543) வெளியிட்டிருக்கிறது. ஐந்து தொகுதிகளையும் வாங்கிப் படிக்க வேண்டும் என்ற விருப்பத்தை இந்தப் புத்தகம் தருகிறது. ஆனால் விலையைக் கணக்கிடுகையில் அந்த ஆர்வத்தை அட்க்கு அடக்கு என்று பட்ஜெட் போடும் மனைவி தலையில் தட்டுகிறாள். ஹி... ஹி... ஹி...! உங்களுக்கு ஆர்வமும், விருப்பமும், பட்ஜெட் பிரச்னையும் இல்லாதபட்சத்தில் ஐந்தையும் படிக்கலாம் என்பதே என் சிபாரிசு. Wednesday, May 14, 2014 Posted by ரூபக் ராம் at 4:45 PM Labels: சுஜாதா, சொர்க்கத் தீவு 10 comments சொர்க்கத் தீவு - சுஜாதா 'சொர்க்கத் தீவு', என் மனதைக் கவர்ந்த சுஜாதாவின் சயன்ஸ் பிக்ஷன் நாவல்கள் வரிசையில் 'என் இனிய இயந்திரா'விற்கு பின் நான் இரண்டாவதாக வைப்பது. அதே சமயம் சொர்க்கத் தீவு சுஜாதா எழுதிய முதல் சயன்ஸ் பிக்ஷன் நாவல் என்பது குறிப்பிடத்தக்கது. திருக்கடம்பூர் சுந்தரவரதன் சீனிவாச அய்ங்கார் என்னும் அய்ங்கார் கம்ப்யூட்டர் என்ஜினீயராக ஒரு தனியார் நிறுவனத்தில் பணி புரியும் இருபத்து எட்டு வயதான திருமணம் ஆகாத இளைஞன். அவனது பணி அவன் கம்பெனிக்கு சொந்தமான ஒரு கம்ப்யூட்டரை பராமரிப்பது. அந்த கம்ப்யூட்டரை IBM மைன்ப்ரெம் போன்ற ஒரு நவீன கணினி. அதில் ஏதேனும் பழுது ஏற்பட்டால், அதை சரி செய்வது தான் இவன் வேலை. அமெரிக்காவிடம் இருந்து அவன் கம்பனி வாங்கிய அந்தக் கணினியை திறமையாக கையாள்வதில் இவனை விட்டால் வேறு எவரும் இல்லை. அந்தக் கணினியின் செயல்பாடுகளை அக்கு வேறு ஆணி வேராக அறிந்து வைத்திருந்தான். அந்தக் கம்ப்யூட்டரை உருவாக்கிய அமெரிக்கன் கூட இவன் அந்தக் கம்ப்யூட்டரை கையாளும் விதம் கண்டு பல சமயம் வியந்ததுண்டு. அய்ங்கார் தனது தங்கைக்கு திருமண ஏற்பாடுகள் செய்துகொண்டிருந்த சமயம் லீலா என்னும் பெண் அவளது அண்ணனை தனது தங்கைக்கு பேச இவனை அணுகினாள். லீலாவின் அண்ணன் விமான பைலட்டாக பணி புரிவதாக அவள் சொல்ல, அவரைக் காண இருவரும் விமான நிலையம் செல்கின்றனர். அங்கு அய்ங்கார் தன்னை அறியாமல் ஒரு விமானத்தின் உள் தள்ளப்பட, அந்த விமானம் புறப்படுகிறது. அந்தப் பெண் லீலா தன்னை ஏமாற்றி கடத்திக் கொண்டுவந்ததை அய்ங்கர் அறியும் சமயம், அந்த விமானம் இந்தியப் பெருங்கடலில் எதோ ஒரு தீவில் தரையிறங்குகிறது. 'சொர்க்கத் தீவில்' இறங்கிய அய்ங்கார் முறையாக வரவேற்கப்பட்டு, விமான நிலையத்தில் இருந்து ஊருக்குள் அழைத்துச் செல்லப்படுகிறான். செல்லும் வழியில் எங்கும் 'சத்யா' என்பவரின் படங்கள் இருப்பதைக் காண்கிறான். மேலும் அந்தத் தீவின் வாசிகள் அனைவரும் ஒரே வகையான புஷ்டியான உடல் கட்டுடன் இருபதைக் கண்டு வியக்கிறான். எதற்காக இங்கு தான் கொண்டுவரப்பட்டோம் என்ற கேள்வி அவனை வாட்டத் தொடங்குகிறது. அவனை சர்வ வசதிகள் பொருந்திய ஒரு அறையில் தங்கவைத்து விட்டு, விரைவில் சத்யா அவனை சந்திப்பார் என்று சொல்லி அவனை விமான நிலையத்தில் இருந்து அழைத்து வந்த அதிகாரி விடை பெற்றுச்செல்கின்றார். சத்யாதான் அந்தத் தீவை இயக்கும் சர்வாதிகாரி என்றும், அந்தத் தீவில் 58 வயதைக் கடக்கும் பிரஜைகள் கொல்லப் படுகிறார்கள் என்ற செய்தியையும் அவன் அறிந்து கொள்கின்றான். மேலும் அந்தத் தீவில் இருக்கும் '2080' என்னும் கம்ப்யூட்டரை பழுது பார்க்க தான் அவன் கடத்திவரப்பட்டான் என்ற உண்மையும் அவனுக்கு புலப்படுகிறது. அந்தத் தீவின் வினோதங்கள் ஒவ்வொன்றையும் அவன் சத்யாவின் பார்வையில் இருந்து அறிகின்றான். அந்தத் தீவில் பிறக்கும் குழந்தைகள் அனைவரும் ஒரு வகையான இயந்திரக் கட்டுப்பாட்டில் தான் வளர்க்கப் படுகின்றனர் என்றும் அவர்களுக்கு சில மருந்துகள் கொடுக்கப் பட்டு அவர்களது அடிப்படை மனித உணர்சிகள் கட்டுப்படுத்தப் பட்டு ஒரு வகையான அடிமைத்துவம் வாய்ந்த பிரஜைகளை உருவாக்கு கின்றனர். இவர்களுக்கு உணவு என்பது மாத்திரைகள் தான். அந்தத் தீவில் இருப்பவர்களுக்கு அம்மா, அப்பா, என்னுடையது, உன்னுடையது, காதல், காமம், வெறி, சமூக ஜாதி, கதை, கட்டுரை, நிஜம், பொய், போன்ற ஒன்றும் தெரியாது. அந்தத் தீவில் இருக்கும் மக்கள் அமைதி, சந்தோஷம், ஆண், பெண், விஞ்ஞானம், மனதில் மற்றும் உடலில் வலிமை கொண்ட பொம்மைகள் போல் இயக்கப் பட்டனர். ​ அந்தக் கம்ப்யூட்டரை அவன் சரி செய்து விட்டால் அவனை திருப்பி அனுப்பி விடுவதாக சத்யா வாக்களிக்க, இரவு பகல் பாராமல் அந்தக் கம்ப்யூட்டரை பழுது பார்க்கும் பணியில் அய்ங்கார் ஈடுபடுகிறான். இந்நிலையில் அவனை நந்தினி என்னும் பெண் சுய உணர்சிகளுடன் அணுகி அவனது காதலனை சந்திக்க அய்ங்காரை பணியும் பொழுது அவன் அதிர்ந்து போகின்றான். அந்தத் தீவின் சட்ட திட்டங்களை மீறி அவளது காதலன் 'கௌதமை' தனிமையில் சந்திப்பதில் இருந்து கதை வேகம் கொள்கின்றது. கௌதம் நந்தினி இருவரும் அந்தக் கம்ப்யூட்டர் பிழையால் தங்கள் தினசரி மருந்தை உண்ணமால் இருக்க அவர்களுக்கு மனித உணர்சிகள் தோன்றியிருப்பதை கௌதம் வாயிலாக அறிகின்றான். சத்யாவின் அடக்குமுறைக்கு எதிராக கிளர்ச்சி செய்ய அய்ங்காரை தன் பக்கம் சேர்ந்துகொண்டு, இந்தத் தீவை கட்டுபடுத்தும் 2080 கம்ப்யூட்டரை அழிக்குமாறு வேண்டுகிறான். நவீனத்துவம் கொண்டு தீவை கட்டுபடுத்தும் சத்யாவின் கண்ணில் மண்ணைத் தூவி அந்த கம்ப்யூட்டரை அழித்து அந்தத் தீவின் மக்களை அய்ங்கார் எப்படிக் காப்பாத்துகின்றான என்பது தான் மீதி கதை. சுஜாதாவின் மற்ற நாவல்கள் போல் இல்லாமல் இந்த நாவல் எனக்கு மிகவும் பிடித்ததற்கு இரண்டு காரணங்கள் உண்டு. காரணம் ஒன்று: இந்தக் கதையின் மையம் 2080 என்னும் ஒரு கம்ப்யூட்டர். நான் எனது அலுவலகத்தில் இந்தக் கதையைப் பற்றி சொன்ன பொழுது எனக்கு கிடைத்த பதில் 'என்ன டமில் புக்ல மைன்ப்ரெமா 1!'. ஆம் இன்று நான் வேலை செய்து கொண்டிருக்கும் மைன்ப்ரெம் கம்ப்யூட்டரை போன்ற ஆனால் அதை விடவும் நவீனத்துவும் வாய்ந்த ஒரு கம்ப்யூட்டரை சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு முன்னரே கற்பனை செய்த சுஜாதாவின் படைப்பாற்றலைப் பற்றி யாரால் வியக்காமல் இருக்க முடியும். காரணம் இரண்டு: விறுவிறுப்பாக சென்ற கதையின் இறுதி பக்கங்களை படித்து விட்டு நான் எதிர்பார்த்த முடிவு ஏற்படாத விரக்தியில் இருந்த பொழுது, கடைசி சில வரிகள் என்னை மெய்சிலிர்க்கச் செய்தன. சுஜாதாவின் நுண்ணறிவிற்கு சிறந்த சான்றாக இந்தக் கதையின் முடிவு இருப்பதை கண்டு மகிழ்ந்தேன். சுவாரசியத்தை இழக்காமல் இருக்க வாசகர்கள் அந்தக் கடைசி பக்கங்களை காத்திருந்து படிப்பதே நலம். ****************************************************************************************************** வெளியீடு : வீசா பப்ளிகேஷன்ஸ் பக்கங்கள் : 168 விலை : ரூ. 58 ****************************************************************************************************** காதலுடன் ரூபக் www.rubakram.com Sunday, May 11, 2014 Posted by பால கணேஷ் at 11:38 AM Labels: திருக்குறள், பட்டுக்கோட்டை பிரபாகர் 13 comments இரண்டு வரிக் காவியம் படைப்பாக்கம் : ஸ்ரீனிவாஸ் பிரபு உலகிலேயே பைபிளுக்கு அடுத்து மிக அதிகமான மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டதும், உலகப் பொதுமறை என்று கொண்டாடப்படுவதும், மனிதனால் மனிதனுக்குச் சொல்லப்பட்ட வாழ்க்கை வழிகாட்டியுமான திருக்குறளிற்கு சமீபத்தில் தமிழில் வந்திருக்கும் தெளிவுரை நூல் தான்... ‘இரண்டு வரி காவியம். ’ பிரபல நாவலாசிரியர்கள் திருக்குறளிற்கு தெளிவுரை எழுதுவது புதிதில்லை, இருபதாண்டுகளுக்கு முன் சுஜாதா எழுதியிருந்தார், இப்போது தன் வசீகர எழுத்து நடையால் படிப்பவர் மனதை கொள்ளை கொள்ளுகிற பட்டுக்கோட்டை பிரபாகர் தன் தெளிவுரையை தந்திருக்கிறார். எத்தனையோ பேர் திருக்குறளுக்கு இதற்கு முன் உரை எழுதியிருக்க... இந்த ‘இரண்டு வரிக் காவிய’த்தில் அப்படி என்ன சிறப்பு? என்று பார்த்தால் ஒன்றல்ல... பல சிறப்புகள் இருக்கின்றன. முதலாவது... உரையாசிரியர் பி.கே.பி. மிகவும் சுருக்கமாக எளிமையாக வள்ளுவரின் வரிகளுக்கு தெளிவுரை தந்திருப்பது! இரண்டாவது.... இரண்டு வரிகளில் வள்ளுவர் எழுதிய திருக்குறள் அனைத்திற்கும் அளவெடுத்தது போல் அதே இரண்டே வரிகளில் பளிச் பளிச்சென தெளிவுரையை எளிமையாகவும், இயல்பான வார்த்தைகளாலும் தந்திருப்பது அழகாக அர்த்தப்படுத்துகிறது. மூன்றாவது... ஒவ்வொரு குறளிற்கும் இரண்டு வரிகளில் அர்த்தம் தந்ததோடு, ஒவ்வொரு அதிகாரத்தின் இறுதியிலும் அந்த அதிகாரம் குறித்தான ‘தொகுப்பு‘ (நாலே வரிகளில்), நான்காவது... அதிகாரத்தின் சுருக்கம் (இரண்டே வரிகளில், ஐந்தாவது... வள்ளுவன் நீதி என்று இரண்டே வார்த்தைகளில் வள்ளுவர் அந்த அதிகாரத்தில் என்ன சொல்ல வருகிறார் என்பதை சிறு தலைப்புகளில் அடுக்கியிருப்பது. இத்தனை சிறப்புகளுடன் கூடிய இந்த உரை நூல் ஆசிரியரின் அரிய முயற்சியை எடுத்துக் காட்டுகிறது. உதாரணமாக இல்வாழ்க்கை - அதிகாரத்தில் வரும் குறளான... அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது குறள் 45 தெளிவுரை : பண்பான இல்வாழ்க்கை என்றால் அதில் அன்பும், நல்ல செயல்களும் இருக்க வேண்டும். தொகுப்பு : அறநெறிகளுடன் கூடிய இல்லற வாழ்க்கை நடத்துபவர் அன்பு கொண்டும், பெற்றோர், வாழ்க்கைத்துணை, மக்கள், உறவினர், துறவிகள், பசியால் வாடுவோர் இவர்களுக்கு துணையாகவும் நிற்க வேண்டும். செல்வத்தை பிறருடன் பகிர்ந்துண்டு, பழிச் சொல்லுக்கு ஆளாகாமல் வாழ்ந்தால் அவர்கள் தெய்வமாக மதிக்கப் படுவார்கள் அதிகாரச் சுருக்கம் : இல்வாழ்க்கை சிறக்க அன்பும் அறநெறியும் தேவை, வள்ளுவன் நீதி : அன்பு செய்! ஒவ்வொரு அதிகாரத்திற்கும் பொருத்தமான கோட்டு ஓவியங்களும் ரசிக்கத்தக்கதாய் இருக்கிறது, (ஓவியம் : தமிழ்). திருக்குறளை புரிந்து கொள்ள ஒரு எளிமையான தெளிவுரை. ===================================================== வடிவமைத்தவன் (பாலகணேஷ்) தரும் சிறுகுறிப்பு : “நம்மில் பெரும்பாலானவர்கள் பள்ளிப் பாடங்களில் வரும் திருக்குறள்களை மட்டுமே மனப்பாடம் செய்து பொருள் அறிந்திருக்கிறோம். எல்லாக் குறள்களையும் படிச்சு ரசிக்கணும்கறது என் ஆசை. அதை முன்னிட்டே குறளுக்கு உரை எழுதும் பணியை நான் மேற்கொண்டேன். ஒரு உழவனாக, விஞ்ஞானியாக,. ஆசிரியராக. இன்னும் இன்னும் பல பரிமாணங்களில் வள்ளுவர் வியக்க வைக்கிறார். மிகுந்த சிரத்தையுடன், மனநிறைவுடன் இந்தப் பணியைச் செய்திருக்கிறேன். இது எனக்கு நல்ல பெயர் வாங்கித் தரும நிச்சயம்” என்று குறிப்பிட்டார் திரு.பி.கே.பி. இந்தப் பணியை என்னிடம் தரும்போது! அது எத்தனை நிஜம் என்பதைப் படிக்கையில் உணர்வீர்கள். எழுத்துப் பிழை நெருடலாக இருக்கக் கூடாது என்பதற்காக நான்கு முறை படித்து பிழை திருத்தம் செய்யப்பட்டது என்றால் புத்தகத் தயாரிப்பில் அவரது அக்கறையை என்ன சொல்ல? இரண்டே பக்கங்களில் குறள் விளக்கம். அதிகாரச் சுருக்கம். வள்ளுவரின் நீதி, தவிர படமும் இடம்பெற வேண்டும் என்கிற சவாலான பணியை மேற்கொண்டு நிறைவாக முடித்த திருப்தி நூலைப் பார்க்கையில் எல்லாம் என்னுள். ===================================================== ஆசிரியர் : பட்டுக்கோட்டை பிரபாகர் வெளியீடு : ரம்யா பிரியா கிரியேஷன்ஸ், 37/1, கெனால் போங்க் ரோடு, கஸ்தூரிபா நகர், அடையாறு, சென்னை – 600 020. போன் : 044- 24415709 விலை : ரூ.150/- பக்கங்கள் : 280 Wednesday, May 7, 2014 Posted by arasan at 11:40 PM Labels: கண்மணி குணசேகரன், சமூக நாவல், நெடுஞ்சாலை 7 comments நெடுஞ்சாலை - கண்மணி குணசேகரன் (நாவல்) தனக்கென்று ஒரு நடையை தேர்ந்தெடுத்து அதன்படியே எழுதும் படைப்பாளிகளில் முக்கியமானவர் திரு. கண்மணி குணசேகரன். விருத்தாசலம், அதனை சுற்றி இருக்கும் கிராமங்களின் மண் மனம் மாறாமல் நிகழ்வுகளை பதிவு செய்து வரும் வலிமையான மனிதர். தான் காணும் நிகழ்வினை அனைவரும் இரசிக்கும் படி, படைப்பாக மாற்றுவது அவ்வளவு எளிதல்ல, அதை மிக நேர்த்தியாக செய்து வருகிறார் திரு. கண்மணி. இவரின் பெரிய பலமே ஆடம்பரமின்றி இயல்பான மக்களின் மொழியில் எழுதுவது. அரசு போக்குவரத்து கழக தற்காலிக ஊழியர்கள் மூன்று பேரின் வாழ்வியலை வலியோடு வலிமையாக பேசுகிறது நெடுஞ்சாலை நாவல். பணிமனையில் நடைபெறும் அன்றாட வேலைகளின் அறிமுகத்தோடு தொடங்குகிறது. முதலில் கொஞ்சம் சீரற்ற வேகத்தில் அங்குமிங்கும் அலைபாய்வதாய் தெரியும் பயணம் சில பக்கங்களிலே தனது சீரான நடையை தொட்டு மின்னல் வேகத்தில் நகர்த்த தொடங்கிவிடுகிறார் திரு. கண்மணி குணசேகரன். ஏழை முத்து, தமிழரசன், ஐய்யனார் இந்த மூன்று இளைஞர்களை பிரதானப்படுத்தினாலும் படைப்பில் வரும் சின்ன சின்ன பாத்திரங்கள் கூட மனதில் பதிந்து விடும் அளவுக்கு பாத்திர படைப்பில் நேர்த்தி இருக்கிறது. உதாரணத்துக்கு "ஏழையின் அப்பா", சென்னை பயணத்தில் வரும் இளம்பெண்ணும் அவரின் போதை மிலிட்டரி அப்பாவும். அப்புறம் குட்டி பையனின் சேட்டைகள்! சில நுணுக்கமான விசயங்களையும் கூட அவ்வளவு அழகாக சொல்வது பெரும் வியப்பு! குடும்பம், காதல், மோகம், நட்பு, பணியிடச் சூழல், கோபம், இயலாமையின் பரிதவிப்பு இப்படி மனிதர்களின் உணர்வுகளை வெளிக்கொணரும் அதே நேரத்தில் மண்வாசனையையும் சொல்ல தவறவில்லை. அனைத்து இரசனைகளும் கொண்ட கலவையான படைப்பு ... பேருந்து, பேருந்து நிலைய நிகழ்வுகள், பயணிகளின் சேட்டைகள், பேருந்தை பராமரிக்கும் திறமை, ஊழியர்களின் மனநிலை, அவர்களின் குடும்ப பிண்ணனி இவற்றை பேசும் இந்நாவலில் அறிந்து கொள்ள எண்ணற்ற விசயங்கள் பொதிந்து கிடக்கின்றது. எளிய எழுத்தை விரும்பும் அனைவரும் படிக்க வேண்டிய ஒரு தரமான நூல் இந்த "நெடுஞ்சாலை" குண்டு குழி சாலைகளில் கடகடத்து ஓடும் பேருந்துகளை காண்கையில், வேர்வையில் நனைந்து உயிரை பிழிந்து வேலை செய்யும் ஊழியர்களுக்கு வணக்கம் போட வைக்கும் ஆற்றல் மிகுந்த புத்தகம்.
ஒற்றைப் புருவ அசைவிலேயே இணையத்தைப் புரட்டிப் போட்டவர் பிரியா பிரகாஷ் வாரியர். ‘ஒரு அடார் லவ்’ என்ற படத்தின் பாடல் காட்சி மூலம் ஃபேமஸ் ஆன வாரியர், தற்போது ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் பக்கங்களில் லட்சக்கணக்கில் பாலோயர்ஸ் வைத்திருக்கிற இணையப்பிரபலம். இந்தத் திடீர் புகழ்வெளிச்சத்தைப் பயன்படுத்தி, தன் இணையப்பக்கத்தில் விளம்பரதாரர்களின் பதிவுகளுக்குக் கட்டணம் வசூலிக்கத் தொடங்கி யிருக்கிறார். ஒரு விளம்பரப் பதிவுக்கு 8 லட்சம் வரை டிமாண்ட் செய்கிறார் என்கிறது மல்லுவுட் வட்டாரம். காற்றுள்ளபோதே... அமெரிக்கா செல்கிறார் விஜயகாந்த். சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு முழு உடல்நலத்தோடு ஃபிட்டாக இருக்கவேண்டும் என்பதற்காக இந்த முடிவாம். அமெரிக்காவின் மருத்துவராகப் பணியாற்றும் கேப்டனின் பரம ரசிகர்தான் சிகிச்சைக்கான அத்தனை ஏற்பாடுகளையும் முன்னின்று பார்த்துக்கொள்கிறாராம். பழைய பன்னீர்செல்வம் ரிட்டர்ன்ஸ்! ஜீவாவுடன் `ஜிப்ஸி’ படத்திற்கு பூஜை போட்ட ராஜூமுருகன், ஷூட்டிங்கைத் தொடங்குவதற்கு முன்னால் இந்தியாவைச் சுற்ற உதவி இயக்குநர்களோடு கிளம்பியிருக்கிறார். நாயகன் இந்தியாவையே குறுக்குவெட்டாகப் பயணிக்கிற கதை என்பதால், அந்த உணர்வைத் தன் உதவி இயக்குநர்களுக்கும் கடத்தவேண்டும் என்று சுற்றுப்பயணம் கிளம்பியிருக்கிறாராம். ஜீவா இப்படத்தில் வித்தியாசமான கெட்டப்பில் தோன்றவிருப்பதால் அதற்காகத் தாடியும் நிறைய முடியும் வளர்க்க வேண்டியிருக்கிறது, அந்த கேப்பில் பயணத்தை முடித்துவிட்டுத் திரும்புவதுதான் திட்டமாம். நாடோடிகள்! பாலிவுட்டிலும் சர்வதேசத் திரைப்படங்களிலும் தனக்கெனத் தனி இடத்தைப் பிடித்துப் புகழ்பெற்ற நடிகர் இர்ஃபான் கான். ‘லைஃப் ஆஃப் பை’, ‘லன்ச் பாக்ஸ்’ படங்களில் நடித்த இவர், தற்போது உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு கேன்சர், மூளைக்காய்ச்சல் என வெவ்வேறு வதந்திகள் கிளம்பின. இது குறித்து இர்ஃபான்கான் ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் ஒன்றைப் பதிவு செய்திருந்தார். ‘எனக்குச் சில உடல்நலக்கோளாறுகள் இருப்பது உண்மைதான், சீக்கிரமே குணமடைந்து மீண்டும் நடிப்புப் பயணத்தைத் தொடருவேன்’ என்று பதிவிட, அவருக்கு ஆதரவாக இந்தியத் திரையுலகப் பிரபலங்களும் ரசிகர்களும் ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர். மீண்டு வாருங்கள் இர்ஃபான்! இந்த ஆண்டுக்கான சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருதினை வென்றவர் பிரான்ஸிஸ் மெக் டார்மன்ட். விருதுக்குப் பிறகு நடந்த விருந்து நிகழ்வில் அவரிடம் இருந்த விருதினை யாரோ திருடிச்சென்றுவிட பரபரப்பானது ஆஸ்கர் டீம். நல்லவேளையாக சில மணிநேரத்தில் டிராபியை மீட்டு மெக்டார்மன்டிடமே சேர்த்திருக்கிறது அமெரிக்கக் காவல்துறை. டிராபியை எடுத்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டவரோ `நான் அப்பாவி, டேபிள் மேலே இது இருந்துதுனு எடுத்து செல்ஃபி எடுத்துக்கிட்டிருந்தேன், அதுக்குள்ள அந்தம்மா ஆர்ப்பாட்டம் பண்ணி போலீஸ் வரைக்கும் போய்ட்டாங்க’’ என்று வாக்குமூலம் கொடுக்க, ஆஸ்கர் கலகலப்பில் இதுதான் ஹைலைட்! செல்ஃபிமேனியா! ஆழ்கடல் அகழ்வாராய்ச்சியில் ஈடுபட்டு வருபவர் பில் வாரன் என்ற அமெரிக்கர். கடலில் மூழ்கியவற்றைத் தேடிக் கண்டுபிடிப்பதில் கில்லாடி! கடலுக்குள் பெட்டியில் வைத்து வீசப்பட்ட ஒசாமாவின் உடலை, கடந்த சில ஆண்டுகளாகத் தேடிவருகிறார். இதற்காக சி.ஐ.ஏ தன்னைக் கொல்லக்கூடும் என அச்சத்திலும் இருக்கிறார். சீக்கிரமே ஒசாமாவின் உடலைக் கண்டுபிடித்துவிட்டு, அடுத்து இந்தியப்பெருங்கடலில் மலேசிய விமானத்தையும் தேடிக் கண்டுபிடிக்கப்போவதாகச் சொல்லிப் பரபரப்பு கிளப்பியிருக்கிறார். வெளிநாட்டு வினோதன்! பல படங்களில் சிறுசிறு வேடங்களில் நடித்துவரும் பேராசிரியர் மு.ராமசாமி, இப்போது ஒரு படத்தில் நாயகனாக நடிக்கிறார். கோலிவுட்டில் ‘வல்லமை தாராயோ’ மூலம் இயக்குநராக அறிமுகமான மதுமிதா. ‘கொல கொலயா முந்திரிக்கா’ படத்திற்குப் பிறகு படங்கள் இயக்காமல் தொலைக்காட்சிப் பக்கமாக ஒதுங்கியிருந்தார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு, இப்போது அவர் இயக்கும் படம் `கே.டி என்கிற கருப்பு துரை.’ 80 வயது கிராமத்துத் தாத்தாவாக நடிக்கப்போவது மு.ராமசாமி. வாங்க தாத்தா வாங்க! போர்னோ படங்களில் நடித்து உலகப் புகழ்பெற்றவர் மியா கலிஃபா. ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளின் தொடர் மிரட்டல்களால் போர்னோ படங்களில் இனி நடிக்கப்போவதில்லை என அறிவித்ததுதான் இணையத்தில் சென்ற வார வைரல் செய்தி. இனி விளையாட்டுப் போட்டிகளின் தொகுப்பாளினியாக மட்டுமே வாழ்க்கையைத் தொடரப்போவதாக அறிவித்திருக்கிறார் மியா. மாற்றம்! ‘நாச்சியார்’ படத்தைப் பார்த்த பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் போன் செய்து, `இந்தியில ஒரு படம் பண்ணலாம். எப்போ கால்ஷீட்?’ என தேதி கேட்டதில் பயங்கர உற்சாகத்தில் இருக்கிறார் ஜிவிபி. ``கைல இருக்குற புராஜெக்ட்டை எல்லாம் சீக்கிரமே முடிச்சிட்டு வந்துடுறேன்’’ என்று சொல்லிவிட்டு இப்போது பரபரப்பாக நடித்துக்கொண்டிருக்கிறார். நீ கலக்கு மச்சான்!
“ஹேய்…! சரிதான் அந்தப்பக்கம் போ ஷர்வே! நீ இப்படித் தான் நல்ல பிள்ளைப் போலக் கெஞ்சுவ. அப்புறம் திரும்ப உன் புத்தியைக் காட்டுவ. இந்த முறை உன்கிட்ட நான் ஏமாறவே மாட்டேன்…” என்று ஷர்வஜித் ஷர்வே என்று அவன் கேலியாக அழைக்கும் அவனின் தங்கை ஷர்வேதிகாவுடன் வாக்குவாதத்தில் இருந்தான். அண்ணனின் மறுப்பில் சுறுசுறுவெனக் கோபம் ஏற, தன் கைகள் இரண்டையும் இடுப்பில் வைத்துக் கொண்டு கண்ணைச் சுருக்கி விழிகளை மட்டும் உயர்த்திப் பார்த்து ஷர்வாவை முறைத்துப் பார்த்தாள். தங்கையின் முறைப்பில் ஷர்வாவிற்குச் சிரிப்பு வந்தது. ஆனாலும் அதை வெளியே காட்டாமல் அடக்கியவன், அவனின் நோட்டில் எழுதுவது போலக் குனிந்து கொண்டான். தன்னைக் கண்டு கொள்ளாத கோபத்தில் கடுப்படைந்தவள் “ஹோய் வாஜி! முடியுமா, முடியாதா?” என்று அதிகாரமாகக் கேட்டாள். அவளின் அதிகாரத்தில் பட்டென நிமிர்ந்தவன் “நீ வாஜினு சொன்னதுக்காகவே செய்ய முடியாது போடி…!” என்றான். “நீ மட்டும் என்னை ஷர்வே கூப்பிடுற? நீ ஷர்வே சொன்னா நான் வாஜி தான் சொல்லுவேன்…” “நீயும் என்னை வாஜி சொல்றதை நிப்பாட்டு. இல்லனா ஷர்வேனு தான் கூப்பிடுவேன்…” “இப்ப இந்தப் பேரா முக்கியம்?” “எனக்கு இது தான் முக்கியம்…” என ஷர்வா சொல்லவும், பதில் சொல்லாமல் மீண்டும் முறைக்க ஆரம்பித்தாள். “என்ன? என்னா முறைப்புங்குறேன்? நீ முறைச்சா நான் பயந்துருவேனா? அம்மா ஷர்வானு கூப்பிடுறாங்க. அப்பா ஜித்துனு கூப்பிடுறாங்க. நீ மட்டும் என்னை வாஜினு கூப்பிடுற. நீ என்னை அப்படிக் கூப்பிட போய்த் தானே நான் உன்னை ஷர்வேனு கூப்பிட ஆரம்பிச்சேன். நீ முதலில் என் பேரை சரியா கூப்பிடு. மத்ததெல்லாம் அப்புறம் பார்க்கலாம்…” என்றான். “என்ன அண்ணா நீ? எல்லாரும் கூப்பிடுற மாதிரியே நானும் கூப்பிட்டா என் கெத்து என்ன ஆகுறது? நான் இப்படித்தான் கூப்பிடுவேன். நீ என்ன சொன்னாலும் மாத்திக்க மாட்டேன். இப்ப அந்தப் பேச்சை விடு! நான் கேட்ட விஷயத்துக்கு வா! எல்லாரும் பெஸ்ட்டா செய்துட்டு வருவாங்க. நான் மட்டும் எப்படி மொக்கையா செய்துட்டுப் போறது? நீ ஹெல்ப் பண்ணினா பெஸ்ட்டா வரும் தானே ? இந்த ஒரு முறை செய்து கொடுத்திரு. அடுத்த முறை நானே செய்ய முயற்சி பண்றேன்…” என்றவளை முறைத்துப் பார்த்தான். “இப்போ எதுக்கு முறைக்கிறண்ணா?” “போன முறையும் நீ இதே தான் சொன்னதா ஞாபகம். இப்பயும் வார்த்தை மாறாம அதையே சொல்ற?” என்று கடுப்புடன் கேட்டான். “உன் தங்கச்சியாச்சே. அதான் அன்னைக்கு ஒன்னு பேசாம, இன்னைக்கு ஒன்னு பேசாம என்னைக்கும் ஒரே போலப் பேசுறேன்…” நல்ல பிள்ளையாக முகத்தை வைத்துக் கொண்டு சொன்னாள். “ஜோக்கு? ஆனா எனக்குச் சிரிப்பு வரல. போ! போய் ப்ராஜெக்ட் பண்ணு! நான் வந்து ஹெல்ப் பண்ணுவேன்னு நினைக்காதே! இந்த முறை நீயாகத்தான் உன் ப்ராஜெட்டை செய்தாகணும்…” என்று சிறிது கண்டிப்புடனே சொன்னான். “ஐயோ…! என்ன அண்ணா இப்படிச் சொல்ற?” என்று சிணுங்கினாள். அதற்கு ஷர்வா மேலும் ஏதோ சொல்ல வர, அப்பொழுது இருவரின் பேச்சையும் நிறுத்தும் வகையில் “ஐயோ…! ரெண்டு பேரும் வழக்காடுறதை நிறுத்துறீங்களா? என்னை நிம்மதியா தூங்க விடுங்க…!” என்று இன்னொரு குரல் வர அண்ணனும், தங்கையும் தங்கள் பேச்சை நிறுத்திவிட்டு திரும்பி படுத்து இருந்தவனை இருவரும் சேர்ந்து முறைத்தார்கள். “டேய்…! உனக்கு என்னடா எந்த நேரம் பார்த்தாலும் உறக்கம் கேட்குது? ஒழுங்கா நீயும் எழுந்து படி. படிக்கணும்னு கொஞ்சம் கூட உனக்கு எண்ணமே இருக்க மாட்டீங்குது. படிப்ப பத்தி பேசுற எங்களையும் பேச வேண்டாம்னு சொல்ற…!” என்று கடுப்புடன் மிரட்டினான் ஷர்வஜித். “போண்ணா…! சும்மா படி படின்னு சொல்லிக்கிட்டு. நான் கொஞ்ச நேரம் தூங்குறேன். அப்புறம் எழுந்து படிக்கிறேன்…” என்றான் ஷர்வஜித்தின் தம்பியும், ஷர்வேதிகாவின் அண்ணனுமான சபரீஸ்வரன். “அப்புறம்னா எப்போ? இப்ப மணி எட்டு இன்னும் கொஞ்ச நேரத்தில் எல்லாம் சாப்பிட்டுப் படுக்கப் போய்ருவோம். அதுக்குப் பிறகு நீ நைட் எல்லாம் உட்கார்ந்து படிப்பியா என்ன? இப்போ எழுந்து படிக்கலைனா உதை விழும். படவா…!” என்று ஷர்வா அதட்ட, “டேய் அண்ணா…! ஏன்டா என்னை இப்படிக் கொடுமை பண்ற? அப்பாவும், அம்மாவும் தான் படி படினு நச்சரிக்கிறாங்கனா, நீயுமா? ஸ்கூல் படிக்கும் போது தான் இப்ப படிச்சா நீங்க பின்னாடி ஜாலியா இருக்கலாம்னு எல்லாரும் படிக்க வைச்சீங்க. சரி காலேஜ் போய் ஜாலியா இருக்கலாம்னு கனவு கண்டுட்டு வந்தா இங்கயும் எக்ஸாம், செமஸ்டர், அசைன்மெண்ட்னு உயிரை எடுக்கிறாங்க. அதை எல்லாம் கொஞ்ச நேரத்துக்கு நினைக்காமல் நிம்மதியா தூங்கலாம்னு பார்த்தா வீட்டிலும் படிக்கச் சொல்லி உயிரை வாங்குறீங்க. அடுத்து வேலைக்குப் போனா வேலை செய்யச் சொல்லி ஆஃபீஸ்ல ஒரு ஆள் உயிரை எடுப்பான். எப்போ தான் மனுஷன் சந்தோஷமா இருக்கிறது?” என்று புலம்பி தள்ளிய படி படுக்கை முழுவதும் உருண்டு வந்தான். “இங்க பாருண்ணா, ஒரு பிராஜெக்ட் செய்யாததுக்கு என்னை எப்படித் திட்டின? இந்த அண்ணாவை பாரு. காலையில் இருந்து மூணு மணி வரை காலேஜ் போறேன்னு சொல்லிட்டு அங்க உட்கார்ந்து பெஞ்சை தேஞ்சுட்டு வந்தான். சாயந்திர டிபன் நல்லா மொக்கிட்டு அவன் பிரண்ட்ஸ் கூட விளையாட போறேன்னு போய்ட்டு ஏழு மணிக்கு தான் வந்தான். வந்து கொஞ்ச நேரம் படுத்துக்குறேன்னு சொல்லிட்டு ஒரு மணி நேரத்தை ஓட்டிட்டான். இப்போ அம்மா சாப்பிட கூப்பிடவும் சாப்பிட்டு வந்து தின்னது தூக்கம் வருதுன்னு தூங்கிருவான். அப்புறம் விடிஞ்சு காலேஜ் போக அரைமணி நேரம் இருக்குறப்ப எழுவான். அப்புறம் எப்ப தான் படிப்பான்? நீ அவனை எல்லாம் இன்னும் நல்லா திட்ட மாட்டீங்கிற. என்னை மட்டும் சும்மா திட்டி எப்படியாவது படிக்க வச்சுர்ற…” என்று சபரீஸ்வரன் மீது புகார் வாசித்தாள். “ஹோய் ஷர்வே…! என்னடி கொழுப்பா? ஒழுங்கா உன் வேலையை மட்டும் பார். என் விஷயத்தில் தலையிடாதேனு உனக்கு எத்தனை முறை சொல்லியிருக்கேன். இப்போ எதுக்குடி அண்ணனை உசுப்பேத்துற? ஏற்கெனவே அண்ணா என்னைத் திட்டுகிட்டு தான் இருக்கு. அது பத்தாதா உனக்கு? அந்தப் பக்கம் போயிரு! வந்தேன் அடி பிச்சுறுவேன்…” என்று படுக்கையில் இருந்து எழுந்து அமர்ந்தான். “டேய் அண்ணா…! என்னை ஷர்வேனு கூப்பிடாதே! மண்டையை உடைச்சுருவேன்…” என்று அருகில் இருந்த பேப்பர் வெயிட்டை எடுத்து எறிய போனாள். அதை வேகமாகத் தடுத்து அவளின் கையில் இருந்து அதை வாங்கி வைத்த ஷர்வா, “வேதி பாப்பா…!” என்று அவளை அதட்டி அடக்கினான். “அப்புறம் என்னண்ணா, என்னை நீ மட்டும் தான் ஷர்வேனு கூப்பிட்டுக்கலாம். அவனைக் கூப்பிட கூடாதுனு சொல்லிருக்கேன்ல. அதைக் கேட்காம அப்படியே கூப்பிட்டா அடிக்கத் தான் தோணுது…” என்றாள் மூக்கு விடைக்க. “ஹேய்…! இது என்ன அநியாயமா இருக்கு. அண்ணன் கூப்பிட்டா தப்பில்லை. நான் கூப்பிட்டா மட்டும் தப்பா? நானும் உனக்கு அண்ணன் தானே. நானும் அப்படித்தான் கூப்பிடுவேன். ஷர்வே, ஷர்வே…” என்று அவளை வம்பிழுத்தான். “இங்க பாருண்ணா, திரும்பத் திரும்ப வேணும்னே வம்பிழுக்கின்றான். இதைப் பார்த்துட்டு என்னைச் சும்மா இருக்கச் சொல்றியா? ஒழுங்கா அவனை வாயை மூடச் சொல்லு! இல்லைன்னா இன்னைக்கு அவன் மண்டை உடைவது உறுதி…” என்றாள். “நான் அப்படித் தான்டி கூப்பிடுவேன் ஷர்வே…” என்று சபரீஷ் மீண்டும் சொல்ல, “டேய்…!” என்று அவனை அடிக்க ஓடினாள். “என்ன நடக்குது இங்கே?” என்று வாயிலில் இருந்து கேட்ட அதிகார குரலில் அப்படியே நின்றவள் திரும்பி பார்த்தாள். ஷர்வாவும், சபரீஷும் கூடத் தங்கள் இருக்கையில் இருந்து எழுந்து அதிர்ச்சியுடன் வாயிலை பார்த்தார்கள். அங்கே பிள்ளைகள் மூவரையும் முறைத்தபடி நின்று கொண்டிருந்தார் அவர்களின் தந்தை சுகுமாரன். தந்தையைப் பயந்த முகத்துடன் சில நிமிடங்கள் பார்த்த பிள்ளைகள் பின்பு சட்டெனச் சத்தம் போட்டு சிரித்து விட்டனர். “டேய்…! நான் முறைக்கிறேன்டா, பயப்படுங்க…” என்று கெஞ்சினார் சுகுமாரன். அவர் அப்படிச் சொன்னதும் இன்னும் சத்தம் போட்டு மூவரும் சிரிக்க, அவர்களுடன் தானும் சிரித்தார். நால்வரின் சத்தமும் கீழே வரை கேட்க, “என்ன அங்கே சத்தம்?” என்று அதட்டல் கீழே இருந்து வர நால்வரின் வாயும் பட்டென மூடிக் கொண்டது. “இதோ பசங்களைச் சாப்பிட கூப்பிட்டு வர்றேன்மா?” என்று கீழே பார்த்து குரல் கொடுத்த சுகுமாரன் அறைக்குள் வந்து, “ஏன்டா, உங்க அம்மா சத்தம் கேட்டா கூடக் கப்சிப் ஆகிடுவீங்க. நான் முறைச்சா சிரிக்கிறீங்க? அப்பான்னு கொஞ்சமாவது பயம் இருக்கா?” என்று கேட்டார். அவர் அருகில் வந்து அவரின் தோளின் மீது உரிமையுடன் கை போட்டுக் கொண்ட ஷர்வேதிகா “எங்க ஃபிரண்டை பார்த்து நாங்க ஏன் பயப்படணும்? உங்க முறைப்பைப் பார்த்தா எங்களுக்குச் சிரிப்பு தான் வருது. நான் முறைக்கிறேன்னு நீங்களா சொன்னா தான் எங்களுக்கே தெரியுது. அப்படி ஒரு லுக்கு வச்சுகிட்டு, நீங்க மொறைச்சா எங்களுக்குச் சிரிப்பு வராமல் என்ன செய்யும்?” என்று கேட்டாள். அவளைப் போலவே அவரின் இன்னொரு பக்கம் வந்து நின்று அவரின் தோளில் கை போட்டுக் கொண்ட சபரீஷ் “முறைக்கிறது எப்படின்னு அம்மாகிட்ட பாடம் படிச்சுட்டு வாங்கப்பா. அம்மா அளவுக்கெல்லாம் உங்களுக்கு முறைக்கத் தெரியல…” என்றான் கேலியாக. ஷர்வா அவர்கள் இருவரும் சொல்வதை ஆமோதிப்பது போலப் புன்னகையுடன் நின்றிருந்தான். “என்னப்பா? நீ எதுவும் என்னைக் கேலி செய்யலையா?” என்று சுகுமாரன் கேட்க, “நான் தனியா வேற உங்களை டேமேஜ் பண்ணனுமா பா? அதான் உங்களை நீங்களே டேமேஜ் பண்ணிப்பீங்களே…” என்று நமட்டு சிரிப்புடன் அவரை வாரினான். தன்னைக் கேலி செய்து சிரிக்கும் தன் மூன்று பிள்ளைகளையும் வாஞ்சையுடன் பார்த்தார் சுகுமாரன். தனியாகத் தொழில் நடத்தும் அளவிற்கு நல்ல திறமையும், சாதுர்த்தியமும் இருந்தாலும் வீடு, மனைவி, பிள்ளைகள் என்று வந்துவிட்டால் மிகவும் மென்மையாக மாறி விடுவார். வீட்டில் அவரின் அதட்டல், உருட்டல் எதுவும் இருக்காது. பிள்ளைகளிடம் அன்பை செலுத்தியும் அரவணைத்துமே அவர்களை வழிநடத்த கூடியவர். பிள்ளைகள் எதுவும் தவறு செய்தால் பொறுமையாகப் பேசி எடுத்துரைப்பாரே தவிர, திட்டவோ, அடிக்கவோ என்றும் அவர் முயன்றதில்லை. அவரின் அக்குணத்தாலேயே மூன்று பிள்ளைகளுடனும் தோழமையுடன் பழகி வந்தார். இவர் இப்படி இருக்க, எப்பொழுதும் கொஞ்சம் தைரியமான பெண்மணியான சந்திராவிற்கு அவரின் மென்மையான குணமும் பிடித்திருந்தாலும் பிள்ளைகள் தவறான வழிக்குச் செல்லாமல் இருக்க வீட்டில் ஒருவராவது மிகவும் கண்டிப்புடன் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் சுகுமாரனுக்கும் சேர்த்து தன் கண்டிப்பை காட்டி வளர்த்து வருகிறார். அவரின் கண்டிப்பினாலோ என்னவோ, பிள்ளைகள் எல்லாம் அவரிடமிருந்து கொஞ்சம் விலகியே இருப்பர். சுகுமாரனிடம் இருக்கும் அளவுக்கு நெருக்கம் இல்லை என்றாலும் சந்திராவின் கண்டிப்புடன் கலந்த அன்பு சிறிதும் குறைந்தது இல்லை. மூவரும் சிரித்துப் பேசியபடி அப்படியே சிறிது நேரம் நின்றிருக்க, “அப்பாவும், பிள்ளைகளும் கொஞ்ச ஆரம்பிச்சாச்சா? இனி நான் இருக்கிறது கண்ணுக்கே தெரியாதே! சாப்பிட வரச் சொல்லி எவ்வளவு நேரம் ஆச்சு? இன்னும் இங்க என்ன பண்றீங்க? வாங்க சாப்பிட…!” என்று மாடி ஏறி வந்து அறைக்கு வெளியே நின்று அதட்டினார் சந்திரா. சந்திராவின் அதட்டலில் நால்வரின் பேச்சும் அப்படியே நின்றுவிட, நால்வரும் ரகசியமாக ஒருவரை ஒருவர் பார்த்து கிண்டலுடன் சிரித்துக்கொண்டனர். “இதோ வந்துட்டோம் மா…!” எனச் சுகுமாரன் அடக்கத்துடன் சொல்ல, “இந்த வீட்டில் புருஷன் யாரு, பொண்டாட்டி யாருனு தெரியலைபா….!” எனக் கேலி செய்து சத்தமாகச் சிரித்தாள் ஷர்வேதிகா. அவளின் சிரிப்பைக் கண்டு சந்திரா முறைக்க, மற்ற மூன்று ஆண்மக்களும் “போச்சுடா…!” என்று மானசீகமாகத் தலையில் கை வைத்தனர்.
மீரிகம, தங்ஹோவிட்ட பிரதேசத்தில் கொள்ளையர்கள் குழுவொன்று மீது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் பஸ்ஸில் பயணித்த யுவதி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். அவர் பெந்தொட ஹம்புருகல பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய பெண் ஆவார். கொள்ளையர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில் அவர் உயிரிழந்திருக்கலாம் என நம்பப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். கொழும்பு – கண்டி பிரதான வீதியில் மீரிகம – தங்கோவிட்ட சந்தியில் இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் இடம்பெற்றுள்ளது. இன்று (02) அதிகாலை இரண்டு மணியளவில் தங்கோவிட்ட பகுதியில் உள்ள மதுபானசாலை ஒன்றில் கொள்ளையிட சிலர் வந்துள்ளதகா பிரதேச மக்கள் பொலிஸாருக்கு தெரியபடுத்தியுள்ளனர். அதன்படி, உடனடியாக சம்பவ இடத்திற்கு பொலிஸார் சென்றுள்ள நிலையில், கொள்ளையர்கள் தாங்கள் வந்த காரில் தப்பிச் செல்ல முயன்றுள்ளனர். இதன்போது பொலிஸார் கொள்ளையர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். எனினும், குறித்த வீதியில் பயணித்த பேருந்தில் பயணித்த பெண் ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின் போது, ​​கஹகஸ்திகிலியவில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த பேருந்தின் பின் இருக்கையில் ஷாமலி இருந்துள்ளார். இந்துருவவில் உள்ள சுற்றுலா விடுதி ஒன்றில் பணிபுரிந்து வரும் அவர், இங்கிலாந்து பல்கலைக்கழகம் ஒன்றில் சுற்றுலா நிர்வாகத்தில் பட்டம் பெற்றவர் என தெரிவிக்கப்படுகிறது. Share Previous News Next News யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.
அதிகாரங்கள்: 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 Ezekiel-45 ►❚❚ 1 நீங்கள் சுதந்தரித்துக்கொள்ளும்படி தேசத்தைச் சீட்டுப்போட்டுப் பங்கிடும்போது, தேசத்தில் இருபத்தையாயிரங்கோல் நீளமும், பதினாயிரங்கோல் அகலமுமான பரிசுத்த பங்கைக் கர்த்தருக்கு அர்ப்பிதமாகப் பிரித்து வைக்கக்கடவீர்கள்; இது தன் சுற்றெல்லை எங்கும் பரிசுத்தமாயிருக்கும். 2 இதிலே பரிசுத்த ஸ்தலத்துக்கென்று ஐந்நூறு கோல் நீளமும் ஐந்நூறு கோல் அகலமுமான நாற்சதுரம் அளக்கப்படக்கடவது; அதற்குச் சுற்றிலும் ஐம்பது முழமான வெளிநிலம் இருக்கவேண்டும். 3 இந்த அளவு உட்பட இருபத்தையாயிரங்கோல் நீளத்தையும் பதினாயிரங்கோல் அகலத்தையும் அளப்பாயாக; அதற்குள் பரிசுத்த ஸ்தலமும் மகா பரிசுத்த ஸ்தலமும் இருக்கவேண்டும். 4 தேசத்தில் பரிசுத்த பங்காகிய இது கர்த்தருக்கு ஆராதனைசெய்யச் சேருகிறவர்களும், பரிசுத்த ஸ்தலத்தில் ஆராதனை செய்கிறவர்களுமான ஆசாரியருடையது; இது அவர்களுக்கு வீடுகளுக்கான இடமும், பரிசுத்த ஸ்தலத்துக்கு அடுத்த இடமுமாயிருக்கவேண்டும். 5 பின்னும் இருபத்தையாயிரங்கோல் நீளமும் பதினாயிரங்கோல் அகலமுமான இடம் ஆலயத்தின் பணிவிடைக்காரராகிய லேவியருடையதாயிருக்கும்; அது அவர்களுடைய காணியாட்சி; அதில் இருபது அறைவீடுகளிருக்கவேண்டும். 6 பரிசுத்த பங்காகப் படைக்கப்பட்டதற்கு எதிரே நகரத்தின் காணியாட்சியாக ஐயாயிரங்கோல் அகலத்தையும் இருபத்தையாயிரங்கோல் நீளத்தையும் அளந்து கொடுப்பீர்களாக; அது இஸ்ரவேல் வம்சத்தாரனைவருக்கும் சொந்தமாயிருக்கும். 7 பரிசுத்த பங்காகப் படைக்கப்பட்டதற்கும் நகரத்தின் காணியாட்சிக்கும் இந்தப்புறத்திலும் அந்தப்புறத்திலும், பரிசுத்த படைப்புக்குமுன்பாகவும், நகரத்தின் காணிக்குமுன்பாகவும், அதிபதியினுடைய பங்கு மேற்கிலே மேற்புறமாகவும் கிழக்கிலே கீழ்ப்புறமாகவும் இருப்பதாக; அதின் நீளம் மேல்எல்லை துவக்கிக் கீழ் எல்லைமட்டும் பங்குகளில் ஒவ்வொன்றுக்கும் எதிராயிருக்கவேண்டும். 8 இது அவனுக்கு இஸ்ரவேலிலே காணிபூமியாக இருக்கக்கடவது; என் அதிபதிகள் இனி என் ஜனத்தை ஒடுக்காமல் தேசத்த இஸ்ரவேல் வம்சத்தாருக்கு அவர்களுடைய கோத்திரங்களுக்குத் தக்கதாக விட்டுவிடுவார்களாக. 9 கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: இஸ்ரவேலின் அதிபதிகளே, நீங்கள் செய்ததுபோதும்; நீங்கள் கொடுக்கையையும் கொள்ளையிடுதலையும் தவிர்த்து, நியாயத்தையும் நீதியையும் செய்யுங்கள்; உங்கள் உத்தண்டங்களை என் ஜனத்தைவிட்டு அகற்றுங்கள் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார். 10 சுமுத்திரையான தராசும், சுமுத்திரையான மரக்காலும், சுமுத்திரையான அளவுகுடமும் உங்களுக்கு இருக்கக்கடவது. 11 மரக்காலும் அளவுகுடமும் ஒரே அளவாயிருந்து, மரக்கால் கலத்திலே பத்தில் ஒரு பங்கும், அளவுகுடம் கலத்திலே பத்தில் ஒரு பங்கும் பிடிக்கக்கடவது; கலத்தின்படியே அதின் அளவு நிருணயிக்கப்படுவதாக. 12 சேக்கலானது இருபது கேரா; இருபது சேக்கலும் இருபத்தைந்து சேக்கலும் பதினைந்து சேக்கலும் உங்களுக்கு ஒரு இராத்தலாகும். 13 நீங்கள் செலுத்த வேண்டிய காணிக்கையாவது: ஒரு கலம் கோதுமையிலே ஒரு மரக்காலில் ஆறிலொருபங்கையும், ஒரு கலம் வாற்கோதுமையிலே ஒரு மரக்காலில் ஆறிலொரு பங்கையும் படைக்கக்கடவீர்கள். 14 அளவுகுடத்தால் அளக்கிற எண்ணெயின் கட்டளையாவது: பத்துக்குடம் பிடிக்கிற கலத்துக்குச் சரியான ஒரு ஜாடி எண்ணெயிலே பத்தில் ஒரு பங்கைப் படைப்பீர்களாக; பத்துஅளவுகுடம் ஒரு கலமாகும். 15 இஸ்ரவேல் தேசத்திலே நல்லமேய்ச்சலை மேய்கிற மந்தையிலே இரு ஆடுகளில் ஒரு ஆடும், அவர்களுடைய பாவநிவாரணத்திற்காக போஜனபலியாகவும் தகனபலியாகவும் சமாதானபலியாகவும் செலுத்தப்படக்கடவதென்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார். 16 இஸ்ரவேலின் அதிபதிக்கு முன்பாக தேசத்தின் ஜனங்கள் எல்லோரும் இந்தக் காணிக்கையைச் செலுத்தக் கடனாளிகளாயிருக்கிறார்கள். 17 இஸ்ரவேல் வம்சத்தார் கூடிவரக் குறிக்கப்பட்ட சகல பண்டிகைகளிலும் மாதப்பிறப்புகளிலும் ஓய்வுநாட்களிலும் தகனபலிகளையும் போஜனபலிகளையும் பானபலிகளையும் செலுத்துவது அதிபதியின்மேல் சுமந்த கடனாயிருக்கும்; அவன் இஸ்ரவேல் வம்சத்தாருக்காகப் பாவநிவாரணம்பண்ணும்படிக்குப் பாவநிவாரணபலியையும் போஜனபலியையும் தகனபலியையும் சமாதானபலியையும் படைப்பானாக. 18 கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: முதலாம்மாதம் முதலாந்தேதியிலே நீ பழுதற்ற ஒரு காளையைக் கொண்டுவந்து, பரிசுத்தஸ்தலத்துக்குப் பாவநிவிர்த்தி செய்வாயாக. 19 பாவநிவாரணபலியின் இரத்தத்திலே கொஞ்சம் ஆசாரியன் எடுத்து, ஆலயத்தின் வாசல் நிலைகளிலும், பலிபீடத்துச் சட்டத்தின் நாலு கோடிகளிலும், உட்பிராகாரத்தின வாசல்நிலைகளிலும் பூசக்கடவன். 20 பிழைசெய்தவனுக்காகவும், அறியாமல் தப்பிதம் செய்தவனுக்காகவும் அந்தப்பிரகாரமாக ஏழாந்தேதியிலும் செய்வாயாக; இவ்விதமாய் ஆலயத்துக்குப் பாவநிவர்த்தி செய்வாயாக. 21 முதலாம் மாதம் பதினாலாந்தேதியிலே புளிப்பில்லாத அப்பம் புசிக்கப்படுகிற ஏழுநாள் பண்டிகையாகிய பஸ்கா ஆரம்பமாகும். 22 அந்நாளிலே அதிபதி தன்னிமித்தமும் தேசத்து எல்லா ஜனங்களிநிமித்தமும் பாவநிவாரணத்துக்காக ஒரு காளையைப் படைப்பானாக. 23 ஏழுநாள் பண்டிகையில், அவன் அந்த ஏழுநாளும் தினந்தோறும் கர்த்தருக்குத் தகனபலியாகப் பழுதற்ற ஏழு காளைகளையும் ஏழு ஆட்டுக்கடாக்களையும், பாநிவாரணபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவையும் தினந்தோறும் படைப்பானாக. 24 ஒவ்வொரு காளையோடே ஒரு மரக்கால் மாவும் ஒவ்வொரு ஆட்டுக்கடாவோடே ஒரு மரக்கால் மாவுமான போஜனபலியையும் ஒவ்வொரு மரக்கால் மாவோடே ஒருபடி எண்ணெயையும் படைப்பானாக. 25 ஏழாம் மாதம் பதினைந்தாந்தேதியில் ஆரம்பமாகிற பண்டிகையிலே அவன் அப்படியே ஏழுநாளும் அதற்குச் சரியானபிரகாரமாகப் பாவநிவாரணபலிகளையும் தகனபலிகளையும் போஜனபலிகளையும், எண்ணெயையும் படைக்கக்கடவன்.
புரட்டாசி மாதத்தில் நான்கு சனிக்கிழமை நிறைவு பெற்றதை தொடர்ந்து காசிமேடு மீன் சந்தை மீண்டும் களைகட்டியுள்ளது. குறிப்பாக 4 சனிக்கிழமைகளில் இந்துக்கள் விரதம் கடைப்பிடிப்பதால் இறைச்சி விற்பனை என்பது மந்தமாகவே இருந்து வந்தது. இந்நிலையில் மீன்களை வாங்குவதற்காகவே மீன் பிரியர்கள் காசிமேடு மீன் சந்தையில் குவிந்துள்ளனர். அதன் படி, வஞ்சிரம் ரூ.600-ஆகவும், பெரிய அளவிலான வஞ்சிரம் 1000 முதல் 1500 வரையில் விற்பனை செய்யப்படுகிறது. அதே போல் வவ்வால் ரூ.500 முதல் ரூ.600 வரையிலும், சங்கரா ரூ.200 ஆகவும், நெத்திலி ரூ.200 முதல் ரூ.400 வரையில் விற்பனை செய்யப்படுகிறது. இதனை தொடர்ந்து தோல்பாறை ரூ.600 என்றும் காரகோழி, இறால், நண்டு போன்றவைகள் குறைந்த விலையில், அதிகளவு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் மற்ற மீன் சந்தைகளில் மீன்களின் வரத்து குறைவாக காணப்படுவதனால், அதிகளவில் ஏலத்தில் வாங்கி வியாபாரிகள் விற்பனை செய்கின்றனர். Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
و حَدَّثَنِي ‏ ‏عُبَيْدُ اللَّهِ بْنُ عُمَرَ الْقَوَارِيرِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الْوَارِثِ بْنُ سَعِيدٍ ‏ ‏وَعَبْدُ الْوَهَّابِ بْنُ عَبْدِ الْمَجِيدِ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏أَيُّوبُ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي قِلَابَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَنَسٍ ‏ ‏قَالَ ‏ ‏أُمِرَ ‏ ‏بِلَالٌ ‏ ‏أَنْ ‏ ‏يَشْفَعَ ‏ ‏الْأَذَانَ وَيُوتِرَ الْإِقَامَةَ ‏ தொழுகை அழைப்பு (அதான்) சொற்களை இரட்டைப்படையாகவும் தொழுகை அறிவிப்பு (இகாமத்) சொற்களை ஒற்றைப்படையாகவும் கூறும்படி பிலால் (ரலி) அவர்கள் கட்டளை இடப்பட்டார்கள். அறிவிப்பாளர் : அனஸ் (ரலி) அத்தியாயம்: 4, பாடம்: 02, ஹதீஸ் எண்: 570 و حَدَّثَنَا ‏ ‏إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ الْحَنْظَلِيُّ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏عَبْدُ الْوَهَّابِ الثَّقَفِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏خَالِدٌ الْحَذَّاءُ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي قِلَابَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَنَسِ بْنِ مَالِكٍ ‏ ‏قَالَ ‏ ‏ذَكَرُوا أَنْ يُعْلِمُوا وَقْتَ الصَّلَاةِ بِشَيْءٍ يَعْرِفُونَهُ فَذَكَرُوا أَنْ يُنَوِّرُوا نَارًا أَوْ يَضْرِبُوا نَاقُوسًا ‏ ‏فَأُمِرَ ‏ ‏بِلَالٌ ‏ ‏أَنْ ‏ ‏يَشْفَعَ ‏ ‏الْأَذَانَ وَيُوتِرَ الْإِقَامَةَ ‏ ‏و حَدَّثَنِي ‏ ‏مُحَمَّدُ بْنُ حَاتِمٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏بَهْزٌ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏وُهَيْبٌ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏خَالِدٌ الْحَذَّاءُ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏لَمَّا كَثُرَ النَّاسُ ذَكَرُوا أَنْ يُعْلِمُوا بِمِثْلِ حَدِيثِ ‏ ‏الثَّقَفِيِّ ‏ ‏غَيْرَ أَنَّهُ قَالَ أَنْ يُورُوا نَارًا ‏ மக்கள் புரிந்து கொள்ளும் வகையில் தொழுகை நேரத்தை அறிவிக்கும் முறையை உருவாக்குவது குறித்து நபித்தோழர்கள் கலந்து பேசினர். அப்போது சிலர், “நெருப்பு மூட்டுவோம்; அல்லது மணி அடிப்போம்” என்றனர். (இரண்டும் யூத-கிறிஸ்தவக் கலாச்சாரம் என்பதால் புதிய முறையாக ‘அதான்’ எனும்) தொழுகைக்கான அழைப்புச் சொற்களை இரட்டைப்படையாகவும் இகாமத் எனும் தொழுகை அறிவிப்புச் சொற்களை ஒற்றைப்படையாகவும் கூறும்படி பிலால் (ரலி) அவர்கள் கட்டளை இடப்பட்டார்கள். அறிவிப்பாளர் : அனஸ் பின் மாலிக் (ரலி) குறிப்பு : மேற்காணும் ஹதீஸ், உஹைப் (ரஹ்) மற்றும் காலித் அல்-ஹத்தா வழி அறிவிப்பில், “முஸ்லிம்களின் எண்ணிக்கை அதிகமானபோது …” எனத் தொடங்குகிறது. அதில், “நெருப்பு மூட்டுவோம்” எனும் ஆலோசனை இடம்பெறவில்லை. அத்தியாயம்: 4, பாடம்: 02, ஹதீஸ் எண்: 569 حَدَّثَنَا ‏ ‏خَلَفُ بْنُ هِشَامٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏حَمَّادُ بْنُ زَيْدٍ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏إِسْمَعِيلُ ابْنُ عُلَيَّةَ ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏خَالِدٍ الْحَذَّاءِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي قِلَابَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَنَسٍ ‏ ‏قَالَ ‏ ‏أُمِرَ ‏ ‏بِلَالٌ ‏ ‏أَنْ يَشْفَعَ الْأَذَانَ وَيُوتِرَ الْإِقَامَةَ ‏ ‏زَادَ ‏ ‏يَحْيَى ‏ ‏فِي حَدِيثِهِ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عُلَيَّةَ ‏ ‏فَحَدَّثْتُ بِهِ ‏ ‏أَيُّوبَ ‏ ‏فَقَالَ ‏ ‏إِلَّا الْإِقَامَةَ ‏ தொழுகை அழைப்பு (அதானில்) இரட்டையாகவும் தொழுகை அறிவிப்பு (இகாமத்தில்) ஒற்றையாகவும் சொற்றொடரை அமைத்துக் கொள்ளுமாறு பிலால் (ரலி) கட்டளை இடப்பட்டார்கள். அறிவிப்பாளர் : அனஸ் (ரலி) குறிப்பு : யஹ்யா பின் யஹ்யா (ரஹ்) அவர்களின் அறிவிப்பில், ” (இகாமத்தில் சொல்லப்படும்) ‘கத் காமத்திஸ் ஸலாஹ்’ என்பதைத் தவிர” என்று அதிகப்படியாக இடம்பெற்றுள்ளது. மேலும் காண்பி... ↓ விரும்பும் பாடம் செல்ல… ↓ விரும்பும் பாடம் செல்ல… Select Category 43.37 நபி (ஸல்) அவர்களைக் கண்ணியப்படுத்துவதும் … (8) 43.36 நபி (ஸல்) அவர்களைப் பின்பற்ற வேண்டியது (முஸ்லிம்களின்) கட்டாயக் கடமையாகும் (1) 43.35 நபி (ஸல்) அவர்களின் அல்லாஹ்வைப் பற்றிய அறிவும் அவனைப் பற்றிய கடுமையான அச்சமும் (2) 43.34 நபி (ஸல்) அவர்களின் பெயர்கள் (3) 43.33 நபி (ஸல்) மக்காவிலும் மதீனாவிலும் எத்தனை ஆண்டுகள் வாழ்ந்தார்கள்? (8) 43.32 நபி (ஸல்) இறந்தபோது அவர்களுக்கு வயது எத்தனை? (2) 43.31 நபி (ஸல்) அவர்களின் உடலமைப்பு; நபியாக அனுப்பப்பெற்றது; அவர்களின் வயது (1) 43.30 நபி (ஸல்) உடலில் நபித்துவ முத்திரை … (3) 43.29 நபி (ஸல்) அவர்களின் தலைநரைமுடி (10) 43.28 நபி (ஸல்) அவர்களின் வெண்ணிறமும் களையான முகமும் (2) 43.27 நபி (ஸல்) அவர்களின் வாய், கண்கள், குதிகால்கள் ஆகியவை (1) 43.26 நபி (ஸல்) அவர்களது தலைமுடியின் தன்மை (3) 43.25 நபி (ஸல்) அவர்களின் உருவத் தோற்றம் … (3) 43.24 நபி (ஸல்) தமது தலைமுடியை … (1) 43.23 நபி (ஸல்) அவர்களுக்கு வேத அறிவிப்பு வரும்போது … (4) 43.22 நபி (ஸல்) அவர்களது வியர்வையின் நறுமணமும் அதன்மூலம் வளம் ஏற்பட்டதும் (3) 43.21 நபி (ஸல்) அவர்களின் மேனியில் கமழ்ந்த நறுமணம் … (3) 43.20 நபி (ஸல்) பாவங்களை விட்டு வெகு தொலைவில் விலகியிருந்தது … (3) 43.19 நபி (ஸல்), மக்களுடன் நெருங்கிப் பழகியதும் அவர்களிடமிருந்து மக்கள் வளம் பெற்றதும் (3) 43.18 மனைவியர்மீது நபி (ஸல்) காட்டிய அன்பும் … (4) 43.17 நபி (ஸல்) அவர்களின் புன்னகையும் அழகிய உறவாடலும் (1) 43.16 நபி (ஸல்) அவர்களின் நாண மிகுதி (2) 43.15 நபி (ஸல்) குழந்தைகள் மீதும் குடும்பத்தார் மீதும் காட்டிய அன்பு … (5) 43.14 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வேண்டப்பட்ட எந்த ஒன்றுக்கும் அவர்கள் “இல்லை” என்று சொன்னதேயில்லை … (5) 43.13 அல்லாஹ்வின் தூதர் (ஸல்), மக்களிலேயே மிகவும் அழகான … (5) 43.12 மக்களிலேயே நபி (ஸல்), தொடர்ந்து வீசும் (மழைக்) காற்றைவிட … (1) 43.11 நபி (ஸல்) அவர்களின் வீரமும் அறப்போருக்காக அவர்கள் முன்னே சென்றதும் (2) 43.10 உஹுதுப் போர் நாளில் நபி (ஸல்) … (2) 43.9 நம் நபி (ஸல்) அவர்களுக்கு (மறுமையில் ‘அல்கவ்ஸர்’) தடாகம் உண்டு … (20) 43.8 உயர்ந்தோன் அல்லாஹ் ஒரு சமுதாயத்தின்மீது அருள் புரிய நாடினால் … (1) 43.7 நபி (ஸல்), இறுதி இறைத் தூதர் என்பது பற்றிய குறிப்பு (4) 43.6 நபி (ஸல்), தம் சமுதாயத்தார் மீது கொண்டிருந்த பரிவும் … (4) 43.5 நபி (ஸல்), நேர்வழியுடனும் ஞானத்துடனும் அனுப்பப் பெற்றதற்கான உவமை (1) 43.4 அல்லாஹ்வையே முழுமையாக நபி (ஸல்) சார்ந்திருந்ததும் … (1) 43.3 நபி (ஸல்) அவர்களின் அற்புதங்கள் (7) 43.2 எல்லாப் படைப்புகளையும்விட நம் நபி (ஸல்) அவர்களின் சிறப்பு (1) 43.1 நபி (ஸல்) அவர்களின் தலைமுறையின் சிறப்பும் … (2) 42.4 நபி (ஸல்) கண்ட கனவு (6) 42.3 கனவுக்கு விளக்கமளித்தல் (1) 42.2 ஷைத்தான் கனவில் விளையாடியது குறித்து … (3) 42.1 கனவில் என்னைக் கண்டவர் … (4) 42.01 கனவுகள் (11) 41.2 பகடை விளையாட்டு, தடை செய்யப்பட்டதாகும் (1) 41.1 கவிதைகள் (9) 40.5 நறுமணப் பொருட்களில் மிகவும் சிறந்த கஸ்தூரியைப் பயன்படுத்துவது … (4) 40.4 ஒருவர், ‘கபுஸத் நஃப்ஸீ’ (என் மனம் அசுத்தமாகிவிட்டது) எனும் சொல்லை … (2) 40.3 ‘அப்து’ (அடிமை ஆண்), ‘அமத்து’ (அடிமைப் பெண்), ‘மவ்லா’/’ஸய்யித்’ (அடிமையின் உரிமையாளர்) ஆகிய சொற்களின் சட்டம் (3) 40.2 திராட்சையை, “கர்மு / கண்ணியம்” என்று பெயரிட்டழைப்பது … (7) 40.1 காலத்தை ஏசுவதற்குத் தடை (5) 39.41 விலங்குகளுக்கு நீர் புகட்டுவதின், உணவளிப்பதின் சிறப்பு (3) 39.40 பூனைகளைக் கொல்வதற்குத் தடை (2) 39.39 எறும்புகளைக் கொல்லத் தடை (3) 39.38 பல்லியைக் கொல்வது நல்லது (5) 39.37 பாம்பு போன்ற விஷ ஜந்துகளைக் கொல்வது (13) 39.36 தொழுநோயாளிகள் போன்றோரிடம் நெருக்கம் தவிர்ப்பது (1) 39.35 சோதிடர்களிடம் செல்வதும் சோதிடம் பார்ப்பதும் (5) 39.34 பறவை சகுனம், நற்குறி, துர்குறி பற்றிய பாடம் (11) 39.33 இல்லாத சகுனங்களும் தொற்றுநோய்களும் (6) 39.32 கொள்ளைநோய், பறவை சகுனம், சோதிடம் போன்றவை (8) 39.31 தேனூட்டு மருத்துவம் (1) 39.30 ‘தல்பீனா‘, நோயாளியின் மனத்துக்கு(ம் உடலுக்கும்) தெம்பு அளிக்கக்கூடியதாகும் (1) 39.29 கருஞ்சீரக மருத்துவம் (2) 39.28 இந்தியக் கோஷ்டக் குச்சியால் சிகிச்சையளிப்பது (2) 39.27 நோயாளிக்கு வற்புறுத்தி சிகிச்சையளிப்பது … (1) 39.26 ஒவ்வொரு நோய்க்கும் மருந்து உண்டு; (நோய்க்கு) மருத்துவம் செய்துகொள்வது விரும்பத் தக்கது (17) 39.25 தொழுகையில் மனம் அலைபாயச் செய்யும் ஷைத்தானிடமிருந்து பாதுகாப்புக் கோரல் (1) 39.24 பிரார்த்திக்கும்போது வலியுள்ள இடத்தில் கையை வைப்பது (1) 39.23 குர்ஆன் வசனங்கள் மற்றும் அல்லாஹ்வைத் துதிக்கும் சொற்களால் ஓதிப்பார்ப்பதற்கு ஊதியம் பெறலாம் (2) 39.22 இறைவனுக்கு இணை கற்பிதம் இல்லாத சொற்களால் ஓதிப்பார்பது தவறில்லை (1) 39.21 கண்ணேறு, சின்னம்மை, விஷக்கடி, (தீய)பார்வை ஆகியவற்றுக்காக ஓதிப்பார்ப்பது விரும்பத் தக்கதாகும் (12) 39.20 பாதுகாப்புக் கோரும் அத்தியாயங்களால் நோயாளிக்கு ஓதிப்பார்ப்பது … (2) 39.19 நோயாளிக்கு ஓதிப்பார்ப்பது விரும்பத் தக்கதாகும் (4) 39.18 விஷம் (1) 39.17 சூனியம் (1) 39.16 நோயும் மருத்துவமும் ஓதிப்பார்த்தலும் (4) 39.15 மூன்றாமவரின் ஒப்புதலின்றி இருவர் மட்டும் இரகசியம் பேசிக்கொள்வது தடை செய்யப்பட்டதாகும் (3) 39.14 … அந்நியப் பெண்ணை, வழிசெல்லும் ஒருவர் வாகனத்தில் அமர்த்திக்கொள்ளலாம் (2) 39.13 பெண்கள் இருக்கும் இடத்திற்கு அலிகள் செல்லத் தடை (2) 39.12 அமர்ந்திருந்த இடத்திற்கு உரியவர் (1) 39.11 அமர்ந்திருக்கும் ஒருவரை எழுப்பிவிடுவது தடை செய்யப்பட்டதாகும் (4) 39.10 அவைக்கு வருபவர், அமரும் ஒழுங்கு (1) 39.9 … கெட்ட எண்ணத்தை அகற்றுவது விரும்பத் தக்கதாகும் (2) 39.8 அந்நியப் பெண்ணிடம் … தனிமையில் இருப்பது தடை செய்யப்பட்டதாகும் (3) 39.7 … பெண்கள் வெளியே செல்லலாம் (2) 39.6 உள்ளே செல்ல அனுமதியாகக் கருதுவதற்கு … (1) 39.5 சிறாருக்கு(ப் பெரியவர்கள்) முகமன் கூறுவது விரும்பத் தக்கதாகும் (2) 39.4 வேதக்காரர்களுக்கு முந்திக்கொண்டு ஸலாம் கூறுவதற்குத் தடை (7) 39.3 ஸலாத்துக்குப் பதிலுரைப்பது முஸ்லிமுக்குக் கடமை (2) 39.2 நடைபாதைகளில் அமர்வதன் ஒழுங்குகளில் … (2) 39.1 முந்தி ஸலாம் சொல்ல வேண்டியவர்கள் (1) 38.10 இயல்பான பார்வை (1) 38.9 பிறர் வீட்டில் எட்டிப் பார்ப்பது தடை செய்யப்பட்டதாகும் (5) 38.8 “யார்?“ என்று கேட்டால் … (2) 38.7 அனுமதி கோருதல் (5) 38.6 “என் அருமை மகனே!“ (2) 38.5 குழந்தை பிறந்தவுடன் இனிப்பான பொருளை மென்று அதன் வாயிலிடுவதும் … (9) 38.4 மன்னாதி மன்னன் எனப் பெயர் சூட்டிக்கொள்வது தடை செய்யப்பட்டதாகும் (2) 38.3 அருவருப்பான பெயரை அழகான பெயராக மாற்றியமைப்பது … (6) 38.2 அருவருப்பான பெயர்கள் … (4) 38.1 … விரும்பத் தகுந்த பெயர்கள் (8) 37.35 வெறும் பெருமை (2) 37.34 மெல்லிய உடையணிந்து, பிறரைத் தன்பால் ஈர்க்கும் வண்ணம் தோள்களைச் சாய்த்து ஒயிலாக நடக்கும் பெண்கள் (1) 37.33 பெண்களின் பொய் அலங்காரங்காரங்களுக்குத் தடை (10) 37.32 நடைபாதைகளில் அமர்வதற்குத் தடையும் பாதைகளுக்குரிய உரிமைகளைப் பேணுவதும் (1) 37.31 தலை முடியில் பகுதி மழித்துவிட்டு, பகுதி மழிக்காமல் விட்டுவிடுவது வெறுக்கத் தக்கதாகும் (1) 37.30 ஸகாத் / ஜிஸ்யாவுக்கான கால்நடைகளில் சூடிட்டு அடை யாளமிடலாம் (4) 37.29 விலங்குகளின் முகத்தில் அடிப்பதும் அடையாளச் சூடிடுவதும் தடை செய்யப்பட்டவை ஆகும் (3) 37.28 ஒட்டகத்தின் கழுத்தில் (திருஷ்டிக்) கயிற்று மாலை அணிவிப்பது வெறுக்கத் தக்கதாகும் (1) 37.27 பயணத்தின்போது நாயும் (ஒலியெழுப்பும்) மணியும் வெறுக்கத் தக்கவை (2) 37.26 உயிரினங்களின் உருவப் படங்களை வரைவதும் … தடை செய்யப்பட்டவை ஆகும் (21) 37.25 (நரைமுடிக்கு) சாயமிட்டுக்கொள்வது யூதர்களுக்கு மாறு செய்வதாகும் (1) 37.24 நரைமுடியில் கருப்பு நிறச் சாயமிடுவது தடை செய்யப்பட்டதாகும் (2) 37.23 ஆண்கள் (மேனியில்) குங்குமப்பூச் சாயமிட்டுக்கொள்வதற்குத் தடை (1) 37.22 மல்லாந்து படுத்துக்கொண்டு கால்மீது காலைப் போட்டுக் கொள்வதற்கு அனுமதி (1) 37.21 மல்லாந்து படுத்துக்கொண்டு கால்மீது காலைப் போட்டுக் கொள்வதற்குத் தடை (3) 37.20 தடை செய்யப்பட்ட இரு நிலைகள் (2) 37.19 காலணிகளை அணிந்து கழற்றும் முறைகள் (3) 37.18 காலணி அல்லது அது போன்றதை அணிந்துகொள்வது விரும்பத் தக்கதாகும் (1) 37.17 மோதிரம் அணிவதற்குத் தடை செய்யப்பட்ட விரல்கள் (2) 37.16 கைச் சுண்டுவிரலில் மோதிரம் அணிவது (1) 37.15 அபிசீனியக் வெள்ளிக் குமிழ் மோதிரம் (2) 37.14 மோதிரங்களை(க் கழற்றி) எறிந்த நிகழ்வு (2) 37.13 நபி (ஸல்) அவர்களின் (முத்திரை) மோதிரம் (3) 37.12 ‘முஹம்மதுர் ரசூலுல்லாஹ்’ எனும் இலச்சினை பொறிக்கப்பட்ட வெள்ளி மோதிரம் (2) 37.11 ஆண்கள் தங்க மோதிரம் அணிவதற்குத் தடை (3) 37.10 ஆடைகளை எண்ணிப் பெருமை கொண்டு, கர்வத்தோடு நடப்பதற்குத் தடை (2) 37.9 பெருமைக்காக ஆடையைத் தரையில் படும்படி இழுத்துச் செல்வதற்குத் தடை (7) 37.8 தேவைக்கு அதிகமான விரிப்புகளும் ஆடைகளும் இருப்பது விரும்பத் தக்கதன்று (1) 37.7 படுக்கை விரிப்புகளைப் பயன்படுத்த அனுமதி (2) 37.6 ஆடையில் (எளிமை,) பணிவு காட்டுவது … (5) 37.5 பருத்தி ஆடை அணிவதன் சிறப்பு (2) 37.4 ஆண்கள் செம்மஞ்சள் நிறச் சாயமிடப்பட்ட ஆடை அணிவதற்குத் தடை (5) 37.3 தோல் உபாதைகள் இருந்தால் ஆண்கள் பட்டாடை அணியலாம் (3) 37.2 பொன் மோதிரம் மற்றும் பட்டாடை அணிவது ஆண்களுக்குத் தடை; பெண்களுக்கு அனுமதி (20) 37.1 பொன் / வெள்ளிப் பாத்திரங்களைப் பயன்படுத்துவது ஆண்களுக்கும் பெண்களுக்கும் தடை (2) 36.35 உணவைக் குறை சொல்லவேண்டாம் (2) 36.34 இறைநம்பிக்கையாளர் ஒரே குடலில் உண்பார்; இறைமறுப்பாளன் ஏழு குடல்களில் உண்பான் (5) 36.33 உணவு குறைவாக இருக்கும்போது … (4) 36.32 விருந்தினரை உபசரிப்பதும் முன்னுரிமை வழங்குவதன் சிறப்பும் (6) 36.31 வெள்ளைப் பூண்டு சாப்பிடக்கூடியதே … (2) 36.30 உணவுக் காடியின் சிறப்பும் … (4) 36.29 ‘அல்கபாஸ்’ பழங்களில் கருப்பு நிறப் பழத்தின் சிறப்பு (1) 36.28 உணவுக் காளானின் சிறப்பும் … (6) 36.27 மதீனத்துப் பேரீச்சம் பழங்களின் சிறப்பு (3) 36.26 குடும்பத்தாருக்காக … உணவுகளைச் சேமித்துவைத்தல் (2) 36.25 பலருடன் சேர்ந்து உண்பவர் … (2) 36.24 உணவு உண்பவர் அமரும் முறை; பணிவோடு அமர்வது விரும்பத் தக்கது (2) 36.23 பேரீச்சை செங்காய்களுடன் வெள்ளரிக்காயையும் சேர்த்து உண்பது (1) 36.22 விருந்தளிப்பவருக்காக விருந்தாளி பிரார்த்திப்பது … (1) 36.21 சுரைக் குழம்பு உண்ண அனுமதி … (2) 36.20 வீட்டு உரிமையாளரின் சம்மதம் கிடைக்கும் என்ற நம்பிக்கை இருந்தால் … (4) 36.19 விருந்துக்கு அழைக்கப்பட்டவரைத் தொடர்ந்து அழைக்கப்படாதவரும் வந்துவிட்டால் … (2) 36.18 உண்டு முடித்ததும் விரல்களைச் சூப்புவதும் உணவுத் தட்டை வழித்து உண்பதும் … (9) 36.17 வலப் பக்கத்திலிருந்து பரிமாறுதல் விரும்பத் தக்கதாகும் (4) 36.16 பாத்திரத்தினுள் (பருகும்போது) வெளியே மூன்று முறை மூச்சு விட்டுப் பருகுவது விரும்பத் தக்கதாகும் (3) 36.15 ஸம்ஸம் நீரை நின்றுகொண்டு அருந்துவது (4) 36.14 நின்றுகொண்டு அருந்துவது வெறுக்கத் தக்கதாகும் (4) 36.13 உண்பது, அருந்துவது ஆகியவற்றின் ஒழுங்குகளும் விதிமுறைகளும் (10) 36.12 இரவு நேர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் (6) 36.11 பழச்சாறுகளைப் பருகுவதும் பாத்திரங்களை மூடிவைப்பதும் (3) 36.10 (ஆட்டுப்) பால் அருந்த அனுமதி (3) 36.9 பழச்சாறுகள் (புளித்துக்) கெட்டியாகி, போதையேறாதவரை அனுமதிக்கப்பட்டவையாகும் (10) 36.8 குடிகாரன் பாவமன்னிப்புக் கோரி திருந்தாவிட்டால் … (3) 36.7 போதை தரும் ஒவ்வொரு பானமும் தடை செய்யப்பட்ட மதுவாகும் (9) 36.6 பானங்கள்-பாத்திரங்கள், தடை-தடை நீக்கம் (36) 36.5 பேரீச்சம் பழம், உலர் திராட்சைக் கலவை ஊறல் வெறுக்கத் தக்கதாகும் (14) 36.4 ‘மதுபானம்’ என்று சொல்லப்படுபவை (4) 36.3 மதுவை மருந்தாகப் பயன்படுத்துவதற்குத் தடை (1) 36.2 மதுபானத்தை (சமையல்) காடியாக மாற்றிப் பயன்படுத்துவதற்குத் தடை (1) 36.1 போதையூட்டும் ஒவ்வொன்றும் மதுவாகும் (9) 35.8 அல்லாஹ் அல்லாதவரின் பெயர் கூறிப் பிராணிகளை அறுப்பதற்குத் தடை (3) 35.7 தலைமுடியை, நகங்களைக் களைவதற்குத் தடை (5) 35.6 அல் ஃபரஉ வல் அத்தீரா (1) 35.5 பலி இறைச்சியை எவ்வளவு காலம் சேமித்து வைக்கலாம்? (14) 35.4 பல், நகம், எலும்பு ஆகியவை தவிர எந்தப் பொருளாலும் பிராணியை அறுக்க அனுமதி (1) 35.3 தாமே அறுப்பதும் அல்லாஹ்வின் பெயரோடு தக்பீர் கூறுவதும் விரும்பத் தக்கவை ஆகும் (3) 35.2 பலிப் பிராணியின் வயது (4) 35.1 பலி கொடுக்கப்படும் நேரம் (10) 34.12 விலங்குகளைக் கட்டிவைத்து அம்பெய்து கொல்வதற்குத் தடை (5) 34.11 … கத்தியைக் கூர்மையாகத் தீட்டிக் கொண்டு வதையற்ற முறையைக் கையாளக் கட்டளை (1) 34.10 … பயிற்சிகளை மேற்கொள்வது அனுமதிக்கப் பட்டதாகும். கல்சுண்டு விளையாட்டு வெறுக்கப்பட்டதாகும் (2) 34.9 முயல் கறி உண்ணத் தக்கது (1) 34.8 வெட்டுக்கிளி உண்ணத் தக்கது (1) 34.7 உடும்புக் கறி உண்ணத் தக்கது (13) 34.6 குதிரைகளின் இறைச்சியை உண்பது கூடுமா? (3) 34.5 நாட்டுக் கழுதைகளின் இறைச்சியை உண்பதற்குத் தடை (14) 34.4 கடல்வாழ் உயிரினங்களில் செத்தவற்றை உண்பதற்கு அனுமதி (5) 34.3 உண்பதற்குத் தடை செய்யப்பட்ட விலங்குகளும் பறவைகளும் (6) 34.2 வேட்டையாடிய பிராணி மறைந்து, பிறகு கிடைத்தால் … (2) 34.1 பயிற்சியளிக்கப்பட்ட நாய்கள் மூலம் வேட்டையாடுதல் (8) 33.56 பயணத்திலிருந்து திரும்புகின்றவர் … (5) 33.55 பயணம் என்பது துன்பத்தின் ஒரு பகுதியாகும் … (1) 33.54 பயணத்தில் கால்நடைகளின் நலன் காப்பதும் … (2) 33.53 “என் சமுதாயத்தாரில் ஒரு குழுவினர் எப்போதுமே உண்மைக்கு ஆதரவாளர்களாக இருப்பார்கள் … (8) 33.52 அம்பெய்வதன் சிறப்பும் … (3) 33.51 உயிர்த் தியாகிகள் பற்றிய விளக்கம் (3) 33.50 அல்லாஹ்வின் பாதையில் எல்லைக் காவல் புரிவதன் சிறப்பு (1) 33.49 கடல்வழிப் போரின் சிறப்பு (2) 33.48 போரில் கலந்துகொள்ள முடியாமல் போனவருக்கும் நன்மை … (1) 33.47 அறப்போரில் கலந்துகொள்ளாமல் இறந்துபோனவர் … (1) 33.46 அல்லாஹ்வின் பாதையில் வீரமரணத்தை வேண்டுவது விரும்பத் தக்கதாகும் (2) 33.45 “எண்ணங்களைப் பொருத்தே செயல்கள் அமைகின்றன” எனும் நபிமொழி … (1) 33.44 … போர்ச் செல்வங்களைப் பெற்றோரும் பெறாதோரும் … (2) 33.43 பிறர் பார்ப்பதற்காகவும் விளம்பரத்திற்காகவும் போரிட்டவர் … (1) 33.42 அல்லாஹ்வின் பாதையில் போரிட்டவர் … (3) 33.41 உயிர்த் தியாகிக்குச் சொர்க்கம் நிச்சயம் (6) 33.40 தகுந்த காரணம் உள்ளவர்களுக்கு அறப்போரில் கலந்து கொள்வது கடமை இல்லை (2) 33.39 அறப்போர் வீரர்களின் துணைவியருடைய கண்ணியம் … (1) 33.38 அறப்போர் வீரருக்கு வாகனம் மற்றும் பிற உதவிகள் … (6) 33.37 அல்லாஹ்வின் பாதையில் தர்மம் செய்வதன் சிறப்பும் அதற்குக் கிடைக்கும் பன்மடங்கு நன்மைகளும் (1) 33.36 இறைமறுப்பாளனை (போரில்) கொன்ற பின்னர் (மார்க்கத்தில்) உறுதியோடு இருத்தல் (2) 33.35 இரு போராளிகளில் ஒருவர் மற்றவரைக் கொன்று, பின் அவ்விருவருமே சொர்க்கத்தில் … (2) 33.34 அறப்போர் மற்றும் எல்லைக் காவலின் சிறப்பு (3) 33.33 வீரமணம் அடைந்தவர்களின் உயிர்கள் … (1) 33.32 அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டவரின் கடனைத் தவிர அனைத்துப் பாவங்களும் மன்னிக்கப்படுகின்றன (3) 33.31 அல்லாஹ் (தனது பாதையில்) அறப்போர் புரிந்தவர்களுக்காகச் சொர்க்கத்தில் வைத்துள்ள உயர்நிலைகள் (1) 33.30 அல்லாஹ்வின் பாதையில் காலையாயினும் மாலையாயினும் (போரிடச்) செல்வதன் சிறப்பு (5) 33.29 அல்லாஹ்வின் பாதையில் வீரமரணம் அடைவதன் சிறப்பு (4) 33.28 அல்லாஹ்வின் பாதையில் புறப்படுதலின், அறப்போரில் ஈடுபடுதலின் சிறப்பு (4) 33.27 குதிரையின் தன்மைகளில் விரும்பத் தகாதவை (1) 33.26 மறுமை நாள்வரை நெற்றிகளில் நன்மை பிணைக்கப்பட்டிருக்கும் குதிரைகள் (5) 33.25 குதிரைப் பந்தயமும் அதற்காகக் குதிரையை மெலிய வைப்பதும் (1) 33.24 குர்ஆன் பிரதிகளை இறைமறுப்பாளர்களின் நாட்டுக்கு எடுத்துச் செல்வது … (3) 33.23 பருவ வயது பற்றிய விளக்கம் (1) 33.22 இயன்றவரை கட்டுப்பட்டு நடப்பதாக உறுதிமொழி அளித்தல் (1) 33.21 பெண்களிடம் உறுதிப் பிரமாணம் (பைஅத்) வாங்கும் முறை (2) 33.20 மக்கா வெற்றிக்குப் பின் ஹிஜ்ரத் கிடையாது (5) 33.19 நாடு துறந்து (ஹிஜ்ரத்) சென்றவர் மீண்டும் தமது தாயகத்தில் குடியேறுவதற்குத் தடை (1) 33.18 ஆட்சித் தலைவர் படையினரிடம் உறுதி மொழி பெற்றுக்கொள்வது … (13) 33.17 ஆட்சித் தலைவர்களில் நல்லவர்களும் தீயவர்களும் (2) 33.16 ஆட்சித் தலைவர்கள் மார்க்கத்திற்கு முரணாகச் செயல்படும்போது … (2) 33.15 இரு ஆட்சியாளர்களுக்கு வாக்களிப்புப் பிரமாண நெருக்கடி ஏற்பட்டால் … (1) 33.14 முஸ்லிம்கள் (ஒரே தலைமையின் கீழ்) ஒன்றுபட்டிருக்கும்போது … (2) 33.13 குழப்பங்கள் தோன்றும்போது கூட்டமைப்போடு சேர்ந்திருப்பது கடமையாகும் … (8) 33.12 உரிமைகள் மறுக்கப்பட்டாலும் தலைமைக்குக் கட்டுப்படுதல் (1) 33.11 அதிகாரத்திலிருப்போர் அநீதியிழைக்கும்போதும் தகுதியற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கும்போதும் … (1) 33.10 கலீஃபாக்களில் முதலாமவருக்கு உறுதிப் பிரமாணம் (பைஅத்) அளிப்பது கடமையாகும் (3) 33.9 ஆட்சித் தலைவர் கேடயம் போன்றவர் … (1) 33.8 பாவமற்றவற்றில் தலைவர்களுக்குக் கட்டுப்படுவது கடமையாகும். பாவமானவற்றில் கட்டுப்படுவதற்குத் தடை (11) 33.7 அதிகாரிகளுக்கு அன்பளிப்புகள் வழங்குவதற்குத் தடை (3) 33.6 பொதுச் சொத்துகளில் மோசடி செய்வது வன்மையாகத் தடை செய்யப்பட்டது (1) 33.5 நேர்மையான ஆட்சியாளரின் சிறப்பும் … (6) 33.4 தேவையின்றி ஆட்சிப் பொறுப்பை ஏற்பது விரும்பத் தக்கதன்று (2) 33.3 ஆட்சியதிகாரத்தைத் தேடி அலைவதற்கும் அதன் மீது ஆசை கொள்வதற்கும் தடை (3) 33.2 ஆட்சித் தலைவரை நியமிக்கலாம்; நியமிக்காமல் விடலாம் (2) 33.1 ஆட்சியதிகாரம் குறைஷியரிடையேதான் இருக்கும் (10) 32.51 அறப்போர்களில் இறைமறுப்பாளரிடம் உதவி கோருவது … (1) 32.50 ‘தாத்துர் ரிக்காஉ’ (ஒட்டுத் துணிப்) போர் (1) 32.49 நபி (ஸல்) கலந்துகொண்ட அறப்போர்களின் எண்ணிக்கை (6) 32.48 அறப்போரில் கலந்துகொண்ட பெண்களுக்கு … (4) 32.47 அறப்போரில் ஆண்களுடன் பெண்களும் கலந்துகொள்வது (2) 32.46 “அவனே உங்களைத் தாக்காமல் அவர்கள் கைகளை தடுத்(து வைத்)தான்” எனும் (48:24) வசனம் (2) 32.45 ‘தூ கரத்’ போரும் பிற போர்களும் (2) 32.44 அஹ்ஸாப் போர் (அ) அகழ்ப் போர் (6) 32.43 கைபர் போர் (5) 32.42 கஅப் பின் அல்அஷ்ரஃப் கொல்லப்படுதல் (1) 32.41 அபூஜஹ்லு கொல்லப்படுதல் (1) 32.40 நபி (ஸல்) (மக்களை) இறைவன்பால் அழைத்து, துன்பங்களைப் பொறுத்துக் கொண்டது (2) 32.39 நபி (ஸல்) எதிர்கொண்ட துன்பங்கள் (7) 32.38 இறைதூதரால் கொல்லப்பட்டவன் மீது இறைவனின் கோபம் (1) 32.37 உஹுதுப் போர் (3) 32.36 கூட்டுப் படையினருக்கு எதிரான அகழ்ப் போர் (2) 32.35 வாக்குறுதியை(ப் போரிலும்) நிறைவேற்றுவது (1) 32.34 ஹுதைபிய்யா சமாதான உடன்படிக்கை’ (7) 32.33 மக்கா வெற்றிக்குப் பின் … (1) 32.32 கஅபாவைச் சுற்றிலும் இருந்த சிலைகளை அப்புறப்படுத்தியது (1) 32.31 மக்கா வெற்றி (2) 32.30 பத்ருப் போர் (1) 32.29 தாயிஃப் போர் (1) 32.28 ஹுனைன் போரில் … (5) 32.27 இறைமறுப்பு அரசர்களுக்கு நபி (ஸல்) எழுதிய கடிதங்கள் (1) 32.26 அழைப்பு விடுத்து ஹெராக்ளியஸ் மன்னருக்கு நபி (ஸல்) எழுதிய கடிதம் (1) 32.25 போரில் கிடைத்த உணவை, பகை நாட்டில் இருக்கும் போதே உண்ணலாம் (2) 32.24 முஹாஜிர்கள் தன்னிறைவு அடைந்தபோது … (2) 32.23 செயல்களுள் முன்னுரிமை அளிக்கத் தக்கது (1) 32.22 ஒப்பந்தத்தை முறித்துவிட்ட (பகை)வர்களுடன் போர் செய்யலாம் (3) 32.21 யூத கிறித்தவர்கள் அரபிய தீபகற்பத்திலிருந்து வெளியேற்றப்படுவது (1) 32.20 யூதர்களை ஹிஜாஸ் பகுதியிலிருந்து நாடு கடத்தியது (2) 32.19 கைதியை என்னென்னவெல்லாம் செய்யலாம் (1) 32.18 பத்ருப் போரில் வானவர்களின் உதவியும் … (1) 32.17 போர் வெற்றிச் செல்வத்தைப் பங்கிடும் முறை (1) 32.16 இறைத்தூதர்களுக்கு யாரும் (சொத்தில்) வாரிசாக முடியாது (5) 32.15 போர் செய்யாமல் கிடைத்த செல்வங்களின் சட்டம் (3) 32.14 … போர்க் கைதிகளைப் பரிமாறிக்கொள்வது (1) 32.13 போரில் கொல்லப்பட்ட எதிரியின் உடைமைகள் (4) 32.12 போர் வெற்றிச் செல்வங்கள் (7) 32.11 போர் வெற்றிச் செல்வங்கள் யாருக்குச் சொந்தம்? (1) 32.10 போரில் மரங்களை வெட்டுவதும் எரிப்பதும் அனுமதிக்கப்பட்டதாகும் (3) 32.9 பெண்களையும் குழந்தைகளையும் அறியாமல் கொன்றுவிட்டால் … (3) 32.8 போரில் பெண்களையும் குழந்தைகளையும் கொல்வதற்குத் தடை (2) 32.7 எதிரிகளை(ப் போரில்) எதிர்கொள்ளும்போது பிரார்த்திப்பது (2) 32.6 எதிரியை(ப் போர்க் களத்தில்) சந்திக்க ஆசைப்படுவது வெறுக்கத் தக்கது … (2) 32.5 போரில் தந்திரம் அனுமதிக்கப்பட்டது (2) 32.4 மோசடி செய்வது தடை செய்யப்பட்டதாகும் (8) 32.3 மக்களிடம் இலகுவாக நடந்துகொள்ள வேண்டும்; வெறுப்பைக் கைவிட வேண்டும் (3) 32.2 படைத் தலைவர், போர் நெறிகள் குறித்து அறிவுறுத்துவது (1) 32.1 முன்னறிவிப்பின்றித் தாக்குதல் தொடுக்கலாமா? (1) 31.5 பயணத்தில் உணவைப் பகிர்ந்துண்ணல் (1) 31.4 செல்வத்தால் பிறருக்கு உதவுவது விரும்பத் தக்கது (1) 31.3 விருந்தோம்பல் சார்ந்தவை (3) 31.2 உரிமையாளரின் அனுமதியின்றி கால் நடையில் பால் கறப்பதற்குத் தடை (1) 31.1 ஹாஜிகள் தவறவிட்டவை (2) 31.0 கண்டெடுக்கப்பட்டவை (5) 30.11 நீதிபதி சமரசம் செய்துவைப்பது விரும்பத் தக்கதாகும் (1) 30.10 ஆய்வாளர்களிடையே கருத்து வேறுபாடு (1) 30.9 சாட்சிகளில் சிறந்தவர் (1) 30.8 தவறான தீர்ப்புகளைத் தள்ளுபடி செய்வதும் (மார்க்கத்தில் இல்லாத) புதுமைகளை நிராகரிப்பதும் (2) 30.7 கோபமாக இருக்கும் நீதிபதி, தீர்ப்பளிப்பது விரும்பத் தக்கதன்று (1) 30.6 நீதிபதியின் ஆய்வுக்கு நன்மை உண்டு (1) 30.5 தடைகள் மூன்று (4) 30.4 ஹிந்த் (ரலி) வழக்கு (3) 30.3 வாதங்களின் அடிப்படையில் தீர்ப்பு அமைந்துவிடுதல் (2) 30.2 சத்தியத்தின் / சாட்சியத்தின் அடிப்படையில் தீர்ப்பளித்தல் (1) 30.1 சத்தியம் செய்து நிரூபிப்பது பிரதிவாதிமீது கடமையாகும் (2) 29.11 இழப்பீடு இல்லாத விபத்துகள் (2) 29.10 தண்டனைகள், குற்றங்களுக்கான பரிகாரமாகும் (3) 29.9 சீர்திருத்திற்காக வழங்கப்படும் சாட்டையடிகளின் (அதிகபட்ச) அளவு (1) 29.8 மது அருந்திய குற்றத்திற்கான தண்டனை (4) 29.7 மகப்பேறான பெண்ணின் தண்டனையைத் தள்ளிவைத்தல் (1) 29.6 இஸ்லாமிய அரசின் கீழ் வாழும் யூதர்கள் விபச்சாரத்தில் ஈடுபட்டாலும் கல்லெறி தண்டனை (6) 29.5 விபச்சாரம் செய்தவரின் ஒப்புதல் வாக்குமூலம் (9) 29.4 மணமானவர்கள் விபச்சாரம் செய்தால் கல்லெறி தண்டனை (1) 29.3 விபச்சாரக் குற்றத்திற்கான தண்டனை (2) 29.2 தண்டனையிலிருந்து விலக்கு அளிக்குமாறு பரிந்துரைப்பதற்குத் தடை (3) 29.1 தண்டனைக்குரிய திருட்டின் அளவுகோலும் தண்டனையும் (7) 28.11 சிசுக் கொலைக்கான இழப்பீடும் … (6) 28.10 கொலையாளி, தன் குற்றத்தை ஒப்புக்கொள்வதும் … (2) 28.9 மனிதர்களின் உயிர், தன்மானம், செல்வம் ஆகியவற்றுக்கு ஊறு விளைவிப்பது … (2) 28.8 மறுமையில் வழங்கப்படும் தீர்ப்பும் தண்டனையும் … (1) 28.7 கொலையை (உலகுக்கு) அறிமுகப்படுத்தியவர் மீதான பாவம் (1) 28.6 முஸ்லிமின் மரண தண்டனைக்கான காரணங்கள் (2) 28.5 பற்கள் போன்ற(உறுப்புகளான)வற்றில் பழிக்குப்பழி உண்டு (1) 28.4 தாக்க வந்தவனிடமிருந்து தற்காத்துக் கொள்வதற்காக … (6) 28.3 கல் மற்றும் கூராயுதங்களால் கொலை செய்தால், பழிக்குப்பழி உண்டு … (3) 28.2 வன்முறையாளர்களுக்கும் மதம் மாறியோருக்குமான தண்டனை (4) 28.1 அல்கஸாமா (4) 27.13 விடுதலைக்கு வாக்களிக்கப்பட்ட அடிமையை விற்கலாம் (2) 27.12 அடிமையில் தமது பங்கை மட்டும் விடுதலை செய்தல் (8) 27.11 ‏தன் உரிமையாளருக்கு விசுவாசமாகவும் … (4) 27.10 அடிமைக்கு எஜமானர் உண்பதிலிருந்து உணவளிப்பதும் … (4) 27.9 விபசாரம் செய்துவிட்டதாக அவதூறு கூறுவதற்கான கண்டனம் (1) 27.8 அடிமைகளுடனான நல்லுறவும் கன்னத்தில் அறைந்ததற்கான பரிகாரமும் (8) 27.7 இறைமறுப்பாளராக இருந்தபோது செய்த நேர்ச்சை… (2) 27.6 ஆகுமாக்கப்பட்டதற்கான சத்தியமாக இருந்தாலும் … (1) 27.5 இன்ஷா அல்லாஹ் என்பதை (சத்தியத்தின்போது) சேர்த்துக் கூறுதல் (4) 27.4 சொல்பவரின் எண்ணப்படியே ஒருவருடைய சத்தியம் அமையும் (2) 27.3 சத்தியம் செய்தவர், அதைவிடச் சிறந்ததாக மற்றொன்றைக் காணும்போது … (12) 27.2 ‘லாத்’ மற்றும் ‘உஸ்ஸா’வின் மீது சத்தியம் செய்துவிட்டவர் … (2) 27.1 அல்லாஹ்வைத் தவிர எவர்/எதன் மீதும் சத்தியம் செய்யத் தடை (3) 26.5 நேர்ச்சை முறிவுக்கான பரிகாரம் (1) 26.4 கஅபாவரை நடைப்பயணம் செல்வதாக நேர்ந்துகொண்டவர் (3) 26.3 இறைவனுக்கு மாறு செய்வதிலோ உரிமை இல்லாததிலோ நேர்ச்சை. (1) 26.2 நேர்ச்சை செய்வதற்குத் தடை; அது (விதியில்) எதையும் மாற்றிவிடாது (6) 26.1 நேர்ச்சையை நிறைவேற்றக் கட்டளை (1) 25.5 வசதியற்றவர் மரண சாஸனம் செய்ய முடியாது (6) 25.4 அறக்கொடை (1) 25.3 மனிதன் இறந்த பின்பும் தொடரும் நன்மைகள் (1) 25.2 இறந்துவிட்டவருக்காகச் செய்யப்படும் தர்மங்களின் நன்மை … (3) 25.1 மரண சாஸனம் 1/3 மட்டுமே (5) 25.0 மரண சாஸனம் (2) 24.4 ஆயுட்கால அன்பளிப்பு (11) 24.3 அன்பளிப்பு வழங்குவதில் பிள்ளைகளிடையே பாகுபாடு காட்டுவது … (10) 24.2 தானமும் அன்பளிப்பும் வழங்கப்பட்ட பின், திரும்பப் பெறுவதற்குத் தடை … (4) 24.1 தானமாகக் கொடுத்ததை விலைக்கு வாங்குவது விரும்பத் தக்கதல்ல (4) 23.4 ஒருவர் விட்டுச்செல்லும் செல்வம் அவருடைய வாரிசுகளுக்கு உரியதாகும் (4) 23.3 இறுதியாக அருளப்பெற்றது கலாலா வசனமாகும் (4) 23.2 ‘கலாலா’ சொத்துரிமை (5) 23.1 உரியவர்களுக்கும் உறவினருக்கும் பிரிக்கப்பட்ட பாகங்கள் (3) 23.0 ஒரு முஸ்லிம், இறைமறுப்பாளருக்கு வாரிசாகமாட்டார் (1) 22.31 பாதைக்கு நிலம் ஒதுக்குவதில் கருத்து வேறுபாடு ஏற்பட்டால் அதற்கான தீர்வு (1) 22.30 பிறர் நிலத்தை அபகரித்தல் போன்ற அநீதி இழைத்தல்களுக்குத் தடை (6) 22.29 அண்டை வீட்டாரின் சுவரில் (சாரம் கட்டுவதற்கு) மரக்கட்டை பதிப்பது (1) 22.28 பங்காளியின் இசைவு (3) 22.27 வியாபாரத்தில் (வீண்)சத்தியம் செய்வது விலக்கப்பட்டுள்ளது (2) 22.26 உணவுப் பொருட்களைப் பதுக்குவதற்குத் தடை (2) 22.25 முன்பணம் செலுத்தும் வணிகம் (2) 22.24 அடமானம் உள்ளூரிலும் பயணத்திலும் செல்லும் (3) 22.23 ஓர் உயிரினத்தை அதே இனத்திற்குப் பதிலாக ஏற்றத்தாழ்வோடு விற்கலாம் (1) 22.22 உங்களில் சிறந்தவர் கடனை அழகிய முறையில் திருப்பிச் செலுத்துபவரே (4) 22.21 ஒட்டகத்தை விற்றவர் அதில் பயணிக்க நிபந்தனை விதிப்பது (5) 22.20 அனுமதிக்கப்பட்டவற்றையும் ஐயத்திற்குரியவற்றையும் கையாளுதல் (1) 22.19 வட்டி வாங்குபவருக்கும் வட்டி கொடுப்பவருக்கும் சாபம் (2) 22.18 உணவுப் பொருளை, சரிக்குச் சரியாக விற்றல் (12) 22.17 பொன்னும் மணியும் பதித்த மாலையை விற்பது (4) 22.16 தங்கத்திற்கு வெள்ளியைக் கடனாக விற்பதற்குத் தடை (3) 22.15 நாணயமாற்று வியாபாரம்; வெள்ளிக்குத் தங்கத்தை ரொக்கத்துக்கு விற்பது (7) 22.14 வட்டி (4) 22.13 மது, செத்தவை, பன்றி, சிலைகள் ஆகியவற்றை விற்பதற்குத் தடை (4) 22.12 மதுபான வியாபாரத்திற்குத் தடை (4) 22.11 குருதி உறிஞ்சி எடுப்பதற்காகக் கூலி பெறுவது கூடும் (4) 22.10 வேட்டை, காவல், பாதுகாப்புக்காக நாய் வளர்க்கலாம் (18) 22.9 நாய் விற்ற காசு, சோதிடரின் தட்சணை, விபச்சாரியின் வருமானம் (4) 22.8 தேவைக்குப் போக மீதம் உள்ள நீரை விற்பதற்குத் தடை (5) 22.7 வசதியுள்ளவர் கடனைச் செலுத்த தாமதம் செய்யக் கூடாது (1) 22.6 கடனை அடைக்க சிரமப்படுபவருக்கு அவகாசம் அளிப்பதன் சிறப்பு (7) 22.5 திவாலானவரிடம் திரும்பப் பெற்றுக்கொள்ளும் உரிமை (4) 22.4 கடனில் தள்ளுபடி செய்வது விரும்பத் தக்கதாகும் (3) 22.3 சேதமடைந்த பழங்களுக்கான தொகைக்குத் தள்ளுபடி (5) 22.2 மரம் நடுதலின், பயிர் செய்தலின் சிறப்பு (5) 22.1 நிபந்தனையின் பேரில் தோப்பைக் குத்தகைக்கு விடுவது (4) 21.21 நிலத்தை (விளைவித்துக்கொள்ள) இரவலாக வழங்குவது (4) 21.20 ‘முஸார’ஆவும் ‘முஆஜரா’வும் (2) 21.19 பொன், வெள்ளி(நாயணங்களு)க்கு நிலத்தைக் குத்தகைக்கு விடுவது (3) 21.18 தானியத்திற்கு நிலத்தைக் குத்தகைக்கு விடுவது (2) 21.17 நிலக் குத்தகை (24) 21.16 தடை செய்யப்பட்ட வியாபார வகைகள் (6) 21.15 கனிகள் நிறைந்த பேரீச்ச மரத்தை விற்பது (4) 21.14 (மரத்திலுள்ள) செங்கனிகளை மாற்றிக் கொள்வதற்குத் தடை (14) 21.13 மரத்திலுள்ள பழங்களை முற்றுவதற்கு முன் விற்பதற்குத் தடை (10) 21.12 வியாபாரத்தில் ஏமாற்றப்படுபவர் (1) 21.11 வியாபாரத்தில் உண்மை பேசுவதும் குறைகளைத் தெளிவுபடுத்துவதும் (1) 21.10 விற்பவருக்கும் வாங்குபவருக்கும் வியாபாரத்தை முறித்துக்கொள்ளும் உரிமை (4) 21.9 அளவு தெரியாத பேரீச்சம் பழக் குவியலை விற்பதற்குத் தடை (1) 21.8 வாங்கப்பட்ட பொருள் கைக்கு வருமுன் (பிறருக்கு) விற்பது கூடாது (13) 21.7 மடி கனக்கச் செய்யப்பட்ட கால்நடைகளை விற்பனை செய்வது பற்றிய சட்டம் (5) 21.6: கிராமவாசிக்காக, நகரவாசி விற்றுக் கொடுக்கத் தடை (5) 21.5: விற்பனைக்கு வரும் சரக்குகளை இடைமறித்து வாங்கத் தடை (4) 21.4: வியாபாரத்தில் தடை செய்யப்பட்டவை (7) 21.3: ஒட்டகக் கன்று (அது பிறக்குமுன்) விற்பதற்கு தடை! (2) 21.2: கல்லெறி வியாபாரம் மற்றும் மோசடி வியாபாரம் ஆகியவை செல்லாது (1) 21.1: ‘முலாமஸா’ மற்றும் ‘முனாபதா’ ஆகிய வியாபாரங்கள் செல்லாது (3) 20.7: அடிமையான தந்தையை விடுதலை செய்வதன் சிறப்பு (1) 20.6: அடிமைகளை விடுதலை செய்வதன் சிறப்பு (4) 20.5: விடுதலை செய்த உரிமையாளரை மாற்றிக் கூறத் தடை (4) 20.4: வாரிசாகும் உரிமையை விற்பதற்கும் அன்பளிப்பாக வழங்குவதற்கும் தடை (1) 20.3: விடுதலை செய்தவருக்கே வாரிசுரிமை உரியது (9) 20.2: அடிமை (தனது முழு விடுதலைக்காக) உழைத்துப் பொருளீட்டுவது (2) 20.1: ஓர் அடிமையி(ன் விலையி)ல், ஒருவர் தமக்கான பங்கை விடுவிப்பது (1) 19.1: சுய சாபம் வேண்டுதல் (17) 18.9: கணவன் இறந்து ‘இத்தா’விலிருக்கும் பெண் துக்கம் கடைப்பிடிப்பது (11) 18.8: கர்ப்பமுற்றிருக்கும் பெண்ணின் ‘இத்தா’க் காலம், பிரசவத்துடன் முடிந்துவிடும் (2) 18.7: ‘இத்தா’விலிருக்கும் பெண் தன் தேவைக்காக வெளியே செல்லலாம் (1) 18.6: மூன்று தலாக் சொல்லப்பட்ட பெண்ணுக்கு ஜீவனாம்சம் பற்றி… (18) 18.5: ஈலாச் செய்வது, மனைவியிடமிருந்து விலகுவது, விருப்ப உரிமை அளிப்பது (5) 18.4: மனைவிக்கு (த் தம்மைப் பிரிந்துவிட) உரிமை அளிப்பது மணவிலக்கு ஆகாது (8) 18.3: மணவிலக்குச் செய்யும் நோக்கமின்றி கூறினால், அது மணவிலக்கு ஆகாது (4) 18.2: மூன்று தலாக்குகள் (3) 18.1: மாதவிடாயான மனைவியை அவளது சம்மதமின்றி மணவிலக்குச் செய்வதற்குத் தடை (14) 17.19: ஹவ்வா-வும், பெண்கள் கணவரை ஏமாற்றுதலும் (2) 17.18: மனைவியரின் நலம் நாடுதல் (4) 17.17: பயன் தரும் இவ்வுலகச் செல்வங்களுள் மிகச் சிறந்த செல்வம், நற்குணமுள்ள மனைவியே (1) 17.16: கன்னிப் பெண்ணை மணப்பது விரும்பத் தக்கதாகும் (5) 17.15: மார்க்கப் பற்றுள்ள பெண்ணை மணப்பது விரும்பத் தக்கதாகும் (2) 17.14: மனைவியருள் ஒருவர், தனது முறைநாளை மற்றவருக்கு விட்டுக்கொடுக்கலாம் (4) 17.13: மனைவியருக்கு (இரவுகளை) ஒதுக்கீடு செய்வது (1) 17.12: கன்னி கழிந்த பெண்ணுக்கும், கன்னிப் பெண்ணுக்கும் கணவன் ஒதுக்க வேண்டிய நாட்கள் (6) 17.11: சாயல் அறியும் நிபுணரின் கூற்றுப்படி, குழந்தைக்கு உரியவரைக் கண்டறிவது (3) 17.10: எஜமானரின் கீழ் வாழும் பெண்ணின் குழந்தை, அவருக்கே உரியது (2) 17.9: பெண் போர்க் கைதியுடன் உடலுறவு கொள்ளலாம் (2) 17.8: பசிக்காகத் தாய்ப்பால் அருந்தினால்தான் பால்குடி உறவு ஏற்படும் (1) 17.7: பருவ வயதை அடைந்தவருக்குப் பாலூட்டுவது (6) 17.6: ஐந்து தடவை அருந்தினால்தான் பால்குடி உறவு உண்டாகும் (2) 17.5: ஓரிரு தடவை (பெண்ணின் மார்பில்) பால் குடிப்பது பற்றிய சட்டம் (6) 17.4: மனைவியின் மகளையும் மனைவியின் சகோதரியையும் மணப்பதற்குத் தடை (2) 17.3: பால்குடிச் சகோதரரின் மகளை மணப்பது தடை செய்யப்பட்டுள்ளது (3) 17.2: பால்குடித் தந்தையின் (இரத்த பந்த) உறவினரும் மணமுடிக்கத் தகாதவரே! (6) 17.1: பிறப்பால் ஏற்படும் உறவும் பால்குடி உறவும் (2) 16.24: பாலூட்டும் மனைவியுடன் உடலுறவு கொள்ளும்போது அஸ்லுச் செய்வது வெறுக்கத் தக்கது (3) 16.23: கருவுற்றிருக்கும் பெண் போர்க் கைதியுடன் உடலுறவு கொள்வது தடை செய்யப்பட்டுள்ளது (1) 16.22: உடலுறவின்போது இடைமுறிப்பு – ‘அஸ்லு’ச் சட்டம் (12) 16.21: மனைவியுடன் நடைபெறும் உடலுறவு இரகசியங்களை வெளியே சொல்வது தடுக்கப்பட்டது (2) 16.20: ஒரு பெண், தன் கணவனின் படுக்கைக்குச் செல்ல மறுப்பதற்குத் தடை (3) 16.19: உடலுறவின் ஒழுங்குகள் (2) 16.18: உடலுறவின்போது ஓத வேண்டிய விரும்பத் தகுந்த பிரார்த்தனை (1) 16.17: மூன்று முறை மணவிலக்கு அளிக்கப்பட்ட பெண்ணின் மறுவிருப்பம் (4) 16.16: விருந்துக்கான அழைப்பை ஏற்பது பற்றிய கட்டளை (13) 16.15: ஸைனப் பின்த்து ஜஹ்ஷு (ரலி) திருமணம்; ஹிஜாப் பற்றிய வசனம்; மணவிருந்து (7) 16.14: அடிமைப் பெண்ணை விடுதலை செய்து, பின்னர் அவளை மணமுடித்துக்கொள்வதன் சிறப்பு (6) 16.13: மணக்கொடை (மஹ்ரு) என்பது … (7) 16.12: ஒருவர் தாம் மணமுடிக்க விரும்பும் பெண்ணின் முகத்தையும் இரு முன் கைகளையும் பார்ப்பது (2) 16.11 ஷவ்வால் மாதத்தில் மணமும் தாம்பத்திய உறவும் (1) 16.10: இளவயதுக் கன்னிக்கு அவளுடைய தந்தை மணமுடித்துவைத்தல் (4) 16.9: மணப் பெண்ணின் வாய் வழிச் சம்மதமும் மௌனச் சம்மதமும் (4) 16.8: திருமண (முன்) நிபந்தனைகளை நிறைவேற்றல் (1) 16.7: மணக்கொடையில்லா திருமணம் செல்லாது (5) 16.6: தம் (முஸ்லிம்) சகோதரன் கேட்டுக்கொண்டிருக்கும் ஒரு பெண்ணை, மற்றவர் கேட்கலாகாது (7) 16.5: இஹ்ராம் புனைந்தவர் திருமணம் செய்வதற்குத் தடை; அவர் பெண் கேட்பது வெறுக்கத் தக்கது (8) 16.4: மனைவியின் அத்தையை, சின்னம்மாவை மணக்கத் தடை (8) 16.3: இடைக்காலத் திருமணம், (முத்ஆ) காலாவதியானது (21) 16.2: இச்சை தூண்டப்பட்டவர், தமது இச்சையைத் தணித்துக் கொள்ளட்டும் (2) 16.1: வசதி இருந்தால் மணமுடிப்பதும் இல்லாதவர் நோன்பு நோற்பதும் (6) 15.97: குபாப் பள்ளிவாசல், அதில் தொழுவது, அதைத் தரிசிப்பது ஆகிய சிறப்புகள் (7) 15.96: இறையச்சத்தின் மீது நிறுவப்பட்ட பள்ளிவாசல் (1) 15.95: மூன்று பள்ளிவாசல்களைத் தவிர வேறெதற்கும் (புனிதப்) பயணம் கிடையாது (2) 15.94: மக்கா, மதீனாப் பள்ளிவாசல்களில் தொழுவதன் சிறப்பு (6) 15.93: ‘உஹுத்’ மலை நம்மை நேசிக்கிறது; நாமும் அதை நேசிக்கின்றோம் (3) 15.92: சொர்க்கப் பூஞ்சோலைகளுள் ஒன்று (3) 15.91: மதீனாவாசிகள் மதீனாவை விட்டு அகலும்போது அதன் நிலை (2) 15.90: மதீனாவிலேயே தங்கியிருப்பதற்கு ஆர்வமூட்டல் (2) 15.89: மதீனாவாசிகளுக்குக் கேடு நினைப்பவர்களை, அல்லாஹ் உருக்குலைத்துவிடுவான் (3) 15.88: தன்னிலுள்ள தீயவர்களை மதீனா அகற்றிவிடும் (5) 15.87: கொள்ளை நோயும் தஜ்ஜாலும் நுழைய முடியாமல் மதீனா பாதுகாக்கப்பட்டுள்ளது (2) 15.86: மதீனாவில் ஏற்படும் நெருக்கடிகளைச் சகித்துக்கொண்டு, அங்குக் குடியிருக்க ஆர்வ மூட்டல் (10) 15.85: மதீனாவின் சிறப்பு; பிரார்த்தித்ததும் புனிதமானவையும் (17) 15.84: இஹ்ராமின்றி மக்காவிற்குள் நுழைய அனுமதி (5) 15.83: அவசியத் தேவையின்றி மக்காவிற்குள் ஆயுதம் எடுததுச் செல்வதற்குத் தடை (1) 15.82: மக்காவும், அதன் புனிதமானவைகளும் (4) 15.81: முஹாஜிருக்கு மக்காவில் தக்குவதற்கு அனுமதிக்கப்பட்ட நாட்கள் (4) 15.80: ஹாஜிகள் மக்காவில் தங்குவதும் அங்குள்ள வீடுகளை வாரிசுரிமையாகப் பெறுவதும் (3) 15.79: ஹஜ், உம்ரா, அரஃபா நாள் ஆகியவற்றின் சிறப்பு (3) 15.78: இணைவைப்பவருக்கான ஹஜ் சட்டங்கள் (1) 15-77: ஹஜ் அல்லது உம்ராவிலிருந்து திரும்பும்போது துல்ஹுலைஃபாவில் தங்கித் தொழுவது (5) 15.76: பயணத்திலிருந்து திரும்பி வரும்போது ஓத வேண்டியவை (2) 15.75: பயணங்களில் வாகனத்தில் ஏறியதும் ஓத வேண்டிய துஆ (2) 15.74: மஹ்ரமான ஆணுடன் மட்டுமே பெண்ணின் ஹஜ் முதலான பயணம் (11) 15.73: ஹஜ் கடமை, ஆயுளில் ஒரு முறைதான் (1) 15.72: குழந்தையின் ஹஜ் செல்லும்; அதை ஹஜ்ஜுக்கு அழைத்துச் சென்றவருக்கும் நற்பலன் உண்டு (3) 15.71: இயலாதவருக்காகவோ, இறந்தவருக்காகவோ பிறர் ஹஜ் செய்தல் (2) 15.70: கஅபாவின் வளைந்த சுவரும் அதன் தலைவாயிலும் (1) 15.69: இறையில்லம் கஅபாவை இடித்துக் கட்டுதல் (7) 15.68: கஅபாவின் உள்ளே நுழைவதும் அதனுள் தொழுவதும் (9) 15.67: விடைபெறும் தவாஃப் மாதவிடாய் ஏற்பட்ட பெண்ணுக்குக் கடமையில்லை (8) 15.66: செல்லும் வழியில் பலிப் பிராணி பாதிப்புக்குள்ளாகிவிட்டால் … (2) 15.65: பலியிடக் கொண்டுசெல்லும் ஒட்டகத்தில், பயணம் செய்ய அனுமதி (6) 15-64: ஹரம் எல்லைக்குச் செல்லாதவர், பலிப் பிராணியை அனுப்பிவைக்கும் முறை (11) 15.63: ஒட்டகத்தை அறுக்கும் முறை (1) 15.62: பலிப் பிராணிகளுள் மாட்டிலும் ஒட்டகத்திலும் கூட்டுச் சேர்வது (8) 15.61: பலிப் பிராணிகளின் இறைச்சி, தோல், சேணம் ஆகியவை தர்மத்துக்குரியன (2) 15.60: ‘தஷ்ரீக்’ நாட்களின் இரவுகளில் மினாவில் தங்குவது கட்டாயமாகும் (2) 15.59: ‘நஃப்ரு’டைய நாளில் ‘அல்முஹஸ்ஸபி’ல் தங்குவதும் அங்குத் தொழுவதும் (9) 15.58: துல்ஹஜ் பத்தாவது நாளில் ‘தவாஃபுல் இஃபாளா’ செய்வது (2) 15.57: ஹஜ் சடங்குகளில் முன் – பின் ஆகிவிட்டால் … (6) 15.56: துல்ஹஜ் பத்தாம் நாளின் சடங்குகள் (3) 15.55: தலைமுடியை மழிப்பதும் குறைப்பதும் (6) 15.54: கற்களின் எண்ணிக்கை (1) 15.53: கல்லெறியும் நேரம் (1) 15.52: பொடிக் கற்கள் போதும் (1) 15.51: துல்ஹஜ் பிறை பத்தில் ஜம்ரத்துல் அகபாவுக்குக் கல்லெறிதல் (3) 15.50: ‘ஜம்ரத்துல் அகபா’வின் மீது கல் எறியும்போது தக்பீர் கூறுவது (4) 15.49: முஸ்தலிஃபாவிலிருந்து மினாவிற்குப் புறப்படச் செய்வது (11) 15.48: முஸ்தலிஃபாவில் ஸுப்ஹுத் தொழுகையை ஆரம்ப நேரத்தில் தொழுவது (1) 15.47: மஃக்ரிப், இஷா வை அடுத்தடுத்துத் தொழுவது (14) 15.46: அரஃபா நாளில் மினாவிலிருந்து அரஃபாவிற்குப் போகும்போது தல்பியாவும் தக்பீரும் கூறுதல் (4) 15.45: துல்ஹஜ் பத்தாவது நாளன்று கல்லெறியத் துவங்கும்வரை தல்பியாச் சொல்லிக்கொண்டிருப்பது (7) 15.44: ஸஃபா-மர்வாவுக்கிடையே ஸயீ (ஓட்டம்) ஒரே தடவைதான் (1) 15.43: ஸஃபா-மர்வாவுக்கிடையே ஸயீச் செய்வது முக்கியக் கடமையாகும் (5) 15.42: வாகனங்கள் மீதமர்ந்து தவாஃப் செய்யலாம் (6) 15.41: தவாஃபின்போது ஹஜருல் அஸ்வதை முத்தமிடுவது (5) 15.40: இறையில்லத்தில் முத்தமிடப்படும் இரு மூலைகள் (6) 15.39: தவாஃபில் விரைந்து நடப்பது விரும்பத்தக்கது (12) 15.38: மக்காவினுள் நுழையும் முன்… (4) 15.37 மக்காவினுள் நுழைவதும் வெளியேறுவதும் (3) 15.36 ரமளான் மாதத்தில் உம்ராச் செய்வதன் சிறப்பு (2) 15.35: நபியவர்களின் உம்ரா எண்ணிக்கையும் காலமும் (4) 15.34 நபியவர்களின் தல்பியாவும் பலியும் (4) 15.33: உம்ராவில் தலைமுடி குறைத்தல் (5) 15.32: இஹ்ராமின்போது பலிப் பிராணி (4) 15.31: ஹஜ்ஜுப் பருவங்களில் உம்ராச் செய்ய அனுமதி (6) 15.30: தமத்துஉ ஹஜ் (2) 15.29: இஹ்ராம் ஹாஜிக்குக் கட்டாயம் (3) 15.28: தவாஃபும் ஸயீயும் கட்டாயம் (3) 15.27: ஹஜ் உம்ரா சேர்த்தும் தனித்தும் செய்வது (3) 15.26: ஒரே இஹ்ராமில் உம்ரா ஹஜ் (3) 15.25: இஹ்ராமிலிருந்து விடுபடுதல் (3) 15.24: பலிப் பிராணியும் ஹஜ் கடமையும் (2) 15.23: தமத்துஉ ஹஜ் அனுமதிக்கப்பட்ட ஒன்றாகும் (13) 15.22: ஒருவர் வேறொருவரின் இஹ்ராமை அச்சொட்டி பூணுதல் (3) 15.21: அரஃபா பெருவெளியில் தங்கி திரும்புதல் தொடர்பான இறை கூற்று (3) 15.20: அரஃபாப் பெருவெளி முழுவதும் தங்குமிடம் (2) 15.19: நபி (ஸல்) அவர்களின் ஹஜ் (1) 15.18: உம்ராவையும் ஹஜ்ஜையும் தனித் தனியாக நிறைவேற்றி பயனடைதல் (2) 15.17: இஹ்ராமின் முறைகள் (27) 15.16: இரத்தப்போக்குடைய பெண் இஹ்ராமில் குளித்தல் (2) 15.15: இஹ்ராமிலிருந்து விடுபட முன் நிபந்தனையிட அனுமதி (5) 15.14: முஹ்ரிம் இறந்துவிட்டால் செய்ய வேண்டியவை (9) 15.13: இஹ்ராம் பூண்ட முஹ்ரிம், தம் உடலைக் கழுவிக்கொள்ள அனுமதி (1) 15.12: இஹ்ராம் பூண்ட முஹ்ரிம், தம் கண்களுக்கு மருந்திட அனுமதி (2) 15.11: இஹ்ராம் பூண்ட முஹ்ரிம், ஹிஜாமா செய்ய அனுமதி (2) 15.10: முஹ்ரிமுக்குத் தலைமுடி மழிக்க அனுமதியும் பரிகாரமும் (7) 15.09: ஹரம் எல்லைக்குள் கொல்ல அனுமதிக்கப்பட்டவைகள் (12) 15.08: இஹ்ராம் பூண்ட முஹ்ரிம் வேட்டையாடுவது குறித்து.. (9) 15.07: இஹ்ராமின்போது நறுமணம் பூசுதல் (19) 15.06: துல்ஹுலைஃபா பள்ளியில் தொழுதல் (1) 15.05: வாகனம் புறப்படுவதற்கு ஆயத்தமானவுடன் தல்பியா கூறுவது (4) 15.04: மதீனாவாசிகள் இஹ்ராம் பூண வேண்டிய இடம் (2) 15.03: தல்பியாவின் பண்பும் அதன் நேரமும் (4) 15.02: ஹஜ்/உம்ராவிற்கான இஹ்ராம் எல்லைகள் (7) 15.01: ஹஜ்/உம்ராவில் அனுமதிக்கப்பட்டவை.. (10) 14.04: துல்ஹஜ் மாதத்தின் பத்து நோன்புகள் (2) 14.02: இஃதிகாஃப் இருக்குமிடத்தினுள் நுழையும் நேரம் (1) 14.03: இறுதிப் பத்தில் வழிபாடுகளில் ஈடுபடுவது (2) 14.01: இறுதிப் பத்து நாட்களில் இஃதிகாஃப் இருத்தல் (5) 13.40: லைலத்துல் கத்ர் இரவு குறித்து.. (17) 13.39: ஷவ்வால் ஆறு நோன்பு (1) 13.37: ஷஅபான் மாத இறுதியில் நோன்பு நோற்றல் (3) 13.38: முஹர்ரம் நோன்பின் சிறப்பு (2) 13.36: சுன்னத்தான நோன்புகள் (5) 13.35: ஒரு நாள் விட்டு ஒரு நாள் நோன்பு (12) 13.34: நோன்பில்லாமல் எந்த மாதத்தையும் கடக்க விடாமலிருப்பது விரும்பத் தக்கது (9) 13.33: மறதியால் (நோன்பாளி) நோன்பு முறியாது (1) 13.32: கூடுதலான நோன்பு முடிவு செய்வதற்கும் விடுவதற்கும் அனுமதி (2) 13.31: அல்லாஹ்வின் பாதையில் செல்லும்போது சக்தி பெற்றிருப்பவர் நோன்பு நோற்பதன் சிறப்பு (2) 13.30: நோன்பின் மாண்பு (6) 13.29: நோன்பாளி, நாவைக் காப்பது (1) 13.28: நோன்பாளி விருந்துக்கு அழைக்கப்பட்டால் “நான் நோன்பாளி” என்று சொல்லிவிட வேண்டும் (1) 13.27: இறந்துபோனவரின் விடுபட்ட நோன்பை நோற்பது (5) 13.26: ரமளானில் விடுபட்ட நோன்பை ஷஅபான் மாதத்தில் ‘களா’ச் செய்தல் (2) 13.25: இறைவசனம் வேறொரு வசனத்தின் மூலம் மாற்றம் (2) 13.24: வெள்ளிக்கிழமை மட்டும் நோன்பு நோற்பது விரும்பத் தக்கதன்று (3) 13.23: அய்யாமுத் தஷ்ரீக் நாட்களில் நோன்பு நோற்பதற்குத் தடை (2) 13.22: நோன்புப் பெருநாளிலும் ஹஜ்ஜுப் பெருநாளிலும் நோன்பு நோற்பதற்குத் தடை (6) 13.20: ஆஷூரா நோன்பை எந்த நாளில் நோற்க வேண்டும்? (4) 13.19: ஆஷூரா நாளில் நோன்பு நோற்றல் (17) 13.18: அரஃபா நாளில் அரஃபாவில் தங்கும் ஹாஜிகளின் நோன்பு (4) 13.17: பயணத்தில் நோன்பு நோற்பதையோ விட்டுவிடுவதையோ தேர்ந்துகொள்ளலாம் (5) 13.16: பயணத்தில் நோன்பைக் கைவிட்டவர், பொதுப் பணியாற்றினால் கிடைக்கும் நன்மை (3) 13.15: பயணத்தில் இருப்பவர் மீதான கடமையான ரமளான் நோன்பு (11) 13.14: ரமளான் பகலில் உடலுறவில் ஈடுபடுவதற்குத் தடையும் அதன் பரிகாரமும் (5) 13.13: பெருந்துடக்குடன் வைகறைப் பொழுதை அடைந்தவரின் நோன்பு செல்லும் (6) 13.12: கட்டுப்படுத்தும் நோன்பாளிக்கு (தம் மனைவியை) முத்தமிடத் தடையில்லை (13) 13.11: தொடர்நோன்பு நோற்பதற்குத் தடை (7) 13.10: பகற் பொழுது வெளியேறி நோன்பு நிறைவடையும் நேரம் (3) 13.09: ஸஹரைத் தாமதிப்பதும் நோன்பு துறப்பதை விரைந்து செய்வதும் (6) 13.08: ஃபஜ்ரு நேரம் வந்தவுடன் நோன்பு ஆரம்பமாகிவிடும் (11) 13.07: ‘இரு பெருநாட்களின் இரு மாதங்களும் குறைவுபடாது’ நபிகளாரின் விளக்கம் (2) 13.06: (வானை) மேகம் மூடிக்கொண்டால் (மாதத்தின் நாட்கள்) முப்பதாக முழுமையாக்கப்படும் (2) 13.05: ஒவ்வோர் ஊர்க்காரர்களுக்கும் அவரவர் பார்க்கும் பிறையே பொருந்தும் (1) 13.04: மாதம் என்பது இருபத்தொன்பது நாட்களாகவும் இருக்கும் (6) 13.03: ரமளானுக்கு முந்தைய இரு நாள்களில் நோன்பு நோற்கக் கூடாது (1) 13.02: ரமளான் நோன்பு தொடக்கமும் முடிவும் (17) 13.01: ரமளான் மாதத்தின் சிறப்பு (2) 12.55: ஸகாத் வசூலிப்பவர், தடை செய்யப்பட்டதைக் கோராதவரை அவரைத் திருப்திபடுத்த வேண்டும் (1) 12.54: தர்மப் பொருள் கொண்டுவந்தவருக்காகப் பிரார்த்தித்தல் (1) 12.53: நபி (ஸல்) அன்பளிப்பை ஏற்றதும் தர்மத்தை மறுத்ததும் (1) 12.52: தர்மப் பொருள், அதன் பண்பு நீங்கி விடுதல் (5) 2.27: நாய் நக்கிய பாத்திரம் பற்றிய சட்டம் (6) 2.28: தேங்கிக் கிடக்கும் தண்ணீரில் சிறுநீர் கழிப்பதற்குத் தடை (3) 2.29: பெருந்துடக்குடையவர் தேங்கிய நீரில் இறங்கிக் குளிக்கத் தடை (1) 2.30: பள்ளிவாசலில் சிறுநீர் கழித்தால்… (3) 2.31: தாய்பால் குடிக்கும் குழந்தையின் சிறுநீரைக் கழுவும் சட்டம் (4) 2.32: விந்து பற்றிய சட்டம் (4) 2.33: மாதவிடாய் இரத்தம் கழுவும் முறை (1) 2.34: சிறுநீரைச் சுத்தம் செய்வது கட்டாயம் (1) 3.01: மாதவிடாயான மனைவியைக் கீழாடைக்கு மேல் அணைத்துக் கொள்வது. (3) 3.02: மாதவிடாயான மனைவியுடன் ஒரே போர்வைக்குள் படுத்துக் கொள்வது. (2) 3.03: மாதவிடாயான பெண் செய்ய அனுமதிக்கப்பட்டவை (11) 3.04: இச்சை நீர் (3) 3.05: உறங்கி எழுந்ததும் முகத்தையும் கையையும் கழுவுதல் (1) 3.06: பெருந்துடக்காளி செய்ய வேண்டியவை (8) 3.07: மதன நீர் வெளிப்பட்ட பெண்ணுக்குக் குளியல் கடமை. (5) 3.08: ஆண்/பெண் (விந்து-மதன)நீரிலிருந்துதான் குழந்தை உருவாகிறது. (1) 3.09: பெருந்துடக்கிற்கான குளியல் முறை (5) 3.10: பெருந்துடக்கு குளியல் தொடர்பானவை (14) 3.11: குளிக்கும் போது மூன்றுமுறை தண்ணீர் ஊற்றுதல் (4) 3.12: குளிக்கும் பெண்களின் சடைமுடி பற்றிய சட்டம் (2) 3.13: மாதவிடாய் குளியலின் போது கஸ்தூரி பயன்படுத்துதல் (2) 3.14: தொடர் உதிரப் போக்குடைய பெண்களின் தொழுகை மற்றும் குளியல் (5) 3.15: மாதவிடாய் நாட்களில் விடுபட்ட கடமைகள் (3) 3.16: குளிப்பவர் திரையிட்டுக் கொள்தல் (3) 3.17: பிறரின் மறையுறுப்பைப் பார்த்தல் (1) 3.18: தனித்துக் குளிக்கும் போது ஆடையின்றி குளித்தல் (1) 3.19: மறையுறுப்பை மறைத்துக் கொள்வதில் கவனம் (3) 3.21: (விந்து)நீர் வெளிப்பட்டாலே (குளியல்)நீர் கடமையாகும் (9) 3.22: ஆண்-பெண் குறிகள் இணைந்து விட்டால் குளியல் கடமையாகும் (3) 3.23: சமைக்கப்படவற்றை உண்டால் மீண்டும் உளூ செய்தல் (3) 3.24: சமைக்கப் பட்டவற்றை உண்டால் உளூச் செய்யும் கட்டாயம் மாற்றப் பட்டது (8) 3.25: ஒட்டக இறைச்சி உண்டால் உளூச் செய்ய வேண்டும் (1) 3.26: வாயு பிரிந்த சந்தேகம் ஏற்பட்டாலும் தொழலாம் (2) 3.27: பதனிடப்படுவதால் செத்த பிராணியின் தோல் தூய்மை ஆகும் (7) 3.28: தயம்மும் (6) 3.29: ஒரு முஸ்லிம் (பெருந்துடக்கு ஏற்பட்டதால்) அசுத்தமாகிவிட மாட்டார். (2) 3.30: பெருந்துடக்கு போன்ற நிலைகளிலும் அல்லாஹ்வைத் துதித்தல். (1) 3.31: சிறுதுடக்காளி (உளூச் செய்யாமல்) உண்ணலாம் (4) 3.32: கழிப்பிடத்திற்குச் செல்லும்போதான பிரார்த்தனை (1) 3.33: உட்கார்ந்து கொண்டு உறங்குவது உளூவை முறிக்காது. (4) 4.01: தொழுகை அழைப்பின் தொடக்கம் (1) 4.02: தொழுகை அறிவிப்பு தொடர் அமையும் விதம் (3) 4.03: தொழுகை அழைப்பு முறை (1) 4.04: ஒரு பள்ளிவாசலுக்கு இரு தொழுகை அழைப்பாளர்கள் (1) 4.05: பார்வையற்றவர் தொழுகை அழைப்பு விட நிபந்தனை (1) 4.06: போரின் போது இணைவைப்பாளர் நாட்டில் தொழுகை அழைப்பு விடுக்கப்பட்டால் (1) 4.07: தொழுகை அழைப்பைச் செவியுறுபவர் செய்ய வேண்டியவை (4) 4.08: தொழுகை அழைப்பின் சிறப்பும் ஷைத்தான் வெருண்டோடுவதும் (6) 4.09: இரு கைகளையும் தோள் புஜத்துக்கு உயர்த்துதல் (4) 4.10: அல்லாஹு அக்பர், ஸமி அல்லாஹு லிமன் ஹமிதஹ் கூறும் இடங்கள் (5) 4.11: தொழுகையில் அல்ஃபாத்திஹா அத்தியாயம் ஓதுதல் (8) 4.12: இமாமைப் பின்பற்றித் தொழுபவர் உரத்து ஓதலாகாது (2) 4.13: பிஸ்மில்லாஹ்வை(த் தொழுகையில்) உரத்து ஓதாலாகாது என்போரின் வாதம் (2) 4.14: அத்தியாயங்களின் துவக்கம் “பிஸ்மில்லாஹ்” குறித்த வாதம் (1) 4.15: தக்பீருக்குப் பின்னும் சஜ்தாவிலும் கைகளை வைக்கும் முறை (1) 4.16: தொழுகையில் அத்தஹிய்யாத் ஓதுவது (4) 4.17: இறுதி அத்தஹியாத்திற்குப் பின் ஸலவாத் கூறுதல் (4) 4.18: ஸமி அல்லாஹு லிமன் ஹமிதஹ், ரப்பனா ல(க்)கல் ஹம்து, ஆமீன் ஆகியவை கூறுவது (5) 4.19: இமாமை மஃமூம் பின்தொடர்வது (5) 4.20: இமாமை முந்துவதற்குத் தடை (4) 4.21: இமாமைப் பின்பற்றுவதில் சட்ட மாற்றம் (10) 4.22: இமாம் வருவதற்குத் தாமதமானால்… (2) 4.23: தொழுகையில் இமாமுக்கு ஏதாவது உணர்த்த விரும்பினால்… (1) 4.24: தொழுகையை முழுமையாக உள்ளச்சத்துடன் தொழல் (4) 4.25: தொழுகையில் இமாமை முந்தாமல் இருத்தல் (7) 4.26: தொழும்போது வானத்தை அண்ணாந்து பார்ப்பதற்குத் தடை (2) 4.27: தொழுகையில் ஒழுங்குகள் (3) 4.28: தொழுகையில் வரிசைகளைப் பேணுதல் (11) 4.29: ஆண்களுக்குப் பின்னால் தொழும் பெண்கள் தலை உயர்த்தும் முறை (1) 4.30: பெண்கள் பள்ளிவாசலுக்குச் செல்தல், நறுமணம் பூசுதல் (11) 4.31: தொழுகையில் அச்சநிலையில் குர்ஆன் ஓதும் முறை (2) 4.32: குர்ஆன் ஓதப்படும்போது செவிதாழ்த்திக் கேட்க வேண்டும். (2) 4.33: ஸுப்ஹுத் தொழுகையில் உரத்துக் குர்ஆன் ஓதுதல் (4) 4.34: லுஹ்ரு, அஸ்ருத் தொழுகைகளில் குர்ஆன் ஓதுதல் (8) 4.35: ஸுப்ஹுத் தொழுகையில் குர்ஆன் ஓதுதல் (13) 4.36: இஷாத் தொழுகையில் குர்ஆன் ஓதுவது (8) 4.37: தொழுகையைச் சுருக்கி, நிறைவுறத் தொழுவிப்பதற்கான கட்டளை (11) 4.38: தொழுகையின் நிலைகளை நிதானமாக, சுருக்கி, நிறைவாகச் செய்வது (4) 4.39: தொழுகையில் இமாமை முந்தி விடாமலிருத்தல் (5) 4.40: ருகூஉவிலிருந்து தலையை உயர்த்திய பின் ஓத வேண்டியவை (5) 4.41: ருகூஉவிலும் ஸஜ்தாவிலும் குர்ஆன் ஓதுவதற்குத் தடை (6) 4.42: ருகூஉவிலும் ஸஜ்தாவிலும் ஓத வேண்டியவை (9) 4.44: ஸஜ்தாவின் போது தரையில் படவேண்டிய உறுப்புகள் (7) 4.45: சீராக ஸஜ்தா செய்தல் (2) 4.46: தொழுகை முறைத் தொகுப்பு (5) 4.47: தனித்துத் தொழுபவர் தடுப்பு ஒன்றை வைத்துக் கொள்வது (13) 4.48: தொழுகையில் குறுக்கே செல்பவரைத் தடுப்பது (4) 4.49: தொழுபவர், தடுப்புக்கு நெருக்கமாக நிற்க வேண்டும் (3) 4.50: தொழுபவருக்கான குறுக்குத் தடுப்பின் அளவு (2) 4.51: தொழுபவருக்குக் குறுக்கே படுத்திருப்பது (8) 4.52: ஒரே ஆடை அணிந்து தொழும் முறை (9) 5.01: பூமியில் எழுப்பப்பட்ட முதலாவது இறையாலயம் (8) 5.02: மஸ்ஜிதுந் நபவீ கட்டப்பட்ட வரலாறு (2) 5.03: தொழுகைத் திசை(கிப்லா) கஅபாப் பள்ளிக்கு மாற்றம் (4) 5.04: மண்ணறைகளில் செய்யக்கூடாதவை (6) 5.05: மஸ்ஜிதுகள் கட்டுவதன் சிறப்பும் அதற்கான ஆர்வமூட்டலும் (2) 5.06: ருகூஉவில் உள்ளங்கைகளை வைப்பதற்கான சட்டத் திருத்தம் (5) 5.07: இரு குதிகால்கள்மீது (தொழுகை அமர்வில்) அமர அனுமதி (1) 5.08: தொழுகையில் பேசிக் கொள்ள இருந்த அனுமதி நீக்கம் (6) 5.09: தொழுகைக்கு இடையில் செய்ய அனுமதிக்கப்பட்டவை (2) 5.10: குழந்தைகளைச் சுமந்துகொண்டு தொழுவதற்கு அனுமதி (3) 5.11: தொழுகையின்போது ஓரிரு அடிகள் நடக்க அனுமதி (1) 5.12: இடுப்பில் கையூன்றிக் கொண்டு தொழுவது வெறுக்கத் தக்கது (1) 5.13: தொழும்போது மண்ணைச் சமப்படுத்துதல் வெறுக்கத் தக்கது (3) 5.14: பள்ளிவாசலில் எச்சில் துப்பத் தடை (10) 5.15: காலணி அணிந்து கொண்டு தொழுவதற்கு அனுமதி (1) 5.16: கவனத்தை ஈர்க்கும் ஆடை அணிந்து தொழுதல் வெறுக்கப்பட்டது (3) 5.17: சிறுநீர்/மலம் அடக்குதல், உணவு காக்க வைத்தல் நிலையில் தொழுதல் (4) 5.18: துர்நாற்றத்துடன் பள்ளிச்செல்லுதலும் அவரை வெளியேற்றலும் (10) 5.19: பள்ளிவாசலினுள் காணாமற்போன பொருளைத் தேடத் தடை (3) 5.20: தொழுகையில் ஏற்படும் மறதிக்குப் பரிகாரம் (17) 5.21: ஸஜ்தா திலாவத் (9) 5.22: அத்தஹிய்யாத்தில் அமரும் முறை (5) 5.23: தொழுகையை நிறைவு செய்யும்போது ஸலாம் கூறும் முறை (3) 5.24: தொழுத பின்னர் திக்ரு (3) 5.25: மண்ணறை வேதனையிலிருந்து பாதுகாப்புக் கோருதல் (3) 5.26: தொழுகையில் பாதுகாப்புக் கோரப்பட வேண்டியவை (8) 5.27: தொழுகைக்குப்பின் திக்ரு செய்தல் (9) 5.28: தொடக்கத் தக்பீருக்குப் பின் கூறவேண்டியவை (4) 5.29: தொழுகையில் கலந்துகொள்ள செல்லும் முறை (5) 5.30: தொழுகைக்காக மக்கள் எப்போது எழுந்து நிற்க வேண்டும்? (5) 5.31: கூட்டுத்தொழுகையை அடைந்துகொள்ள நிபந்தனை (5) 5.32: ஐவேளைத் தொழுகை நேரங்கள் (13) 5.33: கடுங்கோடையில் ஜமாஅத் தொழுகை (8) 5.34: கடுங்கோடையில்லா சமயத்தில் ஜமாஅத் தொழுகை (4) 5.35: அஸ்ருத் தொழுகையின் நேரம் (7) 5.36: அஸ்ருத் தொழுகையைத் தவறவிட்டால்.. (3) 5.37: அஸ்ரு நடுத்தொழுகை என்போரின் சான்று (6) 5.38: ஸுப்ஹு, அஸ்ருத் தொழுகைகளின் சிறப்புகள் (6) 5.39: மஃக்ரிபுத் தொழுகையின் ஆரம்ப நேரம் (2) 5.40: இஷாத் தொழுகையின் நேரமும் அதைத் தாமதமாகத் தொழுவதும் (12) 5.41: ஸுப்ஹுத் தொழுகையின் நேரம் மற்றும் ஓதப்படும் (குர்ஆன் வசனங்களின்) அளவு (7) 5.42: தொழுகைக்கு உரிய நேரத்தைத் தாமதப்படுத்துதல் (7) 5.43: கூட்டுத் தொழுகையின் சிறப்பும் அதைத் தவற விடுவது பற்றிய கண்டனமும் (10) 5.44: தொழுகை அழைப்பைச் செவியுறுபவர் பள்ளிவாசலுக்குச் செல்வது கட்டாயமாகும் (1) 5.45: கூட்டுத் தொழுகை என்பது நேர்வழியைச் சார்ந்தது (2) 5.46: பாங்கு கூறிய பின்னர் பள்ளிவாசலிலிருந்து வெளியேறத் தடை (2) 5.47: இஷா மற்றும் ஸுப்ஹு கூட்டாகத் தொழுவதன் சிறப்பு (4) 5.48: கூட்டுத் தொழுகையைத் தவிர்ப்பதற்கான அனுமதி (1) 5.49: நஃபில் தொழுகைகளை ஜமாஅத்தாகத் தொழுதல் (6) 5.50: கூட்டுத் தொழுகைக்காகக் காத்திருப்பதன் சிறப்பு (5) 5.51: பள்ளிவாசலுக்கு நடந்து செல்வதன் சிறப்பு (6) 5.52: தொழுகைக்கு நடந்து செல்பவருக்குக் கிடைக்கும் பலன்கள் (4) 5.53: உதயம்வரை தொழுத இடத்தில் அமர்ந்திருப்பதன் சிறப்பு (3) 5.54: தொழுகைக்குத் தலைமையேற்க அதிகத் தகுதியுடையவர் (5) 5.55: எல்லாத் தொழுகைகளிலும் குனூத் ஓதும் காலகட்டம் (15) 5.56: விட்டுப்போனத் தொழுகைகளைத் தொழுதல் (8) 6.01: பயணிகளின் தொழுகை; சுருக்கித் தொழுதல் (20) 6.02: மழையின்போது இருப்பிடங்களில் தொழுதுகொள்ளலாம் (4) 6.03: நஃபில் தொழுகைகளை வாகனத்தில் செல்பவர் தொழலாம் (10) 6.04: பயணத்தில் இரு தொழுகைகளைச் சேர்த்து தொழலாம் (7) 6.05: உள்ளூரில் இருக்கும்போது இரு தொழுகைகளை இணைத்து தொழுதல் (10) 6.06: தொழுது முடித்தபின் வலம், இடம் திரும்பி அமர்தல் (3) 6.07: இமாமுக்கு வலப்பக்க வரிசையில் நிற்பது விரும்பத்தக்கது (1) 6.08: இகாமத் கூறத் தொடங்கி விட்டால் நஃபில் தொழுவது வெறுக்கத்தக்கது (5) 6.09: பள்ளிவாசலுக்குள் நுழையும்போது கூறவேண்டிய துஆ (1) 6.10: பள்ளிக் காணிக்கை தொழுகை தொடர்பாக (4) 6.11: பயணத்திலிருந்து திரும்பியவர் இரண்டு ரக்அத் தொழுதல் (3) 6.12: முற்பகல் (ளுஹா) தொழுகை எண்ணிக்கை (11) 6.13: ஃபஜ்ருடைய இரு ரக்அத் சுன்னத் தொழுகை (15) 6.14: சுன்னத் தொழுகைகளின் சிறப்பும் எண்ணிக்கைகளும்! (3) 6.15: நஃபில் தொழுகைகளைத் தொழும் முறைகள் (14) 6.16: இரவுத் தொழுகை (18) 6.17: இரவுத் தொழுகையின் ஒருங்கிணைந்த விபரங்கள் (4) 6.18: அவ்வாபீன் தொழுகை (2) 6.19: இரவுத் தொழுகை, வித்ருத் தொழுகை ரக்அத்கள் (16) 6.20: வித்ருத் தொழுகை நேரம் (2) 6.21: தொழுகையில் மிகச் சிறந்தது (2) 6.22: இரவில் பிரார்த்தனை ஏற்கப்படும் நேரம் (2) 6.23: இரவின் இறுதி நேரத்தில் பிரார்த்தனை (5) 6.24: ‘கியாமு ரமளான்(தராவீஹ்) தொழ ஆர்வமூட்டல் (8) 6.25: இரவுத் தொழுகையில் பிரார்த்திப்பதும் நின்று வணங்குவதும் (17) 6.26: இரவுத் தொழுகையில் நீண்ட நேரம் (நின்று) குர்ஆன் ஓதுவது (2) 6.27: தொழாமல் விடியும்வரை உறங்குபவர் (3) 6.28: கூடுதலான நஃபில் தொழுகைகள் (6) 6.29: நற்செயல்களை வழக்கமாகச் செய்வதன் சிறப்பு. (4) 6.30: இபாதத் தூக்கத்தால் தடைப்பட்டால்… (5) 6.31: குர்ஆனின் தொடர்பைப் பற்றிப் பிடித்துக்கொள்ளக் கட்டளை (7) 6.32: குர்ஆனை இனிய குரலில் ஓதுவது விரும்பத் தக்கதாகும் (5) 6.33: மக்கத்து வெற்றி நாளில்… (2) 6.34: குர்ஆனை ஓதுவதால் இறங்கும் அமைதி (3) 6.35: குர்ஆனை மனனமிட்டவரின் சிறப்பு (1) 6.36: குர்ஆனை ஓதுகின்ற இருவகையினரின் தனிச் சிறப்புகள் (1) 6.37: குர்ஆனில் தேர்ந்த மேன்மக்கள் முன்னிலையில் குர்ஆன் ஓதுவது (2) 6.38: குர்ஆனைச் செவியேற்பதன் சிறப்பு (3) 6.39: குர்ஆனைக் கற்பது மற்றும் ஓதுவதன் சிறப்பு (2) 6.40: குர்ஆன் ஓதுவதன் சிறப்பும் அல்பகரா அத்தியாயத்தின் சிறப்பும் (2) 6.41: ஸூரத்துல் ஃபாத்திஹா, அல்பகரா அத்தியாயத்தின் இறுதி வசனங்களின் சிறப்பு (2) 6.42: ஸூரத்துல் கஹ்ஃப் மற்றும் ஆயத்துல் குர்ஸீ ஆகியவற்றின் சிறப்பு (3) 6.43: குல் ஹுவல்லாஹு அஹது (அத்தியாயத்தை) ஓதுவதன் சிறப்பு (4) 6.44: அல்முஅவ்விதத்தைன் (பாதுகாவல்) அத்தியாயங்களை ஓதுவதன் சிறப்பு (2) 6.45: குர்ஆனின்படி தாமும் செயல்பட்டுப் பிறருக்கும் அதைக் கற்பிப்பவரின் சிறப்பு (4) 6.46: குர்ஆன் ஏழு (வட்டார) மொழிநடையில் அருளப்பெற்றுள்ளது என்பதன் விளக்கம் (4) 6.47: குர்ஆனை வேகமாக ஓதுவதைத் தவிர்த்தல் (4) 6.48: குர்ஆன் ஓதும் முறைகளுள் சில (4) 6.49: தொழத் தடுக்கப்பட்ட நேரங்கள். (8) 6.50: அம்ரு பின் அபஸா (ரலி) இஸ்லாத்தை ஏற்றமை (1) 6.51: சூரியன் உதிக்கும் நேரத்தையும் மறையும் நேரத்தையும் தேர்ந்தெடுத்துத் தொழாதீர்கள்! (2) 6.52: நபி (ஸல்) அஸ்ருக்குப் பிறகு தொழுதுவந்த இரண்டு ரக்அத்கள் எவை? (5) 6.53: மஃக்ரிப் தொழுகைக்கு முன் இரண்டு ரக்அத்கள் தொழுவது விரும்பத் தக்கது (2) 6.54: பாங்குக்கும் இகாமத்துக்கும் இடையிலுள்ள தொழுகை (1) 6.55: அச்சச் சூழல் தொழுகை (8) 7.01: வெள்ளிக்கிழமையில் குளிப்பது வயதுவந்த ஒவ்வோர் ஆண் மீதும் கடமை (7) 7.02: வெள்ளிக்கிழமையில் பல் துலக்குவதும் நறுமணம் பூசுவதும் (4) 7.03: வெள்ளிக்கிழமை சொற்பொழிவின்போது அமைதி காத்தல் (2) 7.04: வெள்ளிக்கிழமையில் (பிரார்த்தனை ஏற்கப்படுவதற்கு) உள்ள ஒரு நேரம் (4) 7.05: வெள்ளிக்கிழமையின் சிறப்பு (2) 7.06: இந்தச் சமுதாயத்தின் (சிறப்பு வழிபாட்டு) நாள் வெள்ளிக்கிழமை (4) 7.07: வெள்ளிக்கிழமை (தொழுகைக்கு) முன்னதாகச் செல்வதன் சிறப்பு (2) 7.08: மௌனமாக (வெள்ளிக்கிழமை) உரையைச் செவியேற்பவரின் சிறப்பு (2) 7.09: சூரியன் (உச்சியிலிருந்து) சாயும்போது ஜும்ஆத் தொழுவது (5) 7.10: தொழுகையின் உரைகளும் இடையே (இமாம்) அமர்வதும் (3) 7.11: வியாபாரத்தையோ வேடிக்கையையோ கண்டால் (62:11ஆவது) இறைவசனம் (4) 7.12: ஜும்ஆத் தொழுகையை(த் தொழாமல்) கைவிடுவதற்குக் கண்டனம் (1) 7.13: (ஜும்ஆத்) தொழுகையையும் (குத்பா) உரையையும் சுருக்கமாக அமைத்தல் (11) 7.14: இமாம் (ஜும்ஆ) உரை நிகழ்த்தும்போது காணிக்கை தொழுகை (6) 7.15: பொது போதனைக்கு நடுவில் தனி போதனை (1) 7.16: ஜும்ஆத் தொழுகையில் ஓத வேண்டியவை (3) 7.17: வெள்ளிக்கிழமை (ஃபஜ்ருத் தொழுகையில்) ஓத வேண்டியவை (3) 7.18: ஜும்ஆவுக்குப் பின் தொழ வேண்டியவை (16) 8.01: பெருநாள் திடலில் பெண்கள் பங்கேற்பது (3) 8.02: பெருநாள் திடலில் தொழுகைக்கு முன்போ பின்போ தொழக் கூடாது (1) 8.03: இரு பெருநாள் தொழுகைகளில் ஓதக் கூடியவை (2) 8.04: பெருநாட்களில் பாவமில்லா விளையாட்டுகளில் ஈடுபட அனுமதி (7) 9.00: இமாம் (மழைத் தொழுகையில்) மேல்துண்டை மாற்றிப் போட்டுக் கொள்வது (4) 9.01: மழைவேண்டிப் பிரார்த்திக்கும்போது இருகைகளை உயர்த்துதல் (3) 9.02: மழைவேண்டிப் பிரார்த்தித்தல் (2) 9.03: கடும் காற்றையும் மேகத்தையும் காணும்போதும்.. மழை பெய்யும்போதும்.. (3) 9.04: கீழைக் காற்று (’ஸபா’) மற்றும் மேலைக் காற்று (’தபூர்’) பற்றிய குறிப்புகள் (1) 10.01: சூரிய கிரகணத் தொழுகை (7) 10.02: கிரகணத் தொழுகையின்போது மண்ணறை வேதனை பற்றி நினைவு கூர்வது (1) 10.03: கிரகணத் தொழுகையின்போது சொர்க்கமும் நரகமும் (6) 10.04: கிரகணத் தொழுகையில் எட்டு ருகூஉகளும் நான்கு ஸஜ்தாக்களும்.. (2) 10.05: கிரகணத் தொழுகைக்காக, “அஸ்ஸலாத்து ஜாமிஆ” அறிவிப்பு.. (8) 11.01: மரணத் தருவாயில் ‘லா இலாஹ இல்லல்லாஹ்’ (எனும் கலிமா)வை நினைவூட்டுதல் (2) 11.02: துன்பம் நேரும்போது வேண்டக்கூடிய பிரார்த்தனை (2) 11.03: நோயாளியிடமும் மரணத் தருவாயில் இருப்பவரிடமும் சொல்ல வேண்டியவை (1) 11.04: உயிர் பிரிந்தவுடன் இறந்தவருக்குச் செய்ய வேண்டியவை (1) 11.05: இறப்பவரின் பார்வை தனது உயிரை நோக்கி நிலைகுத்தி நிற்றல் (1) 11.06: இறந்தவருக்காக அழுவது (3) 11.07: நோயாளிகளைச் சந்தித்து உடல்நலம் விசாரித்தல் (1) 11.08: பொறுமை என்பது துன்பத்தின் முதல் நிலையில் கடைப்பிடிப்பதாகும் (2) 11.09: இறந்தவருக்காக ஒப்பாரி வைத்து அழுதால்.. (14) 11.10: ஒப்பாரிக்குக் கடுமையான கண்டனம் (5) 11.11: ஜனாஸாவின் இறுதி ஊர்வலத்தைப் பின்தொடர்ந்து செல்வதற்குப் பெண்களுக்குத் தடை (2) 11.12: மையித்தைக் குளிப்பாட்டுதல் (4) 11.13: மய்யித்திற்கு ‘கஃபன்’ உடை அணிவித்தல் (4) 11.14: மய்யித்தை மூடிவைத்தல் (1) 11.15: மய்யித்திற்கு அழகிய முறையில் கஃபன் அணிவித்தல் (1) 11.16: இறந்தவர் உடலைத் துரிதமாக அடக்கம் செய்தல் (2) 11.17: ஜனாஸாத் தொழுகையின் மற்றும் ஜனாஸாவைப் பின்தொடர்வதன் சிறப்பு (6) 11.18: மய்யித்துக்காக நூறு பேர் தொழுது செய்யும் பரிந்துரை ஏற்கப்படும் (1) 11.19: மய்யித்துக்காக நாற்பது பேர் பரிந்துரை (1) 11.20: இறந்தவர் குறித்துப் புகழ்ந்து, அல்லது இகழ்ந்து பேசப்படுதல் (1) 11.21: ஓய்வு பெற்றவரும் ஓய்வளித்தவரும் (1) 11.22: ஜனாஸாத் தொழுகையில் சொல்ல வேண்டிய தக்பீர்கள் (6) 11.23: மண்ணறை அருகில் (ஜனாஸாத் தொழுகை) தொழுவது (4) 11.24: ஜனாஸாவுக்காக எழுந்து நிற்பது (7) 11.25: ஜனாஸாவுக்காக எழுந்து நிற்கும் வழக்கம் மாற்றப்பட்டது (3) 11.26: இறந்தவருக்காக ஜனாஸாத் தொழுகையில் செய்யும் பிரார்த்தனை (2) 11.27: ஜனாஸாத் தொழுகையின்போது இமாம் எந்த இடத்தில் நிற்க வேண்டும்? (2) 11.28: ஜனாஸாத் தொழுகை தொழுதுவிட்டு வாகனத்தில் ஏறித் திரும்பிச் செல்லலாம் (2) 11.29: உட்குழியும் மையித்தின் மேல் செங்கற்களை அடுக்குவதும் (1) 11.30: கப்றுக் குழியினுள் போர்வையை விரித்து (மையித்தை) வைப்பது (1) 11.31: கப்றைத் தரை மட்டமாக்க உத்தரவு (2) 11.32: கப்றுகளைக் காரையால் பூசுவதோ அதன் மீது கட்டடம் எழுப்புவதோ கூடாது (2) 11.33: கப்றின்மீது அமர்வதும் அதன் மீது தொழுவதும் தடுக்கப்பட்டவை (3) 11.34: பள்ளிவாசலில் ஜனாஸாத் தொழுகை நடத்துவது (3) 11.35: மையவாடிக்குள் கூற வேண்டியதும் பிரார்த்திப்பதும் (3) 11.36: நபி (ஸல்), தம் தாயாரின் கப்றைக் காண்பதற்கு இறைவனிடம் அனுமதி கோரியது (3) 11.37: தற்கொலை செய்தவருக்கு, (ஜனாஸா) தொழுகையைக் கைவிட்டது (1) 12.00: பல வகை வள வரிகள் (5) 12.01: பத்து சதவீத ஸகாத்; அல்லது ஐந்து சதவீத ஸகாத் (1) 12.02: ஒரு முஸ்லிம் மீது அவர்தம் அடிமைக்காகவும் குதிரைக்காகவும் ஸகாத் கடமை இல்லை (3) 12.03: ஸகாத்தைச் சமர்ப்பிப்பதும் ஸகாத் கொடுக்க மறுப்பதும் (1) 12.04: பெருநாள் தர்மமாகப் பேரீச்சம் பழம், பார்லி (10) 12.05: பெருநாள் தொழுகைக்கு முன்பே பெருநாள் தர்மத்தை வழங்க கட்டளை (2) 12.06: ஸகாத் வழங்க மறுப்பது குற்றமாகும் (4) 12.07: ஸகாத் வசூலிப்பவர்களிடம் கனிவுடன் நடந்துகொள்வது (1) 12.08: ஸகாத் வழங்காதவருக்கான கடும் தண்டனை (2) 12.09: தர்மம் செய்வதற்கு ஆர்வமூட்டல் (2) 12.10: செல்வத்தைச் சேமித்தோர் பற்றிய கண்டனம் (2) 12.11: தர்மம்: ஆர்வமூட்டலும் நற்கூலி உண்டு என்ற நற்செய்தியும் (2) 12.12: செலவழிப்பதன் சிறப்பும் வழங்காதவனின் பாவமும் (4) 12.13: தமக்கும், குடும்பத்தாருக்கும், உறவினர்களுக்குமாக செலவிடுதல் (1) 12.14: இணை வைக்கும் உறவுகளுக்குச் செலவழிப்பதன் சிறப்பு (8) 12.15: இறந்தவருக்காகத் தர்மம் செய்தல் (1) 12.16: எல்லா நல்லறமும் ஸதகா எனப்படும் (5) 12.17: அறவழியில் செலவு செய்பவரும் செய்யாதவரும் (1) 12.18: தர்மம் செய்வதற்கு ஆர்வமூட்டல் (5) 12.19: தர்மம் (இறைவனிடம்) ஏற்கப்படுவதும் வளர்வதும் (3) 12.20: இன் சொல்லையேனும் தர்மம் செய்து நரகத்திலிருந்து பாதுகாப்பு பெறல் (5) 12.21: தர்மத்தின் அளவில் குறை காண தடை (1) 12.22: பாலுக்காக இரவல் வழங்கப்படும் கால்நடைகளின் சிறப்பு (2) 12.23: வள்ளலுக்கும் கஞ்சனுக்குமான உதாரணம் (3) 12.24: உரியவருக்குத் தர்மம் சேரவில்லையேனும் பலன் (1) 12.25: உரிமையாளரின் அனுமதியுடன் தர்மம் செய்தவருக்கும் பலன் (3) 12.26: ஓர் அடிமை தன் உரிமையாளரின் செல்வத்திலிருந்து (அறவழியில்) செலவழித்தல் (3) 12.27: தர்மத்தையும் இதர நற்செயல்களையும் இணைத்துச் செய்தவர் (3) 12.28: அறவழியில் தாராளமாக செலவிடலும் கணக்கு பார்ப்பது விரும்பத்தக்கதல்ல என்பதும் (3) 12.29: சிறிய அளவு தர்மம் (1) 12.30: இரகசியமாகத் தர்மம் செய்வதன் சிறப்பு (1) 12.31: மிகச் சிறந்த தர்மம் (2) 12.32: சிறந்த கை (4) 12.33: யாசிப்பதற்குத் தடை (3) 12.34: ஏழை என்பவன், அடிப்படைத் தேவைகளுக்குப் போதிய பொருளாதாரம் இல்லாதவன் (2) 12.35: மக்களிடம் யாசிப்பது வெறுக்கப்பட்டதாகும் (6) 12.36: யாருக்கு யாசிக்க அனுமதி? (1) 12.37: எதிர்பார்ப்பு இல்லாமல், யாசிக்காமல் வாழ்பவருக்கு வழங்கப்பட்டால் பெற்றுக்கொள்ளலாம் (4) 12.38: உலகாதாயத்தின் மீது பேராசை கொள்வது விரும்பத் தக்கதன்று (2) 12.39: இரு ஓடைகள் இருந்தாலும் மூன்றாவது ஓடையை எதிர்பார்த்தல் (4) 12.40: வாழ்க்கை வசதிகள் அதிகமாக இருப்பது செல்வமன்று (1) 12.41: இவ்வுலகத்தின் கவர்ச்சி குறித்து அஞ்சுதல் (3) 12.42: சுயமரியாதை மற்றும் பொறுமையின் சிறப்பு (1) 12.43: போதுமான வாழ்வாதாரமும் போதுமென்ற மனமும் (4) 12.44: அருவருப்பாகப் பேசி, கடுஞ் சொற்களால் கேட்டவருக்கும் தானம் வழங்குவது (4) 12.45: இறைநம்பிக்கை, (வறுமையால்) கேள்விக்குள்ளாக்கப்படுபவருக்கு உதவுதல் (1) 12.46: இஸ்லாத்தை ஏற்றவர்களுக்கு வழங்கலும் இறை நம்பிக்கை வலுவானவர் பொறுமை கொள்ளலும் (8) 12.47: காரிஜிய்யாக்களும் அவர்களின் தன்மைகளும் (10) 12.48: காரிஜிய்யாக்களைக் கொல்லுவதற்கு ஊக்கப்படுத்துதல் (4) 12.49: காரிஜிய்யாக்கள் படைப்பினங்களிலேயே தீயவர்கள் ஆவர் (3) 12.50: தூதரின் குடும்பத்தார் ஸகாத் பெறுவதற்குத் தடை (6) 12.51: நபி (ஸல்) குடும்பத்தாரைத் தர்மப் பொருட்கள் வசூலிக்கப் பயன்படுத்தலாகாது (1) 2.26: அசுத்தமான கையைப் பாத்திரத்தில் நுழைத்தல் (2) 2.25: ஒருநாள் தொழுகைகளை ஒரு உளூவில் தொழ அனுமதி (1) 2.24: காலுறையில் மஸஹு செய்து தொழுவதற்கான வரம்பு (1) 2.23: முன் தலை மற்றும் தலைப்பாகை மீது மஸஹு செய்தல் (4) 2.22: காலுறையில் மஸஹு செய்தல் (9) 2.21: தண்ணீரால் கழுவித் துப்புரவு செய்தல் (3) 2.20: மலம் கழிப்பதற்குத் தடையுள்ள இடங்கள் (1) 2.19: செயல்களை வலப் புறமிருந்து தொடங்குதல். (2) 2.18: வலக் கரத்தால் கழுவத் தடையானவை (3) 2.17: கழிப்பிடத்தில் துப்புரவு செய்தல் (7) 2.16: இயற்கை மரபுகள் (8) 2.15: பல் துலக்குதல் (7) 2.14: சிரமகாலங்களிலும் முழுமையாக ஒளு செய்வதன் சிறப்பு (1) 2.13: உளூவில் தண்ணீர் படும் இடங்களில் ஒளி படர்தல் (1) 2.12: உளூவில் உறுப்புகளை அதிகப்படுத்திக் கழுவுதல் (6) 2.11: உளூ செய்த நீரோடு வெளியேறும் பாவங்கள் (2) 2.10: உளூவில் உறுப்புகள் முழுவதும் கழுவுதல் (1) 2.09: இரு கால்களையும் முழுமையாகக் கழுவுதல் கட்டாயம் (6) 2.08: சுத்தம் செய்யும் போது ஒற்றைப்படையாக செய்தல் (5) 2.07: நபி (ஸல்) அவர்கள் செய்த அங்கத் தூய்மை (உளூ) (2) 2.06: அங்கத் தூய்மை (உளூ) செய்தபிறகு ஓதப்படும் பிரார்த்தனை (1) 2.05: சிறு பாவங்களுக்கான பரிகாரங்கள் (3) 2.04: அங்கத்தூய்மையின் சிறப்பும் அதன் பின் தொழுவதன் சிறப்பும் (9) 2.03: அங்கத் தூய்மை (உளூ) செய்முறையும் அதை நிறைவாகச் செய்வதும் (2) 2.02: தொழுகைக்குக் கட்டாயமான (அங்கத்) தூய்மை (2) 2.01: அங்கத்தூய்மை(உளூ)யின் சிறப்பு (1) 1.96: மறுமையில் ஆதம்(அலை) அவர்களுக்கு இடப்படும் கட்டளை (1) 1.95: சொர்க்கவாசிகளில் பாதிபேர் (3) 1.94: விசாரணையோ வேதனையோ இன்றி சொர்க்கம் செல்வோர் (7) 1.93: நட்பு கொள்ளத் தக்கவர்களும் தகாதவர்களும் (1) 1.92: இறைமறுப்பாளரின் நற்செயல்கள் பலனளிக்காது (1) 1.91: நரகவாசிகளிலேயே மிகக்குறைவான வேதனை அனுபவிப்பவர். (4) 1.90: அபூதாலிபுக்காக நபி(ஸல்) அவர்களின் பரிந்துரை (3) 1.89: நெருங்கிய உறவினருக்கு எச்சரிக்கை செய்தல் (5) 1.88: இறைமறுப்பாளருக்கு எந்தப் பரிந்துரையும் பலனளிக்காது (1) 1.87: தம் சமுதாயத்தார் மீது நபி(ஸல்) அவர்களுக்குள்ள பரிவு (1) 1.86: நபி(ஸல்) அவர்களின் பரிந்துரைப் பிரார்த்தனை! (8) 1.85: சொர்க்கத்திற்காகப் பரிந்துரைக்கும் முதல் மனிதர் (4) 1.84: சொர்க்கவாசிகளுள் ஆகக் குறைந்த பதவி (14) 1.83: இறுதியானவராக வெளியேறும் நரகவாசி. (3) 1.82: ஷஃபாஅத்(பரிந்துரை) செய்யப்படுபவர்கள் (2) 1.81: இறைவனைக் காணும் வழிமுறை (3) 1.80: இறைவனைக் காண்பதற்கான சான்று (2) 1.79: அல்லாஹ்வின் பார்வை பற்றிய விளக்கம் (2) 1.78: மிஃராஜின் போது நபி(ஸல்) கண்டது பற்றிய விளக்கம் (2) 1.77: நபி(ஸல்) அவர்கள் இறைவனைப் பார்த்தார்களா? என்பது பற்றிய விளக்கம் (5) 1.76: சித்ரத்துல் முந்தஹா(இலந்தை மரம்) பற்றிய குறிப்பு! (4) 1.75: ஈஸா(அலை) மற்றும் தஜ்ஜால் பற்றிய குறிப்புகள் (6) 1.74: விண்ணுலகப் பயணமும் தொழுகை கடமையாக்கப்படலும் (12) 1.73: வேத வெளிப்பாடு (வஹீ) தொடங்குதல் (3) 1.72: இறை நம்பிக்கை ஏற்கப்படாத காலகட்டம் (5) 1.71: ஈசா(அலை) இஸ்லாமிய நெறிப்படி நீதி வழங்குதல் (6) 1.70: தூதுத்துவம் உலக மக்கள் அனைவருக்கும் பொதுவானது (3) 1.69: இறைச்சான்றுகள் மூலம் மன அமைதி (1) 1.68: ஒருவரை இறைநம்பிக்கையாளர் என்று முடிவு செய்தல் (2) 1.67: அச்சநேரத்தில் இறைநம்பிக்கையாளர் நிலை (1) 1.66: இறுதிக் காலத்தில் இறை நம்பிக்கை (அற்றுப்) போய் விடுவது. (2) 1.65: இஸ்லாத்தின் மீளெழுச்சி. (3) 1.64: உள்ளங்களில் குழப்பங்கள் தோன்றுவது. (2) 1.63: குடிமக்களைச் சுரண்டும் ஆட்சியாளன் நரகத்திற்குரியவன் ஆவான். (3) 1.62: செல்வத்தைக் காக்கப் போராடியவர் மற்றும் பிறர் செல்வத்தைப் பறிக்க முனைந்தவர் (2) 1.61: மாற்றாரின் பொருளைக் கைப்பற்றுபவர் நிலை. (5) 1.60: இறைநம்பிக்கையில் தடுமாற்றம் ஏற்பட்டால்.. (8) 1.59: நல்ல-தீய எண்ணங்களுக்கான கூலி (5) 1.58: தீய எண்ணங்களைச் செயல்படுத்தாமல் இருத்தல் (2) 1.57: தாங்க முடியாத சுமை? (2) 1.56: இறை நம்பிக்கையின் வாய்மையும் தூய்மையும் (1) 1.55: இறைமறுப்பாளராக இருந்தபோது செய்த நல்லறங்கள் (3) 1.54: முன் செய்த பாவங்கள் (2) 1.53: அறியாமை காலத்தில் செய்த தீமைகள் (2) 1.52: இறைநம்பிக்கையாளரின் அச்சம் (1) 1.51: குழப்பங்கள் தோன்றுவதற்கு முன் நற்செயல் புரிய விரைதல் (1) 1.50: மறுமை நெருங்கும் வேளையில் வீசும் காற்று (1) 1.49: ஹிஜ்ரத்தில் தற்கொலை செய்து கொண்டவரின் நிலை (1) 1.48: கையாடல் செய்பவரும் இறைநம்பிக்கையாளரும் (2) 1.47: தற்கொலை செய்பவரும் கட்டுப்பட்டு வாழ்பவரும் (7) 1.46: மூன்று பெரும் தவறான செயல்கள் (4) 1.45: புறங்கூறுவது வன்மையாகத் தடை செய்யப் பட்டது (3) 1.44: துக்க வேளைகளில் தடை செய்யப்பட்ட செய்கைகள்! (3) 1.43: முஸ்லிம்களை வஞ்சித்தவர் நிலை! (2) 1.42: முஸ்லிம்களுக்கு எதிராக ஆயுதம் ஏந்தியவர் நிலை! (3) 1.41: “லா இலாஹ இல்லல்லாஹ்” கூறியவரைக் கொல்லத்தடை! (4) 1.40: இணைவைத்தலின் விளைவுகள் (5) 1.39: தற்பெருமை (3) 1.38: பெரும் பாவங்கள் (5) 1.37: பாவங்களில் மிகவும் அருவருப்பானது (2) 1.36: நற்செயல்களில் சிறந்தது (6) 1.35: தொழுகையை விடுதலும் குஃப்ரும் (3) 1.34: இறைநம்பிக்கை குறைவும் குஃப்ர் எனும் சொல்லும் (1) 1.33: அன்ஸாரிகளையும் அலி(ரலி)யையும் நேசித்தல் (6) 1.32: மழையும் இறைமறுப்பும் (4) 1.31: ஓடிப்போன அடிமை (3) 1.30: இறைமறுப்பின் அடையாளங்கள் (1) 1.29: இறைமறுப்பாளர்களாய் மாறுதல் (2) 1.28: முஸ்லிமோடு போரிடுதல் (1) 1.27: தந்தையை வெறுப்பவன் நிலை (4) 1.26: முஸ்லிமை நோக்கி காஃபிர் என அழைத்தல் (2) 1.25: நயவஞ்சகனின் குணங்கள். (3) 1.24: இறைநம்பிக்கையில் குறைவு ஏற்படல் (2) 1.23: மார்க்கம் என்பதே நலன் நாடுவதுதான். (4) 1.22: இறைநம்பிக்கையாளர்களை நேசித்தல் (1) 1.21: இறைநம்பிக்கையில் ஏற்படும் ஏற்றத் தாழ்வு (9) 1.20: நன்மையை ஏவுதல், தீமையைத் தடுத்தல் (2) 1.19: நல்லவற்றிற்கு ஆர்வமூட்டுதல் (3) 1.18: அண்டை வீட்டாருக்குத் தொல்லை தரக் கூடாது (1) 1.17: தமக்கு விரும்வுவதைச் சகோதரனுக்கும் விரும்புதல் (2) 1.16: தூதரை நேசிப்பது கடமை (2) 1.15: இறைநம்பிக்கையின் இனிமை (2) 1.14: இஸ்லாம் கூறும் நல்லறங்களில் சிறந்தது (4) 1.13: இஸ்லாத்தின் அனைத்துப் பண்புகளின் கலவை (1) 1.12: இறைநம்பிக்கையின் கிளைகள் (5) 1.11: இறைநம்பிக்கையைச் சுவைப்பவர் (1) 1.10: ஓரிறை கோட்பாட்டில் மரணித்தவர் நிலை (11) 1.09: இணை வைத்த நிலையில் மரணித்தவர் நிலை (3) 1.08: ஜிஸ்யா செலுத்தாதவர் மீது போர் புரிதல் (6) 1.07: இஸ்லாத்தை ஏற்க அழைப்பு விடுத்தல் (2) 1.06: அறியாதவர்களுக்கு அறிவித்தல் (4) 1.05: இஸ்லாமியக் கடமைகள் (4) 1.04: சொர்க்கம் செல்பவர் (7) 1.03: இஸ்லாத்தின் தூண்கள் (2) 1.02: தொழுகை பற்றிய விளக்கம் (2) 1.01: இறைநம்பிக்கை குறித்த விளக்கம் (7)
வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் உடனான இரண்டாவது சந்திப்பு, மிக விரைவில் நடைபெற உள்ளதாக, அமெரிக்க அதிபர் டோனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். கடந்த 2011ஆம் ஆண்டு வடகொரியாவின் புதிய அதிபராக கிம் ஜாங் உன் பதவியேற்றார். அதன் பின்னர், அடுத்தடுத்து அணு ஆயுத மற்றும் ஏவுகணை சோதனைகளை அந்நாடு நடத்தியது. இதன்காரணமாக கொரிய தீபகற்பத்தில் போர் பதற்றம் அதிகரித்தது. வடகொரியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே எந்தநேரமும் போர் வெடிக்கலாம் என்று அச்சமும் நிலவியது. வடகொரியா மீது ஐ.நா.வும், அமெரிக்காவும் கடுமையான பொருளாதார தடைகளை விதித்தன. இந்தநிலையில், சியோலில் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் வடகொரியா பங்கேற்றது. அதன்பிறகு, கடந்த ஏப்ரலில் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னும், தென் கொரிய அதிபர் மூன் ஜே இன்னும் சந்தித்துப் பேசினர். இது, கொரிய தீபகற்பத்தில் புதிய வரலாற்று அத்தியாயத்தை ஏற்படுத்தியது. இந்தநிலையில், பல்வேறு குழப்பங்களுக்குப் பிறகு ஜூன் 12ஆம் தேதி அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பும், வடகொரிய அதிபர் கிம்மும் சிங்கப்பூரில் சந்தித்துப் பேசினர். உலக நாடுகள் உற்றுநோக்கிய இந்த சந்திப்பிற்கு பிறகு, வடகொரியாவின் நடவடிக்கையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டது. அணுஆயுத சோதனைகளை நிறுத்த வடகொரியா முன்வந்தது. இந்தச்சூழலில் கிம் ஜாங் உன்னுடனான இரண்டாவது சந்திப்பு விரைவில் நடைபெற உள்ளதாக அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம் - 2 ஆக., 2020 விமர்சிக்கப்படும் கூட்டமைப்பு . விடை காணா வினாக்களா ? எஸ். எஸ். தீவகன் வினா 2-சுமந்திரன் இப்போதைய ஸ்ரீதரன் போன்ற விடுதலை போன்ற எதிர்ப்பாளர்களை ஏன் வைத்துள்ளீர்கள் ? விடை 2- சுமந்திரன் ஆரம்பத்தில் நல்ல சடடவலராகவும் மும்மொழி திறன் கொண்டவராகவும் கட்சியில் நுழைந்தார் . அவருக்கு தேசியப்பட்டியல் நியமனம் வழங்கப்பட்டு உலாவங்கப்படார் .அப்புறம் அடுத்த தேர்தலில் அவரை மக்கள் முன் சென்று வேறுதான் வரவேண்டும் என தேர்தலில் பங்கு பற்றி மக்கள் தான் அவரை தெரிவு செய்தனர் .பின் வந்த காலங்களில் புலிகள் எதிர்ப்பு ஒவ்வாமை கருத்தியலை பகிரங்கமாக பல இடங்களில் வெளிப்படுத்தினார் சிலவேளை மழுப்பல் பதில்களையும் வாரி வழங்கினார் ஆனாலும் இனிவரும் காலங்களில் இவரால் கட்சிக்கு ஆபத்தான கட்டிடம் என்பதால் கட்சிக்குள்ளேயே விமர்சனங்கள் பகிரங்கமாக முன்வைக்கப்பட்டு மக்கள் முன் விளக்கம் கோரப்படுகின்ற து இது கட்சிக்குள் உள்ளே உள்ள ஜனநாயக மரபு இப்போது மக்கள் முன் நிறுத்தி வைக்கப்பட்டுளார் மக்கள் அவரை நிராகரிக்கவேண்டும் அடுத்து ஸ்ரீதரன் .எல்லோரும் கட்சிக்குள்ளே வரும்போது நல்ல பிள்ளைகளாக தான் வருவார்கள் கட்சி செல்வாக்கு கட்சி வாக்கு வாங்கி என வளர்ந்து முகவரி தேடிக்கொண்ட பின்னர் தான் சுரூப வெளிவரும் அப்படி தான் ஐவரும் இவருக்கென்று பெரிய வாக்கு வங்கியை உருவாக்கிய இறுமாப்ப்பில் சுமந்திரனோடு அணி சென்ற்து புலி எதிர்ப்பு பக்கமாக நடிக்கிறார் .இவருக்கும் மக்கள் பதில் சொல்வார்கள். இவர் வெற்றி பெற்றாலும் 75 கள்ள வாகு பிரச்சினை சனியனாகா மாறும் அதனை விட இவரது ஒழுக்கற்றல் சம்பந்தமாக மாவை நடவடிக்கை எடுப்பதாக வேறு கூறியுள்ளார் யாழ் கிளி மாவட்த்தில் 10 வேட்ப்பாளர் கூட்ட்டமைப்பில் உள்ளனர் மக்கள் சுமந்தினையும் ஸ்ரீதரனையும் தெரிவு செய்யாமல் விடலாம் தானே இது மக்களின் கவனத்துக்கு at 23:13 விமர்சிக்கப்படும் கூட்டமைப்பு . விடை காணா வினாக்களா ? எஸ். எஸ். தீவகன் வினா 1.நல்லாட்சி அரசில் என்ன கிழித்தீர்கள் ? விடை .பலமாக இருந்த புலிகளின் காலத்திலேயே பேச்சுவார்த்தை உலக நாடுகளின் மத்தியஸ்தம் என்று சென்றும் வருடங்களை இழுத்தடித்து தீர்வு கொடுக்காத ஸ்ரீலங்கா புலிகளின் மௌனிப்புக்கு பின்னர் பலவீனமான நிலையில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எளிதில் ஏதும் கொடுக்கவா போகிறார்கள் அதுவும் சில வருடங்களில் . ஒரு அரசு சொற்ப பலத்துடன் இருக்கும்போது தான் பேரம் பேசி இணங்க வைக்க கூடிய காலமாகும் அதனையே விட ஸ்ரீலங்கா வரலாற்றிலேயே இரண்டு பெரிய பெரும்பான்மை கட்சிகளும் இணைத்து ஆட்சி செய்த ஒரே காலம் அந்த காலத்தில் தான் ஏதும் ஒரு தீர்வு கிடைக்குமானால் கிழித்தெறியப்படாத ஒப்பந்தமாகும் நம்பியே கூட்டமைப்பு இணைக்க நிலையை எடுத்தது . சிலர் கூறுவது போல கேட்ட்து தாராவிடடாள் ராஜினாமா செய்யலாமா ? செய்தால் என்ன நடக்கும் பாராளுமன்றில் மகிந்த தரப்பு நல்லாட்சியை கவிழ்க்கும் . அதாவது கூட்டமைப்பு இல்லாவிடின் பெரும்பான்மை கிடைக்கும் கூட்டமைப்பு வைக்கலாவிடினும் இதே நிலைமை தான் உதாரணம் வேலணை பிரதேச சபை தவிசாளர் டேகிர்வில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினை ர் செந்தூரன் வேண்டுமென்றே வாக்கெடுப்பு முடிந்த பின் வந்து மறைமுகமாக ஈபிடிபிக்கு உதவியது போல .ஆக எடுத்தேன் கவிழ்த்தேன் என்று உள்ள உறுப்பினர் பலமும் போய் நல்லாட்சியும் கவிழ்ந்து 1-2 வருடங்களின் முன்னேயே குழப்பநிலை வந்து எமக்கு என்ன பலன் . அதே தீர்வு கோரிக்கையோடு கம்பெரேலியா பாராளுமன்ற உறுப்பினருக்கான நிதி என்பவதரியும் பயன்படுத்தி போருக்கு பின்னர் அழிந்து போயுள்ள எமது நிலத்தை ஓரளவாது நிவர்த்தி செய்து மக்களை மூச்சுவிட செய்ய முடிந்தது அல்லவா ஈபிடிபி போன்றோரின் கட்டுப்பாட்டில் பலவருடங்களாக கிடைக்காத அபிவிருத்தி சிலவருடங்களில் கிடைத்துள்ளதை சீர்தூக்கிப்பார்க்கலாம் இப்போது கூக்குரலிடும் மாற்று அணிகள் இரண்டும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களை கொண்டவர்கள் தான் அவர்களும் அங்கெ சென்று எதனை செய்தார்கள் அவர்களின் காலத்தில் என்றும் கேட்கலாம் மக்களே சரி இந்த தடவை வெற்றி பெற்று போனாலும் அடுத்த மாதங்களிலேயே அதுவும் கோத்தாவின் ஆட்ச்சியில் தீர்வு கொண்டு வருவார்களா ? அல்லது சமஸடி எடுப்பார்களா ?அல்லது உடனேயே ராஜினாமா செய்வார்களா ? ஒற்றையாட்சி சடடதுக்கு கீழே தான் சாத்தியப்பிரமணமே எடுக்க வேண்டும் மறந்து விடாதீர்கள் 22.14.16 என்று போனபோதே அப்போதைய அரசுகளே கொடுக்காத தேர்வினை கோத்த என்னும் கடும்புக்குவாதி கொடுப்பாரென்று நம்புவீர்களா ? at 22:53 தீவகத்தில் இராணுவ அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் சாட்டி மாவீரர் துயிலும் இல்லத்தை புதுப்பித்து மாவீரர் நாளை நிகழ்த்தியவர்கள் கூட்ட்டமைப்பும் செண்பகம் அமைப்பும் மட்டுமே மற்றவர்கள் இப்போதைய சிவப்பு மஞ்சள் கொடிகாரர் எங்கே போனார்கள் at 22:15 தீவகத்தில் கட்சி தலைவரை கேவலப்படுத்தி கட்சியால் கிடைத்த கம்பெறிலியாவை காரணம் காட்டி வாக்கு சேகரிக்கும் ஸ்ரீதரன் தமிழரசுக்கட்சியின் பேசுபொருளாக ஸ்ரீதரன் மேலும் படிக்க » at 07:56 சைக்கிள் கட்சியின் புலிவேசம் எப்போது கலையும் தேர்தலில் டக்ளஸ் விஜயகலா அங்கஜன் தோல்வி காணலாம் .தமிழ் தேசியக்கட்சிகளுள்ளேயே 7 ஆசனங்களும் பங்கிடப்படலாம் எளிமைக்கு மாவை வரலாறு அனுபவம் நீண்டநாள் கட்சி பனி தலைமைக்கு மாவை கோடை ஊடகப்பிரசாரம் சரவணபவன் மகளிர் கணவனின் அனுதாபம் சசிகலா கிளிநொச்சி தனிமை சரியாருக்கு நாடாளுமன்றத் தேர்தலில் இம்முறை யாழ் மாவட்டத்தில் ஈபிடிபி செயலாளர் டக்ளஸ் தேவானந்தா, ஐக்கிய தேசியக் கட்சியின் விஜயகலா மகேஸ்வரன், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அங்கஜன் ஆகியோர் ஆசனங்களைப் பெறுவார்களா என்பது சந்தேகமே.தேர்தலில் நிறைய சுயேச்சை குழுக்களும் தேசியக்கட்சிகளும் ஐ தே க இரண்டு அணிகளாகவும் போட்டி இடுகின்றன ,இதனால் இந்த காட்சிகள் அல்லது சுயேச்சைகள் பெரும் வாக்குகள் மொத செல்லுபடியான வாக்குகளில் 5 வீதத்துக்கு குறைவாக இருந்தால் அந்த வாக்குகள் கழிக்கப்படும் மீதி மொத்த வாக்குகளில் 6 ஆசனகளுக்கக்கா ஆரால் வகுக்கப்படும் வாக்குகளின் எண்ணிக்கையில் ஆசனகள் கட்சிகளுக்கு பங் கீடாகும் விஜயகாலவின் 20 ஆயிரம் வாக்கு வாங்கி இரண்டாக உடையும் தொலைபேசிக்ககா பிரியும் . அங்கஜன் அணியும் டக்ளஸ் அணியும் ஒரே கோத்தாவின் அணி என்பதால் அவர்களுக்குள்ளேயே இழுபறி வாக்கு வங்கி சிதறும் . கூடுதல் வாக்குகöலாய் கூட்ட்டமைப்பே பெயரம் கணிப்பு இருப்பதால் கூட்டமைப்புக்கு ஒரு போனஸ் ஆசனம் எடுத்து வைக்கப்படும் மீதம் ஆறில் கூட்டமைப்பு 3 ம் சைக்கிள் மீன் அணிகள் தலா ஒவ்வொன்ருமாக பங்கு போட்டுக் கொள்ளலாம் முக்கியமாக கூடடைப்புக்கு அடுத்து இரண்டாம் மூன்றாம் இடங்களை சொற்ப வாக்கு வித்தியாசத்திலாவது அடையும் கட்சிக்கே 6 , 7 ஆம் ஆசனங்கள் கிடைக்கும் உதாரணமாக சைக்கிள் 20000 வீணை 19600 மீன் 19200 மொட்டு 19100 யானை 18 900 -சைக்கிளும் வீணையும் ஒவ்வொன்று மற்றவைக்கு இல்லை அதே போல் சற்று மாறி சைக்கிள் 20000 மீன் 19800 வீணை 19300 என்றால் டக்ளஸ் தோல்வி இனி கூட்ட்டமைப்பை பொறுத்தவரை சுமந்திரன் தோல்வி நிச்சயமாகி விட்ட்து ஸ்ரீதரனின் வாக்கு வாங்கி அவரது வாய்கொழுப்பாலும் சுமந்திரன் இணைப்பு கொளகையாலும் சந்திரகுமாரின் பிரிப்பாலும் சரிவு காணப்படும் இருந்தாலும் தட்டி தடுமாறி வெல்லலாம் சசிகலா விருப்பு வாக்கில் முன்னேறினால் ஸ்ரீதரனுக்கு சரிவு நிச்சயம் .மாவை சித்தர் சரவணபவன் நான்காம் இடம் ஸ்ரீதரன் அல்லது சசிகலா இது ஒரு கட்டிடம் அல்லது மாவை சித்தர் ஸ்ரீதரன் நான்காம் இடம் சரவணபவன் அல்லது சசிகலா என்ற நிலை உருவாகும் கஜதீபனுக்கும் கணிசமான வாக்கு வாங்கி கிடைக்கும் இருந்தாலும் சித்தரின் வங்கியை உடைத்தால் சித்தருக்கும் நட்டம் விஜயகலா மகேஸ்வரன் தோல்வியடைந்து டக்ளஸ், அங்கஜன் ஆகியோர் ஆசனங்களைப் பெறக் கூடிய வாய்ப்புகள் இருப்பதாகக் கருதினாலும், கடந்த 2015ஆம் ஆண்டு தேர்தல் முடிவுகளோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது இது சாத்தியமற்றதே. கோட்டாபய ஜனாதிபதியாக இருப்பதால் சலுகை, நிவாரண அரசியலுக்குப் பழக்கப்பட்ட வாக்காளர்கள் கூட, இம்முறை அங்கஜன், டக்ளஸ் ஆகியோருக்கு வாக்களிப்பர் என்று கூற இயலாது. விஜயகலா மகேஸ்வரனுக்கு வாக்களிப்பர் என்று சொல்லவும் முடியாது. டக்ளஸ் தேவானந்தாவோடு செயற்பட்ட சந்திரகுமார் சுயேட்சையாகப் போட்டியிடுவது. ஈபிடிபிக்குப் பெரும் சவாலாகும். தமிழரசுக் கட்சியைத் தவிர்த்து சிறிதரனின் தனிப்பட்ட வாக்குச் சரிவுக்கும் இது காரணமாக அமையலாம். ஆகவே தமிழரசுக் கட்சி, தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி ஆகிய மூன்று கட்சிகளுமே இம்முறை ஆசனங்களைப் பங்கிட்டுக்கொள்ள முடியும். முதற் சுற்று ஆசனப் பங்கிட்டில் தமிழரசுக் கட்சிக்கே ஆசனங்களும் போனஸ் ஆசனமும் கிடைக்கலாம். 2015ஆம் ஆண்டுத் தேர்தலில் ஆசனம் ஒன்றைப் பெறுவதற்கு ஒருவர் 48ஆயிரத்து முந்நூற்றி 60 வாக்குகளைப் பெற வேண்டிய நிலை இருந்தது. இதனால் இரண்டு இலட்சத்து ஏழாயிரத்து ஐநூற்றி ஏழு வாக்குகளைப் பெற்ற தமிழரசுக் கட்சி, முதல் சுற்று ஆசனப் பங்கீட்டில் நான்கு ஆசனங்களைப் பெற்றது. 14ஆயிரத்து 137வாக்குகள் எஞ்சியிருந்தன. இரண்டாம் சுற்று ஆசனப் பங்கீட்டில் 30ஆயிரத்து 232 வாக்குகளைப் பெற்ற டக்ளஸ் தேவானந்தாவும், 20ஆயிரத்து 25வாக்குகளைப் பெற்றிருந்த விஜயகலா மகேஸ்வரனும் ஒவ்வொரு ஆசனங்களைப் பெற்றிருந்தனர். 17ஆயிரத்து 309 வாக்குகளைப் பெற்றிருந்த அங்கஜன், 15ஆயிரத்து 22 வாக்குகளைப் பெற்றிருந்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஆசனங்களைப் பெறமுடியவில்லை. கூடுதல் வாக்குகளைப் பெற்ற தமிழரசுக் கட்சி மேலதிகமாக ஒரு போனஸ் ஆசனத்தையும் பெற்று ஐந்து ஆசனங்களைத் தனதாக்கிக் கொண்டது. 2015ஆம் ஆண்டு அங்கஜன் தோல்வியடைந்தாலும், தேசியப் பட்டியல் மூலம் நாடாளுமன்ற உறுப்பினராகிப் பிரதியமைச்சராகப் பதவி வகித்திருந்தபோது, தனது அமைச்சின் மூலமாகக் குறைந்த பட்சம் உதவிகளைச் செய்திருக்கிறார். இதனால் இம்முறை தேர்தலில் அங்கஜன் நம்பிக்கையோடு போட்டியிட்டுப் பிரச்சாரம் செய்கிறார். ராஜபக்ச அரசாங்கத்துக்கு ஆதரவு என்பதில் இருந்து விலகித் தன்னைத் தனித்துவமாகவும் காண்பிக்கிறார் அங்கஜன். டக்ளஸ் தேவானந்தா, விஜயகலா மகேஸ்வரன் ஆகியோரின் வாக்கு வங்கிகளையே இலக்குவைத்தும் அங்கஜன் பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார். இதனால் டக்ளஸ். விஜயகலா ஆகியோரின் வாக்குகள் இம்முறை சிதைவடையப் போகின்றன. ஏனெனில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி ஆகியவற்றின் வாக்குகளை அங்கஜனால் உடைத்தெடுப்பது கடினமானது. நிவாரணம், சலுகை அரசியலுக்குப் பழக்கப்பட்ட மக்களே டக்ளஸ் தேவானந்தா, விஜயகலா ஆகிய இருவருக்கும் வாக்களிப்பது வழமை. ஆனால் இம்முறை அங்கஜன் அந்த வாக்குகளைப் பெறும் நோக்கில், இவர்கள் இருவரையும் விட மேலதிகமாக ஏதோ புதிய வடிவம் ஒன்றை அமைத்துள்ளார். அத்துடன் அங்கஜனுடைய இளமைத்துடிப்பினால் கவர்ச்சியடைந்த இளம் ஆதரவாளர்களும் இம்முறை அவருக்கு வாக்களிக்கக் கூடும். ஆகவே அவ்வாறு வாக்களிக்கும்போது ஏற்படும் வாக்குச் சிதைவுகளினால் குறித்த முன்று பேருமே இம்முறை ஆசனங்களைப் பெற முடியாமல் போகலாம். இதற்குச் சந்திரகுமாரும் விதிவிலக்கல்ல. அப்படி இல்லையேல் விஜயகலா மகேஸ்வரன் மாத்திரம் தோல்வியடைந்து டக்ளஸ் அல்லது சந்திரகுமார் ஆகிய இருவரில் ஒருவரும் அங்கஜனும் இரண்டாம் சுற்று ஆசனப் பங்கீட்டில் தெரிவாகலாம். அவ்வாறு இருவர் தெரிவாகும் நிலை ஏற்பட்டால், அது தமிழரசுக் கட்சியின் பாரம்பரிய வாக்குகளில் ஏற்பட்ட சரிவாகவே கருதமுடியும். ஏனெனில் தமிழரசுக் கட்சி, கடந்த அரசாங்கத்துடன் சேர்ந்து இயங்கியதால் ஏற்பட்ட விளைவாகவே அதனைக் கருத வேண்டும். தமிழரசுக் கட்சியின் அரசாங்கச் சார்புக் கொள்கைகளை (இணக்க அரசியல்) சாதகமாகப் பயன்படுத்தியே, அதாவது அரசாங்கத்துடன் தமிழரசுக் கட்சி இணைந்து செயற்பட்டிருந்தாலும், அவர்கள் உங்கள் பிரதேசங்களில் அபிவிருத்தி செய்யவில்லை என்று குற்றம் சுமத்தியே அங்கஜன் பிரச்சாரம் செய்கிறார். டக்ளஸ். சந்திரகுமார் ஆகியோரும் அவ்வாறுதான் பிரச்சாரம் செய்கின்றனர். இவ்வாறான பிரச்சாரங்களை தமிழரசுக் கட்சி ஆதரவாளர்களில் குறிப்பிடக்கூடிய பலர் நம்புகின்றனர். ஆனாலும் டக்ளஸ் சந்திரகுமார் ஆகிய இருவரையும்விட, கவர்ச்சிகரமான தோற்றத்தோடு உலா வரும் அங்கஜனுக்கே அந்தப் பிரச்சாரங்களை நம்பும் தமிழரசுக் கட்சி ஆதரவாளர்களும் வேலை வாய்ப்புகள் கிடைக்குமென நம்பியிருக்கும் சிலரும் வாக்களிக்கும் கள நிலைமை காணப்படுகின்றது. தமிழரசுக் கட்சியின் அரசாங்கச் சார்புக் கொள்கையினால் அதிருப்தியடைந்த ஏனைய ஆதரவாளர்கள் பலர், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணிக்கும் வாக்களிப்பர். மேலும் சிலர் வாக்களிக்கச் செல்வதைத் தவிர்த்துக் கொள்வர். இம்முறை அனேகமான இளம் வாக்காளர்கள் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கே வாக்களிக்கும் கள நிலையும் உண்டு. 2018ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வடக்குக் கிழக்கில் சுமார் ஒரு இலட்சம் வாக்குகளையும் யாழ்ப்பாணத்தில் 63ஆயிரம் வாக்குகளையும் பெற்ற தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி, இம்முறை தமிழரசுக் கட்சி மீதான அதிருப்தி வாக்குகளைத் தமக்குச் சாதகமாக்க முடியுமெனப் பலமாக நம்புகின்றது. 2018ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வடக்குக் கிழக்கில் மொத்தமாக 82 ஆசனங்களை சுரேஸ் பிரேமச்சந்திரன் அணியும் பெற்றுள்ளது. இதனால் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியும் அவ்வாறு எதிர்பார்க்கிறது. இதனாலேயே முதற் சுற்று ஆசனப் பங்கீட்டில் தெரிவாகும் தமிழரசுக் கட்சி கூடுதல் ஆசனங்களைப் பெறமுடியாத நிலை உருவாகும். யாழ் மாவட்டத்தில் மொத்த வாக்களிப்பு வீதம் குறைவடைந்தால், தமிழரசுக் கட்சியின் நிலை மேலும் சிக்கலாகும். காரணம், அதிருப்தியால் வாக்களிப்பைத் தவிர்ப்போர், தமிழரசுக் கட்சி ஆதரவாளர்களாகவே இருப்பர். இதனால் 2015ஆம் ஆண்டைப் போன்று ஐந்து ஆசனங்களை தமிழரசுக் கட்சியால் இம்முறை பெறமுடியாது