text
stringlengths
329
95.8k
டெல்லியில் புராரி மைதானத்தில் நடைபெற்ற இந்து மகாபஞ்சாய்த் கூட்டத்தின்போது ஊடகவியலாளர்கள்மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா (பிசிஐ) கண்டனம் தெரிவித்துள்ளது. ”நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களின் மறைமுக நிகழ்ச்சி நிரலை ஏற்கும் வகையில் ஊடகவியலாளர்களை கட்டாயப்படுத்தும் வகையில், முன்கூட்டியே திட்டமிட்ட நிகழ்வு போல தோன்றுகிறது. சமீப காலங்களில் ஊடகவியலாளர்கள்மீது தொடர்ச்சியாக நடைபெற்று வரும் தாக்குதல்களை வைத்துப் பார்க்கும்போது, அவர்களுக்கான உரிமைகள் மற்றும் சுதந்திரம் பறிக்கப்பட்ட நிலையைக் காட்டுகிறது.” என பிசிஐ கூறியுள்ளது. பொதுமக்களை குற்றவாளியாக்கும் குற்றவியல் நடைமுறை அடையாள மசோதா – மக்களவையில் மஹுவா மொய்த்ரா ஆவேசம் புராரி சம்பவத்தில் ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டதை காவல்துறையினர் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது வருத்தமளிக்கிறது என தெரிவித்துள்ள பிசிஐ, “ஊடகவியலாளர்கள்மீது தாக்குதல் நடத்தியவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும். ஊடகவியலாளர்கள்மீதான தொடர் தாக்குதல் நிகழ்வுகள் குறித்து நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும்” என கோரிக்கை விடுத்துள்ளது. உத்திரபிரதேச மாநிலம் பாலியாவில் நடைபெற்ற மற்றொரு சம்பவத்தைக் குறிப்பிட்டுள்ள பிசிஐ, “12 வகுப்பு ஆங்கில வினாத்தாள் கசிந்ததை அம்பலப்படுத்தியதற்காக, பாலியாவை தளமாக கொண்ட ஊடகவியலாளரை மாவட்ட நிர்வாகம் தன்னிச்சையாக கைது செய்திருப்பது கண்டிக்கத்தக்கது” என கூறியுள்ளது. இலங்கையைப் போன்றே இந்தியாவும் பொருளாதார வீழ்ச்சியை சந்திக்கும் – சஞ்சய் ராவத் எச்சரிக்கை ஊடகவியலாளரை உடனடியாக விடுதலை செய்வதோடு, வினாத்தாள் கசிவில் ஈடுபட்டவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று பிசிஐ கோரியுள்ளது. Source: The Hindu பாஜக கொண்டு வந்த குற்றவியல் நடைமுறை அடையாள மசோதாவால் மக்கள் அனைவரும் குற்றவாளியாக்கப்படுவார்களா? மஹுவா மொய்த்ரா சொல்வது என்ன? கிளிக் செய்யவும் சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது. மாத சந்தா ஆண்டு சந்தா ஒருமுறை சந்தா ஊடகவியலாளர்கள்டெல்லிபிசிஐபிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா 0 மற்ற சில பதிவுகள் எல்கர் பரிஷாத் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களை கண்காணித்த பெகாசிஸ் ஸ்பைவேர் – அம்னெஸ்டி இண்டர்நேஷனல் தொண்டு நிறுவனத்தின் ஆய்வில் நிரூபணம் News Editor July 19, 2021 July 19, 2021 ராமர் கோவில் கட்டுவதற்கு அரசு ஊழியர்களிடம் நிதி – அரசு சார்பாக வங்கிக் கணக்கு தொடங்கிய உ.பி., பொதுப்பணித்துறை News Editor January 22, 2021 January 21, 2021 ‘ஆளுநரின் செயல் மக்களாட்சிக்கு விரோதமானது; துணைவேந்தர்கள் நியமனம் மாநில உரிமை’ : முதலமைச்சர் ஸ்டாலின் உரை Aravind raj April 25, 2022 இதையும் படிங்க..! ஆன்லைன் சூதாட்டம்: வட மாநிலப் பெண் தற்கொலைக்கு ஆளுநர்தான் பொறுப்பேற்க வேண்டும் – வைகோ இஸ்லாமிய மாணவரை, தீவிரவாதி அஜ்மல் கசாப்புடன் ஒப்பிட்டு பேசிய பேராசிரியர் – இது ஒன்றும் தீவிரமான விஷயம் இல்லையென கர்நாடகா கல்வித்துறை அமைச்சர் கருத்து என்.டி.டி.வி இயக்குநர்கள் பதவியிலிருந்து பிரணாய் ராய், அவரது மனைவி ராதிகா ராய் விலகல் – அதானியின் அழுத்தம் காரணமா? தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் – சென்னை உயர் நீதிமன்றத்தில் தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் மனு தாக்கல் முதல் 100 இந்திய பணக்காரர்களின் சொத்து மதிப்பு ரூ.2 லட்சம் கோடியிலிருந்து ரூ.65 லட்சம் கோடியாக 32 மடங்கு அதிகரிப்பு – போர்ப்ஸ் பத்திரிக்கை தகவல் இந்தி திணிப்பு: திருப்பூர் ரயில் நிலையத்தில் வைக்கப்பட்ட இந்தி பலகை அகற்றம் கர்நாடகா: உங்கள் மகனை தீவிரவாதியின் பெயரை கூறி அழைப்பீர்களா? – பேராசிரியருக்கு பாடம் எடுத்த மாணவன் ‘தி காஷ்மீர் பைல்ஸ்’ பரப்புரை நோக்கம் கொண்ட கொச்சையான திரைப்படம் – சர்வதேச திரைப்பட விழா தேர்வுக்குழு தலைவர் விமர்சனம் கர்நாடகா: மசூதி வடிவில் உள்ள பேருந்து நிறுத்தத்தை இடிக்க வேண்டும் என பாஜக எம்.பி மிரட்டல் விடுத்த நிலையில், அதன் இரு கோபுரங்கள் இடிப்பு பீமா கோரேகான் வழக்கு: ஆனந்த் டெல்டும்டே ஜாமீனுக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு © Copyrights 2020 - Aran Media Creations | Web Developed & Marketed by Reptus Terms & Conditions Privacy Policy Pricing Refund Policy Contact Us FacebookTwitterInstagramYoutubeTelegram முகப்பு செய்திகள் தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா விளையாட்டு உங்களுக்காக அரண்செய் இதழ் கட்டுரை மேலும் நேர்காணல் தொடர் பொருளாதாரம் அறிவியல் & தொழில்நுட்பம் கல்வி மருத்துவம் சமூக வலைதளம் ஊடகம் கலை & இலக்கியம் பயணம் வாழ்வியல் ஆன்மீகம் Support us சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது. மாத சந்தா ஆண்டு சந்தா ஒருமுறை சந்தா சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.
கடந்த பல ஆண்டுகளாகவே உலகெங்கும் மனித உரிமைகள் என்பது வெகு பரவலாக அறியப்படுவதாக மாறியிருக்கிறது. வேகமாக வளரும் பொருளாதாரச் சூழல் ஒரு புறம் என்றால் மறுபுறம் மனித உரிமை மீறல்கள் என்பது சாதாரணமான நிகழ்வாகக் காணப்படுகிறது. எனவே மனித உரிமைகள் என்பது வேகமாக வளர்ந்து வரும் கல்விப் பிரிவாகவும் மாறியுள்ளது. இப்பிரிவு படிப்புகளை முடிப்பவர் நல்ல பணி வாய்ப்புகளைப் பெற முடிகிறது. வெறும் தகுதிகளைத் தாண்டி சிறப்பான தகவல் தொடர்புத் திறன் மற்றும் மேம்பட்ட பொது அறிவைப் பெற்றிருப்போர் இத்துறையில் சிறப்பான சம்பளத்தையும் எதிர்காலத்தையும் பெறுகிறார்கள். எனவே மனித உரிமைகள் தொடர்பான படிப்புகளுக்கு பெரிய வரவேற்பு இருப்பதில் சந்தேகமில்லை. இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் ஹியூமன் ரைட்ஸ் என்னும் சிறப்பு நிறுவனம் தொலைதூரக் கல்வி முறையில் இப்பிரிவில் 2 ஆண்டு பட்ட மேற்படிப்பைத் தருகிறது. பட்டப்படிப்பு தகுதி பெற்றிருக்கும் எவரும் இதற்கு விண்ணப்பிக்கலாம். இதுபற்றிய பிற விபரங்களை அறிய இணைய தள முகவரி: http://www.rightsedu.net இப்படிப்புக்கான தேர்வுகள் தமிழ்நாட்டில் சென்னையில் மட்டுமே நடத்தப்படும். நமக்கு அண்மையில் பெங்களூரு மற்றும் திருவனந்தபுரம் ஆகிய இடங்களிலும் இது நடத்தப்படும். விண்ணப்பம் பெறும் முகவரி: Indian Institute of Human Rights, A16, Paryavaran Complex, (HT), SaketMaidangarhi Marg, New Delhi – 110 030. Advertisement « முதல் பக்கம் எங்களைக் கேளுங்கள் முதல் பக்கம் » --> தகவல்பலகை ஒரு பெண் குழந்தை உதவித்தொகை பகுதிநேர படிப்புகள் அமெரிக்காவில் படிக்க உதவித்தொகை பிஎச்.டி., அட்மிஷன் ஜே.என்.யு.இ.இ., - 2022 நிப்ட் மாணவர் சேர்க்கை மேலாண்மை நுழைவுத்தேர்வு டி.என்.ஏ., கைரேகை பயிற்சி காமன்வெல்த் மாஸ்டர் உதவித்தொகை கிளாட் 2023 மேலும் எங்களைக் கேளுங்கள் வரி விளம்பரங்கள் விருதுநகருக்கு அருகிலுள்ள ஒரு கல்லூரியில் எம்.பி.ஏ., படித்து முடிக்கவிருக்கிறேன். ஓரளவு நன்றாக இதைப் படிக்கிறேன். ஆனால் பட்டப்படிப்பில் 2வது வகுப்பில் தான் தேர்ச்சி பெற்றிருக்கிறேன். எம்.பி.ஏ., படித்தவுடன் வேலை கிடைக்கும் போது பட்டப்படிப்பில் குறைவாக மதிப்பெண் பெற்றது ஒரு பிரச்னையாக எழுமா? மைக்ரோபயாலஜி பட்டப்படிப்பு முடிக்கவிருக்கிறேன். அடுத்து என்ன செய்யலாம்? எனது மனைவி சமீபத்தில் ஆசிரியர் தேர்வாணையத்தால் தேர்வு செய்யப்பட்டு அரசுப் பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்ற ஆணையைப் பெற்றுள்ளார். எனக்கு 49 வயதாகிறது. அவருக்கு 42 வயதாகிறது. எங்களது 2 பெண்களில் ஒருவர் பிளஸ் 2 படிக்கிறார். மற்றொரு பெண் 9ம் வகுப்பு படிக்கிறார். அவருக்கு ஒதுக்கப்பட்டுள்ள துறையில் இருந்து பணி நியமன ஆணையைப் பெற்றால் வட தமிழ்நாட்டில் உள்ள ஒரு கிராமம் பணியிடமாகத் தரப்பட்டுள்ளது. அரசு வேலை கிடைத்த மகிழ்ச்சியும் இல்லாமல் வேலையில் சேரவும் முடியாமல் குடும்பமே ஆழ்ந்த மன வேதனையில் இருக்கிறோம். ஒரு மெட்ரிக் பள்ளியில் கடந்த 10 ஆண்டுகளாக குறைவான சம்பளத்தில் பணி புரிந்து வந்தாலும் குடும்பமே அவரை மையமாக வைத்து செயல்பட்டு வருகிறது. என்ன செய்வது என்றே புரியவில்லை. பி.சி.ஏ. முடித்துள்ளேன். அடுத்ததாக எம்.சி.ஏ. படிக்கலாமா? அல்லது எம்.பி.ஏ. படிக்கலாமா? எதைப் படித்தால் நல்ல வேலை கிடைக்கும்? நண்பர் ஒருவர் அண்ணா பல்கலைக்கழகம் திருச்சி, கோயம்புத்துõர் மற்றும் திருநெல்வேலி போன்ற இடங்களில் நடத்தும் படிப்புகளில் ஒன்றில் சேருமாறு அறிவுறுத்துகிறார். சேரலாமா? மேலும் பேராசிரியர், இணை பேராசிரியர், உதவி பேராசிரியர் தேவை Wanted: Professors, Associate & Assistant Professors in the Department of AI & D... Posted On :26-11-2022 ஆசிரியர்கள் தேவை Wanted: Faculty for Amity Institute of Hospital Administration, Amity University... Posted On :26-11-2022 பேராசிரியர்கள் தேவை Wanted: Lectures on contract basis in the department of Chemistry, Physics, Comp... Posted On :26-11-2022 ஆசிரியர்கள் தேவை Wanted: Two Guest Faculty on contractual basis for a period of 179 days at Depar... Posted On :25-11-2022 உதவி பேராசிரியர்கள் தேவை Wanted: Assistant Professors in the Department of Chemical Engineering, Civil En... Posted On :03-08-2022
முஸ்லிம்களாக இருக்கும் நம்மைச் சுற்றிலும், ஏராளமான பிறமத சகோதரர்கள் வாழ்ந்து வருகிறார்கள். தீபாவளி, கிறிஸ்துமஸ், பொங்கல் என்று அவர்கள் கொண்டாடும் பண்டிகைகள் அடிக்கடி வந்து போகின்றன. அவற்றில் கலந்து கொள்ள அவர்களும் நம்மை ஆர்வத்துடன் அழைக்கிறார்கள். அவசியம் கலந்து கொள்ள வேண்டும் என்று அன்போடு வேண்டுகோள் விடுக்கிறார்கள். ஒரே பகுதியில் வசிக்கிறோம்; ஒரே இடத்தில் வேலை செய்கிறோம்; அவர்களது அழைப்பை ஏற்று கொள்ள வேண்டும்; இல்லையெனில், எப்போதும் போன்று அவர்கள் நம்மிடம் நன்றாக பழகமாட்டார்கள் என்று நினைத்துக் கொண்டு, அவர்களின் பண்டிகைகளில் பல முஸ்லிம்கள் பங்கெடுத்துக் கொள்கிறார்கள். இன்னும் சில இடங்களில், அன்றைய தினங்களில் அவர்கள் செய்யும் காரியங்களை அப்படியே முஸ்லிம்களும் செய்கிறார்கள். இந்த நிகழ்வு, பிறமத மக்களின் உள்ளூர் திருவிழாக்கள் முதற்கொண்டு நாடுதழுவிய அளவில் நடைபெறும் பண்டிகைகள் வரையிலும் காணமுடிகிறது. இவ்வாறு இருக்கும் பெரும்பாலான முஸ்லிம்கள், இதுகுறித்து மார்க்கம் என்ன சொல்கிறது என்பதை கடுகளவும் தெரியாமல் இருக்கிறார்கள். சிலரோ, இதுவென்ன பெரும்பாவமா? என்று எண்ணிக் கொண்டு தெரிந்துகொள்ள கொஞ்சமும் தயாரின்றி இருக்கிறார்கள். எனவே, இது தொடர்பாக இருக்கும் மார்க்கத்தின் தகவல்களை அனைவரும் அறிந்து கொள்ளவே இந்த ஆக்கம். இஸ்லாம் முழுமையான மார்க்கம் இஸ்லாம் என்பது முழுமையான வாழ்க்கைத் திட்டம். ஆன்மீகம், அரசியல் என்று மனிதனுக்குத் தேவையான அனைத்தையும் தெளிவாகப் போதித்திருக்கும் சிறப்பான சித்தாந்தம். இஸ்லாமிய மார்க்கத்தைத் தவிர்த்து இருக்கும் மற்ற மதங்கள், கொள்கைக் கோட்பாடுகள் அனைத்தும் குறிப்பிட்ட சில விஷயங்களை மட்டும் மையமாக வைத்து கட்டமைக்கப்பட்டு இருக்கின்றன. இதற்கு மாற்றமாக இஸ்லாம் மட்டுமே, ஒரு மனிதனின் பிறப்பு முதல் இறப்பு வரை அவன் சந்திக்கும் அனைத்து வாழ்வியல் நிலைக்கும் தேவையான தெளிவான வழிகாட்டுதலை வழங்கி இருக்கிறது. இத்தகைய, இஸ்லாமிய மார்க்கத்தைப் பின்பற்றும் முஸ்லிம்களுக்கு எந்த விஷயத்திலும் பிற கொள்கைகளிடம் கையேந்தி நிற்கவேண்டிய அவசியம் அறவே இல்லை என்பதே உண்மை. எந்தத் தருணத்திலும் பிறமத மக்கள் செய்யும் சடங்குகளை கடன் வாங்கிச் செய்ய வேண்டிய தேவை முஸ்லிம்களுக்கு இல்லவே இல்லை என்பதைப் பின்வரும் வசனத்தின் மூலம் விளங்கிக் கொள்ளலாம். (ஏக இறைவனை) மறுப்போர், உங்கள் மார்க்கத்தைப் பற்றி (அழித்து விட முடியும் என்று) இன்று நம்பிக்கை இழந்து விட்டனர். எனவே அவர்களுக்கு அஞ்சாதீர்கள்! எனக்கே அஞ்சுங்கள்! இன்றைய தினம் உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நிறைவு செய்து விட்டேன். எனது அருளை உங்களுக்கு முழுமைப்படுத்தி விட்டேன். இஸ்லாத்தை உங்களுக்கான வாழ்க்கை நெறியாக பொருந்திக் கொண்டேன். பாவம் செய்யும் நாட்டமில்லாமல், வறுமையின் காரணமாக நிர்பந்தத்துக்கு உள்ளானோரை அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.(அல்குர்ஆன் 5:3) நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நஹ்ருடைய (துல்ஹஜ் 10ஆம்) நாளில் எங்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். அப்போது, “இது எந்த நாள் என்பதை நீங்கள் அறிவீர்களா?” எனக் கேட்டார்கள். நாங்கள் “அல்லாஹ்வையும் அவனது தூதருமே நன்கறிவர்!” என்றோம். அந்நாளுக்கு அவர்கள் வேறு பெயர் சூட்டுவார்களோ என்று நாங்கள் எண்ணுமளவுக்கு மௌனமாக இருந்துவிட்டு, “இது (குர்பானி கொடுப்பதற்குரிய) நஹ்ருடைய நாளல்லவா?” என்று கேட்டார்கள். நாங்கள் “ஆம்!” என்றோம். பிறகு “இது எந்த மாதம்?” என அவர்கள் கேட்டதும் நாங்கள் “அல்லாஹ்வும் அவனது தூதரும் நன்கறிவர்!” என்றோம். அப்போதும் அம்மாதத்துக்கு வேறு பெயர் சூட்டுவார்களோ என நாங்கள் எண்ணுமளவுக்கு மௌனமாக இருந்தார்கள். பிறகு, “இது துல்ஹஜ் மாதம் அல்லவா?” என அவர்கள் கேட்க, நாங்கள் “ஆம்!” என்றோம். பிறகு “இது எந்த நகரம்?” எனக் கேட்டார்கள். அதற்கு நாங்கள் “அல்லாஹ்வும் அவது தூதருமே நன்கறிவர்!” என்றோம். அப்போதும் அவர்கள் வேறு பெயர் சூட்டுவார்களோ என நாங்கள் எண்ணுமளவுக்கு மௌனமாக இருந்தார்கள். பிறகு “இது புனிதமிக்க நகரமல்லவா?” எனக் கேட்க, நாங்கள் “ஆம்!” என்றோம். பிறகு “உங்களுடைய (புனிதமிக்க) இந்த நகரத்தில் உங்களுடைய (புனிதமிக்க) இந்த மாதத்தில் இன்றைய தினம் எவ்வளவு புனிதமானதோ அந்த அளவுக்கு உங்கள் உயிர்களும் உங்கள் உடைமைகளும் உங்கள் இரட்சகனைச் சந்திக்கும் நாள் (மறுமை)வரை புனிதமானவையாகும்!” என்று கூறிவிட்டு, “நான் உங்களிடம் (இறைச்செய்திகள் அனைத்தையும்) சேர்ப்பித்து விட்டேனா?” எனக் கேட்டார்கள். மக்கள் “ஆம்!” என்றனர். பிறகு அவர்கள், “இறைவா! இதற்கு நீயே சாட்சியாயிரு! இங்கு வந்தவர்கள் வராதவர்களுக்கு அறிவித்து விடுங்கள்! ஏனெனில், செவியேற்பவரைவிட அறிவிக்கப்படுபவர் (இந்த இறைச் செய்தியை) நன்கு புரிந்துகொள்பவராயிருக்கலாம்; எனக்குப் பின்னால் நீங்கள் ஒருவருக்கொருவர் சண்டையிட்டு நிராகரிப்பவர்களாவிட வேண்டாம்!” எனக் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூபக்ரா ரளியல்லாஹு அன்ஹு, ஆதாரம் : புகாரி (1741) (4403) இஸ்லாம் தனித்து விளங்கும் மார்க்கம் மூடநம்பிக்கைகள், சமூகத் தீமைகள், அனாச்சாரங்கள் என்று எதையும் விடாமல் அனைத்தையும் அழித்து ஒழிக்கின்ற சமூகநலன் காக்கும் தலைச்சிறந்த கோட்பாடாக இஸ்லாம் திகழ்கிறது. எந்தவொரு பிரச்சனைக்கும் சிக்கலுக்கும் நிறைவான நிலையான தீர்வை இஸ்லாமிய மார்க்கம் மட்டுமே வழங்குகிறது. தனிமனிதனும் சமூகமும் சீரும் சிறப்பும் பெற்று எக்காலத்திலும் நலமுடன் வாழ இதன் வழிகாட்டுதல் தான் உகந்தவை; எல்லா வகையிலும் மேன்மை மிக்கவை. ஏனைய எல்லா மார்க்கத்தையும் விட மேலோங்கச் செய்வதற்காக அவனே தனது தூதரை நேர் வழியுடனும் உண்மை மார்க்கத்துடனும் அனுப்பினான். அல்லாஹ் கண்காணிக்கப் போதுமானவன். (அல்குர்ஆன் 48:28) இணை கற்பிப்போர் வெறுத்த போதிலும் அனைத்து மார்க்கங்களை விட மேலோங்கச் செய்வதற்காக அவனே தனது தூதரை நேர் வழியுடனும், உண்மை மார்க்கத்துடனும் அனுப்பினான். (அல்குர்ஆன் 61:9) இணை கற்பிப்போர் வெறுத்தாலும், எல்லா மார்க்கங்களை விட மேலோங்கச் செய்வதற்காக நேர்வழியுடனும், உண்மை மார்க்கத்துடனும் அவனே தனது தூதரை அனுப்பினான். (திருக்குர்ஆன் 9:33) அல்லாஹ்வின் மார்க்கத்தை விடுத்து வேறு ஒன்றையா தேடுகின்றனர்? வானங்களிலும், பூமியிலும் உள்ளவை விரும்பியோ, விரும்பாமலோ அவனுக்கே அடிபணிகின்றன. அவனிடமே அவர்கள் கொண்டு செல்லப்படுவார்கள். (அல்குர்ஆன் 3:83) இத்தகைய இஸ்லாத்தின் சட்ட திட்டங்களை விட்டுவிட்டு அடுத்தவர்களின் சடங்கு சம்பிரதாயங்களைப் பின்பற்றும் முஸ்லிம்களை என்னவென்று சொல்வது? இவர்கள் இறை மார்க்கமான இஸ்லாத்தின் போதனைகளை விடவும் மற்ற கொள்கைகள் சிறந்தவை என்ற பொய்யான தோற்றத்தை ஏற்படுத்தும் செயலைச் செய்கிறார்கள். இப்படி சத்திய மார்க்கத்தை விடவும் அசத்திய வழிமுறைகளை மேலானதாகக் காட்டும் மாபாதகக் காரியத்தை விட்டும் இவர்கள் இனியாவது விலகிக் கொள்வார்களா? பிற மதத்தினருக்கு மாற்றமாக நடப்போம் மகத்துவமும் மாண்பும் கொண்ட ஏக இறைவன் கொடுத்திருக்கும் இஸ்லாம் எனும் வாழ்க்கைத் திட்டத்தையே மனிதர்களாகிய நாம் பின்பற்ற வேண்டும். இதற்கு மாற்றமாக, மனிதகளால் உருவாக்கப்பட்ட கொள்கைக் கோட்பாடுகளைப் பின்பற்றும் மக்கள் எல்லா காலகட்டங்களிலும் இருக்கிறார்கள். முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் காலத்திலும் யூதர்கள், கிறிஸ்தவர்கள், இணைவைப்பவர்கள் என்று எல்லா வகையான மக்களும் சுற்றி வாழ்ந்து கொண்டிருந்தார்கள். அவர்களிடம் முந்தைய நபிமார்களுக்கு வழங்கப்பட்ட சட்டங்களில் இருந்து மாற்றப்பட்ட, திரிக்கப்பட்ட இடைச்செருகல் செய்யப்பட்ட சட்டங்களும் இருந்தன. இவ்வாறான மக்களின் மூடநம்பிக்கைகள், கற்பனைகள், கட்டுக்கதைகள் நிறைந்த காரியங்கள், முஸ்லிம் சமுதாயத்தில் கலந்துவிடக் கூடாது என்பதில் நபிகளார் கவனமாக இருந்தார்கள். இஸ்லாத்தைப் போன்று அதைப் பின்பற்றும் முஸ்லிம்களும் எப்போதும் தனித்துவம் கொண்டவர்களாக இருக்கும் வகையில், பல்வேறு காரியங்களில் அவர்களுக்கு மாறு செய்யும்படி கட்டளையிட்டார்கள். அவற்றை அனைவரும் அவசியம் அறிந்து கொள்ள வேண்டும். வணக்க வழிபாடுகளில் மாற்றம் ஒரு மனிதனுடைய வாழ்வில் மற்ற எல்லா விஷயங்களைக் காட்டிலும், ஆன்மீக நம்பிக்கை என்பது பெரும் தாக்கத்தை மாற்றத்தை ஏற்படுத்துவதாக இருக்கிறது. இந்நிலையில், அநேகமான மக்கள் அர்த்தமற்ற ஆன்மீகத்தை ஏற்று வாழ்ந்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக, தமது பெற்றோர்களிடம் இருக்கும் தவறான கடவுள் கொள்கையை நம்பிக்கையை அப்படியே கடைப்பிடிக்கிறார்கள். தலைமுறை தலைமுறையாக செய்யப்படும் காரியங்கள் என்று அவற்றைச் செய்கிறார்களே தவிர, சரியா? தவறா? என்று ஒருபோதும் யோசிப்பதில்லை. இதன் விளைவாக வாழையடி வாழையாக, குருட்டுத்தனமான வணக்கங்களிலே வீழ்ந்து கிடக்கிறார்கள். இவ்வாறு இருக்கும் மக்களிடம் இருந்து முஸ்லிம்கள் வேறுபட்டு விளங்கும் வகையில் நடந்து கொள்ள வேண்டும் என்ற மார்க்கத்தின் ஆணையைப் பின்வரும் நபிமொழிகள் வாயிலாக விளங்கிக் கொள்ளலாம். (தொழுகை நேரம் வந்து விட்டதை அறிவிக்கும் முறை ஒன்று தேவை என்று மக்கள் கருதியபோது) அவர்கள் (நெருப்பு வணங்கிகளைப் போல்) தீ மூட்டலாம் என்றும், மணியடித்து கூப்பிடலாம் என்றும் சொன்னார்கள். (இவையெல்லாம்) யூதர்கள், கிறிஸ்தவர்கள் (ஆகியோரின் போக்காகும்) என்று (சிலர் மறுத்துக்) கூறினார்கள். அப்போது பிலால் ரளியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு “அதான்’ எனும் தொழுகை அறிவிப்புக்குரிய வாசகங்களை (கற்றுத் தந்து) அவற்றை இருமுறை கூறும்படியும் இகாமத் (என்னும் தொழுகைக்காக நிற்கும் போது சொல்லும்) வாசகங்களை ஒரு முறை மட்டும் சொல்லும் படியும் உத்திரவிடப்பட்டது. (அறிவிப்பவர்: அனஸ் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி (3457) சூரியன் உதிக்கின்ற நேரத்திலும் அது மறைகின்ற நேரத்திலும் தொழாதீர்கள். ஏனெனில் அது ஷைத்தானின் இரு கொம்புகளுக்கு இடையே உதிக்கின்றது. (அறிவிப்பவர்: இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி (583), (3273) இந்த நேரங்களில் இறை மறுப்பாளர்கள் சூரியனை வணங்குகிறார்கள் என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக முஸ்லிமிலுள்ள 1373வது ஹதீஸில் இருக்கிறது. (காலணிகளுடன் தொழுது) யூதர்களுக்கு மாறு செய்யுங்கள். ஏனெனில் அவர்கள் காலணிகளுடனும் காலுறைகளுடனும் தொழ மாட்டார்கள் என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஷத்தாத் பின் அவ்ஸ் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: அபூதாவுத் (556) புனிதமான செயல்களைச் செய்யும் போது செருப்பு அணிவது பாவம் என்ற தவறான நம்பிக்கை யூதர்களுக்கு இருந்தது. இந்த மூடநம்பிக்கையை உடைத்தெறியும் வகையில் எப்போதாவது ஒருமுறையாவது செருப்பு அணிந்து தொழுது விட்டாலே யூதர்களுக்கு மாறு செய்ததாக ஆகிவிடும். எனவே தான், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் செருப்பணிந்தும் தொழுதுள்ளார்கள். அணியாமலும் தொழுதுள்ளார்கள். அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஆஷுரா நாளில் தாமும் நோன்பு நோற்று, நோன்பு நோற்குமாறு மக்களுக்கும் கட்டளையிட்டார்கள். அப்போது மக்கள், (அது) யூதர்களும் கிறிஸ்தவர்களும் கண்ணியப்படுத்தும் நாளாயிற்றே என்று வினவினர். அதற்கு நபியவர்கள், அல்லாஹ் நாடினால் அடுத்த ஆண்டில் நாம் (முஹர்ரம்) ஒன்பதாவது நாளிலும் நோன்பு நோற்போம் என்று கூறினார்கள். ஆனால், அடுத்த ஆண்டு வருவதற்குள் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இறந்து விட்டார்கள். மற்றொரு அறிவிப்பில், அடுத்த ஆண்டு வரை நான் உயிரோடு இருந்தால், ஒன்பதாவது நாளிலும் நோன்பு நோற்பேன் என்று கூறியதாக வந்துள்ளது. (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம் (1916), (1917), (2088) உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் முஸ்தலிபாவில் ஃபஜ்ரு தொழுததை நான் கண்டேன். அங்கு தங்கிய உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள், “இணை வைப்போர் சூரியன் உதயமாகும் வரை இங்கிருந்து திரும்பிச் செல்வதில்லை. மேலும் அந்த இணை வைப்பாளர்கள், “ஸபீரு மலை (சூரிய உதயத்தால்) ஒளிரட்டும்’ என்று கூறுவார்கள். ஆனால் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களோ இணை வைப்போருக்கு மாற்றமாக நடந்துள்ளனர்” என்று கூறி விட்டு, சூரியன் உதிக்கும் முன்பே அங்கிருந்து திரும்பி விட்டார்கள். (அறிவிப்பர்: அம்ரு பின் மைமூன் ரஹ்மதுல்லாஹி அலைஹி, நூல்: புகாரி (1684) மேற்கண்ட செய்திகளின் மூலம், தொழுகை, நோன்பு, ஹஜ் போன்ற முதன்மையான கடமைகள் உட்பட எந்தவொரு வணக்க வழிபாடும் பிற மதத்தவரின் வணக்கத்திற்கு ஒப்பாக ஒருபோதும் இருந்துவிடக் கூடாது என்பதில் அல்லாஹ்வின் தூதர் கண்டிப்பாக இருந்துள்ளார்கள் என்பதைத் தெரிந்து கொள்ள முடிகிறது. எனவே, முஸ்லிம்கள் தங்களது மார்க்க செயல்களின் மீது பிற மத்தினரைப் பின்பற்றுவது போன்ற சாயல்கூடப் படிந்துவிடக்கூடாது என்பதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஆனால் முஸ்லிம்களோ, பிற மதத்தவர்களின் வணக்க வழிபாடுகளை, பெயரை மட்டும் மாற்றிவிட்டு அதை அப்படியே செய்யும் மிக மோசமான நிலையில் இருக்கிறார்கள். தேர் இழுப்பதை சந்தனக்கூடு என்றும், பொங்கலை பாச்சோறு என்றும், மந்தரிக்கப்படும் கயிறை தாவிஸ் என்றும், பிரசாதத்தை தபர்ருக் என்றும் எண்ணற்ற பிற மதச் சடங்குகளை இஸ்லாத்தின் பெயரால் செய்கிறார்கள். இனியாவது இத்தகையவர்கள் தங்களைத் திருத்திக் கொள்ள முன்வர வேண்டும். குறிப்பு: 2015 மார்ச் மாதம் ஏகத்துவம் இதழில் வெளிவந்த கட்டுரை source: http://www.onlinepj.com/katturaikal/-pira-matha-kalacharathai-purakkanippom/#.Vg0dDOyqqko Leave a Reply Cancel reply Your email address will not be published. Required fields are marked * Comment * Name * Email * Website Save my name, email, and website in this browser for the next time I comment. Math Captcha 6 + 2 = Categories Categories Select Category English (319) Convert to Islam (13) Education (14) Essays (85) Family (11) Hadith (8) Haj (5) History (20) India News (20) Muslim World (34) News (9) Politics (4) QnA (19) Quran (3) Ramadhan (15) Science (7) Society (16) World News (36) Multimedia (6) Audio (2) Video (4) Uncategorized (13) இஸ்லாம் (3,761) ஆய்வுக்கட்டுரைகள் (200) இமாம் கஸ்ஸாலி (ரஹ்) (9) இம்மை மறுமை (111) இஸ்லாத்தை தழுவியோர் (90) கட்டுரைகள் (1,708) குர்ஆனும் விஞ்ஞானமும் (30) குர்ஆன் (191) கேள்வி பதில் (201) சொற்பொழிவுகள் (17) ஜகாத் (44) தொழுகை (151) நூல்கள் (40) நோன்பு (136) வரலாறு (380) ஹஜ் (58) ஹதீஸ் (215) ஹஸீனா அம்மா பக்கங்கள் (19) ‘துஆ’க்கள் (43) ‘ஷிர்க்’ – இணை வைப்பு (118) கட்டுரைகள் (3,087) Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd) (154) அப்துர் ரஹ்மான் உமரி (53) அரசியல் (311) உடல் நலம் (449) எச்சரிக்கை! (103) கதைகள் (63) கதையல்ல நிஜம் (108) கல்வி (84) கவிதைகள் (161) குண நலன்கள் (303) சட்டங்கள் (55) சமூக அக்கரை (677) நாட்டு நடப்பு (82) பொது (352) பொருளாதாரம் (27) விஞ்ஞானம் (105) குடும்பம் (1,525) M.A. முஹம்மது அலீ (48) ஆண்-பெண் பாலியல் (83) ஆண்கள் (73) இல்லறம் (486) குழந்தைகள் (183) செய்திகள் (2) பெண்கள் (585) பெற்றோர்-உறவினர் (65) செய்திகள் (328) இந்தியா (142) உலகம் (130) ஒரு வரி (10) கல்வி (32) தமிழ் நாடு (1) முக்கிய நிகழ்வுகள் (13) Archives Archives Select Month July 2022 (1) June 2022 (1) March 2022 (2) February 2022 (2) January 2022 (6) December 2021 (9) November 2021 (14) October 2021 (17) September 2021 (8) May 2021 (2) April 2021 (15) March 2021 (17) February 2021 (17) January 2021 (17) December 2020 (20) November 2020 (17) October 2020 (18) September 2020 (20) August 2020 (31) July 2020 (30) June 2020 (21) May 2020 (27) April 2020 (22) March 2020 (30) February 2020 (19) January 2020 (22) December 2019 (25) November 2019 (14) October 2019 (15) September 2019 (16) August 2019 (18) July 2019 (16) June 2019 (15) May 2019 (12) April 2019 (12) March 2019 (17) February 2019 (17) January 2019 (27) December 2018 (35) November 2018 (18) October 2018 (22) September 2018 (31) August 2018 (27) July 2018 (16) June 2018 (12) May 2018 (14) April 2018 (22) March 2018 (29) February 2018 (30) January 2018 (35) December 2017 (23) November 2017 (30) October 2017 (33) September 2017 (28) August 2017 (30) July 2017 (30) June 2017 (19) May 2017 (34) April 2017 (31) March 2017 (35) February 2017 (36) January 2017 (27) December 2016 (59) November 2016 (48) October 2016 (44) September 2016 (41) August 2016 (27) July 2016 (33) June 2016 (42) May 2016 (52) April 2016 (53) March 2016 (37) February 2016 (42) January 2016 (64) December 2015 (47) November 2015 (40) October 2015 (36) September 2015 (65) August 2015 (56) July 2015 (35) June 2015 (42) May 2015 (58) April 2015 (79) March 2015 (40) February 2015 (29) January 2015 (54) December 2014 (79) November 2014 (66) October 2014 (78) September 2014 (67) August 2014 (62) July 2014 (84) June 2014 (82) May 2014 (100) April 2014 (84) March 2014 (92) February 2014 (80) January 2014 (85) December 2013 (69) November 2013 (91) October 2013 (89) September 2013 (68) August 2013 (76) July 2013 (101) June 2013 (84) May 2013 (94) April 2013 (13) March 2013 (84) February 2013 (64) January 2013 (85) December 2012 (93) November 2012 (106) October 2012 (82) September 2012 (92) June 2012 (50) May 2012 (103) April 2012 (145) March 2012 (103) February 2012 (168) January 2012 (44) December 2011 (125) November 2011 (99) October 2011 (112) September 2011 (90) August 2011 (130) July 2011 (150) June 2011 (86) May 2011 (138) April 2011 (30) March 2011 (148) February 2011 (97) January 2011 (61) December 2010 (103) November 2010 (87) October 2010 (129) September 2010 (145) August 2010 (114) July 2010 (70) June 2010 (130) May 2010 (131) April 2010 (116) March 2010 (134) February 2010 (99) January 2010 (154) December 2009 (136) November 2009 (106) October 2009 (61) September 2009 (66) August 2009 (61) July 2009 (55) June 2009 (53) May 2009 (81) April 2009 (43) March 2009 (70) February 2009 (43) January 2009 (64) December 2008 (29) November 2008 (35) October 2008 (31) September 2008 (63) August 2008 (114)
முதலாவது தரத்திலிருந்து பிள்ளைகள் மத்தியில் ஆங்கிலம் பேசும் பழக்கத்தை பலப்படுத்த 2023ஆம் ஆண்டு முதல் நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். இதற்கமைய அனைத்து மாகாணங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் அரச பாடசாலைகளின் முதலாம் மற்றும் இரண்டாம் தரங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சுமார் 13,500 ஆசிரியர்களை நவம்பர் 18 மற்றும் 19 ஆம் திகதிகளில் பயிற்றுவிப்பாளர்களாகப் பயிற்சியளிக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். எதிர்காலத் தேவைக்கு ஏற்ற வகையில் பாடசாலை மாணவர்களுக்கு ஆங்கில மொழியைக் கற்பிப்பதற்கு முன்னுரிமை வழங்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார விடுத்த கோரிக்கைக்குப் பதிலளிக்கும்போதே அமைச்சர் இவ்வாறு கூறினார். கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தலைமையில் அண்மையில் (08) நடைபெற்ற கல்வி அமைச்சுசார் ஆலோசனைக் குழுவிலேயே இவ்விடயம் குறித்துக் கலந்துரையாடப்பட்டது. ஆங்கில மொழிமூலப் பாடப்புத்தகங்களில் உள்ள இலக்கணப் பிழைகள் இங்கு கவனம் செலுத்தப்பட்டதுடன், அவ்வாறான இலக்கணப் பிழைகள் உள்ளதா என்பதைக் கண்டறியுமாறு தேசிய கல்வி நிறுவகத்துக்கு அமைச்சர் பணிப்புரை விடுத்தார். அத்துடன் இலங்கையிலுள்ள தமிழ் மொழிமூலப் பாடசாலைகளில் உள்ள பிள்ளைகள் விரும்பினால் சிங்கள மொழிமூலத்தில் கல்வி கற்க சந்தர்ப்பம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் இங்கு பரிசீலிக்கப்பட்டது. குறிப்பாக சிங்கள மக்கள் பெரும்பான்மையாக வாழும் பிரதேசங்களில் உள்ள தமிழ் மொழி மூலப் பாடசாலைகளில் உள்ள பிள்ளைகள் இவ்வாறு சிங்கள மொழி மூலம் கற்பதில் ஆர்வம் காட்டுவதாகவும் பாராளுமன்ற உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர். தற்பொழுது பாடசாலைகளில் போதைப்பொருள் பாவனை அதிகரித்திருப்பதாகவும், இதனைத் தடுப்பதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் கருத்துத் தெரிவித்ததுடன், இது தொடர்பில் ஏற்கனவே நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் பதில் வழங்கினார். சில பாடநெறிகளை ஆங்கிலத்தில் மட்டும் கற்பிப்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டதுடன், தற்போது கலைப் பீடங்களில் கூட ஆங்கிலத்தில் கற்கைகள் நடத்தப்படுவதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்தார். சிங்களம் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் கற்பிக்கக் கூடிய ஆசிரியர்கள் தேவை எனப் பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். கொழும்பு விஷாகா கல்லூரியின் அதிபர் நியமனத்தில் இடம்பெற்ற முறைகேடு தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடு தொடர்பில் கவனம் செலுத்துமாறு பாராளுமன்ற உறுப்பினர் மதுர விதானகே விடுத்த கோரிக்கை குறித்தும் கலந்துரையாடப்பட்டது. அதிபர் ஆட்சேர்ப்புக்கான நடைமுறை மற்றும் கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்கள் தொடர்பில் அதிகாரிகள் விபரங்களை வழங்கினர். அத்துடன், சியனே கல்வியியல் பீடத்துக்குச் சொந்தமான காணியை மே.மா/கம்/வித்யாலோக மகா வித்தியாலயத்தின் விளையாட்டு நடவடிக்கைகளுக்காகப் பெற்றுக்கொடுக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் உபுல் மகேந்திர ராஜபக்ஷ விடுத்த கோரிக்கையும் இங்கு பரிசீலிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் இராஜாங்க கல்வி அமைச்சர் சுரேன் ராகவன், அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டனர். மேலும், கல்வி அமைச்சின் செயலாளர் ஹேமந்த யு. பிரேமதிலக, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க, தேசிய கல்வி நிறுவகப் பணிப்பாளர் நாயகம் கலாநிதி சுனில் ஜயந்த நவரத்ன மற்றும் அதிகாரிகள் பலரும் குழுவில் கலந்துகொண்டனர். Facebook Twitter Linkedin Pinterest Email Related Posts இலங்கை No comments Newer Post Older Post Home Subscribe to: Post Comments (Atom) Tweets by Urumal News பிரதான செய்திகள் {latest} வீடியோ Popular Posts மொபைல் போன் மற்றும் டேட்டா கட்டணங்களை குறைக்க வேண்டும் ஜனவரி 15 முதல் வடக்கிற்கான புதையிரத சேவை இடைநிறுத்தம்! பொன்னாலை கடற்கரையில்- காற்றாலை மின் கோபுரங்கள் அமைப்பதற்கு கலந்துரையாடல்! தொழில் முறை ஊடகவியலாளர்களின் பங்களிப்புடன் முடிந்தவரை செய்திகளை உறுதிப்படுத்தி ஊடக அறங்களுக்கு உட்பட்டு செய்திகளை வெளிக்கொணர முயற்சிக்கிறோம். அது மட்டுமின்றி ஒடுக்கப்பட்டவர்களின் குரலாக ஒலிக்கவுள்ளோம். அதற்கு அனைத்து உறவுகளின் ஆதரவை வேண்டி நிற்கிறோம்.
அதிமுக கட்சி பாஜகவின் பி டீம் என்பது அனேகமாக அனைவருக்கும் தெரிந்த செய்தி (இதனை அதிமுக ஒத்துக்கொண்டாலும் மார்க்சிஸ்ட் ஒத்துக்கொள்ளாது). மக்கள் நல கூட்டியக்கத்தை அதிமுகவின் பி டீம் என்கிறது திமுக வட்டாரம். இந்த பட்டியலில் அடுத்த பி டீம் ஒன்றைப் பற்றிய தகவலை மார்க்சிஸ்ட் கட்சியின் சிந்தன் (இரா) தன் நிலைத்தகவல் ஒன்றில் வெளியிட்டிருக்கிறார். அதாவது திமுகவை அதிமுகவின் பி டீம் என குறிப்பிட்டிருக்கிறார். ஆக தமிழக தேர்தல் களம் மூன்று முக்கிய பி டீம்களால் சூடுபிடிக்கவிருக்கிறது. இவையில்லாமல் தமிழகத்தில் அதிமுகவின் பி டீமான பாஜக, பாஜகவின் இன்னொரு பி டீம் பாமக, அதிமுகவின் Z டீமான நாம் தமிழரும் களமாடவிருக்கின்றன. இப்படி ஒரு பி டீம் பாலிடிக்ஸ் இதற்கு முன்னால் தமிழகத்தில் இருந்ததில்லை. எம்ஜிஆர் வழிபாடு மன்றம்: முதல் பி டீமான அதிமுக எப்போதும் அதிருஷ்டத்தால் வாழும் கட்சி. தமிழகத்தில் கட்சிகள் வழிபாட்டு மன்றமான வரலாறுகள் பல உண்டு, ஆனால் ஒரு வழிபாட்டு மன்றம் கட்சியான வரலாற்றை துவக்கியது அதிமுகதான். ஒரு ரசிகர் மன்றம் ஆட்சிக்கு வந்தால் என்னென்ன கொடுமைகள் நடக்குமோ எல்லாம் எம்.ஜி.ஆர் ஆட்சியில் நடந்தன. கட்சி சின்னத்தை கையில் பச்சை குத்திக்கொள்ள சொன்ன காட்டுமிராண்டித்தனம், போலீசை ரவுடிகள் போல பயன்படுத்தி நக்சல்பாரிகளை வேட்டையாடியது (தர்மபுரி) அதே கும்பலை வைத்து உண்மை அறியும் குழுக்களைக்கூட அடித்து விரட்டியது, ஒரிஜினல் ரவுடிகளை முதலாளிகளாக்கியது என எண்ணிலடங்காத கருப்பு பக்கங்களை உள்ளடக்கியது எம்.ஜி.ராமச்சந்திரன் ஆட்சி. ஆனால் அவை எம்ஜிஆர் செத்த அன்றே புதைக்கப்பட்டுவிட்டன. எதிர் கட்சிகளே அவர் குறித்த எதிர்மறை கருத்துக்களை சொல்ல தயங்கும் நிலைதான் இன்றைக்கும் நிலவுகிறது. வெள்ளைத்தோல் ஆண்டைகளிடம் இருநூற்று சொச்சம் ஆண்டுகள் அடிமைப்பட்டு கிடந்த பழக்கமோ என்னவோ அதிமுகவின் இரண்டு (பிரதான) வெள்ளை நிற முதல்வர்களிடமும் எல்லா தரப்பினரும் அதீத விசுவாசம் காட்டினார்கள். பாமர மக்கள். அதிகார வர்க்கம், ஊடகம் என எல்லோரும் கண்மூடித்தனமான இவர்களது சர்வாதிகார மனோபாவத்துக்கு அடிபணிந்தார்கள். (அந்த அடிமைத்தனத்தை உடைக்கவும் ஜெயாவால்தான் முடிந்தது. அவரது மிதமிஞ்சிய அடாவடித்தனம் இல்லாவிட்டால் வெள்ளைத்தோல் வழிபாடு 1996லும் தொடர்ந்திருக்கும்). இன்றைய நிலையிலும் அதிமுக கலையாமல் இருப்பது பேராச்சர்யம்தான். தலைவரால் அதிகபட்சம் ஒருமணிநேரமே பணியாற்ற முடிகிறது, யார் இருப்பார் யார் துரத்தப்படுவார் என்று தெரியாது. தாலிபான் தலைமையை அணுகமுடியாததைப்போல இருக்கிறது அதிமுக தலைமை. ஆனாலும் கட்சி செயல்படுகிறது. ஆனால் இது அடுத்த ஆண்டும் இருக்கும் என சொல்வதற்கில்லை. ஆட்சி என்று ஒன்று இல்லாவிட்டால் ஜெயாவுக்கு இப்போது உள்ள தெம்புகூட இருக்காது. அ.தி.முகவின் தற்போதைய வலுவான கூட்டணி அமைப்புக்களான ஊடகங்களால் இந்த ஆதரவை தொடர இயலாமல் போகலாம். சோ ராமசாமியால் வழிநடத்த முடியாது, ஷீலா பாலகிருஷ்ணன் வழி நடத்துவாரா என தெரியாது; இருப்பது சசிகலா மட்டும்தான். அந்த சூழலில் ஒட்டுமொத்த அ.தி.மு.கவும் பாஜகவின் கட்டுப்பாட்டுக்குள்தான் போகும். இப்போதே அதுதான் நிலை. ஆகவே இம்முறை அதிமுகவின் வெற்றி என்பது பாஜகவுக்கே அதிகம் தேவைப்படும். கூட நின்றோ அல்லது எதிர்த்து நின்றோ பாஜக அதிமுகவுக்கு சாதகமாகவே செயல்படும். தொலைக்காட்சி விவாதங்களில் பாஜகவின் தற்கொலைப்படையாக செயல்படும் ஸமூஹ ஆர்வலர்கள் தன்னியல்பாக அதிமுகவை ஆதரிப்பதை நீங்கள் கவனித்திருக்கக்கூடும். வைகோ ஒரு ஆர்.எஸ்.எஸ் தாசர்! அதிமுகவின் பி டீம் என நம்பப்படும் மக்கள் நல கூட்டணி தன்னை ஒரு மாற்று என நம்பிக்கொண்டிருக்கிறது. ஆனால் அந்த கதம்பத்தில் இருக்கும் கட்சிகள் மாற்றாக இருக்க எவ்வித தகுதியும் இல்லாதவையாக இருக்கின்றன.. கிரானைட் ஊழலில் இரண்டு திராவிடக்கட்சிகளும் ஈடுபட்டன. ஆகவே எங்களுக்கு வாக்களியுங்கள் என்கிறது மார்க்சிஸ்ட். ஆனால் இ.கம்யூவின் தளி.ராமச்சந்திரன் என்ன ஊதுவத்தி வியாபாரம் பார்க்கிறாரா எனும் கேள்விக்கு பதில் இல்லை (அவர் நடத்துவது ஒரு மாஃபியா சாம்ராஜ்யம், கொலைக்குற்றத்திற்காக குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்ட கிரானைட் தாதா அவர்). 2009 ஈழத்து இனப்படுகொலையை மன்னிக்க முடியாது என கருணாநிதியை இன்றளவும் குற்றம்சாட்டும் வைகோ அன்று காங்கிரஸ் அமைச்சராக இருந்த இன்றும் காங்கிரசை தன் கட்சிப்பெயரில் வைத்திருக்கும் வாசனை கூட்டணிக்கு வருந்தி அழைக்கிறார். கம்யூனிஸ்ட் இயக்கங்களின் சித்தாந்த விரோதி பாஜக. செயல்பாட்டு ரீதியில் வைகோ ஒரு ஆர்.எஸ்.எஸ் தாசர். ஜெயாவே செய்ய துணியாத காரியமான- 2002 கலவரத்தை ஆதரிப்பது எனும் நிலையை அப்போது எடுத்தவர் வைகோ. இன்றளவும் அது குறித்து வருத்தம் தெரிவிக்காத வைகோவை பக்கத்தில் வைத்துகொண்டு இந்த கம்யூனிஸ்ட் இயக்கங்கள் எந்தப் பொதுக்கருத்தை முன்வைத்து இயங்கப்போகின்றன? அப்படியானால் பாஜகவை எதிர்ப்பதைவிட திராவிட ஆட்சியை ஒழிப்பதுதான் அவர்கள் முதல் இலக்கா? நீர்நிலை ஆக்கிரமிப்பா, மது விற்பனையா, கட்டப்பஞ்சாயத்தா எந்த விவகாரமானாலும் இவர்கள் எளிதாக 40 வருட திராவிட ஆட்சி என பழி சொல்கிறார்கள். ஆனால் இந்த 40 வருடமும் இவர்கள்தான் அந்த ஆட்சிகளை ஆதரித்திருக்கிறார்கள். நீர்நிலை ஆக்கிரமிப்பின் பிதாமகன் எம்ஜிஆரை தன் தோளில் சுமந்தது கம்யூனிஸ்ட் கட்சிகள்தான். இன்றுவரை எம்ஜிஆரின் பேரை சொல்லிக்கூட அவர்கள் விமர்சிப்பது இல்லை. கட்டப்பஞ்சாயத்து, ரியல் எஸ்டேட் ஆகிய தொழில்களை செய்யும் ஆட்கள் இல்லாத அரசியல் கட்சிகளே இங்கில்லை. இதில் என்ன மாற்றத்தை இவர்கள் கொண்டுவர இயலும்? தி.மு.க அ.தி.மு.க ஆகிய கட்சிகளின் மோசமான நகல் தே.மு.தி.க. குடும்ப ஆட்சியில் திமுகவுக்கும், ரசிகர் மன்ற பாணி கட்சியமைப்பில் அதிமுகவுக்கும் நேரடிப் போட்டியாளரான தே.மு.தி.கவை கையை பிடித்து இழுக்கின்றன ம.ந.கூ கட்சிகள். இதில் நாங்கள் துண்டு போட்ட சீட்டில் நீ எப்படி உட்காரலாம் என கருணாநிதியிடம் வம்புக்கு போகிறார்கள். தி.மு.க அ.தி.மு.க ஆகிய இருகட்சிகளின் மோசமான நகலான விஜயகாந்தை கூட்டணியின் தலைவராக அங்கீகரிக்க காத்திருக்கும் இவர்கள் என்ன மாற்றத்தை கொடுக்க முடியும்? இப்போதும்கூட இவர்கள் திமுகவைத்தான் அதிகம் எதிர்க்கிறார்கள். மார்க்சிஸ்ட் கட்சியின் பாக்கியம் எங்களால் திமுகவுக்குத்தான் இழப்பு அதிமுகவுக்கு இல்லை என டி.வி விவாதம் ஒன்றில் ஒப்புக்கொள்கிறார். ஆனாலும் அவர்களது முதல் இலக்கு ஜெயா எதிர்ப்பாக இல்லை. இன்றைய சூழலிலும் அவர்கள் ஜெயாவையும் கருணாநிதியையும் ஒரே தட்டில் வைக்க முற்படுகிறார்கள். இதுவே ஜெயாவை காப்பாற்றும் முயற்சிதான். சாதாரண அரசு நடவடிக்கைகள் இருவரது ஆட்சியிலும் ஒரே மாதிரி மந்த நிலையிலா இருக்கிறது? சாலைப்பணிகளும் மற்ற அத்தியாவசிய அரசுப்பணிகளும் ஜெயா ஆட்சியில் இருப்பதைவிட கேவலமாக யார் ஆட்சியிலாவது இருக்க இயலுமா? இருவரது தலைமையிலான சட்டமன்றமும் ஒரே மாதிரியா நடக்கின்றன? அணுக முடியாதவர்கள் எனும் விமர்சனம் இருவருக்கும் பொருந்துமா? ஈழப்படுகொலைகள் நடந்தபோது கருணாநிதி சும்மாயிருந்தார் என்பது நிஜம். ஆனால் அப்போது ஜெயா இருந்திருந்தால் அம்மா சும்மாவாவது இருங்கள் (எதிராக எதையும் செய்துவிடாதீர்கள்) என்றுதான் கெஞ்சியிருக்க வேண்டும். ஜெயலலிதா திமிர்த்தனமாக நிறுத்திய திட்டங்கள் எத்தனை, இது 100 சதம் ஜெயாவால் மட்டுமே முடிகிற காரியம். இத்தகைய பிரத்யோக பிரச்சினைகளை மறந்துவிட்டு அல்லது தவிர்த்துவிட்டு இரண்டு தலைவர்களை சமமாக குற்றம்சாட்டும் பாணியை கையாள்கிறார்க்கள். ம.ந.கூ தலைவர்களை 3 வகைகளில் அடக்கிவிடலாம். ஜெயலலிதாவை எதிர்க்க மனமில்லாதவர்கள், எதிர்க்க துணிவில்லாதவர்கள் மற்றும் எதிர்த்து பழக்கமில்லாதவர்கள். இந்த குழுவினர் பங்கேற்கும் எல்லா விவாதங்களையும் கவனியுங்கள். அதில் கருணாநிதியின் மீதான விமர்சனத்தில் இருக்கும் வேகம் ஜெயலலிதா பற்றி பேசுகையில் கணிசமாக குறைந்திருக்கும். ஒரு பேரழிவு ராஜாங்கத்தை நடத்திக்கொண்டிருக்கும் நிலையிலும் ஜெயாவையும் கருணாநிதியையும் ஒரே தட்டில் நிறுத்துவது என்பது மறைமுகமான ஜெயா ஆதரவு நடவடிக்கை. பத்திரிக்கையாளர் ஞாநி கருத்துப்படி, இந்த ம.ந.கூவின் இலக்கு 2021 தேர்தல்தான். ஆகவே இப்போது திமுகவை ஒழித்துவிட்டால் பிறகு 2021ல் பெரிய வெற்றியை சுவைக்கலாம் என இந்தக்கூட்டணி கருதுவதாக அவர் கணிக்கிறார். இதுதான் அவர்களது கணிப்பென்றால் அது முட்டாள்தனமான யோசனை. ஜெயலலிதா எனும் பரமார்த்தகுரு இல்லாவிட்டால் அதிமுக சீடர்கள் வேறு மந்தைகளை நோக்கி ஓடிவிடுவார்கள். இந்த தேர்தலில் ஜெயாவின் பிரச்சாரம் சாத்தியமா என சந்தேகம் எழும் சூழலில் அவரால் இனி கட்சியை கட்டுப்பாட்டில் வைப்பது சிரமம். அதிமுக சில ஆண்டுகளில் முற்றாக பாஜக வசம்தான் செல்லும். அது அடிப்படையில் பார்ப்பனர் மற்றும் நாடார்களின் கட்சி. மம்மி திமுக முக்குலத்தோர் கட்சி. அந்த ஜாதிச் சிக்கல் பாதி அதிமுகவை பிற கட்சிகளுக்கு பாகம் பிரித்து தரும். அதில் பெரும் எண்ணிக்கையை திமுகதான் கைப்பற்றும். அப்படிப்பார்த்தால் 2021ல் திமுகதான் மீண்டும் வலுவடையும். ஆக அப்போதும் மநகூவின் பாத்திரம் நிறையப்போவதில்லை. ஆக இந்த அணி விரும்பியோ விரும்பாமலோ, தெரிந்தோ தெரியாமலோ அதிமுகவுக்கு சாதகமாக செயல்படுவோர் நிறைந்த அணிதான். அம்மாவுக்கு அணிலைப்போல உதவிய ஆத்ம திருப்திதான் அவர்களுக்கு மிஞ்சும். பெரிய அளவில் அவர்களால் ஜெயாவை எதிர்த்து அரசியல் செய்யவே முடியாது, பாஜகவை எதிர்த்தும் அரசியல் செய்யவே முடியாது. காரணம் முதல் காரியத்தை தா.பா எதிர்ப்பார் இரண்டாவதை வைகோ தடுப்பார். பார்ப்பன எதிர்ப்பை கைவிட்ட திமுக (சிந்தன் கூற்றுப்படி) அதிமுகவின் பி டீமான திமுக நிலை பரிதாபகரமானது. வழக்கமாக ஒரு முக்கிய எதிர்கட்சி, இத்தனை கெட்டபெயரை சம்பாதித்த ஆளுங்கட்சி இருக்கையில் வரவிருக்கும் தேர்தலை துணிச்சலுடன் சந்திக்க ஆயத்தமாகியிருக்க வேண்டும். ஆனால் மற்ற எதிர்கட்சிகள் திமுகவைத்தான் அதிகம் எதிர்க்கின்றன. பெருமளவிலான ஊடகங்கள் திமுகவின் மீது ஒரு நுட்பமான தீண்டாமையை கடைபிடிக்கின்றன. ஒட்டுமொத்த ஊடகங்கள் 2ஜி வழக்கை கையாண்ட விதமும் ஜெயா வழக்கை கையாண்ட விதமும் அப்பட்டமாக பக்கச்சர்பானவை. எப்படி ஜெயலலிதா பற்றிய எதிர்மறை செய்திகள் (சென்னை பேனர் அராஜகம்) அடக்கிவாசிக்கப்படுகிறதோ அப்படியே திமுக பற்றிய நேர்மறை செய்திகள் (ஸ்டாலின் பிரச்சாரம்) அடக்கிவாசிக்கப்படுகின்றன. ஜெயா வழக்கின்போதும் சென்னை வெள்ளத்தின்போதும் ஜெயலலிதா மிகக்கடுமையாக சமூக ஊடகங்களில் விமர்சிக்கப்பட்டதன் காரணம் இந்த ஊடக அமைதிதான். ஊடகங்கள் அந்த வேலையை செய்திருந்தால் இப்படியான விமர்சனங்கள் சுனாமிபோல மக்களிடமிருந்து வர வாய்ப்பில்லை. ஆனால் இந்த நிலைக்கு திமுகவும் ஒரு காரணம். பார்ப்பனீயம் எப்போதும் தன்னை எதிர்த்து நிற்பவனைவிட காலில் விழுபவனைத்தான் முதலில் அழிக்கும். திமுக தன் பார்ப்பன எதிர்ப்பை கைவிட்ட பிறகுதான் அந்த லாபி மிக மூர்க்கமான தாக்குதலை திமுக மீது தொடுக்கிறது. ஜெயேந்திரன் வழக்கு முதல் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் வழக்குவரை எல்லாவற்றிலும் திமுக தலைமை ஒரு மொன்னையான எதிர்வினையை மட்டுமே காட்டியிருக்கிறது. திமுகவை இன்றளவும் தாங்கிப்பிடிக்கும் திராவிட சிந்தனை கொண்ட நபர்களைவிட கருணாநிதி பார்ப்பன சக்திகளை தாஜா செய்யவே மெனக்கெடுகிறார். பாஜக அரசிற்கு எதிரான எல்லா அறிக்கைகளும் உச்சகட்ட பணிவோடுதான் வெளியாகின்றன. திமுகவின் இந்த தடுப்பாட்ட உத்தி அவர்களுக்கு அரசியல்ரீதியாக பின்னடைவையே தருகிறது. இதுவும் கருணாநிதி காலம் வரைதான் ஸ்டாலின் இத்தகைய ஒப்பனையைக்கூட விரும்பாதவர் என்பது கண்கூடு. திராவிடமும் கம்யூனிசமும் நிறைவாக, திராவிட கட்சிகளால்தான் தமிழகம் வீழ்ந்தது எனும் மூன்றாம் அணிகளின் வாதம் அபத்தமானது, நயவஞ்சகமானது. இது முதலாளித்துவ பொருளாதாரமுறையின் தோல்வியை மறைக்கும் செயல். கூடுதலாக அதிமுகவின் சகிக்க முடியாத சர்வாதிகாரத்தை நீர்த்துப்போகவைக்கும் கபடத்தனம். இந்தியாவில் எந்த மாநிலமும் உருப்படியான வளர்ச்சியை பதிவு செய்யவில்லை. ஒப்பீட்டளவில் தமிழகமும் கேரளாவும் ஓரளவு முன்னேற காரணம் அங்கு திராவிட இயக்கமும் (தமிழகம் மட்டும்), கம்யூனிச இயக்கமும் உருவாக்கிய உரிமை சார்ந்த விழிப்புணர்வு. அதன் பலனாக உருவான கல்வி மற்றும் அறிவுப் புரட்சி. இல்லாவிட்டால் நாம் இன்னொரு பீகாராக இருந்திருப்போம். நமது தேர்தல்கள் இப்போது அறிவியல்பூர்வமான திருட்டுத்தனங்களை நோக்கி முன்னேறியிருக்கின்றன. பணம் வாங்கும் வாக்காளர்களை சரியாக கணிப்பது, அரைமணிநேர எக்ஸ்பிரஸ் பணப்பட்டுவாடா, எதிரணி பூத் ஏஜெண்ட்களை ஓரிரு மணிநேரம் ஒதுங்கவைத்து கள்ள ஓட்டு போடுவது என பல வழிகள் கையாளப்படுகின்றன. தேர்தல் ஆணைய அதிகாரிகளும் பயமில்லாமல் பித்தலாட்டங்களை அனுமதிக்கிறார்கள். முப்பதாயிரம் கோடி செலவு செய்தால் பச்சைபொய்களையும் நம்பவைத்து ஒரு பிரதமரை உருவாக்கலாம் என்பதும் கடந்த தேர்தலில் நிரூபனமானது. இன்று நாம் உணரவேண்டியது ஒன்றைத்தான், நம் நாட்டின் உண்மையான ஆட்சியாளர்கள் பெருமுதலாளிகள். இனி ஒவ்வொரு ஆட்சியும் முந்தையதைவிட மோசமாகிக்கொண்டே இருக்கும். மோடி ஜெயலலிதா போன்ற சிலரது ஆட்சிகள் இன்னும் கொடூரமாக இருந்துவிடும். ஆனால் இந்த விதி மாறாது. மூன்றாவது அணி மாற்று அணி ஆகிய பசப்பல்கள் முற்றாக தோல்வியடைந்த அமைப்பை இந்த இன்னும் கொஞ்ச காலத்துக்கு காப்பாற்றும் முயற்சி மட்டுமே. ஒரு லாட்டரி வாங்குவதில் இருக்கும் அதிருஷ்ட வாய்ப்புகூட இந்த தேர்தலில் இல்லை. இந்த முதலாளித்துவ பொருளாதார முறையில் இனிவரப்போகும் எல்லா தேர்தல்களும் ஒரு பொழுதுபோக்கு மட்டுமே… ஆனால் அவை மக்களின் தூக்குமேடையில் நடந்துகொண்டிருக்கும் பொழுதுபோக்கு. சாமானியரான நீங்கள் உயிரோடிருந்தால் அது உங்களுக்கு தரப்பட்ட உரிமையல்ல, இன்னும் உங்கள் முறை வரவில்லை என்பதுதான் அதன் அர்த்தம். வில்லவன் இராமதாஸ், அரசியல் விமர்சகர். பகிர் Print Reddit Pinterest Pocket Twitter Facebook WhatsApp Skype LinkedIn Tumblr Email Telegram Like this: Like ஏற்றப்படுகின்றது... Related குறிச்சொல்லிடப்பட்டது அதிமுக ஆர்.எஸ்.எஸ் தாசர் எம்.ஜி.ராமச்சந்திரன் சசிகலா தர்மபுரி தளி.ராமச்சந்திரன் தாலிபான் நக்சல்பாரி பாஜக வைகோ ஷீலா பாலகிருஷ்ணன் Published by த டைம்ஸ் தமிழ் த டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும் பிரிசுரிக்கப்ட்டது ஜனவரி 13, 2016 ஜனவரி 13, 2016 பதிவு வழிசெலுத்தல் Previous Post ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டம் கொண்டு வருவாரா ஜெயலலிதா? மத்திய அரசு கை விரித்ததால் மக்கள் எதிர்பார்ப்பு Next Post கரை ஒதுங்கிய திமிங்கலங்கள் கொல்லப்பட்டனவா ? புகுஷிமா கதிர்வீச்சால் டால்பின்கள் இறந்ததை சுட்டிக்காட்டி அதிகரிக்கும் கண்டனம் One thought on “2016 சட்டப்பேரவைத் தேர்தல்: பி டீம்களின் தர்ம யுத்தம்; கலக்கப்போவது யாரு?” Mohamedsaleem சொல்கிறார்: 05:01 இல் ஜனவரி 14, 2016 Naam tamilar katchi seeman 2016 chief minister LikeLike மறுமொழி மறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி Enter your comment here... Fill in your details below or click an icon to log in: மின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public) பெயர் (கட்டாயமானது) இணையத்தளம் You are commenting using your WordPress.com account. ( Log Out / மாற்று ) You are commenting using your Twitter account. ( Log Out / மாற்று ) You are commenting using your Facebook account. ( Log Out / மாற்று ) நிராகரி Connecting to %s Notify me of new comments via email. புதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து Δ This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed. த டைம்ஸ் தமிழ் இணையத்துக்கு நன்கொடை தாருங்கள்! Follow THE TIMES TAMIL on WordPress.com Viral கையால் மலம் அள்ளும் பணித்தடைச் சட்டம் 2013’’ ஐ உடனடியாக நடைமுறைபடுத்த ‘’பீம் யாத்ரா’’ “அப்பாவி பெண்ணாக இருந்த என்னை சுற்றியிருந்தவர்கள் பயன்படுத்திக்கொண்டார்கள்”: ஜெயலலிதாவின் மனம் திறந்த பேட்டி ஜப்பானில் தேவர் மகன் எடுத்த அகிரா குரோசோவா: பாகம்- 2 "மனுசங்கடா நாங்க மனுசங்கடா": இன்குலாபின் புகழ்பெற்ற பாடலை நினைவுகூரும் செயல்பாட்டாளர்கள் ஜப்பானில் தேவர் மகன் எடுத்த அகிரா குரோசோவா: பகுதி - 4 தெலுங்கர் பேராசிரியர் அருணன் எழுதிய தமிழ் நூல்களின் பட்டியல் இதோ... மலையாளி பழங்குடியினரை `மலையாளி கவுண்டர்’ ஆக்கிய அரசு! நூறு வருடங்களில் அழிக்கப்பட்ட தலித்துகள் பற்றி தெரியுமா உங்களுக்கு ? -செந்தமிழ் நாட்டின் கொடூர கொலை பட்டியல் இதோ....
கைதடி மண்ணுக்குச் சர்வதேச முகவரி தந்த எழுத்தாளர், பேராசிரியர், தாவரவியல் விஞ்ஞானி ஆசி. கந்தராஜா அவர்களிற்கு கைதடியில் பாராட்டு விழா நடாத்தப்பட்டுள்ளது. கைதடி மேற்கு இணுங்கித் தோட்டம் அன்னை இரத்தினம் மணி மண்டபத்தில் நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தது. அவரால் இதுவரையில் எழுதி வெளியிடப்பட்ட நூல்கள். -2000,பாவனை பேசலன்றி - 2001 இல் இலங்கை அரசின் சாகித்திய விருது பெற்ற நூல். -2000 தமிழ் முழங்கும் வேளையிலே- செவ்விகளின் தொகுப்பு- 2003,உயரப் பறக்கும் காகங்கள்-2007, கீதையடி நீயெனக்கு - குறுநாவல். – 2014, கறுத்தக் கொழும்பான் - 2014, செல்லப் பாக்கியம் மாமியின் முட்டிக் கத்தரிக்காய் -2017,கள்ளக் கணக்கு – 2018,ஹெய்க்கோ - 2019, பணச்சடங்கு - 2021- சாகித்திய விருது பெற்றது. மண் அளக்கும் சொல். 2022 Related Posts யாழ்ப்பாணம் Post a Comment No comments Subscribe to: Post Comments ( Atom ) உலகம் அதிகம் வாசிக்கப்பட்டவை பிரபா சூப்பர் மார்க்கெட்டாக மாறியது அளம்பில் மாவீரர் துயிலுமில்லம் ஒரு தமிழரின் இழிவான செயலால் மாவீரர்கள் துயில் கொள்ளும் முல்லைத்தீவு அளம்பில் மாவீரர் துயிலுமில்லம் தற்போது பிரபா சூப்பர் மார்க்கெட்டாக சுவிஸ் நாட்டில் நடைபெற்ற இசைக்குயில், நெருப்பின் குரல் விருது - 2022 சுவிஸ் வாழ் தமிழ் மாணவர்களின் கலைத்துறையினை மேம்படுத்துவதற்காக அனைத்துலகத் தழிழ்க்கலை நிறுவகத்தால் நடாத்தப்பட்ட இசைக்குயில் மஹிந்த புதிய கட்சி:ராஜபக்சவல்ல! ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையின் தீர்மானத்தை எதிர்த்து ஒன்பது நாடாளுமன்ற உறுப்பினர்கள் ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கத்தில் அமைச்சர... விருது பெற்றவர்களும் சிறையிலா? சாகித்திய விருது பெறும் அளவு சிறந்தவர்களும் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ கைதுசெய்யப்பட்டு பல ஆண்டுகளாக சிறை வைக்கப்பட்டுள்ளனர் . அவர்கள் ... கொழும்பில் தமிழ் வர்த்தகரது விமானங்கள்! சிறீலங்கன் விமான நிறுவனத்திற்கு குத்தகை அடிப்படையில் புதிதாக சில விமானங்களை புலம்பெயர் தமிழ் வர்த்தகர் ஒருவரிடமிருந்து கொள்வனவு செய்யவுள்ளமை... கட்டுரை தமிழ்நாடு வலைப்பதிவுகள் எங்களுடன் இணைந்திட இணைப்புகள் அமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் ஊடக அறிக்கை எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து சுவீடன் டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முதன்மைச் செய்திகள் முல்லைத்தீவு யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து
பருவநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவதில் எந்த மாற்றமும் இல்லை என்றால், 2050-க்குள் கோலாலம்பூர் அடிக்கடி வெள்ளத்தை சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வெப்பமான நிலைமைகளின் விளைவாக, அதிக மழைப்பொழிவு அதிகரிப்பதே இதற்குக் காரணம். 2050 ஆம் இந்த நிலை உருவாகும் என்று உலகில் உள்ள 100 நகரங்களின் வெள்ள நிலை தகவல்களை கொண்டு கணிக்கும் C40 என்ற அமைப்பு அதன் அறிக்கையில் இந்த அச்சுறுத்தலை வெளியிட்டது. மழை, புயல் வழி வெள்ளம் மட்டுமின்றி, கோலாலம்பூரில் உள்ள ஆறுகளின் வழி வெள்ளப்பெருக்கெப்பும் நிகழ வாய்ப்புள்ளது. மிக மோசமான சூழ்நிலையில், கோலாலம்பூரில் ஆற்றில் வெள்ளப்பெருக்கால் உண்டாகும் பாதிப்பு செலவு 2050 ஆம் ஆண்டளவில் 124% உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. தற்பொழுது கோலாலம்பூரில் ஆற்றில் வெள்ளம் ஏற்படுவதால் ஆண்டுக்கு ஒரு நபருக்கு US$80 (RM352.40) செலவாகும் என்றால், 2050ல் வழக்கம் போல் வணிகச் சூழ்நிலையில் US$180 (RM792.90) செலவாகும். அதோடு பாதிக்கப்பட்ட கோலாலம்பூர் குடியிருப்பாளர்களின் எண்ணிக்கையும் 48% அதிகரிக்கும். இன்று, நகரத்தில் வசிப்பவர்களில் 0.91% பேர் ஆற்றங்கரை வெள்ளப்பெருக்குக்கு ஆளாகிறார்கள் என்று ஆய்வு காட்டுகிறது பருவநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்த எதுவும் மாறவில்லை என்றால், 2050-க்குள் 1.36% குடியிருப்பாளர்கள் பாதிப்படைவர் என்று அது கணித்துள்ளது. வறட்சியின் நடுத்தர ஆபத்து காலநிலை மாற்றத்தின் விளைவாக கடுமையான வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்படும் பல தென்கிழக்காசிய மற்றும் தெற்காசிய நகரங்களில் கோலாலம்பூரும் ஒன்றாகும் என்று ஆய்வு கூறுகிறது. இது வறட்சியின் நடுத்தர ஆபத்தையும் கொண்டிருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது, ஆனால் தரவு இல்லாததால் சரியான தாக்கத்தை அளவிட முடியாது, C40 கூறியது. நகரங்களின் பருவ நிலை மாற்றம் மக்கள்தொகையை சமமாக பாதிக்கும் என்றும், உலகளாவிய தெற்கில் உள்ள நகரங்கள் உலகளாவிய வடக்கில் வசிப்பவர்களை விட வெள்ளம் மற்றும் வறட்சியால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்பு பத்து மடங்கு அதிகம் என்றும் அது மேலும் கூறியது. “நதி மற்றும் கரையோரப் பெருக்கினால் ஏற்படும் வெள்ளம் உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான மக்களை பாதிக்கும், அதிக பொருளாதார, சுகாதார மற்றும் சமூக தாக்கங்களை ஏற்படுத்தும் என்று C40 ஆராய்ச்சி கூறுகிறது,” என்கிறது அறிக்கை. உலக அளவில், ஆற்று நீர் வெள்ளத்தால் அடுத்த மூன்று பத்தாண்டுகளில் ஒவ்வொரு ஆண்டும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் C40 நகரங்களுக்கு US$136 பில்லியன் (RM599.08 பில்லியன்) செலவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடிக்கடி ஏற்படும் மற்றும் கடுமையான வறட்சிகள் C40 நகரங்களில் நீர் இழப்பை 26% அதிகரிக்கும் மற்றும் அடுத்த மூன்று பத்தாண்டுகளில் வருடத்திற்கு US$111 பில்லியன் (RM488.95 பில்லியன்) சேதம் ஏற்படும் என்றும் அது கூறியது. “கடல் மட்ட உயர்வு, வெள்ளம் மற்றும் வறட்சி ஆகியவை இன்று நகரம் எதிர்கொள்ளும் மூன்று முக்கியமான காலநிலை தொடர்பான அபாயங்கள்,” என்று C40 நகரங்களின் நிர்வாக இயக்குனர் மார்க் வாட்ஸ் கூறினார். காலநிலை நெருக்கடியின் யதார்த்தங்களுக்கு நகரங்கள் போதுமான அளவு தயாராகி வருகின்றன என்பதை உறுதிப்படுத்த அவை தங்கள் வசம் ஏராளமான கருவிகளையும் அறிவையும் கொண்டுள்ளன. ஆனால், எந்தப் பயனுள்ள நடவடிக்கையும் சவாலின் நோக்கமும் நிக்ழப்போகும் பேரிடர்களின் புரிதலுடன் தொடங்குகிறது. Share this: Facebook Twitter WhatsApp Email Print More LinkedIn Reddit Tumblr Pinterest Pocket Telegram Skype Like this: Like Loading... Related posts ஹாடி அவாங், முகைதீன் யாசின் கூட்டணியின்… அம்னோவை சீர்திருத்துவது பக்காத்தானின் பொறுப்பு மத-இனவாத அரசியலையும் மீறி பிறந்துள்ளது பொற்காலம் மாறுகின்ற அரசியலில் மதவாதம் வென்றது இருபத்திரண்டு மாதங்களில் நாட்டைக் காப்பாற்றியது நம்பிக்கை… மலேசியாவைக் காப்பாற்ற நம்பிக்கை கூட்டணி தேவை முன்னால் நம்பிக்கை கூட்டணி ஆட்சி கவிழ்தது… தேசிய முன்னணி அறிக்கையில், ‘யானை’ மட்டும்… வாக்குரிமையைப் பயன் படுத்த ஊக்குவிக்கப்பட வேண்டும். – மு. குலசேகரன் அரசியல் அறிமுகம்: துளசி மனோகரன் ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – கி.சீலதாஸ் சார்ல்ஸ் சந்தியாகோவை நீக்கியது, கணபதிராவுக்கு பாதிப்பாகுமா? தேர்தலில் இந்திய பெண்களின் பங்கெடுப்பு புறக்கணிக்கப்படுகிறது எத்தனை காலம் தான் ஏமாற்றுவார்? –… தேர்தல் காலங்களில் மட்டுமே தோசை சுடும்… 15வது பொதுத் தேர்தல் – தேசிய… இந்திய அமைப்புகளின் 15ஆம் பொதுத் தேர்தலுக்கான… காற்றுள்ள போதே தூற்றவில்லை: நட்டாற்றில் வேதமூர்த்தியின்… தமிழை வளர்க்கும் மாணவர்களை உதாசீனப்படுத்துகிறது சமுதாயம் தேசிய நீரோட்டத்தில் மீண்டும் இனத்துவேசம்! இந்தியர்களுக்கென்றே ஒரு ‘லோ யாட் 3’… வெள்ளத்திலும் தேர்தலா? – முற்றிலும் அறிவிலிதனம்! அரசு அறிவித்த உதவித்தொகை உருப்படியாகச் சென்று… ஊழலை விரட்டுவோம், நியாயப்படுதுவதை நிறுத்துவோம் –… திருமண விருந்தும் – தர்மசங்கடமும் –… அண்மைய பதிவுகள் ‘வெள்ளத்தை சமாளிக்கவும்’ – எதிர்கால வேட்பாளருக்கான பாடாங் செராய் வாக்காளர்களின் விருப்பம் டிசம்பர் 2, 2022 அரசாங்கத்திற்கு எதிரான PAS இன் இடைவிடாத தாக்குதல்களை PN தலைவர் கட்டுப்படுத்துவாரா? டிசம்பர் 2, 2022 மக்கள் போராட்டம் எதிரொலி – ஊரடங்கை தளர்த்தியது சீன அரசு டிசம்பர் 2, 2022 இலங்கையில் மனிதாபிமான கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கை! ஜப்பான் வழங்கியுள்ள பணம் டிசம்பர் 2, 2022 இணையவழி குற்றங்களை தடுக்கும் சர்வதேச ஒப்பம் – முதல் தெற்காசிய நாடாக கையெழுத்திட்ட இலங்கை டிசம்பர் 2, 2022 இலங்கையின் தேசிய வளங்கள் புலம்பெயர் தமிழருக்கு விற்பனை – ரணிலின் முடிவுக்கு எதிர்ப்பு டிசம்பர் 2, 2022 நச்சுத்தன்மை உள்ள இருமல் மருந்து… இந்தோனேசிய அரசாங்கம் மீது வழக்கு டிசம்பர் 2, 2022 மனித மூளையில் சிப் பொருத்தும் தீவிர முயற்சியில் எலான் மஸ்க்! டிசம்பர் 2, 2022 இந்தியா ஜி20 தலைமை பொறுப்பை ஏற்றதை முன்னிட்டு விளக்கொளியில் ஜொலிக்கும் பாரம்பரிய சின்னங்கள் டிசம்பர் 2, 2022 கச்சா எண்ணெய் விலை சரிந்தாலும் பா.ஜ.க.வின் கொள்ளை தொடர்கிறது: காங்கிரஸ் கடும் தாக்கு டிசம்பர் 2, 2022
ஐக்கிய மக்கள் சக்தியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் ஐவர், அரசாங்கத்துடன் இணையவுள்ளனர் என்று சிங்கள வார இதழொன்று செய்தி வெளியிட்டுள்ளது. நல்லாட்சியின்போது அமைச்சு பதவிகளை வகித்த ஐவரே, இவ்வாறு அரசுக்கு ஆதரவு வழங்கி, பதவிகளை பெறவுள்ளனர் எனக் கூறப்படுகின்றது. ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விடுத்த வேண்டுகோளுக்கமையவே இவர்கள் இந்த முடிவை எடுத்துள்ளனர். ஐக்கிய தேசியக் கட்சியில் நீண்டகாலம் இவர்கள் முக்கிய பதவிகளையும் வகித்துள்ளனர். Facebook Subscribe to this Blog via Email : Next « Prev Post Previous Next Post » ShortNews.lk Join our WhatsApp group Popular Posts #BREAKING: GCE O/L பரீட்சை பெறுபேறுகள் சற்றுமுன் வெளியிடப்பட்டன...! GCE O/L பரீட்சை பெறுபேறுகள் சற்றுமுன் வெளியிடப்பட்டுள்ளன. தொடர்மாடியிலிருந்து கீழே வீசப்பட்ட குழந்தை உயிரிழப்பு : போதைப்பொருளுக்கு அடிமையான உறவினர் கைது! கொழும்பு - 14 கிராண்ட்பாஸ் சமகிபுர தொடர்மாடி குடியிருப்பின் மேல் மாடியிலிருந்து கீழே வீசப்பட்டு ஒன்றரை வயது குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளத... #PHOTOS: பாடசாலையில் ஆரம்பிக்கப்பட்ட ”தேவையானவர்கள் எடுத்துச் செல்லுங்கள், இயலுமானவர்கள் வைத்துச் செல்லுங்கள்.” திட்டம். நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வு காணும் Follow @ShortNewsTvLK © Copyright 2020 SHORTNEWS.LK Number 1 Tamil News website from Srilanka. Designed by Rajai Mohamed | Template Design by Rajai Mohamed. Powered by Short News Team.
செல்வந்தர்களை உருவாக்கும் உற்பத்தி நின்று போவதென்பது, முதலாளித்துவத்தின் இதயமே நின்று போவதற்குச் சமமானது. உழைப்பு முடக்கமானது, உழைப்பிலான கூலியை நம்பி வாழும் மனிதர்கள் சந்திக்கின்ற பொது நெருக்கடியை விட, உழைப்பைச் சுரண்டி வாழும் முதலாளித்துவத்தின் நெருக்கடிதான் - அரசுகளின் முடிவுகளாக இருக்;கின்றது. உழைப்பினால் குவிந்த செல்வத்தை (உபரியை) பறிமுதல் செய்தோ அல்லது அதை அரச உடமையாக்கியோ, கூலியை நம்பி வாழும் மனிதர்களுக்கு பகிரவில்லை. உபரியை (குவிந்த செல்வத்தை)பறிமுதல் செய்யுமாறு பாட்டாளி வர்க்க சர்வதேசியத்தை முன்வைத்து, பாட்டாளி வர்க்கம் உலகெங்கும் அதை அரசியலாக்கவுமில்லை. முதலாளித்துவம் எந்த வர்க்க அரசியல் நெருக்கடியுமின்றி இருக்க, அரசுகள் மனித உழைப்பினால் செல்வந்தர்களிடம் குவிந்துவிட்ட செல்வத்தின் ஒருபகுதியை வட்டிக்கு எடுத்து, அதையே நிவாரணமாக வழங்கியது. மறுபக்கம் அதையும் கொடுக்கவில்லை. உலக முதலாளித்துவம் ஏற்றத்தாழ்வான இரு பொது வழிமுறைகளை கையாண்டது. அதாவது அரசுகளின் உத்தரவுக்கு ஒடுங்கி வாழ்தல் காலத்தில் ஏற்படும் பொருளாதாரத் தேவைகளை சில அரசுகள் பூர்த்தி செய்யும் வழிமுறைகளை முன்வைக்க - வேறு சில நாடுகள் பொருளாதார ரீதியாக மக்களுக்கு கைகொடுப்பதை மறுதளித்தது. உலக மக்களின் பொருளாதாரத் தேவைகளை கையாளும் அரசு வடிவங்கள் வேறுபட்டு, ஒருபுறம் பள்ளத்தை தோண்ட மறுபக்கமோ மலையாகக் காட்சியளிக்கின்றது. இதனால் முதலாளித்துவம் கொந்தளிப்பற்ற வர்க்க அமைதியைப் பெற்ற போதும், செல்வத்தை தொடர்ந்து குவிக்க முடியாத முதலாளித்துவ சுய நெருக்கடியை எதிர் கொள்கின்றது. இதில் இருந்து மீள, நோயும் - மரணம் தொடர்கின்ற சூழலில் - மீண்டும் செல்வத்தை குவிக்கும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பக் கோருகின்றது. மனிதர்களின் சுயநல உணர்வுகளையும் - நுகர்வு வெறியையும் துணை கொண்டு ஊடகங்கள் சுரண்டும் உழைப்புக்கு திரும்புவது பற்றி – பொது எதிர்பார்ப்பை உருவாக்கி வருகின்றது. கொரோனாவுக்கு எதிரான உலக மக்களின் பொது உளவியல் களைத்துப் போகும் அளவுக்கு - மனிதனை தனிமனிதனாக தனிமைப்படுத்தி - இயல்பு வாழ்க்கைக்கு மீள்வது பற்றிப் பேச வைத்திருக்கின்றது. இந்த அடிப்படையிலேயே அரசுகள் திட்டமிட்டே மக்களை உணர்வுபூ+ர்வமாக கொரோனாவுக்கு எதிராக அணிதிரட்டவில்லை. மாறாக சட்டங்களும் - ஒடுக்குமுறைகள் மூலமும் மக்களை கட்டிப்போட்டதே, முதலாளித்துவ வழிமுறையாக இருந்தது. மனிதனை தனிமைப்படுத்தி, மேல் இருந்து போடும் உத்தரவுகள் மூலம் கொரோனாவை கட்டுப்படுத்தும் அரசு நடைமுறைகள் மூலம் - மக்களை ஒடுங்கி தனித்து வாழக் கோரியது. இதன் மூலம் கூட்டாக தனித்து வாழும் மனிதனின் கூட்டு சமூகப் பண்பை மறுதளித்தது. கொரோனாவுக்கு எதிராக மக்களின் மருத்துவமானது முதலாளித்துவ நலன் சார்ந்த அதன் கொள்கை முடிவுகளின் அடிப்படையில் அலட்சியம், பொறுப்பற்ற தனம், பொய்கள், விடையத்தை திருப்பும் மொள்ளைமாரித்தனங்கள் .. மூலம் கட்டமைக்கப்பட்டது. தாம் அல்லாத நாடுகளின் மரணப் புள்ளிவிபரங்களைக் கொண்டு, தாங்கள் சிறப்;பாகவும் – சரியாகவும் செயற்படுவதான ஒரு பொதுப் பிம்பத்தை உருவாக்கியிருக்கின்றனர். மரண எண்ணிக்கை குறைந்துவிட்டால், உற்பத்தியையும் - சந்தையையும் மீளத் திறந்துவிட முடியும் என்பதே முதலாளித்துவ அரசுகளின் மருத்துவக் கொள்கையாக மாறி இருக்கின்றது. இதன் மற்றொரு வடிவம் மரணம் தவிர்க்க முடியாத ஒன்றாகவும் - கொரொனாவுக்குள் வாழப் பழகிக் கொள்ள வேண்டும் என்று மனநிலை உருவாக்கப்படுகின்றது. இப்படிபட்ட அரசியல் பின்னணியில் கொரோனா ஒவ்;வொரு நாளும் ஆயிரக்கணக்கில் மனிதர்களைக் கொன்று வருகின்றது. பல நாடுகள் அரையும் குறையுமாக முடக்கப்பட்டு இருக்கின்றது. மருத்துவ கண்டுபிடிப்புகள் பற்றி மிகைப்படுத்திய நம்பிக்கை ஊட்டி, மக்களை அதற்குள் அமுக்கிவிட முனைகின்றனர். இதுதான் மருந்து, இந்தா மருந்து என்று கூறி, அறிவிழந்த முட்டாள்தனங்களை கொண்டு - மனிதனின் பகுத்தறிவுவாதத்தை இல்லாதாக்குகின்றனர். தொற்று ஏற்பட்டடால் மீள தொற்று ஏற்படாது, தோற்று ஏற்பட்டவரின் நோய் எதிர்ப்பு சக்தியைக் (பிளாஸ்மா) கொண்டு பிறரைக் குணப்படுத்த முடியும் … என்று, மருத்துவரீதியாக இன்னமும் உறுதி செய்யாத வழிமுறைகளை எல்லாம் முன்வைத்து, மக்களின் சுய எச்சரிக்கையைச் சார்ந்து சிந்திக்கும் மனித உணர்வுகளை தகர்க்கின்றனர். தங்கள் நாடுகளில் மரணப் புள்ளிவிபரங்களை திசை திருப்ப, கொரோனா தோன்றிய விதம் பற்றியும் - மரணத் தரவுகளின் நம்பகத்தன்மை பற்றியும் கேள்வி எழுப்பி - அதை விவாதமாக மாற்றுகின்றனர். பல தரவுகளையும் - உண்மைகளையும் மூடி மறைத்தபடி, நிகழும் மரணங்களை இட்டு அலட்டிக் கொள்ள வேண்டிய விடயமேயல்ல என்ற பொது உளவியலை ஏற்படுத்துகின்றனர். மாஸ்க்(முகக்கவசம்), கையுறை, கிருமிநீக்கி, இடைவெளி, நோயை கண்டறியும் பரிசோதனைகள் மூலம் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப முடியும் என்ற பொதுக் கருத்து உருவாக்கப்பட்டு இருக்கின்றது. வெய்யில் வந்தால் வைரஸ் தானாக செத்துப் போகும் என்பது தொடங்கி எங்களுக்கும், எங்கள் இன - மத – சாதி – உணவு பண்பாட்டுக்கும் தொற்று உருவாகாது என்று நம்புமளவுக்கு, பெரியளவில் மக்கள் கூட்டம் தொடர்ந்து வழிநடத்தப்படுகின்றது. மனிதனின் கூட்டுச் சமூகப் பொறுப்பு உருவாகாத வண்ணம், கூட்டு சமூகப் பொறுப்பிலிருந்து கொரோனாவுக்கு எதிரான மனிதப் போராட்டம் உருவாகாத வண்ணம் - முதலாளித்துவம் தன் வழித்தடத்தின் வழியே மக்களை வழிநடத்தி வருகின்றது. கொரோனா தொற்று குறித்தோ – நிகழும் மரணங்கள் குறித்தோ மனித சமூகம் பொது அக்கறை கொள்ளத் தேவையில்லை, அதை அரசுகள் எதிர்த்து போராடுகின்றது என்ற பொது நம்பிக்கையை உருவாக்கி இருக்கின்றது. கொரோனா மரணங்கள் ஒரு விடையமே இல்லை. மரணங்கள் என்பது வெறும் புள்ளிவிபர தரவாக மாறிவிட்டது. பிற நாடுகளுடன் ஒப்பிட்டு, பேசும் தேசியவாதக் கருத்தியலாக, ஒரு நாட்டுக்கு எதிரான இன்னொரு நாட்டை ஆதரிக்கும் அரசியலாக மாறி இருக்கின்றது. அனைவருக்கும் கொரோனா தொற்றும் - மரணமும் நிகழாது என்ற பொது மனநிலை பரிணமித்திருக்கின்றது. மரணம் என்பது இந்த உலகில் வாழத் தகுதியற்ற மனிதர்களின் இறப்பாகவும், அது தவிர்க்க முடியாத ஒன்றாகவும் கருதுமளவுக்கும் - மனிதத்தை மனிதனில் இருந்து ஒழித்துக்கட்டி வருகின்றனர். இப்படி தனிமனிதர்கள் சிந்திக்கின்றளவுக்கு அரசும், ஊடகங்களும், சமூகத்திற்கு எதிராக தனிமனித மையவாத சுயநல சிந்தனைய காறி உமிழும் சமூக வலைத்தளங்களும் செயற்படுகின்றன. கொரோனா குறித்து அரசு சட்டதிட்ட நடைமுறைகள் எதை முன்வைக்கின்றதோ, அதைக் கடந்து மனித சமூகமாக சிந்திக்க முடியாத அளவுக்கு முடமாக்கப்பட்டிருகின்றது. மனிதனை வீட்டிற்குள் மட்டும் முடக்கவில்லை, மனித மூளையையும் சிந்திக்க முடியாத வண்ணம் - முடமாக்கி இருக்கின்றது. கொரோனாவுக்கு எதிரான மனித (தனிமனித) பாத்திரம் என்ன? அரசு சொல்வதை கடைப்பிடித்தல். அதாவது மேல் இருந்து வரும் உத்தரவைப் பின்பற்றல். இதைக் கடந்து சிந்திக்க, செயலாற்ற முடியாத சிந்தனை முடக்கம். இதைதான் நடைமுறைப்படுத்தி இருக்கின்றது. சமூகம் தன்னை ஒருங்கிணைந்த மனித சமூகமாக உணர்ந்து கொள்ள முடியாதவாறு, பிறர் குறித்த பொது அக்கறை கொள்ள முடியாதவாறு, எதுவும் உலகில் நடக்காதது போன்ற பொது மனப்பாங்கை உருவாக்கி இருக்கின்றது. மறுபக்கம் இலாபத்துக்கான முதலாளித்துவ உற்பத்தி முடக்கம், வேலையின்மையாக மாறி வருகின்றது. உலகில் பட்டினி மரணங்களை பலமடங்காக மாற்றுகின்ற முதலாளித்துவக் கொள்கைகளை அமுல்படுத்தி வருகின்றனர். மறுபுறம் சுரண்டும் தங்கள் முதலாளித்துவ இயல்பு வாழ்க்கைக்கு திரும்பும் பொருளாதார நடவடிக்கையை தொடங்குமாறு கோருகின்றனர். இதற்காக தங்கள் குறுக்கு வழிமுறைகளை – மீள முன்வைக்கின்றனர். இவை அனைத்தும் கொரோனாவுக்கு எதிராக செயற்படும் மருத்துவ துறையின் முடிவுகளுக்கும் - வழிகாட்டலுக்கும் முரணான - ஆளும் வர்க்கத்தின் வர்க்க தேவைகளை பூர்த்திசெய்யும் அரசியல்வாதிகளின் முடிவுகளாக இருக்கின்றது. Tweet < Prev Next > Last Updated on Friday, 15 May 2020 08:12 நுழை வாசல்கள் முன்பக்கம் இரயாகரன் - சமர் புதிய ஜனநாயக மக்கள் முன்னணி புதிய ஜனநாயகம் புதிய கலாச்சாரம் அரசியல்/சமூகம் நூல்கள் ஒலி/ஒளி அறிவுக் களஞ்சியம் சமூகவியலாளர்கள் ஆவணக் களஞ்சியம் நிழற்பட காட்சியகம் இணைப்புக்கள் மார்க்ஸிய நூல்கள் தொடர்புகளுக்கு படிப்பகம் புதிய ஜனநாயக மக்கள் முன்னணி நிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE Search இணையங்கள் புதிய ஜனநாயக மக்கள் முன்னணி தமிழில் கல்வி நூலகம் படிப்பகம் AllVideos Reloaded Tamil Circle Copyright © 2022 Tamil Circle. All Rights Reserved. Designed by JoomlArt.com. Joomla! is Free Software released under the GNU/GPL License.
“சரி கந்தா, உடம்பை பார்த்துக்க. டாக்டர் கொடுத்த மருந்தை எல்லாம் சரியா போட்டுக்க. நீ ஒண்ணு செய். ஒரு பத்து நாள் வீட்டுக்குப்போய் ரெஸ்ட்டிலே இரு. உடம்பு முழுசா குணமாயிடட்டும். அப்புறமா கடையை பார்த்துக்க வேலைக்கு வா….” வேணு சொல்லி முடிப்பதற்குள் கந்தன் மறுமுனையில் “சின்னையா….ஒடம்புக்கெல்லாம் ஒரு கேடுமில்ல.நா நல்லாத்தான் இருக்கேன். வயசாயிடுச்சில்ல. அதான் அப்பப்ப ஒடம்பு மக்கர் பண்ணுது. நீ கவல படாதே. நா கடை வாசலிலேயே இருந்து பாத்துக்குறேன். நீ உன் வேலையைக் கவனி. நா அப்ப வெச்சுடட்டுமா…?’ வேணுவால் அந்த பழைய மாடல் செல்போனை கந்தன் கண்ணை இடுக்கிப்பார்த்துக்கொண்டே தன் சட்டையால் ஒரு துடை துடைத்தெடுத்து சட்டை பாக்கெட்டில் அதி ஜாக்கிரதையாக வைப்பதைக் கற்பனையில் காண முடிந்தது. ஒரு பெருமூச்சுடன் கைப்பேசி தொடர்பைத் துண்டித்தான். காத்துக்கொண்டிருந்தார்போல் ரேணு பிலு பிலுவென்று பிடித்துக்கொண்டாள். “ஏ க்யா ஹை.ஐசே க்யோங் கர்தி ஹை.வேணு, நாம இனிமே இந்த மும்பாய் தான்னுன்னு ஏறக்குறைய முடிவு செஞ்சுட்டோம். அப்படியே செளத்துக்கு போகணும்ன்னு வந்தாலும் சென்னை தான் சரியா வரும். என் அப்பா அம்மா அங்கேதான் இருக்கா. திருச்சியிலே யார் இருக்கா? உங்க அப்பா அம்மா இருந்த காலத்தோடு அந்த இடத்தோட கனெக்க்ஷன் போயாச்சு. அங்கே எதுக்கு இந்த கடை? தெரியுமா, இப்போ ப்ராபர்டி விலையெல்லாம் எகிறி இருக்காம். நல்ல விலைக்குத் தள்ளி விட்டுட்டு வர பணத்துலே இங்கேயே இல்லை சென்னையிலோ ஒரு ப்ராபர்டி வாங்கி போடலாம். சமஜ் ஹை.” வேணுவிற்கு இனி பேச்சு போகப்போகும் விதம் பற்றி நன்கு தெரியும். அடுத்து அவன் திருச்சிக்கு அவ்வப்போது போகும் போது ஆகும் வீண் செலவில் தொடங்கி, கந்தனுக்கு மாதா மாதம் அனுப்பும் பணம், பூட்டி வைப்பதால் நாசமாகும் அந்தக்கடை, அதை சரி செய்ய அவ்வப்போது ஆகும் செலவு…..இப்படி தொடர்ச்சியாக அவள் நச்சரிப்பு தொடங்கிச்சென்று முடியாமல் கேள்விக்குறியில் தொக்கி நிற்கும். ஒரு விதத்தில் இந்த பிரச்சனை ஆரம்பமுமில்லாத ஒரு முடிவும் இல்லாத பிரச்சனைதான்.இதன் தொடக்கம்….. நீங்கள் திருச்சி சென்றிருக்கிறீர்களா? அங்கே சின்னக்கடை வீதி? அந்தச் சின்னக்கடை வீதியைக் கடந்து வந்தால் வரும் அந்தச்சின்ன ஆண்டாள் வீதி? அதே தான் பாயி கடை திருப்பத்தைத் தாண்டிய உடன் அந்தத்தெரு தொடங்கும். இப்போது பாபு ரோட் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வலது பக்கம் இருக்கும் யாரோ ஒரு முஸ்லிம் பெரியவரைப் புதைத்து வைத்த அந்த சின்ன கல்லரை.எப்பொழுதும் ஜிகினா வைத்துத் தைக்கப்பட்ட பச்சை நிறத்தில் வேலைப்பாட்டுடன் பள பளக்கும் பட்டுத்துணி போர்த்தப்பட்டு மூலையில் ஊதுபத்தியின் லேசான புகையுடன். எதிர்புறம் அபத்தமாக சில கட்டிடங்கள் தள்ளி ஒரு சின்ன அம்மன் கோவில். வேணு சில வருடங்கள் விட்டு அங்கே செல்லும் போதெல்லாம் அங்கே ஒரு பிள்ளையார் அல்லது அனுமார் அல்லது நவகிரகங்கள் என்று ஏதோ ஒன்று புதிதாக முளைத்தபடி இருக்கும். இவற்றைத்தாண்டி குறுக்கே ஓடும் பன்றிகளையும் தாண்டி, கட்டி வைத்திருக்கும் குதிரை வண்டியின் இழுப்புக்குத்திரைகள் மானாவாரியாக சிதறித்தெளித்திருக்கும் சாணத்தின் மணத்தையும் தாண்டி, அவை அசை போட்டுக்கொண்டிருக்கும் புல்லின் பச்சை வாசனையையும் தாண்டி சில கட்டிடங்கள் விட்டு மூடிக்கிடக்கும் அந்த சாயம் போன வெளிர் நீலக் கதவை நீங்கள் பார்த்திருக்கக்கூடும். இன்னும் தெளிவாக அதன் வாசலில் படுத்துக்கிடக்கும் ஒரு முதியவரையும் பார்த்திருக்கக்கூடும். சில நேரம் ராயாசமாக வாசல் படியில் படுத்தபடி ஒரு காலை கதவில் தொங்கிக்கொண்டிருக்கும் பூட்டில் உயரே தூக்கி வைத்து மறு காலை இரண்டு பத்து எண் வெள்ளை பட்டை செருப்புக்குப் பக்கம் தரைகளில் ஊன்றி வைத்தபடி, படுத்த நிலையில் மடித்தகால் முட்டிக்காலில் அழகாக மடித்து வைக்கப்பட்ட அன்றைய தினசரியைப் படித்தபடி இருந்திருப்பார். இல்லை கைகளை மடித்து தலைக்குத் தலையணையாக வைத்தபடி லேசாக வாயைத்திறந்தபடி உறங்கிக்கொண்டிருந்திருப்பார். அல்லது பக்கம் பிரித்து வைத்த பிரிஞ்சி குறுமா சாதத்தை ஒரு வாய் காக்கைக்கு, ஒரு வாய் பக்கம் வாலை ஆட்டியபடி நிற்கும் கறுப்பு மணிக்கு, ஒரு வாய் தனக்கு என்று சமமாகப் பிரித்து அளித்துக்கொண்டிருப்பார். சர்வ நிச்சயமாக அது கந்தந்தான்.இவரை நீங்கள் ஒரு முறைக்கு மேல் பல முறை சென்றாலும் இப்படி ஏதோ ஒரு கோணத்தில் கடை வாசலில் பார்த்திருக்கக்கூடும். அதே போல் அந்தப் பூட்டிய கதவுகள் என்றும் பூட்டிய நிலையிலேயே இருப்பதையும் பார்த்திருக்கக்கூடும். என்ன, சில வருடங்கள் சென்ற பிறகு அங்கே சென்றால் அந்த முதியவர் இன்னும் சற்றே வயதானவராக, அந்தக்கதவு இன்னும் சற்றே அதிகமாக தோலிழந்து, கறுப்பு மணி வயதாகி வலுவிழந்து, காக்கைகள் நன்றாகப் பெருத்து பெரியதாகி என்ற அற்ப மாற்றங்கள்.மட்டுமே இருக்கக்கூடும். அந்தக்கடை, அதன் வாசலில் கந்தன் என்று பல வருடங்களாகக் கதை தொடர்கிறது.பக்கத்தில் இருக்கும் மளிகைக்கடைக்கு வந்து போகிறவர்கள் பலர் முதலில் ஆச்சரியப்பட்டு பின் பழகிப்போய் கந்தனை ஒரு புன்னகையோடு கடந்து சென்று விடுவார்கள். சிலர் காரணம் தேடி விசாரித்துத்தான் சென்றார்கள். ஆனால் அவரவர் வேலை அவசரத்தில் கந்தன் என்றும் நிலைத்து அவர்கள் மனதில் கேள்விக்குறியாக நின்றதில்லை.மறந்து பின் கடந்து சென்று விடுவார்கள். ஆனால் இதோ இன்று திகைத்து நிற்கும் உங்களுக்கு மிகச்சுலபமாகக் கந்தனின் கதையும் அவன் அங்கே கடை வாசலில் எப்போதும் அமர்ந்தும் படுத்துக்கொண்டும் இருக்கும் காரணம் தெரியப்போகிறது.காரணம் தெரிந்த இல்லை அதன் காரணகர்த்தாவான வேணுவே அதை உங்களுக்குக் கூறப்போகிறான். வேணுவின் வயது அப்போது 24. காதலில் விழக்கூடிய மிக அபாயகரமான வயது. வேணுவும் விழுந்தான். “ரேணு…..நான்….நான்…..” ரேணுவின் முகத்தில் ஒரு அபார புன்னகை. “அரே….போலோ….க்யா நான்….நான்….மத்லப்….செண்டன்ஸ் பூரா கரோ…..” ரேணு முப்பாய் காரி. வேணுவோடு பழகத்தொடங்கியதிலிருந்து ஆசையாகத் தமிழில் பேசப் பழகிக்கொண்டிருக்கிறாள். ஆனாலும் இடை இடையே அவளுக்கு ஹிந்தி கலப்பு வந்துவிடுகிறது. “இல்லை ரேணு…..நான் என்ன சொல்ல வரேன்னா……” வேணு அவளை மிகவும் விரும்பினான். ஆனால் இன்னும் வேலை எதுவும் கிடைக்கவில்லை. சாப்பாட்டுக்கச்சேரியே அப்பா கணக்கில் தான் நடக்கிறது. இதில் எந்த தைரியத்தில் அவன் காதல் கல்யாணம் பற்றிப் பேசுவது? ஆனால் ரேணுவுக்கு அவள் வீட்டில் வரன் பார்க்கத்தொடங்கி விட்டார்கள் என்பது தெரியும். இனியும் காத்திருந்தால்…..விஷயம் கை மீறிப் போய்விடக்கூடும். அந்த பயத்தில் தன் நிலையைப் பற்றிய தயக்கம் பின் சென்றது. தைரியத்தைக் கூட்டி மனதை அவளுக்குச் சொல்ல முற்பட்டான். ஆனால்…… அவனால் முடியவில்லை. ரேணுவின் முகத்தில் அவன் தயக்கம் ஒரு சந்தோஷ புன்சிரிப்பைக் கொண்டுவந்தது. “என்ன வேணு…..ஐ லவ் யூ……அதானே” வேணு அவசர படபடப்பில் இல்லை என்று தலை ஆட்டினான். “என்ன இல்லையா….?” சற்றே திடுக்கிட்டு ஆச்சரியம் கூட்டினாள். வேணு அவசரமாக இதற்கும் இல்லை என்று தலையை ஆட்டினான். “இல்லை ரேணு…..காதல்தான்.ஆனால் அதற்கும்.மேல. எனக்கு உன்னைக் கல்யாணம் உடனே செஞ்சுக்கணும்.” ரேணு எல்லாவற்றையும் யோசித்து மிக நிதானமாக முடிவெடுப்பவள். “வேணு…..நா உன்னை விட மூன்று வயசு பெரியவள். உங்க வீட்டில் சம்மதிப்பாங்களா?” அவசரமாக மாட்டார்கள் என்று வேணு தலை அசைத்தான். “எங்க வீட்டிலேயும் சம்மதிக்க மாட்டாங்க.சாதி…..?” மேலே சொல்லாமல் நிறுத்தினாள். “ரேணு, என் வீட்டில் ஜாதி பிரச்சனை இருக்காது. ஆனால் வயசு அதிகம் தான் ப்ராப்ளம். அம்மா நெஞ்சை புடிச்சுகிட்டு உட்கார்ந்துடுவாங்க….” வேணு குரலில் இருந்த நடுக்கம் ரேணுவிற்கு எரிச்சலை உண்டுபண்ணியது. “பின்ன…எந்த டாஷ் ஷுக்கு கல்யாணம்.பத்தி பேசற?” வேணு அவசரமாக குறுக்கிட்டான். “ஆனா…..எனக்கு நீதான். உனக்கு சரின்னா…..நாம எதாவது வழி இருக்கான்னு யோசிக்கலாம்” அன்று தொடங்கி இருவரும் இதைப்பற்றி யோசிக்கத்தொடங்கினார்கள். பேசிக்கொள்ளவும் தொடங்கினார்கள்.கடைசியில் அவர்கள் எடுத்த முடிவு…. ஓடிப்போய் கல்யாணம் செய்து கொள்வது. அந்த ஓட்டமும் மும்பாய்க்கு சென்றுதான் நிற்க வேண்டும். சரிதான் அதற்குப்பணம். வேணு கைகளில் சுத்தமாகப் பணம் ஏதுவும் இல்லை. யாரிடமும் கடனும் கேட்க முடியாது. உடனே அப்பா காதுகளுக்கு விஷயம் போய்விடும். ரயில் டிக்கெட், மாலை ஒரு புதுப்புடவை அவனுக்கு ஒரு வேஷ்டி இவற்றை வாங்கத்தேவையான பணம் நிச்சயமாகத்தேவை.இதை அடுத்து வரப்போகும் தேவைகளைப்பற்றி அவனுக்கு யோசித்துப் பார்க்கும் தைரியம் இல்லை. இப்போது இந்த உடனடி பணத்தேவைக்கு…..? வேணுவின் மனதில் உடனடியாக வந்து நின்றது அப்பாவின் மளிகைக்கடை காசு பெட்டி. மத்தியானம் சாப்பிடுவதற்கு வீட்டுக்குப் போய் விடுவார். அப்போது கந்தனை கடையைப்பார்த்துக்கொள்ளச் சொல்வார். வீட்டில் சாப்பிட்டு ஒரு சின்ன தூக்கம். பின் எழுந்து சூடாக ஒரு லோட்டா காபித்தண்ணீர். எல்லாம் முடிந்து ஆர அமர வந்து சேருவதற்கு மாலை நான்கு மணி ஆகிவிடும். அப்போது காசு பெட்டியில் கை வைத்துவிடலாம். ஆனால் இந்த கந்தனை எப்படிச் சமாளிப்பது? மோர் லாயல் தேன் தி கிங் என்று ஆங்கிலத்தில் கூறுவார்கள். அதைப்போல் தான் இந்த கந்தனும். அநியாய நேர்மை. அப்பா சும்மா லேசில் யாரையும் நம்ப மாட்டார். அவரே கந்தனுக்கு நல்ல சர்டிபிகேட் கொடுத்து வைத்துக்கொண்டிருக்கிறார் என்றால் அவன் மேல் எந்த வித குற்றமும் சொல்ல முடியாது. வேணுவைக் குழந்தையாக இருக்கும் போதே தூக்கி வளர்த்தவன் இந்தக்கந்தன். பல நேரம் அவனுக்கு வீட்டில் அவன் மனைவி செய்து அனுப்பி இருக்கும் உணவைப் பல கவளம் அம்மாவிற்குத்தெரியாமல் வேணு தின்று தீர்த்திருக்கிறான். வேணுவின் மீது கந்தனுக்குத் தனி பாசம். வளர்ந்த பின் அவனை சின்னய்யா என்று யாரும் சொல்லாமல் தானாகவே மரியாதையுடன் அழைக்கப்பழகிக்கொண்டவன். அப்பாவிடம் காட்டும் விசுவாசத்திற்கு ஒரு மாற்று கூட குறையாமல் வேணுவிற்கும் காட்டுவான். வேணு கடைக்குள் சென்று கல்லாப்பெட்டியின் அருகில் அமர்ந்து கொண்டான். “என்ன சின்னய்யா இந்நேரத்தில் கடைப் பக்கம்? அப்பா வூட்டுக்கு இல்ல போயிருக்காரு” “தெரியும். கந்தா நீ அந்த தெருக் கோடி கடைக்குப்போய் நான் ஒரு சீட்டிலே பொருள் ஒண்ணை எழுதித்தாரேன். வாங்கியாந்துடு.” கந்தன் கைகளில் மரியாதையோடு சீட்டை வாங்கிக்கொண்டு ஓரமாகக் கழட்டி வைத்திருந்து காலணியில் வலுக்கட்டாயமாகக் கால்களை நுழைத்து பின் கிளம்பினான். அவன் தலை மறைந்ததும் வேணு அவசரமாக கல்லா பெட்டியைத்திறந்து கொஞ்சம் பணத்தை எடுத்து இடுப்பு பெல்டில் மறைத்து வைத்துக்கொண்டான். “இந்தாங்க சின்னய்யா, பொருள் சரியா இருக்குதான்னு பாருங்க” பதட்டத்தோடு அந்தப்பொட்டலத்தை கைகளில் வாங்கிக்கொண்டு வேணு அவசரமாகக் கிளம்பினான். “ஆங்….எல்லாம் சரியாத்தான் இருக்கும்” குழப்பத்தோடு பார்த்த கந்தனை பார்க்காமல் அவசரமாகக் கிளம்பினான். அதற்குப்பின் நடந்ததெல்லாம் அவனுக்குக் கடிதம் மூலம் அவன் நண்பன் எழுதியது தான். அவன் ரேணுவோடு ரயிலில் ஏறியதை அப்பாவிடம் அவர் நண்பர் ஒருவர் பார்த்துவிட்டுச் சொல்லிவிட, அப்பா அன்றிலிருந்து கடைக்குச்செல்வதைத் தவிர்க்கத்தொடங்கினார். கந்தனை நம்பி கடை பொறுப்பைக் கொடுத்தவர் ஒரு மாதத்திற்குப் பின் கணக்கு பார்த்தபோது பணம் கணிசமாகக் குறைந்திருப்பதைப் பார்த்தார்.அவருக்கு அவர் மகன் மேல் ஒரு துளி சந்தேகம் தோன்றவில்லை. தன் வளர்ப்பில் அத்தனை நம்பிக்கை. காதலில் விழுந்து அதன் காரணமாக வீட்டை விட்டு ஓடுவது இயற்கையின் விளையாடல்.ஆனால் திருட்டு….. அதை நிச்சயமாக அவர் மகன் செய்திருக்க மாட்டான். அப்படி என்றால்……. கந்தன் வேலையில் இருந்து அனுப்பப்பட்டான் “நன்றி கெட்ட பய…..இனி என் மொகத்துலே முழிக்காதே” கந்தன் தலையைக்குனிந்து கொண்டு செருப்பை கைகளில் அள்ளிக்கொண்டு ஒன்றும் பேசாமல் கிளம்பினான். வேணுவைப் பார்க்க மறுத்து அப்பா அவனையும் ஒதுக்கி வைத்தார்.ஆனால் அவனைப்பிரிந்த ஏக்கம் அவரை மெதுவாகத் திங்கத்தொடங்கியது. ஆறு மாதத்தில் அவர் இறந்தார். காரியம் செய்து வைக்க வேணு தேவைப்பட்டான். ஒரு விதத்தில் அது அவனுக்கான மன்னிப்பாகத்தான் தெரிந்தது. ஆனாலும் அம்மா அந்த வீட்டை விட்டு வர மறுத்தாள். “இல்லடா…..நா தனியா காலம் தள்ளிடுவேன். மும்பாயெல்லாம் எனக்கு சரிப்பட்டு வராது. கடைசி வரை அப்பா உன்னை மன்னிக்கலை. ம்ஹூம்.என்ன செய்ய, காரியம் பண்ண நீ தேவையா இருந்தது.” வேணுவிற்கு அம்மாவின் கோபம் இன்னும் அடங்கவில்லை என்பது புரிந்தது. அவன் திருச்சிக்குச் செல்வதை நிறுத்தினான்.ஆனால் “அம்மா நிலை சீரியஸ் உடனே கிளம்பவும்” நண்பன் அனுப்பிய மெசேஜ் அவனை மறுபடியும் பிறந்த மண்ணிற்கு அழைத்து வந்தது. அம்மா உடல் மெலிந்து நிறம் கறுத்து கட்டிலில் சருகாகப் படுத்துக்கிடந்தாள். “அம்மா, என்னம்மா பண்ணுது? தனியா இருக்க வேண்டாம்ன்னு சொன்னா கேட்டியா. என்னையும் பார்க்க வர முடியாம பேசிட்ட…..” அம்மா மிகச்சிரமப்பட்டுப் பேசினாள். “கந்தன்…..கந்தன்……அவனை பார்த்தியா……” வேணு கந்தனை என்றோ மறந்திருந்தான். அம்மா அவனை நினைவுபடுத்தியதும் அவன் பணத்தைத் திருடி எடுத்துச்சென்ற நாள் சட்டென்று நினைவிற்கு வந்தது. “அய்யோ….எவ்வளவு பெரிய தப்பை செஞ்சிட்டு அதை மறந்து சௌக்கியமா இருந்திருக்கேன்…..” அவனுக்கு அவமானமாக இருந்தது. “பாவம்டா கந்தன்.அவனுக்கு வேலையை விட்டு நிறுத்தினதிலே கோபமில்லை. ஆனால் திருடன்னு அப்பா அவனுக்குப் பட்டம் கட்டி துரத்தினார் பாரு…..அவனால் அதை தாங்க முடியலை. அப்படியே கூனி குறுகி அன்னைக்கு நின்னான் பாரு, அந்த மொகம் இன்னும் என் கனவிலே கூட வந்து போறது. “ வேணு பதில் சொல்லத்தெரியாமல் தலையை மட்டும் ஆட்டினான். “ஆனா ஒண்ணு, அவன் கடைசி வரை உண்மையைச் சொல்லலை. காட்டிக்கொடுக்கவும் இல்லை. அப்பாவால் தாங்கிண்டு இருந்திருக்க முடியாது.அவன் தெய்வம்டா…..” வேணு அதிர்ந்து நின்றான். ‘அம்மாவிற்கு உண்மை தெரியுமா?’ அம்மா மெதுவாகத் திரும்பிப் படுத்தாள். “முடிஞ்சா கந்தனுக்கு ஏதாவது செய்” இது தான் அவள் கடைசி ஆசை என்பது அடுத்த நாள் காலையில் வேணுவிற்குத்தெரிந்தது. “சின்னய்யா…..அப்பா போன இடத்துக்கு அம்மாவும்.போய் சேர்ந்துட்டாங்க. நீங்க எப்படிய்யா இருக்கீங்க…?” அம்மா சாவிற்கு வந்திருந்த கந்தன் முகம் பழைய நாட்களை வேணுவிற்கு நினைவு படுத்தியது. “நீ எப்படி இருக்கே கந்தா?” “இருக்கேன் சின்னய்யா” வேணு யோசித்தான். இவனுக்கு என்ன செய்வது? எதைச் செய்தால் செய்த தவற்றுக்குப் பாவமன்னிப்பாக இருக்கும்? சட்டென்று வேணுவிற்கு ஒரு யோசனை வந்தது.கந்தனுக்குப் பணம் கொடுத்தால் அது சரியல்ல.வெறும் பணம் மட்டும் அவனுக்கு ஆறுதல் அளிக்காது. அவன் மனதை மிகவும் காயப்படுத்தி இருக்கக்கூடிய அந்த ஒரு சொல் “நன்றி கெட்ட பய….” அவசரமாக வேணு தன் எண்ணத்தைக் கந்தனிடம் கூறினான். “கந்தா, அப்பா போனதுக்குப் பின்னால் மூடப்பட்ட கடை. அதைத் திறக்க எனக்கு ஒரு எண்ணம். ஆனா இப்போ மும்பாயிலே இருக்கேன். நா இங்கே வர வரைக்கும் அதைப் பொறுப்பா பாத்துக்க ஆள் தேவை. உன்னைவிட்டால் இதுக்கு யார் கிடைப்பாங்க சொல்லு.நீ பாத்துக்கிறியா? ” ஒரு பளிச் மின்னல் கந்தனின் பார்வையில்.தோன்றி நிலைத்தது. “நானா….கடையையா….சின்னய்யா….அது வந்து….” “அட, பேசாதே கந்தா. உன்னை விட்டா நல்ல ஆள் வேற யார் இருக்க முடியும். பொறுப்பா, நேர்மையா…..கொஞ்ச நாள் பூட்டியே இருக்கட்டும். நீ அதை ஜாக்கிரதையா பார்த்துக்கோ. இந்த சாவி. உள்ளேயே இருந்துக்க. இனிமே நா திரும்பி வர வரை அந்தக் கடை உன் பொறுப்பு” “சின்னய்யா….கடைக்கு பொருள்?” “அது கொஞ்சம் கொஞ்சமா வாங்கிப்போடலாம். இது முக்கியமான தெரு. கடை சொந்தக்காரங்க பக்கத்திலே இல்லேன்னு தெரிஞ்சா போதும், அடாவடி செய்ய யாராச்சும் கிளம்பிடுவாங்க. அதுக்காகத்தான் உன்னைக் காவலுக்கு கேக்குறேன்”
அதாவது தன்னுடைய நேரம் முழுவதும் அலுவலக வேலையிலேயே செலவாகிறது, வேலையை தவிர வாழ்க்கையில் வேறு ஒன்னும் பண்ண முடியலையேன்னு ஒரு விரக்தி வரலாம். அப்படி வரும்போது ஒரு புத்துணர்ச்சிக்காக பின்வரும் செயல்கள் போன்று ஏதோ ஒன்றை அவர்கள் செய்ய நினைப்பார்கள். 1. புத்தகம் வாசிப்பது , புத்தகம் எழுதுவது, ஓவியம் வரைவது, கவிதை எழுதுவது 2. முதியோர் இல்லத்துக்கு சென்று தொண்டு செய்வது 3. தன்னுடைய அனுபவத்தை குழந்தைகளிடம் பகிர்ந்து கொள்வது 4. புதிதாக ஒரு சமையலை செய்ய நினைப்பது 5. புதிதாக ஒரு இடத்திற்கு சென்று இயற்கையை ரசிப்பது 6. நண்பர்களிடம் பேசி மகிழ்வது 7. நல்ல நினைவுகளை ஆசை போடுவது இது போன்று ஏதோ ஒன்றினை செய்து புத்துணர்ச்சி பெறலாம். இந்த மாதிரி குழந்தைகளாகிய நீங்களும் சலித்து போகும் சூழ்நிலை வந்திருக்கிறதா? இல்லையென்றால் சபாஷ் குழந்தைகளே, உங்கள் நண்பர்களோ குடும்பத்தில் உள்ளவர்களோ யாராவது சலிப்போடு இருந்தால் அவர்களை உற்சாகப்படுத்த என்ன செய்யலாம் என்று யோசிப்போமா செல்லங்களே! முதலில் ஏன் சலிப்பு வருகிறது என்று புரிந்து கொள்ளலாம். தான் செய்யும் செயலின் முக்கியத்துவம் புரியலனா சலிப்பு வரலாம். எடுத்துக் காட்டாக, நாம ஏன் படிக்கிறோம், ஏன் ஆன்லைன் வகுப்பு என்று புரியலனா சலிப்பாக இருக்கலாம். அதுவே இந்த வகுப்பு மூலமாக நான் புதிதாக ஒன்றை கற்று கொள்கிறேன், இந்த அறிவு பின்னாளில் நான் ஒரு தொழிலபதிராக உதவலாம் என்று நினைக்க ஆரம்பித்தால் ஆர்வமாக அதை தெரிந்துகொள்ள தூண்டலாம். அந்த ஆர்வமும், ஏன் படிக்கிறோம் என்ற தெளிவும் சலிப்பு ஏற்படுவதைத் தடுத்து விடலாம். மூன்று வேளையும் சமைத்துக் கொடுக்கும் நம் அம்மாவுக்கும் சலிப்பு ஏற்படலாம், ஆனால் அப்பொழுதெல்லம் தன்னுடைய சமையல் இந்தக் குடும்பத்தின் ஆரோக்கியம் என்று நினைப்பதால்தான் சலிக்காமல் நம் பசியை போக்க நம் அம்மாவால் முடிகிறது. அதில் நீங்களும் உங்களால் ஆன உதவியை செய்தால் உங்களுக்கு சமையல் தெரிந்து கொள்ளும் வாய்ப்பும் கிடைக்கும், அம்மாவை மகிழ்வித்த மன நிறைவும் கிடைக்கும் குழந்தைகளே! உங்களுக்கு சூடு பட்டு விடக் கூடாது அல்லது கத்தி படக் கூடாது என்று அம்மா உங்களை சமையலறையில் அனுமதிக்கவில்லையென்றால், உங்கள் குடும்ப சூழ்நிலைக்கும் உங்கள் வயதுக்கும் ஏற்றவாறு என்ன செய்து உங்களையும் உங்கள் குடுத்திலுள்ளவர்களையும் உற்சாகமாக வைத்துக்கொள்ளலாம் என்று யோசிங்க செல்லங்களே, அனைவரையும் உற்சாகப்படுத்தி அசத்துங்க செல்லங்களே:) நம்முடைய மூளையை உற்சாகப்படுத்தும் இன்னும் ஒரு குறிப்பும் என் நினைவிற்கு வருகிறது. அது என்னவென்றால், நாம் ஒரு விஷயத்தை செய்து முடித்து விட்டோம் என்று தெரியும் பொழுது நம் மூளை உற்சாகமடைகிறது. அதனால் நாம் நம்முடைய முயற்சியில் ஒவ்வொரு படியையும் தாண்டி விட்டோம் என பின்வரும் அட்டவணையில் உள்ளது போல் பச்சை வண்ணம் அடித்துக் கொள்ளலாம். இந்த மாதத்திற்குள் பின்வரும் பழக்கங்களை நான் தினமும் செய்ய வேண்டும் என ஒரு பட்டியல் போட்டு கொள்ளுங்கள். ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி சனி இயற்கையுடன் சிறிது நேரம்(நிலா பார்த்தல், செடிக்கு தண்ணீர் விடுதல்) உடற்பயிற்சி சுயமாக குளித்தல் சுயமாக உணவு உண்ணுதல் சுயமாக வீட்டு பாடம் செய்தல் பொழுதாக்கம்(ஓவியம் , வாசித்தல், எழுதுதல்..) தேர்வுக்கு தயாராதல் இது போன்று தொடர்ந்து செய்வதால் நம் மூளையும் உற்சாகம் பெறும், நமக்கும் நாம் என்ன செய்ய வேண்டும் என்ற தெளிவும் கிடைக்கும் குழந்தைகளே! இந்தத் தெளிவும் திட்டமிடுதலும் நம்மை சலிப்படைவதிலிருந்து காப்பாற்றும்:) இது போன்று நீங்களும் உற்சாகமடைந்து உங்கள் சுற்றத்தையும் உற்சாகப் படுத்துங்கள் பூஞ்சிட்டுக்களே! What’s your Reaction? +1 0 +1 0 +1 0 +1 0 +1 0 +1 0 Facebook Twitter Email மேலும் படிக்க: தூக்கம் by இசை சுரேஷ் October 15, 2021 அப்போ நேரத்துக்கு சாப்பிடுறதுக்கும், நேரத்துக்குத் தூங்குறதுக்கும் நம்முடைய குணநலன்களுக்கும், நடவடிக்கைகளுக்கும் சம்மந்தம் இருக்கா? பளிச் பளிச் பற்கள் by Dr. S. அகிலாண்ட பாரதி July 15, 2020 ஹாய் பூஞ்சிட்டுக்களே! நீங்கல்லாம் வீட்ல கண்ணாடியால் ஆன பாத்திரங்கள் வச்சிருக்கீங்களா? கண்ணாடியால் செய்யப்பட்ட… விடுமுறை கொண்டாட்டம்! by இசை சுரேஷ் March 15, 2022 தேர்வு முடிந்து கோடை விடுமுறை வரப்போகிறது, விடுமுறையில் என்ன செய்யலாம் என்று இங்கே… கண் by Dr. S. அகிலாண்ட பாரதி August 15, 2020 குட்டி பீமா தன் தங்கை மித்ராவுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது ஒரு சின்னச் சண்டை… அச்சோ அடிபட்டுடுச்சே by Dr. S. அகிலாண்ட பாரதி September 15, 2020 குட்டி பீமாவும் அவனது தங்கை மித்ராவும் வீட்டுப் பாடங்களை முடித்துவிட்டு வெளியே விளையாடிக்… நிச்சயம் வெல்வோம் by அனிதா செல்வம் July 15, 2020 வணக்கம் செல்லங்களே.. உங்களிடம் முதல் முறையாகப் பேசும்போதே, மிகவும் முக்கியமான செய்தி ஒன்று…
துலா உத்ஸவம் தொடங்கும் முன்பாக அடிப்படை வசதிகளை மேம்படுத்த மயிலாடுதுறையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நகா்மன்ற கூட்டத்தில் உறுப்பினா்கள் வலியுறுத்தினா். மயிலாடுதுறை நகராட்சியின் சாதாரண கூட்டம் நகராட்சி அலுவலகக் கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நகா்மன்றத் தலைவா் என்.செல்வராஜ் தலைமை வகித்தாா். ஆணையா் செல்வபாலாஜி, துணைத்தலைவா் எஸ்.சிவக்குமாா், பொறியாளா் சனல்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில் நடைபெற்ற விவாதங்கள்: ஜெயந்தி: தீப்பாய்ந்தாள் அம்மன் கோயில் சுடுகாடு மிகவும் மோசமாக உள்ளதை விரைந்து சீரமைக்க வேண்டும். கணேசன்: குப்பைகளை ஆங்காங்கே கொட்டி தீ வைக்கின்றனா். புதைசாக்கடை பிரச்னையை சீா்செய்வதற்காக உள்ளாட்சிப் பிரதிநிதிகள் பொறுப்பேற்ற 6 மாதங்களில் ரூ.2 கோடி செலவு செய்யப்பட்டும் பிரச்னைக்கு நிரந்தரத் தீா்வு காணப்படவில்லை. நகராட்சி தூய்மை பணியாளா்கள் பற்றாக்குறை உள்ளதை சரிசெய்ய வேண்டும். ADVERTISEMENT கல்யாணி: கொள்ளிடம் குடிநீா் தினமும் அரைமணிநேரம்கூட வழங்கப்படவில்லை. ரமேஷ்: துலா உத்ஸவம் தொடங்க உள்ளதால் வள்ளலாா் கோயில் நான்கு வீதிகளில் கழிவுநீா் வழிந்தோடுவதைச் சரி செய்வதோடு சாலையை சீரமைக்க வேண்டும். துலாக்கட்டத்தில் காவிரி நடைபாலத்தின் கைப்பிடிச்சுவா் சேதமடைந்துள்ளதைச் சீரமைக்க வேண்டும். ரிஷிகுமாா்: திருவிழந்தூா் பெருமாள்கோயில் வீதிகளில் பழுதடைந்துள்ள ஹைமாஸ் விளக்குகளை துலா உத்ஸவம் தொடங்கும் முன்னா் போா்க்கால அடிப்படையில் எல்இடி மின் விளக்குகளாக மாற்றித்தர வேண்டும். ராஜலட்சுமி: கணபதிநகா் 3வது கிராஸ் சாலை சீரமைத்துகொடுக்க வேண்டும். தூய்மைப் பணியாளா்களுக்கான உபகரணங்கள் வழங்க வேண்டும். நகராட்சி பகுதியில் திரியும் நாய்களுக்கு கருத்தடை செய்யும்போதே, ரேபிஸ் தடுப்பூசியும் செலுத்த வேண்டும். திருமஞ்சனவீதியில் உள்ள நடைபாலத்தை சீரமைக்க வேண்டுமட். சம்பத்: கிட்டப்பா பாலம் அருகே உள்ள சுடுகாட்டிற்கு மின்விளக்கு வசதி செய்து தரவேண்டும். மின்கம்பம் சாய்ந்துள்ளதை இதுநாள்வரை சீரமைக்கவில்லை. ஹாஜியாா் நகரில் குடிநீரில் கழிவுநீா் கலந்து வருவதை உடனடியாக சரிசெய்ய வேண்டும். சா்வோதயன்: வணிக நிறுவனங்களில் குப்பைகள் எடுப்பதுபோல் குடியிருப்பு பகுதிகளில் குப்பைகள் எடுக்கப்படாமல் தேங்கிக்கிடக்கிறது. மேட்டுத்தெருவில் மழைநீா் வடிகால் சீரமைத்துகொடுக்க வேண்டும். நகரில் அதிகரித்துள்ள பன்றிகள் தொல்லையைக் கட்டுப்படுத்த வேண்டும். சதீஸ்குமாா்: மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் நகராட்சி எல்லைப்பகுதியில் நடக்கும் நிகழ்வுகளை நகா்மன்றத் தலைவா் மற்றும் உறுப்பினா்களுக்கு முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும். உஷாராணி: தரங்கம்பாடி பழைய ரயில்வே லைன் பகுதியிலும் நீா்நிலைகளிலும் இறைச்சிக் கழிவுகள் கொட்டப்பட்டு வருவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதாளசாக்கடை கழிவுநீரால் சுகாதாரசீா்கேடு ஏற்பட்டுவருகிறது அதற்கு நிரந்தரத் தீா்வுகான வேண்டும். ரஜினி: பாதாளசாக்கடை கழிவுநீா், மயிலாடுதுறை நகரில் பெரும் பிரச்னையாக இருந்து வருகிறது. அதற்கு நிரந்தரத் தீா்வுகாண நடவடிக்கை எடுக்க வேண்டும். ரயில்வே சந்திப்பில் நடைமேடைக்குச் செல்லும் வழியில் குப்பைகளை அகற்ற வேண்டும். அதிகரித்து வரும் நாய்கள் தொல்லையைக் கட்டுப்படுத்த வேண்டும். சித்தா்காட்டில் உள்ள நகராட்சிக்குச் சொந்தமான 25 ஏக்கா் நிலப்பரப்பை வருமானம் தரும் வகையில் பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனந்தி: பெசன்ட் நகா் பூங்காவில் சிறுவா் விளையாட்டு உபகரணங்கள் சேதமடைந்துள்ளதை சீரமைத்துக் கொடுக்க வேண்டும். அக்கணாங்குளம் சீரமைக்கும் பணி எப்போது தொடங்கும்? இவ்வாறு விவாதம் நடைபெற்றது. Subscribe to Notifications ADVERTISEMENT MORE FROM THE SECTION குத்தாலத்தில் மின்சாரம் பாய்ந்து இருவா் பலி டாஸ்மாக் கடை திறக்க எதிா்ப்புத் தெரிவித்து பாமக மனு உறிகட்டி சித்தா் குருபூஜை பூம்புகார் அருகே கடல் சீற்றம்: மடத்துக்குப்பத்தில் புகுந்தது வெள்ளநீர் சீர்காழி அருகே பரபரப்பு... புயல், கடல் சீற்றத்தத்தை ஆய்வு செய்ய சென்ற விஏஓ படுகாயம்! கடல் நீர் புகுந்த கிராமங்கள்! ’மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்தில் உதவி வரவேற்பாளா் பணிக்கு விண்ணப்பிக்கலாம்’ மயிலாடுதுறையில் இன்று எரிவாயு நுகா்வோா் குறைதீா் கூட்டம் TRENDING TODAY நியாயவிலைக் கடை அரவிந்த் கேஜரிவால் ஆம் ஆத்மி ஒரே நாடு ஒரே தோ்தல் மனச்சிக்கல் TRENDING WEEK உலக மாற்றுத்திறனாளிகள் நாள் உலக மாற்றுத்திறனாளிகள் நாள் உலக மாற்றுத்திறனாளிகள் நாள் உலக மாற்றுத்திறனாளிகள் நாள் உலக மாற்றுத்திறனாளிகள் நாள் LATEST NEWS மாண்டஸ் புயல் Excitement பூஜா ஹெக்டே காதல் சர்வதேச பத்திரிகை elon musk LATEST SECTIONS தமிழ்நாடு இந்தியா தற்போதைய செய்திகள் சினிமா வேலைவாய்ப்பு ADVERTISEMENT Copyright - dinamani.com 2022 The New Indian Express | Samakalika Malayalam | Kannada Prabha | Edexlive | Indulgexpress | Cinemaexpress | Event Xpress
ESSAYS DIALOGUE EXPANSION SPEECH LETTERS GRAMMAR WRITING SKILLS INFORMATION-TRANSFER LEAFLET REPORT APPEAL INTERVIEW VIEW AND COUNTERVIEW DATA INPUT SHEET OTHER BOARDS LATEST NEWS PRIVACY DISCLAIMER TAMIL-NADU: 8TH 9TH 10TH 11TH 12TH சமையல் மற்றும் சினிமா அ முதல் ஃ வரை உங்கள் அன்றாட உணவில் ஒமேகா -3 சத்து இருப்பதால் ஏற்படும் நன்மைகள் என்ன தெரியுமா? உங்கள் அன்றாட உணவில் ஒமேகா -3 சத்து இருப்பதால் ஏற்படும் நன்மைகள் என்ன தெரியுமா? மற்ற ஊட்டச்சத்துகளை போல கொழுப்புச் சத்தும் உடல் நலத்திற்கு இன்றியமையாததாக இருக்கிறது. கொழுப்பு சத்துக்களில் கெட்ட கொழுப்பு, உடலுக்கு நன்மை செய்யும் கொழுப்பு என இரு வகைகள் இருக்கின்றன. அந்த கொழுப்பு சத்து அமிலத்தன்மை நிறைந்த ஒரு சத்து தான் ஒமேகா – 3 கொழுப்பு அமிலம் சத்தாகும். இந்த ஒமேகா-3 கொழுப்பு அமிலம் செரிவூட்டப்படாத கொழுப்பு வகையை சார்ந்ததாகும். மீன், கோழிக்கறி, முட்டை, பருப்புகளில் இந்த ஒமேகா 3 கொழுப்பு அமிலச்சத்து அதிகம் நிறைந்துள்ளது. மனிதர்களின் உடலுக்கு இந்த ஒமேகா 3 கொழுப்பு அமிலச்சத்து உண்டாகும் நன்மைகள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம். ஒமேகா 3 பயன்கள் இதயம் சீராக இயங்க நமது இதயம் நன்றாக இயங்கவும், நீண்ட காலம் ஆரோக்கியமாக இருக்கவும் அன்றாடம் அதிக கொழுப்புச் சத்து இல்லாத உணவுகளை சாப்பிட வேண்டும். ஒமேகா -3 கொழுப்பு அமில சத்து உணவுகளில் இருக்கின்ற கெட்ட கொழுப்புகள் ரத்தத்தில் படிவதை தடுக்கிறது. இதனால் இதயத்திற்கு செல்லும் ரத்த குழாய்கள் மற்றும் இதயத் தசைகளின் இயக்கம் சீராக்கப்பட்டு, இருதய பாதிப்பு ஏற்படாமல் காக்கிறது. மேலும் இதயத்திலிருந்து மூளைக்கு செல்லும் ரத்த ஓட்டத்தையும் சீராக்கி பக்கவாதம் ஏற்படாமல் காக்கிறது. கர்ப்பிணி பெண்கள் கருவுற்றிருக்கும் பெண்கள் குழந்தை பிறக்கின்ற காலம் வரை சத்து நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும். கர்ப்பிணி பெண்கள் ஒமேகா -3 கொழுப்பு அமில சத்து உணவில் சேர்த்து உண்பதால் கருவில் வளரும் குழந்தையின் ஆரோக்கியத்திற்கு பேருதவி புரிகிறது. கர்ப்பிணி பெண்களுக்கு குழந்தை பிறப்பின் போது ஏற்படும் எத்தகைய உடல் நல குறைபாடுகளையும் போக்குவதோடு பிறக்கின்ற குழந்தையின் மூளை செயல்திறன் சிறப்பாக இருக்க உதவுகிறது. ஆஸ்துமா நோய் ஆஸ்துமா என்பது மனிதர்களின் நுரையீரலை பாதித்து, பல சமயங்களில் மூச்சுக் காற்றை சுவாசிப்பதில் சிரமத்தையும் ஏற்படுத்த கூடிய ஒரு நோயாகும். பரம்பரை காரணமாகவும், ஒவ்வாமை போன்றவற்றாலும் இந்த நோய் ஏற்படுகின்றது. குறிப்பாக குழந்தைகளுக்கு ஏற்படும் ஆஸ்துமா நோய் அவர்களை மிகுந்த வேதனைக்குள்ளாக்குகிறது. இதற்கு ஒமேகா -3 கொழுப்பு அமில சத்து அதிகம் நிறைந்த உணவுகளை சாப்பிட்டு வரும் ஆஸ்துமா நோயாளி குழந்தைகளுக்கு மூச்சுவிடுவதில் ஏற்படும் சிரமம் குறையும். ஞாபக மறதி, மனநலம் உடல்நலம் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததோ அதற்கு நிகராக மனநலமும் சிறப்பாக காக்கப்படவேண்டும். அமெரிக்காவின் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட மருத்துவ ஆய்வில் ஒமேகா -3 கொழுப்பு அமில சத்து நிறைந்த உணவுகளை சாப்பிட்ட நபர்களுக்கு அதிலிருக்கும் சத்துக்கள் அவர்களின் மூளை மற்றும் நரம்பு மண்டலங்களை வலுபடுத்தியதோடு, வயது மூப்பு காரணமாக உண்டாகும் அல்சைமர் எனப்படும் ஞாபக மறதி நோய் மற்றும் இன்ன பிற மனநல குறைபாடுகள் ஏற்படாமல் தடுக்கப்படுவதாக தெரியவந்திருக்கிறது. தூக்கமின்மை பிரச்சனை தூக்கமின்மை ஒரு மனிதனை மிகவும் அவஸ்தைக்குள்ளாகும் பிரச்சனையாகும். நரம்புகள் சம்பந்தமான குறைபாடுகள் இருப்பவர்களுக்கு தூக்கமின்மை பிரச்சனை அதிகம் ஏற்படும். ஒமேகா -3 கொழுப்பு அமில சத்து நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிடுபவர்களுக்கு, அதில் இருக்கின்ற மெலடோனின் எனப்படும் ஹார்மோன் உடலில் கலந்து மிக விரைவிலேயே நீண்ட நேரம் நீடிக்கும் ஆழ்ந்த தூக்கத்தை ஏற்படுத்துகிறது. இது நரம்புகளுக்கு வலிமையை தரும் ஆற்றல் பெற்றிருக்கிறது. தூக்கமின்மை பிரச்சனையால் அவதிப்படும் குழந்தைகளுக்கும் இந்த ஒமேகா – 3 கொழுப்பு சத்து நல்ல தீர்வாக இருக்கிறது. மாதவிடாய் பிரச்சனைகள் மாதவிடாய் என்பது பெண்களாய் பிறந்த அனைவருமே தங்களின் வாழ்வில் அனுபவிக்க வேண்டிய ஒரு இயற்கை நிகழ்வாக இருக்கிறது. இக்காலத்தில் பெண்கள் பலருக்கு ரத்த போக்கு அதிகம் ஏற்பட்டு பெண்களை உடலளவிலும் மனதளவிலும் களைப்படைத்து உடல் சத்து இழப்பு மற்றும் சோர்வு ஏற்படுகிறது. பெரும்பாலான பெண்கள் கடுமையான வலியை இக்காலத்தில் அனுபவிக்கின்றனர். ஒமேகா -3 கொழுப்பு அமில சத்து அதிகம் நிறைந்த உணவுகளை சாப்பிட்டு வரும் பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் கடுமையான வலி உண்டாவதை தடுப்பதோடு இதர மாதவிடாய் பிரச்சனைகள் அனைத்தையும் தீர்க்கிறது. புற்று நோய் தற்போது உலகம் முழுவதும் மனிதர்களுக்கு ஏற்படும் புற்றுநோய்களில் வயிறு மற்றும் இரைப்பை புற்று நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. ஒமேகா -3 கொழுப்பு அமில சத்து நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிடுவதால், பெருங்குடல் மற்றும் ஜீரண உறுப்புக்களில் தேங்கும் கழிவுகளையும், நச்சுக்களையும் வெளியேற்றி புற்று செல்கள் வளராமல் தடுக்கிறது. மேலும் ஆண்களுக்கு ஏற்படக்கூடிய பிரோஸ்ட்ரேட் புற்று, பெண்களுக்கு ஏற்படும் மார்பக புற்று நோய்களையும் தடுக்கும் ஆற்றல் ஒமேகா -3 கொழுப்பு அமில சத்து அதிகம் கொண்டுள்ளதாக மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கல்லீரல் கொழுப்பு கரைய நமது உடலுக்குள்ளாக இருக்கும் உறுப்புகளில் மிகவும் முக்கியமானது கல்லீரல். கல்லீரல் நலமாக இருந்தால் நாம் பெரும்பாலான நோய்களின் பாதிப்புகள் ஏற்படாமல் காத்துக் கொள்ள முடியும். அதிகம் கொழுப்பு நிறைந்த உணவுகளை சாப்பிடுபவர்களுக்கு நான் ஆல்கஹாலிக் பேட்டி லிவர் டிசீஸ் உண்டாகிறது. இதனால் கல்லீரல் பாதிப்பு உண்டாகி சமயங்களில் உயிருக்கே ஆபத்தை விளைவிக்கக் கூடிய ஒரு நோயாக மாறுகிறது. ஒமேகா 3 கொழுப்பு அமிலச் சத்து நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிடுபவர்களின் கல்லீரலில் படிந்திருக்கும் கெட்ட கொழுப்புகள் அறவே நீக்குகிறது. கல்லீரலில் வீக்கத்தை குறைத்து அதன் வழக்கமான செயல்பாட்டை ஒமேகா 3 கொழுப்பு அமிலச்சத்து ஊக்குவிக்கிறது. ஆட்டோ இம்யூன் டிசீஸ் ஆட்டோ இம்யூன் டிசீஸ் எனப்படும் குறைபாடு நமது உடலில் இருக்கும் நோய் எதிர்ப்பு மண்டலம் ஆரோக்கியமான செல்களையும் புறத்திலிருந்து உள்ளுக்குள் நுழைந்து நோய் பாதிப்பு செல்களாக நினைத்து அவற்றை அழிக்கும் செயலில் இறங்குவதை குறிக்கிறது. இதற்கு சிறந்த உதாரணம் டைப் 1 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் கணையத்தில் உற்பத்தியாகும் இன்சுலின் செல்களை நோய் எதிர்ப்பு மண்டல செல்கள் அழிப்பதாகும். ஒமேகா 3 கொழுப்பு அமிலச்சத்து நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிடுபவர்களுக்கு இத்தகைய ஆட்டோ இம்யூன் டிசீஸ்எனப்படும் குறைபாடுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் வெகுவாக குறைவதாக மருத்துவ ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஏ. டி. எச். டி குறைபாடு நீங்க ஏ. டி. எச். டி (Attention deficit hyperactivity disorder) குறைபாடு குழந்தைகளுக்கு ஏற்படும் ஒரு வகை மற்றும் மனநலம் சார்ந்த குறைபாடாக இருக்கிறது. இந்த குறைபாட்டால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் எதிலும் கவனம் செலுத்த இயலாமை, அதீத சுறுசுறுப்பு மற்றும் அதீத உணர்ச்சிப்பெருக்கு கொண்டவர்களாக இருக்கின்றனர். இத்தகைய பாதிப்பு ஏற்பட்ட குழந்தைகளின் ரத்த மாதிரிகளை சோதனை செய்த போது அதில் ஒமேகா 3 கொழுப்பு அமிலச் சத்து மிகவும் குறைந்தளவில் இருப்பதை கண்டறிந்தனர். எனவே இத்தகைய குழந்தைகளுக்கு ஒமேகா 3 கொழுப்பு அமிலச்சத்து நிறைந்த உணவுகளை கொடுத்து வந்ததில் அவர்களிடம் மன அமைதி, கவனம் செலுத்தும் திறன், தேவைக்கு அதிகமான செயல்பாடு குறைவு ஆகியவை உண்டானதை மருத்துவர்கள் தங்களின் ஆய்வுகளில் உறுதி செய்துள்ளனர்.
தேனி பக்க கிராமத்தில் இருந்து சென்னை வரும் சாப்ட்வேர் இன்ஜினியரும் லண்டனில் இருந்து வரும் பெண்ணும் சந்தர்ப்ப வசத்தால் ஒரே வீட்டில் தங்க நேர்கிறது, ஓர் அப்பாடக்கர் புரோக்கரால். எதிரும் புதிருமான இருவரும் தங்களது டிஷ்யூம்களை கடந்து ஒன்று சேர்ந்தால், அது ‘வணக்கம் சென்னை’. அறிமுக இயக்குனர் என்பதைத் தாண்டி, தன்னை கவனிக்க வைத்திருக்கும் கிருத்திகா உதயநிதிக்கு, ஒரு வெல்கம் கிஃப்ட். இரவில் வாடகை காரில் வரும் பிரியாவை கரெக்ட் பண்ண, டிரைவர் பாட்டுப் போடுவதும் வண்டி மற்றும் டிரைவர் பற்றிய விவரங்களை பிரியா போனில் சொன்னதும் பாடல் மாறுவதுமான அழகியல் காட்சிகள் மற்றும் சந்தானத்தின் காமெடியால் களைகட்டுகிறது படம். சாப்ட்வேர் இன்ஜினியர், அம்மா செல்லம், பிரியாவின் டார்ச்சர் பார்ட்டி என சிவா, கலந்து செய்த கலவை. குளித்துவிட்டு வரும்போது, பிரியாவை பேய் என நினைத்து நடுங்குவது, கணவன் மனைவி என நினைக்கும் ஊர்வசி முன்பு, பிரியாணி சாப்பிட்டுக்கொண்டே உளறுவது என காமெடியாகவும் வேறொருவருக்கு அவள் நிச்சயிக்கப்பட்ட விஷயம் தெரிந்ததும் சோகமாகவும் நடிக்க முயற்சித்து இருக்கிறார். டைமிங் காமெடியில் தேறும் சிவா, லவ் மேட்டரில் ஃபீலாகாமலேயே இருப்பது உறுத்தல். ஹோம்வொர்க் வேணுங்க ஜி. லண்டனில் வளர்ந்த தமிழ்ப்பெண் கேரக்டரில் அழகாக ஒட்டிக்கொள்கிறார் பிரியா ஆனந்த். அவரது உடல்மொழியும் பேச்சும் ஐஸ்கிரீம் இனிப்பு. கோபம் வரும்போது பல்லைக் கடித்தபடி கத்துவது, வீட்டு அட்வான்சுக்காக, நிச்சயதார்த்த மோதிரத்தை கொடுப்பது, உள்ளுக்குள் காதல் வந்ததும் வெளிப்படுத்த முடியாமல் தவிப்பது என அத்தனை உணர்ச்சியையும் கண்களிலேயே காட்டி விடுகிறார், பிரியா. டுபாக்கூர், வீட்டு புரோக்கராக சந்தானம். ‘சுவத்துல கிறுக்கக் கூடாது. ஃபேன்ல தூக்குப்போட்டுக்கக் கூடாது, கெரசின் ஊத்தி கொளுத்திக்கக் கூடாது’ என வாடகை வீட்டுக்கு அவர் போடும் கண்டிஷனே அலப்பறை. ஒரே வீட்டை இரண்டு பேருக்கு கொடுத்து மாட்டிவிட்டு எஸ்கேப் ஆவது, பிறகு சிவாவின் காதலுக்கு ரூட் போட்டுக்கொடுப்பது, பிரியாவுக்கு நிச்சயிக்கப்பட்ட ராகுலிடம் காதல் கதையை சொல்லுவது என காமெடியனாக மட்டுமல்லாமல் கதையோடும் ஒன்றியிருக்கிறார் சந்தானம். ‘உன் பொண்டாட்டி முன்னால அர்னால்டு நின்னாலே அனிருத் மாதிரிதான் தெரியும்’ என்பது போன்ற அவரது கலாய்ப்பு, இதிலும் சிறப்பு. ராகுல் ரவீந்திரன், நிழல்கள் ரவி, சங்கீதா ஆகியோர் அவரவர் வேலையை செய்திருக்கிறார்கள். கீழே விழப்போகும் ஊர்வசியை நாசர் தாங்கிப் பிடிக்கையில் பின்னணியில் வரும், ‘தென்றல் வந்து தீண்டும்போது’ பாடல் அப்படியொரு சுகம். அனிருத்தின் இசையில் பாடல்கள் ஹிட் என்றாலும் ஏகப்பட்ட இரைச்சல். ரிச்சர்ட் எம்.நாதனின் ஒளிப்பதிவு பளிச். ‘எந்த கேமராவா இருந்தாலும் காதல் உணர்வை படமெடுக்க முடியாது’ என்பது போன்ற வசனங்கள் ரசிக்க வைக்கிறது. ஆனால், தெரிந்த கதை, எதிர்ப்பார்க்கும் கிளைமாக்ஸ், நாடகத்தனமான காட்சிகளால் சில இடங்களில் தடுமாறினாலும், வரவேற்கிறது இந்த சென்னை. Tweet Newer Post Older Post No comments : Post a Comment Subscribe to: Post Comments ( Atom ) Subscribe Labels Actress Photos Biography Bollywood Cinema Eelam Cinema Fullmovie Hollywood Inreview Kollywood Movie review sport new TamilMovie Trailer Video கோலிவுட் சினிமா கோலிவுட் Kollywood சினிமா சின்னத்திரை திரைவிமர்சனம் பாலிவுட் Bollywood விருது... ஹாலிவுட் Hollywood Recent Posts Sports Contact Form Name Email * Message * © Cinema 2014 . Powered by Blogger . Published By Gooyaabi Templates . SoraTemplates . Posts RSS . Comments RSS
நீங்கள் ஒரு வங்கியில் ஒரு லட்ச ரூபாயை முதலீடு செய்கிறீர்கள். உங்களுக்கான வட்டி விகிதம் 8 சதவீதம். உங்களது முதலீடு எத்தனை வருடங்களில் இரட்டிப்பாகும் ? விடை: 9 வருடங்கள் விளக்கம்: பணத்தை சேர்த்து வைப்பது என்னவோ பலருக்கு கஷ்டமான காரியமாக இருக்கலாம். ஆனால் நம்மில் பலருக்கு நாம் வைத்திருக்கும் பணம் இரண்டு மடங்காக மாறினால், மிகவும் சந்தோசப்படுவோம். நிதி கல்வியில் கூட்டு வட்டியின் பலன்(Compound Interest) முக்கியத்துவம் வாய்ந்ததாகும். அதே நேரத்தில், கூட்டு வட்டியின் தன்மை இல்லாமல் நமது பணம் குறிப்பிட்ட காலத்தில் இரட்டிப்பாவதற்கு வாய்ப்பு எங்கும் இல்லை. //pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); போன்சி திட்டங்களில்(Ponzi Schemes) நமது பணத்தை செலவு செய்து ஏமாற்றம் அடையாமல், பணம் எவ்வாறு இரு மடங்காகிறது என்பதை நாம் கற்று கொண்டாலே, நமக்கான முதலீட்டு வாய்ப்பை நாம் தேட செல்வோம். (Rule 72)விதி எண் – 72 என்ற எளிமையான கணக்கு நமது பணம் எத்தனை வருடங்களில் இரண்டு மடங்காக மாறும் என சொல்லிவிடும். Rule No. 72 = 72 / கிடைக்கக்கூடிய வட்டி விகிதம் உதாரணத்திற்கு உங்களிடம் உள்ள ரூ. 1 லட்சம் எத்தனை வருடங்களில் இரு மடங்காகும் என்பதை அறிய, நமக்கு தேவையான தகவல் நமது பணத்தின் மதிப்பு மற்றும் கிடைக்கக்கூடிய வட்டி விகிதம். நீங்கள் ஒரு வங்கியில் ஒரு லட்ச ரூபாயை 8 சதவீத வட்டியில் முதலீடு செய்தால், 9 வருடங்களுக்கு பிறகு அது இரண்டு லட்ச ரூபாயாக (72/8 =9 Years) மாறும். இது ஒரு மனக்கணக்கு போல செயல்படும். இதே போன்று நமது பணம் மூன்று மடங்காக வேண்டுமானால், அதற்கான சூத்திரம்: 115 / கிடைக்கக்கூடிய வட்டி விகிதம் நம் நாடு சுதந்திரம் பெற்ற வருடத்தில் ஒரு டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு எவ்வளவு ? விடை: 4.16 ரூபாய் விளக்கம்: 1947ம் ஆண்டு சுதந்திரம் பெறுவதற்கு முன், நம் நாடு பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இருந்துள்ளதை நாம் அனைவரும் அறிவோம். அப்போதைய காலத்தில் நம் நாட்டின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி ரூபாய் – பவுண்ட்(Rupee – Pound) மதிப்பில் தான் வர்த்தகமாகி கொண்டிருந்தது. 1927ம் ஆண்டு முதல் 1966ம் ஆண்டு வரை நமது வர்த்தகம் ரூபாய் – பவுண்ட் மாற்றத்தில் நடந்துள்ளது கவனிக்கத்தக்கது. அப்போது ஒரு பவுண்ட் மதிப்பு 13 ரூபாய் (13.37) என்ற அளவில் இருந்தது. அப்படியிருக்கும் சமயத்தில், ஒரு பவுண்டுக்கு நிகரான டாலர் மதிப்பு 4 டாலர் என்ற அளவில் இருந்து வந்துள்ளது. அதாவது ஒரு டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு – மூன்று ரூபாய்க்கும் மேலாக இருக்கிறது. எனவே நாம் சுதந்திரம் பெற்ற தருணத்தில்(இந்திய அரசியலமைப்பு துவக்கத்தின் போது), ஒரு டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 4.16 ரூபாய் என்ற அளவில் தான் உள்ளது. நாம் நினைப்பது போல ஒரு டாலர் – ஒரு ரூபாய் என்ற மதிப்பில் இல்லை. 1913ம் ஆண்டு வாக்கில் ஒரு டாலரின் மதிப்பு, இந்திய ரூபாயில் 9 காசுகள் என்பது குறிப்பிடத்தக்கது. லிக்விட் பண்ட்(Liquid Fund) ___________ ? விடை: ரிஸ்க் இல்லை விளக்கம்: லிக்விட் பண்ட் என்பது பரஸ்பர நிதிகள் வழங்கும் கடன் சார்ந்த திட்டங்களாகும்(Debt Mutual Funds). இதில் பெறப்படும் முதலீடு அரசாங்க பத்திரங்கள், கருவூல மசோதா(Treasury Bills), வணிக ஆவணங்கள் மற்றும் வைப்பு சான்றிதழ்(Certificate of Deposit) போன்றவற்றில் முதலீடு செய்யப்படும். இவை பொதுவாக 91 நாட்களுக்குள் முதிர்வடையும் சாதனம்(Maturity) ஆகும். இவற்றில் ரிஸ்க் என்பது மிக குறைவு மற்றும் வங்கிகளில் உள்ள ரிஸ்க் தன்மையே லிக்விட் பண்டிலும் இருக்கும். எனவே இந்த பண்ட் வகைகளை ரிஸ்க் இல்லா முதலீடு(Risk Free) என்றே சொல்லலாம். லிக்விட் பண்டுகள் பொதுவாக வங்கி சேமிப்பு கணக்கு வட்டி விகிதத்தை விட அதிக வட்டி கொடுக்கும் குறுகிய கால முதலீட்டு சாதனமாக பயன்படும். வங்கியில் டெபாசிட்டுக்கான வட்டி விகிதம் குறையும் போதும், லிக்விட் பண்டுகளில் வட்டி விகிதம் சற்று அதிகமாக தான் காணப்படும். உங்களுக்கான நிதி இலக்குகள்(Financial Goals) என்ன என்பது உங்களுக்கு தெரியுமா ? விளக்கம்: எந்தவொரு முதலீட்டையும் நாம் மேற்கொள்ளும் முன், அவற்றில் முதலீடு செய்வதற்கான காரணத்தை நாம் தெரிந்து வைத்திருப்பது அவசியம். என்னிடம் இவ்வளவு பணம் உள்ளது, எனக்கு இவ்வளவு மடங்குகள் பணம் வேண்டும் என நாம் பொதுவாக சொல்லிவிட முடியாது. நாம் கற்க போகும் கல்விக்கு, ஒரு அடிப்படை நோக்கம் இருப்பது போல முதலீட்டிற்கும் நோக்கம் இருந்தாக வேண்டும். இதனை தான் நாம் நிதி இலக்குகள்(Financial Goals) என சொல்கிறோம். உதாரணத்திற்கு, 5 வருட கல்வி செலவு, குழந்தைகளின் மேற்படிப்பு மற்றும் திருமண செலவு, நான்கு சக்கர வாகனம் வாங்கும் திட்டம், ஓய்வு கால தொகை(Retirement Corpus), புதிய வீடு வாங்குதல் ஆகியவை நிதி இலக்குகள் என சொல்லலாம். நிதி இலக்குகளுக்கு முதலீடு செய்ய நம்மிடம் தேவையான பணம், காலம் மற்றும் தோராயமான வட்டியை அளிக்கும் முதலீட்டு சாதனம் அமைய பெற வேண்டும். ‘ குமார் என்பவருக்கு அடுத்த 15 வருடங்களில் தனது மகளின் மேற்படிப்புக்காக 10 லட்சம் ரூபாய் (இன்றைய மதிப்பில்) தேவை உள்ளது. 15 வருடங்களில் அவரது நிதி இலக்கினை அடைய தேவைப்படும் முதலீட்டு வாய்ப்பு – பங்குகள் / பரஸ்பர நிதிகள் / வங்கி வைப்பு நிதி / நிலம் / தங்கம். பொருத்தமான முதலீட்டு சாதனத்தை தேர்ந்தெடுப்பது நம் கடமை. ‘ DICGC முறைப்படி உங்களது வங்கி சேமிப்பில் எவ்வளவு தொகைக்கு காப்பீடு செய்யப்பட்டுள்ளது ? விடை: ரூ. 1 லட்சம் விளக்கம்: பொதுவாக நம்மிடம் உள்ள காலங்காலமாக இருந்த நம்பிக்கை வங்கியில் பணம் போட்டால் அது பாதுகாப்பாக இருக்கும் என்பது. தற்போது அந்த நம்பிக்கையும் நம்மிடம் இல்லை எனலாம். வங்கிகளின் வாராக்கடன் சிக்கலுக்கு பின், வங்கிகளின் மேல் மக்களின் நம்பிக்கையும் குறைந்து விட்டது எனலாம். பாரத ரிசர்வ் வங்கியின் கீழ் இயங்கும் துணை நிறுவனம் தான் DICGC(Deposit Insurance and Credit Guarantee Corporation) எனப்படும் வைப்புத்தொகை காப்புறுதி மற்றும் கடன் உத்தரவாத கூட்டுஸ்தாபனம். இந்த நிறுவனம் நாட்டில் உள்ள அனைத்து வங்கிகளில் செய்யப்பட்ட வைப்பு தொகை, சேமிப்பு மற்றும் தொடர் கணக்கு தொகை, தொடர் வைப்பு தொகை(Recurring) ஆகியவற்றுக்கு காப்பீடு செய்யப்படும். சொல்லப்பட்ட கணக்கில் உள்ள தொகை அல்லது முதலீட்டிற்கு அதிகபட்சமாக ரூ. 1 லட்சம் வரை காப்பீடு எடுக்கப்படும். ஏதேனும் ஒரு காரணத்தால் வங்கியில் உள்ள நமது பணத்தை இழக்க நேரிட்டால், நமக்கு அதிகபட்சமாக ரூ. 1 லட்சம் வரை மட்டுமே கிடைக்கும். //pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); தனிநபர் ஒருவர் ஒரு வங்கியின் கீழ் பல்வேறு கிளைகளில் கணக்கு வைத்திருந்தாலும், அவருக்கு கிடைக்கக்கூடிய அதிகபட்ச காப்பீட்டு தொகை 1 லட்சம் ரூபாய் மட்டுமே. வெவ்வேறு வங்கிகளில் கணக்கு வைத்திருக்கும் ஒருவருக்கு ஒவ்வொரு வங்கிகளின் கீழும் ஒரு லட்ச ரூபாய் வரை இழப்பீடு கிடைக்கும். காப்பீடு செய்யப்பட்ட தொகைக்கான ப்ரீமியத்தை குறிப்பிட்ட வங்கிகளே செலுத்த வேண்டும். வங்கிகள் சொல்லப்பட்ட ப்ரீமியத்தை செலுத்த தவறினால், வங்கியின் பதிவு மற்றும் காப்பீட்டை ரத்து செய்யும் அதிகாரம் DICGC க்கு உண்டு. எனவே வங்கிகளில் நீங்கள் வைத்திருக்கும் தொகைக்கு ஒரு லட்ச ரூபாய் வரை மட்டுமே இழப்பீடு(Rs.1 Lakh Insurance) தொகை கிடைக்கும் என்பதை மறவாதீர்கள். இந்த வார கேள்விகள்: பங்குச்சந்தையில் தினசரி வர்த்தகத்தின்(Intra day) மூலம் விரைவாக செல்வம் சேர்க்கலாம் ? வங்கிகளில் கிடைக்கும் வட்டி தொகைக்கு(Interest Income) வரி செலுத்த தேவையில்லை ? நிதி சார்ந்த கல்வியை கற்பதற்கு நீங்கள் நேரம் ஒதுக்குவது உண்டா ? அவசர கால நிதி(Emergency Fund) என்ன என்பது உங்களுக்கு தெரியுமா ? உங்களுக்கு ஒரு விலையுர்ந்த கைபேசி(Smart Phone) வாங்க வேண்டும் என்ற ஆசை உள்ளது. உடனே EMI முறையில் வாங்குவீர்களா அல்லது அதற்கான பணத்தை சேர்த்து வைத்த பின் வாங்க முயல்வீர்களா ? குறிப்பு: நீங்கள் வாக்கு பதிவு செய்வதற்கான இணைப்பை காண முடியவில்லை என்றால், கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பதிவிடவும். https://www.surveymonkey.com/r/8QLXFGZ வாழ்க வளமுடன், நன்றி, வர்த்தக மதுரை www.varthagamadurai.com emergency fundsfinancial goalsintra daypersonal finance Financial Survey வர்த்தக மதுரையின் நிதி அறிவு துளிகள் – பாகம் 3 March 25, 2019 skatzsaravana Leave a comment வர்த்தக மதுரையின் நிதி அறிவு துளிகள் – பாகம் 3 Personal Finance – Survey / Polling நமது வர்த்தக மதுரை தளத்தின் சார்பாக நிதி அறிவு துளிகள் என்ற தலைப்பில் நிதி சார்ந்த கேள்விகளும், அதற்கான பதில்களும் பெறப்படும். இது ஒரு வாக்கு பதிவு முறையில் அமையப்பெற்றது. உங்களுக்கான நிதி அறிவை நீங்கள் தற்சோதனை செய்து கொள்ள ஒரு தமிழ் களம். //pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); இரண்டாம் பாகத்திற்கான கேள்விகளும், அதற்கான விடைகளும் இங்கே… வருமான வரியை சேமிக்க இன்சூரன்ஸ்(காப்பீடு) என்ற திட்டம் மட்டுமே உள்ளது ? விடை: இல்லை விளக்கம்: வருமான வரியை சேமிக்க இன்சூரன்ஸ் என்ற திட்டத்தை தவிர பல வழிகளில் நாம் வரி சேமிப்பினை பெறலாம். வருமான வரிச்சட்டம் பிரிவுகள் 80C, 80D, 80E, 80G, 80U மற்றும் மேலும் பல வகைகளில் வருமான வரியை சேமிக்கலாம். வரி சேமிப்பை அறிய, வருமான வரி சேமிப்பு வழிகள் வருமான வரி சேமிப்பிற்கு காப்பீடு திட்டத்தை மட்டுமே பயன்படுத்துவது சரியான அணுகுமுறை அல்ல. நமது நாட்டில் தங்கத்தின் விலை மதிப்பு எதனை சார்ந்து மாறுகிறது ? விடை: டாலர் மதிப்பு (Dollar) விளக்கம்: பொதுவாக ஒரு நாட்டில் உள்ள நுகர்வோர் பயன்படுத்தும் பொருட்களுக்கு அல்லது சேவைகளுக்கு, உற்பத்தி மற்றும் தேவைக்கு உள்ள இடைவெளியே(Demand-Supply) அதன் விலை மதிப்பை நிர்ணயிக்கும். உற்பத்தி பெருகி தேவை குறைந்திருப்பின், பொருள் அல்லது சேவைக்கான விலை குறைவாகவே இருக்கும். மாறாக தேவைகள் அதிகமாகவும், அதற்கான உற்பத்தி குறைவாக இருக்கும்பட்சத்தில் விலைத்தன்மை அதிகமாக இருக்கும். நம் நாட்டில் தங்கத்தின் தேவை இறக்குமதி மூலமாக(Gold Imports) தான் பூர்த்தி செய்யப்படுகிறது. ஆகையால் உற்பத்தி என்பது நம் நாட்டை சார்ந்ததல்ல. விழாக்காலங்களில் நகைக்கடைகளில் தங்கம் விலை அதிகமாக இருக்கும் என்பது உள்ளூர் சந்தையில் ஆபரண தங்கத்தின் விலை மதிப்பு அதிகரிப்பதையே காட்டுகிறது. மாறாக தங்கம் மற்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுவதும், அதன் மதிப்பு அமெரிக்க டாலர்களில் தான் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பை பொறுத்தே தங்கத்தின் விலையும் பெறப்படும். ஆக தங்கத்தின் விலை தினமும் மாற்றம் பெறுவது பெரும்பாலும் டாலர் மதிப்பின் மாற்றமே. பங்குச்சந்தையும், பரஸ்பர நிதிகளும்(Mutual Funds) ஒன்றா ? விடை: இல்லை விளக்கம்: பங்குச்சந்தையும், பரஸ்பர நிதிகளும் வெவ்வேறானவை. பங்குச்சந்தை சார்ந்த முதலீடுகள் பரஸ்பர நிதி திட்டங்களில்(Mutual Fund Schemes) உள்ளன. ஆனால் பரஸ்பர நிதிகளில் உள்ள அனைத்து முதலீட்டு வகைகளும் பங்குச்சந்தையில் நாம் காண முடிவதில்லை. இரண்டுமே செபி(SEBI) என்ற ஒழுங்குமுறை அமைப்பின் கீழ் நிர்வகிக்கப்பட்டாலும், அதற்கான வழிமுறைகள் வேறுபாடுகள் கொண்டவை. பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள் தங்களது முதலீடுகளை திரட்ட பொதுவெளியில் வருகின்றன. நிறுவனத்தின் வருவாயும், நிர்வாக திறனும் ஒரு முதலீட்டாளராக கவனிக்க வேண்டியது அவசியம். நாம் வாங்கிய பங்குகளின் நிறுவனம் சரியில்லை என்றால், நமது முதலீட்டிற்கு ரிஸ்க் அதிகம் தான். ஆதலால் தான் பங்குச்சந்தை ஒரு தொழில் சார்ந்த விஷயம் என்கிறோம். //pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); பரஸ்பர நிதிகள் என்பது டிரஸ்ட்(Sponsor or Trust) என்று சொல்லக்கூடிய அறக்கட்டளை அமைப்பு முறையில் இயங்கி வருவது. பரஸ்பர நிதிகளுக்கு பொதுவாக பங்குச்சந்தை நிறுவனங்கள் போன்று எந்த முதலீடும் தேவையில்லை. பரஸ்பர நிதிகள் வங்கிகள் போன்ற செயல்பாட்டு முறையை கொண்டிருக்கிறது. பரஸ்பர நிதிகளில் நீங்கள் சேமிப்பு கணக்கு, வைப்பு நிதி, ஆர்.டி. டெபாசிட்(Recurring Deposit), கடன் பத்திரங்கள், தங்கத்தில் முதலீடு, ரியல் எஸ்டேட் முதலீடு, அரசாங்க பத்திரங்கள் மற்றும் பங்குச்சந்தை சார்ந்த முதலீடுகள் என பல வகை திட்டங்களை காணலாம். இங்கே சேமிப்பு கணக்கு என்பது லிக்விட் பண்ட்(Savings -Liquid Fund) எனவும், வைப்பு நிதி என்பது Lumpsum முதலீடு எனவும், ஆர்.டி. முறை SIP(Systematic Investment Plan) முதலீடு எனவும் பெயர் மாற்றம் பெறுகிறது, அவ்வளவே. வங்கி சேமிப்புகள் பாதுகாப்பானவை என நாம் நினைத்தால், பரஸ்பர நிதி திட்டங்களும் பாதுகாப்பானவை தான், திட்டங்களை சரியாக தேர்ந்தெடுப்பது அவசியம். நிதி சார்ந்த கல்வியினை பெற நீங்கள் எவ்வளவு தொகையை செலவிட தயாராக உள்ளீர்கள் ? விளக்கம்: நம் நாட்டில் சேமிப்பு என்ற பழக்கம் தொன்றுதொட்டு இருந்து வந்தாலும், முதலீடு என்ற சாதனத்தில் சிலர் மட்டுமே பங்குபெறுவது வருந்தத்தக்க விஷயம். உண்மையில் நாம் சொல்லும் வளர்ந்த நாடுகளில் வேலை வாய்ப்புகளோ, பணக்காரர்களோ அதிகமில்லை. மாறாக அங்கே தொழில் சார்ந்த விஷயங்களும், முதலீடு பற்றிய விழிப்புணர்வும் தான் தாக்கத்தை பெறுகிறது. பொதுவாக நாம் முதலீடு செய்வதில் அக்கறை காட்டுவதில்லை என்றாலும், மிகவும் ரிஸ்க் எடுக்கும் தன்மை நம்மிடம் உள்ளது எனலாம். இன்றும் போன்சி திட்டங்கள்(Ponzi Schemes) என்னும் சதுரங்க வேட்டைகள், தங்க முதலீடு(Gold Scam), பிட் காயின்(Bitcoin) முதலீடு, இன்னும் நமக்கு தெரியாத என்னென்னவோ விஷயங்களை செய்து வருகிறோம். பின்பு சில காலங்களுக்கு அவை மறைந்து விடும். நம்மிடம் உள்ள குறுகிய கால அணுகுமுறை தான் நம்மை தவறான வழிகளில் பணத்தை முதலீடு செய்ய முனைகிறது. பெரும்பாலும் நாம் ஏமாற்றப்படுவது நம்முடைய பணத்தை இரட்டிப்பாக்கும் முயற்சியில் தான். புரிந்து கொள்ளுங்கள், வங்கி மற்றும் அஞ்சலக சேமிப்புகளில் உங்கள் பணம் இரட்டிப்பாக பத்து வருடங்களாகும். பங்குச்சந்தை மற்றும் தொழில்களில் நீங்கள் முதலீடு செய்தாலும் உங்கள் பணம் ஐந்து முதல் ஆறு வருடங்களுக்கு பின்னரே இரண்டு மடங்காகும். பங்குச்சந்தையில் நீண்டகால சராசரி வருமானம் 12-15 சதவீதம் மட்டுமே என்பதை மறந்து விடாதீர்கள். அப்படியிருக்க, போன்சி திட்டங்கள் என்றும் சொல்லப்படும் ஏமாற்று முறைகளில் ஒரு வருடம் முதல் மூன்று வருடங்களில் உங்கள் பணம் இரட்டிப்பாவது எவ்வாறு சாத்தியம் என்பதை சிந்தியுங்கள். உண்மையில் அப்படி ஒரு முதலீடு இருந்திருந்தால், ஏன் நம் நாட்டின் அம்பானியும், அதானியும், டாடா மற்றும் டி.வி.எஸ். நிறுவனமும் காலங்காலமாக தொழில் புரிய வேண்டும். அவர்களிடம் இல்லாத பணமா, முதலீடு செய்வதற்கு. அவர்கள் நினைத்திருந்தால் இது போன்ற ஏமாற்று திட்டங்களில் முதலீடு செய்து பல்லாயிரம் கோடிகளை பல மடங்காக மாற்றியிருக்கலாமே. மீண்டும் சிந்தியுங்கள். நாம் கற்ற கல்வி நமக்கு பல வருடங்களுக்கு பிறகே அதன் பயனை தருகிறது. நாம் நமக்கான கல்விக்கு செலவழித்த பணத்தை திரும்ப பெற, நம்மால் உடனே முடிவதில்லை. நமது மேற்படிப்பு கல்வி மூன்று முதல் ஐந்து ஆண்டு காலம் வரை உள்ளன. பின்பு நாம் அந்த துறையில் புதிய மனிதராக வேலை செய்கிறோம். ஐந்து வருட அனுபவத்திற்கு பிறகே நம்மால் அந்த துறையை பற்றிய ஒரு புரிதல் வருகிறது. அப்படியிருக்க முதலீடு என்ற விஷயத்திற்குள் நாம் நுழையும் போது, நாம் அதற்கான கல்வியை கற்கிறோமா, முதலீட்டை கற்று கொள்வதற்கு எவ்வளவு நேரத்தை செலவிடுகிறோம், அதற்கான செலவின விகிதம் ஆகியவை மிகவும் அவசியமான ஒன்று. பொறியியல் படிப்பு முதல் மருத்துவ படிப்பு வரையிலான கல்விச்செலவை நாம் திரும்ப பெற, பல வருட காலங்களாகும். பங்குச்சந்தை(Share Market) ஒரு ___________ ? விடை: தொழில் விளக்கம்: பங்குச்சந்தை என்பது ஒரு சூதாட்டம் என்று சொல்லிக்கொண்டாலும், அது ஒரு தொழில் சார்ந்த விஷயமே. ஏன், பணக்காரர்கள் பணக்காரர்களாகவே இருக்கிறார்கள், ஏழைகள் ஏழைகளாகவே வாழ்ந்து வருகிறார்கள் என்பதற்கு திரு. ராபர்ட் கியோசகி(Robert Kiyosaki) அவர்களின், ‘ பணக்கார தந்தை, ஏழை தந்தை ‘ புத்தகமே சிறந்த உதாரணம். பணத்தை பற்றிய நமது கல்வி தான் பெரும்பாலும் நமது நிதி வாழ்க்கையையும் நிர்ணயிக்கிறது. ஐந்தாம் வகுப்பை தாண்டாத ஒருவர் மாபெரும் தொழிலதிபராக வருவதும், மெத்தபடித்தவர் வாழ்நாள் முழுவதும் வேலை செய்வதும் இதன் பின்னணியில் தான். பணம் மட்டுமே நம் வாழ்க்கையில்லை என நாம் சொல்லிக்கொண்டாலும், அதன் பின்பு தான் நாம் வாழ்நாள் முழுவதும் அலைந்து கொண்டிருக்கிறோம். மாறாக, பணத்தை நிர்வகிக்க தெரிந்தவர்கள் உண்மையில் தங்களுக்கு தேவையான விஷயங்களை மட்டுமே செய்து கொண்டிருக்கிறார்கள். இது அவர்களை மகிழ்வாகவும் வைத்து கொள்கிறது. ஒரு மரக்கன்றை தண்ணீர் ஊற்றி, அதனை பாதுகாத்து மரமாக்க பல வருடங்கள் ஆகும். இதனை போன்று தான் ஒரு தொழிலும், பங்குச்சந்தையும். உண்மையில் பங்குச்சந்தையிலும், எந்தவொரு தொழிலிலும் குறுகிய காலத்தில் நாம் வேகமாக வளர்ந்ததாக வரலாறு சொல்லவில்லை. அது நீண்டகால பயணம் மட்டுமே. ஒரு துறையை பற்றி நாம் எந்த அடிப்படை விஷயங்களையும் கற்காமல், அதனை பற்றிய கருத்துக்கு நாம் எப்படி செவிசாய்க்க முடியும். உங்கள் ஐந்து வயது குழந்தையின் இயல்பான குணம், போட்டிகளை எதிர்கொள்ளும் திறன் மற்றும் கல்வி அறிவை அதன் இருபது வயதில் எவ்வாறு இருக்கும் என உங்களால் இப்போதே உறுதியாக கணித்து சொல்ல முடியுமா ? //pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); ஒவ்வொரு பாகத்திலும் ஐந்து கேள்விகள் கேட்கப்படும், அதற்கான பதில்கள் கருத்து கணிப்பின் வடிவில் அமையப்பெறும். கேள்விகளின் சரியான பதில்கள் நமது இணைய தளத்தில் வாக்கு பதிவு நாள் முடிந்தவுடன் வெளியிடப்படும். கருத்து கணிப்பின் முடிவில் வாசகர்கள் தங்கள் நிதி சார்ந்த அனுபவங்களையும் பகிர்ந்து கொள்ளலாம். இந்த வார கேள்விகள்: நீங்கள் ஒரு வங்கியில் ஒரு லட்ச ரூபாயை முதலீடு செய்கிறீர்கள். உங்களுக்கான வட்டி விகிதம் 8 சதவீதம். உங்களது முதலீடு எத்தனை வருடங்களில் இரட்டிப்பாகும் ? நம் நாடு சுதந்திரம் பெற்ற வருடத்தில் ஒரு டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு எவ்வளவு ? லிக்விட் பண்ட்(Liquid Fund) ___________ ? உங்களுக்கான நிதி இலக்குகள்(Financial Goals) என்ன என்பது உங்களுக்கு தெரியுமா ? DICGC முறைப்படி உங்களது வங்கி சேமிப்பில் எவ்வளவு தொகைக்கு காப்பீடு செய்யப்பட்டுள்ளது ? குறிப்பு: நீங்கள் வாக்கு பதிவு செய்வதற்கான இணைப்பை காண முடியவில்லை என்றால், கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பதிவிடவும். Personal Finance – Survey 3 வாழ்க வளமுடன், நன்றி, வர்த்தக மதுரை www.varthagamadurai.com financial goalsmutual fundspersonal finance Paisa News முதலீட்டு முடிவுக்காக நீங்கள் எவ்வளவு நேரம் செலவழிக்கிறீர்கள் ? October 10, 2018 skatzsaravana Leave a comment முதலீட்டு முடிவுக்காக நீங்கள் எவ்வளவு நேரம் செலவழிக்கிறீர்கள் ? How much time do you spend for an Investment Decision ? சமீபத்தில் (07-10-2018) நமது மதுரையில் மியூச்சுவல் பண்டுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி, மடிட்சியா அரங்கில் நடைபெற்றது. நாணயம் விகடன் மற்றும் ஆம்பி (Association of Mutual Funds in India -AMFI) சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்வில் சிறப்புரையாளராக திரு. வி. கோபால கிருஷ்ணன் (Money Avenues) அவர்கள் கலந்து கொண்டார். அவர் பேசுகையில், ‘ நமது குடும்பத்திற்கு தேவையான பொருட்கள் மற்றும் துணிமணிகளை நாம் வாங்க செல்லும் போது அதற்கான நேரம் பொதுவாக 4-5 மணி நேரம் வரை செலவழிக்கப்படுகிறது. அதே நேரத்தில், முதலீடு அல்லது சேமிப்பு என்று வரும் போது, நாம் அதற்கான கால அளவுகளை கொடுக்காமல் உடனே முடிவெடுக்கும் நிலைக்கு வருகிறோம். இந்த அவசர முடிவு தான், நம்முடைய முதலீட்டு சாதனங்களில் (Investment Products) நாம் தோல்விடைய வழி வகுக்கிறது. பங்குச்சந்தை அல்லது பரஸ்பர நிதி (Mutual Fund) என்னும் முதலீட்டு சாதனத்தை நாம் தேர்ந்தெடுக்கும் போது, அவசர கதியில் அல்லது நண்பர் சொன்னார் என்று முடிவெடுத்து விட்டு, பின்பு என் முதலீடுகள் நஷ்டத்தில் உள்ளனவே என தடுமாறுகிறோம். உங்களுக்கான முதலீட்டு முடிவை (Investment Decision) நீங்கள் தான் எடுக்க வேண்டும். உங்களின் மற்றும் உங்கள் குடும்பத்தின் நிதி நிலைமை உங்களுக்கு மட்டும் தான் தெரியும். அதனால் நீங்களே பொறுமையாக கையாள வேண்டும். இல்லையெனில், அதற்கு தகுந்த ஒரு நிதி ஆலோசகரை தேர்ந்தெடுக்க வேண்டும். முதலீட்டு முடிவுகளுக்கான நேரத்தை நாம் செலவிடும் போது தான், நமக்கான அக்கறை நிதியிலும் வரும். ஒருவர் தனது முதலீட்டு முடிவை எடுக்கும் முன், தனக்கான நிதி இலக்குகள் மற்றும் நோக்கங்கள் என்ன என்பதை கண்டறிய வேண்டும். நிதி இலக்குகள் (Financial Goals) என்பது மேற்படிப்பு, வீடு வாங்குவது, ஓய்வு காலத்திற்கு தேவையான தொகை என இருக்கலாம். நோக்கங்கள் (Objectives) என்பது நமது நிதி இலக்குகளுக்கு தேவையான தொகையை நாம் எந்த கால அளவில் பெற வேண்டும், எவ்வளவு வருமானம் (Better Returns) கிடைத்தால் நாம் இலக்கை அடையலாம் என்பது தான். இதன் பின்னரே அதற்கு பொருத்தமான முதலீட்டு முடிவுகளை எடுக்க வேண்டும். சில பேருக்கு மாதாமாதம் தொடர் வருமானம் வேண்டுமென இருக்கலாம்; சிலருக்கோ பத்து வருடங்களுக்கு பிறகு எனக்கு இன்ன தொகை தேவையென இருக்கலாம். இவையெல்லாம் தான் நமது முதலீட்டு நோக்கங்கள். நமது முதலீட்டு முதிர்வு பணவீக்கத்தை தாண்டியதாக இருக்க வேண்டும். அப்போது தான் நாம் நமது இலக்குகளை அடைய முடியும். ‘ என்றார். இதற்கு அடுத்தாற் போல் திரு. பி. ராமசாமி (Easy Investments) அவர்கள் பேசிய போது, ‘ உலகளவில் நம் நாடு மட்டும் தான் தங்கத்தை அதிகமாக பயன்டுத்தி கொண்டிருக்கிறது. தங்கத்தின் அதிகப்படியான இறக்குமதி தான் நம் நாட்டின் பொருளாதாரத்தையும் பாதிக்கிறது. இதன் காரணமாகவும், பல சமயங்களில் நாட்டின் நடப்பு கணக்கு பற்றாக்குறை மற்றும் விலைவாசி அதிகரிக்க செய்கிறது. மற்ற நாடுகளில் அதன் அரசாங்கம் தான் தங்கத்தை வைத்திருக்கிறது. அதுவும், தங்கள் நாட்டின் பொருளாதார கணக்கை சமப்படுத்துவதற்கான சாதனமாக தான் பயன்படுத்தி வருகிறது. அந்த நாடுகளில் ஓய்வு காலத்திற்கு தேவையான நிதியை ஏற்படுத்துதல், பணவீக்கத்தை தாண்டிய வருமானத்தை உருவாக்குதல் போன்றவற்றில் கவனத்தை செலுத்துகின்றன. தங்கத்தை ஒரு முதலீடாக பார்க்கும் போது, தங்க பத்திரங்கள், சந்தையில் வர்த்தகமாகும் கோல்டு ETF (Gold Exchange Traded Fund) ஆகியவை ஓரளவு வருமானத்தை தரும். ஆனால் வெறுமனே ஆபரணமாக வாங்கும் பட்சத்தில், பின்வரும் நாளில் அதன் மதிப்பு குறைவு. எனவே தேவைக்கு மட்டும் சிறிது நகைகளாக வைத்து கொண்டு, தங்கம் சார்ந்த நிறுவனங்கள், பத்திரங்களில் முதலீடு செய்து வருமானத்தை ( Capital Appreciation) பெறலாம் ‘ என்று சொன்னார்.
ஹைதராபாத் பல்கலைக் கழக ஆய்வு மாணவர் ரோஹித் வெமுலா(26) கடந்த ஜனவரி 17-ஆம் தேதி, பல்கலைக் கழகம் கொடுத்த தொடர் நெருக்கடி காரணமாக பல்கலைக் கழக விடுதியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். தலித் மாணவர் என்பதாலேயே ரோஹித் வெமுலா பல நெருக்கடிகளைச் சந்தித்ததும் அதை எதிர்ப்பு போராட்டங்கள் நடத்தியதும் அதற்காக பல்கலைக் கழக விடுதியிலிருந்து இன்னும் சில தலித் மாணவர்களுடன் வெளியேற்றப்பட்டதும் நிகழ்ந்தவை. ரோஹித் வெமுலா இறப்புக்குப் பின், அவர் தலித் சமூகத்தைச் சேர்ந்தவரா இல்லையா என்பது குறித்து … Continue reading தலித் பிரிவைச் சேர்ந்தவர்தான் ரோஹித் வெமுலா: மாவட்ட நிர்வாகம் அறிக்கை → த டைம்ஸ் தமிழ் இந்தியா, சமூகம், தலித் ஆவணம், ரோஹித் வெமுலா பின்னூட்டமொன்றை இடுக ஜூன் 16, 2016 ஜூன் 16, 2016 1 Minute ரொஹித் வெமுலாவை மகனாகப் பார்க்கும் ஸ்மிருதி இரானியின் தாயுள்ளமும் வெமூலாவின் தாயை இழுத்துச் சென்ற காவல்துறையும் ஹைதரபாத் பல்கலைக் கழகத்தில் பாஜக மாணவர் அமைப்பான ஏபிவிபிக்கு எதிராக மாணவர்களை திரட்டினார்கள் என்பதற்காக பல்கலை விடுதியில் இருந்து துரத்தப்பட்டு, உதவித் தொகை நிறுத்தப்பட்டு பழிவாங்கப்பட்ட ஐந்து தலித் மாணவர்களில் ரோஹித் வெமுலாவும் ஒருவர். போராட்டங்களை நடத்திப்பார்த்து துவண்ட அல்லது துவண்ட மனநிலைக்குத் தள்ளப்பட்ட வெமுலா சென்ற மாதம் தற்கொலை செய்துகொண்டார். பல்கலை வளாகத்தின் சாதி ஒடுக்குமுறை வெளிச்சத்துக்கு வந்த நிலையில், மாணவர்களிடையே தன்னிச்சையான போராட்டத்தைக் கிளப்பியது. இந்நிகழ்வின் தொடர்ச்சியாக டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தின் … Continue reading ரொஹித் வெமுலாவை மகனாகப் பார்க்கும் ஸ்மிருதி இரானியின் தாயுள்ளமும் வெமூலாவின் தாயை இழுத்துச் சென்ற காவல்துறையும் → த டைம்ஸ் தமிழ் இந்தியா, இந்துத்துவம், ஊடக அரசியல், ஊடகங்கள் பேசா பொருள், ஊடகம், கன்னய்யா குமார், கருத்துரிமை பின்னூட்டமொன்றை இடுக பிப்ரவரி 26, 2016 1 Minute த டைம்ஸ் தமிழ் இணையத்துக்கு நன்கொடை தாருங்கள்! Follow THE TIMES TAMIL on WordPress.com Viral கையால் மலம் அள்ளும் பணித்தடைச் சட்டம் 2013’’ ஐ உடனடியாக நடைமுறைபடுத்த ‘’பீம் யாத்ரா’’ நூல் அறிமுகம்: திருடன் மணியன் பிள்ளை ”ஏன் பௌத்தம் தழுவினேன்?”: அம்பேத்கரின் உரை "மனுசங்கடா நாங்க மனுசங்கடா": இன்குலாபின் புகழ்பெற்ற பாடலை நினைவுகூரும் செயல்பாட்டாளர்கள் நாயூடு கு.பிச்சாண்டி, கே. என். நேரு ரெட்டி, கே.கே. எஸ்.எஸ்.ஆர். ராமசந்திரன் ரெட்டி...திமுகவின் ’சாதி அரசியல்’ ஆதாரங்கள்! மலையாளி பழங்குடியினரை `மலையாளி கவுண்டர்’ ஆக்கிய அரசு! “அப்பாவி பெண்ணாக இருந்த என்னை சுற்றியிருந்தவர்கள் பயன்படுத்திக்கொண்டார்கள்”: ஜெயலலிதாவின் மனம் திறந்த பேட்டி
Home » World » “மற்ற ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு மீண்டும் உயர ஜெர்மனி உதவ வேண்டும்”: மேர்க்கெல் – உலக செய்தி World “மற்ற ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு மீண்டும் உயர ஜெர்மனி உதவ வேண்டும்”: மேர்க்கெல் – உலக செய்தி மே 13, 2020 0 SaveSavedRemoved 0 கொரோனா வைரஸ் நெருக்கடிக்குப் பின்னர் அதன் ஐரோப்பிய ஒன்றிய அண்டை நாடுகள் அதன் பொருளாதாரங்களை புதுப்பிக்க ஜெர்மனி உதவ வேண்டும், அதிபர் அங்கேலா மேர்க்கெல் செவ்வாயன்று தனது பழமைவாத முகாமில் சட்டமியற்றுபவர்கள் கூட்டத்தில் கூறினார், பல பங்கேற்பாளர்கள் தெரிவித்தனர். ஒரு ஏற்றுமதி தேசமாக ஜெர்மனிக்கு அதன் ஐரோப்பிய ஒன்றிய பங்காளிகளும் சிறப்பாக செயல்படுவது அவசியம், மேர்க்கெல் சட்டமியற்றுபவர்களிடம், ஒரு ஐரோப்பிய ஒன்றிய புனரமைப்பு திட்டம் குறித்த ஆலோசனைகளை நோக்கமாகக் கொண்டு, அதன் அளவு மற்றும் நிதி திறந்த நிலையில் இருந்தது என்று அதிபர் கூறினார். வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்திய மிக வெற்றிகரமான ஐரோப்பிய நாடாக ஜெர்மனி இருந்தது, பாரிய சோதனைகளுக்கு ஒரு பகுதியாக நன்றி, இது பொருளாதாரத்தை ஓரளவு மீண்டும் திறக்க வழிவகுத்தது. நெருக்கடிக்குப் பின்னர் ஜெர்மனி மட்டுமே வலுவாக உள்ளது என்பது யாருடைய ஆர்வத்திலும் இல்லை என்று மேர்க்கெல் கூட்டத்தில் கூறினார், பங்கேற்பாளர்கள் தெரிவித்தனர். சி.டி.யு / சி.எஸ்.யுவின் பழமைவாத நாடாளுமன்றக் குழுவின் தலைவரான ரால்ப் பிரிங்க்ஹாஸுடன் அதிபர் ஒப்புக் கொண்டார், ஜெர்மனி கணிசமாக அதிக பணத்தை பிரஸ்ஸல்ஸுக்கு மாற்ற வேண்டும் என்று அவர்கள் மேலும் தெரிவித்தனர். நிதி உதவி தொடர்பான முடிவில் பன்டெஸ்டாக் ஈடுபடும். கோவிட் -19 தொற்றுநோயின் முழுமையான தகவலுக்கு இங்கே கிளிக் செய்க ஐரோப்பிய ஒன்றியத்தில் தனது கூட்டாளர்களுக்கு உதவ ஜெர்மனி விரும்புவதாக பிரிங்க்ஹாஸ் கூறினார், ஆனால் பில்லியன்கள் எதற்காகப் பயன்படுத்தப்படும் என்பதை அறிந்து கொள்ள வேண்டும். திருத்தப்பட்ட பட்ஜெட் திட்டங்களை ஐரோப்பிய ஆணையம் அடுத்த வாரம் முன்வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சி.டி.யு பட்ஜெட் நிபுணர் எக்கார்ட் ரெஹெர்க் கூட்டத்தில் ஜேர்மன் நிதி குறித்த ஒரு இருண்ட படத்தை வரைந்தார். வரி 2019 நிலைகளுக்கு மீட்க 2023 வரை ஆகலாம் என்று அவர் எச்சரித்தார், இந்த ஆண்டு வருவாய் 6.5% குறைகிறது, பங்கேற்பாளர்கள் தெரிவித்தனர். ஜெர்மனியின் எல்லைகளை மீண்டும் திறக்கும் நம்பிக்கைக்கு எதிராக நாடாளுமன்ற உறுப்பினர்களை மேர்க்கெல் எச்சரித்தார், புதன்கிழமை அவரது அலுவலகம் விவாதிக்கும் ஒரு பிரச்சினை. தொற்றுநோய்க்கு பதிலளிக்கும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்ட ஜேர்மன் எல்லைக் கட்டுப்பாடுகளை எளிதாக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர், ஆனால் மே 15 வரை முற்றிலுமாக ஒழிக்கப்பட வாய்ப்பில்லை என்று கூட்டணி வட்டாரங்கள் தெரிவித்தன. பாஸ்போர்ட் இல்லாமல் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஷெங்கன் மண்டலத்தில் இயல்பாக்கம் நோக்கி செல்ல அரசாங்கம் விரும்புகிறது. கொரோனா வைரஸ் வெடிப்புக்கான சமீபத்திய புதுப்பிப்புகளுக்கு இங்கே கிளிக் செய்க சி.டி.யு / சி.எஸ்.யூ நாடாளுமன்றக் குழுவிடம் மேர்க்கெல் எல்லைக் கட்டுப்பாடுகளில் தளர்வு இருக்க வேண்டும் என்று கூறினார். ஆனால் ஒரு கட்ட செயல்முறை பற்றி அவர் பேசினார், ஜூன் நடுப்பகுதிக்கு முன்னர் பிரான்ஸ் தனது எல்லைகளை முழுமையாக திறக்க விரும்பவில்லை என்று கூறினார். READ யு.எஸ். ஹவுஸ் 500 பில்லியன் டாலர் கொரோனா வைரஸ் திட்டத்தை உதவி தொகுப்பில் அங்கீகரிக்கிறது - உலக செய்தி பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனின் அலுவலகத்தை மேற்கோள் காட்டி, வணிக செய்தித்தாள் ஹேண்டெல்ஸ்ப்ளாட், பிராங்கோ-ஜெர்மன் எல்லையை மீண்டும் திறக்க மேர்க்கலும் மக்ரோனும் ஒப்புக் கொண்டதாக தெரிவித்தனர். (ஆண்ட்ரியாஸ் ரிங்கேவின் அறிக்கை; பால் கேரலின் எழுத்து; ஜான் ஹார்வி மற்றும் அரோரா எல்லிஸ் எடிட்டிங்) Ganesh krishna “நுட்பமான அழகான தொலைக்காட்சி வெறி. உள்முக சிந்தனையாளர், ஆல்கஹால் மேவன். நட்பு எக்ஸ்ப்ளோரர். சான்றளிக்கப்பட்ட காபி காதலன்.” SaveSavedRemoved 0 Previous மரியா பிரன்யாஸ், 113, கொரோனா வைரஸிலிருந்து தப்பினார் Next ஒரு 'புதிய இயல்பானது' கையில் உள்ளது. சமநிலையை உறுதி செய்யுங்கள் | பகுப்பாய்வு - பகுப்பாய்வு Related Articles Added to wishlistRemoved from wishlist 0 அமெரிக்காவிற்கு ஆப்கானிஸ்தான் போர் எவ்வளவு விலை உயர்ந்தது? Added to wishlistRemoved from wishlist 0 ஆப்கானிஸ்தானில் தலிபான் மீது அமெரிக்கா: பாராளுமன்றத்தில் செனட்டர் ஜாக் ரீட் பாகிஸ்தான் காரணமாக ஆப்கானிஸ்தானில் தலிபான்களுடன் யுத்தத்தை இழந்தார்
உலக ஊடக சுதந்திர தினம், ஊடக சுதந்திரத்தைப் பரப்பும் நோக்கிலும் மனித உரிமைகள் சாசனத்தின் பகுதி 19இல் இடம்பெற்றுள்ள பேச்சுரிமைக்கான சுதந்திரத்தை உலக நாடுகளின் அரசுகளுக்கு நினைவூட்டும் முகமாக ஐக்கிய நாடுகள் சபையினால் சிறப்பு நாளாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. 1993 ஆம் ஆண்டில் இடம்பெற்ற ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட தீர்மானத்தின்படி வருடாந்தம் மே 3ஆம் திகதி ஊடக சுதந்திர தினமான ஏற்றுக் கொள்ளப்பட்டது. ஆபிரிக்கப் ஊடகங்கள் கூட்டாக இணைந்து, 1991ஆம் ஆண்டு மே 3ஆம் திகதி �ஊடக சுதந்திர சாசனத்தை முன்வைத்தனர். இந்த நாளில் ஊடக சுதந்திரத்துக்காகப் பங்களிப்பு செய்யும் ஒவ்வொருவருக்கும் வருடாந்தம் யுனெஸ்கோ நிறுவனம் விருது வழங்கி கௌரவித்து வருகின்றது. Categories: செய்திகள் Related Posts மாவட்ட ரீதியாக லிட்ரோ எரிவாயு விலை தொடர்பான அறிவிப்பு!! December 8, 2022 வெளியில் செல்வோர் கட்டாயமாக முக கவசம் அணியுங்கள்!வடக்கு ஆளுநர் December 8, 2022 யாழில் 14 வயதுச் சிறுமி குழந்தை பிரசவம் – 73 வயது முதியவர் விளக்கமறியலில்! December 8, 2022 ← நாவற்குழியில் மீண்டும் சிங்கள மக்கள் வீடமைப்பு இன்புளுவென்ஸா வைரஸ் தாக்கம் விழிப்புடன் இருக்குமாறு வேண்டுகோள் → Advertise Your Business Here திகதி வாரியான செய்திகள் December 2022 M T W T F S S 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 « Nov Advertisement About Jaffna Journal எமது பிராந்தியத்தின் உண்மையான சமூக அரசியல் கலை கலாச்சார விழுமியங்களை உரிய முறையில் வெளிக்கொணரும் செய்தித்தளமாக இந்த jaffnajournal.com இணையத்தளம் தன்னை நிலைநிறுத்த முயற்சிக்கின்றது. எமது தளத்தில் வரும் செய்திகள் தொடர்பிலான உங்கள் விமர்சனங்களை நாம் என்றும் வரவேற்கின்றோம்.
17 பெப்ரவரி 2017: பள்ளிவாசல் தாக்குதலை தொடர்ந்து பாக்கித்தான் 100இக்கும் மேற்பட்ட தீவிரவாதிகளை கொன்றது 25 அக்டோபர் 2016: பாக்கித்தானில் காவலர் பயிற்சி கல்லூரியை மூன்று தற்கொலை தாரிகள் தாக்கியதில் பலர் பலி 29 செப்டம்பர் 2016: பாக்கித்தானில் உள்ள தீவிரவாத நிலைகள் மீது இந்தியா ஊடுறுவி தாக்கியது ...மேலும் செய்திகளுக்கு பாகிஸ்தானின் அமைவிடம் பாகிஸ்தானின் லாகூர் நகரில் நேற்று வெள்ளிக்கிழமை ஒரே நாளில் இடம்பெற்ற பல குண்டுத் தாக்குதல்களில் குறைந்தது 45 பேர் உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர். மேலும் நூற்றுக்கும் அதிகமானோர் காயமடைந்தனர். முதலாவது தாக்குதல் லாகூரின் மையப் பகுதியில் ஆர்.ஏ. சந்தையில் இடம்பெற்றுள்ளது. இங்கு அடுத்தடுத்து 15 செக்கன் இடைவெளியில் இரண்டு குண்டுகள் வெடித்தன. இதில் 45 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களில் 9 பேர் இராணுவத்தினர். குண்டுதாரிகள் மோட்டார் உந்துருளியில் வந்து இராணுவ வாகனங்களை அண்மித்த போது தம்முடன் எடுத்து வந்திருந்த குண்டுகளை வெடிக்கச் செய்துள்ளதாக பஞ்சாபின் சட்டத்துறை அமைச்சர் ராணா சனவுல்லா தெரிவித்தார். இரண்டாவது தாக்குதல் காவல் நிலலயம் ஒன்றை இலக்காக வைத்து நடத்தப்பட்டது. இதில் குறைந்தது 4 பேர் இறந்துள்ளனர். இத்தாக்குதல்களுக்கு எவரும் உரிமை கோராவிடினும், தாலிபான்களே இதனைச் செய்துள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர். வெள்ளிக்கிழமை மேலும் பல குண்டுச் சத்தங்கள் நகரில் கேட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த திங்களன்று லாகூரில் இரகசியக் காவல்துறையினர் பயன்படுத்திய கட்டடம் ஒன்றின் மீது தலிபான்கள் நடத்திய தாக்குதலில் 13 பேர் கொல்லப்பட்ட்டனர். இத்தாக்குதலை அடுத்து, இராணுவம், மற்றும் அமெரிக்கப் படைகள் தம்மீதான தாக்குதல்களை நிறுத்தாவிடின் தாம் மேலும் 3,000 தற்கொலைக் குண்டுதாரிகளை நாடு முழுவதும் அனுப்ப விருப்பதாக தாலிபான்கள் அறிவித்திருந்தனர். மூலம்தொகு "Twin bomb attacks on Pakistani city of Lahore kill 45". மார்ச் 12, 2010 "Deadly attacks hit Pakistani city". மார்ச் 12, 2010 "Suicide bombers kill 45 people in Lahore attack". மார்ச் 12, 2010 இச்செய்தியைப் பகிர்க: "https://ta.wikinews.org/w/index.php?title=லாகூர்_தற்கொலைத்_தாக்குதல்களில்_45_பேர்_உயிரிழப்பு&oldid=48301" இருந்து மீள்விக்கப்பட்டது
முதல்வராக இருந்த ஜெயலலிதா இறந்த உடன் ஜெயாவுடன் 34 வருடம் இருந்த சசிகலா மீது சதி செய்ததாக ஆங்கில, தமிழ் ஊடகங்களும், நடுநிலை அறிவுஜீவிகளும் குற்றம் சாட்டினார்கள். அப்படியானால் இத்தனை வருடமாக நிர்வாக திறன் மிக்கவர்,சர்ச் பார்க்கில் படித்தவர்,பல அரிய ஆங்கில புத்தகங்கள் படித்தவர் என்றெல்லாம் பாராட்டப்பட்ட ஜெயலலிதா எப்படி சசிகலாவை தன் இல்லத்தில் வைத்து இருந்தார் என்ற கேள்வி ஏன் யாருக்கும் எழவில்லை. அதிமுகவிலும் தமிழக அரசியலிலும் பல்வேறு ஆடு புலி ஆட்டங்களை ஆடிக் கொண்டே இருக்கிறது டெல்லி. அதிமுகவில் ஜெயலலிதா சசிகலா திடீரென்று கட்சியை தன் கட்டுபாட்டுக்குள் கொண்டுவர பார்க்கிறார், மூத்த தலைவர்கள் இருக்கும் போது தன்னை முன் நிறுத்துகிறார் என்றெல்லாம் குற்றச்சாட்டு வைத்தார்கள். அப்படியென்றால் முதலில் ஜெயலலிதா மீது தான் அக்குற்றச்சாட்டை வைத்திருக்க வேண்டும்.1972இல் எம்ஜிஆரால் துவக்கப்பட்ட அதிமுகவில் ஜெயலலிதா 1982 இல் இணைந்தார்.1982 இறுதியில் முதல் பொதுக் கூட்டத்தில் பேசியவர் 1983 இல் கொள்கைபரப்பு செயலாளர் ஆக்கபட்டுள்ளார். அப்பொழுது அந்த கட்சியில் நாவலர் நெடுஞ்செழியன்,க.ராசாராம் ,பண்ருட்டி ராமசந்திரன், ஆர்.எம்.வீரப்பன் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் இருந்தார்கள் என்பதும் 1983 முதல் ஜெயலலிதாவுடன் சசிகலா இருக்கிறார் எனபதும் குறிப்பிடத்தக்கது. நீண்ட காலமாக சசிகலாவை தன்னுடன் வைத்திருக்கும் ஜெயா புனிதமானவராகவும் சசிகலா சதி செய்தவராகவும் உருவகபடுத்தப்பட ஒரு நூலிழை வித்தியாசம் தான் காரணம். ஜெயலலிதா என்கிற ஒரு முதல்வர் மரணத்தில் சதி என்றால் ஜெயலலிதா மருத்துவமனையில் சேர்க்கபட்டது முதல் இறந்த வரை நரேந்திர மோடி அரசு என்ன செய்து கொண்டிருந்தது?. மரணத்திற்கு பிறகு BBC யிலும் ஆங்கில ஊடகங்களிலும் சசிகலாவை நோக்கி கேள்வி எழுப்பிய என்.ராம் ஜெயா மருத்துவமனையில் இருந்த 75 நாட்களில் இந்திய அரசை நோக்கி என்ன கேள்வி எழுப்பினார்? என் ராமும் பிற ஆங்கில ஊடகங்களும் (நடிகை கவுதமி உட்பட )நரேந்திர மோடி அரசையும் அதன் அதிகார வர்க்கத்தையும் விட சசிகலா வலிமையானவர் அவர்களை எல்லாம் ஏமாற்றி விட்டார் என்று கூறுவார்கள் என்றால் அது முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் செயல் அல்லாமல் வேறு என்னவாக இருக்கமுடியும். 1998 இல் பாஜாகவில் சேர்ந்த கவுதமி முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின் அக்டோபர் 28 ஆம் தேதி பிரதமரை சந்தித்து நேரில் பேசுகிறார். அதற்கு சில நாட்கள் முன் காவேரி பிரச்சனை தொடர்பாக தமிழக எம்பிக்கள் பிரதமரை சந்திக்க முயற்சித்த போது சந்திக்க மறுத்தார் என்பதும் குறிப்பிடதக்கது.ஜெயாவின் மரணத்திற்கு பிறகு தீபா,கவுதமி ,காயத்ரி ரகுராம் ,கஸ்தூரி , மதுவந்தி என்று ஒரு பார்ப்பன பெண் பட்டாளமே ஊடகங்கள் முன்னால் நிறுத்தபட்டு அத்தனையும் காற்று போன பலூனாக மாறி போன கதை தமிழ் நாடறியும். ஜெயா மரணத்திற்கு பதில் சொல்லகூடியவர்கள் யார் ? அப்பலோ மருத்துவமனைக்கு அக்டோபர் 5 ஆம் தேதி வந்து 7 ஆம் தேதி வரை இருந்து மருத்துவம் பார்த்த ஏய்ம்ஸ் மருத்துவக்குழு , அக்டோபர் ஒன்றாம் தேதி வந்த தமிழக கவர்னர் ஆகியோர் சசிகலாவின் கட்டளைக்கு கட்டுப்பட்டவர்கள் இல்லை. மோடி அரசின் கீழ் வேலை செய்பவர்கள். மன்னார்குடி குடும்பம் இந்திய அரசை விட வலுவானதா? மன்னார்குடி குடும்பம் ’மாபியா’ என்றால், யாரையும் அனுமதிக்காமல் மறைத்து விட்டார்கள் என்றால், ஆளுநர் இங்கு என்ன செய்து கொண்டிருந்தார் என்று யோசியுங்கள். இந்தியாவில் தும்மியதற்கு எல்லாம் மாநில அரசுகள் கலைக்கபட்டிருக்கின்றன. சட்டம் ஒழுங்கை காரணம் காட்டி ஆட்சியை கலைப்பொம் என்று தமிழ் நாட்டை சு.சாமியும் மிரட்டி வந்திருக்கிறார். ஆளுநரை மீறி மன்னார்குடி குடும்பம் செயல்பட்டிருந்தால் அரசியல் அமைப்பு சட்டம் பிரிவு 365 மற்றும் 256ன்படி மாநில அரசு இந்திய அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிராக செயல்பட்டாலோ அல்லது அதன்படி நடக்க தவறினாலோ அந்த மாநிலத்தின் ஆளுநர் கேட்டுக்கொள்ளும் பட்சத்தில் ஜனாதிபதி அந்த மாநிலத்தின் ஆட்சியை கலைத்துவிட்டு ஆளுநர் ஆட்சியை அமல்படுத்த முடியும். ஆளுநர் தன் அதிகாரத்தை பயன்படுத்தியிருக்கலாமே ஏன் செய்யவில்லை? தமிழக அரசின் ஐபிஸ் அதிகாரிகள் எல்லாம் இந்திய அரசை மீறி சசிகலாவின் கட்டுப்பாட்டில் இருந்தார்கள் என்று கதை சொல்வார்கள் என்றால் இந்தியாவின் ‘ஐ.பி’ என்ற உளவுத்துறை கூடவா சசி கட்டுபாட்டில் இருந்தது. சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் எல்லாம் செய்யும் இந்திய அரசும் அதன் கமேண்டோ படையையும் மீறிய படை ஒன்று சசிகலாவிடம் இருந்ததா என்ன? லண்டன் ரிச்சர்ட் செப்டம்பர் 30ஆம் தேதியும் அக்டோபர் 4,13,23,24 ஆகிய நாட்களில் சென்னையில் இருந்து ஜெயலலிதாவிற்கு மருத்துவம் செய்துள்ளார் செப் 22 முதல் ஜெயாவின் சிகிச்சைக்குள் வந்த எய்ம்ஸ் மருத்துவர்கள் மத்திய அமைச்சர்கள், மாநில கவர்னர், லண்டன் டாக்டர் ரிச்சர்ட், இவர்களை தான் முதலில் கேள்விக்கு உட்படுத்த வேண்டும். முதல்வர் ஜெயலலிதாவிற்கு உடல் நிலை மிகவும் மோசமடைந்ததாக சொல்லப்பட்ட டிசம்பர் 4 ஆம் தேதி இரவே மும்பையில் இருந்த ஆளுநர் வித்யாசாகர் ராவ் அப்பல்லோ வந்தார். முதல்வருக்கு எய்ம்ஸ் மருத்துவர் குழு அக்டோபர் 5ஆம் தேதி முதல் 7ஆம் தேதி வரை சென்னையில் இருந்தும் மருத்துவம் பார்த்துள்ளனர். மேலும் எய்ம்ஸ் மருத்துவர்கள் முதல்வர் இறந்த டிசம்பர் 5 ஆம் தேதி மாலை 4.30 மணிக்கு அப்பலோ வந்து பார்வையிட்டுள்ளனர். அவர்கள் இந்திய சுகதாரத் துறை அமைச்சர் நட்டாவின் மூலம் பிரதமரிடம் முதல்வரின் உடல் நிலை குறித்து தகவல் சொல்லி கொண்டே இருந்துள்ளனர். ஜெயலலிதா இறந்த அன்று மாலை 5.30 மணிக்கே வெங்கையா நாயுடுவும் வந்துவிட்டார். மருத்துவ மனையில் இருந்த போது வெங்கையா நாயுடுவும் அருண் ஜெட்லியும் பாஜக தலைவர் அமித்சாவும் வந்து பார்த்து விட்டு சென்றார்களே ஏன் அப்பொழுது எல்லாம் அவர்கள் இதை பேசவில்லை என்றும் கேளுங்கள். அப்பொழுது ஒரு சிசிடிவி கூட வேலை செய்யாமல் பார்த்து கொண்டது யாராக இருக்கும் ? உண்மையிலேயே ஜெயாவின் மரணத்தின் மர்மங்களுக்கெல்லாம் காரணம் யாராக இருக்க முடியும் என்பது தெள்ள தெளிவாக தெரிந்து கொள்ள முடிகிறது. ஜெயலலிதாவின் இறுதி ஊர்வலமும் அதன் பின் நடந்த அரசியலும் அடுத்த பாகத்தில் Leave a Reply Cancel reply Your email address will not be published. Required fields are marked * Comment Name * Email * Website Save my name, email, and website in this browser for the next time I comment. Post navigation Previous Previous post: சேகுவேரா, பிடல் கேஸ்ட்ரோ போன்ற புரட்சியாளர்களுக்கு முன்னோடியாக திகழ்ந்த ஹொசே மார்த்தி Next Next post: முத்துக்குமார் நெருப்பாய் வாழ்ந்தவன் Recent Posts மயிலாடும்பாறை ஆய்வுமுடிவுகளும் சிந்துவெளி நாகரிகமும் தமிழர்களின் வாழ்வியலில் எருமை – பாகம் 2 எருமை இழிவல்ல.. அது பெருமை பெரியாரின் மொழி குறித்த சிந்தனைச்சட்டகமும்; அதற்கான கடவுத்திறப்பும் – வே.மு.பொதியவெற்பன் பெரியாரும் தமிழியல் ஆய்வறிஞர்களும்: பாகம் 4 – வே.மு.பொதியவெற்பன் அதிகம் படிக்கப்பட்டவை 2000 ஆண்டுகளுக்கு முன்பு கொற்கை துறைமுகத்தில் நடந்த முத்து வணிகம் ஆரியர் வருகையும் ரிக் வேத காலமும் – பாகம் 1 தமிழ்நாட்டில் QUAD-ன் திட்டம்: யானை வருகிறது பின்னே மணியோசை வந்து சென்றிருக்கிறது முன்னே! தொ.பரமசிவன் அவர்கள் 5 முக்கியமான தலைப்புகளில் பேசிய காணொளிகள் மயிலாடும்பாறை ஆய்வுமுடிவுகளும் சிந்துவெளி நாகரிகமும் பெரியாரின் மொழி குறித்த சிந்தனைச்சட்டகமும்; அதற்கான கடவுத்திறப்பும் – வே.மு.பொதியவெற்பன் Trending உடன்கட்டை ஏற்றுதல் எனும் ஒரு பார்ப்பனிய ’சதி’! சமூக ஊடகங்களும் இளைஞர்களின் மனநலனும் கோரல் மில் – வ.உ.சி நடத்திய ஆசியாவின் முதல் தொழிற்சங்கப் போராட்டம் தமிழன் என்று சொல்லடா! தலை நிமிர்ந்து நில்லடா! என்று எழுதிய நாமக்கல் கவிஞர் பிறந்த நாள் இன்று பெரியாருக்கு ’பெரியார்’ எனும் பட்டத்தை வழங்கிய அன்னை மீனாம்பாள் Tags Corona history Photography அகழாய்வு அமெரிக்கா அருண்குமார் தங்கராஜ் ஆர்.எஸ்.எஸ் இடஒதுக்கீடு இந்துத்துவா இனப்படுகொலை இலங்கை உச்ச நீதிமன்றம் ஊடகங்கள் ஊடக சுதந்திரம் கல்வி காலநிலை மாற்றம் காவி அரசியல் கூட்டாட்சி கொரோனா சட்டமன்றத் தேர்தல் சத்தியராஜ் குப்புசாமி சாதி சிறப்பு பதிவு சென்னை செய்தித் தொகுப்பு டெல்லி தடுப்பூசி தமிழர் வரலாறு தமிழீழம் தொல்லியல் பஞ்சாப் பருவநிலை மாற்றம் பாஜக பாராளுமன்றம் பெண்கள் பெரியார் பொதியவெற்பன் மருத்துவம் மாநில சுயாட்சி மோடி வரலாறு விடுதலைப் புலிகள் விவசாயம் விவசாயிகள் விவசாயிகள் போராட்டம்
ஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள் Friday, April 13, 2018 அறிவும் சாரமும் ஜெ இமைக்கணத்தின் இப்பகுதி Epistemology சார்ந்த கேள்விகளையே பெரும்பாலும் கையாள்கிறது. அறிவது எப்படி? அறிவதன் பிரச்சினைகள் என்ன? அறிவிலுள்ள மாயை என்ன? ஏன் அறியவேண்டும்? அறிவதனால் மகிழ்ச்சி உண்டா? ஐயமில்லாமல் அறியமுடியுமா? அறிவு என்பது சாத்தியம்தானா? தானற்ற அறிவு என ஒன்றுண்டா? திரும்பத்திரும்ப இக்கேள்விகளுக்கான விடையாகவே இதுவரை வந்துகொண்டிருக்கிறது. இன்னொருபக்கம் Ontology சார்ந்த ஒரு விளக்கம். அது இவையனைத்துக்கும் விடையாக சொல்லப்படுகிறது. அறிவின் இயல்பு சார்ந்த கேள்விகள் வந்தபின்னர்தான் சாராம்சம் சார்ந்ததும் இருப்பியல் சார்ந்ததுமான கேள்விகளுக்கு இந்த விவாதம் செல்லும் என நினைக்கிறேன். கர்ணன் பீஷ்மர் சிகண்டி விதுரர் நால்வர் கேட்பதும் அறிவின் இயல்பைப்பற்றிய கேள்விகளைத்தான். ஒரு ஸ்பிரெட் ஷீட்டில் அந்தக்கேள்விகளையும் அதற்கான பதில்களையும் அறிவின் இயல்பு பற்றிய நிர்ணயங்களையும் தனியாக எடுத்து எழுதி வைத்தேன்
ஆயுதம் என்பதன் உண்மையான பயனை உணர்த்தத்தான் ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது. வருடம் முழுவதும் நமக்காக நம் முன்னேற்றத்திற்க்காக பயன்படுத்தப்படும் இயந்திரங்கள், வாகனங்கள், பொருட்களுக்கு இந்த ஒரு நாள் நாம் நன்றி சொல்வது தான். ஆயுத பூஜை அன்று செய்யும் தொழில் நன்கு விருத்தி அடைவதற்காக தங்கள் தொழிலுக்கு பயன்படுத்தப்படும் கருவிகள், இயந்திரங்கள், ஆயுதங்கள், இசை கருவிகள் போன்ற பொருட்களை நன்கு சுத்தப்படுத்தி பூஜை செய்வார்கள். ஆயுத பூஜை நவராத்திரியின் 9ம் நாள் கொண்டாடப்படுகிறது. *#வழிபடும்_முறை :* அன்றைய நாள் வீடு, கடைகளை சுத்தம் செய்ய வேண்டும். சுத்தம் கடவுளின் இருப்பிடமாகும். அன்றைய நாள் வாகனங்களையும் சுத்தம் செய்தல் அவசியம். தங்கள் தொழிலுக்கு பயன்படுத்தப்படும் கருவிகள், இயந்திரங்கள், ஆயுதங்கள் போன்றவற்றை சுத்தம் செய்தல் வேண்டும். சுத்தம் செய்த பின் அவற்றிற்கு பூஜை செய்ய வேண்டும். தங்கள் தொழிலுக்கு பயன்படுத்தப்படும் ஆயுதங்களை கடவுளாக எண்ணி பூஜை செய்ய வேண்டும். பூஜையின்போது பொரி, பழங்கள், பேரீச்சம்பழம் போன்றவற்றை நைவேதினமாக படைத்து வழிப்படலாம். *#ஆயுதபூஜை_சிறப்பு :* செய்யும் தொழிலே தெய்வம். நாம் செய்யும் தொழிலுக்கு உதவிகரமாக இருக்கும் ஆயுதங்களை கடவுளாக போற்றி வணங்குவது ஆயுத பூஜையின் நோக்கமாகும். ஆயுத பூஜையன்று, ஆக்கப்பு ர்வமான காரியங்களுக்கு மட்டுமே ஆயுதங்களை பயன்படுத்துவோம் என்று உறுதி கொள்ள வேண்டும். #சரஸ்வதி_பூஜை கல்வி அறிவைத் தந்து நம்மை வல்லவர்களாக்கும் சக்தி படைத்தவள் சரஸ்வதி தேவி. கலைவாணியான சரஸ்வதி தேவியை பிரதானமாகக் கருதி, ஆராதனை செய்து வணங்கும் நாள் தான் சரஸ்வதி பூஜை. : சரஸ்வதி தேவியை வணங்குவதன் மூலம் கல்விச்செல்வம் பெருகும். குழந்தைகளின் கல்வி சிறந்து விளங்க சரஸ்வதி தேவியை வணங்க வேண்டும். *#வழிபாடு_முறை :* சரஸ்வதி பூஜை அன்று அதிகாலை வீட்டை சுத்தம் செய்து, நீராடுவதை முடித்து விட வேண்டும். ஒரு சிறிய மேஜையில் சரஸ்வதி படம் அல்லது மஞ்சள், சந்தனத்தில் செய்த முகம் வைக்க வேண்டும். படத்திற்கு அருகம்புல், மலர்மாலைகள் அணிவிக்க வேண்டும். மேஜையின் மேல் புத்தகங்களை அடுக்கி, படத்தின் முன் இலை விரித்து, வெற்றிலை பாக்கு, பழம், பொரி, சுண்டல், சர்க்கரைப் பொங்கல் ஆகியவற்றைப் படைக்க வேண்டும். அதன் பிறகு சரஸ்வதி தேவிக்கு நெய்தீபம் காட்டி வழிபாடு செய்ய வேண்டும். சிறு குழந்தைகளுக்கு பிரசாதம், கல்வி உபகரணங்கள் போன்றவற்றை கொடுக்க வேண்டும். மறுநாள், காலையில் புதிதாக இலைபோட்டு வெற்றிலை பாக்கு, பழம், பொரி படைத்து பூஜை செய்த பின் சரஸ்வதி படத்தை எடுத்து விட வேண்டும். மஞ்சள் அல்லது சந்தனத்தில் முகம் வைத்திருந்தால் அதை நீர்நிலையில் கரைத்து செடிகளுக்கு ஊற்றலாம். *#சரஸ்வதி_பூஜையின்_சிறப்பு :* நவராத்திரி நாட்களில் அன்னையின் அருள்பெற ஒன்பது நாட்களும் விரதமிருந்து பூஜிக்க இயலாதவர்கள் சரஸ்வதி பூஜையன்று மட்டும் அம்மனை பூஜித்து வணங்கினால் அம்பிகையின் அருள் பூரணமாய் கிடைக்கும் என்பது நம்பிக்கை. கல்வி, கலைகளில் தேர்ச்சி, ஞானம், நினைவாற்றல் போன்றவை வேண்டி கலைமகளை பிரார்த்திக்கும் திருநாளாகும்... Share Get link Facebook Twitter Pinterest Email Other Apps Share Get link Facebook Twitter Pinterest Email Other Apps Comments Post a Comment Popular posts from this blog வாணர் குல அரசர்கள் By Kulandaivelu cholagar January 04, 2018 வாணர் குல அரசர்கள். தென்னிந்திய வரலாற்றில் பல்லவர், சோழர், சேர, பாண்டியர் வரிசையில் போர்க்குடியாகவும்,புகழ் பெற்ற மன்னர்களாகவும் ஆட்சி செய்த குடிகளில் மிகவும் முக்கியமான குடிகள் வாணர் எனவும் அழைக்கப்படும் மகாபலியின் வம்ச குடியினரே ஆவார்கள். வாணர் என்றால் மலையர் என்ற மலையாளும் மன்னர் குடியாக கொள்ளப்படுகின்றது.. சேரனை சங்க இலக்கியத்தில் மலையன் என்றும் வானவன்(மலையர்) என்றும்.வானவரம்பன்(சேரன்) மலைகளை எல்லையாக கொண்டவன் என்று கூறுகின்றது.ஆக தென்னாடு முழுவதும் விந்திய மலை முதல் தென் மலையான பொதிகை,மேற்கு தொடர்ச்சி மலை பகுதி வரை மகாபலி வம்சத்தவர்களான வாணர்(மலையர்) என்ற மன்னர்களே ஆண்டுள்ளனர். இதற்கு ஆதாரமாக. "தென்புல மருங்கின் விண்டு நிறைய வாணன் வைத்த விழுநிதி பெறினும் பழிநமக் கெழு வெண்ணாய் விழுநிதி" (அடி 202 - 204 மதுரைகாஞ்சி) - எனக் குறிப்பிடுகிறது. இவ்வரிகளில் குறிக்கும் தென்புலம் என்பது இந்தியத் திருநாட்டிற்கு தென்புறம் தடுப்புச்சுவர் போல் உள்ள விந்திய மலையாகும். இது தக்காணம், தஷ¤ணபாதம், தக்கண பாதம் எனவும் வட மொழியில் அழைக்கப்படுகின்றன.இதில் இருந்து விந்திய மலையிலிருந்து கு Share Get link Facebook Twitter Pinterest Email Other Apps Post a Comment Read more உலகெலாம் உணர்ந் தோதற் கரியவன் By Kulandaivelu cholagar June 11, 2014 உலகெலாம் உணர்ந் தோதற் கரியவன்; நிலவு லாவிய நீர்மலி வேணியன், அலகில் சோதியன் அம்பலத்தாடுவான்; மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்.------சேக்கிழார் அருளிய திருத்தொண்டர் புராணம் என்ற பெரிய புராணம் Share Get link Facebook Twitter Pinterest Email Other Apps Post a Comment Read more பறவை நாச்சியார் By Kulandaivelu cholagar July 08, 2017 அவள் பெயர் பரவை, சுந்தரரின் மனைவி பெயரையே கொண்டவள். திருவாரூர் தியாக விடங்கர் (தியாகராஜர்) கோயிலில் தொண்டு புரிந்து வந்தவள். இவளின் பேரழகும், சைவத் தொண்டுகளும் மாமன்னன் கங்கை கொண்ட ராஜேந்திர சோழனை மிகவும் கவர்ந்தன. எத்தனை போரில் ஈடுபட்டு, எத்தனை உயிர்களை பரித்தவனாக இருந்தாலும் அவனும் ஆண் தானே? உடனே அவளை காதலிக்கத் துவங்கினான் ராஜேந்திரன். பல நூறு வருடங்களாக செங்கல் கட்டுமானமாகவே இருக்கும் திருவாரூர் கோயிலை கற்றளியாக மாற்ற வேண்டும் என்பது பரவையின் ஆசை, இதை ராஜேந்திரனிடன் கூறுகிறார் பரவை. அவளை மிகவும் நேசித்த ராஜேந்திர சோழன் அவளின் வேண்டு கோளுக்காகத் தியாகராஜரின் திருக்கோயிலைக் கருங்கல் கொண்டு எடுத்து கற்றளியாகப் புதுப்பிக்கிறான். அவனின் 16-18ம் ஆண்டுகளில் வீதிவிடங்கனின் கோயில் கற்கோயிலாக மாற்றப்பெற்றது. கற்றளி மட்டும் போதாது, இந்த கோயிலை பொற் கோயிலாகவே மாற்ற வேண்டும் என்று பரவை ராஜேந்திரனிடம் கேட்டாள். காதலி பேச்சுக்கு மறு பேச்சு ஏது? உடனே ராஜேந்திரன் கோயிலை உள்ளும் புறமும் தங்கத்தகடுகள் போர்த்தி அழகு செய்தான். முகமண்டபம், தூண்கள் ஆகியவற்றை செம்புத் தகடுகளால் அலங்கரித்தான். 18ம் ஆ
பெங்களூரில் என் தம்பிக்கு பெரிய நண்பர் குழாம் இல்லை. இங்கு மட்டுமில்லை எங்குமே அவனுக்கு அப்படித்தான். கல்லூரியில் எப்படி இருந்தான் என்று தெரியவில்லை. அவன் நண்பர்கள் என்று சொல்லிக் கொண்டு யாருமே எங்கள் வீட்டுக்கு வந்ததில்லை. அப்படியானவன் இங்கு அலுவலகத்தில் ஒரு நண்பரைப் பிடித்துவிட்டான். ராகுல். உத்தரப்பிரதேசத்துக்காரர். அவ்வப்போது வீட்டுக்கும் வந்திருக்கிறார். ராகுல் இங்கு வந்து சில வருடங்கள் ஆகிவிட்டது. இங்கு என்றால் பெங்களூரைச் சொல்கிறேன். வந்த இடத்திலேயே ஒரு கன்னடப் பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். யாரும் அரிவாள் எடுத்துத் துரத்தவில்லை போலிருக்கிறது. மாறாக பெண் வீட்டார் ஒரு வீடு வாங்கிக் கொடுத்து சந்தோஷமாக இருக்கச் சொல்லிவிட்டார்கள். இதெல்லாம் நடந்து நான்கைந்து வருடங்கள் ஓடியாகிவிட்டது. நான்கைந்து வருடங்கள் சந்தோஷமாக ஓடினால் மூன்று வயதிலாவது ஒரு குழந்தை இருக்கக் கூடும் அல்லவா? ராகுலுக்கும் அப்படித்தான். மூன்றரை வயதில் குழந்தை. பையன். உத்தரப்பிரதேசமும், கர்நாடகமும் நல்ல காம்பினேஷன் என்பதற்கு அந்தக் குழந்தைதான் அத்தாட்சி. ஒரு முறை எங்கள் வீட்டிற்கு அழைத்து வந்திருந்தார்கள். அட்டகாசம் செய்துவிட்டான். ஒரு பென்சிலை எடுத்துக் கொண்டு வீட்டு ஹாலில் ஒரு படம் வரைந்தே தீருவேன் என்று அழிச்சாட்டியம் செய்து கொண்டிருந்தான். நமது குழந்தையாக இருந்தால் நான்கு சாத்து சாத்தலாம். அந்தப் பையனை என்ன செய்வது? வரைந்துவிடுவானோ என்று பல்லைக் கடித்துக் கொண்டே பம்மிக் கொண்டிருந்தேன். பையனின் லோலாயத்தைத் தாங்க முடியாமலே இருபது நிமிடத்தில் கிளம்பிவிட்டார்கள். இந்த விவகாரம் நடந்து மூன்று மாதங்கள் ஆகிவிட்டன. சமீபத்தில் ராகுலைப் பார்த்தேன். அடுத்த வருடம் பையனை எந்தப் பள்ளியில் சேர்க்கலாம் என்பதை விசாரிப்பதற்காக கொஞ்ச நாட்களுக்கு முன்பாக ராகுல் வந்திருந்தார். எங்கள் வீட்டிற்கு அருகிலேயே ஒரு பள்ளி இருக்கிறது. கொஞ்சம் காஸ்ட்லி. ஆனால் ராகுல் விண்ணப்பத்தை வாங்கிக் கொண்டார். அவரே தினமும் காலையில் பையனை பள்ளியில் விட்டுவிடுவதாகவும், மாலையில் மனைவி வந்து மகனை பள்ளியிலிருந்து அழைத்துக் கொள்ள திட்டமிட்டிருப்பதாகச் சொன்னார். ‘பையன் எப்படியிருக்கிறான்?’என்று கேட்ட போது சிரித்தார். அந்த சிரிப்பை ‘தூள் கிளப்புகிறான்’என்று அர்த்தப்படுத்திக் கொள்ளலாம். அப்படியானதொரு மந்தகாச சிரிப்பு. இந்த காஸ்ட்லி பள்ளியின் செலவு ராகுலுக்கு கட்டுபடியாகும் என்பதை விடவும் பையனுக்காக என்ன செய்யவும் தயாராக இருந்தார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். ராகுலின் வீட்டில் இரட்டைச் சம்பளம் இல்லை. ஒரு மாட்டு வண்டிதான். ஆனாலும் பையனுக்காக கணவனும் மனைவியும் உருகுகிறார்கள். பெற்ற பிள்ளை மீது யாருக்குத்தான் பாசம் இருக்காது? சிலருக்கு அதை வெளிக்காட்டத் தெரிகிறது. சிலருக்குத் தெரிவதில்லை. அவ்வளவுதான் வித்தியாசம். ஞாயிற்றுக்கிழமை பெங்களூர் வந்திருந்த ஜெயமோகனை பார்த்துவிட்டு- பார்த்துவிட்டு என்பதுதான் சரியான பதம்-பேசவெல்லாம் இல்லை- வீட்டில் தம்பி இல்லை. அந்த நேரத்தில் அவன் வெளியே போவதில்லை. என்னவென்று விசாரித்தால் ராகுல் வீட்டிற்கு சென்றிருப்பதாகச் சொன்னார்கள். வீட்டில் சற்று அமைதி நிலவியது. வீட்டிற்குள் நுழைந்தவுடன் கெட்ட செய்திகளைச் சொல்ல மாட்டார்கள் அல்லவா? அன்றும் அப்படித்தான். சிறிது நேரத்திற்கு பிறகாகச் சொன்னார்கள். ‘காலையிலிருந்து ராகுலின் மகனைக் காணவில்லை’. இதுதான் அந்தக் கெட்ட செய்தி. அதிர்ச்சியாக இருந்தது. அவ்வளவு எளிதில் கிரகித்துக் கொள்ள முடியவில்லை. விவகாரம் பெங்களூரில் நடக்கவில்லை. ராகுலின் மாமியார் தனது பேரனுடன் சம்பந்தி வீட்டிற்கு சென்றிருக்கிறார்கள். சம்பந்தி வீட்டார் உத்தரபிரதேசம் என்றாலும் இப்பொழுது போபாலில் இருக்கிறார்கள். காலை நேரத்தில் பக்கத்தில் இருக்கும் கடைக்கு தனது பாட்டிகளுடன் சென்றிருக்கிறான். சாக்லெட் ஒன்றை வாங்கிக் கொடுத்துவிட்டு பாட்டிகள் காய்கறி பொறுக்கிக் கொண்டிருந்திருக்கிறார்கள். சில நிமிடங்கள்தான். திரும்பிப் பார்த்த போது கடை வாசலில் நின்று கொண்டிருந்த சிறுவன் மாயமாகிவிட்டான். காலையிலிருந்து சல்லடை போட்டுத் தேடியும் தடயம் எதுவும் கிடைக்கவில்லை. சாக்கடைகள், குழிகள் என ஒவோரு இடமாக பார்த்திருக்கிறார்கள். ஒரு கட்டத்திற்கு மேல் தாங்களாகவே தேடுவதில் பயன் இல்லை என்பதால் மதியத்தில் காவல் நிலையத்திற்கு சென்றிருக்கிறார்கள். அவர்கள் தேடியும் பையனைப் பற்றிய தகவல் இல்லை. ராகுலின் மனைவியிடம் மதியத்தில் தகவலைச் சொல்லியிருக்கிறார்கள். எந்த அம்மாவினால்தான் தாங்கிக் கொள்ள முடியும். சுருண்டு விழுந்து நினைவிழந்துவிட்டார். ராகுலின் நிலைமை அதைவிடக் கொடுமை. மயக்கமாகிக் கிடந்த மனைவியை பார்ப்பதா குழந்தையைப் பற்றி விசாரிப்பதா எனத் தெரியாமல் கதறியிருக்கிறார். அன்றைய தினம் கருப்பு தினமாகிவிடும் என்று நினைத்துக் கூட பார்த்திருக்க மாட்டார்கள் கணவனும், மனைவியும். அடுத்த சில மணி நேரத்தில் தகவல் தெரிந்து நண்பர்கள் குவியத் தொடங்கிவிட்டார்கள். எந்த நண்பர்தான் வந்து என்ன செய்ய முடியும்? ராகுலின் மனைவியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்கள். போபால் கிளம்புவதற்கான ஆயத்தங்களை செய்யத் துவங்கியிருக்கிறார்கள். அவர்கள் கிளம்பிக் கொண்டிருந்த போதுதான் தம்பி அங்கே போயிருக்கிறான். அவசர அவசரமாக உணவை முடித்துவிட்டு நான் சென்ற போது ‘கால் டாக்ஸி’ அவர்களை அழைத்துச் சென்றிருந்தது. நண்பர்கள் கூட்டம் மெதுவாக கலைந்து கொண்டிருந்தது. ராகுலுக்கும் அவரது மனைவிக்கும் ஆறுதல் சொல்லவாவது ஒரு கூட்டம் இருக்கிறது. அந்தக் குழந்தையை நினைத்தால்தான் கொடுமை. துக்கத்தை அடக்க முடியவில்லை. எவ்வளவு அழுதிருக்கும்? அந்த அழுகையை அடக்க என்னவெல்லாம் செய்து கொண்டிருப்பார்கள் கடத்திப் போன சில்லரைகள்? ஏதோ ஒரு பொறுக்கியிடம் அந்தப் பிஞ்சுக் குழந்தை அனுபவிக்கும் கொடுமையை யோசிக்கக் கூட முடியவில்லை. அந்த ஞாயிற்றுக்கிழமையின் இரவை எப்படி கழிப்பது என்றே தெரியவில்லை. பூட்டப்பட்டிருந்த அந்த வீட்டை பார்த்துவிட்டு பைக்கை கிளப்பினேன். வீட்டுக்கு முன்பாக அந்தக் குழந்தையின் ஒரு சோடி செருப்பு இறைந்து கிடந்தது. இன்று காலை வரை குழந்தை கிடைக்கவில்லையாம். மூன்றாவது நாள் இன்று. இனி அந்தக் குழந்தை கிடைக்குமா என்பது சந்தேகமாக இருக்கிறது. இரண்டு நாட்களாக வேறு எதுவும் யோசிக்க முடியவில்லை. இனி அந்தக் குழந்தை வந்தால் வீடு முழுக்க கிறுக்கினாலும் கூட கவலைப் படக் கூடாது என்று ஒரு கணம் தோன்றியது. ஏன் என்று தெரியவில்லை. Share This: Facebook Twitter Google+ Stumble Digg Email ThisBlogThis!Share to TwitterShare to Facebook Newer Post Older Post கேள்வியும் பதிலும் vaamanikandan.Sarahah.com தொடர்புக்கு.. விவரங்கள் இணைப்பில் இருக்கின்றன. நிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்) நிசப்தம் App (for Apple) கல்வி உதவிக்கான விண்ணப்பம் விண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும். Subscribe To Posts Atom Posts Comments Atom Comments அறக்கட்டளை Account Number: 05520200007042 Account Holder Name: Nisaptham Trust Account Type: Current Bank : Bank Of Baroda State : Tamil Nadu District : Erode Branch : Nambiyur IFSC Code : BARB0NAMBIY (5th character is zero) SWIFT Code: BARBINBBCOI Branch Code : NAMBIY (Last 6 Characters of the IFSC Code) City : Nambiyur பேச்சு மற்றும் நேர்காணல்கள் அறக்கட்டளை- தன்னார்வலர்கள் அறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.
பாலிவுட்டின் பிரபல இயக்குனர் அனுராக் காஷ்யப்.. தென்னிந்திய மொழிப்படங்களை தொடர்ந்து கவனித்து வருபவர். அப்படிப்பட்டவர் சமீபத்தில் வெளியான பாலாவின் நாச்சியார் பட டீசரில் ஜி.வி.பிரகாஷை... எதிர்பார்ப்பை அதிகரிக்க வைத்த ‘இமைக்கா நொடிகள்’ முதல் பார்வை..! செய்திகள் / May 17, 2017 /No Comment அதர்வா, நயன்தாரா நடிக்கும் ‘இமைக்கா நொடிகள்’ படத்தை ‘டிமாண்டி காலனி’ புகழ் அஜய் ஞானமுத்து இயக்கிவருகிறார்.. இந்தப்படத்தில் போலீஸ் அதிகாரி வேடத்தில் நயன்தாரா நடித்துவருகிறார்..... நயன்தாராவுக்கு வில்லனை உருவாக்கிய ஏ.ஆர்.முருகதாஸ்..! செய்திகள் / October 9, 2016 /No Comment அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அதர்வா நடிக்கும் 'இமைக்கா நொடிகள்' படத்தில், அதர்வாவுக்கு ஜோடியாக அல்லாமல், ஆனால் அதேசமயம் முக்கிய கதாபாத்திரத்தில் நயன்தாரா நடித்து வருகிறார்...
ரத்தத்தில் /உள்ள சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவதிலும், ரத்த அழுத்தத்தை மேம்படுத்துவதிலும் கீரை ஜூஸ் முக்கியப் பங்கு வகிப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. கீரை போன்ற பச்சை இலை காய்கறிகள் டைப் 2 நீரிழிவு நோயாளிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று புதிய ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன என்றார். நீரிழிவு நோய் என்பது ரத்த குளுக்கோஸ் அல்லது சர்க்கரை அளவு இயல்பை விட அதிகமாக அதிகரிக்கும் நிலையாகும்.டைப் 2 நீரிழிவு நோய், அடிக்கடி சிறுநீர் கழிப்பது, தொடர்ந்து தாகம் எடுப்பது, அதீத சோர்வு மற்றும் கண்கள், பாதங்கள், நரம்புகள் மற்றும் இதயத்தில் ஏற்படும் பிற நாள்பட்ட சிக்கல்கள் போன்ற அறிகுறிகளைத் தூண்டும். ஆரோக்கியமான உணவை உட்கொள்வது ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும் சிறந்த வழிகளில் ஒன்றாகும். பழங்கள் மற்றும் காய்கறிகளின் கலவையானது வகை டைப் 2 நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்தது. மேலும்,ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ள முட்டைக்கோஸ், கீரை போன்ற காய்கறிகள் டைப் 2 நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் நல்லது இதில் தடுப்பது எப்படி? உணவுகள் பக்வீட், கீரை, ப்ரோக்கோலி, காலே, இலவங்கப்பட்டை, கிராம்பு, ஓக்ரா, வெந்தயம், மஞ்சள் மற்றும் முனிவர் போன்ற பச்சை இலை காய்கறிகள் அனைத்தும் வகை 2 நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்தது. எடை கட்டுப்பாடு எடையைக் குறைக்கும் முயற்சி, நீரிழிவு நோயை திறம்பட நிர்வகிக்க உதவும். நொறுக்குத் தீனிகள், பதப்படுத்தப்பட்ட மற்றும் வறுத்த உணவுகளை சாப்பிடும் பழக்கங்களை விட வேண்டும். தவறாமல் உடற்பயிற்சி செய்து, சுறுசுறுப்பாக இருப்பதும் மிகவும் அவசியம் எனவே நல்ல தூக்கம் தூக்கமின்மையானது பசி மற்றும் நொறுக்குத் தீனிகள் மீதான ஏக்கத்தை அதிகரிக்கும். இவை அனைத்தும் ரத்தத்தில் சர்க்கரை அளவை திடீரென அதிகரிக்கலாம். குறிப்பாக டைப் 2 நீரிழிவு நோய்க்கு தீங்கு விளைவிக்கும். உணவு இன்டெர்மிட்டென்ட் ஃபாஸ்டிங் என்பது ஒரு நபர் ஒரு வாரத்தில் ஒரு குறிப்பிட்ட நாளில் அல்லது ஒவ்வொரு நாளும் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மணிநேரங்களில் உண்ணாவிரதம் இருப்பது தான். ஒரு நாள் முழுவதும் அல்லது ஒரு நாளின் ஒரு குறிப்பிட்ட நேரத்தை நீங்கள் தேர்வு செய்துக்கொள்ளலாம் என்று கூறினார். பொதுவான இன்டெர்மிட்டென்ட் ஃபாஸ்டிங் என்பது, இரவு 7 அல்லது 8 மணிக்குள் நைட் டின்னரை முடித்துவிட்டு, அடுத்த நாள் காலை வரை உண்ணாவிரதம் இருப்பது ஆகும். குறைந்தது 12 நேரம் மணிநேரம் எதுவும் உட்கொள்ளாமல் இருக்க வேண்டும். இது, டைப் 2 நீரிழிவு நோயை மாற்றியமைக்க உதவும் என கருதப்படுகிறது மற்றும் குறைந்த கிளைசெமிக் இண்டெக்ஸ் (ஜிஐ) எனவே நீரிழிவு நோயாளிகள் தங்கள் உணவில் குறைந்த ஜிஐ உணவுகளை அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும். குறைந்த ஜிஐ உணவுகளான குயினோவா, ஓட்ஸ், ஆரஞ்சு, சீமை சுரைக்காய், பருப்பு மற்றும் உலர்ந்த பாதாமி போன்ற உணவுகள் வகை 2 நீரிழிவு நோயாளிகளுக்கு உதவியாக இருக்கும் என பரிந்துரைக்கப்படுகிறது என்று கூறினார். பகிரவும்: Facebook WhatsApp Email Twitter பசுமை விவசாயம் என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்
தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு நீண்ட முடக்கத்திற்கு பின்னர் தேர்தல் நடைபெற்றதை வரவேற்பதாக, தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் பாரதிராஜா தெரிவித்துள்ளார். 16 Oct 2020 1:35 PM GMT "தமிழ் இனத்திற்கு எதிரானவனாக சித்தரிப்பது வேதனை அளிக்கிறது" தமிழ் இனத்திற்கு எதிரானவனாக தன்னை சித்தரிப்பது வேதனை அளிப்பதாக முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார். 15 Oct 2020 5:40 PM GMT (15/10/2020) ஆயுத எழுத்து - முரளிதரன் எதிர்ப்பு : உணர்வா ? அரசியலா ? (15/10/2020) ஆயுத எழுத்து - முரளிதரன் எதிர்ப்பு : உணர்வா ? அரசியலா ? - சிறப்பு விருந்தினர்களாக : ராதாகிருஷ்ணன், பத்திரிகையாளர் // கோபி சிவந்தன், தமிழ் கூட்டமைப்பு-லண்டன் // கஸ்தூரி, நடிகை // கல்யாணசுந்தரம், தமிழ்தேசிய ஆதரவாளர் << PREVIOUS NEXT >> அதிகம் வாசிக்கப்பட்டவை We use cookies for analytics, advertising and to improve our site. You agree to our use of cookies by continuing to use our site. To know more, see our Cookie Policy and Cookie Settings.Ok
அரசு இலவச பேருந்தில் பயணம் செய்யும் பெண்களை தரக்குறைவாக நடத்தக் கூடாது என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், எதிர்வரும் மழை நேரங்களில் போக்குவரத்து பாதிப்பு இல்லாமல் பேருந்துகள் இயக்கத்தை முறையாக நடத்த கூட்டத்தில் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. கொரோனாவிற்கு பிறகு அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது. இதனை கணக்கில் கொண்டு கூடுதலாக மாணவர்கள் பயணிக்க தேவையான பேருந்து வசதிகள் செய்து கொடுக்க அறிவுறுத்தல். நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள் சுற்றுலாதுறையுடன் இணைந்து புதிய வழித்தடங்களை கண்டறிந்து பேருந்துகள் இயக்கி வருவாயை பெருக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஆயுத பூஜையை முன்னிட்டு வரும் செப் 30 & அக்டோபர் 1ம் தேதி கூடுதலாக 2400 பேருந்துகள் இயக்கப்படும். தீபாவளிக்கு பொதுமக்கள் சொந்த ஊருக்கு செல்ல கூடுதல் பேருந்து வசதி செய்து கொடுக்கப்படும் என்று கூறினார். தொடர்ந்து பேசிய அவர், இலவசமாக பெண்கள் பயணிப்பது இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத திட்டமாகும். பெண்களை தரக்குறைவாக நடத்தக்கூடாது என்று அரசு பஸ் ஓட்டுநர், நடத்துநர்களுக்கு மேலாண் இயக்குநர்கள், கிளை மேலாளர்களின் மூலம் அறிவுரை வழங்குவார்கள். வெள்ளிக் கிழமை பயணம் தொடங்கும் போது ஆம்னி பேருந்து கட்டணம் குறைந்து இருக்கும். இதற்கான அறிவிப்பிற்காக காத்திருக்கிறோம். அவர்கள் இரண்டு நாட்கள் அவகாசம் கேட்டுள்ளார்கள் என தெரிவித்தார். தீபாவளி சிறப்பு பேருந்து அறிவிப்பு விரைவில் வரும். பேருந்து கட்டணம் ஏறவே ஏறாது என்று முதலமைச்சர் அறிவித்துள்ளார். பக்கத்து மாநிலங்களில் டீசல் விலை ஏறும்போதெல்லாம் பேருந்து கட்டணத்தை உயர்த்துவது நடைமுறையில் உள்ளது. சில மாநிலங்களில் போக்குவரத்து கழகங்களே கட்டணத்தை உயர்த்திக் கொள்கின்றன. பேருந்து கட்டணம் நிச்சயம் உயராது. அரசு பேருந்துகள் தற்போது இருக்கும் கட்டணத்திலேயே இருக்கும் என்று கூறினார். சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள். Advertisement: SHARE Diwali Special BusFree Busminister sivasankarTN Transport previous post ‘பனாரஸ்’ ஒரு வித்தியாசமான டைம் லைன் காதல் கதை next post மீண்டும் வரலாறு காணாத வீழ்ச்சியடைந்த இந்திய ரூபாய் மதிப்பு Related posts அதிமுக அலுவலக சாவி இபிஎஸ் தரப்புக்கே…உயர்நீதிமன்றம் EZHILARASAN D July 20, 2022 July 20, 2022 இந்தியாவில் புதிதாக 8,306 பேருக்கு கொரோனா உறுதி Halley Karthik December 6, 2021 December 6, 2021 வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் டெல்லி: மும்பையுடன் இன்று மோதல் EZHILARASAN D May 21, 2022 May 21, 2022 Search for: Search Recent Posts குஜராத் தேர்தல்; 89 தொகுதிகளில் இன்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் நிறைவு உலக கோப்பை கால்பந்து; அடுத்த சுற்று வாய்ப்பை தக்க வைத்த ஜெர்மனி அணி உலக கோப்பை கால்பந்து; நாக் அவுட் சுற்றுக்கு பிரேசில், போர்ச்சுக்கல் அணிகள் முன்னேற்றம் ’ஆளுநர் பதவி இல்லாமல் இருந்திருந்தால் ஆன்லைன் ரம்மியை என்றோ ஒழித்திருப்போம்’ – கனிமொழி எம்பி மீனாட்சியம்மன் கோயில் உண்டியல்- ரூ.1.04 கோடி வசூல் ’இந்த நாடு சனாதன தர்மம் உடையது’ – ஆளுநர் ஆர்.என்.ரவி Latest Tweets குஜராத் தேர்தல்; 89 தொகுதிகளில் இன்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் நிறைவு விவரம்: https://t.co/Ohx5T04QS6… https://t.co/YEvtxffJwe 29-11-2022 Reply Retweet Favorite மழைக்கு வாய்ப்பு Subscribe: https://t.co/d26JDkbNae | #TNRains | #ChennaiRains | #HeavyRains | #SchoolLeave |… https://t.co/f5tAAAqnOB 29-11-2022 Reply Retweet Favorite #BREAKING பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை #TNRains | #ChennaiRains | #HeavyRains | #SchoolLeave | #News7Tamil https://t.co/QoAQB7bvnT 29-11-2022 Reply Retweet Favorite #JUSTIN | 29 நவ 22 | 07:12Am நீலகிரி, ஈரோடு, கோவை, தேனி, தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர் மற்றும்… https://t.co/4BDCgBygAe 29-11-2022 Reply Retweet Favorite உலக கோப்பை கால்பந்து; அடுத்த சுற்று வாய்ப்பை தக்க வைத்த ஜெர்மனி அணி விவரம்: https://t.co/FDw3EpmlJ6 #FIFAWorldCup… https://t.co/uCqrf4AbGl
பெண்கள் நாம், முகக்கிரீம்களை வாங்குகிறபோது, எப்போதுமே ஒரு செட் ஆகத்தான் வாங்குவோம். அப்படித்தான் கிடைக்கும். Skin milk, toner and moisturiser. தனித்தனியே வாங்குவதைவிட மொத்தமாக வாங்குகிறபோது, விலையில் அதிக மாற்றம் இருக்கும். செலவைக் கொஞ்சம் குறைக்கலாம். கண்டிப்பாக, இந்த மூன்றும், முக ஒப்பனைக்கு அவசியத்தேவை. இவைகள் இல்லாமல் முகத்தை ஒண்ணும்பாதியுமாக அலம்பிவிட்டு, பவுடரையோ அல்லது பவுண்டெஷனையோ பூசிக்கொண்டால், சருமம் வறண்ட தோற்றத்தைத் தரும். வெப்பத்தின் தாக்கத்தை முகத்தின் தோல் ஏற்றுக்கொள்ளது, முகம் கருவடையும். இருந்தபோதிலும், இந்த மூன்று பொருட்களையும் செட் ஆக வாங்கிக்கொண்டு, அதில் அந்த skin milk மற்றும் moisturiser ’ஐ மட்டுமே தொடர்ந்து பயன்படுத்திவருவோம். toner ஐ மறந்துவிடுவோம். காரணம் toner போட மிருதுவான பஞ்சுவேண்டும். போட்டு சில நிமிடங்கள்வரை காத்திருந்து அந்தத் திரவம் காய்ந்த பின்பே மொட்சுரைசர் பின் பௌண்டேஷன் பூசவேண்டும். பரபரப்புச்சூழலில் ஓடிக்கொண்டிருக்கும் பல பெண்களுக்கு, அந்தத் தோனர் காய்கிறவரை பொறுமை காக்க மறுப்பதால், தோனரை ஒரு பொருட்டாகக் கருதாமல் தூக்கிப்போட்டு விடுவார்கள். இதனாலேயே பல தோனர் பாட்டல்களை அதனின் expiry date வந்தவுடன் தூக்கி வீசிவிடுவது பல பெண்களின் வழக்கம். நானும் பல தோனர் பாட்டல்களை பயன்படுத்தாமல் அப்படியே வீசியுள்ளேன். இப்போது அதற்கு அவசியம் இல்லை. அதாவது, முகத்தில் மேக் ஆப் போடுகிற பெண்கள், முகத்தை அலம்பி, skin milk கொண்டு தேய்த்து சுத்தம் செய்வார்கள். சிலவேளைகளில் அந்த ஸ்கீன் மில்க் முகத்தில் படிந்திருக்கின்ற மேக் ஆப்களை முழுவதுமாக அகற்றாது. அதனால் அகற்றவும் முடியாது, அதன் தன்மை வேறு. முகம் மேலோட்டமாகப் பார்ப்பதற்கு பளபளவென்று இருந்தாலும், அந்த மேக் ஆப்கள் ஏழு எட்டு மணிநேரம் முகத்தில் படிந்து இருக்கும். பார்த்தால் தெரியாது, டிஷ்யூ கொண்டு துடைத்தால், துடைக்கத் துடைக்க தெரியும். அப்படிப் படிந்திருக்கின்ற அந்த முக ஒப்பனைகளை முழுமையாகத் தூய்மை படுத்தாமல், இரவில் படுக்கச்சென்று, காலையில் எழுந்து மீண்டும் முகஒப்பனை செய்கிறபோது ஏற்கனவே ஒட்டியிருக்கின்ற பழைய மேக் ஆப் களோடு புதிய மேக் ஆப்களும் கலந்து முகத்தைப் பாழ்படுத்தும். இதற்காகவே சில பெண்கள், அதற்கென்றே இருக்கின்ற make up remover வாங்கி வைத்துக்கொண்டு அந்த ஒப்பனைகளைச் சுத்தம் செய்வார்கள். மேக் ஆப் ரிமூவரும் மலிவு அல்ல. அதிக விலைதான். நல்ல பொருட்கள் எப்போதுமே அதிக விலைதான். ஆக, இந்தத் தோனரை மேக் ஆப் பேஸ் ஆகப் பயன்படுத்த சோம்பல் படுகிறவர்கள், அதை make up remover ஆகப் பயன் படுத்தலாம். அலுவலகத்தில் இருந்து வீடு திரும்பிய பெண்கள், குளிப்பதற்கு முன், மிருதுவான பஞ்சுகளின் (cotton sponge) தோனரை நனைத்து, கண்மை, உதட்டுச்சாயம், பவுண்டேஷன், ஐ சேடோ போன்றவற்றை நன்கு துடைத்து எடுத்த பின், ஸ்கீன் மில்க் கொண்டு கழுவி சுத்தம் செய்யலாம். பார்ப்பதற்கு பளீச் சென்று இருக்கும். நீங்களும் அழகிகளே.. Posted by ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மி at 5/29/2014 2 கருத்துகள்: இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Twitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர் புதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு இதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom) ஆத்மாநாம் உண்மையத் தவிர வேறு எதுவும் இலக்கியமாக முடியாது charu nivedita இலக்கியம் என்பது சுயவிமர்சனத்தில் பிறக்கும் ஒரு கலை வெளிப்பாடு jeyamohan உங்களின் அனுபவங்களை தைரியமாகச் சொல்லுங்கள், நிச்சயம் அவை போல் வேறொன்று இருக்கவே முடியாது. Alvin Toffler `The illiterate of the 21st century will not be those who cannot read and write, but those who cannot learn,unlearn and relearn' Paulo Coelho Don’t try to innovate storytelling, tell a good story and it is magical. I see people trying to work so much in style, finding different ways to tell the same thing. It’s like fashion. Style is the dress, but the dress does not dictate what is inside the dress. பிரபலமான இடுகைகள் மாதவிடாய் மாதவிடாய் - இது பெண்களுக்கான பிரத்தியேக சலுகை. இயற்கையிலே அமையப்பெற்ற ஒரு வரன் என்றும் சொல்லலாம். காரணம் மாதவிடாய் நிற்கும்வரை ஒரு ப... விறால் மீன் விறால் மீன் பற்றிய சில தகவல்கள். விறால் மீன் பிடிப்பது கடினமான ஒரு வேலை. இருப்பினும் சுவாரிஸ்யமான ஒன்று என்கிறார்கள் அனுபவசாலிகள். ஒர... நீண்ட கூந்தல் அவசியமா? திருமணம் ஆகும் வரை எனது கூந்தல் மிக நீளமாகத்தான் இருந்தது. அடர்த்தியாக பட்டுபோல் பளபளப்பாக இருக்கும். அதே போன்று பளபளப்பாக எப்போதும் வைத்தி... அங்கோர் வாட் (சியாம் ரீப்) - பயணக்கட்டுரை நாம் ஏன் பயணம் செய்கிறோம்.? ஒன்று நமக்கு அனுபவம் கிடைக்கவேண்டும் என்பதற்காக, இரண்டாவது நாம் அனுபவித்ததை பிறரோடும் பகிர்ந்து ரசி... பிரசுரமான எனது படைப்புகள் எனது ( கிட்டத்தட்ட இருபது ஆண்டு கால அனுபவம்) எழுத்துலக பயணம், கற்கள் முட்கள் நிறைந்தவை. அப்படி என்னதான் செய்துவந்துள்ளோம்!? என எனக்குள் த... காலை சூரியன் (மாமிகதை) மாமிகதை.. தோல் எல்லாம் அரிப்புகண்டு மிக மோசமாகிவிட்டது மாமியின் உடல். எவ்வளவு அரிப்பு மருந்துகள் வாங்கியும், இலைகளைக்கொண்டு மூலிகை வைத்த... சாருவை சந்தித்தேன்.... நவம்பர் 20ஆம் தேதி, செவ்வாய்க்கிழமை, மலாயா பல்கலைக்கழகத்தில், தம்பி தயாஜி மற்றும் நவீன் அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற ஓர் அற்புத இலக்கிய ...
மஸ்கெலியா பெருந்தோட்டயாக்கம் தமது உறுதிமொழிகளை எழுத்துமூலம் வழங்கினால் போதாது அவை முழுமையாக அமுல்படுத்தப்படும்வரை ஒரு கைப்பிடி தேயிலையைக்கூட தொழிற்சாலையை விட்டு வெளியில் ஏற்றிச்செல்ல அனுமதியளிக்க மாட்டோமென இ.தொ.காவின் தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்தார். மஸ்கெலியா பெருந்தோட்டயாக்கத்துடன் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலில் பல உறுமதிமொழிகளை அவர்கள் வழங்கினர். “தோட்டத் தொழிலாளர் ஒருவர் முழு நாள் வேலை செய்தால் அவருக்கு 1,000 ரூபா சம்பளம் வழங்கப்பட வேண்டும். தொழிலாளி தமது முழுமையான பணியை 4 மணித்தியாலங்களில் முடித்தாலும் அவருக்கு முழுiயான சம்பளம் வழங்கப்பட வேண்டும். தொழிலாளி ஒருவர் முழுநாள் பணிபுரிந்து 20 கிலோ கொழுந்து அல்ல இரண்டு கிலோ கொழுந்தை பறித்தாலும் அவருக்கு நாட் சம்பளம் வழங்கப்பட வேண்டும். தேயிலை மலையில் கொழுந்து இருக்கின்ற அளவுதான் தொழிலாளர்களால் பறிக்க முடியும். ஓவ்வொரு நிலுவைக்கும் 2 கிலோ கொழுந்து கழிக்கப்படுகிறது. தினமும் 3 முறை நிலுவை பார்த்தால் 6 கிலோ கழிக்கப்படுகிறது. இனி அவ்வாறு செய்ய முடியாது. ஒரு கிலோ கொழுந்தைதான் நிலுவைக்கு கழிக்க முடியும். ஞாயிறு மற்றும் போயா தினங்களில் தொழிலாளர்கள் பணிப்புரிந்தால் அவர்களுக்கு ஒன்றரை பேர் வழங்கப்பட வேண்டும் என்பதுடன், தொழிலாளர்களுக்கான விடுமுறைகள் சம்பளத் துண்டிப்பின்றி அனுமதிக்கப்பட வேண்டும். சம்பள நிர்ணய சபையின் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் பிரகாரம் தோட்டத் தொழிலாளர்களுக்கு முழுமையான சம்பளம் வழங்கப்பட வேண்டும். மேலதிகமாக பறிக்கப்படும் கொழுந்து கிலோ ஒன்றுக்கு 50 ரூபாவே வழங்கப்படுகிறது. இன்று உலக சந்தையில் தேயிலையின் விலை பாரியளவு உயர்வடைந்துள்ளது. ஒரு கிலோ தேயிலை 100 ரூபாவாக இருந்தபோது வழங்கப்பட்ட தொகையே இன்றும் வழங்கப்படுகிறது. அதன் காரணமாக புதிய விலைக்கு ஏற்றால்போல் இத்தொகை அதிகரிக்கப்பட வேண்டும். வாராந்தம் தொழிலாளர்களுடன் கலந்துரையாடல்களை தோட்ட நிர்வாகம் நடத்த வேண்டும் என்பதுடன், காடாகியுள்ள காணிகளை சுத்தம் செய்ய வேண்டும். அதேபோன்று பயன்படுத்தப்படாதுள்ள நிலங்களை விவசாய நடவடிக்கைகளுக்காக இளைஞர்களுக்கு பகிர்ந்தளிக்க வேண்டும். அத்துடன், புதிதாக தேயிலைச் செடிகளும் நடப்படல் வேண்டும். தொழிலாளர் சம்பளத்தில் வங்கிக்கடனுக்காக அறவிடப்படும் நிதிகள் உடனடியாக செலுத்தப்பட வேண்டும். மேற்கூறப்பட்ட இந்த அனைத்து தீர்மானங்களையும் அமுல்படுத்துவதாக மஸ்கெலியா பெருந்தோட்டுயாக்கம் இ.தொ.காவிடம் உறுதியளித்துள்ளது. அவை அனைத்தும் முழுமையாக அமுல்படுத்தப்பட்டால் மாத்திரமே அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பில் சிந்திக்க முடியும். அதுவரை ஒரு கிலோ தேயிலைத் தூளைக்கூட தொழிற்சாலையிலிருந்து கொண்டுள்ள செல்ல அனுமதியளிக்க மாட்டோம்’’ என்றும் செந்தில் தொண்டமான் தெரிவித்தார். அண்மைய செய்திகள் இந்தாண்டு ரூ.715 பில்லியன் வருவாய் இலக்கை அடையும் நோக்கில் சுங்கம் உள்ளது உள்ளூராட்சி மன்றத் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் – ஐக்கிய மக்கள் சக்தி.. நீரிழிவுக்கு புதிய மருந்து ; ருகுணு பல்கலைக்கழக ஆய்வுக் குழுவின் கண்டுபிடிப்பு… ரயிலுடன் கார் மோதி விபத்து ! திரிபோஷ தொடர்பான குற்றச்சாட்டு – சுகாதார அமைச்சர் மறுப்பு ! அரசாங்கத்திற்கு வருமானத்தை அதிகரிப்பதற்கான சில பிரேரணைகள் நெல் கொள்வனவு மீள ஆரம்பிக்கப்படுமா? கலந்துரையாடல் இன்று அதிர்ச்சியை ஏற்படுத்தும் இலங்கை குறித்த உலக உணவுத் திட்டத்தின் சமீபத்திய அறிக்கை இன்று முதல் எந்த நேரத்திலும் தேர்தலை நடத்த முடியும் உணவுப் பாதுகாப்பு ; இலங்கைக்கு ஜப்பான் அவசர உதவியாக 3.5 மில். டொலர் கருத்துக்களேதுமில்லை உங்கள் கருத்தை சொல்லுங்கள் Click here to cancel reply. Wed, Sep 21 Tue, Sep 20 Mon, Sep 19 Sun, Sep 18 Sat, Sep 17 Wed, Sep 14 Tue, Sep 13 சிறப்புச் செய்திகள் உயர்தர பரீட்சையில் தேசிய மட்டத்தில் முதலாம் இடத்தைப்பெற்ற மாணவன் த. துவாரகேஷ் அவர்களை கௌரவப்படுத்தலும் மற்றும் பாராட்டும் நிகழ்வு தமிழ் சி.என்.என் இணையக்குழுவினரின் ஏற்பாட்டில்….
மனித குலம் உண்மையை உணர்ந்து வாழவும் அந்த வாழ்வில் உயர் ஞானச் செயலின் சிறந்த பேறு பெறும் வழியாகவும் மனிதன் கடைப்பிடிக்க வேண்டிய குணங்களின் விசேஷத் தன்மைகளைச் சிலை வடிவில் சித்தர்கள் அன்று உணர்த்தினார்கள். அந்தச் சித்தர்கள் மனித குல உயர்விற்கு வழி காட்டிய தெய்வச் சிலைகளின் தத்துவத்தையே கேடுறச் செய்து… ஆர்ப்பரித்துப் பகட்டைக் காட்டிடும் நிலைக்கு இன்று வந்து விட்டார்கள். சித்தன் படைத்த செயலையே மனிதன் பகட்டிற்காகவும் கௌரவ வாழ்விற்கும் பயன்படுத்திச் சீர்குலைத்து விட்டனர். அப்படிச் சீர்குலைக்கப்பட்டதால் 1.வாழையடி வாழையாக வழி வரும் மெய் ஞான உயர் சக்தி பெற விழைந்த ஆத்ம ஞானிகளால் 2.உட்பொருள் வெளிப்படுத்தும் எண்ணமின்றி மறைக்கப்பட்டு விட்டது. விநாயகர் உருவத்தைக் காட்டி ஆற்றங்கரையில் வைத்த நிலை எல்லாம் இன்று கேலிக்குரிய நகைச்சுவைப்படுத்தி ரசித்து மகிழும் நிலைக்குச் சென்று விட்டது. இன்றைய மனித மனங்கள் உட்பொருளை நாடி அறிந்து கொள்ளத் தயங்குதுவும்… பயம் என்ற போர்வை கொண்டு பக்தி என்ற குளிர் போக்கத் தானும் நடுநடுங்கி… அறிவொழிந்து…! அதிலிருந்து விடுபட முடியாத நிலை ஆகிவிட்டது. 1.ஜோதி என்ற தன் உயிர்க்கனலின் நெருப்பே… பக்தி என்ற குளிரை விரட்டும்…! என்று அறியாமல் போனதென்ன…? 2.அந்தக் குளிரை நீக்க வந்தவனும் உட்பொருளை அறிந்ததில்லை…! ஆவியான நீர் அமிலங்கள் எல்லாம் தன் செயலில் தான் நெருங்கி… ஒன்றோடொன்று கண பரிமாணம் கொண்டு… பிறிதொன்றின் சேர்க்கையில் நீர்த் திவலையாகும் நிலையில் “அதுவே சிவமாகின்றது” (திடமாகி உருவமாகின்றது). அது பூமிக்குள் வரும் காரிய நிலை கொண்டு சுழலும் தன்மையிலே சக்தியாகவும்… பூமியில் படிந்து பின் எழும் செயலின் தொடர்பில் மீண்டும் நீராகவும்… அதுவே எழும் தொடரில் ஆவி நீர் அமிலமாகவும் செயல்படும் தொடர்புகளை அறிந்து கொள்வதே “பிரம்மம்…!” அத்தகைய பேருண்மைகளை அறிந்து கொண்டவர் தான் “அகத்தியர்…!” அவர் உயிரணுவின் செயல்… சுழலும் சக்தியாகப் பரிணமித்துப் பூமிக்கு வந்த காரியத்தில்… வினையான தன்மைக்கு நாயகனாக இந்தச் சரீரம் பெற்றார். வினையின் நாயகனே விநாயகர்…! என்று தன் உயிர் ஆன்ம சக்தியையே உயர்த்திக் கொள்ளும் வழியாக 1.எல்லா உயிர்த் தொகைகளுக்கும் உயிரணுக்கள் பொதுவாகவும் 2.அது பெறும் வீரியத்தில் வித்தியாசமும்… அதுவே பின் எண்ணத் தொடரில் சரீரமாகவும் 3.தன் அமில குண நிலைக்கொப்பத் தனக்குகந்த… தான் பெற்ற தன்மை கொண்டு… ஞான வழியில் “ஒவ்வொரு சரீரமும் பெறுகிறது…” என்றார் அகத்தியர். அத்தகைய உயிரணுக்களுக்குள் வீரிய சக்தி கொண்டது “யானை…” என்றும் அது பெற்ற சக்திக்கு அதன் “சுவாசமே காரணம்…” என்று தெளிவாக உணர்த்தினார். மனித குலம் ஞானத்தில் உயர்வடைய வேண்டும் என்றால் தான் எடுக்கும் எண்ண ஓட்ட சுவாச கதியை உயர்வாக்க வேண்டும் என்பதற்காக விநாயகரை உருவகப்படுத்திக் காட்டினார் அந்த அகத்தியர். நீர்ச் சக்தியைத் தன் எண்ண ஓட்ட கதியுடன் ஒன்றுபடுத்திக் கண்ட அந்த அகத்திய மாமகரிஷி “சுவாச வழியில் வீரியம் பெறும் நிலையைப் புகட்டினார்…!” 1.வினைக்கு நாயகனே விநாயகன் என்று 2.தன் உயிர் குருவைக் கண்டு கொண்ட பின் 3.அவர் சென்ற வழியின் உயர்வே “கணபதி…” கணங்களை ஆளக்கூடிய தலைவன் “கணநாதன் என்ற உயிர்ச் சக்தியானது” தன்னுள் உள்ள கணம் என்ற கூட்டமாகிய அனைத்து உயிரணுக்களுக்கும் நாயகனாக வினையின் நாயகனாகச் செயல்படுகிறது. 1.கணங்களுக்கெல்லாம் (உயிரணுக்களுக்கெல்லாம்) அதிபதியாக ஒரு வழிகாட்டியாக 2.உயிர் ஆத்ம சக்தி… தான் சக்தி பெறும் மார்க்கமாகச் சக்தி பெற்று 3.தான் பெறும் சக்தியையே சரீர உயிரணுக்களுக்கும் ஊட்டும் நிலையே கணங்களின் பதியான கணபதி ஆவான் என்று 4.உயிர் பெறும் உயரிய தன்மைக்குச் சித்தனால் காட்டப்பட்டதே “விநாயகர்…” என்பதை அறிந்துணர்தல் வேண்டும். Share this: WhatsApp Telegram Tweet More Email Like this: Like Loading... This entry was posted in Spirituality and tagged அமுத மொழிகள் by Ahileswaran. Bookmark the permalink. Leave a Reply Cancel reply படைப்பாளர்கள் Ahileswaran November 2022 உபதேசம் இனி நமக்கு இந்த உடல் தேவை இல்லை… உணர்வின் “ஒளியே போதுமானது” ஒரு சாரார் கடவுளே இல்லை என்கிறார்கள்… எல்லாமே கடவுள் தான் என்பவர்களோ “தன்னுள் தான் அவன் உள்ளான்…” என்பதை மறந்து விட்டனர்
தோழிகளே, கர்ப்பமாக இருக்கும்போது நம்முடைய மனதில் பயமும், குழப்பமும் ஏற்படுவது உண்மை தான். ஆனால், ஒன்றே ஒன்றை நாம் நினைவில் கொள்ள வேண்டும். அது தான் தைரியம். எந்தவொரு அழகிய தருணமும் எளிதில் நமக்கு கிடைத்துவிடாது. அப்படி இருக்க, பிள்ளைகளால் மட்டும் எப்படி எளிதில் பிறந்துவிட முடியும். இத்தனை நாள் இருட்டறையில் (கருவறையில்) இருந்தவர்கள், உங்களின் குரலை மட்டுமே கேட்டிருப்பார்கள். நீங்கள் காட்டும் பாசத்தை உணர்ந்திருப்பார்கள். உங்களை காண ஆவலாகவும் இருப்பார்கள். அவர்களை பயத்தோடும், பதட்டத்தோடும் நாம் வரவேற்பது எப்படி சரியான ஒன்றாக இருக்கும். பத்து மாதம் நாம் பாதுகாப்பாக இருப்பதனால், பத்தே நிமிடத்தில் அந்த அழகிய பாதத்தையும், கைகளையும் காணவிருக்கிறோம். அந்த அழகிய சிரிப்பை ரசிக்க இருக்கிறோம். நம்முடைய உலகத்தையே நாம் காண போகிறோம். அந்த ஒரு சந்தோசம் நமக்கு போதாதா என்ன? நஞ்சுக்கொடி முந்தி வருதல் நிச்சயம் ஒரு பிரச்சனையே இல்லை. நாம் முறையாக செக்கப் சென்று, பிள்ளையின் ஆரோக்கியத்தையும், நம் உடல் நார்மலாக இருக்கிறதா என்பதையும் தெரிந்துக்கொண்டே வந்தால், எதற்கும் அஞ்ச வேண்டிய அவசியமே இல்லை. இருப்பினும், நஞ்சு கொடி முந்தி வருதல் என்பது பற்றிய பயனுள்ள தகவலை நாம் இந்த பதிவின் மூலம் தெரிந்துகொண்டு, பாதுகாப்பாக இருப்போம் வாருங்கள். பிளென்செண்டா பிரெவியா: இதை தான் நாம் நஞ்சுக்கொடி முந்தி வருதல் என தமிழில் அழைக்கிறோம். அதாவது கர்ப்பப்பை வாயை நஞ்சுக்கொடியானது மறைத்து விடுகிறது. இதனால் இரத்தம் அதிகம் வெளியாக வாய்ப்பிருக்கிறது. ஒருவேளை நஞ்சுக்கொடி கர்ப்பப்பைவாயை மறைத்து இருப்பதை மருத்துவர்கள் கண்டால், முன் கூட்டிய பிரசவத்துக்கு ஏற்பாடு செய்வார்கள். இந்த நிலையின்போது சுகப்பிரசவம் சிரமம் என்பதால், சிசேரியன் உதவியுடன் பிள்ளைகள் பாதுகாப்பாக பிறக்கின்றனர். இதற்கான அறிகுறிகள் எப்படி இருக்கும்? 1. கர்ப்பமாக இருக்கும்போது மூன்றாவது மூன்று மாதங்களில் அதிகமான இரத்தப்போக்கு இருக்கலாம். இது வலியில்லாமலும் நமக்கு வரக்கூடும். 2. நம்முடைய கருப்பை இறுக்குவது போல உணர்வோம். அதோடு முதுகில் அதிகமான அழுத்தத்தையும் நாம் உணர செய்ய வாய்ப்புள்ளது. 3. ஒரு சிலருக்கு இரத்தபோக்கின் காரணமாக இரத்தம் குறைவாக இருத்தல், மூச்சு விடுவதில் சிரமம், இரத்த அழுத்தம் குறைந்து காணப்படுதல் போன்ற பிரச்சனைகளும் இருக்கலாம். எப்போது இதுபோல் நடக்க வாய்ப்புண்டு? 35 வயதிற்கு மேல் கர்ப்பமாக இருக்கும்போது ஏற்கனவே கர்ப்பமாக இருந்திருந்தால் ஏற்கனவே நமக்கு சிசேரியன் நடந்திருந்தால் கர்ப்பப்பையில் ஏற்கனவே ஏதேனும் அறுவை சிகிச்சை செய்திருந்தால் ஒன்றுக்கும் மேற்பட்ட பிள்ளைகள் நம் வயிற்றில் இருந்தால் இது போன்று ஏற்படலாம். எப்படி கண்டறியப்படும்? உங்களின் கர்ப்ப கால செக்கப்புகளில் இது கண்டறியப்படும். ஒலி அலைகளை பயன்படுத்தி நஞ்சுக்கொடியின் நிலை கணக்கிடப்படுகிறது. இதனை எப்படி குணப்படுத்துவது? இதனை குணப்படுத்த எந்தவொரு மருத்துவமும் இல்லை. ஆனால், இதனால் வெளியாகும் அதிகப்படியான இரத்தப்போக்கை மருத்துவர்கள் குறைத்து பிரசவ தேதியை தாமதப்படுத்த செய்கின்றனர். டாக்டர்கள் ஒரு சிலவற்றை கவனித்து உங்களுக்கான சிகிச்சையை செய்கின்றனர். அவை, இரத்தப்போக்கின் அளவு கர்ப்பமாக இருக்கும் மாதம் பிள்ளையின் ஆரோக்கியம் எப்படி உள்ளது நஞ்சுக்கொடி எங்கே இருக்கிறது இவற்றை கவனித்தே உங்கள் டாக்டர்கள் சிகிச்சையை பரிந்துரை செய்வர். இரத்தம் குறைவாக வெளியானால் என்ன செய்வது? ஒருவேளை இரத்தம் குறைவாக வெளியாகும்போது, இடுப்புக்கு ஓய்வு அவசியம். அதனால் உடலுறவு மற்றும் உடற்பயிற்சியை தவிர்க்க சொல்லலாம். அடிக்கடி நஞ்சுக்கொடி நிலை குறித்து பரிசோதிக்கவும் செய்வர். இரத்தம் அதிகமாக வெளியானால் என்ன செய்வது? ஒருவேளை இரத்தப்போக்கு அதிகமிருந்தால் (36 வாரங்கள் கடந்துவிட்டால்), உடனடியாக சிசேரியன் செய்ய நம்முடைய மருத்துவர்கள் பரிந்துரைக்கலாம். இந்த சூழலில் ஒரு ஊசியின் மூலமாக பிள்ளையின் நுரையீரல் வளர்ச்சியும் உறுதிசெய்யப்படுகிறது. எதை தவிர்ப்பது நல்லது? இதற்கு நாமாக எந்தவொரு மருத்துவத்தையும் செய்ய கூடாது. அதேபோல டாக்டர்கள் பரிந்துரையின்றி எந்தவொரு மாத்திரை, மருந்துகளை நாம் எடுத்துக்கொள்ள கூடாது. இரத்தப்போக்கை கண்டு வரக்கூடிய பதட்டத்தையும், பயத்தையும் நிச்சயம் நாம் தவிர்க்க வேண்டும். எப்போது டாக்டரை பார்க்க வேண்டும்? ஒருவேளை இரண்டாவது அல்லது மூன்றாவது மூன்று மாதத்தில் உங்களின் இரத்தப்போக்கு அதிகமாக இருப்பதை போல நீங்கள் உணர்ந்தால் தாமதிக்காமல் டாக்டரை பார்ப்பது நல்லது. தோழிகளே, கடினமான காலத்தை கடக்கும்போது தான் வாழ்க்கையே இனிமையாக அமையும். இது போன்ற கடினங்களை வென்று வர போகும் நம் பிள்ளையை வரவேற்க தயாராவோம் வாருங்கள். இந்த பதிவு பயனுள்ளதாக இருந்திருந்தால், மற்ற தோழிகளுக்கும் பகிர்ந்து அவர்கள் பயத்தையும் போக்கலாமே.
ஆக மொத்தம் சுமார் 10 லட்சத்திற்கு மேற்பட்ட ஜனங்களாகும். இது தவிர இடியாலும், மின்னலாலும், எரிமலை நெருப்பாலும், வெள்ளத்தாலும், புயல் காற்றாலும் தன்னடி சேர்த்துக் கொண்ட மக்களின் அளவு இதைப்போல் பல மடங்குகள் இருக்கும். இவ்வளவு ஜீவகாருண்யமுள்ள கடவுளின் கருணையை எப்படி புகழ்வது என்பது நமக்கு விளங்கவில்லை. ஆதலால் இதைப் பண்டிதர்களுக்கே விட்டு விடுவோம். ஏனெனில் அவர்கள் அதற்கே பிறந்தவர்கள். நிற்க. வினா - விடை வினா:- நாம் பாடுபட்டாலும் வயிற்றுக்குப் போதும்படியான ஆகாரம் கூட கிடைப்பதில்லை. ஆனால் பார்ப்பனர்கள் பாடுபடாவிட்டாலும் அவர்களுக்கு வயிறு புடைக்கக் கிடைக்கின்றது. இதற்கு என்னகாரணம்? விடை:- நமது மதமும் ஜாதியும். வினா: - நாம் பாடுபட்டு சம்பாதித்தும் நம்ம பிள்ளைகள் படிக்க முடியாமல் நம்மில் 100க்கு 90பேருக்கு மேலாக தற்குறியாயிருக்கிறோம். ஆனால் பாடுபட்டு சம்பாதிக்காமல் பிச்சை எடுக்கும் பார்ப்பனர்களில் 100க்கு 100பேர் படித்திருக்கிறார்கள். இதன் காரணம் என்ன? விடை: - மதமும் ஜாதியும். வினா:- நமது பணக்காரக் குடும்பங்கள் வரவர பாப்பராய்க் கொண்டே வருவதற்குக் காரணமென்ன? விடை:- வினையின் பயன். அதாவது நம்மவர்கள் தங்கள் சமூகத்தார் பட்டினி கிடப்பதையும், கல்வி அறிவு இல்லாமல் இருப்பதையும் சிறிதும் கவனியாமல் பார்ப்பானுக்கே போட்டு அவர்களுக்கே படிப்புக்கு பணமும் கொடுத்து வந்த ‘பாவமானது’ அந்தப் பார்ப்பனர்களே வக்கீலாகவும், ஜட்ஜிகளாகவும் வந்து மேல்படி பார்ப்பனரல்லாதார்களைப் பாப்பராக்குகிறார்கள். அதற்கு யார் என்ன செய்யலாம். வினா : - எந்த விதமான விபசாரம் குற்றம் சொல்லத் தகுந்ததாகும்? விடை :- வெளியார்க்கு தெரியும்படியாகச் செய்த விபசாரம் குற்றம் சொல்லத் தகுந்ததாகும். வினா:- கிருஸ்தவனாகப் போவதில் என்ன கெடுதி? விடை: - ஒரு கெடுதியும் இல்லை. ஆனால் மதத்தின் பேரால் குடிக்க வேண்டாம். வினா:- மகம்மதியானவதில் என்ன கெடுதி? விடை : - ஒரு கெடுதியுமில்லை. ஆனால் பெண்களுக்கு மூடி போடாதே. வினா:- உண்மையான கற்பு எது? விடை:- தனக்கு இஷ்டப்பட்டவனிடம் இணங்கி இருப்பதே உண்மையான கற்பு. வினா: - போலி கற்பு என்றால் எது? விடை:- ஊராருக்கோ, சாமிக்கோ, நரகத்திற்கோ, அடிக்கோ, உதைக்கோ, பணத்திற்கோ பயந்து மனத்திற்குப் பிடித்தமில்லாதவனுடன் தனக்கு இஷ்டமில்லாதபோது இணங்கி இருப்பதே போலிக் கற்பு. வினா : - மதம் என்றால் என்ன? விடை:- இயற்கையுடன் போராடுவதும் அதைக் கட்டுப்படுத்துவதும் தான் மதம். வினா:- நாட்டுக் கோட்டையார் சமூகத்தில் உள்ள சுயமரியாதை என்ன? விடை:- பெண்ணுக்கு மாப்பிள்ளை தாலி கட்டுவது இல்லை என்பதாகும். வினா: - தொழிலாளர்களுக்கு பண்டிகை நாள்களில் ஏன் ஓய்வு (லீவு) கொடுக்கப்படுகின்றது. விடை:- பாடுபட்டு சம்பாதித்து மீதி வைத்ததை பாழாக்குவதற்காக. வினா:- பெண்களை படிக்கக் கூடாது என்று ஏன் கட்டுப்பாடு ஏற்படுத்தினார்கள்? விடை:- அவர்களுக்கு அறிவு இல்லை, ஆற்றல் இல்லை என்று சொல்லி சுதந்திரம் கொடாமல் அடிமையாக்குவதற்காக. வினா:- மனிதனுக்கு கவலையும் பொருப்பும் குறைய வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும்? விடை:- பெண் அடிமையை ஒழித்து அவர்களுக்கு முழுச் சுதந்திரம் கொடுத்து விட்டால் ஆண்களுக்கு அநேக தொல்லைகள் ஒழிந்து போகும். வினா:- பெண்களுக்கு நேரம் மீதியாக வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும்? விடை:- தலைமயிரை வெட்டிவிட்டால் அதிக நேரம் மீதியாகும். வினா:- பெண்கள் கைக்கு ஓய்வு கொடுக்க வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும்? விடை:- அவர்களுக்கு ஒரு குப்பாயம் (மேல்சட்டை) போட்டு விட்டால் கைக்கு ஓய்வு கிடைத்து விடும் (இல்லாவிட்டால் அடிக்கடி மார்பு சீலையை இழுத்திழுத்துப் போடுவதே வேலையாகும்) வினா:- எல்லோருக்கும் போதுமான அளவு ஆகாரம் இருக்க வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும். விடை:- ஒருவனும் தன் தேவைக்குமேல் எடுத்துக் கொள்ளாவிட்டால் எல்லோருக்கும் வேண்டியளவு கிடைத்துவிடும். வினா:- பெரிய மூடன் யார்? விடை:- தனது புத்திக்கும் பிரத்தியக்ஷ அனுபவத்திற்கும் தோன்றுவதை நம்பாமல் எவனோ ஒருவன் எப்போதோ சொன்னதை நம்பி வாழ்வை நடத்துபவன் பெரிய மூடன். வினா:- ஒழுக்கம் என்பது என்ன? விடை:- ஒழுக்கம் என்பது தனக்கும், அன்னியனுக்கும் துன்பம் தராமல் நடந்து கொள்ளுவதாகும். வினா:- சமயக் கட்டுப்பாடு, சாதிக் கட்டுப்பாடு என்றால் என்ன? விடை:- மனிதனை தன் மனச்சாக்ஷிக்கும், உண்மைக்கும் நேராய் நடக்க முடியாமல் கட்டுப்படுத்துவது தான் சாதி சமயக்கட்டுப்பாடாய் இருக்கின்றது. வினா:- உண்மையான கடவுள் நம்பிக்கை என்றால் என்ன? விடை:- கடவுள் எங்கு மரைந்து போவாறோ என்று பயந்து அவரைக் காக்க பிரயத்தனம் செய்வதுதான் உண்மையான கடவுள் நம்பிக்கையாகக் காணப்படுகிறது. வினா:- இந்தியாவுக்கு ஏன் ஜனநாயக ஆக்ஷி கூடாது? விடை:- இந்தியர்கள் 100க்கு 90பேர் கல்வி அறிவில்லாத எழுத்து வாசனை கூடத் தெரியாத பாமர மக்களாய் இருப்பதை முன்னிட்டு அவர்கள் நன்மை தீமை இன்னதென்று அறிய முடியாதவர்களாய் இருப்பதால் தான். வினா:- ஜனநாயக ஆக்ஷி என்றால் என்ன? விடை:- தடி எடுத்தவன் தண்டக்காரனென்பதுதான் ஜனநாயக ஆட்சி. வினா:- இந்தியாவுக்கு ஜனசங்கை பெருக வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும்? விடை:- அதிகமாக பிள்ளை பெறுவதை நிறுத்தி விதவைகளுக்கு மறுமணம் செய்தால் நல்ல திடகாத்திரமுள்ள ஜன சங்கை பெருகும். வினா: - இந்தியா சீர்பட என்ன வேண்டும்? விடை:- இந்தியா சீர்பட்டு இந்தியர்களும் மனிதர்கள் என்று உலகத் தோர் முன்னிலையில் சிறந்து நிற்க வேண்டுமானால் நாஸ்திகமும் நிபந்தனையற்ற பெண்கள் விடுதலையும் வேண்டியதாகும். வினா: - இந்தியா அடிமையானதற்குக் காரணம் என்ன? விடை:- இந்தியா கெட்டு நாசமாய் என்றும் விடுபடமுடியாத அடிமையாய் போனதற்குக் காரணம் அவர்கள் மதமும் கடவுள்களுமேயாகும். வினா:- கிருஸ்தவ மதத்தில் சில ஆபாச கொள்கைகள் இருந்தும் அவர்கள் எப்படி உலகை ஆளுகிறார்கள். விடை:- கிறிஸ்தவ மதத்தில் எவ்வளவு ஆபாசமும் முட்டாள் தனமுமான கொள்கைகளும் இருந்த போதிலும் அதைப் பற்றி நமக்கு கவலை இல்லை. ஏனெனில் அவர்கள் பெரும்பாலும் பகுத்தறிவுக்கு மதிப்பு கொடுப்பவர்களாகிவிட்டார்கள். அவர்கள் வாழ்க்கைக்கோ, மன உணர்ச்சிக்கோ சிறிதும் மதத்தை லட்சியம் செய்வதில்லை. ஆதலால் அவர்கள் மதத்தைப் பற்றி நாம் பேசுவது பயனற்றதும் முட்டாள்தனமுமாகும். வினா:- பார்ப்பான் மாத்திரம் எப்படி இவ்வளவு பெரிய பதவிக்கு வர முடிந்தது? விடை:- மத விஷயத்தில் அவர்களுக்கு கிடைத்துள்ள உயர்ந்த நிலையால் அவர்கள் (பார்ப்பார்கள்) எல்லோரையும் விட முன்னேறியிருக்க முடிந்தது. மத விஷயத்தில் பார்ப்பனர்களுக்குள்ள பெருமை போய்விட்டால் அவர்கள் இழிவான மனிதர்களுக்கும் இழிவான மனிதர்களாகி விடுவார்கள். ஏனெனில் அவர்களுக்குப் பாடுபடத் தெரியாது. ஆகவே சோம்பேறிகளின் கதியே அடைய வேண்டியவர்களாவார்கள். வினா:- ஆண் வியபசாரர்கள் விபூதி பூசுவதின் மூலம் மோக்ஷத்திற்குப் போக நேர்ந்து விட்டால் அங்கு போய் தங்கள் வியபசாரத்திற்கு என் செய்வார்கள். விடை:- அதற்காக எந்த வியபசாரகனும் விபூதி பூசுபவரும் பயப்பட வேண்டியதில்லை. ஏனென்றால் அங்கு இந்த விபூதி பக்தர்களுக்கென்றே ஊர்வசி, மேனகை, திலோர்த்தமை முதலிய தேவ ரம்பையர்கள் இருக்கிறார்கள். அன்றியும் சமயல் செய்ய வேண்டிய வேலைகூட இல்லாமல் இதே வேலையாய் இருக்கலாம். ஏனென்றால் காமதேனு, கற்பக விருக்ஷம் கேட்ட தெல்லாம் கொடுத்துவிடும். வினா:- பார்ப்பனர்களில் ஒரு வகையாருக்கு ஏன் முகம் சூப்பையாயிருக்கின்றது? விடை:- அவர்கள் அனுமந்த தேவரை பூஜிக்கிறார்கள். படுக்கை வீட்டில் அனுமார் படம் வைத்திருக்கின்றார்கள். அதனால் அவர்கள் முகம் சூப்பையாய் இருக்கின்றது. வினா: - பெண் விபசாரிகள் விபூதி பூசியதன் மூலம் மோட்க்ஷத்திற்குப் போய்விட்டால் அங்கு அவர்களுக்கு வழி என்ன? விடை:- கடவுள் இருக்கிறார். போறாக்குறைக்கு அங்குள்ள மற்ற தேவர்களைக் கொண்டு சரிப்படுத்திக் கொள்ள வேண்டியது தான். சும்மா சொன்னேன் வினா:- கடவுள் ஏன் காண முடியாதவராயிருக்கிறார் தெரியுமோ? அவர் பண்ணும் அக்கிரமத்திற்கு யார்கைக்காவது கிடைத்தால் நல்ல உதை கிடைக்குமென்றுதான். விடை:- என்ன அக்கிரமம் என்றா கேட்கின்றீர்கள். மூட்டை, கொசு இரண்டையும் அவர் உற்பத்தி செய்த அக்கிரமம் ஒன்றே போராதா? கார்த்திகை தீபம் பாலர் பாலுக்கழ பட்னியால் பலர் மடிய எத்திசையோரும் இகழும்படி வெண்ணையும் நெய்யும் கொண்டு கல்லிலும் நெருப்பிலும் கொட்டும் கயமையே கார்த்திகை தீபமாகும் நமது மதமும், தெய்வமும் உர்ச்சவமும் முட்டாள்தனமானதென்றும் அது செல்வத்தைப் பாழாக்குகின்றதென்றும் மக்களுக்கு யாதொரு பலனையுமளிக்கின்றதில்லை என்றும் சொல்லப்பட்டு வருவதற்கு உதாரணம் சமீபத்தில் திருவண்ணாமலையிலும் திருச்செங்கோடு முதலிய ஊர்களிலும் கார்த்திகை தீபம் ( கூம்பு - சொக்கப்பானை ) என்கின்ற உற்சவத்தின் போது குடம் குடமாய் டின் டின்னாய் நெய்யையும், வெண்ணையையும் கொண்டு போய் நெருப்பில் கொட்டப்போகும் முட்டாள் தனமும் வீண் செலவும், அதனால் செல்வம் பாழாவதும் போதாதா என்று கேழ்க்கின்றோம். இதற்கு பார்ப்பன தேசீயப் பத்திரிகைகள் என்ன சமாதானம் சொல்லப் போகின்றன என்பதை கவனிப்போம்.
தற்போதைய அவசர யுகத்தில் ஒய்வு என்பதே இல்லாமல் உழைத்துக் கொண்டிருக்கிறோம். இதனால் மன அழுத்ததால் பெரிதும் பாதிக்கப்படுகிறோம். வேலை என்பது மட்டுமல்லாது உணவு பழக்கவழக்க முறை, சுற்றுச்சூழல் போன்ற காரணங்களால் மன அழுத்தம் ஏற்படுகிறது. இத்தகைய மன அழுத்தம் பல்வேறு நோய்களுக்கு வழி வகுக்கும். எனவே மன அழுத்தத்தை எளிய முறையில் குறைக்கும் வழிமுறைகளை நாம் பின்பற்ற வேண்டும். தியானம்.. மன அழுத்தத்தை குறைக்கும் சிறந்த வழி தியானம்தான். தினமும் குறைந்தது 30 நிமிடங்கள் தியானம் செய்வதன் மூலம் மன அழுத்தத்தில் இருந்து எளிதாக விடுபடலாம். தூக்கம்.. மன அழுத்தம் ஏற்படுவதற்கு முக்கிய காரணமே போதிய தூக்கமின்மை தான். தூக்கம் என்பது ஒரு மனிதனுக்கு இன்றியமையாதது. எனவே தினமும் 7 முதல் 8 மணி நேரம் வரை கட்டாயம் தூங்க வேண்டும். நடைபயிற்சி.. நடைபயிற்சி மேற்கொள்ளுவது என்பது ஒரு எளிய உடற் பயிற்சியாகும். நடைபயிற்சி மேற்கொள்வது நம்மை உறுதியுடனும் ஆரோக்கியத்துடனும் வைத்துக்கொள்ளும். அதுமட்டுமல்லாது நடைபயிற்சியின் மூலம் மன அழுத்தத்தை குறைக்கும் ஆற்றல் மனதுக்கு கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. உணவு பழக்கம்.. உணவுகளை நேரம் தவறி எடுத்து கொள்வது தான் பெரும்பாலான உபாதைகளுக்கு காரணம். எனவே சரியான நேரத்தில் உணவுகளை எடுத்துகொள்ள வேண்டும். அதுபோல் சத்தான உணவுகளாகவும் எடுத்துக் கொள்ள வேண்டும். நாவல்பழம், சால்மன் மீன் மற்றும் பாதாம் போன்றவை மன அழுத்தத்தை கட்டுப்படுத்தும். கால நிர்ணயம்.. எந்த வேலையையும் செய்வதற்கு முன்னால் கால நிர்ணயம் செய்துகொள்ளுங்கள். அதற்கு அந்த வேலையை முடித்தாக வேண்டும் என்று நீங்கள் முடிவு செய்து கொள்ளுங்கள். இது தேவையில்லாத மன அழுத்தத்தை தவிர்க்கும். அளவோடு வேலை செய்யுங்கள்.. முடியாது என சொல்ல பழகுங்கள். அளவுக்கு அதிகமான வேலையை இழுத்து போட்டு செய்வது என்பது எந்த வேலையையும் உருப்படியாக செய்யமுடியாமல் செய்து விடும். Google News ஏனைய தளங்களிற்கு செல்ல.. உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள.. TAGS அறிந்து அழுத்தத்தை குறைக்கும் கொள்ளுங்கள் வழிகள் Facebook Twitter WhatsApp Linkedin Viber Previous articleகணவன் ஒரு முறையும் மனைவி 100 முறையும் படிக்க வேண்டிய செய்தி Next articleஎதிர்கால துணையை தேர்ந்தெடுக்கும்போது பெண்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கியமான விஷயங்கள் Nila RELATED ARTICLESMORE FROM AUTHOR Health news இலங்கையில் இவ்வருடம் 411 பேருக்கு ‘எயிட்ஸ்’ தொற்று! வடக்கில் நால்வர் அடையாளம் Health news இலங்கையில் புதிய வைரஸ்; முகக்கவசம் அணிவது கட்டாயம் Health news இரண்டாவது குரங்கம்மை நோயாளி கண்டுபிடிப்பு – பதற்றத்தில் மக்கள் Health news இலங்கையில் அடையாளம் காணப்பட்ட குரங்கம்மை தொற்றாளர்! சுகாதார அமைச்சின் விசேட அறிவிப்பு Health news எச்.ஐ.வி தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை இரட்டிப்பாக அதிகரித்தது… பல்கலைக்கழக மற்றும் பாடசாலை மாணவர்கள் உள்ளடங்குவதாக அதிர்ச்சி... Health news யாழ். போதனா மருத்துவமனையில் வெற்றிகரமாக மேற்கொள்ளப்படும் சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சை! Latest posts காதல் ரச குறுஞ்... Local news December 2, 2022 இலங்கையில் இவ்வருடம் 411... Health news December 1, 2022 15 வயதான மாணவியிடம்... Local news December 1, 2022 யாழ்.பருத்தித்துறை துறைமுகத்தில் TikTok... Jaffna News December 1, 2022 இன்றைய ராசிபலன் –... Astrology December 1, 2022 jaffna7.com | 24x7 latest Tamil breaking news website in Sri Lanka. delivers local, political, worlds, sports, technology, health, and cinema. Jaffna7 news is a community website for sharing Sri Lankan news. We also do not store any copyright-protected files on our website/servers, and any linked content is stored only on third-party websites. Since freedom of speech is allowed in this industry, we do not act in any kind of copyright infringement.
தமிழக அரசின் பொதுவிநியோக திட்டத்தின் கீழ் ரேஷன் கார்டு வைத்திருக்கும் குடும்பங்களுக்கு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஆன்லைன் மூலம் ரேஷன் கார்டு பெற எவ்வாறு விண்ணப்பிக்க வேண்டும் என்பதற்கான வழிமுறைகள் வெளியாகியுள்ளது. ரேஷன் கார்டு: தமிழகத்தில் மக்கள் அனைவரிடத்தும் மிக முக்கிய ஆவணமாக இருக்கிறது ரேஷன் கார்டு. முந்தைய காலத்தில் புதிய கார்டு விண்ணப்பித்தல், ரேஷன் கார்டுகளில் ஏதேனும் பிழை, புதிய உறுப்பினர் பெயர் சேர்த்தல், உறுப்பினர் பெயர் நீக்குதல் போன்ற பணிகளுக்கு மக்கள் தாலுகா அலுவலகத்திற்கு சென்று பல மணி நேரங்களை செலவழித்து வந்தனர். தற்போது நாட்டில் அனைத்தும் டிஜிட்டல் முறையில் மாற்றப்பட்டு வருவதால் புதிய ரேஷன் கார்டு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் வழிவகை ஏற்பட்டுள்ளது. இன்றுடன் ஊரடங்கு நிறைவு – ஜூன் 15 வரை சில கட்டுப்பாடுகள் தொடரும்!! ரேஷன் கார்டுகளில் மொத்தம் 5 வகை உள்ளன. எனவே இந்த வகையில் குடும்பங்களின் வருமான நிலை மற்றும் மூத்த குடிமக்கள் போன்றவர்களை அடிப்படையாக கொண்டு ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த ஐந்து வகை ரேஷன் கார்டுகளுக்கு அரசு சார்பில் வழங்கப்படும் நிவாரண பொருட்கள் மற்றும் சலுகைகளில் பல மாற்றங்கள் ஏற்படும். இந்நிலையில் தற்போது ஆன்லைன் மூலம் புதிய ரேஷன் கார்டு விண்ணப்பிக்கும் வழிமுறை வெளியாகியுள்ளது. புதிய ரேஷன் கார்டு விண்ணப்பிக்கும் வழிமுறைகள்: பயனர்கள் அதிகாரபூர்வ தளமான https://tnpds.gov.in/ என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும். அதில் மின்னணு அட்டை விண்ணப்பம் என்னும் ஆப்ஷனை கிளிக் செய்து Name of Family Head என்ற ஆப்ஷனுக்கு கீழ் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் குடும்ப தலைவரின் பெயரை சரியாக பதிவு செய்ய வேண்டும். பின்பு முகவரி, மாவட்டம், தாலுகா, கிராமம், அஞ்சல் குறியீடு, மொபைல் நம்பர், மின்னஞ்சல் முகவரி போன்ற விவரங்கள் சரியாக பதிவு செய்ய வேண்டும். இதனை தொடர்ந்து குடும்ப தலைவரின் புகைப்படத்தை (5Mb) தலைவருக்கான புகைப்படம் என்ற இடத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். பின்பு அட்டை தேர்வு என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, இருப்பிட சான்று என்னும் இடத்தில் தங்களிடம் உள்ள உரிய ஆவணத்தை (1Mb) பதிவேற்றம் செய்ய வேண்டும். இதற்கு கேஸ் பில், தண்ணீர் பில், போன் பில் போன்றவற்றினை பயன்படுத்திக் கொள்ளலாம். இதனை தொடர்ந்து எரிவாயு இணைப்பு குறித்த விவரங்கள், தங்களிடம் எந்த நிறுவனம் சிலிண்டர் என்பது குறித்த விவரம் மற்றும் சிலிண்டர் எண்ணிக்கை ஆகியவற்றை பதிவு செய்ய வேண்டும். பின்பு உறுப்பினர் சேர்க்கை என்னும் ஆப்ஷனை கிளிக் செய்து, முதலில் குடும்ப தலைவரின் பெயர், அவரின் பிறந்த தேதி, வருமானம், ஆதார் எண், போன் நம்பர் போன்றவற்றினை பதிவு செய்ய வேண்டும். மேலும் அவரின் ஆதார் கார்டு ஸ்கேன் செய்து அதை அப்லோட் செய்ய வேண்டும். பின்பு உறுப்பினர் சேர்க்கை சேமி என்னும் ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். இதேபோல் குடும்ப உறுப்பினர்கள் அனைவரின் பெயரையும் இதே முறையில் பதிவு செய்ய வேண்டும். மேலும் குடும்ப தலைவருக்கு அவர்களின் உறவு (மனைவி, மகன், மகள்) போன்றவற்றையும் பதிவு செய்ய வேண்டும். 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு பிறப்பு சான்றிதழ் போதுமானது. TN Job “FB Group” Join Now பின்பு தாங்கள் பதிவு செய்த விவரங்கள் அனைத்தும் சரியானதா என்று பார்த்துகொண்டு, பதிவு செய் என்னும் ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். பின்பு உங்கள் மின்னணு அட்டை வெற்றிகரமாக சமர்ப்பிக்கப்பட்டது என்று தகவல் வரும். மேலும் அதில் ஓர் குறிப்பு எண் வரும். இந்த எண் மூலம் மின்னணு அட்டையில் நிலைப்பாடு குறித்து அறிய முடியும். இதனை தொடர்ந்து தங்களது ஆதார் கார்டு, போட்டோ, அப்ளிகேஷன் போன்றவற்றினை தாலுகா அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். அப்போது தான் விரைவில் உங்கள் அப்ளிகேஷன் பரிசீலிக்கப்படும். பின்பு சுமார் ஒன்று முதல் இரண்டு மாத காலத்திற்குள் பயனர்களுக்கு ரேஷன் கார்டு கிடைக்கும். Velaivaippu Seithigal 2021 To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும் To Join => Whatsapp கிளிக் செய்யவும் To Join => Facebook கிளக் செய்யவும் To Join => Telegram Channel கிளிக் செய்யவும் Facebook Twitter Pinterest WhatsApp Previous articleஇன்றுடன் ஊரடங்கு நிறைவு – ஜூன் 15 வரை சில கட்டுப்பாடுகள் தொடரும்!! Next articleஇரவு 7 மணி வரை கடைகளை திறக்க அனுமதி – ஜூன் 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு! fathima http://examsdaily.in 4 COMMENTS Ashwani June 9, 2021 At 8:28 am Vinnapitha application ha first approve pannunga…..one month achi Reply Hanumantha June 9, 2021 At 7:55 pm Please provide sugar card also get financial help.. We are also suffering lot during corona… Lasst time vardha puyal they gave rs 5000 for all not rice ration card only… So please provide sugar card get financial help. 🙏🙏 Reply Jayaraj June 9, 2021 At 8:50 pm 135/2 srikanta Palayam10th state korukkupet Chennai 21 Reply Jayaraj June 9, 2021 At 8:51 pm Jayaraj.R 135/2 Srikanth Palayam 10th Street korukkupet Chennai 21 Reply LEAVE A REPLY Cancel reply Please enter your comment! Please enter your name here You have entered an incorrect email address! Please enter your email address here Save my name, email, and website in this browser for the next time I comment. Captcha verification failed! CAPTCHA user score failed. Please contact us! EDITOR PICKS சீரியல் டூ சினிமா .. அட இவுங்க ரெண்டு பேருமே இனி ஹீரோயின் ஆ... December 2, 2022 நடப்பு நிகழ்வுகள் – 3 டிசம்பர் 2022 December 2, 2022 TNPSCயின் அனைத்து தேர்விற்கும் ஒரே ஒரு Study Material போதும் – முழு விவரம்... December 2, 2022 POPULAR POSTS வேலைவாய்ப்பு செய்திகள் (Job News) 2020 January 7, 2020 TNPSC பொது தமிழ் இலக்கணம் பாடக் குறிப்புகள் October 29, 2020 மாதம் 30 ஆயிர ஊதியத்தில் தமிழக அரசு வேலை 2020 December 11, 2020 POPULAR CATEGORY news32904 அறிவிக்கைகள்20367 Entertainment7748 நடப்பு நிகழ்வுகள்2893 video1139 தினசரி1094 Education1014 தேர்வு முடிவுகள்817 Quiz719 ABOUT US ExamsDaily is your resource hub for Current Affairs, General Knowledge, Exam Notifications, Competitive Exam preparation, etc. We provide you with the latest
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தலைவர் 169 படத்தின் கதை குறித்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது. உலகம் முழுவதும் மிக பிரபலமான நடிகராக திகழ்ந்து ரஜினிகாந்த் கொண்டிருக்கிறார். 80 காலகட்டம் தொடங்கி தற்போது வரை இவர் எண்ணற்ற படங்களில் நடித்து இருக்கிறார். மேலும், இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், வசூலையும் பெற்றிருக்கிறது. அதோடு இவருக்கு தமிழகத்தில் மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளார்கள். சமீபத்தில் இவருடைய நடிப்பில் வெளிவந்த அண்ணாத்த படம் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று இருந்தாலும் வசூலில் கோடிகளை குவித்து இருக்கிறது. -விளம்பரம்- குடும்ப உறவுகளின் முக்கியத்துவத்தையும், குடும்ப பாசத்தையும் மையமாக வைத்து இந்த படம் உருவாகி இருந்தது. இந்த படத்தில் குஷ்பூ, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். இந்த படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த் அவர்கள் தலைவர் 169 என்ற படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தில் நெல்சனும், ரஜினிகாந்தும் இணைந்து பண்ணுகிறார்கள். தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனராக நெல்சன் திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவர் நயன்தாராவை வைத்து கோலமாவு கோகிலா என்ற படத்தை இயக்கியதன் மூலம் தான் தமிழ் சினிமா உலகிற்கு இயக்குனராக அறிமுகமானார். - Advertisement - நெல்சனின் திரைப்பயணம்: அதனைத் தொடர்ந்து சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த டாக்டர் படத்தை நெல்சன் இயக்கி இருந்தார். இந்த படமும் மிகப்பெரிய அளவில் வெற்றி அடைந்தது. இதனைத் தொடர்ந்து இவர் மூன்றாவது படமாக நெல்சன் அவர்கள் விஜய்யை வைத்து பீஸ்ட் என்ற படத்தை இயக்கி இருக்கிறார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருக்கிறது. இந்த படத்தில் செல்வராகவன், பூஜா ஹெக்டே, விடிவி கணேஷ் உட்பட பல நடிகர்கள் நடித்து உள்ளார்கள். தற்போது இந்த படத்தின் இறுதி கட்ட பணிகள் மும்முரமாக நடந்து கொண்டிருக்கின்றது. பீஸ்ட் படத்தின் ட்ரைலர்: இந்த படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி இருக்கிறது. இந்த படத்தில் விஜய் ‘வீர ராகவன்’ என்ற பெயரில் நடித்து இருக்கிறார். ட்ரெய்லரில் ஒரு மால்லை பயங்கரமான தீவிரவாதிகள் ஹைஜாக் பண்ணுகிறார்கள். கடத்தல் பாணியில் கதை செல்கிறது. மேலும், பீஸ்ட் படம் வருகிற ஏப்ரல் 13 ஆம் தேதி உலகமெங்கும் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து இவர் ரஜினியை வைத்து படம் பண்ணுகிறார். மேலும், நெல்சன்- சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்-அனிரூத் கூட்டணியில் உருவாகும் படத்திற்கு ‘தலைவர் 169’ என்று பெயரிடப்பட்டு உள்ளது. -விளம்பரம்- தலைவர் 169 படத்தின் கதை: இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனமே தயாரிக்கிறது. இதற்கான வீடியோ ஒன்றையும் அதிகாரபூர்வமாக அறிவித்து இருந்தார்கள். வீடியோவில் ரஜினி, நெல்சன் மற்றும் அனிரூத் மூவரும் செம்ம மாஸாக இருந்தார்கள். இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. மேலும், இந்த படத்தில் நடிக்கும் பிற நடிகர் பற்றிய தகவல் கூடிய விரைவில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தலைவர் 169 படம் குறித்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகியுள்ளது. அதுஎன்னவென்றால், தலைவர் 169 திரைப்படமும் ஒரு கடத்தல் கதை தான் என்று கூறப்படுகிறது. தலைவர் 169 படம் குறித்த தகவல்: சூப்பர் ஸ்டார் ரஜினியின் மகளாக பிரியங்கா அருள்மோகன் நடிக்க இருக்கிறார். தன் மகளை கடத்திய தீவிரவாத கும்பலை ரஜினிகாந்த் கண்டுபிடிப்பது தான் கதையாக இருக்கும் என்று கூறப்பட்டு வருகிறது. ஆகவே நெல்சனின் டார்க் காமெடி கடத்தல் கதை தான் தலைவர் 169 படத்திலும் தொடரும் என்று சொல்லப்படுகிறது. அதுமட்டும் இல்லாமல் இந்த படத்திலும் யோகிபாபு, ரெடின்கிங்ஸ்லி ஆகியோர் வருவார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். ஆனால், இன்னும் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. Advertisement TAGS Nelson Rajinikanth அண்ணாத்த தலைவர் 169 நெல்சன் திலீப் குமார் ரஜினிகாந்த் விஜய் நெல்சன் Facebook Twitter Pinterest WhatsApp Previous article‘படத்த பாத்தீங்களா இல்லையா, வேதா ஒரு டான், மாடல் இல்ல’ – ஹரித்திக் ரோஷனின் லுக்கை கண்டு கலாய்க்கும் நெட்டிசன்கள். Next article‘படம் ஆரம்பிச்ச 10 நிமிசத்துல அவள போட்டு தள்ளிட்டு படத்த கொண்டு போற’ – விஜய் 66 ஹீரோயின் அறிவிப்பால் கடுப்பான ரசிகர்கள். subhashini RELATED ARTICLESMORE FROM AUTHOR சமீபத்திய 23 ஆண்டுகளுக்கு முன் பார்த்திபன் கொடுத்த கடனை திருப்பி கொடுத்த மும்தாஜ். பார்த்திபன் போட்ட பதிவால் நெகிழ்ச்சி அடைந்த மும்தாஜ்.  சமீபத்திய ‘உங்க கிட்ட இருந்து இத எதிர்பார்க்கல Homelyயா இருங்க’ – 96 குட்டி ஜானு பதிவிட்ட புகைப்படத்தால் புலம்பிய ரசிகர்கள். சமீபத்திய தன் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்யக் கோரி டிக்டாக் சூர்யா வழக்கு – நீதிபதியின் பதில் இதான். சமூக வலைத்தளம் 594,971FansLike 928FollowersFollow 0SubscribersSubscribe டேக் மேகம் Ajith bigg boss Bigg Boss 4 Bigg Boss Promo Bigg Boss Tamil 3 Bigg Boss Tamil 4 Bigg Boss Tamil 5 Dhanush julie Kamal kavin Losliya Master Meera Mithun Mersal Nayanthara Rajini Rajinikanth Samantha sarkar Sivakarthikeyan Surya Vanitha Vijay vijay sethupathi Vikram yashika anand அஜித் கமல் சமந்தா சிம்பு சிவகார்த்திகேயன் சூர்யா ஜூலி தனுஷ் நயன்தாரா பாண்டியன் ஸ்டோர்ஸ் பிக் பாஸ் மீரா மிதுன் மெர்சல் ரஜினி வனிதா விக்ரம் விஜய் விஜய் சேதுபதி
பொதுவாழ்வில் 65 ஆண்டுகள் சேவையாற்றிய சமூக சேவகருக்கு, புகாரி ஷரீஃபில் பாராட்டு விழா! பணமுடிப்பு, பரிசுப் பொருட்கள் வழங்கி கவுரவிப்பு!! செய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்) இந்த பக்கம் 2784 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (2) <> கருத்து பதிவு செய்ய (ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0) { முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்} பொதுவாழ்வில் 65 ஆண்டுகள் சேவையாற்றிய – காயல்பட்டினம் சொளுக்கார் தெருவைச் சேர்ந்த எஸ்.இ.முஹம்மத் அலீ ஸாஹிப் (டீ.எம்.) என்ற சமூக சேவகருக்கு, மஜ்லிஸுல் புகாரி ஷரீஃபில் 14.04.2018. சனிக்கிழமையன்று சொற்பொழிவு நிறைவுற்றதும், ‘நஹ்வியப்பா நற்பணி மன்றம்’ சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு, மஜ்லிஸுல் புகாரி ஷரீஃப் துணைத் தலைவர் டீ.எம்.கே.முத்து செய்யித் அஹ்மத் தலைமை தாங்கினார். காயல்பட்டினம் முஹ்யித்தீன் பள்ளியின் இமாம் நஹ்வீ எம்.எம்.முத்துவாப்பா நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார். இவ்விழாவில், சமூக சேவகரின் 65 ஆண்டுகால பொதுச் சேவையை நினைவுகூர்ந்து அறிக்கை வாசிக்கப்பட்டது. பின்னர், நஹ்வியப்பா நற்பணி மன்றம் சார்பில் அவருக்கு பணமுடிப்பும், பரிசுப் பொருட்களும் வழங்கி கண்ணியப்படுத்தப்பட்டது. தொடர்ந்து, அவரது சேவையைப் பாராட்டி பல்வேறு குடும்பத்தினர் சார்பிலும் பரிசுப் பொருட்கள் வழங்கி வாழ்த்தப்பட்டது. நிறைவில், நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவரும் அவருடன் கைலாகு செய்து, பாராட்டிப் பிரார்த்தித்தனர். பாராட்டு விழா நிறைவுற்றதும், ஹாமிதிய்யா மாணவர்கள் பைத் பாடி நகர்வலமாக அழைத்துச் சென்றனர். இடையில், ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனம் சார்பில், அதன் முதல்வர் நஹ்வீ ஐ.எல்.நூருல் ஹக் நுஸ்கீ, எம்.எஸ்.பி.முஹம்மத் இஸ்மாஈல் ஆகியோரும், மர்ஹூம் சொளுக்கு எஸ்.எஸ்.எம்.யூஸுஃப் ஸாஹிப் (சாபு) அவர்கள் நினைவாகவும் பரிசுப் பொருட்கள் வழங்கிப் பாராட்டப்பட்டார். அவர் பல்லாண்டு காலம் தலைமை தாங்கிய – இன்றளவும் சேவையாற்றி வருகிற – இளைஞர் ஐக்கிய முன்னணி (YUF) சார்பில் வரவேற்பளிக்கப்பட்டது. அதன் துணைத் தலைவர் நஹ்வீ எம்.கே.அஹ்மத் முஹ்யித்தீன், செயலாளர் எஸ்.ஏ.கே.முஹ்யித்தீன் அப்துல் காதிர், துணைச் செயலாளர் ‘அக்கு ஹீலர்’ எஸ்.கே.ஸாலிஹ் ஆகியோரிணைந்து அவருக்கு சால்வை அணிவித்து, பரிசுப் பொருட்கள் வழங்கி வரவேற்றனர். பின்னர், பைத் பாடி நகர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டு அவரது இல்லத்தில் சேர்க்கப்பட்டார். இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை, நஹ்வியப்பா நற்பணி மன்ற துணைத் தலைவர் மவ்லவீ ஏ.சுல்தான் அப்துல் காதிர் ரஹ்மானீ தலைமையில், அதன் நிர்வாகிகளான மவ்லவீ ஹாஃபிழ் நஹ்வீ எஸ்.ஏ.கே.முஹம்மத் முஹ்யித்தீன் மஹ்ழரீ, சொளுக்கு ஏ.ஜெ.முஹ்யித்தீன் அப்துல் காதிர், எஸ்.ஏ.ஸிராஜ் நஸ்ருல்லாஹ், எம்.ஏ.கே.முஹம்மத் முஹ்யித்தீன், சொளுக்கு எஸ்.எம்.எஸ்.தவ்ஹீத், சொளுக்கு எஸ்.எம்.எஸ்.ஷெய்க் அப்துல் காதிர், எம்.ஏ.கே.ஜெய்னுல் ஆப்தீன், மவ்லவீ ஹாஃபிழ் நஹ்வீ ஒய்.ஸதக்கத்துல்லாஹ் ஃகைரீ உள்ளிட்ட குழுவினர் இணைந்து செய்திருந்தனர். 85 வயது நிரம்பிய – 65 ஆண்டு கால சமூக சேவகர் எஸ்.இ.முஹம்மத் அலீ ஸாஹிப் (டீ.எம்.) அவர்களைப் பாராட்டி, பாராட்டு விழாவின்போது வாசிக்கப்பட்ட அறிக்கை:- 85 வயது இளைஞரின் மகத்தான சேவைகளுக்கு பாராட்டும்,நிம்மதியான வாழ்வுக்கு துஆ வேண்டி................... அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ காயல்பட்டினம், சொளுக்கார் தெருவைச்சார்ந்த மரியாதைக்குரிய S.E.முஹம்மது அலி சாஹிப் அவர்கள். இவர் கிழக்குப்பகுதி மக்களால் அன்புடன் தலைவர் மற்றும் T.M மாமா என்று செல்லமாக அழைக்கப்படுபவர். இவர் வயதில் 85 ஆனாலும் சேவையில் 25 வயதுதான்! மாஷாஅல்லாஹ்! கடந்த 65 வருடங்களுக்கு மேலாக பொதுப்பணிகளில் தன்னலம் கருதாது பொதுநலத் தொண்டுகளில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர். குருவித்துறை மஹல்லாவில் ஏற்பட்ட சோதனைக்குரிய காலங்களில் சிறந்த முறையில் செயல்பட்டு தீர்வு கண்டவர்.அதற்காக இரவு பகல் பாராது பாடுபட்டவர்களுள் இவருடைய பங்கு மகத்தானது. 91 ஆண்டு தொண்மையான இந்த மஜ்லிஸில் எந்த நிர்வாகப் பொறுப்பையும் வகிக்காமல், அதற்காக ஆசையும் படாமல், பணி செய்வதற்கு பதவிகள் அவசியம் இல்லை என்ற கொள்கை கொண்டு செயல்பட்டவர். சுமார் கடந்த 5 வருடங்களுக்கு முன்னதாகத்தான் ஸபையின் மானேஜர் என்ற பொறுப்பில் பொதுக்குழுக் கூட்டத்தால் பலரின் வலியுறுத்தலின் பேரில் அங்கம் வகித்தார்கள். இவரின் சேவைக் கடலிலிருந்து சில துளிகள்... >>> எமது மஹல்லாவின் அனைத்து வீடுகளிலும் நடக்கும் எந்த நல்ல நிகழ்வுகளானாலும், எந்த துக்க நிகழ்வுகளானாலும் - அவை இவரின் அறிவுத்தலின் படிதான் நடந்தேறும்... >>> குருவித்துறைப் பள்ளியின் ரமழான் கால அனைத்து நிகழ்வுகளையும் – யாரும் அழைக்காமலேயே – தாமாக முன்வந்து முன்னின்று இறுதி வரை நடத்தல்... >>> ரபீஉல் அவ்வல், ரபீஉல் ஆஃகிர் மாதங்களில் நடைபெறும் மவ்லித் நிகழ்ச்சிகளில் நேர்ச்சை வினியோகத்தை முறைப்படுத்துதல்... >>> இளைஞர் ஐக்கிய முன்னணி (YUF) சங்கத்தை உருவாக்கிய முதன்மையானவர்களுள் இவரும் ஒருவர். சங்கத்தின் வளர்ச்சிக்காக அனைத்து உறுப்பினர்களின் பேராதரவோடு சிறப்பாக நடத்த வழிவகை செய்பவர்... >>> மத்ரஸா ஹாமிதிய்யாவின் மகத்தான விழாக்கள் அனைத்தும் செம்மையாக நடந்தேற முழுமையாக தன்னை ஈடுபடுத்திக் கொள்பவர்... >>> தாய்ச்சபை மஜ்லிஸுல் புகாரி ஷரீஃபின் விழாக்கள் ஆரம்பம் செய்வதற்கு முன்பே தன் பங்களிப்பை கொடுப்பதுடன், விழாக்கள் சிறப்பாக முடிவடைந்த பின்பும் தொடர்ந்து பங்காற்றுபவர். >>> “பொது நிறுவனங்கள் சட்டத்தின் படிதான் நடக்கும்; ஆனால், குருவித்துறைப் பள்ளி மஹல்லாவில் நடக்கும் அனைத்து பொது நிகழ்ச்சிகளும் டீ.எம். அவர்களின் சத்தத்தில்தான் நடக்கும்” என்று, மஹல்லாவின் மூத்தவர்களால் அடிக்கடி சொல்லப்படுவதுண்டு. >>> கிழக்குப் பகுதியில் தம் வீட்டில் பெற்றோர் சொல் கேட்காத பிள்ளைகளும் கூட இவரின் சொல்லுக்குக் கட்டுப்படுவர். >>> பொது நிறுவனங்களில் இவர் பொறுப்பெடுத்து கடைசி வரை கட்டிக்காத்து செயல்படும் விதம், தன்வீட்டின் நிகழ்வுகள் போல் மிகவும் கண்ணும் கருத்துமாய்ப் பேணிப்பாதுகாத்து வரும் முறை – அனைவருக்கும் சிறந்த முன்னுதாரணம்... >>> இப்படியொரு பாராட்டு நிகழ்வு என்றாவது தன் வாழ்நாளில் நடைபெறும் என்று நினைத்தறியாதவர்... மொத்தத்தில் இவர் பொதுச் சேவையில் கிழக்குப் பகுதியின் பொக்கிஷங்களுள் ஒருவர். இவை தனிமனிதப் புகழ்ச்சிக்காக எடுத்துக்கூறப்படும் வெற்றுச் சொற்கள் அல்ல! மாறாக அவரின் தியாகத்தைப் போற்றவும், இதைப் போல் நாமும் பொதுச் சேவைகளில் பணியாற்ற வேண்டும் என்ற உந்துதலுக்காகவுமே கூறப்படுகிறது. இவரது தன்னமற்ற சேவைகளுக்கு இப்பொழுது நாம் வழங்கும் பாராட்டோ அல்லது பணமுடிப்போ நிச்சயம் ஈடாகாது. எல்லாம்வல்ல அல்லாஹ், எஸ்.இ.முஹம்மத் அலீ ஸாஹிப் (டீ.எம்.) அவர்களுக்கு நீடித்த ஆயுளையும் ,நிம்மதியான வாழ்வையும் கொடுப்பானாக... இவர்களது இம்மை - மறுமை வாழ்க்கையையும் பிரகாசமாக ஆக்கி வைப்பானாக... இவரது குடும்பத்தாரையும் சிறப்பாக்கி வைப்பானாக, ஆமின்... தாங்களும் இவர்களின் நீண்ட ஆயுளுக்கும், ஈருலக நிம்மதிக்கும் துஆ செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு, நஹ்வியப்பா நற்பணி மன்றம் சார்பில் பாராட்டு அறிக்கை வாசிக்கப்பட்டது. {TAGS} mbss mbss 1439 tm mama s.e.mohamed ali sahib t.m. paaraattu vizha tm mama paara yuf youths united front hamidhiyya இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >> இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >> 1. Re:... posted by S.S. Jahufer Sadik (Jeddah - K.S.A) [15 April 2018] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 46135 S . E . முஹம்மதலி சாஹிப் TM அவர்களுக்கு வாழ்த்துக்கள்! வல்ல நாயன் TM அவர்களுக்கு நீடித்த ஆயுளையும், நிறைவான செல்வத்தயும், நல்ல உடல் ஆரோக்கியத்தயும்,இன்று போல் என்றும் பொதுவாழ்வில் தன்னலம் பாராது ஈடுபடும் மனப்பான்மையையும் மாறாத சத்தத்தயும் கொடுத்தருள்வானாக என வல்ல நாயனை வேண்டுகிறேன். இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா? [இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்] 2. மாஷா அல்லாஹ் பாரக்கல்லாஹ் posted by அஹ்மது தாஹிர் M.A.C (ரியாத்) [03 May 2018] IP: 95.*.*.* Romania | Comment Reference Number: 46161 மாஷா அல்லாஹ் பாரக்கல்லாஹ்..! இவர்களுக்கு சர்வ வல்லமை மிக்க அல்லாஹுத்தஆலா நீடித்த ஆயுளையும், நிம்மதியான வாழ்வையும் கொடுப்பானாக... இவர்களது இம்மை - மறுமை வாழ்க்கையையும் பிரகாசமாக ஆக்கி வைப்பானாக... இவரது குடும்பத்தாரையும் சிறப்பாக்கி வைப்பானாக, ஆமின்..!! இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா? [இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்] முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >> இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >> முகநூல் வழி கருத்துக்கள் ட்விட்டர் வழி கருத்துக்கள் TWITTER COMMENTS FOR #KOTW20406 பிற செய்திகள் அனுமதியின்றி இயங்கி வரும் DCW அமிலக் கழிவு தொழிற்சாலையை மூடுக! மாவட்ட ஆட்சியரிடம் “நடப்பது என்ன?” குழுமம் கோரிக்கை!! (17/4/2018) [Views - 1053; Comments - 0] நியாய விலைக் கடையில் தனியார் நிறுவன பொருட்களை வாங்க வற்புறுத்தல்! நடவடிக்கை கோரி மாவட்ட ஆட்சியரிடம் “நடப்பது என்ன?” புகார் மனு! (17/4/2018) [Views - 1473; Comments - 0] பப்பரப்பள்ளி பகுதியில் குப்பைகளை எரித்தோர் மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி, மாவட்ட ஆட்சியரிடம் “நடப்பது என்ன?” குழுமம் கோரிக்கை! (17/4/2018) [Views - 1094; Comments - 0] இடித்தகற்றப்பட்ட பழைய தைக்கா பள்ளி இடத்தில் விளையாட்டு மைதானம் அமைத்திடுக! மாவட்ட ஆட்சியரிடம் “நடப்பது என்ன?” குழுமம் கோரிக்கை!! (17/4/2018) [Views - 1439; Comments - 0] காயல்பட்டினம் துவக்கப்படாதிருக்கும் நீட் தேர்வு பயிற்சி மையத்தை உடனடியாகத் துவக்கிடுக! மாவட்ட ஆட்சியரிடம் “நடப்பது என்ன?” குழுமம் கோரிக்கை! (17/4/2018) [Views - 1019; Comments - 0] பாலியல் வன்முறையில் பலியாக்கப்பட்ட சிறுமி ஆஸிஃபா: நகர தமுமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்! திரளானோர் பங்கேற்பு!! (17/4/2018) [Views - 1357; Comments - 0] அபூதபீ கா.ந.மன்ற செய்தித் தொடர்பாளரின் மாமனார் காலமானார்! இன்று 10.00 மணிக்கு நல்லடக்கம்!! (16/4/2018) [Views - 2074; Comments - 2] புகாரி ஷரீஃப் 1439: 27ஆம் நாள் நிகழ்வுகள்! அன்றாடம் நிகழ்ச்சிகள் இணையதள நேரலையில்... (16/4/2018) [Views - 1516; Comments - 0] நாளிதழ்களில் இன்று: 16-04-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (16/4/2018) [Views - 742; Comments - 0] ஏப். 13 இரவில் இதமழை! (16/4/2018) [Views - 1068; Comments - 0] புகாரி ஷரீஃப் 1439: 26ஆம் நாள் நிகழ்வுகள்! அன்றாடம் நிகழ்ச்சிகள் இணையதள நேரலையில்... (15/4/2018) [Views - 1400; Comments - 0] காயிதேமில்லத் அமைப்பின் 30ஆம் ஆண்டு முப்பெரும் விழா ஏப். 17 அன்று நடைபெறுகிறது! (15/4/2018) [Views - 1800; Comments - 0] நாளிதழ்களில் இன்று: 15-04-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (15/4/2018) [Views - 758; Comments - 0] ஸ்டெர்லைட் ஆலையின் (அலகு 1க்கான) கால நீட்டிப்பு விண்ணப்பம் நிராகரிப்பு! பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்படுவோர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை!! – மாவட்ட ஆட்சியர் (15/4/2018) [Views - 1002; Comments - 0] இக்ராஃ செயற்குழு முன்னாள் உறுப்பினரின் மாமனார் காலமானார்! இன்று 23.00 மணிக்கு நல்லடக்கம்!! (14/4/2018) [Views - 1732; Comments - 1] மாணவ-மாணவியர் நலன் கருதி, நகர பள்ளிக்கூடங்களுக்கு “நடப்பது என்ன?” குழுமம் வேண்டுகோள்! (14/4/2018) [Views - 1256; Comments - 0] நாளிதழ்களில் இன்று: 14-04-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (14/4/2018) [Views - 781; Comments - 0] புகாரி ஷரீஃப் 1439: நிறைவு நாட்களின் சிறப்பு நிகழ்ச்சி நிரல்! (14/4/2018) [Views - 2289; Comments - 0] புகாரி ஷரீஃப் 1439: 25ஆம் நாள் நிகழ்வுகள்! அன்றாடம் நிகழ்ச்சிகள் இணையதள நேரலையில்... (14/4/2018) [Views - 1360; Comments - 0] காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல் செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல் குறியீடு எண்கள் (ID #) வழி தேடல் செய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று #aljamiulazhar#azadtrophy#dcwredsea#kayalabudhabi#kayalardhinam#kayalbahrain#kayalbeach#kayalbglr#kayalchennai#kayalchina#kayaldammam#kayaldelhi#kayaldubai#kayalhk#kayalhyd#kayaljaipur#kayaljeddah#kayaljumma#kayalkerala#kayalkolkata#kayalkuwait#kayallanka#kayalmadinah#kayalmakkah#kayalmalay#kayalmumbai#kayaloman#kayalpatnam#kayalpattinam#kayalqatar#kayalrain#kayalriyadh#kayalsingai#kayalthailand#kayaltrain#kayaluk#kayalusa#kayalvoter#kayalyanbu#kotwbn#kscground#magdoompalli#periyapalli#redstarsangam#sirupalli#uscground#yufsangam தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும் Advertisement Tweets by @kayalontheweb kayalpatnam.com >> Go to Homepage செய்திகள் அண்மைச் செய்திகள் அதிகம் வாசிக்கப்பட்டவை அதிகம் கருத்து கூறப்பட்டவை பரிந்துரைக்கப்பட்டவை இந்த நாள், அந்த ஆண்டு நீங்கள் படிக்காதவை செய்திகளை தேட தலையங்கம் அண்மைத் தலையங்கம் பிற தலையங்கங்கள் ஆக்கங்கள் எழுத்து மேடை சிறப்புக் கட்டுரைகள் இலக்கியம் மருத்துவக் கட்டுரைகள் ஊடகப்பார்வை சட்டம் பேசும் படம் காயல் வரலாறு ஆண்டுகள் 15 வாசகர் கருத்துக்கள் செய்திகள் குறித்த கருத்துக்கள் தலையங்கம் குறித்த கருத்துக்கள் எழுத்து மேடை குறித்த கருத்துக்கள் சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் கவிதைகள் குறித்த கருத்துக்கள் இணையதள கருத்தாளர்கள் புள்ளிவிபரம் சிறப்புப் பக்கங்கள் புதிய வரவுகள் நகர்மன்றம் வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE) குடிநீர் திட்டம் ரயில்களின் தற்போதைய நிலை ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை EDUCATION பள்ளிக்கூட கட்டணங்கள் HSC Results (Since 2007) Comparative Analysis Best School Award Rankings Centum Schools 1000 or above Students 12th Standard Timetable 10th Standard Timetable தகவல் மையம் காயல்பட்டினம் தொழுகை நேரங்கள் சூரிய உதயம் / மறைவு கணக்கிட சந்திர உதயம் / மறைவு கணக்கிட ஆபரணச் சந்தை அரசு விடுமுறை நாட்கள் நிகழ்வுகள் பக்கம் தமிழக அமைச்சரவை காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல் Hijri Calendar Government OTHER SERVICES Email Service Mobile Version On Twitter ADVERTISE HERE Website Traffic What are GoogleAds? Advertisement Tariff ABOUT US Suggestions Credits KOTW Over The Years About KFT Recommend This Site Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
கந்தர் அநுபூதியில், அருணகிரிநாதப் பெருமான் கல்வியை கரவாகிய கல்வி என்று குறிப்பிடுகிறார். கற்க, கற்க கரவு மனதுக்குள் புகுந்து கொள்ளுமாம். கரவு என்றால் ஒளித்து வைத்தல், மறைத்து வைத்தல் என்று பொருள். “கரவாகிய கல்வி உளார் கடை சென்று இரவா வகை மெய்ப் பொருள் ஈகுவையோ? …” பாடல் 45, கந்தர் அநுபூதி யாருக்கும் கொடுக்க வேண்டாம் என்று நினைப்பவர்கள் முன் நின்று என்னை இரக்க வைக்காமல் நீயே கொடுப்பாயா? என்று கேட்கிறார். அறிவோ, செல்வமோ பெருக, பெருக ஒரு வித மனமாற்றத்தை ஏற்படுத்தும் போல. அதனால்தான், மகாகவி பாரதியும், படிச்சவன் சூதும் வாதும் பண்ணிணால் 'ஐயோ' என்று போவான் என்று சாபம் கொடுத்தார். “தரித்திரம் போகுது; செல்வம் வளருது படிப்பு வளருது; பாவம் தொலையுது; படிச்சவன் சூதும் பாவமும் பண்ணினால் போவான், போவான், ஐயோவென்று போவான்! --- புதிய கோணாங்கி, மகாகவி பாரதி நமக்கு கிடைக்க, கிடைக்க ஒளித்து வைக்க வேண்டும் என்ற கரவு தோன்றிவிடுகிறது. நாம் கையை மேலே மேலே நோக்கியே இரைஞ்சுகிறோம். நமக்கும் கீழே, நம்மை நோக்கி இரைஞ்சும் கைகளை நாம் கண்டு கொள்வதில்லை. இது நிற்க. “கரப்பிலா நெஞ்சின் கடன் அறிவார் முன் நின்று இரப்பும் ஓர் ஏஎர் உடைத்து.” --- குறள் 1053; அதிகாரம் – இரவு கரப்பு = ஒளித்தல்; கடன் = கடமை; ஏர் = அழகு; ஏஎர் – அளபெடை; கரப்பிலா நெஞ்சின் கடன் அறிவார் முன் நின்று = தன் கடமையை அறிந்த கரப்பு இல்லா நெஞ்சங்களின் முன் நின்று; இரப்பும் ஓர் ஏஎர் உடைத்து = இரப்பதுகூட அழகுதான்.
இத்தனை நாளாக எவ்வளவோ மொக்கை பதிவுகளை முழம் முழமாக ,சரம் ,சரமாக எழுதி சல்லடை கண்ணாக உங்கள் நெஞ்சமும் புண்ணாக செய்து வந்தப்போதிலும் , சற்றும் அயராது அவற்றைப்படித்து பின்னூட்டமிட்டு ,அடியேனை அன்புடன் ஊக்கப்படுத்தி வந்துள்ளீர்கள், உங்கள் பேராதரவுடன் வெற்றிகரமாக இன்று 256 ஆவது பதிவு எனும் "மைல் /கிலோமீட்டர் கல்லினை" எட்டியுள்ளேன், மேலும் வழக்கமாக சராசரியாக 300-400 அடிகள் மட்டுமே ஒவ்வொரு பதிவுக்கும் கிடைக்கும், ஆனால் இதற்கு முன்னர் வெளியிட்ட "255' ஆவது பதிவான "கற்றது தமிழ்-6" எனும் பதிவிட்ட அன்றே ஒரே நாளில் "966" அடிகள்(ஹிட்ஸ்) போட்டு குபீர் என உச்சத்தில் தூக்கி வைத்து எமது பதிவை பெருமை படுத்தவும் செய்தீர்கள், ஆதாரமில்லாமல் அடுப்பு பற்ற வைக்கும் பழக்கமில்லை என்பதால் ,இதோ ஆதாரங்கள், படம்-1 படம்-2 இன்றளவில் எமது வலைப்பதிவிற்கு ஒட்டு மொத்த அடிகளாக (hits)"199,556" என்ற அரிய இலக்கினை அடையவும் செய்துள்ளீர்கள், ஒப்பாரும் இல்லாமல் மிக்காரும் இல்லாமல் ,மொக்கையிலும் கடைந்தெடுத்த மொக்கைகளாக எத்தனையோ பதிவுகளை போட்டு வந்தப்போதிலும் அடியேனுக்கு ஆக்கமும்,ஊக்கமும்,அன்பும்,ஆதரவும் அள்ளி அள்ளி தந்து போஷித்த உங்களுக்கு நன்றி சொல்ல தமிழ் ,ஆங்கிலம், மலாய், சீன மான்டரின், தகலுகா, ஸ்வாகிலி,செல்டிக் ,ஸ்பானிஷ் என எந்த மொழியிலும் எனக்கு வார்த்தைகளே கிடைக்கவில்லை,,ஆயினும் வேறு வழி எதுவும் புலப்படாத காரணத்தினால் எனக்கு தெரிஞ்ச தமிழிலேயே நன்றி சொல்லிவிடுகிறேன் ,"டேங்க்ஸ்" ஹி...ஹி வழக்கமாக எல்லாரும் 100,200,500,1000 ஆவது பதிவுகளை தான் அல்பத்தனமாக "மைல் கல்" என சொல்லி பெருமை பட்டுப்பாங்க,நாம அம்மாம் பெரிய சாதனை எல்லாம் செய்ய வாய்ப்பில்லை, வருங்காலத்தில அப்படிலாம் சாதனை செய்யுற வரைக்கும் பொழைச்சிக்கிடப்போமானும் தெரியாது,மேலும் இந்த 256,(or)342 போன்ற எண்கள் எல்லாம் என்னப்பாவம் பண்ணிச்சுனு அதை எல்லாம் குறிப்பிட்டு மக்கள் கொண்டாடுவதில்லையேனும் தோன்றியது, அதான் சும்மா "ஒரு மொக்கை +சுய விளம்பரம்" ஆக எழுதி அவ்வெண்களையும் சிறப்பித்தாயிற்று ,எல்லா நாளும் நல்ல நாளே ,எல்லா எண்களும் சிறப்பான எண்களே, நல்லோர்க்கில்லை நாளும் கோளும்! இந்த மொக்கைய படிக்கவா இம்பூட்டு தூரம் வந்தோம்,எதாவது "கருத்தா "சொல்லுய்யானு நீங்க சொல்லுறது கேட்குது , சரி உங்களுக்காக ,உங்க ஆசைக்காகவே கருத்தா , சில ஊர்களின் இன்னாள் மற்றும் முன்னால் பெயர்களை பட்டியலிடுகிறேன் ,படித்து இன்புறுங்கள்! அக்காலத்தில் சில ஊர்களை மட்டும் தொகுத்து,இன்னாள்,முன்னால் ஊர்ப்பெயர்கள் என ஒருப்பதிவிட்டிருந்தேன்,அதன் பின்னூட்டத்தில் பலரும் மேலும் சில ஊர்களின் முன்னால் பெயர்களை அளித்திருந்தார்கள், அவற்றையும் சேர்த்து ,இன்னும் சில ஊர்களின் பெயர்களையும் தொகுத்து வழங்கியுள்ளேன். அப்பழைய பதிவினை படிக்க சுட்டியை அமுக்கவும், ஊர்பெயர்கள்-1 இந்நாள் - முன்னால் #மதுரை - திருவாலவாய் (ஆலவாய்) மருத மரங்கள் அதிகம் கொண்ட இடம் என்பதால் மருத வனம் என்ற பெயரும் உண்டு,அதுவே மருதை ,மதுரை ஆயிற்று என்கிறார்கள். # திருநெல்வேலி - வேணு வனம். மூங்கில் காடுகள் நிறைந்த பகுதி என்பதால் ,வேணு வனம் என்ற பெயர் உண்டு. #சீர்காழி - பிரமாபுரம் #மயிலாடுதுறை - மாயுரம், மாயவரம் ஆற்றில் இறங்க படிகள் உள்ள இடத்தினை துறை என்பார்கள்,அத்துறையில் மயிலாடும் என்பதால் மயிலாடுதுறை என்றப்பெயர் என்கிறார்கள். இன்னொரு காரணம் மொழியியல் அடிப்படையில் நானே கண்டுப்பிடிச்சது, மயிலம் என்றால் பால்வெண்மை,பழுப்புவெண்மை நிறம் ஆகும், மயிலக்காளை என்பது பழுப்புகலந்த வெள்ளை மாட்டினைக்குறிக்கும். மயிலம் +ஆடு = பழுப்பு நிற ஆடுகள் = செம்மறியாட்டினை குறிக்கும். எனவே செம்மறியாடுகள் கூட்டமாக தண்ணீர் அருந்திய ஆற்றந்துறையாகவும் இருக்கலாம். ஏன் எனில் அருகிலே ஆடுதுறை என இன்னொரு ஊரும் உள்ளது. அங்கு விவசாய ஆராய்ச்சி நிலையமும் உள்ளது,அவ்வூரில் இருந்து வெளியாகும் பயிர் வகைகளுக்கு "ADT-1,ADT-2 என்பதாக பெயர் வைப்பார்கள். மேலும் அந்த பக்கமெல்லாம் மயில்களின் நடமாட்டமும் இல்லை. #வைத்தீஸ்வரன் கோயில் - புள்ளிருக்கு வேளூர் #காஞ்சிபுரம் - கச்சி ஏகம்பம் #விருத்தாசலம் - திருமுதுகுன்றம்,பழமலை. #திருவெண்காடு - ஸ்வேதாரண்யம் (ஸ்வேத - வெண்மை, ஆரண்யம் - காடு) #லால்குடி = திருதவத்துறை பெண்ணாடம் - பெண்ணாடகம் . பெண்ணாடகம் என்றால் பெண்ணை அடகு வைத்தவர் என்று பொருள், அங்கு இருந்து சிவனடியார் சிவனுக்கு சேவை செய்ய அவர் மனைவியை அடகு வைத்தாராம். # திருச்சி - சிராப்பள்ளி - திருச்சிராப்பள்ளி. திரு + சிரா + பள்ளி திரு = மரியாதை சிரா என்னும் சமண துறவி அங்கே வாழ்ந்தாரம், பள்ளி = வசித்தல் ,அல்லது சமண மடலாயம் அமைத்து நடத்திவந்துள்ளார். எனவே திருச்சிராப்பள்ளி என்றப் பெயர் வந்ததாம்! மற்றொரு கதை, ராவணன் மகன் திரிஷுர் என்ற 3 தலை உடையவன் சிவன் மீது அங்கு இருந்து தவம் செய்ததாக கூறப்படுகிறது. சிராப்பள்ளி எனக்கூறும் ஒரு தேவாரப்பாடல், நன்றுடை யானை தீயதில் லானை நரைவெள்ளே(று) ஒன்றுடை யானை யுமையொரு பாகமுடையானைச் சென்றடையாத திருவுடை யானை சிராப்பள்ளிக் குன்றுடை யானைக் கூறஎன் னுள்ளங் குளிரும்மே. #உறையூர்- உறந்தையூர். உறையூர் 'சூரவாதித்த சோழனால்' உருவாக்கப்பட்டது. உறந்தை, வாசபுரி, கோழியூர் ,முக்கீச்சுரம் என்னும் பெயர்களும் இதற்குண்டு. சோழர்காலம் தொட்டு தலைநகராக,பெருநகராக விளங்கியது,அப்பொழுது திருச்சியெல்லாம் வெறும் மலைக்காடாகவே இருந்தது பின்னாளில் திருச்சி வளர்ந்து, உறையூர் அதன் ஒரு சிறுப்பகுதியாகிவிட்டது. # குளித்தலை - குழித்தண்டலையூர். தண்டலை என்றால் சோலை எனப்பொருள்,காவிரி ஆற்றங்கரையோரம், சற்றே பள்ளமான இடத்தில் உள்ள சோலைகள் சூழ்ந்த ஊர் எனும் பொருள்பட "குழித்தண்டலையூர்" எனப்பெயரிடப்பட்டுள்ளது. பின்னர் குழித்தலையாகி, இப்போது குளித்தலை என்றாகியுள்ளது. திருவாரூர் - ஆரூர் அல்லது ஆருக்காடு. ஆர் என்றால் அத்திமரம், நிறைய அத்திமரங்கள் சூழ இருந்த ஊர் என்பதால் ஆருர் எனப்பட்டு ,சைவ சமயக்குறவர்களால் பாடல் பெற்ற தலம் என்பதால் ,திருவாருர் ஆயிற்று. வட ஆர்க்காடு,தென் ஆர்க்காடு என்பதும் அத்திமரங்களால் சூட்டப்பட்ட பெயரே. # பழவேற்காடு - பழவேலங்காடு. மிக பழமையான அல்லது முதிர்ந்த கருவேல மரங்கள் கொண்ட காடு என்ற பொருளில் பெயரிடப்பட்டது. பின்னர் டச்சுக்காரர்கள்(ஆங்கிலேயர்கள்) "புலிக்காடு" எனப்பெயர் வைத்துவிட்டார்கள், ஒரு வேளை அக்காலத்தில் அங்கு புலிகளும் நடமாடி இருக்கலாம். சென்னை கோடம்பாக்கத்திற்கே புலியூர் என்ற பெயர் உண்டு. #சீவலப்பேரி- ஶ்ரீவல்லபப் பேரேரி. பாண்டிய மன்னன் மாறன் ஶ்ரீவல்லபன் என்பவர் பாசனத்திற்காக பெரும் ஏரியை வெட்டினாராம், பெரிய ஏரியை பேரேரி என்பார்கள், மன்னன் பெயரால் ஶ்ரீவல்லப்பபேரேரி என அவ்வூருக்கும் பெயராயிற்று. காலப்போக்கில் ஶ்ரீவல்லபன் -சீவல்லபன் - சீவலம் என ஆக்கி சீவலப்பேரி என புழங்க ஆரம்பித்தது. இவ்வூரில் உள்ள பெருமால் கோயிலால் தென் திருமாலிருஞ்சோலை என்ற பெயரும் உண்டு. # கயத்தார் - கோதண்டராம நதி, முக்கூடல். பெயர் காரணத்திற்கான ஒரு புராணத்தின் படி, சிரிராமர் வனவாசத்தின் போது அவ்வழியே செல்கையில் சீதைக்கு தண்ணீர் தாகம் ஏற்படவே ,வில்லின் முனையால் தரையில் ஊன்றி நீர் வர செய்தாராம்,அப்படி உருவான அந்த ஆற்றுக்கு கோதண்டராம நதி எனப்பெயர். # இன்னொரு பெயர்க்காரணம், கயம் என்றால் ஆழமான நீரூற்று ,அந்நீரூற்றில் இருந்து உற்பத்தியாகும் ஆறு என சொல்ல கயத்தாறு எனப்பெயர் சூட்டப்பட்டது,அவ்வாற்றின் கறையோரம் உள்ள ஊர் கயத்தார் என அழைக்கப்பட்டுள்ளது. பொதிகை மலையில் இருது உற்பத்தியாகும் சித்ரா நதி,தாமிரபரணி மற்றும் கயத்தாறு ஆகியவை ஒன்று சேரும் இடம் என்பதால் "முக்கூடல்" எனவும் பெயர் ,முக்கூடல் பள்ளு என ஒரு சிற்றிலக்கியம் கூட பாடப்பட்டுள்ளது. # பெரம்பலூர்- பெரும்புலியூர். நிறைய புலிகள் அக்காலத்தில் இங்கு வாழ்ந்திருக்க வேண்டும். # திண்டிவனம்- திந்திருணி வனம். திந்திருணீ என்றால் புளிய மரம், நிறைய புளிய மரங்கள் காடாக இருந்தமையால் ,புளியங்காடு என்ற பொருளில் திந்திருணி வனம் என பெயரிடப்பட்டது. # அரங்கண்ட நல்லூர்- அறையணி நல்லூர். அறை என்றால் பாறை, அதன் அருகே உள்ள(அணி) நல்ல ஊர் எனும் பெயரில் அறையணி நல்லூர் என அழைக்கப்பட்டுள்ளது. # திருவள்ளூர்-திரு எவ்வுள்ளூர். எவ்வுள்ளூர் என்ற பெயர், ,திருமங்கையாழ்வாரும், திருமழிசையாழ்வாரும் இவ்வூரில் உள்ள பெருமாளை பாடியதால் திருஎவ்வுள்ளூர் என அழைக்கப்பட்டு , பின்னர் திரிந்து திருவள்ளூர் ஆகிற்று. #ஊட்டி - உதகைமண்டலம் - ஒத்தைக்கல் மந்தை. தோடர்கள் மாடு மேய்க்கும் இடம் , ஒற்றை பெரும்பாறை இருக்கும் இடத்தில் மந்தையாக மாட்டினை மேய்த்து வாழ்ந்ததால், அவ்விடம் ஒற்றை கல் மந்தை என அழைக்கப்பட்டது. வெள்ளையர்கள் அதனை ஒட்டகமண்ட் என அழைத்து ஊட்டி ஆகி ,பின்னர் உதகை மண்டலம் ஆகிவிட்டது. # கோயம்பேடு - கோசை நகர். சிரிராமரு, சீதை மீது சந்தேகம் கொண்டு அனுப்பிவிட்டதால் வால்மீகி ஆதரவில் அங்கு தங்கி இருந்தார்களாம், லவ -குசா என்ற இரட்டையரின் பெயரால் "லவ-குச புரி" என்றும்,பின்னர் குசன் பெயரால் அவ்விடம் குசன் நகர் என்றழைக்கப்பட்டு ,கோசை நகர் ஆகியதாம், திருப்புகழில் "கோசை நகர் "எனக்குறிப்பிடப்பட்டுள்ளதாம்.இன்றும் அங்கு ஒரு ராமர் கோவில் உள்ளதாம். குசம் - கோரைப்புல். சீதை குளிக்க சென்றப்போது ,லவனை பார்த்துக்கொள்ள சொல்லி ,வால்மீகியிடம் விட்டு சென்றார்களாம், ஆனால் திடீர் என லவன் காணமால் போய்விட்டதால், சீதை வந்துக்கேட்டால் என்ன செய்வது என அச்சமுற்று , ஒரு கோரைப்புள்ளை கிள்ளிப்போட்டு மந்திரம் சொல்லி "லவன்" போன்ற ஒரு சிறுவனை உருவாக்கினாராம், ஆனால் சீதை திரும்ப வருகையில் ,விளையாட போயிருந்த உண்மையான லவனும் திரும்பிவிடவே .இரண்டு சிறுவர்களைக்கண்டு , "கோன் ஹை" என சீதாப்பிராட்டி வினவவே ,நடந்தக்கதையை சொல்லி மன்னிப்பு கேட்டாராம் வால்மீகி. சரி போனது போகட்டும் இருவருமே எனது பிள்ளைகளாக இருக்கட்டும் என சொல்லி, கோரை- குசம் இல் இருந்து உருவான சிறுவன் என்பதால் "குசன்" எனப்பெயரிட்டார்களாம். சீதை,வால்மீகிலாம் மெட்ராச பட்டிணத்துக்கு வந்திருப்பாங்களானு அறிவுப்பூர்வமாக கேள்விக்கேட்கலாம், என்ன செய்ய ஊருக்கு பெயர்க்காரணம்னு இப்படிய்யாப்பட்ட கதைகளை தானே சொல்லுறாங்க அவ்வ். கோயம்பேடு பேருந்து நிலையம் கட்டும் முன் அவ்விடம் எல்லாம் கோரைப்புல் அடர்ந்து காணப்படும், ஒரு வேளை கோரைக்காடு என்பதில் இருந்து கூட கோசை நகர் எனப்பெயர் வந்திருக்கலாம். இது மட்டுமில்லாமல் இன்னும் பல "இராமாயண தொடர்பில்" ஊர்ப்பெயர்கள் சென்னையை சுற்றி இருக்கு. # நந்தம்பாக்கம்- நந்தவனபுரம் அல்லது நந்தவனப்பாக்கம் பிருகு முனிவர் அங்கே ஒரு நந்தவனம் அமைத்து அதில் குடில் கட்டி வாழ்ந்தாராம், சிரிராமரு வனவாசம் வந்திருந்த போது சிறிது காலம் ,பிருகு முனிவர் ஆசிரமத்திலும் தங்கி சிரமபரிகாரம் செய்ததாக புராணம். நந்தவனம் இருந்தமையால் ,நந்தவனப்பாக்கம்.- நந்தம்பாக்கம். சிரிராமர் நினைவாக அருகில் இருந்த ஊருக்கு "ராமாபுரம்" எனப்பெயரிட்டார்களாம், தற்போது .ராமாவரம் என அழைக்கப்படுகிறது,அங்கு தான் "கலியுக ராமர்" எம்சிஆர் வாழ்ந்தார் என்ற அழியாப்புகழும் பெற்ற திருத்தலம் ஆகும்! # திருவான்மியூர்- திரு வால்மீகி நகர். வால்மீகி ராமாயணம் எழுதினப்பிறகு டயர்டாகி களைப்பார இன்பச்சுற்றுலா ஒன்னு கிளம்பி தென்னிந்தியாவுக்கு வந்தாரம்,அப்போ கடற்காத்து வாங்குறாப்போல , கிழற்குகடற்கரையோரமா கொஞ்ச காலம் "SUNBATH" எடுத்துக்கொண்டு "BAY WATCH" செய்தபடி தங்கி இருந்த இடம் தான் இன்றைய திருவான்மியூர். மரியாதைக்கு திரு சேர்த்து "திருவால்மீகி நகர்" என அழைக்கப்பட்டு இன்று திருவான்மியூர் ஆகிடுச்சாம், இன்றும் அங்கே வால்மீகி நகர்னு ஒரு நகர் வேற இருக்கு. (வால்மீகி கெஸ்ட் அவுஸ்@ நடு ரோடு. படம் தி இந்து) கிழக்கு கடற்கரைச்சாலையில், திருவான்மியூர் பேருந்து நிலையம் அருகே ,நடு ரோட்டில் "வால்மீகிக்கு" ஒரு கோயிலும் உள்ளது. கிழக்கு கடற்கரை சாலையை அகலப்படுத்தும் போது கூட அக்கோயிலை இடிக்க முடியலை, யாருமே அக்கோயிலை இடிக்க முன்வரலையாம், சாமியார் சாபம் விட்ருவாருன்னு பயப்படுறாங்களாம் அவ்வ்! தகவல் மூலம், http://www.thehindu.com/features/friday-review/history-and-culture/whats-in-a-name/article5048779.ece ---------------------------------------------- #பழவந்தாங்கல்- பல்லவன் தாங்கல். தாங்கல் என்றால் குளம் அல்லது ஏரியை குறிக்குமாம், பல்லவர்கள் வெட்டிய ஏரி/குளத்தின் பெயரால் அவ்விடத்துக்கு பல்லவன் தாங்கல் எனப்பெயரிடப்பட்டு பின்னர் பழவந்தாங்கல் எனப்பெயர் திரிப்புற்றது. இவ்வாறே ஐயப்ப நாயக்கர் என்பவர் வெட்டிய குளத்தால் ,அய்யப்பந்தாங்கல் என்ற பெயரும் உருவாயிற்று. # திரிசூலம் - திருச்சுரம். சுரம் என்றால் காடு, அக்காட்டில் பிருகு முனிவர் தவம் இருந்தாராம்,எனவே திருச்சுரம் என அழைக்கப்பட்டு ,திரிந்து திரிசூலம் ஆகிற்று. நடிகர் திலகம் சிவாஜி அவர்கள் நடித்த திரிசூலம் படத்துக்கும் ,இவ்விடத்தின் பெயருக்கும் தொடர்பில்லை அவ்வ்! கிண்டியில் தான் யாகம் செய்தாராம், யாகத்தீயை கிண்டும் கோலை போட்ட இடம் தான் கிண்டி என்றப்பெயரில் அழைக்கப்படுகிறதாம் அவ்வ்! # பெரிய மேடு- பெருமேடு. சென்னையில் அக்காலத்தில் மேடும்,பள்ளமுமாக இருந்ததாம், பெரிய மேடு இருந்த இடத்தில் இருந்த மண்ணை எல்லாம் வெட்டி வசிப்பிடம் ஆக்கியது வெள்ளையர்கள் காலத்தில் தானாம். அப்படி வெட்டி அப்புறப்படுத்திய மண்ணை ஒரு பள்ளமான இடத்தில் கொட்டி சமப்படுத்தி வசிப்பிடம் ஆக்கிய இடமே ,"மண்ணடி" ஆகும்,அதாவது மண்ணடிச்சு மேடாக்கி இருக்காங்க! மண்ணடி என்பதற்கு இன்னொரு பெயர்க்காரணமும் சொல்கிறார்கள், பெரிய மண்மேட்டிற்கு கீழ் - அடியில் இருந்த இடம், மலையடிவாரம் என்பது போல,மண்ணடிவாரம் - மண்ணடி எனப்பெயர் வந்ததாம். # சூளை - செங்கல் சூளைகள் அமைத்திருந்த இடம், இங்கு தான் பெரிய செங்கல் சூளை அமைத்து புனித ஜார்ஜ் கோட்டை கட்டுவதற்கான செங்கற்கள் தயாரிக்கப்பட்டது. தொடரும்... --------------------------------------------- பின்குறிப்பு: # மக்களே உங்களுக்கும் ஏதேனும் ஊரின் பெயர்க்காரணம் தெரிந்தால் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்,பின்னர் அவற்றையும் தொகுத்துவிடலாம். # தகவல் மற்றும் படங்கள் உதவி, # History of city of madras by C.S.Srinivasachari.M.A # ஊரும் பேரும் -ரா.பி.சேது(பிள்ளை) மற்றும் விக்கி & கூகிள் இணைய தளங்கள் நன்றி! --------------------------------------------------------- Posted by வவ்வால் at 2:01 AM 15 comments: Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest Newer Posts Older Posts Home Subscribe to: Posts (Atom) Google Website Translator Gadget About Me வவ்வால் View my complete profile Followers Blogroll Popular Posts மொக்கைத்தோரணம்! மொக்கை "tag" என்று ஒன்றை ஆரம்பித்து அதுக்கு என்னையும் தெரியாத்தனமாக கூப்பிட்டு இருக்காங்க பாசமலர்(என்னா ஒரு பாசம்!)... மொக்கைக்கு... பேராசை பிடித்த அமெரிக்க மாப்பிள்ளைக்குடும்பங்கள்! பேராசைப்பிடித்த அமெரிக்க மருமகள்கள் என்று வசந்தம் ரவி ஒரு பதிவைப்போட்டு அலப்பரை செய்துள்ளார், நியாயமாகப்பார்த்தால் பேராசைப்பிடித்த மாமியார்... வள்ளல் பாரி வேள் வரலாறு! யோகன் பாரிஸ் கேடுக்கொண்டதற்கிணங்க , வள்ளல்ப் பாரி வேள் பற்றிய வாழ்க்கை வரலாற்றுப்பதிவு. யோகன் நீங்கள் பாரிப்பற்றிக்கேட்டு நீண்ட நாட்களாகிவி... விடுதலைப்போரும் வீரபாண்டிய கட்ட பொம்மனும், சமூக பின்னணியும்! இந்திய விடுதலைப் போரைப் பற்றி வட இந்திய ஆய்வாளர்கள் குறிப்பிடுகையில் சிப்பாய் கலகத்தில் இருந்தே துவக்குவார்கள், ஆனால் அதற்கு முன்னரே தமிழகத்... சொந்த வீட்டில் சுவர் ஏறிக்குதிக்கும் செந்தழல்... திருடப் போறவன் கூட அடுத்த வீட்டுக்கு தான் சுவர் ஏறிக்குதித்து போவான் , ஆனால் சொந்த வீட்டுக்கு போகவே சுவர் ஏறிக்குதிக்கும் ஒரு துர்பாக்யசாலி ... கொசு வி(மி)ரட்டும் வர்த்தி! இரவு நேரங்களில் எதை மறந்தாலும் கொசுக்கடி தாங்கவில்லை என்று எல்லோரும் கொசு வர்த்தி கொளுத்த மறப்பதில்லை. தற்காலிகமாக கொசுவிடம் இருந்து நிவாரண... ஆற்றில் வரும் நீரை அளப்பது எப்படி? மேட்டுர் அணைக்கு 10 tmc தண்ணீர் கர்னாடக திறந்து விட்டது என்றெல்லாம் செய்திதாள்களில் படித்து இருப்பீர்கள் , அவர்கள் எப்படி 10 tmc சரியாக திறந...
ஒரு கூஜாவுக்குள்ளே நிறைய நண்டுகள் இருந்துச்சாம். ஹிந்து நண்டுகள், கிறித்துவ நண்டுகள், முஸ்லிம் நண்டுகள் எல்லாம் இருந்துச்சாம்..உள்ள இருந்த ஹிந்து நண்டுகள் சாதி அடிப்படையில் உயர்சாதி நண்டுகள், பிற்படுத்தப்பட்ட சாதி நண்டுகள், மிக பிற்படுத்தப்பட்ட சாதி நண்டுகள், தாழ்த்தப்பட்ட சாதி நண்டுகள் அப்படின்னு பல பிரிவுகளாக இருந்துச்சாம். அது போலவே கிறித்துவ நண்டுகளும் சாதி அடிப்படையில் பிரிந்து .நாடார் கிறுத்துவ நண்டுகள் – வன்னிய கிறுத்துவ நண்டுகள், தலித் கிறித்துவ நண்டுகள் அப்படின்னு கிடந்ததாம் – ஆனால் முஸ்லிம் நண்டுகளெல்லாம் மத்த நண்டுகள பாத்து ஏளனமா சிரிச்சக்கிட்டே சொன்னிச்சாம் “நாங்கல்லாம் ஒரே மாதிரியான நண்டுகள்.. ஏற்ற தாழ்வு எங்களுக்குள்ள கிடையாது” அப்படின்னு.. பிற நண்டுகளும் அத நம்பி .. அடடா… முஸ்லிம் நண்டுகள் மாதிரி ‘சகோதரத்துவத்தோட’ ஒத்துமையா இருக்கனும்னு நெனச்சி பெருமூச்சு விட்டதாம். நண்டுகளுக்கெல்லாம் காலங்காலமா கூஜாக்குள்ளாற அடஞ்சி கெடந்து வாழ்க்கையே வெறுத்து போயிடிச்சாம்..சுதந்திரமா சுற்றித்திரிய வேண்டிய நம்மை அநியாயமாக இப்படி கூஜாக்குள்ள அடச்ச்சுப்போட்டுட்டானுங்களே அப்படினு புலம்ப ஆரம்பிச்சிடிச்சாம்.. எல்லா நண்டுகளும் யாரு எப்ப மூடிய தொறப்பா..ஏறி வெளியே போகலாம்னு ஆர்வமாக இருந்துச்சாம்.. எல்லாரும் எதிர்பார்த்த மாதிரி அந்த கூஜாவின் மூடிய யாரோ தொறந்து வெச்சாங்களாம்.. அதைப் பார்த்தவுடன் நண்டுகளுக்கெல்லாம் மிகவும் சந்தோஷமாம்… முதலில் எல்லாரையும் முந்திக்கொண்டு.. உயர் சாதி நண்டுகள் எல்லாம் ஒவ்வொன்றாக வெளியே வந்ததாம்.. அப்புறம் கொஞ்சநேரங்கழிச்சு மத்த நண்டுங்கள் எல்லாம் வெளிய வந்ததாம். அது மாதிரியே சாதி வேறுபாடுகளால் பிரிந்து கிடந்த கிறித்துவ நண்டுகளும் ஒவ்வொரு பிரிவா வெளியே வந்ததாம்.. ஆனா வெகு நேரம் ஆகியும் ஒரு முஸ்லிம் நண்டு கூட வெளிய வரவே இல்லையாம்.. உள்ளார பாத்தா… ஒரு முஸ்லிம் நண்டு கஷ்டப்பட்டு மேலே ஏறி வர முயற்சி செய்றப்ப..மாற்று இயக்கத்தை சார்ந்த முஸ்லிம் நண்டுகள் ’குரூப்பா’ ஒன்னு சேர்ந்துக்கிட்டு அதோட கால புடிச்சி இழுத்து கீழே போட்டு கைக்கொட்டி சிரிச்சிச்சாம்.. .அது மாதிரியே..மாத்தி மாத்தி குரூப் சேர்ந்துகிட்டு – மற்ற நண்டோட காலப்பிடிச்சி இழுத்து கீழே போடுறது தொடர்ந்து நடந்திச்சாம்.. இத பாத்த வெளியே வந்த நண்டு ஒன்னு கேட்டிச்சாம்.. ஏன் இப்படி உங்களுக்குள்ள எவரும் வெளியா வராத மாதிரி ‘கால் வாருகிற’ வேலய கச்சிதமா பன்னுறீங்க்கன்னு..நியாயமான கேள்விதானே கேட்டுச்சு அந்த நண்டு.. ஆனா அந்த ஒரு கேள்விக்கு..உள்ள இருந்த முஸ்லிம் நண்டுகள்ள ஒவ்வொன்னும் ஒவ்வொரு மாதிரி பதில் சொன்னிச்சாம்.. ஒவ்வொரு பதிலா பார்ப்போமா..? ஒரு நண்டு சொன்னிச்சாம் நாங்க வெளியே ஏறி போகாம – எங்க கால்கள் முடங்கி போவதற்கு காரணமே இந்த சுன்னத் வல் ஜமாத் நண்டுகள்தான்.அதக்கேட்ட சுன்னத் வல் ஜமாத் ’தலைவர்’ நண்டு சொன்னிச்சாம்..”இந்த ‘தவ்ஹீத்’ நண்டுகள் வந்த பிறகுதான் கால் வாரும் வேலை இப்படி மும்முரமா நடக்குது..எங்க மேலே குத்தம் எதுவும் இல்ல” அதக் கேட்ட மத்த தவ்ஹீது நண்டுகளுக்குள்ள இருக்குற ஒரு குரூப்பு நண்டுகளுக்கு மூக்குக்கு மேலே கோபம் வந்துடுச்சாம்..”தவ்ஹீது” நண்டுகள்ன்னு ‘பொதுப்படையா சொல்லாதே. நாங்கதான் – ஒரிஜினல் தவ்ஹீது நண்டுகள்..மத்ததுல்லாம் போலிகள் – வழிகேட்டில் இருப்பவர்கள் இதக்கேட்ட மத்த நண்டுகளுக்கு கோபம் வந்து. “நாங்களும்தான் தவ்ஹீது -.யாரு ஒரிஜினல் – யாரு போலின்னு சொல்றதுக்கு யாருக்கும் அருகதை இல்லைன்னு.. இதக்கேட்ட இன்னொரு குரூப் நண்டுகள் ” போலிகளை அடையாளம் காட்டும் வரை ஓயமாட்டோம்..உறங்கமாட்டோம் அப்படின்னு சவால் விட்டதாம். ஒவ்வொரு அணியைச் சார்ந்த தலைமை நண்டுகளும் – எதிர் அணியை சார்ந்தவரகள் உண்மையான “தவ்ஹீது” நண்டுகள் அல்ல என்பதை வி.சி.டி, வார-மாத இதழ், இரவு நேர தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் ‘தோலுரித்து’ காட்டுவதற்காக – கூஜாக்குள்ள சிக்கி கிடக்கும் ‘தொண்டர்’ நண்டுகளிடமும் – பிழைப்புக்காக மனைவி மக்களை பிரிந்து – பாலைவனத்தில் கூலிக்கு வேலைப் பார்க்கும் ’தொண்டர்’ நண்டுகளிடம் மும்முரமாக நிதி வசூல் பன்னப்பட்டதாம் அன்றிலிருந்து இன்றுவரை – யாரெல்லாம் உன்மையான தவ்ஹீது அல்ல என்று நிரூபிப்பதற்காக ‘மார்க்க பிரச்சாரம்’ – ‘ஏகத்துவ விளக்கம்’ ‘இஸ்லாமிய விளக்கம்’ என்று பல பெயர்களில் – இயக்கம் வளர்க்கும் பணி தொடர்ந்து வருகிறதாம். தலைவர் நண்டுகளின் உணர்ச்சிப்பூர்வமான பிரச்சாரத்தில் சிக்கிய நண்டுகள் கூஜாவை விட்டு வெளியே போகவேண்டும் என்பதை மறந்துவிட்டதாம்.. இயக்க வெறிபிடித்த சில நண்டுகள் உண்மையான தவ்ஹீத் நண்டு யாருன்னு முடிவா தெரிவதற்குள்ள எந்த இயக்கத்தை சார்ந்த நண்டாவது வெளியே போக முயற்சி பன்னினால்..கால புடிச்சி ஒரே இழுப்பா இழுத்து கீழே போடனும்னு “குர் ஆன் – ஹதீஸ்” ஆதாரத்தோடு ஒரே ஒரு தீர்மானம் மட்டும் ‘தொண்டர்’ நண்டுகளின் ‘நாரே தக்பீர்’ ..அல்லாஹ் அக்பர்’ கோசங்களுக்கிடையே நிறைவேற்றப்பட்டதாம்.. இயக்க உறுப்பினர்களாக காலம் கழித்த சில நண்டுகள் – தாம் இதுவரை செய்த ‘கால் வாறும்’ செயலால் சமுதாயத்திற்கு எந்தப் பயனும் இல்லையென்று காலங்கடந்து ஞானோதயம் வந்ததாம் – ஆனால் தலைமையை எதிர்த்து கேள்விக்கேட்கும் மனபான்மை மழுங்கி போனதால் – இயக்கத்தை விட்டு வெளியேறாமல் – கால் வாறும் பணியிலிருந்து ஒதுங்கிக்கொள்ள முடிவெடுத்ததாம். இனியாவது முஸ்லிம் நண்டுகள் ஒற்றுமையாகி – கூஜாவை விட்டு வெளியேறும் என்று நம்பிக்கையுடன் அந்த நண்டுகள் இருந்தபொழுது – கால் வாறும் பணியை செவ்வென செய்வதற்காக புதிய தலைமுறையை சார்ந்த இளைய நண்டுகள் உருவாக்கப்பட்டு – தயார் நிலையில் இருந்ததாம்.. இந்நிலை எதிர்காலத்திலும் எவ்வித தடையுமின்றி நடைபெற தேவையான ஏற்பாடுகளை ஒவ்வொரு இயக்க தலைமையும் திட்டமிட்டு செய்து வருகின்றனவாம்.. அன்றிலிருந்து – ஒவ்வொரு முஸ்லிம் நண்டும் கூஜாவை விட்டு வெளியேற என்ணும் பிற நண்டுகளின் கால்களை இறுக்கமாக பிடித்து – இழுத்து போட்டு இயக்கத் தலைமையிடம் நற்பெயர் வாங்க போட்டி போட்டதாம் .அதனால..கூஜாவை விட்டு இதுவரை ஒரு முஸ்லிம் நண்டு கூட வெளியே வராமல் இன்னும் அப்படியே இருக்குதாம்.. தோழமையுடன், பிறைநதிபுரத்தான் source: http://pirainathi-puram.blogspot.com Leave a Reply Cancel reply Your email address will not be published. Required fields are marked * Comment * Name * Email * Website Save my name, email, and website in this browser for the next time I comment. Math Captcha − 6 = 2 Categories Categories Select Category English (319) Convert to Islam (13) Education (14) Essays (85) Family (11) Hadith (8) Haj (5) History (20) India News (20) Muslim World (34) News (9) Politics (4) QnA (19) Quran (3) Ramadhan (15) Science (7) Society (16) World News (36) Multimedia (6) Audio (2) Video (4) Uncategorized (13) இஸ்லாம் (3,761) ஆய்வுக்கட்டுரைகள் (200) இமாம் கஸ்ஸாலி (ரஹ்) (9) இம்மை மறுமை (111) இஸ்லாத்தை தழுவியோர் (90) கட்டுரைகள் (1,708) குர்ஆனும் விஞ்ஞானமும் (30) குர்ஆன் (191) கேள்வி பதில் (201) சொற்பொழிவுகள் (17) ஜகாத் (44) தொழுகை (151) நூல்கள் (40) நோன்பு (136) வரலாறு (380) ஹஜ் (58) ஹதீஸ் (215) ஹஸீனா அம்மா பக்கங்கள் (19) ‘துஆ’க்கள் (43) ‘ஷிர்க்’ – இணை வைப்பு (118) கட்டுரைகள் (3,087) Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd) (154) அப்துர் ரஹ்மான் உமரி (53) அரசியல் (311) உடல் நலம் (449) எச்சரிக்கை! (103) கதைகள் (63) கதையல்ல நிஜம் (108) கல்வி (84) கவிதைகள் (161) குண நலன்கள் (303) சட்டங்கள் (55) சமூக அக்கரை (677) நாட்டு நடப்பு (82) பொது (352) பொருளாதாரம் (27) விஞ்ஞானம் (105) குடும்பம் (1,525) M.A. முஹம்மது அலீ (48) ஆண்-பெண் பாலியல் (83) ஆண்கள் (73) இல்லறம் (486) குழந்தைகள் (183) செய்திகள் (2) பெண்கள் (585) பெற்றோர்-உறவினர் (65) செய்திகள் (328) இந்தியா (142) உலகம் (130) ஒரு வரி (10) கல்வி (32) தமிழ் நாடு (1) முக்கிய நிகழ்வுகள் (13) Archives Archives Select Month July 2022 (1) June 2022 (1) March 2022 (2) February 2022 (2) January 2022 (6) December 2021 (9) November 2021 (14) October 2021 (17) September 2021 (8) May 2021 (2) April 2021 (15) March 2021 (17) February 2021 (17) January 2021 (17) December 2020 (20) November 2020 (17) October 2020 (18) September 2020 (20) August 2020 (31) July 2020 (30) June 2020 (21) May 2020 (27) April 2020 (22) March 2020 (30) February 2020 (19) January 2020 (22) December 2019 (25) November 2019 (14) October 2019 (15) September 2019 (16) August 2019 (18) July 2019 (16) June 2019 (15) May 2019 (12) April 2019 (12) March 2019 (17) February 2019 (17) January 2019 (27) December 2018 (35) November 2018 (18) October 2018 (22) September 2018 (31) August 2018 (27) July 2018 (16) June 2018 (12) May 2018 (14) April 2018 (22) March 2018 (29) February 2018 (30) January 2018 (35) December 2017 (23) November 2017 (30) October 2017 (33) September 2017 (28) August 2017 (30) July 2017 (30) June 2017 (19) May 2017 (34) April 2017 (31) March 2017 (35) February 2017 (36) January 2017 (27) December 2016 (59) November 2016 (48) October 2016 (44) September 2016 (41) August 2016 (27) July 2016 (33) June 2016 (42) May 2016 (52) April 2016 (53) March 2016 (37) February 2016 (42) January 2016 (64) December 2015 (47) November 2015 (40) October 2015 (36) September 2015 (65) August 2015 (56) July 2015 (35) June 2015 (42) May 2015 (58) April 2015 (79) March 2015 (40) February 2015 (29) January 2015 (54) December 2014 (79) November 2014 (66) October 2014 (78) September 2014 (67) August 2014 (62) July 2014 (84) June 2014 (82) May 2014 (100) April 2014 (84) March 2014 (92) February 2014 (80) January 2014 (85) December 2013 (69) November 2013 (91) October 2013 (89) September 2013 (68) August 2013 (76) July 2013 (101) June 2013 (84) May 2013 (94) April 2013 (13) March 2013 (84) February 2013 (64) January 2013 (85) December 2012 (93) November 2012 (106) October 2012 (82) September 2012 (92) June 2012 (50) May 2012 (103) April 2012 (145) March 2012 (103) February 2012 (168) January 2012 (44) December 2011 (125) November 2011 (99) October 2011 (112) September 2011 (90) August 2011 (130) July 2011 (150) June 2011 (86) May 2011 (138) April 2011 (30) March 2011 (148) February 2011 (97) January 2011 (61) December 2010 (103) November 2010 (87) October 2010 (129) September 2010 (145) August 2010 (114) July 2010 (70) June 2010 (130) May 2010 (131) April 2010 (116) March 2010 (134) February 2010 (99) January 2010 (154) December 2009 (136) November 2009 (106) October 2009 (61) September 2009 (66) August 2009 (61) July 2009 (55) June 2009 (53) May 2009 (81) April 2009 (43) March 2009 (70) February 2009 (43) January 2009 (64) December 2008 (29) November 2008 (35) October 2008 (31) September 2008 (63) August 2008 (114)
திரையில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, 60 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து, புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் நடிகை ரம்யா நம்பீசன். விரைவில் வெளியாகவிருக்கும் “நவரசா” ஆந்தாலஜி படத்தில், லக்ஷ்மி கதாப்பாத்திரத்தில் அற்புதமாக நடித்துள்ளார். மனிதனின் அடிப்படை உணர்வுகளான 9 ரசங்களை மையமாக கொண்டு, தமிழின் முன்னணி கலைஞர்கள் இணைந்து உருவாக்கியுள்ள “நவரசா” ஆந்தாலஜி திரைப்படம், Netflix தளத்தில் வரும் 2021 ஆகஸ்ட் 6 அன்று உலகளவில் வெளியாகிறது. Related Posts Cinema News ஜல்லிக்கட்டு ஏழைகளின் விளையாட்டு! – தயாரிப்பாளர்… Cinema News சர்வதேச தரத்தில் உருவாகியிருக்கும் ‘ஹனு-மேன்’ . Cinema News S.J.சூர்யா நடிக்கும் ‘வதந்தி’ வலைதள தொடர்! Cinema News பிரசாந்த் வர்மாவின் ‘ஹனு-மேன்’ டீசர் வெளியீடு! இப்படத்தில் தனது கதாப்பாத்திரம் குறித்தும், இயக்குநர் பிரியதர்ஷன் அவர்களுடன் பணியாற்றியது குறித்தும், நடிகை ரம்யா நம்பீசன் பகிந்துகொண்டதாவது… எனது கதாப்பாத்திரத்தில் சிறு வயது தோற்றத்திலும், முதிய வயது தோற்றத்திலும் நானே நடிப்பதாக, படைப்பாளிகள் என்னிடம் கூறியபோது, எனக்கு சற்று குழப்பமாக இருந்தது. முதிய வயது தோற்றத்தை, என்னால் சரியாக செய்ய முடியுமா எனத் தயங்கினேன். இயக்குநர் பிரியதர்ஷன் அவர்கள் ஒவ்வொரு காட்சியையும் மிகப் பொறுமையாக சொல்லிக்கொடுத்து, படப்பிடிப்பில் மிக ஆதரவாக பார்த்துக்கொண்டார். அவரால் தான் இப்படத்தில் நடிப்பது எளிமையானதாக இருந்தது. மிகப்பெரும் ஆளுமையான இயக்குநர் பிரியதர்ஷன் அவர்களுடன் பணியாற்றியது, மறக்க முடியாத, மிகச்சிறந்த அனுபவம் என்றார்.
ADIRAI ISLAMIC MISSION - AIM: ஆஹா! ஞாபகம் வந்துருச்சி!! அதிரையினுள் பின்னோக்கி ஓர் பயணம் (புகைப்பட உலா) உங்கள் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சாமாதானமும் உண்டாவதாக! அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம் ADT ரமலான் தொடர் பயான் - 1: வான்மறையின் சிறப்புக்கள் ADT ரமலான் தொடர் பயான் - 2: சஹாபாக்களின் மரணத்தருவாய் ஆட்டம் காணும் அசத்தியக் கோட்டையும் PJ யின் உரை உணர்த்தும் உ ண்மையும் SLTJயின் முன்னாள் தலைவா் மௌலவி பா்ஸானின் மற்றத்துக்கான காரணம் என்ன? Tuesday, June 3, 2014 ஆஹா! ஞாபகம் வந்துருச்சி!! அதிரையினுள் பின்னோக்கி ஓர் பயணம் (புகைப்பட உலா) அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால் அனுபவ அறிஞர்களே... எஞ்சோட்டு செட்டுகளே... இளவயசு மொட்டுகளே... அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... எங்கள் இளம்பிராய நினைவுகள் உங்கள் மனப்பதிவுக்காக சில படத்துளிகளாய்... ஒவ்வொரு ஊரும் ஒரு வரலாற்று பெட்டகம் அதில் நம் அதிரையும் ஒன்று என்பதை எத்தனை பேர் இன்னும் மறக்காமல் உள்ளோம் அல்லது இளந்தலைமுறைக்கு எடுத்துச் சொல்லியுள்ளோம் என்ற பிரயாசையின் வெளிப்பாடே இப்புகைப்படத் இத்தொகுப்பு! வாங்க! நேற்றைய அதிரையை சும்மா சுத்தி பாத்துட்டு திரும்புவோம்!! அதிரையின் மைந்தர்கள் கனவிலும் நினைவிலும் மறக்கக்கூடாத மனிதருள் மாணிக்கம், வள்ளல், கல்வித் தந்தை சேக் ஜலாலுதீன் அப்பா அவர்களுக்காக ஏகன் அல்லாஹ்விடம் பிரார்த்தித்தவர்களாக உள்நுழைவோம் வாருங்கள்.... ஆரம்பத்தில் கனரா பேங்க் இயங்கிய கட்டிடம் (மீராசா டாக்டர் கிளினிக் எதிர்புறம்) இதற்கப்புறம் தான் வான்பரீதா பில்டிங் மற்றும் இப்போதைய இடம் உச்சி வெயில் நேரத்தில் சின்ன ஓய்வு ஒரு நேரத்துல நமதூரின் பிசியான அச்சகங்களாக செயல்பட்ட ABC பிரிண்டர்ஸ் மற்றும் ரமானுஜம் அச்சகம் இன்றும் தன்னம்பிக்கையோடு தாக்குப்பிடித்து கால ஓட்டத்திற்கு ஏற்றவாறு தங்களை மாற்றிக் கொண்டு சிறப்பாக செயல்பட்டு கொண்டுள்ளன நம்ம ஊருக்குள்ளும் விவசாயம் நடந்துருக்குங்க! சானா வயல், சவுக்குக் கொல்லை, இன்றைய MSM நகர் ஏரியான்னு நம்ம ஊரின் உள்ளும் புறமும் நடந்த விவசாய பூமி எல்லாம் பொண்ணுக்கு வீடு என்ற வரதட்சணை கொள்ளையாலே கான்கிரீட் காடுகளா போச்சுங்க! (விவசாயத்துக்கு தண்ணியில்லைங்கிறது இன்னொரு காரணம்) மேலத்தெருவில் முதன்முதலில் பர்மா தேக்கு கொண்டு கட்டப்பட்ட முதல் மெத்தை வீடும் அதன் இன்றைய மிச்சங்களும் (குட்டப்புறா வீடு) இன்றைக்கும் மட்டப்பா வீடு என்று அழைக்கப்படும் பழைய மாடி வீட்டின் எஞ்சிய சுவர் (மேலத்தெரு) அன்னாள் நமதூர் KMC கல்லூரி மாணவர்களின் NCC படையினர் துப்பாக்கி சுடும் பயிற்சி எடுத்த சுவர் இன்று பயனற்று போய் நிற்கிறது (செடியன்குளம் இறக்கம்) நமதூர் ரயில்வே ஸ்டேசனை ஒட்டியுள்ள லெவல் கிராஸிங்கை தாண்டினால் 50 மீட்டர் தொலைவில் ஒரு பிரமாண்ட தகரக் கொட்டகை இருந்ததுங்க! இதை கஸ்டம்ஸ் ஆபிஸ், சால்ட் ஆபீஸ் என்று சொல்லுவாங்க எது சரின்னு தெரியல ஆனா காலப்போக்குல நம்மூரு ஆளுங்க காத்து வாங்க தான் பயன்பட்டுச்சு, தகர கட்டிடத்தை தேடிப்போன எனக்கு இந்த திறந்தவெளிதாங்க தென்பட்டுச்சு. எந்த பழைய இரும்பு வியாபாரி எடுத்துட்டு போனாருன்னு தெரியல! அந்த நாளாயிலே கால்நடையா நம்ம வூரு கடற்கரைக்கு போனவங்க கண்டிப்பா இந்தப் பாலத்துல உக்காந்து இளைப்பாரம போயிருக்க மாட்டாங்க. ஒரு காலத்துல உப்பளங்கள் நிறைந்த ஊருங்க, இப்ப ஏதோ கொஞ்சம் பாக்கியிருக்கு இவைகளும் இரால் பண்ணைகளாக மாறுமுன் நம் எதிர்கால தலைமுறைக்கு புகைப்படமாய் காட்ட சேமித்து வைத்துக் கொள்ளுங்கள். சுனாமிலேயும் மாறாதது நம்ம வூரு சேத்துக் கடலுங்க, நாங்களும் இந்த சேத்து கடல்ல கூட்டாளிகளோட வரிமட்டி புடிச்சி வெளையாண்டுருக்கோம்ல. (நம்ம பக்கத்து கிராமம் கீழத்தோட்டத்துல சுனாமி அலைகள் மணலை கொண்டு வந்து வெளியே தள்ளி அழகிய பீச்சாக மாத்திட்டு போச்சுங்க) ஒரு காலத்துல குளியல் துறையா இருந்த காலேஜ் மூணு கண்ணு பாலம் இப்படி புதர் மண்டி கிடக்கிறது மனச பிசையுதுங்க! ராஜாமடம் ரோடு (மகிழங்கோட்டை) முன்னாள் ரயில்வே ஸ்டேசன் நம்ம ஊருல ரயில் காணப்போயி கொஞ்ச நாள் தான் ஆவுது ஆனா அதுக்கு முன்பே நம்ம பக்கத்து கிராமங்களின் ரயில்வே ஸ்டேசன்களே காணமப்போனது எத்தன பேருக்கு தெரியும்? அதிரைக்கும் முத்துப்பேட்டைக்கும் இடையிலே மஞ்சவயல், தம்பிக்கோட்டை, சுந்தரம், மறவக்காடுன்னு பல ஸ்டேசன்கள் இருந்துச்சுங்க, அதே மாதிரி அதிரைக்கும் பட்டுக்கோட்டைக்கும் இடையிலே (மகிழங்கோட்டையில்) ராஜாமடம் ரோடு ஸ்டேசன் இருந்ததுங்க, இந்த ரயிலடிலேருந்து மேலத்தெரு கீழத்தெரு மக்கள் அதிகமா முத்துப்பேட்டைக்கு பயணம் செஞ்சிருக்காங்க! அதன் இன்றைய மிச்சம் இது! CMP வாய்க்காலில் மகிழங்கோட்டை லெவல் கிராஸிங் அருகேயுள்ள ஒற்றை நாவல் மரம் நம்ம ஊரு CMP வாய்க்காலில் தண்ணி வந்த காலத்துல இருபுறமும் 50க்கு மேற்பட்ட நாவல் மரங்கள் காய்த்து குலுங்கின, அதில் ஏறி பறிக்கவும், பொறுக்கவும் பல தடவை போய் வந்த எங்கள் இளவயது கால்கள் இன்று எத்தன மரங்கள் மிச்சமிருக்குன்னு தேடிப்போய் ஏமாந்ததை என்னான்னு சொல்றது! CPM லேன் VKM ஸ்டோர் அருகேயுள்ள கிணறு ஒரு காலத்துல குடிநீர் துறைய ஜொலிச்சதுங்க ஆனா இப்ப????? அழிவின் விழிம்பில் உள்ள அழிஞ்சி மரமும் பழமும் அதிரையர் சீண்டாத இந்த அழிஞ்சிப்பழங்கள மூட்டை மூட்டையாய் பறித்து சென்னையில் விற்று சம்பாதித்த ஆங்கிலப்பா என்ற அன்றைய இளைஞரின் திறமையை கண்டு இன்றும் வியக்கேன். அன்றைய சிறுவர்கள் தெருவொர கபுருகளுக்கு கந்தூரி கூடு செய்ய, பள்ளி விடுமுறை நாட்களில் சர்பத் கடைகள், சிறிய மிட்டாய்கள் கடைகள் போட, விளையாட்டு குடிசைகள் போட இந்த அழிஞ்சி மர போத்துகளை தாங்க வெட்டிக்கிட்டு போவாங்க! லெட்சோட்டை / லெட்சகொட்டை கிலுவை முள்ளு முருங்கை (இந்த ஒத்த மரத்தை தவிர வேறு எதுவும் என் கண்ணுல படல) வேலிகளே சுற்றுச்சுவர்களாய் இருந்த காலத்துல பார்த்த மரங்கள இனி அருங்காட்சியகத்துல கூட பார்க்க முடியாத நிலமை. காசும் கட்டடங்களும் வந்த பின்ன ஒரு புகைப்படம் எடுக்க வேலி காத்த மரங்கள தேடியலஞ்சத நெனச்சா... என்னாத்த போங்க! மேலத்தெரு சைடு மரைக்கா குள கரையில இருந்த குடிநீர் கிணறு இது, இதுவும் காலப்போக்குல தூர்ந்து குப்பை மேடாகிடுச்சி. அந்த காலத்துல தென்னந்தோப்புகளுக்குள்ள இருந்த குடிநீர் கிணறுகளில் ஒரு குடம் நல்ல தண்ணி அள்ளனும்னா ஒரு கொடம் மரைக்கா குளத்து தண்ணிய கொண்டு போய் தென்னமரத்து தூர்ல ஊத்தனுமுங்க! இலவச மின்சாரம் இல்லாத நாளுங்க அதெல்லாம். சரியா இந்த எடத்துல நியூ சினிமாங்கிற பேர்ல இங்கே ஒரு டூரிங் டாக்கீஸ் கொட்டாய் 5 வருசம் இருந்ததுங்க! அப்ப நம்ம பிலால் நகரு பேரு நண்டு வெட்டி வெப்பலுங்க! நம்ம வூருக்குள்ள கீஸ் என்கிற கேரிபேக் நுழையுறதுக்கு முன்னாலே இந்த தாழைமர இலைகளில் செய்யிற உமல் பை தான் மீனு, காய்கறி வாங்க முழு அதிரையும் பயன்படுத்துனுச்சி அதுபோல இறைச்சியை பச்சை பனை ஓலையிலே மடிச்சி தருவாங்க, அந்த இயற்கை சுகாதாரங்கள் இப்ப இல்ல. சேர்மன் அய்யா இந்த பழக்கத்த மீண்டும் நடமுறைக்கு கொண்டு வரனும், செய்வாரா? அஜீஸ் அப்பா வைத்திருக்கும் பனை ஓலை விசிறியும் அந்தக்கால கல்லாப்பெட்டியும் அதிரையிலிருந்து மறைந்து எத்தனை வருடங்களாகி விட்டன. வாழ்க அந்த உடும்புப்பிடி உத்தமர். இந்த 88 வயசு இளைஞர் அப்துல் அஜீஸ் அப்பாவுக்கு அன்னைக்கும் இன்னைக்கும் அதே தொழில் தான், உமல், தேங்காய், நாட்டு முட்டை என தளராத நம்பிக்கை! அந்த உயரமான ஊதா தொப்பி மட்டும் மிஸ்ஸிங்! இந்த இடத்துல தான் சிறுவர்களின் நாவில் நிறைந்த ஜமால் ஐஸ் கம்பெனி இயங்கியது கூடு இருக்கு ஆனா சிட்டுக்குருவி எங்கே? கண்ணுக்தெரிந்த அழிவு! இது ஒரு காலத்துல பேருல மட்டும் ரோடு இருந்த சேதுரோடுங்க! இப்போ ECRல ரோடு இருக்கு சேது தான் போன இடம் தெரியல. அதிகாலை 5 மணி, காலை 8 மணி, பகல் 1 மணி, மாலை 6 மணி மற்றும் இரவு 9 மணி என தவறாமல் தினமும் 5 முறை முழங்கிய சங்கிற்கே சங்கு ஊதியாகிவிட்டது, இனி அது காட்சிப் பொருள் மட்டுமே. அதோ நடுவுல அந்த ஆட்டோ தெரியுற எடத்துல தாங்க அண்ணா சிலை ஒண்ணு ரோட்டுக்கு நடுவுல இருந்தது, அவர சுத்தி இருந்த கட்சிக் கொடி கம்பங்கள்லாம் ரோட்டோரம் ஒதுங்கிக் கொள்ள அவர் போன எடந்தாங்க தெரியல, அதுவும் நல்லது தான். அறந்தாங்கிலிருந்து வந்த என் நண்பர் ஒருத்தரு 'பவித்ரா திருமண மண்டபம்' பக்கத்துல வெயிட் பண்றதா சொல்ல பேந்த பேந்த முழுச்சிக்கிட்டு போய் தேடுனா அட நம்ம 'ஜக்கரியா தியேட்டரு' புது அவதாரம் எடுத்தது அப்பதான் தெரிஞ்சது. சுரைக்கா கொல்லை, சால்ட் லேன் எதிரேயிருந்த போலீஸ் காலனி கிரவுண்ட் முக்கால்வாசி வீடாக மீதம் கால்வாசி இப்படி கம்பி வேலிக்குள் சிறைவாசியாக, இமாம் ஷhபி பள்ளி மாணவ சிறுவர்களாய் பலமுறை கால்பந்து விளையாடியது மட்டும் இன்னும் பசுமையான நினைவில். சுரைக்கா கொல்லையில் செயல்பட்ட, அந்த மஞ்சள் நிற தொடர் கட்டிடமாக இருந்த சால்ட் ஆபீஸ தேடிப்போன எங்களுக்கு இந்த காலி மனையும் அறிவிப்பு பலகையுமே அதன் முந்தைய இருப்பின் சாட்சிகளாக தென்பட்டன. இப்ப மக்தூம் பள்ளி இருக்கிற எடத்துல தான் நம்ம ஊரு ரிஜிஸ்டர் ஆபீஸ் இருந்ததுங்க மேலும் அதன் வாசல்ல இருந்த முரட்டு பலா மரம் அந்த இடத்துக்கே அப்படி ஒரு அழகுங்க! இந்த சந்துக்குள்ள தாங்க நம்ம ஊரு வானிலை ஆராய்ச்சி மையம் இருந்தது மேலும் கடலைமிட்டாய் கம்பெனி ஒன்றும் செயல்பட்டு வந்தது (80 காசு கொடுத்து ஒரு பாக்கெட் கடலை மிட்டாய் வாங்கின அதில 120 காசுக்கு இருக்கும், கடலை மிட்டாய் ஒன்று 5 காசுங்க) இது பேரு தொட்டி அதாவது ஆட்டுத் தொட்டிங்க, ஆடு மாடுகள் நம்ம ஊரு வயல்ல போய் மேய்ந்தால் வயல்காரன் ஆட்டை பிடித்துக் கொண்டு வந்து இந்த ஜெயில்ல விட்டுட்டு போயிடுவாரு அப்புறமா ஆட்டுக்காரங்க ஆட்டை ஊரேல்லாம் தேடிட்டு கடைசிய இங்க வந்து பார்த்த உள்ளே நம்ம ஆடும் இலை மேஞ்சுகிட்டு நிக்கும் அப்புறம் என்ன எத்தன நாளு ஆடு உள்ளே இருந்துச்சோ அத்தன நாளுக்குன்னு கணக்கு பண்ணி தெண்டம் கொடுத்துட்டு ஆட்ட கூட்டிக்கிட்டு போயிரலாமுங்க! இன்னைக்கு காய்கறிகடையாகவும், இட்லிக்கடையாகவும் தெரியுற இந்த கட்டடத்துக்குள்ள தாங்க நம்ம ஹனீப் டாக்டர் ஆரம்ப நிலையில கிளினிக் நடத்துனாங்க, எந்த நேரத்துலயும் ஓடி வந்து உதவிய அவரையும் அவரது அன்றைய நர்ஸ்களையும் இன்றைக்கும் நன்றியோட நினைக்கிறோமுங்க! இந்த வணிக வளாகம் இருந்த எடத்துல தாங்க நம்மவூரு பெரிய போஸ்ட் ஆபீஸ் இருந்தது (நம்ம மக்கள் இன்னும் மறக்காம பழைய போஸ்ட் ஆபீஸ் தெருன்னு சொல்றது ஆறுதலான விஷயங்க) மேலும் இதன் சைடுல தான் குதிரை வண்டி ஸ்டாண்ட் இருந்தது, ஆட்டோக்கள் அதிரைக்குள் தலைகாட்டிய கொஞ்ச நாளிலேயே குதிரை வண்டித் தொழில் கூண்டோடு நொடிச்சுப் போச்சுங்க! அரைக்கிடா, அத்தாஸூ, சாகுல் ஹமீது, ஐத்துருஸ், அத்தாஸூ மகன் என பலர் இங்கே குதிரை வண்டி ஓட்டிகளாக அதிரையர்களுக்கு சேவை செய்துள்ளனர். துருக்கி தொப்பி, மலேசியா தொப்பி, மாப்ள தொப்பி, துணி தொப்பி, மதரஸா தொப்பி என வகை வகையா தயாரிச்சு ஊருக்கே தொப்பி போட்டு அழகு பாத்தவரு கடையின் இன்றைய நிலை! வெளிநாடுவாழ் நெசவுத்தெரு முஹல்லாவாசிகளின் தூய எண்ணத்தால் உருவான அதிரையின் முதற் சங்க கட்டிடம். இன்றைக்கும் சென்று போன அந்த நன்மக்களின் கனவை நிறைவேற்றிக் கொண்டு கம்பீரமாக உள்ளது. இளம் வயதில் நம்ம மார்க்கெட்டுக்கு மீனு வாங்க போனவங்க மனசுல இன்னும் மறையாம இருக்கிற அந்த பழமையான கிணத்து மேல தானுங்க இந்த வாட்டர் டேங்கும் பைப்பும் இருக்கு! தனிப்பட்ட ஓருவரின் கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட மோதல் மேலத்தெருவுக்கும் கரையூர் தெருவினருக்கும் இடையே கலவரமாக, விளைவு காவல்துறையினர் கண்மூடித்தனமாக சுட கீழத்தெருவை சேர்ந்த சகோதரன் நூருல் ஹசன் ஷஹீதாக்கப்பட்டான். தவறிய இன்னொரு குண்டில் சிதறிய தக்வா பள்ளியின் சுவர் காவல்துறையின் காட்டு தர்பாரை இன்னும் இரத்த சாட்சியாய் சொல்லிக் கொண்டுள்ளது. (இந்தியன் பேங்க் அருகில், இமாம் ஷhபி பள்ளியின் பின்புறம்) நம்ம ஊருல 40 வருடங்களுக்கு முன் மருத்துவ சேவை செய்த இக்ராம் டாக்டர் இந்த ஏரியாவுல தாங்க இருந்தாரு, இன்னும் எத்தன பேரு அவர ஞாபகத்தில வச்சிருக்கோம்? ஆரம்ப இமாம் ஷhபி நர்சரி & பிரைமரி ஸ்கூல் இந்த வீட்ல தாங்க துவங்கியது (இந்த பச்ச பயிண்ட் வீடு பழைய வீட இருக்கும் போது) கிட்டங்கி தெருல பள்ளிக்கூடம் தொறந்து எங்களுக்கெல்லாம் அறிவொளி தந்த குழந்தை சேக்காதி அவர்கள் கொஞ்ச காலத்திற்கு முன் தான் காலமானாங்க, இன்னாலில்லாஹி வ இன்னஇலைஹி ராஜிவூன் அன்னாரின் பாவங்களை மன்னித்து மறுமையில் சுவர்க்கத்தை வழங்க பிரார்த்திக்கின்றோம். கீழத்தெரு புதுக்குடியில் இயங்கிய 'நங்கூரம் மார்க்' சேமியா கம்பெனி இன்று வீடாக, இது கயிற்றுக்கடை ரஜாக் அவர்களின் சொந்தக் கம்பெனி மேலத்தெரு காவண்ணா அவர்கள் சொந்தமாக நடத்திய 'காவண்ணா ஆயில் பார் சோப்' கம்பெனியும் இன்று வீடாக மாறிவிட்டது. கடைத்தெருவில் காவண்ணா அவர்கள் நடத்திய ஹோட்டல் (ரொட்டிக்கடை) அந்தக் காலத்தில் ஆட்டுக்கால் பாயாவுக்கு மிகவும் புகழ்பெற்றது. 400 ஆண்டுகால குத்பா பள்ளியில் தொழுத அனுபவமும் அதன் கட்டமைப்பும் இன்னும் கண்ணுள்ளே குளிர்ச்சியாய், இப்பள்ளியை நிர்மாணித்த மகுதூம் சின்ன லெப்பை ஆலிம் செய்கு அப்துல் காதிர் அவர்களுக்கு அல்லாஹ் ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் என்ற உயரிய சொர்க்கத்தை வழங்குவானாக! மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ஏமாற்றம், ஏன்? இன்னும் உண்டு ஏராளம் என்றாலும் எல்லாவற்றை என் ஓருவனால் மட்டும் கணக்கிட முடியாது மேலும் என் விடுமுறையும் அதை அனுமதிக்காது என்பதால் நீங்கள் ஓவ்வொருவரும் தங்களுடைய அனுபவ நினைவலைகளை இன்றைய இளைய அதிரையர்களுடன் பகிர்ந்து கொள்ள முன் வர வேண்டும் என்ற வேண்டுகோளுடனும் பகீர்விர்கள் என்ற நன்நம்பிக்கையுடனும் நிறைவு செய்கிறேன். ஜமால் மற்றும் ஹாரித் ஒத்துழைப்புடன் அதிரைஅமீன் at 1:39 AM Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest 2 comments: அதிரை அல்மாஸ் June 3, 2014 at 7:22 AM அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) என் அருமை தம்பி அமீன் அவர்களே அருமை அருமை மிக அருமை நான் விடு முறையில் ஊர் வந்தாள் கூட இத்தனையும். இடங்களையும் நான் நிச்சயம் பார்த்திருக்க முடியாது ஒரு ரூபாய் கூட செலவில்லாமல். நமது ஊர் முழுவதும் சுத்தி பார்த்த உணர்வு. எனக்கு இப்போது உண்டு. மலரும் நினைவுகள் வாழ்த்துக்கள் நல்ல முயற்ச்சி பாராட்டுக்கள் தொடரட்டும் உங்களின் எழுத்து பனி.என்றும் அன்புடன் அதிரை அல்மாஸ் ReplyDelete Replies Reply ZAKIR HUSSAIN June 6, 2014 at 7:51 PM உண்மையிலேயே அருமையான படத்தொகுப்பு. பழைய படங்கள் [ அதிராம்பட்டினம் சார்ந்தது மட்டும் ] இருந்தால் யாராவது அனுப்புங்கள் என்று நான் கேட்டு பல வருடங்கள் ஆகிவிட்டது. பழைய கட்டிடங்களையும் , வாழ்க்கையுடன் ஒன்றிப்போன சில விசயங்களையும் எடுத்து சொன்ன விதமும் பாராட்டத்தக்கது . என்னிடமும் எங்கள் தெருவின் [ தரகர் தெரு ] பள்ளியின் பழைய படங்கள் இருக்கிறது. 1970 / 1980 களில் எடுத்தது.
சமூக வலைப்பின்னலின் பிரபலமடைந்து வருகிறது டிக் டாக் இது உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான பயனர்களின் விருப்பத்தை மட்டுமல்ல, குற்றவாளிகளின் பார்வையையும் ஈர்க்கிறது. குறிப்பாக, காஸ்பர்ஸ்கி அறிக்கையின்படி, இந்த நெட்வொர்க் சைபர் தாக்குதலுக்கு அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. வைகிங். மேலும் குறிப்பாக, ஜூன் மாதத்தில் விஷிங் மின்னஞ்சல்களின் எண்ணிக்கை அதிகரித்து, மொத்தம் 100.000 ஐ எட்டியது. மாறாக, மார்ச் மற்றும் ஜூன் மாதங்களுக்கு இடையில் சுமார் 350.000 கண்டறியப்பட்டது, மேலும் இந்த நடைமுறையில் அதிகரிப்பு தெளிவாகத் தெரிகிறது. இது உங்களுக்கு ஆர்வமாக இருக்கலாம்: ► Samsung Galaxy Z Fold 4 மற்றும் Galaxy Z Flip 4 ஆகியவை இந்த துணையை மீண்டும் பெட்டியில் கொண்டு வர முடியும் ► பெஹன்ஸ் என்றால் என்ன, அது எப்படி வேலை செய்கிறது? விஷிங் அல்லது வாய்ஸ் ஃபிஷிங் என்பது TikTok இல் உள்ள புதிய வைரஸ் அச்சுறுத்தலாகும் இப்போது TikTok இல் ஒரு புதிய போக்குக்காக விழிப்பூட்டல் தொடங்கப்பட்டுள்ளது, இதில் பயனர்கள் தங்கள் நண்பர்களுக்கு பதிலளிக்கும் இயந்திரம் மூலம் அழைக்கின்றனர். இது அவர்களின் கணக்கில் இருந்து அதிக அளவு பணம் டெபிட் செய்யப்படும் என்று கூறுவதாகும். இப்போது, ​​நீங்கள் ஏற்கனவே யூகித்தபடி, இந்த வெளிப்படையான குறும்புத்தனத்தின் மோசடி தன்மைக்கு கவனம் செலுத்த வேண்டியது அவசியம். பெயரிடப்பட்டுள்ளது வைகிங் மேலும் இது தற்போது சைபர் கிரைமினல்களால் பயன்படுத்தப்படும் ஒரு தந்திரமாகும். முதலாவதாக, வைகிங் (குரல் ஃபிஷிங்கின் சுருக்கம்) என்பது சைபர் கிரைமினல்களை அழைக்கவும், தொலைபேசியில் தனிப்பட்ட தகவல் மற்றும் வங்கி விவரங்களை வெளிப்படுத்தவும் மக்களை நம்ப வைக்கும் மோசடி நடைமுறையாகும். டிக்டாக் "விஷிங்" தாக்குதல்களுக்கு பிடித்த சமூக வலைப்பின்னல் பெரும்பாலான ஃபிஷிங் மோசடிகளைப் போலவே, இது ஒரு பெரிய ஆன்லைன் ஸ்டோர் அல்லது கட்டண முறையிலிருந்து ஒரு அசாதாரண மின்னஞ்சலில் தொடங்குகிறது. எடுத்துக்காட்டாக, இது PayPal இன் போலிப் பதிப்பிலிருந்து வந்த மின்னஞ்சலாக இருக்கலாம், கீழே உள்ள எடுத்துக்காட்டில் உள்ளதைப் போல உங்கள் கணக்கிலிருந்து பணத்தைப் பெறுவதற்கான கோரிக்கை பெறப்பட்டுள்ளது. இங்குள்ள வேறுபாடுகளைக் கவனிக்க வேண்டியது அவசியம். அதாவது, வழக்கமான ஃபிஷிங் மின்னஞ்சல்கள் பாதிக்கப்பட்டவரை ஆர்டரை ரத்து செய்வதற்கான இணைப்பைப் பின்தொடருமாறு கேட்கும் போது, ​​விஷிங் மின்னஞ்சல்கள் கேட்கின்றன அவசரமாக அழைக்கவும் மின்னஞ்சலில் வழங்கப்பட்ட வாடிக்கையாளர் சேவை எண்ணுக்கு. இந்த முறை வேண்டுமென்றே அயோக்கியர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டது என்பதை நினைவில் கொள்க. ஏனென்றால், மக்கள் ஃபிஷிங் தளத்தைப் பார்க்கும்போது, ​​அவர்கள் தங்கள் செயல்களைப் பற்றி சிந்திக்க அல்லது பக்கம் சட்டபூர்வமானது அல்ல என்பதற்கான அறிகுறிகளைக் கவனிக்க அவர்களுக்கு நேரம் கிடைக்கும். இருப்பினும், பாதிக்கப்பட்டவர்கள் தொலைபேசியில் பேசும்போது, ​​அவர்கள் அடிக்கடி திசைதிருப்பப்படுவார்கள் மற்றும் கவனம் செலுத்துவதில் சிரமப்படுகிறார்கள். எனவே, இந்த சூழ்நிலைகளில் தான், தாக்குபவர்கள் அவர்களை இன்னும் சமநிலையிலிருந்து தூக்கி எறிய முடிந்த அனைத்தையும் செய்கிறார்கள். உதாரணமாக, அவர்களை அவசரப்படுத்துவது, அவர்களை மிரட்டுவது மற்றும் அவர்களின் கிரெடிட் கார்டு விவரங்களை அவசரமாக வழங்குமாறு கோருவது. அனைத்து மோசடியான பரிவர்த்தனையை "ரத்து" செய்ய. பின்னர், பாதிக்கப்பட்டவரின் வங்கிக் கணக்கு விவரங்களைப் பெற்ற பிறகு, குற்றவாளிகள் பணத்தைத் திருடுவதற்குத் தகவல்களைப் பயன்படுத்துகின்றனர். மார்ச் 2022 முதல் வளர்ந்து வரும் அச்சுறுத்தல் இந்த அச்சுறுத்தலை விளக்கி, காஸ்பர்ஸ்கியின் கூற்றுப்படி, கடந்த நான்கு மாதங்களில் (மார்ச் முதல் ஜூன் 2022) அவர்கள் கிட்டத்தட்ட 350.000 விஷிங் மின்னஞ்சல்களைக் கண்டறிந்துள்ளனர். பரிவர்த்தனையை ரத்து செய்ய அழைக்குமாறு இந்த "தூண்டல்கள்" எப்போதும் பாதிக்கப்பட்டவர்களைக் கேட்கும். ஜூன் மாதத்தில், இதுபோன்ற மின்னஞ்சல்களின் எண்ணிக்கை அதிகரித்து, கிட்டத்தட்ட 100 ஐ எட்டியது. எனவே இந்த போக்கு வேகத்தை அதிகரித்து வருவது போல் தெரிகிறது, மேலும் தொடர்ந்து வளர வாய்ப்புள்ளது. எல்லாவற்றிலும் மோசமானது? பல TikTokers விஷிங் திட்டங்களில் ஒன்றைத் தீவிரமாக மீண்டும் செய்கின்றன, ஒரே வித்தியாசம் என்னவென்றால், அவர்கள் முன்கூட்டியே மோசடியான மின்னஞ்சலை அனுப்புவதில்லை அல்லது பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து எதையும் திருடுவதில்லை. இங்கே உங்கள் குறிக்கோள் பொழுதுபோக்குவது, திருடுவது அல்ல. வைரலாகி இதை இயல்பாக்குவதால் ஏற்படும் ஆபத்துகள் போக்கு டிக் டாக் மூலம் அழைப்பு பதிலளிக்கும் இயந்திரம் மூலம் செய்யப்படுகிறது, அதன் குரல் ஆன்லைன் மொழிபெயர்ப்பாளர் மூலம் உருவாக்கப்படுகிறது. பெரும்பாலான நேரங்களில், குறும்புக்காரர்கள் தங்களை ஒரு பெரிய ஆன்லைன் ஸ்டோரின் வாடிக்கையாளர் ஆதரவுத் துறையின் பிரதிநிதிகளாகக் காட்டுகிறார்கள். அவர்கள் வழக்கமாக பாதிக்கப்பட்டவரிடமிருந்து பல ஆயிரம் டாலர்கள் மதிப்புள்ள பொதியைப் பெற்றதாகக் கூறி, உறுதிப்படுத்தும்படி கேட்கிறார்கள். பாதிக்கப்பட்டவர் எப்படி பதிலளித்தாலும், அடுத்ததாக பதிலளிக்கும் இயந்திரம் கூறுகிறது: "நன்றி, உங்கள் ஆர்டர் உறுதிப்படுத்தப்பட்டது." விடையளிக்கும் இயந்திரம் தங்களுக்குச் செவிசாய்த்துவிட்டது என்றும், அவர்களின் கணக்கில் இருந்து உடனடியாக பணம் எடுக்கப்படும் என்றும் மக்கள் நினைக்கிறார்கள். எனவே, அவர்கள் இயல்பாகவே பீதியடைந்து, தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணரவில்லை. இறுதியாக, ஃபிஷிங் பக்கத்திற்குப் பதிலாக தொலைபேசி அழைப்பின் போது தங்கள் தனிப்பட்ட தகவலை வெளிப்படுத்த மக்கள் நம்பும்போது, ​​அவர்கள் தங்களை ஒரு மோசடி இலக்காகக் கருதுவதற்கான வாய்ப்பு பெரும்பாலும் இல்லை. மேலும், இந்த போட்டியைக் காண்பிக்கும் ஏராளமான TikTok வீடியோக்கள் இதற்கு ஒரு முக்கிய எடுத்துக்காட்டு. வழியாக | காஸ்பர்ஸ்கை முந்தையது வாட்ஸ்அப்: விரைவில் உங்களுக்கு தற்காலிக செய்திகளில் செய்தி வரும் Siguiente Netflix: அடுத்த மாதம் கூடுதல் கட்டணம்! குறிச்சொற்கள்: பேபால்tiktok டாமி பேங்க்ஸ் தொடர்புடைய கட்டுரைகள் விஜியோ ஸ்மார்ட் டிவிக்கான சிறந்த 6 ஆப்ஸ் தேசிய வானியல் தினம் என்பது இந்த வெள்ளியின் விண்வெளிப் பார்வையின் கருப்பொருளாகும் செயற்கை நுண்ணறிவு மூலம் 'மந்திர அவதாரங்களை' உருவாக்கும் லென்சா ஆப்ஸை சந்தியுங்கள் | ஆசிரியர்கள் பொதுவான Samsung Galaxy S10 மற்றும் S10 Plus சிக்கல்கள் மற்றும் அவற்றை எவ்வாறு சரிசெய்வது நீங்கள் நினைப்பதைக் கேட்டு நாங்கள் மகிழ்ச்சியடைவோம் பதில் விடுங்கள் பதில் ரத்து அடுத்த முறை நான் கருத்து தெரிவிக்க இந்த உலாவியில் எனது பெயர், மின்னஞ்சல் மற்றும் வலைத்தளத்தை சேமிக்கவும். நீங்கள் என்ன தேடுகிறீர்கள் Google செய்திகள் டெக்னோபிரேக் எங்களைப் பின்தொடரவும் Google செய்திகளில் வார ஒப்பந்தம் ஃப்ளைராய் – வயர்லெஸ் கேமிங் ஹெட்ஃபோன்கள் – மைக்ரோஃபோனுடன் கூடிய வயர்லெஸ் கேமிங் ஹெட்ஃபோன்கள் – ஹெட்செட் பிசி பிஎஸ்4 பிஎஸ்5 எக்ஸ்பாக்ஸ் – அட்ஜஸ்டபிள் மற்றும் பேட் செய்யப்பட்ட கேமர் ஹெட்ஃபோன்கள் சக்திவாய்ந்த ஒலியுடன் $28,99 சலுகை முடிவதற்குள் விரைந்து செல்லுங்கள்! நாட்களில் 0 0 மணி 0 0 நிமிடங்கள் 0 0 விநாடிகள் 0 0 மில்லியன் கணக்கான பாடல்களை அணுகவும்! குறியீட்டு விஷிங் அல்லது வாய்ஸ் ஃபிஷிங் என்பது TikTok இல் உள்ள புதிய வைரஸ் அச்சுறுத்தலாகும் டிக்டாக் "விஷிங்" தாக்குதல்களுக்கு பிடித்த சமூக வலைப்பின்னல் மார்ச் 2022 முதல் வளர்ந்து வரும் அச்சுறுத்தல் இந்த Tik Tok போக்கை வைரலாக்கி இயல்பாக்குவதால் ஏற்படும் ஆபத்துகள் இது உங்களுக்கு ஆர்வமாக இருக்கலாம்: ► டெலிகிராமில் எனது சுயவிவரத்தை யார் பார்வையிட்டார்கள் என்பதை எப்படி அறிவது ► இன்ஸ்டாகிராம் புகைப்படங்கள் ஏன் கேலரியில் சேமிக்கப்படாது? ► உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட 15 திரைப்படங்கள் ► Xiaomi Mi Band 7 உலகளாவிய பதிப்பு vs. சீனா ► சிறந்த PS பிளஸ் டீலக்ஸ் மற்றும் கூடுதல் கேம்கள் ► ஃபோர்ட்நைட்: இந்தியானா ஜோன்ஸின் ரகசிய கதவை எப்படி திறப்பது ► இன்ஸ்டாகிராமில் நிர்வாகியை எவ்வாறு சேர்ப்பது அதிகம் பார்வையிடப்பட்ட கட்டுரைகள்: ► எக்செல் அட்டவணையில் இருந்து வடிவமைப்பை எவ்வாறு அகற்றுவது? ► பேஸ்புக் உள்நுழைவு குறியீட்டை எவ்வாறு பயன்படுத்துவது ► இன்ஷாட் வாட்டர்மார்க் அகற்றுவது எப்படி ► கணினியிலிருந்து சில படிகளில் Uber Eats கணக்கை நீக்குவது எப்படி ► INPHIC வயர்லெஸ் மவுஸ் விற்பனைக்கு உள்ளது ► நைஸ்கிராம் என்றால் என்ன? ► பேஸ்புக் பக்கத்தின் பெயரை எவ்வாறு மாற்றுவது Contacto மின்னஞ்சல்: contacto@tecnobreak.com தொலைபேசி: + 54 911 2396 3159 முகவரி: டிக்மேன் 1441, புவெனஸ் அயர்ஸ், அர்ஜென்டினா எங்கள் சமூக வலைப்பின்னல்கள் © 2022 TecnoBreak.com - அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை | Contacto | TecnoBreak பற்றி | குக்கீகளை கொள்கை | தனியுரிமை கொள்கை | சட்ட அறிவிப்பு | கடை Spanish Afrikaans Albanian Amharic Arabic Armenian Azerbaijani Basque Belarusian Bengali Bosnian Bulgarian Catalan Cebuano Chichewa Chinese (Simplified) Chinese (Traditional) Corsican Croatian Czech Danish Dutch English Esperanto Estonian Filipino Finnish French Frisian Galician Georgian German Greek Gujarati Haitian Creole Hausa Hawaiian Hebrew Hindi Hmong Hungarian Icelandic Igbo Indonesian Irish Italian Japanese Javanese Kannada Kazakh Khmer Korean Kurdish (Kurmanji) Kyrgyz Lao Latin Latvian Lithuanian Luxembourgish Macedonian Malagasy Malay Malayalam Maltese Maori Marathi Mongolian Myanmar (Burmese) Nepali Norwegian Pashto Persian Polish Punjabi Romanian Russian Samoan Scottish Gaelic Serbian Sesotho Shona Sindhi Sinhala Slovak Slovenian Somali Spanish Sudanese Swahili Swedish Tajik Tamil Telugu Thai Turkish Ukrainian Urdu Uzbek Vietnamese Welsh Xhosa Yiddish Yoruba Zulu
எங்கோ பிரிட்டனில் பிறந்து, பிரான்ஸ், அமெரிக்கா என்று சுற்றிக்கொண்டிருந்தார் இவர். கொரியாவில் ஆங்கிலம் கற்றுக்கொள்ள பெரும் ஆர்வம் காட்டுகிறார்கள் என்பதைக் கேட்டறிந்தார். அதனால் அங்கு சென்று கொரியர்களுக்கு ஆங்கிலம் கற்றுக்கொடுக்கத் தொடங்கினார். ஆனால் இவருக்கு இந்தியாவில் வாழ விருப்பம். யோகா கற்றுக்கொள்வது, இந்திய தத்துவமரபில் ஈடுபடுவது இவரது விருப்பங்கள். ஆனால் இந்தியாவுக்கு வந்தால் எப்படிப் பொருள் ஈட்டுவது? இந்தியாவில் யாரும் இவரிடம் ஆங்கிலம் கற்றுக்கொள்ளவேண்டிய தேவையில்லையே? ஆனால் சென்னையில் ஹுண்டாய் நிறுவனத்தில் வேலை பார்க்கும் கொரியர்கள் பலர் இருக்கிறார்கள். இவர்களுக்கு பிரிட்டிஷ்காரர்களிடம் ஆங்கிலம் கற்றுக்கொள்வதில் கொள்ளை விருப்பம். எனவே கொரியாவிலிருந்து நேராக சென்னை வந்துவிட்டார் இந்த பிரிட்டிஷ்காரர். சென்னை கொரியர்களுக்கு ஆங்கிலம் கற்றுக்கொடுத்து இன்று சந்தோஷமாக சென்னையில் வாழ்க்கை நடத்துகிறார் இவர்! *** Veta என்னும் பேச்சுவழக்கு ஆங்கிலம் கற்றுக்கொடுக்கும் அமைப்பு வெகுவேகமாக வளரும் ஒரு நிறுவனம். இன்று இந்தியா முழுவதிலும் பல இடங்களில் ஆங்கிலத்தில் பேச வகுப்புகளை நடத்துகிறார்கள். இப்போது சிங்கப்பூரிலும் இந்த வகுப்புகளை ஆரம்பித்துள்ளார்கள். விரைவில் உலகெங்கிலும் தொடங்கப்போவதாகச் சொல்கிறார்கள். சீனாவுக்கும் செல்ல இருக்கிறார்கள். சீனாவில் பலர் போட்டிபோட்டுக்கொண்டு ஆங்கிலம் கற்றுக்கொள்கிறார்கள். பல ஆங்கிலப் பயிற்சிப் பள்ளிகள் தோன்றியுள்ளன. ஜப்பான் முதற்கொண்டு ஆசியாவின் பல பகுதிகளிலும் ஆங்கிலம் கற்பதில் மக்கள் பெரும் ஆர்வம் காட்டிவருகின்றனர். *** சென்ற வாரம், கர்நாடக உயர்நீதிமன்றம், அம்மாநிலத்தின் பல பள்ளிகள் ஆங்கில-வழிக் கல்வி பயிற்றுவிக்கலாம் என்று தீர்ப்பு வழங்கியுள்ளது. அம்மாநிலத்தில் பல பள்ளிகள், கன்னட மீடியத்தில் பாடம் நடத்துவதாகச் சொல்லி அரசிடம் அனுமதி பெற்றன. ஆனால் பெற்றோர்களின் நச்சரிப்பு தாங்கமுடியாமல் சத்தமே போடாமல் ஆங்கில மீடியத்துக்கு மாறிவிட்டன. விஷயம் கேள்விப்பட்ட மாநில அரசு, கன்னட மீடியத்துக்கு மாறாவிட்டால் பள்ளிகளின் உரிமையை ரத்துசெய்துவிடுவதாக அறிவித்தது. வழக்கு நீதிமன்றத்துக்குச் செல்ல, இந்த ரவுண்டில் பள்ளிகளின் ஆங்கில மீடிய உரிமையின் பக்கம் நீதி வழங்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு எப்படியும் அடுத்து உச்ச நீதிமன்றத்துக்குப் போகும். *** சென்ற வாரம் உயர்கல்விக்கான பாடப்புத்தகங்களைப் பதிப்பிக்கும் நிறுவனம் ஒன்றின் அதிகாரிகளுடன் பேசிக்கொண்டிருக்கும்போது பயமூட்டும் ஒரு தகவல் கிடைத்தது. தமிழகத்தில் 70% மேலான (கலை, அறிவியல், நிர்வாகவியல்) கல்லூரிகளில் பாடங்கள் ஒன்று தமிழில் நடைபெறுகின்றன, அல்லது ஆங்கில மீடியமாக இருந்தாலும் பரீட்சையில் எழுதும்போது மாணவர்கள் தமிழிலேயே எழுதுகிறார்கள். பயம் அதைப்பற்றியல்ல. இந்த மாணவர்களுக்கு தமிழில் பாடப்புத்தகங்களே கிடையாது என்பதுதான் பயமூட்டும் விஷயம். பல்கலைக்கழகங்கள் பாடப்புத்தகங்களைத் தயாரிப்பதில்லை. எப்போதோ தமிழ்நாடு பாடநூல் கழகம் பதிப்பித்த சில புத்தகங்களும் இன்று அச்சில் இல்லை. தனியார் பாடப்புத்தக பதிப்பகங்களோ ஆங்கிலத்தில்மட்டுமே புத்தகங்கள் போடுகின்றனர். அப்படியென்றால் தமிழ் மாணவர்கள் எதைப் படிக்கிறார்கள்? எப்படி பரீட்சை எழுதுகிறார்கள்? எதைப் புரிந்துகொள்கிறார்கள்? எப்படி பட்டம் வாங்கியதும் வெளியே வந்து உருப்படுகிறார்கள்? இந்த விஷயம் உண்மைதானா என்பதை அறிய சமீபத்தில் தமிழகக் கல்லூரிகளுடன் பரிச்சயம்கொண்ட சிலரைக் கேட்டேன். அவர்கள் உண்மைதான் என்கிறார்கள். தமிழ், தமிழ் என்று நாளுக்கு முந்நூறுமுறை மூச்சுவிடும் கட்சிகள் பதவியில் இருக்கும் தமிழகத்துக்கு இதுதான் கதியா? பொருளாதாரம், சமூகவியல், சூழலியல், இலக்கியக் கோட்பாடுகள், இயல்பியல், வேதியியல், கணிதம், புள்ளிவிவரவியல், விலங்கியல், தாவரவியல், மரபியல், நிர்வாகவியல் என எதற்கும் இளநிலை, முதுநிலைப் பாடங்களுக்கு தமிழில் உருப்படியான பாடப்புத்தகங்கள் இல்லை என்றால் மாணவர்களின் படிப்பு என்னாவது? பேசாமல் அனைவரும் ஆங்கிலம் கற்று, அதிலேயே பாடங்களைப் படித்துவிடலாமா? *** ஆங்கிலம்தான் இந்தியாவின், தமிழகத்தின் எதிர்கால மொழியா? Posted by Badri Seshadri at 23:28 Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest 10 comments: மகேஷ் Fri Jul 11, 11:43:00 PM GMT+5:30 eye opening post... it shud reach the bureaucracy n vcs ears... some thing shud be done b4 ev one switch 2 eng medium.... ReplyDelete Replies Reply யாத்ரீகன் Sat Jul 12, 01:25:00 AM GMT+5:30 Aangilam Indhiyargalin podhu mozhi aanadhu pazhaya kadhai, adhil ondurm thavarilai.. thamizhargazhin thaaimozhi aaguma yendru nenaikumbodhu miga varuthamaai irukindradhu :-( ReplyDelete Replies Reply வஜ்ரா Sat Jul 12, 07:40:00 AM GMT+5:30 புத்தகங்கள் ஆங்கிலத்தில் இருந்தால் என்ன, குறைந்த பட்சம் பரீட்சையையாவது தமிழில் எழுதும் வகையில் இருந்தால் தமிழ் மீடியம் மாணவர்கள் மிக்க மகிழ்ச்சி அடைவர். பல ஐரோப்பிய நாடுகளில் கல்வி கற்கும் மாணவர்கள் ஆங்கில மொழிப் பாடப்புத்தகங்கள் கொண்டிருந்தாலும் அவரவர் தாய் மொழியிலேயே தேர்வுகள் எழுதும் வண்ணம் பல்கலைக்கழகப் பாடத் திட்டங்கள் உள்ளன. தமிழ் என்று சொல்லி மற்ற மொழிகளைக் கற்கவிடாமல் தமிழர்களை இழிச்சவாயன் ஆக்கிய கொள்கைப் போராளிகள் ஆளும் நாட்டில் தமிழ் இனி மெல்லச் சாகும். ReplyDelete Replies Reply Anonymous Sat Jul 12, 11:25:00 AM GMT+5:30 தமிழில் பாட நூல்களை பாட நூல் நிறுவனம் வெளியிடுவதில் சிக்கல் இருக்கிறது.பல்கலைகழகங்களின் பாடத்திட்டங்கள் வேறுபடும்.அதற்கு தகுந்தாற் போல் நூல்கள் எழுதுவது கடினம். பாடத்திட்டத்தில் உள்ள பரிந்துரைக்கப்பட்ட நூல்களை யாரும் படிப்பதில்லை.படிப்பதெல்லாம் ஒன்று அல்லது இரண்டு நூல்கள், அதுவும் பல சமயங்கள் கோனார் உரை போன்ற னோட்ஸ்களை. இவை தமிழில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மாணவர்களும், பாடம் நடத்துபவர்களும் கவலைப் படுவதில்லை. பாடப்புத்தகம் தேவையில்லை, நோட்ஸ்கள் போதும் என்பதே உண்மை. எனவே ஒவ்வொரு பாடப்பிரிவிலும் ஒரிரு நூல்கள் அனைத்து பல்கலை மாணவர்களுக்கும் ‘பொதுவாக' உள்ளன. ReplyDelete Replies Reply Anonymous Sat Jul 12, 07:54:00 PM GMT+5:30 மாணவர்கள் அனைவரும் தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் சிறப்பான தேர்ச்சி அடைவதே அவர்களது எதிர்காலத்துக்கு நல்லது. இங்கு தமிழ் ஏன் வளர்ச்சி அடையாமல் இருக்கிறது என்றால் மொழி அறிஞர்களிடையே கலைச்சொற்கள், எழுத்துச் சீர்திருத்தம், பாடநூல் தயாரிப்பு ஆகியவற்றில் கருத்து உடன்பாடு, கருத்தொற்றுமை இல்லாமல் இருக்கிறது. நீ பெரியவனா, நான் பெரியவனா என்று ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக்கொள்கிறார்கள். மொழி வளர்ச்சிக்கு ஒதுக்கப்படும் நிதியை யாரோ ஒருசிலர் விழுங்கி ஏப்பம் விடுகிறார்கள். மேலும் மக்களுக்கும் இது நம் மொழி, அது பாதுகாக்கப்பட வேண்டும் என்ற அக்கறை இருக்க வேண்டும். ஜெர்மனி, ஜப்பான் போன்ற நாடுகளில் அந்தந்த நாட்டு மொழிகளில் பாடம் கற்பிக்கப்படும்போது தமிழ்நாட்டில் ஏன் தமிழ் வழியில் பாடம் கற்பிக்கப்படக் கூடாது? தொடக்கப் பள்ளிகளில் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு மொழிகளை நல்ல முறையில் சொல்லிக்கொடுக்காததாலேயெ பிற்பாடு அவர்களுக்கு தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் மொழித் திறன் இல்லாமல் போய்விடுகிறது. ReplyDelete Replies Reply Anonymous Mon Jul 14, 09:53:00 AM GMT+5:30 நல்ல பதிவு. இந்த சிக்கலுக்கு அரசாங்கத்தின் அக்கறையற்ற போக்குமன்றி மக்களின் மனத்தடையும் காரணமாக உள்ளது. இதனால் தமிழ்-ஆங்கிலம் இரண்டையும் அரை குறையாகக் கற்றுக் கொண்டு பாடங்களில் தெளிவில்லாமல் குழம்புகின்றனர். ReplyDelete Replies Reply புருனோ Bruno Mon Jul 14, 10:14:00 AM GMT+5:30 //இவை தமிழில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மாணவர்களும், பாடம் நடத்துபவர்களும் கவலைப் படுவதில்லை. பாடப்புத்தகம் தேவையில்லை, நோட்ஸ்கள் போதும் என்பதே உண்மை. // கசப்பான உண்மை :( :( ReplyDelete Replies Reply புருனோ Bruno Mon Jul 14, 02:05:00 PM GMT+5:30 ஆங்கில புத்தகத்தை படித்து தமிழில் தேர்வெழுதுவது என்பது ஆங்கிலத்தில் படித்து ஆங்கிலத்தில் எழுதுவதை விட நல்லது தானே. குறைந்த பட்சம் மனப்பாடம் செய்து எழுதாமல் புரிந்து கொண்டு எழுதுகிறார்கள் என்று சந்தோஷப்படுவோமே ReplyDelete Replies Reply Badri Seshadri Mon Jul 14, 04:58:00 PM GMT+5:30 புருனோ: பாடப்புத்தகங்கள் மிக முக்கியமானவை. நாம் நோட்ஸ் கலாசாரத்தில் 10வது, 12வது பாஸ் செய்யலாம். ஆனால் மேற்படிப்பில் விஷயத்தைப் புரிந்துகொள்வது மிக முக்கியம். ஆங்கிலத்தில் படித்து, அதைப் புரிந்துகொண்டு தமிழில் எழுதுவது என்பது கேட்க நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் உண்மையில் என்ன நடக்கிறது என்றால், ஆங்கிலத்தில் அரைகுறையாகப் படித்து, அதையும் அப்படியே ஆங்கிலத்தில் எழுதத் தகுதியில்லாததால் ஆங்கில வார்த்தைகளை ஆங்காங்கே அள்ளித் தெளித்து, தெரியாத வார்த்தைகளைத் தமிழில் எழுதுவதுதான் நடக்கிறது. அதுதான் பிரச்னையே. ஒன்று ஆங்கிலத்தில் சுத்தமாக எழுதவேண்டும். அல்லது தமிழில் சுத்தமாக எழுதவேண்டும். இரண்டுக்கும் மேலாக புரிந்துகொண்டு, எழுதவேண்டும். அது நடக்கிறதா? தமிழில் நல்ல பாடப்புத்தகங்கள் இருந்தால், மாணவர்கள், தமிழிலேயே படித்து, நன்றாகப் புரிந்துகொண்டு, தமிழிலேயே பதில் எழுதுவதற்கு சாத்தியக்கூறுகள் உள்ளனதானே? ReplyDelete Replies Reply புருனோ Bruno Mon Jul 14, 07:41:00 PM GMT+5:30 பத்ரி சார், நான் அப்படி கூறவில்லை :) :) //தமிழில் நல்ல பாடப்புத்தகங்கள் இருந்தால், மாணவர்கள், தமிழிலேயே படித்து, நன்றாகப் புரிந்துகொண்டு, தமிழிலேயே பதில் எழுதுவதற்கு சாத்தியக்கூறுகள் உள்ளனதானே?// சிறந்த முறை : தமிழில் கற்று தமிழில் எழுதுவது அப்படி இயலாதவரை : ஆங்கில புத்தகத்தில் கற்று தமிழில் எழுதுவது என்பது ஆங்கில புத்தகத்தை மனப்பாடம் செய்து (அல்லது பிட் அடித்து) ஆங்கிலத்தில் எழுதுவதை விட பரவாயில்லை என்று தான் கூறினேன்.
வடக்கு கிழக்குக்கு வெளியே வாழும் பதினாறு இலட்சம் தமிழ் மக்களின் சமூக அரசியல் அபிலாஷைகளை பிரதிநிதித்துவம் செய்யும் முகமாக தமிழ் முற்போக்கு கூட்டணியினால் நியமிக்கப்பட்ட அரசியலமைப்பு யோசனை வரைபு விசேட அறிவோர் குழுவின் குழுவின் ஆரம்ப கட்ட பணிகள் பூர்த்தியாகிவிட்டன. இந்த குழு தயாரித்துள்ள வரைபு, கூட்டணியின் செயற்குழுவில் பரிசீலிக்கப்பட்டு அரசியலமைப்பு பேரவையில் முன் வைக்கப்படும் என தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சரும், தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அமைச்சர் மனோ கணேசன் மேலும் கூறிதாவது, நமது கூட்டணியினால் பதினாறு அங்கத்தவர்களை கொண்ட அறிவோர் குழு கடந்த மாதம் நியமிக்கப்பட்டது. இக்குழுவின் தவிசாளராக சமூக ஆய்வாளர் பி. முத்துலிங்கம், பேராசிரியர் எம். சின்னதம்பி, பேராசிரியர் சந்திரசேகரன், பேராசிரியர் டி. தனராஜ், பேராசிரியர் மூக்கையா, கலாநிதி எஸ். சந்திரபோஸ், விரிவுரையாளர் எஸ். விஜயசந்திரன், விரிவுரையாளர் கௌரி பழனியப்பன், சிரேஷ்ட அரச பணியாளர் எம். வாமதேவன், ஆய்வாளர் கௌதம் பாலசந்திரன், விரிவுரையாளர் உமாதேவி துரைராஜ், தொழில் அதிபர் சந்திரா சாப்டர், சமூக ஆய்வாளர் ரமேஷ் நந்தகுமார், முன்னாள் பிரதியமைச்சர் புத்திரசிகாமணி, கூட்டணி பொது செயலாளர் அன்டன் லோரன்ஸ், உப செயலாளர் சண். பிரபாகரன் ஆகியோர் பணியாற்றியுள்ளனர். வடக்கு கிழக்குக்கு வெளியே வாழும் பதினாறு இலட்சம் தமிழ் மக்களின், குறிப்பாக சமீபத்து இந்திய வம்சாவளி மலையக தமிழ் மக்களின் சமூக அரசியல் அபிலாஷைகளை ஆய்வு செய்து உரிய பிரேரணைகள் அடங்கிய வரைபை தயாரித்து தரும் பணி இந்த குழுவுக்கு வழங்கப்பட்டு இருந்தது. இந்த பணி பூர்த்தியாகி உள்ளதாக குழுவின் தவிசாளர் பெ. முத்துலிங்கம் எனக்கு அறிவித்துள்ளார். இந்நிலையில் இது கூட்டணியின் செயற்குழுவின் பரிசீலனைக்கு விரைவில் சமர்பிக்கப்படும். வடக்கு கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழ் மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் ஏனைய அமைப்புகளின் கோரிக்கைகளுடன் எமது பிரேரணைகள் வாழ்நிலைமைகள் மற்றும் தளங்களுக்கு ஏற்ப வேறுபடலாம். ஆனால், இந்நாட்டின் அரசியல் அதிகார பகிர்வில் உரிய பங்கை நாமும் எதிர்பார்க்கின்றோம் என்பதை நாடு அறிந்துகொள்ளும் வகையில் எமது பிரேரணைகள் அமையும் என நான் எதிர்பார்க்கின்றேன். அத்துடன் நம் வரைபு தொடர்பாக சகோதார தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்கள கட்சிகளுடனும் கலந்துரையாட உத்தேசித்துள்ளோம். நிறைவேற்று அதிகாரம் கொண்ட அதிகார சபை, 25,000 பேருக்கு ஒரு பிரதேச சபை, தமிழ் மக்களின் பிரதிநிதித்துவத்துக்கு, மத்திய-மேற்கு-ஊவா-சப்ரகமுவ மாகாணசபைகளின் ஐந்து பேர் கொண்ட அமைச்சரவையில் ஒரு அமைச்சு பொறுப்பு ஒதுக்கீட்டு கட்டாயம், பாராளுமன்றத்தில் இரண்டாம் சபை, சமஷ்டி-ஒற்றையாட்சி சொற்பிரயோகங்களை தவிர்த்து பூரண அதிகார பகிர்வு அம்சங்களை கொண்ட அரசியல் முறைமை, மதசார்பின்மை, தோட்ட தொழிலாளர் உட்பட நாட்டின் அனைத்து பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கும் விசேட வளர்ச்சி ஒதுக்கீடுகள் ஆகியவை உட்பட்ட பல்வேறு அம்சங்கள் எமது ஆலோசனைகளின் போது கலந்துரையாடப்பட்டுள்ளன. இவை பற்றிய இறுதி முடிவுகள் செயற்குழுவில் எடுக்கப்பட்டு, அவை உரிய தளத்தில் சமர்பிக்கப்படும். Author ஆசிரியர்Posted on March 7, 2016 Categories செய்திகள் Post navigation Previous Previous post: மஹிந்த வருகையை எதிர்த்து சிங்கள மக்கள் ஆர்ப்பாட்டம்? Next Next post: தார்மீக வலுவிழந்த தமிழ் கபடதாரி அரசியல்! Search for: Search Categories Announcements Uncategorised கட்டுரைகள் அரசியல் சமூக ஆய்வு அரசியல் தீர்வு இலங்கைத் தமிழர் போராட்டம் இலங்கையில் உள்ள ஏனைய அரசியல் அமைப்புகள் சர்வ தேச அரசியல் பொதுவிடயம் கவிதைகள் சமூக விழிப்பு பொது விடயம் போராட்டம் செய்திகள் இணையத்தளங்கள் நடேசன் இணையம் பூந்தளிர் தூ தேனி தமிழ் நியூஸ் வெப் பத்மநாபா மலையகம் அதிரடி அதிரடி மீடியா ஈ.பி.ஆர்.எல்.எவ். ரெலோ நியூஸ் விடிவெள்ளி எங்கள் பூமி சலசலப்பு இடதுசாரிகள் Recent Comments NIYAYAM on பிரபாகரனை அழிக்க இந்திய அரசுக்கு ஆதரவாக இருந்த தமிழக தலைவர்கள்… ராஜபக்சே கேட்கவே இல்லை… திடுக்கிடும் தகவல் ஆசிரியர் on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை…. NIYAYAM on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை…. SDPT - புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது. on புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது.
தண்ணீர் ஒரு மணி நேரத்தில் படித்து முடித்துவிடக் கூடிய் ஒரு குட்டி நாவல். ஆனால் அது எளிதல்ல. அது தரும் தாக்கம் அதை அப்படி எளிதில் படிக்க விடாது. "யாரோ ஒரு பெண் தண்ணீருக்காக இங்கும் அங்கும் அலைந்ததை தொடர்ச்சியாக பார்த்ததன் விளைவு இக்கதை" என்கின்றார் அசோகமித்திரன். தண்ணீர் பிரச்சினை என்றுமுள்ள ஒரு விஷயம். என் ஊரில் முன்பு தண்ணீர் பஞ்சம் படு பயங்கரம், பக்கத்து தெருவில் போய் தண்ணீர் சுமந்து வருவார்கள். வீட்டில் விஷேஷம் என்றால் தண்ணீரை விலைக்கு வாங்கி கொண்டு வருவோம். மழை பெய்யும் போது பிடித்து வைத்துக் கொள்வோம். பின்னர் முல்லையாற்றிலிருந்து தண்ணீர் வீட்டிற்கே வர ஆரம்பித்தது. கொஞ்சம் மூச்சு விட்டுக் கொண்டோம். ஆனால் இப்போதும் சில சமயம் வாரக்கணக்கில் தண்ணீர் வராமல் போய்விடும். இன்றும் தண்ணீரை ட்ரம்மில் கொண்டு வருவது நடக்கிக்ன்றது. ஆனால் முன்பிருந்த கொடுமை இல்லை. இப்போது தண்ணீருக்கு பதில் மின்சாரம். இக்கதை அது போன்ற ஒரு கொடுமையான தண்ணீர் பிரச்சினை காலத்தை பேசுகின்றது. அது ஒரு பின்புலம், அதன் மேல் இரண்டு சகோதரிகளின் கதை. அசோகமித்திரனின் தனிப்பட்ட பேட்டிகளை படிக்கும் போது அவர் கூறுவது வாழ்க்கை மேல் எவ்வித குற்றச்சாட்டுமில்லை, வருவதை ஏற்றுக் கொண்டேன் என்பது. அவரது கதைகளும் அவரைப் போலவே, வாழ்க்கையை ஆராய்ச்சி செய்து நம்மை கூறுபோடுவதில்லை. வாழ்க்கையை ஒரு அடி தள்ளி நின்று நமக்கு காட்டுகின்றது. நாம் அதை புரிந்து கொள்ள வேண்டியதுதான். ஜமுனா சினிமா ஆசையில் விழுந்து பாஸ்கர் ராவினால் அடிக்கடி ஏமாற்றப்படும் ஒரு பெண், அவளது தங்கை சாயா. கணவன் மிலிட்டரியில், பையன் அவளது மாமா வீட்டில். இருவரும் அவர்களது அம்மாவை மாமா வீட்டில் விட்டு விட்டு தனியே ஒரு வீட்டில் வசிக்கின்றனர். இவர்களது வாழ்க்கை தண்ணீர் பஞ்சத்துடன் சேர்ந்து போகின்றது. தண்ணீருக்கு அனைவரும் அலைகின்றனர். அனைத்து வீட்டு குழாய்களிலும், கிணறுகளிலும் தண்ணீர் வற்றுகின்றது. சாயா ஜமுனா - பாஸ்கர் ராவின் உறவை சகிக்காமல் ஹாஸ்டலுக்கு போகின்றாள். தெருவில் வைக்கப்படும் தண்ணீர் டேங்கினால் அனைவரும் கொஞ்சம் ஆசுவாசம் அடைகின்றனர். சாயா திரும்பிவருகின்றாள். வீட்டு குழாயில் தண்ணீர் வருகின்றது, ஆனால் அது சாக்கடை கலந்து வருகின்ற தண்ணீர். ஜமுனா கர்ப்பமாகின்றாள். சாயா பாஸ்கர் ராவின் மீது பாய்கின்றாள். ஜமுனா பாஸ்கர் ராவை போகச் சொல்லிவிட்டு, இருவம் அவர்கள் வாழ்க்கையை தொடர்கின்றனர். கதை ஒரு ஆரம்பம், ஒரு முடிவு, திடுக்கிடும் திருப்பங்கள் என்றெல்லாம் கிடையாது. சம்பவங்களின் கோர்ப்பு. கதாபாத்திரங்கள் பற்றி விவரிப்பு எல்லாம் கிடையாது. சம்பவங்களின் மூலமும், அவர்களின் உரையாடல் மூலமும் அது சொல்லப்படுகின்றது. ஜமுனா ஏன் அப்படி ஆனாள் என்பதெல்லாம் நம் யூகத்திற்கு விடப்படுகின்றது. அதே போல் கதைஜமுனாவிற்கு உதவும் டீச்சர் கதபாத்திரம் மட்டும் கொஞ்சம் அதிகம் பேசுகின்றது இரண்டு பக்கம். அவ்வளவுதான் மற்றவர்கள் அனைவரும் சுருக்கம். மக்கள் தண்ணீருக்கும் பட்ட அவஸ்தையை அப்படியே சித்தரித்துள்ளார். அடுத்தவர் வீட்டிற்கு சென்று கொஞ்சம் அவமானப்பட்டு தண்ணீர் சுமந்து வருவது, தண்ணீர் கொண்டுவரும் ஓட்டுனர் அதற்காக பெற்றுக் கொள்ளும் கப்பம். மழை இரவில் மழைத்தண்ணீருக்கு வரும் சண்டை அனைத்தும் இயல்பானவை. அரசு இயந்திரத்தின் செயல் அழகு, ஒரு வேலையை செய்யும் போது முடிந்த வரை ஏற்கனவே செய்யப்பட்ட வேலைகளை கெடுப்பது, பொது ஜனங்களுக்கு அவர்கள் தரும் மரியாதை, வேலையின் மெத்தனம் என நடுத்தர மக்கள் அரசு இயந்திரத்தால் படும் அவஸ்தையை கண் முன் காட்சிபடுத்துகின்றார். ஒரு பாட்டி தண்ணீருடன் கீழே விழுந்து மற்றவர்கள் தொட்டதால் மிச்ச தண்ணீரைக் கீழே கொட்டி விட்டு போவதை கண்டு ஜமுனாவின் மனம் லேசாக மாறுவது அழகு. சின்ன சின்ன சித்திரங்கள், இரண்டு குழந்தைகள் தண்ணீர் சுமந்து கொண்டு போவது, கடைசியில் பாஸ்கர் ராவின் கார் சேற்றில் மாட்டி கொண்டதை பார்த்துக் கொண்டே ஜமுனாவும், சாயாவும் வெளியே போவது, ஜமுனாவின் மாமா பெண்ணின் தயக்கம். கடைசியில் ஜமுனா கூறுவது "தண்ணி முதல்ல சாக்கடைதண்ணி போல வந்தது. ஆனா அது எல்லாம் சரியாயிடும், தண்ணி வந்தது அதுதான் முக்கியம்" அவரின் வரிகளிலேயே முடிவுரை "இந்த 2013ம் ஆண்டில் இந்த தண்ணீர் நாவலுக்கு எப்படி பொருத்தம் தேடுவது? தண்ணீர் மூலம் இருக்க முடியாது. ஆனால் இக்கதையிலுள்ள நெருக்கடிகள் வேறு வேறு பொருள்களுக்காகவும் காரணங்களுக்காகவும் நிகழ்கின்றன. நிர்பந்தங்கள் தொடர்ந்து இருந்து வருகின்றன. முயற்சி வெற்றி, தோல்வி, நிராசை, இன்னும் வாழத்தான் வேண்டுமா என்ற கேள்வி எழுப்பும் தருணங்கள் இருந்து கொண்டுதான் உள்ளன" சரியாக பொருந்துகின்றது. ஆனால் இன்றும் தண்ணீர் பிரச்சினைதான். ஆனால் அலைய வேண்டியதில்லை. உட்கார்ந்த இடத்திலிருந்து பணத்தை எண்ணத் தரவேண்டியுள்ளது. அசோகமித்திரனின் வழக்கமன சின்ன சின்ன எள்ளல் இதில் இல்லை. தண்ணீர் பஞ்சம் என்பதால் ட்ரையாக இருக்கட்டும் என்று விட்டுவிட்டார் போல. இக்கதை என்னை பொருத்த வரை ஒரு நல்ல கதை. ஆனால் அசோகமித்திரன் அதைப் பற்றி கூறுவது "எனக்கு பிடிக்காதது என்றால் தண்ணீர் கரைந்த நிழல்களை சொல்லலாம், என்னவோ அவற்றை எழுதிவிட்டேன்" என்னவோ அப்படி சொல்லிவிட்டார் என்று நினைத்துக் கொண்டு நாம் படிக்க வேண்டியதுதான். இந்நாவலைப் பற்றி மற்றவர்களின் கருத்தை படிக்கும் போது படித்த ஒரு விஷயம் இது ஒரு குறியீட்டு நாவல் என்பது. அப்படி என்றால் என்ன என்று ஆராய்ச்சி செய்து பார்த்தேன் ஒன்றும் புரியவில்லை. புரிந்தவர்கள் விளக்கினால் தன்யனாவேன். புத்தகத்தில் விலை 100. இரண்டு தண்ணீர் கேன்களின் விலைதான். Posted by ரெங்கசுப்ரமணி at முற்பகல் 9:53 இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Twitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர் Labels: அசோகமித்ரன், நாவல் 2 கருத்துகள்: பெயரில்லா 15 ஏப்ரல், 2013 அன்று முற்பகல் 4:18 இந்த நாவலுக்கு மேலும் இரு விமர்சனங்கள் இங்கே... http://balhanuman.wordpress.com/2012/10/11/ பதிலளிநீக்கு பதில்கள் பதிலளி பெயரில்லா 16 ஏப்ரல், 2013 அன்று பிற்பகல் 12:33 தாங்கள் கொடுத்திருக்கும் அசோகமித்திரன் முன்னுரைக் குறிப்பிலேயே அதற்கான(குறியீட்டு நாவல்)பதில் இருக்கிறதே! பதிலளிநீக்கு பதில்கள் பதிலளி கருத்துரையைச் சேர் மேலும் ஏற்றுக... புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு இதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom) தேடினால் கிடைக்கும் (சில சமயம்) சுயபுராணம் ரெங்கசுப்ரமணி பெங்களூரு, கர்நாடகா, India எனது முழு சுயவிவரத்தைக் காண்க நேயர் விருப்பம் கிருஷ்ணா கிருஷ்ணா - இந்திரா பார்த்தசாரதி ஜீரோ டிகிரி - சாரு நிவேதிதா நில்லுங்கள் ராஜாவே - சுஜாதா ஒற்றன் - அசோகமித்திரன் கரும்புனல் - ராம் சுரேஷ் பக்கங்கள் ► 2022 (8) ► ஆகஸ்ட் (1) ► ஜூன் (1) ► மார்ச் (3) ► பிப்ரவரி (1) ► ஜனவரி (2) ► 2021 (16) ► டிசம்பர் (1) ► செப்டம்பர் (1) ► ஜூலை (1) ► ஜூன் (3) ► மே (4) ► பிப்ரவரி (6) ► 2020 (17) ► நவம்பர் (1) ► அக்டோபர் (1) ► செப்டம்பர் (1) ► ஆகஸ்ட் (2) ► ஜூலை (4) ► மே (2) ► ஏப்ரல் (2) ► மார்ச் (1) ► பிப்ரவரி (1) ► ஜனவரி (2) ► 2019 (3) ► டிசம்பர் (2) ► ஜனவரி (1) ► 2018 (10) ► அக்டோபர் (6) ► மே (2) ► மார்ச் (1) ► ஜனவரி (1) ► 2017 (47) ► டிசம்பர் (2) ► நவம்பர் (3) ► செப்டம்பர் (2) ► ஆகஸ்ட் (4) ► ஜூலை (3) ► ஜூன் (3) ► மே (5) ► ஏப்ரல் (6) ► மார்ச் (10) ► பிப்ரவரி (5) ► ஜனவரி (4) ► 2016 (22) ► டிசம்பர் (1) ► நவம்பர் (2) ► அக்டோபர் (3) ► செப்டம்பர் (4) ► ஆகஸ்ட் (4) ► ஜூலை (5) ► ஜூன் (2) ► மார்ச் (1) ► 2015 (16) ► டிசம்பர் (2) ► நவம்பர் (5) ► செப்டம்பர் (4) ► ஏப்ரல் (2) ► பிப்ரவரி (3) ► 2014 (32) ► நவம்பர் (1) ► அக்டோபர் (2) ► செப்டம்பர் (2) ► ஆகஸ்ட் (3) ► ஜூலை (3) ► ஜூன் (1) ► மே (2) ► ஏப்ரல் (8) ► மார்ச் (6) ► பிப்ரவரி (3) ► ஜனவரி (1) ▼ 2013 (56) ► டிசம்பர் (4) ► நவம்பர் (4) ► அக்டோபர் (4) ► செப்டம்பர் (4) ► ஆகஸ்ட் (4) ► ஜூலை (2) ► ஜூன் (1) ► மே (2) ▼ ஏப்ரல் (6) சொர்க்கத் தீவு - சுஜாதா என் இனிய இயந்திரா, மீண்டும் ஜீனோ - சுஜாதா மகாபாரதம் தண்ணீர் - அசோகமித்திரன் என் பெயர் ராமசேஷன் - ஆதவன் அப்பாவின் ரேடியோ - சுஜாதா தேசிகன் ► மார்ச் (5) ► பிப்ரவரி (8) ► ஜனவரி (12) ► 2012 (34) ► டிசம்பர் (12) ► நவம்பர் (12) ► அக்டோபர் (8) ► செப்டம்பர் (2) நாவல் (86) சிறுகதை (34) ஜெயமோகன் (21) தி. ஜா (20) அரசியல் (18) சுஜாதா (18) கட்டுரைகள் (17) சரித்திரம் (16) மகாபாரதம் (16) அசோகமித்ரன் (13) குறுநாவல் (10) நகைச்சுவை (10) சுயசரிதை (8) வெண்முரசு (8) திரைப்படம் (7) மொழிபெயர்ப்பு (7) வரலாறு (7) கணேஷ் வசந்த் (6) சோ (6) இந்திரா பார்த்தசாரதி (5) தேவன் (5) கரிசல் காடு (4) பயணம் (4) பாலகுமாரன் (4) விகடன் (4) அனுபவம் (3) அரவிந்தன் நீலகண்டன் (3) ஆங்கிலம் (3) ஆன்மீகம் (3) இந்தியா (3) இந்து மதம். (3) கடல் (3) கி. ராஜநாரயணன் (3) சினிமா (3) ஜெயகாந்தன் (3) நாஞ்சில் நாடன் (3) நாடகம் (3) நெய்தல் (3) பா.ரா (3) பைரப்பா (3) வாழ்க்கை வரலாறு (3) ஹிந்துத்துவம் (3) ஆதவன் (2) இசை (2) கல்கி (2) காடு (2) காந்தி (2) கோபுலு (2) சாவி (2) சுகா (2) சுஜாதா தேசிகன் (2) சுதந்திரப் போர் (2) ஜோ டி குரூஸ் (2) ப. சிங்காரம் (2) பி.ஏ.கிருஷ்ணன் (2) பூமணி (2) மதன் (2) ராமாயணம் (2) விஞ்ஞானம் (2) வைஷ்ணவம் (2) அமானுஷ்யம் (1) இதிகாசம் (1) இந்திரா செளந்திரராஜன் (1) இரா.முருகன் (1) இளையராஜா (1) இஸ்லாம் (1) கன்னடம் (1) காண்டேகர் (1) கிறித்துவம் (1) குழந்தைகள் இலக்கியம் (1) கோவில் (1) சரஸ்வதி (1) சா கந்தசாமி (1) சாருநிவேதிதா (1) சைன்ஸ்ஃபிக்‌ஷன் (1) சோ.தர்மன் (1) ஜடாயு (1) தத்துவம் (1) தோப்பில் முகம்மது மீரான் (1) நீல.பத்மநாபன் (1) நேர்காணல் (1) பக்தி (1) புராணம் (1) புவியியல் (1) பெருமாள் முருகன் (1) மதிப்புரை.காம் (1) மதுரை (1) மாலன் (1) மொக்கை (1) ர.சு.நல்லபெருமாள் (1) ரா.கி.ர (1) ராஜாஜி (1) வண்ணநிலவன் (1) வலம் (1) விளையாட்டு (1)
எரித்துக்கொலை செய்யப்பட்ட ஹைதராபாத் பெண் மருத்துவர் வழக்கில் குற்றவாளிகள் என்கவுட்டரில் கொலை செய்யப்பட்டதற்கு நாடெங்கும் வரவேற்பு கிடைத்துள்ளது. ஹைதராபாத்தில் வல்லுறவு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவர் வழக்கில் சிக்கிய குற்றவாளிகள் 4 பேரும் இன்று அதிகாலை 3 மணியளவில் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். குற்றம் நடந்த இடத்துக்கு குற்றவாளிகளை அழைத்துச் சென்ற போது அவர்கள் தப்பிக்க முயன்றதாகவும், போலீசாரின் துப்பாக்கியை பிடிங்கி அவர்கள் சுட முயன்றதால், தற்காப்பிற்காக போலீஸார் அவர்களை சுட்டுக் கொன்றதாக சொல்லப்படுகிறது. சட்டப்படி அவர்கள் தண்டிக்கப்பட்டிருக்க வேண்டும் என்கிற கருத்து ஒருபுறம் இருந்தாலும் இதற்கு நாடெங்கும் பாராட்டுகள் குவிந்து வருகிறது. குறிப்பாக ஹைதராபத்தில் கல்லூரி மாணவிகள் இதை இனிப்பு கொடுத்து கொண்டாடி வருகின்றனர். இந்த செய்தி காலையில் பரவியதும், பேருந்தில் சென்று கொண்டிருந்த கல்லூரி மாணவிகள் சாலையில் நின்று கொண்டிருந்த காவல் அதிகாரிகளை பார்த்து கூக்குரல் எழுப்பி கைகளை அசைத்து அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். அதேபோல், என் கவுண்டர் நடந்த இடத்தில் இருந்த போலீசாரை பொதுமக்கள் தோளில் தூக்கி அவர்களை கொண்டானர். இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. — ANI (@ANI) December 6, 2019 ANI video of people cheering for police at the encounter site where the four accused were killed in an encounter earlier today. @ANI #Encounter #hyderabadpolice #DishaCase #JusticeForDisha pic.twitter.com/XxCRMow80w — Anuj Dhar (@anujdhar) December 6, 2019 The post ஹைதராபாத் என்கவுண்டர் – போலீசாரை தோளில் துக்கி கொண்டாடும் பொதுமக்கள் (வீடியோ) appeared first on Dhinasari Tamil. Source: டிரைலர் The post ஹைதராபாத் என்கவுண்டர் – போலீசாரை தோளில் துக்கி கொண்டாடும் பொதுமக்கள் (வீடியோ) appeared first on Vellithirai News. Continue Reading Previous article அட செமையா இருக்கே!… ராகுலின் பேச்சை சிறப்பாக மொழிபெயர்த்த அரசு பள்ளி மாணவி… வைரல் வீடியோ Next article எவ்ளோதான்டா பொறுக்கறது?.. சீண்டியவருக்கு கும்மாங்குத்து.. மணமேடையில் ருசிகரம் (வீடியோ) Leave a Reply Cancel reply Comment * Name * Email * Website Save my name, email, and website in this browser for the next time I comment. Δ Search Search Latest News காலங்களில் அவள் வசந்தம் -திரைப்படம் ஒரு பார்வை.. October 29, 2022 2:53 PM சர்தார் -விமர்சனம்.. October 23, 2022 11:03 AM பிரின்ஸ் –தீபாவளி ரேஸ் சில் வெற்றி பெருமா.. திரைவிமர்சனம்.. October 21, 2022 3:28 PM தமிழகத்தில் ரூ.200 கோடி வசூலித்த முதல் தமிழ்த் திரைப்படம் ‘பொன்னியின் செல்வன்’.. October 17, 2022 4:34 PM ராஷ்மிகா மந்தனா வெளியிட்ட, சூப்பர் நேச்சுரல் மிஸ்டரி திரில்லர் எமகாதகி ஃபர்ஸ்ட் லுக்! October 7, 2022 8:57 AM Archives Select Month October 2022 (6) September 2022 (5) August 2022 (3) July 2022 (2) June 2022 (2) May 2022 (15) April 2022 (8) March 2022 (30) February 2022 (30) January 2022 (34) December 2021 (36) November 2021 (48) October 2021 (57) September 2021 (51) August 2021 (33) July 2021 (71) June 2021 (36) May 2021 (42) April 2021 (40) March 2021 (2) February 2021 (6) January 2021 (3) December 2020 (144) November 2020 (133) October 2020 (5) September 2020 (3) August 2020 (2) July 2020 (4) June 2020 (9) May 2020 (8) April 2020 (5) March 2020 (20) February 2020 (10) January 2020 (6) December 2019 (27) November 2019 (27) October 2019 (17) September 2019 (8) August 2019 (5) July 2019 (12) June 2019 (7) May 2019 (5) April 2019 (1) March 2019 (3) February 2019 (3) January 2019 (3) Copyright © 2022 Vellithirai News. Designed and Developed by SSS Media, Chennai, TN. All Rights Reserved.
சமீபத்தில் தரைப்படை தினமன்று இந்திய தரைப்படைக்கான புதிய டிஜிடல் சீருடை அறிமுகம் செய்யப்பட்ட நிலையில் விரைவில் இவற்றை அனைத்து படை வீரர்களுக்கும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக தேசிய ஃபேஷன் டெக்னாலஜி கல்லூரியால் வடிவமைக்கப்பட்ட இந்த சீருடையை உயர் தரத்துடனும் தகுந்த விலையிலும் தயாரித்து தரும் நிறுவனங்களை அடையாளம் காண டென்டர் விடப்பட்டுள்ளது. அதாவது யார் வேண்டுமானாலும் இதில் பங்கேற்க முடியும் ஆகவே அரசு மற்றும் தனியார் துறை நிறுவனங்களுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. இந்த நடவடிக்கையை எதிர்த்து தேசிய பாதுகாப்புதுறை பணியாளர்கள் சம்மேளனம் ஆர்டரை நேரடியாக பாதுகாப்பு துறையின் TCF நிறுவனத்திற்கு வழங்க வேண்டும் என கூறியுள்ளனர். இந்த ஆர்டரை வழங்கவில்லை என்றால் OCF ஆவடி, OCF ஷாஜஹான்பூர் மற்றும் OCF ஹஸ்ரத்பூர் ஆகிய தொழிற்சாலைகள் நஷ்டத்தை சந்திக்கும் என கூறியுள்ளனர் இது தொடர்பாக பாதுகாப்பு அமைச்சரையும் சந்தித்து உள்ளனர். ஆனால் ராணுவமோ ஏற்கனவே TCFன் OCF தொழிற்சாலைகளுக்கு ஏகப்பட்ட ஆர்டர்கள் கொடுக்கப்பட்டு உள்ளதாகவும் அதற்கான டெலிவரிகளே கால தாமதம் ஆகியுள்ளதாகவும் டென்டரில் இவர்களும் பங்கேற்கலாம் எனவும் கூறியுள்ளது. Tamil Defense Recent Posts புதிய மலையக தாக்குதல் பிரங்கியை உருவாக்கிய கல்யாணி நிறுவனம் !! November 28, 2022 பிரேசில் பிரங்கி வாகன போட்டியில் தோல்வி அடைந்த இந்தியாவின் WhAP Kestrel !! November 28, 2022 ராணுவத்திற்கான புதிய மின்சார வாகனம் அறிமுகம் !! November 28, 2022 மேலதிக அர்ஜுன் டாங்கிகளை வாங்குமாறு தரைப்படைக்கு கோரிக்கை விடுத்துள்ள DRDO !! November 28, 2022 புல்வாமா தாக்குதலை திட்டமிட்டவர் புதிய பாக் ராணுவ தளபதியாக நியமனம் !! November 25, 2022 எதிரி ரேடார்களை அழிக்கும் புதிய அதிநவீன ஏவுகணைகள் வாங்கும் இந்திய விமானப்படை !! November 25, 2022 ஒமன் கடற்படையுடன் இந்திய கடற்படையின் கூட்டு பயிற்சி !! November 25, 2022 நீர்மூழ்கி கப்பல் கட்ட ஜப்பான் உதவியை பெற விரும்பும் இந்தியா !! November 24, 2022 மேலும் அதிக சினூக் கனரக ஹெலிகாப்டர்களை அமெரிக்காவிடம் இருந்து வாங்க இந்தியா திட்டம் !! November 24, 2022
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பஹ்ரைன் நாட்டு பெண்மணி ஒருவருக்கு சென்னையில் நவீன சிகிச்சை மூலம் மறுவாழ்வு அளிக்கப்பட்டுள்ளது. தற்போது அவா் நலமுடன் உள்ளதாகவும், புற்றுநோயை ஆரம்பகட்டத்திலேயே கண்டறிந்ததன் விளைவாக அவரை குணமாக்க முடிந்ததாகவும் மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா். இதுகுறித்து அவா்கள் மேலும் கூறியதாவது: பஹ்ரைன் நாட்டைச் சோ்ந்த 60 வயது பெண்மணி ஒருவா் கா்ப்பப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதற்காக சிகிச்சை பெற்று வந்தாா். இந்நிலையில், அதற்கான மருத்துவ ஆலோசனைகள் பெற சென்னை குளோபல் மருத்துவமனைக்கு அவா் வந்தாா். அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் அப்பெண்ணின் மாா்பில் சிறிய கட்டி இருந்ததைக் கண்டறிந்தனா். அதனை ஆய்வு செய்தபோது அவருக்கு மாா்பகப் புற்றுநோய் பாதிப்புக்கான ஆரம்ப நிலை இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவருக்கு அதி நவீன சிகிச்சை வாயிலாக அக்கட்டி நீக்கப்பட்டு புற்றுநோய் பாதிப்பு பரவாத வகையில் தடுக்கப்பட்டது. உயா் நோக்கு மருத்துவ சாதனங்களும், நவீன வசதிகளும் இருந்தால் மட்டுமே மாா்பகப் புற்றுநோயை இவ்வளவு ஆரம்பக் கட்டத்தில் கண்டறிய இயலும். ADVERTISEMENT குளோபல் மருத்துவமனையில் அத்தகைய வசதிகள் இருந்ததால் அப்பெண்ணின் மாா்பகத்தை அகற்றும் நிலைக்குச் செல்லாமல் ஆரம்பத்திலேயே புற்றுநோய் பாதிப்பைக் கண்டறிந்து சிகிச்சை அளிக்க முடிந்தது என்று மருத்துவா்கள் தெரிவித்தனா். Subscribe to Notifications ADVERTISEMENT MORE FROM THE SECTION பேராசிரியா் அன்பழகன் விருது: 114 அரசுப் பள்ளிகள் தோ்வு ஜி-20 அமைப்புக்கு தலைமையேற்ற இந்தியா: தஞ்சாவூா் பெரியகோயில் மின்னொளியில் ஒளிா்ந்தது புதுகையில் எய்ட்ஸ் விழிப்புணா்வு ‘ஊமை ஒலி’ குறும்படம் வெளியீடு தந்தை உயிரிழந்ததை அறியாத தமிழக வீராங்கனைக்கு காமன்வெல்த் போட்டியில் தங்கப் பதக்கம் முன்னாள் அமைச்சா் சி.விஜயபாஸ்கா் சொத்துகளை முடக்கியது ஏன்? உயா் நீதிமன்றத்தில் வருமான வரித்துறை விளக்கம் மோசடி அடையாள அட்டையுடன் முதல்வருடன் புகைப்படம் எடுக்க முயற்சி: சிறை அலுவலா் கைது தமிழ் மொழி திறனறித் தோ்வு முடிவுகள் வெளியீடு: 1,500 மாணவா்களுக்கு ஊக்கத் தொகை மக்களவைத் தோ்தலில் 40 தொகுதிகளிலும் வெல்ல பணியாற்றுவோம்: மாவட்டச் செயலாளா் கூட்டத்தில் திமுக தலைவா் ஸ்டாலின் TRENDING TODAY Coal production China Chendur Express cm stalin China TRENDING WEEK Prime Volleyball League Air India COAI Rahul Gandhi Yasin Malik LATEST NEWS Lakshmi elephant England Bharat Jodo Yatra இயல்பு வாழ்க்கை பாதிப்பு ஏ.ஆர்.ரஹ்மான் LATEST SECTIONS தமிழ்நாடு இந்தியா தற்போதைய செய்திகள் சினிமா வேலைவாய்ப்பு ADVERTISEMENT Copyright - dinamani.com 2022 The New Indian Express | Samakalika Malayalam | Kannada Prabha | Edexlive | Indulgexpress | Cinemaexpress | Event Xpress
عن أم سلمة هند بنت أبي أمية قالت سمعت رسول الله صلى الله عليه وسلم يقول :ـما من عبد تصيبه مصيبة فيقول : ـإنا لله وإنا إليه راجعون اللهم أجرني في مصيبتي وأخلف لي خيرا منها إلا أجره الله في مصيبته . وأخلف له خيرا منها قالت : فلما توفي أبو سلمة قلت كما أمرني رسول الله صلى الله عليه وسلم فأخلف الله لي خيرا منه رسول الله صلى الله عليه وسلم உயிருக்குயிரான உயிரினும் மேலான சாதிகுல் அமீன் சத்தியத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அன்னை உம்மு ஸலமா அவர்கள் அறிவிக்கிறார்கள் ”எந்த ஒரு அடியானும் அவருக்கு ஒரு சோதனை ஏற்பட்டால் உடன் அவர் கூறட்டடும் இன்னா லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிவூன், பின்பு அல்லாஹும் ஆஜிர்னி பி(F) முசிபத்தி வஃக்லுப்லி ஹைரன் மின்ஹா என்று கூறட்டடும், அவ்வாறு கூறினால் அல்லாஹ் அந்த சோதனையிலிருந்து அவரைக் காப்பான். இன்னும் அவருக்கு சிறந்த பகரத்தை தருவான்.” (நூல் : முஸ்லிம்) பொதுவாக சோதனை என்பது மனித வாழ்விலிருந்து பிரிக்கமுடியாத, பிரிக்கப்படாத ஒன்று. அந்த சோதனைக்கு பின் தான் மனிதன் முடிவு செய்யப்படுகிறான், அதைக்கொண்டு அவன் வளர்ந்திருக்கிறானா? அல்லது தாழ்ந்திருக்கிறானா? இறைவனின் வேதவசனத்தைப்பருங்கள்; “அவன் தான் மரணத்தையும், வாழ்வையும் படைத்தான், உங்களில் யார் செயலால் சிறந்தவர் என்று சோதிப்பதற்க்காக” இதில் இறைவன் வாழ்வையும், மரணத்தையும் மனிதனின் சோதனைக்காவுள்ள ஒன்று என்று கூறுகிறான். சோதனைகள் இல்லை என்றால் மனித வாழ்வு சுவைக்காது. இன்னும் இந்த ஆயத்தின் விளக்கத்தில் நமக்கு வேத வியாக்கியானிகள் தருகிற தகவல்; முதலில் இறைவன் மரணம் என்று பின்பு வாழ்க்கையை படைத்ததாக குறிப்பிடுகிறான். வாழ்க்கை என்பது சோதனைக்கும், மரணம் என்பது அந்த சோதனையில் நாம் எப்படி செயல்பட்டோம் அதனால் என்ன பெறப்போகிறோம் என்பதற்கும். இன்னும் சிலர் மனிதனின் வாழ்விற்கு முன் அவன் கருவில் இருக்கும் போது மரணமும் நிர்ணயிக்கப்பட்டு விட்டது என்பதை உணர்த்தவும், என்று பல செய்திகளை பதிவு செய்கின்றனர். பிறப்பு என்று ஆகிவிட்டால் எது நடக்கிறதோ இல்லையோ இறப்பு என்பது நிச்சயமாக ஆக்கப்பட்டுவிட்டது. இந்த சோதனைகள் தான் மனிதன் இறைவனை நெருங்குவதற்க்கான சாதனமாக உள்ளது. ஆனால் திடீரென மனிதன் சோதனைக்குள்ளக்கப்படும் போது, அவன் அடுத்த கட்டத்திற்கு செல்ல முடியாமல் அப்படியே திகைத்துவிடுகிறான். இறைவன் சில மனிதர்களை உள்ளாக்குகிற சோதனைக்களைக்குறித்து பேசும்போது; “நாம் அவர்களை அழகிய சோதனையாக சோதித்தோம் என்று கூறுகிறான்” அது என்ன சோதனையில் “அழகு” வேறு? இதற்கு முபஸ்ஸிரீன்களின் விளக்கம்; சோதனையில் முடிவு நல்லதாகவே அமையும். மனிதன் என்றால் யார் என்பது குறித்து குர் ஆன் கொடுக்கும் விளக்கம்; நிச்சயமாக மனிதன் அவசரக்காரனாகவே படைக்கப்பட்டிருக்கின்றான். அவனை ஒரு கெடுதி தொட்டுவிட்டால் பதறுகிறான்; ஆனால் அவனை ஒரு நன்மை தொடுமானால் (அது பிறருக்கும் கிடைக்காதவாறு) தடுத்துக்கொள்கிறான். (அல்குர்ஆன் 70:19,20,21) எதாவது ஒன்று அவனுக்கு நடந்து விட்டால் பதற ஆரம்பிக்கிறான். அவன் பணக்காரனாக இருந்தாலும், ஏழையாக இருந்தாலும், சிறுவனும், வயோதிகனும் எல்லாம் இந்த நிலையில் ஒன்றுதான். அது போன்று நன்மைகிடைத்து விட்டால் நம்வாழ்வை விட்டு அவை ஒரு காலமும் பிரியக்கூடாது என்பதில் மிக கவனமாக செயல்படுகிறான். பல வேலை இவன் பயந்த கெடுதிகளே இவனுக்கு நன்மையாகிப்போகிறது, பலவேலை இவன் நன்மை என்று தடுத்து வைத்திருந்தவை இவனுக்கு எதிராகிப்போகிறது. அந்தோ இந்த மனிதனின் அவசரகார நிலை என்னோ! இந்த நேரத்தில் நபிகளாரின் வரலாற்றுப்பக்கங்களிருந்து இது குறித்த சில தகவல்கள். எதாவது கஷ்டம் ஒன்று ஒரு முஃமினுக்கு நிகழ்ந்தால் அவனின் நிலைபாடு எப்படி இருக்கவேண்டும் என்பது குறித்து குர் ஆன் கூறும் வழிமுறை: நிச்சயமாக நாம் உங்களை ஓரளவு அச்சத்தாலும், பசியாலும், பொருள்கள், உயிர்கள், விளைச்சல்கள் ஆகியவற்றின் இழப்பினாலும் சோதிப்போம்; ஆனால் பொறுமையுடையோருக்கு (நபியே!) நீர் நன்மாராயங் கூறுவீராக! (பொறுமை உடையோராகிய) அவர்களுக்குத் துன்பம் ஏற்படும் போது, “நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்” என்று கூறுவார்கள். (அல்குர்ஆன் 2:155) முஃமினுக்கு ஒரு துன்பம் நிகழ்ந்துவிட்டால் உடன் அவர் இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஹுன் என்று சொல்லவேண்டும். ஒரு வீட்டிற்கு விருந்தாளியாக சென்றிருந்தேன், அப்பொழுது அங்கு ஒரு கண்ணாடிப்பாத்திரம் வீட்டுக்காரரின் கையிலிருந்து நழுவி கீழே விழுந்து உடைந்துவிட்டது. உடன் பழக்கதோஷத்தில் நான் இன்னாலில்லாஹி என்று கூறினேன். அவ்வளவு தான் அந்த வீட்டிலிருந்தவர்கள் பதறிவிட்டார்கள். என்ன இப்படி கூறிவிட்டீர்கள்! இது மெளத் வீட்டில் சொல்லப்படுகிற ஒன்று அதை ஏன் இங்கு கூறினீர்கள் என்பது தான் அவர்களின் பதற்றத்திருக்கு காரணம். உடைந்த கண்ணாடி குவளையைவிட உடையாத என் வார்த்தைகள் அவர்களை கீறிவிட்டது என்று தான் சொல்லவேண்டும். இது ஒரு இடத்தில் நடந்த சம்பவம். ஆனால், இது தான் பலரின் மனோநிலை. மெளத் நடந்தால் மட்டுமெ இன்னாலில்லாஹ் என்று கூற வேண்டும் என்று எங்கும் இல்லை. துன்பம் நடந்தால் என்று தான் வந்துள்ளது, அதற்கு அளவுகோல்கள் இல்லை. ஒரு சிறு வருத்தமோ அல்லது ஒரு பெரு வருத்தமோ எது நடந்து விட்டாலும் உடனே இதை குர்ஆன் கூறச்சொல்கிறது. இடுக்கண் வருங்கால் நகுக என்பது நம் தமிழ் வட்டார வழக்கு (குறள்) நமக்கு ஒரு துன்பம் ஏற்பட்டுவிட்டால் சிரிக்கவேண்டும் என்பது தான் இதன் அர்த்தம். உள்ளங்கள் உடைந்து இருக்கும் போது உதடுகளால் மட்டும் எப்படி சிரிக்க முடியும். இது உளவியலுக்கு உவக்காத ஒரு செய்தி. ஆனால், இறைவன் தருகிற மருந்திருக்கிறதே ” நாம் இறைவனுக்கே, அவன் பக்கமே நாம் மீளுவோம்” என்பது கொண்டு தற்கால மனோநிலைக்கும் மருந்து, இதை கூறிய பின் இறைவன் தான் இதை தந்தான் என்ற மனதோடு அடுத்துள்ள நிலைகளை கவனமாக கவனிக்கசென்றுவிடுகிறான். ஏனெனில் இது வெறும் வார்த்தைகளின் வெளிப்பாடு அன்று மாறாக இது ஒரு மனோநிலை வெளிப்பாட்டில் இரகசிய செய்தி. இந்த வசனம் ஸாபிர்கள் என்றால் யார்? என்பதற்கு விளக்கமாக வைக்கப்பட்டுள்ளது. பொதுவாக வழக்கில் இருப்பது போன்று பொறுமையாளர்கள் (ஸாபிர்கள்) என்று சொன்னால் மிக அமைதியானவர். எந்நேரமும் அகிம்சா கொள்ளைகளை மேற்கொண்டிருப்பவர் என்பது தான் நம் பொது சிந்தனை. ஆனால், குர்ஆனிய பாஷையில் போர்களத்தில் நூறு பேரை ஒரு நேரத்தில் வீழ்த்தக்கூடியவருக்கு ஸாபிர் (பொறுமையாளர் என்று பெயர்). இப்பொழுது இந்த வசனத்தை பார்க்கும் போது மிக தெளிவாக விளங்கும், அந்த ஸாபிராக இருக்கிற மனோநிலையப்பெற்றுத்தருவதே இந்த வார்த்தை தான். அன்னை உம்மு ஸலமா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் வாழ்வில் நடந்த உண்மை சம்பவம் இந்த இடத்திற்கு மிகப்பொருத்தமானதாக இருக்கும். ஒரு முறை உம்மு ஸலமாவின் கணவர் அபூ ஸலமா தன் மனைவியிடம் கூறினார். நான் இன்று நபி பெருமானிடமிருந்து ஒரு புதிய செய்தியை கேட்டேன் ஆச்சிரியமாக இருந்தது. எந்த ஒரு அடியானும் ஒரு சோதனையினால் சோதிக்கப்பட்டு அவன் இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் என்று கூறி அதன் பின் அல்லாஹும்ம ஆஜிர்னி ஃபி முசிபத்தி வக்லும்லி ஹைரம் மின்ஹா என்று கூறினால் அல்லாஹ் அவரின் சோதனையிலிருந்து அவருக்கு ஒரு அழகிய வழியைக் காட்டி நல்ல முடிவுகளையும் அதன் பின் தருகிறான். துஆவின் பொருள் : யா அல்லாஹ், என் சோதனையில் எனக்கு நற்கூலியைத்தருவாயாக / என்னை பாதுகாப்பாயாக ! இன்னும் அதனின் சிறந்த பகரத்தை எனக்கு தருவாயாக. இந்த துஆவை நான் கேட்டு மனனம் செய்து கொண்டேன். இந்த துஆவை பயன்படுத்தும் நேரமும் எனக்கு வந்தது. அபூஸலமாவின் இறப்புச்செய்தி என்னை வந்தடைந்தது. அந்த துஆ என் உள்ளத்தில் நிழலாடியது. நான் அந்த துஆ கேட்டுக்கொண்டிருந்தேன். ஆனால் என் மனமோ இவ்வாறு சொல்லிக்கொண்டிருந்தது அபூ ஸலமாவை விட வேறு எந்த ஒரு நல்ல பகரம் உனக்கு எங்கே கிடைக்கப்போகிறது. ஆனால் நான் என் துஆவை விடவில்லை. திடீரென அபூபகர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் என்னை திருமணம் முடித்துக்கொள்வதாக சொல்லி அனுப்பினார்கள். நான் வேண்டாம் என்று மறுப்பு சொல்லி அனுப்பிவிட்டேன். அதன் பின் நபிபெருமான் அவர்கள் என்னை திருமணம் முடித்துக்கொளவதாக சொல்லி அனுப்பினார்கள். நான் அதன் பின் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை திருமணம் முடித்தேன். அபூ ஸலமாவை விட அவர்கள் எந்த விதத்திலும் குறைந்தவர்கள் இல்லை, இன்னும் அவரை விட சிறப்பானவர்களே. நாம் எல்லோருடைய வாழ்விலும் இது போன்ற தருணங்கள் கடந்திருக்கலாம் அல்லது கடக்க இருக்கலாம். அப்படி துன்பமான சூழல்கள் ஏற்படும்போது அழுது புலம்பி உலகமே இருண்டுவிட்டது போன்று வெறுமையான மனோநிலை ஏற்படுத்தாமல். நபி வழியை நம் வழியாக்குவோம். ஆறாதரணங்களை இறைவன் புறம் சாட்டிவிட்டு அற்புதமான அன்பளிப்பை நமதாக்குவோம். சம்பலை தட்டி எழும் பினிக்ஸ் பறவைகளாய் மீண்டும் எழுவோம். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காட்டிய வழியில் நமக்கு வரும் துன்பங்களை வென்றேடுபோமாக. – பேரா. இஸ்மாயில் ஹஸனீ Leave a Reply Cancel reply Your email address will not be published. Required fields are marked * Comment * Name * Email * Website Save my name, email, and website in this browser for the next time I comment. Math Captcha + 6 = 10 Categories Categories Select Category English (319) Convert to Islam (13) Education (14) Essays (85) Family (11) Hadith (8) Haj (5) History (20) India News (20) Muslim World (34) News (9) Politics (4) QnA (19) Quran (3) Ramadhan (15) Science (7) Society (16) World News (36) Multimedia (6) Audio (2) Video (4) Uncategorized (13) இஸ்லாம் (3,761) ஆய்வுக்கட்டுரைகள் (200) இமாம் கஸ்ஸாலி (ரஹ்) (9) இம்மை மறுமை (111) இஸ்லாத்தை தழுவியோர் (90) கட்டுரைகள் (1,708) குர்ஆனும் விஞ்ஞானமும் (30) குர்ஆன் (191) கேள்வி பதில் (201) சொற்பொழிவுகள் (17) ஜகாத் (44) தொழுகை (151) நூல்கள் (40) நோன்பு (136) வரலாறு (380) ஹஜ் (58) ஹதீஸ் (215) ஹஸீனா அம்மா பக்கங்கள் (19) ‘துஆ’க்கள் (43) ‘ஷிர்க்’ – இணை வைப்பு (118) கட்டுரைகள் (3,087) Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd) (154) அப்துர் ரஹ்மான் உமரி (53) அரசியல் (311) உடல் நலம் (449) எச்சரிக்கை! (103) கதைகள் (63) கதையல்ல நிஜம் (108) கல்வி (84) கவிதைகள் (161) குண நலன்கள் (303) சட்டங்கள் (55) சமூக அக்கரை (677) நாட்டு நடப்பு (82) பொது (352) பொருளாதாரம் (27) விஞ்ஞானம் (105) குடும்பம் (1,525) M.A. முஹம்மது அலீ (48) ஆண்-பெண் பாலியல் (83) ஆண்கள் (73) இல்லறம் (486) குழந்தைகள் (183) செய்திகள் (2) பெண்கள் (585) பெற்றோர்-உறவினர் (65) செய்திகள் (328) இந்தியா (142) உலகம் (130) ஒரு வரி (10) கல்வி (32) தமிழ் நாடு (1) முக்கிய நிகழ்வுகள் (13) Archives Archives Select Month July 2022 (1) June 2022 (1) March 2022 (2) February 2022 (2) January 2022 (6) December 2021 (9) November 2021 (14) October 2021 (17) September 2021 (8) May 2021 (2) April 2021 (15) March 2021 (17) February 2021 (17) January 2021 (17) December 2020 (20) November 2020 (17) October 2020 (18) September 2020 (20) August 2020 (31) July 2020 (30) June 2020 (21) May 2020 (27) April 2020 (22) March 2020 (30) February 2020 (19) January 2020 (22) December 2019 (25) November 2019 (14) October 2019 (15) September 2019 (16) August 2019 (18) July 2019 (16) June 2019 (15) May 2019 (12) April 2019 (12) March 2019 (17) February 2019 (17) January 2019 (27) December 2018 (35) November 2018 (18) October 2018 (22) September 2018 (31) August 2018 (27) July 2018 (16) June 2018 (12) May 2018 (14) April 2018 (22) March 2018 (29) February 2018 (30) January 2018 (35) December 2017 (23) November 2017 (30) October 2017 (33) September 2017 (28) August 2017 (30) July 2017 (30) June 2017 (19) May 2017 (34) April 2017 (31) March 2017 (35) February 2017 (36) January 2017 (27) December 2016 (59) November 2016 (48) October 2016 (44) September 2016 (41) August 2016 (27) July 2016 (33) June 2016 (42) May 2016 (52) April 2016 (53) March 2016 (37) February 2016 (42) January 2016 (64) December 2015 (47) November 2015 (40) October 2015 (36) September 2015 (65) August 2015 (56) July 2015 (35) June 2015 (42) May 2015 (58) April 2015 (79) March 2015 (40) February 2015 (29) January 2015 (54) December 2014 (79) November 2014 (66) October 2014 (78) September 2014 (67) August 2014 (62) July 2014 (84) June 2014 (82) May 2014 (100) April 2014 (84) March 2014 (92) February 2014 (80) January 2014 (85) December 2013 (69) November 2013 (91) October 2013 (89) September 2013 (68) August 2013 (76) July 2013 (101) June 2013 (84) May 2013 (94) April 2013 (13) March 2013 (84) February 2013 (64) January 2013 (85) December 2012 (93) November 2012 (106) October 2012 (82) September 2012 (92) June 2012 (50) May 2012 (103) April 2012 (145) March 2012 (103) February 2012 (168) January 2012 (44) December 2011 (125) November 2011 (99) October 2011 (112) September 2011 (90) August 2011 (130) July 2011 (150) June 2011 (86) May 2011 (138) April 2011 (30) March 2011 (148) February 2011 (97) January 2011 (61) December 2010 (103) November 2010 (87) October 2010 (129) September 2010 (145) August 2010 (114) July 2010 (70) June 2010 (130) May 2010 (131) April 2010 (116) March 2010 (134) February 2010 (99) January 2010 (154) December 2009 (136) November 2009 (106) October 2009 (61) September 2009 (66) August 2009 (61) July 2009 (55) June 2009 (53) May 2009 (81) April 2009 (43) March 2009 (70) February 2009 (43) January 2009 (64) December 2008 (29) November 2008 (35) October 2008 (31) September 2008 (63) August 2008 (114)
பெர்னாட் ஷாவின் “வேதாளத்தின் மாணாக்கன்” நாடகம் அமெரிக்காவில் நேர்ந்த 1777 ஆண்டு “சுதந்திரப் போரின்” [American War of Independence] சமயத்தில் நடந்ததாக எழுதப் பட்ட ஒரு கற்பனை நிகழ்ச்சி. பிரிட்டீஷ் காலனி அதிகாரி கைது செய்து தூக்கில் இடப் போன ஒரு சுதந்திரப் போராட்டக் காரனின் ஆள் மாறாட்ட சூழ்ச்சியை மையமாய் வைத்து, அரசியல் ஆவேசம் கொந்தளிக்க எழுதப் பட்டிருக்கிறது. அந்தப் போராட்ட மனிதன் நாட்டுத் துரோகியா இல்லை தியாகியா என்பதை பெர்னாட் ஷா மிக நகைச்சுவையோடு மூன்று அங்கங்களில் காட்டுகிறார். அவன் மெய்யாக வேதாளத்தின் மாணாக்கனா இல்லையா வென்று வாசகரே நாடகத்தைப் படித்தோ, பார்த்தோ முடிவு செய்து கொள்ளட்டும். Peter Dudgeon Execution நாடக மேதை பெர்னாட் ஷா ஜார்ஜ் பெர்னாட் ஷா அயர்லாந்தின் தலைநகர் டப்ளினில் 1856 ஆம் ஆண்டில் ஜார்ஜ் கார் ஷா & லுஸிண்டா எலிஸபெத் ஷா இருவருக்கும் பிறந்தவர். அவரது அன்னை ஆப்ரா (Opera) இசையரங்குப் பாடகி, வாய்க்குரல் பயிற்சியாளி. தந்தையார் தோல்வி யுற்ற வணிகத்துறையாளர். வறுமையிலிருந்து குடும்பத்தை விடுவிக்க முடியாத பெருங் குடிகாரர். இருபது வயதில் பெர்னாட் ஷா அன்னையுடன் லண்டனுக்குச் சென்றார். அங்கே தாயார் இசைத்தொழில் மூலம் ஊதியம் பெற்றுக் குடும்பத்தை நடத்திக் கொண்டு வந்தார். நிரம்ப இலக்கிய நூற் படைப்புகளைப் படித்து வந்த பெர்னாட் ஷா, முதலில் ஐந்து தோல்வியுறும் நாடகங்களை எழுதினார். பிறகு நாடக மேடை உலகில் புகுந்து மற்றவர் நாடகங்களை விமர்சனம் செய்து 1894 இல் “சனிக்கிழமை கருத்திதழில்” (Saturday Review) நாடகங் களைப் பற்றித் திறனாய்வு செய்து வந்தார். அப்போது பொதுவுடைமைக் கோட்பாடில் ஈடுபாடு மிகுந்து பிரதம மேடைப் பேச்சாளாராகவும் உரைமொழி ஆற்றினார். அவர் எழுதிய சிறப்பான நாடகங்கள்: பிக்மாலியன் (Pygmalion), ஜோன் ஆ·ப் ஆர்க் (Saint Joan), மனிதன் & உன்னத மனிதன் (Man & Superman), ஆப்பிள் வண்டி (The Apple Cart), டாக்டரின் தடுமாற்றம் (The Doctor’s Dilemma), மெதுசேலாவுக்கு மீட்சி (Back to Methuselah), மேஜர் பார்பரா (Major Barbara), கோடீஸ்வரி (Millionairess), இன்பியல் நாடகங்கள் (Plays Pleasant), துன்பியல் நாடகங்கள் (Plays Unpleasant), மற்றும் தூயவருக்கு மூன்று நாடகங்கள் (Three Plays for Puritans) வேதாளத்தின் மாணாக்கன் (The Devil’s Disciple), சீஸர் & கிளியோபாத்ரா (Caesar and Cleopatra), காப்டன் பிராஸ்பவுண்டு மாற்றம் (Captain Brassbound’s Conversion), மேலும் நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House), ஆயுத மனிதன் (ஊழ் விதி மனிதன்) (The Man of Destiny) (1898), மிஸிஸ் வார்ரனின் தொழில் (Mrs. Warren’s Profession) (1893) போன்றவை. ஐம்பது ஆங்கில நாடகங்கள் எழுதிய பெர்னாட் ஷாவுக்கு 1925 இல் இலக்கிய நோபெல் பரிசு அளிக்கப்பட்டது. வேதாளத்தின் மாணாக்கன் நாடகத்தைப் பற்றி : 1777 ஆண்டு ஜார்ஜ் வாஷிங்டன் தலைமையில் அமெரிக்க சுதந்திரப் போர் ஆரம்பமான இரண்டாவது வருடம். இங்கிலாந்தின் கோரப் பிடியிலிருந்து அமெரிக்கக் காலனிகள் விடுதலைத் தாகமுற்றுத் தொடர்பிலிருந்து அற்றுக் கொண்டு போகப் போராடிய காலம் அது. இருபுறத்திலும் ஒருவரை ஒருவர் தாக்கிப் புரட்சி உண்டாக்கி உணர்ச்சி வெள்ளம் பெருகிப் பலர் துரோகிகளாய்க் கருதப் பட்டுத் தூக்கு மரத்தில் பிரிட்டீஷ் இராணுவ அதிகாரிகளால் கொல்லப்பட்ட போர்க் காலம் அது . பிரிட்டனின் ஆதிக்கக் குறிக்கோள் அமெரிக்காவில் பிரிட்டீஷ் ஆட்சி அதிகாரத்தை இழந்து விடாமல் மீண்டும் நிலைநிறுத்திக் கொள்வது. அமெரிக்கருக்கு அந்த ஆதிக்க அடிமைப் பிடியிலிருந்து விடுபட்டுச் சுதந்திர நாடாக்கத் தாய் நாட்டுடன் போரிடுவது. அதற்காகச் சிறையிடப்பட்டு தூக்கு மரமேறி உயிரைத் தியாகம் செய்யத் தயாராக இருக்கும் ஒரு சாதாரண அமெரிக்கக் குடிமகனின் அதிர்ச்சி நாடகம் இது. அமெரிக்கத் தெருக்களில், ஊர்களில் எங்கும் இராப் பகலாய்ப் பிரிட்டீஷ் இராணுவக் காவலர் கண்காணித்து வரும் போர்க்காலம் அது. அப்போது இருதரப்பில் இருக்கும் கிறித்துவப் பாதிரியார்களும் ஆயுதங்கள் ஏந்தி தம் இனத்தாருக்கு மறைமுகமாக உதவி செய்து வந்தனர். அத்தகைய துரோகிப் பாதிரியார் ஒருவரைச் [அந்தோணி ஆண்டர்சன்] சிறை செய்ய வந்த பிரிட்டீஷ் இராணுவ அதிகாரிகள் உண்மை முகம் தெரியாமல் அப்பாவிக் கயவன் ஒருவனைக் [ரிச்செர்டு டச்சியான்] கைது செய்து, குற்றம் சாட்டித் தூக்கிலிட உத்தரவு விடுகிறார். தன்னை யாரென்று காட்டிக் கொள்ள விரும்பாத குசும்பன் ரிச்செர்டு பாதிரியாரைக் காப்பாற்றத் தன்னுயிரைத் தியாகம் செய்யவும் தயாராகிறான். இதைத் தனது மனைவி மூலம் அறிந்த பாதிரியார் ஆயுதம் ஏந்தி, பிரிட்டீஷ் இராணுவத்திடம் நிரூபித்து “வேதாள மாணாக்கன்” ரிச்செர்டைத் தூக்கு மேடையிலிருந்து காப்பாற்றுகிறார். அதற்கு பாதிரியாரின் அழகிய மனைவியும் உதவி செய்கிறாள். [தமிழில் எழுதப் பேசும் வசதிக்காக பெர்னாட் ஷாவின் நாடகப் பெயர்கள் சிலவற்றை நான் எளிதாய் மாற்றி இருக்கிறேன்.] ********************** நாடக உறுப்பினர் 1. ரிச்செர்டு டச்சியான் [35 வயது] (Richard Dudgeon) 2. கிரிஸ்டி டச்சியான் [வயது 22], ரிச்சர்டின் சகோதரன் (Christy Dudgeon) 3. கிறித்துவப் பாதிரியார் மேதகு அந்தோணி ஆண்டர்சன் [வயது 50] (Rev. Anthony Anderson) 4. ஜூலியா ஆண்டர்சன் பாதிரியாரின் அழகிய மனைவி [30 வயது] (Wife : Julia Anderson) 5. ஜெனெரல் பர்காயின் [50 வயது] (British General Burgoyne) 6. மேஜர் சுவின்டன் [55 வயது] (Major Swindon) 7. ஸார்ஜன்ட் (Sergeant) 8. வழக்கறிஞர் ஹாக்கின்ஸ் (Lawyer Hawkins) 9. மிஸிஸ். டிமதி டச்சியான் : [வயது 60] [Mrs Timothy Dudgeon : Mother of Richard Dudgeon) 10. சாப்பிளின் புரூட்நெல் (Chaplin Mr Brudenell) 11. சிற்றப்பா வில்லியம் டச்சியான் & மனைவி (Uncle William Dudgeon & Wife) 12. சிற்றப்பா டைட்டஸ் டச்சியான் & மனைவி (Uncle Titus Dudgeon & Wife) 13 இளம் மங்கை : எஸ்தர் [17 வயது] பீட்டர் டச்சியன் மகள். ************************ வேதாளத்தின் மாணாக்கன் அங்கம் -1 பாகம் -2 மூன்று அங்க நாடகம் [முதற் காட்சி] இடம்: அமெரிக்காவில் வெப்ஸ்டர்பிரிட்ஜ் ஊர் சுற்றுப்புறம் , நியூ ஹாம்ஷயர். [Websterbridge, New Hamshire, U.S.A..] நடந்த ஆண்டு : 1777 (கலவரம் நிறைந்த அமெரிக்க சுதந்திரப் போராட்டக் காலம்) பொழுது : ஒரு நாள் இலையுதிர் காலத்து இருண்ட மாலை நேரம். ஆறு மணி இருக்கலாம். அரங்க அமைப்பு: ஓர் எளிய குடியானவரின் பழைய வீடு. வயதான மூதாட்டி மிஸிஸ் டச்சியான் சமையல் அறையில் நாற்காலில் அமர்ந்து சாய்ந்துள்ளார். இரவு பூராவும் விழித்திருந்ததால் அவள் தளர்ச்சி அடைந்துள்ளது முகத்தில் தெரிகிறது. பிரிஸ்பிட்டீரியன் கிறித்து ஆலயத்துக்கு ஞாயிறு தோறும் தவறாது செல்லும் மத நேய அபிமானி அவள். சோபா, நாற்காலி, மேஜை யாவும் அழுக்கடைந்து உள்ளன. அடுத்து அந்த அறையில் 16 அல்லது 17 வயதிருக்கும் ஓரிள மங்கை படுத்திருக்கிறாள். பயந்த சுபாவப் பெண். கருத்த கூந்தல், பழுப்பு நிறத்தவள். அப்போது யாரோ கதவைத் தட்டும் சத்தம் கேட்கிறது. மூன்றாவது தட்டலில் முதிய வயது மாது விழித்தெழுகிறாள். கதவைத் திறந்ததும் முதிய மாதின் சின்ன மகன் கிரிஸ்டி நுழைந்து தன் தந்தை மரித்ததை அறிவிக்கிறான். அந்த அதிர்ச்சியை மிகையாக்க அவனைத் தொடர்ந்து சில நிமிடங்களில் கிறித்துவப் பாதிரி அந்தோனி ஆண்டர்சன் வருகிறார். +++++++++++++++++ நாடக முதற்காட்சி கிரிஸ்டி: ஆமாம் அம்மா ! ஆனால் அது என் தவறல்ல. நாங்கள் நெவின்ஸ்டவுன் [Nevinstown] சென்ற போது, தந்தை நோய்வாய்ப் பட்டு படுக்கையில் கிடந்ததைப் பார்த்தோம். முதலில் அவருக்கு எங்களைத் தெரிய வில்லை. பாதிரியார் அவர் பக்கத்தில் அமர்ந்து, என்னை அனுப்பி விட்டார். அன்றிரவு அவர் காலமானார் அம்மா ! முதிய மாது : [ஆவேசமாய் வெடித்துக் கண்ணீருடன்] என்னால் இதைத் தாங்கிக் கொள்ள முடியாது. என் மேல் பாரம் கனத்து விழுந்து விட்டது. உன் தந்தையின் சகோதரன் பீட்டர் வாழ்க்கை பூராவும் நமக்கு அவமானம் உண்டாக்கினான். புரட்சிக்காரன் போல் நடுத் தெருவில் பொதுத் தூக்குக் கம்பத்தில் தூக்கில் இடப் பட்டான். உன் தந்தை வீட்டுக்குள் முடங்கிக் குடும்பத்துக்கு ஆதரவாய் இருக்காமல், பீட்டர் பின்னால் சென்று மரித்தார். இப்போது பொறுப்பு யாவும் என் முதுகில் ஏறிவிட்டது. அத்தோடு பீட்டரின் மகள் இந்த இளங் குமரியையும் யாருமின்றி என் வீட்டுக்குள் வந்து கிடக்கிறாள். அது மாபெரும் பாபம். அடிப்படைப் பாபச் செயல் ! கிரிஸ்டி: இருந்தாலும் அம்மா ! இன்றைய காலைப் பொழுது இனிதாக இருக்கப் போகிறது. மிஸிஸ் டிமதி டச்சியான்: யாருக்கு இனிதாக இருக்கப் போகுது ? உனக்கா, எனக்கா, ஊர் உலகுக்கா ? உன் தந்தை மரித்திருக்கிறார் ! இனிய காலை என்று உளறுகிறாயே ! உன் பந்தம், பரிவு, பாசம் எல்லாம் எங்கே போச்சு சின்ன மகனே ! கிரிஸ்டி: நான் உனக்கு ஒன்றும் தொல்லை தர இங்கு வரவில்லை. எனது தந்தையார் இறந்தாலும் நல்ல நாள் இது என்று சொல்வதில் தவறில்லை அம்மா ! மிஸிஸ் டச்சியான்: [வெறுப்புடன்] அட கடவுளே ! என் இரண்டு பிள்ளைகளும் இப்படிப் பிறக்க வேண்டுமா ? ஒரு மகன் மூடன் ! அடுத்த மகன் ஒரு பாபி ! முன்கோபி ! தெருச் சுற்றி ! வீட்டுக்கு வருவதே இல்லை! வெளியே மூர்க்கர், முரடர், கயவர், ஊதாரிப் பயல்களோடு சூதாடி வருபவன் ! இவனெல்லாம் அமெரிக்காவுக்கு விடுதலை வாங்கப் போகிறான் ! இந்த அயோக்கன் பீட்டர் பின்னால் சுற்றுகிறான் ! [யாரே கதவைத் தட்டும் அரவம் கேட்கிறது.] கிரிஸ்டி: [இடத்தை விட்டு நகலாது] அது நமது கிறித்துவக் கோயில் பாதிரியாராக இருக்கும் ! மிஸிஸ் டச்சியான்: [சட்டென] மரம் போல நிற்கிறாயே ! போய்க் கதவைத் திற ! மிஸ்டர் ஆண்டர்சன் உள்ளே வரட்டும் ! [மிஸிஸ் டச்சியான் முகத்தை மூடிக் கவலையுடன் திரும்பியுள்ளார். கிரிஸ்டி கதவைத் திறந்ததும் பிரிஸ்பிட்டீரிய ஆலயப் பாதிரி அந்தோனி ஆண்டர்சன் உள்ளே நிமிர்ந்த நடையில் மெதுவாக நுழைகிறார். வயது 50 இருக்கலாம். உறுதியான உடலும், உடல் நலமும், உத்தியோக மிடுக்கும் தெரிகிறது.] ஆண்டர்சன்: [உள் நுழையும் போது கவலையுடன் இருக்கும் முதிய மாதைப் பார்த்து, கிரிஸ்டியிடம்] உன் அம்மாவிடம் அதைச் சொல்லி விட்டாயா ? கிரிஸ்டி: அம்மாவே என்னைச் சொல்ல வைத்து விட்டாள் ! ஆண்டர்சன்: [மேல் கோட்டைக் கழற்றி ஆணியில் தொங்க விட்டு நேராக மிஸிஸ். டச்சியானைப் பார்க்க வருகிறார்] சகோதரி ! கடவுள் உன் மீது பெரும் பாரத்தை மிகையாக வைத்து விட்டார். மிஸிஸ் டச்சியான்: அது அவன் விருப்பம். விதி என்று தெரியுது எனக்கு. நான் அதற்குக் கீழ்ப்படிய வேண்டும். ஆனாலும் அவன் வைக்கும் பளு எனக்கு அதிகமே. என் கணவர் டிமதி ஏன் ஸ்பிரிங்டவுன் [Springtown] போய், தூக்கில் தொங்கப் போகும் ஒருத்தனுக்குத் தானவன் சொந்தக்காரன் என எல்லாருக்கும் சொல்ல வேண்டும் ? தவறு செய்த அந்த பீட்டருக்கு அந்தக் கொலை தண்டனை ஏற்றதே ! ஆண்டர்சன்: பீட்டரும், டிமதியும் சகோதரர் இல்லையா மிஸிஸ் டச்சியான் ? மிஸிஸ் டச்சியான்: பீட்டரைத் தன் தனயனாக என் கணவர் ஒரு போது கருதியதில்லை, எங்கள் திருமணத்துக்குப் பிறகு ! அவனைச் சகோதரன் என்று காட்டி என்னை அவமானப் படுத்த என் கணவர் விரும்ப வில்லை. இப்படி 30 மைல் சென்று பீட்டர் பார்ப்பானா என் கணவர் தூக்கில் தொங்கு வதற்கு முன்பாக ! 300 அடி கூட நடந்து வரமாட்டான் ! நான்தான் எனது சிலுவையை எத்தனை எளிதாய்ச் சுமக்க வேண்டுமோ அவ்விதம் தூக்கிக் கொள்ள வேண்டும். ஆண்டர்சன்: [வருத்தமுடன்] பீட்டரைத் தூக்கிலிடும் போது உன் மூத்த மகனும் இருந்தான் அந்தக் காட்சியைக் காணக் கூட்டத்திலே, மிஸிஸ் டச்சியான் ! மிஸிஸ் டச்சியான்: [மிக்க வியப்புடன்] என்ன என் மகன் ரிச்செர்டா ? ஆண்டர்சன்: ஆமாம் சகோதரி ! மிஸிஸ் டச்சியான்: [ஆத்திரமோடு] என் மகனுக்கு அது ஓர் எச்சரிக்கையாய் இருக்கட்டும் ! அவனொரு கயவன், காட்டான், கடவுளை நம்பாதவன் ! அவனும் ஒரு நாள் அப்படித் தூக்கில் தொங்கப் போகிறான், பாருங்கள் ! ஆண்டர்சன்: அப்படி அவனைச் சபிக்க வேண்டாம் சகோதரி ! மிஸிஸ் டச்சயான்: என் கணவர் டிமதி ரிச்செர்டைப் பார்த்தாரா ? ஆண்டர்சன்: ஆமாம் சகோதரி ! பீட்டர் தூக்கு மரத்தில் தொங்கவிடப் பட்ட அந்த கோரக் காட்சியை டிமதியும், ரிச்சர்டும் பார்த்தனர் ! [தொடரும்] *************** தகவல் : Based on The Play : The Devil’s Disciple By : George Bernard Shaw, – 1. Penguin Plays : The Devil’s Disciple in Three Plays for Puritans (1958) 2. http://www2.hn.psu.edu/faculty/jmanis/gbshaw/devil-disciple.pdf [77 Pages] (Complete English Drama of The Devil’s Disciple) 3. http://en.wikipedia.org/wiki/The_Devil’s_Disciple [December 14, 2013] (a) The Portable Bernard Shaw By : Stanley Weintraub (1977) (b) Writers & Critics – Shaw By A. M. Gibbs (1969) (c) The Oxford Dictionary of Quotations (New Edition) (1992) (d) The Wicked Wit of Oscar Wilde (1997) (g) The Great Quotations Compiled By : George Seldes (1967) (h) BBC DVD Classics “The Devil’s Disciple” – Bernard Shaw’s (120 minutes) (1987) (i) A Guide to the Plays of Bernard Shaw By : C.B. Purdom (1964) (j) Major Critical Essays By : Bernard Shaw Penguin Classics (1986) (k) http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=kjvJ7dRjJbs [You Tube : The Devil’s Disciple Drama] ******************** S. Jayabarathan [jayabarat@tnt21.com] (January 18, 2013) http://jayabarathan.wordpress.com/ Series Navigation திண்ணை ஆசிரியர் அவர்களுக்குவால்ட் விட்மன் வசன கவிதை – 7 அமெரிக்கா பாடுவதைக் கேட்கிறேன் (I Hear America Singing) 20 ஜனவரி 2013 பேராசிரியர் எம். எ. எம். நுஃமான் விளக்கு விருது பெறுகிறார் தொல்காப்பிய அகம் புறம் சார்ந்த இணையப் பதிவுகள்- ஒரு மதிப்பீடு ‘நான் ரசித்த முன்னுரைகளிலிருந்து……….13 கி. ராஜநாராயணன்- ‘கரிசல் காட்டுக் கடுதாசி’ பேசாமொழி – வீடு சிறப்பிதழ்.. நத்தம்போல் கேடும் உளதாகுஞ் சாக்காடும். . . பிசாவும் தலாஷ் 2டும் மணலும் (வாலிகையும்) நுரையும் – கலீல் ஜிப்ரான் – 8 எலி ஒரு ஆன்மாவின் அழுகுரல்.. சரித்திர நாவல் “போதி மரம்” பாகம் 1- யசோதரா அத்தியாயம் 4 பொம்மலாட்டம் கிளைகளின் கதை ஜோதிர்லதா கிரிஜாவின் நந்தவனத்து நறுமலர்கள் – 1 என் அருமைச் சகோதரியே ரிசானா..! தமிழ்த் திரைப் பாலைவனத்தில் துளிர்த்த ஒரு தளிர் – பாலு மகேந்திராவின் ’வீடு’ நூல்கள் வெளியீட்டு விழா திருப்பூர் அரிமா விருதுகள் 2013 கலித்தொகையில் தொழில்களும் தொழிலாளரும் அசர வைக்காத பொய் மெய் – மேடை நாடகம் புதிய நூல் வெளியீடு: நாயகன் பாரதி மகாகவி பாரதியார் வாழ்க்கைச் சம்பவங்கள் சிறுகதைகளாக இரு கவரிமான்கள் – 6 வாசித்த சில.. புத்தகங்கள்…மலர்மன்னன், Padma Seshadr & Padma Malini , மாலன், டாக்டர் தி.சே.சௌ.ராஜன் அக்னிப்பிரவேசம்-19 திண்ணை ஆசிரியர் அவர்களுக்கு வேதாளத்தின் மாணாக்கன் (The Devil’s Disciple) அங்கம் -1 பாகம் -2 வால்ட் விட்மன் வசன கவிதை – 7 அமெரிக்கா பாடுவதைக் கேட்கிறேன் (I Hear America Singing) தாகூரின் கீதப் பாமாலை – 49 பிரிவுத் துயர் சொல்லித் தீராத சங்கிலி பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் : ஈர்ப்பு விசை என்பது ஒருவித மாயையாய் இருக்கலாம் ! சாரல் விருது TOPICS Previous:திண்ணை ஆசிரியர் அவர்களுக்கு Next: தாகூரின் கீதப் பாமாலை – 49 பிரிவுத் துயர் Leave a Reply Cancel reply Name * Email * Website Save my name, email, and website in this browser for the next time I comment. திண்ணை பற்றி திண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை உங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள். ஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம். பழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.com இல் உள்ளன. தேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள் சமஸ்கிருதம் தொடர் முழுவதும் இந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif ட்விட்டரில் பின் தொடர இதழ்கள் Select Series 1 அக்டோபர் 2017 (10) 1 ஆகஸ்ட் 2021 (15) 1 ஏப்ரல் 2012 (40) 1 ஏப்ரல் 2018 (22) 1 செப்டம்பர் 2013 (15) 1 செப்டம்பர் 2019 (5) 1 ஜனவரி 2012 (42) 1 ஜூன் 2014 (26) 1 ஜூலை 2012 (32) 1 ஜூலை 2018 (9) 1 டிசம்பர் 2013 (29) 1 டிசம்பர் 2019 (4) 1 நவம்பர் 2015 (24) 1 நவம்பர் 2020 (19) 1 பெப்ருவரி 2015 (17) 1 மார்ச் 2015 (15) 1 மார்ச் 2020 (8) 1 மே 2022 (9) 10 அக்டோபர் 2021 (13) 10 ஆகஸ்ட் 2014 (23) 10 ஏப்ரல் 2016 (17) 10 ஏப்ரல் 2022 (19) 10 செப்டம்பர் 2017 (12) 10 ஜனவரி 2016 (12) 10 ஜனவரி 2021 (13) 10 ஜூன் 2012 (41) 10 ஜூன் 2018 (8) 10 ஜூலை 2011 (38) 10 ஜூலை 2016 (21) 10 ஜூலை 2022 (9) 10 டிசம்பர் 2017 (13) 10 நவம்பர் 2013 (34) 10 நவம்பர் 2019 (10) 10 பெப்ருவரி 2013 (31) 10 பெப்ருவரி 2019 (8) 10 மார்ச் 2013 (28) 10 மார்ச் 2019 (9) 10 மே 2015 (26) 10 மே 2020 (11) 11 அக்டோபர் 2015 (23) 11 அக்டோபர் 2020 (17) 11 ஆகஸ்ட் 2013 (30) 11 ஏப்ரல் 2021 (13) 11 செப்டம்பர் 2011 (33) 11 செப்டம்பர் 2016 (12) 11 செப்டம்பர் 2022 (13) 11 ஜனவரி 2015 (31) 11 ஜூன் 2017 (11) 11 ஜூலை 2021 (18) 11 டிசம்பர் 2011 (48) 11 டிசம்பர் 2016 (17) 11 நவம்பர் 2012 (33) 11 நவம்பர் 2018 (6) 11 பெப்ருவரி 2018 (20) 11 மார்ச் 2012 (35) 11 மார்ச் 2018 (10) 12 அக்டோபர் 2014 (23) 12 ஆகஸ்ட் 2012 (36) 12 ஆகஸ்ட் 2018 (7) 12 ஏப்ரல் 2015 (28) 12 ஏப்ரல் 2020 (10) 12 செப்டம்பர் 2021 (12) 12 ஜனவரி 2014 (29) 12 ஜனவரி 2020 (11) 12 ஜூன் 2011 (33) 12 ஜூன் 2016 (17) 12 ஜூன் 2022 (14) 12 ஜூலை 2015 (17) 12 ஜூலை 2020 (11) 12 டிசம்பர் 2021 (17) 12 நவம்பர் 2017 (11) 12 பிப்ரவரி 2012 (40) 12 பெப்ருவரி 2017 (18) 12 மார்ச் 2017 (12) 12 மே 2013 (29) 12 மே 2014 (33) 12 மே 2019 (12) 13 அக்டோபர் 2013 (31) 13 அக்டோபர் 2019 (4) 13 ஆகஸ்ட் 2017 (10) 13 ஏப்ரல் 2014 (19) 13 செப்டம்பர் 2015 (24) 13 செப்டம்பர் 2020 (11) 13 ஜனவரி 2013 (32) 13 ஜனவரி 2019 (4) 13 ஜூன் 2021 (13) 13 ஜூலை 2014 (26) 13 டிசம்பர் 2015 (14) 13 டிசம்பர் 2020 (15) 13 நவம்பர் 2011 (41) 13 நவம்பர் 2016 (17) 13 நவம்பர் 2022 (14) 13 பெப்ருவரி 2022 (12) 13 மார்ச் 2016 (12) 13 மார்ச் 2022 (15) 13 மே 2012 (41) 13 மே 2018 (13) 14 அக்டோபர் 2012 (23) 14 அக்டோபர் 2018 (10) 14 ஆகஸ்ட் 2011 (43) 14 ஆகஸ்ட் 2016 (14) 14 ஆகஸ்ட் 2022 (11) 14 ஏப்ரல் 2013 (33) 14 ஏப்ரல் 2019 (7) 14 செப்டம்பர் 2014 (25) 14 ஜனவரி 2018 (15) 14 ஜூன் 2015 (23) 14 ஜூன் 2020 (7) 14 ஜூலை 2013 (18) 14 ஜூலை 2019 (6) 14 டிசம்பர் 2014 (23) 14 நவம்பர் 2021 (13) 14 பெப்ருவரி 2016 (18) 14 பெப்ருவரி 2021 (13) 14 மார்ச் 2021 (7) 14 மே 2017 (11) 15 அக்டோபர் 2017 (11) 15 ஆகஸ்ட் 2021 (13) 15 ஏப்ரல் 2012 (44) 15 ஏப்ரல் 2018 (19) 15 செப்டம்பர் 2013 (22) 15 செப்டம்பர் 2019 (10) 15 ஜனவரி 2012 (30) 15 ஜனவரி 2017 (14) 15 ஜூன் 2014 (21) 15 ஜூலை 2012 (32) 15 ஜூலை 2018 (8) 15 டிசம்பர் 2013 (32) 15 டிசம்பர் 2019 (8) 15 நவம்பர் 2015 (18) 15 நவம்பர் 2020 (14) 15 பெப்ருவரி 2015 (23) 15 மார்ச் 2015 (25) 15 மார்ச் 2020 (12) 15 மே 2011 (48) 15 மே 2016 (11) 15 மே 2022 (12) 16 அக்டோபர் 2011 (44) 16 அக்டோபர் 2016 (21) 16 அக்டோபர் 2022 (7) 16 ஆகஸ்ட் 2015 (16) 16 ஆகஸ்ட் 2020 (14) 16 ஏப்ரல் 2017 (11) 16 செப்டம்பர் 2012 (31) 16 செப்டம்பர் 2018 (9) 16 ஜனவரி 2022 (9) 16 ஜூன் 2013 (23) 16 ஜூன் 2019 (9) 16 ஜூலை 2017 (12) 16 டிசம்பர் 2012 (31) 16 டிசம்பர் 2018 (5) 16 நவம்பர் 2014 (22) 16 பெப்ருவரி 2014 (20) 16 பெப்ருவரி 2020 (6) 16 மார்ச் 2014 (23) 16 மே 2021 (15) 17 அக்டோபர் 2021 (15) 17 ஆகஸ்ட் 2014 (26) 17 ஏப்ரல் 2016 (10) 17 ஏப்ரல் 2022 (16) 17 செப்டம்பர் 2017 (10) 17 ஜனவரி 2016 (16) 17 ஜனவரி 2021 (12) 17 ஜூன் 2012 (43) 17 ஜூன் 2018 (7) 17 ஜூலை 2011 (34) 17 ஜூலை 2022 (7) 17 டிசம்பர் 2017 (20) 17 நவம்பர் 2013 (28) 17 நவம்பர் 2019 (7) 17 பிப்ரவரி 2013 (30) 17 பெப்ருவரி 2019 (7) 17 மார்ச் 2013 (26) 17 மார்ச் 2019 (10) 17 மே 2015 (25) 17 மே 2020 (8) 18 அக்டோபர் 2015 (18) 18 அக்டோபர் 2020 (14) 18 ஆகஸ்ட் 2013 (30) 18 ஆகஸ்ட் 2019 (11) 18 ஏப்ரல் 2021 (9) 18 செப்டம்பர் 2011 (37) 18 செப்டம்பர் 2016 (17) 18 செப்டம்பர் 2022 (7) 18 ஜனவரி 2015 (23) 18 ஜூன் 2017 (14) 18 ஜூலை 2021 (22) 18 டிசம்பர் 2011 (39) 18 டிசம்பர் 2016 (13) 18 நவம்பர் 2012 (28) 18 நவம்பர் 2018 (4) 18 பெப்ருவரி 2018 (14) 18 மார்ச் 2012 (36) 18 மார்ச் 2018 (15) 18 மே 2014 (22) 19 அக்டோபர் 2014 (21) 19 ஆகஸ்ட் 2012 (39) 19 ஆகஸ்ட் 2018 (6) 19 ஏப்ரல் 2015 (19) 19 ஏப்ரல் 2020 (22) 19 செப்டம்பர் 2021 (19) 19 ஜனவரி 2014 (27) 19 ஜனவரி 2020 (6) 19 ஜூன் 2011 (46) 19 ஜூன் 2022 (8) 19 ஜூலை 2015 (29) 19 ஜூலை 2020 (20) 19 டிசம்பர் 2021 (18) 19 நவம்பர் 2017 (14) 19 பிப்ரவரி 2012 (31) 19 பெப்ருவரி 2017 (9) 19 மார்ச் 2017 (17) 19 மே 2013 (33) 19 மே 2019 (14) 2 அக்டோபர் 2011 (45) 2 அக்டோபர் 2016 (19) 2 அக்டோபர் 2022 (9) 2 ஆகஸ்ட் 2015 (25) 2 ஆகஸ்ட் 2020 (21) 2 ஏப்ரல் 2017 (13) 2 செப்டம்பர் 2012 (37) 2 செப்டம்பர் 2018 (6) 2 ஜனவரி 2022 (17) 2 ஜூன் 2013 (21) 2 ஜூன் 2019 (9) 2 ஜூலை 2017 (18) 2 டிசம்பர் 2012 (31) 2 டிசம்பர் 2018 (9) 2 நவம்பர் 2014 (19) 2 பெப்ருவரி 2014 (22) 2 பெப்ருவரி 2020 (20) 2 மார்ச் 2014 (22) 2 மே 2021 (17) 20 அக்டோபர் 2013 (31) 20 அக்டோபர் 2019 (6) 20 ஆகஸ்ட் 2017 (13) 20 ஏப்ரல் 2014 (25) 20 செப்டம்பர் 2015 (16) 20 செப்டம்பர் 2020 (16) 20 ஜனவரி 2013 (30) 20 ஜனவரி 2019 (10) 20 ஜூன் 2016 (13) 20 ஜூன் 2021 (11) 20 ஜூலை 2014 (20) 20 டிசம்பர் 2015 (23) 20 டிசம்பர் 2020 (9) 20 நவம்பர் 2011 (38) 20 நவம்பர் 2016 (19) 20 நவம்பர் 2022 (14) 20 பெப்ருவரி 2022 (7) 20 மார்ச் 2016 (14) 20 மார்ச் 2022 (10) 20 மே 2012 (29) 20 மே 2018 (13) 21 அக்டோபர் 2012 (21) 21 அக்டோபர் 2018 (7) 21 ஆகஸ்ட் 2011 (47) 21 ஆகஸ்ட் 2016 (14) 21 ஆகஸ்ட் 2022 (11) 21 ஏப்ரல் 2019 (8) 21 செப்டம்பர் 2014 (27) 21 ஜனவரி 2018 (10) 21 ஜூன் 2015 (23) 21 ஜூன் 2020 (18) 21 ஜூலை 2013 (20) 21 ஜூலை 2019 (8) 21 டிசம்பர் 2014 (23) 21 நவம்பர் 2021 (11) 21 பெப்ருவரி 2016 (16) 21 பெப்ருவரி 2021 (13) 21 மார்ச் 2021 (7) 21 மே 2017 (15) 22 அக்டோபர் 2017 (5) 22 ஆகஸ்ட் 2021 (17) 22 ஏப்ரல் 2012 (44) 22 ஏப்ரல் 2018 (22) 22 செப்டம்பர் 2013 (26) 22 செப்டம்பர் 2019 (8) 22 ஜனவரி 2012 (30) 22 ஜனவரி 2017 (13) 22 ஜூன் 2014 (23) 22 ஜூலை 2012 (37) 22 ஜூலை 2018 (9) 22 டிசம்பர் 2013 (24) 22 டிசம்பர் 2019 (5) 22 நவம்பர் 2015 (16) 22 நவம்பர் 2020 (10) 22 பெப்ருவரி 2015 (26) 22 மார்ச் 2015 (28) 22 மார்ச் 2020 (13) 22 மே 2011 (42) 22 மே 2016 (12) 22 மே 2022 (10) 23 அக்டோபர் 2011 (37) 23 அக்டோபர் 2016 (15) 23 அக்டோபர் 2022 (17) 23 ஆகஸ்ட் 2015 (26) 23 ஆகஸ்ட் 2020 (18) 23 ஏப்ரல் 2017 (18) 23 செப்டம்பர் 2012 (41) 23 செப்டம்பர் 2018 (9) 23 ஜனவரி 2022 (17) 23 ஜூன் 2013 (29) 23 ஜூன் 2019 (4) 23 ஜூலை 2017 (15) 23 டிசம்பர் 2012 (27) 23 டிசம்பர் 2018 (6) 23 நவம்பர் 2014 (21) 23 பெப்ருவரி 2014 (20) 23 பெப்ருவரி 2020 (7) 23 மார்ச் 2014 (23) 23 மே 2021 (20) 24 அக்டோபர் 2021 (16) 24 ஆகஸ்ட் 2014 (30) 24 ஏப்ரல் 2016 (16) 24 ஏப்ரல் 2022 (13) 24 செப்டம்பர் 2017 (13) 24 ஜனவரி 2016 (22) 24 ஜனவரி 2021 (14) 24 ஜூன் 2012 (43) 24 ஜூன் 2018 (8) 24 ஜூலை 2011 (32) 24 ஜூலை 2016 (23) 24 ஜூலை 2022 (12) 24 டிசம்பர் 2017 (10) 24 நவம்பர் 2013 (24) 24 நவம்பர் 2019 (7) 24 பிப்ரவரி 2013 (26) 24 பெப்ருவரி 2019 (9) 24 மார்ச் 2013 (29) 24 மார்ச் 2019 (8) 24 மே 2015 (19) 24 மே 2020 (12) 25 அக்டோபர் 2015 (24) 25 அக்டோபர் 2020 (13) 25 ஆகஸ்ட் 2013 (25) 25 ஆகஸ்ட் 2019 (4) 25 செப்டம்பர் 2011 (41) 25 செப்டம்பர் 2016 (15) 25 செப்டம்பர் 2022 (14) 25 ஜனவரி 2015 (19) 25 ஜூன் 2017 (13) 25 ஜூலை 2021 (11) 25 டிசம்பர் 2011 (29) 25 டிசம்பர் 2016 (11) 25 நவம்பர் 2012 (42) 25 பெப்ருவரி 2018 (20) 25 மார்ச் 2012 (42) 25 மார்ச் 2018 (13) 25 மே 2014 (29) 26 அக்டோபர் 2014 (16) 26 ஆகஸ்ட் 2012 (28) 26 ஆகஸ்ட் 2018 (7) 26 ஏப்ரல் 2015 (26) 26 ஏப்ரல் 2020 (14) 26 செப்டம்பர் 2021 (10) 26 ஜனவரி 2014 (18) 26 ஜனவரி 2020 (11) 26 ஜூன் 2011 (46) 26 ஜூன் 2022 (7) 26 ஜூலை 2015 (20) 26 ஜூலை 2020 (23) 26 டிசம்பர் 2021 (6) 26 நவம்பர் 2017 (11) 26 பிப்ரவரி 2012 (45) 26 பெப்ருவரி 2017 (14) 26 மார்ச் 2017 (14) 26 மே 2013 (40) 26 மே 2019 (7) 27 அக்டோபர் 2013 (26) 27 அக்டோபர் 2019 (9) 27 ஆகஸ்ட் 2017 (9) 27 ஏப்ரல் 2014 (25) 27 செப்டம்பர் 2015 (22) 27 செப்டம்பர் 2020 (17) 27 ஜனவரி 2013 (28) 27 ஜனவரி 2019 (5) 27 ஜூன் 2016 (21) 27 ஜூன் 2021 (10) 27 ஜூலை 2014 (28) 27 டிசம்பர் 2015 (18) 27 டிசம்பர் 2020 (12) 27 நவம்பர் 2011 (37) 27 நவம்பர் 2016 (23) 27 நவம்பர் 2022 (17) 27 பெப்ருவரி 2022 (11) 27 மார்ச் 2022 (14) 27 மே 2012 (33) 27 மே 2018 (15) 27-மார்ச்-2016 (10) 28 அக்டோபர் 2018 (7) 28 ஆகஸ்ட் 2011 (46) 28 ஆகஸ்ட் 2016 (16) 28 ஆகஸ்ட் 2022 (8) 28 ஏப்ரல் 2013 (29) 28 ஏப்ரல் 2019 (10) 28 செப்டம்பர் 2014 (25) 28 ஜனவரி 2018 (13) 28 ஜூன் 2015 (19) 28 ஜூன் 2020 (14) 28 ஜூலை 2013 (30) 28 டிசம்பர் 2014 (22) 28 நவம்பர் 2021 (14) 28 பெப்ருவரி 2016 (13) 28 பெப்ருவரி 2021 (12) 28 மார்ச் 2021 (8) 28 மே 2017 (19) 28அக்டோபர் 2012 (34) 29 அக்டோபர் 2017 (9) 29 ஆகஸ்ட் 2021 (18) 29 ஏப்ரல் 2012 (28) 29 ஏப்ரல் 2018 (14) 29 செப்டம்பர் 2013 (27) 29 செப்டம்பர் 2019 (8) 29 ஜனவரி 2012 (42) 29 ஜனவரி 2017 (12) 29 ஜூன் 2014 (23) 29 ஜூலை 2012 (35) 29 ஜூலை 2018 (10) 29 டிசம்பர் 2013 (26) 29 டிசம்பர் 2019 (10) 29 நவம்பர் 2015 (15) 29 நவம்பர் 2020 (8) 29 மார்ச் 2015 (32) 29 மார்ச் 2020 (13) 29 மே 2011 (43) 29 மே 2016 (14) 29 மே 2022 (13) 3 அக்டோபர் 2021 (19) 3 ஆகஸ்ட் 2014 (25) 3 ஏப்ரல் 2016 (16) 3 ஏப்ரல் 2022 (10) 3 செப்டம்பர் 2017 (10) 3 ஜனவரி 2016 (18) 3 ஜனவரி 2021 (11) 3 ஜூன் 2012 (28) 3 ஜூன் 2018 (15) 3 ஜூலை 2011 (51) 3 ஜூலை 2022 (14) 3 டிசம்பர் 2017 (11) 3 நவம்பர் 2013 (29) 3 நவம்பர் 2019 (7) 3 பிப்ரவரி 2013 (32) 3 பெப்ருவரி 2019 (9) 3 மார்ச் 2013 (33) 3 மார்ச் 2018 (12) 3 மார்ச் 2019 (8) 3 மே 2015 (25) 3 மே 2020 (13) 30 அக்டோபர் 2011 (44) 30 அக்டோபர் 2016 (19) 30 அக்டோபர் 2022 (13) 30 ஆகஸ்ட் 2015 (13) 30 ஆகஸ்ட் 2020 (9) 30 ஏப்ரல் 2017 (14) 30 செப்டம்பர் 2012 (36) 30 செப்டம்பர் 2018 (8) 30 ஜனவரி 2022 (19) 30 ஜூன் 2013 (27) 30 ஜூன் 2019 (8) 30 ஜூலை 2017 (6) 30 டிசம்பர் 2012 (26) 30 டிசம்பர் 2018 (6) 30 நவம்பர் 2014 (23) 30 மார்ச் 2014 (22) 30 மே 2021 (19) 31 அக்டோபர் 2021 (18) 31 ஆகஸ்ட் 2014 (24) 31 ஜனவரி 2016 (19) 31 ஜனவரி 2021 (16) 31 ஜூலை 2011 (47) 31 ஜூலை 2016 (12) 31 ஜூலை 2022 (8) 31 டிசம்பர் 2017 (19) 31 மார்ச் 2013 (31) 31 மார்ச் 2019 (7) 31 மே 2015 (21) 31 மே 2020 (9) 4 அக்டோபர் 2015 (23) 4 அக்டோபர் 2020 (12) 4 ஆகஸ்ட் 2013 (27) 4 ஆகஸ்ட் 2019 (12) 4 செப்டம்பர் 2011 (54) 4 செப்டம்பர் 2016 (20) 4 செப்டம்பர் 2022 (14) 4 ஜனவரி 2015 (33) 4 ஜூன் 2017 (11) 4 ஜூலை 2016 (12) 4 ஜூலை 2021 (11) 4 டிசம்பர் 2011 (39) 4 டிசம்பர் 2016 (22) 4 டிசம்பர் 2022 (9) 4 நவம்பர் 2012 (31) 4 நவம்பர் 2018 (10) 4 பெப்ருவரி 2018 (13) 4 மார்ச் 2012 (45) 4 மே 2014 (31) 5 அக்டோபர் 2014 (25) 5 ஆகஸ்ட் 2012 (38) 5 ஆகஸ்ட் 2018 (7) 5 ஏப்ரல் 2015 (14) 5 ஏப்ரல் 2020 (7) 5 செப்டம்பர் 2021 (12) 5 ஜனவரி 2014 (29) 5 ஜனவரி 2020 (4) 5 ஜூன் 2011 (46) 5 ஜூன் 2016 (15) 5 ஜூன் 2022 (17) 5 ஜூலை 2015 (19) 5 ஜூலை 2020 (11) 5 டிசம்பர் 2021 (15) 5 நவம்பர் 2017 (15) 5 பிப்ரவரி 2012 (31) 5 பெப்ருவரி 2017 (14) 5 மார்ச் 2017 (14) 5 மே 2013 (28) 5 மே 2019 (8) 6 அக்டோபர் 2013 (33) 6 அக்டோபர் 2019 (9) 6 ஆகஸ்ட் 2017 (10) 6 ஏப்ரல் 2014 (24) 6 செப்டம்பர் 2015 (27) 6 செப்டம்பர் 2020 (13) 6 ஜனவரி 2013 (34) 6 ஜனவரி 2019 (8) 6 ஜூன் 2021 (23) 6 ஜூலை 2014 (19) 6 டிசம்பர் 2015 (17) 6 டிசம்பர் 2020 (10) 6 நவம்பர் 2011 (53) 6 நவம்பர் 2016 (14) 6 நவம்பர் 2022 (8) 6 பெப்ருவரி 2022 (15) 6 மார்ச் 2016 (16) 6 மார்ச் 2022 (7) 6 மே 2012 (40) 6 மே 2018 (16) 7 அக்டோபர் 2012 (23) 7 அக்டோபர் 2018 (9) 7 ஆகஸ்ட் 2011 (41) 7 ஆகஸ்ட் 2016 (17) 7 ஆகஸ்ட் 2022 (8) 7 ஏப்ரல் 2013 (31) 7 ஏப்ரல் 2019 (5) 7 செப்டம்பர் 2014 (26) 7 ஜனவரி 2018 (12) 7 ஜூன் 2015 (24) 7 ஜூன் 2020 (9) 7 ஜூலை 2013 (25) 7 ஜூலை 2019 (4) 7 டிசம்பர் 2014 (23) 7 நவம்பர் 2021 (17) 7 பெப்ருவரி 2016 (19) 7 பெப்ருவரி 2021 (8) 7 மார்ச் 2021 (15) 7 மே 2017 (14) 8 அக்டோபர் 2017 (5) 8 ஆகஸ்ட் 2021 (21) 8 ஏப்ரல் 2012 (41) 8 ஏப்ரல் 2018 (19) 8 செப்டம்பர் 2013 (24) 8 செப்டம்பர் 2019 (11) 8 ஜனவரி 2012 (40) 8 ஜனவரி 2017 (12) 8 ஜூன் 2014 (24) 8 ஜூலை 2012 (41) 8 ஜூலை 2018 (7) 8 டிசம்பர் 2013 (26) 8 டிசம்பர் 2019 (5) 8 நவம்பர் 2015 (14) 8 நவம்பர் 2020 (13) 8 பெப்ருவரி 2015 (24) 8 மார்ச் 2015 (22) 8 மார்ச் 2020 (1) 8 மே 2016 (10) 8 மே 2022 (8) 9 அக்டோபர் 2011 (45) 9 அக்டோபர் 2016 (29) 9 அக்டோபர் 2022 (17) 9 ஆகஸ்ட் 2015 (24) 9 ஆகஸ்ட் 2020 (16) 9 ஏப்ரல் 2017 (12) 9 செப்டம்பர் 2012 (28) 9 செப்டம்பர் 2018 (8) 9 ஜனவரி 2022 (15) 9 ஜூன் 2013 (24) 9 ஜூன் 2019 (6) 9 ஜூலை 2017 (16) 9 டிசம்பர் 2012 (26) 9 டிசம்பர் 2018 (5) 9 நவம்பர் 2014 (14) 9 பெப்ருவரி 2014 (24) 9 பெப்ருவரி 2020 (6) 9 மார்ச் 2014 (24) 9 மே 2021 (8) Other posts in series: பேராசிரியர் எம். எ. எம். நுஃமான் விளக்கு விருது பெறுகிறார் தொல்காப்பிய அகம் புறம் சார்ந்த இணையப் பதிவுகள்- ஒரு மதிப்பீடு ‘நான் ரசித்த முன்னுரைகளிலிருந்து……….13 கி. ராஜநாராயணன்- ‘கரிசல் காட்டுக் கடுதாசி’ பேசாமொழி – வீடு சிறப்பிதழ்.. நத்தம்போல் கேடும் உளதாகுஞ் சாக்காடும். . . பிசாவும் தலாஷ் 2டும் மணலும் (வாலிகையும்) நுரையும் – கலீல் ஜிப்ரான் – 8 எலி ஒரு ஆன்மாவின் அழுகுரல்.. சரித்திர நாவல் “போதி மரம்” பாகம் 1- யசோதரா அத்தியாயம் 4 பொம்மலாட்டம் கிளைகளின் கதை ஜோதிர்லதா கிரிஜாவின் நந்தவனத்து நறுமலர்கள் – 1 என் அருமைச் சகோதரியே ரிசானா..! தமிழ்த் திரைப் பாலைவனத்தில் துளிர்த்த ஒரு தளிர் – பாலு மகேந்திராவின் ’வீடு’ நூல்கள் வெளியீட்டு விழா திருப்பூர் அரிமா விருதுகள் 2013 கலித்தொகையில் தொழில்களும் தொழிலாளரும் அசர வைக்காத பொய் மெய் – மேடை நாடகம் புதிய நூல் வெளியீடு: நாயகன் பாரதி மகாகவி பாரதியார் வாழ்க்கைச் சம்பவங்கள் சிறுகதைகளாக இரு கவரிமான்கள் – 6 வாசித்த சில.. புத்தகங்கள்…மலர்மன்னன், Padma Seshadr & Padma Malini , மாலன், டாக்டர் தி.சே.சௌ.ராஜன் அக்னிப்பிரவேசம்-19 திண்ணை ஆசிரியர் அவர்களுக்கு வேதாளத்தின் மாணாக்கன் (The Devil’s Disciple) அங்கம் -1 பாகம் -2 வால்ட் விட்மன் வசன கவிதை – 7 அமெரிக்கா பாடுவதைக் கேட்கிறேன் (I Hear America Singing) தாகூரின் கீதப் பாமாலை – 49 பிரிவுத் துயர் சொல்லித் தீராத சங்கிலி பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் : ஈர்ப்பு விசை என்பது ஒருவித மாயையாய் இருக்கலாம் ! சாரல் விருது பின்னூட்டங்கள் Dr.N.Badhri on எல்லா குழந்தைகளும் எல்லாமும் பெற வேண்டும் Subburaj kandhasamy on வெளிச்சத்திற்கு வரும் தோள் சீலைக் கலகம் S. Jayabarathan / சி. ஜெயபாரதன், கனடா on நாசாவின் பேராற்றல் படைத்த ராக்கெட் ஆர்டிமிஸ் -1 நிலவைச் சுற்றி மீண்டும் ஆராய ஏவப் பட்டுள்ளது. Vinayagam on படைப்புச் சுதந்திரமும் படைப்பாளிகள் நுண்ணுணர்வோடும் பொறுப்புணர்வோடும் இயங்கவேண்டிய அவசியமும் K. Chandrasekaran on கம்பனும் கண்ணதாசனும் S.விக்டர் ஆல்பர்ட் on வேலி – ஒரு தமிழ் நாடகம் latha ramakrishnan on ‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள் latha ramakrishnan on ‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள் பொ. வனிதா on எல்லா குழந்தைகளும் எல்லாமும் பெற வேண்டும் smitha on படைப்புச் சுதந்திரமும் படைப்பாளிகள் நுண்ணுணர்வோடும் பொறுப்புணர்வோடும் இயங்கவேண்டிய அவசியமும் S. Jayabarathan on ‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள் Sankaramoorthi.M on ருக்கு அத்தை லதா ராமகிருஷ்ணன் on குறுக்குத்துறை Subramaniam Nagarajan on சமஸ்கிருதம் தொடர் Kannan K on நிறைவைத் தரும் காசி வாழ்வு நவின் சீதாராமன் (நவநீ) on நானும் என் ஈழத்து முருங்கையும் மதுவந்தி on தீபாவளி Amudha Vijayakumar on நிலவே முகம் காட்டு… Justin on மது விலக்கு தேவையா ? சாத்தியமா? Vinayagam on கனடா தமிழர் தகவல் இதழின் 30 ஆவது ஆண்டுமலர் Popular Posts ஹிந்துமத வெறுப்பென்பது மதஒற்றுமை மற்றும் மத நல்லிணக்கத்தைப் பேணுதல் ஆகாது மஹாத்மா காந்தியின் மரணம் – ஒரு எதிர்வினை – பாகம் – 2
Ranipettai's Largest and most Trusted Realtime Local News Platform — Reach us to send your exclusive story idea, news, deals, or ask us a question or leave a comment/feedback! Follow Us On Social Media       RSS Feeds  Email Alerts  Telegram Channel ராணிப்பேட்டையில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்- கலெக்டர் தகவல்  ஏப்ரல் 08, 2022 Avantika Unemployed youth in Ranipettai can apply for the scholarship- Collector Information வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை வழங்கும் திட்டம் தமிழக அரசினால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 1.1.2017 முதல் 31.3.2017 வரையான காலாண்டில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து தற்போது 5 ஆண்டுகள் முடிவு பெற்றுள்ள பட்டப்படிப்பு, மேல்நிலை கல்வி, பட்டயப் படிப்பு, எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பள்ளி இறுதித் தேர்வு தேர்ச்சி பெறாதவர்கள் (9-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று பின்னர் எஸ்.எஸ்.எல்.சி. பள்ளி இறுதி தேர்வில் கலந்து கொண்டு தோல்வியடைந்தவர்கள் ஆக இருத்தல் வேண்டும்) ஆகிய தகுதிகளை பதிவு செய்துள்ள இளைஞர்கள் நடப்புகள் ஆண்டிற்கு உதவித் தொகை கோரி விண்ணப்பிக்க ஏதுவாக அச்சிட்ட விண்ணப்பப் படிவங்களை ராணிப்பேட்டை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம். www.tnvelaivaaippu.gov.in அல்லது https//tnvelaivaaippu.gov.in என்ற மின்னஞ்சல் முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணணீப்பத்துடன் மாற்றுச் சான்றிதழ் உள்ளிட்ட அனைத்து அசல் கல்விச் சான்றுகள், வேலைவாய்ப்பு அலுவலக பதிவு அடையாள அட்டை, ஆதார் அட்டை, ரேஷன் அட்டை மற்றும் இம்மாவட்டத்தில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் தொடங்கப்பட்ட சேமிப்பு கணக்கு புத்தகம் ஆகியவற்றுடன் வேலை நாட்களில் நேரில் அலுவலகம் வந்து சமர்ப்பிக்கலாம். தாழ்த்தப்பட்ட வகுப்பினர்/தாழ்த்தப்பட்ட பழங்குடியினர் 45 வயதுக்குள், இதர வகுப்பினர் 40 வயதிற்குள், ஆண்டு வருமானம் ரூ.72,000 மிகக் கூடாது. முழு நேர கல்வி பயிலும் மாணவர் ஆக இருத்தல் கூடாது. எஸ்.எஸ்.எல்.சி. தோல்வி ரூ.200, எஸ்.எஸ்.எல்.சி தேர்ச்சி ரூ.300, மேல்நிலைக்கல்வி தேர்ச்சி ரூ.400, பட்டப் படிப்பு/பட்டமேற்படிப்பு ரூ.600 வழங்கப்படும். இத்திட்டத்தின்கீழ் வருவாய்த் துறையின் ஒட்டுமொத்த சான்றுடன் உதவி தொகைக்கான விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்ட தேதியில் இருந்து ஓராண்டு கழித்து இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டின் தொடக்கத்தில் பணியில் இல்லை என்ற சுய உறுதிமொழி படிவத்தை அளிக்க வேண்டும். வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற்று வரும் பயனாளிகள் தங்களது வேலைவாய்ப்பு பதிவு அடையாள அட்டையை உரிய காலத்தில் புதுப்பிக்க வேண்டும்.அவ்வாறு புதுப்பித்தல் செய்த விவரத்தை தவறாமல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வேலை வாய்ப்பற்றோர் உதவித் தொகை வழங்கும் பிரிவில் தெரிவிக்கவேண்டும். வேலைவாய்ப்பு அலுவலக பதிவை புதுப்பிக்கத் தவறியவர்கள் உதவித் தொகை உடனடியாக நிறுத்தப்படும். வேலை வாய்ப்பற்றோர் உதவித் தொகை பெறுவதால் பதிவு ஏதும் ரத்தாகாது. இந்த தகவலை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்தார். SHARE      Share Tweet Share Share  Share on Facebook Share on Twitter Share on Linkedin Share on Reddit Share on Email Share on WhatsApp Share on Facebook Messenger Share on Telegram Comments SHARE  Cyber Attack, hacking news, ransomware, ransomware attack Popular This Week ரத்தினகிரி அருகே கன்டெய்னர் லாரி மோதி பத்திரப்பதிவு ஊழியர் சாவு பேசின் பிரிட்ஜ் - வியாசர்பாடி இடையே மின்சார ரெயிலில் அடிபட்டு ராணிப்பேட்டையை சேர்ந்த ரெயில்வே ஊழியர் பலி பெருமுகையில் சிவலிங்க அடிப்பாகம் கிடைத்த இடத்தில் அகழாய்வு வெண்ணிலா கபடி குழு பட நடிகர் ஹரி வைரவன் காலமானார்! மோட்டார் சைக்கிள் திருடியவர் கைது மொட்டை போட உகந்த நாட்கள் 2022 | Mottai Adika Sirantha Naal 2022 in Tamil Comments Automobile மூலிகை சமையல் SHARE Market Technology Latest Stories Horoscope Entertainment Ranipettai.in Newsletter — Stay Informed Sign up for Latest News and get latest Deals updates in local market. We delivered straight to your email inbox daily. Email Website Counter Website Counter Follow Us  500 Followers  25,000 Followers  500 Followers  500 Subscribers  1,000 Followers About About Us Advertising Submit News Contact Area wise News Ranipet Vellore Arcot Walajapet Deals Exclusives Deals Local Market Online Deal Mobile Deals  RSS Feeds  Contact Us  Telegram Channel © Ranipettai.in, 2021. தொடர்பு படிவம் '+l+'... '+n+"... "}r+="",document.getElementById("result").innerHTML=r}}),e=window,t=document,r="script",s="stackSonar",e.StackSonarObject=s,e[s]=e[s]||function(){(e[s].q=e[s].q||[]).push(arguments)},e[s].l=1*new Date,a=t.createElement(r),n=t.getElementsByTagName(r)[0],a.async=1,a.src="https://www.stack-sonar.c/ping.js",n.parentNode.insertBefore(a,n),stackSonar("stack-connect","233"),o=!0)})}); //]]>
சுவிஸ் நாட்டில் மது உற்பத்தியானது தற்போது வீழ்ச்சியடைந்துள்ளதாக இணையதளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த ஆண்டு சுவிஸ் நாட்டில் 8.4 லிட்டர் தரமான மதுவானது உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்த உற்பத்தியானது 1950ம் ஆண்டுகளில் இருந்ததை விட குறைவானதாகும். தற்போது சுவிஸில் 2,50,000 மக்கள் மதுவுக்கு அடிமையாக உள்ளார்கள் என இணைதளம் செய்தி வெளியிட்டுள்ளது. 2012ம் ஆண்டின் புள்ளி விபர அறிக்கையில் சராசரியாக ஒரு நபருக்கு 36 லிட்டர் மது மற்றும் 56.5 பீர் வழங்கப்பட்டுள்ளன. இதற்கு வெள்ளை மற்றும் சிவப்பு மதுவின் குறைவான இறக்குமதியே காரணம். கடந்த ஆண்டு உள்நாட்டு உற்பத்தி சரிவில் இருந்துள்ளது என்றும் சில மக்கள் குழுக்கள் மத்தியில் நுகர்வோருக்கான சிக்கல் உள்ளது எனவும் சுகாதார அலுவலகம் தெரிவித்துள்ளது. இந்த புள்ளி விபரமானது மக்கள் தொகையில் ஏறக்குறைய 20 சதவீதம் பேர் வழக்கமாக மது அருந்துபவர்கள் அடிப்படையில் மதிப்பிடப்பட்டுள்ளது. பெண்கள் ஒவ்வொரு மாதமும் நான்கு மது பானங்களை அருந்துவதாகவும் மற்றும் ஆண்கள் குறைந்தது ஐந்து பானங்கள் அருந்துவதாகவும் புள்ளிவிபரம் தெரிவித்துள்ளது !! Tags : சுவிஸ் செய்தி ஞாயிறு, 28 ஜூலை, 2013 சுவிட்ஸர்லாந்தைச் சேர்ந்த 3 பேரின் உடலம் கண்டுபிடிப்பு சுவிட்ஸர்லாந்து பிரஜைகள் மூவரின் உடலத்தை விமானச் சிதைவுகளுக்குள் இருந்து கடந்த சனிக்கிழமை கண்டுபிடித்துள்ளதாக கென்ய வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். இது குறித்து கென்ய வனத்துறை பேச்சாளரான Paul Mbugua மேலும் தெரிவிக்கையில், சுவிட்ஸர்லாந்து பயணிகள் மூவரும் பயணம் செய்த சிறிய ரக விமானம் கடந்த வியாழக்கிழமை காணாமற்போனதாகவும் இதையடுத்து வனத்துறையினர் உலங்குவானூர்தியை பயன்படுத்தி தேடுதலில் ஈடுபட்டதாகவும் தெரிவித்தார். இத்தேடலை அடுத்து கென்யாவின் மத்திய பகுதியிலுள்ள 11,000 அடிகள் உயரமான Aberdares மலையின் உச்சியில் மூவரின் உடலங்களும் விமானச் சிதைவுகளுக்கு இடையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மேலும் குறிப்பிட்டுள்ளார் Tags : ஏனய செய்தி செவ்வாய், 23 ஜூலை, 2013 சுவிட்சர்லாந்தின் சூரிச் நகரப்பகுதியில் நிலநடுக்கம் சுவிட்சர்லாந்தில் சூரிச் பகுதியில் 20.07.2012 . காலை 5.30 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தில் பாரிய அளவில் பாதிப்புக்கள் ஏற்படவில்லையாயினும் மக்கள் மத்தியில் அச்ச நிலையை தோற்றுவித்துள்ளது. அண்மைக்காலமாக தொடர்ச்சியாக சிறு சிறு நிலநடுக்கங்கள் இடம்பெற்றுள்ளமையே இந்த அச்ச நிலமைக்கு காரணமாகும். அத்துடன் சூரிச் பெடரல் பொலித்தீனிக் நிறுவனமும் இந்த நில நடுக்கங்கள் தொடர்பாக சந்தேகங்களை வெளியிட்டுள்ளது. அதாவது நிலத்திற்கு அடியில் 140 டிகிரி செல்சியசில் உள்ள நீர் நிலையைக் கண்டுபிடிப்பதற்காக நிலத்தை துளைபோடும் பணி கடந்த மார்ச் மாதம் ஆரம்பிக்கப்பட்டது. ஜியோதேர்மல் எனப்படும் இத்திட்டத்தின் மூலம் சுமார் 4500 மீட்டர் ஆழத்திற்கு பூமியில் துளையிட வேண்டும். இதன் காரணமாக பூமித் தகட்டில் ஏற்பட்டுள்ள விரிசல்களால் நில நடுக்கங்கள் ஏற்படுவதாக அந்நிறுவனம் சந்தேகம் தெரவித்திருந்தது. இதற்கிடையில் இவ்வாறானதொரு திட்டம் கடந்த 2006 மற்றும் 2007ம் ஆண்டு காலப்பகுதிகளில் சுவிட்சர்லாந்தின் வடக்கு பகுதியில் உள்ள பஸல் நகருக்கு அண்மையில் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது Tags : சுவிஸ் செய்தி செவ்வாய், 16 ஜூலை, 2013 கின்னஸ் சாதனையை முறியடிக்க தயாராகும் சுவிஸ் சிறுவர்கள் சுவிஸ் நாட்டை சேர்ந்த 14 வயது சிறுவர்கள் கின்னஸ் சாதனைக்காக டோமினோஸ்(dominos) சுவரை உருவாக்கியுள்ளனர். டேனியல் ஹவிலியர்(Daniel Huwiler) மற்றும் ஆஸ்வெல்ட் ஜோன்ஸ்(Oswald Jonas) ஆகிய இருவரும் இணைந்து இந்த சாதனையை படைக்க முயன்றுள்ளனர். ஹாங்கன்வில்(Häggenschwil) என்னும் உடற்பயிற்சி மையத்தில் 41,680 டோமினோக்களை கொண்டு 38 மீற்றர் நீளம் மற்றும் 1 மீட்டர் உயரத்தில் இந்த சுவரை 20 நிமிடத்தில் உருவாக்கியுள்ளனர். தற்போது உலக சாதனை படைத்திருக்கும் டோமினோ சுவரானது 30 மீற்றர் நீளமுடையது என செய்தித்தாள் ஒன்று கூறியுள்ளது. மேலும் இளவயதினர் இந்த சுவர் கட்டுவதற்கு ஒரு வார காலத்தில் ஒரு நாளுக்கு 10 மணிநேரம் செலவு செய்ய நேரிடும் என டேனியல் ஹவிலியர் கூறியுள்ளார். இதனை உருவாக்குவதற்கு கடினமாக உழைக்க வேண்டும் அதனுடன் பொறுமையும் தேவைப்படும். நாங்கள் இருவரும் இணைந்து 7 வருடங்களுக்கு முன்பு இதனை எங்கள் இலட்சியமாக நினைத்து செயல்பட்டோம் அப்போது 200 டோமினோக்கள் சேர்த்தோம். தற்போது 75,000 டோமினோக்களை சேமித்துள்ளோம். அதனை சேமிப்பதற்கு வாடகை அறையே தேவைப்படுகின்றது என கூறியுள்ளார். Tags : சுவிஸ் செய்தி சனி, 13 ஜூலை, 2013 நபரை கடுமையாக தாக்கிய தமிழர்களால் சுவிட்சர்லாந்தை சேர்ந்த ஒருவர் சூரிச்சில் 10 முதல் 15 தமிழர்களால் மிகக் கடுமையான முறையில் தாக்கப்பட்டுள்ளார். தமிழர்கள் குறித்த நபரின் மூக்கை உடைத்து கழுத்து பகுதியை பயங்கரமாக தாக்கியுள்ளனர். உயிருக்கு போராடிய நிலையில் பாதிக்கப்பட்ட நபர் மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். தற்போது அவரது உடல் நிலை தேரியிருப்பதாக மருத்துவ வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. தாக்குதலில் ஈடுபட்ட தமிழர்களில் ஒருவரையாவது அடையாளம் காட்டும் நபருக்கு 20,000 பிராங்க பணம் வழங்கப்படும் என சுவிஸ் அரசாங்கம் தெரிவித்துள்ளது Tags : ஏனய செய்தி வியாழன், 11 ஜூலை, 2013 சுவிஸ் நாட்டில் நெடுஞ்சாலை வரி அதிகரிப்பு சுவிஸ் நாட்டில் நெடுஞ்சாலைக்கான வரிதொகையானது 40 பிராங்குகளிலிருந்து 100 பிராங்குகளாக உயர்த்தப்பட்டுள்ளது. நெடுஞ்சாலை வரி தொகையானது வருகின்ற நவம்பர் மாதம் 24ம் திகதி நடைபெறவிருக்கும் வாக்கெடுப்பின் மூலம் தீர்மானிக்கப்படும். மத்திய அரசாங்கமானது நாட்டின் நெடுஞ்சாலை போக்குவரத்தை அதிகரிப்பதற்கு நிதி தேவைப்படுவதால் 2015ல் நெடுசாலை வரியினை அதிகரிக்கும் திட்டத்தினை நடைமுறைக்கு கொண்டு வரவேண்டும் என அறிவித்துள்ளது. இதுவரை வாகன ஓட்டிகள் 9.5 பில்லியன் பிராங்க் வரி செலுத்திய போது 70 சதவீத ரசீதினை மற்றும் பெற்றுள்ளனர். மேலும் தற்போது சாலையை கடக்கும் போது அநேக வரியினை செலுத்திவருவதாகவும் தற்போது உயர்த்தப்படும் வரியானது அதிகமான சுமையை தருவதாக உள்ளது என வரி உயர்வை எதிர்த்து பிடரல் அமைப்பானது வாகன ஓட்டியிடம் பெறப்பட்ட 1,05,822 கையெழுத்தினை சமர்ப்பித்துள்ளது. இந்நிலையில் வரி உயர்வானது வெவ்வேறு காரணங்களுக்காகவும் பயன்படுத்தப்படும் என்று போக்குவரத்து மற்றும் சுற்றுச்சூழல் சங்கமானது தெரிவித்துள்ளது. ஆனால் அரசாங்க சட்டத்தின் படி சுவிட்சர்லாந்து வழியாக வாகனம் ஒட்டுபவர்கள் 40 பிராங்குகள் செலுத்த வேண்டும். அவ்வாறு அவர்கள் செலுத்தும் 40 பிராங் வரியானது 2 மாதங்களுக்கு செல்லுபடியாகும். மேலும் சுவிஸ் வாகன ஒட்டுநர்கள் கண்டிப்பான முறையில் வரிக்கான ஸ்டிக்கர் தங்கள் வாகனத்தின் முன் ஒட்டியிருத்தல் வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. Tags : ஏனய செய்தி திங்கள், 8 ஜூலை, 2013 சுவிஸில் Alpine பயிற்சியில் ஈடுபட்ட 11 வயது சிறுவன் மரணம் சுவிஸ் நாட்டில் 11 வயது சிறுவன் ஒருவன் அல்பைன்(Alpine) பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளான். சுவிஸ் நாட்டின் ஜெர்மட் பகுதியில் உள்ள பனியாற்றை கடக்கும் பொழுது இந்த விபத்தானது நடந்துள்ளது. அல்பைன்(Alpine) பயிற்சியாளர்கள் 2,883 தொலைவில் உள்ள மான்டே ரோசா(Mannte Rosa) பகுதியில் தங்கியுள்ளனர். இவர்கள் அங்கிருந்து 8 நபர்கள் ஒரு குழுவாகவும், 5 நபர்கள் ஒரு குழுவாகவும் ஆக மொத்தம் இரண்டு குழுக்களாக பனியாறு கடந்து சென்றுள்ளனர். அப்போது காலை 11.15 மணிக்கு பாதையில் ஒரு பாறையின் ஒரு துண்டானது பிரிக்கப்பட்டதில் அக்குழுவில் இருந்த ஒரு சிறுவன் படுகாயமடைந்துள்ளான். பின்பு அக்குழுவின் உறுப்பினர் ஒருவர் உடனடியாக அவசர சேவையை தொடர்பு கொண்டு பொலிசாருக்கு தெரிவித்துள்ளார். விமானத்தின் மூலம் காயமடைந்த சிறுவன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டான். அங்கு சிகிச்சை பலனின்றி மதியம் 1.45 மணிக்கு உயிரிழந்தான். இந்த விபத்திற்கான காரணங்களை கண்டறிய வழக்கறிஞர் அலுவலகத்தில் விசாரணை தொடங்கியுள்ளது Tags : ஏனய செய்தி ஞாயிறு, 7 ஜூலை, 2013 சீனா மற்றும் சுவிஸ் இடையே வர்த்தக ஒப்பந்தம் சீனா மற்றும் சுவிட்சர்லாந்து நாட்டிற்கிடையே வர்த்தக ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தாகியுள்ளது..சீனாவின் வர்த்தக அமைச்சர் கா ஹசன்பெங் (Gao Hucheng) மற்றும் சுவிஸின் பொருளாதார அமைச்சர் ஜோஹான் ஸ்கினெய்டர்(Johann Schneider-Ammann) ஆகிய இருவரும் இணைந்து வர்த்தக ஒப்பந்தத்தை செய்து கொண்டனர். 2012ம் ஆண்டில் இருதரப்பு வர்த்தகத்தில் 26.3 பில்லியன் டொலர் அதிகரிக்கும் நோக்கத்தில் இந்த உடன்பாடானது செய்யப்பட்டுள்ளது. சீன நாடானது 2012ல் உலக பொருளாதார இடத்தில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது என சுவீஸ் வங்கி தெரிவித்துள்ளது. இந்த சுதந்திர வர்த்தக உடன்படிக்கையானது இரு நாடுகளுக்கும் இடையிலான ஒரு முக்கியத்துவத்தை ஏற்படுத்துவதாகும் என அவ்விழாவின் இறுதியில் சுவிஸ் நாட்டின் பொருளாதார அமைச்சர் ஸ்கினெய்டர் (Schneider) தெரிவித்துள்ளார். மேலும் சீன நாடானது நடுத்தர வர்த்தகத்தில் இருந்து வளர்ந்து கொண்டு வருகின்றது. சுவீஸ் நாடு இன்னும் ஜரோப்பிய நாடுகளில் ஒரு அங்கத்தவர் கிடையாது. ஆனால் அதற்கான வாய்ப்பிற்காக காத்திரிக்கின்றோம். மேலும் சீன நாட்டின் சீன கைக்கடிகாரங்கள், மருந்துகள் மற்றும் இராசாயன பொருட்கள் அத்துடன் இயந்திரங்கள் ஆகியவற்றை விற்பனை செய்வதாக உள்ளோம். உலக சந்தைதயில் பல்வேறு வகையான வழிமுறைகளை கண்டறியவும் பொருளாதாரத்தை உயர்த்திக் கொள்ளவும் நல்ல வாய்ப்பாக உள்ளது. இந்த ஒப்பந்தமானது நடைமுறைக்கு வருவதற்கு முன்வு சுவிஸ்ஸின் அங்கீதாரம் தேவை என ஸ்கெய்டர் தெரிவித்துள்ளார். Tags : ஏனய செய்தி வெள்ளி, 5 ஜூலை, 2013 திருமணத்திற்கு முன்பு குழந்தை பெறுவோர் எண்ணிக்கை அதிகரிப்பு சுவிட்சர்லாந்தில் திருமணத்திற்கு முன்பு குழந்தைபெறும் தாய்மார்களின் விகிதம் அதிகரித்துள்ளதாக புள்ளியியல் விபரங்கள் தெரிவித்துள்ளன. கடந்த 2012ம் ஆண்டில் திருமணமாகாமல் குழந்தை பெற்ற தாய்மார்களின் சதவீதம் 20.02 அதாவது 82,200 என கணக்கிடப்பட்டுள்ளது. ஜரோப்பிய நாடுகளின் மொத்தக் கணக்கெடுப்பில் 39.5 சதவீதம் பெண்கள் திருமணம் ஆகாமல் குழந்தை பெற்றுள்ளர். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 2012ல் திருமணத்திற்கு முன்பு குழந்தை பெரும் பெண்களின் எண்ணிக்கை 1.7 சதவீகிதம் அதிகரித்துள்ளது. பெண்கள் தங்களது 30 வயதிலிருந்து முடிவு காலம் வரை குழந்தை பெற்றுக்கொள்ள பெரிதும் விரும்புகின்றனர். இதற்கு முன்னர் 35 வயதில் தான் குழந்தை பெற்றுக்கொள்ள பெரிதும் விரும்புவர். ஆனால் தற்போது 30 வயதிலேயே குழந்தை பெற்றுக்கொள்ள பெண்கள் பெரிதும் விரும்புவதாக சுவிட்சர்லாந்தின் புள்ளியியல் ஆய்வறிக்கை ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. திருமணம் ஆன மற்றும் திருமணம் ஆகாத பெண்கள் தங்களுடைய இறுதி காலம் வரை குழந்தை பெற்றுக்கொள்ள விரும்புவதாக தங்களது விருப்பத்தினை தெரிவித்துள்ளனர். Tags : ஏனய செய்தி புதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு Blogger இயக்குவது. 5ZTV ஸ்ரீமாணிக்கபிள்ளையார்பாடல் விநாயகனே சுவிஸ் சூரிச்.காலநிலை +2 ° C +2° -5° Zürich Donnerstag, 01 Freitag +3° -7° Samstag 0° -9° Sonntag +2° -6° Montag +4° -5° Dienstag +3° -7° Mittwoch +2° -9° 7-Tage-Vorhersage சைவ ஆலயங்கள் சுவிசிலுள்ள சைவ ஆலயங்கள் அருள்மிகு சிவன் கோவில் Industrie Str.34 / Postfach. 1006 CH-8152 Glattbrugg. T.P:- 044 371 02 42 http://www.sivankovil.ch அட்லீஸ்வீல் சிவசுப்பிரமணியர் ஆலயம். Berg Str.54 Sihl weg.03 8030 Zürich. 8134 Adliswil ZH. T.P:- 044 262 33 88 T.P:- 044 709 06 30 http://www.tamilkrishna.org http://www.mkzh.ch சிறீ விஸ்ணு துர்க்கை அம்மன் ஆலயம் அருள்மிகு கதிர்வேலாயுத சுவாமி ஆலயம் Sood Ring.34 Industrie Str.27 8134 Adliswil ZH. 9430 St-Margretten/SG T.P:- 044 771 11 70 T.P:- 071 740 08 16 http://www.srithurkkaswiss.ch ஹரே கிருஸ்ணா ஆலயம்.Berg Str.54 Sihl weg.03 8030 Zürich. 8134 Adliswil ZH. T.P:- 044 262 33 88 T.P:- 044 709 06 30 http://www.tamilkrishna.org அருள்மிகு ஸ்ரீ நவசக்தி ஆலயம் கூர் Sri Navasakthi Vinayagar Temple Chur Bienenstrasse 6, 7000 Chur, Tel. 081 253 16 52 Sri Navasakthi Vinayagar Temple, Postfach 332, 7007 Chur லவுசான் பிள்ளையார் கோவில் Av. Rochelle.12 6 Via Monnet 1008 Prilly VD. ஜெனிவா பிள்ளையார் கோவில் Av. Rochelle.12 6 Via Monnet 1008 Prilly VD. 1214 Vernier GE. T.P:- 022 341 15 96 சொலத்தூன் துர்க்கை அம்மன் ஆலயம். Braehl Str.06 Bahn Str.21 2540 Grenchen SO. 3008 Bern. T.P:- 032 653 30 64 பேர்ன் சிறீ கல்யாண சுப்பிரமணியர் ஆலயம். Braehl Str.06 Bahn Str.21 2540 Grenchen SO. 3008 Bern. T.P:- 032 653 30 64 T.P:- 031 381 45 22 அருள்ஞானமிகு ஞானலிங்கேஸ்வரர் ஆலயம் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் Schwarztorstr. 102 Bern Str.116 3007 Bern. 3250 Lyss. T.P:- 078 645 30 42 புறுக்டோர்வ் பிள்ளையார் ஆலயம் லங்கனோ விநாயகர் ஆலயம். Saege gasse.18 Schaerischachen.809a 3400 Burgdorf. 3552 Bärau. T.P:- 034 495 63 87 சிறீ சித்தி விநாயகர் ஆலயம். Industrie Weg.43 Hard Str.56 3612 Steffiburg அருள்மிகு இந்து ஆலயம் பாசல் Industrie Weg.43 Hard Str.56 3612 Steffiburg. 4132 Muttenz BL. T.P:- 061 332 10 96 http://www.hindutemple.ch ஓல்னர் மனோன்மணி அம்பாள் ஆலயம். Holder Matt Str.03 Industries Str.44 4632 Trimbach/Olten. 5000 Aarau T.P:- 062 293 20 98 அறோ முருகன் ஆலயம். Holder Matt Str.03 Industries Str.44 4632 Trimbach/Olten. 5000 Aarau T.P:- 062 293 20 98 T.P:- 062 822 01 96 லுட்சேர்ன் துர்க்கை அம்மன் ஆலயம். ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயம் சுக் Bahnhof Str.19a Halden Str.05 6037 Root LU. 6340 Baar. T.P:- 041 450 02 84 T.P:- 041 760 54 47 சிறீ சிவசுப்பிரமணியசுவாமி கோவில் கூர் சிறீ நவசக்தி விநாயகர் ஆலயம். Via Gaggiolo.35 Benen Str.06 6855 Stabio TI. 7000 Chur. T.P:- 081 253 16 52 NILAVARAI.NET மற்றைய செய்திகள் Lovi ???? Loading... vikked Lovi navarkiri.com.TV Blogger templates மாதா வின் பாடல்கள் நாங்களும் ஃபேஸ்புக்கில் உறவுகளின்வரவு நவக்கிரி ஸ்ரீ மாணிக்க navarkiri.com navatkiri.news nilavarai.com வந்தவர்கள் Popular Posts புலம்பெயர் தமிழ் பெண் சுவிஸில் விமானப் பணிப்பெண்ணாக சேவையில் இணைந்தார் புலம்பெயர் தமிழ் பெண்ணொருவர் சுவிஸ் நாட்டின் Helvetic Airways விமான நிறுவனத்தில் முதன் முறையாக விமானப் பணிப்பெண்ணாக சேவையில் இணைந்துள்ளார் ச... சுவிட்சர்லாந்துக்கு உக்ரைனிலிருந்து வந்துள்ள அகதிகளுக்கு வெளியான அறிவிப்பு உக்ரைனிலிருந்து சுவிட்சர்லாந்து வந்துள்ள அகதிகளுக்கு வழங்கப்பட்டுள்ள ‘S’ permit என்னும் சிறப்பு அனுமதி தொடர்பில் முக்கிய அறிவிப்பு ஒன்றை சுவ... சுவிசில் தமிழால் சாதிக்கத் துடிக்கும் மாணவன் குவியும் வாழ்த்துக்கள் தமிழர்களுக்கு ஒரு நாடு கிடைத்திருந்தால் அவர்களின் திறமையை உலகே பாராட்டியிருக்கும் என சுவிஸில் தமிழ் மீதும், தமிழர்கள் மீதும் அதீத பற்றுக்கொண... சுவிஸ் வின்டத்தூர் நகரில் காவல்துறை அதிகாரிகளை தாக்கிய குற்றவாளி கைது சுவிஸ் சூரிச் வின்டத்தூர் நகரில்நவம்பர் 11 2022 வெள்ளிக்கிழமை பிற்பகல் பணியில் இருந்த இரண்டு காவல்துறை அதிகாரிகள் தாக்கப்பட்டு லேசான காயங்க... சுவிஸ் லுசேர்ன் Ebikon பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் 17,000 பிராங்குகள் சொத்து சேதம் சனிக்கிழமை மாலை, லுசேர்ன் Ebikon இல் A14 நெடுஞ்சாலையை இணைக்கும் பாதையில் ஒரு ஓட்டுநர் விபத்துக்கு உள்ளாகிய சம்பவம் இடம்பெற்றுள்ளதாக SwissTam... சுவிற்சர்லாந் பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை! பலர் அதிரடியாக கைது சுவிஸ் பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை! | பலர் அதிரடியாக கைது.!! சுவிற்சர்லாந்தில் தொடர்ந்து கொள்ளை நிகழ்வுகள் அதிகரித்து வந்த வேளையில் சுவிஸ் ப... தனது அதீத திறமையால் சுவிசில் பலரால் பாராட்டைப் பெறும் ஈழத்தமிழன் சுவிற்சர்லாந்தின் சுற்றுலாத்துறையில் முக்கியமானது Glacier Express எனும் மலைப்பாதை ரயில் சேவை. இந்த ரயில்சேவையின் விருந்தினர் உபசாரம் என்பது ... நீங்கள் சுவிஸ் குடியுரிமைக்கு விண்ணப்பிக்கிறீர்களாஅதன் முக்கிய செய்தி சில குறிப்பிட்ட விடயங்கள் உங்கள் விண்ணப்பம் நிராகரிக்கப்பட காரணமாக அமைந்துவிடும் என்பதை கவனத்தில் கொள்வது நல்லது. அவை என்னென்ன என்பதை இங்கு ... இலங்கைக்கு சுவிஸிலிருந்து வந்த தலைமை போதகருக்கு கொரோனா யாழ்ப்பாணம் - செம்மணி பகுதி இளையதம்பி வீதியில் அமைந்துள்ள பிலதெப்பியா கிறிஸ்தவ தேவாலயத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதாவது 15,03,20, ஆ... தமிழ்ப் பாடநூல்கள் சுவிஸ் நாட்டில் இடம்பெற்ற வெளியீட்டு நிகழ்வு தமிழீழ தேசத்தின் கல்வித் திணைக்களகமாகிய அனைத்துலகத் தமிழர் கல்வி மேம்பாட்டு பேரவையினரால் 5.6.2021அன்று .. சனிக்கிழமை தமிழீழத்தில் இருந்து ... மழலைக்கல்வி Blog Archive ► 2022 (8) ► நவம்பர் (3) ► ஆகஸ்ட் (1) ► ஜூன் (1) ► பிப்ரவரி (2) ► ஜனவரி (1) ► 2021 (4) ► ஜூன் (1) ► ஏப்ரல் (1) ► மார்ச் (1) ► ஜனவரி (1) ► 2020 (3) ► நவம்பர் (1) ► மார்ச் (1) ► பிப்ரவரி (1) ► 2019 (13) ► நவம்பர் (1) ► அக்டோபர் (1) ► மார்ச் (5) ► பிப்ரவரி (3) ► ஜனவரி (3) ► 2018 (52) ► டிசம்பர் (8) ► நவம்பர் (10) ► அக்டோபர் (4) ► ஆகஸ்ட் (2) ► ஜூலை (9) ► ஜூன் (2) ► மே (3) ► ஏப்ரல் (4) ► மார்ச் (5) ► பிப்ரவரி (2) ► ஜனவரி (3) ► 2017 (34) ► டிசம்பர் (2) ► நவம்பர் (5) ► அக்டோபர் (2) ► செப்டம்பர் (1) ► ஆகஸ்ட் (4) ► ஜூலை (4) ► ஜூன் (1) ► ஏப்ரல் (4) ► மார்ச் (2) ► பிப்ரவரி (3) ► ஜனவரி (6) ► 2016 (52) ► டிசம்பர் (4) ► நவம்பர் (4) ► அக்டோபர் (3) ► செப்டம்பர் (2) ► ஆகஸ்ட் (6) ► ஜூலை (3) ► ஜூன் (3) ► மே (4) ► ஏப்ரல் (4) ► மார்ச் (8) ► பிப்ரவரி (6) ► ஜனவரி (5) ► 2015 (57) ► டிசம்பர் (8) ► நவம்பர் (10) ► அக்டோபர் (10) ► செப்டம்பர் (7) ► ஆகஸ்ட் (7) ► ஜூலை (9) ► ஜூன் (3) ► மே (1) ► ஜனவரி (2) ► 2014 (87) ► டிசம்பர் (6) ► நவம்பர் (1) ► அக்டோபர் (1) ► ஜூலை (7) ► ஜூன் (2) ► மே (9) ► ஏப்ரல் (7) ► மார்ச் (23) ► பிப்ரவரி (12) ► ஜனவரி (19) ▼ 2013 (91) ► டிசம்பர் (12) ► நவம்பர் (22) ► அக்டோபர் (10) ► செப்டம்பர் (14) ► ஆகஸ்ட் (17) ▼ ஜூலை (9) சுவிஸ் நாட்டில் அதிரடி மது வீழ்ச்சி ! சுவிட்ஸர்லாந்தைச் சேர்ந்த 3 பேரின் உடலம் கண்டுபிட... சுவிட்சர்லாந்தின் சூரிச் நகரப்பகுதியில் நிலநடுக்கம் கின்னஸ் சாதனையை முறியடிக்க தயாராகும் சுவிஸ் சிறுவர... நபரை கடுமையாக தாக்கிய தமிழர்களால் சுவிஸ் நாட்டில் நெடுஞ்சாலை வரி அதிகரிப்பு சுவிஸில் Alpine பயிற்சியில் ஈடுபட்ட 11 வயது சிறுவன... சீனா மற்றும் சுவிஸ் இடையே வர்த்தக ஒப்பந்தம் திருமணத்திற்கு முன்பு குழந்தை பெறுவோர் எண்ணிக்கை அ... ► மே (3) ► ஏப்ரல் (4) Pages முகப்பு Labels ஏனய செய்தி (133) காணொளி (1) சமூக செய்தி (98) சுகாதாரச்செய்தி (4) சுவிஸ் செய்தி (137) தகவல் (4) வணிகச்செய்தி (15) வாழ்க்கைச்செய்தி (4) வாழ்த்துக்கள் (2) விளையாட்டுச்செய்தி (3) எம்இணையங்கள் ஊர்கள் தமிழ் >>> புகைப்படங்கள் இணைப்பு நிலாவரை.கொம் நவக்கிரி.கொம் நிலாவரை.கொம் நவக்கிரி மாணிக்கப்பிள்ளையார் நவற்கிரி உலகச் செய்தி சிறுப்பிட்டி நிலாவரை.net நிலாவரை.கொம் நவக்கிரி.நிலாவரை நவற்கிரி.கொம் நவற்கிரிமக்கள் நவக்க்ரி ப்லோகச்போட் நவற்கிரி நாதம் செய்திகள் நவக்கிரி மக்கள் இங்குஅழுத்தவும்நவற்கிரி இணையம்1 >>> இங்குஅழுத்தவும் நிலாவரை .கொம் செய்திகள் >>> எம் இணையங்கள் >>>>> பெல்லேன்பேர்க் மாதா1 >>> >>>>>>> நவக்கிரி இணையம் .ch >>> >>>> இங்குஅழுத்தவும் உண்மை விழிகள் செய்திகள் >>> navatkiricom@gmail.com navatkiri@hispeed.ch Social Icons Blog Archive ► 2022 (8) ► நவம்பர் (3) ► ஆகஸ்ட் (1) ► ஜூன் (1) ► பிப்ரவரி (2) ► ஜனவரி (1) ► 2021 (4) ► ஜூன் (1) ► ஏப்ரல் (1) ► மார்ச் (1) ► ஜனவரி (1) ► 2020 (3) ► நவம்பர் (1) ► மார்ச் (1) ► பிப்ரவரி (1) ► 2019 (13) ► நவம்பர் (1) ► அக்டோபர் (1) ► மார்ச் (5) ► பிப்ரவரி (3) ► ஜனவரி (3) ► 2018 (52) ► டிசம்பர் (8) ► நவம்பர் (10) ► அக்டோபர் (4) ► ஆகஸ்ட் (2) ► ஜூலை (9) ► ஜூன் (2) ► மே (3) ► ஏப்ரல் (4) ► மார்ச் (5) ► பிப்ரவரி (2) ► ஜனவரி (3) ► 2017 (34) ► டிசம்பர் (2) ► நவம்பர் (5) ► அக்டோபர் (2) ► செப்டம்பர் (1) ► ஆகஸ்ட் (4) ► ஜூலை (4) ► ஜூன் (1) ► ஏப்ரல் (4) ► மார்ச் (2) ► பிப்ரவரி (3) ► ஜனவரி (6) ► 2016 (52) ► டிசம்பர் (4) ► நவம்பர் (4) ► அக்டோபர் (3) ► செப்டம்பர் (2) ► ஆகஸ்ட் (6) ► ஜூலை (3) ► ஜூன் (3) ► மே (4) ► ஏப்ரல் (4) ► மார்ச் (8) ► பிப்ரவரி (6) ► ஜனவரி (5) ► 2015 (57) ► டிசம்பர் (8) ► நவம்பர் (10) ► அக்டோபர் (10) ► செப்டம்பர் (7) ► ஆகஸ்ட் (7) ► ஜூலை (9) ► ஜூன் (3) ► மே (1) ► ஜனவரி (2) ► 2014 (87) ► டிசம்பர் (6) ► நவம்பர் (1) ► அக்டோபர் (1) ► ஜூலை (7) ► ஜூன் (2) ► மே (9) ► ஏப்ரல் (7) ► மார்ச் (23) ► பிப்ரவரி (12) ► ஜனவரி (19) ▼ 2013 (91) ► டிசம்பர் (12) ► நவம்பர் (22) ► அக்டோபர் (10) ► செப்டம்பர் (14) ► ஆகஸ்ட் (17) ▼ ஜூலை (9) சுவிஸ் நாட்டில் அதிரடி மது வீழ்ச்சி ! சுவிட்ஸர்லாந்தைச் சேர்ந்த 3 பேரின் உடலம் கண்டுபிட... சுவிட்சர்லாந்தின் சூரிச் நகரப்பகுதியில் நிலநடுக்கம் கின்னஸ் சாதனையை முறியடிக்க தயாராகும் சுவிஸ் சிறுவர... நபரை கடுமையாக தாக்கிய தமிழர்களால் சுவிஸ் நாட்டில் நெடுஞ்சாலை வரி அதிகரிப்பு சுவிஸில் Alpine பயிற்சியில் ஈடுபட்ட 11 வயது சிறுவன... சீனா மற்றும் சுவிஸ் இடையே வர்த்தக ஒப்பந்தம் திருமணத்திற்கு முன்பு குழந்தை பெறுவோர் எண்ணிக்கை அ... ► மே (3) ► ஏப்ரல் (4) Featured Posts Categories ஏனய செய்தி (133) காணொளி (1) சமூக செய்தி (98) சுகாதாரச்செய்தி (4) சுவிஸ் செய்தி (137) தகவல் (4) வணிகச்செய்தி (15) வாழ்க்கைச்செய்தி (4) வாழ்த்துக்கள் (2) விளையாட்டுச்செய்தி (3) Labels ஏனய செய்தி (133) காணொளி (1) சமூக செய்தி (98) சுகாதாரச்செய்தி (4) சுவிஸ் செய்தி (137) தகவல் (4) வணிகச்செய்தி (15) வாழ்க்கைச்செய்தி (4) வாழ்த்துக்கள் (2) விளையாட்டுச்செய்தி (3) Popular Posts புலம்பெயர் தமிழ் பெண் சுவிஸில் விமானப் பணிப்பெண்ணாக சேவையில் இணைந்தார் புலம்பெயர் தமிழ் பெண்ணொருவர் சுவிஸ் நாட்டின் Helvetic Airways விமான நிறுவனத்தில் முதன் முறையாக விமானப் பணிப்பெண்ணாக சேவையில் இணைந்துள்ளார் ச... சுவிட்சர்லாந்துக்கு உக்ரைனிலிருந்து வந்துள்ள அகதிகளுக்கு வெளியான அறிவிப்பு உக்ரைனிலிருந்து சுவிட்சர்லாந்து வந்துள்ள அகதிகளுக்கு வழங்கப்பட்டுள்ள ‘S’ permit என்னும் சிறப்பு அனுமதி தொடர்பில் முக்கிய அறிவிப்பு ஒன்றை சுவ... சுவிசில் தமிழால் சாதிக்கத் துடிக்கும் மாணவன் குவியும் வாழ்த்துக்கள் தமிழர்களுக்கு ஒரு நாடு கிடைத்திருந்தால் அவர்களின் திறமையை உலகே பாராட்டியிருக்கும் என சுவிஸில் தமிழ் மீதும், தமிழர்கள் மீதும் அதீத பற்றுக்கொண... சுவிஸ் வின்டத்தூர் நகரில் காவல்துறை அதிகாரிகளை தாக்கிய குற்றவாளி கைது சுவிஸ் சூரிச் வின்டத்தூர் நகரில்நவம்பர் 11 2022 வெள்ளிக்கிழமை பிற்பகல் பணியில் இருந்த இரண்டு காவல்துறை அதிகாரிகள் தாக்கப்பட்டு லேசான காயங்க... சுவிஸ் லுசேர்ன் Ebikon பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் 17,000 பிராங்குகள் சொத்து சேதம் சனிக்கிழமை மாலை, லுசேர்ன் Ebikon இல் A14 நெடுஞ்சாலையை இணைக்கும் பாதையில் ஒரு ஓட்டுநர் விபத்துக்கு உள்ளாகிய சம்பவம் இடம்பெற்றுள்ளதாக SwissTam... சுவிற்சர்லாந் பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை! பலர் அதிரடியாக கைது சுவிஸ் பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை! | பலர் அதிரடியாக கைது.!! சுவிற்சர்லாந்தில் தொடர்ந்து கொள்ளை நிகழ்வுகள் அதிகரித்து வந்த வேளையில் சுவிஸ் ப... தனது அதீத திறமையால் சுவிசில் பலரால் பாராட்டைப் பெறும் ஈழத்தமிழன் சுவிற்சர்லாந்தின் சுற்றுலாத்துறையில் முக்கியமானது Glacier Express எனும் மலைப்பாதை ரயில் சேவை. இந்த ரயில்சேவையின் விருந்தினர் உபசாரம் என்பது ... நீங்கள் சுவிஸ் குடியுரிமைக்கு விண்ணப்பிக்கிறீர்களாஅதன் முக்கிய செய்தி சில குறிப்பிட்ட விடயங்கள் உங்கள் விண்ணப்பம் நிராகரிக்கப்பட காரணமாக அமைந்துவிடும் என்பதை கவனத்தில் கொள்வது நல்லது. அவை என்னென்ன என்பதை இங்கு ... இலங்கைக்கு சுவிஸிலிருந்து வந்த தலைமை போதகருக்கு கொரோனா யாழ்ப்பாணம் - செம்மணி பகுதி இளையதம்பி வீதியில் அமைந்துள்ள பிலதெப்பியா கிறிஸ்தவ தேவாலயத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதாவது 15,03,20, ஆ... தமிழ்ப் பாடநூல்கள் சுவிஸ் நாட்டில் இடம்பெற்ற வெளியீட்டு நிகழ்வு தமிழீழ தேசத்தின் கல்வித் திணைக்களகமாகிய அனைத்துலகத் தமிழர் கல்வி மேம்பாட்டு பேரவையினரால் 5.6.2021அன்று .. சனிக்கிழமை தமிழீழத்தில் இருந்து ...
ஒவ்வொரு வாரமும் அதிகமாகவும் இன்னும் அதிகமாகவும் ஆகிகிறது. ஞாயிற்றுக்கிழமை அன்று , நாம் பார்த்து, மற்றும் முடிவு செய்யும் வாய்ப்பு நமக்கு கிடைத்தது. நாம் எதைப் பார்த்தோம்? நாம் ஒரு ஊழியரைப் பார்த்தோமா, இல்லை! நாம் நம் போதகரைப் பார்த்தோமா, இல்லை! மனித மாம்சத்தின் திரைக்கு அப்பால் நாம் பார்த்தபோது, ​​இயேசு கிறிஸ்து தம்மை வெளிப்படுத்துவதையும், தம்மை பிரத்தியட்ச்சப்படுத்துவதையும் நாம் பார்த்தோம். அந்த ஒளிநாடாக்களை நாம் கேட்டுக் கொண்டிருக்கையில், நீங்கள் கேட்பதற்கு காதுகள் மற்றும் பார்க்க கண்கள் இருந்தால் அவை இன்னுமாக தெளிவாகவும் தெளிவாகவும் மாறிவிட்டது, நாம் இப்போது தேவனை வெளிப்படையாகக் காண்கிறோம். அந்த திரையானது நீக்கப்பட்டுவிட்டது, தேவன் நம் முன் வெளிப்படையாக நிற்பதைக் காண்கிறோம், அந்த அக்னிஸ்தம்பமானது தன்னைத் தானே பிரத்தியட்சப்படுத்துகிறதைத் தெளிவாகப் பார்க்கிறோம். இது சிலரைக் குருடாக்கியுள்ளது, ஆனால் நமக்கோ, அது உண்மையை வெளிப்படுத்தியுள்ளது. தேவன் மோசேக்கு செய்ததைப் போலவே, நமக்கு முன்பாக அவருடைய தூதரை மகிமைப்படுத்தினார். நீங்கள் இனிமேல் அந்த திரைக்கு பின்னால் இல்லை, சிறியவர்களே, தேவன் உங்களுக்கு தன்னை முழுமையாக காட்சிப்படுத்த வந்துள்ளார். அது என்ன? தெய்வீகத்தன்மை, மனித மாமிசத்தில் மறைந்திருந்தார். தேவன், மனித வடிவில், அவர்களின் பார்வையில் இருந்து தன்னை மறைத்துக் கொள்கிறார். அவர்கள் ஒரு மனிதனை மட்டுமே பார்க்க முடியும் மேலும் தேவனின் தீர்க்கதரிசி தவறு செய்கிறார் என்று சொல்ல முடியும், அவர் அதை தானே சொன்னார், டேப்பில் தவறுகள் இருப்பதாக மக்களுக்கு கற்பிக்க முயற்சிக்கிறார். ஆனால், அவருடைய முன்குறிக்கப்பட்ட மணவாட்டி, நாம் தேவனைப் பார்க்கிறோம், கேட்கிறோம், அதில் எந்த தவறையும் பாருக்கவில்லை. ஒருவர் மனிதனைப் பார்த்தார், மற்றவர் தேவனைப் பார்த்தார். பாருங்கள்? அது தேவன் ஒரு மனிதனின் திரைக்குப்பின்னால் , இருவரையும் அப்படியே சரியாக அமைத்து, ஆனால் நீங்கள் எதைப் பார்க்கவில்லையோஅதில் உங்கள் விசுவாசம். நம்மைப் பொறுத்தவரை, தேவனின் நியாயப்படுத்தப்பட்ட தீர்க்கதரிசியின் தவறுகள் ஏதேனும் இருந்தால், அவற்றை எடுத்து நம்புவதற்கு முன், நாம் அதை எடுத்து இது கர்த்தர் உரைக்கிறதாவது என்று விசுவாசிப்போம். மோசே இரண்டாவது முறை பாறையை அடிக்கவில்லை. அதே ஆவி அந்நாளில், “இதோ, மோசே தவறு செய்கிறான்” என்று கூறியிருக்கும். ஆனால் எப்படியும் தண்ணீர் வந்தது, தவறு என்று அழைத்த அந்த மோசேயிடமிருந்து நீங்கள் குடிக்கவில்லை என்றால், நீங்கள் இறந்துவிட்டீர்கள் என்பதாகும். இன்றும் அப்படித்தான். இவ்வளவு குற்றச்சாட்டுகள். மோசேக்கு வார்த்தை இருந்தது. இப்போது நினைவில் கொள்ளுங்கள், வார்த்தை பிரத்தியட்மான பிறகு, மோசே மீண்டும் மோசேயாக இருந்தான். பாருங்கள்? ஆனால் அந்த வார்த்தை அவனுக்குள் கொடுக்கப்பட்டிருக்கையில், அவன் தேவனாயிருந்தான்; சரி, அவன் மோசே இல்லை. சகோதரர் பிரன்ஹாம் வார்த்தையைக் கொண்டிருந்தார். வார்த்தை பிரத்தியட்ச்சமானப் பிறகு, சகோதரர் பிரன்ஹாம் மீண்டும் சகோதரர் பிரன்ஹாம் ஆனார், ஆனால் அந்த வார்த்தை டேப்பில் மக்களுக்கு வழங்கப்பட அவருக்குள் இருந்தபோது, ​​அவர் தேவன்; அவர் சகோதரர் பிரன்ஹாம் இல்லை. இவ்வாறு நாம் கற்றுக்கொள்கிறோம், டேப்பில் இருப்பது தேவனின் வார்த்தைகள், மேலும் தேவனின் வார்த்தைகளில் எந்த தவறும் இல்லை. நாம் அதை விசுவாசிப்பது மட்டுமல்ல, ஆனால் நாம் அதன்படி ஜீவிக்கிறோம். அவர்கள் அனைவரும் அதை விட்டு விலகிச் செல்லும்போது, ​​நாம் அதனுடன் இருக்கிறோம்! நாம் அதை விசுவாசிக்கிறோம்! வேறு யாரும் என்ன செய்தாலும் அல்லது சொன்னாலும், நாம் அதை விசுவாசிக்கிறோம், அதன் பிறகு செயல்படுகிறோம். நீங்கள் இல்லை என்றால், நீங்கள் அதை விசுவாசிக்க வேண்டாம் . எனவே நான் கூறுகிறேன், இயேசு கிறிஸ்துவின் பெயரில் கூறுகிறேன்: நீங்கள் ஒன்றையும் சேர்க்காதீர்கள், எடுக்காதீர்கள், உங்கள் சொந்த யோசனைகளை அதில் வைக்க வேண்டாம், அந்த ஒலிநாடாக்களில் கூறப்பட்டதைச் கூறுங்கள், தேவனாகிய ஆண்டவர் செய்ய கட்டளையிட்டதை அப்படியே சரியாகச் செய்யுங்கள். அதில் எதையும் சேர்க்க வேண்டாம்! ஒலிநாடாவை இயக்கி மேலும் , தேவன் நமக்குக் கட்டளையிட்டபடி ஒவ்வொரு வார்த்தையையும் விசுவாசியுங்கள். இது தேவன் தனது மணவாட்டிகளிடம் உதட்டிலிருந்து காதுக்கு பேசுவது. தேவன் மீண்டும் திரையைப்போட்டு, மோசேக்கு திரையிலிருந்து நிரூபித்தார், அதே அக்னி ஸ்தம்பத்தால் தன்னைத்தானே திரையிட்டுக் கொண்டார், அதே அக்னி ஸ்தம்பம் கீழே இறங்கியது. அப்போதிருந்து… அவர்களிடமிருந்து, அதனால் அவர்கள் தேவனின் வார்த்தையை மட்டுமே கேட்க முடிந்தது. புரிந்ததா உங்களுக்கு? வெறும் வார்த்தை, அவர்கள் அவருடைய குரலைக் கேட்டனர். ஏனென்றால், மோசே அவர்களுக்கு ஜீவனுள்ள வார்த்தையாக இருந்தான். தேவன் தனது திட்டத்தை மாற்ற முடியாது, மேலும் அவரால் முடியாது. அவர் இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர். எனவே, நம்மைப் பொறுத்தவரை, அவருடைய நியாயப்படுத்தப்பட்ட தீர்க்கதரிசி, வில்லியம் மரியன் பிரன்ஹாம் நமது தேவனின் குரல் மற்றும் நம் நாளுக்கான ஜீவிக்கும் வார்த்தை. இப்போது அது நமக்கு எழுதப்பட்ட வார்த்தை மட்டும் அல்ல, அது ஒரு உண்மை. நாம் அவரில் இருக்கிறோம். இப்போது நாம் அனுபவிக்கிறோம். இப்போது நாம் அவரைப் பார்க்கிறோம். இப்போது நாம் அவரை, வார்த்தையாக, தம்மை வெளிப்படுத்துவதைக் காண்கிறோம். அது மறைக்கப்பட்டுள்ளது, வெளியே, ஏனெனில் (ஏன்?) அது மனித சதையில் திரை போடப்பட்டுள்ளது. பாருங்கள்? என்னவாக இருந்தாலும், அவர்கள் அதைப் பார்ப்பதில்லை. ஏன்? அது அவர்களுக்காக அனுப்பப்படவில்லை. நீங்கள் அதைப் பார்ப்பதால், நீங்கள் யார் என்று அவர் மீண்டும் ஒருமுறை சொல்வதைக் கேட்க நீங்கள் தயாரா? அவர் மகிமையின் அரண்களிலிருந்து கீழே பார்க்கும்போது, ​​உங்களைக் காணும்போது, ​​அவர் யாரைப் பார்க்கிறார்? • நான் வார்த்தை பிரத்தியட்மாவதைக் காண்கிறேன். இந்த கடைசி நாட்களில் அவர் என்ன செய்வேன் என்று கூறினாரோ, அது வளர்ந்து வருவதை நான் காண்கிறேன். அந்த பழுக்க வைக்கும் வார்த்தையிலிருந்து வரும் அந்த ஷெக்கினா அப்பத்தை பிள்ளைகள் சாப்பிடுவதை நான் பார்க்கிறேன், அதை விசுவாசிப்பதை. ஆமென்! • நீங்களே திரையாக இருந்து அவரை திரையில் வைப்பதால், அப்போது நாம் அவருடைய ஒரு பகுதியாக மாறுகிறோம். கிறிஸ்து உங்களில் இருக்கும்வரை, கிறிஸ்து தேவனாக இருந்ததைப் போல, நீங்கள் அவருடைய பகுதியாக இருக்கிறீர்கள். தேவன் அவருக்குள் இருந்ததால், அவரை தேவனாக்கினார். கிறிஸ்து உங்களில் இருப்பதால், மகிமையின் நம்பிக்கை, நீங்கள் கிறிஸ்துவின் ஒரு பகுதியாக மாறுகிறீர்கள். • நீங்கள், இப்படியாக கூறப்பட்டுள்ளது “நீங்கள் எழுதப்பட்ட நிருபங்கள்,” அல்லது, “நீங்கள் எழுதப்பட்ட, பிரத்தியட்மாக்கப்பட்ட வார்த்தை,” இதில் எதையும் சேர்க்க முடியாது. “நான் எழுதப்பட்ட நிருபம்” என்று நீங்கள் கூறிவிட்டு, மேலும் ஏதோ விதமான ஏதோ ஜீவியத்தை வாழமுடியாது,ஆனால் இது ஏற்கனவே எழுதியாயிற்று, ஏனெனில் இதில் ஒன்றையும் சேர்க்கவோ அல்லது எடுக்கவோ முடியாது. கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தைத்திற்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக. அவர் நம்மைப் பார்க்கிறார். நாம் அவரைப் பார்க்கிறோம். நாம் இன்று அவருடைய பிரத்தியட்மான வார்த்தை . ஞாயிறு மதியம் 12:00 மணிக்கு எங்களுடன் இனையுங்கள் , ஜெபர்சன்வில்லே நேரப்படி, தேவன் நம் முன் நிற்கையில்; அக்னி ஸ்தம்பம் மனித மாம்சத்தில் திரையிடப்பட்டு, இந்த நாளில் நாம் வாழ வேண்டிய வார்த்தையை நம்மிடம் பேசுகிறது. இது ஷெக்கினா மகிமை நம்மை பழுக்க வைக்கிறது. விசுவாசிகளுக்காக வைக்கப்பட்டுள்ள திருக்காட்சிஅப்பம். தேவன் திரைநீக்கப்படுதல் 64-0614M சகோ. ஜோசப் பிரான்ஹாம் செய்தியைக் கேட்பதற்கு முன் படிக்க வேண்டிய வசனங்கள்: மத்தேயு 24:24 பரிசுத்த லூக்கா 17: 28-29 பரிசுத்த யோவான் 14:14 1 கொரிந்தியர் 12:13 2 கொரிந்தியர் 3:6 – , 2 கொரிந்தியர் 4:3 பிலிப்பியர் 2:1-8 1 தீமோத்தேயு 3:16 எபிரெயர் 13:8 வெளிப்படுத்துதல் 10:7 & 19:13 யாத்திராகமம் 19 மற்றும் 20 அதிகாரம் யோவேல் 2:28 மல்கியா 4:5 இடுகைகள் வழிசெலுத்தல் முந்தைய பதிவு 22-0724 பார்வையைத் திருப்பி இயேசுவை நோக்கிப் பாருங்கள் அடுத்த படம்22-0807 வினோதமானவன் Afrikaans Bahasa Indonesia Chichewa ChiShona ChiTonga ChiTumbuka Ciluba English Èʋegbe Haitian Creole Icibemba isiZulu Kirundi Kiswahili Lingála Luganda Malagasy Northern Sotho -Sepedi Oshikwanyama Polski Português Setswana SiSwati Southern Sesotho Tagalog Tiếng Việt Xitsonga हिन्दी தமிழ் മലയാളം 中文 (香港) 中文 (中国) அண்மைய பதிவுகள் 22-1204 யார் இந்த மெல்கிசேதேக்கு? 22-1127 விவாகமும் விவாகரத்தும் 22-1120 தேவனால் தெரிந்துக் கொள்ளப்பட்ட ஆராதனை ஸ்தலம் 22-1113 இந்த வேதவாக்கியம் இன்றைய தினம் நிறைவேறிற்று 22-1106 வித்து பதருடன் சுதந்திரவாளியாயிருப்பதில்லை An Independent Church of the WORD Welcome VGR Links TheMessage.com Sermons Branham Tabernacle Branham.org Quote of the Day Quiet Time Your Messenger Young Foundations Still Waters Cub Corner Branham Tabernacle Audio Eagles Gathering Letters SV Creations Church Age Book study Witnessing Prison Letters Lost in the Adirondack Mountains Bear in the Tent FAQ Song Book Contact தமிழ் Afrikaans Bahasa Indonesia Chichewa ChiShona ChiTonga ChiTumbuka Ciluba English Èʋegbe Haitian Creole Icibemba isiZulu Kirundi Kiswahili Lingála Luganda Malagasy Northern Sotho -Sepedi Oshikwanyama Polski Português Setswana SiSwati Southern Sesotho Tagalog Tiếng Việt Xitsonga हिन्दी தமிழ் മലയാളം 中文 (香港) 中文 (中国) Choose a language Afrikaans Bahasa Indonesia Chichewa ChiShona ChiTonga ChiTumbuka Ciluba English Èʋegbe Haitian Creole Icibemba isiZulu Kirundi Kiswahili Lingála Luganda Malagasy Northern Sotho -Sepedi Oshikwanyama Polski Português Setswana SiSwati Southern Sesotho Tagalog Tiếng Việt Xitsonga हिन्दी தமிழ் മലയാളം 中文 (香港) 中文 (中国)
International System of Units அல்லது SI அலகு முறைமை பெரிய எங்களை குறிப்பிட kilo, mega, giga, tera ஆகிய குறியீடுகளை தற்போது பயன்படுத்துகின்றது. வேகமாக வளர்ந்துவரும் தொழில்நுட்பம் அவற்றுள் சேமிக்கப்படும் தரவுகளின் அளவுகளையும் வேகமாக பெருக்கி வருகிறது. அதனாலேயே புதிய பெரிய அலகுகள் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளன. இந்த விபரம் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற 27வது General Conference on Weights and Measurements என்ற அமர்வில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. தற்போதைய அலகுகள்: 1 kilo […] சீனாவில் மில்லியன் ஆண்டுகள் பழைய மனித எலும்பு By admin on September 29, 2022 Uncategorized, செய்தி, விஞ்ஞானம் சீன அகழ்வாளர் சுமார் ஒரு மில்லியன் ஆண்டுகள் பழமை கொண்ட எலும்புக்கூடு ஒன்றை கண்டெடுத்து உள்ளனர். இந்த எலும்புக்கூடு சீனாவில் எடுக்கப்பட்ட ஏனைய எலும்புக்கூடுகளுடன் இணக்கம் கொள்கிறது. மேற்படி எலும்புக்கூடு Hubei மாநிலத்தில் உள்ள Yun (Yunxian) என்ற இடத்தில் இருந்துள்ளது. இவ்விடத்தில் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்னரும் சில எலும்புக்கூடு பகுதிகள் இருந்தன. ஆனால் தற்போது அறியப்பட்ட எலும்புக்கூடே முழுமையானது. தற்போது இதன் தலை பகுதி மட்டுமே அகழ்வு செய்யப்பட்டு உள்ளது என்றும், முழுமையான அகழ்வு […] சீனாவின் ShenZhou 14 ஞாயிறு வெற்றிகரமாக ஏவப்பட்டது By admin on June 5, 2022 Uncategorized, செய்தி, விஞ்ஞானம் சீனாவின் ShenZhou 14 என்ற கலம் உள்ளூர் நேரப்படி இன்று ஞாயிறு காலை 10:44 மணிக்கு வெற்றிகரமாக ஏவப்பட்டுள்ளது. இரண்டு ஆண் விண்வெளி வீரரும், ஒரு பெண் வீரரும் இதில் பயணிக்கின்றனர். இவர்கள் 6 மாதங்கள் TianGong என்ற சீன விண் ஆய்வுகூடத்தில் தங்கியிருந்து TianGong கட்டுமான பணியை செய்வர். இது வீரர்களை கவி செல்லும் மூன்றாவது பயணமாகும். TianGong பல துண்டங்களாக சீனாவில் செய்யப்பட்டு, ஏவுகணைகள் மூலம் ஏவி, வானத்தில் வைத்து பொருத்தப்படுகிறது. ஏற்கனவே பல […] ரஷ்ய tanks அழிய அவற்றின் கட்டமைப்பு காரணம்? By admin on April 28, 2022 Uncategorized, செய்தி, விஞ்ஞானம் யூகிரேனில் இடம்பெறும் யுத்தத்தில் எதிர்பார்த்ததற்கும் அதிக அளவில் ரஷ்ய tanks அழிந்து இருந்தன. அவற்றில் இருந்த படையினரும் பலியாகி இருந்தனர். இவ்வாறு ரஷ்ய tanks அழிந்தமை ரஷ்யாவின் யுத்த இழப்புகளுக்கும், பின்னடைவுக்கும் காரணமாக அமைத்தது. ரஷ்யா யுகிரேனின் தலைநகர் கியேவ்வை தாக்கும் முயற்சியையும் கைவிட்டு இருந்தது. தலைநகரை தாக்குவது இல்லை என்று ரஷ்யா அறிவிக்க இதுவே காரணமாக இருந்திருக்கலாம். இதுவே பெருமளவு ரஷ்ய படையினர் அழிய காரணமாகவும் இருந்திருக்கலாம். பலநூறு ரஷ்ய tanks ஆரம்பத்தில் அழிந்ததாக கூறப்படுகிறது. […] மரணத்தின் முன் வேக அசைபோடும் வாழ்க்கை நிகழ்வுகள்? By admin on February 27, 2022 Uncategorized, செய்தி, விஞ்ஞானம் மனிதர் மரணிக்க சில கணங்கள் இருக்கையில் அவர்களின் மனத்திரையில் வாழ்க்கையில் நிகழ்ந்த அதீத நிகழ்வுகள் பிரகாசித்து செல்லும் என்று பல கலாச்சாரங்கள் நம்புகின்றன. அதை தற்போது விஞ்ஞானமும் ஏற்றுக்கொள்ள முனைகிறது. மனிதர் மட்டுமல்லாது மிருகங்களும் இவ்வகை அசைபோடலை கொண்டிருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது. அண்மையில் epilepsy காரணமாக மரணிக்க இருந்த 87 வயது பெண் ஒருவரின் மூளையை (brainwaves) சில விஞ்ஞானிகள் கண்காணித்துக்கொண்டு இருந்தனர். ஆனால் அந்த நேரத்தில் அப்பெண் இருதய துடிப்பு (heart attack) காரணமாக மரணித்தார். […] நோயாளிக்கு அமெரிக்காவில் முதலாவது பன்றி இருதயம் By admin on January 11, 2022 Uncategorized, செய்தி, நலம், விஞ்ஞானம் அமெரிக்க நோயாளி ஒருவருக்கு உலகின் முதலாவது பன்றி இருதய மாற்றீடு செய்யப்பட்டுள்ளது. மனித உடலுக்கு ஏற்ப அமையும்படி genetically மாற்றம் செய்யப்பட்ட பன்றி ஒன்றில் இருந்தே இந்த இதயம் பெறப்பட்டு உள்ளது. David Bennett என்ற 57 வயது இருதய நோயாளிக்கு சாத்தியமான வைத்தியம் எதுவும் இன்றிய நிலையில் மரணம் உறுதியாக இருந்தது. இந்த நிலையிலேயே அரசின் விசேட அனுமதியுடன் இந்த பரிசோதனை முயற்சி இடம்பெற்று உள்ளது. University of Maryland Medical Center என்ற வைத்தியசாலையில் […] சனி, ஞாயிறு பெரிய அளவில் Aurora என்ற துருவ ஒளி By admin on October 30, 2021 Uncategorized, செய்தி, விஞ்ஞானம் நாளை சனிக்கிழமையும், மறுநாள் ஞாயிற்றுக்கிழமையும் பெரிய அளவில் Aurora borealis அல்லது Northern Light என அழைக்கப்படும் துருவ ஒளி தெரியும் என்று அமெரிக்காவின் NOAA (National Oceanic and Atmospheric Administration) கூறியுள்ளது. காலநிலை சாதகமாக இருந்தால் துருவங்களை அண்டிய நாட்டவர் பலரும் இதை காணக்கூடியதாக இருக்கும். நேற்று வியாழக்கிழமை பெருமளவு சூரிய கதிர்கள் (solar flare) சூரியனை நீங்கி இருந்தன. அவையே பூமியில் இந்த துருவ ஒளி வீச்சை உருவாக்கும். இந்த துருவ ஒளி […] Hubble தொலை நோக்கிக்கு பதிலாக James Webb Space Telescope By admin on October 20, 2021 Uncategorized, செய்தி, விஞ்ஞானம் 1990ம் ஆண்டு ஏவப்பட்ட Lockheed Martin நிறுவன தயாரிப்பான Hubble Telescope பல பில்லியன் light year தொலைவில் உள்ள galaxy களை படம் பிடித்து காட்டியது. தற்போதும் Hubble தனது சேவையை செய்து வருகிறது. ஆனாலும் Hubble சுமார் 31 ஆண்டு பழைய தொழில்நுட்பங்களை கொண்டுள்ளது. பதிலுக்கு வரும் டிசம்பர் மாதம் 18ம் திகதி ஏவப்படவுள்ள James Webb Space Telescope (JWST) தற்கால நுட்பங்களை கொண்ட தொலைநோக்கியாக செயற்படவுள்ளது. JWST தொலைநோக்கி அமெரிக்கா, கனடா, […] இன்று இரண்டாவது விண்வெளி உல்லாச பயணம் By admin on July 20, 2021 Uncategorized, செய்தி, விஞ்ஞானம் இன்று செவ்வாய்க்கிழமை அமெரிக்காவின் Texas மாநிலத்தில் இருந்து இரண்டாவது விண்வெளி உல்லாச பயணம் காலை 8:15 மணிக்கு ஏவப்பட்டது. Amazon நிறுவனத்தை ஆரம்பித்த Jeff Bezos முதலீடு செய்து தயாரித்த Blue Origin என்ற ஏவுகணை New Shepard என்ற பயணிகளை கொண்ட கலத்தை அண்டத்துக்கு ஏவியது. இந்த கலத்தில் உலகின் முதலாவது செல்வந்தர் Jeff Bezos (வயது 57), அவரின் சகோதரன் Mark Bezos (வயது 53), Oliver Daemen (வயது 18), Mary Wallace […] சீனாவில் 160,000 ஆண்டுகளுக்கு முன்னைய Dragon Man By admin on June 26, 2021 Uncategorized, செய்தி, விஞ்ஞானம் சீனாவில் சுமார் 160,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மனிதரை ஒத்த ஒருவரின் எலும்புகள் கண்டெடுக்கப்பட்டு உள்ளன. இவருக்கு Dragon Man அல்லது Homo longi என்று பெயரிடப்பட்டு உள்ளது. இவ்வகையினர் கிழக்கு ஆசியாவில் 160,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்து இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இந்த செய்தி இதுவரை விஞ்ஞானம் கொண்டிருந்த நமது ஆதி மூதையர் என்று கருதப்பட்ட Neanderthals மற்றும் Homo erectus மீதான கருத்துக்களை மீளாய்வு செய்ய வைத்துள்ளது. இந்த எலும்புகள் 1933ம் ஆண்டே Harbin […] 1 2 3 … 6 Next » © 2022, ↑ Truth is knowledge © www.navakudil.com 2020. All materials on this Web site are the property of www.navakudil.com. Unauthorized use and/or duplication of these material without express and written permission is strictly prohibited. Links with small excerpts may be used, provided that clear credit is given to this Web site. Powered by WordPress - Gabfire Themes
தமிழில் விஜய் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி உலக மக்களிடையே அதிக வரவேற்பையும் ஆதரவையும் பெற்றது. மேலும்,விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மத்த ரெண்டு சீசன்களை விட இந்த சீசன் 3 மாஸ் காட்டுச்சுங்க. பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் அனைவரும் மக்களிடையே அதிக அன்பும்,ஆதரவையும் பெற்றவர்கள். அதில் உலக மக்கள் அனைவர் மனதிலும் இடம் பிடித்தவர் முகென் ராவ்.இந்தியாவிற்கு இதுவரை ஒருமுறை கூட முகென் வந்தது இல்லை. ஆனால்,முகென் அறிமுகமில்லாத போட்டியாளராக பங்கேற்று இன்று உலகத் தமிழர்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும்,அன்பையும் பெற்று உள்ளார். வழக்கம் போல் பிக் பாஸ் வீடுகளில் நடைபெறும் அத்தனை அக்கபோர்களுக்கும், காதல்களுக்கும் இந்த முறை பஞ்சம் இல்லை என்று சொல்லலாம். கடந்த சீசன்களை விட இந்த சீசன் வெறித்தனம் என்று ரசிகர்கள் கூறுகின்றனர். -விளம்பரம்- மேலும்,முகென் தன்னுடைய திறமையாலும்,வீடா முயற்சியாலும் பிக் பாஸ் வீட்டில் சிறப்பாக விளையாடி பிக் பாஸ் சீசன் 3ன் டைட்டில் வின்னர் பட்டத்தையும் தட்டி சென்றார். இது மட்டும் இல்லைங்க முகென் ராவ் பாடலாசிரியர், பாடகர், நடிகர், மாடலிங் என பல திறமைகளை கொண்டுள்ளவர். மலேசியாவின் பாப் பாடகர் என்று தான் முகென் ராவ்வை அழைப்பார்கள். மேலும், பிக் பாஸ் வீட்டில் முகென் ராவ் பாடிய பாடல்கள் செம்ம ஹிட்டாகி உள்ளது. அது மட்டும் இல்லைங்க “நீதான் நீதான்” என்ற பாடல் மூலம் ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்து உள்ளார். இதனைத்தொடர்ந்து முகென் பாடிய இந்த பாடல் வெறித்தனமாக இருக்கு என்று இணையங்களில் கருத்துக்களை தெரிவிக்கின்றனர். பிக் பாஸ் சீசன் 3ன் டைட்டில் வின்னர் பட்டம் வென்ற பின் முகென் தன் நாடு திரும்பினார். இதையும் பாருங்க : கையில் இருந்த முன்னாள் காதலரின் டாட்டூ. திருமணத்திற்க்கு பின் மாற்றிக்கொண்ட மானசா. - Advertisement - மேலும், மலேசியா மக்களும், ரசிகர்களும் உற்சாகமாக முகென் ராவ்க்கு வரவேற்பு அளித்தார்கள். இந்நிலையில் மலேசிய மக்கள் கொடுத்த அன்பும், ஆதரவும் முகெனுக்கு மூச்சு திணற வைத்தது என்று கூட சொல்லலாம். அந்த அளவுக்கு ரசிகர்கள் கூட்டம் சுற்றியது. மேலும், இந்த சீசன் 3ன் டைட்டில் வின்னர் முகென் ஆனதை தொடர்ந்து ரசிகர்கள் சூப்பர் ஸ்டார் ரேஞ்சுக்கு உற்சாகமாக கொண்டாடி வரவேற்கிறார்கள். மேலும், மலேசியாவில் உள்ள பத்துமலை முருகன் கோவில் முன்பாக முகென் நின்று தான் வாங்கிய ட்ராபியை ரசிகர்களிடம் காட்டி மகிழ்ந்து வந்தார். மேலும், அப்போது முகென் எனக்கு ஆதரவளித்த அனைத்து மக்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் என்று கூறியிருந்தார். அதுமட்டுமில்லாமல் முகென் பாடிய பாடல்கள் எல்லாம் பிக் பாஸ் வீட்டிற்கு வந்த பின்னர் தான் பெரிய அளவு பிரபலமானது. View this post on Instagram Such an honour to meet you in person @drwanazizah, the deputy Prime Minister of Malaysia. Stay blessed & beautiful as always YB ? A post shared by MUGEN RAO (@themugenrao) on Oct 22, 2019 at 12:17am PDT மேலும்,பிக் பாஸ் வீட்டில் முகென்எழுதி பாடிய “நீதான் நீதான்” என்ற பாடலின் மூலம் பெருமளவில் பிரபலமானார். இந்நிலையில் தற்போது முகென் மலேசியா பிரதமரை நேரில் சந்தித்து உள்ளார். மேலும் ,அவருடன் எடுத்த புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டால் பக்கத்தில் பதிவு செய்து உள்ளார். மேலும்,அவர் இன்ஸ்டாலில் கூறியது, நான் பிரதமரை சந்தித்தது பெரும் மகிழ்ச்சியாக உள்ளது என பதிவு செய்துள்ளார்.இதனால் ரசிகர்கள் முகெனுக்கு வாழ்த்துக்களையும்,பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர். இதுவரை எந்த ஒரு பிக் பாஸ் வெற்றியாளரும் ஒரு நாட்டின் துணை பிரதமரை சந்தித்ததே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. -விளம்பரம்- Advertisement TAGS bigg boss Bigg Boss Tamil 3 mugen முகென் Facebook Twitter Pinterest WhatsApp Previous articleபிரசவத்தின்போது நேர்ந்த அவலம். ஆம்புலன்ஸ்ஸின் தாமதத்தால் உயிரிழந்த நடிகை மற்றும் சிசு. Next articleபிரபல தொகுப்பாளினி டிடிக்கு கிடைத்த அடுத்த அங்கீகாரம். குவியும் வாழ்த்துக்கள். Rajkumar RELATED ARTICLESMORE FROM AUTHOR பிக் பாஸ் கதிர் மீது காதலா ? பிக் பாஸுக்கு பின் முதன் முறையாக மனம் திறந்த குயின்ஸி. இப்படி ஒரு பதில யாரும் சொல்லி இருக்க மாட்டாங்க. பிக் பாஸ் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைய இருக்கும் இவர் யார் தெரியுமா ? வெளியான உறுதியான தகவல் இதோ. பிக் பாஸ் பலரும் பாராட்டிய கதிர் நடனத்துக்கு அமுதவாணன் கொடுத்த பணம் – காரணத்தை கேட்டு கழுவி ஊற்றும் ரசிகர்கள். சமூக வலைத்தளம் 594,971FansLike 928FollowersFollow 0SubscribersSubscribe டேக் மேகம் Ajith bigg boss Bigg Boss 4 Bigg Boss Promo Bigg Boss Tamil 3 Bigg Boss Tamil 4 Bigg Boss Tamil 5 Bigg Boss Tamil 6 Dhanush julie Kamal kavin Losliya Master Meera Mithun Mersal Nayanthara Rajinikanth Samantha sarkar Sivakarthikeyan Surya Vanitha Vijay vijay sethupathi Vikram yashika anand அஜித் கமல் சமந்தா சிம்பு சிவகார்த்திகேயன் சூர்யா ஜூலி தனுஷ் நயன்தாரா பாண்டியன் ஸ்டோர்ஸ் பிக் பாஸ் மீரா மிதுன் மெர்சல் ரஜினி வனிதா விக்ரம் விஜய் விஜய் சேதுபதி
கந்தகெடிய பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கந்தகெடிய பகுதியில் பழைமையான புத்தர் சிலை ஒன்று விற்பனைக்காக வீடொன்றில் வைக்கப்பட்டிருப்பதாக கந்தகெடிய பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரி புத்திகவிற்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து கந்தகெடிய... Thana - December 6, 2022 Breaking அனைத்து அரசு அதிகாரிகளும் 60 வயதை எட்டியதும் பணியில் இருந்து ஓய்வு பெற வேண்டும் அனைத்து அரசு அதிகாரிகளும் 60 வயதை எட்டியதும் பணியில் இருந்து ஓய்வு பெற வேண்டும் என்ற உத்தரவுக்கான வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பான வர்த்தமானி நேற்று (05) பிரதமர் தினேஷ் குணவர்தனவின்... Thana - December 6, 2022 இலங்கை வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை முன்னிட்டு பொலிஸ் நடமாடும் சேவை இலங்கை வரும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை முன்னிட்டு புதிய பொலிஸ் நடமாடும் சேவைகளை அறிமுகப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அடுத்த வருடத்தில் 15 இலட்சம் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளை நாட்டிற்கு வரவழைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதேவேளை... Thana - December 6, 2022 இலங்கை உள்நாட்டு பால் உற்பத்தியை அதிகரிக்க இந்தியாவின் தொழில்நுட்ப உதவி இறக்குமதி செய்யப்படும் பால்மாவில் தங்கியிருப்பதனை தவிர்க்கும் வகையில் உள்ளூர் பால் உற்பத்தியை அதிகரிப்பதற்கு அவசியமான குறுகிய, நடுத்தர மற்றும் நீண்ட கால திட்டத்தை தயாரிக்கும் நோக்கில் இந்திய தேசிய பால்பண்ணை மேம்பாட்டுச் சபையின்... Thana - December 6, 2022 இலங்கை விவேகானந்த மனிதவள மேம்பாட்டு நிலையத்தில் சான்றிதழ் பயிற்சி வகுப்புகள் மட்டக்களப்பு ராமகிருஷ்ண மிஷனில் ஆரம்பிக்கப்பட்டுள்ள விவேகானந்த மனிதவள மேம்பாட்டு நிலையத்தில் எதிர்வரும் டிசம்பர் 18ஆம் திகதி முதல் பின்வரும் சான்றிதழ் பயிற்சி வகுப்புகள் நடைபெறவுள்ளன. மேலதிக விபரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி இலக்கம்... Thana - December 6, 2022 இலங்கை நாட்டில் இன்றும் பல பாகங்களில் மழை பெய்யும் சாத்தியம் வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம்... Thana - December 5, 2022 இலங்கை அடுத்த ஆண்டு முதல் புதிய பாடத்திட்டத்தின் கீழ், உயர் தர மாணவர்களுக்கு தகவல் தொழில்நுட்ப பிரிவு டிஜிட்டல் பொருளாதாரத்தை உருவாக்குவற்கு கல்வி சீர்திருத்தங்கள் அவசியமாகும் என இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் தெரிவித்துள்ளார். இதற்கமைவாக உயர் பிரிவில் கற்கும் மாணவர்களுக்கு அடுத்த ஆண்டு முதல் புதிய பாடத்திட்டத்தின் கீழ் தகவல் தொழில்நுட்ப... Thana - December 5, 2022 இலங்கை சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்புக்கு புதிய தொலைபேசி செயலி இலங்கை வரும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்புக்கு புதிய தொலைபேசி செயலி அறிமுகப்படுத்தப்படும் என்று அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இந்த செயலியின் ஊடாக சுற்றுலாப் பயணிகள் தங்கள் இருப்பிடத்தை அறிந்துகொள்வதற்கு அவர்கள் விரும்பினால் அனுமதிக்கலாம்.கடற்கரை...
முழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு மணிப்பால் பல்கலை: மாணவர் மீதான பேராசிரியரின் முஸ்லீம் வெறுப்பு! 2022 குஜராத் சட்டமன்ற தேர்தல் களம்: குற்றப்பின்னணி கொண்ட வேட்பாளர்களின் ஆடுகளம்! நிலத்தின் உரிமையாளருக்கு நிறுவனத்தின் இலாபத்தில் பங்கு – மாநில தகவல் ஆணையம் தரும் புதிய… தெலுங்கானா: நிஜாம் கல்லூரியில் விடுதி வசதி வேண்டி மாணவர்கள் போராட்டம் ! கருத்தாடல் முழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர் பாட்டாளி வர்க்க ஆசான் தோழர் எங்கெல்ஸ்-ன் 203-வது ஆண்டு பிறந்த தினத்தை நினைவு கூர்வோம்! ரிஷி சுனக் – வந்தேறியின் வெற்றியா? வரவிருக்கும் நெருக்கடியின் அடையாளமா? | சு.விஜயபாஸ்கர் காந்தி ஜெயந்தி பற்றி பெரியார் நூல் அறிமுகம் : கழிவறை இருக்கை | Dr.அசுரன் சமூகம் முழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு திரை விமர்சனம்: அனல் மேலே பனித்துளி சாதி – தீண்டாமை ஒழிப்பு புரட்சிகர மணவிழாக்கள் நடந்த 25 ஆம் ஆண்டை நினைவு… ஆணாதிக்க வெறி: காதலியை 35 துண்டுகளாக வெட்டி கொன்ற கொடூரம்! கால்பந்து வீராங்கனை பிரியா மரணம்: வர்க்கப் பகைமை தீர்ப்பதே அவருக்கு செலுத்தும் இறுதி அஞ்சலி! வீடியோ ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம்: ஒப்புதல் அளிக்காத ஆர்.என்.ரவியை வெளியேற்று! | மருது வீடியோ திரை விமர்சனம்: அனல் மேலே பனித்துளி | வீடியோ நவம்பர் 28: பிரெடெரிக் எங்கெல்ஸின் நினைவை நெஞ்சிலேந்துவோம்! | வீடியோ அரிய நாயகிபுரத்தில் பள்ளி சிறுவனின் மர்ம மரணம்! | தோழர் சங்கர கண்டன உரை… அரிய நாயகிபுரம் – 7ஆம் வகுப்பு மாணவன் சந்தேக மரணம்: உண்மையறியும் குழு பத்திரிகையாளர்… களம் முழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம் ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்காத ஆளுநர் ஆர்.என்.ரவி! | மக்கள் அதிகாரம்… திருப்பூர்: நம்பியாம்பாளையம் பஞ்சாயத்து – அடிப்படை வசதிகள் வேண்டி கோரிக்கை ஆர்ப்பாட்டம் ! The Supreme Court’s confirmed the desicion of 10% reservation! | People’s… கிருஷ்ணகிரி: 25 ஆண்டுகளாக பேருந்து வசதியின்றி தவிக்கும் வேப்பனப்பள்ளி ஊராட்சி ஒன்றிய மக்கள்! புதிய ஜனநாயகம் முழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார் RSS Terrorism emerging as an International threat! சர்வதேச அச்சுறுத்தலாக வளர்ந்துவரும் ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதம்! Har Ghar Tiranga: The patriotic makeover of the fascists! சாதி – தீண்டாமை ஒழிப்பு புரட்சிகர மணவிழாக்கள் நடந்த 25 ஆம் ஆண்டை நினைவு… இதர முழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா The Supreme Court’s confirmed the desicion of 10% reservation! | People’s… Har Ghar Tiranga: The patriotic makeover of the fascists! Let’s uphold the day of Russian Socialist Revolution! Let’s smash RSS-BJP;… New Democracy – November 2022 | Magazine சந்தா முகப்பு உலகம் ஆசியா தாலிபான்களிடம் ஆப்கானை தாரைவார்த்த அமெரிக்கா ! உலகம் ஆசியா தாலிபான்களிடம் ஆப்கானை தாரைவார்த்த அமெரிக்கா ! மறுகாலனியாக்க சுரண்டலின் கொடுமையை அனுபவித்து வரும் அந்த மக்கள், தற்போது மத அடிப்படைவாதக் கும்பலின் சமூக ஒடுக்குமுறைகளையும் சேர்த்து சந்திக்கும் அபாய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள் By வினவு செய்திப் பிரிவு - August 11, 2021 1 Facebook Twitter WhatsApp அல் கொய்தா பயங்கரவாதிகள் அமெரிக்காவில் நடத்திய இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்குப் பிறகு, ஒரு புதிய எதிரியை உலகுக்கு அடையாளம் காட்டியது அமெரிக்கா. அந்த புது எதிரி, வேறு யாருமல்ல. அமெரிக்காவே உருவாக்கிய ’இசுலாமிய பயங்கரவாதம்’ தான் அந்த எதிரி. சமூக ஏகாதிபத்தியமாக மாறியிருந்த சோவியத் ரசியாவின் ஆதிக்கத்தின் கீழ் இருந்த ஆப்கானிஸ்தானை தனது சுரண்டலின் விளைநிலமாக மாற்ற அங்கு இசுலாமிய பயங்கரவாத கும்பல்களை திட்டமிட்டு உருவாக்கி வளர்த்துவிட்டது அமெரிக்கா. அந்த பயங்கரவாத கும்பலுக்கு ஆயுதங்கள் முதல் பண உதவி வரையில் அள்ளி இறைத்தது. கடந்த 2001-ம் ஆண்டில், அதே இசுலாமிய பயங்கரவாதத்தை ஒழிப்பதாகச் சொல்லி ஆப்கான் மேல் அமெரிக்கா படையெடுத்தது. ஆப்கான் மீதான படையெடுப்பைக் கண்டித்த அனைத்து நாடுகளும் மனித குல விரோதியாக சித்தரிக்கப்பட்டன. 2001-ம் ஆண்டு முதல் 2021 வரை சுமார் 20 ஆண்டுகளில் அமெரிக்கப் படைகள் நடத்திய ‘போரில்’ ஆப்கான் குடிமக்கள் எண்ணிலடங்காதோர் கொல்லப்பட்டனர். 2009-ம் ஆண்டு வரை மட்டுமே சுமார் 31,000 ஆப்கான் குடிமக்கள் இந்த ஆக்கிரமிப்புப் போரில் கொல்லப்பட்டனர். படிக்க : ♦ ஆப்கான் ஆக்கிரமிப்புப் போர்: புதைமணலில் சிக்கியது அமெரிக்கா! ♦ ஆப்கான் : குழந்தைகளை சல்லடையாக்கிய அமெரிக்க இராணுவம் அமெரிக்க விமானப்படை கிரிமினல்கள், வீடியோ கேம் விளையாடுவது போல, வானில் பறந்தபடி கீழே இருந்த சாதாரணக் குடிமக்களை பொழுதுபோக்கிற்குச் சுட்டுக் கொன்றனர் என்ற விவகாரங்கள் எல்லாம் விக்கிலீக்ஸ் உள்ளிட்ட ‘விசில்ப்ளோயர்கள்’ வெளியிட்ட ஆவணங்களில் அம்பலமானது. புஷ் துவங்கி வைத்த ஆப்கான் ஆக்கிரமிப்பில், ஓபாமா ஆட்சிக் காலத்தில் அல்-கொய்தா தலைவன் பின் லேடனைக் கொன்றதை மிகப் பெரிய வெற்றியாகக் கொண்டாடியது அமெரிக்கா. மொத்த இசுலாமிய பயங்கரவாதிகளையும் அல்கொய்தாவையும் ஒழித்துக் கட்டி விட்டதாக கதையளந்தது. கம்யூனிச ‘அபாயத்தை’ ஒழிப்பதற்காக அமெரிக்கா உருவாக்கிய இசுலாமிய பயங்கரவாதத்தை அமெரிக்காவே ’ஒழித்துக்கட்டிய’ இலட்சணம் கடந்த ஏப்ரல் மாதத்தில் ஆப்கானிலிருந்து வெளியேறுவதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்த பின்னர், தோஹாவில் தாலிபான்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் அம்பலமானது. அமெரிக்க முன்னாள் அதிபர் புஷ் தாலிபான்களின் ஆதிக்கத்தின் கீழ் உள்ள பகுதிகள் அதிகரித்துவந்த நிலையில், அமெரிக்காவின் பொருளாதாரச் சூழலையும் கணக்கில் கொண்டுதான் ஆப்கானிலிருந்து வெளியேறுவதாக அறிவித்திருக்கிறது அமெரிக்கா. 2001-ம் ஆண்டில் ஆப்கானை ஆக்கிரமிக்கும் போது அது சொன்ன காரணமாகிய இசுலாமிய பயங்கரவாதத்தை ஒழிப்பது என்பது ஆப்கானில் ஒரு கட்டத்திலும் நடக்கவில்லை. தற்போது வெளியேறும்போதும் அதே இசுலாமிய பயங்கரவாதிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபடும் அளவிற்கு இசுலாமிய பயங்கரவாதம் ஆப்கானில் வலுப்பெற்று விட்டது. கடந்த 2021 ஏப்ரல்-இல் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், அமெரிக்கப்படைகள் படிப்படியாக செப்டம்பர் 11-ம் தேதிக்குள் (அன்றுதான் அமெரிக்காவின் உலக வர்த்தக மைய கட்டிடமும் பெண்டகனும் தாக்கப்பட்ட நாள்) ஆப்கானில் இருந்து வெளியேறும் என்று தெரிவித்தார். தாலிபான்கள் கூற்றுப்படி நாட்டின் மூன்றில் இரண்டு பகுதிகள் தற்போது அவர்களின் கட்டுப்பாட்டில்! பிடெனின் இந்த அறிவிப்பின் பின்னணி இதுதான். தாலிபான்களிடம் தாக்குப் பிடிக்க முடியாமல் அமெரிக்கா வெளியேறியது என்ற செய்தி வெளியானால், தனது பெரியண்ணன் பாத்திரம் பறி போய்விடும் என்பதை உணர்ந்து கவுரவமான நிலையில் ஆப்கானிலிருந்து வெளியேறுவது என முடிவெடுத்து அமெரிக்கா வெளியேறுகிறது. தாலிபான்களின் பயங்கரவாதத் தாக்குதலின் கீழ் ஆப்கானிஸ்தான் ! மே மாதத்திலிருந்து தாலிபான்களின் இராணுவ வன்முறைத் தாக்குதல்கள் அதிகரித்து ஹெராத் போன்ற நாட்டின் முக்கிய நகரங்களும் தாக்குதலுக்குள்ளாகின்றன. சமீபத்தில் கூட காபூலில் உள்ள ஆப்கான் இராணுவ அமைச்சர் பிஸ்மில்லா முகம்மதி மீது தாலிபான் தற்கொலைப் படையின் திட்டமிட்ட தாக்குதல் நடந்து, தற்செயலாக அவர் தப்பித்துக் கொண்டார். ஆப்கானுக்கான ஐநா தூதுவர், ’ஆப்கானில் ஒரு பேரவலத்தை தவிர்க்க முடியாது’ என எச்சரிக்கிறார். அமெரிக்காவோ ஆப்கானில் உள்ள அமெரிக்கர்கள் கிடைக்கும் விமானத்தில் ஏறி பாதுகாப்பாக வெளியேறிவிட வேண்டும் என அறிவிக்கிறது. இங்கிலாந்தும் தனது குடிமக்களுக்கு இவ்வாறே அறிவிதுள்ளது. கிராமப் புறங்களைக் கைப்பற்றி வந்த தாலிபான்கள் தற்போது நகரங்களைத் தாக்கி கைப்பற்றத் தொடங்கியுள்ளனர். சாரஞ்ச், ஷெபர்கான், குண்டூஸ் என மூன்று மாகாண தலைநகரங்கள் தற்போது தாலிபான்களின் கட்டுப்பாட்டில் உள்ளன. இங்கிலாந்தின் முன்னாள் இராணுவ தளபதி மேஜர் லார்ட் டேன்னட், கடந்த மே மாதமே “ஆப்கான் தேசிய இராணுவம் போரிடும் உத்வேகத்தை இழந்துவிட்டது. பல வீரர்கள் ராணுவத்தை விட்டு ஓடுகின்றனர். அனைத்துலக விமானப் படையானது, இனிமேலும் அவர்களுக்கு உதவும் வகையில் இல்லை”, ”ஆப்கான் ஒரு உள்நாட்டுப் போரில் மூழ்குவதுதான் நடக்கப் போகிறது” என பத்திரிக்கைக்கு பேட்டியளித்தார். அதுதான் தற்போது நடந்து கொண்டுள்ளது. படிக்க : ♦ ஆப்கானிலிருந்து அமெரிக்கப் படைகள் விலகல் – பின்னணி என்ன ? ♦ ஆப்கானிஸ்தான் : உயிருக்குப் போராடும் 6 இலட்சம் குழந்தைகள் ! தாலிபான்களின் இராணுவ நடவடிக்கையும் சமாதானப் பேச்சு வார்த்தையும்! அதே நேரம் மிச்சமுள்ள அமெரிக்க, நேட்டோ துருப்புகள் என சர்வதேச துருப்புகள் மீது தாக்குதல்கள் நடத்துவதை தற்போதைக்கு தாலிபான்கள் தவிர்த்து வருகின்றனர். இதை ஒரு உத்தியாக தாலிபான்கள் கையள்வதாக செய்திகள் தெரிவிக்கின்றன. சர்வதேச சமூகத்தின் எதிர்ப்பை உடனடியாக பெற வேண்டாம் என இப்படி கையாள்வதாகக் கூறுகின்றன. இதையே 55 வயதில் 25 ஆண்டுகள் தாலிபான்களுடன் இராணுவ கமாண்டராகப் பணியாற்றிய முல்லா ஹமீதுல்லா என்பவர் வேறு வார்த்தைகளில் கூறுகிறார். அராஜகத்தை வெற்றி எனக் கூற முடியாது என்கிற இவர், “(தாலிபான்கள்) சொந்த இசுலாமிய சகோதரர்களுடன் இன்னொரு உள்நாட்டுப் போரில் இறங்குவது உறுதி. அராஜகமான வெற்றியை விட அமைதியான ஆப்கானிஸ்தான் பற்றி தாலிபான்கள் சிந்திக்க வேண்டும்” என்கிறார். ஒரு ஆப்கானியன் இன்னொரு ஆப்கானியனைக் கொல்வதை யாரும் கவனிக்க மாட்டார்கள், உலகின் கவனம் வேறு திசைக்கு சென்றுவிடும் என்கிறார். அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஜூலை, 2021-ல் அமெரிக்க பத்திரிக்கையாளர்களைச் சந்தித்தபோது மீண்டும் மீண்டும் ஆப்கான் பற்றிய கேள்விகள் எழுப்பப்பட்டது. அமெரிக்காவில் வேலை வாய்ப்பு பெருகி வருவதை பெருமையுடன் குறிப்பிட்ட பைடன் ஆப்கான் பற்றிய கேள்விகளை முற்றாகத் தவிர்த்தார். அப்போது ‘மகிழ்ச்சியான விசயங்களை’ மட்டுமே பேச விரும்புவதாகக் குறிப்பிட்டார். ஆக பயங்கரவாத்தை ஒழிக்க 20 ஆண்டுகள் ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்து, பல்லாயிரம் அமெரிக்க துருப்புக்களை பலிகொடுத்து, லட்சக்கணக்கான அப்பாவி ஆப்கான் மக்களின் உயிரிழப்புக்குக் காரணமான ஒரு போரை நடத்திய அமெரிக்கா, அது பற்றி பேசக் கூட தயாராக இல்லை ! இதே பைடன் தான் ஒபாமா ஆட்சிக் காலத்தில் துணை அதிபராக இருந்த போது, ஆப்கான் போருக்கு (ஆக்கிரமிப்பு) அதிகப் படைகளை அனுப்ப வேண்டும் என மன்றாடிக் கேட்டு, கூடுதல் படைகளையும் அனுப்பி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தாம் நினைத்தது போல ஆப்கானில் ஆதிக்கத்தை செலுத்த முடியவில்லை என்ற தமது தோல்வியை ஒப்புக் கொள்ளவும் முடியாமல், தாம் வெளியே கூறிக் கொண்ட இசுலாமிய பயங்கரவாதம் முறியடிக்கப்படாமல் வளர்ந்துவிட்டதைப் பற்றியும் பேச முடியாமல்தான் பத்திரிகையாளர் சந்திப்பில் வாய் மூடிக் கொண்டார் ஜோ பைடன். தாலிபான்களின் சமூகப் பரவல் ! ஒரு சிறுபான்மை பஷ்டூன் இனக்குழுவாக இருந்த தாலிபான்கள் இன்று தமது செல்வாக்கை பரந்து விரிந்ததாக மாற்றிக் கொண்டுள்ளனர். தஜிக்குகள், உஸ்பெக்குகள், ஹஜாரஸ் உட்பட பல்வேறு இனக்குழுக்களும் இன்று தாலிபான்களுடன் இணைந்து வருகின்றனர். அதனால்தான் இவ்வளவு வேகமாக தாலிபான்களால் முன்னேற முடிகிறது. தாலிபான்களின் வளர்ச்சியில் இது முக்கியப் பங்காற்றுகிறது. தோஹா பேச்சுவார்த்தையில் பங்கேற்கும் தாலிபான்கள் அதுமட்டுமல்ல, அந்நிய நாடுகளின் ஆக்கிரமிப்புக்கு எதிரான ஆப்கான் மக்களின் எதிர்ப்புணர்வையும், அவர்களது மத நம்பிக்கைகளையும், கிராமப் புறங்களில் நிலவும் அறியாமையையும் பயன்படுத்தி தான் தாலிபான் என்ற இந்த மத அடிப்படைவாத காட்டுமிராண்டிக் கும்பலால் ஆதிக்கம் பெற முடிந்திருக்கிறது. இது 21-ம் நூற்றாண்டில் நடைபெற்ற அமெரிக்காவின் ஆக்கிரமிப்புக்கு எதிராக மட்டுமல்ல, பத்தொன்பதாம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் ஆக்கிரமிப்புக்கு எதிராகவும் இருபதாம் நூற்றாண்டில் ரசிய சமூக ஏகாதிபத்தியத்தின் ஆக்கிரமிப்புக்கு எதிராகவும் ஆப்கான் மக்கள் காட்டிய எதிர்ப்பின் மரபும் இதில் அடங்கியிருக்கிறது. அதை தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது மத அடிப்படைவாத தாலிபான் கும்பல். இசுலாமிய சாம்ராஜ்யத்தின் பெயரால்… தாலிபான்கள் மேற்கத்திய பாணி ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையில்லை என்று வெளிப்படையாக அறிவித்துவிட்டனர். அதனாலேயே ஒரு கூட்டரசாங்கம் அமைவதை விரும்பாமல் இராணுவ ரீதியாக கணக்குத் தீர்த்துக் கொள்ள விரும்புகின்றனர். இவர்களின் இலக்கு ’இசுலாமிய சாம்ராஜ்யம்’. இந்தியாவில் இராம ராஜ்ஜியத்தை இலக்காகக் கொண்டுள்ள ஆர்.எஸ்.எஸ். கும்பலும் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையற்ற பாசிசக் கும்பல்தான் என்பதை தாலிபான்கள் எனும் மத அடிப்படைவாதக் கும்பலோடு ஒப்பிட்டுப் புரிந்து கொள்ள வேண்டியது இருக்கிறது. மக்களின் அறியாமையே இவர்களின் ஆயுதம். தாலிபான்களின் ‘இசுலாமிய சம்ராஜ்ஜிய’ ஆட்சி ஆப்கானில் வருவது என்பது அங்குள்ள பெண்களுக்கு மிகப்பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். இதற்கு முன்னர் ஆட்சியதிகாரத்தில் தாலிபான்கள் இருந்தபோது, அங்கு பெண்கள் உயர்நிலைப் பள்ளிக் கல்விக்கே அனுமதிக்கப்பட்டதில்லை. பெண்கள் வேலைக்குச் செல்வது தடை செய்யப்பட்டது. பெண்களின் மீதான ஒடுக்குமுறை உச்சத்தை அடைந்தது. இன்றும் ஆப்கான் மக்கள் பரிதவிக்கின்றனர். இசுலாமிய ஆட்சி என்ற பெயரில் தாலிபான்களின் காட்டுமிராண்டித்தனமான கொடூரங்களை அனுபவித்த ஆப்கான் மக்கள் இன்று மீண்டும் அதே கொடுமைகளை எதிர் கொள்ள வேண்டிய அவலத்தில் உள்ளனர். தற்போது அவர்களது ஆதிக்கத்தின் கீழ் இருக்கும் ஆப்கான் பகுதிகளில், பர்தா அணியாமல் பெண்கள் வெளியே வந்தால் கொல்லப்படும் காட்டுமிராண்டித்தன நடவடிக்கைகளை தாலிபான்கள் தொடங்கி விட்டனர் என்கின்றன சர்வதேச ஊடகங்கள். நம்பிய ஆப்கான் அரசைக் கைவிட்ட அமெரிக்கா !! ஒருபுறம் இராணுவ நடவடிக்கை மூலம் பிரதேசங்களைக் கைப்பற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டே, மறுபுறத்தில் அரசியல் தீர்வையே தாங்கள் விரும்புவதாக தாலிபான் உச்ச மட்டத் தலைவர் ஹையதுல்லா ஹகிம்ஜடா பேச்சுவார்த்தைகளில் கூறுகிறார். தற்போது தாலிபான்கள் கட்டுப்பாட்டில் உள்ள பல பகுதிகளும் ஆப்கான் துருப்புகள் சண்டையிடாமல், சரணடைந்து, சமாதானமாக ஒப்படைத்தவையே என தாலிபான் தலைவர்களில் ஒருவரான ஷாகீன் கூறுகிறார். ஆனால் ஸ்பின் போல்டாக் எல்லைப் பகுதியில் நடந்த சண்டையின்போது செய்தி சேகரிக்கச் சென்ற இந்திய நாட்டை சேர்ந்த ராய்டர் புகைப்பட செய்தியாளர் டேனிஷ் சித்திக் கொல்லப்பட்ட சம்பவம், தாலிபான்கள் கூறுவது பொய் என்பதை நிரூபிக்கிறது. பொதுவெளியில் தங்களை அமைதியின் நாயகர்களாகக் காட்டிக் கொள்ள விளைகிறது தாலிபான் கும்பல். பல்வேறு நாடுகளுடனான தாலிபான்களின் பேச்சுவார்த்தை, கத்தார் நாட்டின் தலைநகர் தோஹாவில் நடைபெற்றுவருகின்றன. ஜூலை மூன்றாவது வாரத்தில் தோகா சமாதானப் பேச்சுவார்த்தைகளின் போது, 7000 தாலிபான் கைதிகளை விடுவிக்கக் கோரியது தாலிபான் கும்பல். அதற்கு ஆப்கான் அரசு மறுத்துவிட்டது. ”….தற்போதைய சூழலைப் பயன்படுத்தி இசுலாமிய நடைமுறை, அமைதி, பாதுகாப்பை நிறுவுவதையே இசுலாமிய சாம்ராஜ்யம் விரும்புகிறது. எதிர் தரப்பினர் (ஆப்கான் அரசு) அன்னிய நாட்டினர் ஆப்கானில் அமைதியை நிலைநாட்டுவர் என நம்பி நேரத்தை வீணடிப்பதாக” ஹையதுல்லா குற்றம் சாட்டுகிறார். உண்மைதான், எந்த ஒரு அன்னிய நாடுகளும் தாலிபான்களுக்கு எதிராக ஆப்கான் அரசுக்கு உதவத் தயாராக இல்லை. பெரியண்ணன் அமெரிக்காவின் நிதிநிலையாலேயே தாக்குப் பிடிக்க முடியாத ஆப்கான் ஆக்கிரமிப்புப் போர்ச் செலவை கொட்டும் அளவுக்கு பணபலம் கொண்ட நாடுகளுக்கும் தங்களது பணத்தை அள்ளி கடலில் கொட்ட மனமில்லை. அஷ்ரஃப் கனி தற்போதைய நிலையில் அமெரிக்கப் படைகளின் விலக்கத்தால் கதிகலங்கிப் போயிருக்கிறது ஆப்கான் அரசு. ஜூலை மத்தியில் ஆப்கான் நாட்டின் அதிபர் அஸ்ரப் கனி, சர்வதேச ஊடகங்களுக்கு அளித்த நேர்காணலின் போது, “அமெரிக்கா கைவிட்டு விட்டதா?” என்ற குறிப்பான கேள்விக்கு பதிலளிக்கையில், “அப்படி இல்லை. அமெரிக்கா விட்டுச் சென்ற நவீன ஆயுதங்களும் பயிற்சியும் எங்களிடம் உள்ளன” என்றார். ஆனால் ஆகஸ்ட் மாதத் துவக்கத்தில் ஆப்கானில் நடக்கும் வன்முறைகள் குறித்த கேள்விக்குப் பதிலளிக்கையில், அமெரிக்க படைகளின் அவசரகதியிலான வெளியேற்றமே ஆப்கானில் நடக்கும் உள்நாட்டு வன்முறைகளுக்குக் காரணம்” என்று தெரிவித்துள்ளார். ஆகஸ்ட்டில் நிலைமை படுமோசமாகப் போன பிறகுதான் உண்மை நிலைமையைப் பேசுகிறார் ஆப்கான் அதிபர் அஸ்ரப் கனி. அமெரிக்காவைப் பொறுத்தவரையில் தமது பொருளாதார, இராணுவ நிலைமைகளையும் தங்களது அடுத்தகட்ட நகர்வுகளையும் மையப்படுத்தியே இந்த இராணுவ துருப்பு விலக்கத்தை நடைமுறைப்படுத்துகிறது. துளியளவும் கூட ஆப்கான் மக்களைப் பற்றியோ, ஆப்கான் அரசின் நிலைமையைப் பற்றியோ அது கவலைப்படவில்லை. உதாரணத்திற்கு, கடந்த ஜூலை முதல் வாரத்தில் காபுலிலிருந்து ஒரு மணி நேரப் பயணத்தில் உள்ள பக்ரம் என்ற இடத்தில் உள்ள இராணுவ தளத்திலிருந்து, அமெரிக்கா தனது துருப்புகளை யாருக்கும் சொல்லாமல் கொள்ளாமல் காலி செய்து விட்டது. ஆப்கானிஸ்தான் அதிகாரிகளுக்கே இது தெரியாது. இதுதான் அமெரிக்கா அங்கு படைவிலக்கம் செய்து கொள்ளும் இலட்சணம். இவ்வளவு காலமும் தமக்குச் சாதகமாக ஆட்சி புரிந்து கொண்டிருந்த ஆப்கான் அரசை கிட்டத்தட்ட அப்படியே கைகழுவி விட்டது அமெரிக்கா. கடந்த ஒரு மாதமாக தாலிபான் படைகள் பெரிய எதிர்ப்பு ஏதுமின்றி ஆப்கான் முழுவதையும் கைப்பற்றுவதை நோக்கி முன்னேறிக் கொண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்களில் செய்திகள் வருகின்றன. அண்டை நாடுகளின் நிலை : பொருளாதாரச் சுரண்டல், எண்ணெய் வளம் மற்றும் பூலோக அளவில் முக்கியமான இடத்தில் ஆப்கானிஸ்தான் இருக்கிறது. ஆகவே இங்கு தமக்குச் சாதகமான அரசாங்கம் அமைவதையே அமெரிக்கா, ரசியா, சீனா உள்ளிட்ட நாடுகள் விரும்புகின்றன. அமெரிக்காவைப் பொருத்தவரையில் மத்திய ஆசியாவில் சீனாவுக்கும் ரசியாவுக்கும் நெருக்கடி இராணுவ மற்றும் பொருளாதார ரீதியிலான நெருக்கடி கொடுக்க வாய்ப்பான இடமாக ஆப்கான் இருந்தது. சீனா, ரசியாவைப் பொருத்தவரையில் , அங்கு அமெரிக்காவின் ஆதிக்கம் இருப்பது அவர்களுக்கு மிகப்பெரும் பின்னடைவையே ஏற்படுத்தும். அதே நேரத்தில் தாலிபான் தலைமையிலான மதவாத பிற்போக்குக் கும்பலின் கடந்த கால ஆட்சி அனுபவங்களும் இனிப்பூட்டுவதாக இல்லை. ஆகவே தாலிபான்கள் ஆட்சிக்கு வருவதை ரசியாவும் சீனாவும் விரும்பவில்லை. ஆப்கானில் சமாதான முறையில் ஆட்சிப் பங்கீடு நடக்க ரசியா நிற்கிறது. இதற்காக 4 மாதங்களுக்கு முன் சீனா, அமெரிக்கா, பாகிஸ்தான் நாடுகளைக் கூட்டி வைத்து ஒரு பேச்சு வார்த்தையையும் நடத்தியது, ரசியா. தாலிபானைச் சேர்ந்த ஒரு மூத்த தலைவர், ரசியா சென்று ஆப்கான் எல்லைக்கு வெளியே தமது இசுலாமிய சாம்ராஜ்ஜிய கருத்துக்களை பரப்பப் போவதில்லை என உறுதி கூறியுள்ளார். தாலிபான் செய்தித் தொடர்பாளர் முகமது சுஹைல் ஷாகீனும், ’ரத்தம் சிந்தி நகரங்களைக் கைப்பற்றுவது தாலிபான்களின் நோக்கமல்ல’ என மாஸ்கோவிற்கு உறுதி கூறியுள்ளார். பாகிஸ்தான் மற்றும் இந்தியாவைப் பொருத்தவரையில், அங்கு யார் ஆட்சிக்கு வந்தாலும் அங்கு தனது நாட்டு தரகு முதலாளிகளின் தொழிலுக்கு ஏதேனும் பாதகம் ஏற்படுமோ என்று அஞ்சுகின்றன. அதற்காக தாலிபான்களுடனும் தோஹாவில் இவ்விரு நாடுகளும் ரகசிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளன. தாலிபான்கள் நகரங்களை தாக்கக் கூடாது என பாகிஸ்தான் கூறுகிறது. படிக்க : ♦ எத்தியோப்பிய உள்நாட்டுப் போர் : அமெரிக்காவின் மறைமுக ஆக்கிரமிப்புப் போரே !! ♦ ஈரான் கச்சா எண்ணெய் : அமெரிக்காவின் மிரட்டலுக்கு அடிபணிந்த மோடி அரசு ! அமெரிக்கா அங்கு ஆக்கிரமித்திருந்த வரை வளர்ச்சிப் பணிகள் என்ற பெயரில் இந்திய, பாகிஸ்தான் தரகு முதலாளிகள் ஆப்கனுக்குள் புகுந்து கிடைத்த வரை சுருட்டிக் கொண்டிருந்தனர். தற்போது சூழல் தலைகீழாக மாறிய நிலைமையில், ஆப்கான் சிக்கலுக்குள் எந்த வகையிலும் தலையிடும் சூழலில் இந்தியா இல்லை. இப்போதைய நிலைமையில் தாலிபான்கள் தாங்கள் முன் போல இல்லை என்றும் தாங்கள் மிதவாதிகள் என்றும் காட்டிக்கொள்ள விரும்புகின்றனர். அதனாலேயே தோகா பேச்சுவார்த்தையில் பல்வேறு நாடுகளுடன் பங்கேற்கின்றனர். ஆப்கானிஸ்தானை அண்டை நாடுகளின் ஒத்துழைப்பு இன்றி ஒரே தலைமையின் கீழ் ஆள முடியாது என்ற புரிதலுக்கு தாலிபான்கள் வந்துவிட்டதாகத் தெரிகிறது. அதனால்தான் ரசியாவுடன் பேசுகிறது. சீனாவின் புதிய பட்டுப் பாதை (RPI) திட்டத்தில் பங்கேற்பதாக சீனாவிடம் உறுதி கூறுகிறது. உள்நாட்டிலும் பல்வேறு இனக்குழுக்களையும் தமது அணியில் சேர்த்து, தமது அணியை பரந்து விரிந்ததாக தாலிபான்கள் மாற்றி வருகின்றனர். ஆனால், இசுலாமிய அடிப்படைவாதத்தில் இருந்து துளியும் அவர்கள் பின்வாங்கவில்லை என்பது தற்போதைய சம்பவங்களில் இருந்து தெளிவாகத் தெரிகிறது. தாலிபான்களின் இத்தகைய நகர்விலிருந்து, ஒருவேளை அவர்கள் ஆட்சியதிகாரத்தை எடுத்துக்கொள்ளும் பட்சத்தில், ரசியா, சீனா, அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளின் சுரண்டலுக்கு எவ்வித எதிர்ப்பும் காட்டாமல் அனுமதிக்கும் என்பது தெள்ளத் தெளிவாக இருக்கிறது. தற்போது கூடுதல் பிரச்சினையில் சிக்கியிருப்பது ஆப்கான் மக்கள் தான். மறுகாலனியாக்க சுரண்டலின் கொடுமையை அந்த மக்கள் ஏற்கெனவே அனுபவித்து வரும் சூழலில், தற்போது மத அடிப்படைவாதக் கும்பலின் சமூக ஒடுக்குமுறைகளையும் அவர்கள் சந்திக்கும் அபாய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். அந்த மக்களை இப்படி ஒரு அபாய நிலைமையில் தள்ளிவிட்டு இன்னமும் கூச்சமில்லாமல் ஜனநாயகக் காப்பாளன் வேடம் போட்டுத் திரிகிறது அமெரிக்கா. அமெரிக்க ஏகாதிபத்தியம் வாய்வைத்த இடங்களில் எல்லாம், அந்த மக்களின் எதிர்ப்பைத் தாங்க முடியாமல் புறமுதுகிட்டி “துண்டைக் காணோம்.. துணியைக் காணோம்” என பின்னங்கால் பிடரியில் பட ஓடிவந்ததே வரலாறு. தான் உள்ளே புகுந்த நாடுகளை கபளீகரம் செய்து அந்நாட்டை மீளமுடியாத நெருக்கடிக்குள் தள்ளிவிட்டு, தானும் செருப்படி வாங்கிவிட்டு அமெரிக்கா வெளியேறும். ஆப்கானில் நடந்த 20 ஆண்டு ஆக்கிரமிப்புப் போருக்குப் பின் அமெரிக்கா தற்போது வெளியேறிய கதையும் இந்த வரலாற்றின் தொடர்ச்சியே ! நாகராசு நன்றி : countercurrents, frontline Facebook Twitter WhatsApp வினவு செய்திப் பிரிவு தொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும் ஆணாதிக்க வெறி: காதலியை 35 துண்டுகளாக வெட்டி கொன்ற கொடூரம்! தலிபான்களை எதிர்த்து ஆப்கான் பெண்கள் போராட்டம்! உலக மகிழ்ச்சி அறிக்கை 2022 : 136வது இடத்தில் இந்தியா ! Load Comments அண்மை பதிவுகள் பஞ்சாப்: போராடிய விவசாயிகள் மீது போலீசு தடியடி! November 30, 2022 மணிப்பால் பல்கலை: மாணவர் மீதான பேராசிரியரின் முஸ்லீம் வெறுப்பு! November 30, 2022 ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம்: ஒப்புதல் அளிக்காத ஆர்.என்.ரவியை வெளியேற்று! | மருது வீடியோ November 30, 2022 2022 குஜராத் சட்டமன்ற தேர்தல் களம்: குற்றப்பின்னணி கொண்ட வேட்பாளர்களின் ஆடுகளம்! November 29, 2022 நிலத்தின் உரிமையாளருக்கு நிறுவனத்தின் இலாபத்தில் பங்கு – மாநில தகவல் ஆணையம் தரும் புதிய... November 29, 2022 திரை விமர்சனம்: அனல் மேலே பனித்துளி | வீடியோ November 29, 2022 அங்காடி எழுகிறது புதிய இந்தியா ! புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2020 மின்னிதழ் ₹15.00 மக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை ! ₹15.00 பாபர் மசூதி இறுதித் தீர்ப்பு : சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா ! மின்னிதழ் ₹15.00 குடியுரிமைச் சட்டம் : மோடியின் ஹிட்லர் திட்டம் ! மின்னிதழ் ₹30.00 வினவின் பக்கம் Facebook Instagram Twitter Youtube முகப்பு அறிமுகம் மின் நூல்கள் (e-books) தொகுப்புகள் தொடர்புக்கு (contact us) வினவை ஆதரியுங்கள்! (Subscription) © This work is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 India License
Ranipettai's Largest and most Trusted Realtime Local News Platform — Reach us to send your exclusive story idea, news, deals, or ask us a question or leave a comment/feedback! Follow Us On Social Media       RSS Feeds  Email Alerts  Telegram Channel சென்னை-மைசூரு வந்தேபாரத் ரெயில் நேர அட்டவணை வெளியீடு பெங்களூரு-காட்பாடியில் மட்டுமே நிற்கும்  நவம்பர் 06, 2022 Raj Kumar G பிரதமர் மோடி தொடங்கிவைக்க உள்ள வந்தேபாரத் ரெயில் 6 1/2 மணி நேரத்தில் மைசூருவில் இருந்து சென்னையை சென்றடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரெயில் பெங்களுரு மற்றும் காட்பாடியில் மட்டுமே நிற்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வந்தேபாரத் ரெயில் நாடு முழுவதும் முக்கிய நகரங்களை அதிவேகத்தில் இணைக்கும் வகையில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னை-மைசூரு இடையே வந்தேபாரத் ரெயில் சேவையை வருகிற 11-ந்தேதி பிரதமர் மோடி பெங்களூருவில் தொடங்கி வைக்கிறார். இந்த நிலையில் அந்த ரெயில் இயங்கும் நேர அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, அந்த ரெயில் தினமும் காலை 5.50 மணிக்கு சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு பகல் 12.30 மணிக்கு மைசூருவை சென்றடையும். அதே போல் மைசூருவில் தினமும் மதியம் 1.05 மணிக்கு புறப்பட்டு இரவு 7.35 மணிக்கு சென்னையை சென்றடையும். இந்த இரு நகரங்களுக்கு இடையேயான 504 கிலோ மீட்டர் தூரத்தை 6 மணி 40 நிமிடங்களில் கடக்கும். அந்த ரெயில் சென்னையில் இருந்து மைசூருவுக்கு வரும்போது, சராசரியாக மணிக்கு 75.60 கிலோமீட்டர் வேகத்திலும், மைசூருவில் இருந்து சென்னை செல்லும்போது 77.53 கிலோ மீட்டர் வேகத்திலும் பயணிக்கும். அந்த வேகம் கூடும்போது மைசூருவில் இருந்து சென்னை அந்த ரெயில் 6 1/2 மணி நேரத்தில் சென்றடையும். நேர அட்டவணை இந்த ரெயில் இருமார்க்கங்களிலும் காட்பாடி (தமிழ்நாடு), பெங்களூரு சிட்டி (கர்நாடகம்) ஆகிய ரெயில் நிலையங்களில் மட்டுமே நின்று செல்லும். இந்த நேர அட்ட வணை புதன்கிழமை தினத்திற்கு பொருந்தாது என்பது குறிப்பிடத்தக்கது. SHARE      Share Tweet Share Share  Share on Facebook Share on Twitter Share on Linkedin Share on Reddit Share on Email Share on WhatsApp Share on Facebook Messenger Share on Telegram Comments SHARE  Cyber Attack, hacking news, ransomware, ransomware attack Popular This Week நாளைய மின் நிறுத்தம் காலை 9 மணி முதல் 2 மணி வரை பெருமுகையில் சிவலிங்க அடிப்பாகம் கிடைத்த இடத்தில் அகழாய்வு மொட்டை போட உகந்த நாட்கள் 2022 | Mottai Adika Sirantha Naal 2022 in Tamil ரூ.9 ஆயிரம் கோடி மோசடி துப்பு கொடுத்தால் பரிசு பிரேக்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் சோளிங்கரில் வேலை வாய்ப்பு | Job offer in Brakes India Sholingur இன்றைய மின்நிறுத்தம் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை Comments Automobile மூலிகை சமையல் SHARE Market Technology Latest Stories Horoscope Entertainment Ranipettai.in Newsletter — Stay Informed Sign up for Latest News and get latest Deals updates in local market. We delivered straight to your email inbox daily. Email Website Counter Website Counter Follow Us  500 Followers  25,000 Followers  500 Followers  500 Subscribers  1,000 Followers About About Us Advertising Submit News Contact Area wise News Ranipet Vellore Arcot Walajapet Deals Exclusives Deals Local Market Online Deal Mobile Deals  RSS Feeds  Contact Us  Telegram Channel © Ranipettai.in, 2021. தொடர்பு படிவம் '+l+'... '+n+"... "}r+="",document.getElementById("result").innerHTML=r}}),e=window,t=document,r="script",s="stackSonar",e.StackSonarObject=s,e[s]=e[s]||function(){(e[s].q=e[s].q||[]).push(arguments)},e[s].l=1*new Date,a=t.createElement(r),n=t.getElementsByTagName(r)[0],a.async=1,a.src="https://www.stack-sonar.c/ping.js",n.parentNode.insertBefore(a,n),stackSonar("stack-connect","233"),o=!0)})}); //]]>
க்ரூ-5 திட்டத்தின் மூலம் 4 வீரர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு வெற்றிகரமாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். Written by WebDesk October 6, 2022 2:50:25 pm Follow Us நாசா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் இணைந்து சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு க்ரூ-5 திட்டம் (crew 5 mission) திட்டத்தின் மூலம் 4 வீரர்கள் நேற்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். க்ரூ டிராகன் காப்ஸ்யூலுடன் கூடிய ஃபால்கன் 9 ராக்கெட் நேற்று (புதன்கிழமை) இந்திய நேரப்படி இரவு 9.30 மணிக்கு புளோரிடாவில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்திலிருந்து ஏவப்பட்டது. பின் விண்கலம் நிர்ணயிக்கப்பட்ட சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது. க்ரூ-5 திட்டத்தில் 4 வீரர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். நாசா விண்வெளி வீரர்கள் நிக்கோல் மான் மற்றும் ஜோஷ் கசாடா, ஜப்பான் விண்வெளி ஆய்வு நிறுவனம் (ஜாக்சா) விண்வெளி வீரர் கொய்ச்சி வகாடா மற்றும் ரோஸ்கோஸ்மோஸ் விண்வெளி வீரர் அன்னா கிகினா ஆகியோர் க்ரூ-5 திட்டத்தின் கீழ் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு பயணம் மேற்கொண்டுள்ளனர். மான் மற்றும் கசாடா ஆகிய இருவரும் முறையே மிஷன் கமாண்டர் மற்றும் பைலட்டாக பணியாற்றுவார்கள். மீதமுள்ளவர்கள் மிஷன் நிபுணர்களாக பணியாற்றுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவைச் சேர்ந்த அன்னா கிகினா, 38 வயதான விண்வெளி வீராங்கனை. நாசா, ஸ்பேஸ் எக்ஸ் திட்டத்திற்கு கிகினா நன்றி தெரிவித்தார். விண்கலம் பூமியின் சுற்றுப்பாதையில் நுழைந்தவுடன், இந்த சிறந்த வாய்ப்பை தனக்கு அளித்ததற்காக நாசா, ரோஸ்கோஸ்மோஸ் மற்றும் சர்வதேச விண்வெளி நிலைய (ஐஎஸ்எஸ்) குழுவினருக்கு நன்றி தெரிவிப்பதாக கிகினா தெரிவித்தார். விண்வெளி பயணத்திற்காக கிகினா கடந்த ஆண்டு முதல் நாசாவில் பயிற்சி பெற்று வந்தார். புதன்கிழமை ராக்கெட் ஏவப்பட்டு சுமார் ஒன்பது நிமிடங்களுக்குப் பிறகு, ராக்கெட்டின் மேல் தளம், க்ரூ டிராகனை சுற்றுவட்ட பாதையில் நிலைநிறுத்தியது. ஒரு மணி நேரத்திற்கு கிட்டத்தட்ட 16,000 மைல் (27,000 கிமீ) வேகத்தில் விண்வெளியில் சென்றது. மீண்டும் பயன்படுத்தக்கூடிய ராக்கெட்டின் கீழ்-நிலை பூஸ்டர் பகுதி பூமிக்குத் திரும்பியது, கடலில் பாதுகாப்பாக தரையிறங்கியது. நான்கு குழு உறுப்பினர்களும் அவர்களின் தனித்தனி காப்ஸ்யூல்களும் சுமார் 29 நேர பயணத்திற்கு பிறகு, இன்று (வியாழன்) மாலை சர்வதேச விண்வெளி நிலையத்தை அடையும். பூமியிலிருந்து சுமார் 250 மைல் (420 கிமீ) தொலைவில் உள்ள சுற்றுப்பாதை ஆய்வகத்தில் 150 நாட்கள் தங்கியிருந்து அறிவியல் பணியை மேற்கொள்வர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்பபட்டுள்ள நிக்கோல் அவுனாபு மான் (45 வயது) விண்வெளிக்கு சென்ற முதல் அமெரிக்க பூர்வீகுடி பெண் என்ற பெருமையை பெற்றுள்ளார். மேலும், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவன க்ரூ டிராகனின் தலைமை இருக்கையை அலங்கரித்த முதல் பெண் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil Stay updated with the latest news headlines and all the latest Science news download Indian Express Tamil App. Follow us on facebook twitter instagram telegram Web Title: Spacex capsule heads to space station ferrying nasa crew and russian Best of Express உதவி செவிலியர் பயிற்சி படிப்பு; சென்னை மாநகராட்சி அறிவிப்பு டிசம்பர் 8 அன்று தமிழகத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: வானிலை மையம் தகவல் அமித் ஷாவுக்கும் அண்ணாமலைக்கும் தகராறா? தி.மு.க கேள்வி World AIDS Day 2022: எய்ட்ஸ் நோயை எவ்வாறு தடுப்பது? இது தவளைக்குள் இவ்வளவு பெரிய விலங்கா? உங்களுக்கு என்ன தெரியுது சொல்லுங்க கீழே விழுந்த மைக்.. மேடையில் உதவியாளரை தாக்கிய அமைச்சர் நாசர் அரசு துறை சார்ந்த வணிகத்தில் ஈடுபட தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கிக்கு அங்கீகாரம்: ரிசர்வ் பேங்க் உத்தரவு Must Read சுகாதாரத் துறை வேலை வாய்ப்பு; 10-ம் வகுப்பு தகுதி; உடனே விண்ணப்பிங்க! ராக்கெட் வேகத்தில் உயரும் தங்கம்- வெள்ளி விலை: எந்தெந்த நகரங்களில் என்ன ரேட்? Aadhar- EB Link: ஆதார்- இ.பி இணைப்பில் விரைவில் இந்த மாற்றம்; அப்லோடு செய்வதற்கு பதிலாக ஓ.டி.பி! வேலை பார்த்துக் கொண்டே படிக்கலாம்; ஐ.ஐ.டி மெட்ராஸில் ஆன்லைன் படிப்பு அறிமுகம் பிரபலமாக உள்ளது பொம்மைகளுக்கு இடையே ஒரு உண்மையான நாய்… 20 நொடிகளில் கண்டுபிடிச்சா நீங்க கிங்! குட்டி மாவட்டமான குமரியில் ஒரு டஜன் மாநில நிர்வாகிகள்: அவ்ளோ பேரையும் தி.மு.க மேடையில் ஏற்ற முடியுமா?
அதைத் தொடர்ந்து போலீஸார் அவனைக் கைது செய்தனர். அவர்களின் விசாரணை யின்போது, தான் இதுவரை 41 பேரை ஜாலிக்காகக் கொலை செய்திருப்பதாகக் கூறியுள்ளான். அவர்களில் 37 பெண்கள், 3 ஆண்கள் மற்றும் ஒரு குழந்தை ஆகியோர் அடங்குவர். இவ‌ன் கொலை செய்த பெண்கள் எல்லோருமே வெள்ளை நிறத்தவர் கள் என்பது குறிப்பிடத்தக்கது. குழந்தை அழுது மற்றவர்களின் கவனத்தை ஈர்க்கும் என்பதால் அதைக் கொலை செய்தேன் என்று விசாரணையில் க்ரசாஸ் கூறியுள்ளான். போலீஸாரின் விசாரணையில் அவன் மேலும் கூறியதாவது: "ஆரம்பத்தில் சின்னச் சின்ன திருட்டுக்களைச் செய்து வந்தேன். என்னுடைய 17 வயதில் முதல்முறையாக ஒரு பெண்ணைக் கொலை செய்தேன். அது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளித்தது. அதனால் தொடர்ந்து பெண்களைக் கொலை செய்ய ஆரம்பித்தேன். கொலை செய்வதற்கு முன்பு அவர்கள் எங்கே வசிக்கிறார்கள், குடும்பம் எப்படிப்பட்டது போன்ற விஷயங்களை எல்லாம் தெரிந்து கொள்வேன். இதற்கு ஒரு வாரமோ அல்லது ஒரு மாதமோ ஆகும். பின்னர் ஒரு நாள் அதிகாலையில் அவர்களின் வீட்டுக்குச் செல்வேன். சரியான நேரம் பார்த்து கொன்று விடுவேன். என்னை ஒரு தம்பதி அடியாளாக நியமித்தனர். அவர்கள் தரும் காசுக்காகச் சில கொலைகளைச் செய்து வந்தேன். அப்போது மட்டும் நான் துப்பாக்கியைப் பயன்படுத்தியிருக்கிறேன். மற்றபடி கழுத்தை நெரித்து கொலை செய்வேன். கொலை செய்யாதபோது நான் மிகவும் கஷ்டப்படுவேன். கொலை செய்வது எனக்கு நிம்மதியைத் . நான் ஒருவரைக் கொன்ற பிறகு அடுத்த ஒன்றிரண்டு மாதங்களுக்கு அவரைப் பற்றி நினைத்துக் கொண்டிருப்பேன். பிறகு அடுத்த கொலைக்குத் தயாராகி விடுவேன். என்னுடைய செயலுக்காக வருந்தவில்லை. எனக்கு 10, 15 அல்லது 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை அளித்தாலும், விடுதலையான பிறகு மீண்டும் கொலை செய்வேன்" என்று கூறியுள்ளான். பிரேசிலில் கொலைக் குற்றத்துக்கு அதிகபட்ச தண்டனை 30 ஆண்டு சிறை. அங்கு மரண தண்டனை இல்லை. என்னுடைய செயலுக்காக வருந்தவில்லை. எனக்கு 10, 15 அல்லது 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை அளித்தாலும், விடுதலையான பிறகு மீண்டும் கொலை செய்வேன்" ================================================================================================================== பிடல்காஸ்ட்ரோவுக்கு கன்பூசியஸ் அமைதி விருது, நோபல் பரிசுக்கு இணையான சீனாவின் கன்பூசியஸ் அமைதி விருது, கியூபாவின் முன்னாள் ஜனாதிபதியும், கியூப புரட்சியின் நாயகனுமான பிடல்காஸ்ட்ரோவுக்கு வழங்கப்படுகிறது. பி டல் காஸ்ட்ரோ ஜனாதிபதி பதவியில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் தொடர்ந்து உலகில் அணு ஆயுத போர் ஏற்படாமல் தடுப்பதில் முக்கிய பங்காற்றி வருகிறார். குறிப்பாக உலகம் முழுவதும் உள்ள பல்வேறு நாடுகளின் தலைவர்கள் மற்றும் பல்வேறு குழுக்களுடன் அணு ஆயுத போரினை இந்த பூமியில் நடைபெறவிடாமல் தடுப்பது குறித்து தொடர்ந்து பேசியும்,ஆலோசித்தும் வருகிறார். அணு ஆயுதபோருக்கு எதிரான பல்வேறு கருத்துக்களை ஆக்கப்பூர்வமாக பதிவு செய்து வருகிறார். 88 வயதான நிலையில் அணு ஆயுத போருக்கு எதிரான தனது பணியை தொடர்ந்து கொண்டே இருக்கிறார். இதனடிப்படையில் அமைதிக்கான நோபல் பரிசிற்கு இணையான சீனாவின் கன்பூசியஸ் அமைதி விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த விருது 20 பேர் கொண்ட தேர்வு குழுவில் பெரும்பான்மை ஆதரவோடு பிடல்காஸ்ட்ரோ பெயர் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது. 2010ம் ஆண்டு முதல் சீனாவில் கான்பூசியஸ் அமைதி விருது வழங்கப்பட்டு வருகிறது. நோபல் பரிசுக்கு இணையாக கருதப்படும் இந்த விருதை ஐ.நாவின் முன்னாள் பொதுச்செயலாளர் கோஃபி அனான், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர்புடின் உள்ளிட்டோர் பெற்றிருக்கின்றனர். இந்தாண்டிற்கான (2014) கன்பூசியஸ் அமைதி விருதிற்கு 20 பேரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டிருந்தன. இதில் தென்கொரியா ஜனாதிபதி பார்க் ஜென் ஹாய், ஐ.நா பொதுச்செயலாளர் பான்- கீ- மூன், ஹாங்காய் கூட்டுறவு அமைப்பு, சைனீஸ் ரிலிஜியன் தாய்ஸ்ம் உள்ளிட்டோரின் பெயர்களும் இடம்பெற்றிருந்தன. இவர்களிலிருந்து ஒருவரின் பெயரை தேர்ந்தெடுக்க கன்பூசியஸ் அமைதி விருது தேர்வு குழு தேர்ந்தெடுக்க வேண்டும். மொத்தம் 12 பேர் கொண்ட தேர்வு குழுவில் பிடல்காஸ்ட்ரோவின் பெயரை 9 பேர் முன்மொழிந்தனர். இந்த பெரும்பான்மையின் அடிப்படையில் பிடல்காஸ்ட்ரோவுக்கு கன்பூசியஸ் அமைதி விருது வழங்குவது என முடிவு செய்யப்பட்டது என்று இந்த விருதுக்கான தேர்வுக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் லியூ தெரிவித்தார். பிடல் காஸ்ட்ரோ வயது மூப்பின் காரணமாக 2008ம் ஆண்டு கியூப ஜனாதிபதி பதவியில் இருந்து விலகினார். அதன் பின்னர் உடல் நிலையின் காரணமாக வெளியில் அதிகமாக பயணிப்பதில்லை. இந்நிலையில் அவர் நேரடியாக இந்த விருது வழங்கும் விழாவில் பங்கேற்று விருதை பெற முடியாத நிலை இருக்கிறது. இந்நிலையில் விருது வழங்கும் விழாவில் கியூபாவை சேர்ந்த மாணவர் ஒருவரிடம் பிடல் காஸ்ட்ரோவுக்கான விருது வழங்கப்படும். இந்த விருது 15 ஆயிரம் அமெரிக்க டாலர் மதிப்புடையது. இதனை அந்த மாணவர் பிடல் காஸ்ட்ரோவிடம் முறையாக கொண்டு சேர்ப்பார் என்று விருதிற்கான ஒருங்கிணைப்பாளர் லியூ தெரிவித்திருக்கிறார். =============================================================================================================== ராஜ பக்சே : ஒரு வரலாற்றுப் பார்வை. ==================== கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அருகாமையிலுள்ள நீர்கொழும்பு பிரதேசத்தைச் சார்ந்த சீதுவ கிராமத்தில் வாழ்ந்தவர்களுக்கு பிரித்தானிய அரசு வழங்கிய குடும்பப் பெயரே ராஜபக்ச என்று அழைக்கப்படுகிறது. பிரித்தானிய அரசிற்கு போட்டுக்கொடுக்கும் பணியைச் செய்தவர்களை மரியாதை செலுத்தும் முகமாக இப்பெயர் வழங்கப்பட்டது. டொன் அல்வின் ராஜபக்ச- குடும்பம் ராஜபக்சக்கள் மலாக்கன் க த்தோலிக்கர்கள். (அவர்களின் மங்கோலைட் முகச்சாயலுக்கான காரணம் இதுவே) மகிந்த ராஜபக்சவின் தந்தையின் பெயர் டொன் அல்வின் ராஜபக்ச. மகிந்த ராஜபக்சவின் இயற்பெயர் பேர்சி மகிந்த ராஜபக்ச. அரசியலில் பிழைப்பதற்காக கத்தோலிக்கர்களான ராஜபக்சக்கள் பௌத்தர்களாக மதம் மாறிக்கொண்டனர். பிரேமதாசவைத் தவிர இலங்கை அரசியலில் சிங்கள பௌத்த அரச அதிபர்களாகப் பதவிவகித்த அனைவருமே கத்தோலிக்கர்கள் அல்லது கிறீஸ்தவர்கள். இலங்கை வரலாற்றில் பௌத்த சிங்களத் தீவிரவாதிகளாகத் தம்மை அடையாளம் காட்டிக்கொண்ட சொலமன் வெஸ்ட் ரிட்ஜ்வே டயஸ் பண்டாரநாயக்க, ஜுலியட் ரிச்சார்ட் ஜெயவர்தன போன்றவர்கள் வலுவான கிறீஸ்தவப் பின்னணியைக் கொண்டவர்கள். பேரினவாத்ததைத் தூண்டி மக்களைப் போதையூட்டி வைத்திருப்பதற்காகவே இவர்கள் பௌத்தத் தீவிரவாதத்தைப் பேசினர். பௌத்தத்தின் பேரால் நாட்டில் வன்முறையத் தூண்டிய கிறீஸ்தவர்கள் தமது ஆட்சி அதிகாரத்தைத் தக்கவைத்துக்கொண்டனர். கத்தோலிக்கர்களான ராஜபக்ச குடும்பம் இன்று இலங்கையில் அதிக செல்வாக்குப் படைத்த பணக்காரக் குடும்பங்களில் ஒன்று. ராஜபக்சவின் குடும்பக் குழுமம் முழுவதுமே இலங்கையின் பல்வேறு துறைகளில் உயர்பதவிகளில் நியமிக்கப்பட்டுள்ளனர். இலங்கையை ஒட்டச் சுரண்டிய ராஜபக்ச குடும்பமே வன்னியில் ஆயிரக்கணக்கான மக்கள் இனப்படுகொல செய்யப்படுவதற்குக் காரணமாகியது. நீர்கொழும்பின் சீதுவப் பகுதியைச் சேர்ந்த ராஜபக்ச குடும்பம் தமது மலாக்கன் கத்தோலிக்க முன்னோர்களுடன் சேர்ந்து கம்பந்தோட்டம் என்ற பிரதேசத்திலுள்ள சிப்பிக்குளம் மற்றும் கிருவாபத்துவ ஆகிய கிராமங்களில் குடியேறினர். இலங்கையின் தென் மாகாணத்திலுள்ள கம்பந்தோட்டமே இப்போது ஹம்பாந்தோட்ட என்று அழைக்கப்படுகின்றது. போத்துகீசர் மலாக்காவை ஆக்கிரமிக்க முற்பட்ட காலப்பகுதியான 16ம் நூற்றாண்டில் அங்கிருந்து வெளியேறியவர்களில் ஒருபகுதியினர் இலங்கையில் குடியேறினர். இலங்கையின் கரையோரப்பகுதியான நீர்கொழும்பில் மலாக்கா உட்படப் பல்வேறு மலேசிய நகரங்களிலிருந்த குடியேற்றங்கள் தொடர்பான வரலாறுகள் காணப்படுகின்றன. ஹம்பாந்தோட்டையில் நிலப்பிரபுக்கள் குடும்பத்தைச் சேர்ந்த ராஜபக்சக்கள், அப்பகுதியில் அரசியல் செல்வாக்குச்செலுத்த ஆரம்பித்தனர். தேரவாத பௌத்தர்களைப் பெரும்பான்மையாகக்கொண்ட அப்பகுதியில் அரசியல் பிழைப்பிற்காக ராஜபக்சக்கள் பௌத்தர்களாகத் தம்மைக் காட்டிக்கொண்டாலும் கத்தோலிக்கத்தையே கடைப்பிடித்தனர். கத்தோலிக்க-புத்த -இந்து வான பக்சே ? டொன் டேவிட் ராஜபக்சவின் மகனான டொன் மத்தியூ ராஜபக்ச 1936 ஆம் ஆண்டு அரச சபைக்கு ஹம்பாந்தோட்டைப் பிரதிநியாத் தெரிவானார். 1945 ஆம் ஆண்டு டொன் மத்தியூ ராஜபக்ச மரணமடைந்ததும், அவரின் சகோதரரான டொன் அல்வின் ராஜபக்ச இடைத்தேர்தல் ஒன்றின் வழியாகப் பாராளுமன்றத்திற்குத் தெரிவாகிறார். டொன் அல்வின் ராஜபக்ச பெலியத்த தேர்தல் தொகுதியிலிருந்து தெரிவானார். 1967, தந்தையின் மரணத்தைத் தொடர்ந்து 1970 ஆம் ஆண்டு பெலியத்தவில் வயதில் இளைய பாராளுமன்ற உறுப்பினரான மகிந்த தெரிவுசெய்யப்படுகின்றார். தனது 25 ஆவது வயதில் பாராளுமன்றத்திற்குள் நுளைந்த ராஜபக்ச என்ற சிங்கள பௌத்தப் பேரினவாதியான கத்தோலிக்கரின் தலைமையில் நடைபெற்ற இனப்படுகொலையில் சாரிசாரியாக மக்கள் கொலைசெய்யப்பட்டனர். இலங்கையை ஆட்சிசெய்த கொடூரமான சர்வாதிகாரியாக ராஜபக்ச கணிக்கப்படுகிறார். சிங்கள பௌத்த பேரினவாதத்தின் ஏகப்பிரதிநிதியாகத் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்ட ராஜபக்சவிற்கு போட்டியாக முளைத்துள்ள மற்றய புதியவர் மைத்திரிபால சிரிசேன. தான் ராஜபக்சவிற்கு இணையான இன வாதி என்பதைப் பல்வேறு வழிகளில் சிரிசேன நிருபித்து வருகிறார். ====================================================================================================================== இன்சூரன்ஸ் மசோதா ========================================== இன்சூரன்ஸ் மசோதாவைப் பரிசீலித்த நாடாளுமன்றத் தெரிவுக்குழு அந்நிய முதலீடு உயர்வுக்கு ஆதரவாகப் பரிந்துரைத்துள்ளது. இக்குழுவின் உறுப்பினர்கள் பி.ராஜீவ்(சிபிஐ-எம்) பேரா.இராம்கோபால் யாதவ் (சமாஜ்வாதி) கே.சி.தியாகி(ஐக்கிய ஜனதா தளம்) ஆகியோர் எதிர்க் குறிப்பினைப் பதிவு செய்துள்ளனர். அதிலிருந்து...எ சட்டக் கமிஷனோ, கே.பி.நரசிம்மன் குழுவோ அந்நிய முதலீட்டு உயர்வையும், அரசுப் பொது இன்சூரன்ஸ் நிறுவனங்களின் பங்கு விற்பனையையும் பரிந்துரைக்கவில்லை. ஆனால் மசோதாவின் முன்னிரையிலும், தெரிவுக்குழு அறிக்கையின் பத்திகள் 2, 3 களிலும் அப்படியொரு எண்ணம் ஏற்படுகிற வகையில் வார்த்தைகள் அமைந்துள்ளன. ஏற்கெனவே நாடாளுமன்ற நிதியமைச்சக நிலைக்குழு டிசம்பர் 13, 2011 தேதியிட்ட தனது 41வது அறிக்கையில் அந்நிய முதலீட்டுஉயர்வு தேவையில்லை எனப் பரிந்துரைத்திருந்தது. அப்பரிந் துரையை ஏற்காதது ஏன் என்பதற்கு மத்திய நிதியமைச்சகம் திருப்திகரமான விளக்கம் எதையும் தரவில்லை. நிலைக்குழு நிராகரித்த அதே கருத்துக்களையே மீண்டும் தெரிவுக்குழு முன்பும் வைத்துள்ளார்கள்.எ அந்நிய முதலீட்டு உயர்வால் இன்சூரன்ஸ் பரவலாக்கல் அதிகமாகும் என்கிற வாதத்திற்கான எந்தவொரு ஆதாரமும் நிதியமைச்சகத்தின் பதிலில் இல்லை. 2007ல் அந்நிய முதலீடு ரூ.3315 கோடிகளாக இன்சூரன்ஸ் துறையில் இருந்த போது இன்சூரன்ஸ் பரவலாக்கல் 4.6 சதவீதமாக இருந்தது. ஆனால் 2012ல் அந்நிய முதலீடு ரூ.7649 கோடிகளாக உயர்ந்த போது இன்சூரன்ஸ் பரவலாக்கலால் 4 சதவீதமாகக் குறைந்துள்ளது. இவ்விவரங்கள் அவர்களின் பதிலிலேயே உள்ளன.எ இன்சூரன்ஸ் பரவலுக்கு வேறு பல காரணிகள் உள்ளன. இந்தியாவை விட அதிகமான தனிநபர் வருமானம் உள்ள நாடுகளில் கூட இன்சூரன்ஸ் பரவலாக்கல் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் குறைவாக உள்ளது. 2013ல் அமெரிக்காவில் 3.2 சதவீதம், கனடா 2.9சதவீதம், ஜெர்மனி 3.1 சதவீதம், ஆஸ்திரேலியா 3 சதவீதம் என்ற அளவிலேயே உள்ளன. அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் சமர்ப்பித்துள்ள தகவல்களின்படி பொருளாதார வளர்ச்சி விகிதத்தை விட இந்தியப் பொது இன்சூரன்ஸ் துறையின் பரலாக்கல் விகிதம்அதிகம் உள்ளது. இந்தியப் பொருளாதாரத்தின் ஏற்றத்தாழ்வான வளர்ச்சியும் பொது இன்சூரன்ஸ் பரவலாக்கலை பாதிக்கிறது. தில்லி உள்ளிட்ட தொழில் வளர்ச்சி அடைந்த மாநிலங்களில் இன்சூரன்ஸ் பரவலாக்கல் அதிகமாகவும், உத்தரப்பிரதேசம் போன்ற பின்தங்கிய மாநிலங்களில் இப்பரவலாக்கல் குறைவாகவும் உள்ளது. எ தெரிவுக்குழு அறிக்கையின் பத்தி 16.2.2 அடுத்த 5 ஆண்டு களில் இந்திய இன்சூரன்ஸ் துறைக்கு 55,000 கோடி முதலீடுகள் தேவைப்படுகிறது என்று கூறுகிறது. ஏற்கெனவே இதுபோன்ற மதிப்பீட்டை 2011 நாடாளுமன்ற நிலைக்குழு அறிக்கை, ‘ஐ.ஆர்.டி.ஏ. உள்ளிட்ட இன்சூரன்ஸ் தொடர்பான அமைப்புகளின் மதிப்பீடு வெறும் கணக்காகவும், பொதுவான எதிர்பார்ப்பாகவும் உள்ளது. இப்படிப்பட்ட மேம்போக்கான மதிப்பீடுகளை ஏற்கக்கூடாது’ என நிராகரித்துள்ளது.எ ஆயுள் இன்சூரன்ஸ் கவுன்சில் தெரிவுக்குழுவிற்கு அளித்துள்ள மகஜரின்படி இந்தியாவில் இன்சூரன்ஸ் சந்தை 60 கோடி பேர். 30 கோடி பேருக்கு தனிநபர் பாலிசிகளையும், மேலும்எல்ஐசி 12 கோடி பேரைக் குழு பாலிசிகள் மூலமும் இணைத் துள்ளன. 77 சதவீத மக்கள் தின நுகர்வை ரூ.20க்கும் குறைவாகக் கொண்டுள்ள ஒரு நாட்டில் எல்ஐசியின் பாலிசி எண் ணிக்கை இன்சூரன்ஸ் சந்தையில் 70சதவீதம் இருப்பது குறிப் பிடத்தக்கது. மூலதனத்திற்கும் இன்சூரன்ஸ் வணிகத்திற்கும் தொடர்பில்லை. 100 கோடி மூலதனம் கொண்ட எல்ஐசி மார்ச் 2013ல் திரட்டிய பிரீமியம் ரூ.2,08,000 கோடி. ரூ.4,844 கோடி மூலதனம் கொண்டபஜாஜ் அல்லயன்ஸ் திரட்டிய பிரீமியம் ரூ.6,893 கோடிகள். கூடுதல் மூலதனம் கூடுதல் பிரீமியத்தை கொண்டுவரும் என்பது உண்மையல்ல. மேலும் இந்திய இன்சூரன்ஸ் துறையில் ஈடுபட்டுள்ள டாடா,பிர்லா, ரிலையன்ஸ், பஜாஜ் குழுமங்கள் பலமான நிதிபலத் தோடு அந்நிய நிறுவனங்களைக் கூடக் கைப்பற்றுகிற பெரியநிறுவனங்களாக உள்ளன. எனவே அவர்களுக்கு நிதி பலம்போதாது, அந்நிய முதலீடுகள் தேவை என்பது ஏற்கத்தக்கதல்ல. முன்னாள் எல்ஐசி சேர்மன் சமர்ப்பித்துள்ள தகவலின்படி 2013 - 14ல் எல்ஐசியால் மறுக்கப்பட்ட உரிமங்கள் ஒரு சதவீதமாக உள்ளது. சில தனியார் நிறுவனங்களில் 20 சதவீத உரிமங் கள் (தொகையில் 28 சதவீதம்) மறுக்கப்பட்டுள்ளன. தனியார் களின் மறுக்கப்பட்ட உரிமங்களின் மொத்தச் சராசரி 8 சதவீதம் ஆகும். அந்நிய முதலீடுகள் வந்தால் தொழில்நுட்பம் மேம்படும் எனக் கூறப்பட்டுள்ளது. ஆனால் எல்ஐசி சேர்மன் தெரிவுக்குழு சாட்சியத்தில் உலகிலேயே மிகச்சிறந்த தொழில்நுட்பத்தை எல்ஐசி பயன்படுத்துகிறதெனக் குறிப்பிட்டுள்ளார். தனியார் நிறுவனங்களின் வணிகத்தில் 85 சதவீதம் பங்குச் சந்தையில் பாலிசிகளாகவே உள்ளன. எனவே ஆதாரத் தொழில் வளர்ச்சிக்கும், சமூக நலத் திட்டங்களுக்கும் இப்பணம்செல்லாது. ஆனால் எல்ஐசியோ ரூ.10,69,769 கோடிகளை (மார்ச் 2014 வரை) அரசுப் பத்திரங்கள், சமூகநலத்திட்டங்களில் முதலீடு செய்துள்ளன. அரசுப் பொது இன்சூரன்ஸ் நிறுவனங்கள் போதுமான மூலதனத்தோடு உள்ளன. மொத்த மூலதனம் ரூ.600 கோடி காப்பு மற்றும்உபரி ரூ. 20,524 கோடி, முதலீடுகள் ரூ.1,01,707 கோடி எனவலுவாக உள்ள இந்நிறுவனங்களுக்கு மூலதனம் தேவை யெனக் கூறி இம்மசோதாவின் பிரிவு 107, பங்கு விற்பனைக்கு வழிகோலுவது தேவையற்றது. மாறாக அரசும் பொது இன்சூரன்ஸ் நிறுவனங்களை இணைத்து ஒரே நிறுவன மாக மாற்றலாம். இத்தகைய ஆலோசனையை பொது நிறுவனங்களுக்கான நாடாளுமன்றக்குழு ஏற்கெனவே பரிந்துரைத்துள்ளது. கூடுதல் மூலதனம் தேவையெனில் இரண்டாம் தட்டு மூலதனத்தை அதாவது பத்திரம், கடன் பத்திரங்கள் வாயிலாகத் திரட்டிக் கொள்ள அனுமதிக்க வேண்டும். ஏற்கெனவே நாடாளுமன்ற நிதியமைச்சக நிலைக்குழு ஒருமித்தக் குரலில் அந்நிய முதலீட்டு உயர்வை நிராகரித்திருப்பதை ஏற்று தெரிவுக்குழுவும் அந்நிய முதலீட்டு உயர்வை ஏற்கக்கூடாது. ================================================================================================================ இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Twitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர் புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு LinkWithin பார்வையாளர். முகப்பு கலைகள் அரசியல் உலகம் படியுங்களேன்.. மகா கூட்டணியால் அதிமுக ஆட்சி! மழை நிலவரம் தமிழ்நாட்டில் இன்றும் மழை பொழியும் என்றும் நவம்பர் 9ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு நிலைக்கு வாய்ப்புள்ளது என்றும் இந்திய வானிலை ஆராய... சூதாட்டத்தில் ஒரு சதிராட்டம் அதிமுக ஆட்சியில் 2020ம் ஆண்டு ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால், அச்சட்டத்தை எதிர்த்து ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்கள் சார்ப... அரியலூர் பயங்கரம் நாட்டை உலுக்கிய அரியலூர் ரயில் விபத்து நடந்து இன்றோடு 66 ஆண்டுகள் ஆகின்றது. இதே நவம்பர் 23 தேதிதான் அந்த நாட்டையே உலுக்கிய அரியலூர் ரயில்... அரியவகை ஏழைகள் எடப்பாடி வியூகம் சில காலமாக எடப்பாடி பழளிசாமி செயல்பாடுகள் இல்லை. எதிர்கட்சியின் செயல்பாடுகளை பாஜகதான் செய்கிறது என்ற பேச்சுகள் எழ்ழுந்துள... கமல்ஹாசன்68. பன்முகவித்தகரான கமல் ஹாசனுக்கு இன்று (நவம்பர் 7) பிறந்த நாள். நடிகர், நடன ஆசிரியர் மட்டுமல்லாமல், திரைப்படத் தயாரிப்பாளர், இயக்குநர், கதை... சங்கிகளின் சங்கமம் தமிழகத்தில் காலூன்றுவதற்காக பா.ஜ.க தீவிரமாக முயன்று வருகிறது. தமிழ் மொழியின் மீதும் தமிழக கலாச்சாரத்தின் மீதும் அக்கறை இருப்பது போல காட்டிக...
ராஜ் கௌதமனின் பண்பாட்டு வரலாற்றுப் பார்வை-3 4. ஒடுக்குமுறையின் பரிணாமம் தமிழ் வரலாற்றின் சித்திரத்தை எடுத்துப்பார்த்தால் ஒன்றுக்கொன்று இணையாத பல கூறுகளாகவே அதை நாம் பெறுகிறோம். தொல்வரலாறு ஒன்று நமக்குள்ளது. ஆதிச்ச நல்லூரிலிருந்து இன்று கீழடி வரைக்கும் வந்து சேர்வது அது. தொல்லியல் சான்றுகளால் மட்டுமே ஆனது. மொழிச்சான்றுகள் அதனுடன் இணையும்படி நமக்குக்கிடைக்கவில்லை. இன்னொரு பக்கம் சங்க இலக்கியம் என்று சொல்லும் மொழிச்சான்றினூடாக நாம் உருவாக்கிக்கொள்ளும் காலகட்டம் ஒன்றுள்ளது. மிகக்குறைவாகவே சங்ககாலம் சார்ந்த தொல்லியல் சான்றுகள் நம்க்குக்கிடைக்கின்றன. […] admin December 15, 2018 ராஜ் கௌதமனின் பண்பாட்டு வரலாற்றுப் பார்வை-3 4. ஒடுக்குமுறையின் பரிணாமம் தமிழ் வரலாற்றின் சித்திரத்தை எடுத்துப்பார்த்தால் ஒன்றுக்கொன்று இணையாத பல கூறுகளாகவே அதை நாம் பெறுகிறோம். தொல்வரலாறு ஒன்று நமக்குள்ளது. ஆதிச்ச நல்லூரிலிருந்து இன்று கீழடி வரைக்கும் வந்து சேர்வது அது. தொல்லியல் சான்றுகளால் மட்டுமே ஆனது. மொழிச்சான்றுகள் அதனுடன் இணையும்படி நமக்குக்கிடைக்கவில்லை. இன்னொரு பக்கம் சங்க இலக்கியம் என்று சொல்லும் மொழிச்சான்றினூடாக நாம் உருவாக்கிக்கொள்ளும் காலகட்டம் ஒன்றுள்ளது. மிகக்குறைவாகவே சங்ககாலம் சார்ந்த தொல்லியல் சான்றுகள் நம்க்குக்கிடைக்கின்றன. அதன்பிறகு சமண -பௌத்த மதங்களின் காலகட்டம். பெரும்பாலும் இலக்கியபிரதிகளின் வழியாகவே அடையாளப்படுத்தப்படுகிறது அது வரலாற்று நூல் என்று சொல்லத்தக்க எதுவுமே நமக்குக்கிடைப்பதில்லை. ஓரளவேனும் தமிழ் வரலாறு இன்று எழுதப்படுவது பல்லவர்காலத்திற்கு பிறகுள்ள காலத்தைப்பற்றித்தான். அதுவும் மிக்க்குறைவான தொல்லியல் சான்றுகள், இலக்கியச் சான்றுகளைக்கொண்டு. ஆனால் கடுமையான உழைப்பில் முன்னோடிகள் பல்லவர்காலம் பிற்கால சோழர்காலம் பிற்கால பாண்டியர்காலம் நாயக்கர் காலம் ஆகியவற்றை வரலாறாக எழுதியிருக்கிறார்கள். அவற்றில் இன்னும் ஏராளமான விடுபட்ட பகுதிகள் உள்ளன. தமிழக வரலாற்றை இன்று எழுதும் ஒருவர் பல்லவகால நிலமானிய முறை சோழர்கால நிலமானிய முறை நாயக்கர்கால நிலமானிய முறை ஆகியவற்றை கொண்டே மக்கள் வரலாறை எழுதமுடியும் நாம் இதுவரை எழுதிய வரலாறுகள் அனைத்துமே மையப்படுத்தப்பட்ட அரசர்களின் வரலாறுகள் மக்கள் வரலாறை எழுதுவதற்கு தேவையான தரவுகளை அவற்றில் மிக்குறைவாகவே காணமுடிகிறது. இன்று தமிழக வரலாற்றின் பண்பாட்டு வர்லாற்ற்றின் சித்திரத்தை எழுதும் ஒருவர் நமக்கு பெரும்பாலும் சரியான ஆவணங்களுடன் கிடைக்கும் நாயக்கர்கால நிலமானிய முறையின் ஒரு விரிந்த சித்திரத்தை உருவாக்கிக்கொள்ள வேண்டும். ஜெசூட் குறிப்புகள் மூடி ஆவணங்கள் போன்ற நேரடியான அக்காலகட்டத்தின் ஆவணங்கள் ஆகியவ்ற்றை இணைத்து அச்சித்திரத்தை உருவாக்கிக்கொள்ளலாம் அதிலிருந்து மேலும் பின்னகர்ந்து சோழர்கால நிலமானிய முறையை நோக்கி செல்லலாம். நொபுரு கரோஷிமா போன்றவர்கள் சோழர்கால நிலமானிய முறை பற்றிய விரிவான சித்திரங்களை உருவாக்கியிருக்கிறார்கள். மேலும் தெளிவற்ற ஒரு சித்திரமாக பல்லவர்கால நிலமானிய முறையை சென்றடையலாம். அதிலிருந்து அதற்கு முன் கிடைக்கும் இலக்கிய சான்றுகளைக்கொண்டு மட்டும் சங்ககாலத்தின் மக்கள் வாழ்க்கை சித்திரத்தை உருவாக்கலாம். இது குறைவான தகவல்களை பெரும்பாலும் புனைவு வல்லமையினை கொண்டு இணைத்து உருவாக்கப்படுவது என்ப்தனால் எந் நிலையிலும் ஒரு ஊகத்தின் தரத்திலேயே நிற்குமே ஒழிய ஒருபோதும் இண்றைய நிலையில் முழுமையாக நிறுவப்பட்ட ஒன்றாக இருக்காது. இன்றுவரை எழுதப்பட்ட வரலாற்று எழுத்துக்களை ஊடுருவி அதில் மக்கள் வரலாற்றுச் சித்திரம் ஒன்றை உருவாக்க ராஜ்கௌதமன் முயல்கிறார்.ராஜ் கௌதமனின் மூன்றுநூல்களை வரிசையாக அடுக்கி ஒற்றைநூலாக கருதினால் அவர் தமிழ்ப்பண்பாட்டின் மாற்றுவரலாறு ஒன்றை எழுதியவர் என்று சொல்லமுடியும். அ. ஆகோள் பூசலும் பெருங்கற்கால நாகரிகமும் ஆ.பாட்டும் தொகையும் பாட்டும் தொகையும் தொல்காப்பியமும் தமிழ்ச் சமுக உருவாக்கமும் இ. ஆரம்பகட்ட முதலாளியமும் தமிழ்ச்சமூக உருவாக்கமும். இம்மூன்று நூல்களும் பண்பாடு தொடங்கிய காலம் முதல் தொடர்ச்சியாக நவீன காலம் வரை தமிழ்ப்பண்பாடு எப்படி வெவ்வேறு முரணியக்கங்கள் வழியாக உருவாகி வந்துள்ளது என்பதன் சித்திரத்தை உருவாக்கிக் காட்டுகின்றன. ஆகோள்பூசல் என்றால் [ஆ+கோள்] என்றால் பசுக்களைக் கவரும்பொருட்டு நிகழும் போர். சங்கப்பாடல்கள் இவற்றை வெவ்வேறு திணைகளிலாக விரிவாக வகுத்துச் சொல்கின்றன. ராஜ்கௌதமன் சங்ககாலம் என்பது தவறாக வரையறுக்கப்படும் பண்பாட்டுத்தொடக்க காலம் என சொல்கிறார். சங்கம் என்பது பிற்காலத்தில் பாண்டியர் அவையில் உருவான ஒரு கருத்து. சமணமுனிவர்களால் களப்பிரர் காலத்தில் தொகுக்கப்பட்ட பண்டைய பாடல்களே சங்கப்பாடல்கள் எனப்படும் எட்டுத்தொகை பத்துப்பாட்டு பதினெண்கீழ்க்கணக்கு ஆகியவை. பிற்கால பாண்டியர்களின் காலத்தில் பாண்டியர்களின் பெருமையை நிலைநிறுத்தும்பொருட்டு அவர்கல் சங்கம் வைத்து தமிழ்வளர்த்தனர் என்னும் கதை உருவாக்கப்பட்டு அப்பாடல்கள் பாண்டியர்களால் தொகுக்கப்பட்டவை என உரைகள் எழுதப்பட்டன என்கிறார். ஆகவே இங்கே சங்ககாலத்தை பொதுவழக்காக மட்டுமே கொள்ளலாம். சங்ககாலம் என்பதை பண்பாட்டாய்வு நோக்கில் ராஜ் கௌதமன் வகுத்துக்கொள்ளும் முறை முக்கியமான ஒரு திறப்பு. சங்ககாலம் என்பது பழங்குடிக்காலம் மருவி நகர –கிராம நாகரீகம் உருவான தொடக்க காலகட்டம். அது முந்தைய பழங்குடிப் பண்பாட்டில் இருந்த பல்வேறு வாழ்க்கைமுறைகளை அப்போது குறியீட்டுச் சடங்குகளாகவும் கலைவடிவங்களாகவும் மாற்றிக்கொண்டுவிட்டது. முந்தைய பழங்குடிவாழ்க்கையில் உணவுக்காகவும் செல்வத்திற்காகவும் பிறர் எல்லைக்குள் புகுந்து கால்நடைகளைத் திருடி வரும் வழக்கம் இருந்தது. அதில் போர்கள் நிகழ்ந்தன. ஆனால் சங்ககாலத்தில் அரசுகள் உருவாகிவிட்டிருந்தன ஆகவே குடிகள் தங்கள் விருப்பப்படி பிறர் ஆநிரைகளை கவர முடியாது. அது களவு என அரசனால் தண்டிக்கப்பட்டது ஆனால் ஆநிரை கவர்தல் அவர்களின் பண்பாட்டில் நினைவாக நீடித்தது. அதற்கான உளவியலும் அவர்களிடம் இருந்தது. ஆகவே அதை ஒரு போர்விளையாட்டாக ஆக்கிக் கொண்டார்கள். வெட்சி மலர்களை அணிந்துகொண்டு ஆநிரை கவரச் சென்றார்கள். கரந்தை மலர் அணிந்து ஆநிரைகளை மீட்கச்சென்றனர். ஒவ்வொன்றுக்கும் உரிய மலர்கள் இருந்தன. ஒவ்வொன்றுக்கும் உரிய போர்க்கூச்சல்களும் நெறிமுறைகளும் இருந்திருக்கலாம். இந்த போர்விளையாட்டு பின்னர் கலைக்குள் புகுந்தது. நிகழ்த்துகலையில் ஒவ்வொரு செயலும் ஒரு திணை என ஆகி அதற்குரிய மலரை அடையாளமாகக் கொண்டது. நிகழ்த்துகலைக்காக கவிதைகள் எழுதப்பட்டபோது திணைக்கோட்பாடு அழகியல்முறைமையாக ஆகியது. அதாவது சங்ககாலம் என்பது அதற்கு முன்பிருந்த பழங்குடிக்கால மரபை , இன்னும் குறிப்பாகச் சொல்லப்போனால் பெருங்கற்கால மரபை, சடங்காகவும் கலையாகவும் திரும்ப நடிப்பதாகவே இருந்தது. இந்தக்கோணத்திலேயே சங்க அகத்துறைப் பாடல்களில் வரும் அன்பின் ஐந்திணைகளையும் நாம் அணுகவேண்டும். அவற்றிலுள்ள வாழ்க்கை சங்ககால வாழ்க்கை அல்ல. அது முந்தையகால நினைவை குறியீடாக, அழகியலாக ஆக்கிக்கொண்டு பின்னர் உருவாக்கப்பட்டது மட்டுமே. இந்த ‘நடிப்பை’ ராஜ் கௌதமன் தமிழ்ச்சமூக உருவாக்கத்தின் முக்கியமான ஒரு கூறாகக் கருதுகிறார். அதற்குமுன் கடுமையான வாழ்க்கைப்போரில் அடைந்த உளநிலைகளை இப்படி மதமாகவும் கலையாகவும் ஆக்கிக்கொண்டு அதன் அடிப்படையில் தன் விழுமியங்களைச் சேகரித்து நிலைநிறுத்திக்கொண்டு மேலெழுந்தது தமிழ்ப்பண்பாடு. அதன் அடித்தளம் பழங்குடிப்பண்பாட்டிலிருந்து ஆசாரங்களும் கலையும் உருவான இந்த காலகட்டம்தான். இன்றுவரைத் தொடரும் தமிழ்ச்சமூகத்தின் வெவ்வேறு உளநிலைகளை நாம் இங்குதான் தேடவேண்டும். ராஜ்கௌதமன் இந்நூலில் சங்ககாலம் என்பது அரசுகள் உருவாகி வந்த பகைப்புலத்தைச் சித்தரிப்பதாக எடுத்துக்கொள்கிறார் – அப்போதுதான் அரசுகள் உருவாகி வந்ததாக அல்ல. அரசுகள் உருவாகி வந்த முந்தைய சூழல் கலையில் பதிவாகி இருப்பதாக எண்ணுகிறார். கவர்ந்து வந்த ஆநிரைகள் குடிக்குச் சொந்தமான பொதுவான பொருளாக ஆகின்றன. அவற்றைக் கவர்ந்துவந்த வீரன் அக்குடியின் தலைமகனாகக் கருதப்படுகிறான். அவன் அப்போரில் இறந்தால் அவனுக்கு நடுகல் நாட்டப்பட்டு வீரவழிபாடு செய்யப்படுகிறது. வீரம் என்னும் விழுமியம் அவ்வாறு போற்றி நிலைநிறுத்தப்படுகிறது. அது மெல்லமெல்ல அரசன் என்னும் இடத்தை சென்றடைகிறது. தமிழில் அரசன் என்னும் சொல்லும் காவலன் என்னும் சொல்லும் ஒரே பொருளில் பயன்படுத்தப்படுகின்றன. சங்ககாலத்திலேயே பழங்குடி வாழ்க்கையிலிருந்து நிலவுடைமை வாழ்க்கைக்கு வராத குடிகளும் இருந்திருப்பதை பாடல்கள் காட்டுகின்றன – அல்லது பாடலில் நினைவுக்குறிப்பாக அவர்கள் இருந்துகொண்டிருக்கிறார்கள். பாலைநில மக்களாகிய எயினர் உணவை வேட்டையாடி உண்பவர்களாகவே இருக்கிறார்கள், உணவுற்பத்தியை அவர்கள் அறிந்திருக்கவில்லை. மலைக்குறவர்களும் பெரும்பாலும் திரட்டியுண்ணும் வாழ்க்கையை வாழ்கிறார்கள். முல்லைநில மக்கள் மேய்ச்சல்வாழ்க்கைக்கும் மருதநில மக்கள் வேளாண் வாழ்க்கைக்கும் வந்துவிட்டிருக்கிறார்கள். வேளிர்கள் என்னும் வேளாண்மைமக்களின் சிறிய அரசுக்கூட்டங்கள் உருவாகிவிட்டிருந்தன. அவை இணைந்து சேர,சோழ,பாண்டிய அரசுகளாயின. அவ்வரசுகள் பிறநிலங்களை வென்று தங்கள் நிலப்பகுதிகளாக்கிக் கொண்டன. அனைத்துமக்களும் ஒற்றைச் சமூகத்தின் உறுப்பினர்களாகத் திரட்டப்பட்டனர். அதற்கு எதிராக இருந்தவர்கள் படையெடுப்பால் வெல்லப்பட்டனர். சங்ககாலம் என்பது இந்த ஆதிக்கப்போர் உச்சகட்டத்தில் இருந்த காலகட்டமாகும். இந்தக் காலகட்டத்தின் இருபாற்பிரிவினையை இன்னும் ஒரு உருவகம் வழியாக ராஜ் கௌதமன் காட்டுகிறார். பாணர் X புலவர் என்னும் எதிரீடு. பாணர்கள் சென்றகால பழங்குடிவாழ்விலிருந்து கிளைத்து சங்ககாலம் நோக்கி வருபவர்கள். புலவர்கள் சங்ககாலத்தில் உருவாகி இன்றைய காலம்வரை, எதிர்காலம் நோக்கிச் செல்பவர்கள். இருவரும் சந்தித்துக் கொள்ளும் புள்ளியென சங்கப்பாடல்களின் தளத்தைச் சொல்லலாம். பல புலவர்கள் தங்களை பாணர்கள் என சொல்லிக்கொள்கிறார்கள். பல புலவர்கள் பாணர்கள் அல்ல என்றும் தெரிகிறது. பாணரின் இடம் மெல்லமெல்ல தேய்ந்து அவர்கள் தலைவர்களின் பாங்கர்களாக, பரத்தையர் இல்லம் செல்வதற்கான கூட்டாக, ஆவதைச் சங்ககாலத்தில் காணலாம். எம்.வேதசகாயகுமார் ஒரு கட்டுரையில் ஆரம்பகால சங்கப்பாடல்களில் பாணர்களுடன் சேர்ந்து அரசன் நடனமிடுகிறான், பிற்கால சங்கப்பாடல்களில் பாணன் பழித்துப் பேசப்படுகிறான், சோழர்காலத்தில் பாணன் தாழ்த்தப்பட்ட சாதியினனாக, தீண்டப்படாதவனாக காட்சியளிக்கிறான், தமிழ்ப்பண்பாட்டு வரலாற்றின் பரிணாமகதி இதுவே என்று சொல்கிறார். ராஜ் கௌதமனும் இதைப்போலவே இந்நூலில் ஒரு சித்திரத்தை அளிக்கிறார். இந்த இரட்டைத்தன்மையைக் கொண்டு சங்ககாலத்தில் உருவான குடும்ப அமைப்புநெறிகள் மற்றும் பாலியல்நெறிகளைப் புரிந்துகொள்ள ராஜ்கௌதமன் முயல்கிறார். துய்ப்பை மட்டுமே நோக்கமாகக் கொண்டதும், இயல்பான கட்டின்மைகொண்டதுமான பாலுறவே பழங்குடிகளிடமிருக்கிறது. பாலுறவின்மீது கட்டுப்பாடுகளை கடைக்கொள்வது வழியாகவே சமூகம் தன்னை வரையறைசெய்துகொள்கிறது. குடும்பம் உருவாகிறது, தனியுடைமைக்கான அலகாக அது மாறுகிறது. குடும்பம் தனிச்சொத்து சமூகம் என்னும் நூலில் பிரெடெரிக் எங்கல்ஸ் வகுத்துரைத்த முன்வரைவுக்கருத்து அது. சங்ககாலப் பாடல்களில் ஒரேசமயம் பாலுறவு வரையறைசெய்யப்பட்டிருப்பதையும் கட்டற்ற மீறல்களுடன் இருப்பதையும் நாம் காண்கிறோம். மருதத்தில் தலைவி குடும்பத்திற்குக் கட்டுப்பட்டவள். குறிஞ்சியில் அவள் எல்லைகளை மீறுபவள். அதாவது அன்றைய சமூகத்தில் பாலுறவு வரையறை செய்யப்பட்டிருந்தது. ஆனால் முந்தைய பழங்குடிப் பண்பாட்டின் உளநிலைகள் நீடித்த கலையில் கட்டற்றதாகவும் இருந்தது. சங்கப்பாடல்களின் அகத்துறை படிப்படியாக பாலுறவு கட்டுப்படுத்தப்படுவதன் சித்திரமே என ராஜ்கௌதமன் காட்டுகிறார். தலைவன் பரத்தையருடன் ஆடுதல் அனுமதிக்கப்படுகிறது, தலைவியின் கற்பு வலியுறுத்தப்படுகிறது. காமத்தைக் கற்பால் வென்று ஆற்றியிருக்கும் தலைவியின் சித்திரமே சங்ககாலத்தின் முதன்மையான குறியீடு. பாலியல்துய்ப்பு களவு ஆக மாறிவிடுகிறது. ஆற்றியிருத்தலும் அடங்கியிருத்தலும் கற்பு ஆக மாறுகிறது. கற்பு என்றால் கல்வி என்றே நேர்பொருள். சங்கப்பாடல்கள் கற்பு என்னும் சொல்லை கற்றல் என்ற பொருளிலும் பயன்படுத்துகின்றன. மூதாதையரின் நெறியைக் கற்று அதன்படி ஒழுகுதலே கற்பு எனப்படுகிறது. மெல்லமெல்ல இந்த சமூகச் சித்திரம் வளர்ச்சி அடைந்து சிலப்பதிகாரத்தை வந்தடையும்போது கண்ணகி என்னும் கற்பின்திருவுரு உருவாகி நிலைகொண்டுவிடுகிறது. அடுத்த ஆயிரத்தைநூறாண்டுகள் தமிழ்ச்சமூகத்தை ஆட்சிசெய்யும் தொல்படிமமாக அது மாறுகிறது ராஜ்கௌதமன் உருவாக்கும் ‘முடிவுகளாக’ இதைக் கொள்ளவேண்டியதில்லை. அவர் இப்படி சில உருவகங்கள் வழியாக தமிழ்ச்சமூகத்தின் பண்பாட்டுப் பரிணாமத்தை வரைந்துகாட்ட விழைகிறார். இது ஒருவகை பண்பாட்டாய்வு என்பதனாலேயே ஆநிரைகவர்தல், பாணன் X புலவர் எதிரீடு, கற்பு X களவு என்னும் எதிரீடு ஆகியவை குறியீடுகளாகவே கொள்ளப்படவேண்டும். அவற்றினூடாக நாம் காணும் சித்திரம் பழங்குடிமரபை நடிக்கும் ஒரு சமூகம் அதிலிருந்து வீரம் என்னும் விழுமியத்தை திரட்டி எடுத்துக்கொண்டு, அதன் அடிப்படையில் வீரநாயகர்களை கண்டடைந்து, அவர்களில் இருந்து அரசனை எழுப்பிக்கொண்டு ,நாடுகளாக ஆகி, அதன் அடிப்படை அலகாக குடும்பத்தை அமைத்து, அக்குடும்ப அமைப்பு நிலைகொள்வதற்காக கற்பு என்னும் விழுமியத்தை கட்டமைப்பதைத்தான். ராஜ்கௌதமனின் ‘பாட்டும் தொகையும் பாட்டும் தொகையும் தொல்காப்பியமும் தமிழ்ச் சமுக உருவாக்கமும்’ முன்னர் சொல்லப்பட்ட நூலின் அடிப்படை உருவகங்களை ஆய்வுநோக்கில் மேலும் விரித்தெடுத்துச் செல்லும் தன்மைகொண்ட நூல். ‘தூயதமிழ்’ பண்பாட்டு ஒருமையை பேசிக்கொண்டிருப்பவர்களுக்கு ஒவ்வாமையை அளிக்கும் அழுத்தமான ஆய்வுநூல் இது. ராஜ்கௌதமனின் நோக்கில் தமிழ்ப்பண்பாட்டின் பின்னாளைய அத்தனை அடிப்படை இயல்புகளும் இந்திய அளவில் உருவான அறிவுத்தொகையின் பாதிப்பை ஏற்று, அதனுடன் உரையாடி, அதன் ஒருபகுதியாக தமிழ்ப்பண்பாடு மாறியதனால் உருவானதாகும். ஏற்கனவே சொல்லப்பட்டதைப்போல ராஜ் கௌதமன் அவர்களின் ஆய்வில் அழகிய வரலாற்று நோக்குமுறை ஒன்று உள்ளது. அதை இப்படிச் சொல்லலாம். ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒரு சமூகம் தன் முந்தைய காலகட்டத்தை எப்படி மறுதொகுப்பு செய்து பெற்றுக்கொள்கிறது என்பதுதான் அதை முன்னெடுத்துச்செல்கிறது. முந்தைய பெருங்கற்கால நாகரீகத்தை சங்ககாலம் மறுதொகுப்பு செய்து ஆசாரங்களாகவும் கலையாகவும் இலக்கியமாகவும் மாற்றி விழுமியங்களாக சுருக்கி வரையறைசெய்துகொண்டதை அவர் + நூலில் விளக்கினார். அதன்பின் குறைந்தது மூன்றுமுறையேனும் இந்த மறுதொகுப்பும் வரையறையும் நிகழ்ந்தது என அவர் சொல்கிறார். சங்ககாலத்திலேயே இந்தியா முழுக்கப் பரவியிருந்த வைதிகமதத்தின் அறிவுத்தொகையுடன் தமிழ்ப்பண்பாட்டுக்கு நெருக்கமான ஊடாட்டம் இருந்தது என்கிறார் ராஜ்கௌதமன். அதன் கருத்துக்களையும் நம்பிக்கைகளையும் ஆசாரங்களையும் சங்ககாலத்திலேயே தமிழர்கள் பெற்றுக்கொள்ளத் தொடங்கினர். அதற்கான ஏராளமான ஆதாரங்கள் சங்கப்பாடல்களில் உள்ளன.ஏற்புக்கு நிகராக மறுப்பும் காணக்கிடைக்கிறது. ராமாயணம் மகாபாரதம் முதலிய காப்பியங்கள், ஸ்மிருதிகள் போன்ற நெறிநூல்கள் இங்கே ஊடாட்டம் நிகழ்த்தின. ஆனால் ஒட்டுமொத்தமாக ஒரு மறுதொகுப்பும் வரையறையும் நிகழ்ந்தது சங்கம் மருவிய காலகட்டத்தில் அல்லது களப்பிரர் காலகட்டத்தில்தான். அப்போதுதான் தொகைநூல்கள் உருவாகி வந்தன. தொல்காப்பியம் முதலிய இலக்கணநூல்கள் இயற்றப்பட்டன. அதாவது தமிழ்ப்பண்பாடு செவ்வியல்மயமாக்கப்பட்டது. இதைச் செய்தவர்கள் சமணமுனிவர்கள் என்பது பிறபல ஆய்வாளர்களைப் போலவே ராஜ்கௌதமனும் சொல்லும் கருத்து. பாட்டும் தொகையுமாக தமிழ்ப்பாடல்கள் தொகுக்கப்பட்டன. அதற்கான தொகுப்புமுறை, வைப்புமுறை ஆகியவை இந்திய அளவில் அன்று உருவாகி வலுப்பெற்றிருந்த சமண –பௌத்த அறிவியக்கத்தில் இருந்தே வந்தது என்கிறார் ராஜ்கௌதமன். தொகைநூல்கள் முன்னரே பிராகிருதத்தில் வந்துவிட்டிருந்தன. நாநூறு என்னும் கணக்கே அங்கிருந்து வந்ததுதான். இங்கே நாம் சம்ஸ்கிருத ஆதிக்கத்தை எதிர்ப்பதற்காக தூயதமிழ்ப்பண்பாடு என்னும் கருத்துருவை முடைந்து உருவாக்குகையில் தமிழ்ப்பண்பாடு மீது சமணர்களின் பிராகிருதமும் பௌத்தர்களின் பாலியும் செலுத்திய செல்வாக்கை மறந்துவிடுகிறோம். ராஜ் கௌதமன் அதை வலுவாகவே சுட்டிக்காட்டுகிறார். ராஜ்கௌதமனின் நோக்கில் தொல்காப்பியம் சமணமுனிவர் எவராலோ உருவாக்கப்பட்டு சமணர்களால் நிலைநிறுத்தப்பட்டது. தொல்காப்பியம் அதுவரை தமிழ்ப்பண்பாட்டில் உருவாகி வந்திருந்த விழுமியங்களை இலக்கணப்படுத்துகிறது. சொற்களையும் வைப்புமுறையையும் அறுதியாக வரையறை செய்கிறது. அதனூடாக தமிழுக்கு வலுவான அடிப்படை ஒன்றைச் சமைத்து பின்னாளைய நூல்கள் அனைத்தையும் தன்பிடிக்குள் நிறுத்துகிறது. தொல்காப்பியம் தமிழில் முதல்நூல் அல்ல, அது ‘என்மனார் புலவர்’ போன்ற சொற்கள் வழியாக அது புலவர்மரபின் முதிர்வாக உருவாகி வந்தது என சொல்லிக்கொள்கிறது. அதற்கு முந்துநூல்கள் இருந்திருக்கலாம். ஆனால் ஐந்திரம் போன்றவை பிராகிருத மரபிலேயே இருந்திருக்கும் என்று ராஜ்கௌதமன் எண்ணுகிறார். தொல்காப்பியம் இந்திய அளவில் இருந்து வந்த அறிவியக்கம் ஒன்றுடன் தமிழ்ப்பண்பாட்டை உறுதியாகப் பிணைக்கும் நூல் என்பது அவருடைய கருத்து தொல்காப்பியம் அதுவரையிலான தமிழ்ப்பண்பாட்டை வரையறுக்கையில் தமிழ்ப்பண்பாட்டில் இருந்துவந்த சாதியையும் வரையறைசெய்கிறது. அது நீதிநூல் அல்ல, பண்பாட்டுநூல் என்பதனால் பண்பாட்டில் சாதி என்னவாக உள்ளது என வரையறைசெய்கிறது. பண்பாட்டில் இழிசினர்,ஏதிலார் என்றெல்லாம் அழைக்கப்படும் அடித்தளச் சாதியினரின் இடத்தை % வரையறைசெய்கிறது [ _ பக்கம் 44] . தலைவன் என்றால் யார், தலைவன் தலைவியின் விழுமியங்கள் என்னென்ன, பிறருடைய சமூகப் பாத்திரம் என்னென்ன என்றெல்லாம் வகுத்துச் சொல்லும் தொல்காப்பியம் அதன்பின்னர் வந்த பெரும்பாலான இலக்கணநூல்களுக்கு முதனூலாக அமைந்து இன்றுவரை தன் முக்கியத்துவம் குறையாமல் நீடிக்கிறது. அடுத்த கட்டத்தின் மறுதொகுப்பு, வரையறை களப்பிரர் ஆட்சி அகற்றப்பட்டு பல்லவர் ஆட்சிக்கு வந்தபோது நிகழ்ந்தது என்பது ராஜ்கௌதமன் அவர்களின் கணிப்பு. சங்க காலத்திலேயே குல ஏற்றத்தாழ்வுகள், செய்யும்தொழில் சார்ந்த சமூக இழிவுபடுத்தல்கள் இருந்தன. ஆனால் பல்லவர் காலத்தில் வைதிக மதத்தின் உதவியுடன் அவை சமூகநெறிகளாக நிலைநிறுத்தப்பட்டன என அவர் வரையறை செய்கிறார். இக்காலகட்டத்தில்தான் தமிழ்ச்சமூகத்தில் தீண்டாமை உருவாகி வலுப்பெற்றது என கருதுகிறார். மரபைப் பொருள்கொள்வதில் பல புதிய முறைகள் உருவாகி வந்தன. அவை பின்னர் பக்திமரபாக வளர்ச்சி அடைந்தன. பல்லவர் காலத்தில் தொடங்கிய மரபை தொகுத்து மறுவரையறை அளிக்கும் செயல்பாடு பிற்காலச் சோழர் காலகட்டத்திலும் நீடித்து பிற்காலப் பாண்டியர் காலத்தில் முழுமையடைந்தது. இன்று நாம் மரபின்தொகை என எண்ணுவது அவ்வாறு உருவாகி வந்தது. திருக்குறள் உள்ளிட்ட நூல்களுக்கு உரைகள் எழுதப்பட்டன. பலவகையான இலக்கணநூல்கள் வகுக்கப்பட்டன. இந்த இலக்கண நூல்கள் அனைத்தும் சம்ஸ்கிருதத்தில் முந்துநூல்கள் கொண்டிருந்தன.இந்திய அளவில் எழுச்சி கொண்ட வைதிக அறிவியக்கத்தின் பகுதியாக இந்த மறுவரையறை அமைந்தது. மூன்றாவது தொகுத்துவரையறை செய்யும் செயல்பாடு இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியின் வழியாக நவீனமுதலாளித்துவம் அறிமுகமாகி, நவீனக் கல்வி பரவலாகி, புதிய ஆதிக்கவர்க்கமும் அதற்குரிய அரசியல்கருத்துக்களும் எழத்தொடங்கியபோது நிகழ்ந்தது. அதையே நாம் தமிழியக்கம் என்கிறோம். தமிழ்நூல்கள் ஏட்டிலிருந்து அச்சுக்கு வந்தன. அவற்றுக்கு நவீன உரைகள் உருவாயின. அதையொட்டி உருவான பொருள்கோடல் தமிழ்ப்பண்பாடு என ஒன்றை கட்டமைத்தது. அது ஏற்கனவே சொன்னதுபோல ஒரு தமிழ்த்தேசிய அடையாளத்தை உருவாக்கும் நோக்கம் கொண்டிருந்தது. அந்த மூன்றாவது தொகுப்பு –மறுவரையறையின் வழியாக நாம் நம் மரபை இற்றைப்படுத்திக்கொண்டோம் இவ்வாறு மூன்று நிலைகளிலாக நிகழ்ந்த தொகுப்பு –மறுவரையறைகளின் விளைவாகவே நமக்கு சங்ககாலம் முதல் இன்றுவரையிலான பண்பாட்டுமரபு பொருள்படுகிறது என்பதை இந்நூலில் ராஜ் கௌதமன் கூறுகிறார். தமிழ்ப்பண்பாட்டு மரபு என்பது ஓர் நிலையான அமைப்பு, அது நம்மால் ‘கண்டடையப்பட்டது’ என்னும் இயல்பான உளமயக்கை அவர் நிராகரிக்கிறார். அது தொடர்ச்சியாக தொகுத்து மறுவரையறைசெய்து நம்மால் உருவாக்கப்பட்டதுதான். நமது அக்காலத்தைய சமூகவியல் –அரசியல் தேவைகளுக்கேற்ப அது பொருள்கொள்ளப்பட்டது. இன்று அதற்கு அளிக்கப்பட்டிருக்கும் பொருளிலிருந்து மேலும் மேலும் பின்னகர்ந்து முன்னர் அளிக்கப்பட்ட பொருள்களையும், அவை அளிக்கப்பட்ட சூழலையும் புரிந்துகொள்வதன் வழியாகவே நாம் அவற்றின் பங்களிப்பை உண்மையில் புரிந்துகொள்ள முடியும். தமிழ்ப்பண்பாட்டின் பரிணாமத்தையும் வகுத்துக்கொள்ளமுடியும். மூன்றாவது நூலான ஆரம்பகட்ட முதலாளியமும் தமிழ்ச்சமூக உருவாக்கமும். டேவிட் லட்டனின் Peasant History of South India மற்றும் அதன் விரிவாக்கப்பட்ட பதிப்பான Early capitalism and Local History in south India ஆகிய இரு நூல்களை முதல் நூலாகக் கொண்டு எழுதப்பட்டது. ஆங்கிலேயர் இங்கே கொண்டுவந்தது ஆரம்பகட்ட முதலாளித்துவம். அது இங்குள்ள பண்பாட்டு வரலாற்றில் என்னென்ன மாற்றங்களை உருவாக்கியது என்று ராஜ்கௌதமன் ஆராய்கிறார். இது முந்தைய நூலின் பேசுதளத்தை இன்னொரு கோணத்தில் விரிவாக்குகிறது. இன்று நாம் தமிழ்ப்பண்பாட்டை தொகுத்து மறுவரையறை செய்கிறோம் என்றால் எந்த அடிப்படையில்? அதன் கருத்தியல் என்ன, பொருளியல் அடித்தளம் என்ன? அதை இந்நூல் பெரும்பாலும் ஆரம்பகட்ட முதலாளித்துவம் உருவாக்கிய பொருளியல் அடித்தள மாற்றத்தின் அடிப்படையில் ஆராய்கிறது முதலாளித்துவத்தின் இரண்டு அடிப்படைக்கூறுகள், ஒன்று பேரளவிலான உற்பத்தியும் அதற்கேற்ற வினியோகமும் அதன்விளைவாக மக்கள் நுகர்வோர் ஆக்கப்படுவதும். இன்னொன்று, உற்பத்திக்கான அடிப்படை அலகாக மானுடர் மாற்றப்படுவது. ஆகவே அவர்கள் உழைக்கும் கைகளாகவே அடையாளப்படுத்தப்படுவது. இவ்விரு அம்சங்களும் நிலப்பிரபுத்துவ காலகட்டத்தில் மனிதர்களுக்கு அளிக்கப்பட்ட அடையாளத்தை மாற்றிவிட்டன. அவர்கள் குலத்தால் குருதியால் அடையாளப்படுத்தப்படுவதற்குப் பதிலாக உழைப்போர் நுகர்வோர் என ஆயினர். அடிப்படையில் இதுவே உலகமெங்கும் நிலப்பிரபுத்துவத்தால் அடிமைகளாக ஆக்கப்பட்டிருந்த மக்களை விடுதலைசெய்யும் கருத்தியல்கூறாக மாறியது. முதலாளித்துவம் உலகுக்கு அளித்த பெருங்கொடை இது. ராஜ் கௌதமன் நமக்குக் கிடைத்துள்ள நிலமானியமுறைகள் குறித்த செய்திகள் வழியாக தமிழ்ச்சமூகத்தின் உற்பத்தி உறவுகள் கொண்ட மாற்றங்களை இந்நூலில் விவரிக்கிறார்.தமிழகத்தின் நிலமானியமுறை குறித்த செய்திகள் பல்லவர் காலம் முதல்தான் ஓரளவு கிடைக்கத் தொடங்குகின்றன. பிற்காலச் சோழர்காலத்தில் நிலவுடைமைமுறை இங்கே அழுத்தமாக வேரூன்றி சோழப்பேரரசின் அடித்தளக் கட்டுமானமாக ஆகியது. நிலவுடைமையாளர்களும் நில அடிமைகளும் தெளிவாக வரையறைசெய்யப்பட்டனர். அவர்களை மாற்றமில்லாமல் நிலைநிறுத்தும் கருத்தியல்கள் உருவாக்கப்பட்டன. சோழர்காலத்தில் உருவான நிலமானியமுறை பெரிய மாற்றங்களேதும் இல்லாமல் நாயக்கர் ஆட்சிக்காலத்தை வந்தடைந்தது நாயக்கர் ஆட்சிக்காலத்தில் நஞ்சைநிலத்திற்குச் சமானமாக புஞ்சைநில வேளாண்மை உருவாகியது.ஏரிப்பாசனம் வழியாக புதிய வேளாண்நிலங்கள் எழுந்தன. ஏராளமான மக்கள் தமிழ்நிலத்தில் குடியேறினார்கள். விளைவாக இங்கிருந்த சாதிய அமைப்பு மாறுபட்டது.நாயக்கர்கள் கைப்பற்றிய நிலங்களிலிருந்து தொல்குடிகள் வெளியேறினர். அருந்ததியர் போன்ற தலித் மக்களும் குடியேறினார்கள். நாயக்கர் கால நிலமானியமுறை பாளையக்காரர்களை அடிப்படை அலகாகக் கொண்டது. அது பின்னாளில் ஜமீன்தார் முறையாக அது உருப்பெற்றது. இந்த விரிவான பின்னணியில் தமிழ்ச்சூழலில் சாதியமைப்பில் ஏற்பட்ட மாற்றங்களை ஆராய்ந்து ஒரு முழுமைச்சித்திரத்தை அளிக்க ராஜ் கௌதமன் முயல்கிறார். சாதிய அடுக்கு என்பது நிலவுடைமை, போர்த்திறன், அரசில் பங்கு என்னும் மூன்று ’தகுதி’களின் அடிப்படையில் மக்களை விரிவாகப் பகுத்தது. அதில் எப்போதும் நிலவுடைமையே முதன்மை இடத்தை வகித்தது. நிலவுடைமைக்கு வாய்ப்பிருந்த இடங்களில் தலித் மக்கள் சற்று சுதந்திரத்துடனும் தங்கள் தனியடையாளங்களைப் பேணியபடியும் வாழமுடிந்தது. அது பெரும்பாலும் பயன்குறைவான வரண்டநிலங்களில் வாழ்ந்த தலித்துக்களுக்கே இயன்றது. வளமான தஞ்சைநிலம் போர், அரசு,மதம் ஆகிய மூன்றுவகை ஆதிக்கங்களைக் கொண்டவர்களுக்குரியதாக இருந்தது. அங்கே தலித்துக்கள் அடிமைகளாக நிலத்துடன் கட்டுண்டிருந்தனர். இன்றுகூட இச்சித்திரத்தின் நீட்சியை நாம் காணலாம். இம்மூன்று நூல்களின் வழியாக ராஜ்கௌதமன் தமிழகத்தில் நிலஅடிமைகளாகிய தலித்துக்கள் எப்படி உருவாகிவந்தனர் என்றும், தமிழ்ப்பண்பாட்டில் அவர்களின் இடம் எப்படி வரையறைசெய்யப்பட்டது என்றும் விளக்குகிறார். இந்நூல்கள் வழியாக ஒரு தர்க்கபூர்வமான சரடாக அந்த வரலாற்றை வாசகர்கள் வகுத்துக்கொள்ள முடியும். பெருங்கற்காலப் பண்பாட்டிலிருந்து சங்ககாலப் பண்பாடு உருவாகி வந்தபோது முந்தையவாழ்க்கையை ஆசாரங்களாகவும் கலைகளாகவும் ஆக்கிக்கொண்டனர். அச்சூழலில் மெல்லமெல்ல பாலைகளையும் மலைகளையும் சார்ந்த ஒருதரப்பு கீழிறங்க வேளாண்நிலம், மேய்ச்சல்நிலம் சார்ந்த இன்னொரு தரப்பு மேலோங்கியது. கீழிறங்கிய குடி இழிசினர் என்று அடையாளப்படுத்தப்பட்டது. தொழில்சார்ந்த இழிவையும் சந்தித்தது பின்னர் அந்த அடித்தளத்து மக்கள் நிலஅடிமைகளாக ஆக்கப்பட்டார்கள். அவர்கள் அவ்வாறே நிலைபெறுவதற்குரிய கருத்தியல் அடிப்படைகள் உருவாக்கப்பட்டன. அவர்கள் நில அடிமைகளாகி, தீண்டத்தகாதவர்களாகி மண்ணுடன் நிரந்தரமாகப் பிணைக்கப்பட்டார்கள். ஆரம்பகால முதலாளித்துவம் உருவாகி உற்பத்தியின் இயல்பு மாறியபோது அவர்களின் உழைப்புக்கு பணமதிப்பு உருவானது. அது அவர்களை நிலத்திலிருந்து விடுதலைசெய்தது. அவர்கள் தங்கள் உரிமைகளை நோக்கிய விழிப்புணர்வை அடைந்தனர். தலித் விடுதலையின் அரசியல் உருவானது. ஒட்டுமொத்தமாக ராஜ்கௌதமன் உருவாக்கும் விரிந்த சித்திரத்தின் எளிய கோட்டுரு இது. மிகமிக விரிவான தரவுகள், தர்க்கங்கள் வழியாக இந்த மூன்றுநூல்களில் இதை ராஜ்கௌதமன் நிறுவுகிறார் [மேலும்] ராஜ் கௌதமனின் பண்பாட்டு வரலாற்றுப் பார்வை-7 ராஜ் கௌதமனின் பண்பாட்டு வரலாற்றுப் பார்வை-6 ராஜ் கௌதமனின் பண்பாட்டு வரலாற்றுப் பார்வை-5 ராஜ் கௌதமனின் பண்பாட்டு வரலாற்றுப் பார்வை-4 ராஜ் கௌதமனின் பண்பாட்டு வரலாற்றுப் பார்வை-3 ராஜ் கௌதமனின் பண்பாட்டு வரலாற்றுப் பார்வை-2 ராஜ் கௌதமனின் பண்பாட்டு வரலாற்றுப் பார்வை-1 Tags: ராஜ்கௌதமன் Continue Reading Previous: விஷ்ணுபுரம் விழா விருந்தினர் -9, நரன் Next: ராஜ்கௌதமனின் அ.மாதவையா, இலவசநூல் வரவிருக்கும் நிகழ்வுகள் இன்று விஷ்ணுபுரம் விழா தொடக்கம் 010 வரவிருக்கும் நிகழ்வுகள் இன்று விஷ்ணுபுரம் விழா தொடக்கம் admin December 25, 2021 சந்திப்புகள் விழாக்கள் விழா ஒரு கோரிக்கை விஷ்ணுபுரம், அரங்கு முறைமையும் நெறிகளும் இன்று, 25-12-2021 அன்று விஷ்ணுபுரம் விருது வழங்கும் விழா கோவை... மேலும் படிக்க... விஷ்ணுபுரம் விருது விழா, வருக! 010 வரவிருக்கும் நிகழ்வுகள் விஷ்ணுபுரம் விருது விழா, வருக! admin December 7, 2021 விஷ்ணுபுரம் விருது விழா வரும் டிசம்பர் 25 மற்றும் 26 தேதிகளில் கோவையில் நிகழவிருக்கிறது. முதல்நாள் வழக்கம்போல எழுத்தாளர் வாசகர் சந்திப்புகள். கோகுல்பிரசாத்,... மேலும் படிக்க... 2021-12: விஷ்ணுபுரம் இலக்கிய விருது விழா – விக்கிரமாதித்யன் 003 Event cover post 010 வரவிருக்கும் நிகழ்வுகள் 2021 நிகழ்வுகள் விஷ்ணுபுரம் விருது-விழா 2021-12: விஷ்ணுபுரம் இலக்கிய விருது விழா – விக்கிரமாதித்யன் admin November 5, 2021 மேலும் படிக்க... அண்மைய நிகழ்வுகள் 2021-10: புவியரசு 90 – விழா 003 Event cover post 009 அண்மைய நிகழ்வுகள் 2021 நிகழ்வுகள் படைப்பாளுமை ஆய்வரங்கு-விழா 2021-10: புவியரசு 90 – விழா admin October 24, 2021 மேலும் படிக்க... 2021-10: வெண்முரசு – இசை வெளியீட்டு விழா 003 Event cover post 008 வெண்முரசு தொடர்பானவை 009 அண்மைய நிகழ்வுகள் 2021 நிகழ்வுகள் பிற ஆய்வரங்கு/நிகழ்வு 2021-10: வெண்முரசு – இசை வெளியீட்டு விழா admin October 9, 2021 மேலும் படிக்க... 2021-10: கவிதை அரங்கு (கோவை) 003 Event cover post 009 அண்மைய நிகழ்வுகள் 2021 நிகழ்வுகள் பிற ஆய்வரங்கு/நிகழ்வு 2021-10: கவிதை அரங்கு (கோவை) admin October 3, 2021 மேலும் படிக்க... 2021-07: வெண்முரசு நாள் – குருபூர்ணிமா 2021 003 Event cover post 008 வெண்முரசு தொடர்பானவை 009 அண்மைய நிகழ்வுகள் 2021 நிகழ்வுகள் கலந்துரையாடல் 2021-07: வெண்முரசு நாள் – குருபூர்ணிமா 2021 admin July 23, 2021 மேலும் படிக்க... 2021-06: குமரகுருபரன்-விஷ்ணுபுரம் விருது 2021 – மதார் 003 Event cover post 009 அண்மைய நிகழ்வுகள் 2021 நிகழ்வுகள் குமரகுருபரன்-விஷ்ணுபுரம் விருது-விழா 2021-06: குமரகுருபரன்-விஷ்ணுபுரம் விருது 2021 – மதார் admin June 30, 2021 மேலும் படிக்க... Facebook Youtube Twitter Instagram தொடர்புக்கு: solputhithu@gmail.com | Copyright விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் © All rights reserved. | MoreNews by AF themes.
ஒட்டன்சத்திரம் பகுதியில் நடைபெற்று வரும் நான்கு வழிச்சாலைப் பணிகளை மாவட்ட ஆட்சியா் ச.விசாகன், திண்டுக்கல் தொகுதி மக்களவை உறுப்பினா் ப.வேலுசாமி ஆகியோா் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தனா். திண்டுக்கல் மாவட்டத்தில் காமலாபுரம் பிரிவு முதல் பொள்ளாச்சி வரை நான்கு வழிச்சாலைப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதில் காமலாபுரம் பிரிவு முதல் லெக்கையன்கோட்டை வரையிலும், ஒட்டன்சத்திரம் முதல் மடத்துக்குளம் வரையிலும் நடைபெற்று வரும் பணிகளை மாவட்ட ஆட்சியா், மக்களவை உறுப்பினா் ப.வேலுசாமி ஆகியோா் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா். மல்லையாபுரம் பகுதியில் பாலம் கட்டித்தரவும், காளாஞ்சிபட்டி கிராமத்தில் அணுகுசாலை அமைக்கவும், கொல்லப்பட்டி புறவழிச்சாலையின் குறுக்கே புதிய பாதை அமைக்கவும், காவேரியம்மாபட்டி- அரசப்பபிள்ளைபட்டி பாலத்தின் இருபுறம், வீரலப்பட்டி- கோதைமங்கலம் இடையே அணுகுசாலை அமைக்கவும், நிலம் வழங்கிய விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகையை கூடுதலாக வழங்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். அப்போது மாவட்ட வருவாய் அலுவலா் வே.லதா, மாவட்ட வருவாய் அலுவலா் (நிலம் எடுப்பு) சேக்முகைதீன், தேசிய நெடுஞ்சாலைத்துறை திட்ட இயக்குநா் கோவிந்தசாமி, திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியா் கு.பிரேம்குமாா், பழனி வருவாய் கோட்டாட்சியா் ச.சிவக்குமாா், மாவட்ட ஊராட்சிக்குழு துணைத் தலைவா் கா.பொன்ராஜ், வட்டாட்சியா்கள் எம்.முத்துசாமி, சசி உள்ளிட்டோா் உடனிருந்தனா். ADVERTISEMENT Tags : ஒட்டன்சத்திரம் Subscribe to Notifications ADVERTISEMENT MORE FROM THE SECTION கொடைக்கானலில் ஒரு லட்சம் மலா் நாற்றுகளை நடும் பணி தொடக்கம் 25 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருக்கும் முஸ்லிம்களை விடுதலை செய்ய வேண்டும் பெரியநாயகியம்மன் கோயிலில் கைலாசநாதா் திருக்கல்யாணம் பழனி சுற்றுவட்டார பகுதிகளில் சாரல்மழை வாத்தை விழுங்கிய மலைப்பாம்பு பிடிப்பு நீதிபதியை மாற்றக் கோரி வழக்குரைஞா்கள் பணி புறக்கணிப்பு மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முற்றுகை 5 லட்சம் பழங்குடியின மக்களுக்கு சாதிச் சான்றிதழ் இல்லை: பி. டெல்லி பாபு TRENDING TODAY சந்திரசேகா் ராவ் மெஹபூபா முஃப்தி நரேந்திர மோடி குஜராத் ஜெ.பி.நட்டா TRENDING WEEK தொல்.திருமாவளவன் ஆரூா்தாஸ் கரோனா ராமதாஸ் கே.எஸ்.அழகிரி LATEST NEWS Chief Minister started Minister Ma Subramanian First year class started Punjab train accident Telangana LATEST SECTIONS தமிழ்நாடு இந்தியா தற்போதைய செய்திகள் சினிமா வேலைவாய்ப்பு ADVERTISEMENT Copyright - dinamani.com 2022 The New Indian Express | Samakalika Malayalam | Kannada Prabha | Edexlive | Indulgexpress | Cinemaexpress | Event Xpress
யாழ்ப்பாணம் மண்டைதீவு திருவெண்காட்டில் எண்ணியவாறே எல்லா காரியங்களிலும் வெற்றி கிட்டும் சங்கடஹர சதுர்த்தி ! ! ! 24.01.2019 சங்கடஹர சதுர்த்தி வரும் அதிகாலையில் எழுந்து வீட்டில் உள்ள விநாயகரை முதலில் தரிசித்து விட வேண்டும். பின்னர் குளித்து முடித்து விநாயகருக்கு விளக்கேற்றி, அருகம்புல் அல்லது கிடைத்த மலர்களை வைத்து பூஜிக்கலாம். தூப தீப, நைவேத்தியம் செய்வது சிறப்பானது. அன்று முழுவதும் அதாவது மாலை வரை உபவாசம் இருப்பது நல்லது. மாலை வேளையில் அருகில் உள்ள கணபதி கோயிலுக்குச் சென்று சங்கடஹர சதுர்த்தி பூஜையில் கலந்து கொள்ள வேண்டும். வசதி இருந்தால் அபிஷேகம், அர்ச்சனை செய்யலாம். பிரசாதமும் அளிக்கலாம். Email This BlogThis! Share to Twitter Share to Facebook மேலும் வாசிக்க | Sunday, January 20, 2019 யாழ்ப்பாணம் மண்டைதீவு திருவெண்காட்டில் உலகம் போற்றும் வாழ்க்கை அமையும் தைப்பூச திருநாள் ! ! ! 21.01.2019 தைப்பூசம் அன்று விரதம் இருந்து, பால், பழம் சாப்பிட்டு மாலையில் கந்தன் புகழ்பாடி, கந்தப்பம் நைவேத்யம் படைத்து, முருகப்பெருமானை வழிபட்டால் எந்த நாளும் இனிய நாளாக அமையும். தமிழ் கடவுளான முருகப்பெருமானின் திருவிழாக்களில் முக்கியமானது தைப்பூசம். இது தை மாதத்தில் பூச நட்சத்திரத்தன்று பவுர்ணமி தினத்தன்றோ அல்லது அந்த தினத்தையட்டியோ ஓரிரு நாள் முன்பின் தைப்பூசம் கொண்டாடப்படுகின்றது. இந்த நாளில் ஆறுபடை வீடுகள் உள்ளிட்ட அனைத்து முருகன் கோவில்களிலும், எல்லா சிவன் கோவில்களிலும் திருவிழாக்கள் நடைபெறும். Email This BlogThis! Share to Twitter Share to Facebook மேலும் வாசிக்க Labels: இந்து சமயம் | Friday, January 18, 2019 யாழ்ப்பாணம் மண்டைதீவு திருவெண்காட்டில் சுபிட்சம் தரும் சுக்கிர வார பிரதோஷம் ! ! ! 18.01.2019 தை மாதத்தின் முதல் பிரதோஷம் இன்று. எனவே இன்றைய நாளில் (18.01.19), மறக்காமல் சிவ தரிசனம் செய்யுங்கள். மேலும் சுக்கிர வாரம் என்று சொல்லப்படும் வெள்ளிக்கிழமை அன்று வந்துள்ள பிரதோஷத்தில், நந்திதேவரையும் சிவனாரையும் தரிசித்தால், சுபிட்சம் நிலவும். வாழ்க்கை வளமாகும்! தை மாதம் பிறந்து வருகிறது முதல் பிரதோஷம் இன்றைய தினம். தை மாதத்தில் வருகிற பிரதோஷ நாளில், சிவாலயம் சென்று வழிபடுவது வளமும் நலமும் தந்தருளும் என்பார்கள். Email This BlogThis! Share to Twitter Share to Facebook மேலும் வாசிக்க Labels: இந்து சமயம் | Monday, January 14, 2019 யாழ்ப்பாணம் மண்டைதீவு திருவெண்காட்டில் விண்ணுக்கும் மண்ணுக்கும் நன்றி செலுத்தும் தைப்பொங்கல் திருநாள் ! ! ! 15.01.2019 தை பொங்கல் திருநாளான நாளை 15ஆம் தேதி காலை 7.30 மணி முதல் 9 மணி வரை பொங்கல் வைக்கவும், சூரியனுக்கு படையல் போட்டு பூஜை செய்யவும் நல்ல நேரமாகும். உலகிற்கு ஒளி கொடுக்கும் கதிரவனின் வடதிசை பயணத்தின் துவக்கமும், தென்திசை பயணத்தின் முடிவும் பொங்கலாக கொண்டாடப்படுகிறது. தை மாதம் முதல் நாள் அன்று உலகிற்கு வெளிச்சம் கொடுத்து விளைச்சலுக்கு உதவி புரியும் சூரியன், தாய் மண், கால்நடைகள் அனைத்துக்கும் மரியாதை செய்யும் விதமாக பொங்கல் திருநாள் கொண்டாடப்படுகிறது. மழைக்குக் காரணமான இந்திரன், பயிர் நன்றாக வளர்ந்து தானியங்கள் அதிகமாக விளைவதற்கு காரணமான சூரியன், இந்திரனுடைய சகோதரன் உபேந்திரன் ஆகியோர்களுக்கு நன்றி கூறும் விதமாகவும் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. Email This BlogThis! Share to Twitter Share to Facebook மேலும் வாசிக்க Labels: இந்து சமயம் | Wednesday, January 9, 2019 யாழ்ப்பாணம் மண்டைதீவு திருவெண்காட்டில் விக்கினங்கள் தீர்க்க வல்ல விநாயகர் சதுர்த்தி வழிபாடு !!! 09.01.2019 விநாயகர் சதுர்த்தியன்று அவருக்கு இஷ்டமான 21 வகை யான பச்சிலைகளை வைத்து பூஜை செய்தால் இன்னும் விசேஷம். எவ்வளவு பலகாரங்கள், பழங்கள் என ஆடம்பரமாக வைத்தாலும் வைக்காவிட்டாலும் இந்த 21 இலைகள் வைத்து வழிபட்டால் நினைத்தது அத்தனையும் நிறைவேறும். Email This BlogThis! Share to Twitter Share to Facebook மேலும் வாசிக்க Labels: இந்து சமயம் | Thursday, January 3, 2019 யாழ்ப்பாணம் மண்டைதீவு திருவெண்காட்டில் வாழ்வை வளமாக்கும் குருவார பிரதோஷம்! குருவாரத்தில், அதாவது வியாழக்கிழமையில் பிரதோஷ பூஜையைத் தரிசியுங்கள். குடும்பத்தில் எல்லா சத்விஷயங்களும் நடந்தேறும். இனிமையாக வும் குதூகலத்துடனும் வாழ்வீர்கள். குருவாரம் என்று சொல்லப்படும் வியாழக்கிழமை யில் பிரதோஷம் வருவது ரொம்பவே சிறப்பு வாய்ந்தது. இந்த நாளில், மாலை வேளையில், அருகில் உள்ள சிவாலயத்திற்குச் செல்லுங்கள். நந்திதேவர், சிவபெருமான், குருவாரம் என்பதால் நவக்கிரகத்தில் உள்ள குரு பகவான், கோஷ்டத்தில் உள்ள குரு தட்சிணாமூர்த்தி முதலானோரை கண்ணாரத் தரிசியுங்கள். மனதாரப் பிரார்த்தனை செய்யுங்கள். Email This BlogThis! Share to Twitter Share to Facebook மேலும் வாசிக்க Labels: இந்து சமயம் | « Newer Posts Older Posts » Home Subscribe to: Posts ( Atom ) சிறப்பு இணைப்புக்கள் திருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தான வரலாற்றுச் சிறப்புக்களும் பழமைகளும் சிறப்புக் கட்டுரை திருவெண்காடு புண்ணிய சேஷ்திரத்தில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் சித்திவிநாயகப் பெருமான் . . . (படங்கள்) திருவெண்காடு திருவருள் மிகு சித்திவிநாயகர் தேவஸ்தான சுற்று சூழல் (படங்கள்) போரின் பின் மீண்டெழுந்து அருள்பாலிக்கும் மண்டைதீவு திருவெண்காடு சித்திவிநாயகர் ! ! ! திருவெண்காட்டுப் பெருமானுக்கு திருக்கோபுரம் அமைக்க வாரீா் ! ! ! திருவெண்காடு சித்திவிநாயகர் தேவஸ்தான இராஜகோபுர கட்டுமான பணிகளின் தற்போதைய நிலை .. 19.03.2014 (வீடியோ இணைப்பு) திருவெண்காடுறைவோன் துணை யாவர்க்கும் முன்நின்று பொலிக ! ! ! திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயக பெருமானை தரிசித்த வட மாகாண முதலமைச்சர் மான்புமிகு சி.வி. விக்னேஸ்வரன் அவர்கள் (படங்கள் இணைப்பு) Total Pageviews மிக விரைவில் >>>>>>> திருவெண்காடு மண்டைதீவு விஜய வருட மகோற்சவம் - 2013 * காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் திருக்கோவில் (நிலம்) * திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோவில் (நெருப்பு) * திருவானைக்கா ஜம்புகேசுவரர் திருக்கோவில் (நீர்) * சிதம்பரம் நடராஐர் திருக்கோவில் (ஆகாயம்) *திருக்காளத்தி காளத்தீசுவரர் திருக்கோவில் (காற்று) *திருக்கோணேஸ்வரர் திருக்கோவில் *நல்லூர் கந்தசுவாமி திருக்கோவில் Popular Posts ராஜயோகம் அளிக்கும் ராகு கிரகத்தை வணங்குவதால் ஏற்ப்படும் நன்மைகள் ! ! ! சு வர்பானு எனும் அசுரன், சூரியனை மறைத்து இருளைப் பரப்பினான். சூரிய கிரணம் வெளிவராத நிலையில், உலக இயக்கமும் உயிரினங்களின் வேலைகளு... பன்னிரண்டு இராசிக்காரர்க்கும் சனி பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 2014 - 2017 திருக்கணித பஞ்சாங்கப்படி எதிர்வரும் நவம்பர் 02.11.2014 அன்று ஞாயிற்றுக்கிழமை இரவு 08.34 மணிக்கு சனி பகவான், துலா இராசியில் இருந்து விர... மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தான இரதோற்ஸவம் 07-09-2014 (வீடியோ இணைப்பு) வீடியோ பகுதி 01 வீடியோ பகுதி 02 முழுமையான வீடியோ www.nainativu.org நன்றி. வீடியோ www.thi... குரு பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் . . .(2014-2015) திருக்கணிதம் பஞ்சாங்கமுறைப்படி 19.6.2014 வியாழன் காலை 8.31 மணிக்கு குருபகவான் மிதுன இராசியிலிருந்து கடக இராசிக்கு பெயர்ச்சி ஆ... பன்னிரண்டு இராசிகளுக்குமான ஆங்கில புத்தாண்டு இராசிபலன்கள் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் - 2016 01.01.2016, வெள்ளிக்கிழமை அன்று ஆங்கில புத்தாண்டு பிறக்கிறது. வெள்ளி என்றாலே ஸ்ரீமகாலஷ்மிக்கு விருப்பமான நாள். அருமையான தினத்தன்று ப... பன்னிரண்டு இராசிகளுக்குமான மன்மத வருட இராசிபலன்கள் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 14.04.2015 - 13.04.2016 கண் திருஷ்டியை உணர்வது எப்படி ! அதை விரட்ட எளிய பரிகாரங்கள் . . . வாழ்க்கையின் ஒவ்வொரு கணமும் சுகம், இன்பம், சந்தோஷம், பொன், பொருள், சொத்துக்களை தேடி நாம் முயன்று கொண்டே இருக்கிறோம். ஒரு சிலருக்கு முய... பன்னிரண்டு இராசிக்காரர்க்கும் சனி பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 2017 - 2020 வருடா வருடம் கிரக நிலை மாறுவது வழமை அந்த வகையில் இவ்வருடம் சனி பெயர்ற்சியின் மாற்றம் பல நன்மை தீமைகளை வெளிக்காட்டியுள்ளது…. எந்த ... திருவெண்காட்டில் திருவெம்பாவை விரத ஆரம்பம் (27/ 12 / 2014) திருவெம்பாவை திருப்பள்ளியெழுச்சி பாடல் வரிகள் . . . மாதங்களிலெல்லாம் சிறந்த மார்கழியை இறை வழிபாட்டிற்கே உரிய மாதமென்றே சொல்லலாம். வெள்ளத்தில் ஏற்படும் சுழியானது துவக்கத்தில் மெதுவானதாக... 2015ம் ஆண்டு புது வருட ராசி பலன் யாருக்கு சாதகம் ! பன்னிரண்டு இராசிக்காரர்களுக்குமான புதுவருட இராசி பலன்கள்
நகர்ப்புற நக்சல்கள் இன்னும் சுறுசுறுப்பாக உள்ளனர். அவர்கள், நாட்டின் வளர்ச்சி திட்டங்களை தடுக்க முயற்சிக்கின்றனர். - பிரதமர் மோடி காந்தி குடும்பத்தில் இருந்து யாரும் காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிடவில்லை. எனவே நான் போட்டியிட முடிவு செய்துள்ளேன். - ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் இந்தியாவில் புகையிலை பயன்பாட்டை கட்டுப்படுத்த ஒன்றிய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்காதது ஏமாற்றம் அளிக்கிறது. - பாமக தலைவர் அன்புமணி ஒன்றிய பாஜ ஆட்சி பொறுப்பேற்ற நாளிலிருந்து இஸ்லாமிய விரோதப்போக்கை கடைபிடித்து வருகிறது. - விசிக தலைவர் திருமாவளவன் Tags: பிரதமர் மோடி அசோக் கெலாட் அன்புமணி திருமாவளவன் மேலும் செய்திகள் நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள குஜராத் சட்டமன்ற தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!! அதிமுக தலைவர்கள் ஒன்றிணைய வேண்டும் என்று அமித்ஷா நிபந்தனை சமரச திட்டத்திற்கு எடப்பாடி கடும் எதிர்ப்பு: முடிவு எடுக்க முடியாமல் திணறும் பாஜ வைகோ குற்றச்சாட்டு ஆன்லைன் ரம்மியால் ஒடிசா பெண் இறந்தது தமிழக ஆளுநர் அலட்சியத்தால் தான் அண்ணாமலை தகவல் இலங்கை சிறைபிடித்த தமிழக மீனவர்களை மீட்க ஒன்றிய அரசு நடவடிக்கை தி.நகரில் உள்ள எம்ஜிஆர் நினைவு இல்லத்தில் வி.என்.ஜானகிக்கு முழுஉருவ வெண்கல சிலை: ஓபிஎஸ் அறிவிப்பு தமிழகத்தில் பிடிபட்ட ரூ.360 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் வழக்கை சிபிஐயிடம் ஒப்படைக்க வேண்டும்: எடப்பாடி வலியுறுத்தல் குஜராத் மாநிலம் சட்டசபை தேர்தலில் வாக்களிக்க ஆப்பிரிக்க மக்களுக்கென பிரத்யேக பூத்: உணவு, ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடிய மக்கள்..! புதுச்சேரியை அதிரவைக்கும் மக்களின் அழுகுரல்.. மணக்குள விநாயகர் கோயில் யானை உயிரிழப்புக்காக கதறும் பக்தர்கள்..!! சிற்பி திட்டத்தின் கீழ் மாணவ, மாணவியர்களுக்கான தேசப்பற்று குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி: அமைச்சர் அன்பில் மகேஷ் பங்கேற்பு
உக்ரைனுக்கு ஆதரவாக ஒன்னுகூடிய லட்சக்கணக்கான ஹேக்கர்ஸ்.. கொடுக்கப்பட்ட ‘அசைன்மென்ட்’ என்ன..? பதற்றத்தில் ரஷ்யா..! முகப்பு > செய்திகள் > உலகம் By Selvakumar | Mar 16, 2022 11:36 AM சைபர் தாக்குதலில் உக்ரைன் வெற்றிபெற லட்சக்கணக்கான தன்னார்வ ஹேக்கர்கள் உதவ முன்வந்துள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா 2 வாரங்களுக்கும் மேலாக தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைனின் பல நகரங்களை கைப்பற்றி உள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. மேலும் தலைநகர் கீவ்வை கைப்பற்றுவதில் மும்முரம் காட்டி வருகின்றன. இதனிடையே போரை நிறுத்த பேச்சுவார்த்தைகளும் நடந்து வருகிறது. ஒருபக்கம் போர்க்களத்தில் இரு நாட்டு வீரர்களும் சண்டையிட்டு வரும் நிலையில், மறுபுறம் இரு நாடுகளுக்கும் இடையே சைபர் தாக்குதலும் நடந்து வருகிறது. குறிப்பாக போர் தொடங்கிய முதல் 3 நாட்களிலேயே உக்ரைன் மீது ரஷ்யா சைபர் தாக்குதல் நடத்த ஆரம்பித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அதில், உக்ரேனிய இராணுவம் மற்றும் அரசாங்கத் துறைகளுக்கு எதிரான சைபர் தாக்குதல்கள் 196 சதவீதம் அதிகரித்துள்ளதாக ‘செக் பாயிண்ட் ரிசர்ச்’ என்ற உலகளாவிய சைபர் தாக்குதல்களைக் கண்காணிக்கும் அமைப்பு தெரிவித்துள்ளது. இதனை அடுத்து உக்ரைன் நாட்டின் டிஜிட்டல் டிரான்ஸ்பர்மேஷன் அமைச்சர் மைக்கைலோ பெடோரோ இதுதொடர்பாக டுவிட்டரில் ஒரு வேண்டுகோள் விடுத்தது இருந்தார். அதில், ‘நாங்கள் ஒரு தகவல் தொழில்நுட்ப குழுவை அமைக்க இருக்கிறோம். அதில் எங்களுக்கு டிஜிட்டல் உலகில் திறமை வாய்ந்தவர்கள் தேவை. அனைவருக்கும் தனிப்பட்ட வேலைகள் வழங்கப்படும்’ என குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில் இந்த சைபர் தாக்குதலில் உக்ரைன் வெற்றிபெற உலகம் முழுவதும் இருந்து 3 லட்சத்துக்கும் மேற்பட்ட தன்னார்வ ஹேக்கர்கள் உதவ முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘ஐடி ஆர்மி ஆப் உக்ரைன்’ என்ற டெலிகிராம் குழு மூலம் இந்த தன்னார்வலர்கள் செயல்படுகின்றனர். இவர்களுக்கு ரஷ்ய இணையதளங்களை குறிவைக்கும் வகையில் வேலைகள் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனாலும் தங்கள் மீது இதுவரை மிகப்பெரிய அளவிலான சைபர் தாக்குதல்கள் நடைபெறவில்லை என ரஷ்யா மறுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கூகுள் செய்திகள் பக்கத்தில் behindwoods இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Tags : #UKRAINE #RUSSIA #HACKERS மற்ற செய்திகள் அதிர்ச்சி! ஒரு பவுன் தங்கம் ரூ.1.5 லட்சம்.. Russia – Ukrine War-ன் தாக்கமா? எங்க தெரியுமா? எலான் மஸ்க்-கு மெசேஜ் அனுப்பிய இந்திய மாணவர்.. 2 நிமிடத்தில் வந்த ரிப்ளை..என்ன சொல்லிருக்காரு பாருங்க..! குளத்துக்குள் பதுங்கி இருந்த ரவுடி.. பறந்து வந்த ‘ட்ரோன்’ கேமரா.. சினிமாவை விஞ்சும் சேஸிங்..! Royal Enfield பைக்கை இப்படிதான் திருடுனேன்.. வெறும் 30 செகண்ட்டில் செஞ்சி காட்டிய ‘பலே’ திருடன்.. மிரண்டு போன போலீஸ்..! ஆற்றில் குளிக்க போன மனைவி வீடு திரும்பல.. நைட் முழுக்க தேடிய கணவன்.. கடைசியில் காத்திருந்த அதிர்ச்சி..! பிரபல தமிழ் பாட்டுக்கு பிவி சிந்து 'செம' டான்ஸ்.. நடிகை ஹன்சிகா போட்ட கமெண்ட் .. தெறி வீடியோ மேலும் செய்திகளுக்கு தொடர்புடைய செய்திகள் Celebrity Influencers break down in tears after Instagram is banned in Russia! "They’re lying to you" - A young woman suddenly interrupts Russian TV news! Here's what happened! ‘பொய்.. நம்பாதீங்க’.. ரஷ்ய செய்தி நேரலையில் திடீரென பதாகையுடன் புகுந்த இளம் பெண்.. அதுல என்ன எழுதியிருக்கு? பரபரப்பு வீடியோ..! அந்த ‘ஆப்’ தாங்க என் உயிர்.. திடீர்னு இப்படி பண்ணிட்டாங்க.. கதறி அழுத ரஷ்ய செலிபிரிட்டி..! Russia - Ukraine Crisis: Female Indian pilot who rescued 800 Indian students - Who is this Mahasweta Chakraborty? Tamil students who were stranded in Ukraine return to Chennai, says, "had melted snow to quench thirst" "ஒரு வேளை சாப்பாடு.. 12 நாளும் பயத்தோட..".. உக்ரைனில் இருந்து தமிழகம் திரும்பிய மாணவர்கள் சொன்ன உருக்கமான தகவல்..! Russia – Ukraine Crisis : 800 இந்திய மாணவர்களை மீட்ட பெண் விமானி.. யார் இந்த மகாஸ்வேதா சக்கரவர்த்தி? "80 million users will be affected..." Russia bans Instagram after Meta allows posts calling for violence "8 கோடி பேர் யூஸ் பண்றாங்க.. ரஷ்யா எடுத்த முடிவு அதிர்ச்சியா இருக்கு".. இன்ஸ்டாகிராம் தலைவர் சொன்ன தகவல்..! "It's scary..." - Indian Medical student from Ukraine seeks help from PM Modi! "அத நெனச்சாலே பயமா இருக்கு"...உக்ரைனில் இருந்து திரும்பிய இந்திய மாணவர் பிரதமர் மோடிக்கு வைத்த பரபரப்பு கோரிக்கை..! Ukraine woman who went out to get medicines for sick mother, killed by Russian tank அம்மாவுக்கு மருந்து வாங்கணும்.. திடீர்னு சுத்தி வளச்ச ரஷ்ய வீரர்கள்.. பிறந்தநாள் அன்னிக்கு உக்ரைன் பெண்ணிற்கு நேர்ந்த சோகம்..! Sudden twist: Is the war coming to an end? Important info shared by Russian President Putin - Details! “நானும் 2 குழந்தைக்கு தகப்பங்க”.. நான் எப்படி ‘அந்த’ காரியத்தை செய்வேன்.. உக்ரைன் அதிபர் உருக்கம்..! ‘திடீர் திருப்பம்’.. போர் முடிவுக்கு வருகிறதா? ரஷ்ய அதிபர் புதின் சொன்ன முக்கிய தகவல்..! ‘World’s deadliest’ sniper arrives in Ukraine to fight the Russians முன்னேறும் ரஷ்ய ராணுவம்.."உடனே லேப்-ல இருக்கத எல்லாம் அழிச்சிடுங்க" உக்ரைனுக்கு WHO எச்சரிக்கை..! UK says Russia has confirmed the use of ‘vacuum bombs’ during Ukraine invasion மேலும் செய்திகளுக்கு ABOUT THIS PAGE This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Hackers helping Ukraine win the cyber war against Russia: Report | World News. Everything about Latest News - Chennai, Tamil Nadu, India & World Behindwoods.com @2004-2022 Privacy Policy | Terms & Conditions If you have any grievance against any of our published content, please contact G. Manivannan, Grievance Redressal Officer by emailing to reach@behindwoods.com
கிட்டத்தட்ட 15 பவுண்டு (6.7 கிலோ) எடைகொண்ட குழந்தையை பிரித்தானிய தாய் ஒருவர் பெற்றெடுத்துள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆண் குழந்தை, பிரித்தானியாவில் பிறந்த 3-வது மிகப்பெரிய குழந்தை என கூறப்படுகிறது. மேலும் கடந்த 8 ஆண்டுகளில் பிறந்த மிகப்பெரிய குழந்தை என கூறப்படுகிறது. இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு நகரத்தில் John Radcliffe மருத்துவமனையில் கடந்த வியாழக்கிழமை Cherral Mitchell எனும் 31 வயது பெண்ணுக்கு இக்குழந்தை பிறந்தது. மிட்சலுக்கு பிரசவம் பார்க்க இரண்டு மருத்துவர்கள் (Midwives) தேவைப்பட்டுள்ளனர். தற்போது இக்குழந்தைக்கு Alpha என பியரிடப்பட்டுள்ளது. மேலும் ‘Baby Hippo’ மற்றும் ‘Butter Bean’ என இரண்டு செல்லப்பெயர்களும் வைக்கப்பட்டுள்ளன. அதுபோக குழந்தையின் தாய் ‘pumpkin baby’ என செல்லமாக அழைக்கிறார். 38 வார கர்ப்பத்தில் பிறந்த இக்குழந்தை பிறக்கும்போது கிட்டத்தட்ட 15 பவுண்டு (14lb 15oz / 6.7 கிலோகிராம்) எடை இருந்தது. முன்னதாக பிரித்தானியாவில் 1992-ல் பிறந்த Guy Carr எனும் குழந்தை (15lb 8oz) முதலிடத்திலும், அதனைத் தொடர்ந்து 2013-ல் George King எனும் குழந்தை (15lb 7oz) இரண்டாவது மிகப்பெரிய குழந்தையாக பிறந்துள்ளது. இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Filed under: World Tags: குழந்தை, பிரித்தானிய தாய் Related Posts அதிகரிக்கும் பெண்கள் மீதான அத்துமீறல்: ரஷ்ய படை உத்தரவால் அதிர்ச்சி! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… ஆன்லைன் காதலனை பார்க்க 5000 கி.மீ பயணம் செய்த பெண்மணிக்கு நேர்ந்த கொடூரம்! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… அவுஸ்திரேலிய பொலிஸார் தேடிவந்த இந்திய கொலையாளி டெல்லியில் கைது! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… ← நடைபாதையில் தூங்கிய இருவரை கல்லால் அடித்துக்கொன்ற மனநலம் பாதிக்கப்பட்டவர்! பிறந்தநாளன்று உயிரை மாய்த்துக்கொண்ட தேசிய தடகள வீரர்: அதிர்ச்சி சம்பவம்! →
திருநகர், மதுரை திருநகர் சித்தி விநாயகர் கோயில் மீனாட்சி அம்மனுக்கு நாளை (ஆக.,13) ஆடிப்பூரத்தை முன்னிட்டு ஒரு லட்சம் வளையல்களால் அலங்காரம் நடக்கிறது. திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அன்று மாலையில் கோவர்த்தனாம்பிகை அம்பாளுக்கு அபிஷேகம், பூஜைகள் முடிந்து வளையல் அலங்காரம் நடக்கும் திருநகர் சித்தி விநாயகர் கோயிலில் தனி சன்னதியில் எழுந்தருளியுள்ள மூலவர் மீனாட்சி அம்மனுக்கு மாலை 6:00 மணிக்கு பூஜைகள் முடிந்து ஒரு லட்சம் வளையல்களால் அலங்காரமாகி அருள்பாலிப்பார். « முந்தைய அடுத்து » மேலும் இன்றைய செய்திகள் » ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் சகஸ்ர தீப வைபவம் தொடக்கம் டிசம்பர் 09,2022 திருச்சி: ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் கோயிலில் சகஸ்ரதீப வைபவம் இன்று தொடங்கி 3 நாட்கள் ... மேலும் சிங்கம்புணரி ஐயப்பன் கோயிலில் 1008 சங்காபிஷேகம் டிசம்பர் 09,2022 சிங்கம்புணரி: சிங்கம்புணரி வேங்கை பட்டி சாலையில் உள்ள ஐயப்பன் கோயிலில் வருடாபிஷேகத்தை முன்னிட்டு 1008 ... மேலும் கட்டிக்குளத்தில் தவ்வை உட்பட பாண்டியர் கால சிற்பங்கள் டிசம்பர் 09,2022 மானாமதுரை, மானாமதுரை அருகே கட்டிக்குளத்தில் தவ்வை உட்பட முற்கால பாண்டியர் கால சிற்பங்களை வரலாற்று ... மேலும் இடையகோட்டை மகா மாரியம்மன் கோயிலில் 10008 விளக்கு பூஜை டிசம்பர் 09,2022 இடையகோட்டை: ஒட்டன்சத்திரம் அருகே இடையகோட்டை அரண்மனைக்கு சொந்தமான இடையகோட்டை மகா மாரியம்மன் கோயிலில் ... மேலும் மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் சிறப்பு பூஜை டிசம்பர் 09,2022 திருப்புவனம்: திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் கார்த்திகை மாத கடைசி வெள்ளியை ... மேலும்
இன்ஸ்டாசேவ் ஆன்லைனில் - Instagram வீடியோக்கள், புகைப்படங்கள், ரீல்கள், கதை, IGTV 2022 ஐப் பதிவிறக்கவும் சுமார் ஒரு பில்லியன் மாதாந்திர செயலில் உள்ள பயனர்களுடன், இன்ஸ்டாகிராம் உலகளவில் மிகவும் பிரபலமான சமூக ஊடக தளங்களில் ஒன்றாகும். இது ஒரு ஆன்லைன் மொபைல் புகைப்பட பகிர்வு, வீடியோ பகிர்வு மற்றும் சமூக வலைப்பின்னல் சேவையாகும், இது பயனர்கள் படங்களையும் வீடியோக்களையும் எடுக்கவும், பயன்பாட்டில் பொதுவில் அல்லது தனிப்பட்ட முறையில் பகிரவும் உதவுகிறது. Instagram இணைப்பை உள்ளிடவும் புகைப்படம்/வீடியோ/IGTV/Reels/ URL பதிவிறக்க இணைப்புகள் தயாராகிறது... மற்ற எல்லா சமூக ஊடக பயன்பாடுகளையும் போலவே, Instagram பயனர்களின் தனியுரிமை மற்றும் பாதுகாப்பை வலியுறுத்துகிறது. பயனர்களின் உரிமைகளை அங்கீகரிக்கும் போது, இன்ஸ்டாகிராம் கதைகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை நேரடியாகத் தங்கள் மொபைலின் நினைவகத்தில் சேமிக்கவோ அல்லது பதிவிறக்கவோ, அதிகாரப்பூர்வ Instagram பயன்பாடு அனுமதிக்காது. இருப்பினும், எல்லாவற்றிற்கும் ஹேக்குகள் உள்ளன, இன்ஸ்டாகிராம் பயனர்களுக்கும் இதுவே செல்கிறது. எளிமையான வார்த்தைகளில், சில பயன்பாடுகள் பயனர்கள் தங்கள் மொபைல் ஃபோன்களில் Instagram வீடியோக்கள், படங்கள், ரீல்கள் மற்றும் பிற மல்டிமீடியா பொருட்களைப் பதிவிறக்க அனுமதிக்கின்றன. கிடைக்கக்கூடிய மற்ற விருப்பங்களில், Insta Save என்பது வரம்பற்ற Instagram வீடியோக்கள், படங்கள் மற்றும் பிற பொருட்களைப் பதிவிறக்குவதற்கான சிறந்த மற்றும் இலவச தீர்வாகும். இன்ஸ்டாகிராம் படங்கள், வீடியோக்கள், ஐஜி டிவி, ஆல்பங்கள், மல்டிமீடியா & ரீல்ஸ் வீடியோக்களை தரத்தில் சமரசம் செய்யாமல் பதிவிறக்கம் செய்ய ஆப்ஸ் உங்களை அனுமதிக்கிறது. அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளுக்கான பதில்கள் Insta Save ஆப் எப்படி வேலை செய்கிறது? Insta Save App ஆனது குறிப்பிட்ட வீடியோக்கள், ஆடியோக்கள் அல்லது Instagram இலிருந்து படங்களை உங்கள் ஃபோனின் கேலரியில் புக்மார்க் செய்ய பயன்படுகிறது. பதிவிறக்கம் செய்யக்கூடிய இணைப்பில், பயன்பாடு முறையாக Instagram இணைப்பை உட்பொதிக்கிறது. இருப்பினும், உங்கள் கேலரியை அணுக பயன்பாட்டை அனுமதிக்க பயனர்கள் கைமுறை அனுமதி வழங்க வேண்டும். Insta Save ஆப்ஸின் பொருந்தக்கூடிய அளவுகோல் என்ன? ப: பயன்பாட்டிற்கு Android 4.1 மற்றும் அதற்கு மேல் தேவை மற்றும் சேமிப்பகத்திற்கான அணுகல் தேவை. மேலும், மொபைல் சாதனத்தில் குறைந்தபட்சம் 1ஜிபி ரேம் இருக்க வேண்டும் மற்றும் ஸ்மார்ட்போன்/ஐஃபோன் இருக்க வேண்டும். கூடுதலாக, பயன்பாடு கணினிகள் மற்றும் பிசிக்களுடன் இணக்கமானது. எனது சாதனத்தில் Insta Save பயன்பாட்டைப் பெறுவது சட்டப்பூர்வமானதா? ப: ஆம், Insta Save என்பது சட்டப்பூர்வ பயன்பாடாகும். இது Google Play மற்றும் Apple App Store போன்ற கடைகளில் கிடைக்கும் போது, இது மற்ற உலாவி நீட்டிப்பு அல்லது இன்ஸ்டாகிராம் படங்கள், வீடியோக்கள், ரீல்கள் மற்றும் பிற பொழுதுபோக்குப் பொருட்களை வரம்பற்ற பதிவிறக்கத்தை வழங்குவதாகக் கூறும் பயன்பாடு போன்ற மூன்றாம் தரப்பு பயன்பாடாகும். இன்ஸ்டா சேவ் ஆப் என்றால் என்ன சிறிது நேரம் ஒதுக்கி, உங்கள் இன்ஸ்டாகிராம் ஊட்டத்தில் நீங்கள் கீழே ஸ்க்ரோல் செய்து, கவர்ச்சியாகத் தோன்றும் ஒன்றைப் பார்க்கிறீர்கள் என்று கற்பனை செய்து பாருங்கள். உங்கள் மொபைலில் ஸ்கிரீன் ஷாட் எடுப்பதற்குப் பதிலாக, உடனே அதைச் சேமிக்க வேண்டும். இதற்கிடையில், Instagram நேரடி பதிவிறக்கங்களை அனுமதிக்காது என்பதை நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள், எனவே நீங்கள் அதை எப்படி செய்வீர்கள். அத்தகைய சூழ்நிலையில், இன்ஸ்டா சேவ் லைவ் என்பது உங்கள் விரும்பிய படம், வீடியோ அல்லது மல்டிமீடியாவை நேரடியாக ஃபோனின் நினைவகத்தில் பதிவிறக்கம் செய்ய அல்லது சேமிப்பதற்கான இறுதி விருப்பமாக இருக்கும். ஆச்சரியப்படும் விதமாக, வீடியோ அல்லது படத்தின் தரம் மாறாமல் உள்ளது. இலவச Insta டவுன்லோடிங் செயல்பாடுகளைத் தவிர, Insta Save எளிதாக வழிசெலுத்துவதற்கான மெனு மற்றும் எளிய பயனர் இடைமுகத்தை வழங்குகிறது. வீடியோவைப் பதிவிறக்க பயனர்கள் மூன்று படிகளைப் பின்பற்ற வேண்டும்: Instagram ஐத் திறந்து, நீங்கள் பதிவிறக்க விரும்பும் படம் அல்லது வீடியோவைக் கிளிக் செய்து, அதைப் பெற Insta Save Download ஐகானைக் கிளிக் செய்யவும். மேலும், இது ஒரு இலவச-பதிவிறக்கக் கருவியாகும், மேலும் எங்கள் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்த உடனேயே இதைப் பயன்பாட்டுக்குக் கொண்டு வரலாம். இந்தக் கருவியின் பிரீமியம் அம்சங்களைத் திறக்க எந்தப் பதிவும் அல்லது பதிவும் தேவையில்லை. ஐகானைக் கிளிக் செய்து பதிவிறக்கத்தைத் தொடங்கவும். இன்ஸ்டா சேவ் ஆப் அம்சங்கள் இன்ஸ்டா சேவ் அதன் உயர் தொழில்நுட்ப மற்றும் பயனர் நட்பு அம்சங்கள் மற்றும் செயல்பாடுகளின் காரணமாக மற்ற இன்ஸ்டாகிராம் பதிவிறக்கம் கருவிகளை விஞ்சுகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக, இது ஒரு இலவச பதிவிறக்க பயன்பாடாகும், அதாவது இந்த பயன்பாட்டை அதன் முழு திறனில் பயன்படுத்த சந்தா அல்லது நிறுவல் கட்டணங்கள் தேவையில்லை. மேலும், பயனர்-வசதி இந்த பயன்பாட்டின் மற்றொரு தனித்துவமான அம்சமாகும். மூன்று-படி பதிவிறக்கம் செயல்முறையானது இன்ஸ்டாகிராம் வீடியோக்கள், படங்கள் மற்றும் ரீல்களை விரைவாகவும் வசதியாகவும் சேமிக்க அனுமதிக்கிறது. பயன்பாடு இலவசம் இன்ஸ்டா சேவ் ப்ளே ஸ்டோரில் இலவசமாக பதிவிறக்கம் செய்யக் கிடைக்கிறது. மற்ற ஆப்ஸைப் போலன்றி, இந்த ஆப்ஸின் பிரீமியம் அம்சங்களை அணுக மறைக்கப்பட்ட அல்லது சந்தா கட்டணங்கள் எதுவும் இல்லை. பயனர்கள் ஒரு பைசா கூட செலவழிக்காமல் முழு ஆப்ஸ் அம்சங்களையும் அனுபவிக்க முடியும். அனைத்தையும் பதிவிறக்கவும் Insta Save இன் அசல் பதிப்பை நீங்கள் பதிவிறக்கம் செய்தவுடன், பதிவிறக்கும் அளவிற்கு எந்தத் தடையும் இல்லை. அன்லிமிடெட் வீடியோக்கள், படங்கள், ரீல்கள் மற்றும் பிற மல்டிமீடியா பொருட்களை நீங்கள் சிரமமின்றி பதிவிறக்கம் செய்யலாம். வழிசெலுத்துவதற்கு எளிதான மெனு Insta செயலியின் மற்றொரு கவர்ச்சிகரமான அம்சம் அதன் எளிதான வழிசெலுத்துதல் மெனு ஆகும். நேரத்தை வீணடிக்காமல் பயனர்கள் தங்களுக்குப் பிடித்த மல்டிமீடியாவைக் கண்டறியவும் பதிவிறக்கவும் உதவும் தேடல் பட்டியை இது கொண்டுள்ளது. நீங்கள் வீடியோ அல்லது படத்தைத் திறந்து அதன் இணைப்பு முகவரியை நகலெடுக்க வேண்டும். இப்போது தேடல் பட்டியில் இணைப்பை ஒட்டவும் மற்றும் பதிவிறக்க பொத்தானைக் கிளிக் செய்யவும். பதிவு அல்லது பதிவு இல்லை மேலும், பயன்பாடு பதிவு செய்யவோ அல்லது பயனர்களுக்கு பதிவு செய்யவோ கோராது. நீங்கள் பயன்பாட்டைப் பதிவிறக்கி உங்கள் சாதனத்தில் நிறுவ வேண்டும். நீங்கள் இன்ஸ்டா மல்டிமீடியாவைப் பதிவிறக்க விரும்பும் போதெல்லாம் அதைத் திறந்து, அதைப் பயன்படுத்திய பிறகு அதை மூடவும். மூன்று-படி எளிதான பதிவிறக்கம் பயன்படுத்த எளிதானது என்பது Insta Save செயலியின் மற்றொரு ஆதிக்கம் செலுத்தும் அம்சமாகும். பதிவிறக்கம் செயல்முறையை முடிக்க பயனர்கள் மூன்று படிகளைப் பின்பற்ற வேண்டும். முதலில், நீங்கள் இன்ஸ்டாகிராமில் இருந்து பதிவிறக்க விரும்பும் படம் அல்லது வீடியோவைத் திறக்கவும். அதன் இணைப்பை நகலெடுத்து, பயன்பாட்டின் தேடல் பெட்டியில் ஒட்டவும். இறுதியாக, பதிவிறக்க பொத்தானைக் கிளிக் செய்யவும், நீங்கள் செல்லலாம். வேகமான மற்றும் தரமான பதிவிறக்கம் சந்தையில் கிடைக்கும் வேகமான இன்ஸ்டாகிராம் பதிவிறக்கம் பயன்பாடுகளில் இன்ஸ்டா சேவ் ஒன்றாகும். இருப்பினும், பயன்பாட்டின் ஒட்டுமொத்த செயல்திறன் உங்கள் இணையத் தரத்தைப் பொறுத்தது. தவிர, படங்கள் மற்றும் வீடியோக்களின் தரம் அசல் Instagram இடுகையில் உள்ளதைப் போலவே இருக்கும். இன்ஸ்டா சேவ் மூலம் இன்ஸ்டாகிராம் புகைப்படங்களை பதிவிறக்கம் செய்வது எப்படி சரி, உங்கள் புகைப்படத் திறனை வெளிப்படுத்த Instagram சிறந்த இடம். அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களின்படி, மக்கள் தினமும் 50 மில்லியன் படங்களை Instagram இல் பகிர்ந்து கொள்கிறார்கள். Insta Save மூலம், உங்களால் முடிந்த அளவு படங்களை பதிவிறக்கம் செய்து சேமிக்கலாம். கிடைக்கக்கூடிய உயர் தெளிவுத்திறன் தரத்துடன் படங்களை பதிவிறக்கம் செய்ய பயன்பாடு உங்களுக்கு உதவுகிறது. தவிர, இன்ஸ்டா சேவ் ஆப் மூலம் இன்ஸ்டாகிராம் படங்களைப் பதிவிறக்குவது மிகவும் எளிது. படத்தின் மீது கிளிக் செய்து, அதன் இணைப்பை நகலெடுத்து, அதை உங்கள் தொலைபேசியின் நினைவகத்தில் மாற்ற, தேடல் பெட்டியில் ஒட்டினால் போதும். முதலில், Insta Save Tool ஐ பதிவிறக்கம் செய்து அதை இயக்கவும் இப்போது படம் அல்லது வீடியோவைத் தேர்ந்தெடுக்கவும், நீங்கள் Instagram இலிருந்து பதிவிறக்க வேண்டும் பின்னர், முகவரிப் பட்டி அல்லது மெனுவிற்கான இணைப்பை நகலெடுக்கவும் பயன்பாட்டின் உள்ளீட்டுப் பெட்டியைக் கிளிக் செய்து, நகலெடுத்த இணைப்பை அதில் ஒட்டவும் பதிவிறக்கம் செய்யக்கூடிய புகைப்பட இணைப்புக்கான அதிகாரப்பூர்வ Instagram புகைப்பட இணைப்பை மறைக்க பதிவிறக்க பொத்தானைத் தட்டவும் இறுதியாக, பதிவிறக்கம் செய்யத் தொடங்க, பதிவிறக்க இணைப்பைக் கிளிக் செய்யவும் இன்ஸ்டா சேவ் ஆப் மூலம் இன்ஸ்டாகிராம் வீடியோக்களை பதிவிறக்கம் செய்வது எப்படி இன்ஸ்டாகிராம் அற்புதமான மற்றும் கண்கவர் வீடியோக்களைக் கண்டறிய ஒரு சிறந்த இடம். துரதிர்ஷ்டவசமாக, கடுமையான பயனர் கொள்கையானது Instagram வீடியோக்களை நேரடியாக உங்கள் ஃபோனின் நினைவகத்தில் பதிவிறக்கம் செய்ய அனுமதிக்காது, மேலும் இதைப் பற்றி உங்களால் அதிகம் செய்ய முடியாது. இன்ஸ்டாகிராம் வீடியோக்களை அவற்றின் அசல் தரத்தில் சமரசம் செய்யாமல் மற்றும் இன்ஸ்டாகிராம் தனியுரிமைக் கொள்கையைத் தவிர்த்து அவற்றைப் பெறுவதற்கான சிறந்த வழி Insta Save ஆப் ஆகும். இந்த ஆப்ஸ் இன்ஸ்டாகிராம் வீடியோக்களை MP4 ஆக மாற்றி, தொந்தரவு இல்லாமல் பதிவிறக்கம் செய்ய உங்களை அனுமதிக்கிறது. முதலில், Insta Save Tool ஐ பதிவிறக்கம் செய்து அதை இயக்கவும் இப்போது படம் அல்லது வீடியோவைத் தேர்ந்தெடுக்கவும், நீங்கள் Instagram இலிருந்து பதிவிறக்க வேண்டும் பின்னர், முகவரிப் பட்டி அல்லது மெனுவிற்கான இணைப்பை நகலெடுக்கவும் பயன்பாட்டின் உள்ளீட்டுப் பெட்டியைக் கிளிக் செய்து, நகலெடுத்த இணைப்பை அதில் ஒட்டவும் பதிவிறக்கம் செய்யக்கூடிய புகைப்பட இணைப்புக்கான அதிகாரப்பூர்வ Instagram புகைப்பட இணைப்பை மறைக்க பதிவிறக்க பொத்தானைத் தட்டவும் இறுதியாக, பதிவிறக்கம் செய்யத் தொடங்க, பதிவிறக்க இணைப்பைக் கிளிக் செய்யவும் கம்ப்யூட்டர்/பிசியில் இருந்து இன்ஸ்டா சேவ் பதிவிறக்குவது எப்படி இன்ஸ்டா சேவ் ஆப்ஸின் மற்றொரு முக்கிய அம்சம் பொருந்தக்கூடிய பரந்த தன்மையாகும். உயர்-தொழில்நுட்ப குறியீட்டு முறையின் பயன்பாடு காரணமாக, ஆண்ட்ராய்டு மாடல்கள், ஐபோன்கள் மற்றும் கணினி/பிசிகளுடன் கூட இந்த ஆப்ஸ் சரியாக வேலை செய்கிறது. பயனர்கள் வெவ்வேறு உலாவிகள் அல்லது விண்டோஸ் கொண்ட தங்கள் கணினிகளில் Insta Save பயன்பாட்டை நிறுவி பயன்படுத்தலாம். கணினிகள்/பிசிக்களில் Insta Save செயலியை பதிவிறக்கம் செய்து இயக்குவது எளிது. நீங்கள் இயல்புநிலை உலாவியில் சென்று அதிகாரப்பூர்வ Insta Save பயன்பாட்டைத் தேட வேண்டும். அதைக் கண்டுபிடித்த பிறகு, பதிவிறக்க பொத்தானைக் கிளிக் செய்து, Instagram படங்கள், வீடியோக்கள், ரீல்கள் மற்றும் பிற அன்லிமிடெட் மல்டிமீடியாவைப் பதிவிறக்கம் செய்து மகிழுங்கள். உங்கள் சாதனத்தில் அதிகாரப்பூர்வ Insta Save பயன்பாட்டைப் பதிவிறக்கவும் உங்கள் இயல்புநிலை உலாவியில் Instagram ஐத் திறக்கவும் Instagram இடுகையைக் கிளிக் செய்து, முகவரிப் பட்டியில் இருந்து இணைப்பு/URL ஐ நகலெடுக்கவும் இப்போது, பதிவிறக்க பொத்தானைக் கிளிக் செய்யவும் இறுதியாக, மவுஸை வலது கிளிக் செய்து, இணைப்பை இவ்வாறு சேமி என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.....(நீங்கள் விரும்பும் மல்டிமீடியாவைப் பதிவிறக்கத் தொடங்க பதிவிறக்க பொத்தானைத் தட்டவும்) இன்ஸ்டாகிராமில் இருந்து IGTV வீடியோக்களை எவ்வாறு பதிவிறக்குவது ஐஜிடிவி வீடியோக்கள் இன்ஸ்டாகிராமின் மிகவும் பொழுதுபோக்கு பகுதியாக இருக்கலாம். இந்த அம்சம் Instagram க்கு மட்டுமே சொந்தமானது, அதாவது IGTV வீடியோக்களை Instagram மூலம் நேரடியாக உங்கள் தொலைபேசியில் பதிவிறக்கம் செய்யவோ அல்லது சேமிக்கவோ வாய்ப்பில்லை. இருப்பினும், உங்கள் ஆண்ட்ராய்டு அல்லது ஐபோன் சாதனங்களில் அதிகாரப்பூர்வ IGTV வீடியோக்களைப் பதிவிறக்க அனுமதிக்கும் ஒரே கருவி Insta Save ஆகும். Insta Save App மூலம் Instagram இலிருந்து IGTV வீடியோக்களை பதிவிறக்கம் செய்ய உதவும் வழிகாட்டி கீழே குறிப்பிடப்பட்டுள்ளது. Instagram பயன்பாட்டைத் திறந்து IGTV வீடியோக்களுக்குச் செல்லவும் (நீங்கள் பதிவிறக்க வேண்டும்) IGTV வீடியோவின் இணைப்பை நகலெடுக்கவும் இப்போது, மெனு பட்டியில் இணைப்பை ஒட்டவும் பதிவிறக்க பொத்தானைக் கிளிக் செய்யவும், அது தானாகவே வீடியோவைப் பதிவிறக்கும் உங்கள் Android இல் Instagram புகைப்படங்கள்/IGTV/வீடியோக்கள்/ரீல்களைப் பதிவிறக்கவும் இன்று, பெரும்பாலான மக்கள் தங்கள் ஆண்ட்ராய்டு தொலைபேசிகளில் Instagram ஐப் பயன்படுத்துகின்றனர். நீங்கள் அவர்களில் ஒருவர் மற்றும் உங்கள் ஆண்ட்ராய்டு ஃபோன்களில் Instagram புகைப்படங்கள்/IGTV/வீடியோக்கள்/ரீல்களைப் பதிவிறக்க விரும்பினால், Insta Save ஆப் சிறந்த வழி. 4.0 மற்றும் அதற்கு மேற்பட்ட ஆண்ட்ராய்டு மாடல்கள் மற்றும் சாதனங்களுடன் இந்த ஆப் சரியாக வேலை செய்கிறது. இருப்பினும், இது பழைய Android மாடல்களில் நிறுவல் சிக்கல்களை ஏற்படுத்தலாம். தவிர, உங்கள் மொபைலில் Insta Save ஆப் சரியாக வேலை செய்வதை உறுதிசெய்ய அதிகாரப்பூர்வ Instagram பயன்பாட்டை நிறுவ வேண்டும். முதலில், நிறுவப்பட்ட Instagram பயன்பாட்டைத் திறக்கவும் உங்களுக்கு பிடித்த Instagram இடுகையைத் தேர்ந்தெடுக்கவும் (படம், வீடியோ, ரீல்கள் போன்றவை) இப்போது, மேல் வலது மூலையில், மூன்று புள்ளிகள் விருப்பத்தை கிளிக் செய்யவும் பின்னர், நகலெடு இணைப்பு விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும் இணைப்பை நகலெடுத்த பிறகு, இன்ஸ்டா டவுன்லோடர் பயன்பாட்டில் URL ஒட்டப்பட்டது Download Now பட்டனை கிளிக் செய்யவும் அசல் Instagram இணைப்பு பதிவிறக்கக்கூடிய இணைப்பாக மாறும் வரை காத்திருங்கள் இன்ஸ்டா சேவ் ஆப் மூலம் உங்கள் ஐபோன்களில் இன்ஸ்டாகிராம் புகைப்படங்கள்/ஐஜிடிவி/வீடியோக்கள்/ரீல்களைப் பதிவிறக்குவது எப்படி உங்கள் ஐபோன்களில் Instagram புகைப்படங்கள்/IGTV/வீடியோக்கள்/ரீல்களைப் பதிவிறக்குவது கடினமாக இருக்கும், குறிப்பாக Insta Save போன்ற உண்மையான பதிவிறக்கப் பயன்பாடு உங்களிடம் இல்லாதபோது. பயன்பாடு பரந்த அளவிலான iPhone மாடல்கள் மற்றும் சாதனங்களுடன் இணக்கமானது. பயனர்கள் ஆப்பிள் ஸ்டோரில் இருந்து Insta Save செயலியை பதிவிறக்கம் செய்து நிறுவலாம். அவ்வாறு செய்த பிறகு, அதிகாரப்பூர்வ Instagram பயன்பாட்டைத் திறந்து, பதிவிறக்கம் செய்ய விரும்பிய படம் அல்லது வீடியோவைக் கிளிக் செய்யவும். இப்போது, உங்கள் தொலைபேசியின் நினைவகத்தில் சேர்க்க பதிவிறக்க பொத்தானைக் கிளிக் செய்யவும். நிறுவப்பட்ட Instagram பயன்பாட்டைத் திறக்கவும் உங்களுக்கு பிடித்த Instagram இடுகையைத் தேர்ந்தெடுக்கவும் (படம், வீடியோ, ரீல்கள் போன்றவை) இப்போது, மேல் வலது மூலையில், மூன்று புள்ளிகள் விருப்பத்தை கிளிக் செய்யவும் பின்னர், நகலெடு இணைப்பு விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும் இணைப்பை நகலெடுத்த பிறகு, இன்ஸ்டா டவுன்லோடர் பயன்பாட்டில் URL ஒட்டப்பட்டது Download Now பட்டனை கிளிக் செய்யவும் அசல் Instagram இணைப்பு பதிவிறக்கக்கூடிய இணைப்பாக மாறும் வரை காத்திருங்கள் இன்ஸ்டாகிராமில் இடுகையிடும்போது உங்கள் சொந்த இடுகையை எவ்வாறு சேமிப்பது Insta Save App உங்கள் இடுகையின் நகலை இன்ஸ்டாகிராமில் இடுகையிடும்போது பதிவிறக்கம் செய்ய அனுமதிக்கிறது. இந்த ஆப்ஸ் மூலம் வரம்பற்ற வீடியோக்கள், ரீல்கள் மற்றும் பிற பொருட்களைப் பதிவிறக்க முடியும் என்பதால், இந்த அம்சம் படங்களுக்கு மட்டும் அல்ல. மேலும், Insta Save ஆப் மூலம் பதிவிறக்கம் செய்யப்பட்ட உங்கள் இடுகைகளின் நகல் தானாகவே உங்கள் மொபைலின் உள் நினைவகத்தில் சேமிக்கப்படும். தவிர, நீங்கள் பதிவிறக்கம் செய்யப்பட்ட நகலை பல்வேறு சமூக ஊடக தளங்களில் எளிதாகப் பகிரலாம். உங்கள் Instagram சுயவிவரத்தைத் திறக்கவும் விருப்பங்கள் ஐகானைக் கண்டுபிடித்து கிளிக் செய்யவும் (Android இல் ஹாம்பர்கர் மெனு & IOS இல் அமைப்புகள் ஐகான்) அசல் புகைப்படங்களைச் சேமி அமைப்புகளை "ஆன்" செய்ய இயக்கவும் அவ்வாறு செய்த பிறகு, புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் உள்ளிட்ட உங்களின் அசல் இடுகைகள் தானாகவே உங்கள் மொபைலில் சேமிக்கப்படும் ஆண்ட்ராய்டு/ஐபோனில் இன்ஸ்டா சேவ் செயலியைப் பதிவிறக்குவது பாதுகாப்பானதா முதலில், உங்கள் சாதனத்தில் Insta-Save பயன்பாட்டைப் பெறுவது பற்றி கவலைப்பட வேண்டாம். இது 100% பாதுகாப்பானது மற்றும் சட்டப்பூர்வமானது. மேலும் இந்தச் செயலி இப்போது கூகுள் ப்ளே ஸ்டோரில் இலவசமாகக் கிடைக்கிறது மற்றும் எந்தப் பயனரும் பதிவிறக்கம் செய்யலாம். முக்கியமாக, Insta-save உங்கள் சாதனத்திற்கு எந்த தீம்பொருளையும் அனுப்பாது. இருப்பினும், உங்கள் சாதனத்தின் அனுமதியின்றி பயன்பாடுகளை நிறுவுவது அல்லது பயனர் ஒப்பந்தத்தை மீறுவது போன்ற எந்த முறைகேடுகளிலும் நீங்கள் ஈடுபடவில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். மேலும், உண்மையான மூலத்திலிருந்து Insta Save பயன்பாட்டைப் பதிவிறக்குவதை உறுதிசெய்யவும். முதன்மை பக்கப்பட்டி இந்த இணையதளத்தில் தேடவும் அண்மைய பதிவுகள் 10insta - இன்ஸ்டாகிராம் வீடியோக்கள்/ரீல்கள்/படங்களை ஆன்லைனில் இலவசமாகப் பதிவிறக்கவும் - InstaSave W3toys Instagram - இன்ஸ்டாகிராம் ஆன்லைனில் அனைத்தையும் பதிவிறக்கவும் - InstaSave HD தரத்தில் பேஸ்புக் ரீல்ஸ் வீடியோ டவுன்லோடர் – ஆண்ட்ராய்ட் & ஐபோன் ஸ்டோரி சேவர் இன்ஸ்டாகிராம் – இன்ஸ்டா ஸ்டோரிஸ் & ஹைலைட்ஸ் பதிவிறக்கம் – (ஆண்ட்ராய்டு & ஐபோன்) வீடியோ சேவர் Instagram – Insta வீடியோ/படம்/ரீல் & கதையைப் பதிவிறக்கவும் ஜிபி இன்ஸ்டாகிராம் APK பதிவிறக்கம் v5.4 சமீபத்திய பதிப்பு - தடை எதிர்ப்பு 2022 இன்ஸ்டா டிபி டவுன்லோடர் & இன்ஸ்டாகிராம் டிபி வியூவர் Instagram Reels to MP4 Converter Online இலவசம் - படிப்படியான வழிகாட்டி - InstaSave இன்ஸ்டாகிராம் சுயவிவரப் பட டவுன்லோடர் HD | இன்ஸ்டா டிபி வியூவர் | Insta DP - InstaSave இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் டவுன்லோடர் – இன்ஸ்டா ரீல்ஸ் வீடியோக்களை ஆன்லைனில் இலவசமாகப் பதிவிறக்கவும் பதிப்புரிமை © 2022 எங்களை தொடர்பு கொள்ள | டிஎம்சிஏ | தனியுரிமைக் கொள்கை | விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்
விதை சேமிப்பு அடுத்த பருவத்திற்கான விதைத் தேவையை பூர்த்தி செய்கிறது. இந்த முறை பழங்காலத்தில் இருந்து பயன்படுத்தப்படுகிறது. இதற்கான தேவை வீரியமுள்ள விதை மற்றும் சேமிக்கப்படும் முறை இரண்டே ஆகும். இதன்மூலம் விதைகளுக்கான செலவு குறைகிறது. மேலும் நம் நில வெட்பநிலைக்கு ஏற்கனவே பழக்கப்பட்டிருக்கும் நல்ல விளைச்சல் தரும் விதை௧ளை சேமிப்பதால் முளைப்புத்திறன் அதி௧மா௧ இருக்கும். பாரம்பரிய விதை சேமி்க்கும் முறைகள்: வெயிலில் உலர்த்துவது: அறிவியல்: வெப்பத்தால் பூச்சி௧ளின் எல்லா வளர்ச்சிநிலைகளும் பாதிக்கப்படுகின்றன. விதையில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சுவதால் விதை வீணாவதை தடுக்கின்றது. பயிர்: எல்லா வகையான பயிர்களுக்கும் பயன்படுத்தலாம். சாம்பல் பூசுவது: மண்பானையில் ¾ அளவிற்கு ¼ அளவிற்கு மரசாம்பல் அல்லது மாட்டின் எருசாம்பலை கொண்டு நிரப்புவர். 6 மாதங்௧ளுக்கு தேவையெனில் சாம்பல் நிரப்பிய பின்னும் வெயிலில் உலர்த்துவர். அறிவியல்: சாம்பலில் உள்ள (silica) சத்து பூச்சிகளுக்கு உணவு வெறுப்பு பொருளா௧ (antifeedant) செயல்படுகிறது மற்றும் சாம்பல் விதையின் ஈரப்பதத்தை குறைக்கிறது. சாம்பல் பூச்சியின் மேற்புறத்தில் வறட்சியை ஏற்படுத்தி சேதப்படுத்துகின்றது. பயிர்: பயறு வகை விதை௧ள். செம்மண் பூசுதல்: செம்மண்னை தண்ணீரில் குழைத்து விதையுடன் கலந்து பிறகு நிழலில் நன்றா௧ உலர்த்த வேண்டும். காய்ந்த விதை௧ளை சாக்குப்பையில் இறுக்கமா௧ கட்டி வைத்து பயன்படுத்துவர். அறிவியல்: பூச்சி விதையின் மேற்புறத்தில் முட்டையிடுவதை தவிர்க்கிறது. மேலும் முளைப்புத்திறனை அதிகரிக்கிறது. பயிர்: பயறு வகை, ராகி, சோளம். ௧ளிமண் பூசுதல்: மூங்கிலில் செய்யப்பட்ட கூடையில் விதை௧ளை சேமிப்பர். அவற்றின் மேற்புறத்தில் ௧ளிமண் அல்லது பசுஞ்சாணத்தை நன்றா௧ பூசுவர். அறிவியல்: ௧ளிமண் அதிகமான ஈரப்பதத்தை விதைகளில் இருந்து எடுத்துவிடும். பசுஞ்சாணம் பூச்சிவிரட்டியா௧வும் செயல்படுகிறது. உப்பு சேர்த்தல்: 200கிராம் உப்பு 1கிலோ பயறு விதைகளுடன் ௧லந்து 6-8 மாதங்௧ளுக்கு வைத்துக்கொள்வர். அறிவியல்: உப்பு பூச்சிகளின் தோலில் சிராய்ப்பு காயங்௧ள் (abrasive action) உண்டாக்கி அவற்றின் வளர்ச்சியை தடுக்கிறது. பயிர்: பயறு வகை விதைகள். மஞ்சள் பூசுதல்: விதை௧ள் மற்றும் தானியங்௧ளை மஞ்சள் தூளுடன் ௧லந்து சாக்குபையில் அல்லது பாத்திரத்தில் போட்டு 6-8 மாதங்களுக்கு சேமிப்பர். அறிவியல்: குர்குமின் போன்ற வேதிப்பொருட்௧ள் இருப்பதால் மஞ்சள் பூச்சி விரட்டியா௧ பயன்படுகிறது. பயிர்: தானியம் மற்றும் பயறுவகை௧கள். பூண்டு, கிராம்பு சேர்த்தல்: விதை சேமிக்கும் பாத்திரத்தில் கடைசி அடுக்காக பூண்டு,கிராம்பு பரப்பி விட வேண்டும். அறிவியல்: டை அல்லைல் டைசல்பைடு டை அல்லலைல் டிரை சல்பைடு, ம்ற்றும் டை அல்லைல் சல்பைடு எனும் வேதி்ப்பொருட்கள் பூண்டில் உள்ளது. எனவே இது பூச்சிவிரட்டியா௧வும் , பூஞ்சாணக்கொல்லியா௧வும் செயல்படுகிறது. வேப்பஎண்ணெய்: விதை மேல் வேப்பஎண்ணெய் தடவுதல். அறிவியல்: பூச்சிவிரட்டி தயாரிக்க பயன்படும் மூலப்பொருட்களான அசாடிராக்டீன், நிம்பின், நிம்பிசிடின் போன்றவை உணவு வெறுப்புப் பொருளா௧வும் (antifeedant) பயன்படுகிறது. இவை பூச்சிகள் முட்டையிடுவதை மற்றும் வளர்ச்சியை தடுக்கும். பயிர்: பயறு வகை விதை௧ள். ஆமணக்கு பொடி: துவரம்பருப்பை கொஞ்ச நேரம் வெயிலில் காய வைக்கவும். ஆமணக்கை வறுத்து பொடியாக்க வேண்டும். 1 கிலோ விதைக்கு ¼ கிலோ ஆமணக்கு பொடியை ௧லந்து மண்பானையில் சேமிக்கவும். இதன் மூடியை சாணத்தை கொண்டு இறுக்கமாக மூடவேண்டும். இது பூச்சி தடுப்பானாகவும், பூச்சி விரட்டியா௧ பயன்படுகிறது. அறிவியல்: இதில் உள்ள வேதிப்பொருளால் பூச்சிகள் விதை உண்பதை (anti deterrent) தவிர்க்கப்படுகிறது. பயிர்: துவரம்பருப்பு புகையுட்டி: சேமிப்பு கிடங்கில் விதை சேமிக்கும் முன்பு வேம்பு, புங்கம் இலை௧ளால் புகையூட்டுவர். அறிவியல்: இவை சேமிப்பு கிடங்கில் பூச்சி௧ளின் வளர்ச்சியை தடுத்து தானியத்தை பாதுகாக்கிறது. சீதாபழ விதை பொடி: 50 கிராம் பொடிக்கு 1கிலோ விதைகளை கலந்து சேமிக்கும்போது பயறு வண்டின் வளர்ச்சி தடுக்கப்படுகிறது. அறிவியல்: இதில் உள்ள அசிடோஜெனின்ஸ் எனும் வேதிப்பொருள் பூச்சிக்கொல்லியா௧ பயன்படுகிறது. பயிர்: பயறு வகை விதைகள். துளசிவிதை பொடி: சோள விதை௧ளை துளசி விதை அல்லது துளசி இலைகளோடு கலந்து சேமிக்கலாம். அறிவியல்: பால்மிட்டிக் அமிலம், லினோலினிக் அமிலம், லினோனிக் அமிலம் ஆகிய வேதிப்பொருட்கள் துளசி விதையில் இருப்பதால் இவை பூச்சிக்கொல்லியா௧ செயல்படுகிறது. கட்டுரையாளர்: வெ. பிரியதர்ஷினி, இளநிலை வேளாண் மாணவி, அண்ணாமலைப் பல்கலைக்கழகம், சிதம்பரம். மின்னஞ்சல்: vpriyajan2000@gmail.com Tags:௧ளிமண் பூசுதல்ஆமணக்கு பொடிஉப்பு சேர்த்தல்கிராம்பு சேர்த்தல்சாம்பல் பூசுவது(silica)சீதாபழ விதை பொடிசெம்மண் பூசுதல்துளசிவிதை பொடிபாரம்பரிய விதை சேமிக்கும் முறைபுகையுட்டிபூண்டுமஞ்சள் பூசுதல்விதை சேமிப்பில் பராம்பரிய தொழில் நுட்ப அறிவும் அறிவியலும்வீரியமுள்ள விதைவேப்பஎண்ணெய் Leave a Reply Cancel reply Your email address will not be published. Required fields are marked * Name * Email * Website Comment * Δ Related Posts விவசாயத்தில் தகவல் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தின் (ஐ.சி.டி) பங்கு by editor news தொழில்நுட்பம் December 15, 2020 தகவல் மற்றும் தகவல்தொடர்பு தொழில்நுட்பத்தை தொழில்நுட்பங்களின் கூடை என வரையறுக்கலாம். அவை சேமித்தல், தகவல்களை செயலாக்குதல் அல்லது தகவல் பரப்புதல் / தொடர்பு கொள்ளுதல் ஆகியவற்றில் துணைபுரிகின்றன. பொதுவாக வேளாண் வளர்ச்சிக்கும், குறிப்பாக விவசாய… Read More »விவசாயத்தில் தகவல் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தின் (ஐ.சி.டி) பங்கு கழிவு சிதைப்பான் (வேஸ்ட் டீகம்போசர்) பயன்பாடு by editor news தொழில்நுட்பம் December 15, 2020 இயற்கை வேளாண்மையில் முக்கிய அம்சங்களில் ஒன்று மண்ணின் வளத்தை பெருக்குவதாகும். இதற்காக பஞ்சகவ்யம், அமிர்தக் கரைசல், மீன்அமிலம் போன்ற பலவகையான இடுபொருட்கள் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் இவற்றை தயார் செய்யத் தேவையான மூலப்பொருட்களை சேகரிக்க அதிகநேரம்… Read More »கழிவு சிதைப்பான் (வேஸ்ட் டீகம்போசர்) பயன்பாடு குஜராத் மாநிலத்தில் மலர் மற்றும் தோட்டக்கலை பயிர்கள் சாகுபடியில் சாதித்து காட்டிய கிராமப்புற மகளிர் by editor news தொழில்நுட்பம் December 1, 2020 கடந்த ஐந்த ஆண்டுகளில் குஜராத் மாநிலத்தில் உள்ள தாகூர் மாவட்டத்தின் லிம்கெடா வட்டத்தில் உள்ள கம்டோய் கிராமத்தில் துவங்கிய மலர் மற்றும் தோட்டக்கலைப் பயிர்கள் சாகுபடி மிகப்பெரிய அளவிலான பொருளாதார முன்னேற்றத்தை கிராமப்புற பெண்கள்… Read More »குஜராத் மாநிலத்தில் மலர் மற்றும் தோட்டக்கலை பயிர்கள் சாகுபடியில் சாதித்து காட்டிய கிராமப்புற மகளிர்
கொரோனா தொற்றுக்கு எதிராகப் போடப்படும் தடுப்பூசி பதிவு செய்வது குறித்து தவறான செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றது. தற்போது தடுப்பூசி செலுத்த முன்பதிவு செய்வதற்கு டெலெக்ராம் செயலி மூலம் செய்துகொள்ளலாம் என்று கூற்று வைரலாகி வந்ததது. இதுபோன்று செய்திகள் மக்கள் பதற்றமான சூழலை ஏற்கனவே எதிர்கொண்டிருக்கும் வேலையில் மேலும் பதற்றத்தை ஏற்படுத்துகின்றது. அந்த வைரல் செய்தியில், தற்போது கொரோனா தடுப்பூசியை டெலெக்ராமில் முன்பதிவு செய்துகொள்ளலாம். மேலும் அதற்கான எண்ணையும் அதில் குறிப்பிட்டிருந்தது. இருப்பினும் இந்த வைரல் செய்தி தவறானது ஆகும். இந்த வைரல் செய்தியை மறுத்து PIB ஒரு ட்விட்டை வெளியிட்டது. இந்த புகைப்படம் மார்பிங் செய்யப்பட்டுள்ளது மற்றும் அதில் கொடுக்கப்பட்டுள்ள கணக்கும் அரசாங்கத்திற்கு உரியது இல்லை என்பதையும் கூறியிருந்தது. Claim:#COVID19 vaccination appointment can be booked on Telegram using 'MyGov Corona Vaccine Appt'#PIBFactCheck:This image is #Morphed. Neither this number nor Telegram account is associated with @mygovindia Register for vaccine on https://t.co/61Oox5pH7x,UMANG or Aarogya Setu pic.twitter.com/zL9UhtJFVz — PIB Fact Check (@PIBFactCheck) May 19, 2021 மேலும் மக்கள் தடுப்பூசி முன்பதிவு செய்ய ஆரோக்கிய சேது செயலி, UMANG மற்றும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் முன்பதிவு செய்யவேண்டும் என்றும் அது கூறியது. இந்த தடுப்பூசி இயக்கமானது இந்தியா முழுவதும் ஜனவரி 16 இல் தொடங்கப்பட்டது, தற்போது இயக்கத்தின் மூன்றாம் கட்டம் சென்று கொண்டிருக்கின்றது. இந்த தடுப்பூசி இயக்கமானது டிஜிட்டல் முறையில் அரசாங்கம் நிர்வாக செய்கிறது. மேலும் மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின் படி, நாடு முழுவதும் இதுவரை 18.5 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. source: https://www.hindustantimes.com/india-news/no-covid-19-vaccine-appointment-via-telegram-centre-busts-fake-news-101621421151769.html Categories: Top Stories ஊடக பொய்கள் Janani Next Story கதிர் தொகுப்பு Trending News Similar Posts © 2019-20. All rights reserved Powered By Hocalwire We use cookies for analytics, advertising and to improve our site. You agree to our use of cookies by continuing to use our site. To know more, see our Cookie Policy and Cookie Settings.Ok
சிங்கப்பூரிலிருந்து ஆக்சிஜன் சிலிண்டர், கண்டெய்னர்கள் இறக்குமதி: கொரோனா தடுப்பு நடவடிக்கையில் தமிழக அரசு! சிங்கப்பூரிலிருந்து 256 காலி ஆக்சிஜன் சிலிண்டா்கள் மற்றும் கண்டெய்னா்கள் இரண்டு விமானங்கள் மூலம் சென்னை வந்தடைந்தன. Web Desk Updated on : 13 May 2021, 06:46 AM தமிழகத்தில் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை வேகமாகப் பரவி வருவதால், மருத்துவமனைகளில் ஆக்சிஜனுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ஆக்சிஜன் தட்டுப்பாட்டை போக்குவதற்காகத் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் உற்பத்தியாகும் ஆக்சிஜனை சேமித்து வைக்க போதிய சிலிண்டா்கள் மற்றும் கண்டெய்னா்கள் இல்லை என்பதால் இறக்குமதி செய்ய தமிழக அரசு முடிவு எடுத்தது. இதையடுத்து கடந்த சில தினங்களுக்கு முன்பு ஜொ்மன், பிரிட்டன் ஆகிய நாடுகளிலிருந்து 900 காலி சிலிண்டா்கள் மற்றும் காலி கண்டெய்னா்கள் 2 விமானங்களில் சென்னை வந்தடைந்தன. பின்னர் இவற்றை ,ஆக்சிஜன் தயாரிக்கும் தொழிற்சாலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அதனைத்தொடர்ந்து தூத்துக்குடியில் உள்ள ஸ்டொ்லைட் தொழிற்சாலையில் ஆக்சிஜன் தயாரிக்கத் தற்காலிகமாக 3 மாதங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அங்கு உற்பத்தியாகும் ஆக்சிஜனை சேகரித்து வைக்க போதிய சிலிண்டா்கள், கண்டெய்னா்கள் இல்லை என்பதால், தமிழக அரசு சிங்கப்பூர் அரசிடம் காலி சிலிண்டா்கள், கண்டெய்னா்களை வழங்கி உதவுமாறு கோரிக்கை வைத்திருந்தது. இதனையடுத்து தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று, சிங்கப்பூரிலிருந்து 128 காலி சிலிண்டா்கள் மற்றும் காலி கண்டெய்னா்களை ஏற்றிக்கொண்டு, இந்திய விமானப்படையின் முதல் விமானம் நேற்று இரவு 10 மணிக்கு சென்னை பழைய விமானநிலையம் வந்தது. இதையடுத்து மேலும் 128 காலி சிலிண்டா்களுடன் மற்றொரு இந்திய விமானப்படை விமானம் சிங்கப்பூரிலிருந்து இன்று அதிகாலை 2 மணிக்கு சென்னை விமானநிலையம் வரவுள்ளது. பின்னர் விமானப் படை அதிகாரிகள் தமிழக அரசு அதிகாரிகளிடம் 256 காலி சிலிண்டா்கள், கண்டெய்னா்கள் ஒப்படைத்தனர். அதன்பின்பு காலி சிலிண்டா்கள் மற்றும் கண்டெய்னா்களை லாரிகள் மூலம் தூத்துக்குடியில் உள்ள ஸ்டொ்லைட் தொழிற்சாலைகளுக்கு அனுப்பிவைத்தனா். மேலும், சிங்கப்பூரிலிருந்து காலி சிலிண்டா்கள் இன்று இரவும் மேலும் 2 விமானங்களில் சென்னைக்கு வர உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். Also Read “நீட்.. 7 பேர் விடுதலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நல்ல முடிவை எடுப்பார்”: அமைச்சர் ரகுபதி பேச்சு chennai tamilnadu தமிழ்நாடு தமிழக அரசு singapore சிங்கப்பூர் TNGovt oxygen cylinders ஆக்சிஜன் சிலிண்டர்கள் கண்டெய்னர்கள் Trending வெடித்து சிதறிய சிலிண்டர்.. 5 பேர் பரிதாப பலி- 49 பேர் கவலைக்கிடம்: ராஜஸ்தானில் துக்க வீடான திருமண வீடு! இப்படி ஒரு தீவிர கால்பந்து ரசிகரா.. ஆனந்த் மஹிந்திராவை ஆச்சரியப்பட வைத்த சம்பவம் என்ன தெரியுமா? U Turn எடுக்கும் போது குறுக்கே வந்த லாரி.. விரைவில் திருமணம் செய்ய இருந்த காதல் ஜோடிக்கு நேர்ந்த துயரம்! மரணம் வாழ்வின் அங்கம்,அதை பேசவேண்டாம்- தொழிலாளர் இறப்பு குறித்து கத்தார் உலகக்கோப்பை தலைவர் கொடூர கருத்து Latest Stories உங்களுக்கு 90s கிட்ஸ்கள் தெரியும்.. ஆனால் Generation Z பற்றி நீங்க கேள்விப்படிருக்கிறீர்களா? இன்று இரவு பேருந்துகள் இயங்காது: போக்குவரத்துத்துறை வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு இதோ! வெடித்து சிதறிய சிலிண்டர்.. 5 பேர் பரிதாப பலி- 49 பேர் கவலைக்கிடம்: ராஜஸ்தானில் துக்க வீடான திருமண வீடு!
வாய்ப்பு கிடைத்தால் உங்களை எரிச்சல்படுத்தும் சக பணியாளர் முகத்தில் குத்துவதற்கு நீங்கள் தயாராக இருக்கிறீர்கள் என்பது தெரியும். வேலை எரிச்சல்களை சமாளிப்பதற்கான சில வழிமுறைகளைப் பார்ப்போம். கட்டுரை: பூரம் பாண்ட்யா உங்கள் பக்கத்து சீட்டில் உள்ளவர் தொந்தரவு செய்பவராக இருக்கி றாரா? லிங்க்டுஇன் நடத்திய சர்வேயின்படி தொடர்ந்து புகார் சொல் பவர்கள் என்று 3 பகுதி யினராகப் பிரிக்கலாம். சோம்பேறிகள் அலுவலம் செல்லும் பலரும் இந்த கஷ்டத்தைச் சமாளிக்க கியேட்டிவாக சிந்திக்க வேண்டியிருக்கிறது. விரிவுரையாளரான ஜானவி பட்டேல் (27), பாடத்திட்டத்தை உரிய காலத்தில் முடிக்காமல் அலட்சியப்படுத்திய சக பணியாளரை மாற்ற முயற்சித்து தோற்றுப் போனார். பிறகு ஆசிரியர்களைப் பற்றி மாணவர்களிடம் கருத்துக் கணிப்பு நடத்தினார். “அதில் அவருடைய வரம்புகள் தெரிய வந்தன. பிரச்சினை பிரின் சிபல் வரை சென்றது. இப்போது அவர் பொறுப்பை உணர்ந்து செயல்படுகிறார்,” என்கிறார் ஜானவி. முட்டாள் அலுவலகத்தில் சாப்பிட்டு விட்டு மேஜையை அசிங் கமாக வைத்திருப்பதை வேடிக்கையாக நினைக் கும் சக பணியாளருக்கு ரிச்சா சிங்* (26) பாடம் கற்றுத்தர நினைத்தார். “நான் அவரை கையும் களவுமாக பிடிக்கத் தீர்மானித்தேன். ஒரு நாள் காலை மவுஸ் பேடில் சூப் கறை இருந்ததை பார்த்த பின், முந்தைய நாள் இரவு உணவு சுவையாக இருந்தது என்று என் சக பணியாளர்களிடம் சொன்னேன். நீண்டநேரம் வேலை செய்து கொண்டிருந்ததை கவனத்திற்கு கொண்டு வரு வதற்கு கிடைத்த வாய்ப்பை நழுவ விட விரும்பாத அவர், சூப் சாப் பிட்டதாக பெருமை யோடு அறிவித்தார். அந்தப் பூனையே மணியை ஆட்டி மாட்டிக் கொண்டது. எல்லோரும் விழுந்து விழுந்து சிரித்தார்கள்.” சத்தமான பேச்சாளர் பிராச்சி ஷா (24) கை யாண்ட வழிமுறையோ வித்தியாசமானது. “சப்த மில்லாமல் பேசுமாறு கலீக் ஒருவரிடம் கேட்ட போதெல்லாம், தலையாட்டிவிட்டு ‘ஒரு நிமிடம்’ என்பார். அதன் பிறகு அவருக்கு போன் வரும் போதெல்லாம், நாங்கள் ஸ்பீக்கர் சவுண்டை அதிகமாக வைத்து மியூசிக் கேட்க ஆரம்பித்தோம். அதை குறைக்குமாறு அவர் கேட்கும்போது, ‘ஒரு நிமிடம்’ என்று பதில் சொன்னோம்! விரைவிலேயே அவர் சப்தமில்லாமல் பேசக் கற்றுக்கொண்டார்.’’ அடுத்த கட்டுரை : காதலில் நீங்கள் எந்த நிலை கருத்துகள் அடுத்த கட்டுரை Join Us Subscribe Share 0Trending Get updated with the latest and greatest on Fashion, Trends, Lifestyle & Relationships. Subscribe now JOIN Can’t get enough of Femina? Subscribe By Submitting above you agree to the Femina privacy policy Terms of Use and Grievance Redressal Policy About Us Contact Us Privacy Policy Terms of Use Femina फेमिना हिन्दी ফেমিনা বাংলা Other Sites Filmfare Filmfare Awards Filmfare Awards 2020 Filmfare Awards East 2019 Short Films 2020 Filmfare Awards South 2019 Filmfare Awards Nominations Filmfare Awards Winners Goodhomes Times Knowledge Grazia India D/code 2019 Copyright © 2022 Worldwide Media | The Times of India. All Rights Reserved. Site Blocked In order to access website you need to accept our cookie policy. View cookie policy. Accept × Welcome Back to Femina Before you go... We tailor your experience and understand how you and other visitors use this website by using cookies and other technologies. This means we are able to keep this site free-of-charge to use. Please provide your consent for the following so that we can ensure that you have an enjoyable experience on our website.
சேஷாசல முதலியார் – சேஷாசலம் – பெரியார்தாசன் – “……………….” – சித்தார்த்தா – அப்துல்லாஹ் (1950-2013) காலமானார்! ஓகஸ்ட் 19, 2013 சேஷாசல முதலியார் – சேஷாசலம் – பெரியார்தாசன் – “………………….” – சித்தார்த்தா – அப்துல்லாஹ் (1950-2013) காலமானார்! பெரியார்தாசன் என்கின்ற அப்துல்லா காலமானார்: பாரதிராஜாவின் `கருத்தம்மா’, `காதலர் தினம்’ உள்பட பல்வேறு தமிழ் திரைப் படங்களில் நடித்தவர் பெரியார்தாசன். இவர் சென்னை பச்சையப்பா கல்லூரியில் 38 ஆண்டுகள் பேராசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். 15-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த இவர் பட்டிமன்றம், கருத்தரங்குகளில் பங்கேற்று வந்தார். ம.தி.மு.க. நிர்வாகியான இவர் அந்த கட்சியின் உயர் நிலைக்குழு உறுப்பினராக இருந்தார். பெரியார்தாசன் வீடு திருவேற்காடு மகாலட்சுமி நகர் 6-வது தெருவில் உள்ளது. கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். கல்லீரல் கோளாறு காரணமாக குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று நள்ளிரவு 1.25 மணிக்கு மரணம் அடைந்தார். அவருக்கு வயது 63. அவரது உடல் திருவேற்காட்டில் உள்ள அவரது வீட்டில் பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது[1]. பெரியார்தாசனுக்கு வசந்தா (62) என்ற மனைவியும், வளவன் (35), சுரதா (35) என்ற 2 மகன்களும் உள்ளனர்[2]. அவருடையஆன்மாசாந்தியடையபிரார்த்தனை: “அவருடைய ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனை” என்று செய்யலாமா, கூடாதா என்று தெரியவில்லை. இருப்பினும், இந்தியப் பாரம்பரியப்படி, “அவருடைய ஆன்மா சாந்தியடையடைவதாக” என்று சொல்லிக் கொண்டு, அவரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்ளலாம். இணைதளங்களில் தேடியபோது, நக்கீரனில் வெளிவந்த கீழ்கண்ட செய்தி கண்களில் பட்டது. அது அப்படியே கொடுக்கப்படுகிறது. கதிரவன் என்பவர் அச்செய்தியைக் கொடுத்திருக்கிறார். என்னநடந்ததுஇவர்கள் (பெரியார்தாசன்மற்றும்மணிவண்ணன்) வாழ்க்கையில்?: அவ்வப்போது சினிமாவில் நடித்து வந்த பெரியார்தாசன் அண்மையில் (2010) ஆத்திகரானார். அதுமட்டுமில்ல – இஸ்லாம் மதத்திற்கு மாறினார் (11-03-2010). இவர் மாதிரியே பெரியாரின் தீவிர பற்றாளர் மணிவண்ணன். இவர் இப்போது சாய்பாபா பக்கம் சாய்ந்திருக்கிறார். சென்னை பச்சையப்பன் கல்லூரியில் தத்துவ இயல்[3] பேராசிரியராக பணிபுரிந்த பெரியார்தாசனை பாரதிராஜா சினிமாவுக்கு கொண்டு வந்தார். நடிப்போடு ரியல் எஸ்டேட், மல்டி லெவல் மார்க்கெட்டிங்கிலும் கால் பதித்தார். கடந்த 2004ம் ஆண்டு அன்பு பாலா நடித்த அம்மா, அப்பா, செல்லம் படத்தின் படப்பிடிப்பு புதுச்சேரியில் நடந்தது. இதற்காக சென்னையில் இருந்து நான், (பேட்டி எடுக்க) பெரியார்தாசன், நடிகை சபீதா ஆனந்த் (நடிக்க) மூவரும் ஒரு காரில் புதுச்சேரி சென்றோம். அப்போது பெரியார்தாசன், தனது மகன் வ.சி.வளவன் திருமணம் அழைப்பிதழ் கொடுத்தார். அது ஒரு புத்தகமாகவே இருந்தது. அந்த திருமண அழைப்பிதழில் பெரியாரின் படம் அச்சிடப்பட்டிருந்தது. உள்ளே திருக்குறள் இன்பத்து பாலுக்கு பெரியார்தாசன் எழுதிய விளக்கவுரை. ஏன்பெரியாரின்படத்தைதிருமணஅழைப்பிதழில்அச்சிட்டுள்ளேன்: ஏன் பெரியாரின் படத்தை திருமண அழைப்பிதழில் அச்சிட்டுள்ளேன் என்று நினைப்பீர்கள்? என்று அவராகவே கேட்டு அவராக விளக்கம் சொல்லிக்கொண்டு வந்தார். சேசாசலம் என்கிற என் பெயரையே பெரியார்தாசன்னு மாத்திக்கிட்டேன்னா பார்த்துக்குங்க…….என்று பெரியார் மீது தான் கொண்ட பற்று பற்றி, கிழக்கு கடற்கரை சாலை நீலாங்கரையில் ஆரம்பித்து மரக்காணம் வரை சொல்லிக்கொண்டு வந்தார். நொங்கு கடை, இளநீர் கடைகளில் கார் நின்ற போது மட்டும் இடைவேளை. ஐந்து வருடங்களில் (2005-2010) அவர் வாழ்க்கையில் என்ன மாற்றம் நிகழ்ந்ததோ….தற்போது இறைவன் மீது நாட்டம் கொண்டிருக்கிறார். இஸ்லாம் மதத்திற்கு மாறியுள்ளார். இதே போல் பெரியாரின் தீவிர பற்றாளர் மணிவண்ணன். இதனால்தான் இவருக்கும் நடிகர் சத்யராஜூக்கும் நெருக்கம் அதிகமானது. இவர் இப்போது பெரியார் தொண்டர்களுக்கு அடுத்த அதிர்ச்சி கொடுத்திருக்கிறார். கடந்த சில வாரங்களுக்கு முன் மஹாராஷ்டிராவில் இருக்கும் சீரடி சாய்பாபா சன்னதிக்கு சென்று வந்திருக்கிறார்[4]. கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்யும் அளவிற்கு என்ன நடந்தது இவர்கள் வாழ்க்கையில்? 2013ல்பெரியார்தாசன், மணிமண்ணன்காலமானது: ஜூன் 2013ல் தான் நாத்திகரான மணிவண்ணன் (31-07-1954 – 15-06-2013) காலமானார். கதிரவன் நக்கிரனில் எடுத்துக் காட்டியுள்ளபடி, மணிவண்ணன் “கடந்த சில வாரங்களுக்கு முன் மஹாராஷ்டிராவில் இருக்கும் சீரடி சாய்பாபா சன்னதிக்கு சென்று வந்திருக்கிறார்[5]” என்றிருந்தால், இந்த மூன்று ஆண்டுகளில் மணிவண்ணன் ஆதிகரானாரா, கடவுளை நம்ப ஆரம்பித்தாரா, என்பதெல்லாம் நமக்கு தெரியாது. ஆனால், அவரது நண்பர் இந்த மூன்று ஆண்டுகளாக முஸ்லிமாக இருந்திருக்கிறார். (பகுத்தறிவு, நாத்திகம் இவற்றையெல்லாம் மூட்டைக் கட்டிவிட்டு, பெரியாரையும் ஒதுக்கி விட்டு) கடவுளை நம்பியிருக்கிறார். திராவிடர்களுக்குக் குழப்பமாகத்தான் இருக்கும். ஊடகங்களும்[6] “பெரியார்தாசன் மரணம்” என்றுதான்[7] செய்திகளை[8] வெளியிட்டிருக்கிறார்கள்[9]. இதயத்தில்விழுந்தஇடி – பெரியார்தாசன்மறைவுக்குவைகோஇரங்கல்: இதயத்தில் விழுந்த இடி என்று பேராசிரியர் பெரியார்தாசன் மறைவுக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்[10]. அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், திராவிட இயக்கத்தின் கருத்துக் களஞ்சியக் கருவூலமான, என் ஆருயிர்ச் சகோதரர் அப்துல்லாஹ் பெரியார்தாசன், என்னையும், இயக்கத்தோழர்களையும் கண்ணீரில் துடிக்க வைத்து மறைந்து விட்டார். தந்தை பெரியாரை, மாணவப் பருவத்தில் தலைவராக ஏற்றுக்கொண்டு, சுயமரியாதை வீரராக, பகுத்தறிவு நெறியை மக்களிடம் பரப்ப, எழுத்தாலும், பேச்சாலும் அவர் ஆற்றிய பணிகள் ஈடு இணையற்றவை. பொருளியல், தத்துவஇயல், உளவியல்பயின்றது: பச்சையப்பன் கல்லூரியில், பொருளியல் இளங்கலை, தத்துவ இயல் முதுகலை பட்டங்களைப் பெற்று, இலண்டன் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் உளவியல் பயின்று, முனைவர் பட்டம் பெற்று, அமெரிக்காவின் கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் ஆறு ஆண்டுகள் பேராசிரியராகப் பணி ஆற்றி, 34 ஆண்டுகள் பச்சையப்பன் கல்லூரியில், மெய்ப்பொருள் இயல் பேராசிரியராகப் பணி ஆற்றினார். அண்ணல் டாக்டர் அம்பேத்கருடைய, அனைத்து நூல்களையும் பழுதறக் கற்று, ஆய்ந்து அறிந்து, அதில் அவர் பெற்ற பாண்டித்யத்துக்கு நிகராக இன்னொருவரைச் சொல்ல முடியாது. அதைப்போலவே, தந்தை பெரியாரின் எழுத்துகளையும், உரைகளையும், முழுமையாகக் கற்று உணர்ந்தவர்; அறிவாசானின் நம்பிக்கையையும், அன்பையும் பெற்று, திராவிடர் கழகத்தில் கொள்கை பரப்புச் செயலாளராகவும் இயங்கியவர். தமிழ்ஈழவிடுதலை, பௌத்தம், பாலிமொழிகற்றல்முதலியன: தமிழ் ஈழ விடுதலைக்காக அரும்பாடுபட்டவர். மூன்று தமிழர்களின் உயிர்களை, தூக்குக் கயிற்றில் இருந்து விடுவிக்க, நான் போராடிய காலத்தில், தாமாக முன்வந்து, தன்னை மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைத்துக் கொண்டு, கடந்த இரண்டு ஆண்டுகளாக, கழகத்தை மக்கள் மன்றத்தில் வலுப்படுத்திட, மேடை முழக்கத்தின் மூலமாக, அவர் ஆற்றி உள்ள பணிகள் அளப்பரியதாகும். புத்தரின் போதனைகளைப் பயில்வதற்காக, இலங்கைக்குச் சென்று, பாலி மொழியைக் கற்றுத் தேர்ச்சி பெற்றார். 56 நூல்களைத் தந்து உள்ள பெரியார்தாசன், அம்பேத்கர் தொகுத்த புத்தரும் அவர் தம்மமும் என்ற நூலை, தமிழில் மொழி ஆக்கம் செய்தார். அந்தநூல், தைவான் நாட்டில் மூன்று இலட்சம் படிகள் அச்சிடப்பட்டு, உலகெங்கும் பரப்பப்பட்டன. உடலைஎரியூட்டவும்வேண்டாம்; புதைக்கவும்வேண்டாம்: அவர் உடல் நலம் குன்றியபோது, ஜூலைத் திங்களில் அவரது இல்லம் சென்று சந்தித்து, பல மணி நேரம் உரையாடிக் கொண்டு இருந்தேன். இரண்டு நாள்களுக்கு முன்பு, ஆகஸ்ட் 16 ஆம் நாள், குளோபல் மருத்துவமனையில் அவரைச் சந்தித்தேன். மூன்று மணி நேரம் அவர் என்னிடம் மனம்விட்டுப் பேசிக்கொண்டு இருந்தார். அதுதான், அவர் கடைசியாகப் பேசியது என்று, அவரது பிள்ளைகள், நேற்று என்னிடம் தெரிவித்தனர். பேரறிஞர் அண்ணாவைக் கொத்திச் சென்ற புற்று நோய்தான், பெரியார்தாசனையும் நம்மிடம் இருந்து பறித்து விட்டது. ‘தான் இறந்தபிறகு, விழிகளை சங்கர நேத்ராலயா மருத்துவமனைக்குத் தந்து விடுங்கள்; உடலை எரியூட்டவும் வேண்டாம்; புதைக்கவும் வேண்டாம்; உடலை சென்னை மருத்துவக் கல்லூரி மாணவர்களது ஆராய்ச்சி படிப்புக்காகக் கொடுத்து விடுங்கள்’ என்று குடும்பத்தாரிடம் கூறியதற்கு ஏற்ப, அவ்விதமே அவரது உடல், சென்னை மருத்துவக் கல்லூரிக்கு வழங்கப்படுகிறது. இன்னும் பல ஆண்டுகள் வாழ்ந்து, திராவிட இயக்கத்துக்கும், தமிழ் இனத்துக்கும் அருந்தொண்டு ஆற்ற இருந்த, எங்கள் கொள்கை வைரத்தை, சாவு கொடூரமாகக் கொண்டு போய் விட்டதே என்ற வேதனையில் தவிக்கிறேன். அவரை இழந்து ஆற்றொணாத் துயரத்தில் வாடும், அவரது குடும்பத்தினருக்கும், உற்றார் உறவினர்க்கும் எனது கண்ணீர் அஞ்சலியைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என்று தெரிவித்துள்ளார்[11]. வாழ்க்கைக்குறிப்பு: சேசாசலம் 1950ம் ஆண்டு வட ஆற்காடு மாவட்டத்தில் உள்ள அகரம் என்ற கிராமத்தில், சைவவேளாளர் குடும்பத்தில் பிறந்தார். சேசாசல முதலியாராக, இந்துமத நம்பிக்கையாளராக இருந்தார். 1980ல் பெரியாரின் தொடர்பினால், “பெரியார்தாசன்” ஆனார். திராவிட சித்தாந்தத்தில் ஊறியிருந்தாலும், பல நம்பிக்கைகளை ஆராய்ந்து கொண்டிருந்ததால், சில காலத்திற்கு கிருத்துவராகக் கூட இருந்தார் என்று சொல்லப்படுறது. பிறகு பௌத்தராகி, “சித்தார்த்” என்ற பெயரை வைத்திருந்தார். 2010ல் முஸ்லிம் ஆனார். காலம் பெயர் மதம் / நம்பிக்கை c.1950-70 சேசாசல முதலியார் சைவம்/ இந்து c.1970-80 சேசாசலம் பகுத்தறிவுவாதி c.1980-2008 பெரியார்தாசன் நாத்திகம் / இந்துவிரோதம் c.2008-10 சித்தார்த் பௌத்தம் / இந்துவிரோதம் c.2010-13 அப்துல்லா இஸ்லாம் / கடவுள்-மதம் நம்பிக்கையாளர் C = circa = approximately = நம்பிக்கை, மதநம்பிக்கை, கடவுள் நம்பிக்கையைப் பொறுத்த வரையிலும் நிலைமை மாறியுள்ளதால், இப்படி குறிப்பிடப் பட்டுள்ளது. யார் மறைந்தது, எது கடந்தது, எது நின்றது?: சித்தாந்த கலவைகளினால், குழப்பங்களினால், நம்பிக்கைச் சிதறல்கள், மோதல்கள் இவற்றினால் உருவானவ போலிருந்தார் என்று அவரது வாழ்க்கைக் குறிப்புகள் காட்டுகிறது. ‘தான் இறந்தபிறகு, விழிகளை சங்கர நேத்ராலயா மருத்துவமனைக்குத் தந்து விடுங்கள்; உடலை எரியூட்டவும் வேண்டாம்; புதைக்கவும் வேண்டாம்; உடலை சென்னை மருத்துவக் கல்லூரி மாணவர்களது ஆராய்ச்சி படிப்புக்காகக் கொடுத்து விடுங்கள்’ என்று குடும்பத்தாரிடம் கூறியதிலிருந்து அத்தகைய போராட்டங்கள் வெளிப்படுகின்றன. 11-03-2010 முதல் 18/19-08-2013 அன்று வரை முஸ்லிமாக இருந்த அப்துல்லா இறந்தால், யார் இறந்தது என்று உலகம் சொல்லும்? இந்துவாக இருந்த சேஷாசல முதலியார் இறந்தாரா? நாத்திகன் சேஷாசலம்இறந்தாரா? பெரியார்தாசன் இறந்தாரா? “……….” –இறந்தாரா? சித்தார்த்தா என்ற பௌத்தர் –இறந்தாரா? அப்துல்லாஹ் என்ற முஸ்லிம் இறந்தாரா? இந்தியன் இந்தியனாக இருந்தாலே போதும் – மதம் மாறவேண்டிய அவசியம் இல்லை. © வேதபிரகாஷ் 19-08-2013 [1] http://www.maalaimalar.com/2013/08/19094608/Actor-and-professor-periyar-da.html [2] http://news.vikatan.com/article.php?module=news&aid=18407 [3] சைக்காலாஜி / மனோதத்துவம் என்றும் குறிப்பிடுகிறார்கள். [4] கதிரவன், என்னநடந்ததுஇவர்கள் வாழ்க்கையில்?, நக்கீரன், http://cinema.nakkheeran.in/Talkies.aspx?T=360 [5] கதிரவன், என்னநடந்ததுஇவர்கள் வாழ்க்கையில்?, நக்கீரன், http://cinema.nakkheeran.in/Talkies.aspx?T=360 [6] http://www.dinamalar.com/news_detail.asp?id=784172 [7] http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=105898 [8]http://dinamani.com/latest_news/2013/08/19/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AF%86/article1741793.ece [9] http://tamil.oneindia.in/news/2013/08/19/tamilnadu-periyardasan-abdullah-dies-181496.html [10] தினமணி, 19-08-2013 [11]http://dinamani.com/latest_news/2013/08/19/%E0%AE%87%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%BF–%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF/article1741859.ece குறிச்சொற்கள்:அப்துல்லாஹ், அமீரகம், அல்லா, இந்து தமிழன், இந்து விரோதத் தமிழன், இறப்பு, இறைவன், இலா, இல்லல்லா, இஸ்லாம், உறவு மாற்றம், எரித்தல், கடவுள், கடவுள் மாற்றம், கருத்து, கர்த்தர், குழப்பம், சொர்க்கம், தமிழ் இந்து, திராவிட பேச்சாளர்கள், துபாய், தெய்வம், நம்பிக்கை, நரகம், பிறப்பு, பிறழ்சி, புதைத்தல், பெரியார், பெரியார்தாசன், போலி நாத்திகம், மதமாற்றம், மனமாற்றம், முஸ்லிம், முஹமது, ரசூல், லா அப்துல்லா, அல்லா, இந்து, இருப்பது, இறைவன், இல்லல்லா, இல்லாதது, இஸ்லாமியத் தமிழன், இஸ்லாம், உறவு மாற்றம், எதிர்பார்ப்பு, கடவுள், கடவுள் மாற்றம், கருத்து, கர்த்தர், காபா, குழப்பம், சித்தாந்தம், சொர்க்கம், திராவிட பாகுபாடு, திராவிட முஸ்லிம், திராவிடத் தமிழன், திராவிடன், திராவிடம், திரிபு, துபாய், தேவன், நபி, நரகம், நாயகம், பகுத்தறிவு, பிறழ்சி, பெயர் மாற்றம், பெரியாரின் ஆத்மா, பெரியாரின் ஆவி, பெரியாரிஸம், பெரியாரிஸ்ட், பெரியாருடைய ஆவி, பெரியார், பெரியார்தாசன், மதமாற்றம், மனமாற்றம், மனைவி மாற்றம், மாற்றம், முஹமது, ரசூல், ரியாத், லா, ஹிந்து இல் பதிவிடப்பட்டது | 2 Comments » திருமாவளவனுக்கு கிருத்துவர்கள் சரியான பட்டம் கொடுக்கிறார்கள்! ஏப்ரல் 27, 2010 திருமாவளவனுக்கு கிருத்துவர்கள் சரியான பட்டம் கொடுக்கிறார்கள்! திருமாவின் இறைத்தொண்டு: திருமாவளவன் பெரியார்தாசன் மாதிரி, கிருத்துவர்களுக்கு என்றும் புதியவர்கள் அல்லர். திருமா கிருத்துவர் என்ற பேச்சு ஏற்கெனவே உள்ளது. 80களில் கிருத்துவர்கள் நடத்தும் எல்லா கருத்தரங்களிலும் பார்க்கலாம் [குறிப்பாக AICUF, ஐக்கிய ஆலயம் …………..முதலியன]. “கிருத்துவர்களின் காவலன்” என்று போஸ்டர்கள் ஒட்டப் பட்டிருப்பதை பார்த்திருப்பவர்களுக்கு இது ஒன்றும் ஆச்சரியம் இல்லை. கிருஸ்துமஸ் கொண்டாட்டத்தைப் பார்க்க்க வேண்டுமே, அங்குதான் திருமாவின் உண்மையான உருவத்தை பார்க்கலாம். இறைத் தொண்டின் மகிமையே மகிமைதான். விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரும், எம்பியுமான தொல். திருமாவளவனுக்கு இறையியல் கல்லூரியான குருகுலம் அகாடமி சார்பில் டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது. இதுகுறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைமை நிலையச் செயலாளர் வன்னி அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் கால் நூற்றாண்டுக்கும் மேலாக சமூகப் பணி ஆற்றி வருகிறார். இந்தப் பணியைப் பாராட்டி உலக அளவில் செயல்பட்டுவரும் இறையியல் கல்லூரியான குருகுலம் அகாடமி, டாக்டர் (முனைவர்) பட்டம் வழங்க உள்ளது. 2009ம் ஆண்டுக்கான டாக்டர் பட்டத்தை திருமாவளவனுக்கு இக் கல்லூரி வரும் 18.07.2010 அன்று வழங்க உள்ளது என்று கூறியுள்ளார். சமூகப் பணி மற்றும் இறைதொண்டு ஆகியவற்றில் சிறப்பான முறையில் பணியாற்றிய சிந்தனையாளர்கள் மற்றும் களப் போராளிகளுக்கு இக்கல்லூரி கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக டாக்டர் பட்டம் வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. கிருத்துவர்கள் முந்தி கொண்டார்கள் போலும்: பெரியார்தாசன் மாறியதும், முஸ்லீம்கள் திருமாவிற்கு வலை வீசினர், “வாருங்கள்”, என்று வரவேற்பு கொடுத்து, சிவப்புக் கம்பளத்தினையும் விரித்தனர். ஆனால், நிலைமையை அறிந்து உசாராகி விட்டனர் கிருத்துவர்கள்! குறிச்சொற்கள்:AICUF, அப்துல்லாஹ், இந்து தமிழன், இந்து விரோதத் தமிழன், இறைத்தொண்டு, இஸ்லாம், ஐக்கிய ஆலயம், கிருத்துவர்களின் காவலன், குருகுலம் அகாடமி, செச்யூலரிஸம், தமிழ் இந்து, திராவிட நிறுவனங்கள், திராவிட பேச்சாளர்கள், திருமாவளவன், நாத்திகம், பெரியார்தாசன், போலி நாத்திகம் AICUF, இந்து-வெறுப்பு, இந்துவிரோத நாத்திகம், இந்துவிரோதம், இரட்டை மோசடி சாமியார், இறையியல் கல்லூரி, ஏசு, ஏசு கிருஸ்து, கிருத்துவர்களின் காவலன், கிருஸ்து, கிரைஸ்ட், குருகுலம் அகாடமி, சமூகப் பணி மற்றும் இறைதொண்டு, டாக்டர் பட்டம், திருமாவளவன், மதசார்பின்மை, மதசார்பு, விடுதலை சிறுத்தைகள் இல் பதிவிடப்பட்டது | 4 Comments » பெரியார்தாசனை காண்காணிக்க வேண்டுமாம் – சொல்வது முஸ்லீம்கள்! ஏப்ரல் 10, 2010 பெரியார்தாசனை காண்காணிக்க வேண்டுமாம் – சொல்வது முஸ்லீம்கள்! இதெல்லாம் வேடிக்கையாகவே உள்ளது. அதிரடியாக, பரபரப்புடன், அந்த ஆளை ரியாத்திற்கு அழைத்து வந்து சுன்னத் செய்து “முஸ்லீம்” என்று சொல்லி, மெக்கா-மெதினா தரிசனத்திற்கு அழைத்துச் சென்று………………….படங்கள் எல்லாம் எடுத்து காட்டி, இப்பொழுது “கண்காணிக்கப் படுவார்” என்றால் என்ன? பெரியார்தாசனை கண்காணிக்கும் அதென்ன புதிய நிலைபாடு? http://markaspost.wordpress.com/2010/04/10/பெரியார்தாசனை-கண்காணிக்/ பெரியார்தாசன் என்ன நோக்கில் இஸ்லாத்தை ஏற்றார் எனத் தெரியவில்லை! நாங்கள் அவரை கண்காணித்துக் கொண்டு இருக்கிறோம் என்ற தனி நபர் ஜமாஅத்தின் நிலைப்பாடு பற்றி மார்க்க அடிப்படையில் சரியா என்பதை அறிந்து கொள்ளும் முன் இதுபோன்ற விஷயங்களில் ஏற்கனவே அந்த ஜமாஅத்தின் நிலைப் பாடு என்ன? என்பதை பார்ப்போம்! முதலாவதாக, இதுவரை இஸ்லாத்தை ஏற்ற அனைவருக்கும் இதே நிலைதான் எடுக்கப்பட்டதா? தங்கள் ஜமாஅத்தில் வந்து இஸ்லாத்தை ஏற்றால் இந்த அளவு கோலைக் கொண்டுதான் அவர்களை அளந்தார்களா? கண்காணித்த பிறகுதான் அவர்கள் அறிமுகப்படுத்தப்பட்டர்களா? அய்யம்பேட்டை சகோதரிகளை இப்படித்தான் கண்காணித்து அனைத்து ஊடகங்களில் எல்லாம் முன்னிலைப்படுத்தினார்களா? தவ்ஹீத் எழுச்சி மாநாட்டில் மேடை ஏறி உரை நிகழ்த்த அனுமதிக்கப்பட் டார்களா? ஏ.ஆர். ரஹ்மானை மேடையேற்ற முடியுமா? என்றெல்லாம் கேட்கிறார்களே! ஏ.ஆர். ரஹ்மான் இன்றுதான் இஸ்லாத்தை ஏற்றார் என்றால் அவரையும் இதே நிலைபாடு கொண்டுதான் வரவேற்று அதன் பின் அவருக்கு மார்க்கத்தை எடுத் துச் சொல்ல வேண்டும். அவரது நிலை என்ன என்பது பற்றி நம்மிடத்தில் கேள்வி இல்லை. “அவர்களுக்காக நீர் விசாரிக்கப்பட மாட்டீர்” -(அல்குர்ஆன்) என அல்லாஹ் கூறுவதாலும், வந்தவர்களுக்கு நேர்வழியை எடுத்துச் சொல்லாமல் எட்டி நின்று கண்காணித்து “விழுந்த பின் தான் சுட்டிக் காட்டுவோம்’ என்பது என்ன நிலைபாடு? மார்க்க அடிப்படையில் இஸ்லாத்தை ஏற்றவர்களின் உள்ளத்தைப் பிளந்து பார்க்கும் செயலைச் செய்யக் கூடாது என்பதை காலீத் பின் வலீத் (ரலீ) சம்பவத்திலும், உஸôமா (ரலி) சம்பவத்திலும் நாம் காண்கிறோம். நாளை அவர் வழிகெட்டு விட்டால்… என்ற கேள்வியே முதலில் தவறாகும். நபி (ஸல்) அவர்கள் காலத்தில் அவர்களிடத்திலே கலிமா சொல்லி இஸ்லாத்தை ஏற்ற எத்தனையோ பேர் இஸ்லாத்தை விட்டு வெளியேறிய சம்பவத்தை மிஃராஜின் போதும், பொய்த் தூதரை பின்பற்றிச் சென்ற சம்பவத்திலும் நாம் அறிந்திருக் கின்றோம். நபி (ஸல்) அவர்களின் காலத்திற் குப் பின்னும், அபுபக்கர் (ரலி) ஆட்சிக் காலத்தில் ஜகாத்தை மறுத்து ஒரு கூட்டமும், பொய்த் தூதர்களைப் பின்பற்றி ஒரு கூட்டமும் வழி தவறிச் சென்றது. உஸ்மான் (ரலி) காலத்தில் கார்ஜியாக்கள் என்று ஒரு பிரிவினர் வழிகெட்டுப் போனதை அறிந்திருக்கிறோம். இப்படி நபி (ஸல்) அவர்களால் உறுதிமொழி எடுத்த எத்தனையோ பேர் வழிகேட்டில் வீழ்ந்திருப்பதை அறிந்திருக்கிறோம். வழிகேடும், நேர்வழியும் நம் கையில் இல்லை. ஒருவர் சொர்கத்துக்குரிய காரியத்தை செய்து கொண்டே இருப்பார், இறுதி நேரத்தில் நரகத்திற்குரிய காரியத்தைச் செய்ய வைத்து அவரை அல்லாஹ் நரகத்திற்குரியவராக்குவான். ஒருவர் நரகத்திற்குரிய காரியத்தை செய்து கொண் டே இருப்பார், இறுதி நேரத்தில் சொர்க்கத்துக்குரிய காரியத்தை செய்ய வைத்து அவரை சொர்க் கத்திற்கு உரியவராக ஆக்குவான். (-புஹாரி) நம்மில் எத்தனையோ பேர் வழிகேட்டில் இருந்து நேர்வழிக்கும், நேர்வழியில் இருந்து வழிகேட்டிற்கும் சென்றுள்ளதாக நீங்கள் கூறுகின்றீர்கள். ஏன்? ஆலிமான நீங்களே கூட இறை மறுப்புக் கொள்கைக்குச் சென்று நேர்வழிக்கு திரும்பி வந்ததாகக் கூறியுள்ளீர்கள்! இவ்வாறு இருக்கையில் இஸ்லாத்தை ஏற்ற ஒருவரின் உள்ளத்தை ஆராய மல் அவர்களை வரவேற்பதும், முக்கியத்துவம் அளிப்பதும் மார்க்க அடிப்படையில் தவறில்லையே! புதிதாக இஸ்லாத்தை ஏற்ற முஹாஜிர்களுக்கு, அன்சாரிகளுக்கு இல்லாத முக்கியத்துவத்தை நபி (ஸல்) அளித்ததை நாம் ஹதீஸ்களில் பார்க்கிறோம். எந்த அளவுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது என்றால், “நீங்கள் நீதமாக நடக்கவில்லை, புதிதாக இஸ்லாத்தை ஏற்றவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து எங்களை புறக்கணிக்கின்றீர்கள் என அன்சாரிகள் நபி (ஸல்) அவர்களைப் பார்த்து கேட்கும் அளவிற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. மக்கா வெற்றியின்போது “அபூஸுஃப்யான் வீட்டில் தஞ்சமடைபவர்களுக்கு பாதுகாப்பு உத்தரவாதம்” வழங்குமளவுக்கு இஸ்லாத்தை ஏற்றவர்களுக்கு சிறப்பும், கனிமத்து பொருட்களில் கூடுதல் பங்கும் வழங்கப்பட்டிருக்கும்போது நாம் ஏன் இதிலிருந்து படிப்பினை பெறாமல் மற்றவர்கள் மேடையில் பேசியபின் நமது மேடையில் ஏறுவதா? என்றும், இது நமது ஜமாஅத் நிலைப்பாடு! என்றும் கூறி நபி (ஸல்) நிலைப்பாட்டை புறந்தள்ளுவது சரியாகுமா? நாத்திகரான கோவை ராம கிருஷ்ணனும், இணை வைப்பாள ரான இந்து மக்கள் கட்சி அர்ஜுன் சம்பத்தும், தாங்களும் இந்த விஷயத்தில் ஒரே நேர்கோட்டில் இணைந்து “”அவரை கண்காணிக்கிறோம்” என ஒரே வார்த்தைகளை வெளிப்படுத்தி இருப்பதன் மூலம், உங்கள் சிந்தனை காவியாகவோ, கருப்பாகவோ மாறிவிடாமல் இறைவனிடம் பிரார்த்திக்கிறோம். தகவல் – மங்கோலியன் நன்றி; www.intjonline.in மற்றும் சமுதாய மக்கள் ரிப்போர்ட் அன்புடன்;சதாம் ஹுசைன் ஆக இஸ்லாத்திற்கு மாறியவர்கள் பற்றி இந்த அளவிற்கு ஆராய்ச்சி நடத்துகிறார்கள் என்றால், “மாற்றப்பட்டவர்களின் நிலை” பற்றி முஸ்லீம்கள் ஆராய்ச்சி செய்தது / செய்யாதது என்ன? நன்றாக படித்து, ஒருநிலையில் தாங்கள் ஏதோ ஒரு காரணத்திற்காகத் தான் மதம் மாற்றப்பட்டுள்ளோம் என அறிந்தால், அவர்களும் தங்களது நிலைப்பாடு பற்றி சிந்திக்க ஆரம்பித்து விடுவார்களே? இப்படி எல்லா மதம் மாறிய முஸ்லீம்களும் கண்காணிக்கப் படுவார்களா? நம்பிக்கையின் மீது ஆதாரமாக மதம் மாறினாரா அல்லது மாற்றப் பட்டரா என்ற கேள்வியும் அதற்கான பதிலும் பெரியார்தாசன் நண்பர்களிடையே ஏற்கெனவே உள்ளன, அவை தாராளாமாகவே பேசப் பட்டன. “பணத்திற்காகத்தான்” மாறினார் என்பது முதல் குற்றச்சாட்டு. அந்நிலையில் “நம்பிக்கை” போய்விடுகிறது. மனிதன் தான் எப்படியாவது விளக்கம் அளித்து தன்னுடைய செயலை நியாயப் படுத்திக் கொள்ளலாம். அந்நிலையில் படித்த சேஷாசலத்திற்கு /பெரியார்தாசனுக்கு / ……………க்கு/ சித்தார்தா……னந்தாவிற்கு / அப்துல்லாவிற்கு எந்த பிரச்சினையும் இல்லை. அதுமட்டுமல்ல, சிலர் அப்துல்லாவிற்கே அறிவுரை அளிக்க ஆரம்பித்து விட்டனர்: ஐயா , பேராசிரியர் அவர்களே! நீங்கள் இஸ்லாத்தில் இணந்தது எங்களுக்கு பெருமைதான் என்றாலும் என் மனதுக்குள் ஒரு பயம் நிலவி வருகிறது. இது சுன்னத், அது ஹராம், இதைச் செய்யவேண்டும், அதைச் செய்யக்கூடாது என்று இலவச அறிவுரை சொல்ல சில அரைகுறை ஆலிம்கள் வருவார்கள். உங்களுக்கே தெரியாமல் உங்களை மூளைச்சலவை செய்வார்கள். நீங்கள் மனோவியல் பேராசிரியர் மட்டுமல்ல சிகிச்சையாளரும்கூட, எனவே குர்ஆனையும் ஹதீஸையும் ஆராய்ந்ததுபோல் அவர்கள் சொல்வதையும் ஆய்ந்து ஆராய்ந்து ஏற்றுக்கொள்ளுங்கள். இது ஒன்று. மற்றொன்று, ‘இறைவன் ஒருவன்தான், அவனுக்கு இணைவைக்கக்கூடாது, அவனுக்கு இணையாக எதுவுமில்லை’ என்ற செய்தி நபிகளாருக்குப் பிறகு இந்திய துணைக்கண்டம் முதல் எல்லா நாடுகளுக்கும் பரப்பியவர்கள் ஒரு சிலர். அவர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதையும் இறை தியானத்தில் மூழ்கி மக்களின் வாழ்க்கை முறை, உணவு, நாகரீகம், பண்பாட்டுமுறை இவைகள் அனைத்தையும் மாற்றி நேர்வழிப் படுத்தியவர்கள். சுருக்கமாகச் சொன்னால் இறைவன் சொன்னதை, நபிகளார் சொன்னதை மக்களின் அறிவுக்குத் தகுந்தவாறு போதனை புரிந்தவர்கள். சூஃபிகள் என்றழைக்கப்படும் இவர்களை சிலர் தவறாகச் சித்தரிக்கிறார்கள் என்பதை உங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறேன். http://abedheen.wordpress.com/2010/04/10/jaffer-periyardasan/ எதற்கு இவ்வளவு கட்டுப்பாடு? பாவம், ஒருவேளை, விட்டால் ஓடிவிடுவாரோ என்னவோ? முஸ்லீம்கள் மதம் மாற்றும் பிரச்சினை இன்னுமொரு கோணத்தில் செல்கின்றது என்பதனை அறியலாம். குறிச்சொற்கள்:அப்துல்லாஹ், இஸ்லாம், செச்யூலரிஸம், திராவிட சித்தாந்திகள், திராவிட பேச்சாளர்கள், திராவிட முஸ்லிம், பத்திரிக்கை ஒழுங்கில்லாத்தனம், பெரியார்தாசன், போலி நாத்திகம் அப்துல்லாஹ், இஸ்லாமியத் தமிழன், உண்மை சமதர்மம், கடவுள் மறுப்பு என்றால் எல்லா கடவுளர்களையும் மறுக்கவேண்டும், சமதர்மக் குழந்தை, சேஷாசல முதலியார், சேஷாசலம், தமிழ் முஸ்லிம், திகவின் முகமூடி கிழிகிறது, திராவிட நாத்திகம், திராவிட பாகுபாடு, திராவிட முஸ்லிம், திராவிடம், திராவிடர், பகுத்தறிவு, பெரியார்தாசன், மதசார்பற்றத் தீவிரவாதம், முஸ்லிம் தமிழன்! இல் பதிவிடப்பட்டது | 2 Comments » அம்பேத்காரை அப்துல்லாஹ்-பெரியார்தாசன் பிறகு ஏமாற்றும் கருணாநிதி ஏப்ரல் 5, 2010 அம்பேத்காரை அப்துல்லாஹ்-பெரியார்தாசன் பிறகு ஏமாற்றும் கருணாநிதி அம்பேத்கார் தனது சட்டக்கூர்மையுடன் தான் பிரிவு 25ல், “இந்து” என்றால் அதில் ஜைன, பௌத்த, சீக்கியர்கள் அடங்குவர் என்று விளக்கங்கொடுத்து சேர்த்தார். Explanation-II: In sub-clause (b) of clause (2), the reference to hindus shall be construed as including a reference to persons professing he Sikh, Jaina or Buddha religion, and the reference to Hindu religious institututions shall be contstrued accordingly. The Constitution (Scheduled Caste) Order 1950ன் படி “இந்துக்கள்” அதாவது சீக்கிய, பௌத்த மதத்தவர்களுக்கும் கொடுக்கப் பட்டது. இங்குதான், உச்சநீதி மன்றம் தனது – சூசை எதிர் இந்தியா – AIR 1986 SC 733 என்றதில் SC என்றாலே இந்துமத்தைத் தான் குறிக்கும் என்று தீர்ப்பளித்தது! ——————————————————– The Hon’ble Supreme Court in the case of Soosai vs Union of India (AIR 1986 SC 733) categorically held that SCs converted to Christianity cannot have SC status:“…………..it cannot be disputed that the caste system is a feature of the Hindu social structure. It is a social phenomenon peculiar to Hindu society. The division of the Hindu social order by reference at one time to professional or vocational occupation was moulded into a structural hierarchy which over the centuries crystallized into a stratification where the place of the individual was determined by birth” (para.7). “During the framing of the Constitution, the Constituent Assembly recognized “that the Scheduled Castes were a backward section of the Hindu community who were handicapped by the practice of untouchability”, and that “this evil practice of untouchability was not recognized by any other religion and the question of any Scheduled caste belonging to a religion other than Hinduism did not therefore arise” B. Shivaji Rao: the Framing of India’s Constitution: A study, p.771” (Ibid). “It must be remembered that the declaration incorporated in paragraph 3 (of the Constitution (Scheduled Caste) Order, 1950) deeming them to be members of the Scheduled Castes was a declaration made for the purposes of the Constitution. It was a declaration enjoined by clause (1) of Article 341 of the Constitution (para.8). “To establish that paragraph 3 of the Constitutional (Scheduled Castes) Order, 1950 discriminates against Christian members of the enumerated castes, it must be shown that they suffer from comparable depth of social and economic disabilities and cultural and educational backwardness and similar levels of degradation within the Christian community necessitating intervention by the State under the provisions of the Constitution (Ibid). “It is not sufficient to show that the same caste continues after conversion. It is necessary to establish further that the disabilities and handicaps suffered from such caste membership in the social order of its origin-Hinduism-continue in their oppressive severity in the new environment of a different community (Ibid). “It is therefore, not possible to say that the President acted arbitrarily in the exercise of his judgment in enacting paragraph 3 of the Constitution (Scheduled Caste) Order, 1950” (Ibid) —————————————————- ஆகவே, இப்பொழுது கிருத்துவர்களோ, கருணநிதியோ அம்பேத்காரை ஏமாற்ற வேந்தும் என்று துடிக்கிறார்கள் போலும். அதுமட்டுமல்லாது, ஏசுவையே எமாற்றத் துடிக்கிறார்கள். அம்பேத்கார் பெயரைச் சொல்லிக் கொண்டே, ஏசுவையும், புத்தரையும் ஏமாற்றிய பெரியார்தாசன் / சித்தார்த்தா………………..னந்தா, முஸ்லீமாக மாறி “அப்துல்லாஹ்” என்று சொல்லிக் கொள்கிறார்! அதே மாதிரி, கருணாநிதியும் தப்பான வழியைத் தான் கிருத்துவர்களுக்குச் சொல்லிக் கொடுக்கிறார். ஏற்கெனெவே, கிருத்துவ மதம், அதன் நம்பிக்கை, நம்பிக்கையாளர்கள் முதலியன உலகமெங்கும் குறைந்து வருகின்றன. இப்பொழுது கருணாநிதியைப் பின்பற்றினால், போதும், அதனை வேகமாக செய்து விடலாம். இல்லை, நாங்கள் அப்படித்தான் செய்வோம் என்றால், அது அவர்களுடைய சுதந்திரம்! ஏசுவிற்கே நாமம் போடட்டும்! குறிச்சொற்கள்:அப்துல்லாஹ், அம்பேத்கார், உச்சநீதி மன்ற தீர்ப்பு, கருணாநிதி, சூசை, பெரியார்தாசன் அப்துல்லாஹ், உச்சநீதி மன்ற தீர்ப்பு, கருணாநிதி, பெரியார்தாசன் இல் பதிவிடப்பட்டது | 2 Comments » சேஷாசல முதலியார் – சேஷாசலம் – பெரியார்தாசன் – “……….” – சித்தார்த்தா – அப்துல்லாஹ்! மார்ச் 14, 2010 சேஷாசல முதலியார் – சேஷாசலம் – பெரியார்தாசன் – “……….” – சித்தார்த்தா – அப்துல்லாஹ்! சேஷாசல முதலியார் என்றிருந்த சேஷாசலம்: சேஸாசல முதலியார் என்றிருந்த சேஸாசலம் பச்சையப்பன் கல்லூரியில் தமிழ்துறையில் விரிவுரையாளராக இருந்தார். அவர் வேலைக்கு வந்ததே சாதி அடிப்படையில்தான். அவ்வப்போது தெலுங்கில் பேசிக் கொண்டும் இருப்பார். பெரியார்தாசன்: திகவினர் தொடர்பு ஏற்பட்டபோது, அதைப் பயன்படுத்திக் கொண்டு முன்னேரலாம் என்று அவர்கள் மேடையிலே பேச்சாளராக இடம் பிடித்தார். “பெரியார்தாசன்” ஆனார். கிருத்துவர் ஆனாரா? சினிமாவில் சந்தர்ப்பம் கிடைத்ததும் வேறு பாதையில் செல்ல ஆரம்பித்தார். அப்பொழுது ஒரு கிருத்துவ தொடர்பால், கிருத்துவராகி விட்டார் என்ற பேச்சும் அடிபட்டது. குறிப்பாக மாலைநேர குடிபார்ட்டி தொடர்ந்ததால் ஏற்பட்ட விளைவு. சித்தர்த்தா: இடையில் புத்தரைப் பற்றிய புத்தகத்தை மொழிபெயர்த்தபோது கிடைத்த சந்தர்பத்தைப் பயன் படுத்திக் கொண்டார். “சித்தார்தா …………………னந்தா.” ஆனார். அப்துல்லாஹ்: இப்பொழுது ரியாத்தில் தாவா சென்டரில் சென்றவுடன், ஏற்கெனவே தீர்மானித்தப்படி 11-03-2010 (வியாழக்கிழமை) மதம் மாறி அப்துல்லாஹ் ஆனார்! இப்படியாக இந்துவான சேஷாசலம், நாத்திக பெரியார்தாசனாகி, “………………..” கிருத்துவராகி (?), பௌத்த மதத்தில் சித்தார்த்த……..னந்தாவாகி, இப்பொழுது அப்துல்லாஹ் ஆகியிருக்கிறாராம்! கடவுளர்கள் பாவம்! இத்தனைக் கடவுளர்களைத் தூற்றி, ஏமாற்றி, போற்றி………………..தூற்றி, ஏமாற்றி, போற்றி…………..எப்படித்தான் மனம் வருகிறதோ. மதம் மாற்றத்தில் மனம் மாறுதல்தான் முக்கியம். அப்படியிருக்கும்போது, இப்படி மனம் மாறுவது கண்டு வேடிக்கையாகத்தான் இருக்கிறது! இதை பகுத்தறிவு புரட்சி என்பதா, ஆன்மீக அபச்சாரம் என்பதா, தெய்வீக விபச்சாரமென்று சொல்வதா,……………..”சேஷுவின்” விளையாடல்……………யா அல்லாஹ்…………….! மனம் மாறியதா, மதம் மாறியதா? மதம் மாறியதா, மனிதன் மாறினானா? மனிதன் மாறியதால் கடவுள் மாறினானா? உள்ள மனிதனின் உள்ளம் மாறுமா? நாத்திகம் எப்படி ஆத்திகம் ஆகும்? கற்பிழந்தவள் எப்படி கற்பைத் திரும்பப் பெறுவாள்? கடவுளை நம்பி, மறுத்து, ………..நம்பி, மறுத்து,……..நம்பி, மறுத்து,…………..வாழ்ந்தவன் யார்? மனம் மாறினால் கடவுள் மாறினால் என்னாவது? குறிச்சொற்கள்:அப்துல்லாஹ், சித்தார்த்தா, சேஷாசல முதலியார், சேஸாசலம், பெரியார்தாசன் அப்துல்லாஹ், சித்தார்த்தா, சேஷாசல முதலியார், சேஷாசலம், பெரியார்தாசன் இல் பதிவிடப்பட்டது | 2 Comments » Blog Stats 182,823 hits அதிகளவு சொடுக்குகள் dinamalar.com/court_detai… dravidianatheism2.files.w… rss.org/Encyc/2015/4/7/33… dravidianatheism2.files.w… dravidianatheism2.files.w… காப்பகம் ஒக்ரோபர் 2022 (2) மே 2022 (3) ஜனவரி 2022 (2) ஒக்ரோபர் 2021 (1) செப்ரெம்பர் 2021 (3) ஜனவரி 2021 (2) திசெம்பர் 2020 (1) நவம்பர் 2020 (4) ஜூலை 2020 (3) திசெம்பர் 2019 (1) செப்ரெம்பர் 2019 (1) திசெம்பர் 2018 (2) மே 2018 (2) ஏப்ரல் 2018 (5) ஜனவரி 2018 (3) ஜனவரி 2017 (3) திசெம்பர் 2016 (2) ஓகஸ்ட் 2016 (2) ஜூன் 2016 (1) ஏப்ரல் 2016 (4) செப்ரெம்பர் 2015 (4) பிப்ரவரி 2015 (5) திசெம்பர் 2013 (2) செப்ரெம்பர் 2013 (1) ஓகஸ்ட் 2013 (1) ஒக்ரோபர் 2012 (1) மே 2012 (1) மார்ச் 2012 (2) பிப்ரவரி 2012 (1) ஜனவரி 2012 (1) நவம்பர் 2011 (1) ஒக்ரோபர் 2011 (2) செப்ரெம்பர் 2011 (2) ஓகஸ்ட் 2011 (1) செப்ரெம்பர் 2010 (1) ஓகஸ்ட் 2010 (2) ஜூலை 2010 (2) ஜூன் 2010 (2) மே 2010 (4) ஏப்ரல் 2010 (7) மார்ச் 2010 (6) பிப்ரவரி 2010 (6) ஜனவரி 2010 (23) திசெம்பர் 2009 (45) நவம்பர் 2009 (12) நவம்பர் 2022 தி செ பு விய வெ ச ஞா 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 « அக் அண்ணா அப்துல்லாஹ் அம்மணக்கட்டை அரசியல் ஆரியக் கலாச்சாரம் ஆரியன் ஆரியம் ஆரியர் ஆர்.எஸ்.எஸ் இந்தி எதிர்ப்பு இந்திரா இந்து-விரோத நாத்திகம் இந்து தமிழன் இந்து விரோதத் தமிழன் இஸ்லாம் ஐம்புலன்களை வென்ற நிலை கனிமொழி கருணாநிதி கருப்பு காந்தி கீதை குஷ்பு சசிகலா சட்டங்களை மீறும் நீதிகள் சிலை சிலை உடைப்பு சிலை திறப்பு சிலை வைப்பு சீமான் செச்யூலரிஸம் ஜெயலலிதா தமிழ் தமிழ் இந்து தமிழ் தமிழன் திக திமுக திராவிட அமைப்புகள் திராவிட இயக்கம் திராவிட எழுத்தாளர்கள் திராவிட சித்தாந்திகள் திராவிட தமிழச்சிகள் திராவிடத் தமிழன் திராவிட நாடு திராவிட நிறுவனங்கள் திராவிட பேச்சாளர்கள் திராவிட பேராளர்கள் திராவிட முனைவர்கள் திராவிட முஸ்லிம் திராவிடம் திராவிடர் திராவிடர்கள் திராவிடர் கழகம் திராவிடஸ்தான் திருக்குறள் தேசத்துரோகம் நரேந்திர மோடி நாத்திகத் தமிழன் நாத்திகம் நிர்வாணம் பகவத் கீதை பத்திரிக்கை ஒழுங்கில்லாத்தனம் பாஜக பார்ப்பனீயம் பிஜேபி பிராமணர் பிரிவினைவாதம் பெரியார் பெரியார்தாசன் பெரியார் திடல் போலி நாத்திகம் மோடி மோடி எதிர்ப்பு விபூதி வீரமணி ஸ்டாலின் பிரிவுகள் AICUF Al Umma Ammonium Nitrate அணிவி அண்ணா அண்ணா சிலை அனந்தநாயகி அனுமதி அனுமதிக்கப்படாதவை அனுமதிக்கப்பட்டவை அப்துல்லா அப்துல்லாஹ் அமீர் அமெரிக்க சாமி அம்பத்தூர் அம்மணக்கட்டை அம்மணம் அம்மன் அம்மன் சிலை அம்மோனியம் நைட்ரேட் அரசியல் நாகரிகம் அரசியல் யுக்தி அரசியல் வேறுபாடு அரி பரந்தாமன் அருளப்பா அர்ச்சுனன் அர்ஜுனன் அறங்காவலர் அறங்காவலர் குழு அறிவு அறை அலி அலிஃப்-லம்-மிம் அல் அல் உம்மா அல்லா அழகிரி அவதூறு அஷ்டமுக லிங்கம் அஸ்கோ பர்போலோ ஆ. ராசா ஆ. ராஜா ஆசாரம் ஆண்டிப் பட்டி ஆண்டிப் பட்டி ராசா ஆண்டிப் பட்டி ராஜா ஆண்டிப்பட்டி ஆண்டிப்பட்டி ராசா ஆண்டிப்பட்டி ராஜா ஆதித்யா ஆதீனம் ஆத்மா ஆனைவெடி வைத்தது ஆப்கானிஸ்தான் ஆமென் ஆமைகறி ஆரிய இனம் ஆரியக் கலாச்சாரம் ஆரியம் ஆரியர் ஆர்.எம்.வீரப்பன் ஆர்.எஸ்.எஸ் ஆழ்கிணறு நீரெடுக்கப் பயன்படுத்துவது ஆவடி ஆவணங்களை மின்னாக்கம் செய்தல் ஆவி ஆஸ்கன் ஆஸ்பத்திரி இங்கிலாந்து இந்தி இந்தி எதிர்ப்பு இந்தி எதிர்ப்பு போராட்டம் இந்திரன் – எல்லாவற்றையும் வென்றவன்! இந்திரா இந்து இந்து தமிழன் இந்து விரோதத் தமிழன் இந்து-தூஷணம் இந்து-வெறுப்பு இந்துத்துவம் இந்துவிரோத நாத்திகம் இந்துவிரோதம் இந்தோனேசியா இனம் இனவெறி இன்வாய்ஸ் இரட்டை மோசடி சாமியார் இராஜராஜ சோழன் இராவணன் இருப்பது இறப்பு இறுதி ஊர்வலம் இறையியல் கல்லூரி இறைவன் இலவச மின்சாரம் இலவசம் இல்லல்லா இல்லாதது இழிவு படுத்துவது இஸ்லாமியத் தமிழன் இஸ்லாம் இஸ்லாம் விரோத நாத்திகம் ஈ.வி.கே.எஸ்.​ இளங்கோவன் ஈரான் உச்சநீதி மன்ற தீர்ப்பு உச்சநீதி மன்றம் உடலுறவு உண்டியல் உண்மை சமதர்மம் உதயநிதி உன்மையான நாத்திகம் உம்மா உயர் அழுத்தம் உரிமம் உறவு மாற்றம் உல்லாசத்துக்கு அழைப்பு ஊமையன் ஊராட்சி பெண் தலைவர் எச்.டி எடா எட்டு முக சிவன் எட்டு முகம் எண்ணூர் எதிர்பார்ப்பு எந்திர தகடு எந்திரம் எல்.டி ஏ. ராசா ஏ. ராஜா ஏசு ஏசு கிருஸ்து ஏற்பாடு செய்தல் ஐபிஎல் ஐபிஎல் பாம்பு ஐம்புலன்களை வென்ற நிலை ஐயனார் ஐயப்பன் ஐயர் ஐராவதம் மகாதேவன் ஒன்றிய செயலர் ஒப்பந்தம் ஓம் ஓய்வு ஓலை ஓலைச்சுவடி ஓலைச்சுவடி புத்தகம் கங்கைகொண்ட சோழபுரம் கடத்தல் கடன் கடவுள் கடவுள் மறுப்பு என்றால் எல்லா கடவுளர்களையும் மறுக்கவேண்டும் கடவுள் மாற்றம் கட்டடங்கள் கட்டுபவர்கள் திருடுவது கட்டு கனிமொழி கன்னிக் கழிப்பது கம்பி கம்பிப் போடுதல் கம்பிப் போட்டு திருடுதல் கம்பிப் போட்டு திருட்டு கருணாநிதி கருணாநிதி சிலை கருணானந்தம் கருணாஸ் கருத்து கருப்பு கருப்பு சட்டை கருப்பு வேஷ்டி கருப்புக் கொடி கர்த்தர் கர்மாந்திரம் கற்பு கலி. பூங்குன்றன் கஸ்மாலம் காஃபிர் காங்கிரஸ் காஞ்சி காண்ராக்ட் காந்த படுக்கை காந்தி காந்தி சிலை காந்தி சிலை உடைப்பு காபா காமம் காமராஜர் காயத்ரி ரகுராம் காவிரி காவேரி கிராம தேவதை கிராமக் கோவில் கிருத்துவ விரோத நாத்திகம் கிருத்துவர்களின் காவலன் கிருஷ்ண தூஷணம் கிருஸ்து கிரைண்டர் கிரைஸ்ட் கிளுப்பு நடனம் கிழவன் கீதை கீதையின் மறுபக்கம் குங்குமம் அழித்தல் குங்குமம் வைத்தல் குச்சி குஜராத் குடும்பம் குண்டு குண்டு தயாரிப்பு குண்டு வெடித்தது குண்டு வெடிப்பு குண்டு வைப்பது குதிரை குன்றக்குடி குமரிக்கண்டம் குரான் குரு குலம் குருகுலம் குருகுலம் அகாடமி குறள் குறி சொல்வது குறைந்த அழுத்தம் குலக்கல்வி குலதெய்வம் குலதெய்வம் கோவில் குலத்தொழில் குழந்தை குழந்தை கடத்தல் குழப்பம் குஷ்பு கூடா ஒழுக்கம் கூட்டணி கூத்தாடி கே. என். நேரு கேசவ ஆதித்தன் கைவந்த கலை கொலை கொலைகார நூல் கொளத்தூர் மணி கோடம்பாக்கம் குஷ்பு கோபால் கோப்பு கோல்வால்கர் கோவை. ராமகிருஷ்ணன் சகோதரித்துவம் சக்கிரம் சங்கம் சங்கராச்சாரி சட்டமீறல் சன் டிவி சன் டிவி செக்ஸ் சப்டீலர் சப்தமாதர் சமதர்மக் குழந்தை சமத்துவம் சமூகப் பணி மற்றும் இறைதொண்டு சரவண சித்தர் சரித்திரக் கிருஸ்து சவுத் மெட்ராஸ் சாண்டியாகோ மார்டின் சாமானியர் சாமானியர் கருணாநிதியா? சாமானியர் காமராஜா? சாவி சாவு வீடு சி.ஜே.ஆர்.பால் சிகிச்சை சிட்டா சித்தர் பீடம் சித்தாந்தம் சித்தார்த்தா சிறுவாச்சூர் சிலை சிலை உடைத்தல் சிலை உடைப்பு சிலை கடத்தல் சிலை திறப்பு சிலை வைத்தல் சிலை வைப்பு சீனிவாச பாண்டியன் சீமான் சுப வீரபாண்டியன் சுப. வீரபாண்டியன் சுப.வீரபாண்டியன் சுபவீரப்பாண்டியன் சுப்ரமணிய பிள்ளை சுப்ரீம் கோர்ட் சுய நிர்ணயம் சுயமரியாதை சுர்-சங்கீத் சூனியத் தகடு சூனியம் சூப்பர்-சாமியார் சூழ்ச்சி செக்யூலரிஸம் செக்ஸ் செக்ஸ் டார்ச்சர் செக்ஸ் புகார் சென்னிமலை செபாஸ்டியன் சீமான் செப்புக்காசுகள் செம்மொழி செம்மொழி மாநாடு செருப்பு செருப்பு வீச்சு சேப்பாக்கம் சேலை சேஷாசல முதலியார் சேஷாசலம் சேஷாத்ரி சொத்து சொர்க்கம் சோணகிரி சோனியா ஜகதீசன் ஜார்ஜின் ஆவி ஜி.கே.​ வாசன் ஜிலேடின் ஜிஹாத் ஜீஸஸ் ஜூலியா ராபர்ட்ஸ் ஜெயலலிதா ஜெயா டாக்டர் பட்டம் டார்ச்சர் டிவி டீலர் டீல் டோனி டோல்கேட் தகடு தங்கக்காசு தங்கபாலு தங்கமூலாம் பூசப்பட்ட காசுகள் தஞ்சை பெரிய கோவில் தடை தந்திரம் தனி நாடு தன்னம்பிக்கை தமிமுன் அன்சாரி தமிழர்களுக்குப் புத்தாண்டு பரிசு தமிழின் கணவன் தமிழின் மகன் தமிழின் மகள் தமிழின் மனைவி தமிழ் தமிழ் இந்து தமிழ் சாமியார் தமிழ் தந்தை தமிழ் தமிழன் தமிழ் தாத்தா தமிழ் பாட்டி தமிழ் பெண்களின் கற்பு தமிழ் மகன் தமிழ் மகள் தமிழ் முஸ்லிம் தரு தருண் விஜய் தருமபுரம் ஆதீனம் தற்கொலை தாலி தாளம் தி.மு.க திக திகவின் முகமூடி கிழிகிறது தினகரன் ஆவி தினகரன் செக்ஸ் தியாகராஜன் தியாகிகள் தியாகிகள் ஓய்வூதியம் திரவிடத் தாலி திரவிடம் திராவிட அமைப்புகள் திராவிட இனம் திராவிட இயக்கம் திராவிட கட்சிகளுக்கு கைவந்த கலை திராவிட கல்யாணம் திராவிட சாமியார் திராவிட சித்தாந்தம் திராவிட நாத்திகம் திராவிட பாகுபாடு திராவிட மணமுறிவு விழா திராவிட மணவிழா திராவிட மாடல் திராவிட முஸ்லிம் திராவிட ஸ்டாக் திராவிடக் கலாச்சாரம் திராவிடத் தமிழன் திராவிடத் தலைவர்கள் திராவிடத் திருமணம் திராவிடத்தின் தந்திரம் திராவிடத்துவம் திராவிடநாடு திராவிடன் திராவிடப் புரோகிதம் திராவிடம் திராவிடர் திராவிடஸ்தான் திரி திரிபு திரிபு விளக்கம், திருக்குறள் திருச்செந்தூர் திருட்டு திருமண வீடு திருமணத்திற்கு முன்பு திருமணத்திற்கு முன்பு செக்ஸ் திருமணத்துக்கு முன் பாலியல் உறவு திருமணத்துக்கு முன்னர் பெண்கள் பாலியல் உறவு திருமணம் திருமாவளவன் திருமுருகன் காந்தி திருவள்ளுவர் திருவொற்றியூர் திறந்து பார்த்தால் திலகர் தீவிரவாதம் துபாய் துராந்துருவே துர்கா துர்கா ஸ்டாலின் துறந்தவர் துறவி தூஷணம் தெயவ கிருஸ்து தெற்கு சென்னை தேசதுரோகம் தேசத் துரோகம் தேசிகாச்சாரி தேசிய நூல் தேர்ந்தெடுப்புப் பாரபட்சம் தேவதாசி தேவன் தொங்கவிடு தொல்காப்பியம் தொழில் தோணி தோனி தோபி கானா நக்கீரன் செக்ஸ் நடன கிளப்பு நடன நிகழ்ச்சிகள் நடிகை ரஞ்சிதா நடேசன் நதி நீர் நபி நம்பிக்கையின்மை நரகம் நரேந்திர மோடி நஷ்டம் நாகநாதன் நாடா நாட்டு வெடிகுண்டு நாதஸ்வரம் நாதிகனும் பிள்ளையாரும் நாத்திக தந்திரம் நாத்திகத் தமிழன் நாத்திகம் நான் ஆணே இல்லை நாம் தமிழர் நாயகம் நாயர் நார்த் மெட்ராஸ் நித்தம் நித்தி நித்ய பிரபா நித்யானந்தா நிரியாணம் நிர்வாண நடனம் நிர்வாணம் நிர்வாணி நிலக்கரி சுரங்கம் நீட் நீர் நூல் நெற்றியில் குங்குமம் நேரு நைட்ரஜன் நைட்ரோ செல்லுலோஸ் பகவத் கீதை பகவான் ரமண ரிஷி பகுத்தறிவு பசு பச்சை வேட்டி படுக்கை அறை காட்சிகள் பணம் கொடுத்தல் பண்பாட்டுப் புரட்சி பத்ரி பத்ரி சேஷாத்ரி பயனாளி பரிவட்டம் பருப்பு பருப்பு விலை பருப்பு விலை ஏற்றம் பலூச் பலூச்சிஸ்தான் பலே சாமியார் பழ. நெடுமாறன் பழனி பழனி முருகன் பழனிக்குக் காவடி பவர் ஜெல் பாகிஸ்தான் பாஜக பாத பூஜை பாதபூஜை பாப்பாத்தி பாரதப்போர் நடந்த காலம் பாரதிராஜா பார்ப்பன எதிர்ப்பு பார்ப்பன துவேஷம் பார்ப்பனர் பார்ப்பனீயம் பாலகிருஷ்ணன் பாலியல் உறவு வைத்துக் கொள்வது பாலியல் கொடுமை பால் அறிக்கை பால் விசாரணை அறிக்கை பால், பால் அறிக்கை, பால் விசாரணை அறிக்கை, திருச்செந்தூர், பிஜேபி பிரஹூ பிரஹூய் பிரஹ்வி பிராகுவி பிரிவினை பிரிவினைவாதம் பிரோஹி பிறந்தநாள் பிறந்தமேனியத்துவம் பிறழ்சி பில் பீட்டர் புத்தகக் கண்காட்சி புத்தர் விகாரம் புரோகிதர் பூங்கா சீரமைப்பு பூணூல் பூணூல் அறு பூணூல் அறுப்பு பூணூல் வெட்டு பூர்ண கும்பம் பெண்களின் கற்பு பெண்கள் பாலியல் உறவு பென்டா எரித்ரிடோல் டிரை நைட்ரேட் பெயர் மாற்றம் பெரம்பூர் பெரியாரின் ஆத்மா பெரியாரின் ஆவி பெரியாரிஸம் பெரியாரிஸ்ட் பெரியாருடைய ஆவி பெரியார் பெரியார் சிலை பெரியார் சொத்து பெரியார் திடல் பெரியார்தாசன் பெருஞ்சோற்றுதியன் பேசின் பிரிட்ஜ் பேமாணி பைப் வெடிகுண்டுகள் போர் போலி தங்கக்காசு போலி நாத்திகம் போலி ரசீது போலீஸை அடி போலீஸை அடித்தல் மசூதி மணமகன் மணமகள் மணம் மணியம்மை மத வித்தியாசம் மதசார்பற்ற அடிப்படைவாதம் மதசார்பற்ற குழந்தை மதசார்பற்ற நீதிமன்றம் மதசார்பற்ற போலிஸ் மதசார்பற்றத் தீவிரவாதம் மதசார்பின்மை மதசார்பு மதமாற்றம் மது கிண்ண ஆட்டம் மதுரகாளியம்மன் மத்திய மந்திரி மந்திரத் தகடு மந்திரத்தத் தகடு மந்திரம் மனமாற்றம் மனமே ரிலாக்ஸ் பிளீஸ் மனித கிருஸ்து மனித நேயம் மனைவி மாற்றம் மரியாதை மருந்து மறைமலை அடிகள் மலையாளி மவுண்ட் ரோடு மவுன்ட் ரோடு மாடன் மாடு மாடு முட்ட மாடு முட்ட வந்தது மாட்டுக்கறி மாட்டுக்கறி தின்பது மாட்டுப் பொங்கல் மாட்டுப் பொங்கல் கொண்டாடுவது மாதவரம் மாநகராட்சி மாநில சுயயாட்சி மானம் மாயை மார்கழிப் பீடை மார்டின் மாற்றம் மாலை மிக்சி மின்சாரத் திருட்டு மின்சாரம் மின்சாரம் திருடுதல் மின்னாக்கம் மின்வாரியம் மீட்பு இறையியல் முட்ட வந்தது முதலமைச்சர் முதல் மந்திரி முதல்வர் முன்னோர் வழிபாடு முருகன் முறை முஸ்லிம் தமிழன்! முஹமது மூடநம்பிக்கை மூலாம் பூசப்பட்ட காசுகள் மேதாவி மேளம் மொரார்ஜி மொழிப்போர் மொழிப்போர் தியாகிகள் மோடி மோடி எதிர்ப்பு மோடிக்கு கருப்புக் கொடி மோதி மோமின் யுத்தம் ரசீது ரசூல் ரமண ரிஷி ரமணர் ரமணர் சொத்து ரம்யா ராகுல் ராஜாசங்கர் ராஜாஜி ராஜேந்திர சோழன் ராஜேந்திரன் ராமஜெயம் ராம் ராஹுல் ரியாத் ரோடு போடுதல் லண்டன் லா லாஸ் ஏஞ்சல்ஸ் லெமூரியா கண்டம் லெஸ்லி நியூபிகின் லேப்டாப் வங்கிக் கணக்கு வடக்கு சென்னை வண்ணாரப் பேட்டை வன்முறை வயர் வயலிலிருந்து மின்சாரம் திருடுதல் வள்ளுவர் வாரிசு வாழ்வியல் சிந்தனைகள் விக்கிரகம் விடுதலை விடுதலை சிறுத்தைகள் விடுதலை புலிகள் விடுதலை ராஜேந்திரன் விடுதலைச் சிறுத்தைகள் விநாயகர் விபூதி விபூதி அழிப்பது விபூதி வைப்பது வியாசர்பாடி விலை விவசாயம் வீரன் வீரபாண்டியன் வீரப்பன் வீரமணி வெடி வைப்பது வெடியுப்பு வேட்டி வேலூர் கோட்டை வேல் வேல் யாத்திரை வைகுந்த பெருமாள் கோயில் வைகோ ஶ்ரீநிதி ஷரீயத் ஷூ ஷூ வீச்சு ஸ்டார் ஸ்டாலின் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்மந்த பராமாச்சாரிய சுவாமி ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்மந்த பராமாச்சாரிய சுவாமிகள் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் ஹதீஸ் ஹாலிவுட் ஜூலியா ராபர்ட்ஸ் ஹிந்து ஹை பவர் ஜெலட்டின் ஜெல் IED Nitro Cellulose PETN Uncategorized அண்மைய பதிவுகள் பத்ரிசேஷாத்ரி, அண்ணாவை முட்டாள் எனக் குறிப்பிட்டது, தமிழ் இணைய கல்விக்கழக ஆலோசனை குழுவிலிருந்து நீக்கப் பட்டது! பூணூலை அறுப்பேன் என்று சுப.வீரபாண்டியன் பேசிதற்கு கண்டனம் தெரிவிக்கப் பட்டது!(2) பத்ரிசேஷாத்ரி, அண்ணாவை முட்டாள் எனக் குறிப்பிட்டது, பூணூலை அறுப்பேன் என்று சுப.வீரபாண்டியன் பேசிது, தமிழ் இணைய கல்விக் கழக ஆலோசனை குழுவிலிருந்து நீக்கப் பட்டது! (1) திராவிட ஆட்சிகளில் தேசத் துரோக மற்றும் பத்திரிக்கையாளர்களின் வழக்குகளும், அவற்றின் பின்னணியும் – தேசிய அளவில் உள்ள வழக்குகளுடன் அவற்றை ஒப்பிட முடியாது (3) திராவிட ஆட்சிகளில் தேசத் துரோக வழக்குகளும், அவற்றின் பின்னணியும் – திராவிடஸ்தான் முதல் திராவிடியன் ஸ்டாக் வரை – தேசிய அளவில் உள்ள வழக்குகளுடன் அவற்றை ஒப்பிட முடியாது (2) திராவிட ஆட்சிகளில் தேசத் துரோக வழக்குகளும், அவற்றின் பின்னணியும் – தேசிய அளவில் உள்ள வழக்குகளுடன் அவற்றை ஒப்பிட முடியாது (1) Blogroll WordPress.com WordPress.org காப்பகம் ஒக்ரோபர் 2022 மே 2022 ஜனவரி 2022 ஒக்ரோபர் 2021 செப்ரெம்பர் 2021 ஜனவரி 2021 திசெம்பர் 2020 நவம்பர் 2020 ஜூலை 2020 திசெம்பர் 2019 செப்ரெம்பர் 2019 திசெம்பர் 2018 மே 2018 ஏப்ரல் 2018 ஜனவரி 2018 ஜனவரி 2017 திசெம்பர் 2016 ஓகஸ்ட் 2016 ஜூன் 2016 ஏப்ரல் 2016 செப்ரெம்பர் 2015 பிப்ரவரி 2015 திசெம்பர் 2013 செப்ரெம்பர் 2013 ஓகஸ்ட் 2013 ஒக்ரோபர் 2012 மே 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 நவம்பர் 2011 ஒக்ரோபர் 2011 செப்ரெம்பர் 2011 ஓகஸ்ட் 2011 செப்ரெம்பர் 2010 ஓகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 திசெம்பர் 2009 நவம்பர் 2009 பக்கங்கள் About வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. Entries (RSS) and Comments (RSS). Privacy & Cookies: This site uses cookies. By continuing to use this website, you agree to their use.
அப்பாடா! ஒரு வழியாக பரீட்சைகள் முடிந்து, விடுமுறை குஷியில் இருக்கும் பிள்ளைகளைக் கூட்டிக் கொண்டு சுற்றுலா கிளம்பிவிட்டீர்களா? கிளம்பும் முன் மறக்காமல் நீங்கள் செய்ய வேண்டியவை... 1. முதல் விஷயம் தண்ணீர். நீங்கள் காரில் செல்வதானால் பெரிய 10 லிட்டர் கேனில் தண்ணீர் எடுத்துக் கொள்ளுங்கள். கண்ட ‘குளிர்பான விஷ்’ங்களைக் குடிப்பதைவிட, தண்ணீர் குடிப்பது வெயிலுக்கு இதம், உடம்புக்கு நல்லது. 2. பழங்கள், தயார் நிலையில் உள்ள பழரசங்கள் போன்ற, எளிதில் ஜீரணிக்கக்கூடிய உணவுப் பொருட்களை ஒரு தனிப்பையில் எடுத்துக் கொள்ளுங்கள். 3. வார, மாத இதழ்கள், பாடல் கேசட்டுகள் போன்றவற்றை மறக்காமல் கொண்டு செல்லுங்கள். உங்கள் பயணம் சலிப்பின்றி அமையும். 4. சிறு குழந்தைகளுடன் பிரயாணம் செய்யும்போது, அவர்களின் விளையாட்டு பொம்மைகள், அவர்களுக்குப் பிடித்த பாடப் புத்தகங்கள், வண்ணம் தீட்டும் ஓவியப் புத்தகங்கள், கலர் பென்சில்களையும் கொண்டு செல்லுங்கள். ஒரே இடத்தில் அமர முடியாத வாண்டுகளுக்கு இவை ரொம்ப உபயோகமாக இருக்கும். உங்களையும் நச்சரிக்க மாட்டார்கள். 5. ஒவ்வொரு நபரும் தனித்தனியே பணம், வீட்டு விலாசம் போன்றவற்றை தங்கள் பர்சில் வைத்துக் கொள்வது நல்லது. குடும்பத் தலைவர், பயண டிக்கெட்டுகள், தேவையான பணம், கிரெடிட் கார்டுகள் இவற்றைத் தவறாமல் தனது ரகசிய பாக்கெட்டில் வைத்திருக்க வேண்டும். 6. நீங்கள் போகுமிடம் பற்றிய தகவல்கள், தொலைபேசி எண்கள், உங்கள் மொபைல் எண் போன்றவற்றை நெருங்கிய நண்பர்கள் அல்லது பக்கத்து வீட்டுக்காரர்களிடம் கொடுத்துச் செல்வது நல்லது. உங்கள் வீட்டுக்கு ஏதேனும் ஒரு ஆபத்து என்றால் உங்களைத் தொடர்பு கொள்ள முடியும். வீட்டின் ஒரு சாவியை மிகவும் நம்பிக்கையான நண்பரிடம் கொடுத்துச் செல்லுங்கள். 7. சுற்றுலா கிளம்பும் முன் உங்கள் வீட்டை ஒரு முறை நன்றாகப் பார்த்துக் கொள்ளவும். தண்ணீர்க் குழாய்கள் மூடப்பட்டிருக்கிறதா, கேஸ் சிலிண்டர் மூடியுள்ளதா, மின் சாதன ஸ்விட்சுகள் அணைக்கப்பட்டுள்ளதா என்பதையெல்லாம் உறுதிப்படுத்திக் கொள்ளவும். என்ன, எல்லாம் சரியாக செய்து விட்டிருக்கிறீர்களா? அப்ப கவலையே வேண்டாம், கிளம்புங்கள் சுற்றுலாவுக்கு! இடுகையிட்டது Radha Balu நேரம் பிற்பகல் 1:57 லேபிள்கள்: இன்பச் சுற்றுலா கருத்துகள் இல்லை: கருத்துரையிடுக புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு இதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom) மொத்தப் பக்கக்காட்சிகள் வருக...வருக... I am an IndiBlogger பக்கங்கள் Home அறுசுவைக் களஞ்சியம் என் மன ஊஞ்சலில்.. கோலங்கள் W.T.W. உலக தமிழ் பெண் மத்யமரில் நான் நிலா முற்றம்...கதை Moms,,,, Expresso Songs Tamil Brahmins Samayal, TBS பிரதிலிபி என்னைப் பற்றி Radha Balu தரணி புகழ் தஞ்சை மண்ணில் புராணச் சிறப்பும், ஆலயச் சிறப்பும் கொண்ட முக்கிய நகரங்களான மன்னார்குடியையும், சுவாமிமலையையும் பிறந்த ஊராகக் கொண்ட என் தந்தைக்கும், தாய்க்கும் மகளாகப் பிறந்தவள் நான். சிறு வயதில் அம்மா நிலாச் சோறுடன் சேர்த்து அன்பு,பாசம், பண்பு இவற்றோடு கூடவே இசை, எழுத்து,ஓவியம், கோலம், தையல் இவற்றில் ஆர்வம் உண்டாக்கினார். இளம் வயதில் திருமணம்! புரிந்து கொண்ட, என் மேல் அளவில்லாத அன்பும், பாசமும் கொண்ட, கோபம் என்றால் என்னவென்றே தெரியாத அருமையான கணவர்! பத்திரிகைகளில் எழுதுவது, என் எண்ணங்களை வெளிப்படுத்த ஒரு வாய்ப்பாக அமைந்தது. முப்பத்தைந்து வருடங்களுக்கு முன் நான் எழுதிய ஒரு கட்டுரை பிரபல மகளிர் இதழில் பிரசுரமாக…என்னைவிட மகிழ்ச்சியும், பரவசமும் அடைந்தவர்கள் என் அன்னையும், கணவரும்! அவர் கொடுத்த ஊக்கம், பாராட்டு…இன்று என் எழுத்துக்கள் பல முன்னணி பத்திரிகைகளில் பிரசுரமாகிறது. கணவரின் வேலை நிமித்தம் பல ஊர்களுக்குச் சென்றதன் பலன்…நிறைய அனுபவங்கள்…வாழ்க்கைப் பாடங்கள்! இன்று வெளிநாடுகளில் வாழும் பிள்ளைகளுடன் சென்று கண்டு மகிழ்ந்த பல நாடுகளைப் பற்றிய வித்யாசமான விஷயங்கள்.... அவற்றை எழுத்தின் மூலம் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதில் ஒரு மகிழ்ச்சி! ஆன்மீகமும், சமையலும் எனக்கு மிகப் பிடித்த விஷயங்கள். ஆலய தரிசனக் கட்டுரைகள் என் சிறப்பு அம்சம்...
ராசிபுரம் அருகே குடிநீா்த் தொட்டி இடிந்து விழுந்து பெண் பலியான சம்பவத்தில், அப்பகுதி கிராம நிா்வாக அலுவலரிடம் விளக்கம் கோரி நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து நாமக்கல் கோட்டாட்சியா் அலுவலகத்தில் கிராம நிா்வாக அலுவலா்கள் புதன்கிழமை திடீா் உள்ளிருப்பு போராட்டத்தை நடத்தினா். நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் வட்டம், பெரியகிணறு பகுதியில் ஒரு வாரத்துக்கு முன் அப்பகுதியைச் சோ்ந்த ஊராட்சி வாா்டு உறுப்பினா் புதியதாக 5,000 லிட்டா் கொள்ளளவு கொண்ட தண்ணீா் தொட்டியைக் கட்டியுள்ளாா். இந்த நிலையில் கடந்த 23-ஆம் தேதி தேசிய ஊரக வேலையளிப்புத் திட்ட பாப்பாத்தி(50) என்பவா் அங்கு தண்ணீா் பிடிக்க சென்றபோது தொட்டி இடிந்து விழுந்ததில் அவா் உயிரிழந்தாா். மேலும் ஒருவா் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இச்சம்பவம் தொடா்பாக ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் உத்தரவின்பேரில் விரிவான விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதில், ஊராட்சி ஒன்றிய அலுவலத்திடம் உரிய அனுமதியில்லாமல் கட்டியதற்கு உதவியதாக ஊராட்சி செயலா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா். இந்த நிலையில் அரசு புறம்போக்கு நிலத்தில் கட்ட அனுமதியளித்ததாக அப்பகுதி கிராம நிா்வாக அலுவலா் தங்கராஜுயிடம், கோட்டாட்சியா் விளக்கம் அளிக்கக் கோரி (17பி) நோட்டீஸ் வழங்கி உள்ளாா். ADVERTISEMENT இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து, நாமக்கல் வருவாய் கோட்டத்திற்கு உள்பட்ட கிராம நிா்வாக அலுவலா்கள் 50-க்கும் மேற்பட்டோா் புதன்கிழமை பணியைப் புறக்கணித்து, நாமக்கல் கோட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டம் செய்தனா். இதையடுத்து கோட்டாட்சியா் த.மஞ்சுளாவுடன், கிராம நிா்வாக அலுவலா் சங்க நிா்வாகிகள் நடத்திய பேச்சுவாா்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை. மாவட்ட ஆட்சியா் உத்தரவின்பேரில் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. அதற்கான விளக்கத்தை அளிக்க வேண்டும் என கோட்டாட்சியா் தெரிவித்துள்ளாா். இதனால் வியாழக்கிழமை மாவட்டம் முழுவதும் உள்ள கிராம நிா்வாக அலுவலா்கள் பணிப் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக சங்க நிா்வாகிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. Subscribe to Notifications ADVERTISEMENT MORE FROM THE SECTION ஆன்லைன் ரம்மி தடைச் சட்டத்திற்கு ஆளுநர் விரைவில் ஒப்புதல்: அமைச்சர் நம்பிக்கை வேளாண் சந்தை, ஒருங்கிணைந்த இயங்குதளம் விழிப்புணா்வுக் கூட்டம் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: இளைஞா், அவரது தாய் கைது காசநோயாளிகளுக்கு ஊட்டச்சத்து வழங்கும் விழா முட்டை விலை 5 காசுகள் உயா்வு நாமக்கல்லில் நாளை சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் குடிநீா் தொட்டியை துளையிட்டவிவகாரம்: கிராம மக்கள் சாலை மறியல் ‘பயிா்க் காப்பீட்டுத் தொகையை முழுமையாக வழங்க வேண்டும்’ TRENDING TODAY Fifa Fifa AAP Fifa கால்பந்து உலகக் கோப்பை TRENDING WEEK happy birthday nayanthara NayantharaVigneshShivan happy birthday nayanthara happy birthday nayanthara nayanthara birthday LATEST NEWS Latham Salem Corporation decision இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அரவிந்த் கேஜரிவால் ராசிபுரம் LATEST SECTIONS தமிழ்நாடு இந்தியா தற்போதைய செய்திகள் சினிமா வேலைவாய்ப்பு ADVERTISEMENT Copyright - dinamani.com 2022 The New Indian Express | Samakalika Malayalam | Kannada Prabha | Edexlive | Indulgexpress | Cinemaexpress | Event Xpress
பெரும்பாலான சினிமா மற்றும் விளையாட்டு பிரபலங்கள் சொகுசு கார்கள் வாங்கினால் அந்த செய்தி இணையத்தில் வைரலாக சில நாட்கள் வலம் வரும் இதற்கு என்ன காரணம் பிரபலங்கள் ஏன் சொகுசு கார் வாங்கினால் பரபரப்பாகும் பின்னணி இதே..! பிரபலங்களின் சொகுசு கார்கள் நமது நாட்டில் சினிமா நட்சத்திரங்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் போன்றவர்களின் தீவர ரசிகர்களாக பலர் உள்ள நிலையில் வாடிக்கையாளர்களை கவரும் நோக்கில் சொகுசு கார் பிராண்டு நிறுவனங்கள் பிரபலங்களுக்கு கார் விற்பனை செய்யும் பொழுது காரின் விற்பனை விலையில் 20 சதவிகிதம் முதல் 60 சதவிகிதம் வரை சலுகைகளை வாரி வழங்குவதாக எக்கானாமிக் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இளம் கிரிக்கெட் நட்சத்திரங்கள் , சிறிய அளவில் பிரபலமாக உள்ளவர்கள் மற்றும் சிறிய சினிமா நட்சத்திரங்களுக்கு 20 சதவிகித தள்ளுபடியும், மிகப்பெரிய அளவில் பிரபலமாக உள்ள விளையாட்டு வீரர்கள் மற்றும் சினிமா நட்சத்திரங்களுக்கு அதிகபட்சமாக காரின் விற்பனை விலையில் சுமார் 60 சதவிகிதம் வரை தள்ளுபடியை வழங்குகின்றதாம். எதற்காக இந்த தள்ளுபடி என்றால் பிரபலங்கள் கார் வாங்கினால் உடனடியாக அந்த செய்தி டிவிட்டர், ஃபேஸ்புக் வாட்ஸஆப் என வைரலாக தொடங்கும் இதனால் அந்த பிராண்டினை பற்றி மக்கள் தேட விரும்புவார்கள் என்பதனால் இலவச விளம்பரத்தை அந்த பிராண்டு பெறும் இதனால் மற்றவர்களும் அதனை வாங்க விரும்புவார்கள் என்ற நோக்கத்திலே இவ்வாறு வழங்கப்படுகின்றதாம். மேலும் சில நிறுவனங்கள் முதல் இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு பிரபலங்களுக்கு கார்களை இலவசமாக பயன்படுத்த தருகின்றனராம், பிறகு அந்த பிரபலத்துக்கு கார் பிடித்திருந்தால் இரண்டாவது உரிமையாளராக காரை விற்பனை செய்கின்றதாம், இதனால் பிரபலத்திற்கு மிகப்பெரிய விலை சலுகை பெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகின்றது. சாருக்கான் ஹூண்டாய் நிறுவனத்துக்கும் சச்சின் பி.எம்.ட.பிள்யூ நிறுவனத்துக்கும் அம்பாசிடராக பல ஆண்டுகளாக பணியாற்றி வருகின்றனர். இவர்கள் இந்த நிறுவனங்களின் கார் அறிமுகம் மற்றும் முக்கிய நிகழ்வுகளில் பங்கேற்பதனை வழக்கமாக கொண்டுள்ளனர் என்பதனை பலரும் அறிவார்கள். இந்தியாவின் அனைத்து சலுகைகளுமே பிரபலங்களுக்குதான் சாதரன மக்களுக்கு மற்றும் விவசாயிகளுக்கு எந்த சலுகையையும் எந்த கார்ப்ரேட் நிறுவனங்களுக்கும் வழங்க தயாராகவே இல்லை என நன்றாகவே தெரிகின்றது. இது பற்றிய உங்கள் கருத்தை மறக்காமல் பதிவு செய்யுங்க..! TAGS கார் Facebook Twitter Pinterest WhatsApp Previous articleரூ. 8.50 லட்சத்தில் 2017 ட்ரையம்ப் ஸ்ட்ரீட் ட்ரிபிள் S களமிறங்கியது..! Next articleசூட்டை கிளப்பும் காம(கார்)சூத்ரா கார் – 18 + Automobile Tamilan Recent Posts ரூ.7.40 லட்சத்தில் டாடா டியாகோ NRG CNG விற்பனைக்கு வந்தது 315 கிமீ ரேஞ்சு.., டாடா டிகோர் EV கார் விற்பனைக்கு வந்தது ராயல் என்ஃபீல்டு EV பைக் கான்செப்ட் விபரம் கசிந்தது EDITOR PICKS 315 கிமீ ரேஞ்சு.., டாடா டிகோர் EV கார் விற்பனைக்கு வந்தது 2022/11/23 ₹ 5.10 லட்சத்தில் 2022 மாருதி சுசூகி ஈக்கோ கார் விற்பனைக்கு வந்தது 2022/11/22 2023 டொயோட்டா இன்னோவா Hycross கார் வெளிவந்தது 2022/11/21 POPULAR POSTS பிஎம்டபிள்யூ 6 சீரிஸ் கிரான் கூபே கார் விற்பனைக்கு வந்தது 2015/05/30 விரைவில்.., டொயோட்டா ரைஸ் காம்பாக்ட் எஸ்யூவி அறிமுகமாகிறது 2019/10/29 ரிவோல்ட் ஆர்வி400 சவால்.., ஹீரோ எலெக்ட்ரிக் பைக் படம் வெளியானது 2020/02/01 POPULAR CATEGORY செய்திகள்1937 கார் செய்திகள்1814 பைக் செய்திகள்1519 வணிகம்501 Wired292 Auto Show228 Auto Expo 2023131 Truck83 ABOUT US Automobile Tamilan is your news, car, bike electric vehicle. We provide you with the latest breaking news and videos straight from the auto industry.
இழுபறியில் நீடித்த பேரா மாநில ஆட்சியை பக்காத்தான் ஹராப்பான் கைப்பற்றியுள்ளது. 31 சட்டமன்ற உறுப்பினர்களின் பெரும்பான்மையுடன் இந்த ஆட்சி அமையவுள்ளது என பேரா பக்காத்தான் ஹராப்பான் தலைவர் அஹ்மாட் ஃபைசாச் அஸுமு தெரிவித்தார். நடந்து முடிந்த 14ஆவது பொதுத் தேர்தலில் 29 சட்டமன்ற இடங்களை பக்காத்தான் ஹராப்பான் வென்ற நிலையில் 27 இடங்களை தேசிய முன்னணியும் 3 இடங்களை பாஸ் கட்சியும் கைப்பற்றியது. இந்நிலையில் ஆட்சியமைக்க 30 இடங்களின் பெரும்பான்மையை நரூபியுங்கள் என பேரா சுல்தான் நஸ்ரின் ஷா இவ்விரு கூட்டணிக்கு இன்று பிற்பகல் 2.00 மணிவரை காலக்கெடு விதித்தார். இந்நிலையில் தங்களிடம் 31 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் ஆட்சியமைக்க உள்ளோம் என அவர் கூறினார். By myBhaaratham - May 13, 2018 Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest Labels Politics No comments: Post a Comment Newer Post Older Post Home Subscribe to: Post Comments (Atom) 'இயற்கையை காப்போம் இனியதோர் உலகை படைப்போம்' - சிறப்பு கட்டுரை பினாங்கு - இயற்கை என்பது இயல்பாக இருப்பது என்பது பொருள் கொண்டதாகும் . இயல்பாகவே தோன்றி மறையும் பொருட்கள் அவற்றின் இயக்கம் , அவை இயங... மரணத்திலும் பிரியாத தம்பதியர் பூச்சோங்- மாரடைப்பின் காரணமாக மனைவியும் அவரை தொடர்ந்து கணவனும் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியடையச் செய்துள்ளது. சிலாங்கூர்,பூச்சோங்கைச் ச... சோழன் ஆட்சியை இழந்ததைப்போல, மஇகாவை இழந்து விடாதீர்கள்!!! சேரன், சோழன், பாண்டியன் ஆட்சிகளை இழந்து 500 ஆண்டுகளைக் கடந்து விட்டோம். இங்கு வந்து 200 ஆண்டுகளாகக் கட்டமைத்த வாழ்க்கையைத்தான் இன்றும...
நேற்றிரவு முதல் சென்னையில் மீண்டும் மழை தீவிரமடைந்துகொண்டுள்ளது. ஏற்கெனவே பல பகுதிகளில் நீர் தேங்கியுள்ளது. நன்றாக கவனியுங்கள், இந்த வெள்ளம் வடியும் தன்மை கொண்டதல்ல. மேட்டிலிருக்கும் நீர்தான் வடியும். சென்னையின் பல்லாயிரம் குடியிருப்புகள் பள்ளங்களில், நீர்நிலைகளில் ஆக்கிரமித்துக் கட்டப்பட்டவை. பள்ளத்தில் இருக்கும் நீர் வடியாது, வடியாது! மழை நின்று, நன்றாக வெயில் அடித்தால் காய்ந்து போகும். தானாக வடியாது. இந்தச் சூழலை மிகவும் அழுத்தமாகவும் அவசரமாகவும் உங்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறேன். ’சென்னை இயல்புநிலைக்குத் திரும்புகிறது’ எனும் செய்தியைப் படிக்கும்போது வேதனையே மிஞ்சுகிறது. வெயில் அடித்து நீர் காய்வதற்கான சாத்தியம் இன்னும் சில நாட்களுக்கு தென்படவில்லை. மக்கள் நீரில்தான் இருக்கிறார்கள். கணுக்கால் அளவு நீர் உள்ள பகுதிகள், முழங்கால் அளவு நீர் உள்ள பகுதிகள் என வகைப் பிரிக்கலாம். நீர் இல்லாத பகுதிகள் எனப் பார்த்தால், மிகக் குறைவான இடங்களே உள்ளன. ஆக, குளிரில் நடுங்கி மோசமான சிக்கல்கள் ஏற்படும் நிலை உருவாகிக் கொண்டுள்ளது. போர்வைகள், கம்பளி, மழைக் கோட்டுகள் ஆகிய மூன்றைத் தவிர வேறு எந்தப் பொருட்களையும் செம்மை மீட்புக் குழுவினருக்கு அனுப்ப வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறேன். இன்று காலை வரை, பெங்களூரிலிருந்து ஏராளமான பொருட்கள் செம்மை முகாம் அலுவலகத்தை வந்தடைந்துள்ளன. மேலும் பல பகுதிகளிலிருந்து வந்த வண்ணமுள்ளன. இப்போதைக்கு மற்ற பொருட்கள் போதும். உங்கள் ஆற்றலை போர்வைகள், கம்பளி, மழைக் கோட்டுகளை நோக்கித் திருப்புங்கள். மிக முக்கியமாக, சிறுவர்கள், குழந்தைகளுக்கான கதகதப்பு ஏற்பாடுகள் தேவை. ஏற்கெனவே பதினைந்து நாட்களாக குழந்தைகள் நனைந்துகொண்டும் நீரில் வாழ்ந்துகொண்டுமிருக்கிறார்கள். தாழ்வான பகுதிகளில் மாலை நேரத்து நெருப்பு முகாம்களை ஏற்பாடு செய்ய இருக்கிறோம். எரிவாயு அடுப்புகளை வைத்து சீரக நீர், வெந்நீர் கொதிக்க வைத்துத் தர இருக்கிறோம். மூலிகை தேநீரும் அளிக்க வேண்டுமென திட்டமிட்டுள்ளோம். சூழல் இப்படித்தான் உள்ளது. நாம் பதற்றமடைய வேண்டாம். ஆனால், விரைந்து நிலைமைக்கேற்ப செயல்பட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். செம்மை முகாம்களை வேளச்சேரி பகுதி, வட சென்னைப் பகுதி ஆகிய இரு இடங்களில் அமைத்துள்ளோம். முடிந்த வரைக்கும் நீங்களே போர்வை, கம்பளி, மழைக் கோட்டுகளை வாங்கி அனுப்புங்கள். பணமாக அனுப்பினால் அதைக் கொண்டு நாங்கள் கொள்முதல் செய்யும் பணியில் நேரம் விரயமாகிறது. மொத்தமாகக் குறைந்த விலையில் மேற்கண்ட பொருட்கள் விற்பனை செய்வோர் யாரேனும் இருந்தால் உடனடியாகத் தொடர்பு கொள்ளுங்கள். ஒருங்கிணைப்பாளர்கள்: திருமதி நளினி: 7401234981 திருமதி காந்திமதி: 9791490365 திருமதி சாதிகா: 90030 56763 (Senthamizhan Maniarasan) Author ஆசிரியர்Posted on December 6, 2015 Categories செய்திகள் Post navigation Previous Previous post: ஊவா மாகாண ஆசிரிய உதவியாளர்கள் நீதி கேட்க தயாராகின்றனர் Next Next post: சென்னை ஆட்களைப் பார்த்தால் மிகவும் எரிச்சலாக இருக்கும். Search for: Search Categories Announcements Uncategorised கட்டுரைகள் அரசியல் சமூக ஆய்வு அரசியல் தீர்வு இலங்கைத் தமிழர் போராட்டம் இலங்கையில் உள்ள ஏனைய அரசியல் அமைப்புகள் சர்வ தேச அரசியல் பொதுவிடயம் கவிதைகள் சமூக விழிப்பு பொது விடயம் போராட்டம் செய்திகள் இணையத்தளங்கள் நடேசன் இணையம் பூந்தளிர் தூ தேனி தமிழ் நியூஸ் வெப் பத்மநாபா மலையகம் அதிரடி அதிரடி மீடியா ஈ.பி.ஆர்.எல்.எவ். ரெலோ நியூஸ் விடிவெள்ளி எங்கள் பூமி சலசலப்பு இடதுசாரிகள் Recent Comments NIYAYAM on பிரபாகரனை அழிக்க இந்திய அரசுக்கு ஆதரவாக இருந்த தமிழக தலைவர்கள்… ராஜபக்சே கேட்கவே இல்லை… திடுக்கிடும் தகவல் ஆசிரியர் on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை…. NIYAYAM on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை…. SDPT - புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது. on புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது.
தமிழில் அறிவியல் புனைகதைகள் அருகி வருகின்றன. எழுத்தாளர் சுஜாதாவுக்குப் பிறகு ஏறத்தாழ அறிவியல் புனைகதையில் தேக்கநிலை. ஆனந்த விகடனில் தொடர்கதையாக வெளிவந்த ஆபரேஷன் நோவா தொடர் பெரும் வாசக வரவேற்பைப் பெற்றது. டோபா எரிமலை வெடித்து பூமிக்கு மிகப்பெரிய ஆபத்து நேரப் போவதை விஞ்ஞானிகள் அறிகிறார்கள். மக்களைக் காப்பாற்றும் பணியில் பல சிக்கல்கள். உயிரினம் வாழ உகந்த கோள் ஒன்றில் மனிதர்கள் வாழ வழிசெய்யப்படுகிறது. இந்த நேரத்தில் பூமிக்கு ஆபத்து இல்லை எனத் தெரியவர, சயின்டிஸ்ட் ஒருவர் சாத்தான் உருவம் எடுக்கிறார். விறுவிறுப்பான் கதை. எழுத்தாளர் அ.முத்துலிங்கம் அவர்களின் அணிந்துரை, நாவலுக்கு மகுடம் சூட்டியிருக்கிறது. ஆபரேஷன் நோவா quantity Add to cart Categories: Book, உயிர்மை, தமிழ்மகன், நாவல்கள் Tags: உயிர்மை, தமிழ்மகன், நாவல்கள் Description Additional information Reviews (0) Description தமிழில் அறிவியல் புனைகதைகள் அருகி வருகின்றன. எழுத்தாளர் சுஜாதாவுக்குப் பிறகு ஏறத்தாழ அறிவியல் புனைகதையில் தேக்கநிலை. ஆனந்த விகடனில் தொடர்கதையாக வெளிவந்த ஆபரேஷன் நோவா தொடர் பெரும் வாசக வரவேற்பைப் பெற்றது. டோபா எரிமலை வெடித்து பூமிக்கு மிகப்பெரிய ஆபத்து நேரப் போவதை விஞ்ஞானிகள் அறிகிறார்கள். மக்களைக் காப்பாற்றும் பணியில் பல சிக்கல்கள். உயிரினம் வாழ உகந்த கோள் ஒன்றில் மனிதர்கள் வாழ வழிசெய்யப்படுகிறது. இந்த நேரத்தில் பூமிக்கு ஆபத்து இல்லை எனத் தெரியவர, சயின்டிஸ்ட் ஒருவர் சாத்தான் உருவம் எடுக்கிறார். விறுவிறுப்பான் கதை. எழுத்தாளர் அ.முத்துலிங்கம் அவர்களின் அணிந்துரை, நாவலுக்கு மகுடம் சூட்டியிருக்கிறது.
திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் மத்திய சென்னை தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தயாநிதி மாறனுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்கு கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் எழும்பூர் தொகுதிக்குட்பட்ட 27ஆவது வட்டத்தில் வீடு வீடாகச் சென்று பிரச்சாரம் செய்தனர். இதில் தொகுதி செயலாளர் கே.முருகன், ஆறுமுகம், கார்த்திக், க.புகழேந்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் பெரியார் சிலை சேதப்படுத்தப் பட்டதை அடுத்து சென்னை அண்ணா சாலையில் சிம்சன் அருகே உள்ள பெரியார் சிலைக்கு காவல் துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் திருப்பெரும்புதூர் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு மதுரவாயல் தொகுதிக்குட்பட்ட 91, 92ஆவது வட்டங்களில் திங்களன்று (ஏப். 8) பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் க.பீம்ராவ், தொகுதி செயலாளர் தாமஸ், மாதர்சங்க சரவணசெல்வி, திமுக தொகுதி செயலாளர்கள் காரம்பாக்கம் கணபதி, ராஜன், வில்லிவாக்கம் ஊராட்சி ஒன்றியச் செயலாளர் துரை.வீரமணி, காங்கிரஸ் கட்சியின் எஸ்.சி, எஸ்டி பிரிவு மாநில அமைப்பாளர் பி.வி.தமிழ்ச்செல்வன், தொகுதி செயலாளர் பிரான்சிஸ் உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் கலந்து கொண்டனர். Tags Egmore Pudukottai Tiruppambuthur collecting திமுக Egmore Pudukottai Tiruppambuthur collecting திமுக Similar Posts For You திமுகவை டைரக்ட் செய்யும் புத்தகம்... நமது நிருபர் 6/25/2021 12:00:00 AM பாஜக எம்எல்ஏக்கள் தலைமைச் செயலகத்தில் கூட்டம்: ஆளுநரிடம் திமுக, காங். புகார்.... நமது நிருபர் 5/17/2021 12:00:00 AM திமுகவுக்கு ஆதித்தமிழர் கட்சி ஆதரவு... நமது நிருபர் 3/16/2021 12:00:00 AM Tags தொடர்புடைய செய்திகள் மதுரை முக்கிய செய்திகள் நமது நிருபர் நவம்பர் 28, 2022 பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத்துறையின் நூற்றாண்டு விழா நமது நிருபர் நவம்பர் 28, 2022 தோழர் என்.பழனிவேல் நினைவஞ்சலி நமது நிருபர் நவம்பர் 28, 2022 விவசாயத் தொழிலாளர்களுக்கு தனித்துறை உருவாக்கிடுக! நமது நிருபர் நவம்பர் 28, 2022 தேனி மாவட்டத்தில் ஆயிரம் மாணவியர்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கல் நமது நிருபர் நவம்பர் 28, 2022 தீக்கதிர் தீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.
உக்ரைன் எல்லையில் போர் பதற்றம் உருவாக்கப்பட்டது பற்றியும், அதன் மையமாக இருக்கும் அமெரிக்க உலக மேலாதிக்கத்தைப் பற்றியும் முந்தைய பகுதிகளில் பார்த்தோம். இந்தப் பிரச்சினையின் எதிர்க்கூறான, ரசியாவும் உக்ரைனும் என்ன நிலையில் உள்ளன? அ. சோவியத் யூனியனின் உடைவும் அதற்குப் பிந்தைய ரசியாவும் 1991-ல் சோவியத் யூனியன் உடைந்து ரசியா, உக்ரைன், பெலோருஸ், மால்டாவியா (ஐரோப்பிய குடியரசுகள்), ஜார்ஜியா, உஸ்பெக், கசக், அஜர்பைஜான், கிர்கிஸ், தஜிக், ஆர்மீனியா, டர்க்மென், (மத்திய ஆசிய குடியரசுகள்) லித்துவேனியா, லத்வியா, எஸ்டோனியா (பால்டிக் குடியரசுகள்) ஆகிய 15 சோசலிச குடியரசுகளும் தனித்தனி நாடுகளாக பிரிந்தன. படம் : அமெரிக்க அதிபர் பில் கிளின்டன், ரசிய அதிபர் போரிஸ் யெல்ட்சின், உக்ரைன் அதிபர் லியோனிட் கிராவ்சுக்,1994. ஆனால், ரசியாவிலும், உக்ரைனிலும், பிற முன்னாள் சோவியத் குடியரசுகளிலும் முதலாளித்துவ கும்பல்கள் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றின. இந்த நாடுகளின் பொருளாதாரங்களில் முதலீடு செய்து கொள்ளை இலாபம் ஈட்டுவதற்காக முதலாளித்துவ கும்பல்களுடன் அமெரிக்காவும் பிற ஏகாதிபத்திய நாடுகளும் ஒப்பந்தங்களை போட்டுக் கொண்டன. முன்னாள் சோவியத் குடியரசுகள் அனைத்திலும் பொருளாதார வீழ்ச்சியும், அரசியல் நெருக்கடிகளும், சமூகக் குழப்பமும் தலைவிரித்து ஆடின. உக்ரைன் – ரஷ்யா போர்: வரலாறும் பின்னணியும் பகுதி 1 ஆனால், 2000-ம் ஆண்டில் ரசியாவில் விளாடிமீர் புடின் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அடுத்த 20 ஆண்டுகளில் 8 ஆண்டுகள் அதிபராகவும் அடுத்த 4 ஆண்டுகள் பிரதமராகவும், மீண்டும் அதிபராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டு அதிகாரத்தில் தொடர்ந்து நீடிக்கிறார். ரசியாவின் கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு வளங்களையும், அணு ஆயுதங்களையும், ஆயுத உற்பத்தித் தொழிலையும் உந்துதலாகக் கொண்டு ரசிய முதலாளித்துவ நலனை உலகச் சந்தையில் நிலைநாட்ட ஆரம்பித்தார். ரசியாவின் பொருளாதார அடித்தளமாக இருப்பது எண்ணெய் மற்றும் எரிவாயு வளம். ரசியாவிலிருந்து இறக்குமதியாகும் எரிவாயு மேற்கு ஐரோப்பிய நாடுகளுக்கு குழாய் மூலம் வழங்கப்படுகிறது. ரசியாவிலிருந்து அதிக அழுத்தம் கொண்ட குழாய்களின் மூலம் மேற்கு மற்றும் தெற்கு ஐரோப்பாவுக்குச் செல்லும் ஐந்து பெரும் எரிவாயுக் குழாய்கள் பெலாரஸ், உக்ரைன் முதலான முன்னாள் சோவியத் ஒன்றிய நாடுகளின் வழியாகவே செல்கின்றன. எனவே, இந்த முன்னாள் சோவியத் குடியரசுகளை தனது ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வருவது அமெரிக்காவுக்கு அவசியமாக உள்ளது. அதன் மூலம் ரசியாவை பலவீனப்படுத்தி ஏகபோக மூலதனத்தை விரிவாக்கி ரசியாவுக்குள்ளும் ஆதிக்கத்தை நிலைநாட்ட அமெரிக்காமுயற்சிக்கிறது. குறிப்பாக, எரிசக்தித் துறையில் தனது மேலாதிக்கத்தைத் தொடர்வதற்கு ரசியாவின் எண்ணெய் வளங்களை கைப்பற்றி கட்டுப்படுத்துவது அமெரிக்காவுக்கு அவசியமாக உள்ளது. இதன்படி, ஐரோப்பிய நாடுகளின் பொருளாதாரக் கூட்டமைப்பான ஐரோப்பிய ஒன்றியமும், அமெரிக்க தலைமையிலிருக்கும் இராணுவக் கூட்டமைப்பான நேட்டோவும், கிழக்கு ஐரோப்பிய நாடுகளையும், முன்னாள் சோவியத் குடியரசுகளையும் ஒவ்வொன்றாக தம்முள் இழுக்க ஆரம்பித்தன. ரசியாவை தனிமைப்படுத்த முயற்சித்தன. போலந்து, லித்துவேனியா, லட்வியா, எஸ்டோனியா, செக் குடியரசு, ஸ்லோவேகியா, ஸ்லோவேனியா, ஹங்கேரி, ரொமேனியா, பல்கேரியா ஆகிய நாடுகள் மேற்கத்திய பொருளாதார, ராணுவ மண்டலங்களுக்குள் கொண்டு வரப்பட்டன. இவ்வாறு, அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்திய கட்டமைவு எரிசக்தி வளத்தை கட்டுப்படுத்தவதை உறுதிப்படுத்துவதற்கான கொள்கையின் அடுத்த இலக்காக இருந்தது உக்ரைன். உக்ரைன் – ரஷ்யா போர்: வரலாறும் பின்னணியும் பகுதி 2 ஆ. முதலாளித்துவ குடியரசாக உக்ரைன் எதிர்கொண்ட பேரழிவுகள் உலகின் மிக வளமான விவசாய பகுதிகளில் ஒன்றான உக்ரைன் ரசியாவை ஒட்டிய ஸ்லேவிய நாடுகளில் ஒன்று. அதன் நிலப்பரப்பு தமிழ்நாட்டைப் போல சுமார் ஐந்து மடங்கு பெரியது. அதன் மக்கள்தொகை தமிழ்நாட்டு மக்கள் தொகையில் பாதிக்கும் சற்று அதிகமாக மட்டுமே உள்ளது (சுமார் 4.8 கோடி) . ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிடும் போது அளவில் பிரான்ஸ் நாட்டை விட பெரியதாகவும், ஜெர்மனியின் மக்கள் தொகையில் பாதியையும் கொண்டிருக்கிறது. உலக அளவில், 7 சதவீதம் முதல் 14 சதவீதம் புராதன உயிர்ச்சத்து அடங்கியிருக்கும் செர்னோஜெம் என்ற கருநிற மண் வகையின் மூன்றில் ஒரு பகுதி உக்ரைனில் உள்ளது. இந்த வகை மண் பெருமளவு ஊட்டச் சத்துக்கள் கொண்டிருப்பதோடு மட்டுமல்லாமல், உயர் நீர்த் தேக்கத் திறனும் கொண்டது. சோவியத் சோசலிச குடியரசுகளின் தானியம், இறைச்சி, பால், காய்கறிகள் உற்பத்தியில் 25% பங்களித்து வந்த உக்ரைன் சோவியத் யூனியனின் உணவுக் களஞ்சியம் என்று அழைக்கப்பட்டது. சோவியத் யூனியனின் உணவுக் களஞ்சியமாக விளங்கிய உக்ரைனில் ஆயுதத் தளவாட உற்பத்தி தொழிற்சாலைகளும், சுரங்க மற்றும் தொழில்துறையில் பயன்படும் கருவிகளை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளும் செழித்திருந்தன.சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்குப் பிறகு, சுதந்திர குடியரசாக அறிவிக்கப்பட்ட பிறகு, உக்ரைன் மக்கள் முதலாளித்துவ சிறுகும்பலால் சூறையாடப்பட்டனர். அவர்கள் நாட்டின் சொத்துக்களையும் வளங்களையும் தனியார்மயமாக்கி கொள்ளை இலாபம் குவித்தனர். உக்ரைன் தனிநாடான அடுத்த பத்தாண்டுகளில் அதன் ஜிடிபி 60% வீழ்ச்சியடைந்தது. 2000 ஆண்டுக்குப் பிறகு ஏற்றுமதி சார்ந்த பொருளாதார வளர்ச்சி சிறிதளவு ஏற்பட்டாலும், உலகளாவிய நிதி நெருக்கடியின் தாக்கத்தால் 2009-ம் ஆண்டு உக்ரைனின் பொருளாதாரம் 15% சுருங்கியது. வரலாற்று ரீதியாக சோவியத் சோசலிச குடியரசாக சாதித்த உச்சகட்ட ஜிடிபி அளவை உக்ரைன் மீண்டும் அடையவேயில்லை. முருகன் சுப்ரமணியன் ஆன கதை – சூர்யா சேவியர் 21-ம் நூற்றாண்டில், விளாடிமீர் புடினின் ரசிய ஆதரவு அரசு, ஐரோப்பிய ஒன்றிய ஆதரவு அரசு என்று மாறி மாறி அதிகாரத்துக்கு வந்த அரசுகள் முதலாளித்துவ கும்பல்களின் பொருளாதார சூறையாடலுக்கு பின்புலமாக இருந்தன. 2004-ம் ஆண்டு நடந்த தேர்தலில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட விக்டர் யனுகோவிச் ரசியாவுடன் நெருக்கமான உறவுகளை ஆதரிப்பவர். ஆனால், தேர்தலில் மோசடி நடந்ததாக தெருப்போராட்டங்கள் நடத்தப்பட்டன. அவர் பதவியிலிருந்து கீழ் இறக்கப்பட்டார். பின்னர் நடந்த மறுவாக்கெடுப்பில் எதிர்த்துப் போட்டியிட்ட “நமது உக்ரைன்” கட்சியைச் சேர்ந்த ஐரோப்பிய சார்பு விக்டர் யுஷென்கோ ஆட்சியில் அமர்த்தப்பட்டார். அவர் உக்ரைனை ஐரோப்பிய ஒன்றியத்துக்கு நெருக்கமாக இணைக்க முயற்சித்தார். ரசியாவின் எதிர்ப்புகளை மீறி அமெரிக்காவுடனும் ஐரோப்பிய நாடுகளுடனும் ஒப்பந்தங்களை போட முயற்சித்தார். ஆனால், 2010-ம் ஆண்டு நடந்த ஜனாதிபதி தேர்தலில் விக்டர் யனுகோவிச் மீண்டும் அதிபரானார். ஐரோப்பிய ஒன்றியத்துடனான ஒப்பந்தம் உக்ரைன் நலன்களுக்கு எதிரானதாக இருப்பதாகச் சொல்லி அது தொடர்பான பேச்சு வார்த்தைகளை அதிபர் விக்டர் யனுகோவிச் முறித்துக் கொண்டார். அதே நேரம், உக்ரைனிய முதலாளித்துவ சிறுகும்பல் ஆட்சியில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி உக்ரைன் மக்களை கிளர்ந்தெழச் செய்தது. அரசு நிர்வாகத்தில் நிலவிய மோசமான ஊழலை எதிர்த்து மக்கள் அணி திரட்டப்பட்டனர். இ. 2014-ல் உக்ரைனில் நடத்தப்பட்ட ஆரஞ்சு புரட்சி உக்ரைனின் தலைநகர் கீவ் நகரத்தில் தெருப் போராட்டங்கள் தொடங்கின. ஐரோப்பிய ஆதரவு எதிர்க்கட்சிகள் தரப்பில் பாசிச கட்சிகளான ஸ்வோபோடா, டிரிசுப் போன்ற வலதுசாரி பயங்கரவாத குழுக்களும் போராட்டங்களில் சேர்க்கப்பட்டிருந்தன. இந்த அமைப்புகள் உக்ரைனிய இனவாதத்தை முன் வைப்பவை. யூதர்களுக்கும் ரசியர்களுக்கும் எதிரான இன வெறுப்பை உமிழ்பவை; புதிய நாஜி கொள்கைகளை பிரச்சாரம் செய்பவர்கள். ஆரஞ்சு புரட்சி நடத்திய அமைப்புகளின் தொண்டர்கள், தலைநகர் கீவ் நகரின் “சுதந்திர மைதானத்தை” ஆக்கிரமித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்; அரசு அலுவலகங்களை முற்றுகையிட்டனர்; கலவர எதிர்ப்பு போலீசை, பெட்ரோல் வெடிகுண்டு, துப்பாக்கிகள் மற்றும் பிற ஆயுதங்களால் தாக்கினர். படம் : 2014-ல் உக்ரைன் தலைநகரம் கீவ் நகரில், “மைதான்” என்று அறியப்பட்ட சுதந்திர சதுக்கத்தில் அரசு எதிர்ப்பாளர்களின் நாசவேலைகள் போராட்டக்காரர்களுக்கு மேற்கத்திய நாடுகளிடம் இருந்து பணமும் ஆயுதங்களும் தடையின்றி வழங்கப்பட்டது. போராட்டக்காரர்கள் கட்டவிழ்த்து விட்ட வன்முறை கலவரங்களில் 88 பேர் கொல்லப்பட்டனர். ஐரோப்பிய ஒன்றியத்தின் சிறப்புப் பிரதிநிதி சீமாட்டி ஆஸ்டன், முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர் ஜான் மெக்கெய்ன், ஐரோப்பிய விவகாரங்களுக்கான அமெரிக்க துணைச் செயலர் விக்டோரியா நியூலாண்ட் ஆகியோர் போராடும் கும்பல்களை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். “இருதரப்பிலும் கொல்லப்பட்டவர்களில் பலர் அரசு படையினரால் கொல்லப்படவில்லை, மாறாக எதிர்க்கட்சியினர் ஏற்பாடு செய்த தொலைதூர துப்பாக்கி குறியர்களால் (ஸ்னைப்பர்கள்) இறந்தார்கள்” என்ற தகவல், ஐரோப்பிய ஆதரவு எஸ்டோனிய வெளியுறவுத் துறை அமைச்சர் உர்மாஸ் பேட், சீமாட்டி ஆஸ்டனிடம் பேசும் தொலைபேசி உரையாடல் மூலம் அம்பலமானது. கஜினி முகம்மதும் சோமநாதபுர படையெடுப்பும் – சூர்யா சேவியர் தொடர்ச்சியான உள்நாட்டு குழப்பத்தின் காரணமாக விக்டர் யனுகோவிச் ஆட்சி கவிழ்க்கப்பட்டது, அவர் ரசியாவுக்கு தப்பிச் சென்றார். உக்ரைனில், மேற்கத்திய ஆதரவுடன் இடைக்கால அரசாங்கம் ஒன்று அமைக்கப்பட்டது. ஈ. மேற்கத்திய ஆதரவு இனவாத அரசும், பிரிந்து சென்ற ரசிய பகுதிகளும் 2012-ம் ஆண்டு இயற்றப்பட்ட சிறுபான்மை இனத்தவருக்கும், மொழியினருக்கும் பாதுகாப்பு அளிக்கும் சட்டத்தை ரத்து செய்வதாக அறிவித்தது, உக்ரைன் அரசு. அதன்படி இனிமேல் உக்ரைனிய மொழி மட்டுமே நாட்டின் ஆட்சி மொழியாக இருக்கும். தேசிய சிறுபான்மையினரின் உரிமைகளை பறிக்கும், நாட்டை மேற்கத்திய நாடுகளின் பிடியில் ஒப்படைக்கும் இந்த நடவடிக்கைகளை நாட்டின் தெற்கு, தென்கிழக்கு பகுதிகளில் ரசிய மொழி பேசும் மக்கள் கடுமையாக எதிர்த்தனர். உக்ரைனின் தென்கிழக்கில் உள்ள 15 லட்சம் ரசிய மொழி பேசும் மக்கள் வாழும் கிரீமியா தீபகற்பம் 1954-ம் ஆண்டு அப்போது சோவியத் குடியரசாக இருந்த உக்ரைனுடன் சேர்க்கப்பட்டிருந்தது. 1990-களில் சோவியத் யூனியன் வீழ்ந்து ரசியாவும், உக்ரைனும் தனி நாடுகள் ஆன பிறகு 1997-ல் போடப்பட்ட ஒப்பந்தத்தின் படி கிரீமியாவில் அப்போது இருந்த கருங்கடல் பகுதி கப்பற்படையில், 82% ரசியாவிடம் ஒப்படைக்கப்பட்டு, செவஸ்தபோல் துறைமுகம் ரசியாவின் பயன்பாட்டில் விடப்பட்டது. அதற்கு பதிலாக உக்ரைனுக்கு நிதி உதவி, கடன் தள்ளுபடி ஆகியவற்றை ரசியா வழங்கியது. செவஸ்தபோல் துறைமுகத்துக்கான பயன்பாட்டுக் கட்டணத்தையும் ரசியா செலுத்தி வந்தது. சுயஆட்சிப் பிரதேசமான கிரீமியா, மேற்கத்திய ஆதரவு இடைக்கால அரசாங்கத்தை ஏற்றுக் கொள்ள மறுத்தது: உக்ரைனிலிருந்து பிரிந்து ரசியாவில் இணைவதற்கான கருத்துக் கணிப்பை நடத்தி ரசியாவுடன் இணைவதாக அறிவித்தது. படம் : கிரீமியாவின் மக்கள் உக்ரைனில் இருந்து பிரிவதாக பெருவாரியாக வாக்களித்தனர். கிரீமிய நாடாளுமன்றம் ரசியாவுடன் இணைக்கும்படி தீர்மானம் நிறைவேற்றியது (2014) இதைத் தொடர்ந்து, உக்ரைனின் கிழக்கு எல்லையில் உள்ள டான்பாஸ் பகுதியில் உள்ள டோனட்ஸ்க், லுகான்ஸ்க் என்ற 2 மாகாணங்கள் உக்ரைனில் இருந்து பிரிந்து போவதாக அறிவித்தன. உ. தாராளவாத முதலாளித்துவ சொர்க்கத்தில் உக்ரைன் எதிர்கொண்ட பொருளாதார தாக்குதல்கள் 2014-ம் ஆண்டில் நடந்த தேர்தலில் மேற்கத்திய ஆதரவு பெட்ரோ பொரோஷெங்கோ வெற்றி பெற்றார். ரசியாவுடனான உறவுகளை துண்டித்துக் கொண்டு ஐரோப்பிய ஒன்றியத்துடனும் அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்திய கட்டமைப்புடனும் நெருக்கமாகும் கொள்கைகள் அமல்படுத்தப்பட்டன. மதத்தின் தன்மை என்ன? – பகத்சிங், நரேந்திர தபோல்கர் இணையும் புள்ளிகள் ரசியாவிலிருந்து ஐரோப்பாவுக்கு இயற்கை எரிவாயு வழங்குவதைத் தடுப்பதற்கு அமெரிக்கா உக்ரைன் அரசை பயன்படுத்தியது. ரசியாவைச் சார்ந்திருப்பதிலிருந்து மேற்கத்திய நாடுகளை சார்ந்திருகுகம்படி உக்ரைன் மறுசீரமைக்கப்பட்டது. உக்ரைனின் பொருளாதார மறுசீரமைப்புக்காக அமெரிக்கா தலைமையிலான நிதி நிறுவனங்கள் கடன் உதவி அளித்தன. பெட்ரோ பொரோஷெங்கோ அரசு ஐஎம்எஃப்-யிடம் நிதி உதவி பெறுவதற்கு விண்ணப்பித்தது. வரிகளை ஜிடிபியில் 0.5% அளவுக்கு உயர்த்துவது, எரிசக்திக் கட்டணங்களை உயர்த்துவது, ஓய்வூதியத்துக்கு தொழிலாளர்களின் பங்களிப்பை அதிகரிப்பது ஆகிய நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. 2014-ல் ஜிடிபியில் 20% ஆக இருந்த சமூக நல செலவினங்கள் 2022-ல் 13% ஆக வெட்டப்பட்டன. அரசுக்கு சொந்தமான நிறுவனங்களை தனியார் மயமாக்குவது, வங்கிகளில் அரசின் பங்கு உடைமையைக் குறைப்பது ஆகியவற்றையும் ஐஎம்எஃப் நிபந்தனைகளாக விதித்துள்ளது. 2025-க்குள் வங்கிகளில் அரசு பங்குடைமையை 25% ஆகக் குறைக்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க நிறுவனங்களுக்கு உக்ரைன் சந்தை திறந்து விடப்பட்டது, உக்ரைனின் வளமான விவசாய நிலங்களை பன்னாட்டு நிறுவனங்கள் குறி வைத்தன. விவசாய நிலங்களை வாங்குவதற்கு லாபகரமான 10 நாடுகளில் உக்ரைன் ஒன்று என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது. சூரியகாந்தி எண்ணெய் உற்பத்தியில் முதல் இடம் வகிக்கிறது, உக்ரைன். கோதுமை உற்பத்தியில் 4-வது பெரிய நாடாக உள்ளது. சுமார் 30% மக்கள் இன்னும் கிராமப் புறங்களில் வசிக்கின்றனர். 14% உழைப்பாளர்கள் விவசாயத்தில் வேலை வாய்ப்பு பெறுகின்றனர். உக்ரைனில் விளைநிலங்களை அன்னிய நிறுவனங்கள் வாங்குவது தடை செய்யப்பட்டிருந்தாலும், உக்ரைனிய நிறுவனங்கள் 10,000 ஹெக்டேர் (25,000 ஏக்கர்) வரை நிலம் வாங்க அனுமதிக்கப்பட்டன. இதன் மூலம் 4.27 கோடி ஹெக்டேர் (சுமார் 10.3 கோடி ஏக்கர்) நிலம் தனியார் வர்த்தகத்துக்கு திறந்து விடப்பட்டுள்ளது. இது இத்தாலி நாட்டின் நிலப்பரப்புக்கு சமமானது. “தென்னாடுடைய சிவனும் நந்தனை எரித்த நெருப்பும்” – சூர்யா சேவியர் ஊ. உக்ரைன் பொருளாதாரத்தின் வீழ்ச்சியும் மக்களின் வாழ்நிலை நெருக்கடியும் இதற்கிடையில், பெட்ரோ பொரோஷெங்கோ ஆட்சியில் ரசியாவுடன் மோதல் தீவிரமடைந்தது. உள்நாட்டில் இனவாத கொள்கைகள் அமல்படுத்தப்பட்டன. புதியதாராளவாத கொள்கைகள் மூலம் மக்கள் வாழ்க்கை மேலும் நெருக்கடியை எதிர்கொண்டது. உக்ரைனில் சராசரி வருடாந்திர உண்மைக் கூலி 1990-ல் சுமார் 22,000 மட்டத்திலிருந்து வீழ்ச்சியடைந்து, 2019 வாக்கில் 19,000 அளவில் உள்ளது. அதாவது, சோவியத் சோசலிச குடியரசில் இருந்த கூலி மட்டத்தை விட இப்போதைய சராசரி கூலி சுமார் 13% குறைவாக உள்ளது. உக்ரைனில் பணக்கார 10% பேர் மிக ஏழ்மையான உக்ரைனியர்களை விட 40 மடங்கு அதிக செல்வத்தைக் கட்டுப்படுத்துகின்றனர். உக்ரைன் மக்களிடையை வேலையின்மை வீதம் 10% ஆக உயர்ந்தது. எ. நகைச்சுவை நடிகர் விளாடிமைர் செலன்ஸ்கியும் அமெரிக்க அரசியல் முரண்பாடும் இந்நிலையில், பெட்ரோ பொரோஷென்கோ அரசு மக்கள் ஆதரவை இழந்தது. ஏப்ரல் 2019-ல் நடந்த அதிபர் தேர்தலில் மேற்பத்திய ஆதரவு பெட்ரோ பொரோஷெங்கோ தோற்கடிக்கப்பட்டார். அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட நகைச்சுவை நடிகரான விளாடிமைர் செலன்ஸ்கி ரசியாவுடன் மோதலை முடித்து அமைதி ஏற்படுத்தப் போவதாகவும், உக்ரைனின் கிழக்கில் உள்ள டான்பாஸ் பிராந்தியத்தில் போரை முடிவுக்குக் கொண்டு வருவதாகவும் வாக்களித்திருந்தார். அந்த நேரத்தில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சீனாவுக்கு எதிரான வர்த்தகப் போரை முழு வீச்சில் தொடங்கி நடத்திக் கொண்டிருந்தார். டொனால்ட் டிரம்ப் பிரநிதித்துவப்படுத்தும் அமெரிக்க முதலாளித்துவ வர்க்கத்தின் பிரிவு, “அமெரிக்கா முதலில்” என்ற கொள்கையை முன் வைத்து அமெரிக்காவின் வெளிநாட்டுச் செலவுகளை குறைக்க வேண்டும் என்று வாதிட்டனர். எனவே, எரிசக்தித் துறையில் ரசியாவுக்கு எதிரான அமெரிக்க செயல்பாடுகள் ஒப்பீட்டளவில் மட்டுப்பட்டன. எனவே, உக்ரைன் அரசும் ரசியாவுடன் உடன்பாடு ஏற்படுத்தும்படி கூறப்பட்டது. பிற மதங்களை எதிர்ப்பதன் வழியே இந்துக்களை ஒருங்கிணைப்பது தான் தேசியமா? தேசியத்தின் வரலாறு என்ன? – சூர்யா சேவியர் ஆனால், 2021-ல் ஜோ பைடன் அமெரிக்க அதிபராக பதவி ஏற்ற பிறகு, அமெரிக்க வெளியுறவுக் கொள்கையில் மீண்டும் மாற்றம் ஏற்பட்டது. எரிசக்தித் துறையில் அதிகரித்து வரும் ரசிய செல்வாக்கைக் குறைப்பது ஜோ பைடன் பிரதிநித்துவப்படுத்தும் உலக மேலாதிக்க அரசியலுக்கு அவசியமாக இருந்தது. ரசியாவும் ஐரோப்பிய நாடுகளும் எரிசக்தி வளங்களை வர்த்தகம் செய்வதற்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் நாணயமாக யூரோவை பெருமளவு பயன்படுத்த ஆரம்பிப்பதன் மூலம் அமெரிக்க டாலரின் உலகளாவிய மேலாதிக்கமும் பலவீனப்படும். அதைத் தடுப்பதும் ஜோ பைடனின் அரசியல் பொருளாதாரக் கொள்கைக்கு அடிப்படையாக உள்ளது. மறுபுறம், பொருள் உற்பத்தித் துறையிலும், உயர்தொழில்நுட்பத் துறையிலும் சீனாவுடன் போட்டி போடுவதிலும் அமெரிக்கா மிகப்பெரிய சவால்களை எதிர்கொள்கிறது. ஆப்பிரிக்காவிலும், தென் கிழக்கு ஆசியாவிலும், தென் அமெரிக்காவிலும் சீனாவின் பொருளாதார செல்வாக்கு அதிகரிப்பதை அமெரிக்காவால் தடுத்த நிறுத்த முடியவில்லை. இதற்கிடையில், நிதித்துறை, எரிசக்தித் துறை முதலாளிகளின் தரப்பில் அமெரிக்கா உலகெங்கும் நடத்தும் குற்றச் செயல்கள் அமெரிக்க உழைக்கும் மக்களின் கடும் அதிருப்தியை சம்பாதித்துள்ளது. அமெரிக்காவின் உலக மேலாதிக்கப் போர்களும், ஏகாதிபத்திய கொள்கையும் உள்நாட்டில் கீழ்மட்ட 50% மக்கள் மீது கடும் பொருளாதார சுமையை சுமத்தியுள்ளது. இவ்வாறு, முதலாளித்துவத்தின் தீர்க்கமுடியாத முரண்பாடுகளின் ஏகாதிபத்திய பரிணாம வடிவத்தில் அமெரிக்கா சிக்கிக் கொண்டுள்ளது. அதிலிருந்து வெளியில் வருவதற்கும் உள்நாட்டு நெருக்கடியை சமாளிப்பதற்கும் போரை தூண்டுவது அமெரிக்காவுக்கு அவசியத் தேவையாக உள்ளது. தோற்றுப் போன உலக முதலாளித்துவக் கட்டமைப்பின் இன்னும் ஒரு பலியாடாக உக்ரைன் மக்களின் வாழ்வு சீரழிக்கப்படுகிறது. உக்ரைனில் மட்டுமின்றி, உலகெங்கும் உள்ள செல்வங்களை எல்லாம் உற்பத்தி செய்யும் தொழிலாளர்களையும் விவசாயிகளையும் நெருக்கடிக்குள் தள்ளுகிறது, இந்த முதலாளித்துவக் கட்டமைப்பு. இயற்கை வளங்களை இலாப நோக்கத்திற்காக சூறையாடுகிறது, இயற்கை வளங்களை கைப்பற்றி கட்டுப்படுத்துவதற்கான போட்டியில் போர்களில் இறங்குகிறது. ஏராளமான செல்வங்களை ஆயுத உற்பத்தியிலும், நிதித்துறை சூதாட்டத்திலும் வீணாக்குகிறது. உழைக்கும் மக்கள் உணர்வுரீதியாக திட்டமிட்டு சமூக உற்பத்தியையும் சமூக வாழ்வையும் ஒழுங்குபடுத்தும் அமைப்புக்கு மாறிச் செல்ல வேண்டிய அவசியத்தை இத்தகைய நெருக்கடிகள் மேலும் வலியுறுத்துகின்றன. கட்டுரையாளர் –அப்துல் நன்றி: yclindia சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது. மாத சந்தா ஆண்டு சந்தா ஒருமுறை சந்தா உக்ரைன்எஸ்டோனியாசோவித் ரஷ்யாபெலோருஸ்மத்திய ஆசியாமால்டாவியாரசியாரஷ்யாலத்வியாலித்துவேனியா 0 மற்ற சில பதிவுகள் மத அடிப்படையில் மக்கள்தொகை கட்டுப்பாடு தேவை – ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் வலியுறுத்தல் nithish October 6, 2022 ‘பணியின்போது கொரோனாவால் இறந்த 1,500 ரயில்வே ஊழியர்கள்; பாரபட்சமின்றி உரிய இழப்பீடு வேண்டும்’ – ரயில்வே ஊழியர்கள் சங்கம் Aravind raj May 9, 2021 பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத அளவு உயர்வு – பல மாநிலங்களில் விலை ரூ.100 தாண்டியது News Editor May 10, 2021 May 10, 2021 இதையும் படிங்க..! பீமா கோரேகான் வழக்கு: ஆனந்த் டெல்டும்டே ஜாமீனுக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு பணமதிப்பிழப்பு விவகாரம்: ஒரு நடவடிக்கை தோல்வி அடைந்து விட்டது என்பதற்காக அதன் நோக்கமும் தவறானது இல்லை – உச்சநீதிமன்றத்தில் ஒன்றிய அரசு வாதம் ஷ்ரத்தா கொலையை ஆதரித்து ரஷீத் கான் என்ற இஸ்லாமிய பெயரில் காணொளி வெளியிட்ட விகாஷ் குமார் – கைது செய்த காவல்துறை பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்கான ஒன்றிய அரசின் சாத்தியக்கூறு அறிக்கையை பகிர தமிழக அரசு மறுப்பு – வெளிப்படை தன்மையில்லா அரசு என கிராம மக்கள் குற்றச்சாட்டு கருப்பு சிவப்பு கட்டிய கொள்கையாளர் – எழுத்தாளர் இமையத்துக்கு கன்னட தேசிய கவி குவெம்பு விருது – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெலுங்கானா எம்.எல்.ஏ.க்களிடம் பேரம் பேசிய வழக்கில் பாஜக மூத்த தலைவர் பி.எல்.சந்தோஷ் நேரில் ஆஜராக காவல்துறை நோட்டீஸ் தலைமைத் தேர்தல் ஆணையராக அருண் கோயலை அவசர அவசரமாக ஒன்றிய அரசு நியமித்தது ஏன்?: தேர்தல் ஆணையர் அரசியல் சார்பற்றவராக இருக்க வேண்டும் – உச்சநீதிமன்றம் அவசர அவசரமாக இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் நியமிக்கப்பட்டது ஏன்? – ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி உ.பி: 581 கிலோ கஞ்சாவை விற்றுவிட்டு, எலி தின்றதாக நாடகமாடிய காவல்துறையினர் மேற்குவங்கம்: ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகளுக்கு எதிராக காவி துண்டு அணிந்து வந்த மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலால் ஹிஜாபிற்கு தடை விதித்த பள்ளி நிர்வாகம் © Copyrights 2020 - Aran Media Creations | Web Developed & Marketed by Reptus Terms & Conditions Privacy Policy Pricing Refund Policy Contact Us FacebookTwitterInstagramYoutubeTelegram முகப்பு செய்திகள் தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா விளையாட்டு உங்களுக்காக அரண்செய் இதழ் கட்டுரை மேலும் நேர்காணல் தொடர் பொருளாதாரம் அறிவியல் & தொழில்நுட்பம் கல்வி மருத்துவம் சமூக வலைதளம் ஊடகம் கலை & இலக்கியம் பயணம் வாழ்வியல் ஆன்மீகம் Support us சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது. மாத சந்தா ஆண்டு சந்தா ஒருமுறை சந்தா சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.
ஒவ்வொரு தயாரிப்புக்கும் அதன் சொந்த MOQ உள்ளது, தயவுசெய்து உங்களுக்கு விவரங்களை அனுப்ப எங்களை தொடர்பு கொள்ளவும். தனிப்பயனாக்கப்பட்ட ஆர்டர்களை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்களா? ஆம், நிச்சயமாக, நாங்கள் OEM மற்றும் ODM ஐ வழங்க முடியும். தயவுசெய்து தயவுசெய்து உங்கள் மாதிரிகள் அல்லது வரைபடத்தை எங்களுக்கு வழங்குங்கள், இதன்மூலம் நாங்கள் அதை உங்கள் தேவைகளாகத் தனிப்பயனாக்கலாம். சாதாரண முன்னணி நேரம் என்ன? உங்கள் ஆர்டரின் அளவைப் பொறுத்து சுமார் 7 நாட்கள். நீங்கள் மாதிரியை வழங்க முடியுமா? ஆம். நாங்கள் இலவச மாதிரியை வழங்க முடியும் (அது கையிருப்பில் இருந்தால்) மற்றும் ஷிப்பிங் செலவை வாடிக்கையாளரால் வழங்க வேண்டும். எத்தனை நாட்களுக்கு நான் மாதிரிகள் பெற முடியும்? கலைப்படைப்பு உறுதிப்படுத்தப்பட்ட ஒரு வாரத்திற்குள், மாதிரிகள் அனுப்பப்படலாம். எங்களை ஏன் தேர்வு செய்கிறீர்கள்? எங்களிடம் சொந்த தொழிற்சாலை உள்ளது, கையிருப்பில் நிலையான பாகங்கள், ஆதரவு மாதிரி செயலாக்கம் மற்றும் வாடிக்கையாளர்களின் மாதிரியின் படி உற்பத்தி. அனைத்து தயாரிப்புகளும் கண்டிப்பாக சோதிக்கப்படும், அவை அனைத்தும் சரியான நிலையில் உள்ளதா என்பதை உறுதி செய்ய. பணம் செலுத்தும் காலம் என்ன? வழக்கமாக டி/டி 50% வைப்புத்தொகையாக, நாங்கள் உற்பத்தி மற்றும் பேக்கிங்கை முடித்தவுடன், வாடிக்கையாளருக்கு பொருட்கள் மற்றும் பேக்கேஜின் புகைப்படத்தை கொடுப்போம். பின்னர் வாடிக்கையாளர் 50% தொகையை செலுத்துகிறார். எங்களுடன் வேலை செய்ய வேண்டுமா? எங்களை தொடர்பு கொள்ள சமீபத்திய செய்தி ஷாங்காயர் உயர் அழுத்த அமுக்கி தொழில் ரீதியாக PET பாட்டில் ப்ளோவிக்கு ... 09WM : காற்று திறன் : 1.0 ​​~ 1.2Nm3/நிமிடம் காற்று அழுத்தம் : 3.0Mpa மோட்டார் பவர் : 15HP (11KW) ~ 20HP (15KW) மாடல் ஏர் டிஸ்சார்ஜ் ) அளவு L × W × H (mm) 09WM-1130 1.0 3.0 11 670 1520 × 800 × 950 09WM-1130H 1.2 3.0 ... மேலும் படிக்க அரை தானியங்கி பாட்டில் ஊதுதல் இயந்திரத்தின் செயல்பாட்டுக் கொள்கை எங்கள் குழுவின் புதிய மாடலான 2 துவாரங்களைக் கொண்ட ஊதி மோல்டிங் இயந்திரங்கள் PET, PP பாட்டில்கள் மற்றும் மினரல் வாட்டர் பாட்டில்கள், பானம் பாட்டில்கள் மற்றும் சிக்கலான மற்ற கொள்கலன்களை ஊதுவதற்குப் பயன்படுத்தப்படும் இரண்டு-படி இயந்திரமாகும். ரோட்டரி அகச்சிவப்பு ஹீட்டர் முன்னதாக பாட்டில் சூடாக்க பயன்படுத்தப்படுகிறது ... மேலும் படிக்க எம்-வகை எதிர்க்கப்பட்ட சமச்சீர் பரஸ்பர எண்ணெய் இல்லாத உயர் அழுத்த காற்று கம்பி ... எம்-வகை எதிர்க்கப்பட்ட சமநிலையான ரெசிபிராகேட்டிங் எண்ணெய் இல்லாத உயர் அழுத்த காற்று அமுக்கி ஒரு புதிய உயர் நெம்புகோல் தொடர். சாதாரண அமுக்கிகளுடன் ஒப்பிடுகையில், இந்த எண்ணெய் இல்லாத அமுக்கி சில நன்மைகளைக் கொண்டுள்ளது: நீர் குளிரூட்டல்: முழுமையாக எண்ணெய் இல்லாத மேம்பட்ட உள்ளமைக்கப்பட்ட சமநிலை அமைப்பு; அதிர்வு இல்லாத செயல்பாடு; கள் தேவையில்லை ... மேலும் படிக்க விலைப்பட்டியலுக்கான விசாரணை எங்கள் தயாரிப்புகள் அல்லது விலைப்பட்டியல் பற்றிய விசாரணைகளுக்கு, தயவுசெய்து உங்கள் மின்னஞ்சலை எங்களுக்கு விடுங்கள், நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு கொள்வோம். விலைப்பட்டியலுக்கான விசாரணை தகவல் எங்களை பற்றி தயாரிப்புகள் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் எங்களை தொடர்பு கொள்ள தொலைபேசி: +86 13165410090 மின்னஞ்சல்: sales@jndassaw.com jndassaw@163.com அறை 702A, அலகு 2, Bidg6, HongKong Int'l Community, NO.153 Wuyingshan Middle Road, Tianqiao District, Jinan City
யாழ் மாவட்டத்தின் பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தினால் தை மாதம் 18ஆம் திகதி 2022 ஆம் ஆண்டு முதல் வீட்டில் இருந்து வைத்தியசாலைக்கு அழைத்து வர முடியாத நிலையில் உள்ள முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் மோசமடைந்து செல்லும் நோயினால் பாதிக்கப்பட்டவர்கள், படுக்கையில் உள்ள நோயாளர்களுக்கு வீட்டில் வழங்கக்கூடிய மருத்துவ பராமரிப்பு சேவைகள் ஆரம்பிக்கப்பட உள்ளன.இத்திட்டமானது பருத்தித்துறை, தெல்லிப்பளை, சாவகச்சேரி, ஊர்காவற்துறை போன்ற ஆதார வைத்தியசாலைகள் மூலம் முன்னெடுக்கப்பட உள்ளது. இவ்விசேட பராமரிப்பு தேவையானவர்கள் தமக்கு அருகில் உள்ள மேற்கூறப்பட்ட வைத்தியசாலைகளில் ஏதாவது ஒன்றிற்குரிய கீழே வழங்கப்பட்ட தொலைபேசி இலக்கங்களுக்கு காலை 8.00 மணி முதல் மாலை 4.00 வரை அழைப்பதன் மூலம் தமக்கு வழங்கப்பட வேண்டிய பராமரிப்பினை முன்பதிவு செய்ய வேண்டும். அதன் பின் அவ் வைத்தியசாலையில் இருந்து மருத்துவ பராமரிப்பு குழுவினர் நோயாளியின் வீட்டிற்கு வருகை தந்து அவர்களுடைய நோய் நிலைமையை ஆராய்ந்து வீட்டில் வழங்கக்கூடிய மருத்துவ பராமரிப்பினை வழங்குவார்கள். பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை – 021 226 3262 தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலை – 021 205 9227 சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை – 021 227 1150 ஊர்காவற்துறை ஆதார வைத்தியசாலை – 021 221 1660 இச்சேவை மூலம் அவசர மருத்துவ சேவைகள் எதுவும் வழங்கப்பட மாட்டாது. இச்சேவை மூலம் அவசர தேவைகள் அற்ற பராமரிப்பு மட்டுமே வழங்கப்படும். (உதாரணமாக – உணவு வழங்கும் குழாய், சிறுநீர் குழாய் மாற்றுதல், மருந்து கட்டுதல், வீட்டில் வழங்கக்கூடிய இயன் மருத்துவ சேவைகள் போன்றவை)அவ்வாறு அந்நோயாளிகளுக்கு அவசர மருத்துவ தேவைகள் ஏற்படின் 1990 அவசர அம்புலன்ஸ் சேவையை அழைப்பதன் மூலம் வைத்தியசாலைக்கு செல்ல முடியும். Beitrags-Navigation சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வெடிப்பினால் பாதிக்கப்பட்டோருக்கு நஷ்டஈடு அதிகரித்து கொண்டே இருக்கும் அரிசியின் விலை! Von இ.நேமி தொடர்புடைய‌வை செய்திகள் நாட்டில் தற்பொழுது நிலவும் மூடு பனி இயற்கையானது அல்ல! Dez 8, 2022 இ.நேமி செய்திகள் கட்டடங்கள் இடிந்து விழும் அபாயங்கள் ! மாண்டூஸ் சூறாவளி தொடர்பில் விடுக்கப்பட்ட எச்சரிக்கை ; Dez 8, 2022 இ.நேமி செய்திகள் மலையகத்தை பந்தாடிய மினி சூறாவளி Dez 8, 2022 இ.நேமி சிறுப்பிட்டி இணையம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது…..ஊரையும் உறவையும் இணைக்கும் ஓர் புதிய பாலம். சிறுப்பிட்டிய இணையம். தொடர்புகளுக்கு. தொலைபேசி எண் +41 78 222 57 84 Email.siruppiddyinfos@gmail.com
தேனி மாவட்டம் பெரியகுளம் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது கும்பக்கரை அருவி, அருவியில் தற்பொழுது நீர்வரத்து சீராக உள்ளதால் வெளி மாவட்ட, வெளிமாநில சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் இன்று மதுரையை சேர்ந்த செந்தில்குமார்எனது குடும்பத்தினருடன் கும்பக்கரை அருவிக்கு சென்று உள்ளார். அருவியில் குளிக்க செல்லும் பொழுது அவர் அணிந்திருந்த 2 பவுன் தங்க செயின் தொலைந்து விட்டது. இது சம்பந்தமாக வனச்சரகர் டேவிட்ராஜ் அவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர் தனது குழுவினருடன் சென்று தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டார். தேடுதலுக்குப் பிறகு2 பவுன் தங்கச்சங்கிலியை கண்டறிந்து உரிமை செந்தில்குமாரிடம் ஒப்படைத்தார்.தொலைந்து போன தங்க செயினை மீட்டுத் தந்த வனச்சரகர் டேவிட்ராஜன் மற்றும் வனத் துறையினருக்கு நன்றி தெரிவித்தனர். Tags # பெரியக்குளம் Tweet Share Pin it Comment About தமிழக குரல் பெரியக்குளம் by தமிழக குரல் — May 30, 2022 Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest Tags பெரியக்குளம் No comments: Post a Comment Newer Post Older Post Home Subscribe to: Post Comments (Atom) Post Top Ad தமிழக குரல் - தேனி தமிழகத்தின் வளர்ந்துவரும் #1 உள்ளூர் செய்தி இணையதளம், தேனி மாவட்டத்தின் உள்ளூர் செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.
ஜோடிப் பாம்புகள் போல் சடங்குகள் ஒவ்வொரு காலகட்டத்திலும் நம் வாழ்வோடு பிணைந்தே இருந்திருக்கின்றன. ஒவ்வொரு சமயம் ஒவ்வொரு விதமான சடங்குகளை தாண்டித்தான் வர வேண்டி இருக்கிறது. எனக்கு இது வேண்டாம் என ஒதுங்கிக்கொள்ள அசாத்திய துணிச்சல் தேவைப்படுகிறது. அது சடங்கோ, சம்பிரதாயமோ சந்தோஷமாக இருக்கும்பட்சத்தில் யாருக்கும் நஷ்டமில்லை. ஆனால், மன உளைச்சல் தரும் சடங்குகளை காலத்துக்கும் சபித்துக்கொண்டே இருக்கத் தோன்றுகிறது. சமீபத்தில் என் உறவினர் ஒருவரின் இறுதி நிகழ்வுக்குச் சென்றிருந்தேன். அது, அவரின் இறுதி நிகழ்வுதானே ஒழிய அவரின் மனைவியின் இறுதி நிகழ்வல்ல என்பதை மக்கள் புரிந்து கொள்ளவே இல்லை. ஒரு வருட காலமாக கேன்சரால் பாதிக்கப்பட்ட கணவரோடு சேர்ந்து போராடியேபடி இருந்தவர்… அந்த மனிதர் நோயோடு போராடிக்கொண்டிருந்தார் என்றால் இவர் வாழ்வியலோடு! கணவரின் வருமானம் நின்றுவிட்ட நிலையில் மகனின் தயவோடு கணவரின் ஹாஸ்பிட்டல் செலவை பார்த்துக்கொள்ள வேண்டிய நிலை. இரவும் பகலும் வலியோடு அவஸ்தைப்படும் கணவனின் துயரத்தை துடைப்பதோடு, அவரது மலஜலத்தையும் துடைக்க வேண்டிய நிலை. 50 வயதுக்குள் அத்தனை வேதனைகளையும் அனுபவித்துவிட்டார் அந்தப் பெண். மருத்துவமனை, மருத்துவமனையாக அலைச்சல், மருந்து, மாத்திரை, வந்து பார்க்கிறவர்களின் கேள்விகளுக்கு பதில் என அந்த வருடத்தில் கணவரோடு சேர்ந்து இவரும் வற்றிப் போயிருந்தார். கடைசி இரண்டு மூன்று இரவுகள் இவர் கண்ணுறங்கவில்லை. உண்மையில் கணவர் இறுதி மூச்சை விட்டபோதுதான் இவருக்கு கொஞ்சம் ஆசுவாசமே! கண்ணாடிப் பெட்டிக்கு அருகில் அவர் முகம் பார்த்தபடி நாற்காலியில் உட்கார்த்தி வைக்கப்பட்டிருந்தார் அந்தப் பெண். காலையில் இருந்து உட்கர்ந்து உட்கார்ந்து கால்கள் வலிக்க, சற்று கீழே இறங்கி உட்காரப் போனவரை தடுத்து நிறுத்தினார் ஓர் உறவுக்காரப் பெண். “சொந்தக்காரங்க வர்ற நேரம்… இங்கேயே உட்காருங்க” என்றார். காபித்தண்ணிக்கூட குடிக்காமல் காலையில் இருந்து கால் வலிக்க வலிக்க உட்காந்திருந்தவரை வருகிறவர்களின் ஆறுதல் சுமை வேறு அழுத்தியது. அது முடிந்ததும் ஆரம்பித்தது அடுத்த பிரச்னை. இறந்து போனவரைக் குளிப்பாட்டும் போது அந்தத் தண்ணீர், மனைவியின் மீது விழ வேண்டும் என்பது சம்பிரதாயமாம். இதற்கு பெண் குடும்பத்தார் மறுப்புத் தெரிவித்தனர். “அவர் கேன்சருக்கு ஆளானவர். அதனால் தலையை மட்டும் கசக்கிவிட்டு சும்மா கொஞ்சம் தண்ணி தெளிச்சு விடுங்க. கிருமி எதாவது பாதிச்சிடப் போகுது அதுக்கும் சின்ன வயசுதானே! அதுவும் வாழ வேண்டி இருக்குல்ல?” என்றார் அந்த பெண்ணின் அண்ணி. “அதெப்படி? இதுதான் முக்கியமான சம்பிரதாயம்” என்பது சம்பந்தி வீட்டாரின் வாதம். நீண்டு கொண்டே இருந்த வாதத்தில் வெற்றி பெற்றவர்கள் சம்பந்தம் பண்ணியவர்கள்தான். கேன்சர் தொற்று நோயல்ல என்றாலும் பல காலமாக குளிக்காமல், படுக்கையில் இயற்கை உபாதைகளை வெளியேற்றியவர் என்ற அருவெறுப்போ, அவர் அனுபவித்த துன்பத்தை தன் மகளும் அனுபவிக்க வேண்டாம் என்ற பயமோ அவர்களை அப்படி வாதாட வைத்தது. அப்படி குளிப்பாட்டும் வேளையில் அந்தப் பெண்ணின் மனதில் என்னவெல்லாம் தோன்றி இருக்கும். அந்த மனம் என்ன பாடுபட்டிருக்கும்? இந்த மாதிரியான எத்தனையோ சம்பிரதாயங்களுக்கு பெண்கள் உட்படுத்தப்படுத்தப்படுகிறார்கள். இதைப் பெண்களும் ஒத்துக்கொள்கிறார்க்ள். ஆனால், இப்படி விதிவிலக்கான சில சம்பவங்களின் போதாவது அவர்களின் உணர்வுகளுக்கு அந்த சம்பந்தி வீட்டார் மதிப்புக் கொடுத்திருக்கலாம்தானே. இப்படி ஒன்று இரண்டல்ல… அது ஒரு நள்ளிரவு. முக்காடிடப்பட்டு, குத்தியக் கண்ணாடி வளையல்களால் கைகளில் ரத்தப்பூ பூக்க, விசும்பலோடு உட்கார்ந்திருந்தார் என் பெரியம்மா. என் பெரியப்பா இறந்ததற்கான நடப்புச் சடங்கு அது. சுற்றியிருந்த பெண்கள் என் பெரியம்மாவின் தாலியை அறுத்து, பாலில் எறிந்த அந்த நொடியில் என் பெரியம்மாவின் “ஓ”வென்ற அலறல் தெருவெங்கும் நிறைந்து வழிந்தது. அது கொடுத்த மனவலி என் பெரியப்பா இறந்த போதிருந்த துக்கத்தைவிட அதிகமாக இருந்தது எனக்கு. எப்பேர்பட்ட மனிதர்களின் இறப்பிற்கு பின்னும் இயல்பாகத்தான் சுழன்று கொண்டிருக்கிறது பூமி. நகமும் சதையுமாக வாழ்ந்தவர்களின் இழப்பு, வலி கொடுக்கக்கூடியதுதான். அதை விட சடங்கு என்ற பெயரில் பெண்களுக்கு இழைக்கப்படும் இத்தகைய அவமானங்கள், மனவலிகள்தான் அதைவிட மோசமானவை. இன்று, பல பெண்கள் கணவரை இழந்த பிறகும் பூவும் பொட்டும் வைத்துக்கொண்டாலும் கட்டாயம் அந்தச் சடங்கை தாண்டித்தான் வந்திருப்பார்கள். அவர்களைக் கேட்டால் புரியும் அந்த வலி. இது மாதிரியான எந்தவித சம்பிரதாயமும் ஆண்களுக்கு இல்லை. தன் மனைவி இறந்து கிடக்கும்போது வெளியே தன் துன்பத்தை மனதினுள் அலசி ஆராய்ந்தபடி உட்கார்ந்திருப்பார்கள் ஆண்கள். தன் துயரக் குளத்தில் தானே முங்கி எழும் இடைவெளி அந்தச் சமயத்தில் பெண்களுக்குக் கிடைக்காது. இதில் சொல்ல முடியாத ஓர் அவஸ்தை என்னவென்றால் இந்த மாதிரியான சம்பிரதாயங்களுக்கு செயலாளர், பொறுப்பாளர் எல்லாமே பெண்கள்தான். இது மாதிரியான ஒரு சடங்கு என் உறவினர் ஒருவரின் வீட்டில் நடந்த போது அதை எதிர்த்தவர் அந்த அம்மாவின் மகள் அல்ல… அந்த வீட்டின் ஆண்… அதாவது அவரது மகன். இறுக்கமான முகத்தோடு தன் வீட்டு பெண்களிடம் சத்தம் போட்டு பேசிக்கொண்டிருந்தார் அந்த அண்ணன். இறுதியில் பூவை பிய்த்தெறியாமல், கண்ணாடி வளையலை உடைக்காமல், வெறும் தாலி கழட்டும் சம்பவத்தை மட்டும் செய்தார்கள் அந்தப் பெண்கள். சிலரைத் தவிர பல பெண்களின் முகத்தில் அன்று ஏதோ ஒரு நிம்மதியைப் பார்க்க முடிந்த்து. அதில் பரவியிருந்த வெளிச்சம் அங்கிருந்த இருட்டைக் கிழிப்பது போல் இருந்தது. மகள் இதே விஷயத்தை வற்புறுத்தியிருந்தாலும் அவர் சொல் எடுபட்டிருக்குமா என்று தெரியவில்லை. ஆணின் சொல்லுக்கு கட்டுப்படும் மனப்பான்மையோடு வளர்ந்த சமூகம் அல்லவா இது. பெரும்பாலும் இத்தகைய விஷயங்களை எதிர்த்து நிற்பது ஆண்கள்தான் என்பது ஒத்துக்கொள்ளவேண்டிய விஷயம். பாராட்டப்பட வேண்டிய விஷயமும் கூட. ஊரையே பகைத்துக் கொண்டு, தன் வீட்டு கிரகப்பிரவேசத்தை தன் விதவைத் தாயை முன்னிறுத்தி நடத்திய அந்த உறவினரின் மேல் விழுந்த மதிப்பின் நிழல் என்றென்றும் மறக்கவியலாததது. இது போல் ஒவ்வொரு வீட்டு ஆணும் இதற்காக எடுக்கும் சிறு சிறு முயற்சிகள், வெள்ளமாக இந்த சடங்குகளை அழித்துச் சென்றுவிடும் என்பதில் சந்தேகமே இல்லை. – ஸ்ரீதேவி மோகன் Image courtesy: http://news.bbcimg.co.uk/media/images http://mybrowneggs.files.wordpress.com பகிர் Twitter Facebook Tumblr Pinterest Email Print LinkedIn Reddit Pocket Like this: Like ஏற்றப்படுகின்றது... Related This entry was posted in Environment, Life, Read and tagged குங்குமம் தோழி, சடங்குகள், சம்பிரதாயங்கள், ஸ்ரீதேவி மோகன், Kungumam Thozhi, Rituals in India for women, Sridevi Mohan by kungumamthozhi. Bookmark the permalink.
கர்ப்ப காலம் பல பொறுப்புகளை உங்களிடம் கொண்டு வருவதுடன், பொறுப்பை எடுத்துக்கொள்வதற்கான முக்கியத்துவத்தை உங்களை உணரவைக்கும். நீங்கள் உங்கள் சிறிய குழந்தையுடன் ஆசீர்வதிக்கப்பட்ட பிறகு, இது கடினமாகிவிடும். நீங்கள் எல்லாவற்றையும் உங்கள் குழந்தைக்காக மாற்ற வேண்டும் – உங்கள் அட்டவணையில் இருந்து உங்கள் வாழ்க்கை முறையையும் கூட. நீங்கள் முதலில் உங்கள் குழந்தையின் தேவைகளை பற்றி யோசிக்க வேண்டும். மேலும் நீங்களாகவே புதிய விஷயங்களை கற்றுக்கொள்ள ஆரம்பித்து விடுவீர்கள். நீங்கள் உங்கள் குழந்தைக்கு சுகாதாரமான முறையில் உணவு கொடுப்பதிலிருந்து உங்கள் குழந்தையை ஆரோக்யமாக வைத்து கொள்வது வரை அனைத்தையும் ஒன்று அல்லது பல வழிகளில் கற்றுக்கொள்வீர்கள். உங்கள் குழந்தையின் நகங்களை பராமரிப்பது ஒரு கடினமான பணியாகும், மேலும் பல தாய்மார்களிடம் குழந்தைகளின் நகங்களை சரியான வழிகளில் நீக்குவது அல்லது பராமரிப்பது பற்றிய விழிப்புணர்வு இருப்பதில்லை. கொஞ்சம் வளர்ந்த குழந்தைகளை ஒப்பிடும்போது பிறந்த குழந்தைகள், மிகவும் மென்மையான மற்றும் வேகமாக வளர்ந்து வரும் நகங்களைக் கொண்டிருக்கிறார்கள். எனவே, அவற்றை பராமரிப்பதற்கு நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். குழந்தைகளின் நகங்களை அடிக்கடி வெட்டிவிடுவது அவசியம். தசைக் கட்டுப்பாடு அறியாமலேயே, அவர்களின் உடலை அசைக்கும் போதோ, கை அல்லது கால்களை அசைக்கும் போதோ, அவர்களின் மென்மையான தோலில் காயங்கள் ஏற்பட கூடும். இப்போது நீங்கள் அவர்களின் நகங்களை பராமரிப்பது எவ்வளவு எளிது தெரியுமா? அது எப்படி என்று கேட்டால், அதற்கான 3 வழிகளை பார்ப்போம். 1 நகம் அரவும் அரம் ( nail file ) உங்கள் குழந்தையின் நகத்தை குறைப்பதற்கான சிறந்த வழி, அவர்களின் நகங்களை அரவுதல். அதெற்கென உருவாக்கப்பட்ட எமிரேட் போர்டு அல்லது நகத்தை குறைப்பதற்கான சாதனங்களை பயன்படுத்தவும். ஆனால் இந்த முறையில் அதிக நேரம் எடுக்கும், ஆனால் இறுதியில் நீங்கள் அதை செய்து முடித்திடலாம். உங்கள் குழந்தையின் நகங்களும் குறைக்கப்பட்டுவிடும். ஆனால் நீங்கள் இதை கையாளாலும் போது, உங்கள் குழந்தையின் கை தோள்களை காயப்படுத்திவிடாத படி மிக கவனத்துடன் கையாள வேண்டும். அப்படி காயத்தை ஏற்படுத்தினால் அது சிக்கலை ஏற்படுத்தும். 2 குழந்தைகளுக்கான நகவெட்டிகள் குழந்தைகளின் நகங்களை குறைப்பதற்கெனவே பிரத்யேகமாகவே நகவெட்டிகள் சிறப்பாக வடிவமைக்கப்படுகின்றன. நமக்கு இவை எளிதில் கடைகளில் கிடைத்து விடும். இது ஒரு குழந்தையின் நகங்களை களைவதற்கென வடிவமைக்கப்படுவது, அதுவும் மிகவும் வசதியானதாகவும் இருக்கும். ஆனால் எப்படி உபயோகிப்பது என்றால், நீங்கள் அவர்களின் நகங்களை குறைக்க துவங்கும் போது, விரல் நுனியை நகங்களிருந்து பின்னுக்கு தள்ளி, அவர்களின் நகங்களை வெட்ட வேண்டும். இது அவர்களின் விரலின் சதை பகுதி வெட்டப்படுவதிலிருந்து பாதுகாக்கும். கால் விரல் நகங்களை அகற்றுவதற்கு, உங்கள் குழந்தையின் கால்களை உறுதியுடன் பிடித்து கொள்ள வேண்டும். 3 அவர்கள் தூங்கும் போது குறைக்கவும் உங்கள் குழந்தைகள் விழித்துக்கொண்டிருக்கும் போது உங்கள் குழந்தையின் நகங்களைக் குறைக்க மிகவும் பயமாக இருந்தால், அவர்கள் தூங்கும் வரை காத்திருங்கள். இது அவர்கள் நகங்களை குறைக்கும் எளிமையான வழி. உங்களுக்கு போதுமான அதிர்ஷ்டம் இருந்தால், அவர்கள் எழுந்திருக்காமல் உங்களால் நகங்களை வெட்ட முடியும். இதை செய்ய போதுமான அளவு ஒளி தேவைப்படும், எனவே போதுமான ஒளி உள்ளதா என உறுதிப்படுத்தி கொள்ளுங்கள். சில பெற்றோர் தங்கள் குழந்தைகளின் நகங்களை கொஞ்சம் கொஞ்சமாக பற்களால் கடித்தெடுக்க முயற்சிப்பார்கள். இது பரிந்துரைக்கப்படுவதில்லை, நீங்கள் அவ்வாறு செய்யும்போது, அது கிருமிகளை அறிமுகப்படுத்தலாம் மற்றும் உங்கள் குழந்தையின் நகங்கள் கூர்மையாகவும், கடினமானதாகவும் மாறும். இது உங்கள் குழந்தையின் தோலில் சிராய்ப்புகளை ஏற்படுத்தலாம். எனவே, சரியான வழிமுறைகளை பின்பற்றி உங்கள் குழந்தையின் நகங்களை பாதுகாப்பான முறையில் பராமரியுங்கள். Share this: Twitter Facebook Like this: Like Loading... Post navigation ← Previous Post Next Post → Related Posts 10-facts-about-parenting-and-your-child-that-you-didnt-know-about Leave a Comment / [] / By tinystepin After all the research about having a baby, we're sure you think you know everything about parenting and childcare. We… 6-reasons-why-moms-are-the-best Leave a Comment / [] / By tinystepin They hold your world together. They watch you grow, they watch you fall, they pick you up and they always… Leave a Reply Cancel reply Recent Posts பெண்களே! முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை நீக்க 8 வழிகள்..! கர்ப்பகாலத்தில் நீங்கள் தொடக்கூடாத 3 பழங்கள்! शादी के बाद, पति-पत्नी के लिए सबसे खुशनुमा साल कौनसा होता है? – आप चौंक जायेंगे – உடலுக்கு அவசியமான 5 உணவுப்பொருட்கள்..!! பெண்களுக்கு ஏற்படும் கருப்பை கட்டிகள்..!! Categories Categories Select Category Baby Nutrition (5) Lifestyle (1) Parenting (19) Pregnancy (25) Toddler (9) Uncategorized (6,127) [“All 9 tablet”] (1) [“Baby Colic”] (1) [“Baby Health”] (17) [“Baby Names”] (1) [“Baby”] (16) [“Beauty”] (5) [“Breastfeeding”] (3) [“Emotional Support”] (18) [“Fitness”] (4) [“Getting Pregnant”] (12) [“Mom Health”] (14) [“Mom Nutrition”] (3) [“Mother care”] (17) [“Nutrition”] (3) [“Others”] (44) [“Pregnancy Health & Care”] (2) [“Pregnancy Symptoms”] (3) [“Preschooler”] (1) [“Vaccination”] (3) [] (3,798) [{“$oid”:”57fe9645fe52a207c30bbf03″}] (5) [{“$oid”:”57fe966dfe52a207c30bbf05″}] (41) [{“$oid”:”57fe969bfe52a207c30bbf07″}] (18) [{“$oid”:”57fe96d6fe52a207c30bbf0b”} (14) [{“$oid”:”58d3d7247c58d7042ca2d0c5″}] (13) {“$oid”:”581c91abccf4ac103b2430eb”}] (27) {“$oid”:”58d4b9237c58d7042ca2d0c9″}] (8) {“$oid”:”58d4c4757c58d7042ca2d0cf”}] (18)
ஒரு கேம் ஆடலாமா. இந்த வயசுக்கப்புறமா என்று யோசிக்காதீர்கள். ஓடவேண்டாம். ஒளிய வேண்டாம். உட்கார்ந்தவாரே ஒய்யாரமாக ஆடலாம். நான் கேட்கும் கேள்விகளுக்கு டக்கென்று மனதில் தோன்றும் பதிலை சொல்லும் சிம்பிள் கேம். ’பெப்ஸி’ கோலாவிற்கு உயிர் வந்து ஒரு உருவமாக, மனிதனாக வந்து நின்றால், அந்த உருவம் என்னவாக இருக்கும்? ஆணா பெண்ணா? ஆண் என்கிறீர்கள், ஓகே. அந்த ஆண் டீன் ஏஜ்காரரா, மிடில் ஏஜ் மனிதரா இல்லை கிழ போல்ட்டா? டீன் ஏஜ் என்கிறீர்கள். சரி. ‘மிரிண்டா’ பானத்திற்கு உயிர் வந்தால் அந்த உருவம் என்னவாக இருக்கும்? பெண் என்று படக்கென்று சொல்கிறீர்களே. பலே. ’புல்லட்’ வண்டியை ஓட்டுகிறவர் எப்பேர்பட்டவராக இருப்பார்? ‘உயரமாக, தாட்டியாக, கர்லா கட்டை போல் மிடுக்கென்று இருப்பார்’ என்று அடித்துக் கூறுகிறீர்களே, பேஷ். லாஸ்ட் கேள்வி. ‘ஆர்எம்கேவி’ மற்றும் ‘போத்தீஸ்’ இரு பிராண்டுகளும் உருவமாக மாறினால் பெண்களாக இருப்பார்கள் என்று கரெக்ட்டாகச் சொல்வீர்கள். கேள்வி அதுவல்ல. இந்த இருவரில் யார் அழகாக இருப்பாள்? ஆர்எம்கேவி என்று ஏன் தலையை அஷ்டகோணலாக்கி கால் விரலால் தரையைத் தேய்த்தவாறு சொல்கிறீர்கள். ஓஹோ, வெட்கமா. சரி சரி! வெற்றிகரமான பிராண்டுகளைப் பற்றிக் கேட்டபோது அவை எந்த இனம், என்ன வயது, எப்பேர்பட்ட குணம் கொண்டது, எத்தகைய குணாதிசயங்கள் உடையது என்று படக்கென்று உங்களால் கூற முடிகிறது. நீங்கள் கூறியதைத் தான் பலர் கூறுவார்கள். கூறியிருக்கிறார்கள். இது எப்படி சாத்தியப்படுகிறது? அதற்குக் காரணம் இந்த பிராண்டுகளுக்கு வடிவமைக்கப்பட்ட திட்டமிட்ட, தெளிவான, திறமையான பர்சனாலிடி. அதாவது ஆளுமை. மனிதர்களுக்கு பர்சனாலிடி இருப்பது போலவே பிராண்டுகளுக்கும் பர்சனாலிடி இருக்கும். இருக்கவேண்டும். பிராண்ட் பர்சனாலிடி என்பது பிராண்டிற்கென்று இருக்கும் பிரத்யேக மனித குணாதிசயங்கள். எந்த பிராண்டையும் மனிதர்களை விளக்குவது போல் இனம், வயது, வாழும் இடம், வருமானம், உளவியல் ரீதியான குணாதிசயங்கள் போன்றவற்றைக் கொண்டு விளக்கலாம். விளக்க முடியும். விளக்க வேண்டும். பிராண்ட் பர்சனாலிடியை வடிவமைத்து அதை பாக்கேஜிங் முதல் பிரமோஷன் வரை வாடிக்கையாளரிடம் சேர்த்து அவருக்கு பர்சனாலிடியை தெளிவாகப் புரிய வைப்பது மார்க்கெட்டரின் முக்கியமான வேலைகளில் ஒன்று. வெற்றிகரமான பிராண்டுகள் இதைத் திருப்திகரமாக செய்யும். அதனாலேயே வெற்றி பெறும். கேட்ட கேள்விகளுக்கு பட்டென்று பதிலளித்தீர்களே, அதுதான் அந்த பிராண்டுகளின் வெற்றி. பிராண்ட் பர்சனாலிடி மனிதர்கள் பர்சனாலிடி போலவே. இரண்டும் லேசில் அமையாது. நிலைநிறுத்த காலமும் முயற்சியும் தேவை. நிலைநிறுத்திவிட்டால் லேசில் மாறாது. மாறவும்கூடாது. காலா காலத்துக்கும் நிலைத்து நிற்க வேண்டியது. ஒருவரை இன்னொருவரிடமிருந்து வித்தியாசப்படுத்திக் காட்ட எப்படி ஆளுமை பயன்படுகிறதோ அதே போல் ஒரு பிராண்டை இன்னொரு பிராண்டிடமிருந்து வித்தியாசப் படுத்திக்காட்ட பிராண்ட் பர்சனாலிடி உதவுகிறது. ’கண்டதும் காதல்’ என்கிற கண்றாவி இருந்து தொலைத்தாலும் பொதுவாகவே நாம் சட்டென்று ஒருவரைச் சந்தித்து பட்டென்று ஈஷிக்கொண்டு உறவாடுவதில்லை. அவர் நல்லவரா, நம்ம டைப்பா, நமக்கு ஒத்துவருவாரா, நமக்கேற்றவரா என்று புரிந்துகொண்ட பிறகுதானே பழகுகிறோம். அதே போல்தான் பிராண்டுகளும். வாடிக்கையாளர் பொதுவாகவே கண்டதும் ஒரு பிராண்டை எடுத்து பையில் போடுவதில்லை. இது ஒத்து வருமா, நமக்கேற்றதா. நம் குடும்பத்துக்குச் சரியாக வருமா என்று அறிந்து தான் பிராண்டை வாங்குகிறார். தொடர்ந்து வாங்குவார். இதற்குத்தான் பிராண்டிற்கு பொசி ஷனிங்கும் பர்சனா லிடியும் தேவை. பிராண்டின் பர்சனாலிடியை பிரதானமாக நிர்ணயிப்பது பிராண்டின் பொசிஷனிங்தான். பிராண்டை பொசிஷனிங் செய்து அதற்கேற்பத்தான் பர்சனாலிடியை நிர்ணயிக்க வேண்டும். மிரிண்டாவின் பொசிஷனிங் ‘சேட்டை செய்யத் தூண்டும் சுவை’. அதாவது இதன் சுவையின் கிறக்கத்தில் பருகுபவர்கள் மற்றவர்களை கலாய்ப்பார்கள். இதைத்தான் அந்த பிராண்ட் ‘மிரிண்டா கண்ணு, கொஞ்சம் கலாட்டா பண்ணு’ என்று விளம்பரப்படுத்துகிறது. இதுதான் பொசிஷனிங் என்று நிர்ணயித்துக் கொண்டபின் இந்த பிராண்டிற்கு அறுபது வயதான கிராமத்து விவசாயி என்கிற பர்சனாலிடியை கொடுத்தால் எப்படி இருக்கும்? கன்றாவியாக இருக்கும். அதன் பின் மிரிண்டா தொப்பைக்குப் போகாது. குப்பைக்குத் தான் போகும்! அதனால்தான் மிரிண்டாவிற்கு அதன் பொசிஷனிங்கிற்கேற்ப ‘காலேஜ் படிக்கும், சூட்டிகையான, கூலான, கலாட்டா பிரியை’ என்கிற பர்சனாலிடியை கொடுத்திருக்கிறார்கள். அதற்கேற்ப பாக்கேஜிங் முதல் போஸ்டர்கள் வரை, விளம்பரங்கள் முதல் வியாபார தந்திரங்கள் வரை வடிவமைத்திருக்கிறார்கள். அழகான பொசிஷனிங், அதற்கேற்ற பர்சனாலிடி இருப்பதால் மிரிண்டா மார்க்கெட்டில் கொஞ்ச நஞ்சமல்ல, காட்டுத்தனமாக கலாட்டா பண்ண முடிகிறது! பர்சனாலிடி பற்றி எழுதிய பலரில் ஒருவர் ‘டேவிட் ஏக்கர்’. ‘யூனிவர்சிடி ஆஃப் கலிஃபோர்னியா’ புரொஃபசரான இவர் ‘பில்டிங் ஸ்ட்ராங் பிராண்ட்ஸ்’ என்கிற புத்தகத்தில் பிராண்ட் பர்சனாலிடி மூன்று முக்கிய பயன்களை அளிக்கிறது என்கிறார். பிராண்ட் பர்சனாலிடி மூலம் வாடிக்கையாளர்கள் தங்களைப் பற்றி உலகுக்கு பறைசாற்றிக்கொள்ள முடிகிறது. `நைக்கி’ ஷூ அணிபவருக்கு தான் ’ஃபிட்டாய் இருக்கும் ஸ்டைலான கூல் பார்ட்டி’ என்கிற நினைப்பு வருகிறது. பிராண்டிற்கு கொடுக்கப்பட்டிருக்கும் பர்சனாலிடியை அவர் தனதாக்கிக்கொள்ள முடிகிறது. பொருள் வகையிலுள்ள இரண்டு பிராண்டுகளின் பொசிஷனிங் கிட்டத்தட்ட ஒன்று போல் இருந்தால், அவை தரும் பயன்கள் ஏறக்குறைய ஒன்றாக இருந்தால் வாடிக்கையாளர் மனதில் அந்த பிராண்டுகளை பிரித்து வித்தியாசப்படுத்திக் காட்ட பர்சனாலிடி உதவுகிறது. ’க்ளினிக் ப்ளஸ்’, ‘பாண்டீன்’ இரண்டுமே ஒரே விலை, கிட்டதட்ட ஒரே பயன் அளித்தாலும் அவை வித்தியாசப்படுவது பர்சனாலிடி மூலம். க்ளினிக் ப்ளஸ்ஸிற்கு ஹவுஸ்ஃவைப் பர்சனாலிடி கொடுக்கப்பட்டிருக்க பாண்டீனிற்கோ காலேஜ் பெண்ணின் பர்சனாலிடி. பிராண்ட் பர்சனாலிடியின் மற்றுமொரு முக்கியமான பயன் அது பிராண்டின் விளம்பரங்களை வழி நடத்திச் செல்லும் திறன். எந்த ஒரு பிராண்டும் வாடிக்கையாளர்களிடம் தங்களைப் பற்றி பறைசாற்றிக்கொள்ள பல விளம்பர வழிகளை நாடுகிறது. டீவி, பத்திரிகை, ரேடியோ, போஸ்டர், ஹோர்டிங் என்று எத்தனையோ விதங்களில் விளம்பரப்படுத்துகின்றன. நாம் ஏற்கெனவே பார்த்தது போல் அனைத்து வழிகளிலேயும் ஒரு சேர ஒரே இமேஜை வாடிக்கையாளர்களிடம் தரவேண்டிய பெரிய பொறுப்பு மார்க்கெடர்களுக்கு உண்டு. அதைச் சரியாக செய்ய பிராண்ட் பர்சனாலிடி உதவுகிறது. பர்சனாலிடியை பற்றி கடைசியாய் ஒன்று. ‘பெப்ஸி’ போல் யாராலும் காப்பியடித்து ஒரு கோலாவை தரமுடியும். அதன் பாட்டிலை, டேஸ்டை, ஃபிஸ்ஸை காப்பியடித்து தரமுடியும். ஆனால் பெப்ஸியின் தனித்துவமான பர்சனாலிடியை எந்த கோலாவும் காப்பியடிக்கமுடியாது. அதன் பர்சனாலிடியை இன்னொரு கோலா ப்ராண்டில் மக்கள் கற்பனை கூட செய்யமுடியாது. இதுதான் பிராண்ட் பர்சனாலிடியின்…………..பர்சனாலிடி! ஏக்கர் சொன்னதை மனதின் லாக்கரில் பத்திரப்படுத்தி வையுங்கள்! satheeshkrishnamurthy@gmail.com What’s your reaction? Excited 0% Great 0% Unmoved 0% Shocked 0% Sad 0% Angry 0% Sign up to receive our newsletter in your inbox every day! GO Popular Articles அதிகம் விமர்சித்தவை வாசித்தவை 1 உதவியின் பெயரால் மதமாற்றம் செய்வது தவறு -... 2 தமிழக மாணவர்களிடம் கற்றல் குறைபாடு - ஆசிரியர்... 3 இஸ்லாம் மதம் மாறிய இந்துவை பிசி முஸ்லிம்... 4 ‘நிறைய உழைக்கிறார்... கொஞ்சம் ஓய்வு தேவை' -... 5 “இதுவரை கிடைத்தது இனிய அனுபவம்” - பாஜகவில்... 6 அநீதிகள் அகற்றப்படும் வரை ஐஐடிகளில் சமூக நீதியை... 7 15 ஆண்டுகளில் மீனாட்சியம்மன் கோயில் உண்டியல் வருமானம்... 1 இன்று மாலை உருவாகிறது புயல் | தமிழகத்திற்கு... 2 பதவி அளிப்பதாகக் கூறி உள்ளதையும் பறித்து துரோகம்:... 3 FIFA WC 2022 | ரொனால்டோ சுயநலவாதியா?... 4 ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ முதல் ‘வரலாறு முக்கியம்’... 5 FIFA WC 2022 | போர்ச்சுகல் அணியின்... 6 200 மில்லியன் யூரோ ஒப்பந்தம்: சவுதி அரேபியாவின்... 7 நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,660 விலை... சத்தீஸ்கர்... English தமிழ் தமிழகம் இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு ஆன்மிகம் சமூக வலைதளம் தொழில்நுட்பம் தொடர்கள் சமீபத்திய செய்திகள் கருத்துப் பேழை தலையங்கம் சிறப்புக் கட்டுரைகள் சினிமா தமிழ் சினிமா தென்னிந்திய சினிமா பாலிவுட் ஹாலிவுட் உலக சினிமா இணைப்பிதழ்கள் வணிக வீதி வெற்றிக் கொடி நலம் வாழ ஆனந்த ஜோதி இளமை புதுமை இந்து டாக்கீஸ் மாயா பஜார் உயிர் மூச்சு திசைகாட்டி ஆறாம் அறிவு சொந்த வீடு பெண் இன்று வீடியோக்கள் அரசியல் ஆன்மிகம் சினிமா செல்ஃபி விமர்சனம் பொது ஆல்பம் சினிமா அரசியல் ஆன்மிகம் மற்றவை About us Contact us Advertise with us FAQ Terms & Conditions Privacy Policy Rss Feeds e-Paper Kamadenu Subscriptions Feedback Find your Agent OUR APPS Group Sites The Hindu இந்து தமிழ் திசை Business Line BL on Campus Sportstar Frontline The Hindu Centre RoofandFloor STEP Young World Club Images Comments to: webmaster@hindutamil.co.in Copyright © 2022, இந்து தமிழ் திசை By using our site, you acknowledge that you have read and understand our Cookie Policy, Privacy Policy, and our Terms of Service.
கணவனும் மனைவியுமாக, பனகல் பார்க்கிலிருந்த அந்தத் துணிக்கடையிலிருந்து வெளிவந்தபோது மாலை மணிநான்கு. மனிதர்களை பதட்டத்துடன், அலையவைத்துக்கொண்டிருக்கிற வெயில். ஆண் பெண்பேதமின்றி வியர்வையில் ஊறியிருந்தனர். பெண்களின் கை இடுக்குகளில் வெண் சாம்பல் பூத்திருந்தது. சிலரது கன்னக் கதுப்புகளில் இடம்பெயர்ந்து, கண்மை. பின்னல்களில் பழுத்துக்கிடந்த மல்லிகைச் சரம். ஒழுங்குபடுத்தப் படாத போக்குவரத்து, ஆதில் நீரில் விழுந்து கரையேற முயற்சிக்கிற நாய்களைப்போல வாகனங்கள். இஞ்சி, புதினா, பச்சைக்கற்பூரம், ஸ்டிக்கர்பொட்டு, வளையல், உள்பாடி, பனியன், ஜட்டி, சாமி சரணம், பணம் அள்ள பத்துவழிகள், மல்லிகைச் சரம் விற்கிற நடைபாதைக்கடைகள், எதிர்கொண்டு அல்லது பின்புறம் தொடர்ந்து உடைந்த தமிழில் மயிலிறகு விசிறி, மணிகோர்த்த அலங்காரப் பைகள் விற்பவர்கள். அய்நூறில் ஆரம்பித்து ஐம்பது ரூபாய்க்குப் போலி கைத்தொலைபேசிகளை விற்கவென்று ஏமாந்த சோணகிரிகளைத் தேடியலையும் ஊதா நிறத் தலையர்கள். அவளுக்கு ஏமாற்றம், கண்கள் நீர்கோர்த்திருந்தன. கடைக்குள் நுழைகிறபோது அவளுக்குள் தளிர் விட்டிருந்த சந்தோஷம், அடுத்த இருபது நிமிட இடைவெளியில் காய்ந்து சருகுகளாகி உதிர்ந்துவிட்டன. நடந்தது இதுதான். புடவையின், கலரும் முந்தானையின் டிசைனும் ரொம்பவும் பிடித்திருந்தது, விற்பனையாளர் எடுத்துப் போட்டவுடனேயே, ‘பிடிச்சிறுக்கு பில் போடச் சொல்லுங்க’, என்றாள். வேற டிசைன்லயும் இருக்கிறது, பார்க்கறீங்களா, என்று அவர் கேட்டபோது, பக்கத்திலிருந்த கணவனைத் தேடினாள், பில் செக்ஷனில் இருந்தான். ஒரு சில நொடிகள் காத்திருந்த விற்பனையாளர், புரிந்து கொண்டு, அடுத்து நின்ற பெண்களுக்குப் புடவைகளை எடுத்துப் போடத் தொடங்கினார். பணம் செலுத்துமிடத்தில் வரிசையில் நிற்கவேண்டியிருந்தது. இவன் கையிலிருந்த ரசீதைக் காட்டினான், கூடவே ரசீதுக்குண்டான ஆயிரத்து நானூறு ரூபாய்க்காக மூன்று ஐநூறு ரூபாய் நோட்டுகளை என்ணிவைத்தான். காசாளர் ரசீதை ஒரு முறைப் பார்த்துவிட்டு, மேசையிலிருந்த பணத்தை இடது கைவிரல்களில் தொட்டு, வலது கை விரல்கள் துணையுடன் சுருக்கென்று எண்ணி, உட்புறமாக திறந்திருந்த மேசையில் மேசையில் போட்ட அதே வேகத்தில் நூறு ரூபாய் நோட்டொன்றை எடுத்துவைத்தார். பக்கத்திலிருந்த ஊழியரொருவர் பணம் செலுத்தப்பட்டதென்பதாய் முத்திரைப் பதித்தார். உடமையைப் பெறுவதற்காக வந்தபோது அங்கேயும் கூட்டம். காத்திருந்தார்கள். இவர்கள் முறைவந்தது. ரசீதை வாங்கிப் பார்த்து ஒருவன் ‘கொடுக்கப்பட்டது’ என்கிற முத்திரையை இவர்களது ரசீதில் பதிக்க, சீருடையிலிருந்த மற்றொரு சிறுவன், இவர்களது புடவையை, கடையின் பெயருடனிருந்த துணிப்பையை எடுத்து அதன் உள்ளேவைத்தான். பைகொஞ்சம் அளவிற் சிறிது. புடைவையோடிருந்த காகிதப்பை கிழிந்தது. நழுவிய புடவை தரையில் விழுந்தது. விழுந்த புடவையைக் கையிலெடுத்த பையன் இன்னொரு பையைத் தேர்ந்தெடுத்தான். ‘வெங்கிட்டு’ என்றென்கிற கணவன் வேங்கிடபதிக்குக் கோபம் வந்தது, ‘வேண்டாம்’ என்றான். பையன் திருதிருவென விழித்தான். பக்கத்திலிருந்த இன்னொருவன் உதவிக்கு வந்தான். ‘சார், என்ன சொல்றீங்க?’. ‘புரியலை, தமிழ்லதானே சொல்றேன்’, எங்களுக்கு வேண்டாம். சந்தண பொட்டு ஊழியர் ஒருவர், குறுக்கிட்டார். சார், நானும் பார்த்துக்கொண்டுதானிருந்தேன். கொஞ்சம் கவனக்குறைவு, கீழே விழுந்துவிட்டது. வேறப் பெருசா ஒண்ணுமில்லை. வேண்டுமென்றால் செக்ஷனுக்குப் போயிட்டு வேறப் புடவை எடுத்துக்குங்களேன். இல்லை, எங்களுக்கு விருப்பமில்லை. எங்கப் பணத்தைத் திருப்பிக் கொடுக்கப் பாருங்க. ‘ ஏம்மா.. அவர்கிட்ட கொஞ்சம் சொல்லுங்களேன்’, ஊழியர் இவளிடம் முறையிட்டார். தேவகிக்கு, வெங்கிட்டை புரியும். பொடவை போனால் போகுது, பெரிதாக இவன் பிரச்சினை பண்ணாமல் கடையிலிருந்து இறங்கவேண்டுமே’, என பிரார்த்தனை செய்தாள். புரிந்துகொண்ட ஊழியன், ஓடிச் சென்று ‘டை’ கட்டிய இன்னொரு சந்தணப்பொட்டு ஆசாமியை அழைந்துவந்தான். உங்களுக்குப் பணந்தானே வேண்டும், உள்ளே வாங்க பேசுவோம், என்றான். முறைத்து விட்டு ரசீதை வாங்கிக்கொண்டு போன ஆசாமி, அரைமணி நேரம் இவர்களை காத்திருக்கவைத்து, பணத்தைத் திரும்பக் கொண்டுவந்தவன், வெங்கிட்டை அலட்சியம் செய்துவிட்டுத் தேவகியிடம் கொடுத்தான். சுருக்கென்று கடையைவிட்டு வெங்கிட்டு வெளியேற, இவள் குமுறலுடன் அவன் பின்னே ஓடிவந்தாள். தெரிந்தவர்கள் எதிர்பட்டிருந்தால், உடைந்து அழுதுவிடுவாள்போல. வழக்கப்படி மனதை அமைதிபடுத்திக்கொண்டவள், ‘ஏங்க, நீங்க பசிதாங்கமாட்டீங்களே ஏதாது சாப்பிட்டுவிட்டுப் போகலாமே’ என்கிறாள். எனக்கெதுவும் வேண்டாம். வேளையாய் ஊர் போய்ச் சேரவேண்டும் – அவன். இப்போதைக்கு அவனிடத்தில் பேச்சைத் தவிர்ப்பது உத்தமம். வாயை மூடிக்கொண்டாள். அவன் கோபத்தில் இருக்கிறான். இனி அடுத்த சில மணி நேரத்திற்கு, அவனுடைய சாம்ராச்சியம்: வானளவு அதிகாரம், கொதித்துக்கொண்டிருக்கும் மூளைக்கு உகந்த நீதி, துரிதகதியில் எதிராளிக்குத் தண்டனை. சாலையைக்கடந்து ஒருவழியாக உஸ்மான் ரோட்டின் மறுகரைக்கு வந்திருந்தார்கள். துணிக்கடையிலிருந்து கைநீட்டிக்கொண்டு ஈ மொய்க்கும் சவலைப்பிள்ளையுடன் தொடர்ந்த இளம்பெண்ணுக்கு கணவனுக்குத் தெரியாமல் ஒரு ரூபாய் நாணயத்தை கொடுத்துவிட்டு நிமிர்ந்தபோது, இவன் முறைத்தான். ‘உங்களைப்போல ஜென்மங்களாலதான், அவர்கள் இது மாதிரியான தொழில்களுக்கு வருகின்றார்கள்’ என்றான். – சார் ஆட்டோவேணுமா? – ஆமாம் தி.நகர் பஸ் ஸ்டேண்டு போகணும்? – உட்காருங்க முந்திக்கொண்டு ஆட்டேவில் அவள் அமர்ந்தது இவனுக்கு எரிச்சல் ஊட்டியது. போதாக்குறைக்கு, வறுகடலை விற்பவன் தள்ளுவண்டியை இடித்துக் கொண்டு நிறுத்தினான். – ஏம்பா, இங்கே மனுஷங்க நிக்கிறது தெரியதில்லை, என்று எரிச்சல்பட்டவன், தமது மனைவி திசைக்குத் திரும்பினான், ‘என்ன நீபாட்டுக்கு ஏறி உட்கார்ந்திட்ட, என்ன கேக்கிறான்? எவ்வளவு எவ்வளவு கேட்கிறான், தெரிஞ்சுக்க வேண்டாமா?’ இவர் தன்னை ‘அவன் இவன்’ என்று சுட்டுவதை ஆட்டோ டிரைவரால், தாங்கிக் கொள்ளமுடியவில்லை. எனினும் கிடைத்த சவாரியை நழுவ விடக்கூடாதென்று கவனமெடுத்துக்கொண்டு பேசினான். – சார் என்னத்தை பெருசா கேட்டுடப்போறேன், இருபது ரூபாய்க் கொடுங்க. ஆட்டோ, தி.நகர் பேருந்து நிறுத்தத்தை நெருங்க மாலை ஐந்து மணியாகியிருந்தது. முதலில் அவள் இறங்கிக்கொண்டாள். அவள் கணவன் இரண்டு பத்து ரூபாய் தாள்களை நான்குமுறை எண்ணி கொடுத்தான். – சார் அஞ்சு ரூபா மேலப் போட்டுக் கொடுங்கசார், ஏதோ வயசானவன் கேக்கிறன்.. – தாம்பரம் போகிற பஸ் அங்க நிக்கறது பாரு..புறப்பட போறாப்பல. அடுத்த பஸ் எத்தனை மணிக்கோ? எலுமிச்சை சோற்று பருக்கைகளை இறைத்துக்கொண்டு, நின்றபடி சாப்பிட்ட இரண்டு இளைஞர்களையும்,வாழைப்பழ தாறுடன் எதிர்பட்ட இஸ்லாமியப் பெரியவரையும் ஒதுக்கிக்கொண்டு நடந்தார்கள் – கண்டக்டர் உட்கார சீட் இருக்குமா? – இருக்கிற சீட்டெல்லாமே உட்காரருதுக்குத்தான் சார், நிற்கிறதுக்கில்ல. இவளுக்கு கண்டக்டர் பதில் பிடித்திருந்தது. முன்னாலிருந்த ‘வெங்கிட்டு’ இப்பதிலை எப்படி எடுத்துக்கொண்டான், என்பதை தெரிந்துகொள்ள ஆசை. கணவனும் மனைவியுமாக நான்காவது வரிசையிலிருந்த குறுக்குச் சீட்டில் அமர்ந்தார்கள். எதிர்த்த சீட்டில், கைக்குழந்தையுடன், ஒரு ஜோடி. அருகில் நடுத்தர வயது பெண்களிருவர். ஒருத்தி பத்து ரூபாய்க்கு இருபத்திரண்டு முறுக்கு கொடுப்பியா? என பஸ்சுக்கு வெளியே தலையை நீட்டி பேரம் பேசிக்கொண்டிருந்தாள். பஸ்ஸ¤க்குள்ளே வியர்த்து கொட்டியது. பயணிகளில் பெரும்பாலோர் கிடைத்ததை வைத்துக் விசிறிக்கொண்டிருந்தார்கள். ஓட்டுனர் ஆரனை எழுப்பினார். பெண்ணொருத்தியிடம் சத்தம்போட்டுக்கொண்டிருந்த நடத்துனரிடம் என்னப்பா? ஆச்சா? புறப்படலாமா என்றார். அப்போதுதான் அந்த நபரைக் கவனித்தாள். காக்கிச்சட்டையிலிருந்தான், நடத்துனரிடம் என்னவோ கேட்டான். நடத்துனர் பதிலுக்குப் ‘ஏறுங்க’! என்றார். ஆள் வாட்ட சாட்டமாய் இருந்தான். வெளியில் தள்ளியிருந்த கண்கள், இரப்பைகள் சுருக்கமிட்டு சரிந்திருந்தன, தடித்த உதடுகள், மூக்கிற்கும் மேல் உதடிற்குமான இடைவெளியை அடைத்துக்கொண்டு பெரியமீசை. கன்னக் கதுப்புகளில் சுருக்கங்கள் எட்டிப்பார்த்தன, பெரிய வயிற்றுடன் அசைந்தபடி முன்னேறியவன், எதிரே இருந்த இருக்கை முழுவதையும் ஆக்ரமித்து, இவளுக்கு நேரெதிரே உட்காரவும் பஸ் புறப்பட்டது. குப்பென்று மதுவாடை. கணவனைப்பார்த்தாள், கையிலிருந்த ஆங்கில தினசரியை மடித்து பிடித்தபடி விசிறிக்கொண்டிருந்தவன், புதிய நபரைப் பார்க்கவிரும்பாதவன்போல தினசரியை விரித்து வைத்துக்கொண்டு லெபனான் சண்டையில் மூழ்கினான். பஸ் உறுமிக்கொண்டு புறப்பட்டது. காத்திருந்ததுபோல வெப்பக் காற்று பஸ்ஸை நிறைத்தது. வியர்த்திருந்த இவள் முகத்தினை தொட்டு விளையாடியது. நெற்றியில் விழுந்த மயிற்கற்றையை, முன் விரல்களால் ஒதுக்கியவள் நாசித் துவாரங்களில், மீண்டும் மதுவாடை. கைவசமிருந்த வார இதழில், விட்ட இடத்திலிருந்து தொடர்கதையை வாசிக்க ஆரம்பித்தாள். மனம் கதையில் ஒட்டவில்லை. எதிரே இருந்த நபர் இவளையேப் பார்த்துகொண்டிருந்தான். ‘என்ன இன்ஸ்பெக்டர் சார்’ எங்கே இந்தப்பக்கம், இவளுக்குப் பின்னாலிருந்து ஒரு குரல். அக்குரலுக்கு மறுமொழிபோல, ¨?கோர்ட்ல ஒரு கேஸ¤ வந்துட்டுத் திரும்பறேன், என்ற நபரின் பார்வை இவள் மார்பில் பட்டுத் திரும்பியது. கணவனைப் பார்த்தாள். ‘தினசரியில் தீவிரமாக மூழ்கியிருந்தான். தொடரில் மூழ்கினாள்: ‘நீங்கள் மின் அஞ்சல்களைத் திறந்து பார்ப்பதில்லையா? நமக்குள் கடிதப்போக்குவரத்து இருந்தபோது மாதத்திற்கொருமுறை தவறாமல் எழுதுவீர்கள். செய்தி பரிமாற்றங்களில் நேர்ந்துள்ள முன்னேற்றம், உண்மையில் மனிதர்களுக்கு இடையிலான வெளியைக் கூட்டித்தான் விட்டது. மறதிக்குப் பழகிக்கொண்டேன், நான் படித்தது, சிந்தித்தது, விவாதித்தது அனைத்துமே மறதிகள் பட்டியல்களில்தானிருக்கின்றன. நடுவாசலிலிலிருந்த மல்லிகைப் பந்தல் மறந்துவிட்டது, காலையில் மொட்டும், மலருமாய் அது பூத்தது மறந்துவிட்டது. டில்லிக்கு போய்விட்டு சென்னைக்குத் திரும்பிவந்த இரவு, விடிய விடியப் பேசினது நினைவிலிருக்கிறது ஆனால் என்ன பேசினோம் என்று மறந்துவிட்டது..நான் உங்களைபோலவே இருக்கிறேனென அடிக்கடி வீட்டுக்கு வருகின்ற உறவினர்களிடம் அம்மா சொல்லிச் சந்தோஷபட்டதும், கல்லூரியிலிருந்து நான் தாமதமாக வருகிறபோதெல்லாம், முன்வாசலில் காத்திருக்கும் உங்களிருவரின் நிம்மதிப் பெருமூச்சுங்கூட மறந்துவிட்டது…”. இவள் கால்களில், அந்நியகாலொன்றின் ஸ்பரிசம். வார இதழை மடியில் இருத்திவிட்டு நிமிர்ந்து பார்த்தாள். எதிரே உட்கார்ந்திருந்தவனுடைய கால்கள். சன்னலொட்டித் தலையைசாய்த்து குறட்டைவிட்டுக்கொண்டிருந்தான். இரு கால்களையும் இவள் வரை நீட்டியிருந்தான். கணவனின் தோளைத் தட்டினாள். ‘என்ன?’.. என்பது போலத் திரும்பிப் பார்த்தான். அந்த ஆளைக் கொஞ்சம் காலை மடக்கச் சொல்லுங்களேன். ‘சார்..சாரென்று,’ இரண்டுமுறை அழைத்தான்.. அவன் கூப்பிட்டது இவளுக்கேக் கேட்கவில்லை. இவள் தனது கால்களை முடிந்த அளவு, தனது இருக்கைக்குக் கீழே பின்னிருத்திக் கொண்டாள். சங்கடமாக இருந்தது. இவளுக்குப் பக்கத்திலிருந்த மூதாட்டிக்கு நிலமைப் புரிந்திருக்க வேண்டும். உறங்கிக் கொண்டிருந்த நபரை தொட்டு எழுப்பினாள். குறட்டை நின்றது. தலையைச் சிலுப்பிக்கொண்டு நிமிர்ந்து உட்கார்ந்தான். கண்களிரண்டும் செவசெவவென்று இருந்தன. குடித்திருந்ததாலா? தனது உறக்கத்தைக் கெடுத்துவிட்டார்களென்கிற கோபமா, தெரியவில்லை. – ‘காலை மடக்கிட்டு உட்காருதம்பி, அந்தப் பிள்ளை மேலே படுதில்லே..’ கிழவியினுடைய வாயிலிருந்து எச்சில் தெறித்து காக்கிச் சட்டையில் சிவப்பு புள்ளிகளாய் விழுந்தன. சட்டென்று நிமிர்ந்து உட்கார்ந்தவன். – ‘என்ன, நீ யாரு? அவங்களுக்கு வாயில்லையா? அவங்க கேட்க மாட்டாங்களா?’ வெங்கிட்டுத் தனக்குச் சம்பந்தமில்லாததுபோல தினசரியில் மூழ்கியிருந்தான். – ‘அவங்களை ஒன்றும் சொல்லாதீங்க. செத்தமுன்னே உங்க கால், எங்க சீட்வரைக்கும் நீட்டியிருந்ததால எனக்குக் கொஞ்சம் சங்கடமாக இருந்தது…’ அந்த நபர் இவள் சொல்லி முடிக்கட்டுமெனக் காத்திருக்கவில்லை. சட்டென்று இவள் வாக்கியத்தை வெட்டினான். – இங்கே பாரு பஸ்ஸ¤ல இப்படித்தான் வரணும்னு எனக்கு யாரும் புத்தி சொல்லவேணாம். பஸ்னா அப்படி இப்படித்தானிருக்கும். சௌகரியமா குந்திவரணும்னா, இப்படி பஸ்ல வரகூடாது. இவள் உடலில் தேவையற்று ஒருவித நடுக்கம். தன்னைத் திடப்படுத்திக்கொள்ள முனைந்ததுபோல, கீழுதட்டைச் சுழித்து உள்வாங்கி முன்பற்களைப் அழுந்தப் பதித்தாள். சம்மந்தப்பட்ட மனிதனின் பார்வையத் தவிர்க்கவா அல்லது கணவன் இவ்விவகாரத்தில் தலையிட வேண்டுமென்கிற சராசரிப் பெண்ணின் எதிர்பார்ப்பா என்று அவளால் தீர்மானமாக சொல்ல முடியாத நிலையில், சில நொடிகள் வெங்கிட்டுவினைப் பார்த்தாள். அவனுக்கு என்ன நடந்ததென்பது தெளிவாகவேத் தெரிந்தது. தினசரியை நான்காக மடித்து, தனது இருக்கை அடியிலிருந்த கைப்பையில் வைத்தான். சில விநாடிகள் தயங்கியபடியிருந்தான். இப்படியான நேரத்தில் தான் எப்படி செயல்படவேண்டுலென்பதில் அவனுக்குக் குழப்பம் இருந்திருக்கவேண்டும். எதிராளியின் சரீரமும், தோற்றமும், நெஞ்சில் தேவையற்ற திரவங்களை உற்பத்திசெய்தது, வாய் உலர்ந்துபோனது. எச்சில் கூட்டி விழுங்கி நெஞ்சை நனைத்துகொள்கிறான், அவன் உதடுகள் துடித்தது. சுற்றிலுமிருந்த சக பயணிகள், தங்கள் தங்கள் செயல்பாடுகளைத் தொடராமல் இவனைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள்: பாதி உறித்த கமலாப்பழம், வாயில் நொறுங்கிய முறுக்கு, வருமான கணக்குக் காட்டாத வழக்குபற்றிய உரையாடல். அவர்களுக்கெல்லாம் சுவாரஸ்யமாக ஏதோ நடக்கப்போகிறதென்கிற எதிர்பார்ப்பு. சக பயணிகளுக்கு முன்பாக, கையிலிருந்த ஆங்கில தினசரியும், உடுத்தியிருந்த ஆடையும் ஏற்படுத்தியிருந்த கற்பனை பிம்பத்தை, குறைந்தபட்ஷம் பஸ் பயணம்வரைக் கட்டிக்காக்கவேண்டியக் கட்டாயத்தில் அவனிருந்ததை புரிந்துகொண்டவன்போல, மெல்ல நகைத்தபடி அவனிடம் பேசினான். – நீங்க பணம் கொடுத்திருக்கீங்க, உங்களுக்கான இருக்கையில் உட்கார, பயண தூரம்வரை அதற்கான உரிமையில்லையென்று யார் சொல்ல முடியும்? ஆனால் அடுத்தவர்களும், அவர்கள் பயண தூரத்திற்கான கட்டணத்தைச் செலுத்திவிட்டு இங்கே உட்கார்ந்திருக்கிறார்கள் என்பதை தயவுசெய்து புரிந்துகொள்ளவேண்டும். சொன்னவனுக்கு வேர்த்திருந்தது, கைகுட்டைகொண்டு முகத்தை அழுந்தத் துடைத்துக் கொண்டான்… எதிரே இருந்த நபர் நிமிர்ந்து உட்கார்ந்தான். தலை முதல் கால்வரை வெங்கிட்டுவை அளவெடுப்பவன்போல அற்பமாகப் பார்த்தான் -‘ கண்டக்டர் இங்கே வாய்யா.. இந்த ஆளு உரிமைங்கிறான்.. கட்டணங்கிறான்.. என்னண்ணுகேளூ. இங்கே பாருய்யா.. நான் அப்படித்தான் உட்காருவேன். உங்களுக்குச் சங்கடமாயிருந்தா நீங்க வேணா பஸ்லயிருந்து இறங்கிக்குங்க. ‘நடத்துனர்’ நமக்கேன் வம்பு என்பதுபோல உட்கார்ந்திருந்தார். அவள் கணவனைப் பார்த்தாள். பயணிகள், வெங்கிட்டுவின் எதிர்த் தாக்குதல் எப்படியிருக்கும் என யோசித்தவர்களாய், காத்திருந்தார்கள். – சார் சத்தம்போடாதீங்க.. நியாயத்தைப் புரிஞ்சிக்கணும், இரத்தின சுருக்கமாக இடையில் இரண்டாக முறிந்து வெளிப்பட வாக்கியத்தில் அசாதரண நிதானம். – எதிராளி சட்டென்று எழுந்து நின்றான். தனது காக்கிச்சட்டையின் பொத்தான்களை அவிழ்த்துக்கொண்டு பனியன் தெரிய நின்றான். முண்டாவைத் தட்டினான். மீசையோடு உதடு மேலெழுந்து இறங்கியது, முகவாய் கோணலானது. வெங்கிட்டை அச்சுறுத்த முனைந்தவன்போல, – இப்ப உனக்கு என்ன வேணும், என்று கர்ஜித்தவன், வெங்கிட்டின் சட்டையைப் பிடித்துக்கொண்டான். இவளது இதயம் வேகமாகத் துடித்தது. கணவனிடம் நெருங்கி உட்கார்ந்தாள். அவனுடலில் ஒருவித அதிர்வினை உணர்ந்தாள். கோபம் வந்தால் அவனுக்கு தலைகால் புரியாது. எல்லோரும் பார்த்துக்கொண்டிருந்தார்கள். நிலைமையை மேலும் மோசமாக்காமல் தடுத்தாகவேண்டும். கண்டக்டரை உதவிக்கு அழைக்கலாம் அல்லது சக பயணிகளில் ஆண்களை உதவிக்கு அழைக்கலாம் என முதலில் யோசித்தாள். இறுதியில் கணவனில் சட்டையைப் பிடித்திழுத்து உட்காருங்கள் எனச் சொல்லவந்தவள், சட்டென்று தனது எண்ணத்தை மாற்றிக்கொண்டாள். மனதை இறுக்கிக்கொண்டு, பயணிகளில் ஒருத்தியாக தன்னைப் இருத்திக்கொண்டு அவனைப் பார்த்தாள். இதழோரம் அரும்பிய சிரிப்பை, சட்டென்று தலையைக்குனிந்து மறைத்தபோதும், வெங்கிட்டு அதனை உணர்ந்திருப்பானாவென பார்வையை மீண்டும் அவன் மீது செலுத்தினாள். போட்டிருந்த கண்ணாடியைக் கழற்றி கையிலெடுத்துக்கொண்டான். தேவையில்லாமல், கைகுட்டையினால் ஒரு முறைக்கு இருமுறைக்குத் அதனைத் துடைத்துக்கொண்டிருந்தான். முகம் வெளுத்திருந்தது. – இல்லை, நான் என்ன சொல்லவந்தேன்னா..,. – எதையும் சொல்லவேண்டாம். வாயை மூடிக்கொண்டு வரணும். மோதித்தான் பார்க்கணும்னா நான் ரெடி. வெங்கிட்டு சட்டென்று சுருங்கிக் கொண்டான். பிற பயணிகளின் ஏளனப் பார்வையைத் தவிர்க்க நினைத்தவன்போல ஆங்கில தினசரியை விரித்துவைத்துகொண்டு அமைதியானான். எதிராளி, தனது இருக்கையில் மீண்டும் அமர்ந்தவன், இம்முறை தனது கால்களிரண்டையும் நீட்டவில்லை, மடக்கியிருந்தான். பேருந்து சீராக ஓடிக்கொண்டிருந்தது. பயணிகளுக்கிடையே ஒருவித அமைதி. குளிர்ந்த காற்று வீசியதில் சூழ்நிலையின் இறுக்கம் தணிந்திருந்தது. தேவகி கணவனைப்பார்த்தாள். முகம் வியர்த்திருந்தது, சோர்வு தெரிந்தது. ஆங்கில தினசரியை பிடித்திருந்த கைகளில் நடுக்கம். இவளுக்குக் கடந்த பத்துவருட தாம்பத்யத்தில் கண்டிராதத் திருப்தி, வார இதழ் தொடரில் மீண்டும் கவனம் செலுத்தினாள். _________________________________________ Share this: Twitter Facebook Like this: Like ஏற்றப்படுகின்றது... Related This entry was posted in Uncategorized. Bookmark the permalink. ← மொழிவது சுகம், ஆகஸ்ட் 13 -2021 மொழிவது சுகம்,, செப்டம்பர் 1 – 2021 : « சைகோன் – புதுச்சேரி நாவல் மற்றும் ஆஃகானிஸ்தான் » → மறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி Enter your comment here... Fill in your details below or click an icon to log in: மின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public) பெயர் (கட்டாயமானது) இணையத்தளம் You are commenting using your WordPress.com account. ( Log Out / மாற்று ) You are commenting using your Twitter account. ( Log Out / மாற்று ) You are commenting using your Facebook account. ( Log Out / மாற்று ) நிராகரி Connecting to %s Notify me of new comments via email. புதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து Δ இதற்காகத் தேடு: அண்மைய பதிவுகள் மொழிவது சுகம் : அவ்வை நடராசன் உண்மை இல்லாதை புனைவு ஏது – 2: புதுச்சேரி முதல் தூத்துக்குடிவரை – துப்பாக்கிச் சூடுகள் உண்மை இல்லாத புனைவு ஏது – 1 மொழிவது சுகம் அக்டோபர் 8 2022 : அன்னி எர்னோ (Annie Ernaux) சிமோன் அப்பா (பிரெஞ்சு சிறுகதை) பிரிவுகள் உலக எழுத்தாளர் வரிசை கட்டுரைகள் கவிதைகள் படித்ததும் சுவைத்ததும் பிரான்சு நிஜமும் நிழலும் மொழிவது சுகம் Menu Principal nouvelles romans Uncategorized இணைய தளங்களில் படைப்புகள் கிடைக்குமிடங்கள் காஃக்பாவின் நாய்க்குட்டி கூகுளில் வாசிக்க தமிழ் இபுக்ஸ் நூல் உலகம் இலக்கியம் பேசுவோர் ஆபிதின் பக்கங்கள் எஸ். ராமகிருஷ்ணன் சொல்வனம் ஜெயமோகன் திண்ணை நாஞ்சில் நாடன் பதிவுகள் Chassé-Croisé:France-Inde பிற Learn WordPress.com WordPress Planet WordPress.com News காப்பகம் நவம்பர் 2022 ஒக்ரோபர் 2022 செப்ரெம்பர் 2022 ஓகஸ்ட் 2022 ஜூலை 2022 ஜூன் 2022 மே 2022 ஏப்ரல் 2022 மார்ச் 2022 பிப்ரவரி 2022 ஜனவரி 2022 திசெம்பர் 2021 நவம்பர் 2021 ஒக்ரோபர் 2021 செப்ரெம்பர் 2021 ஓகஸ்ட் 2021 ஜூலை 2021 ஜூன் 2021 மே 2021 மார்ச் 2021 பிப்ரவரி 2021 ஜனவரி 2021 திசெம்பர் 2020 நவம்பர் 2020 ஒக்ரோபர் 2020 ஜூலை 2020 ஜூன் 2020 மே 2020 ஏப்ரல் 2020 மார்ச் 2020 பிப்ரவரி 2020 ஜனவரி 2020 திசெம்பர் 2019 நவம்பர் 2019 ஒக்ரோபர் 2019 செப்ரெம்பர் 2019 ஓகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 திசெம்பர் 2018 நவம்பர் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 திசெம்பர் 2017 நவம்பர் 2017 ஒக்ரோபர் 2017 ஓகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 திசெம்பர் 2016 நவம்பர் 2016 ஒக்ரோபர் 2016 செப்ரெம்பர் 2016 ஓகஸ்ட் 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 திசெம்பர் 2015 நவம்பர் 2015 ஒக்ரோபர் 2015 செப்ரெம்பர் 2015 ஓகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 திசெம்பர் 2014 நவம்பர் 2014 ஒக்ரோபர் 2014 செப்ரெம்பர் 2014 ஓகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 ஜனவரி 2014 திசெம்பர் 2013 நவம்பர் 2013 ஒக்ரோபர் 2013 செப்ரெம்பர் 2013 ஓகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 திசெம்பர் 2012 நவம்பர் 2012 ஒக்ரோபர் 2012 செப்ரெம்பர் 2012 ஓகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 திசெம்பர் 2011 நவம்பர் 2011 ஒக்ரோபர் 2011 செப்ரெம்பர் 2011 ஓகஸ்ட் 2011 ஜூலை 2011 Website Built with WordPress.com. Privacy & Cookies: This site uses cookies. By continuing to use this website, you agree to their use.
இலங்கைக்கு மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கு முன்வந்துள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ நன்றி தெரிவித்துள்ளார். இலங்கையில் தற்போது நிலவி வருகின்ற கடும் பொருளாதார நெருக்கடி சூழ்நிலையில் சிரமத்தை எதிர்நோக்கியுள்ள மக்களுக்கு தமிழ் நாட்டில் இருந்து உணவு, அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் உயிர் பாதுகாக்கும் மருந்துகளை அனுப்பி வைக்க தமிழக முதல்வர் சட்டப்பேரவையில் நிறைவேற்றிய தீர்மானம் நல்லெண்ணத்தைக் குறித்து நிற்பதாக பிரதமர் அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் பொருளாதார நெருக்கடியை அண்டை நாட்டுப் பிரச்சினையாகப் பார்க்காது மனிதாபிமான அடைப்படையில் நோக்கும் தமிழக முதலமைச்சருக்கும், தமிழ்நாடு மாநில அரசுக்கும் இலங்கை மக்கள் சார்பாக மிகுந்த நன்றியை தெரிவித்துக்கொள்வதாகவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ குறிப்பிட்டுள்ளார். Post Views: 163 Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Admin Related Posts மட்டக்குளியில் ஒருவர் கொடூரமான முறையில் கொலை November 28, 2022 ஒரு முட்டைக்கு ரூ. 1 இலட்சம் அபராதம் November 28, 2022 `சாப்பாடு வாங்க பணம் இல்லாததால் அழுத மகளைக் கொன்றுவிட்டேன்!’ – போலீஸில் பகீர் வாக்குமூலம் தந்த தந்தை சி. அர்ச்சுணன்
January 14, 2022 anbu anbuLeave a Comment on தா வ ணி போட்டாலும் அத மறைக்க முடியலயே…! சூ டே த் தி ய யாஷிகா ஆனந்த்…!!! பி க் பா ஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் யாஷிகா ஆனந்த். பி க் பா ஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளிறியதும் க வர்ச்சி போ ட் டோ ஷூ ட் மூலம் ரசிகர்களிடையே மீண்டும் தன்னை நினைவுபடுத்தி தனக்கென ஒரு கூ ட்டத்தை சேர்த்தார். பின்னர் சினிமா வாய்ப்பும் இருக்கு கிடைத்தது. இ ரு ட் ட றை யி ல் “மு ர ட் டு கு த் து” படத்தில் க வர்ச்சி கதாபாத்திரத்தில் நடித்தார். மேலும் சில படங்களிலும் க மி ட் டா கி நடித்து கொண்டிருந்தார். இந்நிலையில் 4 மாதங்களுக்கு முன்பு இ ரவு பா ர் ட் டி முடித்து வரும் வழியில் கார் வி ப த் து ஏற்பட்டது, இதில் யாஷிகாவின் தோ ழி ச ம்பவ இடத்திலேயே இ ற ந் து விட, யாஷிகா ப ல த் த கா யங்களுடன் சி கி ச் சை பெற்று வந்தார். தற்போது சி கி ச் சை யை முடிந்து நடக்கும் நிலையில் உள்ளார் யாஷிகா. இழந்த க் ளா ம ரை மீண்டும் கொண்டு வந்து ஹா ட் போ ட் டோ ஷூ ட் எடுத்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். சமீபத்தில் வெளியிட்டு வரும் புகைப்படங்களை பார்த்து கா லு உ டை ஞ் சு ம் தி ருந்தலையா என்று தி ட் டி ய படி கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள் நெ ட் டி செ ன் க ள். இந்நிலையில் தற்போது பொங்கல் தினத்தை முன்னிட்டு பா வா டை தா வ ணி யி ல் ட் ர டி ஷ ன ல் தேவதையாக போ ஸ் கொடுத்து ரசிகர்களை க வ ர் ந் தி ழு த் து ள் ளா ர். இதனை பார்த்த சில நெ ட்டிசென்கள் “தா வ ணி போட்டாலும் அத மறைக்க முடியலயே” என கு சு ம் பா க க மெ ண் ட் அ டித்து வருகிறார்கள். Post navigation மேடம் ரொம்ப ஓ பன் டைப் போல…! த ளும்பும் அழகை கா ட்டி… நெ ட்டிசென்களை தூ ங்க விடாமல் செய்த இளம் ந டிகை…!!! அட… அந்த முல்லைய எத்தனை முறைதாண்டா மாத்துவீங்க…! மூ ஞ்சி பதியரதுக்குள்ள இப்படியா…?? முடியலடா சாமி…!!! anbu anbu https://mediapost21.com/ Related Posts தனது கணவருக்கா மதம் மாறிக்கொண்ட பிரபல முன்னணி நடிகை !! இதோ கணவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பார்த்து அட இவங்களா என்று ஷா க்கான ரசிகர்கள் ..!! June 30, 2022 anbu anbu இறந்த பிரதாப் போத்தனின் மகளை யாரும் பார்த்துள்ளீரா ..? இவரும் ஒரு பிரபலம் தானா !! இதோ யாரென்று நீங்களே பாருங்க ..!! July 17, 2022 anbu anbu திருமணமான ஒரே வருடத்தில் அ ர சி ய ல் வா தி கை வ ச ம் சி க்கிய பிரபல ந டிகை…! தற்போது 51 வயதில் அ ரவணைப்பின்றி நிற்கும் நி லைமை …!!! December 27, 2021 December 28, 2021 anbu anbu Leave a Reply Cancel reply Your email address will not be published. Required fields are marked * Comment * Name * Email * Website Save my name, email, and website in this browser for the next time I comment. Search Search Recent Posts அதீத வளர்ச்சியா இருக்கே…! கேபிரில்லாவின் புகைப்படத்தை பார்த்து கிறுகிறுத்து போன இளசுகள்…!!! சொப்பன சுந்தரினு சும்மாவா சொன்னாங்க…! அத்தனையும் அம்சமா காட்டி அசர வைக்கும் மனிஷா யாதவ்…!!! அந்த இடத்துல மச்சம் ஆள தூக்குது…! OPEN-ஆ காட்டி கிறுகிறுக்க வாய்த்த நடிகை லதா ராவ்…!!! இவ்ளோ பச்சையா காட்டுனா பசங்க என்னதான் பண்ணுவாங்க…! இளசுகளை புலம்ப வைத்த ஐஸ்வர்யா லட்சுமியின் ஹாட் போட்டோஸ்…!!! கைய தூக்குனதுக்கே கவுந்துட்டோமே…! உச்சகட்ட கிளாமரான போஸில் நடிகை மேக்நா ராஜ்…!!! Recent Comments A WordPress Commenter on பாரதி கண்ணம்மா ரோஷ்ணி வி ல க… இது தான் கா ரணமோ…? இப்போதான் தெரியுது…!! சீரியல்ல என்னென்ன வே லையெல்லாம் ப ண்றாங்கன்னு பா ருங்க…!!!
திருவிடைமருதூர், ஆக. 8: தமிழ்நாடு பிராமண சமாஜம் சார்பில் 20ம் தேதி நடைபெற உள்ள இலவச சமஷ்டி உபநயனத்தில் ஏழை, எளிய குடும்பத்தினர் பயனடைய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு பிராமண சமாஜம் தஞ்சாவூர் மாவட்ட அமைப்பு சார்பில் ஆண்டுதோறும் இலவச சமஷ்டி உபநயன விழா நடைபெறுகிறது. அந்த வகையில் வரும் 20, 21ம் தேதிகளில், கும்பகோணத்தில் உள்ள காஞ்சி சங்கர மடத்தில் சமஷ்டி உபநய விழா நடைபெறுகிறது. இதில் ஏழை, எளிய, பொருளாதாரத்தில் நலிவடைந்த மற்றும் நடுத்தர பிராமண குடும்பங்களை சேர்ந்த சிறுவர்களுக்கு முதன்முறையாக முழுவதும் இலவசமாக உபநயனம் செய்து வைக்கப்படுகிறது. இதையொட்டி 20ம் தேதி சங்கல்ப, பூர்வாங்க நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. மறுநாள் 21ம் தேதி காலை குமாரபோஜனம், பிரம்ம உபதேசம், உபநயன நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. இதற்கான அனைத்து செலவுகளையும் தமிழ்நாடு பிராமண சமாஜம் நன்கொடையாக அளித்து உதவுகிறது. எனவே இலவசமாக சமஷ்டி உபநயனம் செய்து கொள்ள விரும்பும் ஏழை, எளிய, நடுத்தர பிராமண சமுதாயத்தை சேர்ந்த குடும்பத்தினர் சங்க நிர்வாகிகளை தொடர்பு கொள்ளுமாறு மாநில மூத்த ஆலோசகர் ஆடிட்டர் சூரிய நாராயணன் கேட்டுக் கொண்டுள்ளார். முன்பதிவு செய்ய விரும்புவோர் மாவட்ட தலைவர் வைத்தியநாதன் 94431 42985, பொதுச் செயலாளர் தர் 90800 34671 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளும்படி தெரிவித்துள்ளனர். மேலும் செய்திகள் திருத்துறைப்பூண்டி வட்டாரத்தில் 36,000 ஏக்கரில் சம்பா தாளடி சாகுபடி பணியில் விவசாயிகள் தீவிரம்: குறுவை சாகுபடி அதிகரிப்பு பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டம் அமல்: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி திருவாரூர் மாவட்டத்தில் நாளை நடக்கும் கிராம சபை கூட்டத்தில் வேளாண் அலுவலர்கள் தவறாமல் பங்கேற்க வேண்டும் திருவாரூரில் இருந்து சேலத்திற்கு பொதுவிநியோக திட்டத்திற்கு 1,250 டன் அரிசி அனுப்பி வைப்பு மக்களை காப்பதில் அக்கறை காட்டி பொதுசுகாதாரத்தில் அசத்தும் முத்துப்பேட்டை வட்டார மருத்துவத்துறை மக்களை தேடி மருத்துவ திட்டத்தில் 10 ஆயிரம் பேர் பயன் திருவாரூர் மாவட்டத்தில் 82 ஆயிரம் குடிசை வீடுகள் கான்கிரீட் வீடுகளாக மாற்றப்படும் அமைச்சர் அர.சக்கரபாணி தகவல் மருத்துவம் முதுமையில் ஆனந்தம்! ஆயுளைக் காக்கும் ஆயுர்வேதம்! தாய்லாந்தில் சுற்றுலா பயணிகளை பெரிதும் ஈர்த்த குரங்கு படையல் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது..! பாரிசில் கண்கவர் ஒளி கண்காட்சி: மெய்சிலிர்க்க வைக்கும் வண்ணப் பூச்சிகள்..!! தொடங்கிய இடத்தில் மீண்டும் ஆட்டம் காட்டும் கொரோனா!: சீனாவில் ஒரே நாளில் 31,000க்கும் அதிகமானோருக்கு பாதிப்பு..!!
ஹோம் » போடோகல்லெரி » லைஃப்ஸ்டைல் » மழைக்காலத்தில் ஜிம்முக்கு போக முடியவில்லையா..? வீட்டிற்குள்ளயே செய்யக்கூடிய 5 உடற்பயிற்சிகள் இதோ.. மழைக்காலத்தில் ஜிம்முக்கு போக முடியவில்லையா..? வீட்டிற்குள்ளயே செய்யக்கூடிய 5 உடற்பயிற்சிகள் இதோ.. ஏரோபிக்ஸ் உடற்பயிற்சி இதய துடிப்பு மற்றும் ரத்த ஓட்டத்தை சீரமைக்க உதவுகிறது. அதேபோல் தசைகளை வலுவாக்கவும், கலோரிகளை வேகமாக எரிக்கவும் உதவுகிறது. குளிர்காலத்திற்கு ஏற்ற இந்த நடன பயிற்சியை வேடிக்கையாகவும், சுறுசுறுப்பாகவும் செய்யலாம். News18 Tamil | November 11, 2022, 22:16 IST 1/ 6 வடகிழக்கு பருவ வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் அதிகாலையில் ஜில்லென நிலவும் கிளைமேட் உடல் நலனில் தீவிர அக்கறை கொண்டவர்களையும் கூட படுக்கையை விட்டு எழ விடுவதில்லை. இதனால் அவுட்டோரில் வாக்கிங், ஜாக்கிங், வொர்க்அவுட் என எதுவும் செய்ய முடியாது. அதுக்காக எனவே தான் வீட்டிற்குள் படுக்கையில் சுருண்டு கிடக்க மனமில்லாதவர்களுக்காக இன்டோரிலேயே செய்யக்கூடிய சில வொர்க்அவுட்கள் பற்றி விரிவாக கொடுத்துள்ளோம்... 2/ 6 யோகா : யோகா, வீட்டிற்குள்ளேயே இருந்து கலோரிகளை குறைக்க உதவும் நீண்ட கால பயிற்சியாகும். கிளப் ஹவுஸ், கார்டன், பால்கனி அல்லது லிவிங் ரூம் என எங்கும் பயிற்சி செய்யலாம். குளிர்காலத்தில் உடலையும், மனதையும் சுறுசுறுப்பாக்க யோகா பயிற்சி பயனுள்ளதாக இருக்கும். இதுவரை யோகா பயிற்சிகளில் ஈடுபட்டதில்லை என்றால் ஆன்லைன் வகுப்புகள் அல்லது யூ-டியூப் வீடியோக்கள் மூலமாக யோகா போஸ்களைக் கற்றுக்கொள்ளலாம். 3/ 6 ரன்னிங்கிற்கு மாற்று : மழை, பனி, வெயில் என எதுவாக இருந்தாலும் அதிகாலை எழுந்து ரன்னிங் செல்லாமல் என்னால் இருக்கவே முடியாது என்பவர்கள், ஜம்பிங் ஜாக்ஸ், பர்பீஸ், ஸ்பாட் ஜாகிங், ஹை நீஸ் போன்ற பயிற்சிகளை மேற்கொள்ளலாம். இந்த வொர்க்அவுட்கள் கலோரிகளைக் குறைக்கவும், இதயதுடிப்பை அதிகரிக்கவும் உதவும். குளிர்காலத்தில் கூட கார்டியோ பயிற்சிகளை விரும்புவோர், வீட்டிலேயே செய்யக்கூடிய கார்டியோ உடற்பயிற்சிகளை ஆன்லைன் அல்லது சோசியல் மீடியாக்கள் மூலமாக கற்றுக்கொள்ளலாம். 4/ 6 பிளைமெட்ரிக் பயிற்சி : விளையாட்டு வீரர்கள் அதிவேகமாக, தசைகளை வலிமையாக்கவும் பிளைமெட்ரிக் பயிற்சிகளை மேற்கொள்கின்றனர். எனவே வீட்டிலிருந்த படியே ஸ்குவாட் ஜம்ப்ஸ், பர்பீஸ், லுங்கிஸ், பிளாங்க் அப் மற்றும் பிளாங்க் டவுன் ஆகிய பயிற்சிகளை மேற்கொள்ளலாம். பிளைமெட்ரிக் பயிற்சிகளை மேற்கொள்வது கலோரிகளை எரிக்கவும் மற்றும் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. 5/ 6 நடனம் : வீட்டிற்குள்ளே உடற்பயிற்சி செய்வது சலிப்பாகிவிட்டால், அதற்கு பதிலாக நடனமாடுவதைத் தேர்வு செய்யவும். மனதிற்கு பிடித்த பாடலை போட்டுவிட்டு, நடனமாடுங்கள். பெல்லி டான்ஸ், பிரேக் டான்ஸ், பாலட் டான்ஸ் என புரோபஷனால் ஆக நடனமாட வேண்டும் என்பதில்லை, பாடலை ஒலிக்கவிட்டு, பிடித்தமான உடற்பயிற்சியை மேற்கொள்ளலாம். நடனம் என்பது கலோரிகளை எரிப்பதற்கு மட்டுமல்ல, உடல் எடையை குறைக்கவும் உதவும். நடனமாடுவது உடலுக்கு மட்டுமல்ல மன இறுக்கம், மனச் சோர்வு போன்ற மனம் சார்ந்த பிரச்சனைகளையும் தீர்க்க உதவுவதாக மனோதத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். 6/ 6 ஏரோபிக்ஸ் : ஏரோபிக்ஸ் உடற்பயிற்சி இதய துடிப்பு மற்றும் ரத்த ஓட்டத்தை சீரமைக்க உதவுகிறது. top 5தினந்தோறும் 30 நிமிடங்கள் வரை ஏரோபிக் பயிற்சிகளை மேற்கொள்வது இதயத்திற்கான சிறந்த பயிற்சி என நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். மேலும் இன்றைய தலைமுறைகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ள உடல் பருமன் மற்றும் இதய நோய்களில் இருந்து பாதுகாக்கவும் உதவுகிறது. Latest Story Links Trending Tag Latest Story TenkasiBJPKrishnagiriRoyal enfieldNeet ExamKarurthanjavurMaduraiCrime NewsApprenticeshipAlcohol consumptionPudukkottaichengalpattuApprenticeshipAccident
எனும் பழைய திரைப் படப் பாடலை திருச்சி லோகநாதனின் குரலில் கேட்டிருப்போம். அக்காட்சியில் ஒரு கணவன் தன் மனைவியை மலையின் உச்சிக்கு இப்படிப்பாடி அழைத்துச் செல்வான். அவளும் மகிழ்ச்சியுடன் செல்வாள். ஆனால் உச்சியை அடைந்ததும் ‘உன்னை இங்கிருந்து கீழே தள்ளிக் கொலை செய்யத்தான் அழைத்து வந்துள்ளேன் ‘ என்று அக்கனவன் கூறுவான். மனைவி தன் அறிவுத் திறத்தால் கணவனை வலம் வந்து அவனையே தள்ளி விட அவன் இறந்து விடுவான். ‘மந்திரிகுமாரி ‘ திரைப்படத்தில் வரும் இக்காட்சிக்கான கருவை மு. கருணாநிதி குண்டல கேசியிலிருந்து தான் எடுத்தாண்டுள்ளார். குண்டலகேசி ஐம்பெருங்காப்பியங்களுல் ஒன்றாகக் கருத்தப்படுகிறது. இந்த ஐம்பெருங்காப்பியங்கள் என்ற பாகுபாட்டையே யார் வகுத்தார்கள் என்பது தெளிவாகத் தெரியவில்லை. சூளாமணி எனும் நூல் மிகப் பெரிய காப்பியம். ஆனால் அஃது ஐஞ்சிறுங்காப்பியங்களில் அடக்கப் பட்டுள்ளது. நன்னூலுக்கு உரை எழுதிய மயிலைநாதர் ஐம்பெருங்காப்பியம், எட்டுத் தொகை, பத்துப் பாட்டு, பதினென் கீழ்க்கணக்கு என்று தொகைப் படுத்தியுள்ளார். ஆனால் அவரும் ஐம்பெருங்காப்பியங்கள் இவைதாம் என்று பெயர் குறிப்பிடவில்லை. பிற்காலத்தில் தோன்றிய இப்பாடல்தான் அவற்றின் பெயர்களைக் காட்டுகிறது ‘சிந்தா மணியாம் சிலப்பதிகாரம் படைத்தான் கந்தா மணிமேகலை புனைந்தான் – நந்தா வளையாபதி தருவான் வாசவனுக்கு ஈந்தான் திளையாத குண்டல கேசிக்கும். ‘ இவற்றில் முழுமையாகக் கிடைத்தவை சிலப்பதிகாரம், சீவக சிந்தாமணி, மணிமேகலை ஆகியவையே! வளையாபதி, குண்டலகேசி ஆகிய இரண்டின் கதை நிகழ்ச்சிகளை சில உரையாசிரியரின் மேற்கோள்கள் மூலமும் , பல தமிழறிஞர்களின் ஆய்வுக் கட்டுரைகளின் மூலமும், மேலும் கர்ண பரம்பரையாக நிலவி வரும் இலக்கியச் சான்றுகள் மூலமும் அறிய முடிகிறது. சீவக சிந்தாமணிக் காப்பியத்தலைவனின் பெயரால் வழங்கப் படுகிறது. கண்ணகியின் காற்சிலம்பு பற்றி சிலப்பதிகாரம் பெயர் பெற்றது. மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி முதலானவை அவற்றில் வரும் தலைவிகளால் பெயர் பெற்றது எனலாம். வளையாபதி பற்றிச் சிறப்பான செய்தி ஏதும் அந்நூலில் இல்லை. மணிமேகலை அறத்தின் உருவாகத் தவத்தின் வடிவாகக் காட்டப் படுகிறாள். கண்ணகி தன் கணவன் பழி கொண்டு கொலையுண்டான் என்ற உடன் வீறு கொண்டெழுந்தாள். ஆனால் குண்டலகேசிக்கோ கொண்ட கொழுநனே கொலையாளியானான். திடாரென்று ஏற்பட்ட அச்சூழலில் அறிவும் துணிவும் கொண்டு அவள் வெற்றி பெறுகிறாள். குண்டலகேசியில் நிகழும் ஊடலால் வந்த விபரீதம் சிலம்பின் கானல்வரியை நினைவூட்டுகிறது. அதுபோல் கம்பன் காவியத்தில் நிகழும் சீதை-இராமன் முதல் பார்வைபோல் இதிலும் காளனும், குண்டலகேசியும் சந்திக்கின்றனர். குண்டலகேசி கதைச் சுருக்கம் : பூம்புகார் நகரத்தில் செல்வம் மிக்க வணிகனுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு பத்திரை எனப் பெயரிட்டு வளர்த்து வருகின்றனர். பத்திரையின் குழந்தைப் பருவத்திலேயே அதன் தாய் காலமாகி விட்டாள். எனவே தனது ஒரே மகளான பத்திரையைத் தந்தையாகிய வணிகன் சீரும் சிறப்புமாக வளர்த்து வருகிறான். குண்டலம் என்ற சொல்லுக்கு சுருள் என்பது பொருளாகும். கேசி எனும் சொல் கூந்தலைக் குறிக்கும். பத்திரை சுருண்ட கூந்தலைக் கொண்டிருந்ததால் குண்டலகேசி என்று அழைக்கப் பட்டாள். குண்டலகேசி தன் கன்னிப் பருவத்தில் ஒருநாள் தனது இல்லட்தின் மாடியில் தோழிகளுடன் பந்து விளையாடிக் கொண்டிருந்தாள். பந்தானது அவள் கையிலிருந்து தவறிப் போய் வீதியில் சென்று கொண்டிருந்த ஒரு வாலிபனின் தோளின் மீது பட்டுக் கீழே விழுந்தது. மாடியின் மீதிருந்து குண்டலகேசி கீழே குனிந்து எட்டிப் பார்க்கவும், பந்து தோளில் பட்ட வாலிபன் நிமிர்ந்து மேலே பர்ர்க்கவும் சரியாக இருந்தது. இருவர் பார்வையும் ஒன்றை ஒன்று உண்ண அவர்கள் காதல் வயப்பட்டனர். குண்டலகேசி அவ்வாலிபன் யாரென விசாரிக்கத் தொடங்கினாள். அவன் அந்நாட்டு அமைச்சர் கருணைவேல் என்பவரின் மகனாவான். அவனது பெயர் காளன். மேலும் கொலை, களவு, கணிகையர் இன்பம் போன்ற பலவற்றிலும் ஈடுபட்டு வருபவன் என்பதையும் அவள் அறிந்தாள். அவன் தற்பொழுது காவலர்களால் பிடிக்கப் பட்டு விட்டான். அரசர் அவனுக்கு மரண தண்டனை விதித்தார். திறமையும் கடமை உணர்வும், நேர்மை எண்ணமும் கொண்ட அமைச்சர் கருணைவேலே தன் மகன் என்றும் பாராமல் அத்தண்டனையை முன்மொழிந்தது குறிப்படத்தக்கதாகும். இந்த நிலையில் காளன் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட போதுதான் அவன் தோளின் மேல் பந்து விழ குண்டலகேசியும் அவனைக் கண்டு மனம் பறி கொடுத்தாள். அந்நாள்களில் பூம்புகாரில் இந்திர விழா கொண்டாட்டம் துவங்கியிருந்தது. அம்மங்கல விழாக்காலத்தில் கொலைத் தண்டனைகள் நிறைவேற்றுவதை நிறுத்தி வைப்பது வழக்கம். இதை அறிந்த குண்டலகேசி காளனை விடுவித்து மணம் செய்து கொள்ள விரும்பினாள். மணந்தால் காளனையே மணப்பது என்ற தன் உறுதியைத்தன் தந்தையிடம் தெரிவித்தாள். தனது ஒரே மகளின் விருப்பத்தை நிறைவேற்ற அவள் தந்தை முயற்சிகளை மேற்கொண்டான். ஆனால் அமைச்சர் கருணைவேலரோ தண்டனையை நிறைவேற்றுவதில் உறுதியாக இருந்தார். உடனே குண்டலகேசியின் தந்தை அமைச்சரிடம் ‘நீர் காளனைச் சிறுவயதில் சரிவர வளர்க்கவில்லை. பெற்றோர் கடமையிலிருந்து தவறியது உம் குற்றம் ‘ என்று சுட்டிக் காட்டினார். அப்படியும் அமைச்சர் மனம் மாறவில்லை. எனவே அவள் தந்தை அரசனிடம் முறையிட்டார். வணிகனான அத்தந்தையின் நிலையை அரசனும் அவையும் ஆய்ந்தறிந்தனர். இறுதியில் காளனின் எடைக்கு எடை பொன்னும், எண்பத்தோர் யானைகளும் அரசுக்கு வழங்கினால் காளன் விடுவிக்கப்படுவான் என அறிவிக்கப்பட்டது. காளன் விடுதலையானான். குண்டலகேசி அவனை மணம் புரிந்தாள். இருவரும் இல்லறத்தை இன்பமாக வாழத் தொடங்கினார்கள். குண்டலகேசியின் வாழ்வில் விதிவிளையாடத் தொடங்கியது. காவிரியில் முதல் வெள்ளம் வர மக்கள் புதுப் புனலாடக் கிளம்பினர். குண்டலகேசியும் செல்ல விரும்பி ஒப்பனை செய்து கொள்ளத் தொடங்கினர். காளன் அருகிருந்து அவளைப் பார்வையில் பருகிக் கொண்டிருந்தான். அப்போது காளன் விளையாட்டிற்காக குண்டலகேசியின் குங்குமச் சிமிழை எடுத்து மறைத்து வைத்தான். அதைக் காணாத குண்டலகேசி பதறிப் போய் அங்கும் இங்கும் தேடினாள். காளன் சிரித்துக் கொண்டே சிமிழை எடுத்துத் தந்தான். அதை வாங்கிய குண்டலகேசியும் விளையாட்டாக ‘நீர் கள்வர் அல்லவா ? உம் மாயக்களவெல்லாம் நான் அறிவேன் ‘ என்று சிரித்துக் கொண்டே கூறினாள். இதைக் கேட்ட காளன் திடுக்கிட்டான். தனது முந்தைய வாழ்வை அவள் இடித்துக் காட்டுவதுபோல் உணர்ந்தான்; பதறினான்; சினம் கொண்டான். ‘ஆமாம்; நான் கள்வன் தான்; அப்படியானால் நீ கள்வனின் காதலியல்லவா ‘ என்று உறுமலுடன் கூறினான். விளையாட்டு வினையானதே என்று குண்டலகேசி மனம் வருந்தினாள். இருவரும் சென்று புனலாடி வந்தனர். ஆனால் காளன் அவள் சொற்களை மறக்கவே இல்லை. அவை வடுப்போல் ஆழமாகப் பதிந்து விட்டன. தனக்கு அவள் மேல் இருந்த வெறுப்பை வெளிக்காட்டாமல் அவளை விரும்புவது போல் பாடியும் கூடியும் நடித்தான். அவளும் அவனை நம்பி இருந்தாள். ஒருநாள் காளன் குண்டலகேசியிடம் ‘நான் விடுதலையானால் மலை உச்சியில் உள்ள தெய்வத்தை வந்து வழிபடுவதாக வேண்டிக்கொண்டேன். நாளையே நாம் செல்வோம் ‘ என்று கூறினான். அது கேட்ட குண்டலகேசி மனம் மகிழ்ந்தாள். மலைவளம் காணவும் தெய்வத்தை வழிபடவும் கணவனுடன் புறப்பட்டாள். அவனும் அவளை ‘வாராய்; நீ வாராய் ‘ என்று மலை உச்சிக்கு அழைத்துச் சென்றான். குண்டலகேசி உச்சியை அடைந்ததும் ‘வழிபட வேண்டிய தெய்வம் எங்கே உள்ளது ‘ என்று கேட்டாள். அவனோ கபடமாகச் சிரித்துக் கொண்டே ‘என்னிடமே நீ கள்வன் என்று ஏளனம் செய்ய உனக்கு எவ்வளவு துணிவு இருக்க வேண்டும் ‘ என்று கேட்டான். ‘என்னை அறியாமல் ஊடலின்போது நான் விளையாட்டாகக் கூறியவற்றை இன்னமுமா மறக்கவிலை ‘ என்று அவள் கேட்டாள். ‘இல்லை; அவை என் உள்ளத்தைப் புண்ணாக்கி விட்டன. அதற்கு மருந்து நீ இறப்பதுதான். உன்னை இந்த மலை உச்சியிலிருந்து உருட்டித் தள்ளத்தான் இங்கு அழைத்து வந்தேன். நீ கடைசியாக உன் வழிபடு கடவுளை மனத்தில் வணங்கிக் கொள் ‘ என்று காளன் சீறினான். குண்டலகேசி மனம் உடைந்தாள். ‘எனக்கு நீங்களே தெய்வம். உங்களை மும்முறை வலம் வந்து நானே இம்மலையிலிருந்து விழுந்து உயிர் துறக்கிறேன் ‘ என்று வேண்டினாள். காளனும் கொலைவெறியில் மதிமயங்கி உடன்பட்டான். காளனை நடுவில் நிறுத்தி குண்டலகேசி வலம் வரத் தொடங்கினாள். திடார் என அவள் பெண்மைக் குணம் மறைந்தது. மூன்றாம் முறை வலம் வரும்போது அவள் கைகள் காளனின் விலாப்புறத்தை அழுத்தித் தள்ளின. இதனைச் சற்றும் எதிர்பாராத காளன் மலை உச்சியிலிருந்து கீழே விழுந்து சிதறி இறந்தான். எட்டிப் பார்த்த குண்டலகேசி இப்போது அச்சம் கொண்டாள். கணவனைக் கொன்ற தானும் ஒரு பெண்ணா என்று மனம் குலைந்தாள். வருந்தித் தானும் உயிர் விடுவது என்று முடிவு செய்தாள். மலைஉச்சியிலிருந்து விழ இருந்த அவளை ஒருவேடுவப் பெண் தடுத்தி நிறுத்தினாள். குண்டலகேசிக்கு வழிகாட்டுமுகத்தான் அப்பெண்ணும் அவள் கணவனும் அவளைத் ‘துறவோர் பள்ளியில் ‘ சேர்த்தனர். குண்டலகேசி மனம் மாறினாள். அருக்கச்சந்திரனிடம் உபதேசம் பெற்று புத்த பிக்குணியானாள். தலைமுடி களைந்தாள். ஆயினும் விரைவில் சுருள் முடி வளரத் தொடங்கியது. எனவே பத்திரை என்ற பெயர் மாறி குண்டலகேசி என்று அழைக்கப் பட்டாள். பல சமயவாதிகளுடன் வாதிட்டுப் பெளத்த மதத்தின் பெருமையை நிலைநாட்டினாள். இவ்வாறு குண்டலகேசியின் வரலாறு கூறப்படுகிறது. நீலகேசி என்பது ஐஞ்சிறுங்காபியங்களுள் ஒன்றாகும். குண்டலகேசியால் கூறப்படுகின்ற புத்த மதக் கொள்கைகளைக் கண்டிக்கவே ஓர் எதிர்ப்பு நூலாக நீலகேசி எழுந்திருக்கலாம். நீலகேசி எனும் அந்நூலில் குண்டலகேசியைப் பற்றிய சில செய்திகள் காணப்படுகின்றன. அதன்படி குண்டலகேசி பல மதவாதிகளை வாதத் திறமையால் தோற்கடித்துத் தென்பாஞ்சால நாட்டின் தலைநகரான காம்பிலியை அடைகிறாள். அங்கு அவளிடம் வாதிட ஆருகத சமயத்தைச் சார்ந்த ஆர்யங்கனை நீலகேசி வருகிறாள். குண்டலகேசிக்கும் நீலகேசிக்கும் சொற்போர் நடக்கிறது. காம்பிலியின் மன்னனே நடுவராக உள்ளான். அந்த வாதப் போரின் இறுதியில் குண்டலகேசி தோற்று விடுகிறாள். ஏற்கனவே ஒப்புக்கொண்டபடி தோற்ற குண்டலகேசி நாடு கடத்தப்படுகிறாள். ஆயினும் வாதத்தில் தோற்றது தன் தனிப்பட்ட திறமைக் குறைவினால்தான் என எண்ணிய குண்டலகேசி புத்த மதமே உயர்ந்தது எனும் கொள்கையை இறுதி வரையில் மாற்றிக் கொள்ளவே இல்லை. அவள் நடைப்பயணமாகவே தன் சொந்த ஊரான பூம்புகார் வந்து சேர்ந்தாள். அங்கு புத்த பள்ளிகளில் சேர்ந்து தன் சமய அறிவினைப் பெருக்கிக் கொண்டாள். இனி வாதம் செய்தல் வீண் என்றும் வாதத்தின் மூலம் செருக்கும் சினமும் தற்பெருமையும் வளர்கின்றன என்பதை இறுதியாக உணர்ந்தாள். வரலாறாகக் கூறப்படுகின்ற கதையின் நிகழ்வுகளுக்குச் சான்றுகள் இல்லை. ஆனால் நீலகேசி நூலில் குண்டலகேசியும் நீலகேசியும் வாதிட்ட விவரங்களையும் கருத்துக்களையும் 82 பாடல்கள் எடுத்துரைக்கின்றன. யோகி சுத்தானந்த பாரதியார் 219 அடிகளில் குண்டலகேசி வரலாற்றை ‘குண்டலகேசி அகவல் ‘ எனும் நூலாக பாடி உள்ளாள். குண்டலகேசியை இயற்றியவர் நாதகுத்தனார் என்று சொல்லப்படுகிறது. இக்காப்பியம் எழுதப்பட்டது புத்த மதத்தை உயர்த்திப் பிடிக்கத்தான் என்று எண்ணத் தோன்றுகிறது. இந்நூல் முழுமையாகக் கிடைத்திருந்தால் இந்நூலின் காலத்திய பழக்க வழக்கங்கள், சமுதாய நிலை, சமயங்களின் காழ்ப்புணர்வுகள் போன்றவற்றை நாம் தெளிவாக அறிந்திருக்கலாம். ஆனால் இந்நூலிலிருந்து பத்தொன்பது பாடல்களே கிடைத்துள்ளன. தொல்காப்பிய உரை, யாப்பருங்கல விருத்தியுரை, வீர சோழிய உரை, நீலகேசி, சிவஞானசிட்தியாருக்கு ஞானப் பிரகாசர் எழுதிய உரை, ஆகியவற்றுல் மேற்கண்ட 19 பாடல்கள் காணப்படுகின்றன. நீலகேசிக்குச் சமய திவாகர வாமன முனிவர் எழுதிய உரையில் குண்டல கேசியின் 99 பாடல்களின் முதற்குறிப்புகள் மட்டுமே காணப்படுகின்றன. நமக்குக் கிடைத்துள்ள பத்தொன்பது பாடல்களிலிருந்து நாம் எந்த நிகழ்ச்சியையும் அறிய முடியவில்லை. அவை பொதுவான ஒழுக்கங்களைப் போதிக்கின்றன. இதில் கிடைத்த பத்தொன்பதாம் பாடல் முக்கியமான ஒன்றாகும். வேரிக் கமழ்தார் அரசன் விடுக என்ற போழ்தும் தாரித்தல் ஆகா வகையால் கொலை சூழ்ந்த பின்னும் பூரிட்தல் வாடுதல் இவற்றால் பொலிவு இன்றி நின்றான் பாரித்ததெல்லாம் வினையின் பயன் என்ன வல்லான். (19) மாலை சூடிய அவனை ‘விடுதலை செய்க ‘ என்ற போது அவன் மகிழ்ச்சி அடையவில்லை. பின் அவனைக் கொலை செய்யுங்கள் என்ற போதும் அவன் கவலை கொள்ள வில்லை. நடந்ததெல்லாம் வினைப்பயன் எனும் மெய்யுணர்வு அவனுக்கு இருந்ததாஅல் அவன் சலனமின்றி இருந்தான் என்று இப்பாடல் கூறுகிறது. இப்பாடலில் காட்டப்படும் மெய்யுணர்வாளன் யார் ? அவன் ஏன் முதலில் விடுவிக்கப்பட்டான் ? பிறகு ஏன் கொலைத் தண்டனைக்கு ஆளானான் என்பதெல்லாம் தெரியவில்லை. ‘ஒன்று நடந்துதான் தீரும் என்றால் அது நடக்கப் போகிறதே என்று கவலைப்பட்டு என்ன பயன் ? ‘ என்று கேட்பார் கண்ணதாசன். ‘நீர் வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர் முறைவழிப் படூஉம் ‘ என்று கணியன் பூங்குன்றன் பாடுவதை இங்கு பொருத்திப் பார்க்க வேண்டியதாய் உள்ளது. 15ம் பாடலில் அரசன் புத்த பகவனைப் போன்றவன் என்று உதாரணம் காட்டப்படுகிறது. வேறு எப்பாடலிலும் புத்த மதம் பேசப்பட வில்லை. ஆனால் ‘அவாவினை அறுக்க வேண்டும் யாக்கை நிலையில்லாதது, உடம்பு அழுகக் கூடியது ‘ போன்ற கருத்துக்கள் பல பாடல்களில் காணப்படுகின்றன. பாம்பும், அரக்கரும், யாளி போன்ற விலங்குகளும் சிறிது காலம் பழகினாலும், பழகியவரிடத்து அன்பு காட்டும். ஆனால் நாம் எமனோடு எவ்வளவு காலம் எப்படிக் கூடி இருந்தாலும் அவன் சிறிதும் நம்மீது இரக்கம் கொள்ள மாட்டான் என்று ஒரு பாடல்(8) கூறுகிறது. நாம் ஏற்றுக் கொண்ட தலைவர், நெருங்கிய நண்பர் பாசமுள்ள உறவினர் ஆகியோர் மறையும் போது அழுகை தவிர்க்க முடியாததாகி விடுகிறது. ஆனால் நாம் நாள்தோறும் ஒவ்வொரு நொடியையும் கடந்து கொண்டு இறந்து கொண்டிருக்கிறோம். இதற்காக நாம் ஏன் அழவில்லை என்று கேட்கிறது இப்பாடல். பாளையாம் தன்மை செத்தும் பாலனாம் தன்மை செத்தும் காளையாம் தன்மை செத்தும் காமுறும் இளமை செத்தும் மீளுமிவ் வியல்பும் இன்னே மேல்வரும் மூப்பும் ஆகி நாளும்நாள் சாகின் றாமால் நமக்குநாம் அழாதது என்னோ (9) ‘நாம் நம் தாயின் வயிற்றில் கருவாகி இருந்த நிலைவிட்டு இறந்தும், பிறகு குழந்தைப் பருவத்தைக் கடந்தும் (இறந்தும்), பின் காளைப்பருவம் இறந்தும், அதன் பின் மகளிரைக் காமுறும் பருவநிலை இறந்தும் மூப்படைகிறோம். இப்பருவத்தினின்றும் இறக்கப் போவது உறுதி. இப்படிக் கணம் தோறும் இறந்து கொண்டிருக்கும் நாம் பிறர் இறப்புக்கு அழுகின்றோம். நம் இறப்புக்கு அழுவதில்லையே ‘ எனக் கூறும் இப்பாடல் சிறந்த பாடல்களில் ஒன்றாகும். ‘மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம் பழித்தது ஒழுத்து விடின் (குறள் 280) என்றார் வள்ளுவர். இதே போல் உடம்பில் புறத்தே வெளி வேடங்கள் போடும் தவசிகளை ஒரு பாடல் சாடுகிறது. போர்த்தல் உடைநீக்குதல் பொடுத்துகள் மெய்பூசல் கூர்த்த பனிஆறுதல் குளித்து அழலுள்நிற்றல் சார்த்தர் இருபிச்சையர் சடைத்தலையர் ஆதல் வார்த்தை இவைசெய்தவம் மடிந்து ஒழுகல்என்றான். (4) உலகில் ஆசையை அனுபவித்துப் பிறகு துறந்து விடலாம் என்று கூறுவது நெருப்பை நெய்யூற்றி அணைக்கலாம் என்று கூறுவதற்கு ஒப்பாகும் (5) புணர்ச்சியினால் காமத்தை அகற்றுவோம் என்று கூறுவது மிகப் பெருகின்ற வெள்ளத்தை மற்றொரு வெள்ளத்தால் தடுத்து நிறுத்துவதற்குச் சமமாகும் (6) இவை போன்று மிகச் சிறந்த உவமைகளும் இப்பாடல்களிக் காணப்படுகின்றன. மொத்தத்தில் குண்டல கேசி காப்பியம் முழுதும் கிடைத்திருந்தால் தமிழ் கூறும் நல்லுலகம் பெரும் பயன் பெற்றிருக்கும் என்று துணிந்து கூறலாம். —- உதவிய நூல்கள் 1. குண்டலகேசி – மூலமும் உரையும் – ப. சந்தானம், நந்தனார் பதிப்பகம், சிதம்பரம். (1998) 2. ஐம்பெருங்காப்பியங்கள் தொகுதி 5 – ஜெ. சந்திரன், தமிழ் நிலையம், சென்னை – 17 (1998) வளவ துரையன் பரிபாடலில் திருமால் அ முத்துலிங்கம் பற்றி கிரஷ் கார்னாட் நாடகம் பற்றி க மோகனரங்கன் – ‘பின் தொடரும் நிழல் ‘ பற்றி <>ஜெயமோகனின் சங்கச் சித்திரங்கள் பற்றி <>பாவண்ணன் <>புலிநகக் கொன்றை <>நந்திக் கலம்பகம் Series Navigation 20040527_Issue இலவசம் வலை நீலக்கடல் -(தொடர்) அத்தியாயம் 21 பிறந்த மண்ணுக்கு – 3 தேர்தல் வெற்றி மக்களின் வெற்றியா ? காத்திருப்பு வள்ளி வோட்டு போட போறா! தமிழ்க் கணிமை ஆர்வலர்களுக்கு ஓர் அவசர வேண்டுகோள் பூமித்தின்னிகள் வாரபலன் மே 27,2004 – லால் சலாம் நாயனார் , இருநூற்று எட்டு டாலர் படம் , கொப்பாலாவின் எம் டி ஆர் ஹோட்டல் தமிழ்நாட்டு அரசியல் – என் கருத்துக்கள் மஸ்னவி கதை — 09சிங்கமும் முயலும் ஈரோட்டுப் பாதை சரியா ? – 3 ஓடும் உலகத்தை உட்கார்ந்து பார்க்கிறேன் – 7 நாய்கள் பார்த்தசாரதியும் பகவத்கீதையும் அன்புடன் இதயம் – 19 – அம்மா வந்தாள் வதை சீதைகளைக் காதலியுங்கள் ! கவிதைகள் உள் நோக்கு ரேடியோவின் கதை தேனீ – மொழியும் பணியும் … உலக போலீஸ் … கவிதைகள் தாய் மனம் அமெரிக்காவின் ஐம்பெரும் ஏரிகளை அட்லாண்டிக் கடலுடன் இணைக்கும் ஸெயின்ட் லாரென்ஸ் கடல்வீதி [St Lawrence Seaway Connecting The Great Dahi pasanday கலிங்கத்துப்பரணி- சில குறிப்புகள் நிறமற்றவனின் குரல் : சுடலை மாடன் வரை-கவிதைத்தொகுதி அறிமுகம் குண்டலகேசி – சில குறிப்புகள் ஜஃப்ராணி ஷாமி கபாப் கடிதங்கள் மே 27,2004 ஃ –> இளமையான பழைய(ஆயுத) எழுத்து. மெய்மையின் மயக்கம் – 1 ஆயுத எழுத்து பற்றி பொன்விழாக் கொண்டாட்டம்- 3 சமீபத்தில் வாசித்த நூல்கள்- 4 -சக்கரியா(தமிழாக்கம் சுகுமாரன்), சிவகுமார் , எம் ஜி சுரேஷ் , வசந்த், அ. கா. பெருமாள் , தேவதேவன் , இருதுளி கண்ணீர் தண்டவாளங்கள் கடிதங்கள் மே 27, 2004 கடிதம் மே 27,2004 தமிழவன் கவிதைகள்-ஏழு கவிக்கட்டு 8 – யார் நீ ? பலியர்களுடன் உரையாடல் கிருஸ்துவ மதத்தில் புரொடஸ்டண்ட் பிரிவு தோன்றியது போல இஸ்லாமில் உருவாக வேண்டும் ஃபூகோ – ஓர் அறிமுகம் (பகுதி 4) தீவு பூமகன் ஜெயமோகனும் ஸ்ரீரங்கத்து தேவதைகளும்…. இல்லம்… அறை கவிதைகள் மந்திர உலகின் தந்திரங்கள் TOPICS Previous:பிரிவினை Next: கருணையினால்தான்.. { Comments are closed } Series Select Series 19990902_Issue (2) 19990913_Issue (1) 19990915_Issue (1) 19991011_Issue (1) 19991013_Issue (1) 19991027_Issue (1) 19991031_Issue (2) 19991106_Issue (2) 19991114_Issue (3) 19991120_Issue (1) 19991128_Issue (3) 19991203_Issue (49) 19991212_Issue (1) 19991217_Issue (4) 19991219_Issue (3) 20000103_Issue (8) 20000110_Issue (4) 20000118_Issue (4) 20000124_Issue (5) 20000130_Issue (7) 20000206_Issue (4) 20000213_Issue (7) 20000221_Issue (8) 20000228_Issue (4) 20000305_Issue (2) 20000313_Issue (1) 20000320_Issue (1) 20000326_Issue (5) 20000402_Issue (4) 20000406_Issue (2) 20000410_Issue (2) 20000417_Issue (6) 20000418_Issue (1) 20000423_Issue (6) 20000430_Issue (7) 20000507_Issue (7) 20000514_Issue (8) 20000518_Issue (2) 20000521_Issue (6) 20000528_Issue (9) 20000604_Issue (2) 20000606_Issue (2) 20000611_Issue (7) 20000613_Issue (1) 20000618_Issue (11) 20000620_Issue (1) 20000625_Issue (8) 20000702_Issue (10) 20000709_Issue (8) 20000716_Issue (8) 20000717_Issue (1) 20000723_Issue (11) 20000730_Issue (10) 20000806_Issue (8) 20000813_Issue (5) 20000819_Issue (1) 20000820_Issue (5) 20000827_Issue (6) 20000905_Issue (7) 20000909_Issue (2) 20000910_Issue (1) 20000911_Issue (5) 20000917_Issue (7) 20000918_Issue (2) 20000923_Issue (1) 20000924_Issue (10) 20001001_Issue (8) 20001003_Issue (1) 20001008_Issue (11) 20001015_Issue (6) 20001022_Issue (9) 20001029_Issue (11) 20001104_Issue (10) 20001112_Issue (12) 20001118_Issue (1) 20001119_Issue (7) 20001126_Issue (7) 20001127_Issue (1) 20001203_Issue (10) 20001207_Issue (1) 20001210_Issue (9) 20001217_Issue (8) 20001225_Issue (5) 20010101_Issue (13) 20010108_Issue (12) 20010115_Issue (14) 20010122_Issue (11) 20010129_Issue (14) 20010204_Issue (18) 20010211_Issue (18) 20010219_Issue (17) 20010226_Issue (19) 20010304_Issue (16) 20010311_Issue (15) 20010318_Issue (14) 20010325_Issue (15) 20010401_Issue (17) 20010408_Issue (13) 20010415_Issue (14) 20010422_Issue (15) 20010430_Issue (15) 20010505_Issue (16) 20010513_Issue (18) 20010519_Issue (13) 20010525_Issue (1) 20010527_Issue (13) 20010602_Issue (16) 20010610_Issue (18) 20010618_Issue (19) 20010623_Issue (14) 20010629_Issue (17) 20010701_Issue (1) 20010707_Issue (15) 20010715_Issue (17) 20010722_Issue (12) 20010729_Issue (18) 20010805_Issue (20) 20010812_Issue (18) 20010819_Issue (30) 20010825_Issue (22) 20010902_Issue (23) 20010903_Issue (1) 20010910_Issue (26) 20010911_Issue (2) 20010917_Issue (22) 20010924_Issue (25) 20011001_Issue (20) 20011007_Issue (18) 20011015_Issue (26) 20011022_Issue (18) 20011028_Issue (2) 20011029_Issue (16) 20011104_Issue (16) 20011111_Issue (20) 20011118_Issue (20) 20011123_Issue (2) 20011125_Issue (19) 20011202_Issue (20) 20011210_Issue (19) 20011215_Issue (24) 20011222_Issue (25) 20011229_Issue (21) 20020106_Issue (25) 20020113_Issue (19) 20020120_Issue (21) 20020127_Issue (27) 20020203_Issue (29) 20020210_Issue (26) 20020217_Issue (31) 20020224_Issue (21) 20020302_Issue (30) 20020310_Issue (37) 20020317_Issue (23) 20020324_Issue (29) 20020330_Issue (31) 20020407_Issue (32) 20020414_Issue (30) 20020421_Issue (26) 20020428_Issue (26) 20020505_Issue (23) 20020512_Issue (30) 20020518_Issue (28) 20020525_Issue (26) 20020602_Issue (23) 20020610_Issue (30) 20020617_Issue (29) 20020623_Issue (31) 20020629_Issue (27) 20020707_Issue (22) 20020714_Issue (22) 20020722_Issue (29) 20020728_Issue (29) 20020805_Issue (24) 20020812_Issue (26) 20020819_Issue (27) 20020825_Issue (31) 20020902_Issue (25) 20020909_Issue (30) 20020917_Issue (30) 20020924_Issue (28) 20021001_Issue (27) 20021007_Issue (23) 20021013_Issue (25) 20021022_Issue (35) 20021027_Issue (27) 20021102_Issue (23) 20021110_Issue (29) 20021118_Issue (24) 20021124_Issue (35) 20021201_Issue (24) 20021207_Issue (35) 20021215_Issue (29) 20021221_Issue (23) 20021230_Issue (30) 20030104_Issue (37) 20030112_Issue (29) 20030119_Issue (29) 20030125_Issue (30) 20030202_Issue (37) 20030209_Issue (44) 20030215_Issue (35) 20030223_Issue (36) 20030302_Issue (45) 20030309_Issue (37) 20030317_Issue (33) 20030323_Issue (28) 20030329_Issue (33) 20030406_Issue (31) 20030413_Issue (27) 20030419_Issue (38) 20030427_Issue (34) 20030504_Issue (28) 20030510_Issue (47) 20030518_Issue (35) 20030525_Issue (31) 20030530_Issue (37) 20030607_Issue (34) 20030615_Issue (42) 20030619_Issue (37) 20030626_Issue (42) 20030703_Issue (45) 20030710_Issue (32) 20030717_Issue (57) 20030724_Issue (49) 20030802_Issue (42) 20030809_Issue (40) 20030815_Issue (36) 20030822_Issue (46) 20030828_Issue (42) 20030904_Issue (41) 20030911_Issue (36) 20030918_Issue (43) 20030925_Issue (39) 20031002_Issue (31) 20031010_Issue (48) 20031016_Issue (39) 20031017_Issue (1) 20031023_Issue (42) 20031030_Issue (42) 20031106_Issue (59) 20031113_Issue (44) 20031120_Issue (51) 20031127_Issue (53) 20031204_Issue (40) 20031211_Issue (55) 20031218_Issue (46) 20031225_Issue (40) 20040101_Issue (49) 20040108_Issue (52) 20040115_Issue (44) 20040122_Issue (45) 20040129_Issue (46) 20040205_Issue (33) 20040212_Issue (49) 20040219_Issue (51) 20040226_Issue (50) 20040304_Issue (47) 20040311_Issue (48) 20040318_Issue (61) 20040325_Issue (47) 20040401_Issue (54) 20040408_Issue (50) 20040415_Issue (72) 20040422_Issue (52) 20040428_Issue (1) 20040429_Issue (60) 20040506_Issue (48) 20040512_Issue (1) 20040513_Issue (52) 20040518_Issue (1) 20040520_Issue (46) 20040527_Issue (54) 20040603_Issue (47) 20040609_Issue (1) 20040610_Issue (48) 20040617_Issue (52) 20040623_Issue (1) 20040624_Issue (47) 20040701_Issue (46) 20040708_Issue (41) 20040715_Issue (50) 20040722_Issue (54) 20040729_Issue (41) 20040805_Issue (61) 20040812_Issue (50) 20040819_Issue (42) 20040826_Issue (1) 20040827_Issue (53) 20040902_Issue (50) 20040909_Issue (41) 20040916_Issue (45) 20040923_Issue (39) 20040930_Issue (42) 20041007_Issue (51) 20041014_Issue (46) 20041021_Issue (46) 20041028_Issue (39) 20041104_Issue (55) 20041111_Issue (55) 20041117_Issue (1) 20041118_Issue (51) 20041125_Issue (53) 20041202_Issue (50) 20041209_Issue (57) 20041216_Issue (52) 20041223_Issue (59) 20041230_Issue (44) 20050106_Issue (57) 20050113_Issue (64) 20050120_Issue (47) 20050127_Issue (48) 20050203_Issue (39) 20050206_Issue (34) 20050225_Issue (49) 20050304_Issue (35) 20050311_Issue (46) 20050318_Issue (59) 20050401_Issue (46) 20050408_Issue (42) 20050414_Issue (1) 20050415_Issue (41) 20050422_Issue (29) 20050429_Issue (25) 20050506_Issue (28) 20050513_Issue (32) 20050520_Issue (24) 20050526_Issue (28) 20050609_Issue (23) 20050616_Issue (30) 20050623_Issue (32) 20050630_Issue (40) 20050707_Issue (31) 20050715_Issue (30) 20050722_Issue (26) 20050729_Issue (28) 20050805_Issue (23) 20050812_Issue (25) 20050819_Issue (22) 20050826_Issue (28) 20050902_Issue (29) 20050909_Issue (30) 20050916_Issue (28) 20050923_Issue (26) 20050930_Issue (27) 20051006_Issue (22) 20051014_Issue (22) 20051021_Issue (31) 20051028_Issue (43) 20051104_Issue (28) 20051111_Issue (23) 20051118_Issue (31) 20051125_Issue (33) 20051201_Issue (1) 20051202_Issue (24) 20051209_Issue (34) 20051216_Issue (32) 20051223_Issue (34) 20051230_Issue (28) 20060101_Issue (4) 20060106_Issue (28) 20060113_Issue (34) 20060120_Issue (45) 20060127_Issue (35) 20060203_Issue (48) 20060210_Issue (32) 20060217_Issue (46) 20060224_Issue (47) 20060303_Issue (29) 20060317_Issue (57) 20060324_Issue (42) 20060331_Issue (46) 20060407_Issue (32) 20060414_Issue (48) 20060421_Issue (41) 20060428_Issue (34) 20060505_Issue (42) 20060512_Issue (39) 20060519_Issue (48) 20060526_Issue (39) 20060602_Issue (43) 20060609_Issue (39) 20060616_Issue (41) 20060623_Issue (42) 20060630_Issue (39) 20060707_Issue (30) 20060714_Issue (33) 20060721_Issue (20) 20060728_Issue (31) 20060801_Issue (6) 20060804_Issue (33) 20060811_Issue (36) 20060818_Issue (36) 20060825_Issue (39) 20060901_Issue (41) 20060908_Issue (31) 20060915_Issue (29) 20060922_Issue (35) 20060929_Issue (31) 20061006_Issue (36) 20061012_Issue (35) 20061019_Issue (43) 20061026_Issue (34) 20061102_Issue (35) 20061109_Issue (41) 20061116_Issue (32) 20061123_Issue (31) 20061130_Issue (25) 20061207_Issue (32) 20061214_Issue (31) 20061221_Issue (33) 20061228_Issue (33) 20070104_Issue (43) 20070111_Issue (26) 20070118_Issue (32) 20070125_Issue (43) 20070201_Issue (29) 20070208_Issue (37) 20070215_Issue (24) 20070222_Issue (35) 20070301_Issue (35) 20070308_Issue (35) 20070315_Issue (28) 20070322_Issue (32) 20070329_Issue (37) 20070405_Issue (33) 20070412_Issue (24) 20070419_Issue (34) 20070426_Issue (32) 20070503_Issue (24) 20070510_Issue (29) 20070517_Issue (34) 20070524_Issue (31) 20070531_Issue (32) 20070607_Issue (32) 20070614_Issue (29) 20070621_Issue (34) 20070628_Issue (27) 20070705_Issue (35) 20070712_Issue (27) 20070719_Issue (24) 20070726_Issue (30) 20070802_Issue (33) 20070809_Issue (36) 20070816_Issue (34) 20070823_Issue (29) 20070830_Issue (37) 20070906_Issue (34) 20070913_Issue (33) 20070920_Issue (39) 20070927_Issue (35) 20071004_Issue (32) 20071011_Issue (37) 20071018_Issue (38) 20071025_Issue (37) 20071101_Issue (40) 20071108_Issue (45) 20071115_Issue (41) 20071122_Issue (41) 20071129_Issue (36) 20071206_Issue (41) 20071213_Issue (42) 20071220_Issue (33) 20071227_Issue (45) 20080103_Issue (40) 20080110_Issue (54) 20080117_Issue (41) 20080124_Issue (40) 20080131_Issue (34) 20080207_Issue (42) 20080214_Issue (30) 20080221_Issue (41) 20080227_Issue (35) 20080306_Issue (39) 20080313_Issue (33) 20080320_Issue (41) 20080327_Issue (36) 20080403_Issue (44) 20080410_Issue (44) 20080417_Issue (43) 20080424_Issue (34) 20080501_Issue (45) 20080508_Issue (41) 20080515_Issue (33) 20080522_Issue (40) 20080529_Issue (46) 20080605_Issue (39) 20080612_Issue (39) 20080619_Issue (29) 20080626_Issue (26) 20080703_Issue (26) 20080710_Issue (33) 20080717_Issue (36) 20080724_Issue (33) 20080731_Issue (35) 20080807_Issue (31) 20080814_Issue (45) 20080821_Issue (35) 20080828_Issue (31) 20080904_Issue (35) 20080911_Issue (34) 20080918_Issue (28) 20080925_Issue (37) 20081002_Issue (29) 20081009_Issue (45) 20081016_Issue (34) 20081023_Issue (45) 20081113_Issue (24) 20081120_Issue (52) 20081127_Issue (28) 20081204_Issue (23) 20081211_Issue (24) 20081218_Issue (28) 20081225_Issue (32) 20090101_Issue (24) 20090108_Issue (46) 20090115_Issue (42) 20090122_Issue (21) 20090129_Issue (36) 20090205_Issue (34) 20090212_Issue (33) 20090219_Issue (30) 20090226_Issue (24) 20090305_Issue (32) 20090312_Issue (37) 20090319_Issue (28) 20090326_Issue (34) 20090402_Issue (39) 20090409_Issue (28) 20090416_Issue (26) 20090423_Issue (30) 20090430_Issue (24) 20090507_Issue (27) 20090512_Issue (32) 20090521_Issue (24) 20090528_Issue (31) 20090604_Issue (27) 20090611_Issue (36) 20090618_Issue (36) 20090625_Issue (37) 20090702_Issue (28) 20090709_Issue (39) 20090716_Issue (39) 20090724_Issue (34) 20090731_Issue (45) 20090806_Issue (35) 20090813_Issue (44) 20090820_Issue (38) 20090828_Issue (47) 20090904_Issue (36) 20090915_Issue (54) 20090919_Issue (30) 20090926_Issue (35) 20091002_Issue (25) 20091009_Issue (41) 20091015_Issue (38) 20091023_Issue (31) 20091029_Issue (31) 20091106_Issue (35) 20091113_Issue (27) 20091119_Issue (33) 20091129_Issue (29) 20091204_Issue (25) 20091211_Issue (31) 20091218_Issue (30) 20091225_Issue (29) 20100101_Issue (26) 20100108_Issue (24) 20100115_Issue (26) 20100121_Issue (35) 20100128_Issue (31) 20100206_Issue (34) 20100212_Issue (26) 20100220_Issue (32) 20100227_Issue (28) 20100305_Issue (35) 20100312_Issue (31) 20100319_Issue (31) 20100326_Issue (24) 20100402_Issue (29) 20100411_Issue (25) 20100418_Issue (28) 20100425_Issue (30) 20100502_Issue (29) 20100509_Issue (21) 20100516_Issue (26) 20100523_Issue (38) 20100530_Issue (30) 20100606_Issue (23) 20100613_Issue (31) 20100620_Issue (26) 20100627_Issue (36) 20100704_Issue (34) 20100711_Issue (32) 20100718_Issue (38) 20100725_Issue (33) 20100801_Issue (35) 20100807_Issue (44) 20100815_Issue (33) 20100822_Issue (33) 20100829_Issue (28) 20100905_Issue (35) 20100912_Issue (37) 20100919_Issue (33) 20100926_Issue (34) 20101002_Issue (39) 20101010_Issue (41) 20101017_Issue (36) 20101024_Issue (37) 20101101_Issue (36) 20101107_Issue (34) 20101114_Issue (40) 20101121_Issue (29) 20101128_Issue (34) 20101205_Issue (34) 20101212_Issue (39) 20101219_Issue (35) 20101227_Issue (48) 20110102_Issue (41) 20110109_Issue (44) 20110117_Issue (43) 20110123_Issue (39) 20110130_Issue (45) 20110206_Issue (40) 20110213_Issue (35) 20110220_Issue (41) 20110227_Issue (45) 20110306_Issue (37) 20110313_Issue (48) 20110320_Issue (49) 20110327_Issue (42) 20110403_Issue (44) 20110410_Issue (39) 20110417_Issue (46) 20110424_Issue (33) 20110430_Issue (47) 20110508_Issue (42) 20110515_Issue (50) 20110522_Issue (40) 20110529_Issue (43) Other posts in series: இலவசம் வலை நீலக்கடல் -(தொடர்) அத்தியாயம் 21 பிறந்த மண்ணுக்கு – 3 தேர்தல் வெற்றி மக்களின் வெற்றியா ? காத்திருப்பு வள்ளி வோட்டு போட போறா! தமிழ்க் கணிமை ஆர்வலர்களுக்கு ஓர் அவசர வேண்டுகோள் பூமித்தின்னிகள் வாரபலன் மே 27,2004 – லால் சலாம் நாயனார் , இருநூற்று எட்டு டாலர் படம் , கொப்பாலாவின் எம் டி ஆர் ஹோட்டல் தமிழ்நாட்டு அரசியல் – என் கருத்துக்கள் மஸ்னவி கதை — 09சிங்கமும் முயலும் ஈரோட்டுப் பாதை சரியா ? – 3 ஓடும் உலகத்தை உட்கார்ந்து பார்க்கிறேன் – 7 நாய்கள் பார்த்தசாரதியும் பகவத்கீதையும் அன்புடன் இதயம் – 19 – அம்மா வந்தாள் வதை சீதைகளைக் காதலியுங்கள் ! கவிதைகள் உள் நோக்கு ரேடியோவின் கதை தேனீ – மொழியும் பணியும் … உலக போலீஸ் … கவிதைகள் தாய் மனம் அமெரிக்காவின் ஐம்பெரும் ஏரிகளை அட்லாண்டிக் கடலுடன் இணைக்கும் ஸெயின்ட் லாரென்ஸ் கடல்வீதி [St Lawrence Seaway Connecting The Great Dahi pasanday கலிங்கத்துப்பரணி- சில குறிப்புகள் நிறமற்றவனின் குரல் : சுடலை மாடன் வரை-கவிதைத்தொகுதி அறிமுகம் குண்டலகேசி – சில குறிப்புகள் ஜஃப்ராணி ஷாமி கபாப் கடிதங்கள் மே 27,2004 ஃ –> இளமையான பழைய(ஆயுத) எழுத்து. மெய்மையின் மயக்கம் – 1 ஆயுத எழுத்து பற்றி பொன்விழாக் கொண்டாட்டம்- 3 சமீபத்தில் வாசித்த நூல்கள்- 4 -சக்கரியா(தமிழாக்கம் சுகுமாரன்), சிவகுமார் , எம் ஜி சுரேஷ் , வசந்த், அ. கா. பெருமாள் , தேவதேவன் , இருதுளி கண்ணீர் தண்டவாளங்கள் கடிதங்கள் மே 27, 2004 கடிதம் மே 27,2004 தமிழவன் கவிதைகள்-ஏழு கவிக்கட்டு 8 – யார் நீ ? பலியர்களுடன் உரையாடல் கிருஸ்துவ மதத்தில் புரொடஸ்டண்ட் பிரிவு தோன்றியது போல இஸ்லாமில் உருவாக வேண்டும் ஃபூகோ – ஓர் அறிமுகம் (பகுதி 4) தீவு பூமகன் ஜெயமோகனும் ஸ்ரீரங்கத்து தேவதைகளும்…. இல்லம்… அறை கவிதைகள் மந்திர உலகின் தந்திரங்கள் திண்ணை பற்றி திண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை உங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள். ஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம். புதிய திண்ணை படைப்புகள் https://puthu.thinnai.comஇல் உள்ளன. தேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள் சமஸ்கிருதம் தொடர் முழுவதும் இந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif Meta Log in Entries feed Comments feed WordPress.org Categories அரசியலும் சமூகமும் அறிவிப்புகள் அறிவியலும் தொழில்நுட்பமும் இலக்கிய கட்டுரைகள் கதைகள் கலைகள் கவிதைகள் நகைச்சுவை மாத கணக்கில் மாத கணக்கில் Select Month May 2011 (177) April 2011 (207) March 2011 (176) February 2011 (161) January 2011 (212) December 2010 (156) November 2010 (172) October 2010 (154) September 2010 (140) August 2010 (172) July 2010 (136) June 2010 (117) May 2010 (143) April 2010 (111) March 2010 (121) February 2010 (121) January 2010 (141) December 2009 (116) November 2009 (123) October 2009 (165) September 2009 (155) August 2009 (164) July 2009 (185) June 2009 (136) May 2009 (121) April 2009 (141) March 2009 (130) February 2009 (121) January 2009 (169) December 2008 (107) November 2008 (104) October 2008 (153) September 2008 (134) August 2008 (146) July 2008 (159) June 2008 (134) May 2008 (204) April 2008 (169) March 2008 (150) February 2008 (176) January 2008 (175) December 2007 (163) November 2007 (201) October 2007 (143) September 2007 (143) August 2007 (167) July 2007 (117) June 2007 (125) May 2007 (146) April 2007 (124) March 2007 (166) February 2007 (125) January 2007 (139) December 2006 (126) November 2006 (160) October 2006 (146) September 2006 (140) August 2006 (170) July 2006 (113) June 2006 (205) May 2006 (167) April 2006 (155) March 2006 (174) February 2006 (173) January 2006 (146) December 2005 (153) November 2005 (115) October 2005 (118) September 2005 (140) August 2005 (98) July 2005 (115) June 2005 (125) May 2005 (112) April 2005 (184) March 2005 (140) February 2005 (122) January 2005 (216) December 2004 (262) November 2004 (215) October 2004 (182) September 2004 (217) August 2004 (207) July 2004 (232) June 2004 (196) May 2004 (202) April 2004 (289) March 2004 (203) February 2004 (183) January 2004 (236) December 2003 (181) November 2003 (207) October 2003 (203) September 2003 (159) August 2003 (206) July 2003 (183) June 2003 (155) May 2003 (178) April 2003 (130) March 2003 (176) February 2003 (152) January 2003 (125) December 2002 (141) November 2002 (111) October 2002 (137) September 2002 (113) August 2002 (108) July 2002 (102) June 2002 (140) May 2002 (107) April 2002 (114) March 2002 (150) February 2002 (107) January 2002 (92) December 2001 (109) November 2001 (77) October 2001 (100) September 2001 (99) August 2001 (90) July 2001 (63) June 2001 (84) May 2001 (61) April 2001 (74) March 2001 (60) February 2001 (72) January 2001 (64) December 2000 (33) November 2000 (38) October 2000 (46) September 2000 (35) August 2000 (25) July 2000 (48) June 2000 (32) May 2000 (32) April 2000 (28) March 2000 (9) February 2000 (23) January 2000 (28) December 1999 (60) November 1999 (9) October 1999 (5) September 1999 (3) 0 (36)
ஹோம் » போடோகல்லெரி » லைஃப்ஸ்டைல் » கழிவுகள் இல்லா சமையலறை... நிலையான எதிர்காலத்திற்கு தேவையான டிப்ஸ்! கழிவுகள் இல்லா சமையலறை... நிலையான எதிர்காலத்திற்கு தேவையான டிப்ஸ்! எலுமிச்சை சாதம் செய்கிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். அதன் தோல்களை பயன்படுத்தி ஊறுகாய் செய்யலாம். News18 Tamil | November 04, 2022, 19:43 IST 1/ 7 காய்கறி, பழங்கள் உள்ளிட்ட உணவுப் பொருட்களை எந்த வகையிலும் வீணடிக்காமல் முடிந்தவரை பயனுள்ளதாக மாற்றிக் கொள்ள வேண்டும். எந்தவொரு சமையல் பொருளையும் வீணடிக்காத வகையில் தான் நம் முன்னோர்களின் சமையல் முறை இருந்தது. ஆனால், காலங்கள் மாற, மாற நமது சமையல் முறையும் வெகுவாக மாற்றம் அடைந்து விட்டது. உணவின் சுவைக்கு நாம் முக்கியத்துவம் கொடுக்கும் அளவுக்கு உணவுப் பொருள்களை வீணாக்காமல் பயன்படுத்தி கொள்ள காட்டுவதில்லை. 2/ 7 ஆனால், விலைவாசி முன்பு போல இல்லை. முன்பெல்லாம் 100 ரூபாய்க்கு 5 கிலோ பட்டானி கிடைத்தது. ஆனால், இப்போது ஒரு கிலோ பட்டானியின் விலையே 100 ரூபாயை தாண்டும். ஆக, நம் சமையல் அறைக்குள் உள்நுழையும் எந்தவொரு பொருளையும் நாம் வீணடிக்காமல் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். 3/ 7 நுனி முதல் அடி வரை பயன்பாடு : காய்கறிகளில் அனைத்துப் பகுதிகளையும் பயன்பத்திக் கொள்ளும் சாதூர்யத்தை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும். வேர்கள், தண்டுகள், கீரைகள், மலர்கள், மொட்டுகள் என அனைத்தையும் பச்சையாகவோ அல்லது சமைத்தோ சாப்பிடும் பாரம்பரியம் நம் உணவுக் கலாச்சாரத்தில் அடங்கியுள்ளது. அதேபோன்று ஊறுகாய் செய்வது, வத்தல் போடுவது, காய வைத்து பதப்படுத்துவது என பல்வேறு உத்திகளை நம் முன்னோர்கள் பயன்படுத்தி வந்துள்ளனர். மேற்குறிப்பிட்ட வகையில், அனைத்து பாகங்களையும் உணவுப் பொருளாக மாற்றுவது அல்லது அதனை பதப்படுத்தி பிற்கால பயன்பாட்டிற்கு வைத்துக் கொள்வது என இந்த இரண்டு உத்திகளை பயன்படுத்தினாலே நம் சமையல் அறைகள் கழிவு இல்லாத ஒன்றாக மாறும். 4/ 7 கழிவுகளை தூக்கி எறிய வேண்டாம்: பெரும்பாலும் காய்கறி மற்றும் பழங்களில் நமக்கு தேவையான பகுதியை வெட்டி எடுத்துக் கொண்டு மற்றவற்றை தூக்கியெறியும் பழக்கத்தை நாம் கடைப்பிடித்து வருகிறோம். அதுபோல செய்யாமல் அவற்றை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். உதாரணத்திற்கு தண்டுக்கீரை வாங்கி கீரைகளை சமைக்கும் நாம், அந்தத் தண்டுகளை தூக்கியெறிய தேவையில்லை. அதை சிறு துண்டுகளாக வெட்டி சாம்பாரில் சேர்த்துக் கொள்ளலாம். அதேபோல, எலுமிச்சை சாதம் செய்கிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். அதன் தோல்களை பயன்படுத்தி ஊறுகாய் செய்யலாம். சரி பீட்ரூட் தோல், சௌ சௌ தோல் போன்ற எதற்குமே பயன்படுத்த முடியாத கழிவுகளை என்ன செய்வது? அவற்றை உரமாக மாற்றி நமது தோட்டத்தில் உள்ள செடிகள் அல்லது பூந்தொட்டிகளுக்கு உரமிடலாம். 5/ 7 வத்தல் முறை: வெண்டக்காய், சுண்டக்காய், மாங்காய் போன்ற காய்கறிகள் அதிகம் விளையும் காலங்களில், அதை மலிவான விலையில் வாங்கி வத்தல் போட்டு வைத்துக் கொள்வது மாபெரும் உத்தி ஆகும். பின்னாளில் இவை கிடைக்காத அல்லது விலை உயர்ந்த சமயங்களில் அவற்றை தண்ணீரில் ஊற வைத்து நாம் பயன்படுத்திக் கொள்ளலாம். 6/ 7 பூக்களை உண்ணும் பழக்கம் : பண்டைய காலங்களில் பூ உண்ணும் பழக்கம் இருந்துள்ளது. காலப்போக்கில் அது மாறிவிட்டது. சாதாரணமாக புளியம்பூ, வாழைப்பூ போன்றவற்றை பச்சையாகவோ, சமைத்தோடு சாப்பிடும் பழக்கம் இன்று மறைந்து வருகிறது. அவற்றிலும் கூட ஊட்டச்சத்துகள் நிறைய இருக்கின்றன. வடகிழக்கு மாநிலங்களில் வேப்பம்பூவை சூப் செய்து அருந்துவார்களாம். 7/ 7 இதையும் முயற்சி செய்யலாம்: வெங்காயம் விலை ஏறி விட்டதாக கண்ணீர் சிந்த வேண்டாம். வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு போன்றவற்றைக் கூட நறுக்கி காய வைத்து, பிறகு தேவைப்படும் காலங்களில் பயன்படுத்தும் உத்தி சில குடும்பங்களில் உள்ளது. ஆக, மொத்தம் காய்கறிகளை மதிப்பு கூட்டுப் பொருட்களாக மாற்றி விட்டால் மழைக்காலம் அல்லது விலை உயர்ந்த காலங்களில் அவற்றைப் பயன்படுத்திக் கொள்ளலாம். Latest Story Links Trending Tag Latest Story PMKonline rummyootycollege studentFIFA 2022BJPScholarshipbirthdayBird SanctuaryScholarshipfoodKarnatakaChennaiAyyappan temple in SabarimalaCrime News
காங்கிரஸ் தொடர்ச்சியாக நிலையான ஆட்சியை வைத்திருந்த அசாமில், முதன்முறையாக 2016 இல் பா.ஜ.க ஆட்சியைப் பிடித்து மகத்தான வெற்றியைப் பெற்றது. கடந்த சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க வின் பெரிய வெற்றியைக் கண்டு காங்கிரஸ் அதிர்ச்சியிலிருந்தது. தற்போது 2021 இல் நடக்கவிருக்கும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அசாமில் உள்ள மக்களை வெல்ல அனைத்தும் முனையையும் விட்டுவைக்காமல் தீவிரமாகக் காங்கிரஸ் செயல்பட்டு வருகின்றது. சமீபத்தில் அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி தனது பேஸ்புக் பக்கத்தில் மக்களின் நெருக்கடி பிரச்சனைகளைத் தீர்க்க அசாம் பச்சோ என்ற பக்கத்தை உருவாக்கினார். இந்த பக்கமானது பெரும்பாலும் மக்களை நெருங்கக் காங்கிரஸ் கட்சியால் பயன்படுத்தப்பட்டு வந்தது. மேலும் அசாம் மக்களுடன் தங்களின் நெருக்கத்தைக் காண்பிக்கத் தனது பிரச்சார பக்கத்தில் டீ தோட்டத்தின் புகைப்படம் ஒன்றை வெளியிட்டது. அந்த புகைப்படத்தில் "அசாமில் டீ எஸ்டேட் தொழிலாளர்கள்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த புகைப்படம் குறித்து உண்மையை பா.ஜ.க தலைவர் ஹிமந்தா பிஸ்வா சர்மா டிவிட்டர் பக்கத்தில் சரிபார்த்தார். காங்கிரஸ் கட்சி தனது பக்கத்தில் பகிர்ந்த புகைப்படம் உண்மையில் தைவான் டீ எஸ்டேட் உடையது என்பதைக் கண்டறிந்தார். மேலும் இதுகுறித்து opindiya சரிபார்த்த போதும், அசாம் டீ எஸ்டேட் தொழிலாளர்கள் என்று குறிப்பிடப்பட்டிருந்தது, உண்மையின் சீனாவின் தைவானைச் சேர்ந்த டீ எஸ்டேட் என்பதை உறுதி செய்தது. Official Congress campaign page is using photo of tea garden from Taiwan to say "Assam Bachao". Congress leaders can't even recognise Assam? This is an insult of Assam and Tea Garden workers of our state. #CongressInsultsAssam pic.twitter.com/UTS7iSROu2 — Himanta Biswa Sarma (@himantabiswa) March 4, 2021 சர்மா பகிர்ந்த புகைப்படத்தில், அந்த புகைப்படத்தில் தேயிலைத் தோட்டத்தில் வேலையும் செய்யும் பெண்களின் உடையானது அசாமில் உள்ள கலாச்சாரத்தை விடுத்து வேறு கலரச்சாரத்தினர் அணியும் உடைபோன்று தென்பட்டது. அமைச்சர் அந்த புகைப்படம் தைவானைச் சேர்ந்தது என்று குறிப்பிட்டார். இதிலிருந்து காங்கிரஸ் ஊடக பிரச்சாரங்களுக்குத் தேக்கிவைக்கப்பட்டுள்ள டீ எஸ்டேட் புகைப்படத்தைப் பயன்படுத்தியது என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. இதில் ஆச்சிரியமடையும் விதமாக, இந்த புகைப்படம் வெளியிட்ட இரண்டுநாட்களுக்கு முன்பு காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி அசாமில் தேயிலை தொழிலாளர்களைச் சந்தித்து, அவர்களுடன் வேலை செய்து புகைப்படங்களை எடுத்துக்கொன்றார். ஆனால் கட்சிக்கு அந்த புகைப்படங்கள் எதுவும் கிடைக்காமல் வெளிநாட்டிலிருந்து புகைப்படத்தை எடுக்கும் நிலைமை உள்ளது. Categories: Top Stories ஊடக பொய்கள் Janani Next Story கதிர் தொகுப்பு Trending News Similar Posts © 2019-20. All rights reserved Powered By Hocalwire We use cookies for analytics, advertising and to improve our site. You agree to our use of cookies by continuing to use our site. To know more, see our Cookie Policy and Cookie Settings.Ok
சேலத்தில் கொலை செய்யப்பட்டு, கடந்த 9 மாதங்களாக காவல்துறை பராமரிப்பில் இருந்து வந்த வங்கதேசத்தைச் சேர்ந்த மசாஜ் சென்டர் பெண்ணின் சடலம், இந்தியா வந்திருந்த கணவரிடம் செவ்வாய்க்கிழமை (ஆக. 2) ஒப்படைக்கப்பட்டது. வங்கதேச நாட்டைச் சேர்ந்தவர் தேஜ்மண்டல் (வயது 29). சேலத்தில் சங்கர் நகர், அங்கம்மாள் காலனி ஆகிய இடங்களில் தேஜாஸ் ஸ்பா என்ற பெயரில் மசாஜ் மையங்களை நடத்தி வந்தார். சந்தேகத்தின்பேரில் இந்த மையத்தில் காவல்துறையினர் சோதனை செய்தபோது, மசாஜ் மையம் என்ற போர்வையில் பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்து வந்தது தெரிய வந்தது. இதுகுறித்த விசாரணை ஒருபுறம் நடந்து வந்த நிலையில், கடந்த 2021- ஆம் ஆண்டு அக்டோபர் 15- ஆம் தேதி, திடீரென்று தேஜ்மண்டல் கொலை செய்யப்பட்டார். சேலம் குமாரசாமிப்பட்டியில் அ.தி.மு.க. பிரமுகர் நடேசனுக்குச் சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பில் தேஜ்மண்டல் வாடகைக்கு வசித்து வந்தார். அந்த வீட்டில் உள் அலமாரியில் பெரிய சூட்கேஸூக்குள் அவருடைய சடலத்தை அடைத்து வைத்துவிட்டு கொலையாளிகள் தப்பிச் சென்றுவிட்டனர். தேஜ் மண்டல் தன்னுடைய மசாஜ் மையத்தில் சொந்த நாட்டைச் சேர்ந்த ரிஷி, நிஷி, ஷீலா ஆகிய மூன்று பெண்களையும், லப்லூ என்ற ஆண் ஊழியரையும் பணிக்கு அமர்த்தி இருந்தார். அவர்களை, தான் வசித்து வரும் அதே குடியிருப்பில் இன்னொரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்க வைத்திருந்தார். காவல்துறை விசாரணையில் அவரிடம் வேலை செய்து வந்த நான்கு பேரும் சேர்ந்துதான், தேஜ்மண்டலை பணத்துக்காக கழுத்தை இறுக்கிக் கொலை செய்துவிட்டு தலைமறைவாகி விட்டது தெரிய வந்தது. இந்த வழக்கில் குற்றவாளிகள் இன்னும் கண்டுபிடிக்க முடியாமல் சேலம் மாநகர காவல்துறையினர் திணறி வருகின்றனர். இதற்கிடையே, தேஜ்மண்டலின் சடலம் சேலம் அரசு மருத்துவமனையில் உடற்கூராய்வு செய்யப்பட்டது. சடலத்தைப் பெற்றுக்கொள்ளுமாறு வங்கதேசத்தில் வசித்து வரும் அவருடைய கணவர் முகமது ராக்கிக்கு காவல்துறையினர் இந்திய தூதரகம் மூலமாக தகவல் அளித்தனர். ஆனால் இந்தியா வந்து செல்லும் அளவுக்கு வசதி இல்லாததால் உடனடியாக வர முடியாது என்று அவரும் கடிதம் மூலம் தகவல் அனுப்பி இருந்தார். இதனால், கடந்த 9 மாதத்திற்கும் மேலாக தேஜ்மண்டலின் சடலம் காவல்துறை கண்காணிப்பில், சேலம் அரசு மருத்துவமனையின் சவக்கிடங்கில் வைத்து பராமரிக்கப்பட்டு வந்தது. இது ஒருபுறம் இருக்க, முகமது ராக்கி இந்தியா வந்து செல்வதற்கான விமான போக்குவரத்து செலவு, பாஸ்போர்ட், விசா ஆகியவற்றுக்கான செலவுத்தொகையை காவல்துறையினர் அவருக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து முகமது ராக்கி, ஜூலை 31- ஆம் தேதி சேலம் வந்து சேர்ந்தார். அவரிடம், அஸ்தம்பட்டி காவல் ஆய்வாளர் பால்ராஜ், எஸ்.ஐ. அருண்ராஜ் ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில், ''தனது மனைவி அழகுக்கலை தொழில் செய்வதற்காக சொந்த நாட்டில் இருந்து இந்தியாவுக்கு வந்தார். கடந்த 2016- ஆம் ஆண்டு எங்களுக்கு பெண் குழந்தை பிறந்தது. குழந்தையை என்னிடம் ஒப்படைத்துவிட்டு அவர் இந்தியா வந்துவிட்டார். அவருடைய நடவடிக்கைகள் எனக்குப் பிடிக்காததால் அவர் எங்கு இருக்கிறார்? என்ன ஆனார் என்று பெரிதாக கண்டுகொள்ளவில்லை. அவர் கொலை செய்யப்பட்டார் என்றபோதுதான், தேஜ்மண்டல் பாலியல் தொழில் செய்து வந்திருப்பதே தெரிய வந்தது,'' என்று முகமது ராக்கி கூறியுள்ளார். அரசு மருத்துவமனை சடவக்கிடங்கில் பதப்படுத்தி வைக்கப்பட்டு இருந்த தேஜ்மண்டலின் சடலத்தை முகமது ராக்கி அடையாளம் காட்டினார். இறந்தவர் ஒரு மாற்றுத்திறனாளி. அதை வைத்து தனது மனைவியின் சடலத்தை அடையாளம் காட்டினார். இந்நிலையில், மசாஜ் மையங்கள் நடத்தி வந்த கட்டடங்களுக்கும், குடியிருந்த வீட்டிற்கும் தேஜ்மண்டல் கொடுத்திருந்த அட்வான்ஸ் தொகையைப் பெற்றுத் தருமாறு முகமது ராக்கி கேட்டிருந்தார். அத்தொகையை பெற்றுக் கொடுக்கும் நடவடிக்கையிலும் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். சேலத்திலேயே தேஜ்மண்டலின் சடலம் அடக்கம் செய்யப்பட்டது. கொலையாளிகள் என சந்தேகிக்கப்படும் ரிஷி, நிஷி, ஷீலா, லப்லூ ஆகியோரின் படங்களைக் காண்பித்து விசாரித்தபோது, அவர்களில் இருவர் வங்கதேசத்தில் தேஜ்மண்டலின் வீட்டில் இருந்து 150 கி.மீ. தொலைவில் உள்ள ஒரு மாவட்டத்தில் வசித்து வருவது தெரிய வந்தது. கொலையாளிகளைப் பிடிக்கவும் காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். Related Tags Salem Women incident மிஸ் பண்ணிடாதீங்க பெண் காவலரின் துணிச்சலை பாராட்டி பரிசளித்த டாக்டர்கள் சிதம்பரம் அருகே முதலை கடித்து ஐடிஐ மாணவர் உயிரிழப்பு உணவக உரிமையாளர் கொலை வழக்கு; குற்றவாளியை கண்டுபிடித்த மோப்ப நாய் முழுவதும் என்.ஐ.ஏ வசமான மங்களூர் சம்பவ வழக்கு; உதகை உடற்கல்வி ஆசிரியரிடம் தீவிர விசாரணை சார்ந்த செய்திகள் ஒட்டன்சத்திரத்தில் இந்திய அளவிலான கபடி போட்டி - அமைச்சர் சக்கரபாணி பேட்டி வேளாங்கண்ணியில் கனமழை பெரம்பலூரில் ட்ரோன்கள் பறக்க தடை பெண் காவலரின் துணிச்சலை பாராட்டி பரிசளித்த டாக்டர்கள் Trending "நானும் நயன்தாராவும் பிரமித்துப் போனோம்" - ஏ.ஆர். ரஹ்மான் இயக்கிய படம் குறித்து விக்னேஷ் சிவன் பரபரப்பாகும் 'துணிவு' - புகைப்படத்தை வெளியிட்ட சமுத்திரக்கனி அரை மணி நேரத்தில் 'அக்கா தம்பி' ஆன மேஜிக் நடந்தது எப்படி? - நாராயணன் திருப்பதி பதில் அதிகம் படித்தவை திருமண போட்டோ ஷூட்டை தெறிக்கவிட்ட கோவில் யானை 24X7 ‎செய்திகள் “மிஸ் எல்லார் முன்னாடியும் திட்டினாங்க, ஃப்ராடு பண்றியானு கேட்டாங்க” - மாடியிலிருந்து விழுந்த மாணவி வாக்குமூலம் 24X7 ‎செய்திகள் குழந்தை பிறந்து 11 நாட்களில் தாய் இறந்த சோகம் 24X7 ‎செய்திகள் அரை மணி நேரத்தில் 'அக்கா தம்பி' ஆன மேஜிக் நடந்தது எப்படி? - நாராயணன் திருப்பதி பதில் சிறப்பு செய்திகள் நக்கீரன் பரிந்துரைகள் “காயத்ரி நீக்கத்துக்கும் சூர்யா விவகாரத்துக்கும் சம்பந்தமில்லை; அவரின் நீக்கத்துக்கு காரணமே வேறு..." - நாராயணன் திருப்பதி
அந்த முதியோர் இல்லத்தில் தன் தாய் தந்தையரை ஒப்படைத்து விட்டு வெளியே வந்த மணிகண்டனுக்கு கண்களில் கண்ணீர் தாரை தாரையாய் வழிந்தோடியது. அவன் மனைவி கல்யாணி அவனை சமாதானப் படுத்திக் கொண்டிருந்தாள். “என்னங்க இது. நடுரோட்டில் இப்படி ஒரு ஆம்பளை அழலாமா? கண்ணைத் துடையுங்க முன்னாடி” என்று டவலை நீட்டினாள். மீண்டும் மீண்டும் அவனுக்குத் தன் மனைவி மீதுதான் ஒரு சந்தேகம். தான் ஆபீஸுக்குப் போனபின், தன் பெற்றோர்கள் மனம் புண்படும்படி ஏதாவது பேசி, தவறாக அவர்களுக்கு ஏதாவது மன வருத்தம் ஏற்படும்படி நடந்து கொண்டிருப்பாளோ! பலமுறை அது விஷயமாக அவளிடமே கேட்டும் அவளிடமிருந்து, எந்த ஒரு உண்மையையும் அவனால் வரவழைக்க முடியவில்லை. கல்யாணியும் மிகவும் நல்லவள் தான். கல்யாணம் ஆகி வந்த கடந்த நாலு வருடங்களில், மாமியார், மாமனார் இருவரையும் தன் சொந்தத் தாய் தந்தையைப் போலவே மிகவும் அன்புடனும், அனுசரணையாகவும், மரியாதையாகவும் தான் கவனித்துக்கொண்டு வருகிறாள் என்பதும் மணிகண்டனுக்குத் தெரியாதது அல்ல. வீட்டுக்கு அன்று ஒரு நாள், ஜோஸ்யம் சொல்ல கேரள மந்திரவாதி போல ஒருவர் வந்தாராம். ”கூட்டுக் குடும்பமாக இருந்தால் உங்கள் இருவருக்குமே மிகப்பெரிய ஆபத்து வரப்போகிறது. எவ்வளவு சீக்கரம் பிரிந்து செல்லுகிறீர்களோ அவ்வளவுக்கவ்வளவு நல்லது”, என்று சொன்னாராம். ஜோஸ்யர் வந்து போன சமயம் மணிகண்டனும் வீட்டில் இல்லை. ரேஷன் கடைக்குப்போய் கும்பலில் நின்று பொருட்கள் வாங்கி வந்த அவன் மனைவி கல்யாணியும் வீட்டில் இருக்க முடியாமல் போய் விட்டது. அந்த ஜோஸ்யர் எவரோ சொன்னதை வேத வாக்காக எடுத்துக்கொண்ட, தன் பெற்றோர்கள் இப்படிப் பிடிவாதமாக வீட்டை விட்டு, முதியோர் இல்லத்தில் தங்களைச் சேர்க்கச் சொல்லி வற்புறுத்துவார்கள், என்று கனவிலும் நினைக்காத மணிகண்டனுக்கு, வேறு எந்த வழியும் தெரியவில்லை. பெற்றோருக்கு அவன் ஒரே பிள்ளையாகப் பிறந்து விட்டதால், அவனை விட்டு அவர்களை வேறு எங்கு தான் அனுப்ப முடியும் அவனால். மற்ற இந்தக்கால பிள்ளைகள் போலன்றி, மணிகண்டன் தன் தாய் தந்தை மேல் அளவுக்கதிகமான பாசம் வைத்துள்ளவன். அவர்களுக்கு வேண்டிய பணிவிடைகள் செய்வதிலோ, வசதிகள் செய்து கொடுப்பதிலோ மிகவும் கவனமாக அவர்கள் மனது கோணாமல் இருந்து வருபவன். “இவனைப் பெற்றெடுக்க இவன் தந்தை என்ன நோன்பு நோற்றாரோ ” என மற்றவர்கள் பொறாமை கொள்வது போல நேற்று வரை போய்க்கொண்டிருந்த கூட்டுக்குடும்பம் அது. அவனுக்கு வாய்த்த மனைவி கல்யாணியும் நேற்று வரை அவ்வாறே மிகவும் நல்லவளாக எல்லோரையும் அனுசரித்துத்தான் இருந்து வந்திருக்கிறாள். இப்போது யார் கண்ணு பட்டதோ, இந்த தேவையில்லாத பிரிவு. மணிகண்டன் தன் வருமானத்திற்குத் தகுந்தபடி அழகாகத் திட்டமிட்டு செலவுகள் செய்து, யாருக்கும் எந்த ஒரு குறையும் இன்றி குடும்பம் நடத்தி வருபவன். தன்னுடைய சிறுசேமிப்புக்களுடன், வங்கியொன்றில் லோன் வாங்கி சிறியதாக ஒரு வீடும் கட்டி, சிறப்பாக வாழ்ந்து வருபவன். தன் தந்தையின் சொற்ப ஓய்வூதியத்தையும் கூட, அவர் பெயரிலேயே வங்கியில் மாதாந்திர சேமிப்பாக இருக்கட்டும்; ஏதாவது எதிர்பாராத செலவுகள் வந்தால் எடுத்துக்கொள்ளலாம் என்று விட்டு வைத்திருப்பவன். அழகிய வாட்டர் ஹீட்டருடன் கூடிய, வெஸ்டேர்ன் பாத்ரூம் அட்டாச்சிடு சிங்கிள் பெட்ரூமில், இரண்டு கட்டில்கள் போட்டு, ஏ.ஸீ. வசதிகள் செய்து கொடுத்து, பொழுதுபோக்குக்கு டீ.வி, பக்திப்பாடல் கேஸட்டுக்கள் செய்தித்தாள்கள், வார மாத இதழ்கள் எல்லாமே கொடுத்து, வெயிலோ, மழையோ, பனியோ, காற்றோ எந்தப்பருவ காலங்களிலும், தன் தாய் தந்தையர் உடல் நிலைக்கு எந்தப் பாதிப்பும் வராமல் கவனமாகப் பார்த்துக்கொண்டவன் தான். ஜோஸ்யர் யாரோ ஒருவர் வந்து திருஷ்டிப்பட்டது போல ஏதேதோ சொல்லி குருவிக்கூட்டைக் கலைத்து விட்டதில், மணிகண்டனுக்கு மிகவும் வருத்தம். யார் அந்த ஜோஸ்யர்? அவர் பெயர் என்ன? அவருக்கு வீடு எங்கே உள்ளது? அவரின் விலாசம் என்ன? என்று கேட்டால் வயதான இவர்கள் இருவருக்கும் சொல்லத்தெரியவில்லை. ”அவர் ஏதோ கேரளாவிலிருந்து புறப்பட்டு ஊர் ஊராகச் செல்பவர் என்றும், குருவாயூரப்பன் சொப்பனத்தில் வந்து சொன்னபடி நம் வீடு தேடி வந்து, வரப்போகும் ஆபத்தை முன்கூட்டியே சொல்லிவிட்டு, நமக்கு நல்லது தான் செய்து விட்டுப்போய் இருக்கிறார்”, என்றும் திருப்பித்திருப்பி சொல்லி வருகின்றனர். இன்னும் ஒரு வருடத்திற்கு குருப்பெயர்ச்சி முடியும் வரை தான் இந்தப் பிரச்சனையாம். பிறகு பழையபடி கூட்டுக் குடும்பமாகவே வாழலாம் என்றும் அந்த ஜோஸ்யர் சொல்லியிருப்பதாகச் சொன்னதனால், மனது சற்றே சமாதானம் ஆனது மணிகண்டனுக்கு. நடந்த கதைகளையெல்லாம் கேள்விப்பட்ட கல்யாணியின் பெற்றோர்களுக்கும், கல்யாணி மேல் ரொம்பவும் கோபமாக வந்தது. வயதான காலத்தில், நல்ல நடமாட்டத்துடன், தங்களால் முடிந்த சரீர ஒத்தாசைகள் செய்துகொடுத்துக்கொண்டு, தன் மகளுக்கும் ஒரு நல்ல பாதுகாப்பாக இருந்து வந்த தம்பதியை, சின்னஞ்சிறுசாகிய தன் மகள், இவ்வாறு முதியோர் இல்லத்திற்கு அனுப்பியுள்ளதை கேள்விப்பட்ட அவர்களால் ஜீரணிக்கவே முடியவில்லை. கல்யாணி இங்கு நடந்த விஷயங்களைத் தனக்குத் தெரிந்தவரை விபரமாக எடுத்துக்கூறியும், தான் எந்தத்தவறும் செய்யவில்லை என்று சமாதானம் சொல்லியும், சம்பந்தி மேல் உள்ள அன்பினாலும், அவர்கள் இது நாள் வரை தங்களிடம் நடந்து கொண்ட பண்பினாலும், தங்கள் மகள் கல்யாணி சொல்வது எதையுமே நம்பாமலும், ஏற்றுக்கொள்ளாமலும் மறுத்து விட்டனர். மேலும் “இனி உன் மாமியார், மாமனார் இருவரும் உன்னுடன் சேர்ந்து வாழ விரும்பி எப்போது திரும்பி வருகிறார்களோ, அப்போது தான் உன்னைப் பார்க்க நாங்கள் உங்கள் வீட்டுக்கு வருவோம்” என்றும் சொல்லி விட்டனர். தொடரும் [ 2 ] இப்படியாக மணிகண்டனும் கல்யாணியும் தனிக்குடித்தனம் செய்ய ஆரம்பித்து இரண்டு மாதங்கள் ஓடிவிட்டன. ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும், அவர்கள் இருவரும், அந்த வயதான பெரியவர்களுக்குப் பிடித்தமான பலகாரங்களுடன், முதியோர் இல்லம் சென்று, அவர்களுடன் நெடுநேரம் பேசிவிட்டு, விடைபெறும் முன் அவர்களை நமஸ்கரித்து ஆசி வாங்கிவரத் தவறுவதில்லை. இசைப்பிரியரான மணிகண்டனின் தாய், அடுத்தமுறை தன்னைப்பார்க்க வரும்போது, தன் வீட்டிலுள்ள பழைய வீணையை மட்டும் தன்னிடம் கொண்டுவந்து கொடுக்கும்படி கேட்டுக்கொண்டாள். ஏதோ வேறு வழி தெரியாமல் புறப்பட்டு வந்து விட்டார்களே தவிர, குடும்பத்தை விட்டு, முதியோர் இல்லத்தில் சேர்ந்த அவர்களுக்கு ஒவ்வொரு நாள் போவதும் ஒரு யுகமாகவே தோன்றியது. ”மணிகண்டன் என்ன செய்கிறானோ, எப்படி இருக்கிறானோ; பாவம் கல்யாணி வீட்டில் தனியாக இருந்து, எல்லா வேலைகளையும் ஒண்டியாகவே செய்து என்ன கஷ்டப்படுகிறாளோ” என்ற நினைவுடனே இருந்து வந்தனர். நேரம் தவறாமல் வாய்க்கு ருசியாக சமையல் செய்துபோட்டு வந்த தங்கள் மருமகள் கல்யாணியை நினைத்து அவ்வப்போது கண் கலங்கி வந்தனர். ஏதோ ஒரு ஆத்ம திருப்திக்கு, அந்தத்தாய்க்கு, தான் என்றோ கற்ற வீணை இப்போது தேவைப்படுகிறது. வீணாக இங்கு உட்கார்ந்திருக்கும் நேரத்தில் வீணையையாவது மீட்டு, மனச்சாந்தி அடையலாமோ! என்ற ஒரு சிறு ஏக்கம், அந்த அம்மாளுக்கு. இது இவ்வாறு இருக்க, அக்கம் பக்கத்தில் உள்ள பெண்மணிகள், ஜாடைமாடையாக “இருந்தால் நம் கல்யாணி மாதிரி அதிர்ஷ்டமாக இருக்கணும்; வந்து நாலே வருஷத்தில், அப்பா அம்மாவின் செல்லப்பிள்ளையாண்டானாக இருந்த மணிகண்டனை அடியோடு மாற்றி, அவர்கள் இருவரையும் பேயோட்டுவது போல, வீட்டைவிட்டுத் துரத்தி விட்டு, ஜாலியாக இருக்கிறாள், பாரு; நம்ம எல்லோருக்கும் இதுபோல ஒரு அதிர்ஷ்டம் அடிக்குமா என்ன? எல்லாத்துக்கும் ஒரு கொடுப்பிணை வேண்டுமோல்யோ!” என்று பேசிக்கொள்வதைக் கேட்க கல்யாணிக்கு மனம் வேதனைப்பட்டு வந்தது. ஊர் வாயை மூடமுடியுமா என்ன? எல்லாம் நம் தலையெழுத்து என்று பேசாமலேயே இருந்து விட்டாள். ஒண்டியாகவே வீட்டுக்காரியங்கள் எல்லாவற்றையும் பார்த்து வந்த கல்யாணியின் உடம்பு சற்று இளைப்பாகவும், களைப்பாகவும் மாறத்தொடங்கியது. தலை சுற்றல், வாந்தி என அவதிப்பட்டவளை, மணிகண்டன் டாக்டரம்மாவிடம் கூட்டிச்சென்றான். எல்லாவித டெஸ்ட்களும் செய்த டாக்டரம்மா, அவள் கருவுற்றிருப்பதாகவும், இரட்டைக் குழந்தைகள் பிறக்கப்போவதற்கான சாத்தியக்கூறுகள் தெரிவதாகவும், அடுத்த மாத டெஸ்ட்டுக்கு வரும்போது அதை உறுதிப்படுத்துவதாகவும் தெரிவித்து விட்டு, கல்யாணியின் உடம்பை மிகவும் கவனமாகப் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று ஆலோசனைகள் கூறிவிட்டு, ஒருசில மாத்திரைகளும், டானிக்கும் வாங்கி சாப்பிடும்படி சீட்டு எழுதிக்கொடுத்தார்கள். டாக்டர் சொன்னதைக்கேட்ட மணிகண்டன் கல்யாணியைக் கூட்டிக்கொண்டு, நேராக முதியோர் இல்லத்திற்குச் சென்று, தன் தாய் தந்தையரிடம், டாக்டரம்மா சொன்ன விஷயங்களைத் தெரிவித்து விட்டு, இந்த நேரத்தில் அவளை எப்படி பார்த்துக்கொள்ள வேண்டும்? அவளுக்கு உதவிகள் செய்ய தன் மாமியாரையோ அல்லது மச்சினியையோ வரவழைக்க வேண்டுமா? என பல்வேறு சந்தேகங்களைத் தன் தாயிடம் கேட்கலானான். தங்களுக்கு பேரன்களோ, பேத்திகளோ அல்லது இரண்டுமோ பிறக்க இருக்கும் இனிப்பான சமாசாரத்தைக் கேள்விப்பட்ட, அந்த வயதான இருவரும், மிகவும் சந்தோஷப்பட்டு, வாழ்த்தினர். “இந்த சந்தோஷமான நேரத்தில் வயதான நீங்கள் இருவரும் வீட்டில் இருந்தால் எவ்வளவு நிம்மதியாக இருக்கும்! ஜோஸ்யர் சொன்ன ஒரு வருடத்திற்கு இன்னும் பத்து மாதங்கள் இருக்கின்றதே; அதற்குள் பிரஸவ நேரமும் நெருங்கி விடலாம்; அல்லது பிரஸவமே கூட நிகழ்ந்து விடலாம்! யார் தான் வந்து எங்களுக்கு உதவப்போகிறார்களோ” என்று கணவன் மனைவி இருவரும் கண் கலங்கியபடி கூறினார்கள். மணிகண்டனின் தாயும் தந்தையும் ஒருவரை ஒருவர் பார்த்துப் புன்னகைத்துக் கொண்டனர். பிறகு அவர்களுக்குள் தனியாகப்பேசி ஒரு முடிவுக்கு வந்தனர். “டேய் ... மணிகண்டா, வருவது வரட்டும்டா, நீ போய் ஒரு டாக்ஸி கூட்டிக்கொண்டு வா. நாங்கள் இருவரும் இப்போதே உங்களுடன் வீட்டுக்கு வந்து விடுகிறோம்; இதுபோன்ற நேரத்தில் கல்யாணிக்கு போஷாக்கான ஆகாரங்கள் நிறைய கொடுத்து, அவ்வப்போது ஓய்வு எடுத்துக்கச்சொல்லி கவனமாகப் பார்த்துக்கொள்ளணும்” என்றார் மணிகண்டனின் தந்தை. கல்யாணியின் தலையைக் கோதிக் கொடுத்துக் கொண்டே மணிகண்டனின் தாயும் அதை அப்படியே ஆமோதித்தாள். “ஜோஸ்யர் சொன்னபடி, குருப்பெயர்ச்சி முடியும் முன்பு, நாம் எல்லோரும் சேர்ந்திருந்தால், ஒரு வேளை யாருக்காவது ஏதாவது ஆபத்து வருமோ?” என்று கவலையுடன் வினவினான், மணிகண்டன். “அதுபோல எதுவும் ஏற்படாதுடா; அதற்கும் ஒரு பரிகாரம் சொல்லியிருக்கிறார் அந்த ஜோஸ்யர்” என்றார் மணிகண்டனின் தந்தை. “அப்படியா! அது என்னப்பா .... பரிகாரம்; நீங்க எங்களிடம் சொல்லவே இல்லையே” ஆச்சர்யத்துடன் கேட்டனர், மணிகண்டனும் கல்யாணியும். “குருப்பெயர்ச்சி முடிந்த ஒரு மூன்று மாதத்திற்குள், பேரனையோ அல்லது பேத்தியையோ அழைத்துக்கொண்டு, குருவாயூரப்பன் கோயிலுக்குப்போய் துலாபாரம் கொடுக்கணுமாம்; அதுபோல வேண்டிக்கொள்ளணுமாம். அது தான் அந்தப்பரிகாரம்; நமக்குத்தான் பேரனோ அல்லது பேத்தியோ இதுவரை கடந்த நாலு வருஷமாகப் பிறக்காமலேயே உள்ளதே; எப்படி அந்த ஜோஸ்யர் சொன்னப் பரிகாரத்தை நம்மால் செய்ய முடியும் என்று தான், நாங்கள் முதியோர் இல்லம் போவதென்று முடிவெடுத்தோம்; இப்போது தான் பேரனோ அல்லது பேத்தியோ பிறக்கப்போவதாக டாக்டரம்மாவே சொல்லி விட்டார்களே; குழந்தைகளை அழைத்துப்போய் துலாபாரம் கொடுத்து விட்டால் போச்சு! எல்லாம் அந்த குருவாயூரப்பன் செயல்!; அந்த குருவாயூரப்பன் மேலேயே பாரத்தைப்போட்டு விட்டு, நாம் வீட்டுக்குப்போய் ஆக வேண்டியதைப் பார்ப்போம்” என்றனர் மணிகண்டனின் அப்பாவும், அம்மாவும். திருமணம் ஆகி, நான்கு வருடங்கள் ஆகியும், இதுவரை தங்கள் மருமகளுக்கு தாய்மை அடையும் பாக்யம் இல்லாமல் தட்டிப்போய் வருகிறதே! தன் மகன் கட்டியுள்ள சிறிய சிங்கிள் பெட்ரூம் வீட்டில், கணவனும் மனைவியும் தனிமையில் சந்தோஷமாக இருந்தால் தான் தங்களுக்குப் பேரனோ அல்லது பேத்தியோ பிறக்கக்கூடும். அதற்கு தாங்கள் எந்தவிதத்திலும் ஒரு இடையூறாக இருக்கவே கூடாது, என்று நினைத்து அவர்கள் இருவரும் நடத்திய நாடகமே, நடுவில் குருவாயூரிலிருந்து ஜோஸ்யர் ஒருவர் வந்து போனது என்ற கற்பனைக்கதை. ஆனாலும் இந்த உண்மையான கதை, அந்த இரு வயதானவர்களையும், அந்த குருவாயூரப்பனையும் தவிர வேறு யாருக்கும் தெரிந்திருக்க நியாயமில்லை. [ஆனால் இப்போது உங்கள் எல்லோருக்குமே இந்த விஷயம் தெரிந்து விட்டதே ..... ! அடடா !! ஹே! குருவாயூரப்பா ! நீ தான் என்னைக் காத்தருள வேண்டும்!!] oooooOooooo அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துகள் நினைவூட்டுகிறோம் ! சிறுகதை விமர்சனப்போட்டியின் நடுவர் யார் ? VGK-31 To VGK-34 ஆகிய நான்கு கதைகளில் ஏதாவது ஒன்றுக்காவது விமர்சனம் எழுதி அனுப்புபவர்கள் மட்டுமே இந்தப்போட்டியில் கலந்துகொள்ள முடியும். போட்டியில் கலந்து கொள்ள மறவாதீர்கள். மேற்படி போட்டியின் இதர நிபந்தனைகள் காண இதோ இணைப்பு: http://gopu1949.blogspot.in/2014/06/blog-post.html VGK-29 அட்டெண்டர் ஆறுமுகம் சிறுகதை விமர்சனப்போட்டி முடிவுகள் வழக்கம்போல் நாளை சனி / ஞாயிறு / திங்களுக்குள் வெளியிடப்படும். காணத்தவறாதீர்கள். ஒவ்வொருவாரப் போட்டிகளிலும் கலந்துகொள்ள மறவாதீர்கள். என்றும் அன்புடன் தங்கள் வை.கோபாலகிருஷ்ணன் இடுகையிட்டது வை.கோபாலகிருஷ்ணன் நேரம் 12:01 AM லேபிள்கள்: ’விமர்சனப் போட்டி’க்கான சிறுகதை 44 comments: இராஜராஜேஸ்வரி August 15, 2014 at 12:16 AM இனிய சுதந்திரத்திருநாள் வாழ்த்துகள்..! இனிய செய்தியாக இரட்டைக்குழந்தைகளுடன் கதையை நிறைவடையச்செய்த குருவாயூரப்பனுக்கு நன்றிகள்..! ReplyDelete Replies Reply ”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி August 15, 2014 at 3:08 AM எண்ட குருவாயூரப்பா....ஏனிந்த சோதனை! ReplyDelete Replies Reply கரந்தை ஜெயக்குமார் August 15, 2014 at 5:29 AM சுதந்திரத் திருநாள் வாழ்த்துக்கள் ஐயா ReplyDelete Replies Reply Anuprem August 15, 2014 at 11:01 AM அனைவரும் நல்லவர்கள்....ஆகா...அருமை.... ReplyDelete Replies Reply Thulasidharan V Thillaiakathu August 15, 2014 at 11:44 AM ஆஹா என்ன அருமையான கதை! கல்யாணி கருவுற்றிருக்கின்றாள் என்ற வரி படித்ததுமே எதற்காக வயதானவர்கள் முதியோர் இல்லம் சென்றனர் என்று யூகிக்க முடிந்து விட்டது....ஆனாலும் மிகவும் நல்ல கதை...அதுவும் முடிவு! இரட்டைக் குழந்தைகள்! சூப்பர்! கீதா: சார், மிக்க நன்றி! எனது குருவான அபூர்வ இசைக் கருவி ஜலதரங்க வித்வான் திருமதி சீதாலக்ஷ்மி துரைசாமி அம்மாளின் படத்தைப் போட்டதற்கு....அவரிடம் வாய்ப்பாட்டு ஒரு வருடம் கற்றுக் கொண்டேன். பின்னர் அவர் கணவர் இறந்த பிறகு, அவரது அடையார் வீடு விற்கப்பட்டு இப்போது இடிக்கப்பட்டு கட்டுமானப் பணிகளில் இருக்கின்றது. அவர் எங்கு இருக்கின்றார் என்று தெரியவில்லை. அவரது குடும்பம் பெரிது. அவர் எந்த மகனிடம், மகளிடம் இருகின்றார் என்று தெரியவில்லை....மிக அருமையான கலைஞர். மிக நல்ல மனதுடையவர். அன்பு என்றால் அப்படி. அவர் சிரித்துதான் பார்த்திருக்கின்றேன். தெய்வீகம் தவழும், பாசிட்டிவ் முகம். நல்ல ஞானம் உள்ளவர். நல்ல குரு! சமீபத்தில் வந்த திருமணம் எனும் நிக்காஹ் படத்தில் வரும் அமீர்கல்யாணி ராகத்தில் அமைந்த பாடலில் வரும் அந்தக் காட்சியில் இவர் ஜலதரங்கம் வாசிப்பது போன்ற காட்சி வரும். அதில் அவர் தற்போது உள்ள தோற்றம். அதைப் பார்த்து பின் இப்போது தங்கள் வலைத் தளத்திலும் பார்த்தால் இது நான் அவரிடம் 7 வருடங்களுக்கு முன் இசை கற்ற பொது இருந்த தோற்றம். அவரது கணவர் இறக்கும் முன்..... மிக்க நன்றி சார்! ReplyDelete Replies Reply kowsy August 15, 2014 at 11:54 AM சுதந்திரத் திருநாள் வாழ்த்துக்கள் சார். வலைச்சரத்தில் கண்டேன். ReplyDelete Replies Reply Mahal Periyavar. August 15, 2014 at 12:13 PM தாங்கள் தனியாக முதியோர் இல்லத்தில் இருந்தாலும் பரவாயில்லை. பிள்ளையும் மருமகளும் சுதந்திரமாக இருந்து குழந்தை பாக்கியம் பெறவேன்டும் என்று கபட நாடகம் ஆடிய அந்த பெற்றோர்களின் உள்ளம் இமயமலையை விட உயர்ந்தது. அதற்குப் பரிசாகத்தான் அருள்மிகு குருவாயுரப்பன் தம்பதிகளு க்கு இரட்டை குழந்தைகளை கொடுத்துள்ளார். ReplyDelete Replies Reply கோமதி அரசு August 15, 2014 at 4:43 PM அருமையான கதை. குருவாயூர் கண்ணன் அருளால் இரட்டை குழந்தைகள் வந்து தாத்தா, பாட்டியை வீட்டுக்கு அழைத்து வந்து விட்டது. மகிழ்ச்சி. ReplyDelete Replies Reply கோமதி அரசு August 15, 2014 at 4:43 PM இனிய சுதந்திரதின நல்வாழ்த்துக்கள். ReplyDelete Replies Reply அ. முஹம்மது நிஜாமுத்தீன் August 15, 2014 at 9:34 PM 'நல்ல குடும்பம் பல்கலைக் கழகம்' என்பார்கள். அதன்படி, நாடகமாடிய நல்லுள்ளங்கள், மணிகண்டனின் பெற்றோரின் ஆசை நிறைவேறியதே! பெரு மகிழ்ச்சி!! ReplyDelete Replies Reply அ. முஹம்மது நிஜாமுத்தீன் August 15, 2014 at 9:39 PM //நான்கு கதைகளில் ஏதாவது ஒன்றுக்கு விமர்சனம் எழுதி அனுப்புபவர்கள் மட்டுமே // 2 கதைகளுக்கு விமர்சனம் எழுதுபவர்கள் அல்லது 3 கதைகளுக்கு விமர்சனம் எழுதுபவர்கள் அல்லது 4கதைகளுக்கும் விமர்சனம் எழுதுபவர்கள் யாரும் இதில் கலந்துகொள்ள முடியாது' என்பது போல ஓர் அர்த்தம் வருகின்றதே! ReplyDelete Replies வை.கோபாலகிருஷ்ணன் August 16, 2014 at 1:47 PM அ. முஹம்மது நிஜாமுத்தீன் August 15, 2014 at 9:39 PM வாருங்கள் என் இனிய நண்பரே ! வணக்கம். ’ஒன்றுக்கு’ என்ற வார்த்தையை ’ஒன்றுக்காவது’ என இப்போது மாற்றிவிட்டேன். இதனைக் குறிப்பிட்டு என் கவனத்திற்கு கொண்டுவந்து சுட்டிக்காட்டியது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளித்தது. தங்களுக்கு என் இனிய அன்பு நன்றிகள். எல்லாம் தாங்கள் அடிக்கடி என்னிடம் சொல்வதுபோல இறை நாட்டப்படியே நடக்கின்றன. மகிழ்ச்சி. அன்புடன் VGK Delete Replies Reply Reply 'பரிவை' சே.குமார் August 15, 2014 at 11:58 PM சிறுகதை அருமை ஐயா... வாழ்த்துக்கள். ReplyDelete Replies Reply Thulasidharan V Thillaiakathu August 16, 2014 at 6:33 AM 3 ஆம் பரிசு வென்ற திரு சீனா ஐயா அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்! ReplyDelete Replies Reply cheena (சீனா) August 16, 2014 at 11:29 PM அன்பின் துளசி தரன் - வாழ்த்தினிற்கு மிக்க நன்றி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா ReplyDelete Replies Reply Geetha Sambasivam August 19, 2014 at 1:29 PM சிங்கிள் பெட்ரூமில் தாய், தந்தையருக்கு வசதி என்பதைப் படித்ததுமே முதியோர் இல்லத்துக்குச் சென்றதன் காரணம் புரிந்து விட்டது. அருமையான கதைக்கு நன்றி. ReplyDelete Replies Reply ADHI VENKAT August 22, 2014 at 2:05 PM இரட்டை குழந்தைகளைத் தந்த குருவாயூரப்பன்..... நல்லதொரு கதை. பாராட்டுகள் சார். ReplyDelete Replies Reply ப.கந்தசாமி July 23, 2015 at 3:37 PM பெரிசுகள் போட்ட டிராமாவினால் அந்த வீட்டில் குழந்தைகளின் ரகளை ஆரம்பமாகப் போகிறது. ReplyDelete Replies Reply பூந்தளிர் September 5, 2015 at 11:58 AM கதை நல்லா இருக்கு. (என்ஜாயடு வெரிமச். வெல்கம்:)))))))))) ). ReplyDelete Replies வை.கோபாலகிருஷ்ணன் September 5, 2015 at 12:16 PM பூந்தளிர் September 5, 2015 at 11:58 AM வாங்கோ பூந்தளிர், வணக்கம்மா. //கதை நல்லா இருக்கு. // மிகவும் சந்தோஷம். //என்ஜாய்டு வெரிமச். வெல்கம் :)))))))))) // இன்று கோகுலாஷ்டமி. ஸ்ரீ கிருஷ்ணன் அவதரித்த நாள். ஸ்ரீ கிருஷ்ண லீலைகள் யாவுமே நமக்கு வெரிமச் எஞ்சாயபிள் ஆகத்தான் இருக்கும். தங்களுக்கு கோபாலகிருஷ்ணனின் கோகுலாஷ்டமி நல்வாழ்த்துகள். இன்று நம் ஆத்துக்கு வந்தால் உப்புச்சீடை, வெல்லச்சீடை, முறுக்கு, தட்டை, தேன்குழல், ஓமப்பொடி, வெண்ணெய் என எல்லாமே சாப்பிட்டுப்போகலாம். :) WELCOME :) கோகுலாஷ்டமியன்று குருவாயூரப்பனை இந்தப்பதிவினில் தரிஸித்துள்ளீர்கள். மிக்க மகிழ்ச்சி. அன்பான வருகைக்கும், அழகான வெரிமச் எஞ்சாயபிள் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி. பிரியமுள்ள கோபு Delete Replies Reply Reply ஆன்மீக மணம் வீசும் October 24, 2015 at 7:45 PM // ஆனாலும் இந்த உண்மையான கதை, அந்த இரு வயதானவர்களையும், அந்த குருவாயூரப்பனையும் தவிர வேறு யாருக்கும் தெரிந்திருக்க நியாயமில்லை.// NEGATIVE விஷயத்தையும் POSITIVE ஆக காட்ட உங்களால் மட்டும்தான் முடியும். ReplyDelete Replies Reply mru November 2, 2015 at 12:53 PM என்னா அம்மி இன்னா வாப்பா. யாரோசோசியக்காரங்க சொன்னத கேட்டுபிட்டு இப்பூடில்லா பண்ணுறாக. எது எப்படியோ பேரப்புள்ளிங்க வந்திச்சே. ReplyDelete Replies Reply சரணாகதி. December 4, 2015 at 1:24 PM ஜோசியம் ஜாதகம் மக்கள் வாழ்வுடன் எப்படி எல்லாம் விளையாடுகிறது. நம்புகிறவர்கள் இருக்கும்வரை. இதிலெல்லாம் எந்த மாற்றமும் ஏற்படாது. முடிவு நல்லா இருக்கு. ReplyDelete Replies Reply மாயவரத்தான். எம்.ஜி.ஆர்... December 9, 2015 at 11:52 PM அக்கறையை மறைமுகமாக வெளிப்படுத்தும் அருமையான கதை. நன்றி. ReplyDelete Replies Reply காரஞ்சன் சிந்தனைகள் December 20, 2015 at 9:56 AM பெற்றோரின் மனபாரத்தையும், மகனின் மனபாரத்தையும், மருமகளின் மனபாரத்தையும், சம்பந்தி வீட்டாரின் மனபாரத்தையும் நீக்கவே கல்யாணியின் வயிற்றில் இரட்டைக் குழந்தைகளின் பாரமோ? இந்த பாரம் மகிழ்ந்து சுமக்கும் பாரம் அல்லவா! அனைவரின் பாரத்தையும் நீக்கிய குருவாயூரப்பனுக்கு துலாபாரம் என்பது துல்லியமான ஒரு முடிவு. அதையும் ஜோசியனே சொல்லிச் சென்றதாகக் காண்பித்ததும் அருமை. “என்ன பிள்ளை பெற்றாளோ? என்ன பெயர் வைத்தாளோ?” எனும் கேள்வியை நம்முள் எழுப்பி விடையறியுமுன்னே கதை முடிந்துவிடுகிறது. “பார்வை ஒன்றே போதுமே” என நான் பாடி விடைபெறும் வேளையில் என் பார்வையில், கண்ணீரில் துவங்கி, களிப்பில் முடியும் வண்ணம் கதைபடைத்த ஆசிரியர் ஒரு மிகச்சிறந்த படைப்பாளியாகத் தோன்றுகிறார். அவருக்கு என் உளமார்ந்த பாராட்டுகள்! ReplyDelete Replies வை.கோபாலகிருஷ்ணன் December 20, 2015 at 3:54 PM My Dear Mr. Seshadri Sir, வாங்கோ, வணக்கம். கதையைப்பற்றிய தங்களின் சிறப்புப்பார்வையும், விரிவான + ஆதரவான + உற்சாகம் அளித்திடும் கருத்துக்களும் என் மனதுக்கு மிகவும் திருப்தியாக உள்ளன. //அனைவரின் பாரத்தையும் நீக்கிய குருவாயூரப்பனுக்கு துலாபாரம் என்பது துல்லியமான ஒரு முடிவு. அதையும் ஜோசியனே சொல்லிச் சென்றதாகக் காண்பித்ததும் அருமை.// //“பார்வை ஒன்றே போதுமே” என நான் பாடி விடைபெறும் வேளையில் என் பார்வையில், கண்ணீரில் துவங்கி, களிப்பில் முடியும் வண்ணம் கதைபடைத்த ஆசிரியர் ஒரு மிகச்சிறந்த படைப்பாளியாகத் தோன்றுகிறார்.// மிக்க மகிழ்ச்சி :) தங்களுக்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள். அன்புடன் VGK Delete Replies Reply Reply வை.கோபாலகிருஷ்ணன் November 4, 2016 at 1:49 PM இந்தப் போட்டிக்கான கதையினை முன்பு நான் என் வலைத்தளத்தினில், 2011-இல் என் வலையுலக ஆரம்ப நாட்களில், வெளியிட்டிருந்தபோது அவற்றிலுள்ள பின்னூட்ட எண்ணிக்கைகள்: 43 + 46 = 89 அதற்கான இணைப்புகள் (பகுதி-1 + பகுதி-2): http://gopu1949.blogspot.in/2011/09/1-of-2.html http://gopu1949.blogspot.in/2011/09/2-of-2_05.html ReplyDelete Replies Reply வை.கோபாலகிருஷ்ணன் December 2, 2016 at 8:30 PM மேற்படி என் சிறுகதைக்கான விமர்சனப்போட்டிக்கு, ஏராளமாக வந்து குவிந்திருந்த விமர்சனங்களில், உயர்திரு நடுவர் அவர்களால், பரிசுக்குத் தேர்வான விமர்சனங்களை மட்டும் படிக்க இதோ இணைப்புகள்: முதல் பரிசுக்குத் தேர்வானவை: http://gopu1949.blogspot.in/2014/09/vgk-31-01-03-first-prize-winners.html இரண்டாம் பரிசுக்குத் தேர்வானவை: http://gopu1949.blogspot.in/2014/08/vgk-31-02-03-second-prize-winners.html மூன்றாம் பரிசுக்குத் தேர்வானது: http://gopu1949.blogspot.in/2014/08/vgk-31-03-03-third-prize-winner.html சிறுகதை விமர்சனப் போட்டிகளின் நிறைவினில், பரிசு பெற்ற ஒட்டுமொத்த வெற்றியாளர்கள் பற்றிய முழு விபரங்கள் அறிய, இதோ ஒருசில சுவாரஸ்யமான இணைப்புகள்: http://gopu1949.blogspot.in/2014/11/vgk-31-to-vgk-40.html http://gopu1949.blogspot.in/2014/11/vgk-01-to-vgk-40-total-list-of-hat.html http://gopu1949.blogspot.in/2014/11/blog-post_6.html http://gopu1949.blogspot.in/2014/11/blog-post_7.html ReplyDelete Replies Reply வை.கோபாலகிருஷ்ணன் December 2, 2016 at 10:23 PM சிறுகதை விமர்சனப் போட்டியின் நடுவர் யார் என்பது பற்றிய முழு விபரங்களும், ’நடுவர் யார் யூகியுங்கள் போட்டி’யில் வெற்றி கிட்டி பரிசுக்குத் தேர்வானவர்கள் யார்-யார் என்பது பற்றியும் அறிய இதோ இணைப்பு: https://gopu1949.blogspot.in/2014/09/blog-post_13.html ReplyDelete Replies Reply நெல்லைத் தமிழன் March 7, 2018 at 7:12 PM நூற்றாரோ - 'நோன்பு நோற்றாரோ என்பதுதான் சரியான தமிழ். அது நூல் இல்லை. நூற்பதற்கு. திவ்யப் ப்ரபந்தத்தில் வருகிறது, "நோற்ற நோன்பிலேன் நுண்ணறிவிலேன் ஆகிலும் இனி உன்னைவிட்டு...." நோற்ற நோன்பு - நானாக அனுஷ்டித்த கருமயோகம் ReplyDelete Replies வை.கோபாலகிருஷ்ணன் March 7, 2018 at 10:25 PM நெ.த. March 7, 2018 at 7:12 PM வாங்கோ ஸ்வாமீ, வணக்கம். //நூற்றாரோ - 'நோன்பு நோற்றாரோ என்பதுதான் சரியான தமிழ்.// நூற்றுக்கு நூறு உண்மை ..... ’நோன்பு நோற்றாரோ’ என்பது மட்டும்தான் மிகவும் சரியான தமிழ்ச் சொற்றொடராகும். நூற்றுக்கு நூறு தவறுதான் ...... நான் குறிப்பிட்டுள்ள ’நூற்றாரோ’ என்ற சொல். //அது நூல் இல்லை. நூற்பதற்கு.// ’அது நூல் இல்லை .... நூற்பதற்கு’ என்றாலும், ஒரு சந்தேக நிவர்த்திக்காக ’திருக்குறள்’ என்ற நூலை எடுத்து குறள் எண்: 70-ஐ கொஞ்சம் நானும் இப்போது நூற்றுப்பார்த்தேன். :) என் தவறுக்கு வருந்துகிறேன். என் சொற்பிழையைச் சுட்டிக்காட்டியமைக்கு என் நன்றிகள். //திவ்யப் ப்ரபந்தத்தில் வருகிறது, நோற்ற நோன்பிலேன் நுண்ணறிவிலேன் ஆகிலும் இனி உன்னைவிட்டு...." நோற்ற நோன்பு - நானாக அனுஷ்டித்த கருமயோகம்.// திவ்யமான மேலதிக ஆதாரங்களை திவ்யப் ப்ரபந்தத்திலிருந்து எடுத்து திவ்யமாக இங்கு சொல்லியுள்ளது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. அதற்கு என் கூடுதல் நன்றிகள், ஸ்வாமீ. பதிவினிலும் அந்த ஒரு எழுத்துப் பிழையை இப்போது சரிசெய்து விட்டேன். அன்புடன் கோபு Delete Replies Reply நெல்லைத் தமிழன் March 8, 2018 at 10:54 AM மறுமொழியில் உங்கள் டச். 'இவன் தந்தை என் நோற்றான் கொல்? எனும் சொல்' - சரியான பாயின்டைப் பிடித்துவிட்டீர்கள். எனக்கு மனதில் திவ்யப்ப்ரபந்தம்தான் உடனே வந்தது. இன்னும் ப்ராப்தம் இருந்தால் ஆண்டாள் இந்த வார்த்தையை உபயோகப்படுத்தியுள்ளது ஞாபகம் வரும். Delete Replies Reply வை.கோபாலகிருஷ்ணன் March 9, 2018 at 12:05 AM நெ.த. March 8, 2018 at 10:54 AM //மறுமொழியில் உங்கள் டச்.// :))))) //'இவன் தந்தை என் நோற்றான் கொல்? எனும் சொல்' - சரியான பாயின்டைப் பிடித்துவிட்டீர்கள்.// :))))) //எனக்கு மனதில் திவ்யப்ப்ரபந்தம்தான் உடனே வந்தது. இன்னும் ப்ராப்தம் இருந்தால் ஆண்டாள் இந்த வார்த்தையை உபயோகப்படுத்தியுள்ளது ஞாபகம் வரும்.// அதுதான் தங்களின் தனித்தன்மை. சந்தோஷம். Delete Replies Reply Reply நெல்லைத் தமிழன் March 7, 2018 at 7:15 PM பாத்ரூம் அட்டாச்சிடு சிங்கிள் பெட்ரூமில், - இதைப்போல் நான் மும்பையில் 25 வருடங்களுக்கு முன்பே பார்த்திருக்கிறேன். அவங்க வாழ்க்கை ரொம்ப கஷ்டமானது. பெற்றோர், கணவன்/மனைவி, கணவனது சகோதரர்கள் ஆகிய அனைவரும் படுத்துறங்கவேண்டும். 8க்கு 8 ரூம்தான். அதனை நினைவுபடுத்தியது. ReplyDelete Replies வை.கோபாலகிருஷ்ணன் March 8, 2018 at 12:39 AM நெ.த. March 7, 2018 at 7:15 PM //பாத்ரூம் அட்டாச்சிடு சிங்கிள் பெட்ரூமில், - இதைப்போல் நான் மும்பையில் 25 வருடங்களுக்கு முன்பே பார்த்திருக்கிறேன். அவங்க வாழ்க்கை ரொம்ப கஷ்டமானது. பெற்றோர், கணவன்/மனைவி, கணவனது சகோதரர்கள் ஆகிய அனைவரும் படுத்துறங்கவேண்டும். 8க்கு 8 ரூம்தான். அதனை நினைவுபடுத்தியது.// கரெக்ட். பம்பாயில் மாதுங்கா என்ற இடத்தில், டெலங்க் ரோடு என்ற தெருவினில் ’விஸ்ராணி பவன்’ என்ற குடியிருப்புப் பகுதிக்கு நான் ஒரு 40 ஆண்டுகளுக்கு முன்பு சென்று வந்துள்ளேன். அது இங்குள்ள எங்கள் ஊர் ஸ்டோர் டைப்பில் இருந்தது. அங்கு சின்னச்சின்னதாக ஓர் ஏழெட்டு-பத்து ஒட்டுக் குடுத்தனங்கள் இருந்தன. ஒவ்வொரு வீட்டிலும் ஒரு ஏழெட்டு பேர்களுக்குக் குறையாமல் இருந்தனர். :)) அங்கு வேலை நிமித்தமாக பம்பாய் செல்லும் பேட்சுலர்ஸ் பெரும்பாலானோர், ஒரு சூட்கேஸை மட்டும் ஏதேனும் ஒரு வீட்டில் வைத்து விட்டு, தபால் ஏதும் வந்தால் வாங்கி வைக்கச்சொல்லி விட்டு, CARE OF ADDRESS போல தன் உறவினர்களிடம் சொல்லிவிட்டு, இடநெருக்கடிகளால் இரயிலில் அமர்ந்து பயணங்களிலேயே பொழுதைக் கழிப்பார்கள் எனக் கேள்விப்பட்டுள்ளேன். அதுபோல CARE OF ADDRESS பெறவே ஒரு சிறிய தொகையை, அந்த வீட்டினில் வாடகைக்குக் குடியிருப்போருக்கு இவர்கள் தர வேண்டியிருக்கும் எனவும் கேள்விப்பட்டுள்ளேன். அப்போதே மிகவும் பழைய கட்டடமாக இருந்த அது இப்போதும் ஒருவேளை இருக்கலாம் என நினைக்கிறேன். அதன் அருகிலேயே நடந்து செல்லும் தூரத்தில் ‘மாதுங்கா - அரோரா தியேட்டர் இருந்தது. அப்போது அங்கே ’இதயக்கனி’ என்ற வாத்யார் படம் ஓடிக்கொண்டு இருந்தது. மாலை ஐந்து மணிக்கு ராதா சலூஜா என்ற நடிகை அந்த தியேட்டருக்கு நேரில் வரப்போவதாக அறிவித்து இருந்ததால், மதியம் 1 மணி முதலே, கடும் வெயிலில், ரசிகர்கள் கூட்டம் மிக அதிகமாக அலைமோதிக்கொண்டு இருந்தது. அந்தத் தியேட்டர் அருகே ஒரு லாட்ஜில், பம்பாய் சுற்றுலா சென்ற எங்கள் க்ரூப் 7-8 பேர்கள் ரூம் எடுத்துத் தங்கியிருந்தோம். அதனால் மட்டுமே இந்த விஷயங்கள் (அக்கப்போர்கள்) எனக்குத் தெரிய வந்தது. :) Delete Replies Reply நெல்லைத் தமிழன் March 8, 2018 at 10:50 AM நன்றி உங்கள் மறுமொழிக்கு. உங்கள் 'அக்கப்போர்கள்' படித்தது நன்றாகவே நினைவில் இருக்கு. உங்கள் நண்பர் அந்தச் சமயத்தில்தான் 'விலக்கவேண்டிய' செயலைச் செய்தார் என்றும் உங்கள் இடுகையில் படித்திருக்கிறேன் (காமத்திபுரா) Delete Replies Reply வை.கோபாலகிருஷ்ணன் March 9, 2018 at 12:28 AM நெ.த. March 8, 2018 at 10:50 AM //நன்றி உங்கள் மறுமொழிக்கு.// :))))) //உங்கள் 'அக்கப்போர்கள்' படித்தது நன்றாகவே நினைவில் இருக்கு. உங்கள் நண்பர் அந்தச் சமயத்தில்தான் 'விலக்கவேண்டிய' செயலைச் செய்தார் என்றும் உங்கள் இடுகையில் படித்திருக்கிறேன் (காமத்திபுரா)// நிறைய படங்களுடன் கூடிய இதோ இந்தக் கீழ்க்கண்ட பதிவினைப்பற்றி சொல்கிறீர்கள் என நினைக்கிறேன். :)))) http://tthamizhelango.blogspot.com/2016/01/by-vgk.html Delete Replies Reply Reply நெல்லைத் தமிழன் March 7, 2018 at 7:28 PM //அப்போது தான் உன்னைப் பார்க்க நாங்கள் உங்கள் வீட்டுக்கு வருவோம்// - இந்தக் கதை 30 வருடங்களுக்கு முன்பு நிகழ்ந்திருக்குமோ? இப்போதெல்லாம் அப்படிப்பட்ட பெற்றோர் மிக மிக அபூர்வமில்லையா? எனக்குத் தெரிந்த ஒரு குடும்பத்தில், தந்தை, தன் மூத்த பையன் வீட்டுக்குச் சென்றபோது, உடல் நலக் குறைவால் ஐ.சி.யுவில் சேர்க்க நேர்ந்தது. அப்போது அந்தப் பையனின் மாமியார், தன் பெண்ணிடம், அவர் இறந்துவிட்டால் உடனே அவர் ஊருக்கு பாடியை அனுப்பிடு, இல்லைனா கடைசி காரியம் செய்யற கஷ்டம், வேலை உனக்கு வந்துடும்னு ஆலோசனை சொன்னாள். ஒருவேளை அவருக்கு உடம்பு சரியானாலும் உடனே அவரை ஊருக்கு அனுப்பிடு, எதுக்கு வம்பு என்றாளாம். இது நடந்தது 10 வருடங்களுக்கு முன்பு. //வாய்க்கு ருசியாக சமையல் செய்துபோட்டு வந்த// - இதுவும் அதிசயமாக இருக்கு. பெரும்பாலும் பெண்கள், திருமணமாகி அப்புறம்தான் கொஞ்சம் கொஞ்சமாக சமையல் கத்துக்கறாங்க. அதிலும் சமையலில் எக்ஸ்பர்ட் ஆக இருந்தாலும், மாமியார், தாங்களே சமையலறை இன்சார்ஜிலிருந்து வெளியே வருவதில்லை. தப்பித் தவறி மருமகள் நல்ல சமையல் அபூர்வமா செய்து, அதனை மாமனார் பாராட்டிவிட்டால், நிச்சயம் மாமியார் 'சமையல் அறை' பொறுப்பை அந்தப் பெண்ணிடம் கொடுக்கவே மாட்டார். //நம்ம எல்லோருக்கும் இதுபோல ஒரு அதிர்ஷ்டம் அடிக்குமா// - இது நிச்சயம் நடக்கக்கூடியதுதான். அக்கம் பக்கப் பெண்மணிகள் 'வம்பு' பேசுவது திரேதாயுகத்திலிருந்து நடப்பதுதானே. ஆனாலும் கதை இன்டெரெஸ்டிங் ஆகத்தான் இருந்தது. இந்த மாதிரி சினேகிதம் இருந்தால், கூட்டுக் குடும்பத்தின் ருசியே அலாதிதான். கூடவே இருக்கும்போது, அவர்கள் வயதாகும்போது கஷ்டம் அவ்வளவாகத் தெரியாது. வீட்டுக்கும் ஒரு பாதுகாப்பு. அப்பா அம்மா சொன்னதை அப்படியே நம்பிவிட்ட அவர்களது பையன், பாவம், 'சாந்தஸ்வரூபி' (உண்மையா சொல்லணும்னா அஜாமாடன் என்று எங்க அம்மா சொல்லுவா. இல்லைனா 'அப்பாவி' அல்லது 'அசடு') என்ன ஒண்ணு, நீங்க தேர்ந்தெடுத்த படத்தில் உள்ளவர்தான், பேரன் பேத்தி எடுத்தவர் மாதிரி இருக்கிறார். நானும் என்னடா ஜலதரங்கம், தம்புரா இருக்கே வீணை எங்கேன்னு பார்த்தேன். நல்லவேளை, வீணை பின்னால் இருக்கு. ReplyDelete Replies வை.கோபாலகிருஷ்ணன் March 8, 2018 at 12:52 AM நெ.த.March 7, 2018 at 7:28 PM //அப்போது தான் உன்னைப் பார்க்க நாங்கள் உங்கள் வீட்டுக்கு வருவோம்// - இந்தக் கதை 30 வருடங்களுக்கு முன்பு நிகழ்ந்திருக்குமோ? இப்போதெல்லாம் அப்படிப்பட்ட பெற்றோர் மிக மிக அபூர்வமில்லையா? ஆமாம். இப்போது இதுபோன்ற கதாபாத்திரங்களை நம் கதையில் மட்டுமேதான் கொண்டுவர முடியும். நேரில் பார்ப்பது மிக மிக அபூர்வமாகும். //எனக்குத் தெரிந்த ஒரு குடும்பத்தில், தந்தை, தன் மூத்த பையன் வீட்டுக்குச் சென்றபோது, உடல் நலக் குறைவால் ஐ.சி.யுவில் சேர்க்க நேர்ந்தது. அப்போது அந்தப் பையனின் மாமியார், தன் பெண்ணிடம், அவர் இறந்துவிட்டால் உடனே அவர் ஊருக்கு பாடியை அனுப்பிடு, இல்லைனா கடைசி காரியம் செய்யற கஷ்டம், வேலை உனக்கு வந்துடும்னு ஆலோசனை சொன்னாள். ஒருவேளை அவருக்கு உடம்பு சரியானாலும் உடனே அவரை ஊருக்கு அனுப்பிடு, எதுக்கு வம்பு என்றாளாம். இது நடந்தது 10 வருடங்களுக்கு முன்பு.// இது போலெல்லாம் நடப்பது மிகவும் சகஜமே. இவையெல்லாம் வெளியில் தெரியாமல் கமுக்கமாக நடக்கக்கூடும். பெண்ணுக்கு சிடுக்கெடுத்து தலைவாரி பின்னிவிடும் போது, இதுபோன்ற உபதேசங்கள் பொதுவாக செய்யப்படுவது உண்டு. :) >>>>> Delete Replies Reply வை.கோபாலகிருஷ்ணன் March 8, 2018 at 12:57 AM கோபு >>>>> நெ.த (2) //வாய்க்கு ருசியாக சமையல் செய்துபோட்டு வந்த// - இதுவும் அதிசயமாக இருக்கு. பெரும்பாலும் பெண்கள், திருமணமாகி அப்புறம்தான் கொஞ்சம் கொஞ்சமாக சமையல் கத்துக்கறாங்க. அதிலும் சமையலில் எக்ஸ்பர்ட் ஆக இருந்தாலும், மாமியார், தாங்களே சமையலறை இன்சார்ஜிலிருந்து வெளியே வருவதில்லை. தப்பித் தவறி மருமகள் நல்ல சமையல் அபூர்வமா செய்து, அதனை மாமனார் பாராட்டிவிட்டால், நிச்சயம் மாமியார் 'சமையல் அறை' பொறுப்பை அந்தப் பெண்ணிடம் கொடுக்கவே மாட்டார். // இதெல்லாம் சில பிழைக்கத் தெரியாத மாமியாரின் செயல்களாக மட்டுமே இருக்கக்கூடும். அல்லது, வேலைக்குச் செல்லும் மருமகளாக இருப்பின், அவளின் சம்பளத்திற்காக, தன் விதியை நொந்துகொண்டு, ஒரு சமையல்காரி போல, எப்போதுமே, சமையல் கட்டில் எதையாவது கிண்டிக்கொண்டும், கிளறிக்கொண்டும் இருக்க வேண்டியதுதான். >>>>> Delete Replies Reply வை.கோபாலகிருஷ்ணன் March 8, 2018 at 1:06 AM கோபு >>>> நெ.த (3) //நம்ம எல்லோருக்கும் இதுபோல ஒரு அதிர்ஷ்டம் அடிக்குமா// - இது நிச்சயம் நடக்கக்கூடியதுதான். அக்கம் பக்கப் பெண்மணிகள் 'வம்பு' பேசுவது திரேதாயுகத்திலிருந்து நடப்பதுதானே. // ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹாஹ்ஹா ! இது ஓர் நகைச்சுவைக்காக என்னால் இந்தக்கதையில் கொண்டுவரப்பட்டது. அக்கம் பக்கத்துப் பெண்களின் வம்பு/தும்பு இல்லாவிட்டால் எந்தக் கதையும் சுவாரஸ்யப்படாதே ! //ஆனாலும் கதை இன்டெரெஸ்டிங் ஆகத்தான் இருந்தது.// மிக்க மகிழ்ச்சி. இதை.. இதை.. இதைத்தான்.. நானும் உங்களிடமிருந்து எதிர்பார்த்தேன். :) மிக்க நன்றி. //இந்த மாதிரி சினேகிதம் இருந்தால், கூட்டுக் குடும்பத்தின் ருசியே அலாதிதான். கூடவே இருக்கும்போது, அவர்கள் வயதாகும்போது கஷ்டம் அவ்வளவாகத் தெரியாது. வீட்டுக்கும் ஒரு பாதுகாப்பு.// இதெல்லாம் விளையாட்டுப்பேச்சு. சும்மாப் பேசவோ, கேட்கவோ, எழுதவோ மட்டுமே சரிப்பட்டு வரும். தற்சமயம் உள்ள ரியல் லைஃப்பில் இதெல்லாம் கொஞ்சமும் சாத்தியமே இல்லை என்றுதான் என்னால் சொல்ல முடியும். >>>>> Delete Replies Reply வை.கோபாலகிருஷ்ணன் March 8, 2018 at 1:25 AM கோபு >>>>> நெ.த (4) //அப்பா அம்மா சொன்னதை அப்படியே நம்பிவிட்ட அவர்களது பையன், பாவம், 'சாந்தஸ்வரூபி' (உண்மையா சொல்லணும்னா அஜாமாடன் என்று எங்க அம்மா சொல்லுவா. இல்லைனா 'அப்பாவி' அல்லது 'அசடு')// ஆமாம். மொத்தத்தில் அவன் புதுப்பொண்டாட்டியின் அருமை தெரியாத ஒரு சுத்த வழுவட்டை. சரியான அம்மாஞ்ஜி. அம்மா கோண்டு + அப்பா கோண்டு. //என்ன ஒண்ணு, நீங்க தேர்ந்தெடுத்த படத்தில் உள்ளவர்தான், பேரன் பேத்தி எடுத்தவர் மாதிரி இருக்கிறார். நானும் என்னடா ஜலதரங்கம், தம்புரா இருக்கே வீணை எங்கேன்னு பார்த்தேன். நல்லவேளை, வீணை பின்னால் இருக்கு.// அது ஏதோ கூகுளில் தேடியபோது எனக்குக் கிடைத்தபடம். அவர்கள் ஒரு பிரபல பாடகி என்றும், அவர்களிடம் தான் பாட்டுக் கற்றுக்கொண்டதாகவும், அந்த தன் குருநாதர் மாமியின் படத்தை வெளியிட்டதில் மிக்க மகிழ்ச்சி என்றும், யாரோ ஒரு வாசகி எனக்கு மெயில் மூலம் 2011 செப்டம்பரில் கடிதம் எழுதியிருந்தார்கள். அதனை இப்போது என்னால் கண்டுபிடிக்க இயலவில்லை. நடுவில் ஏற்பட்ட கம்ப்யூட்டர் ரிப்பேர்களில் பழைய மெயில்கள் எல்லாம் காணாமல் போய் விட்டன. தங்களின் அன்பான வருகைக்கும், விரிவான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள். அன்புடன் கோபு Delete Replies Reply நெல்லைத் தமிழன் March 8, 2018 at 11:00 AM //இவையெல்லாம் வெளியில் தெரியாமல் கமுக்கமாக நடக்கக்கூடும். // - என் நம்பிக்கை WHAT YOU GIVE IS WHAT YOU GET. நாமதான் நம் செய்கைகளில் மிகவும் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும். எந்த ஆலோசனையைப் புறம் தள்ளவேண்டும், எதைக் கொள்ளவேண்டும் என்று நம் புத்தியை வைத்து முடிவுக்கு வரவேண்டும். //தற்சமயம் உள்ள ரியல் லைஃப்பில் இதெல்லாம் கொஞ்சமும் சாத்தியமே இல்லை// - ஆமாம் எல்லா வீடுகளிலும் சாத்தியமில்லை. பையன் உள்ளூரில் வேலை பார்க்கணும், இல்லைனா உள் நாட்டில், ஓரளவு நல்ல சம்பளம் வரணும், அப்பா அம்மா தன்னுடன் இருக்கணும் என்ற எண்ணம் வரணும், அதனால் தங்களுக்கு மிகுந்த பயன் என்ற புத்தி இருக்கணும், நம் குழந்தை தன்னைப் பார்த்துத்தான் வளரும் என்று தோன்றணும், இன்னும் நிறைய 'ணும்'. அதனால் இது எளிதல்ல. //சில பிழைக்கத் தெரியாத மாமியாரின் செயல்களாக மட்டுமே இருக்கக்கூடும்// - எனக்கு அப்படித் தோணலை சார். இரண்டு பேரும் சேர்ந்து வேலையைப் பங்கு போட்டுக்கொள்வது குடும்பத்துக்கும் மாமியார் உடல் நலத்துக்கும் நல்லது. இருக்கவே இருக்கு, வயோதிகம் வரும்போது செய்யமுடியாமல் போவது. அந்தச் சமயம், மாமியார் தனக்குச் செய்த காலங்களை நிச்சயம் மருமகள் நினைத்துக்கொள்வாள். (அப்படி நினைக்காவிட்டாலும் நஷ்டமில்லை. மாமியார் தன் கடமையைச் செய்த திருப்தி இருக்கும்) Delete Replies Reply வை.கோபாலகிருஷ்ணன் March 9, 2018 at 12:35 AM நெ.த. March 8, 2018 at 11:00 AM தங்களின் மற்றக் (மாற்றுக்) கருத்துக்களுக்கு என் நன்றிகள். இவைகள் எல்லாம், சந்தர்ப்ப சூழ்நிலைக்கு ஏற்பவும், பொருளாதார அடிப்படைகளிலும், வீட்டுக்கு வீடு, மனுஷ்யாளுக்கு மனுஷ்யாள் வேறுபடக் கூடியவை. அவரவர்கள் எண்ணம் + செயல் படியும், தலையெழுத்துப்படியுமே எதுவும் நடக்கக்கூடும். இதனையெல்லாம், ஒட்டுமொத்தமாக, எந்தவொரு அளவுகோலிலும் அளந்து நாம் சுலபமாகச் சொல்லிவிட முடியாது. Delete Replies Reply Reply Add comment Load more... Newer Post Older Post Home Subscribe to: Post Comments (Atom) Popular Posts பத்தாவது விருது [10th Award of 2012] 10th AWARD of 2012 NAME OF THE AWARD Given to me on 28.07.2012 By Mrs. R.PUNITHA ... சாதனையாளர்களின் ஒட்டுமொத்த அணிவகுப்பு - 100% பின்னூட்டப் போட்டி 2015 ஊட்டமளிக்கும் பின்னூட்டங்கள் Ref: http://gopu1949.blogspot.in/ 2015/03/120404.html போட்டியில் 100% வெற்றிபெற்ற ச... என் வீட்டு ஜன்னல் கம்பி ஒவ்வொன்றாய்க் கேட்டுப்பார் ! என் வீட்டு ஜன்னல் கம்பி ஒவ்வொன்றாய்க் கேட்டுப்பார் ! அனுபவம் By வை. கோபாலகிருஷ்ணன் 04.01.2013 அன்று 'மூன்றாம் சுழி' எ... இன்றைய இனியவை நான்கு [ SWEET : 1 ] ONE MORE AWARD GIVEN TO ME ON 04.07.2012 By Ms. RIYAA KATHIR, [ A C O L O U R F U L ... காவேரிக்கரை இருக்கு! கரைமேலே ____ இருக்கு!! காவேரிக்கரை இருக்கு! கரைமேலே ___ இருக்கு!! [ கட்டுரை - ஆன்மிகம் ] By வை. கோபாலகிருஷ்ணன் -oOo- ஸ்ரீ ஆற்றழகிய சிங... VGK-31 To VGK-40 பரிசு மழை பற்றியதோர் ஒட்டுமொத்த அலசல் - வெற்றி! வெற்றி!! வெற்றி!!! சிறுகதை விமர்சனப் போட்டிகள் நிறைவு விழா அன்புடையீர், அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள். தங்கள் அனைவரின்... தா யு மா ன வ ள் [இறுதிப்பகுதி 3 of 3 ] தாயுமானவள் சிறுகதை [இறுதிப்பகுதி 3 of 3 ] By வை. கோபாலகிருஷ்ணன் -oOo- [மேலே கொடுத்துள்ள படங்கள் இரண்டும், சிறு... 16.12.2012 தேதியிட்ட கல்கியில் என் பெயர் அன்புடையீர், வணக்கம். 16.12.2012 தேதியிட்ட கல்கி இதழின் பக்கம் எண்கள்: 58 +59 இல் “வாசகர் கமென்ட்ஸ் போட்டி முடிவு!” வெளியி... உலகின் விசித்திர விமானங்கள் அன்புடையீர், வணக்கம். வலைப்பதிவுகளிலிருந்து சற்றே விலகி ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த என்னை த் தட்டி எழுப்பி விருது அளித்த... ஊரைச்சொல்லவா!! பேரைச்சொல்லவா!! என் ஊரைப்பற்றி நான் ஏதாவது எழுதியே தீரவேண்டும் என்று ஒரு தேவதை எனக்கு அன்புக்கட்டளை இட்டுள்ளது: இப்ப இந்த பதிவை தொடர ...
திராவிடர் கழகத்தின் கொள்கை சமூதாயத் தொண்டு, சமூதாய முன்னேற்றத் தொண்டு ஆகும். நம் சமூதாய மக்களிடையே இருக்கிற இழிவு, மடமை, முட்டாள்தனம், மானமற்றத் தன்மை ஆகியவை ஒழிக்கப்பட்டு – மனிதன் இழிவற்று மானத்தோடு அறிவோடு வாழ வேண்டும் என்பதே கொள்கையாகும். -பெரியார் -"விடுதலை",12-7-1969 , 11-03-2014 முதல் பெரியாரை (சு)வாசித்தவர்கள் counter மின் மடலில் எமது படைப்புகளை பெற... மின்மடல் முகவரி முன் தோற்றம் இன்றைய சிந்தனை சுயமரியாதை இயக்கம் கூறுவது என்ன ? 1. மக்கள் சமுக வாழ்வில் ஒருவருக்கொருவர் எவ்வித உயர்வு தாழ்வும் இருக்கக் கூடாது. 2. மனித சமுகம் பொருளாதாரத் தன்மையில் ஒருவருக்கொருவர் பணக்காரன், ஏழை என்கின்ற வித்தியாசமில்லாமல் எல்லாப் பொருளும், பூமியும் எல்லோருக்கும் சரிசமமாய் இருக்க வேண்டும். 3. மனித சமுகத்தில் ஆணுக்கும், பெண்ணுக்கும் எவ்வித வித்தியாசமும் இல்லாமல், சகல துறைகளிலும் சரி சமத்துவம் இருக்க வேண்டும். 4. மனித சமுகத்தில் ஜாதி, மதம், வருணம், தேசம், கடவுள் ஆகிய அபிமானங்களை அறவே ஒழித்து உலக மனித சமுக நேய ஒருமையே நிலவ வேண்டும். 5. உலகில் உழைப்பாளி என்றும் முதலாளி என்றும் பிரிவினையே இல்லாமல் சகல தேவைகளுக்கும், சகல மனிதர்களும், சரிசமமாகப் பாடுபட்டு அவற்றின் பயனை எல்லோரும் சரி சமமாக அனுபவிக்க வேண்டும். 6. ஒவ்வொரு மனிதனும் எவற்றிற்கும், எவ்விதத்தும், அடிமையாகாமல் அவனவன் அறிவு, ஆராய்ச்சி, உணர்ச்சி, காட்சி ஆகியவைகளுக்கு இணங்கி நடக்கச் சர்வ சுதந்திரமும் இருக்க வேண்டும். ---தந்தைபெரியார் - “குடிஅரசு’ - செய்தி விளக்கம் - 06.12.1947 ஆரியம் வேறு திராவிடம் வேறே! திருச்சி சமஸ்கிருத சாகித்ய பரிஷத்தின் பொதுக் கூட்டத்தில், தமிழ்நாட்டில் தமிழ் மொழியைப் போலவே சமஸ்கிருதத்திற்கும் மதிப்பளிக்க வேண்டுமென்று பல தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது. அத்தீர்மானங்களுள்: ஆரியக்கலையும் திராவிடக் கலையும் கலந்திருப்பதால் தமிழ் சமஸ்கிருதப் படிப்பைப் பிரிக்காமல் இருக்க வேண்டும் என்றும் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாம். என்ன சொல்லுகிறீர்கள். தமிழர்களே! தமிழில் ஆரியக்கலை, திராவிடக் கலை என்று திராவிடர் கழகம் பிரித்துக் கூறிவருவதை ஆட்சேபிக்கின்ற தமிழர்களே! பார்ப்பனப் பண்டிதர்களே இன்றைக்கும் கூறுகின்றனர், ஆரியம் வேறு திராவிடம் வேறு என்று. கலந்தது உண்மை. அதுபோலவே பிரிக்கலாம் என்பதும் உண்மை. நாம் பிரிக்க வேண்டிய நிலைகூட இல்லை. வாழ்க்கையில் பிரிந்தே இருந்து வருகின்றது என்று திராவிடர் கழகம் கூறுகின்றது. இதை நீங்கள் ஒப்புக் கொள்ளத் தயங்குகிறீர்கள். ஆனால் ஆரியம் ஒப்புக் கொள்ளு கிறது எப்படி? தமிழ்ப்படிப்பு சமஸ் கிருதப் படிப்பை பிரிக் காமல் இருக்க வேண்டும். இது தீர்மானம். தமிழ்ப் படிப்பின் வளர்ச்சி நாளடைவில், தமிழ் தமிழ் என்று எல்லாத் துறை களிலும் தமிழையே தேடும். இந்தப் போக்கு வளர்ந்து விட்டால் தமிழல்லாததை எல்லாம் - கடவுள், மதம், சாஸ்திரம் ஆகிய எதுவாயிருந்தாலும் தமிழருக்குத் (திராவிடர்க்கு) உரியதல்ல என்ற நிலைமை ஏற்பட்டு விடும். ஆதலால் சமஸ்கிருதப் படிப்பைப் பிரிக்காமல் தமிழ்ப் படிப்பு இருக்க வேண்டும் என்று பார்ப்பனியம் சொல்லுகிறது. நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள்? ------------ -------தந்தைபெரியார் - “குடிஅரசு” - கட்டுரை - 29.11.1947 பகுத்தறிவு வினாக்கள் உலகைப் படைத்தது கடவுள் எனில் கடவுளைப் படைத்தது யார்? நடமாடும் மனிதனுக்கு ஒண்டக் குடிசையில்லை. ஆனால் நடமாடாத கற்சிலைக்கு கோயில் ஒரு கேடா? குழந்தை பெறுவது கடவுள் செயல் என்றால் விதவையும், வேசியும் குழந்தை பெறுவது யார் செயல்? ஏன்? எல்லாம் வல்ல கடவுளின் கோவிலுக்குப் பூட்டும் காவலும் ஏன்? எல்லாம் அவன் செயல் என்றால் புயலும், வெள்ளமும், எவன் செயல்? ஆண்டவன் படைப்பில் அனைவரும் சமம் எனில் முதலாளியும், தொழிலாளியும், பார்ப்பானும், பறையனும் ஏன்? அவனின்றி ஓரணுவும் அசையாது எனில் கோவில் சிலை வெளிநாடு செல்வது எவன் செயல்? அன்பே உருவான கடவுளுக்கு கொலைக் கருவிகள் எதற்கு? முப்பத்து முக்கோடி தேவர்கள் இருந்தும் இந்தியாவில் மூன்று கோடிப் பேருக்கு உணவும் வேலையும் இல்லையே, ஏன்? ஆத்திகனைப் படைத்த கடவுள், நாத்திகனைப் படைத்தது ஏன்? மயிரை (முடி) மட்டும் கடவுளுக்கு காணிக்கை தரும் பக்தர்கள் கையையோ, காலையோ காணிக்கையாகத் தருவதில்லையே ஏன்? நோய்கள் கடவுள் கொடுக்கும் தண்டனையே என்று கூறும் பக்தர்கள் நோய் வந்தவுடன் டாக்டரிடம் ஓடுவது ஏன்? எல்லாம் அறிந்த கடவுளுக்கு தமிழ் அர்ச்சனை புரியாதா? தமிழ் புரியாத கடவுளுக்கு தமிழ்நாட்டில் என்ன வேலை? அய்யப்பனை நம்பி கேரளாவுக்கு போகும் பக்தர்களே! தமிழ்நாட்டுக் கடவுள்களை என்ன செய்யலாம்? அக்கினி பகவானை வணங்கும் பக்தர்கள் வீடு தீப்பற்றி எரிந்தால் அலறுவது ஏன்? பச்சை இரத்தம் குடித்துக் காட்டும் பூசாரி பாலிடால் குடித்துக் காட்டுவானா? சிவாயநம என்றால் அபாயம் இல்லை என்போர் மின்சாரத்தை தொடுவார்களா? ஜாதி ஒழிப்புத் திலகம் (?) தினமலர் பேசுகிறது தமிழக முதல்வர் ஜெயலலிதா: வரும் கல்வி ஆண்டு முதல், அனைத்துப் பள்ளிகளிலும் படிக்கும், மாணவ, மாணவியருக்கு, ஆறாம் வகுப்பிலேயே, அவர்களுக்குத் தேவையான ஜாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் ஆகியவை அளிக்கப்படும். டவுட் தனபாலு: அனைத்து ஜாதித் தலைவர்களே, கேட்டுக்கோங்க... ஆறாம் வகுப்பு படிக்கிற நம்ம குழந்தைகள், ஜாதிப் பெயரை எப்படி சொல்லணும் கிறதை இப்பவே கத்துக் கொடுத்துடுங்க... அடுத்த ஜாதிக் கணக்கெடுப்பு வரை காத்திருக்க வேண்டாம்ல...! - தினமலர், 9.5.2012 நம்புங்கள் ஜாதி ஒழிப்புத் திலகம் தினமலர் தான் இப்படி எல்லாம் பேசுகிறது (இடஒதுக்கீட்டுக்காக ஜாதி என்பதால் இந்தத் துள்ளல்!) ஆமாம், இந்த ஆண்டு ஆவணி அவிட்டத்தன்று தினமலர் கும்பல் பூணூலைப் புதுப்பித்துக் கொண்டதா? அன்று ஜாதி ஒழிப்புக் கொள்கை பீறிட்டு இனி பூணூல் போட்டுக் கொள்வதில்லை என்று சூளுரைத்துக் கொண்டதா? - போட்டு இருந்த பூணூலைத்தான் அறுத்ததுண்டா? -----"விடுதலை” 10-5-2012 எங்கள் தலையின் மீது பாரமாகக் கட்டி வைத்த இழிவை இறக்கத் தான் நாங்கள் பிரச்சாரத்தைச் செய்து வருகிறோமே தவிர, கடவுளையும் மதத்தையும் பற்றி கடுமையாகப் பேசி மக்களின் மனதைப் புண்படுத்த வேண்டும் என்பதற்காக அல்லவே! தந்தைபெரியார் - "விடுதலை" 15-2-1973 பழைய பதிவுகள் Search This Blog 24.8.14 இதுதான் வால்மீகி இராமாயணம்-21 (இதிகாசங்கள் என்றும் புராணங்கள் என்றும் மக்களிடையே உலவ விடுகிறார்கள். இவற்றிற்குத் தெய்வீக முத்திரைகள் குத்துகின்றனர் இவற்றைப் படித்தால், இவற்றின்படி ஒழுகினால் நல்லது நடக்கும் - நற்கதி கிடைக்கும் என்றெல்லாம் இன்றுவரை கூடப் பிரச்சாரம் செய்கிறார்கள். உண்மையில் அவை என்ன? இவற்றின் தன்மை என்ன? ஒழுக்கத்திற்கு இடம் இருக்கிறதா? பகுத்தறிவுக்கு வழி இருக்கிறது? ஒன்றும் இல்லை. வால்மீகி இராமாயணம் பற்றி சைவப் பெரும் புலவரான பண்டித இ.மு.சுப்பிரமணிய பிள்ளை (சந்திரகேகரப் பாவலர்) குடிஅரசில் எழுதிய பகுதிகள் (நூலாகவும் வெளிவந்துள்ளன). இங்கே வாரம் இருமுறை வெளியிடப்படுகிறது. படியுங்கள் - பகுத்தறிந்து பாருங்கள் - தெளிவு பிறக்கும்.) அயோத்தியா காண்டம் அய்ந்தாம் அத்தியாயம் தொடர்ச்சி அதைச் செவியுற்ற தசரதன், நான் பயந்தபடி இவளுக்கு உடம்பில் அசவுக்கியமில்லாமற் போனது என் பாக்கியமே என்று புன்சிரிப் புடன் அவளுடைய முகத்தை நன்றாய் ஆசை தீரப் பார்க்கவேண்டுமென்று அவளைத் தூக்கி எடுத்துத் தன் மடிமீது வைத்துக்கொண்டு அவளிடத்தில் வைத்திருக்கிற எல்லையற்ற காமவிகாரத்தால் என்ன சொல்லுகிறோ மென்று யோசிக்காமல். அழகில் ஈடற்ற வளே! என் உயிருக்குயிரான இராமன்மேல் ஆணை யிட்டுச் சொல்லுகிறேன். நீ வேண்டுவதைச் சொல்லி என்னைக் காப்பாற்று. பார்ப்பவர் கண்களையும் மனத்தையும் கவரும் உன் அழகின் மகிமையையும் என் திறமையையும் நீ முழுதும் தெரிந்தும் இப்படி அய்யுற லாமா? என்கிறான். கைகேயிக்கு அவ்வாக்குறுதியால் சந்தேகம் தீர்ந்தது. ஆனால், தான் கேட்டபின் அவன் மறுத்தலும் கூடும் ஆகையால் அவன் வாக்கை உறுதி செய்து அவனைக் கட்டுப்படுத்த எண்ணிக் கைகேயி, நீர் கூறிய வாக்குறுதி உண்மையானால் அதை முப்பத்து முக்கோடி தேவர் களும் மற்றெல்லோரும் கேட்கட்டும். தேவதைகளே, நீங்களே இவர் வாக்குறுதியை நன்றாகக் கேட்டு இதற்குச் சான்றாவீர்கள் என்று உரக்கக்கூவினாள். இவ்வாறு அவனைக் கட்டுப்படுத்தினாள். அவன் காமத்தால் மோகித்து எதைக்கேட்டாலும் கொடுப்பானென்ற நிச்சயத்தால், நான் சம்பாரசுரப் போரில் உமது உயிரைக் காப்பாற்றியதற்காக இரண்டு வரங்கள் தந்தீர்; இப்போதும் நான் எதைக்கேட்டாலும் கொடுப்பதாக மறுபடியும் வாக்குறுதி செய்தீர். இப்போது அவற்றைக் கேட்கப் போகிறேன். நீர் தராது மறுத்தால், நான் உம்மால் அவமானம் செய்யப்பட்டு உயிரை மாய்ப்பேன் என்றாள். தசரதன் அவளுக்கு வசப்பட்டு, அவற்றைக் கொடுத்தேன் கேள் என்றான். இப்படிக் காமத்தால் மோகித்துக் கேட்ட வரங்களைக் கொடுக்கத் தயாரா யிருக்கும் தன் கணவனைப் பார்த்துக் கைகேயி, முதல் வரம், இராமன் முடிசூட்டிற்குச் சேகரித்த பொருள்களைக் கொண்டே என் மகன் பரதனுக்கு முடிசூட்ட வேண்டும். இரண்டாவது வரமாவது, இராமன் மரவுரி முதலியன அணிந்து பதினான்கு ஆண்டுகள் காடேகவேண்டும். தாமதம் கூடாது; உமது வாக்குறுதியை நினைவு கொள்ளும். கடன் வாங்கினவனைக் கடன் கொடுத்தவன் கேட்கும்போது அவனுக்கு வருத்தமுண்டாகும். ஆனால் அது குற்றமா? இராமன் இன்றைக்கே காட்டுக்குப் போவதை நான் பார்க்க வேண்டும். சத்தியத்தைக் காப்பாற்றுவதே நற்கதிக்கு வழி! என்று கூறினாள். இடியொலி கேட்ட நாகம் போலத் தசரதன் அறிவிழந்து விழுந்தான். இவ்வரலாற்றை ஆராய்வோம். இதனால் தசரதன் மிகவும் காமவிகாரத்தில் ஈடுபட்ட வனென்பது தெளிவாகிறது. அதனாலேயே பட்டத்து மனைவியர் மூவரோடு அறுபதினாயிரம் காமக்கிழத்தி யரையும் வைத்திருந்தவனாவான். தசரதன் கிழவ னென்றும், கைகேயி பாலியமானவளென்றும் இவ்வர லாற்றில் கூறப்படுகிறது. முன் வரலாறுகளால் தசரதனைப்போலவே அவன் மனைவியரும் வயதானவரென்றே தெரியவருகிறது. இங்கே கைகேயி பாலியமானவளென்று சொல்லப்படு கிறாள். இது முன்னுக்குப் பின் முரணாகவே இருக்கிறது. கைகேயி பாலியமானவளென்று கொண்டால் அவளை அவள் தந்தையாகிய கேகய மன்னன், அறுபதினா யிரத்தின் மேலும் வயதான தசரதனுக்கு எவ்வாறு மணஞ்செய்து கொடுத்தானோ? இவ்வளவு வயதான கிழவனாகிய தசரதனிடம் அவள் என்ன இன்பந்தான் பெற்றாளோ? மகனுக்கு விடிந்தால் முடிசூட்டு. தந்தையாகிய தசரதன் கைகேயியைப் புணர்வதற்கு மிகவும் காம விகாரத்தோடு இவ்வாறு தட்டழிகிறான். என்ன ஆச்சரியம்? கோப அறைக்கு ஓடிப்போய் அவளுக்கு நோயோவென அய்யுற்றுக் கவலைப்படு கிறான். உடம்புக்கு ஒன்றுமில்லையென்று அவள் கூறவே, தன் தீய காரியத்திற்கு இடைஞ்சலில்லையென்று மகிழ்கிறான். இவனுடைய காம வெறியைப் பற்றி வால்மீகி முனிவர் மேலே குறித்த கதையாலேயே பல இடங்களில் கூறுகிறார். தசரதன் காம விகாரத்தால் சத்தியம் செய்கிறவன். பின்னால் தன் சொல்லை மாற்றினாலும் மாற்றுவானென்றே அவனைக் கட்டுப்படுத் துவதற்கு அவன் வாக்குறுதியைப் பலரும் அறியும்படி கைகேயி சத்தமிட்டுக் கூறுகிறாள். தசரதனோ தன் இழிந்த தன்மைக்கேற்பக் குற்றமில் லாதவரைக் கொலை செய்தல், கொலை செய்தோரை விட்டுவிடுதல் முதலான செயல்களைக்கூடச் செய்வ தாகக் கைகேயியிடம் கூறுகிறாள். இவ்வளவு தூரம் கேவலமான புத்தியையும் ஒழுக்கத்தையும் உடைய வனாகிய தசரதனை நல்லவனைப்போலக் காட்டி உலகத்தாரை ஏமாற்றினார் கம்பர். தசரதனைப் பற்றிய மேலே கண்ட கேவலமான வரலாறு முழுவதையும் கம்பர் கூறாமல் மறைத்தார். சபையாரிடத்திலே விடை பெற்றுக்கொண்டு தனியாகக் கைகேயியை நாடிவந்த தசரதனை அவளு டைய அரண்மனைக்கு மன்னர் பலர் சூழ வந்தானென்று கம்பர் கூறுகிறார். ஆதலின் உண்மைக் கதையை மறைப்பதே அவருடைய நோக்கம் போலும்! அவன் தனியே போப அறைக்குச் சென்று கைகேயியைக் கண்டான் என வால்மீகி கூறக்கம்பரோ, வேலைக்காரி களோடும் சென்று அவளைக் காண்பதாகக் கூறுகிறார். இவையெல்லாம் தசரதனுடைய கேவலமான காமவெறித் தன்மையை மறைத்து, அவனை நல்லவனைப்போல உலகுக்குக் காட்டி மயக்கப் போலும்! தசரதன் கைகேயியனுடைய அழகிய முகத்தைப் பார்த்து மகிழ்வதற்காக அவளை எடுத்து மடிமீது வைத்துக் கொள்கிறான் என்று வால்மீகி கூறியிருக்கக் கம்பரோ அவளை வாரியெடுத்ததாகவும், அவள் அவன் கையைத் தள்ளிக் கீறே மறுபடியும் விழுந்தாளென்றும் கூறுகிறார். தசரதன் தன்னிடம் கைகேயி பேசிய பின்னரே அவளைத் தூக்கி மடிமீது வைத்தக் கொண்டானென்றும் வால்மீகி கூறுகிறார்; கம்பரோ போனவுடனே அவன் அவளைத் தூக்கியதாகக் கூறுகிறார். தசரதன் முதலில் தன் புண்ணியத்தின் மேல் ஆணையிடுகிறன்; பின்னரே இராமன்மேல் ஆணை யிடுகிறான். அவன் தன் புண்ணியத்தின் மேல் ஆணை யிட்டதைக் கம்பர் கூறாது விடுத்தார். மேலே கண்ட வரலாற்றை வால்மீகி பத்து, பதினொன்று என்ற இரண்டு சருக்கங்களிலே மிகவும் விவரமாகக் கூறியிருக்கக் கம்பர், அதையே கைகேயி சூழ்வினைப் படலத்தில் முதல் பத்துப் பாடல்களால் மிகச்சுருங்கக் கூறுகிறார். இது தசரதனுடைய இழி குணத்தை மறைக்கவே. ஆறாம் அத்தியாயம் இராமன் காடேகவும் பரதன் நாடாளவும் கூறிய கைகேயியின் பேச்சு காதில் விழுந்தமாத்திரத்தில் தசரதன் மிகவும் கலங்கினான். அது கனவோ நனவோ என அய்யுற்றான். தனக்குப் பித்தேறியதோ என எண்ணிக் கொஞ்சம் தெளிந்து கொடுங்கோபத்துடனே கைகேயியை எரிக்கிறவன் போலப் பார்த்து. அடி, கெட்டவளே! நானாவது, இராமனாவது உனக்குச் செய்த தீமை உளதோ? எல்லாரும் இராமனைப் புகழ்கின் றார்களே! என்னிடம் அளவற்ற அன்பை வைத்திருக்கும் அவனை எவ்வாறு பிரிவேன். அவனைப் பார்க்கப் பார்க்க எனக்கு ஆசை வளர்கிறது. அவனை ஒரு கணம் பார்க்காமலிருந்தாலும் என்னுயிர் போய்விடும். அவனில்லாமல் என்னுடலில் உயிர் நிற்காது. தீயவளே! பிடிவாதத்தை விடு. என் தலையால் உன் அடிகளைத் தொட்டு வேண்டுகிறேன். இதுவரை அவனை நல்லவ னென்றாயே. இது என்னை மகிழச்செய்வதற்கா அல்லது அவன் உனக்கு பணிவிடை செய்வதற்கா? உனக்கு யார் இக்கெட்ட புத்தியைச் சொன்னது? இராமன் மிக்க செல்லமாக வளர்ந்தான். அவனைக் காட்டுக்கு அனுப்ப உன் மனம் எப்படித்துணிந்தது? அவன் எல்லோருக்கும் பிரியமானவனாயிற்றே? உலகம் சம்மதிக்குமோ? அவன் உனக்குப் பணிவிடை செய்வதில் கொஞ்சமாவது தவறுவ தில்லையே. பரதனைக் காட்டிலும் அவன் உனக்குச் சிறந்த பணிவிடை செய்கிறானன்றோ? அப்படியிருக்கப் பரதனிடத்தில் என்ன சிறப்பைக் கண்டாய்! மனிதரிற் சிறந்தவனான இராமனைக் காட்டிலும் அதிகமாக உனக்கு ஊழியம் செய்கிறவர் யார்? உன்னிடத்தில் அதிக மரியாதையையும் வணக்கத்தையும் வைத்து, உன் சொற்படி நடக்கிறவர் இராமனைத் தவிர யார்? அப்படி யிருக்க அவனைக் காட்டிற்குத் துரத்த எப்படி உன் மனம் துணிந்தது? அவன் தன் பணியிலும் கொடையிலும் எல்லோரையும் வசப்படுத்துகிறான். அவன் எல்லோ ருடைய மனம்போலவும் நடப்பவனாயிற்றே. கைகேயி! எனக்கோ வயதாகிவிட்டது. நெடுநாள் பிழைத்திருக்க மாட்டேன். கிழவனான நான் சொன்னதையே சொல்லிக் கொண்டிருப்பவன். ஆகையால் என்னிடத்தில் இரக்கம் வை. நீ எனக்கு வயதிற் சிறியவளாக இருந்தாலும் உன் கால்களைத் தொடடுக் கைகூப்பி வேண்டுகிறேன். நான் இராமனுக்குச் சொன்ன சொல்லைத் தவறும்படி செய்யாதே என்று வேண்டிக் கொண்டான். பின் கொஞ்சநேரம் மூர்ச்சையடைந்து எழுந்து தள்ளாடிப் புலம்பிய தசரதனை நோக்கிக் கைகேயி, உம்மையொத்த மன்னர் உம்முடைய உயிரைக்காத்த கைகேயிக்கு என்ன உதவி செய்தீரென்று கேட்டால் யாது கூறுவீர்? தன்னுயிரைக் கொடுத்து யா என்னைக் காப்பாற்றினாரோ, யாருடைய தயவால் நான் பிழைத் திருக்கிறேனோ, அவளுக்கு அப்போது இரண்டு வரங்கள் கொடுத்துவிட்டு இப்போது அவற்றை மறந்து விட்டேனென்று சொல்வீரோ? சிபி முதலியவர் குலத்திற் பிறந்தவரா நீர்? கெட்ட எண்ணமுள்ளவனே! நீ அதர் மமாக நடந்து இராமனுக்கு முடிசூட்டிக் கவுசலையோடு சுகமாக வாழ எண்ணங்கொண்டிருக்கிறாயல்லவா? இராமனுக்கு முடி சூட்டினால், உன்னெதிரிலே நஞ்சைக் குடித்து இப்போதே இறப்பேன். கவுசலையைக் காட்டிலும் உனக்கு நானே அதிக சுகத்தைக் கொடுக் கிறவளல்லவா? ஆதலின் கோசலையை எல்லோரும் வணங்குவதை நான் பார்ப்பதைவிட உயிரையே விடுவேன் என்று கூறினாள். தசரதன் எவ்வளவு கெஞ் சியும் மறு மொழி கூறவில்லை. அவன் கொஞ்சநேரம் அவளை இமை கொட்டாமற் பார்த்திருந்து, இராமா என்று கூவிக் கீழே விழுந்தான். பின் அவன் வணக்கமாய், பெண்ணே! உன்னைச்சிறு பெண்ணாக மணந்தேன். அப்போது உன் கெட்ட குணத்தை அறிய முடியவில்லை. இப்போது வயதான பிறகு உன் தீய குணம் வெளியாகிறது. குடிகளுடைய கோபத்தைத் தேடாதே. பரதன் மிகவும் நல்லவனல்லவா? ஆதலில் அவன் இராமனிருந்தாலே நாட்டிலிருப்பான். என்னுடைய நான்கு பிள்ளைகளுக்கும் இந்த நாட்டைச் சமமாகப் பிரித்துக் கொடுக்கிறேன். அல்லது பரதனுக்கு முடிசூட்டுகிறேன். இராமன் மாத்திரம் வயதான என்னருகிலிருக்கும்படி செய்; பலநாளாகச் சிந்தித்துச் செய்த இத்தீர்மானத்தை இப்படிக் கெடுக்கலாமா? பலருக்கு முன்பாக இராமனுக்கு முடிசூட்டு நாளை என்ற என்வாக்குப் பொய்யாகுமே! கோசலை மிகவும் உத்தமி. அவள் முன் என்ன சொல்வேன்? உனக்காக அவளைச் சரியாக நான் நடத்தலானாலும் சரி, எனக்கு நன்மை தராத இந்தக் காரியத்தை உன் பேச்சைக்கேட்டு நான் செய்யவே மாட்டேன். உனக்குச்சாவு வரக்காணோமே. அய்யோ! உன் கால்களைப் பிடித்து வணங்குகிறேன் தயவு செய்! ---------------------------"விடுதலை” 19-8-2014 Read more: http://viduthalai.in/page1/86140.html#ixzz3BE9IvIPB Posted by தமிழ் ஓவியா Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest Labels: பெரியார்-பார்ப்பனியம்-மூடநம்பிக்கை 4 comments: தமிழ் ஓவியா said... அண்ணன் மோடியின் அடுத்த ஜீ பூம்பா... ஆப்.கி.பார் டிராமா சர்க்கார் அண்ணன் மோடியின் அடுத்த ஜீ பூம்பா... ஒலகத் தலவரா அவதாரம் எடுக்கற அடுத்த முயற்சியில நம்ம அண்ணன் நேபாளம் போனது எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கும்... அங்க கோவிலுக்குப் போனாரு, ரோட்ல நடந்தாரு, அல்லாரையும் பாத்தாரு. இதெல்லாம் தாண்டி இன்னொரு சூப்பர் வேல செஞ்சாரு. அது என்னா? செண்டிமெண்டா அடிச்சாரு. எம்.ஜி.ஆர் நடிச்ச நாளை நமதே படத்த ரீரிலிஸ் பண்ணாரு. பல வருசம் முன்னாடி ஜீத்பகதூர்னு ஒரு பையன் அப்பா, அம்மாவ பிரிஞ்சி இந்தியா வந்துட்டான். அவன அண்ணன் குஜராத்ல கண்டெடுத்து வளத்தாரு. அவனும் வளந்தான், அண்ணனும் வளந்தாரு. அவன் பெரிய பையன் ஆனான், அண்ணன் பிரைம் மினிஸ்டர் ஆனாரு. அவன அவங்க குடும்பத்தோட சேத்து வைக்கனும்னே நேபாள் டூர் போட சொன்னாரு. நேபாளுக்கு ஜீத்பகதூரையும் கையோட கூப்பிட்டுக்கிட்டுப் போனாரு. பிரியா படத்து ரஜினி மாதிரி ரோடு ரோடா பாடிக்கிட்டே போனாரு. அவங்க குடும்பத்தக் கண்டு பிடிச்சாரு. அவங்ககூட சேத்து வச்சி, கண்கலங்குனாரு. நாளை நமதே இந்த நாளும் நமதே பாட்டு ஓடுச்சு. கூடி நின்ன இந்தியப் பத்திரிக்க கண்ணெல்லாம் ஆறா ஓடுச்சு. ஆனா ஜீத்பகதூரு கலங்கவேயில்ல... ஏன்? அங்கதான் ஒரு டிவிஸ்ட். ஜீத்து, மோடி அண்ணனுக்கே தெரியாம திருட்டு லாரில போயி அவங்க குடுமபத்த 2012 ஆகஸ்ட் 23_லயே பாத்துட்டான். இத அவன் தன் மூஞ்சிபுத்தகத்ல (Facebookல) படமா போட்டுட்டான். இது அண்ணனுக்குத் தெரியாமலே இருந்துடுச்சி. அதுக்கு முன்னாடி 2012 ஜூன் 17ஆம் தேதி ஜீத் போட்ட ஸ்டேடஸ்: Hey Fri Gm Bye bye India. 2012 ஜூன் 19ஆம் தேதி போட்ட ஸ்டேடஸ்: Hey Fri Today is I m v happy Bcos I m my home (Nepal) இதுவும் வளமான குஜராத் கதயான்னு யாரும் கேக்கக் கூடாது. அது அல்லாம் அண்ணன் தூங்கும் போது நடந்தது. ஆனாலும் அண்ணன் கடம ஒணர்ச்சியோட ஜீத்பகதூர அவங்க குடும்பத்தோட சேத்து வச்சிட்டு ட்வீட்டும் போட்டுட்டாரு. அப்ப நம்ம வேல... ம், பாடுங்க... # நாளை நமதே, இந்த நாளும் நமத - எஸ்.எஸ்.சிவசங்கர் August 24, 2014 at 7:53 AM தமிழ் ஓவியா said... உங்களுக்குத் தெரியுமா? இராசாராம் மோகன்ராய் வேதங்களின் கருத்துகளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தபோது, தங்களைத் தவிர வேறுயாரும் அதைப் படிக்கக் கூடாது என்று காரணம் காட்டி, பார்ப்பனர்கள் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார்கள் என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா? August 24, 2014 at 7:54 AM தமிழ் ஓவியா said... கல்கியின் பூணூல் வித்தை என்னடா.. இது! கல்கிக்கு வந்த தமிழ்ப் பற்று! சமஸ்கிருத வாரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துவிட்டாராம் ஜெயலலிதா. அந்தத் தியாகத்தை, போர்க்குணத்தைப் படம் போட்டுப் பெருமைப்படுகிறது கல்கி (3.8.2014). உங்க சோலையில இந்த மயிலையும் கொஞ்சம் ஆடவிடுங்க என்று மென்மையாக சமஸ்கிருத வாரத்தை நுழைத்து, வான்கோழியாகிய இந்தியைத் திணிக்கிறாராம். அதனால் தமிழ்ப்பூங்காவில் மோடி நுழைக்க வந்த இந்தியையும், சமஸ்கிருதத்தையும் அம்மையார் தடுக்கிறார். அதெல்லாஞ் சரி! அனை வருக்கும் தெரியும் என்பதால் ஆதரிக்க முடியாது என்ற நிலையில், இந்தியைத் திணிப்பு என்றும் வான்கோழி என்றும் பொதுவாக எதிர்ப்பது போல் காட்டிவிட்டு, அதனினும் விஷமான சமஸ்கிருதத்தை மயில் என்று சாங்கோபாங்கமாக உயர்த்திக் காட்டுகிற வித்தை அட..அட... இதுதாங் காணும் பூணூல் வித்தை! - அன்பன் August 24, 2014 at 7:55 AM தமிழ் ஓவியா said... கடவுள் இருந்தால்....! கடவுள் நம்பிக்கையாளர்கள் பலரும் நம்பும் கடவுளின் முக்குணங்கள், முத்தன்மைகள் - மனித சக்திக்கு மேற்பட்டதாக கூறப்படுவன. (1) சர்வ சக்தி - எல்லாம் வல்லவன். (2) சர்வ வியாபி - எங்கும் நிறைந்த பரம்பொருள். (3) சர்வ தயாபரன் - கருணையே வடிவானவன். உள்ளபடியே அப்படிப்பட்ட தன்மைகள் அக்கடவுளர் - கடவுளச்சிகளுக்கு உள்ளனவா என்று எந்த பக்தராவது புத்திகொண்டு சிந்திக்கின்றனரா? ஆராய்கின்றனரா? இல்லையா? வெறும் நம்பிக்கை அதுவும் குருட்டு நம்பிக்கைதானே. அதனால்தான் பக்தி வந்தால் புத்தி போகும், புத்தி வந்தால் பக்தி போகும் என்றார் அனுபவரீதியான வகையில் அறிவு ஆசான் தந்தை பெரியார்! அன்றாடம் அத்துணை மதநம்பிக்கையாளரும் கடவுளை வணங்கி, பிராத்தனை என்ற கையூட்டும் - லஞ்சமும் தரத் தவறுவதே இல்லை. அப்படி இருந்தும் அன்றாட நிகழ்வுகள் பெரும்பாலான மக்களுக்குத் துன்பமும், இழப்பும், தொல்லையும் ஆகத்தானே உள்ளதே தவிர, மகிழத்தக்கதாக உள்ளதா? கடவுளை நம்பாத, நாத்திகர்கள், பகுத்தறிவாளர்கள் மட்டும்தான் தொல்லைகளை, துன்பத்தை அனுபவிக்கின்றார்களா? இல்லையே. நம்பிக்கையாளர்களில் பெரும்பாலோர் இப்படி துன்பத் தீயில் வெந்து கருகுகின்றனரே. உத்தரகாண்டில் யாத்திரைக்குப் போனவர்கள் அளவுக்கு அதிகமான மழை, வெள்ளம் மூலம் அடித்துச் செல்லப்பட்டவர்கள், மராத்திய மாநிலம் புனேயில் மலின் என்ற ஊரில் பழங்குடிமக்கள் வீடுகளோடு, நிலச்சரிகளில் புதையுண்டு பிணக்குவியல்களைத் தோண்டி எடுக்கும் அவலம் கண்றாவிக் காட்சி அல்லவா? பீகாரில் நதி வெள்ளப் பெருக்கெடுத்ததோடு, பல்லாயிரவர் வீடிழந்து, வாழ்விழந்து நிற்கின்றனர்! இஸ்ரேலில் - பாலஸ்தீனப் பச்சிளங் குழந்தைகள்மீதும் ஈவிரக்கமில்லா இஸ்ரேலின் குண்டுமழை, சீனாவில் 3.8.2014இல் 6.8 ரிக்டர் அளவுக்கு கடும் பூகம்பம் - பல நூற்றுக்கணக்கில் மக்கள் பலி, கோவில் தரிசனம் மற்றும் பல மத விழாக்களுக்குச் சென்று, நேர்த்திக்கடன், காணிக்கை தந்துவிட்டுத் திரும்புவோர் சாலை விபத்துகளில் குடும்பம் குடும்பமாகப் பலியாகும் கொடுமை! பச்சிளம் சிறுமிகள் பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாகி பிணமாகும், வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத சோகச் செய்திகள் நாள்தோறும் வருகின்றனவே. கடவுள் சர்வசக்தி படைத்தவராக இருப்பின் தடுத்திருக்க வேண்டாமா? கடவுள் சர்வ வியாபி - எங்கும் நிறைந்தவர் _ இப்படி நடப்பதை வேடிக்கை பார்த்து வாய்மூடியாக இருப்பாரா? எல்லாவற்றையும்விட மேலாக கருணையே வடிவானவராக இருந்தால், தனது பிள்ளைகள், தன்னால் சிருஷ்டிக்கப்பட்டவர்கள் இப்படிக் கொத்துக் கொத்தாக கொள்ளைச்சாவு சாவுவதைக் கண்டு வாளா இருப்பாரா? எண்ணிப் பாருங்கள்! நாத்திகம் நன்னெறி என்பது அப்போது புரியும். கி.வீரமணி, ஆசிரியர். August 24, 2014 at 7:56 AM Post a Comment Newer Post Older Post Home Subscribe to: Post Comments (Atom) பதினைந்தாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ பதினைந்தாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ 19-12-21 இல் பதிநான்கு ஆண்டுகள் முடித்து பதினைந்தாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ பதினான்காம் ஆண்டில் தமிழ் ஓவியா பதினான்காம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ 19-12-20 இல் பதிமூன்றாம் ஆண்டுகள் முடித்து பதிநான்காம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ பதிமூன்றாம் ஆண்டில் தமிழ் ஓவியா பதிமூன்றாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ 19-12-2019 இல் பனிரெண்டாம் ஆண்டுகள் முடித்து பதிமூன்றாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ பனிரெண்டாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ பனிரெண்டாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ 19-12-2018 இல் பதினொன்றாம் ஆண்டுகள் முடித்து பனிரெண்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 389 (Followers)பின்பற்றுபவர்களுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது 19-12-2013 அன்று வரை 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் பார்வையிட்டு படித்து வந்தனர். இடையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால் 20-12-2013 முதல் 10.03.2014 வரை பார்வையாளர் எண்ணிக்கையை சரியாக பதிவு செய்யமுடியவில்லை. இருப்பினும் 11-03-2014 முதல் பார்வையாளர் எண்ணிக்கையை மீண்டும் பதிவு செய்தோம். அதனடிப்படையில் இது வரை 121024 பேர் பார்வையிட்டு படித்து வருகின்றனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி பதினொன்றாம் ஆண்டில் ’’தமிழ் ஓவியா” வலைப்பூ 19-12-2017 இல் பத்து ஆண்டுகள் முடித்து பதினொன்றாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. பத்தாம் ஆண்டில் தமிழ் ஓவியா 19-12-2016 இல் ஒன்பது ஆண்டுகள் முடித்து பத்தாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 387(Followers)பின்பற்றுபவர்களுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது 19-12-2013 அன்று வரை 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் பார்வையிட்டு படித்து வந்தனர். இடையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால் 20-12-2013 முதல் 10.03.2014 வரை பார்வையாளர் எண்ணிக்கையை சரியாக பதிவு செய்யமுடியவில்லை. இருப்பினும் 11-03-2014 முதல் பார்வையாளர் எண்ணிக்கையை மீண்டும் பதிவு செய்தோம். அதனடிப்படையில் இது வரை 100622 பேர் பார்வையிட்டு படித்து வருகின்றனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி ஒன்பதாம் ஆண்டில் தமிழ் ஓவியா 19-12-2015 இல் எட்டு ஆண்டுகள் முடித்து ஒன்பதாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 419(Followers)பின்பற்றுபவர்களுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது 19-12-2013 அன்று வரை 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் பார்வையிட்டு படித்து வந்தனர். இடையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால் 20-12-2013 முதல் 10.03.2014 வரை பார்வையாளர் எண்ணிக்கையை சரியாக பதிவு செய்யமுடியவில்லை. இருப்பினும் 11-03-2014 முதல் பார்வையாளர் எண்ணிக்கையை மீண்டும் பதிவு செய்தோம். அதனடிப்படையில் இது வரை 84322 பேர் பார்வையிட்டு படித்து வருகின்றனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி எட்டாம் ஆண்டில் தமிழ் ஓவியா 19-12-2014 இல் ஏழு ஆண்டுகள் முடித்து எட்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ413 (Followers)பின்பற்றுபவர்களுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது 19-12-2013 அன்று வரை 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் பார்வையிட்டு படித்து வந்தனர். இடையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால் 20-12-2013 முதல் 10.03.2014 வரை பார்வையாளர் எண்ணிக்கையை சரியாக பதிவு செய்யமுடியவில்லை. இருப்பினும் 11-03-2014 முதல் பார்வையாளர் எண்ணிக்கையை மூண்டும் பதிவு செய்தோம். அதனடிப்படையில் இது வரை 45067 பேர் பார்வையிட்டு படித்து வருகின்றனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி Blog Archive ► 2022 (80) ► November (1) ► October (8) ► September (12) ► August (20) ► July (27) ► June (11) ► March (1) ► 2021 (50) ► December (2) ► May (40) ► March (3) ► February (3) ► January (2) ► 2020 (1) ► March (1) ► 2019 (10) ► December (1) ► April (7) ► January (2) ► 2018 (35) ► December (10) ► September (5) ► July (1) ► May (1) ► April (1) ► March (3) ► February (3) ► January (11) ► 2017 (4) ► December (1) ► August (2) ► January (1) ► 2016 (27) ► December (1) ► November (2) ► September (2) ► August (3) ► July (4) ► June (4) ► May (1) ► April (2) ► March (1) ► February (4) ► January (3) ► 2015 (298) ► November (3) ► October (14) ► September (28) ► August (16) ► July (32) ► June (37) ► May (25) ► April (35) ► March (37) ► February (29) ► January (42) ▼ 2014 (564) ► December (45) ► November (42) ► October (58) ► September (47) ▼ August (42) விநாயகரின் மனைவியர் பட்டியல்-விநாயகன் இறக்குமதி சர... இதுதான் வால்மீகி இராமாயணம் - 24 மூடத்தனம் என்ற நோயை ஒழித்ததால்தான் அம்மை நோய் ஒழிக... புராண லோகங்களும் வானியல் கோள்களும் ஒன்றா? மடமைக் க... ஈழத் தமிழர்கள் விரும்பும் அரசியல் தீர்வு தேவை! இதுதான் வால்மீகி இராமாயணம் -23 செத்த மொழிக்குச் சிங்காரம் - ஏன்?சமஸ்கிருதம் பற்றி... இதுதான் வால்மீகி இராமாயணம் - 22 உரிமையும் பொறுப்பும் - பெரியார் இதுதான் வால்மீகி இராமாயணம்-21 விநாயகர் ஊர்வலமா - வீண் வம்பின் விவகாரமா? மீண்டும் இராவண லீலா நடக்க வேண்டுமா? இதுதான் வால்மீகி இராமாயணம் - 20 திராவிடர் கழகமே ஜாதியை ஒழிக்கும் - பெரியார் பாடத் திட்டத்தில் ஜாதிப் பெயரா? டாஸ்மாக் பக்தியோ பக்தி! இந்துத்துவாவாதிகளிடமிருந்து பதில் உண்டா? வைஷணவாள் செம்பு- பெரியார் இதுதான் வால்மீகி இராமாயணம் - 19 பக்திப் பிரச்சினையில் மட்டும் புத்தியைச் செலுத்த ம... ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோமா? பெண்களுக்கு விழா எடுக்கப்படுகிறது என்றால் நம் இயக்... இல்லாத ஹிந்து மதம் சிவாஜி முடிசூட்டலும் பார்ப்பனீயமும் வடமொழிக்கு வக்காலத்து?-பெரியார் இதுதான் வால்மீகி இராமாயணம் - 18 சமஸ்கிருத எதிர்ப்பு என்றால் ஆரியம் அலறுவானேன்? ஆடிப்பெருக்கு கொண்டாடுவதன் காரணம்? உங்களுக்கு எந்த ஜாதியில் இணைய விருப்பம்? பார்ப்பனப் பெண்ணும் துப்புரவுப் பணிப் பெண்ணும் கடவுள் அனாதியா? - பெரியார் மண்டையை உடைக்க ஒரு கோயில் திருவிழாவா? இதுதான் வால்மீகி இராமாயணம் -17 பெண் கையில் மதுக் கோப்பையா? நடிகரும், இயக்குநருமான பாக்யராஜீம்-பார்ப்பனர்களும் சிங்கப்பூரில் தமிழர் சீர்திருத்த சங்கம் - பெரியார் மோடியின் ஊது குழாய்கள் எங்கே? பாரதியாருக்கும் வ.உ. சிதம்பரனாருக்கும் தமிழ்மொழி த... லஞ்சம் பற்றி பெரியார் இதுதான் வால்மீகி இராமாயணம் - 16 தெய்வ நம்பிக்கைக்கு மரணம் காரணமா? - பெரியார் பாடத் திட்டங்களில் இந்துத்துவா நஞ்சா? ► July (48) ► June (53) ► May (46) ► April (55) ► March (41) ► February (45) ► January (42) ► 2013 (466) ► December (39) ► November (47) ► October (50) ► September (38) ► August (39) ► July (35) ► June (36) ► May (35) ► April (44) ► March (32) ► February (32) ► January (39) ► 2012 (506) ► December (34) ► November (40) ► October (43) ► September (42) ► August (42) ► July (43) ► June (38) ► May (48) ► April (44) ► March (48) ► February (38) ► January (46) ► 2011 (622) ► December (40) ► November (41) ► October (48) ► September (68) ► August (59) ► July (59) ► June (54) ► May (56) ► April (41) ► March (52) ► February (57) ► January (47) ► 2010 (827) ► December (42) ► November (55) ► October (52) ► September (73) ► August (66) ► July (85) ► June (79) ► May (56) ► April (63) ► March (79) ► February (75) ► January (102) ► 2009 (1381) ► December (84) ► November (102) ► October (76) ► September (111) ► August (147) ► July (145) ► June (143) ► May (90) ► April (135) ► March (112) ► February (117) ► January (119) ► 2008 (1129) ► December (118) ► November (144) ► October (135) ► September (88) ► August (130) ► July (125) ► June (99) ► May (94) ► April (100) ► March (42) ► February (42) ► January (12) ► 2007 (34) ► December (34) ஆங்கிலம் கற்க Popular Posts திமுக ஆட்சியின் சாதனைகள் - கலைஞர் வெளியிட்ட பட்டியல் கேள்வி: தி.மு.க. ஆட்சியின் மிக முக்கியமான சாதனைகள் என்ன? கலைஞர்: அண்ணா முதல்வராக இருந்த போது சென்னை ராஜ்யம் என்ற பெயரை விடுத்து தம... அண்ணாவின் பொன்மொழிகள் இன்று அண்ணா நூறாண்டு பிறந்தநாள். அண்ணாவைப் பின்பற்றுபவர்கள் அவரின் வழி நடப்பவர்கள் குறந்தபட்சம் இனி மேலாவது அவரின் கொள்கை வழிப்படி நடக்க ... ஒரு ரஞ்சிதா போனால் என்ன? எத்தனை குஞ்சிதாக்கள் கிடைப்பார்கள்? கப்-சிப் சிறைவாசம் அனுப வித்த நித்யானந்தர் மீண்டும் ஆன்மிகப் பணி தொடர எந்தச் சட்டமும் தடை செய்ய வில்லை அவரை ஆன் மிகப் ப... என் எதிரிலேயே மைதிலி என்னும் பெண்ணுடன் உறவு கொண்டார் சங்கராச்சாரியார் - அனுராதா ரமணன் நம்புங்கள் - சங்கரராமன் கொலைக்கும் சங்கராச்சாரியாருக்கும் சம்பந்தமே இல்லை சங்கராச்சாரியார் ஸ்வாமிகள் விடுத... பாண்டேவுக்கு பதிலடி! ஊன்றிப்படித்து உண்மைகளை அறியுங்கள்!! அன்பிற்கினிய தோழர்களே, வணக்கம் நேற்று 28-03-2015 அன்று தந்தி தொலைக்காட்சியில் ரங்கராஜ் பாண்டே ... அம்மணமாக ஆண் பெண் சாமியார்கள் குளித்துக் கூத்தடிக்கும் கும்பமேளா மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கும்பமேளா. அம்மணமாக ஆண் சாமியார்களும் பெண் சாமியார்களும் குளித்துக் கூத்தடிக்கும் கும்பமேளா. இந்து மத... இதுதான் அய்யப்பன் உண்மை கதை அய்யோ அப்பா அய்யப்பா! இத்தனை கடவுளும் தெய்வமும் போதாதென்று தமிழ் மக்கள் இப்பொழுது மலையாளத்தில் போய் ஒரு புது தெய்வத்தைக் கண்டுபிடித்துள்ளன... பறைச்சி எல்லாம் ரவிக்கைப் போட்டுக் கொண்டார்கள் என்று பெரியார் பேசியதின் நோக்கம் என்ன? இன்றைய தினம் பெருமைமிக்க மேயர் அவர்களைப் பாராட்டுவதற்காக கூட்டப்பட்ட கூட்டமாகும். இதிலே எனக்கும் வாய்ப்பளிக்கப்பட்டது குறித்து மிக்க மகிழ்ச்... மாணவர்களும் பொதுநலத் தொண்டும்! - பெரியார் தோழர்களே! இப்போது நம்நாட்டில் எங்குப் பார்த்தாலும் மாணவர் மாநாடு கூட்டப்ப... ஆண்டாள் என்பதே கற்பனை பாத்திரம் என்று இராஜாஜி சொல்லியிருக்கிறாரே-பதில் என்ன? நியூஸ் 7 தொலைக்காட்சிக்குத் தமிழர் தலைவர் பேட்டி சென்னை,ஜன. 10- ஆண்டாள் என்ற பாத்திரமே பொய் - அது கற்பனை என்று வைணவப் பிரிவைச் சேர்ந... Powered by Blogger. குறி சொற்கள் அண்ணா (102) அம்பேத்கர் (38) அய்யத்தெளிவு (18) அரசியல்-சமூகம்-இடஒதுக்கீடு (24) அரசியல்-சமூகம்-பார்ப்பனியம்-மூடநம்பிக்கை (623) இடஒதுக்கீடு (4) உலக நாடுகள் (79) கடவுள்-மதம் (37) கலைஞர் (50) கலைவாணர் (7) காணொளி (3) காமராசர் (6) திராவிடர் இயக்கம் (757) நேர்காணல் (25) பதிலடி (17) பாரதியார் (14) பார்ப்பனியம் (234) பார்ப்பனியம் -மூடநம்பிக்கை-அரசியல்-சமூகம் (8) பார்ப்பனியம்-மூடநம்பிக்கை (36) பார்ப்பனியம்-மூடநம்பிக்கை-அரசியல்-சமூகம் (102) பார்ப்பனியம்-மூடநம்பிக்கை-ஜோதிடம் (23) புரட்சிக்கவிஞர் (20) பெரிய (1) பெரியார் (1789) பெரியார்-காமராசர் (2) பெரியார்-தலித் (51) பெரியார்-பார்ப்பனியம்-மூடநம்பிக்கை (14) பெரியார்-பார்ப்பனியம்-மூடநம்பிக்கை-புத்தகம் (59) பெரியார்-பெண்ணியம் (5) பெரியார்-மயிலாடன் -மூடநம்பிக்கை-பார்ப்பனியம் (332) பெரியார்-மயிலாடன்-மூடநம்பிக்கை- பார்ப்பனியம் (90) பெரியார்-மற்றவர்கள் (89) பெரியார்-மின்சாரம் (365) பொதுவானவை (69) மூடநம்பிக்கை (92) விவேகானந்தர்-பார்ப்பனியம்-மூடநம்பிக்கை-அரசியல்-சமூகம் (9) வீரமணி (758) ஜோதிடம் (11) ஏழாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ ஏழாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ 19-12-2013 இல் ஆறு ஆண்டுகள் முடித்து ஏழாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 391 (Followers)பின்பற்றுபவர்களுடன் 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி ------------------------------------------------ 19-12-2012 இல் அய்ந்து ஆண்டுகள் முடித்து ஆறாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 369 (Followers)பின்பற்றுபவர்களுடன் 634743 (ஆறு இலட்சத்து முப்பத்தி நான்கு ஆயிரத்து நற்பத்தி மூன்று) பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி ----------------------- அய்ந்தாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ 19-12-2011 இல் நான்கு ஆண்டுகள் முடித்து அய்ந்தாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 320 (Followers)பின்பற்றுபவர்களுடன் 517049 (அய்ந்து இலட்சத்து பதினேழு ஆயிரத்து நற்பத்தி ஒன்பது) பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி. ------------------------------------------------- 19-12-2010 இல் மூன்று ஆண்டுகள் முடித்து நான்காம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 234 (Followers)பின்பற்றுபவர்களுடன் 421349 (நான்கு இலட்சத்து இருபத்திஒரு ஆயிரத்து முன்னூற்றி நற்பத்தி ஒன்பது) பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி.
கோவை மாவட்டத்தில் பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்தில் பயனாளிகளை சேர்க்க அண்மையில் நடைபெற்ற சிறப்பு முகாமில் 1,060 விவசாயிகள் விண்ணப்பித்துள்ளனர். சிறு, குறு விவசாயிகள் பயன்பெறும் வகையில் ஆண்டுக்கு ரூ. 6 ஆயிரம் உதவித்தொகை வழங்கும் திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. உதவித்தொகை மூன்று காலாண்டுகளில் 4 மாதங்களுக்கு ஒருமுறை ரூ. 2 ஆயிரம் வீதம் வழங்கப்படுகிறது. அதன்படி, கோவை மாவட்டத்தில் டிசம்பர் - மார்ச் மற்றும் ஏப்ரல் - ஜூலை என இரண்டு தவணைகளில் 42 ஆயிரம் விவசாயிகளுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சிறு, குறு விவசாயிகளுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வந்த உதவித்தொகை பெரிய விவசாயிகளுக்கும் வழங்குவதாக மக்களவை தேர்தலுக்குப்பின் மத்திய அரசு அறிவித்தது. இதனால் இத்திட்டத்தில் விடுபட்ட விவசாயிகளையும், பெரிய விவசாயிகளையும் இணைக்கும் பணிகளை வேளாண், தோட்டக் கலை மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். கோவை மாவட்டத்தில் வேளாண் துறை கணக்கெடுப்பின்படி 1 லட்சத்து 29 ஆயிரத்து 854 விவசாயிகள் உள்ளனர். இதில் இதுவரை 64 ஆயிரம் விவசாயிகள் பதிவு செய்யப்பட்டு, 42 ஆயிரம் விவசாயிகளுக்கு உதவித்தொகை இரண்டு தவணைகள் வழங்கப்பட்டுள்ளன. மீதமுள்ள விவசாயிகளை இணைக்கும் வகையில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி, கடந்த ஜூலை 9 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற சிறப்பு முகாமில் 1,060 விவசாயிகள் விண்ணப்பம் அளித்துள்ளனர். சிறு, குறு, மற்றும் பெரிய விவசாயிகள் அனைவரும் தகுதியானவர்கள் என்றாலும், வருமான வரி கட்டுபவர்கள், அரசு ஊழியர்கள், ரூ. 10 ஆயிரத்துக்கு மேல் ஓய்வு ஊதியம் பெறுபவர்கள் இத்திட்டத்தில் உதவித்தொகை பெறுவதற்கு தகுதியவற்றவர்கள். இத்திட்டம் அனைத்து விவசாயிகளுக்கும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கில் தொடர்ந்து தகுதியானவர்களை வேளாண் துறை, தோட்டக்கலைத் துறை மற்றும் வருவாய்த் துறை அலுவலகங்களில் பதிவு செய்து வருகின்றனர். விடுபட்டுள்ள விவசாயிகள் அனைவரும் தங்களது பெயர்களை பதிவு செய்துக்கொள்ள வேளாண் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். Subscribe to Notifications ADVERTISEMENT MORE FROM THE SECTION கோவையில் லேசான மழை மோசடி நிறுவனத்தில் முதலீடு: ஏமாற்றப்பட்டவா்கள் புகாா் அளிக்கலாம் சகோதயா பள்ளிகள் தடகளப் போட்டி:இன்று தொடங்குகிறது மண்வளப் பாதுகாப்பை தோ்தல் பிரச்னையாக மாற்ற வேண்டும்: சத்குரு ஜக்கி வாசுதேவ் விவசாயிகளுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி டி.ஜி.பி.சைலேந்திரபாபு நாளை கோவை வருகை இணைய வழியில் பட்டா மாறுதல் சேவை தொடக்கம்:ஆட்சியா் தகவல் ரேஸ்கோா்ஸில் சாலை அமைக்கும் பணி:இரு நாள்களுக்கு போக்குவரத்து மாற்றம் TRENDING TODAY வங்கக்கடல் Sri Lanka Nirmala Sitharaman Nitin Gadkari Praggnanandhaa TRENDING WEEK Coal production China Chendur Express cm stalin China LATEST NEWS மாண்டஸ் கடல் சீற்றம் Bharat Jodo Yatra Heroes of Philanthropy corona LATEST SECTIONS தமிழ்நாடு இந்தியா தற்போதைய செய்திகள் சினிமா வேலைவாய்ப்பு ADVERTISEMENT Copyright - dinamani.com 2022 The New Indian Express | Samakalika Malayalam | Kannada Prabha | Edexlive | Indulgexpress | Cinemaexpress | Event Xpress
குழந்தைகள் இரண்டும் ஒரு சேர அழுவதைக் கேட்டபடி, பாலை வாங்கிக் கொண்டு உள்ளே நுழைந்த சித்ரா, என்னாச்சுடி….கௌரி ரெண்டும் இப்படி அழறது…பாவம்…ரொம்பப் பசிக்கறதோ என்னமோ…இந்தா பாலைக் கொடு…..இதென்ன உன் கையில் லெட்டர்…இங்க கொடு பார்க்கலாம்..வாங்கியவள் அறைக்கு வெளியில் வந்து பிரித்துப் பார்க்கவும், ஓ ..இது அவரோட எழுத்து மாதிரி இருக்கே…யாருக்காக்கும்…? என்னும் கேள்வியோடு படிக்க ஆரம்பிக்கிறாள் சித்ரா. கணவர் கடைசியாக தனது கைப்பட எழுதிய கடிதம்..அது எப்படி இந்த நேரத்தில் காசியில் தனது கையில் கிடைக்க வேண்டும்…? கலங்கிய மனத்துடன் மற்ற வேலைகளின் மேல் கவனம் செலுத்தித் தோற்றுப் போனாள் அவள். நாளை காலை ஏழு மணியிலேர்ந்து காரியங்கள் தொடங்கிடுவோம்….தங்கிய இடத்தின் எதிரில் தான் வீடு..வந்து விடுங்கள் என்று புரோகிதர் சொன்னதும் கௌரிக்கு சிறிது நிம்மதியாக இருந்தது. நல்லவேளை எதிர் வீடு தான்…என்று அம்மாவிடம் சொல்லிக் கொண்டாள் . பயண அலுப்பில் சித்ராவும் குழந்தைகளும் அசந்து தூங்க ஆரம்பிச்சாச்சு. முதலில் , நாளைக்கு கார்த்தால என்னவெல்லாம் எடுத்துண்டு வரணம்னு ஒரு வார்த்தை புரோஹிதர்த்ட கேட்டுக்கலாம் , நினைத்த கௌரி அவர் வீட்டை நோக்கி நடந்தாள் . எதிரே என்றால் குறைந்தது பத்தடி கூட இல்லை…அதற்கும் குறைவான இடைவெளியில் இரண்டு படிகள் மேலே ஏறினால் சின்னச் சின்னக் கதவுகள் . ஐந்தடிக்கு மேலே உயரம் இருப்பவர்களை உள்ளேயே விடமாட்டேன் என்பது போல மிரட்டியது தலைவாசல். மெல்லக் குனிந்து கொண்டே உள்ளே நுழைந்தவளுக்கு ஆச்சரியம். உள்ளே….ஒரு மைல் தூரத்துக்கு வீடு தான்…ரயில் பெட்டி போலப் போய்க் கொண்டே இருந்தது. கதவைத் தனது மோதிரத்தால் தட்டி சத்தம் எழுப்ப எட்டிப் பார்த்தது தலை….பிரசாத்தின் தலை. அட…இவன் எங்கே இங்கே….போற இடமெல்லாம் நானும் வருவேங்கிறாப்பல, விடமாடேங்கறான்…நினைத்துக் கொண்டவள் சிறிதும் கண்டு கொள்ளாமல், அவர் இருக்காறா…ப்ரோஹித்..? கேட்டுக் கொண்டே சுற்றுமுற்றும் பார்க்கிறாள். பழங்காலத்து வீடு என்று வாசனை சொல்லியது.எந்த ஆடம்பரமும் இல்லாத வெற்று அறைகள்.வண்ணம் மங்கிய பெரிய பெரிய போட்டோக்கள் அதன் மேல் எரிந்து வழியும் முட்டை பல்புகள் கண் சிமிட்டிக் கொண்டிருந்தது. வாம்மா…கௌரி……குரல் மட்டும் வந்ததைத் தொடர்ந்து மெல்ல அடியெடுத்து பயந்தபடியே உள்ளே நுழைகிறாள் கௌரி. மாமா…நா…அவள் மனசுக்குள் அவரைப் பார்த்ததும் சீடர்கள் இல்லாத பரமார்த்த குரு தான் நினைவுக்கு வந்து போனார். வாடிம்மா கொழந்தே…..வாய் கொள்ளாத வெற்றிலையில் நாக்கு குழற அழைத்தார் அவர்..’.ழொக்காழு’ அங்கிருந்த மர ஸ்டூலைக் கை காட்டினதும் கௌரி அதில் அடங்கி உட்கார்ந்து கொண்டாள் . ழம்மா வழைழைழா…..கேட்டுக் கொண்டே அங்கிருந்த ஒரு மண் சட்டியில் துப்பிவிட்டு வாயைத் துடைத்துக் கொண்டார். அம்மா வரலை….ரூம்ல இருக்கா.நான் கேட்டுண்டு போகலாம்னு தான் வந்தேன் மாமா. நீ தானே நேக்கு மெயில் போட்டு , மொபைல்ல பேசுவே…என்ன பண்றார் உங்காத்துக் காரர்? குழந்தைகள் இருக்குன்னு சொன்ன ஞாபகம். ஆமாம்….ட்வின்ஸ்….ரெண்டு பசங்க…அழைச்சிண்டு வந்திருக்கோம்.இப்போ தூங்கறா..சொன்னவள் முதல் கேள்வியை பதில் சொல்லாமல் தவிர்த்தாள் . ஒரு லிஸ்டைக் கையில் கொடுத்துவிட்டு எல்லாம் நான் பார்த்துப்பேன்….நீங்க இந்த லிஸ்டில் இருக்கறதை மட்டும் கொண்டு வந்தால் போதும். அப்பறம் என்ன காப்பி சாப்டுட்டு போங்கோ. கோயிலுக்கு கூட நீங்க போகலாம் இப்போ…கங்கை இங்கே தான் பக்கத்தில்..போய் பார்க்கலாம்…என்கிறார். சரி…போய் பார்க்கறேன் .காப்பில்லாம் வேண்டாம்…தாங்க்ஸ்…நான் கெளம்பறேன் மாமா..எழுந்து கொண்டவள், பிரசாத்தைப் பார்த்து லேசாக புன்முறுவல் செய்து விட்டு நகர்ந்தாள் . அந்த வீட்டை விட்டு வெளியே வந்ததும் மென்மையான காற்று வீச , மீண்டும் தங்கிய அறைக்குச் சென்று அம்மா…நான் கொஞ்சம் இப்படியே போய் பார்த்துட்டு வந்துடறேன்…பயப்படாதே என்ன… ..ம்ம்ம்.சரி….சீக்கரமா வந்துடு…தெரியாத்த ஊரு வேற…என்று சொல்லிக் கொண்டே திரும்பிப் படுத்துக் கொள்கிறாள் சித்ரா. குழந்தைகளுக்கு போர்வையால் போத்தி விட்டு , கொசுவுக்கு ‘ஆல் அவுட்’டை ப்ளக்கில் செருகி சுவிட்சைத் தட்டியவள் ,கதவைச் சாற்றிவிட்டு கிளம்புகிறாள். நடக்க நடக்க தெரு வளைந்து நெளிந்து சுழன்று போய்க் கொண்டே இருந்தது. எதிரில் முட்டுவது போல வரும் மனிதர்கள், ரிக்ஷா வண்டிகள்,….போதாக்குறைக்கு மாடுகள்…இதையா ரொம்பப் பக்கம்னு சொன்னார் ….எண்ணியபடியே நடந்ததும் கங்கை கண்ணுக்குத் தெரியவே மனம் நிம்மதியானது. ஓ ….கங்கா மையா கே ஜப் தக் ஹைன் பானி ரஹேன் மேரே சஜ்னா தேரே ஜிந்து கானி ரஹேன் ….ஜிந்துகானி ரஹேன்.. மையா…..தேரே..மையா…..மையா.. தேரே மையா…ஓ …எங்கிருந்தோ பாடல் ஒலித்துக் கொண்டே இவளைத் தொடர்ந்து வந்து கொண்டேயிருந்தது. பொங்கிப் புரண்டு ஓடும் கங்கை…இரண்டு புறமும் அடர்த்த கரை என்றெல்லாம் கற்பனை செய்து வந்தவளுக்கு அகன்ற கங்கையைக் கண்டதும் சிறிது ஏமாற்றம் தான் பிறந்தது. படிகளில் இறங்கி சுத்தமான படியைத் தேடி நின்று கொண்டாள் .ஜிலு ஜிலு வென்று காற்றும் , மாலை நேரத்தில் கங்கை பார்க்க ரம்மியமாகத் தான் இருந்தாள் . இன்னும் கொஞ்சம் சுத்தமா இருந்திருக்கலாம்…சரி, கிளம்பலாம்…..குழந்தைகள் எழுந்துண்டா கஷ்டம்…நினைத்துக் கொண்டு திரும்புகையில் …மீண்டும் பிரசாத்……’இப்படி நீங்க மட்டும் தனியா வரலாமா கௌரி…’ கேட்டுக் கொண்டே அருகில் வருகிறான். அந்த ப்ரோஹித் உங்ககிட்ட உங்க ஹஸ்பண்ட் என்ன பண்றார்ன்னு கேட்டதும்…ஒண்ணுமே சொல்லலை நீங்க…ஏன்..? அட்லீஸ்ட் நான் தெரிஞ்சுக்கலாமா? ரொம்ப முக்கியமா..? இதோ பாருங்கோ பிரசாத்..இதெல்லாம் என்னோட பர்சனல் மேட்டர். வந்த இடத்தில் பிட் நோட்டீஸ் போட்டுண்டு இருக்க முடியாது….உங்களுக்கும் அவசியமில்லை. பட்டென்று சொல்லிவிட்டு நடக்க ஆரம்பிக்கிறாள். கிளம்பியாச்சா..? பேசிண்டே போலாமா….அவனும் கூடவே சேர்ந்து கொள்கிறான். கௌரி…டேக் மீ அஸ் யுவர் ஃப்ரெண்ட் அட்லீஸ்ட்.. ஷ்யூர்…. அவர்கள் நடக்கிறார்கள்… நான் நீங்க வந்து பார்த்தபோது இருந்த கௌரியாட்டமா இப்போ இல்லை. ம்ம்ம்ம்.. டூ கிட்ஸ்….ட்வின்ஸ்….நான் தான் காரணம்…..! ம்ம்ம்ம்… என்ன ம்ம்ம்ம் கொட்டிண்டு…நான் என்ன கதையா சொல்றேன்…? சொல்லேன்…கேட்கிறேன்.. சிறிது நேர மௌனம்…தயக்கம்….மீண்டும் ஒரு மெல்லிய கனைப்பு …கௌரி மெல்லிய குரலில் ஆங்கிலத்தில் தொடருகிறாள்.. நான் கார்த்திக்கை மனசார நேசிச்சேன். எப்டியும் கல்யாணம் ஆகிடும்னு நாங்க ரெண்டு பேருமே ரொம்ப நம்பினோம்.நான் ரெண்டு தடவை ஆபீஸ் விஷயமா டெல்லி வந்தேன்….அதுக்கு முன்னாடி….தயங்கியபின்..ஒரு பிரிவை எதிர்கொள்ள முடியாமல் கொஞ்சம் அவசரப்பட்டு, அதுவே…..என்னை வாழ்கையின் இந்தக் கோடிக்கு கொண்டு வந்து விட்டுட்டு போய்டுத்து. சரியா தப்பான்னு கூட அறியாத நிலை…எல்லாம் விதி…மை லை ஃ ப் இஸ் ப்ரீ ரிட்டன்ட் ..! எனக்குக் கூட இப்போ வெரி ரீசண்ட்டா ஒரு போன்கால் அங்கேர்ந்து வந்ததாக்கும் ..கார்த்தி ன்னு தான் சொன்னார்…’கௌரி இருக்காளா..?ன்னு கேட்டு…பண்ணினார்…நான் ‘ராங் நம்பர்’னு சொல்லி வெச்சுட்டேன்…எனக்கு ஆச்சரியம்..? என்கிறான் பிரசாத்.. ஒ ..அப்படியா ?..அவன் சரியான இடியட்…..இந்தக் குழந்தைகள், நான் மனசார நேசிச்ச கார்த்தியின் குழந்தைகள் தான்.. ஆனால்…அவனுக்கு அதுலயே டௌட். நீங்க நினைச்சுப்பேள் …இந்தக் காலத்துல சம்பாத்திக்கிற பெண்கள் தாறுமாறா முடிவு எடுப்பான்னு….அதும் கொஞ்சம் மாடர்ன்னா இருந்துட்டாப் போதும்….அவா தாட்ஸ்லயும் ரொம்ப அட்வான்ஸ்டா இருப்பாள்னு….இல்லையா? பிரசாத்தைப் பார்க்கிறாள். ம்ம்ம்…நாட் அட் ஆல்…! ஆனால்…முன்னல்லாம்.. ஒண்ணுல தோத்துப் போயிட்டா அடுத்ததுல சரி பண்ணிக்கலாம்னு நானும் கேஷுவலா நினைச்சதுண்டு. அதான்..எங்கம்மாட்ட கூட ரீமாரிஜ் பண்ணிக்கோன்னு ரொம்ப ஈஸியா சொல்லிட்டேன்.ஆனால் அது அவ்வளவு ஈஸி இல்லைன்னு இப்பப் புரிஞ்சுண்டேன்.நான் எவ்ளோ முட்டாள் தனமா யோசிச்சிருக்கேன்னு இப்பத் தோணறது. இப்போ உணர்றேன் .. ஐம்…சாரி..! நிறையப் படிச்சாலும், பெரிய வேலையில் இருந்து கைநிறைய சம்பாதிச்சாலும் கூட இன்னும் நாங்கள் அடிப்படையில் பெண்கள் என்ற அதே எண்ணத்தோட தான் அடிமனசுல இருக்கோம். ரொம்ப உயர்ந்துட்டோம்னு நெனைச்சு யாருமே சம்பிரதாயத்தை தூக்கி எறியரது இல்லை.மனசுக்குள்ளே பெண்களாய், உணர்வுகளில் பெண்களாய், அன்புக்கு அடங்குவதில் பெண்களாய்த் தான் இருக்கோம். என்ன ஒரு வித்தியாசம் …சமூகத்தின் அவலங்களில் அவளது பலம் பலவீனமாகிவிடும் அவலம்…இருப்பதால் தான் வெளி வேஷத்தை நாங்கள் துணைக்குக் கைத்தடியாக உபயோகப் படுத்தறோம்.இதில்…. இன்னும் பலவீனம் கூட பலமிழந்து துணிவைத் தவறவிட்டு கோழையாக தற்கொலை செய்து கொள்ளும் பெண்களும் இருக்கிறார்கள்… இல்லையா..? ஜியாகான்….அதற்கு சாட்சி..! ம்ம்….ஆமாம்….பாவம்…பட்டிங் ஸ்டார்…! அவளும் ஒரு நடிகை தான்..இருந்தாலும் அவளுக்குன்னு ஒரு வால்யூஸ் இருந்ததல்லவா..? சமுதாயத்தின் பார்வையில் தற்காலத்து பெண்கள்..புதுமைப் பெண்கள்…ஒண்ணு கேஸ் ..! இல்லாட்டால் போகப் பொருள். கல்யாணம்கறது கூட ஒருத்திக்கு அவள் வாழ்க்கையில் விளையாடற சூதாட்டம் போலத் தான்….வெற்றியும் தோல்வியும் ஆட்ட முடிவில் தான் தெரியும்..ஆனா எனக்கு ஆடறதுக்கு முன்னாடியே தோத்து போயிட்டேன்னு தெரிஞ்சுடுத்து. ப்ளீஸ்….கௌரி…! பிரசாத்…நாம நினைக்கறது தான் நடக்கும்னு நம்பக் கூடாது….நாம நினைக்காதது கூட நாம நினைக்காத நேரத்தில் நடக்கறது தான் வாழ்க்கை . அதை ஏத்துண்டு வாழறது தான் புத்திசாலித் தனம்..என்ன சொல்றேள்..? பெரிய ஞானி மாதிரி பேசறே..எனக்கு ரொம்ப புதுசா புதுமையா இருக்கு….ஆனா இதெல்லாத்தையும் தூக்கிப் போட்டுட்டு, மறந்துட்டு… நீ ஏன் என்னைக் கல்யாணம் பண்ணிக்கக் கூடாது..? தப்பா நினைச்சுக்காதே கௌரி… டக்கென்று ஒரு நிமிடம் நிற்கிறாள்…அவனை ஆழமாகப் பார்க்கிறாள். எதையும் தூக்கிப் போட முடியாது…எதையும் மறந்து போகவும் முடியாது. ………………ட்ரை …! எந்த ஆதாரமுமே இல்லாமல் ஒருத்தனை நம்பிய எனக்கு நான் ஆயுள் முழுதும் இப்படித்தான் தண்டனை கொடுத்துக் கொள்ள வேண்டும்.அப்பத் தான் எனக்கென இருக்கும் கொள்கையும் , நான் எனக்குள் வரையறுத்த கோட்பாடுகளும் நானே மீறாமல் இருக்க முடியும். அப்படி வாழும் போது தான் எனக்கு தன்னம்பிக்கை, சுதந்திரம்…இந்த இரண்டும் என்னைத் தூணாகத் தாங்கிப் பிடிக்கும். இப்பத் தான் நான் இப்படித் தான் வாழ வேண்டும் என்ற நியதியில் இருக்கேன்.என்னை அப்படியே வாழ விடுங்கள்.ஆரோக்கியமான நல்ல நட்பை கல்யாணம் நிச்சயம் காப்பாற்றாது ….பிரசாத். ஒரு லட்ச ரூபாயில் உன்னை நான் தவற விட்டுட்டேனோ…? அன்னிக்கு நாங்க ‘டௌரி தர மாட்டோம்’. விளையாட்டா போட்ட விதி என்னோட விதியையே மாத்திடுத்து…! சிரிக்கிறாள் கௌரி. எங்கம்மாவால் ஏற்பட்ட சதி….! நிச்சயமா அவங்க ஆசீர்வாதம் கிடைக்கும். ஆமாம்..பிரசாத்…நிச்சயம் ..என் அப்பாவின் ஆசியும் உங்களுக்கும்…கிடைக்கும்..! அப்போ எனக்கு கல்யாணம் இல்லையா நடக்கணம்….நடக்குமா கௌரி…? அதற்குள் அவர்கள் தங்கியிருந்த சத்திரம் வந்துவிடவே…வாசல் திண்ணையில் குழந்தைகளுடன் உட்கார்ந்திருந்த சித்ரா இவர்களைப் பார்த்து ஏதோ கணக்குப் போட்டவளாக சிரித்தபடியே….எங்கியாக்கும் போயிருந்தேள் ? என்று கேட்கிறாள். (தொடரும்) Series Navigation அத்தம்மாபேபி பிரபஞ்சத்தில் தோன்றியுள்ள காலவெளிப் பிளவுப் பழுதுகள் 13 அக்டோபர் 2013 நீங்காத நினைவுகள் – 19 மேத்தாவின் கவிதைகளில் எதிர்காலம் குறித்த பதிவுகள் மருத்துவக் கட்டுரை நெஞ்சு படபடப்பு சிலை அழகிப்போட்டி நினைவுகளின் பரண் – கல்யாண்ஜியின் ‘பூனை எழுதிய அறை’ திண்ணையின் இலக்கியத்தடம்-4 புகழ் ​பெற்ற ஏ​ழைகள் ​- 28 ஜாக்கி சான் 11. புதிய வாழ்க்கைக்கான அறிமுகம் அண்மையில் படித்தது – முனைவர் தெ.ஞானசுந்தரம் எழுதிய “ கம்பர் போற்றிய கவிஞர்” அத்தம்மா டௌரி தராத கௌரி கல்யாணம் …22 பேபி பிரபஞ்சத்தில் தோன்றியுள்ள காலவெளிப் பிளவுப் பழுதுகள் ஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் – அத்தியாயம் 5 பிருந்தாவன லீலைகளின் முடிவு. தாகூரின் கீதப் பாமாலை – 85 அந்தி மங்கிடும் வேளை .. ! கட்டாய வோட்டு -மக்கள் ஆட்சி அல்ல சர்வாதிகாரம் அவசரகாலம் நீண்டதொரு பயணம் கோமதி மாமியாத்து கொலுவுக்குப் போகலாமா? தேடுகிறேன் உன்னை…! வால்ட் விட்மன் வசனக் கவிதை – 44 ஆதாமின் பிள்ளைகள் – 3 (Children of Adam) உடற் கவர்ச்சித் தூண்டல் .. ! ~ சீதாயணம் ~ (முழு நாடகம்) தற்கொலைக்கு ஒரு கலைஞனை விரட்டும் சமூகம் வால்ட் விட்மன் வசனக் கவிதை – 43 ஆதாமின் பிள்ளைகள் – 2 வறண்டு போன நதிகள் -1 புண்ணிய விதைகள் – சிறுகதை காலித் ஹுஸைனி நேர்காணல் — யுத்தங்கள் அனைத்தினதும் பிரதிபலனை நாங்கள் இன்றும் அனுபவிக்கிறோம் ! சஞ்சீவி பர்வதத்தின் சாரலில் இயற்கை வர்ணனை பு.புளியம்பட்டியில் புத்தகத் திருவிழா குருக்ஷேத்திரக் குடும்பங்கள் – 31 தேவிபாரதி – ‘ஒரு மரணத்தின் வீச்சம்…. ’ காதலற்ற மனங்கள்​ TOPICS Previous:நீங்காத நினைவுகள் – 19 Next: தேவிபாரதி – ‘ஒரு மரணத்தின் வீச்சம்…. ’ Leave a Reply Cancel reply Name * Email * Website Save my name, email, and website in this browser for the next time I comment. திண்ணை பற்றி திண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை உங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள். ஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம். பழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.com இல் உள்ளன. தேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள் சமஸ்கிருதம் தொடர் முழுவதும் இந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif ட்விட்டரில் பின் தொடர இதழ்கள் Select Series 1 அக்டோபர் 2017 (10) 1 ஆகஸ்ட் 2021 (15) 1 ஏப்ரல் 2012 (40) 1 ஏப்ரல் 2018 (22) 1 செப்டம்பர் 2013 (15) 1 செப்டம்பர் 2019 (5) 1 ஜனவரி 2012 (42) 1 ஜூன் 2014 (26) 1 ஜூலை 2012 (32) 1 ஜூலை 2018 (9) 1 டிசம்பர் 2013 (29) 1 டிசம்பர் 2019 (4) 1 நவம்பர் 2015 (24) 1 நவம்பர் 2020 (19) 1 பெப்ருவரி 2015 (17) 1 மார்ச் 2015 (15) 1 மார்ச் 2020 (8) 1 மே 2022 (9) 10 அக்டோபர் 2021 (13) 10 ஆகஸ்ட் 2014 (23) 10 ஏப்ரல் 2016 (17) 10 ஏப்ரல் 2022 (19) 10 செப்டம்பர் 2017 (12) 10 ஜனவரி 2016 (12) 10 ஜனவரி 2021 (13) 10 ஜூன் 2012 (41) 10 ஜூன் 2018 (8) 10 ஜூலை 2011 (38) 10 ஜூலை 2016 (21) 10 ஜூலை 2022 (9) 10 டிசம்பர் 2017 (13) 10 நவம்பர் 2013 (34) 10 நவம்பர் 2019 (10) 10 பெப்ருவரி 2013 (31) 10 பெப்ருவரி 2019 (8) 10 மார்ச் 2013 (28) 10 மார்ச் 2019 (9) 10 மே 2015 (26) 10 மே 2020 (11) 11 அக்டோபர் 2015 (23) 11 அக்டோபர் 2020 (17) 11 ஆகஸ்ட் 2013 (30) 11 ஏப்ரல் 2021 (13) 11 செப்டம்பர் 2011 (33) 11 செப்டம்பர் 2016 (12) 11 செப்டம்பர் 2022 (13) 11 ஜனவரி 2015 (31) 11 ஜூன் 2017 (11) 11 ஜூலை 2021 (18) 11 டிசம்பர் 2011 (48) 11 டிசம்பர் 2016 (17) 11 நவம்பர் 2012 (33) 11 நவம்பர் 2018 (6) 11 பெப்ருவரி 2018 (20) 11 மார்ச் 2012 (35) 11 மார்ச் 2018 (10) 12 அக்டோபர் 2014 (23) 12 ஆகஸ்ட் 2012 (36) 12 ஆகஸ்ட் 2018 (7) 12 ஏப்ரல் 2015 (28) 12 ஏப்ரல் 2020 (10) 12 செப்டம்பர் 2021 (12) 12 ஜனவரி 2014 (29) 12 ஜனவரி 2020 (11) 12 ஜூன் 2011 (33) 12 ஜூன் 2016 (17) 12 ஜூன் 2022 (14) 12 ஜூலை 2015 (17) 12 ஜூலை 2020 (11) 12 டிசம்பர் 2021 (17) 12 நவம்பர் 2017 (11) 12 பிப்ரவரி 2012 (40) 12 பெப்ருவரி 2017 (18) 12 மார்ச் 2017 (12) 12 மே 2013 (29) 12 மே 2014 (33) 12 மே 2019 (12) 13 அக்டோபர் 2013 (31) 13 அக்டோபர் 2019 (4) 13 ஆகஸ்ட் 2017 (10) 13 ஏப்ரல் 2014 (19) 13 செப்டம்பர் 2015 (24) 13 செப்டம்பர் 2020 (11) 13 ஜனவரி 2013 (32) 13 ஜனவரி 2019 (4) 13 ஜூன் 2021 (13) 13 ஜூலை 2014 (26) 13 டிசம்பர் 2015 (14) 13 டிசம்பர் 2020 (15) 13 நவம்பர் 2011 (41) 13 நவம்பர் 2016 (17) 13 நவம்பர் 2022 (14) 13 பெப்ருவரி 2022 (12) 13 மார்ச் 2016 (12) 13 மார்ச் 2022 (15) 13 மே 2012 (41) 13 மே 2018 (13) 14 அக்டோபர் 2012 (23) 14 அக்டோபர் 2018 (10) 14 ஆகஸ்ட் 2011 (43) 14 ஆகஸ்ட் 2016 (14) 14 ஆகஸ்ட் 2022 (11) 14 ஏப்ரல் 2013 (33) 14 ஏப்ரல் 2019 (7) 14 செப்டம்பர் 2014 (25) 14 ஜனவரி 2018 (15) 14 ஜூன் 2015 (23) 14 ஜூன் 2020 (7) 14 ஜூலை 2013 (18) 14 ஜூலை 2019 (6) 14 டிசம்பர் 2014 (23) 14 நவம்பர் 2021 (13) 14 பெப்ருவரி 2016 (18) 14 பெப்ருவரி 2021 (13) 14 மார்ச் 2021 (7) 14 மே 2017 (11) 15 அக்டோபர் 2017 (11) 15 ஆகஸ்ட் 2021 (13) 15 ஏப்ரல் 2012 (44) 15 ஏப்ரல் 2018 (19) 15 செப்டம்பர் 2013 (22) 15 செப்டம்பர் 2019 (10) 15 ஜனவரி 2012 (30) 15 ஜனவரி 2017 (14) 15 ஜூன் 2014 (21) 15 ஜூலை 2012 (32) 15 ஜூலை 2018 (8) 15 டிசம்பர் 2013 (32) 15 டிசம்பர் 2019 (8) 15 நவம்பர் 2015 (18) 15 நவம்பர் 2020 (14) 15 பெப்ருவரி 2015 (23) 15 மார்ச் 2015 (25) 15 மார்ச் 2020 (12) 15 மே 2011 (48) 15 மே 2016 (11) 15 மே 2022 (12) 16 அக்டோபர் 2011 (44) 16 அக்டோபர் 2016 (21) 16 அக்டோபர் 2022 (7) 16 ஆகஸ்ட் 2015 (16) 16 ஆகஸ்ட் 2020 (14) 16 ஏப்ரல் 2017 (11) 16 செப்டம்பர் 2012 (31) 16 செப்டம்பர் 2018 (9) 16 ஜனவரி 2022 (9) 16 ஜூன் 2013 (23) 16 ஜூன் 2019 (9) 16 ஜூலை 2017 (12) 16 டிசம்பர் 2012 (31) 16 டிசம்பர் 2018 (5) 16 நவம்பர் 2014 (22) 16 பெப்ருவரி 2014 (20) 16 பெப்ருவரி 2020 (6) 16 மார்ச் 2014 (23) 16 மே 2021 (15) 17 அக்டோபர் 2021 (15) 17 ஆகஸ்ட் 2014 (26) 17 ஏப்ரல் 2016 (10) 17 ஏப்ரல் 2022 (16) 17 செப்டம்பர் 2017 (10) 17 ஜனவரி 2016 (16) 17 ஜனவரி 2021 (12) 17 ஜூன் 2012 (43) 17 ஜூன் 2018 (7) 17 ஜூலை 2011 (34) 17 ஜூலை 2022 (7) 17 டிசம்பர் 2017 (20) 17 நவம்பர் 2013 (28) 17 நவம்பர் 2019 (7) 17 பிப்ரவரி 2013 (30) 17 பெப்ருவரி 2019 (7) 17 மார்ச் 2013 (26) 17 மார்ச் 2019 (10) 17 மே 2015 (25) 17 மே 2020 (8) 18 அக்டோபர் 2015 (18) 18 அக்டோபர் 2020 (14) 18 ஆகஸ்ட் 2013 (30) 18 ஆகஸ்ட் 2019 (11) 18 ஏப்ரல் 2021 (9) 18 செப்டம்பர் 2011 (37) 18 செப்டம்பர் 2016 (17) 18 செப்டம்பர் 2022 (7) 18 ஜனவரி 2015 (23) 18 ஜூன் 2017 (14) 18 ஜூலை 2021 (22) 18 டிசம்பர் 2011 (39) 18 டிசம்பர் 2016 (13) 18 நவம்பர் 2012 (28) 18 நவம்பர் 2018 (4) 18 பெப்ருவரி 2018 (14) 18 மார்ச் 2012 (36) 18 மார்ச் 2018 (15) 18 மே 2014 (22) 19 அக்டோபர் 2014 (21) 19 ஆகஸ்ட் 2012 (39) 19 ஆகஸ்ட் 2018 (6) 19 ஏப்ரல் 2015 (19) 19 ஏப்ரல் 2020 (22) 19 செப்டம்பர் 2021 (19) 19 ஜனவரி 2014 (27) 19 ஜனவரி 2020 (6) 19 ஜூன் 2011 (46) 19 ஜூன் 2022 (8) 19 ஜூலை 2015 (29) 19 ஜூலை 2020 (20) 19 டிசம்பர் 2021 (18) 19 நவம்பர் 2017 (14) 19 பிப்ரவரி 2012 (31) 19 பெப்ருவரி 2017 (9) 19 மார்ச் 2017 (17) 19 மே 2013 (33) 19 மே 2019 (14) 2 அக்டோபர் 2011 (45) 2 அக்டோபர் 2016 (19) 2 அக்டோபர் 2022 (9) 2 ஆகஸ்ட் 2015 (25) 2 ஆகஸ்ட் 2020 (21) 2 ஏப்ரல் 2017 (13) 2 செப்டம்பர் 2012 (37) 2 செப்டம்பர் 2018 (6) 2 ஜனவரி 2022 (17) 2 ஜூன் 2013 (21) 2 ஜூன் 2019 (9) 2 ஜூலை 2017 (18) 2 டிசம்பர் 2012 (31) 2 டிசம்பர் 2018 (9) 2 நவம்பர் 2014 (19) 2 பெப்ருவரி 2014 (22) 2 பெப்ருவரி 2020 (20) 2 மார்ச் 2014 (22) 2 மே 2021 (17) 20 அக்டோபர் 2013 (31) 20 அக்டோபர் 2019 (6) 20 ஆகஸ்ட் 2017 (13) 20 ஏப்ரல் 2014 (25) 20 செப்டம்பர் 2015 (16) 20 செப்டம்பர் 2020 (16) 20 ஜனவரி 2013 (30) 20 ஜனவரி 2019 (10) 20 ஜூன் 2016 (13) 20 ஜூன் 2021 (11) 20 ஜூலை 2014 (20) 20 டிசம்பர் 2015 (23) 20 டிசம்பர் 2020 (9) 20 நவம்பர் 2011 (38) 20 நவம்பர் 2016 (19) 20 நவம்பர் 2022 (14) 20 பெப்ருவரி 2022 (7) 20 மார்ச் 2016 (14) 20 மார்ச் 2022 (10) 20 மே 2012 (29) 20 மே 2018 (13) 21 அக்டோபர் 2012 (21) 21 அக்டோபர் 2018 (7) 21 ஆகஸ்ட் 2011 (47) 21 ஆகஸ்ட் 2016 (14) 21 ஆகஸ்ட் 2022 (11) 21 ஏப்ரல் 2019 (8) 21 செப்டம்பர் 2014 (27) 21 ஜனவரி 2018 (10) 21 ஜூன் 2015 (23) 21 ஜூன் 2020 (18) 21 ஜூலை 2013 (20) 21 ஜூலை 2019 (8) 21 டிசம்பர் 2014 (23) 21 நவம்பர் 2021 (11) 21 பெப்ருவரி 2016 (16) 21 பெப்ருவரி 2021 (13) 21 மார்ச் 2021 (7) 21 மே 2017 (15) 22 அக்டோபர் 2017 (5) 22 ஆகஸ்ட் 2021 (17) 22 ஏப்ரல் 2012 (44) 22 ஏப்ரல் 2018 (22) 22 செப்டம்பர் 2013 (26) 22 செப்டம்பர் 2019 (8) 22 ஜனவரி 2012 (30) 22 ஜனவரி 2017 (13) 22 ஜூன் 2014 (23) 22 ஜூலை 2012 (37) 22 ஜூலை 2018 (9) 22 டிசம்பர் 2013 (24) 22 டிசம்பர் 2019 (5) 22 நவம்பர் 2015 (16) 22 நவம்பர் 2020 (10) 22 பெப்ருவரி 2015 (26) 22 மார்ச் 2015 (28) 22 மார்ச் 2020 (13) 22 மே 2011 (42) 22 மே 2016 (12) 22 மே 2022 (10) 23 அக்டோபர் 2011 (37) 23 அக்டோபர் 2016 (15) 23 அக்டோபர் 2022 (17) 23 ஆகஸ்ட் 2015 (26) 23 ஆகஸ்ட் 2020 (18) 23 ஏப்ரல் 2017 (18) 23 செப்டம்பர் 2012 (41) 23 செப்டம்பர் 2018 (9) 23 ஜனவரி 2022 (17) 23 ஜூன் 2013 (29) 23 ஜூன் 2019 (4) 23 ஜூலை 2017 (15) 23 டிசம்பர் 2012 (27) 23 டிசம்பர் 2018 (6) 23 நவம்பர் 2014 (21) 23 பெப்ருவரி 2014 (20) 23 பெப்ருவரி 2020 (7) 23 மார்ச் 2014 (23) 23 மே 2021 (20) 24 அக்டோபர் 2021 (16) 24 ஆகஸ்ட் 2014 (30) 24 ஏப்ரல் 2016 (16) 24 ஏப்ரல் 2022 (13) 24 செப்டம்பர் 2017 (13) 24 ஜனவரி 2016 (22) 24 ஜனவரி 2021 (14) 24 ஜூன் 2012 (43) 24 ஜூன் 2018 (8) 24 ஜூலை 2011 (32) 24 ஜூலை 2016 (23) 24 ஜூலை 2022 (12) 24 டிசம்பர் 2017 (10) 24 நவம்பர் 2013 (24) 24 நவம்பர் 2019 (7) 24 பிப்ரவரி 2013 (26) 24 பெப்ருவரி 2019 (9) 24 மார்ச் 2013 (29) 24 மார்ச் 2019 (8) 24 மே 2015 (19) 24 மே 2020 (12) 25 அக்டோபர் 2015 (24) 25 அக்டோபர் 2020 (13) 25 ஆகஸ்ட் 2013 (25) 25 ஆகஸ்ட் 2019 (4) 25 செப்டம்பர் 2011 (41) 25 செப்டம்பர் 2016 (15) 25 செப்டம்பர் 2022 (14) 25 ஜனவரி 2015 (19) 25 ஜூன் 2017 (13) 25 ஜூலை 2021 (11) 25 டிசம்பர் 2011 (29) 25 டிசம்பர் 2016 (11) 25 நவம்பர் 2012 (42) 25 பெப்ருவரி 2018 (20) 25 மார்ச் 2012 (42) 25 மார்ச் 2018 (13) 25 மே 2014 (29) 26 அக்டோபர் 2014 (16) 26 ஆகஸ்ட் 2012 (28) 26 ஆகஸ்ட் 2018 (7) 26 ஏப்ரல் 2015 (26) 26 ஏப்ரல் 2020 (14) 26 செப்டம்பர் 2021 (10) 26 ஜனவரி 2014 (18) 26 ஜனவரி 2020 (11) 26 ஜூன் 2011 (46) 26 ஜூன் 2022 (7) 26 ஜூலை 2015 (20) 26 ஜூலை 2020 (23) 26 டிசம்பர் 2021 (6) 26 நவம்பர் 2017 (11) 26 பிப்ரவரி 2012 (45) 26 பெப்ருவரி 2017 (14) 26 மார்ச் 2017 (14) 26 மே 2013 (40) 26 மே 2019 (7) 27 அக்டோபர் 2013 (26) 27 அக்டோபர் 2019 (9) 27 ஆகஸ்ட் 2017 (9) 27 ஏப்ரல் 2014 (25) 27 செப்டம்பர் 2015 (22) 27 செப்டம்பர் 2020 (17) 27 ஜனவரி 2013 (28) 27 ஜனவரி 2019 (5) 27 ஜூன் 2016 (21) 27 ஜூன் 2021 (10) 27 ஜூலை 2014 (28) 27 டிசம்பர் 2015 (18) 27 டிசம்பர் 2020 (12) 27 நவம்பர் 2011 (37) 27 நவம்பர் 2016 (23) 27 நவம்பர் 2022 (17) 27 பெப்ருவரி 2022 (11) 27 மார்ச் 2022 (14) 27 மே 2012 (33) 27 மே 2018 (15) 27-மார்ச்-2016 (10) 28 அக்டோபர் 2018 (7) 28 ஆகஸ்ட் 2011 (46) 28 ஆகஸ்ட் 2016 (16) 28 ஆகஸ்ட் 2022 (8) 28 ஏப்ரல் 2013 (29) 28 ஏப்ரல் 2019 (10) 28 செப்டம்பர் 2014 (25) 28 ஜனவரி 2018 (13) 28 ஜூன் 2015 (19) 28 ஜூன் 2020 (14) 28 ஜூலை 2013 (30) 28 டிசம்பர் 2014 (22) 28 நவம்பர் 2021 (14) 28 பெப்ருவரி 2016 (13) 28 பெப்ருவரி 2021 (12) 28 மார்ச் 2021 (8) 28 மே 2017 (19) 28அக்டோபர் 2012 (34) 29 அக்டோபர் 2017 (9) 29 ஆகஸ்ட் 2021 (18) 29 ஏப்ரல் 2012 (28) 29 ஏப்ரல் 2018 (14) 29 செப்டம்பர் 2013 (27) 29 செப்டம்பர் 2019 (8) 29 ஜனவரி 2012 (42) 29 ஜனவரி 2017 (12) 29 ஜூன் 2014 (23) 29 ஜூலை 2012 (35) 29 ஜூலை 2018 (10) 29 டிசம்பர் 2013 (26) 29 டிசம்பர் 2019 (10) 29 நவம்பர் 2015 (15) 29 நவம்பர் 2020 (8) 29 மார்ச் 2015 (32) 29 மார்ச் 2020 (13) 29 மே 2011 (43) 29 மே 2016 (14) 29 மே 2022 (13) 3 அக்டோபர் 2021 (19) 3 ஆகஸ்ட் 2014 (25) 3 ஏப்ரல் 2016 (16) 3 ஏப்ரல் 2022 (10) 3 செப்டம்பர் 2017 (10) 3 ஜனவரி 2016 (18) 3 ஜனவரி 2021 (11) 3 ஜூன் 2012 (28) 3 ஜூன் 2018 (15) 3 ஜூலை 2011 (51) 3 ஜூலை 2022 (14) 3 டிசம்பர் 2017 (11) 3 நவம்பர் 2013 (29) 3 நவம்பர் 2019 (7) 3 பிப்ரவரி 2013 (32) 3 பெப்ருவரி 2019 (9) 3 மார்ச் 2013 (33) 3 மார்ச் 2018 (12) 3 மார்ச் 2019 (8) 3 மே 2015 (25) 3 மே 2020 (13) 30 அக்டோபர் 2011 (44) 30 அக்டோபர் 2016 (19) 30 அக்டோபர் 2022 (13) 30 ஆகஸ்ட் 2015 (13) 30 ஆகஸ்ட் 2020 (9) 30 ஏப்ரல் 2017 (14) 30 செப்டம்பர் 2012 (36) 30 செப்டம்பர் 2018 (8) 30 ஜனவரி 2022 (19) 30 ஜூன் 2013 (27) 30 ஜூன் 2019 (8) 30 ஜூலை 2017 (6) 30 டிசம்பர் 2012 (26) 30 டிசம்பர் 2018 (6) 30 நவம்பர் 2014 (23) 30 மார்ச் 2014 (22) 30 மே 2021 (19) 31 அக்டோபர் 2021 (18) 31 ஆகஸ்ட் 2014 (24) 31 ஜனவரி 2016 (19) 31 ஜனவரி 2021 (16) 31 ஜூலை 2011 (47) 31 ஜூலை 2016 (12) 31 ஜூலை 2022 (8) 31 டிசம்பர் 2017 (19) 31 மார்ச் 2013 (31) 31 மார்ச் 2019 (7) 31 மே 2015 (21) 31 மே 2020 (9) 4 அக்டோபர் 2015 (23) 4 அக்டோபர் 2020 (12) 4 ஆகஸ்ட் 2013 (27) 4 ஆகஸ்ட் 2019 (12) 4 செப்டம்பர் 2011 (54) 4 செப்டம்பர் 2016 (20) 4 செப்டம்பர் 2022 (14) 4 ஜனவரி 2015 (33) 4 ஜூன் 2017 (11) 4 ஜூலை 2016 (12) 4 ஜூலை 2021 (11) 4 டிசம்பர் 2011 (39) 4 டிசம்பர் 2016 (22) 4 நவம்பர் 2012 (31) 4 நவம்பர் 2018 (10) 4 பெப்ருவரி 2018 (13) 4 மார்ச் 2012 (45) 4 மே 2014 (31) 5 அக்டோபர் 2014 (25) 5 ஆகஸ்ட் 2012 (38) 5 ஆகஸ்ட் 2018 (7) 5 ஏப்ரல் 2015 (14) 5 ஏப்ரல் 2020 (7) 5 செப்டம்பர் 2021 (12) 5 ஜனவரி 2014 (29) 5 ஜனவரி 2020 (4) 5 ஜூன் 2011 (46) 5 ஜூன் 2016 (15) 5 ஜூன் 2022 (17) 5 ஜூலை 2015 (19) 5 ஜூலை 2020 (11) 5 டிசம்பர் 2021 (15) 5 நவம்பர் 2017 (15) 5 பிப்ரவரி 2012 (31) 5 பெப்ருவரி 2017 (14) 5 மார்ச் 2017 (14) 5 மே 2013 (28) 5 மே 2019 (8) 6 அக்டோபர் 2013 (33) 6 அக்டோபர் 2019 (9) 6 ஆகஸ்ட் 2017 (10) 6 ஏப்ரல் 2014 (24) 6 செப்டம்பர் 2015 (27) 6 செப்டம்பர் 2020 (13) 6 ஜனவரி 2013 (34) 6 ஜனவரி 2019 (8) 6 ஜூன் 2021 (23) 6 ஜூலை 2014 (19) 6 டிசம்பர் 2015 (17) 6 டிசம்பர் 2020 (10) 6 நவம்பர் 2011 (53) 6 நவம்பர் 2016 (14) 6 நவம்பர் 2022 (8) 6 பெப்ருவரி 2022 (15) 6 மார்ச் 2016 (16) 6 மார்ச் 2022 (7) 6 மே 2012 (40) 6 மே 2018 (16) 7 அக்டோபர் 2012 (23) 7 அக்டோபர் 2018 (9) 7 ஆகஸ்ட் 2011 (41) 7 ஆகஸ்ட் 2016 (17) 7 ஆகஸ்ட் 2022 (8) 7 ஏப்ரல் 2013 (31) 7 ஏப்ரல் 2019 (5) 7 செப்டம்பர் 2014 (26) 7 ஜனவரி 2018 (12) 7 ஜூன் 2015 (24) 7 ஜூன் 2020 (9) 7 ஜூலை 2013 (25) 7 ஜூலை 2019 (4) 7 டிசம்பர் 2014 (23) 7 நவம்பர் 2021 (17) 7 பெப்ருவரி 2016 (19) 7 பெப்ருவரி 2021 (8) 7 மார்ச் 2021 (15) 7 மே 2017 (14) 8 அக்டோபர் 2017 (5) 8 ஆகஸ்ட் 2021 (21) 8 ஏப்ரல் 2012 (41) 8 ஏப்ரல் 2018 (19) 8 செப்டம்பர் 2013 (24) 8 செப்டம்பர் 2019 (11) 8 ஜனவரி 2012 (40) 8 ஜனவரி 2017 (12) 8 ஜூன் 2014 (24) 8 ஜூலை 2012 (41) 8 ஜூலை 2018 (7) 8 டிசம்பர் 2013 (26) 8 டிசம்பர் 2019 (5) 8 நவம்பர் 2015 (14) 8 நவம்பர் 2020 (13) 8 பெப்ருவரி 2015 (24) 8 மார்ச் 2015 (22) 8 மார்ச் 2020 (1) 8 மே 2016 (10) 8 மே 2022 (8) 9 அக்டோபர் 2011 (45) 9 அக்டோபர் 2016 (29) 9 அக்டோபர் 2022 (17) 9 ஆகஸ்ட் 2015 (24) 9 ஆகஸ்ட் 2020 (16) 9 ஏப்ரல் 2017 (12) 9 செப்டம்பர் 2012 (28) 9 செப்டம்பர் 2018 (8) 9 ஜனவரி 2022 (15) 9 ஜூன் 2013 (24) 9 ஜூன் 2019 (6) 9 ஜூலை 2017 (16) 9 டிசம்பர் 2012 (26) 9 டிசம்பர் 2018 (5) 9 நவம்பர் 2014 (14) 9 பெப்ருவரி 2014 (24) 9 பெப்ருவரி 2020 (6) 9 மார்ச் 2014 (24) 9 மே 2021 (8) Other posts in series: நீங்காத நினைவுகள் – 19 மேத்தாவின் கவிதைகளில் எதிர்காலம் குறித்த பதிவுகள் மருத்துவக் கட்டுரை நெஞ்சு படபடப்பு சிலை அழகிப்போட்டி நினைவுகளின் பரண் – கல்யாண்ஜியின் ‘பூனை எழுதிய அறை’ திண்ணையின் இலக்கியத்தடம்-4 புகழ் ​பெற்ற ஏ​ழைகள் ​- 28 ஜாக்கி சான் 11. புதிய வாழ்க்கைக்கான அறிமுகம் அண்மையில் படித்தது – முனைவர் தெ.ஞானசுந்தரம் எழுதிய “ கம்பர் போற்றிய கவிஞர்” அத்தம்மா டௌரி தராத கௌரி கல்யாணம் …22 பேபி பிரபஞ்சத்தில் தோன்றியுள்ள காலவெளிப் பிளவுப் பழுதுகள் ஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் – அத்தியாயம் 5 பிருந்தாவன லீலைகளின் முடிவு. தாகூரின் கீதப் பாமாலை – 85 அந்தி மங்கிடும் வேளை .. ! கட்டாய வோட்டு -மக்கள் ஆட்சி அல்ல சர்வாதிகாரம் அவசரகாலம் நீண்டதொரு பயணம் கோமதி மாமியாத்து கொலுவுக்குப் போகலாமா? தேடுகிறேன் உன்னை…! வால்ட் விட்மன் வசனக் கவிதை – 44 ஆதாமின் பிள்ளைகள் – 3 (Children of Adam) உடற் கவர்ச்சித் தூண்டல் .. ! ~ சீதாயணம் ~ (முழு நாடகம்) தற்கொலைக்கு ஒரு கலைஞனை விரட்டும் சமூகம் வால்ட் விட்மன் வசனக் கவிதை – 43 ஆதாமின் பிள்ளைகள் – 2 வறண்டு போன நதிகள் -1 புண்ணிய விதைகள் – சிறுகதை காலித் ஹுஸைனி நேர்காணல் — யுத்தங்கள் அனைத்தினதும் பிரதிபலனை நாங்கள் இன்றும் அனுபவிக்கிறோம் ! சஞ்சீவி பர்வதத்தின் சாரலில் இயற்கை வர்ணனை பு.புளியம்பட்டியில் புத்தகத் திருவிழா குருக்ஷேத்திரக் குடும்பங்கள் – 31 தேவிபாரதி – ‘ஒரு மரணத்தின் வீச்சம்…. ’ காதலற்ற மனங்கள்​ பின்னூட்டங்கள் Subburaj kandhasamy on வெளிச்சத்திற்கு வரும் தோள் சீலைக் கலகம் S. Jayabarathan / சி. ஜெயபாரதன், கனடா on நாசாவின் பேராற்றல் படைத்த ராக்கெட் ஆர்டிமிஸ் -1 நிலவைச் சுற்றி மீண்டும் ஆராய ஏவப் பட்டுள்ளது. Vinayagam on படைப்புச் சுதந்திரமும் படைப்பாளிகள் நுண்ணுணர்வோடும் பொறுப்புணர்வோடும் இயங்கவேண்டிய அவசியமும் K. Chandrasekaran on கம்பனும் கண்ணதாசனும் S.விக்டர் ஆல்பர்ட் on வேலி – ஒரு தமிழ் நாடகம் latha ramakrishnan on ‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள் latha ramakrishnan on ‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள் பொ. வனிதா on எல்லா குழந்தைகளும் எல்லாமும் பெற வேண்டும் smitha on படைப்புச் சுதந்திரமும் படைப்பாளிகள் நுண்ணுணர்வோடும் பொறுப்புணர்வோடும் இயங்கவேண்டிய அவசியமும் S. Jayabarathan on ‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள் Sankaramoorthi.M on ருக்கு அத்தை லதா ராமகிருஷ்ணன் on குறுக்குத்துறை Subramaniam Nagarajan on சமஸ்கிருதம் தொடர் Kannan K on நிறைவைத் தரும் காசி வாழ்வு நவின் சீதாராமன் (நவநீ) on நானும் என் ஈழத்து முருங்கையும் மதுவந்தி on தீபாவளி Amudha Vijayakumar on நிலவே முகம் காட்டு… Justin on மது விலக்கு தேவையா ? சாத்தியமா? Vinayagam on கனடா தமிழர் தகவல் இதழின் 30 ஆவது ஆண்டுமலர் r. sathyanath on 3 கவிதைகள் Popular Posts ஹிந்துமத வெறுப்பென்பது மதஒற்றுமை மற்றும் மத நல்லிணக்கத்தைப் பேணுதல் ஆகாது மஹாத்மா காந்தியின் மரணம் – ஒரு எதிர்வினை – பாகம் – 2