text
stringlengths
328
398k
“நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் கருத்து வெளியிடும் சுதந்திரம் இருக்கின்றது. எனவே, அதற்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையிலான செயற்பாடுகள் இடம்பெறுவது கண்டிக்கத்தக்கது. இவ்வாறான நடவடிக்கைகள் ஜனநாயக ஆட்சிக்கு விரோதமான செயற்பாடுகளாகும்.” என ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளரான நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். எம்.பி திஸ்ஸ அத்தநாயக்கவின் ஆன்மிக பயணத்தின் ஒரு அங்கமாக இன்று (05) நுவரெலியா – வலப்பனை நாராங்தலாவ, மைலகஸ்தென்ன ஸ்ரீ தர்மராஜராமய விகாரையின் விகாராதிபதியை சந்தித்து ஆசி பெற்றுக்கொண்டதன் பின் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது, ” தமது கருத்துகளை, நிலைப்பாடுகளைச் சுதந்திரமாக நாடாளுமன்றத்துக்குள் வெளியிடும் உரிமை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இருக்க வேண்டும். அந்த உரிமையைப் பயன்படுத்தி கருத்து வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரைத் தாக்க முற்படுவது, அவருக்கு அச்சுறுத்தல் விடுப்பது என்பன ஏற்புடைய விடயமாக அமையாது. அவற்றைக் கண்டிக்க வேண்டும். அதேபோல நாடாளுமன்றத்துக்குள் கடந்த இரு நாட்களாக இடம்பெற்ற சம்பவங்களானவை ஜனநாயக ஆட்சிக்கு பெரும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளது. எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிரான அச்சுறுத்தலை ஏற்கமுடியாது. எனவே தான், நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் வரை சபை அமர்வுகளைப் புறக்கணிப்பதற்கு நாம் தீர்மானித்துள்ளோம். அதற்கான நடவடிக்கை எவ்வாறு இடம்பெறும் என்பதைக் கட்சியின் நாடாளுமன்றக்குழு தீர்மானிக்கும். குறிப்பாக நாடாளுமன்றம் தொடர்பில் மக்களுக்கு தற்போது நன்மதிப்பு இல்லை. எனவே, நாடாளுமன்றத்துக்குள் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுவதைத் தடுத்து மக்கள் மத்தியில் நம்பிக்கையைக் கட்டியெழுப்ப வேண்டிய பொறுப்பு சபாநாயகருக்கும், கட்சித் தலைவர்களுக்கும், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இருக்கின்றது. அவ்வாறு இல்லாவிட்டால் எதிர்காலத்தில் நாடாளுமன்றமும் வன்முறைக்களமாக மாறும் அபாயம் உள்ளது. நிவாரணங்கள் கிடைக்கும், சுதந்திரமாக வாழக்கூடிய சூழ்நிலை உருவாகும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில்தான் இந்த அரசுக்கு மக்கள் வாக்களித்தனர். அந்த எதிர்பார்ப்பு ஒரு வருடத்துக்குள்ளேயே தவிடுபொடியாக்கப்பட்டுள்ளது. நாட்டில் இன்று என்ன நடக்கின்றது? நாளாந்தம் பொருட்களின் விலைகள் அதிகரிக்கின்றன. மக்களுக்கு நிவாரணம் கிடைக்கும் சூழலும் இல்லை.” என தெரிவித்துள்ளார்.
சைமன் கமிஷன் பகிஷ்கார வேலை நிறுத்தத்தைப் பற்றி சென்ற வாரம் எழுதியிருந்தோம். இந்த ஒரு வாரமாய் அதைப் பற்றி தேசீயப் பத்திரிகைகள் என்று சொல்லப்படும் வயிறு வளர்ப்புப் பத்திரிகைகளும், பார்ப்பனப் பத்திரிகைகளும் சற்றும் மானம் ஈனம் என்பது இல்லாமல் சரமாரியாய் பொய்யையும் புளுகுகளையும் மனங் கொண்டவரையில் எழுதி பத்திரிகைகளை நிரப்பி வருகின்றன. பொய் எழுதுபவைகளுக்கு எவ்வித தண்டனையும் இல்லை என்கிற காரணத்தாலும் பாமர ஜனங்களுக்கு உண்மையை எடுத்துக் கூறும் பத்திரிகைகள் அதிகமாக இல்லாததினாலும் தங்கள் அக்கிரமங்களை சுலபத்தில் யாரும் கண்டு பிடித்துக் கொள்ள முடியாது என்கின்ற எண்ணம் மேலும் மேலும் இவ்விழி தொழிலில் இறங்கி வாழத் தைரியம் கொடுத்து வருகின்றது. ஆனபோதிலும் சென்னை அரசியல் பத்திரிகைகள் என்பவைகளிலேயே சில தம்மையும் அறியாமல் எழுதிவிட்ட சில குறிப்புகளை மாத்திரம் முதலில் இங்கு குறிப்பிடுகின்றோம். அதாவது, ‘சுதேசமித்திரனின்’ 4ம் தேதி தலையங்கத்தில் குறிப்பிடுவதாவது, “..............இதுவரையில் நமக்கெட்டியிருக்கும் செய்திகளில் சென்னை ஒன்றில்தான் துர் அதிர்ஷ்டவசத்தினால் அர்த்தாலின் மகிமையைக் குறைக்கக்கூடிய சம்பவங்கள் நடந்திருப்பதாகத் தெரிகிறது....... திறந்திருந்த கடைகளில் மறியல் செய்யவும் (அதாவது மூடும்படி. ப-ர் ) ஓடிக் கொண்டிருந்த போக்குவரத்து சாதனங்களைத் தடைப்படுத்தவும் எத்தனித்த பிறகே தொல்லை விளைய ஆரம்பித்தது யார்? காங்கிரஸ் தலைவர்கள் தொண்டர்கள் (ப-ர்)............. “அர்த்தாலின் கவுரவத்திற்கு குறைவு ஏற்பட்டு விட்டது. போலிஸ் கமிஷனரும் அவரது சகாக்களும் சீப் பிரசிடென்சி மேஜிஸ்ட்ரேட்டும் அடக்கத்துடனும் பொறுமையுடனும் நடந்து கொண்டது குறிப்பிடத்தக்கது. அவர்கள் நிலைமை தவறி இருந்தால் அதிக மரணங்கள் ஏற்பட்டிருக்கும்” (அதாவது இதனால் சர்க்கார் யோக்கியமாகவே நடந்து கொண்டார்கள் என்று விளங்குகின்றது. (ப-ர்) மற்றொரு பார்ப்பன பத்திரிகையாகிய “இந்து” பத்திரிகையும் தலைவர்கள் தோற்றுவிட்டார்கள் என்றும் சரியானபடி ஏற்பாடு செய்ய வில்லையென்றும் தங்கள் யோக்கியத்துக்கு மீறின காரியத்தைச் செய்தார்கள் என்றும் இனி வேலை நிறுத்தம் செய்யக்கூடாது என்றும் பொருள்பட தைரியமாய் எழுதிவிட்டது. (அதாவது சர்க்கார் யோக்கியமாகவே நடந்து கொண்டார்கள் என்று விளங்குகின்றது. ப-ர்) மற்றபடி பொதுவான - பத்திரிகைகளாகிய நவசக்தி 8 தேதி பத்திரிகைகளில் குறிப்பிட்டிருக்கிறதாவது................ “வெள்ளிக்கிழமை காலையில் (அதாவது அர்ட்டால் தினத்தன்று. ப-ர்) வழக்கம் போல் டிராம் வண்டிகள் ஓடின. மற்ற வண்டிகள் அங்கும் இங்கும் ஓடின தொழில் சாலைகளில் வழக்கம் போல வேலை துவங்கப்பட்டது. பல பெரிய வாணிபக் கூடங்கள் (அதாவது வியாபாரக் கடைகள். ப-ர்) திறக்கப்பட்டன................... நீதிமன்றங்களில் வழக்கு வாதம் வழக்கம் போல் நடத்தப்பட்டன பச்சையப்பன் கல்லூரி தவிர மற்ற கல்லூரிகள் எல்லாம் திறக்கப்பட்டன....... அன்று பத்து மணிவரை சென்னையின் காட்சி இதுவாகும்” என்று எழுதியிருக்கின்றது. மற்றபடி ‘சைபுல் இஸ்லாம்’ ‘தாருல் இஸ்லாம்’ என்கின்ற மகமதிய சமூக பத்திரிகைகள் அர்த்தால் பெரிதும் காலித்தனத்தின் உதவியைக் கொண்டே நடத்த முயற்சிக்கப்பட்டதென்றும் அப்படி இருந்தும் பெரிய தோல்வி அடைந்ததென்றும் காட்டியிருக்கின்றது. இவைகள் தவிர பல முக்கியஸ்தர்களும் காங்கிரசின் நடவடிக்கையை கண்டித்து எழுதி வருகிறார்கள். தவிர கல்கத்தாவில் நடந்த காலித்தனத்திற்கும் அளவில்லை என்பதும் பார்ப்பனப் பத்திரிகைகளிலேயே விளங்குகின்றது. வெளியூர்களில் நடந்ததாகச் சொல்வது அவ்வளவும் 100-க்கு 99 முழுப் பொய்யாகவே இருக்கின்றது. உதாரணமாக கோயமுத்தூர் டவுனில் வேலை நிறுத்தம் நடந்ததாக சில அரசியல் பிழைப்பு பத்திரிகைகளில் காணப்படுகின்றன. ஆனால் அங்கு ஒரு சின்ன பார்ப்பனக் கடைகூட மூடப்படவில்லை என்றும் ஸ்ரீமான் ரத்ன சபாபதி முதலியாரை வைவதற்காக அன்று மாலையில் மாத்திரம் சில பார்ப்பனக் காலிகள் ஒரு இடத்தில் கூடி வெகு சீக்கிரத்தில் கலைந்து விட்டார்கள் என்றும் சரியான தகவல் கிடைத்திருக்கின்றது. மற்றும் பல இடங்களில் இது போலவே கூட்டங்கூடி கத்தினதல்லாமல் யாரும் லக்ஷியம் செய்யவில்லை என்றும் பல இடங்களில் காங்கிரஸ் என்ற பெயரைக்கூட வாயில் உச்சரிப்பதற்கு மனமில்லாமல் இருந்ததென்றும் சிலவிடங்களில் சில காங்கிரஸ் காலிகளுக்குத் தக்கபடி புத்தி கற்பிக்கப்பட்டதென்றும் தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. பம்பாயைப் பொறுத்தவரையில் விசேஷ கலவரம் இல்லை. ஆனாலும் பகிஷ்காரத்தைவிட வரவேற்பு ஆடம்பரமே பலமாய் இருந்ததாக பார்ப்பனப் பத்திரிகைகளிலேயே தெரிய வருகின்றது. ஆகவே இவைகளினால் எந்த விதத்தில் வேலை நிறுத்தம் வெற்றி என்று சொல்ல இடமிருக்கின்றதோ தெரியவில்லை. புதியதாக மதம் மாறியவர் களுக்கு மதவேஷம் அதிகம் என்பதுபோல் “தமிழ்நாடு” பத்திரிகையும் அதன் ஆசிரியர் ஸ்ரீவரதராஜுலுவும் மாத்திரம் இவ்வளவையும் லக்ஷியம் செய்யாமல் ஒரே அடியாய் புளுகுவதுடன் உண்மையை மறந்தாப் போல் வெளியிட்ட மித்திரன் மீதும் காய்ந்து விழுகின்றது. ஸ்ரீ வரதராஜுலுவின் பத்திரிகைப் படிக்கும் அவரது பேச்சுப் படிக்கும் பார்த்தாலே காலிகள் என்பவர்கள் வேலை நிறுத்தத்திற்கு அனுகூலமாய் வேலை செய்தவர்களா பிரதிகூலமாய் வேலை செய்தவர்களா என்பது நன்றாய் விளங்கும். மோட்டார் பஸ்கள் மீதிலும் டிராம் வண்டிகள் மீதும் தெருவில் மோட்டார் வண்டியில் போனவர்கள் மீதும் கோர்ட்டுக்குப் போன வக்கீல்கள் மீதும் திறந்து வைக்கப்பட்டிருந்த கடைக்காரர்கள் மீதும் கல் எறியப்பட்டதாகவும் காரி உமிழ்ந்ததாகவும் வாயில் வந்தபடி இழிமொழிகளால் பேசியதாகவும் ஸ்ரீவரதராஜுலு பத்திரிகை உள்பட எல்லா பத்திரிகையிலும் காணப்படுகின்றது. குறிப்பாய் வேண்டுமானால் ஆரிசன் கம்பெனி கொள்ளையிடப்பட்டதும் சர்க்கார் வக்கீலின் மோட்டார் வண்டி கொளுத்தப்பட்டதுமே போதுமானதாகும். மற்றும் ஐகோர்ட்டில் கலகம் செய்ததும் கோர்ட்டுக்கு போன வக்கீல்களை துன்புறுத்தியதும் இன்னும் மேலான சாட்சியமாகும். இந்த நிலையில் காலிகள் காங்கிரஸ்காரர்களா அல்லது பகிஷ்காரத்திற்கு எதிரிடையானவர்களா என்பதை யோசித்தால் முழுமூடனுக்கும் விளங்காமல் போகாது. தவிர ஸ்ரீவரதராஜுலு மோட்டார் மூலம் வேலை நிறுத்தத்தை நடத்த சென்னை முழுதும் சுற்றினதாகவும் அடிக்கடி தன் வண்டியை பலர் வந்து மறித்ததாகவும் தான் வரதராஜுலு என்று தெரிவித்தவுடன் தன்னை காலிகள் விட்டு விட்டு போய் விட்டதாகவும் தானே பல இடங்களில் எழுதிக் கொண்டிருக்கின்றார். இதனால் ஸ்ரீ வரதராஜுலுக்கு ஒரு மோட்டார் இருப்பதாக பொது ஜனங்களுக்கு தெரியப்படுத்த இடமேற்பட்டாலும் இவரை வழிமறித்த காலிகள் வேலை நிறுத்தத்திற்கு எதிரிடையானவர்களாயிருந்திருந்தால் ஸ்ரீ வரதராஜுலுவை சும்மா விட்டிருப்பார்களா என்பது யாருக்கும் விளங்காமல் போகாது. ஆகவே வரதராஜுலு என்று தெரிந்த உடன் சும்மா விட்டு விட்டார்கள் என்பதாலேயே அக்காலிகள் காங்கிரசைச் சேர்ந்தவர்கள் என்பது விளங்கவில்லையா என்று கேட்கின்றோம். எந்த இடத்திலாவது மூடியிருந்த கடைக்காரனையாவது நிறுத்திவிட்ட எந்த வண்டிக்காரனையாவது திறக்கும்படியோ ஓட்டும்படியோ யாராவது தொந்திரவு செய்ததாக ஏற்பட்டால் அது மாத்திரம் வேலை நிறுத்தத்திற்கு விரோதமான கூட்டத்தாரின் செய்கை என்று சொல்லலாம். அப்படிக்கில்லாமல் தங்களை ‘தலைவர்கள்’ ‘தலைவர்கள்’ என்று தாங்களே ஒருவருக்கொருவர் மரியாதை செய்து கொண்டு பட்டம் சூட்டிக் கொண்டு காசு பணத்தை செலவு செய்து காலித்தனத்தை வளர்த்துவிட்டு அவமானமும் தோல்வியும் ஏற்பட்ட பிறகு மேலும் மேலும் அவமானம் அடையத்தக்க மாதிரி முட்டாள்தனமாக ஊர் அறிந்த உண்மையை மறைத்து மறைத்து கீழே விழுந்தும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பது தலைமைத்தனத்துக்கு அழகா? அல்லது மனுஷத்தனத்திற்கு அழகா என்று கேட்கின்றோம். யோக்கியமானவர்களாயிருந்தால் ஆண்மையுள்ளவர்களாயிருந்தால் கடுகளவாவது சுயமரியாதையில் கவலை உடையவர்களாயிருந்தால் உண்மையை ஒப்புக் கொண்டு தவறிப் போனதற்கு உண்மையான காரணத்தைக் காட்டி விட்டு மேலால் நடக்க வேண்டியதற்கு முயற்சி செய்ய வேண்டும். அப்படிக்கில்லாமல் நடந்த தப்பிதங்களை மறைத்து விட்டு மேலால் நடக்க வேண்டிய காரியங்களையும் பயந்து கொண்டு நழுவ விட்டுவிட்டு ‘அது அவன் தப்பு இது இவன் தப்பு’ என்று ஜவாப் தாரித்தனத்தை எதிரிகளின் மீது போடுவது பேடித்தனமும் கடைந்தெடுத்த மானங்கெட்டதனமும் ஆகுமா அல்லவா? என்று கேட்கின்றோம். காங்கிரஸ்காரர்களோ வேலை நிறுத்தம் ஆரம்பித்த வீரப்புலிகளோ ஆண்பிள்ளைகளாய் இருந்தால் “போலீசார் வேலை நிறுத்தத்தை ஒழுங்காய் நடத்திக் கொடுக்கவில்லை” என்று சொல்வதற்கு கொஞ்சமாவது வெட்கப்பட்டிருக்கமாட்டார்களா என்று கேட்கின்றோம். “போலீசார் யோக்கியமாய் பொறுமையாய் புத்திசாலித்தனமாய் நடந்து கொண்டார்கள்” என்று சொல்லிவிட்டு மறுபடியும் போலீசார் தக்க பந்தோபஸ்து எடுத்துக் கொள்ள வில்லை என்று சொல்லுவது அறிவுடைமையாகுமா என்று யோசித்துப் பார்த்தால் விளங்காமல் போகாது. தவிர ‘17-தேதி வேலைநிறுத்தத்திற்காக ஊர்வலத்தையும் மீட்டிங்குகளையும் விளம்பரங்களையும் நாங்களாகவே நிறுத்தி விட்டோம் என்று ஸ்ரீவரதராஜுலு சொல்லுகிறார், எழுதுகிறார். ஏன் நிறுத்திவிட்டார் என்று கேட்கின்றோம். ஒன்றா சர்க்கார் 144 போடப் போகும் விஷயம் தெரிந்து பயந்து கொண்டு பயங்காளித்தனமாய் நிறுத்தி இருக்க வேண்டும் அல்லது இவைகளால் தான் கலவரங்கள் ஏற்பட்டது என்று முடிவு செய்து நிறுத்தி இருக்க வேண்டும். அல்லது வெளியில் தலைகாட்டுவதற்கும் மீட்டிங்கு போடுவதற்கும் தங்களுக்கு யோக்கியதையும் செல்வாக்கும் அற்றுப் போய் விட்டது என்பதை நன்றாய் அறிந்து நிறுத்தி இருக்க வேண்டும். இல்லாவிட்டால் வேறு காரணம் என்னவாயிருக்கக்கூடும்? என்று கேட்கின்றோம். ஒரு சமயம் ஜனங்களுக்கு போதுமான உணர்ச்சி வந்துவிட்டது. யாருடைய முயற்சியும் இல்லாமல் தாமாகவே கடை மூடிவிடுவார்கள் என்கின்ற நம்பிக்கை இருக்குமானால் “கடை அடைத்தவர்கள் மீதும், அடைக்கும்படி கட்டாயப்படுத்துகிறவர்கள் மீதும் நடவடிக்கை எடுத்துக் கொள்ளப்படும்” என்று சென்னையில் தண்டூரா அடித்ததை பார்த்துக் கொண்டும் 144 உத்திரவு போட்டதை வாங்கிக் கொண்டும் ஜனங்களுக்கு தைரியம் சொல்லாமலும் உத்திரவுக்கு பயப்படாமலும் வெளியில் வந்து வேலை செய்யாமல் “நாங்கள் 144-க்கு விரோதமாய் யாதொரு வேலையும் செய்வதில்லை என்று முன்னமேயே தீர்மானித்து விட்டோம்” என்று சொல்லுவதில் எவ்வளவு நாணயப் பொறுப்பும் ஆண்மையும் இருக்கின்றது என்பதைப் பாருங்கள். இது எது போல் இருக்கின்றதென்றால் ஒரு திருடன் தென்னை மரத்தில் தேங்காய் திருட ஏறியபோது, மரக்காரன் பார்த்துக் கொண்டதை உணர்ந்து திருடன் கீழே இறங்கி வரும்போது, மரக்காரன் திருடனைப் பார்த்து எதற்காக மரத்தின் மீது ஏறினாய் என்று கேட்டதற்கு திருடன் கன்றுகுட்டிக்குப் புல்லுப் பிடுங்க ஏறியதாய்ச் சொல்ல மரக்காரன் தென்னை மரத்தில் புல் ஏதென்று கேட்க, திருடன் அதனால்தான் பார்த்து விட்டு சும்மா இறங்கி வந்துவிட்டேன் என்று சொல்லி தப்பித்துக் கொள்ள முயற்சித்தது போல் இருக்கின்றது. எப்படி இருந்தாலும் சைமன் கமிஷன் பகிஷ்காரமும் வேலை நிறுத்தமும் பார்ப்பனர்களின் சூழ்ச்சி என்பதை மக்கள் உணர்ந்து விட்டார்கள் என்பது மாத்திரம் இந்த வேலை நிறுத்தத்தினால் வெளியாய் விட்டதற்கு நாம் மிகுதியும் சந்தோஷமடைகின்றோம். அதாவது (1) ஸ்ரீமான். சத்தியமூர்த்தியே இந்த விஷயமறிந்து அன்று பார்ப்பனர்கள் யாரும் வெளியில் போகக் கூடாது என்று உத்திரவு போட்டு விட்டு தான் மாத்திரம் செக்ரிடரியேட் ஆபிசீல் போய் ஒளிந்து கொண்டதும் (2) போலீஸ் உதவி கமிஷனராகிய ஒரு பார்ப்பனருடன் ஸ்ரீ சத்தியமூர்த்தி கலந்து பேசியதில் அவர் தன்னை வெளி யில் வரவேண்டியதில்லை என்று சொன்னதாக ஸ்ரீ சத்தியமூர்த்தி தன்னுடைய சமாதானத்தில் குறித்திருப்பதும் (3) இதற்கு விரோதமாய் ஸ்ரீ வரதராஜுலு தான் பார்ப்பனரல்லாதார் என்கின்ற காரணத்தால் வெளியில் தாராளமாய் உலவினதும் (4) தன்னை வழிமறித்தவர்களிடம் தான் வரதராஜுலு என்று சொல்லி தப்பித்துக் கொண்டதாக எழுதியிருப்பதும், (5) காங்கிரஸ் காலிகளே கோர்ட்டுக்குப் போய் பார்ப்பன வக்கீல்களைப் பார்த்து ‘பார்ப்பனரல்லாதார் களாகிய எங்களை மாத்திரம் வேலை நிறுத்தம் செய் யும்படி சொல்லி விட்டு பார்ப்பனர்கள் நீங்கள் மாத்திரம் கோர்ட்டுக்கு போக லாமா’ என்று கேட்டதாக பார்ப்பனப் பத்திரிகைகளில் காண்பதும் (6) சிற்சில இடங்களில் அதாவது திருவல்லிக்கேணி இரும்ப வாராவதி முதலிய இடங்களில் மீசை இல்லாதவர் களையும் பூணூல் போட்டவர்களையும் மறித்து உபத்திரவம் செய்ததாக பார்ப்பனப் பத்திரிகைகளிலேயே காண்பதாலும் (7) பார்ப்பன அட்வகேட் ஜனராலாகிய ஸ்ரீ டி.ஆர்.வெங்கிட்டராமய்யர் போன்றார்கள் ஸ்ரீ சத்திய மூர்த்தியின் அட்டகாசத்தில்தான் இம்மாதிரி கலகங்கள் நடந்தது என்று வருத்தப்பட்டுக் கொண்டதும் அவரும் தாக்கப்பட்டதாய் சொல்லப்படுவதும், மற்றும் பல காரியங்களும் வெளிப்பட்டு விட்டது. நிற்க (8) சர்.சி. பி. ராமசாமி ஐயரின் குமாரர்கள் இந்த வேலை நிறுத்தத்தில் அதிக முயற்சி எடுத்துக் கொண்டதும் (9) கதர் வேலையைத் தவிர வேறு வேலை பார்ப்பதில்லை என்று சொல்லி வடக்கத்திய பிரபுக்களிடம் லக்ஷக்கணக்காய் பணம் வாங்கி வந்து வைத்துக் கொண்டு ஆசிரமம் என்னும் பேரால் ஆதிக்கம் செலுத்தி வரும் சி.ராஜகோபாலாச்சாரியாரும் பத்திரிகைகளில் வேலை நிறுத்தம் செய்யும்படி கோடுகட்டிய குறள் எழுதிவந்ததும் (10) அவரே கதர் கடைகளை யெல்லாம் 3-ம் தேதி மூடும்படி கடிதம் எழுதச் செய்ததும் ஆகிய இவ்வளவு காரியங்கள் வெளிப்படையாய் நடந்ததோடு (11) பார்ப்பன அதிகாரிகள் அதாவது சட்டமெம்பர் ஐகோர்ட்டு ஜட்ஜி முதலானவர் களின் செல்வாக் குகள் வேலை நிறுத்தத்திற்கு உபயோகப்பட்டது என்று சொல்லத்தக்க பல ரகசிய காரியங்களும் போதுமானதாகும். தவிர இவ்வேலை நிறுத்தத்திற்கு விரோதமாய் வேலை செய்தவர்கள் இன்னார் என்று ஒரு வார்த்தையாவது இது வரை எந்த பத்திரிகையும் சொல்லவே இல்லை. கலகங்கள் நடந்ததாகவும் சொல்லத்தக்க ஆதரவுகளும் இல்லை. மாலை 5 மணி வரை வேலை நிறுத்தத்திற்கு அனுகூலமாய் கலவரங்கள் நடந்திருப்பது மாத்திரம் விளங்குகின்றதேயல்லாமல் விரோத மாய் இன்ன காரியம் நடந்தது என்று ஒரு பத்திரிகையும் எழுதவில்லை. ஆனால் மாலையில் கூட்டத்திலும் பார்ப்பனத் தெருக்களிலும் பார்ப்பனரைக் கண்ட விடங்களிலும் கலகமானதாக எல்லாப் பத்திரிகைகளிலும் காணப்படுகின்றது. இது வாஸ்தவமாக இருக்க அநேக காரணங்கள் உண்டு. என்ன வென்றால் பார்ப்பனரல்லாதார்களை மாத்திரம் வேலை நிறுத்தம் செய்யச் செய்து நஷ்டமடையும்படியும் கஷ்டமடையும்படியும் செய்து விட்டு பார்ப்பனர்கள் ஒரு நஷ்டமும் அடையாமல் ஒரு குஞ்சுகூட வெளியில் வராமல் தங்கள் அலுவல்களைச் செய்து கொண்டிருப்பதை பார்த்த வேலை நிறுத்தத்திற்கு அனுகூலமாய் இருந்த பார்ப்பனரல்லாத மக்கள் சாதாரணமாய் பார்ப்பனர்கள் மீது ஆத்திரப்படுவதில் ஆச்சரியமொன்றுமில்லை, அவர் களுக்கு புத்தி கற்பிக்க வேண்டுமென்று நினைப்பதிலும் ஆச்சரியமில்லை. தேசத்தில் தேசீய விஷயத்தில் அஹிம்சையை முக்கியமாக வைத்து ஸ்ரீமான் காந்தி 5, 6 வருஷம் எவ்வளவோ வேலை செய்து வந்தும் ஸ்ரீமான்கள் சத்தியமூர்த்தி, குப்புசாமி முதலியார், அண்ணாமலை முதலியார், வரதராஜுலு, ஷாபி மகம்மது, அமீத்கான் இவர்களால் ஹிம்சையே தாண்டவ மாடும் படியான நிலைமை ஏற்பட்டு வருகின்றது. இதற்கு உதாரணமாக ஸ்ரீமான். சத்தியமூர்த்தி அய்யர் போன்றார் ‘கிளப்பி விடத்தான் முடியும். சர்க் காரர்தான் அதை அடக்க வேண்டும்’ என்று பொருள்படச் சொல்லுவது ஒன்றே போதுமானதாகும். நாம் கடைசியாக பார்ப்பனர்களுக்குச் சொல்லுவ தென்னவென்றால் சென்னைக் காலித்தனம் மற்ற இடங்களில் பரவாமல் பார்த்துக் கொள்ள வேண்டுமென்றும் அந்தபடி லக்ஷியம் செய்யாமல் தங்கள் தந்திரங்களினாலும் பணத்திமிரினாலும் பார்ப்பனரல்லாதாரை சரிப்படுத்திக் கொண்டு பார்ப்பனரல்லாதார் மீது ஏவிவிடுவதன் மூலம் தங்கள் காரியங் களைச் செய்து கொள்ளலாம் என்று இன்னும் நினைப்பார்களானால் மாலை 5 மணி வரையில்தான் பார்ப்பன ரல்லாதார் மீது பாய்ந்து சிலருக்கு கெடுதி விளைவிக்கக்கூடுமே யொழிய உண்மை விளங்கியவுடன் இருட்டில் அவர்கள் மீதே திரும்பிப்பாயும் என்கிற எண்ணத்தை இனியாவது கருத்தில் கொண்டு ஜாக்கிரதையாய் இருக்கும்படி எச்சரிக்கை செய்வதோடு, முடத் தெங்குகளை நம்பி மோசம் போய் விடாதீர்கள் என்று சினேக முறையில் தெரிவித்துக் கொள்கிறோம்.
Author: நலன் விரும்பி Published Date: 23/12/2021 Leave a Comment on எப்படி கொலை செய்தேன் -போலீசாரை அலற விட்ட கொள்ளையன் இதனை SHARE பண்ணுங்க எப்படி கொலை செய்தேன் -போலீசாரை அலற விட்ட கொள்ளையன் எஜமானியின் அணிந்துவரும் தங்க நகையை நீண்ட காலமாக தனதாக்கி கொள்ளவேண்டும் என்ற ஆசையில் எஜமானியை கண்டம் துண்டமாக வெட்டி கொலை செய்தேன் என மட்டக்களப்பு நகர் பார் வீதியில் எஜமானியை வெட்டி கொலை செய்த வேலைக்காரியான பெண்ணிடம் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட இருவரையும் எதிர்வரும் ஜனவரி 4ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.சி.எம்.றிஸ்வான் நேற்று (21) உத்தரவிட்டார். மட்டக்களப்பு நகரில் நகைக்கடை வர்த்தகரின் மனைவியை வேலைக்காரி பணத்துக்காக படுகொலை செய்து 46 பவுண் தங்க ஆபரணங்களை கொள்ளையிட்ட சம்பவம் மக்களிடையே பயத்தையும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக வேலைக்காரியிடம் மேற்கொண்ட விசாரணையில் உண்மைகள் தெரியவந்துள்ளது. நகரின் நடுப்பதியில் அரசடி பகுதியில் உள்ள பார்வீதியில் அதிக சனநடாட்டம் உள்ள பகுதியில் மாடிக்கட்டிம் கொண்ட வீட்டில் களுவாஞ்சிக்குடியில் தங்க ஆபரண விற்பனை கடை நடாத்திவரும் செவ்வராசா செல்வி என்றழைக்கப்படும் தயாவதி ஆகிய தம்பதிகளுக்கு 23 வயதுடைய பெண், 26 வயதுடைய ஆண் பிள்ளைகளான இரு பிள்ளைகளுடன் எளிமையாக வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் வர்த்தகர் செல்வராசாவின் வீட்டிற்கு மட்டக்களப்பு கருவப்பங்கேணி ஒம்பிறோஸ் வீதியில் வசித்துவரும் 27 வயதுடைய ரவிகார்த்திகா என்ற பெண் ஒருவர் தினமும் காலையில் வந்து மாலை வரை வீட்டில் மனைவிக்கு ஒத்துழைப்பாக சமையல் மற்றும் ஏனைய வீட்டு வேலைகளை செய்து வந்துள்ளார். அவருக்கு வேலைக்கான சம்பளத்தையும் வழங்கி வந்துள்ளனர். குறித்த வேலைக்காரி பின்னர் மலேசியாவுக்கு வீட்டு வேலை வாய்ப்பு பெற்று அங்கு சென்று வேலை செய்துவந்த நிலையில் போதை பொருள் பாவனைக்கு அடிமையாகிதால் அங்கிருந்து அவரை பொலிஸார் பிடித்து நாட்டுக்கு திருப்பி அனுப்பியுள்ளனர். இந்நிலையில் இலங்கைக்கு வந்த அவர் வாழைச்சேனையில் திருமணம் முடித்து கொண்டு பெற்றோருடன் அங்கு சென்று குடியிருந்து 8 மாதங்களாக வாழ்ந்து வந்த இவர் அடிக்கடி முன்னர் வேலை செய்த தனது எஜமானியின் வீட்டிற்கு வந்து சென்றுள்ளார். இந்த நிலையில் சம்பவதினமான திங்கட்கிழமை (20) வேலைக்காரி எஜமானியின் தங்க நகையை தனதாக்கி கொள்ளவேண்டும் என்ற ஆசையில் காரணமாக தனது கணவரிடம் கல்லாற்றுக்கு தனது 48 வயதுடைய ஏரம்பு ரவி என்ற தந்தையுடன் செல்வதாக தெரிவித்து தந்தையிடம் தனக்கு எஜமானியம்மா 85 ஆயிரம் ரூபா பணம் தரவேண்டும் அதனை வாங்கிவரவேண்டும் என தந்தையிடம் பொய்கூறி 48 வயதுடைய தந்தையாரை அழைத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறி தந்தையுடன் பஸ்வண்டியில் ஏறி மட்டக்களப்பு சினன் ஆஸ்பத்திரி சந்தியில் இறங்கியுள்ளனர். இதனை தொடர்ந்து அங்கிருந்து மட்டு தலைமையக பொலிஸ் நிலையத்துக்கு முன்னாள் உள்ள கடை ஒன்றில் கோழிவெட்ட கத்தி ஒன்று தேவை என கோரி கத்தி ஒன்றை வாங்கி தனது தோல்பையில் வைத்துக்கொண்டு பார் வீதியிலுள்ள எஜமானியம்மாவின் வீட்டுக்கு இருவரும் சென்றனர். அங்கு முதலாளியின் கார் நிற்பதை கண்டு வீட்டுக்கு செல்லாமல் அங்கிருந்து கருவப்பங்கேணியிலுள்ள தந்தை தொழில் புரிந்துவரும் ஹோட்டல் முதலாளியை சந்திப்பதற்காக அங்கு சென்று பின்னர் அங்கிருந்து மீண்டும் எஜமானியம்மா வீட்டுக்கு வந்துள்ளனர். அப்போது வர்த்தகர் செல்வராசா அருகிலுள்ள கோவில் திருவிழா காரணமாக கடைக்கு மகனாரை அனுப்பிவிட்டு மனைவியான 48 வயதுடைய தயாவதி மற்றும் மகளுடன் கோவிக்கு சென்று வழிபட்டுவிட்டு சுமார் 11.30 மணியளவில் வீட்டுக்கு வந்து மனைவியார் கோவிலுக்கு செல்லும் போது முழு தங்க ஆபரணங்களை அணிந்து சென்ற நிலையில் அதோடு சமையலில் ஈடுபட்டுக் கொண்டிருந்துள்ள நிலையில் வேலைக்காரியும் அவரது தந்தையும் அங்கு சென்றதையடுத்து அவர்களை வரவேற்று கலந்துரையாடிய நிலையில் மதிய உணவை சாப்பிட்டுவிட்டு செல்லுமாறு வேலைக்காரி அவரது தந்தையிடம் கூறினார். இதன் பின்னர் வர்த்தகர் செல்வராசா அவரது மகள் ஆகியோர் சாப்பிட்டு விட்டு வீட்டின் முதலாம் மாடியிலுள்ள அறையில் தூங்க சென்ற நிலையில் மகளும் சாப்பிட்டுவிட்டு வீட்டு மண்டபத்தில் குசன் சோபாவில் அமர்ந்து கொண்டு கையடக்க தொலைபேசியில் இருந்த நிலையில் நித்திரை போயுள்ளார். அப்போது எஜமானியம்மா தனது கையால் வேலைக்காரி மற்றும் அவளின் தந்தை ஆகிய இருவருக்கும் உணவு வழங்கி அவர்கள் சாப்பிட்ட பின்னர் எஜமானியம்மாவுடன் கதைத்துக் கொண்டிருந்த போது நேரம் மாலை சுமார் 4 மணியை நெருங்கி கொண்டிருந்த வேளை எஜமானியம்மாவும் வேலைக்காரியும் கதைத்துக் கொண்டிருந்ததையடுத்து அங்கிருந்து வேலைக்காரியின் தந்தையர் வீட்டின் வெளியிலுள்ள பகுதிக்கு சென்றுள்ளார். இந்த நிலையில் வீட்டின் முன்பதியில் இருந்த களஞ்சிய அறைக்கு எஜமானியம்மா சென்றுள்ளபோது அவரை வேலைக்காரி பின் தொடர்ந்து சென்று அறையினுள் எஜமானியம்மாவை வெட்ட தனது தோல் பையில் வைத்திருந்த கைத்தியை எடுத்தபோது எஜமானியம்மா அதனை கண்டு வேலைக்காரியை தள்ளிய போது வேலைக்காரியின் கையில் கத்திபட்டதில் அவளுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. எஜமானியம்மாவை பிடித்து தள்ளிவிட்டபோது அவர் கீழே தலைகுப்பற வீழ்ந்தபோது அங்கு இருந்த தேங்காயில் தலைஅடிப்பட்டு கீழேகிடந்த எஜமானியம்மா சத்தம் போடதவாறு கழுத்தை சுற்று மின்னல் வேகத்தில் கழுத்தை கத்தியால்; சுமார் 10 தடவை படபடவென வெட்டியுள்ளார். பின்னர் அவர் ஓடமுடியாதாவாறு முழங்கால்கள் இரண்டையும் வெட்டியதுடன் அவரின் கழுத்தில் இருந்த சுமார் 25 பவுண்தாலிக் கொடியை கழற்றியபோது தலைமுடி தாலியில் சிக்கியதையடுத்து தலைமுடியை வெட்டி தாலிக் கொடியை எடுத்துக்கொண்ட பின்னர் கையில் அணிந்திருந்த காப்புக்களை கழற்ற அங்கிருந்த பலககட்டையில் கையை வைத்து கையின் மணிகட்டு பகுதியை கத்தியால் வெட்டி துண்டாக்கிவிட்டு காப்புக்களை கழற்றியுள்ளார். கைவிரலில் இருந்த மோதிரங்களையும் கழற்றிவிட்டு காதில் இருந்த தோட்டை கழற்ற காதை தோட்டுன் கத்தியால் அறுத்து எடுத்து கொண்டு 46 பவுண் தங்க ஆபரணங்களையும் கொள்ளையிட்டு அதனை தோல்பையில் பையில் எடுத்து வைத்துகொண்டு கொண்டு கத்தியை அங்கு விட்டுவிட்டு அறையில் இருந்து வெளியேற முற்பட்டுள்ளார். இந்த நிலையில் வீட்டின் வெளியே சென்ற வேலைக்காரியின் தந்தையர் அங்கு சென்ற போது மகள் செய்த கொடூரத்தை கண்டு மகள்மீது தாக்கி என்ன செய்துள்ளாய் என இருவரும் சண்டிபிடித்துக் கொண்ட போது ஏற்பட்ட சத்தத்தையடுத்து சோபாவில் நித்திரை யில் இருந்த எஜமானியின் மகள் விழித்தொழுந்து வந்தபோது அங்கு தாயார் இரத்த வெள்ளத்தில் கிடப்பதைகண்டு அதிர்ந்து கத்தியுள்ளார். இந்த கத்தல் சத்தம் கேட்டு முதல் மாடியில் படுத்திருந்த கணவர் பதற்றத்துடன் கீழ் இறங்கி வந்தபோது மனைவி இரத்த வெள்ளத்தில் கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து சத்தமிட்டார். இதன்போது கொள்ளையடித்த நகைகளுடன் வேலைக்காரியும் அவளது தந்தையும் அங்கிருந்து வெளியேறி தப்பி ஓடி வீதிக்கு சென்றபோது வீதியில் இருந்த முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் அவர்களை பின்தொடர்ந்துடன் அங்கு கடைகளில் இருந்தவர்களும் ஒன்றிணைந்து அவர்களை மடக்கிபிடித்தனர் என பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி முகமட் ஜெஸ்லி தலைமையில் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் வேலைக்காரி இவ்வாறு தெரிவித்துள்ளார். இதனையடுத்து சம்பவ இடத்துக்கு திங்கட்கிழமை இரவு சென்ற மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்ற நீதவான் ஏ.சி.எம்.றிஸ்வான் சம்பவ இடத்தை பார்வையிட்டு சடலத்தை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்துமாறும் கொலைக்கு பயன்படுத்திய கத்தி உள்ளிட்ட தடயப் பொருட்களை சேகரித்து கொள்ளுமாறும் உத்தரவிட்டார். கொள்ளையடிக்கப்பட்டு மீட்கப்பட்ட 46 பவுண் தங்க ஆபரணங்கள், கொலைக்கு பயன்படுத்திய கத்தி மற்றும் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிரிவி கமராவில் பதிவான சிசிரிவி ஒளித் தொகுப்புக்கள் அடங்கிய விசிடி எனப்படும் வண்தட்டு போன்ற தடயப் பொருட்களை பொலிஸார் மீட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட வேலைக்காரி மற்றும் அவளது தந்தை ஆகிய இருவரையும் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.சி.எம்.றிஸ்வான் முன்னிலையில் நேற்று (21) ஆஜர்படுத்தியபோது அவர்களை எதிர்வரும் ஜனவரி 4ம் திகதி 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய மாமன்னன் இராசராசன் சிலையை, அந்தக் கோயிலின் உள்ளே வைக்கும் அதிகாரம் தமிழக அரசுக்கு இல்லை. தலைமைச் செயலகம் செயல்படும் புனித ஜார்ஜ் கோட்டை வளாகத்தில் முளைத்து உள்ள புல் பூண்டுகளைப் அகற்றிட கூட அதிகாரம் மாநில அரசுக்கு இல்லை என்ற நிலையில் மத்திய மாநில அரசுகளின் அதிகாரங்கள் ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டுள்ளன. அவை மட்டுமல்லாமல், மாநிலங்களுக்கு உள்ள அதிகாரங்கள் பல அண்மையில் மத்திய அரசினால் ஒவ்வொன்றாகத் தொடர்ந்து பறிக்கப்படுகின்றன. ஜி.எஸ்.டி.வரி விதிப்புக் கொள்கைமூலம் தமிழகம் பாதிக்கப்பட்டுள்ளது. அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு மாணவர்களைச் சேர்க்கும் அதிகாரம் மாநில அரசிடம் இருந்தது. “நீட்” என்னும் நுழைவுத் தேர்வைப் புகுத்தி அந்த அதிகாரத்தை மத்திய அரசு பறித்துள்ளது. அந்த ஆண்டு முதல் சித்தா ஆயுர் வேதிக் முதலான படிப்புகளுக்கும் “நீட்” தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு “நீட்” தேர்வு எழுதிய 5000க்கு மேற்பட்ட மாணவர்களுக்குப் பல்வேறு மாநிலங்களில் தேர்வுகளை மையங்களை ஒதுக்கி அவர்களை மிகப்பெரிய கொடுமைக்கு ஆளாக்கியுள்ளது. அதனால் சிலர் உயிர் இழக்கவும் நேர்ந்துள்ளது. தேர்வு அறைக்குள் நுழைவதற்கு முன் மாணவிகளின் ஆடை, அணிகலன்கள் களையப்பட்ட அவலமும் நிகழ்ந்துள்ளது. எம்.டி., எம்.எஸ். முதலான மருத்துவ உயர்கல்வி மாணவர் சேர்க்கையிலும் மாநில அரசின் அதிகாரத்தை மத்திய அரசு எடுத்துக்கொண்டது. இந்தி, சமஸ்கிருத மொழிகள் பல்வேறு வகையிலும் திணிக்கப்படுகின்றன. இத்தகைய மத்திய அரசின் செயல்களால் மாணவர் உலகம் மிகப்பெரிய பாதிப்புக்கு ஆளாகியுள்ளது. நெடுவாசல் ஹைட்ரோகார்பன் திட்டம், கதிராமங்கலம் மீத்தேன் எரிவாயு திட்டம், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைத் திட்ட விரிவாக்கம், நியூட்ரினோ திட்டம் போன்ற திட்டங்கள் தமிழக மக்களின் எதிர்ப்புகளையும் மீறி, அவர்களின் வாழ்வாதாரங்களை அழிக்கும் முயற்சிகள் தொடர்கின்றன. சேலம் இரும்பாலையைத் தனியாருக்குத் தாரைவார்க்கும் முயற்சிகளும் எதேச்சாதிகாரப் போக்குடன் மேற்கொள்ளப்படுகிறது. இப்படித் தமிழகத்திற்கு எதிரான பல செயல்களை மத்திய அரசு தொடர்ந்து கடைப்பிடிக்கிறது. ஆந்திரா மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு-ஆந்திரா வரியாக 1 ரூபாய் மத்திய அரசுக்குத் தந்தால் மத்திய அரசு ஆந்திராவுக்கு 45 பைசா மட்டுமே தருகிறது. உத்திரபிரதேச மாநிலம் மத்திய அரசுக்கு 1 ரூபாய் வரியாகத் தந்தால் மத்திய அரசு உத்திரபிரதேசத்துக்கு 1 ரபாய் 85 காசு தருகிறது. என்கிறார். மேற்கு வங்க முதலமைச்சரும் கர்நாடகா, தெலுங்கானா மாநில முதலமைச்சர்களும் இவ்வாறு மாநில உரிமைகள் நசுக்கப்படுகின்றன எனக் குரல் கொடுக்கின்றனர். இவையெல்லாம் மத்தியில் குவிந்து கிடக்கும் அதிகாரங்களால்தானே! அண்மையில் தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகரராவ் தலைவர் கலைஞர் அவர்களையும், கழகச் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களையும் வந்து சந்தித்த போது, மு.க.ஸ்டாலின் அவர்கள் மாநில சுயாட்சிப் பற்றி அவரிடம் பேசியுள்ளார். “மாநில சுயாட்சி மாநாடு” நடத்தப்படும் என்றும் மு.க.ஸ்டாலின் அவர்களால் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மாநில சுயாட்சி ஏன் ? அதன் குறிக்கோள் தத்துவம் என்ன என்பவை குறித்து அனைவரும் அறிந்து கொள்வது அவசியமாகும்.
தமிழ்நாட்டில் வைகை-பாபநாசம்-சாத்தனூர்-ஆழியாறு மணிமுத்தாறு- மேட்டூர்-பவானி சாகர் உள்பட 89 அணைகளும், பூண்டி- சோழவரம்- செம்பரம்பாக்கம்- வீராணம் உள்பட 13 ஆயிரம் ஏரிகளும், 30 லட்சம் கிணறுகளும் எண்ணிக்கையில் அடங்கா ஆழ்துளை கிணறுகளும் உள்ளன. 20க்கும் மேற்பட்ட புதிய அணைகள் திமுக ஆட்சியில் கட்டப்பட்டன. தமிழகத்தில் முதன் முதலாக காவேரி- குண்டாறு மற்றும் தாமிரபரணி நம்பியாறு ஆகிய இருபெரும நதிநீர் இணைப்பு திட்டங்கள் திமுக ஆட்சியில் தொடங்கப்பட்டன. ரூ. 1000 கோடி செலவில் வடசென்னை மீஞ்சூரிலும், ரூ.908 கோடி செலவில் தென்சென்னை நெம்மேலியிலும் ஆக இரண்டு இடங்களில் கடல்நீரை குடிநீராக்கும் நிலையங்கள் திமுக ஆட்சியில் தொடங்கப்பட்டன. இதில் மீஞ்சூரில் பணிகள் முடிந்து அதனை 3.7.2010-ல் முதல்வர் கலைஞர் தொடங்கி வைத்தார்கள். மக்களின் குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்வதற்கென்றே பிரத்தியேகமாக குடிநீர் வடிகால் வாரியம் என்ற அமைப்பு 1971-72-ம் ஆண்டு கலைஞர் முதல்வராக இருந்தபோது நிறுவப்பட்டது. இதன் முதல் தலைவராக செ.கந்தப்பன் அவர்கள் பணியாற்றினார். இதன் மூலம் கழக ஆட்சிக் காலங்களில் நிறைவேற்றப்பட்ட ஒரு சில குடிநீர்த் திட்டங்கள் பின்வருமாறு. மேட்டூர் குடிநீர் திட்டம், மதுரை மேலூர் கூட்டுக் குடிநீர் திட்டம், பல்லடம் கூட்டுக் குடிநீர் திட்டம், விருதுநகரிலே மூன்று குடிநீர் திட்டங்கள், நாகப்பட்டினத்திலே கூட்டுக் குடிநீர் திட்டம், ஆத்தூரில் கூட்டுக் குடிநீர் திட்டம், வேலூர் மாவட்டத்தில் கூட்டுக் குடிநீர் திட்டம், போரூ, மதுரவாயல், ஆவடி, உள்ளகரம், திருவொற்றியுர், ஆலந்தூர், அம்பத்தூர் ஆகிய இடங்களில் குடிநீர் திட்டங்கள் ஈரோடு கூட்டுக் குடிநீர் திட்டம். ரூ.283 கோடி செலவில் சேலம் மாநகராட்சிக்கென்று தனி குடிநீர் திட்டம். கரூர், இனாம் கரூர், தாந்தோணி ஆகிய 3 மாநகராட்சிகளுக்கும் சேர்த்து 75 கோடி ரூபாய் செலவில் கூட்டுக் குடிநீர் திட்டம்., கொடுமுடி மூலனூர் காவேரி கூட்டுக் குடிநீர் திட்டத்தில் மூலனூர் பேரூராட்சி வழியாக கன்னிவாடி வரை உள்ள கிராமங்கள் பயன்பெறும். வகையில் 22 கோடி ரூபாய் செலவில் நிறைவேற்றப்பட்டது. 31 கோடி ரூபாய் செலவில் திருவண்ணாமலைக்கு 3வது கூட்டுக் குடிநீர் சிறுவாணி கூட்டுக் குடிநீர் திட்டம்… கிருஷ்ணா நதிநீர் குடிநீர் திட்டம் ரூ.200 கோடி செலவில் கண்டலேறு கால்வாயை சீர்படுத்தி சென்னைக்கு கிருஷ்ணா நதிநீர் முறையாக கிடைக்கச் செய்தது. கிருஷ்ணா நதிநீர் ஆந்திர மாநிலத்திலிருந்து சென்னைக்கு வரக்கூடிய திட்டம் கண்டலேறு கால்வாய் பழுதடைந்து முறையாக நதிநீர் வந்து சேரவில்லை. அப்போது துணை முதல்வராக இருந்த தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களும் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த துரைமுருகன் அவர்களும் புட்டபர்த்தி சாய்பாபா அவர்களை நேரடியாக சந்தித்து அவரிடத்திலே 200 கோடி ரூபாய் நிதி உதவி பெற்று அதன் மூலம் கண்டலேறு கால்வாயை சீர்படுத்தி கிருஷ்ணா நதிநீர் முறையாக கொண்டு வந்தது. திமுக ஆட்சி. இராமநாதபுரம் கூட்டுக் கூடிநீர் திட்டம் இராமநாதபுரம் நீண்ட கடற்கரையைக் கொண்ட மாவட்டம் மட்டுமல்ல. மூன்று புறமும் கடலால் சூழப்பட்டுள்ளது. இதனால் தோன்றுகின்ற பக்கமெல்லாம் உப்பு தண்ணீராக இருப்பதால் மக்களுக்கு நல்ல தண்ணீர் கிடைப்பது அரிதாக உள்ளபடியால் கோடைக் காலத்தில் கடுமையாக குடிதண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு மக்கள் அல்லல்பட்டு வந்தனர். இந்த இன்னலை போக்கிடும் வகையில் தலைவர் கலைஞரின் பொற்கால ஆட்சியில் 2007-ம் ஆண்டு காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தை ரூ.650 கோடி செலவில் தொடங்கி மாவட்ட மக்களுக்கு அர்ப்பணித்தார்கள். இத்திட்டத்தின் மூலம் புதுக்கோட்டை, திருமயம், திருப்பத்தூர், சிங்கம்புணரி, சிவகங்கை, இளையான்குடி, பரமக்குடி, ராமநாதபுரம், மண்டபம், ராமேஸ்வரம் வரையிலும் மேற்கே மாவட்டத்தின் கடைசி எல்லையான உச்சிநத்தம் வரையிலும் சிமெண்ட் குழாய்கள் மூலம் காவிரி குடிதண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. இராமநாதபுரம் 4 நகராட்சி பகுதிகளுக்கு, 11 ஒன்றிய பகுதி மக்களுக்கும் சீரான முறையில் காவிரி குடிநீருக்கு முறையான வசதிகள் அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்டது… ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் கிருஷ்ணகிரி, தர்மபுரி ஆகிய 2 மாவட்டங்களில் கிடைக்கும் தண்ணீரைக் குடிக்கக்கூடிய மக்களுடைய பற்கள் கெட்டும் கறுத்தும் போய் விடுகிறது. உடலிலே தோளிலே சொல்ல முடியாத நோய்கள் வருகிறது. 3 லட்சம் மாணவர்கள் அதனால் பாதிக்கப்படுகிறார்கள் என்று ஒரு ஆய்வு சொல்கிறது. இந்த ஆபத்திலிருந்து இந்த மாவட்ட மக்களை மீட்டு அவர்களின் குடிநீர் பற்றாக்குறையை நிரந்தரமாக தீர்ப்பதற்காக 2006-ம் ஆண்டு 5வது முறையாக ஆட்சிக்கு வந்த கலைஞர் அவர்கள் கொண்டு வந்த திட்டம்தான் இந்த ஒகேனக்கல் கூட்டுக குடிநீர் திட்டம்… உள்ளாட்சித் துறை அமைச்சர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு வங்கியின் செயல் இயக்குநர் டிசி யோகுசி அவர்களுடன் 6.2.2008 அன்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி நிதியை முழுமையாக பெற்று 1928 கோடி ரூபாய் செலவில் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் தொடங்கப்பட்டது. இத்திட்டத்திற்கு 26.2.2008 அன்று தர்மபுரியில் முதலமைச்சர் கலைஞர் அவர்கள் அடிக்கல் நாட்டினார்கள். அதன்பிறகு உள்ளாட்சித் துறை அமைச்சர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் ஏறக்குறைய 25 முறை அந்த இரு மாவட்டங்களுக்கும் நேரில் சென்று ஆய்வு செய்து அப்பணிகளை விரைவுபடுத்தி 80 சதவிகித பணிகள் நிறைவடைந்த நிலையில் 2011 தேர்தலில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு அதிமுக பதவிக்கு வந்தது. இந்த இரு மாவட்டங்களில் இருக்கக்கூடிய 3 மாநகராட்சிகள், 17 பேரூராட்சிகள், 18 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 6752 கிராமங்கள் இவற்றில் வசிக்கும் 33 லட்சம் மக்கள் இதனால் பயன் அடைகிறார்கள். ஆட்சியில் இல்லாத போதும் இத்திட்டம் மேலும் காலதாமதம் ஏற்படாமல் குடிதண்ணீர் மக்களுக்கு கிடைப்பதற்காக திமுக போராட்டங்கள் ஆர்ப்பாட்டங்கள் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழக மக்களின் குடிதண்ணீர் தட்டுப்பாட்டைப் போக்க திமுக ஆட்சியில் போடப்பட்ட திட்டங்களை எழுதினால் இந்த ஏடு கொள்ளாது. நதிநீர் இணைப்பு தாமிரபரணி-கருமேனியாறு-பச்சையாறு-நம்பியாறு காவிரி- அக்னியாறு- கோரையாறு- பாம்பாறு- வைகை- குண்டாறு, கோதாவரி கிருஷ்ணா அணையைக் கட்டிய சர் ஆர்தர் கார்ட்டன் என்பவர் மிகத் தெளிவாக ஒன்றைச் சொன்னார். அதாவது “இந்தியாவில் இரயில்வே தொடர்புகள் ஏற்படுத்துவதை விட நீர்வழிச் சாலைகைள் அமைப்பதன் மூலமாக வெள்ளம் மற்றும் வறட்சிப் பேரிடர்களைத் தவிர்க்கலாம்; பாசன வசதியைப் பெருக்கலாம், விளைபொருட்களை அதிகரிக்கலாம். என்பதே அவரது திடமான கருத்து. இவர்தான் நதிநீர் இணைப்பு என்ற உன்னதமான விதையை முதன் முதலாக ஊன்றியவர். மேலும், “ஒவ்வோர் ஆண்டும் வெள்ளத்தால் மட்டுமே 20 லட்சம் ஹெக்டேர் நிலங்களில் பயிரிடப்படும் பயிர்கள் மூழ்கி சேதமடைகின்றன. நாட்டிலே 16 சதவிகிதம் மக்கள் வறட்சியால் வாடுகின்றனர். இந்தியா தன்னுடைய நீர் ஆதாரங்களில் 12 லட்சம் மில்லியன் கன அடி நீரில் 3 லட்சத்து 70 ஆயிரம் மில்லியன் கன அடி நீர் வீணாக கடலில் கலக்கிறது. நதிநீர் இணைப்பின் மூலம் இந்த நீரை முறையாக திருப்பி விட்டால் ஆண்டொன்றுக்கு 35 ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி கிடைக்கும். 35 மில்லியன் ஹெக்டேர் நிலங்கள் பாசன வசதிபெறும். 25 கோடி மக்கள் வேலைவாய்ப்பினைப் பெறுவார்கள். 15 ஆயிரம் கி.மீ தேசிய சீர் நெடுஞ்சாலை பெற முடியும். என்பதெல்லாம் அதனைத் தொர்ந்து அவர் ஆய்வு செய்து வெளியிட்ட கருத்துக்கள். மேற்குறித்த சர் அர்தார் கார்ட்டன் அவர்களின் கருத்தையொட்டி, தமிழகத்தில் பாய்ந்தோடும் நதிகளை இணைத்து வெள்ளக் காலங்களில் பாய்ந்தோடி வீணாக கடலில் கலக்கும் நீரை சேமித்து பாசனத்திற்கும் குடிதண்ணீருக்கும் பயன்படுத்தலாமே, என்ற உயர்ந்த சிந்தனையோடு, தலைவர் கலைஞர் அவர்கள் திட்டங்களைத் தீட்டினார்கள். அதன் முதல் பகுதியாகத்தான் மேற்கண்ட இரண்டு நதிநீர் இணைப்பு திட்டங்களை இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் முதன் முதலாக உடனடியாக செயல்படுத்துவதற்கு 5வது முறை 2006-11 தமிழக முதல்வராக பொறுப்பேற்ற தலைவர் கலைஞர் அவர்கள் முன்வந்தார்கள். புரட்சிகரமான இந்த முன்னோடி திட்டங்களுக்கு நிதி உதவி கோரி 29.5.2007-ல் டெல்லியில் நடைபெற்ற 53வது தேசிய வளர்ச்சிக் கவுன்சில் கூட்டத்தில் அப்போது முதல்வராக இருந்த கலைஞர் அவர்கள் நினைவூட்டினார்கள். தொடர்ந்து 11.2.2008 அன்று டெல்லியில் நடைபெற்ற 2008-2009க்கான திட்டக் கமிசன் கூட்டத்திலும் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். என்று வற்புறுத்திக் கேட்டுக் கொண்டார். ஒரு வழியாக மத்திய நீர்வள ஆதாரத்துறை அமைச்சர் சைபுதீன் சோஸ் அவர்கள் 22.2.2008 தேதியில் தமிழக முதல்வர் கலைஞர் அவர்களுக்கு எழுதிய கடிதத்தில் மத்திய திட்டக் கமிசன் ஒப்புதலோடு நீர்வள ஆதார அமைச்சகமும் கொடுத்துள்ள விதிமுறைகளின்படி மேற்குறித்த திட்டத்திற்கு நிதியுதவி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. அறிவுப்பூர்வமாக சிந்தித்து விரைந்து முடிவெடுப்பதில் கலைஞர் வல்லவர் என்பது அனைவரும் அறிந்ததே. மத்திய அரசு நிதி வழங்க ஒப்புதல் அளித்துள்ள நிலையில் அந்த நிதியை எதிர்நோக்கி ரூ.2180 கோடி திட்டச் செலவில் காவிரி- அக்னியாறு-கோரையாறு-பாம்பாறு- வைகை – குண்டாறு இணைப்புத் திட்டத்தை 2008-2009 நிதிநிலை அறிக்கையில் இடம்பெறச் செய்து முதற்கட்டமாக காவிரி ஆற்றின் குறுக்கே கட்டளைப் பகுதியில் ரூ.165 கோடி மதிப்பீட்டில் கதவணை அமைக்கும் பணியை உடனடியாக துவக்க ஆணையிட்டார். தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களிலுள்ள சாத்தான் குளம், திசையன் விளை போன்ற வறண்ட பகுதிகளுக்குத் தாமிரபரணி ஆற்றின் உபரி வெள்ளநீர் கொண்டு செல்ல 369 கோடி ரூபாய் செலவில் இரண்டாவது திட்டமாக தாமிரபரணி கருமேனியாறு பச்சையாறு- நம்பியாறு இணைப்புத் திட்டத்தையும் 21.2.2009 அன்று தலைவர் கலைஞர் அவர்கள் பாளையங்கோட்டை விழாவில் தொடங்கி வைத்தார்கள். காவேரி குண்டாறு இணைப்புத் திட்டத்திற்கான முதல்கட்ட பணிகளை உள்ளாட்சித்துறை அமைச்சரும் துணை முதல்வருமான தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களும் அவ்வப்போது நேரடியாக களத்திற்கே சென்று தகுந்த ஆய்வுகளை மேற்கொண்டு அப்பணிகளை விரைந்து முடிக்க தகுந்த அறிவுரைகளையும் வழங்கி வந்தார்கள். 50 சதவிகித பணிகள் நிறைவடைந்த நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ஜெயலலிதா அம்மையார் அவர்கள் முதல்வர் பதவி ஏற்றவுடன் தலைவர் கலைஞர் மீதுள்ள அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக அந்த இரு திட்டங்களையும் கிடப்பில் போட்டு விட்டார். அத்துடன் நில்லாமல், 21.3.2014-ல் விருதுநகர் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்த ஜெயலலிதா அம்மையார் அவர்கள் 17 வருடங்கள் மத்தியில் ஆட்சியில் இருந்த, திமுக நதிநீர் இணைப்புக்கு ஒரு துரும்பையாவது கிள்ளி போட்டதுண்டா, என கேள்வி கேட்டு பொய்த் தகவல்களை அள்ளி வீசினார்கள். ஆனால் இத்திட்டம் குறித்து 3.3.2014 தேதியிட்ட தினமலர் நாளிதழில் வெளிவந்த உண்மைச் செய்தி பின்வருமாறு நாளிதழில் வெளிவந்த உண்மைச் செய்தி பின்வருமாறு, “திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் ஏறத்தாழ 48 ஆயிரம் ஏக்கர் நிலங்களுக்கு பாசன வசதி தரக்கூடிய தாமிரபரணி கருமேனியாறு நம்பியாறு இணைப்புத் திட்டம் 50 சதவிகிதம் பணிகள் மட்டுமே முடிந்த நிலையில் முடங்கியுள்ளது. தென் மாவட்டங்களில் வறட்சி ஏற்பட்டிருக்கும் சூழலில், இத்திட்டத்தை விரைந்து முடிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். என்ற கோரிக்கை எழுந்துள்ளது. கடந்த 2003-ம் ஆண்டு சாத்தான்குளம் இடைத்தேர்தல் வெற்றி விழாவில் இத்திட்டம் நிறைவேற்றப்படும். என்று அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா அம்மையார் உறுதி அளித்தார். ஆனால் நிறைவேற்றவில்லை. பின் திமுக ஆட்சி காலத்தில் 2008-2009-ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் இத்திட்டம் 369 கோடி ரூபாயில் நிறைவேற்றப்படும் என அறிவிக்கப்பட்டது. முதல் கட்ட பணிகளைத் தொடங்க கடந்த 2009-ம் ஆண்டு பிப்ரவரி 2ந் தேதி 65 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. கடந்த 2010-11-ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையிலும், 2011-12-ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையிலும் முறையே 41 கோடி ரூபாய் 107 கோடி ரூபாய் என மொத்தம் 213 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. இதனால் இத்திட்டத்தின் முதல் இரண்டு கட்டங்களும் திமுக ஆட்சியில் துரிதமாக முடிக்கப்பட்டன” என்றெல்லாம் தெரிவித்துள்ளது. ஆனால் ஜெயலலிதா அம்மையார் அவர்கள் இந்த திட்டங்களை நிறைவேற்ற திமுக ஆட்சியில் ஒரு துரும்பைக்கூட கிள்ளிப் போடவில்லை. என்று அபாண்டமாக குற்றம் சாட்டினார். தென் மாவட்ட மக்களின் கனவு திட்டமான கீரியாறு அணைக்கட்டு திட்டம். மேற்கு தொடர்ச்சி மலையில் தமிழக பகுதியில் தோன்றி தமிழக மலைப்பகுதி வழியாக பாய்ந்து கேரளாவின் பல்வேறு பகுதிகளை வளமாக்கி இறுதியாக அரபிக் கடலில் கலந்து வீணாகிறது. கீரியாறு. இந்த ஆற்றில் அணை கட்டி தண்ணீர் தேக்கி 500 மெகாவாட் மின்சார உற்பத்தி, குடிதண்ணீர் வசதி, திருநெல்வேலி மாவட்டத்தில் சங்கரன் கோவில் தாலுகா, சிவகிரி தாலுகா மற்றும் திருவேங்கடம், விருதுநகரின் வெம்பகோட்டை,, தூத்துக்குடி மாவட்டத்தின் வீளாத்திக்குளம் மற்றும் கோவில்பட்டி மற்றும் இராமநாதபுரத்தின் ஒரு சில பகுதிகள் என 10 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் நீர்ப்பாசன வசதி செய்ய திட்டமிடப் பட்டது. இந்த திட்டத்தின் மூலம் நிலத்தடி நீரையும் அதிகரிக்க முடியும். முதலில் இந்த திட்டம் கைவிடப்பட்டது. ஆனால் 1996 முதல் 2001 வரை தமிழகத்தின் முதலமைச்சராக பதவி வகித்ததலைவர் கலைஞர் அவர்களின் விடாமுயற்சியால் இந்த திட்டத்திற்கு உயிரூட்டப்பட்டது. தேசிய நதிநீர் ஆணையம் மூலம் 13,000 கோடி ரூபாய் மதிப்பில் நீர்ப்பாசன வசதிகள் ஏற்படுத்திட திட்டமிடப்பட்டபோது, கீரியாறு அணைக்கட்டு திட்டத்தையும் மேற்கொள்ளும்படி கோரிக்கை வைக்கப்பட்டது.
ஒரே நேரத்தில் தற்கொலை செய்துகொண்ட 3 பள்ளி தோழிகள்.. காரணத்தை கேட்டு அதிர்ந்த போலிஸ்.. ம.பி-யில் பரபரப்பு! மூன்று பள்ளி மாணவி தோழிகள் ஒரே நேரத்தில் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் மத்திய பிரதேசத்தில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. KL Reshma Updated on : 29 October 2022, 01:45 PM மூன்று பள்ளி மாணவி தோழிகள் ஒரே நேரத்தில் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் மத்திய பிரதேசத்தில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேசம் மாநிலம் செஹோர் பகுதியில் பள்ளி ஒன்று உள்ளது. இங்கு 12-ம் வகுப்பு படிக்கும் மாணவிகள் 3 பேர் நேற்று பள்ளிக்கு செல்லாமல் சுமார் 120 கி.மீ., தொலைவில் இந்தூருக்கு சென்றுள்ளனர். அங்கு பன்வர்குவான் என்ற பகுதியில் 3 பெரும் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளனர். pragati 3 மாணவிகளும் மயக்க நிலையில் இருப்பதாய் கண்ட அப்பகுதி வாசிகள், அவர்களை மீட்டு அருகிலிருந்த தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கே சிகிச்சை அளிக்க முடியாது என்று கூறியதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர்கள் வேறொரு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும் இது குறித்து காவல்துறைக்கும் தகவல் அளிக்கப்பட்டது. தகவலின் பேரில், விரைந்து வந்த அவர்கள் மாணவிகளிடம் விசாரணை மேற்கொள்ள முயன்றனர். ஆனால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 3 பேரில், 2 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மற்றொரு மாணவியும் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும் நிலையில் இருக்கிறார். அந்த மாணவியிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, நாங்கள் பள்ளி மாணவிகள் என்றும், செஹோர் பகுதியை சேர்ந்தவர்கள் என்றும் மாணவி கூறினார். மேலும், எனது தோழி ஒருவரின் ஆண் நண்பரை சந்திக்க இந்தூருக்கு வந்ததாகவும், ஆனால் அவளை அவளது நண்பன் பார்க்க வரவில்லை என்றும் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய மாணவி, இதனால் மனமுடைந்த தோழி, தான் கொண்டு வந்திருந்த விஷத்தை குடித்ததாகவும், மற்றொரு தோழி அவளது குடும்பத்தில் நிலவும் பிரச்னை காரணமாக விஷத்தை குடித்ததாகவும், தனது தோழிகள் குடித்ததை பார்த்து தனக்கும் வாழ விருப்பமில்லை என்பதால் தானும் விஷத்தை குடித்ததாகவும் வாக்குமூலம் அளித்தார். இதைக்கேட்டதும் அதிர்ச்சியடைந்த காவல்துறையினர், மாணவிகளின் குடும்பத்தினருக்கு தகவல் கொடுத்தனர். மூன்று பள்ளி மாணவி தோழிகள் ஒரே நேரத்தில் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. குடும்ப விவகாரம் அல்லது வேறு ஏதேனும் பிரச்சனை காரணமாக “மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக அரசின் சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 எண்ணை அழைத்து, இலவச கவுன்சிலிங் பெறலாம்.” முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், கழக நிகழ்வுகள் மற்றும் இன்றைய முக்கிய செய்திகள் என அனைத்து செய்திகளை உடனுக்கு உடன் அறிய கலைஞர் செய்திகள் இணையதளத்தில் தெரிந்துக்கொள்ளலாம் ! Also Read “கோவை சம்பவம் - ஆளுநர் எந்த ஆதாரங்களின் அடிப்படையில் கருத்துக்களை சொல்கிறார்” : சபாநாயகர் அப்பாவு ஆவேசம்! suicide madhya pradesh indore Trending மும்பை: சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து பிளேடால் அறுத்து கொன்ற சிறுவன் -காரணத்தை கேட்டு அதிர்ந்த போலிஸ் இடைத்தேர்தலில் ரிஷி சுனக் கட்சி படுதோல்வி.. புதிய பிரதமரை நிராகரித்துள்ள பிரிட்டன் பொதுமக்கள் ! ஆன்ட்ராய்டு, ஆப்பிள் போன்களுக்கு மாற்றாக புதிய ஸ்மார்ட்போன் - எலான் மஸ்க் ட்வீட்டால் பரபரப்பு ! ”கும்பல் வன்முறையில் ஈடுபட்டால் ஆயுள் சிறை” - ஜார்க்கண்ட் அரசு அதிரடி; சட்டமன்றத்தில் மசோதா நிறைவேற்றம்! Latest Stories "இப்படி செய்தால் இந்தியா அல்ல, உலகமே நம்மை கேலிதான் செய்யும்" - பாக். அணியை விமர்சித்த முன்னாள் வீரர் ! வெற்றிமாறனின் 'விடுதலை' படப்பிடிப்பில் ரோப் கயிறு அறுந்து விபத்து.. படுகாயமடைந்த சண்டை பயிற்சியாளர் பலி ! மனித மூளைக்குள் சிப்.. எலான் மஸ்க்-ன் அடுத்த அதிரடி.. விலங்குகளுக்கு பொருத்தி சாதனை படைத்ததாக அறிவிப்பு ! கச்சா எண்ணெய் விலை 25% குறைந்தும் பெட்ரோல் விலை ஏன் குறையவில்லை ? மோடிக்கு ராகுல் காந்தி சரமாரி கேள்வி !
உலகில் உள்ள இக்வானுல் முஸ்லிமூன் வஹாபி அரசில் தலைமைகள் முழுக்க முழுக்க அமைரிக்க உதவியிலேயே தங்கியிருக்கிறார்கள். ஸிரியாவிலும் இராக்கிலும் உள்ள ISIS மற்றும் "அல் நுஸ்ரா" பயங்கரவாத இக்வான் வஹாபி இயக்கங்களுக்கு சகல விதமான ஆயுத உதவிகளையும் வழங்குவது அமெரிக்கா என்பது உலகறிந்த பகிரங்க விடயம். இந்த இக்வான் பயங்கரவாதிகளுக்கு சகல உதவிகளையும் கொடுத்து ஸிரியாவையும் இராக்கையும் கடந்த 2011 முதல் அழித்துக் கொண்டிருக்கின்றது ஸியோனிஸ அமெரிக்கா. ஆனால் அந்த பயங்கரவாத இயக்கங்களை ஆதரிக்கும் இலங்கையில் உள்ள இக்வானுல் முஸ்லிமூன் ஏஜண்டுகளான ஜமாஅத்தே இஸ்லாமியும் , D.A. யும் அவர்களின் அரபுலக நண்பனான அமெரிக்காவை எதிர்த்து இங்கு தமது ஊடகங்களில் எழுதுகிறார்கள். அமெரிக்கா பலஸ்தீனில் செய்யும் அட்டூழியங்களை எதிர்ப்பது போல் இங்கு நடிக்கிறார்கள். இலங்கையில் உள்ள இக்வானுல் முஸ்லிமூன் வஹாபிகள் உண்மையில் அமெரிக்காவை எதிர்க்கிறார்கள் என்றால், இதோ இங்கிருக்கும் இரண்டு உலகத் தலைவர்களும் அமெரிக்காவை மடக்கிய சாதனைகளை அவர்களின் ஊடகங்களில் கூறட்டும் பார்க்கலாம். அமெரிக்காவை இரண்டு துறைகளில் மடக்கிய இந்த இரண்டு தலைவர்களையும் பாராட்டி இங்குள்ள இக்வான் ஊடகங்கள் பேசாவிட்டால் , இக்வான் வஹாபிகள் அமெரிக்காவின் ஆட்கள் என்பதை இலங்கை முஸ்லிம்களே நீங்கள் இனம் கண்டுகொள்ளுங்கள். ஒரு தலைவர் : 2011 முதல் , பசுத்தோல் போர்த்திய புலியாக, "அரபு வசந்தம்" என்ற பெயரில் , ஸிரிய அரசாங்கத்தை வீழ்த்தி ஸிரியாவை லிபியா போன்று அழிக்க முயன்ற அமெரிக்காவையும் அதன் அடிவருடியான , இக்வான் உற்பத்தி செய்த ISIS , அந்நுஸ்ரா பயங்கரவாதிகளையும் படு தோழ்வியடையச் செய்து, ஸிரியாவைஅழிக்கும் அமெரிக்காவின் சதித்திட்டத்தை துணிவோடு முறியடித்த ஸிரிய ஜனாதிபதி பஷார் அல் அஸத். அடுத்த தலைவர் : அமெரிக்காவைத் தாக்க உலகில் எவராலும் முடியாது என்று பெருமை பேசிய அமெரிக்காவுக்கு போட்டியாக அணு ஆயுதங்களை உற்பத்தி செய்து, அமெரிக்காவின் சகல விதமான மிரட்டல்களையும் புறக்கணித்து, அமெரிக்காவின் எந்தப் பாகத்தையும் சில மணித்தியாலங்களில் தாக்கியழிக்கக்கூடிய அணு குண்டுகளைச் சுமந்து செல்லக்கூடிய பல்லெஸ்டிக் Ballistic ஏவுகணைகளை உற்பத்தி செய்து அமெரிக்காவுக்கு பெரும் சவாலாக உள்ள வட கொரிய ஜனாதிபதி கிம் ஜோங் ஓன். வட கொரிய இராணுவம் ஸ்தாபிக்கப்பட்டு 70 ம் வருட நினைவையொட்டி, வட கொரிய ஜனாதிபதிக்கு ஸிரிய ஜனாதிபதி வாழ்த்து அனுப்பிய செய்தியையும் இரு தலைவர்களின் படங்களையும் இங்கே காணலாம். வட கொரியா பல்லெஸ்டிக் ஏவுகணை ஏவுவதை ஜனாதிபதி அவதானிப்பதை அடுத்த படத்தில் காணலாம். http://www.alalam.ir/news/3344336/%D8%B1%D8%B3%D8%A7%D9%84%D8%A9-%D9%85%D9%86-%D8%A7%D9%84%D8%A3%D8%B3%D8%AF-%D9%84%D8%B2%D8%B9%D9%8A%D9%85-%D9%83%D9%88%D8%B1%D9%8A%D8%A7-%D8%A7%D9%84%D8%B4%D9%85%D8%A7%D9%84%D9%8A%D8%A9---%D9%85%D8%A7%D8%B0%D8%A7-%D9%83%D8%AA%D8%A8%D8%9F http://www.ahram.org.eg/News/202476/26/625274/%D8%A3%D8%AE%D8%A8%D8%A7%D8%B1-%D8%B9%D8%B1%D8%A8%D9%8A%D8%A9-%D9%88-%D8%B9%D8%A7%D9%84%D9%85%D9%8A%D8%A9/%D9%83%D9%88%D8%B1%D9%8A%D8%A7-%D8%A7%D9%84%D8%B4%D9%85%D8%A7%D9%84%D9%8A%D8%A9-%D8%AA%D8%B7%D9%84%D9%82-%D8%B5%D8%A7%D8%B1%D9%88%D8%AE%D8%A7-%D9%82%D8%A7%D8%AF%D8%B1%D8%A7-%D8%B9%D9%84%D9%89-%D8%A7%D9%84%D9%88%D8%B5%D9%88%D9%84-%D9%84%D9%83%D8%A7%D9%85%D9%84-.aspx மீண்டும் கேள்வியை நினைவூட்டுகிறேன் : அமெரிக்காவை எதிர்த்து போலிக் கண்ணீர் வடிக்கும் இங்குள்ள இக்வான் ஆதரவாளர்கள் , அதே அமெரிக்காவை தோற்கடித்த இந்த இரண்டு பெரும் உலகத் தலைவர்களையும் பாராட்டத் தயாரா ?
அவளிடம் தயக்கமும், வெட்கமும், தவிப்பும் போட்டி போட்டாலும் தன் ஒப்புக்கொடுத்தலை உணர்த்தி விடும் வேகத்தில் அவனின் மார்பின் மீதே இப்போது தலையை வைத்துப் படுத்துக் கொண்டாள் சம்பூர்ணா. “சம்மூ…?” என்று கேள்வியாக அழைத்தவன், அவளின் தலையைத் தன் மார்பில் இருந்து நிமிர்த்தி மனைவியின் முகத்தை ஆழ்ந்து பார்த்தான். கணவனின் பார்வையைச் சந்திக்க முடியாமல் பார்வையை எங்கெங்கோ அலைய விட்டவளிடம் தெரிந்த தவிப்பை கண்டவனுக்கு, அவளின் ஒப்புக் கொடுத்தல் புரிந்தது. இந்த நாளுக்காக ஏங்கி தவித்தவன் தான். ஆனால் இப்போதோ சம்சார வாழ்க்கையை அறவே வெறுக்கும் அக்மார் சந்நியாசி போலச் சாதாரணமாக மனைவியைப் பார்த்து வைத்தான். “என்ன திடீர்னு?” மெல்ல கேட்டான். அவனுக்கான பதிலாக என்ன சொல்வதென்று அறியாமல் கணவனைச் சுற்றிப் போட்டிருந்த கையைத் தனக்குச் சம்மதம் என்பது போல் அழுத்தி காட்டினாள். தன்னை வளைத்திருந்த அவளின் கையைப் பிடித்தவன் “என் மேல கோபமா இருந்தியே சம்மூ?” என்று கேட்டான். ‘அவன் மேலே பாதிப் படுத்துருக்கேன். இப்போ போய்க் கோபத்தைப் பத்தி கேட்குறான் பார்’ என்று உள்ளுக்குள் செல்லமாகக் கடிந்து கொண்டாலும், “அதெல்லாம் போயிருச்சு…” என்று முனங்கலாகப் பதில் தந்தாள். “போயிருச்சா?” என்று ஆச்சரியமாகக் கேட்டான். “ஆமாம்…” என்பது போல் தலையை அசைத்தாள். “ஓ…! அப்போ இப்பவாவது என்ன கோபம்னு சொல்லலாம்ல சம்மூ?” “இப்போ எதுக்கு அது? நான் தான் ஏதோ தப்பா புரிஞ்சுக்கிட்டேன்… அதனால் இப்போ உங்க மேல கோபம் இல்லை…” “அப்படி என்ன தப்பா புரிஞ்சுக்கிட்ட சம்மூ?” “வேண்டாமே…” என்று அவள் தயங்க, “எனக்கு வேணும் சம்மூ… நமக்குக் கல்யாணம் ஆகி ஒரு மாசம் ஆகப் போகுது. இந்த ஒரு மாசமும் என் மேல் கோபம்னு என்கிட்ட இருந்து தள்ளி இருந்திருக்க. அதுக்கு முன்னாடி நான் பொண்ணு பார்க்க வந்ததில் இருந்து கல்யாணம் ஆகுற வரை ஒரு மாசம். நாம பஸ்ஸில் பார்த்ததில் இருந்து உன்னைப் பொண்ணு பார்க்க வரும் வரை ஒன்றரை மாசம். ஆக மொத்தம் மூணரை மாதம் என் மேல கோபமா இருந்திருக்க. அவ்வளவு நாள் நீ என் மேல கோபப்படுற அளவுக்கு நான் என்ன தப்பு செய்தேன்னு எனக்குத் தெரிய வேண்டாமா?” என்று கேட்டவன் அவளை விலக்கி அமர வைத்து தானும் எழுந்து அமர்ந்தான். கட்டிலில் சாய்ந்து அமர்ந்தவள் “அது…” என்று மெல்ல பேச்சை ஆரம்பித்தாள். “ஹ்ம்ம்… எது…?” அழுத்தமாகத் திருப்பிக் கேட்டு வைத்தான். “உங்களைப் பஸ்ஸில் பார்த்தப்ப உங்க நிறம் தான் என்னைத் திரும்பி பார்க்க வச்சது. பார்த்தேன். ஆனா நீங்க பதிலுக்கு என்ன செய்தீங்க?” என்று திருப்பிக் கேட்டாள். “என்ன செய்தேன்? அதையும் நீயே சொல்லிடு…” என்றான். “கண்ணடிச்சீங்க…” “ஆமா… அதுக்கென்ன?” “புதுசா பார்க்கிற பொண்ணை அப்படித் தான் பார்த்த முதல் நாளே கண்ணடிப்பாங்களா?” என்று கேட்டாள். “முதல் நாள்னு யார் சொன்னா? அதுக்கு முன்னாடியே எனக்கு உன்னைத் தெரியும்னு அன்னைக்குப் பூச்சியை வைச்சு பயமுறுத்தினப்ப சொன்னேன்னே…?” “ஆமா… எனக்கும் அப்போ தானே தெரியும். உங்களுக்கு என்னை முன்னாடியே தெரியும்னு. ஆனா அதுக்கு முன்னாடி முதல் முதலில் பார்த்த அன்னைக்கே கண்ணடிக்கிற உங்க கேரக்டர் எப்படி இருக்குமோனு பயமாகிருச்சு…” என்றாள். “பதினைந்து நாளா ஒரு பொண்ணு பின்னாடி பைக்கை எல்லாம் விட்டுட்டு அவளுக்காகவே லோலோனு பஸ்ஸில் அலையுறேன். அவ என்னடானா அப்படி ஒருத்தன் பஸ்ஸில் அவளுக்காக வர்றதை பார்க்காம பதினைந்தாவது நாள் திரும்பி பார்த்து என்னைச் சைட் அடிச்சா எப்படி இருக்கும்? நீயே சொல்லு…” என்று திருப்பிக் கேட்டான் ராகவ். “என்னது? பதினைந்து நாளா எனக்காகப் பஸ்ஸில் வந்தீங்களா?” அதிர்ந்தே போனாள் சம்பூர்ணா. “ஆமா மாலில் டைனோசர் பொம்மையைப் பார்த்து பயந்தீயே அப்போ தான் முதல் தடவையா உன்னைப் பார்த்தேன். என்னடா இவ சின்னக் குழந்தை போலப் பயப்படுறாளேனு முதலில் சிரிப்பு தான் வந்துச்சு. அதுக்குப் பிறகு மாலில் மேல, கீழேனு திரும்பத் திரும்ப உன்னைச் சில இடத்தில் பார்த்தேன். அந்த நேரத்தில் ஏனோ ஒரு உள்மனம் உன்னைப் பின் தொடர சொல்லி தூண்டுச்சு. நீ மால்லை விட்டு போற வரை உன் பின்னாடி தான் சுத்தினேன். அப்பயே என் கூட இருந்த பசங்க கண்டுபிடிச்சு கேலி பண்ண ஆரம்பிச்சுட்டாங்க. அப்போ உன் கூட வந்த ஃபிரண்ட் ஒருத்தர் கம்பெனி ஐடி கார்ட் போட்டிருந்தை பார்த்து நீ வேலை பார்க்கிற இடம் கண்டு பிடிச்சேன். அதுக்குப் பிறகு உன்னோட மத்த டீடைல்ஸ் கண்டு பிடிக்கிறது எனக்குக் கஷ்டமே இல்லை. கம்பெனி வச்சு நீ போற பஸ்ஸை கண்டு பிடிச்சு, நீ இறங்கும் இடத்தை வச்சு உன் வீட்டை கண்டு படிச்சேன். அதுக்கு மேலே படிப்படியா உன் விவரம் சேகரித்து உன் அப்பா மாப்பிள்ளைக்குச் சொல்லி வச்சிருந்த தரகர் வரை பிடிச்சேன். இதுக்கு இடையில உன் பேரு மேட்ருமனி எதுலயும் இருந்து வேற எதுவும் வரன் ஃபிக்ஸ் ஆகிடுச்சுனா என்ன செய்றதுன்னு அது வேற தனியா தேடினேன். ஆனா உன் பேரு எதுலயும் இல்லை. அப்புறம் தான் தெரிஞ்சது உன் அப்பா தெரிஞ்சவங்ககிட்டயும், தரகர்கிட்டயும் மட்டும் தான் மாப்பிள்ளை பார்க்க சொல்லி வச்சிருந்தார்னு. ம்ம்ம்… உன்னைக் கண்டு பிடிக்க எல்லா வேலையும் பார்த்துக்கிட்டே, உன்னைப் பார்க்க வந்தா நீ திரும்பி கூடப் பார்க்கலை. அப்புறம் ஒரு நாள் பார்த்தாய். நீ என்னைப் பார்த்ததும் எப்படி இருந்தது தெரியுமா? என் சந்தோஷத்தை வெளிப்படுத்தக் கண்ணடிச்சேன். அதுவும் அத்தனை நாள் உன் பின்னாடி சுத்தியதில் நீ என் உடமைனு ஒரு உரிமை வந்துருச்சு. அதான் கண்ணடிச்சது எனக்குத் தப்பா தெரியலை…” என்று அனைத்தையும் சொல்லி முடித்துத் தோளை குலுக்கினான். ‘இத்தனை வேலை பார்த்திருக்கிறானா?’ என்பது போல் மலைத்துப் போய்ப் பார்த்தாள். “இத்தனையும் பண்ணிட்டு நீயும் என்னைப் பார்க்கிற. இனி எல்லாம் சரியாகிடும்னு நினைச்சுட்டு இருந்தா ஒரு நாள் பஸ்ஸில் வர்றதை நிறுத்திட்ட. அப்புறம் விசாரிச்சா நீ அந்தக் கம்பெனில லெட்டர் போட்டுட்டனு தெரிஞ்சது. அதுக்குப் பிறகு என்ன செய்றது? உன்னை எப்படி அணுகுறது யோசிச்சேன். இந்த இடத்தில் எனக்கு அம்மா, அப்பா உதவி தேவைப்பட்டது. உன்னை நான் விரும்புற விஷயத்தைச் சொல்லி நான் விசாரிச்சதையும் சொன்னேன். அப்புறம் என்ன? தரகரை பிடிச்சு பொண்ணு கேட்டு விட்டாங்க. அதுக்குப் பிறகும் எங்களுக்குச் சாதகமா பதில் வருமா? வராதானு அத்தனை தவிப்பு. ஏன்னா அப்பாவும், அம்மாவும் வேற வேற மாநிலம். லவ் மேரேஜ்னு எனக்கு முன்னாடி வரன் பார்த்ததில் தட்டி போயிருக்கு. அதை வைச்சு தான் அம்மா பயந்து என்னையும் பயமுறுத்தி விட்டுட்டாங்க. உங்க அப்பா பொண்ணு பார்க்க வர சொல்ற வரை உயிரை கையில் பிடிச்சுக்கிட்டு இருந்தது போல் தான் காத்திருந்தேன். அத்தனை தவிப்பும் அடங்கிப் பொண்ணு பார்க்க வந்தா மேடம் யார் நீன்னு அசால்ட்டா கேட்குறீங்க? ம்ம்ம்…” என்று இழுத்தான். “எனக்கு நீங்க முதலில் கண்ணடிச்சது உறுத்துச்சு. அதுக்குப் பிறகு பஸ்ஸில் பார்த்தப்ப ரொம்ப உரிமையா பார்த்தீங்க. எனக்கும் உங்களைப் பார்க்க பிடிச்சாலும, உங்க பிகேவியர் என்னைத் தள்ளி போகச் சொல்லுச்சு. எனக்காக இத்தனை வேலை பார்த்தீங்கன்னு தெரியாம, இது என்ன இப்படி நடந்துக்கறீங்கனு நெகட்டிவ் தாட் விழுந்தது. அப்புறம் ஒரு நாள் லாஸ்ட் படில நின்னுட்டு அசால்ட்டா டிராவல் செய்தீங்க. உயிர் மேல் அப்படி என்ன அசால்ட்னு கோபம் வந்துச்சு. அதுக்குப் பிறகு ஒரு நாள் ஒரு சிகரெட் பாக்கெட் கையில் வச்சுருந்தீங்க. இந்தப் பழக்கம் வேறயானு மிரண்டு பார்த்தா, நீங்களும் உங்க பிரண்ட்ஸும் குடிக்கிறது பத்தி சர்வ சாதாரணமா பேசிட்டு வர்றீங்க. ஐயோ! குடிகாரனானு மிரண்டு போய்ட்டேன். உங்க குடிகார பிரண்ட்ஸ் கூடச் சேர்ந்து தான் அப்படிக் கெட்டு போறீங்க போலன்னு நீங்க அவங்க கூட இருந்தாலே கோபமா வந்துச்சு. அதிலும் உங்க ஃபிரண்ட் குடிச்சுட்டு வேற ஒரு மாதிரியா பேசினார். அப்படிப்பட்ட ஃபிரண்ட்ஸ் கூட உங்களைப் பார்த்து எனக்கு எப்படி நல்ல அபிபிராயம் வரும்? எந்தப் பொண்ணும் நல்ல பழக்க வழக்கம் உள்ள ஆணை கூடத் திரும்பி பார்ப்பாள்? உங்ககிட்டயும் அந்த நல்ல பழக்கத்தை எதிர்பார்த்தேன். ஆனாலும் அடுத்தடுத்து உங்களைப் பார்க்கும் போது என் மனசே என் பேச்சை கேட்கலை. நான் எவ்வளவோ மனசை கட்டுப்படுத்த முயற்சி செய்தும், ஒரு பக்கம் என் மனசு உங்க பக்கம் சாய, இன்னொரு பக்கம் எனக்குப் பிடிக்காத உங்க பழக்கம் என்னை உங்க பக்கம் சாய்வே கூடாதுனு நிமிர வச்சது. என்னோட அப்பா எல்லா விஷயத்திலும் அவ்வளவு கன்ரோலா இருப்பார். பஸ்ஸில் போனா நமக்காக ஒரு குடும்பம் இருக்கு நாம் தான் கவனமா இருக்கணும்னு எவ்வளவு பஸ் கூட்டமா இருந்தாலும் உள்ளே ஏறி வந்து நிற்பார். சிகரெட், மதுனு எந்தப் பழக்கமும் இல்லை. அவரையே பார்த்து வளர்ந்தவள் நான். அவர் என்கிட்ட கண்டிஷனா இருந்தது கஷ்டமா இருந்தாலும், அவரோட இந்தக் குணம் எல்லாம் எனக்கு ரொம்பப் பிடிக்கும். எனக்கு வர போறவனும் அப்படி இருக்கும்னு ரொம்ப எதிர்பார்ப்பு இருந்தது. ஆனா நான் பார்த்த வரை என் அப்பா குணத்துக்கு அவ்வளவு ஆப்போசிட்டா தெரிஞ்சீங்க. இப்படி நான் நினைச்ச மாதிரி எதுவுமே இல்லாத உங்க பக்கம் என் மனசு சாய்றதை என்னால கண்ட்ரோல் பண்ண முடியலைனு தெரிஞ்சதும் என் மனசுகிட்ட இருந்து தப்பிக்க அந்தப் பஸ்ஸில் வந்தா தானே பிரச்சனைனு வேலை விட்டு நின்னுட்டேன்…” என்று அவள் சொல்ல, “அடிப்பாவி…!” என்று வாயை பிளந்தான் ராகவ். “அப்போ என்கிட்ட இருந்து தப்பிக்கத் தான் வேலையை விட்டியா?” அதிர்வு மாறாமல் கேட்டான். “ஆமாம்…” என்று அப்பாவி போலத் தலையசைத்தாள். “அடியேய்! உன்னை எல்லாம் என்ன செய்றது? பிள்ளையார் அம்மா மாதிரி பொண்ணு வேணும்னு நினைச்சுக் காத்திருந்தது மாதிரி நீ உன் அப்பா மாதிரி மாப்பிள்ளை வேணும்னு எதிர்பார்த்தியாக்கும்? உன் அப்பா மேல உனக்குப் பயம் போல அதான் அப்படிப் பவ்யமா நடந்துக்கிறனு நினைச்சுருக்கேன். ஆனா இப்போதான் தெரியுது. அவர் குணம் பிடிச்சு நீ அவரை ரொம்ப உயர்ந்த இடத்தில் நிறுத்தி வச்சுருக்க. அதனால் தான் அவர் கிட்ட அவ்வளவு மரியாதையா நடந்துகிறனு இப்போ புரியுது. ஆனாலும் உன் அப்பா மாதிரியே எல்லாரும் எப்படி இருப்பாங்க? உன் அப்பா, அப்பா தான். இந்த ராகவ், ராகவ் தான்…! அவர்கிட்ட உள்ள குணம் அப்படியே என்கிட்டயும் இருக்கணும்னு எப்படி எதிர்ப்பார்க்க முடியும்?” என்று கேட்டான். “ம்ம்ம்… அது இப்போ எனக்கும் புரியுது. அப்போ அப்பா மாதிரி நீங்க இல்லைனு எனக்கு அவ்வளவு வேதனையா இருக்கும். வேலை விட்ட பிறகு ஒரு நாள் அப்பா ஒரு வரன் வந்திருக்குனு சொன்னார். அப்படிச் சொன்னதும் எனக்கு உங்க ஞாபகம் தான் முதலில் வந்தது. உங்க ஞாபகத்தை ஒதுக்கவும் முடியலை. அப்பா சொன்ன மாப்பிள்ளையைப் பத்தி விவரம் கூடக் கேட்க பிடிக்கலை. ஆனா அப்பாவே மாப்பிள்ளை பற்றிய விவரம் சொன்னார்…” என்று சொல்லி நிறுத்தி கணவனைக் குறும்பாகப் பார்த்தாள். “ஏய் சம்மூ! அப்போ நான் தான் மாப்பிள்ளைனு தெரிந்து தான் அலங்காரம் பண்ணிட்டு வந்து நின்னியா?” அதிர்ச்சியும், ஆச்சரியமாகக் கேட்டான். “ஆமாம்…” அழுத்தியே சொன்னாள். “ஆனா நீ என்னைப் பார்த்து இவனா மாப்பிள்ளைனு ஷாக் ஆனாயே… அது…?” “ஹான்! அது உங்களுக்கு ஷாக் கொடுக்க…” என்று எப்போதும் அவன் செய்யும் வேலையான கண்ணடிக்கும் வேலையை இப்போது அவள் செய்தாள். “அடியேய்! கண்ணடிக்கவும் தெரியுமா உனக்கு? நம்ம நிச்சயம் அப்போ தெரியாதுன்னு முழிச்சியே?” “அதெல்லாம் தெரியும். நீங்க மாப்பிள்ளை மேடைல கண்ணடிக்கலாம். நான் அடிச்சா அம்மா என்னைய அடிச்சு போடவா?” “அப்படியே அம்மாவுக்குப் பயந்தவத் தான் நீ… சரி அதை விடு! கண்ணடிக்கிறதை பத்தி அப்புறமா கண்ணடிச்சுட்டே பேசலாம். இப்போ விஷயத்துக்கு வா…! அப்போ நான் தான் வருவேன்னு தெரிஞ்சே வேணும்னே தான் கோபமா முறைச்சுட்டு வேற நின்னியா? கல்யாணத்தை வேற நிறுத்துறனு குதிச்ச?” “ஆமா இந்த வெள்ளாவியில் வெந்தவனை வேண்டாம்னு ஒரு மனசு சொல்லுது… என் வசீயா இவன் வேணும்னு இன்னொரு மனம் சொல்லுது. வேணுமா? வேண்டாமானு குழம்பி தவித்துப் போய் அப்போ நின்னேன். கடவுள் கிட்ட வேண்டுதல் எல்லாம் வச்சேன். நீங்க என்னைப் பொண்ணு பார்க்க வரும் போது எனக்குப் பிடிச்ச மாதிரி எந்தப் பழக்கமும் இல்லாம சுத்தமா திருந்தி வரணும்னு. அந்த அளவு நீங்க என் வாழ்க்கையில் வேணும்னு என் மனசு எதிர்பார்த்தது. அதே நேரம் நேருக்கு நேர் பேசும் போது உங்க பிகேவியர் எப்படி இருக்கும்னு தெரிஞ்சுக்க ஆசைப்பட்டேன். அதனால் தான் உங்களைப் பார்த்து ஷாக் ஆனது போலப் பிகேவ் பண்ணினேன். இந்தக் குடிகார பயலை வேண்டாம்னு சொன்னா அவன் என்ன தான் சொல்றான்னு தெரிஞ்சுப்போம்னு ஒரு ஆர்வம் வேற… பஸ்ஸில் பார்த்தவன் பொண்ணு கேட்டு வீடு தேடியே வந்துட்டானே… அப்படியெல்லாம் என்னை வேண்டாம்னு விட மாட்டான்னு ஒரு நம்பிக்கை வேற…” என்று அவள் சொல்ல, “அம்பிகளைக் கூட நம்பிடலாம்டி. உன்னை மாதிரியான அம்மியை மட்டும் நம்பவே கூடாது. அமுக்குனியா இருந்துட்டு நீ எவ்வளவு யோசிச்சுருக்க…” என்று மனைவியின் காதை பிடித்துத் திருகினான். “ஆ…!” என்று அவள் அலற, “கத்தாதேடி…!” என்று வேகமாக அவளின் வாயை மூடினான். “என்னை எப்படியெல்லாம் நோட்டம் விட்டு என் வாயில் இருந்தே கல்யாணத்தைப் பேசி முடிக்க வச்சுருக்க. நீ என்னை வேண்டாம்னு சொல்லிருவியோன்னு நான் எவ்வளவு பயந்தேன் தெரியுமா? நீ என்னன்னா என்னையே போட்டு வாங்கிருக்க…” “ஹா… வேற என்ன செய்றது? உங்க பழக்க வழக்கத்தில் எனக்குப் பிடித்தம் இல்லாமல் இருக்கும் போது என் மனசை வெளிப்படையா காட்ட எனக்குக் கஷ்டமா இருந்தது…” “சரி தான். உன் மனநிலையும் புரியுது. ஆனாலும் நீ செய்தது எல்லாம் ஓவர் தான்டி… சரி இப்போ ஒவ்வொன்னுக்கா பதில் சொல்லு! அதென்ன வெள்ளாவியில் வெந்தவன்? வசீ? இதுக்கு முதலில் பதில் சொல்லு. அப்புறம் நீ பண்ணின வேற கேடித்தனம் எல்லாம் என்னென்னனு சொல்லு…!” என்றான். “வெள்ளாவியில் வெந்தவன் உங்க நிறத்துக்கு நான் வச்ச பேரு…” என்றவள் அவனைப் பார்த்ததும் மனதிற்குள் பாடிய பாடலை சொன்னாள். “நான் எவ்வளவு சாக்லேட் பாய் மாதிரி இருக்கேன். எனக்குப் போய் எப்படி ஒரு பேரை பிடிச்சிருக்க? உன்னை எல்லாம்…” என்று பொய்யாக முறைத்துப் பார்த்தான். “சாக்லேட் பாய்க்கு நக்கலாகவும் ஒரு பேர் வைப்பேன். ரொமான்ட்டிக்காகவும் ஒரு பேர் வைப்பேனே…” என்று அவனின் முறைப்பை கண்டு கொள்ளாமல் விளையாட்டாகச் சொன்னவள், வசீக்கான காரணத்தைச் சொல்ல ஆரம்பித்தாள். “வசீயும் முதலில் உங்க தோற்றத்துக்கு வச்ச பேரு தான். உங்க தோற்றத்தைப் பார்த்து உங்க பேரு வசீகரனா தான் இருக்கும்னு நானே நினைச்சுக்கிட்டேன். அதனால் உங்களை மனதில் நினைக்கும் போதெல்லாம் வசீனு தான் நினைச்சுப்பேன். அப்பா மாப்பிள்ளை விவரம் சொல்லி உங்க போட்டோ காட்டினப்ப தான் உங்க பேரு ராகவேந்திரன்னே தெரியும். இது என்னடா உருவத்துக்கும் பேருக்கும் பொறுத்தமாவே இல்லைனு தோணுச்சு. ஆனா உங்க பேரு என்னவா இருந்தா என்ன? எனக்கு நீங்க வசீயாவே இருக்கட்டும்னு முடிவு பண்ணிக்கிட்டேன். அதுவும் நான் குத்துப்பாட்டு தான் அதிகம் கேட்பேன். மெலடி கேட்டாலும் அதில் எனக்கு ரொம்பப் பிடிச்ச பாட்டு ‘வசீகரா, என் நெஞ்சினிக்க உன் பொன் மடியில் தூங்கினால் போதும்!’ இந்தப் பாட்டு ரொம்பப் பிடிக்கும். இந்தப் பாட்டுக்கு உங்க கூட ஒரு ஆட்டம் போடணும்லாம் நினைச்சுருக்கேன்…” என்று சொல்லி கணவனைக் குறும்பாகப் பார்த்தாள். “உன் டேஸ்ட்டே தனித் தான்டி பொண்டாட்டி! ஆட்டம் தானே? போட்டுடலாம். ஆனா அன்னைக்கு மாதிரி ஓடி ஒளிய கூடாது…” என்றான். “அது அன்னைக்குக் கூச்சமா இருந்தது. அந்தக் கூச்சத்தைப் போக்க வேண்டியது இனி உங்க வேலை…” என்றவள் கண்ணைச் சிமிட்டினாள். “கூச்சத்தைத் தானே போக்கிடலாம்…” என்று அவனும் மனைவியை ஒரு மார்க்கமாகப் பார்த்து வைத்தான். “சரி மீதியையும் சொல்லிடுறேன். குடிகாரன்னு கோபம் இருந்தாலும், நீங்களே பொண்ணு பார்க்க வந்தது. நான் மறுத்து பேசினப்ப கல்யாணத்தைப் பேசி முடிச்சது எல்லாம் பிடிச்சிருந்தது. கெட்டப் பழக்கம் இருக்குறவரை எப்படிக் கல்யாணம் பண்ணிக்கிறதுனு தயங்கினேன். ஆனா கல்யாணத்துக்குப் பின்னாடி உங்களைக் குடிக்க விடாம செய்துடலாம்னு தான் கல்யாணத்தைத் தடுக்க நினைக்கலை. அதே போல அப்பாவே ஓகே சொல்றார்னா நீங்க நல்லவரா இருப்பீங்கனு ஒரு நம்பிக்கை…” “அது சரி என்னைக் குடிகாரன்னு சொல்றீயே? உங்க அப்பா எப்படி விசாரிக்காமயா பொண்ணு கொடுக்கச் சம்மதிச்சார்?” என்று குறுக்கிட்டு கேட்டான். “அப்பா கண்ணுக்கு வராம இருந்திருக்கும். எத்தனை பேர் அவங்க வீட்டுக்கே தெரியாம குடிக்கிறவங்க இருக்காங்க. அதுவும் இல்லாம நான் தான் பார்த்தேனே… பஸ்ஸில் போகும் போது உங்க பேக்ல லேசா பாட்டில் தெரிஞ்சதே. கையில் சிகரெட் பாக்கெட் வேற. ஆனா நம்ம கல்யாணம் முடிஞ்ச பிறகு சிகரெட் குடிக்கிறது இல்லையா நீங்க? உங்க ரூம்ல உங்க சட்டைல எல்லாம் தேடினேன்னே ஒரு சிகரெட் கூடக் கிடைக்கலை?” என்று அவனைக் கூர்ந்து பார்த்துக் கேட்டாள். “தேடுற வேலை வேற செய்தியா? ஆமா இப்போ குடிக்கிறது இல்லை. ஏன்னா நான் பொண்டாட்டிக்கு பயந்தவன் பாரு…” என்றான் கிண்டலுடன். அவனை முறைத்துப் பார்த்தவள் “இத்தனை நாளும் அந்தப் பழக்கம் இருந்தாலும், இனி இருக்கக் கூடாது…” என்றாள் அதிகாரமாக. “சரிதான்…” என்று அவளுக்குத் தலையை ஆட்டி வைத்த ராகவ் மனைவியின் பார்வை தன்னை ஊடுருவியதை கவனிக்காமல் போனான்.
கேரட் மிகவும் மலிவாக எளிதில் கிடைக்கும் காய்களில் ஒன்றாகும். அதிக நன்மைகள் நிறைந்த கேரட் அனைவராலும் விரும்பி உண்ணும் சுவை நிறைந்த காயாகும். நாம் அனுதினமும் பயன்படுத்தும் … Read more நெல்லி பொடி நெல்லி பொடி பயன்கள் நெல்லியில் இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ் போன்ற தாதுக்கள் அதிக அளவில் நிறைந்துள்ளதால் இது இரத்த சோகைக்கு நல்ல மருந்தாகும். நெல்லியில் அறுசுவையில் உப்பு … Read more முடக்கத்தான் பொடி முடக்கத்தான் பொடி பயன்கள் முடக்கத்தான் முடக்கு அறுத்தான் என்பது நாளடைவில் முடக்கற்றான் என்றானது. கசப்புத் தன்மையுடைய முடக்கத்தான் முடக்கு வாத நோய்களை குணமாக்குவதால் முடக்கத்தான் என்று பெயர் … Read more கரிசலாங்கண்ணி பொடி கரிசலாங்கண்ணி பொடி பயன்கள் கரிசலாங்கண்ணி அதிக அளவில் மருத்துவ குணங்கள் நிறைந்த மூலிகையாகும். இதில் எக்லிப்டால், டெஸ்மீத்தைல், அக்கோண்டனால், ஹென்ட்ரை, ஸ்டிக்மாஸ்டீரால், தங்கச்சத்து, இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் … Read more ஆவாரம் பூ பொடி ஆவாரம்பூ பொடி பயன்கள் ஆவாரம்பூ துவர்ப்புத் தன்மை உடையது. இதில் தங்கச்சத்து நிறைந்துள்ளது. ஆவாரம் பூ பொடியை தினமும் ஒரு டீஸ்பூன் அளவு சாப்பிட்டு வர சர்க்கரை … Read more கஸ்தூரி மஞ்சள் பொடி கஸ்தூரி மஞ்சள் பொடி பயன்கள் கஸ்தூரி மஞ்சள் முக அழகு சாதன பொருட்களில் ஒன்றாகும். இது அனைத்து வகை சருமத்திற்கும் கேடு விளைவிக்காத அலர்ஜி எதிர்ப்பு தன்மை … Read more எலுமிச்சை தோல் பொடி பயன்கள் எலுமிச்சை தோல் பொடியினைக் கொண்டு ஃபேஸ் பேக் முதல் பாதத்திற்கு அழகு தரும் பெடிக்யூர் வரை பயன்படுத்தலாம். எலுமிச்சை தோலில் அதிக அளவு கலோரிகள், கார்ப்ஸ், நார்ச்சத்து, … Read more ஆரஞ்சு தோல் பொடி ஆரஞ்சு தோல் பொடியின் பயன்கள் ஆரஞ்சு தோலில் அதிகளவு ஆன்டி ஆக்ஸிடன்டுகள் நிறைந்துள்ளது. இது இயற்கை அழகை விரும்பும் பெண்களுக்கு மிகச் சிறந்த அழகு சாதன பொருளாகும். … Read more முருங்கை இலை பொடி முருங்கை இலை பொடி பயன்கள் முருங்கையில் விட்டமின்கள், மினரல், அமீனோ ஆசிட்கள், வைட்டமின் சி, கால்சியம், பொட்டாசியம் மற்றும் புரோட்டின் போன்ற ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளது. 10 கிராம் … Read more மருதாணி பொடி மருதாணி பொடி பயன்கள் மருதாணி பொடியானது இளநரையை தடுக்க அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். இதனுடன் அவுரி பொடியை சேர்த்து பயன்படுத்தும் போது நம் கூந்தலுக்கு ஏராளமான நன்மைகள் … Read more ரோஸ் பொடி ரோஸ் பொடியின் பயன்கள் ரோஜாவிற்கு இயற்கையாகவே சருமத்தின் நிறத்தை கட்டுப்படுத்தும் தன்மை உள்ளது. ரோஜாவில் அதிகளவு வைட்டமின் சி நிறைந்துள்ளது. இது நல்ல ஆன்டி-ஆக்ஸிடன்ட் ஆகும். ரோஜா … Read more மண் சிகிச்சை மண்ணின் மகத்துவத்தை அறிந்து அதில் உள்ள மருத்துவ குணங்களை கொண்டு மண் சிகிச்சை முறைகளை சித்த மருத்துவர்கள் கூறியுள்ளனர். பழங்காலங்களில் அனைத்து கிராமங்களிலும் மண் சிகிச்சை முறைகளை … Read more முகத்தில் உள்ள கருமை நீங்க வேண்டுமா? முக அழகு என்பது அனைவரும் விரும்பும் ஒன்றாகும். அதிலும் பெண்கள் முகத்தில் ஏதேனும் ஒரு சிறு பரு வந்தாலும் மிகவும் வேதனைப்படுவர். அநேக பெண்கள் வெள்ளை நிறத்தில் … Read more சர்க்கரை நோயில் இருந்து ஆரம்பத்திலேயே தப்பித்துக்கொள்ள… சர்க்கரைக்கேற்ற முருங்கை சர்க்கரை நோய் சர்க்கரை நோய் இன்றைய காலத்தில் அதிகளவில் காணப்படும் நோயாகும். நம் உடலில் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ … Read more உடலுக்குத் தேவையான வைட்டமின்கள் புழுக்கமான சீதோஷ்ண நிலை பெரும்பாலும் மே, ஜுனில் காணப்படுகிறது. வறட்சியான ஈரப்பதம் ஃபுளூ காய்ச்சலுக்கு ஈடான உடல் நலக் கோளாறுகளை ஏற்படுத்துகிறது. மூக்கடைப்பு, டான்சில், குரல் வளை … Read more
“நலமிகு சென்னை.. சைக்கிள் பயணத்தை ஊக்குவிக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்”: “தி இந்து’’ சிறப்புச் செய்தி! முதலமைச்சர் சைக்கிள் பயணம் செய்வது அதற்கான பிரச்சாரத்தில் ஈடுபடுபவர்களுக்கு மிகப்பெரிய ஊக்குவிக்கும் சக்தியாகத் திகழ்கிறது என்று “தி இந்து’’ ஆங்கில நாளேடு புகழாரம் சூட்டியுள்ளது. Prem Kumar Updated on : 18 January 2022, 03:58 AM முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சைக்கிள் பயணம் செய்வது அதற்கான பிரச்சாரத்தில் ஈடுபடுபவர்களுக்கு மிகப்பெரிய ஊக்குவிக்கும் சக்தியாகத் திகழ்கிறது என்று “தி இந்து’’ ஆங்கில நாளேடு தனது சிறப்புச் செய்தியில் புகழாரம் சூட்டியுள்ளது. இதுகுறித்து நேற்றைய (17.1.2022) “தி இந்து’’ ஆங்கில நாளேட்டில் வெளியிடப்பட்டுள்ள சிறப்புச் செய்தியில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது:- “பெருநகர சென்னை மாநகராட்சி கடந்த சில நாட்களாக சைக்கிள் ஓட்டுதல், நடைபயணம் செய்தல் மற்றும் ஓட்டம் போன்றவற்றை ஊக்குவிக்கத் தொடங்கியுள்ளது. இது “சிங்காரச் சென்னை 2.0’’ திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் “நலமிகு சென்னை’’ பிரச்சாரத்தின் ஓர் அம்சமாகும். இதற்கு முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சமீபத்தில் சைக்கிள் பயணம் ஒன்றை மேற்கொண்டு அதற்கு ஊக்குவிப்பை அளித்ததோடு, அதன் மூலம் சைக்கிள் ஓட்டுவதில் தனக்குள்ள ஆர்வத்தையும் வெளிப்படுத்தினார். அதன்மூலம் பெரும் நகரங்களில் சைக்கிள் ஓட்டுதல், நடைபயணம் செய்தல், ஓட்டம் போன்றவற்றுக்கான போட்டிகளை நடத்தும் ஒன்றிய அரசின் முயற்சிகளையும் தொடங்கி வைத்தார். ஏராளமான சைக்கிள் ஓட்டுவோர் சங்கங்களும், குடியிருப்போர் சங்கங்களும் மாநகராட்சியின் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கின்றன. இது பொங்கல் பண்டிகைக்குப் பின் இதுமேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை மாநகராட்சி குடியிருப்போரை “ஸ்ட்ராவா’’ ஆப்பை டவுன்லோடு” செய்து அதன்மூலம் தங்களுடைய சைக்கிள் ஓட்டுதல் மற்றும் நடைபயண நடவடிக்கைகளுக்கான தடங்களை ஜனவரி 26ஆம் தேதிக்கு முன்பாக தெரிந்து கொள்ளும் படி கேட்டுக் கொண்டுள்ளது. இதற்கிடையில் சென்னை மூன்றாவது மிகப்பெரிய எண்ணிக்கையிலான தேசிய அளவிலான நடைபயணம் மற்றும் சைக்கிள் ஓட்டும் போட்டிகளுக்கான பதிவை பதிவு செய்துள்ளது. சென்னை நகரின் குடிமக்களில் 1,458 குடியிருப்போர் இதில் பதிவு செய்துள்ளனர். சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஓட்டப்பந்தயங்களில் 181 கி.மீட்டர் தூரம் கடந்து இந்தப் போட்டியில் கலந்துகொள்பவர்களில் மூன்றாவது இடம் பெற்றுள்ளார். இதன் இறுதிப் போட்டிகளின் முடிவுகள் ஜனவரி 26ஆம் தேதிக்குப் பிறகு வெளியிடப்படும். இந்த நிகழ்ச்சி பல்வேறு மோட்டார் அல்லாத போக்குவரத்து தொடர்பாக சென்னை மாநகரில் உள்ள பல்வேறு வகையான வசதிகளுக்கான விழிப்புணர்வை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. Also Read “நாட்டிலேயே தொழில் முதலீடுகளுக்கு சிறந்த மாநிலம் தமிழ்நாடு” : 'Business Line’ ஆங்கில நாளேடு புகழாரம்! The Hindu சைக்கிள் பயணம் சைக்கிள் Trending எத்தனை நிமிடம்.. யாருடைய பாட்டை அதிகம் கேட்டு இருக்கீங்க? : அறிமுகமானது 'SPOTIFY WRAPPED 2022'.. புறக்கணிக்கப்பட்ட அழைப்பு.. ஓடிக்கொண்டிருந்த TV.. VAO வீட்டில் அரசு அதிகாரிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி! தோல்விகளை துச்சமெனக் கடந்த ‘ஃபீனிக்ஸ் பறவை’ : 27 Years of #Ajithism ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது.. வந்து விட்டது ஜோம்பி வைரஸ்: மனித குலத்துக்கு பேராபத்தா? Latest Stories "மன்னிப்புக் கேட்கிறேன்.. ஆனால் 'Kashmir Files' பற்றி கூறிய கருத்து மறுக்க முடியாத உண்மை" -நடாவ் லாபிட்! அன்பே சிவம், பகவதி உள்ளிட்ட பல படங்களை தயாரித்த தயாரிப்பாளர் முரளிதரன் காலமானார்.. திரையுலகம் அதிர்ச்சி !
பாரதிக்கு அறுவைசிகிச்சை நடந்துகொண்டிருந்த போது, மாயா உடல்நலம் சற்றுதேறி ஐ.சி.யுவில் இருந்து அறைக்கு மாற்றப்பட்டாள். அவளுக்கு நடந்த விஷயம் எதுவும் தெரியாது, அவள் இருக்கும் நிலையில் இதை கூறவேண்டாம் என்று யாரும் அவளிடம் எதுவும் கூறவில்லை. பாரதி கிடைத்துவிட்டாள் என்று மட்டும் அவளுக்கு சொல்லப்பட்டது. பாரதி கிடைத்த பிறகு தன்னை யாரும் வந்து பார்க்கவில்லை, தன்மீது கோவமாக இருக்கிறார்கள் போல என்று நினைத்த மாயாவிற்கு என்றும்விட அந்த இறுதினங்கள் மறைந்த பெற்றோரின் நினைவு அதிகமாக இருந்தது. பாரதி கிடைத்துவிட்டாள் அதுபோதும் என்று நினைத்தவள் மனதில் தோன்றும் தேவையற்ற எண்ணங்களை மாற்றுவதற்காக தொலைக்காட்சியை இயக்கினாள். இலக்கில்லாமல் சேனல் மாற்றி கொண்டிருந்தவள் தொழிலதிபர் ஆதித்யன் என்று வரவும் அந்த சேனலில் நிறுத்தினாள். அதில் கூறப்பட்ட செய்தியை அவளால் நம்பவே முடியவில்லை. எந்த நியூஸ் சேனலை மாற்றினாலும் செய்தி ஒன்றாகத்தான் இருந்தது. பாரதி, பாரதிக்கு எப்படி என்று ஒன்றும் புரியாமல் அறையைவிட்டு வெளியில் வந்தவள், அங்கு அவளை பார்ப்பதற்கு வந்துகொண்டிருந்த பாலகுமாரை பார்த்து அவனிடம் ஓடினாள். அண்ணா பாரதிக்கு என்ன அண்ணா ஆச்சு ஏன் என்கிட்ட யாரும் சொல்லல இப்ப பாரதி எங்க நான் அவளை பார்க்கனும் என்று கண்ணீரோடு கேட்டவளிடம் என்ன சொல்வது என்று பாலகுமாருக்கு தெரியவில்லை. மாயாவுக்கு இப்போதைக்கு விஷயம் தெரிய கூடாது என்று ஆதி கூறியிருந்தான். ஆனால் அவளுக்கு எப்படியோ தெரிந்துவிட்டது, எப்படியோ என்ன எல்லா நியூஸ்லையும் இதுதானே பிரேக்கிங் நியூஸ் என்று நினைத்தவன் மாயாவிடம், மாயா நீ முதல்ல உன்னோட ரூம்க்கு வா என்று அவளை அழைத்துசென்றான். நீ தெரிஞ்சுக்கிட்டது உண்மைதான், உனக்கு முழுசா உடம்பு சரியாகுற வரைக்கும் உன்கிட்ட சொல்லவேண்டானு மாப்பிள்ளை நினைச்சாரு அதுதான் சொல்லல. மாயா பாரதிக்கு டிரீட்மெண்ட் போயிட்டு இருக்கு நீ பயப்படாத முதல்ல உன்னோட உடம்பு குணமாகட்டும் அப்புறம் நீ பாரதியை பார்க்கலாம் சரியா, இல்ல அண்ணா நான் சாரையும், மேடத்தையும் பார்க்கனும் ப்ளீஸ் கூட்டிட்டு போங்க என்று பிடிவாதம் பிடித்தாள் மாயா. இதற்குமேல் முடியாது என்று விட்டுசென்றாலும் அவளால் நிம்மதியாக இருக்க முடியாது என்று நினைத்த பாலகுமார் அவளை தன்னுடன் அழைத்து கொண்டு சென்றான். பாரதிக்கு இன்னும் அறுவைசிகிச்சை நடந்துகொண்டிருந்தது. ஆதி, சஞ்சனா மற்றும் கிருஷ்ணவேணி வெளியில் காத்துக்கொண்டிருந்தனர். அங்கு வந்த மாயா, ஆதி மற்றும் சஞ்சனாவின் வாடிப்போன முகம் பார்த்து தவித்து போனாள். வேகமாக அவர்கள் அருகில் ஓடியவள் சஞ்சனா கால்லை கட்டிக்கொண்டு அழுக தொடங்கினாள். சாரி மேடம், என்ன நம்பித்தான் பாரதிய அனுப்புனீங்க இப்படி ஆகுனு நான் கொஞ்சம் கூட நினைக்கல, கூடவே இருந்தும் என்னால அவளை காப்பாற்ற முடியல, சின்ன பொண்ணு நம்ப யாராவது வந்துடமாட்டோமான்னு எவ்வளோ தவிச்சிருப்பா, இப்படி ஆயிடுச்சே என்று தலையில் அடித்துக்கொண்டு அழுதாள். வேகமாக அவளை தடுத்த சஞ்சனா, மாயா உனக்கே இப்பதான் உடம்பு கொஞ்சம் தேறி இருக்கு நீ கொஞ்சம் அமைதியா இரு, நடந்த எதுக்கும் நீ காரணம் இல்லை, குற்றவுணர்ச்சிய வளர்த்திக்காத. பாரதிய இதுல இருந்து மீட்டெடுக்க எனக்கு மாயா வேணும். எதையும் தைரியமா எதிர்த்து நிக்குற எங்களோட மாயா வேணும் என்று கூறினாள். அவளை அனைத்துக்கொண்ட மாயா, சின்ன பொண்ணு மேடம் என்னால தாங்க முடியல, எனக்கு எதாவது ஆகியிருந்த கூட பரவாயில்லை, இதை எப்படி பாரதி என்று கேவினாள். உனக்கு எதாவது ஆகியிருந்த மட்டும் எங்கனால நிம்மதியா இருந்திருக்க முடியுமா மாயா, அப்பவும் எங்களுக்கு இதே தவிப்புதான் இருந்திருக்கும் என்று கூறிய ஆதியை பார்த்த மாயாவிற்கு இவர்களா தன் மீது கோவமாக இருக்கிறார்கள் என்று நினைத்தோம் என்று தோன்றியது. அதன்பின் சற்று அமைதியான மாயா, அறைக்கு போகமாட்டேன் என்று கூறி அவர்களோடே இருந்து கொண்டாள். அதேசமயம் அடையாரில் பணக்காரர்கள் வாழும் பகுதியில் இருந்த ஒரு வீட்டில் செய்திகள் ஓடிக்கொண்டிருந்தது. அதை பார்த்துக்கொண்டிருந்த பையன் அண்ணா இங்க வந்து இந்த நியூஸ் பாரு என்று கத்தினான். அந்த குரல் கேட்டு வெளியில் வந்தது வேறு யாருமில்லை சிறுது மாதத்திற்கு முன்னாடி பாரதி பள்ளியில் பிரச்சனையில் மாட்டிக்கொண்ட வருண்,அது கிரிமினல் லாயர் காளிதாஸ்ஸின் வீடு. அவரும் பாரதியின் நியூஸ்ஸை பார்த்திருந்தார், அன்னைக்கு கேஸ் கொடுத்த என்னோட குடும்ப மானத்துக்கு ஒரு பிரச்சனையும் இல்லைனு திமிர பேசுனான், இன்னைக்கு இப்படி ஆகிடுச்சு என்று நினைத்தார். இப்போது அவரது சின்ன மகன் விஷ்வா அந்த செய்தி பார்த்து தன் அண்ணனை அழைக்கவும் அவர்கள் பேசுவதை கேட்டுக்கொண்டே தனது வேலையை தொடர்ந்தார். தம்பி குரல் கேட்டு அங்கு வந்த வருண் எதுக்குடா கத்துற அங்க நியூஸ் பாருண்ணா, எதோ சும்மா கிண்டல் பண்ணிடனு பிரின்ஸிபள்கிட்ட சொல்லி, அப்பாவ வரவெச்சு என்ன ஸ்கூல் மாற வெச்ச அந்த பாரதிக்கு நல்ல வேணும். அவன் கூறியது கேட்டு நியூஸ் பார்த்த வருண் கரெக்ட்ட சொன்ன விஷ்வா ரொம்போ ஓவர்ரா பண்ணா, இப்ப என்ன பண்ணுவ யார்கிட்ட போய் கம்ப்ளைண்ட் பண்ணுவ, வெளியில இனி தலைகாட்ட முடியாது என்று நக்கலாக சொன்னான். அவர்களுக்கு சாப்பாடு எடுத்துவைத்து கொண்டிருந்த அவர்களின் அம்மா அனுராதா மகன்களின் பேச்சை கேட்டு அதிர்ந்துப்போனார். காலையில் அந்த செய்தி பார்த்து பாவம் அந்த பொண்ணு என்று மனம் கனத்துபோனது அவருக்கு, அந்த செய்தி பார்த்து தன் மகன்கள் இப்படி பேசுவது அவருக்கு தனது வளர்ப்பு மீது சந்தேகத்தை கொடுத்தது. பேசிக்கொண்டிருந்த மகன்கள் அருகில் வந்தவர் தொலைக்காட்சியை அணைத்தார். என்னம்மா பார்த்துட்டு இருக்கப்ப எதுக்கு ஆப் பண்ணீங்க நீங்க பேசிட்டு இருந்ததுக்கு உங்கள பாராட்டத்தான். மனைவி வந்து பேசவும் செய்யும் வேலையை விட்டுவிட்டு அவர்களை கவனித்தார் காளிதாஸ். பாராட்டவ? என்னம்மா சொல்ரீங்க என்று கேட்டான் வருண். ஆமா வருண், ஒரு பொண்ணோட வழிய, வேதனையை கொண்டாடுற என்னோட மகன்களை நினைச்சு எனக்கு பெருமையா இருக்கு. நான் படிக்காதவத்தான், உங்களையும், உங்க அப்பாவையும் தாண்டி எனக்கு உலகம் கிடையாது. என்னதான் படிக்கலைனாலும் உங்கள நல்ல முறையில வளர்த்திருக்கனு எனக்கு எப்பவும் பெருமையா இருக்கும். என்னைக்கு ஸ்கூல்ல கம்ப்ளைண்ட் வந்ததோ அன்னைக்கே எனக்கு கருக்குனு இருந்துச்சு. சரி வயசு கோளாறு இதெல்லாம் சொல்லி புரியவெச்சுக்கலாம்னு இருந்துட்டேன். அதுக்கேத்தமாதிரி உங்க அப்பாவும் நான் ஏற்கனவே பேசிட்ட நீ திரும்ப அதையே பேசி பசங்கள கஷ்டப்படுத்தாதனு சொல்லிட்டாரு. எப்பவும் போல அவருக்கு எதிர்பேச்சு பேசாம அமைதிய இருந்துட்டேன். அதுதான் நான் செஞ்ச தப்பு பேசி இருக்கனும். இதை இதை அப்பா சொல்லனும் இதை இதை அம்மா சொல்லனுனு இருக்கு. என்னதான் ஒரு பொண்ணுகிட்ட எப்படி நடந்துக்கனுனு அப்பா சொன்னாலும் அவரு ஒரு ஆண்ங்குற நிலையில இருந்துதான் சொல்லுவாரு. அன்னைக்கே நான் இந்த மாதிரி வெளியில ஏற்படுற தொல்லைகள் ஒரு பொண்ண எந்த அளவுக்கு பாதிக்கும், தப்பு செஞ்சது ஆம்பளையா இருந்தாலும் அதுக்கு சேர்த்து பெண்ணைத்தான் சிலுவை சுமக்கவைக்குனு உங்களுக்கு புரியற மாதிரி நான் சொல்லி இருக்கனும். அப்படி நான் சொல்லி இருந்த ஒருவேளை இன்னைக்கு அந்த பொண்ணு நிலமையை பார்த்து உங்களுக்கு சந்தோசம் வந்திருக்காது. ஒரு சின்ன கேலிய தாங்காத அந்த பொண்ணு இவ்வளோ பெரிய வழிய எப்படி தாங்குவானு கொஞ்சமாவது யோசிச்சிய வருண். உன்னோட தம்பிதான் சின்ன பையன் நீ என்ன ஒன்னு தெரியாதவன தப்புடானு நீயில்ல அவனுக்கு சொல்லியிருக்கனும். எனக்கோ, இல்ல நீ காதலிக்குறயே காவியா அவளுக்கோ இப்படி நடந்து இருந்த அப்பவும் இப்படித்தான் நடந்துபியா? அம்மா என்று வார்த்தை வராமல் தலைகுனிந்தான் வருண். மகன் காதலிக்குறான் வெளியில் சென்றுவரும் நமக்கு தெரியாத விசயம் வீட்டுலயே இருக்கும் மனைவிக்கு தெரிந்திருக்கிறது. மனைவி பேச தொடங்கியதும் தனது எண்ணத்திற்காக அவருக்கு அவமானமாக தான் இருந்தது. தலைகுனிந்து நிற்கும் மகன் அருகில் வந்து நின்றார் காளிதாஸ். அவரை பார்த்த அனுராதா, என்னங்க ஒண்ணுமே தெரியாத படிக்காதவ இவ்வளோ பேசுறானு பார்க்குறீங்களா? இதை பேச அறிவு வேண்டாம், அந்த பொண்ணோட வழிய புரிஞ்சுக்க முடிஞ்சா போதும். விஷ்வா பொண்ண பொறந்திருந்த அந்த பொண்ணு வயசுதான் இருந்திருக்கும், ஆனா நம்ம வீட்டுலதான் பொண்ணு இல்லையே வேற யாரு எப்படி போன என்னனு அமைதியா இருந்தீங்களா? உங்க மனைவி பொண்ணுதான், உங்க பசங்களோட அம்மா பொண்ணுதான், அதை மறந்துடீங்களே என்று கேட்கும்போது அவருக்கு குரல் கரகரத்தது. சிறிதுநேரம் அந்த இடமே அமைதியாக இருந்தது. அனைவரும் உணர்ச்சிமயமாக இருந்தனர். வருணுக்கு அவன் அன்னை கேட்ட கேள்விகளின் நியாயம் புரிந்தது, அவனால் பாரதி நிலையில் காவியாவை யோசிக்கக்கூட முடியவில்லை விதிர்த்து போனான். விஷ்வாவிற்கு அனைத்தும் புரியவில்லை என்றாலும் தான் பேசியது தவறு என்று புரிந்தது. அமைதியை கலைத்து பேசதொடங்கினார் காளிதாஸ். ராதா எதுக்கு இப்படி உன்னையே படிக்காதவனு குறைத்து பேசுற, என்னோட எல்லா வெற்றிக்கும் மூலகாரணமே நீதான். நீ இந்த வீட்டோட ஆணிவேர், வெளியில சொல்லலனாலும் நீ இல்லாம எங்க மூணு பேருக்கும் இயக்கமே இருக்காது. ஏதோ ஒரு கோவத்துல பசங்க தப்பா பேசிட்டாங்க நானும் அமைதிய இருந்துட்டேன் தப்புதான் எங்களை மன்னிச்சுடு. நீ இப்படி கலங்கி போற அளவுக்கு நம்ப பசங்க மோசமானவங்க இல்லை, நீ அவங்கள சரியாதான் வளர்த்தி இருக்க. இப்ப என்ன செய்யலானு சொல்லு செய்வோம். அவங்களை போய் பார்க்கலாங்க இந்த சமயத்துல சொந்தமே நெருங்கி வர யோசிக்கும், யாரு இல்லைனு அவங்க கலங்கிபோய்டலாம். நம்ம இருக்கோனு சொல்லிட்டு வருவோம், நீங்க முடிஞ்ச இந்த கேஸை நடத்துங்க. இந்த கேஸ்ஸை நான்தான் நடத்துறதுனு எப்பவோ முடிவு பண்ணிட்ட, சரி நீ கிளம்பு போய் பார்த்துட்டு வந்திடலாம் என்று கூற அனுராதா நிம்மதியாக கிளம்ப சென்றார். இவர்களின் தவறை அனுராதா புரியவைத்துவிட்டார். ஆனால் சுற்றி இருக்கும் சமூகம் பாரதியை வீழ்த்த காத்திருக்கிறது அதில் இருந்து அவள் எப்படி மீண்டு வரப்போகிறாள்??? அறிய தொடர்ந்து வாசியுங்கள் மீண்டும் மலர்வாய்.
தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது. அதன்படி தற்போது மீண்டும் வரும் 31-ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். பள்ளிகளில் மாணவர் சேர்க்கை மற்றும் புத்தக விநியோகத்திற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. பள்ளிகளில் அனைத்து நிர்வாக பணிகளும் தோய்வு இன்றி நடைபெறலாம். ஆசிரியர்களும் பள்ளிக்கு சென்று நிர்வாக பணிகளில் ஈடுபடலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பாடத்தயாரிப்பு பணிகளிலும் ஆசிரியர்கள் ஈடுபடலாம். 50 சதவீத மாணவர்களுடன் தட்டச்சு, சுருக்கெழுத்து, ITI உள்ளிட்ட பயிற்சி நிலையங்கள் தொடர்ந்து செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. புதுசேரி நீங்கலாகநீங்கலாக மற்ற மாநிலங்களுக்கான போக்குவரத்திற்கு தடை தொடர்கிறது. தியேட்டர்கள், பார்கள், திறக்கவும் பொழுதுபோக்கு, விளையாட்டு, அரசியல், கலாச்சார நிகழ்வுகள், பூங்காக்கள் உள்ளிட்டவைகளுக்கான தடை நீட்டிக்கிறது. திருமணம் உள்ளிட்ட சுபகாரிய நிகழ்வுகளில் 50 சதவீதம் பேரும், இறுதி சடங்கில் 20 சதவீத பேரும் பங்கேற்க்கலாம். இதை தவிர ஏற்கனவே அனுதிக்கப்பட்ட செயல்பாடுகள் எந்த வித மற்றம் இன்றி தொடரும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். முகக்கவசம் அணியாமல் செல்வது, தனிமனித இடைவெளியை கடைபிடிக்காதது என கொரோனா தடுப்பு விதிமுறைகளை மீறுவோருக்கு அபராதம் விதிக்கும் நடைமுறை தொடரும் என்று முதலமைச்சர் கூறியுள்ளார். Share Article: Tags: Chief Minister M.K. Stalin cinema news tamil coorna virus corona lockdown corona vaccination covid 19 google tamil news latest news in tamil latest tamil news Lifestyle live news tamil news in tamil news live tamil news tamil news tamil live news tamil today tamil cinema news tamil news Tamil news live tamil news paper tamil news today tamil video today gold prize today news in tamil today news tamil today tamil news todays news in tamil
ராஷ்மிகா மந்தனா இந்த பெயரை தெரியாதவர்கள் இருக்கவே முடியாது. ஒரே பாடலில் உலக பேமஸ் ஆனவர் தான் ராஷ்மிகா மந்தனா. கன்னடத்தில் அறிமுகமாகி இருந்தாலும் அம்மணிக்கு தெலுங்கு சினிமாவில் தான் மவுசு அதிகம். தெலுங்கு தவிர தமிழ் சினிமாவில் நடித்து ராஷ்மிகா கைவசம் இரண்டு ஹிந்தி படங்களையும் வைத்துள்ளார். இப்போ விஷயம் இது இல்லைங்க. அம்மணி சமீபகாலமாகவே வீடுகளாக வாங்கி குவித்து வருகிறார். அவரது சொந்த ஊரான பெங்களூரில் ஒரு வீடும், மும்பையில் அபார்ட்மெண்ட்டும், கோவாவில் சொகுசு பங்களா என தொடர்ந்து மூன்று நகரங்களில் வீடுகளை வாங்கி குவித்தார். என்ன காரணமாக இருக்கும் என பலரும் யோசித்த நிலையில், தற்போது அவரே இதற்கான காரணத்தை கூறியுள்ளார். rashmika அதாவது ராஷ்மிகா என்ன கூறியுள்ளார் என்றால், “நான் படப்பிடிப்பிற்காக எந்த பகுதிக்கு சென்றாலும், ஹோட்டல்களில் தங்குவதில் எனக்கு விருப்பம் இல்லை. பல நாட்கள் படப்பிடிப்பிற்காக வெளியில் தங்குவதால், சொந்த வீடாக இருந்தால் நன்றாக இருக்கும் என்று தான் நான் அதிகம் படப்பிடிப்பு நடக்கும் பகுதியில் வீடுகளை வாங்குகிறேன்” என கூறியுள்ளார். மேலும், “எனக்கு ஒரு தங்கை இருக்கிறார். அவரை என்னால் அதிக நாட்கள் பிரிந்து இருக்கவே முடியாது. எனவே தான் நான் செல்லும் இடங்களில் வீடுகளை வாங்கி வைத்துக் கொள்கிறேன். அவரையும் என் உடனே அழைத்து செல்கிறேன்” என கூறியுள்ளார். இவரின் காரணத்தை கேட்ட ரசிகர்கள் தங்கச்சி மேல அம்புட்டு பாசமா என இவரின் பாசத்தை மெச்சி வருகிறார்கள். இருந்தாலும் ஹோட்டல் பிடிக்கலனு வீடு வாங்குறதெல்லாம் கொஞ்சம் ஓவர் தான் என்று ஒருபுறம் பேசுகிறார்கள். Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
உழவு தொழிலுக்கு உறுதுணையாக இருக்கும் மாடுகளை போற்றும் வகையில் பாரம்பரியமுறையிலான மாட்டுப்பொங்கல் இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. விவசாயிகளின் அன்றாட வாழ்க்கையில் உழவு, போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகளில் ஒரு உற்றதுணையாக பயணிப்பவை மாடுகள். விவசாயிகள் தங்களது பெற்ற பிள்ளை செல்வங்களை பாதுகாப்பது போலவே மாடுகளையும் அன்றாடம் போற்றிப் பாதுகாத்து வருகின்றனர். ஆண்டுக்கு ஒரு முறை இன்னும் சீறும், சிறப்போடும் மாடுகளை வழிபடுவதற்காக பாரம்பரியமாக தை மாதத்தின் இரண்டாம் நாளன்று மாட்டுப் பொங்கல் விழா பாரம்பரியமாக கொண்டாடப்பட்டு வருகிறது. நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள் தை முதல்நாள் பொங்கல் என்றாலும் கூட கிராம புறங்களில் மாட்டுப்பொங்கல்தான் அதிவிமர்சையாக கொண்டாப்படுவது வழக்கமாகும். மாடுகளை குளிப்பாட்டி, கொம்புகளுக்கு வர்ணம் பூசி, புதுப்பானையில் பொங்கலிட்டு, மாடுகளை வழிபட்டு அவற்றுக்கு தித்திக்கும் பொங்கலை விவசாயிகள் புகட்டுவதும் வழக்கம். சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
ஏய் நானும் ஆறு மாசமா கேட்டுக்கிட்டு இருக்கறன். கொஞ்சம் கூட கருணை காட்டமாட்டேன்கிறியே நியாயமா?. நான் என்ன ஊர் உலகத்தல நடக்காததயா கேட்டன். அங்கப்பாரு அவுங்க எவ்ளோ சந்தோஷமா இருக்காங்க. அவளைப்பாரு அவனை ஏதோ கடிச்சி முழுங்கற மாதிரி பாக்கறா?. நீயும் இருக்கியே…. நீ உதை வாங்கப்போற. எதுக்கு. எங்கக்கா நீ ரொம்ப நல்லவன்னு சொன்னதால தான் உன்னை லவ் பண்றன். இந்த மாதிரி டார்ச்சர் பண்ண கட் பண்ணிடுவன். ஓவ்வொருத்தனும் நாலஞ்சி கரெக்ட் பண்ணி வச்சிக்கிட்டு லவ்வுங்கற பேர்ல லூட்டி அடிக்கறான். நான் எவ்வளவு ஒழுக்கமா நீ கிழிக்கற கேட்ட தாண்டாம நல்ல பிள்ளையா இருக்கன். நாம காதலிக்க ஆரம்பிச்சி ஒரு வருஷமாகப்போகுது. என்னைக்காவுது உன்னை தப்பா பாத்துயிருக்கனா. பாத்தாக்கூட பரவாயில்ல. நீ கேட்கறயே. என்னத்த பெருசா கேட்டுட்டாங்க. ஒரே ஒரு கிஸ் கேட்டன் அதுவும் கன்னத்தல. அவ அவ காதலன் கேட்கமாட்டாலான்னு ஏங்கறாளுங்க. நீ என்னடான்னா……… இங்கப்பாரு முடியாதுன்னா முடியாது தான். நான் உன்கூட வெளியில வந்ததே தப்பு. நீ அமிர்தி போகலாம்மான்னு கேட்கும் போதே யோசிச்சியிருக்கனும். இப்ப வந்து மாட்டிக்கிட்டன் என்றவள் அவள் தோள் மேல் சாய்ந்திருந்த என்னை பிடித்து தள்ளினால். அவள் அப்படி தள்ளியதும் கோபமாகி ஏய் இப்ப என்ன கேட்டுட்டன்னு தள்ளிவிடற. நான் கேட்டது தப்பு தான். உன்ன அழைச்சி வந்ததும் தப்பு தான் போதும்மா. இப்ப எதுக்கு கோப்படற. நான் ஏன் உன் மேலப்போய் கோபப்பட போறன். எனக்கு அதெல்லாம் பிடிக்காதுன்னா விடேன். ஏய் என்ன இப்படி சொல்ற. கல்யாணத்துக்கு அப்பறம் கூட கிடையாதா?. நம்ம காதலை வீட்ல ஏத்துக்கிட்டு கல்யாண ஏற்பாடு பண்ணட்டும் அதுக்கப்பறம் நீ போதும் போதும்ன்னு சொல்ற அளவுக்கு நீ விரும்பறப்படி தர்றன். அதுக்கு எப்படியும் இன்னும் இரண்டு வருஷத்துக்கு மேலாகுமே. ஏன் ஏன் அவ்ளோ நாள் என படப்படத்தாள். லூசா நீ. நமக்கு இந்த வருஷம் தான் காலேஜ் முடியுது. அதுக்கப்பறம் வேலைக்கு போய் ஒரு வருஷமாவுது சம்பாதிக்கனும். அதோட முக்கியம் நமக்கு நடக்கறதுக்கு முன்னாடி ப்ரியாவுக்கு கல்யாணமாகனும். ஆமாம்யில்ல. அதுக்கு தான் சொல்றன். நீ கொஞ்சம் கருணை காட்டனா நல்லாயிருக்கும். கோபமாக முகத்தை திருப்பி திரும்ப அந்த நினைப்புக்கு போகாத. சரி சரி. அதப்பத்தி பேசல. சரி அக்காக்கிட்ட என்ன சொல்லிட்டு வந்த. நீ வேற இப்பவெல்லாம் ப்ரியாக்கிட்ட நிறைய பொய் சொல்ல ஆரம்பிச்சிட்டன். ஏன்?. எல்லாம் காதலிக்க ஆரம்பிச்ச பிறகு தான். உன்ன சந்திக்க வர்றப்பயெல்லாம் ஏதாவது பொய் சொல்ல வேண்டியிருக்கு. ஜான்கிட்டயும் அடிக்கடி சமாளிக்கச்சொல்றன். அவன் நீயேப்போய் இப்பவே ப்ரியாக்கிட்ட சொல்லிடு. அதுக்கா தெரியவந்துச்சின்னா பிரச்சனையாகிடும்னு பயமுறுத்தறான். எனக்கும் அவளை ஏமாத்தறனேன்னு கஸ்டமாயிருக்கு. அதுக்கு. அவ நல்ல மூடுல இருக்கறப்ப நம்ம லவ் மேட்டர சொல்லிடலாம்னு இருக்கன். எதுவும் சொல்லாதுயில்ல என கேட்டவள் நான் பதில் சொல்லதைப்பார்த்து ஒரு நிமிடம் அமைதியாக இருந்தாள். மாம்ஸ் என மெல்லிய குரலில் அழைத்தவளின் முகத்தை உற்று நோக்கியதும் ஒ.கோயாகிடும்முள்ள என கேட்கும்போதே அவளின் குரல் உடைந்து போனது. ச்சீ விடு. அதெல்லாம் ஒன்னும் சொல்லமாட்டா. அவளை நான் சம்மதிக்க வைக்கறன் என்றேன். அவளிடம் தான் அப்படி சொன்னேனே தவிர மனதோ குழப்பமாத்தான் இருந்தது. அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல் கவியிடம் சகஜமாக பேசிக்கொண்டு மாலை அவளை வீட்டின் அருகே கொண்டும் போய்விட்டுவிட்டு வந்தேன். ஃபைக்கை தருவதற்காக ஜான் வீட்டுக்கு செல்லும் வழியில் எல்லாம் மனம் த்தளித்தது. லவ் மேட்டர ப்ரியாக்கிட்ட சொன்னா எப்படி எடுத்துக்குவா. நண்பனா பழகிட்டு இப்படி என் தங்கச்சியையே லவ் பண்றியே நியாயமான்னு கேள்வி கேட்டா என்ன பதில் சொல்றது. அது கேட்கலன்னாலும் அதோட அப்பவும், அம்மாவும் கேட்பாங்களே?. இதனால ப்ரியா பேசாமலே போய்ட்டா என நினைக்கும்போதே நெஞ்சி வெடித்துவிடும் போல் இருந்தது. ப்ரியா பிரச்சனையில்ல நான் தான் காதலிக்கறன்னு தெரிஞ்சா சந்தோஷத்தோடு ஏத்துக்கும் என சிறிது நேரத்தில் மனம் நம்பிக்கை தெரிவித்தது. ஜான் வீட்டில் இல்லை வண்டியை பார்க் செய்துவிட்டு சாவியை தந்துவிட்டு ரூம்க்கு வந்துவிட்டேன். மறுநாள் காலை எப்போதும் போல் கல்லூரிக்கு நானும் அகிலனும் போகும்போது, எப்போதும் நாங்கள் அமரும் புங்கமரத்தின் கீழ் ப்ரியா மட்டும் தனியாக அமர்ந்திருந்தாள். தூரத்தில் இருந்து வரும்போதே தெரிந்தது. டைம் 9 தானே ஆகுது. அதுக்குள்ள ப்ரியா காலேஜ் வந்திருக்கா, ஏதாவது பிரச்சனையா என யோசித்தபடி நடக்க அகிலன் என்னடா சீக்கிரம் வந்துயிருக்கு என கேட்டபடியே வந்தான். வேகமாக ப்ரியாவிடம் சென்றதும் என்னை பார்த்ததும் அவளுக்கு எங்கிருந்து தான் அவ்வளவு கோபம் வந்ததோ தெரியவில்லை. பொறுக்கி நாயே, உன்ன செருப்பால அடிக்கறன் என எழுந்து வந்து கன்னத்தில் பளார், பளார் என அறைய நிலை குலைந்து போனேன். அவள் அடிப்பது ஒன்னும் புதியதல்ல. அவள் பேசிய வார்த்தைகள் என் நெஞ்சில் ஈட்டியைய் சொருகியது போல் இருந்தது. உன்னயெல்லாம் நம்பனன் பாரு. என்னையும் தான் அடிச்சிக்கனும் என அழுதுக்கொண்டே சூடாக பேசப்பேச கல்லூரிக்குள் வந்த சக மாணவ-மாணவிகள் நின்று இதனை வேடிக்கை பார்த்தனர். அருகில் இருந்த அகிலன் ப்ரியாவுக்கு பயந்து தூரவே நின்றான். என்னை ஏமாத்திட்ட நீ. உன்ன எவ்வளவு நம்பனன். என்கிட்ட எல்லாத்தையும் மறைச்சி, பொய் சொல்லி என்னை முட்டாளாக்கியிருக்கற என அழுதவள் இனிமே என் மூஞ்சியிலயே முழிக்காத என்றபடி அழுதுக்கொண்டே க்ளாஸ்க்கு போனால். அவள் பேசிய பேச்சின் அதிர்ச்சியில் இருந்து மீள 5 நிமிடமானது. மச்சான் என்னை மன்னிச்சிடுடா என்ற ஜானின் குரலை கேட்டதும் தான் சுய நினைவுக்கு வந்தேன். நேத்து மதியம் நானும் தேவியும் சினிமாவுக்கு போறதப்பத்தி பேசிக்கிட்டு இருந்தோம். அப்ப ப்ரியாவும் கூடயிருந்தது. ப்ரியா அடிக்கடி எங்களை கிண்டல் செஞ்சதா அந்த டென்ஷன்ல அதுங்கக்கிட்ட உன் லவ் மேட்டர சொல்ல வேண்டியதாகிடுச்சி என இழுத்தான். அது என்னை அடிச்சிட்டு திட்டும்போதே புரிஞ்சது. லேட்டா தெரிய வேண்டியது இப்ப தெரிஞ்சிடுச்சி. நானா சொல்லியிருந்தா பிரச்சனை சின்னதா இருந்திருக்கும். நீ சொன்னதால பெருசாகிடுச்சி. விடு இனிமே அடுத்து என்ன பண்றதுங்கறத்தான் யோசிக்கனும் என அவனுக்கு சமாதானம் சொல்லிவிட்டு அந்த சிமெண்ட் பெஞ்சில் அமர்ந்தேன். நேத்து சொன்னன்ங்கற அப்ப கவிதாக்கிட்ட ஏதாவது கேட்டுயிருக்குமா?. டேய், அதுக்கூட பரவாயில்ல. அவுங்க அப்பா-அம்மாக்கிட்ட சொல்லயிருந்தா? அதெல்லாம் அது சொல்லாது என்றதும் அமைதியானான். வகுப்புக்கு போகவே பிடிக்கவில்லை. அங்கேயே அமர்ந்திருந்தேன். ஜானும் க்ளாஸ்க்கு போகவில்லை. அகிலனும் கூடவேயிருந்தான். மதியம் லஞ்ச் டைமில் எங்களை க்ராஸ் செய்துக்கொண்டு போன ப்ரியா நாங்கள் இருந்த அந்த சிமெண்ட் பெஞ்ச் பக்கம் திரும்பவேயில்லை. எனக்கும் சாப்பிட பிடிக்காவில்லை. அங்கு வந்த தயா, ரமேஷ் இருவரும் என்னடாச்சி என கேட்க ஜான் தான் சொன்னான். ஒழுங்கா உண்மைய சொல்லு. உன் லவ்வப்பத்தி ப்ரியா இவன்கிட்ட சொன்னதுக்கு பழிக்கு பழி வாங்க இவன் லவ்வப்பத்தி அதுங்கிட்ட போட்டு தந்துட்டியா என்றதும் சத்தியமா இல்லடா என்றான். மாலை எல்லோரும் காலேஜ் விட்டு போகும்போதும் அங்கேயே அமர்ந்திருந்தேன். அப்போதும் ப்ரியா என்னை உதாசீனப்படுத்தி விட்டுபோனால். அவள் என்னை உதாசீனப்படுத்தியது தான் என் நெஞ்சில் நெருப்பாய் சுட்டது. இரவு சாப்பிட பிடிக்கவில்லை இருந்தும் அகிலன் தான் கட்டாயப்படுத்தி சாப்பிட வைத்தான். அதற்கடுத்த மூன்று நாட்கள் ப்ரியாவை பார்க்கவே முடியவில்லை. மனம் வெறுத்துப்போய் சைக்கிள் ஸ்டான்டீல் அமர்ந்திருந்தபோது, ஜான் தேவியோடு அருகே வந்து எதிரே நின்றார்கள். ஒருவருக்கொருவர் பேசாமல் அமைதியாக இருந்ததும் தேவியே, அன்னைக்கு தெரியாமத்தான் சொல்லிட்டான் என்றதும் அவனை முறைத்தப்படி இங்கப்பாரு தேவி யார் சொன்னாங்கங்கறது பிரச்சiயில்ல. சொல்லிட்டான். வேணும்னே சொன்னான்னு நான் சொல்லல. எனக்கு அந்த நினைப்பும் வரல. பசங்க அவனை கிண்டல் பண்ணிக்கிட்டு இருந்தான்ங்க. நான் அத பெருசா எடுத்துக்கல. சொல்றதாயிருந்தா அவன் எப்பவோ சொல்லியிருக்கலாம். அதவிட்டுட்டு இப்ப சொல்லியிருக்கான்னா ஏதோ டென்ஷன்ல சொல்லியிருப்பான். அதனால அது இப்ப பிரச்சனையில்ல. இத எப்படி சால்வ் பண்றதுங்கறது தான். அவக்கிட்ட பேசிப்பாத்தன். நீ அவளை ஏமாத்திட்டன்னே சொல்லிக்கிட்டு இருக்கறா. கவிதாக்கிட்டயும் பேசறதில்ல என்ற தேவியிடம். இன்னைக்கு வெள்ளிக்கிழமை தானே கோயிலுக்கு ஒரு ஏழு மணிக்கா அழைச்சிக்கிட்டு வா நான் பேசிப்பாக்கறன். ம் என தலையாட்டிவிட்டு கிளம்பி சென்றது. 6:30க்கே கோயில் உள் பிரகராத்தில் உள்ள விநாயகர் சந்நதியில் அமர்ந்திருந்தேன். கொஞ்ச நேரத்தில் தேவியும் ப்ரியாவும் வந்தனர். ப்ரியா என்னைப்பார்த்தும் கோபமாகி தேவியை முறைத்தாள். ஏதோ பேசனும்ன்னான் அதான் என இழுத்தவள் என்னன்னு தான் கேளேன் என்ற தேவி நான் ப்ரியாவின் அருகே போனதும் தேவி எங்களை தனியே விட்டுவிட்டு போனது. நான் அவள் முன் தலை குனிந்து நின்றபடி நான் பண்ணது தப்பு தான் ஸாரி என்றதும் கோயில் என பார்க்காமல் பளார் என அறைந்தாள். அவள் முகம் முழுக்கவே கோபமாகயிருந்தது. ஒரு நிமிடம் தயங்கி அவ உன் தங்கச்சின்னு தெரியாமத்தான் ஒயிட் கலர்ன்னு சொல்லுவேனே அது கவிதாத்தான். அன்னைக்கு நீ அறிமுகப்படுத்தனப்ப தான் அது உன் தங்கச்சின்னு தெரியும். இருந்தும் மனசு கேட்கல. அதான் லவ் பண்றன்னு சொன்னன். அவுங்களும் ஏத்துக்கிட்டாங்க. நான் உங்கிட்ட சொல்லிடலாம்ன்னு பாத்தன். அதுக்குள்ள அவன் சொல்லிட்டான். ஒரு வருஷமா உங்களுக்கு தோணலையோ. இல்ல……… அது வந்து என தடுமாறியதும் திரும்பவும் பொய் சொல்ல முயற்சி பண்ணாத என்றவளிடம். காலேஜ் வரலியா அதான் கோயிலுக்கு வந்தன். நான் காலேஜ் வந்தன். உன் மூஞ்சியிலயே முழிக்ககூடாதுன்னு தான் நீ இருக்கற பக்கமே வரல. இதைக்கேட்டதும் அதிர்ச்சியாகி கண்ணீல் நீர் தளும்பியது. எங்கே மடை திறந்த வெள்ளமாய் கண்ணீர் அருவியாய் கொட்டிவிடுமோ என பயந்து அiதியாக அழுகையை அடக்கிக்கொண்டு இருந்தேன். அமைதியை பயன்படுத்திக்கொண்டு ப்ரியா என்னை விட்டுவிட்டு நடந்து போய்க்கொண்டிருந்தாள். கோயிலின் உயரமான மதில் சுவர் மீது சாய்ந்துக்கொண்டு எவ்வளவு நேரம் தான் நின்றிருந்தேன் என நினைவில்லை. மழை தூரல் விழும்போது தான் நினைவுக்கு வந்து மழையிலேயே நனைந்தப்படி ரூம்மை நோக்கி நடந்தபோது, என் மூகத்தையே பாக்ககூடாதுங்கற அளவுக்கு என் மேல வெறுப்பா என கண்ணீர் மழை நீரில் கலந்து போனது. மறுநாள் கவிதா காலேஜ் போகும்முன் பேருந்து நிலையத்தில் அவளை பார்த்தபோது, உங்கக்குக்கு லவ் மேட்டர் தெரிஞ்சிடுச்சி என்றதும் அதிர்ச்சியாகி அதான் பேசறதில்ல போல என்றவள் வீட்ல யார்க்கிட்டயும் சொல்லல என்றாள். தனியா வந்து சந்திக்காத வெள்ளிக்கிழமை கோயில்ல சந்திப்போம், அவசரம்ன்னா தேவிக்கிட்ட சொல்லிவிடு இல்ல ரூம்க்கு வா எனச்சொல்லிவிட்டு வந்தேன். அடுத்தடுத்து வந்த நாட்களில் காலேஜ் வளாகத்தில் அவளை சந்திக்கும் நிமிடங்களில் என்னை தவிர்த்துவிட்டு போக தொடங்கினால். நித்தம் நித்தம் சந்தித்துக்கொண்ட எங்களது பொழுதுகள் இப்போது வீணாககிடந்தன. மச்சான். காலேஜ் முடிய இன்னும் 3 மாசம் தான் இருக்கு. எப்படியாவது இப்பவே சமாதானப்படுத்திடு. இல்லன்னா அப்பறம் கஸ்டமாயிடும் என்ற ஜான். கவி உன்ன பாக்கனும்மாம் ஈவ்னிங் பஸ் ஸ்டாப்ல வெயிட் பண்ணச்சொல்லுச்சாம். ம். எனச்சொல்லிவிட்டு அவனிடமே ஃபைக் வாங்கிக்கொண்டு ரூம்க்கு வந்துடு எனச்சொல்லிவிட்டு கிளம்பினேன். மனம் ப்ரியாவை எப்படி சமாதானம் செய்வது என்ற நினைப்பிலேயே போக ஃபைக் பொய்கையை தாண்டி போய்க்கொண்டுயிருந்தது. திடீரென விழிப்பு வர ஹய்யோ ரொம்ப தூரம் வந்துட்டமே என யூ டர்ன் அடிக்க திரும்பிய போது தான் அது நடந்தது. எதிரே வந்த ஒரு கார் அப்செட்டாகி மரத்தின் மீது மோதியது. டிரைவர்க்கு பலத்த காயமாக இருக்க காரில் இருந்த ஒருவர் தூக்கி வெளியே வீசப்பட்டார். இதனை பார்த்து வண்டியை நிறுத்தவிட்டு ஓடியபோது கல் தடுக்கி கீழே விழுந்து எழுந்து ஓடிப்போய் பார்த்தபோது அவரின் தலை, முகம்மெல்லாம் அடிப்பட்டு உயிருக்கு போராடிக்கொண்டுயிருந்தார். அவரை தூக்கி சார் சார் என அழைத்தபோது உம் கொட்டினார். கூட்டம் கூட சிலர் ஆம்புலன்ஸ்க்கு தகவல் தந்தனர். இவருக்கு பிளட் ரொம்ப லீக்காகுது. இவரை இப்படியே விட்ட ஆம்புலன்ஸ் வர்றதுக்குள்ள இறந்துடுவாரு. யாராவது ஹெல்ப் பண்ணா இவரை ஆஸ்பத்திரியில சேர்த்துடலாம் என்றபோது, இது போலிஸ் கேஸ் என பயந்து ஒதுங்கினர். யாராவது இவரை புடிச்சிக்கிட்டு ஆஸ்பத்திரி வரை வந்தா போதும்ங்க என்றதும் ஒரு இளைஞர் மட்டும் முன் வந்து நான் வர்றன்ங்க என்றார். நான் டூவீலரை கொண்டு வந்து அவரை தூக்கி உட்கார வைத்துவிட்டு சி.எம்.சி போறன் போலிஸ்காவுது தகவல் சொல்லிடுங்க, ஆம்புலன்ஸ் வந்தா டிரைவரை அதல ஏத்தி அனுப்புங்க எனச்சொல்லிவிட்டு வேகவேகமாக வந்து சி.எம்.சியில் அவரை சேர்த்தேன். கொஞ்ச நேரத்தில் ஆம்புலன்ஸ் ஒன்று வர அதிலிருந்து அந்த டிரைவரை இறக்கி கொண்டும் போனார்கள். ஆஸ்பத்திரியில் பெயர் கேட்க எதுவும் தெரியாது சார் வர்ற பொய்கையாண்ட கார் ஆக்சிடன்ட்டாகி தூக்கி வெளிய வீசப்பட்டாரு. உயிருக்கு போராடனதால கொண்டு வந்தோம் என்றதும் அவர் சிகிச்சைக்கு தர தொடங்கினர். போலிஸ் வந்து கேட்டதும் பார்த்ததை சொன்னதும் ஆக்சிடன்ட் நடந்த இடத்தை குறித்துக்கொண்டு கிளம்பினார்கள். மறுநாள் விடியற்காலம் அவர் கண் விழித்ததும், உங்க டிரைவர் பரவாயில்ல சார் பக்கத்து வார்டுல தான் இருக்கார். அவர் உங்க வீட்டு தொலைபேசி எண் தந்தாரு. வாங்கி தகவல் சொல்லிட்டன். உடம்ப பாத்துக்குங்க நான் கிளம்பறன் என்றதும் கையை பிடித்து தேங்க்ஸ் என்றவர் நான் பெங்களுர், என் பேர் இராஜேஷ்கவுடா என பேச தொடங்க அவரை பேச விடாமல் தடுத்து சார் நீங்க தூங்குங்க. நான் முடிஞ்சா அப்பறம் வந்து உங்கள சந்திக்கறன் எனச்சொல்லிவிட்டு கிளம்பிவிட்டேன். ரூம்க்கு போகும்போது கவிய சந்திச்சிடலாம் என பஸ் ஸ்டாப்பில் நின்றபோது சரியாக அதே நேரம் அவளும் வர நேத்து வரச்சொன்னதுக்கு இப்ப வர்ற. பாக்கத்தான் வந்தன். வண்டி ரிப்பேர் அதவிடு. என்ன விஷயம். அக்காவுக்கு மாப்பிளை பாக்கறாங்க. மாப்பிளையா அதுக்குள்ள என்ன அவசரம். தேரியல. சோந்தக்காரங்க மூலமா வந்தது நல்லயிடம்ன்னு சொன்னதால ஜாதகம் பாக்க ஆரம்பிச்சியிருக்காங்க அதச்சொல்லத்தான் வரச்சொன்னன். நல்ல விஷயம் தான். இப்ப என்ன உங்கிட்ட பேசுதா. ம். எப்பவாவுது பேசது எனும்போதே பஸ் வந்துவிட்டது. நானும் ரூம்க்கு போய் குளித்துவிட்டு காலேஜ் போனதும் எங்கடா போன, நைட்டெல்லாம் உன்ன தேடிக்கிட்டுயிருந்தோம் தெரியுமா. ஒன்னும்மில்லடா எ னநடந்தை சுருக்கமாக சொன்னதும் பொதுசேவை உனக்கு எதுக்குடா என ஜான் முறைத்தான். அத விடு ப்ரியாவுக்கு மாப்பிளை பாக்கறாங்களாம். அதுக்குள்ளவா யார் சொன்னது. கவிதா தான். சரி விடு. உனக்கு ரூட் கிளியர் ஆனா சரிதான் என்றான். நாட்கள் போனதே தெரியவில்லை. ப்ரியா சிலமுறை நான் இருக்கும் பக்கம் வருவாளே தவிர பார்க்கவே, பேச முயற்சிப்பதில்லை. நான் முயன்றும் தோல்வியிலேயே இருந்தது. தேர்வுக்கு ஒரு வாரம் இருக்கும் நிலையில் தான் ப்ரியாவிடம் கேட்டேன். இன்னும் எத்தனை நாளைக்கு தான் உங்க கோபம். மன்னிப்பு கேட்டா அடிக்கற. தப்பு பண்ணிட்டன்னு நான் தான் ஒத்துக்கறன்யில்ல அப்பறம்மென்ன என்றதும் சைலண்டாக இருந்தவளிடம், வாழ்த்துக்கள் என்றதும் தலையை நிமிர்ந்து பார்த்தாள். தொடரும்……………… சுகமான சுமைகள்..........24 Posted by Rajpriyan கருத்துகள் இல்லை: இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Twitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர் வெள்ளி, ஏப்ரல் 27, 2012 தண்ணீர் மார்பகங்கள். இந்த வாரம் இந்தியா டுடேவில் பிரச்சுரம்மாகியுள்ள சிலிக்கான் மார்பகம் பற்றிய ஒரு கட்டுரையை படித்தபோது சில ஆச்சர்யத்தையும் அதிர்ச்சியையும் தந்தது. என்னவென்றால், உலகம் மாறியப்பின் அதன் நுகர்வை இந்தியா அதிகமாகவே நுகர தொடங்கியுள்ளது. அதிலும் குறிப்பாக இந்திய ஒன்றியத்தில் கர்நாடகா, தமிழ்நாடு, மகாராஷ்ட்டிரா, டெல்லி, ஆந்திரா போன்ற சில மாநிலங்கள் அதிகளவில் விளம்பர மோகத்தில் விழுந்து பன்னாட்டு மோகத்தில் விழுந்துள்ளனர். அதாவது 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்கா, பிரான்ஸ், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் உள்ள மாடலிங் மற்றும் சினிமாவில் நடிக்கும் பெண்கள் விளம்பர நிறுவனங்கள் ஆசைப்படுவது போல உடல் அமைப்பை சிக்காக வைத்துக்கொள்ள வேண்டும் என்பது விதி. ஆதனால் காலப்போக்கில் ‘உலர்ந்து’ போகும் தங்களது மார்பகங்களை ஆப்ரேஷன் மூலம் ‘உலராமல்’ வைத்துக்கொள்கின்றனர். மேற்கத்திய நாடுகளில் சகஜமாக இருந்தது இது. 1995க்கு பின் இந்த தாக்கம் இந்தியாவுக்குள் நுழைந்துள்ளது. அதற்கு முன் இந்தியாவில் உள்ள மாடலிங், சினிமாத்துறையில் உள்ள சிலர் வெளிநாடுகளில் போய் தங்களது உலர்ந்த மார்பகங்களை அழகு படுத்திக்கொண்டு வந்தனர். இப்போது இந்தியாவில் இந்த மாற்றம் சர்வ சாதாரணமாக நடந்து வருகிறதாம். ஆண்டுக்கு 5 லட்சம் நங்கைகள் இந்த ஆப்ரேஷன் மூலம் தங்களது மார்பகங்களை அழகு படுத்திக்கொள்கிறார்கள் என ஒரு புள்ளி விவரம் தெரிவிக்கிறது. உடல் அளவு அதாவது ஒல்லியாக உள்ள பெண்களுக்கு ஒரளவும், சதை பிடிப்பாக உள்ள பெண்களுக்கு அதற்கு ஏற்றாற் போல் தான் மார்பகங்கள் இருக்கும். இந்த அளவு பத்தாது என்றும், தனக்கு சிறியதாக இருக்கிறது என்றும், மார்பகத்தை வைத்து தான் ஆண்கள் தங்களை ரசிக்கிறார்கள் என முடிவு செய்து நடுத்தர மற்றும் மேல்தட்டு வர்க பெண்கள் தங்களது மார்பகங்களை அழகாக்க அதற்கான க்ரீம் மற்றும் ஆப்ரேஷன் மூலம் செம்மை படுத்திக்கொள்கிறார்கள். அறுவை சிகிச்சை செய்து பெண்களின் மார்பகத்துக்குள் தண்ணீர் போன்ற சிலிக்கான் போன்ற சவ்வை கொண்டு விருப்பமான அளவுக்கு ஏற்றாற்போல் அந்த சவ்வை உள் மார்பகத்தில் வைத்து தைத்துவிடுகிறார்களாம். ஐதயல் போட்டது தெரியாது. வெளியே இருந்து பார்த்தால் பலுன் போல் ஊதிக்கொண்டு இருக்கும். இதனைக்கொண்டு தான் சில நடிகைகள் மற்றும் மாடலிங் பெண்கள் தங்களை கிக்காக காட்டிக்கொள்கிறார்கள். இவர்களுக்கு போட்டியாக இன்றைய மேல்தட்டு இளைஞர்கள் தங்களது உடலை அழகு படுத்திக்கொள்ள தொடங்கியுள்ளார்கள். நங்கைகளுக்கு மார்பு பெரியதாக, சிக்காக காட்ட அறுவை சிகிச்சை என்றால், இளைஞர்க்ள தங்களது மார்பு பகுதியில் உள்ள அதிகப்படியான சதைகளை அகற்ற மருத்துவர்களிடம் வருகிறார்களாம். அதாவது புகைப்படங்களை காட்டி பாடிபில்டர், சிக்ஸ்பேக் போல் உடலை வைத்துக்கொள்ள அறுவை சிகிச்சை செய்துக்கொள்கிறார்களாம். இதில் உலகில் இந்தியா நான்காவது இடத்தில் உள்ளதாக புள்ளி விவரம் கூறியுள்ளது. உடல் பல புதிர்களை கொண்டது. ஒவ்வொருவரின் வேலை, அவர்களது உணவு, உடற்பயிற்சி போன்றவற்றுக்கு ஏற்றாற்போல் தான் உடல் அமையும். அதனை சிகிச்சைகள் மூலம் மாற்றிக்கொள்ள முயல்வது ஆபத்தானது. உடலை நம் விருப்பத்துக்கு மாற்றிக்கொள்ள இயற்கையாகவே பல வழிகள் உள்ளன. உணவு முறையில் கட்டுப்பாடு, வேலைகள் செய்வதன் மூலம் மாற்றமடையும். அப்படியிருக்க இளம் தலைமுறை செயற்கையாக தங்களது உடலை அழகு படுத்திக்கொள்ள நினைப்பது ஆபத்து என்பதை உணர்வார்களா?. Posted by Rajpriyan 2 கருத்துகள்: இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Twitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர் புதன், ஏப்ரல் 25, 2012 கடத்திய மாவோயிஸ்ட்டுகள் தீவிரவாதிகளா?. சத்திஸ்கர் மாநிலத்தில் சுக்மா மாவட்டத்தின் ஆட்சித்தலைவராக பணியாற்றிய அலெக்ஸ்பால்மேனனை நக்சல்கள் கடத்தியுள்ளனர். ஒரிசா மாநில எம்.எல்.ஏ ஜினாஜிகா, இத்தாலி நாட்டை சேர்ந்த சுற்றுலா பயணிகள் இருவர் கடத்தப்பட்டபோது மாவோயிஸ்ட்டுகள் நாங்கள் தான் கடத்தினோம் என அறிவித்தனர். இருந்தும் ஆதிக்க மனப்பான்மை கொண்ட மீடியாக்கள் தீவிரவாதிகள் கடத்தியுள்ளார்கள் என அலறி வருகின்றன. மாவோயிஸ்ட்டுகள் கடத்தியுள்ளார்கள் மறுப்பதற்க்கில்லை. அதிகாரத்தில் உள்ளவர்களை கடத்தியவுடன் எப்படி அவர்கள் எப்படி தீவிரவாதிகளாக மாறினார்கள் என தெரியவில்லை. கடத்தல் பற்றி மட்டும் தான் பேசுகிறார்களே ஒழிய எதனால், எதற்காக கடத்தினார்கள் என ஆராய மறுக்கிறார்கள். மாவோயிஸ்ட்டுகள் பணம் சம்பாதித்து கோட்டை, கோபுரம் போன்று மாளிகைகள் கட்டி சொகுசாக வாழ துப்பாக்கி ஏந்தி போராட வந்தவர்களில்லை. ஆண்டாண்டு காலமாக பழங்குடியின மக்களும், ஆதிவாசிகளும் வாழ்ந்து வரும்மிடத்தை கனிம வளங்கள் வெட்டியெடுக்க பன்னாட்டு கம்பெனிகளுக்கும், தரகு முதலாளிகளுக்கும் லட்ச கணக்கான ஏக்கர் காட்டை, நிலத்தை சொற்ப விலைக்கும், குத்தகைக்கும் தந்து வருகிறது அரசு. அதைத்தான் அந்த மக்கள் எதிர்க்கிறார்கள். உண்ண உணவில்லை, உடுத்த உடையில்லை, இருக்க இடம்மில்லை, மருத்துவமனைகள் இல்லை, சாலைகள் இல்லை, மின்சாரம்மில்லை இப்படி பலப்பல இல்லைகள். இதை கேட்கும் அம்மக்களுக்கு கிடைப்பது துப்பாக்கி குண்டுகள் தான். தன் சொந்த நாட்டு மக்களை பணத்துக்காக சுட்டுக்கொல்லும் முதலாளித்துவ அரசாங்கத்தை எதிர்த்து போராட தொடங்கியபோது அதில் தங்களது உறவினரை, உடன் பிறந்தவர்களை இழந்தவர்கள் இவர்கள் என்பது வேதனையான ஒன்று. தன் சந்ததியை காக்க இந்த முதலாளித்துவ கொள்ளைக்கார பன்னாட்டு முதலாளிகளுக்கான அரசை எதிர்த்து நடத்தும் போராட்டத்தில் கலந்துக்கொண்டு அம்மக்கள் போராளிகளாக மாறியுள்ளார்கள். அவர்களுக்கு இந்த முதலாளிக்களுக்கான அரசாங்கம் நக்சல், மாவோயிஸ்ட் என்ற முத்திரை குத்துகிறது. ஆதிக்க மீடியாக்கள் தீவிரவாதிகள் என்கின்றன. இந்த பன்னாட்டு தரகு முதலாளிகளின் தொழிலை பாதுகாக்கவே அரச படைகள் களம்மிறக்கப்பட்டு போராடும் பழங்குடி, ஆதிவாசி, கிராம பாமர மக்கள் மீது வெறியாட்டம் நடத்துகின்றன. பாலியல் வல்லுறவு செய்வது, தப்பு செய்யாதவனையும் துன்புறுத்தி கொல்வது, வீடுகளுக்கு தீ வைத்து கொளுத்துவது என அடுக்கடுக்கான தவறுகள் செய்கின்றன. மாவோயிஸ்ட்டுகளுக்கு உதவுகிறார்கள் என்ற போர்வையில் நூற்றுக்கணக்கான இளைஞர்கள், பெண்கள், இளைஞிகள் சிறையில் சித்ரவதைகளை அனுபவிக்கின்றனர். இதனை கேட்க எந்த நாதியும் இல்லை. இந்த குற்றச்சாட்டுகளுக்கு இதுவரை பதில்யில்லை, தண்டனையில்லை. இப்போது கூட தங்களது சகாக்களை மீட்கவே எம்.எல்.ஏவை, கலெக்டரை கடத்தியுள்ளார்கள். அவர்கள் கடத்தப்பட்டதும் ஏழைக்காக பேசுகிறோம் என மனித உரிமை பேசிய சிலரின் முகமுடிகள் இந்த விவகாரத்தின் போது கிழிந்தது. சத்திஸ்கர் அரசு மீட்பு குழு அமைத்ததில் சமூக சேவகர் என தன்னை பிரகடனப்படுத்திக்கொண்ட வழக்கறிஞர் பிரஷாந்த்பூஷன் நான் கலெக்டரை விடுதலை செய்தால் தான் பேச்சுவார்த்தைக்கு போவேன் என அறிவித்துள்ளார். அவரை தூதுவராக போகச்சொல்வதே கடத்தப்பட்டவரை மீட், அவர்களின் பிரச்சனைகளை வெளியுலகத்துக்கு அறிவிக்க வேண்டும், அரசாங்கத்திடம் சொல்ல வேண்டும் என்பதற்காக தான். ஆனால் இவர் சொல்கிறார் முதலில் விடுதலை செய் பின் உன்னுடன் பேசுகிறேன் என்று. இதில் இருந்து புரிவது அவரின் எண்ணமும் மாவோயிஸ்ட்டுகள் தீவிரவாதிகள் என்றே உள்ளது. அவர் மட்டுமல்ல, இந்திய ஒன்றியத்தில் சிலரை தவிர மற்ற அனைத்து தளத்தில் உள்ளவர்களும் நக்சல் தீவிரவாதிகள் என எண்ணி அவர்கள் பிரச்சனைப்பற்றி பேச மறுக்கின்றனர். நக்சல்கள், மாவேயிஸ்ட்டுகள் என பலப்பெயர்களில் பிரிக்கப்பட்டு நசுக்கப்படும் இப்போராளிகள், இன்றைய ஆதிக்க சக்திகளிடம் உள்ள மீடியாக்கள் கூறுவதுபோல் தீவிரவாதிகள்ள. தங்களது வாழ்வாதார பிரச்சனைக்காக பல முறை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைக்கு வந்தவர்கள். அப்படி பேச்சு வார்த்தைக்கு வந்தவர்களை நயவஞ்சகமாக சுட்டுக்கொன்றது இந்த முதலாளித்துவ அரசுகள். அவர்களுக்கு ஆதரவு தந்த அவர்களின் உண்மையான பிரச்சனைகளை மக்கள் மன்றத்துக்கு கொண்டு வர போராடிய ஆஸாத், ஷேமச்சந்திரபண்டே போன்றோரை சுட்டுக்கொன்றது பாதுகாப்பு படைகள். அவர்கள் மட்டுமல்ல, மாவோயிஸ்ட் கள தளபதிகளில் ஒருவரான கிஷன்ஜீயை நயவஞ்சகமாக தங்களது இடத்துக்கு வரவைத்து சித்திரவதை செய்து சுட்டுக்கொன்றனர். இப்படிப்பட்ட தவறுகளை மறைத்து மாவோயிஸ்ட்டுகள் தீவிரவாதிகள் என முதலாளித்துவ அரசாங்கமும், மீடியாக்களும் அலறினாலும் பாதிக்கப்படும் மக்கள் நக்சல்களாகவோ, மாவோயிஸ்ட்டுகளாகவே மாறிக்கொண்டு தான் இருப்பார்கள். அரசாங்கங்கள் தங்களது நிலைமைய அதாவது கொள்கையை மாற்றிக்கொள்ளாத வரை இது தொடரத்தான் செய்யும். Posted by Rajpriyan 1 கருத்து: இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Twitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர் சனி, ஏப்ரல் 21, 2012 வட இந்தியன் ஊழல் செய்தால் தப்புயில்லை. ஸ்பெக்ட்ராம் விவகாரத்தை மீடியாக்கள் அலசியது போல மத்தியரசின் நிலக்கரி ஊழல், கச்சா எண்ணெய் ஊழல், 4ஜீ ஊழல் போன்றவற்றை அலசமறுக்கின்றன. அது ஏன் என்பது தான் தெரியவில்லை. குறிப்பிட்ட ஊழல்கள் 2ஜியை விட பெரியது. அதாவது நிலக்கரி இறக்குமதியில் 10 லட்சம் கோடி, இஸ்ரோவில் 2 லட்சம் கோடி, இயற்கை எரிவாயு கண்டறிதலில் 4லட்சம் கோடி ஊழல் நடந்துள்ளதாக மத்திய தணிக்கை துறை கூறியுள்ளது. ஆனால் இவைகளைப்பற்றி எந்த மீடியாவும் வாய் திறக்க மறுக்கின்றன. ஏன் 2ஜீ ஊழல் ஊழல் என ஊழலுக்கு எதிர்ப்பாக உண்ணாவிரதம், போராட்டம் என களம்மிறங்கி கூப்பாடு போட்ட அன்னாஹசாரே, பாபாராம்தேவ், பிரசாந்த்பூசன், கிரன்பேடி போன்றவர்கள் இப்போது எங்கு இருக்கிறார்கள் என தெரியவில்லை. நிலக்கரி ஊழல். 2004 முதல் 2009 வரை நாட்டில் நிலக்கரி சுரங்கங்கள் தோண்டும் பணிக்கு 100 நிறுவனங்களுக்கு 155 சுரங்கங்கள் விடப்பட்டுள்ளன. இந்த ஒதுக்கீடு ஏல முறையில் இல்லாமல் விரும்பியபடி தரப்பட்டுள்ளன. இதனால் 10லட்சத்து 36 அயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பாராளமன்றத்தின் இரு அவைகளிலும் பிரச்சனையாகியுள்ளது. இயற்கை எரிவாயு கிருஷ்ணா கோதாவரி ஆற்றுப்படுக்கையில் இயற்கை எரிவாயு வயல்களை கண்டறியவும், ஆழ்துளை கிணறு அமைக்கும் பணிக்கான ஒப்பந்தத்தை ரிலையன்ஸ் எனர்ஜி நிறுவனம் எடுத்துள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் அதற்கான செலவுகளை அரசாங்கம் செய்யும். கண்டுபிடிக்கப்பட்டப்பின் அதை வெளியே எடுத்து சுத்திகரித்து விற்கப்படும் போது லாபத்தில் பங்கு இதுதான் ஒப்பந்தம். ஆற்றுப்படுக்கையில் எரிவாயு கண்டறிய முயன்ற ரிலையன்ஸ் பலயிடங்களில் இல்லை என்றும், சிலயிடங்களில் குறைந்த அளவே உள்ளது என பதில் சொன்னது. அதோடு, இதற்கான பணிச்செலவில் ஓப்பந்தத்தில் குறிப்பிட்ட தொகையை விட மூன்று மடங்கு அதிகமாக செலவுகளை குறிப்பிட்டு ‘பில்’ தந்து நிதியினை பெற்றுள்ளது. இதைத்தான் தவறு என சி.ஏ.ஜீ அறிக்கை தப்பு நடந்துள்ளது என சுட்டிக்காட்டுகிறது. ஆரசின் பொதுத்துறை நிறுவனம் எண்ணெய் வயல்களை கண்டறியும் நுட்பமும் வசதியும் அதனிடத்தில் உண்டு. தூர நாடுகளுக்கு சென்றும் அரசின் நிறுவனங்கள் செய்கின்றன. அப்படியிருக்க தனியார் விட்டதால் தான் சமார் 4 லட்சம் கோடி இழப்பு என்கிறது. இஸ்ரோ விஞ்ஞானிகள் நடத்திய ஊழல். இந்தியாவின் இஸ்ரோ விஞ்ஞானிகள் சிலர் தோன்றி விண்ணில் ராக்கெட் ஏவப்பட்டது என எப்போதாவது தகவல்கள் தருவார்கள். அதன்பின் அந்த ராக்கெட் பற்றியோ, செயற்கைகோள் பற்றியோ பொதுமக்களுக்கு தகவல்கள் தரப்படமாட்டாது. அதேபோன்று தான் அதற்கான கணக்குகளும். ஏவ்வளவு செலவு செய்து இந்த ராக்கெட்டையும், செயற்கைகோளையும் உருவாக்கினிhகள் என கேட்டால் சுட்டுப்போட்டாலும் அரசு பதில் தராது. அப்படிப்பட்ட நிறுவன விஞ்ஞானிகள், நாட்டின் விசுவாசிகள் என வாணிக்கப்டுபவர்கள் ஸ்பெக்ராம் ஒதுக்கீட்டில் தனியார் நிறுவனத்துக்கு மிக குறைந்த விலைக்கு தந்து 2லட்சம் கோடிக்கு ஊழல் செய்துள்ளார்கள். இத்தனைக்கும் இந்த துரை பிரதமரின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள துறை. இப்படி கோடிகளில் கொள்ளையடிக்கப்பட்ட தகவல்கள் 2ஜி விவகாரத்துக்கு பின் வெளியே வந்துள்ளது. இவைகள் எல்லாமே 2ஜியை விட அதிகமான ஊழல்கள். ஆனால் இதுப்பற்றி மீடியாக்களும் பேச மறுக்கின்றன. நாங்கள் நேர்மையாளர்கள் என வேஷம் போடும் மத்திய புலனாய்வுத்துறையும் கண்டுக்கொள்ளவேயில்லை. உச்சநீதிமன்ற நீதிபதிகள் பார்வைக்கு இவைகள் போகவேயில்லை போல. ஊழல் யார் செய்தாலும் தவறுதானே. ஆப்படியிருக்க ராசா விவகாரத்தில் நோண்டி நுங்குயெடுத்தவர்கள் இதில் ஏன் கவனம் செலுத்த மறுக்கின்றன. அதற்கு காரணம் என் சிறு மூளைக்கு எட்டியவரையில், ஸ்பெக்ட்ராம் விவகாரத்தில் ராசா தலித் என்ற குற்றச்சாட்டு என்பது ஒரு புறமிருக்கட்டும். ராசா இந்தியாவில் உள்ள ரிலையன்ஸ், ஏர்டெல் போன்ற பெரும் முதலாளிகளுக்கு அடங்கி போகவில்லை. அவர்கள் தங்களது பண, அதிகார, வடஇந்திய செல்வாக்கை வைத்து அதை பூதாகரமாக்கினர். ஸ்பெக்ட்ராம் விவகாரத்தில் சிலர் சொன்ன பொய்களை வெளிச்சம் போட்ட மீடியாக்கள், நீதிமன்றத்தில் வாதத்தின் போது அவை சுக்கு நூறாக உடைகின்றன. இதனை கணாமல் வாய், காது, கண் ஆகியவற்றை மூடிக்கொண்டன. மீடியாக்கள் எழுதிய தீர்ப்பை தற்போது நீதிமன்றம் எழுதிவிடும் நிலையில் உள்ளது. மிகப்பெரிய ஊழல் என வர்ணித்தவர்கள் அதை விட அதிகமான ஊழல்கள் நடந்துள்ளன என அதே மத்திய தணிக்கை குழுதான் பட்டியல் போட்டு அறிக்கை தந்துள்ளது. ஆனால் அதுப்பற்றி பேச மறுக்க காரணம், அதே வடஇந்திய லாபி தான். அந்த ஊழல்களை கிளறினால் சிக்குவது ராசா போன்றவர்கள் அல்ல. பெரும் முதலாளிகள், அவர்களின் வட இந்திய அதிகார அரசியல்வாதிகள் அதனால் அடக்கி வாசிக்கின்றன. இதற்கு மத்தியில் திராவிட பெரியாரிய தளத்தில் உள்ள தமிழகத்தில் திமுக என்ற பலம் பொருந்திய கட்சியை அரசியலை விட்டு அகற்ற காங்கிரஸ், பாரதிய ஜனதா போன்ற ஒன்றிய பெரும் கட்சிகள் இதை கருவியாக பயன்படுத்தி விளையாடின. அடுத்ததாக ஊழல்க்கு நாங்கள் எதிர்ப்பாளர்கள் என கொடி பிடித்து, கோஷம்போட்டு, டான்ஸ் ஆடியவர்கள் நியாயவாதிகள் என்றால் இந்த ஊழல்களுக்கும் உண்ணாவிரதம் இருந்திருக்க வேண்டும். இருக்கவில்லை காரணம், இவர்கள் பின்னால் இருந்து இவர்களை இயக்குவது காவிகளும், மீடியா மன்னர்களும், பெரும் பெரும் பண முதலாளிகளும் தான். அதனால் தான் தற்போது அவர்கள் பற்றி புகார் வந்ததும் கவிழ்ந்து படுத்துக்கொண்டார்கள். வடஇந்தியனாக, பூணுல் போட்டவனாக, தேசிய கட்சியை சார்ந்தவனாக, பெரும் முதலாளிகளின் ஆதரவு பெற்றவனாக இருந்தால் இந்தியாவை விலைக்கு விற்றுவிட்டு கூட வந்துவிடலாம் அது பெரிய விவகாரமேயில்லை என்பதை தான் இந்த மறைக்கப்பட்ட ஊழல்கள் காட்டுகின்றன. Posted by Rajpriyan 5 கருத்துகள்: இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Twitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர் மக்களை அழிக்க வந்த அக்னி. அக்னி 5 ஏவுகணை மாபெரும் வெற்றி என இந்திய ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. இதை கேட்டு இந்தியாவில் பெரும்பாலானவர்கள் கொண்டாடி மகிழ்கிறார்கள். தந்போது உருவாக்கப்பட்டுள்ள அக்னி ஐந்து என்கிற ஏவுகனை 5 ஆயிரம் கி.மீ தாண்டிப்போய் குறிப்பிட்ட இடத்தை தாக்கும் திறன் கொண்டது, அதேபோல் கண்டம் விட்டு கண்டம் பாயும் வேகம் கொண்டது இந்த ஏவுகனை என்கிறார்கள். கண்டம் விட்டு கண்டம் போய் தாக்குதல் நடத்தும் இந்த ஏவுகனை நமக்கு உலகில் வல்லரசு என்ற பெயரை வேண்டுமானால் வாங்கி தரலாமே ஒழிய இந்திய ஒன்றியத்தில் உள்ள வறுமையை ஒழிக்காது. எதிரி நாடுகளும், இந்தியாவை சீண்ட நினைக்கும் நாடுகள் வேண்டுமானால் இதனை கண்டு பயப்படலாம். மற்றப்படி இந்த ஏவுகனையால் மக்களுக்கு ஒன்றும் புரியோஜனம்மில்லை. ஆளும் வர்க்க அரசியல்வாதிகளுக்கும், இதன் விஞ்ஞானிகளுக்கும் வேண்டுமானால் பெரும் ‘லாபமா’ இது இருக்கும். காரணம், கணக்கு வழக்கில்லாத பணம் இந்த ஆய்வுக்காக ஒதுக்கப்படுகிறது. மக்கள் மன்றத்துக்கு செலவு கணக்குகள் வருவதேயில்லை. நாட்டின் பாதுகாப்பு சம்மந்தமானது என இதற்கு காரணம் கூறுகிறார்கள். பாதுகாப்பு சம்மந்தமானது என்றால் அக்னி ஏவுகனையில் பயன்படுத்தப்படும் டெக்னாலஜி பற்றிய விவரங்களை வெளியிடாமல் இருக்கலாம். செலவுகளை கூட வெளியிட மாட்டேன் என்பது எந்த விதத்தில் நியாயம். மக்களின் வரிப்பணம் தான் இதற்கு பயன்படுத்தப்படுகிறது. செயல்பாடோ சர்வாதிகாரமாக உள்ளது. இதற்கு பெயர் ஜனநாயக நாடாம். மக்களின் வரிப்பணத்தை பாதுகாப்பு என்ற பெயரில் கொள்ளையடிக்கிறார்கள். போர் வரும்போது மட்டும் தான் இந்த அக்னி ஏவுகனைகளை நாம் பயன்படுத்தப்போகிறோம். அதற்கு பலாயிரம் கோடிகள் செலவு செய்கிறார்கள். இது எந்த விதத்தில் நியாயம். இதுப்பற்றி கேள்வி கேட்டால் நாட்டின் பாதுகாப்பு மீது உங்களுக்கு அக்கறையில்லையா என எதிர்பாட்டு பாடுகிறார்கள். நாடு பாதுகாப்பாக இருந்தால் போதுமா மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டாமா?. முருங்கை மரம் பறந்து விரிந்து இருக்கும். அதன் இலைகள், காய்கள் மக்கள் பயன்படுத்தலாம். அந்த மரத்தில் ஏறினாலோ, ஊஞ்சல் விளையாட நினைத்தாலோ ஆபத்து தான். அதேபோல் தான் அக்னி ஏவுகனை. அது இருக்கிறது என்பதற்காக ஐக்கிய நாடுகள் சபையில் அழகாக அதிகாரம் செலுத்தலாம், உலகில் ஜாம்பவானாக வலம் வரலாம். ஆனால் பிறர் சீண்டும் போதுதான் தெரியும் அக்னியெல்லாம் ‘அவுல்’ போல என்பது. தினமும் கோடிக்கணக்கான மக்கள் ஒரு வேளை உணவு உண்டு உயிர் வாழும் தேசத்தில் அதற்கெல்லாம் முக்கியத்துவம் தராத மீடியாக்கள் அக்னிக்கு அதீத முக்கியத்துவம் தருகின்றன. தேசம் பாதுகாப்பாக தான் இருக்கிறது. ஆனால் மக்கள் தான் இந்த நாட்டில் பாதுகாப்பாக இல்லை. Posted by Rajpriyan 2 கருத்துகள்: இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Twitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர் வியாழன், ஏப்ரல் 19, 2012 கழகத்தில் கலகம். தீராத மோதல். மீண்டும் உச்சத்துக்கு வந்துள்ளது திமுகவின் தலைவர் அழகிரி - ஸ்டாலின் மோதல். கட்சியில் யாருக்கு அதிக அதிகாரம் என்பதை காட்ட முயற்சி செய்கிறார்கள். இதில் மாட்டிக்கொண்டு முழிப்பது தொண்டர்கள் தான். கலைஞரின் மகனாக இல்லாவிட்டால் திமுக எப்போதே ஸ்டாலின் கைக்கு போயிருக்கும். காரணம், கட்சிக்காக அவ்வளவு உழைத்துள்ளார். இன்றும் கட்சி பணியாக தினமும் நூற்றுக்கணக்கான கி.மீ சுற்றி வருகிறார். கட்சியினருடன் பழகுகிறார், கட்சி பணிகளை தொய்வில்லாமல் நடத்துகிறார். முடிவுகளை உடனுக்குடன் எடுக்கிறார். கட்சியின் மேல்மட்ட முக்கிய தலைவர்களுக்கு உரிய மரியாதையை தருகிறார். கட்சியின் மீதான விமர்சனங்களை ஒதுக்கி தள்ள முயல்கிறார், கட்சிக்கு இளம் ரத்தம் பாய்ச்ச முயல்கிறார். தகுதியானவர்களை பொறுப்புக்கு வரவைக்க வேண்டும் என முயல்கிறார். எதிர்கட்சியான பின் ஆளும்கட்சி நடத்தும் அராஜகங்களை கண்டு கொதிக்கிறார். கட்சியின் முக்கியஸ்தர்களை பாதுகாப்பாக இருக்க வேண்டும் என அறிவுறுத்துகிறார். ஜெ தமிழக முதல்வரானதும், தன்மேல் எந்த வழக்கும் வரக்கூடாது என்பதற்காக தன் குடும்பத்தையே வெளிநாட்டில் இருக்க வைத்தவர் அழகிரி. ஸ்டாலின் வருவது வரட்டும்மென அவர் மீது போடப்பட்ட வீடு அபகரிப்பு என்ற வழக்கை எதிர்கொண்டு தவறு நடக்கவில்லை என நிருபித்துள்ளார். இதுதான் ஒரு கட்சி தலைவருக்கு அழகு. ஓடி ஒளிவதல்ல என்பதை காட்டினார். ஸ்டாலின் உழைத்தார் பதவிகள் அவரை தேடி வந்தது. பதவியை தேடி அவர் செல்லவில்லை. கழகத்தில் அவரின் உழைப்பு வேறு ஒருவர் செய்திருந்தால் அவர் இன்னேறம் முதல்வராக உருவாகியிருப்பார். தலைவர் வழி விடட்டும் என்று காத்துள்ளார் தனயன். ஸ்டாலின் சில அவமானங்களை சந்தித்துவிட்டு தான் இந்த பதவிக்கே வந்துள்ளார். ஸ்டாலின் துணை முதல்வரானபோது சோக்காளி சோ தெளிவாக சென்னார். ஸ்டாலின்க்கு கிடைத்த பதவி மிகவும் தாமதமானது என்று. எதிர் தரப்பாக இருந்தாலும் உண்மையை சொன்னார். ஸ்டாலின் செயல்பாடுகளுக்கு பெரும் முட்டுக்கட்டையாக இருப்பது அவரின் உடன்பிறந்த சகோதரர் அழகிரி தான். மதுரை கட்சியினரிடம் மட்டுமே பழக்கத்தை ஏற்படுத்திக்கொண்டு கட்சியை நிர்வகிக்க தொடங்கியவர். கடந்த ஐந்தாண்டில் அவருடன் இருந்த சர்ச்சைக்குரியவர்களுக்கு பதவிகள் வாங்கி தந்தார். இறுதியில் கட்சியில் இல்லாத தென்மண்டல அமைப்பு செயலாளர் என்ற பதவியை உருவாக்க வைத்து அந்த பதவியில் ஜம்மென்று வாங்கி உட்கார்ந்;துக்கொண்டு ஸ்டாலினால் ஒதுக்கப்பட்ட பாரம்பரிய கட்சியினரை, வயதானவர்களை தன்னுடன் வைத்துக்கொண்டு கழகத்தில் கலகத்தை உருவாக்க தொடங்கியுள்ளார். கழகத்துக்கு துரோகம் செய்த தயாநிதிமாறனை நம்பி பணியாற்ற தொடங்கியுள்ளார். மதுரையை விட்டு வெளியே வந்தால் அழகிரிக்கு மரியாதை செய்யக்கூட ஆள்யில்லை. அப்படிப்பட்டவர் கழகத்தின் அடுத்த தலைவராக வேண்டும்மென ஆசைப்படுகிறார். ஜனநாயக இயக்கத்தில் யார் வேண்டுமானாலும் தலைவர் பதவிக்கு ஆசைப்படலாம். ஆனால் அதற்கான தகுதியிருக்கறா என்பதை முதலில் தங்களுக்கு தாங்களே தனது மனதை கேட்டுக்கொள்ள வேண்டும். அழகிரி, கனிமொழி போன்றவர்களால் தான் வாரிசு கழகம் என்ற அவப்பெயர் திமுகமேல் அதிகமாக விழுகிறது. ஸ்டாலின்க்கு கிடைக்கும் மரியாதை, புகழை கண்டு மயங்கி போய் தங்களுக்கும் பதவி வேண்டும்மென துடித்து எம்.பி, மந்திரி பதவியென வாங்கி அமர்ந்தனர். இப்போது வாரிசு வாரிசு என ஏலனம் செய்ய தொடங்கிவிட்டார்கள் கழகத்தை துற்றுவோர். கலைஞர் தீவிரமான முடிவு எடுக்க வேண்டிய சமயம். அதாவது அவர் தலைவர் பொறுப்பில் இருந்து விலகி ஸ்டாலினை அதில் அமர வைக்க வேண்டும். அழகிரிக்கான கடிவளாம் போடவேண்டும். கனிமொழிக்கு இனி பதவிகள் இல்லை என கூற வேண்டும். தயாநிதியை கட்சியில் இருந்து ஒதுக்கி வைக்க வேண்டும் அப்போது தான் கழகம் வளரும். இல்லையேல் மிகப்பெரிய உள்கட்சி பிரச்சனையை கழகம் சந்திக்கும். Posted by Rajpriyan 7 கருத்துகள்: இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Twitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர் ஈழம் அமைய வாக்கெடுப்பு. – அமெரிக்காவின் ஆட்டம். சீனாவின் முத்துமாலையை அறுக்க முயலும் அமெரிக்கா என்ற பதிவை கடந்த மாத இறுதியில் வெளியிட்டுயிருந்தேன். அந்த பதிவில் அமெரிக்காவின் இந்த திட்டத்துக்கு இந்தியா பெரும் உதவியாக இருக்கிறது என சுட்டிக்காட்டியிருந்தோம். அடுத்து அமெரிக்கா, இலங்கையை தன் பக்கம் இழுக்க முயலும் இல்லையேல் அத்தீவை பிரித்து தமிழர்களின் கனவான தனி ஈழம் அமைக்க முயலும் என குறிப்பிட்டுயிருந்தோம். அதுப்படியே கடந்த சில தினங்களாக நிகழ்வுகள் நடைபெற துவங்கியுள்ளன. அமெரிக்க ஜனாதிபதியான ஓபாமாவுக்கான தமிழர் அமைப்பு, சில தினங்களுக்கு முன் ரகசியமாக இலங்கையின் முன்னால் தூதரும், தற்போதைய தெற்காசிய வெளிவிவகாரத்துக்கு பொறுப்பாளருமான ராபர்ட் பிளேக்கை ‘ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு’ சந்தித்து தனி ஈழம் அமைக்க வாக்கெடுப்பு நடத்த வேண்டும் எங்கள் மக்கள் அதைத்தான் விரும்புகிறார்கள் என்ற கோரிக்கை மனுவை தந்துவிட்டு வந்துள்ளார்கள். அதோடு, அதிகாரபூர்வமற்ற முறையில் அமெரிக்காவின் வெளியுறவுத்துறை அமைச்சர் அம்மையார் ஹிலாரி கிளின்டனையும் சந்தித்தாக செய்தி வெளியாக கொழும்பு அரசியல் வட்டாரம் அதிர்ந்துப்போய்வுள்ளது. அமெரிக்கா ஈழம் அமைப்பதற்கான நகர்வை ஆரம்பிக்க காரணம், முத்துமாலை திட்டத்தில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதி இலங்கை தீவு. இந்திய பெருங்கடலில் இலங்கை யார் கைப்பாவையாக உள்ளதோ அவர்ளே உலகின் எஜமானாகள். அதனை யூகித்து தான் இலங்கைக்கு போர் காலத்தில் 60 சதவிதமான உதவிகளை சீனா செய்தது. அதற்கு போட்டியாக இந்தியா, ரஷ்யா, பாகிஸ்தான், அமெரிக்கா போன்ற நாடுகள் உதவின. போர் முடிவுற்ற பின் இலங்கை, உதவி செய்த 8 நாடுகளை கழட்டி விட்டுவிட்டு சீனாவோடு அதிக நெருக்கமாயின. இந்தியா வழியாக அமெரிக்கா மிரட்டி பார்த்தும் பலனில்லை. நேரடியாக மிரட்யும் இராஜபக்சே சகோதரர்கள் போக்குகாட்டினர். தமிழர்களுக்கு எதிரான போரை நடத்திய இலங்கை இராணுவதளபதி பொன்சேகாவை தன் பக்கம் இழுத்தது அமெரிக்கா. ஜனாதிபதி தேர்தலிலும் நிற்க வைத்தது. உடனே அவரை தேச துரோகி என குற்றம் சாட்டி சிறையில் தள்ளினார்கள் இராஜபக்சே சகோதரர்கள். அதன்பின்பே ஐ.நா வழியாக இலங்கை மீது போர்குற்றச்சாட்டை சுமத்த முன்வந்தது அமெரிக்கா. ஐ.நா சபையில் தீர்மானம் கொண்டு வரும் முன் சீனாவிடம்மிருந்து பிரிந்து தன் ஆதரவாளராக நடந்துக்கொள்ள வேண்டும், சிறையில் உள்ள பொன்சேகாவை விடுதலை செய்ய வேண்டும் என அமெரிக்கா எதிர்பார்த்தது. அதை இராஜபக்சே ஏற்றுக்கொள்ளாமல், இந்தியாவும், சீனாவும் தனக்கு பக்க பலமாக இருக்கிறார்கள் என்ற எண்ணத்தில் அமெரிக்காவை சீண்டி பார்க்க தொடங்கினர் இராஜபக்சே சகோதரர்கள். சீனாவை முக்கறுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்த இந்தியா, அமெரிக்காவின் தீர்மான திட்டத்துக்கு தலையாட்டியது. அமெரிக்கா திட்டப்படி ஐ.நாவில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் வந்தபோது இந்தியா இலங்கைக்கு எதிராக வாக்களித்தது. ஏமாந்துபோன இலங்கை இந்தியா தனக்கு ஐ.நாவில் கைகொடுக்கவில்லை என்பதால் இந்தியா மீண்டும் புலிகளுக்கு தமிழகத்தில் பயிற்சி வழங்குகிறது என கருத்து சொன்னது. அடுத்து, கூடங்குளம் விவகாரத்தில் அரசின் கருத்துக்கு எதிர் கருத்துக்கூறி இந்திய அரசிடம் பலமாக வாங்கிகட்டிக்கொண்டது. ஐ.நா தீர்மானம் வருங்காலத்தில் பல பிரச்சனைகளை உருவாக்கும் என்பதை இலங்கை நன்கறியும். இருந்தும் சீனாவின் நட்பை அவர்களால் விட முடியவில்லை. சீனாவை மீறி அமெரிக்காவிடம் அடைக்கலம் புகுந்தால் இராஜபக்சே சகோதரர்கள் ஒழிக்கப்படுவார்கள் அதோடு, வருங்கால பிரச்சனைகளின் போது ஐ.நாவில் வீட்டோ அதிகாரம் உள்ள சீனா தங்களுக்கு பாதுகாப்பாக இருக்கும் என இராஜபக்சே சகோதரர்கள் நம்புகிறார்கள். தொடர்ந்து இலங்கையை அமெரிக்காவும், இந்தியாவும் மறைமுகமாக இராஜதந்திர ரீதியில் மிரட்ட பணிய மறுப்பதால் தான் தான் இறுதியாக, தனி ஈழ வாக்கெடுப்பு என்ற அஸ்திரத்தை கடைசியாக ஏவியுள்ளனர். இதன் பின்னும் இராஜபக்சே அன் கோ, இறங்கி வரவில்லையெனில் அடுத்தடுத்த நகர்வுகள் இலங்கைக்கு எதிராக இருக்கும். தனி ஈழம் அமைக்க வழிவகை செய்யப்படும். இந்தியா அதனை ஆதரிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படும். தற்போதைய நிலையில் சீனாவின் பிடியில் இருந்து இலங்கை விலக சாத்தியமில்லை. அமெரிக்காவின் திட்டம் வெற்றியடைய வாய்ப்பு உண்டு. இதனை யூகித்து தான் கலைஞர் ஐ.நாவில் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என அறிக்கை விட்டுள்ளார். Posted by Rajpriyan 12 கருத்துகள்: இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Twitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர் புதன், ஏப்ரல் 18, 2012 சுகமான சுமைகள் …………. 24. கோயில்க்கு வெளியே அவளுக்காக காத்திருந்தேன். 6 மணிக்கு வர்றன் என்றவள் வரவில்லை. அவளுங்க சொல்ற நேரத்துக்கு நாம வந்துடனும். ஆனா அவளுங்க வரமாட்டாளுங்க. நாம காத்திருக்கனும். இதே அவளுங்க காத்திருந்தா கத்துவாளுங்க என எண்ணியடியே அவளுக்காக காத்திருந்தேன். சொன்ன நேரத்தை விட இருபது நிமிடம் தாமதமாக வந்தவள். சைக்கிளை நிறுத்திவிட்டு அருகே வந்ததும் வாங்க போகலாம் என்றாள். அசையாமல் இருப்பதை பார்த்து ஸாரி லேட்டாகிடுச்சி. வாங்க. பதிலை சொல்லிட்டு கூப்பிடுங்க வர்றன். அய்ய. எதுவும்மே இல்லாம தான் உங்கள கோயிலுக்கு வரச்சொன்னனா என்றதும் ஆனந்தமாகி இன்னைக்கி சந்தோஷமான நாள்ங்க. சாமிய பாத்துட்டு அப்பறம் பேசிக்கலாம் என நடக்க அவளுடன் நடந்தபோது மனமெல்லாம் சந்தோஷமாக இருந்தது. உங்களப்பத்தி அக்கா அடிக்கடி சொல்லும்போது எல்லாம் எனக்கு பொறாமையா இருக்கும். அவ மேல நீங்க எடுத்துக்கற அக்கறையை பாத்து லவ் பண்றிங்களோன்னு கூட நினைச்சன். தேவிக்கிட்ட கேட்டப்ப அதெல்லாம் இல்லன்னு சொன்னா. உங்கள பத்தி சொல்ல சொல்ல உங்கள பாக்கனம்;ன்னு ஆவலா இருந்தன். அக்கா அறிமுகப்படுத்தற அன்னைக்கு நான் உங்கள பாத்தப்ப நம்ம பின்னாடி வந்தவனாச்சேன்னு ஒரே சந்தோஷம். அதான் நீங்க லவ் பண்றன்னு சொன்னதும் சந்தோஷமாகிடுச்சி. இருந்தும் அக்காவுக்கு தெரிஞ்ச என்ன நினைக்குமோன்னு பயந்து தான் பதில் சொல்லல. அன்னைக்கு நைட்டெல்லாம் தூக்கம் வரல தெரியுமா. அவ்ளோ சந்தோஷம் என்றவள் கொஞ்ச நாளைக்கு அக்காக்கிட்ட சொல்லாதிங்க என்றபோது அதிர்ந்து போனேன். என்னால அதுங்கிட்ட இரண்டு நாளைக்கு மேல சொல்ல முடியாது. அதுக்கு தெரியாம நான் எதையும் பண்ணதில்ல. நான் குடிக்கறத சொன்னதுக்கே இதே பத்து நாளா பேசாம இருக்கறா. இந்த விஷயத்த மறைச்சது தெரிஞ்சது அவ்ளோ தான் அதனால சீக்கிரம் சொல்லிடுவன் என்னை மன்னிச்சிடு. சொன்னதை அமைதியாக கேட்டவள். சரி கொஞ்சம் லேட் பண்ணி சொல்லுங்க பாத்துக்கலாம் என்றவள் வாராவாரம் வெள்ளிக்கிழமை இங்க பாப்போம், ஏதாவதுன்னு போன் பண்ணுங்க என்றவள் வெளியே வந்து சைக்கிளை எடுத்துக்கொண்டு கிளம்பினால். மனம் விசில் அடிக்க தொடங்கியது. அன்றைய இரவு விதவிதமான கனவு மனதில் வந்தது. மறுநாள், புங்கமரத்து காற்று குளு குளு என வீச நான், ஜான், அகிலன் மூவரும் அமர்ந்திருந்தோம். என்னடா உம்முன்னு இருக்க என்னாச்சி அகிலன் ஜான்னிடம் கேட்டான். எல்லாம் இந்த நாயாள வந்தது. இரண்டு நாளைக்கு முன்ன கோயிலுக்கு போனோம்மில்ல. அங்க ப்ரியாக்கிட்ட குடிக்க போறன்னு சொல்லியிக்கான். அதல ரெண்டு பேருக்கும் சண்டை வந்து பாதியிலயே வீட்டுக்கு போய்டுச்சி. அது சும்மாயில்லாம தேவிக்கிட்ட போட்டு குடுத்துடுச்சி. அவ என்னடான்னா குடிகாறநாயே என் முகத்தலயே முழிக்காதன்னு காரிதுப்பி துறத்தறா. விடறா எல்லாம் சரியாகிடும் என்றான். அப்ப இனிமே குடிக்கமாட்டியா?. குடிக்கறதா இருந்தா பாக்க வராதுன்னு சொல்றா. அப்பாடா ஒருத்தன் செலவு மிச்சம். அகிலா சாயந்தரம் நம்ம பசங்கக்கிட்ட சொல்லீடு. லீமா பார்ல பார்ட்டி. ஏய் என்னை விட்டு போன செருப்பால அடிப்பன். இப்பதான் குடிக்கமாட்டன்னு சொன்ன குhதலி சொல்றத கேட்கறதா இருந்தா ஒருத்தன் கூட குடிக்க முடியாது. அவுங்க சொல்றத சொல்லுவாங்க. நாம கேட்டுக்கிட்ட மாதிரி நடிக்கனும் என்ற ஜான் அதிருக்கட்டும் எதுக்கு பாhட்டி. எதுக்காயிருக்கும் அவுங்க ஆள் லவ்வ ஒத்துக்கிட்டுயிருக்கும் என அகிலன் சொல்ல கைகுடு மச்சான். உண்மையாவா ? எப்ப என ஜான் ஆச்சர்யத்துடன் கேட்க. நேத்து நைட் தான். கொஞ்ச நாளைக்கு ப்ரியாக்கிட்ட சொல்ல வேணாம்ன்னிட்டா. மச்சான் சூப்பர்டா என சந்தோஷப்பட்டான் ஜான். அப்போது, ப்ரியா முறைத்தபடி க்ளாஸ் நோக்கி போனால். என்ன மச்சான் இன்னுமா உங்க சண்டை தீரல. அவ குடிக்கறத விடுங்கறா. நான் வாரத்தல ஒருநாள் மட்டும்தான்னு சொல்றன். கேட்கறமாட்டேன்கிறா. விடு பாத்துக்கலாம். அன்று இரவு அதிகமாக குடிச்சதால், ஜலதோஷம் பிடித்துக்கொண்டு இரண்டு நாள் காலேஜ் போகாமல் ரூமிலேயே படுத்திருந்தேன். மதியம் யாரோ கதவு தட்டும் சத்தம் கேட்க திறந்துபோது, ப்ரியா கலக்கத்தோடு நின்றிருந்தாள். வாங்க. என்ன இவ்ளோ தூரம் என்றதும் எதுவும் பேசாமல் கழுத்தில் கை வைத்து பார்த்தவள் உடம்பு அதிகமாக சுட இவ்ளோ சுடுது. ஆஸ்பத்திரிக்கு போனயா என கேட்டாள். போய்ட்டு தான் வந்தன். வா உள்ள வந்து உட்காரு என்றதும் உள்ளே வந்து அமர்ந்தவள். எந்த டாக்டர்க்கிட்ட போன, என்ன சொன்னாரு, மாத்திரை சாப்பிட்டயா, சாப்பாடு என்ன சாப்பிடச்சொன்னாரு என வரிசையாக கேள்வி கேட்டபடியே இருந்தாள். ஏய் இரு இரு இது சாதாரண ஜொரம் தான். டாக்டர் மாத்திரை தந்துயிருக்காரு. சூடா கஞ்சி சாப்பிடச்சொல்லியிருக்காரு. ஏதனால ஜொரம் வந்தது. சொன்னா கோபப்படுவியே. நீ பேசலங்கறதால இரண்டு நாளா அதிகமா குடிச்சன்னா ஜலதோஷம் புடிச்சி ஜொரம் வந்துடுச்சி என்றதும் முறைத்தால். ஏய் முறைக்காதடா என கெஞ்சியதும் கொஞ்சம் ரிலாக்ஸ் ஆனவளிடம் ஆமாம். எனக்கு உடம்பு சரியில்லன்னு யார் சொன்னது. அகிலன். ஆவன் தான் சொன்னான்யில்ல. உடம்பு சரியில்லாதவனை பாக்க போறமே ஆப்பிள், ஆரஞ்சி வாங்கி போகலாம்ங்கற எண்ணம் வந்துச்சா உனக்கு. செருப்பு இரண்டு வாங்கி வந்துயிருக்கனும். ரெண்டு நாளா காலேஜ் வரலயே கேட்டுக்கிட்டு வந்தா உனக்கு இதெல்லாம் வாங்கி வரனுமாக்கும் என்றாள். கொஞ்ச நேரம் பேசிக்கொண்டுயிருந்தவளை சாப்பிட சொல்ல வேண்டாம் வீட்டுக்கு போய் சாப்பிட்டுக்கறன் என கிளம்பினாள். சுhயந்தரம் பசங்க எல்லாம் ரூம்க்கு வந்து பேசிவிட்ட போனான்கள். ஜான் மட்டும் பேசிக்கொண்டு ரூமிலேயே இருந்தான். 7 மணிக்கு ப்ரியா, கவிதா, தேவி மூவரும் அறைக்கு வந்தனர். ஜானை முறைத்தபடியே அருகில் வந்த தேவி, ஜானை காட்டி இதோட சேந்து நீயும் உருப்படாம போறியா?. ஆமாம் இவர் பாவம் பால் கூட குடிக்க தெரியாத பச்ச புள்ள நாங்க கெடுக்கறதுக்கு என ஜான் கடுப்படிக்க ஏதாவது பேசன வாய உடைச்சிடுவன் என்றதுதும் சைலண்டானான். தேவியும், கவிதாவும் மாறி மாறி விசாரித்தனர். ப்ரியா கூடையில் வைத்திருந்த பாக்ஸ்சை எடுத்து தந்தாள். கஞ்சி இருக்கு குடி. அகிலனை ஹோட்டல்ல சாப்பிட சொல்லிடு என்றாள். அகிலன் ஊருக்கு போயிருக்கான். அதிருக்கட்டும் பழம் வாங்கனா காசு கொடுக்கனும்மேன்னு, கஞ்சிய தந்து ஏமாத்தற. அடிவாங்கப்போற என ப்ரியாச்சொல்ல அமைதியாகி கவிதாவை பார்த்தேன். ரொம்ப கவலையாக இருந்தாள். கஞ்சியும், மாத்திரையும் சாப்பிட்டபின் கொஞ்சம் தெம்பாக இருந்தது. நாளைக்கு காலேஜ் வர்றியா. இல்ல. நாளைக்கு சாயந்தரம் வர்றன். உடம்ப பாத்துக்க. முடிஞ்சா காலையில போன் பண்ணு என கிளம்பினால் ப்ரியா. கவிதாவும் வர்றங்க என சுரத்தேயில்லாமல் சொல்லிவிட்டு புறப்படப்படனர். தேவி ஒரு நிமிஷம், அவனை நோஸ்கட் பண்ணாத. இப்பவே பையன் நொந்துப்போய்யிருக்கான். மேலும் அவனை நோகடிக்காத. முதல்ல அவனை குடிக்கறத விடச்சொல்லு. அதெல்லாம் இனிமே குடிக்கமாட்டான். நான் பாத்துக்கறன். வேலிக்கு ஓனான் சாட்சியாம் என்ற ப்ரியா வாடீ போலாம் என தேவியை இழுத்துக்கொண்டு போனாள். போகும்போது தேவி ஜானின் கையை பிடித்து கிள்ளிவிட்டு போனால். அதை பாhத்தபோது சிரிப்பு வந்தது. மறுநாள் காலை ப்ரியா வீட்டுக்கு போன் செய்தபோது, அவளே போனை எடுத்தாள். பரவாயில்ல. இருந்தும் இன்னைக்கு ரெஸ்ட் எடுத்துட்டு நாளைக்கு வரலாம்னு இருக்கன். வெளியில எங்கயும் சுத்தப்போகாம ரெஸ்ட் எடு. நூன் சாயந்தரம் வர்றன். ம் எனச்சொல்லிவிட்டு போனை வைத்தேன். ரூம்க்கு வந்தபோது அகிலன் காலேஜ் போயிருந்தான். லைப்ரரியில் இருந்து அகிலன் எடுத்து வந்திருந்த பொன்னியின் செல்வன் புத்தகத்தை எடுத்து வைத்துக்கொண்டு சும்மா புரட்டுக்கொண்டுயிருந்தேன். அப்போது கதவு தட்டப்பட யார் அது எழுந்து திறந்தபோது ஆனந்த அதிர்ச்சி. கவிதா வெளியே நின்றிருந்தாள். ஏய் நீ எங்க இங்க. இப்ப எப்படி இருக்கு உடம்பு. புரவாயில்ல. நீ என்ன காலேஜ் போகாம இங்க வந்திருக்க. ப்ரியாக்கிட்ட போன் பேசனப்பக்கூட அதுக்கூட எதுவும் சொல்லல. உன்ன பாக்கபோறன்னு சொன்னா செருப்பால அடிக்கும். யாருக்கும் தெரியாம தான் வந்தன். லூசா நீ. யாராவது பாத்துட்டு உங்க வீட்ல சொன்னா அவ்ளோ தான். உங்கக்கா இதுக்கு தான் என் கூட பழகனியான்னு கேட்டு கத்தும். உங்கம்மா எவ்ளோ அசிங்கமா நினைப்பாங்க. ஓன்னும் நினைக்கமாட்டாங்க. இரண்டு நாளா உடம்பு சரியில்லயேன்னு மனசு கேட்காம உன்ன பாக்க வந்திருக்கன். நீ எதுக்கு சும்மா கண்டத நினைச்சி பயந்து சாகற. ஓன்னும் ஆகாது. சாயந்தரம் வரைக்கும் இருந்துட்டு 4 மணிக்கா வீட்டுக்கு போய்டுவன். உங்கக்கா சாயந்தரம் வர்றன்னியிருக்கு. அது 6 மணிக்கு மேல தான் வரும். அப்ப எல்லாம் தெரிஞ்சிக்கிட்டு தான் வந்துயிருக்க. ம் என்றபடியே. மதியம் என்ன சமையல். நூன் ஒருத்தன் தானே மெஸ்ல சாப்பிடலாம்னு பாத்தன். அதான் நீ வந்துட்டீயே நீ சமை. இன்னைக்கு உன் சமையலை தான் மாமன் சாப்பிடபோறன். என்னது. சும்மா சொன்னன்டா கோவிச்சிக்காத. சமைத்தபடியே பள்ளி வாழ்க்கை, கல்லூரி வாழ்க்கை, வீடு, நண்பர்கள் என பேசியபடி சமைத்தால். கத்தரிக்காய் காரக்குழம்பு நன்றாக சமைத்திருந்தாள். நல்லா சமைக்கறப்பா. இப்படியே சமைச்சி போட்டன்னு வச்சிக்க தொப்பை நிச்சயம் என்றதும். நிஜமா நல்லாயிருக்கா என வெட்கத்துடன் கேட்டாள். உண்மையாதான் நல்லாயிருக்கு என்றதும் அதிகமாக வெட்கப்பட்டாள். சாப்பிட்ட பாத்திரங்களை கழுவி வைத்துவிட்டு வந்தவள் நான் உட்கார்ந்திருந்த கட்டிலுக்கு எதிர் கட்டிலில் உட்கார்ந்து ஏதோ பேசிக்கொண்டிருந்தாள். கவி என அழைத்ததும் பேசுவதை நிறுத்திவிட்டு என்னவென பார்த்தால். என்னோட தனியா இருக்கியே எம்மேல அவ்ளோ நம்பிக்கையா?. எல்லாரையும் விட உன்ன அதிகமாவே நம்பறன் என்றாள். தேங்க்ஸ். எதுக்கு. எம்மேல இவ்ளோ நம்பிக்கை வச்சிருக்கியே அதுக்கு. லூசு என பழிப்பு காட்டா. நீ தூங்கு என என் அருகில் இருந்த பொன்னியின் செல்வன் நாவலை எடுத்துக்கொண்டு படிக்க தொடங்கினால். ஆவளை பார்த்துக்கொண்டேயிருந்த நான் எப்போது தூங்கினேன் என தெரியவில்லை. மாம்ஸ் மாம்ஸ் என்ற குரல் கேட்டு எழுந்த போது கவிதா தான் அருகே நின்றிருந்தாள். யாரு. நான்தாம்பா எழுப்பனன். என்ன சொல்லி எழுப்பன. ச்சீ போ என்றவள் டைம்மாகிடுச்சி கிளம்பறன் என பேக்கை எடுத்துக்கொண்டு புன்னகைத்தபடியே ஓடினால். தொடரும்............... சுகமான சுமைகள்............... 23 Posted by Rajpriyan 1 கருத்து: இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Twitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர் தப்பை தப்பாக செய்யும் தனியார் பள்ளிகள். வருங்கால தலைமுறையை உருவாக்க வேண்டிய ஆசிரியர்கள் மோசமான தலைமுறையை உருவாக்க தொடங்கிவிட்டார்கள். பள்ளிகளில் நடத்தப்படும் பத்தாம் வகுப்பு, பனிரென்டாம் வகுப்பு பொதுதேர்வுகளின் போது, படிக்காத சிலப்பல பிள்ளைகள் தேர்ச்சி பெற்றுவிட வேண்டும் என்பதற்காக பிட் அடிப்பது இயல்பு. அதையும் தடுக்க பலப்பல ஸ்கோடு டீம் அமைக்கப்பட்டு பிட் அடிக்கும் மாணவர்கள் பிடிக்கப்படுகிறார்கள். தண்டிக்கப்படுகிறார்கள். இந்த பிடிப்பு என்பது அரசு பள்ளி மாணவ-மாணவிகள் தேர்வு எழுதும் இடத்தில் மட்டும் தான் நடைபெறுகிறது. தனியார் பள்ளிகளில் இந்த பிடிப்பு நடைபெறுவதில்லை என்பது நீண்ட நாள் குற்றச்சாட்டு. தனியார் பள்ளிகள் தங்களது பள்ளியில் படிக்கும் பிள்ளைகள் அனைவரும் தேர்ச்சி பெற்று விடவேண்டும், அதுவும் அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றால் 100 சதவிதம் தேர்ச்சி பெற்ற பள்ளி என விளம்பரப்படுத்தி அந்த ஆண்டு புதியதாக பள்ளியில் சேர வரும் பிள்ளைகளிடம் அதீத கட்டணம் வசூலிக்கலாம் என்ற எண்ணத்தில் தனியார் பள்ளிகள் தங்களது பள்ளியில் தேர்வு எழுதும் பிள்ளைகளுக்கு பிட் தருகிறார்கள். புக் வைத்து எழுத அனுமதிக்கிறார்கள், சொல்லி தருகிறார்கள். சமீபத்தில், அரசியல்வாதிகள், அதிகாரிகள் என பலப்பல வி.ஐ.பிகளின் பிள்ளைகள் படிக்கும் திருவண்ணாமலை மவுண்ட் செயின்ட் ஜோசப் பள்ளியில், தேர்வு எழுதும் பிள்ளைகளுக்கு பிட் தந்து உதவ தேர்வு அறை கண்காணிப்பாளர்கள் 7 பேர் பாக்கெட்டில் பிட் வைத்திருந்துள்ளனர். கலெக்டர் அமைத்த ஸ்பெஷல் டீம் அதை கண்டறிந்துள்ளது. அதோடு, பள்ளி அலுவலகத்தில் அன்றைய தேர்வுக்கான கேள்வி தாளில் இருந்த கேள்விக்கு பதில் எழுதி தேர்வு எழுதும் சில பிள்ளைகளுக்கு தர பள்ளியிலேயே ஜெராக்ஸ் எடுத்துள்ளார்கள் எவ்வளவு அயோக்கியத்தனம். இதனை தேர்வு மைய கண்காணிப்பாளர், தேர்வு அறை கண்காணிப்பாளர், பறக்கும் படை, சிறப்பு பறக்கும் படையினர் கண்டுக்கொள்ளக்கூடாது என்பதற்காக பணம், பொருள், மது விருந்து மூலம் சிறப்பாக கவனிக்கப்பட்டுள்ளன. இப்படித்தான் தனியார் பள்ளிகள் பல ஆண்டுகளாக செயல்படுத்தி வருகின்றன. கல்வித்துறை உயர் அதிகாரிகளுக்கு தெரிந்தே நடைபெறுவதை அவர்கள் கண்டும் காணாமல் இருந்துள்ளார்கள். அதற்கு காரணம், அங்கு அவர்களது பிள்ளைகள் படிக்கிறார்கள், அதற்கடுத்து பணம், அதற்கடுத்து அரசியல் தாதாக்கள் தான் தற்போது கல்வி நிலையத்தை நடத்துவதால் இயல்பான பயம். இதனால் எதையம் கண்டுக்கொள்வதில்லை இந்த ஆசிரியர்கள். இதனால் தான் பொது தேர்வு முடிவுகள் வெளிவரும்போது அரசு பள்ளிகளை விட தனியார் பள்ளிகள் 100 சதவிதம் தேர்ச்சி பெற்றுயிருக்கும். அதுபெற்ற வழி நன்றாக படிக்க கற்று தந்ததால் அல்ல. நன்றாக பிட் அடிக்க கற்று தந்தார்கள் என்பதாலே. இப்படி பள்ளியில் பிட்டடித்து தேர்ச்சி பெற்று மேல் படிப்புக்கு மருத்துவம், இன்ஜினியரிங் என போகும்போது கல்லூரியில் டெக்னாலஜி வளர்ச்சியை பயன்படுத்தி ‘பிட்’ அடிக்க முயற்சி செய்கிறார்கள். அப்படித்தான் மக்களின் உயிர் காக்கும் மருத்துவம் படித்துவிட்டு உயர் படிப்பான எம்.எஸ், எம்.டி தேர்வு எழுதிய இளம் டாக்டர்கள் செல்போன் மூலம் பிட் அடித்து மாட்டியுள்ளார்கள். கல்வி என்பது ஒருமனிதனை ஒழுக்கமானவனாக, சமூகத்தில் சிறந்தவனாக, சிந்தனையாளனாக உருவாக்க வேண்டுமே தவிர அவனை மோசமானவனாக உருவாக்ககூடாது. இன்றயை தனியார் பள்ளிகள் அதைத்தான் செய்கின்றன. நான் கேட்கும் பணத்தை நன்கொடையாக, கட்டணமாக மாதாமாதம் தா அது போதும் உன் பிள்ளை தேர்ச்சி பெறுவான். அவன் எதை செய்தாலும் எங்களுக்கு கவலையில்லை எனச்சொல்லும் பள்ளி நிர்வாகங்கள் தான் அதிகமாக உள்ளன. பெற்றோர்களும் தனியார் பள்ளிகள் தான் சிறந்த பள்ளிகள் என அதில் போய் பணத்தை கட்டி தங்களது பிள்ளைகளை பாழும் கிணற்றில் தள்ளுகிறார்கள். உண்மையில் இந்த மாதிரியான தனியார் பள்ளிகளை விட அரசு பள்ளிகள் சிறந்த பள்ளிகள். அங்கு படிப்பவன் தன் சுய முயற்சியால் படித்து தேர்ச்சி பெறுகிறான். மோசடி தனத்தில் ஈடுபடாத சிறந்த ஆசிரியர்கள் ஓரளவு அரசு பள்ளியில் உள்ளனர். அதனால் தனியார் பள்ளி மோகம் கண்டு ஓடாதீர்கள் சிறந்த தலைமுறையை உருவாக்க அரசு பள்ளியை நாடுங்கள். அவன் வாழ்க்கையில் போராட கற்றுக்கொள்வான். வாழ்க்கையை சிறப்பாக அமைக்க கற்றுக்கொள்வான். Posted by Rajpriyan 2 கருத்துகள்: இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Twitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர் செவ்வாய், ஏப்ரல் 17, 2012 ஜெவின் சிறு பிள்ளை விளையாட்டு. நீ அன்னைக்கு என் கூட விளையாட வரலயில்ல. அதல உனக்கு முட்டாய் தரமாட்டன் போ என ஐந்து வயது பிள்ளைகள் தெருவில் விளையாடும் போது தங்களுக்குள் சண்டையிட்டுக்கொள்ளும். ஆதற்கு தெரியாது இதெல்லாம் ஒரு விவகாரம் என்று ஏன் எனில் அவைகள் குழந்தைகள். குழந்தைகளை விட மோசமாக நடந்துக்கொள்கிறார் தமிழக முதல்வராகவுள்ள ஜெ. சட்டமன்ற வளாகத்தில் அனைத்து கட்சியினருக்கும் அறைகள் ஒதுக்கப்படும். ஆப்படித்தான் சட்டமன்ற எதிர்கட்சியான விஜயகாந்த் கட்சிக்கும், சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் என்ற முறையில் விஜயகாந்த் கட்சிக்கு சட்டமன்றத்தில் இரண்டு அறைகள் ஒதுக்கப்பட்டு இருந்தன. விஜயகாந்த்க்கு ஒதுக்கப்பட்ட அறையின் அகலத்தை குறைத்து அதில் பாதியை காங்கிரஸ் கட்சிக்கான அறையாக ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த ஏற்பாடு. விஜயகாந்த் சஸ்பென்ட் செய்யப்பட்டு சட்டசபைக்கு வராத 10 நாள் இடைவெளியில் அறை ‘குறுக்கல்’ பணியை செய்து முடித்துள்ளனர். ஆறை குறைப்பை தாமதமாக கண்ட தேமுதிக எம்.எல்.ஏக்கள் சட்டமன்றத்தில் இப்பிரச்சனையை கிளப்பியுள்ளனர். சபாநாயகர் ஜெயக்குமார், அறையை ஒதுக்குவது, மாற்றுவது என்பது சபாநாயகரோட தனிப்பட்ட உரிமை. அதை கேள்வி கேட்க கூடாது என தன் அதிகாரத்தை கூற, இதற்காகவே காத்திருந்த பணிவு புகழ் நிதியமைச்சர் ஒ.பி.எஸ், உங்களுக்கு என்ன சட்டமன்றம் பட்டாவா போட்டு தந்துயிருக்கு என கேட்டுள்ளார். சட்டமன்றமும், தலைமை செயலகமும் அதிமுகவுக்கு மட்டுமா பட்டா போட்டு தந்துள்ளது. அவையெல்லாம் மக்கள் சொத்து. மக்கள் வரிப்பணத்தில் தான் இந்த நாடே இயங்குகிறது என்பதை முதல்வராக இருந்த ஓ.பி.எஸ்க்கு தெரியவாய்ப்பில்லை. தேமுதிகவினர் பத்து பேர் கூட நிற்க முடியாத அறையாக எங்கள் கட்சி தலைவரும், எதிர்கட்சி தலைவரின் அறையை குறைத்துள்ளார்கள். இதனால் எங்கள் கட்சிக்கு தந்த அறையை எடுத்துக்கொள்ளுங்கள் என கடிதம் தந்துள்ளோம் என்றார் விஜயகாந்த் கட்சி எம்.எல்.ஏ சந்திரகுமார். தன்னை எதிர்த்து கேள்வி கேட்கிறாறே, மிரட்டுகிறாறே என்ற வெறுப்பில் எதிர்கட்சி தலைவரின் அறையின் அளவை குறைத்தும், சஸ்பென்ட் காலம் முடிந்தும் எதிர்கட்சி தலைவருக்கான காரை தராமல் வெறுப்பை காட்டியுள்ளார். இது ஓரு காரணம். இதில் உள்ள மற்றொரு விவகாரம், காங்கிரஸ் அரசுடன் ஜெ நெருங்கி செல்கிறார். மற்றொரு காரணம், விஸ்தாரமான அறைகளை ஒதுக்க முடியாத அளவுக்கு சட்டமன்றத்தில் இடநெருக்கடி. இதனை 10 ஆண்டுகளுக்கு முன்பே உணர்ந்த ஜெ, தனியாக சட்டமன்றம் கட்ட முயன்றார். கல்வி நிலையத்துக்கான இடத்தில் அமைவதை அப்போதே பலர் எதிர்த்தனர். இதனால் அத்திட்டம் முடங்கியது. அடுத்து வந்த திமுக ஆட்சியில் புதிய சட்டமன்றம் கட்டப்பட்டது. அது கட்டி முடிந்து திறப்பு விழா நடைபெற்று புதிய சட்டமன்றம் இயங்கியது. எல்லா கட்சிகளுக்குமான டிஜிட்டல் முறையிலான, புதிய டெக்னாலஜிகள் அமைக்கப்பட்ட அறைகள், பறந்த நெருக்கடியில்லாத சட்டசபை என இருந்தது. ஆனால் அதை பொறுத்துக்கொள்ள முடியாத தீய எண்ணம் கொண்ட ஜெ, நான் முதல்வரானால் என் கால் அடிக்கூட அதில்படாது என அறிவித்தார். அதன்படி சட்டமன்ற தேர்தலுக்கு பின் புதிய சட்டமன்றத்திற்க்கு போகாமல் பழைய செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கே சட்டமன்றம், தலைமை செயலகத்தை மாற்றினார். பெரும் செலவில் கட்டப்பட்ட புதிய தலைமை செயலகம், சட்டமன்ற வளாகத்தை மருத்துவமனையாக்க போகிறேன் என்றார் ஜெ. இதனை அப்போது நடுநிலை என காட்டிக்கொண்டவர்கள், அதிமுகவின் ஜால்ரா பத்திரிக்கைகள் புதிய சட்டமன்றம் சரியில்லை, ஊழல், மழை வந்தால் ஒழுகுது என ஒன்னுமேயில்லாத விவகாரத்தை ஊதி, ஊதி புகைகிளப்பின. இப்போது, சட்டமன்றத்தில் இடநெருக்கடியால் தவிக்கின்றனர். கட்சிகளுக்கு அறைகள் ஒதுக்ககூட முடியாமல் தவிக்கிறது. இதுதான் அதிமுக ஆட்சியின் அவலம். என்றுமே நியாயமாக யோசிக்கும் தன்மையில்லாதவராக ஆணவம், கர்வம், திமிர் கொண்டவராகவே ஜெ மிளிர்கிறார். Posted by Rajpriyan 2 கருத்துகள்: இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Twitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர் அடுத்த ரப்பர் ஸ்டாம்ப் (ஜனாதிபதி) யார் ?. இந்திய ஒன்றியத்தின் முதல் பெண் ஜனாதிபதியும், 12வது ஜனாதிபதியுமான பிரதீபாபட்டேலின் பதவிகாலம் இன்னும் இரண்டு மாதத்தில் முடிவடைகிறது. அடுத்த ஜனாதிபதி யார்?. அரசியல் வட்டாரத்திலும், அரசியல் நோக்கர்கள் மத்தியிலும், பொதுமக்கள் மத்தியிலும் எழுந்துள்ள கேள்வி. இந்த தேர்தல் ஜனாதிபதியை மட்டும் தேர்வு செய்யப்போவதில்லை. 2014ல் நடக்கும் பாராளமன்ற தேர்தலுக்கான முன்னோட்டம். இந்த தேர்தலில் ஏற்படும் கூட்டணி பாராமன்ற தேர்தலுக்கான கூட்டணியாகவும் அமைய வாய்ப்புண்டு. அதனால் ஜனாதிபதி தேர்தல் பெரும் எதிர்பார்ப்புக்குள்ளாகியுள்ளது. ஜனாதிபதியை தனித்து தேர்ந்தெடுக்கும் பலம் இந்திய ஒன்றியத்தை ஆளும் காங்கிரஸ் கட்சிக்கும் அதன் கூட்டணிக்கும் கிடையாது. அதேநேரத்தில் முக்கிய எதிர்கட்சியான பி.ஜே.பிக்கும் கிடையாது அதன் கூட்டணி கட்சிகளுக்கும் கிடையாது. எதிர்கட்சிகள் ஒன்றிணைந்தால் ஒருவேளை ஜனாதிபதியை தேர்வு செய்யலாம். அதற்கும் வாய்ப்பு கிடையாது. காரணம் பி.ஜே.பி முன்னிறுத்தும் வேட்பாளரை கம்யூனிஸ்ட்டுகள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். மாநிலத்தை ஆளும் கட்சிகளிடம் தான் உள்ளது ஜனாதிபதி யார் என்ற முடிவு. அதிலும் காங்கிரஸ், பிஜே.பி என்ற இரண்டு மத்திய கட்சியுடனுடன் கூட்டணியில் இல்லாத உத்தரபிரதேசம், தமிழகம் தான் ஜனாதிபதி தேர்வில் முக்கிய பங்காற்றும். அதற்கடுத்து மேற்குவங்க முதல்வராக உள்ள மம்தா எடுக்கும் முடிவும் ஜனாதிபதி தேர்தலில் எதிரொலிக்கும். இவர்கள் மூவரும் ஆளுக்கொரு திசை நோக்கி வருகின்றனர். இவர்களை ஒரே நேர்க்கோட்டில் நிறுத்தும் கட்சி வேட்பாளருக்கு வெற்றி நிச்சயம். ஆனால் அந்த கட்சி நிறுத்தும் வேட்பாளரை இவர்கள் விரும்ப வேண்டும். ஆனால் அதற்கான வாய்ப்பு குறைவு. காரணம், ஜனாதிபதி என்பவர் ரப்பர் ஸ்டாம்பாக இருந்தாலும் தேர்தல் காலங்களில், தேர்தல் முடிவுக்கு பின் தொங்கு பாராளமன்றம் போன்றவை ஏற்பட்டால் ஜனாதிபதி விரும்பும் கட்சி ஆட்சியமைக்க அழைக்கலாம் இப்படி அவரை கொண்டு பலவற்றை சாதிக்கலாம் என்பதால் அப்பதியை அரசியல் கட்சிகள் விரும்பும். அதனாலயே அரசியல்வாதிகளையே அப்பதவிக்கு முன்னிறுத்தும். இதுவரை பதவியில் அமர்ந்துள்ள டாக்டர் இராஜேந்திரபிரசாத் முதல் தற்போதைய பிரதீபாபட்டேல் வரையிலான 12 ஜனாதிபதிகளில் ஜாகீர்உசேன், முகமது இதயதுல்லா, டாக்டர் அப்துல்கலாம் தவிர்த்து மற்ற அனைவரும் அரசியல்வாதிகளே. ஜனாதிபதி பதவிக்கு இவர் போட்டியிடுகிறார், அவர் போட்டியிட போகிறார் என பட்டியல் வாசிக்கப்படுகிறது. ஆதில் தற்;போதைய துணை குடியரசு தலைவர் அமீத்ஹன்சாரி, இந்திய ஒன்றியத்தின் பிரதமர் டாக்டர்மன்மோகன்சிங், நிதியமைச்சர் பிரணாப்முகர்ஜி, முன்னால் நாடாளமன்றவாதி நஜ்மா, பிரதமருக்கான தகவல் தொழில்நுட்ப ஆலோசகர் பிராண்டோ, நாடாளமன்ற சபாநாயகர் மீராகுமார், காந்தியின் பேரன் கிருஷ்ணகுமார் என பட்டியல் நீள்கிறது. இதில் பி.ஜே.பியில் யார் என்பதும், கம்யூனிஸ்ட்டுகள் யார் நிறுத்தப்போகிறார்கள் என்பதும் இன்னும் கேள்விக்குறியாகவே உள்ளன. காங்கிரஸ் வேட்பாளராகட்டும், பி.ஜே.பி வேட்பாளராகட்டும், இடதுசாரிகள் அல்லது மாநில கட்சிகள் இணைந்து நிறுத்தும் வேட்பாளராகட்டும் யார் வேட்பாளரை நிறுத்தினாலும் அதற்கு பிறரின் வாக்குயிருந்தால் மட்டுமே தங்கள் வேட்பாளரை வெற்றி பெற வைக்க முடியும் என்றநிலை. ஒருவேளை மும்முனை போட்டி நிகழ்ந்தால் காங்கிரஸ் நிறுத்தும் வேட்பாளர் வெற்றி பெற்றுவிடுவார். இருமுனை போட்டியென்றால் இரண்டு கூட்டணியிலும் இல்லாத மாநில கட்சிகள் கைகளில் தான் உள்ளது அடுத்த குடியரசு தலைவர் யார் என்கிற லகான். குடியரசுத்தலைவர் தேர்வு நடைபெறும் போது ஒரு புதிய கூட்டணி உருவாகியிருக்கும். இந்த கூட்டணி தான் அடுத்து வரப்போகும் பாராளமன்ற தேர்தலிலும் தொடரும். ஆக இந்த குடியரசுத்தலைவர் தேர்தல் ஒரு புதிய கூட்டணியை உருவாக்க காத்திருக்கிறது. இந்த தேர்தல் மூலம், காங்கிரஸ் தனது இரண்டாவது பங்காளியான திமுகவை கழட்டி விடுமா என்பதே தமிழக களத்தில் பலரின் எதிர்பார்ப்பு. காரணம், காங்கிரஸ்சின் பார்வை ஆளும்கட்சியான அதிமுக பக்கம் அதிகமாகவே வீசுகிறது. என்ன யோசித்தாலும் விடை தெரியல. அதாவது அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்து தேர்தலை சந்தித்து வெற்றி பெற்று எதிர்கட்சி தலைவராக உள்ள விஜயகாந்த் கட்சி இந்த ஜனாதிபதி தேர்தலின் போது அம்மா வாக்களிக்கும் வேட்பாளருக்கு வாக்களிப்பாரா ? எதிர்த்து வாக்களிப்பாரா?. Posted by Rajpriyan கருத்துகள் இல்லை: இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Twitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர் பிராமணீயத்துக்கு கூஜா தூக்கும் தமிழ் தேசியவாதிகள். தமிழ் தேசியவாதிகள் திராவிடம் என்பது மாயை இது எந்த பிரச்சனையையும் தீர்க்கவில்லை. திராவிடத்துக்கு வக்காலத்து வாங்குபவர்கள் யாரும் தமிழர்கள் இல்லை. தமிழகத்தில் இருந்து திராவிடம் பேசுபவர்களை துரத்த வேண்டும் என குதிக்கிறார்கள். இவர்கள் திராவிடம் என்றால் என்னவென்றே தெரியாதவர்கள். சுதந்திரத்திற்க்கு முன்னால் இந்தியா ஆங்கிலேயனிடம் அடிமைப்பட்டு இருந்தபோது முதலில் நமக்கு விடுதலை தேவை, அது வெள்ளையனிடமிருந்துயில்லை. பார்ப்பனனிடம்மிருந்து தான் தேவை என மற்ற எல்லா சாதியினர் முடிவு செய்தனர். அதற்கு காரணம், மிக குறைவான பிரமாணர்கள் ஆங்கில அரசாங்கம், பத்திரிக்கை துறை என பலவற்றிலும் மொய்த்துக்கொண்டு மற்ற சாதியினரை ஏய்த்து வாழ்ந்தனர். இதனை எதிர்த்தே திராவிடர்கள் சங்கம் உருவானது. அதாவது வடமாநிலத்தில் இருந்து வந்த பிராமணர்கள் ஆரியர்கள், தென்னிந்தியாவை அதாவது ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தமிழ்நாட்டை சார்ந்தவர்கள் திராவிடர்கள் என பிரிக்கப்பட்டனர். திராவிடர்கள் பிராமணர்களிடம் இருந்து விடுதலை வேண்டும் என தென்னிந்திய நலச்சங்கம் என்ற பெயரில் அமைப்பு தொடங்கி அது ஜஸ்டீஸ் கட்சி,: திராவிடர் கழகம் வரை உருமாற்றம் பெற்றாலும் அவர்களின் ஒட்டுமொத்த நோக்கம் பார்ப்பனியத்தை எதிர்ப்பது. அனைத்து சாதியினரும் படிப்பது, வேலைக்கு போவது போன்றவைக்காக தான். நாடு விடுதலையடைந்தும் திராவிட இயக்கங்களின் போராட்டம் பிராமணியத்துக்கு எதிர்ப்பாக தொடர்ந்தது. மொழிவாரி மாநிலங்களாக நாடு பிரியும் போது அதுவரை சென்னை மாகாணத்தோடு இருந்த ஆந்திரா, கர்நாடகா, கேரளா போன்றவை பிரிந்து தனி மாநிலங்களாயின. அம்மாநில தலைவர்கள் திராவிட கோஷத்தை மறந்து மாநில பற்றுதலோடு இயங்க தொடங்கினர். ஆனால், தமிழ்நாட்டில் மட்டும் எல்லாமே திராவிட கொள்கைப்படியே நடந்தன. திராவிட இயக்க போராட்டங்களுக்கு பின் தான் தமிழகத்தில் பிராமணீயத்தின் எழுச்சி சுத்தமாக நொறுக்கப்பட்டது. பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்கள் வளர்ச்சிக்காக திராவிட இயக்கங்கள் இயங்கின. திராவிடத்தை அடிக்கல்லாக கொண்டு கட்டப்பட்ட திமுக ஆட்சிக்கட்டிலில் அமர்ந்தன. அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம், ஒரே கல்வி முறை, சம போஜனம், கோயிலில் அனைத்து சாதியினரும் நுழையலாம், தமிழுக்கு முக்கியத்துவம் என சொல்லிக்கொண்டு போகலாம். அவைகள் சட்டமாக்கவும்பட்டன இதெல்லாம் திராவிடம் தந்தது. மக்களுக்காக உழைத்த திராவிட இயக்கங்களின் நூற்றாண்டு விழா தற்போது தொடங்கியுள்ளது. இதைத்தான் மீண்டும் கொச்சைப்படுத்த துவங்கியுள்ளனர் திராவிட கொள்கையை அழிக்க கடந்த 80 ஆண்டுகளாக போராடி வரும் பிராமணீயம். இவர்களோடு கைகோர்த்துக்கொண்டுள்ளார்கள் தமிழ்தேசியம் பேசுபவர்கள். தமிழகத்தில் ஆட்சியில் அமரும் தலைவர்கள் யாரும் தமிழர்களில்லை. கலைஞர் தெலுங்கர், ஜெ கன்னடர் என முத்திரை குத்துகிறார்கள். அவர்கள் மட்டுமல்ல வை.கோ தெலுங்கர் என்ற அடைப்புக்குறிக்குள் அடைக்கின்றனர். இவர்களால் தான் தமிழகம் முன்னேற்றம் அடையவில்லை. தமிழனின் கருத்துக்கள் பிரிதிபலிக்கவில்லை என வசனம் பேசுகிறார்கள். அதிலும் ஜெவை அதிகமாக அட்டாக் செய்வதில்லை என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். மொழி வாயிலாக நாடு துண்டாடப்பட்ட பின் தந்தை பெரியாராகட்டும், அறிஞர் அண்ணாவகட்டும் அவர்கள் குறிப்பிட்டது நாம் மொழியால் தமிழர்கள், இனத்தால் திராவிடர்கள் என்றார்கள். திராவிடர்களுக்காக ஆரியக்கூட்டத்தோடு போராடுகிறோம். திராவிட குடும்பத்தில் மற்ற மொழி பேசும் தெலுங்கனோ, கன்னடனோ, மலையாளியோ மோதுவதில்லை. தமிழகத்தில் மோதுகிறோம். காரணம், அவனோடு சமரசமானால் அவன் நம் உச்சந்தலையில் ஏறி உட்கார்ந்துக்கொண்டு ஆட்டம் போடுவான் அதனாலே. திராவிட கொள்கையால் மக்கள் மேம்பாடு அடையவில்லை, அதன் தலைவர்கள் தான் மேம்பட்டார்கள் என்கிறார்கள். சாதிகள் ஒழியவில்லை என வியாக்கியானம் பேசுகிறார்கள். இந்தியாவில் எங்கு தான் சாதிகள் ஒழிந்துள்ளது. தமிழகத்தை விட மற்ற மாநிலங்கள் இன்னும் சாதியை வைத்து தான் அரசியல் செய்கிறார்கள். தமிழகத்தை தவிர்த்து பிற மாநிலங்களில் அதிகாரிகள் கூட சாதியை கொண்டு தான் அதிகாரம் செலுத்துகிறார்கள். புpற மாநிலங்களில் மக்களிடமும் சாதி வேரூன்றி போய்வுள்ளது. ஆனால் தமிழகத்தில் மட்டும் தான் இலைமறை காயாக சாதி பேசப்படுகிறது. ஆந்திராவில், கர்நாடகாவில் சாதியை தான் உயர்த்தி பிடிக்கிறார்கள். ஆட்சிக்கு வருகிறார்கள். அங்கு இன்னும் கீழ் சாதியினர் என அடையாளம் காட்டப்படுபவர்கள் மேலே வர முடியவில்லை. ஆனால் தமிழகம் அப்படியல்ல. இங்கு சாதி மோதல்கள், சாதி அடக்குமுறைகள் இருந்தாலும் அம்மக்களால் மேலே வரமுடிகிறது. தமிழகத்தில் மட்டும் தான் ஒவ்வொரு தனி மனிதனின் மனதில் சாதி இருந்தாலும் அதை வெளிக்காட்டிக்கொள்வதில்லை. சாதி பார்த்து பழகுவதில்லை, சாதி பார்த்து பேசுவதில்லை. சாதி பெயரில் அரசியல் கட்சி வைத்திருப்பவர்கள் கூட தங்களது பெயருக்கு பின்னால் சாதியை சேர்ப்பதில்லை. இது திராவிட கொள்கையை கொண்டு அரசியல் செய்வதால் தான் சாத்தியமானது. அடுத்து திராவிடம் பேசுவதால் தான், தமிழகத்தின் நீர் ஆதார பிரச்சனையான காவேரி, பாலாறு, முல்லை பிரச்சனைகளில் தமிழகத்தின் நலனை விட்டு தருகிறார்கள் காரணம் இவர்கள் தமிழர்களில்லை தமிழனாக இருந்தால் விட்டு தரமாட்டார்கள் என குற்றம் சாட்டுகிறார்கள். அவர்கள் தண்ணீர் விடவில்லை என்பதற்காக என்ன செய்ய முடியும். பேசித்தான் தீர்க்க வேண்டுமே தவிர. அவர்களை அடித்து உதைத்து வாங்க முடியாது. அடுத்து இலங்கையில் வாழும் தமிழர்கள் கொல்லப்படுவதற்கு காரணம், திராவிட இயக்கம் தான் என்கிறார்கள். அதாவது திமுக. திராவிடம் பேசுபவர்கள் கையில் துப்பாக்கியை தூக்கி தந்து போய் சுட்டு விட்டு வா என்றார்களா என்ன?. ஈழத்தமிழர் பிரச்சனையை உலக அரங்கம் வரை கொன்டு சென்று முதன் முதலில் குரல் கொடுத்தது திமுக தான். ஈழத்தமிழர் பிரச்சனையை பட்டி தொட்டியெங்கும் கொண்டு போய் சேர்த்து மக்களிடம் ஆதரவு வட்டத்தை உருவாக்கி தந்தது திராவிட இயக்கங்களும், திராவிட அரசியல் பேசியவர்களும் தான். ( அன்றைய அதிமுக, இன்றைய அதிமுக அதில் கிடையாது). ஐ.நா சபையில் ஈழத்தமிழுக்காக 1980களிலேயே திமுகவின் சார்பில் உரையாற்றப்பட்டது. ஈழப்பிரச்சனையில் எம்.ஜீ.அரை தூக்கி வைத்து கொண்டாடுகிறார்கள் தமிழ் தேசியவாதிகள். ஈழப்போராட்டத்தை தன் சுயநலத்துக்காக பயன்படுத்தியவர், முல்லை பெரியாரை தான் பிறந்த கேரளா மாநிலத்துக்காக தமிழனின் உரிமையை தமிழக முதல்வராக இருந்தபோது விட்டு தந்தவர். அந்த எம்.ஜீ.ஆரை தூக்கி வைத்து கொண்டாடும் தமிழ் தேசியம் பேசுபவர்களே எம்.ஜீ.ஆர் என்ன தமிழரா?. அவர் மலையாள பிராமணர். அவரை மட்டும் ஏற்றுக்கொள்ளும் போது ஒன்று மட்டும் புரிகிறது. நீங்கள் திராவிடத்தை எதிர்க்கும் போர்வையில் பிராமணீயத்துக்கு கூஜா தூக்குகிறிறர்கள். தூக்கிக்கொள்ளுங்கள் அதற்காக திராவிட கொள்கையை கொச்சைப்படுத்தாதீர்கள். Posted by Rajpriyan 7 கருத்துகள்: இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Twitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர் திங்கள், ஏப்ரல் 16, 2012 2300க்கு விற்ற மாத்திரை 73ரூபாய்க்கு. –மருத்துவ மோசடி. உலகில் தற்போது புதிய புதிய நோய்கள் வருகின்றன. பன்றி காய்ச்சால், பறவை காய்ச்சலில் இருந்து புற்றுநோய் உட்பட பல நோய்கள் வருகின்றன. இப்படி நோய்கள் அதிகரிக்க காரணம், நமது உணவு முறை மாற்றம், உலகம் மாறுவதால் நமது வாழ்க்கை முறையும் மாற்றம்மடைகிறது அதனால் நோய்களும் அதிகமாகவே வருகின்றன. நோய் என்னவோ ஏழை, பணக்காரன் என்ற பேதம்மில்லாமல் வருகிறது. ஆனால் சிகிச்சை என்பது வசதி படைத்;தவர்களால் மட்டும்மே பெற முடிகிறது. ஏழைகளால் அந்நோயோடு வாழ மட்டுமே முடிகிறது. சிகிச்சை பெற முடிவதில்லை. அதற்க்கு காரணம் பெரும்பாலான நோய்களுக்கான டெஸ்ட்டுகள், சிகிச்சைகள், மருந்துகள் உதாரணமாக, கர்ப்பணி பெண்களுக்கான மருந்துகள், குழந்தையில்லாத தம்பதிகளுக்கான மருந்துகள், சர்ஜரிக்கான உபகரணங்கள், மருந்துகளின் விலைகள் அதிகமோ அதிகம். இப்படி அதிக விலை வைத்து விற்பனை செய்து பன்னாட்டு கம்பெனிகள் கொள்ளை லாபம்மடைகின்றன. இந்த விலை உயர்வு தவிர்க்க முடியாததல்ல. பன்னாட்டு முதலாளிகளின் லாபவெறியும், பண கொள்முதலுமே மருந்துகளின் விலை உயர்வுக்கு காரணம். உதாரணத்துக்கு ஜெர்மனியை சேர்ந்த பன்னாட்டு மருந்து கம்பெனியான பேயர் நிறுவனம் சிறுநீரகம் மற்றும் கல்லீரல் புற்றுநோய்க்கான மருந்தை தயாரித்து விற்பனை செய்கிறது. இந்தியாவில் 120 மாத்திரைகள் கொண்ட ஒரு பெட்டியின் விலை 2 லட்சத்து 84 ஆயிரம் ரூபாய். (ஒரு மாத்திரையின் விலை ரூபாய் 2366.70.) பன்னாட்டு கம்பெனிகள் இந்தியாவில் கடைவிரித்து, குறைந்த விலையில் விற்க வேண்டிய மருந்துகளை கொள்ளை லாபத்திற்க்கு விற்கின்றன. இதில், ஏழை மக்கள் தான் பாதிக்கப்படுகிறார்கள். உயிர் வாழ தேவையான மருந்தை இப்படி விற்பதை கண்டு பல நாடுகளில் உள்ள சிறிய கம்பெனிகள் குறைந்த விலைக்கு மருந்தை தயாரித்து விற்பனை செய்ய அனுமதி கேட்டும் ஆசிய, ஆப்ரிக்கா கண்டத்தில் உள்ள ஏழ்மையான நாடுகளுக்கு அந்நாட்டு அரசாங்கம் அனுமதி தருவதில்லை. இந்திய அரசும் அனுமதி தராமல் போக்கு காட்டுகின்றன. அதற்கு காரணமாக, காப்புரிமை சட்டத்தை காட்டுகின்ற இந்நாடுகள். மருந்து கம்பெனிகள் கண்டுபிடித்த மருந்துகளுக்கும், அவை தயாரிக்கும் மருந்துகளுக்கும் காப்புரிமை தரப்பட்டு வந்தன. இந்தியாவில் 1970ல் இந்திராகாந்தி பிரதமராக இருந்தபோது, ஒரு கம்பெனி ஒரு மருந்தை கண்டறிந்தால் அதற்கு மட்டுமே காப்புரிமை. மற்றப்படி அந்த கம்பெனி தயாரிக்கும் மருந்துக்கெல்லாம் இந்தியாவில் காப்புரிமை தர முடியாது. அம்மருந்தை யார் வேண்டுமானாலும் தயாரித்து விற்கலாம் என காப்புரிமை சட்டத்தை மாற்றியமைத்தார். அதன்படி 1978ல் இந்தியாவில் மருந்து விலை கட்டுப்பாட்டு ஆணையம் உருவாக்கப்பட்டது. இந்தியாவில் விற்கப்படும் மருந்துகளின் விலையை இதுதான் நிர்ணயிருக்கும். 500க்கும் அதிகமான மருந்துகளின் விலையை கண்காணித்து வந்தது. இதனால் மருந்துகளின் விலை மிக குறைவாகவே இருந்தது. இதனை கண்ட உலக சுகாதார நிறுவனமும் இதை பிற நாடுகளும் செயல்படுத்தலாம் என்றன. ஆனால் 1995க்கு பின் நிலை தலைகீழாக மாறியது. முதலாளித்துவத்தின் கைகளுக்கு உலகம் செல்ல தொடங்கிய பின் இந்த காப்புரிமை விதியை ஏற்றுக்கொள்ளாமல் உலக அரங்கில் பெரிய லாபியே செய்கின்றன மருந்து கம்பெனிகள். இதனால் இந்தியாவில் மருந்துகளுக்கு விலை நிர்ணயம் செய்யும் நிறுவனமும் செயல்பட முடியாமல் தவிக்கிறது. முன்பு 500க்கும் மேற்பட்ட மருந்துகளின் விலையை நிர்ணயித்த இந்நிறுவனம் தற்போது 50க்கும் குறைவான மருந்துகளின் விலையை நிhணயித்து கண்காணிக்கிறது. இதனால் இந்தியாவில் பல மருந்துகளின் விலைகள் சமீப ஆண்டுகளில் அதிகமாக உயர்ந்துள்ளன. உலக நாடுகள் பலவற்றிலும் இதே நிலை தான். இதனை கவனத்தில் கொண்ட உலக சுகாதார நிறுவனம் மற்றும் காப்புரிமை தரும் நிறுவனமும் இணைந்து 2001 ஆம் ஆண்டு கத்தார் நாட்டின் தலைநகர் தோகாவில் நடைபெற்ற உலக வணிக அமைப்புகளின் மாநாட்டில், எந்த நாட்டிலாவது காப்புரிமை காரணமாக உயிர் காக்கும் மருந்துகள் கிடைக்கவில்லை என்றாலோ அல்லது அதிக விலைக்கு விற்றால் அம்மருந்தை அறிவுசார் காப்புரீமை என்ற விதியின் கீழ் அந்த நாட்டின் மருந்து கம்பெனிகளே அந்த மருந்தை தயாரிக்க அனுமதி அளிக்கலாம் என்று முடிவுசெய்து அறிவித்தது. ஆனால் பெரும்பாலான நாடுகளின் அரசுகள் அதை செயல்படுத்தவேயில்லை. சமீபத்தில் அதாவது ஒரு மாதத்திற்க்கு முன்பு, இந்தியாவின் ஐதராபாத் நகரில் உள்ள நேட்கோ ஃபார்மா என்ற மருந்து தயாரிப்பு கம்பெனி கல்லீரல் புற்று நோய்க்கான மருந்தை விற்பனை செய்யும் உரிமையை பெற்றுள்ள ஜெர்மனி கம்பெனி விலையை விட 98 சதவிதம் குறைவாக அதே மருந்தை, அதே தரத்தில் அதே 120 மாத்திரையை வெறும் ருபாய் 8,800க்கு (1 மாத்திரையின் விலை 73.35) விற்பனை செய்ய போராடி அனுமதி பெற்றுள்ளது. இப்படி பல உயிர் காக்கும் மருந்துகளை குறைந்த மதிப்பில் விற்பனை செய்ய அனுமதி வழங்க முடியும். ஆனால் அதனை செய்ய இந்திய அதிகார மையம் முன்வருவதில்லை. காரணம் பணம் பணம். பன்னாட்டு மருந்து கம்பெனிகள் அந்த அளவுக்கு பணத்தால் அதிகார தலைமைகளை குளிப்பாட்டுகின்றன. இதனால் அவர்களுக்கு ஏற்றாற்போல் செயல்படுகின்றனர். இதனால் உயிர் காக்கும் மருந்துகள் உட்பட பல மருந்துகள் இப்போது விலை அதிகமாகி வருகின்றன. பன்னாட்டு மருந்து கம்பெனிகளின் மோசடிகளை கண்டித்தும், இந்திய ஆளும் அரசியல்வாதிகளின் சுயநலத்தை கண்டித்தும், மருந்துகளின் விலையை குறைக்க வேண்டியும், காப்புரிமை பெற்று அதன் காலம் முடியும் தருவாயில் உள்ள மருந்துகளை இனி எல்லா கம்பெனிகளும் தயாரிக்கும் வகையில் கட்டாய தயாரிப்பு அனுமதி வழங்க வேண்டும் என கேட்கின்றனர். ஆனால் இந்தியாவை ஆளும் காங்கிரஸ் அரசு அதனை சட்டைசெய்ய மறுக்கிறது. அரசின் முடிவை கண்டித்து பல தன்னார்வ அமைப்புகள் போராடி வருகின்றன. நாமும் முடிந்த அளவுக்கு அவர்களோடு கைகோர்த்து போராடுவோம். Posted by Rajpriyan 3 கருத்துகள்: இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Twitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர் ஞாயிறு, ஏப்ரல் 15, 2012 இந்தியாவில் இராணுவ ஆட்சி சாத்தியமா ?. ஓர் எளிய அலசல். சில தினங்களாக இந்தியாவின் பட்டி தொட்டி எங்கும் இராணுவம் ஆட்சியை பிடிக்க முயன்றதாமே என்ற பேச்சுதான் அதிகமாக பேசப்படுகிறது. இராணுவ தளபதி வி.கே.சிங் – அரசின் மோதல் தான் இவ்வளவு சர்ச்சைக்கும் காரணம். 1951ல் தரைப்படை தளபதி சிங் பிறந்ததாக அவரது பள்ளி சான்றிதழ்களில் உள்ளன. ஆனால் அவர் இராணுவத்தில் சேரும்போது தரப்பட்ட விண்ணப்பத்தில் 1950 என்று குறிப்பிட்டுள்ளார். இது தான் சர்ச்சைக்கு காரணம். உச்சநீதிமன்றம் வரை இரண்டு தரப்புமே சென்றது. பின் திடீரென வழக்கு இரண்டு தரப்பின் ஒத்தொழைப்போடு முடிவுக்கு வந்தது. 1951ஐ கணக்கில் கொண்டு இந்த ஆண்டு மே மாதம் இறுதியில் ஓய்வு பெற மத்தியரசு கூறிவிட அதற்கு சம்மதித்துவிட்டார் சிங். இதன்பின் தான் சர்ச்சைகள் ஆரம்பமாகின. எனக்கு ஓய்வு பெற்ற கர்னல் ஒருவர் நேரடியாக என்னிடம் ஆயுத பேரத்துக்கு 14 கோடி லஞ்சம் தருவதாக ஒரு கம்பெனியின் சார்பாக பேசினார். இதனை இராணுவ அமைச்சரிடம் கூறியும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குண்டை வீசினார் சிங். அடுத்ததாக இராணுவம் போரை சந்திக்கும் நிலையில் இல்லை. வெடிமருந்து சுத்தமாக கையிருப்பில் இல்லை என அடுத்த குண்டை வீசினார். தொடர்ந்து, பிரதமருக்கு சிங் ரகசியமாக எழுதிய கடிதம் லீக்கானது. அது எப்படி என்ற விவாதம் எழுந்தது. ஒருவழியாக புலனாய்வு பிரிவுகள் விசாரிக்கும் என அரசு அறிவித்தது. இந்த நிலையில் தான் இண்டியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ், ஜனவரி 16ந்தேதி இரவு, டெல்லியை நோக்கி இராணுவத்தின் மிக முக்கிய பிரிவுகளை இரவு நேரத்தில் அமைச்சகத்துக்கு தகவல் தராமல் தளபதி சிங் நகர்த்தினார். இதனை மோப்பம் பிடித்த ஐ.பி, உடனடியாக அரசுக்கு எச்சரிக்கை மணியடித்தது. இராணுவ அமைச்சர் மூலம் பிரதமர்க்கு தகவல் தந்து, வெளிநாட்டு பயணத்தில் இருந்த இராணுவ செயலாளரை உடனடியாக நாடு திரும்ப உத்தரவிட்டு டெல்லியை நோக்கி வந்த படையை டிராப்பிக்ஜாம் ஏற்படுத்தி தாமதப்படுத்தி இராணுவ செயலாளர் மூலம் பட்டாலியன்களை திரும்ப அதன் இடத்துக்கே அனுப்பி வைக்கப்பட்டது. இது இராணுவம் ஆட்சியை பிடிக்க நடந்த செயல் என செய்தி வெளியாக இந்தியாவே பதட்டம்மடைந்தது. புதட்டம், பேட்டி, நாடாளமன்றம் முடக்கம் எல்லாம் நடந்து வருகிறது. இதெல்லாம் ஒரு பக்கம்மிருக்கட்டும். முதலில் நம் சட்டத்தை தெளிவாக அறிந்துக்கொள்ள வேண்டும். நாடே முக்கியம். தனி மனிதன் முக்கியமல்ல என்பதாலும், பிற நாடுகளில் இராணுவம் ஆட்சியை பிடிப்பது போன்று நம் நாட்டில் எந்த காலத்திலும் நடக்ககூடாது என்பதால் இராணுவம், எல்லை பாதுகாப்புபடை, காவல்துறை மற்றும் பிற பாதுகாப்பு ஏஜென்சிகளின் அதிகாரம் உட்பட பலவற்றை பரவலாக்கி ஒவ்வொருவருக்கும் சம்மந்தமில்லாமல் வைக்கப்பட்டுள்ளது. முதலில் இராணுவத்தை எடுத்துக்கொள்வோம். இந்தியாவின் முப்படைகளுக்கும் தனித்தனி தலைமை தளபதிகள். தனித்தனி அதிகாரங்கள் இந்த மூன்று தளபதிகளும் போர் காலங்களை தவிர மற்ற நேரங்களில் ஒன்றிணைந்து பணியாற்ற முடியாது. அதோடு, இந்த தளபதிகளும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணியை தவிர்த்து மற்றப்படி தன்னிச்சையாக எந்த ஒரு முடிவுகளும் எடுக்க முடியாது. இராணுவத்துக்கு என்று தனி அமைச்சர் உண்டு, தனி செயலாளர்கள் உண்டு. செயலாளர்களுக்கு ஆலோசனை தரும் ஆலோசகர்கள் உண்டு அவர்களின் உத்தரவு இருந்தால் மட்டுமே இராணுவ தளபதி செயல்பட முடியும். அதேபோல் ஆயுத கொள்முதலும் தலைமை தளபதி என்ற அந்தஸ்த்தை வைத்துக்கொண்டு ஆயுதம் வாங்கவோ, விற்கவோ முடியாது. அமைச்சர் மற்றும் அமைச்சரவை தான் ஆயுதங்களை வாங்கி தரும். அதற்கென தனி குழுவும் உண்டு. அதோடு, முப்படைகளுக்கெல்லாம் தலைவர் ஜனாதிபதி மட்டுமே. மூன்று படை தளபதிகளுக்கும் உத்தரவு போடும் அதிகாரம் இந்தியாவில் அவரிடம் மட்டுமே உள்ளன. புpரதமரிடம் கூட அந்த அதிகாரம் கிடையாது. ஜனாதிபதி உத்தரவு இருந்தால் மட்டுமே போர் விமானங்கள் பறக்கும், கப்பல் படை கிளம்பும், பீரங்கி படை வெடிக்கும். இல்லையேல் எதுவும் நடக்காது. முப்படைக்கும் உத்தரவு போடும் அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் அதிகாரங்கள் அனைத்தும் அமைச்சரவை மற்றும் பாராளமன்றத்திடம் உள்ளன. இவர்களை மீறி ஜனாதிபதியால் சிறு துரும்பை கூட கிள்ளி போட முடியாது. உதாரணத்துக்கு இந்தியாவின் முதல் குடிமகனும், மூப்படை தளபதிகளை கட்டுப்படுத்தும் அதிகாரமும், உச்சநீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்யும் அதிகாரமும், பாராளமன்றத்தை கலைக்கும் அதிகாரமும் கொண்ட ஜனாதிபதிக்கு கார் டிரைவரை தேர்ந்தெடுக்கும் உரிமை கூட கிடையாது. கார் டிரைவர் முதல் செயலாளர் வரை பணியாளர்களை நியமிப்பது வரை மத்தியரசு தான். ஆக அவரின் அதிகாரமே கண்காணிக்கப்படுகிறது. அதற்கடுத்த நிலையில் உள்ள மத்திய தொழில் பாதுகாப்பு படை, எல்லை பாதுகாப்பு படை என உள்ள பலப்படை பிரிவுகளுக்கும் தனித்தனி இயக்குநர்கள். இவர்களுக்கு வரையறுக்கப்பட்ட தனித்தனி அதிகாரங்கள். இவர்களும் தன்னிச்சையாக முடிவுகள் எடுக்க முடியாது. மத்தியரசின் உள்துறைக்கு கட்டுப்பட்டவர்கள். அதேபோல் இந்தியாவில் உள்ள பாதுகாப்பு சம்மந்தமான புலனாய்வு துறைகளில் இராணுவ புலனாய்வு அமைப்பு இராணுவ செயலாளருக்கு கட்டுப்பட்டது. ஐ.பி உள்துறைக்கு கட்டுப்பட்டது. ரா பிரதமர்க்கு கட்டுப்பட்டது. இந்த துறைகளுக்குள் வேறு யாரும் மாறி உள் சென்று உத்தரவுகள் போட முடியாது. இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். அதிகாரம் குவிந்திருந்தால் நினைத்ததை செய்ய முடியும். இந்தியா என்றோ இராணுவ ஆட்சி மையமாகியிருக்கும். இப்போது அல்ல எப்போதும்மே இந்தியா இராணுவ ஆட்சியாகாது. காரணம், இராணுவத்தில் பலப்பல படைப்பிரிவுகள், வீரர்களாக பலப்பல மாநிலத்தை சாhந்தவர்கள் உண்டு. இவர்கள் நாட்டுக்கு விசுவாசமாக இருப்பார்களே தவிர தனி மனிதருக்கு விசுவாசமாக இருக்கமாட்டார்கள். அப்படியே ஒன்றினைந்து இராணுவம் ஆட்சியை பிடிக்க வேண்டுமாயின் முதலில் முப்படை தளபதிகளும் ஒன்றிணைய வேண்டும். பின் தங்களது அதிகாரங்களை பயன்படுத்த வேண்டும். அதற்கு சாத்தியமேயில்லை. மூன்று தளபதிகள் அரசின் ஒப்புதல் இல்லாமல் நேரடியாகவே, மறைமுகமாக சந்தித்தாலே அவர்களது பதவி காலி, கைது செய்யப்படுவார்கள். ஆட்சியை பிடிக்க முயலும் தகவல் அரசு அறிந்து ஒரு தளபதியை இடை நீக்கம் செய்தால் அவரை அவரது அலுவலக சிப்பாய் கூட அதன்பின் உள்ளே அனுமதிக்கமாட்டார். அடுத்ததாக ஜனாதிபதியின் உத்தரவுயில்லாமல் ஒரு துப்பாக்கி கூட சுடாது. அப்படி ஏதாவது ஒரு ரெஜிமென்ட் நாட்டுக்குள் துப்பாக்கியை திருப்பினால் அந்த ரெஜிமென்டே ‘காணாமல்’ போய்விடும். அதிகாரங்கள் அப்படி பரவலாக்கப்பட்டுள்ளன. செய்திகளில் குறிப்பிடுவது போல இராணுவ தளபதி படைகளை ஆட்சியை பிடிக்க டெல்லியை நோக்கி அனுப்பி இருந்தால் அது தற்கொலைக்கு சமம். உதாரணத்துக்கு பாராளமன்றத்தை முற்றுகையிட்டு பிரதமர் அமைச்சர்களை அவர் சிறைபிடிக்க முயல்கிறார் என வைத்துக்கொள்வோம். உடனடியாக ஜனாதிபதிக்கு தகவல் அனுப்பி படைகளை திரும்பி செல்லுமாறு கூறுவார்கள் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லையெனில், மற்ற தரைப்படை ரெஜிமென்ட்டுகளை கொண்டு முற்றுகையிட்ட ரெஜிமெண்ட்டை தாக்க உத்தரவு தருவார்கள். தரைப்படை முழுவதும் தளபதிக்கு கட்டுப்பட்டு அவர்கள் ஒன்றினைந்தால் கப்பற்படை மற்றும் விமானப்படை வீரர்களை களமிறக்கி தரைப்படை தளபதிகளை கைது செய்யவோ, சுட்டுக்கொல்லவோ ஜனாதிபதி உத்தரவிடலாம். இல்லை முப்படை தளபதிகளும் ஒன்றிணைந்துவிட்டார்கள் என்றால், நாட்டில் மத்தியரசின் கட்டுப்பாட்டில் உள்ள படைகளை கொண்டு இராணுவத்தோடு மோத வைப்பார்கள் இவ்வளவுக்கும் சாத்தியமும்முண்டு. மற்றொன்றை தெளிவாக தெரிந்துக்கொள்ளுங்கள். மேலே குறிப்பிட்டதை போல ஆட்சியை பிடிக்க எந்த தளபதியாலும் முடியாது. மற்றொன்று, இராணுவத்துக்குள் அதிகார மோதல் உண்டு. அந்த மோதல் தான் இப்படி தளபதியை கொதிக்க வைத்துள்ளது. அதனால் இராணுவ ஆட்சியென்பது இந்தியாவில் சாத்தியமேயில்லை……………….. Posted by Rajpriyan 6 கருத்துகள்: இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Twitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர் புதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு இதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom) என்னைப் பற்றி Rajpriyan தமிழ்நாடு, India இவ்வுலகில் அனைவரும் நல்லவர்களே.......... நாம் நல்லவர்களாக இருந்தால்.......... எனது முழு சுயவிவரத்தைக் காண்க பிரபலமான பதிவுகள். தமிழீழ தேசிய தலைவர் பிரபாகரன் பிறந்தநாள் நவம்பர் 26. 3. மலையக மக்களின் வாழ்வும் துயரமும். ( சிலோன் முதல் ஈழம் வரை தொடர் ) 1796இம் இண்டு இலங்கையை தங்களது ஓரே தலைமையின் கீழ் கொண்டு வந்த ஆங்கியேலர் தங்களது வசதிக்காகவும் , தாங்கள் நிம்மதியாக ஆட்சி செய்ய ... ஓரினச்சேர்க்கை போல…. விலங்குகளுடன் செக்ஸ். சட்ட அங்கீகாரம் உண்டா ?. ஓரின சேர்க்கையாளர்களுக்கு எதிரான உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு நாட்டில் வாத பிரதிவாதங்களை ஏற்படுத்திவிட்டது. ஆண் - பெண் உறவு நிலைக்கு மாறா... வை.கோவை சீமான் வெறுப்பது ஏன்?. வை.கோ மீதும், அவரின் பல முடிவுகள் மீது எனக்கு எதிர்மறையான விமர்சனங்கள் உண்டு. ஆனால் அவர் ஈழ மக்களுக்காக எப்போதும் எந்த காம்பர்மைஸ்ச... 6. விடுதலைப்புலிகள் ( சிலோன் முதல் ஈழம் வரை ) தமிழர்களை நசுக்கிய சிங்கள அரசிடமிருந்தும் , சிங்கள மக்களிடமிருந்தும் தன் மக்களை காப்பாற்றவும் , உரிமைகளை பெறவும் எழுச்சி பெற...
கேரட் மிகவும் மலிவாக எளிதில் கிடைக்கும் காய்களில் ஒன்றாகும். அதிக நன்மைகள் நிறைந்த கேரட் அனைவராலும் விரும்பி உண்ணும் சுவை நிறைந்த காயாகும். நாம் அனுதினமும் பயன்படுத்தும் … Read more நெல்லி பொடி நெல்லி பொடி பயன்கள் நெல்லியில் இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ் போன்ற தாதுக்கள் அதிக அளவில் நிறைந்துள்ளதால் இது இரத்த சோகைக்கு நல்ல மருந்தாகும். நெல்லியில் அறுசுவையில் உப்பு … Read more முடக்கத்தான் பொடி முடக்கத்தான் பொடி பயன்கள் முடக்கத்தான் முடக்கு அறுத்தான் என்பது நாளடைவில் முடக்கற்றான் என்றானது. கசப்புத் தன்மையுடைய முடக்கத்தான் முடக்கு வாத நோய்களை குணமாக்குவதால் முடக்கத்தான் என்று பெயர் … Read more கரிசலாங்கண்ணி பொடி கரிசலாங்கண்ணி பொடி பயன்கள் கரிசலாங்கண்ணி அதிக அளவில் மருத்துவ குணங்கள் நிறைந்த மூலிகையாகும். இதில் எக்லிப்டால், டெஸ்மீத்தைல், அக்கோண்டனால், ஹென்ட்ரை, ஸ்டிக்மாஸ்டீரால், தங்கச்சத்து, இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் … Read more ஆவாரம் பூ பொடி ஆவாரம்பூ பொடி பயன்கள் ஆவாரம்பூ துவர்ப்புத் தன்மை உடையது. இதில் தங்கச்சத்து நிறைந்துள்ளது. ஆவாரம் பூ பொடியை தினமும் ஒரு டீஸ்பூன் அளவு சாப்பிட்டு வர சர்க்கரை … Read more கஸ்தூரி மஞ்சள் பொடி கஸ்தூரி மஞ்சள் பொடி பயன்கள் கஸ்தூரி மஞ்சள் முக அழகு சாதன பொருட்களில் ஒன்றாகும். இது அனைத்து வகை சருமத்திற்கும் கேடு விளைவிக்காத அலர்ஜி எதிர்ப்பு தன்மை … Read more எலுமிச்சை தோல் பொடி பயன்கள் எலுமிச்சை தோல் பொடியினைக் கொண்டு ஃபேஸ் பேக் முதல் பாதத்திற்கு அழகு தரும் பெடிக்யூர் வரை பயன்படுத்தலாம். எலுமிச்சை தோலில் அதிக அளவு கலோரிகள், கார்ப்ஸ், நார்ச்சத்து, … Read more ஆரஞ்சு தோல் பொடி ஆரஞ்சு தோல் பொடியின் பயன்கள் ஆரஞ்சு தோலில் அதிகளவு ஆன்டி ஆக்ஸிடன்டுகள் நிறைந்துள்ளது. இது இயற்கை அழகை விரும்பும் பெண்களுக்கு மிகச் சிறந்த அழகு சாதன பொருளாகும். … Read more முருங்கை இலை பொடி முருங்கை இலை பொடி பயன்கள் முருங்கையில் விட்டமின்கள், மினரல், அமீனோ ஆசிட்கள், வைட்டமின் சி, கால்சியம், பொட்டாசியம் மற்றும் புரோட்டின் போன்ற ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளது. 10 கிராம் … Read more மருதாணி பொடி மருதாணி பொடி பயன்கள் மருதாணி பொடியானது இளநரையை தடுக்க அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். இதனுடன் அவுரி பொடியை சேர்த்து பயன்படுத்தும் போது நம் கூந்தலுக்கு ஏராளமான நன்மைகள் … Read more ரோஸ் பொடி ரோஸ் பொடியின் பயன்கள் ரோஜாவிற்கு இயற்கையாகவே சருமத்தின் நிறத்தை கட்டுப்படுத்தும் தன்மை உள்ளது. ரோஜாவில் அதிகளவு வைட்டமின் சி நிறைந்துள்ளது. இது நல்ல ஆன்டி-ஆக்ஸிடன்ட் ஆகும். ரோஜா … Read more மண் சிகிச்சை மண்ணின் மகத்துவத்தை அறிந்து அதில் உள்ள மருத்துவ குணங்களை கொண்டு மண் சிகிச்சை முறைகளை சித்த மருத்துவர்கள் கூறியுள்ளனர். பழங்காலங்களில் அனைத்து கிராமங்களிலும் மண் சிகிச்சை முறைகளை … Read more முகத்தில் உள்ள கருமை நீங்க வேண்டுமா? முக அழகு என்பது அனைவரும் விரும்பும் ஒன்றாகும். அதிலும் பெண்கள் முகத்தில் ஏதேனும் ஒரு சிறு பரு வந்தாலும் மிகவும் வேதனைப்படுவர். அநேக பெண்கள் வெள்ளை நிறத்தில் … Read more சர்க்கரை நோயில் இருந்து ஆரம்பத்திலேயே தப்பித்துக்கொள்ள… சர்க்கரைக்கேற்ற முருங்கை சர்க்கரை நோய் சர்க்கரை நோய் இன்றைய காலத்தில் அதிகளவில் காணப்படும் நோயாகும். நம் உடலில் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ … Read more உடலுக்குத் தேவையான வைட்டமின்கள் புழுக்கமான சீதோஷ்ண நிலை பெரும்பாலும் மே, ஜுனில் காணப்படுகிறது. வறட்சியான ஈரப்பதம் ஃபுளூ காய்ச்சலுக்கு ஈடான உடல் நலக் கோளாறுகளை ஏற்படுத்துகிறது. மூக்கடைப்பு, டான்சில், குரல் வளை … Read more
மே 6 ஆம் திகதி காலை 7 மணி முதல் 24 மணி நேர வேலைநிறுத்தப் போராட்டத்தில் சுகாதார பணியாளர்கள் தவிர அனைத்து சுகாதாரத்துறை ஊழியர்களும் ஈடுபடவுள்ளனர். அனைத்து அத்தியாவசிய மற்றும் உயிர்காக்கும் சேவைகள் நடத்தப்படும் என்றும், பொது மக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களை குறைக்க விசேட வேலைத்திட்டம் செயற்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், அத்தியாவசியமற்ற நோக்கங்களுக்காக மருத்துவமனைகளுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு தொழிற்சங்கங்கள் பொது மக்களை வலியுறுத்தியுள்ளன. தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக காலை 9 மணி முதல் சுகாதார அமைச்சு மற்றும் அனைத்து மருத்துவமனைகளுக்கும் எதிரே ஹர்த்தால் முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அண்மைய செய்திகள் சுவாமி விபுலாநந்த அடிகளாரின் 130வது ஜனன தின நிகழ்வு மட்டக்களப்பில் அனுஷ்டிக்கப்பட்டது. 2009ல் தலையில் தூக்கி வைத்து பாற்சோறு கொடுத்து கொண்டாடியவர்களே இன்று போராட்டம் நடத்தி தூற்றும் நிலை… (பாராளுமன்ற உறுப்பினர் – கோ.கருணாகரம்) மீசாலையில் பாடசாலை அதிபர் சடலமாக மீட்பு. எம்.பிக்கள் மற்றும் பிரமுகர்களின் பெருநாள் வாழ்த்து செய்தி சாய்ந்தமருதில் இரவில் துர்நாற்றம் வீச காரணமென்ன? களவிஜத்தில் கண்டுகொண்ட உண்மைகளும், வெளிவர தயங்கும் எதார்த்தங்களும் !
முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன, இலங்கை மீன்பிடி துறைமுகக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் மற்றும் முன்னாள் பணிப்பாளர் ஆகியோரை ஒக்டோபர் 29 ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு கொழும்பு உயர் நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது. 2014 ஆம் ஆண்டு கொழும்பு முகத்துவார மீன்பிடி துறைமுகத்தை குத்தகைக்கு விட்டு அரசாங்கத்திற்கு நஷ்டம் ஏற்படுத்திமை தொடர்பான வழக்கு விசாரணைகளுக்காகவே அவர்களுக்கு இவ்வாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. Related posts: சிறுவர் இல்லப் பிரச்சினைகளை உடனுக்குடன் அறிவிக்க வேண்டும்! விருந்தோம்பலில் முதன்மையானது யாழ்ப்பாணம் - சொல்கிறார் அமைச்சர் விஜயதாஸ! பாலூட்டும் தாய்மார் தடுப்பூசியை பெற்றுக்கொள்வதனால் எந்தப் பாதிப்பும் கிடையாது – கொழும்பு ஐ.டி.எச் வை...
அரசுப் பணியில் நேர்மையாக நடந்து தங்கள் பணியை சிறப்பாகச் செய்த இரண்டு அதிகாரிகள் அரசியல் காரணத்துக்காக பழிவாங்கப்பட்டுள்ளனர். அரசுப் பணியில் நேர்மையாக நடக்கும் அதிகாரிகள் அரிதிலும் அரிதாக இருக்கும் இன்றைய சூழலில், நேர்மையான அதிகாரிகள் இப்படி பழிவாங்கப்பட்டு இருப்பது, மற்ற நேர்மையான அதிகாரிகளை மனச்சோர்வு அடைய வைக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு சிறைத்துறையில் கண்காணிப்பாளராக இருந்து வருபவர் ராஜேந்திரன். துணை ஜெயிலராக பணியில் சேர்ந்து இன்று கண்காணிப்பாளர் நிலைக்கு உயர்ந்துள்ளார். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே அப்போது இருந்த மத்திய சிறையில் ஜெயிலராக ராஜேந்திரன் இருந்த போதுதான் தற்போதைய முதல்வர் ஜெயலலிதா, திமுக அரசால் கைது செய்யப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டார். ஜெயலலிதாவை பழிவாங்க வேண்டும் என்ற நோக்கத்தில் அப்போது சிறையில் பயன்படுத்தப்படாமல் இருந்த பழைய அறையில் ஜெயலலிதாவை அடைத்தனர். சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே இருந்த பழைய சிறை கூவம் நதிக்கரையில் அமைந்துள்ளது. கூவம் நதிக்கரையில் அமைந்துள்ளதால், அந்தச் சிறையில் எலி, பெருச்சாளி, போன்றவை சாதாரணமாக நடமாடும். தற்போதைய முதல்வர் ஜெயலலிதாவை இருப்பதிலேயே மோசமான அறையில் அடைத்து, அவரை துன்புறுத்தி அப்போதைய முதல்வர் கருணாநிதியிடம் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்பதற்காக அது வரை பயன்படுத்தப்படாமல் இருந்த ஒரு அறையில் அடைத்தனர். சிறையில் அடைக்கப்பட்ட ஜெயலலிதா முதல் நாள் இரவு தன்னுடைய அறைக்குள் பெரிய அளவில் உள்ள பெருச்சாளிகள் சர்வ சாதாரணமாக நடமாடுவது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இந்த அதிர்ச்சியில் இரவு முழுவதும் தூங்காமல் அவதிப்பட்டார். பெருச்சாளிகள் தொல்லைகள் போக, ஆயிரக்கணக்கில் கொசுக்களும் தொல்லை கொடுத்தன. மறுநாள் காலையில் சிறையை பார்வையிட வந்த அப்போது ஜெயிலராக இருந்த ராஜேந்திரனிடம், அறைக்குள் பெருச்சாளிகளின் நடமாட்டம் குறித்து புகார் தெரிவித்தார் ஜெயலலிதா. ஜெயலலிதாவிடம் ராஜேந்திரன், சிறையில் முதல் வகுப்புக்கான உத்தரவை நீதிமன்றம் மூலமாக பெற்று விடுங்கள். அந்த உத்தரவு இல்லையென்றால், உங்களுக்கு தொடர்ந்து தொல்லை கொடுப்பார்கள் என்று கூறியவுடன், ஜெயலலிதா நாவலர் நெடுஞ்செழியனை வரச் சொல்லுங்கள் என்று சொல்கிறார். நாவலர் நெடுஞ்செழியன் ஜெயலலிதாவை சிறைக்கு வந்து சந்தித்த பின், ஜெயலலிதாவுக்கு சிறையில் முதல் வகுப்பு வசதி பெறப்படுகிறது. ஆனால் ராஜேந்திரன் முதல் வகுப்பு உத்தரவுக்காக காத்திருக்காமல், உடனடியாக, அந்த அறைக்குள் இருந்த ஓட்டைகளை தடுப்பு வைத்து அடைத்து, பெருச்சாளிகள் அறைக்குள் நுழையாமல் தடுப்புகளை ஏற்படுத்தினார் ராஜேந்திரன். இதன்பிறகுதான் அந்த அறையில் பெருச்சாளிகள் நுழையாது என்று அச்சமில்லாமல் ஜெயலலிதாவால் உறங்க முடிந்தது. சிறைக்கைதிகளின் நலனைப் பாதுகாக்க வேண்டிய தன்னடைய கடமையைச் செய்ததன் பலனை ஒரே வாரத்தில் அனுபவித்தார் ராஜேந்திரன். உடனடியாக அவரை புதுக்கோட்டை சிறைக்கு மாற்றி உத்தரவிட்டது. இத்தோடு ராஜேந்திரனுக்கு துன்பங்கள் ஓயவில்லை. 2006ல் திமுக ஆட்சிக்கு வந்ததும், கோவை சிறையில் அவர் கண்காணிப்பாளராக இருந்த போது, சிறைக்கு நூல் வாங்கியதில் விதி மீறல் ஏற்பட்டுள்ளதாக குற்றம் சாட்டி, அவருக்கு குற்றக்குறிப்பாணை வழங்கப்பட்டது. 2006ல் குற்றக்குறிப்பாணை வழங்கப்பட்டு, இந்த விசாரணை இன்னும் முடியாமல் நிலுவையில் வைக்கப்பட்டுள்ளது. ராஜேந்திரனோடு பணியில் சேர்ந்த மற்ற துணை ஜெயிலர்கள் 2008லேயே பதவி உயர்வு பெற்று விட்டனர். இவரை விட பணியில் இளையவர்கள் கூட டிஐஜியாக பதவி உயர்வு பெற்ற நிலையில், திமுக ஆட்சியில் பழிவாங்கும் நோக்கத்தோடு இவர் மீது தொடரப்பட்ட அந்தக் குற்றச்சாட்டுக் குறிப்பாணையால் டிஐஜி பதவி உயர்வு மறுக்கப்பட்டு இன்னும் கண்காணிப்பாளராகவே உள்ளார். தலைமைச் செயலகத்தில் கடந்த ஆறு ஆண்டுகளாக ராஜேந்திரனின் கோப்பை கவனித்து வரும் தினகர் என்ற சார்புச் செயலாளர், தன்னை உள்துறைச் செயலாளராகவே கருதிக் கொண்டு, ராஜேந்திரனின் கோப்பின் மீது நடவடிக்கை எடுக்காமல், அவருக்கு பதவி உயர்வு கிடைக்காமல் தொடர்ந்து தடுத்து வருகிறார். விசாணைக் கைதிகள் சிறையில் மர்மமான முறையில் இறந்ததற்கு பொறுப்பான சிறைத் துறை அதிகாரிகளே பதவி உயர்வு பெற்றுள்ள நிலையில், என்ன காரணத்தாலோ ராஜேந்திரனுக்கு மட்டும், பதவி மறுக்கப்பட்டுள்ளது ஏன் என்பது புரியவில்லை. இவரைப்போலவே பழிவாங்கப்பட்டு உள்ள மற்றொரு அதிகாரி, எஸ்.கே.உபாத்யாய். இவர் 1976ம் ஆண்டு நேரடியாக ஐபிஎஸ் அதிகாரியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் எஸ்.கே.உபாத்யாய். சிபிஐ உட்பட பல்வேறு துறைகளில் பணியாற்றியவர். 2008ல் இவருக்கு வந்த நெருக்கடி அப்போதைய தலைமைச் செயலாளர் திரிபாதியால் வந்தது. 2007ல் லஞ்ச ஒழிப்புத்துறையின் இயக்குநராக நியமிக்கப்பட்ட உபாத்யாய்க்கு தற்போதைய முதல்வர் ஜெயலலிதா மீது கொடநாடு எஸ்டேட் வாங்கியது தொடர்பாக ஒரு புதிய ஊழல் வழக்கை பதிவு செய்யுமாறு வற்புறுத்துகிறார். உபாத்யாய் இது போல வழக்கு தொடர்வதற்கு இந்த நேர்வில் ஆதாரங்கள் இல்லை, புதிய வழக்கு தொடர முடியாது என்று மறுக்கிறார். ஆனால், தலைமைச் செயலாளர் தொடர்ந்து உபாத்யாவை வற்புறுத்துகிறார். தலைமைச் செயலாளரின் நெருக்கடி தாங்க முடியாமல், உபாத்யாய், தலைமைச் செயலாளரின் இந்த தொலைபேசி நெருக்குதல்களை தன்னுடைய மடிக்கணினியில் பதிவு செய்கிறார். திரிபாதியின் நெருக்கடி ஒரு புறம் இருக்க, அப்போது சமூக நலத்துறை அமைச்சராக இருந்த பூங்கோதை, 50 ஆயிரம் லஞ்சம் வாங்கி லஞ்ச ஒழிப்புத் துறை வலையில் சிக்கிய தன்னுடைய உறவினர் ஜவஹர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று கோரிக்கை விடுக்கிறார். இந்த இரு உரையாடல்களும் ஜுலை 2008ல் ஊடகங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. இந்த உரையாடல்கள் வெளியானதை அடுத்து, தமிழக அரசு ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி சண்முகம் தலைமையில் ஒரு ஆணையத்தை ஏற்படுத்தி, அந்த ஆணையம் உபாத்யாய் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப் பரிந்துரைத்தது. இந்தப் பரிந்துரையின் அடிப்படையில் எடுக்கப்பட்ட நடடிவக்கையில் உபாத்யாய் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை என்று அறிக்கையளித்த பின்னும் கடந்த மூன்று ஆண்டுகளாக உபாத்யாய் டிஜிபி பதவி உயர்வு அளிக்கப்படாமல் கூடுதல் டிஜிபியாகவே உள்ளார். அவரை விட பணியில் இளையவரான லத்திக்கா சரண், டிஜிபியாக பதவி உயர்வு அளிக்கப்பட்டு ஓய்வு பெற்று விட்டார். ஆனால் உபாத்யாய் இன்னமும் பதவி உயர்வு அளிக்கப்படாமல், சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் கண்காணிப்பு அதிகாரியாக, முக்கியத்துவம் இல்லாத பதவியில் கடந்த மூன்றாண்டுகளாக அமர்த்தப்பட்டுள்ளார். தலைமைச் செயலாளராக இருந்த திரிபாதியின் உத்தரவுப்படி, ஜெயலலிதா மீதும் புதிய வழக்கை பதிவு செய்யவில்லை, அமைச்சர் பூங்கோதையின் உறவினர் மீதும் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்வதற்கு உத்தரவிட்டார் உபாத்யாய்.. இந்த இரண்டு அதிகாரிகளும், மனசாட்சிக்கு விரோதமாக நடந்து கொண்டிருப்பார்களேயானால், இவர்களுக்கு இந்தச் சிக்கல் வந்திருக்காது. 1996ல் இருந்த திமுக அரசின் மனதைக் குளிரவைக்கும் வகையில் ஜெயிலராக இருந்த ராஜேந்திரன், முதல்வர் ஜெயலலிதாவின் அறையில் பெருச்சாளி நுழைந்ததை கண்டுகொள்ளாமல் இருந்திருந்தால், இவருக்கு தற்போது மற்ற அதிகாரிகளைப் போல பதவி உயர்வு கிடைத்திருக்கும். தலைமைச் செயலாளர் உத்தரவின் படி, முதல்வர் ஜெயலலிதாவின் மீது கொடநாடு எஸ்டேட் வாங்கியது தொடர்பாக ஒரு புதிய வழக்கைத் தொடர சம்மதித்திருப்பாரேயானால் அவருக்கும் எந்தத் தொல்லையும் ஏற்பட்டிருக்காது. கடந்த மூன்றாண்டுகளாக டிஜிபயாக இருந்திருப்பார். நேர்மையான முறையில் தங்கள் கடமையைச் செய்ததற்காக பல ஆண்டுகளாக தொடர்ந்து நியாயமாக கிடைக்க வேண்டிய பதவி உயர்வு கிடைக்காமல் இரண்டு அதிகாரிகள் அல்லலுற்று வருகிறார்கள். ஆனால், திமுக ஆட்சியில் இருந்த இடம் தெரியாமல் ஒடுங்கிக் போய் கிடந்த அதிகாரிகளும், திமுகவுக்கு மறைமுகமாக உதவி செய்து வந்த பல அதிகாரிகளும், இன்றும் நல்ல பதவியில் திளைத்துக் கொண்டு இருக்கிறார்கள். நேர்மையான அதிகாரிகள் இது போலப் பழிவாங்கப்படுவதைக் கூட ஜெயலலிதா கண்டுகொள்ளாமல் இருப்பது, மற்ற அதிகாரிகளையும் அரசியல் சார்போடு நடக்கவோ, நமக்கு என்ன வந்தது, காற்று வீசும் பக்கம் சாய்ந்து கொள்ளலாம் என்ற எண்ணத்துக்கு தள்ளி விடும். Share $('#twitter').sharrre({share: {twitter: true },template: ' ',enableHover: false,enableTracking: true,buttons: { twitter: {via: ''}},click: function(api, options){api.simulateClick();api.openPopup('twitter');}});$('#facebook').sharrre({share: {facebook: true },template: ' ',enableHover: false,enableTracking: true,buttons:{layout: 'box_count'},click: function(api, options){api.simulateClick();api.openPopup('facebook');}}); // Scrollable sharrre bar, contributed by Erik Frye. Awesome! var $_shareContainer = $(".sharrre-container"),$_header = $('#header'),$_postEntry = $('.entry'),$window = $(window),startSharePosition = $_shareContainer.offset(),//object contentBottom = $_postEntry.offset().top + $_postEntry.outerHeight(),topOfTemplate = $_header.offset().top,topSpacing = _setTopSpacing();//triggered on scroll shareScroll = function(){var scrollTop = $window.scrollTop() + topOfTemplate,stopLocation = contentBottom - ($_shareContainer.outerHeight() + topSpacing);$_shareContainer.css({position : 'fixed'});if( scrollTop > stopLocation ){$_shareContainer.css( { position:'relative' } );$_shareContainer.offset( {top: contentBottom - $_shareContainer.outerHeight(),left: startSharePosition.left,});}else if (scrollTop >= $_postEntry.offset().top - topSpacing){$_shareContainer.css( { position:'fixed',top: '100px' } );$_shareContainer.offset( {//top: scrollTop + topSpacing,left: startSharePosition.left,});} else if (scrollTop < startSharePosition.top + ( topSpacing - 1 ) ) {$_shareContainer.css( { position:'relative' } );$_shareContainer.offset( {top: $_postEntry.offset().top,left:startSharePosition.left,});}},//triggered on resize shareMove = function() {startSharePosition = $_shareContainer.offset();contentBottom = $_postEntry.offset().top + $_postEntry.outerHeight();topOfTemplate = $_header.offset().top;_setTopSpacing();}; setTimeout( function() {contentBottom = $_postEntry.offset().top + $_postEntry.outerHeight();}, 2000);function _setTopSpacing(){var distanceFromTop = 20;if( $window.width() > 1024 ) {topSpacing = distanceFromTop + $('.nav-wrap').outerHeight();} else {topSpacing = distanceFromTop;}return topSpacing;}//setup event listeners $window.on('scroll', _.throttle( function() {if ( $window.width() > 719 ) {shareScroll();} else {$_shareContainer.css({top:'',left:'',position:'' }) }}, 50 ) );$window.on('resize', _.debounce( function() {if ( $window.width() > 719 ) {shareMove();} else {$_shareContainer.css({top:'',left:'',position:'' }) }}, 50 ) ); });
தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடத் திரைத்துறையில் தனக்கென ஒரு பெயரைப் பெற்ற நடிகை ராஷ்மிகா மந்தனா வியாழக்கிழமை அன்று திரைப்படத்துறையில் ஐந்து வருடங்களை நிறைவு செய்துள்ளதாகவும் இந்த காலகட்டத்தில் தான் நான் கற்றுக்கொண்ட சில பாடங்களைப் பகிர்ந்து கொண்டதாகவும் அறிவித்தார். நான் திரைத்துறைக்கு வந்து 5 வருடங்கள் ஆகிறது. அது எப்படி நடந்தது போல ஆச்சர்யமாக இருக்கிறது. நான் இத்தனை வருடங்களில் கற்றுக்கொண்ட சில விஷயங்கள்: வாழ்க்கையில் எதுவும் எளிதானது அல்ல என்பதை நான் உணர்ந்தேன். நீங்கள் விரும்புவதற்கு எப்போதும் போராடிக்கொண்டே இருக்க வேண்டும். எச்சரிக்கையாக இருங்கள், உங்கள் கால்விரல்களில் இருங்கள், அடித்தளமாக இருங்கள், நன்றியுடன் இருங்கள், எப்போதும் நீங்கள் விரும்புவதை அடைவதற்காக சண்டையிட்டுக் கொண்டே இருங்கள். ஆனால் பொறுமையாக இருங்கள், காத்திருங்கள், நீங்கள் நினைத்ததை அடையலாம், எப்போதும் பொறுமையாகவும் அமைதியாகவும் இருங்கள். பிறர் உங்களுக்குக் கற்பிக்க எப்போதும் ஏதாவது வைத்திருப்பார்கள், எனவே எப்போதும் கற்றுக் கொள்ள முன்வாருங்கள். நீங்கள் பல விஷயங்களை கற்றுக்கொள்ளாமலும் கற்றுக்கொள்ளவும் முடியும். உணர்ச்சிப் பூர்வமான விஷயங்கள், உடல் ரீதியான விஷயங்கள், மன ரீதியான விஷயங்கள் எதையும் நினைத்து வருந்த வேண்டாம் விட்டுவிடுங்கள் விட்டுவிடுவதே கற்றுக்கொள்ளுங்கள். வாழ்க்கையில் நீங்கள் செயல்பட விரும்பும் விஷயங்களுக்கு நேரம் கொடுங்கள். என்று சமூக வலைதளப் பக்கத்தில் இந்த பதிவை பதிவிட்டுள்ளார் ராஷ்மிகா மந்தனா. Categories Entertainment News Tags 5 secrets that no one knows about Rashmika ..!, National Crush, Rashmika, Rashmika Mandana, ராஷ்மிகா வை பற்றி யாரும் அறியாத 5 ரகசியம்..! முதல் Finalist ஆக அமீர் வெற்றி நாளை முதல் ATM பணம் எடுக்கும் முறை மற்றம்..? Recent Posts Why is Crypto the biggest solution For our problems? United States Dollar மதிப்பு என்ன ? புஷ்பா தி ரூல் நாளை பூஜை விழாவுடன் தொடங்குகிறது:- படத்தின் இணை தயாரிப்பாளராக ரெட் ஜெயண்ட் மூவிஸ் கைகோர்த்து வரும் நிலையில், துருவ நட்சத்திரம் விரைவில் வெளிவரவுள்ளது.
அம்மாவுக்குக் கல்யாணமாகி பதினாறு வருஷம் கழித்துப் பிறந்தவன் நான். கோவில் கோவிலாகப் போய், மண் சோறு தின்று, தேவாலயங்களில் முட்டி போட்டு ஜெபித்து என அம்மாவின் நீண்ட பிரார்த்தனையில் கருக்கூடிய பிள்ளை நான் என்பதால் சின்ன வயதிலிருந்தே அத்தனை செல்லம். வளர்ந்து பெரியவனாகி தமட்ட மாடு மாதிரி ஊர் சுற்றிவிட்டு நண்பர்களோடு வந்து சாப்பாட்டு தட்டின் முன் உட்காரும்போது நண்பர்களுக்குத் தெரியாமல் இரண்டு அவித்த முட்டைகள் என் சோற்றுக்கடியில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் அம்மாவின் பிரியம். என் உடல் கறுப்பை யாராவது எந்த வயதில் கிண்டலடித்தாலும், ‘பொறக்கும்போது எம்புள்ள ரத்த செவப்புதான், தெரியாம ஒரு நாளு நாந்தான் காக்காக்கறி கொடுத்திட்டேன், அப்பயிருந்துதான் லேசா இந்த கறுப்பு ஒட்டிகிச்சு’ என்பதை சிரிக்காமல் சீரியசாக சொல்லத் தெரிந்திருந்த அம்மா அவள். பெண் என்பவள் எல்லோரையும் போல எனக்கும் அம்மாவிலிருந்துதான் ஆரம்பம். என் ஆரம்பக்கல்வி அப்பா வேலை பார்த்த அரசு பழங்குடியின உண்டு உறைவிடப் பள்ளியில். என்னைச் சுற்றிலும் எப்போதும் இருளர் இன சிறுமிகளும் சிறுவர்களுமிருந்தார்கள். அவர்கள் மேலிருந்து எழுந்த ஒரு வாசத்தின் கிறக்கம் இன்றளவும் அப்படியே என்னுள் கிடக்கிறது. அவ்வாசம் மேலெழுகையில்தான் நான் சத்ரு, பச்சை இருளன், ஓணான் கொடி சுற்றிய ராஜாம்பாள் நினைவுகள் என என் முக்கியமான கதைகளை எழுதியிருக்கிறேன். மற்றவர்களுக்கு அது வீச்சமாக இருக்கலாம், எனக்கு மட்டும் அது வாசம்தான். பெண்ணின் அருகாமை, தொடல், அணைத்தல், எதற்கென புரியாத திருட்டு முத்தமென எல்லாமுமாய் என் வாழ்வும் அங்கிருந்துதான் துவங்கியது. ஆறாம் வகுப்பில் நகரத்தின் ஒரு கிருஸ்துவ பள்ளிக்கு நான் இடம் மாறியபோது அங்கிருந்த ஆசிரியைகளின் சுத்தமும், உடைகளும், உடல் நிறமும் என்னைத் திக்கு முக்காட வைத்தன. கொஞ்சம் கொஞ்சமாக நான் ஐந்தாவது வரை அனுபவித்த வாசத்தை, வீச்சம் என என் உடல் உணரத் தொடங்கிய துர்பாக்கியமும் அப்போதுதான் ஆரம்பித்தது. இன்றளவும் என் உலகத்துப் பெண்கள் வேறு. அவர்கள் ஸ்லீவ்லெஸ் ப்ளவுஸ் அணிபவர்களோ, டைட் ஜீன்ஸும் ஆங்கில வாசகம் எழுதிய டீ ஷர்ட்டும் போட்டு வருபவர்களோ அல்ல. முட்டிக்கால் வரைத் தூக்கிச் செருகிய புடவையோடு அதிகாலை ஆறுமணிக்கே புளித்த சேற்றிலிறங்கி மத்தியானம் வரை நிமிராமல் நாற்று நட்டோ, களைஎடுத்தோ, உடன் குனிந்த பெண்களோடு ஊரில் யார் யாரை வச்சிருக்காங்க? தன் மாமன் படுக்கையில் தன்னை எப்படியெல்லாம் கையாளுவான் என்றோ பேசி சிரித்து, உடல்வலி மறக்கும் பெண்களே இன்றளவும் என் உலகத்து பெண்கள். என் வாழ்வில் அவர்கள் இருப்பதால் என் கதைகளிலும் அவர்கள் மட்டுமே இருக்கிறார்கள். என் கதைகளில் வரும் அஞ்சல, மல்லிகா, ராஜாம்பா என நீளும் பெயர்களை நீங்கள் காட்சிப் படுத்தும்போது முழங்கால் வரை தூக்கி செருகிய புடவையோடு, குதிகால் வரை சேற்றில் புதைந்த மனுஷிகளே உங்களுக்குத் தெரிவார்கள். நடவு முடிந்து வரப்பேறி வரும் கண்ணம்மாவை இவர்களின் பிரதிநிதியாக உங்கள் முன் நிறுத்த ஆசைப்படுகிறேன். இந்த நட்ட நடு மத்தியானத்தில், இந்த வரப்பில் நின்று கண்ணம்மாவிடம் ‘‘உன் வாழ்க்கை எப்படி கண்ணம்மா இருக்குது?’’ என ஒரு நிருபர் தொனியில் நான் ஆரம்பித்தால், உனக்கு வேற வேலை இல்லப்பா, எனக்கு நெறைய இருக்கு என சொல்லிக் கொண்டே அடுத்த வேலைக்கு அவள் போய்விடக் கூடும். கெஞ்சி கூத்தாடி அந்த வேப்ப மரத்தடி நிழலில் நிறுத்தி கண்ணம்மாவிடம் கேட்கிறேன், ‘உன் கைகாலெல்லாம் ஏன் இப்படி வெந்து கிடக்கு கண்ணம்மா?’ நிமிர்ந்து தீர்க்கமான ஒரு பார்வையால் என்னை ஏறெடுக்கிறாள் கண்ணம்மா. பூதமங்கலத்தில் நடந்த தீமிதித் திருவிழாவில் ஒரு ஓரமாக நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த இளவயது கண்ணம்மா அப்போது அவள். எல்லோர் பார்வையும் மிதமிஞ்சிய பக்தியில் நெருப்பில் நடக்கும் கால்களையே கவனித்துக் கொண்டிருக்கையில், கண்ணம்மாவின் கண்கள் மட்டும், தத்தி, தத்தி நெருப்புக்குள் விழுந்துவிட்ட ஒரு மூன்று வயது பெண் குழந்தையை கவனித்துவிடுகிறது. எரியும் நெருப்பிலிறங்கி அக்குழந்தையைத் தூக்கி தன்னை நோக்கி நீண்ட ஒரு கைகளுக்குள் அடைக்கலமாக்குகிறாள். திடீரெனெறு எழுந்த ஜனங்களின் கூக்குரல்தான் தான் நெருப்பில் விழுந்து கிடக்கிறோம் என்று உணர்த்துகிறது அவளுக்கு. அறுபது நாட்கள் ஆஸ்பத்திரியில் படுத்தெழுந்து வரும்போது அவள் உடலின் ஒரு பகுதி வெந்து தீய்ந்திருந்தது. அதிலெல்லாம் துளி வருத்தமில்லை கண்ணம்மாவுக்கு. ‘ஒடம்புல ஒரு சின்ன வடுவில்லாத அந்தப் பொண்ண இப்ப மேற்கக் கல்யாணம் கட்டி குடுத்துட்டாங்கப்பா’ என்று சொல்லும்போது அவள் கண் வழியே கசியும் பெருமிதம் நம் யாராலும் அளவிட முடியாதது. ஒரு காவல் தெய்வம் போல கண்ணம்மா எங்கள் நிலத்தோடு வாழ்பவள். தூரத்திலிருந்து வரும் நல்ல பாம்பின் அசைவும், விரியனின் அருகாமையையும் அவள் மட்டுமே அறிந்திருப்பாள். ‘ஒரு எட்டாவது வரைக்கும் மட்டும் படிச்சிருந்தா போதும் கண்ணம்மா நீ, நம்ம டிஸ்ட்ரிக்ட் கலெக்டர சீட்ல இருந்து எழுப்பி ‘தே செத்த அப்படி ஒக்காரு, நான் கொஞ்சம் பாக்கறேன்’ என பல வருடங்களாக தீராத பல பஞ்சாயத்துக்களை நீ முடிச்சிருப்ப கண்ணம்மா` என ஷைலஜா சொல்லும்போது முகம் மலர்ந்து சிரித்துக் கொள்ள மட்டும் தெரியும் அவளுக்கு. நாளெல்லாம் உழைத்து, வலிக்கும் கால்களோடு, கடை வரை ஒரு எட்டு நடந்து, குவார்ட்டர் பாட்டிலும், ஒரு கட்டு கணேஷ் பீடியும் தன் கணவன் சோமுவுக்கு வாங்கி மடியில் வைத்துக்கொண்டு நடக்கும் கண்ணம்மாவைப் பார்க்கும் போதெல்லாம் ஆண், பெண் உறவையும், அதிகாரத்தையும் வகைப்படுத்தத் தெரியாமல் நான் விழிபிதுங்கியதுண்டு. ஒரு மனிதன் தன் வாழ்நாளில் ஏதோதோ காரணங்களால் ஐந்தாறு பெண்களையேனும் நட்பால், காதலால், காமத்தால் கடக்கிறவனாக இருக்கிறான். நானும் அதில் விதிவிலக்கல்லதானே! எப்படிப் பார்த்தாலும் நான் அடிப்படையில் ஆண் திமிரேறிய ஒரு ஆள்தான். எந்த ஆளுமையோ, புத்தகங்களோகூட இதுவரை என்னை பெண்ணை முழுமையாகப் புரிந்துகொள்ள நேரடியாய் கற்பித்ததில்லை. பெண்கள் மீதான என் சகமனிதப் தோழமையை, ஒருவேளை என் வாழ்வின் இயல்பிலிருந்து நான் அடைந்ததே. மூன்று வருடங்களுக்கு முன் மலையாளத்தில் ‘ஒரே கடல்’ என்ற ஒரு படம் பார்த்தேன். இன்றளவும் என்னை புரட்டிப் போட்ட படம் அதுதான். மம்முட்டி, மீராஜாஸ்மின், நரேன் என மூன்று முக்கோண மனிதர்களின் மனமும், எதிர்பார்ப்பும், ஏமாற்றமும், பேரன்பும், குரூரமும் படம் முழுதும் வியாபித்திருக்கும். அறிவு ஜீவித்தனத்தின் ஏமாற்றுதலுக்கு, ஒரு பக்கத்து போர்ஷன் பெண் தன்னையேத் தந்துவிடுவாள். So what? அதனாலென்ன? என சகஜமாக நகரும் அம்மேதையின் அதன் பிறகான நாட்கள் அத்தனை சாதரணமாக நகரக் கூடியதா என்ன? படைப்பாளிகளை, கலைஞர்களை தினம் தினம் அலைவுறும் மனதோடு எத்தனை பெண்கள் கடக்கிறார்கள். அவர்களிடம் பேசி தீர்க்க, உங்கள் கதையில் வந்த காயத்ரி நான்தானே சார்? என சந்தேகம் போக்க, ‘‘வாழ்நாளெல்லாம் உங்கள் வார்த்தைகளின் அருகாமையில் வாழ்ந்துவிட்டால் போதும் சார்’’ என இறைந்து மண்றாட, ஒருநாள் உங்களோடு இருந்திட்டா என் வாழ்வு அர்த்தப்படுமென…. எந்த அர்த்தமுமற்ற சீரியல் உரையாடலோடு என. படைப்பாளி என்பவன் பின்னுக்குப் போய் ஆண் என்பவன் துருத்திக் கொண்டு முன் வந்து நிற்பது அந்த மாதிரியான தருணங்களில்தான். எழுத முடிந்த, எழுத முடியாமல்போன எத்தனையோ அவலக் காவியங்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியே இன்னும் இருக்கிறது. என் பத்தாம் வகுப்பின் நிறைவில் நான் என் முதல் காதலை கண்டடைந்தேன். காதல் என்பதே கடிதங்கள் எழுதிக் கொள்வதுதானே! வைரமுத்து, மேத்தாவில் ஆரம்பித்து கலாப்ரியா, சுகுமாரன் என என் கடிதங்கள் விரிவடையும் போது அது முறிந்திருந்தது. என் கடிதங்களை கொண்டு போக என் வகுப்புத் தோழியே என் பெண் புறா ஸ்நேகிதி. திரும்ப பெறப்பட்ட ஒரு கடிதத்தில் கையெழுத்து மாறியிருந்ததைக் கவனித்து அதிர்ந்தேன். எதிர்பார்த்த மாதிரியே அப்பெண் தோழிதான். ஏன் நண்பா இக்கவிதைக் கடிதங்களைப் பெறும் பாக்யவதியாக நானே இருந்துவிடக் கூடாது? என அவள் ஒரு ஹைக்கூ மாதிரி அக்கடிதத்தில் கேட்டிருந்தாள். வாழ்வு எத்தனை வினோதமானது தோழனே! இவைகளை கடந்துதான் ஒவ்வொருவரும் நிலையை அடைந்திருக்கிறோம். என் +2 படிப்பு முடிந்து கல்லூரியில் படிக்க ஆர்வம் மேலிட்டு அலைந்த நாட்களின் ஒரு பின்னிரவில்தான், ஒரு ஸ்டேண்ட் போட்டு நிறுத்தப்பட்டிருந்த சைக்கிள் கேரியரில் உட்கார்ந்து ‘டீ’ குடித்துக் கொண்டிருந்த அந்த வசீகரமான பெண் எனக்கு அறிமுகமானாள். என் தவிப்பை புரிந்து கொண்டவள் போல, கீழறங்கி வந்து என் தலைக்கோதி, ‘‘பேரு விஜயா, டெல்லியம்மா வீட்ல தொழில் செய்றேன். சைக்கிள் ஓட்றதும், எல்லாரையும் அனுப்பிட்டு நடுராத்தில இப்படி தனியா வந்து டீ அடிக்கிறதும் புடிக்கும். உன்னை எனக்கு ரொம்ப புடிக்கும். நல்லா படி’’ இன்றும் என்னைக் கடந்த ஸ்நேகிதிகளில் விஜயா என்ற அந்த பாலியல் தொழிலாளிக்கும் ஒரு இடமுண்டு. எப்போதாவது எதிர்ப்படும் நேரங்களில் அவளுடன் வாய்த்த வலிமை வாய்ந்த உரையாடல்கள் இன்றளவும் என்னை ஸ்திரபடுத்திக் கொள்ள உதவியிருக்கிறது. ஷைலஜா என் வாழ்விற்குள் வந்த போதுதான் அதுவரை அறைகுறையான புரிதலோடிருந்த பல விஷயங்கள் எனக்குப் பிடிபட்டன. பெண் என்பவளின் பலமும், மனமும், தனித்துவமும், என்னை ஆழ புரிந்துகொள் என என்னுள் இருந்த ஆண் திமிரிடம் நேரடியாக பேசிய கணம் அதுதான். வேறெந்த எழுத்தாளர்களை விடவும் எனக்கு பெண் ஸ்நேகிதிகள் அதிகம் நாமே வரைந்துகொண்ட அல்லது நம் குடும்ப அமைப்புகள் போட்டு வைத்திருக்கிற கண்ணுக்குத் தெரியாத எல்லைக்கோடுகளைத் தாண்டி சிலர் பிரவேசிக்கும்போது நான் ஒரு பார்வையால் மட்டுமே எச்சரிக்கப்படுவேன். மற்றபடி என் படுக்கையறையில் மணிக்கணக்கில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கக்கூட என் ஸ்நேகிதிகளால் முடியும். அது ஒரு மேலான இயல்பு. புரிந்து கொண்டமையின் அங்கீகாரம். மரணவீடுகளில் ஒப்பாரி வைத்து அங்கு போதையிலும், ஏளனத்திலும் இறைக்கப்படும் சில்லரைக் காசுகளை பொறுக்கியெடுத்து, அதிலிருந்து தினம், தினம் ஐம்பதுக்கும் நூறுக்கும் இட்லி வாங்கி, பசித்த குரங்குகளுக்கு பகிர்ந்து கொடுத்த என் பாட்டுக்கார லட்சுமியின் இளகிய மனதை எந்த பெண் மனதோடும் என்னால் ஒப்பிட்டு பார்க்கவே முடிந்ததில்லை. கண்ணம்மா, லட்சுமி மாதிரியான பெண்களின் உடல் மற்றும் ஆன்ம பலன்கள் ஆண்களும் தேடியடைந்துவிட வாழ்நாளெல்லாம் முயலவேண்டிய ஒன்று. சாலைகளைக் கடக்கும் எந்த அவசரத்திலும் கவனித்திருக்கிறேன். ‘‘என் சமூகம் உனக்கு முன்பாக செல்லும்’’ என வாசகங்கள் எழுதப்பட்ட வாகனங்களை. அப்போதெல்லாம் எனக்குள் தோன்றுவது, எந்த சமூகம் என் ஜீவிதத்தின் முன்னால் போகிறது? பால் சக்காரியா, சந்தோஷ் ஏச்சிக்கானம், என்.எஸ். மாதவன் என்ற மூன்று எழுத்தாளர்களின் மூன்று முக்கிய கதைகளின் பெண்களே என்னை எப்போதும் ஆற்றுப் படுத்துபவர்கள், கலங்கடிப்பவர்கள் அல்லது வழிநடத்துபவர்கள். இரண்டாம் குடியேற்றம் என்று சக்காரியாவின் புகழ்பெற்ற ஒரு கதை உண்டு. ஆஷாமேத்யு என்ற எம்.ஏ. ஆங்கில இலக்கியம் படித்த அப்பெண் திருவனந்தபுரத்திலுள்ள ஒரு மனநோய் மருத்துவருக்கு எழுதும் கடிதமே கதை. இனி ஆஷாவே எழுதுகிறாள். நான் வாழப் போகிற கணவன் வீட்டிற்குப்போய், திருமணத்திற்கு முன்பே ஒரு பேயிங் கெஸ்ட்டாக ஒரு வாரம் தங்கி அவ்வீட்டின் இயல்பு, அம்மனிதர்களின் குணம், இயற்கையின் மீதும் மற்ற ஜீவன்கள் மேலும் அவர்களுக்குள்ள கரிசனம் என எல்லாவற்றையும் புரிந்துகொண்டு, பிடித்திருந்தால் மட்டுமே அவ்வீட்டிற்கு குடியேறலாமா? என முடிவெடுக்கிறேன். அவ்வளவுதான் டாக்டர் என் வீட்டில் பிரளயம் வெடிக்கிறது. அவளை ஒரு மனநோய் பாதித்தவளாய் குடும்பம் நினைக்க ஆரம்பிக்கிறது. அதனாலேயே அக்கடிதம். ஆஷா மேத்யு இந்த நவீன சமூகத்தின் மிக முக்கிய மனுஷியாக, பெண்களின் சமூகத்தின் முன் செல்லும் வீராங்கனையாக நான் பார்க்கிறேன். எப்போது நினைத்தாலும் என்னை மூர்ச்சையாக்குகிற சந்தோஷ் ஏச்சிக்கானத்தின் ‘இரை’ என்றொரு கதை உண்டு. நீரற்ற பாழ்கிணற்றில் தனித்து வாழும் ஒரு பாம்பு. தவறி விழுந்த ஒரு தவளையை விழுங்க, அது சமீபிக்கும்போது தவளை வாய்த்திறந்து பாம்பிடம் பேசும். ‘இரு நண்பா. பொறு. என்னையும் தின்று முடித்தப்பின் மீண்டும் இப்பாழுங்கிணற்றில் பரவும் வெறுமையை என்ன செய்வாய்? அது பசியைவிட கொடியதில்லையா? ‘அப்படியென்றால் நான் எப்படி உயிர்வாழ்வது?’ பாம்பு நிதானத்துடன் கேட்கிறது. ‘என்னைத்தான் உண்டு வாழவேண்டுமென்று எந்த விதியும் இல்லை. நீ இக்கிணற்றில் கிடக்கும் சருகை, சேற்றை, செடியை தின்று வாழலாம்’ ‘அதெல்லாம் முடியாது, நான் ஒரு மாமிச உண்ணி; ‘அதெல்லாம் நாமே உருவாக்கிக்கொண்ட பெரும் பொய்கள். சகோதரா, கொஞ்சநாள் தாவரங்களைச் சாப்பிடு என்னதான் ஆகிறாய் பார்க்கலாம்’ இது தவளை. ஒரு அசந்த சமயத்தில் தன் வாயை அகலமாகத் திறந்து அப்பாம்பை அப்படியே தவளை விழுங்கும் காட்சியோடு கதை முடிகிறது. உண்மையில் இது பாம்பு, தவளைக் கதையா? எத்தனை காலம்தான் சமூகம் வரையறுத்த விதிகள் எனச்சொல்லி பெண் ஆணுக்கு இரையாகிக் கொண்டிருப்பாள்? எந்த காரிருளிலும் என் சமூகத்திற்கு முன் அத்தவளையே தத்தித்தத்திப் போய்க்கொண்டிருக்கிறது. என்.எஸ்.மாதவனும் இதே ‘இரை’ என்ற பெயரில் ஒரு புனைவெழுதியிருக்கிறார். கண்கள் கறுப்புத் துணியால் கட்டப்பட்ட ஒரு சர்க்கஸ் மாஸ்டர் முன், உடலில் டூ பீஸ் உடையோடு, சிலுவையில் தொங்கும் இயேசு மாதிரி ஒருத்தி தினம் தினம் நிற்க வேண்டும். கையில் உள்ள கத்திகள் தீரும் மட்டும் அவன் அவளை நோக்கி வீசுவான். கடைசிக் கத்தியின் வீசுதலுக்குப் பிறகு அச்சுவரை விட்டு அவள் அகலுவாள். ஒளியூட்டப்பட்ட அந்த வெற்றுச்சுவரில் கத்திகளால் வரையப்பட்ட அவள் உருவம் தெரியும். இக்கதையை நான் தொடரப் போவதில்லை. மாதவன் பெண் என்ற ஒரு ‘இரை’யைப் பற்றி பேசுகிறார். என் சமூகத்தை முன்னகர்த்தி போக வேண்டியவள் அம்மிணி என்ற அந்த `இரை` பெண்ணல்ல. அந்த மாஸ்டரை எதிர்த்து சமர்புரியும் அவள் தங்கை ஜெயலஷ்மிதான். வாழ்வின் இக்கட்டுகளைக் கையாளத் தெரியாமல் விழிபிதுங்கி நிற்கும் போதெல்லாம் நிஜ வாழ்விலிருந்து எனக்கு கண்ணம்மாவும், லட்சுமியும், கதைகளிலிருந்து ஆஷா மேத்யுவும், ஜெயலஷ்மியும், பாம்பை விழுங்கிய அத்தவளையுமே என்னை இயக்குகிறார்கள். பெண்ணியம் என்பது புத்தகம் படிப்பதாலேயோ, பிரசங்கம் கேட்பதாலோ, படம் பார்ப்பதாலேயோ மட்டும் ஒரு மனுஷியின் மேல் படிந்துவிடுவதில்லை. ஒரு புகழ்பெற்ற பெண்ணிய எழுத்தாளர் அவர். தன் சக ஆண் எழுத்தாளர் வீட்டிற்குப் போகிறார். இரவு உணவிற்குப் பின் வெகுநேரம் இலக்கியம் பேசி முடித்து நேரம் பார்க்கிறார்கள். இரவு 12.00 மணியைக் கடந்திருக்கிறது காலம். அவள் தங்கியிருக்கும் விடுதியில் அவளை விட்டுவிட்டு வர அவர் புறப்படுகிறார். எழுத்தாளரின் மனைவி அவரை தனியே அழைத்து காதில் ஏதோ சொல்கிறார், ‘‘என்ன சார் பொம்பளயை விடப்போறீங்க. சீக்கிரம் வாங்கன்னு உங்க மனைவி சொல்றாங்களா?’’ கிண்டல் கொப்பளிக்கும் வார்த்தைகளில் அவர் கேட்க, ‘‘இல்ல மேடம், உங்க கூடவே இன்னிக்குத் தங்கிட்டு நாளைக்குக் காலைல வந்தால் போதும். இரவில தனியா வர வேணாம்ன்னு சொல்றாங்க’’ என்கிறார். அவர் அதுவரை தனக்குள் உருவாக்கி வைத்திருந்த பிம்பங்கள் உடைந்து அந்த அறையெங்கும் சிதறுகின்றன. அவர் பார்வையில் அந்த எழுத்தாளனின் மனைவி படிப்பற்றவள். வாசித்தறியாதவள், பெண்ணியம் பற்றி மேடைகளில் விவாதிக்கத் தெரியாதவள். இருந்துவிட்டுப் போகட்டுமே. அவள் தன் அனுபவத்தால் இவைகளை அடைந்திருக்கிறாள். அதைச் சுலபமாகக் கடக்கத் தெரிந்தவளாயிருக்கிறாள். என் பள்ளி நாட்களில், கல்லூரிக் காலங்களில் உடன் படித்த, இப்போது உடன் பணிபுரிகிற பல பெண்களுடன் என் உரையாடல்களை ஐந்து நிமிடம்கூட நகர்த்த முடியாமல் திணறுகிறேன். ஒருத்தி என்னை பைபிள் படித்து, ஆவிக்குரிய வாழ்விற்கு அழைக்கிறாள். கலையும், இலக்கியமும், சினிமாவும் சாத்தானின் துர்ச்செயல்கள் என எச்சரிக்கிறாள். இன்னொருத்தி, என் எழுத்தாள நண்பர்களிடம் சொல்லி தீபாவளிச்சீட்டு போட முடியுமா? என தன் வாழ்வின் கசப்பின் ஒரு சிறு பகுதியை அக்கோரிக்கையோடு சுருதி கூட்டுகிறாள். பொதுவாக எல்லோருமே இந்த அன்றாடங்களில் மிதிபட உள்ளூர விரும்புகிறார்கள். இதன் மீறலை நிராகரிக்கிறார்கள். ஒன்றிரண்டு பேர் கண்ணம்மா போல, ஆஷா மேத்யூ போல மேலெழுந்து வந்து என் கை பற்றிக் குலுக்குகிறார்கள். அக்கரங்கள் மிருதுவானவை அல்ல ஆயிரம் வருட களிம்பேறிய கைகள்.
இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து பிரியங்கா மோகன், வினய், அர்ச்சனா, தீபா, ரெடின், யோகி பாபு உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். மிகப்பெரிய எதிர்பார்ப்பில் திரையரங்களில் வெளியான டாக்டர் படம், விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றியடைந்தது. அதே போல் கடந்த தீபாவளிக்கு சன் டிவியில் இப்படம் ஒளிபரப்பு செய்யப்பட்டது. அதிலும், இப்படம் TRP-யில் வேட்டையாடியது. இந்நிலையில் டாக்டர் திரைப்படத்தில் ஒரு குறிப்பிட்ட காட்சியில் நடிகர் விஜய் இருப்பது போல், ரசிகர் ஒருவர் மிகவும் அருமையாகவும், கச்சிதகமாவும் வடிவமைத்துள்ளார். இதனை விஜய் மற்றும் சிவகார்த்திகேயனின் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் ‘டாக்டர் படத்தில் தளபதி விஜய்’ என கூறி பகிர்ந்து வருகிறார்கள். ரசிகர்களால் உருவாகியுள்ள இந்த Fan Made புகைப்படம் தற்போது செம வைரலாகி வருகிறது. நடிகர் விஜய் தற்போது டாக்டர் படத்தின் இயக்குனர் நெல்சன் திலீப்குமாரின் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
حَدَّثَنِي ‏ ‏مُوسَى بْنُ قُرَيْشٍ التَّمِيمِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏إِسْحَقُ بْنُ بَكْرِ بْنِ مُضَرَ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏أَبِي ‏ ‏حَدَّثَنِي ‏ ‏جَعْفَرُ بْنُ رَبِيعَةَ ‏ ‏عَنْ ‏ ‏عِرَاكِ بْنِ مَالِكٍ ‏ ‏عَنْ ‏ ‏عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ زَوْجِ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَنَّهَا قَالَتْ ‏ ‏إِنَّ ‏ ‏أُمَّ حَبِيبَةَ بِنْتَ جَحْشٍ ‏ ‏الَّتِي كَانَتْ تَحْتَ ‏ ‏عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ ‏ ‏شَكَتْ إِلَى رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏الدَّمَ فَقَالَ لَهَا ‏ ‏امْكُثِي قَدْرَ مَا كَانَتْ تَحْبِسُكِ حَيْضَتُكِ ثُمَّ اغْتَسِلِي فَكَانَتْ تَغْتَسِلُ عِنْدَ كُلِّ صَلَاةٍ ‏ அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்களின் துணைவி உம்மு ஹபீபா பின்த் ஜஹ்ஷ் (ரலி), தமது தொடர் குருதிப் போக்கைப் பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் முறையிட்டார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “(வழக்கமாக) மாதவிடாய் நிற்கும் நாட்கள் வரை நீ காத்திரு! பின்னர் குளித்துக்கொள்!” என்று அவரிடம் கூறினார்கள். (எனினும்) உம்மு ஹபீபா (ரலி) ஒவ்வொரு தொழுகைக்கும் குளிப்பவராய் இருந்தார். அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி). அத்தியாயம்: 3, பாடம்: 14, ஹதீஸ் எண்: 504 و حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ رُمْحٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏اللَّيْثُ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏لَيْثٌ ‏ ‏عَنْ ‏ ‏يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ ‏ ‏عَنْ ‏ ‏جَعْفَرٍ ‏ ‏عَنْ ‏ ‏عِرَاكٍ ‏ ‏عَنْ ‏ ‏عُرْوَةَ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏أَنَّهَا قَالَتْ ‏ ‏إِنَّ ‏ ‏أَمَّ حَبِيبَةَ ‏ ‏سَأَلَتْ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏عَنْ الدَّمِ فَقَالَتْ ‏ ‏عَائِشَةُ ‏ ‏رَأَيْتُ ‏ ‏مِرْكَنَهَا ‏ ‏مَلْآنَ دَمًا فَقَالَ لَهَا رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏امْكُثِي قَدْرَ مَا كَانَتْ تَحْبِسُكِ حَيْضَتُكِ ثُمَّ اغْتَسِلِي وَصَلِّي ‏ உம்மு ஹபீபா (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் தொடர் குருதிப் போக்கைப் பற்றிக் கேட்டார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “(வழக்கமாக) மாதவிடாய் நிற்கும் நாட்கள் வரை நீ காத்திரு! அதற்குப் பின்னர் குளித்து விட்டுத் தொழுது கொள்!” என்று அவரிடம் கூறினார்கள். அவர் (நின்று) குளித்து வந்த துணி அலசும் பாத்திரத்தில் குருதி நிரம்பியிருக்க நான் கண்டிருக்கிறேன். அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி). அத்தியாயம்: 3, பாடம்: 14, ஹதீஸ் எண்: 503 و حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ سَلَمَةَ الْمُرَادِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ ‏ ‏عَنْ ‏ ‏عَمْرِو بْنِ الْحَارِثِ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ شِهَابٍ ‏ ‏عَنْ ‏ ‏عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ ‏ ‏وَعَمْرَةَ بِنْتِ عَبْدِ الرَّحْمَنِ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ زَوْجِ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَنَّ ‏ ‏أُمَّ حَبِيبَةَ بِنْتَ جَحْشٍ ‏ ‏خَتَنَةَ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَتَحْتَ ‏ ‏عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ ‏ ‏اسْتُحِيضَتْ سَبْعَ سِنِينَ فَاسْتَفْتَتْ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فِي ذَلِكَ فَقَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِنَّ هَذِهِ لَيْسَتْ بِالْحَيْضَةِ وَلَكِنَّ هَذَا ‏ ‏عِرْقٌ ‏ ‏فَاغْتَسِلِي وَصَلِّي ‏ ‏قَالَتْ ‏ ‏عَائِشَةُ ‏ ‏فَكَانَتْ تَغْتَسِلُ فِي ‏ ‏مِرْكَنٍ ‏ ‏فِي حُجْرَةِ أُخْتِهَا ‏ ‏زَيْنَبَ بِنْتِ جَحْشٍ ‏ ‏حَتَّى تَعْلُوَ حُمْرَةُ الدَّمِ الْمَاءَ ‏ ‏قَالَ ‏ ‏ابْنُ شِهَابٍ ‏ ‏فَحَدَّثْتُ بِذَلِكَ ‏ ‏أَبَا بَكْرِ بْنَ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْحَارِثِ بْنِ هِشَامٍ ‏ ‏فَقَالَ يَرْحَمُ اللَّهُ ‏ ‏هِنْدًا ‏ ‏لَوْ سَمِعَتْ بِهَذِهِ الْفُتْيَا وَاللَّهِ إِنْ كَانَتْ ‏ ‏لَتَبْكِي لِأَنَّهَا كَانَتْ لَا تُصَلِّي ‏ ‏و حَدَّثَنِي ‏ ‏أَبُو عِمْرَانَ مُحَمَّدُ بْنُ جَعْفَرِ بْنِ زِيَادٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏إِبْرَاهِيمُ يَعْنِى ابْنَ سَعْدٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ شِهَابٍ ‏ ‏عَنْ ‏ ‏عَمْرَةَ بِنْتِ عَبْدِ الرَّحْمَنِ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏قَالَتْ ‏ ‏جَاءَتْ ‏ ‏أُمُّ حَبِيبَةَ بِنْتُ جَحْشٍ ‏ ‏إِلَى رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَكَانَتْ اسْتُحِيضَتْ سَبْعَ سِنِينَ ‏ ‏بِمِثْلِ حَدِيثِ ‏ ‏عَمْرِو بْنِ الْحَارِثِ ‏ ‏إِلَى قَوْلِهِ تَعْلُوَ حُمْرَةُ الدَّمِ الْمَاءَ وَلَمْ يَذْكُرْ مَا بَعْدَهُ ‏ ‏و حَدَّثَنِي ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ ‏ ‏عَنْ ‏ ‏الزُّهْرِيِّ ‏ ‏عَنْ ‏ ‏عَمْرَةَ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏أَنَّ ‏ ‏ابْنَةَ جَحْشٍ ‏ ‏كَانَتْ تُسْتَحَاضُ سَبْعَ سِنِينَ ‏ ‏بِنَحْوِ حَدِيثِهِمْ ‏ அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் மைத்துனியும் அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்களின் துணைவியாருமான உம்மு ஹபீபா பின்த் ஜஹ்ஷ் (ரலி) அவர்களுக்கு ஏழு ஆண்டு காலமாகத் தொடர் குருதிப் போக்கு இருந்து வந்தது. எனவே, அவர் இது குறித்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் தீர்ப்புக் கோரினார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இது மாத விடாயன்று; சிரைக் குருதி நோயாகும். எனவே, நீ (வழக்கமான மாதவிடாய்க் காலம் முடிந்ததும்) குளித்து விட்டுத் தொழுது கொள்!” என்று கூறினார்கள். அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி). குறிப்பு: “உம்மு ஹபீபா (ரலி), தம் சகோதரி(யும் நபியவர்களின் துணைவியுமான) ஸைனப் பின்த் ஜஹ்ஷ் (ரலி) அவர்களது இல்லத்திலிருந்த துணி அலசும் பாத்திரத்தில் (நின்று) குளிப்பார். அவர் குளிக்கும் நீரின் நிறத்தை அவரது குருதியின் நிறம் மிகைத்திருக்கும்” என்று அறிவிப்பாளர் ஆயிஷா (ரலி) கூறினார். “நான் இந்த ஹதீஸை அபூபக்ர் பின் அப்திர் ரஹ்மான் பின் ஹாரிஸ் பின் ஹிஷாம் (ரஹ்) அவர்களிடம் எடுத்துரைத்தபோது, “(அபூஸுஃப்யானின் மனைவி) ஹிந்தாவுக்கு அல்லாஹ் கருணை புரிவானாக! அல்லாஹ்வின் மீதாணையாக, இந்தத் தீர்ப்பை அவர் செவியுற்றிருந்தால் அழுது விடுவார். ஏனெனில், (தொடர் குருதிப் போக்காளியான) ஹிந்தா தொழாமல் இருந்து வந்தார்” என்று அபூபக்ர் (ரஹ்) கூறியதாக இந்த ஹதீஸின் அறிவிப்பாளர்களில் ஒருவரான இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) கூறுகிறார். ஸுஃப்யான் பின் உயைனா (ரஹ்) வழி அறிவிப்பு, “பின்த் ஜஹ்ஷ் (ரலி) அவர்களுக்கு ஏழாண்டுகளாகத் தொடர் குருதிப் போக்கு இருந்து வந்தது” எனத் தொடங்குகிறது. அத்தியாயம்: 3, பாடம்: 14, ஹதீஸ் எண்: 502 حَدَّثَنَا ‏ ‏قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏لَيْثٌ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ رُمْحٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏اللَّيْثُ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ شِهَابٍ ‏ ‏عَنْ ‏ ‏عُرْوَةَ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏أَنَّهَا قَالَتْ ‏ ‏اسْتَفْتَتْ ‏ ‏أُمُّ حَبِيبَةَ بِنْتُ جَحْشٍ ‏ ‏رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَقَالَتْ إِنِّي أُسْتَحَاضُ فَقَالَ إِنَّمَا ‏ ‏ذَلِكِ ‏ ‏عِرْقٌ ‏ ‏فَاغْتَسِلِي ثُمَّ صَلِّي فَكَانَتْ تَغْتَسِلُ عِنْدَ كُلِّ صَلَاةٍ ‏ ‏قَالَ ‏ ‏اللَّيْثُ بْنُ سَعْدٍ ‏ ‏لَمْ يَذْكُرْ ‏ ‏ابْنُ شِهَابٍ ‏ ‏أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَمَرَ ‏ ‏أُمَّ حَبِيبَةَ بِنْتَ جَحْشٍ ‏ ‏أَنْ تَغْتَسِلَ عِنْدَ كُلِّ صَلَاةٍ وَلَكِنَّهُ شَيْءٌ فَعَلَتْهُ هِيَ ‏ ‏و قَالَ ‏ ‏ابْنُ رُمْحٍ ‏ ‏فِي رِوَايَتِهِ ‏ ‏ابْنَةُ جَحْشٍ ‏ ‏وَلَمْ يَذْكُرْ ‏ ‏أُمَّ حَبِيبَةَ ‏ உம்மு ஹபீபா பின்த் ஜஹ்ஷ் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், “நான் தொடர் குருதிப் போக்குடையவள்” எனக் கூறித் தீர்ப்புக் கேட்டார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இது ஒருவகை சிரைக் குருதி நோயாகும். எனவே (வழக்கமான மாதவிடாய்க் காலம் முடிந்தவுடன்) குளித்து விட்டுத் தொழுது கொள்!” எனக் கூறினார்கள். என்றாலும் உம்மு ஹபீபா (ரலி) ஒவ்வொரு தொழுகைக்கு(முன்னரு)ம் குளிக்கும் வழக்கம் உடையவராக இருந்தார். அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி). குறிப்பு: (எனக்கு இந்த ஹதீஸை அறிவித்த) இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்), “உம்மு ஹபீபா (ரலி) அவர்களை ஒவ்வொரு தொழுகைக்கும் குளிக்குமாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள்” என்று கூறவில்லை. மாறாக, உம்மு ஹபீபா தாமாகவே அவ்வாறு செய்து வந்தார் என்று இந்த ஹதீஸின் அறிவிப்பாளர்களில் ஒருவரான லைஸ் பின் ஸஅத் (ரஹ்) கூறுகின்றார். இப்னு ரும்ஹு (ரஹ்) வழி அறிவிப்பில் நபித்தோழியின் ‘உம்மு ஹபீபா’ எனும் பெயர் இல்லாமல் ‘ஜஹ்ஷின் மகள்’ என்று இடம் பெற்றுள்ளது. அத்தியாயம்: 3, பாடம்: 14, ஹதீஸ் எண்: 501 و حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَأَبُو كُرَيْبٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏وَكِيعٌ ‏ ‏عَنْ ‏ ‏هِشَامِ بْنِ عُرْوَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏قَالَتْ ‏ ‏جَاءَتْ ‏ ‏فَاطِمَةُ بِنْتُ أَبِي حُبَيْشٍ ‏ ‏إِلَى النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَقَالَتْ يَا رَسُولَ اللَّهِ إِنِّي امْرَأَةٌ أُسْتَحَاضُ فَلَا أَطْهُرُ أَفَأَدَعُ الصَّلَاةَ فَقَالَ لَا إِنَّمَا ‏ ‏ذَلِكِ عِرْقٌ وَلَيْسَ بِالْحَيْضَةِ فَإِذَا أَقْبَلَتْ الْحَيْضَةُ فَدَعِي الصَّلَاةَ وَإِذَا أَدْبَرَتْ فَاغْسِلِي عَنْكِ الدَّمَ وَصَلِّي ‏ ‏حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏عَبْدُ الْعَزِيزِ بْنُ مُحَمَّدٍ ‏ ‏وَأَبُو مُعَاوِيَةَ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏جَرِيرٌ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏ابْنُ نُمَيْرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبِي ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏خَلَفُ بْنُ هِشَامٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏حَمَّادُ بْنُ زَيْدٍ ‏ ‏كُلُّهُمْ ‏ ‏عَنْ ‏ ‏هِشَامِ بْنِ عُرْوَةَ ‏ ‏بِمِثْلِ حَدِيثِ ‏ ‏وَكِيعٍ ‏ ‏وَإِسْنَادِهِ ‏ ‏وَفِي حَدِيثِ ‏ ‏قُتَيْبَةَ ‏ ‏عَنْ ‏ ‏جَرِيرٍ ‏ ‏جَاءَتْ ‏ ‏فَاطِمَةُ بِنْتُ أَبِي حُبَيْشِ بْنِ عَبْدِ الْمُطَّلِبِ بْنِ أَسَدٍ ‏ ‏وَهِيَ امْرَأَةٌ مِنَّا ‏ ‏قَالَ ‏ ‏وَفِي حَدِيثِ ‏ ‏حَمَّادِ بْنِ زَيْدٍ ‏ ‏زِيَادَةُ حَرْفٍ تَرَكْنَا ذِكْرَهُ ‏ ஃபாத்திமா பின்த் அபீஹுபைஷ் எனும் பெண்மணி நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! நான் தொடர் குருதிப் போக்குடையவளாக இருக்கிறேன். (குருதிப் போக்கிலிருந்து) நான் சுத்தமாவதில்லை. எனவே, நான் தொழுகையை விட்டு விடலாமா?” என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “கூடாது. ஏனெனில், அது மாதவிடாயன்று; சிரைக் குருதி நோயாகும். எனவே, (வழக்கமாக) மாதவிடாய் ஏற்படும் நாட்களில் தொழுகையை விட்டுவிடு! மாதவிடாய்க் காலம் முடிந்து விட்டால் குருதியைக் கழுவி(, குளித்து) விட்டுத் தொழுது கொள்!” என்று கூறினார்கள். அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி). குறிப்பு: ஜரீர் (ரஹ்) வழியாக குதைபா (ரஹ்) அறிவிக்கும் ஹதீஸில், “ஃபாத்திமா பின்த் அபீஹுபைஷ் பின் அப்தில் முத்தலிப் பின் அஸத் (ரலி) (நபியவர்களிடம்) வந்தார். அவர் எங்கள் குலத்தைச் சேர்ந்த பெண்மணியாவார்” எனும் கூடுதல் குறிப்பு இடம்பெற்றுள்ளது. ஹம்மாத் பின் ஸைத் (ரஹ்) வழி அறிவிப்பில், “குருதியைக் கழுவிக்கொள்; உளூச் செய்துகொள்” என்று கூடுதலாக ஒரு வரி காணப்படுகிறது. ஆயினும் (ஹம்மாத் மட்டுமே இதை அறிவிப்பதால்) அதை நாம் குறிப்பிடாமல் விட்டுவிட்டோம் என முஸ்லிம் (ரஹ்) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். மேலும் காண்பி... ↓ விரும்பும் பாடம் செல்ல… ↓ விரும்பும் பாடம் செல்ல… Select Category 43.37 நபி (ஸல்) அவர்களைக் கண்ணியப்படுத்துவதும் … (8) 43.36 நபி (ஸல்) அவர்களைப் பின்பற்ற வேண்டியது (முஸ்லிம்களின்) கட்டாயக் கடமையாகும் (1) 43.35 நபி (ஸல்) அவர்களின் அல்லாஹ்வைப் பற்றிய அறிவும் அவனைப் பற்றிய கடுமையான அச்சமும் (2) 43.34 நபி (ஸல்) அவர்களின் பெயர்கள் (3) 43.33 நபி (ஸல்) மக்காவிலும் மதீனாவிலும் எத்தனை ஆண்டுகள் வாழ்ந்தார்கள்? (8) 43.32 நபி (ஸல்) இறந்தபோது அவர்களுக்கு வயது எத்தனை? (2) 43.31 நபி (ஸல்) அவர்களின் உடலமைப்பு; நபியாக அனுப்பப்பெற்றது; அவர்களின் வயது (1) 43.30 நபி (ஸல்) உடலில் நபித்துவ முத்திரை … (3) 43.29 நபி (ஸல்) அவர்களின் தலைநரைமுடி (10) 43.28 நபி (ஸல்) அவர்களின் வெண்ணிறமும் களையான முகமும் (2) 43.27 நபி (ஸல்) அவர்களின் வாய், கண்கள், குதிகால்கள் ஆகியவை (1) 43.26 நபி (ஸல்) அவர்களது தலைமுடியின் தன்மை (3) 43.25 நபி (ஸல்) அவர்களின் உருவத் தோற்றம் … (3) 43.24 நபி (ஸல்) தமது தலைமுடியை … (1) 43.23 நபி (ஸல்) அவர்களுக்கு வேத அறிவிப்பு வரும்போது … (4) 43.22 நபி (ஸல்) அவர்களது வியர்வையின் நறுமணமும் அதன்மூலம் வளம் ஏற்பட்டதும் (3) 43.21 நபி (ஸல்) அவர்களின் மேனியில் கமழ்ந்த நறுமணம் … (3) 43.20 நபி (ஸல்) பாவங்களை விட்டு வெகு தொலைவில் விலகியிருந்தது … (3) 43.19 நபி (ஸல்), மக்களுடன் நெருங்கிப் பழகியதும் அவர்களிடமிருந்து மக்கள் வளம் பெற்றதும் (3) 43.18 மனைவியர்மீது நபி (ஸல்) காட்டிய அன்பும் … (4) 43.17 நபி (ஸல்) அவர்களின் புன்னகையும் அழகிய உறவாடலும் (1) 43.16 நபி (ஸல்) அவர்களின் நாண மிகுதி (2) 43.15 நபி (ஸல்) குழந்தைகள் மீதும் குடும்பத்தார் மீதும் காட்டிய அன்பு … (5) 43.14 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வேண்டப்பட்ட எந்த ஒன்றுக்கும் அவர்கள் “இல்லை” என்று சொன்னதேயில்லை … (5) 43.13 அல்லாஹ்வின் தூதர் (ஸல்), மக்களிலேயே மிகவும் அழகான … (5) 43.12 மக்களிலேயே நபி (ஸல்), தொடர்ந்து வீசும் (மழைக்) காற்றைவிட … (1) 43.11 நபி (ஸல்) அவர்களின் வீரமும் அறப்போருக்காக அவர்கள் முன்னே சென்றதும் (2) 43.10 உஹுதுப் போர் நாளில் நபி (ஸல்) … (2) 43.9 நம் நபி (ஸல்) அவர்களுக்கு (மறுமையில் ‘அல்கவ்ஸர்’) தடாகம் உண்டு … (20) 43.8 உயர்ந்தோன் அல்லாஹ் ஒரு சமுதாயத்தின்மீது அருள் புரிய நாடினால் … (1) 43.7 நபி (ஸல்), இறுதி இறைத் தூதர் என்பது பற்றிய குறிப்பு (4) 43.6 நபி (ஸல்), தம் சமுதாயத்தார் மீது கொண்டிருந்த பரிவும் … (4) 43.5 நபி (ஸல்), நேர்வழியுடனும் ஞானத்துடனும் அனுப்பப் பெற்றதற்கான உவமை (1) 43.4 அல்லாஹ்வையே முழுமையாக நபி (ஸல்) சார்ந்திருந்ததும் … (1) 43.3 நபி (ஸல்) அவர்களின் அற்புதங்கள் (7) 43.2 எல்லாப் படைப்புகளையும்விட நம் நபி (ஸல்) அவர்களின் சிறப்பு (1) 43.1 நபி (ஸல்) அவர்களின் தலைமுறையின் சிறப்பும் … (2) 42.4 நபி (ஸல்) கண்ட கனவு (6) 42.3 கனவுக்கு விளக்கமளித்தல் (1) 42.2 ஷைத்தான் கனவில் விளையாடியது குறித்து … (3) 42.1 கனவில் என்னைக் கண்டவர் … (4) 42.01 கனவுகள் (11) 41.2 பகடை விளையாட்டு, தடை செய்யப்பட்டதாகும் (1) 41.1 கவிதைகள் (9) 40.5 நறுமணப் பொருட்களில் மிகவும் சிறந்த கஸ்தூரியைப் பயன்படுத்துவது … (4) 40.4 ஒருவர், ‘கபுஸத் நஃப்ஸீ’ (என் மனம் அசுத்தமாகிவிட்டது) எனும் சொல்லை … (2) 40.3 ‘அப்து’ (அடிமை ஆண்), ‘அமத்து’ (அடிமைப் பெண்), ‘மவ்லா’/’ஸய்யித்’ (அடிமையின் உரிமையாளர்) ஆகிய சொற்களின் சட்டம் (3) 40.2 திராட்சையை, “கர்மு / கண்ணியம்” என்று பெயரிட்டழைப்பது … (7) 40.1 காலத்தை ஏசுவதற்குத் தடை (5) 39.41 விலங்குகளுக்கு நீர் புகட்டுவதின், உணவளிப்பதின் சிறப்பு (3) 39.40 பூனைகளைக் கொல்வதற்குத் தடை (2) 39.39 எறும்புகளைக் கொல்லத் தடை (3) 39.38 பல்லியைக் கொல்வது நல்லது (5) 39.37 பாம்பு போன்ற விஷ ஜந்துகளைக் கொல்வது (13) 39.36 தொழுநோயாளிகள் போன்றோரிடம் நெருக்கம் தவிர்ப்பது (1) 39.35 சோதிடர்களிடம் செல்வதும் சோதிடம் பார்ப்பதும் (5) 39.34 பறவை சகுனம், நற்குறி, துர்குறி பற்றிய பாடம் (11) 39.33 இல்லாத சகுனங்களும் தொற்றுநோய்களும் (6) 39.32 கொள்ளைநோய், பறவை சகுனம், சோதிடம் போன்றவை (8) 39.31 தேனூட்டு மருத்துவம் (1) 39.30 ‘தல்பீனா‘, நோயாளியின் மனத்துக்கு(ம் உடலுக்கும்) தெம்பு அளிக்கக்கூடியதாகும் (1) 39.29 கருஞ்சீரக மருத்துவம் (2) 39.28 இந்தியக் கோஷ்டக் குச்சியால் சிகிச்சையளிப்பது (2) 39.27 நோயாளிக்கு வற்புறுத்தி சிகிச்சையளிப்பது … (1) 39.26 ஒவ்வொரு நோய்க்கும் மருந்து உண்டு; (நோய்க்கு) மருத்துவம் செய்துகொள்வது விரும்பத் தக்கது (17) 39.25 தொழுகையில் மனம் அலைபாயச் செய்யும் ஷைத்தானிடமிருந்து பாதுகாப்புக் கோரல் (1) 39.24 பிரார்த்திக்கும்போது வலியுள்ள இடத்தில் கையை வைப்பது (1) 39.23 குர்ஆன் வசனங்கள் மற்றும் அல்லாஹ்வைத் துதிக்கும் சொற்களால் ஓதிப்பார்ப்பதற்கு ஊதியம் பெறலாம் (2) 39.22 இறைவனுக்கு இணை கற்பிதம் இல்லாத சொற்களால் ஓதிப்பார்பது தவறில்லை (1) 39.21 கண்ணேறு, சின்னம்மை, விஷக்கடி, (தீய)பார்வை ஆகியவற்றுக்காக ஓதிப்பார்ப்பது விரும்பத் தக்கதாகும் (12) 39.20 பாதுகாப்புக் கோரும் அத்தியாயங்களால் நோயாளிக்கு ஓதிப்பார்ப்பது … (2) 39.19 நோயாளிக்கு ஓதிப்பார்ப்பது விரும்பத் தக்கதாகும் (4) 39.18 விஷம் (1) 39.17 சூனியம் (1) 39.16 நோயும் மருத்துவமும் ஓதிப்பார்த்தலும் (4) 39.15 மூன்றாமவரின் ஒப்புதலின்றி இருவர் மட்டும் இரகசியம் பேசிக்கொள்வது தடை செய்யப்பட்டதாகும் (3) 39.14 … அந்நியப் பெண்ணை, வழிசெல்லும் ஒருவர் வாகனத்தில் அமர்த்திக்கொள்ளலாம் (2) 39.13 பெண்கள் இருக்கும் இடத்திற்கு அலிகள் செல்லத் தடை (2) 39.12 அமர்ந்திருந்த இடத்திற்கு உரியவர் (1) 39.11 அமர்ந்திருக்கும் ஒருவரை எழுப்பிவிடுவது தடை செய்யப்பட்டதாகும் (4) 39.10 அவைக்கு வருபவர், அமரும் ஒழுங்கு (1) 39.9 … கெட்ட எண்ணத்தை அகற்றுவது விரும்பத் தக்கதாகும் (2) 39.8 அந்நியப் பெண்ணிடம் … தனிமையில் இருப்பது தடை செய்யப்பட்டதாகும் (3) 39.7 … பெண்கள் வெளியே செல்லலாம் (2) 39.6 உள்ளே செல்ல அனுமதியாகக் கருதுவதற்கு … (1) 39.5 சிறாருக்கு(ப் பெரியவர்கள்) முகமன் கூறுவது விரும்பத் தக்கதாகும் (2) 39.4 வேதக்காரர்களுக்கு முந்திக்கொண்டு ஸலாம் கூறுவதற்குத் தடை (7) 39.3 ஸலாத்துக்குப் பதிலுரைப்பது முஸ்லிமுக்குக் கடமை (2) 39.2 நடைபாதைகளில் அமர்வதன் ஒழுங்குகளில் … (2) 39.1 முந்தி ஸலாம் சொல்ல வேண்டியவர்கள் (1) 38.10 இயல்பான பார்வை (1) 38.9 பிறர் வீட்டில் எட்டிப் பார்ப்பது தடை செய்யப்பட்டதாகும் (5) 38.8 “யார்?“ என்று கேட்டால் … (2) 38.7 அனுமதி கோருதல் (5) 38.6 “என் அருமை மகனே!“ (2) 38.5 குழந்தை பிறந்தவுடன் இனிப்பான பொருளை மென்று அதன் வாயிலிடுவதும் … (9) 38.4 மன்னாதி மன்னன் எனப் பெயர் சூட்டிக்கொள்வது தடை செய்யப்பட்டதாகும் (2) 38.3 அருவருப்பான பெயரை அழகான பெயராக மாற்றியமைப்பது … (6) 38.2 அருவருப்பான பெயர்கள் … (4) 38.1 … விரும்பத் தகுந்த பெயர்கள் (8) 37.35 வெறும் பெருமை (2) 37.34 மெல்லிய உடையணிந்து, பிறரைத் தன்பால் ஈர்க்கும் வண்ணம் தோள்களைச் சாய்த்து ஒயிலாக நடக்கும் பெண்கள் (1) 37.33 பெண்களின் பொய் அலங்காரங்காரங்களுக்குத் தடை (10) 37.32 நடைபாதைகளில் அமர்வதற்குத் தடையும் பாதைகளுக்குரிய உரிமைகளைப் பேணுவதும் (1) 37.31 தலை முடியில் பகுதி மழித்துவிட்டு, பகுதி மழிக்காமல் விட்டுவிடுவது வெறுக்கத் தக்கதாகும் (1) 37.30 ஸகாத் / ஜிஸ்யாவுக்கான கால்நடைகளில் சூடிட்டு அடை யாளமிடலாம் (4) 37.29 விலங்குகளின் முகத்தில் அடிப்பதும் அடையாளச் சூடிடுவதும் தடை செய்யப்பட்டவை ஆகும் (3) 37.28 ஒட்டகத்தின் கழுத்தில் (திருஷ்டிக்) கயிற்று மாலை அணிவிப்பது வெறுக்கத் தக்கதாகும் (1) 37.27 பயணத்தின்போது நாயும் (ஒலியெழுப்பும்) மணியும் வெறுக்கத் தக்கவை (2) 37.26 உயிரினங்களின் உருவப் படங்களை வரைவதும் … தடை செய்யப்பட்டவை ஆகும் (21) 37.25 (நரைமுடிக்கு) சாயமிட்டுக்கொள்வது யூதர்களுக்கு மாறு செய்வதாகும் (1) 37.24 நரைமுடியில் கருப்பு நிறச் சாயமிடுவது தடை செய்யப்பட்டதாகும் (2) 37.23 ஆண்கள் (மேனியில்) குங்குமப்பூச் சாயமிட்டுக்கொள்வதற்குத் தடை (1) 37.22 மல்லாந்து படுத்துக்கொண்டு கால்மீது காலைப் போட்டுக் கொள்வதற்கு அனுமதி (1) 37.21 மல்லாந்து படுத்துக்கொண்டு கால்மீது காலைப் போட்டுக் கொள்வதற்குத் தடை (3) 37.20 தடை செய்யப்பட்ட இரு நிலைகள் (2) 37.19 காலணிகளை அணிந்து கழற்றும் முறைகள் (3) 37.18 காலணி அல்லது அது போன்றதை அணிந்துகொள்வது விரும்பத் தக்கதாகும் (1) 37.17 மோதிரம் அணிவதற்குத் தடை செய்யப்பட்ட விரல்கள் (2) 37.16 கைச் சுண்டுவிரலில் மோதிரம் அணிவது (1) 37.15 அபிசீனியக் வெள்ளிக் குமிழ் மோதிரம் (2) 37.14 மோதிரங்களை(க் கழற்றி) எறிந்த நிகழ்வு (2) 37.13 நபி (ஸல்) அவர்களின் (முத்திரை) மோதிரம் (3) 37.12 ‘முஹம்மதுர் ரசூலுல்லாஹ்’ எனும் இலச்சினை பொறிக்கப்பட்ட வெள்ளி மோதிரம் (2) 37.11 ஆண்கள் தங்க மோதிரம் அணிவதற்குத் தடை (3) 37.10 ஆடைகளை எண்ணிப் பெருமை கொண்டு, கர்வத்தோடு நடப்பதற்குத் தடை (2) 37.9 பெருமைக்காக ஆடையைத் தரையில் படும்படி இழுத்துச் செல்வதற்குத் தடை (7) 37.8 தேவைக்கு அதிகமான விரிப்புகளும் ஆடைகளும் இருப்பது விரும்பத் தக்கதன்று (1) 37.7 படுக்கை விரிப்புகளைப் பயன்படுத்த அனுமதி (2) 37.6 ஆடையில் (எளிமை,) பணிவு காட்டுவது … (5) 37.5 பருத்தி ஆடை அணிவதன் சிறப்பு (2) 37.4 ஆண்கள் செம்மஞ்சள் நிறச் சாயமிடப்பட்ட ஆடை அணிவதற்குத் தடை (5) 37.3 தோல் உபாதைகள் இருந்தால் ஆண்கள் பட்டாடை அணியலாம் (3) 37.2 பொன் மோதிரம் மற்றும் பட்டாடை அணிவது ஆண்களுக்குத் தடை; பெண்களுக்கு அனுமதி (20) 37.1 பொன் / வெள்ளிப் பாத்திரங்களைப் பயன்படுத்துவது ஆண்களுக்கும் பெண்களுக்கும் தடை (2) 36.35 உணவைக் குறை சொல்லவேண்டாம் (2) 36.34 இறைநம்பிக்கையாளர் ஒரே குடலில் உண்பார்; இறைமறுப்பாளன் ஏழு குடல்களில் உண்பான் (5) 36.33 உணவு குறைவாக இருக்கும்போது … (4) 36.32 விருந்தினரை உபசரிப்பதும் முன்னுரிமை வழங்குவதன் சிறப்பும் (6) 36.31 வெள்ளைப் பூண்டு சாப்பிடக்கூடியதே … (2) 36.30 உணவுக் காடியின் சிறப்பும் … (4) 36.29 ‘அல்கபாஸ்’ பழங்களில் கருப்பு நிறப் பழத்தின் சிறப்பு (1) 36.28 உணவுக் காளானின் சிறப்பும் … (6) 36.27 மதீனத்துப் பேரீச்சம் பழங்களின் சிறப்பு (3) 36.26 குடும்பத்தாருக்காக … உணவுகளைச் சேமித்துவைத்தல் (2) 36.25 பலருடன் சேர்ந்து உண்பவர் … (2) 36.24 உணவு உண்பவர் அமரும் முறை; பணிவோடு அமர்வது விரும்பத் தக்கது (2) 36.23 பேரீச்சை செங்காய்களுடன் வெள்ளரிக்காயையும் சேர்த்து உண்பது (1) 36.22 விருந்தளிப்பவருக்காக விருந்தாளி பிரார்த்திப்பது … (1) 36.21 சுரைக் குழம்பு உண்ண அனுமதி … (2) 36.20 வீட்டு உரிமையாளரின் சம்மதம் கிடைக்கும் என்ற நம்பிக்கை இருந்தால் … (4) 36.19 விருந்துக்கு அழைக்கப்பட்டவரைத் தொடர்ந்து அழைக்கப்படாதவரும் வந்துவிட்டால் … (2) 36.18 உண்டு முடித்ததும் விரல்களைச் சூப்புவதும் உணவுத் தட்டை வழித்து உண்பதும் … (9) 36.17 வலப் பக்கத்திலிருந்து பரிமாறுதல் விரும்பத் தக்கதாகும் (4) 36.16 பாத்திரத்தினுள் (பருகும்போது) வெளியே மூன்று முறை மூச்சு விட்டுப் பருகுவது விரும்பத் தக்கதாகும் (3) 36.15 ஸம்ஸம் நீரை நின்றுகொண்டு அருந்துவது (4) 36.14 நின்றுகொண்டு அருந்துவது வெறுக்கத் தக்கதாகும் (4) 36.13 உண்பது, அருந்துவது ஆகியவற்றின் ஒழுங்குகளும் விதிமுறைகளும் (10) 36.12 இரவு நேர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் (6) 36.11 பழச்சாறுகளைப் பருகுவதும் பாத்திரங்களை மூடிவைப்பதும் (3) 36.10 (ஆட்டுப்) பால் அருந்த அனுமதி (3) 36.9 பழச்சாறுகள் (புளித்துக்) கெட்டியாகி, போதையேறாதவரை அனுமதிக்கப்பட்டவையாகும் (10) 36.8 குடிகாரன் பாவமன்னிப்புக் கோரி திருந்தாவிட்டால் … (3) 36.7 போதை தரும் ஒவ்வொரு பானமும் தடை செய்யப்பட்ட மதுவாகும் (9) 36.6 பானங்கள்-பாத்திரங்கள், தடை-தடை நீக்கம் (36) 36.5 பேரீச்சம் பழம், உலர் திராட்சைக் கலவை ஊறல் வெறுக்கத் தக்கதாகும் (14) 36.4 ‘மதுபானம்’ என்று சொல்லப்படுபவை (4) 36.3 மதுவை மருந்தாகப் பயன்படுத்துவதற்குத் தடை (1) 36.2 மதுபானத்தை (சமையல்) காடியாக மாற்றிப் பயன்படுத்துவதற்குத் தடை (1) 36.1 போதையூட்டும் ஒவ்வொன்றும் மதுவாகும் (9) 35.8 அல்லாஹ் அல்லாதவரின் பெயர் கூறிப் பிராணிகளை அறுப்பதற்குத் தடை (3) 35.7 தலைமுடியை, நகங்களைக் களைவதற்குத் தடை (5) 35.6 அல் ஃபரஉ வல் அத்தீரா (1) 35.5 பலி இறைச்சியை எவ்வளவு காலம் சேமித்து வைக்கலாம்? (14) 35.4 பல், நகம், எலும்பு ஆகியவை தவிர எந்தப் பொருளாலும் பிராணியை அறுக்க அனுமதி (1) 35.3 தாமே அறுப்பதும் அல்லாஹ்வின் பெயரோடு தக்பீர் கூறுவதும் விரும்பத் தக்கவை ஆகும் (3) 35.2 பலிப் பிராணியின் வயது (4) 35.1 பலி கொடுக்கப்படும் நேரம் (10) 34.12 விலங்குகளைக் கட்டிவைத்து அம்பெய்து கொல்வதற்குத் தடை (5) 34.11 … கத்தியைக் கூர்மையாகத் தீட்டிக் கொண்டு வதையற்ற முறையைக் கையாளக் கட்டளை (1) 34.10 … பயிற்சிகளை மேற்கொள்வது அனுமதிக்கப் பட்டதாகும். கல்சுண்டு விளையாட்டு வெறுக்கப்பட்டதாகும் (2) 34.9 முயல் கறி உண்ணத் தக்கது (1) 34.8 வெட்டுக்கிளி உண்ணத் தக்கது (1) 34.7 உடும்புக் கறி உண்ணத் தக்கது (13) 34.6 குதிரைகளின் இறைச்சியை உண்பது கூடுமா? (3) 34.5 நாட்டுக் கழுதைகளின் இறைச்சியை உண்பதற்குத் தடை (14) 34.4 கடல்வாழ் உயிரினங்களில் செத்தவற்றை உண்பதற்கு அனுமதி (5) 34.3 உண்பதற்குத் தடை செய்யப்பட்ட விலங்குகளும் பறவைகளும் (6) 34.2 வேட்டையாடிய பிராணி மறைந்து, பிறகு கிடைத்தால் … (2) 34.1 பயிற்சியளிக்கப்பட்ட நாய்கள் மூலம் வேட்டையாடுதல் (8) 33.56 பயணத்திலிருந்து திரும்புகின்றவர் … (5) 33.55 பயணம் என்பது துன்பத்தின் ஒரு பகுதியாகும் … (1) 33.54 பயணத்தில் கால்நடைகளின் நலன் காப்பதும் … (2) 33.53 “என் சமுதாயத்தாரில் ஒரு குழுவினர் எப்போதுமே உண்மைக்கு ஆதரவாளர்களாக இருப்பார்கள் … (8) 33.52 அம்பெய்வதன் சிறப்பும் … (3) 33.51 உயிர்த் தியாகிகள் பற்றிய விளக்கம் (3) 33.50 அல்லாஹ்வின் பாதையில் எல்லைக் காவல் புரிவதன் சிறப்பு (1) 33.49 கடல்வழிப் போரின் சிறப்பு (2) 33.48 போரில் கலந்துகொள்ள முடியாமல் போனவருக்கும் நன்மை … (1) 33.47 அறப்போரில் கலந்துகொள்ளாமல் இறந்துபோனவர் … (1) 33.46 அல்லாஹ்வின் பாதையில் வீரமரணத்தை வேண்டுவது விரும்பத் தக்கதாகும் (2) 33.45 “எண்ணங்களைப் பொருத்தே செயல்கள் அமைகின்றன” எனும் நபிமொழி … (1) 33.44 … போர்ச் செல்வங்களைப் பெற்றோரும் பெறாதோரும் … (2) 33.43 பிறர் பார்ப்பதற்காகவும் விளம்பரத்திற்காகவும் போரிட்டவர் … (1) 33.42 அல்லாஹ்வின் பாதையில் போரிட்டவர் … (3) 33.41 உயிர்த் தியாகிக்குச் சொர்க்கம் நிச்சயம் (6) 33.40 தகுந்த காரணம் உள்ளவர்களுக்கு அறப்போரில் கலந்து கொள்வது கடமை இல்லை (2) 33.39 அறப்போர் வீரர்களின் துணைவியருடைய கண்ணியம் … (1) 33.38 அறப்போர் வீரருக்கு வாகனம் மற்றும் பிற உதவிகள் … (6) 33.37 அல்லாஹ்வின் பாதையில் தர்மம் செய்வதன் சிறப்பும் அதற்குக் கிடைக்கும் பன்மடங்கு நன்மைகளும் (1) 33.36 இறைமறுப்பாளனை (போரில்) கொன்ற பின்னர் (மார்க்கத்தில்) உறுதியோடு இருத்தல் (2) 33.35 இரு போராளிகளில் ஒருவர் மற்றவரைக் கொன்று, பின் அவ்விருவருமே சொர்க்கத்தில் … (2) 33.34 அறப்போர் மற்றும் எல்லைக் காவலின் சிறப்பு (3) 33.33 வீரமணம் அடைந்தவர்களின் உயிர்கள் … (1) 33.32 அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டவரின் கடனைத் தவிர அனைத்துப் பாவங்களும் மன்னிக்கப்படுகின்றன (3) 33.31 அல்லாஹ் (தனது பாதையில்) அறப்போர் புரிந்தவர்களுக்காகச் சொர்க்கத்தில் வைத்துள்ள உயர்நிலைகள் (1) 33.30 அல்லாஹ்வின் பாதையில் காலையாயினும் மாலையாயினும் (போரிடச்) செல்வதன் சிறப்பு (5) 33.29 அல்லாஹ்வின் பாதையில் வீரமரணம் அடைவதன் சிறப்பு (4) 33.28 அல்லாஹ்வின் பாதையில் புறப்படுதலின், அறப்போரில் ஈடுபடுதலின் சிறப்பு (4) 33.27 குதிரையின் தன்மைகளில் விரும்பத் தகாதவை (1) 33.26 மறுமை நாள்வரை நெற்றிகளில் நன்மை பிணைக்கப்பட்டிருக்கும் குதிரைகள் (5) 33.25 குதிரைப் பந்தயமும் அதற்காகக் குதிரையை மெலிய வைப்பதும் (1) 33.24 குர்ஆன் பிரதிகளை இறைமறுப்பாளர்களின் நாட்டுக்கு எடுத்துச் செல்வது … (3) 33.23 பருவ வயது பற்றிய விளக்கம் (1) 33.22 இயன்றவரை கட்டுப்பட்டு நடப்பதாக உறுதிமொழி அளித்தல் (1) 33.21 பெண்களிடம் உறுதிப் பிரமாணம் (பைஅத்) வாங்கும் முறை (2) 33.20 மக்கா வெற்றிக்குப் பின் ஹிஜ்ரத் கிடையாது (5) 33.19 நாடு துறந்து (ஹிஜ்ரத்) சென்றவர் மீண்டும் தமது தாயகத்தில் குடியேறுவதற்குத் தடை (1) 33.18 ஆட்சித் தலைவர் படையினரிடம் உறுதி மொழி பெற்றுக்கொள்வது … (13) 33.17 ஆட்சித் தலைவர்களில் நல்லவர்களும் தீயவர்களும் (2) 33.16 ஆட்சித் தலைவர்கள் மார்க்கத்திற்கு முரணாகச் செயல்படும்போது … (2) 33.15 இரு ஆட்சியாளர்களுக்கு வாக்களிப்புப் பிரமாண நெருக்கடி ஏற்பட்டால் … (1) 33.14 முஸ்லிம்கள் (ஒரே தலைமையின் கீழ்) ஒன்றுபட்டிருக்கும்போது … (2) 33.13 குழப்பங்கள் தோன்றும்போது கூட்டமைப்போடு சேர்ந்திருப்பது கடமையாகும் … (8) 33.12 உரிமைகள் மறுக்கப்பட்டாலும் தலைமைக்குக் கட்டுப்படுதல் (1) 33.11 அதிகாரத்திலிருப்போர் அநீதியிழைக்கும்போதும் தகுதியற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கும்போதும் … (1) 33.10 கலீஃபாக்களில் முதலாமவருக்கு உறுதிப் பிரமாணம் (பைஅத்) அளிப்பது கடமையாகும் (3) 33.9 ஆட்சித் தலைவர் கேடயம் போன்றவர் … (1) 33.8 பாவமற்றவற்றில் தலைவர்களுக்குக் கட்டுப்படுவது கடமையாகும். பாவமானவற்றில் கட்டுப்படுவதற்குத் தடை (11) 33.7 அதிகாரிகளுக்கு அன்பளிப்புகள் வழங்குவதற்குத் தடை (3) 33.6 பொதுச் சொத்துகளில் மோசடி செய்வது வன்மையாகத் தடை செய்யப்பட்டது (1) 33.5 நேர்மையான ஆட்சியாளரின் சிறப்பும் … (6) 33.4 தேவையின்றி ஆட்சிப் பொறுப்பை ஏற்பது விரும்பத் தக்கதன்று (2) 33.3 ஆட்சியதிகாரத்தைத் தேடி அலைவதற்கும் அதன் மீது ஆசை கொள்வதற்கும் தடை (3) 33.2 ஆட்சித் தலைவரை நியமிக்கலாம்; நியமிக்காமல் விடலாம் (2) 33.1 ஆட்சியதிகாரம் குறைஷியரிடையேதான் இருக்கும் (10) 32.51 அறப்போர்களில் இறைமறுப்பாளரிடம் உதவி கோருவது … (1) 32.50 ‘தாத்துர் ரிக்காஉ’ (ஒட்டுத் துணிப்) போர் (1) 32.49 நபி (ஸல்) கலந்துகொண்ட அறப்போர்களின் எண்ணிக்கை (6) 32.48 அறப்போரில் கலந்துகொண்ட பெண்களுக்கு … (4) 32.47 அறப்போரில் ஆண்களுடன் பெண்களும் கலந்துகொள்வது (2) 32.46 “அவனே உங்களைத் தாக்காமல் அவர்கள் கைகளை தடுத்(து வைத்)தான்” எனும் (48:24) வசனம் (2) 32.45 ‘தூ கரத்’ போரும் பிற போர்களும் (2) 32.44 அஹ்ஸாப் போர் (அ) அகழ்ப் போர் (6) 32.43 கைபர் போர் (5) 32.42 கஅப் பின் அல்அஷ்ரஃப் கொல்லப்படுதல் (1) 32.41 அபூஜஹ்லு கொல்லப்படுதல் (1) 32.40 நபி (ஸல்) (மக்களை) இறைவன்பால் அழைத்து, துன்பங்களைப் பொறுத்துக் கொண்டது (2) 32.39 நபி (ஸல்) எதிர்கொண்ட துன்பங்கள் (7) 32.38 இறைதூதரால் கொல்லப்பட்டவன் மீது இறைவனின் கோபம் (1) 32.37 உஹுதுப் போர் (3) 32.36 கூட்டுப் படையினருக்கு எதிரான அகழ்ப் போர் (2) 32.35 வாக்குறுதியை(ப் போரிலும்) நிறைவேற்றுவது (1) 32.34 ஹுதைபிய்யா சமாதான உடன்படிக்கை’ (7) 32.33 மக்கா வெற்றிக்குப் பின் … (1) 32.32 கஅபாவைச் சுற்றிலும் இருந்த சிலைகளை அப்புறப்படுத்தியது (1) 32.31 மக்கா வெற்றி (2) 32.30 பத்ருப் போர் (1) 32.29 தாயிஃப் போர் (1) 32.28 ஹுனைன் போரில் … (5) 32.27 இறைமறுப்பு அரசர்களுக்கு நபி (ஸல்) எழுதிய கடிதங்கள் (1) 32.26 அழைப்பு விடுத்து ஹெராக்ளியஸ் மன்னருக்கு நபி (ஸல்) எழுதிய கடிதம் (1) 32.25 போரில் கிடைத்த உணவை, பகை நாட்டில் இருக்கும் போதே உண்ணலாம் (2) 32.24 முஹாஜிர்கள் தன்னிறைவு அடைந்தபோது … (2) 32.23 செயல்களுள் முன்னுரிமை அளிக்கத் தக்கது (1) 32.22 ஒப்பந்தத்தை முறித்துவிட்ட (பகை)வர்களுடன் போர் செய்யலாம் (3) 32.21 யூத கிறித்தவர்கள் அரபிய தீபகற்பத்திலிருந்து வெளியேற்றப்படுவது (1) 32.20 யூதர்களை ஹிஜாஸ் பகுதியிலிருந்து நாடு கடத்தியது (2) 32.19 கைதியை என்னென்னவெல்லாம் செய்யலாம் (1) 32.18 பத்ருப் போரில் வானவர்களின் உதவியும் … (1) 32.17 போர் வெற்றிச் செல்வத்தைப் பங்கிடும் முறை (1) 32.16 இறைத்தூதர்களுக்கு யாரும் (சொத்தில்) வாரிசாக முடியாது (5) 32.15 போர் செய்யாமல் கிடைத்த செல்வங்களின் சட்டம் (3) 32.14 … போர்க் கைதிகளைப் பரிமாறிக்கொள்வது (1) 32.13 போரில் கொல்லப்பட்ட எதிரியின் உடைமைகள் (4) 32.12 போர் வெற்றிச் செல்வங்கள் (7) 32.11 போர் வெற்றிச் செல்வங்கள் யாருக்குச் சொந்தம்? (1) 32.10 போரில் மரங்களை வெட்டுவதும் எரிப்பதும் அனுமதிக்கப்பட்டதாகும் (3) 32.9 பெண்களையும் குழந்தைகளையும் அறியாமல் கொன்றுவிட்டால் … (3) 32.8 போரில் பெண்களையும் குழந்தைகளையும் கொல்வதற்குத் தடை (2) 32.7 எதிரிகளை(ப் போரில்) எதிர்கொள்ளும்போது பிரார்த்திப்பது (2) 32.6 எதிரியை(ப் போர்க் களத்தில்) சந்திக்க ஆசைப்படுவது வெறுக்கத் தக்கது … (2) 32.5 போரில் தந்திரம் அனுமதிக்கப்பட்டது (2) 32.4 மோசடி செய்வது தடை செய்யப்பட்டதாகும் (8) 32.3 மக்களிடம் இலகுவாக நடந்துகொள்ள வேண்டும்; வெறுப்பைக் கைவிட வேண்டும் (3) 32.2 படைத் தலைவர், போர் நெறிகள் குறித்து அறிவுறுத்துவது (1) 32.1 முன்னறிவிப்பின்றித் தாக்குதல் தொடுக்கலாமா? (1) 31.5 பயணத்தில் உணவைப் பகிர்ந்துண்ணல் (1) 31.4 செல்வத்தால் பிறருக்கு உதவுவது விரும்பத் தக்கது (1) 31.3 விருந்தோம்பல் சார்ந்தவை (3) 31.2 உரிமையாளரின் அனுமதியின்றி கால் நடையில் பால் கறப்பதற்குத் தடை (1) 31.1 ஹாஜிகள் தவறவிட்டவை (2) 31.0 கண்டெடுக்கப்பட்டவை (5) 30.11 நீதிபதி சமரசம் செய்துவைப்பது விரும்பத் தக்கதாகும் (1) 30.10 ஆய்வாளர்களிடையே கருத்து வேறுபாடு (1) 30.9 சாட்சிகளில் சிறந்தவர் (1) 30.8 தவறான தீர்ப்புகளைத் தள்ளுபடி செய்வதும் (மார்க்கத்தில் இல்லாத) புதுமைகளை நிராகரிப்பதும் (2) 30.7 கோபமாக இருக்கும் நீதிபதி, தீர்ப்பளிப்பது விரும்பத் தக்கதன்று (1) 30.6 நீதிபதியின் ஆய்வுக்கு நன்மை உண்டு (1) 30.5 தடைகள் மூன்று (4) 30.4 ஹிந்த் (ரலி) வழக்கு (3) 30.3 வாதங்களின் அடிப்படையில் தீர்ப்பு அமைந்துவிடுதல் (2) 30.2 சத்தியத்தின் / சாட்சியத்தின் அடிப்படையில் தீர்ப்பளித்தல் (1) 30.1 சத்தியம் செய்து நிரூபிப்பது பிரதிவாதிமீது கடமையாகும் (2) 29.11 இழப்பீடு இல்லாத விபத்துகள் (2) 29.10 தண்டனைகள், குற்றங்களுக்கான பரிகாரமாகும் (3) 29.9 சீர்திருத்திற்காக வழங்கப்படும் சாட்டையடிகளின் (அதிகபட்ச) அளவு (1) 29.8 மது அருந்திய குற்றத்திற்கான தண்டனை (4) 29.7 மகப்பேறான பெண்ணின் தண்டனையைத் தள்ளிவைத்தல் (1) 29.6 இஸ்லாமிய அரசின் கீழ் வாழும் யூதர்கள் விபச்சாரத்தில் ஈடுபட்டாலும் கல்லெறி தண்டனை (6) 29.5 விபச்சாரம் செய்தவரின் ஒப்புதல் வாக்குமூலம் (9) 29.4 மணமானவர்கள் விபச்சாரம் செய்தால் கல்லெறி தண்டனை (1) 29.3 விபச்சாரக் குற்றத்திற்கான தண்டனை (2) 29.2 தண்டனையிலிருந்து விலக்கு அளிக்குமாறு பரிந்துரைப்பதற்குத் தடை (3) 29.1 தண்டனைக்குரிய திருட்டின் அளவுகோலும் தண்டனையும் (7) 28.11 சிசுக் கொலைக்கான இழப்பீடும் … (6) 28.10 கொலையாளி, தன் குற்றத்தை ஒப்புக்கொள்வதும் … (2) 28.9 மனிதர்களின் உயிர், தன்மானம், செல்வம் ஆகியவற்றுக்கு ஊறு விளைவிப்பது … (2) 28.8 மறுமையில் வழங்கப்படும் தீர்ப்பும் தண்டனையும் … (1) 28.7 கொலையை (உலகுக்கு) அறிமுகப்படுத்தியவர் மீதான பாவம் (1) 28.6 முஸ்லிமின் மரண தண்டனைக்கான காரணங்கள் (2) 28.5 பற்கள் போன்ற(உறுப்புகளான)வற்றில் பழிக்குப்பழி உண்டு (1) 28.4 தாக்க வந்தவனிடமிருந்து தற்காத்துக் கொள்வதற்காக … (6) 28.3 கல் மற்றும் கூராயுதங்களால் கொலை செய்தால், பழிக்குப்பழி உண்டு … (3) 28.2 வன்முறையாளர்களுக்கும் மதம் மாறியோருக்குமான தண்டனை (4) 28.1 அல்கஸாமா (4) 27.13 விடுதலைக்கு வாக்களிக்கப்பட்ட அடிமையை விற்கலாம் (2) 27.12 அடிமையில் தமது பங்கை மட்டும் விடுதலை செய்தல் (8) 27.11 ‏தன் உரிமையாளருக்கு விசுவாசமாகவும் … (4) 27.10 அடிமைக்கு எஜமானர் உண்பதிலிருந்து உணவளிப்பதும் … (4) 27.9 விபசாரம் செய்துவிட்டதாக அவதூறு கூறுவதற்கான கண்டனம் (1) 27.8 அடிமைகளுடனான நல்லுறவும் கன்னத்தில் அறைந்ததற்கான பரிகாரமும் (8) 27.7 இறைமறுப்பாளராக இருந்தபோது செய்த நேர்ச்சை… (2) 27.6 ஆகுமாக்கப்பட்டதற்கான சத்தியமாக இருந்தாலும் … (1) 27.5 இன்ஷா அல்லாஹ் என்பதை (சத்தியத்தின்போது) சேர்த்துக் கூறுதல் (4) 27.4 சொல்பவரின் எண்ணப்படியே ஒருவருடைய சத்தியம் அமையும் (2) 27.3 சத்தியம் செய்தவர், அதைவிடச் சிறந்ததாக மற்றொன்றைக் காணும்போது … (12) 27.2 ‘லாத்’ மற்றும் ‘உஸ்ஸா’வின் மீது சத்தியம் செய்துவிட்டவர் … (2) 27.1 அல்லாஹ்வைத் தவிர எவர்/எதன் மீதும் சத்தியம் செய்யத் தடை (3) 26.5 நேர்ச்சை முறிவுக்கான பரிகாரம் (1) 26.4 கஅபாவரை நடைப்பயணம் செல்வதாக நேர்ந்துகொண்டவர் (3) 26.3 இறைவனுக்கு மாறு செய்வதிலோ உரிமை இல்லாததிலோ நேர்ச்சை. (1) 26.2 நேர்ச்சை செய்வதற்குத் தடை; அது (விதியில்) எதையும் மாற்றிவிடாது (6) 26.1 நேர்ச்சையை நிறைவேற்றக் கட்டளை (1) 25.5 வசதியற்றவர் மரண சாஸனம் செய்ய முடியாது (6) 25.4 அறக்கொடை (1) 25.3 மனிதன் இறந்த பின்பும் தொடரும் நன்மைகள் (1) 25.2 இறந்துவிட்டவருக்காகச் செய்யப்படும் தர்மங்களின் நன்மை … (3) 25.1 மரண சாஸனம் 1/3 மட்டுமே (5) 25.0 மரண சாஸனம் (2) 24.4 ஆயுட்கால அன்பளிப்பு (11) 24.3 அன்பளிப்பு வழங்குவதில் பிள்ளைகளிடையே பாகுபாடு காட்டுவது … (10) 24.2 தானமும் அன்பளிப்பும் வழங்கப்பட்ட பின், திரும்பப் பெறுவதற்குத் தடை … (4) 24.1 தானமாகக் கொடுத்ததை விலைக்கு வாங்குவது விரும்பத் தக்கதல்ல (4) 23.4 ஒருவர் விட்டுச்செல்லும் செல்வம் அவருடைய வாரிசுகளுக்கு உரியதாகும் (4) 23.3 இறுதியாக அருளப்பெற்றது கலாலா வசனமாகும் (4) 23.2 ‘கலாலா’ சொத்துரிமை (5) 23.1 உரியவர்களுக்கும் உறவினருக்கும் பிரிக்கப்பட்ட பாகங்கள் (3) 23.0 ஒரு முஸ்லிம், இறைமறுப்பாளருக்கு வாரிசாகமாட்டார் (1) 22.31 பாதைக்கு நிலம் ஒதுக்குவதில் கருத்து வேறுபாடு ஏற்பட்டால் அதற்கான தீர்வு (1) 22.30 பிறர் நிலத்தை அபகரித்தல் போன்ற அநீதி இழைத்தல்களுக்குத் தடை (6) 22.29 அண்டை வீட்டாரின் சுவரில் (சாரம் கட்டுவதற்கு) மரக்கட்டை பதிப்பது (1) 22.28 பங்காளியின் இசைவு (3) 22.27 வியாபாரத்தில் (வீண்)சத்தியம் செய்வது விலக்கப்பட்டுள்ளது (2) 22.26 உணவுப் பொருட்களைப் பதுக்குவதற்குத் தடை (2) 22.25 முன்பணம் செலுத்தும் வணிகம் (2) 22.24 அடமானம் உள்ளூரிலும் பயணத்திலும் செல்லும் (3) 22.23 ஓர் உயிரினத்தை அதே இனத்திற்குப் பதிலாக ஏற்றத்தாழ்வோடு விற்கலாம் (1) 22.22 உங்களில் சிறந்தவர் கடனை அழகிய முறையில் திருப்பிச் செலுத்துபவரே (4) 22.21 ஒட்டகத்தை விற்றவர் அதில் பயணிக்க நிபந்தனை விதிப்பது (5) 22.20 அனுமதிக்கப்பட்டவற்றையும் ஐயத்திற்குரியவற்றையும் கையாளுதல் (1) 22.19 வட்டி வாங்குபவருக்கும் வட்டி கொடுப்பவருக்கும் சாபம் (2) 22.18 உணவுப் பொருளை, சரிக்குச் சரியாக விற்றல் (12) 22.17 பொன்னும் மணியும் பதித்த மாலையை விற்பது (4) 22.16 தங்கத்திற்கு வெள்ளியைக் கடனாக விற்பதற்குத் தடை (3) 22.15 நாணயமாற்று வியாபாரம்; வெள்ளிக்குத் தங்கத்தை ரொக்கத்துக்கு விற்பது (7) 22.14 வட்டி (4) 22.13 மது, செத்தவை, பன்றி, சிலைகள் ஆகியவற்றை விற்பதற்குத் தடை (4) 22.12 மதுபான வியாபாரத்திற்குத் தடை (4) 22.11 குருதி உறிஞ்சி எடுப்பதற்காகக் கூலி பெறுவது கூடும் (4) 22.10 வேட்டை, காவல், பாதுகாப்புக்காக நாய் வளர்க்கலாம் (18) 22.9 நாய் விற்ற காசு, சோதிடரின் தட்சணை, விபச்சாரியின் வருமானம் (4) 22.8 தேவைக்குப் போக மீதம் உள்ள நீரை விற்பதற்குத் தடை (5) 22.7 வசதியுள்ளவர் கடனைச் செலுத்த தாமதம் செய்யக் கூடாது (1) 22.6 கடனை அடைக்க சிரமப்படுபவருக்கு அவகாசம் அளிப்பதன் சிறப்பு (7) 22.5 திவாலானவரிடம் திரும்பப் பெற்றுக்கொள்ளும் உரிமை (4) 22.4 கடனில் தள்ளுபடி செய்வது விரும்பத் தக்கதாகும் (3) 22.3 சேதமடைந்த பழங்களுக்கான தொகைக்குத் தள்ளுபடி (5) 22.2 மரம் நடுதலின், பயிர் செய்தலின் சிறப்பு (5) 22.1 நிபந்தனையின் பேரில் தோப்பைக் குத்தகைக்கு விடுவது (4) 21.21 நிலத்தை (விளைவித்துக்கொள்ள) இரவலாக வழங்குவது (4) 21.20 ‘முஸார’ஆவும் ‘முஆஜரா’வும் (2) 21.19 பொன், வெள்ளி(நாயணங்களு)க்கு நிலத்தைக் குத்தகைக்கு விடுவது (3) 21.18 தானியத்திற்கு நிலத்தைக் குத்தகைக்கு விடுவது (2) 21.17 நிலக் குத்தகை (24) 21.16 தடை செய்யப்பட்ட வியாபார வகைகள் (6) 21.15 கனிகள் நிறைந்த பேரீச்ச மரத்தை விற்பது (4) 21.14 (மரத்திலுள்ள) செங்கனிகளை மாற்றிக் கொள்வதற்குத் தடை (14) 21.13 மரத்திலுள்ள பழங்களை முற்றுவதற்கு முன் விற்பதற்குத் தடை (10) 21.12 வியாபாரத்தில் ஏமாற்றப்படுபவர் (1) 21.11 வியாபாரத்தில் உண்மை பேசுவதும் குறைகளைத் தெளிவுபடுத்துவதும் (1) 21.10 விற்பவருக்கும் வாங்குபவருக்கும் வியாபாரத்தை முறித்துக்கொள்ளும் உரிமை (4) 21.9 அளவு தெரியாத பேரீச்சம் பழக் குவியலை விற்பதற்குத் தடை (1) 21.8 வாங்கப்பட்ட பொருள் கைக்கு வருமுன் (பிறருக்கு) விற்பது கூடாது (13) 21.7 மடி கனக்கச் செய்யப்பட்ட கால்நடைகளை விற்பனை செய்வது பற்றிய சட்டம் (5) 21.6: கிராமவாசிக்காக, நகரவாசி விற்றுக் கொடுக்கத் தடை (5) 21.5: விற்பனைக்கு வரும் சரக்குகளை இடைமறித்து வாங்கத் தடை (4) 21.4: வியாபாரத்தில் தடை செய்யப்பட்டவை (7) 21.3: ஒட்டகக் கன்று (அது பிறக்குமுன்) விற்பதற்கு தடை! (2) 21.2: கல்லெறி வியாபாரம் மற்றும் மோசடி வியாபாரம் ஆகியவை செல்லாது (1) 21.1: ‘முலாமஸா’ மற்றும் ‘முனாபதா’ ஆகிய வியாபாரங்கள் செல்லாது (3) 20.7: அடிமையான தந்தையை விடுதலை செய்வதன் சிறப்பு (1) 20.6: அடிமைகளை விடுதலை செய்வதன் சிறப்பு (4) 20.5: விடுதலை செய்த உரிமையாளரை மாற்றிக் கூறத் தடை (4) 20.4: வாரிசாகும் உரிமையை விற்பதற்கும் அன்பளிப்பாக வழங்குவதற்கும் தடை (1) 20.3: விடுதலை செய்தவருக்கே வாரிசுரிமை உரியது (9) 20.2: அடிமை (தனது முழு விடுதலைக்காக) உழைத்துப் பொருளீட்டுவது (2) 20.1: ஓர் அடிமையி(ன் விலையி)ல், ஒருவர் தமக்கான பங்கை விடுவிப்பது (1) 19.1: சுய சாபம் வேண்டுதல் (17) 18.9: கணவன் இறந்து ‘இத்தா’விலிருக்கும் பெண் துக்கம் கடைப்பிடிப்பது (11) 18.8: கர்ப்பமுற்றிருக்கும் பெண்ணின் ‘இத்தா’க் காலம், பிரசவத்துடன் முடிந்துவிடும் (2) 18.7: ‘இத்தா’விலிருக்கும் பெண் தன் தேவைக்காக வெளியே செல்லலாம் (1) 18.6: மூன்று தலாக் சொல்லப்பட்ட பெண்ணுக்கு ஜீவனாம்சம் பற்றி… (18) 18.5: ஈலாச் செய்வது, மனைவியிடமிருந்து விலகுவது, விருப்ப உரிமை அளிப்பது (5) 18.4: மனைவிக்கு (த் தம்மைப் பிரிந்துவிட) உரிமை அளிப்பது மணவிலக்கு ஆகாது (8) 18.3: மணவிலக்குச் செய்யும் நோக்கமின்றி கூறினால், அது மணவிலக்கு ஆகாது (4) 18.2: மூன்று தலாக்குகள் (3) 18.1: மாதவிடாயான மனைவியை அவளது சம்மதமின்றி மணவிலக்குச் செய்வதற்குத் தடை (14) 17.19: ஹவ்வா-வும், பெண்கள் கணவரை ஏமாற்றுதலும் (2) 17.18: மனைவியரின் நலம் நாடுதல் (4) 17.17: பயன் தரும் இவ்வுலகச் செல்வங்களுள் மிகச் சிறந்த செல்வம், நற்குணமுள்ள மனைவியே (1) 17.16: கன்னிப் பெண்ணை மணப்பது விரும்பத் தக்கதாகும் (5) 17.15: மார்க்கப் பற்றுள்ள பெண்ணை மணப்பது விரும்பத் தக்கதாகும் (2) 17.14: மனைவியருள் ஒருவர், தனது முறைநாளை மற்றவருக்கு விட்டுக்கொடுக்கலாம் (4) 17.13: மனைவியருக்கு (இரவுகளை) ஒதுக்கீடு செய்வது (1) 17.12: கன்னி கழிந்த பெண்ணுக்கும், கன்னிப் பெண்ணுக்கும் கணவன் ஒதுக்க வேண்டிய நாட்கள் (6) 17.11: சாயல் அறியும் நிபுணரின் கூற்றுப்படி, குழந்தைக்கு உரியவரைக் கண்டறிவது (3) 17.10: எஜமானரின் கீழ் வாழும் பெண்ணின் குழந்தை, அவருக்கே உரியது (2) 17.9: பெண் போர்க் கைதியுடன் உடலுறவு கொள்ளலாம் (2) 17.8: பசிக்காகத் தாய்ப்பால் அருந்தினால்தான் பால்குடி உறவு ஏற்படும் (1) 17.7: பருவ வயதை அடைந்தவருக்குப் பாலூட்டுவது (6) 17.6: ஐந்து தடவை அருந்தினால்தான் பால்குடி உறவு உண்டாகும் (2) 17.5: ஓரிரு தடவை (பெண்ணின் மார்பில்) பால் குடிப்பது பற்றிய சட்டம் (6) 17.4: மனைவியின் மகளையும் மனைவியின் சகோதரியையும் மணப்பதற்குத் தடை (2) 17.3: பால்குடிச் சகோதரரின் மகளை மணப்பது தடை செய்யப்பட்டுள்ளது (3) 17.2: பால்குடித் தந்தையின் (இரத்த பந்த) உறவினரும் மணமுடிக்கத் தகாதவரே! (6) 17.1: பிறப்பால் ஏற்படும் உறவும் பால்குடி உறவும் (2) 16.24: பாலூட்டும் மனைவியுடன் உடலுறவு கொள்ளும்போது அஸ்லுச் செய்வது வெறுக்கத் தக்கது (3) 16.23: கருவுற்றிருக்கும் பெண் போர்க் கைதியுடன் உடலுறவு கொள்வது தடை செய்யப்பட்டுள்ளது (1) 16.22: உடலுறவின்போது இடைமுறிப்பு – ‘அஸ்லு’ச் சட்டம் (12) 16.21: மனைவியுடன் நடைபெறும் உடலுறவு இரகசியங்களை வெளியே சொல்வது தடுக்கப்பட்டது (2) 16.20: ஒரு பெண், தன் கணவனின் படுக்கைக்குச் செல்ல மறுப்பதற்குத் தடை (3) 16.19: உடலுறவின் ஒழுங்குகள் (2) 16.18: உடலுறவின்போது ஓத வேண்டிய விரும்பத் தகுந்த பிரார்த்தனை (1) 16.17: மூன்று முறை மணவிலக்கு அளிக்கப்பட்ட பெண்ணின் மறுவிருப்பம் (4) 16.16: விருந்துக்கான அழைப்பை ஏற்பது பற்றிய கட்டளை (13) 16.15: ஸைனப் பின்த்து ஜஹ்ஷு (ரலி) திருமணம்; ஹிஜாப் பற்றிய வசனம்; மணவிருந்து (7) 16.14: அடிமைப் பெண்ணை விடுதலை செய்து, பின்னர் அவளை மணமுடித்துக்கொள்வதன் சிறப்பு (6) 16.13: மணக்கொடை (மஹ்ரு) என்பது … (7) 16.12: ஒருவர் தாம் மணமுடிக்க விரும்பும் பெண்ணின் முகத்தையும் இரு முன் கைகளையும் பார்ப்பது (2) 16.11 ஷவ்வால் மாதத்தில் மணமும் தாம்பத்திய உறவும் (1) 16.10: இளவயதுக் கன்னிக்கு அவளுடைய தந்தை மணமுடித்துவைத்தல் (4) 16.9: மணப் பெண்ணின் வாய் வழிச் சம்மதமும் மௌனச் சம்மதமும் (4) 16.8: திருமண (முன்) நிபந்தனைகளை நிறைவேற்றல் (1) 16.7: மணக்கொடையில்லா திருமணம் செல்லாது (5) 16.6: தம் (முஸ்லிம்) சகோதரன் கேட்டுக்கொண்டிருக்கும் ஒரு பெண்ணை, மற்றவர் கேட்கலாகாது (7) 16.5: இஹ்ராம் புனைந்தவர் திருமணம் செய்வதற்குத் தடை; அவர் பெண் கேட்பது வெறுக்கத் தக்கது (8) 16.4: மனைவியின் அத்தையை, சின்னம்மாவை மணக்கத் தடை (8) 16.3: இடைக்காலத் திருமணம், (முத்ஆ) காலாவதியானது (21) 16.2: இச்சை தூண்டப்பட்டவர், தமது இச்சையைத் தணித்துக் கொள்ளட்டும் (2) 16.1: வசதி இருந்தால் மணமுடிப்பதும் இல்லாதவர் நோன்பு நோற்பதும் (6) 15.97: குபாப் பள்ளிவாசல், அதில் தொழுவது, அதைத் தரிசிப்பது ஆகிய சிறப்புகள் (7) 15.96: இறையச்சத்தின் மீது நிறுவப்பட்ட பள்ளிவாசல் (1) 15.95: மூன்று பள்ளிவாசல்களைத் தவிர வேறெதற்கும் (புனிதப்) பயணம் கிடையாது (2) 15.94: மக்கா, மதீனாப் பள்ளிவாசல்களில் தொழுவதன் சிறப்பு (6) 15.93: ‘உஹுத்’ மலை நம்மை நேசிக்கிறது; நாமும் அதை நேசிக்கின்றோம் (3) 15.92: சொர்க்கப் பூஞ்சோலைகளுள் ஒன்று (3) 15.91: மதீனாவாசிகள் மதீனாவை விட்டு அகலும்போது அதன் நிலை (2) 15.90: மதீனாவிலேயே தங்கியிருப்பதற்கு ஆர்வமூட்டல் (2) 15.89: மதீனாவாசிகளுக்குக் கேடு நினைப்பவர்களை, அல்லாஹ் உருக்குலைத்துவிடுவான் (3) 15.88: தன்னிலுள்ள தீயவர்களை மதீனா அகற்றிவிடும் (5) 15.87: கொள்ளை நோயும் தஜ்ஜாலும் நுழைய முடியாமல் மதீனா பாதுகாக்கப்பட்டுள்ளது (2) 15.86: மதீனாவில் ஏற்படும் நெருக்கடிகளைச் சகித்துக்கொண்டு, அங்குக் குடியிருக்க ஆர்வ மூட்டல் (10) 15.85: மதீனாவின் சிறப்பு; பிரார்த்தித்ததும் புனிதமானவையும் (17) 15.84: இஹ்ராமின்றி மக்காவிற்குள் நுழைய அனுமதி (5) 15.83: அவசியத் தேவையின்றி மக்காவிற்குள் ஆயுதம் எடுததுச் செல்வதற்குத் தடை (1) 15.82: மக்காவும், அதன் புனிதமானவைகளும் (4) 15.81: முஹாஜிருக்கு மக்காவில் தக்குவதற்கு அனுமதிக்கப்பட்ட நாட்கள் (4) 15.80: ஹாஜிகள் மக்காவில் தங்குவதும் அங்குள்ள வீடுகளை வாரிசுரிமையாகப் பெறுவதும் (3) 15.79: ஹஜ், உம்ரா, அரஃபா நாள் ஆகியவற்றின் சிறப்பு (3) 15.78: இணைவைப்பவருக்கான ஹஜ் சட்டங்கள் (1) 15-77: ஹஜ் அல்லது உம்ராவிலிருந்து திரும்பும்போது துல்ஹுலைஃபாவில் தங்கித் தொழுவது (5) 15.76: பயணத்திலிருந்து திரும்பி வரும்போது ஓத வேண்டியவை (2) 15.75: பயணங்களில் வாகனத்தில் ஏறியதும் ஓத வேண்டிய துஆ (2) 15.74: மஹ்ரமான ஆணுடன் மட்டுமே பெண்ணின் ஹஜ் முதலான பயணம் (11) 15.73: ஹஜ் கடமை, ஆயுளில் ஒரு முறைதான் (1) 15.72: குழந்தையின் ஹஜ் செல்லும்; அதை ஹஜ்ஜுக்கு அழைத்துச் சென்றவருக்கும் நற்பலன் உண்டு (3) 15.71: இயலாதவருக்காகவோ, இறந்தவருக்காகவோ பிறர் ஹஜ் செய்தல் (2) 15.70: கஅபாவின் வளைந்த சுவரும் அதன் தலைவாயிலும் (1) 15.69: இறையில்லம் கஅபாவை இடித்துக் கட்டுதல் (7) 15.68: கஅபாவின் உள்ளே நுழைவதும் அதனுள் தொழுவதும் (9) 15.67: விடைபெறும் தவாஃப் மாதவிடாய் ஏற்பட்ட பெண்ணுக்குக் கடமையில்லை (8) 15.66: செல்லும் வழியில் பலிப் பிராணி பாதிப்புக்குள்ளாகிவிட்டால் … (2) 15.65: பலியிடக் கொண்டுசெல்லும் ஒட்டகத்தில், பயணம் செய்ய அனுமதி (6) 15-64: ஹரம் எல்லைக்குச் செல்லாதவர், பலிப் பிராணியை அனுப்பிவைக்கும் முறை (11) 15.63: ஒட்டகத்தை அறுக்கும் முறை (1) 15.62: பலிப் பிராணிகளுள் மாட்டிலும் ஒட்டகத்திலும் கூட்டுச் சேர்வது (8) 15.61: பலிப் பிராணிகளின் இறைச்சி, தோல், சேணம் ஆகியவை தர்மத்துக்குரியன (2) 15.60: ‘தஷ்ரீக்’ நாட்களின் இரவுகளில் மினாவில் தங்குவது கட்டாயமாகும் (2) 15.59: ‘நஃப்ரு’டைய நாளில் ‘அல்முஹஸ்ஸபி’ல் தங்குவதும் அங்குத் தொழுவதும் (9) 15.58: துல்ஹஜ் பத்தாவது நாளில் ‘தவாஃபுல் இஃபாளா’ செய்வது (2) 15.57: ஹஜ் சடங்குகளில் முன் – பின் ஆகிவிட்டால் … (6) 15.56: துல்ஹஜ் பத்தாம் நாளின் சடங்குகள் (3) 15.55: தலைமுடியை மழிப்பதும் குறைப்பதும் (6) 15.54: கற்களின் எண்ணிக்கை (1) 15.53: கல்லெறியும் நேரம் (1) 15.52: பொடிக் கற்கள் போதும் (1) 15.51: துல்ஹஜ் பிறை பத்தில் ஜம்ரத்துல் அகபாவுக்குக் கல்லெறிதல் (3) 15.50: ‘ஜம்ரத்துல் அகபா’வின் மீது கல் எறியும்போது தக்பீர் கூறுவது (4) 15.49: முஸ்தலிஃபாவிலிருந்து மினாவிற்குப் புறப்படச் செய்வது (11) 15.48: முஸ்தலிஃபாவில் ஸுப்ஹுத் தொழுகையை ஆரம்ப நேரத்தில் தொழுவது (1) 15.47: மஃக்ரிப், இஷா வை அடுத்தடுத்துத் தொழுவது (14) 15.46: அரஃபா நாளில் மினாவிலிருந்து அரஃபாவிற்குப் போகும்போது தல்பியாவும் தக்பீரும் கூறுதல் (4) 15.45: துல்ஹஜ் பத்தாவது நாளன்று கல்லெறியத் துவங்கும்வரை தல்பியாச் சொல்லிக்கொண்டிருப்பது (7) 15.44: ஸஃபா-மர்வாவுக்கிடையே ஸயீ (ஓட்டம்) ஒரே தடவைதான் (1) 15.43: ஸஃபா-மர்வாவுக்கிடையே ஸயீச் செய்வது முக்கியக் கடமையாகும் (5) 15.42: வாகனங்கள் மீதமர்ந்து தவாஃப் செய்யலாம் (6) 15.41: தவாஃபின்போது ஹஜருல் அஸ்வதை முத்தமிடுவது (5) 15.40: இறையில்லத்தில் முத்தமிடப்படும் இரு மூலைகள் (6) 15.39: தவாஃபில் விரைந்து நடப்பது விரும்பத்தக்கது (12) 15.38: மக்காவினுள் நுழையும் முன்… (4) 15.37 மக்காவினுள் நுழைவதும் வெளியேறுவதும் (3) 15.36 ரமளான் மாதத்தில் உம்ராச் செய்வதன் சிறப்பு (2) 15.35: நபியவர்களின் உம்ரா எண்ணிக்கையும் காலமும் (4) 15.34 நபியவர்களின் தல்பியாவும் பலியும் (4) 15.33: உம்ராவில் தலைமுடி குறைத்தல் (5) 15.32: இஹ்ராமின்போது பலிப் பிராணி (4) 15.31: ஹஜ்ஜுப் பருவங்களில் உம்ராச் செய்ய அனுமதி (6) 15.30: தமத்துஉ ஹஜ் (2) 15.29: இஹ்ராம் ஹாஜிக்குக் கட்டாயம் (3) 15.28: தவாஃபும் ஸயீயும் கட்டாயம் (3) 15.27: ஹஜ் உம்ரா சேர்த்தும் தனித்தும் செய்வது (3) 15.26: ஒரே இஹ்ராமில் உம்ரா ஹஜ் (3) 15.25: இஹ்ராமிலிருந்து விடுபடுதல் (3) 15.24: பலிப் பிராணியும் ஹஜ் கடமையும் (2) 15.23: தமத்துஉ ஹஜ் அனுமதிக்கப்பட்ட ஒன்றாகும் (13) 15.22: ஒருவர் வேறொருவரின் இஹ்ராமை அச்சொட்டி பூணுதல் (3) 15.21: அரஃபா பெருவெளியில் தங்கி திரும்புதல் தொடர்பான இறை கூற்று (3) 15.20: அரஃபாப் பெருவெளி முழுவதும் தங்குமிடம் (2) 15.19: நபி (ஸல்) அவர்களின் ஹஜ் (1) 15.18: உம்ராவையும் ஹஜ்ஜையும் தனித் தனியாக நிறைவேற்றி பயனடைதல் (2) 15.17: இஹ்ராமின் முறைகள் (27) 15.16: இரத்தப்போக்குடைய பெண் இஹ்ராமில் குளித்தல் (2) 15.15: இஹ்ராமிலிருந்து விடுபட முன் நிபந்தனையிட அனுமதி (5) 15.14: முஹ்ரிம் இறந்துவிட்டால் செய்ய வேண்டியவை (9) 15.13: இஹ்ராம் பூண்ட முஹ்ரிம், தம் உடலைக் கழுவிக்கொள்ள அனுமதி (1) 15.12: இஹ்ராம் பூண்ட முஹ்ரிம், தம் கண்களுக்கு மருந்திட அனுமதி (2) 15.11: இஹ்ராம் பூண்ட முஹ்ரிம், ஹிஜாமா செய்ய அனுமதி (2) 15.10: முஹ்ரிமுக்குத் தலைமுடி மழிக்க அனுமதியும் பரிகாரமும் (7) 15.09: ஹரம் எல்லைக்குள் கொல்ல அனுமதிக்கப்பட்டவைகள் (12) 15.08: இஹ்ராம் பூண்ட முஹ்ரிம் வேட்டையாடுவது குறித்து.. (9) 15.07: இஹ்ராமின்போது நறுமணம் பூசுதல் (19) 15.06: துல்ஹுலைஃபா பள்ளியில் தொழுதல் (1) 15.05: வாகனம் புறப்படுவதற்கு ஆயத்தமானவுடன் தல்பியா கூறுவது (4) 15.04: மதீனாவாசிகள் இஹ்ராம் பூண வேண்டிய இடம் (2) 15.03: தல்பியாவின் பண்பும் அதன் நேரமும் (4) 15.02: ஹஜ்/உம்ராவிற்கான இஹ்ராம் எல்லைகள் (7) 15.01: ஹஜ்/உம்ராவில் அனுமதிக்கப்பட்டவை.. (10) 14.04: துல்ஹஜ் மாதத்தின் பத்து நோன்புகள் (2) 14.02: இஃதிகாஃப் இருக்குமிடத்தினுள் நுழையும் நேரம் (1) 14.03: இறுதிப் பத்தில் வழிபாடுகளில் ஈடுபடுவது (2) 14.01: இறுதிப் பத்து நாட்களில் இஃதிகாஃப் இருத்தல் (5) 13.40: லைலத்துல் கத்ர் இரவு குறித்து.. (17) 13.39: ஷவ்வால் ஆறு நோன்பு (1) 13.37: ஷஅபான் மாத இறுதியில் நோன்பு நோற்றல் (3) 13.38: முஹர்ரம் நோன்பின் சிறப்பு (2) 13.36: சுன்னத்தான நோன்புகள் (5) 13.35: ஒரு நாள் விட்டு ஒரு நாள் நோன்பு (12) 13.34: நோன்பில்லாமல் எந்த மாதத்தையும் கடக்க விடாமலிருப்பது விரும்பத் தக்கது (9) 13.33: மறதியால் (நோன்பாளி) நோன்பு முறியாது (1) 13.32: கூடுதலான நோன்பு முடிவு செய்வதற்கும் விடுவதற்கும் அனுமதி (2) 13.31: அல்லாஹ்வின் பாதையில் செல்லும்போது சக்தி பெற்றிருப்பவர் நோன்பு நோற்பதன் சிறப்பு (2) 13.30: நோன்பின் மாண்பு (6) 13.29: நோன்பாளி, நாவைக் காப்பது (1) 13.28: நோன்பாளி விருந்துக்கு அழைக்கப்பட்டால் “நான் நோன்பாளி” என்று சொல்லிவிட வேண்டும் (1) 13.27: இறந்துபோனவரின் விடுபட்ட நோன்பை நோற்பது (5) 13.26: ரமளானில் விடுபட்ட நோன்பை ஷஅபான் மாதத்தில் ‘களா’ச் செய்தல் (2) 13.25: இறைவசனம் வேறொரு வசனத்தின் மூலம் மாற்றம் (2) 13.24: வெள்ளிக்கிழமை மட்டும் நோன்பு நோற்பது விரும்பத் தக்கதன்று (3) 13.23: அய்யாமுத் தஷ்ரீக் நாட்களில் நோன்பு நோற்பதற்குத் தடை (2) 13.22: நோன்புப் பெருநாளிலும் ஹஜ்ஜுப் பெருநாளிலும் நோன்பு நோற்பதற்குத் தடை (6) 13.20: ஆஷூரா நோன்பை எந்த நாளில் நோற்க வேண்டும்? (4) 13.19: ஆஷூரா நாளில் நோன்பு நோற்றல் (17) 13.18: அரஃபா நாளில் அரஃபாவில் தங்கும் ஹாஜிகளின் நோன்பு (4) 13.17: பயணத்தில் நோன்பு நோற்பதையோ விட்டுவிடுவதையோ தேர்ந்துகொள்ளலாம் (5) 13.16: பயணத்தில் நோன்பைக் கைவிட்டவர், பொதுப் பணியாற்றினால் கிடைக்கும் நன்மை (3) 13.15: பயணத்தில் இருப்பவர் மீதான கடமையான ரமளான் நோன்பு (11) 13.14: ரமளான் பகலில் உடலுறவில் ஈடுபடுவதற்குத் தடையும் அதன் பரிகாரமும் (5) 13.13: பெருந்துடக்குடன் வைகறைப் பொழுதை அடைந்தவரின் நோன்பு செல்லும் (6) 13.12: கட்டுப்படுத்தும் நோன்பாளிக்கு (தம் மனைவியை) முத்தமிடத் தடையில்லை (13) 13.11: தொடர்நோன்பு நோற்பதற்குத் தடை (7) 13.10: பகற் பொழுது வெளியேறி நோன்பு நிறைவடையும் நேரம் (3) 13.09: ஸஹரைத் தாமதிப்பதும் நோன்பு துறப்பதை விரைந்து செய்வதும் (6) 13.08: ஃபஜ்ரு நேரம் வந்தவுடன் நோன்பு ஆரம்பமாகிவிடும் (11) 13.07: ‘இரு பெருநாட்களின் இரு மாதங்களும் குறைவுபடாது’ நபிகளாரின் விளக்கம் (2) 13.06: (வானை) மேகம் மூடிக்கொண்டால் (மாதத்தின் நாட்கள்) முப்பதாக முழுமையாக்கப்படும் (2) 13.05: ஒவ்வோர் ஊர்க்காரர்களுக்கும் அவரவர் பார்க்கும் பிறையே பொருந்தும் (1) 13.04: மாதம் என்பது இருபத்தொன்பது நாட்களாகவும் இருக்கும் (6) 13.03: ரமளானுக்கு முந்தைய இரு நாள்களில் நோன்பு நோற்கக் கூடாது (1) 13.02: ரமளான் நோன்பு தொடக்கமும் முடிவும் (17) 13.01: ரமளான் மாதத்தின் சிறப்பு (2) 12.55: ஸகாத் வசூலிப்பவர், தடை செய்யப்பட்டதைக் கோராதவரை அவரைத் திருப்திபடுத்த வேண்டும் (1) 12.54: தர்மப் பொருள் கொண்டுவந்தவருக்காகப் பிரார்த்தித்தல் (1) 12.53: நபி (ஸல்) அன்பளிப்பை ஏற்றதும் தர்மத்தை மறுத்ததும் (1) 12.52: தர்மப் பொருள், அதன் பண்பு நீங்கி விடுதல் (5) 2.27: நாய் நக்கிய பாத்திரம் பற்றிய சட்டம் (6) 2.28: தேங்கிக் கிடக்கும் தண்ணீரில் சிறுநீர் கழிப்பதற்குத் தடை (3) 2.29: பெருந்துடக்குடையவர் தேங்கிய நீரில் இறங்கிக் குளிக்கத் தடை (1) 2.30: பள்ளிவாசலில் சிறுநீர் கழித்தால்… (3) 2.31: தாய்பால் குடிக்கும் குழந்தையின் சிறுநீரைக் கழுவும் சட்டம் (4) 2.32: விந்து பற்றிய சட்டம் (4) 2.33: மாதவிடாய் இரத்தம் கழுவும் முறை (1) 2.34: சிறுநீரைச் சுத்தம் செய்வது கட்டாயம் (1) 3.01: மாதவிடாயான மனைவியைக் கீழாடைக்கு மேல் அணைத்துக் கொள்வது. (3) 3.02: மாதவிடாயான மனைவியுடன் ஒரே போர்வைக்குள் படுத்துக் கொள்வது. (2) 3.03: மாதவிடாயான பெண் செய்ய அனுமதிக்கப்பட்டவை (11) 3.04: இச்சை நீர் (3) 3.05: உறங்கி எழுந்ததும் முகத்தையும் கையையும் கழுவுதல் (1) 3.06: பெருந்துடக்காளி செய்ய வேண்டியவை (8) 3.07: மதன நீர் வெளிப்பட்ட பெண்ணுக்குக் குளியல் கடமை. (5) 3.08: ஆண்/பெண் (விந்து-மதன)நீரிலிருந்துதான் குழந்தை உருவாகிறது. (1) 3.09: பெருந்துடக்கிற்கான குளியல் முறை (5) 3.10: பெருந்துடக்கு குளியல் தொடர்பானவை (14) 3.11: குளிக்கும் போது மூன்றுமுறை தண்ணீர் ஊற்றுதல் (4) 3.12: குளிக்கும் பெண்களின் சடைமுடி பற்றிய சட்டம் (2) 3.13: மாதவிடாய் குளியலின் போது கஸ்தூரி பயன்படுத்துதல் (2) 3.14: தொடர் உதிரப் போக்குடைய பெண்களின் தொழுகை மற்றும் குளியல் (5) 3.15: மாதவிடாய் நாட்களில் விடுபட்ட கடமைகள் (3) 3.16: குளிப்பவர் திரையிட்டுக் கொள்தல் (3) 3.17: பிறரின் மறையுறுப்பைப் பார்த்தல் (1) 3.18: தனித்துக் குளிக்கும் போது ஆடையின்றி குளித்தல் (1) 3.19: மறையுறுப்பை மறைத்துக் கொள்வதில் கவனம் (3) 3.21: (விந்து)நீர் வெளிப்பட்டாலே (குளியல்)நீர் கடமையாகும் (9) 3.22: ஆண்-பெண் குறிகள் இணைந்து விட்டால் குளியல் கடமையாகும் (3) 3.23: சமைக்கப்படவற்றை உண்டால் மீண்டும் உளூ செய்தல் (3) 3.24: சமைக்கப் பட்டவற்றை உண்டால் உளூச் செய்யும் கட்டாயம் மாற்றப் பட்டது (8) 3.25: ஒட்டக இறைச்சி உண்டால் உளூச் செய்ய வேண்டும் (1) 3.26: வாயு பிரிந்த சந்தேகம் ஏற்பட்டாலும் தொழலாம் (2) 3.27: பதனிடப்படுவதால் செத்த பிராணியின் தோல் தூய்மை ஆகும் (7) 3.28: தயம்மும் (6) 3.29: ஒரு முஸ்லிம் (பெருந்துடக்கு ஏற்பட்டதால்) அசுத்தமாகிவிட மாட்டார். (2) 3.30: பெருந்துடக்கு போன்ற நிலைகளிலும் அல்லாஹ்வைத் துதித்தல். (1) 3.31: சிறுதுடக்காளி (உளூச் செய்யாமல்) உண்ணலாம் (4) 3.32: கழிப்பிடத்திற்குச் செல்லும்போதான பிரார்த்தனை (1) 3.33: உட்கார்ந்து கொண்டு உறங்குவது உளூவை முறிக்காது. (4) 4.01: தொழுகை அழைப்பின் தொடக்கம் (1) 4.02: தொழுகை அறிவிப்பு தொடர் அமையும் விதம் (3) 4.03: தொழுகை அழைப்பு முறை (1) 4.04: ஒரு பள்ளிவாசலுக்கு இரு தொழுகை அழைப்பாளர்கள் (1) 4.05: பார்வையற்றவர் தொழுகை அழைப்பு விட நிபந்தனை (1) 4.06: போரின் போது இணைவைப்பாளர் நாட்டில் தொழுகை அழைப்பு விடுக்கப்பட்டால் (1) 4.07: தொழுகை அழைப்பைச் செவியுறுபவர் செய்ய வேண்டியவை (4) 4.08: தொழுகை அழைப்பின் சிறப்பும் ஷைத்தான் வெருண்டோடுவதும் (6) 4.09: இரு கைகளையும் தோள் புஜத்துக்கு உயர்த்துதல் (4) 4.10: அல்லாஹு அக்பர், ஸமி அல்லாஹு லிமன் ஹமிதஹ் கூறும் இடங்கள் (5) 4.11: தொழுகையில் அல்ஃபாத்திஹா அத்தியாயம் ஓதுதல் (8) 4.12: இமாமைப் பின்பற்றித் தொழுபவர் உரத்து ஓதலாகாது (2) 4.13: பிஸ்மில்லாஹ்வை(த் தொழுகையில்) உரத்து ஓதாலாகாது என்போரின் வாதம் (2) 4.14: அத்தியாயங்களின் துவக்கம் “பிஸ்மில்லாஹ்” குறித்த வாதம் (1) 4.15: தக்பீருக்குப் பின்னும் சஜ்தாவிலும் கைகளை வைக்கும் முறை (1) 4.16: தொழுகையில் அத்தஹிய்யாத் ஓதுவது (4) 4.17: இறுதி அத்தஹியாத்திற்குப் பின் ஸலவாத் கூறுதல் (4) 4.18: ஸமி அல்லாஹு லிமன் ஹமிதஹ், ரப்பனா ல(க்)கல் ஹம்து, ஆமீன் ஆகியவை கூறுவது (5) 4.19: இமாமை மஃமூம் பின்தொடர்வது (5) 4.20: இமாமை முந்துவதற்குத் தடை (4) 4.21: இமாமைப் பின்பற்றுவதில் சட்ட மாற்றம் (10) 4.22: இமாம் வருவதற்குத் தாமதமானால்… (2) 4.23: தொழுகையில் இமாமுக்கு ஏதாவது உணர்த்த விரும்பினால்… (1) 4.24: தொழுகையை முழுமையாக உள்ளச்சத்துடன் தொழல் (4) 4.25: தொழுகையில் இமாமை முந்தாமல் இருத்தல் (7) 4.26: தொழும்போது வானத்தை அண்ணாந்து பார்ப்பதற்குத் தடை (2) 4.27: தொழுகையில் ஒழுங்குகள் (3) 4.28: தொழுகையில் வரிசைகளைப் பேணுதல் (11) 4.29: ஆண்களுக்குப் பின்னால் தொழும் பெண்கள் தலை உயர்த்தும் முறை (1) 4.30: பெண்கள் பள்ளிவாசலுக்குச் செல்தல், நறுமணம் பூசுதல் (11) 4.31: தொழுகையில் அச்சநிலையில் குர்ஆன் ஓதும் முறை (2) 4.32: குர்ஆன் ஓதப்படும்போது செவிதாழ்த்திக் கேட்க வேண்டும். (2) 4.33: ஸுப்ஹுத் தொழுகையில் உரத்துக் குர்ஆன் ஓதுதல் (4) 4.34: லுஹ்ரு, அஸ்ருத் தொழுகைகளில் குர்ஆன் ஓதுதல் (8) 4.35: ஸுப்ஹுத் தொழுகையில் குர்ஆன் ஓதுதல் (13) 4.36: இஷாத் தொழுகையில் குர்ஆன் ஓதுவது (8) 4.37: தொழுகையைச் சுருக்கி, நிறைவுறத் தொழுவிப்பதற்கான கட்டளை (11) 4.38: தொழுகையின் நிலைகளை நிதானமாக, சுருக்கி, நிறைவாகச் செய்வது (4) 4.39: தொழுகையில் இமாமை முந்தி விடாமலிருத்தல் (5) 4.40: ருகூஉவிலிருந்து தலையை உயர்த்திய பின் ஓத வேண்டியவை (5) 4.41: ருகூஉவிலும் ஸஜ்தாவிலும் குர்ஆன் ஓதுவதற்குத் தடை (6) 4.42: ருகூஉவிலும் ஸஜ்தாவிலும் ஓத வேண்டியவை (9) 4.44: ஸஜ்தாவின் போது தரையில் படவேண்டிய உறுப்புகள் (7) 4.45: சீராக ஸஜ்தா செய்தல் (2) 4.46: தொழுகை முறைத் தொகுப்பு (5) 4.47: தனித்துத் தொழுபவர் தடுப்பு ஒன்றை வைத்துக் கொள்வது (13) 4.48: தொழுகையில் குறுக்கே செல்பவரைத் தடுப்பது (4) 4.49: தொழுபவர், தடுப்புக்கு நெருக்கமாக நிற்க வேண்டும் (3) 4.50: தொழுபவருக்கான குறுக்குத் தடுப்பின் அளவு (2) 4.51: தொழுபவருக்குக் குறுக்கே படுத்திருப்பது (8) 4.52: ஒரே ஆடை அணிந்து தொழும் முறை (9) 5.01: பூமியில் எழுப்பப்பட்ட முதலாவது இறையாலயம் (8) 5.02: மஸ்ஜிதுந் நபவீ கட்டப்பட்ட வரலாறு (2) 5.03: தொழுகைத் திசை(கிப்லா) கஅபாப் பள்ளிக்கு மாற்றம் (4) 5.04: மண்ணறைகளில் செய்யக்கூடாதவை (6) 5.05: மஸ்ஜிதுகள் கட்டுவதன் சிறப்பும் அதற்கான ஆர்வமூட்டலும் (2) 5.06: ருகூஉவில் உள்ளங்கைகளை வைப்பதற்கான சட்டத் திருத்தம் (5) 5.07: இரு குதிகால்கள்மீது (தொழுகை அமர்வில்) அமர அனுமதி (1) 5.08: தொழுகையில் பேசிக் கொள்ள இருந்த அனுமதி நீக்கம் (6) 5.09: தொழுகைக்கு இடையில் செய்ய அனுமதிக்கப்பட்டவை (2) 5.10: குழந்தைகளைச் சுமந்துகொண்டு தொழுவதற்கு அனுமதி (3) 5.11: தொழுகையின்போது ஓரிரு அடிகள் நடக்க அனுமதி (1) 5.12: இடுப்பில் கையூன்றிக் கொண்டு தொழுவது வெறுக்கத் தக்கது (1) 5.13: தொழும்போது மண்ணைச் சமப்படுத்துதல் வெறுக்கத் தக்கது (3) 5.14: பள்ளிவாசலில் எச்சில் துப்பத் தடை (10) 5.15: காலணி அணிந்து கொண்டு தொழுவதற்கு அனுமதி (1) 5.16: கவனத்தை ஈர்க்கும் ஆடை அணிந்து தொழுதல் வெறுக்கப்பட்டது (3) 5.17: சிறுநீர்/மலம் அடக்குதல், உணவு காக்க வைத்தல் நிலையில் தொழுதல் (4) 5.18: துர்நாற்றத்துடன் பள்ளிச்செல்லுதலும் அவரை வெளியேற்றலும் (10) 5.19: பள்ளிவாசலினுள் காணாமற்போன பொருளைத் தேடத் தடை (3) 5.20: தொழுகையில் ஏற்படும் மறதிக்குப் பரிகாரம் (17) 5.21: ஸஜ்தா திலாவத் (9) 5.22: அத்தஹிய்யாத்தில் அமரும் முறை (5) 5.23: தொழுகையை நிறைவு செய்யும்போது ஸலாம் கூறும் முறை (3) 5.24: தொழுத பின்னர் திக்ரு (3) 5.25: மண்ணறை வேதனையிலிருந்து பாதுகாப்புக் கோருதல் (3) 5.26: தொழுகையில் பாதுகாப்புக் கோரப்பட வேண்டியவை (8) 5.27: தொழுகைக்குப்பின் திக்ரு செய்தல் (9) 5.28: தொடக்கத் தக்பீருக்குப் பின் கூறவேண்டியவை (4) 5.29: தொழுகையில் கலந்துகொள்ள செல்லும் முறை (5) 5.30: தொழுகைக்காக மக்கள் எப்போது எழுந்து நிற்க வேண்டும்? (5) 5.31: கூட்டுத்தொழுகையை அடைந்துகொள்ள நிபந்தனை (5) 5.32: ஐவேளைத் தொழுகை நேரங்கள் (13) 5.33: கடுங்கோடையில் ஜமாஅத் தொழுகை (8) 5.34: கடுங்கோடையில்லா சமயத்தில் ஜமாஅத் தொழுகை (4) 5.35: அஸ்ருத் தொழுகையின் நேரம் (7) 5.36: அஸ்ருத் தொழுகையைத் தவறவிட்டால்.. (3) 5.37: அஸ்ரு நடுத்தொழுகை என்போரின் சான்று (6) 5.38: ஸுப்ஹு, அஸ்ருத் தொழுகைகளின் சிறப்புகள் (6) 5.39: மஃக்ரிபுத் தொழுகையின் ஆரம்ப நேரம் (2) 5.40: இஷாத் தொழுகையின் நேரமும் அதைத் தாமதமாகத் தொழுவதும் (12) 5.41: ஸுப்ஹுத் தொழுகையின் நேரம் மற்றும் ஓதப்படும் (குர்ஆன் வசனங்களின்) அளவு (7) 5.42: தொழுகைக்கு உரிய நேரத்தைத் தாமதப்படுத்துதல் (7) 5.43: கூட்டுத் தொழுகையின் சிறப்பும் அதைத் தவற விடுவது பற்றிய கண்டனமும் (10) 5.44: தொழுகை அழைப்பைச் செவியுறுபவர் பள்ளிவாசலுக்குச் செல்வது கட்டாயமாகும் (1) 5.45: கூட்டுத் தொழுகை என்பது நேர்வழியைச் சார்ந்தது (2) 5.46: பாங்கு கூறிய பின்னர் பள்ளிவாசலிலிருந்து வெளியேறத் தடை (2) 5.47: இஷா மற்றும் ஸுப்ஹு கூட்டாகத் தொழுவதன் சிறப்பு (4) 5.48: கூட்டுத் தொழுகையைத் தவிர்ப்பதற்கான அனுமதி (1) 5.49: நஃபில் தொழுகைகளை ஜமாஅத்தாகத் தொழுதல் (6) 5.50: கூட்டுத் தொழுகைக்காகக் காத்திருப்பதன் சிறப்பு (5) 5.51: பள்ளிவாசலுக்கு நடந்து செல்வதன் சிறப்பு (6) 5.52: தொழுகைக்கு நடந்து செல்பவருக்குக் கிடைக்கும் பலன்கள் (4) 5.53: உதயம்வரை தொழுத இடத்தில் அமர்ந்திருப்பதன் சிறப்பு (3) 5.54: தொழுகைக்குத் தலைமையேற்க அதிகத் தகுதியுடையவர் (5) 5.55: எல்லாத் தொழுகைகளிலும் குனூத் ஓதும் காலகட்டம் (15) 5.56: விட்டுப்போனத் தொழுகைகளைத் தொழுதல் (8) 6.01: பயணிகளின் தொழுகை; சுருக்கித் தொழுதல் (20) 6.02: மழையின்போது இருப்பிடங்களில் தொழுதுகொள்ளலாம் (4) 6.03: நஃபில் தொழுகைகளை வாகனத்தில் செல்பவர் தொழலாம் (10) 6.04: பயணத்தில் இரு தொழுகைகளைச் சேர்த்து தொழலாம் (7) 6.05: உள்ளூரில் இருக்கும்போது இரு தொழுகைகளை இணைத்து தொழுதல் (10) 6.06: தொழுது முடித்தபின் வலம், இடம் திரும்பி அமர்தல் (3) 6.07: இமாமுக்கு வலப்பக்க வரிசையில் நிற்பது விரும்பத்தக்கது (1) 6.08: இகாமத் கூறத் தொடங்கி விட்டால் நஃபில் தொழுவது வெறுக்கத்தக்கது (5) 6.09: பள்ளிவாசலுக்குள் நுழையும்போது கூறவேண்டிய துஆ (1) 6.10: பள்ளிக் காணிக்கை தொழுகை தொடர்பாக (4) 6.11: பயணத்திலிருந்து திரும்பியவர் இரண்டு ரக்அத் தொழுதல் (3) 6.12: முற்பகல் (ளுஹா) தொழுகை எண்ணிக்கை (11) 6.13: ஃபஜ்ருடைய இரு ரக்அத் சுன்னத் தொழுகை (15) 6.14: சுன்னத் தொழுகைகளின் சிறப்பும் எண்ணிக்கைகளும்! (3) 6.15: நஃபில் தொழுகைகளைத் தொழும் முறைகள் (14) 6.16: இரவுத் தொழுகை (18) 6.17: இரவுத் தொழுகையின் ஒருங்கிணைந்த விபரங்கள் (4) 6.18: அவ்வாபீன் தொழுகை (2) 6.19: இரவுத் தொழுகை, வித்ருத் தொழுகை ரக்அத்கள் (16) 6.20: வித்ருத் தொழுகை நேரம் (2) 6.21: தொழுகையில் மிகச் சிறந்தது (2) 6.22: இரவில் பிரார்த்தனை ஏற்கப்படும் நேரம் (2) 6.23: இரவின் இறுதி நேரத்தில் பிரார்த்தனை (5) 6.24: ‘கியாமு ரமளான்(தராவீஹ்) தொழ ஆர்வமூட்டல் (8) 6.25: இரவுத் தொழுகையில் பிரார்த்திப்பதும் நின்று வணங்குவதும் (17) 6.26: இரவுத் தொழுகையில் நீண்ட நேரம் (நின்று) குர்ஆன் ஓதுவது (2) 6.27: தொழாமல் விடியும்வரை உறங்குபவர் (3) 6.28: கூடுதலான நஃபில் தொழுகைகள் (6) 6.29: நற்செயல்களை வழக்கமாகச் செய்வதன் சிறப்பு. (4) 6.30: இபாதத் தூக்கத்தால் தடைப்பட்டால்… (5) 6.31: குர்ஆனின் தொடர்பைப் பற்றிப் பிடித்துக்கொள்ளக் கட்டளை (7) 6.32: குர்ஆனை இனிய குரலில் ஓதுவது விரும்பத் தக்கதாகும் (5) 6.33: மக்கத்து வெற்றி நாளில்… (2) 6.34: குர்ஆனை ஓதுவதால் இறங்கும் அமைதி (3) 6.35: குர்ஆனை மனனமிட்டவரின் சிறப்பு (1) 6.36: குர்ஆனை ஓதுகின்ற இருவகையினரின் தனிச் சிறப்புகள் (1) 6.37: குர்ஆனில் தேர்ந்த மேன்மக்கள் முன்னிலையில் குர்ஆன் ஓதுவது (2) 6.38: குர்ஆனைச் செவியேற்பதன் சிறப்பு (3) 6.39: குர்ஆனைக் கற்பது மற்றும் ஓதுவதன் சிறப்பு (2) 6.40: குர்ஆன் ஓதுவதன் சிறப்பும் அல்பகரா அத்தியாயத்தின் சிறப்பும் (2) 6.41: ஸூரத்துல் ஃபாத்திஹா, அல்பகரா அத்தியாயத்தின் இறுதி வசனங்களின் சிறப்பு (2) 6.42: ஸூரத்துல் கஹ்ஃப் மற்றும் ஆயத்துல் குர்ஸீ ஆகியவற்றின் சிறப்பு (3) 6.43: குல் ஹுவல்லாஹு அஹது (அத்தியாயத்தை) ஓதுவதன் சிறப்பு (4) 6.44: அல்முஅவ்விதத்தைன் (பாதுகாவல்) அத்தியாயங்களை ஓதுவதன் சிறப்பு (2) 6.45: குர்ஆனின்படி தாமும் செயல்பட்டுப் பிறருக்கும் அதைக் கற்பிப்பவரின் சிறப்பு (4) 6.46: குர்ஆன் ஏழு (வட்டார) மொழிநடையில் அருளப்பெற்றுள்ளது என்பதன் விளக்கம் (4) 6.47: குர்ஆனை வேகமாக ஓதுவதைத் தவிர்த்தல் (4) 6.48: குர்ஆன் ஓதும் முறைகளுள் சில (4) 6.49: தொழத் தடுக்கப்பட்ட நேரங்கள். (8) 6.50: அம்ரு பின் அபஸா (ரலி) இஸ்லாத்தை ஏற்றமை (1) 6.51: சூரியன் உதிக்கும் நேரத்தையும் மறையும் நேரத்தையும் தேர்ந்தெடுத்துத் தொழாதீர்கள்! (2) 6.52: நபி (ஸல்) அஸ்ருக்குப் பிறகு தொழுதுவந்த இரண்டு ரக்அத்கள் எவை? (5) 6.53: மஃக்ரிப் தொழுகைக்கு முன் இரண்டு ரக்அத்கள் தொழுவது விரும்பத் தக்கது (2) 6.54: பாங்குக்கும் இகாமத்துக்கும் இடையிலுள்ள தொழுகை (1) 6.55: அச்சச் சூழல் தொழுகை (8) 7.01: வெள்ளிக்கிழமையில் குளிப்பது வயதுவந்த ஒவ்வோர் ஆண் மீதும் கடமை (7) 7.02: வெள்ளிக்கிழமையில் பல் துலக்குவதும் நறுமணம் பூசுவதும் (4) 7.03: வெள்ளிக்கிழமை சொற்பொழிவின்போது அமைதி காத்தல் (2) 7.04: வெள்ளிக்கிழமையில் (பிரார்த்தனை ஏற்கப்படுவதற்கு) உள்ள ஒரு நேரம் (4) 7.05: வெள்ளிக்கிழமையின் சிறப்பு (2) 7.06: இந்தச் சமுதாயத்தின் (சிறப்பு வழிபாட்டு) நாள் வெள்ளிக்கிழமை (4) 7.07: வெள்ளிக்கிழமை (தொழுகைக்கு) முன்னதாகச் செல்வதன் சிறப்பு (2) 7.08: மௌனமாக (வெள்ளிக்கிழமை) உரையைச் செவியேற்பவரின் சிறப்பு (2) 7.09: சூரியன் (உச்சியிலிருந்து) சாயும்போது ஜும்ஆத் தொழுவது (5) 7.10: தொழுகையின் உரைகளும் இடையே (இமாம்) அமர்வதும் (3) 7.11: வியாபாரத்தையோ வேடிக்கையையோ கண்டால் (62:11ஆவது) இறைவசனம் (4) 7.12: ஜும்ஆத் தொழுகையை(த் தொழாமல்) கைவிடுவதற்குக் கண்டனம் (1) 7.13: (ஜும்ஆத்) தொழுகையையும் (குத்பா) உரையையும் சுருக்கமாக அமைத்தல் (11) 7.14: இமாம் (ஜும்ஆ) உரை நிகழ்த்தும்போது காணிக்கை தொழுகை (6) 7.15: பொது போதனைக்கு நடுவில் தனி போதனை (1) 7.16: ஜும்ஆத் தொழுகையில் ஓத வேண்டியவை (3) 7.17: வெள்ளிக்கிழமை (ஃபஜ்ருத் தொழுகையில்) ஓத வேண்டியவை (3) 7.18: ஜும்ஆவுக்குப் பின் தொழ வேண்டியவை (16) 8.01: பெருநாள் திடலில் பெண்கள் பங்கேற்பது (3) 8.02: பெருநாள் திடலில் தொழுகைக்கு முன்போ பின்போ தொழக் கூடாது (1) 8.03: இரு பெருநாள் தொழுகைகளில் ஓதக் கூடியவை (2) 8.04: பெருநாட்களில் பாவமில்லா விளையாட்டுகளில் ஈடுபட அனுமதி (7) 9.00: இமாம் (மழைத் தொழுகையில்) மேல்துண்டை மாற்றிப் போட்டுக் கொள்வது (4) 9.01: மழைவேண்டிப் பிரார்த்திக்கும்போது இருகைகளை உயர்த்துதல் (3) 9.02: மழைவேண்டிப் பிரார்த்தித்தல் (2) 9.03: கடும் காற்றையும் மேகத்தையும் காணும்போதும்.. மழை பெய்யும்போதும்.. (3) 9.04: கீழைக் காற்று (’ஸபா’) மற்றும் மேலைக் காற்று (’தபூர்’) பற்றிய குறிப்புகள் (1) 10.01: சூரிய கிரகணத் தொழுகை (7) 10.02: கிரகணத் தொழுகையின்போது மண்ணறை வேதனை பற்றி நினைவு கூர்வது (1) 10.03: கிரகணத் தொழுகையின்போது சொர்க்கமும் நரகமும் (6) 10.04: கிரகணத் தொழுகையில் எட்டு ருகூஉகளும் நான்கு ஸஜ்தாக்களும்.. (2) 10.05: கிரகணத் தொழுகைக்காக, “அஸ்ஸலாத்து ஜாமிஆ” அறிவிப்பு.. (8) 11.01: மரணத் தருவாயில் ‘லா இலாஹ இல்லல்லாஹ்’ (எனும் கலிமா)வை நினைவூட்டுதல் (2) 11.02: துன்பம் நேரும்போது வேண்டக்கூடிய பிரார்த்தனை (2) 11.03: நோயாளியிடமும் மரணத் தருவாயில் இருப்பவரிடமும் சொல்ல வேண்டியவை (1) 11.04: உயிர் பிரிந்தவுடன் இறந்தவருக்குச் செய்ய வேண்டியவை (1) 11.05: இறப்பவரின் பார்வை தனது உயிரை நோக்கி நிலைகுத்தி நிற்றல் (1) 11.06: இறந்தவருக்காக அழுவது (3) 11.07: நோயாளிகளைச் சந்தித்து உடல்நலம் விசாரித்தல் (1) 11.08: பொறுமை என்பது துன்பத்தின் முதல் நிலையில் கடைப்பிடிப்பதாகும் (2) 11.09: இறந்தவருக்காக ஒப்பாரி வைத்து அழுதால்.. (14) 11.10: ஒப்பாரிக்குக் கடுமையான கண்டனம் (5) 11.11: ஜனாஸாவின் இறுதி ஊர்வலத்தைப் பின்தொடர்ந்து செல்வதற்குப் பெண்களுக்குத் தடை (2) 11.12: மையித்தைக் குளிப்பாட்டுதல் (4) 11.13: மய்யித்திற்கு ‘கஃபன்’ உடை அணிவித்தல் (4) 11.14: மய்யித்தை மூடிவைத்தல் (1) 11.15: மய்யித்திற்கு அழகிய முறையில் கஃபன் அணிவித்தல் (1) 11.16: இறந்தவர் உடலைத் துரிதமாக அடக்கம் செய்தல் (2) 11.17: ஜனாஸாத் தொழுகையின் மற்றும் ஜனாஸாவைப் பின்தொடர்வதன் சிறப்பு (6) 11.18: மய்யித்துக்காக நூறு பேர் தொழுது செய்யும் பரிந்துரை ஏற்கப்படும் (1) 11.19: மய்யித்துக்காக நாற்பது பேர் பரிந்துரை (1) 11.20: இறந்தவர் குறித்துப் புகழ்ந்து, அல்லது இகழ்ந்து பேசப்படுதல் (1) 11.21: ஓய்வு பெற்றவரும் ஓய்வளித்தவரும் (1) 11.22: ஜனாஸாத் தொழுகையில் சொல்ல வேண்டிய தக்பீர்கள் (6) 11.23: மண்ணறை அருகில் (ஜனாஸாத் தொழுகை) தொழுவது (4) 11.24: ஜனாஸாவுக்காக எழுந்து நிற்பது (7) 11.25: ஜனாஸாவுக்காக எழுந்து நிற்கும் வழக்கம் மாற்றப்பட்டது (3) 11.26: இறந்தவருக்காக ஜனாஸாத் தொழுகையில் செய்யும் பிரார்த்தனை (2) 11.27: ஜனாஸாத் தொழுகையின்போது இமாம் எந்த இடத்தில் நிற்க வேண்டும்? (2) 11.28: ஜனாஸாத் தொழுகை தொழுதுவிட்டு வாகனத்தில் ஏறித் திரும்பிச் செல்லலாம் (2) 11.29: உட்குழியும் மையித்தின் மேல் செங்கற்களை அடுக்குவதும் (1) 11.30: கப்றுக் குழியினுள் போர்வையை விரித்து (மையித்தை) வைப்பது (1) 11.31: கப்றைத் தரை மட்டமாக்க உத்தரவு (2) 11.32: கப்றுகளைக் காரையால் பூசுவதோ அதன் மீது கட்டடம் எழுப்புவதோ கூடாது (2) 11.33: கப்றின்மீது அமர்வதும் அதன் மீது தொழுவதும் தடுக்கப்பட்டவை (3) 11.34: பள்ளிவாசலில் ஜனாஸாத் தொழுகை நடத்துவது (3) 11.35: மையவாடிக்குள் கூற வேண்டியதும் பிரார்த்திப்பதும் (3) 11.36: நபி (ஸல்), தம் தாயாரின் கப்றைக் காண்பதற்கு இறைவனிடம் அனுமதி கோரியது (3) 11.37: தற்கொலை செய்தவருக்கு, (ஜனாஸா) தொழுகையைக் கைவிட்டது (1) 12.00: பல வகை வள வரிகள் (5) 12.01: பத்து சதவீத ஸகாத்; அல்லது ஐந்து சதவீத ஸகாத் (1) 12.02: ஒரு முஸ்லிம் மீது அவர்தம் அடிமைக்காகவும் குதிரைக்காகவும் ஸகாத் கடமை இல்லை (3) 12.03: ஸகாத்தைச் சமர்ப்பிப்பதும் ஸகாத் கொடுக்க மறுப்பதும் (1) 12.04: பெருநாள் தர்மமாகப் பேரீச்சம் பழம், பார்லி (10) 12.05: பெருநாள் தொழுகைக்கு முன்பே பெருநாள் தர்மத்தை வழங்க கட்டளை (2) 12.06: ஸகாத் வழங்க மறுப்பது குற்றமாகும் (4) 12.07: ஸகாத் வசூலிப்பவர்களிடம் கனிவுடன் நடந்துகொள்வது (1) 12.08: ஸகாத் வழங்காதவருக்கான கடும் தண்டனை (2) 12.09: தர்மம் செய்வதற்கு ஆர்வமூட்டல் (2) 12.10: செல்வத்தைச் சேமித்தோர் பற்றிய கண்டனம் (2) 12.11: தர்மம்: ஆர்வமூட்டலும் நற்கூலி உண்டு என்ற நற்செய்தியும் (2) 12.12: செலவழிப்பதன் சிறப்பும் வழங்காதவனின் பாவமும் (4) 12.13: தமக்கும், குடும்பத்தாருக்கும், உறவினர்களுக்குமாக செலவிடுதல் (1) 12.14: இணை வைக்கும் உறவுகளுக்குச் செலவழிப்பதன் சிறப்பு (8) 12.15: இறந்தவருக்காகத் தர்மம் செய்தல் (1) 12.16: எல்லா நல்லறமும் ஸதகா எனப்படும் (5) 12.17: அறவழியில் செலவு செய்பவரும் செய்யாதவரும் (1) 12.18: தர்மம் செய்வதற்கு ஆர்வமூட்டல் (5) 12.19: தர்மம் (இறைவனிடம்) ஏற்கப்படுவதும் வளர்வதும் (3) 12.20: இன் சொல்லையேனும் தர்மம் செய்து நரகத்திலிருந்து பாதுகாப்பு பெறல் (5) 12.21: தர்மத்தின் அளவில் குறை காண தடை (1) 12.22: பாலுக்காக இரவல் வழங்கப்படும் கால்நடைகளின் சிறப்பு (2) 12.23: வள்ளலுக்கும் கஞ்சனுக்குமான உதாரணம் (3) 12.24: உரியவருக்குத் தர்மம் சேரவில்லையேனும் பலன் (1) 12.25: உரிமையாளரின் அனுமதியுடன் தர்மம் செய்தவருக்கும் பலன் (3) 12.26: ஓர் அடிமை தன் உரிமையாளரின் செல்வத்திலிருந்து (அறவழியில்) செலவழித்தல் (3) 12.27: தர்மத்தையும் இதர நற்செயல்களையும் இணைத்துச் செய்தவர் (3) 12.28: அறவழியில் தாராளமாக செலவிடலும் கணக்கு பார்ப்பது விரும்பத்தக்கதல்ல என்பதும் (3) 12.29: சிறிய அளவு தர்மம் (1) 12.30: இரகசியமாகத் தர்மம் செய்வதன் சிறப்பு (1) 12.31: மிகச் சிறந்த தர்மம் (2) 12.32: சிறந்த கை (4) 12.33: யாசிப்பதற்குத் தடை (3) 12.34: ஏழை என்பவன், அடிப்படைத் தேவைகளுக்குப் போதிய பொருளாதாரம் இல்லாதவன் (2) 12.35: மக்களிடம் யாசிப்பது வெறுக்கப்பட்டதாகும் (6) 12.36: யாருக்கு யாசிக்க அனுமதி? (1) 12.37: எதிர்பார்ப்பு இல்லாமல், யாசிக்காமல் வாழ்பவருக்கு வழங்கப்பட்டால் பெற்றுக்கொள்ளலாம் (4) 12.38: உலகாதாயத்தின் மீது பேராசை கொள்வது விரும்பத் தக்கதன்று (2) 12.39: இரு ஓடைகள் இருந்தாலும் மூன்றாவது ஓடையை எதிர்பார்த்தல் (4) 12.40: வாழ்க்கை வசதிகள் அதிகமாக இருப்பது செல்வமன்று (1) 12.41: இவ்வுலகத்தின் கவர்ச்சி குறித்து அஞ்சுதல் (3) 12.42: சுயமரியாதை மற்றும் பொறுமையின் சிறப்பு (1) 12.43: போதுமான வாழ்வாதாரமும் போதுமென்ற மனமும் (4) 12.44: அருவருப்பாகப் பேசி, கடுஞ் சொற்களால் கேட்டவருக்கும் தானம் வழங்குவது (4) 12.45: இறைநம்பிக்கை, (வறுமையால்) கேள்விக்குள்ளாக்கப்படுபவருக்கு உதவுதல் (1) 12.46: இஸ்லாத்தை ஏற்றவர்களுக்கு வழங்கலும் இறை நம்பிக்கை வலுவானவர் பொறுமை கொள்ளலும் (8) 12.47: காரிஜிய்யாக்களும் அவர்களின் தன்மைகளும் (10) 12.48: காரிஜிய்யாக்களைக் கொல்லுவதற்கு ஊக்கப்படுத்துதல் (4) 12.49: காரிஜிய்யாக்கள் படைப்பினங்களிலேயே தீயவர்கள் ஆவர் (3) 12.50: தூதரின் குடும்பத்தார் ஸகாத் பெறுவதற்குத் தடை (6) 12.51: நபி (ஸல்) குடும்பத்தாரைத் தர்மப் பொருட்கள் வசூலிக்கப் பயன்படுத்தலாகாது (1) 2.26: அசுத்தமான கையைப் பாத்திரத்தில் நுழைத்தல் (2) 2.25: ஒருநாள் தொழுகைகளை ஒரு உளூவில் தொழ அனுமதி (1) 2.24: காலுறையில் மஸஹு செய்து தொழுவதற்கான வரம்பு (1) 2.23: முன் தலை மற்றும் தலைப்பாகை மீது மஸஹு செய்தல் (4) 2.22: காலுறையில் மஸஹு செய்தல் (9) 2.21: தண்ணீரால் கழுவித் துப்புரவு செய்தல் (3) 2.20: மலம் கழிப்பதற்குத் தடையுள்ள இடங்கள் (1) 2.19: செயல்களை வலப் புறமிருந்து தொடங்குதல். (2) 2.18: வலக் கரத்தால் கழுவத் தடையானவை (3) 2.17: கழிப்பிடத்தில் துப்புரவு செய்தல் (7) 2.16: இயற்கை மரபுகள் (8) 2.15: பல் துலக்குதல் (7) 2.14: சிரமகாலங்களிலும் முழுமையாக ஒளு செய்வதன் சிறப்பு (1) 2.13: உளூவில் தண்ணீர் படும் இடங்களில் ஒளி படர்தல் (1) 2.12: உளூவில் உறுப்புகளை அதிகப்படுத்திக் கழுவுதல் (6) 2.11: உளூ செய்த நீரோடு வெளியேறும் பாவங்கள் (2) 2.10: உளூவில் உறுப்புகள் முழுவதும் கழுவுதல் (1) 2.09: இரு கால்களையும் முழுமையாகக் கழுவுதல் கட்டாயம் (6) 2.08: சுத்தம் செய்யும் போது ஒற்றைப்படையாக செய்தல் (5) 2.07: நபி (ஸல்) அவர்கள் செய்த அங்கத் தூய்மை (உளூ) (2) 2.06: அங்கத் தூய்மை (உளூ) செய்தபிறகு ஓதப்படும் பிரார்த்தனை (1) 2.05: சிறு பாவங்களுக்கான பரிகாரங்கள் (3) 2.04: அங்கத்தூய்மையின் சிறப்பும் அதன் பின் தொழுவதன் சிறப்பும் (9) 2.03: அங்கத் தூய்மை (உளூ) செய்முறையும் அதை நிறைவாகச் செய்வதும் (2) 2.02: தொழுகைக்குக் கட்டாயமான (அங்கத்) தூய்மை (2) 2.01: அங்கத்தூய்மை(உளூ)யின் சிறப்பு (1) 1.96: மறுமையில் ஆதம்(அலை) அவர்களுக்கு இடப்படும் கட்டளை (1) 1.95: சொர்க்கவாசிகளில் பாதிபேர் (3) 1.94: விசாரணையோ வேதனையோ இன்றி சொர்க்கம் செல்வோர் (7) 1.93: நட்பு கொள்ளத் தக்கவர்களும் தகாதவர்களும் (1) 1.92: இறைமறுப்பாளரின் நற்செயல்கள் பலனளிக்காது (1) 1.91: நரகவாசிகளிலேயே மிகக்குறைவான வேதனை அனுபவிப்பவர். (4) 1.90: அபூதாலிபுக்காக நபி(ஸல்) அவர்களின் பரிந்துரை (3) 1.89: நெருங்கிய உறவினருக்கு எச்சரிக்கை செய்தல் (5) 1.88: இறைமறுப்பாளருக்கு எந்தப் பரிந்துரையும் பலனளிக்காது (1) 1.87: தம் சமுதாயத்தார் மீது நபி(ஸல்) அவர்களுக்குள்ள பரிவு (1) 1.86: நபி(ஸல்) அவர்களின் பரிந்துரைப் பிரார்த்தனை! (8) 1.85: சொர்க்கத்திற்காகப் பரிந்துரைக்கும் முதல் மனிதர் (4) 1.84: சொர்க்கவாசிகளுள் ஆகக் குறைந்த பதவி (14) 1.83: இறுதியானவராக வெளியேறும் நரகவாசி. (3) 1.82: ஷஃபாஅத்(பரிந்துரை) செய்யப்படுபவர்கள் (2) 1.81: இறைவனைக் காணும் வழிமுறை (3) 1.80: இறைவனைக் காண்பதற்கான சான்று (2) 1.79: அல்லாஹ்வின் பார்வை பற்றிய விளக்கம் (2) 1.78: மிஃராஜின் போது நபி(ஸல்) கண்டது பற்றிய விளக்கம் (2) 1.77: நபி(ஸல்) அவர்கள் இறைவனைப் பார்த்தார்களா? என்பது பற்றிய விளக்கம் (5) 1.76: சித்ரத்துல் முந்தஹா(இலந்தை மரம்) பற்றிய குறிப்பு! (4) 1.75: ஈஸா(அலை) மற்றும் தஜ்ஜால் பற்றிய குறிப்புகள் (6) 1.74: விண்ணுலகப் பயணமும் தொழுகை கடமையாக்கப்படலும் (12) 1.73: வேத வெளிப்பாடு (வஹீ) தொடங்குதல் (3) 1.72: இறை நம்பிக்கை ஏற்கப்படாத காலகட்டம் (5) 1.71: ஈசா(அலை) இஸ்லாமிய நெறிப்படி நீதி வழங்குதல் (6) 1.70: தூதுத்துவம் உலக மக்கள் அனைவருக்கும் பொதுவானது (3) 1.69: இறைச்சான்றுகள் மூலம் மன அமைதி (1) 1.68: ஒருவரை இறைநம்பிக்கையாளர் என்று முடிவு செய்தல் (2) 1.67: அச்சநேரத்தில் இறைநம்பிக்கையாளர் நிலை (1) 1.66: இறுதிக் காலத்தில் இறை நம்பிக்கை (அற்றுப்) போய் விடுவது. (2) 1.65: இஸ்லாத்தின் மீளெழுச்சி. (3) 1.64: உள்ளங்களில் குழப்பங்கள் தோன்றுவது. (2) 1.63: குடிமக்களைச் சுரண்டும் ஆட்சியாளன் நரகத்திற்குரியவன் ஆவான். (3) 1.62: செல்வத்தைக் காக்கப் போராடியவர் மற்றும் பிறர் செல்வத்தைப் பறிக்க முனைந்தவர் (2) 1.61: மாற்றாரின் பொருளைக் கைப்பற்றுபவர் நிலை. (5) 1.60: இறைநம்பிக்கையில் தடுமாற்றம் ஏற்பட்டால்.. (8) 1.59: நல்ல-தீய எண்ணங்களுக்கான கூலி (5) 1.58: தீய எண்ணங்களைச் செயல்படுத்தாமல் இருத்தல் (2) 1.57: தாங்க முடியாத சுமை? (2) 1.56: இறை நம்பிக்கையின் வாய்மையும் தூய்மையும் (1) 1.55: இறைமறுப்பாளராக இருந்தபோது செய்த நல்லறங்கள் (3) 1.54: முன் செய்த பாவங்கள் (2) 1.53: அறியாமை காலத்தில் செய்த தீமைகள் (2) 1.52: இறைநம்பிக்கையாளரின் அச்சம் (1) 1.51: குழப்பங்கள் தோன்றுவதற்கு முன் நற்செயல் புரிய விரைதல் (1) 1.50: மறுமை நெருங்கும் வேளையில் வீசும் காற்று (1) 1.49: ஹிஜ்ரத்தில் தற்கொலை செய்து கொண்டவரின் நிலை (1) 1.48: கையாடல் செய்பவரும் இறைநம்பிக்கையாளரும் (2) 1.47: தற்கொலை செய்பவரும் கட்டுப்பட்டு வாழ்பவரும் (7) 1.46: மூன்று பெரும் தவறான செயல்கள் (4) 1.45: புறங்கூறுவது வன்மையாகத் தடை செய்யப் பட்டது (3) 1.44: துக்க வேளைகளில் தடை செய்யப்பட்ட செய்கைகள்! (3) 1.43: முஸ்லிம்களை வஞ்சித்தவர் நிலை! (2) 1.42: முஸ்லிம்களுக்கு எதிராக ஆயுதம் ஏந்தியவர் நிலை! (3) 1.41: “லா இலாஹ இல்லல்லாஹ்” கூறியவரைக் கொல்லத்தடை! (4) 1.40: இணைவைத்தலின் விளைவுகள் (5) 1.39: தற்பெருமை (3) 1.38: பெரும் பாவங்கள் (5) 1.37: பாவங்களில் மிகவும் அருவருப்பானது (2) 1.36: நற்செயல்களில் சிறந்தது (6) 1.35: தொழுகையை விடுதலும் குஃப்ரும் (3) 1.34: இறைநம்பிக்கை குறைவும் குஃப்ர் எனும் சொல்லும் (1) 1.33: அன்ஸாரிகளையும் அலி(ரலி)யையும் நேசித்தல் (6) 1.32: மழையும் இறைமறுப்பும் (4) 1.31: ஓடிப்போன அடிமை (3) 1.30: இறைமறுப்பின் அடையாளங்கள் (1) 1.29: இறைமறுப்பாளர்களாய் மாறுதல் (2) 1.28: முஸ்லிமோடு போரிடுதல் (1) 1.27: தந்தையை வெறுப்பவன் நிலை (4) 1.26: முஸ்லிமை நோக்கி காஃபிர் என அழைத்தல் (2) 1.25: நயவஞ்சகனின் குணங்கள். (3) 1.24: இறைநம்பிக்கையில் குறைவு ஏற்படல் (2) 1.23: மார்க்கம் என்பதே நலன் நாடுவதுதான். (4) 1.22: இறைநம்பிக்கையாளர்களை நேசித்தல் (1) 1.21: இறைநம்பிக்கையில் ஏற்படும் ஏற்றத் தாழ்வு (9) 1.20: நன்மையை ஏவுதல், தீமையைத் தடுத்தல் (2) 1.19: நல்லவற்றிற்கு ஆர்வமூட்டுதல் (3) 1.18: அண்டை வீட்டாருக்குத் தொல்லை தரக் கூடாது (1) 1.17: தமக்கு விரும்வுவதைச் சகோதரனுக்கும் விரும்புதல் (2) 1.16: தூதரை நேசிப்பது கடமை (2) 1.15: இறைநம்பிக்கையின் இனிமை (2) 1.14: இஸ்லாம் கூறும் நல்லறங்களில் சிறந்தது (4) 1.13: இஸ்லாத்தின் அனைத்துப் பண்புகளின் கலவை (1) 1.12: இறைநம்பிக்கையின் கிளைகள் (5) 1.11: இறைநம்பிக்கையைச் சுவைப்பவர் (1) 1.10: ஓரிறை கோட்பாட்டில் மரணித்தவர் நிலை (11) 1.09: இணை வைத்த நிலையில் மரணித்தவர் நிலை (3) 1.08: ஜிஸ்யா செலுத்தாதவர் மீது போர் புரிதல் (6) 1.07: இஸ்லாத்தை ஏற்க அழைப்பு விடுத்தல் (2) 1.06: அறியாதவர்களுக்கு அறிவித்தல் (4) 1.05: இஸ்லாமியக் கடமைகள் (4) 1.04: சொர்க்கம் செல்பவர் (7) 1.03: இஸ்லாத்தின் தூண்கள் (2) 1.02: தொழுகை பற்றிய விளக்கம் (2) 1.01: இறைநம்பிக்கை குறித்த விளக்கம் (7)
நீண்ட முடி, சிறப்பாக எதுவும் இல்லை, நியாயமான பாலினத்தை அலங்கரிக்கிறது, குறிப்பாக அவர்கள் ஸ்டைலிங் கொண்டிருக்கும் சூழ்நிலையில். நீண்ட முடிக்கு, சிகை அலங்காரம் போக்குகள் தொடர்ந்து மாறுகின்றன, ஏனென்றால் நவீன பெண்கள் எப்போதும் அழகு நிலையத்தைப் பார்வையிடவும், புதுப்பாணியான சிகை அலங்காரத்தை உருவாக்குவதற்கு நிறைய நேரம் செலவிடவும் வாய்ப்பில்லை. இருப்பினும், நீண்ட முடிக்கு ஸ்டைலிங் இந்த ஆண்டின் முக்கிய போக்காக கருதப்படுகிறது. அதே நேரத்தில், ஒரு சிறிய நுணுக்கமும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகிறது – சிகை அலங்காரங்கள் செயல்படுத்துவதில் எளிமையாகவும், சாதாரண தோற்றத்தையும் கொண்டிருக்க வேண்டும். நீண்ட முடிக்கு மிகவும் பல்துறை மற்றும் எளிதான ஸ்டைலிங் சிகையலங்காரமானது இரும்புடன் பொருந்தக்கூடிய ஏராளமான ஹேர்கட்களை பரப்பியுள்ளது. இந்த வழக்கில், ஆரம்பத்தில் உங்கள் தலைமுடியைக் கழுவுதல், உங்கள் தலைமுடியை ஒரு ஹேர்டிரையர் மூலம் உலர்த்துவது மதிப்பு. அடுத்து, நீண்ட முடிக்கு பாதுகாப்பை வழங்கும் ஒரு சிறிய தயாரிப்பு பயன்படுத்தப்படுகிறது. முட்டையிடுவது பெரும்பாலும் ஸ்டைலர்களின் செல்வாக்குடன் சேர்ந்துள்ளது, எனவே இந்த விதி புறக்கணிக்கப்படக்கூடாது. பாதுகாப்பு அழகுசாதனப் பொருட்களைப் பயன்படுத்திய பிறகு, முடியை இன்னும் கொஞ்சம் உலர்த்துவது மதிப்பு. மேலும், சலவையின் உதவியுடன், இழைகள் சீரமைக்கப்பட்டு, எந்தவொரு நிகழ்விற்கும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு அழகான ஸ்டைலிங் பெறப்படுகிறது. இது நடைமுறை மற்றும் அழகாக இருக்கும். ஈரமான இழைகளை செயலாக்க இரும்பு பயன்படுத்தப்படக்கூடாது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும், இல்லையெனில் சுருட்டைகளின் ஆரோக்கியம் பாதிக்கப்படும் மற்றும் முழு சிகை அலங்காரத்தின் அழகியல் தொந்தரவு செய்யப்படும். முதலில், இழைகள் உலர்த்தப்பட வேண்டும், பின்னர் முடி சம பாகங்களாக பிரிக்கப்பட வேண்டும், பின்னர் மட்டுமே – ஒவ்வொரு இழைகளும் இரும்புடன் இழுக்கப்பட வேண்டும். இந்த நேரத்தில், மீதமுள்ள இழைகள் சரி செய்யப்படுகின்றன. தலையின் முழு மேற்பரப்பும் சிகிச்சையளிக்கப்பட்ட பிறகு, முடிக்கு ஒரு ஃபிக்சிங் வார்னிஷ் பயன்படுத்தப்படுகிறது, இது கூடுதல் சரிசெய்தலுக்கு பங்களிக்கும். நீண்ட கூந்தலின் இத்தகைய ஸ்டைலிங் ஒரு சிறப்பு சந்தர்ப்பத்திற்கும் நண்பர்களுடன் ஒரு சாதாரண நடைக்கும் ஏற்றது. ஒரு புகைப்படம் ஸ்டைலர்களுடன் நீண்ட முடி ஸ்டைலிங் நீண்ட முடி ஒரு அழகான ஸ்டைலிங் உருவாக்க, நீங்கள் பொறுமை நிறைய காட்ட வேண்டும். முதல் முயற்சியில் எதுவும் செயல்படவில்லை என்றால், நீங்கள் மீண்டும் மீண்டும் முயற்சிக்க வேண்டும், மிக முக்கியமாக, எளிய மற்றும் முக்கியமான விதிகளைப் பின்பற்றவும். முடி ஸ்டைலிங் எவ்வாறு செய்யப்படுகிறது என்பதில் பல வேறுபாடுகள் உள்ளன. நீண்ட முடிக்கு, ஸ்டைலர்கள் பொதுவாக சிகை அலங்காரங்களை உருவாக்க பயன்படுத்தப்படுகின்றன. நீங்கள் தடிமனான சுருட்டைகளுடன் ஒரு சிகை அலங்காரம் செய்ய விரும்பினால், அது ஒரு தூரிகை முனை அல்லது ஒரு பெரிய கர்லிங் இரும்பு பயன்படுத்த முக்கியம். சிறந்த விருப்பம் வெப்ப கர்லர்களின் பயன்பாடாகவும் இருக்கும். அவர்கள் பெண்கள் மத்தியில் மிகவும் தேவை மற்றும் நீங்கள் ஒரு குறுகிய காலத்தில் ஒரு ஸ்டைலான சிகை அலங்காரம் கண்டுபிடிக்க உதவும். வெல்க்ரோ கர்லர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தால், நீங்கள் பொறுமையாக இருக்க வேண்டும், ஏனென்றால் அவர்களுக்கு நீண்ட வெளிப்பாடு தேவைப்படுகிறது. curlers மீது நீண்ட முடி முறுக்கு போது, ​​அது நன்றாக strands சரி, அதே போல் hairpins, hairpins மற்றும் சிறிய மீள் பட்டைகள் பயன்படுத்தி மதிப்பு. நீண்ட கூந்தலில் ஸ்டைலிங் உருவாக்குவது மட்டுமல்லாமல், கூடுதல் பாகங்களும் உதவும். ஒரு பெண்ணுக்கு நேராக முடி இருந்தால், அவள் இரும்பு பயன்படுத்த வேண்டும். இந்த வெப்ப சாதனம் சுருட்டைகளை உருவாக்க ஏற்றது. இத்தகைய சிகை அலங்காரங்கள் தலையணிகளுடன் இணைந்து காதல் தோற்றமளிக்கின்றன. இந்த பாகங்கள் தேர்ந்தெடுக்கும் போது, ​​உங்கள் முடி நீளம் மற்றும் கட்டமைப்பு கருத்தில் கொள்ள முக்கியம். மியூஸ் மற்றும் ஜெல் பொதுவாக சிகை அலங்காரத்தை சரிசெய்ய பயன்படுத்தப்படுகின்றன, மேலும் ஸ்டைலரின் செல்வாக்கிலிருந்து இழைகளை பாதுகாக்க ஒரு வெப்ப முகவர் பயன்படுத்தப்படுகிறது. அத்தகைய வழிகளைப் பயன்படுத்தாமல் சுருட்டை காயப்படுத்தலாம், எனவே அவற்றை முன்கூட்டியே சேமித்து வைப்பது மதிப்பு. நீங்கள் நீண்ட முடி மீது விரைவான ஸ்டைலிங் உருவாக்கினால், சீப்புகளையும் பயன்படுத்தலாம். அவை முடியின் வேர் அளவைக் கண்டறிய உதவும். நீண்ட முடிக்கு எந்த நாள் ஸ்டைலிங் தேர்வு செய்ய வேண்டும்? மூட்டை. நீண்ட இழைகளுக்கு அத்தகைய பல்துறை மற்றும் நேர்த்தியான ஸ்டைலிங் எப்போதும் போக்கில் உள்ளது. இது விரைவாக உருவாக்கப்பட்டு, எந்த வகை முகத்திற்கும் பொருந்துகிறது, அதே நேரத்தில் எந்த பாணியிலும் பொருந்தும். கூடுதலாக, இது ஒரு சீப்பு மற்றும் சில கண்ணுக்கு தெரியாத அல்லது ரப்பர் பேண்டுகளை மட்டுமே பயன்படுத்தி உருவாக்கப்பட்டது. மூட்டை கவனக்குறைவாக இருக்கலாம் அல்லது நேர்த்தியான மென்மையான தோற்றத்தைக் கொண்டிருக்கலாம். இது உயரமாகவும் குறைவாகவும் வைக்கப்படலாம். நீண்ட முடி அதன் சொந்த எடையின் கீழ் அவிழ்க்க முடியும் என்ற உண்மையின் காரணமாக, இந்த சிகை அலங்காரத்தை நன்றாக சரிசெய்வது முக்கியம். சற்று சிக்கலான அல்லது சீப்பு சுருட்டை மென்மையான இழைகளை விட நீண்ட காலம் நீடிக்கும் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். இல்லையெனில், நிலையான திட்டத்தின் படி மூட்டை எளிதாக உருவாக்கப்படுகிறது: ஒரு டூர்னிக்கெட்டில் சேகரிக்கப்பட்ட முடி கடிகார திசையில் முறுக்கப்பட்டு சரி செய்யப்படுகிறது. கடற்கரை விளைவு. ஒரு ஸ்டைலர் மற்றும் கர்லர்கள் இல்லாமல் கூட நீண்ட முடிக்கு அழகான கடற்கரை அலைகளை உருவாக்க முடியும். இதைச் செய்ய, நீங்கள் சுத்தமான மற்றும் சற்று ஈரமான இழைகளை சேகரிக்க வேண்டும், அவற்றை இறுக்கமான ரொட்டியில் முறுக்கி, தலையின் பின்புறத்தில் பாதுகாப்பாக சரிசெய்ய வேண்டும். அடுத்து, ஒரு முடி உலர்த்தியின் உதவியுடன், நீங்கள் மூட்டையை உலர்த்தி, அதை உங்கள் கைகளால் கரைக்க வேண்டும். இதற்கு துலக்குதல் தேவையில்லை. “திரைச்சீலைகள்”. இது ஒரு நம்பமுடியாத எளிமையான ஸ்டைலிங் ஆகும், இது அதிநவீன எளிமையை விரும்பும் பெண்களை ஈர்க்கும். இது நேராக, பாயும் முடியைக் குறிக்கிறது, இது காதுகளை ஒரு திரைச்சீலையுடன் மூடுகிறது, அதே போல் கழுத்தின் பக்கங்களிலும் தலையின் பின்புறத்திலும் உள்ளது. இந்த ஸ்டைலிங் நேர்த்தியாகத் தோன்ற, முடியை சீப்ப வேண்டும், தேவைப்பட்டால், குறும்பு முடிக்கு ஒரு சிறப்பு ஸ்ப்ரேயைப் பயன்படுத்தி நேராக்க வேண்டும், இது சிக்கலைத் தடுக்கும். இந்த ஸ்டைலிங்கின் ஒரு அம்சம், அதன் சொந்த எளிமை காரணமாக, ஒப்பனைக்கு கவனம் செலுத்துவதற்கான திறன் ஆகும், இந்த சூழ்நிலையில் சிறப்பு கவனம் செலுத்தப்பட வேண்டும்.
கேரட் மிகவும் மலிவாக எளிதில் கிடைக்கும் காய்களில் ஒன்றாகும். அதிக நன்மைகள் நிறைந்த கேரட் அனைவராலும் விரும்பி உண்ணும் சுவை நிறைந்த காயாகும். நாம் அனுதினமும் பயன்படுத்தும் … Read more நெல்லி பொடி நெல்லி பொடி பயன்கள் நெல்லியில் இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ் போன்ற தாதுக்கள் அதிக அளவில் நிறைந்துள்ளதால் இது இரத்த சோகைக்கு நல்ல மருந்தாகும். நெல்லியில் அறுசுவையில் உப்பு … Read more முடக்கத்தான் பொடி முடக்கத்தான் பொடி பயன்கள் முடக்கத்தான் முடக்கு அறுத்தான் என்பது நாளடைவில் முடக்கற்றான் என்றானது. கசப்புத் தன்மையுடைய முடக்கத்தான் முடக்கு வாத நோய்களை குணமாக்குவதால் முடக்கத்தான் என்று பெயர் … Read more கரிசலாங்கண்ணி பொடி கரிசலாங்கண்ணி பொடி பயன்கள் கரிசலாங்கண்ணி அதிக அளவில் மருத்துவ குணங்கள் நிறைந்த மூலிகையாகும். இதில் எக்லிப்டால், டெஸ்மீத்தைல், அக்கோண்டனால், ஹென்ட்ரை, ஸ்டிக்மாஸ்டீரால், தங்கச்சத்து, இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் … Read more ஆவாரம் பூ பொடி ஆவாரம்பூ பொடி பயன்கள் ஆவாரம்பூ துவர்ப்புத் தன்மை உடையது. இதில் தங்கச்சத்து நிறைந்துள்ளது. ஆவாரம் பூ பொடியை தினமும் ஒரு டீஸ்பூன் அளவு சாப்பிட்டு வர சர்க்கரை … Read more கஸ்தூரி மஞ்சள் பொடி கஸ்தூரி மஞ்சள் பொடி பயன்கள் கஸ்தூரி மஞ்சள் முக அழகு சாதன பொருட்களில் ஒன்றாகும். இது அனைத்து வகை சருமத்திற்கும் கேடு விளைவிக்காத அலர்ஜி எதிர்ப்பு தன்மை … Read more எலுமிச்சை தோல் பொடி பயன்கள் எலுமிச்சை தோல் பொடியினைக் கொண்டு ஃபேஸ் பேக் முதல் பாதத்திற்கு அழகு தரும் பெடிக்யூர் வரை பயன்படுத்தலாம். எலுமிச்சை தோலில் அதிக அளவு கலோரிகள், கார்ப்ஸ், நார்ச்சத்து, … Read more ஆரஞ்சு தோல் பொடி ஆரஞ்சு தோல் பொடியின் பயன்கள் ஆரஞ்சு தோலில் அதிகளவு ஆன்டி ஆக்ஸிடன்டுகள் நிறைந்துள்ளது. இது இயற்கை அழகை விரும்பும் பெண்களுக்கு மிகச் சிறந்த அழகு சாதன பொருளாகும். … Read more முருங்கை இலை பொடி முருங்கை இலை பொடி பயன்கள் முருங்கையில் விட்டமின்கள், மினரல், அமீனோ ஆசிட்கள், வைட்டமின் சி, கால்சியம், பொட்டாசியம் மற்றும் புரோட்டின் போன்ற ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளது. 10 கிராம் … Read more மருதாணி பொடி மருதாணி பொடி பயன்கள் மருதாணி பொடியானது இளநரையை தடுக்க அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். இதனுடன் அவுரி பொடியை சேர்த்து பயன்படுத்தும் போது நம் கூந்தலுக்கு ஏராளமான நன்மைகள் … Read more ரோஸ் பொடி ரோஸ் பொடியின் பயன்கள் ரோஜாவிற்கு இயற்கையாகவே சருமத்தின் நிறத்தை கட்டுப்படுத்தும் தன்மை உள்ளது. ரோஜாவில் அதிகளவு வைட்டமின் சி நிறைந்துள்ளது. இது நல்ல ஆன்டி-ஆக்ஸிடன்ட் ஆகும். ரோஜா … Read more மண் சிகிச்சை மண்ணின் மகத்துவத்தை அறிந்து அதில் உள்ள மருத்துவ குணங்களை கொண்டு மண் சிகிச்சை முறைகளை சித்த மருத்துவர்கள் கூறியுள்ளனர். பழங்காலங்களில் அனைத்து கிராமங்களிலும் மண் சிகிச்சை முறைகளை … Read more முகத்தில் உள்ள கருமை நீங்க வேண்டுமா? முக அழகு என்பது அனைவரும் விரும்பும் ஒன்றாகும். அதிலும் பெண்கள் முகத்தில் ஏதேனும் ஒரு சிறு பரு வந்தாலும் மிகவும் வேதனைப்படுவர். அநேக பெண்கள் வெள்ளை நிறத்தில் … Read more சர்க்கரை நோயில் இருந்து ஆரம்பத்திலேயே தப்பித்துக்கொள்ள… சர்க்கரைக்கேற்ற முருங்கை சர்க்கரை நோய் சர்க்கரை நோய் இன்றைய காலத்தில் அதிகளவில் காணப்படும் நோயாகும். நம் உடலில் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ … Read more உடலுக்குத் தேவையான வைட்டமின்கள் புழுக்கமான சீதோஷ்ண நிலை பெரும்பாலும் மே, ஜுனில் காணப்படுகிறது. வறட்சியான ஈரப்பதம் ஃபுளூ காய்ச்சலுக்கு ஈடான உடல் நலக் கோளாறுகளை ஏற்படுத்துகிறது. மூக்கடைப்பு, டான்சில், குரல் வளை … Read more
அட்லாண்டிக் கடலில் உருவான சக்தி வாய்ந்த பியோனா புயல் கனடா நோக்கி நகர்ந்ததையடுத்து, இது கனடா வரலாற்றில் மிகவும் கடுமையான புயல்களில் ஒன்றாக இருக்கும் என்று அந்த நாட்டின் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது. அதை தொடர்ந்து புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டன. இந்த நிலையில் கனடாவின் கிழக்கு பகுதிகளை பியோனா புயல் நேற்று முன்தினம் பந்தாடியது. மணிக்கு 179 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று சூழன்றடித்தது. இந்த புயலால் நோவா ஸ்கோடியா, நியூ பிரன்சுவிக், நியூபவுண்ட்லேண்ட் ஆகிய மாகாணங்களும், பிரின்ஸ் எட்வர்டு மற்றும் மாக்டலன் தீவுகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அங்கு சூறாவளி காற்றுடன் பலத்த மழை கொட்டித்தீர்த்ததால் பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாகின. குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்ததை தொடர்ந்து மக்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டு வருகின்றனர். இதனிடையே புயலால் கடல் சீற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து, கடற்கரையோரத்தில் இருந்த ஏராளமான வீடுகள் கடலில் அடித்து செல்லப்பட்டன. புயல், மழையை தொடர்ந்து பல பகுதிகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதால் 5 லட்சத்துக்கும் அதிகமான வீடுகள் இருளில் மூழ்கி உள்ளன. மேலும் தகவல் தொடர்பு, சாலை போக்குவரத்து உள்ளிட்டவையும் பாதிக்கப்பட்டுள்ளதால் மக்களின் இயல்பு முற்றிலுமாக முடங்கியுள்ளது. புயல் பாதித்த பகுதிகளில் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட ராணுவத்தை அனுப்பியுள்ளதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ(Justin Trudeau) தெரிவித்துள்ளார்.
திருக்கடையூர் கோவில் வரலாறு: மிருகண்டு முனிவர், அவரின் மனைவி புத்திரப் பேறு வேண்டி இறைவனை வழிபட்டு வந்தனர். அவர்கள் பக்திக்கு மெச்சி இறைவன் அவர்கள் முன் தோன்றி ஆயிரம் ஆண்டுகள் வாழும் துர்க்குணங்கள் நிறைந்த மகன் வேண்டுமா? அல்லது 16 வயது வரை மட்டும் வாழும் தலைசிறந்த மகன் வேண்டுமா என்று கேட்க மிருகண்டு தமபதியினர் 16 வயது மகனே வேண்டும் என்று வரம் கேட்டனர். 🛕 மிருகண்டு தம்பதியருக்கு இறைவன் அருளால் பிறந்த மார்க்கண்டேயர் சிறந்த சிவபக்தராக விளங்கினார். அவருக்கு 16 வயது நடக்கும் போது அவரின் பெற்றோர் இறைவன் கூறியபடி விதிக்கப்பட்ட ஆயுள் 16 வயது தான் என்பதை மார்க்கண்டேயருக்கு கூறினர். சிவபெருமானே அவரின் ஆயுளைக் காக்க முடியும் என்று மார்க்கண்டேயர் ஒவ்வொரு சிவஸ்தலமாக தரிசித்து வரும் போது திருக்கடவூர் வந்து சேர்ந்தார். அவர் திருக்கடவூர் தலம் வந்தபோது அவருடைய ஆயுள் முடியும் நாள் நெருங்கியது. 🛕 எமன் தன் பணியை முடிக்கும் பொருட்டு பாசக்கயிற்றை மார்க்கண்டேயர் மீது வீசினான். எமனைக் கண்டு அச்சமுற்ற மார்க்கண்டேயர் தான் வழிபட்டுக் கொண்டிருந்த லிங்கத்தை ஆரத் தழுவிக் கொண்டார். எமனும் பாசக்கயிற்றை லிங்கத்தையும் சேர்த்து வீசினான். இறைவன் சிவபெருமான் தன்னுடைய பக்தனைக் காப்பாற்ற லிங்கத்திலிருந்து திரிசூலத்துடன் வெளிப்பட்டு காலனைக் சூலாயுத்தால் கொன்று காலனுக்குக் காலனாக காலசம்ஹார மூர்த்தியாக விளங்கினார். பின்பு பூதேவி, பிரம்மா, மஹாவிஷ்னு ஆகியோரின் வேண்டுதலுக்கு இணங்கி எமனை உயிர்ப்பித்து அருள் புரிந்தார் என்று தல புராணம் கூறுகிறது. சிவபெருமானின் எட்டு வீரச் செயல்களுள் காலனை கடிந்த இந்த வீரச் செயலும் ஒன்று. புராண வரலாறு 🛕 பிரம்மா ஞானோபதேசம் பெற விருப்பம் கொண்டு சிவபெருமானை வழிபட்டார். சிவபெருமான் வில்வ விதை ஒன்றைக் கொடுத்து, அவ்விதை நடப்பட்ட ஒரு முகூர்த்தத்திற்குள் எந்த இடத்தில் முளை விடுகிறதோ அங்கு தன்னை வழிபடும்படி தெரிவிக்கிறார். பிரம்மாவும் அந்த விதையை பல இடங்களில் நட்டுப் பார்த்து திருக்கடவூரில் முளை விடக் கண்டார். இதனால் இத்தலம் வில்வவனம் என்று பெயர் பெற்றது. 🛕 பாற்கடலைக் கடைந்து எடுத்த அமுதத்தை தேவர்கள் அசுரர்களுக்கு கொடுக்க விரும்பாமல் அதை குடத்தில் (கடம்) எடுத்துக் கொண்டு செல்லும் போது வழியில் நீராடுவதற்காக இத்தலத்தில் இறக்கி வைத்துவிட்டு நீராடச் சென்றனர். திரும்பி வந்து குடத்தை எடுக்க முயற்சி செய்த போது குடத்தை எடுக்க முடியவில்லை. குடம் பூமியில் வேர் ஊன்றி விட்ட இடம்தான் திருக்கடவூர் என்று பெயர் பெற்றது. அந்தக் குடம் லிங்க வடிவில் நிலைத்து நின்றபடியால் இந்த லிங்கேஸ்வரர் அமிர்தகடேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். கோவில் அமைப்பு 🛕 ஆலயத்தின் கிழக்கிலும் மேற்கிலும் இராஜகோபுரங்கள் இருந்தாலும் மேற்கில் உள்ள ஏழு நிலை ராஜகோபுரம் தான் பிரதான வாயிலாகும். கருவறையில் உள்ள அமிர்தகடேஸ்வரர் சுயம்பு லிங்கமாக மேற்கு நோக்கி காட்சி தருகிறார். கருவறை சுற்றுப் பிரகாரத்தில் முருகன், லட்சுமி, சோமஸ்கந்தர், நடராஜர், வில்வனேஸ்வரர், பைரவர், பஞ்சபூத லிங்கங்கள், சூரியன், அகத்தியர், சப்த கன்னியர்கள், 63 நாயன்மார்கள் சந்நிதிகள் உள்ளன. இவ்வாலயத்தில் நவக்கிரக சந்நிதி இல்லை. 🛕 இறைவன் கருவறைக்கு முன்னால் உள்ள மண்டபத்தில் காலசம்ஹார மூர்த்தியின் செப்புச் சிலை உருவம் பார்த்து தரிசிக்க வேண்டியதாகும். காலன் காலடியில் தலைகீழாக விழுந்து கிடக்கிறான். காலசம்ஹாரமூர்த்தி வலது காலை ஊன்றி இடது காலை உயர்த்தி எமனை உதைக்கும் நிலையில் காணப்படுகிறார். மார்க்கண்டேயர் அருகில் கூப்பிய கரத்துடன் நிற்கிறார். பிறகு எமனுக்கு மன்னிப்புக் கொடுத்த சிவபெருமான் எமனை தன் சந்நிதிக்கு எதிரே இருக்கச் செய்து விடுகிறார். எருமை வாகனத்துடன் கரம் கூப்பியவாறு நிற்கும் எமனுக்கு சிறு கோவில் உள்ளது. எமனுடைய பாசக்கயிறு பட்டதால் லிங்கத்தின் உச்சியில் ஒரு பிளவும், மேனியில் தழும்பும் காணப்படுகின்றன. Thirukadaiyur Abirami Temple திருக்கடையூர் அபிராமி கோவில்: வெளிப் பிரகாரத்தில் கிழக்கு நோகியவாறு அன்னை அபிராமி சந்நிதி உள்ளது. சரஸ்வதி தேவிக்கும், அபிராமி பட்டருக்கும் அருள் புரிந்தவள் இந்த அன்னை அபிராமியே. இவ்வூரில் வாழ்ந்து வந்த பட்டர் ஒருவர் அன்னை அபிராமியின் மீது அளவு கடந்த பக்தி கொண்டவர். பக்தி அதிகரிக்க உன்மத்த நிலையில் இருப்பார். அவ்வாறு இருந்த சமயம் ஒருமுறை தஞ்சை மன்னர் இரண்டாம் சரபோஜி இவ்வூர் வந்த போது இந்த பட்டரைப் பார்த்து இன்று என்ன திதி என்று கேட்கிறார். அன்னை நினைவிலிருந்த பட்டர் அமாவாசையை பௌர்ணமி திதி என்று தவறாகக் கூறி விடுகிறார். 🛕 பட்டரைப் பற்றி தவறான கருத்துக்களை மன்னரிடம் கோவில் அர்ச்சகர்கள் ஏற்கனவே கூறி இருந்தனர். இதனால் கோபமுற்ற மன்னர் அன்றிரவு பௌர்ணமியைக் காணாவிட்டால் பட்டருக்கு தண்டனை அளிக்கப்படும் என்று கூறிவிடுகிறார். பட்டர் அன்னை மீது 100 பாடல்கள் கொண்ட அபிராமி அந்தாதி பாட, அமாவாசை அன்று பௌர்னமி தோன்றியது. 79வது பாடலின் போது அன்னை அபிராமி தனது காதில் இருந்த தோடு ஒன்றைக் கழற்றி ஆகாயத்தில் வீச அது பௌர்ணமி இரவு பூர்ண சந்திரனாகக் காட்சி அளித்தது. இவ்வாறு பட்டருக்கு அருள் செய்த இந்த அன்னை அபிராமியை வழிபடுவோர் எல்லா நலங்களும் பெறுவர். திருக்கடையூர் கோவில் சிறப்புகள் 🛕 எம பயம் நீக்கும் தலங்கள் திருக்கடையூர், திருவீழிமிழலை, திருவையாறு, திருவெண்காடு, திருவைகாவூர், திருவாஞ்சியம் ஆகியவை ஆகும். இவற்றுள் திருக்கடையூர் மிகவும் பிரசித்தி பெற்ற தலம். 🛕 கார்த்திகை மாத சோமவார நாட்களில் மூலவர் சந்நிதிக்கு எதிரில் உள்ள சங்கு மண்டபத்தில் வலம்புரி சங்குடன் கூடிய 1008 சங்குகள் வைத்து இறைவனுக்கு அபிஷேகம் நடைபெறும். அச்சமயத்தில் மட்டுமே இறைவன் திருமேனியை வஸ்திரம் ஏதுமின்றி தரிசிக்க முடியும். காலன் பாசக்கயிறு மேலே விழுந்ததால் ஏற்பட்ட அடையாளத் தழும்புகளும், காலனை சம்ஹாரம் செய்யும் பொருட்டு லிங்கத்திலிருந்து வெடித்துத் தோன்றியதால் லிங்கத்தின் உச்சியில் ஏற்பட்ட பிளவும் நன்றாகத் தெரியும். அதேபோல் முன் மண்டபத்தில் உள்ள காலசம்ஹார மூர்த்தியின் செப்புச் சிலை வடிவமும் சிவலிங்கம் இரண்டாகப் பிளந்து அதிலிருந்து திரிசூலம் ஏந்திய கையுடன் சிவபெருமான் வெளிப்படும்படி தத்ரூபமாக அமைந்துள்ளது. இந்த காலசம்ஹார மூர்த்திக்கு ஆண்டுக்கு 11 முறை மட்டுமே அபிஷேகம் நடைபெறும். அவ்வாறு அபிஷேகம் நடைபெறும் போது இறைவனின் திருமேனி அழகினைக் கண்டு களிக்க முடியும். 🛕 திருக்கடையூரில் பூர்ணாபிஷேகம் (100வயது பூர்த்தி), கனகாபிஷேகம் (90 வயது), சதாபிஷேகம், பீமரதசாந்தி, மணிவிழா மற்றும் ஆயுஷ்ய ஹோமம் செய்து கொண்டால் ஆயுள் நீடிக்கும் என்பது நம்பிக்கை. இந்த திருமணத்தின்போது 16 கலசங்கள் வைத்து, அருகில் நவதானியங்களில் நவக்கிரகங்களை ஆவாஹனம் செய்து, ஹோமம் செய்கின்றனர். கலசங்களில் உள்ள புனித நீரை உறவினர்களைக் கொண்டு, தம்பதியர் மீது ஊற்றுகிறார்கள். இவ்வாறு செய்வதால் பாவங்கள் நீங்கிவிடுவதாக நம்பிக்கை. திருப்புகழ் முருகன் 🛕 திருப்புகழில் இத்தலத்து முருகன் மீது 2 பாடல்கள் உள்ளன. இத்தலத்தில் முருகப்பெருமான் ஒரு திருமுகத்துடனும் நான்கு திருக்கரங்களுடனும் தனது தேவியர் இருவருடன் எழுந்தருளியுள்ளார். இங்கு முருகப்பெருமான் சிறு பாலகன் வடிவில் பார்வதியின் வலப்பக்கம் தாயைத் தழுவியவாறு காட்சி தருவது காண வேண்டிய ஒரு காடசியாகும். நேர்த்திக்கடன் 🛕 அங்க பிரதட்சணம், கல்யாணவரம் வேண்டுவோர் கல்யாண மாலை சாத்துதல், குழந்தை பாக்கியம் வேண்டுவோர், குழந்தை தத்துக் கொடுத்தல் ஆகியவற்றை நேர்த்திக்கடன்களாக செய்கின்றனர். வியாதிகள் குணமாக சங்காபிசேகமும், புத்திரபாக்கியம் வேண்டுவோர் ருத்ராபிசேகமும் சுவாமிக்கு செய்கின்றனர். பிரார்த்தனை 🛕 மிகச் சிறந்த பரிகாரத்தலமாகத் திகழும் இத்தலத்தில் வீற்றிருக்கும் மூலவர் அமிர்தகடேசுவரரை வணங்குவோர்களுக்கு துயரம் நீங்கி மனஅமைதி கிடைக்கும். மேலும் வேலை வாய்ப்பு, தொழில் விருத்தி, உத்தியோக உயர்வு, ஆகியவற்றுக்காகவும் இங்கு பிரார்த்தனை செய்தால் சுவாமி பக்தர்களது வேண்டுதல்களை நிச்சயம் நிறைவேற்றி கொடுப்பார். Thirukadaiyur Temple Festivals திருவிழா: எம சம்ஹாரம் – சித்திரை மாதம் – 18 நாட்கள் – மகம் நட்சத்திரத்தன்று இத்திருவிழா சிறப்பாக இத்தலத்தில் நடக்கும். தினமும் சுவாமி புறப்பாடு நடைபெறும் – 6 ம் நாள் அன்று கால சம்கார மூர்த்தி ஒரே ஒரு முறை வெளியே வரும். கார்த்திகை – சோம வாரம் 1008 சங்காபிசேகம் இத்தலத்தில் மிக சிறப்பாக நடைபெறும் என்பது குறிப்படத்தக்கது. புரட்டாசி நவராத்திரி, மார்கழி மாதம் விதிபாதம் அன்று ஏக தின உற்சவம் இங்கு சிறப்பாக நடக்கும். ஆடிப்பூரம், நவராத்திரி, பௌர்ணமி பூஜை ஆகியவை இத்தலத்தில் வெகு விமரிசையாக நடக்கும். 🛕 கந்தர் சஷ்டி, மகாசிவராத்திரி, பங்குனி உத்திரம் ஆகியவை தலத்தின் சிறப்பான விசேச நாட்கள் ஆகும். தை அமாவாசை அன்று அந்தாதி பாராயணம் பாடி நிலவு காட்டி வழிபடுதல் இங்கு விசேசம். மாதாந்திர பிரதோச நாட்களின் போது பக்தர்கள் கூட்டம் கோவிலில் பெருமளவில் இருக்கும். வருடத்தின் சிறப்பு நாட்களான தீபாவளி, பொங்கல், தமிழ் & ஆங்கில புத்தாண்டு தினங்களின்போதும் கோவிலில் சிறப்பு அபிசேக ஆராதனைகளும் நடக்கும். திருக்கடையூர் அருகில் உள்ள கோவில்கள் 🛕 திருக்கடையூர் சென்று அமிர்தகடேஸ்வரர் ஆலயத்தையும், கடவூர் மயானத்திலுள்ள பிரம்ம்புரீஸவரர் ஆலயத்தையும் தரிசித்த பிறகு அருகிலுள்ள கீழ்க்கண்ட மற்ற கோவில்களுக்கும் சென்று வரலாம். அனந்தமங்கலம்: திருக்கடையூரில் இருந்து சுமார் 3 கி.மி. தொலைவில் உள்ளது அனந்தமங்கலம் இராஜகோபாலப் பெருமாள் கோவில். இக்கோவிலில் உள்ள த்ரிநேத்ர பஞ்சமுக ஆஞ்சனேயர் மிகவும் பிரசித்தி பெற்றவர். தில்லையாடி: திருக்கடையூரில் இருந்து கிழக்கே திருவிடைக்கழி செல்லும் பாதையில் சுமார் 4 கி.மி. தொலைவில் உள்ளது தில்லையாடி. இங்குள்ள சிவன் கோவில் பெரிய பிரகாரம், பெரிய கோபுரம் உடையதாகும். சுயம்பு லிங்க வடிவிலுள்ள இறைவனை திருமால் வழிபட்டுள்ளார். திருவிடைக்கழி: தில்லையாடியில் இருந்து மேற்கே சுமார் 3 கி.மி. தொலைவில் உள்ள திருவிடைக்கழி திருவிசைப்பா பாடல் பெற்ற முருகன் தலம். இக்கோவிலில் மூலவர் திருகாமேஸ்வரர். ஆயினும் பிரதான மூர்த்தியாகத் திகழ்பவர் இக்கோவிலில் உள்ள அருணகிரிநாதரால் திருப்புகழில் பாடப் பெற்றுள்ள சுப்பிரமண்யர் தான். தேவானூர்: தில்லையாடிக்கு அருகில் உள்ள தேவானூரில் உள்ள அருள்மிகு விசாலாட்சி உடனுறை விஸ்வநாத சுவாமி ஆலயமும் பார்க்க வேண்டிய ஒன்றாகும். இக்கோவிலில் உள்ள ஞான குரு பகவான் சந்நிதியும் பார்த்து வழிபட வேண்டிய சிறப்புள்ளது. இங்குள்ள ஞான குரு பகவான் இந்திரனால் வழிபடப் பெற்றவர். தரங்கம்பாடி: திருக்கடையூரில் இருந்து தென்கிழக்கே சுமார் 8 கி.மி. தொலைவில் உள்ள “அளப்பூர்” என்ற தேவார வைப்புத்தலம் தான் இன்றைய தரங்கம்பாடி. கடல் அலைகள் மோதி மோதி மிகவும் சிதிலம் அடைந்துள்ள இங்குள்ள சிவாலயத்தின் மூலவர் மாசிலாநாதர். கந்தர்சஷ்டி நாளில் திருவிடைக்கழி முருகன் சூரசம்காரம் செய்யும் தலம். Thirukadaiyur Temple Timings திறக்கும் நேரம்: காலை 6 மணி முதல் 1 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும். Thirukadaiyur Temple Address 🛕 Sannathi St, Thirukadaiyur, Tamil Nadu 609311 அமிர்தகடேஸ்வரர் கோவில் எங்கு உள்ளது? எப்படிப் போவது? 🛕 மயிலாடுதுறை – தரங்கம்பாடி சாலை மார்க்கத்தில் மயிலாடுதுறையில் இருந்து 23 கி.மி. தூரத்தில் திருக்கடையூர் இருக்கிறது. சீர்காழியில் இருந்து சுமார் 30 கி.மி. தொலைவில் சீர்காழி – தரங்கம்பாடி சாலை வழியில் இத்தலம் உள்ளது. எல்லோரும் மார்க்கண்டேயனைப் போல் என்றும் 16 வயதுடன் மரணத்தில் இருந்து தப்ப முடியாது. இருப்பினும் நாம் எதிர்கொள்ளும் மரணம் துன்பத்தைத் தராமல் இருக்க இத்தலத்து இறைவனை வணங்கி வழிபட்டு நலம் பெறுவோம்.
ஸிஹாஹ் ஸித்தா என்னும் ஆறு உண்மையான ஹதீதுத் தொகுப்புகளில் ஒன்றான ஸுனனெ அபூதாவூத் என்னும் ஹதீஸ்களைத் தொகுத்து மார்க்கத்திற்குப் பெரும் தொண்டாற்றிய இவர்களின் இயற்பெயர் சுலைமான் பின் அஷ்அஸ். குறிப்புப் பெயர் அபூதாவூத் . பஸராவைச் சார்ந்த ஒரு இடமான சஜஸ்தான் என்ற ஊரிலே ஹிஜ்ரீ 202வது வருடத்தில் பிறந்தார்கள். ஆகயால் தான் மக்கள் மத்தியில் ‘அபூதாவூத் சஜஸ்தானீ’ என்று பிரபலமாகியுள்ளார்கள். இமாம் அபூதாவூத் வாழ்ந்த காலம் அறிஞர்கள் நிறைந்த காலம். இத்துடன் அவர்கள் சிறுவயதிலேயே பத்திசாலியாகவும் திகழ்ந்தார்கள். இக்காலச் சூழ்நிலை அபூதாவூத் கல்வி கற்க மிக ஏதுவாக இருந்தமையால் சிறு வயதிலேயே ஹதீஸ் துறையில் ஈடுபட ஆரம்பித்தார்கள். ஹதீஸ் துறையில் துரிதமாகச் செயல்பட்டதால் அரும்பெரும் அறிஞர்களைச் சந்திக்கும் வாய்ப்பு இமாம் அபூதாவூதிற்குக் கிடைத்தது. ஹதீஸ் துறையிலும் மார்க்கச் சட்டத் துறையிலும் பெரும் பங்கு வகித்தார்கள். தன்னுடைய 18 வது வயதிலே கல்விக்காக பல ஊர்களுக்குப் பயணிக்க ஆரம்பித்தார்கள். ஈராக், கூஃபா, பஸரா, ஷாம், ஜஸீரா,ஹிஜாஸ், எகிப்து, ஹுராஸான், சஜஸ்தான், ரய் ஆகிய ஊர்களுக்குப் பயணம் செய்துள்ளார்கள். இமாம் திர்மிதி, நஸயீ, இப்னு அபித்துன்யா, அபூ உவானா,இப்ராஹிம் பின் ஹம்தான் மற்றும் பலர் இவர்களின் மாணவர்களாவர். இமாம் அஹ்மத், அலீ பின் மதீனி, யஹ்யா பின் மயீன்,முஹம்மத் பின் பஷ்ஷார், சுலைமான் பின் ஹர்ப் மற்றும் பலரிடம் கல்வி கற்றிருக்கிறார்கள். சுமார் 5 இலட்சம் ஹதீதுகளைத் திரட்டி அவற்றிலிருந்து 4,800 ஹதீதுகளைத் தேர்ந்தெடுத்து நூலாக்கி அதற்கு ‘ஸுனனெ அபூதாவூத்’ எனப் பெயரிட்டார்கள். ஒரு மனிதன் நேரிய இஸ்லாமிய வாழ்வை வாழ்வதற்கு பின்வரும் 4 நபிமொழிகளே போதுமானவை என்று இவர்கள் கூறினர். அவை 1. செயல்களெல்லாம் எண்ணத்தைப் பொறுத்து அமைந்துள்ளன. 2. ஒரு நல்ல முஸ்லிமுக்கு அடையாளம் அவன் சம்பந்தப்படாதவற்றில் தலையிடாமல் இருப்பதாகும். 3. இறைநம்பிக்கையான் தனக்கு விரும்புவதைத் தன் சகோதரனுக்கும் விரும்பபாதவரை அவன் உண்மையான இறை நம்பிக்கையாளன் ஆகமாட்டான். 4. அனுமதிக்கப்பட்டதும், அனுமதிக்கப்படாததும் தெளிவாகவே உள்ளன. அவற்றில் ஐயத்திற்கு உள்ளவற்றை தவிர்த்து கொள்பவன் தன் கௌரவத்தையும், மார்க்கத்தையும் காப்பாற்றிக் கொண்டான்’ என்பவைகளாகும். இவர்கள் ஹதீதுத்தொகுப்பைத் தவிர்த்து பின்வரும் நூல்களையும் இயற்றியுள்ளார்கள். அவை: 1. மராஸீல் 2. அர்ரத்து அலல் கத்ரிய்யா 3. அன்னாஸிக் வல் மன்ஸூக் 4. மாதபர்ரத பிஹி அஹ்லுல் அம்ஸார் 5. ஃபளாயிலுல் அம்ஸார் 6. முஸ்னது மாலிக் 7. அல் மஸாயில் 8. மஃரிபத்துல் அவ்காத் 9. கிதாப் பத்ஹுல் வஹ்யி சிறிதளவு உணவையே உண்டு, அல்லாஹ்வுக்கு அதிகம் பயந்தவர்களாகவும், ஆடம்பரத்தை வெறுத்தவர்களாகவும் நபிகளாரின் சுன்னத்தை பின்பற்றுவதில் அதிக அக்கறை எடுத்துக் கொண்டவர்களாகவும் இருந்தனர். இவர்கள் ஹதீதுகலையில் மட்டுமின்றி ஃபிக்ஹிலும் சிறந்து விளங்கினர். தம்முடைய ஹதீது தொகுப்பின் அத்தியாயங்களை பிக்ஹுக்கு ஏற்றவண்ணம் அமைத்தனர். ஸஹீஹுஸ் ஸித்தாவில் இவர்களது தொகுப்பே பிக்ஹு சட்டங்கள் நிறைந்ததாக இருக்கிறது. ‘இமாம் அபூதாவூதின் ஹதீதுத் தொகுப்பே நான்கு இமாம்களின் பிக்ஹுகளுக்கெல்லாம் ஆதாரமான கருவூலம்’ என்று இமாம் கத்தாபி அவர்கள் புகழ்கிறார்கள். இவர்கள் ஷாபி மத்ஹபை பின்பற்றினார்கள் என்று சிலரும், ஹன்பலி மத்ஹபை பின்பற்றினார்கள் என்று வேறு சிலரும் கூறுகிறார்கள். இவர்கள் ‘முஜ்தஹித்’ என்று ஷாவலியுல்லாஹ் கூறுகிறார்கள். இவர்களது மகன் அபூபக்கரும் ஒரு முஹத்திஸாகவும் ஒரு இலட்சம் ஹதீதுகளை மனனம் செய்த ஹாபிளாகவும் விளங்கினார். தங்கள் வாழ்நாளில் பெரும்பகுதியை பக்தாதில் கழித்த இவர்கள் இறுதி நான்கு ஆண்டுகளை பஸராவில் கழித்து எழுபத்து மூன்று வயது நிறைவுற்றவராக ஹிஜ்ரீ 275 ஆம் ஆண்டு ஷவ்வால் மாதம் 16 – ம் நாள் வெள்ளிக்கிழமையன்று இவ்வுலகை விட்டு மறைந்தார்கள்.
மனிதனின் மாண்பு அவரின் பிறப்பால் அல்ல, மாறாக அவரவரின் செயலே மனிதனை மாண்புடன் வாழத் துணைபுரிகிறது. மனிதமும், புனிதமும் இணையும்போது ஒருவன் மாட்சி பெறுகிறான். மனிதனாகப் படைக்கப்பட்ட எல்லோரும் கடவுளை போற்றிப் புகழ்ந்து அவரின் சித்தப்படி வாழவே படைக்கப் பட்டிருக்கிறோம். புனிதர்கள் என்று போற்றப்படும் மனிதர்கள் இறையன்பைச் சுவைத்தவர்கள். எப்பொழுதும் இறைவனோடு இணைந்து அவரின் சித்தப்படி வாழ்ந்து தியாகத்திலும், செபத்திலும் தங்கள் வாழ்வின் பெரும் பகுதியைச் செலவிட்டு இயேசுவின் அன்பிற்குச் சாட்சிகளாய் வாழ்ந்தார்கள். "நீங்கள் என்னுள்ளும், என் வார்த்தைகள் உங்களுள்ளும் நிலைத்திருந்தால் நீங்கள் விரும்பிக் கேட்பதெல்லாம் நடக்கும்” (யோவா 15:7). "நீங்கள் என் பெயரால் எதைக் கேட்டாலும் செய்வேன். நீங்கள் என்மீது அன்பு கொண்டிருந்தால் என் கட்டளைகளைக் கடைப்பிடிப்பீர்கள்" (யோவா 4:14-15) என்று இயேசு கூறியதை தமது வாழ்வாக்கி இறையன்பு - பிறரன்பு மிகுந்து வாழ்ந்த இவர்கள் பிறருக்காக இயேசுவிடம் பரிந்து பேசினால் அவர்கள் மன்றாட்டு கேட்கப்படும். புனிதர்களின் செபத்தால் அதிசயம், அற்புதம் நடந்து நாம் விசுவாசத்தில் வளர பெரும் துணை புரிகிறது. இயேசுவின் பிறப்பு உலகில் சமாதானத்தை அளித்தது (லூக் 2:13). அதேபோல் புனிதர்கள் பிறப்பால் இறையன்பு பூமியில் அதிகரித்தது. பரிசுத்தமாய் வாழ்ந்து பாவத்தை வெறுத்து வாழ்ந்ததால் இவர்கள் புனிதரானார்கள். "பாவம் செய்வதைவிட சாவதே மேல்" என்றார் புனித டோமினிக் சாவியோ. "ஒருவர் உலகம் முழுவதையும் தனதாக்கிக் கொண்டாலும், தன் வாழ்வையே இழப்பாரெனில் அவருக்குக் கிடைக்கும் பயன் என்ன ?" (மாற் 8:36) என்ற இயேசுவின் வாக்கின்படி உலக இன்பத்தை வெறுத்து தனது ஆத்மாவை புனிதமாகக் காத்துக்கொண்டு பரிசுத்தமாய் வாழ்ந்த இவர்களே புனிதர்கள். குடும்பம் குட்டித் திருச்சபை: இயேசு-மரி - சூசை வாழ்ந்த குடும்பம் திருக்குடும்பம். அங்கு அன்பு, அமைதி, செபம், உறவு மிகுதியாகக் காணப்பட்டன. 'நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம்' என்ற வார்த்தை உண்மையிலே அந்தக் குடும்பத்தில் காணப்பட்டது. எனவே, இயேசு பணிவோடு, பாசத்தோடு கீழ்ப்படிந்து வாழ்ந்தார். அன்பிற்கு ஆணிவேராய் அமைவது பெற்றோரே. எங்கு அன்பு உண்டோ அங்கு அமைதியும் அடக்கமும் உண்டு. எனவே, பெற்றோர் பிள்ளைகளை புனிதத்தில் வளர்க்க முடியும். தவறு நிகழும்போது செபத்தால் திருத்த முடியும். மகன் மனம் மாற செபித்த மோனிக்காவின் செபம் கேட்கப்பட்டு தனது மகனை புனிதராகக் கண்டார் புனித மோனிக்கா. மம்மா மார்கிரேட் தனது மகனை பரிசுத்தமாய் வளர்த்ததால் ஜான் போஸ்கோ புனிதரானார். புனித அருளானந்தர் தன் நாட்டை விட்டு இந்தியா வந்து வேதசாட்சியாய் மரித்தார். தன் மகன் இறந்தார் என்ற செய்தி கேட்ட அவரின் தாய் அழாது பட்டாடை அணிந்து மகிழ்ந்தார். தன் தாய்மை நிலையில் பாசம் இருந்தாலும் இயேசுவின் சாட்சியாய் வாழ தன் மகனுக்கு துணிவைக் கொடுத்த தாயுள்ளம் தன் மகன் இறையன்பிற்கும், உண்மைக்கும், நீதி நேர்மைக்கும் சாட்சியாய் வாழ்ந்து உண்மைக்காக இரத்தம் சிந்தி மரித்ததால் மகிழ்ந்தது. தன் ஏழு பிள்ளைகளும் விசுவாசத்திற்காய் போராடி மரித்ததை பெசிலிட்டி எனும் தாய் கண்டு அழாது அவர்களை ஊக்குவித்தாள். இவ்வாறு பல பெண்கள் தங்கள் மனதை மாற்றி தம் பிள்ளைகளையும் புனிதராக்கிய புனிதைகள் பலர் உண்டு. புனித ஹெலினேர் தன் மகனுக்கு தாழ்ச்சியைக்‌ கற்றுக்கொடுத்து சிலுவையின்‌ மகத்துவத்தை உலகு அறியச்‌ செய்தவர்‌. இவர்களுக்கெல்லாம்‌ முன்னோடியாக புனித அன்னாள்‌-சுவக்கீன்‌. இவர்களின்‌ புனித உறவால்‌ உதித்தவர்‌ அன்னை மரியா. தன்னை ஈன்ற பெற்‌றோரின்‌ பாசம்‌, பக்தி. தியாகம்‌, செபம்‌ இவையே மாதாவை தியாகத்தின்‌ தாயாக, தாழ்ச்சியின்‌ சிகரமாக மாற்றியது. எல்லாவற்றிற்கும்‌ மேலாக “பெண்களுக்குள்‌ பேறுபெற்ற மரியே' என்று - உலகம்‌ போற்றுமளவுக்கு 'பரிசுத்த ஆவியால்‌ நிரப்பப்பட்டவரே, நீர்‌ ஆசி பெற்றவர்‌: என்று எலிசபெத்‌ மரியாவைப்‌ போற்றி மகிழும்‌ அத்தகு பெருமையுடைய மகளை பெற்று வளர்த்த அன்னாள்‌- சுவக்கின்‌ இவர்களின்‌ இல்லற வாழ்வு சிறப்புடையது. எனவேதான்‌ உலகிற்கே தாயாக, அனைவரின்‌ அன்னையாக மரியா போற்றப்படுகிறார்‌. இத்தகு புனிதர்கள்‌ இல்லறத்தில்‌ இருந்து கொண்டே இறை சித்தத்தை ஏற்று, என்றும்‌ எதிலும்‌ இறைவனைப்‌ போற்றி மகிழ்ந்த புனிதப்‌ பெண்கள்‌ ஆவர்‌. கன்னிப்‌ பெண்களுள்‌ புனிதர்‌ பலருண்டு. அழகு, அந்தஸ்து, பட்டம்‌, பதவி, சொத்து சுகம்‌ அனைத்தையும்‌ துறந்து ஆண்டவருக்காய்‌ தன்‌ வாழ்வை முழுமையாய்‌ அர்ப்பணித்து இல்லற வாழ்வில்‌ ஈடுபடாது வாழ்ந்து இறைவனுக்காய்‌ வாழ்ந்தவர்களே புனித கன்னிப்‌ பெண்கள்‌. இசை வளம்‌ மிக்க செசிலியா அழகு மிக்கவராய்‌ இருந்ததால்‌ பல பாடுகள்‌ பட்ட போதிலும்‌ தன்‌ விசுவாச வாழ்வில்‌ நிலைத்து இரத்தம்‌ சிந்தி புனிதையானார்‌. இவ்வாறே ஆகத்தா, அனஸ்தாசியா, மரிய கொரற்றி, லீமாரோஸ்‌, கேத்தரீன்‌, மார்கிரேட்‌, -கிளாரா... மேலும்‌ ஸ்பெயின்‌ நாட்டைச்‌ சேர்ந்த ஜஸ்டா-ரூபினா என்ற இரு வாலிபப்‌ பெண்களும்‌ . சிலைகளை வணங்க மறுத்ததால்‌ கொடூர "மரணத்திற்கு உள்ளானார்கள்‌. ஸ்பெயின்‌ நாடே போற்றுமளவுக்கு விசுவாசத்தில்‌ உறுதியாய்‌ இருந்து உண்மையான கடவுளையே வழிபட்டு இரத்தம்‌ சிந்தி மரித்தனர்‌. அது மட்டுமல்லாது இந்திய மண்ணில்‌ பிறந்து தனிமை நோயால்‌ பீடிக்கப்பட்டாலும்‌ இறைப்பற்றுடைய புனித அல்போன்சா துறவியாகி கன்னிப்‌ பெண்ணாக மரித்தார்‌. இராணி மரியா மக்கள்‌ நலனுக்காகப்‌ பாடுபட்டு பிறரின்‌ வாழ்வு சிறக்க தன்னுயிரை மாய்த்து இரத்தம்‌ சிந்தி மரித்தார்‌. இவர்களெல்‌லாம்‌ கற்பில்‌ சிறந்து, கடவுளை நேசித்து உண்‌மைக்கும்‌, நீதிக்கும்‌ சாட்சியாய்‌ இரத்தம்‌ சிந்தி மரித்த புனிதப்‌ பெண்கள்‌. வேதசாட்சிகளாய்‌ மரித்த ஆண்கள்‌: ஆண்‌- பெண்‌ என்று பாராது எல்லோரும்‌ மீட்படைய இரத்தம்‌ சிந்தினார்‌ இயேசு. இயேசுவின்‌ அன்பு விவரிக்க முடியாதது, விலைமதிப்பற்றது. அந்த இயேசுவின்‌ அன்பைச்‌ சுவைத்து அவரின்‌ போதனையை தமது வாழ்வாக்கி இயேசுவைப்‌ போலவே இரத்தம்‌ சிந்தி மரித்தார்கள்‌ பன்னிரு அப்போஸ்தலர்கள்‌. புனித இராயப்பர்‌ தலைகீழாக சிலுவையில்‌ அறையப்பட்டு மரித்தார்‌. புனித மத்தியாஸ்‌ கற்‌களால்‌ எறியப்பட்டு தலை வெட்டப்பட்டு வேத சாட்சியானார்‌. புனித யாகப்பர்‌ தடியால்‌ அடித்தே கொல்லப்பட்டார்‌, புனித ஆன்ட்ரு எக்ஸ்‌ வடிவிலான சிலுவையில்‌ துன்புறுத்தப்பட்டு இரத்தம்‌ சிந்தி மரித்தார்‌. புனித ததேயு அம்புகளால்‌ தாக்கப்‌பட்டு வேதசாட்சியாய்‌ மரித்தார்‌. புனித யாகப்பர்‌ தலை துண்டிக்கப்பட்டு வேதசாட்சியானார்‌. பாத்தலோமியோ சாட்டையால்‌ அடித்துக்‌ கொல்லப்‌பட்டார்‌. முதல்‌ வேத்சாட்சியாய்‌ மரித்த முடியப்பர்‌ கற்களால்‌ எறிந்து கொல்லப்பட்டார்‌. புனித பிவிப்பு சிலுவையில்‌ அறையப்பட்டு மரித்தார்‌. சைமன்‌, யூதா-ததேயு இழுத்துச்‌ செல்லப்பட்டு இரத்தம்‌ சிந்தி மரித்தார்கள்‌. யோவான்‌ மட்டும்‌ அமைதியான முறையில்‌ மரித்தார்‌. இந்தியா வந்து உண்மைக்கும்‌. நீதிக்கும்‌ போராடிய தோமையார்‌ ஈட்டியால்‌ குத்தப்பட்டு இரத்தச்‌ சாட்சியானார்‌.' பன்னிரு சீடர்களும்‌ பல பாடுகள்‌ பட்டே மரித்‌தார்கள்‌. நற்செய்தி அறிவித்த மத்தேயு வாளினால்‌ வெட்டப்பட்டும்‌, புனித லூக்கா தூக்கிலிடப்பட்டும்‌, புனித மாற்கு, புனித ஜான்‌ (யோவான்‌) விசுவாசத்‌ தோடு வாழ்ந்து இறைவார்த்தையைப்‌ போதித்து பரிசுத்த உள்ளத்தோடுமரித்தார்கள்‌. “என்‌ அன்பில்‌ நிலைத்திருங்கள்‌” (யோவா 15:9) என்ற வார்த்‌ தையின்படி இயேசுவின்‌ அன்பில்‌ நிலைத்திருந்து அவருக்காக மரித்த இவர்கள்‌ புனிதர்‌ என்று போற்றப்படுகிறார்கள்‌. இயேசுவின்‌ பணி என்றும்‌ தொடர்ந்திட... கல்விப்பணி, மருத்துவப்பணி, ஆற்றுப்படுத்தல்‌, சிறை சந்திப்பு இவற்றின்‌ மூலமாகவும்‌, முதியோர்‌ ' விடுதி, அனாதை இல்லம்‌ என்று பல்வேறு பணிகள்‌ மூலமும்‌ இயேசுவின்‌ அன்பை எல்லோரும்‌ சுவைத்‌திட பல சபைகளை உருவாக்கி மரித்த புனிதர்கள்‌ பலர்‌ உண்டு. இயேசு சபையை உருவாக்கி கல்வி, இறை ஞானம்‌ பெற்றிட உழைத்த புனித இஞ்ஞாசியாரின்‌ வழியைப்‌ பின்பற்றி எண்ணற்றவர்‌ புனிதரானார்கள்‌. இந்தியா வந்து கோவா, ஜப்பானில்‌ போதித்து மரித்த சவேரியார்‌ இஞ்ஞாசியாரின்‌ வழித்தோன்றலே. ஏழை எளிய்வர்‌, முதியவர்‌ நலன்‌ பெற வின்சென்ட்‌ தே பால்‌ சபையை தோற்றுவித்தார்‌ ஓசானாம்‌. இறைவார்த்தையை வாழ்‌வாக்கி மரியாவின்‌ பக்தியை உலகறியச்‌ செய்த இரட்‌சகர்‌ சபையை தோற்றுவித்தார்‌ புனித விகோரி, இயற்கையில்‌ இறை அன்பு, இறை பராமரிப்பு உண்டு என்பதை உணர்ந்து, எளிமையே இறைவனின்‌ சிறந்த பண்பு என்று பணிவுடன்‌ வாழ கப்புச்சின்‌ சபையை தோற்றுவித்தார்‌ பிரான்சிஸ்‌ அசிசியார்‌. பாதை தடுமாறி திரியும்‌ இளையோரை ஆற்றுப்படுத்தி அன்பு காட்டி, தந்தைபோல்‌ அர வணைத்து, இறையன்பை இளையோர்‌ பெற்றிட புனித ஜான்‌ போஸ்கோ சலேசிய சபையை உருவாக்கினார்‌. அன்றும்‌ இன்றும்‌ நிறுவனப்‌ பொறுப்பேற்று நடத்துவது பெரும்‌ போராட்டமே. பணப்‌ பிரச்சனைகள்‌, மருத்துவ ரீதியாகத்‌ துன்பங்கள்‌ பல இருந்தபோதும்‌ இறைவனையே நம்பி பல சேவைகள்‌ செய்தார்கள்‌. “நீங்கள்‌ இறைவனிடம்‌ வேண்‌டும்போது நம்பிக்கையுடன்‌ கேட்பதை எல்லாம்‌. - பெற்றுக்கொள்வீர்கள்‌” (மத்‌ 21:22) என்று இடைவிடாது செபத்தில்‌ ஒன்றித்து, சபைகளை உருவாக்கி, அப்பணி தொடர அல்லும்‌ பகலும்‌ தியாகத்‌தோடு உழைத்து மரித்த புனிதர்களாகிய இவர்கள்‌ பெருமைக்குரியவர்கள்‌. “உன்னைக்‌ காக்கும்படி நான்‌ உன்னுடன்‌ இருக்கிறேன்‌” (எரே 18) என்ற இறைவாக்கின்படி சபைகளின்‌ வழியாக இறைப்‌பணி ஆற்றிய இவர்களும்‌ புனிதர்களே. இல்லறத்தில்‌ இணைந்தும்‌ புனிதரான பெண்கள்‌: அன்னை மரியாவே பொறுமை, தாழ்ச்சியின்‌ சிகரமாக, கடின உழைப்பால்‌ இறை திட்டத்தை ஏற்று செபத்தில்‌ அதிகம்‌ ஈடுபட்டு பல பெண்களுக்கு மாதிரியாக வாழ்ந்த புனிதப்‌ பெண்‌, நம்‌ எல்லோரின்‌ தாய்‌. புனிதமாய்‌ வாழ்ந்த மரியா எலிசபெத்திற்கு உதவிட தியாகத்தோடு சென்று எலிசபெத்தைச்‌ சந்தித்தார்‌. மரியாவின்‌ வாழ்த்‌ தொலி கேட்டு எலிசபெத்‌ வயிற்றிலிருந்த குழந்தை மகிழ்ச்சியால்‌ துள்ளிற்று. எலிசபெத்தும்‌ தூய ஆவியால்‌ ஆட்கொள்ளப்பட்டு "பெண்களுக்குள்‌ நீர்‌ ஆசி பெற்றவர்‌, உம்‌ வயிற்றில்‌ வளரும்‌ குழந்தையும்‌ ஆசி பெற்றதே: என்று மரியாவை வாழ்த்தினார்‌. எனவே, இவர்களின்‌ குழந்தைகள்‌ தூய ஆவியின்‌ அருள்‌ பெற்று புனிதமாய்‌ வாழ்ந்து, இறை சித்தப்படி வாழ்ந்து பிறரை புனிதப்‌ பாதையில்‌ நடத்தி புனிதராய்‌ வாழ வழிகாட்டிய உன்னத குழந்தைகள்‌ ஆனார்கள்‌. தாயின்‌ வளர்ப்பே இதற்குக்‌ காரணம்‌. இந்தப்‌ புனித தாய்மார்களைப்‌ போன்று புனிதமாய்‌ வாழ்ந்து தம்‌ பிள்ளைகளை புனிதப்‌ பாதையில்‌ வளர்த்த புனிதப்‌ பெண்கள்‌ பலர்‌ உண்டு. அவர்‌ களில்‌ சிலர்‌ அரசர்களை மணந்தும்‌ ஆடம்பரத்தில்‌ ஈடுபடாது தம்‌ கணவர்களின்‌ மனதையும்‌ மாற்றி புனிதமாய்‌ வாழ்ந்து, பிறர்நலனில்‌ அக்கறை காட்டி வாழ்ந்து, மரித்தவர்கள்‌ புனித எலிசபெத்‌ ஹங்கேரி, மார்கிரேட்‌ ஸ்காட்லாந்து, புனித எட்விச்‌ ஆகியோர்‌. புனித மோனிக்கா தன்‌ மகன்‌ மனம்‌ மாறிட இடைவிடாது செபத்தில்‌ ஈடுபட்டு மகனையும்‌ புனித . ராக்கினார்‌. புனித ரீட்டா, புனித பிரிஜிட்‌, கேத்தரின்‌ ஜெனிவா இவர்கள்‌ கணவரால்‌ பல பாடுகள்‌ பட்டா லும்‌ மனம்‌ சோர்ந்து போகாது பல நற்செயல்கள்‌ மூலம்‌ புனிதையானார்கள்‌. புனித ரீட்டா கணவரால்‌ பல பாடுகள்‌ பட்டபோதும்‌ அவரின்‌ குழந்தை கள்‌ ஆதரவு கொடுத்து விசுவாசத்தைக்‌ காத்தனர்‌. - நோய்பட்ட கணவரை நன்கு கவனித்து அவரின்‌ மர ணத்திற்குப்‌ பின்‌ பிளேக்‌ நோயால்‌ பாதிக்கப்பட்டோ க்கு உதவி இறையன்பில்‌ இணைந்தார்‌ புனித ரீட்டா. இல்லறமே இறையன்பிற்கு சாட்சி, புனிதத்‌ திற்கு முதற்படி என்பதற்கு இவர்களே சாட்சிகள்‌. இளமையில்‌ புனிதரான ஆண்களில்‌ சிலர்‌: புனித பங்கிராஸ்‌, புனித லாரன்ஸ்‌, புனித டாமினிக்‌ சாவியோ, புனித ஸ்தனிஸ்லாஸ்‌ போன்றோர்‌ உலகம்‌ முழுவதையும்‌ தனதாக்கிக்‌ கொண்டு தன்‌ ஆத்மாவையே இழப்பாரெனில்‌ அவருக்குக்‌ கிடைக்‌ கும்‌ பயன்‌ என்ன என்ற இறைவார்த்தையின்படி உலகத்தை வெறுத்து, ஆத்மா பரிசுத்தமாய்‌ இருக்க பாடுபட்டு, பல இளைஞர்களை நல்வழியில்‌ நடத்தி இரத்தம்‌ சிந்தி மரித்து புனிதரானார்கள்‌. புனித வியான்னி கல்வியறிவு குறைந்தவராயினும்‌ பல ஆத்மாக்கள்‌ பரிசுத்தமாய்‌ வாழ பாவசங்கீர்த்தனம்‌ மூலம்‌ ஆற்றுப்படுத்தி புனிதர்‌ ஆனார்‌. இவர்கள்‌ எல்லாம்‌ தன்னலத்தை துறந்து பிறர்‌ நலனில்‌ அக்‌ கறை காட்டி இறைவனிடம்‌ இடைவிடாது செபித்‌ தார்கள்‌. 'கேளுங்கள்‌ கொடுக்கப்படும்‌! என்பதன்படி இறைவனிடம்‌ வேண்டி நமது துன்பங்களில்‌ துணை நின்று நமக்காய்‌ பரிந்து பேசுவார்கள்‌. எனவே, புனிதர்களின்‌ வழியாய்‌ நம்‌ செபம்‌ கேட்‌ கப்பட்டு நாமும்‌ விசுவாசத்தில்‌ வளர வழிகாட்டிய புனிதர்களை தாய்‌ திருச்சபை பெருமையுடன்‌, மகிழ்வுடன்‌ போற்றி நவம்பர்‌ 1 இல்‌ சகல புனிதர்‌ களின்‌ திருவிழாவை சிறப்பாகக்‌ கொண்டாடுகிறது. புனிதர்களின்‌ உறவால்‌ நாமும்‌ புனிதராகி நம்‌ திருச்சபையும்‌ புனிதமாய்‌ இருக்க இறையன்பில்‌ வளர்ந்திட புனிதர்களின்‌ தோழமையில்‌ குடும்ப உறவை வளர்ப்போம்‌.
சுவிசேஷங்களின் படியான ஏசுவின் முதல் தரிசனம் எனக்கு 1956ல் கிட்டியது. எனது ஜெசூட் நண்பர் என்னை மதமாற்ற முயன்று, அந்த முயற்சியில் தோல்வியடைந்திருந்தார். பாட்னாவில் உள்ள மிஷன் தலைமையகத்திற்குத் திரும்பி வந்ததும், எங்களுக்கிடையில் நடந்த உரையாடல்: அவர் கேட்டார்: ‘ஏசு ஒரு அவதார புருஷர் என்று நீ நம்புகிறாயா?’ ‘ஆம், நம்புகிறேன்’, என்றேன் நான். ‘அவதார புருஷர் பொய் கூறக் கூடுமா?’ ‘கூடாது என்றுதான் கருதவேண்டும்.’ ‘ஏசு தான் ஒருவரே கடவுள் என்று கூறுகிறாரென்றால்?’ ‘அப்படிக் கூறியிருக்க முடியாது’. எனது நண்பர் உடனே புதிய ஏற்பாட்டை எடுத்து சுவிசேஷங்களிலிருந்து பல பத்திகளை வாசிக்க ஆரம்பித்தார். அவற்றில் பற்பல வாக்கியங்களில் ஏசு தான் ஒருவரே கடவுள் என்பதை மட்டுமல்ல, அவரது இந்த உரிமைக்கோரலை ஏற்காதவர்கள் அனைவரும் நரகக் குழியில் எரிவார்கள் என்றும் கூறியிருந்தார். ஏசு என்பவர் அவரை உயர்த்திப் பிடிக்கும் இந்துக்கள் நம்ப வைக்கப் பட்டிருப்பது போல ‘மலைப் பிரசங்கம்’ மட்டுமல்ல என்பதை ஒருவிதமான வலிமிகுந்த வியப்புடன் புரிந்து கொண்டேன். ஆண்டுகள் சென்றன. ஏசுவுடன் செலவழிக்க என்னிடம் நேரமிருக்கவில்லை. 1980களில் ராம் ஸ்வரூப் ஏகஇறை மதங்களைப் பற்றிய எனது புரிதலை அறிவார்ந்ததாகச் செய்ததற்குப் பின்னர், நான் மீண்டும் ஏசுவின் பக்கம் கவனம் செலுத்தினேன். அப்போது தான் சுவிசேஷங்களை முழுமையாக வாசித்தேன். திகிலடைந்தேன் என்றே கூறவேண்டும். கிறிஸ்தவத்தின் வரலாறு ஏன் இப்படி இருக்கிறது என்பது அப்போதுதான் புலப்பட்டது. விஷத்தின் ஊற்று சுவிசேஷங்களில் காணும் ஏசுவிடத்திலேயேதான் உள்ளது என்பது புரிந்தது. தொடர்ந்து கற்றேன். சில வருடங்கள் முன்பு கிறிஸ்தவ மிஷநரிகளின் அச்சுறுத்தல் குறித்து ஒரு காந்திய நண்பருடன் பேசிக்கொண்டிருந்தேன். அவர்கள் வஞ்சனையும் கபடமும் கொண்டவர்கள் என்பதில் அவர் என்னுடன் உடன்பட்டார். நாம் மிஷினரிகளை சமாளிக்க வேண்டும் என்றால் ஏசுவைப் பற்றிய முழு உண்மையை மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும் என்று நான் கூறினேன். அவர் நடுங்குவது தெரிந்தது. தொண்டை அடைக்க, உணர்ச்சி கலந்த குரலில், ‘ஸீதாபாயி, ஜீசஸ் கோ குச் மத் கஹியே’ (சீதா அண்ணா, ஏசுவைப் பற்றி மட்டும் எதுவும் சொல்லிவிடாதீர்கள்) என்றார். ‘நீங்கள் சுவிசேஷங்களைப் படித்திருக்கிறீர்களா’ என்று அவரிடம் கேட்டேன். அவர் எரிச்சலடைந்தார். ‘எதற்கு இந்தத் தனிப்பட்ட கேள்வி?’ என்று திருப்பியடித்தார். அந்தப் பேச்சை அப்போதே நிறுத்தவேண்டியதாயிற்று. ஒவ்வொரு முறையும் கருத்துப் பிடிவாதம் கொண்ட நபர்களிடம் ஒரு குறிப்பிட்ட விஷயத்தைப் பற்றிய அவர்களது கருத்துக்கான அடிப்படை என்ன என்று நான் கேட்கும்போது, நான் தனிப்பட்ட விஷயத்தில் தலையிடுகிறேன் என்று குற்றம் சாட்டப் படுகிறேன். ‘ஒரு கழுதையாக இருப்பதன் சாதகங்கள்’ (Advantages of Being an Ass) என்று ஒரு கட்டுரை எழுதலாமா என்று யோசிக்கிறேன். இப்போது அந்தத் தடையைத் தாண்டி விட்டேன். எனது காந்திய நண்பர் இதை எப்படி எடுத்துக்கொள்வார் என்று தெரியவில்லை. முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் நடந்துகொள்ளும் விதத்தைப் பற்றியதிலேயே முழுக் கவனத்தையும் செலுத்தி வந்த இந்துக்கள், அத்தகைய நடத்தையை அவர்களிடம் உருவாக்கும் சமய நம்பிக்கைக் கட்டுமானங்கள் (belief system) மீது எந்தக் கவனமும் செலுத்தவில்லை என்பதே உண்மை. இது குறித்துப் பல வருடங்களாக யோசித்திருக்கிறேன். நாம் கிறிஸ்தவ மதமாற்ற மிஷநரிகளை ஆட்சேபிக்கிறோம், ஆனால் கிறிஸ்தவத்தைக் குறித்தும் அதன் கடவுளான ஏசுவைக் குறித்துப் பேச மறுக்கிறோம். நாம் இஸ்லாமிய பயங்கரவாதத்தை ஆட்சேபிக்கிறோம், ஆனால் இஸ்லாம் குறித்தும் அதன் இறைத்தூதர் குறித்தும் எதையும் பார்க்கக் கூட மறுக்கிறோம். இந்துக்களின் இந்தப் பழக்கம் சிறிதும் அறிவுக்கும் தர்க்கத்துக்கும் பொருந்தக் கூடியதாக இல்லை. சொல்லப் போனால், நாம் இதைவிட ஒருபடி மேலே செல்கிறோம். நாம் கிறிஸ்தவ மிஷனரிகளிடம் அவர்கள் செய்துகொண்டிருப்பதைச் செய்யவேண்டாம் என்று ஏசுவின் பெயரால் கோரிக்கை விடுக்கிறோம். நாம் இஸ்லாமியர்களிடம் அவர்கள் செய்துகொண்டிருப்பதைச் செய்யவேண்டாம் என்று முகமதுவின் பெயரால் கோரிக்கை விடுக்கிறோம். இந்த செயல்முறையில், நாம் ஒரு ‘உண்மையான’ ஏசுவையும், ‘உண்மையான’ கிறிஸ்தவத்தையும் கண்டுபிடித்திருக்கிறோம். அதே போல, ஒரு ‘உண்மையான’ முகமதுவையும் ஒரு ‘உண்மையான’ இஸ்லாத்தையும் கூட உருவாக்கிவிட்டிருக்கிறோம். மஷினரிகளும் முல்லாக்களும் நமது கண்டுபிடிப்புகளைப் பார்த்து சிரிக்கிறார்கள். சிரித்துக் கொண்டே நமது அறிவுப்பலவீனத்தை அவர்களுக்கேற்ற வகையில் பயன்படுத்திக் கொண்டு தங்கள் காரியங்களைத் தொடர்ந்து வழக்கம் போல் செய்துகொண்டிருக்கிறார்கள். இத்தனை காலமாக ‘வகுப்புவாத’ பிரச்சினைகளை நாம் ஏன் தீர்க்க முடியவில்லை என்றால் இதுதான் காரணம். நமது சொந்த மக்களான இந்தியக் கிறிஸ்தவர்களும் இந்திய முஸ்லிம்களும் ஏன் கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாத்தின் வசியத்திற்கு ஆட்பட்ட பிறகு நம்மிடமிருந்து முற்றிலும் அன்னியப் பட்டுப் போகவேண்டும் என்பதை அறிந்துகொள்வதற்கு நாம் எந்த முயற்சியும் செய்யவில்லை. தங்களைத் துன்புறுத்தும் ஒரு சக்திவாய்ந்த கொடுமைக்காரனை மென்மைப் படுத்துவதற்கு வேறு எந்த வழியும் தெரியாதபோது, பலவீனர்கள் அவனது நாயகர்களையும் அவனது மதத்தையும் புகழ்வதற்கான அவசியம் ஏற்படுகிறது என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. இஸ்லாம், கிறிஸ்தவம் ஆகிய இரண்டு மதங்களின் விஷயத்திலும் இத்தகைய நெருக்கடி நிலையை இந்துக்கள் அனுபவித்திருக்கிறார்கள். ஆனால் அதேவிதமான மனநிலை அப்படியே தொடரவேண்டும் என்பதற்கு ஒரு அவசியமுமில்லை. ‘ஆபத்துக்கால தர்மம்’ என்ற நடைமுறையை ‘என்றென்றைக்குமான (சனாதன) தர்மம்’ என்பதாக மாற்றும் தவறை இந்துக்கள் ஒருபோதும் செய்யக் கூடாது. * சீதாராம் கோயல் Jesus Christ: An Atrifice for Aggression என்ற இந்த முக்கியமான நூல் ஏசு கிறிஸ்து என்னும் கருத்தாக்கம் ஒரு ஆக்கிரமிப்புக் கருவி அன்றி வேறில்லை என்பதை முன்வைக்கிறது. வரலாற்றுச் சான்றுகள் காட்டும் ஏசு, புனைவுகள் மற்றும் கற்பனைகளின் மூலம் கட்டி எழுப்பட்டுள்ள ஏசு, சுவிசேஷங்களின் மூலம் விசுவாசத்திற்குரியவராக முன்னிறுத்தப் படும் ஏசு என்று மூன்று கோணங்களில் ஏசுவைப் பற்றிய ஆதாரபூர்வமான ஆய்வுகளையும், நவீன காலகட்டத்தில் மேற்குலகில் கிறிஸ்தவத்தின் அடித்தளம் முழுமையாக வீழ்ந்து நொறுங்குவதையும் 120 பக்கங்களே கொண்ட இந்த சிறிய நூலில் கச்சிதமாக விவரிக்கிறார் கோயல். Jesus is Junk என்று தலைப்பிடப் பட்டுள்ள இறுதி அத்தியாயத்தைத் தொடர்ந்து, சில மேற்கத்திய அறிஞர்களுடன் அவர் நடத்திய கடித உரையாடல்களும் உள்ளன. இந்த நூலை இணையத்தில் இங்கு வாசிக்கலாம் – http://bit.ly/jc-srgoel சீதாராம் கோயல் (1921-2003) சுதந்திர இந்தியாவின் ஒரு முக்கியமான வரலாற்று அறிஞர் மற்றும் சமூக சிந்தனையாளர். 1940களில் தீவிர கம்யூனிச ஆதரளவாக இருந்து 50களில் சோவியத் அரசின் கோரங்கள் பற்றி அறிந்து, அதைத் துறந்து இந்து தர்மம், இந்திய தேசியம் என்ற தன் வேர்களுக்குத் திரும்பினார். இந்து சமுதாய, அரசியல் பிரச்சினைகள், கம்யூனிசத்தின் கொடூரங்கள், கிறிஸ்தவ மதப் பரவல் மற்றும் மிஷினரிகள், கிறிஸ்தவ மத அடிப்படைகளைத் தகர்க்கும் மேற்கத்திய அறிவியக்கம், இந்தியாவில் இஸ்லாமிய ஆக்கிரமிப்பின் வரலாறு மற்றும் அதில் இழையோடும் ஜிகாத் வன்முறைக் கோட்பாடு, இவற்றைப் பற்றிய ஆழமான ஆய்வுகள், வரலாற்று உண்மைகளை வெளிக் கொணரும் பல முக்கிய நூல்களை அவர் எழுதியும், தொகுத்தளித்தும் உள்ளார். ஆற்றொழுக்குப் போன்று, அதே சமயம் கூர்மை தெறிக்கும் ஆங்கிலத்தில் 35க்கும் மேற்பட்ட நூல்களையும், குறிப்பிடத்தக்க ஹிந்தி மொழியாக்கங்களையும், பத்திரிகைக் கட்டுரைகளையும் அவர் படைத்திருக்கிறார். கோயலின் இஸ்லாம் தொடர்பான சில வரலாற்று ஆய்வு நூல்களைத் தடைசெய்யுமாறு அராஜக கோரிக்கைகள் எழுந்தன. இரண்டு நூல்கள் குறுகிய காலத்திற்கு தடை செய்யப் பட்டு, பின்னர் நீதிமன்றக் குறுக்கீட்டால் தடை விலக்கப் பட்டது. நேருவின் அரசியல் கொள்கைகள், எமர்ஜென்சி, போலி மதச்சார்பின்மை இவை பற்றிய மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்த சீதாராம் கோயல், மறைந்த அரசியல் தலைவர்களான ஜெயப்ரகாஷ் நாராயண், கே.ஆர்.மல்கானி மற்றும் காந்தியவாதி தரம்பால் ஆகியாரின் நெருங்கிய நண்பரும், உடன் பணியாற்றியவரும் கூட. மறைந்த தத்துவ சிந்தனையாளர் ராம் ஸ்வரூப் தொடங்கிய வாய்ஸ் ஆஃப் இந்தியா என்னும் இலாப நோக்கற்ற பதிப்பகத்தைத் தன் இறுதி நாள் வரை நடத்தி வந்த இந்த கர்மயோகி இன்று இந்து எழுச்சி பற்றிய விமர்சனங்களுக்காக அதிகம் கவனிக்கப்படும் கொய்ன்ராட் எல்ஸ்ட், டாக்டர் டேவிட் ஃப்ராலி, அருண் ஷோரி, சுபாஷ் கக் போன்றவர்களுக்கு முன்னோடியாகவும், வழிகாட்டியாகவும், பதிப்பாளராகவும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
🛕 நல்லவனா நடிக்கிறதுலேயே என்னோட ஒட்டுமொத்த கெட்டிகாரத்தனமும் போயிடுமோனு கவலைப்பட ஆரம்பிச்சாக்கூட போதும். கொஞ்சம் கொஞ்சமா உங்களுக்குள்ளே ஒரு நல்ல மாற்றம் வரும். ஆன்ம தேடல் , ரொம்ப அவசியம். வாழ்க்கை முழுவதுமே ஒரு நடிப்புலேயே போயிடப்போகுது.. சீக்கிரம் உஷாராகுங்க.. 🛕 நல்லவன்கிற போர்வை போர்த்திதான் எல்லாருமே நடமாடுறாங்க. சந்தர்ப்பம் அமையாதானு தப்பு செய்ய மனசு ஏங்கும். மாட்ட மாட்டோம்னு தெரிஞ்சா தப்பு செய்வோம். அதுக்கு அப்புறம், கொஞ்ச நாள் கழிச்சு – அந்த தப்புக்கு , நமக்கு வேதனை ஆரம்பிக்கும். இதுதான் வாழ்க்கை. இதை மாயை அப்படின்னு சித்தர்கள் சொல்றாங்க. 🛕 கடவுள் நிஜமாகவே இருக்கிறாரா.. இல்லையா..? இந்த குழப்பம் பெரும்பாலான மக்களுக்கு இருக்கு. ஒருவேளை , அவர் இருந்து , நாம அவரை கும்பிட்டு, அவர் அருள் கிடைச்சாப் போதுமே, நம்ம கஷ்டம் எல்லாம் தீர்ந்துடாதா.. இப்படி நினைச்சுத்தான், கோவில்கள்ளே இன்னைக்கு கூட்டம் வருது. 🛕 கடவுளை பார்த்ததா சொல்றவங்க – கதை எல்லாம் , நம்பவும் முடியலை , நம்பாம இருக்கவும் முடியலை ரகம் தான். ஆனா, இப்போ ரொம்ப சமீபமா – ஐந்து , ஆறு நூற்றாண்டுகள் முன்னாலே வாழ்ந்த அருணகிரிநாதர் , சென்ற நூற்றாண்டு பட்டினத்தார் , வள்ளலார் , ராமகிருஷ்ணர் , பாம்பன் சுவாமிகள் – இப்படி மகான்கள் கடவுளை தரிசிச்சு இருக்கிறாங்க.. அவங்க பொய் சொல்லி , மக்களை ஏமாத்தணும்னு அவசியமே இல்லை. அதனாலே , உங்க பக்திமேலே நம்பிக்கை வைங்க. உங்களுக்கும் கடவுள் அருள் கிட்டும். 🛕 அப்படி, இறைவனை நேரில் தரிசித்த அருணகிரிநாதரைப் பற்றி ஒரு ஸ்பெஷல் கட்டுரை இன்னைக்கு. ஒரு பழைய புத்தகத்திலேருந்து எடுத்தது. அப்படியே உங்க கிட்டே பகிர்ந்துக்கிறேன். இன்னைக்கு இருக்கிற ஒவ்வொரு சராசரி மனுஷனுக்கும் இருக்கிற உணர்வுகள் உள்ள ஒரு மனுஷனுக்கு – முருகன் அருள் எப்படி கிடைச்சதுன்னு பாருங்க.. அருணகிரிநாதர் வரலாறு 🛕 அருணகிரிநாதர், கி.பி. 15 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்து, முருகக் கடவுள் மீது பாடல்கள் எழுதி புகழ் பெற்ற அருளாளர். இவர் சென்னைக்கு அருகே உள்ள திருவண்ணாமலையில் பிறந்தார். இவர் தமிழ் மொழி, வடமொழி ஆகிய இரு மொழிகளிலும் புலமை பெற்றவர். இவரைப்போல் ஆயிரக்கணக்கான பல்வேறு இசைச் சந்தங்களிலே பாடியவர் வேறு யாரும் இல்லை என்றே சொல்லலாம். கருத்தாழமும், சொல்லழகும், இசைத்தாளச் செறிவும் நிறைந்தது, இவர் பாடல்கள். இவர் எழுதிய திருப்புகழில் 1307 இசைப்பாடல்கள் உள்ளன. இவற்றுள் 1088க்கும் மேற்பட்ட சந்த வேறுபாடுகள் உள்ளன என்று கணித்து இருக்கிறார்கள். 🛕 இவருடைய நூல்கள் தேவாரம், திருவாசகம் போல் மந்திர நூலாகவும், நாள்தோறும் இறைவனைப் போற்றிப் புகழ்பாடும் நூலாகவும் பத்தி வழி பின்பற்றுவோர் கொள்ளுகின்றனர். 🛕 இவருக்கு ஒரு மூத்த சகோதரி இருந்தாள். திருமணம் செய்து கொள்ளாமல் தம்பியின் வாழ்க்கையையே நினைத்துத் தம்பிக்குச் சேவை செய்து வந்ததாய்ச் சொல்லுவதுண்டு. அருணகிரிநாதரின் தமக்கையார் அருணகிரிநாதரைச் சிறு வயதில் இருந்து மிகவும் செல்லம் கொடுத்து வளர்த்து வந்தார். இவர் பெண்ணாசை கொண்டவராய் இருக்கிறார் என்பது தெரிந்தும் அந்த அம்மையார் நாளாவட்டத்தில் இவர் திருந்துவார் என எதிர்பார்த்தார். ஏனெனில் அருணகிரி இளமையிலே நல்ல கல்வி கற்றுத் தமிழில் உள்ள இலக்கிய, இலக்கணங்களைக் கற்றுத் தேர்ந்திருந்தார். 🛕 உரிய வயதில் திருமணமும் ஆகியது. ஆனாலும் இவருக்கு முற்பிறவியின் பயனாலோ என்னவோ, பெண்களின் தொடர்பு அதிகமாய் இருந்தது. வீட்டில் கட்டிய மனைவி அழகியாய் இருந்தும், வெளியில் பரத்தையரிடமே உள்ளத்தைப் பறிகொடுத்ததோடு அல்லாமல், கொஞ்சம் கொஞ்சமாய்ச் சொத்தையும் இழந்து வந்தார். எந்நேரமும் காமத்திலே மூழ்கித் திளைத்ததன் விளைவாய் சொத்தை இழந்ததோடு அல்லாமல், பெருநோயும் வந்து சேர்ந்தது இவருக்கு. 🛕 என்றாலும் அந்நிலையிலும் இவருக்குப் பெண்ணின் அண்மை தேவைப்பட, கட்டிய மனைவியைக் கட்டி அணைக்க முற்பட்டவரை மனைவி வெறுத்து ஒதுக்க, கோபத்துடனும், வருத்தத்துடனும் இவரிடம் சொல்ல தன் தீய செயல்களால் ஏற்பட்ட விளைவு குடும்பத்தையே உருக்குலைத்ததை எண்ணி இவர் வீட்டை விட்டே வெளியேறிக் கால் போன போக்கில் சென்றார். அப்போது ஒரு பெரியவர் இவரைக் கண்ணுற்றார். அவர் தான் அருணாசலேஸ்வரர் என்றும் சொல்லுகின்றனர். குமரக் கடவுள் என்றும் சொல்லுவதுண்டு. எது எப்படி இருந்தாலும் அருணகிரிநாதருக்கு அருட்பேராற்றல் சித்திக்கும் நேரம் நெருங்கி விட்டது. 🛕 அந்தப் பெரியவர் அவருக்கு, “குன்றுதோறாடும் குமரக் கடவுளைப் பற்றிச் சொல்லி, அந்த ஆறெழுத்து மந்திரத்தையும், அதன் உட்பொருளையும், சரவணபவ என்னும் சொல்லின் தத்துவத்தையும் விளக்கி, குமரனைப் போற்றிப் பெருவாழ்வு வாழச் சொல்லி ஆசீர்வாதம் செய்தார்”. என்றாலும் குழப்பத்தோடு இருந்த அருணகிரி சரியாகச் செவி சாய்த்தாரில்லை. ஒருபக்கம் பெரியவரின் பேச்சு. மறுபக்கம் குழப்பமான மனது. சற்றுத் தெளிவடைகிறது மனம் என நினைத்தால் மீண்டும், மீண்டும் குழப்பம். முருகனை நினைத்து தியானத்தில் அமர்ந்தால் மனம் ஈடுபட மறுக்கிறது. அமைதி வரவில்லை. என்ன செய்யலாம்? குழப்பத்திலும், கவலையிலும் செய்வதறியாது தவித்த அருணகிரி கடைசியில் ஒரு முடிவுக்கு வந்தார். 🛕 திருவண்ணாமலைக் கோபுர வாயிலில் தவம் இருந்த அருணகிரியார் அந்தக் கோபுரத்தின் மேலே ஏறி அதிலிருந்து கீழே குதித்து தம் உயிரை விட முற்பட்டார். அவர் கீழே குதித்தபோது இரு கரங்கள் அவரைத் தாங்கின. அந்தக் கரங்களுக்குச் சொந்தக்காரர் வேறு யாரும் இல்லை. குன்றுதோறாடும் குமரனே ஆகும். தன் கைகளால் அவரைத் தாங்கி, “அருணகிரி! நில்!” என்றும் சொன்னார். 🛕 திகைத்த அருணகிரி தம்மைக் காப்பாற்றியது யாரோ எனப் பார்க்க வடிவேலவன் தன் திருக்கோலத்தைக் காட்டி அருளினான். மயில்வாகனனின் தரிசனம் கிடைத்த அருணகிரி வியப்பின் உச்சியிலிருந்து மீளாமல் தவிக்க, முருகன் அவரை, “அருணகிரிநாதரே!” என அழைத்துத் தம் வேலால் அவர் நாவிலே “சரவணபவ” என்னும் ஆறெழுத்து மந்திரத்தைப் பொறித்து, யோக மார்க்கங்களும், மெய்ஞ்ஞானமும் அவருக்குக் கைவரும்படியாக அருளினார். சித்தம் கலங்கிய நிலையில் இருந்த அருணகிரியாரின் சித்தம் தெளிந்தது. 🛕 பிரணவ மந்திர உபதேசத்தை நேரடியாக முருகனிடமிருந்தே பெற்ற இவர் வள்ளி மணாளனை இரு கரம் கூப்பித் தொழுதார். அவனோ, “அருணகிரி, இந்தப் பிறவியில் இன்னும் செய்யவேண்டியவை நிறைய உள்ளன உனக்கு. ஆகையால் இம்மையில் எம்மைப் பாடுவாயாக. பாடிப் பணிந்து பின்னர் எம்மிடம் வந்து சேருவாய்.” என்று சொல்ல, கந்தனின் கட்டளையால் மனம் மகிழ்ந்தாலும், பாடல் புனையும் வழியே அறியாத தாம் எவ்விதம் கந்தனைப் பாடுவது எனக் கலங்கினார். கந்தவேளோ, “யாமிருக்க பயமேன்? அஞ்சேல்!” என்று சொல்லிவிட்டு, “முத்தைத் தரு பத்தித் திருநகை” என எடுத்துக் கொடுத்துவிட்டு மறைந்தான். 🛕 கந்தன் வந்து உபதேசம் செய்து சென்றபின்னரும் அருணகிரியாரைச் சோதனை விடவில்லை. திருவண்ணாமலை ஆலயத்தின் இளையனார் சந்நிதியில் பெரும்பாலும் மோனத் தவம் செய்து வந்தார் அருணகிரி. தவம் கலைந்த வேளைகளில் சந்தப் பாடல்களை மனம் உருகிப் பாடிவந்தார். இவரின் இந்தப் பாடல்கள் யோகக் கலையை ஒட்டி அமைந்தவை. பரிபூரண யோக ஞானம் கைவரப் பெற்றவர்களுக்கு மட்டுமே இந்தப் பாடல்களின் உட்பொருள் புரியும். 🛕 அப்போது திருவண்ணாமலையை ஆண்டு வந்தவன் விஜயநகர வம்சத்தைச் சேர்ந்த பிரபுடதேவராயன் என்னும் மன்னன். தெய்வ பக்தி மிகுந்த அவன் அருணகிரியாரைப் பற்றியும் அவர்க்கு நேர்ந்த அனுபவங்கள் பற்றியும் அறிந்து கொண்டான். அருணகிரியாரைப் பணிந்து தனக்கும் அவருக்குக் கிடைத்த பாக்கியங்கள் கிடைக்குமாறு செய்யவேண்டும் என வேண்டிக் கேட்க, அருணகிரிக்கும், அரசனுக்கும் நட்பு முகிழ்ந்து மணம் வீசிப் பரவலாயிற்று. 🛕 அந்த நட்பின் மணமானது மன்னனிடம் ஆஸ்தான பண்டிதன் ஆன சம்பந்தாண்டானைப் போய்ச் சேர்ந்தது. தேவி பக்தன் ஆன அவன் தேவிகுமாரனைப் பணிந்து வந்த அருணகிரியிடம் ஏற்கெனவே பொறாமை கொண்டிருந்தான். இப்போது மன்னனும் அருணகிரியைப் பணிந்து அவர் சீடர் ஆக முயல்வதைக் கண்டதும் மன்னனைத் தடுக்க எண்ணம் கொண்டான். “மன்னா, யாம் உம் நெருங்கிய நண்பன். உம் நன்மையே நாடுபவர். உமக்கு நல்லதே செய்ய நினைக்கிறோம். அருணகிரி பற்றி நீர் சரிவர அறியாமல் அவனிடம் நட்புக் கொண்டுள்ளீர். வேண்டாம் இந்த நட்பு. பரத்தையரிடமே தஞ்சம் எனக் கிடந்தான் அருணகிரி. உற்றார், உறவினர் கைவிட்டனர். அத்தகைய பெருநோய் வந்திருந்தது அவனுக்கு. ஏதோ மாயவித்தையால் இப்போது மறைந்திருக்கலாம். சித்துவேலைகளை எவ்வாறோ கற்றுக் கொண்டு, முருகன் நேரில் வந்தான், எனக்குச் சொல்லிக் கொடுத்தான், நான் முருகனுக்கு அடிமை, என்று சொல்லித் திரிகின்றான். நம்பவேண்டாம் அவன் பேச்சை!” என்று சொன்னான். 🛕 மன்னரோ, அருணகிரிநாதரின் ஆன்மபலத்தையும், அவரின் பக்தியையும், யோகசக்தியையும் நன்கு உணர்ந்துவிட்டார். அருணகிரியின் செந்தமிழ்ப் பாக்களும், அதன் சந்தங்களும் அவரைப் பெரிதும் கவர்ந்திருந்தன. சம்பந்தாண்டானிடம், “நீர் பெரிய தேவி உபாசகர் என்பதை நாம் அறிவோம். அருணகிரி பரிசுத்தமான யோகி. முருகன் அவரை உண்மையாகவே ஆட்கொண்டதோடு அல்லாமல், பாடல் பாடவும் அடியெடுத்துக் கொடுத்துள்ளான். அவரின் கடந்த காலவாழ்க்கை எவ்விதம் இருந்தாலும் இப்போது அவர் வாழ்வது பரிசுத்தமான துறவு வாழ்க்கை. முருகன் அருணகிரியை ஆட்கொள்ளவில்லை என்பதை உம்மால் எவ்விதம் நிரூபிக்கமுடியும்?” என்று கேட்டான் மன்னன். 🛕 சம்பந்தாண்டான் இது தான் சமயம் என சாமர்த்தியமாக , “மன்னா, தன்னை முருகனடிமை என்று சொல்லிக் கொண்டிருக்கும் அந்த அருணகிரியை அழையுங்கள். தேவி உபாசகன் ஆன நான் என் பக்தியால் அதன் சக்தியால் அந்தத் தேவியை இங்கே தோன்றச் செய்கிறேன். அதேபோல் அருணகிரியும் தன் பக்தியால் அந்த முருகனைத் தோன்றச் செய்யவேண்டும். தோல்வி அடைந்தால் ஊரை விட்டே ஓடவேண்டும். சம்மதமா?” என்று சவால் விட்டான். மன்னனும் நமக்கென்ன? தேவி தரிசனம் ஒருபக்கம், இன்னொரு பக்கம் முருகன் தரிசனம். சம்மதமே என்று சொன்னான் மன்னன். குறிப்பிட்ட நாளும் வந்தது. அருணகிரிநாதருக்கும் விஷயம் சொல்லப்பட்டது. என் முருகன், என் அப்பன் என்னைக் கைவிட மாட்டான் என்ற பூரண நம்பிக்கையுடன் அவரும் சம்மதம் சொல்லிவிட்டார். மந்திர, தந்திரங்களில் தேர்ந்த சம்பந்தாண்டான் தன் தந்திர வித்தையால் தேவியைப் போன்ற தோற்றம் உண்டாக்கமுடியும் என்ற நம்பிக்கையில் இருந்தான். ஊரெங்கும் செய்தி பரவி அனைவரும் கூடிவிட்டனர். 🛕 தேவி உபாசகன் ஆன சம்பந்தாண்டான் தான் வழிபடும் தேவியைக் குறித்துத் துதிகள் பல செய்து அவளைக் காட்சி தருமாறு வேண்டிக் கொண்டான். கொஞ்சம் ஆணவத்துடனேயே கட்டளை போல் சொல்ல அவன் ஆணவத்தால் கோபம் கொண்ட தேவி தோன்றவே இல்லை. கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. சம்பந்தாண்டானின் தோல்வி உறுதியானது. அனைவரும் அருணகிரியாரை மிகுந்த ஆவலுடன் நோக்கினார்கள். 🛕 அருணகிரியாரோ கந்தவேளை மனதில் தியானித்துப் பின்னர் அருணாசலேஸ்வரர் ஆலயத்தின் வடக்குப் பக்கம் இருக்கும் மண்டபத்தின் வடகீழ்த் தம்பத்தில் முருகன் காட்சி அளிக்கும்படி வேண்டிக் கொள்வதாயும், இறைவன் திருவருளால் காட்சி கிடைக்கும் என்றும் சொல்லிவிட்டுக் கோவிலை நோக்கி நடக்கலானார். அனைவரும் அவரைப் பின் தொடர்ந்து சென்றார்கள். பக்திப் பரவசத்துடன் மனமுருகி, மணிரெங்கு என்று ஆரம்பிக்கும் திருப்புகழைப் பாட ஆரம்பித்தார். பாடி முடித்ததுதான் தாமதம், பேரொளி ஒன்று அங்கே அனைவரும் பார்க்கும் வண்ணம் தோன்றி மறைய, கூடி இருந்த கூட்டம் பக்திப் பரவசத்தில் ஆனந்தக் கூத்தாடியது. சம்பந்தாண்டான் அருணகிரியார் காலி விழுந்து மன்னிப்பு கோரினான். சம்பந்தாண்டனை மன்னித்து விட்டு, மன்னனையும் சம்பந்தாண்டனை மன்னித்து விடுமாறு கேட்டுக் கொண்டார்.
பயணி (passenger) என்ற சொல் ஓர் உந்தில் பயணம் செய்யும் நபரைக் குறிக்கிறது. இது வண்டி ஓட்டுநரையும் வண்டியில் பணி புரிபவரையும் குறிக்காது. இரண்டு வகைகளில் இந்தச் சொல் பயன்படுத்தப்படுகிறது: முதலாவதாக ஓர் தானுந்து அல்லது சிற்றூர்திகளில் பயணிப்பவரைக் குறிக்கும். இந்த ஊர்திகளில் பயணிகள் தங்கள் பயணத்திற்கு கட்டணம் செலுத்தியோ செலுத்தாமலோ பயணம் செய்பவராக இருப்பார்கள். இரண்டாவதாக தங்கள் பயணத்திற்காக கட்டணம் செலுத்தி பேருந்துகள், தொடர்வண்டிகள், வானூர்திகள், மற்றும் கப்பல்களில் பயணம் மேற்கொள்பவர்களைக் குறிப்பதாகும். இவ்வகை ஊர்திகளில் பயணிக்கும் பணியாளர்கள் பயணிகளாக கருதப்படுவதில்லை. பேருந்து ஒன்றில் ஏறுகின்ற பயணிகள். பெரும்பாலான நாடுகளில் இப்பயணங்களை நடத்தும் நிறுவனங்களுக்கு தங்கள் ஊர்திகளில் பயணிக்கும் பயணிகளுக்கு கொடுக்க வேண்டிய வசதிகள் குறித்து சட்ட கட்டுப்பாடுகள் உண்டு.
சென்றவாரம் டெல்லியில் 20 அடி ஆழமுள்ள செப்டிங் டாங்கில் இறங்கி சுத்தம் செய்யும்போது அனில் என்ற துப்புரவுத் தொழிலாளி இறந்துபோனார். வறுமையான நிலையில் இருந்த அனிலின் குடும்பத்தினர் அடக்கம் செய்யக்கூட பணமின்றித் தவித்தனர். இதை ஸ்டேடஸாக ஆன்லைனில் ஒருவர் வெளியிட, விஷயம் நாடு முழுக்க வைரலானது. அடுத்த ஒரே நாளில் இந்தியா முழுவதிலுமிருந்து, அனிலின் குடும்பத்திற்கு 50 லட்ச ரூபாய் வரை உதவிகள் குவிந்துவிட்டன. அன்பே சிவம்! 1972க்குப் பிறகு நிலாவுக்கு யாருமே சென்றதில்லை. 46 ஆண்டுகளுக்கு பிறகு நிலாவுக்கு சுற்றுலாப் பயணிகளை அழைத்துச் செல்லவிருக்கிறது ‘ஸ்பேஸ் எக்ஸ்’ நிறுவனம். இந்தப் பயணத்தில் இடம்பெறப்போகிற முதல் நபர் ஜப்பானிய கோடீஸ்வரரான யுசாக்கு மேசாவா. திட்டமிட்டபடி எல்லாம் நடந்தால் 2023க்குள் அவர் நிலவுக்குக் கிளம்பிவிடுவார். தன்னோடு எட்டு கலைஞர்கள் மற்றும் எழுத்தாளர்களையும் அழைத்துச்செல்லவிருக்கிறார். உலகில் இருக்கிற யார்வேண்டுமானாலும் யுசாக்குவிடம் விண்ணப்பிக்கலாமாம். எழுத்தாளர்கள் ப்ளீஸ் நோட். அமிதாப் பச்சன், அமீர்கான், காத்ரீனா கயீஃப், ஜாக்கி ஷராஃப் எனப் பெரிய நட்சத்திரங்கள் கூட்டணி சேரும் படம் ‘தி தக்ஸ் ஆப் இந்தோஸ்தான்’. 1839ல் எழுதப்பட்ட ‘தி கன்ஃபெஷன்ஸ் ஆப் எ தக்’ என்ற நாவலை அடிப்படையாகக்கொண்டு பிரமாண்டமாக இப்படம் எடுக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி எதிர்பார்ப்பை எகிறவைத்திருக்கிறது. அமீர்கானை எப்ப காட்டுவீங்க? த்ரிஷா அமெரிக்கா சென்றுள்ளார். ஸ்கூபா டைவிங், பாரா கிளைடிங் என அட்வென்ச்சர் பயணம் இது. இந்தப் பயணத்தில் டால்பினைக் கட்டிக்கொண்டு முத்தமிடும் படத்தைத் தன் சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். பீட்டாவில் உறுப்பினராக இருக்கும் ஒருவர் இப்படி டால்பினை சித்ரவதை செய்யலாமா என வறுத்தெடுத்துவிட்டார்கள் விலங்குநேசர்கள். த்ரிஷாவுக்கு வந்த சோதனை! வடகிழக்கு மாநிலங்களில் உள்ள சில அணிகள் உள்பட 9 புதிய அணிகளுக்கு `முதல் தர’ போட்டிகளில் பங்கேற்க ‘க்ரீன் சிக்னல்’ கொடுத்துள்ளது பி.சி.சி.ஐ. இதில் புதுச்சேரியும் ஒன்று. ‘நமக்கும் எதிர்காலத்தில் இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கும்’ என ஒருபுறம் புதுச்சேரி வீரர்கள் நம்பிக்கையுடன் இருக்க, முன்னாள் இந்திய வீரர்களான அபிஷேக் நாயர், பங்கஜ் சிங், தமிழக வீரர்கள் என வீரர்களை ஒப்பந்தம் செய்தது புதுச்சேரி கிரிக்கெட் போர்டு. கடுப்பான புதுச்சேரி லோக்கல் பாய்ஸ், ‘எதுக்கு உருட்டிகிட்டு’ மோடில் இருக்கிறார்கள். பாவம் பாய்ஸ்! அப்பா வழியில் மகளும் சின்னத்திரைக்கு வரவிருக்கிறார். சமூகப் பிரச்னைகளைப் பேசும் டாக்‌ஷோ ஒன்றை தமிழ் சேனலுக்காகத் தொகுத்து வழங்கவிருக்கிறார் ஸ்ருதிஹாசன். சமீபத்தில் லண்டனில் முதல் மியூசிக் கான்செர்ட்டை வெற்றிகரமாக முடித்துவிட்டுத் திரும்பியிருக்கும் ஸ்ருதி, அதே குஷியோடு டிவி ஷூட்டிங்கிற்கும் தயாராகிவிட்டாராம். ஸ்மால் பாஸ்! இந்தியாவில் ஒரு எம்.எல்.ஏ-வின் வருட வருமானம் (நேர்மையாக சம்பாதிப்பது மட்டும்) எவ்வளவு இருக்கும்? யூகிக்க முடிகிறதா? ஒரு கோடி என்கிறது ‘நேஷனல் எலெக்‌ஷன் வாட்ச்’ ஆய்வறிக்கை. இந்தியாவிலேயே கர்நாடக எம்.எல்.ஏ-க்கள்தான் மிக அதிகமாக சம்பாதிக்கிறார்களாம். இந்த விஷயத்தில் தமிழ்நாடு கொஞ்சம் பரவாயில்லை. ஆனா ரெய்டு இங்கேதான் அதிகம் நடக்குது! 100 மீட்டர் ஓட்டத்திற்கு எப்படி உசேன் போல்ட்டோ அப்படித்தான் மாரத்தானுக்கு எலியூத் கிப்சோகே. கடைசியாகக் கலந்துகொண்ட எட்டு மாரத்தான்களிலும் தங்கம் வென்று சாதனை படைத்தவர். ஒரு மனிதனால் இவ்வளவுதான் செய்ய முடியும் என்ற எல்லா எல்லைகளையும் உடைத்துத் தள்ளிச் சாதனைகள் செய்பவர். சென்றவாரம் நடந்த பெர்லின் மாரத்தானில் 2:01:39 நிமிடங்களில் போட்டி தூரத்தைக் கடந்து சாதனை செய்திருக்கிறார். இது முந்தைய சாதனையை விட ஒருநிமிடம் 18 விநாடிகள் அதிகம். ஓட்ட நாயகன்!
கோப்பாய் பகுதியில் அதிகாலையில் தொடர்ச்சியாக இடம்பெறும் வழிப்பறிக் கொள்ளையில் இலங்கை போக்குவரத்துச் சபையின் கோண்டாவில் சாலை ஊழியர்கள் உள்பட பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் இந்த வழிப்பறிக் கும்பலின் அட்டூழியம் தொடர்பில் கோப்பாய் பொலிஸாரின் அசமந்தப் போக்கினால் நேற்று மட்டும் 7 பேரிடம் பணம் மற்றும் அலைபேசி என்பன கத்திமுனையில் அபகரிக்கப்பட்டுள்ளன. நேற்று அதிகாலை 4 மணிக்கு இடையில் இலங்கை போக்குவரத்துச் சபையின் 6 ஊழியர்கள் மற்றும் பத்திரிகை விநியோகம் செய்பவர் என 7 பேரிடம் 70 ஆயிரம் ரூபாய்க்கு மேற்பட்ட பணம் மற்றும் பல லட்சம் பெறுமதியான அலைபேசிகள் அபகரிக்கப்பட்டுள்ளன. கோப்பாய் பகுதியில் உள்ள கோழிப் பண்ணை முன்பாக முகமூடி தொப்பி அணிந்துகொண்டு கத்திகளுடன் நின்ற நான்கு பேர் கொண்ட கும்பல் இந்த துணிகரக் கொள்ளையில் ஈடுபட்டுள்ளது. அவர்கள் வீதியினால் பயணிப்போரை வழிமறித்து பொலிஸார் எனத் தெரிவித்து அடையாள அட்டையை காண்பிக்குமாறு கேட்டுவிட்டு கத்தியை கழுத்தில் வைத்து அச்சுறுத்தி வழிப்பறியில் ஈடுபட்டதாக பாதிக்கப்பட்ட இ.போ.ச. ஊழியர்கள் முறைப்பாடு செய்துள்ளனர். பருத்தித்துறையிலிருந்து கோண்டாவில் சாலைக்கு மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரிடம் 30 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் ஒரு லட்சம் பெறுமதியான அலைபேசி என்பன கத்திமுனையில் அபகரிக்கப்பட்டுள்ளன. இந்தச் சம்பவஙகள் அண்மைய நாள்களில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் நிலையில் கோப்பாய் பொலிஸாரின் அசமந்த போக்கினால் இ.போ.ச கோண்டாவில் சாலை ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
வேட்பாளர் வேட்புமனு தாக்கலின்போது படிவம் 3 (வேட்புமனு) மற்றும் படிவம் 3-A (உறுதிமொழி ஆவணம்) ஆகியவற்றுடன் சேர்த்து தாக்கல் செய்த வேட்பாளர்களின் தகவல் குறித்த சுருக்கம் (09.12.2019 முதல் 16.12.2019 வரை பெறப்பட்ட வேட்புமனுக்களை ஸ்கேன் செய்யப்பட்டு இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட மொத்த வேட்புமனுக்களின் எண்ணிக்கை) Captcha-வை தட்டச்சு செய்யவும் பார்வையாளர்களின் எண்ணிக்கை: 24684254 The information published through this website has been entered by the Returning Officer, and is subject to change.
பிரதமர் நரேந்திர மோடி குஜராத் மாநிலத்தில் உள்ள அரசுப் பள்ளிக்கு நேரில் சென்றது ஆம் ஆத்மி கட்சிக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி என்று அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டதாவது: டெல்லி அரசுப் பள்ளிகளில் ஆம் ஆத்மி மேற்கொண்ட முயற்சிகளால் அவை இப்போது நாட்டுக்கே மாடல் பள்ளிகளாக விளங்குகின்றன. நாட்டின் அனைத்து தலைவர்களும், எல்லா கட்சிகளும் இவற்றை முன்னுதாரணமாகப் பார்க்கத் தொடங்கியிருப்பது ஆம் ஆத்மி கட்சியின் மிகப்பெரிய சாதனை. அந்த வகையில் குஜராத்திலுள்ள அரசுப் பள்ளிக்கு பிரதமர் நேரில் சென்று பார்வையிட்டது ஆம் ஆத்மி அரசுக்கு கிடைத்த வெற்றியாகும். -இவ்வாறு பதிவிட்டு, அரசுப் பள்ளியில் மாணவர்களுடன் மோடி அமர்ந்திருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். முன்னதாக நேற்று பிரதமர் மோடி, குஜராத்தில் ‘மிஷன் ஸ்கூல் ஆஃப் எக்ஸலன்ஸ்’ என்ற திட்டத்தை தொடங்கி வைத்த பின்னர் அங்குள்ள அரசுப் பள்ளிக்குச் சென்று பார்வையிட்டார்.
தனது அம்மா மற்றும் மனைவியுடன் நடிகர் சிவகார்த்திகேயன், இந்த அன்ஸீன் புகைப்படத்தை நீங்கள் பார்த்துள்ளீர்களா? – Mediatimez.co.in Skip to content Mediatimez.co.in privacy policy தனது அம்மா மற்றும் மனைவியுடன் நடிகர் சிவகார்த்திகேயன், இந்த அன்ஸீன் புகைப்படத்தை நீங்கள் பார்த்துள்ளீர்களா? June 11, 2021 media CINEMA இன்றைய முன்னணி தமிழ் சினிமா நடிகரான சிவா கார்த்திகேயன் அவர்கள் சினிமா துறைக்குள் வருவதற்கு முன்பு பிரபல தொலைக்காட்சி நிறுவனமான விஜய் டிவியில் தொகுப்பாளராக பணியாற்றி வந்தது நம் அனைவருக்கும் அறிந்த ஒன்றே அதே போல் அவரது வாழ்க்கையை சின்னத்திரையில் இருந்து படிப்படியாக மேலே வந்த தற்போது சினிமா துறையில் பெரும் ரசிகர்கள் கூட்டத்தை தான் பக்கம் வைத்துள்ளார்.சிவா அவர்கள் ஆரம்பகாலத்தில் இவர் விஜய் டிவியில் வெளியான கலக்க போவது யாரு என்னும் ஷோவில் போட்டியாளராக பங்கு பெற்றவர்.தற்போது இவர் தமிழ் சினிமா வில் பல பரிமாணங்களில் கலக்கி வரும் இவர் அந்த சமயத்தில் இந்த ஒரு விளம்பரத்தை நடித்துள்ளார்.கோலிவுட் திரையுலகில் நடிப்பது மட்டுமல்லாமல் இவர் படங்களை தயாரித்து வருகிறார் அதன் பிறகு இவர் பாடல் ஆசிரியராகவும், பாடல்களை பாடியும் உள்ளார். நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் முன்னணி நடிகராக விளங்குபவர்.இவர் நடிப்பில் வெளியான நம்ம வீட்டு பிள்ளை திரைப்படம் நல்ல வசூல் சாதனை புரிந்தது, அதன் பின் வெளியான ஹீரோ திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. அதனை தொடர்ந்து இவர் நடிப்பில் டாக்டர், அயலான் உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியாகவுள்ளது. மேலும் இவர் நடிப்பில் டான் என்ற படம் உருவாகி வந்தது. இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் அவரின் அம்மா மற்றும் மனைவியுடன் இருக்கும் பழைய புகைப்படம் ஒன்று இணையத்தில் பரவி வருகிறது.மேலும் இந்த புகைப்படம் அவர்களின் திருமணத்திற்கு பிறகு எடுக்கப்பட்டது என ரசிகர்கள் கூறிவருகின்றனர். Post navigation Previous Post:விஜேவாக இருந்த அர்ச்சனா தற்போது என்ன செய்கின்றார் தெரியுமா? திடீர் அறிவிப்பால் ரசிகர்கள் ஷா க்
இன்று(04) காலை 8 மணி முதல் நாடளாவிய ரீதியில் எரிபொருள் முற்பதிவு நடவடிக்கையில் இருந்து விலகுவதற்கு தீர்மானித்துள்ளதாக பெட்ரோலிய விநியோகஸ்தர்கள் சங்கம் அறிவித்துள்ளது . விநியோகஸ்தர்களுக்கு வழங்கப்பட்ட தள்ளுபடியில் 45 வீதத்தை மீள அறவிடுவதற்கு பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுத்தமைப்பு எதிர்ப்பு தெரிவித்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. குறித்த காலப்பகுதியில் எரிபொருள் முற்பதிவு நடவடிக்கையிலிருந்து விலகுவதாக பெட்ரோலிய விநியோகஸ்தர்கள் சங்கத்தின் செயலாளர் கபில நாஒட்டுன்ன தெரிவித்துள்ளார். Videos play பிம்ஷானியை அவரது பதவியில் இருந்து நீக்க முயற்சிக்கும் பொலிஸ் மா அதிபரின் வெள்ளை மற்றும் கருப்பு மகன்கள்!
சென்னையின் பீனிக்ஸ் மாலில் ஏராளமானோர் வேலை பார்த்து வருகின்றனர். எந்நேரம் ஆயிரக்கானோர் இதற்குள் ஷாப்பிங் செய்வார்கள். அந்த வகையில் லைப்ஸ்டைல் கடை ஒன்று இங்கு இயங்கி வருகிறது. அதில் பணிபுரிந்து வந்த அரியலூரைச் சேர்ந்த பெண்ணுக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. இதனால் அந்த மால்க்கு வந்து சென்றவர்கள் சுமார் 3 ஆயிரம் பேருக்கு கொரோனா பாரிசோதனை செய்ததில், 5 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. இதனிடையே, தனிமைப்படுத்தப்பட்ட அரியலூர் இளம்பெண் பூஜா, செல்போனில் டிக்டாக் செய்து வீடியோ எடுத்தார். இதில் ஒன்று, இரண்டு வீடியோக்கள் வெளியானது. கொரோனா வைரஸ் வந்துச்சு நம்ம கிட்டதான்.. அது வந்துச்சுன்னா நம்ம எல்லாம் மட்டைதான்" கதறவிட்டாங்கோ, பதறவிட்டாங்கோ, பரவ விட்டாங்கோ.. வைரஸை பரப்பி விட்டாங்கோ.." "இப்படியே வாழந்தாக்கா புழு மட்டும் வாழும்டா, பூச்சி மட்டும் வாழுடா.. மனுஷ பய இடம் மட்டும் மண்ணாகி போகுமடா" என்று பெட்-டில் படுத்து கொண்டே டிக்டாக் வீடியோக்களை செய்திருந்தார். இதையடுத்து, ஆஸ்பத்திரி நிர்வாகம் அவரை கண்டித்து அறிவுரை வழங்கியதால் டிக்டாக் செய்வதை நிறுத்திக்கொண்டார். இதனிடையே தொடர் கண்காணிப்பில் இருந்த பூஜாவுக்கு அடுத்தடுத்து டெஸ்ட்கள் 3 முறை செய்யப்பட்டன. இப்போது அந்த தொற்று முழுதும் நீங்கிவிட்டது. இது டெஸ்ட்டிலும் உறுதியானது. இதையடுத்து அரியலூர் மாவட்ட ஆஸ்பத்திரியில் இருந்து பூஜா டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். வீட்டுக்கு கிளம்பும்போது அங்கிருந்த டாக்டர்கள், நர்ஸ்கள், சுகாதார ஊழியர்களுக்கு நன்றியை சொன்னார். அங்கிருந்து போகும்போது பூஜா ஒரு டிக்டாக் செய்துவிட்டுதான் போனார். மருத்துவமனையில் இருந்தப்போது தான் வரைந்த புகைப்படத்துடன் "இனிமேல் டிக்டாக் செய்ய மாட்டேன், டிக்டாக்கை கைவிட்டுவிட்டேன்" என்பதுதான் அந்த கடைசி டிக்டாக்..
ரொடான் என்ற சிற்பியைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். ‘சிந்தனையாளன்’,’எண்ணம்’,’முத்தம்’ இவை போன்ற பல அற்புதமானசிற்பங்களைச் செய்த அமரர் அவர். ஒருமுறை, ஃபிரெஞ்சு கதாசிரியர் பல்ஸாக்கின் சிலையை உருவாக்கிக் கொண்டிருந்தவர், முடிவுறும் கட்டத்தில், ஒரு நண்பரைக் கூப்பிட்டுக் காட்டினார். அந்த மனிதர் சிலையை வெகுவாகப் புகழ்ந்து விட்டு, “எல்லாவற்றுக்கும் மேலாக பாஸ்லாக் கைகளை வைத்திருக்கும் விதம் மிக நன்றாக இருக்கிறது” என்று சொல்லிச் சென்றார். பிறகு இன்னொரு ரசிகரை அழைத்துக் காண்பித்தார். அவருக்கும் ஒரே மகிழ்ச்சி. “இவ்வளவு இயற்கையாக எந்தச் சிற்பியுமே கைகளை வடித்ததில்லை” என்று பாராட்டினார். வந்து பார்த்த எல்லாருமே, “இந்தக் கைகள்! அபாரம்!” என்றார்கள். ரொடான் ஒரு சுத்தியலை எடுத்து பால்ஸாக் சிலையின் கைகளை உடைத்துத் தள்ளினார். அவர் சொன்ன நியாயம், ‘கை என்பது ஒரு உறுப்பு. அது உறுப்பாகத்தான் இருக்க வேண்டும். மொத்த உருவத்தை மறக்கடிக்கும் அளவுக்குத் தனி சிறப்போடு அது அமைந்து விடுவது நல்ல சிற்பத்துக்கு லட்சணமாகாது’ ஒவ்வொரு வாரமும் இப்படி ஒரு ரத்தின பதில் கட்டாயம் இருக்கும். Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , அரசு பதில்கள் 1977, ஆசிரியர் குழு, Aasiriyar Kulu, Kelvi-Pathilgal, கேள்வி-பதில்கள் , Aasiriyar Kulu Kelvi-Pathilgal, ஆசிரியர் குழு கேள்வி-பதில்கள், குமுதம் புத்தகம் வெளியீடு, kumudam puthagam velieedu, buy Aasiriyar Kulu books, buy kumudam puthagam velieedu books online, buy tamil book. எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All 10% கேளுங்கள் சொல்லப்படும் கட்டுமானத் துறை தொடர்பான பொதுவான ஐயங்கள், தொழிற்நுட்பம், பொருட்கள் குறித்த கேள்விகள் பதில்கள்
காற்று மாசால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுப்பதிலும் செலவினங்களை குறைப்பதிலும் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குவதிலும் அனல் மின் நிலையங்களை மூடுவது எந்த அளவுக்கு பலனளிக்கும் என்பது, C 40 நகரங்கள் அமைப்பு மேற்கொண்ட ஒரு புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது. ஊடக செய்திக் குறிப்பு சென்னை, இந்தியா செப்டம்பர் 29, 2021: அனல்மின் நிலையங்களால் ஏற்படும் காற்று மாசு சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களின் உடல்நலத்தில் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தி வருவதாக C 40 நகரங்கள் அமைப்பு வெளியிட்டுள்ள “Coal-free cities: the health and economic case for a clean energy revolution” அறிக்கை எச்சரித்துள்ளது. C40 Cities (2021) Coal-free cities - the health and economic case for a clean energy revolution இந்தியாவில் அனல்மின் நிலைய உற்பத்தித் திறனை 64 GW (ஜிகா வாட்டாக) அதிகரிப்பதற்காக பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதனால், சென்னையில் மட்டும் அனல் மின் நிலைய காற்று மாசின் விளைவாக ஏற்படும் வருடாந்திர உயிர் இழப்புகள் தற்போதைய நிலையை விட இருமடங்காக அதிகரிக்கும் என்றும், அடுத்த 10 ஆண்டுகளில், தங்கள் சாராசரி ஆயுட்காலத்திற்கு குறைவாக உயிரிழப்போரின் எண்ணிக்கை தற்போதைய நிலையைவிட 60% அதிகரிக்கும் எனவும் C40 அறிக்கை கூறியுள்ளது. பெரிய நகரங்களும், அரசுகளும் அனல் மின் உற்பத்தி நிலையங்களில் முதலீடு செய்வதற்குப் பதிலாக புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தியில் முதலீடு செய்வது வர்த்தக ரீதியிலும் சரி, தொழிலாளர்களின் உடல்நலம் சார்ந்தும் சரி, நன்மை விளைவிக்கக் கூடியதாக இருக்கும். ஒருவேளை புதிய அனல் மின் திட்டங்களை செயல்படுத்தினால் உடல் நலக்குறைவால் எடுத்துக்கொள்ளப்படும் விடுப்பு நாட்கள் 2030ஆம் ஆண்டில் சென்னையில் மட்டும் 22 லட்சம் நாட்களாக இருக்கும் என இந்த அறிக்கை எச்சரிக்கிறது. புதுப்பிக்கத்தக்க மின் சக்திக்கு மாறுவது, சென்னையில் மலிவான விலையில் மின்சாரம் விநியோகம் செய்ய வழி வகுப்பதோடு மட்டுமில்லாமல் சென்னையைச் சுற்றி மட்டும் 2020-2030 ஆண்டு காலகட்டத்தில் 1,40,000 புதிய வேலைவாய்ப்புகளை மின்னுற்பத்தி, உபகரணங்களை பொருத்துதல் போன்ற துறைகளில் உருவாக்கும் எனவும் இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. நிலக்கரியால் ஏற்படும் காற்று மாசுபாட்டின் காரணமாக பிற சி40 நகரங்களை விடவும் சென்னை நகர மக்களின் உடல்நலன் மோசமான பாதிப்பைச் சந்தித்துள்ளது. இந்தியாவில் அனல் மின் நிலையத்தால் உற்பத்தி செய்யப்படும் மின் உற்பத்தியில் 11% நகர்ப்புறத்திலிருந்து 500 கிலோமீட்டர் சுற்றளவுக்குள்ளாக உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. நிலக்கரியை எரித்து மின் உற்பத்தி செய்யப்படும் அனல்மின் நிலையத்திலிருந்து வெளியாகும் காற்று மாசுபாடு நீண்ட தொலைவுக்கு பயணிக்கக் கூடியது என்பதாலும் அதனால் ஏற்படும் தாக்கத்தின் அதிகம் என்பதாலும் அனைவருக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது. குறிப்பாக விளிம்பு நிலையில் வசிக்கும் இளைஞர்கள், முதியோர், கருவுற்ற பெண்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. “சென்னையில் உள்ள காற்று மாசுபாடு (pm 2.5யின் வருடாந்திர அளவு) உலக சுகாதார நிறுவனத்தின் வழிகாட்டுதலைவிட நான்கு மடங்கும், தேசிய வழிகாட்டுதலைவிட சற்று அதிகமாகவும் உள்ளது. தேசிய அளவிலான தற்போதைய திட்டங்களின் படி 2020 – 2030 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்டக் காலத்தில் அனல்மின் நிலையங்களை 20 விழுக்காடாக குறைக்க வேண்டும். மாறாக, இந்தியாவின் காலநிலை மற்றும் காற்றுத் தர இலக்குகளைப் புறந்தள்ளி 28% அதிகமாக விரிவாக்கம் செய்வதால் சென்னை நகர மக்களின் உடல்நலன் பாதிக்கப்படுவதோடு, வாழ்வாதாரத்திற்கும் அச்சுறுத்தல் ஏற்படும். மேலும், தேசிய அளவிலான தற்போதைய திட்டங்களால், சென்னை நகரத்தில் அனல்மின் நிலைய காற்று மாசுபாடு காரணமாக ஏற்படும் வருடாந்திர மரணங்களின் எண்ணிக்கையானது இரண்டு மடங்கிற்கும் அதிகமாக அதிகரிக்கக்கூடும்” என்கிறார் சி 40 அமைப்பின் அறிவுசார் மற்றும் ஆய்வு பிரிவின் தலைவரான முனைவர் ரேச்சல் ஹக்ஸ்லீ. அனல்மின் நிலையங்களை அதன் காலக்கெடு முடிவதற்கு முன்பாகவே மூடுவது குறித்தும் அதன் ஒரு பகுதியாக மாசுபாடற்ற மின் உற்பத்தியில் முதலீடு செய்வது குறித்தும் ஒன்றிய, மாநில அரசுகள் கருத்தில் கொள்ளவேண்டும். மேலும் புதிய அனல் மின்நிலையங்கலைக் கட்டக்கூடாது. காற்றின் தரம் மற்றும் காலநிலை கொள்கைளை உறுதிப்படுத்த வேண்டும். இந்தப் பின்னணியில் பார்க்கும்போது, சி40 அமைப்பின் இந்த ஆய்வு என்பது சென்னை சுற்று வட்டாரப் பகுதிகள் விரைவிலேயே அனல்மின் நிலையத்தால் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்திலிருந்து வெளியேற வேண்டியதன் அவசியத்தை தெளிவாக சுட்டிக்காட்டியுள்ளது. காற்று மாசுபாட்டை குறைப்பதினால் மனித உயிரைக் காக்கலாம். சென்னை, தில்லி, மும்பை, கொல்கத்தா மற்றும் பெங்களூர் ஆகிய நகரங்களைச் சுற்றி ஏற்படவுள்ள அனல்மின் நிலைய விரிவாக்கத்தின் காரணமாக அடுத்த பத்து ஆண்டுகளில் 52,700 பேர் சராசரி ஆயுட்காலத்தை விட முன்கூட்டியே இறக்க நேரிடும். இதில் தில்லி, மும்பை, பெங்களூரை காட்டிலும் சென்னையில் உயிர் இழப்புகள் கிட்டத்தட்ட இரண்டு மடங்கு அதிகரிக்கும். இதுதவிர, 31,700 குறை பிரசவங்களும், பல்லாயிரம் பேருக்கு ஆஸ்துமாவினால் பாதிப்பும் ஏற்பட்டு கூட்டம் கூட்டமாக மருத்துவமனைக்கு செல்வது போன்ற சம்பவங்கள் நிகழக்கூடும் என இந்த அறிக்கை எச்சரிக்கிறது. இது நோய்களின் விகிதத்தை அதிகரிக்கும் என்பதோடு, கூடுதலாக 5,700 குழந்தைகளுக்கு ஆஸ்துமாவையும் உண்டாக்கக்கூடும். அதுமட்டுமின்றி, அனல்மின் நிலைய விரிவாக்கத்தின் காரணமாக 6,820 பேர் ஆயுட்காலம் முழுதும் உடல்நலக் குறைபாட்டுடன் வாழ நேரிடும். பொருளாதார அடிபடையிலான பலன்கள்: காற்று மாசுபாட்டின் காரணமாக தொழிலாளர் உற்பத்தித் திறன் குறைகிறது. மேலும் தொழிலாளர்கள் விடுப்பு எடுப்பது அதிகரிக்கிறது. இது நகர்ப்புற பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. மேலும், காற்று மாசுபாடு பொருளாதார இழப்பிற்கும், மருத்துவ செலவு அதிகரிப்பிற்கும் வழிவகுக்கிறது. இந்தியாவில் அதிக காற்று மாசுபாடு ஏற்படும் நாட்களில் தொழிலாளர் உற்பத்தித்திறன் 8-10% வரை குறையக்கூடுமென தொழில்முனைவோர்கள் கணித்துள்ளனர். தற்போது முன்மொழியப்பட்டுள்ள அனல் மின் விரிவாக்கம் தொடருமானால் சென்னையைச் சுற்றியுள்ள அனல்மின் நிலையங்களினால் ஏற்படும் காற்று மாசுபாட்டின் விளைவாக ஏறத்தாழ 22 லட்சம் நாட்களுக்கு தொழிலாளர்கள் உடல்நலக் காரணங்களால் விடுப்பு எடுப்பார்கள் என்கிறது சி40 ஆய்வு. மேலும், உடல்நலன் சார்ந்த செலவினங்கள் 2020-2030ஆம் ஆண்டு காலகட்டத்தில் 5.9 பில்லியன் அமெரிக்கா டாலர்களாக இருக்கும் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது. வேலைவாய்ப்பை உருவாக்குகிறது: வரும் 2030ஆம் ஆண்டுக்குள் பழைய மற்றும் அதிகம் பயன்தராத அனல்மின் நிலையங்களை மூடிவிட்டு அதற்கு மாற்றாக சூரிய ஒளி மற்றும் காற்றாலை ஆற்றல்களில் முதலீடு செய்து சென்னைக்கு மின்சாரம் வழங்கினால் 1,40,000 புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கலாம். நகர்ப்புற பகுதியில் வாழும் மக்களுக்கு குறைந்தவிலையில் மின்சாரம் வழங்கலாம். இந்தியாவில் புதிதாக அனல் மின் நிலையங்களை அமைப்பது, தற்போதுள்ள அனல்மின் நிலையங்களை இயக்குவது ஆகியவற்றைவிட சூரிய ஒளி ஆற்றல் மலிவானதாகும். காலநிலை மாற்றத்தை சமாளித்தல்: இந்தியாவின் மொத்த வருடாந்திர பசுமை இல்ல (274MT CO2ன் உமிழ்வு) வாயுக்களின் உமிழ்வை ஆண்டுக்கு 11% மாக குறைக்கலாம். இது 60 மில்லியன் வாகனங்கள் ஒரு ஆண்டிற்கு சாலையில் பயணிப்பதனால் ஏற்படும் உமிழ்வுக்கு ஈடானதாகும். “காற்று மாசை குறைக்க, மக்களின் சுகாதாரத்தை மேம்படுத்த, பாரிஸ் ஒப்பந்த்ததின் இலக்கை அடைய புதுப்பிக்கத்தக்க ஆற்றலுக்கு மாறுவதுதான் ஒரே வழி” என்கிறார் சி40யின் தெற்கு மற்றும் மேற்கு ஆசியாவின் மண்டல இயக்குனரான ஸ்ருதி நாராயணன். C40 நகரங்கள், அமெரிக்காவின் மேரிலாந்து பல்கலைக்கழகம் மற்றும் க்ரியாவுடன் சேர்ந்து ஒவ்வொறு அனல் மின் நிலையத்திற்கும் தனித்தனியாக அது தொடங்கப்பட்ட நாள், தொழில்நுட்பம், அதலில் இருந்து ஈட்டப்படும் வருமானம், செயல்படும் கால அளவு, நீரிலும் காற்றிலும் அனல்மின் நிலையங்கள் ஏற்படுத்தும் தாக்கம் முதலிய காரணிகளை வைத்து ஒரு Modelஐ உருவாக்கியுள்ளது. அந்த மாடலின்படி 2021ஆம் ஆண்டில் நிலக்கரியின் பயன்பாடு இந்தியாவில் உச்சத்தை தொடும். 2021 – 2030 ஆண்டுகளில் நிலைக்கரியின் பயன்பாடு 20% குறையும். 2045ஆம் ஆண்டில் அனைத்து அனல்மின் நிலையங்களின் காலக்கெடு முடிகிறது. சென்னையை சுற்றி இருக்கும் 33 பழைய மற்றும் அதிக அளவு மாசை விளைவிக்கும் அனல்மின் நிலையங்களின் (3. 8 GW), காலக்கெடு இன்னும் இரண்டு ஆண்டுகளில் முடிகிறது, அதனை தொடர்ந்து 40 (5.4 GW) அனல்மின் நிலையங்களின் காலக்கெடு 2030லும், 2045இல் மீதமுள்ள அனைத்து அனல் மின் நிலையங்களின் காலக்கெடுகளும் முடிகின்றன. “இந்தியாவில் அனல்மின் விரிவாக்க திட்டங்களை உடனடியாக நிறுத்த வேண்டும். பழைய அனல் மின் நிலையங்களை மூடுவதற்கான இலக்குகளை தீர்மானித்துக் கொண்டிருக்கையில், மாநில மற்றும் தேசிய அரசுகள் புதிய அனல்மின் திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யக்கூடாது” என்கிறார் C40 நகரங்களின் மூத்த ஆராய்ச்சி மேலாளரான மார்க்ஸ் பேரன்சன். இந்த அறிக்கை குறித்து கருத்து தெரிவித்துள்ள பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த சுந்தர்ராஜன் “காற்று மாசுபாடும் காலநிலை மாற்றமும் ஒன்றுக்கொன்று பெரிதும் தொடர்புடைய, ஒன்றாக அணுகப்பட வேண்டிய பிரச்சனைகள் ஆகும். குறிப்பாக அதிக அளவிலான கார்பன் உமிழ்வுகள் வெளியேற முக்கிய காரணமாய் இருப்பது நிலக்கரி சார்ந்த துறைகள்தான். தற்போது நாம் சந்தித்து வரும் 1°C உலக வெப்ப உயர்வில் நிலக்கரி 0.3°C அளவிற்கு பங்களித்துள்ளது. ஆனால், அரசு கொள்கைகளை வகுக்கும்போது காலநிலை மாற்றமும் காற்று மாசுபாடும் தனித்தனியே கையாளப்படுகின்றன. இந்த நிலை மாற வேண்டும். காற்று மாசையும் காலநிலை மாற்றத்தையும் ஒரு சேர கட்டுப்படுத்த அனல் மின் நிலையங்களை படிப்படியாக மூடுவது என்ற கொள்கை நிலைப்பாட்டை அரசுகள் எடுக்க வேண்டும்” என்று கூறியுள்ளார். முழு அறிக்கைக்கு: https://www.c40knowledgehub.org/s/article/Coal-free-cities-the-health-and-economic-case-for-a-clean-energy-revolution
இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும். Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world. Have a great day. பரமாசாரியாரின் அருள் வாக்கு Wednesday, April 25, 2007 காந்திக்கும் போஸுக்கும் பனிப்போர் ஏன்? Wற்கெனவே ஆங்கிலேய அரசால் நாடு கடத்தப் பட்டு ஐரோப்பா சென்றிருந்த போஸ் மறுபடி தாய்நாடு திரும்பியதும் ஆங்கிலேய அரசால் சிறையிலும் அடைக்கப் பட்டார். கிட்டத் தட்ட 11 முறை அவர் சிறையில் அடைக்கப் பட்டிருக்கிறார். அதிலே உடல்நலமும் பாதிக்கப் பட்டிருக்கிறார். ஆகவே 37-ல் ஆஸ்திரியாவிற்குச் சிகிச்சை எடுத்துக் கொள்ளச் சென்ற போஸ் அங்கே இருக்கும்போது தான் தான் போட்டியின்றிக் காங்கிரஸ் தலைவராய்த் தேர்ந்தெடுக்கப் பட்டதை அறிகிறார். அப்போது 1938-ம் ஆண்டு. காந்தி நினைத்தது வேறு. ஆனால் போஸ் அப்போது ஆஸ்திரியாவில் இருந்து இங்கிலாந்து சென்று அங்கே உள்ள முக்கியத் தலைவர்களைச் சந்திக்கிறார். அவர் சந்திப்பில் இடம் பெற்றவர்கள் கன்சர்வேட்டிவ் கட்சியின் பிரபுக்கள் மட்டுமில்லாது, இந்தியாவிடம் அனுதாபம் கொண்டு அதற்குச் சுதந்திரம் கொடுக்க ஆதரவு கொடுத்து வந்த லேபர் கட்சி மட்டும் லிபரல் கட்சிப் பிரமுகர்களும் அடங்குவர். சர் ஸ்டாஃப்போர்டு கிரிப்ஸும் அவர் சந்தித்த பிரமுகர்களில் ஒருவர். இந்தியா எந்த விதமான நிபந்தனைகளும் இன்றிச் சுதந்திரம் அடைய வேண்டும் என்ற தன்னுடைய ஆசையை போஸ் இப்போது காங்கிரஸ் தலைவர் ஆனதின் மூலம் நிறைவேற்றிக் கொள்ள ஆசைப் பட்டார். தேச சுதந்திர விஷயத்தில் தன்னுடைய இந்த முடிவுக்கு மாற்றுக் கருத்து இருக்காது எனவும் எதிர்பார்த்தார். ஆங்கிலேய அரசுக்கு எதிராய் காங்கிரஸ் கட்சியின் எதிர்ப்பையும் வலுப்படுத்தி, நிபந்தனை அற்ற சுதந்திரம் வேண்டும் எனவும், அதே சமயத்தில் தேசம் முழுதும் ஒரே சமயம் போராட்டங்கள் நடத்தவும் தீர்மானிக்கிறார். ஆனால் அஹிம்சைக் கொள்கை என்னும் கடலில் மூழ்கிப் போன காந்தீயவாதிகளுக்கு, காந்தி உள்பட போஸ் இப்படி முடிவெடுத்தது பிடிக்கவில்லை. அவர்கள் இந்தியாவில் உள்ள ஆங்கிலேயப் பிரதிநிதிகளிடம் ஒருவிதமான புரிதலுடன் இருந்து வந்தார்கள். இருவருக்கும் இடையே understanding சரியான விகிதத்தில் இருக்கவே அவர்களை எதிர்த்து ஏதும் செய்ய இவர்களுக்கு இ்ஷ்டம் இல்லை. போஸ் தாய்நாடு திரும்புகிறார். National Planning Committee ஆரம்பித்து உறுப்பினர்களை நியமித்துத் தொழில் துறைக்கு முக்கியத்துவம் கொடுத்துச் செயல்படவேண்டும் எனச் சொல்கிறார். தொழில் துறைகளினால் நாடு முன்னேற வழி இல்லை எனச் சொல்லிக் கொண்டிருந்த காந்தீயக் கொள்கைகளில் ஈடுபாடு கொண்டவர்களுக்கும், காந்திக்கும் இதில் உடன்பாடு இல்லை. ஆட்சேபிக்கிறார்கள். அதே வரு்ஷம் "மூயூனிக்" நகரில் ஏற்பட்ட ஒப்பந்தத்துக்குப் பின் போஸ் பகிரங்கமாய் அறை கூவல் விடுகிறார் நாடு தழுவிய போராட்டத்துக்கும், நிபந்தனை அற்ற சுதந்திரத்துக்கும், மக்களுக்கு. மக்கள் நடுவில் கிளர்ச்சி ஏற்படத் துவங்குகிறது. ஆனால் காந்தீயவாதிகளுக்கு இந்தத் தேசம் தழுவிய போராட்டத்தில் துளிக்கூட இஷ்டம் இல்லை என்பதோடு 2-உலகப் போர் நடந்தால் ஆங்கில அரசுக்கு ஆதரவு தெரிவிக்கவும் தயாராய் இருந்தார்கள். சுதந்திரம் சில வருடங்கள் தள்ளிப் போகலாம், தப்பில்லை எனவும் நினைத்தார்கள். காந்திக்கும் போஸுக்கும் நடுவே இடைவெளி அதிகம் ஆகிறது. இந்தச் சமயம் மறு தேர்தல் வருகிறது காங்கிரஸ் தலைவர் பதவிக்கு. அப்போதே காங்கிரஸில் இடதுசாரிகள் எனப்படும் ஒரு கூட்டம் காந்தியக் கொள்கைகளில் இருந்து மாறுபட்டு இருந்தார்கள். இவர்கள் பெரும்பான்மையாகவும் இருந்தனர். இவர்களைத் தவிர சோஷலிஸ்ட எனப்படுபவர்களும் காங்கிரஸுக்குள்ளேயே இருந்து வந்தனர். இவர்கள் எல்லாரும் போஸ் மறுமுறையும் காங்கிரஸ் தலைவராய் வர ஆதரவு தெரிவிக்கக் காந்தியால் அவருடைய சொந்த வேட்பாளராக நியமிக்கப் பட்ட "பட்டாபி சீதாராமையா" தோற்றுப் போனார். இதைத் தன் சொந்தத் தோல்வியாகக் கருதினார் காந்தி. "ஹரிஜன்" பத்திரிகையிலும் இதைப் பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார். உண்மையில் இது காந்தியின் இந்திய அரசியல் வாழ்வில் 1923-24-க்குப் பின் வந்த முதல் தோல்வி என்றே சொல்லலாம். இருந்தாலும் காங்கிரஸ் தலைவராய்ப் பொறுப்பேற்றுக் கொள்வதில் தயங்காமல் போஸ் தன் வேலைகளைத் தொடருகிறார். மூன்றாம் முறையாக காங்கிரஸ் தலைவராய்ப் பொறுப்பேற்றுக் கொள்ளும் போஸ் 1939-ல் இன்னும் ஆறு மாதத்துக்குள்ளே இந்தியா நிபந்தனை அற்ற சுதந்திரம் அடைய வேண்டும் என்ற தீர்மானம் கொண்டு வருகிறார். அதே சமயம் நாடு தழுவிய போராட்டத்துக்கும் மக்களைத் தயாராகுங்கள் என்று கூறுகிறார். காந்தி அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கிறார். உண்மையில் காங்கிரஸில் அப்போது காந்தியவாதிகள் சிறுபான்மையாக இருந்தாலும், அவர்கள் அனைவரும் "காந்தி" என்ற ஒரு மனிதரின் தலைமைக்கும், ஆளுமைக்கும் கட்டுப் பட்டு இருந்தனர். அடுத்தது நேரு அவர்கள். இவருக்கும் ஆங்கிலேய அரசிடம் செல்வாக்கு இருந்தது. ஆகவே வெளிப்படையாகச் சொல்ல வேண்டுமானால் இவர்கள் இருவரையும் மீறி போஸால் ஏதும் செய்ய முடியாமல் போயிற்று. காங்கிரஸ் கட்சியின் விதிகளின்படி காங்கிரஸ் காரியக் கமிட்டிக்கு உறுப்பினர்களை காங்கிரஸ் தலைவர்தான் தீர்மானித்து நியமிக்க வேண்டும். ஆனால் போஸால் அதைத் தீர்மானிக்க முடிந்தாலும் நியமிக்க முடியவில்லை. காந்தி ஆதரவாளர்கள் சொல்லுபவர்களை நியமிக்கும்படி நிர்ப்பந்தப் படுத்தப் பட்டார். (இதை போஸே எழுதி இருக்கிறார்.) இப்படித் தன்னிச்சையாக அவர் செயல் படமுடியாமல் எல்லா விதத்திலும் அவருக்கு மறைமுகத் தடை போடப் பட்டது. இந்தச் சமயம் இடது சாரிகள் கொடுத்து வந்த ஆதரவும் சரியாக செயல்படுத்த முடியவில்லை. சோ்ஷலிஸ்ட்டுகளோ இதிலிருந்து தம்மை விலக்கிக் கொண்டனர்.ொரு பொம்மைத் தலைவராக ரப்பர் ஸ்டாம்பாக இருக்க விரும்பால் போஸ் தானே விலகி ராஜினாமா கொடுக்கும்படியான சூழ்நிலை உருவாக்கப் பட்டது. இந்த விவரங்கள் போதுமா? போஸ் பகத்சிங் தூக்கிலிடப் பட்டதற்கு ஆதரவு ஒன்றும் தெரிவிக்கவில்லை. அப்போது கல்கத்தா இளைஞர் காங்கிரஸ் தலைவராய் இருந்தாரோன்னு நினைக்கிறேன். எதிர்ப்பைத் தெரிவித்துவிட்டு "மாண்டலே" சிறையில் இருந்தார். எதுக்கும் ஒருமுறை கூகிளாண்டவர் கிட்டேயும் கேட்டுக்கறேன். போர்க்கொடி, இது போதுமா? இன்னும் கொஞ்சம் வேணுமா?
நபி இப்ராஹீம் (அலை) அவர்கள் புதுப்பித்துக் கட்டிய காபா ஆலயம், பலவீனமாக இருந்ததால் குறைஷியர் அதை இடித்துவிட்டுப் புதுப்பித்துக் கட்டினார்கள். நபித்துவ வாழ்வுக்கு முன், காபாவைப் புதுப்பித்துக் கட்டும் அறப்பணியில் நபி (ஸல்) அவர்களும் கலந்து கொண்டு கல் சுமந்திருக்கிறார்கள். குறைஷியர் காபாவைக் கட்டும்போது பொருளாதார நெருக்கடியினால் காபாவைச் சுருக்கி விட்டனர். படம் காண்க. “நான் காபா ஆலயத்தில் நுழைந்து அதில் தொழ விருப்பம் கொண்டிருந்தேன், அப்போது நபி (ஸல்) அவர்கள் என் கையைப் பிடித்து ஹிஜ்ருக்குள் என்னை நுழையச் செய்து ஆலயத்தின் உள்ளே நுழைய நீ விரும்பினால் இங்கே தொழுவாயாக! ஏனெனில் இதுவும் ஆலயத்தின் ஒரு பகுதியாகும். எனினும் உனது கூட்டத்தினர் காபாவைக் கட்டியபோது அதைச் சுருக்கி விட்டனர். மேலும் இந்த இடத்தை ஆலயத்தை விட்டும் அப்புறப்படுத்தி விட்டனர்” என்று கூறினார்கள். (திர்மிதீ, நஸயீ) இந்த செய்தியை அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். மாஷா அல்லாஹ், இதை இறைவன் இந்த சமுதாயத்துக்கு வழங்கிய மாபெரும் அருள் என்றே சொல்ல வேண்டும். நபி இப்ராஹீம் (அலை) அவர்கள் சரியான அடித்தளத்திலிருந்து (002:127) உயர்த்திப் புதுப்பித்துக்கட்டிய காபா நான்கு மூலைகளைக் கொண்டதாக இருக்கவில்லை. இரு யமனிய மூலைகள் (ருக்னைன் யமானீயன்) என்று சொல்லப்படும் வடகிழக்கு, தென் கிழக்கு ஆகிய இரு மூலைகளை மட்டும் கொண்டதாக இருந்தது. இப்போது இருக்கும் காபாவுக்கு வடக்கே உள்ள ஷாமியா மூலைகள் (ருக்னுஷ் ஷாமியா) இருக்கவில்லை. படம் 1ல் ஒட்டகத் திமில் போல் வளைந்து காணப்படும் ‘ஹிஜ்ர்’ அல்லது ‘ஹத்தீம்’ என்று அழைக்கப்படும் அரைவட்டப் பகுதியும் சேர்த்து காபா செவ்வையான வடிவத்தில் இருந்தது. குறைஷியர் காபாவைப் புதுப்பித்துக் கட்டியபோது பொருளாதார நெருக்கடியின் காரணமாக ஹத்தீம் பகுதியில் ஐந்து அல்லது ஆறு முழங்களைக் கொண்ட அரைவட்டப் பகுதியை அப்புறப்படுத்தி, சதுர வடிவத்தில் சுருக்கிக்கட்டி விட்டனர். ஆயினும், இன்றும் ஹிஜ்ர் அல்லது ஹத்தீம் என்று அழைக்கப்படும் அரைவட்டப் பகுதியும் காபாவைச் சேர்ந்த பகுதியே என்பதற்கு காபாவைத் தவாஃப் செய்பவர்கள் அந்த அரைவட்டப் பகுதியையும் சேர்த்தே சுற்றுகிறார்கள் என்பதிலிருந்து விளங்கலாம். மேலும் நபி (ஸல்) அவர்களும் அரைவட்டப் பகுதியும் காபாவைச் சார்ந்தது என்றே அங்கீகரித்திருக்கிறார்கள். இதற்கான ஆதாரங்கள் பல நபிவழித் தொகுப்புகளில் இடம் பெற்றிருக்கின்றன. இப்போது இருக்கும் சதுர வடிவான காபாவை, நபி இப்ராஹீம் (அலை) அவர்கள் புதுப்பித்துக் கட்டியிருந்தது போல் செவ்வக வடிவான அமைப்பில் கட்டுவதற்கும், காபாவுக்கு கிழக்கு, மேற்குமாக இரு வாயில்களை அமைக்கவும் நபி (ஸல்) அவர்கள் நாடியிருந்தார்கள். ஆனால் குறைஷியர் புதிதாக இஸ்லாத்தை ஏற்றிருந்ததால் அதை வெறுப்பார்கள் என்ற எண்ணத்தில் நபி (ஸல்) அவர்கள் அதைக் கைவிட்டார்கள். இதை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த அறிவிப்பை தமது சிறிய தாயார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாகச் செவியேற்றிருந்த அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்கள் மறைவுக்குப்பின் ஹிஜ்ரி 64ம் ஆண்டில், நபி (ஸல்) அவர்கள் காபாவை எவ்வாறு கட்டுவதற்கு நாடியிருந்தார்களோ அதைப் போன்று ஹிஜ்ர், ஹத்தீம் என்ற அரைவட்டப் பகுதியையும் காபாவோடுச் சேர்த்துக் கட்டினார்கள், காபாவுக்குள் நுழைந்து வெளியேற மேற்கு, கிழக்கு என இரு வாயில்களையும் அமைத்தார்கள். அதற்கான காரணம்… யஸீது பின் முஆவியா ஆட்சிக் காலத்தில் ஷாம்வாசிகள் (அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்களுக்கு எதிராக மக்காவை முற்றுகையிட்டு) போர் தொடுத்தபோது, இறையில்லம் காபா தீக்கிரையானது. அப்போது நடந்தவை நடந்து முடிந்தன. அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்கள் மக்கள் ஹஜ் பருவத்தில் ஒன்று கூடும்வரை இறையில்லத்தை அது நிலையிலையிலேயே விட்டு வைத்தார்கள். (பனூ உமய்யாக்களான) ஷாம்வாசிகளுக்கு எதிராக மக்களுக்கு எழுச்சியூட்டுவதற்ாகவே அல்லது அவர்களை ரோஷம் கொள்ளச் செய்வதற்காகவே அவ்வாறு விட்டு வைத்தார்கள். (ஹஜ்ஜை முடித்து) மக்கள் புறப்பட்டபோது அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்கள், ”மக்களே காபா விஷயத்தில் எனக்கு ஆலோசனை கூறுங்கள். அதை இடித்துவிட்டுப் புதிதாகக் கட்டுவதா அல்லது பழுதடைந்த பகுதியை மட்டும் செப்பனிடுவதா?” என்று கேட்டார். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், ”எனக்கு இது தொடர்பாக ஒரு யோசனை தோன்றுகிறது. அதில் பழுதடைந்த பகுதியை மட்டும் நீங்கள் செப்பனிடுங்கள். மக்கள் இஸ்லாத்தை ஏற்றபோதிருந்த அதே நிலையில் காபாவை விட்டுவிடுங்கள், மக்கள் இஸ்லாத்தை ஏற்றபோதும், நபி (ஸல்) அவர்கள் இறைத்தூதராக நியமிக்கப்பெற்றபோதும் இருந்த நிலையில் அதன் கற்களையும் (விட்டுவிடுங்கள்)” என்றார். அதற்கு அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்கள், ”உங்களில் ஒருவரது இல்லம் தீக்கிரையானால் அதைப் புதுப்பிக்காத வரை அவரது மனம் திருப்தியடைவதில்லை. இந்நிலையில் இறையில்லத்தின் விஷயத்தில் மட்டும் எப்படி (நீங்கள் இவ்வாறு கூறுவீர்கள்)? நான் (காபாவை இடித்துப் புதுப்பிப்பதா, அல்லது பழுதடைந்ததைச் செப்பனிடுவதா எனும் விஷயத்தில்) என் இறைவனிடம் நன்முடிவு வேண்டி மூன்று முறை பிரார்த்திப்பேன். பிறகு ஒரு முடிவுக்கு வருவேன்” என்றார். நன்முடிவு வேண்டி பிரார்த்தித்தபின், இடித்துவிட்டுப் புதுப்பிக்கும் முடிவுக்கு வந்தார். இதை வாசித்தீர்களா? : தஞ்சை முஸ்லிம்களைக் குறிவைக்கும் சங் பரிவாரங்கள் (பகுதி 1) அப்போது மக்கள் முதலில் காபாவின் மீது ஏறும் மனிதர் மீது வானத்திலிருந்து ஏதேனும் வேதனை இறங்கிவிடும் என அச்சம் தெரிவித்தனர். இறுதியாக ஒரு மனிதர் காபாவின் மீதேறி அதிலிருந்து ஒரு கல்லைக் கீழே தள்ளினார். அவருக்கு எதுவும் நேராததைக் கண்ட மக்கள் ஒவ்வொருவராக (இடிக்கும் பணியில்) ஈடுபட்டு அதைத் தரைமட்டமாக்கினர். பின்னர் அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்கள் கட்டுமானப்பணி நிறைவடையும்வரை (இறையில்லத்திற்குத் தற்காலிகத்) தூண்கள் அமைத்து அவற்றின் மீது திரையும் தொங்க விட்டார்கள். மேலும், அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்கள் கூறினார்கள், ஆயிஷா (ரலி) அவர்கள் ”என்னிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (உன்னுடைய சமுதாய) மக்கள் இறைமறுப்பிற்கு நெருக்கமான காலத்தவர்கள் (புதிதாக இஸ்லாத்தை ஏற்றவர்கள்) என்றில்லையாயின் – என்னிடம் காபாவின் கட்டடத்தை வலுப்படுத்தக்கூடிய அளவு பொருளாதாரம் இல்லை என்பது (ஒருபுறம்) இருக்க – நான் ‘ஹிஜ்ர்’ பகுதியில் ஐந்து முழங்களை காபாவுடன் சேர்த்து விட்டிருப்பேன். பின்னர் மக்கள் நுழைவதற்கு ஒரு வாயிலும் வெளியேறுவதற்கு ஒரு வாயிலுமாக (இரு வாயில்களை) அதற்கு அமைத்திருப்பேன். என்று கூறியதை நான் கேட்டுள்ளேன். இன்று என்னிடம் பொருளாதாரமிருப்பதைக் காண்கிறேன். மக்களை அஞ்சும் நிலையிலும் நான் இல்லை” என்று கூறி(விட்டு காபாவைப் புதுப்பிக்கலா)னார்கள். பின்னர் காபாவில் ‘ஹிஜ்ர்’ பகுதியில் ஐந்து முழங்களைக் கூடுதலாக்கினார்கள், மக்கள் பார்த்துக் கொண்டிருக்கவே (ஹிஜ்ர் பகுதியை அகழ்ந்து) ஓர் அடித்தளத்தை வெளியாக்கினார்கள். அதன் மீதே காபாவை எழுப்பினார்கள். (முடிவில்) காபாவின் உயரம் பதினெட்டு முழங்களாக இருந்தது. அதன் உயரத்தை அதிகமாக்கிய பின்பும் அது குறைவாகவே பட்டது. எனவே மேலும் பத்து முழங்கள் அதிகமாக்கினார்கள், அத்துடன் உள்ளே நுழைவதற்கும் ஒரு வாயில், வெளியேறுவதற்கு ஒரு வாயில் என இறையில்லத்திற்கு இரு வாயில்களை அமைத்தார்கள். (முஸ்லிம்) குறைஷியர் சுருக்கிக் கட்டிய காபாவை – அன்று மக்காவின் ஆட்சியாளராக இருந்த அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்கள் – இடித்து விட்டு விரிவுபடுத்தி புதுப்பித்துக் கட்டினார்கள். இப்னு ஸுபைர் கொலை செய்யப்பட்டபோது, ஹஜ்ஜாஜ் பின் யூசுஃப் மக்காவின் ஆட்சியாளராகப் பொறுப்பேற்றார். கலீஃபா அப்துல் மலிக் பின் மர்வானுக்கு ஒரு கடிதம் எழுதுகிறார். அதன் பிறகு அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்கள் காபாவை இடித்து விரிவாக்கிக் கட்டிய காபா, மீண்டும் ஹிஜ்ரி 74ல் இடிக்கப்பட்டு, குறைஷிகள் கட்டியது போல சுருக்கிக் கட்டப்படுகிறது. ஹிஜ்ரி 74ல் ஹஜ்ஜாஜ் பின் யூசுஃப். அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்கள் கொல்லப்பட்டபோது ஹஜ்ஜாஜ் பின் யூசுஃப் இந்த விவரங்களைத் தெரிவித்து (கலீஃபா) அப்துல் மலிக் பின் மர்வானுக்கு ஒரு கடிதம் வரைந்தார். அதில் ”அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்கள் (ஹிஜ்ர் பகுதியை அகழ்ந்து அங்கிருந்த) ஓர் அடித்தளத்தின் மீது காபாவை எழுப்பியுள்ளார், அதை மக்காவின் நியாயவான்கள் பலரும் பார்த்துள்ளனர்” என்றும் குறிப்பிட்டிருந்தார். அதற்கு அப்துல் மலிக் பின் மர்வான், ”நாம் இப்னு ஸுபைரை எந்த விஷயத்திலும் களங்கப்படுத்த விரும்பவில்லை, எனவே அவர் உயர்த்திக் கட்டியதை அப்படியே விட்டுவிடுவீராக! ‘ஹிஜ்ர்’ பகுதியிலிருந்து அவர் அதிகப்படுத்தியதை (மட்டும்) பழையபடியே மாற்றி அமைப்பீராக! அவர் புதிதாகத் திறந்துவிட்ட வாயிலை மூடிவிடுவீராக!” என்று பதில் எழுதினார். எனவே, ஹஜ்ஜாஜ் (‘ஹிஜ்ர்’ பகுதிச் சுவரை) இடித்து முன்பிருந்த அமைப்பிற்கே மாற்றி அமைத்தார். (முஸ்லிம்) பிறகு… அப்துல் மலிக் மர்வான் ஆட்சிக் காலத்தில், அவரிடம் ஹாரிஸ் பின் அப்துல்லாஹ் பின் அபீரபீஆ (ரஹ்) அவர்கள் ஒரு தூதுக் குழுவில் சென்றார்கள். அப்போது அப்துல் மலிக் பின் மர்வான், ”அபூகுபைப் (இப்னுஸ் ஸுபைர்) ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்து தாம் கேட்டதாகக் கூறும் செய்தியை, அவர் அவர்களிடமிருந்து கேட்டிருக்கமாட்டார் என்றே நான் எண்ணுகிறேன்” என்றார். அதற்கு ஹாரிஸ் (ரஹ்) அவர்கள், ”ஆம் (அபூகுபைப் உண்மையே சொல்கிறார்) இதை நானும் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்து செவியுற்றுள்ளேன்” என்றார். அதற்கு அப்துல் மலிக் பின் மர்வான் ”ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்து நீங்கள் செவியுற்றதைக் கூறுங்கள்” என்றார். அதற்கு ஹாரிஸ் (ரஹ்) கூறினார், ஆயிஷா (ரலி) அவர்கள் சொன்னார்கள், என்னிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ”உன்னுடைய சமுதாயத்தார் இறையில்லம் காபாவின் கட்டடத்தைச் சுருக்கிவிட்டனர். அவர்கள் (புதிதாக இஸ்லாத்தை ஏற்றவர்கள்) என்றில்லையாயின், அவர்கள் விட்டுவிட்டதை நான் மறுபடியும் இணைத்துக் கட்டியிருப்பேன். எனக்குப் பின் உன் சமுதாயத்தாருக்கு அதை (விரிவாக்கிக்) கட்ட வேண்டுமென்ற எண்ணம் தோன்றினால் (அவ்வாறு செய்யட்டும்!) என் அருகில் வா! அவர்கள் விட்டுவிட்ட (இடத்)தை உனக்கு நான் காட்டுகிறேன்” என்று கூறிவிட்டு, (காபா அருகில்) ஏழு முழங்கள் அளவிற்கு இடத்தை எனக்குக் காட்டினார்கள். (முஸ்லிம்) இதை வாசித்தீர்களா? : காபா இடம் மாறிக் கட்டப்பட்டிருக்கிறதா? (பகுதி-2) பிறகு ஹாரிஸ் பின் அப்துல்லாஹ் (ரஹ்) அவர்களிடம் அப்துல் மலிக் பின் மர்வான் ”ஆயிஷா (ரலி) அவர்கள் இவ்வாறு கூறியதை நீங்கள் செவியுற்றீர்களா?” என்று கேட்டார். அதற்கு ஹாரிஸ் (ரஹ்) அவர்கள் ”ஆம்” என்றார்கள். பிறகு அப்துல் மலிக் பின் மர்வான் தம்மிடமிருந்த குச்சியால் தரையைச் சிறிது நேரம் குத்திக் கீறி (யபடி ஆழ்ந்து யோசித்து) விட்டு, ”இறையில்லத்தையும் இப்னுஸ் ஸுபைர் மேற்கொண்டதையும் (அதே நிலையில்) விட்டிருக்க வேண்டுமென (இப்போது) விரும்புகிறேன்” என்றார். (முஸ்லிம்) இவ்வாறாக… – நபி இப்ராஹீம் (அலை) அவர்கள் காபாவைப் புதுப்பித்துக் கட்டினார்கள். – பிறகு, குறைஷியர் காபாவை இடித்துவிட்டுப் புதுப்பித்துச் சுருக்கிக் கட்டினர். – பிறகு, ஹிஜ்ரி 64ல் மக்காவின் ஆட்சியாளாராக இருந்த அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்கள் காபாவை இடித்துவிட்டு ஹத்தீமை காபாவோடு இணைத்து விரிவாக்கிக் கட்டினார்கள். – பிறகு, ஹிஜ்ரி 74ல் மக்காவின் ஆட்சியாளராக இருந்த ஹஜ்ஜாஜ் பின் யூசுஃப், விரிவாகக் கட்டப்பட்டிருந்த காபாவில் ஹத்தீம் எனும் அரைவட்டப் பகுதியை இடித்து நீக்கிவிட்டு குறைஷியர் கட்டியிருந்த அளவுக்குச் சுருக்கிக் கட்டினார். – இன்று இருக்கும் காபாவின் அமைப்பு, ஹஜ்ஜாஜ் பின் யூசுஃப் கட்டியது. தற்போது புனித காபாவின் கட்டட அமைப்பு: சதுர வடிவம். இதற்குப்பின் மாற்றம் செய்வதை அறிஞர்கள் சிலர் விரும்பவில்லை. இதற்கு எடுத்துக்காட்டாக பின்வரும் நிகழ்ச்சியைக் கூறலாம். இறைநம்பிக்கையாளரின் தலைவர் ஹாரூன் அர்ரஷீத் அல்லது அவருடைய தந்தை மஹ்தீ, காபாவை இடித்துவிட்டு அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்கள் செய்த மாற்றத்தை மீண்டும் கொண்டு வருவது குறித்து இமாம் மாலிக் (ரஹ்) அவர்களிடம் யோசனை கேட்டார். அதற்கு அவர்கள், ”இறைநம்பிக்கையாளரின் தலைவரே! இறையில்லம் காபாவை அரசர்களின் விளையாட்டுத் தலமாக ஆக்கி விடாதீர்கள். ஆளாளுக்கு அதை இடிக்க நினைப்பார்கள், இடித்தும் விடுவார்கள்” என்று கூறினார்கள். எனவே ஹாரூன் அர்ரஷீத் அந்த முடிவைக் கைவிட்டார். (தஃப்ஸீர் இப்னு கஃதீர்) {mosimage}காபா சிலமுறைகள் இடிக்கப்பட்டுக் கட்டப்பட்டிருந்தாலும் காபாவின் பழைய அஸ்திவாரத்திற்குள்ளேயே கட்டப்பட்டிருக்கிறது. பழைய அஸ்திவாரத்தை விட்டு வெளியே கட்டப்படவில்லை. குறைஷியர் காபாவைச் சுருக்கி விட்டனர் என்பது பழைய அஸ்திவாரத்திற்குள்ளேயே சுருக்கிக் கட்டினார்கள். மேலும் ஹத்தீம் என்ற வளைந்த பகுதியை அப்புறப்படுத்திச் சுருக்கிக் கட்டினார்கள். அதனால் காபா இடம் மாற்றிக் கட்டப்படவில்லை! காபாவுக்குள்ளேயே காபா சுருக்கப்பட்டது இடம் மாறி காட்டியதாக ஆகாது. இன்றும் காபாவை வலம் வருபவர்கள் ஹத்தீம் – வளைந்த அரைவட்டப் பகுதியையும் சேர்த்து சுற்றி வருகிறார்கள். அருகிலுள்ள படம் காண்க. மேலும், காபாவின் மேல் பகுதி முகடுகளைத் தாங்கி நிற்க காபாவின் உட்பகுதியில் மூன்று தூண்கள் நிறுவப்பட்டுள்ளன. இப்போது இருக்கும் தரையை விட்டு சற்று மேல் பகுதியில் அமைந்த காபாவின் நுழைவாயில் பற்றி நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஆயிஷா (ரலி) அறிவிக்கும் செய்தியில், நான் நபி(ஸல்) அவர்களிடம் கஅபாவின் அருகிலுள்ள ஒரு (வளைந்த சிறு) சுவரைப் பற்றி, ‘இது காபாவில் சேர்ந்ததா?’ எனக் கேட்டேன். அதற்கு அவர்கள் ‘ஆம்!” என்றார்கள். பிறகு நான் ‘எதற்காக அவர்கள் இதனை காபாவோடு இணைக்கவில்லை?’ எனக் கேட்டேன். அதற்கவர்கள் ‘உன்னுடைய சமூகத்தாருக்குப் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதால் தான்!” என்று பதிலளித்தார்கள். நான் ‘காபாவின் வாசலை உயரத்தில் வைத்திருப்பதின் காரணம் என்ன?’ எனக் கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள் ‘தங்களுக்கு வேண்டியவர்களை உள்ளே அனுமதிப்பதற்காகவும் தங்களுக்கு வேண்டாதவர்களைத் தடுத்து விடுவதற்காகவுமே உன்னுடைய கூட்டத்தார் அவ்வாறு செய்தார்கள். ‘உன் கூட்டத்தினர் புதிதாக இஸ்லாத்தை ஏற்றவர்களாயிருப்பதால், அவர்களின் உள்ளத்தில் வெறுப்பு தோன்றும்’ என்ற அச்சம் எனக்கில்லாவிட்டால் நான் இச்சுவரை காபாவினுள் இணைத்து அதன் கதவைத் கீழிறக்கி பூமியோடு சேர்ந்தால் போலாக்கியிருப்பேன்” என்று பதிலளித்தார்கள். (புகாரி) இன்றும் காபாவின் வாயில் கதவு தரையோடு இல்லாமல் சற்று உயரமான இடத்திலேயே அமைப்பட்டிருக்கிறது. காபாவின் நிர்வாகத்தினர் நாடினாலன்றி காபாவினுள் எவரும் செல்ல முடியாது. ஆனாலும் அல்லாஹ்வின் அளப்பெரும் கிருபையால் காபாவினுள் நுழைந்து தொழ விரும்புபவர்கள் காபா புனித ஆலயத்தின் ஒரு பகுதியாகிய திறந்தவெளியாக இருக்கும் ஹத்தீம் எனும் அரைவட்டப் பகுதியில் நுழைந்து தொழுது கொள்ளலாம். இதுவும் காபாவைச் சேர்ந்ததுதான். மக்கள் ஹத்தீம் பகுதிக்குள் செல்வதை யாரும் தடுக்க மாட்டார்கள். இன்னும் இறுதி காலம்வரை, அல்லாஹ் நாடியவரை காபா இந்த நிலையிலேயே இருக்கும். (அல்லாஹ் மிக அறிந்தவன்) (அல்குர்ஆன், மற்றும் ஹதீஸ் தொகுப்புகள், தப்ஸீர், திருக்குர்ஆனின் நிழலில் ஆகிய நூற்களிலிருந்து ஆதாரங்களைத் திரட்டி இத்தொடர் எழுதப்பட்டது.)
நாட்டு விதைகளை விதைத்து இயற்க்கை விவசாயத்திற்கு மாறுவோம் நம் தாய்மொழி தமிழுக்கு கையெழுத்தை மாற்றுவோம் என்று முழங்கிய நடிகர் ஆரி அவர்களுக்கு DR.R.K.S கல்லூரி நிர்வாகம் "மக்கள் சேவகர்" என்ற பட்டமளித்து விருது வழங்கி கௌரவித்தார்கள் . DR. R. K. Shanmugam Educational Trust சார்பாக மறைந்த DR. R. K.சண்முகம் (சுதந்திர இந்தியாவின் முதல் நிதியமைச்சர்)பெயரில் 1997-ம் வருடம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் DR.R.K.Shanmugam College of Arts and Science என்ற கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது.ஏழை எளிய மற்றும் பிற்படுத்தப்பட்ட பழங்குடி இன மாணவர்களுக்காக ஆரம்பிக்கப்பட்ட இக்கல்லூரி வருடந்தோறும் ஆண்டுவிழா நடத்தி பல்வேறு கலை நிகழ்ச்சிகளை அரங்கேற்றி வருகிறது. இந்த வருட ஆண்டு விழாவில் கலை நிகழ்ச்சிகள் மட்டுமில்லாமல் எங்கள் நிர்வாகம் சார்பாக மக்களுக்காக தன்னலம் பார்க்காமல் நற்பணிகளை முன்னெடுக்கும் பிரபலங்களில் ஒருவரை பாராட்டி கௌரவிக்கவும் முடிவுசெய்யப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம். அவ்வகையில் - பிரபல நடிகர்களே பொது சேவை செய்ய தயக்கம் காட்டும் வேளையில் வளர்ந்து வரும் நடிகராக இருந்தாலும் தன் சினிமா பணிகளுக்கு மத்தியிலும் மக்களுக்கான நலத்திட்ட உதவிகளை முன்னெடுக்கும் பிரபலங்களில் நடிகர் ஆரியும் ஒருவர். திரைப்படங்களில் பிசியாக நடித்து கொண்டிருக்கும் வேளையிலும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல நிகழ்ச்சிகளை பொறுப்பேற்று நடத்துவதிலும் பல நலத்திட்ட விழாக்களில் கலந்துகொண்டு அவர்களை ஊக்குவிப்பதிலும் நடிகர் ஆரி மற்ற தொழில்முறை நடிகர்களிடமிருந்து தனித்து தெரிகிறார். "மாறுவோம் மாற்றுவோம்" என்ற அறக்கட்டளையை வெற்றிகரமாக நடத்திக்கொண்டிருக்கும் இவர் விவசாயம்,ஜல்லிக்கட்டு,நெடுவாசல் என மக்கள் பிரச்னையில் தீவிரம் காட்டிய சமூக சேவகராக அறியப்படுகிறார். இயற்கை விவசாயம் காக்கவும் நம் பாரம்பரிய நாட்டு விதைகளை பயன்படுத்தி பாதுகாக்கும் பொருட்டு ஒரு விழிப்புணர்வு பிரச்சாரம் செய்ததை கின்னஸ் உலகசாதனை புத்தகம் சாதனையாக அங்கீகரித்துள்ளது. சமீபத்தில் வட அமெரிக்க தமிழ் சங்க பேரவை ( 'பெக்னா')வுடன் இணைந்து "மாறுவோம் மாற்றுவோம்" அறக்கட்டளை சார்பாக தாய்மொழியில் கையெழுத்திடும் புதிய விழிப்புணர்வு பிரச்சாரத்தை மக்களிடையே ஏற்படுத்தியதும் கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது கவனிக்கத்தக்கது.. நெகிழி (பிளாஸ்டிக்) பயன்பாடுகளை முற்றிலும் ஒழிக்க வேண்டி பிரச்சாரம் மேற்கொண்டு தமிழக அரசு பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்க முக்கிய காரணியாக அமைந்தார். மேலைநாட்டு குளிர்பானங்களை தவிர்த்து நம் நாட்டு இயற்கை பானங்களான இளநீர்,பதநீர் அருந்துவதை மக்களிடையே ஊக்கப்படுத்தினார்.சமீபத்தில் வடபழனி போக்குவரத்துக்கு காவலர்களுடன் இணைந்து மக்களிடையே போக்குவரத்துக்கு விதிகளை மதிக்க வேண்டிய அவசியத்தை பிரச்சாரம் செய்தார். இவர்தம் சேவைகளையும் தொண்டுகளையும் பாராட்டி அங்கீகரிக்கும் விதமாக கல்லூரி ஆண்டு விழாவில் "மக்கள் சேவகர்" என்ற பட்டமளித்து கௌரவிக்க முடிவு செய்யப்பட்டு மேற்கண்ட விழா கடந்த மார்ச் 1ந் தேதி (இன்று) கல்லூரி வளாகத்தில் உள்ள அறிஞர் அண்ணா கலையரங்கத்தில் சிறப்புற நடைபெற்றது. நாட்டு விதைகளை பயன்படுத்தி மக்கள் இயற்கை விவசாயத்திற்கு மாறவேண்டும் எனவும் அவரவர் தம் தாய்மொழி கையெழுத்து இட வேண்டும் தமிழுக்காக மட்டுமல்லாமல் அவரவர் தாய்மொழியே சிறந்தது என்று குரல் கொடுத்தமைக்காகவும் நடிகர் ஆரி அவர்களுக்கு எங்கள் கல்லூரி சார்பாக "மக்கள் சேவகர்" என்ற பட்டமளித்து விருது வழங்குவதில் பெருமை கொள்கிறோம் என்று DR.R.K.S கல்லூரி chairman DR.மகுடமுடி மற்றும் கல்லூரி இயக்குனர் என்ஜினீயர் திரு.M .R .நாராயணன்அவர்களும் கூறினார்கள். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக Dr.மதன்குமார் ஸ்ரீனிவாசன் (இணைத்துணை தலைவர் -அக்சன்சர்,பெங்களூரு), Dr.M.C.சாரங்கன் I.P.S பங்கேற்றார்.Dr.M.C.சம்பந்தம் B.E.,M.B.A.,Ph.d.,(மேலான் கூடுதல் இயக்குனர்,தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்கம்,தமிழ்நாடு அரசு) ஆகியோர் கலந்து கொண்டனர்
கேரட் மிகவும் மலிவாக எளிதில் கிடைக்கும் காய்களில் ஒன்றாகும். அதிக நன்மைகள் நிறைந்த கேரட் அனைவராலும் விரும்பி உண்ணும் சுவை நிறைந்த காயாகும். நாம் அனுதினமும் பயன்படுத்தும் … Read more நெல்லி பொடி நெல்லி பொடி பயன்கள் நெல்லியில் இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ் போன்ற தாதுக்கள் அதிக அளவில் நிறைந்துள்ளதால் இது இரத்த சோகைக்கு நல்ல மருந்தாகும். நெல்லியில் அறுசுவையில் உப்பு … Read more முடக்கத்தான் பொடி முடக்கத்தான் பொடி பயன்கள் முடக்கத்தான் முடக்கு அறுத்தான் என்பது நாளடைவில் முடக்கற்றான் என்றானது. கசப்புத் தன்மையுடைய முடக்கத்தான் முடக்கு வாத நோய்களை குணமாக்குவதால் முடக்கத்தான் என்று பெயர் … Read more கரிசலாங்கண்ணி பொடி கரிசலாங்கண்ணி பொடி பயன்கள் கரிசலாங்கண்ணி அதிக அளவில் மருத்துவ குணங்கள் நிறைந்த மூலிகையாகும். இதில் எக்லிப்டால், டெஸ்மீத்தைல், அக்கோண்டனால், ஹென்ட்ரை, ஸ்டிக்மாஸ்டீரால், தங்கச்சத்து, இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் … Read more ஆவாரம் பூ பொடி ஆவாரம்பூ பொடி பயன்கள் ஆவாரம்பூ துவர்ப்புத் தன்மை உடையது. இதில் தங்கச்சத்து நிறைந்துள்ளது. ஆவாரம் பூ பொடியை தினமும் ஒரு டீஸ்பூன் அளவு சாப்பிட்டு வர சர்க்கரை … Read more கஸ்தூரி மஞ்சள் பொடி கஸ்தூரி மஞ்சள் பொடி பயன்கள் கஸ்தூரி மஞ்சள் முக அழகு சாதன பொருட்களில் ஒன்றாகும். இது அனைத்து வகை சருமத்திற்கும் கேடு விளைவிக்காத அலர்ஜி எதிர்ப்பு தன்மை … Read more எலுமிச்சை தோல் பொடி பயன்கள் எலுமிச்சை தோல் பொடியினைக் கொண்டு ஃபேஸ் பேக் முதல் பாதத்திற்கு அழகு தரும் பெடிக்யூர் வரை பயன்படுத்தலாம். எலுமிச்சை தோலில் அதிக அளவு கலோரிகள், கார்ப்ஸ், நார்ச்சத்து, … Read more ஆரஞ்சு தோல் பொடி ஆரஞ்சு தோல் பொடியின் பயன்கள் ஆரஞ்சு தோலில் அதிகளவு ஆன்டி ஆக்ஸிடன்டுகள் நிறைந்துள்ளது. இது இயற்கை அழகை விரும்பும் பெண்களுக்கு மிகச் சிறந்த அழகு சாதன பொருளாகும். … Read more முருங்கை இலை பொடி முருங்கை இலை பொடி பயன்கள் முருங்கையில் விட்டமின்கள், மினரல், அமீனோ ஆசிட்கள், வைட்டமின் சி, கால்சியம், பொட்டாசியம் மற்றும் புரோட்டின் போன்ற ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளது. 10 கிராம் … Read more மருதாணி பொடி மருதாணி பொடி பயன்கள் மருதாணி பொடியானது இளநரையை தடுக்க அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். இதனுடன் அவுரி பொடியை சேர்த்து பயன்படுத்தும் போது நம் கூந்தலுக்கு ஏராளமான நன்மைகள் … Read more ரோஸ் பொடி ரோஸ் பொடியின் பயன்கள் ரோஜாவிற்கு இயற்கையாகவே சருமத்தின் நிறத்தை கட்டுப்படுத்தும் தன்மை உள்ளது. ரோஜாவில் அதிகளவு வைட்டமின் சி நிறைந்துள்ளது. இது நல்ல ஆன்டி-ஆக்ஸிடன்ட் ஆகும். ரோஜா … Read more மண் சிகிச்சை மண்ணின் மகத்துவத்தை அறிந்து அதில் உள்ள மருத்துவ குணங்களை கொண்டு மண் சிகிச்சை முறைகளை சித்த மருத்துவர்கள் கூறியுள்ளனர். பழங்காலங்களில் அனைத்து கிராமங்களிலும் மண் சிகிச்சை முறைகளை … Read more முகத்தில் உள்ள கருமை நீங்க வேண்டுமா? முக அழகு என்பது அனைவரும் விரும்பும் ஒன்றாகும். அதிலும் பெண்கள் முகத்தில் ஏதேனும் ஒரு சிறு பரு வந்தாலும் மிகவும் வேதனைப்படுவர். அநேக பெண்கள் வெள்ளை நிறத்தில் … Read more சர்க்கரை நோயில் இருந்து ஆரம்பத்திலேயே தப்பித்துக்கொள்ள… சர்க்கரைக்கேற்ற முருங்கை சர்க்கரை நோய் சர்க்கரை நோய் இன்றைய காலத்தில் அதிகளவில் காணப்படும் நோயாகும். நம் உடலில் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ … Read more உடலுக்குத் தேவையான வைட்டமின்கள் புழுக்கமான சீதோஷ்ண நிலை பெரும்பாலும் மே, ஜுனில் காணப்படுகிறது. வறட்சியான ஈரப்பதம் ஃபுளூ காய்ச்சலுக்கு ஈடான உடல் நலக் கோளாறுகளை ஏற்படுத்துகிறது. மூக்கடைப்பு, டான்சில், குரல் வளை … Read more
KineMaster என்று சொல்லக்கூடிய இந்த செயலியை KineMaster Corporation என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. இந்த செயலி 2013 டிசம்பர் 26 ஆம் நாள் கூகுள் ப்ளே ஸ்டோரில் KineMaster Corporation நிறுவனம் வெளியிட்டது. இதுவரை இந்த செயலியை 10,00,00,000 க்கும் மேற்பட்ட நபர்கள் பதிவிறக்கம் செய்துள்ளனர். தற்போது இந்த செயலியை நீங்கள் கூகுள் ப்ளே ஸ்டோரில் 75.78 எம்பிக்கு பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த செயலிக்கு ப்ளே ஸ்டோரில் இதுவரை 5 க்கு 4.4 ரேட்டிங் பெற்றுள்ளது. இந்த செயலியின் பயன்கள் கீழே பார்க்கலாம். COMPARED TO PC SOFTWARES கணினியில் உங்களது வீடியோக்களை எடிட் செய்வதற்கு Adobe premiere Pro மிகப்பெரிய மென்பொருளாக உள்ளது. அதைப்போன்று மொபைலில் வீடியோக்களை எடிட் செய்வதற்கு முதலிடத்தில் உள்ள செயலி Kinemaster. இதை யாராலும் மறுக்க முடியாது. பிரீமியர் புரோவிலுள்ள அனைத்து அம்சங்களும் இந்த Kinemaster உள்ளது. எனவே மொபைலில் வீடியோக்களை எடிட் செய்வதற்கு இந்த செயலி மிக சிறந்த ஒன்றாக உள்ளது. HOW TO USE THIS BLACK SCREEN EFFECT இந்த வீடியோ விளைவைக் கொண்டு உங்கள் வீடியோ அல்லது புகைப்படங்களை மேலும் அழகாக வடிவமைக்க இந்த விளைவு உதவுகிறது. இதை எப்படி பயன்படுத்துவது என்று கூறுகிறேன். உங்களது புகைப்படங்கள் அல்லது வீடியோவில் மேல் இந்த விளைவை வைத்துவிட்டு வீடியோவை தேர்வு செய்த பின்னர் பிலண்டிங் என்ற ஒரு ஆப்ஷன் இருக்கும். அதில் ஸ்கிரீன் என்ற ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும் பின்னர் உங்களது வீடியோ அந்த விளைவுடன் சேர்ந்து விடும். HOW TO USE THIS GREEN SCREEN EFFECT இந்த விளைவை கொண்டு உங்களது புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை அழகாக மாற்ற முடியும். இந்த விளைவில் பல வகையான வடிவங்கள் உள்ளது. இதை எப்படி பயன்படுத்துவது என்று கூறுகிறேன். உங்களது புகைப்படத்தின் மேல் விளைவு வீடியோவை வைத்துவிட்டு குரோமோ கீ என்ற ஒரு ஆப்சன் இருக்கும் அதை தேர்வு செய்ய வேண்டும். பின்னர் விளைவில் உள்ள அனைத்தும் உங்களது புகைப்படத்தின் மேல் சேர்ந்துவிடும். HOW TO USE THIS INTRO TEMPLATE இந்த டெம்ப்ளேட்டை பயன்படுத்தி உங்களது இன்ட்ரோ வீடியோ உருவாக்க முடியும். இதில் உங்களது லோகோ மற்றும் டெக்ஸ்ட் மட்டும் சேர்த்து ஒரு இன்ட்ரோ வீடியோ உருவாக்கிக்கொள்ள முடியும். இதை மொபைல் மூலம் உருவாக்க முடியும் என்பது தனிச்சிறப்பு எனலாம். இந்த டெம்ப்ளேட்டை கையாள்வது மிகவும் எளிமையான ஒன்று. எனவே அனைவரும் இதை பயன்படுத்தி உங்களது யூட்யூப் சேனலுக்கான இன்ட்ரோ வீடியோ உருவாக்கிக்கொள்ள முடியும். KINEMASTER PREMIUM FEATURES MULTIPLE LAYERS KineMaster அப்ளிகேஷனில் உங்களது விருப்பமான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை ஒன்றன் பின் ஒன்றாக add செய்து உங்களால் எடிட் செய்ய முடியும். பல செயலிகள் இருந்தாலும் இந்த சிறப்பம்சம் Kinemaster அப்ளிகேஷனில் மட்டுமே உள்ளது. இதனால் உங்களது விருப்பமான வீடியோக்களை சரியாக எடிட் செய்துகொள்ள முடியும். BLENDING MODE கூகுள் ப்ளே ஸ்டோரில் வீடியோ எடிட் செய்வதற்காக பல செயலிகள் உள்ளது. ஆனால் அவற்றை எதிலுமே இந்த ப்லண்டிங் ஆப்ஷன் கிடையாது. இந்த செயலில் மட்டுமே உள்ளது. இந்த ப்லண்டிங் ஆப்ஷனை பயன்படுத்தி உங்களது விருப்பமான வீடியோ மற்றும் புகைப்படங்களை ஒன்றாக இணைக்க முடியும். CHROMA KEY வீடியோவின் பேக்ரவுண்ட் ஐ அளிக்க இந்த chroma key ஆப்ஷன் பயன்படுகிறது. வீடியோவின் பேக்ரவுண்ட் ஒரே கலராக இருந்தாள் சுலபமாக அளிக்கமுடியும். உதாரணமாக வீடியோவின் பேக்ரவுண்ட் பச்சை நிறத்தில் இருந்தால் ரிமூவ் செய்வதற்கு எளிதாக இருக்கும். வீடியோவில் கலர் எது என்று தெரிந்து கொண்டு ரிமூவ் செய்யும்போது கீ கலர் அதே கலராக செலக்ட் செய்ய வேண்டும். அப்போதுதான் வீடியோவின் பின்புற பேக்ரவுண்ட் ரிமூவ் செய்ய முடியும். VOICE RECORDING வீடியோவை எடிட் செய்யும்போது தேவையான இடத்தில் உங்களது குரலை பதிவு செய்ய இந்த செயலியில் அதற்கான அம்சமும் உள்ளது. குரலைப் பதிவு செய்வதற்கு கூகுள் ப்ளே ஸ்டோரில் பல செயலிகள் உள்ளது இருப்பினும் உங்களது வீடியோக்களை நீங்கள் எடிட் செய்யும்போதே வாய்ஸ் ரெக்கார்ட் செய்வதற்கு இந்த செயலியில் அம்சம் உள்ளது. HANDWRITING இந்த அம்சம் மூலம் உங்களது வீடியோக்களில் தேவையான இடத்தில் சில குறியீடுகளை அமைக்க முடியும். இதனால் உங்களது வீடியோக்களை பார்க்கும் பார்வையாளர்களுக்கு நீங்கள் கூற விரும்புவது குறியீடு மூலம் காட்டும்போது அவர்களுக்கு எளிதாக புரியும். VOICE CHANGER உங்களது உண்மையான குரலை மாற்றவும் அல்லது வீடியோவில் உள்ள பிற குரலை வேறு குரலாக மாற்ற இந்த ஆப்ஷன் பயன்படுகிறது. உதாரணமாக உங்களது குரலை ரோபோட் பேசினால் எப்படி இருக்கும் அதுபோன்று மாற்றவும் இந்த செயலியில் அம்சங்கள் உள்ளது. EQ MODES ஆடியோவில் பல விளைவுகளை ஏற்படுத்த இந்த ஆப்ஷன் பயன்படுகிறது. இதன் மூலம் உங்களது ஆடியோ கேட்பதற்கு தெளிவாகவும் அந்த ஆடியோவை கேட்டுக்கொண்டே இருக்க செய்ய பல ஆப்ஷன்ஸ் இதற்குள் உள்ளது. உதாரணமாக கூறினால் ராக் கிளாசிக் போக் இதுபோன்ற ஆடியோ பில்டர்ஸ் இதில் உள்ளது. இதை பயன்படுத்தும் போது உங்களது ஆடியோ கேட்க இனிமையாக இருக்கும். PREMIUM COLOUR FILTER வீடியோ மற்றும் புகைப்படங்களில் கலரை பிடித்த மாறி மாற்றிக்கொள்ள இந்த கலர் பில்டர் ஆப்ஷன் பயன்படுகிறது. இதன் மூலம் உங்களது வீடியோ மற்றும் புகைப்படத்தின் கலரை மாற்றுவதன் மூலம் அதன் தோற்றம் அழகாக இருக்கும். இதை பயன்படுத்திப் பார்த்தால் மட்டுமே அதன் அனுபவம் உங்களுக்கு தெரியும். EXPORT QUALITY இந்த செயலியை பயன்படுத்தி நீங்கள் எடிட் செய்யும் வீடியோக்களை 4K 60fps வரை அவுட்புட் எடுத்துக்கொள்ள முடியும். இதன் மூலம் உங்களது வீடியோக்களை பார்க்க தெளிவாக இருக்கும். பார்ப்பவர்களுக்கு வீடியோவில் உள்ள தகவல்களை எளிதாக புரிந்து கொள்ள முடியும். இதில் உங்களுக்குப் பிடித்த பார்மட்டில் வீடியோக்களை மாற்றிக் கொள்ளவும் முடியும். உதாரணமாக உங்களுக்கு 720p 30fps வரை போதும் என்றால் அந்த அளவுக்கு உங்களது வீடியோக்களை அவுட்புட் எடுத்துக்கொள்ளலாம். SPEED CONTROL உங்களது வீடியோக்களை வேகமாக மற்றும் மெதுவாக இயக்க இந்த ஸ்பீட் கண்ட்ரோல் ஆப்சன் பயன்படுகிறது. இதன் மூலம் உங்களது வீடியோவை தேவையான இடத்தில் வேகமாக இயக்கவும் அல்லது மெதுவாக இயக்கவும் முடியும். இதை பயன்படுத்தி எடிட் செய்யும்போது பார்வையாளர்களை கவர்ந்து இழுக்க முடியும். ஏனென்றால் வேகமாக நடக்கும் நிகழ்ச்சியை மெதுவாக பார்க்கும் அனுபவம் புதிதாக இருக்கும். இதை நீங்கள் பயன்படுத்தி பார்த்தால் மட்டுமே இந்த அம்சத்தின் சிறப்பை நீங்கள் உணர முடியும். VIDEO REVERSE MODE ஒரு நிகழ்வை தொடக்கத்திலிருந்து பார்க்காமல் கடைசியிலிருந்து முதல் பகுதிக்கு மாற்றி பார்க்க இந்த ரிவர்ஸ் ஆப்சன் பயன்படுகிறது. உதாரணமாக உங்களுக்குப் புரியும் படி கூறினாள் ஒரு மிதிவண்டி சென்றுகொண்டிருக்கிறது அதை அப்படியே பின்புறமாக வரச்செய்யுவும் மற்றும் பழையபடியே அதை செயல்படுத்தவும் பயன்படும் ஆப்ஷன் வீடியோ ரிவர்ஸ் மூடு ஆகும். THREE TYPE OF VIDEO RATIO உங்களது வீடியோக்களை உங்களுக்கு பிடித்த பார்மெட்டில் எடிட் செய்ய இந்த செயலியில் அம்சங்கள் உள்ளது. உதாரணமாக கூறினால் வாட்ஸ்அப் ஃபுல் ஸ்க்ரீன் வீடியோ சைஸில் எடிட் செய்யவும் யூடியூப் வீடியோ சைஸில் எடிட் செய்யவும் இன்ஸ்டாகிராம் போஸ்ட் சைஸில் வீடியோ எடிட் செய்யவும் இதில் ஆப்ஷன்ஸ் உள்ளது. இதை பயன்படுத்தி உங்களுக்கு பிடித்த வடிவத்தில் உங்களது வீடியோக்களை எடிட் செய்ய முடியும். CLIP GRAPHICS இந்த ஆப்ஷனை பயன்படுத்தி உங்களது வீடியோக்களில் நடுவில் புதிய விளைவுகளை ஏற்படுத்த முடியும். உதாரணமாக கூறினால் ஒரு வீடியோவை நடுவில் இரண்டாக கட் செய்திருந்தால் அந்த இடத்தில் ஒரு புதிய எபெக்ட்ஸ் கொடுக்க முடியும். இதன் மூலம் ஒரு வீடியோவில் இருந்து மற்றொரு வீடியோவிற்கு மாறும்பொழுது நீங்கள் ஏற்படுத்திய எபெக்ட்ஸ் நடுவில் இருக்கும். அப்பொழுது அந்த வீடியோவை பார்க்க அழகாக இருக்கும். ஏனெனில் ஒரு வீடியோவில் இருந்து மற்றொரு வீடியோ மாறும்போது நீங்கள் ஏற்படுத்திய விளைவு அந்த வீடியோவை அழகாக்கும். ROTATE AND MIRRORING OPTION வீடியோ மற்றும் புகைப்படங்களை உங்களுக்கு ஏற்றார்போல் ஏற்ற திசைக்கு மாற்றிக்கொள்ள இந்த ரோட்டைட் அண்ட் மிரர் ஆப்சன் பயன்படுகிறது. உதாரணமாக கூறினால் உங்களது வீடியோ கிழக்கு திசையை பார்த்து இருந்தால் அதை மேற்கு மற்றும் உங்களுக்கு பிடித்த திசையில் மாற்றிக்கொள்ள இந்த ஆப்ஷன் பயன்படுகிறது. இதை உங்கள் பிச்சர் மற்றும் வீடியோவில் பயன்படுத்திக் கொள்ளலாம். COLOUR ADJUSTMENT உங்களது வீடியோ மற்றும் புகைப்படங்களில் கலர் வெளிச்சம் கம்மியாக இருந்தால் உங்களது வீடியோ மற்றும் புகைப்படங்களை பார்க்கும்போது ஒரு தெளிவு இருக்காது. அப்படி இருக்கும் உங்களது வீடியோ மற்றும் புகைப்படங்களை இந்த கலர் அட்ஜஸ்ட்மெண்ட் ஆப்ஷனை பயன்படுத்தி தேவையான இடத்தில் காண்ட்ராஸ்ட் லெவல் பிரைட்னஸ் அட்ஜஸ்ட் செய்யும் போது பார்க்க ஒரு அளவுக்கு தெளிவாகவும் அழகாகவும் மாற்ற இந்த ஆப்ஷன் பயன்படுகிறது. எனவே தெளிவில்லாத மற்றும் மங்கலாக இருக்கும் பிச்சர் மற்றும் வீடியோக்களில் இந்த ஆப்ஷனை பயன்படுத்தினால் பார்க்க ஓரளவு நன்றாக இருக்கும். VOLUME ENVELOPE இந்த ஆப்ஷன் Kinemaster அப்ளிகேஷன் அடுத்த லெவலுக்கு கொண்டு செல்ல உதவியது எனலாம். ஏனெனில் இந்த ஆப்சன் கணினியில் எடிட் செய்வதற்கு மட்டுமே உள்ளது. ஆண்ட்ராய்டு செயலியில் அரிதாக காணலாம். அது இந்த இந்த செயலிலும் உள்ளது. இதன்மூலம் உங்களது வீடியோ மற்றும் ஆடியோவில் தேவையான இடத்தில் வால்யூம் அதிகப்படுத்தவும் தேவையற்ற இடத்தில் வால்யூம் முழுமையாக குறைக்கவும் முடியும். VIGNETTE MODE இதைப் பயன்படுத்தி வீடியோ மற்றும் பிச்சர் இன் கரையில் கருநீல ஷேடோ ஏற்படுத்தமுடியும். இதனால் நடுவிலுள்ள அனைத்தும் தெளிவாக பார்க்க முடியும். இதற்காக இந்த ஆப்ஷன் பயன்படுத்துகிறோம். இது வீடியோவை தனித்துவமாக காட்ட உதவுகிறது. நீங்கள் எடிட் செய்ய விரும்பும் போது இதை ஒரு முறை பயன்படுத்தி பாருங்கள் இதன் சிறப்பம்சம் உங்களுக்கு புரியும். EXTRACT AUDIO இதுவும் ஒரு சிறந்த அம்சம் எனக் கூறலாம் இந்த செயலியில் ஏனெனில் வீடியோ எடிட் செய்யும் போது அந்த வீடியோவுக்காண பாடல் உங்களிடம் இல்லை என்றாலும் அந்த ஆடியோ விற்கான வீடியோ உங்களிடம் இருந்தால் அந்த வீடியோவில் இருந்து ஆடியோவை தனியாக பிரித்தெடுக்க முடியும் எடுத்துவிட்டு நமக்குத் தேவையில்லாத வீடியோவை டெலிட் செய்து கொள்ளலாம். நீங்கள் பாடல் டவுன்லோட் செய்யாமலே உங்களுக்கு தேவையான பாடலை தனியாக எடுத்துக்கொள்ள இந்த ஆப்ஷன் பயன்படுகிறது. TRIM AND SPLIT OPTION வீடியோ ஆடியோ மற்றும் புகைப்படங்களை தேவையில்லாத இடத்தை வெட்ட இந்த ட்ரிப் அண்ட் ஸ்பிளிட் ஆப்ஷன் பயன்படுகிறது. இந்த ஆப்ஷன்ஸ் சிறப்பாக செயல்படுகிறது. ஏனெனில் கூகுள் ப்ளே ஸ்டோரில் வீடியோ எடிட் செய்வதற்கான செயலிகள் பல உள்ளது. அவற்றை ஒப்பிடும்போது இந்த செயலியில் நாம் விரும்பும் இடத்தை சரியான இடத்தில் வெட்டி மற்றொரு இடத்தை சேர்க்கவும் முடியும். PAN AND ZOOM இந்த ஆப்ஷன் மூலம் உங்களது வீடியோக்களை பார்வையாளர்களுக்கு மிக அருகாமையில் காட்ட இந்த ஆப்ஷன் பயன்படுகிறது. உதாரணமாக கூறினால் மிக பின்புறத்தில் உள்ள ஒரு சப்ஜெக்ட்டை மிக அருகாமையில் அதாவது திரைக்கு முன்பாக மிக அருகே கொண்டுவர இந்த ஆப்ஷன் பயன்படுகிறது. PREMIUM TEXT இந்தச் செயலியில் அளவுக்கு அதிகமான அகராதிகள் உள்ளது. உங்களுக்கு பிடித்த மொழியை பதிவிறக்கம் செய்து கொள்ளவும் முடியும். Kinemaster asset Store ல் உங்களுக்கு தமிழ்மொழி தேவை என்றால் தமிழ் மொழியை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இந்த செயலியில் டிபால்ட் ஆக ஆங்கில அகராதிகள் உள்ளது. இதை நீங்கள் இலவசமாக பயன்படுத்திக்கொள்ளலாம். OVERLAY AND STICKERS வீடியோ மற்றும் புகைப்படங்களை மேலும் அழகாக்க இந்த ஓவர்லே அண்ட் ஸ்டிக்கர்ஸ் ஆப்ஷன்ஸ் பயன்படுகிறது. உதாரணமாக கூறினால் உங்களது வீடியோவில் தீப்பொறி பறப்பதுபோல் விளைவை ஏற்படுத்தலாம் மற்றும் உங்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறுவதுபோல் விளைவும் ஏற்படுத்த முடியும். இதுவே ஓவர்லே அண்ட் ஸ்டிகர்ஸ் ஆப்ஷன் ஆகும். SPECIAL EFFECTS இதிலும் ஓவர்லே அண்ட் ஸ்டிக்கர்ஸ் ஆப்ஷனை போன்று உங்களுக்குப் பிடித்த விளைவுகளை உங்களது வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களில் பயன்படுத்திக் கொள்ள முடியும். இந்த ஆப்ஷனை வீடியோ மற்றும் புகைப்படங்களில் குறிப்பிட்ட இடத்தில் சரியாக பயன்படுத்த முடியும் தேவையில்லாத இடத்தில் அதை நிறுத்திக் கொள்ளவும் முடியும். இதன் மூலம் உங்களது வீடியோ மற்றவர்கள் வீடியோவிலிருந்து தனித்துவமாக தெரியும். ANIMATION AND TRANSITION EFFECTS எழுத்துக்களில் விளைவுகளை ஏற்படுத்த அனிமேஷன் எபெக்ட்ஸ் பயன்படுகிறது. Transition புகைப்படங்கள் மற்றும் வீடியோவில் விளைவுகளை ஏற்படுத்த உதவுகிறது. இதில் தொடக்கத்தில் ஒரு அனிமேஷன் ஆப்ஷனை பயன்படுத்த முடியும் முடிவில் ஒரு ஆப்ஷனை பயன்படுத்த முடியும். தெளிவாகக் கூறினால் ஒரு எழுத்துக்களின் தொடக்கத்தில் ஒரு விளைவையும் அந்த எழுத்து மறையும் பொழுது ஒரு விளைவையும் கொடுக்க முடியும். KINEMASTER TIPS: WHY DO I HAVE IMAGE INSERT OF MEDIA ? இந்த செயலியில் லேயர் ஆப்ஷனில் மீடியாவிற்கு பதிலாக இமேஜ் என்று இருந்தால் வீடியோக்களை பயன்படுத்த முடியாது. அதை எப்படி மீடியா என மாற்றுவது என்று கூறுகிறேன். Kinemaster அப்ளிகேஷனை ஓபன் செய்ததும் ரேஷியோ செலக்ட் செய்வதற்கு கீழ் ஒரு கியர் ஐகான் இருக்கும். அதை கிளிக் செய்த பிறகு பல ஆப்ஷன்ஸ் அதில் வரும் அவற்றில் மூன்றாவதாக DEVICE CAPABILITY INFORMATION என்று ஒரு ஆப்ஷன் இருக்கும் அதை கிளிக் செய்த பிறகு உங்கள் மொபைலை பற்றிய விவரங்கள் அதில் கூறப்பட்டிருக்கும். அதன்பிறகு மேலே மூன்று புள்ளிகள் இருக்கும் அதை கிளிக் செய்யுங்கள் செய்தபிறகு RUN ANALYSIS NOW என்று வரும் அதை கிளிக் செய்யுங்கள் செய்தபிறகு இரண்டிலிருந்து மூன்று நிமிடங்கள் அது பிராசசிங் ஆகும். அதுவரை வேறு எந்த ஒரு செயலிக்கும் நீங்கள் செல்லக்கூடாது. இது நீங்கள் செய்தபிறகு அப்ளிகேஷனை ஓபன் செய்து பாருங்கள் லேயரில் இமேஜ் என்று இருந்தால் அது மீடியாவாக மாற வாய்ப்பு உள்ளது. இந்த முறையைப் பயன்படுத்தி அனைவருக்கும் மாறும் என்றால் அது கிடையாது உங்களது மொபைலின் process ஐ பொருத்து மாறக்கூடும்.
டெல்லி மாநகராட்சித் தேர்தல்... 100க்‍கும் மேற்பட்ட இடங்களில் ஆம் ஆத்மி முன்னிலை... 80க்‍கும் மேற்பட்ட இடங்களில் பா.ஜ.க. முன்னிலை குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தங்கர், மாநிலங்களவை தலைவராக பொறுப்பேற்பு - வாழ்வில் கடினமான சூழல்களை கடந்து இந்த நிலைக்‍கு வந்திருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் ஆளுநர் 6-வது விரல், அதை வெட்டி எறிய வேண்டும், அஞ்சு விரல் போதும் : நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆவேசம் மத மோதலை ஏற்படுத்தும் வகையில் டிவிட்டரில் கருத்து பதிவிட்டதாகப் புகார் - இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் மீது 2 பிரிவுகளின்கீழ் போலீசார் வழக்குப்பதிவு காஞ்சிபுரம் வழக்‍கறுத்தீஸ்வரர் கோயிலில் நடிகர் டி.ராஜேந்தர், சுவாமி தரிசனம் - காஞ்சி காமாட்சி அம்மன் கோயிலிலும் வழிபாடு டெல்லி மாநகராட்சித் தேர்தல் வாக்‍கு எண்ணிக்‍கை - பா.ஜ.க. 100க்‍கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடக்‍கம் - முக்‍கிய மசோதாக்‍களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டம் ஜி-20-க்‍கு இந்தியா தலைமையேற்றிருப்பதை உலக நாடுகள் உற்று நோக்‍குகிறது - நாடாளுமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேட்டி ரெப்போ வட்டி விகிதம் 0.35 சதவீதம் உயர்வு - ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்‍திகாந்த தாஸ் தகவல் புயல் எச்சரிக்‍கை எதிரொலி... ராமநாதபுரம், கன்னியாகுமரி, மயிலாடுதுறை மாவட்ட மீனவர்கள் கடலுக்‍குச் செல்ல அனுமதி மறுப்பு
பேலியகொட மெனிங் சந்தையில் நாளாந்தம் பெருந்தொகையான மரக்கறிகள் குப்பைகளாக அகற்றப்பட வேண்டியுள்ளதாக மரக்கறி வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். எரிபொருள் நெருக்கடி காரணமாக சந்தைக்கு வரும் வியாபாரிகளின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாலும், மரக்கறிகளை கையிருப்பு செய்ய முடியாமல் இருப்பதே இதற்குக் காரணம் என அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இது தொடர்பில் அதிகாரிகள் கவனம் செலுத்தவில்லை என வியாபாரிகள் மேலும் தெரிவிக்கின்றனர். (யாழ் நியூஸ்) Share Previous News Next News யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.
மருந்தே உணவு உணவே மருந்து என்பது உண்மைதான். பலர் இக்காலத்தில் மருந்தையே - மாத்திரைகளையே- உணவாக- உணவு அளவில் சாப்பிடுகின்றனர். தமிழரின் இயற்கை வாழ்வியலில்- இயற்கையான அளவான உணவே மருந்தாகவும் இருந்து நோய்களை வரவிடாமல் தடுப்பதாகவும் ( வருமுன் காப்போம்) வந்துவிட்டால் போக்குவதாகவும் அமைந்துள்ளது. வாழை இலை வாழை இலையில் சாப்பிடுவதால் தலைமுடி கருக்கும். தலைவாழை இலை என்பது மிகவும் மென்மையான பகுதி என்பதால், அதன் பச்சையம் எளிதில் சூடாக இருக்கும் உணவுடன் கலக்கும். தலைமுடி கருக்க : நெல்லிமுள்ளியைப் பாலில் அரைத்து தலைக்குத்தேய்த்துக் குளி. நரைமுடி கருக்க : மருதோன்றி (மருதாணி) இலைச்சாறு அல்லது பொன்பருத்தி இலைச்சாறு தேய்த்துக் குளிக்கவும்.மருதோன்றி (மருதாணி) இலையை அரைத்து அடையாகத் தட்டித் தேங்காய் எண்ணெயில் கொதிக்க வைத்து, எடுத்தவைத்து நாள்தோறும் முடிக்குத் தேய்க்கவும். 2.இயற்கை மருத்துவம்: அன்பர்களே! நாள்தோறும் ஒரு திருக்குறள் படியுங்கள்! அன்பு இயற்கையானது. வன்பு செயற்கயானது. இனிமையோடும் மகிழ்ச்சியோடும் அமைதியோடும் அன்போடும் வாழும் வாழ்க்கையே இயற்கையானது. அழுகையும் துன்பமும் புலம்பலும் சினமும் சீற்றமும் செயற்கையானவை. குழந்தை இயல்பாகச் சிரிக்கிறது. பசியோ வலியோ உணரப்படும்போது முயற்சி செய்து அழுகிறது. காலை எழுந்தது முதல் இரவு படுக்கைக்குச் செல்லும் வரை. . . . பேஸ்ட், பிரஷ், காஃப்பி, மிக்சி,கிரைண்டர், கேஸ், ஃப்ரைடு ரைஸ், நூடுல்ஸ் , ஃபாஸ்ட் ஃபூட், மெட்ரோ ரயில், ஸ்கூட்டர் / கார் , லேப்டாப், இண்டெர்நெட், மஸ்கிடோ காயில் . . . . . ! என்ன ? எல்லாம் அயல் மொழிச் சொற்களாய் இருக்கின்றனவே! என்கிறீர்களா? ஆம்! அனைத்தும் அயல்! எல்லாமே செயற்கை! “நம் ஊர்ப் புறங்களில் காலையில் எழுந்ததுமே செங்கல் தூள் அல்லது உப்புத்தூள் போட்டு பல் விளக்கிக் கண்ணுள்ளே விளக்கெண்ணெய் விட்டு... அடடா... பெரிய வேடிக்கைதான்!.” -என்று தமிழகச் சிற்றூர் மக்களை- தமிழர்களைக் கிண்டல் செய்து வானொலியில் ஒருவர் வெகுகாலம் பேசிக்கொண்டிருந்தார். இப்போது “உங்கள் பேஸ்ட்டில் உப்பு இருக்கிறதா?” என்று விளம்பரங்களில் கேட்கும் நிலைமைக்கு பசையாக்குநர்களே வந்துவிட்டார்கள். மனிதன் இயற்கையான வாழ்வை இழந்ததால் துன்பப் படுகிறான். உப்பு, கிராம்பு, கருவேலம்பட்டை இடித்துக் கலந்து பற்பொடியாகப் பயன்படுத்தினால் பல்நோய்கள் வருமா? பயன்படுத்துவதில்லை. ஏன்? வேல மரமே தெரியாது! கருவேல மரம் எப்படித் தெரியும்? வேம்பை அயல் நட்டான் காப்புரிமைபெற்ற பின்னர் விழித்துக் கொண்டு மீட்பதற்குப் பல கோடி செலவிட்டவர்கள்தாமே நாம்! இயற்கை வாழ்வுக்குத் திரும்புவோம். “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி!” ஆலங்குச்சி அல்லது வேலங்குச்சியால் பல் விளக்குங்கள்! 3. மூச்சுப் பயிற்சி : நாள்தோறும் குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட இடத்தில் அமர்ந்து மூச்சுப் பயிற்சி, உடற்பயிற்சி, ஓகப்பயிற்சி, தியானம் முதலியன செய்வது உடல்நலத்திற்கு உதவக்கூடியன. மூச்சுமருத்துவம் என்பது “மோக்சா” மருத்துவம் எனச் சீனாவில் வழங்குகிறது. மூச்சுப் பயிற்சி செய்ய நேரம் இல்லாதவர்களும், முறைப்படி பிரணாயாமம் ஆசனம் முதலியன தெரியாதவர்களும், உடல்நலம் இல்லாதவர்களும் கூட செய்யத்தக்க மூச்சுப்பயிற்சி : நல்ல காற்று வீசுகிற ஓரிடத்தில் நிமிர்ந்து அமரவும். வாயை நன்கு மூடிக்கொள்ளவும். வாய்க்குள் நாக்கை கீழ்அண்ணத்துடன் அழுத்தி வைத்துக் கொள்ளவும். கண்ணை மூடிக்கொள்ளவும். மூக்கால் மூச்சை நன்கு உள் இழுக்கவும். சில நொடிகள் உள் வைத்திருக்கவும் பின் இழுத்த நேரத்தைவிட அதிகமாக மூச்சை மிக மென்மையாக வெளியே விடவும். இப்படி 30 முறை செய்யவும். நாள்தோறும் காலை மாலை இந்த மூச்சுப் பயிற்சி செய்தால் நோய்கள் வருவதைத் தடுக்கலாம். - கல்விக்காவலர் கி.துளசி ஐயா வாண்டையார், பூண்டி, தஞ்சை மாவட்டம். 4. இசைமருத்துவம்: நமது முன்னோர்கள் பலநோய்களைக் குணமாக்கத் தேவாரம் திருவாசகம் ஆழ்வார் பாடல்கள் போன்றவற்றை வீடுகளில் பாடினர். இக்காலத்தில் மேல்நாடுகளிலும்,சீனா,ஜப்பான்போன்ற நாடுகளிலும் வேளாண்மையில் செடிகொடிகள் நன்கு வளரவும், மனிதர்களுக்கு நோய்கள் தீரவும், கர்ப்பினிகளுக்கு நன்கு குழந்தை பிறக்கவும் இசையைப் பயன்படுத்துகின்றனர். குறிப்பிட்ட நோய்களுக்குக் குறிப்பிட்ட இசை எனத் தேர்ந்தெடுத்து அதை செவிக்கருவியில்பொருத்தி நாள்தோறும் சில மணி நேரங்கள் அந்த இசையைச்செவிமடுக்க வைப்பார்கள். இந்த இசை மருத்துவம் நோய்கலைக் குணமாக்க உதவுகிறது. 5. தண்ணீர் மருத்துவம்: காலை வெறும் வயிற்றில் 500 மில்லி ( 3 குவளை) தண்ணீர் குடிப்பது நல்லது; மாலை 8 மணிக்கு முன்னர் முன்று நான்கு முறை குடிப்பதும் நல்லது; சளிவாகு உள்ளவர்கள் இரண்டுமுறை மட்டுமே குடிக்கவும். நீர் குடித்த ஒருமணி நேரத்திற்குப் பின்னர் சாப்பிட வேண்டும்; அல்லது சாப்பிட்ட 1 மணி நேரத்திற்குப் பின்னர் தண்ணீர் குடிக்க வேண்டும்; சாப்பிடும்போது தண்ணீர் குடிக்கக் கூடாது; பேசக் கூடாது. மண்பானையில் குடிதண்ணீரில் வெட்டிவேர், விளாமிச்சி வேர் போட்டு வைத்திருந்தால் மணமாக இருக்கும்; உடலுக்குக் குளிர்ச்சியும் தரும். 1 ஏலக்காய், 2 கிராம்பு, 2 சீரகம் போட்டு வைத்தால் மணமும் இருக்கும்; வயிற்றுக் கோளாறுகள் வருவதில்லை. 6. எண்ணெய் மருத்துவம்: “சனி நீராடு” என்று ஔவை கூறியுள்ளார். எனவே சனிக்கிழமை மட்டுமே நீராடல் – குளியல் – எனக் கூறி சனிக்கிழமை மட்டும்தான் குளியல் என முடிவு செய்யாதீர்கள்! பிறகு உங்கள் துணிமணிகள் நாறும், வீடே நாறிவிடும்! “புறந்தூய்மை நீரான் அமையும்” என்பார் திருவள்ளுவர். நாள்தோறும் குளிப்பதுதான் நல்லது. சனிக்கிழமைகளில் எண்ணெய் தேய்த்து நீராடல் வேண்டும். எண்ணெய் என்றால் எள்+ நெய்; எனவே எள்ளின் நெய் என்று பொருள் தரும். எள் நெய்யைக் குறிக்க நல்லெண்ணெய் என்ற தனிச் சொல் வழக்கு உள்ளதே அதன் நல்ல தன்மையையும் அதிக நற்பயன் தருவதையும் உணர்த்தும். எண்ணெய் என்பது பொதுவாக அனைத்து நெய் வகைகளையும் குறிக்கத்தொடங்கி கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெய், கடுகு எண்ணெய் என வழங்கலாயிற்று. மண்ணிலிருந்து கிடைப்பதால் மண்ணெண்ணெய் என்ற புதுச் சொல்லை உருவாக்கிக் கொண்டவர்கள் தமிழர்கள்! நடுவில் கொஞ்சம் இலக்கணம் படித்து விட்டோம்! இது என்ன விளக்கெண்ணெய்? என்கிறீர்களா! பாரதியார் இப்படித்தான் இலக்கணத்தை ஒதுக்கினார். மாகவி ஆகிவிடவில்லையா? நல்லெண்ணெயில் காலை மாலை வாய் கொப்புளிக்க வாய் நாற்றம், பல்சொத்தை நீங்குவதுடன் வாய்வழியே குடலுக்கு – உடலுக்குச்- சேரும் நோய்க் கிருமிகள் தவிர்க்கப் பெறுவதால் பிற நோய்கள் பலவும் தாக்குவதில்லை. குறிப்பாக வாதவலிகள் மூட்டு வலிகள் நீங்குகின்றன. பெண்கள் வெள்ளிக் கிழமையும் ஆண்கள் சனிக்கிழமையும் நல்லெண்ணெய் தேய்த்துக் கொள்வது நல்லது. சளி (சிலேட்டும) உடல்வாகு உள்ளவர்கள் குளிர் காலங்களில் அல்லது சளி பிடிக்கும் நிலையில், சிறிது அரிசி, ஓமம், மிளகு (அனைத்து அரை தேக்கரண்டி) இட்டுக் காய்ச்சித் தலைக்குத் தேய்த்துகொள்க. சூட்டு உடம்பினர் நல்லெண்ணெய் அல்லது நெய், அல்லது தயிர் தேய்த்துக் குளிக்கலாம். இடுகையிட்டது இறையரசன் நேரம் 9:02 PM 2 comments: Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest Wednesday, February 12, 2014 கிளி ஓச்சி கிளிநொச்சி பெண்மணி மாத இதழ் இலக்கியச் சோலை–1 / வெளிவந்தது - கிளி ஓச்சி கிளிநொச்சி -முனைவர் பா.இறையரசன் மிகவும் அழகான அந்த ஊர்தான் கிளிநொச்சி. சிறு தெருக்களும் பெரிய வீதிகளும் செம்மண் சாலைகள்தான்.வீடுகள் நூல்பிடித்துபோல் நேர் ஒழுங்காக இருக்கும். எல்லா வீடுகளும் செங்கல் வீடுகள். நகரத்துக்கு உள்ளேயே அங்காடித்தெருக்கள். காய்க் கடை, எண்ணெய்க் கடை, துணிக்கடை என எல்லாக் கடைகளும் அங்கே இருந்தன. இளவனர் (யவனர்) என்னும் வெளிநாட்டவர் கடைகளும் உண்டு. மிலேச்சர் என்னும் ஆரியர்கள் வெள்ளைத்தோல் என்றாலும் குளிக்காத அழுக்கு மூட்டைகள். கயிற்றின் மேல் ஆடிப் பிழைக்கும் கழைக் கூத்தாடிகள். புத்த மதம் பரப்புகிறேன் என்று வந்த அவர்களில் பலர் கழைக் கூத்தடிகளகவும் சிலர் மரத்தடிகளின் கீழிருந்து போதிப்பவர்களாகவும் இருந்தனர். ஊரைச் சுற்றியுள்ள வயல்களில் கரும்பும் நெல்லும் தினையும் பயிராகும். பக்கத்து மலையிலிருந்து வரும் மலைக் குறவர்கள் தேனும் பலாவும் காய்கறிகளும் விற்று நெல்லும் உப்பும் துணிமணிகளும் வாங்கிச் செல்வர். தச்சரும் கம்மியரும் பிறரும் தொழில் செய்யும் ஓசையும் விற்பவர்கள், வாங்குபவர்கள் , அரசு திணைக்களத்து அதிகாரிகள், வீரர்கள் என அனைவரின் பேச்சொலிகளும் கடல் ஒலிபோல் கேட்கும். இரவில் நடனமோ தெருக்கூத்தோ தொடங்கி விடியும் வரை நடக்கும். என்றைக்கும் மகிழ்ச்சி ஒலி கேட்ட அவ்வூர் இப்போது சாவு அமைதியில் இருக்கிறது. வானத்தில் கோட்டைகட்டி இருப்பதாகக் கதைவிட்ட ஒரு சிறு கூட்டம் அரக்கர்களாக அவ்வூரில் புகுந்து வயல்களையும் வீடுகளையும் கொளுத்தியது; பெண்களையும் குழந்தைகளையும் கொன்றது. வீர மறவர்களோடு மட்டுமே போரிட்டுப் பழக்கப்பட்ட தமிழ்வீரர்கள் புறமுதுகிடாமல் மண்ணில் பிணமாகி உரமாயினர். தேவாரம் பாடிய கோயில் வாயிலில் அழிப்பாளர்கள் புத்தர் சிலையை நட்டுவிட்டுப் போய்விட்டனர். ஊரே பிணக்காடு. கடைகள் வீடுகள் எல்லாம் தரை மட்டம். இவற்றையும் மீறி நின்ற சில வீடுகள் குட்டிச் சுவர்களாய் நின்றன. தெருவெல்லாம் எலும்பும் தசையும் குருதியும் கொஞ்சம் கொஞ்சமாக்க் காய்ந்து செம்மண்ணைக் கருகிய சுடுகாடாக ஆக்கியிருந்தது. பல மாதங்கள் ஆகியும் அங்கு வீடுகள் எதுவும் கட்டித்தரப்பட வில்லை. ஊரைவிட்டு வெளியேறிய பெரியவர்களும் பெண்களும் குழந்தைகளும் மட்டும் அரைகுறை உயிரோடு முற்காடுகளுக்குள் இருந்தனர். அதோ அந்த வீடு ஒற்றை வீடு. தனியே நிற்கிறது. அரக்கர்களின் கொடிய பார்வையில் தப்பி நிற்கிறது. மிகப்பெரிய அறிஞராகவும் அரசு திணைக்கள அதிகாரியாகவும் விளங்கிய மல்லாகம் மாறன் வழுதி அம்பலம் வீடு. அவர் வீட்டில் எப்போதும் திருவிழாபோல் கூட்டம் இருக்கும். அறிஞரும் வருவர், வறியவரும் வருவர். அடுக்களையில் எப்போதும் சோறுவடித்து ஊற்றும் கஞ்சி தெருவில் மலைப்பாம்பு நெளிவது போல் பளபள என்று ஓடும். வீட்டிற்கு முன்புறம் தினை காய வைத்திருப்பார்கள். அதைக் காத்துக் கொண்டிருக்கும் கிழவிகள் ஊர்க்கதை பேசிக் கொண்டே கிளிகளையும் குருவிகளையும் விரட்டுவர். குறுக்கே வரும் குழந்தைகளையும் விரட்டிப் பிடித்துக் கருப்பஞ்சாறு கொடுத்து, “எதிரே போய் மன்றத்தில் விளையாடுங்கள்” என அனுப்புவர். அறம்தலைக் கொண்ட அந்தக் கலகலப்பான வீடு இன்று தனிமையில். இரவில் எப்போதாவது ஒருமுறை ஆந்தை அலறிவிட்டு அடங்கிப் போய்விடும். சாவின் அமைதியாகிப் போன அந்த முன்றிலில் இன்று தினை காயவில்லை. அந்த முற்றத்தில் இப்போது ஓர் அணில் ஓடுகிறது. சிறு ஒலி கேட்டாலும் அஞ்சி ஓடுகின்ற அழகிய அணில் மெல்ல ஓடி அங்கே தரையில் கிடக்கும் ஒன்று இரண்டு தினை மணிகளைத் தின்றுவிட்டுத், தன் முதுகைவிட மென்மையான குழந்தைகளையும் வாலைவிட மென்மையான வெண்தலை முடியைக் கொண்ட கிழவிகளையும் தன் அழகிய காண்களில் காணாமல் சலித்துப்போய் வாய் சப்பிக் கொண்டிருந்தது. ஒய்யாரக் கொண்டையிட்டுக் கூந்தலிட்டுப் பூ முடித்து காலில் சலங்கை ஒலிக்க மயிலாட்டம் போல் நடைநடந்து குயில் போல் குரலெடுத்துப் பாடிக் கிளி ஓட்டிக் காவல் காக்கும் அழகுப் பெட்டகமாகிய அந்த இளங்கொடி, தினைப்புனக் காட்டுக்குள்ளே ஆரும் அறியாமல் காதலனுடன் கூடிக்களித்துத் திருவிழாக்காலத்து ஊர் போல் மகிழ்ந்து விளையாடியவள், இன்று தன்தலைவன் பொருள் தேடிச் சென்று விட்டதால், இப்போது ஊர்மக்கள் யாரும் இல்லாமல் போய் விட்டதால் அமைதியாகிப்போன அந்த அணில் விளையாடும் வீட்டு முற்றத்தைப் போல் அழகிழந்து வாடி வதங்கிப் படுத்துக்கிடந்தாள்.
ஸ்மார்ட்போன்கள் ஒருபக்கம் பிரபலமாகி வர, இன்னொரு பக்கம் ஸ்மார்ட் வாட்ச்கள் வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகின்றன. தற்போது புது புது ஸ்மார்ட் வாட்ச்கள், டெக் உலகத்தை ஆக்கரமிக்க, இயங்குதளத்தின் (Operating System) ஒப்பீட்டை ஸ்மார்ட் வாட்ச்களுக்கு இடையே செய்து பார்க்க ஆரம்பித்திருக்கிறார்கள். சமீபத்தில் ஆப்பிள் நிறுவனம் தனது ஸ்மார்ட் வாட்ச்சான ஐவாட்சை வெளியிட, ஹெச்.டி.ஸி. நிறுவனம் தனது ஸ்மார்ட் வாட்சை விரைவில் வெளியிடவுள்ளது. மோட்டோரோலா நிறுவனம் தனது ஸ்மார்ட் வாட்ச்சான மோட்டோ 360யை வெளியிட்டு சிறிது நாட்களில் அதன் புக்கிங் முடிந்துவிட்டது. மேலும், சாம்சங் மற்றும் எல்.ஜி. நிறுவனமும் தங்களது ஸ்மார்ட் வாட்ச்களை வெளியிட்டுள்ளனர். இயங்குதளத்தின் அடிப்படையில் இந்த ஸ்மார்ட் வாட்ச்களை இரண்டாக பிரிக்கலாம். ஒன்று ஆப்பிளின் ஐ.ஓ.எஸ்.சில் இயங்கும் ஐவாட்ச். மற்றவை எல்லாம் கூகுளின் ஆண்ட்ராய்ட் இயங்கு தளத்தில் செயல்படுபவை. விலை: விலையின் அடிப்படையில் பார்க்கும்போது ஆப்பிளின் ஐவாட்ச் $349-க்கு விற்கப்படுகிறது (சுமார் 21,282 ரூபாய்). ஆனால், சராசரியாக அனைத்து ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் வாட்ச்களின் விலை $200-க்குள் (சுமார் 12,178 ரூபாய்) அமைந்து விடுகிறது. இதனால், பெரும்பாலானோர் ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் வாட்ச்களையே தங்கள் முதல் சாய்ஸாக வைத்துக்கொள்கிறார்கள். ஐபோன் வாடிக்கையாளர்களுக்கு வேறு வழியில்லை என்பதால், ஐவாட்சை மட்டும் தான் அவர்கள் பயன்படுத்த முடியும். செயல்பாடு: ஆப்பிள் தனது ஐவாட்சில் குறிப்பிட்ட சேவைகளை மட்டும் வழங்கினாலும், தரும் சேவைகளை சிறப்பாக செய்யும் ஆற்றலை பெற்றுள்ளது. ஆனால், ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் வாட்ச்கள் பல சேவைகளை தரும் திறன் பெற்றதாய் இருக்கிறது. இருந்தாலும், அனைத்து சேவைகளையும் சிறப்பாக செய்யும் ஆற்றல் அதனிடம் குறைவாகவே உள்ளது. டிசைன்: டிசைன் அடிப்படையில் பார்க்கும் போது ஐவாட்ச்சிற்கு நிகர் வேறு எந்த ஸ்மார்ட் வாட்ச்சையும் ஒப்பிட முடியாது. ஸ்போர்ட்ஸ்மேன் லுக்கிலிருந்து ஒரு பிஸ்னெஸ்மேன் லுக் வரை, எந்த வகையிலும் ஐவாட்சை மாற்றிக்கொள்ளலாம். ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் வாட்ச்கள் தங்களது விலைக்கேற்ற வகையில் ஒரே லுக்கை மட்டுமே வழங்குகின்றன. மொத்தத்தில், அதிகபடியான சேவை மற்றும் விலை ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் வாட்ச்களின் பிளஸ். சிறப்பான சேவை மற்றும் டிசைன் ஐவாட்சின் சிறப்பம்சம்.
பி.எஸ்.என்.எல் நிறுவனம் மத்திய அரசின் தொலைதொடர்பு நிறுவனமாகும். ஏர்டெல், ஜியோ, வோடபோன் போன்ற தனியார் நிறுவனங்களை விட குறைந்த விலையில் சேவை வழங்கி வருகிறது. தனியார் நிறுவனங்கள் வளர்ச்சியால் பி.எஸ்.என்.எல் அதன் பெரும் பயனர்களை இழந்துள்ளது. அரசு இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் கூறிவருகின்றனர். பி.எஸ்.என்.எல் மொபைல் டேட்டா சேவைகள் பயனர்களை இழந்துள்ளது. இருப்பினும் பிராட்பேண்ட் திட்டங்களை பலரும் பயன்படுத்துகின்றனர். வைஃபை பிராட்பேண்ட்களுக்கு பி.எஸ்.என்.எல் சேவைகள் சிறப்பாக உள்ளன. குறைந்த விலையில் அதிக பயன்களை கொடுக்கிறது. அந்தவகையில் தற்போது ரூ.499 விலையில் ஒரு திட்டம் அறிமுகப்படுத்தியுள்ளது. பழைய திட்டத்திலிருந்து கூடுதலாக பயனளிக்கும் வகையில் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது எனக் கூறப்பட்டுள்ளது. பி.எஸ்.என்.எல் நிறுவனம் முன்பே ரூ.499 விலையில் ஒரு திட்டத்தை செயல்படுத்தி வந்தது. அதிலிருந்து இந்த திட்டம் புதிய பெயரில் கூடுதல் சலுகைகளுடன் அறிமுகப்படுத்தப்படுகிறது. ரூ.499 ஃபைபர் திட்டம் ரூ.499 பிராட்பேண்ட் திட்டத்தில் அன்லிமிடெட் காலிங் வசதி உள்ளது. 40 Mbps இணைய வேகத்துடன் மாதம் 3300 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. FUP வசதி உள்ளது. இந்த திட்டம் குறித்து மேலும் விவரங்களுக்கு பி.எஸ்.என்.எல் ஆன்லைன் தளத்திலோ அல்லது கடைகளிலோ தெரிந்து கொள்ளலாம். NEO பிராட்பேண்ட் திட்டம் பி.எஸ்.என்.எல் ஃபைபர் அடிப்படை NEO பிராட்பேண்ட் திட்டமும் ரூ. 449 வழங்கப்படுகிறது. இத் திட்டத்தில் பயனர்கள் 30 Mbps இணைய வேகத்தை பெற முடியும். மாதம் 3300 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இந்த திட்டத்திலும் பயனர்கள் அன்லிமிடெட் காலிங் வசதி பெறலாம். 2 திட்டங்கள் இனி இல்லை இதற்கிடையில் பி.எஸ்.என்.எல் ரூ.775 மற்றும் ரூ.275 பிராட்பேண்ட் திட்ட சேவைகளை நிறுத்தப்போவதாக அறிவித்துள்ளது. நவம்பர் 15, 2022 முதல் இந்த சேவை நிறுத்தப்படும் எனக் கூறியுள்ளது. இந்த இரண்டு திட்டங்களும் 75-வது சுதந்திர தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக அறவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil Stay updated with the latest news headlines and all the latest Technology news download Indian Express Tamil App.
இன்று தமிழக முதல்வர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் சென்னை, காவேரி மருத்துவமனையில் பூஸ்டர் டோஸை செலுத்தி கொண்டார். பூஸ்டர் டோஸை அனைத்து முன்களப் பணியாளர்கள்¸ இணை நோய்கள் கொண்ட 60 வயது நிரம்பிய மூத்த குடிமக்கள் செலுத்திக் கொள்ள வேண்டும். தடுப்பூசி எனும் கவசத்தைக் கொண்டு நம்மையும் காப்போம்; நாட்டையும் காப்போம்! Published January 11, 2022 By Author Categorized as ஆரோக்கியம், இந்தியா, தமிழ்நாடு, புதிய செய்திகள், மருத்துவம் Tagged Booster Dose, Chief Minister, corona news, covid 19, Covid-19 vaccine, precaution dose
தாய்மொழியை அழிக்கும் நோக்கில் மற்ற மொழியை திணிக்க முயன்றால் அனைவரும் சேர்ந்து எதிர்க்க வேண்டும் என்று தமிழ்நாடு பாட நூல் கழகத்தின் தலைவர் திண்டுக்கல் ஐ.லியோனி வலியுறுத்தி பேசினார். Prem Kumar Updated on : 24 November 2022, 04:15 AM சேலத்தில் நடைபெற்று வரும் புத்தக திருவிழாவில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பேச்சாளர்களும், முக்கிய பிரமுகர்களும் கலந்து கொண்டு பல்வேறு தலைப்பில் உரையாற்றி வருகின்றனர். அந்த வகையில் நான்காவது நாளான இன்று புத்தக திருவிழா வளாகத்தில் அமைக்கப்பட்டு உள்ள மேடையில் எழுத்தாளர் பவா செல்லத்துரை கலந்து கொண்டு, கதையின் உயிர் மனிதனே என்ற தலைப்பிலும், தமிழ்நாடு பாட நூல் கழக தலைவர் திண்டுக்கல் ஐ.லியோனி கலந்து கொண்டு கதை கேட்டு வளர்ந்தேன் என்ற தலைப்பிலும் உரையாற்றினர். அவர் பேசும் போது, “பழங்கால கதைகளும், உதாரணங்களும் அவரவர் மொழியில் இருந்தால் மட்டுமே நன்று என்றும் ஆனால் தற்போது மொழி திணிப்பு என்பது நம்மை எதிர் நோக்கி இருக்கும் பிரச்சனையாக உள்ளது. இந்தி மொழியை படிக்க வேண்டாம் என்று கூறவில்லை. ஆனால் இந்தியை திணிப்பை தான் எதிர்க்கிறோம். இந்தி திணிப்பை எதிர்க்க அனைவரும் ஒன்று சேர வேண்டும்” என்றும் வேண்டுகோள் விடுத்தார். நிகழ்ச்சியில் சேலம் பால்பண்ணை பொது மேலாளர் விஜயபாபு, சேலம் மாநகர காவல்துறை துணை ஆணையர் மாடசாமி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். Also Read இந்தி திணிப்பை எதிர்த்து கிளர்ந்தெழுந்த தமிழ்நாடு.. உதயநிதி ஸ்டாலின் MLA தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம்! hindi imposition Dindigul I Leoni Trending சோமாலியாவில் விழுந்த விண்கல்:உடைத்துப்பார்த்த விஞ்ஞானிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி..உள்ளே இருந்தது என்ன? ஆளுநருக்கு இத்தனைகோடி செலவா ? வேலையே செய்யாதவர்களுக்கு இத்தனை செலவு ஏன் என இணையவாசிகள் ஆவேசம் ! உலகக்கோப்பையில் ஈரான் அணி தோல்வி.. கொண்டாடிய நபரை சுட்டுக்கொன்ற ஈரான் ராணுவம்.. அதிர்ச்சியில் உலகநாடுகள்! தாய் இறந்த சோகத்தில் பாச மகன் எடுத்த விபரீத முடிவு.. அதிர்ச்சியில் நண்பர்கள் - உறவினர்கள்! Latest Stories சோமாலியாவில் விழுந்த விண்கல்:உடைத்துப்பார்த்த விஞ்ஞானிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி..உள்ளே இருந்தது என்ன? உலகக்கோப்பையில் ஈரான் அணி தோல்வி.. கொண்டாடிய நபரை சுட்டுக்கொன்ற ஈரான் ராணுவம்.. அதிர்ச்சியில் உலகநாடுகள்! அரளி சித்தராக மாற்றப்பட்ட மனநலம் பாதித்த முதியவர்: உண்டியல் வைத்து பணம் வசூலித்த கும்பலிடமிருந்து மீட்பு!
பிரித்தானிய மகாராணியிடம் இருந்து இளைஞர் தலைமைத்துவ நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் விருது வென்ற இலங்கையர்களான ரகித மாலேவன மற்றும் செனெல் வன்னியாரச்சி ஆகிய இரு இளைஞர்களும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்தனர். ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் இந்த இரு இளைஞர்களும் இலங்கைக்கு பெற்றுத்தந்துள்ள பெருமையை பாராட்டிய ஜனாதிபதி, அவர்களது எதிர்காலத்திற்காக தனது ஆசிகளை தெரிவித்தார்.பொதுநலவாய நாடுகளில் உள்ள மக்களிடம் நிலையான மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில் தனிப்பட்ட திறன்களை பொதுமக்களின் வாழ்க்கையை மாற்றுவதற்காக பயன்படுத்தும் இளைஞர் யுவதிகளை அடையாளம் காண்பதற்காக இந்த நிகழ்ச்சித்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.பொதுநலவாய நாடுகளில் இருந்து தெரிவுசெய்யப்பட்ட 60 இளைஞர்களுக்கு பிரித்தானிய மகாராணியால் இவ்வாறு இங்கிலாந்து பக்கிங்ஹம் மாளிகையில் விருதுகள் வழங்கப்பட்டன. இலங்கை அரசியலில் பெண்கள் பிரதிநித்துவத்தை அதிகரிக்கும் நோக்கில் பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்களை ஏற்பாடுசெய்தல், இளைஞர்கள் மற்றும் பெண்களை விழிப்பூட்டல், பால் சமத்துவம் மற்றும் சிவில், அரசியல் உரிமைகள் தொடர்பில் அறிவூட்டுவதற்காக சமூக ஊடகங்களை பயன்படுத்தல் போன்ற விடயங்களுக்காக செனெல் வன்னியாரச்சிக்கு இந்த விருது வழங்கப்பட்டது. 2014ம் ஆண்டு இலங்கையில் ஐக்கிய நாடுகள் சபையின் இளைஞர் பிரதிநிதியான செனெல் வன்னியாரச்சி கொழும்பு பல்கலைகழகத்தின் சர்வதேச உறவுகள் தொடர்பான விசேட பட்டதாரியாவார்.எச்.ஐ.வீ வைரஸ் இற்கான ஒரு மருந்தை கண்டுபிடித்தமைக்காக ரகித மாலேவனவுக்கு விருது வழங்கப்பட்டுள்ளது. தற்பொழுது கொழும்பு மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்திலும் கொழும்பு பல்கலைக்கழகத்திலும் வெளி மருத்துவ ஆராய்ச்சியாளராக செயற்பட்டுவரும் ரகித மாலேவன நாலந்தா கல்லூரியில் கல்வி கற்கும் காலப்பகுதியில் எச்.ஐ.வீ தொற்றுக்கான புதியதொரு தடுப்பூசியை கண்டுபிடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. Related posts: உயிருடன் மீட்கப்பட்ட சிசு! கிளிநொச்சியில் புரவியால் பாரிய அழிவு - விவசாயிகள் கவலை! சமையல் எரிவாயு நிறுவனங்களை இணைத்து புதிய நிறுவனம் அமைத்திருப்பதன் ஊடாக எரிவாயு விலைகளை குறைக்க வாய்ப... Tweet உயிர்த்த ஞாயிறு நினைவேந்தல்கள் இரத்து - கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை! நாட்டில் மேலும் 23 கொரோனா உயிரிழப்புகள் பதிவு - பாதிப்பு எண்ணிக்கையும் ஒரு இலட்சத்து 31 ஆயிரத்தைக் ... 75% பல்கலைக்கழக ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது - பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு த...
மூன்றாவது ஊதிய மாற்றம், நேரடி நியமன ஊழியர்கள் ஓய்வூதிய பலன்கள் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, AUAB சார்பாக, முதல் கட்ட போராட்டமான, கண்டன ஆர்ப்பாட்டம், இன்று (27.05.2022), சேலம் GM அலுவலகத்தில் எழுச்சியுடன் நடைபெற்றது. போராட்டத்திற்கு தோழர்கள் K. ராஜன் (BSNLEU), V. தியாகராஜன் (AIGETOA), V. குருவாயூர் கண்ணன் (SNEA) V. சண்முகசுந்தரம் ( AIBSNLEA) தலைமை தங்கினார்கள். தலைமை குழு தோழர்களின் உரைக்கு பின், BSNLEU தமிழ் மாநில உதவி செயலர் தோழர் S. ஹரிஹரன், SNEA மத்திய குழு உறுப்பினர் தோழர் G. சேகர், AIBSNLEA மாவட்ட உதவி செயலர் தோழர் L. வெங்கட்ராகவன், AIGETOA மாவட்ட பொருளர் தோழர் V. அன்பழகன் ஆகியோர் கருத்துரை வழங்கினார்கள். சேலம் மாவட்ட AIBDPA செயலர் தோழர் S. தமிழ்மணி, சேலம் மாவட்ட TNTCWU செயலர் தோழர் M. செல்வம், AIBDPA மாநில சங்க நிர்வாகி தோழர் T. பழனி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். BSNLEU மாவட்ட செயலர் தோழர் E. கோபால், AIGETOA மாவட்ட செயலர் தோழர் B. மணிகுமார், SNEA மாவட்ட செயலர் தோழர் K. ஸ்ரீனிவாசன் ஆகியோர் சிறப்புரை வழங்கினார்கள். BSNLEU மாவட்ட பொருளர் தோழர் M. சண்முகம், நன்றி கூறி போராட்டத்தை முடித்து வைத்தார். போராட்டத்தில், மாவட்டம் முழுத்தலுமிருந்து, நூற்றுக்கும் மேற்பட்ட அதிகாரிகள், ஊழியர்கள் திரளாக கலந்து கொண்டனர். பெண் தோழர்கள் கணிசமாக கலந்து கொண்டது சிறப்பம்சம். ஒப்பந்த ஊழியர்கள் ஓய்வூதியர்கள் திரளாக கலந்து கொண்டது பாராட்டுக்குரியது. இயக்கத்தில் கலந்து கொண்ட அனைத்து தோழர்களுக்கும், சேலம் மாவட்ட AUAB சார்பாக நெஞ்சு நிறை நன்றிகள். தோழமையுடன் E.கோபால், கன்வீனர், AUAB மற்றும் மாவட்ட செயலர் BSNLEU குறிப்பு: அடுத்த கட்ட போராட்டமான தர்ணா போராட்டம், 09.06.2022 அன்று, சேலம் GM அலுவலகத்தில் காலை 10.30 மணிக்கு துவங்கும்
ஐ எஸ் அமைப்புடன் பங்காண்மை அடிப்படையில் நைஜீரியாவில் செயற்படும் பொக்கோ ஹரம் அமைப்பிற்குள் தற்போது பெரும் பிளவு ஏற்பட்டுள்ளது. பொக்கோ ஹரம் அமைப்பின் தலைவரை ஐ எஸ் அமைப்பினர் மாற்றியதைத் தொடர்ந்து இந்தப் பிளவு உருவாகியுள்ளது. நைஜீரியாவில் தனித்துச் செயற்பட்டு வந்த பொக்கோ ஹரம் அமைப்பு 2015-ம் ஆண்டு மார்ச் மாதம் ஈராக்கிலும் சிரியாவிலும் செயற்பட்டு வந்த ஐ எஸ் எனப்படும் இஸ்லாமிய அரசு அமைப்புடன் இணைந்து கொண்டது. ஐ எஸ் அமைப்பிற்கு உலகெங்கும் இருக்கும் பிரபல்யமும் அதனிடம் இருக்கும் பெருமளவு பணமும் பொக்கோ ஹரம் அமைப்பின் மீது ஈர்ப்பை ஏற்படுத்தியது. ஆனால் தற்போது பொக்கோ ஹரம் ஐ எஸ் அமைப்பிற்கு கட்டுப்பட்டவர்கள் என்றும் கட்டுப்படாதவர்கள் என்றும் இரு பிரிவாகப் பிளவு பட்டுள்ளது. பொக்கோ ஹரம் அமைப்பின் வரலாறு 2002-ம் ஆண்டு மொஹமட் யூசுப் என்பவரால் ஆரம்பிக்கப்பட்ட பொக்கோ ஹரம் அமைப்பு ஆரம்பத்தில் இசுலாமிய மத போதனையை ஏழைப் பிள்ளைகளுக்கு செய்து வந்தது. பின்னர் இது இசுலாமிய அரசு உருவாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை மக்கள் மத்தியில் பரப்புரை செய்தது. பின்னர் 2009-ம் ஆண்டு படைக்கலன்கள் ஏந்திய போராட்டத்தை ஆரம்பித்தது. மோட்டார் சைக்கிளில் துப்பாக்கியுடன் சென்று தாக்குதல் நடத்துவதை இவர்கள் வழமையாகக் கொண்டிருந்தனர். பல காவல் நிலையங்கள் மீது தாக்குதல்கல் நடத்தியது. 2009 ஆண்டு நைஜீரியப் படையினர் இந்த அமைப்பின் தலைமையகத்தின் மீது தாக்குதல் நடாத்தி அதன் தலைவரைக் கொன்றதுடன் பலரைக் கைதும் செய்தனர். கொல்லப்பட்ட தலைவர் மொஹமட் யூசுப்பின் உடலின் படத்தை தொலைக்காட்சியில் காட்டிய நைஜீரிய அரசு பொக்கோ ஹரம் அமைப்பு ஒழித்துக் கட்டப்பட்டது என மக்களுக்கு அறிவித்தனர். 2010-ம் ஆண்டு இவர்கள் மீண்டும் அபுபக்கர் செக்கௌ தலைமையின் கீழ் திரண்டு எழுந்தனர். சிறைச் சாலையின் மீது தாக்குதல் நடாத்தி தமது அமைப்பின் உறுப்பினர்களை விடுவித்தனர். 2010-ம் ஆண்டு புத்தாண்டு தினத்திலும் 2011 நத்தார் தினத்திலும் இவர்கள் கிறித்தவர்கள் மீது தாக்குதல்கள் நடாத்திப் பலரைக் கொன்றனர். தம்மீது நடாத்திய தாக்குதல்களுக்கு அவை பழிவாங்கல்கள் என்றனர் பொக்கோ ஹரம் அமைப்பினர். 2011-ம் ஆண்டின் பிற்பகுதியில் அமெரிக்க வெளியுறவுத் துறை பொக்கோ ஹரம் அமைப்பு தமக்கு எதிரானது என அறிவித்தனர். அத்துடன் பொக்கோ ஹரம் அமைப்பிற்கும் அல் கெய்தாவிற்கும் தொடர்பு இருப்பதாகவும் அமெரிக்க அரசு கருத்து வெளியிட்டது. 2013-ம் ஆண்டு ஒரு இசுலாமிய வழிபாட்டு நிலையம் மீது தற்கொடைக் குண்டுத் தாக்குதல் மேற்கொண்டனர். பல இசுலாமிய மத போதகர்களையும் தலைவர்களையும் இலக்கு வைத்துப் பல தாக்குதல்கள் 2012, 2013-ம் ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்டது. 2013-ம் ஆண்டில் கமரூன் நாட்டில் இவர்கள் தமது முதல் தாக்குதலை மேற்கொண்டனர். இவர்கள் உலகில் கவனத்தை ஈர்த்தது 12 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் படிக்கக் கூடாது என்று சொல்லி பாடசாலைகளின் பயின்று கொண்டிருந்த பெண்களை இவர்கள் கடத்திச் சென்ற போதே. இவர்களின் அரசுக்கு எதிரான கிளர்ச்சியில் இதுவரை நைஜீரியாவில் இருபதினாயிரத்திற்கும் அதிகமானவர்கள் கொல்லப் பட்டுள்ளனர். இரத்த வெறி கொண்ட அபு பக்கர் ஷெக்கௌ பொக்கோ ஹரம் அமைப்பின் தலைவர் அபு பக்கர் ஷெக்கௌ இரத்த வெறியுடன் செயற்படுவதாக ஐ எஸ் அமைப்பு குற்றம் சாட்டியது. பொக்கோ ஹரம் அமைப்பின் நிறுவனரான காலம் சென்ற மொஹமட் யூசுப்பின் மகன் அபு முஸப் அல் பர்னாவியை ஐ எஸ் அமைப்பினர் பொக்கோ ஹரம் அமைப்பின் தலைவராக அறிவித்தனர். இந்த நியமனத்தை எதிர்த்த அபு பக்கர் ஷெக்கௌ தனியாக தனது ஆதரவாளர்களுடன் பிரிந்து சென்றுள்ளார். பொக்கோ ஹரம் ஒரு கட்டுக்கோப்பான அமைப்பாக இருப்பதில்லை. பல உள் மோதல்கள் நிறைந்த அமைப்பு அது. பிராந்தியத் தளபதிகள் பலர் தான் தோன்றித்தனமாக நடப்பார்கள். அபு பக்கர் ஷெக்கௌவின் கடுமையான நிலைப்பாடும் இரக்கமற்ற செயல்களும் பலரை அவரை வெறுக்க வைத்தன. பொக்கோ ஹரம் அமைப்பின் முக்கிய தளபதிகளில் ஒருவரான மம்மன் நூர் என்பவர் அபு பக்கர் ஷெக்கௌவிற்கு இஸ்லாமிய போதனைகளின் அடிப்படைகள் போதிக்கப் படவேண்டும் என்றார். ஷெக்கௌவின் இரக்கமற்ற செயற்பாடுகளால் பல போராளிகள் பொக்கோ ஹரம் அமைப்பில் இருந்து வெளியேறினர். 2012-ம் ஆண்டு பொக்கோ ஹரம் அமைப்பில் இருந்து பிரிந்து சென்று வேறு ஒரு அமைப்பை உருவாக்கினார்கள். இறப்பிற்கு தண்ணி காட்டிய ஷெக்கௌ. நைஜீரியப் படையினர் பல தடவைகள் ஷெக்கௌவை கொலை செய்ய முயற்ச்சி எடுத்தனர். அவர் கொல்லப்பட்டார் என்ற செய்திகள் கூட ஒலி/ஒளிபரப்பப்பட்டன. ஆனால் எலாவற்றிலும் இருந்து அவர் தப்பி விடுவார். தனக்கோ தனது அமைப்பிற்கோ எதிரானவர்கள் அல்லது ஆப்பத்தானவர்கள் என நினைப்பவர்களை ஈவு இரக்கமின்றி அவர் கொன்று விடுவார். முஸ்லிம்களை ஷெக்கௌ கொல்வதை ஐ எஸ் அமைப்பால் தலைவராக நியமிக்கப்பட்ட அபு முஸப் அல் பர்னாவி கடுமையாக எதிர்த்து வந்தார். பெரும் உள் மோதல் ஐ எஸ் அமைப்பினர் தலைமை மாற்றம் செய்ததால் பொக்கோ ஹரம் அமைப்பினுள் பெரும் உள் மோதல்கள் நடக்கின்றது. இதனால் பல போராளிகள் நைஜீரிய அரச படையினரிடம் சரணடைந்து வருகின்றனர். ஐ எஸ் அமைப்பினர் பல போராளிகளை கொல்லப்படக் கூடிய சூழ் நிலைகளை தொடர்ந்து உருவாக்கி வருவதால் ஐ எஸ் அமைப்பின் தலைவர் அபு பக்கர் அல் பக்தாதி ஒரு அமெரிக்க-இஸ்ரேலிய உளவாளி என்ற கருத்து பரவலாக முன்வைக்க்ப் படுகின்றது.
வரலாற்றுக்குநினைவுதெரிந்தநாளிலிருந்துநெற்களஞ்சியம்என்றுகொண்டாடப்படும்தஞ்சைப்பாசனப்பரப்புபாலைவனமாகிவிடுமோஎன்றஅச்சம்தமிழ்ச்சமூகத்தில்நிலவுகிறது. “விளைந்தால்விலையில்லை; விலையிருந்தால்விளைச்சலில்லை”என்றசந்தைக்கலாசாரத்தால்விவசாயிஏற்கெனவேவீழ்ந்துகிடக்கிறான்.இப்போதுகாவிரியில்தண்ணீரும்கண்களில்கண்ணீரும்வற்றிப்போனபிறகுஎன்னசெய்வான்பாவம்ஏழைத்தமிழ்உழவன்? உச்சநீதிமன்றத்தின்தீர்ப்புதமிழ்நாட்டுக்கானஉரிமைத்தண்ணீரைக்குறைத்துக்கொடுத்தது.அந்தக்குறைந்ததண்ணீரையாவதுகாவிரிமேலாண்மைவாரியம்பெற்றுக்கொடுக்கும்என்றநம்பிக்கையின்மீதுஇப்போதுநம்பிக்கைஇல்லாமல்செய்வதுநியாயமா? உச்சநீதிமன்றத்தீர்ப்பு ‘ஸ்கீம்’ என்றசொல்லைச்சுட்டியிருக்கிறது. கிளிஎன்றாலும்கிள்ளைஎன்றாலும்ஒன்றுதான்.‘ஸ்கீம்’ என்றாலும்காவிரிமேலாண்மைவாரியம்என்றாலும்ஒன்றுதான்என்றுஉச்சநீதிமன்றத்திற்குவிளக்கவேண்டியமத்தியஅரசேஉச்சநீதிமன்றத்திடம்விளக்கம்கேட்பதுவிசித்திரமாய்இருக்கிறது. உச்சநீதிமன்றத்தீர்ப்பேஎங்கள்உழவர்களின்வேட்டியைக்கிழித்துவிட்டது. மத்தியஅரசோகிழிந்தவேட்டியையும்பறிக்கப்பார்க்கிறது.உழவர்கள்வேட்டிஇழந்தால்நாடுநிர்வாணமாகிவிடும். அரசியலின்பற்சக்கரங்களுக்குமத்தியில்விவசாயிகளின்விலாஎலும்புகள்நொறுங்கும்சத்தம்கேட்கத்தொடங்கிவிட்டது. இந்தியாவின் ‘கல்ச்சர்’ என்னஎன்றுகேட்டபோது ‘அக்ரிகல்ச்சர்’ (விவசாயம்)என்றார்வல்லபாய்பட்டேல்.அவரைநேசிக்கிறவர்கள்இதைமறந்திருக்கமாட்டார்கள். மீண்டும்மீண்டும்நீதிமன்றத்துக்குள்ளேயேசுற்றுவதுகொக்குவிழுங்கியமீனைத்தொண்டைக்குள்இறங்கித்தேடுவதாகிவிடும். கண்ணீர்வற்றிப்போனதமிழ்நாட்டுஉழவர்களின்கண்களில்இரத்தம்கசிவதற்குள்காவிரிமேலாண்மைவாரியம்அமையவேண்டும்என்றுஒருவிவசாயிமகனாகக்கும்பிட்டுக்கேட்டுக்கொள்கிறேன்.
Colombo (News 1st) நேற்று (16) இவ்வுலகை விட்டுப் பிரிந்து சென்ற தலைமன்னார் மாணவரின் இறுதிக்கிரியைகள் இன்று மாலை நடைபெற்றன. தலைமன்னார் உயர் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் 9 ஆம் தரத்தில் நேற்று வரை கல்வி கற்ற பாலச்சந்திரன் தருணின் பூதவுடல் இன்று பாடசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. தலைமன்னார் பியர் கிழக்கு பகுதியில் ஒரு வறிய குடும்பத்தில் பிறந்த முதலாவது பிள்ளையே பாலசந்திரன் தருண். தனது இரண்டு தங்கைகளுடன் பல்வேறு சவால்களுக்கு மத்தியிலே இவர் கல்வி பயின்று வந்துள்ளார். மீன்பிடித் தொழிலை வாழ்வாதாரமாகக் கொண்ட பாலசந்திரன் தருணின் தந்தை நோய்வாய்ப்பட்டு கடந்த சில மாதங்களாக தொழிலுக்கும் செல்லவில்லை. மரக்கறிக்கடையொன்றில் வேலை செய்யும் தருணின் தாய் குடும்பத்தின் சுமையை தாங்கி வருகிறார். துயர் மிக வாழ்க்கை தொடரும் நிலையிலேயே, கொழும்பில் இருந்து தலைமன்னார் நோக்கிப் பயணித்த கடுகதி ரயிலில் மன்னாரில் இருந்து தலைமன்னார் நோக்கி பயணித்த பஸ் மோதியதில், பஸ்ஸில் பயணித்த தருண் உயிரிழந்தார். 300 மீட்டர் தொலைவில் ரயில் நிலையம் உள்ளமையினால், குறைந்த வேகத்தில் ரயில் பயணித்தபோதே விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்து இடம்பெற்ற போது ரயில் கடவை காப்பாளர் அவ்விடத்தில் இருக்கவில்லை என்பதுடன், ரயில் கடவை திறந்திருந்ததாக விபத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர். இது பொறுப்பற்ற செயல் எனவும் கடவை காப்பாளர் இருந்திருந்தால் உயிரைக் காப்பாற்றியிருக்கலாம் எனவும் மக்கள் ஆதங்கம் வௌியிட்டனர். தருணின் பூதவுடல் இன்று மாலை தலைமன்னார் பியர் இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இதேவேளை, இந்த விபத்தில் காயமடைந்து மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக நேற்று இரத்த தட்டுப்பாடு நிலவியது. மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை நிர்வாகம் விடுத்த வேண்டுகோளை அடுத்து, அதிகளவிலான இளைஞர் யுவதிகள் தன்னார்வமாக வைத்தியசாலைக்கு சென்று இரத்த தானம் செய்தனர். இந்த விபத்து தொடர்பில் பஸ் சாரதியும், ரயில் கடவையின் கடமை நேர காவலாளியும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இன்று மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது, அவர்களை எதிர்வரும் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
இவர் இலங்கைத்தமிழர் விடுதலைக்காக ஆயுதம் தாங்கிய போராட்ட அமைப்புகளின் தலைவர்களில் வித்தியாசமானவர். இவர் ஆயுதப்போராட்டத்தில் குதிப்பதற்கு முன்னர் இவருக்கு வயது முப்பதைத்தாண்டி விட்டிருந்தது. தமிழர் விடுதலைக்கூட்டணியின் இளைஞர் அணியில் நீண்ட காலம் இயங்கியிருக்கின்றார்.அதன் காரணமாகத் தமிழ் அரசியல்வாதிகளுடன் நன்கு பழகியிருந்தார். அரசியல் பற்றிய புரிதல் நிறைய இவருக்கிருந்தது. பொதுவாக அடக்குமுறைகளுக்கு எதிராக உணர்ச்சி வசப்பட்டு இளம் வயதில் ஆயுதம் தூக்கியவர் என்பதற்கு மாறாக, நடுத்தர வயதினை நெருங்கிக்கொண்டிருந்த சமயத்தில், நல்லதொரு உத்தியோகம் உள்ள நிலையில் அதனை உதறிவிட்டுப் போராட்டத்துடன் தன்னைப் பிணைத்துக்கொண்டவர். இவரது வயது, அறிவு இவைதாம் இவரை ஆரம்பத்தில் போராட்ட அமைப்பின் தலைவராக்கியது. பல விடயங்களில் இவருக்குத் தூரப்பார்வை இருந்தது. சகல விதமான அடக்குமுறைகளும் (வர்க்க, இன, மத, மொழி, வர்ண) உடைக்கப்படுவதே மக்களின் விடுதலைக்கு அவசியம் என்பதை உணர்ந்திருந்ததால்தான் பின்னர் தன் தலைமையில் அமைப்பு உருவானபோது 'சகல அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம்' என்னும் தாரக மந்திரத்தைக் கட்சியின் தாரக மந்திரமாகக்கொள்ள முடிந்தது. தென்னிலங்கை முற்போக்குச் சக்திகளுடன் இணைந்தே தமிழ் மக்களின் பிரச்சினை தீர்க்கப்பட முடியுமென்ற தீர்க்கதரிசனச் சிந்தனை இருந்ததால்தான் இவருடைய தலைமையின் கீழ் சுமார் அறுநூறு வரையிலான சிங்கள இனத்தைச் சேர்ந்த போராளிகள் இவர் அமைப்பில் இணைந்து போராட முன் வந்திருந்தார்கள். ஆயுதம் தாங்கிய வேறெந்த தமிழ் அமைப்புகளிலும் இல்லாத நிலை இது. போராளிகள் மக்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டும். அவர்களது அடிப்படைப்பிரச்சினைகளை அறிந்து கொள்ள வேண்டும். என்ற எண்ணமிருந்ததால்தான் காந்தியம் அமைப்புடன் இணைந்து இயங்கி , காந்தியப்பண்ணைகளில் இளைஞர்களைச் செயற்பட வைக்க இவரால் முடிந்தது. பூரணமான மார்க்சியவாதியோ இல்லையோ மார்க்சியச் சிந்தனைகள் இவரிடமிருந்தன. அதன் காரணமாகத்தான் மார்க்சியச் சிந்தனை மிக்க இளைஞர்கள் பலரை (ஜான் மாஸ்ட்டர் , சந்ததியார் போன்ற) இவரது தலைமையிலான அமைப்பு ஈர்க்கக் காரணமாக அமைந்தது. தென்னிலங்கையின் இடதுசாரி அமைப்புகள் பல இவரது அமைப்புடன் நெருங்கிவந்தன. தமிழகத்தில் இந்திய அரசின் உதவியுடன் அமைப்புகள் பலம் பெற்று வந்த நிலையில் இவர் ஒருவர்தான் உறுதியாக 'எங்களுக்கு உதவினால் போதும், நாங்களே எங்கள் விடுதலையைப் பெற்றுக்கொள்வோம்' என்று பல தடவைகள் கூறினார்.அவ்வுரைகளைத் தாங்கி வெளியான ஊடகங்கள் பலவற்றைக் கண்டிருக்கின்றேன். பரந்து பட்ட மக்களின் ஒன்றிணைந்த தாக்குதலே இறுதியில் வெற்றியைத்தரும். மக்களுக்குத் தேவையற்ற அழிவுகளைத்தரும் தாக்குதல்கள் குறுகிய காலப்பயனைத்தந்தாலும் இறுதியில் அழிவைத் தரும் என்று இவரது தலைமையிலான அமைப்பின் பிரச்சார ஏடு அடிக்கடி வலியுறுத்தியது. தீர்க்கதரிசனம் மிக்க தெளிவான பார்வை, வசீகரப்படுத்தும் ஆளுமை இவரிடம் இருந்ததால்தான் 83 கலவரத்தைத்தொடர்ந்து ஆயிரக்கணக்கில் இளைஞர்கள் இவர் பின்னால் அணி திரண்டார்கள் பெருங் கனவுகளுடன். இருந்தும் உபகண்ட அரசியற் சூழல், அதன் ஆதிக்கத்துக்குப் பணிந்து கொடுக்க முடியாத தன்மை இவற்றால் அமைப்பில் பிளவுகள் உருவாகின. உருவாக்கப்பட்டன. சந்ததியார் , சிவநேசன் போன்றவர்களின் மரணங்கள், கூடவே உள்ளே உருவான முரண்பாடுகளைச் சரியாகத் தீர்க்கத்தவறிவிட்டதன் காரணமாக ஏற்பட்ட விளைவுகள் இவர் தலைமையிலான அமைப்பு உடைவதற்குப் பிரதானமான காரணங்கள். அவற்றைச் சரியாகக் கையாண்டு, அமைப்பினைக் கொண்டு நடத்தியிருந்தால் இவரது எதிர்காலம் வேறொரு திசையில் பயணித்திருக்கும். இறுதியில் இவரது முடிவும் எதிர்பாராத விதமாகவே அமைந்து விட்டது. பாரதப் பிரதமர் இந்திரா காந்திக்கு நடந்ததுபோல் இவரது முடிவும் அமைந்து விட்டது. இவர்தான் தமிழீழ மக்கள் விடுதலைக்கழகத்தின் தலைவராகச், செயலதிபராக விளங்கிய உமாமகேஸ்வரன். இன்று அவரது நினைவு தினம். ஒரு காலத்தில் இவரது தலைமையையேற்று கனவுகளுடன் அணி திரண்ட ஆயிரக்கணக்கான இளைஞர்கள் இன்றும் பல்வேறு நாடுகளில் வாழ்ந்துக்கொண்டிருக்கின்றார்கள். அவர்கள் பலவேறுபட்ட விமர்சனங்களுடன் இவரை இன்றும் மறக்காமல்தானிருக்கின்றார்கள். 'உமாமகேஸ்வரன் அறக்கட்டளை' போன்ற அமைப்புகள் மூலம் இலங்கையில் பல்வேறு சமூக நலப்பணிகளைச் செய்துகொண்டுதானிருக்கின்றார்கள். இவர் பெயரில் வவுனியாவில் நீண்டதொரு வீதி கூட இருக்கின்றது. இலங்கைத்தமிழர் அரசியல் வரலாற்றில் தடம் பதித்த முக்கிய ஆளுமைகளில் இவரும் ஒருவர். வாழ்வின் சுக,சுகதுக்கங்களையெல்லாம் ஒதுக்கி, மக்களுக்காகப் போராட எழுந்தார். அதன்பொருட்டு ஏற்பட்ட விளைவுகளையெல்லாம் ஏற்றுக்கொண்டார். மக்களின் விடுதலைக்காகவே அனைவரும் போராடினர். அனைத்து அமைப்புகளும் போராளிகளும், அவர்கள்தம் குறை , நிறைகளுடன் நினைவுகூரப்படுவது அவசியம். கூடவே யுத்தச்சூழலில் பலியாகிய மக்கள் அனைவரும் எப்போதும் நினைவு கூரப்பட வேண்டும். ஏற்பட்ட கடந்த கால அழிவுகளிலிருந்து பெற்ற பாடத்தின் மூலம் இலங்கையின் அனைத்தின அரசியல் தலைவர்களும் சகல மக்களும் சகல உரிமைகளுடன் எவ்வித அச்சமுமற்று வாழும் நிலையினை ஏற்படுத்தும் வகையில் செயற்பட வேண்டும். எதிர்காலம் அவ்விதமானதொரு சூழலை உருவாக்குமென்று நம்புவோம். அதே சமயம் கடந்த கால வரலாற்றை முறையாகப்பதிவு செய்வோம். அனைத்து அமைப்புகளும் குறை, நிறைகளுடன் தம் வரலாற்றினைப்பதிவு செய்வது அவசியம். அமைப்புரீதியாக முட்டிமோதிய காலம் வரலாறாகிவிட்டது. தற்போதுள்ள தேவை ஆய்வுக்கண்ணோட்டத்துடன், நடைபெற்ற தவறுகளை, மனித உரிமை மீறல்களை விமர்சிக்கும் அதே சமயம், பிரச்சாரம் தவிர்த்து, அமைப்புகளின் வரலாறுகளும் முறையாகப் பதிவு செய்யப்பட வேண்டியது அவசியம். இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பேனை தளமாகக் கொண்ட நிறுவனம் கொரோனோ வைரஸ் தொற்றுநோயைக் கண்டுபிடிக்கும் செல்போன் செயலியை கண்டுபிடித்துள்ளது. இந்த கண்டுபிடிப்பின் மூளையாக இருப்பவர் குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகத்தில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் எலக்ட்ரிக்கல் என்ஜினீயரிங் துறை இணை பேராசிரியராக பணிபுரியும் இலங்கையைச் சேர்ந்த உடாந்த அபேவர்த்தனே. இவர் தனது குழுவினருடன் இணைந்து, கொரோனோ வைரஸ் தொற்றுநோயைக் கண்டுபிடிக்கும் செல்போன் செயலிக்கான தொழில்நுட்பத்தை உருவாக்கியிருக்கிறார். அதன் அடிப்படையில் ‘ரெஸ்ஆப்’ (ResApp) என்ற செயலியை அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பேனை சேர்ந்த ஒரு நிறுவனம் உருவாக்கியுள்ளது. இந்த செயலியானது, கொரோனாவை மட்டுமின்றி ஆஸ்துமா, நுரையீரல் அழற்சி போன்ற சுவாச வியாதிகளையும் கண்டுபிடித்துவிடும். இருமல், மூக்கில் நீர் ஒழுகுதல், காய்ச்சல் போன்ற எளிய அறிகுறிகளைக்கொண்டே ஒருவருக்கு கொரோனா மாதிரியான வியாதி ஏற்பட்டிருக்கிறதா, அது எந்த அளவு தீவிரமாக உள்ளது என்று இந்த செயலி தெரிவித்துவிடும் என்று கூறப்படுகிறது. இந்த செயலி 92 சதவீதம் துல்லியமாக முடிவுகளை வெளியிடுவதாகவும் இதை உருவாக்கியுள்ள நிறுவன வட்டாரங்கள் கூறுகின்றன. இந்நிலையில், உலகின் மிகப்பெரிய உயிர் மருத்துவ தொழில் நிறுவனமான பைசர் இந்த செயலியை $179 மில்லியன் கொடுத்து வாங்கியுள்ளது. இந்த பணத்தை உடாந்த பெற்றுள்ளார். பல்வேறு கட்ட பரிசோதனைகள், மருத்துவ கட்டுப்பாட்டு அமைப்புகளின் ஒப்புதலுக்கு பிறகே இந்த செல்போன் செயலி வெளிப்பயன்பாட்டுக்கு வரும் என்று தெரிகிறது. பைசர் செய்தித்தொடர்பாளர் கூறுகையில், இந்த முக்கியமான தயாரிப்பை நுகர்வோருக்கு விரைவாகக் கொண்டு வர நாங்கள் எதிர்நோக்குகிறோம். இந்த நோயைத் தணிக்கும் நோக்கில் நுகர்வோருக்கு புதிய தீர்வுகளை வழங்குவதற்கான அடுத்த படியாக கோவிட்-19 ஸ்கிரீனிங் கருவி இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம் என கூறியுள்ளார்.
ரியோ செகோவியா, கேப் ஆறு, [1] அல்லது யாரா ஆறு, என்பது வடக்கு நிகரகுவா மற்றும் தெற்கு ஒண்டுராசின் எல்லையில் அமைந்துள்ள ஒரு ஆறாகும். இது 841 கி. மீ (523 மைல்) நீளம் கொண்ட மத்திய அமெரிக்க குறுநில இணைப்புப் பகுதிக்குள் முழுவதுமாக ஓடும் மிக நீளமான ஆறாகும் [2] பான் அமெரிக்கன் நெடுஞ்சாலை நிகரகுவாவைக் கடக்கும் இடத்திற்கு அருகிலுள்ள சோமோட்டோ கனியன் தேசிய நினைவுச்சின்னத்தில் இந்த நதி உருவாகிறது, மேலும் 841 கி. மீ (523 மைல்) தொலைவிற்குத் தாழ்வான மலைப்பாங்கான நிலப்பரப்பில் பாய்கிறது. கரீபியன் கடலுக்குள் கபோ கிராசியாஸ் அ டியோஸ் என்ற இடத்தில் உட்புகுகிறது. இடைப்பகுதி மற்றும் தாழ் பகுதிகள் ஹோண்டுராஸ்-நிகரகுவா எல்லையை உருவாக்குகின்றன. செப்டம்பர் 7, 2007 அன்று, வகை 5 ஃவீலிக்ஸ் சூறாவளி கரையைக் கடந்து இரண்டு நாட்களுக்குப் பிறகு ரியோ கோகோ சாதாரண நிலையை விட 11 மீட்டர்கள் (36 அடி) அளவு உயர்ந்து இருப்பதாக முக்கிய சர்வதேச செய்தி நிறுவனமான வயர் தெரிவித்தது. மேற்கோள்கள்தொகு ↑ [htt://chestofbooks.com/travel/reference/World-Gazetteer/Cape-River-Capua.html Cape River-Capua], Chest of Books website, accessed 8 March 2010. ↑ Aragón R., William. "Desentrañando el Gran Cañón" (in Spanish). La Prensa. Archived from the original on 2007-08-07. https://web.archive.org/web/20070807123206/http://www-ni.laprensa.com.ni/archivo/2006/marzo/09/servicios/guiaturistica/92982.shtml. பார்த்த நாள்: 2007-08-08.
பிரபல நடிகை ஸ்ரீபிரியாவின் தாயார் உடல்நலக்குறைவு காணமாக நேற்று உயிரிழந்துள்ளார். இதற்கு திரை பிரபலங்கள் பலரும் தங்கள் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். KL Reshma Updated on : 23 November 2022, 11:18 AM 1974-ம் ஆண்டு வெளியான 'முருகன் காட்டிய வழி' என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை ஸ்ரீபிரியா. அதன்பிறகு பல்வேறு படங்களில் நடித்துள்ள இவர், எம்.ஜி.ஆர், சிவாஜி தொடங்கி, கமல், ரஜினி படங்களிலும் நடித்துள்ளார். 90-களில் ரஜினி, கமல், போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக பல படங்களில் நடித்துள்ள இவர், தற்போது வரை சுமார் 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழ் மட்டுமல்லாமல், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும் நடித்துள்ளார். இவர் ஒரு நடிகையாக மட்டுமல்லாமல் இயக்குனர், தயாரிப்பாளர், டப்பிங் ஆர்ட்டிஸ்ட், என பன்முக கலைஞராகவும் விளங்குகிறார். இவரது இயக்கத்தில் தெலுங்கில் வெளியான 'த்ருஷ்யம்' - மலையாளம், தமிழ் உள்ளிட்ட மொழிகளில் ரீ-மேக் செய்யப்பட்டு த்ரிஷ்யம், பாபநாசம் என்ற பெயர்களில் வெளியானது. மேலும் இவரது தயாரிப்பில் 1979-ல் வெளியான 'நீயா' படம் பெரிய அளவில் தமிழில் ஹிட் கொடுத்தது. இந்த படத்தை இவரது தாயாரும் சேர்ந்து தயாரித்துள்ளார். இந்த நிலையில் இவரது தாயாரான கிரிஜா பக்கிரிசாமிக்கு தற்போது 81 வயதாகும் நிலையில், வயது மூப்பு காரணமாக உயிரிழந்தார். ஸ்ரீ பிரியாவின் தாயார் மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மேலும் திரை பிரபலங்கள் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.. கிரிஜா பக்கிரிசாமி 'நீயா', 'நட்சத்திரம்', காதோடு தான் நான் பேசுவேன்' உள்ளிட்ட படங்களை தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. Also Read 55 வருட தேடல்.. மலேசியாவில் கண்டுபிடித்த மகன்: 'மனிதம் தழைக்கட்டும்' என முதல்வர் நெகிழ்ச்சி ட்வீட்! Girija Pakriswamy RIP Girija Pakriswamy Sripriya mother actress Sripriya Trending சோமாலியாவில் விழுந்த விண்கல்:உடைத்துப்பார்த்த விஞ்ஞானிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி..உள்ளே இருந்தது என்ன? பயணிகள் கவனத்திற்கு.. ரயிலில் ஜன்னலோரம் அமர்ந்த நபரின் கழுத்தில் பாய்ந்த இரும்பு ராட்: திக் திக் சம்பவம்! உலகக்கோப்பையில் ஈரான் அணி தோல்வி.. கொண்டாடிய நபரை சுட்டுக்கொன்ற ஈரான் ராணுவம்.. அதிர்ச்சியில் உலகநாடுகள்! ஆளுநருக்கு இத்தனைகோடி செலவா ? வேலையே செய்யாதவர்களுக்கு இத்தனை செலவு ஏன் என இணையவாசிகள் ஆவேசம் ! Latest Stories சோமாலியாவில் விழுந்த விண்கல்:உடைத்துப்பார்த்த விஞ்ஞானிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி..உள்ளே இருந்தது என்ன? உலகக்கோப்பையில் ஈரான் அணி தோல்வி.. கொண்டாடிய நபரை சுட்டுக்கொன்ற ஈரான் ராணுவம்.. அதிர்ச்சியில் உலகநாடுகள்! அரளி சித்தராக மாற்றப்பட்ட மனநலம் பாதித்த முதியவர்: உண்டியல் வைத்து பணம் வசூலித்த கும்பலிடமிருந்து மீட்பு!
வலிமை படத்தை தொடர்ந்து அஜித் அடுத்து நடித்து வரும் பெயரிடப்படாத AK 61 படத்தில் நடிக்கிறார். இப்படத்தை வலிமை படத்தை இயக்கிய எச். வினோத் இயக்க போனி கபூர் தருகிறார். 3 வது முறையாக அஜித்-வினோத் மற்றும் போனி கபூர் கூட்டணியில் இப்படம் உருவாக இருக்கிறது. அஜித் நடிக்கும் 61வது திரைப்படத்தின் படப்பிடிப்பு நாளை ஹைதராபாத்தில் தொடங்க இருக்கும் நிலையில் நேற்று அஜித் ஹைதராபாத்துக்கு விமான மூலம் சென்றார். அந்நிலையில் விமானத்தில் அவரை சந்தித்த விமான பணிப்பெண் ஒருவர் அவருடன் செல்பி எடுத்துக் கொண்டு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அதில் ‘ அஜித் சார் மிகவும் எளிமையான மனிதர், இயல்பிலேயே மிகவும் மென்மையானவர் மற்றும் முகத்தில் எப்போதும் புன்னகையுடன் இருப்பவர்’ என குறிப்பிட்டுள்ளார். மற்றும் அந்த விமானத்தில் இருந்த பலரும் அஜீத்துடன் புகைப்படங்களை எடுத்துக் கொண்டனர் என்பதும் அந்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது. Yesterday With handsome thala Ajith Kumar sir #AjithKumar #AK61 #handsomethala . Very down to earth person , very gentle by nature and always smile on face ? pic.twitter.com/NTOqRacgtS — Kan_flygal (@FlygalKan) April 8, 2022 Tags: Ajith Ajith Kumar AK 61 AK 62 Thala 61 Thala 62 Vignesh Shivan Share on Share on Facebook Share on Twitter Share on Pinterest Share on WhatsApp Share on WhatsApp Share on Linkedin Share on Tumblr Share on Reddit
விதியை மாற்றும் வலிமையான ஆயுதம் என்று ஒன்று இருந்தால், அது காதல் தான். இரண்டு மனங்கள் ஒத்துப் போனால் அங்கு இனிமையான தருணங்களை எதனாலும் அழிக்க முடியாது. ஒருவர் தன்னை இன்னொருவரிடம் இழக்கும் போது, அதை விடவும் இழப்பதற்கு இந்த உலகில் ஒன்றும் இல்லை. ஒரு பெண் இயக்குனர் காதல் கதை எழுதும்போது அதனுள் ஆழமான எமோஷன் இருக்கும். அபியும் அனுவும் படத்தின் விளம்பர காட்சி ப்ரோமோ மற்றும் பாடல்கள் அதை பறை சாற்றுகின்றன. இயக்குனர் பிஆர் விஜயலக்‌ஷ்மி தனிச்சிறப்புடைய காதலை அழகுபடுத்தி படத்தில் காட்டியிருக்கிறார். “அபி (டொவினோ தாமஸ்) மற்றும் அனு (பியா பாஜ்பாய்) கதாபாத்திரங்கள் முற்றிலுமாக வேறு உலகத்தை சார்ந்தவர்கள். அவர்கள் பாதை ஒரு இடத்தில் சந்திக்கும்போது, அவர்களின் புது பயணம் தொடங்குகிறது, அதன் பிறகு நிறைய சவால்களை கடக்க வேண்டி வருகிறது. கதாபாத்திரங்களை எழுதி முடித்து, அதற்கான வடிவத்தை கொடுக்கும் பொழுதே டொவினோ தாமஸ், பியா பாஜ்பாயை உடனடியாக பொறுத்தி பார்த்தேன். அந்த கதாபாத்திரங்கள் கச்சிதமாக பொருந்துகின்றன. படத்தின் ஆரம்பத்திலேயே ரசிகர்கள் இந்த படத்தின் கதாபாத்திரங்கள் தங்களை பிரதிபலிப்பதை உணர்வார்கள்” என்கிறார் விஜயலக்‌ஷ்மி. மேலும் படத்தின் இசை நல்ல வரவேற்பு பெற்றதை பற்றி அவர் கூறும்போது, “தரண் அவரது முதல் படத்தில் இருந்தே சிறந்த காதல் பாடல்கள் இசையமைப்பதில் திறமை வாய்ந்தவர். அவரது அனைத்து படங்களின் ஆல்பங்களுமே எப்போதும் கேட்கக் கூடிய வகையில் இருக்கும். சின்ன சின்ன விஷயங்களிலும் அவரது இசை அறிவு வியக்க வைக்கிறது. தரண் இசை மதன் கார்க்கியின் அற்புதமான பாடல் வரிகளோடு இணையும்போது அது படத்தை வேறு தளத்திற்கு கொண்டு செல்கிறது” என்றார். படத்தில் வசனம் எழுதியிருக்கும் கே சண்முகம் அவர்களை மறக்காமல், அவரை பற்றி கூறும்போது, “கதாபாத்திரங்கள் சண்முகம் எழுதிய வசனங்களோடு சேர்ந்த பின்பு தான் முழுமையடைந்தது. அந்த வகையில் சண்முகம், படத்தின் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் அவரது வசனங்களால் இன்னும் வலிமையாக்கி கொடுத்தார்” என்றார். அபியும் அனுவும் படத்தை சரிகம ஃபிலிம் லிமிடெட் நிறுவனத்தின் ஒரு அங்கமான யூட்லீ ஃபிலிம்ஸ் தயாரித்திருக்கிறது. வரும் மே 25ஆம் தேதி படம் வெளியாக இருக்கிறது.
தென்காசி மாவட்டத்தில் மீன் குளம் அமைத்து மீன் வளர்க்க 50 சதவிகிதம் மானியம் வழங்கப்படுகிறது என மாவட்ட ஆட்சித் தலைவர் ச.கோபால சுந்தரராஜ் தெரிவித்தார். இதுகுறித்து தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது: தென்காசி மாவட்டத்தில்; மீன்வளர்ப்பினை விரிவுபடுத்திட மற்றும் மீன்குஞ்சு உற்பத்தியினை அதிகரித்திட புதிய குளம் அமைத்து உள்ளீட்டு மானியம் வழங்குதல் திட்டத்தின்கீழ் மீன்வளர்ப்பில் ஆர்வமுள்ள பயனாளிகள் ஒரு ஹெக்டேரில் ரூ.7.00 இலட்சம் செலவு செய்து மீன்குளம் அமைத்திட 50% மானியமாக ரூ.3.50 இலட்சம் மற்றும் ஒரு ஹெக்டேர் நீர்ப்பரப்பில் மீன்வளர்ப்பு செய்திட ஆகும். உள்ளீட்டு செலவினங்களுக்கு (மீன்குஞ்சு, மீன்தீவனம் மற்றும் இதர செலவினங்களுக்கு) ரூ.1.50 இலட்சத்தில் 40 சதவிகிதமாக ரூ.60,000/- பின்னேற்பு மானியமாக வழங்கப்படும். இத்திட்டத்தின் கீழ் பயன்பெறுவதற்கு சொந்தநிலம் அல்லது குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் பதிவு செய்யப்பட்ட குத்தகை ஒப்பந்தம் இருத்தல் வேண்டும். மீன்வளர்ப்பு அல்லது மீன்குஞ்சு வளர்ப்பிற்கு ஏற்ற நீர் ஆதாரம் இருத்தல் வேண்டும். இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் விண்ணப்பப்படிவத்தை www.tenkasi.nic.in/forms/ என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகம், 42C, 26 வது குறுக்குத்தெரு, மகாராஜா நகர், திருநெல்வேலி – 627011 என்ற அலுவலக முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ சமர்ப்பிக்கலாம். இத்திட்டம் தொடர்பான விபரங்களுக்கு 0462 2581488 என்ற தொலைபேசி எண்ணில் அலுவலக நேரங்களில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ச.கோபால சுந்தரராஜ்; செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
இவ்வசனத்தில் (43:45) முன்னர் சென்று விட்ட தூதர்களிடம் ஒரு கேள்வியைக் கேட்குமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குக் கட்டளையிடப்படுகிறது. மரணித்துவிட்ட தூதர்களிடம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எப்படி கேள்வி கேட்க முடியும்? என்ற சந்தேகம் இதில் ஏற்படலாம். ஆனால் 'தூதர்களிடம் கேட்பீராக!' என்பதை, "தூதர்கள் கொண்டு வந்த போதனைகளில் தேடிப்பார்ப்பீராக'' என்ற கருத்தில்தான் புரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு புரிந்து கொள்வதற்கு திருக்குர்ஆனில் மற்றொரு வசனம் சான்றாக அமைந்துள்ளது. திருக்குர்ஆனின் 4:59 வசனத்தில் "உங்களுக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டால் அல்லாஹ்விடமும், அவனது தூதரிடம் கொண்டு செல்லுங்கள்'' என்று அல்லாஹ் கூறுகிறான். இங்கே அல்லாஹ்விடம் கொண்டு செல்லுங்கள் என்பதற்கு அல்லாஹ்வின் வேதத்தோடு உரசிப் பாருங்கள் என்பதைத் தவிர வேறு அர்த்தம் இருக்க முடியாது. அதே போல அல்லாஹ்வின் தூதரிடம் கொண்டு செல்லுங்கள் என்றால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உயிருடன் இருந்த காலத்தில் அவர்களிடம் கொண்டு செல்ல முடியும். அவர்களின் மரணத்துக்குப் பிறகு எந்தப் பிரச்சினையையும் அவர்களிடம் கொண்டு செல்ல முடியாது. அவர்களின் வழிகாட்டுதலுடன் பொருத்திப் பார்க்க வேண்டும் என்பது தான் இதன் கருத்தாகும். அதுபோல் தான் இந்த வசனத்தையும் புரிந்து கொள்ள வேண்டும். திருக்குர்ஆன் பல இடங்களில் இறந்தவர்கள் செவியுற மாட்டார்கள், பதில் தர மாட்டார்கள் என்று கூறுவதால் இவ்வாறுதான் புரிந்து கொள்ள வேண்டும் என்பது மேலும் உறுதியாகிறது.
இந்தப் பதிவின் முதல் பகுதியைப் படிக்க இங்கே க்ளிக்கவும். இரண்டாவது பகுதியைப் படிக்க இங்கே படிக்கவும். மூன்றாவது பகுதியை படிக்க எங்கேயும் க்ளிக்க வேண்டாம். தொடர்ந்து படிக்கவும். நாட்கள் போயிகிட்டே இருந்துச்சி. ஆறாவது செமஸ்டர் முடிவுல ஆரம்பிச்ச ப்ளேஸ்மெண்ட் ஓட்டம் ஏழாவது செமஸ்டர் முழுசும் தொடர்ந்துச்சி. நாட்கள் போகப் போக நா சுத்திப் பாத்த ஊர்களோட எண்ணிக்கையும், காலேஜுங்களோட எண்ணிக்கையும் அதிகமாச்சே தவற வேற எந்த Improvement உம் இல்லை. இவய்ங்க இப்புடியே சுத்திக்கிட்டு இருந்தா வேலைக்கு ஆக மாட்டாய்ங்கன்னு ப்ளேஸ்மெண்ட் co-ordinator ah இருந்த எங்க க்ளாஸ் பசங்களும் பொண்ணுங்களும் mock இண்டர்வியூல்லாம் வச்சி வசூல்ராஜா கமலுக்கு டாக்டருங்க ட்ரெயிங்க் குடுக்குற மாதிரில்லாம் குடுத்தாங்க. ”the symptoms are poly uriya, unusual thirst, frequent urination and unusual weight loss” ன்னு பசங்க ட்ரெயிங் குடுக்க குடுக்க கமல் மேறியே ப்ராக்டிஸ்லாம் பன்னுவேன். அய்யோ அது மூணாவது கேள்விக்கு சொல்ல வேண்டிய பதிலுடாம்பானுங்க.. “நா ஒரு ஆர்டர்ல மனப்பாடம் பன்னிட்டேன் நீ மாத்தி கேட்டியன்ன இன்னா பன்றது”ன்னு இங்க நல்லா வாயடிச்சிட்டு போவேன். உண்மையான இண்டர்வியூல ப்ரகாஷ்ராஜ் மாதிரி ஒருத்தன் வந்து மொக்கை குடுத்துருவான். இதுல ஒரே ஒரு நல்ல விஷயம் என்ன மாதிரியே இண்டர்வியூல மொக்கை வாங்குற ஒரு நாலஞ்சி பசங்கல்லாம் சேர்ந்து ஒரு குரூப்பா ஃபார்ம் ஆனோம். இப்பவா இருந்தா பட்டுன்னு எல்லார்கிட்டயும் நம்பர வாங்கி “வேலையில்லா வாலிபர் சங்கம்”ன்னு ஒரு வாட்ஸாப் குரூப்ப ஆரம்பிச்சி விட்டுருக்கலாம். அப்ப அதுவும் இல்லை. எல்லாரும் ஒருத்தருக்கு ஒருத்தர் பார்ட்னர் பார்ட்னர்னு கூப்டுக்க ஆரம்பிச்சோம். வேலை இல்லைன்னாலும் நம்மள மாதிரியே நாலு பேரு கூட இருந்த்து மனசுக்கு ஒரு ஆறுதலா இருந்துச்சி. அதுக்கப்புறம் எல்லாரும் இண்டர்வியூக்கு போகும்போதெல்லாம் “பாஸ் என்கிற பாஸ்கரன்”ல சாமிநாதன் ஆர்யாவப் பாத்து சொல்ற மாதிரி “பாஸ்.. இண்டர்வியூ க்ளியர் பன்னி எதுவும் தொலைச்சிராதீங்க.. அப்புறம் எனக்கு கம்பெனியே இருக்காது” ன்னு நினைச்சிக்கிறது. எப்புடி மொத்தமா போறோமோ அதே மாதிரி மொத்தமா மொக்கை வாங்கிட்டு வருவோம். ”நல்லவேளை நீங்க எதுவும் செலெக்ட் ஆயிருவீங்களோன்னு நா பயந்தே பொய்ட்டேன்.. சங்கத்துல ஆள் கம்மி ஆயிருமா இல்லையா?” என்னடா தொடர்ந்து ஓட ஓட அடிக்கிறானுங்களே… பையன் ஒவ்வொரு இண்டர்வியூவுக்கும் பன்னிட்டு இருந்துருப்பான்னு மட்டும் நினைக்காதீங்க.. அந்த டைம்லதான் நாங்க ஷார்ட் பிலிம் எடுக்கலாம்னு தீவிரமா வேலை பாத்துக்கிட்டு இருந்தோம். அந்த காலகட்டத்துலதான் எடுத்து ரிலீஸ் பன்னதுதான் கீழ இருக்க ட்ரெயிலர்.. இப்பவரைக்கு ட்ரெயிலர் மட்டும்தான் ரிலீஸ் பன்னிருக்கோம். அப்ப திடீர்னு இண்டர்வியூ வந்தா என்ன பன்னுவன்னு தானே கேக்குறீங்க? கஜினில சத்யன் அசின்கிட்ட சொல்லுவானே.. மேடம் கோட்டு ரெடியா இருக்கு.. இப்ப சொன்னா கூட சஞ்சய் ராமசாமியா மாறி வந்துருவேன்னு.. அதே தான். ஃபைல் ஆல்வேஸ் ரெடி… மறுநாள் இண்டர்வியூன்னு சொன்னீங்கன்னா மொதநாள் நைட்டு அதுக்குன்னே வச்சிருக்க பெசல் சட்டையையும் பேண்டையும் தொவைச்சி போட்டு காலைல அயன் பன்னா இண்டர்வியூக்கு நான் ரெடி.… இண்டர்வியூக்கு போறதுல எனக்கு இருந்த ஒரு மிகப்பெரிய ப்ரச்சனை மீசை வைக்கிறதா வைக்கிறதில்லையாங்குறது தான். எனக்கு மீசை வைச்சா கேவலமா இருக்கும். மீசைய எடுத்தா கண்றாவியா இருக்கும். அதனால இந்த கேவலத்துக்கும் கண்றாவிக்கும் இடையில இருக்கா மாதிரி எப்பவும் ட்ரிம் பன்னிக்கிட்டு தான் சுத்திக்கிட்டு இருப்பேன். இண்டர்வியூன்னா ஷேவ் பன்னனும். தாடிய ஷேவ் பன்னிட்டு மீசைய ட்ரிம் பன்னுனா பாக்க சேவிங் பன்னமாதிரியும் இருக்காது பன்னாத மாதிரியும் இருக்காது... ஒரே குஸ்டமப்பா... அன்று ஒரு நாள்……….. பெருசா எதுவும் சம்பவம் நடக்கப்போவுதுன்னு நினைப்பீங்க.. ஆனா அதெல்லாம் ஒண்ணும் இல்லை. எப்பவும்போல மறுநாள் ஒரு கோர் கம்பெனி இண்டர்வியூக்கு வர்றாங்கன்னு தெரிஞ்சதும் எல்லாத்தையும் ரெடி பன்னி வச்சிக்கிட்டு ஷேவ் பன்னப் போகயிலதான் யோசிச்சேன். இந்த ஒருதடவ மீசைய ட்ரின் பன்னாம மொத்தமா எடுத்துருவோம்னு எடுத்துட்டேன். காலையில மொழுக்கட்டையா இண்டர்வியூக்கு போகும்போது நம்ம பயலுகல்லாம் “இன்னா மூஞ்சி.. உலகத்து அழகுகளையெல்லாம் ஒட்டு மொத்தமா சேத்து வச்சா மாதிரி இருக்கு இந்த மூஞ்சி.. காலங்காத்தால வேலைக்கு போறவன் மொத மொத இந்த மூஞ்ச பாத்துட்டு போனாப் போதும்… துப்பூ ….வெளங்கும் ”ன்னு கைகொட்டி சிரிக்கிறாய்ங்க. ஆத்தாடி… போறப்பவே இப்டின்னா வர்றப்ப இன்னும் ஃபோர்சா இருக்குமேன்னு நினைச்சிக்கிட்டே போனேன். அது எனக்கு பதினெட்டாவது கம்பெனி. ஆண்டவன் புண்ணியத்துல எனக்கும் என்கூட இருந்த பார்ட்னர்கள் ரெண்டு பேருக்கும் அந்தக் கம்பெனில வேலை கெடைச்சிது. மிக்க மகிழ்ச்சி.. ஹாஸ்டலுக்கு வந்து வீட்டுக்கு ஃபோன் பன்னி சொல்லிட்டு புள்ளையார்பட்டிக்கும் குன்றக்குடிக்கும் போய் ஒரு தரிசனத்தப் போட்டுட்டு வர 9 மணி ஆகிருச்சி. அப்புறம் வந்து காரைக்குடிலருந்து பட்டுக்கோட்டைக்கு பஸ் ஏறி வீட்டுக்கு போய் கதவத் தட்டும்போது மணி பன்னெண்டுக்கும் மேல. கதவத் தொறந்து மீசையில்லாம சேவிங் பன்ன கொரங்கு மாதிரி இருந்த என் மூஞ்சப் பாத்ததும் எங்கம்மா கேட்ட மொத கேள்வி “இந்த மொகரைக்கு எவண்டா வேலை குடுத்தது?”ன்னு. (உண்மையாவே இந்தக் கேள்விதான் கேட்டுச்சு) அதுக்கப்புறம் கடைசி செமஸ்டர் ஆரம்பிச்சி காலேஜ் போகும்போது சில பசங்க என்ன மச்சி கோர் கம்பெனில ப்ளேஸ் ஆயிட்ட.. கோர் கம்பெனிக்காகவ் வெய்ட் பன்னியாடா?ன்னு கேப்பானுக.. பசுபதி மே/பா ராசக்காபாளையம் படத்துல DSP வந்து விவேக்கிட்ட என்ன காரியம் பன்னிருக்கீங்கன்னதும் விவேக் பதறிருவாரு.. உடனே ஊரே நடுங்குற மார்கெட் சேகர அரெஸ்ட் பன்னது சாதாரண விஷயமான்னதும் விவேக் சுதாரிச்சிக்கிட்டு “இந்த ஆப்ரேஷன நாங்க ரொம்ப நாளாவே ப்ளான் பன்னிட்டுதான் சார் இருந்தோம். கரெக்ட்டா ஸ்கெட்ச் போட்டு நேக்கா தூக்கிட்டோம்”ன்னு பீலா விடுவாரு. அந்த மாதிரி கோர் கம்பெனிக்காக வெய்ட் பன்னியா மச்சி?ன்னு கேக்குற பயலுககிட்ட “ எனக்கு சின்ன வயசுலருந்தே கோர் கம்பெனில ப்ளேஸ் ஆகனும்னுதான் மச்சி ஆசை.. சாஃப்ட்வேர்லாம் வேஸ்டு”ன்னு அடிச்சிவிட்டுக்கிட்டு இருந்தேன். ஏழாவது செமஸ்டர்ல கேம்பஸ் இண்டர்வியூ ஆரம்பிச்ச காலத்துலருந்து எவ்வளவுதான் சந்தோஷமா இருந்தாலும் திடீர்னு உள்ளுக்குள்ள வேலை கிடைக்கலங்குற குறை இருந்துக்கிட்டேதான் இருக்கும். ப்ளேஸ் ஆனதுக்கப்புறம் அந்த குறை தீர்ந்துச்சி. மேல சொன்ன மாதிரி எனக்கு வேலை கிடைச்சது பதினெட்டாவது கம்பெனில தான். எனக்கு தெரிஞ்ச வரை அவ்வளவு கம்பெனி அட்டெண்ட் பன்னது எங்க பேட்ச்ல நாந்தான்னு நினைக்கிறேன். சும்மா அடிச்சில்லாம் விடல. உண்மையத்தான் சொல்றேன். எனக்கு Arrear எதுவும் இல்லை. படிச்சது எலெக்ட்ரிகல். அதனால ஒண்ணு ரெண்டு ப்யூர் மெக்கானிக்கல் based கம்பெனிகளத் தவற மத்த எல்லா கம்பெனிலயும் இண்டர்வியூ அட்டெண்ட் பன்னுற eligibility இருந்துச்சி. வேலை கிடைக்காத வரைக்கும் நமக்கு ஏன் இன்னும் வேலை கிடைக்கலன்னு யோசிச்சதே இல்லை. வேலை கிடைச்சதுக்கப்புறம்தான் ஏன் நமக்கு வேலை கிடைக்க இவ்வளவுநாள் ஆச்சுங்குறத யோசிச்சிப் பார்த்திருக்கேன். இந்தக் கம்பெனில ப்ளேஸ் ஆனதுக்கு எனக்கு அசிங்கமா இருக்குனு சொன்ன நண்பருக்கெல்லாம் வேலை கிடைச்சிது. ஆனா நமக்கு ஏன் கிடைக்கல? நான் யோசிச்ச வரைக்கும் எனக்கு கிடைச்ச பதில் நம்மோட மனநிலை. ஒருத்தனுக்கு அந்த வேலை கிடைச்சாலும் ஒக்கேதான் கிடைக்கலன்னாலும் ஓக்கேதான் அப்டின்னு நினைக்கிறவன் ரொம்ப பதட்டப் பட மாட்டான். ஆனா நமக்கு இந்த வேலை கண்டிப்பா வேணும்னு நினைக்கிறவன் எப்படியாவது வேலை வாங்கியே ஆகனும்ங்குற ஒரு நிலையில நிச்சயம் பதட்டப்படுவான். அந்தப் பதட்டம்தான் இண்டர்வியூக்கள்ல முதல் எதிரி. ”இண்டர்வியூ எடுக்குறவன் யாரோ ஒருத்தன்.. அவன் நமக்கு வேலை குடுத்தா ஓக்கே… இல்லன்னா நமக்கு ஆயிரம் வேலை கிடைக்கும்” அப்டிங்குற மனநிலை ஒருத்தனுக்கு எப்போ வருதோ அதாவது “போனால் போகட்டும் போடா” அப்டிங்குற மனநிலைக்கு ஒருத்தன் எப்ப போறானோ அப்ப நிச்சயம் பதட்டம் வராது. அந்தப் பதட்டம் எனக்கு இல்லாம இருந்துருந்தா “What is current ?”ன்னு அவன் கேட்டப்பவே பதில் சொல்லிருப்பேன். ஆனா அந்த ”போனால் போகட்டும் போடா” மனநிலையை உருவாக்குறது அவ்வளவு சாதாரண விஷயம் இல்லை. அது தனி ஒரு மாணவனை மட்டும் சார்ந்த விஷயமும் இல்லை. அவன் குடும்ப சூழ்நிலைகள்தான் இந்த மனநிலைய தீர்மானிக்குது. ஒரு well settled குடும்பத்துலருந்து வரும் ஒரு மாணவர எடுத்துக்குவோம். அவர் படிச்சி முடிச்ச உடனே வேலைக்கு போகனும்ங்குற அவசியம் இல்லை. அவசியம்ன்னு சொல்றத விட அத்யாவசிய தேவைகளுக்காக அவர் வேலைக்கு போயே ஆகவேண்டும் என்கிற கட்டாயம் இருக்காது. கலேஜ்ல வேலை கிடைக்கலன்னாலும் காலேஜ் முடிச்சப்புறம் கொஞ்ச நாள் வீட்டுல இருந்து வேலை தேடமுடியும்ங்குற நம்பிக்கை அவர்கிட்ட இருக்கும். அவருக்கு இந்த ”போனால் போகட்டும் போடா” மனநிலை ஈஸியா வந்துரும். ஆனா அதே ஒரு மிடில் க்ளாஸ் பையனையோ இல்லை அதற்கும் கீழ் நிதி நிலமையில இருக்க குடும்ப பசங்களையோ எடுத்துக்குங்க. அவங்க எப்படா படிச்சி முடிச்சி வேலைக்கு போவாங்க.. நம்ம குடும்ப கடனெல்லாம் எப்படா தீரும்.. அப்பாவுக்கு எப்படா கொஞ்சம் சுமை இறங்கும்னு பாத்துக்கிட்டு இருப்பாங்க. அந்த எதிர்பார்ப்ப பூர்த்தி செய்யனுமேங்குற ஒரு அழுத்தமே அந்தப் பையனுக்கு மேல சொன்ன மனநிலையக் குடுக்காது. அப்ப அந்த தெளிவான மனநிலைய நமக்கு கொண்டு வருவதற்கு முதல்ல நம்ம மேலயே நமக்கு தன்னம்பிக்கை வரனும். அதுக்கு நாம மத்தவங்கள விட கொஞ்சம் கடினமா உழைக்கனும். நிறைய பயிற்சி எடுத்துக்கனும். நமக்கு இந்த வேலை வேணும்… அதே சமயம் இவன் இல்லைன்னா இன்னொருத்தன் நமக்கு வேலை குடுப்பான்னு தோணனும்.. வேலை குடுத்தாத்தான் அவன் நமக்கு முதலியார்.. இண்டர்வியூ எடுக்குறப்பல்லாம் அவன முதலி யாரோன்னு தான் நினைக்கனும். இதெல்லாம் நா பன்னல.. அதுனாலதான் எனக்கு 18 கம்பெனி. இதயெல்லாம் செஞ்ச, நம்ம கேட்டகிரிலயே உள்ள பல நண்பர்கள் முதல் இண்டர்வியூலயே க்ளியர் பன்னிருக்காங்க. ஆக ஒரு இண்டர்வியூல நாம என்ன பதில் சொல்றோம்குறத விட எப்படி பதில் சொல்றோம்ங்குறதுதான் முடிவத் தீர்மானிக்குது. எதோ நா வாங்குன அடியிலருந்து நா கத்துக்கிட்ட ஒண்ணு ரெண்டு விஷயங்கள பகிர்ந்துருக்கேன். யார் மனதும் புண்பட்டிருந்தாலும், கொஞ்சம் ஓவராகப் பேசியதைப் போலத் தோண்றினாலும் மன்னிக்கவும். வேறு ஒரு கல்லூரிப் பதிவில் தொடரலாம்.... பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற Posted by முத்துசிவா at Thursday, June 29, 2017 Labels: Accet placement, athiradikkaran, campus interview, muthusiva, அதிரடிக்காரன், கல்லூரி, சினிமா, நகைச்சுவை 3 comments: Unknown said... antha video link send pannunga ji. June 29, 2017 at 10:36 PM Unknown said... தலைவர் ரசிகன் என்ற முறையில் ஆரம்பித்து பல வருடங்களாய் உங்களின் எழுத்துக்களை படித்து வருகிறேன் உங்கள் வேலையை பார்த்து கொண்டே டிவி சீரியலில் ட்ரை செய்யுங்கள். எங்கேயாவது லிங்க் கிடைத்து டிவி சீரியல் செய்தால் காமெடி செண்டிமெண்ட் எல்லாம் கலந்த தொடர் மக்களுக்கு கிடைக்கும். நீங்கள் வெற்றிகரமாய் இருப்பீர்கள். June 30, 2017 at 6:11 AM Natarajan S said... அருமையான தொடர் பதிவு மச்சி. முதல் ரெண்டு பதிவுகளில் எவ்வளவு நகைச்சுவை இருந்ததோ அதுக்கு சமமா கடைசி பதிவில் "ஆழ்ந்த கருத்தோட" முடிச்சு இருக்கீங்க. இந்த கடைசி பதிவு படிக்கும் போது எந்திரன் கிளைமாக்ஸ் சீன்ல ரோபோ ரஜினி பேசுற வசனங்கள் எனக்கு வந்து போகுது... உன்னோட வலைப்பதிவு தொடர வாழ்த்துக்கள். நண்பர் கூறியது போல, நீ சினிமா துறைல முயற்சி பண்ணி பார்க்கணும்... எனக்கு தோணுது நீ ஒரு நல்ல திரைக்கதை எழுத்தாளர் ஆகலாம்.
கேரட் மிகவும் மலிவாக எளிதில் கிடைக்கும் காய்களில் ஒன்றாகும். அதிக நன்மைகள் நிறைந்த கேரட் அனைவராலும் விரும்பி உண்ணும் சுவை நிறைந்த காயாகும். நாம் அனுதினமும் பயன்படுத்தும் … Read more நெல்லி பொடி நெல்லி பொடி பயன்கள் நெல்லியில் இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ் போன்ற தாதுக்கள் அதிக அளவில் நிறைந்துள்ளதால் இது இரத்த சோகைக்கு நல்ல மருந்தாகும். நெல்லியில் அறுசுவையில் உப்பு … Read more முடக்கத்தான் பொடி முடக்கத்தான் பொடி பயன்கள் முடக்கத்தான் முடக்கு அறுத்தான் என்பது நாளடைவில் முடக்கற்றான் என்றானது. கசப்புத் தன்மையுடைய முடக்கத்தான் முடக்கு வாத நோய்களை குணமாக்குவதால் முடக்கத்தான் என்று பெயர் … Read more கரிசலாங்கண்ணி பொடி கரிசலாங்கண்ணி பொடி பயன்கள் கரிசலாங்கண்ணி அதிக அளவில் மருத்துவ குணங்கள் நிறைந்த மூலிகையாகும். இதில் எக்லிப்டால், டெஸ்மீத்தைல், அக்கோண்டனால், ஹென்ட்ரை, ஸ்டிக்மாஸ்டீரால், தங்கச்சத்து, இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் … Read more ஆவாரம் பூ பொடி ஆவாரம்பூ பொடி பயன்கள் ஆவாரம்பூ துவர்ப்புத் தன்மை உடையது. இதில் தங்கச்சத்து நிறைந்துள்ளது. ஆவாரம் பூ பொடியை தினமும் ஒரு டீஸ்பூன் அளவு சாப்பிட்டு வர சர்க்கரை … Read more கஸ்தூரி மஞ்சள் பொடி கஸ்தூரி மஞ்சள் பொடி பயன்கள் கஸ்தூரி மஞ்சள் முக அழகு சாதன பொருட்களில் ஒன்றாகும். இது அனைத்து வகை சருமத்திற்கும் கேடு விளைவிக்காத அலர்ஜி எதிர்ப்பு தன்மை … Read more எலுமிச்சை தோல் பொடி பயன்கள் எலுமிச்சை தோல் பொடியினைக் கொண்டு ஃபேஸ் பேக் முதல் பாதத்திற்கு அழகு தரும் பெடிக்யூர் வரை பயன்படுத்தலாம். எலுமிச்சை தோலில் அதிக அளவு கலோரிகள், கார்ப்ஸ், நார்ச்சத்து, … Read more ஆரஞ்சு தோல் பொடி ஆரஞ்சு தோல் பொடியின் பயன்கள் ஆரஞ்சு தோலில் அதிகளவு ஆன்டி ஆக்ஸிடன்டுகள் நிறைந்துள்ளது. இது இயற்கை அழகை விரும்பும் பெண்களுக்கு மிகச் சிறந்த அழகு சாதன பொருளாகும். … Read more முருங்கை இலை பொடி முருங்கை இலை பொடி பயன்கள் முருங்கையில் விட்டமின்கள், மினரல், அமீனோ ஆசிட்கள், வைட்டமின் சி, கால்சியம், பொட்டாசியம் மற்றும் புரோட்டின் போன்ற ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளது. 10 கிராம் … Read more மருதாணி பொடி மருதாணி பொடி பயன்கள் மருதாணி பொடியானது இளநரையை தடுக்க அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். இதனுடன் அவுரி பொடியை சேர்த்து பயன்படுத்தும் போது நம் கூந்தலுக்கு ஏராளமான நன்மைகள் … Read more ரோஸ் பொடி ரோஸ் பொடியின் பயன்கள் ரோஜாவிற்கு இயற்கையாகவே சருமத்தின் நிறத்தை கட்டுப்படுத்தும் தன்மை உள்ளது. ரோஜாவில் அதிகளவு வைட்டமின் சி நிறைந்துள்ளது. இது நல்ல ஆன்டி-ஆக்ஸிடன்ட் ஆகும். ரோஜா … Read more மண் சிகிச்சை மண்ணின் மகத்துவத்தை அறிந்து அதில் உள்ள மருத்துவ குணங்களை கொண்டு மண் சிகிச்சை முறைகளை சித்த மருத்துவர்கள் கூறியுள்ளனர். பழங்காலங்களில் அனைத்து கிராமங்களிலும் மண் சிகிச்சை முறைகளை … Read more முகத்தில் உள்ள கருமை நீங்க வேண்டுமா? முக அழகு என்பது அனைவரும் விரும்பும் ஒன்றாகும். அதிலும் பெண்கள் முகத்தில் ஏதேனும் ஒரு சிறு பரு வந்தாலும் மிகவும் வேதனைப்படுவர். அநேக பெண்கள் வெள்ளை நிறத்தில் … Read more சர்க்கரை நோயில் இருந்து ஆரம்பத்திலேயே தப்பித்துக்கொள்ள… சர்க்கரைக்கேற்ற முருங்கை சர்க்கரை நோய் சர்க்கரை நோய் இன்றைய காலத்தில் அதிகளவில் காணப்படும் நோயாகும். நம் உடலில் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ … Read more உடலுக்குத் தேவையான வைட்டமின்கள் புழுக்கமான சீதோஷ்ண நிலை பெரும்பாலும் மே, ஜுனில் காணப்படுகிறது. வறட்சியான ஈரப்பதம் ஃபுளூ காய்ச்சலுக்கு ஈடான உடல் நலக் கோளாறுகளை ஏற்படுத்துகிறது. மூக்கடைப்பு, டான்சில், குரல் வளை … Read more
இந்தியாவில் கரோனா தடுப்பூசிகளும், பூஸ்டர் டோஸ்களும் முழு வீச்சில் செலுத்தப்பட்டுவருகின்றன. அதேசமயம், ஊசி மூலம் செலுத்தப்படுவதால் தடுப்பு மருந்தைச் செலுத்திக்கொள்ள தயக்கம் காட்டுபவர்களும் உண்டு. குறிப்பாக, கிராமப்புறப் பகுதிகளில் வசிப்பவர்களில் ஒரு சிலர் தடுப்பூசி செலுத்திக்கொள்ளத் தயக்கம் காட்டுகிறார்கள். இந்நிலையில், மூக்கு வழியாகத் தெளித்து உட்செலுத்தும் தடுப்பு மருந்தைத் தயாரிக்கும் பணியில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக ஈடுபட்டிருக்கிறது பாரத் பயோடெக் நிறுவனம். இந்தியாவில் கோவாக்சின் தடுப்பூசியை உருவாக்கிய இந்நிறுவனம், தற்போது மூக்குவழி கரோனா தடுப்பு மருந்து தயாரிப்பின் இறுதிக்கட்டத்தைத் தாண்டியிருக்கிறது. இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு ஜெனரல் ஏற்கெனவே ஒப்புதல் அளித்துவிட்ட நிலையில், சோதனை முறையில் 4,000 பேருக்கு இந்த மருந்து செலுத்தப்பட்டு பரிசோதிக்கப்பட்டிருக்கிறது என இந்நிறுவனத்தின் தலைவர் கிருஷ்ணா எல்லா தெரிவித்திருக்கிறார். அவர்களில் ஒருவருக்குக்கூட பக்கவிளைவுகளோ, ஆபத்தான அறிகுறிகளோ ஏற்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார். எப்போது பயன்பாட்டுக்கு வரும்? குஜராத்தின் அங்கலேஷ்வரில் இயங்கிவரும் பாரத் பயோடெக் தடுப்பூசி நிறுவனம், கரோனா தடுப்பூசி மட்டுமல்லாமல், குரங்கு அம்மைக்கான தடுப்பூசியைத் தயாரிக்கும் பணியிலும் ஈடுபட்டிருக்கிறது. உலகிலேயே இந்தப் பணியில் ஈடுபட்டிருக்கும் இரண்டாவது நிறுவனம் இது. ஜெர்மனியின் பவேரியன் நார்டிக் பகுதியில் உள்ள தடுப்பூசி நிறுவனமும் குரங்கு அம்மைக்கான தடுப்பூசியை உருவாக்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறது. இந்நிலையில், மூக்கின் வழியாக பூஸ்டர் டோஸாகச் செலுத்தப்படும் தடுப்பு மருந்துக்கான உரிமம் இந்த மாதமே (ஆகஸ்ட்) கிடைத்துவிடும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார். அதன் பின்னர் ஓரிரு மாதங்களில் இது பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கிருஷ்ணா எல்லா, “ஊசி மூலமும், மூக்கின் வழியாகவும் செலுத்தப்படும் தடுப்பு மருந்தின் மூலம் மக்களின் உயிர்களைக் காப்பாற்ற முடியும். எந்த வகையான வைரஸ் திரிபுகள் வந்தாலும் நம்மால் எதிர்கொள்ள முடியும்” என நம்பிக்கை தெரிவித்திருந்தார். தடுப்பூசியைவிட சிறந்தது ஊசி மூலம் செலுத்தப்படும் தடுப்பு மருந்து ஓரளவுக்குத்தான் பலனளிக்கும்; அதனால்தான் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்கும்கூட தொற்று உறுதிசெய்யப்படுகிறது எனத் தெரிவித்திருக்கும் அவர், மூக்கின் வழியாகச் செலுத்தப்படும் தடுப்பு மருந்து முழு உடலுக்கும் பாதுகாப்பு அளிக்கும் எனக் குறிப்பிட்டிருக்கிறார். பிஏ.5 வைரஸ் திரிபு தடுப்பூசியையும் கடந்து தொற்றை ஏற்படுத்தக்கூடியது என்பதால் இந்தியாவில் இந்தத் திரிபின் பரவல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்றும் அவர் எச்சரித்திருக்கிறார்.
தமிழ்நாட்டில் இன்று 18 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கேரள - தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று (நவ. 13) தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, மதுரை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோவை, நீலகிரி, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நவம்பர் 14 முதல் 17-ம் தேதி வரை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியசை ஒட்டி இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
காங்கிரசுக்கும் தீண்டப்படாதோருக்கும் இடையேயான சர்ச்சையில் பொதிந்துள்ள அடிப்படைப் பிரச்சினை என்ன? நான் புரிந்து கொண்டவரை, தீண்டப்படாதோர் இந்தியாவின் தேசிய வாழ்க்கை யில் ஒரு தனி சக்தியினரா, இனத்தினரா இல்லையா என்பதுதான் இதிலுள்ள பிரச்சினை என்று கருதுகிறேன். இதுதான் இந்த சர்ச்சையில் உள்ள உண்மையான பிரச்சினை. இந்தச் சர்ச்சையில்தான் காங்கிரசும் தீண்டப்படாதவர்களும் வேறு பட்ட நிலைகளை, போக்குகளை மேற்கொண்டுள்ளனர். இந்தக் கேள்விக்கு தீண்டப்படாதோர் அளிக்கும் பதில் ‘ஆம்’ என்பதுதான். தாங்கள் இந்துக்களிடமிருந்து தனியானவர்கள், வேறுபட்டவர்கள் என்று அவர்கள் வாதிடுகின்றனர். ஆனால் காங்கிரசோ ‘இல்லை’ என்று மறுதலிக்கிறது; தீண்டப்படாதவர்கள் இந்து சமுதாயத்தின் ஒரு பிரிக்க முடியாத பகுதியினர் என்று அது சாதிக்கிறது. இதுதான் இந்தப் பிரச்சினையில் இருதரப்பினரது மனப்பான்மை. இதில் பிரிட் டிஷ் அரசாங்கத்தின் நிலை என்ன? இந்தியாவின் வைசிராய் மற்றும் கவர்னர் ஜெனரல் என்ற முறையில் லின்லித்கோ பிரபு இதில் பிரிட் டிஷ் அரசாங்கத்தின் நிலையை தாம் வெளியிட்ட ஓர் அறிக்கையில் (பின் இணைப்பு VIல், குறிப்புகள் 9 மற்றும் 12 பார்க்க) மிகத் தெள்ளத் தெளிவாக வெளிப்படுத்தியுள்ளார்; தீண்டப்படாத வர்கள் இந்தியாவின் தேசிய வாழ்வில் ஒரு தனித்த இனத்தினர்தான் என்று அந்த அறிக்கையில் அவர் திட்டவட்டமாக உறுதிப்படுத்தியுள்ளார். அரசியல் சட்டப் பாதுகாப்புகள் பிரச்சினையை ஓர் அடிப் படை பிரச்சினையாகக் கருதும் பலர் அவர்கள் அடிப்படையானது என்று எதைக் கருதுகிறார்களோ அதிலிருந்து மாறுபட்ட அடிப்படை யானதொரு பிரச்சினையாக நான் கருதுவதைக் கண்டு வியப்படையக் கூடும். ஆனால் உண்மையைக் கூறுவதானால் இதில் வேறுபாடு ஏதும் இல்லை. ஒருவர் எதை உடனடியானதாகக் கருதுகின்றனர், எதை முடிவானதாகக் கருதுகின்றனர் என்பதைப் பொறுத் துத்தான் இது அமைந்துள்ளது. அரசியல் சட்டப் பாதுகாப்புகள் பிரச்சினையை மற்றவர்கள் இறுதியானதாகப் பார்க்கின்றனர். நானோ உடனடிப் பிரச்சினையாகப் பார்க்கிறேன். நேரியல் வாத முறையில் ஒரு முற்கோளிலிருந்து எப்படி முடிவு தோன்றுகிறதோ அது போன்றதுதான் இது. இந்த வேறுபாட்டை நான் ஏன் வற்புறுத்து கிறேன் என்பதை இங்கு கூறியாக வேண்டும். இந்திய அரசியலமைப் பின் பரிணாம வளர்ச்சி ஒரு வகையான நேரியல் வாதத்தைத் தோற்று வித்திருப்பதாகவே எனக்குத் தோன்றுகிறது. இந்த நேரியல் வாதத் தில் பிரதான முற்கோள் இந்தியாவின் தேசிய வாழ்க்கையில் தனி யானதென, வேறுபட்டதென நிர்ணயிக்கக்கூடிய ஒரு சக்தி, இனம் இருக்குமாயின் அரசியல் சட்டரீதியான பாதுகாப்புகள் பெற அது உரிமை பெற்றுள்ளது என்பதேயாகும். அரசியல் சட்டப் பாதுகாப்புகள் கோரும் ஓர் இனத்தினர் மற்றவர்களிடமிருந்து தாங்கள் வேறுபட்ட வர்கள், தனித்தவர்கள் என்பதை மெய்ப்பிக்க வேண்டும். அவ்வாறு தாங்கள் தனியானவர்கள், வேறுபட்டவர்கள் என்பதை அவர்கள் நிரூபித்தால், அரசியல் சட்டப் பாதுகாப்புகள் பெறுவதற்கு அவர் களுக்குள்ள உரிமை அனுமதிக்கத்தக்கதே. இவ்வாறுதான் முஸ்லீம்கள், இந்தியக் கிறித்தவர்கள், ஆங் கிலோ-இந்தியர்கள், ஐரோப்பியர்கள், சீக்கியர்கள் ஆகியோர் அர சியல் சட்டப் பாதுகாப்புகள் பெற வகை செய்யப்பட்டது. இந்தியா வின் அரசியலமைப்பு கோட்பாடுகளின் அடிப்படையில் உருவாக்கப் படவில்லை என்பது உண்மையே. கோட்பாடுகளின் அடிப்படை யிலன்றி அவசரத் தேவைகளுக்கு, நெருக்கடி நிலைமைகளுக்கு தற்காலித் தீர்வுகாணும் அடிப்படையிலேயே அது தற்செயலாக உருவானது என்றே கூறவேண்டும். ஆயினும் நான் குறிப்பிட்டது ஒரு கோட்பாடல்லாவிட்டாலும், ஓர் அமைதியான முற்கோள்; அது எல்லா வகையிலும் செயல்பட்டு வருவதாகவே தோன்றுகிறது. ஒரு பிரிவினர் அரசியல் சட்டப் பாதுகாப்புகள் பெறுவதற்கான உரிமை காரண காரிய தொடர்புள்ளதாக எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கிறது. அடிப்படையாக நிபந்தனை பூர்த்தி செய்யப்படும்போது, அதாவது அவர்கள் இந்திய தேசிய வாழ்க்கையில் ஒரு தனித்த, வேறுபட்ட இனத்தினராக அமைந்திருக்கின்றனர் என்பது நிலைநாட்டப்படும் போது அரசியல் சட்டப் பாதுகாப்புகள் பெறுவதற்கு அவர்களுக்குள்ள உரிமை தானாகக் கிட்டுவதே நியாயம், முறை. இந்தப் பிரச்சினையைக் கையாளும்போது, நேரியல்வாதத்தில் கையாள்வது போல் இதையும் கையாள வேண்டும். நேரியல் வாதத்தில் முடிவும் சரி, முற்கோளும் சரி அடிப்படையானவை; எனவே முற்கோளைப் பரிசீலிப்பதைத் தவிர்த்துவிட்டு முடிவை மட்டும் ஆராய்வது போது மானதாகாது. இந்தக் கோணத்திலிருந்து பிரச்சினையை நோக்கும் போது, அரசியல் சட்டப் பாதுகாப்புகளைப் பற்றி மட்டும் விவா தித்து விட்டு தீண்டப்படாதவர்கள் சம்பந்தப்பட்ட இதர விஷயங் களைப் புறக்கணிக்கக் கூடாது என்று கருதுகிறேன். முற்கோள், முடிவு அல்லது அரசியல் சட்டப் பாதுகாப்புகள் உருவாவதாகத் தோன்றும் ஆய்வுப் பொருள் ஆகியவற்றை இயல்பான முறையில் அல்லாவிட்டாலும் முந்துரிமை அடிப்படையில் பரிசீலிக்க நான் கடமைப் பட்டுள்ளேன் என்பதை உணர்கிறேன். இவ்வாறு, உடனடியானதற்கு வேறுபட்டதான முடிவை தனி யாக ஆராய்வதற்கு நான் தீர்மானித்திருப்பது முற்றிலும் நியாயமே என்பதை எவரும் காணமுடியும். இதனைத் தனியாகவும், கணிசமான அளவிலும் ஆராய்வது அவசியம் எனத் தோன்றுகிறது. ஏனென்றால் இதனை அடிப்படையான பிரச்சினை என்று காங்கிரஸ் முற்றிலும் உணர்ந்துள்ளது; தீண்டப்படாதவர்களை ஒரு தனி இனம் என்று அங்கீகரித்துவிட்டால், அரசியல் சட்டப் பாதுகாப்புகள் பெறும் தங்கள் கோரிக்கையில் அவர்கள் வெற்றி பெறுவதைத் தடுக்க முடி யாது என்பதையும் அது அறிந்துள்ளது. இந்த முற்கோளை எதிர்க்க காங்கிரஸ் முன்வந்திருக்கிறது என்றால், இது முதல் அகழி என்றும், அதனைப் பாதுகாக்கத் தவறிவிட்டால் தன்னால் நிலைமையைச் சமாளிக்க முடியாது என்பதையும் அது அறிந்திருப்பதே இதற்குக் காரணம். II சர்ச்சைக்கு இடமற்றத்தை சர்ச்சைக்குள்ளாக்க காங்கிரஸ் முன் வந்திருப்பது அதாவது தீண்டப்படாதவர்கள் இந்துக்களிடமிருந்து வேறுபட்டவர்கள் என்பதை எதிர்க்க அது முன்வந்திருப்பது இந்தியா விலுள்ள நிலைமைகளை நன்கு அறிந்தவர்களை பெரிதும் வியப்பிற் குள்ளாக்காமல் இருக்க முடியும். ஆனால் காங்கிரஸ் இதனை எதிர்க்க தீர்மானித்துவிட்ட நிலைமையில் இந்தப் பிரச்சினையை என்னால் முடிந்தளவு ஆழமாக விளக்க வேண்டியவனாக இருக்கிறேன். தாங்கள் இந்துக்களிடமிருந்து வேறுபட்டவர்கள் என்ப தற்கு ஆதரவாக தீண்டப்படாதோர் கூறும் காரணங்களைப் புரிந்து கொள்வது கடினமல்ல. இதற்கு நீண்ட, விரிவான விளக்கம் தரவேண் டிய அவசியமே இல்லை. ஓர் எளிதான கேள்வியை வைத்து அவர் களது வாதத்தை முழு அளவுக்கு நிலைநாட்டலாம். அந்தக் கேள்வி இதுதான்: எந்த அர்த்தத்தில் அவர்கள் இந்துக்கள்? முதலாவதாக, ’இந்து’ என்னும் சொல் பல்வேறு பொருள்களில் பயன்படுத்தப் படுகிறது; எனவே இந்தக் கேள்விக்கு முறையாகப் பதிலளிப்பதற்கு முன்னர் இந்த சொல் எந்த அர்த்தத்தில் பயன்படுத்தப்படுகிறது என்பதைத் தெரிந்துகொள்வது அவசியம். பிரதேச அடிப்படையில் அது பயன்படுத்தப்படுகிறது. இதன்படி இந்துஸ்தானில் வாழும் ஒவ்வொருவரும் இந்து எனப்படுகிறார். இந்தப் பொருளில் பார்க்கும் போது தீண்டப்படாதவர்களை இந்துக்கள் எனக் கூறலாம் என்பதில் ஐயமில்லை. ஆனால், இதே அளவுகோல் முஸ்லீம்கள், கிறித்தவர் கள், சீக்கியர்கள், யூதர்கள், பார்சிகள் போன்றோருக்கும் பொருந்தும். இரண்டாவதாக ‘இந்து’ என்னும் சொல் சமய அர்த்தத்திலும் பயன் படுத்தப்படுகிறது. இது சம்பந்தமாக எத்தகைய முடிவுக்கும் வருவ தற்கு முன்னர் இந்து சமயத்தின் மீறமுடியாத, வறட்டுத்தனமான சித்தாந்தங்களை இந்து சமயத்தின் வழிபாடு மரபுகளிலிருந்தும், வினைமுறைகளிலிருந்தும் தனியே பிரித்துப் பார்ப்பது அவசியம். மத அர்த்தத்தில் தீண்டப்படாதவர்கள் இந்துக்களா என்பது அவர்கள் தங்களுக்கு அடிப்படையானவையாக எதைத் தேர்ந்தெடுக்கிறார்கள், சித்தாந்தங்களையா அல்லது வழிபாட்டு மரபுகளையா என்பதைப் பொறுத்துள்ளது. இந்து சமயத்தின் அடிப்படைகள் சாதி, தீண்டாமை சித்தாந்தங்கள்தான் என்றால் அப்போது ஒவ்வொரு தீண்டப்படாத வரும் இந்து சமயத்தையும், தான் ஓர் இந்து என்பதையும் திட்ட வட்டமாக, தீர்மானமாக மறுதலிக்கவே செய்வார். இதற்கு மாறாக, இங்கு கடைப்பிடிக்கப்படும் அடிப்படை என்பது ராமன், கிருஷ்ணன், விஷ்ணு, சிவன் மற்றும் இந்து சமயத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஏனைய தெய்வங்களை வழிபடும் மரபைக் குறிக்கிறது என்றால் அப்போது தீண்டப்படாதவர்களை இந்துக்கள் என்று உரிமை கொண்டாடக் கூடும். காங்கிரஸ் வழக்கம்போல் தீண்டப்படாதவர்களிடமிருந்து ஒரு கைக்கூலிப் படையை உருவாக்கி, தீண்டப்படாதவர்கள் இந்துக் கள்தான், இந்துக்களாகவே அவர்கள் மாண்டுமடிவார்கள் என்று அவ்வப்போது ஆரவாரக்க் கூச்சல் போடச் செய்துள்ளது. ஆனால் இந்து சமயம் என்பது சாதியிலும், தீண்டாமையிலும் நம்பிக்கை வைப் பதையே குறிக்கிறது என்னும் நிலைமையில் தங்களை இந்துக்கள் என்று பலர் அறியப் பிரகடனம் செய்யும்படி கேட்கப்பட்டால் இந்த ஐந்தாம்படையினரே கூட தங்களை இந்துக்களாகக் கூறிக்கொள்ள ஒப்பமாட்டார்கள். மற்றொரு விஷயத்தையும் இங்கு வலியுறுத்திக் கூற வேண் டும். மேலே செய்யப்பட்ட ஆய்வின்படி, இந்து என்னும் சொல் சமய அர்த்தத்தில், அதுவும் ஓர் அங்கீகரிக்கப்பட்ட வழிபாட்டு முறையைப் பின்பற்றுபவர் என்னும் ஒரு வரையறைக்குட்பட்ட அர்த்தத்தில் பயன்படுத்தப்படுமானால் தீண்டப்படாதவரை ஓர் இந்து என்று கூற வாய்ப்பு உண்டு. ஆனால் இங்கேயும் கூட இந்துவும் தீண்டப் படாதவரும் ஒரு பொதுவான சமயத்தைச் சேர்ந்தவர்கள் என்ற முடி வுக்கு வருவதற்கு எதிராக எச்சரிக்கை செய்வது அவசியமாகிறது. இவ்விரு தரப்பினரும் அங்கரிக்கப்பட்ட வழிபாட்டு முறைகளைப் பின்பற்றுபவர்கள் என்பதை வைத்துக்கூட அவர்கள் ஒரு பொது வான சமயத்தைக் கொண்டிருக்கின்றனர் என்று கூறிவிட முடியாது. வேண்டுமானால் இவர்கள் ஒத்த சமயத்தைக் கொண்டிருப்பவர்கள் என்று கூறலாம்; இதுதான் துல்லியமான, சரியான விளக்கமாக இருக்க முடியும். ஒரு பொதுசமயம் என்பது பொதுப் பங்கெடுப்பாளர் வட் டத்தைக் குறிக்கிறது. அப்படிப் பார்க்கும்போது, வழிபாட்டு மரபு களையும், வினைமுறைகளையும் கடைப்பிடிப்பதில் இத்தகைய பொதுப் பங்கெடுப்பாளர் வட்டம் என்று ஏதும் இல்லை. இந்துக் களும் தீண்டப்படாதவர்களும் தமது வழிபாட்டு மரபுகளைத் தனித் தனியாகக் கடைப்பிடிக்கின்றனர்; அவர்களுடைய வழிபாட்டு மரபு கள் ஒத்தவையாக இருந்தாலும் அவர்கள் இரண்டு அந்நியர்களைப் போல் தனித்தனியாகவே இருந்து வருகின்றனர். எனவே, இவ் விரண்டு அர்த்தங்களில் எது ஒன்றும் ‘இந்து’ என்னும் சொல் அர சியல் பிரச்சினையை நிர்ணயிப்பதில் உதவிகரமாக இருக்க முடியாது என்பது தெள்ளத் தெள்வு; இது ஒன்றுதான் இந்த விவாதத்தை நியாயப் படுத்த முடியும். எனவே, இந்து சமுதாயத்தின் ஓர் உறுப்பினர் என்பதைக் குறிக்கும் சமூக அர்த்தம்தான் இங்கு பயன்படுத்தப்படக்கூடிய ஒரே அடிப்படையாக இருக்க முடியும். இவ்வகையில் ஒரு தீண்டப்படாத வரை இந்து சமுதாயத்தின் ஒரு பகுதியாக, அங்கமாக கருத முடி யுமா? அவர்களை இந்துக்களின் ஏனைய பகுதியினருடன் இணைக் கும் மனிதாபிமான பிணைப்பு ஏதேனும் இருக்கிறதா? அத்தகைய பிணைப்பு ஏதும் இல்லை. மண உறவு இல்லை. சமபந்தி போஜனம் இல்லை. இணைந்து சேர்ந்து பழகுவது இருக்கட்டும், தொடும் உரிமை கூட இல்லை. இதற்கு மாறாக, தொட்டாலே ஓர் இந்துவை தீட்டு பிடித்துக் கொள்ளும். தீண்டப்படாதவர்கள் ஒரு தனி இனத் தினர் என்பதை இந்து பாரம்பரியம் முழுவதுமே நெடுகிலும் அங்கீகரித்து வந்துள்ளது; இது மறுக்க முடியாத உண்மை என்பதை யும் வலியுறுத்தி வந்துள்ளது. இந்துக்களையும் தீண்டப்படாதவர் களையும் பிரித்துக் காட்டுவதற்கு இந்துக்கள் காலம் காலமாக, வழி வழியாகப் பயன்படுத்தி வந்துள்ள பதப்பிரயோகம் தீண்டப்படாதவர்களின் வாதத்துக்கு வலுவூட்டும் சான்றாக அமைந்துள்ளதைக் காணலாம். இந்தப் பாரம்பரியமான பதப்பிரயோகப்படி, இந்துக் கள் சவர்ணர்கள் என்றும், தீண்டப்படாதவர்கள் அவர்ணர்கள் என்றுமொ குறிப்பிடப்பட்டு வந்திருக்கின்றனர். இந்துக்களை சதுர் வருணிகர்கள் என்றும், தீண்டப்படாதவர்களைப் பஞ்சமர்கள் என்றும் அது கூறுகிறது. இவர்களிடையேயான பிரிவினை இவ்வளவு மிகப் பிரதானமாக இருந்திருக்கவில்லை என்றால், இத்தகைய ஒரு பதப்பிரயோகம் உருவாகி இருக்க முடியாது. இந்தப் பிரிவினை யைக் கடைப்பிடிப்பது மிகவும் அவசியமாக இருந்ததால்தான் இத் தகைய பதப்பிரயோகங்களைக் கண்டுபிடிக்க வேண்டியதேற்பட்டது என்பது வெள்ளிடை மாலை. எனவே, தீண்டப்படாதவர்கள் இந்துக்கள் என்றும், ஆதலால் முஸ்லீம்களும் அவர்களைப் போன்றவர்களும் அனுபவிக்கும் அதே அரசியல் உரிமைகளை தீண்டப்படாதவர்கள் கோர முடியாது என் றும் காங்கிரஸ் முன்வைக்கும் வாதத்தில் எத்தகைய சத்தும் சாரமும், ஆதாரமும் அடிப்படையும் இல்லை என்பது தெள்ளத் தெளிவு. தீண்டப்படாதவர்கள் இந்துக்கள் அல்ல என்பதை நிரூபிப்பதற்கு பாரம்பரிய பழக்கவழக்கங்களை அடிப்படையாகக் கொண்ட வாதம் சிறந்ததாகவும், செல்லத்தக்கதாகவும் இருக்கக்கூடும் என்றாலும் சிலருக்கு இந்த வாதம் பலவீனமானதாகத் தோன்றக்கூடும். காங்கிரஸ் வாதத்தை நேரடியாகச் சந்திக்காமல் களத்தைவிட்டுச் செல்லுவதற்கு நான் விரும்பவில்லை. இதன் பொருட்டு, மத வழியில் தீண்டப் படாதவர்கள் இந்துக்களே என்பதை ஒப்புக்கொள்ளத் தயாராக இருக் கிறேன். ஆனால் இங்கு எழும் கேள்வி என்னவென்றால் அவர்கள் இந்துக்களாகவே இருக்கட்டும், அதனால் என்ன? இந்தியாவின் தேசிய வாழ்வில் அவர்கள் ஒரு தனி இனத்தினராக ஏற்கப்படுவதற்கு இது குறுக்கே நிற்க முடியுமா? சமயம் என்ற குறுகிய அர்த்தத்தில் அவர்கள் இந்துக்கள் என்று அழைக்கப்படுவது மட்டுமே அவர்கள் இந்து சமுதாயத்தின் ஒரு பிரிக்க முடியாத பகுதியினர் என்ற வாதத்துக்கு எவ்விதம் ஆதார அடிப்படையாக இருக்க முடியும் என்பதைப் புரிந்துகொள்வது சிரமமாக இருக்கிறது. சமய வழியில் தீண்டப்படாதவர்கள் இந்துக்களே என்பதை ஒரு விவாதத்திற்காக ஏற்றுக்கொள்வோம். ஆனால் ஏனைய இந்துக் களைப் போன்றே தீண்டப்படாதவர்களும் அதே தெய்வங்களை யும், தேவதைகளையும் வழிபடுகிறார்கள்; அதே யாத்திரைத் தலங்களுக்குச் செல்கிறார்கள், அதே தெய்வீக அருள் நிகழ்வு நம்பிக்கை கள் கொண்டிருக்கிறார்கள், அதே கற்களையும், மரங்களையும், மலைகளையும் மற்ற இந்துக்களைப் போலவே புனிதமானவையாகக் கருதுகிறார்கள் என்றெல்லாம் ஏற்கெனவே கூறினேனே அதற் கும் மேலாக இந்த வாதம் எதை அர்த்தப்படுத்துகிறது? தீண்டப்படாதவர்களும் இந்துக்களும் ஒரே சமூகத்தின் பின்னிப்பிணைந்த பகுதியினர் என்ற முடிவுக்கு வருவதற்கு இதுமட்டுமே போதுமா? சரி, இதுதான் காங்கிரஸ் வாதத்திற்கு அடிப்படையாக உள்ள தருக்க நியாயம் என்றால், பெல்ஜியர்கள், டச்சுக்காரர்கள், நார்வேஜியர்கள், சுவீடிஷ்காரர்கள், ஜெர்மானியங்கள், பிரெஞ்சுக்காரர்கள், இத்தாலியர்கள், ஸ்லாவ்கள் போன்றோரின் விஷயம் என்ன? இவர்கள் எல்லோரும் கிறித்தவர்களில்லையா? ஒரே தேவனை வழி படுபவர்கள் இல்லையா? அவர்கள் அனைவரும் ஏசுவை தங்களது ரட்சகராக ஏற்றுக்கொள்ளவில்லையா? அவர்கள் ஒரே சமய நம்பிக்கைகளைக் கொண்டிருக்கவில்லையா? எண்ணத்திலும், சிந்தனையிலும், வழிபாட்டிலும், நம்பிக்கைகளிலும் அவர்களிடையே பரிபூரண ஒற்றுமை நிலவுவது கண்கூடு. எனினும், பிரெஞ்சுக்காரர்களும், ஜெர்மானியங்களும், இத்தாலியர்களும், ஏனையோரும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல என்பதை யார் மறுக்க முடியும்? அடுத்தப்படியாக, அமெரிக்காவில் உள்ள வெள்ளையர்கள், நீக்ரோக்கள் விஷயத்தை எடுத்துக் கொள்வோம். அவர்களும் ஒரு பொதுவான மதத்தை பின்பற்றுபவர்களாவர். இரு இனத்தவர்களும் கிறித்தவர்கள். இதன் காரணமாக அவர்கள் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்று எவரேனும் கூறமுடியுமா? மூன்றாவதாக இந்தியக் கிறித் தவர்கள், ஐரோப்பியர்கள், ஆங்கிலோ-இந்தியர்களை எடுத்துக் கொள்வோம். அவர்கள் ஒரே மதத்தில் பற்றுறுதி கொண்டு அதனைப் பின்பற்றி வருகிறார்கள். எனினும் அவர்கள் ஒரே கிறித்தவ சமூ கத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல என்பது ஏற்றுக்கொள்ளப்படுகிறது. அடுத்து சீக்கியர்களை எடுத்துக் கொள்வோம். அவர்களில் சீக்கியர் கள், மஜ்பி சீக்கியர்கள், ராம்தாசிய சீக்கியர்கள் எனப் பலப் பிரிவினர் இருக்கிறார்கள். அனைவரும் சீக்கிய மதத்தைப் பின்பற்றுபவர்களே. எனினும் அவர்கள் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்களல்ல என்று ஒப்புக்கொள்ளப்படுகிறது. இந்த உதாரணங்களில் பின்புலத்தில் பார்க்கும்போது, காங்கிரஸ் வாதம் முற்றிலும் குறைபாடுகளுடையது என்பது தெளிவு. அரசியல் சட்டப் பாதுகாப்புகள் வழங்குவதா, இல்லையா என்பதைத் தீர்மனிப்பதற்கான அடிப்படை அம்சம் மக்கட்தொகை யில் ஒரு சமூகக் குழுவினர் ஒன்றுபட்டிருக்கின்றனரா அல்லது பிரிந் திருக்கின்றனா என்பதேயாகும் என்பதை உணர்ந்து கொள்ளத் தவறியது காங்கிரஸ் வாதத்திலுள்ள முதல் குறைபாடாகும். மதம் என்பது ஐக்கியமா, பிளவா என்பதை முடிவு செய்யக்கூடிய ஒரு சூழ்நிலை மட்டுமே ஆகும். முசல்மான்களும் இந்தியக் கிறித்தவர் களும் தனி அரசியல் அங்கீகாரத்தைப் பெற்றிருப்பதற்கு அவர்கள் முசல்மான்களாகவோ அல்லது கிறித்தவர்களாகவோ இருப்பது காரணமல்ல, மாறாக அவர்கள் அடிப்படையிலேயே இந்துக் களிடமிருந்து வேறுபட்ட இனத்தினராக இருப்பதே காரணம். இந்த உண்மையை காங்கிரஸ் புரிந்து கொண்டதாகத் தெரியவில்லை. பொது மதம் இருந்தால் சமூகக் கூட்டிணைப்பை மெய்யெனக் கொள்ள வேண்டும் என்று நிரூபிக்க முயல்வதில் காங்கிரஸ் வாதத் தின் இரண்டாவது குறைபாடு அடங்கியுள்ளது. இத்தகைய தருக்க நியாயத்தின் அடிப்படையில் வெற்றி பெற்றுவிட முடியும் என்று காங்கிரஸ் நம்புகிறது. துரதிர்ஷ்டவசமாக காங்கிரஸ் இவ்வாறு வெற்றிபெறுவது சாத்தியமல்ல். ஏனென்றால் உண்மை நிலவரங் கள் இத்தகைய முடிவான அனுமானத்திற்கு வருவதற்கு எதிராக இருக்கின்றன. பொதுவான மதம் இருந்தால் சமூக இணைப்பு ஏற் பட்டுவிடும் என்ற வாதம் சரியானதல்ல. ஏனென்றால், ஐரோப்பா வில் இத்தாலியர்கள், பிரெஞ்சுக்காரர்கள், ஜெர்மானியர்கள், ஸ்லாவ் கள், அமெரிக்காவில் நீக்ரோக்கள், வெள்ளையர்கள், இந்தியாவில் இந்தியக் கிறித்தவர்கள், ஐரோப்பியர்கள், ஆங்கிலோ-இந்தியர்கள் ஆகியோர் ஒரே மதத்தைப் பின்பற்றுபவர்களாக இருப்பினும் அவர் கள் ஒரே சமூகமாக அமைந்திருக்கவில்லை என்பதைப் பார்க்கி றோம். இதிலுள்ள மிகவும் பரிதாபகரமான விஷயம் என்னவென் றால் மதம் ஓர் ஒன்றுபடுத்தும் அம்சம் என்ற தனது வாதத்தில் முற்றிலுமாக மயங்கிப்போய் சில முக்கிய உண்மைகளை காங்கிரஸ் உணரத் தவறிவிட்டதேயாகும்; இவை இரண்டுக்கும் இடையே ஒத்துப்போகும் இயல்பு இல்லை என்பதையும், சில சந்தர்ப்பங்களில் மதங்கள் தனித்தனியாக இருந்தாலும் பிளவு ஏற்படவில்லை என் பதையும், வேறு சில சந்தர்ப்பங்களில் ஒரு பொதுவான மதம் இருந் தாலும் பிளவு ஏற்பட்டிருப்பதையும், இவை எல்லாவற்றையும் விட மோசம் மதமே ஒரு விதிமுறையாக ஆக்குவதால் பிளவு நிலவு வதையும் காங்கிரஸ் புரிந்துகொள்ளத் தவறிவிட்டது. காங்கிரஸ் வாதத்திற்கு சமாதி கட்டுவதற்கு மேலே குறிப் பிட்ட சந்தர்ப்பங்கள் ஒவ்வொன்றுக்கும் ஓர் உதாரணம் கூறுவது பொருத்தமாக இருக்கும். முதலாவது சந்தர்ப்பத்தை எடுத்துக் கொண் டால் அதற்கு மிகச்சிறந்த, எளிதினும் எளிதான உதாரணமாக சீக்கி யர்களையும் இந்துக்களையும் குறிப்பிடலாம். அவர்கள் சமய அள வில் வேறுபட்டவர்களாக இருக்கின்றனர். ஆனால் சமூக ரீதியில் அவர்கள் பிரிந்திருக்கவில்லை. அவர்கள் ஒன்றாக உணவு உண் கின்றனர்; ஒருவருக்கொருவர் திருமணம் செய்து கொள்கின்றனர்; ஒன்றாக வாழ்கின்றனர். ஓர் இந்து குடும்பத்தில் ஒரு மகன் சீக்கியனாக இருப்பான்; இன்னொரு மகன் இந்துவாக இருப்பான். சமய வேறு பாடு சமூக உறவைத் துண்டிப்பதில்லை. இரண்டாவது சந்தர்ப் பத்தைப் பொறுத்தவரையில், ஐரோப்பாவில் இத்தாலியர்களை யும், பிரெஞ்சுக்காரர்களையும், ஜெர்மானியர்களையும், அமெரிக்கா வில் வெள்ளையர்களையும் நீக்ரோக்களையும் சிறந்த உதாரணங் களாகக் கூறலாம். மதம் ஓர் ஒன்றிணைக்கும் சக்தியாக இருக்கும் இடத்தில்தான் இவ்வாறு நிகழ்கிறது; ஆனால் வருண இன உணர்வு போன்ற பிளவு உண்டுபண்ணும் சக்திகளைத் தாக்குப் பிடித்து நிற்கும் அளவுக்கு மதம் வலுமிக்கதாக இருப்பதில்லை. மதமே பிளவை உண்டுபண்ணும் மூன்றாவது சந்தர்ப்பத்திற்கு இந்துக்களையும் இந்து சமயத்தையும் மிகப் பொருத்தமான இன்னும் சொல்லப்போனால் ஒரே உதாரணங்களாகக் குறிப்பிடலாம். இந்து சமயம் ஒற்றுமைக் குப் பதிலாக பிரிவினையை போதிக்கிறது என்பது அனைவரும் நன்கு அறிந்த விஷயம். ஓர் இந்து என்றால் கூடியுறவாடாதவன், எல்லா வற்றிலும் தனித்து நிற்பவன் என்றே பொருள். இந்து சமயம் சாதி அமைப்பையும் தீண்டாமையையும் தாங்கிப் பிடித்து நிற்கிறது என்று பொதுவாகப் பயன்படுத்தப்படும் வாசகம் அநேகமாக அதன் இயல்பை மூடிமறைக்கிறது என்றே சொல்லவேண்டும். இந்து சம யத்தின் உண்மையான இயல்பு பிளவுபடுத்தவதே ஆகும். இதில் எத்தகைய ஐயத்துக்கும் இடமில்லை. ஏனென்றால் சாதி அமைப்பும், தீண்டாமையும் எதைக் குறிக்கின்றன? பிளவையும் பிரிவினையை யுமே குறிக்கின்றன என்பது தெளிவு. சாதி என்பது பிரிவினைக்கு மற்றொரு பெயர்; தீண்டாமை என்பது ஒரு சமூகத்தை இன்னொரு சமூகத்திலிருந்து பிரிக்கும் மிக அதீத பிரிவினை வடிவத்தைக் குறிக் கிறது. சாதியமைப்பும், தீண்டாமையும் மரணத்திற்குப் பின்னர் ஆத்மாவின் நிலை சம்பந்தப்பட்ட இதர சித்தாந்தங்களுடன் ஒப்பிடும் போது கேடுவிளைவிக்காத சித்தாந்தங்கள் அல்ல என்பதும் ஐயத் துக்கப்பாற்பட்ட்தேயாகும். இவை ஒவ்வொரு இந்துவும் இந்த உலகில் தனது வாழ்நாட் காலத்தில் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுக்க முறையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளன. சாதி அமைப்பும் தீண்டாமை யும் வெறும் சித்தாந்தங்களாக மட்டுமன்றி, இந்த் மதம் விதித் துள்ள மிக முக்கியமான சமய வினைமுறைகளில் ஒரு பகுதியாகவும் அமைந்துள்ளன. சாதி அமைப்பு மற்றும் தீண்டாமையைச் சித்தாந்தங் களில் ஓர் இந்து நம்பிக்கை வைப்பது மட்டும் போதாது. அவன் தனது அன்றாட வாழ்க்கையில் சாதியையும் தீண்டாமையையும் கடைப்பிடித்தொழுகவும் வேண்டும். இந்து சமயம் தனது தீண்டாமை சித்தாந்தத்தின் மூலம் இந்துக்களும் தீண்டாதவர்களுக்கும் இடையே கொண்டுஒ வந்துள்ள பிளவு, பிரிவினை காலனி நாடுகள் சம்பந்தமாக போர்த்துக்கீசியர் களுக்கும் அவர்களுடைய எதிராளிகளுக்கும் இடையே ஏற்பட்ட சச்சரவில் ஒரு சமயம் போப்பாண்டவர் கோடிட்டது போன்ற வெறும் கற்பனையான ஒரு பிரிவினைக் கோடல்ல; அது கண்ணுக்குத் தெரியக் கூடிய அல்லது தெரியாமலும் இருக்கக்கூடிய அகலமில்லாத நீளம் மட்டுமே கொண்ட வண்ணகோடு அல்ல; அது தனித்தன்மை கொண்ட ஆனால் வேறுபாடு காட்டாத வழிமரபுக் கோடல்ல. மாறாக இந்தக் கோட்டுக்கு ஆழமுமுண்டு, அகலமுமுண்டு. உண்மையில் இந்துக்களும் தீண்டப்படாதவர்களும் குத்துமுள் கம்பிகளால் ஆன ஒரு வேலியால் பிரிக்கப்பட்டுள்ளனர். சுருக்கமாகக் கூறுவதானால் இதனைத் தொற்றுநோய்த் தடுப்பு வேலி என்றே கூறவேண்டும். தீண்டப்படாதவர்கள் இதனைக் கடந்து செல்ல ஒருபோதும் அனு மதிக்கப்பட்டதில்லை, என்றேனும் அனுமதிக்கப்படுவார்கள் என்ற நம்பிக்கையும் இல்லை. பொதுப்படையாகக் கூறுவதானால், இந்து சமயமும் சமூகக் கூட்டிணைப்பும் பரஸ்பரம் ஒன்றுக்கொன்று ஒவ்வாதவை, முரண் பாடானவை. ஆனால் இந்து சமயம் தனது இயல்பு காரணமாக, சமூகப் பிரிவினையில் நம்பிக்கை வைத்திருக்கிறது; இது சமூக ஒற் றுமையின்மையின் மறுபெயராகும்; எனவே இது சமூகப் பிரிவினை யையும் தோற்றுவிக்கிறது. இந்துக்கள் ஒன்றுபட்டு இருக்க விரும்பி னால் அவர்கள் இந்து சமயத்தைத் துறக்க வேண்டும். இந்து சமயத்தைக் கைவிடாமல் அவர்களால் ஒற்றுமையாக இருக்க முடியாது. இந்து சமயம் இந்துக்களின் ஒற்றுமைக்கு மிகப் பெரிய தடையர ணாக இருந்து வருகிறது. அனைத்துச் சமூக ஒற்றுமைக்கும் அடிப் படையான ஒன்றுப்படிருக்க வேண்டும் என்ற அந்த ஆசையை. ஆர்வத்தை இந்து சமயத்தால் தோற்றுவிக்க முடியாது. அதற்கு மாறாக பிரிய வேண்டுமென்ற விருப்பத்தைத்தான் இந்து சமயம் தோற்று விக்கிறது. தான் முன்வைக்கும் வாதம் தன்க்கு எதிராகவே திரும்புகிறது என்பதை காங்கிரஸ் உணர்ந்ததாகத் தெரியவில்லை. ஆனால் தீண்டப்படாவதவர்கள் முன்வைக்கும் வாதம் அப்படிப்பட்டதல்ல; அது மறுக்க முடியாத, அசைக்க முடியாத ஆணித்தரமான வாதம். தீண்டப்படாதவர்கள் இந்துக்களே என்ற வரட்டுத்தனமான வாதத் திலிருந்து ஏதேனும் முடிவுக்கு வர முடியுமானால் அந்த முடிவு பின் கண்டவாறுதான் இருக்கும்; தீண்டப்படாதவர்கள் இந்துக்கள்தான் என்று சாதிக்கும் இதே இந்து சமயம்தான் தீண்டப்படாதவர்களை இந்துக்களில் ஒரு பிரிக்க முடியாத பகுதியினராக ஏற்றுக்கொள்ளக் கூடாது, மாறாக அவர்களை இந்துக்களிடமிருந்து பிரித்து ஒரு தனித்த பகுதியினராகவே நடத்திவர வேண்டும் என்று கொள்கை அளவிலும் சரி, நடைமுறையிலும் சரி எப்போதுமே வலியுறுத்தி வந்திருக்கிறது. எனவே, தீண்டப்படாதவர்கள் தாங்கள் ஒரு தனிப் பிரிவினர் என்று கூறினால் அரசியல் அனுகூலங்களைப் பெறுவதற்காக அவர் கள் ஒரு புதிய கோட்பாட்டை கண்டுபிடித்திருக்கின்றனர் என்று அவர்கள்மீது யாரும் குற்றம் சுமத்த முடியாது. அவர்கள் அப்பட்ட மான யதார்த்தத்தையும், அந்த எதார்த்தம் எவ்வாறு இந்து சமயத் தின் மரபுரிமையாக வந்தது என்பதையும் சுட்டிக்காட்டியிருக்கிறார் களே தவிர வேறல்ல. தீண்டப்படாதவர்களை ஒரு தனி இனத்தின ராக அங்கீகரிக்க மறுப்பதற்கு இந்து சமயத்தை ஒரு வாத ஆதாரமாக காங்கிரஸ் பயன்படுத்திக் கொள்ள முடியாது; அது நேர்மையான செயலாகவும் இருக்க முடியாது; அவ்வாறு அது பயன்படுத்திக் கொள்ளுமானால், சுயநல நோக்கங்களால் தூண்டப்பட்டே அவ்வாறு செய்ய முடியும். தீண்டப்படாதவர்களை இந்தியாவின் தேசிய வாழ் வில் ஒரு தனித்த, வேறுபட்ட இனத்தினராக ஏற்றுக்கொள்வது நிர் வாக சபையிலும், சட்டமன்றங்களிலும், அரசுப் பணித்துறைகளிலும் உள்ள இடங்களை தீண்டப்படாதவர்களும் இந்துக்களும் தங்களுக் குள் பங்கிட்டுக் கொள்வதில் போய் முடியும் என்பதையும், இதன் மூலம் இந்துக்களும் பங்கு குறையும் என்பதையும் காங்கிரஸ் அறியும். இதுவரை தீண்ப்படாதவர்களுக்கு உரிய இடங்களையும் இந்துக்களே அபரித்துக் கொள்வது வழக்கமாக இருந்து வந்திருக் கிறது. அப்படியிருக்கும்போது அந்த இடங்களை இப்போது இந்துக் கள் இழப்பதை காங்கிரஸ் விரும்பவில்லை. இந்தியாவின் தேசிய வாழ்வில் தீண்டப்படாதவர்களை ஒரு தனி இனமாக அங்கீகரிக்க காங்கிரஸ் மறுப்பதற்கு இதுவே உண்மையான காரணம். தேசிய வாழ்வில் தீண்டப்படாதவர்களை ஒரு தனித்த, வேறு பட்ட இனமாக அரசியல் ரீதியில் அங்கீகரிக்கக் கூடாது, அவ்வாறு செய்தால் இந்துக்களுக்கும் தீண்டப்படாதவர்களுக்கும் இடையே யான பிளவை அது நிரந்தரமாக்கிவிடும் என்பது காங்கிரஸ் முன் வைக்கும் இரண்டாவது வாதம். இது எவ்வகையிலும் பரிசீலனைக்குத் தகுதியற்ற உப்பு சப் பில்லாத வாதம். காங்கிரஸ் முன்வைத்துள்ள வாதங்களிலேயே இது மிகவும் பலவீனமானது; இதைவிட உருப்படியான வாதங்கள் எதை யும் வைக்க காங்கிரசுக்குத் திராணியில்லை என்பதையே இது காட்டு கிறது, சட்டியில் இருந்தால்தான் அகப்பையில் வரும். தவிரவும், அதன் முந்தைய வாதத்துக்கே முரண்பாடானதாக இருக்கும் இந்த வாதம் முற்றிலும் தவறான கருத்திலிருந்து தோன்றியதாகும். இந்துக்களுக்கும் தீண்டப்படாதவர்களுக்கும் இடையே உண்மையிலேயே பிளவு இருக்குமானால், தீண்டப்படாதவர்களுக்கு எதிராக இந்துக்கள் பாரபட்சப் போக்கைக் கடைப்பிடிக்கக்கூடிய அபாயம் இருக்குமானால், அப்போது தீண்டப்படாதவர்கள் அர சியல் அங்கீகாரம் பெறுவதும், இந்துக்களின் கொடுங்கோன்மை யிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள அவர்களுக்கு அரசியல் பாதுகாப்புகள் வழங்குவதும் இன்றியமையாததாகிறது. இதை விடுத்து, உங்களுக்கு ஒளிமயமான எதிர்காலம் காத்திருக்கிறது எனும் வாதத்தை இப்போதைய கொடுங்கோன்மையிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கான வழி துறைகளைத் தீண்டப்படாத வர்கள் பெறாதபடி தடுப்பதற்குப் பயன்படுத்திக் கொள்ள முடியாது. இரண்டாவதாக, இந்துக்களையும் தீண்டப்படாதவர்களை யும் சமூக ரீதியில் ஒன்றிணைப்பதில் உண்மையிலேயே ஆர்வம் கொண்டவர்களும், இத்தகைய கூட்டிணைப்பை உருவாக்குவதற்கான வழிதுறைகளைக் காணுவதில் செயலூக்கத்துடன், தீவிரமாக ஈடுபட் டிருப்பவர்களும்தான் இந்த வாதத்தைப் பயன்படுத்த முடியும். தீண்டப் படாதவர்களின் பிரச்சினை சமூக இயல்பும், அரசியல் இயல்பும் கொண்டது என்று காங்கிரஸ்காரர்கள் அடிக்கடி பேசி வருவதைக் கேட்கிறோம். ஆனால் இங்கு ஒரு கேள்வி எழுகிறது: இது ஒரு சமூகப் பிரச்சினை என்று காங்கிரஸ்காரர்கள் நெஞ்சறிந்து, வாய்மை யோடும் நேர்மையோடும் கூறுகிறார்களா? அல்லது தீண்டப்படாத வர்களுடன் அரசியல் அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்வதால் ஏற்படக் கூடிய விளைவுகளைத் தவிர்க்கும் நோக்கத்தோடு இதனை ஒரு சாக்குப்போக்காகக் கூறுகிறார்களா? இது ஒரு சமூகப் பிரச்சினை என்று உண்மையிலேயே அவர்கள் மனமார்ந்து கருதுகிறார்கள் என்றால் இந்த விஷயத்தில் அவர்கள் நேர்மையோடு, வாய்மையோடு நடந்துகொள்கிறார்கள் என்பதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது? என்ன சான்று இருக்கிறது? காங்கிரஸ்காரர்கள் இந்துக்களிடையே ஏதேனும் சமூக சீர்திருத்த இயக்கத்தைத் தொடங்கி நடத்தி வருகிறார் களா? சமபந்தி போஜனங்களையும் கலப்புத் திருமணங்களையும் ஆதரித்து அவர்கள் என்ன அறப்போர் நடத்தினார்கள்? சமூக சீர் திருத்தத் துறையில் காங்கிரஸ் புரிந்துள்ள சாதனைதான் என்ன? III தீண்டப்படாவதர்கள் தங்கள் பிரச்சினை குறித்து என்ன கருத்து கொண்டிருந்தார்கள் என்பதை இங்கு கூறுவது உசிதமாக இருக்கும். பிரிட்டிஷார் வரும்வரை தீண்டப்படாதவர்கள் தாங்கள் தீண்டப்படாதவர்களாக இருப்பதிலேயே திருபதியடைந்திருந்தார் கள். இப்படித்தான் இருக்க வேண்டும் என்பது எங்கள் தலையெழுந்து; இந்து தெய்வம் இவ்வாறு முன்விதித்தமைத்து, அதை இந்து அரசு அமல்படுத்தி வந்தது. ஆதலால் இதிலிருந்து தப்ப எங்களுக்கு வேறு வழியில்லை. இந்த ரீதியில்தான் இந்த மக்களின் கண்ணோட்டம் நீண்ட நெடுங்காலமாக இருந்து வந்தது. இதன்பின்னர் அதிர்ஷ்ட வசமாகவோ அல்லது துரதிர்ஷ்டவசமாகவோ கிழக்கிந்திய கம் பெனிக்கு இந்தியாவிலிருந்து தங்கள் போர்ப்படைகளுக்குப் படை வீரர்கள் தேவைப்பட்டனர். அப்போது அவர்களுக்கு தீண்டப்படாத வர்களைத் தவிர வேறு யாரும் கிடைக்கவில்லை. கிழக்கிந்தியக் கம்பெனியின் ராணுவம் குறைந்தபட்சம் அதன் வரலாற்றின் ஆரம்ப கட்டத்தில் தீண்டப்படாதவர்களைக் கொண்டதாகவே இருந்தது. தீண்டப்படாதவர்கள் இப்போது போருக்குத் தகுதியற்றவர்களது வகுப்பினர் பட்டியிலில் சேர்க்கப்பட்டு, அதனால் படைகளில் சேர்க்கப்படாமல் இருந்து வருகின்றனர். ஆனால் அப்போது இப்படி இல்லை. தீண்டப்படாதோர்களைக் கொண்ட போர்ப்படையின் துணைகொண்டுதான் பிரிட்டிஷார் இந்தியாவை வென்று கைப்பற் றினர். கிழக்கு இந்தியக் கம்பெனியின் சைனியத்தில் இந்தியப் படை வீரர்களும் அவர்களுடைய குழந்தைகளும் ஆணாயினும் சரி, பெண் ணாயிலும் சரி கட்டாயம் கல்வி கற்றாக வேண்டும் என்ற ஒரு விதி முறை இருந்து வந்தது. ராணுவத்தில் சேருவதற்கு தீண்டப்படாதவர் கள் அனுமதிக்கப்பட்டிருந்தபோதுதான் அவர்களுக்கு கல்வி கற்கும் வசதி அளிக்கப்பட்டது; இது அவர்கள் இதற்கு முன்னர் ஒருபோதும் பெற்றிராத ஓர் அனுகூலமாகும். இது அவர்களுக்கு ஒரு புதிய பார்வை யையும் மதிப்பையும் அளித்தது. தாங்கள் கீழானவர்களாக நடத்தப் படுவது தங்களது தவிர்க்க முடியாத விதி அல்ல என்பதையும், சூழ்ச்சி மிக்க புரோகிதரின் நயவஞ்சக செயல்களால் தங்கள் ஆளுமை மீது தீணிக்கப்பட்ட ஒரு கறை, வடு என்பதையும் அவர்கள் உணர ஆரம்பித்தனர். இதுகுறித்த இதன் முன்னர் என்றும் இல்லாத விதத் தில் அவர்கள் வெட்கி தலைகுனிந்தனர்; இந்த இழுக்கை, அழுக்கை ஒழித்துக்கட்டியே தீருவது என்று உறுதிபூண்டனர். அவர்களும் ஆரம் பத்தில் தங்கள் பிரச்சினை சமூக ரீதியான என்றே எண்ணினர்; அப்பிரச்சினைக்குத் திர்வுகாண சமூக வழிகளில் போராடி வந்தனர். இது முற்றிலும் இயல்பே. ஏனென்றால் இந்துக்களுக்கும் தீண்டப் படாதவர்களுக்கும் இடையே சமபந்தி போஜனங்களும், கலப்புத் திருமணங்களும் தடைசெய்யப்பட்டிருப்பதை தங்களது கீழான நிலையின் வெளிப்புறச் சின்னங்களாக அவர்கள் பார்த்தனர். எனவே, தங்கள் மீது பூசப்பட்டுள்ள கறையை அகற்றுவதற்கு சமத்துவ அடிப்படையில் இந்துக்களுடன் சமூக உறவை வளர்த்துக் கொள்வது அவசியம் என்றும், சம்பந்தி போஜனங்களையும் கலப்புத் திருமணங் களையும் தடுக்கும் விதிகளை இதம் மூலம் ரத்து செய்ய முடியும் என்றும் அவர்கள் முடிவுக்கு வந்தனர். வேறுவிதமாகச் சொன்னால், தீண்டப்படாதவர்கள் தங்களது கீழ்ப்பட்ட, இழிந்த நிலையை தெரிந்து கொண்ட பிறகு, அதிலிருந்து விடுபடுவதற்கு, விமோசனம் அடைவதற்கு மேற்கொண்ட முதல் செயல் திட்டம் சாதி முறையை ஒழிக்கும்படி வலியுறுத்தி, இந்து சமயத்தின் அரவணைப்பின் கீழ் உள்ள எல்லோரிடையேயும் சமூக சமத்துவத்தை நிலைநாட்டுவதேயாகும். இதில், இந்துக்களில் ஒரு பகுதியினர் தங்களுடைய நண்பர் களாக இருப்பதை தீண்டப்படாதவர்கள் கண்டனர். தங்களுடைய சமூக அமைப்பு மிகவும் குறைபாடுடையாதாக இருக்கிறது என்பதை யும், பல சமூகத் தீமைகளுக்கு, கேடுகளுக்கு, கொடுமைகளுக்கு இதுவே உறைவிடம், பிறப்பிடம் என்பதையும் பிரிட்டிஷாருடன் ஏற்பட்ட தொடர்பால் தீண்டப்படாதவர்களைப் போலவே இவர் களும் உணர்ந்து கொண்டனர். அவர்களும் ஒரு சமூக சீர்திருத்த இயக்கத்தைத் தொடங்க விரும்பினர். வங்காளத்தில் ராஜா ராம் மோகன் ராயுடன் இந்த இயக்கம் தொடங்கி அங்கிருந்து அகில இந்தியாவிலும் படர்ந்து பரவிற்று; இறுதியில் இந்திய சமூக சீர்திருத்த மாநாடு என்னும் அமைப்பை நிறுவுவதில் முடிந்தது; அரசியல் சீர் திருத்தத்திற்கு முன்னர் சமூக சீர்திருத்தம் என்னும் குறிக்கோளை இந்த அமைப்பு முன்வைத்து. தீண்டப்படாதவர்கள் இந்த சமூக சீர்திருத்த மாநாட்டைப் பின்பற்றினர்; அதன் பின்னால் ஒரேஎ மனிதனாக அணி வகுத்து நின்றனர்; அந்த அமைப்புக்குத் தங்கள் முழு ஆதரவையும் அளித்தனர். நாளடைவில் இந்த அமைப்பு மாண்டு மடிந்து, குழி தோண்டிப் புதைக்கப்பட்டு, மறக்கப்பட்டு விட்டது என்பதை அனை வரும் அறிவர். அதை யார் கொன்றார்களா? காங்கிரஸ்தான் கொன்றது. “அரசியல்தான் முதலில், அரசியல்தான் முடிவில்”, “அரசியல்தான் ஆதியும் அந்தமும்”, “ஒவ்வொருவருக்கும் அரசியல், அனைவருக் கும் அரசியல்” என்பன போன்ற கோஷங்களை முழங்கிய காங்கிரஸ் சமூக சீர்திருத்த மாநாட்டை தனது எதிராளியாகக் கருதிற்று. அர சியல் சீர்திருத்த ஏற்படுவதற்கு முன்னர் சமூக சீர்திருத்தம் ஏற்படுவது அவசியம் என்ற மாநாட்டின் கோட்பாட்டை அது வன்மையாக எதிர்த்தது. காங்கிரஸ் மேடையிலிருந்தும், தனிப்பட்ட காங்கிரஸ் தலைவர்களிடமிருந்து இடையறாதும் ஓயாதும் வீசப்பட்ட அக்கினி குண்டுகளால், அவர்களது பயங்கர பிரசாரத் தீயால் சமூக சீர்திருத்த மாநாடு எரிந்து சாம்பலாயிற்று. சமூக சீர்திருத்தத்தின் மூலம் தங்களுக்கு விமோசனம் கிட்டும் என்று தீண்டப்படாதவர்கள் கொண்டிருந்த நம்பிக்கை முழுவதும் இவ்வாறு தீய்ந்துபோன பிறகு, காய்ந்து போன பிறகு தங்களைப் பாதுகாத்துக் கொள்வதோடு அரசியல் வழிகளை நாட வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு அவர்கள் உள்ளாயினர். இப்போது காங்கிரஸ்காரர்கள் குட்டிக்கரணம் அடித்து, இது சமூகப் பிரச்சினை என்று கூற ஆரம்பித்துள்ளனர். இது கடைந்தெடுத்த கபட நாடகமே தவிர வேறன்று. தீண்டப்படாதவர்கள் சம்பந்தப்பட்ட பிரச்சினை ஒரு சமூகப் பிரச்சினை என்று கூறுவது தவறு. ஏனென்றால் சீதனம், விதவை மறுமணம், திருமண வயது போன்றவற்றைத்தான சமூகப் பிரச்சினை கள் எனக் கூறுவது முறையாகும்; தீண்டப்படாதோர் பிரச்சினை இப்படிப்பட்ட பிரச்சினைகள் போன்றதல்ல. அடிப்படையில் இது முற்றிலும் வேறுபட்டதொரு பிரச்சினை. இன்று பெரும்பான்மை யினர் சிறுபான்மையினருக்கு சுதந்திரமும் சமத்துவ வாய்ப்பும் அளிக்க மறுக்கின்றனர்; சிறுபான்மையினர் மீது தமது கொள்கை யைத் திணிக்க சதிசெய்து வருகின்றனர்; இத்தகைய பகைமை மனோ பாவம் கொண்ட பெரும்பான்மையினர் சிறுபான்மையினருக்கு சுதந் திரமும் சமத்துவ உரிமையும் வழங்கச் செய்வதே இன்று தீண்டப் படாதோரை எதிர்நோக்கும் பிரச்சினையாகும். இந்தக் கண்ணோட் டத்திலிருந்து பார்க்கும்போது, தீண்டப்படாதோர் பிரச்சினை அடிப் படையில் ஓர் அரசியல் பிரச்சினை என்பது புலனாகும். சரி, இது ஒரு சமூகப் பிரச்சினை என்று வாதத்திற்காக வைத்துக்கொண்டால் கூட, இந்துக்கள் நல்லெண்ணம் படைத்தவர்களாக இருக்கும் பட்சத் தில், தீண்டப்படாதவர்களுக்கு அரசியல் அங்கீகாரம் வழங்குவதும், அவர்களுடைய பந்தோபஸ்துக்காக பாதுகாப்புகள் அளிப்பதும் அவர் கள் சமூக ரீதியில் இந்துக்களுடன் ஒன்றுபடுவதை எப்படி தடுக்கும் என்பதைப் புரிந்துகொள்ள முடியவில்லை. காங்கிரஸ்காரர்கள் தங்கள் மனத்தில் திட்டவட்டமான, தெளிவான கருத்துகள் ஏதுமின்றியே வாதிடுகிறார்கள் என்றே தோன்றுகிறது. அரசியல் அம்சங்களுக்கும் சமூக அம்சங்களுக்கும் இடையேயான பரஸ்பர உறவுகள் குறித்து, சம்பந்தா சம்பந்தங்கள் குறித்து அவர்களுக்கு ஒரு தெள்ளத் தெளிந்த கருத்து இருப்பதாகக் தெரியவில்லை. அவர்கள் தனிவாக்காளர் தொகுதிகளை எதிர்ப்பதிலிருந்தும், கூட்டு வாக்காளர் தொகுதிகளை ஆதரிப்பதிலிருந்தும் இதனைத் தெளிவாகத் தெரிந்து கொள்ளலாம். இதற்கு அவர்கள் கூறும் காரணத்தைப் பார்ப்போம். ஒரு கூட்டு வாக் காளர் தொகுதியில் இந்து வாக்காளர்கள் ஒரு தீண்டப்படாதவருக் கும் தீண்டப்படாத இனத்தைச் சேர்ந்த வாக்காளர்கள் இந்துவுக் கும் வாக்களிக்கலாம். இது சமூக ஒற்றுமையைக் கட்டி வளர்க்கிறது. தனி வாக்காளர் தொகுதியிலோ இந்து வாக்காளர்கள் ஓர் இந்துவுக் கும், தீண்டப்படாத இன வாக்காளர்கள் ஒரு தீண்டப்படாதவருக் குமே வாக்களிக்கின்றனர். இது சமூக ஒருமைப்பாடு உருவாவதைத் தடுக்கிறது. ஆனால் வாக்காளர் தொகுதிகள் பிரச்சினையை தீண்டப் படாதவர்கள் இந்தக் கண்ணோட்டத்திலிருந்து பார்க்கவில்லை. இவை இரண்டில் எது தீண்டப்படாதவர்கள் தாங்கள் விரும்பும் தங்களுடைய இன வேட்பாளரை வெற்றிபெறச் செய்ய உதவும் என்ற கண்ணோட்டத்திலிருந்தே இப்பிரச்சினையை அவர்கள் நோக்கு கிறார்கள். ஆனால் இங்கு காங்கிரஸ் வாதத்தை நுணுகி ஆராய்வதி லேயே என் கவனத்தைச் செலுத்த விரும்புகிறேன். விரிவாக சென்று வாதத்தை சிக்கலாக்க விரும்பவில்லை. காங்கிரஸ் முன்வைக்கும் வாதம் சரியானதாகவே தோன்றுகிறது. ஆனால் இது இவ்விஷயம் குறித்த ஆழமற்ற மேலெழுந்தவாரியான கண்ணோட்டமேயாகும். இந்தத் தேர்தல்கள் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுகின்றன என்பதை மறந்துவிடக் கூடாது. அப்படியிருக்கும்போது, இந்த ஐந் தாண்டுகளில் மற்ற நாட்களில் எல்லாம் இந்துக்களும் தீண்டப் படாதவர்களும் கடுமையான முறையில் பிரிந்து வாழ்ந்து வருகை யில் தேர்தல்கள் நடைபெறும் இந்த ஒரு நாளில் கூட்டாக வாக் களிப்பதால் மட்டும் எப்படி அவர்களிடையே ஒருமைப்பாட்டைக் கட்டி வளர்த்துவிட முடியும் என்று கேட்கலாம். அதேபோன்று, இந்த ஐந்தாண்டுகளில் ஒரே ஒரு நாளில் மட்டும் தனிவாக்காளர் தொகுதியில் வாக்களிப்பது ஏற்கெனவே உள்ளதைவிட எப்படி அதிகப் பிரிவினையை ஏற்படுத்திவிட முடியும் என்று கேட்கலாம்; இவ்வாறே, ஐந்தாண்டுகளில் ஒரு நாளை தனி வாக்காளர் தொகுதி யில் வாக்களிப்பதற்கு செலவிடுவது ஒற்றுமைக்காகப் பாடுபடு வோரின் பணியை எப்படித் தடுக்க முடியும் என்றும் கேட்கலாம். இன்னும் ஸ்தூலமாகக் கூறுவதானால், தீண்டப்படாதவர்களுக்கு தனி வாக்காளர் தொகுதிகளை உருவாக்குவது அவர்களுக்கும் இந்துக் களுக்கும் இடையே சமபந்தி போஜனங்களும் கலப்புத் திருமணங் களும் நடைபெறுவதற்கு எப்படி முட்டுக்கட்டையாக இருக்க முடியும்? இது முட்டுக்கட்டையாகத்தான் இருக்கும் என்று பிறவி முழு மூடன்தான் கூற முடியும். எனவே, நிரந்தரப் பிரிவினைக்கு முடிவுகட்ட இந்துக்கள் உண்மையிலேயே விரும்பினால், தீண்டப் படாதவர்களை ஒரு தனி இனமாக அரசியல் ரீதியில் அங்கீகரித்து, அவர்களுக்கு அரசியல் சட்டரீதியாக பாதுகாப்புகளை வழங்குவது அவர்களிடையேயான பிளவை சாசுவதமாக்கவே செய்யும் என்று கூறுவதும் வாதிடுவதும் சிறுபிள்ளைத்தனமானதேயாகும். IV தங்களுக்கு அரசியல் சட்டப் பாதுகாப்புகள் அளிக்கப்பட வேண்டுமென்ற தீண்டப்படாதவர்களின் கோரிக்கைக்கு எதிராக வேறு சில கவைக்குதவாத வாதங்களும் முன்வைக்கப்படுகின்றன. அவற்றையும் இங்கு பரிசீலிப்பது அவசியம். அத்தகைய வாதங் களில் ஒன்றை இங்கு பார்ப்போம். இந்தியாவில் மட்டுமன்றி ஐரோப்பாவிலும் இதர எல்லா இடங்களிலும் சமூகப் பிரிவினை கள் இருந்து வரவே செய்கின்றன; ஆனால் ஐரோப்பிய மக்கள் தங்கள் அரசியலமைப்புச் சட்டங்களை வகுத்துக் கொண்டபோது இவற்றைக் கணக்கிலெடுத்துக் கொள்ளவில்லை. இவ்வாறு பொதுவாக வாதிடப்/ படுகின்றது. எனினும் தீண்டப்படாதவர்களின் கோரிக்கையும் இந்த வாதத்திற்கும் அடங்கக்கூடும். எனவே, இந்த வாதம் சிறிதளவும் ஆதாரமற்றது என்று நான் ஏன் நினைக்கிறேன் என்பதை இங்கு கூறவேண்டும். இவ்வகையில் என் கருத்துகளைக் கூறும்போது, தெரிவிக்கப் படும் கூற்றுக்கும் அதனை அடிப்படையாகக் கொண்ட வாதத்தை யும் வேறுபடுத்தி அவற்றைத் தனித்தனியாகப் பகுத்தாய விரும்பு கிறேன். ஒரு குறிப்பிட்ட கட்டம் வரை இந்தக் கூற்று ஏற்கத்தக்கதாக இருக்கிறது. ஒவ்வொரு சமுதாயத்திலும் வகுப்புகள் இருக்கின்றன என்று கூறப்படுவதை மறுக்க முடியாது. ஏனென்றால் ஐரோப்பிய அல்லது அமெரிக்க சமுதாயத்தில் கூட பல்வேறு வழிகளில், பல் வேறு நோக்கங்களுக்காக இணைந்த வகுப்பினர் இருக்கின்றனர். சில வகுப்பினர் குருதி உறவால் அல்லது மொழியால் பிணைந்த வகுப்பினர்களாக உள்ளனர். சில வகுப்பினர் சமுதாய படிநிலை யிலும் அந்தஸ்திலும் வேறுபட்ட சமூக வர்க்கங்களைப் போன்று அமைந்துள்ளனர். இதேபோன்று குறிப்பிட்ட சித்தாந்தங்களைப் பின்பற்றும் சமயப் பிரிவினர் இருக்கின்றனர். இதேபோன்று சில சமயங்களில் வேறுபட்ட நோக்கங்களைக் கொண்டவர்களும், சில சமயங்களில் இறுக்கமற்ற பிணைப்புகளைக் கொண்டவர்களும்,சில சமயங்களில் வெவ்வேறு அளவில் கட்சிகளும், தொழில்துறை இணைக் கழகங்களும் என முடிவே இல்லாமல் இந்தப் பட்டியல் நீண்டு கொண்டே செல்லுகிறது. ஆனால் இதற்கப்பாலும் சென்று இந்தியா விலுள்ள சாதிகள் ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலுள்ள குழுக் கள், வகுப்புகளைப் போன்றவையே என்று கூறுவது சுத்த முட்டாள் தனமாகும். கடைந்தெடுத்த அபத்தமாகும். ஐரோப்பாவிலுள்ள வகுப்புகளும் குழுக்களும் மேலெழுந்தவாரியாகப்ல் பார்க்கும்போது இந்தியாவிலுள்ள சாதிகள் போல் தோன்றலாம். ஆனால் அடிப் படையில் இவை இரண்டுமே முற்றிலும் வேறுபட்டவை. இதில் பிரதான வேறுபாடு இந்தியாவில் சாதிகள் தனிமைப்படுத்தப்படு வதும் ஒதுக்கப்படுவதுமாகும்; இதுதான் இந்தியாவின் சாதிகள் குறித்த தனி அம்சங்களாகும்; இவை ஏதோ வெறும் நடைமுறைகளாக அன்றி சமய சார்புடைய விதிமுறைகளாகவே கடைப்பிடிக்கப்படு கின்றன; இந்த அம்சங்களில் எதையும் ஐரோப்பாவிலோ அல்லது அமெரிக்காவிலோ உள்ள குழு அல்லது வகுப்பு அமைப்பில் காண முடியாது. இந்தியாவின் சமூக அமைப்பு முறை ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் உள்ள சமூக அமைப்பு முறையிலிருந்து வேறு பட்டிருக்கும் விஷயத்தை எடுத்துக்கொண்டு பார்ப்போமானால், ஐரோப்பாவும் அமெரிக்காவும் தமது அரசியலமைப்பை உரு வாக்கும்போது தமது சமூக அமைப்பு பற்றிய விவரங்களையும், சூழ்நிலைகளையும் கணக்கிலெடுத்துக் கொள்ள வேண்டியதில்லை என்பதும், ஆனால் இந்தியா இது விஷயத்தில் தனது சாதி அமைப்பு முறையையும் தீண்டாமையையும் கணக்கிலெடுத்துக் கொள்ளா மல் இருக்க முடியாது என்பதும் புலனாகும். இந்தப் பிரச்சினையை இன்னும் முழு அளவுக்குப் புரிந்துகொள்வதற்கு இது ஐரோப்பா வுக்கு ஏன் தேவையில்லை. இந்தியாவுக்கு ஏன் தேவைப்படுகிறது என்பதை இங்கு விளக்குவது அவசியம். குழுக்களாக அமைந்துள்ள ஒரு சமுதாயத்தை எதிர்நோக்கும் அபாயம் என்னவென்றால் ஒவ் வொரு குழுவும் “தனது சொந்த நலன்களை” வளர்த்துக் கொள்கிறது, அப்போது இத்தகைய நலன்கள் மற்ற குழுக்களது நலன்களுக்கு குந்தகம் விளைவிக்காமல் தடுப்பதற்கு அரசியல் சட்ட பாதுகாப்பு களை உருவாக்க வேண்டியதாகிறது. இந்தத் தீங்கை அரசியல் அல் அலாத வழிகளில் தடுத்து நிறுத்துவதற்கு வாய்ப்பு இருக்கும்போது, அரசியல் சட்டப் பாதுகாப்புகளை உருவாக்க வேண்டிய அவசியம் இல்லாது போகிறது. இவ்வாறு இந்தத் தீங்கை அரசியல் அல்லாத வழிகளில் முறியடிப்பதற்கு வாய்ப்பு இருக்கும்போது அரசியல் சட்டப் பாதுகாப்புகளுக்கு வகைசெய்ய வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் இந்த சீர்கேட்டுக்கு முடிவுகட்டுவதற்கு அரசியல் அல்லாத வழிகள் இல்லாதபோது, அரசியல் சட்டப் பாதுகாப்புகள் வழங்கு வது இன்றியமையாதது. ஒரு குறிப்பிட்ட குழு “தனது சொந்த நலன் களை” வளர்த்துக் கொள்வதிலிருந்து எழக்கூடிய தீமையை எதிர்க் கக்கூடிய சாத்தியக்கூறு ஐரோப்பாவில் இருக்கிறது. ஏனென்றால் அங்கு பல்வேறு குழுக்கள் தனிமைப்படுத்தப்பட்டோ, ஒதுக்கப் பட்டோ இருக்கவில்லை; அக்குழுக்கள் பரஸ்பரம் சுதந்திரமாக உறவுகளை வளர்த்துக்கொள்ள இது உதவுகிறது; இதன் விளைவாக, குழுக்கள் தமது சொந்த நலன்களுக்காக நிற்பதும், எப்போதும் அவற்றைப் பாதுகாப்பதை தலையாய குறிக்கோளாகக் கொண்டிருப் பதும் வரம்பு மீறிய செயலாகக் கருதப்படுகிறது; இத்தகைய தூய எண்ணம் அவற்றின் குறிக்கோள்களையும் நோக்கங்களையும் விரிவு படுத்தவும் சமூக நலனுக்குகந்தவையாக இருக்கச் செய்யவும் வகை செய்கிறது. ஐரோப்பாவில் பல்வேறு குழுக்களிடையே நிலவும் இத்தகையதோரு நிலை அவற்றின் போக்குகளில் ஆக்கபூர்வமான மாற்றங்களை உண்டுபண்ணுகிறது; இதனால் சிந்தனையில் ஒருமைப்பாடும், நோக்கங்களில் உடன்பாடும், செயலில் ஒற்றுமையும் நிலவும் ஒரு சமுதாயத்தை உருவாக்க முடிகிறது. ஆனால் இந்தியாவின் விஷயம் இதிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாகும். இந்தியாவில் சாதிகள் என்பவை தனிமைப்படுத்தப்பட்டவையாக, ஒதுக்கப்பட்டவையாக இருந்து வருகின்றன. அவற்றிடையே பரஸ்பர உறவு ஏதுமில்லை; ஒத்த குறிக்கோள்களோ நோக்கங்களோ இல்லை. ஒரு சாதியோ அல்லது சாதிகளின் கூட்டோ தமது “சொந்த நலன்களை” ஏனைய சாதிகளின் நலன்களை விட மிகவும் புனிதமானவையாக, என்றென்றும் மீறவொண்ணாதவையாகக் கருதுகின்றன. இந்த சாதிகள் ஒன்றுபடுவதும் ஒத்துழைப்பதும் அவற்றின் இயல்பை மாற்றிவிடுவதில்லை. இந்த ஒத்துழைக்கும் செயல்பாடுகள் வெறும் யாந்திரிகமானவை, சமூக ரீதியானவை அல்ல. தனிநபர்கள் சில குறிப்பிட்ட பலன்களை அடையும் பொருட்டு பரஸ்பரம் ஒருவர் மற்றவரைப் பயன்படுத்திக் கொள்கின்றனர்; இதில் உணர்ச்சிபூர்வமான, அறிவுபூர்வமான மனப்போக்கும் இடமில்லை. அவர்கள் பரஸ்பரம் கட்டளைகளைப் பிறப்பிப்பதும் கட்டளைகளை ஏற்பதும் அவர்களது செயற்பாடு களிலும் விளைவுகளிலும் வேண்டுமானால் தாக்கத்தை ஏற்படுத் தலாம். ஆனால் இது அவர்களது மனப்போக்குகளை மாற்றாது. ஆதலால் “சுயநல நோக்கங்கள்” கொண்ட சாதிகள் ஏனைய நிராதர வான சாதிகளுக்கு கேடு விளைவிப்பதைக் தடுப்பதற்கு இந்திய அரசியலமைப்புச் சட்டம் அவற்றுக்குப் பாதுகாப்புகள் அளிப்பது அவசியம். இந்திய அரசியலமைப்பு சட்டம் ஏன் இதனைக் கணக்கி லெடுத்துக் கொள்ள வேண்டும். இதிலிருந்து தோன்றக்கூடிய கேட் டுக்கு எதிராக ஏன் பாதுகாப்புகள் அளிக்க வேண்டும் என்பதை நியாயப்படுத்தும் மற்றொரு அம்சமும் இந்திய சாதி அமைப்பு முறையில் அடங்கியுள்ளது. ஒவ்வொரு சமுதாயமும் பல்வேறு குழுக்களைக் கொண்டதாக இருக்கிறது. ஆனால் இந்தக் குழுக்களுக்கு இடையேயான பரஸ்பர உறவுகள் எல்லா இடங்களிலும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை என்பதைக் கருத்திற் கொள்ள வேண்டும். ஒரு சமுதாயத்தில் குழுக்கள் பரஸ்பரம் ஒன்று மற்றொன்றில்பால் காட்டும் மனப்போக்கு சமூக-சார்பற்றதாக இருக்கக்கூடும். இன்னொரு சமுதாயத்தில் இதுவே சமூக-விரோதப் போக்காக இருக்கக்கூடும். பல்வேறு சமூகக் குழுக்களைச் செயல்பட உந்தும் உணர்வு சமூக சார்பற்றதாக இருக்கும் இடங்களில்தான் இத்தகைய குழுக்கள் இருந்துவருவதை அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்குவதில் கணக்கிலெடுத்துக் கொள்ளத் தேவையில்லை. ஆனால் ஒரு குழு மற்றொரு குழுவிடம் சமூக-விரோத உணர்வுடன் நடந்துகொள்ளும் போதும், அந்தக் குழுவுக்கு வெளியே இருப்பவர்களைப் பகைவர் களாகக் கருதும்போதுதான் அரசியலமைப்புச் சட்டத்தை வகுக்கும் போது இதனைக் கணக்கிலெடுத்துக் கொள்ள வேண்டும்; சமூக- விரோதப் போக்குக்கு இலக்கான வகுப்பினருக்கு முறையான பாது காப்புகள் அளிக்கப்பட வேண்டும். இந்தியாவில் சாதிகள் வெறும் சமூக சார்பற்றவையாக மட்டும் இருக்கவில்லை. மிகப்பல சந்தர்ப் பங்களில் அவை சமூக-விரோதமானவையாகவும் இருக்கின்றன. தீண்டப்படாதவர்கள் விஷயத்தில் இந்துக்கள் நடந்துகொள்ளும் போக்கை இவ்வகையில் முக்கியமாகக் குறிப்பிட வேண்டும். தீண்டப் படாதவர்கள்பால் இந்துக்கள் எத்தகைய சமூக-விரோதப் போக்கைக் கடைப்பிடிக்கிறார்கள் என்பதற்கு இங்கு சில உதாரணங்களைக் கூறுவது பொருத்தமாக இருக்கும். ஒரு பொதுக் கிணற்றிலிருந்து தீண்டப்படாதவர்கள் தண்ணீர் எடுப்பதை இந்துக்கள் அனுமதிக் காத்தை இங்கு ஓர் எடுத்துக்காட்டாகக் கூறலாம். இதேபால் பொதுப் பள்ளிக்கூடங்களில் தீண்டப்படாத இனத்தைச் சேர்ந்த குழந்தைகளை இந்துக்கள் அனுமதிக்க மாட்டார்கள். தீண்டப்படாதவர்கள் பேருந்து களில் பயணம் செய்வதையும் இந்துக்கள் அனுமதிக்க மாட்டார்கள். ஒரே ரயில் பெட்டியில் தங்களுடன் சேர்ந்து தீண்டப்படாதவர்கள் பயணம் செய்வதையும் இந்துக்கள் அனுமதிக்க மாட்டார்கள். தீண்டப் படாதவர்கள் அழுக்குப்படாத தூய்மையான உடை உடுத்துவதை யும் இந்துக்கள் அனுமதிக்க மாட்டார்கள். தீண்டப்படாதவர்கள் அணிமணிகளி அணிவதையும் இந்துக்கள் அனுமதிக்க மாட்டார் கள், தீண்டப்படாதவர்கள் தங்கள் வீடுகளின் கூரைகளுக்கு ஓடுகள் வேய்வதையும் இந்துக்கள் அனுமதிக்க மாட்டார்கள். தீண்டப்படா தவர்களுக்கு நிலம் சொந்தமாக இருப்பதை இந்துக்கள் சகித்துக் கொள்ள மாட்டார்கள். தீண்டப்படாதவர்கள் ஆடுமாடுகள் போன்ற கால்நடைகளைச் சொந்தமாக வளர்ப்பதை இந்துக்கள் அனுமதிக்க மாட்டார்கள். ஓர் இந்து நின்று கொண்டிருக்கும்போது தீண்டப்படாத வர் அமர்ந்திருப்பதை இந்துக்கள் அனுமதிக்கவே மாட்டார்கள். இவையாவும் இந்துக்களிடையே உள்ள சில தீயவர்கள் அங்கு மிங்குமாக செய்யும் அடாவடித்தனங்கள் அல்ல. மாறாக, இவை எல்லாம் தீண்டப்படாதவர்களுக்கு எதிராக இந்து சமூகம் நிரந்தர மாகக் கடைப்பிடிக்கும் சமூக-விரோதப் போக்கின் வெளிப்பாடுகளே ஆகும். இந்த விஷயத்தை மேலும் நீட்டித்துச் செல்லத் தேவை யில்லை. இது ஏராளமான குற்றம் குறைகள் நிறைந்த வாதமாகும். அரசியலமைப்புச் சட்டப் பாதுகாப்புகள் தங்களுக்கு அளிக்கப்பட வேண்டுமென்று தீண்டப்படாதவர்கள் முன்வைக்கும் கோரிக்கையை எதிர்ப்பதற்கு இந்த சித்தாந்தம் பயன்படுத்தப்பட்டால் அது மிகவும் மானக்கேடான, பழிப்பிற்கிடமான ஏமாற்றுவித்தையாகவே இருக் கும் என்று கூறினால் போதும் என்று கருதுகிறேன். V மற்றொரு சொத்தையான வாதம் முன்வைக்கப்படுவதை யும் பார்க்கிறோம். தீண்டாமை என்பது மறைந்துபோகக் கூடிய ஒரு நிகழ்வுப் போக்கு, ஆதாலால் தீண்டப்படாதவர்களை இந்தியாவின் தேசிய வாழ்வில் ஒரு தனித்த சக்தியினராக, இனத்தினராக அங்கீ கரிப்பதில் அர்த்தமில்லை, பயனுமில்லை என்பது இந்த வாதத்தின் அடிப்படை. மனிதகுல வரலாற்றில் எல்லாமே மறைந்து போகக் கூடியதுதான், நிரந்தரமானது என்று எதுவுமே இல்லை. தீண்டாமை வேரோடு வேரடி மண்ணோடு அழிக்கப்பட்ட பிறகு வேண்டுமானால் இந்தைப் பற்றிப் பரிசீலிக்கலாம். அந்த நிலை வரும் வரை இதுகுறித்து எத்தகைய கவனமும் செலுத்தத் தேவையில்லை. தீண்டாமை ஒழிய வேண்டும், மண்ணோடு மண்ணாக மடிய வேண்டும் என்றே நாம் அனைவரும் விரும்புகிறோம், நம்புகிறோம். ஆனால் அசைக்க முடியாத நம்பிக்கைவாதிகள் என்று தங்களைத் தம்பட்டமடித்துக் கொள்ளும் பேர்வழிகளைப் பற்றி நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சோர்வுற்றிருக்கும் ஒருவருக்கும் உற்சாகமும் உத்வேக மூட்டக்கூடிய ஒரு நம்பிக்கைவாதி ஒரு நல்ல தோழன்தான் என்பதில் ஐயமில்லை. ஆனால் அவன் மெய்ந்நிகழ்வுகளுக்கு எப்போதும் ஓர் உண்மையான சான்றாளனாக எப்போதும் இருப்பான் என்று எதிர் பார்க்க முடியாது. இந்த வாதம் உண்மையில் வாதமே அல்ல. அவர் இந்த வாதத்தின் மாயவலையில் விழக்கூடுமாதலால் அதன் உண்மை சொரூபத்தைத் தோலுரித்துக் காட்டவும், அது எத்தகைய வீணான, பயனற்ற வாதம் என்பதை அம்பலப்படுத்தவும் விரும்புகிறது. இந்த விஷயத்தை எழுப்புபவர்கள் “என்னைத் தொடாதே” என்கிற ரீதி யான தீண்டாமைக்கும் சமூக ரீதியில் தீண்டப்படாதவர்களிடம் பார பட்ச மனோபாவம் காட்டும் தீண்டாமைக்குமுள்ள வேறுபாட்டைத் தெரிந்து கொண்டதாகத் தெரியவில்லை. இவை இரண்டும் முற்றிலும் வேறுபட்டவை. ‘என்னைத் தொடாதே’ என்னும் ரீதியான தீண் டாமை நகரங்களில் படிப்படியாக மறைந்து கொண்டிருக்கலாம்; எனினுமொ இது குறிப்பிடத்தக்க அளவில் நடைபெற்று வருகிறதா என்பதில் எனக்கு ஐயமே. தீண்டப்படாதவர்கள் விஷயத்தில் இந்துக்கள் பாரபட்சம் காட்டும் மனோபாவ ரீதியிலான தீண்டாமை நக ரங்களிலும் சரி, கிராமங்களிலும் சரி அண்மைக் காலத்தில் மறைந் தொழியப் போவதில்லை என்பதில் எனக்கு எள்ளளவும் சந்தேகம் இல்லை. இவ்வாறு பாரபட்ச மனோபாவ ரீதியிலான தீண்டாமை மறையாத்தோடு, ஏராளமான இந்துக்கள் இப்போது வாழ்ந்து வரு கின்ற, இனியும் தொடர்ந்து வாழ்ந்து வரப்போகின்ற பல்லாயிரக் கணக்கான கிராமங்களில் ‘என்னைத் தொடாதே’ என்னும் ரீதியி லான தீண்டாமையும் எண்ணிப் பார்க்கத்தக்க காலத்தில் மறையப் போவதில்லை. இரண்டாயிரம் ஆண்டுக்காலமாக திருக்குமறுக்காக உருத்திரிந்துபோன மனித மனத்தை எதிர்நிலையில் திருப்பவிட முடியாது. இந்து சமயம் நிலைமைக்கும்த் தக்கபடி தன்னைப் பெரிதும் மாற்றியமைத்துக் கொள்ளக்கூடிய சமயம் என்றும், எல்லாவற்றுக் கும் தன்னை தகவமைத்துக் கொண்டு, எதையும் தன்னுள் ஈர்த்துக் கொள்ளக்கூடிய ஆற்றல் அதற்கு இருக்கிறது என்றும் கூறும் சில இந்து சமய தீவிர ஆதரவாளர்கள் இருக்கிறார்கள் என்பதை நான் அறிவேன். ஒரு சமயத்துக்குள்ள இத்தகைய ஆற்றலை ஒரு மாபெரும் நற்கூறாகப் பலர் கருத மாட்டார்கள் என்பதை நான் நிச்சயமாக அறிவேன். ஏனென்றால் ஒரு குழந்தை சாணத்தைத் தின்று சீர ணிக்கக்கூடிய ஆற்றலைப் பெற்றுவிட்டது என்பதற்காக யாரேனும் பெருமைப்படுவார்களா? எனினும் இது வேறுவிஷயம். இந்து சமயம் எந்த நிலைமைக்கும் தன்னைத் தகவமைத்துக் கொள்ள முடியும் என்பது முற்றிலும் உண்மையே. அக்பர் தீன் இலாஹி என்னும் சமய நூலை உருவாக்கினார்; இந்து சமயத்தினுள் அதற்கு ஓர் இடத்தைப் பெற்றுத் தருவதற்காகவும், அதனை இந்து மெய் விளக்க வியலின் ஏழாவது தொகுதியாக அங்கீகரிப்பதற்காகவும் அக்காலத் திய பிராமணர்கள் அல்லஹுப நிடதம் என்னும் இலக்கிய நூலைப் படைத்தார்கள். தகவமைத்துக்கொள்ள இந்து சமயத்துக்குள்ள ஆற்ற லுக்கு இதனை மிகச் சிறந்த உதாரணமாகக் கூறலாம். இந்து சமயம் பல விஷயங்களைத் தன்னுள் ஈர்த்துக் கொள்ள முடியும் என்பது உண்மையே. மாட்டிறைச்சி உண்பதை ஆரம்பத்தில் ஆதரித்துவந்த இந்து சமயம் (அல்லது சரியாகக் கூறுவதானால் ஆதி நாட்களில் இந்து சமயத்தின் சரியான பெயர் பிராமணீயம் என்பதேயாகும்) பௌத்த சமயத்தின் அகிம்சைக் கொள்கையைச் சுவீகரித்துக் கொண்டு சைவ உணவுக் கோட்பாட்டை ஆதரிக்கும் சமயமாயிற்று. எனினும் இந்து சமயத்தால் எக்காலத்திலும் செய்ய இயலாத ஒரு விஷயம் இருக்கிறது. தீண்டப்படாதவர்களை ஈர்த்துக் கொள்ளும் வகையில் அல்லது தீண்டாமை என்னும் தடைவேலியை அகற்றும் வகையில் அது தன்னைத் தகவமைத்துக் கொள்ளாததே அது. திரு. காந்திக்கு முன்பே பல சீர்திருத்தவாதிகள் அரங்கில் தோன்றி அவர்கள் அனைவரும் தோல்வியே கண்டனர். என்னைப் பொறுத்தவரையில் அவர்களுடைய தோல்விக்கான காரணத்தை மிக எளிதாகக் கூறிவிடலாம். தீண்டப் படாதவர்களைப் பற்றி இந்துக்கள் அஞ்சுவதற்கு எதுவும் இல்லா திருப்பதும், தீண்டாமையை ஒழிப்பதால் அவர்களுக்கு எந்த ஆதாய மும் கிட்டப்போவதில்லை என்பதுமே அந்தக் காரணம். இந்துக்கள் மாட்டிறைச்சி உண்பதை கைவிட்டார்களே. ஏன்? ஏனென்றால் அவ்வாறு செய்யவில்லை என்றால் பௌத்த சமயம் இந்து சமயத் தைத் தூக்கி விழுங்கிவிடும் என்ற பயம் இந்துக்களுக்கு. இந்துக்கள் அல்லாஹு பனிடதத்தை எழுதினார்கள் என்றால் அக்பர் ஒரு புதிய சமயத்தை உருவாகுவதற்கு உதவுவதன் மூலம் தங்களுக்கு எல்லாவிதத்திலும் ஆதாயம் கிட்டும் என்று அவர்கள் நம்பியதே இதற்குக் காரணம். இந்த நூலை எழுதியவர் அக்பரை மகிழ்வித்து நிறைய பணம் பெற்றார்; அது மட்டுமல்ல; அக்பர் ஒரு புதிய சமயத்தை உருவாக்குவதற்கு உதவுவதன் மூலம், இந்துக்களுக்கு இதுவரை இஸ்லாமிய மன்னர்கள் இழைத்துவந்த கொடுமையை யும் கொடுங்கோன்மையையும் குறைக்க முடியும் என்று அவர் நம்பினார். தீண்டாமை என்னும் சாபத்தீட்டுக்கு, சாபக்கேட்டுக்கு இந்துக்கள் தாமே முன்வந்து முற்றுப்புள்ளி வைப்பார்கள் என்ற நம்பிக்கை தீண்டப்படாதவர்களுக்கு இடையே மிகவும் பரந்த மனோ பாவம் படைத்தவர்களுக்கே இல்லை. தீண்டாமை ஒழித்துக்கட்டப்படுவதால் இந்துக்கள் அஞ்சு வதற்கு எதுவுமில்லை; அவர்கள் பெறக்கூடிய ஆதாயமும் எதுவு மில்லை; ஆனால் உண்மையில் அவர்கள் இழக்கக்கூடியதான் மிகவும் அதிகம். தீண்டாமை அமைப்பு முறையை இந்துக்களுக்கு ஒரு தங்கச் சுரங்கம் என்றே கூறவேண்டும். இதில், 24 கோடி இந்துக் கள் தங்களுக்கு ஏவலர்களாக, எடுபிடிகளாக ஊழியம் செய்வதற்கு 6 கோடி தீண்டப்படாதவர்களைப் பெற்றிருக்கின்றனர்; இந்துக்கள் தங்களது ஆடம்பரத்தையும் பகட்டாவாரத்தையும், ஆர்ப்பாட்டத் குரிய பெருமையையும் செருக்கையும் அகம்பாவத்தையும் கட்டி வளர்க்க இது துணைபுரிகிறது; தனக்குக் கீழே ஓர் அடிமை வர்க்கம் இல்லையென்றால் இத்தகைய மதிப்பை, மேன்மையைக் கட்டிக் காப்பாற்ற முடியாது. இதில், 24 கோடி இந்துக்கள் கட்டாயமாக உழைப்பதற்கென 6 கோடி தீண்டப்படாதவர்களைப் பெற்றுள்ளனர்; இந்தப் பரிதாபத்துக்குரிய மக்களின் துணையற்ற, வகையற்ற நிராதரவான அவலநிலை காரணமாக அவர்கள் மிக அற்பக் கூலிக்கு அல்லது சிலசமயம் கூலியில்லாமலேயே உழைக்க நிர்ப்பந்திக்கப் படுகின்றனர். இதில், 24 கோடி இந்துக்கள் தெருப்பெருக்குதல், துப் புரவு செய்தல் போன்ற அசுத்தமான வேலைகளைச் செய்ய 6 கோடி தீண்டப்படாதவர்களைப் பெற்றிருக்கின்றனர்; இந்தப் பணிகளை எல்லாம் ஓர் இந்து செய்யக்கூடாது, இந்துவல்லாதவர்கள் செய்ய வேண்டும் என்று அவனது சமயம் விதித்துள்ளது; அந்த இந்துவல்லா தவர்கள் வேறு யாருமல்ல, தீண்டப்படாதவர்கள்தான். இதில், 24 கோடி இந்துக்கள் கீழ்மட்ட பணிகளில் அமர்த்தப்படுவதற்கு 6 கோடி தீண்டப்படாதவர்களைப் பெற்றிருக்கின்றனர்; இதனால் இந்துக்களுக்கு ஏகபோகமானவையாகக் கருதப்படும் உயர் பதவிகளுக் கான போட்டியில் தீண்டப்படாதவர்கள் பங்கெடுத்தக்கொள்ள முடியாதப்படித் தடுக்கப்படுகின்றனர். இதில், 24 கோடி இந்துக்கள் 6 கோடி தீண்டப்படாதவர்களை பொருளாதார மந்தத்தின்போது அதிர்ச்சி தாங்கிகளாகவும், பொருளாதார ஏற்றத்தின்போது தேவை யற்ற சுமையாகவும் நடத்துகின்றனர்; இதன் காரணமாக பொரு ளாதார மந்தத்தின்போது தீண்டப்படாதவன்தான் முதலில் வேலை யிலிருந்து விலக்கப்படுகிறான், இந்து கடைசியாகத்தான் வேலை இழக்கிறான்; ஆனால் அதேசமயம் பொருளாதார ஏற்றத்தின்போதோ இந்துதான் முதலில் வேலைவாய்ப்பு பெறுகிறான், தீண்டப்படாத வனுக்கோ கடைசியில்தான் வேலைவாய்ப்பு அளிக்கப்படுகிறது. தீண்டாமை என்பது ஒரு சமய விதிமுறை என்று பலர் நம்புகின்றனர். இது உண்மைதான். ஆனால் இது ஒரு வெறும் சமய விதிமுறை என்று மட்டுமே கருதுவது தவறு. தீண்டாஅமை சமய விதிமுறைக்கும் அப்பாற் செல்லுகிறது. அது அடிமைத்தனத்தையும் விட மிக மோசமான பொருளாதார விதிமுறையாகவும் உள்ளது. எது எப்படியிருந்தாலும் அடிமை முறையில் எசமான் தனது அடிமைக்கு உணவு, உடை, உறைவிட வசதிகளைச் செய்து தரவும், அவனை நல்ல நிலைமையில் பராமரிக்கவும் கடமைப்பட்டிருக்கிறான்; இல்லையேல் அடிமையின் சந்தை விலை வீழ்ச்சியடைந்துவிடும். ஆனால் தீண்டாமை முறையிலோ அப்படியல்ல; தீண்டப்படாத வனைப் பராமரிக்கும் பொறுப்பு எதையும் இந்து ஏற்றுக்கொள்வதில்லை. ஒரு பொருளாதார அமைப்பு முறை என்ற வகையில் தீண்டாமையானது எத்தகைய கடமைப் பொறுப்புமின்றி இஷ்டம் போல் சுரண்டுவதற்கு அனுமதிக்கிறது. எனவே, தீண்டாமை என்பது மட்டுப்படுத்தப்படாத ஒரு சுரண்டல் முறை மட்டுமல்ல, ஒரு கட்டுப் படுத்தப்படாத சுரண்டல் முறையுமாகும். இதனைக் கண்டிக்கக் கூடிய சுதந்திரமான பொதுஜன அபிப்பிராயம் இல்லாதிருப்பதும், அதனைத் தடுத்து நிறுத்தும் நேர்மை வாய்ந்த நிர்வாக அமைப்பு இல்லாதிருப்பதுமே இதற்குக் காரணம். பொதுஜன அபிப்பிராயத் துக்கு வேண்டுகோள் விடுப்பதற்கும் வழியில்லை; ஏனென்றால் பொதுஜன அபிப்பிராயம் என்பது சுரண்டும் வர்க்கத்தைச் சேர்ந்த இந்துக்களின் அபிப்பிராயமே ஆகும்; இந்த அபிப்பிராயம் சுரண் டலை ஆதரிப்பது முற்றிலும் இயல்பே. காவல் துறையோ அல்லது நீதித்துறையோ தடுப்பு நடவடிக்கைகள் எடுத்துக் கொள்வதற்கும் வாய்ப்பில்லை; ஏனெனில் இவர்கள் எல்லோரும் இந்துக்கள் வட்டா ரத்திலிருந்து வந்தவர்கள்; சுரண்டல்காரர்களுக்கே அவர்கள் பச்சை விளக்குக் காட்டுகின்றனர். தீண்டாமை விரைவில் மறைந்துவிடும் என்று நம்புபவர் கள் இந்துக்களுக்கு அது வழங்கும் பொருளாதார அனுகூலங்களைக் கருத்திற் கொண்டதாகத் தெரியவில்லை. தன்னைப் பீடித்துள்ள தீண் டாமை என்னும் அவக்கேட்டை ஒழித்துக்கட்டுவதற்கு தீண்டப்படாத வனால் எதுவும் செய்ய இயலாது. அவன் தனிப்பட்ட முறையில் இழைக்கும் எந்தத் தவறாலும் இது தோன்றுவதில்லை. தீண்டாமை என்பது இந்துவிடம் குடிகொண்டிருக்கும் ஒரு மனோபாவம். ஆத லால் தீண்டாமை மறைய வேண்டுமானால், இந்து மனம் மாற வேண்டும். அவ்வாறு அவன் மாறுவானா? இந்துவுக்கு மனச்சான்றுக்கு என்று எதுவும் இருக்கிறதா? இந்தக் கயமைத்தனமான ஒழுக்கக்கேட்டை, அக்கிரமத்திலும் அக்கிரமான இந்த அநீதியை எதிர்த்து அவன் என்றேனும் தீங்குகள் போல் மனம் குமுறி வெடித்துக் கொதித்தெழுந்தது உண்டா? தனது நியாய மான வெஞ்சினத்தை வெளிப்படுத்தியது உண்டா? தீண்டாமையை ஒரு பெரும் அநீதியாக, பழிச்செயலாகக் கருதும் அளவுக்கு அவன் மாறிவிட்டதாகவே வைத்துக்கொள்வோம்; மனிதனை கடவுளின் நிலைக்கு உயர்த்தும் அளவுக்கு அவன் நேர்மை உணர்வைப் பெற்று விட்டான் என்றே வைத்துக்கொள்வோம்; அப்போது அவன் தீண்டாமை அளிக்கும் பொருளாதார, சமூக ஆதாயங்களை விட்டுக் கொடுக்க இணங்குவானா? ஓர் இந்துவுக்கு நீதி நேர்மையின் பால்பட்ட மனச்சான்று இருக்கிறது. அநீதியை அழித்தொழிப்பதற்கு ஓர் அறப்போரைத் தொடுக்கும்படி தார்மிக ஆவேசத்துடன் அவனை ஆர்த்தொழச் செய்யும் முடிவுக்கு வருவதை வரலாறு எவ்வகையிலும் நியாயப்படுத்தாது என்றே அஞ்சுகிறேன். அறவியலும் பொருளியலும் முரண்படும்போது, பரஸ்பரம் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொள்ளும் போது வெற்றி எப்போதுமே பொருளியலின் பக்கமே இருந்து வந்திருப்பதை வரலாறு காட்டுகிறது. அதிகார நலக் கும்பல் களை நிர்ப்பந்தப்படுத்தக்கூடிய போதிய வலுமிக்க சக்திகள் இருந்தா லொழிய இந்தக் கும்பல்கள் தாமே முன்வந்து தமது அதிகாரங் களைக் கைவிட்டதை நாம் ஒருபோதும் அறிந்ததில்லை. தீண்டப் படாதவர்களால் இத்தகைய ஆற்றலை உருவாக்க முடியும் என்று எதிர்பார்க்க முடியாது. அவர்கள் வறுமையிலும் வெறுமையிலும் கல்லாமையிலும் இல்லாமையிலும் உழன்று சிதறிக் கிடக்கின றனர். அவர்கள் தலைதூக்கத் துணிந்தால் அவர்களை எளிதாக ஒடுக்கி விட முடியும். இந்த அடிப்படையில் நோக்கும்போது, சுயராஜ்யம் இந்துக் களை மேலும் வலிமைமிக்கவர்களாகவும், தீண்டப்படாதவர்களை ஆதரவற்றவர்களாகவுமே ஆக்கும். மேலும், சுயராஜ்யம் இந்துக் களுக்கு ஏராளமான, தாராளமான பொருளாதார அனுகூலங்களை அளிக்கும் என்ற கண்ணோட்டத்திலிருந்து பார்க்கும்போது, சுய ராஜ்யம் தீண்டாமையை ஒழித்துக் கட்டுவதற்குப் பதிலாக அதற்குப் புத்துயிர் அளிக்கவே செய்யும் என்பது தெளிவு. எனவே, தீண்டாமை மறைந்து வருகிறது என்று கூறுவது வெறும் கட்டுக்கதையே தவிர, இட்டுக்கட்டப்பட்ட பச்சைப் பொய்யே தவிர வேறல்ல. அரசிய லமைப்புச் சட்டப் பாதுகாப்புகள் போன்ற தீண்டப்படாதவர்கள் முன் லெடுத்துக் கொள்வதும் இன்றைய எதார்த்தங்களையும் எதிர்கால எதார்த்தங்களையும் புறக்கணிப்பதும் வடிகட்டிய முட்டாள்தனமே ஆகும், அறிவு மழுக்கமே ஆகும்.
சில திடப் பொருட்களை வெப்பப்படுத்தும் போது, அவை திரவ நிலையை அடையாமல் நேரடியாக வாயு நிலைக்கு மாற்றமடைகிறது. ஆவியைக் குளிர வைக்கும் போது மீண்டும் திண்மத்தைத் தருகிறது. இந்நிகழ்விற்கு பதங்கமாதல் என்று பெயர். Example: எ.கா.: அயோடின், கற்பூரம், அம்மோனியம் குளோரைடு. கற்பூரம் பதங்கமாதலுக்கான செய்முறை விளக்கம்: i. நன்கு தூளாக்கப்பட்ட அம்மோனியம் குளோரைடு மற்றும் மணல் கலவை, கொண்ட ஒரு பீங்கான் கிண்ணத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். ii. அதன் மேல் துளையுடைய கல்நார் தகட்டினால் மூடி வைக்கப்படுகிறது. கல்நார்த் தகட்டின் மேல் புனல் ஒன்று கவிழ்த்து வைக்கப்படுகிறது. iii. புனலின் திறந்த முனையானது பஞ்சினால் அடைக்கப்பட்டு, பீங்கான் கிண்ணம் கவனத்துடன் வெப்பப்படுத்தப்படுகிறது. iv. எளிதில் ஆவியாகக் கூடிய திண்மத்தின் ஆவி கல்நார்த் தகட்டில் உள்ள துளைகளின் வழியாகச் சென்று புனலின் உள்பக்கத்தில் குளிர்கிறது. ஆவியாகாத மாசுக்கள் பீங்கான் கிண்ணத்திலேயே தங்கி விடுகிறது. பதங்கமாதல் அன்றாட வாழ்வில் பதங்கமாதல் நிகழ்வு: கழிவறைகளில் காற்று தூய்மையாக்கிகள் பயன்படுத்தப்படுகிறது. இதில் உள்ள திண்மம் மெதுவாக பதங்கமாகி நறுமணமுள்ள வாயுவை ஒரு குறிப்பிட்ட காலம் வரை வெளியிடுவதன் மூலம் கழிவறையை நறுமணத்துடன் வைக்கிறது. நாஃப்தலீனை உள்ளடக்கிய அந்துருண்டை, பூச்சிகளை விரட்டப் பயன்படுகிறது. இதில் உள்ள நாஃப்தலீன் பதங்கமாகி வாயுவாக மாறுகிறது. இதே போன்று, இந்தியர்களின் வீடுகளில் பயன்படும் கற்பூரம் பதங்கமாதலுக்குட்பட்டு நறுமணத்தைத் தரவல்லது.
கந்துவட்டி கொடுமைகுறித்து பொதுமக்களிடம் விழிப்பு உணர்வு ஏற்படுத்தும் வகையில் நடத்தப்பட்ட கலை பிரசாரம் பொதுமக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. கந்துவட்டி கொடுமை காரணமாக நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அக்டோபர் 23-ம் தேதி இசக்கிமுத்து அவரது மனைவி மற்றும் இரு குழந்தைகளுடன் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து கந்துவட்டிக்கு எதிரான கருத்து வலுப்பெற்றுவருகிறது. இதனிடையே சினிமா தயாரிப்பாளரான அசோக்குமார் கந்துவட்டிக் கொடுமையால் தற்கொலை செய்த விவகாரம் சர்ச்சையாகி உள்ளது. இந்த நிலையில், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், ம.தி.மு.க., எஸ்.டி.பி.ஐ., தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம், மனிதநேய மக்கள் கட்சி, தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் சமூக அமைப்பினர் இணைந்து நெல்லை மாவட்டத்தில் கந்துவட்டி ஒழிப்பு கூட்டியக்கம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பின் சார்பாக டிசம்பர் 10-ம் தேதி பாளையங்கோட்டை ஜான்ஸ் கல்லூரியில், கந்துவட்டியால் பாதிக்கப்பட்டோருக்கான பொது விசாரணை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விசாரணையின் நடுவர்களாக உயர் நீதிமன்றத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற நீதிபதிகள், ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரிகள், கல்வியாளர்கள், மூத்த வழக்கறிஞர்கள், மூத்த பத்திரிகையாளர்கள், திரைப்பட இயக்குநர்கள் போன்றோர் இடம் பெறுகின்றனர். அதில், கந்துவட்டியால் பாதிக்கப்பட்ட மக்களின் வழக்குகளை முழுமையாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி அரசுக்குப் பரிந்துரை செய்வதுடன், உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்குகளைத் தொடுக்க முறையான நடவடிக்கைகள் எடுப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கந்துவட்டியால் பாதிக்கப்பட்ட ஏழை, எளிய மக்களின் மீது அக்கறை கொண்ட அக்கறையின் காரணமாக இந்த இயக்கம் தொடங்கப்பட்டு இருக்கிறது. இதுகுறித்து பொதுமக்களிடம் தெரியப்படுத்தி பாதிக்கப்பட்ட மக்கள் வருவதற்கு வழிவகை செய்யும் வகையில், பிரசார கலைப்பயணம் நடைபெற்றுவருகிறது. வி.எம்.சத்திரம் பகுதியில் தொடங்கிய இந்தப் பயணம், பாளையங்கோட்டை பேருந்து நிலையம், சமாதானபுரம், மேலப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்றது. இந்த கலைக்குழுவின் நிகழ்ச்சிகளைப் பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.
'''எம். ஆர். சந்தானம்''' (13 மே 1918 – 25 மார்ச் 1970) பழம்பெரும் தமிழ் நாடக, திரைப்பட நடிகரும், தயாரிப்பாளருமாவார். இவர் தயாரித்த [[பாசமலர்]], [[அன்னை இல்லம்]] போன்ற திரைப்படங்கள் பெரும் வெற்றியைப் பெற்றன. 50 இற்கும் அதிகமான திரைப்படங்களில் நகைச்சுவை, குணசித்திர, வில்லன் வேடங்களில் நடித்துள்ளார். '''பூங்காவனம் சந்தானம்''' என்றும் அழைக்கப்பட்டார். திரைக்கலைஞர்கள் [[ஆர். எஸ். சிவாஜி]], [[சந்தான பாரதி]] ஆகியோர் இவருடைய பிள்ளைகள் ஆவர். ==வாழ்க்கைக் குறிப்பு== '''எம். ஆர். சந்தானம்''' (பிறப்பு: 13 மே 1918, இறப்பு:25 மார்ச் 1970) பெரும்பாலும் தமிழ்த்திரைப்படங்களில் பங்களித்த பழம்பெரும் திரைப்பட நடிகரும் தயாரிப்பாளருமாவார். இவரும் கே. மோகனும் ராஜாமணி பிக்சர்ஸ் என்ற பெயரில் [[சிவாஜி கணேசன்]], [[சாவித்திரி (நடிகை)|சாவித்ரி]] முதலானோர் நடிப்பில் அண்ணன் தங்கைப் பாசத்தைக் கருவாகக் கொண்டு தயாரித்து 1961 இல் வெளியிட்ட [[பாசமலர்]] திரைப்படம் வெள்ளிவிழா கண்டது. திரைக்கலைஞர்கள் [[ஆர். எஸ். சிவாஜி]]யும் [[சந்தான பாரதி]]யும் இவருடைய பிள்ளைகள். இவர் ஆர். எஸ். ராமசாமி கவுண்டர், நாச்சியார் ஆகியோரின் 12 பிள்ளைகளில் 11-வது மகவாக<ref name=AKM">[https://antrukandamugam.wordpress.com/2013/09/08/poonkaavanam-m-r-santhanam/ பூங்காவனம் எம்.ஆர்.சந்தானம்], அன்று கண்ட முகம், 8 செப்டெம்பர் 2013</ref> 1918 மே 13 இல் பிறந்தார். இவரது நெருங்கிய நண்பர் [[டி. எஸ். துரைராஜ்]] மூலமாகத் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார்.<ref name=AKM"/> 1945-இல் ''[[மீரா (திரைப்படம்)|மீரா]] திரைப்படத்தில் முதன்முதலாக நடித்தார்.<ref name=AKM"/> [[சொர்க்க வாசல்]] திரைப்படத்தில் ''பூங்காவனம்'' என்ற பாத்திரத்தில் நடித்துப் புகழடைந்ததால், இவர் "பூங்காவனம் சந்தானம்" என்றும் அழைக்கப்பட்டார்.<ref name=AKM"/> == குடும்பம் == 1945-இல் இவர் ராஜலட்சுமி என்பவரைத் திருமணம் புரிந்தார்.<ref name=AKM"/> இவர்களுக்கு வசந்தா, காந்திராஜ், [[சந்தான பாரதி]], மங்கையற்கரசி, [[ஆர். எஸ். சிவாஜி]] என்ற ஐந்து பிள்ளைகள் உள்ளனர்.<ref name=AKM"/> இவர்களில் ஆர். எஸ். சிவாஜி திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். சந்தானபாரதி திரைப்பட இயக்குநர் ஆவார். == நடித்த திரைப்படங்கள் == # *[[மீரா (திரைப்படம்)|மீரா]], 1945 # *[[கிருஷ்ண விஜயம்]], 1950<ref>{{cite web |url=https://www.thehindu.com/features/cinema/Blast-from-the-past-Krishna-Vijayam/article16875859.ece|title=Blast from the past: Krishna Vijayam|authorlink=ராண்டார் கை]|work=[[தி இந்து]] (ஆங்கிலம்)|date=20 ஆகஸ்ட் 2009| accessdate=19 சனவரி 2019}}</ref> # *[[ஜமீந்தார் (திரைப்படம்)|ஜமீந்தார்]], 1952<ref>{{cite web | url= https://www.thehindu.com/features/cinema/zamindar-1955/article4301740.ece | title= Zamindar 1955 ||authorlink=ராண்டார் கை]|work=தி இந்து (ஆங்கிலம்)| date=12 சனவரி 2013| accessdate=19 சனவரி 2019}}</ref> # *[[சொர்க்க வாசல் (திரைப்படம்)|சொர்க்க வாசல்]], 1954 <ref>{{Cite news|url=https://www.thehindu.com/features/cinema/Sorgavaasal-1954/article15448137.ece|title=Sorgavaasal 1954|last=|first=ராண்டார் கை|date=2010-02-04|work=[[தி இந்து]] (ஆங்கிலம்)|access-date=2019-12-18|language=|issn=0971-751X}}</ref>
டெங்கு வைரஸ் காச்சல் இலங்கைத்தீவில் தொடர்ந்தும் சுகாதார சவாலை ஏற்படுத்திய வண்ணமே உள்ளது. நன்னீர் பகுதியில் உருவாகும் நுளம்பு வகையால் பரவும் இவ் டெங்கின் தாக்கம் அவ்அவ்வாண்டு நிலவும் காலநிலைக்கேற்ப மாறுபட்டாலும் அனைத்து மாவட்டங்களிலும் அதன் தாக்கம் உண்டு. இவ்வாண்டு மே நடுப்பகுதி வரையிலான ஜந்து மாதங்களில் கொழும்பு மாவட்டத்தில் அதிகப்படியாக 2763 பேர் டெங்கு தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளனர். அடுத்து இரண்டாவது இடத்தில் 2211 பேருடன் திருகோணமலையும் அடுத்து 2096 பேருடன் மட்டக்களப்பும் அடுத்து 1788 பேருடன் யாழ்ப்பாண மாவட்டமும் உண்டு. அதாவது டெங்கு வைரஸ் தாக்கத்தில் முதல் நான்கு இடங்களில் மூன்றிடத்தை தமிழ் மாவட்டங்கள் பிடித்துள்ளன. ஆனால் சனத்தொகையில் யாழ்ப்பாணம் மாவட்டம் 16ஆவது இடத்திலும் மட்டக்களப்பு மாவட்டம் 17ஆவது இடத்திலும் திருகோணமலை மாவட்டம் 21ஆவது இடத்திலுமே உள்ளமை குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுமிடத்து மேற்க்கண்ட தமிழ் மாவட்டங்களே ஏனைய மாவட்டங்களை விட இதே காலப்பகுதியில் அதிகரிப்பை வெளிப்படுத்துகின்றன. இது அரச தரப்பிலான அசட்டையை வெளிப்படுத்துகிறதா? என்ற கேள்வியையும் எழுப்புகிறது. அதேவேளை அவ்வாறாயின் அதைக் கடந்தான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் மக்களினதும் சுகாதாரத் துறையினரின் அசமந்தப் போக்கையும் கூட அது வெளிப்படுத்துகிறது. சனத்தொகையில் குறைந்த 25ஆவது மாவட்டமாக முல்லைத்தீவும் 23ஆவது இடத்தில் கிளிநொச்சியும் இருந்தாலும் இவ்விரு மாவட்டங்களும் 2010 முதல் அனைத்து ஆண்டுகளிலும் குறைந்தளவு டெங்கு தாக்கத்தையே வெளிப்படுத்துகின்றன. இவ்வாண்டு இதுவரை டெங்கு தாக்கத்திற்கு உள்ளான 19474 பேரில் முல்லைத்தீவில் 64 கிளிநொச்சியில் 105 பேரிலான தாக்கத்தையே வெளிப்படுத்தியுள்ளது. 2011இல் ஆண்டு முழுமையாக முல்லைத்தீவு 19 கிளிநொச்சி 66 பேர் எனவும் 2016இல் கிளிநொச்சி 86 முல்லைத்தீவு 182 பேர் எனவும் கடைசி இடத்திற்கே இரு மாவட்டங்களும் போட்டியிட்டுள்ளன. 2009 இற்கு முற்ப்பட்ட காலத்தில் அமைந்த தமிழ் நிழல் அரசில் டெங்கு குறித்து தமிழ் மக்கள் தமிழீழ சுகாதாரத் துறையால் விழிப்பூட்டப்பட்டு அதற்கான தடுப்பு நடவடிக்கைகளில் அவர்கள் முனைப்புடன் முறைமைப் படுத்தப்பட்டிருந்தமையே தற்போதும் அம் மக்கள் டெங்கு தாக்கத்தை தவிர்த்து வருவதற்கான காரணியாக அமையலாம். அவ்வாறாயின் கொழும்பு அரசுகளின் எதிர்பார்க்கப்படும் அசமந்தப் போக்கைக் கடந்து ஏனைய தமிழ் மாவட்டங்களிலும் மக்கள் விழிப்பூட்டப்பட்டு சமூகமாக தடுப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்த அதற்கான தலைமையை வழங்கப்போபவர்கள் யார்? அன்றைய பன்முகத் தலைமை மீது இன்று கல்லை வீசும் சிலர் தமிழ்மக்கள் நலன் என்பது டெங்கு வரை இருக்கிறது என்பதை எப்போது புரிந்து கொள்வார்கள் என்பதுவும் பெரும் கேள்வியே?
பொழிப்பு (மு வரதராசன்): காக்க வேண்டியவற்றுள் எவற்றைக் காக்காவிட்டாலும் நாவையாவது காக்கவேண்டும்; காக்கத் தவறினால் சொற் குற்றத்தில் அகப்பட்டுத் துன்புறுவர். மணக்குடவர் உரை: எல்லாவற்றையும் அடக்கிலராயினும் நாவொன்றினையும் அடக்குக: அதனை அடக்காக்காற் சொற்சோர்வுபட்டுத் தாமே சோகிப்பா ராதலான். இது சோகத்தின்மாட்டே பிணிக்கப் படுவரென்பது. பரிமேலழகர் உரை: யாகாவாராயினும் நாகாக்க - தம்மால் காக்கப்படுவன எல்லாவற்றையும் காக்க மாட்டாராயினும் நாவொன்றனையும் காக்க, காவாக்கால் சொல் இழுக்குப்பட்டுச் சோகாப்பர் - அதனைக் காவாராயின் சொல் இழுக்குப்பட்டுச் சோகாப்பர் - அதனைக் காவாராயின் சொற்குற்றத்தின்கண் பட்டுத் தாமே துன்புறுவர். ('யா' என்பது அஃறிணைப் பன்மை வினாப்பெயர். அஃது ஈண்டு எஞ்சாமை உணர நின்றது. முற்று உம்மை விகாரத்தால் தொக்கது. சொற்குற்றம் - சொல்லின்கண் தோன்றும் குற்றம். 'அல்லாப்பர் செம்மாப்பர்' என்பன போலச் 'சோகாப்பர்' என்பது ஒரு சொல்.) இரா சாரங்கபாணி உரை: ஒருவர் எவற்றைக் காக்கா விட்டாலும் நாவினைக் காப்பாராக. காக்கவிட்டால் சொற்குற்றப்பட்டு வருந்துவர். பொருள்கோள் வரிஅமைப்பு: யாகாவார் ஆயினும் நாகாக்க காவாக்கால் சொல்லிழுக்குப் பட்டு சோகாப்பர் . பதவுரை: யா-எவை; காவார்-காக்க மாட்டார்; ஆயினும்-ஆனாலும்; நா-நாக்கு; காக்க- காத்துக்கொள்க, அடக்குக; காவாக்கால்-காப்பாற்றாவிட்டால், அடக்காவிட்டால்; சோகாப்பர்-துன்பம் உழப்பர்; சொல்-பேச்சு, மொழி; இழுக்கு-குற்றம்; பட்டு-உற்று. யாகாவார் ஆயினும் நாகாக்க: இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்: மணக்குடவர்: எல்லாவற்றையும் அடக்கிலராயினும் நாவொன்றினையும் அடக்குக; பரிப்பெருமாள்: எல்லாவற்றையும் அடக்கிலராயினும் நாவொன்றினையும் அடக்குக; பரிதி: வாக்கும் மனமும் காயமும் அடங்காதபோது வாக்கையாகினும் பாதுகாக்க; பரிமேலழகர்: தம்மால் காக்கப்படுவன எல்லாவற்றையும் காக்க மாட்டாராயினும் நாவொன்றனையும் காக்க; பரிமேலழகர் குறிப்புரை: 'யா' என்பது அஃறிணைப் பன்மை வினாப்பெயர். அஃது ஈண்டு எஞ்சாமை உணர நின்றது. முற்று உம்மை விகாரத்தால் தொக்கது. 'காக்கப்படுவன எல்லாவற்றையும் காக்க மாட்டாராயினும் நாவொன்றனையும் காக்க' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர். இன்றைய ஆசிரியர்கள் 'எவற்றை அடக்காவிடினும் நாக்கை அடக்குக', '(ஐந்து புலன்களில் மற்ற) எதை அடக்காவிட்டாலும் நாக்கை அடக்கியாள வேண்டும்', 'காக்க வேண்டிய பிற எல்லாவற்றையுங் காவார் ஆயினும், மக்கள் தமது நாவினைக் காக்கக்கடவர்', 'எவற்றைக் காக்காது போயினும் நாவை மட்டும் காக்க', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர். எவற்றை காக்காது போயினும் நாக்கை அடக்குக என்பது இப்பகுதியின் பொருள். காவாக்கால் சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு: இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்: மணக்குடவர்: அதனை அடக்காக்காற் சொற்சோர்வுபட்டுத் தாமே சோகிப்பா ராதலான். மணக்குடவர் குறிப்புரை: இது சோகத்தின்மாட்டே பிணிக்கப் படுவரென்பது. பரிப்பெருமாள்: அதனை அடக்காக்காற் சொற்சோர்வுபட்டுத் தாமே சோகிப்பா ராதலான். பரிப்பெருமாள் குறிப்புரை: மேல்நிலைமையின் திரியாமல் அடக்க வேண்டும் என்றார். அவ்வாறு செய்வது அரிதாயின், நா ஒன்றையும் அடக்க வேண்டும். அது பிறபயன் தருவதேயன்றிக் காலத்தே சோகத்தையும் தவிர்க்கும் ஆதலான் இது சோகத்தின் மாட்டே பிணிக்கப் படுவரென்பது பரிதி: அப்படிக் காவாதபோது துன்பம் வரும் என்றவாறு. பரிமேலழகர்: அதனைக் காவாராயின் சொற்குற்றத்தின்கண் பட்டுத் தாமே துன்புறுவர். பரிமேலழகர் குறிப்புரை: சொற்குற்றம் - சொல்லின்கண் தோன்றும் குற்றம். 'அல்லாப்பர்ன்செம்மாப்பர்' என்பன போலச் 'சோகாப்பர்' என்பது ஒரு சொல். 'அதனைக் காவாதபோது சொற்குற்றத்தின்கண் பட்டுத் தாமே துன்புறுவர்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர். இன்றைய ஆசிரியர்கள் 'அடக்காவிடின் சொற்குற்றப்பட்டு வருந்துவாய்', '.நாக்கை அடக்கிப் பேசாவிட்டால் சொல் குற்றம் ஏற்பட்டுத் துன்பப்பட நேரும்', 'அதனைக் காவார் ஆயின் சொற்குற்றத்தின்கண் பட்டுத் துன்புறுவர்', 'அதனைக் காவாராயின் சொல் குற்றத்தின்கண் பட்டுத் தாமே வருந்துவர்' என்றபடி இப்பகுதிக்கு பொருள் உரைத்தனர். அதனைக் காவாராயின் சொல்குற்றத்தின்கண் பட்டுத் துன்புறுவர் என்பது இப்பகுதியின் பொருள். நிறையுரை: எவற்றை காக்காது போயினும் நாக்கை அடக்குக; அதனைக் காவாராயின் சொல்குற்றத்தின்கண் பட்டு சோகாப்பர் என்பது பாடலின் பொருள். 'சோகாப்பர்' என்பதன் பொருள் என்ன? ஒருவரது சொல்லொழுக்கம் அவர் துன்பப்படாதவாறு காக்கும். காக்க வேண்டியவற்றுள் மற்றெவற்றைக் காத்துக்கொள்ளாது போயினும், ஒருவர் பேசுவதில் குற்றம் நிகழாதவாறு காத்துக் கொள்ளல் வேண்டும்; நாவினைக் காக்கத் தவறுவாரானால் அவர் சொற்குற்றத்திற்கு உள்ளாகித் துன்புறுவர். காக்கப்படுவன எல்லாம் காத்தற்குப் பெரும் முயற்சி தேவை. இங்கு காக்கப்படுவன எனக் குறிக்கப்பெறுவது மனம், மெய், மொழி ஆகியன. இவற்றுள் மிகவும் காக்கப்படவேண்டியதான மொழியை அடக்கியாளவேண்டும். நாக்கு அடங்காத தன்மை கொண்டது; அது மிகவும் கொடூரமான ஆயுதம் போன்றதாதலால், அதை ஆளமாட்டாதவர் சொற்குற்றத்தில் சிக்குண்டு துயருறுவர் என்கிறது பாடல். வாயில் இருந்து வரும் சொல் என்பது வில்லில் இருந்து எய்த அம்புபோன்றது; ஒருமுறை எய்துவிட்டால், அதை திரும்பப் பெற முடியாது. அதன் பாதிப்பையும் நேராக்க முடியாது. காட்டுபாடின்றி எடுத்தேன் கவிழ்த்தேன் என்று பேசினால் இன்னல் வந்து சேரும். செருக்குடன் யாரையும், எதையும் மதிக்காமல் கூறப்படும் சொற்கள் தீமை உண்டாக்கும். இழிவாகப் பேசுதல், ஒருவர் இல்லாத இடத்தில் அவரைப் பற்றித் தவறான கருத்து உண்டாகுமாறு செய்திகளைக் கூறல், ஒருவரைப்பற்றி மற்றொருவரிடத்தில் பொய்யானவற்றைச் சொல்லித் தவறான எண்ணத்தை உருவாக்கிப் பிரித்தல், பகை கொள்ளச் செய்தல், எள்ளல் செய்வது, மனம் புண்படும்படி பேசுவது, இவைபோன்றவை சொற்களால் உண்டாகும் குற்றங்களாகும். மனிதர்கள் தம் உறவுகளை இழப்பதற்கு, அவர்கள் பேச்சே மிக முக்கிய காரணமாக அமைகிறது. எதையும் பொருட்படுத்தாத மனப்போக்காலோ அல்லது உணர்ச்சி வசப்பட்டோ, பொறுமையிழந்து, சிந்திக்காமல் சில கடும் சொற்களை மனிதர்கள் உதிர்த்து விடுவதால், அது தீராத பகை உணர்வை வளர்த்துவிடுகிறது; இழந்த உறவுகளை ஒருவர் மீண்டும் பெறுவது என்பது கடினமாகி விடுகிறது. இவற்றின் பின்விளைவுகளால் சோகமே வந்தடையும். பழிச்சொல் உண்டாகும். சொற்செலவில் பதட்டம் காட்டாது காத்துக் கொள்ளவேண்டும். நாம் மற்றவர்களிடம் எதைப்பேசுவது, எப்படிப் பேசுவது, எந்த அளவுக்குப் பேசுவது போன்றவற்றை முன்கூட்டியே சிந்தித்துப் பார்த்துப் பேசினால் பெரும்பாலான தீய எதிர்வினைகள் வாராமல் காத்துக் கொள்ள முடியும். இல்லையேல், துன்பங்களைத்தாம் எதிர்கொள்ள நேரிடும். அளவறிந்து பேசினால் நல்ல நாவடக்கப் பயிற்சி கிடைக்கும். நாக்கை அடக்காததால் இன்னலுக்காட்பட்ட இரண்டு நிகழ்வுகளைச் சிலப்பதிகாரத்திலிருந்து காட்டலாம். கண்ணகியும் கோவலனும் கவுந்திஅடிகளுடன் மதுரை நோக்கிச் சென்றுகொண்டிருக்கும்போது இரு வம்பப்பரத்தையர் 'யார் இவர்கள்?' என்று கண்ணகி-கோவலனைச் சுட்டி அடிகளை அணுகிக் கேட்க 'இவர்கள் என் மக்கள்' என்று கவுந்தியடிகள் கூறினார். உடனே அவர்கள் உடன் வயிற்றோர்கள் ஒருங்குடன் வாழ்க்கை கடவதும் உண்டோ கற்று அறிந்தீர் என வம்பப்பரத்தையர் எள்ளலாகக் கேட்க, அடிகள் அவர்களை 'முதுநரி ஆகுக' எனச் சினந்துரைத்தார். மற்றொரு நிகழ்வில் காவா நாக்குக் கொண்ட கனகன், விசயன் என்னும் சிற்றரசர் இருவர் வடநாட்டரசர் பலர் குழுமியிருந்த சபையில் தமிழ் நாட்டரசருடைய வீரத்தைப் பழித்துரைத்தனர். அதைக் கேள்வியுற்ற சேரன் செங்குட்டுவன் அவர்கள் மீது படையெடுத்து வென்று கண்ணகிக்குச் சிலை செய்வதற்கான கல்லை அவர்கள் தலையில் சுமக்கச் செய்தான். 'சோகாப்பர்' என்பதன் பொருள் என்ன? சோகாப்பர் என்ற சொல்லுக்குச் சோகிப்பார், துன்பம் வரும், துன்புறுவர், துக்கம் அடைவார்கள், சோம்பிப் போவார், மீளா இனத்துயரில் அழுந்தி அழிவார்கள் எனப் பொருள் கூறினர். சோகாப்பர் என்பதற்கு மணக்குடவர் சோகிப்பார் எனப் பொருள் உரைத்தார். சோகிப்பார் என்றதற்கான பொருள் சோகம் உறுவார் அதாவது வருந்துவார் என்பது. துன்பம் என்னும் பொருளை உணர்த்தும் சோகம் என்பதன் விகாரமாகிய சோ என்னும் சொல், காப்பர் என்னும் சொல் ஆகிய இரண்டும் சேர்ந்து சோகாப்பர் என்றாயின என்பது பொதுவான விளக்கம். ஆனால் இதை ஒப்பாது 'அல்லாப்பர் செம்மாப்பர் என்பன போலச் சோகாப்பார் என்பது ஒருசொல்' என்று கூறப்பட்டது எனப் பரிமேலழகர் இச்சொல்லுக்கு வேறொரு விளக்கம் தருவார். தேவநேயப் பாவாணர் சோ- காத்தல், சிறையிற் காத்திருத்தல், நா காவாவிடின் சொற்குற்றப்பட்டுச் சிறைத் தண்டம் அடைவர் என விளக்கினார். சோகாப்பர் என்பதை ஒரு சொல்லாகக் கொண்டு மற்றவர்கள் பொருள் கூற, இவர் இரு சொல்லாகக் கொண்டு இவ்வாறு கருத்துரைத்தார். சோ என்பது அரிய பொறிகள் ஏற்றப்பட்ட சிறந்த அரண் எனக் கொண்டு அரண் காத்தல் எனவும் பொருள் கூறினார். 'அல்லா-செம்மா-சோகா என்ற பகுதிகள் தொல்காப்பியர் காலத்திலேயே வழக்கொழிந்தமை கருதியே தேவநேயர் இருசொல்லாக்கிச் சிறைப்படுவர் என்றார். சோ-மதிலை யல்லது சிறையைக் குறிக்கும் தனித்தமிழ்ப் பெயர்ச்சொல். எங்ஙனமாயினும் சோகா என்ற தமிழடியாக வந்த வினைமுற்று என்றலே சிறத்தல் காண்க' எனச் சொல்லிப் பாவாணர் உரையைத் தண்டபாணி தேசிகர் ஏற்றார். இரா சாரங்கபாணி இதற்கு 'நா காவாதவர் சொல்லிழுக்கப்பட்டு சிறைத் தண்டனை ஒன்று மட்டும் அடைவர் எனக் கூறுவதினும் பொதுவாகத் துன்புறுவர் என்று கூறுவது சிறக்கும். சிறைத் தண்டனையும் துன்புறுவதில் அடங்கும். பாவாணர் கொண்டபடி, சோகாத்தல் எனத் தமிழ்ச் சொல்லாகவே கொண்டு முதலில் அச்சொல் மதில் காத்தல், அதாவது சிறைத் தண்டனையைக் குறித்ததாகவும் பின் அது தன் தனித்தன்மையிழந்து பொதுத்தன்மை எய்தித் துன்புறுதலைக் குறித்ததாகவும் கொள்ளல் ஏற்புடையது. மொழியியலின்படி சொற்கள் தனித்தன்மையிழந்து பொதுத்தன்மை அடைதலும் இழிதன்மை நீங்கி உயர்தன்மை எய்துதலும் போன்றன இயல்பே. வேளாண்மை, நாற்றம் முதலிய சொல் காண்க. வேளாண்மை முன் பயிர் செய்தலைக் குறித்துப் பின் உதவி செய்தலைக் குறித்தது போலச் சோகாத்தல் முன் சிறைத்த தண்டனையைக் குறித்து இப்போது துன்புறுதலைக் குறித்ததாகக் கொள்ளுதல் தகும்' என விரிவான விளக்கம் தந்தார். சோகாப்பர் என்ற சொல்லுக்குத் துன்புறுவர் என்பது பொருள். எவற்றை காக்காது போயினும் நாக்கை அடக்குக; அதனைக் காவார் சொல்குற்றத்தின்கண் பட்டுத் துன்புறுவர் என்பது இக்குறட்கருத்து.
50 சதவீத மானியத்தில் வேளாண் கருவிகள் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு50 சதவீத மானியத்தில் வேளாண் கருவிகள் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வேளாண்மை இயந்திரமயமாக்கும் திட்டத்தில், விவசாயிகளுக்கு 50 சதவீத மானியத்தில் வேளாண் கருவிகள் வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் கொ. வீரராகவ ராவ் தெரிவித்துள்ளதாவது : வேளாண்மைப் பொறியியல் துறை சார்பில், விவசாயிகளுக்கு மானிய விலையில் வேளாண் READ MOREREAD MORE ஜீவாமிர்தம் தயாரிக்கும் முறைகள்ஜீவாமிர்தம் தயாரிக்கும் முறைகள் ஜீவாமிர்தம் தயாரிக்கும் முறைகள் தேவைப்படும் பொருட்கள் பசுஞ்சாணம் – 10 கிலோ கோமியம் – 10 லிட்டர் பனை வெல்லம் – 2 கிலோ பனைவெல்லம் கிடைக்கவில்லை என்றால் கரும்புச் சாறு – 4 லிட்டர் கம்பு, பாசிபயறு. சுண்டல், உளுந்து, READ MOREREAD MORE விளம்பரம் போஸ்ட் செய்ய முடியவில்லையா?விளம்பரம் போஸ்ட் செய்ய முடியவில்லையா? விவசாய சந்தை அப்ளிகேஷன் பயனாளர்களுக்கு இலவசமாக வழங்குவதற்கு வடிவமைக்கப்பட்டது. சில உள்கட்டமைப்பு பிரச்சனையால், சிலரால் விளம்பரங்களை போஸ்ட் செய்ய இயலாமல் இருந்தது, தற்போது பிரச்சனை சரி செய்துகொண்டு வருகிறோம், உங்களால் போஸ்ட் செய்ய முடியவில்லை என்றால். உங்களது இமெயில் ஐடி;யை கமெண்ட்
ஜெயமோகனின் ‘அறம்’ புத்தக வெளியீட்டுக்கு அவர்தான் தலைமை. ஈரோட்டில் நடைபெற்ற அந்த விழாவில் நான் அந்தத் தொகுப்பில் உள்ள ‘வணங்கான்’ கதையைப் பற்றி பேசினேன். நிறைவுரையாக ஜெயமோகன் பேசிய அற்புதமான உரையைக் கேட்டு கிறங்கிப் போய் வெளியே நின்றிருந்தபோது, எனது தோளைத் தட்டி, நீங்க மிகச் சிறப்பாக பேசினீங்க கருணா. உங்க பேஒச்சில் உண்மை இருந்தது என்றார் டாக்டர் ஜீவா. தாமதமாகச் சென்றதால் அவரோட தலைமையுரையை நான் கேட்டிருக்கவில்லை. எனவே, பேச ஏதுமின்றி, ரொம்ப நன்றி டாக்டர். இந்த விழாவை கூட வெளியில் நல்ல ஏ.சி ஹாலில் வைத்திருந்திருக்கலாம். நிறைய விஐபிங்க வந்திருந்தாங்க என்றேன். உடனே அவர் பதறிப்போய், எதுக்கு? எதுக்கு? பேசப் போறோம். கேட்கப் போறோம். மகாத்மாவோட நினைவுகளோட வீட்டுக்குப் போகணும்.. அவ்வளவுதானே! அதுக்கு ஏன் ஏ.சி ஹால் செலவெல்லாம்? இந்த பள்ளிக்கூட டியூப்லைட், ஃபேனே ஆடம்பரம்தான் என்றார் அந்தப் பரிபூரண காந்தியவாதி. அந்தக் கணத்திலேயே எனக்கு ஓர் ஆசானாக எனது மனதில் வந்து அமர்ந்து கொண்ட டாக்டர் ஜீவா நேற்றுவரை எனக்கும், நண்பர் பவா செல்லதுரைக்கும் ஒரு ஞானத்தந்தை ஆக இருந்தார் என்பதுதான் உண்மை. புற்றுநோய் மருத்துவத்தில் மிகச் சிறந்த நிபுணர். ஆனால், தனியார் மருத்துவமனை தொடங்கி லட்சங்களை சம்பாதிக்க வில்லை. மாறாக, தமிழகத்திலேயே முதன்முறையாக கோ ஆப்ரேட்டிவ் முறையில் ஈரோட்டில் மருத்துவமனை தொடங்கினார். நூறு செல்வந்தர்களை அணுகி ஆளுக்கு 2 லட்சம் மட்டும் பெற்று தொடங்கப்பட்ட மருத்துவமனை அது. புற்றுநோய் வாய்ப்பட்ட எளியவர்களுக்கு மிகக்குறைந்த அல்லது இலவசமாக சிகிச்சை அளிக்கத் தொடங்கினார். அவரது வாழ்நாள் லட்சியம் ஒன்றே ஒன்றுதான். ஏழை மக்களுக்கு புற்றுநோய்க்கான சிகிச்சை அவர்களிடம் இருக்கும் பணத்தின் அளவுக்கு அல்லாமல், அவர்களுடைய நோய் தீவிரத்தின் அடிப்படையில் தரமான சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்பதுதான். அதற்காகத் தொடங்கப்பட்ட ஒரு கூட்டுறவு முறை மருத்துவமனை பலதாக பெருகி வியாபித்து மக்களுக்கு உதவியது. பாண்டிச்சேரியில் மிகச் சிறப்பான வசதிகளுடன் தொடங்கப்பட்ட ஒரு மருத்துவமனையை என்னையும் Board Member ஆக சேர்ந்து பொறுப்பேற்று நடத்தக் கேட்டு ஒருநாள் டாக்டர் ஜீவாவும், பாண்டி மாஸ் ஹோட்டல் அதிபர் எம்.ஏ.சுப்ரமணியமும் என்னை சந்தித்தனர். அத்தனைப் பெரிய பொறுப்பை ஏற்க நான் மனதளவில் தயாராக இல்லாதக் காரணத்தால் அது நடக்கவில்லை. ஆனால், அப்போதுதான் இப்படிப்பட்ட மேன்மையான மனிதர்களை அறிந்து கொண்டேன். எங்களின் ப்ரியமான எழுத்தாளர் பிரபஞ்சனை இறுதிக் காலத்தில் எந்தவொரு சிரமும் இன்று, செலவும் இன்றி பராமரித்ததில் டாக்டர் ஜீவாவின் மருத்துவமனைக்கு பெரும் பங்குண்டு எப்போதெல்லாம் ஈரோட்டில் இருந்து பாண்டி சென்றாலும் வாய்ப்பிருந்தால் இடையில் பவாவையும், என்னையும் சந்திப்பார். இரவெல்லாம் நாங்கள் உரையாடுவோம் அந்தக் கணங்கள் எல்லாம் எனது வாழ்நாளின் பொன்னானத் தருணங்கள் என்பதை நான் அப்போதே உணர்ந்திருந்தேன். எத்தனையோ இரவுகள்! எத்தனையோ உரையாடல்கள்! டாக்டர் ஜீவா போன்று ஒரு அடிப்படையிலேயே ஒரு நல்ல ஆன்மாவை நாம் நேரில் சந்தித்து பழகுவது அரிது. அது ஒரு கொடுப்பினை.
தூக்கம் வராத இன்ஸோம்னியா நாள்களில் போஜ்புரி சினிமாக்கள் என் கண்ணில் பட்டன. அதுவரை பாட்னா என்றால் அஞ்சாப்பு பாடப்புத்தகத்துல பீகாரின் தலைநகரம்னு படிச்சிருக்கேன். சமீபத்தில் போஜ்புரி சினிமாக்கள் பார்த்ததும் வேறொரு இமேஜ் வந்துவிட்டது. வாங்க அதைப் பத்திச் சொல்றேன். அதுக்கு முன்னாடி... பேல்பூரி, பானிபூரி கேள்விப்பட்டிருப்பீங்க... அதென்ன போஜ்புரி? இந்தியாவின் பூர்வாஞ்சல் எனப்படும் மேற்கு பீகார், கிழக்கு உத்தரப்பிரதேசம், ஜார்க்கண்ட் மற்றும் தெற்கு நேபாளமான தராய் பகுதிகளில் பேசப்படும் இந்தியைப்போலவே இருக்கிற ஆனால், இந்தி அல்லாத ஒரு இந்திய மொழி. போஜ்புரி சினிமாவை `போஜிவுட்', `பிர்ஹாவுட்' என அன்போடு பீகாரிகள் அழைக்கிறார்கள். மார்க்கெட் இழந்த நம்ம ஊர் நடிகைகள் ரம்பா, நக்மா, நீத்து சந்த்ரா என நிறைய பேர் அங்கு கடைசியாய் நடித்தார்கள். முன்னொரு காலத்தில் இந்திப்படங்கள் பீகாரில் கோலோச்சியபோது, `நமக்கே நமக்கான சினிமாக்கள் வர வேண்டும்’ என பலர் ஆசைப்பட்டார்கள். ஆசை யார் வேணும்னாலும் படலாம். ஆனால், ஆசையை நிறைவேற்ற ஒரு தலைவராலதான முடியும்? அந்தத் தலைவர் வேற யாருமில்லைங்க... 1960-ல் இந்தியாவின் ஜனாதிபதியா இருந்த ராஜேந்திர பிரசாத். கித்னா படா போஸ்ட்ல இருந்தாலும் அவருக்குப் புடிச்சது தம்மாத்தூண்டு பாட்னா. போஜ்புரி மீது பெருங்காதல் கொண்டவர். சினிமாமீது காதல் கொண்ட அவருக்குப் பாட்னா வரும் போதெல்லாம், தியேட்டர்களில் இந்திப்படங்கள் ஓடுறதைப் பார்த்து ‘போஜ்புரி சினிமா இங்கு இல்லையே’ என ஏங்கியிருக்கிறார். அவரின் நண்பர் பிஸ்வநாத் பிரதாப் என்ற தயாரிப்பாளரை வரவழைத்து, ‘இந்தியாவின் முதல் போஜ்புரி சினிமாவை எடுங்கள்’ என அன்புக் கட்டளை இட்டிருக்கிறார். குந்தன் குமார் என்ற இயக்குநர், `கங்கா மையா தோஹோ பியாரி சதாய்போ' என்ற படத்தை எடுத்து பாட்னாவில் அதே ஜனாதிபதி கைகளால் ஒரு தியேட்டரில் 1963-ல் ரிலீஸ் செய்தார். படம் ஹிட். அதன்பிறகு இந்தி சினிமாக்களைப் பார்த்து அதே ஸ்டைலில் போஜ்புரிப் படங்களை எடுத்துக் குவிக்க ஆரம்பித்தனர். பத்து லட்சம் இருந்தா போதும், ஒரு போஜ்புரி படத்தை எடுத்துடலாம். வியாபாரமும் குறைந்தபட்சம் ஒரு கோடிக்கு ஆகிவிடும் என்பதால் `சின்னக் கல்லு பெத்த லாபம்' போல் ருசி கண்டனர் பீகார் கலைப் பூனைகள். 1980-ல் `மாய்', `ஹமர் பாஜி' போன்ற படங்களை எடுத்து, புதிய அலை போஜ்புரி சினிமாவை ஆரம்பித்தார் இயக்குநர் ராஜ்குமார் சர்மா. 2001-ல் போஜ்புரி சூப்பர் ஸ்டார் ரவி கிஷனின் என்ட்ரி. `சய்யான் ஹமர்', `பண்டித்ஜி பதாய் நா பியா கப் ஹே', `சாசுரா படா பைசா வாலா' என வாயில் நுழையாத டைட்டில்களில் பல சில்வர் ஜூப்ளி போஜ்புரி சினிமாக்கள் வர ஆரம்பித்தன. ஒரு புறம் ரவி கிஷன் மறுபுறம் மனோஜ் திவாரி இணைந்த கைகளாய், சரிந்திருந்த போஜ்புரி சினிமாவை நட்டக்குத்தலாகத் தூக்கி நிறுத்தினர். இவர்களின் சினிமாக்களில் அமிதாப் பச்சனும் மிதுன் சக்கரபர்த்தியும் கெஸ்ட் ரோலில் நடிக்கும் அளவுக்கு ஒரு மார்க்கெட்டை அங்கு உருவாக்கி வைத்தனர். 50 வருட போஜ்புரி சினிமாவில் இப்போதுதான் ஆக்‌ஷன் மெகா ஸ்டார்கள் உருவாகிக் கலக்குகிறார்கள். அதில் முக்கியமான ஸ்டார்களைப் பற்றிச் சொல்றேன்... ஏற்கெனவே சொன்ன மாஸ் மகாராஜா மனோஜ் திவாரி... போஜ்புரி சினிமாவின் வசூல் சக்கரவர்த்தி. பீகாரில் பிறந்தவர். 30 லட்ச ரூபாய் பட்ஜெட்டில் பத்துக் கோடி ரூபாய் வசூலை வாரிக்குவித்த `சாசுரா படா பைசாவாலா' படத்தில் நடித்தவர். ஆல்டைம் பிளாக்பஸ்டர். சினிமா தந்த வெளிச்சம் சமாஜ்வாடி கட்சியில் சேர்ந்து இப்போது லோக் சபா எம்.பி வரை ஆக்கிவிட்டிருக்கிறது. இவருக்கு அடுத்த ஆள் ரவி கிஷன். போஜ்புரி சினிமாவின் சூப்பர் ஸ்டார். தற்போது உ.பி கோரக்பூரின் எம்.பி. சினிமாவில் கிடைத்த ஹிட்டுகளாலேயே காங்கிரஸில் சேர்ந்தவர், பிறகு பா.ஜ.க-வுக்குத் தாவிவிட்டவர். தமிழிலும்கூட, `பூஜாவுக்கு பூந்தி கொடுத்தேன்...சாந்திக்கு சாக்லேட் கொடுத்தேன்...பாமாவுக்குப் பால்கோவா கொடுத்தேன்!'னு `மோனிஷா என் மோனாலிசா' படத்தில் மொக்கைக் காமெடி பண்ணி நடித்தார். விஜய் சேதுபதியோடு `சங்கத்தமிழன்' படத்தில்கூட சின்னதாய் தலைகாட்டியிருந்தார். இந்த இரண்டு பேரும் கிட்டத்தட்ட வி.ஆர்.எஸ் வாங்கியதால் இன்றைய தேதியில் போஜ்புரியின் யூத் ஸ்டார் என்றால் `நிரகுவா' என்றழைக்கப்படும் தினேஷ் லால் யாதவ்தான். `நிரகுவா ரிக்‌ஷாவாலா', `நிரகுவா இந்துஸ்தானி' என இவர் நடித்த படங்களின் டைட்டிலில் எல்லாமே நிரகுவா என்று அவசியம் இருக்கும். நம்ம ஊர் சீயான் போல அங்கு நிரகுவா வார்த்தை ரொம்பவே பாப்புலர். பாகிஸ்தான் தீவிரவாதிகளைப் பூண்டோடும் இஞ்சி கசகசாவோடும் அழிக்கும் வேலையைப் படங்களில் தவறாமல் செய்பவர். அடுத்த ஆள் டெரர் பவர் ஸ்டார் பவன் சிங்... ஆக்‌ஷன், ரொமான்ஸ் எனக் கலந்துகட்டி நடிப்பவர். பாடகராகவும் கலக்குபவர் என்பதால் பா.ஜ.க இவரைக் கட்சிக்குள் வளைத்துப் போட்டது. `மா துஜே சலாம்’, `ராஜா', `ஜெய் ஹித்', `ஷேர் சிங்' என ஹிட் படங்களைக் கொடுத்து டாப் ஸ்டாராக இருக்கிறார். சிக்ஸ் சிங்கிள் பேக்கிலேயே சிக்ஸ்பேக் தோரணை காட்டிச் சிதறவிடுவதும், ஹீரோயின்களோடு ஓவர் ரொமான்ஸ் செய்வதும் இவர் சிறப்பு. பவனுக்கு அடுத்து யூத்துகளின் சாய்ஸ் கேசரி லால் யாதவ்! ஆக்‌ஷன் என்ற பெயரில் கொலையாய்க் கொல்லுகிறார். கேசரி கலரில் வரும் ரத்தச்சாயத்தோடு ஃபைட்டுகளை யூடியூபில் பார்த்தால், சிரிப்பு கியாரண்டி. சண்டைக்காட்சிகளில் இவர் ஃபாலோ செய்வது நம்ம ஊர் எம்.ஜி.ஆர் ஸ்டைலை. முதல் இரண்டு அடியை வாங்கிவிட்டு வாயை ரத்தக்களறியாக்கிய பிறகுதான் திருப்பிக் கொடுப்பது இவர் ஸ்டைல். இவர்களைத்தவிர `சிண்ட்டு', `கல்லு', `ரித்தேஷ் பாண்டே', `ராகேஷ் மிஸ்ரா', `பர்வேஷ் லால் யாதவ்' என நிறைய ஹீரோக்கள் இருக்கிறார்கள். மனோதிடம் இருப்பவர்கள் இவர்களின் படங்களைப் பார்க்கலாம். போஜ்புரி ஹீரோயின்கள் எல்லோரும் கிளாமரில் ஹாலிவுட் ஹீரோயின்களுக்கே டஃப் கொடுத்துப் பத்தடி பாய்கிறார்கள். சொல்லி வைத்தாற்போல் ஒரு படத்தில் ஒரு பெட்ரூம் காட்சியிலாவது நடித்துவிடுகிறார்கள். பாடல் காட்சிகளில் அநியாயத்துக்கு அன்னியோன்யம் காட்டுகிறார்கள். பார்ப்பதற்குக் கொழுக்மொழுக்கென பப்ளியாய் இருக்கும் ஹீரோயின்களே இங்கு ஜொலிஜொலிக்கிறார்கள். ஒண்ணு டிரவுசரில் வருகிறார்கள். இல்லையென்றால் இடுப்பு தெரியும் சேலைகளில் வந்து, கிளாமர் காட்டுகிறார்கள். மோனாலிசா, ராணி சாட்டர்ஜி, அக்‌ஷரா சிங், ஆம்ராபாலி துபே, காஜல் ரக்வானி, அஞ்சனா சிங், நிதி ஜா, மது சர்மா, பூனம் துபே, சுபி சர்மா என ஹீரோயின்கள் எல்லோரும் கிளாமரில் தெறிக்கவிடுகிறார்கள். ஹீரோயின்கள் பாடல் காட்சிகளில் மட்டும் தான் அப்பிடி இப்படி இருப்பார்களே தவிர சென்டிமென்ட் காட்சிகளில் பீம்சிங் படத்து ஹீரோயின்களுடன் போட்டி போடுகிறார்கள். ஹீரோவைக் காப்பாற்றக் குறுக்கே பாய்ந்து நெஞ்சில் குண்டடி பட்டுச் சாவது, தவழ்ந்து போய் கோயிலில் நேர்த்திக்கடன் செய்வது, கிட்னியை தானமாகக் கொடுத்து இன்னொரு கிட்னியை இழந்து சாவது என சென்டிமென்ட்டில் பிழிந்தெடுக்கிறார்கள். போஜ்புரியின் மாஸ் ஹிட் படங்கள் அனைத்தும் யூடியூபில் இருக்கின்றன. குடும்பங்கள் கொண்டாடும் `வலிமை’ படம், கிட்னாப்பர்ஸ் திண்டாடும் `பீஸ்ட்’ படங்களெல்லாம் தெய்வ லெவல் படங்கள்னு சொல்றதுக்காகவே மொத்த போஜ்புரியன்ஸும் மேக்கிங்கில் பெயிலானாலும், பீகாரிகள் குத்த வெச்சு இந்தப் படங்களைக் கொண்டாடி மகிழ்கிறார்கள். ஆனால், குடும்பத்தோட பார்க்கக்கூடாத பாடல் காட்சிகள் நிறைந்த அந்தப் படங்களைப் பார்ப்பது கொஞ்சம் ரிஸ்க். போஜ்புரி இந்திய சினிமாவின் அடையாளங்களுள் ஒன்றாக இல்லாமல் போகலாம். ஆனால், ஒரு பின்தங்கிய மாநிலத்தின் இளசுகளுக்கும் உழைக்கும் வர்க்கத்தினருக்கும் பெரிய பொழுதுபோக்காகத் தன்னளவில் தனித்து ஜிகினாவோடு ஜொலிக்கிறது!
Rosemary_Xo கேமராக்கள் ஆன் MFC, ஒரு வெப்கேம் மாதிரி! வெப்கேம் நிகழ்ச்சிகளில் அவரது நிர்வாணம் மற்றும் பாலியல் செயல்பாடுகளைப் பாருங்கள். Rosemary_Xo உடன் அரட்டையடிக்க இப்போதே சேருங்கள், மேலும் அவரது புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் அவரைப் போன்ற பல கேம் மாடல்களை எவ்வாறு கண்டுபிடிப்பது என்பதற்கான உதவிக்குறிப்புகளைப் பார்க்கவும்! இந்த கேம் நட்சத்திரத்தை ஆன்லைனில் நிர்வாணமாக பார்க்க சிறந்த இடம் அவரது முழு நிர்வாண புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களின் தொகுப்பை www இல் பாருங்கள்.mfc.im/Rosemary_Xo/, நீங்கள் ஏமாற்றமடைய மாட்டீர்கள். இந்த வளர்ந்து வரும் நட்சத்திரம் இளமையாகவும், கவர்ச்சியாகவும், ஒல்லியாகவும், நடுத்தர அளவிலான மார்பகங்களுடன் (பெரிய முலைக்காம்புகள்), நல்ல தொடைகளுடன் வளைந்ததாகவும், நேரலை நிகழ்ச்சியின் போது நாய்க்குட்டி பாணியில் அதைக் கசக்கும் போது அனைவரும் கசக்க விரும்பும் கழுதையாகவும் இருக்கிறார்! அவள் ஒல்லியான டீன் ஏஜ் கேம்கேர்ள், அவள் 30 வினாடிகளுக்குள் உங்களை கடினமாக்குவாள்-அது உங்கள் டிக் குதிக்கவில்லை என்றால், எதுவும் செய்யாது! XO இன் கேம் ஷோக்களுக்கு 100% தணிக்கை செய்யப்படாத அணுகலைப் பெறுவீர்கள் அவள் செக்ஸ் பொம்மைகளுடன் விளையாடுவதைப் பார்த்து, உறுப்பினர்களிடமிருந்து கோரிக்கைகளைப் பெறவும். XO நீங்கள் விரும்பும் எந்த அழுக்கான செயலையும் செய்யும் - அது உங்கள் விஷயம் என்றால் அவள் அதைச் செய்யும்போது உன்னிடம் அழுக்காகப் பேசுவாள். XO தன்னை வெளிப்படுத்திக் கொள்வதில் ஒரு சார்புடையது, எனவே எல்லாமே பச்சையாகவும், இயற்கையாகவும், வெளிப்படையாகவும், மிகவும் திருப்திகரமாகவும் இருக்கும் என்று நீங்கள் எதிர்பார்க்கலாம். சிறந்த அம்சம் என்னவென்றால், நீங்கள் எதையும் செலுத்த வேண்டியதில்லை; XO தனது அனைத்து நிகழ்ச்சிகளையும் இலவச கேமராக்களில் செய்கிறது-பிரீமியம் கணக்குகள் தேவையில்லை! இது எளிதானது, பாதுகாப்பானது மற்றும் வேடிக்கையானது! நான் நேசிக்கிறேன் MFC நீங்கள் எப்போதும் நிறைய ரோஸ்மேரி_எக்ஸ்ஓ ஆபாசத்தைக் கண்டுபிடிப்பதை நம்பலாம், அதைப் பார்ப்பதற்கு பல வழிகள் உள்ளன, அதைப் பயன்படுத்துவது எளிது... அதுபோன்ற ஒன்றை நீங்கள் ஏன் பார்க்க விரும்பவில்லை? இது பாதுகாப்பானது, வேடிக்கையானது, எளிதானது மற்றும் எனக்குத் தெரிந்தவரை - 100% சட்டபூர்வமானது! Rosemary_Xo இன் வெப்கேம் நிகழ்ச்சிகளை நீங்கள் ஏன் பார்க்கக்கூடாது? அவள் இப்போது சிறிது காலமாக அவற்றைச் செய்து வருகிறாள், அவள் என்ன செய்கிறாள் என்று அவளுக்குத் தெரியும், அவை நிச்சயமாக பார்க்கத் தகுந்தவை!
மல்லிகார்ஜுன ராயன் விஜயநகரப் பேரரசின் பேரரசனாக இருந்தவன். சங்கம மரபைச் சேர்ந்தவன். இவன் தனது தந்தையான இரண்டாம் தேவராயனின் மறைவுக்குப் பின் ஆட்சிபீடம் ஏறினான். இரண்டாம் தேவராயன் ஒரு திறமையான பேரரசனாக விளங்கினான். இவனது காலம் சங்கம மரபினரின் பொற்காலம் எனலாம். எனினும், மல்லிகார்ஜுன ராயன் தனது தந்தையைப் போலன்றி திறமையற்றவனாகவும், ஊழல் நிறைந்தவனாகவும் இருந்தான். [1] தொடக்கத்தில் பாமினி சுல்தானகம், ஒரிசாவின் அரசன் ஆகியோரின் தாக்குதல்களைச் சமாளித்துப் பேரரசைக் காத்துக்கொண்டான் எனினும், பின்னர் அவனுக்குத் தொடர்ச்சியான பல தோல்விகள் ஏற்பட்டன. கஜபதிகள், ராஜமுந்திரியை 1454 ஆம் ஆண்டிலும், உதயகிரியையும், சந்திரகிரியையும் 1463 இலும் கைப்பற்றிக் கொண்டனர். 1450 இல் பஹமானி அரசுகள், பேரரசின் பெரும்பாலான பகுதிகளைக் கைப்பற்றிக்கொண்டு தலைநகரத்தையும் அண்மித்தனர். இது ஒருபுறமிருக்கப் போத்துக்கேயர் தென்னிந்தியாவுக்குள் நுழைந்தனர். மேற்குக் கரையில் விஜயநகரத்தின் கட்டுப்பாட்டுக்குள் இருந்த பல துறைமுகங்கள் அவர்களுடைய கட்டுப்பாட்டுக்குள் வந்தன. இந் நிகழ்வுகள் சங்கம மரபின் வீழ்ச்சிக்கு வித்திட்டன. 1465 ஆம் ஆண்டில் மல்லிகார்ஜுன ராயனின் ஒன்றுவிட்ட சகோதரனான இரண்டாம் விருபக்ஷ ராயன் ஆட்சியைக் கைப்பற்றினான். எனினும், இவனும் முன்னவனை விடத் திறமையானவனாக இருக்கவில்லை. மேற்கோள்கள்தொகு ↑ Vijayanagara and Bamini Kingdom 2.37 "https://ta.wikipedia.org/w/index.php?title=மல்லிகார்ஜுன_ராயன்&oldid=2589872" இருந்து மீள்விக்கப்பட்டது
மண் வாரி இறைக்கப்பட்டு புழுதி பறந்து கொண்டிருந்தது. இந்தப் புழுதிகள் எங்கு போய்ப் படியப் போகிறதோ?. மண் அள்ளிப் போடல் நடந்துகொண்டிருந்தது. அந்தப் பெரிய மரத்தின் மறைவிலிருந்துதான் கட்டிகளாயும் மண்களாயும், புழுதியாயும், மண் அள்ளிப் போடல் நடந்து கொண்டிருந்தது. நிலம் கீறும் சத்தம் கேட்டது. என்ன நடக்கிறது? எது நிலம் கீறி மண் அள்ளிப் போடுகிறது? என்பதை என்னால் யூகிக்க முடியவில்லை. கொஞ்ச நேரத்திற்கு பிறகு சாமரப் பருமன் இறகு ஒன்று தெரிய ஆரம்பித்து, எனக்கு ஆச்சரியத்தையும் பயத்தையும் உண்டாக்கி, காட்சி முழுமையாகியது. நானோ என்னை மறைக்கக்கூடிய ஒரு மரத்தின் மறைவிலிருந்து ஒழிந்து பார்த்துக் கொண்டிருந்தபோதுதான் காட்;சி முழுமையாகியது. ஒரு பெரிய ஆறு அடி உயரமுள்ள சேவல். சிவப்பும் மஞ்சளும், கறுப்பும் கலந்த நெருப்புக் கண் கொண்ட சேவல், நிலம் கீறி மண் அள்ளிப் போட்டுக் கொண்டிருந்தது. இ;ந்த மகா பெரிய சேவலைப் பார்த்ததும் எனக்குப் பயம் தொற்றிக்கொண்டது. அதன் ஆபத்து ஏற்படுத்தும் வீச்செல்லைக்கு அப்பால் நான் ஒழிந்து பார்த்துக் கொண்டிருந்தபடியாலும,; நான் காண்பது கனவென்றபடியாலும் எனக்கு பயம் வரவில்லை. அந்த நாள் முதற் கொண்டு இந்தநாள் வரைக்கும் கனவு கலரா? அல்லது கறுப்பு வெள்ளையா? விவாதம் போய்க் கொண்டிருக்கின்றது. நாளை கனவு கலைந்து காலை விழித்தவுடன் கனவு கலர் என்று புறூஃப் பண்ண வேண்டும் என்று கனவிலேயே நினைக்கிறேன். நினைத்துவிட்டு, நிகழ்கால நனவிலேயே நான் கடந்த கால நனவுகளை தொடர்புபடுத்துகிறேனே, அட நான் என்ன பெரிய புத்தி ஜீவியாக இருக்க வேண்டும்? என என்னை எண்ணி பீற்றிக் கொள்கிறேன். ஆனால் விடிந்தால்தான் தெரியும் அது பீற்றலா அல்லது பிதற்றலா என்று. இப்போது மரத்தில் கையை வைத்து மறைந்திருந்து சேவலை பார்க்கிறபோதுதான் இந்த மரம் பற்றிய எண்ணம் ஏற்படுகிறது. முதலைத் தோல் பட்டை, சாதாரண அளவு மரம். இப்போது நான் மறைந்துகொண்டிருந்தது புல் என்று உணர ஆரம்பிக்கிறேன். மகா பெரிய சேவலைக் கண்டவுடன் அதனைச் சார்ந்து நான் மறைய உதவியது புல் என உணர்ந்தேன். வாழ்க்கையை இயக்குவதே சார்பியம். வாழ்க்கையின் ஊற்று, நம்பிக்கை மற்றும் இத்யாதி எல்லாமே சார்பியம். சிறியது எனப்படுவது பெரியதைச் சார்ந்து, குட்டையெனப்படுவது உயரத்தைச் சார்ந்து, திசையோ நிலையைச் சார்ந்து. ஒரு தடவை இடதெனப்படுவது, மறுதடவை வலதெனப்படும். துன்பம் என்பது இன்பத்தைச் சார்ந்து, துன்பத்துள் வாழ்தல் அல்லது வாழ்தலுக்குள் துன்பம் என்பது பற்றிய ஒப்பீடு இன்பத்துள் வாழ்ந்துஃவாழ்தல் அல்லது வாழ்ந்ததற்குள்ஃவாழ்தலுக்குள் இன்பம்பற்றிய சார்பு. உலகமே சார்பும், ஒப்பும். ஐன்ஸ்ரைனுக்கு சாராதது ஒளிமட்டும். ஆனால் இது கூட இன்று சார்பு. ஒன்றைச் சார்ந்து ஒப்பிட ஒன்று இல்லாது அல்லது தெரியவராது இருக்கும் வரை வாழ்தல் பற்றிய பிரச்சினைகளின் தன்மை பழக்கமாகிவிடும். திடிரென இப்போது, சேவல் என்னைப் பார்த்தது. என்னைக் கிலி பற்றியது. மெல்ல மெல்ல என்னை நோக்கி அடியெடுத்து வைத்தது. நானும் பின்னால் ஓடத் தொடங்க, அதுவும் துரத்த தொடங்குகிறது. பாய்ந்து என் மண்டையில் ஒரு கொத்து கொத்தினால் போதும், என் மூளை கலங்கி வெளியே வந்துவிடும். இப்போது சேவல் என்னை வேகமாக நெருங்கிவிட்டது. கடவுளிடம் உதவி கேட்கின்றேன். உதவி வந்துவிட்டதுதான் என்று நினைக்கின்றேன். “டொக்.. டொக்“ என்று கதவு தட்டும் சத்தம் கேட்டது. கனவு கலைந்து எழும்பி, கதவைத் திறந்தேன். என்னை சேவலிடமிருந்து காப்பாற்றியது சசி என்று தெரிந்தது. உடனே நேரத்தைப் பார்த்தேன். காலை 7.55 மணி. எட்டு மணிக்கு இரண்டு பேருக்கும் ஒரு வேலை இருந்தது. நேரந் தவறாமை முக்கியம். உடனே டெனிமை எடுத்து காலுக்குள் நுழைத்து, முன்னாலிருந்த சிங்கில், நின்ற நிலையில் முகம் கழுவிக் கொண்டிருந்தபோதுதான் பல் துலக்க வேண்டும் என்ற ஞாபகம் வந்தது. தூரிகையில் பசை வைத்து ஐந்தாறு தரம் இழுத்துவிட்டு, மேசையில் கிடந்த இரகுநாதையரின் திருக்கணித வாக்கிய பஞ்சாங்கத்தையும், அகராதியையும் பரர்த்துவிட்டு எனது பையுடன் மோட்டார் சைக்கிளில் நானும், சசியும் புறப்படத்தொடங்கம் போது நேரம் 8.00 மணி. கனவு கலரா? கறுப்பு வெள்ளையா?; மனித சஞ்சாரமற்ற மலையடிவார சமநிலத்தில் பரந்து கிடந்த, மஞ்சள் சூரியகாந்திப் பூந்தோட்டத்தையும், அதிலுள்ள மஞ்சள் அரக்கர்களையும், மஞ்சள் விமானத்தையும், நான் எனது ஆறாவது வயதில் கனவில் கண்டதாக நினைத்திருந்த கனவு எனக்கு இன்னும் ஞாபகம் இருக்கிறது கலர்களுடன். ஆனால் அம்புலிமாமா வாசித்துவிட்டு சாப்பிடாமல் படுத்ததன் விளைவாகவும் இருக்கலாம். மண்டை வலிக்கத் தொடங்கிவிட்டது. அறவே மண்டைக்குள் ஞாபகம் வரவில்லை. மிகவும் முயற்சி பண்ணுகிறேன். சேவல் பற்றிய உணர்வு இருந்தது. ஆனால் நிறம் பற்றிய உணர்வு இல்லை. ஆனால் மனம் மஞ்சள், சிவப்பு, கறுப்பு என்று பீற்றத் தொடங்குவது பொய்யெனப்பட்டது. பொய்மை என்ற தளத்தை உறுதியாக்கி அதன் மேல் சூனியத்தை வெளியாக்கி, வாழ்வமைத்து, கட்டடங்கள் கட்டி, பொருளாதாரம், அரசியல் உருவாக்கி அருவத்திற்கு உருவம் கொடுத்தால் சந்தோசப்படுவதுதானே பேதமை மனம். சாப்பாடு என்ன மாதிரி என்று சசி கேட்டான். நான் சாப்பிட வேண்டும் என்று பேசாமல் தலையாட்டினேன். சசி ஏதாவது வாங்கி வர அந்தச் சந்தைக்கருகில் சைக்கிளை விட்டிறங்கி போனான். அவன் ஏதோ பெட்டிக் கடைக்கு தூரத்தில் நுழைந்து கொண்டிருந்தபோது, ஒரு லொறி சந்தைக்கருகில் வந்து நின்றது. உடனே ஒரு நடுத்தர வயதுக்காரன் லொறிக்கருவில் வந்து நின்றான். அதனைத் தொடர்ந்து எங்கிருந்தெல்லாமோ ஏழெட்டுச் சிறுவர்கள் முதலாளி...முதலாளி என்று கத்திக்கொண்டு வந்தார்கள். எல்லோரும் பத்து வயதுக்குள்தான் இருப்பார்கள் போல. இரண்டு பேரைத் தவிர, மற்றவர்கள் ஒருவருக்கும் சட்டையில்லை. மெலிந்த கறுத்த தேகம். எப்போதோ பாடசாலையில் கொடுத்த நீலக் களிசான்கள், சிலரிடத்தில் அர்ணாக்கொடியின் உபயத்தில் தொங்கிக்கொண்டிருந்தன. அப்போது முதலாளி என அழைக்கப்பட்டவன், ஒரு பையனின் தோளில் ஒரு மூடையை வைக்கிறான். அது உருளைக்க்pழங்கு, 15 கிலோகிராம் நிறையுடைய மூடை என்று தெரிந்தது. இன்னும் ஒரு மூடை என்றான் சிறுவன். முதலாளி மீண்டும் வைத்தான். அந்த இரு மூடையுடனேயே அவன் துவளத் தொடங்கினான். இன்னும் ஒரு மூடைக்காக கெஞ்சலுடன் முதலாளியைப் பார்த்தான். முதலாளி மறுத்துவிட்டான். இதற்கிடையில் மற்றச் சிறுவர்களுக்கிடையில், மூட்டை சுமக்க போட்டியேற்பட்டுவிட்டது. முதலாளி எனக்கு.. எனக்கு... முதலாளி... நான்.. நான்... எனச் சத்தங்கள் கேட்டுக் கொண்டிருக்க முதலாளி ஒவ்வொருவரின் தோள்களிலும், மூட்டைகளை வைக்கத் தொடங்கினான். முதலில் கிழங்கு மூட்டை வாங்கிய அந்தச் சிறிய நாட்டாண்மையை பார்க்கிறேன். 25 கிலோ பையன் 30 கிலோவை துவண்டு, துவண்டு தூக்கிக் கொண்டு சென்று கொண்டிருந்தான். முடிவுப் புள்ளியில் மூட்டையை போட்டுவிட்டு, மீண்டும் திரும்பிவந்து, மீண்டும் சுமப்பான் போல. இவர்களின் தாய், தந்தை, சகோதரர்கள் எல்லாம் எங்கே? இன்னும் ஐந்தாறு வருடங்களில் இவர்களிடம் சிறுபிள்ளைப் பருவம் தொலைய, இவர்களும் தொலைந்து போவார்கள். பின் இவர்களின் அடுத்த வாரிசு மூட்டை சுமக்கும். மீணடும் திரும்பிப் பார்க்கிறேன். இப்பொதும், துவண்டு, துவண்டு இந்தப் பையன்கள்; மூட்டை தூக்கிக் கொண்டு போய்க் கொண்டிருந்தார்கள். அவர்கள் சுமப்பது மூட்டையல்ல. அவர்களின் வாழ்க்கையை. இப்போது மோட்டார் சைக்கிள், சந்தையிலிருந்து மேற்குப் பக்கமாக காடும் வயலும் சார்ந்த, இடம் நோக்கி போய்க் கொண்டிருந்தது. பாதையே பள்ளம் படுகுழி. ஒரு தடவை, நான் யானை எலும்புக்கூடு எடுத்துவர காட்டுக்கு ரெக்றரில் சென்றபோது முன் ரயர் கழண்டு பறந்ததும் இந்தப் பாதையில்தான். போவது வயலும் காடும் சார்ந்த இடங்கள் என்றாலும், இங்கேயும் மக்கள் வசிக்கின்றார்கள்தான். இப்போது வெயில் மெல்ல மெல்ல ஏறிக் கொண்டிருந்தது. பாதை நெடுக ஆங்காங்கே மக்கள் புள்ளியாய்த் தெரியத் தொடங்கினார்கள். ஒரு பெண், தலையில் பெரிய சுமையுடன், அந்தப் பாதையில் வயிறு பெருத்து வந்து கொண்டிருந்தாள். கிட்ட வந்தவுடன் அவள் கர்ப்பஸ்த்திரீ என்று தெரிந்தது. வயிறு வெள்ளையும், நீலமும் பாரித்த மாதிரி இருந்தது. எப்படியோ இன்னும் இரு மாதத்தில் பிள்ளை கிடைத்துவிடும். வயிறு கொஞ்சம் பெரிதாகத்தான் இருந்தது. இரட்டைப் பிள்ளை என்றால் ஒரு கொடியை இருவருமா? அல்லது இருவரும் இரு கொடிகளையா பகிர்ந்து கொள்வார்கள்; என்று தெரியவில்லை. இந்த வெயிலில், இப்படி வயிற்றிலும், தலையிலும் சமந்து கொண்டு..., மனதில் இதைவிடப் பாரங்களும் இருந்தால், வயிற்றினதும், தலையினதும் பாரங்கள் ஒரு துரும்பாகும். சுமைகளுடன், அந்தப் பெண்ணின் நடை, நடைமுறைச் சாத்தியமா? தெரியவில்லை. ஆனால் உண்மை. கருவினிலே அடிபடத் தொடங்குவதால் அவர்களின் மக்கள் வீரர்களாகிறார்கள். யாராவது, தனியேயும், கூட்டமாகவும், அந்தப் பாதைகளில் நடந்து வரும்போது, கல், மண் ஏற்றிவரும் உழவு இயந்திரங்கள் அவர்களை ஏற்றிச் சென்று இறக்கிவிடுதல் ஒரு எழுதப்படாத கடமை. ஒரு பையன் தன் தலையுயர சைக்கிளில் பின்பக்கமும், பின் ரயரின் இரு ஒரப் பக்கங்களிலும் மொத்தமாக பெரிய மூன்று கருங்கற்களை கட்டிக் கொண்டு.. இல்லை.. விறகு அடுக்கி கட்டிக் கொண்டு வந்து கொண்டிருந்தான். மிகவும் சிறிய வயது. காலில் செருப்பு இல்லை. சைக்கிளுக்கு கூட மிதியடிக் கட்டைகள் இல்லை. இந்தப் பாலை வனத்தில் இந்த வெறும் பாதத்தால் எப்படி அந்த இரும்புக் கம்பியை மிதித்து இந்தப் பாரத்தை இழுக்கிறானோ தெரியாது. பாதை பள்ளமும், படுகுழியும் ஆனபடியால், மோட்டார் சைக்கிள் அவனுக்கு அருகே வர, அவன் இறங்கி சைக்கிளை உருட்டத் தொடங்கினான். என் கடைசித் தம்பியின் வயதைவிட சின்ன வயது. மடித்துக் கட்டிய சாரன் விறகு பட்டு கிழிந்திருந்தது. முழங்காலுக்கு சற்று கீழே பின் பகுதியும், விறகு கிழிபட்டு, இரத்தம் கசிந்து கொண்டிருந்தது. இது புதிய காயம் இல்லை என்று விளங்கியது. பழைய காயம் தொடர்ந்த தாக்கப் பட்டுக் கொண்டிருக்கிறது என்பதை உணர்ந்தேன். ஆனால், இரத்தம், வலி பற்றிய பிரக்ஞையை முகத்திற் காட்டாமல், சைக்கிளை உருட்டிக் கொண்டிருந்தான். பெருங்குடல் சிறுகுடலைக் கவ்வ வலி பிறக்கும். அவ்வலியை விட இது என்ன பெரிதா? இந்த விறகு அடிமாட்டு விலைக்கு விலைபோய் எரிந்தால்தான், அவன் வீட்டு அடுப்பும் எரியுமாக்கும். அடுப்புடன் சிலவேளைகளில் மனமும்தான். இதே மாதிரி இன்னொருவன், தன் குடும்பத்தை மிதக்க வைக்க, இரு பக்கமும், தோணியின் கொல்லாவைக் கட்டிக் கொணடு; ஓடிக் கொண்டிருந்தான். இன்னொருவன் தன் குடும்பத்திற்கு பசியிலிருந்து வேலி கட்ட காட்டுக் கம்புகளை கட்டி ஓடிக் கொண்டிருந்தான். எங்கே எந்தளவு ஆழம் என்பது பற்றிய பயத்துடன் வேகமாக மணலாற்றை ஆழங்குறைந்த பகுதியூடாக கடந்தோம். அப்போது ஆற்றுக்குள், எங்களுக்கு நேரே அந்த ஆழம் குறைந்த பகுதியால், ஒரு பெண் தன் கைக்குழந்தையுடன் வருவது தெரிந்தது. ஆற்றைக் கடத்தல் நடந்து கொண்டிருந்தது. இரு மாதங்களுக்கு முன், இப்படி ஆற்றைக் கடத்தலில் ஒரு தாயும் பிள்ளையும் மடுவிற்குள் அகப்பட்டு இறந்து போனது எனக்கு இப்போது ஞாபகம் வருகிறது. வெயில், கைக்குழந்தை, தாய், ஆறு, ஆழம் எனக்கு வியப்பாகவும் புதுமையாகவும் இருந்தது. உடைந்த பிரமாண்டமான சிவப்பு பாலத்தின் கீழால், தாண்டி, புதைகின்ற களி;ப்பாதை தாண்டி, குறுக்குப் பாதையில் வேறொரு பாலத்தடி வந்தோம். மோட்டார் சைக்கிளை நிறுத்தி, றெளசரை மடித்து விட்டேன். பாலத்தின் கீழ் நீர் வடிந்தோடிக்கொண்டிருந்தது. பத்து அடிக்கு கீழிருந்த பாலத்தின் கீழ் மெல்ல இறங்கத் தொடங்கினோம். நீர் வடிந்தோடிக் கொண்டிருந்தது என்றாலும் அவ்வளவு வேகமில்லை. நான் முதலில் நீருக்குள் அடியெடுத்து வைத்தேன். கால் சேற்றில் புதையத் தொடங்கியது. சசி கவனம் என்றான். இப்போது நீர் வழிந்தோடும் மதகின் கட்டிலிருந்து ஆற்றிற்குள் இறங்கிவிட்டேன். சசியும்தான். இடுப்பு பிடித்த தண்ணீர். “சசி எங்கே முதலை“ என்றேன். “அந்தப் பக்கம்தான் இருக்க வேணும்” என்று ஒரு திசையைச் சுட்டிக் காட்டினான். இருவரும் சேற்றுக்குள் புதைந்து முதலையைத் தேடி அந்தப் பக்கம் போய்ப் பார்த்தோம். காணவில்லை. அந்த இடத்தில் கிடந்த, நேற்று சூடுபட்டு இறந்த ஆறரையடி முதலை எங்கே?. இங்கேதானே கிடக்க வேண்டும். சசியும் நானும் ஆளுக்கொரு பக்கம் தேடினோம். முதலை எங்கேயும் இல்லை. ஒரு வேளை, வெள்ளம் அடித்துச் சென்றுவிட்டதோ? அல்லது ஆற்றில் நீர்மட்டம் உயர்ந்து பிரப்பம் காட்டுக்குள் முதலையை அடித்துச்சென்றுவிட்டதோ?. நானும் சசியும், பிரப்பம் கிளைகளை பிரித்து உட்செல்ல முயன்றோம். ஆனால் முடியவில்லை. கையில் முட்கள் தைக்கத் தொடங்கியது. முடியவில்லை. முயற்சியைக் கைவிட்டோம். முட்கள் தைக்காமலிருந்தால், உட்சென்றிருப்போம். ஒரு வேளை முதலை அங்கேயும் இல்லாமலிருந்தால், முட்கள் தைத்திருக்கக்கூடாதுபோல இருக்கலாம். ஏனெனில் உள்ளே சென்றது அநாவசியம் எனக் கருதுவோம் என்ற படியால். திடிரென பாலத்தின் மேல், ஒரு கறுத்த, மெல்லிய, நீல களிசான் பையன் சிரித்துக்கொண்டே தேடுவது என்ன என்று கேட்டான். முதலையை என்றேன். “காலையில அங்கதான் படுத்தது, அப்ப வெறெங்காவது போயிருக்கும்” என்றான். என்ன.. நேற்றுச் சுட்ட ஆறரையடி முதலை எப்படிப் படுக்கும் என்றேன். “அண்ணன் நீங்க நிக்கிறது முதல பாளியிலதான்“ என்றான். உடனே முதுகுப் பக்கம் இருந்த சிறுநீரக மேற்பட்டை, அட்ரீனலின் சுரந்து, இதயத் துடிப்பை கூட்டி, “சசி லெற்ஸ் மூவ்“ என்று என்னை கத்த வைத்து, வேகமாக இருவரையும் நாகமரம் இருந்த கரைநோக்கி கரையேற வைத்தது. பாலப் பையனை பார்த்தேன். மறைந்துவிட்டான். பழப் பரிட்சை வைக்க வந்த தேவகுமாரன் போல் தோன்றி சிரித்து மறைந்து விட்டான். கெம்பஸ் மியுசியத்திற்கு ஒரு முதலை மிஸ் பண்ணிவிட்டது கொஞ்சம் கவலையாகத்தான் இருந்தது. நேற்றிருந்த காட்சி நிகழ்காலத்துடன் முறுகித் திரிந்து, பொய்யாகி, எதிர்காலத்துள் சென்றுவிட்டது. யதார்த்தமும், அயதார்த்தமும் சண்டையிட்டு எதிர்காலத்தை துரத்திச் சென்று கொடியாய் என் என் காலைச் சுற்றிப் படர்ந்தன. கொடியை விலக்கி தூரே எறிந்த போதுதான் பெருமூச்சு வந்தது சிறுமூச்சின் ஒலியைவிட சத்தமாக. வேகமாக கரையேறி, நாக மரம் பிடித்து தலை நிமிர்கிறேன். அது கவிதைச் சூழல். சிறுபிள்ளையின் வயிற்றில் வாயால் ஊத, பிள்ளையின் வயிற்றுத் தசையும், எங்களின் கன்னத் தசையும் அலையியக்கமாக மாறி மாறி காற்றினால் ஏறியிறங்குவது போல வயலிலிருந்த நெற் புற்களும், அப்போது கேட்கும் சிறுபிள்ளையின் சிரிப்பு போல், வாய்க்கால் நீரின் ஒட்ட ஒசையும், அதனால் கிடைக்கும் சந்தோசம் போல் தென்றலும் இருந்து சூழலை இனிமையாக்கின. “தம்பி இது பாளி மடு ஆறு” என்றுசொல்லி ஒரு முதியவர், நிறைய முதலைப் பாளிகளை காட்டினார். ”ஒரு நாளைக்கு நீ முதலை தேடி முதலைப் பாளிக்குள்ளேயே இறங்குவாய்” என்று எனது ஆசிரியர் அடிக்கடி சொல்வதை நினைக்க எனக்கு சிரிப்பு வந்தது. இதை சசியிடம் பகிர்ந்;தேன். “நாசமத்துப் போவான், இடியுழுந்து போவான், கண்ணத் திண்டிருவான்” என்று சத்தம் போட்டு, மரியாதை இராமனிடம் நீதிகேட்டு வருவதுபோல் எங்களிடம் ஒரு பெண் வந்தாள். அவளாகவே கதைக்கத் தொடங்கினாள். தன்னுடைய, சேவல் கோழிகளை, கூட்டுடன் திருடன்ஃதிருடர்கள் தூக்கிக்கொண்டு போய்விட்டார்களாம். திருடர்களை யாரென்று கண்டு பிடிப்பாளாம். ஏனென்றால் திருடர்களின் காலடி மண்ணை பத்திரப்படுத்தி வைத்திருக்கிறாளாம். எங்களையும் வந்து பார்க்கச் சொன்னாள். இரண்டு மூன்று காலடிகளைக் காட்டி, பனை ஓலைப் பெட்டியால் மூடத் தொடங்கினாள். அங்கேயும், இங்கேயும் காலடிகளிலிருந்து மண்களை கைபடாதவாறு வெள்ளைச் சீலைக்குள் அள்ளத் தொடங்கினாள். அந்த மண்ணை ஐயரிடம் கொண்டு போனால், ஐயர் சூனியம் செய்வாராம். உடனே திருடர்கள்ஃதிருடன் இறந்து விடுவானாம். அதைவைத்து திருடர்கள் யாரென்று கண்டுபிடித்து விடலாமாம். எனக்கு வியப்பாகவும், மலைப்பாகவும் இருந்தது. அப்போது முதியவர், நாவல் மரத்திற்கு அடியிலிருந்த பற்றைக்குள்ளிருந்து சேவல்கள் இல்லாத கூட்டை மீட்டார். கோழிக் கூட்டைக் காண அவளுக்கு இன்னும் ஆத்திரம் வந்தது. இன்னும் ஏசத் தொடங்கினாள். ஆளரவம் குறைந்த இந்க கானகத்தில் இக் கோழிகள் இவளுக்கு பிடிமானமாக இருக்கலாம். அதுவே அவள் வாழ்தலுக்கான இருப்பையும் அர்த்தப்படுத்தலாம். “கோழிகளுக்கு எவ்வளவு வரும்” என்று கேட்டேன். “எழுநூறு” என்றாள். ஐயருக்கு நாநூறு, ஐநூறு அதை விட மேலயும் போகுமென்றாள். செலவு நன்மை பகுப்பாய்வை சொன்னேன். பழிவாங்க அடம்பிடித்தாள். என்ன! ஆடு காப்பணம், சுமை கூலி முக்காப் பணம் போல். சட்டி சுட்டு கைவிடும் வரை ஒன்றும் இங்கே பிரயோசனமில்லை. ஆற்றைப் பார்க்கிறேன் முதலைப் பாளி என்று தெரியாதவரை முதலையை நிம்மதியாக பாளிக்குள் தேடலாம். முதலையை நாமோ அல்லது நம்மை முதலையோ காணாத வரை. நனவுகளிலேயே காலொடிந்த சேவல்கள் என்னமாய் ஓடுகின்றன, சிறகொடிந்த சேவல்கள் என்னமாய் பறக்கின்றன. சொண்டுடைபட்ட சேவல்கள் என்னமாய் பொறுக்கித் தின்னுகின்றன. தொண்டை நசிந்த சேவல்கள் என்னமாய் கூவுகின்றன. ஒடிந்ததற்கும், உடைந்ததற்கும், நசிந்ததற்கும் எதிராக ஏவாத மந்திரம். என்ன! மந்திரம். இந்த மந்திரம் பரா சைக்கொலஜியா அல்லது மெற்றாபிசிக்ஸா அல்லது இரண்டின் கலவையா? விஞ்ஞானத்தின் வியாபகம் மட்டுப்படுத்தப்பட்டது அவதானிக்க முடியாததை ஆராய முடியாததாலாகும். அவதானிக்க முடிந்த சேவல்களையாவது ஆராய்ந்து கிழித்துத்தான் போட்டார்கள். கழுதைகளைச் சுமக்கும் சுவர்ச் சித்திரப் புத்தகங்கள். வாந்திகள், மலங்கள், அழுக்குகள், விசம் கக்கும் சுயநலமிகள். “அம்மா, கவனம் உங்கட இல்ல எங்கட யாரின்ட கால் மண், தவறுதலாக போகப் போகுது..” என்றேன். அதை நான் நக்கலாக சொல்லவில்லை என்பதை அவள் புரிந்து கொண்டாதாக அவள் முகம் காட்டியது. இடுப்பிலே குறுக்காக சேலை செருகி இப்போது ஒற்றையடிப் பாiதியிலே மந்திரத்தை நோக்கி நடக்கத் தொடங்கினாள். இறகுகள் இல்லாத வாய் பேசாத கோழிகளுக்காக மரியாதை இராமன்கள் பாவம். மனம் இறுகத் தொடங்கியது. இதிலிருந்து தப்ப வேண்டு;ம். கடவுளிடம் உதவி கேட்டுவிட்டு, சசியை அர்த்தபுஷ்டியுடன் பார்க்கின்றேன். “டொக்.. டொக்..” என்று சத்தம் கேட்கத் தொடங்கியது. at October 08, 2011 Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest Labels: சிறுகதை No comments: Post a Comment Newer Post Older Post Home Subscribe to: Post Comments (Atom) பாறைகளில் உறைந்து போன உயிர்ச்சுவடுகள் ஓமானின் வட பகுதியில், அல் பற்றினா தென் மாகாணத்தின் பகுதிகளில் பிரயாணம் செய்து கொண்டிருந்தபோது ஒரு இடம் என்னை மிகக் கவர்வதாய் இருந்தது. அந்... இராட்சத தொட்டாச் சுருங்கி, எங்கள் காலடிக்கு வந்துவிட்ட ஆக்கிரமிக்கத் துடிக்கும் அபாயம். - ஏ.எம். றியாஸ் அகமட் (சிரேஸ்ட விரிவுரையாளர், தென்கிழக்கு பல்கலைக்கழகம், இலங்கை) Mimosa pigra (Giant sensitive plant) (giant mimosa), இ... கடல்களில் உருவாக்கப்படும் ”அமிழ்த்தப்படு வாகனச் சூழற்றொகுதி” சுற்றுச்சூழலுக்கு உகந்ததா? -ஏ.எம். றியாஸ் அகமட், (சிரேஸ்ட விரிவுரையாளர் தென்கிழக்கு பல்கலைக்கழகம், இலங்கை) உலகெங்கும் பாவித்து, ஒதுக்கப்பட்ட அல்ல கழிக்கப்பட்ட தரையிலோட... வெள்ள அனர்த்தங்கள்: கற்றுக்கொள்ள வேண்டியவைகளிலிருந்து கற்கத் தவறிய பாடம். ஏ . எம் . றியாஸ் அகமட் ( சிரேஸ்ட விரிவரையாளர் , கிழக்குப் பல்கலைக்கழகம் , இலங்கை ). உலகின் பலநாடுகளில் பாதிப்பினை ஏற்படுத்தும் ...
இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் அடிலெய்ட் மைதானத்தில் முதலில் டாஸ் வென்ற அணி இதுவரை டி20 போட்டியில் வெற்றி பெறவில்லை என வினோத வரலாற்றை கொண்டுள்ளது. டி20 உலகக்கோப்பைத் தொடரில் இதுவரை அடிலெய்ட் மைதானத்தில் நடைபெற்ற 6 போட்டிகளில் 4 போட்டிகளில் முதலில் பேட்டிங் செய்த அணிகளே வெற்றிபெற்றுள்ளனர். ஆனால் இங்கிலாந்து போன்ற வலிமையான பேட்டிங்கை வைத்துள்ள அணிக்கு இந்திய அணி பீல்டிங்கை தேர்வு செய்தால் அது மிகப்பெரிய பிரச்னையாக உருவெடுக்கும். இதனால் இந்திய அணி டாஸ் வெல்லாமல் தொற்பதே நல்ல முடிவாக இருக்கும். அடிலெய்ட் மைதானத்தின் ஸ்கொயர் பவுண்டரியின் எல்லை குறைவாக இருக்கும் என்பதால், அதற்கேற்ப இந்திய அணியின் திட்டம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி இருக்கும்பட்சத்தில் இங்கிலாந்து பேட்ஸ்மேன்களுக்கு எதிராக அதனை களத்தில் செயல்படுத்தினால் இந்திய அணி சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த ஏதுவாக இருக்கும். இதையும் படிங்க: INDvsENG Live Updates | டி20 உலகக்கோப்பை அரையிறுதி: இந்தியா - இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை! இந்த நிலையில் இந்த போட்டியில் டாஸ் வென்ற அணி தோல்வியடையும் என்பது அடிலெய்ட் மைதானத்தின் வரலாறு. ஆம் இதுவரை இந்த மைதானத்தில் 11 சர்வதேச டி20 போட்டிகள் நடைபெற்று உள்ளது. இதில் 11 ஆட்டங்களிலும் டாஸ் வென்ற தோல்வியை தழுவி உள்ளது என்பது குறிப்பிடதக்கது. இதனால் இந்த போட்டியில் இந்திய அணி டாஸ் தோற்றாலே போட்டியை வெற்றி பெற்றதை போல தான். எதற்கு கூறுகிறோம் என்றால் இங்கிலாந்து அணியில் பட்லர் தொடங்கி கிரிஸ் வோக்ஸ் வரை பேட்டிங்கில் திறமை உடையவர்களாக இருக்கிறார்கள் இதனால் இந்திய அணிக்கு சேசிங் கிடைத்தால் வெற்றி வாய்ப்பு நிறைந்திருக்கும். Published by:Arunkumar A First published: November 10, 2022, 12:41 IST உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம். Tags: India Vs England, T20 World Cup Latest Story Links Trending Tag Latest Story VirudhunagartiruvarurAmericaTamilnadu policeRamnadJobsCoimbatorePudukkottaiCoimbatoreTrichyADMKPM KisanPudukkottaiTenkasiPriya Bhavani Shankar
இலங்கையில் நடக்கும் மனித உரிமை மீறல்களை கண்டிக்கும் ஐ.நா. தீர்மானத்துக்கு மேலும் பல நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. ஆட்சியாளர்களுக்கு எதிராக போராட்டம் நடந்ததை தொடர்ந்து, அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே, பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சே ஆகியோர் பதவி விலகினர். ரணில் விக்ரமசிங்கே அதிபர் ஆன நிலையில், அவரது ஆட்சியை எதிர்த்தும் போராட்டம் நடந்து வருகிறது. போராட்டக்காரர்கள் மீது ராணுவமும், போலீசாரும் தாக்குதல் நடத்தும் நிகழ்வுகள் நடந்து வருகின்றன. இந்தநிலையில், இலங்கையில் நடக்கும் இத்தகைய மனித உரிமை மீறல்களை கண்டிக்கும் தீர்மானத்தை ஜெனீவாவில் உள்ள ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் தாக்கல் செய்ய சில நாடுகள் முடிவு செய்துள்ளன. இங்கிலாந்து, அமெரிக்கா, ஜெர்மனி, கனடா, மலாவி, மான்டனெக்ரோ, வடக்கு மாசிடோனியா ஆகிய நாடுகள் இத்தீர்மானத்தை கொண்டு வருகின்றன. தீர்மானத்தில் கூறப்பட்டு இருப்பதாவது: இலங்கையில் நடக்கும் மனித உரிமை மீறல்களை கண்காணிப்பதை ஐ.நா. மனித உரிமை ஆணையர் தீவிரப்படுத்த வேண்டும். மனித உரிமை மீறல்களுக்கு எதிரான ஆதாரங்களை திரட்டவும், ஆய்வு செய்யவும் மனித உரிமை அமைப்புகளுக்கு அதிகாரம் அளிக்க வேண்டும். எதிர்கால மனித உரிமை மீறல்களுக்கு எதிராக வியூகம் வகுக்க வேண்டும். இலங்கையில் கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து நடக்கும் மனித உரிமை மீறல்கள் கவலை அளிக்கின்றன. போராட்டக்காரர்கள் மீது தாக்குதல், கைது நடவடிக்கை, அரசு ஆதரவாளர்களுக்கு எதிரான வன்முறை, எம்.பி.க்கள் வீடு தீவைப்பு போன்ற நிகழ்வுகள் கவலை அளிக்கினறன. இலங்கையில் நல்லிணக்கத்தை ஊக்குவிக்க வேண்டும். தவறு செய்பவர்களை பொறுப்பேற்க செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்துக்கு மேலும் பல நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. அல்பேனியா, ஆஸ்திரேலியா, ஆஸ்திரியா, பெல்ஜியம், செக்கியா, டென்மார்க், எஸ்தோனியா, பின்லாந்து, பிரான்ஸ், ஐஸ்லாந்து, அயர்லாந்து, லாட்வியா, லிச்டென்ஸ்டின், லிதுவேனியா, லக்சம்பர்க், மார்ஷல் தீவு, நெதர்லாந்து, நியூசிலாந்து, நார்வே, ஸ்லோவாகியா, சுவீடன், துருக்கி ஆகிய நாடுகள் தீர்மானத்துக்கு ஆதரவாக கையெழுத்திட்டுள்ளன. இந்த தீர்மானம் மீது இந்த வாரம் ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் வாக்கெடுப்பு நடைபெறும் என்று தெரிகிறது. இந்த பின்னணியில், இலங்கையில் சர்ச்சையை ஏற்படுத்திய உயர் பாதுகாப்பு மண்டலங்களை அதிபர் ரணில் விக்ரமசிங்கே கலைத்துள்ளார். கொழும்பிலும், புறநகர்களிலும் இந்த மண்டலங்கள் அறிவிக்கப்பட்டு இருந்தன. இதற்கு எதிர்க்கட்சிகளும், மனித உரிமை அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்து வந்தன. இதற்கிடையே, வெளிநாட்டு பயணத்தை முடித்துக்கொண்டு இலங்கை திரும்பிய ரணில் விக்ரமசிங்கே, அந்த மண்டலங்களை கலைக்க உத்தரவிட்டார். இதற்கிடையே, ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில், இலங்கை மனித உரிமை மீறல்களுக்கு எதிரான அறிக்கை விரைவில் தாக்கல் செய்யப்படும் என்று அங்கு வசிக்கும் இலங்கை பிரதிநிதிகளிடம் அந்நாட்டு எம்.பி.க்கள் 2 பேர் உறுதி அளித்துள்ளனர். மக்கள் கருத்து மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.
புதுடில்லி : லஞ்சம் வாங்கியதாக, சி.பி.ஐ., உயரதிகாரியான, ராகேஷ் அஸ்தானா மீது, அந்த அமைப்பு, வழக்கு பதிவு செய்துள்ளது. உளவு அமைப்பான, ‘ரா’ வின், முக்கிய அதிகாரி மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இறைச்சி ஏற்றுமதி செய்யும் பிரபல தொழிலதிபரான, டில்லியைச் சேர்ந்த, மொயின் குரேஷி, பல்வேறு மோசடிகள் செய்ததாக புகார்கள் எழுந்தன. அவர் மீதான மோசடி வழக்குகளை, சி.பி.ஐ., விசாரித்து வந்தது. பல்வேறு அரசு அதிகாரிகளுக்கு, மோயின் குரேஷி, லஞ்சம் கொடுத்ததும் தெரியவந்தது. விலகல் : சி.பி.ஐ., முன்னாள் இயக்குனராக இருந்த, ஏ.பி. சிங், லஞ்சம் வாங்கியதாக புகார் எழுந்தது. இதையடுத்து, யு.பி.எஸ்.சி., எனப்படும் மத்திய பணியாளர் தேர்வாணையத் தலைவர் பதவியில் இருந்து, அவர் விலகினார். அதேபோல், சி.பி.ஐ.,யின், மற்றொரு முன்னாள் இயக்குனராக இருந்த, ரஞ்சித் சின்ஹாவையும் மோயின் குரேஷி பலமுறை சந்தித்ததாக புகார்கள் எழுந்தன. மோயின் குரேஷி தொடர்பான வழக்குகளை, சி.பி.ஐ.,யின் இரண்டாவது உயர் அதிகாரியான, சிறப்பு இயக்குனர், ராகேஷ் அஸ்தானா விசாரித்து வருகிறார். இந்நிலையில், லஞ்சம் வாங்கியதாக, ராகேஷ் அஸ்தானா மீதும், சி.பி.ஐ., தற்போது வழக்கு பதிவு செய்துள்ளது. மோயின் குரேஷியுடன் தொடர்புள்ள, மனோஜ் என்பவனை, சி.பி.ஐ., சமீபத்தில் கைது செய்தது. விசாரணையில், ராகேஷ் அஸ்தானாவுக்கு, 2 கோடி ரூபாயை, குரேஷி லஞ்சமாக கொடுத்தது தெரிய வந்தது. விசாரணை : இதற்கு, உளவு அமைப்பான, ‘ரா’ வின் இரண்டாவது உயர் அதிகாரியான, சாவந்த் குமார் கோயல் உதவியதாகவும் விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து, ராகேஷ் அஸ்தானா மற்றும் சாவந்த் குமார் மீது, லஞ்சம் வாங்கியதாக, சி.பி.ஐ., வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த சம்பவம், சி.பி.ஐ., அதிகாரிகள் இடையேயான அதிகார மோதலை வெளிப்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. சி.பி.ஐ., இயக்குனராக உள்ள, அலோக் வர்மாவுக்கும், ராகேஷ் அஸ்தானாவுக்கும் இடையே நீண்டகாலமாக மோதல் இருந்து வந்துள்ளது.தன் நடவடிக்கைகளில், அலோக் வர்மா தலையிடுவதாக, அஸ்தானா பகிரங்கமாக புகார் கூறியுள்ளார். இந்த நிலையில், அஸ்தானா மீது, லஞ்சம் வாங்கியதாக வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதுகுறித்து, சி.பி.ஐ., வட்டாரங்கள் கூறுகையில்,’இந்த விவகாரங்களில், முதல் கட்ட விசாரணை துவங்கியுள்ளது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் மட்டுமே, துறை ரீதியான நடவடிக்கை எடுக்க முடியும். ‘விசாரணை முடிவடைவதற்கு முன், அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்க முடியாது’ என்றன. Share this page Search for: Categories Categories Select Category cinema (1) entertainment (2) General (516) International (129) News (48) Politics (271) sports (19) Tamil (441) TamilNadu (11) Uncategorized (11) Archives Archives Select Month June 2022 (12) July 2021 (4) September 2020 (58) August 2020 (159) July 2020 (5) April 2020 (13) January 2020 (9) November 2019 (16) October 2019 (39) September 2019 (85) August 2019 (103) July 2019 (111) June 2019 (4) May 2019 (10) April 2019 (28) March 2019 (17) February 2019 (28) January 2019 (54) December 2018 (106) November 2018 (113) October 2018 (137) September 2018 (188) August 2018 (129) July 2018 (1)
வம்சி இயக்கத்தில் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் உருவாகி வரும் படம் வாரிசு. இப்படத்தில் விஜய், ரஷ்மிகா மந்தனா, சரத்குமார் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். மேலும் தில் ராஜு இப்படத்தை தயாரித்து வருகிறார். இந்த சூழலில் தற்போது வாரிசு சூட்டிங் ஸ்பாட்டில் விஜய் கோபப்பட்டு அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளாராம். அதாவது வாரிசு படப்பிடிப்பில் எடுக்கப்படும் புகைப்படங்கள் தொடர்ந்து இணையத்தில் வெளியாகி வருகிறது. இது படகுழுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. Also Read :காலை வாரிவிட்ட பிரின்ஸ் படம்.. உச்சகட்ட பயத்தில் இருக்கும் விஜய், தனுஷ் இதற்காக பல கட்டுப்பாட்டுகள் விதித்தும் மீண்டும் மீண்டும் புகைப்படம் வெளியாகி வருகிறதாம். அதுவும் பாடல் எடுக்கும் காட்சி தான் இணையத்தில் வெளியாகியுள்ளது. இதனால் கேமராவுக்கு பின்னால் ஜிம் பாய்ஸ் நிறைய பேர் இருந்துள்ளனர். இவர்கள் எல்லோரையுமே விஜய் வெளியே அனுப்பி விட்டாராம். அதாவது அவர்கள் வேலையை முடித்துவிட்டு அனுப்பி விடுங்கள், வேறு புதிய ஜிம் பாய்ஸை வைத்துக் கொள்ளலாம் என வாரிசு பட குழுவிடம் விஜய் கூறியுள்ளார். ஏனென்றால் இவர்களால் தான் வாரிசு சூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் வெளியே வந்திருக்கும் என விஜய் சந்தேகப்பட்டு உள்ளார். Also Read :கழுத்தை நெரித்த கடன் தொல்லை.. விஜய்க்காக எதையும் எதிர்பார்க்காமல் காப்பாற்றிவிட்ட மூத்த நடிகர் தீபாவளியன்று வாரிசு படத்தின் முதல் சிங்கிள் வெளியாகும் என ரசிகர்கள் மிகுந்த ஆர்வமுடன் காத்திருந்தனர். ஏனென்றால் வாரிசு படம் பொங்கல் ரிலீஸ்க்கு தான் தயாராகி வருகிறது. இதனால் கண்டிப்பாக படக்குழு முதல் பாடலை வெளியிடும் என எதிர்பார்த்தது. ஆனால் வாரிசு படத்தின் புதிய போஸ்டர் மட்டும் வெளியாகியுள்ளதால் ரசிகர்கள் அதிருப்தியில் உள்ளனர். போஸ்டரில் விஜயின் கெட்டப்பை பார்ப்பதில் ஆக்சன் நிறைந்த படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் மிக விரைவில் வாரிசு படத்தில் அடுத்தடுத்த அப்டேட் வெளியாக காத்திருக்கிறது. Also Read :தீபாவளியன்று சரவெடியாய் வெளிவந்த வாரிசு போஸ்டர்.. சம்பவம் செய்யும் தளபதி Continue Reading Related Topics:சினிமா செய்திகள், தமிழ் சினிமா, தமிழ் படங்கள், தில் ராஜு, நடிகர்கள், நடிகைகள், ரஷ்மிகா மந்தனா, வம்சி, வாரிசு, விஜய்
Thennakam Admin 14th December 2018 Current Affairs – 14 December 20182018-12-14T08:07:22+05:30 நடப்பு நிகழ்வுகள் தமிழகம் 1.தமிழகத்தில் உள்ள வேளாண் சந்தை கமிட்டிகளை நிர்வகிக்க நியமிக்கப்பட்ட தனி அதிகாரிகளின் பதவிக் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. 2.தமிழகத்தில் மாநிலப் பாடத் திட்டத்தில் 2, 7, 10, 12-ஆம் வகுப்புகளுக்கான புதிய பாடத்திட்டம் தயாரிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்தியா 1.மத்தியப் பிரதேச முதல்வராக அந்த மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் மூத்த தலைவர் கமல்நாத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 2.ரஃபேல் ஒப்பந்தத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக குற்றம்சாட்டி நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை கோரிய மனுக்கள் மீது உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீர்ப்பளிக்கவுள்ளது. 3.கடந்த நான்கரை ஆண்டுகளில் விளம்பரங்களுக்காக மத்திய அரசு ரூ.5,200 கோடி செலவு செய்துள்ளதாக நாடாளுமன்றத்தில் மத்திய தகவல், ஒளிபரப்புத் துறை இணையமைச்சர் ராஜ்யவர்த்தன் ரத்தோர் கூறியுள்ளார். 4.ஜனவரி 1-ஆம் தேதி முதல் காப்பீட்டு பிரீமியம் தொகையை செலுத்தியது தொடர்பான தகவல்களை பாலிஸிதாரர்களுக்கு குறுந்தகவல் (SMS) மூலம் காப்பீட்டு நிறுவனங்கள் தெரிவிக்க வேண்டும் என இந்திய காப்பீடு ஒழுங்காற்று மற்றும் வளர்ச்சி ஆணையம் (IRDAI) வெளியிட்டுள்ள புதிய உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 5.இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) ஜிசாட்-7ஏ என்ற தகவல்தொடர்பு செயற்கைக்கோளை வருகிற 19-ஆம் தேதி விண்ணில் செலுத்த உள்ளது. வர்த்தகம் 1.காப்பீட்டு நிறுவனங்களின் மூலதன தேவை விதிமுறைகளில் மாற்றங்களை ஏற்படுத்த இந்திய காப்பீட்டு ஒழுங்காற்று மற்றும் மேம்பாட்டு ஆணையம் (IRDAI) நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. 2.மத்திய அரசு, பொதுத் துறை வங்கிகளுக்கு கூடுதலாக ரூ.30,000 கோடி மூலதனத்தை வழங்க பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 3.இந்தியாவில் விமான பயணம் மேற்கொள்வோரின் எண்ணிக்கை கடந்த 2 ஆண்டுகளில் 20 சதவீதம் அதிகரித்திருப்பதாக மக்களவையில் தெரிவிக்கப்பட்டது. உலகம் 1.இலங்கை நாடாளுமன்றத்தை அதிபர் சிறீசேனா கலைத்து உத்தரவிட்டது செல்லாது; அது சட்டவிரோதம் என்று அந்நாட்டு உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 2.அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷியத் தலையீடு உள்ளிட்ட வழக்குகளில், நாடாளுமன்றத்திடம் உண்மையை மறைத்த குற்றங்களுக்காக, அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் முன்னாள் வழக்குரைஞரும், அவரது அந்தரங்க உதவியாளராக இருந்தவருமான மைக்கேல் கோஹெனுக்கு அந்த நாட்டு நீதிமன்றம் 3ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது. 3.பிரான்ஸ் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜேன் ஈவ்ஸ் லெ டிரியன் 2 நாள் பயணமாக வெள்ளிக்கிழமை இந்தியா வருகிறார். விளையாட்டு 1.உலகக் கோப்பை ஹாக்கி போட்டியின் அரையிறுதிக்கு பெல்ஜியம், நெதர்லாந்து உள்ளிட்டவை தகுதி பெற்றுள்ளன.காலிறுதி ஆட்டத்தில் இந்திய அணி நெதர்லாந்திடம் 1-2 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்து வெளியேறியது. 2.சீனாவின் குவாங்ஷுவில் நடைபெற்று வரும் பாட்மிண்டன் வேர்ல்ட் டூர் பைனல்ஸ் போட்டியில் இந்திய நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து, அபாரமாக ஆடி உலகின் முதல்நிலை வீராங்கனை டை சூ யிங்கின் வெற்றிப்பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
எல்.எல்.சி உரிமையாளர்கள் சட்ட ஆவணங்களில் தவறாக கையொப்பமிடுவதன் மூலம் இந்த நிறுவனத்தின் கட்டமைப்பைப் பயன்படுத்துவதற்கான முதன்மை காரணத்தை - வரையறுக்கப்பட்ட பொறுப்பை - அகற்றுவதற்கான ஆபத்து உள்ளது. நீங்கள் தனிப்பட்ட முறையில் அல்ல, நிறுவனத்திற்கான ஆவணங்கள் மற்றும் ஒப்பந்தங்களில் கையெழுத்திடுகிறீர்கள் என்பதை நீங்கள் தெளிவுபடுத்த வேண்டும். ஒப்பந்தம் ஒரு கட்சிக்கும் எல்.எல்.சிக்கும் இடையில் உள்ளது என்பதை ஒப்பந்த மொழி தெளிவாகக் குறிப்பிட வேண்டும், நீங்கள் தனிப்பட்ட முறையில் அல்ல. நீங்கள் ஒப்பந்தத்தில் கையெழுத்திடும்போது, ​​நிறுவனத்திற்குள் உங்கள் பெயரையும் பொருத்தமான தலைப்பையும் பயன்படுத்தவும். இது ஒரு தனிநபராக அல்லாமல் நிறுவனத்தின் சார்பாக நீங்கள் கையெழுத்திடுகிறீர்கள் என்பதை இது நிறுவுகிறது. உதவிக்குறிப்பு நீங்கள் தனிப்பட்ட முறையில் அல்ல, நிறுவனத்திற்கான ஆவணங்கள் மற்றும் ஒப்பந்தங்களில் கையெழுத்திடுகிறீர்கள் என்பதை நீங்கள் தெளிவுபடுத்த வேண்டும். ஒப்பந்தம் ஒரு தரப்பினருக்கும் எல்.எல்.சிக்கும் இடையில் உள்ளது என்பதை ஒப்பந்தம் தெளிவாகக் குறிப்பிட வேண்டும். எல்.எல்.சி தலைப்புகள் முக்கியம் நிறுவனங்கள் மற்றும் கூட்டாண்மைகளைப் போலவே, எல்.எல்.சி சட்ட ஆவணங்கள் மற்றும் ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் போது தலைப்புகள் முக்கியம். உங்கள் தலைப்பு "உறுப்பினர்" அல்லது "மேலாளர்" என்றால், நீங்கள் ஆவணங்களில் கையொப்பமிடும்போது அதைப் பயன்படுத்த வேண்டும். மற்ற கட்சி உங்கள் கையொப்பத்திலிருந்து குறைந்தது இரண்டு விஷயங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும். முதலாவதாக, ஒப்பந்தங்களில் கையெழுத்திட உங்களுக்கு நிறுவன அதிகாரம் இருப்பதாக மற்ற தரப்பினர் வசதியாக இருக்க வேண்டும். ஒரு உறுப்பினர் அல்லது மேலாளராக, உங்களுக்கு சட்டப்பூர்வமாக அந்த அதிகாரம் உள்ளது. இரண்டாவதாக, நீங்கள் தனிப்பட்ட முறையில் ஆவணத்தில் கையெழுத்திடவில்லை என்பதை மற்ற தரப்பினர் அறிந்திருக்க வேண்டும், ஆனால் எல்.எல்.சி சார்பாக. தவறான கையொப்பங்களுடன் சாத்தியமான சிக்கல்கள் உங்கள் பெயருடன் மட்டுமே நீங்கள் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டுமானால், ஒப்பந்தத்துடன் ஏதேனும் சிக்கலாகிவிட்டால், உங்கள் தனிப்பட்ட சொத்துக்கள் அனைத்தையும் தாக்கும் அபாயம் உள்ளது. எடுத்துக்காட்டாக, நீங்கள் "ஜான் ஸ்மித்" என்று வெறுமனே கையொப்பமிட்டால், நீங்கள் தனிப்பட்ட முறையில் கையொப்பமிட்டுள்ளீர்கள். ஒப்பந்த இயல்புநிலை ஏற்பட்டால், மற்ற தரப்பினர் உங்களுக்கு தனிப்பட்ட முறையில் வழக்குத் தொடரலாம், எல்.எல்.சியின் அதிகாரி அல்லது உரிமையாளராக அல்ல. உங்களிடம் சொத்துக்கள் இருந்தால் - வீடு, கார், வங்கிக் கணக்குகள் - மற்ற கட்சியின் இழப்புக்கு எல்.எல்.சி அல்ல, நீங்கள் பொறுப்பேற்க வேண்டும் என்று நீதிமன்றம் தீர்மானித்தால் அவை ஆபத்தில் இருக்கக்கூடும். சரியான கையொப்பத்தின் கூறுகள் ஒப்பந்தம் எல்.எல்.சியின் பெயரில் உள்ளது என்பது உங்களுக்குத் தெரிந்தவுடன், சரியான கையொப்பத்தில் உங்கள் பெயர், தலைப்பு மற்றும் அமைப்பின் பெயர் ஆகியவை இருக்க வேண்டும். ஒப்பந்தம் ஒரு கட்சிக்கும் எல்.எல்.சிக்கும் இடையில் உள்ளது என்பதை ஒப்பந்தம் குறிப்பிடுகிறது என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள், கூடுதல் கட்சிகள் இல்லாமல் கையொப்பம் தேவையில்லை. சரியான கையொப்பம் "ஜான் ஸ்மித், மேலாளர், ஏபிசி நிறுவனம், எல்எல்சி." நிறுவனங்கள் தங்களுக்காக கையெழுத்திட முடியாது என்பதால், இந்த கையொப்பம் கையெழுத்திடும் நபர், நபரின் தலைப்பு மற்றும் அதிகாரம் மற்றும் ஒப்பந்தக் கட்சியின் பெயர் ஆகியவற்றை அடையாளம் காட்டுகிறது. தனிப்பட்ட மற்றும் நிறுவனத்தின் கையொப்பங்கள் சில நேரங்களில் தேவைப்படும் உங்கள் தனிப்பட்ட மற்றும் நிறுவனத்தின் கையொப்பங்கள் அவசியமான நேரங்கள் உள்ளன. புதிய வணிகங்கள் பெரும்பாலும் தனிப்பட்ட மற்றும் எல்.எல்.சி உத்தரவாதங்களை வழங்க வேண்டும். ஒரு புதிய எல்.எல்.சி சிறு வணிக நிர்வாகத்திடமிருந்தோ அல்லது வணிக கடன் வழங்குநரிடமிருந்தோ கடன் வாங்கினால், அது பொதுவாக எல்.எல்.சி இயக்க வரலாறு இல்லாததால் ஒரு நிறுவனம் மற்றும் தனிப்பட்ட உத்தரவாதத்தை வழங்க வேண்டும். சரியான கையொப்பம், இந்த வழக்கில், "ஜான் ஸ்மித், மேலாளர், ஏபிசி நிறுவனம், எல்எல்சி மற்றும் ஜான் ஸ்மித்."
டிடிவி தினகரனுக்கு எதிராக தீர்மானம்; எடப்பாடிக்கு வாழ்த்து., அ.ம.மு.க-வில் பிளவை ஏற்படுத்திய புகழேந்தி! டிடிவி தினகரன் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்யக்கோரி அ.ம.முக கூட்டத்தில் தீர்மானம் எடுத்துள்ளதாக புகழேந்தி தெரிவித்துள்ளார். Prem Kumar Updated on : 6 October 2019, 11:35 AM டி.டி.வி. தினகரனின் அ.ம.மு.க-விலிருந்து பல முக்கிய நிர்வாகிகள், விலகி மாற்றுக் கட்சிகளில் சேர்ந்த வண்ணம் உள்ளனர். அந்த வரிசையில் அக்கட்சியின் முக்கிய நிர்வாகியான பெங்களூரு புகழேந்தி மாற்றுக் கட்சிக்கு தாவ இருக்கிறார் என்று யூகிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், அ.ம.மு.க-விலிருந்து தினகரன் வெளியேறவேண்டும் எனவும் தனது எம்.எல்.ஏ பதவியை அவர் ராஜினாமா செய்யவேண்டும் எனவும் நேரடி எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளார் புகழேந்தி. அவரின் இந்த பேச்சு அ.ம.மு.க-வினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக, ஜெயலலிதா மரணத்திற்கு பிறகு அ.தி.மு.க-வில் பிளவு ஏற்பட்ட போது, சசிகலா மற்றும் தினகரனுக்கு ஆதரவாகவும் விசுவாசியாகவும் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டவர் புகழேந்தி. அ.தி.மு.க-வில் இருந்து பிரிந்து டி.டி.வி தினகரனின் அ.ம.மு.க-வில் சேர்ந்தார். அதன் பின்பு, தேர்தல் தோல்வி, முக்கிய நிர்வாகிகள் விலகல், தினகரனின் செயல்பாடுகள் என அனைத்துமே புகழேந்திக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அதன் தொடர்ச்சியாக, கடந்த மாதம் கோவை ஹோட்டல் ஒன்றில், தன்னை சந்திக்க வந்த கட்சியினரிடம் மாற்றுக் கட்சிக்கு செல்வது குறித்து புகழேந்தி பேசுவதாக வீடியோ ஒன்று வெளியானது. அ.ம.மு.க-வின் ஐ.டி விங் தான் இந்த வீடியோவை வெளியிட்டதாக கூறப்படுகிறது. இதனால் புகழேந்திக்கு அ.ம.மு.க-வில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. அதன்பின்பு அ.ம.மு.க-வின் முக்கிய நிர்வாகி பட்டியலில் புகழேந்தி பெயர் இல்லாமல் போனது. இதற்கு பதிலளித்த புகழேந்தி “அ.ம.மு.க நான் உருவாக்கியது. அதில் இருந்து என்னை யாரும் நீக்க முடியாது.” என பகிரங்கமாக பேட்டியளித்தார். இந்நிலையில், கோவையில் புகழேந்தி தலைமையில் அ.ம.மு.க-வின் முக்கிய நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எம்.எல்.ஏ பதவியை தினகரன் ராஜினாமா செய்ய வேண்டும் என தீர்மானங்கள் எல்லாமல் நிறைவேற்றியுள்ளனர். மேலும், டி.டி.வி தினகரன் பின்னால் இனி போகமுடியாது; எங்கள் கனவு பொய்த்துபோனது என்றார். அதுமட்டுமல்லாமல், ”இனி தினகரனால் அரசியலில் நிலைக்க கூட முடியாது. இடைத் தேர்தலிலும், உள்ளாட்சி தேர்தலிலும் வெற்றியில்லை என்றால் தினகரன் யாரிடமாவது விலை போய்விடுவார்” என கடுமையாக சாடினார். அதுமட்டுமின்றி, கட்சி மாறும் நிலைமையை வெளிப்படையாக பேசாத புகழேந்தி, தினகரனை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றிய அதேவேளையில், எடப்பாடி பழனிச்சாமிக்கு பாராட்டு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அ.தி.மு.க-விற்கோ, கட்சிக்கோ பாதிப்பு என்றால் சிப்பாய்கள் போன்று நின்று காப்பாற்றுவோம் என்று அ.தி.மு.க-வின் கொள்கை பரப்பு செயலாளராகவே புகழேந்தி மாறியதாக கூறுகின்றனர் அவரது பேச்சைக் கேட்டவர்கள். அ.ம.மு.கவில் ஏற்பட்டிருக்கும் கோஷ்டிகளில் எந்த பக்கம் நிற்பது எனத் தெரியாமல் அக்கட்சியினர் குழம்பிப் போயிருக்கிறார்களாம். ammk edapadi palanisamy TTV Dhinakaran டிடிவி தினகரன் அமமுக புகழேந்தி na pugazhendhi Trending சாவர்க்கர் பரம்பரையில் வந்த தேசமகா பக்தர்களின் ‘குறுகிய பாரதம்’: பாஜகவின் உண்மை முகத்தை தோலுரித்த முரசொலி “இந்தியா அளித்துள்ள உத்தரவாதங்களைக் காப்பாற்ற தமிழ்நாடு உறுதுணையாக இருக்கும்” : முதலமைச்சர் உரை! முகமூடி அணிந்து 100 பெண்களிடம் பாலியல் அத்துமீறல்.. தங்கப்பதக்கம் வென்ற வீரர் அட்டகாசம்:சிக்கியது எப்படி? #FIFA2022 கால்பந்து போட்டிகளையும் முந்தும் தமிழ்நாடு : உலக அரங்கில் ஜொலிக்கும் ‘திராவிட மாடல்’ ! Latest Stories போட்டியின் நடுவே வந்த சேதி: தங்கப்பதக்கத்தை வைத்து தந்தைக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய வீராங்கனை! சாவர்க்கர் பரம்பரையில் வந்த தேசமகா பக்தர்களின் ‘குறுகிய பாரதம்’: பாஜகவின் உண்மை முகத்தை தோலுரித்த முரசொலி
ஒவ்வொரு எஸ்சிஓ சாம்பியனும் கற்றுக் கொள்ள வேண்டிய மறைக்கப்பட்ட பேஸ்புக் மற்றும் ட்விட்டர் தந்திரங்களை செமால்ட் நிபுணர் பகிர்ந்து கொள்கிறார் செமால்ட் நிபுணர் பங்குகள் மறைக்கப்பட்ட பேஸ்புக் மற்றும் ட்விட்டர் தந்திரங்கள் ஒவ்வொரு எஸ்சிஓ சாம்பியனும் கற்றுக்கொள்ள வேண்டும் ஒரு சமூக ஊடக விற்பனையாளருக்கு தினசரி அடிப்படையில் எதிர்கொள்ள நிறைய சவால்கள் உள்ளன. மிகவும் சிக்கலானது என்னவென்றால், அவர் பிரபலமான தலைப்புகளை எவ்வாறு கண்காணிக்கிறார் மற்றும் ஒரு வலைத்தளத்தின் காட்சிகள், பங்குகள், விருப்பங்கள் மற்றும் கருத்துகளின் எண்ணிக்கையை அதிகரிக்க சிறந்த உத்திகளை எவ்வாறு செயல்படுத்துகிறார். சமூக ஊடக விற்பனையாளர்கள் பேஸ்புக் மற்றும் ட்விட்டர் தொடர்பான அனைத்து வகையான தந்திரங்களையும் உதவிக்குறிப்புகளையும் அறிந்திருந்தாலும், செமால்ட்டின் வாடிக்கையாளர் வெற்றி மேலாளரான ஆலிவர் கிங் வழங்கிய பின்வரும் விஷயங்கள் ஆன்லைனில் ஒருபோதும் வெளிப்படுத்தப்படவில்லை. பேஸ்புக்: இணைப்பைச் சேமி பேஸ்புக்கில் ஒரு சேமிப்பு இணைப்பு உள்ளது என்பது உங்களுக்குத் தெரியுமா? உங்கள் உள்ளடக்கத்தின் தரத்தை அதிகரிக்கவும், இந்த சமூக வலைப்பின்னலில் மேலும் மேலும் பார்வையாளர்களை ஈடுபடுத்தவும், நீங்கள் அந்த விருப்பத்தை செயல்படுத்த வேண்டும். இது தளத்தை மேம்படுத்த உங்களுக்கு உதவப் போகிறது மற்றும் மெனு பிரிவில் புதைக்கப்பட்டுள்ளது. ட்விட்டர்: பிடித்தவைகளால் சேமிக்கவும் உங்கள் ட்வீட்களைக் கையாள ஏராளமான வழிகள் உள்ளன, மேலும் இதைப் பற்றி மேலும் அறிய சமூக ஊடக உதவிக்குறிப்புகளை நீங்கள் சரிபார்க்கலாம். ட்விட்டரில், இந்த விருப்பம் உங்கள் பார்வையாளர்களை உருவாக்க உங்களை அனுமதிக்கிறது மற்றும் உங்கள் வலைத்தளத்திற்கு நிறைய பார்வைகளைப் பெறலாம். உங்கள் அட்டைப் படத்தை புத்திசாலித்தனமாகத் தேர்ந்தெடுத்துள்ளீர்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள், அது ட்விட்டரின் தரத்திற்கு ஏற்றது. பேஸ்புக்: மொபைலில் புகைப்படங்களைத் திருத்து உங்களில் பலர் தினசரி புறக்கணிக்கும் விஷயங்களில் இதுவும் ஒன்று. பேஸ்புக்கில், நீங்கள் ஒரு தனிப்பட்ட கணினி அல்லது மொபைல் சாதனத்தைப் பயன்படுத்துகிறீர்களோ இல்லையென்றாலும் புகைப்படங்களைத் திருத்த உதவும் பல விருப்பங்கள் உள்ளன. இந்த விருப்பத்தைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள். வெளிப்படையாக, இது மெனு பிரிவில் மறைக்கப்பட்டுள்ளது, மேலும் இந்த விருப்பத்தை எவ்வாறு செயல்படுத்துவது மற்றும் பயன்படுத்துவது என்பது நம்மில் பெரும்பாலோருக்கு தெரியாது. ஆனால் முழுமையாக செயல்படுத்தப்பட்டதும், நீங்கள் ஏராளமான புகைப்படங்களைத் திருத்தலாம், அவற்றை சமூக ஊடகங்களில் பகிரலாம் மற்றும் சில நொடிகளில் உங்கள் மொபைல் சாதனத்தின் கோப்புறையில் சேமிக்கலாம். ட்விட்டர்: உங்களைப் பின்தொடராதவர்கள் யார் என்பதைக் கண்டறியவும் உங்கள் வணிகத்தைப் பற்றி நீங்கள் ட்வீட் செய்கிறீர்கள் என்றால், ட்விட்டரில் உங்களை யார் பின்தொடர்ந்தார்கள், ஏன் என்று தெரிந்து கொள்வது அவசியம். உண்மை என்னவென்றால், அதை எவ்வாறு சாத்தியமாக்குவது என்பது பெரும்பாலானவர்களுக்குத் தெரியாது, ஆனால் நீங்கள் அதைப் பற்றி எல்லாவற்றையும் அறிய ட்விட்டர் அனலிட்டிக்ஸ் செல்லலாம். இனி உங்களிடமிருந்து கேட்க வேண்டாம் என்று யார் தேர்ந்தெடுத்தார்கள் என்பதைக் கண்டுபிடிப்பதன் மூலம், எந்த வகையான நபர்கள் உங்களை விரும்பவில்லை, ஏன் என்று ஒரு யோசனையைப் பெறலாம். இவை அனைத்தும் உங்கள் தற்போதைய உத்திகளை மதிப்பீடு செய்ய மற்றும் மேம்படுத்த உதவும். உங்களைப் பின்தொடர்பவர்களின் தேவைகளுக்கு ஏற்ப அந்த உத்திகளை நீங்கள் சீரமைத்து அதற்கேற்ப உங்கள் ட்விட்டர் அமைப்புகளை சரிசெய்யலாம். பேஸ்புக்: நட்பு இல்லாமல் பின்தொடரவும் பேஸ்புக்கில் உங்களைப் பின்தொடர்வது யார் தெரியுமா? நேர்மையாகச் சொன்னால், நம்மில் பலருக்கு அவர்களைப் பின்பற்றுபவர்கள் யார் என்று கூட தெரியாது. பேஸ்புக்கில் மறைத்து வைக்கப்பட்டுள்ள இந்த அம்சத்தின் மூலம், ஒவ்வொரு நாளும் உங்கள் இடுகைகளைப் பின்தொடரும் நபர்களின் சுயவிவரங்களைக் காணலாம். உங்கள் முன்னேற்றத்திற்காக யார் இங்கே இருக்கிறார்கள், உங்களுக்காக யார் பிரச்சினைகளை உருவாக்க முடியும் என்பது பற்றிய ஒரு யோசனையை இது வழங்கும். ட்விட்டர்: முடக்கு அம்சம் ட்விட்டரின் முடக்கு அம்சம் நீங்கள் கவனம் செலுத்த வேண்டியது. அங்குதான் என்ன வகையான அம்சங்கள் மற்றும் விருப்பங்களை முடக்கலாம் மற்றும் எதை இணைக்க வேண்டும் என்பதைக் கண்டறியலாம். இவை அனைத்தும் உங்கள் தளத்தின் நம்பகத்தன்மையை ஆன்லைனில் அதிகரிக்கக்கூடும், மேலும் உங்களைப் பின்தொடர்பவர்கள் வாரங்களுக்குப் பிறகு நிச்சயதார்த்தத்தில் ஈடுபடுவார்கள்.
குஜராத் காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவராக இருந்த ஹர்திக் படேல் அக்கட்சியிலிருந்து விலகி இரண்டு வாரங்கள் ஆகிவிட்ட நிலையில், அவர் பாஜகவில் இணைவது உறுதி எனத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. படேல் சமூகத்தினருக்கான இடஒதுக்கீடு கோரி பாடிதார் அனாமத் ஆந்தோலன் சமிதி எனும் பெயரில் படேல் சமூகக் குழுக்கள் இணைந்து நடத்திய போராட்டம், 2015 முதல் 2019 வரை நீடித்தது. இந்தப் போராட்டங்களை வழிநடத்தியதன் மூலம் நம்பிக்கைக்குரிய இளம் தலைவராகக் கருதப்பட்டவர் ஹர்திக் படேல். அவரது செல்வாக்கைப் பார்த்து, காங்கிரஸ் கட்சியில் சேர ராகுல் காந்தி அவருக்கு அழைப்பு விடுத்தார். 2017 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னதாக காங்கிரஸ் கட்சியில் ஹர்திக் படேல் இணைந்தார். அந்தத் தேர்தலில், மொத்தம் உள்ள 182 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 77 இடங்களைக் கைப்பற்றியதன் பின்னணியில் ஹர்திக் படேலின் செல்வாக்கும் ஒரு காரணம் எனக் கருதப்பட்டது. எனினும், கட்சிக்குள் தனக்குப் போதிய முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை எனும் வருத்தம் அவருக்கு இருந்தது. மாநில காங்கிரஸ் தலைமை தன்னை எந்தக் கூட்டத்துக்கும் அழைப்பதில்லை என்றும், எந்த முடிவு குறித்தும் தன்னிடம் ஆலோசிக்கப்படுவதில்லை என்றும் அவர் குற்றம்சாட்டியிருந்தார். பாடிதார் போராட்டத்தால் குஜராத்தில் காங்கிரஸ் கட்சி வலுப்பெற்றதைச் சுட்டிக்காட்டிய அவர், பாஜகவை வீழ்த்துவதில் முனைப்பு காட்டாமல் தங்களுக்குள் காங்கிரஸ் கட்சியினர் மோதிக்கொண்டிருப்பதாகவும் விமர்சித்திருந்தார். ராகுல் காந்தியின் கவனத்துக்குக் கொண்டுசென்ற பின்னரும் இந்தப் பிரச்சினை நீடிப்பதாக அவர் விமர்சித்துவந்தார். கூடவே, பாஜகவைப் புகழ்ந்து பேசி காங்கிரஸ் கட்சியினரை அதிரவைத்தார். அரசியல் ரீதியாக பாஜக எடுத்த முடிவுகளைப் பாராட்டிய அவர், அக்கட்சி வலிமையுடன் இருப்பதால்தான் அப்படியான முடிவுகளைத் துணிந்து எடுக்கிறது என்று புகழ்ந்திருந்தார். இதையடுத்து அவர் கட்சியிலிருந்து வெளியேறுவது உறுதி எனும் ஊகங்கள் எழுந்தன. ஆனால், அவர் கடைசி வரை காங்கிரஸ் தலைமை தனக்குக் கைகொடுக்கும் என்றே கூறிவந்தார். தான் கட்சியிலேயே தொடர்வது குறித்து மத்திய தலைவர்கள் ஒரு முடிவை எட்டுவார்கள் என நம்புவதாகச் சொல்லிவந்தார். எனினும் கட்சியின் தேசியத் தலைமை அவரைக் கண்டுகொள்ளாததால், மே 18-ல் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்தார். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு எழுதிய ராஜினாமா கடிதத்தில், ‘நெருக்கடியான சூழல்களில் நம் தலைவர் வெளிநாட்டில் இருந்தார்’ என ராகுல் காந்தி மீது கடும் விமர்சனத்தையும் அவர் முன்வைத்திருந்தார். ஏசி அறையில் சிக்கன் சாண்ட்விச் கிடைக்கிறதா என்பதில்தான் காங்கிரஸ் உயர்மட்டத் தலைவர்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர் என்றும் அவர் விமர்சித்தார். “சாதி அடிப்படையிலான அரசியலில்தான் குஜராத் காங்கிரஸ் அதிக கவனம் செலுத்துகிறது. இந்தக் கட்சியில் நான் எனது 3 வருடங்களை வீணடித்துவிட்டேன்” என்றும் பொருமினார். இதையடுத்து அவர் பாஜகவில் இணைவார் என்று பேசப்பட்டது. குஜராத்தில் காங்கிரஸுக்கு மாற்றாகத் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள முயலும் ஆம் ஆத்மி கட்சியில் இணைவார் என்றும் ஊகங்கள் வெளியாகின. எனினும், அந்த ஊகங்களை அவர் மறுத்தார். வேறொரு கட்சியில் இணைவது எந்த முடிவையும் எடுக்கவில்லை என்று கூறிவந்த அவர், எந்த முடிவை எடுத்தாலும் மக்களின் நலனை மனதில் கொண்டே அது இருக்கும் என்றும் உறுதியாகத் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக இன்று செய்தி வெளியிட்டிருக்கும் என்டிடிவி ஊடகம், வரும் வியாழன் அன்று ஹர்திக் படேல் பாஜகவில் இணைவார் எனத் தகவல்கள் வெளியாகியிருப்பதாகக் குறிப்பிட்டிருக்கிறது. அவர் பாஜகவில் இணைவது குறித்து கடந்த இரண்டு மாதங்களாகவே பேச்சுவார்த்தை நடந்துவந்ததாகவும் கூறப்படுகிறது. டிசம்பர் மாதம் குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில் ஹர்திக் படேல் பாஜகவில் இணைவது அக்கட்சிக்கு மேலும் வலுசேர்க்கும் எனக் கருதப்படுகிறது.
புதுமுகங்களான சிவஹரி ஹீரோவாகவும், அமீதா ஹீரோயினாகவும் நடிக்கும் புதிய படம் ‘நெஞ்சுக்குள்ள நீ நிறைஞ்சிருக்க’..! ஒளிப்பதிவு – மஞ்சுநாத், இசை – லராய் C. சர்சன், இயக்கம் – சம்பத்குமார் – ராஜேந்திரன், தயாரிப்பு – சம்பத்குமார், சஞ்சய் காந்தி. முதல் படம் இயக்கும் இயக்குநர்கள் பலரும் குறிவைப்பது கமர்ஷியலான வெற்றியை மட்டும்தான். ஆனால் வெகு சிலர் மட்டுமே தாங்கள் இத்தனை காலமாக மனதில் சுமந்து கொண்டிருந்த சமூக பாரத்தை, காலம் காலமாக தொடரும் சமூக அவலத்தை தம் முதல் படத்தின் மூலம் வெளியுலகிற்கு தெரிவித்துவிட மாட்டோமா என உள்ளுக்குள் நெருப்பாக கனன்று கொண்டு இருப்பார்கள். அப்படிப்பட்ட இரட்டையர்கள்தான் ‘நெஞ்சுக்குள்ள நீ நிறைஞ்சிருக்க’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் இயக்குநர்களான சம்பத்குமாரும் கோனூர் ராஜேந்திரனும். இதில் இயக்குநர் சம்பத்குமார் ‘வெங்காயம்’ படத்தில் இணை இயக்குனராக பணியாற்றியவர். இவருடைய நண்பரான கோனூர் ராஜேந்திரன் இந்தப் படத்தில் இவருடன் இணைந்து இயக்குநராக மாறியுள்ளார். தனது கருத்தை சொல்வதற்கு குறுக்கீடுகள் எதுவும் வந்துவிடக் கூடாது என்பதற்காகவே இந்தப்படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவராகவும் மாறியுள்ளார் இயக்குநர் சம்பத்குமார். இந்தப் படம் பற்றி இயக்குநர் சம்பத்குமார் பேசும்போது, “நாட்டில் சட்டங்களும் திட்டங்களும் இயற்றப்பட்டுத்தான் இருக்கின்றன. ஆனால் அதை செயல்படுத்துவதில்தான் சிக்கல் நீடிக்கிறது. இதற்கு அரசாங்கத்தை மட்டும் குறை கூறி பயனில்லை. நாம் ஒவ்வொருவரும் பொறுப்பாளிகள்தான் என்கிற கருத்தை அழுத்தமாக வலியுறுத்தும் படம் இது. ஷங்கர் போன்ற இயக்குநர்கள் இந்த உலகின் பிரம்மாண்டத்தை எல்லாம் திரைப்படத்தில் கொண்டுவந்து மகுடம் சூட்டிவிட்டார்கள். அதேபோல சினிமாவின் அடித்தளமும் யதார்த்தமாக, அமையவேண்டும் என்பதுதான் என் விருப்பம். அதுமட்டுமல்ல, சினிமாவால் சமுதாய சீர்கேடுகளை நூறு சதவீதம் சரி செய்ய முடியும் என்பதை நான் ஆணித்தரமாக நம்புகிறேன். அதுதான் என்னுடைய முதல் படமாக இதை துணிந்து எடுக்க காரணம். இந்தப் படம் முழுக்க முழுக்க மலையும் மலை சார்ந்த பகுதிகளிலும் மட்டுமே படமாக்கப்பட்டுள்ளது. அதற்கு ஒரு காரணமும் உண்டு. எவ்வளவோ நாகரிக வளர்ச்சிகள் வந்துவிட்டதாக நாம் பீற்றிக் கொண்டாலும்கூட, இன்னும் அடிப்படை வசதிகள்கூட சென்றடையாத மக்கள் எவ்வளவோ பேர் இருக்கத்தான் செய்கிறார்கள். அந்த மக்களின் அவலத்தைத்தான் அழகான காதல் கதை மூலம் சொல்ல முயற்சித்திருக்கிறோம். மலை மீது வசிக்கிறான் மாமன் மகன். மலை அடிவாரத்தில் வசிக்கிறாள் அத்தை மகள். இருவருக்கும் காதல். ஆனால் பெண்ணின் தகப்பனோ, மலை மீது இருக்கும் மாப்பிள்ளைக்கு பெண்ணை தர மாட்டேன் என்று, மலையடிவாரத்திலேயே வசதியான மாப்பிள்ளையாக பார்க்கிறார். இதை மீறி இந்த காதல் கை கூடுவதும், இயற்கை ரூபத்தில் விதி அவர்கள் வாழ்வில் விளையாடுவதும்தான் இந்தப்படத்தின் கதை. இது ஒரு உண்மை சம்பவமும்கூட. சேலம் மாவட்டம் மேட்டூர் தாலுகாவை சேர்ந்த பாலமலை என்கிற பகுதியில்தான் சுமார் 60 நாட்களாக இதன் படப்பிடிப்பை நடத்தியிருக்கிறோம். அடிவாரத்தில் இருந்து மலையில் நடந்தே சென்று 14 கி.மீ. தூரத்தில் படப்பிடிப்பு நடத்தியுள்ளார்கள். தலைச் சுமையாக படக் குழுவினர் கொண்டுபோன உணவுப் பொருட்கள் வெகு சீக்கிரம் தீர்ந்துவிட்டன.. அதனால் அங்கே மலையில் வசிப்பவர்கள் சமைப்பதையே நாங்களும் சாப்பிட்டு படப்பிடிப்பை நடத்தியது உண்மையிலேயே எங்களுக்கு ஒரு புதுமையான அனுபவம்…” என்கிறார் சம்பத்குமார். இந்தப் படத்தில் இடம்பெறும் கிளைமாக்ஸ் பாடலில் இந்த பகுதி மக்கள் படும் அவலங்களை படமாக்கியுள்ளார்கள். இதனால் நெகிழ்ந்து போன அந்த பகுதி மக்கள், எங்களது இத்தனை வருட கஷ்டங்களை சினிமாவாக வெளிக்கொண்டு வருகிறீர்கள் என நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்ததோடு, படக் குழுவினருக்கு தேவையான அனைத்து உதவிகளையும் தாங்களே மனமுவந்து செய்து கொடுத்தார்களாம். தற்போது படம் சம்பந்தப்பட்ட வேலைகள் அனைத்தும் முடிவடைந்து ரிலீஸுக்கு தயாராகியுள்ளது. படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள் படத்திற்கு ‘யு’ சான்றிதழ் வழங்கியுள்ளனர். வரும் அக்டோபர் 21-ம் தேதி படத்தினை ரிலீஸ் செய்யும் முயற்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. Our Score actor sivahari actress ameetha director rajendran director sampathkumar nenjukkulla nee nirainjirukka movie nenjukkulla nee nirainjirukka movie previews slider இயக்குநர் சம்பத்குமார் இயக்குநர் ராஜேந்திரன் நடிகர் சிவஹரி நடிகை அமீதா நெஞ்சுக்குள்ள நீ நிறைஞ்சிருக்க முன்னோட்டம் tweet Previous Post'தர்மதுரை' படத்தின் பாடலுக்கு வீடியோ போட்டி அறிவித்திருக்கிறார் தயாரிப்பாளர் சுரேஷ்..! Next Postநண்பர்களின் கதையைச் சொல்லும் 'அதிரன்' திரைப்படம்
நவராத்திரியை ஒட்டி வரக்கூடிய ‘விஜயதசமி’ எனும் அற்புதமான நிகழ்வின் சில துளிகள், காரணங்களுடன். தொடக்கம் - தேவி மகாத்மியத்தில் இருந்து... மன்னர் ஒருவரும், வியாபாரி ஒருவரும், தங்களைச் சுற்றி இருந்தவர்களால் பக்குவமாக ஏமாற்றப்பட்டு, ஒதுக்கப்பட்டார்கள். இருவருமாக, மேதஸ் எனும் முனிவரைச் சந்தித்து, தங்கள் நிலைமையை விவரித்தார்கள். அத்துடன், ‘‘முனிவரே! வேண்டாம் என்று எங்களை ஒதுக்கிய அந்த உறவினர்களை மறக்கவும் முடியவில்லை, ஒதுக்கவும் முடியவில்லை. தவியாய் தவிக்கிறோம். இந்நிலையில் இருந்து விடுபட்டு, நிம்மதியை அடைய என்ன வழி?’’ எனக் கேட்டார்கள். அப்போது அங்கிருந்த மரத்தின் மேலே, ஒரு தாய்ப்பறவை தன் குஞ்சுகளைச் சிறகுகளால் அணைத்து, மிகவும் ஆர்வமாய் இரை ஊட்டிக் கொண்டிருந்தது. வியாபாரிக்கும் அரசருக்கும் அதைச் சுட்டிக் காட்டிய முனிவர், ‘‘மோகத்தினால் தன் குஞ்சுகளின் வாயில் இரை ஊட்டும், இப்பறவையைப் பாருங்கள்! காமம், பசி, இன்பம், துன்பம்’’ என்று இவைகளுக்கு உண்டானவை அனைத்தும் மனிதர்களுக்கும் உள்ளன. மனைவி, மக்கள், உறவினர்கள் என அனைவருக்கும், ‘‘இவர்கள் ஏதாவது ஒரு விதத்தில் நமக்கு உதவுவார்கள்’’ என்ற எதிர் பார்ப்பிலேயே, ஆணவத்தோடும் மோகத்தோடும் மனிதர்கள் செயல்படுகிறார்கள். அதன் காரணமாகவே, துயரங்கள் பெருகுகின்றன. அதிலிருந்து தப்பி, அமைதி காண வேண்டுமானால், அம்பிகையை வழிபடுவதைத் தவிர வேறு வழியில்லை’’ என்று சொல்லி, அதற்கான வழியையும் உபதேசித்தார். அதன் படியே செயல்பட்டு, அரசரும் வியாபாரியும் நன்னிலை பெற்று அமைதி அடைந்தார்கள். இக்கதையில் வரும் அரசரும் வியாபாரியும், வேறு யாரோ அல்ல; நாம் தான். ஒன்று, அரசரைப்போல உயர்ந்த பதவியில் இருந்து கொண்டு, அடுத்தவர்களை ஆட்டிப்படைக்கிறோம். நம்முடன் இருப்பவர்கள், நம்மை ஆட்டிப் படைக்கிறார்கள். துன்பம் பெருகுகிறது. அடுத்தது, வியாபாரி! நாம் அனைவருமே வியாபாரிகள்தான். வியாபாரிகள் பொருளை விற்பார்கள். நாம், நம் உழைப்பை விற்கிறோம்; பணம் பெறுகிறோம். அறிவை விற்கிறோம்; பணம் பெறுகிறோம். அவ்வளவுதான்! அரசரைப் போல உயர் பதவியில் இருந்தாலும் சரி, வியாபாரி போல விற்பனையாளராக இருந்தாலும் சரி! சுற்றி இருப்பவர்களால், செயல்களால், துன்பம் விளைகிறது. அனைவருக்கும் பொதுவானது இது. இதில் இருந்து தப்பி, அமைதி காண வேண்டுமானால், அம்பாளை வழிபட வேண்டும். இதற்கு அடிப்படையாகவே, மூன்று அம்பிகைகளைப் பற்றி, 3 அசுர சம்காரங்களைச் சொல்லி, வழி காட்டுகிறது தேவி மகாத்மியம். நவராத்திரியில் முதல் மூன்று நாட்கள் 1) துர்கா வழிபாடு படைக்கும் கடவுளான பிரம்மதேவரை, மது - கைடபர் எனும் இரு அசுரர் கொல்ல முயற்சி செய்தார்கள். அவர்களைக் கொன்று பிரம்மதேவரைக் காத்தாள் அம்பிகை. இந்த அம்பிகையை ‘மதுகைடப சம்ஹாரிணி’ எனப்போற்றித் துதித்து வழிபடுகிறோம். 2) இரண்டாவது மூன்று நாட்கள் மகாலட்சுமி என்ற பெயரில், ‘மகிஷாசுரமர்தனி’ வழிபாடு. மகிஷன் எனும் அசுரனை மாய்த்ததால், மகிஷாசுரமர்தனி எனப்படுகிறாள். மகிஷன் எனும் அசுரன் பெருத்த-கொழுத்த எருமை வடிவு கொண்டவன். பலப்பல வடிவங்கள் எடுக்கும் சக்தி படைத்தவன். இப்படிப்பட்ட மகிஷனால் துன்புறுத்தப்பட்ட தேவர்கள் வேண்ட, அம்பிகை மகிஷனை மாய்த்தாள். (மகிஷன் கதைச்சுருக்கம்) பெருத்த - கொழுத்த எருமை வடிவம் என்பது, அறியாமையின் ஒட்டு மொத்த வடிவத்தைக் குறிக்கும். அதை ஏன் எருமை எனக் குறிப்பிட வேண்டும்? உதாரணமாக, சென்னை அண்ணாசாலை போன்ற சாலை நடுவில், எருமை படுத்துக் கிடக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அது எதுவும் செய்யாவிட்டாலும், செயல்படாமல் இருந்தாலும், அந்த எருமை அங்கே பெரும் இடையூறாகத்தான் இருக்கும். அதைக் கிளப்ப முயற்சி செய்கிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள்! விருட்டென்று எழுந்து, வாலை உயரே தூக்கி, நான்கு கால்களையும் பரப்பி, கொம்புகளை நிமிர்த்தி ஓடத் தொடங்கினால் என்ன ஆகும்? சுற்றி இருப்பவர்கள் சிதறி ஓட மாட்டார்களா? அந்த எருமை செயல்படாவிட்டாலும் பிரச்னை. செயல்பட்டாலும் பிரச்னை. இதன் காரணமாகவே அறியாமையை அசுரனாகச்சொல்லி, எருமையாகச் சொல்லப்பட்டது. அறியாமை நீக்கம் வேண்டுமானால், அம்பிகையை வழிபட வேண்டும். (3) மூன்றாவது மூன்று நாட்கள் மகா சரஸ்வதி எனும் பெயரில், சும்ப - நிசும்பர்களைச் சங்காரம் செய்த அம்பாளை வழிபடுகிறோம். சும்ப - நிசும்பர்களில், சும்பன் என்பவன் வெறும் உடல் பலம் மட்டுமே மிகுந்தவன். அறிவின் செயல்பாடு - அணு அளவும் இல்லாதவன். நிசும்பன் என்பவன் வெறும் அறிவு பலம் மட்டுமே மிகுந்தவன். உடல் பலம் என்பது அணு அளவும் இல்லாதவன். இந்த இருவரும் சேர்ந்து நல்லவர்களுக்குத் துன்பம் உண்டாக்க, இவர்களை சங்காரம் செய்து நல்லோரைக் காத்தாள் அம்பிகை. இவ்வளவு நேரம் பார்த்த, தீமைகளில் இருந்து விடுதலை அளித்து, கட்டிக் காப்பாற்றுபவள் அம்பிகை என்பதைத் தெளிவாக உணர்வதே - உணர்ந்து செயல்படுவதே விஜயதசமி. தசமி என்பது 10-ஐக் குறிக்கும். நாம் அனைவரும் அந்த 10-க்கு அடிமைப்பட்டவர்கள்தான். அந்த 10-என்பது, ஞான இந்திரியங்கள் 5; கர்ம இந்திரியங்கள் 5 - என்பவை. அறிவுடன் செயல்படுபவை, செயல்பட வேண்டியவை ஞான இந்திரியங்கள். கண், காது, மூக்கு, நாக்கு, உடம்பு என்பவையே அவை. அறிவற்ற நிலையில் செயல்படுபவை, கை, கால், மலவழி, ஜல வழி, வாய் என்பவை கர்ம இந்திரியங்கள். நம்மை ஆட்டிப்படைக்கும் இந்தப் பத்தையும் வென்றால் ஒழிய, அமைதி - நிம்மதி என்பது இருக்காது. அவ்வாறு வெல்வதே, ஜய தசமி. அவை மறுபடியும் தலையெடுத்து நம்மைத் தாக்காமல் இருப்பதே, விஜய தசமி. அதை அருள்பவள் அம்பிகை. இதைக் குறிக்குமுகமாகவே, நம் ஆலயங்களில் விஜய தசமி அன்று, அம்பிகை திருவீதி உலா வந்து, ஊர் எல்லை செல்வாள். அங்கே ‘அம்பு போடுதல்’ எனும் நிகழ்ச்சி நடைபெறும். அம்பிகையைப் பூஜிக்கும் குருக்கள், அம்பாள் திருக்கரத்தில் இருந்து வில்லை எடுத்து, திசைகள் எட்டிலும் அம்பு போட்டு, மேல் - கீழ் என (2) அம்பு போட்டு, ‘‘அம்மா! எல்லோரையும் காப்பாற்று!’’ என வேண்டுவார். அதாவது பத்துத் திசைகளிலும் இருந்து விளையும் தீமைகளில் இருந்து காப்பாற்ற வேண்டுவதாக ஐதீகம். இதை, திருச்சி அருகே உள்ள கம்பரசன்பேட்டை எனும் கிராமத்தில், அம்பு போடுவதைப் பல ஆண்டுகள் அடியேன் பார்த்து இருக்கிறேன். அம்பிகை நமக்கு ‘ஜய தசமி’ அளித்து, ‘விஜய தசமி’ யாகவும் அருளுமாறு வேண்டுவோம்!
இந்திய கடற்படையின் 15பி திட்டத்தின் இரண்டாவது கப்பலான மோர்முகாவ், கோவா விடுதலை நாளன்று கடல் சோதனைகளுக்கு புறப்பட்டது Posted On: 19 DEC 2021 1:55PM by PIB Chennai 2022-ம் ஆண்டின் நடுவில் செயல்பாடுகளை தொடங்க திட்டமிடப்பட்ட பி15பி (P15B) பிரிவை சேர்ந்த இந்திய கடற்படையின் உள்நாட்டிலேயே கட்டமைக்கப்படும் இரண்டாவது ரகசிய அழிக்கும் கப்பலான மோர்முகாவ் இன்று தனது முதல் கடல் பயணத்தை மேற்கொண்டது. போர்ச்சுகீசிய ஆட்சியில் இருந்து கோவா விடுதலை பெற்று 60 ஆண்டுகள் நிறைவடைந்ததை இன்று நாடு கொண்டாடுவதால், கப்பல் கடலுக்குச் செல்ல மிகவும் பொருத்தமான தேதியாக டிசம்பர் 19 அமைந்துள்ளது. விடுதலையில் இந்திய கடற்படை முக்கிய பங்கு வகித்தது குறிப்பிடத்தக்கது. கப்பலின் பெயரை கடல்சார் மாநிலமான கோவாவுக்கு அர்ப்பணிப்பது இந்திய கடற்படைக்கும் கோவா மக்களுக்கும் இடையிலான பிணைப்பை வலுவாக்குவதோடு, தேசத்தை கட்டமைப்பதில் கடற்படையின் முக்கிய பங்களிப்புக்கு அடையாளமாக திகழும். 15பி வகை அழிக்கும் கப்பல்கள் கட்டமைக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக மசகான் டாக் ஷிப்பில்டர்ஸ் லிமிடெட்டால் மோர்முகாவ் கட்டமைக்கப்படுகிறது. பல முக்கிய உள்நாட்டு தொழில்நுட்பங்களை உள்ளடக்கிய இந்த கப்பல் தற்சார்பு இந்தியாவுக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக திகழ்கிறது. 'மேக் இன் இந்தியா' முயற்சிக்கு உத்வேகத்தையும் ஊக்கத்தையும் இக்கப்பல் அளித்துள்ளது மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1783193 ************* (Release ID: 1783233) Visitor Counter : 162 Read this release in: English , Urdu , Hindi , Marathi பாதுகாப்பு அமைச்சகம் இந்திய கடற்படையின் 15பி திட்டத்தின் இரண்டாவது கப்பலான மோர்முகாவ், கோவா விடுதலை நாளன்று கடல் சோதனைகளுக்கு புறப்பட்டது Posted On: 19 DEC 2021 1:55PM by PIB Chennai 2022-ம் ஆண்டின் நடுவில் செயல்பாடுகளை தொடங்க திட்டமிடப்பட்ட பி15பி (P15B) பிரிவை சேர்ந்த இந்திய கடற்படையின் உள்நாட்டிலேயே கட்டமைக்கப்படும் இரண்டாவது ரகசிய அழிக்கும் கப்பலான மோர்முகாவ் இன்று தனது முதல் கடல் பயணத்தை மேற்கொண்டது. போர்ச்சுகீசிய ஆட்சியில் இருந்து கோவா விடுதலை பெற்று 60 ஆண்டுகள் நிறைவடைந்ததை இன்று நாடு கொண்டாடுவதால், கப்பல் கடலுக்குச் செல்ல மிகவும் பொருத்தமான தேதியாக டிசம்பர் 19 அமைந்துள்ளது. விடுதலையில் இந்திய கடற்படை முக்கிய பங்கு வகித்தது குறிப்பிடத்தக்கது. கப்பலின் பெயரை கடல்சார் மாநிலமான கோவாவுக்கு அர்ப்பணிப்பது இந்திய கடற்படைக்கும் கோவா மக்களுக்கும் இடையிலான பிணைப்பை வலுவாக்குவதோடு, தேசத்தை கட்டமைப்பதில் கடற்படையின் முக்கிய பங்களிப்புக்கு அடையாளமாக திகழும். 15பி வகை அழிக்கும் கப்பல்கள் கட்டமைக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக மசகான் டாக் ஷிப்பில்டர்ஸ் லிமிடெட்டால் மோர்முகாவ் கட்டமைக்கப்படுகிறது. பல முக்கிய உள்நாட்டு தொழில்நுட்பங்களை உள்ளடக்கிய இந்த கப்பல் தற்சார்பு இந்தியாவுக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக திகழ்கிறது. 'மேக் இன் இந்தியா' முயற்சிக்கு உத்வேகத்தையும் ஊக்கத்தையும் இக்கப்பல் அளித்துள்ளது மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1783193
சென்னை நகர் மற்றும புறநகர் பகுதியில் நில மதிப்பு வின்னை ஏட்டியுள்ளது. இதனால் கடந்த பல வருடக்ளாகவே பலபிரச்சனைகள் எழுந்து வருகின்றன. கட்டபஞ்சாயத்து ரவுடிகளுக்குள் மோதல் என பணத்திற்காக பல விரும்பதகாத சம்பவங்கள் நடந்து வருகின்றன. இதணிடையே இன்று கோவில் நிலத்தை ஆக்கிரமித்து பாதை அமைத்ததால் ஏற்பட்ட கோஷ்டி மோதலில் எம்.எல்.ஏ.வின் தந்தை மற்றும் உறவினருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. பதிலுக்கு துப்பாக்கியால் சுட்டதில் கீரை வியாபாரி ஒருவர் படுகாயம் அடைந்தார் செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. இதயவர்மன். இவருடைய தந்தை லட்சுமிபதி. முன்னாள் ஒன்றிய குழுத்தலைவரான இவர், திருப்போரூரை அடுத்த செங்காடு கிராமத்தில் வசித்து வருகிறார். அதே ஊரை சேர்ந்த இமயம்குமார் குடும்பத்தினருக்கும், எம்.எல்.ஏ. இதயவர்மன் குடும்பத்தினருக்கும் நிலம் வாங்குவது விற்பதில் முன்விரோதம் இருந்து வந்தது. செங்காடு கிராமத்தில் உள்ள சங்கோதி அம்மன் கோவிலுக்கு சொந்தமான நிலம் அருகே உள்ள 350 ஏக்கர் நிலத்தை சென்னையை சேர்ந்தவர்களுக்கு இமயம்குமார் வாங்கி கொடுத்துள்ளார். அந்த நிலத்துக்கு செல்ல அருகில் உள்ள கோவில் நிலத்தை ஆக்கிரமித்து சாலை அமைத்ததாக தெரிகிறது. இதற்கு எம்.எல்.ஏ. தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். துப்பாக்கி சூடு இந்த நிலையில் அந்த நிலத்திற்கு இமயம்குமார், சென்னையை சேர்ந்த ரவுடிகளுடன் சென்றுள்ளார். அங்கு எம்.எல்.ஏ.வின் தந்தை லட்சுமிபதி இருந்தார். அப்போது நிலம் தொடர்பாக அவர்கள் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது இமயம் குமாருடன் வந்த ரவுடி கும்பல் திடீரென எம்.எல்.ஏ.வின் தந்தை லட்சுமிபதி, அவரது உறவினர் குருநாதன் ஆகியோரை அரிவாளால் வெட்டினர். பதிலுக்கு லட்சுமிபதி, தனது பாதுகாப்புக்காக வைத்திருந்த துப்பாக்கியால் இமயம் குமாரின் காரை நோக்கி சுட்டார்.மேலும் இந்த மோதல் குறித்து கேள்விப்பட்டு அங்கு வந்த எம்எல்ஏ இதயவர்மன் தான் பாதுகாப்பிற்கு வைத்திருந்த கைத்துப்பாகியால் சுட்டதில் எதிர் தரப்பினர் காரில் குண்டு பாய்ந்தது. சும்மா போன கீரை வியாபாரி படுகாயம் அந்த வழியாக சென்ற தையூரை சேர்ந்த கீரை வியாபாரி சீனிவாசன் மீது ஒரு குண்டு பாய்ந்தது. இதில் படுகாயம் அடைந்த அவர், சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். மேலும் அரிவாளால் வெட்டப்பட்டதால் படுகாயம் அடைந்த லட்சுமிபதி, குருநாதன் ஆகியோர் கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இதேபோன்று படுகாயம் அடைந்த இமயம் குமார் தரப்பினரும் சிகிச்சைக்காக சென்னை தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இரு தரப்பினர் மோதலில் 3 இருசக்கர வாகனங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. இது குறித்து தகவல் அறிந்ததும் செங்கல்பட்டு போலீஸ் சூப்பிரண்டு கண்ணன் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டார். லட்சுமிபதி வைத்திருப்பது உரிமம் பெற்ற துப்பாக்கியா? என்று விசாரணை நடத்தினார். மேலும் எம்எல்ஏ இதயவர்மனையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர். பதற்றத்தை தவிர்க்க அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.
பேராசிரியர் சமீர் அமின் (1931-2018)‘நான் அறிந்த மூன்றாம் உலக நாட்டு அறிவு ஜீவிகளின் வரிசையில் மிகச் சிறந்த தீர்க்க தரிசனமும், தளராத ஈடுபாடும், மன உறுதியும் நிறைந்த ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளிகளில் முதன்மையானவர் சமீர் அமின் ’ என்று மார்க்சிய பொருளாதார அறிஞர் பிரபாத் பட்நாயக் தெரிவிக்கிறார். எகிப்து நாட்டின் தலைநகர் கெய்ரோவில் 1931 ஆம் ஆண்டு பிறந்த சமீர் அமின் கடந்த ஆகஸ்ட் 12, 2018 அன்று உடல் நலக் குறைவின் காரணமாக மறைந்தார் என்ற செய்தி மார்க்சிய சிந்தனையாளர்கள் வட்டத்தில் பேரதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.எகிப்தில் பிறந்து பள்ளிக்கல்வியைத் தொடர்ந்த அவர் மேல்நிலைப் பள்ளிக் காலத்திலேயே தன்னை ஒரு கம்யூனிஸ்டாக வரித்துக்கொண்டார். பின்னர் எகிப்து கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினரானார். அன்று முதல் இறக்கும் தருவாய் வரை அவர் ஒரு கம்யூனிஸ்டாகவே திகழ்ந்தார். 1952 ஆம் ஆண்டு பிரான்சில் அரசியல் விஞ்ஞானத்தில் பட்டமும், 1956ல் புள்ளியியலில் பட்டமும், 1957 ஆம் ஆண்டு பொருளாதாரத்தில் முனைவர் பட்டமும் பெற்றார். பின்னர் பொருளாதாரப் பேராசிரியராக பாரிசிலும், ஆப்பிரிக்க பல்கலைக் கழகங்களிலும் பணியாற்றினார்.கெய்ரோவில் உள்ள பொருளாதார நிர்வாக கல்வி நிறுவனத்தில் 1960 ஆம் ஆண்டு பணியாற்றிய பின்னர் 1960 – 63 காலத்தில் மாலி நாட்டின் திட்ட அமைச்சக ஆலோசகர் பணியில் திறம்பட செயல்பட்டார். பாரிசில் இருந்த காலத்தில் பிரெஞ்சு கம்யூனிஸ்ட் (பி.சி.எப்) கட்சியில் இணைந்து பணியாற்றினார். செனகல் நாட்டின் டாக்கர் நகரில் உள்ள அரசியல் பல்கலைக் கழகத்திலும் சில காலம் பேராசிரியராகப் பணி புரிந்தார். ஆப்ரிக்காவுக்கான சமூக விஞ்ஞான வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சி கவுன்சிலை (CODESRIA) உருவாக்கியவர்களில் இவரும் ஒருவர். ஆப்பிரிக்காவின் சுற்றுப்புறச்சூழல் வளர்ச்சி (ENDA) நிறுவனத்தையும் அவர் உருவாக்கினார்.1980ஆம் ஆண்டில் டாக்கர் நகரைத் தலைமையகமாகக் கொண்டு செயலாற்றிய மூன்றாம் உலக நாடுகளின் மன்றம் (Third World Forum) அமைப்பின் நிறுவனராக பல காலம் செயல்பட்டார். சுதந்திர சிந்தனைக்கான ரஷ்ட் விருது 2009ஆம் ஆண்டு அவருக்கு வழங்கப்பட்டது. உலகப் புகழ்பெற்ற Monthly Review என்ற சோசலிச பத்திரிக்கையில் ஆரம்பகாலம் முதலே பல கட்டுரைகளை எழுதத் தொடங்கி அந்தப் பங்களிப்பைச் இறுதிவரை செய்தார். மாற்றுக் கொள்கைகளுக்கான உலக மன்றம் (World’s Forum for Alternatives) என்ற அமைப்பில் 1997 முதல் தலைவராக செயல்பட்டார்.எகிப்திய தந்தைக்கும், பிரெஞ்சு அன்னைக்கும் மகனாகப் பிறந்த சமீர் அமின் மிகச் சுலபமாக பிரெஞ்சு, அரபி மற்றும் ஆங்கில மொழிகளில் விற்பன்னராகத் திகழ்ந்தார். அவர் 1970 முதல் இறுதி வரை 30க்கும் மேற்பட்ட அரிய நூல்களை எழுதி உள்ளார். உலகளாவிய அளவில் மூலதனச் சேர்க்கை (1974), சமனற்ற வளர்ச்சி (1976), ஏகாதிபத்தியமும் சமனற்ற வளர்ச்சியும் (1979), உலகமயமாக்கல் காலத்தில் முதலாளித்துவம் (1997), காலாவதியாகிப்போன மூலதனம் (1998), ஐரோப்பிய மைய இயல் (2005), முன்னோக்கிய பார்வையில் ஒரு வாழ்க்கை (2006), ஒரு நூற்றாண்டுக்குப் பின் புரட்சி (ரஷ்ய புரட்சி 1917 – 2017) ஆகிய நூல்கள் அவற்றில் மிகவும் புகழ் பெற்றவை. https://ia801502.us.archive.org/5/items/MarxistTamilSep2018/Tribute%20to%20Samir%20Amin%20%28Tamil%29%20Arumuga%20Nayinar%20-%20Yazhini.mp3 (குரல்: யாழினி) மரணம் என்பது மனிதனின் சமூகம் சார்ந்த பங்களிப்பில் இருந்து ஒருவரை அத்தனை எளிதாகப் பிரித்துவிட முடிவதில்லை. சமீர் அமின் என்ற மார்க்சிய சிந்தனையாளர், பொருளாதார பேரறிஞர், ஏகாதிபத்திய எதிர்ப்பு செயல்பாட்டாளர், மூன்றாம் உலக நாடுகளுக்கான போராளி, ஆகஸ்ட் 12, 2018 அன்றோடு மறைந்துவிட்ட நிலையில் அவரது பங்களிப்புகள் முற்றுப்பெறவில்லை அல்லது மறைந்து விடவில்லை. சமூகம் சார்ந்த அனைத்துத் துறைகளிலும் அவரது அறிவார்ந்த பங்களிப்பு உற்று நோக்கப்படுவதாகவும், மேலும் செழுமைப்படுத்தி உபயோகப்படுத்தவேண்டிய ஆயுதமாகவும் விளங்குகிறது. சுரண்டலுக்கு எதிராகத் திரளும் மக்களுடன் சமீர் இன்றைக்கும் கைகோர்த்து நடக்கிறார்; ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டத்தில் தோளோடு தோள் நிற்கிறார்; மக்களைப் பிளவுபடுத்துபவர்களுக்கு எதிராக, தேச எல்லைகளுக்கு அப்பால் ஒருமைப்பாட்டை உருவாக்குகிறார்; சுரண்டலுக்கு எதிரான அணி திரட்டலைச் செய்கிறார். அவரின் மரணத்திற்கு பின்னும் அவர் மேற்கொண்ட பாதையில் மேலும் உற்சாகமாக ஈடுபட அவரது நூல்கள், ஆராய்ச்சிக் கட்டுரைகள், கொள்கை விளக்கங்கள் உத்வேகமளிக்கின்றன. “வடக்கு-தெற்கு” அரசியல் பொருளாதாரம் அவரது அரசியல் பொருளாதார பங்களிப்புகளில் பிரதானமானது வடக்கு – தெற்கு சம்பந்தமானது. ஊடகங்களிலும், பல்கலைக் கழகங்களிலும், மிக உயர்ந்தபட்ச சர்வதேச அமைப்புகளிலும் பயன்படுத்தக்கூடிய பதங்களாக இருந்தாலும் கூட அவை யதார்த்தமான சூழல்களையும், அதன் தன்மைகளையும், அதன் அரசியல் பொருளாதார ஆதிக்கங்களையும் வெளிக்கொண்டு வருகிற பதப்பிரயோகங்களாக அவை அமைந்துவிடுகின்றன. பெரும்பான்மையான வளர்ந்த நாடுகள் பூமத்திய ரேகைக்கு வடக்கேதான் உள்ளன. குறிப்பாக அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், ஜப்பான் உட்பட ஜி7-ஐ பிரதிநிதித்துவப்படுத்துகிற அனைத்து நாடுகளுமே வடக்கே உள்ளன. மாறாக லத்தீன் அமெரிக்கா, ஆப்பிரிக்கா, ஆசிய/தெற்காசிய நாடுகளின் கணிசமான பகுதிகள் சிறிது வடக்கே இருந்தாலும் கிழக்கு நாடுகளான ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் உள்ள நாடுகள் அனைத்தும் இன்னும் சொல்லப்போனால் ஐரோப்பாவிற்குத் தெற்கே உள்ள வளைகுடா நாடுகள் உட்பட அனைத்து நாடுகளும் ‘தெற்கு’ என்ற அரசியல் பொருளாதார மொழியால் வர்ணிக்கப்படுகின்றன. உலக முதலாளித்துவத்தையும், ஏகாதிபத்தியத்தின் உலகளாவிய மேலாண்மையையும் எப்படி வளர்ந்த பணக்கார நாடுகளான, ‘வடக்கு’ நாடுகள் ஆதிக்கம் செலுத்துகின்றன என அமின் விளக்குகிறார். ‘தொழில்நுட்பத்தில் ஏகபோகம், அனைத்து இயற்கை வளங்களையும் கையகப்படுத்துவது, அனைத்து நிதியங்களையும் ஆளுமை செய்வது, உலகளாவிய ஊடகங்களின் முழு ஆதிக்கம் மற்றும் அனைத்து அழிவு ஆயுதப் பெட்டகங்களையும் தன் வசம் வைத்திருப்பது’ ஆகிய ஐந்து வழிகளில் உலக முதலாளித்துவம் தன்னிகரற்ற உலக சக்தியாக வலம் வருவதை சமீர் அமின் தனது ஆய்வுகளில் வரிசைப்படுத்துகிறார். ஏகாதிபத்தியத்திற்கு எதிரான அறிவு ஜீவி ஏவுகனைகளாக இந்த ஆய்வுத் தாக்குதல்களை அவர் தொடுக்கிறார். மூன்றாம் உலக சிந்தனையாளர்கள் – பதவிக்கும், பொருளுக்கும் சுலபமாக விலைபோய் விடக்கூடியவர்கள் என்ற கூற்றைப் பொய்யாக்கி, சமீர் அமின் தனது இறுதி மூச்சு உள்ளவரை ஏகாதிபத்திய எதிர்ப்பு ஆய்வுகளைச் செய்தார். இறப்பதற்கு சில வாரங்களுக்கு முன்னதாக கூட சமகாலப் பொருளாதார அறிவு ஜீவிகளுக்கு – உலகளாவிய அளவில், குறிப்பாக மூன்றாம் உலக நாடுகளில் உள்ளோருக்கு அவர் அனுப்பிய மின் அஞ்சலே அதற்கு சாட்சி. உடனடியாக ஒரு “சோசலிச அகிலம்” உருவாக்கப்படவேண்டும் என்ற கோரிக்கையை அவர் அனைவருக்கும் அதன்மூலம் முன்வைத்தார். பேராசிரியர் ஜெயதி கோஷ் தனது அஞ்சலிக்குறிப்பில் இதனைக் குறிப்பிட்டுக் கூறி, முன்முயற்சி எடுக்க முடியாததற்கு நாங்கள் வெட்கிக் குனிகிறோம், நீங்கள் சொன்னதை ஏற்றுக்கொள்கிறோம், நீங்கள் கோரியவற்றில் சிலவற்றையாவது நிறைவேற்றுவதே நாங்கள் உங்களுக்குச் செலுத்தும் அஞ்சலியாக இருக்கும் என அவர் தெரிவிக்கிறார். ஏகாதிபத்தியத்தையும், சமகால முதலாளித்துவத்தையும் நுணுக்கமாக ஆய்வு செய்த சமீர் அமின் எவ்வாறு வடக்கு – தெற்கு பிளவு என்பது தெளிவாகியுள்ளது என்பதை விளக்கினார். வளர்ந்த ஏகாதிபத்திய மையம் என்பது நடுவிலும் (Core) புறக்கணிக்கப்பட்ட தெற்கு என்பது விளிம்புகளிலும் (Periphery) எவ்வாறு ஒதுக்கப்பட்டுள்ளது என்பது அவரது ஆராய்ச்சிகளில் பிரதான உள்ளடக்கமாக இருந்தது. வர்க்கச்சுரண்டலும் முதலாளித்துவ நெருக்கடியும் ‘உலகளாவிய மதிப்பின் சட்டம்’ என்ற அவரது நூலில் மையம் – விளிம்பு ஆகிய பகுதிகள் எவ்வாறு வர்க்கச் சுரண்டலில் வகைப்படுத்தப்பட்டுள்ளன என ஆய்வு செய்கிறார். 1) ஏகாதிபத்திய பெருமுதலாளித்துவ வர்க்கம் மையத்தில் உபரி மதிப்பு முழுவதையும் குவிப்பது 2) மையத்தில் உழைப்புக்கு ஓரளவு நிவரணம் பெறும் பாட்டாளி வர்க்கப் படை நிரந்தரமற்ற அச்சத்துடனேயே உள்ளது. 3) மையப் பெருமுதலாளி நலனுடன் இணைந்துள்ள, விளிம்பில் உள்ள பெருமுதலாளித்துவ வர்க்கம் – அது தரகுத்தன்மை கொண்டது 4) விளிம்பிலுள்ள தொழிலாளி வர்க்கம் ஒட்டச் சுரண்டப்படுவது; அதனது கூலி சமனற்ற பரிவர்த்தனை (Unequal Exchange) மதிப்பு கொண்டது 5) விளிம்பில் உள்ள விவசாய வர்க்கம் அதுவும் மேற்கூறியது போல உற்பத்தியுடன் இருந்து பிரிக்கப்பட்டு ஒட்டச் சுரண்டப்படுவது. 6) பெருமுதலாளித்துவமல்லாத அடக்குமுறை வர்க்கங்கள் முதலாளித்துவ சார்பாளர்கள், தனிப்படைகள் உடையோர், ஆட்சியதிகாரத்தின் ஆதிக்க சக்திகள். மேற்கூறிய ஆறு வழிகளில் மையத்திலும், விளிம்பிலும் இன்றைய முதலாளித்துவ வளர்ச்சிக் கட்டத்தில் வர்க்கச் சுரண்டல் நடைபெற்று வருவதை சமீர் விளக்குகிறார். முதலாளித்துவம், சமீபகால வரலாற்றில் பல நெருக்கடிகளுக்கு ஆளானபோதிலும் அந்தந்தக் காலங்களின் தன்மைக்கு ஏற்ப சில உடனடி மாறுதல்களைச் செய்துகொண்டு அது தன்னைப் புனரமைத்துக்கொள்கிறது. மனித சமூகத்தையும், இயற்கைச் செல்வங்களையும் மானுடத்துக்கான இயற்கையின் கொடை என்ற நிலையில் இருந்து அவற்றை பண மதிப்பில் பரிவர்த்தனை செய்யக் கூடிய சரக்காக, பண்டமாக அது மாற்றியுள்ளது. 1873 ஆம் ஆண்டில் தொடங்கிய 19வது நூற்றாண்டின் முதலாளித்துவ நெருக்கடி 1914 முதல் 1945 வரையிலான முப்பது ஆண்டுகள் நடந்த புரட்சி மற்றும் போர்கள் மூலம் தீர்த்துவைக்கப்பட்டது. 1971 ஆம் ஆண்டு தொடங்கிய அராஜக வர்த்தக/உற்பத்தி நெருக்கடிகள் உலகலாவிய நிதி நெருக்கடியாக 2008 ஆம் ஆண்டில் வந்து முடிந்தது. எனவேதான், முதலாளித்துவம் ஒரு புதிய அமைப்பு சார்ந்த நெருக்கடியின் கட்டத்துக்குள் அது இன்று தள்ளப்பட்டுள்ளது. இன்று அதனுடைய வடக்கு சார்ந்த மையங்களில் வளர்ச்சியின் வேகமான வீழ்ச்சியைச் சந்தித்துவருகிறது. நவீன உலகமயப்பட்ட தாராளவாதம், அதன் வறட்டுத்தனமான – சுதந்திர வர்த்தகம், தனியார்மயம், தடையற்ற பரிவர்த்தனை மதிப்பு, பொதுச் செலவினச் சுருக்கம் – ஆகியவற்றின் காரணமாக, முதலாளித்துவத்தை நெருக்கடியிலிருந்து வெளியேற்றுவதற்கான கதவுகள் அனைத்தையும் மூடி, பொருளாதாரத் தேக்கம் எனும் முட்டுச் சந்தில் உலகப் பொருளாதாரத்தைக் கொண்டு வந்து முடக்கியுள்ளது. அதை உடைத்துக்கொண்டு புதிய பொருளாதாரப் பாதையில் அடி எடுத்துவைக்க முடியாமல் அது மாட்டிக்கொண்டுள்ளது. பொது நம்பிக்கையின்படி பொருளாதார அடிப்படை விதியான “சந்தைகள்” தானாக தன்னை ஒழுங்குபடுத்திக்கொள்ளும் என்பது தோற்று விட்டது. இன்று அதற்கு அரசுக் கட்டுப்பாடும் ஒழுங்குபடுத்துதலும் தேவைப்படுகிறது – எனவும் சமீர் அமீன் முதலாளித்துவத்தின் இன்றைய நெருக்கடியைப் பற்றி பேசுகிறார். அவர் 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இறப்பதற்கு முன் அளித்த பேட்டியில் தெரிவித்த கருத்து மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. “நவீன தாராளமயக் கட்டம் குலைந்து விழுகிற கட்டத்துக்கு வந்துவிட்டது. அதன் பொருள் முதலாளித்துவம் அந்த நிலைக்கு வந்துவிட்டது என்பதல்ல. அதாவது முதலாளித்துவத்தின் இந்தக் கட்டம் நிலைகுலைந்துள்ளது. அது ஒரு புதிய கட்டத்துக்குள் மீண்டும் நுழையும். அத்தகைய கட்டம் எவ்வாறு யாருக்கு சாதகமாக இருக்கும் என்பது வர்க்க சக்திகளின் சார்பில் இருந்துதான் பின்னர் வெளிப்படும்”. கண்ணியிலிருந்து பிரிவது முதலாளித்துவ அரசியல் பொருளாதார வளர்ச்சி மற்றும் பாதை குறித்த இந்த மார்க்சிய பார்வையின் மூலம் ஒரு புதிய மாற்றுப்பாதையை – உருவாக்க அவர் ஆலோசனை வழங்கினார். அதுதான் கண்ணியைப் பிரித்தல் (Delinking); ஏற்கனவே சங்கிலி போல் பிணைந்து அதன் பகுதியாக இருக்கும் அந்தக் கண்ணியைப் பிரித்து எடுப்பது. இது, அமீன் அவர்களது சிறப்பான அரசியல் பொருளாதாரப் பங்களிப்பாக இன்றும் பாராட்டப்படுகிறது. சமீர் அமின் மறைந்த உடனேயே அஞ்சலி செலுத்தியவர் வெனிசுவேலாவின் குடியரசுத்தலைவர் நிக்கோலஸ் மதுரோ ஆவார். நடைமுறையில் ஓரளவுக்கு லத்தீன் அமெரிக்க நாடுகளும், மக்கள் சீனமும், பிரிக்ஸ் போன்ற அமைப்புகளும் இவர் பங்களித்த டி-லிங்கிங், “கண்ணியிலிருந்து பிரிதல்” என்ற அரசியல் பொருளாதாரக் கோட்பாட்டினை ஒட்டி நடைபெற்று வரும் நடவடிக்கைகளாக பார்க்கப்படுகின்றன. பொலிவாரியப் புரட்சி இயக்கங்களும், பல துருவ உலக முயற்சிக்கான நடவடிக்கைகளிலும், சீனா, இரான், ரஷ்யா, பொலிவியா ஆகியவற்றின் பொருளாதாரப் பாதைகளிலும், பிராந்தியக் கூட்டுகளான அல்பா, ஆப்பிரிக்க ஒருமைப்பாடு ஆகிய பல அமைப்புகளிலும் அமீன் அவர்களது கண்ணியை விலக்கும் கோட்பாடு மிகப்பெரும் பங்களிப்பைச் செய்துள்ளது. சமீபத்திய ஓர் ஆய்வறிக்கையில் பொருளாதார நிபுணர் ஏ.கே.அன்வர் கண்ணியைப் பிரிப்பது (Delinking Theory) பற்றி கீழ்க்கண்டவாறு கூறுகிறார். “எளிமையாகக் கூறுவதானால், தேசப் பொருளாதார அமைப்பு, வெளி அரசுகளின் மேலாதிக்கத்துக்கும், நிர்ப்பந்தங்களுக்கும் பணியாமல், தனது நாட்டு வளர்ச்சிப் பாதையை மையப் பொருளாகக் கொண்டு பொருளாதாரத் திட்டமிடலைச் செய்ய வேண்டும்” என்பதே அது ஆகும். சர்வதேச அரசியல் பொருளாதார அரங்கில் அவரது “கண்ணியிலிருந்து பிரிவது” என்பது தீவிரத் தத்துவார்த்த பங்களிப்பாக கருதப்படுகிறது. எந்தத் தத்துவமும் – விளக்கமும் ‘புனிதமான’ சொத்துடைமையின் தன்மையைக் கேள்வி கேட்காவிடில் – அவை பொருளற்றவை ஆகிவிடும். சொத்துடைமையாளர்களின் ஆதிக்கத்தையும் – அதற்கு தேவையான சமத்துவமற்ற சொத்துடைமை வடிவத்தையும் மாற்றுகிற வர்க்கப் போராட்டத்தின் மீது சமீர் உறுதியான நம்பிக்கையைக் கொண்டிருந்தார். எனவேதான், கண்ணியிலிருந்து பிரிவது என்ற கோட்பாட்டை முன்மொழியும்போது அது நீண்டகாலத் திட்டத்தின் கோட்பாடாக (Strategy) அமைய வேண்டுமென அவர் கருதினார். அது “தன்னெழுச்சியாக, நடைமுறைத் தேவையாக, மூலதனம் மற்றும் ஏகாதிபத்தியத்தின் தேவைக்கு தன்னைச் சரி செய்துகொள்வது;தமது சுயவளர்ச்சிக்குப் பதிலாக ஏகாதிபத்திய நலன்களை முதன்மைப்படுத்தி சட்டத் திட்டங்களை சரி செய்து கொள்வது”என்ற நிலைமையை மாறற வேண்டும் எனக் கோரினார். சமனற்ற உலகில், நாடுகளின் தனித்த வளர்ச்சிப்பாதை சார்ந்த திட்டமிடுதல் வெற்றிபெறக் கூடியதுதான் என அவர் உறுதியாக நம்பினார். நாடுகளுக்கு தொழில்நுட்பம், தொழில் வளர்ச்சி ஆகியவை தேவைதான்; வெளிநாட்டு ஒத்துழைப்பு தேவைதான். எனவே அந்நிய மூலதனத்தைக் கட்டுப்பாடுகளுடன் அனுமதிக்க கற்றுக்கொள்ளுங்கள் என அவர் கூறினார். இன்றைய தேவை பல துருவ உலகம் உலகமயமாதல் என்பது ஏகாதிபத்தியத்தின் பொருளாதார விரிவாக்கத்தின் ஒரு கட்டம். உலக பெருமுதலாளித்துவ நிதி மூலதனம் அதைக் கட்டுப்படுத்துகிறது. குறிப்பாக அமெரிக்கா, மேற்கு ஐரோப்பா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகள். அவர்கள் உலக உற்பத்தி, பொருளாதார-அரசியல் வாழ்க்கை ஆகியவற்றின் அனைத்து அம்சங்களையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறார்கள். எனவே அந்த உலகமயமாதலை விட்டு வெளியே வாருங்கள் என சமீர் அறைகூவல் விடுத்தார். வளர்ந்த “வடக்கு” என்பது தெற்கைக் கபளீகரம் செய்துகொள்ளும். உலகமயமாக்கல் சவாலுக்கு கண்ணியிலிருந்து பிரிவதுதான் சரியான வழி. அது உயர்ந்த ஒரு கருத்துருவமாகப் படலாம். ஆனால் நடைமுறைப்படுத்தமுடியாத மாயை அல்ல என்றும் அவர் வலியுறுத்தினார். உலகளாவிய அமைப்புகளை விளிம்புகளிலுள்ள தெற்கு நாடுகளைக் கொண்டு மறுகட்டுமானம் செய்யவேண்டும் என அவர் கோரினார். லத்தின் அமெரிக்க நாடுகள், ஆப்ரிக்க நாடுகள், அரபு நாடுகள், கிழக்கு ஆசிய நாடுகள், இந்தியா, சீனா போன்ற முன்னணி நாடுகள் இவற்றைச் செய்ய முடியும். கூட்டுச் சேரா நாடுகளின் அனைத்து உறுப்புக்களையும் இதில் இணைக்க முடியும் என அவர் வலியுறுத்தினார். பல துருவ உலக முயற்சிகள் வெற்றி பெறும் காலத்தில் நாம் இருக்கிறோம் என அவர் கருதினார். சமீர் அமீன் உலக நடப்புகளின் பல்வேறு விசயங்கள் குறித்து தலையீடு செய்யக்கூடிய, தைரியமாகப் பொது வெளியில் கருத்து தெரிவிக்கக்கூடிய அரசியல் விஞ்ஞானியாகத் திகழ்ந்தார். அவர் மக்கள் சீனத்தின் அரசியல் பொருளாதார வளர்ச்சி குறித்து அபரிமிதமான நம்பிக்கை கொண்டிருந்தார். “கம்யூனிச நோக்கங்களை முதலாளித்துவப் பாதையில்” (Communist ends, Capitalist means) என பொருளாதார அறிஞர்கள் கிண்டலடிப்பதை அவர் கடுமையாகச் சாடினார். ஐரோப்பிய அமெரிக்க நாடுகளால் முடியாத ஒரு சமூகத்தை மக்கள் சீனத்தால் எவ்வாறு நிர்மாணிக்க முடிந்தது என்பதைக் கூர்ந்து ஆராய்ந்தார். கண்ணியிலிருந்து பிரிவதன் கருத்தாக்கத்துக்கு இது மிகவும் உதவி செய்தது. மக்களை மையப்படுத்தி சுயேட்சையான வளர்ச்சியக் கருத்தில்கொண்டு அந்நிய மூலதனத்தைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்து, லட்சியங்களைக் காவுகொடுக்காமல் ஒரு புதிய பொருளாதாரப் பாதையைத் தேர்வு செய்யக்கூடிய சாதுர்யம் மக்கள் சீனத்துக்கு இருந்தது என்பதை அவர் உலகுக்குக் காட்டினார். அவர் மாவோ மீது மிகுந்த மதிப்பும் மரியாதையும் கொண்டிருந்தார். இன்றைய வளர்ச்சிப்பாதையின் மிக முக்கியமான சோசலிச அடித்தளத்தையும் கட்டுமானத்தையும் மாவோ உருவாக்கினார். அதன் காரணமாகவே 1966 ஆம் ஆண்டில் நடைபெற்ற “கலாச்சாரப் புரட்சி”-யைக் கூட அவர் ஆதரித்தார். “தலைமையகத்தைத் தகருங்கள்” என்ற கோஷம் அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. அன்றைய தலைமுறை மக்கள் சீனத்தின் தலைவர்களின் தொலைநோக்குப் பார்வையையும், கொள்கை உறுதியையும் அவர் சரியாகப் புரிந்து வைத்திருந்தார் . ஆனால் இன்று மக்கள் சீனத்தில், சந்தை, அந்நிய மூலதனம், வர்த்தகம் என அனைத்தும் உள்நாட்டு வளர்ச்சியின் தேவையை ஒட்டியே தீர்மானிக்கப்படுகின்றன என்பது அவருக்கு மிகவும் பிடித்தமானதாக இருந்தது. இஸ்லாமிய அரசியல் பற்றிய அவரது கருத்து கூர்ந்து கவனிக்கப்படவேண்டியது. “…அது ஏகாதிபத்திய எதிர்ப்புத்தன்மை கொண்டதல்ல. தீவிரவாதக் குழுக்கள் ஒருவேளை அவ்வாறு கருதிக்கொள்ளலாம். அவர்கள் ஏகாதிபத்தியத்தின் முக்கியக் கூட்டாளிகளாக உள்ளார்கள் என்பது “இஸ்லாமிய அரசியல்” செய்பவர்களுக்கு தெரிந்தேதான் இருக்கிறது. சவூதி அரேபியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் ஆளும் வர்க்கங்களின் செயல்பாடு இவற்றையெல்லாம் தெரிந்த வகையில்தான் உள்ளது. அவர் என்றுமே இஸ்லாம் மதத்தையோ அதன் அடிப்படைகளையோ விமர்சித்தத்தில்லை. அதே சமயம் ஐரோப்பிய மற்றும் வடக்குப் பிரதேசங்கள் கையாள்கிற, “இஸ்லாமியோ போபியா” என அழைக்கப்படுகின்ற முஸ்லிம் எதிர்ப்பு நிலையைக் கடுமையாகச் சாடினார். ஒரு கொள்கைப் பிடிப்புமிக்க எகிப்திய கம்யூனிஸ்ட்டாக வாழ்க்கையைத் துவங்கிய சமீர் அமின் இறுதிவரை கம்யூனிஸ்ட்டாக வாழ்ந்தார். ஏகாதிபத்திய எதிர்ப்பாளனாக, மூன்றாம் உலக நாடுகளின் நண்பனாக, சோசலிசத்தின் ஆதரவாளனாக, செயல்பாட்டிலும், நடைமுறையிலும் மிகுந்த மனமார்ந்த ஈடுபாடு கொண்ட அறிவு ஜீவியாகத் திகழ்ந்தார். எதிர் நீச்சல்போட்டு, போராடி வெல்லவேண்டும் என்ற கருத்தைக் கொண்டிருந்தார். நைல் நதிக்கரையில் பிறந்து, ஐரோப்பாவில் வளர்ந்து, ஆப்பிரிக்காவில் வாழ்ந்து, லத்தீன் அமெரிக்க, ஆசிய, அரபு நாட்டு மக்களின் மேம்பாட்டுக்கான ஆய்வுகளைச் செய்து கடைசிவரை பணியாற்றினார். மார்க்ஸ் பிறந்த 200ஆம் ஆண்டு, ரஷ்ய புரட்சியின் நூற்றாண்டு ஆகியவற்றை – அதன் அனுபவங்களையும் கண்டறந்து ஏகாதிபத்தியத்தின் அசைவுகளைத் துல்லியமாகப் படம்பிடித்துக் காட்டிய மாபெரும் மனிதாபிமானியான சமீர் அமின் அவர்களுக்கு நாம் செலுத்தும் அஞ்சலி. “நீங்கள் விட்டுச் சென்ற அரும்பணியை நாங்கள் தொடர்வோம்” – என்பது தான்.
மேலும் சுவாரசியமான செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழ் டெஸ்க் அன்ட்ரொயிட் அப்பை டவுண்லோர்ட் செய்யுங்கள் அதன்பிறகு விஜய், ரஜினி, தனுஷ் என முன்னணி நடிகர்களுடன் நடித்தார், தெலுங்கு-ஹிந்தி மொழிகளிலும் நடித்து வந்தார். பிரிட்டிஷ் தொழிலதிபர் ஜார்ஜ் என்பவரை காதலித்த எமி ஜாக்சன் அவரை திருமணம் செய்துகொண்டு 2019ம் ஆண்டு ஒரு ஆண் குழந்தையும் பெற்றார். அதன்பிறகு இருவருக்கும் ஏதோ பிரச்சனைகள் வர விவாகரத்து பெற்றனர். தற்போது நடிகை எமி ஜாக்சன், பிரபல நடிகரான Ed Westwick என்பவரை டேட்டிங் செய்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நடிகர் இதற்கு முன் பல நடிகைகளுடன கிசுகிசுவில் சிக்கியிருக்கிறார். அதோடு 3 பெண்கள் Ed Westwick தங்களிடம் தவறாக நடந்துகொண்டார் என்று கூட வழக்கு தொடர்ந்தனர். ஆனால் போதிய ஆதாரம் இல்லாததால் அந்த வழக்கு அப்படியே முடித்து வைக்கப்பட்டது.
நடிகர் சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஏஜென்ட் கண்ணாயிரம்’. இப்படத்தை ‘வஞ்சகர் உலகம்’ படத்தை இயக்கிய மனோஜ் பீதா இயக்கியுள்ளார். கடந்த 2019-ம் ஆண்டு தெலுங்கில் நவீன் பாலிஷெட்டி மற்றும் ஸ்ருதி ஷர்மா நடிப்பில் வெளியான ‘ஏஜெண்ட் சாய் ஸ்ரீனிவாச ஆத்ரேயா’ என்ற படத்தின் ரீமேக். இந்த படத்தில் நடிகை ரியா சுமன், ஸ்ருதி ஹரிஹரன், புகழ், முனிஷ்காந்த், ரெடின் கிங்ஸ்லி, ராம்தாஸ், இந்துமதி, மதன் தட்சிணாமூர்த்தி, ஆதிரா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த ஆண்டு தொடக்கத்தில் ‘ஏஜென்ட் கண்ணாயிரம்’ படத்தின் டீசர் வெளியானது. இந்த படத்தில் சந்தானம் டிடெக்டிவ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த நிலையில் ‘ஏஜென்ட் கண்ணாயிரம்’ படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது. இந்த டிரெய்லரை நடிகர் ஜெயம் ரவி தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டார். ‘ஏஜென்ட் கண்ணாயிரம்’ படம் வருகிற நவம்பர் 25-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த டிரெய்லர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. Happy to release #AgentKannayiram Trailer #AKTrailer 👉https://t.co/Z29pgRMCYI@manojbeedha_dir has shown @iamsanthanam in a completely different style & classic making👌🏻 A @thisisysr Musical #AgentKannayiramFromNov25 @IRiyaSuman @VijaytvpugazhO @shiyamjack @DoneChannel1 pic.twitter.com/5SzDgFyleV — Jayam Ravi (@actor_jayamravi) November 11, 2022 From Around the web Trending Featured About Us Ciniexpress is a multimedia organization created in 2020 with the aim to please its audience, comprising various forms of entertainment that include news, movie reviews, audio launches, cinema news, crime news, lifestyle, health, and much more!
கரிசல் பூமி ஏழைகளை கொன்று போடும் கந்தகம் தகிக்கும் பூமி. மழையற்ற பூமியின் மண்ணுக்குள் ஏழ்மையோடு போராடி போராடி தோற்றவர்களின் எத்தனையோ கதைகள் புதைந்து போய் கிடக்கின்றன. உழைப்பின் பயனை அனுபவத்தறியா மக்கள் வாழும் மரணத்தின் சுவடுகள் புகையாய் கவிழ்ந்த பூமி கரிசல் பூமி. சம்சாரிகளுக்கு ஒரு கஷ்டமென்றால் ஏழைபாழைகளுக்கு வேறு கஷ்டம், இப்படியே வாழ்க்கை வண்டியை அதனதன் துன்பத்தோடு ஓட்டிச் சென்று முடியாத வாழ்க்கைப் பாதையில் வழியில் ஏதோ ஒரு திருடனால் கழட்டி விடப்படும் ஜனங்கள் நிரம்பிய அப்பூமியின் சில நிகழ்வுகளை மேலாண்மைப் பொன்னுச்சாமியின் பூச்சுமை புத்தகம் எழுத்துக்களில் காட்சியாய் வடித்திருந்தது. புத்தகத்தைப் படிக்கப் படிக்க மனதில் பாரொமொன்று படிந்து விலக நேரம் பிடித்தது. பூச்சுமையில் அனைத்தும் சிறு கதைகள். என்னைப் பாதித்த ஒரு சிறுகதை “மைதானம்”. பேச்சி என்கிற ஒன்பது வயதுச் சிறுமி தன் தாயின் துயரத்தில் பங்கெடுக்க தன் ஆடிப்பாடி விளையாடிக் கொண்டிருந்த தன் மைதானத்தை விட்டு தீப்பெட்டித் தொழிற்சாலைக்குச் செல்கிறாள். அங்கு தன் வயதின் காரணமாய் அடிபைப்பில் தண்ணீர் அடிக்க அதைக் கண்டு மேஸ்திரி திட்டுகிறான். கோபத்தில் அவரை எதிர்த்துப் பேசுகிறாள். மறு நாள் அவளை பஸ்ஸில் ஏற்றிக் கொள்ள மறுக்க அச்சிறுமிக்கு பயமேற்பட்டு விட, ஏஜெண்ட் ஏதேதோ பேசி சமாளித்து கம்பெனிக்கு அனுப்பி வைக்கிறான். பல பேர் முன்னிலையில் அவமானப்பட்ட அச்சிறுமியின் கண்களில் நீர்ப் பூக்கிறது. அதை மறைக்க அவள் சன்னலோரம் முகத்தை திருப்புகிறாள். அங்கு அவள் விளையாண்ட மைதானம் அவளை விட்டு தூரப் போய்க் கொண்டிருக்கிறது. அவள் தனக்குள் நினைக்கிறாள் “ விளையாடுவது தவறா?” என்று. மனதைக் கனக்கச் செய்த சிறுகதை. அதன் தாக்கம் தீர கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் ஆகி விட்டது. வார்த்தைகளில் காட்சியைப் பிடிப்பது என்பது “ மேலாண்மை பொன்னுச்சாமி” அவர்களுக்கு கை வந்த கலை. ஒவ்வொரு சிறுகதையும் ஒவ்வொரு படம். மனித வாழ்க்கையின் அவலங்களைப் படம் பிடித்துக் காட்டுகின்றன. அனைவரும் படிக்க வேண்டிய புத்தகம். இன்றைக்கு செய்தி தாளில் ஒரு செய்தி வெளியாகி இருந்தது. பவர் கட் ஆன நேரத்தில் பக்கத்து வீட்டுப் பசங்களால் ஒரு பெண்மணி கற்பழிக்கப்பட்டிருக்கிறார் என்று. பவர் கட் இன்னும் என்னென்ன செய்ய இருக்கிறதோ தெரியவில்லை. தங்கம் விற்கும் விலைக்கு பவர் கட் பல பேரின் வாழ்க்கையை கட் செய்து விடாமல் இருக்க வேண்டும். அரசு விரந்து ஆவண செய்தால் நலம்.
மலையாள சினிமாவில் இளம் நடிகர்களின் அதிகம் கவனிக்கப்படுபவராக வளர்ந்து வருகிறார் ஸ்ரீநாத் பாசி. இவர் '22 பீமேல் கோட்டயம்', 'உஸ்தாத் ஓட்டல்', 'கும்பளிங்கி நைட்ஸ்', 'வைரஸ்', உள்ளிட்ட பல நடங்களில் நடித்து ரசிகர்களின் பாராட்டைப் பெற்றுள்ளார். இந்நிலையில் ஸ்ரீநாத் பாசி நடிப்பில் கடந்த வெள்ளியன்று 'சட்டம்பி' என்ற புதிய படம் வெளியாகியுள்ளது. இதையடுத்து பிரபல youtube சேனல் ஒன்று படம் குறித்து இவருடன் பேட்டி எடுத்துள்ளது. அப்போது தொகுப்பாளர் கேட்ட கேள்வியால் நடிகர் ஸ்ரீநாத் பாசி கோபமடைந்துள்ளார். மேலும் பேட்டியைப் பாதியில் நிறுத்தி பெண் தொகுப்பாளரை ஆபாசமாகத் திட்டி அநாகரீகமாக நடந்து கொண்டுள்ளார். இதையடுத்து, நடிகர் ஸ்ரீநாத் பாசி மீது காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த புகாரை அடுத்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து ஸ்ரீநாத் பாசியைக் கைது செய்துள்ளது. இவர் கைது செய்யப்பட்டுள்ளது மலையாள சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Also Read பிரபல இசையமைப்பாளரும், அனிருத்தின் தாத்தாவுமான எஸ்.வி.ரமணன் காலமானார் ! - யார் இந்த SV ரமணன் ? malayalam actor Sreenath Bhasi Trending சோமாலியாவில் விழுந்த விண்கல்:உடைத்துப்பார்த்த விஞ்ஞானிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி..உள்ளே இருந்தது என்ன? உலகக்கோப்பையில் ஈரான் அணி தோல்வி.. கொண்டாடிய நபரை சுட்டுக்கொன்ற ஈரான் ராணுவம்.. அதிர்ச்சியில் உலகநாடுகள்! ஆளுநருக்கு இத்தனைகோடி செலவா ? வேலையே செய்யாதவர்களுக்கு இத்தனை செலவு ஏன் என இணையவாசிகள் ஆவேசம் ! பயணிகள் கவனத்திற்கு.. ரயிலில் ஜன்னலோரம் அமர்ந்த நபரின் கழுத்தில் பாய்ந்த இரும்பு ராட்: திக் திக் சம்பவம்! Latest Stories சோமாலியாவில் விழுந்த விண்கல்:உடைத்துப்பார்த்த விஞ்ஞானிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி..உள்ளே இருந்தது என்ன? உலகக்கோப்பையில் ஈரான் அணி தோல்வி.. கொண்டாடிய நபரை சுட்டுக்கொன்ற ஈரான் ராணுவம்.. அதிர்ச்சியில் உலகநாடுகள்! அரளி சித்தராக மாற்றப்பட்ட மனநலம் பாதித்த முதியவர்: உண்டியல் வைத்து பணம் வசூலித்த கும்பலிடமிருந்து மீட்பு!