text
stringlengths 0
12k
|
---|
70 |
1.2.4 அன்புடைமை |
அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர் |
புன்கணீர் பூசல் தரும். |
71 |
அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் |
என்பும் உரியர் பிறர்க்கு. |
71 |
அன்போடு இயைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு |
என்போடு இயைந்த தொடர்பு. |
73 |
அன்பு ஈனும் ஆர்வம் உடைமை அதுஈனும் |
நண்பு என்னும் நாடாச் சிறப்பு. |
74 |
அன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்து |
இன்புற்றார் எய்தும் சிறப்பு. |
75 |
அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார் |
மறத்திற்கும் அஃதே துணை. |
76 |
என்பி லதனை வெயில்போலக் காயுமே |
அன்பி லதனை அறம். |
77 |
அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண் |
வற்றல் மரந்தளிர்த் தற்று. |
78 |
புறத்துறுப் பெல்லாம் எவன்செய்பு ம் யாக்கை |
அகத்துறுப்பு அன்பி லவர்க்கு. |
79 |
அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு |
என்புதோல் போர்த்த உடம்பு. |
80 |
1.2.5. விருந்தோம்பல் |
இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி |
வேளாண்மை செய்தற் பொருட்டு. |
81 |
விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா |
மருந்தெனினும் வேண் டற்பாற் றன்று. |
82 |
வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை |
பருவந்து பாழ்படுதல் இன்று. |
83 |
அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து |
நல்விருந்து ஓம்புவான் இல். |
84 |
வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பி |
மிச்சில் மிசைவான் புலம். |
85 |
செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான் |
நல்வருந்து வானத் தவர்க்கு. |