text
stringlengths 0
12k
|
---|
பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை. |
37 |
வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன் |
வாழ்நாள் வழியடைக்கும் கல். |
38 |
அறத்தான் வருவதே இன்பம் மற் றெல்லாம் |
புறத்த புகழும் இல. |
39 |
செயற்பால தோரும் அறனே ஒருவற்கு |
உயற்பால தோரும் பழி. |
40 |
1.2. இல்லறவியல் |
1.2.1. இல்வாழ்க்கை |
இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும் |
நல்லாற்றின் நின்ற துணை. |
41 |
துறந்தார்க்கும் துவ்வாதவர்க்கும் இறந்தார்க்கும் |
இல்வாழ்வான் என்பான் துணை. |
42 |
தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு |
ஐம்புலத்தாறு ஓம்பல் தலை. |
43 |
பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை |
வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல். |
44 |
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை |
பண்பும் பயனும் அது. |
45 |
அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றில் |
போஒய்ப் பெறுவ தெவன்? |
46 |
இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான் |
முயல்வாருள் எல்லாம் தலை. |
47 |
ஆற்றின் ஒழுக் கி அறனிழுக்கா இல்வாழ் க்கை |
நோற்பாரின் நோன்மை உடைத்து. |
48 |
அறன் எனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும் |
பிறன்பழிப்ப தில்லாயின் நன்று. |
49 |
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உநற்யும் |
தெய்வத்துள் வைக்கப் படும். |
50 |
1.2.2 வாழ்க்கைத் துணைநலம் |
மனைக்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான் |
வளத்தக்காள் வாழ்க்கைத் துணை. |
51 |
மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை |
எனைமாட்சித் தாயினும் இல். |