text
stringlengths 0
12k
|
---|
86 |
இனைத்துணைத் தென்பதொன் றில்லை விருந்தின் |
துணைத்துணை வேள்விப் பயன். |
87 |
பரிந்தோம்பிப் பற்றற்றேம் என்பர் விருந்தோம்பி |
வேள்வி தலைப்படா தார். |
88 |
உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா |
மடமை மடவார்கண் உண்டு. |
89 |
மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து |
நோக்கக் குநழ்யும் விருந்து. |
90 |
1.2.6 இனியவைகூறல் |
இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம் |
செம்பொருள் கண்டார்வாய்ச் சொல். |
91 |
அகன்அமர்ந்து ஈதலின் நன்றே முகனமர்ந்து |
இன்சொலன் ஆகப் பெறின். |
92 |
முகத்தான் அமர்ந் துஇனிது நோக்கி அகத்தானாம் |
இன்சொ லினதே அறம். |
93 |
துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும் |
இன்புறூஉம் இன்சொ லவர்க்கு. |
94 |
பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு |
அணியல்ல மற்றுப் பிற. |
95 |
அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை |
நாடி இனிய சொலின். |
96 |
நயன் ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்று |
பண்பின் தலைப்பிரியாச் சொல். |
97 |
சிறுமையுவு நீங்கிய இன்சொல் மறுமையும் |
இம்மையும் இன்பம் தரும். |
98 |
இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ |
வன்சொல் வழங்கு வது? |
99 |
இனிய உளவாக இன்னாத கூறல் |
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று. |
100 |
1.2.7 செய்ந்நன்றி அறிதல் |
செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும் |
வானகமும் ஆற்றல் அரிது. |
101 |
காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும் |
ஞாலத்தின் மாணப் பெரிது. |