Content
stringlengths 0
19k
⌀ | Title
stringlengths 2
120
| Category
stringclasses 127
values |
---|---|---|
உன் நினைவுகளை தீண்டிவிட்டு
ஓடும் ரயிலில் மெல்ல சாய
தண்டவாலத்தின் இடி சத்தமும்
தாயின் தாலாட்டாகுதடி ! | தண்டவாலத்தின் மீது தாலாட்டு - காதல் கவிதை | காதல் கவிதை |
விழிகளில் கனிவும்
விரல் நுனிகளில்
ஆளுமைத் திறமும்
இப்படி ஒரு
கல்லூரி முதல்வர்
எனச் சொன்னால்
நம்ப இயலா அளவிற்கு
வாழ்ந்து மறைந்த
எங்கள் வாழ்வின்
அறிவொளியே!
குண்டூசி
குத்துவது முதல்
கல்லூரிகளில் சென்று
மாணவர்களிடம்
பேசுவதுவரை
ஒத்திகை நடத்தி
ஒத்திகை நடத்தி
மழலைக்கு
கற்றுக் கொடுக்கும்
தாயாய்
நாங்கள் தந்தையான
காலத்திலும்
கற்றுக் கொடுத்த
எங்கள் ஆசிரியரே!
எங்கள் வளர்ச்சியின்
ஒவ்வொரு நிலையிலும்
உளமாறச் சிரித்து
ஊக்கமூட்டி
இன்னும் மென்மேலும்
முன்னேறு முன்னேறென
படி அமைத்த
பண்பாளரே!
மாணவர்களிடம் செல் !
மாணவர்களுக்குச்
சொல்வதற்காகக் கற்றுக்கொள் !
மற்றவர்களின் உயர்வே
உனது வாழ்வெனக் கொள்!
என எங்களை வழி நடத்திய
எங்கள் முதல்வரே !
வாழ்க உந்தன் புகழ் !
வா. நேரு
(திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியின் முன்னாள் முதல்வர் டாக்டர் இரா.கனகசபாபதி அவர்களின்
8-வது ஆண்டு நினைவு நாளை(8.3.) முன்னிட்டு) | எங்கள் முதல்வரே ! - ஏனைய கவிதைகள் | ஏனைய கவிதைகள் |
என்னை
எப்படி
சாகடிப்பாயென
நீ
கேட்டதற்கான
விடை கேள்
பெண்ணே .
அன்பு
வெள்ளத்தில்
மூழ்கடிப்பேன் .
பிரியத்தீயில்
கருக வைப்பேன் .
என்
கண்களுக்குள்
சமாதியக்குவேன் .
ஆக்சிஜனை போல
சுவாசிப்பேன்.
காற்று
நீ
பலூன்
நான்
உன்னை
நிரப்பியதால்
மட்டுமே
நான் பறப்பேன் .
நீயே
என்
சுவாசம் . | சுவாசம் - காதல் கவிதை | காதல் கவிதை |
மழை நீராய்
என் கண்களில் கண்ணீர்.
ஒளியில்லை என் விழியில்
மேகமாய் அலைகின்றேன்
கறுப்பு நிலாவை தேடி.
உன்னால் ஒளி பெறுவேன்
உன் விழியை திறந்து
எனக்கு ஒளியை தா.
என் பார்வைக்கு நீயே ஒளி
என் பாதைக்கு நீயே வழி.! | என் பாதைக்கு நீயே வழி. - காதல் கவிதை | காதல் கவிதை |
மாதச் சம்பளம்
ஐம்பதனாயிரம்
என்ன செய்ய?
ஏடிஎம் கார்டை
கணவனிடம்
கொடுத்துவிட்டு
வெகு நேரமாய்
கை ஏந்தி நிற்கிறாள்
பேருந்தில்
அலுவலகம் செல்ல
ஐந்து ரூபாய் கேட்டு | மகளிர் தினம் - மார்ச் 8 - ஏனைய கவிதைகள் | மார்ச் 8 - ஏனைய கவிதைகள் |
பெண்ணே நீ கேட்டுகொள்
பெரிதாக ஒன்றுமில்லை காதில் போட்டுகொள்
பாப்பா என்பர் பால் நிலவழகு என்பர் அது
பாசம் இல்லையடி பசப்பு வார்த்தையடி
கரியை கண்ணில் பூசி
கண் மையாக்கிவிடுவர்
கடைசியில் பாத்திரத்தில்
கரியினை கழுவ விடுவர்
முடிகளை வளர்க்கவிட்டு
முழுவதும் சிக்கலுக்கு வித்திடுவர்
முடிவின்றி நீ திருத்தி
முயற்சிக்காமல் நரையாவாய்
செடிகளில் பூக்களுண்டு
சீவுவதற்க்கு நீயுண்டு
சிந்தையில் கட்டுண்டு
சிரிப்பதில்தான் முற்களுண்டு
காலில் கொலுசு மாட்டி
கண்ணகியாய் இருக்க செய்வார்
காலம் முழுக்க கோவலனாய் இருப்பதற்கோ
கயமைத்தனத்தில் இதை செய்தார்
வளையலாய் சிறுவட்டம்
வலக்கையில் இடக்கையில் போட்டுவிட்டார்
வாழ்க்கையில் எதுவட்டம்
வரமாட்டாய் நீ கேள்வி கேட்க
தோடு இரண்டு போட்டுவிட்டார்
தொலையாமல் நீ காப்பாய்
தூங்கபோகவும் உன் கனவில்
துரத்தி வந்திடுவார் கவனம் சிதறாமல்
மூக்குத்தி போட்டுவிடுவார்
முகம்முன்னே நகை ஆசையாய்
மூக்கு சிந்தியே அழுதிருப்பாய்
முட்டாள் இரத்தமும் கண்ணீராய் வருமே
காதலிக்க சுற்றிவருவார் கற்பனையில் மண முடிப்பார்
கற்பை மட்டும் ருசிகண்டு
கவலையின்றி கைவிடுவார் கொடுமையடி
கொஞ்ச கிராமில் தாலிகட்டி
கொள்ளையடிக்கவே நகையை பூட்டி
குடும்பத்தில் சேர்ப்பதுகூட
குழந்தை பெறும் இயந்திரமடி
ஆனாலும் ஆண் குழந்தை
அதற்கில்லை கர்ப்ப பை தாயாக மறுக்கவில்லை
தலை குனிகிறேன் இந்நாளில்
தவறி நடந்தாலும் திருத்திவிடுகிறேன் | மகளிர் தினச் செய்தி - வாழ்க்கை கவிதை | வாழ்க்கை கவிதை |
பெண்ணே!
நீயும் நிலவும் ஒன்று தான்
அருகில் இருப்பது போல் தெரிந்தாலும்
என் கைகளுக்கு எட்டாத தொலைவில்
அல்லவா இருக்கிறாய்!
நினைவில் கொள்.
நானும் ArmStrong தான். | நிலாப் பெண் - ஹைக்கூ கவிதை | ஹைக்கூ கவிதை |
இப்படி
பாதியிலேயே காதல்
செத்துபோகுமென
தெரிந்திருந்தால்
அன்றே
கருகலைப்பு
செய்திருப்பேன்
உனக்கான
என் கவிதைகளை | கருகலைப்பு! - காதல் தோல்வி கவிதைகள் | காதல் தோல்வி கவிதைகள் |
அப்பாவிடம் வாங்கிய பாக்கெட் Money -ல் கிடைத்த ஆனந்தம் இன்று வாங்கும் Salary -ல் இல்லை
வகுப்பறை அரட்டைகளில் கிடைத்த திருப்தி
இன்றைய கூகிள் சாட்டில் இல்லை
ஆறு கிலோ மீட்டர் நடையில் தெரியாத அலுப்பு
இன்றோ ஐந்து நிமிட நடையில்.
கொளுத்தும் வெயில் கூட அன்று சங்கீதம்
இந்த ஏ.சி ரூம் கூட இன்று இரைச்சல் தான்
இறைவா!
போதும் இந்த வாழ்க்கை
திரும்ப தா ஏன் கல்லூரி பருவத்தை! | அது ஒரு நிலாக் காலம் - நண்பர்கள் கவிதை | நண்பர்கள் கவிதை |
நமது காதலும் உறக்கமும்
ஒன்று தான்!
நினைத்தாலும் தழுவிடும்
இரண்டும்
இருப்பது போல் இல்லாமல்
நம் உள் இருக்கும்
இரண்டும்
விழி மூடிஉறக்கம்
நமை தழுவது போல்
விழி திறந்தும்
நமை தழுவிக்கொள்ளும்
காதல்!
இரண்டும் உருவம் அற்றது !
உயிர் கொண்டது
உயிர் கொள்ளவது! | காதலும் உறக்கமும் - காதல் கவிதை | காதல் கவிதை |
இரவைச் சுட்டெரித்த
சூரியன் போல நம்
பிரிவை சுட்டெரிக்க
நினைவுகள் ஒன்றே போதும்
என் கண்ணே.! | நினைவுகள் ஒன்றே போதும்.! - காதல் கவிதை | காதல் கவிதை |
நம் வாழ்வில் எத்தனையோ கோடி மகிழ்ச்சியான தருணங்களை கடந்து சென்றிருந்தாலும் அது நம் தோழர்களுடன் கூடி கழித்த சிலநொடி மகிழ்ச்சிக்கு ஈடாகுமோ .
குட்டிசுவற்றின் மேல் அமர்ந்து குட்டிகதைகள் பேசி அரட்டை அடித்தது.
சாலையில் செல்லும் பெண்ணைகண்டு கூடி சண்டையிட்டு பார்வையால் ரசித்தது.
அதே பெண் தன் நண்பனின் காதலியாக மாறிவிட்டால் அவளை தன் தமக்கையாக பாவித்து
பாசமலரானது
தேநீர்விடுதியில் மறைவாக நின்று ஒரு புகயிலைசுருள் வாங்கி நட்போடு
பகிர்ந்த்திளுத்தது.
தெருக்களில் மட்டைபந்து ஆடி நடந்துசெல்வோரின்
மண்டையை உடைத்தது.
^நாங்க எல்லாம் அந்த காலத்துல^ என்று போதனை செய்ய வரும் பெருசுகளை ^நாராயணா இந்த கொசுதொல்ல தாங்கலடா^ என்று குறும்பு செய்தது.
எதிர்வீட்டு மாமியை கூடிநின்று ஏடாகூடமாக சிந்தனை செய்தது.
மொட்டைமாடி நிலவொளியில் ஒருவரையொருவர் சீண்டிக்கொண்டே உறங்கியது.
நண்பனின் அக்காவின் திருமணத்திற்கு சென்று தண்ணீர் விருந்து என்னும் பெயரில் நண்பனிடம் பணம் பறித்து அவனை பாடாய்படுத்தியது
போதையில் தடுமாறிய நண்பனை தாங்க நண்பர்களின் கரங்கள் ஒன்றாய் கூடியது.
காதல் தோல்வியில் தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் இருந்த நண்பனை ஒன்றக சேர்ந்து சென்று கருத்து சொல்கிறேன் பேர்வழி என்று அவனை கடுப்படித்தது.
நண்பனின் காதலியை அவனோடு சேர்த்துவைத்து அதனை பெரும் சாதனையாக நினைத்து சந்தோஷத்தில் களித்த்தது.
சினிமா கொட்டகையில் சேர்ந்து சென்று சண்டையிளுத்து காவல்நிலையத்தில் சிக்கி தர்மஅடிவாங்கி நண்பனிடத்தில் மச்சான் வலி எப்புடிடா இருக்கு என்று கேள்வி வினவி அந்த வலியிலும் கூடி சிரித்தது
வெளியூரில் வேலைக்கு செல்லும் நண்பனை கூடி சென்று வழி அனுப்பியது.
பொருளாதார சிக்கலில் சிக்கிய நண்பனின் கும்பத்திற்கு நட்பை தவிர வேறு ஏதும் எதிர்பாராமல் உதவி செய்து நண்பனின் சோகங்களை பகிர்ந்து கொண்டது.
எங்கும் காக்கை கூட்டம்போல ஒன்றாக சுற்றித்திரிந்தது .
சிறு சிறு சண்டைகள் இட்டு பின் பிரிவின் வலியை உணர்ந்து கூடி திளைத்து
இதைவிட மகிழ்ச்சியான தருணங்கள் வாழ்வில் கிடைக்குமா? எப்போதும் இப்படியே வாழ்ந்துவிட வேண்டும் என்று மனது நினைக்கிறது , ஆனால் காலமோ நம்மை இதனை கடந்து செல்லவைத்து அதனை வெறும் நினைவலைகளாக மட்டும் உலாவர செய்கிறது
நட்பின் சுகம் வேறு எதிலுண்டு கூறுங்கள் நண்பர்களே | நண்பர்களோடு கூடி மகிழ்ந்த நாட்கள் - நண்பர்கள் கவிதை | நண்பர்கள் கவிதை |
தாயின் கருவறையில்
நான் வெளிவரும் போது
கொண்ட உந்து சக்தி
அவளின் உயிர் வழியில் ,
வலியில் நான் கொண்ட
உயிர் வேகம்!
அந்த துடிப்பின்
சாரம் இன்னும் குறையவில்லை
அம்மா
உனது கருவறைக்குள்
நான் கொண்ட இதய
துடிப்பு
இப்போது என்
உதிர செல்களுக்குள் முழங்கு கிறது
அம்மா
நான் துடிப்புக்குள்
உனது நாடி துடிப்புக்குள்
துடித்தவன்
இப்போது துடிக்கிறேன்
ஜெயித்துவிட
துணிவாய் உன்துடிப்பை
என்னுள் விட்டு சென்றாய்
அது துடிக்கவில்லை
வெடிக்கிறது
என் வெற்றியினை
உனக்கு சொல்ல
உன் மகன்
ஜெயிப்பான் உனது
துடிப்புடன் | கருவறை துடிப்பு - வாழ்க்கை கவிதை | வாழ்க்கை கவிதை |
தொடுவானமாய்
கானல் நீராய்
போகுமோ
நம் காதலென
அர்த்த ராத்திரியில்
தூக்கமில்லாமல்
அமர்ந்து
அர்த்தமில்லாமல்
யோசிக்கிறேன் .
நீ கண்டு
கொள்ளாததால் . | கானல் நீராய் - காதல் கவிதை | காதல் கவிதை |
நீ
நீராட
பனித்துளி
துவட்ட
பூக்கள்
உடுத்த
வானவில்
உறங்க
மேகம்
தலையணை
நிலா
தாலாட்ட
தென்றல்
தழுவ
நான்
நழுவ
நீ. | தழுவ நான் - காதல் கவிதை | காதல் கவிதை |
மறந்து விட்ட உன்னை நினைத்து
நான் மனம் வாடவில்லை
என்னை மறக்க சொன்ன உன்னை
நினைத்தே மனம் வாடுகிறேன் | மனம் வாடுகிறேன் - காதல் கவிதை | காதல் கவிதை |
என் உயிர் இந்த பூமியை விட்டு
பிரிந்தாலும்
என் இரு விழிகளும் விழித்திருக்கும்
உன்னை காண | கண் தானம் - ஹைக்கூ கவிதை | ஹைக்கூ கவிதை |
என்றோ வரவிருக்கும்
இறப்பிற்காக
தினம் தினம்
ஒத்திகை
இரவில் | தூக்கம் - ஏனைய கவிதைகள் | ஏனைய கவிதைகள் |
உலக மகளிர் தினம் கவிஞர் இரா .இரவி
ஓவ்வொரு ஆணின் வெற்றிக்கு பெண் பின் நின்றது போதும்
ஓவ்வொருப் பெண்ணும் வெற்றிப் பெற வேண்டும்
தடைகளை உடன் தகர்த்திட வேண்டும்
தன்னம்பிக்கையை மனதில் வளர்த்திட வேண்டும்
மூடநம்பிகைகளை முற்றாக ஒழித்திட வேண்டும்
மூளையைப் பகுத்தறிவிற்குப் பயன்படுத்திட வேண்டும்
மானே தேனே என்றால் கவனமாக இருந்திட வேண்டும்
மனது லட்சியம் நோக்கிப் பயணித்திட வேண்டும்
சமையல் அறையில் இருந்து முதலில் விடுபட வேண்டும்
சமயங்களின் மூடப் பழக்கங்களை மாற்றிட வேண்டும்
போகப் பொருள் அல்ல பெண்கள் உணர்த்திட வேண்டும்
பாகத்தில் சரிசமமாகப் பங்குப் பெற்றிட வேண்டும்
பெண்ணாகப் பிறந்ததற்குப் பெருமைப் பட வேண்டும்
பெண் இன்றி உலகம் இல்லை விளக்கிட வேண்டும்
எதையும் சாதிக்கும் இதயம் பெற்றிட வேண்டும்
எதற்கும் அஞ்சாத துணிவினைப் பெற்றிட வேண்டும்
பெண்கள் ஆற்றலின் இமயம் தெரிந்திட வேண்டும்
பெண்கள் திறமையின் ஊற்றுப் புரிந்திட வேண்டும்
பெண்கள் சிந்தனையின் சிகரம் தெரிந்திட வேண்டும்
பெண்கள் செயலின் வடிவம் புரிந்திட வேண்டும்
ஆண் பெண் பேதம் உடன் அகற்றிட வேண்டும்
ஆண் பெண் சமத்துவம் நடைமுறைப் படுத்திட வேண்டும்
பெண்கள் இட ஒதுக்கீடு உடனே சட்டம் ஆகிட வேண்டும்
தாமதித்தால் பெண்கள் வாக்களிக்க முடியாது அறிவித்திட வேண்டும் | உலக மகளிர் தினம் கவிஞர் இரா .இரவி - வாழ்க்கை கவிதை | வாழ்க்கை கவிதை |
அவளுக்காக
பரிசு ஏதும் வாங்கி தர வில்லை
அவள் என்னுடம் இருப்பதால்
அவளுக்காக
கவிதைகள் ஏதும் எழுத வில்லை
அவள் வார்த்தைகள் கவிதையாக இருப்பதால்
அவளுக்காக
காத்திருக்கவில்லை அவள் நினைவுகள்
என்னுடம் இப்போதும் பேசுவதால்
அவளுக்காக
எதையும் ரசித்ததில்லை அவள்
முகம் என்னுள் புதைந்ததால்
அவளுக்காக
இறக்கபோவதில்லை அவள்
காதல் என்னுடன் இருப்பதால்
வேலு | அவளுக்காக - காதல் தோல்வி கவிதைகள் | காதல் தோல்வி கவிதைகள் |
அவள்
உன்னுடன் பேசவில்லையா ?
அவள்
உன்னை பார்க்கவில்லையா ?
அவள்
உன்னிடம் பழகவில்லையா ?
அவள்
உன்னை நினைக்கவில்லையா ?
அவள்
உன்னை நேசிக்கவில்லையா ?
நீயும் அப்படியே இரு
இதில் மட்டுமாவது
அவளுடன் ஒன்றி இருக்கட்டும்
அப்போதாவது புரியட்டும் !
வேலு | ஒருதலை காதலா - காதல் தோல்வி கவிதைகள் | காதல் தோல்வி கவிதைகள் |
என் கல்லாரில் இருந்து செல்லும் காற்றே
சொல் அவளிடம் நான் இன்னும் அவளை காதலிக்கிறேன் என்று | மரண வலி - ஏனைய கவிதைகள் | ஏனைய கவிதைகள் |
அறியாத வயதில் தெரியாமல் செய்த தவறுகளில்
சரியாக செய்த ஒரு தவறு என் முதல் காதல் | முதல் காதல் - ஏனைய கவிதைகள் | ஏனைய கவிதைகள் |
"பணம் பத்தும் செய்யும்"
சொன்னவன் பைத்தியக்காரன்
காதலன் கை பிடித்து
உயிர்விட தயாராக
இருந்தநேரத்தில்
பின்னாடி நின்றிருந்த
பலகோடி
காரும் காரில் இருந்த பணவும்
என்ன செய்து கொண்டு இருக்கிறது
வேலு | பணம் பத்தும் செய்யுமா ? - கைபேசி கவிதைகள் | கைபேசி கவிதைகள் |
அன்று
தலைவனுக்கு
மேகம் தூது அனுப்பி
பல திங்கள் காத்திருந்தால்
தலைவி !
இன்று
காதலனுக்கு
கணினியில் தூது அனுப்பி
காதலனுக்கு கடிதம் சேரும் முன்னே
வேறு ஒருவரை
தேர்தேடுத்துக்கொண்டு
இருக்கிறாள்
நவீன காதலி !
வேலு | நவீன காதலி ! - காதல் தோல்வி கவிதைகள் | காதல் தோல்வி கவிதைகள் |
எத்தனை
அழகி வேண்டுமானாலும்
தேர்ந்தெடுத்துக்கொள்ளட்டும்
இந்த சமுதாயம்
என்னவள்
மறைவுக்குப்பின்
| என்னவள் - காதல் தோல்வி கவிதைகள் | காதல் தோல்வி கவிதைகள் |
உனது காதல் பூக்களின் மனம்.!
எனது கனவிற்கு உயிர் தருகிறது தினம்.!
மலரட்டும் என் காதல் கனவுகள்.!
உணரட்டும் உன் காதல் பூக்கள்.! | காதல் - ஏனைய கவிதைகள் | ஏனைய கவிதைகள் |
நீ நடந்து செல்லும் பாதையில் மலரை
இருக்க ஆசை உன் பார்வை தான்
என் மிது படவில்லை
உன் மதமாவது படட்டுமே . | உன் பார்வை - ஏனைய கவிதைகள் | ஏனைய கவிதைகள் |
கொசுவை கூட
தேனீயாக
பார்க்கிறேன்
உன்னை கடிப்பதால்! | தேனீயான கொசு. - ஏனைய கவிதைகள் | ஏனைய கவிதைகள் |
எத்தனை முறை தேர்தல் வந்தாலும்
ஏழைகளின் வாழ்வில் விடியல் வந்துவிடுமா
எத்தனை முறை போராடி
விடுதலை வாங்கினாலும்
ஏழைகள் எங்களுக்கு நீதியும்
விடுதலையும்
கிடைக்குமா?.
மறக்காமல் இப்பொழுது மட்டும்
வந்து போவர்கள் அரசியல் வாதிகள்
எங்கள் பக்கம்
ஏழைகள் எங்களின் ஓட்டும்
அவர்கள் ஜெயிக்க அவசியம் தேவை
என்பதால் என்னவோ ?
மேடைகளில் அனல் பறக்கும்
வார்த்தைகளையும்
அவர்கள் சொன்ன
உறுதி மொழிகளையும்
மீண்டும் நம்ப மனம் இல்லை .
இருந்தாலும் ஒரு நம்பிக்கை
என்றாவது ஒரு மனிதன்
எங்கள் கண்ணிற் துடைக்க
வருவான் என்ற ஒரு நம்பிக்கையில் தான்
ஓட்டு போட நடக்கிறேன்
நம்பிக்கை தான் வாழ்க்கை அல்லவா. | ஏதோ ஒரு நம்பிக்கையில் - ஏனைய கவிதைகள் | ஏனைய கவிதைகள் |
நிலவை வெட்டி வைத்த அவள் கை விரலுகளை காண ,,,,,,,,,,,
மேககைலை எடுத்து வைத்த அவள் குந்தலை
காண,,,,,,,,,,
புன்னகை சிந்தும் அவளின் உதடை காண ,,,,
காந்த விசை கொண்ட அவளின் கண்ணகை காண .
புவினனால் உருவக்கிய அவளின் பாதைகளை காண,,
என்னக்காக துடிக்கும் அவளின் இதய துடிப்பை காண,,,,,,,,,
ஆசை ,,,,,,,,,,,
பார்ப்பேனா ? | தேடல் - ஏனைய கவிதைகள் | ஏனைய கவிதைகள் |
இருண்ட மேகங்கள்
இடி முழக்கத்தோடு
மழை இன்னும் இல்லை
என் மன நிலை போல
பார்வைக்காக காத்திருக்கிறேன்
விழி தர மறுக்கிறாய்
உயிருக்காக காத்திருக்கிறேன்
சுவாசம் தர மறுக்கிறாய்.! | சுவாசம் தர மறுக்கிறாய். - காதல் கவிதை | காதல் கவிதை |
தோழமை குற்றம்
தொல்லியல் குற்றம்
வீரம் குற்றம்
காதல் குற்றம்
காமம் குற்றம்
துள்ளல் குற்றம்
சுயம் குற்றம்
மணம் குற்றம்
சொல் குற்றம்
செயல் குற்றம் .
அரை நிர்வாணமே
மகளிர் முன்னேற்றமா?
அயராத கண்களின் ஏக்கம்
அயலோற்கும் புரியாது
அன்னைக்கும் புரியாது
கிழித்த கோட்டை தாண்டிவிட்டால்
விளித்து கொள்ளும் ஆண்கள் நெஞ்சம்
புளித்து போன புலம்பல்கள் .
வேசங்கள் மாறினும்
வேதனை ஒன்றுதான்
தீர்ப்புகளின் வடிவம் மாறினாலும்
வார்ப்புகள் மாறிடா .பெண்ணியம் உலகிலே | மகளிர் தினம் - வாழ்க்கை கவிதை | வாழ்க்கை கவிதை |
அடிபடாமலே
ஆழமான காயம்
அவளின்
மௌனம் | காதல் காயம் - காதல் தோல்வி கவிதைகள் | காதல் தோல்வி கவிதைகள் |
உனக்கு
துடிக்க வைப்பது
என்றால்
ரொம்ப
பிடிக்கும் போல்.
எத்தனையோ
மனிதர்களை
துடிக்க வைத்த
நீ
இன்று
இயற்கையையும்
துடிக்க வைத்துவிட்டாயடி.
எத்தனை தடவை
சொல்ல
உனக்கு .
மழையில்
குடை
கொண்டு
செல்லாதே
யென்று ?.
பார்.
இந்த துளிகள்
என்ன செய்ததடி
உனக்கு.
அவைகளையும்
உந்தன் மேனியில்
விழவிடாமல்
துடிக்கவிட்டாய்.
இயற்கைக்கே
இந்த கதி
யென்றால்
மனிதர்களுக்கு. | துளிகள் - காதல் கவிதை | காதல் கவிதை |
நீ பிறந்த
சில தினங்களில்
தினத்திற்கு
ஓராயிரம்
முறை
உன் காலில்
விழுந்து கொண்டிருந்தாள்.
அவளை அறியாமலே.
இந்த
உலகம்
என்னும் வாழ்க்கையில்
உன்னை
போராளியாக
விட
போகிறோமே யென்று.
அந்த காலங்களில்
அயராது
போராடிக் கொண்டிருப்பாள்
உன் சேட்டைகளோடு
அவள்.
தன் செயல்களை
மறந்து
அசந்து
போய்
உட்கார்ந்திருப்பாள்.
நீ அவள்
மடியில்
அமர்ந்திருக்க .
இன்றோ நீ
செய்கிறாய்
பதில் மரியாதையாக .
வீடுகள் இருந்தும்
அனாதையாக
அவள்
முதியோர் இல்லத்தில்.
காரணம்
உன் திடீர்
சொந்தம்.
உன்னை
பெற்று எடுத்ததற்கே
ஆயிரம் முறை
காலில் விழுந்தவளுக்கு
நீ எத்தனை
முறை
?????
விழ வேண்டும் யென்று
யோசி.
அவளை
தவிக்க விட்டதற்காக.
இந்த உலகே
கூடினாலும்
அவளின்
மன ஆத்திரம்
அடங்காதடா.
நான் சொல்லிவிட்டேன்
அடங்காது
யென்று
ஆனால்
நீ ஒரு
முறை
மனதார
அவளிடம்
செல்.
அவளே புரிந்து
கொள்வாள்
உன் நிலையை .
அறிந்து கொள்
உன் தாயை. | மன்னிப்பு - வாழ்க்கை கவிதை | வாழ்க்கை கவிதை |
எத்தனை முறை
தான் தூது
விடுவேன் .
என் காதலை
சொல்லி வா
என்று
அந்த வானிடம்.
என்று தான்
போய்
சேருமோ
என் காதலியாகிய
அந்த நிலவிற்கு. | தூது - காதல் கவிதை | காதல் கவிதை |
அன்று
ஷாஜஹான்
கட்டினான்
ஆக்ராவில்
தாஜ் மகாலை
அவன் காதலிக்காக.
நானோ
கட்டி வைத்திருக்கிறேன்
ஒரு உலகத்தையே
அவளுக்காக
என் மனதில்
என்று தான்
தெரியுமோ .
அவளுக்கு .
காத்து கொண்டிருக்கிறேன்
அந்த உலகத்தில் வாழ
என் ஆயுள் வரை. | பரிசு - காதல் கவிதை | காதல் கவிதை |
வெள்ளைத்தாளில்
விடைதருவாயோ
உனக்கொரு கடிதம்
விடுகதையாய்
வெறும் வெள்ளையாய்
பதிலும் தந்ததென்ன
காதல் மையும்
தீர்ந்ததுவோ?
-இப்படிக்கு முதல்பக்கம் | காதல் மை - ஏனைய கவிதைகள் | ஏனைய கவிதைகள் |
இப்போது தான்
தெரிகிறது
பைசா சாய்
கோபுரத்தின் ரகசியம் .
அது கூட
ரசித்து உள்ளதடி
உன் அழகை.
யாருக்கும் தெரியாமல்.
நீ தீண்டிய
அதிர்ச்சியில்
இருந்து
இன்னும் மீள
வில்லை
போலும் .
அந்த தூணுக்கு
கூட
உயிர் வந்துள்ளதடி
உன்னை காணும் போது.
நான் மட்டும்
என்ன விதி
விலக்கா இதற்கு. | சாய்வு - காதல் கவிதை | காதல் கவிதை |
தூர்வாரி தூர்வாரி
துரும்பாகப் போன நெஞ்சம்
துருப்பிடித்து அடைக்கும் முன்னே
காதல்நீரும் பாய்ந்திடுமோ?
குடிநீரை மறந்திருக்கும்
குணமகனின் குறைதீர்ப்பாய்
குடி-மகனாய் ஆகும் முன்னே
காதல்நீரும் பாய்ந்திடுமோ?
வறண்டு கிடக்கும் வைகையல்ல
பாலாறு பரணி நதிகளோடு
வங்காளம் வரளும் முன்னே
காதல்நீரும் பாய்ந்திடுமோ?
கடைக்கண்ணில் காட்சிமங்க
சுருக்கங்கள் மேனிகொள்ள
கைத்தடி அதுவேடுக்கும் முன்னே
காதல்நீரும் பாய்ந்திடுமோ?
பட்டம் பெற்றேன் பணமும் பெற்றேன்
பதவியுடன் பலனும் பெற்றேன்
பெற்றவரின் ஆசை முன்னே
காதல்நீரும் பாய்ந்திடுமோ?
உன்னையன்றி யாருமில்லை
உலகிலீடு வேறுமில்லை
உண்மை நிலை மாறும் முன்னே
காதல் நீரும் பாய்ந்திடுமோ?
சுகதுக்கம் எல்லாமே
கருவறையில் பூட்டிவைத்தேன்
துக்கமது கூடும் முன்னே
காதல்நீரும் பாய்ந்திடுமோ?
கடல் சாயல் வான நீலம்
மழைச் சாயல் கொண்ட மேகம்
உலகைவிட்டு மறையும் முன்னே
காதல்நீரும் பாய்ந்திடுமோ?
உன்பதிலில் விடையுண்டு
உணர்ச்சிகளின் எடையுண்டு
கண்மூடும் நேரம் முன்னே
காதல்நீரும் பாய்ந்திடுமோ?
-இப்படிக்கு முதல்பக்கம் | காதல் நீர் - ஏனைய கவிதைகள் | ஏனைய கவிதைகள் |
விற்பனைக்காக
பலதும் உண்டு
கவிதையில் குறிப்பாய்
காதலேயுண்டு!
-இப்படிக்கு முதல்பக்கம் | விற்பனைக்காக - ஏனைய கவிதைகள் | ஏனைய கவிதைகள் |
உன் பிறந்தநாள் இரவில்
உனக்கு பரிசாக
பூக்கள் நிறைந்த கூடையை எடுத்துவந்தேன் உன் அறைக்கு
அந்த பூக்களை பார்த்த உன்னிடம்
உன்னை போலவே
இந்த பூக்களுக்கும்
இன்றுதான் பிறந்தது என்றவுடன்
வெட்கப்பூ ஒன்று பிறந்தது உன்னிடம்
திரும்பச் செல்லும் போது
கூடை நிறைய வெட்கப்பூக்களுடன்
இரண்டு முத்தபூக்களும் எடுத்துசென்றேன் | முத்தக்கூடை - காதல் கவிதை | காதல் கவிதை |
எந்தன் மனதில் என்றும் உறுதியாய்
உரிமையாய் இருக்கும் என் தாயானவனே
என் உயிருக்குள் இருந்து அணுவணுவாய்
கொள்கிறாயே .
உந்தன் மூச்சு எந்தன் உடலெங்கும்
பட்டு தழுவி உஷ்ணத்தால் எந்தன்
உயிர் சொர்க்கம்காண்பது எப்போது
சோதனைகள் பல வந்தபோதும் உள்ளத்துக்குள்
உன்னையே சுமக்கிறேனே .உந்தன் தோல்
சாய்ந்து எந்தன் வேதனை மறப்பது எப்போது
இறப்பதற்கு முதல் என்னிடம் வந்துவிடு
உறவாட அல்ல .உந்தன் உச்சியில்
முத்தமிட்டு ஒரே ஒரு முறை நான்
உன்னிடம் I LOVE U சொல்ல காத்திருக்கிறேன் | I LOVE U சொல்ல - காதல் கவிதை | காதல் கவிதை |
நீ பேசும் போது தயவுசெய்து
கைகளை ஆட்டி ஆட்டி பேசாதே
எதிர்க்கட்சி போல்
எப்போதும் சலசலத்துக்கொண்டே இருக்கிறது
இந்த வளையல்கள் | வளையல்கள் - ஏனைய கவிதைகள் | ஏனைய கவிதைகள் |
அன்று எனக்கு,
என்றுமில்லாத
மகிழ்ச்சி.!
அழகாய் இருந்தாள்,
பா.விஜய்யின் பாடல் போல.!
டாவின்சியின் ஓவியம் போல.!
கொழும்பில் இப்படியும் ஒரு தேவதையா.!
அதுவும் எனக்கருகில்,
பஸ்ஸில், என்னை நானே கிள்ளிப்பார்த்தேன்,
அவளால் தானோ என்னவோ,
பம்பலபிட்டியில் இறங்கவேண்டிய நான்,
வெள்ளவத்த தாண்டி சென்றுகொண்டிருந்தேன்.!
சட்டென எழும்பிய
அவள் என்னைப்பார்த்து சிரித்துவிட்டு இறங்கிச்சென்றாள்,
ஏன் சிரித்தாள்!
ஐயோ.! என்ர கடவு சீட்டு,
ஆயிரம் ரூபா! | ஏன் சிரித்தாள்! - ஏனைய கவிதைகள் | ஏனைய கவிதைகள் |
நீ ஒன்றும்,
என் முதல் மழையல்ல
என்னை நனைத்த மழைகளில்
நீ ஆலங்கட்டி மழை | முதல் மழை - ஏனைய கவிதைகள் | ஏனைய கவிதைகள் |
கனவுகள் எப்போதும்
ஒருமுறைதான் வருமாம்
நான் மட்டும் எப்படி
தினமும் உன் கனவில் வருகிறேன்
உண்மைதான்
கனவு ஒருமுறைதான் வரும்
ஆனால்,
தேவதை கனவு
திரும்ப திரும்ப
தினமும் வரும் | தேவதை கனவு - காதல் கவிதை | காதல் கவிதை |
நான் எதை கேட்டாலும்
வெட்கத்தையே தருகிறாய்
அந்த வெட்கத்தையே கேட்டால்
என்ன தருவாய் | வெட்கத்தை கேட்டால் - காதல் கவிதை | காதல் கவிதை |
தாலாட்டும் நானறியேன்
தாய் முகமும் நானறியேன்
தந்தை என்முன் பெயரும் நானறியேன்
முன் எழுத்து ஆயிரமிடத்தில்
கேள்விகள் பல கோணத்தில்
பதில் நானே அறியேன்
உதித்த இடம் ஓர் மறைவு
பிறந்த இடம் கழிவறை
விழுந்த இடம் குப்பை தொட்டி
வளர்ந்த இடம் அநாதைகள் இல்லம்
சொந்த இடம் யாதென சொல்வேன்.
பத்திரத்தில் அறிவழகி
இல்லம் வழங்கிய நற்பெயர்
பார்ப்போர் முன் அறிவழகி
பின் முதுகில் அநாதை
சமூகத்தின் பல வேடங்கள்
சகித்து வாழும்
கழிவறை குழந்தை நானே .
நட்பெனும் பெயர் தொடுத்து
காமத்தின் பசி தேடி
மனித உருவில் நடமாடும்
உணர்ச்சியற்ற மிருகங்கள்
மிருகத்தின் இன்பம் - இன்று
துயரத்தில் வாழும்
கழிவறை சிசுக்கள்.
உயிராக்கும் இறை வடிவ பெண்ணே
அன்புக்கு ஆலயமும் நீயே
எப்போது நீ மாறினாய்?
பெண் உருவில் எமனாக
ஆண்களை சிறை வைத்து - நீ
நிரபராதி சட்டம் உன் நண்பனே
எப்போது மாறும் சட்டத்தின் கீதை.
தொப்புள் கொடி உறவை உன் மடியில்
உன் உயிர் பிழிந்து அன்போடு பாலூட்டி
உன் தாலாட்டின் இசையில்
தன் நிலை மறந்து தூங்க வைத்தவளே
எப்போது நீ மாறினாய்?
கள்ளிப்பால் நிபுணராக
சங்கு ஊதுவதற்கு . | குப்பை தொட்டி தாயாகிறாள் - ஏனைய கவிதைகள் | ஏனைய கவிதைகள் |
அர்ச்சகர்
அள்ளி வழங்கினார் குங்குமம்
தட்டில் பணம் | ஹைக்கூ - ஏனைய கவிதைகள் | ஏனைய கவிதைகள் |
எவ்வளவு முயன்றும்
வளைந்தோ
நெளிந்தோ
கோணலாகவோ
வருகிறது
நேராக போட முயன்ற
கோடு | கோடு - ஏனைய கவிதைகள் | ஏனைய கவிதைகள் |
உனக்குள் நானும்
எனக்குள் நீயும்
எப்போதுமே
வாழ்ந்துகொண்டிருப்பதால்
பிரிவு என்பது
நமக்குள் இல்லை.! | பிரிவு - காதல் கவிதை | காதல் கவிதை |
அக்காலம் இக்காலம்
வரும்காலம் எக்காலம்
பொன்னான நேரத்தை
பூர்த்தியாய் செலவழிக்க
உனக்கிங்கு ஓர்காலம்
உணர்ச்சிகளை கொள்ளைகொள்ளும்
அருமையென அண்டிநிற்க
அற்புதமாய் காட்சிதரும்
உன்காலம் ஊரறிய
உள்மனதை கொன்றுதின்னும்
நாசியிலே காற்றடைக்க
நாடியதன் குணம்கூறும்
அருகாமையில் முன்னேவரும்
நேரமிங்கு காதலிலே
காதலிங்கு பொதுவுடைமை
புணர்வதனில் குறையில்லை
வறட்சிகண்ட வாழ்க்கையிலே
வசந்தத்தின் வாடைதரும்
வந்தவழி யாரறிவார்
தொடர்ந்துவரும் கோடை என்று
காலத்தின் செயல்பாட்டில்
காதலது தீர்ப்பளிக்கும்
வெற்றிமாலை அவரிடத்தில்
வறட்சியிலும் குளிர்ந்தவராம்
-இப்படிக்கு முதல்பக்கம் | காலம் - ஏனைய கவிதைகள் | ஏனைய கவிதைகள் |
காதல் என்பது ஒரு முறை
இறந்து தான் பிறக்குமாம்.,
அவள் என்னை காதலிக்கும் வரை!
எனது இதயம் அவளுக்காக
துடிக்க தொடங்கிவிடுமாம்.,
அப்படியென்றால் எனது உயிர்?
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
கசக்கி எறியும் காகிதமும்
கிறுக்கி தள்ளும் கடிதங்களும்
சில நேரம் தலையணையையும்
நனைத்துச் செல்லும்.,
அவள் என்னை
பார்க்க தவறிய நாட்களில்!
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
சில நாட்கள்
கெட்ட கனவு என்றோ
கனவிலாவது வா என்றோ
புலம்பி தள்ளும் புரண்டு எழும்
தூக்கமின்றி விடிந்துச் செல்லும்
தூங்கா என் இரவுகளும்,
அவள் நினைவுகளும்.,
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
எதிர் எதிரே பின்னிக் கிடக்கும்
விழிகள் நான்கும்,
இரண்டாகி போகாதோ என
பொழுதும் புலம்பி கொண்டே
பரிதவித்து பரிணாமிக்க துடிக்கும்
இதயமெனும் ஊஞ்சலில்.,
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
வந்த பின்னும் வர மாட்டாளா
என்னருகே வந்து நின்றாலும்
பேசமாட்டாளா என்னிடமே!
எத்தனியும் மோகமும் தாகமும்?
தயக்கமே முன்னிருக்க
நானோ இல்லை அவளோ
தொலைத்திடுவோம் என் உயிரை.,
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
சதா கற்பனையில் உதிர்த்து
தள்ளும் வார்த்தைகள் யாவும்
காற்றில் என்ன சேர்ந்தா விட போகிறது
அவளிடம்.,
இருந்தும் அலைந்து கொண்டே
ஆறுதல் அடைகிறது என் உயிர்!
அவளிடம் சென்று விடலாமென்று!
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
ஏற்க துனியும் தைரியம் இருந்தும்
ஏனோ எதிரியாய் அலைந்த
இரு உயிரும்., ஒருயிராய் ஆனகதை
அவள் உள்ளங்கையில் எழுதிப்போகும்
எனது பெயர் தற்செயலாய
என் கண்ணில் -இன்று
அவள் உள்ளந்தனில்
காதலாகி போனது எனது உயிர்! | காதலி காதலி - காதல் கவிதை | காதல் கவிதை |
காதலித்தாய் இரு மனதிற்குள்
மனவறைக்குள் புகுவதற்கு
கண்பேசும் வார்த்தை போதாது
கையும் உடல் பேசவேண்டுமோ?
பேருந்தில்.
பூங்காவில்.
கடற்கரையில்.
கடவுள் சந்நிதியில்.
திரையரங்கில்.
தனியிடத்தில்.
சோலையிலே.
காட்டினிலே.
வீதியிலே.
மாடியிலே.
விடுதியிலே.
வேலையிலே.
பள்ளியிலே.
கல்லூரியிலே.
கைகொண்ட காதல்கொண்டு
காதல் இங்கு சாகுதய்யா.
நாயினும் இவர் கேவலமாய்
நானிலத்தில் வலம்வரவே
பத்துபேரை முன்னிறுத்தி
செருப்பாலடி தரவேண்டுமைய்யா.
காதலுக்காய்.நல் காதலருக்காய்.
-இப்படிக்கு முதல்பக்கம் | காதலிங்கு. - ஏனைய கவிதைகள் | ஏனைய கவிதைகள் |
நான் தேவதைகளை நம்புகின்றேன்
அவை கடவுளின் தூதர்கள்
நான் தேவதைகளால் சூழப்பட்டவள்
அவர்களை நண்பர்கள் என்று அழைக்கிறேன். | நட்பு - நண்பர்கள் கவிதை | நண்பர்கள் கவிதை |
யாரையும் அதிகமாக
நேசித்து விடாதே
அவர்கள் நம்மிடம்
பேசாத ஒரு நிமிடம்
நரகமாக மாறிவிடும். | நேசம் - காதல் கவிதை | காதல் கவிதை |
பக்கம் பக்கமாய்
பேச நினைக்கின்றேன்
"ஆனால் "
முந்திக்கொள்கிறது
என் மௌனம் | மௌனம் - ஏனைய கவிதைகள் | ஏனைய கவிதைகள் |
உலகில் எத்தனை
கவுள் இருந்தாலும்
உன்னை எனக்கு
தோழியாக கொடுத்த
உன் தாயும்
கடவுள்தான். | கடவுள் - நண்பர்கள் கவிதை | நண்பர்கள் கவிதை |
கவலைகளை சுமந்து
கண்ணீர் சிந்துவதைவிட
லட்சியம் சுமந்து
ரத்தம் சிந்து
உலகம் உன்னை
போற்றும். | லட்சியம் - வாழ்க்கை கவிதை | வாழ்க்கை கவிதை |
நிழல் கூட
வெளிச்சம் உள்ள வரைதான்
துணைக்கு வரும்
உண்மையான "நட்பு"
உயிர் உள்ள வரை
துணைக்கு வரும் . | நட்பு - நண்பர்கள் கவிதை | நண்பர்கள் கவிதை |
கல் எறிந்த குளத்தில்
வளையங்கள் விரிவது போல்
குழி விழுந்த உன் கன்னத்தில்
வைரங்கள் மின்னுகின்றன | வைரம் - காதல் கவிதை | காதல் கவிதை |
ஆண்களின் காதல்
ஆயுள் உள்ளவரை
பெண்களின் காதல்
பெற்றோர் அழும் வரை. | காதல் - காதல் கவிதை | காதல் கவிதை |
என் இதயத்தில்
ஊஞ்சல் கட்டி
நிதமும் ஊசலாடுபவளே
நிறுத்தி விடாதே
உன் ஆட்டத்தை
நின்று விடும்
என் உயிரோட்டம். | காதல் - காதல் கவிதை | காதல் கவிதை |
உலகத்திற்கு ஒளி
தரும் சூரியனே
உறங்க சென்று விட்டது
என் உயிருக்கு
ஒளி தரும் நட்பே
நீ மட்டும் ஏன்
விழித்திருக்கிறாய். | நண்பன்டா - நண்பர்கள் கவிதை | நண்பர்கள் கவிதை |
நட்பு என்பது
கரும்பலகை அல்ல
அழித்து அழித்து எழுதுவதற்கு
அது கல்வெட்டு. | நட்பு - நண்பர்கள் கவிதை | நண்பர்கள் கவிதை |
அன்பின் உருவமாக முழுமையாய் இறை,
இறை அன்பை வணங்கும் மனிதங்கள்,
இறையுடன் கலக்க விழையும் மனிதங்கள்,
மனிதம் மேல் அன்பு கொள்ளும் மனிதங்கள்.
நாய்கள் அன்பு கொள்ளுவது நாய்களிடத்தில் மட்டுமே.
நாய்களுக்கு மனிதத்தை உணரமுடிவதில்லை. | மனிதம் - ஏனைய கவிதைகள் | ஏனைய கவிதைகள் |
அந்த உன் நினைவுகளிடம்
தான்
கற்றுக்கொண்டேன்
நீ இல்லாமல்
வாழ்வது எப்படி என்பதை! | வாழ்வு! - காதல் தோல்வி கவிதைகள் | காதல் தோல்வி கவிதைகள் |
தோல்வி உன்னை
துரத்துகிறது என்றால்
வெற்றியை நீ
நெருங்கி விட்டாய்
என்று அர்த்தம். | வெற்றி - வாழ்க்கை கவிதை | வாழ்க்கை கவிதை |
மண்ணில் உதிர்ந்து கிடந்த
இறகு ஒன்று
மெல்ல காற்றில் மேலே
ஏறுகிறது
உதிர்ந்து
எந்த பாதையில் வந்ததோ
அதே பாதையில்
அசைந்து அசைந்து மேலெழும்பி
தனுக்கு சொந்தமான சிறகில்
லாவகமாய் பொருத்திக்கொண்டது
இப்பொழுது
பறத்தலில் சற்று வேகம்
கூடியிருந்தது அந்த பறவையிடம்! | பறத்தல் நிமித்தம்! - ஏனைய கவிதைகள் | ஏனைய கவிதைகள் |
அவள் கொடுத்த
அவளின் புகைப்படத்தையும்
அவள் காதலையும்
சேமித்து வைத்தேன்
அன்று.!
அவள் என்னை விட்டு
பிரிந்து சென்ற பின்
அவள் புகைப்படத்தை
அகற்றிவிட்டேன் என்னிடமிருந்து,
இருந்தும்,
அவள் கொடுத்து
சென்ற காதல்
நினைவுகளை அகற்ற
வழி தெரியாமல்
நான் இன்றும்! | ஒரு வழி சொல்லுங்கள்! - காதல் தோல்வி கவிதைகள் | காதல் தோல்வி கவிதைகள் |
நீ பிரிந்து
சென்றது வலிதான்
எனக்கு,
ஆனாலும் மகிழ்கிறேன்
மீண்டும் ஒரு முறை
அந்த வலி எனக்கு
கிடைக்காது என்பதால்.! | காதல் தோல்வி! - காதல் தோல்வி கவிதைகள் | காதல் தோல்வி கவிதைகள் |
என் உயிரினை உன் உள்ளத்தினுள்
உலாவவிட்டுவிட்டாய்.
அது உன்னை எப்பொழுதும் குத்திக்
குடைந்து கொண்டுதானிருக்கும்.
அதை இன்பமாக்குதலும், துன்பமாக்குவதும்
உன் பொறுப்பே.
முழுமையாக்குதளைத் தவிர்த்து
வேறு வழியேயில்லை. | காதலின் ஆரம்பம் - ஏனைய கவிதைகள் | ஏனைய கவிதைகள் |
மனித கழிவுகள் அறிவோம்.- இங்கு
மனிதனே கழிவாய்.!
பெண் சுகம் ஏற்போம். - நமது
அன்பின் வெளிப்பாடாய்.! | பெண்சுகம் தவிர்.! - ஏனைய கவிதைகள் | ஏனைய கவிதைகள் |
நீ என்னிடம் சொல்லி
விட்டு தான் செல்கிறாய்
ஆனாலும்
என் இதயம்
அடித்துக்கொள்கிறது
உன்னை பிரியும்
அந்த நொடி! | சந்திப்புக்கு பின்! - காதல் கவிதை | காதல் கவிதை |
இறந்து விட
தோன்றுதடி
நீ விட்டு சென்ற
உன் நினைவுகளுடன்
வாழ பிடிக்காமல்! | காதல் தோல்வி! - காதல் தோல்வி கவிதைகள் | காதல் தோல்வி கவிதைகள் |
தோல்வி தான்
இருந்தும் மகிழ்ச்சி
அடைகிறேன் இந்த
காதலில் மட்டும்! | தோல்வி ஒன்று! - காதல் தோல்வி கவிதைகள் | காதல் தோல்வி கவிதைகள் |
வெற்றி என்பது பெற்றுக்கொள்வது
தோல்வி என்பது கற்றுக்கொள்வது
முதலில் கற்றுக்கொள்வோம்
பிறகு பெற்றுக்கொள்வோம். | வெற்றி - வாழ்க்கை கவிதை | வாழ்க்கை கவிதை |
அரளி விதையும்
அழுகிறது இப்போது
"தன்னால்"
இறப்பவர்களை விட
"பெண்ணால்"
இறப்பவர்கள் அதிகம் என்று. | பெண் - வாழ்க்கை கவிதை | வாழ்க்கை கவிதை |
விட்டு கொடுங்கள்
விருப்பங்கள் நிறைவேறும்
தட்டி கொடுங்கள்
தவறுகள் குறையும். | வாழ்க்கை - வாழ்க்கை கவிதை | வாழ்க்கை கவிதை |
மறக்க வேண்டும்
என்று தான் நினைப்பேன்
அவளை பார்க்கும் வரை
"ஆனால்"
அதை கூட மறந்து விடுகிறேன்
அவளை பார்த்த பின்பு. | பார்வை - காதல் கவிதை | காதல் கவிதை |
பத்துமாதம் சுமந்த தாயைவிட
காலம் முழுதும் உன்னை சுமப்பேன் என்று சொன்ன உன் வாக்குறுதி எங்கே போனது
என்னை இழந்த பின்னும் ஏன் நீ மட்டும் இன்னும் வாழ்கிறாய் என்று கேட்க்கிறாயா .
சொல்கிறேன் கேள்
உன்னை இழந்த அதே நாள்
அதே இடம்
அதே நேரம்
உன் மடியில் துங்கிய படியே என் உயிர் போகும் எனக்காக காத்திரு. | எனக்காக காத்திரு. - ஏனைய கவிதைகள் | ஏனைய கவிதைகள் |
என்னை கொன்றுவிட
உங்களுக்கு பெரிதாய்
ஆயுதம் ஒன்றும்
தேவையில்லை
உங்களின்
இந்த பொய்யான
ப்ரியம் ஒன்றே போதும்
நான் செத்துவிட! | உங்களின் ப்ரியம்! - ஏனைய கவிதைகள் | ஏனைய கவிதைகள் |
சிந்திக்க தெரிந்தவனுக்கு
ஆலோசனை தேவை இல்லை
துன்பங்களை சந்திக்க தெரிந்தவனுக்கு
வாழ்வில் தோல்வி இல்லை. | தோல்வி - வாழ்க்கை கவிதை | வாழ்க்கை கவிதை |
கண்களை விட
கண்ணீருக்கு அதிக மதிப்பு
கண்கள் உள்ளதை காட்டும்
"ஆனால்"
கண்ணீர் உள்ளத்தை காட்டும். | கண்ணீர் - வாழ்க்கை கவிதை | வாழ்க்கை கவிதை |
பகைவனின் புண் சிரிப்பைவிட
நண்பனின் கோபம்
மேலானது. | கோபம் - நண்பர்கள் கவிதை | நண்பர்கள் கவிதை |
வேலைக்குப் போகும்
பெண்தான் வேண்டும்
எனக் கட்டிவந்துவிட்டு
ஜாலியாய் முற்றத்தில்
அமர்ந்து பேப்பர்
படிக்கும் கணவன் !
வீட்டைப்
பளிச்சென
வைக்கத்தெரியவில்லை
உனது பொண்டாடிக்கு
கணவனிடம் மாமியார்
அம்மா! பணியாரம்
செய்யச் சொல்லி
எத்தனை நாளாய்
கேட்கிறேன்
செய்து தரமாட்டீர்களா!
கோபத்தில் மகள்!
அலுவலகம் புறப்படும்
நேரத்தில்
நிதானமாய் வந்தமர்ந்து
ஊர்க்கதை சொல்ல
ஆரம்பிக்கும் உறவு!
சில்லறையாக
வைத்துக்கொண்டு
பஸ் ஏறத்தெரியாதா ?
பேருந்தில் கண்டக்டர்
கம்ப்யூட்டரில்
லேட்டஸ்டா
வந்ததெல்ல்லாம்
கற்றுக்கொள்ளுங்கள் மேடம்
அப்பத்தான் அலுவலக
வேலையெல்லாம்
எளிதாகும்
அலுவலகத்தில் மேலதிகாரி
யாரிடம் கோபிப்பது
எப்படி கோபிப்பது
எனப் புரியாமல்
இயந்திரமாய் ஓடும் வாழ்க்கை ! | உழைக்கும் மகளிர். - ஏனைய கவிதைகள் | ஏனைய கவிதைகள் |
அன்பே என்னால் நேசிக்க முடியும்
நீ இல்லாமல் சுவாசிக்கத்தான் முடியாது
என்னால் அழ முடியும்
நீ இல்லாமல் சிரிக்கத்தான் முடியாது
என்னால் சாக முடியும்
அன்பே நீ இல்லாமல் வாழத்தான் முடியாது.! | அன்பே நீ - காதல் கவிதை | காதல் கவிதை |
மவுனம்
சாதிக்கும் மாயபிம்பம்.
கண்ணாடியில்
என்னைப்பார்த்தால் தெரியும்
அவள் முகம்.! | அவள் முகம். - காதல் கவிதை | காதல் கவிதை |
மாலையின் நிழலில்
உன் கைகோர்த்து நடக்கிறேன்.
உன் இடைவிடா மௌனம்
உன் உள்ளங்கையின் அதிர்வின் வழி
என் ஞாபகத்தை கலைக்கிறது! | மௌனம் - காதல் கவிதை | காதல் கவிதை |
மலர்ந்தும் பறிக்காத பூக்கள்
என் மனதை பறித்துச்சென்ற பூக்களும்
அவள் கறுத்த விழிகள் மட்டும்தான்.! | அவள் விழிகள் - காதல் கவிதை | காதல் கவிதை |
உனக்கு நானும் எனக்கு நீயும்
என்னவாய் இருக்கிறோம்
நீ சொன்ன பிரிந்தே கிடக்கும்
கதவுகளைப் போலவா
காத்திருப்போடு.! | காத்திருப்போடு - காதல் கவிதை | காதல் கவிதை |
சாலையில் உள்ள மரங்களுக்கு
எல்லாம் இலையுதிர்காலம்
நீ வரும்போது.
உன்னை தொடுவதர்காகவே
உதிர்கின்றன! | நீ வரும்போது. - காதல் கவிதை | காதல் கவிதை |
உன் தாய்க்கு நீ இளையமகன்
எனக்கு நீ தான் தலை மகன்
என்று சொன்னாயே.
என் அம்மாவிற்கு பின்
என் தாயும் நீயாகவே இருந்தாயே.
அன்பே உன்னையும் இழப்பேன் என்று
நான் கனவில் கூட நினைததிலையே.
இறைவன் விளையாடிய விளையாட்டில்
உன் உயிர் பிரிந்ததே என் உயிர் ஏன் இன்னும் பிரியவில்லை.
நான் இருந்தால் உன் மடியில் குழந்தையாக இருக்க வேண்டும்.
நான் மடிந்தால் உன் மடியிலேயே குழந்தையாக பிறக்கவேண்டும்.
அடுத்த ஜென்மத்திலாவது நீ என் தாயாகவே பிறக்க வேண்டும். | நீ என் தாயாகவே - ஏனைய கவிதைகள் | ஏனைய கவிதைகள் |
நீ நடந்துவர இதயத்தில்
பூக்களை விரித்துவைத்தேன்.
நீ மட்டும் ஏன்?
இதயத்தில்
முள்ளாக குத்துகிறாயோ? | இதயத்தில். - காதல் கவிதை | காதல் கவிதை |
மேகமாய் நீ
உருவெடுக்கும் போது
வானம் திகைக்கிறது
ஆனால்.
மழைநீராய் நீ வரும் போது
வானம் அழுகிறது! | மழைநீராய் நீ வரும் போது.! - காதல் கவிதை | காதல் கவிதை |
என் ஜீவன் காணாமல் தேடுகிறேன்
உன் நேசம் கிடைக்காமல்
தண்ணீரில் தத்தளிக்கும் காகித ஓடம் போல்
என் இதயம் துடிக்கிறது
உன் வார்த்தைகளால்.! | என் இதயம் துடிக்கிறது.! - காதல் கவிதை | காதல் கவிதை |
பெண்ணே. நீ சிரித்தால்
முத்து உதிருமாம்
எனக்காக ஒரே ஒரு முறைமட்டும்
சிறியேன் நான் வறுமையில்
இருக்கிறேன்.! | வறுமை - வாழ்க்கை கவிதை | வாழ்க்கை கவிதை |
அந்த
கடற்க்கரையோரம்
பொழுது போவது கூட தெரியாமல்
என் தோளோடு சாய்ந்து
கைகளை இருக்கமாக பற்றி
நம் எண்ணங்களை பரிமாறிய போது
உன் அன்பின் மிகுதியால்
நீ அழுத போது
உன் கண்ணீரை துடைத்து
உனக்கு ஆறுதல் சொன்னது
என் கரங்கள்
இன்று நீ இன்றி நான்அழுகிறேன்
என் கண்ணீரை துடைக்க
நீ அருகில் இல்லையே
அன்பே. | நீ இன்றி நான் அழுகிறேன். - ஏனைய கவிதைகள் | ஏனைய கவிதைகள் |