Content
stringlengths
0
19k
Title
stringlengths
2
120
Category
stringclasses
127 values
அன்பே! உன்னை பார்த்ததாலோ என்னவோ ! என் கால்களுக்கும் பார்வை வந்ததடி. அது திசை அறியாமல் சென்றதடி . உன் பாதையில் நீ பார்ப்பாய் என்பதையும் மறந்து.
பார்வை வந்ததடி.` - காதல் கவிதை
காதல் கவிதை
உன்னை பார்ப்பதற்கு முன் என் உயிர்க்கு தான் எத்தனை எத்தனை நடுக்கங்கள். அந்த நடுக்கங்களை வேரோடு அழித்ததடி. உன் பார்வையின் தீண்டல்கள் . இனி உன் தீண்டல்களுக்காகவே உயிர் வாழுமடி ஆயிரம் யுகங்கள்!
தீண்டல்கள் - காதல் கவிதை
காதல் கவிதை
உன் மனதில் என் உணர்வுக்கு இடமில்லை என்று அறிந்ததுமே தெரிந்தது எனது உடலுக்கு இடம் ஒன்று "கல்லறையாக" உயிர் என்றும் உன்னை சுற்றியே!.
கல்லறை - காதல் கவிதை
காதல் கவிதை
இன்னும் சில நாட்களிலோ? பல நாட்களிலோ ? உனக்காகவே காத்திருப்பேன் என் உயிர் பிரிந்ததையும் மறந்து. என் கல்லறையில் . என் உடல் மட்டும் . உயிர் எப்போதும் உன்னை சுற்றி.
மறதி - காதல் கவிதை
காதல் கவிதை
உனது பெயரை காகித பக்கங்களில் நிரப்பி நினைவுபடுத்த விரும்பவில்லை. காரணம், உன்னை மறந்தால் தானே நினைப்பதற்கு .
விரும்பாமை - காதல் கவிதை
காதல் கவிதை
பொதுவாக, தொண்டைக்கு தான் தாகம் உண்டாகும். உன்னை பார்த்ததாலோ என்னவோ?. என் இதயத்தில் காதல் என்ற தாகம் உண்டானதடி . அந்த தாகத்திற்கு மருந்தாக நீ வேணுமடி என் வாழ்வில்.
தாகம் - காதல் கவிதை
காதல் கவிதை
உன் நினைவுகள் என்னை சுட்டெரிக்க என் கண்களும் கரைந்ததடி கண்ணீராக!. உன்னை காணமல்.
கண்ணீர். - காதல் கவிதை
காதல் கவிதை
நான் உன்னை காதலித்ததலோ என்னவோ? நீயும் மந்திரவாதியானயடி . யாருக்கும் தெரியாமல் என் கண்களுக்கு மட்டும் கட்சியளிதயடி என் உயிராக .
மந்திரவாதி - காதல் கவிதை
காதல் கவிதை
"என் மனதிற்கு கட்டுப்படவில்லை என் நினைவுகள்?. அவைகள் கற்பனை செய்ததடி . "நீ ஆசையோடு
கட்டுப்பாடின்மை - காதல் கவிதை
null
நீ! உன் கண்களுக்கு உணவு கொடுப்பதில்லை போலும். அது தன் பசியால் என்னை விழுங்குகிறதடி. அது விழுங்குவதை மட்டும் உணர முடிந்த என்னால் . உன் எண்ணங்களை புரிந்து கொள்ள முடியவில்லையடி .
உணவு - காதல் கவிதை
காதல் கவிதை
எப்பொழுதும் உன் கால்களுக்கு கீழ் கிடக்க காலணிகளுக்கு மட்டும் வரம் கொடுத்த நீ. ஏன் எனக்கு மட்டும் வரம் கொடுக்க மறுக்கிறாய் உன் காலுக்கு கிடக்கும் கணவனாக.
வரம் - காதல் கவிதை
காதல் கவிதை
என்றும் பிரியாமல் ஒன்றாக பணிபுரிந்த என் இமைகள் கூட பிரிந்ததடி . உன்னை கண்டதும்.
பிரிவு - காதல் கவிதை
காதல் கவிதை
உன் பார்வைக்குதான் எத்தனை தந்திரமடி. பல வினாக்கள் எழுப்புகிறதடி மனதை உன்னிடம் தொலைத்த என்னிடம். பதில் சொல்லத் தெரியாமல் தவிக்குதடி என் உடல் மட்டும் உயிராக நீ இல்லாமல் .
பார்வை - காதல் கவிதை
காதல் கவிதை
உன்னை காணமல் என் கண்கள் தவிக்குதடி. தவிக்கும் கண்களுக்கு விடுதலை போராளியாக உன் நினைவுகள் . என் கனவுக்குள்
தண்டனை - காதல் கவிதை
காதல் கவிதை
என் கண்கள் கூட உன்னை தாங்கியதடி. வலியாக அல்ல சுகமாக நினைவுகளின் சித்திரமாக
தாங்கல் - காதல் கவிதை
காதல் கவிதை
காற்றுக்குதான் எத்தனை ஆசைகள் உன் கூந்தலை தழுவிட.
ஆசைகள் - ஹைக்கூ கவிதை
ஹைக்கூ கவிதை
என்னுடைய இதழ்கள் அதிகமாவே துடிக்கின்றன உன் இதழ்களின் சுவையை அறிய
இதழ்கள் - ஹைக்கூ கவிதை
ஹைக்கூ கவிதை
தற்கொலை செய்து கொள்ள ஏங்குகிரதடி என் மனம். உன் பின்னிய கூந்தல்களை கயிறாக சுருட்டும் போது.
பாசக் கயிறு - காதல் கவிதை
காதல் கவிதை
உன் நீளகூந்தல் என்பது ஒரு வகை பாம்போ! என் மனதிற்குள் காதல் என்னும் விஷத்தை செலுத்தியதடி. பாம்பின் விஷம் கூட ஒன்றும் செய்யவில்லையடி. நீ செலுத்தியதோ சுற்ற வைக்கிறதடி உன்னை மட்டும்
விஷம் - காதல் கவிதை
காதல் கவிதை
உன் மில்லிமீட்டர் புன்னகை பல கிலோமீட்டர் கடந்து வந்து எனக்குள் நாணேற்றி என்னையே கொல்வதேன் !
ம்ம் புன்னகை - காதல் தோல்வி கவிதைகள்
காதல் தோல்வி கவிதைகள்
உன்னை காணமல் இரு யுகங்கள் வாழ்ந்திட்டேனடி. என் மீது நீ கொண்ட கோபம் இன்னும் தணியவில்லையோ. ஏனடி விழ மறுக்கிறாய் எனது கண்ணில். என் மனம் செய்த தவறுக்கு கண்கள் தண்டனை அனுபவிப்பதா. இத்துணை இன்னல்களைக் கண்ட கண்கள் இன்னும் ஒரு துளி நீர் கூட சிந்தவில்லையடி. காரணம் , நீ இல்லாமல் ஒரு துளி நீர் பிரிந்தால் கூட உயிர் பிரிந்ததாகவே தோன்றுகிறதடி என் எண்ணங்களுக்கு .
யுகங்கள்` - காதல் கவிதை
காதல் கவிதை
உன் ஓரப்பர்வையே பார்ப்பதற்கே ஓராயிரம் யுகங்கள் வாழலாமடி . இல்லை , உயிரையே கொடுக்கலாம் உன் விழிகள் என்னை ஆரதிப்பதற்காக
ஓராயிரம் யுகங்கள் - காதல் கவிதை
காதல் கவிதை
உன் கண்கள் என்ன பாதாளச் சுரங்கமோ. உள்ளே செல்ல செல்ல ஒன்றுமே தெரியவில்லை. உன் பார்வைகள் என்னை சிலைகளாக செதுக்கி வைத்திருந்த இடங்களை தவிர
சுரங்கம் - காதல் கவிதை
காதல் கவிதை
கனல் கண்ணில், எண்ணில் புன்னகை கை கோர்க்க துடிக்கும்- கைரேகை காலமெல்லாம் ஏதொ சொல்லி வலியாய் வந்து துதி பாட கண்ணில் உறக்கம் இல்லை வாழ்வில் வெறுப்பும் இல்லை வசந்தக்காற்றாகி மாறிப்போகிறதே மயக்கத்திலே பார்க்கும் பொழுது உடலை சூடாக்கி உதிரம் திரைவதேன் மரணம் கூட வசந்தமாய் வந்து ஒட்டுவதேன் உள்ளம் குளிர கைகள் கோர்த்தபொழுது நொடிப்பொழுது நோயும் வந்து போனது சொல்ல வார்த்தைகள் இல்லை என்ற நாவும் அடங்கிப்போனது கட்டிலில் பகிரவேண்டிய ஒரு சில நிமிடங்கள் வாழ்வாய் கரைகின்றதே நிம்மதி இழந்தது நித்திரை இழந்தது இந்த நிமிடங்களுக்காக தானா காமம் கண்ணை மறைக்கின்றது காதல் என்னும் வார்த்தை சொல்லி??
காமமாகிப்போன காதல் - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
"வரச் சொன்ன நேரத்திற்கு வராத உன் மேல் கோபமே இல்லையெனினும் பொய் கோபம் கொண்டு அமர்ந்திருக்கிறேன். என்னை சமாதானப்படுத்த நீ முத்தமிடுவாய் என்பது தெரியும். ஆனால் அதற்காகத்தான் நீ தினமும் தாமதமாய் வருகிறாயா என்பது தான் தெரிய வில்லை. "எப்படி இவ்வளவு அழகாக
பாடு பொருள் : - ஏனைய கவிதைகள்
null
அழகான இருவரிக் கவிதை. ஒன்று உன் மேல்உதடு. மற்றொன்று உன் கீழ்உதடு. என் முத்தம் அந்த கவிதையின் முற்றுப்புள்ளி. அதிகமாக முத்தமிட்டால் ஆயுள் அதிகமென்று புள்ளிவிவரம் சொல்கிறது. சத்தியமாக எனக்கு சாவே வராது.
முத்தம் - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
பாதம் படுவதற்காகவே பதிந்திருகிறது உன் வீட்டு படியில் பனித்துளி கொஞ்சம் பார்த்து செல் பாத உஷ்ணத்தில் கரைந்து விட போகிறது உனக்காக காத்திருக்கும் ஒன்றை சிதைக்க வேண்டாம் என்னை செய்தது போல் .
பனித்துளி - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
பெண்மையை நீ நேசி உன்னை அறியாமலே நீ புன்னகைப்பாய். புன்னகை உன்னில் பூக்க காதலும் உன் அருகில் காத்துக்கிடக்கும் கண்டதையும் நீ கற்பனையில் கொண்டால். காமம் மட்டுமே உனதருகில் கரையொதுங்கும்
காதல் தத்துவம் - வாழ்க்கை கவிதை
வாழ்க்கை கவிதை
உனக்காய் அன்பை . நான் சுமந்தேன் நீயோ அவளுக்காய் . உன் அன்பை நீ சுமந்தாய் என் உள்ளத்தில் . உன் விம்பங்கள் உன் உள்ளத்திலோ . அவளின் பணத்தின் பந்தாக்கள்
கயவனின் காதல் - காதல் தோல்வி கவிதைகள்
காதல் தோல்வி கவிதைகள்
கன்னியின் கனவுகளில் கரையொதுங்கிட எண்ணி கள்வன் அவன் காத்துக்கிடந்தான் காமத்தின் அலைகளில் கன்னம் சிவக்க கடைசியில் சிவந்ததோ- கண்கள் கா்வத்தின் கணப்பில்.
கயவனின் காதல் - 2 - காதல் தோல்வி கவிதைகள்
2 - காதல் தோல்வி கவிதைகள்
விழிகளில் வழிகின்ற விழிநீர்கள் விழுமோ உன் மடிமீது அழமட்டும் தெரிந்த எனக்கு உன்னை ஆளத் தெரியவில்லையே என்றோ ஒரு நிமிடம் . நீ என்னை அறிவாய் அந்தோ கணம் அவலையாய் நீ அலைந்து என் அரியனைகாய் அலறுவாய் விழுகின்ற நான்கும் உன் விதியின் காலமே.!
காதலனின் தவிப்பு - காதல் தோல்வி கவிதைகள்
காதல் தோல்வி கவிதைகள்
மறப்பதற்கு ஒரு மனம் மன்னிப்பதற்கு ஓர் குணம் இத்தனையும் உள்ளது என்னிடத்தில் . வேருப்பதத்கோர் கணம் உன்னிடத்தில் வேன்றிடவோர் தினம் என் உள்ளத்தில் நலமென்று நீ அறிவாய் - உன் நாடி துடிப்பு நான்நிலத்தில் இல்லாதபோதே!
தோல்வியின் சாபம் - காதல் தோல்வி கவிதைகள்
காதல் தோல்வி கவிதைகள்
தங்காத போது தத்தளிக்கும் உன் மனது என் தனிமையையை தனித்தது நீ உறங்க . என் உறக்கம் தனித்தேன் உன் நினைவு மட்டுமே எனக்கு நிழலாகி போனாதால் உன் கனவிட்காய் உன் இளமை தாகத்திட்காய் என்னையே வருத்தினேன் உன் உதட்டில் புன்னகை பூக்க வேண்டும் என்பதற்காய் ஆனால் நீயோ கண்ணீரை மட்டும் எனக்கு கவிதையாய் வடித்தாய் காலமெல்லாம் காத்திருப்பேன் கடைசிவரை காலவன் கைப்பிடிக்கும் வரை கைதேர்ந்த உன் காதல் கனவுகளோடு
காதலின் வேதனையின் உளறல் - காதல் தோல்வி கவிதைகள்
காதல் தோல்வி கவிதைகள்
நான் பறந்தா இரவுக்கு வெளிச்சம் உடல் மூடி உறங்கும் மின்மினிகள் நான் அடித்தா கரைக்குப் பெருமை உடல் மூடி உறங்கும் கடலலைகள் நான் வந்தா சோலைக்கு அழகு உடல் மூடி உறங்கும் குளிர்தென்றல் நான் கலந்தா உன் நீரும் உப்பாக உடல் மூடி வற்றும் நீரோடை நான் வளர்ந்து மரமா கனிகொடுக்கும் உடல் மூடி குறுகும் செடிகொடிகள் நான் எரிந்தா உலகினில் உள் வேலை உடல் மூடி உறங்கும் கதிரவனே நான் கொள்ளாக் கனவா வாழ்வு தரும் உடல் மூடி உறங்கும் காதலர்கள் -இப்படிக்கு முதல்பக்கம்
சந்தேகம் - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
மனதை மயக்கும் மன்மதனுக்காய் மங்கை பாடும் மௌன ராகம்
விட்டுகொடுப்பு. - காதல் கவிதை
காதல் கவிதை
இறந்த உடம்பில் உரையா இரத்தம் உன்பெயர் கூறும் காதல் போதை -இப்படிக்கு முதல்பக்கம்
காதல் போதை - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
யாருக்கும் தெரியாமல் உன்னை நேசிக்கிறேன் ஒரு நாள் உனக்கே தெரியாமல் - நீ என்னை நேசிப்பாய் என்று
காதல் அன்பு - காதல் கவிதை
காதல் கவிதை
கார்ச்சிலம்பை கையெடுத்து மதுரை வென்றாள் கண்ணகி அவள் கைச்சிலம்பை அடகு வைத்து என்னை வென்றாள் காதலி வைக்கிறேன் ஒரு சிலை உண்மையாய் என்னகம் -இப்படிக்கு முதல்பக்கம்
சிலை கொண்ட சத்தியம் - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
பார்வையால் கொட்டிய பாசத்தை விட பாதகத்தால் செய்த பரிதாபமே பாவி என்னை பரிதவிக்க வைத்தது 2 மறைவானதை விளக்கிவிட நினைப்பதை விட உன்னை மறந்துவிடுவதே மேல். 3 இரவுகளில் இமைகள் மூட மறுக்கின்றன இளமையின் ஏக்கங்கள் கழிந்தடும் என்பதற்காக
காதல் திட்டுகள் - பதில் சொல்லு - காதல் கவிதை
பதில் சொல்லு - காதல் கவிதை
காமத்தைப் பார்க்கும் கழுதையே காதலென்று ஊரெங்கும் ஏன் சுற்றுகிறாய் -இப்படிக்கு முதல்பக்கம்
என்னைப் பார் யோகம் வரும் - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
நீ என்னை வாழ வைக்க வேண்டாம் வாழ விடாமல் வைத்துவிடு அது போதும் உனக்காய் வாழ்ந்து உன்னால் இறந்தேன்.!
உன்னால் இறந்தேன். - காதல் கவிதை
காதல் கவிதை
என் உயிருக்கும் உணர்வுண்டு என்று உணர்த்திய என் செல்லமே நீ மட்டும் போதும் எனக்கு.!
நீ மட்டும் போதும் எனக்கு - காதல் கவிதை
காதல் கவிதை
நீ சொல்லாமல் போயிருந்தால் காதலென்ற அந்த வார்த்தை அழகாய் இருந்திருக்காது. . நீ சொல்லாமல் போயிருந்தால் காதலென்ற அந்த வார்த்தை யாராலும் நேசிக்கப்பட்டிருக்காது . நீசொல்லாமல் போயிருந்தால் காதலென்ற அந்த வார்த்தை காதல் தோல்வியால் தர்க்கொளையாகி போயிருக்கும். நீ சொல்லாமல் போயிருந்தால் காதலென்ற அந்த வார்த்தையை தமிழ் அகராதியில் இருந்து நீக்க நான் போராட்டம் செய்திருப்பேன். நான் மௌனமாய் இருப்பது நீ சொன்ன அந்த வார்த்தையால் மெய்மறந்துத்தானே தவிர! உன்னை பிடிக்காமல் இல்லை.!
காதல் என்ற வார்த்தை - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
மேகங்கள் ஒன்றுக்குள் ஒன்று மறையும் போது உன்னுள் என்னைப் புதைத்த நினைவுகள் நிழலோடியது என் கண்களில்.!
என் கண்களில். - காதல் கவிதை
காதல் கவிதை
உன் மீது நான் கொண்ட காதலை உணர இந்த ஆயுள் போதாது உனக்கு. என் ஆயுளையும் சேர்த்து உனக்கு கொடுக்க இறைவனை வேண்டுகிறேன். அப்போதாவது என் காதலை உணர்வாய் என்ற நம்பிக்கையில்.
உணர்வாயா : - காதல் தோல்வி கவிதைகள்
காதல் தோல்வி கவிதைகள்
உன்மீதான காதலை என் மரணத்தில் உணர விரும்புகிறாயா. நேசிக்கும் இதயத்திற்கு நீ கொடுக்கும் பரிசு மரணமே எனினும் ஏற்கும் என் மனம். அதையும் என் காதலனாக இருந்து கொடுத்து விடு.
காதலனே : - காதல் தோல்வி கவிதைகள்
காதல் தோல்வி கவிதைகள்
உணர்ச்சியின் உச்சம்! புணர்ச்சியின் எச்சம்!
காமம் (A) - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
கண்களை அறியாது அவன் காம கணைகளை அறியாது காதலும் புரியாது காத்திருந்தேன் காலமெல்லாம் நட்பிற்கு இலக்கணம் அறியா நய வஞ்சகன் நடிப்பில் அவனை இமைகள் பார்க்க மறுக்கின்றன இதயம் இணைய மறுக்கின்றன இத்தனை இருந்தும் - இவனது இளமை எக்கதிட்காய் இடர்களை இன்பமாக்கி இன்னல்களை தனதாக்கி ஈகையில் இளமை இழந்தால் தாய்மையை தங்கிய அவள் உத்தரங்கள் தரம் கேட்டு போனதென்று தட்டி விட்டு தாவிச் சென்றான் தங்கமென்றுரைத்த தாரகையின் தாம்பத்தியத்தில் இருந்து.
காதல் கள்வன் - காதல் தோல்வி கவிதைகள்
காதல் தோல்வி கவிதைகள்
இரைக்காக கரையும் காக்கையின் சாதி. வறுமை கோட்டிற்கு மேலும் கீழுமாய் எங்கள் வாயிற்று பிழைப்பு. ஆசைகள் அதிகம் கனவுகள் அதிகம் ஆனால் வயிற்றுக்கு தேடியே எங்கள் வாழ்க்கை முடிகிறது. கோபுரகள் பல கட்டினாலும் குடிசையில்தான் எங்கள் வாழ்க்கை. முதலாளித்துவம் ஓங்கி நிற்க தொழிலாளி வேசம் எங்கள் வாழ்க்கை முழுவதும். யாருக்காகவோ உழைக்கிறோம் யாரென்றுகூட தெரியவில்லை எங்கள் உழைப்பு மட்டும் மாத மாதம் அவர்களின் வங்கி கணக்கை நிரப்பிய படி. செங்கல் சுமந்து மணல் சிமென்ட் கலந்து வண்ணங்கள் தீட்டி எங்களால் உயிர் பெரும் கட்டடங்கள் உயிர் பெற்று ஆடம்பர மின் விளக்கில் மின்னி கொண்டிருக்கையில் உள்ளே எங்களுக்கு அனுமதி கிடையாது. சாக்கடையில் முழ்கி வாழ்க்கையெனும் முத்தை தேடுகிறோம். நகரத்து சாலைகள் கூட அழகுதான் நரகமான எங்களின் வாழ்க்கையை விட. வறண்ட நிலமாய் விவசாயின் வாழ்கை வானத்தையே நம்பியிருகிறது. மழையும் அரசியல் வாதிகளும் ஒரே கூட்டணியில் எப்போவது ஒருமுறை மட்டுமே இவர்களின் வருகை. எங்களின் உழைப்பில் விளைந்தவைக்கு எவனோ விலை வைக்கிறான் எங்கள் வாழ்க்கை பத்திரங்களோடு கிராம வங்கியில். உழைத்து உழைத்து கைரேகையோடு எங்கள் ஆயுள்ரேகையும் அழிந்துகொண்டிருகிறது. பிறருக்கு உழைப்பு எந்திரமாய் எங்கள் வாழ்க்கை வாய்க்கும் வயிறுக்கும் இடையே பொதுவுடைமை சிறைபட்டு கிடக்கிறது. எங்களின் தலைஎழுத்தை எழுதியவன் யாரோ அவனுக்கு ஒரு தலைஎழுத்து எங்களின் புலம்பலை தினம் கேட்க வேண்டுமென்று. முதலாளிதுவம் முடிவில் பொதுவுடைமை சித்தாந்தம் ஏட்டோடு இல்லாமல் நாடாளும் வரை எங்களின் வாழ்க்கை கேள்விக்குறியாய் வளைந்த எங்கள் முதுகெலும்பை போல்.
ஏழை தொழிலாளிகள் - வாழ்க்கை கவிதை
வாழ்க்கை கவிதை
கண்ணீரில் கரைவது பெண்ணின் மனம் காமத்தில் கரைவது ஆணின் மனம் கட்டியதை தொட்டனைக்க கணவனும் கண்டதை தொட்டனைக்க காமஷ்தணும் என்றழைப்பது கலாச்சாரம் வேதனையில் வெந்தாலும் வேகம் புரியாது நோயினால் நொந்தாலும் - தனது நோக்கம் அறியாது தன்னவனின் தற்பெருமை தரையில் தாளாது இருக்க தன்னையே தாரை வார்த்து கொடுப்பவள் அந்த தாரகை மங்கை ஒரு நொடி அவன்னருகில் இருக்க கிடைத்தால் கூட உலகத்தை மறந்து வாழ்வாள் - ஆனால் அவனோ அடுத்த மங்கையின் அரவணைபிட்காய் அயராது அலைவான் அவள் இருந்தும் கூட பாசத்தை பால் ஆக்கி நேசத்தை நெத்திவியர்வையாக்கி நின்தைகளை நினைவில் அகற்றி நின்னவனின் நிம்மதிக்காய் நீள்தூர நினைவுகளுடன் நிவல் நடந்தால் - ஆனால் அவனோ அத்தனை சுகத்தை அடைந்ததும் அம்மா அரேன்ச்மேண்டுக்காக அல்வா கொடுத்து அழகா அடுத்த பெண்ணை சென்றடைந்தான் ஈர விழிகளுடன் இமைகள் மூடாமல் இரவுகள் கனக்க இதய கண்ணீரோடு இறைமை இழந்தால் வந்தவள் வசந்தத்திட்காய் வாழ்ந்தவள் வாழ்கையை வழியில் விட்டுச்சென்ற வாள்ளில்லா குரங்கு அவன்.
காதல் திருடன் - காதல் தோல்வி கவிதைகள்
காதல் தோல்வி கவிதைகள்
என் உயிருக்குள் நீயாக உன் உயிருக்குள் நானாக உறவாடுகிறோம் உணர்வுகளால் உனக்காக நான் வாழ எனக்காக நீ வாழ உயிர்வாழ்கிறோம் உறவாடவே !
உயிர்த்தோழி - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
என் சுவாசமாய் நீ வேண்டும் என் இதழில் இதமான புன்னகையாய் நீ வேண்டும் எனக்கு மட்டுமே நீ வேண்டும் நீ இல்லையென்றால் இறுதியென்பது எனக்கு இப்போதே வேண்டும்.!
நீ வேண்டும்.! - காதல் கவிதை
காதல் கவிதை
கண்கள் காதல் செய்யும். கண்நீர்த்துளிகளோ அவள் நினைவுகளால் இதயத்தை கொள்ளும்.
கண்ணீர்த்துளிகள் - காதல் கவிதை
காதல் கவிதை
காதல் பிறப்பதற்கு காரணம் கண்கள் என்றால், காதல் பிறந்து, பிரிந்து,மறைந்து வரும் கண்ணீர்த்துளிகள் யாருக்கு சொந்தம்?
கண்ணீர்த்துளிகள் யாருக்கு சொந்தம்? - காதல் தோல்வி கவிதைகள்
காதல் தோல்வி கவிதைகள்
அவள் என்னோடு இருந்தவரை வரவில்லை. என்னைவிட்டு பிரிந்து சென்றவுடன் வந்தது கண்ணீர்த்துளியே மழைத்துளியாக.
கண்ணீர்த்துளியே மழைத்துளியாக. - காதல் தோல்வி கவிதைகள்
காதல் தோல்வி கவிதைகள்
உனக்கு மவுனம் பிடிக்கும். மவுனமாய் இருக்கும் பூப்போன்ற உன் கருவிழிகளை ரசிப்பது மட்டும்தான் எனக்கு பிடிக்கும்.
மவுனம் பிடிக்கும். - காதல் கவிதை
காதல் கவிதை
பிஞ்சு பழுத்தது. பதினெட்டு வயதிற்கு முன் திருமணம்.
பிஞ்சு பழுத்தது. - ஹைக்கூ கவிதை
ஹைக்கூ கவிதை
எலும்புகள் நிறைந்து சதைகளால் போர்த்தப்பட்ட என்னையும் சுட்டெரிக்கும் சூரியனாய் இதயத்தில் அவளின் நினைவுகள்
சுட்டெரிக்கும் சூரியனாய் - காதல் கவிதை
காதல் கவிதை
ஆண்களை கண்டவுடன் பெண்களின் தலைகுனிந்த வெட்கப்பார்வை. புள்ளி வைத்து கோலமிடாமல் கோலங்களின் அரசியாய் விளங்கும் "புள்ளி"மானைப்போன்று ஒரு தனி அழகு.
கோலங்களின் அரசியாய் - காதல் கவிதை
காதல் கவிதை
ரசிக்கும்போது நினைத்தேன். அவள் சிலையென்று. ரசித்த பிறகுதான் தெரிந்தது. அவள் அழகில் நான்தான் சில நிமிடங்கள் மட்டும் சிலையாகிவிட்டேன் என்று.
ரசித்த பிறகுதான் தெரிந்தது. - காதல் கவிதை
காதல் கவிதை
ஏழைகளின் காதல் கல்வெட்டுக்கள். கள்ளிச்செடிகள்.
காதல் கல்வெட்டுக்கள். - ஹைக்கூ கவிதை
ஹைக்கூ கவிதை
அப்பா,அம்மா அடிக்கவில்லை. என்னை விட்டு நீ விலகிவிட்டாய். உன்னை நான் வெறுக்கவில்லை. எதனையும் நான் இழக்கவில்லை. அழுது வெறுக்கின்றேன். உன்னையல்ல. உன் பிரிவின் வலியால் இந்த உலகத்தையே.
உன் பிரிவின் வலியால். - காதல் தோல்வி கவிதைகள்
காதல் தோல்வி கவிதைகள்
பல வருட தவம்கூட ஒரு நொடியில் கரைந்துபோனது. என் தவத்தை கலைப்பதற்கென்றே பெண் மோகினியாய் நீ பிறந்ததால்.
நீ பிறந்ததால். - காதல் கவிதை
காதல் கவிதை
உன் மனைவியாய் இருப்பதை விட காதலியாய் இருப்பதையே நான் விரும்புகிறேன்!.விவகாரமும் இல்லை .விவாகரத்தும் இல்லை .
காதலியாய் - காதல் கவிதை
காதல் கவிதை
அன்பாய் என்னை அணைத்து அருகில் இருத்தி நெற்றியில் நீ இட்ட ஒற்றை முத்தத்தில் நான் உணர்ந்தேன் என்மீது நீ கொண்ட அன்பின் ஆழத்தை மட்டுமல்ல . இதுவரையும் உனக்கும் எனக்குமான பிரிவையும் அதனால் நம் மனசு இருந்து தவித்த தவிப்பின் வலியையும். உன் ஒற்றை முத்தம் சொன்னது இனியும் உன்னை பிரியமாட்டேன் என்று . முத்தத்தின் பின்பு உந்தன் அரவணைப்பின் வருடல் . எந்தன் நகங்கள் உன்னை கீற எந்தன் உதடுகள் பேச மொழி இன்றி போனதுபோல் "ம்ம்ம் "என்று அனுங்கியது உந்தன் செல்லம் கொஞ்சலுக்கு பதில் அழிப்பதாய் உந்தன் அணைப்பிலே கழிந்தது இனிமையான இராப்பொழுது . விடிந்ததை உணர்ந்தவளாய் எழுந்து அசதியாய் தூங்கும் உந்தன் தலைமுடியை வருடியவளாய் உன் நெற்றிப்பொட்டில் ஒரு முத்தமிட்டேன் படுக்கையை விட்டு எழுந்து வெளியே வந்தபின் தான் உணர்ந்தேன் .எல்லாமே கனவு என்பதை நிஜத்தில் எப்போதும் நீ தொலைதூரம் தான் கனவிலும் நினைவிலும் மட்டும் எப்போதும் நான் உந்தன் அரவணைப்பில்.
ஒற்றை முத்தத்தில் - காதல் கவிதை
காதல் கவிதை
நினைத்தேன் நினைத்தேன் நடந்தது நினைத்தேன் நிகழ காலம் எதிர் காலம் நிகழ்வுகள் எல்லாம் இனித்தது எதிர் பார்ப்புகள் எல்லாம் நல்லதாகவே நடக்கும்
நினைத்தேன் - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
ஆயிரம் தோல்விகள் ஆயிரம் ஆயிரம் வலிகள் இருந்தாலும் நான் நானகவே பிறக்க விரும்புகிறேன் என்னவளின் அன்புக்காக!
என்னவளின் அன்புக்காக. - காதல் கவிதை
காதல் கவிதை
நீ உன் காதலியை போர் அடிக்காமல் பார்த்துக்கொள் அப்போதுதான் அவள் உன்னை பீர் அடிக்காமல் பார்த்துக்கொள்வாள்!
உன் காதலியை - காதல் கவிதை
காதல் கவிதை
அடையாளம் தெரிந்தும் காட்டிகொடுக்கக முடியவில்லை என் இதயத்தை திருடியவளை.!
இதயத்தை - காதல் கவிதை
காதல் கவிதை
என்னை காப்பாற்றி இடையிலேயே விட்டு சென்றுவிட்டாயே . உன்னால் நான் விரும்ப்பட்ட போது நானும் என்னை விரும்பினேன் இன்றும் உன்னால் விரும்பபடுகிறேன் ஆனால் உந்தன் உறவாய் இல்லையே என்று என்னை நான் வெறுக்கிறேன் என்னை உருவாக்கிய உன்னை காணவேண்டும் என்பதற்காய் இன்னும் சிலகாலம் உனக்குள் காத்திருப்பேன் கண்ணீருடன் வந்துவிடு இல்லை மறுஜென்மம் இருந்தால் சந்திப்போம் அமைதியான தூக்கம் இது எனக்கு மிகவும் பிடிக்கும் இன்று எனக்குள் அமைதியாக தூங்குகிறது எந்தன் அமைதியான தூக்கம் .எந்தன் விழிகளோ நிரந்தர தூக்கத்துக்காய் காத்திருக்கின்றன எந்தன் வேதனையில் இருந்து நான் வெளியேறனும் அதற்காய் உன்னிடம் ஒன்று கேட்க்கிறேன் காதலும் கலங்கபடாம காமமும் தோற்று விடாம நீ தந்திடும் ஒற்றை முத்தத்தில் என் உயிர் உலகை விட்டு விடைபெறனும்
அமைதியான தூக்கம் - காதல் கவிதை
காதல் கவிதை
நாகம் நஞ்சினை மட்டுமே கக்கும் ! ஆனால் - நம்மில் உள்ளோர்களோ நஞ்சோடு சேர்ந்து நெருப்பினையும் கொட்டுவோர் உண்டு !
நஞ்சு - ஹைக்கூ கவிதை
ஹைக்கூ கவிதை
உயர நினைத்தாலும் - நம்மை உள்ளிழுக்கும் சில உயிர்களை நினைத்தால் - என் உள்ளம் பதறும்.! ஊக்கம் கொண்டாலும் உயர விடவில்லையே - இந்த ஊழல் !
ஊழல் - வாழ்க்கை கவிதை
வாழ்க்கை கவிதை
பயம் கொண்டவனுக்கு வெளிச்சம் கூட இருட்டுதான் ! பதற்றம் அவனைப் பதுக்கி வைக்கும் ! தயக்கம் அவனை தேக்கி வைக்கும் ! சோர்வு அவனை முடக்கி வைக்கும் ! இயலாமை அவனை இறப்பில் தள்ளும் ! இவைதான் பயத்தின் பாடசாலை!
பயம் - தமிழ் மொழி கவிதை
தமிழ் மொழி கவிதை
உன் சிரிப்பினில் நான் சிதறிப்போகவில்லை, உன் பேச்சினில் நான் உருகி விடவில்லை, உன் தீண்டலில் நான் பிரபஞ்சத்தை தாண்டி விடவில்லை, ஆனால், உன் பிரிவினில் உணருகிறேன் இவை யாவும்
உன் பிரிவினில். - காதல் கவிதை
காதல் கவிதை
என் இதயமும். நான்கரை பெட்டிதான். என்னவள் வருவதற்கு முன்.! இப்போதெல்லாம் என் இதயம் துடிக்கிறதா.! என்பதை கூட அவளிடம்தான் கேட்க்க வேண்டி உள்ளது.!
என்னவளே.! என் இதயம் துடிகிறதா.?????? - காதல் கவிதை
காதல் கவிதை
உன் நியாபகத்தின் தொட்டிலில் உறக்கம் கொண்ட போது கடந்துச் சென்ற ஒவ்வொரு நள்ளிரவுகளும் நெல்லிஇரவுகளாய் இனித்து கொண்டிருந்தது இருந்தது விடியும்வரை
நெல்லிஇரவு - காதல் கவிதை
காதல் கவிதை
நான் நேற்றிரவு உறக்கத்தில் புன்னகை செய்ததை பார்த்த பாட்டி குழந்தை புன்னகை செய்தால் குழந்தையும் தேவதையும் கனவில் விளையாடும் உனக்கு என்னாச்சு என்றாள். பாட்டிக்கு தெரியுமா நானும் என் காதல் தேவதையும் நேற்றிரவு கனவில் விளையாடியது!
தேவதையுடன் விளையாடியது - காதல் கவிதை
காதல் கவிதை
உடைத்துப் பார்த்தால் உள்ளே உயிர் துடித்துக்கொண்டிருப்பது தெரியும், முட்டை போல் தான் நானும் அன்பே உடைத்து விடாதே உள்ளே துடித்துக்கொண்டிருப்பது உன் உயிர்.!
அன்பே உடைத்து விடாதே.! - காதல் கவிதை
காதல் கவிதை
உலகம் சொல்லியது நீ தான் என் நட்பு என்று பாவம் அதற்கு தெரியாது நீ தான் என் உலகம் என்று.
என் நட்பு. - நண்பர்கள் கவிதை
நண்பர்கள் கவிதை
இன்று உன் காதலுக்கு தூது போகும் ரோஜா, நாளை உன் கல்லறைக்கும் வந்து வழியனுப்பும் என்பதை மறந்து விடாதே.!
உன் கல்லறைக்கு - காதல் தோல்வி கவிதைகள்
காதல் தோல்வி கவிதைகள்
முதல் முறை வான் தேவதை வடிவில் "நந்தவனத் தேரை" பார்க்கிறேன் என்னவள் சேலையில் வந்தபோது.!
நந்தவனத் தேரு. - காதல் கவிதை
காதல் கவிதை
என் வீட்டில் இறால் திருடி இங்கு வந்து செரிக்க வைக்க குந்தியிருக்கும் காகம் மறைத்து கும்பிட்டு நிமிர்ந்து பார்த்தேன் புத்தன் சிலையோ புன்னகைக்க போதனையோ என்ன விலை ? நான் இறந்து போய்விட்டால் நாதியற்று புதைக்காவிட்டால் காகம்தானே கடித்து உண்டு கடமையினால் சடங்கை முடிக்க கடவுளாக காகம் பார்த்தேன் கால மதத்தினில் என்னுடல் மாமிசம் மட்டுமே யோசித்தேன்! மாமிசம் மட்டுமே யோசித்தேன்!
அன்பே! - வாழ்க்கை கவிதை
வாழ்க்கை கவிதை
நிலவின் ஒளியில் நீ உறங்க விண்மீன் கண்டு கண் சிமிட்ட தென்றல் உனக்கு தாலாட்டு பாட என் செல்லமே நீ கண்ணுறங்கு .
கண்ணுறங்கு - வாழ்க்கை கவிதை
வாழ்க்கை கவிதை
உணர்வை பகிர்ந்து . உள்ளம் தந்து . உயிராய் இருப்பவன்
நண்பன் - நண்பர்கள் கவிதை
நண்பர்கள் கவிதை
உன் காதலை காவியமாக வரைந்தேன் காகிதத்தில் அல்ல என் கல்லறையில் .
காதல் - காதல் தோல்வி கவிதைகள்
காதல் தோல்வி கவிதைகள்
பனைமரங்களுக்கிடையில் மறையும் செஞ்சூரியன் நெற்கதிரை கொத்தித்தின்னும் சிட்டுக்குருவி கூடு திரும்பும் பறவைகள் வரப்பில் பூத்திருந்த ஊதா பூக்கள் தூரத்தில் கேட்க்கும் ரயிலின் ஓசை என எதையும் ரசிக்கவிடவேயில்லை அந்தியில் என்னில் மையம்கொள்ளும் உன் நினைவுகள்!
உன் நினைவுகள்! - காதல் கவிதை
காதல் கவிதை
காதல் ஒரு கண்ணாடி அவள் முகம் வரும் முன்னாடி உடைந்து விட்டால் பின்னாடி நீ வளர்ப்பாய் கருந்தாடி.
காதல் - காதல் தோல்வி கவிதைகள்
காதல் தோல்வி கவிதைகள்
நீ என்னை நினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதே நினைத்தால் உயிர் வாழ்வேன் மறந்தால் மண்ணில் வீழ்வேன்.
காதல் - காதல் தோல்வி கவிதைகள்
காதல் தோல்வி கவிதைகள்
என்னை பிடிக்கவில்லை என்றால் ஒரே வார்த்தையில் பிடிக்கவில்லை என்று விலகிவிடு என்றாவது சந்தோசம் தருகிறாய் அதை அனுபவிக்க முதலே வார்த்தையால் கொல்கிறாய் நான் சிரிப்பது பிடிக்கவில்லை என்றால் என்னை வெறுத்து விடு வாழ்க்கை முழுவதும் சிரிக்கவே மாட்டேன் என்னை வருத்துவதாய் எண்ணி வெறுப்பாய் பேசி பேசி என் உயிர் போன பின் உன் சிரிப்பை இழந்து விடாதே . இறுதியாய் ஒன்று சொல்கிறேன் உன்னை இழந்த நாள் முதல் நான் உயிரில்லா ஜடம் தானடா
வாழ்க்கை முழுவதும் சிரிக்கவே மாட்டேன் - காதல் கவிதை
காதல் கவிதை
நான் போட்ட மெட்டுக்கு அவள் கவிதை வடித்தாள் என்னை மறந்து விடு என்று.
மெட்டு - காதல் தோல்வி கவிதைகள்
காதல் தோல்வி கவிதைகள்
உலகமே என் காலடியில் நீ என் அருகில் இருக்கும்போது சிறகில்லாமலும் பறக்கும் என் இதயம்.
இதயம் - காதல் கவிதை
காதல் கவிதை
கதிர் மறைவில் மாறிய மனங்கள் இங்கு முதல்முறையாய் கிழக்கு நோக்கி ஒருமைப் பிரயாணத்தில் சீறியெழும் சூரியனின் சுதந்திரம் கொள்ள -இப்படிக்கு முதல்பக்கம்
கிழக்கு நோக்கி - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
உன் நினைவு இல்லாத நாள் என் நினைவு நாள் .
நினைவு நாள் - காதல் தோல்வி கவிதைகள்
காதல் தோல்வி கவிதைகள்
ஒருபிடி சோற்றுக்காய் இவன் படும் அவலம் அதிலே ஒருபருக்கைக்காய் சுற்றிவரும் காகம் இருகையேந்தினான் பருக்கைகளைக் காப்பாற்ற -இப்படிக்கு முதல்பக்கம்
ஒரு பருக்கை - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
ஓட்டைத் தட்டில் பங்கு போடும் பாவிகளே உங்களில் ஒருகை இந்த தட்டின் ஓட்டை அடைக்க முன்வருமா? -இப்படிக்கு முதல்பக்கம்
பங்கு - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
காவிய சொர்ப்பொழிவும் உன்னிடம் சரணடையும் ! காட்டுமிராண்டியும் கம்பனவான் கண்ணே உன் காந்தர்வ பேச்சிலே !
மழலை - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
கட்டிலைக் காட்டும் கை நோக்கி மனைவி கண்கொண்டு கேட்டாள் இன்றாவது அடுப்பு எரியுமா? மௌனமாய் வந்த ஒரு கேள்வி பசியிலே ஜீரணித்துவிட்டது -இப்படிக்கு முதல்பக்கம்
மௌனமாய் ஒரு கேள்வி - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
உன்மேல் இவருக்கு இத்தனை உரிமையா? பேருந்துகளில் மகளிர் கையில் தயாராய் எப்பொழுதும் நீ .ஒரு செருப்பு! -இப்படிக்கு முதல்பக்கம்
உன் உரிமை கொண்டு - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
வாழ்க்கை ஒரு ரோஜாச்செடி முள்ளும் இருக்கும் மலரும் இருக்கும் முல்லை கண்டு பயந்து விடாதே மலரை கண்டு மயங்கி விடாதே .
வாழ்க்கை - வாழ்க்கை கவிதை
வாழ்க்கை கவிதை
நான் கட்டிய பாலம் விழுந்தபோதுதான் வலித்தது.போதாது அன்று கணக்காசிரியர் கொடுத்த அடி இதயம் நிறைய எட்டிப்பார்த்தது -இப்படிக்கு முதல்பக்கம்
வலித்தது - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்