Questions
stringlengths 4
72
| Answers
stringlengths 11
172
|
---|---|
நெஞ்சுவலி | திடீர் என ஏற்பட்டால் கஸ்தூரியை ஒரு வெற்றிலையில் வைத்து மென்று சாப்பிட்டால் வலி குறையும். |
இதயபலவீனம் குணமாக | தூதுவளை காய் மோரில் ஊற வைத்து வறுத்து சாப்பிட்டு வரலாம். |
மண்டை குடைச்சல்தீர | தழுதாழை இலை சாறு மூக்கில் உறிஞ்சி வர தீரும். |
தலைவலிகுணமாக | அகத்தி இலைசாறு எடுத்து நெற்றியில் தடவாலம் |
ஒற்றை தலைவலி குணமாக | எட்டி மரக்கொழுந்து, மிளகு, பூண்டு இவைகளை நல்லெண்னையில் போட்டு கொதிக்க வைத்து தலைக்கு குளித்து வரலாம். |
தலைவலி நீங்க | குங்குமப்பூவை தாய்ப்பால் விட்டு அரைத்து நெற்றியில் பற்று போடலாம். |
எவ்வித தலைவலியும் தீர | மிளகாய்வற்றல், மிளகு, நல்லெண்னையில் காய்ச்சி வாரம் 1 நாள் தலை முழுகி வரலாம். |
மண்டை குடைச்சல் தீர | வில்வஇலை பொடி அரை கரண்டி தேனில் சாப்பிடலாம். |
தலைசுற்றல், இரத்த கொதிப்பு தீர | நெல்லி வற்றல், பச்சை பயறு கஷாயம் காலை, மாலை சாப்பிடலாம். |
தலைவலி குணமாக | சுக்கை அரைத்து பற்றிடலாம். |
தலைவலி, சுரம் தீர | காக்கிரட்டான் வேர் கஷாயம் சாப்பிடலாம். |
மண்டை கொதிப்பு | கோபுரம் தாங்கி இலைசாறு நல்லெண்ணையில் காய்ச்சி தலை முழுகி வரலாம். |
மண்டை குடைச்சல் நீங்க | தழுதாழை இலை சாறு மூக்கில் உறிஞ்சிவர நீங்கும். |
தீப்புண் | வேப்பம்பட்டையை இடித்து கஷாயமாக்கி காய்ச்சி தடவலாம். |
வடு | வேப்பம் பட்டையை இடித்து கஷாயமாக காய்ச்சி அதை தீ புண் வடு மீது தடவி வர வடு மறையும். |
தீக்காயம் | வாழைப்பட்டை சாறு பிழியலாம். |
கண்கள் ஒளி | நேந்திரமூலி, அதிமதுரம் தூள் செய்து உட்கொண்டு வந்தால் ஒளி பெறும். |
கண் எரிச்சல் | அதிமதுரம், கடுக்காய், திப்பிலி, மிளகு சேர்த்து பொடிசெய்து தேன் கலந்த சுடுநீரில் சாப்பிட குணமாகும். |
நீர் கோளை | உடற்சூட்டினால் வரும். இதற்கு கொத்த மல்லி இலையை சுத்தம் செய்து அரைத்து, சிறு உருண்டை சாப்பிட பிரச்சனை தீரும். |
கண் நோய் | குங்குமப்பூவை தாய்ப்பாலில் குழைத்து கண் மீது பற்று இட குணமாகும். |
கண்வலி, கண்சிவப்பு, அரிப்பு | வில்வம் தளிரை வதக்கி இளம் சூட்டுடன் கண்களின் மீது ஒத்தடம் கொடுக்கலாம். |
கண்கள் குளிர்ச்சி | அரைக்கீரை வாரம் 2முறை உணவில் சேர்த்து வரலாம். |
கண்வலி, கண்சிவப்பு | புளியம்பூவை அரைத்து கண்ணைச் சுற்றி பற்றிட குணமாகும். |
கண்பார்வை தெளிவு | பொன்னாங்கண்ணி இலையை காலையில் மென்று தின்று பால் பருகி வரலாம். |
கண்நோய் தீர | முருங்கைகீரை சாப்பிட்டு வரலாம். |
கண் கூர்மை | தான்றிக்காய் தோலை உறித்து பொடி செய்து கால்கரண்டி தேனில் குழைத்து காலையில் மட்டும் சாப்பிட்டு வர குணமாகும். |
கண்ணில் சதை வளருவதை தடுக்க | பிரமதண்டு இலைச்சாறு பால் 1துளி கண்ணில் விடுவது பலன் தரும். |
கண் ஒளி பெருக | தான்றிக்காய் பொடி கால் ஸ்பூன் தேனில் கலந்து காலையில் சாப்பிட்டு வரலாம். |
கண் பிரகாசமடைய | பற்பாடகம் இலையை பாலில் அரைத்து பூசி குளித்து வரலாம். உடல் நாற்றம் நீங்கும். |
கண்களுக்கு குளிர்ச்சி தீர | வெண்டைக்காய் உணவுடன் அடிக்கடி சேர்த்து வரலாம். மூளை பலமடையும். |
கண் வலி வராமல் தடுக்க | எள் செடியின் பூவை பறித்து பற்களில் படாமல் விழுங்கி விட வேண்டும். |
கண் எரிச்சல் நீங்க | தினமும் அரைக்கீரை சாப்பிட்டு வரலாம். உடல் குளிர்ச்சியடையும். |
கண் புரை குணமாக | கீழா நெல்லி இலை, வேரை மட்டும் நீக்கி தண்டை மட்டும் எடுத்து விளக்கெண்ணையில் கலந்து கண்ணில் விட்டு வரலாம். |
குழந்தைகளுக்கு கண் சூடு தணிய | நெல்லிக்காய் சாறு பிழிந்து எடுத்து உள்ளுக்குள் கொடுத்து வர குணமாகும். |
கண் குளிர்ச்சி பெற | சுரக்காய் பச்சடி செய்து சாப்பிட்டால் குளிர்ச்சியடையும். மஞ்சள் காமாலை நோய் குணமாகும். |
குழந்தைகளுக்கு ஏற்படும் கண் நோய்கள் குணமாக | காய்ந்த மஞ்சளை பொடியாக்கி தேங்காய் எண்ணெயில் காய்ச்சி தலைக்கு தேய்த்து வர குணமாகும். |
ஆரம்ப கட்டத்திலுள்ள கண் பொறை குணமாக | தங்களுடைய சிறுநீரால் கண்களைக் கழுவி வரலாம். |
கண் பாதுகாப்பு | ஒரு துணியை மஞ்சள் கலக்கிய நீரில் நனைத்து நிழலில் உலர்த்தி கண்களை துடைத்து வந்தால் கிருமிகள் கண்களை தாக்குவதை தடுக்கலாம். |
மாலைக்கண் நோய் குணமாக | மூக்கிரட்டை இலை, பொன்னாங்கன்னி இலை, கீழாநெல்லி பொடி சமஅளவு கலந்து சாப்பிட்டு வர மாலைக்கண் நோய் குணமாகும். |
கண் பிரகாசிக்க | பற்பாடகம் இலை பாலில் அரைத்து குளித்து வரலாம். |
கண்வலி, சிகப்பு தீர | வில்வஇலை தளிரை வதக்கி இளஞ்சுட்டில் ஒத்தடம் கொடுக்கலாம். |
பார்வை மங்கல் குணமாக | மூக்கிரட்டை வேர் பொடி காலை, மாலை 1சிட்டிகை தேனில் சாப்பிட்டு வரலாம். |
எண்ணெய் தேய்த்து குளிக்கும் போது | பச்சைத் தண்ணீர் சேர்க்காமல் ஒரே சூடான தண்ணீரில் தான் குளிக்க வேண்டும். |
கண்பார்வை தெளிவு, ஆண்மை பெருக்கம் உண்டாக | பாதாம் பருப்பு வறுத்து அடிக்கடி உண்டு வரலாம். |
கண்ணில் சதை வளர்வது தடுக்க | அருகம்புல் சாறு தாய்பாலில் கலந்து கண்ணில்விட சதை வளர்வது நிற்கும். |
இரத்தம் சுத்தமின்மை | இதனால் உடல் அசதி, காய்ச்சல், வயிற்றுப்பொருமல், சுவாசக்கோளாறுகள் உருவாகலாம். |
புதிய இரத்தம் உருவாக | பீட்ரூட் கிழங்கு சாப்பிடவும். |
இரத்த கொதிப்பு | அகத்திக் கீரையை வாரம் 2முறை சாப்பிட்டு வர குணமாகும். |
இரத்தத்தை சுத்தப்படுத்த | இஞ்சி சாறுடன் தேன் கலந்து சாப்பிடலாம். |
இரத்தம் விருத்தியாக | செம்பருத்தி பூவை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர வெட்டை சூடு தீர்ந்து விருத்தியாகும். |
இரத்த குழாய் அடைப்பு நீங்க | தினம் ஒரு கப் தயிர் சாப்பிட்டு வர அடைப்பு நீங்கும். |
இரத்தத்தில் உள்ள கிருமிகளை ஒழிக்க | அடிக்கடி விளாம்பழம் சாப்பிட்டு வரலாம். |
இரத்தம் தூய்மையாகி கரப்பான் நீங்க | கரும்செம்பை இலை சாறு 10மி.லி. சாப்பிட்டு வரலாம். |
இரத்தம் சுத்தமடைய | திராட்சை பழம் சுரத்தை தணித்தை மலச்சிக்கலைப்போக்கி இரத்தம் சுத்தமாகும். |
இரத்தம் சுத்தமாகி உடல் வலுப்பெற | "ஏழைகளின் ஆப்பிள்" என்று சொல்லப்படும் தக்காளி பழம் உண்டு வரலாம். வாதநோய் உள்ளவர்கள் தவிர்த்தல் வேண்டும் |
மலத்துடன் இரத்தம் வருவது நிற்க | மாதுளம்பூ இடித்து தேன் கலந்து சாப்பிட்டு வரலாம். |
இரத்தம் உறைதல் குணமாக | நெல்லிக்காய் தொடர்ந்து சாப்பிட்டு வரலாம். |
இரத்தத்தை சுத்தம் செய்து சுறுசுறுப்பாக்க | இலந்தைப்பழம் சாப்பிடலாம். பசியைத் தூண்டும். |
இரத்த ஓட்டம் சீராக, நரை திரை விலக | ஓரிதழ் தாமரை தாது கல்லேகியத்துடன் சேர்த்து சாப்பிட்டுவர 6மாதத்தில் சீராகும். |
ரத்த கொதிப்பு குணமாக | கொதிக்க வைத்து ஆறிய நீரில் சீரக பொடி 12மணி நேரம் ஊறவைத்து குடிக்கலாம். |
இரத்த அழுத்தம் சீர்பட | ஒரு டம்ளர் மோரில் எலுமிச்சம் பழச்சாறு பிழிந்து சாப்பிடலாம் . |
இரத்தத்திலுள்ள பித்தம் குறைய | ஆரமரகுச்சியைத் துண்டுகளாக்கி காய்ச்சி வடிகட்டி தேன் கலந்து குடிக்கலாம். |
இரத்தப்போக்கு நின்று விரைவில் குணமாக | வாழைப்பழத் தோலை கண்ணாடி குத்திய இடத்தில் வைத்து கட்டலாம். |
இரத்தம் விருத்தி ஆக | நாவல்பழம் தினமும் சாப்பிடலாம். |
சுளுக்கு நிவர்த்தியாக | மஞ்சள், உப்பு, சுண்ணாம்பு இம்மூன்றையும் வெந்நீர் விட்டு அரைத்து அந்த விழுதை சூடுசெய்து சுளுக்கின் மீது பற்றுபோட சுளுக்கு நிவர்த்தியாகும். |
இரத்தம் விருத்தியாக | முருங்கைக்கீரையை துவரம்பருப்புடன் சமைத்து ஒரு கோழிமுட்டை உடைத்துவிட்டு கிளறி நெய் சேர்த்து 41நாட்கள் சாப்பிட்டு வர இரத்தம் விருத்தியாகும். |
சுளுக்கு நீங்க | புளி, உப்பு கரைத்து கொதிக்கவைத்து பின் இறக்கி ஆறியவுடன் பற்றுப்போட வீக்கம்.ரத்தகட்டு குணமாகும். |
சுளுக்கு தீர | தழுதாழை இலையை விளக்கெண்ணையில் வதக்கி ஒத்தடம் கொடுக்க வேண்டும். |
அடிபட்ட வீக்கம் | பிரண்டைசாறு, உப்பு, புளி சேர்த்து காய்ச்சிய தைலத்தை தடவி வந்தால் பூரண குணம் கிடைக்கும். |
அனைத்து வீக்கமும் குணமாக | மாவிலங்க இலையை அரைத்து பற்றுப் போடலாம் . |
வீக்கம் குறைய | பூவரசு இலைகளை அரைத்து வதக்கி கட்டவும். |
கல் போன்ற வீக்கம் | தாருணி செடியை அரைத்து பற்று போடலாம். |
சதைபிழற்சி, அடிபட்ட வீக்கம் தீர | பிரண்டை சாறில் புளி, உப்பு கலந்து காய்ச்சி பற்று போடவும். |
கல் போன்ற வீக்கம் கரைய | நத்தைசூரி இலையை அரைத்து பற்று போடவும். |
வீக்கம், பாண்டு இராஜபிளவை முகப்பரு | கொள்ளுக்காய், வேளைசெடி வேரை அரைத்து மோரில் கலக்கி குடித்து வரலாம். |
நரம்பு இசிவு, சிரங்கு குணமாக | உத்தாமணி இலையை வேப்ப எண்ணையில் வதக்கி ஒத்தடம் கொடுக்க குணமாகும். |
நீரடைப்பு சரியாக | கோவை கஷாயம் குடித்து வரலாம். |
நீர் கட்டை உடைக்க | சிறுபூளை வேரை சிதைத்து கஷாயம் செய்து 2வேளை குடிக்கலாம். |
தக்காளி சூஸ் சாப்பிடும் போது விதைகளை தவிர்த்தல் | சிறுநீரகக் கோளாறு வராது. |
நீர்தாரை எரிச்சல் தீர | பூசணி சாறு, செம்பருத்தி பூவுடன் சாப்பிட்டு வரவும். |
மூத்திரக்கடுப்பு தீர | அன்னாச்சிப்பழச்சாறு சாப்பிடவும் . |
எரிச்சல் குணமாக | மாதுளம் பழ தோலை வறுத்து கருக்கி பொடியாக்கி விளக்கெண்ணையில் கலந்து ஆசனவாயில் தடவலாம். |
துர்நீர் கழிய | நீர்முள்ளிவிதை,நெருஞ்சில் விதை, வெள்ளரி விதை சிதைத்து கஷாயம் பனங்கற்கண்டு சேர்த்து குடிக்கலாம். |
நீர்கடுப்பு, நீர் சுருக்கு குணமாக | நன்னாரி வேர் 5கிராம் அரைத்து பசும்பாலில் சாப்பிட்டு வரலாம். |
சிறுநீர் பெருக | கருஞ்செம்பை இலைசாறு 10மி.லி. குடித்து வரலாம். |
சிறுநீர் தடை நீங்க | சங்கிலை வேர் பட்டை சாறு 20மி.லி. வெள்ளாட்டு பாலில் குடித்து வரலாம். |
நீர் கோவை காய்ச்சல் தீர | சந்தனதூள் கஷாயம் செய்து குடிக்கலாம். |
பித்தநீர் நீங்க | சீதேவி செங்கழுநீர் சமூலம் குடிநீராக்கி சாப்பிடலாம். |
ஈரல் வீக்கம், நீர்கட்டு தீர | செம்பரத்தை பூ,எலுமிச்சம்பழ சாறு விட்டு அரைத்து பனங்சர்க்கரை பாகில் கொதிக்க வைத்து சாப்பிட்டு வரலாம். |
நீர்தாரை குற்றங்கள் | முள்ளங்கி சாறு 30மி.லி. காலை, மாலை சாப்பிடவும். |
வீக்கம், நீர்கட்டு | மூக்கிரட்டை வேர், அருகம்புல், மிளகு, கீழாநெல்லி கஷாயம் 2வேளை சாப்பிடலாம். |
நீர் சுருக்கு சரியாக | பனங்கற்கண்டு, பசும்பால் சாப்பிட்டு வரலாம். |
தேவையில்லாத கெட்ட நீர் சிறுநீர் வழியாக வெளியேற | தினமும் பப்பாளிக்காயைச் சாப்பிட்டு வரலாம். |
நீரழிவு நோய் கட்டுப்பட | வாழைப்பூ வேகவைத்துஅல்லது பொரியல் செய்து சாப்பிட்டு வரலாம். அஜீரணம் அகலும். |
நீர்க்கடுப்பு குணமாக | புளியங்கொட்டை தோல் எடுத்து நன்கு உலர்த்தி பொடி செய்து அரை கரண்டி பசும்பாலில் குடித்து வரலாம். |
சிறுநீர் கோளாறு நீங்க | மூலாம்பழம் சாப்பிட்டு வரலாம். |
சிறுநீர் சம்பந்தப்பட்ட நோய்கள் அகல | கல்யாணப் பூசணிக்காய் சமைத்துச் சாப்பிட்டு வர குணமாகும். |
நீர் நன்றாக பிரிய | வெள்ளரிக்காய் அதிகம் சாப்பிட்டு வந்தால் சிறுநீர் அடைப்பு தானாக விலகும். நீர் பிரியும். |
நீரழிவு அலர்ஜி குணமாக | சிறியாநங்கை சாப்பிடலாம். |
சிறுநீரில் உள்ள கற்களை அகற்ற | மாதுளம்பழத்தின் விதைகளை சாப்பிடலாம். |