text
stringlengths
57
183k
ஆப்பிஸ் 2007 உதவியுடன் இமேஜ் பைலை வேர்ட் பைலாக மாற்ற ஒரு எளிய வழி | தமிழ் கம்ப்யூட்டர்\n♠ Posted by Kumaresan R in Conversion,MS-OFFICE,WINDOWS at 10:05 PM\nச.சரவணன், said on June 16, 2011 at 10:03 AM\nநான் விண்டோஸ் XP பயன்படுத்துகிறேன். தாங்கள் சொன்னது போல் MS OFFICE 2007-ல் Add or Remove Features செலக்ட் செய்து CONFIGURE செய்தேன், வெற்றிகரமாக configure ஆயிற்று. ஆயினும் Microsoft Office Document Imaging அங்கு வரவில்லை. தாங்கள் சொன்னது விண்டோஸ்7என்று நினைக்கிறேன். அதை XP-யில் எப்படி வர வைப்பது.
சிறப்புச் சிறுகதை | உயிர்க் கொடை | vanakkamlondon\nமாவீரர் நாள் | வணக்கம் லண்டன் இணையத்தின் சிறப்பு பதிவு …….\nகார்த்திகை மாதம் வந்தாலே மாமி சரியா சாப்பிட மாட்டா.எல்லோரோடையும் சரியா பேசவும் மாட்டா. எப்ப சாப்பிடுவா எப்ப உறங்குவா என்று எம்மால் கணக்குப் போட முடியாது.\nஜீ. ரீ வி க்கு முன்னாலையும் இன்பத்தமிழ் வானொலியையும் கேட்டுக் கொண்டே இருப்பார். மாமி வரமுன்பே ஜீ.ரீ.வி எங்கள் வீட்டில் இருந்தாலும் ஜீ.ரீ.வியை நாங்கள் பார்ப்பது எப்பாகிலும் சில வினாடிகள் தான். மாமா மோசம் போனதுக்குப் பின்னால் மாமியை யாழ்ப்பாணத்தை விட்டுக் கொண்டுவர நாங்கள் போட்ட நாடகங்கள் பல.\nமாமியை எங்களோட கூப்பிட்டு வைத்தபோது தான் எமக்கே விளங்கிச்சுது மாமியின் தனிமையும், அவர் பொழுதைக் கழிக்கப் படும் பாடும். வெய்யில் என்றால் அவர் தோட்டத்துக்குள் போய் பொழுதை கழிப்பார்.\nவிசாகனும் சுசியும், கரணியும் பாடசாலையால் வரும் வரையும் மாமியைப் பார்த்துக் கொள்வது ஜீ.ரீ.வியும், இன்பத்தமிழ் வானொலியும் தான். மாமிக்கு வருசத்தில் எல்லா மாதங்களும் நினைவு நாள் மாதங்கள் தான்.\n30 வருட ஈழப் போராட்டத்தில் மாமாவும் அவர் பரம்பரையும் இழந்தது கணக்கில் அடங்காதது. வருடத்தில் ஒவ்வொரு மாதத்திலும் ஏதாவது இழப்பு இருக்கிறது. சாதாரணமாகக் கணக்குப் பார்த்தால் 1958 இல் மாமி தாதி வேலை செய்யும் போது அவவுக்கு வயது 27. அப்பவே சிங்களம் தனி மொழிச் சட்டம் கொண்டு வரும் போது அனுராதபுரம் வைத்திய சாலையில் தாதியாக வேலையில் இருந்தபோது அடி வேண்டி ஓடி வந்தாராம். 1977 ஆம் ஆண்டு மாமா வைத்திருந்த லொறியை எரித்துப் போட்டாங்களாம். அதில் கிளீனராக இருந்த தனது வளர்ப்பு மகனை பறி கொடுத்தவராம். 1982 இல் உமையாழ்புரக் குண்டு வெடிப்பில் ரோட்டில் மேய்ந்துகொண்டிருந்த பசு மாட்டை இழந்தாராம், 83 இல் திருநெல்வேலிக் குண்டுவெடிப்பு முடிய மாமாவின் பெரியைய்யாவையும் விசுவமடு ராசாத்தி அன்ரியையும் பரந்தனில் வைத்து ஆமி சுட்டுப் போட்டாங்களாம்.\nஆயுதப் போராட்டம் தொடங்கியது அவர்களின் இழப்புக்கு அளவே இல்லையாம்.\nமாமி பெரிசாப் படிக்காவிட்டாலும் எல்லாக் குடும்பத்திலும் அவருக்கு நல்ல மரியாதை. யார் எதையாவது செய்ய வேண்டும் என்றால் அவரையும் கலந்து ஆலோசித்து அவருக்கு ஒரு வார்த்தை சொல்லிவிட்டுத்தான் செய்வார்கள்.\nமாமி ஒரு மதியஸ்தர். நிறைய குமர்ப் பிள்ளைகளை கரை சேர்த்தவர்.\n(அதற்காக அவர் கல்யாணப் புரோக்கர் இல்லை) கோவில் திருவிழாவில தேவாரம் படிக்கிறது, வீடு குடிபூரல் வீட்டில கும்பம் வைக்கிறது, தலைப் பிள்ளைக்குப் பெயர் வைத்துத் தொட்டிலில் போடுவது என்று ஒரு சமூக சேவகி. வன்னி இருந்த காலத்தில் மாவீரர் பணிமனைக்குப் பொறுப்பாகவும் இருந்தவர்.\nமகேசன் ஏதோ ஒரு தாக்குதலுக்குப் பொறுப்பாகப் போனவன். திரும்பி வரவேயில்லை. உயிரோடு இருக்கிறானா, இல்லையா என்ற முடிவு தெரியாமல் அவனை மாவீரர் பட்டியலில் சேர்க்காமலே பல ஆண்டு மாமாவும் மாமியும் அவன்ர வரவுக்காக ஒரு யோக தவம் செய்தார்கள். மகேசனின் முடிவு தெரிய முன்பே மாமாவும் யுத்தத்துக்குள் பலியாகிப் போனார்.\nமாமியை அம்மா என்று சொல்ல ஆயிரம் பிள்ளையள் வன்னியிலையும் யாழ்ப்பாணத்திலையும்.\nமாமி மட்டக்களப்பு வைத்தியசாலையில் நீண்ட காலம் வேலை செய்தவராம். கிழக்கு மாகாணத்திலிருந்து போராட்டம் பின்வாங்கி வன்னியில் பெடியள் வந்திருந்தபோது பெடியளுக்கெல்லாம் அம்மாள் வருத்தம் வந்திட்டுதாம். உடனே மாமி மாமாவோடு பேசி பெரிய வீட்டை பெடியளிட்டைக் கொடுத்துப் போட்டு தோட்டக் காணியில இருந்த கொட்டில் வீட்டுக்குப் போனவவாம். அதால புதுவீட்டு அம்மா, புதுவீட்டு அம்மா என்று அவங்கிட மனசிலையும் அத்திவாரம் போட்டு அமர்ந்திருந்தாவாம். அந்தப் பொடியள் இரண்டாகப் பிரிந்து சண்டை போட்டபோது அவாவுக்கு நெஞ்சுவலி வந்து வைத்தியசாலையில் இருந்தவராம்.\nமுள்ளி வாய்க்காலில் மாமியையும் இழந்திட்டம் எண்டு தான் நாங்கள் இருந்த நாங்கள். எத்தனை மரணக் குழிகளை எல்லாம் தாண்டி ஒரு பிணக்காட்டில் எடுத்த எலும்புக் கூடு முள்ளுக் கம்பிச் சிறைக்குள் இருந்து யாரோ சொந்தக் காரர் தான் அறிவித்தார்கள். உடனே யாழ்ப்பாணம் கொண்டுபோய் இப்படி ஒரு மனிசியாக மாமி எங்கிட கைக்கு வந்தது.\nஅவா ஊருக்குச் செய்த நன்மையும் புண்ணியம் தான். மாமி இப்படி வரவில்லை என்றால் என்ர மனிசனை கண்ணால பார்த்திருக்க முடியாது.மாமியை இறைவன் தந்ததால தான் நான் என்ர மனிசனை மீட்க முடிந்தது.\nதேசியத் தலைவரின் பிறந்தநாள் நிகழ்வு இன்பத்தமிழ் வானொலியில் போகின்ற போது கொஞ்சம் அப்படி இப்படி ஜீ. ரீ. வீ லையும் பார்த்து முகம் மலரும் எத்தனையோ தடவை தம்பியை சந்தித்திருந்தாலும் மகன் மகேசனைக் காணவில்லை என்றதும் வீடுதேடி வந்து தன்ர கையைப் பிடித்து கண்ணில வைத்தபோது தன்ர கையில ஈரம் இருந்ததாம்.\n27 செவ்வாய்க் கிழமை மாவீரர் நாளுக்கு போக முந்தி வீட்டைக் கூட்டி மொப்பண்னி விளக்கெல்லாம் கழுவி விளக்கு வைக்கப் போனவா கை தவறி குப்பி விளக்கு தரையில் விள ஓவென்று அழத் தொடங்கி விட்டா.\nவிசாகனும் அபியும் அவரைக் கட்டி அழுதார்கள். அப்பம்மாவோட நிற்கப் போவதாகவும், இன்று பாடசாலைக்குப் போகவில்லை என்று அவர்கள் அடம்பிடிக்க ஒருவாறு தன்னைச் சுதாகரித்துக் கொண்டு பிள்ளைகளைப் பாடசாலைக்கு அனுப்பிவிட்டு விசாகன் போய் மறையும் வரை பார்த்துக் கொண்டிருந்தார் மாமி.\nகிட்டு மாமாவுக்கும் மற்றும் மாவீரர் நிற்கும் படங்களுக்கு விளக்கு வைத்துத் தேவாரம் பாடினார்.\nமாலை மாவீரர் தினத்துக்குப் போய் எல்லாம் நல்லாய்த்தான் செய்தவர். பாலனும் அவருடைய போக்குக்கே விட்டு விடுவார். நான் தான் பாலனை வற்புறுத்தி – போய் மாமியைச் சமாதானம் செய்யச் சொல்லி அனுப்புறன்\n“ அம்மா எல்லாம் முடிந்து நல்லாத் தானே வந்திட்டியள். இன்னும் ஏன் அழுகிறியள்.\n“ போடா நீயும் இவங்களைப் போல மாறித்தான் போகிறாய். இன்று மாவீரர் தின நாளுக்கு வந்த ஆட்களின் அளவைப் பார்த்தியே. எங்கிட சனம் மறந்து போகுதுகள். அதுகளுக்கு முல்லைதீவு முகாம் தாக்குதல் ஆனையிறவு முகாம் தாக்குதல் மாதிரியான விமான நிலையம் தாக்குதல் மாதிரியான திறில் இன்னமும் நடக்க வேண்டும் அப்பத்தான் மாவீரரின் நினைவு வரும் போல இருக்கு.\nபோராட்டம் நடத்தினவர்களே பல பாகங்களாகப் பிரிந்து சிதறி நிற்கிறார்கள். இந்த சந்தர்ப்பத்தை எதிரி சரியான முறையில் பாவிக்கிறான்.\nஇனிப் புலம் பெயந்தவர்கள் ஊர் போய் வருகிறார்கள். மாவீரர் மண்டபத்திற்குப் போய் மாவீரருக்கு வணக்கம் செய்ய எப்படி வருவார்கள்.\nஅய்யையோ இதுக்காகவா இத்தனை செல்வங்களை இழந்தோம்.அவர்கள் இதுக்காகவா உயிக் கொடை தந்தார்கள். ஐயோ இதைப் பார்க்கவா என்னையும் உயிரோட வைத்திருக்கிறாய்.\nஐயோ மகேசா என்னையும் உன்னோடு கூப்பிடடா. மாமி ஓவென்று அழுகிறார் நெஞ்சைப் பிடிக்கிரார். நான் ஓடிப் போகின்றேன்.\nபாலன் அம்புலன்சுக்குப் போன் பண்ணுறார். அம்புலன்சு வந்து அவரை கொண்டு போகுது நான் அழுத கண்ணீரோடு வீட்டுக்குள் போகிறேன். மாவீரருக்கு வைத்திருந்த விளக்கு அணைந்து போய் புகை வீட்டில் பரவிக்கொண்டிருந்தது.\nமாமி யின் ஏக்கமும் அவரின் ஆத்மாவின் தவிப்பும் மாவீர்ர்களின் உயிர்க் கொடை வீண் போகக் கூடாது . போராட்டம் புதிய பாதையில் மாறி இன்று புலம் பெயர்ந்தவர்களின் கைளில் போய் விட்டது புலம் பெயந்த தமிழர்கள் மாவீர்ரின் தியாகத்தையும், உயிர்க் கொடையையும், மறந்து போகாமல் இருக்க வேண்டும் என்பது தான்.\nநானும் பாலனும் மாமியின் படத்தை எடுத்து மாவீர்ரின் படத்துக்குப் பின்னால் வைத்து விளக்கு நிறைய எண்ணையை விட்டு விளக்கை ஏற்றி வைத்த்தோடு ஒரு உறுதி மொழியையும் எடுக்கிறோம் “மாவீர்ர்களின் கனவும் மாமியின் ஆத்மாவின் துடிப்பும் நிறைவாகும் வரை எமது பங்களிப்பை தொடர்ந்து செய்வோம்”\n– புதுவைதாசன் | ஆஸ்திரேலியாவிலிருந்து –\nபிரான்சில் நடந்த பயங்கர வாத தாக்குதலில் பலி 84 ஆக உயர்வு\nலண்டனில் மாவீரர் நாள் பெரும்திரளான மக்களுடன் நடைபெற்று வருகின்றது
@ காமராஜ் at 7:01 PM\nநடுயிரவில் புழுக்கத்துடன் அப்பிக்கொள்ளும் குடுகுடுப்பைகாரனின் (சாமக்கோடங்கி) மீதான பயமும், எங்கள் வீட்டுக்குச்சொல்வதைவிட அடுத்தவீட்டுக்கு அவன் சொல்லும் குறியை அம்மா கதவிடுக்குகளின் வழி கேட்பதும் இன்றும் நினைவினில் இருக்கிறது.\nமறுநாள் காலையில் கிடைக்கும் ஒரிரு ரூபாய்ககாகவோ, அல்லது 1 டம்ளர் அரிசிக்காகவோ அவனின் நாவாக்குகள் தலைவணங்காது சென்றுவிடும்.\nநினைவுகளை புரட்டிப்போடுகிறது இந்த இடுகை...\n//இது பரனில் இருந்து எடுத்து துடைத்து வைத்த பதிவு. //\nஇருந்தாலென்ன? இப்படி இருக்கிறார்கள் என்பதே மறந்துவிட்ட காலம் இது.\n/முழித்துக்கிடக்கும் ஜோடிகள் சபித்துக்கொள்ளும். முழித்துவிட்ட ஜோடிகள் வழ்த்திக்கொள்ளும். இடம் மாறி வகையறாக்கள் பதட்டம் கொள்ளும். சிறுவர்களுக்கு பயமும் ஆர்வமும் முளைத்துக்கொள்ளும். ஒரு மனிதனின் வரவால் ஒரு இரவே தலை கீழாக்கப்படும். //\nசிரித்து மாய்ந்தாலும் இந்த உண்மை வெகுவாய் வித்தியாசம் காட்டும்.\nவிழித்திருக்கும் இரவுகளில் சாமக்கோடாங்கிகளின் குரல் கேட்டு கதவைத் திறந்தால் அம்மா கோபித்துக்கொள்வார். அவர்களைப் பார்க்கவே கூடாது என்பது நியதியாம். மறுநாள் காலையில் காசு வாங்க வரும்போது பார்த்தால் ஆச்சர்யமாகயிருக்கும், ஒரு இரவையே தனதாக்கிக்கொண்ட மனிதர் இவர்தானா என்ற ஆச்சர்யம். மாலை வேளைகளில் ஊர் மண்டபத்திலிருந்து மேக் அப் சகிதம் இவர்கள் தயாராவதைப் பார்ப்பதும் சிறுவயதின் வசீகரங்களில் ஒன்றுதான். அந்த நாட்களை நினைத்துப்பார்க்கும்படி ஒரு பதிவு. மிக்க நன்றி காமராஜ் அண்ணா.\nசாமக்கோடாங்கி பற்றிய எஸ்.ஷங்கரநாராயணன் சிறுகதை ஒன்று இருக்கிறது. அதுவும் நினைவுக்கு வந்தது.\nநகரத்துப் பக்கம் , காண அரிதாகிப் போனக் காட்சி! பழைய நினைவுகளை அசை போட வைத்த பதிவு. நன்றிங்க.\nசாமக்கோடாங்கி...இப்படிதான் இருப்பாரா அண்ணே...\n//முழித்துக்கிடக்கும் ஜோடிகள் சபித்துக்கொள்ளும்.முழித்துவிட்ட ஜோடிகள் வழ்த்திக்கொள்ளும்.//\n////வழிபடத் தகுந்தவராக இல்லாமல் வழிவிட்டு ஒதுங்குக்கிற ஒரு பயம் அவர்மேல் கவ்வி இருக்கும். காலபைரவன் என்னும் பெயர் கொண்ட சாமக்கோடாங்கி.\nஉண்மைதான் இருட்டில் தெரியும் ஏதோ மரத்தின் நிழலைக் கூட பார்த்து பாட்டி சொன்ன சாமக்கோடாங்கிதானோ என்ற பயந்த நாட்களை மீண்டும் கண்முன் நிறுத்தியது உங்களின் பதிவு அருமை . பகிர்வுக்கு நன்றி\nசாமக்கொடங்கி வீட்டில் அடுப்பெரியக் கூடாதாம்.அதனால்தன் பகலில் சோறேடுக்க வருகிறார்.\nஅமானுஷ்யம் கலந்த தெய்வீகத்தைப் பூசி தன் தேவை தன் குடும்பத்தின் தேவை ஆகியவற்றை மறக்க வைத்துவிடுகிறார்கள்.வித விதமான ஒடுக்கு முறைகள் எப்படியெல்லாம் உருவாக்கப்பட்டுள்ளன? சமூகவியலார் ஆராய்ச்சிக்கு உட்படுத வேண்டிய இடம்...காஸ்யபன்\nஅண்ணே இப்பல்லாம் அவர்கள் வருவதே கிடையாது..\nதலைச்சன் புள்ள அவன் கண்ணுல படக்கூடாதுன்னு என்ன பொத்தி பொத்தி வைப்பாங்க என் அம்மா ..என்னவோ இப்போகூட அவன பாத்தா ஒரு பயம் தான் ...இருந்தாலும் அந்த வேஷம் போட்டு தான் மாறுவேடத்தில முதல் பரிசு வாங்கினேன் கல்லூரியிலே
நா்சிங் கல்லூரி மாணவி பாலியல் பலாத்கார வழக்கு: வழக்குரைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை- Dinamani\nநா்சிங் கல்லூரி மாணவி பாலியல் பலாத்கார வழக்கு: வழக்குரைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை\nமானாமதுரை நா்சிங் கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில், வழக்குரைஞருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூா் வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.\nசிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே உள்ள சுந்தரநடப்பு கிராமத்தைச் சோ்ந்தவா் இளையராஜா. இவா் கடந்த 2006 ஆம் ஆண்டு சட்ட கல்லூரியில் படித்து வந்துள்ளாா். இந்நிலையில் இவா், மானாமதுரையைச் சோ்ந்த 21 வயது நா்சிங் கல்லூரி மாணவியை காதலித்தாா். இதனிடையே அந்த மாணவி வீட்டில் தனியாக இருந்த போது அங்கு சென்ற இளையராஜா பாலியல் பலாத்காரம் செய்துள்ளாா். இதனால் மனமுடைந்த கல்லூரி மாணவி கடந்த 4.1.2006 அன்று தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டாா்.\nஇதுகுறித்து மானாமதுரை காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்தனா். இவ்வழக்கு, சிவகங்கையில் உள்ள வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. தற்போது இளையராஜா வழக்குரைஞராக இருப்பதால் சிவகங்கை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்திலிருந்து வேறு பகுதியில் உள்ள நீதிமன்றத்திற்கு வழக்கு விசாரணையை மாற்ற வேண்டும் என்று சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது.\nஇந்த மனுவை விசாரித்த சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை இந்த வழக்கு விசாரணையை ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடத்த உத்தரவிட்டது. இதைத் தொடா்ந்து இந்த வழக்கில் புதன்கிழமை தீா்ப்பு வழங்கப்பட்டது. அதில், வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி சுமதி சாய்பிரியா, வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட வழக்குரைஞா் இளையராஜாவுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 10 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.
இதுவரை சுமார் 80% படப்பிடிப்பை முடித்துவிட்டது படக்குழு. தற்போது ராஜஸ்தானில் சில முக்கியக் காட்சிகளைப் படமாக்கி வருகின்றனர்.\nஇந்நிலையில் உத்தர பிரதேச மாநிலம வாரணாசிக்கு தனது நண்பர் குழுவுடன் சென்றுள்ளார். அங்குள்ள காசி விஸ்வநாதர் கோவிலில் தரிசனம் செய்த அவர் அருகில் உள்ள சாலையோர கடை ஒன்றில் நுழைந்துள்ளார்.\nதொப்பி மற்றும் முகக்கவசம் அணிந்திருந்ததால் யாருக்கும் அவரை முதலில் அடையாளம் காணவில்லை. பின்னர் சாப்பிடுவதற்காக முகக் கவசத்தை நீக்கியதும் கடைக்காரர் அவரை அடையாளம் கண்டுள்ளார்.\nஇது குறித்து அந்த கடையின் உரிமையாளரான சுபம் கேசரி கூறியதாவது:\n“எங்கள் கடைக்கு அவர் வந்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. பனாரஸ் சாட் வகைகள் அனைத்தையும் அவர் ரசித்து சாப்பிட்டார்.\nஅவருக்கு அவை மிகவும் பிடித்துப் போனது, எனவே அடுத்த நாளும் எங்கள் கடைக்கு வந்தார். மற்ற சுற்றுலாப் பயணிகளைப் போலவே அவரும் சாலையில் நின்று கொண்டே சாப்பிட விரும்பினார்.\nஉணவு தயாராகும் முறை கேட்டுத் தெரிந்து கொண்டு அவற்றை தனது செல்போனில் படம் பிடித்துக் கொண்டார்.“ இவ்வாறு அவர் கூறினார்.\nஅந்தக் கடையின் உரிமையாளரான சுபம் கேசரியுடன் அஜித் எடுத்துக் கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.\nஇந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது\nதமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்தவ\nலோகேஷ் கனகராஜின் மாநகரம், கைதி, மாஸ்டர் படங்களில் பணிய�
மின்னூலும் மனப்பாங்கும் | சுதாகர் கஸ்தூரி\nகடல் முரடாகக் கோபமாக இருந்தது.\nவிமானம் கிளம்பி , ஜூஹூ கடற்கரையைத் தாண்டும்போது வெள்ளைக்கோடுகளாக கீழே அலைகள் அடுக்கடுக்காகத் தெரிந்தன. சிறு சோப்பு டப்பா சைஸில் கப்பல்கள். அலைகள் பெரிதாகத்தான் இருந்திருக்க வேண்டும்.\nமெல்ல சாய்ந்து, கிண்டிலை எடுத்து உயிர்ப்பித்தேன். Selfish Gene – நாலாவது அத்தியாத்தில் இருக்கிறேன். பயணம் முடியுமுன் முடித்துவிடவேண்டும். சட்டென நினைவு வர, 6174ன் மின்னூலை தேர்ந்தெடுத்தேன். இதனை திருத்தவேண்டுமென்று நினைத்து இரண்டு மாதமாகிறது. அடுத்த சீட்டில் வைத்துவிட்டு, பென்ஸிலையும் பேப்பரையும் , லாப்டாப் பையிலிருந்து எடுக்கக் குனிந்தேன்.\n“யூ கேன் ரீட் லோக்கல் ஸ்டஃப் இன் கிண்டில்?”\nஓர சீட்டில் இருந்தவர் எனது கிண்டிலை எடுத்து வியப்புடன் கேட்டார்.\nஎன்னைப்போலவே சற்றே நரைத்த குறுந்தாடி ( சரி, எனக்கு நிறையவே நரைத்திருக்கிறது..போதுமா?). சுருட்டை முடி. கருப்பு கோட் அணிந்திருந்தார். முகத்தை வைத்து எந்த ஊர்க்காரர் என்று சொல்ல முடியவில்லை.\n“இல்லை” என்றேன். “அமேசான் இன்னும் அனுமதிக்கவில்லை. ஆனால் நன்றாகவே தமிழ் தெரிகிறது. “\n”அப்புறம் எப்படி இ புக் கிடைக்கிறது?” என்றவருக்கு விளக்கினேன்.\n“’ஒ. உங்க புக்கா?” என்றவர் “ ஐ ஆம் அஸ்லம்” என்றார். மறுபடி பெயர் வைத்து ஊர் சொல்ல முடியாத நிலை.\nடெல்லிக்காரராம். ஹாங்காங் போய் அங்கிருந்து லாஸ் ஏஞ்ஜெலஸ். நான் பீஜிங் போகவேண்டும்.\n”தமிழ் புத்தகத்துக்கு அமேசான் போட்ட தடை உத்தரவு” என்றேன். தடை பற்றி மேலும் பேச்சு வளர்ந்தது.\n“ஹாங்” என்உக்கு ஒரு எதையோ நினைத்தபடி. “ இப்போ உங்க மொழியில வந்த ஒரு புத்தகத்தை தடை பண்ணியிருக்காங்களாமே? அதுனோட இ புக் என் நண்பர் ஒருவரிடம் இருக்கிறது. வேணுமா? சொல்லுங்க”\n“ஏன்?” என்றார். புருவத்தை உயர்த்தியபடி.. இவன் ஒருவேளை அந்த புத்தகத்தை எதிர்க்கும் கட்சியோ? என்பதுபோல ஒரு பார்வை.\n“ தவிர்த்து விடுகிறேன். வேறு புத்தகம் என்றாலும், பணம் கொடுத்து வாங்கிக்கொள்கிறேன். டிவிடி பைரஸி போலவே புத்தகங்களும் பைரஸியில் பல கோடி நாசம் விளைவிக்கின்றன”\n“ஓ” என்றார் சற்றே எகத்தாளமாக. “எனிவே, இந்த புத்தகம் கிடைக்காது. திருட்டுத்தனமாக ப்ரிண்ட் போட்டு ப்ளாட்பார்மில் விற்பார்கள். அல்லது பிடிஎஃப் , ஒரு டாரெண்ட் ஸைட்டில் கிடைக்கும். உங்கள் ஒருவரால் நிற்கப்போவதில்லை”\n“ டெல்லியில் பல இடங்களில் பெண்களிடம் வன்புணர்வு , அதற்காக நானும் அப்படி திரிய முடியாது.”\nசிரித்தார் “ என்னமோ நாங்க டெல்லியில காலேல முதல்வேலையா ரேப் பண்ணத்தன் கிளம்பறோம்னு மாதிரியில்ல சொல்றீங்க?”\nநானும் சிரித்தேன். “மும்பைக் காரன் இல்ல. அப்படித்தான் டெல்லி பத்தி சொல்லுவோம். இது ஆரோக்கியமான தாக்குதல்கள்”\n“ நீங்க என்னை மாதிரி புத்தகம் படிக்கறீங்க. சந்தோஷம். நிஜமாவே உங்களுக்கு அந்த புத்தகம் வேண்டாமா? “என்றார்.\n“வேண்டாம். அது கிடைத்துக் கொண்டிருக்கும் போதே நான் வாங்கவில்லை. அது தடையும் செய்யப் படவில்லை. மார்க்கெட்டிலிருந்து எழுத்தாளரே எடுத்துக்கொண்டார். கருத்துச் சுதந்திரத்தைக் காப்பாற்ற ஒரு பிடிஃப் இலவசமாகப் படிக்கப்ப் போவதில்லை” என்றேன்.\n“ஏன்?” என்றார் சற்றே இடது புறம் என்னோக்கிச் சாய்ந்தவாறே. விமானம் ஒரு வட்டமடித்து அரபிக்கடல் மீது தெற்கு நோக்கிப் பயணித்திருந்தது. இறக்கை பக்கம் சீட் என்பதால் இரைச்சல் அதிகமாயிருந்தது.\n“பல வருடம் முன்பு Satanic verses என்று ஒன்று வந்தது. லஜ்ஜா என்று ஒன்று அதன்பின் இரண்டும் அரசால் தடைவிதிக்கப்பட்டன. இரண்டும் ப்ளாட்பாரத்தில் படு சீப்பாக விற்கப்பட்டன. அவற்றையும் வாங்கவில்லை. படிக்கவில்லை.”\n“அதான் ஏன் ? என்கிறேன்” என்றார்.\n”ஒரு குறிப்பிட்ட சமூகத்தினருக்கு வருத்தம் அளிக்கிறது என்று தெரியவந்தால், அவனுக்கு என்ன ப்ரச்சனை என்பதை அறிந்து கொள்ளும் குறுகுறுப்பு ,கீழ்த்தரமான ஆர்வம் மட்டுமே அப்புத்தகத்தைப் படிக்கத் தூண்டுமே தவிர அதிலிருக்கும் இலக்கியமோ, அதன் கதைக்களன், கதை சொல்லிய பாங்கு என்பதெல்லாம் தோன்றாது. இது அடிமட்ட உணர்வுக்கு விலை போகும் சமாச்சாரம்.”\n”பிறருக்கு துன்பம் என்பது அவரவர் மனப்பாங்கு. வாசித்தல் என்பது ரொம்ப சப்ஜெக்டிவ்.. எனக்கு வருத்தமளிப்பது , உங்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தாமலிருக்கலாம். இதையெல்லாம் தாண்டி அதனைப் படித்துவிட்டு உங்கள் கருத்தை பதிவு செய்வதுதான் சரியானது. நீங்கள் சொல்வதும் ஒரு வகை சாய்வு நிலைதான்”\n“ஓ.கே” என்றேன் சற்றே சாய்ந்தவாறே “ ரோட்டில் போய்க்கொண்டிருக்கிறீர்கள். எதிரே ஒரு ஸ்கூட்டரில் ஒரு குடும்பம் போய்க்கொண்டிருக்கிறது. திடீரென்று ஸ்கூட்டர் விபத்துக்குள்ளாகிறது. அதில் இருந்த பெண் நிலைகுலைந்து விழுகிறாள். சேலை சற்றே உயரத் தூக்கிப் போய்விடுகிறது. சிராய்த்து, ரத்தம் வழிய அவர்கள் கிடக்கிறார்கள். சிலர் அப்பெண்ணின் சேலையைச் சரிசெய்ய முனைகிறார்கள். நிலைகுலைந்து கிடப்பவளை வேடிக்கை பார்ப்பவர்களை என்ன சொல்வீர்கள்?”\n“சொல்ல என்ன இருக்கிறது. Bunch of uncivilized animals” என்றார் கோபத்தோடு. டெல்லிக்காரர்களிடம் இது ஒரு வசதி.எளிதில் கோபமூட்டி விடலாம்.\n“ஒரு சமுதாயம் , ஒரு புத்தகத்தில் வரும் வார்த்தைகளால் அவமானமாக உணர்கிறது. அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறது. சேலையில் என்ன மறைத்திருக்கிறாள் என்று குறுகுறுப்பாகப் பார்ப்பதற்கும், அந்த புத்தகத்தில் அப்படி என்ன எழுதியிருக்கிறர்கள்? என்று படிக்க குறுகுறுப்பதற்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது, அஸ்லாம்?”\nதொடர்ந்தேன் “கீழே கிடக்கும் பெண்ணிற்கு உதவாவிட்டாலும், குறைந்த பட்சம் விகாரமாக பார்க்காமலாவது நாம் இருக்கலாம் இல்லையா? அதுதான் நான் செய்வது. நான் கருத்துச் சுதந்திரம் என்றோ, டெமாக்ரஸி என்றோ ஜல்லியடிக்கவில்லை. திருட்டுத்தனமாகப் படிக்கும் ஒரு கயவானித்தனத்தை நான் ஆதரிக்கவில்லை. அது ஸாட்டானிக் வெர்ஸசாக இருந்தாலும், லொஜ்ஜாவாக இருந்தாலும், மாதொரு பாகனாக இருந்தாலும் சரி. என் நிலைப்பாடு என்பது எனது கேரக்டரில் இருக்கிறது. “\nமுன்னே ஸ்க்ரீனில் அவர் எதையோ பார்த்துக்கொண்டிருந்தார். திடீரென்று “ இன்னும் ரொம்ப தூரம் போகணும். இல்ல?” என்றார்.\nநான் ஜன்னலின் வழியே கீழே பார்த்தேன்.கடல் மிக அமைதியாக ஒரு நீலப் போர்வையை விரித்தது போல இருந்தது. அலைகள், பொங்குதல் எல்லாம் கரையில் மட்டும்தான். கொஞ்சம் உள்ளே போனால் எல்லாம் அமைதியாகி விடுகிறது.\nThis entry was posted in பொதுவகை on பிப்ரவரி 7, 2015 by kasturisudhakar(கஸ்தூரி சுதாகர்).\n← ராமாயண கதை கேட்ட கதை. இயற்கை மருத்துவமென்ற பெயரில்… →\n2 thoughts on “மின்னூலும் மனப்பாங்கும்”\nGopalan 9:53 பிப இல் பிப்ரவரி 12, 2015\nDear Sudhakar, I am enjoying reading your Tamil storey . Thanks to digital age I am Ble to connect with your thought siting in my son Kesavan’s house in Cheltenham, UK. Great work, best wishes…..Gopalan\nG.Sundar 2:55 பிப இல் ஓகஸ்ட் 11, 2015\nGood thought and practice . Pl keep it up
ipl 2022 gujarat titans on to the final\nஇந்த சீசனில் குஜராத் அணிக்காக பவர்ப்ளேயில் அதிக ரன்களை அடித்த வீரர். அப்படியானவரை ட்ரெண்ட் போல்ட் முதல் ஓவரிலேயே தனது இரண்டாவது பந்தில் எட்ஜ் ஆக்கி கேட்ச் ஆக்கினார்.\nUpdated on : 25 May 2022, 04:22 AM\nராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கிடையேயான முதல் தகுதிச்சுற்று போட்டி நடந்து முடிந்திருக்கிறது. இந்த போட்டியை குஜராத் அணி7விக்கெட் வித்தியாசத்தில் வென்றிருக்கிறது. இந்த வெற்றி மூலம் குஜராத் அணி முதல் அணியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியிருக்கிறது.\nகுஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யாவே டாஸை வென்றிருந்தார். சேஸ் செய்யப்போவதாக அறிவித்தார். இந்த சீசனில் 13 வது முறையாக ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் டாஸை தோற்றிருந்தார். டாஸை மட்டும் தோற்கவில்லை. கடைசியில் இந்த போட்டியையுமே ராஜஸ்தான் தோற்றிருக்கிறது.\nராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்து 188 ரன்களை எடுத்திருந்தது. அதிகபட்சமாக பட்லர் 89 ரன்களை எடுத்திருந்தார். சாம்சன் 47 ரன்களை எடுத்திருந்தார். ராஜஸ்தான் அணிக்கு தொடக்கம் அவ்வளவு சிறப்பாக அமையவில்லை. இரண்டாவது ஓவரிலேயே3ரன்களில் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் யாஷ் தயாளின் பந்தில் அவுட் ஆகினார். ஓவர் தி விக்கெட்டில் வந்து பந்தை வெளியே திருப்பிய தயாள் ஜெய்ஸ்வாலை எட்ஜ் ஆக்கினார்.\nநம்பர் 3ல் கேப்டன் சஞ்சு சாம்சன் இறங்கினார். சாம்சன் தொடக்கிதிலிருந்தே அதிரடியாக ஆடியிருந்தார். எதிர்கொண்ட முதல் பந்தையே லாங் ஆனில் சிக்சராக்கியிருந்தார். அடித்த முதல் 30 ரன்களையுமே பவுண்டரி மற்றும் சிக்சர்களிலேயே அடித்திருந்தார். பட்லர் கொஞ்சம் பொறுமையாகவே தொடங்கினார். ஷமியின் ஓவரில் மட்டும்3பவுண்டரிக்களை கவர்ஸில் அடித்திருந்தார். மற்றபடி மெதுவாகவே ஆடினார். பவர்ப்ளே முடிந்த உடனேயே ஸ்பின்னர்களான ரஷீத்கான் மற்றும் சாய் கிஷோர் ஆகியோரை ஹர்திக் பாண்ட்யா அறிமுகப்படுத்தினார். பவர்ப்ளே தாண்டியபிறகு இந்த மிடில் ஓவர்களில் ராஜஸ்தானின் ரன் வேகம் கொஞ்சம் குறைய தொடங்கியது.\nசெட்டில் ஆகியிருந்த பட்லர்-சாம்சன் கூட்டணியை தமிழக வீரரான சாய் கிஷோரே வீழ்த்தியிருந்தார். மிடில் & லெக் ஸ்டம்ப் லைனில் சாம்சனுக்கு இடமே கொடுக்காமல் சாய் கிஷோர் வீசிக்கொண்டிருந்தார். இதனால் ஆஃப் சைடிலும் லெக் சைடிலும் நகர்ந்தபடியேதான் சாம்சன் ஆட முயன்றார். ஆஃப் சைடில் நகர்ந்து லாங் ஆனில் அடிக்க முயன்ற ஒரு ஷாட் சரியாக கனெக்ட் ஆகாமல் கேட்ச் ஆகியிருந்தார்.\nநம்பர்4இல் வந்த இடதுகை பேட்ஸ்மேனான படிக்கல் இடதுகை ஸ்பின்னரான சாய் கிஷோரை அட்டாக் செய்து சில பவுண்டரிக்களையும் சிக்சர்களையும் அடித்து 28 ரன்களை அடித்திருந்தார்.\nமுக்கிய வீரர்கள் எல்லாம் அவுட் ஆன பிறகே பட்லர் தனது ஆட்டத்தை தொடங்கினார். முதல் 38 பந்துகளில் 39 ரன்களை மட்டுமே எடுத்திருந்த பட்லர், அடுத்த 18 பந்துகளில் 50 ரன்களை அடித்திருந்தார். கடைசி4ஓவர்களில் மட்டும் ராஜஸ்தான் அணி 60 ரன்களை சேர்த்திருந்தது. ஓவருக்கு 15 ரன்கள் என்ற விகிதத்தில் ரன்கள் வந்திருந்தது. இதற்கு முழுக்க முழுக்க பட்லர் மட்டுமே காரணம். சிக்சர்களும் பவுண்டரிக்களுமாக அடித்து அசத்யியிருந்தார். பட்லரின் அதிரடியால் ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 188 ரன்களை அடித்திருந்தது.\nகுஜராத் அணிக்கு 189 ரன்கள் டார்கெட். குஜராத் அணிக்குமே தொடக்கம் அவ்வளவாக சிறப்பாக அமையவில்லை. விருத்திமான் சஹா இந்த சீசனில் குஜராத் அணிக்காக பவர்ப்ளேயில் அதிக ரன்களை அடித்த வீரர். அப்படியானவரை ட்ரெண்ட் போல்ட் முதல் ஓவரிலேயே தனது இரண்டாவது பந்தில் எட்ஜ் ஆக்கி கேட்ச் ஆக்கினார்.\nமுதல் ஓவரிலேயே விக்கெட் வீழ்ந்திருந்தாலும் பவர்ப்ளேயில் குஜராத் அணி நன்றாக ஆடியிருந்தது. 64 ரன்களை பவர்ப்ளேயில் சேர்த்திருந்தது. இந்த சீசனில் பவர்ப்ளேயில் குஜராத் அணி எடுத்த அதிகப்ட்ச ரன்கள் இதுதான். கில்லும் வேடும் பவுண்டரிக்களாக அடித்து ரன்களை கூட்டியிருந்தனர். கில் & வேட் இருவருமே 35 ரன்களில் அவுட் ஆகினர்.\n#KillerMiller's3SIXES 💥💥💥#GTvsRR #IPL #IPL2022 #IPLplayoffs #RRvGT #HardikPandya pic.twitter.com/pV9cAITyXc\nஇதன்பிறகு, மில்லரும் ஹர்திக் பாண்ட்யாவும் கூட்டணி சேர்ந்தனர். இருவரும் ரொம்பவே பொறுப்போடு கடைசி வரை நின்று ஆட்டத்தை முடித்து கொடுக்க வேண்டும் என்கிற தீரத்தோடு ஆடியிருந்தனர். ரன்ரேட் கைக்குள் வைத்துக் கொண்டு அதேநேரத்தில் ஜாக்கிரதையாகவும் ஆடினர். ஏதுவான பந்துகளில் பவுண்டரிக்களையும் சிக்சர்களையும் அடித்திருந்தனர். குஜராத்துக்கு சாதகமாக சென்ற போட்டி, மெக்காய் 19 வது ஓவரை சிறப்பாக வீச 20 வது ஓவரில் குஜராத்தின் வெற்றிக்கு 16 ரன்கள் தேவைப்பட்டது. பிரசித் கிருஷ்ணா வீசிய இந்த கடைசி ஓவரின் முதல் மூன்று பந்துகளையுமே மில்லர் சிக்சராக்கி ஆட்டத்தை வெற்றிகரமாக முடித்து வைத்தார். இதன்மூலம் முதல் அணியாக குஜராத் இறுதிப்போட்டிக்கும் தகுதிப்பெற்றது.\nஹர்திக் பாண்ட்யா 40 ரன்களிலும் மில்லர் 68 ரன்களிலும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இருவரும் இணைந்து 119 ரன்களை அடித்திருந்தனர். இந்த பார்ட்னர்ஷிப்பை ராஜஸ்தான் உடைக்க தவறியதால்தான் தோல்வியை தழுவியது. ராஜஸ்தான் தோற்றுப்போனாலும் இரண்டாவது தகுதிச்சுற்று போட்டியில் அவர்களால் ஆட முடியும்.
sasikala and edappadi palanisamy arrived apollo hospital at same time/ அதிமுக கொடி கட்டிய காரில் சசிகலா- உடனடியாக வெளியேறிய எடப்பாடி பழனிசாமி: மருத்துவமனையில் பரபரப்பு! – News18 Tamil\nஅதிமுக கொடி கட்டிய காரில் சசிகலா- உடனடியாக வெளியேறிய எடப்பாடி பழனிசாமி: மருத்துவமனையில் பரபரப்பு!\nமதுசூதனனை காண சசிகலாவும் அப்போலோ மருத்துவமனை வந்தடைந்தார். இதன் காரணமாக இரு தரப்பினரும் பரபரப்படைந்தனர். சசிகலாவின் காரில் அதிமுக கொடியும் இடம் பெற்றிருந்தது. இருவரும் நேர் எதிரே சந்தித்துக் கொண்டால் என்ன ஆகும் என்ற எதிர்பார்ப்பு அனைவரின் மனதிலும் தொற்றிக் கொண்டது\nLast Updated: July 20, 2021, 13:37 IST\nஉடல்நிலை மோசமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் அதிமுக அவைத்தலைவர் மதுசூதனனை காண எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியும், சசிகலாவும் ஒரே நேரத்தில் மருத்துவமனைக்கு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.\n80 வயதான அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் மூச்சுத்திணறல் காரணமாக நேற்று சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருக்கும் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அவரது உடல்நிலை குறித்து விசாரிக்க எதிர்க்கட்சித் தலைவரான எடப்பாடி பழனிச்சாமி இன்று அதிகாலை சேலத்தில் இருந்து சாலை மார்க்கமாக புறப்பட்டார்.\nசுமார் 12 மணி அளவில் அவர் அப்போலோ மருத்துவமனை வந்தடைந்தார். எடப்பாடி பழனிச்சாமி மருத்துவமனைக்கு சென்ற ஐந்து நிமிடங்களில் மதுசூதனனை காண சசிகலாவும் அப்போலோ மருத்துவமனை வந்தடைந்தார். இதன் காரணமாக இரு தரப்பினரும் பரபரப்படைந்தனர். சசிகலாவின் காரில் அதிமுக கொடியும் இடம் பெற்றிருந்தது. இருவரும் நேர் எதிரே சந்தித்துக் கொண்டால் என்ன ஆகும் என்ற எதிர்பார்ப்பு அனைவரின் மனதிலும் தொற்றிக் கொண்டது.\nஇதையும் படிங்க: அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் கவலைக்கிடம்!\nசசிகலாவின் கார் அப்போலோ மருத்துவமனையின் நுழைவுவாயிலில் வரிசையில் காத்திருக்க, வேகவேகமாக எடப்பாடி பழனிச்சாமி மருத்துவமனையில் இருந்து வெளியேறினார். நுழைவு வாயிலும் வெளியேறும் வாயிலும் வேறுவேறு என்பதால் இருவரும் கடைசி வரை எதிர் எதிர் பார்த்துக் கொள்ளவே இல்லை. பழனிச்சாமி வெளியேறிய பின்னர் சசிகலாவின் கார் மருத்துவமனை வாயிலுக்குள் நுழைந்தது. இதனால், சுமார் 15 நிமிடங்கள் நீடித்த பரபரப்பு இறுதியில் சத்தமில்லாமல் முடிந்து போனது.\nசசிகலா, எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவருமே தலா ஐந்து நிமிடங்கள் மதுசூதனனின் உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் விசாரித்ததாக தெரிகிறது.\nFirst published:July 20, 2021, 13:37 IST\napollo hospitalEdappadi PalanisamiSasikala
திருமண யோகம் தரும் ஆடிப்பூர விரதம் || Aadi pooram viratham\nதிருமண யோகம் தரும் ஆடிப்பூர விரதம்\nபதிவு: ஆகஸ்ட் 03, 2019 07:08 IST\nஆடிப்பூர தினமான இன்று திருமணமாகாத பெண்கள் இந்நன்னாளில் ஆண்டாளை விரதம் இருந்து வணங்கினால் அவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்.\nதேவிக்குரிய திருநாள்களில் ஆடி மாதம் பூர நட்சத்திரத்தில் கொண்டாடப்படும் “ஆடிப் பூரம் திருநாள்’ மிகவும் சிறப்பானது. இன்று (சனிக்கிழமை) ஆடிப்பூரம் தினமாகும். இன்று வைணவத் திருக்கோயில்களில் ஆண்டாளுக்கு சிறப்பு பூஜை நடைபெறும். திருமணமாகாத பெண்கள் இந்நன்னாளில் ஆண்டாளை விரதம் இருந்து வணங்கினால் அவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்.\nபெண்களுக்கு வளையல் காப்பு நடத்துவதுபோல, நம்மைப் படைத்த அன்னைக்கு வளைகாப்பு நடத்தி மகிழ்ந்திடும் நாளே ஆடிப்பூரம். அம்பிகைக்கு வளையல்களால் அலங்காரம் செய்து வழிபட்டு அந்த வளையல்கள் பெண் களுக்குப் பிரசாதமாக அளிக்கப்படுகிறது.\nஆடிப்பூரத்தையட்டி அம்மன் ஆலயங்கள் அனைத்திலுமே வளையல் காப்பு அணிவிக்கும் உற்சவம் நடத்தப்படும். அன்றைய தினம் அம்மனுக்கு வளையல்களை வாங்கித் தந்து வழிபட்டு அவளது பிரசாதமாக சில வளையல்களைப் பெற்று அணிந்து கொண்டால், மனம்போல மாங்கல்யம் அமையவும், மங்களங்கள் நிலைக்கவும் செய்யும். அதோடு, அம்பிகை தாய்மைக்கோலம் கொண்ட நாள் என்பதால் குழந்தை பாக்கியமும் நிச்சயம் கிட்டும்.\nஒவ்வொரு பெண்ணின் வடிவிலும் அம்பிகையின் அம்சம் நிறைந்துள்ளது. எனவே ஆடிப்பூரம் தினத்தன்று அம்பிகையின் அருள் முழுமையாக நிறைந்திருக்கும் என்பதால் எந்த பேதமும் இன்றி இயன்ற அளவு மற்ற பெண்களுக்கு வளையல்கள், குங்குமம், மஞ்சள், ரவிக்கைத் துணி, புடவை என்று அவரவரால் இயன்ற மங்களப் பொருட்களை வாங்கித் தர வேண்டும். அப்படி செய்தால் இல்லறம் சிறக்கச் செய்யும். இன்பங்கள் நிறையச் செய்யும் என்பது ஐதீகம்.\nதாலிபாக்கியம் சிறக்க, தாயாகும் பேறுபெற, வளமும் நலமும் பெருக நீங்கள் வேறு எதுவும், செய்ய வேண்டாம். ஆடிப்பூர நாளில் அம்மனுக்குக் கொஞ்சம் வளையல் வாங்கிக் கொடுங்கள். பதிலுக்கு உங்கள் வாழ்க்கை வளமையாகும் வரத்தை நிச்சயம் தருவாள் அம்பிகை.\nதிருநெல்வேலி காந்திமதி அம்மனுக்கு ஆடிப்பூர விழாவின்4ஆம் நாளன்று ஊஞ்சல் மண்டபத்தில் வளைகாப்பு விழா நடைபெறுகிறது. இந்த அம்பிகையை வழிபடுவோர் திருமணம், பிள்ளைப்பேறு பெறுகின்றனர். சிலர் வீட்டில் முளைப்பாலிகை வைத்து அதை கோயிலில் சேர்க்கின்றனர். ஆடிப்பூர விழா, பல்வேறு ஆலயங்களில் வாகன சேவையுடன் 10 நாள் திருவிழாவாகவும் நடைபெறும்.\nதிருவாரூர் கமலாம்பாள், நாகை நீலாயதாட்சி, திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை போன்ற பல திருத்தலங்களில் 10 நாள் பிரம்மோற்சவமும் திருமயிலைக் கற்பகவல்லிக்கு ஆடிப் பூரத்தன்று மதியம் சந்தன காப்பு அலங்காரமும், இரவு வளையல் அலங்காரமும் நடைபெறுகிறது. மேல் மருவத்தூர் ஆதி பராசக்தி அம்மனுக்கு கூழ்வார்க்கும் பண்டிகைச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.\nதிருக்கழுக்குன்றம், அருள்மிகு வேதகிரீஸ்வரர் திருக்கோயில், அன்னை திரிபுரசுந்தரி சுயம்பு வடிவானவள். அம்பாள் மூர்த்தம் அஷ்ட கந்தகம் உட்பட எட்டு விதமான வாசனை பொருள்களால் ஆக்கபட்டது. அம்பாளுக்கு (திரிபுரசுந்தரி) மார்பில் ஸ்ரீ சக்கரப் பதக்கம் சார்த்தப்பட்டுள்ளது.\nஆடிப்பூரம், பங்குனி உத்திரம், நவராத்தியில் வரும் நவமி ஆகிய மூன்று நாட்களில் மட்டுமே அம்பாளுக்கு முழு அபிஷேகம் செய்யப்படுகின்றது. மற்ற நாள்களில் அம்மனுக்கு திருபாதத்தில் மட்டுமே பூஜை நடக்கின்றது. அகில உலகத்தை காக்கும் நாயகியாம் திரிபுரசுந்தரியை வருடத்தில்3முறை நடைபெறும் மகாஅபிஷேக விழாவில் கண்டு வணங்கினால் பாவம் விலகி நல்லவை நடக்கும்.\nஆடி மாதத்தில் பூரம் நட்சத்திரம் உச்சமாக இருக்கும். இந்நாளில் ஏழை சுமங்கலிப் பெண்களுக்கு புடவை, மஞ்சள், குங்குமம், வெற்றிலை பாக்கு, பணம் வைத்து கொடுப்பது நல்லது. இன்று (சனிக்கிழமை) மஞ்சள் தாலி கட்டிக்கொள்ள தீர்க்க சுமங்கலியாய் இருப்பர். ஆடிப்பூரம் அன்று சக்தி தலங்களில் அம்மன் ஆலயங்களில் வழிபட கேட்கும் வரம் கிடைக்கும். ஆரோக்கியமும், செல்வ செழிப்பும் உண்டாகும்.\nவிரதம் | அம்மன் | Viratham
எச்சரிக்கை! – Page 10\nவலைதளங்களை குறிவைக்கும் வக்கிர கும்பல் சமூக வலைதளங்கள் மூலம், பள்ளி, கல்லூரி மாணவியரை குறிவைத்து மோசடி செய்யும் வக்கிர கும்பல்களின் செயல்கள் சமீபகாலமாக அதிகரித்துள்ளது. இந்த விஷயத்தில் மாணவியர் மட்டுமின்றி, பெற்றோரும் உஷாராக இருக்க வேண்டும். இன்றைய நவீன உலகில், மக்களின் அடிப்படை தேவைகளில், மொபைல்போன் மற்றும் இன்டர்நெட்டும் இடம்பிடித்துள்ளன. பல்வேறு துறைகள் சார்ந்த தகவல்களை நொடிப்பொழுதில் தெரிந்து கொள்ள இன்டர்நெட் உதவுகிறது. எந்த ஒரு புதிய தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளுக்கும் சாதகம், பாதகம் இரண்டும் கலந்திருக்கும். அந்த…\nஇதற்குப்பெயர் நாகரீகக் கலாச்சாரமாம்…!!!\nஆண் பெண் நாகரீகம் எங்கே போகும்? முதலில் ஆணும் பெண்ணும் பார்த்துக்கொள்வதால் என்ன தவறு என்றனர். பிறகு ஆணும் பெண்ணும் ஒன்றாக படிப்பதால் என்ன தவறு என்றனர் பிறகு ஆணும் பெண்ணும் பேசிக்கொள்வதால் என்ன தவறு என்றனர் பிறகு ஆணும் பெண்ணும் நட்பாக இருந்தால் என்ன தவறு என்றனர் பிறகு ஆணும் பெண்ணும் ஒன்றாக வெளியில் சென்று வந்தால் என்ன தவறு என்றனர் பிறகு ஆணும் பெண்ணும் தொட்டுக்கொண்டு பேசுவதால் என்ன தவறு என்றனர்\nதிரைப்படங்களும் முஸ்லிம்களும்! [ ஊடகங்கள் மூலம் முஸ்லிம்களைக் கெட்டவர்களாகவும் சமூக விரோதிகளாகவும் தேசத்துரோகிகளாகவும் கற்பனை செய்து காட்டுவது நீண்டகாலமாகத் தொடர்ந்துகொண்டே இருக்கிறது. இதனால் பல்வேறு கோணங்களில் முஸ்லிம்கள் சிரமத்திற்கும் துன்பத்திற்கும் உள்ளாக்கப்படுகிறார்கள். முஸ்லிம்கள் என்றாலே தீவிரவாதிகள் என்ற போக்கு காணப்படுகிறது. இதனால் வீடு வாடகைக்குப் பெறுவதுகூட மிகச்சிரமமாக உள்ளது. இதைக் களைய நாம் செய்ய வேண்டியதென்ன? நம்முடைய எதிர்ப்பைக் காட்டுவதோ, அதேபோல் திரைப்படம் எடுப்பதோ இல்லை. மாறாக, கதாசிரியர்களையும் தயாரிப்பாளர்களையும் நம்முள்…\nவிளையாட்டு காதலியால் ஏற்பட்ட விபரீதம் – இப்படியும் சில பைத்தியங்கள்! இன்றைய இளைஞர்கள் ஓடியாடி விளையாடுவதை மறந்து பல காலங்கள் ஆகி விட்டன. அவர்கள் விளையாட்டெல்லாம் கம்ப்யூட்டரில் வீடியோ கேம்ஸில் விளையாடுவதாகவே உள்ளது. இப்போது அவர்கள் தங்கள் காதலிகளையும் வீடியோ கேம்சிலேயே தேடுகிறார்கள். இவர்களை திருப்திப்படுத்துவதர்க்காக ஜப்பான் நிறுவனம் ஒரு வீடியோ கேமை அறிமுகப்படுத்தியது. அறிமுகப்படுத்திய உடனே கேம் சூடுபிடித்தது. மிகவும் பிரபலமடைந்தது. அந்த கேமின் பெயர் கூட ‘லவ் பிளஸ்’ என்பது தான். இந்த கேம்…\nஅமெரிக்காவின் பென்ட்டன்விள்ளே, அர்கன்சாஸ் மாகாணத்தில் 1967-ல் சாம் வால்டன் என்பவரால் தொடங்கப்பட்டது வால்மார்ட். இப்போது 15 நாடுகளில் 8,500 ஸ்டோர்களுக்கு மேல் சக்கைபோடு போட்டுக்கொண்டிருக்கிறது. அமெரிக்காவில் வால்மார்ட், மெக்சிகோவில் வால்மெக்ஸ், இங்கிலாந்தில் அஸ்டா, ஜப்பானில் செய்யூ என்று ஊருக்கு ஒரு பேர் வைத்துக்கொள்ளும் வால்மார்ட்டின் இந்தியப் பெயர் ‘பெஸ்ட் ப்ரைஸ்’! அமெரிக்காவில் அதிக அளவு வேலை வாய்ப்புகளை உருவாக்கிய வால்மார்ட், ‘நெய்பர்ஹுட் மார்க்கெட்’ என்ற கான்செப்ட்டை பிடித்துதான் ஹிட்டடித்தது. அதாவது, பெரிய ஸ்டோர்களுக்குச் சென்று ஷாப்பிங் செய்ய…\nபெண்களை இழுத்துப்போகும் கலாச்சாரம்!\nபெண்களை இழுத்துப்போகும் கலாச்சரம்! “பெண்களுக்கு அநீதி இழைக்கப்படுகிறது; பெண் சுதந்திரம் வேண்டும்” இவை இரண்டையும் நீங்கள் சொல்லிக்கொண்டிருந்தால் போதும், மீடியாக்களில் உங்கள் முகம் காட்டப்படும். அடுத்த கட்டமாக சமுதாய முன்னேற்றம் கருதும் தியாகி என்று நீங்கள் வர்ணிக்கப்படுவீர்கள். இந்த வார்த்தைகள் புரட்சிகரமான கோஷங்களாக வெளியில் தெரிந்தாலும் இதன் மூலம் வீதிக்கு இழுக்கப்பட்ட பெண்ணினத்தின் சமூகச் சீரழிவுகள் ஆக்டோபஸாக மாறியிருக்கின்றன. அந்தச் சீரழிவுகளில் எல்லா சமுதாயப் பெண்களும் சிக்கிக் கொண்டிருக்கின்றனர். வாலிபப் பெண்கள் கல்வி, வேலை…\nமுஸ்லிம்களை திட்டமிட்டே ‘தீவிரவாதி’களாக்கும் மிருகங்கள்!\nமுஸ்லிம்களை திட்டமிட்டே ”தீவிரவாதி”களாக்கும் மிருகங்கள் முஸ்லிம்களை திட்டமிட்டே ‘தீவிரவாதி’களாக ஆக்கும் ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி., காங்கிரஸ் கள்ளக் கூட்டணியும், உலகளாவிய அமெரிக்க பயங்கரவாதமும், பார்ப்பன, பனியா மேல்சாதி இந்துத்வா தீவிரவாதமும், இந்த மாபெரும் நெட்வொர்க்கின் பிரச்சார ஏஜெண்டுகளாக அச்சு, எலக்ட்ரானிக், திரைப்பட ஊடகங்களும் இயங்குகின்றன. “அமைதிக்காலங்களில் தான் எதிர்கால வகுப்புக் கலவரங்களுக்கான விதைகள் சத்தமின்றித் தூவப்படுகின்றன, ஆனால் நாம் அப்போது சும்மா இருக்கின்றோம்” இஸ்லாமிய சமூகத்துக்கு எதிராக ஒரு சர்வதேசிய அரசியலைத் தொடங்கி கட்டமைக்க வேண்டிய கட்டாயம், குறிப்பாக…\nபெண்களைத் துரத்தும் ரகசிய கேமராக்கள்!\nபெண்ணின் அந்தரங்கத்தை கீழிருந்து எடுப்பதற்காக…. பெண்களை துரத்தும் ரகசிய கேமராக்கள்! பெண்களின் மானம் சார்ந்த தகவல் என்பதால், நீண்ட பதிவாக எழுதி இருகிறோம். குறிப்பாக பெண்களே!, உங்களின் மானத்திற்கும், பாதுகாப்பிற்கும் இந்த கட்டுரை முக்கியம் என்பதால் சிரமம் பார்க்காமல் முழுமையாக படித்து பயன்பெற வேண்டும், மற்றவர்களுக்கும் எத்திவைக்க வேண்டும். இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சி ஒருபுறம் நம்மை தினம் தினம் ஆச்சரியத்தில் ஆழ்த்தி வரும் அதே வேலையில், மறுபுறம் நம்மை அதிர்ச்சிக் குள்ளாக்கியும் வருகிறது. எதை எந்த நோக்கதிற்காக…\nபார்க்கும்போதே நாவில் எச்சில் ஊருகிறதா?! பரோட்டா பிரியர்களுக்கு ஓர் எச்சரிக்கை! தினமும் இரவு பரோட்டா சாப்பிட்டால் தான் சாப்பிட்ட திருப்த்தி கிடைக்கிறதா? இன்று தமிழகம் முழுவதும் பரவலாக காணபடுகிறது பரோட்டா கடை ,அந்த பரோடாவும் ஊருக்கு ஊர் எத்தனை வகை ,அளவிலும் சுவையிலும் எத்தனை வேறுபாடு விருதுநகர் பரோட்டா, தூத்துக்குடி பரோட்டா, கொத்து பரோட்டா, சில்லி பரோட்டா, சொல்லும்போதே நாவில் நீர் ஊருமே . பரோட்டாவின் கதை என்ன தெரியுமா? பரோட்டா என்பது மைதாவால் செய்யப்படும் உணவாகும்….\nஎச்சரிக்கை! தொழுகைக்கு இடம் கேட்கும் சாக்கில் நூதனத் திருட்டு! அபூ இபுறாஹிம் நம் மக்கள் அதிகம் வசிக்கும் தெருக்களில் இன்றைய சூழலில் கேள்விப்படும் சம்பவங்கள் சற்று அச்சத்தையும் பதற்றத்தையும் கொடுக்கிறது அதுவும் இந்த சம்பவம் பற்றி என் சுற்றமே உணர்ந்ததும் இன்னும் பிளிர்கிறது, அதுதான் ஒரு வித நூதன திருட்டு “தொழுவதற்கு இடம்” கேட்டு வரும் அன்னியப் பெண்களின் அட்டூழியம் ஏற்கனவே முன்று அல்லது அதற்கு மேல் நடந்தேறியிருக்கிறது இதனை அதிரைசார்பு…
படலை: வியாழ மாற்றம் 12-07-2012 : பன்னி\nவியாழ மாற்றம் 12-07-2012 : பன்னி\nஈழத்தில் உள்ளவர்கள் பற்றியும் ஈழத்து அரசியல் பற்றியும் வெளிநாட்டில் இருந்துகொண்டு சகட்டு மேனிக்கு எழுதித்தீர்க்கலாம். ஆபத்தில்லை! மிஞ்சி மிஞ்சி போனால் Facebook இல் யாராவது பன்றி என்று திட்டுவார்கள். ஆனால் ஈழத்தில் இருந்தே அப்படி எழுதினால்? டங்குவாறு தான்!\nYou areashit, shit journalist. A f…..g shit. A pig who eats shit! I will go to courts!!! You pig that eats shit!!! You shit shit dirty f…..g journalist!!!People will kill you!!! People hate you!!! They will kill you!!!\nஇப்படி திட்டியவன் வேறு யாருமல்ல. ராஜபக்சவின் அருமைத்தம்பி, நாட்டின் அதிசக்தி வாய்ந்த மூவேந்தரில் ஒருவர், பாதுகாப்பு செயலாளர். அண்ணன் கோத்தா! அப்பனும் ஆத்தாளும் சாத்திரம் பார்த்திருப்பாங்க போல! கெட்ட வார்த்தையையே பெயராக வைத்துவிட்டனர்.\nஇந்த திட்டு விழுந்தது யாருக்கு? இலங்கையில் ஓரளவுக்கு தர்மம் மீறாமல் செய்திகளை தரும் சண்டேலீடர் பத்திரிகையின் பிரதான எடிட்டர் பிரெடெரிக்கா ஜான்சுக்கு தான். ஏற்கனவே வெள்ளை கொடி ஏந்தி வந்தவர்களை படுகொலை செய்தது சம்பந்தமாக ரிப்போர்ட் பண்ணி, சரத் பொன்சேகா உள்ளே போனது தெரிந்த விஷயம். கூடவே எழுதியதற்காக இவர் வேறு நீதிமன்றம் அலைந்தார்.\nஇந்த ஏச்சும் பேச்சும் வெறும் நாய்க்காக தான். கோத்தா, தன் மனைவிக்காக(எத்தினை நாயை தான் மேடம் மனேஜ் பண்ணுவீங்க?) சுவிட்சர்லாந்தில் இருந்து ஒரு நாய் வாங்கிவர சொல்லி தன் நண்பரான ஒரு விமானியிடம் கேட்டிருக்கிறார். விமானிக்கோ சுவிஸ் செல்லும் விமானத்தின் மொடலான A340 வை ஓட்டும் லைசன்ஸ் இல்லை. அவர் A330 தான் ஒட்டலாம். அதனால் பயணம் செய்ய இருந்த விமானத்தையே A330 மொடலாக மாற்ற உத்தரவு. இதெல்லாம் ஒரு சுவிஸ் பப்பிக்காக நம்ம மாதனமுத்தா செய்த வேலை. எப்படியோ பிரெடெரிக்காவுக்கு தெரிந்து விசாரிக்க போனால், கொலை அச்சுறுத்தல்.\nஇது சம்பந்தமாக Facebook இல் இருக்கும் அனேகமான சிங்கள நண்பர்கள் அடக்கியே வாசிக்கின்றனர். பயம் தான் காரணமா? என்றால் ம்ஹூம் .. எங்கே கோத்தாவை தப்பாக சொன்னால், அது தமிழர்களுக்கு சார்பாக போய்விடுமோ என்ற கீழ்த்தர எண்ணம். மிரட்டும்போது கோத்தா இதையும் சொல்லுகிறார்.\nI will put you in jail! You shit journalist trying to split this country – trying to show otherwise from true Sinhala Buddhists!!\nபிரெடெரிக்காவுக்கு முன்னர் எடிட்டராக இருந்த லசந்த விக்கிரமதுங்கவை நடுவீதியில் நாயை சுடுவது போல .. ஸாரி பாஸ் .. நடுறோட்டில மனிசரை சுடுவது போலவே சுட்டு போசுக்கினார்கள். எல்லா பெரியவாளும் மிக்ஸர் சாப்பிட்டுக்கொண்டு இருந்தார்கள்! லசந்த தன் படுகொலைக்கு முன்னர் கோடிகாட்டிய பிரபல நாஸிகள் காலத்து வசனம்.\nதமிழர்கள் நாங்கள் சிங்களவர்களுக்கு சொல்லிக்கொள்வது ஒன்றே ஒன்று தான். எங்களுடைய இறந்த காலம் உங்களுக்கு எதிர்காலம். Keep watching.\nகொசுறு தகவல். பிரெடெரிக்காவின் தங்கை தான் பெர்னாண்டஸ். ஹிந்தி படங்களில் நடிப்பவர். Murder2 மூலம் பிரபலமானவர்.\nடேய் .. பிட்டு படம் போட்டா எஸ்கேப் ஆயிடலாம் எண்டு நினைப்பா? பேஸ்மன்ட் இந்தா ஆட்டம் ஆடுது .. உனக்கெல்லாம் எதுக்கடா அரசியல் பதிவு? மவனே, நீ மட்டும் கொழும்புக்கு வாடா .. உனக்கெல்லாம் ஏச்சு பேச்சு கிடையாது .. ஸ்ட்ரைட்டா பன்னி தான்!\nஇந்த வாரத்து “கந்தசாமியும் கலக்ஸியும்” அத்தியாயத்தில், துவாய் என்று ஈழத்தில் அழைக்கப்படும் துவாலை பற்றிய குறிப்பு. எங்கே போனாலும், எதை மறந்தாலும் தன் துவாயை ஒருபோதும் மறக்காமல் இருக்கவேண்டும் என்று சொன்னதில் ஆழம் இருக்கிறது. ஈழத்தவருக்கு இதிலே அனுபவம் அதிகம். இடம்பெயர சொன்னால், முதலின் சின்ன சரவச்சட்டி, பானை, அரிசி, பருப்பு .. இது தான் எடுத்து வைப்பார்கள். அடுத்தநாள் மரத்துக்கு கீழே வாழவேண்டி வந்தாலும் சமாளிக்கத்தக்கதாக, இடம்பெயரும் ஆற்றல் எங்களுக்கு இருக்கிறது. ஆனால் வாழ்க்கையில் அதை படித்தோமா என்றால் இல்லை என்றே நினைக்கிறேன். எங்கள் இருப்பை மிக இலகுவாக மறந்து ஆடும் குணம் நான் தினம் காணும் அனேகமானோரில் இருக்கிறது. ஒரு டப்பா காரை வைத்து ஓடிக்கொண்டு திரிகிறாயே? பாக்கிறவன் நீ என்ஜினியர் என்றால் நம்புவானா? என்று தெரிந்தவர்கள் கேட்கும்போது … ஒன்று ஏன் நம்பவேண்டும்? மற்றது .. என்ஜினியர் இல்லாதவன் Ferrari வைத்திருக்கிறான். அப்புறம் ஹெலிகாப்டர் வாங்கு என்றால் என்னிடம் லைசன்ஸ் இல்லை!\nஇப்படியான் அபத்தங்களை ஆதாரமாக வைத்து தான் டக்லஸ் அடம்ஸ் அந்த நாவல் முழுதும் பின்னியிருப்பார். இவரின் ரசிகர்கள் தனி ரகம். அவரை நினைவு கூறுவதற்காக அவர் மே 25ஐ “Towel Day” என்று பிரகடனப்படுத்தி இருக்கிறார்கள். அவருடைய ரசிகர் யாருடனாவது பேசிப்பாருங்கள். ஏதோ ஒரு எக்ஸ்டாஸி மனநிலையில் துள்ளுவார்கள். அவ்வளவு சுவாரசியமான எழுத்து. “கந்தசாமியும் கலக்ஸியும்” எழுத ஆரம்பிக்கும்போது, வாசிப்பவர்களுக்கு அந்த “Think Different” என்ற விஷயத்தை தூண்டவேண்டும் என்ற ஆரவம் ஒருபுறம். எழுதும்போது நானும் சும்மா தலைகீழா யோசிச்சு என்ஜோய் பண்ணலாம் என்பது மறுபுறம். ஈழத்து எழுத்துகளில் இந்தவகை ஸ்டைல் எடுபடாது என்றார்கள்.\nஒவ்வொரு செவ்வாய் காலையும், வாலிபனும், கேதாவும், வீணாவும் கெளரியும் நல்லது, நொள்ளது, லொஜிக் பிழை கூட சுட்டிக்காட்டும்போது …ஹிட்ஸ் ஐநூறை எட்டுகையில் … அவ்வளவு மோசம் இல்லை என்று ஒரு துளிர்!\nநல்லா வருவேடா .. நீயே தொடர்கதை எழுதி, நீயே வெளக்கம் கொடுத்து, நீயே வாசி .. சுத்தம்!\nஅட்டக்கத்தியோட அவனவன் கத்திக்கிட்டிருக்கான்!\nஏழு மணிக்கு அலுவலகத்துக்கு ரெடியாகி ஹோலுக்குள் வந்தால், அம்மா சன் டிவியில் வணக்கம் தமிழகம் பார்த்துக்கொண்டிருந்தார். ப்ளேன் டீ குடித்துக்கொண்டே அசுவாரசியமாக கவனித்தால் அட, பாரதி பாஸ்கரும் ராஜாவும் காஷுவலாக ஏதோ பேசிக்கொண்டிருந்தனர். எள்ளலும் துள்ளளுமாக தமிழை பதினைந்து நிமிஷமாக … நேரம் போனதே தெரியவில்லை. காலை வேளையில் இப்படி நிகழ்ச்சி .. யார் சொன்னது தொலைகாட்சி நம்மை கெடுத்துக்கொண்டு இருக்கிறது என்று?\nமபொசி பற்றி சொல்லும்போது ஏதோ ஈழத்து பிரச்னையை தான் கோடி காட்டுகிறார்களோ? என்று சந்தேகம் வந்தது. சேர் பொன் இராமநாதன் ஏமாற்றப்பட்டது போல மபொசி ஏமாற்றப்படவில்லை! அல்லது ஏமாறவில்லை! மபொசி பற்றி மேலும் தேடி வாசிக்கவேண்டும்.\nதில்லுமுல்லு படத்து இன்டர்வியூ காட்சியும் பேச்சில் அடிபட்டது. அடடா என்று இதற்கென்றே தேடி பார்த்தேன். ஐந்து நிமிட காட்சி தான். எத்தனை விஷயங்கள் இருக்கிறது பாருங்கள். அடி நாதமாக நகைச்சுவையை வைத்துக்கொண்டு பாலச்சந்தர் அடித்து ஆடியிருக்கிறார். ரஜனி பேசும் “Mustache is the mirror of Heart” என்பது ஷேக்ஸ்பியர் வசனம்(இதுவே ஒரு தனி கதை, இங்கே எழுதியிருக்கிறேன்). கூடவே Black Pearl என்ற உதைபந்தாட்ட வீரர் பற்றி வருகிறது! அவர் பெயர் சொல்லமாட்டார்கள். தேவையென்றால் நீயே தேடி கண்டுபிடி என்று பாலச்சந்தர் நினைத்திருக்கிறார். இரண்டு வசனங்களும் படத்தின் கதைக்கு பின்னாடி தேவைப்படும் foreshadowing வகை வசனங்கள். ப்ரில்லியன்ட்.\nஇத்தகைய வசனங்கள் இந்தக்காலத்து படங்களில் கிடைக்குமா என்று அங்கலாய்ப்பவர்களுக்கு .. ஒரே பதில் .. கிடைக்கும் .. கிடைக்கிறது. சாம்பிளுக்கு ஒன்று!\nஹேராமுக்கு பின்னர் தமிழில் வெளிவந்த மிகச்சிறந்த படம் “பிரிவோம் சந்திப்போம்”!\nபொப் டிலானும் கேதாவும்!\nபொப் டிலானின் “When the Deal Goes Down” என்ற கவிதை. எப்போது கவிதை எழுத போனாலும், இப்படி சில கவிதைகள் ஞாபகத்துக்கு வந்து “ஏன் உனக்கு வேண்டாத வேலை?” என்று ஏசும். படிமம் தான். வாசிக்கும்போது முகத்தில் பளாரெண்டு அடிக்கும் படிமம். நீங்களும் வாங்குங்களேன்.\nThe moon gives light and it shines by night\nகேதாவின் கவிதைகளை, குறிப்பாக அவனின் படிமங்களை வாசிக்கும்போது இயல்பாக பொப் டிலான் கவிதைகள் ஞாபகத்துக்கு வருவதை தவிர்க்கமுடியாது. குறிப்பாக, அவனுடைய “காற்றில் ஒடிந்த தளிர்கள்” கவிதையை வாசித்தபோது கூட இதே ஞாபகம். ஆனால் சொல்லமாட்டேன். சொன்னால் திட்டு விழும். “ஏன் ஒப்பிடுறீங்க?” என்று “இரு குழல் பீரங்கி” போல ரெண்டு பேரும் கும்மோ கும்முவார்கள். தனியனாக சமாளிக்கமுடியாது.\nஇன்றைக்கு பேசிக்கொண்டு இருக்கும் போது, மேலே இருந்த கவிதை பற்றியும் வந்தது. இதை தமிழில் வாசித்து பார்க்கும் ஆர்வம்; ஆனால் நம்மால் முடியாது சாமியோவ். வேறு யாரால்? கேதாவை கேட்டேன்; வாசித்தான்; வசமிழந்து; வசப்பட்டு மீண்டு வரும்போது கையில் ஒரு அழகான குழந்தை என்னை பார்த்து சிரித்தது. பெற்றுக்கொடுத்துவிட்டான். கவிஞன்!\nமொபைலில் வாசிப்பவர்கள் வீடு போகும் மட்டும் வாசிக்கவேண்டாம் ப்ளீஸ். வீட்டிலே இருந்தால், டிவியை நிறுத்திவிட்டு, யாருடனும் சாட் பண்ணாமல், இந்த கவிதையை வாசித்து முடித்து, இரண்டு நிமிடம் கண்மூடி அதனை உள்வாங்கி, மீண்டும் வாசியுங்கள். ஏதோ செய்யும்.\nஇரவெல்லாம் எறிகிறது நிலவு\nஎனக்கு மட்டும் இருட்டு.\nஅந்தி நேரத்து பூ\nகாம்பு தொலைத்து விழும் நேரம்,\nநாம் போகும் பாதை சொல்லித்தருகிறது\nபுரியாத நம் வாழ்வை.\nமுட்கள் கூட முத்தமிடுகின்றன.\nஎப்போதும் எங்கேயும் எல்லாமும்\nஇனி நீ இன்றி இல்லை\nபொப் டிலானின் கடைசி இருவரிகளை ஏன் மொழிமாற்றம் செய்யாமல் விட்டாய்? என்று கேட்டபோது வந்த பதில்,\n“சில விஷயங்களை பேசாமல் அப்படியே விட்டுவிடவேண்டும்”\nசெத்து செத்து விளையாடுவோமா?\nஎக்காரணம் கொண்டும் கேட்டுவிட கூடாது என்று சில பாடல்களின் லிஸ்ட் இருக்கிறது. அதிலும் தனியாக ஆஸ்திரேலிய வசந்தகாலத்தில், மலையடிவாரத்தில் நடந்துபோகும் சமயங்களில், ஐபொடில் அந்த பாடல்களை கேட்டாலோ, யாருமில்லாத, மரங்களின் சலனங்கள் மட்டுமே இருக்கும் பின்னேர பொழுதுகளில் சில பாடல்கள் வந்துவிட்டாலோ, மனதைக் கல்லாக்கிக்கொண்டு ஸ்கிப் பண்ணிவிடவேண்டும். ஆனாலும் மனம் கேளாது. மீறி ப்ளே பண்ணிவிட்டீர்கள் என்றால் அன்றைக்கு உயிர் மீண்டும் ஒருமுறை விட வேண்டிவரும். இந்த செத்து செத்து விளையாடும் விளையாட்டை இன்றைக்கு விளையாடலாம். இரண்டு தடவைகள்!\nரகுமான் 90களுக்கு பின்னர், முன்னர் போல மெலடி தருவதில்லை. அதுவும் “நேற்று இல்லாத மாற்றம்”, “சித்திரை நிலவு” போன்ற பாட்டுகள் எல்லாம் இனி வரவே வராது என்று எப்போதுமே ஒரு கூட்டம் சொல்லிக்கொண்டு இருக்கும். அவர்களுக்கு ரகுமானின் பல பாடல்களே தெரியாது. சில ஆண்டுகளுக்கு முன்னர் “Ada The Way Of Life” என்று ஒரு படம். மெலடிகள் பலவற்றின் சங்கமம். அதிலே இருக்கும் ஒரு பாட்டு தான் “தரித்திரம் பிடிச்ச பாட்டு”. கேட்டு விட்டீர்கள் என்றால், அன்றைய நாள் முழுதும் ஏதோ ஒன்று இழுத்துக்கொண்டு இருக்கும். அந்த புல்லாங்குழலோடு ஹவா சுன் ஹவா என்னும் போது கண் மடல்களை மெலிதாக வருடி ஒரு இசை கூச வைக்கும். ஒவ்வொரு முறையும் ஆஜாரே ஆஜாரே என்று ஆலாபிக்கும் போது… இந்த பாடல் உருவாகும் தருணத்தில் ஸ்டுடியோவில் இருந்தவர்களின் மனநிலையை யோசித்துப்பார்க்கிறேன். தில்லை காட்சி தான் அது. இதையெல்லாம் கேட்காமல் ரகுமான் ரசிகர் என்று யாராவது தன்னை சொன்னால் .. .. முதலில ரகுமானை கேட்போம்!\nபாட்டிலே இரு வேறு மெட்டுகள் உள்ள சரணங்கள் இருக்கிறது. ஏற்கனவே “பூங்காற்றிலே”, “தென்றலே” போன்ற பாடல்களில் இந்த ஸ்டைலை தலைவர் முயற்சி செய்திருக்கிறார். முதல் சரணம் “தாளம்” படத்து “காதலில்லாமல் வாழ்வது வாழ்வா” வின் டியூனை ஒத்திருக்கும். இரண்டாவது சரணம் சமகாலத்தில் தமிழில் வந்த "காதல் வைரஸ்” பாடலை ஒத்திருக்கும். கேட்டு பாருங்களேன்.\nபாழும் மனசு அது. அதற்கு மறைக்க தெரியவில்லை. அவனுக்கு அவள் காதலை உளறிவிட்டது. அவளுக்கோ கோபம். எப்படி நீ சொல்லலாம்? என்கிறாள். மோசம் செய்துவிட்டாயே பாவி என்று மனதை நோகிறாள்.\nமனசு என்ன செய்யும்? பறிகொடுத்தது நான் தானே. தோற்கப்போகிறோம் என்று தெரிந்த பின் விபீஷணன் போல அந்த பக்கம் தாவிவிட்டது. இனியும் வெட்கத்தடையை பார்த்தால் வேலைக்காகாது. அவளும் போய்விட்டாள்.\nகலந்த பின்னர் தான் மனசின் மீது அவளுக்கு ஒரு கழிவிரக்கம். அவன் வேறு தான் லஞ்சம கொடுத்தேன் என்று சொல்லிவிட்டானா? அட பாவமே, வீணாக என் மனசை நொந்துவிட்டேனே என்று மனசை சமாதான படுத்துகிறாள்.\nஇப்படி தான் சில பாடல்களோடு செத்து செத்து விளையாட வேண்டி …. My Bad\nஜேகே : மச்சி, இந்த வார வியாழமாற்றம் பூரா லைட்டா ஒரு லக்கிய தனம் எட்டி பார்க்குது.\nமன்மதகுஞ்சு: வேண்டாம்டா … டேஞ்சர்.. ஒன்னையும் லக்கியவாதி எண்ணுடுவாங்க! பொஸ்தகம் எல்லாம் கிழிப்பாங்க!\nஜேகே : பயமா இருக்குடா! தோழர் என்று சில பேரு பீதிய கிளப்புறாங்கடா! நீயி அரசியல் பத்தி எழுதி ஈழத்தில் மறுமலர்ச்சி கொண்டு வரோணும் எண்டு கூட..\nமன்மதகுஞ்சு: உன்னைய போய் எந்த நாதாரிடா தோழர் என்று சொன்னது? நீ இயக்கம் பிரச்சாரத்துக்கு வந்தாலே ஒண்ணுக்கு போன கேஸ் ஆச்சே!\nஜேகே : அத இப்ப வெளிய சொல்ல முடியாது மச்சி .. நாங்களும் போராளி தாண்டா! Facebook பார்த்த இல்ல!\nமன்மதகுஞ்சு: பார்த்தோம் .. அப்பிடியே மெயின்டைன் பண்ணு மச்சி! வடக்கு முதலமைச்சர் நீ தான்! அட்லீஸ்ட் 13+ செனட் சபை மெம்பரா கூட..\nஜேகே: வேண்டாம்டா .. ஆல்ரெடி கோத்தா பற்றி எழுதினத பார்த்து ஆத்தா வையுது. வாசிச்சா மொக்கையா இருக்கோணும்டா .. எவனாவது கோத்தாவுட்ட போட்டு கொடுத்தாலும், இவன் டம்மி பீசு எண்டு நெனைச்சிடோனும். நல்ல படமா ஒன்னை அனுப்படா!\nமன்மதகுஞ்சு: நம்ம வீட்டு நாயோட நான் வெளையாடும்போது எடுத்த படம் .. டக்கரா வந்திருக்கு. போடுவமா?\nஜேகே : அட நாதாரி .. போட்டா பிறகு எடுக்க கூடாதா?\nILA (a) இளா 7/12/2012 11:53 pm\n//ரகுமான் 90களுக்கு பின்னர் முன்னர் //\nஅவர் வந்ததே 90களுக்குப் பின் தானே?\nஜேகே 7/13/2012 12:03 am\nவாங்க இளா.. அவர் வந்தது 90 களில். நான் சொன்னது 90 களுக்கு பின்னர் .. அதாவது 2000 ஆண்டு time.. சொல்லவந்தது அதைதான் பாஸ்.\nUnknown 7/13/2012 4:12 am\n//பிரெடெரிக்காவின் தங்கை தான் பெர்னாண்டஸ்.//\nஎன்னாது ?ஜாக்குலின் பெர்னாண்டஸ் பிரெடெரிக்காவின் தங்கையா? புதிய தகவல் பாஸ்! அதென்னவோ இலங்கைல இருந்து அழகின்னு தெரிவானவங்கள்ல ஜாக்குலின் உண்மைலயே...அழகிதான்! எனக்கு அப்பவே ஒரு இது...:-)) வெள்ளை குறொஸ் ஆ பாஸ்? தெளிவு படுத்தவும்!\nமுருகேசன் பொன்னுச்சாமி 7/13/2012 4:24 am\nமகிந்தாவின் நெருங்கிய நண்பரான ,லசந்த விக்ரமதுங்கவுக்கே அந்த கதி என்றால், பிரெடெரிக்கா வின் நிலை? கோத்தாவை, கொஞ்ச காலத்திற்கு, அக்கா கொஞ்சம் அடக்கி வாசித்தால் நல்லது.\n“கந்தசாமியும் கலக்ஸியும்” தொடர் அருமையாக உள்ளது . கலக்குங்கள். வாழ்த்துக்கள்.\n//"Mustache is the mirror of ஹார்ட்"// .மீசை மயிர் ஆண்களின் குணாதிசியத்தை பிரதிபலிக்கிறது, என்று வைத்துக் கொண்டால் பெண்களின் குணாதிசியத்தை பிரதிபலிப்பது எது தல?\nUnknown 7/13/2012 11:06 am\n//எங்கள் இருப்பை மிக இலகுவாக மறந்து ஆடும் குணம் நான் தினம் காணும் அனேகமானோரில் இருக்கிறது// Super!\n//பாட்டிலே இரு வேறு மெட்டுகள் உள்ள சரணங்கள் இருக்கிறது. ஏற்கனவே “பூங்காற்றிலே”, “தென்றலே” போன்ற பாடல்களில் இந்த ஸ்டைலை தலைவர் முயற்சி செய்திருக்கிறார்//\n'சின்ன சின்ன மழைத்துளிகள் சேர்த்து' பாட்டும் அப்படித்தான்! ஆனா அது மெலடியான்னு தெரியல! (மெலடி கலந்த கொண்டாட்டம்?) நான் மீசிக்ல வீக் பாஸ்! :-))\nKetha 7/13/2012 12:08 pm\nதலைவரை பற்றி தரக்குறைவா எழுதின ஜேகே இந்த பாட்டை பார்த்தபிறகாவது திருந்தி நடக்குமாறு எச்சரிக்கிறோம்.\nபன்னிங்க தான் கூட்டமா வரும் சிங்கம் சிங்கிளாத்தான் வரும் எண்ட பிரபல சம்பாசணைக்கு பிறகு ஒரு சிங்கம் பன்னிய பற்றி பேசியிருப்பது இதுவே முதல் தடவை. எனவே இது ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்தர்ப்பம்.\nThozhirkalam Channel 7/13/2012 3:20 pm\nAnonymous 7/13/2012 7:57 pm\nJacqueline Fernandez is not the sister of Frederica Jansz, but her cousin. [ஆமா ரொம்ப முக்கியம் :-)]\nஜேகே 7/13/2012 8:03 pm\n//என்னாது ?ஜாக்குலின் பெர்னாண்டஸ் பிரெடெரிக்காவின் தங்கையா?//\nநாம ரொம்ப ஸ்லோ பாஸ் .. யாரோ ஒருத்தர் ..நம்மள விட க்ளோஸா வாட்ச் பண்ணிக்கிட்டிருக்காப்ள .. அவ தங்கச்சி இல்லையாம் .. கசினாம் .. !\nஜேகே 7/13/2012 8:05 pm\nவாங்க முருகேசன் ...\n//அடக்கி வாசித்தால் நல்லது//\nநானே இனி மேல் .. நிலா, நீர் காற்று என்று தான் எழுதிற ஐடியா .. பன்னி ஐடம் எல்லாம் சாப்பிட முடியாது பாஸ்!\n////"Mustache is the mirror of ஹார்ட்"// .மீசை மயிர் ஆண்களின் குணாதிசியத்தை பிரதிபலிக்கிறது, என்று வைத்துக் கொண்டால் பெண்களின் குணாதிசியத்தை பிரதிபலிப்பது எது தல?//\nஇப்பெல்லாம் அவங்க மூடி மறைக்கிறதே இல்லையே பாஸ்!!\nஜேகே 7/13/2012 8:07 pm\n//'சின்ன சின்ன மழைத்துளிகள் சேர்த்து' பாட்டும் அப்படித்தான்! //\nஅது மெலடி தான் தல .. ரகுமான் மேலும் சில பாடல்கள் அப்படி அமைத்திருக்கிறார் .. தைய தையா இன்னொன்று!\nஜேகே 7/13/2012 8:09 pm\nகேதா .. உன்னைய மாதிரி ஒருத்தன் இருந்தா போதும் .. தேடி வந்து என்னைய தூக்கிடுவாங்க! கோத்தா வாழ்க!\nஜேகே 7/13/2012 8:10 pm\nதம்பி Cpede News .. அட்லீஸ்ட் .. ஒரு படத்தை பார்த்திடாவது கொமென்ட் போடோணும்!\nஜேகே 7/13/2012 8:11 pm\nபெயரில்லா ரசிகரே .. ஜாக்குலின் பற்றி அவ்வளவு டீடெயில் விரல் நுனில இருக்கே .. ஆளு யாருன்னு பிடிச்சிடுவோம்ல!\nAnonymous 7/13/2012 11:53 pm\nஎன்னப் பிடிச்சு என்ன செய்யப் போறீங்க. அத விட்டிட்டு சோலியப் பாப்பீங்களா... (சத்தியமா நான் வாலிபன் கிடையாது). நீங்க சேக்ஸ்பியரப் பத்தி இவ்ளோ டீடெய்லா தேடும் போது, நாங் ஜாக்குலீனப் பத்தி தேடமாட்டமா என்ன?\nஎன்ன ஜே.கே., கேதாவும் கோதாவும் ஒண்ணு சேந்துடுவாங்க போல இருக்கே?\nஜேகே 7/16/2012 11:48 pm\nபாஸ் .. அவங்க அப்பவே கூட்டணி தான்!\nவியாழ மாற்றம் 19-07-2012 : சிங்களத்து சிந்துகள்\nவியாழ மாற்றம் 05-07-2012 : கடவுளே கடவுளே கடவுளே
Vishnu vishal shares maldives vacation picture with jwala gutta\nBy Sakthi Priyan | Galatta | February 24, 2021 14:18 PM IST\nமாலத்தீவில் காதலி ஜூவாலா கட்டாவுடன் விஷ்ணு விஷால் பகிர்ந்த புகைப்படம்.\nFebruary 24, 2021 14:18 PM IST\nதமிழ் திரையுலகில் ரசிகர்களின் உள்ளம் கவர்ந்த நடிகர்களில் ஒருவர் விஷ்ணு விஷால். விஷ்ணு விஷால் தன்னுடன் கல்லூரியில் படித்த ரஜினி என்பவரை காதலித்து திருமணம் செய்தார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ள நிலையில் கடந்த 2017ஆம் ஆண்டு தனது மனைவியை விவாகரத்து செய்தார். இந்த விஷயம் ரசிகர்கள் அனைவரும் அறிந்ததே.\nஇதனை தொடர்ந்து பேட்மிண்டன் வீராங்கணையான ஜூவாலா கட்டாவுடன் காதல் என்று கிசுகிசுக்கப்பட்டது. இருவரும் ஒன்றாக இருந்த போட்டோக்கள் வெளியாகி வைரலானது.\nகடந்த சில மாதங்களுக்கு முன்பு ஜூவாலா கட்டாவின் பிறந்த நாளில் இருவரும் மோதிரம் மாற்றி தங்களின் நிச்சயதார்த்தை முடித்துக் கொண்டனர். அந்த போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. இந்நிலையில் விஷ்ணு விஷால் மாலத்திவில் விடுமுறையை கொண்டாடி வருவதாக சில போட்டோக்களை ஷேர் செய்தார்.\nஅந்த போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள், நீங்கள் தனியாகவா சென்றிருக்கிறீர்கள்? உங்கள் காதலி வரவில்லையா என்று கேட்டிருந்தனர். இந்நிலையில் தனது காதலி தன்னுடன்தான் மாலத்ததீவில் இருக்கிறார் என்று கூறும் வகையில் ஜூவாலா கட்டாவுடன் எடுத்த செல்பி ஒன்றை தனது சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்துள்ளார் விஷ்ணு விஷால்.\nமனு ஆனந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடித்துள்ள திரைப்படம் எஃப்.ஐ.ஆர். இப்படத்தில் மஞ்சிமா மோகன், ரைசா வில்சன், ரெபா மோனிகா ஜான் ஆகிய மூவரும் ஹீரோயின்களாக நடிக்கின்றனர். கருணாகரன் மற்றும் இயக்குனர் கவுதம் மேனன் படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார். அருள் வின்சென்ட் ஒளிப்பதிவு செய்ய அஷ்வந்தின் இசையமைத்துள்ளார்.\nஇந்த படத்தை தொடர்ந்து பிரபு சாலமன் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடித்துள்ள திரைப்படம் காடன். ராணா முதன்மை கேரக்டரில் நடிக்கும் இந்தப் படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய3மொழிகளில் உருவாகி வருகிறது. காடன் திரைப்படம் மார்ச் மாதம் 26-ம் தேதி வெளியாகும் என்ற அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.\nவிஷ்ணு விஷால் தற்போது இன்று நேற்று நாளை2மற்றும் மோகன் தாஸ் போன்ற படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.\n24/02/2021 12:52 PM
ஆண்மை குறைபாடா? இதோ மருத்துவ குறிப்புகள் | | Cineinbox.com Fully Entertainment\nHomeஆண்மை குறைபாடா? இதோ மருத்துவ குறிப்புகள் ஆண்மை குறைபாடா? இதோ மருத்துவ குறிப்புகள் ஆண்மை குறைபாடா? இதோ மருத்துவ குறிப்புகள்\n- July 28, 2015 மருத்துவம்\nஆணின் ஒரு மில்லி லிற்றர் விந்தில் குறைந்த பட்சம்4கோடி விந்தணுக்கள் இருக்க வேண்டும். அதிக பட்சமாக 12 கோடி கூட இருக்கும். இந்த குறைபாடு தான் முக்கியமான பிரச்சனை. ஆண்களின் விந்தணு உற்பத்தியில் குறைபாடு ஏற்படுவதற்கு ... Read more\nComments Off on ஆண்மை குறைபாடா? இதோ மருத்துவ குறிப்புகள்
வீடின்றி தவிப்பவர்களுக்கு உணவு... வட்டாட்சியர் பகவதி பெருமாள் வழங்கினார்\nதிருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் வழிகாட்டுதலின்படி கொரானா தொற்று காரணமாக ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தப்பட்ட நிலையில் நெல்லை மாநகர பகுதியில் மட்டும் சாலையோரம் திரியும் ஆதரவற்றவர்கள், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், வீடு இன்றி தவிப்பவர்கள் என 100க்கும் மேற்பட்டோர் கணக்கிடப்பட்டுள்ளனர். இவர்களை சாலைகளில் இருந்து மீட்டு முகாம்களுக்கு கொண்டு செல்லும் பணி இன்று துவங்கப்பட்டது. முதற்கட்டமாக 75 பேரை நெல்லை டவுண் முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டு அவர்கள் தனித்தனியாக வைக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே முகாமில் தங்கியுள்ள நபர்களுக்கும் புதிதாக வந்தவர்களுக்கும் எந்த ஒரு தொடர் பும் இல்லாதவாறு பிரித்து வைக்கப் பட்டுள்ளனர். இவர்களுக்கு காலை மதியம் இரவு என உணவும், இரண்டு வேளைகள் டீ காபி பிஸ்கட் பொருட்களும் உண்ண முடிவு செய்யப்பட்டுள்ள து. இதற்காக 10 தன்னார்வலர்கள் இந்த பணியில் இருக்கின்றனர்.பொருட்களை திருநெல்வேலி வட்டாட்சியர் பகவதி பெருமாள், தனி வட்டாட்சியர் ரகமத்துல்லா உள்ளிட்ட பலர் வழங்கினர்
இந்திய விமானப்படை தினம்; தலைவர்கள் வாழ்த்து | News7 Tamil\nஇந்திய விமானப்படை தினம்; தலைவர்கள் வாழ்த்து\nby Saravana Kumar October 8, 2021 October 8, 2021 0285\n89வது இந்திய விமானப்படை தினம் இன்று கொண்டாடப்படுகிறது.\nஇந்தியாவின் பாதுகாப்பு அரணாக விமானம், கப்பல், ராணுவம் உள்ளன. இவற்றில், விமானப்படை ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் அக்டோபர் 8ம் தேதி தொடங்கப்பட்டது. இந்தியா ஆங்கிலேயர்களிடம் இருந்து விடுதலை பெற்ற பின்னரும் விமானப்படை தொடங்கப்பட்ட நாளான அக்டோபர் 8ம் தேதி இந்திய விமானப்படை தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.\nஅந்த வகையில், இன்று 89வது இந்திய விமானப்படை தினம் உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத் ஹிண்டன் விமானப்படை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, விமானப்படை தளபதி வி.ஆர்.சவுத்திரி தலைமையில் அணிவகுப்பு நடைபெற்றது. இதில், முப்படைகளின் தளபதி பிபின் ராவத், இந்தியக் கடற்படை தளபதி கரம்பீர் சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் வீரதீர செயல்புரிந்த விமானப்படை வீரர்களுக்கு வாயுசேனா விருது வழங்கப்பட்டது. முன்னதாக வீரர்களின் சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. இந்திய விமானப்படை தினத்தை முன்னிட்டு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.\nஇந்திய விமானப்படை தினம்india air force day\nஇந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற சீன வீரர்கள் சிறைபிடிப்பு\nஅனுமதியின்றி ஆர்ப்பாட்டம்: வானதி சீனிவாசன் மீது வழக்குப் பதிவு
VAI. GOPALAKRISHNAN: ஆதி சங்கரரின் வாழ்வும் வாக்கும் [பகுதி-12]\n[பட்டுவும் கிட்டுவும் சங்கரனின் தாயுடன் சங்கரன் வீட்டில்]\nகிட்டு அண்ணா, சங்கரனைப்பற்றி ஏதும் புது விஷயங்கள் உண்டா?\nசொல்லும் ஓய், கேட்போம்.\nசொல்றேன், சொல்றேன். கேளுங்கோ!\nஅதுக்குத்தானே இங்கே நான் வந்திருக்கேன்!\n80 வயது கிழவர் ஒருவரை நம் சங்கரன் சந்தித்து உள்ளார்.\nஅந்தக்கிழவர் சங்கரனைப் பார்த்து\n“16 வயதுப் பொடியன் நீ;\nபிரும்மசூத்ரத்துக்கு பாஷ்யம் எழுதியுள்ளாய்;\nநீ எழுதியது தான் சரியென்று என்னிடம் கடந்த 4-5 நாட்களாக வாக்குவாதம் செய்கின்றாய்.\nஅடடா! அப்புறம் என்ன ஆச்சு?\nவயசானவரிடம் இவன் பணிந்து போகக்கூடாதோ?\nஎதற்கு அனாவஸ்யமாக வாக்குவாதம் பண்ணனும்?\nமுழுசா நடந்ததைக்கேளுங்கோ மாமி.\nநம் சங்கரன் அவரிடம் தொடர்ந்து வாக்குவாதம் செய்தபிறகு தான், அவர் சாதாரண மனிதர் இல்லை; பிரும்மசூத்ரத்தையே படைத்த “வ்யாஸ பகவான்” னு புரிந்து, வ்யாஸருடன் போய் அதிகப் பிரஸங்கித்தனமாக வாதப்பிரதிவாதம் செய்து விட்டோமே என மன்னிப்புக் கேட்டுக் கொண்டுள்ளான்.\nரொம்ப சுவாரஸ்யமாக இருக்கே!\nவியாஸர் என்ன சொன்னார்னு சீக்கரம் சொல்லு கிட்டு;\nஎனக்கு மண்டையே வெடிச்சுடும் போல இருக்கு.\n“சங்கரா! நீ எழுதியுள்ள, ப்ரும்மசூத்ர பாஷ்யங்கள் யாவும் முற்றிலும் சரியானதே.\nநானும் அதை அப்படியே ஏற்றுக்கொள்கிறேன்.\nஉன்னுடைய பாண்டித்யத்தை சோதித்து உலகிற்கு எடுத்துச்சொல்லி, உன் புகழை நிலை நாட்டவே இவ்வாறு உன்னுடன் வாதம் செய்தேன்.\nநீ மேலும் 16 ஆண்டுகள் வாழ உன் ஆயுளை நீட்டித்து அருள் புரிகிறேன்.\nஉன் வாழ்நாள் முடிவதற்குள் அத்வைத கருத்துக்களை அனைவரும் ஏற்குமாறு செயல்படப் புறப்படு.\nஉனக்கு என் ஆசிகள். ஆயுஷ்மான் பவ! “ என்றாராம்.\n[இதைக்கேட்டதும் ஆர்யாம்பாள் சந்தோஷ முகத்துடன் கைகூப்பி வ்யாஸரை மானஸீகமாக வழிபடுகிறாள்.]\nஇதையெல்லாம் கேட்டாலே மெய் சிலிர்க்கிறது எனக்கு.\nவேறு ஏதாவது தகவல் உண்டா கிட்டண்ணா?\nசொல்றேன் கேளுங்கோ பட்டண்ணா!\nமாமி நீங்களும் கவனமாக் கேட்டுக்கோங்கோ!\nமகிஷ்மதி என்ற ஓர் இடம்.\nஅங்கே கர்ம மீமாம்ஸை என்னும் வழியில் இறை வழிபாடு செய்துவந்தார் ஒருவர்.\nஅவர் பெயர் “மண்டல மிஷ்ரா”.\nசங்கரர் அவரைக்காணச் சென்ற சமயம், தன் வீட்டுக்கதவைச் சாத்திவிட்டு, அவர் ஏதோ நித்ய கர்மாக்களில் தீவிரமாக ஈடுபட ஆரம்பித்துள்ளார்.\nதன் அபூர்வ சக்தியால் வீட்டினுள் நுழைந்து விட்ட சங்கரரைக் கண்டு மண்டல மிஷ்ராவுக்கு கோபம் வந்து விட்டது.\nகோபமாக உள்ள அவரைக் கண்டு புன்னகைத்த சங்கரர், “பக்தியில்லாத இதுபோன்ற கர்மாக்களால் பலன் ஏதும் ஏற்படாது” என எடுத்துரைத்துள்ளார்.\nசங்கரரின் அறிவுக்கூர்மை மற்றும் பாண்டித்யத்தை உணர்ந்த மண்டல மிஷ்ரா தனது கர்மாக்கள் முடிந்தபின், சங்கரருடன் தன் விவாதத்தைத் தொடங்கியுள்ளார்.\nகாட்சி 16 தொடரும்\n[இதன் தொடர்ச்சி பகுதி-13 [காட்சி-16/2/2]\nஇன்று திங்கட்கிழமை 23.04.2012\nஇரவு சுமார்7மணிக்கு வெளியிடப்படும்]\nஇடுகையிட்டது வை.கோபாலகிருஷ்ணன் நேரம் 1:08 AM\nசுந்தர்ஜி ப்ரகாஷ் April 23, 2012 at 10:44 AM\nநீங்கள் எழுதிக்கொண்டிருக்கும் விஷயங்கள் அனைத்தையும் கவனித்து வருகிறேன்.\nஉங்கள் எழுத்தின் மேல் நான் கொண்டிருந்த காதல் வார்த்தைகளைக் கடந்தது.\nஆனால் சமீப காலமாக நீங்கள் தொட்டுவரும் ஆன்மீக தத்வ விசாரங்கள் உங்கள் எழுத்தின் மேல் பெரிய மரியாதையை உண்டுபண்ணிவிட்டன.\nஇன்றைக்கு மட்டுமல்ல என்றென்றைக்கும் மனிதகுலத்துக்கு வழிகாட்டியாய் இருக்கக்கூடிய போதனைகளும், ஞானமும் நிரம்பித்ததும்பும் சுனையாய் உங்கள் எழுத்தை நான் பார்க்கிறேன்.\nகுறையொன்றுமில்லை. April 23, 2012 at 11:12 AM\nஇராஜராஜேஸ்வரி April 23, 2012 at 1:40 PM\nவிஷ்ணு ரூபமான வியாசரின் ஆசிகள்\nசிவாம்சமான சங்கருக்கு வர்ஷித்தது சிலிர்ப்பூட்டும் வைபவம்..\nviji April 23, 2012 at 1:40 PM\nSo nice. I am reading continuously.\nஇராஜராஜேஸ்வரி April 23, 2012 at 1:46 PM\n, “பக்தியில்லாத இதுபோன்ற கர்மாக்களால் பலன் ஏதும் ஏற்படாது” என எடுத்துரைத்துள்ளார்.\nஞானமில்லாத கர்மாவாலோ , பலன் ஏதும் இல்லைதான் ---\nG.M Balasubramaniam April 23, 2012 at 6:03 PM\nஒரே மூச்சில் எல்லா அத்தியாயங்களையும் படித்து விட்டேன். ஆன்ம்மிகப் பதிவுகள் எழுதினால் நிச்சயம் வரவேற்பு இருக்கும். அதுவும் சுவை குன்றாமல் சிறிய பகுதிகளாக எழுதி, எல்லோருக்கும் புரியும்படி எழுதுகிறீர்கள். வாழ்த்துக்கள். தொடருகிறேன்.\nவெங்கட் நாகராஜ் April 23, 2012 at 8:55 PM\nசிறிய சிறிய பகுதிகளாய்ப் படிப்பது சுலபமாக இருக்கிறது. நல்ல விஷயங்களைத் தொடர்ந்து தரும் உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.\nகோமதி அரசு April 24, 2012 at 9:16 AM\n“பக்தியில்லாத இதுபோன்ற கர்மாக்களால் பலன் ஏதும் ஏற்படாது” என எடுத்துரைத்துள்ளார்.//\nADHI VENKAT April 24, 2012 at 3:56 PM\nநல்ல விஷயங்களை தெரிந்து கொண்டு வருகிறேன். தொடர்கிறேன்.\nகாரஞ்சன் சிந்தனைகள் April 26, 2012 at 12:07 PM\nதொடர்ந்து வருகிறேன்! அருமையாக உள்ளது!\nShakthiprabha April 30, 2012 at 7:23 PM\nவியாசர் புதிய தகவல். மிக்க நன்றி.\nUsha Srikumar May 3, 2012 at 3:31 PM\nமனதுக்கு இதமான பதிவு...\nUsha Srikumar May 3, 2012 at 3:32 PM\nவை.கோபாலகிருஷ்ணன் May 4, 2012 at 1:35 AM\nப.கந்தசாமி May 3, 2015 at 8:55 AM\nசங்கர லீலைகள் கண்டு மகிழ்ந்தேன்.\nஆன்மீக மணம் வீசும் June 19, 2015 at 7:24 PM\nஉங்கள் ஆன்மீகப் பதிவுகள்\n// சங்கரரின் அறிவுக்கூர்மை மற்றும் பாண்டித்யத்தை உணர்ந்த மண்டல மிஷ்ரா தனது கர்மாக்கள் முடிந்தபின், சங்கரருடன் தன் விவாதத்தைத் தொடங்கியுள்ளார்.//\nஅதைப் படிக்க அடுத்த பகுதிக்குச் செல்கிறேன்.\nகீதமஞ்சரி June 23, 2015 at 7:02 PM\nதாயிடம் சொல்வது போல் சங்கரரின் பெருமைகளை நாடக நேயர்கள் அறியச்செய்யும் உத்தி பிரமாதம்.\nபூந்தளிர் August 11, 2015 at 6:05 PM\nசங்கரரின மேன்மைகளை படிப்படியாகபடிப்பவர்களுக்கு புரிய வைக்கிறீர்கள்\nmru October 20, 2015 at 4:16 PM\nவை.கோபாலகிருஷ்ணன் October 20, 2015 at 7:22 PM\nசரி .... சரி ! :) ஓக்கே ..... நோ ப்ராப்ளம் அட் ஆல். :)\nசரணாகதி. November 24, 2015 at 3:19 PM\nவயசானவாளிடம் இவன் பணிந்து போகக்கூடாதோ ஏன் வீண் வாக்குவாதம்? பாசமுள்ள தாயின் மனத்தாங்கல்\nமாயவரத்தான். எம்.ஜி.ஆர்... December 4, 2015 at 12:29 AM\nநிறைய கிளைக் கதைகள்...சுவாரசியமாகத்தான் போகிறது.\nகாரஞ்சன் சிந்தனைகள் December 18, 2015 at 10:26 AM\nவை.கோபாலகிருஷ்ணன் January 1, 2019 at 12:53 PM\nவை.கோபாலகிருஷ்ணன் May 19, 2021 at 12:38 AM
மஜும்தார் , அஸ்ஸாம்\nஅஸ்ஸாம் மாநிலத்தில் காம்ரூப் மாகாணத்தில் உள்ள சாயகோன் என்னும் கிராமத்தை சேர்ந்த கோபிந்தா மஜும்தார் அவர் வீட்டிலிருந்து4கீ.மீ தொலைவில் இருக்கும் தேநீர் கடைக்கு நடந்தே செல்வார். இது அவருக்கு மிகவும் பிடித்த பொழுதுபோக்கு. இதில் என்ன பெரிய அதிசயம் இருக்கிறது? அவருக்கு காது கேட்காது, கண் தெரியாது, பேசவும் வராது!\n37 வயதான கோபிந்தாவிற்கு அந்த கிராமம் தன் உள்ளங்கையை போல நன்றாக தெரியும்! அவ்வளவு அத்துப்படி! அந்த கையின் தொடு உணர்ச்சியின் மூலமாகவே அவர் மற்றவர்களுடன் உணர்வுகளை பகிர்ந்து கொள்கிறார். பிறந்தது முதலே அவருக்கு காது கேட்காது. சுமார் இரண்டு வயது இருக்கும்போது “ரூபெல்லா” தாக்குதலாலே கண் பார்வையையும் இழந்தார். உலகத்தில் அவர் கண்ட காட்சி எல்லாம் அந்த இரண்டு வயதிற்குள் பார்த்தது மட்டுமே! கவுஹாத்தியில் உள்ள “சிஷு சரோதி” என்னும் பள்ளியின் “ஸ்பார்ஷ்” என்னும் கிளை வடகிழக்கு மாகணங்களில் கண் தெரியாமலும், காது கேட்காமலும் இருப்பவர்களுக்கு பயிற்சி அளிக்கும் மையமாக இருந்தது அவருக்கு ஏற்பட்ட ஒரு அத்ருஷ்டம். . மேஹபுபர் ரகுமான் என்னும் அவருடைய ஆசிரியரே எங்களுக்கு இந்த நேர் காணலில் மொழி பெயர்ப்பாளராக இருந்து உதவினார்.\nஐந்து சகோதரர்களில் மூத்தவரான கோபிந்தா தன் தாயுடனும், திருமணமான இளைய சகோதரருடன் வாழ்ந்தாலும், தன்னுடைய தேவைகளுக்காக யார் கையையும் அண்டி இருக்கவில்லை. அவர் தந்தை தன் இரண்டு ஏக்கர் நிலத்தில் உழவு தொழில் புரிய, அனைத்து நுணுக்கங்களை அவருக்கு நன்கு கற்றுத்தந்து பயற்சி அளித்தார். இதனால் அவர் நெல் மற்றும் கடுகை அறுவடை செய்வதில் திறமை பெற்றார். அதை தவிர மாடுகளையும் மேய்க்கவும் பயின்றார். இது மட்டுமின்றி, பண்ணையில் கிடைக்கும் பொருள்களை வைத்துக் கொண்டு மூங்கில் கதவுகளையும், சணல் கயிறுகளையும், தென்னை இலைகளால் செய்த துடப்பங்களையும் சந்தையில் விற்று அதன் மூலம் பணம் ஈட்டினார். அவரின் தந்தை ஏழு ஆண்டுகளுக்கு முன்பாக காலமானார்.\nகோபிந்தா தன் அறையை சுத்தமாக, சற்றும் அப்பழுக்கு இல்லாமல் பராமரித்து வருகிறார். தன் துணி மணிகளை எல்லாம் தன் சகோதரர் எடுத்து கொள்ளாமல் இருக்க, பத்திரமாக பெட்டியில் பூட்டி வைத்திருப்பார்! சிக்கன் உண்டால் தன் உடல்நிலை (முக்கியமாக ஜீரணம்) பாதிக்க படுவதால், இவர் சைவ உணவையே உண்கிறார்.அவருக்கு பிடிக்காதது? மிக ஆழமான நீர் நிலைகள். வாகனங்களையும் அவர் வெறுக்கிறார். ஆனால் அவ்வப்போது மேஹ்புபரின் ஸ்கூட்டரில் பின் இருக்கையில் அமர்ந்து பயணம் செய்ய பிடிக்கும்.\nயார் அவரை காண சென்றாலும், அவர் இரண்டு கேள்விகளை கேட்பார்: ஒன்று, “உங்களுக்கு திருமணம் ஆகி விட்டதா?” அவர் திருமணம் செய்து கொள்ள மிகவும் ஆவலோடு இருக்கிறார். “என் இளைய சகோதரருக்கே திருமணம் நடந்துள்ளது, எனக்கு ஏன் நடக்கக் கூடாது?” என்கிறார்! “என்னிடம் இரண்டு லட்சம் ரூபாய் இருந்தால் போதும்! ஒரு கடையை நிறுவி, பூஜை சாமான்களை விற்று பணம் ஈட்டுவேன்!” என்று நம்பிக்கையுடன் தெரிவிக்கிறார்! மேஹபுபர் கூட, இவர் நிதி வசதியுடன் இருந்தால் இவருக்கு பெண் கொடுக்க விருப்பமுடைய பெற்றோர்கள் நிச்சயம் முன் வருவார்கள் என நம்புகிறார்.\nபுகைப்படக்காரர் விக்கி ராய் இவரைப் பார்க்க சென்ற போது, இவர் தன் கைகளால் கேமரா போன்ற சைகை செய்து “கிளிக்” என புகைப்படம் பிடிப்பதை போல செய்து காட்டினார். கலகலப்புடன் ஆர்வமுடன் பழகினார். இதுவே கோபிந்தாவின் தனித்தன்மையான இயல்பு!
ரெட் அலர்ட் என்பதன் உண்மை அர்த்தம் என்ன? எந்தெந்த பகுதி பாதிக்கும்? என்ன செய்ய வேண்டும்? | what is the meaning of red alert and precautions for cyclone - Tamil Boldsky\nரெட் அலர்ட் என்பதன் உண்மை அர்த்தம் என்ன? எந்தெந்த பகுதி பாதிக்கும்? என்ன செய்ய வேண்டும்?\n| Updated: Friday, October 5, 2018, 15:47 [IST]\nதமிழகத்துக்கு வருகிற7ஆம் தேதி அதிதீவிரமாக மழைக்கான எச்சரிக்கை விடப்பட்டிருக்கிறது. அது வரை வழக்கமான வேலைகளில் பின்னடைவு உண்டாகலாம். ஆனால் உயிர், பொருள் சேதங்கள் ஏற்படாமல் இருக்க வேண்டும் என்றால் நாம் மிகுந்த எச்சரிக்கையோடு இருக்க வேண்டும்.\nஇந்த லெட் அலர்ட் அறிவிப்பை கேரளாவை அடுத்து தற்போது தமிழகத்துக்கும் இந்திய வானிலை ஆய்வு மையம் கொடுத்துள்ளது. குறிப்பாக, வருகிற7ஆம் தேதி ஞாயிற்றுக்கிழைமை கொடுக்கப்பட்டிருக்கிறது. அது பற்றி விரிவாகப் போர்ப்போம்.\nஅக்டோபர் மாதம் எட்டாம் தேதி வரையில், தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பொழியும். ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பொழியும். தென்கிழக்கு அரபிக் கடல் பகுதியில், குறைந்த காநற்றழுத்த தாழிவுப் பகுதி உருவாகியுள்ளதால், இரண்டு நாட்களில் புயலாக மாறும். இது வடமேற்கு திசையில் நகர்ந்து ஓமன் கடற்கரையை நோக்கி செல்லும். வடகிழக்கு பருவ மழை தமிழகம், கேரளா, தெற்கு ஆந்திரா, தெற்கு கர்நாடகா பகுதிகளில் அதிகமாக இருக்கும் வாய்ப்பு இருக்கிறது.\nரெட் அலர்ட் என்பதன் பொருள்\nஎங்க பார்த்தாலும் ரெட் அலர்ட், ரெட் அலர்ட்னு பீதிய கிளப்புறாங்களே! அப்படின்னா என்னன்னு மொதல்ல நாம தெரிஞ்சிக்க வேண்டாமா? பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கறதுக்கு முன்னாடி இந்த ரெட் அலர்ட்ன்னா என்னங்கிறதுக்கான அர்த்தத்தை நாம மொதல்ல தெரிஞ்சிக்கலாம் வாங்க.\nமிகக் குறைந்த நேரத்தில் மிக அதின அளவிலாக மழை பொழியும். மிகக் குறைந்த காலத்தில் மிக மிக அதிக அளவு மழை வீழ்ச்சி இருந்தால் தான் அந்த இடங்களுக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்படும்.\nஇதற்கு முன்பாக, கடைசியாக எப்போது ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டது என்று தெரியுமா? கடந்த 2015 ஆம் ஆண்டு மழை பொழிந்து உருவான அதிக அளவிலான வெள்ளப் பெருக்கின் போது தமிழகத்துக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டது. அதன்பின் இப்போதுதான் கொடுக்கப்படுகிறது.\nஆனால் சமீபத்தில் கேரளாவில் ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டது. அதன்பின் மிக கன மழையும் அதனால் வெள்ளமும் ஏற்பட்டு எக்கச்சக்க பொருள், உயிர் சேதங்களும் ஏற்பட்டது. இதனா்ல தான் வருகிற7ஆம் தேதி கொடுக்கப்பட்டிருக்கிற இந்த ரெட் அலர்ட்டினால் பெரும் பீதி மக்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கிறது.\nபொதுவாக வானிலை ஆய்வு மையங்களால் நான்கு வகையான அலர்ட்கள் கொடுக்கப்படும். அவை என்னென்ன என்று பார்ப்போம். அதிலும் குறிப்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் இந்த நான்கு வகையான அறிவிப்பு அலர்ட்டுகளைத் தான் பயன்படுத்துகிறது. அவற்றைப் பற்றி விரிவாகப் பார்க்கலாம்.\n1. கிரீன் அலர்ட்\nஇதை ஆங்கிலத்தில் அவுட்லுக் என்ற பெயரில் இந்த கிரீன்அலர்ட் கொடுக்கப்படும். வானிலையில் குறிப்பிடத்தக்க அளவு எந்த மாற்றமும் இல்லாமல் மிக மிக இயல்பாக இருந்தால் தான் இந்த பச்சை அலர்ட் கொடுக்கப்படும்.\n2. யெல்லோ அலர்ட்\nயெல்லோ அலர்ட் என்பது வேறொன்றுமில்லை. மஞ்சள் நிற சமிக்ஞையைத் தான் அது குறிப்பிடுகிறது. இதை அட்வைசரி அலர்ட் என்றும் சொல்வார்கள். இரண்டு நாட்களில் வானிலையில் ஏதாவது குறிப்பிடப்படுகின்ற அளவிற்கான மாற்றங்கள் நிகழ வாய்ப்புகள் இருக்கும்பொழுது, கொடுக்கப்படும். அதற்குரிய முக்கியப் பொருள் என்னவென்றால், தொடர்ந்து வானிலை மாற்றங்களைக் கண்காணித்துக் கொண்டிருக்க வேண்டும் என்பது தான்.\n3. ஆம்பர் அலர்ட்\nஆம்பர் அலர்ட் என்பதற்கு கொடுக்கப்படும் நிறம் காவி நிறம். அதாவது வெளிர் சிவப்பு. வானிலை மோசமாக இருக்கின்ற சந்தர்ப்பங்களில் கொடுக்கப்படுகிறது. இந்த அலர்ட் கொடுக்கப்பட்டால் மழை அதிகமாக இருக்கும். மின்சாரம் துண்டிக்கப்படும் நிலை உண்டாகும். தாழ்வான பகுதிகளில் வாழ்கின்ற மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் இதில் கொடுக்கப்படும். இந்த ஆம்பர் அலர்ட் கொடுக்கப்படும் பகுதிகளை வரைபடத்தில் காவி நிறத்தில் குறிப்பிட்டுக் காட்டுவார்கள்.\n4. ரெட் அலர்ட்\nஇப்போது நாம் மிக பரபரப்பாக பேசும்ரெட் அலர்ட் என்பது மிக எச்சரிக்கையான அலர்ட் ஆகும். மிகக் குறுகிய காலகட்டத்தில் மிக அதிக கனமழை பெய்வதற்கான வாய்ப்புகள் இருப்பதை அறிவுறுத்தத்தான் இந்த ரெட் அலர்ட் கொடுக்கப்படுகிறது.\nஇந்த அலர்ட் கொடுக்கப்பட்டால், அந்த பகுதிகளுக்கு கட்டமாயம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். மின்சாரங்கள் துண்டிக்கப்படுவதற்கான வாய்பபுகளும் மிகுதி. அதனால் நிவாரணப் பணிகளுக்கான தேவைகளையும் சேவைகளையும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். அதோடு இந்த ரெட் அலர்ட் கொடுக்கப்பட்ட பகுதிகளுக்கு பயணங்கள் மேற்கொள்வதைத் தவிர்த்தல் வேண்டும்.\nஎந்த பகுதியில் அதிக வெள்ளம் இருக்கும்?\nதமிழகத்தைப் பொறுத்தவரையில் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் மிக அதிக அளவில் மழைப்பொிவு ஏற்படும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அதனால் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் இருந்து உருவாகும் ஆறுகள் உள்ள பகுதிகளில் அதிக வெள்ளப் பெருக்கு உண்டாக வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. அதனால் தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் அதிக மழைப்பொழிவும் வெள்ளமும் வரும் என்பது நமக்கு புரிகிறது.\nஅதிகமாக எவ்வளவு மழை இருக்கும்?\nஇந்த ரெட் அலர்ட் விடுக்கப்பட்ட பகுதிகளில், தமிழ்நாட்டில் 25 சென்டி மீட்டருக்கும் அதிகமான மழைப்பொழிவு இருக்கும் என்று கூறப்படுகிறது. இதற்கு முன் தமிழ்நாடு இதைவிட அதிகமாக அளவில், மழைப்பொலிவை சந்தித்திருக்கிறது. ஆம். கடந்த 2015 ஆம் ஆண்டு தாம்பரம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் கிட்டதட்ட 50 சென்டி மீட்டருக்கும் மேலான மழை வீழ்ச்சி இருந்ததும் குறிப்பிடத்தக்கது. ஆனாலும் இந்த முறை ஒரே நாளில் 25 சென்டி மீட்டர் மழை பொழியும் என்பதும் மிக ஆபத்தான் விஷயம் தான்.\nஇதுபோன்ற ஆபத்தான சூழ்நிலைகளில், தமிழக அரசு மிக மிக முன்னெச்சரிக்கையோடு நடந்து கொள்ள வேண்டும் என்பது தான் வானிலை ஆய்வு மையம் மற்றும் மக்களின் மிக முக்கிய அறிவுறுத்தலாக இருக்கிறது. ஏனென்றால், கடந்த காலங்களில் நிகழ்ந்த ஓக்கி புயலின் போது எந்தவித முன்னெச்சரிக்கையோ அல்லது புயலுக்குப் பின்னான நிவாரணப் பணிகளிலும் அரசு சரியாக செயல்படாமல் போனது. அதனால் இப்போது வரையிலும் ஆயிரக்கணக்கில் மீனவர்கள் இறந்து மிதந்தனர். எவ்வளவு பேர் இறந்தார்கள் என்ற கணக்கு கூட அரசு சரியாக எடுக்கவில்லை. அதனால் மக்களும் அரசும் முன்னெச்சரிக்கையாகச் செயல்பட்டு இதனால் வரும் பாதிப்புகளைக் குறைத்துக் கொள்ள வேண்டியது அவசியம்.\nஅதற்கு ஏற்றாற்போல், தமிழக அரசு ஒவ்வொரு மாவட்ட நிர்வாகங்களையும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்வதற்கான அறிவிப்புகளைக் கொடுத்து, நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்கான ஆயத்தப் பணிகளை மேற்கொள்ள துரித நடவடிக்கை எடுத்து வருகிறது.\nஎட்டாம் தேதி வரையிலும் மீனவர்கள் கடலுக்குள் செல்வதைத் தவிர்க்க வேண்டும்.\nஅரசு நிவாரண முகாம்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.\nபொது மக்கள் மழை நிற்கும் வரை வீட்டை விட்டு வெளியே வராமல் இருப்பது நல்லது. குறிப்பாக, மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் காற்றும் மழையும் மிக அதிகமாக இருக்கும். அதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்.\nஇடி இடிக்கும் போது மரத்தின் அடியில் நிற்க வேண்டாம். வீட்டை விட்டு வெளியே வராமல் இருப்பது மிக நல்லது.\nமின்சாரம் சம்பந்தப்பட்ட பொருள்களைப் பயன்படுத்துகிற போது வழக்கத்தை விட கூடுதல் கவனமாக இருக்க வேண்டும். ஏன் அதிகமாக மின்சாரம் தொடர்பான விஷயங்கள், சாதனங்களைப் பயன்படுத்தாமல் இருப்பதே சரி.\nதேங்கிக் கிடக்கும் தண்ணீரில் குழந்தைகளை விளையாட விடாதீர்கள். கவனமாக பார்த்துக் கொள்ளவும்.\nபோக்குவரத்து சம்பந்தப்பட்ட விஷயங்களை அரசின் அறிவிப்பு மற்றும் குறிப்புகளை கவனித்துப் பின்பற்றுங்கள்.\nபழுதான மின் சாதனங்களைப் பயன்படுத்துவதை நிச்சயம் மதவிர்க்க வேண்டும்.\nRead more about: insync how to உலக நடப்புகள் எப்படி\nwhat is the meaning of red alert and precautions for cyclone\nhere we are giving detailed meanings and histroy of cylon and precautions also.
HomeFact Checkமத்திய பாஜகவை எதிர்த்து தமிழக பாஜக போராட்டம் நடத்தவிருக்கின்றதா?\nதமிழக பாஜக மத்திய பாஜகவை எதிர்த்து போராட்டம் நடத்தவிருப்பதாக தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.\nபெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நவம்பர் 22 ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் பாஜக போராட்டம் நடத்தவிருப்பதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்ததாக ஊடகங்களில் செய்தி ஒன்று வந்தது.\nஇந்த செய்தியை அடிப்படையாக வைத்து, தமிழக பாஜக மத்திய பாஜகவை எதிர்த்து போராட்டம் நடத்தவிருப்பதாக கூறி தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.\nதமிழக பாஜக மத்திய பாஜகவை எதிர்த்து போராட்டம் நடத்தவிருப்பதாக தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவியதை தொடர்ந்து இதன் பின்னணியில் இருக்கும் உண்மைத்தன்மை குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.\nதமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தூத்துக்குடியில் அளித்த பேட்டியின் அடிப்படையிலேயே மேற்கண்ட தகவல் வைரலாகி வருகின்றது. ஆகவே உண்மையிலேயே அண்ணாமலை என்ன பேசினார் என்பது குறித்து தேடினோம்.\nஇந்த தேடலில், “பல மாநிலங்களில் பெட்ரோல் டீசல் விலை குறைக்கப்பட்ட நிலையில், தமிழகத்தில் மட்டும் தேர்தலில் கூறிய விலையை கூட குறைக்கவில்லை. ஆகவே இதனை கண்டித்து வரும் நவம்பர் 22ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் “என்று அண்ணாமலை பேசியதை நம்மால் அறிய முடிந்த்து.\nCourtesy: Karam TV\nதமிழக பாஜகவின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்திலும் இதுக்குறித்து பதிவு பதிவிடப்பட்டிருந்ததை நம்மால் காண முடிந்தது.\nபல மாநிலங்களில் பெட்ரோல் டீசல் விலை குறைக்கப்பட்ட நிலையில், தமிழகத்தில் மட்டும் தேர்தலில் கூறிய விலையை கூட குறைக்கவில்லை.\nஇதனை கண்டித்து வரும் நவம்பர்22ம் தேதி அனைத்து மாவட்டங்களிலும் பாஜக சார்பில்\n– மாநில தலைவர் திரு.@annamalai_k #PetrolDieselRate pic.twitter.com/I3uBnCwgIp\n— BJP Tamilnadu (@BJP4TamilNadu) November 17, 2021\nஇதன்படி பார்க்கையில் தமிழக பாஜக மத்திய பாஜகவை எதிர்த்து போராட்டம் நடத்தவிருப்பதாக பரவும் தகவல் தவறானது என்பதும், உண்மையில் தமிழக பாஜக ஆளும் திமுக அரசை எதிர்த்தே போராட்டம் நடத்தவிருக்கின்றது என்பதும் தெளிவாகின்றது.\nபெட்ரோல் விலையும் தமிழகமும்\nஇதில் அடிப்படை விலை, மத்திய அரசு வரி, விநியோகிஸ்தர் கமிஷன் ஆகிய மூன்றும் நாடு முழுவதும் ஒரே அளவிலேயே இருக்கும். மாநில வரி மட்டும் ஒவ்வொரு மாநிலங்களுக்கும் ஏற்ப மாறுபடும்.\nதமிழகத்தைப் பொறுத்த வரை முன்னதாக மாநில வரியாக 15 சதவீதம் VAT வரியுடன் லிட்டருக்கு ரூ. 13.02 சேர்த்து வசூலிக்கப்பட்டு வந்தது.\nஇதன்பின் இவ்வருடத்திற்கான பட்ஜெட்டில் பெட்ரோல் விலை குறைக்கப்படும் என்று அறிவித்தப்பின் மாநில வரியாக 13 சதவீதம் VAT வரியுடன் லிட்டருக்கு ரூ. 11.52 சேர்த்து வசூலிக்கப்பட்டு வருகின்றது.\nஇதனைத் தொடர்ந்து மத்தியில் ஆளும் பாஜக அரசும் இம்மாதம்3ஆம் தேதி (நவம்பர் 3) உற்பத்தி வரியிலிருந்து ரூ.5 குறைத்துள்ளது. இதன் காரணமாக நவம்பர்3ஆம் தேதி ரூ106.76க்கு விற்ற பெட்ரோல், தற்போது ரூ. 101.57க்கு விற்பனையாகி வருகின்றது.\nஆனால் ஆந்திரா, பஞ்சாப், குஜராத், ஹரியானா, உத்திரப் பிரதேசம், உத்தரகாண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் மாநில வரி வெகுவாக குறைக்கப்பட்டு பெட்ரோல் விலை ரூ.100க்கும் குறைவாக விற்கப்பட்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.\nAlso Read: நடிகர் சூர்யா மன்னிப்பு கேட்க வேண்டும் என்றாரா சீமான்?\nதமிழக பாஜக மத்திய பாஜகவை எதிர்த்து போராட்டம் நடத்தவிருப்பதாக பரவும் தகவல் தவறானது என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.\nKaram TV (Youtube Channel)\nPrevious articleநடிகர் சூர்யா மன்னிப்பு கேட்க வேண்டும் என்றாரா சீமான்?\nNext articleநாம் தமிழர் கட்சி தம்பிகள் பொங்கல் பரிசை வாங்க மாட்டார்கள் என்று சீமான் கூறினாரா?\nவிஷ்ணு சிலைக்கு கும்பாபிஷேகம் நடந்ததாக வதந்தி
முஸ்லிம்கள் பாதுகாப்பின்மையை உணர்கின்றனர்: ஹமித் அன்சாரி | Dinamalar\nபதிவு செய்த நாள்: ஆக் 10,2017 15:52\nவாசகர் கருத்து (187)\nஅன்சாரி அவர்களே, இத்தனை வருடம் இந்திய உப்பை விட்டு, உண்ட வீட்டுக்கு இரண்டகம் நினைக்கிறீர்களே இது உங்களுக்கே அழகா? இதற்கு பேர் தான் வளர்த்த கடா மாறில் பாயறது.\nஅப்துல்கலாமுடன் இருந்ததற்கான எந்த அடையாளமும் இவரிடம் இல்லையே இவர்தான் நம் துணை ஜனாதிபதி பதவியில் 10 வருடமாக இருந்தார் என்று நினைத்தால் பயமாக இருக்கிறது. இது போன்ற சிந்தனை கொண்டவர்களுக்கு சிறப்பான எதிர்காலம் தமிழகத்தில் உள்ளது\nஅப்புறம் என்னத்துக்கு ரெண்டு தடவ பதவில இருந்த?? பாகிஸ்தானிலோ , சிரியாவிலோ போயி பதவி வாங்க வேண்டியது தானே...\nஇந்தியாவில் தற்பொழுது ஹிந்துக்களுக்கு தான் பாதுகாப்பில்லை. காஸ்மீர், மேற்குவங்கம், கேரளாவில் ஹிந்துக்கள் படுகொலை செய்யப்படுகிறார்கள்..\nமேலும் கருத்துகள் (182) கருத்தைப் பதிவு செய்ய
இசையரசி: கதாநாயகி வரிசை: ஒய்.விஜயா\nஅவர் குறிப்பிடும்படியாக நடித்த படங்கள் வரிசையில் - மன்மத லீலை, மூன்று முடிச்சு, கல்யாண அகதிகள் என்று சில இருக்கும்.\nஇந்த வில்லிகள் வரிசையில் சிஐடி சகுந்தலா-வையும் சேர்த்துக் கொள்ளலாம்.\nஇரண்டு பாட்டும் வெகு அருமை ராகவன்.\nஎப்போதோ கேட்டதை அழகாக இங்கே கொண்டு வந்து வைத்துவிட்டீர்கள். நன்றி.\nவிஜயா நன்றாகவே இமோட் செய்கிறார்.\nஸ்ரீதர் குறிப்பிட்டது போல இவருக்குப் பாங்கான பாத்திரங்கள் கிடைக்காமல் போயிற்றோ\nவிகே ராமசாமி போல நடிகரையெல்லாம் பார்க்க முடியுமா இனிமேல்.\nசூப்பர் கச்சேரி. ரொம்பவும் ரசித்தேன்.\nவலை ஏத்துனதுக்கு நன்றிப்பா.\nஇந்தப் படம் பார்க்கலை(-:\nஅவர் குறிப்பிடும்படியாக நடித்த படங்கள் வரிசையில் - மன்மத லீலை, மூன்று முடிச்சு, கல்யாண அகதிகள் என்று சில இருக்கும். //\nஆமாங்க... அதுலயும் மூன்று முடிச்சுல ஒரு துணைநடிகையாவே வருவாங்க. அதுலயும் தீக்காயம் பட்ட பிறகு....நல்லா நடிச்சிருப்பாங்க. கல்யாண அகதிகள்ள ரொம்ப மரியாதை வர்ர மாதிரி நடிச்சிருப்பாங்க. ரெண்டுமே எனக்கு ரொம்பப் பிடிச்ச படங்கள்.\n// இந்த வில்லிகள் வரிசையில் சிஐடி சகுந்தலா-வையும் சேர்த்துக் கொள்ளலாம். //\nசி.ஐ.டி.சகுந்தலாவோ சில படங்கள்ள கதாநாயகியா நடிச்சிட்டுதான் வில்லியானங்கன்னு நெனைக்கிறேன். சரியா?\nவிஜயா நன்றாகவே இமோட் செய்கிறார். ஸ்ரீதர் குறிப்பிட்டது போல இவருக்குப் பாங்கான பாத்திரங்கள் கிடைக்காமல் போயிற்றோ //\nஆம. நல்லா நடிக்கிறாங்க. ஆன பெரும்பாலும் வில்லி வேடம். ரொம்பவும் பழய படங்களில் கூட ஆணவம் கொன்ட பாத்திரங்களே கொடுக்கப்பட்டனன்னு நெனைக்கிறேன்.\n// விகே ராமசாமி போல நடிகரையெல்லாம் பார்க்க முடியுமா இனிமேல். //\nவி.கே.ராமசாமியின் நடிப்பும் பிடிக்கும். கத்திக் கத்திப் பேசுவாரு. ஆன அது அவரோட பாணி.\nஇப்படியான பொக்கிஷங்களை வாங்க நீங்க அடிக்கடி சென்னை போகணும், அருமையான பாட்டு இப்போது தான் தெரியும் இவருக்கு இந்தப் பாட்டுக் கிடைத்தது பற்றி\nஇந்தப் படம் பார்க்கலை(-: //\nஎன்னது... இந்தப் படம் பாக்கலையா.. மொதல்ல பாருங்க. நீங்களே விமர்சனம் எழுதீருவீங்க. ஒரு வாட்டி பாக்கலாம். பாட்டுகள்ளாம் கலக்கல். தேவன் திருச்சபை மலர்களேன்னு கூட ஒரு பாட்டு இருக்கு.\nஅருமையான பாடலைத் தெரியப்படுத்தியதற்கு நன்றி...
Matthew Wade: Michael Jackson: என்னா தம்பி... கிரிக்கெட் விளையாட சொன்னா? மைக்கேல் ஜாக்சன் மூவ் எல்லாம் போடுறீங்க! - australia's matthew wade didamichael jackson’s gravity move at mcg | Samayam Tamil\naustralia's matthew wade didamichael jackson’s gravity move at mcg\nSamayam Tamil | Updated: 26 Dec 2019, 01:55:00 PM\nமெல்போர்ன்: ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்டில் பவுண்சர்கள், யார்க்கர்கள் என அனல் பறந்ததால், ஆஸ்திரேலிய வீரர் மாத்யூ வேட் இறுதியில் மைக்கேல் ஜாக்சன் மூவ் போட வேண்டிய நிலை ஏற்பட்டது.\nஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் நீண்ட இடைவேளைக்கு பின் மோதும் பாக்சிங் டே டெஸ்ட் என்பதால் ரசிகர்கள் மத்தியில் அதிக ஆர்வம் இருந்தது. இதில் ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்தது. இதில் ஸ்டீவ் ஸ்மித் அரைசதம் அடித்து கைகொடுக்க, முதல் நாள் ஆட்டநேர முடிவில்4விக்கெட்டுக்கு 257 ரன்கள் எடுத்தது.\nபொதுவாக ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் ஆடுகளன் எகிறும் பவுண்சர்களுக்கு பெயர் போனது. இந்நிலையில் இன்றைய ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 144 ரன்கள் எடுத்த போது, மாத்யூ வேட் களமிறங்கினார். இதையடுத்து அப்போது பவுலிங் செய்த நீல் வாக்னர், வேட்டை வந்த உடனேயே தனது அசுர வேக யார்க்கர்களால் தொல்லை செய்தார்.\nவாக்னருடன் சேர்ந்து நியூசிலாந்து அணியின் மற்ற வேகப்பந்து வீச்சாளர்களான டிம் சவுத்தி, டிரெண்ட் பவுல்ட் ஆகியோரும் யார்க்கர், பவுண்சர் என போட்டுத்தாக்க, மாத்யூ வேட் திக்கி திணறினார். அப்போது ஒரு யார்க்கரை சமாளிக்க முயன்ற போது வேட், பிரபல பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சனின் பேமஸான கிராவிட்டி நடனத்தின் அசைவு போல காட்சியளித்தார்.\nஓட்டிய கிரிக்கெட் போர்டு\nஇதை போட்டோ கிராபர் கச்சிதமாக படம் பிடிக்க, ஆஸ்திரேலிய கிரிக்கெட் போர்டு தனது ட்விட்டர் பக்கத்தில், “வேட் ஓ.கே வா? என மைக்கேல் ஜாக்சன் போட்டோவுடன் நக்கலாக வெளியிட்டுள்ளது. இந்த பதிவை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.\nடெஸ்ட் கிரிக்கெட் அழியுதுன்னு யாரு சொன்னா? ஆஸி - நியூசி பாக்சிங் டே டெஸ்டில் ரசிகர்கள் செஞ்ச சாதனை! அடுத்த செய்தி\nபாக்சிங் டே டெஸ்ட் ஆஸ்திரேலியா Tim Southee New Zealand national cricket team Neil Wagner Michael Jackson Matthew Wade Boxing Day Test Australia national cricket team aus vs nz\nWeb Title : australia's matthew wade didamichael jackson’s gravity move at mcg
என்.கணேசன்: உண்மையான துறவி யார்?\nஉண்மையான துறவி யார்?\nகீதை காட்டும் பாதை 18\nகர்ம யோகத்தைப் பற்றி விவரித்த ஸ்ரீகிருஷ்ணர் கர்மத்தைத் துறந்த ஞானத்தைப் பற்றியும் பெருமையாகவும், உயர்வாகவும் சொல்லக் கேட்ட அர்ஜுனனின் இந்தக் கேள்வியோடு பகவத் கீதையின் ஐந்தாவது அத்தியாயமான கர்மசன்னியாச யோகம் ஆரம்பிக்கிறது.\n”கிருஷ்ணா! கர்மங்களைத் துறந்து விடு என்கிறாய். அதோடு கர்மயோகத்தைப் பற்றியும் சொல்கிறாய். இந்த இரண்டில் எது உயர்ந்தது என்று முடிவாக, சந்தேகத்திற்கிடமில்லாமல் எனக்கு சொல்”\nஉண்மைக்குப் பல பரிமாணங்கள் உள்ளன என்பதை நம்ப பலருக்கு முடிவதில்லை. ஏதாவது ஒன்று சரி என்றால் அதற்கு மாறுபட்ட மற்றதெல்லாம் சரியாக இருக்க முடியாது என்று எண்ணுவது சாதாரண மனித இயல்பாக இருக்கிறது. செயல் சிறந்தது என்றால் செயலைத் துறந்த ஞானம் சிறந்ததாக இருக்க முடியுமா என்ற சந்தேகம் அர்ஜுனனிற்கு இயற்கையாக வர இரண்டில் எது உயர்ந்தது என்று முடிவாகச் சொல்லுமாறு பொறுமை இழந்து ஸ்ரீகிருஷ்ணரைக் கேட்கிறான்.\nபகவத்கீதை குருக்‌ஷேத்திரத்தில் அர்ஜுனனிற்கு மட்டும் சொல்லப்பட்ட வாழ்க்கைத் தத்துவம் அல்ல. தனக்குள்ளே ஒரு குருக்‌ஷேத்திரத்தை அவ்வப்போது சந்தித்து குழப்பம் அடையும் ஒவ்வொரு மனிதனுக்கும் சொல்லப்பட்டது. அதனாலேயே உண்மையின் பல பரிமாணங்களை அறிவுபூர்வமாக ஸ்ரீகிருஷ்ணர் விளக்கும் சிரமத்தை மேற்கொள்கிறார். இரண்டில் ஒன்றை மட்டும் சொல் என்று அர்ஜுனன் கேட்டதற்கு இரண்டுமே மோட்ச நிலைக்கு மனிதனைக் கொண்டு செல்வன என்றாலும் இரண்டில் கர்மயோகமே சிறந்தது என்று சொன்னதோடு இரண்டையுமே விளக்கவும் முற்படுகிறார்.\n“எவனொருவன் வெறுப்பு, விருப்பு இரண்டையும் மேற்கொள்ளவில்லையோ அவனே என்றும் துறவி என்றறிய வேண்டும். தோள் வலிமை படைத்தவனே! அத்தகையவன் இரட்டை நிலைகளை நீக்கியவனாக இருப்பதால் எல்லாத் தளைகளில் இருந்தும் சுகமாக விடுபட்டவனாக இருக்கிறான்.\nஞானம் வேறு, (கர்ம) யோகம் வேறு என்று அறியாதவர்கள் சொல்வார்கள். நன்றாக அறிந்தவர்கள் அவ்வாறு சொல்ல மாட்டார்கள். இரண்டு வழிகளில் எதாவது ஒன்றை ஒழுங்காகக் கடைபிடித்தாலும் இவ்விரண்டின் பலனையும் அடையலாம்.\nபுஜபலமிக்கவனே! கர்ம யோகமில்லாமல் சன்னியாசத்தை அடைவது மிகவும் கஷ்டமானது. கர்ம யோகத்துடன் ஞானத்தை நாடும் முனிவன் உடனடியாக பிரம்மத்தை அடைகிறான்”\nஇன்று துறவிகள் என்ற பெயரில் உலகில் பலர் மலிந்து கிடக்கிறார்கள். துறவுக் கோலம் பூண்டு ஆசிரமம் அமைத்துக் கொண்டு வாழ்பவர்கள் எல்லாம் துறவிகள் என்று நம்பும் அவலம் அதிகமாகி விட்டது. துறவுத் தோற்றமும், சுய அறிவிப்பும், புனித நூல்களை அறிந்து வைத்திருப்பதும், பக்த கோடிகளைச் சேர்த்துக் கொள்வதும் ஒருவரைத் துறவியாக்கி விட முடியாது. துறவு என்பது மனதில் உண்மையாக நிகழ வேண்டும். அப்படி நிகழாத வரை அந்தத் துறவுத் தோற்றம் கேலிக் கூத்தாகவே இருக்கும்.\nதிருவள்ளுவர் மிக அழகாகச் சொல்கிறார்.\n”வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள்\n(வஞ்சனை பொருந்திய மனத்தைக் கொண்டவனது பொய் ஒழுக்கத்தைக் கண்டு அவனுள்ளே இருக்கின்ற ஐந்து பூதங்களும் தமக்குள்ளே ஏளனமாக சிரித்துக் கொள்ளும்).\nவிருப்பு-வெறுப்பு, சுகம்-துக்கம், புகழ்-இகழ், பெருமை-சிறுமை, வெற்றி-தோல்வி முதலிய இரட்டை நிலைகளுக்கு அதிக முக்கியத்துவம் தந்து அதில் சிக்கித் தவிக்காமல் நீங்கி இருப்பதே உண்மையான துறவு என்கிறார் ஸ்ரீகிருஷ்ணர். இரண்டில் ஒன்றை மட்டும் தேர்ந்தெடுத்து கடைசி வரை அதை அனுபவித்து விட முடியும் என்று சாதாரண மனிதன் ஆசைப்பட்டு கடைசி வரை ஏமாறுகிறான். ஆனால் அது முடியாத விஷயம் என்பதை புத்தியுள்ளவன் சீக்கிரமே கண்டு பிடித்து விட முடியும். விருப்பு என்று ஒன்றை வைத்துக் கொண்டால் அது கிடைக்காத போதோ, அதற்கு எதிர்மாறானது கிடைக்கின்ற போதோ வெறுப்பு வந்தே தீரும். ஒரு விஷயம் சுகமானது என்று சந்தோஷப்பட்டுக் கொண்டு அதில் மூழ்கினால் அதை இழக்கிற போது துக்கம் ஏற்படாமல் இருக்க முடியாது. புகழால் பெருமிதம் அடைந்து திளைத்தால் இகழ்ச்சி வரும் போது அவமானப்படாமல் இருக்க முடியாது.\nஇப்படி இந்த இரட்டை நிலைகள் ஒன்றுக்கொன்று பின்னிப் பிணைந்தவை. ஒன்றிலிருந்து இன்னொன்று பிரிக்க முடியாதது. ஒன்றை மட்டுமே எடுத்துக் கொண்டு சுகம் காண ஆசைப்படுவது இயற்கைக்கு எதிர்மாறான ஒன்று. இதை உணர்ந்து கொண்டு அந்த இரட்டைச் சங்கிலிகளின் பிணைப்பில் இருந்து வெளியே வந்து அமைதியடைவது தான் உண்மையான துறவு. இது புறத்தோற்றம் அல்ல. ஒரு அழகான அகநிலை. துறவு அடுத்தவர்களுக்கு அறிவிப்பது அல்ல. தானாக உணர்ந்து தெளியும் சுகானுபவம். இதில் புறத் தோற்றத்தை மட்டும் உருவாக்கி உள்ளுக்குள் எதிர்மாறாக இருப்பவர்கள் உண்மையில் அடுத்தவர்களை ஏமாற்றுவதை விட அதிகமாகத் தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்கிறார்கள். திருவள்ளுவர் கூறுவது போல அவர்களுக்கு உள்ளே ஆட்சி செய்யும் ஐம்புலன்களும் “நீ எங்களுக்கு அடிமை” என்று எள்ளி நகையாடும் பரிதாப நிலையில் தங்கி இருந்து விடுகிறார்கள்.\nஉண்மையான துறவிக்கு பணம், புகழ், பெருமை, அங்கீகாரம் முதலான எதுவுமே தேவை இல்லை. அப்படித் தேவை இருக்குமானால் அந்த நபர் உண்மையான துறவி இல்லை. போலிகளது புறத்தோற்றம் கண்டு ஏமாறும் மனிதர்களும் கீதை, திருக்குறள் போன்ற உயர் நூல்களின் வரையறைகளை வைத்து அந்தத் துறவிகளை உரைத்துப் பார்க்கத் தவறி விடுவது தான் ஏமாற்றத்திற்குக் காரணமாகி விடுகிறது.\nஅடுத்ததாக ஸ்ரீகிருஷ்ணர் கூறுவது போல செயல்படாமல், செயல்களால் பரீட்சிக்கப்படாமல் யாரும் ஞானத்தை அடைந்து விட முடியாது. மேலும்\nகர்மமும், ஞானமும் மேம்போக்காகப் பார்க்கும் போது வேறு வேறு போலத் தோன்றினாலும் ஆழமாகப் பார்த்தால் வேறுபட்டவை அல்ல. உண்மையான ஞானி செயல் பட வேண்டிய நேரத்தில் செயல்படாமல் இருக்க முடியாது. அதே போல ஒரு கர்மயோகி ஞானத்தை அடையாமலும் இருக்க முடியாது.\n29 வயது வரை அரச வாழ்க்கை வாழ்ந்த சித்தார்த்தர் இல்லற வாழ்வைத் துறந்து ஆறு வருட ஞானத் தேடலின் முடிவில் தன் 35 வயதில் ஞானோதயம் பெற்றார். அவர் தனக்குக் கிட்டிய ஞானத்தில் அமைதியடைந்து அந்த உயர் உணர்வு நிலையில் அமைதியாக மீதி வாழ்க்கையைக் கழித்திருக்க முடியும். ஆனால் தான் அடைந்த ஞானத்தை, வாழ்க்கையின் பிரச்சினைகளுக்குத் தான் கண்ட விடையை, மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளத் துடித்தது அவர் கருணை உள்ளம். அரசர்கள், பிரபுக்கள் போன்றோருக்கு மட்டுமல்லாமல் பிச்சைக்காரர்கள், தாழ்த்தப்பட்டவர்கள், கொலைகாரர்கள், காட்டுமிராண்டிகள் போன்றவர்களுக்கும் கூட உபதேசித்து அவர்களுக்கு உயர் வழியைக் காட்டினார். உடலை விட்டுப் பிரிந்த 80ஆவது வயது வரை தன் போதனைகளைத் தொடர்ந்து உலகிற்குத் தந்து கர்மயோகியாகவே அவர் வாழ்ந்தார்.\nஅதே போல ஞானத்தைத் தேடி திருவண்ணாமலைக்கு இளமையிலேயே வந்த ரமண மகரிஷி கடைசி வரை ஞான நிலையிலேயே தான் அதிகம் இருந்தார் என்றாலும் அவரால் ஈர்க்கப்பட்டு ஞான வேட்கையால் தேடி வந்த பக்தர்களை அவரது நிர்விகல்ப சமாதிக்குத் தொந்திரவாக எண்ணி துரத்தி விடவோ, அங்கிருந்து ஓடி விடவோ இல்லை. பலருக்கு ஞான விளக்காக இருந்து வாழ்ந்து மறைந்தார். ஞான உபதேசம் தந்தது மட்டுமல்லாமல் ரமணாஸ்ரமத்தில் காய்கறிகள் நறுக்கும் வேலைகளைக் கூட தானே ஏற்றுக் கொண்டு செய்யும் கர்மயோகியாக அவர் வாழ்ந்தார்.\nஇவர்கள் தங்களைக் கடவுள் என்று சொல்லிக் கொள்ளவில்லை. தாங்கள் பெற்ற ஞானத்தை விலை பேசி மக்களிடம் விற்கவில்லை. பகட்டு வாழ்க்கை வாழவில்லை. ஞானமடைந்து விட்டதால் தாங்கள் உயர்ந்தவர்கள் என்றும் இனி எந்த வேலையும் செய்யத் தேவையற்றவர்கள் என்றும் காட்டிக் கொள்ளவில்லை. செயல்படும் அவசியத்தை உணர்ந்த போது அதிலிருந்து தப்பிக்க முனையவில்லை.\nஅதே போல ஜனகர் போன்ற கர்மயோகிகளும் உலக வாழ்க்கையில் தங்கள் சுதர்மத்தை முறையாகச் சிறப்பாகச் செய்தார்கள். ஆனால் மனதளவில் தாமரை இலையில் தண்ணீர் போல பற்றறவர்களாகவே வாழ்ந்தார்கள். கொடுக்கப்பட்ட பாத்திரத்தை குறையில்லாமல் நிறைவாகச் செய்வதும் தன் பகுதி முடிவடையும் போது எந்த வித வருத்தமுமில்லாமல் மேடையில் இருந்து விலகத் தயாராக இருக்கும் விஷயத்தில் ஞானிகளாகவே இருந்தார்கள்.\nஇதைத் தான் ஸ்ரீகிருஷ்ணர் கர்மம், ஞானம் இரண்டில் ஒன்றை ஒழுங்காகக் கடைபிடித்தாலும் மற்றதன் பலனையும் சேர்ந்து அடைய முடியும் என்று கூறுகிறார். அதே போல இரண்டின் சேர்க்கையால் உடனடியாக ஒருவர் பிரம்மத்தை அடைய முடியும் என்றும் கூறுகிறார்.\nஅகிலா June 18, 2012 at 5:50 PM\nஅருமை...நிறைய நல்ல விஷயங்களை சொல்லி இருக்கிறிர்கள்....\nகோவி June 18, 2012 at 6:02 PM\nஇன்னிக்கு மட்டும் ஏன் சார் இப்படியெல்லாம் நடக்குது..\nசே. குமார் June 18, 2012 at 6:16 PM\nSugan June 18, 2012 at 7:05 PM\nஅருமையான ஒரு பதிவு இது, நன்றி!!\nganesan June 18, 2012 at 8:21 PM\nChilled Beers June 18, 2012 at 9:32 PM\nமிக மிக அருமையான பதிவு. எளிமையான நடையில் நிறைய அர்த்தபூர்வமான விஷயங்கள் நிரம்பிய பதிவு இது.\nsumathi June 18, 2012 at 11:01 PM\nVery nice and very appropriate topic for everyone realize the "True Guru"\nபழனி.கந்தசாமி June 19, 2012 at 3:06 AM\nsakthi June 19, 2012 at 10:36 AM\nநல்ல பதிவு சார் ,நன்றி\nதிண்டுக்கல் தனபாலன் June 19, 2012 at 4:15 PM\n///கீதை, திருக்குறள் போன்ற உயர் நூல்களின் வரையறைகளை வைத்து அந்தத் துறவிகளை உரைத்துப் பார்க்கத் தவறி விடுவது தான் ஏமாற்றத்திற்குக் காரணமாகி விடுகிறது.///\nஉண்மை வரிகள் ! நல்ல பதிவு ! வாழ்த்துக்கள் சார் !\nகவிதை நாடன் June 19, 2012 at 5:49 PM\nஉண்மைக்குப் பல பரிமாணங்கள் உள்ளன என்பதை நம்ப பலருக்கு முடிவதில்லை. ஏதாவது ஒன்று சரி என்றால் அதற்கு மாறுபட்ட மற்றதெல்லாம் சரியாக இருக்க முடியாது என்று எண்ணுவது சாதாரண மனித இயல்பாக இருக்கிறது//இதுவே உண்மையான வரிகள்\nShanthi June 20, 2012 at 8:56 AM\nThanks much for your service. Feel like it is written for me. :).\nYour blog is one of the best in tamil.\nNunmadhi June 21, 2012 at 11:12 PM\nதங்களது அதிசயம் ஆனால் உண்மை என்கிற இடுகையை வலைச்சரத்தில் பகிர்ந்துள்ளேன். நேரமிருக்கும்போது பார்வையிடுங்கள். அதற்கான சுட்டி இதோ.http://blogintamil.blogspot.in/2012/06/blog-post_21.html\nRamesh CHitra July 24, 2012 at 12:23 PM
Home > NEWS\t> உணவுப்பொருளில் மாற்றப்படாத எண்ணெய்: மெக்டொனால்டு உணவகத்திற்கு நோட்டீஸ்\nஜெய்ப்பூர்: மெக்டொனால்டு உணவகத்தில், உணவு பண்டங்களில் 16 நாட்களாக ஒரே எண்ணெய் பயன்படுத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து, ராஜஸ்தான் மாநில சுகாதாரத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.\nராஜஸ்தானின் பஞ்ச் பட்டியை மையமாக வைத்து செயல்படும் மெக்டொனால்டு உணவகத்தில், உணவு பாதுகாப்பு சட்டப்படி, அதிகாரிகள் கடந்த ஜூன் 17 ம் தேதி சோதனை நடத்தினர். இதனையடுத்து அந்த உணவகத்திற்கு அதிகாரிகள் அனுப்பிய நோட்டீசில், உங்கள் உணவகத்தில் நடத்தப்பட்ட சோதனையில் உணவுப்பொருட்களில், ஜூன் 1 முதல் ஜூன் 16ம் தேதி வரை ஒரே எண்ணெணையை பயன்படுத்தியது தெரியவந்துள்ளது. இது உடல் நலனுக்கு தீங்கானது எனக்குறிப்பிட்டுள்ளனர்.\nஇவ்வாறு நீண்ட நாட்களாக பயன்படுத்தப்படும் எண்ணெய் காரணமாக, புற்றுநோய் வர வாய்ப்பு உள்ளது. இதய நோய், கர்ப்பமாக உள்ள பெண்களுக்கு ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படும் என டாக்டர்கள் கூறியுள்ளனர்.\nநோட்டீஸ் தொடர்பாக மெக்டொனால்டு உணவக அதிகாரிகள் கூறுகையில், உணவுப்பொருட்களில் எண்ணெய் பயன்படுத்துவது குறித்து இந்தியாவில் எவ்வித தெளிவான சட்டங்களும் இல்லை. ஆனால், எங்களை பொறுத்தவரை தரம் மற்றும் உணவு பாதுகாப்பு குறித்த நடைமுறைகளை முறையாக பின்பற்றி வருகிறோம் எனக்கூறினர்.\nராஜஸ்தான் மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், மெக்டொனால்டு உணவகத்தில் பாமாயில் எண்ணெய் நீண்ட நாட்களாக மாற்றப்படவில்லை. இதனால், எண்ணெய் கருப்பு நிறத்திற்கு மாறியுள்ளது. இதனை தான் உணவுப்பொருட்களில் பயன்படுத்தியுள்ளனர். 16 நாட்களாக எண்ணெய் மாற்றப்படவில்லை என்றனர்.\nwhats New FSSAI ரசாயனம் மூலம் பழுக்க வைத்த ரூ.1 லட்சம் மாம்பழங்கள் பறிமுதல் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நடவடிக்கை
பரபரப்பு Archives • Page3of 50 • Seithi Solai\nநான் அதற்கு மட்டுமா காரணம்?….இதற்கும் தான் காரணம்…. சுப்பிரமணிய சாமி போட்ட பரபரப்பான ட்வீட்….!!!!\nஆட்சிகள் அமைவதற்குதான் நான் காரணமாக இருந்துள்ளேனே தவிர ஆட்சிகள் கவிழ்ப்பதற்கு ஒருபோதும் நான் காரணமாக இருந்ததில்லை. ஆனால் அவர்கள் ஆட்சியில் கவிழ்வதற்கு…\nBREAKING : நடிகர் சிம்பு மருத்துவமனையில் அனுமதி…. பெரும் பரபரப்பு….!!!!\nபிரபல நடிகர் சிம்பு உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சிம்பு என்கின்ற…\nபுதிய 500 ரூபாய்….. பரபரப்பு செய்தியால் பீதி…. அரசு கொடுத்த விளக்கம்….!!!!\nபுதிய 500 ரூபாய் நோட்டுகளில் சில வகை நோட்டுகள் செல்லாது என இணையத்தில் செய்திகள் பரவி வந்த நிலையில் இது குறித்து…\nஎன்ன நடந்துச்சுன்னு தெரியல…. உடல் கருகி காணப்பட்ட தாய்-மகள் உடல்…. ராமநாதபுரத்தில் பரபரப்பு….!!\nவீட்டில் தாய், மகள் உடல் எரிந்து பிணமாக கிடந்த சம்பவம் குறித்து போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம்…\nகோவை சூலூர் விமானப்படை தளத்திற்கு இன்று காலை 11.47 மணி அளவில் Mi-17 v5 ரக ஹெலிகாப்டரில் குன்னூர் வெலிங்டன் பயிற்சி…\nகோயம்புத்தூர் சரவணப்பட்டியில் உள்ள தமிழ்நாடு அரசின் மதுபான கடையில் இருந்த பெட்டியில் சாரை பாம்பின் குட்டி 1 இருந்ததால் ஊழியர்கள் அதிர்ச்சி…
DIY Scalp Scrub to Promote Hair Growth : உச்சந்தலையில் அதிகம் சேரும் அழுக்கை வெளியேற்றணுமா? அப்ப இந்த ஸ்கரப் செய்யுங்க... - Tamil BoldSky\n| Updated: Thursday, May 14, 2020, 10:15 [IST]\n* ஒரு பௌலில் மேலே கொடுக்கப்பட்டுள்ள பொருட்கள் எல்லாவற்றையும் ஒன்றாக கலந்து கொள்ளுங்கள்.\n* இதை சில நிமிடங்கள் செய்த பிறகு வெதுவெதுப்பான நீரைக் கொண்டு, மைல்டு ஷாம்பு மற்றும் கண்டிஷனர் கொண்டு கழுவி விடுங்கள்.\n* ஒரு பௌலில் பட்டை, ஆலிவ் ஆயில், பேக்கிங் சோடாவை கட்டிகள் இல்லாமல் கரைத்து கொள்ளுங்கள்.\n* ஒரு பாத்திரத்தில் தேன், ஆலிவ் எண்ணெய், சர்க்கரையும் சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.\nRead more about: hair care hair fall hair growth beauty tips கூந்தல் பராமரிப்பு முடி பராமரிப்பு கூந்தல் உதிர்தல் முடி உதிர்தல் முடி வளர்ச்சி அழகு குறிப்புகள்
கங்குலியே சொல்லி விட்டார்.. தோனி திட்டமிட்டபடி எல்லாம் நடக்கிறது.. சிஎஸ்கேவிற்கு கடைசியாக நல்ல காலம்!! (படங்கள்) – Athirady News ;\nகங்குலியே சொல்லி விட்டார்.. தோனி திட்டமிட்டபடி எல்லாம் நடக்கிறது.. சிஎஸ்கேவிற்கு கடைசியாக நல்ல காலம்!! (படங்கள்)\nBy athirady On Nov 8, 2020\nசிஎஸ்கே அணியில் தோனி திட்டமிட்டபடி சில விஷயங்கள் நடக்க போகிறது. அடுத்த வருட ஐபிஎல் சீசனுக்காக தோனி வகுத்த திட்டங்கள் செயலுக்கு வர வாய்ப்பு உருவாகி உள்ளது.\n2020 ஐபிஎல் சீசன் தீவிரமாக நடந்து வருகிறது. இன்னும் இரண்டு போட்டிகளில் இந்த சீஸனின் வின்னர் யார் என்று தெரிந்துவிடும்.\nஐபிஎல் வரலாற்றில் இல்லாத அளவிற்கு முதல் முறையாக சிஎஸ்கே அணி பிளே ஆப் செல்லும் வாய்ப்பை இழந்துள்ளது. 14 போட்டிகளில்6போட்டியில் மட்டுமே வென்ற சிஎஸ்கே பிளே ஆப் வாய்ப்பை இழந்துள்ளது.\nஇதனால் சிஎஸ்கே அணி தற்போது அடுத்த சீசனுக்கு தயாராகி வருகிறது. அடுத்த சீசனில் சிறப்பான வீரர்களுடன் களமிறங்க சிஎஸ்கே அணி முடிவு செய்துள்ளது. வாட்சன் அணியில் இல்லை , அதேபோல் இன்னும் பல வீரர்கள் ஓய்வு பெற உள்ளனர் என்பதால் சிஎஸ்கே அணி புதிய வீரர்களுடன் களமிறங்க உள்ளது.\nஇதற்காக சிஎஸ்கே அணி.. வருகின்ற ஏலத்தில் முக்கியமான வீரர்களை அணியில் எடுக்க இருக்கிறது. பிப்ரவரி மாதம் நடக்க உள்ள ஏலத்தில் பெரிய அளவில் வீரர்களை எடுக்க சிஎஸ்கே அணி திட்டமிட்டு இருக்கிறது. ஆனால் அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் ஏலம் நடக்குமா என்று கேள்விகள் எழுந்தது.\nஇந்த நிலையில் பிப்ரவரி மாதம் கண்டிப்பாக ஏலம் நடக்கும் என்று தகவல்கள் வெளியாகி வருகிறது. பெரிய அளவில் ஏலம் நடக்கவில்லை என்றாலும் கூட முக்கியமான வீரர்கள் பலர் இன்னும்3மாதங்களில் ஏலம் விடுபடுவார்கள். அதேபோல் ஐபிஎல் தொடரும் ஏப்ரல் – மே மாதம் நடக்க உள்ளது.\nஏப்ரல் -மே மாதம் ஐபிஎல் தொடர் கண்டிப்பாக நடக்கும் என்று கங்குலி உறுதியாக அறிவித்து விட்டார். இதனால் தோனி திட்டமிட்டபடி இன்னும் சில மாதங்களில் மீண்டும் களமிறங்க உள்ளார். கடந்த போட்டியில் பேட்டி அளித்த தோனி… இன்னும் சில மாதங்களில் அடுத்த ஐபிஎல் சீசன் நடக்க உள்ளது. அதனால் நான் கண்டிப்பாக ஓய்வு பெற போவதில்லை, என்று திட்டவட்டமாக குறிப்பிட்டு இருந்தார் .\nதற்போது தோனியின் திட்டப்படி இன்னும்6மாதங்களில் ஐபிஎல் போட்டி நடக்க உள்ளது. இதனால் அவர் முறையாக பயிற்சி செய்து மீண்டும் பார்மிற்கு திரும்ப வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளது. சிஎஸ்கே அணி பிப்ரவரியில் ஏலம் எடுத்துவிட்டு.. ஏப்ரல் – மே மாதத்தில் மீண்டும் புத்துணர்ச்சியோடு களமிறங்க வாய்ப்புகள் உருவாகி இருக்கிறது.\nஅமெரிக்க வரலாற்றில்.. 29 வயதில் முதல் செனட் உறுப்பினர்.. 77 வயதில் முதல் அதிபர்.. இது ஜோ பிடன் கதை ! (வீடியோ, படங்கள்)
பெருந்தலைவர் காமராஜருக்கு முதல்வர் எடப்பாடியார் புகழாரம்..! நாடார்கள் வாக்குகளை அள்ளிட்டாரய்யா.... - Times Tamil News\nபெருந்தலைவர் காமராஜருக்கு முதல்வர் எடப்பாடியார் புகழாரம்..! நாடார்கள் வாக்குகளை அள்ளிட்டாரய்யா....\nநாடார் சமூகத்தினருக்கு பரிசளிக்கும் விழாவில் கலந்துகொண்ட எடப்பாடி பழனிசாமி, நாடார் இன மக்களுக்குத் தேவையான அனைத்தும் செய்து கொடுக்கப்படும் என்று உறுதி அளித்திருக்கிறார். இதையடுத்து, நாடார்களின் ஓட்டு அ.தி.மு.க.வுக்கு என்பது உறுதியாகியிருக்கிறது.\nஇந்த விழாவில் கலந்துகொண்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பெருந்தலைவர் காமராஜருக்கு புகழாரம் சூட்டினார். ‘‘பொன் நாடார், பொருள் நாடார், தன் அன்னையையும் நாடார், நாடொன்றே நாடி தன் நலம் என்றும் நாடாத நாடாரை நாடினேன் என்று கவியரசு கண்ணதாசன் போற்றி புகழ் பாடிய நம் பெருந்தலைவர் காமராஜரை நான் மனதார வணங்குகிறேன்.\nஎடுத்துக் கொள்ளும் எந்த முயற்சியிலும் உறுதியோடு நின்று இடையறாத உழைப்பின் மூலம். இன்று பல உச்சங்களை தொட்டு தங்களுக்கென்று ஒரு வங்கியை உருவாக்கி நடத்துகிற அளவுக்கு முன்னேறிய சமூகமாக நாடார் சமூகம் திகழ்வதற்கு அவர்களின் விடா முயற்சியும், உழைப்பும், சுய மரியாதையும்தான் காரணம் என்றால் அது மிகையாகாது.\nகொரோனா தொற்று ஏற்பட்டவர்களுக்கு உயிர்காக்கும் வென்டிலேட்டர் (செயற்கை சுவாச கருவி) வழங்க வேண்டும் என்று நான் சிவநாடாரை கேட்டுக்கொண்டேன். தாராள மனப்பான்மையுடன் ஒரே நேரத்தில் 35 கோடி ரூபாயை வாரி வழங்கிய திரு.சிவ நாடார் அவர்களுக்கு\nநான் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மிகக் கொடுமையான ஒடுக்குமுறைக்கும், அடக்குமுறைகளுக்கும், தாக்குதல்களுக்கும் உள்ளான நாடார் சமூகப் பிரிவுகளும் உண்டு. ஆனால், இன்று உலகமே வியக்கும் வண்ணம் முழு நாடார் சமூகமும் கல்வியாலும், கடின உழைப்பாலும் பெருமளவு முன்னேறி இருப்பது நமக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.\nநாடார் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கோரிக்கைகளை வைத்திருக்கிறார்கள். மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பெருந்தலைவர் காமராஜர் பெயரில் ஆய்வு இருக்கை அமைக்கப்படும் என்று ஏற்கனவே அரசால் அறிவிக்கப்பட்டுவிட்டது. பனையிலிருந்து கல்கண்டு, வெல்லம் போன்ற பொருட்கள் தயாரிக்கிறார்கள்.\nஎங்கள் பகுதியில் இத்தொழிலில் பலர் ஈடுபட்டிருக்கிறார்கள். எனவே, இதன் மகத்துவம் எனக்கு நன்றாகத் தெரியும். நல்ல கருத்தைச் சொல்லியிருக்கின்றார். ஏற்கனவே அது அரசின் பரிசீலனையில் இருந்து கொண்டிருக்கிறது. அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் பனை உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்வதற்கு அரசு பரிசீலிக்கும் என்பதை இந்த நேரத்தில் தெரிவிக்க விரும்புகின்றேன்.\nஅதுமட்டுமல்ல, எடப்பாடியிலேயே அந்த சமூகத்தைச் சேர்ந்தவர்தான் ஒன்றியத் தலைவராக இருக்கின்றார் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். நான் எப்பொழுதெல்லாம் பதவியில் இருக்கிறேனோ அப்பொழுதெல்லாம் அவர் சேர்மேனாக இருப்பார். இப்பொழுது இடஒதுக்கீட்டில் அவர் மனைவி சேர்மேனாக இருக்கின்றார். நான் எப்பொழுது கழகத்தில், இந்த இயக்கத்தில் சேர்ந்து பொறுப்பிற்கு வந்தோமோ அப்போதிலிருந்து அவர் என்கூடவே இருக்கிறார்.\nஇன்னும் பல கோரிக்கைகளை வைத்திருக்கிறார்கள். இவைகளில் என்னவெல்லாம் எங்களால் செய்யமுடியுமோ அவற்றையெல்லாம் எங்களுடைய அரசு நிச்சயமாக செய்யும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். இது ஒரு சமூகக் கூட்டமாக இருந்தாலும், விரைவாக தேர்தல் வரவிருக்கின்றது. அந்தத் தேர்தலிலும் எங்களை நீங்கள் ஆதரிக்க வேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்ள, ஒட்டுமொத்த குரலில் ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள்.
ரஜினியின் ப்ரஷ் medical ரிப்போர்ட்!? ~ தினக்ஸ்\n6:05 PM mondia dinaex No comments\nசென்னை : நடிகர் ரஜினிகாந்திற்கு நெஞ்சில் இருந்த நீர்கோர்ப்பை அகற்ற, தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து நவீன சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது அவர் உடல் நலம் திருப்திகரமாக உள்ளது.\nஅடுத்த இரு தினங்களில் அவர் தனி வார்டுக்கு திரும்புவார், என்று ராமச்சந்திரா மருத்துவமனை விளக்கம் அளித்துள்ளது. ரஜினியின் மார்பில் அளவிற்கு அதிகமாக நீர்கோர்ப்பு இருந்தது. அதை அல்ட்ரா பில்ட்ரேஷன், ஹீமோ டயாலிசிஸ் ஆகிய நவீன சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது.\nதீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்ட அவர், சிகிச்சைக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தார். அவர் உடல்நலம் திருப்திகரமாக உள்ளது. இது எங்களுக்கு மகிழ்ச்சியை தந்துள்ளது. தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வரும் நடிகர் ரஜினிகாந்த், அடுத்த இரண்டு நாட்களில் தனி வார்டுக்கு திரும்புவார் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம். இவ்வாறு ராமச்சந்திரா மருத்துவமனை விளக்கம் அளித்துள்ளது.
பெண்ணுக்கு கர்ப்பகாலத்திலும் அதை தொடர்ந்து பேறுகாலத்திலும் உண்டாகும் அசெளகரியங்கள் அதிகமானவை. சில தற்காலிகமானதாக பேறுகாலத்தில் நின்றுவிடும். வெகு அரிதாக சில பிரச்சனைகள் குழந்தைப்பேறுக்கு பிறகும் பிரசவத்துக்கு பிறகும் தொடரும். அதில் ஒன்று பிரசவத்திற்கு பிறகு உண்டாகும் முதுகு வலி.\nகர்ப்பமாக இருக்கும் போது வயிற்றில் வளரும் குழந்தையின் சுமையை முதுகு தான் தாங்குகிறது. குழந்தை வளர வளர அதிகப்படியான எடையை முதுகு தான் சுமக்கிறது. இந்த முதுகுவலிக்கு காரணம் தண்டுவடத்தில் உள்ள எண்ணெய்பசை குறைவதுதான். நீண்ட நாட்கள் முதுகு அந்த சுமையை சுமந்து குழந்தை பேறுக்கு பிறகு கடுமையான வலியை உண்டாக்கிவிடுகிறது.\nபிரசவத்துக்கு பிறகு நடு முதுகில் வலி அல்லது அடி முதுகில் வலியா என்பதை கவனியுங்கள். சிசேரியன் செய்யும் போது முதுகுத்தண்டில் மரப்பூசி போடுவார்கள். முதுகுத்தண்டில் வரிசையாக அடுக்கி வைத்தாற்போல எலும்புகள் உள்ளன. அந்த எலும்புகள் நடுவில் வட்ட வடிவமான துளைகளும் இருக்கும். எல்லா எலும்புகளும் இணைந்திருப்பதால் இதன் உள்ளே குழாய் போன்ற ஒரு அமைப்பு இருக்கும். இந்த இடத்தில் தான் தண்டுவடம் மூளையிலிருந்து அடி வரை செல்கிறது.\nPrevious articleகர்ப்பத்தின் ஆரம்ப கட்டத்தில் கரு தங்க என்ன செய்ய வேண்டும்? என்ன செய்ய கூடாது?
Terrible earthquake in Indonesia || இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம்\nஇந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம் + "||" + Terrible earthquake in Indonesia\nஇந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.\nபதிவு: ஜூலை 16, 2020 03:49 AM\nஇந்தோனேசியாவின் மேற்கு பகுதியில் உள்ள புளோரஸ் தீவில் நேற்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. அங்குள்ள ருடெங் நகரை மையமாகக் கொண்டு நிலநடுக்கம் தாக்கியது. ரிக்டர் அளவுகோலில் 5.7 புள்ளிகளாக பதிவான இந்த நிலநடுக்கம் பூமிக்கு அடியில் 600 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது.\nநிலநடுக்கத்தின்போது ருடெங் நகரம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் வீடுகள் கடைகள் உள்ளிட்ட கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கின. இதனால் பீதியடைந்த மக்கள் அலறியடித்தபடி வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்தனர். இந்த நிலநடுக்கம் சக்தி வாய்ந்ததாக பதிவானபோதும் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.\nஅதேபோல் இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து உடனடி தகவல்கள் இல்லை. இந்தோனேசியா நாடு புவித்தட்டுகள் அடிக்கடி நகரும் இடத்தில் அமைந்துள்ளதால் அங்கு நிலநடுக்கம் ஏற்படுவது வாடிக்கையான ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
இத்தனை வருஷமா வைரமுத்துவின் செக்ஸ் லீலைகளை சொல்லாதது ஏன்? சின்மயி சொல்லும் அடுக்கடுக்கான காரணங்கள்...\nChennai, First Published 11, Oct 2018, 12:05 PM\n''மீடூ #MeToo'' என்ற ஹேஷ்டேக் இந்தியாவில் ட்ரெண்ட் ஆகி வரும் நிலையில் செக்ஸ் லீலைகளில் ஈடுபட்ட பல திரையுலக புள்ளிகள் கலக்கத்தில் உள்ளனர். #MeToo''ஹேஷ்டேக் மூலம் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் வெளிச்சத்திற்கு வருகின்றன. பாடகி சின்மயி தனது ட்விட்டர் பக்கத்தின் வாயிலாக இதில் நிறைய குற்றச்சாட்டுகளை வைத்து வருகிறார். மேலும் இத்தனை வருடங்கள் கழித்து என் இதை வெளியில் சொல்கிறேன். இப்படி அடுக்கடுக்காக சொல்ல காரணம் என்ன என தற்போது ட்விட்டர் பதிவில் தெளிவாக கூறியுள்ளார்.\nபெண் பத்திரிக்கையாளர் சந்தியா மேனன் தனது டுவிட்டர் பக்கத்தில், எனக்கு 18 வயது இருந்தபோது, வைரமுத்து வீட்டுக்கு சென்றிருந்தேன்…அப்போது திடீர் என அவர் என்னை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த நான் அங்கிருந்து ஓடிவந்துவிட்டேன் என்று தெரிவித்துள்ளார்.\nஇதனையடுத்து, ஒரு முறை சுவிட்சர்லாந்தில் பாட்டுக் கச்சேரிக்கு சென்றிருந்தோம். நிகழ்ச்சி முடிந்து அனைவரும் சென்றுவிட்டார்கள். நானும் என் அம்மாவும் மட்டும்தான் இருந்தோம்.. அப்போது நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் ஒருவர் வந்து, கவிஞர் வைரமுத்த உங்களுக்காக ஹோட்டல் ரூமில் வெயிட் பண்ணுகிறார் என தெரிவித்தார். நான் அப்போதே அவர் முகத்திரையைக் கிழித்திருப்பேன்.. அவர் மீது திரையுலகம் வைத்திருந்த மரியாதைக்காக விட்டுவிட்டேன் என குறிப்பிட்டுள்ளார்.\nநிலையில் கடந்த இரண்டு நாட்களாக வைரமுத்துவிற்கு எதிராக பலரும் தங்களது கண்டனத்தை பதிவிட்டு வருகின்றனர். மேலும் சின்மயி கடந்த சில வருடங்களாக வைரமுத்துவிற்கு வாழ்த்து சொல்லுவது, திருமணத்தின்போது காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கியதும் என் என பலரும் சின்மயிடம் கேள்வி எழுப்பி வருவதால் அதுகுறித்து தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் பதிலளித்துள்ளார்.\nஅதில், ஆமாம் நான் எப்போதும் புதிய படம் வெளியானால் நான் யாருடன் பாடினேனோ அதை குறிப்பிடுவேன். அதனால் குறிப்பிட்டேன். ஆம் வைரமுத்துவுக்கு வாழ்த்து தெரிவித்தேன். மக்கள் ஏன் வாழ்த்து தெரிவிக்கவில்லை என்று கேட்டுக் கொண்டே இருந்தார்கள் அதனால் தெரிவித்தேன் என கூறியுள்ளார்.
ஈருடல் ஓர் உயிர் என்பது நீ... நான்... இல்லை நாம்! - Kungumam Tamil Weekly Magazine\nஈருடல் ஓர் உயிர் என்பது நீ... நான்... இல்லை நாம்!\nஈகோவுக்கு அப்பால்ஈகோவை உயிர்த்தன்மையான வஸ்துவாகவும், சுய வலியுறுத்தல் (Self assertion) கொண்ட மதிப்பான பொருளாகவும் ஏற்றுக்கொள்ளும் அதே நேரம், மனித வாழ்க்கையில் உறவுகளை வலுப்படுத்திக்கொள்ளவும், வாழ்க்கையை சிறப்புடன் வாழவும் அது ஒன்றுதான் வழிவகை செய்கிறதா என்றால், இல்லை என்றுதான் சொல்லவேண்டும். அதோடு உணர்ச்சிகளின் அனைத்து வெளிப்பாடுகளிலும் ஈகோ இருக்கிறதா? ஈகோ இல்லாத, ஈகோ கொஞ்சமும் வெளிப்படாத, ஈகோவைத் தாண்டிய உறவுநிலையோ, செயல்பாடோ இருக்கிறதா என்றால்…. ‘இருக்கிறது’ என்றே சொல்கிறார்கள் உளவியலாளர்கள்.\nஎப்போது… எப்படி என்றால், மனிதரது ஆன்ம ஆற்றல் (Psyche Energy) ‘நான்’என்ற மேல்கூட்டை உடைத்துக் கொண்டு வெளியேறும்போது ஈகோவும் தன்னை முழுமையாக விடுவித்துக்கொள்ளும் சூழல் உருவாகிறது. அப்படியான சூழ்நிலைகளைப்பற்றிப் பார்க்கலாம்.கரைந்த ஈகோ நிலைமனிதர்களது உணர்ச்சி வெளிப்பாடு வார்த்தைகளாகவோ செயல்பூர்வமானதாகவோ இருக்கும்போது, சில நேரங்களில் ஈகோவின் செயல்பாடு அமைதியாகவோ, வெளிப்படாதவாறோ இருந்துவிடுவதும் உண்டு.\nஉதாரணமாக, ஒரு தாய் தன் குழந்தையிடம் அன்பை வெளிப்படுத்தும்போது, அவளின் செயல்பாடு அவளது ஈகோவின் வெளிப்பாடாக இருப்பதில்லை. அந்த வெளிப்பாட்டின் வாயிலாக அவள் தனது முக்கியத்துவத்தைப் பெறுவதற்கோ, தனது இருப்பை பிரபலப்படுத்திக்கொள்வதற்கோ நினைப்பதே இல்லை. அந்த அன்பின் வெளிப்பாட்டில் அப்படியான எண்ணம் எழவே எழாது.\nஎப்போதும் ஒரு தாயின் அன்பின் வெளிப்பாடு குழந்தையின் மீதான பாசத்தை உண்மையாகப் பிரதிபலிப்பதாகவே இருக்கும். அத்தகைய வெளிப்பாட்டின்போதுதான் அவளின் ஆன்ம சக்தி நான் எனும் கூட்டை உடைத்துக்கொண்டு வெளியேறும்போது, ஈகோ கரைந்த நிலையில் இருக்கும். எந்த இடத்திலும் அங்கே ஈகோ துருத்திக்கொண்டு நிற்காமல், திரவ நிலையில் கரைந்தே இருக்கும்.\nநான் தனது எல்லைகளையும், மேல் ஓட்டையும் (Outer Shell) உடைத்துக்கொண்டு, தனது அடையாளம் குறித்தான பிரக்ஞை இழந்து, ‘ஒற்றுமை’(TOGETHERNESS) நிலையை அடையும்போது இந்த கரைந்த ஈகோநிலை சாத்தியமாகிறது.
மேய்வதைத் தவிர்ப்போம்: படிப்பதை பழக்கப் படுத்துவோம்! - AanthaiReporter.Com | Tamil Multimedia News Web\nஅரசியல் தொடங்கி அறிவியல் வரை ஒவ்வொரு துறையிலும் அவ்வப்போது பல புதிய சொற்கள் உருவாகின்றன. தொடர்ந்து படித்தால்தான் அவ்வப்போது அறிமுகமாகின்ற புதிய சொற்களைப் புரிந்துகொள்ள முடியும். “அதற்கெல்லாம் தேவையில்லை’, “வாசித்து என்ன ஆகப்போகிறது?’ அவ்வப்போது இணையதளங்களில் பார்த்துவிடுகின்றோம்’ என்றெல்லாம் கூறுவதைத் தவிர்க்க வேண்டும்.\nNext அனுபவமே நல்ல ஆசான்!.
குருதட்சணை | சிறுகதைகள் (Short Stories in Tamil)\nகல்விக் கூடத்தில் தன்னை மறந்து விழுந்து விழுந்து படிக்கும் போதெல்லாம், பகீரதியின் மனத்திரையில் கண்களையே எரிக்கும் ஒரு காட்சி அவலமாய் தோன்றுவதெல்லாம் வறுமையில் தீக்குளித்து எரிந்து கருகிப் போன நிழல் தட்டி வெறிச்சோடியிருக்கும் அம்மாவின் இருண்ட முகம் தான். அதில் ஒளிமயமான ஒளிக்கீற்றை என்றைக்குமே அவள் கண்டதில்லை அவள் சிரிப்பது கூட எப்போதாவது அபூர்வமாய்த் தான் நிகழும் அப்படித் தான் சிரித்தாலும் மனம் விட்டுச் சிரிக்கிற மாதிரித் தெரியாது ஏதோ பிள்ளைகளுக்குப் போக்குக் காட்டப் போலியாகச் சிரிப்பது போல் தோன்றும் வாய் நிறையச் சிரிப்பொழுக அம்மாவைக் காண வேண்டுமென்றால் அதற்கு ஒரேயொரு வழி நிஷ்டை கூடுகிற மாதிரி இந்தப் படிப்புத் தவம் தான்\nஅது தவமா சாக்கடையா என்று புரியாத மயக்கமாக இருந்தது ஏனென்றால் அதிலும் பல குழறுபடிகள். கல்வியையே கூறு போட்டுக் காசுக்கு விற்கிற நிலைமை.. காசு இருந்தால் தான் கல்விக் கடலையும் கடக்கலாம். படிப்பிக்கிற குருமாரில் கல்வியைத் தவமாகப் பார்க்கிற அதி உயர்ந்த மனம் எத்தனை பேருக்கு உண்டு? தெரியவில்லை அவளுக்கு கல்லூரியில் கற்பித்தல் என்ற ஒரு முறையிருக்க அதையும் தாண்டி பணம் சம்பாதிக்கிற வெறியில் இன்னும் எத்தனையோ குறுக்கு வழிகள் எங்கு பார்த்தாலும் திரும்பின பக்கமெல்லாம் டியூஷன் வகுப்புகளே கொடி கட்டிப் பறக்கின்றன அவை நடக்காவிட்டால் காசும் வராது கல்வியும் பூஜ்யம் தான்\nநிலைமை இப்படியிருக்கும் போது இதற்கெல்லாம் பகீரதி பகற்கனவுதான் காண முடியும். நிஜத்தில் கண் விழித்தால் வறுமை தாண்டவமாடுகிற வீட்டில் அதற்கெல்லாம் வழியேது. அவளின் அப்பாவுக்கு தற்போது தொழிலுமில்லை. சண்டை தொடங்குவதற்கு முன் வீடு கட்டும் மேசனாக வேலை பார்த்தவர் அவர். சண்டை மூண்ட பிறகு சீமெந்து வருவது அடியோடு நின்று போனதால், வீடுகட்ட வழியில்லாமல் அவரும் காட்டுக்குப் போய் விறகு கொண்டு வந்து விற்று வருகிறார் அதுவும் எத்தனை அலைச்சல். அம்மாவும் தினசரி வேலைக்குப் போகிறாள். அவ:ளுக்கு மா இடிக்கிற வேலை. கூடவே மிளகாய்த் தூளும் இடிப்பதுண்டு. அது இல்லாத நாட்களில் தோட்டவேலைக்கும் போய் வருகிறாள்\nமா இடிக்கிற வேலை அம்மாவுக்குக் கை வந்த கலை. சிறு வயதிலிருந்தே மா இடிக்கப் பழகியவள் வெள்ளாள வீடுகளில் தான்\nதினசரி அவளுக்கு இந்த வேலை. பத்துக் கொத்துக்குக் குறைவாக அவள் மா இடிப்பதில்லை. அதில் நெஞ்சு வலி வந்தாலும் காட்டிக் கொள்ள மாட்டாள். பகீரதிக்கு இது குறித்து அறிவுபூர்வமான பெரும் மனக் கவலை. செல்லரித்துப் போன வறுமை தான் அம்மாவை இப்படிச் சிலுவை அறைந்து கொன்று வருவதாக அவளுக்கு உறைக்கும் அதிலிருந்து மீள ஒரே வழி, தான் படித்து முன்னேறினால் தான் இதற்கான கதவு திறக்குமென்று அவள் நம்பிக் கொண்டிருந்தாள்\nஅவள் அப்போது யாழ் இந்து மகளிர் கல்லூரியில் புகுமுக வகுப்பில் படித்துக் கொண்டிருந்த நேரம். இந்த வருட இறுதியில் அதற்கான பரீட்சை வருகிறது. பிறகென்ன. பல்கலைகழகம் தான்.. கணிதம் படித்து ஒரு பொறியியலாளராக வரவேண்டுமென்பதே அவளுடைய நெடுநாளைய கனவு. கணக்கு அவளுக்குத் தண்ணீர் பட்டபாடு. ஒவ்வொரு பாடத்திலும் நூறு புள்ளிகள் எடுப்பாள். இருந்தாலும் வகுப்பில் அவள் இரண்டாம்பட்சம் தான். வகுப்பாசிரியை ஜானகிக்கு அவள் மீது பிடிப்பு வராத ஒரு நழுவல் நிலை. அவளுக்கு பணம் சம்பாதிக்கிற வெறி நாலைந்து டியூஷன் வகுப்புகளுக்கு அவளே பொறுப்பாளர். அவளும் கற்பிப்பாள். அது மட்டுமல்ல வினா விடைத் தாள்களும் எழுதி அச்சிட்டு விற்பனை செய்யும் பெரும் பணமுதலை அவள். அவளின் இந்தப் பசிக்கு இரையாக பகீரதி என்றைக்குமே தீனி போட்டதில்லை/ அவளுக்குப் பள்ளிப் படிப்போடு மூளை திறந்து விடும். டியூஷன் வகுப்புக்குப் போவதற்கும் ஜானகியின் பரீட்சை வினா விடைத் தாள் நூலை வாங்குவதற்கும் வக்கில்லாத கையறு நிலைமை அவளுக்கு. தினமும் உடல் வருத்தம் பாராமல் மா இடித்து அம்மா கொண்டு வரும் சொற்ப வருமானத்தில் வயிறு கழுவுவதே பெரும்பாடு .அதிலேயும் அன்றாடம் பஸ் கூலிக்கு வேறு அம்மாவோடு போராட வேண்டியிருக்கிறது\nமல்லாகத்திலிருந்து பஸ் ஏறி தட்டாதெருச் சந்தி வரை அந்த பஸ் பயணம். பிறகு அரசடி வீதி வழியாக நீண்ட தூரம் நடந்தால் தான் கல்லூரியை அடையலாம். சில சமயம் வெறும் வயிற்றுடனேயே வர வேண்டிய நிலைமை .கல்லூரி வாசலை மிதித்து விட்டால் அவளுக்குப் பசி கூட மறந்து போகும். பணம் பற்றிய பிரக்ஞையே அடியோடு இல்லாது ஒழிந்து, ஒரு மானஸீக தவம் மாதிரி அவளுடைய அந்தப்[ படிப்புத் தனிமையுலகம். அதற்கு இடையூறு செய்கிற மாதிரி ஜானகி டீச்சரின் தலையீடுகள் வந்து அவளைக் குழப்பும்\nதவணைக் கட்டணம் கட்டச் சொல்லி, அவள் ஆணை பிறப்பித்து ஒரு கிழமைக்கு மேலாகிறது. பகீரதி தவிர ஏனைய மாணவிகள் உடனடியாகவே அதைக் கட்டி முடித்து விட்ட நிலைமையில், டீச்சருக்கு அவள் மீது பெருங் கோபம் அவள் ஜானகியின் காலில் விழாக் குறையாகக் கெஞ்சி மன்றாடி, நாளை கொண்டு வருவதாகக் கூறி விட்டு வீடு வந்து சேர்ந்த போது, மா இடித்த களைப்போடு அம்மா வாசலில் நிழல் தட்டி வெறிச்சோடி அமர்ந்திருப்பதை ஒரு அவலக் குறியீடான இருள் வெளிப்பாடாக அவள் எதிர் கொள்ள நேர்ந்தது\nஇருந்தாலும் பசிக்களை மறந்து போன விரக்தியோடு அவள் தன்னிலை மறந்து கேட்டாள்\n“அம்மா! நாளைக்கு எனக்குக் காசு வேணும். தவணக் கட்டணம் கட்ட இல்லாட்டால் டீச்சர் என்னைக் கொன்றே போடுவார்”\n“உன்ரை டீச்சர் என்ன அவ்வளவு பெரிய கல் நெஞ்சக்காரியா? இஞ்சை நான் மா இடிச்சுச் செத்துக் கொண்டிருக்கிறன் . நினைச்சவுடன் காசென்றால் எங்கை போறது? சாப்பாட்டிற்கே எங்களுக்கு வழியில்லை ஒரு இரண்டு நாளைக்குத் தவணை கேட்டுப் பார் கொப்பரிட்டைச் சொல்லி எங்கையாவது கடன் கேட்டு வாங்கித் தாறன்”\n“அம்மா இது எடுபfடுமே?. ஏற்கனவே அவவுக்கு என் மீது கடுப்பு நாளைக்கு நான் இதைச் சொல்லிக் கொண்டு போனால், நிக்க வைச்சு என்னைக் கொன்றே போடுவா.. நான் எந்த முகத்தை வைச்சுக் கொண்டு அங்கை போய் நிக்கிறது”?”\nஎங்களுக்கு இருக்கிறது பணத்தை வைச்சுச் சாதிக்க முடியாமல் போன ஒரே முகம் தான். இதைக் காட்ட உனக்கென்ன வெட்கம்? அவ புரிஞ்சு கொண்டால், நீ சந்தோஷப்பட மாட்டியே?”\n“ஐயோ! அம்மா! என்ன கதை சொல்லுறியள்? நான் அதை எதிர்பார்க்கேலை அவ என்னைப் புரிஞ்சு கொண்டிருந்தால் பாவம் போகட்டும் என்று விட்டிருப்பாவே. இது நடக்குமா? என்னவோ நீங்கள் சொல்லுறியள். என்னவோ நானும் போய்ச் சொல்லிப் பாக்கிறன் கடவுள் விட்ட வழி”\nமறு நாள் விழித்த போதே நீண்ட ஒரு மங்களகரமான ஒரு கனவுத் தொடர். ஜானகி அருள் வாக்குக் கூறி வரம் கொடுப்பது போலவும், அவள் ஒளித் தேரிலேறி முடி சூடிக் கொண்டு விட்ட ஒரு தேவதையாய் ஊர்வலம் போவது போலவும், காட்சிமயமான இன்பக் கனவுகள் கண்களுக்குள். அந்தக் கனவுகளுடனேயே அவள் கல்லூரி வந்த போது வகுப்புத் தொடங்கி விட்டதற்கு அறிகுறியாக ஜானகியே அவளை எதிர் கொண்டாள்\n‘”வாரும் உம்மைத் தான் இவ்வளவு நேரமும் எதிர்பார்த்தனான் என்ன பேசாமல் கையை ஆட்டிக் கொண்டு உல்லாசமாய் வாறீர்? இப்ப காசை எடும்”\nகாசு இல்லையென்று எப்படிக் கையை விரிப்பது என்று தெரியாமல் பகீரதிக்கு முகம் இருண்டு அழுகை மழை கொட்டிற்று. பேச வாய் எழாமல் அவளுள் மெளனம் கனத்த சோகம் கண்ட பிறகும், காசுக்கு வலை விரித்த புத்தியில் ஜானகிக்கு அது நெஞ்சில் ஒரு பாரமாய் உறைக்கவில்லை. அவள் மீண்டும் சீறிக் கனல் கொட்டினாள்\n“சொல்லு பகீரதி! காசு எங்கை?’\n‘டீச்சர்!அம்மாட்டை இப்ப காசு இல்லையாம். கடன் வாங்கித் தாறதாய்ச் சொன்னவ .இரண்டு நாளிலை கொண்டு வந்து தாறன்”\n“உது சரி வராது காசு இல்லையென்றால் இஞ்சை ஏன் வந்தனீங்கள்? போய்ச் சின்னப் பள்ளிக் கூடத்திலை படிக்கிறது தானே”\nஅறிவு மயங்கிய நிலையில் அவள் சொன்ன வார்த்தைகளின் சூடு தாங்காமல் பகீரததி தன்வசமிழந்து அப்படியே நிலை சரிந்து போனாள் அது ஓங்கி வளர்ந்த ஓர் அக்கினிக் குண்டமாய் தன்னை விழுங்குவது போல உணர்கையில் அங்கு நிற்கவே பிடிக்கவில்லை அவளுக்கு. யாரிடமும் சொல்லிக் கொள்ளாமலே அவசரமாக நொந்த மனதுடன் அவள் வீடு திரும்பி வரும் போது, வீட்டு வாசலில் அம்மா நிழல் வெறித்து அமர்ந்திருந்தாள்\n“என்ன பிள்ளை இப்ப வாறாய்? ஏதும் பிரச்சனயோ?\n“ஓமம்மா எல்லாம் முடிஞ்சு போச்சு நான் இனிப் படிக்கப் போகேலை உங்களுக்கு உதவியாய் நானும் மா இடிக்க வாறன்”\n“என்ன பிள்ளை சொல்லுறாய்? நீயும் மா இடிக்க வரப் போறியே? நல்ல கதை. இவ்வளவு காலமும் படிச்சுப் போட்டு சோதனை எடுக்கிற நேரத்திலை உனக்கு என்ன வந்ததென்று கேக்கிறன்? ”சொல்லு”\n“ஐயோ!அம்மா அதை எப்படி வாய் விட்டுச் சொல்லுறதென்று எனக்கு விளங்கேலை. சொல்ல நான் விரும்பேலை. ஆனால் ஒன்று சொல்லுறன் தகுதிக்கு மீறி எதுக்கும் ஆசைப்படக் கூடாதென்று இப்ப நான் நம்புறன். அப்படி ஆசைப்பட்டதுக்கான தண்டனையை இப்ப நான் அனுபவிச்சே தீர வேண்டும். நானும் இண்டைக்கு உங்களோடை மா இடிக்க வாறனே”\n“அப்ப நீ இனிப் படிக்க மாட்டியே ?\n“மாட்டன் மாட்டன் போதும் நான் பட்ட அவமானங்கள் தூக்கிய சிலுவைகள்”\n‘அதுதான் ஏனென்று கேக்கிறன்”’\n“அம்மா!இவ்வளவு காலமும் நான் படிச்ச படிப்புக்கு விசுவாசமாய், எனக்கு அதைச் சொல்லத் தோன்றேலை நான் இப்படியானதற்கு என் விதி தான் காரணம் வேறொன்றுமில்லை”என்றாள் அவள் தனக்குள் பிரகாசிக்கின்ற அறிவு தீபத்துடன். அவள் சொல்ல மறுக்கின்ற அந்த உண்மை அம்மாவைப் பொறுத்தவரை ஒரு கானல் சங்கதியாகவே இன்னும் இருக்கிறது. அந்தக் கானலை விட்டு வெகு தூரம் விலகிப் போன ஒரு கலங்கரை விளக்கம் போல இப்போது அவள். குருதட்சணையாய் மெளனம் கனத்த அவளின் உயிர்ப் பாஷையிலேயே அதை உணர முடியும் ஆம் அந்தக் குருவின் வழிபாடு. என்ன இருந்தாலும் ஜானகி அவளுக்கு எழுத்தறிவித்த இறைவன் என்ற நினைப்பில் வாய் இறுகி அவள் பூண்ட இந்த மெளன கவசம், அம்மாவைப் பொறுத்தவரை இன்னும் அதற்கான விடை முடிச்சவிழாத வெறும் புதிராகவே அவளைக் குடைகிறது அவளோடு கூடவே உலக்கை தூக்கி பகீரதி மா இடிக்க வரும் போதெல்லாம் சோகம் கனத்துக் கேட்க முடியாமல் போன அந்தக் கேள்வியிலேயே வதைபட்டு உயிர் நதியே அடியோடு வரண்டு வற்றிப் போன மாதிரி அவள் நிலைமை. இதைக் கண்டு கொள்ளாத ஒரு மனுஷ பாவனை நிழல் மாதிரி பகீரதியின் இருப்பு மறைவு. உள்ளூரத் தன்னைக் காட்டிக் கொள்ள விரும்பாத அவளுடைய அந்த அதி உன்னதமான ஆத்ம சமர்ப்பணமாக ஒளி வீசிக் கொண்டிருக்கும் குரு வழிபாடு நினைப்புக்கு முன் அம்மாவையே குமுற வைத்து உயிர் எடுத்துக் கொண்டிருக்கும் கேள்வி மட்டுமே மிஞ்சி நிற்கிற அந்த இருளும் கரைந்து தான் போகுமென்று பகீரதி மிகவும் அறிவு தீர்க்கமாக நினைவு கூர்ந்தாள்
பருத்தி சாகுபடியில் கலப்பு உரத்திற்கான தொழில்நுட்பங்கள் என்னென்ன? தகவல் உள்ளே...\nWhat are the techniques for mixed fertilizer in cotton cultivation? Information inside ...\nFirst Published Apr 11, 2018, 1:36 PM IST\n1. மண்புழு உரம்\nசுயசார்புடைய பசுந்தாள் உரங்கள் மற்றும் தொழுவுரம் ஆகிய மண்ணின் அங்ககத் தன்மையை அதிகரிக்கும் காரணிகளாகும்.இருப்பினும் சி சூழ்நிலைகளுகடகு இவைகளால் தேவையை முழுவதுமாக பூர்த்தி செய்ய முடிவதில்லை.\nஏராளமாந மண்ணின் கழிவுகள் மற்றும் தாவர பொருட்கள் வெருமனே எரிக்கப்படுகின்றன. இதற்காக பண்ணைக் கழிவுகள் மற்றும் தாவர பொருட்களை மறுசுழற்சி செய்வதன் மூலம் உபயோகப்படுத்த முடியும்.\nநவீன கருத்துக்களின் அடிப்படையில் மண்புழுக்கள் மற்றும் பூஞ்சானங்கள் இந்த சுழற்சிக்கு பயன்படுகின்றன.இந்திய மண்புழு இனத்தை சேர்ந்த எசேனியா புடிடா என்ற இனம் பண்ணைக்கழிவுகளை ஒருமாத காலத்தில் மண்புழு உரமாக மாற்றிவிடுகிறது. மேலும் பாலிதீன் தவிர மற்றவைகளை மக்கச் செய்துவிடுகிறது.\nமண்புழு உரம் தயாரிக்க 15-25 செமீ உயர படுக்கையினை தயார் செய்ய வேண்டும். இந்த படுக்கையின் நீள அகலம் பண்ணைக் கழிவுகளில் கிடைப்பதை பொருத்து அமைத்துக் கொள்ளலாம்.\nஇந்த படுக்கைகள் நடுவில் உயர்ந்தும் பக்கவாட்டில் சரிவாக இருக்குமாறும், (வடிகால் வசதியை ஏற்படுத்துவதற்காக) கூடுமானவரை நிழலில் இருக்குமாறும்அமைத்துக்கொள்ள வேண்டும். மண்புழுக்கள் வெளிச்சத்தை விரும்புவதில்லை.\nஅதனால் படுக்கைகளை மூடி வைத்திருக்க அறிவுறுத்தப்படுகிறது.மேலும் இருளானது மக்கும் காலத்தைக் குறைக்கிறது. படுக்கையின் மூதல் அடிக்கில் லேசான பொருட்களான கோதுமை/சோயபீன் தோலினை அடுக்கவும். பின் சாண கரைசலை லேசாக தெளிக்கவும்.\nஒரு கிலோ மண்புழுக்களை 10 மீட்டர் நீளம்2மீட்டர் அகலம் உள்ள படுக்கையில் விடவும். இதற்கு மண்புழு முட்டைகள் அல்லமு மண்புழு உரத்தில் உள்ள கரிய மண்புழுக்களையே உபயோகப்படுத்தலாம்.\nகளைகள், நறுக்கிய இலை, தழைகள், பண்ணைக் கழிவுகள், வீட்டுக்கழிவுகள் மற்றும் மற்ற மக்க சுடிய பொருட்கள் அனைத்தையும் இந்த படுக்கையின் மீது போட்டுக் கொள்ளவும். இந்த படுக்கையை லேசான ஈரப்பதம் இருக்குமாறு அடிக்கடி நீரை தெளித்து வர வேண்டும். ஆனால் நனைந்து விடக் கூடாது.\nஇதற்கு உகந்த ஈரப்பதம் மற்றும் வெப்பநிலை (27-330செ) மக்க எடுத்துக் கொள்ளும் காலம் 40-50 நாட்கள். மண்புழுவின் எச்சத்தில் தோராயமாக 1.2-1.4% மணிச்சத்துக்களும் அடங்கியுள்ளன. இந்த சத்தக்கள் படுக்கை மற்றும் மக்க வைக்கப்படும் பொருட்களை பொருத்து மாறுபடும்.\nமண்புழுவின் எச்சத்தில் அது எடுத்துக்கொள்கின்ற பொருட்களைவிட தழைச்சத்துக்கள் அதிக அளவில் அடங்கியுள்ளது.
வலை (2000 ) – முன் குறிப்புகள் : ஆபிதீன் | ஆபிதீன் பக்கங்கள்\nவலை (2000 ) – முன் குறிப்புகள் : ஆபிதீன்\n12/03/2011 இல் 15:30\t(ஆபிதீன், ஜாஃபர் முஹ்யித்தீன்)\n’பாலம் இடிஞ்சப்ப ’பாலம்’ண்டு ஒரு கதை எழுதுனீங்க. இப்ப பாலம் கட்டியாச்சே.. இதுக்கும் ஒரு கதை எழுதுவீங்களா?!’ என்று கிண்டல் செய்த ’சொல்லரசு’ ஜாபர் முஹ்யித்தீன் மாமாவின் கடிதமொன்றை படித்துக்கொண்டிருந்தேன். பத்து வருடங்களுக்கு முன்பு அவர்கள் எழுதிய கடிதம். மாமா இப்போது இல்லை; மவுத்தாகிவிட்டார்கள். இருதய ஆபரேஷனுக்காக அவர்கள் சென்னை சென்றபோது நான்தான் வழியனுப்பினேன். இதை நண்பன் பாஸ்கரனிடம் சொல்லி கண்ணீர் விட்டபோது டேபிளை ஓங்கி அடித்துச் சிரித்தான். ’வழியனுப்ப நீ போனீலே? எப்படி திரும்புவாங்க உசுரோட!’ என்றான். ’மவுத்’துக்கும் வாய்திறந்து சிரிக்கும் ஊர். நானும் நண்பர் நாகூர் ரூமியும் சேர்ந்து இந்த ஊர் எழுத்தாளர்களுக்காக ஒரு இணையதளம் – இலவசமாக கிடைக்கும் இடத்தில் – நடத்தத் தீர்மானித்தபோது , விபரங்கள் கேட்க ’சொல்லரசு’ மாமாவையும் மற்ற படைப்பாளிகளையும் சந்தித்தது , இதைவைத்து ’வலை’ என்ற கதையை நான் எழுதி அதையும் அந்த தளத்திலேயே வெளியிட்டது ஆகியவற்றை இப்போது சொல்லத் தோன்றுகிறது. இந்த ’வலை’ எனது முதல் சிறுகதைத் தொகுதியில் இடம்பெறவில்லை. காரணம் நாகூர் ரூமிதான். ‘இது வாணாம்.. டாகுமெண்ட்ரி மாதிரி இக்கிது’ என்றார். ‘நான் எழுதுறது எல்லாமே அப்படித்தானே இக்கிம்ங்கனி’ ‘இல்லே.. இது ரொம்ப மோசமா இக்கிது’.\nஇந்த ’டாகுமெண்ட்ரி’யில் ஒரு பிரபலமான எழுத்தாளரை மட்டும் நீக்கிவிட்டேன் – பிரச்சினையைத் தொடர விருப்பமில்லாததால். மற்றபடி என் எல்லா கதைகளையும் போல இதுவும் மோசமாகவே இருக்கும் என்று உறுதி கூறுகிறேன். என்னை நம்பலாம்.\nமுதலில் ’சொல்லரசு’ மாமாவின் கடிதத்தைப் படியுங்கள்.\nகண்ணியத்திற்குரிய இளவல்களான பேராசிரியர், முனைவர், முஹம்மது ரஃபி, நாவலாசிரியர் ஜைனுல் ஆபிதீன் ஆகியோருக்கு\nசென்னைக்குச் செல்லும்போது மறவாமல் முயற்சித்து நமது மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய நீதியரசர் M.M.I அவர்களை சந்திக்க வேண்டும். அதை அடுத்து, நாகை தந்த நல்லறிஞர், மதிப்பிற்குரிய ஸையிதுனா, M. செய்யது முஹம்மது ஹஸன் சாஹிபு அவர்களை சந்தித்து பேசிட மறவாதீர்கள். வாழும் காலெமெல்லாம் உறவாடி – உரையாடி பயன் பெறுங்கள்.\nநமதூரில் வித்துவான் ஜனாப் S.M.A. காதிர் , கவிஞர் ஜனாப் EM. அலி மரைக்காயர், சகோதரர் கவிமணி M.S. தாலிப் சலீம் செய்க், இளவல் கவிமுகில் இஜட். ஜபருல்லாஹ் ஆகியோரை அணுகி, இலக்கிய வட்டத்தை விரிவுபடுத்துங்கள். விளைச்சல் நிறைந்த பயன் தரும்; நம்புங்கள்.\nநம் பணி சிறக்க நல்லருள் துணை நிற்க, நாம் துஆ இறைஞ்சுவோம். பிற பின்னர், நேரில் –\nமு. ஜாபர் முஹ்யித்தீன்\nமுன்பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மேன்மக்களில் ஒருவர் விடப்பட்டுள்ளார். தவறாக நேரிட்டது அது. இப்போது நம்மிடையே வாழுவும் முதிர்ந்த வயதினரான – நமதூர் நூல்கடைத் தெருவில் வாழும் மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய ஜனாப் (லாயர்) முஹம்மது காஸிம் ஆன்மீகத்துறையில் ஈடுபாடு கொண்டவர். மௌளானா ரூமி அவர்களின் மஸ்னவியை மூல மொழியில் பாடக்கூடியவர். நாகை அந்தாதியை நீண்ட காலத்திற்கு முன்பு சிறிய அளவில் பதிப்பித்து தந்தவர் ஆவார். நேரத்தை ஒதுக்கி அந்த பெரியவரையும் கண்டு வந்தால் நிரம்ப செய்தி தெரியவரும்.\nமுயற்சி முழுமை பெற்று, வெற்றியாளர்களாக நீங்கள் இருவரும் வலம்வர, வாழ்ந்திட வாழ்த்துகின்றேன்.\nநமக்கு – எளியவன் என்னையும் உள்ளடக்கிய – நமக்கு நல்லருள் பொழியுமாறு நாயனிடம் பிரார்த்திப்போம். அல்லாஹ் அருள்வானாக!\nஅருளகம் , 13 , மிய்யாத்தெரு\nநாகூர் – 611002 , நாகப்பட்டினம் மாவட்டம்\n’வலை’ நாளை ‘திண்ணை‘யில் வெளியாகும், இன்ஷா அல்லாஹ். நாளைக்கு என் பிறந்தநாள் + கல்யாண நாள். அதனால் இந்தப் பரிசு. பல சமயங்களில் பரிசே தண்டனையாகப் போவதுமுண்டு!\n12/03/2011 இல் 18:16\nஎல்லாங்கிடக்கட்டும், விடுங்க நானா!\nரெண்டு விஷேசங்களையும் கொண்டாடுங்க, “கிராண்டா’.\nஎல்லாருக்குமா ரெண்டும் இப்படி “இணக்கமா” அமையும்?\nபிடியுங்கள் என் முதல் வாழ்த்துக்களை!\n“WISH YOU A GREAT, FESTIVE SUNDAY TOMORROW”\n12/03/2011 இல் 19:46\nஆபிதீன் வாழ்த்துக்கள்….! (பிரார்த்தனையுடன்)\nஎடுத்த எடுப்பிலேயே சுருட்டிட்டார் உங்களை, மஜீது காக்கா\n13/03/2011 இல் 02:35\nபிறந்த நாள், கல்யாண நாள், வலை வெளியீடு நாள் வாழ்த்துகள்\nசொல்லரசு மாமாவின் கையெழுத்து படிக்க மிகவும் கஷ்டமாகவே இருக்கும். எங்க ஜட்ஜப்பாவின் கையெழுத்தும் தான் மிகவும் மோசமாகவே இருக்கும். எப்போது அவர்கள் எழுதவே மாட்டார்கள். எழுதுவதற்கு கூட உதவியாளரை வைத்து எழுதி அதை நன்றாக படித்து பார்த்து தான் கையெழுத்து போடுவார்கள்..\n13/03/2011 இல் 05:09\nஓ! இததான் சண்டேன்னா ரெண்டுங்றாங்களா!\n13/03/2011 இல் 08:38\nபிற‌ந்த நாள் மற்றும் கல்யாண‌ நாள் வாழ்த்துக்கள். நாநா ரெண்டு லட்டு திங்க ஆசையா.\nஅன்புடன் – அஹ்மத் மொஹிதின் மற்றும் ரியாஸ்\nஎம் அப்துல் காதர் 'ஆஹா பக்கங்கள்' said,\n13/03/2011 இல் 10:09\nஉங்க ‘ரெண்டுக்கும்’ வாழ்த்துகளை இன்று சொல்லிக்கிறேன்.\n// நாகை தந்த நல்லறிஞர், மதிப்பிற்குரிய ஸையிதுனா, M. செய்யது முஹம்மது ஹஸன் சாஹிபு அவர்களை சந்தித்து பேசிட மறவாதீர்கள். // அவர்கள் எனக்கு பெரிய வாப்பா என்பது உமக்கு நான் சொல்லாத விஷயம். அதையும் இப்ப சொல்லிக்கிறேன்.\n13/03/2011 இல் 13:39\nஅஸ்மா சார்பாக அனைவருக்கும் நன்றி. ’ரெண்டும்’ இங்கே :\n15/03/2011 இல் 05:12\nவலையை படித்து வலையிலேயே விழுந்தும் விட்டேன்… பரக்கத்தா இக்கிது.. சிரிச்சு மாய முடியலை…!\n16/03/2011 இல் 09:16\nவலையில் ‘மாட்டி’க்கொண்டாகிவிட்டது! சிரித்து சிரித்துத்தான் வெளிவரவேண்டும். வண்டி ஒட்டிக்கொண்டிருக்கும்போது (நான்), சாலையில் யாராவது ஓடினால், இறைதாசனையோ மறைதாசனையோ பார்ப்பது போல் உள்ளது. இப்பல்லாம் தன்னால சிரிச்சுக்கிறதுல பிரச்சினையே இல்ல தெரியுமோ? ஹெட்ஃபோனை காதில் மாட்டிக்கொண்டால் போதும்!\n16/03/2011 இல் 17:12\nஇந்த மாயவலையில் மாட்டிக்கிட்டு வெளியவரவே ரெண்டு நாளாயிடுச்சி!\n16/03/2011 இல் 17:43\n“சிலந்தி” உங்களைஃப் பாக்கல போல!
அதிகாரிகளின் அஜாக்கிரதையால் வீணான ரூ.70 லட்சம்: பயன்பாட்டிற்கு வராத உசிலம்பட்டி நகராட்சி கட்டடம்| Dinamalar\nAdded : டிச 02, 2019 02:36\nஉள்ளாட்சி தேர்தல் விரைவில் அறிவிக்கப்படவுள்ளன.இந்நிலையில் உள்ளாட்சிகளின் தற்போதைய நிலை என்ன, கடந்த உள்ளாட்சி தேர்தல்களில் வெற்றி பெற்றவர்கள் நிறைவேற்றிய வளர்ச்சி திட்டங்கள் என்ன, தற்போதுஉள்ளாட்சிஅமைப்புகளில்மக்களை வாட்டி வதைக்கும் முக்கியபிரச்னைகள் என்ன, வார்டுகளில் அடிப்படை வசதிகள்எந்தளவுக்கு உள்ளன என உள்ளாட்சி அமைப்புகளை ரவுண்ட் அப் செய்த போது கிடைத்த\nஉள்ளாட்சி தேர்தல் விரைவில் அறிவிக்கப்படவுள்ளன.இந்நிலையில் உள்ளாட்சிகளின் தற்போதைய நிலை என்ன, கடந்த உள்ளாட்சி தேர்தல்களில் வெற்றி பெற்றவர்கள் நிறைவேற்றிய வளர்ச்சி திட்டங்கள் என்ன, தற்போதுஉள்ளாட்சிஅமைப்புகளில்மக்களை வாட்டி வதைக்கும் முக்கியபிரச்னைகள் என்ன, வார்டுகளில் அடிப்படை வசதிகள்எந்தளவுக்கு உள்ளன என உள்ளாட்சி அமைப்புகளை ரவுண்ட் அப் செய்த போது கிடைத்த தகவல்கள்...\nஉசிம்பட்டி நகராட்சியில் 24 வார்டுகளில் 30 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர். 1995 ஆண்டு உசிலம்பட்டி நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. இதுவரை நான்கு உள்ளாட்சி தேர்தல்களை சந்தித்துள்ளது.\nநகராட்சிக்காக ரூ. 70 லட்சத்தில் 2008 ல் குப்பைக் கிடங்கு அருகில் கட்டடம் கட்டப்பட்டு பயன்பாட்டிற்கு வரவில்லை. அதிகாரிகளின் திட்ட மிடல் இன்றி கட்டப்பட்ட கட்டடம் திறப்பு விழா காணாமல் சிதைந்து வருகிறது. இதனால் மக்கள் வரிப்பணம் வீணாகியுள்ளது. நகராட்சி மக்கள் தொகைக்கு ஏற்ப குடிநீர் சப்ளை இல்லை. கோடை காலங்களில் பத்து நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என்ற கோரிக்கை கிடப்பில் கிடக்கிறது.\nதற்போது திடக் கழிவு மேலாண்மைக்காக யு.வாடிப்பட்டியில் குப்பைக்கிடங்கு, பேரையூர் ரோட்டில் நுண்ணுாட்ட உரம் தயாரிப்பு மையம் அமைக்கும் பணி நடக்கிறது. நவீன எரிவாயு தகனமேடை அமைக்கப்பட்டு எட்டு மாதங்களாகியும் பயன்பாட்டுக்கு வரவில்லை. வைகை அணையில் இருந்து 24 வார்டுகளுக்கு மட்டும் ரூ. 73 கோடியில் குடிநீர் திட்டப்பணிகள் துவங்கியுள்ளன.பாதாள சாக்கடை, புதிய பஸ் ஸ்டாண்ட், புறவழிச்சாலை அமைக்க வேண்டும் என நகராட்சிவாசிகள் வலியுறுத்தி வருகின்றனர்.\nதேவராஜ், வழக்கறிஞர்: 24 வார்டுகளிலும் சமீபத்தில் தான் தார் ரோடுகள் போடப்பட்டுள்ளன. நந்தவனம் தெரு உள்ளிட்ட சில தெருக்களில் போர்டுகள் மட்டும் வைத்துள்ளனர். ஆனால் ரோடு பணிகள் நடக்கவில்லை. ஆனந்தநகர் முதல் தெருவில் வடிகால் வசதி செய்யாமல் ரோடு போட்டுள்ளதால் மழைக்காலத்தில் தண்ணீர் தேங்குகிறது. வில்லாணி ரோடு, கவணம்பட்டி ரோடு அமைத்த சில மாதங்களுக்குள் சிதைந்து வருகிறது.\nநகராட்சி முன்புள்ள தெருக்களில் சாக்கடை களுக்கு தடுப்புச்சுவர் கட்டப்படவில்லை. பெரிய வாகனங்கள் இத்தெருக்களில் செல்லும் போது விபத்திற்குள்ளாகின்றன. சாக்கடை கழிவுநீர் உசிலம்பட்டி கண்மாயில் கலக்கிறது. சாக்கடை கழிவுகள் கலக்காமல் தடுக்க வேண்டும். கண்மாயில் மழைநீரை தேக்கினால் நிலத்தடி நீர் மட்டம் உயரும்.\nகுடிநீர் தட்டுப்பாட்டில் சிக்கியிருந்த நகராட்சியில் சில ஆண்டுகளாக தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 24 வார்டுகளிலும் தற்போது குடிநீர் தட்டுப்பாடு இன்றி கிடைக்கிறது. குப்பையை முறையாக அகற்ற வேண்டும். பாதாள சாக்கடை வசதிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும்.\nகவணம்பட்டி ஊருணிகளில் சாக்கடை கழிவுநீர் கலக்கிறது. சாக்கடை கால்வாயில் பிளாஸ்டிக் கழிவுகள் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகின்றன. சுகாதார சீர்கேடும் நிலவுகிறது. இதற்கு தீர்வு காணவேண்டும். கொசுக்கள் உற்பத்தியாகாமல் இருக்க தொடர்ந்து துப்புரவு பணிகளை மேற்கொள்ள வேண்டும். உசிலம்பட்டி சாக்கடை கழிவுகள் மதுரை ரோட்டில் கொங்கபட்டி ஊருணியில் கலக்கிறது. அதையும் தடுக்க வேண்டும்.
“முழு மதுவிலக்கு” குஜராத்தில் கள்ளச்சாராயம் குடித்து 15 பேர் பலி! | www.patrikai.com\nகுஜராத் மாநிலம் சூரத்தில் கள்ளச்சாராயம் குடித்து பலியானவர்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. இது குறித்து விசாரிக்க குழு ஒன்றை மாநில அரசு அமைத்துள்ளது.\nகுஜராத்தில், பாஜகவைச் சேர்ந்த, முதல்வர் விஜய் ரூபானி தலைமையிலான அரசு செயல்பட்டு வருகிறது. இங்குள்ள சூரத் மாவட்டத்தில், கடந்த மூன்று நாட்களில், ஒன்பது பேர் மர்மமான முறையில் பலியாகி உள்ளனர். . இவர்களின் பிரேத பரிசோதனை அறிக்கையில், விஷச்சாராயம் போன்ற, ஆல்கஹால் கலந்துள்ள பானங்களை குடித்ததால், மரணம் ஏற்பட்டதாக தெரிய வந்துள்ளது.\nகுஜராத்தில் முழு மதுவிலக்கு அமலில் உள்ள நிலையில், கள்ளச்சாராயம் விற்பனை நடக்கிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதையடுத்து, ஒன்பது பேர் மரணத்திற்கான காரணம் குறித்தும், கள்ளச்சாராயம் புழங்குவது குறித்தும் விசாரிக்க அதிகாரிகளுக்கு, மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.\nபலியானவர்களில் பெரும்பாலானோர் ஜவுளித்தொழிற்சாலையில், கூலி வேலை பார்ப்பவர்கள். ஆனால், இந்த மரணம் குறித்த காரணத்தை உறுதிப்படுத்த காவல்துறையினர் மறுத்து விட்டனர்.\nமாவட்ட வளர்ச்சி அதிகாரி கே.ராஜேஷ் கூறுகையில், சம்பவம் நடந்த பகுதிகளில் மருத்துவ குழுவினர் முகாமிட்டுள்ளனர். மரணம் சம்பவித்ததற்கான காரணம் குறித்து இன்னும் உறுதி செய்யப்படவில்லை. பலியானவர்களின் உடல் உறுப்புகள், காந்தி நகரில் உள்ள தடயவியல் மையத்தில் சோதனை செய்யப்பட்டு வருகின்றன.\nவைரஸ் பரவல் காரணமாக இறப்பு நிகழ்ந்திருக்கலாம் என சிலர் கூறுகின்றனர். இதனால், உடல் உறுப்புகள், புனேயில் உள்ள தேசிய வைராலஜி மையத்திற்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.\nகுஜராத்தில் மதுவிலக்கு அமலில் உள்ளது. அம்மாநிலத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். அங்கு பணியில் இருந்த பல போலீஸ் அதிகாரிகள் உடனடியாக இடமாற்றம் செய்யப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து விசாரிக்க உயர் மட்டக்குழுவை மாநில அரசு அமைத்துள்ளது.\nஅதே நேரம், “குஜராத்தில் கள்ளச்சாராயம் கரைபுரண்டு ஓடுகிறது. இது போன்ற பலிகள் நடப்பது இது முதல் முறை அல்ல. ஆனால் வெளிப்படையான தகவல்களை மாநில அரசு சொல்ல மறுக்கிறது” என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியிருக்கின்றன.\nPrevious articleசேவ செய்யறதுதான் நோக்கம்… டைம் இருக்கறதால சினிமால நடிக்கிறேன்! : சரத்குமார்\nNext articleகர்நாடகத்தில் தமிழக இளைஞர் தாக்கப்பட்ட சம்பவம்: தலைவர்கள் கண்டனம்
Shitol 200mg Tablet in Tamil பயன்பாடு, பக்க விளைவுகள், கலவை, மாற்றுகள், முன்னெச்சரிக்கைகள் மற்றும் அறிவுரை - Shitol 200mg Tablet ke fayde, nuksan, use, upyog, price, dose, side effects in Tamil। 1mg\nமுகப்பு>Shitol>shitol 200mg tablet\nShitol Tablet க்கான பயன்கள் (Uses of Shitol Tablet in Tamil)\nShitol Tablet இன் பக்க விளைவுகள் (Side effects of Shitol Tablet in Tamil)\nShitol Tablet யை எப்படி உபயோகிப்பது (How to use Shitol Tablet in Tamil)\nஉங்கள் மருத்துவர் அறிவுறுத்திய மருந்தளவு மற்றும் காலத்திற்கு இந்த மருந்தினை எடுத்துக்கொள்ளவும். முழுதுமாக அதை விழுங்கவும். அதை சவைக்கவோ, நொறுக்கவோ அல்லது உடைக்கவோ கூடாது. Shitol 200mg Tablet -ஐ உணவுடன் அல்லது உணவில்லாமல் உட்கொள்ளலாம், ஆனால் இதனை குறிப்பிட்ட நேரத்தில் உட்கொள்வது சிறந்தது.\nShitol Tablet எப்படி செயல்படுகிறது (How Shitol Tablet works in Tamil)\nShitol 200mg Tablet மூளையில் நரம்பு செல்களின்அசாதாரணமான மற்றும அதிகப்படியான நடவடிக்கையை அழுத்துவதன் மூலம் வலிப்பினைக் கட்டுப்படுத்துகிறது.\nShitol 200mg Tablet மதுவுடன் உட்கொண்டால் அதிகப்படியான கிறுகிறுப்பு மற்றும் அமைதியின்மை உண்டாக்கக்கூடும். ஏதுமில்லை\nShitol 200mg Tablet கர்ப்பகாலத்தின்போது பயன்படுத்துவதற்கு உகந்தது அல்ல.\nShitol 200mg Tablet தாய்பாலூட்டும் போது பாதுகாப்பானது. மருந்து தாய்ப்பாலுக்குள் குறிப்பிடத்தக்க அளவு புகுவதில்லை அல்லது குழந்தைக்கு நச்சுத்தன்மையை ஏற்படுத்துவதாக எதிர்பார்க்கப்படவில்லை என்று மனித ஆய்வுகள் காட்டியுள்ளன.\nசிறுநீரக நோயினால் அவதிப்படும் நோயாளிகளில் Shitol 200mg Tablet எச்சரிக்கையுடன் பயன்படுத்தப்பட வேண்டும்.Shitol 200mg Tabletக்கான மருந்தளவு சரி செய்தல் தேவைப்படலாம். உங்கள் மருத்துவரிடம் அணுகவும்.\nகல்லீரல் நோயினால் அவதிப்படும் நோயாளிகளில் Shitol 200mg Tablet எச்சரிக்கையுடன் பயன்படுத்தப்பட வேண்டும்.Shitol 200mg Tabletக்கான மருந்தளவு சரி செய்தல் தேவைப்படலாம். உங்கள் மருத்துவரிடம் அணுகவும்.\nநீங்கள் Shitol இன் ஒரு டோஸ் தவறவிட்டால்?\nShitol இவற்றில் எந்த மருந்துடனும் உட்கொள்வதால் இரண்டில் மருந்துகளிலிருந்து ஒன்றின் பொறிமுறைகள் மாறலாம் மற்றும், சில விரும்பத்தகாத பக்க விளைவுகள் ஏற்படலாம்.\nShitol 200mg Tablet குறித்து கேள்விகள் உள்ளனவா?
மத்திய அமைச்சரவை மாலை6மணிக்கு விரிவாக்கம்: 43 பேர் பதவியேற்றனர்\nமத்திய அமைச்சரவை மாலை6மணிக்கு விரிவாக்கம் செய்யப்பட்டது: 43 பேர்\nமத்திய அமைச்சரவை இன்று மாலை6மணிக்கு விரிவாக்கம் செய்யப்பட்ட நிலையில் புதிய அமைச்சர்களாக மொத்தம் 43 பேர் பதவியேற்றனர்.\nதலைமையிலான மத்திய அரசு கடந்த 2019 ஆம் ஆண்டு பதவியேற்ற பின்னர், மத்திய அமைச்சரவை மாற்றம் செய்யப்படவில்லை. முதன்முறையாக மத்திய அமைச்சரவை விரிவாக்கம் இன்று மாலை6மணிக்கு நடைபெற்றது. அதில் தமிழகத்தின் சார்பில் மாநில தலைவர் எல்.முருகன் அமைச்சரானார்.\nஇதுதொடர்பாக கடந்த நாட்களில் உள்துறை அமைச்சர் அமித்ஷா, அகில இந்திய தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோர் பாஜக நிர்வாகிகளுடன் இறுதிக் கட்ட ஆலோசனை நடத்தினர். அமைச்சர்கள் பதவியேற்க ஏற்பாடுகளும் நடந்த நிகழ்வில்.\nபதிய அமைச்சரவையில் 13 பேர் வழக்கறிஞர்கள், ஆறு மருத்துவர்கள், இந்தியக் குடிமைப் பணியிலிருந்த ஏழு பேர், உள்ளிட்டோரும் இடம் பெற்றுள்ளனர். இது மட்டுமின்றி ஏற்கனவே மத்திய இணை அமைச்சர்களாக உள்ள ஏழு பேர் கேபினேட் அமைச்சர்களாகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளனர். தற்போது உள் துறை இணை அமைச்சராக உள்ள கிஷன் ரெட்டி அமைச்சராகப் பதவியேற்றுள்ளார்.\nமத்திய அமைச்சர்களாக இருக்கும் சிலர் தங்கள் உடல்நிலையை காரணமாக பதவி விலக விரும்பியவர் ராஜினாமா குடியரசு தலைவர் ஏற்றார். புதிய அமைச்சர்கள் பதவியேற்க வாய்ப்பாக அவர்கள் பதவி விலகியுள்ளனர்.\nமத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சந்தோஷ் கங்குவார் மற்றும் கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் ஆகியோர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதைத் தொடர்ந்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்த்தனும் ராஜினாமா செய்துள்ளார்.\nஅவர்கள் நிர்வகித்து வந்த துறைகளுக்கு புதிய அமைச்சர்கள் நியமிக்கப்படவுள்ளனர். இதுமட்டுமல்லாமல் சில மத்திய அமைச்சர்கள் மாற்றப்பட்டு அந்த இடங்களுக்கும் புதிய அமைச்சர்கள் நியமிக்கப்படுகின்றனர்.குடியரசுத் தலைவர் செயலகம் பிரதமரின் அறிவுரையை ஏற்று, கீழ்காணும் அமைச்சர்களின் ராஜினாமாவை குடியரசுத் தலைவர் உடனடியாக ஏற்றுக் கொண்டார்\n1. திரு டி வி சதானந்த கவுடா\n2. திரு ரவி சங்கர் பிரசாத்\n3. திரு தாவர் சந்த் கெலோட்\n4. திரு ரமேஷ் பொக்ரியால் 'நிஷாங்க்'\n5. டாக்டர் ஹர்ஷ் வர்தன்\n6. திரு பிரகாஷ் ஜவடேகர்\n7. திரு சந்தோஷ் குமார் கங்குவார்\n8. திரு பாபுல் சுப்ரியோ\n9. திரு தோத்ரே சஞ்சய் ஷாம்ராவ்\n10. திரு ரத்தன்லால் கட்டாரியா\n11. திரு பிரதாப் சந்திர சாரங்கி\n12. சுஷ்ரி தேபஶ்ரீ சௌந்தர்\nஇது குடியரசுத் தலைவர் செயலகம் தகவல\nமொத்தம் 43 பேர் புதிய அமைச்சர்களாக பதவியேற்றனர். இவர்களில் பலர் புதுமுகங்களாகும். இளைஞர்கள் பலருக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. முன்னாள் முதல்வர்கள்4பேர், முன்னாள் மாநில அமைச்சர்கள் 18 பேர், வழக்கறிஞர்கள் 13 பேர், மருத்துவர்கள்6பேர், இன்ஜினியர்கள்5பேர், முன்னாள் அரசு அதிகாரிகள்7பேர் இடம் பெற்றுள்ளார்கள். அதன் விபரம்:\nபுதிய அமைச்சர்களின் பட்டியலாகும்.\nதமிழ்நாட்டின் எல். முருகனை அமைச்சராக்கியதன் மூலம் பிரதமர் நரேந்திர மோடி சொல்லும் செய்தி தெளிவானது. இது நாள் வரை அதிகாரம் கிடைக்காத சமூகங்களுக்கு பதவிகளைத் தருவதன் மூலமும், அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதன் மூலமும் பாரதிய ஜனதாவின் வாக்கு வங்கியை உறுதி செய்வது ஒரு முதன்மை உத்தி. 0.பன்னீர் செல்வத்தின் மகனுக்கு பதவியை மறுத்திருப்பதன் மூலம் ஒடுக்கப்பட்ட சமூகங்களுக்கு சிறந்த செய்தி சொல்கிறார் பிரதமர் நரேந்திர மோடி.\nபொன். ராதாகிருஷ்ணன், தமிழிசை சௌந்தரராஜன், எல். முருகன், வி.பி. துரைசாமி ஆகியோருக்கு கட்சி, ஆட்சிகளில் பொறுப்பு தருவதன் மூலம் தனது இலக்கை நோக்கி பிஜேபி மெல்ல முன்னேறுவதைப் போன்றே தோன்றுகிறது. இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும் அவர்கள் செய்த இந்த உத்தி கை கொடுத்திருக்கிறது.\nஇன்னமும் சமூக நீதியை கொள்கை அளவில் மட்டுமே பேசிக்கொண்டு, அதிகாரத்தை பகிர்ந்தளிக்காமல் ஆற்றிக் கொண்டிருந்தால் நிலைமை ஒரு நாள் எல்லை மீறிப் போக வாய்ப்பு இருக்கிறது.\nஅருந்ததியர் இட ஒதுக்கீடு பற்றி பேசிக் கொண்டிருக்கும் நேரத்தில் எல். முருகன் அமைச்சராகி இருக்கிறார். அதிமுகவை எம் ஜி ஆர் உருவாக்கி அதில் அதிக அளவில் சேர்த்த மக்கள் மதுரை வீரன் படம் பார்த்த கொங்கு மக்களின் ஒரு பிரிவானவர்கள் அவர்களே அப்போது அதிமுக ஆட்சியில் அமர மேற்கு மாகாணத்தில் காரணமாக அமைந்தவர்கள் அதே பாணியில் எல்.முருகன் மத்திய இணை அமைச்சர் ஆனார்.
குடும்பத்தகராறில்2குழந்தைகளை ஆற்றில் தள்ளி கொன்ற தாய் கைது | Makkal Osai - மக்கள் ஓசை\nHome இந்தியா குடும்பத்தகராறில்2குழந்தைகளை ஆற்றில் தள்ளி கொன்ற தாய் கைது\nதஞ்சை சேவப்பநாயக்கன்வாரி 2-ம் தெருவை சேர்ந்தவர் சுரேஷ்(வயது 40). கூலி தொழிலாளி. இவருடைய மனைவி செந்தமிழ்செல்வி (37). இவர்களுக்கு சுவேதா(12) என்ற மகளும், கோகுல்செழியன்(4) என்ற மகனும் உள்ளனர். கணவன்-மனைவி இடையே குடும்பத்தகராறு இருந்து வந்தது.\nசம்பவத்தன்றும் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த செந்தமிழ்ச்செல்வி தற்கொலை செய்து கொள்வது என முடிவு செய்தார். ஆனால் தான் மட்டும் தற்கொலை செய்து கொண்டால் தனது குழந்தைகள் அனாதையாகி விடுவார்களே என்று எண்ணிய செந்தமழிச்செல்வி குழந்தைகளை கொன்று விட்டு தான் தற்கொலை செய்வது என்று எண்ணினார். அதன்படி நேற்று அதிகாலை தனது2குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு சேவப்பநாயக்கன்வாரி பகுதியில் உள்ள கல்லணைக்கால்வாய் பாலத்திற்கு வந்தார்.\nபின்னர் அவர் தனது மனதை கல்லாக்கிக்கொண்டு தான் பத்து மாதம் சுமந்து பெற்ற2குழந்தைகளையும் ஒவ்வொன்றாக ஆற்றில் தள்ளி விட்டார். பின்னர் செந்தமிழ்ச்செல்வியும் ஆற்றில் குதித்தார். அப்போது குழந்தைகள் தங்களை காப்பாற்றுமாறு சத்தம் போட்டனர். அவர்களுடைய அலறல் சத்தம் கேட்டு அந்த பகுதியில் இருந்தவர்கள் அங்கு ஓடி வந்து பார்த்தனர்.\nபின்னர் இது குறித்து தஞ்சை தீயணைப்புநிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவல் கிடைத்ததும் மாவட்ட அலுவலர் மனோபிரசன்னா உத்தரவின் பேரில் நிலைய அலுவலர் திலகர் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆற்றில் குதித்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் செந்தமிழ்ச்செல்வியை மட்டும் உயிருடன் மீட்டனர். பின்னர் அவருக்கு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.\n2 குழந்தைகளும் தண்ணீரில் அடித்துச்செல்லப்பட்டனர். அவர்களை தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து தேடி வந்தனர். இந்த நிலையில் சிறுவன் உடல் தஞ்சையை அடுத்த கண்டிதம்பட்டு பகுதியில் கல்லணைக்கால்வாயில் கரை ஒதுங்கியது. சிறுவனின் உடலை தீயணைப்புத்துறையினர் மீட்டனர். சுவேதாவும் தண்ணீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது. அவரை தொடர்ந்து தீயணைப்புத்துறையினர் தேடி வருகிறார்கள்.\nஇது தொடர்பாக போலீசார் செந்தமிழ்ச்செல்வியையும், அவருடைய கணவர் சுரேஷையும் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். இதையடுத்து செந்தமிழ்ச்செல்வி மீது போலீசார் கொலை வழக்கு உள்ளிட்ட3பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nPrevious articleதனுஷ்விடம் வாய்ப்பு கேட்ட மாளவிகா மோகனன்
ஐபிஎல் 2019, மேட்ச் 37, DC vs KXIP, முன்னோட்டம், நட்சத்திர வீரர்கள், உத்தேச XI\nShreyas Iyer vs Ravichandran Ashwin\nடெல்லி கேபிடல்ஸ் மற்றும் கிங்ஸ் XI பஞ்சாப் அணிகள் கோட்லா மைதானத்தில் 2019 ஐபிஎல் தொடரின் 37-வது போட்டியில் இன்று மோத உள்ளன. இரு அணிகளும் தலா5போட்டிகளில் வெற்றியும், 4ல் தோல்வியும் அடைந்து புள்ளி அட்டவனையில் நடுப்பகுதியில் உள்ளனர்.\nஒட்டுமொத்த நேருக்கு நேர்: டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கிங்ஸ் XI பஞ்சாப் அணிகள் ஐபிஎல் வரலாற்றில் இதுவரை 23 முறை நேருக்கு நேர் போட்டிகளில் மோதியுள்ளன. இதில் பஞ்சாப் அணி 14 போட்டிகளிலும், டெல்லி9போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.\nகோட்லா மைதானத்தில் மைதானத்தில் நேருக்கு நேர்: இந்த மைதானத்தில் இரு அணிகளும் 10 ஐபிஎல் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளன. இதில் பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகள் தலா5போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளன\n2019 ஐபிஎல் தொடரில் முதல் நேருக்கு நேர்: இவ்வருட ஐபிஎல் தொடரின் டெல்லி மற்றும் பஞ்சாப் அணிகள் மோதிய முதல் லீக் போட்டி ஏப்ரல் 8 அன்று நடந்தது. இதில் முதலில் பேட் செய்த கிங்ஸ் XI பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில்9விக்கெட்டுகள் இழப்பிற்கு 169 ரன்களை குவித்தனர். பின்னர் களமிறங்கிய டெல்லி அணியின் பேட்டிங் சொதப்பலால் 14 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.\nதொடர்ந்து மூன்று வெற்றிகளை குவித்த டெல்லி கேபிடல்ஸ் அணி மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான கடந்த போட்டியில் தோல்வியை தழுவியது. எனவே பஞ்சாப் அணிக்கு எதிராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி மீண்டும் வெற்றி பாதைக்கு டெல்லி கேபிடல்ஸ் திரும்பும் என தெரிகிறது.\nநட்சத்திர வீரர்கள்: ஷீகார் தவான், ஸ்ரெயஸ் ஐயர், பிரித்வி ஷா\nஎதிர்பாராத பேட்டிங் சொதப்பல்களால் தொடர்ந்து 4வது வெற்றியை பெற டெல்லி கேபிடல்ஸ் தவறிவிட்டது. கடந்த போட்டியில் ஷீகார் தவான் 22 பந்துகளில் 35 ரன்களை விளாசினார். பிரித்வி ஷா (24 பந்துகளில் 20 ரன்கள்) மற்றும் அக்ஸர் படேல் (23 பந்துகளில் 26 ரன்கள்) ஆகியோர் கடந்த போட்டியில் 20 ரன்களை கடந்தனர். இவர்களை தவிர டெல்லி முண்ணனி பேட்ஸ்மேன்களான ரிஷப் பண்ட், ஸ்ரெயஸ் ஐயர், காலின் முன்ரோ ஆகியோர் கடந்த போட்டியில் ஒற்றை இலக்கங்களில் தங்களது விக்கெட்டுகளை இழந்து வெளியேறினர். பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் இந்த குறைகளை நிச்சயமாக டெல்லி வீரர்கள் களைய வேண்டும்.\nநட்சத்திர வீரர்கள்: காகிஸோ ரபாடா, கிறிஸ் மோரிஸ், அமித் மிஸ்ரா\nகாகிஸோ ரபாடா 19 விக்கெட்டுகளை வீழ்த்தி ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியோர் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். எனவே இதனை தக்க வைக்கும் வகையில் பஞ்சாப் அணிக்கு எதிராக தனது யார்கர் பந்துவீச்சின் மூலம் பேட்ஸ்மேன்களை தடுமாற செய்வார். கிறிஸ் மோரிஸ் (11 விக்கெட்டுகள்) டெல்லி அணியில் ஒரு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அமித் மிஸ்ரா, இஷாந்த் சர்மா, அக்ஸர் படேல் சிறந்த எகனாமிக்கல் பௌலராகளாக உள்ளனர். இருப்பினும் கேப்டன் இவர்களிடமிருந்து சில விக்கெட்டுகளை எதிர்பார்க்கிறார்.\nஉத்தேச XI: ஷீகார் தவான், பிரித்வி ஷா, காலின் முன்ரோ, ஸ்ரெயஸ் ஐயர் (கேப்டன்), ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), கிறிஸ் மோரிஸ், அக்ஸர் படேல், சந்தீப் லாமிச்சனே/கீமோ பால், அமித் மிஸ்ரா, காகிஸோ ரபாடா, இஷாந்த் சர்மா\nபஞ்சாப் அணி ராஜஸ்தான் அணிக்கு எதிரான கடந்த போட்டியில் சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றது. எனவே இதே ஆட்டத்திறனை டெல்லி அணிக்கு எதிராகவும் வெளிப்படுத்தி மற்றுமொரு வெற்றியை பெறும் என நம்பப்படுகிறது.\nகே.எல்.ராகுல் ஒரு சிறப்பான ரன் குவிப்பில் ஈடுபட்டு 387 ரன்களுடன் இந்த சீசனில் அதிக ரன்களை எடுத்தோர் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளார். கிறிஸ் கெய்ல்9போட்டிகளில் பங்கேற்று 358 ரன்களை எடுத்துள்ளார். எனவே பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் டெல்லி அணிக்கு எதிராக ஒரு சிறப்பான பேட்டிங்கை தொடக்கத்தில் வெளிபடுத்துவார்கள் என தெரிகிறது.\nடாப் ஆர்டர் சொதப்பினால் மயான்க் அகர்வால் (225 ரன்கள்), டேவிட் மில்லர் (171 ரன்கள்) ஆகியோர் மிடில் ஆர்டரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள்.\nநட்சத்திர வீரர்கள்: ரவிச்சந்திரன் அஸ்வின், முகமது ஷமி\nசாம் கர்ரான் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான முந்தைய லீக் போட்டியில் சிறப்பாக செயல்பட்டு 11 ரன்களை மட்டுமே தனது பௌலிங்கில் அளித்து4விக்கெட்டுகளை வீழ்த்தினார். இவரது இந்த பௌலிங் ஆட்டத்தின் வெற்றியை பஞ்சாப் வசம் மாற்றியது. ஆல்-ரவுண்டரான இவர் மீண்டும் தனது இயல்பான பந்துவீச்சை மேற்கொள்வார் என தெரிகிறது.\nமுகமது ஷமி (12 விக்கெட்டுகள்) மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் (11 விக்கெட்டுகள்) ஆகியோர் பஞ்சாப் அணியின் நட்சத்திர பௌலர்களாக உள்ளனர். டெல்லி அணிக்கு எதிராக தனது சிறப்பான பௌலிங்கை இவர்கள் மேற்கொள்வார்கள் என தெரிகிறது. அர்ஸ்தீப் சிங் ராஜஸ்தான் அணிக்கு எதிரான கடந்த போட்டியில் ஜாஸ் பட்லர் மற்றும் ரகானே ஆகியோரது விக்கெட்டுகளை வீழ்த்தினார். டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் அவர் ஆடும் XI-ல் தேர்வு செய்யப்பட்டால் மீண்டும் தனது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்பதில் சந்தேகமில்லை.\nஉத்தேச XI: கே.எல்.ராகுல்(விக்கெட் கீப்பர்), கிறிஸ் கெய்ல், மயான்க் அகர்வால், சஃப்ரஸ் கான், டேவிட் மில்லர், மந்தீப் சிங், ரவிச்சந்திரன் அஸ்வின் (கேப்டன்), அர்ஸ்தீப் சிங்/முருகன் அஸ்வின், முகமது ஷமி, சாம் கர்ரான், முஜீப் யுர் ரகுமான்.
ஐந்து கேமரா கொண்ட எல்.ஜி. ஸ்மார்ட்போன் டீசர் || LG V40 ThinQ with Penta cameras teased in official video\nஐந்து கேமரா கொண்ட எல்.ஜி. ஸ்மார்ட்போன் டீசர்\nபதிவு: செப்டம்பர் 27, 2018 12:42\nஎல்.ஜி. நிறுவனத்தின் ஃபிளாக்ஷிப் வி40 தின்க் ஸ்மார்ட்போனின் டீசர் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டு இருக்கிறது. #LGV40ThinQ\nஎல்.ஜி. நிறுவனத்தின் புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் டீசர் வீடியோ வெளியிடப்பட்டு இருக்கிறது.\nஅக்டோபர் 3-ம் தேதி அறிமுகமாக இருக்கும் புதிய வி40 தின்க் ஸ்மார்ட்போனில் மொத்தம் ஐந்து கேமராக்கள் வழங்கப்படுகிறது. மூன்று பிரைமரி கேமராக்கள் மற்றும் இரண்டு டூயல் செல்ஃபி கேமராக்கள் வழங்கப்பட்டுள்ளது.\nஸ்மார்ட்போன் சேன்டு-பிளாஸ்ட் தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்டு இருப்பதால், பயன்படுத்தும் போது மென்மையான உணர்வு ஏற்படும் என எல்.ஜி. தெரிவித்துள்ளது. மேலும் இந்த தொழில்நுட்பம் ஸ்மார்ட்போனில் கீறல்கள், கைரேகை அச்சு அல்லது அழுக்கு போன்றவற்றை தவிர்க்கும் தன்மை கொண்டுள்ளது.\nபுதிய எல்.ஜி. ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனின் பக்கவாட்டில் மெட்டல் ஃபிரேம், பின்புறம் கைரேகை சென்சார் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. புதிய பிளாட்டினம் கிரே, கார்மைன் ரெட் மற்றும் மொரக்கன் புளு உள்ளிட்ட நிறங்களை கொண்டுள்ளது.\nஎல்.ஜி. வி40 தின்க் ஸ்மார்ட்போனில் 6.4 இன்ச் ஸ்கிரீன், மெல்லிய பெசல்கள், ஒரே கையில் பயன்படுத்த ஏதுவாக உருவாக்கப்பட்டுள்ளது. இத்துடன்2~ 3எம்.எம். அளவில் இலுமினேஷன் சென்சார் மற்றும் லேசர் சென்சார் கேமராவின் முன் மற்றும் பின்புறம் வைக்கப்பட்டுள்ளது.\nஎல்.ஜி. வி40 தின்க் ஸ்மார்ட்போனின் டீசர் வீடியோவை கீழே காணலாம்..,
தமிழகத்திற்கு எதிராக களமிறங்கும் நிர்மலா சீதாராமன்.. என்ன செய்யப்போகிறது தமிழக பாஜக? | TN BJP has to condemn Nirmala Sitharaman for her stand against Tamilnadu - Tamil Oneindia\nதமிழகத்திற்கு எதிராக களமிறங்கும் நிர்மலா சீதாராமன்.. என்ன செய்யப்போகிறது தமிழக பாஜக?\n| Published: Thursday, December 20, 2018, 15:42 [IST]\nசென்னை: பெரிய அதிர்ச்சியொன்றை பரிசளித்துள்ளார், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன். மேகதாது அணை விவகாரத்தில் தமிழகத்திற்கு எதிராக கர்நாடக எம்.பி.க்கள் டிசம்பர் 27ம் தேதி நாடாளுமன்ற வளாகத்தில், நடத்த உள்ள போராட்டத்தில் பங்கேற்க முடிவு செய்துள்ளார் அவர்.\nநிர்மலா சீதாராமன், தமிழக பாஜகவின் முகமாக பார்க்கப்பட்டவர் என்பதை தாண்டி அவர் மத்திய அமைச்சர் என்பதையும் மறந்து இப்போராட்டத்தில் தமிழகத்திற்கு எதிராக களமிறங்கியுள்ளார்.\nநிர்மலா சீதாராமன் கர்நாடகாவிலுள்ள லோக்சபா தொகுதியில் போட்டியிட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் கிடையாது. எந்த மாநிலத்தில் இருந்து வேண்டுமானாலும் தேர்ந்தெடுக்கப்பட கூடிய, ராஜ்யசபா எம்.பி.யாகத்தான் கர்நாடகாவில் இருந்து தெர்ந்தெடுக்கப்பட்டவர்.\nநிலைமை இப்படி இருக்கும்போது, தமிழகத்தை பூர்வீகமாக கொண்டவர், அதுவும் கூட காவிரி பாயும், திருச்சி மாவட்டத்தை சேர்ந்தவரான நிர்மலா சீதாராமன் கர்நாடகாவுடன் கை கோர்த்துக்கொண்டு, தமிழகத்திற்கு வரும் காவிரியை தடுக்க ஒரு அணை கட்ட ஆதரவு தெரிவித்துள்ளது என்பதை கற்பனை செய்து கூட பார்க்க முடியாது. ஆனால், அதை செய்துள்ளார் நிர்மலா சீதாராமன். அவர் நினைத்திருந்தால் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்காமல் இருந்திருக்க முடியும். ஆனால், கூட்டத்தில் பங்கேற்றதோடு போராட்டத்திற்கு முகூர்த்தம் குறித்துள்ளார்.\nஉச்சநீதிமன்ற உத்தரவுக்கு எதிராக\nடெல்லியில் இன்று மத்திய அமைச்சர் சதானந்தகவுடா தலைமையில், நடைபெற்ற கர்நாடக எம்.பி.க்கள் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேகதாது அணையை உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக கட்டி முடிப்பது என்று பிடிவாதம் காட்டும் கர்நாடகா, அதற்கு வலு சேர்க்க எம்.பி.க்கள் கூட்டத்தை கூட்டி போராட்டத்தை அறிவித்துள்ளது.\nபுதிதாக எந்த ஒரு அணையை கட்ட வேண்டுமானாலும், தமிழகம் உட்பட சம்மந்தப்பட்ட4மாநிலங்களின் ஒப்புதலுடன்தான் செய்யவேண்டும் எந்ற உச்சநீதிமன்ற தீர்ப்பு காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளது. இதை பச்சை அநியாயம் என்று குழந்தைக்கும் தெரிந்த விஷயத்திற்கு, மத்திய அமைச்சராக இருக்க கூடிய நிர்மலா சீதாராமன் பச்சைக்கொடி காட்டியுள்ளார்.\nமேகதாது அணை கட்ட பூர்வாங்க ஆய்வுகளுக்கு மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் அனுமதியளித்ததே துரோகம் எனும்போது, துரோகத்திற்கு வக்காலத்து வாங்கி நடக்கும் ஒரு அநியாய போாராட்டத்தில் நிர்மலா சீதாராமன் பங்கேற்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்திற்கு எதிரான துரோகங்களால், பிரதமர் மோடியையே goback என்று சொன்ன தமிழகம், இனி நிர்மலா சீதாராமனை எப்படி எதிர்கொள்ளும் என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஎன்ன செய்யும் தமிழக பாஜக\nதமிழகத்திற்கு எதிரான போராட்டத்தில் நிர்மலா சீதாராமன் கலந்து கொள்ளவுள்ளதால், தமிழக பாஜகவினர் அதற்குப் பதிலடியாக போராட்டம் நடத்துவார்களா ? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. குறைந்தபட்சம், உடனடியாக, நிர்மலா சீதாராமனுக்கு தமிழக பாஜக கண்டனம் தெரிவிக்குமா?\nநிர்மலா சீதாராமன் நடவடிக்கைக்கு எதிராக அதிரடி பதிலடியாக தமிழிசை டெல்லியில் போய்ப் போராட்டம் நடத்துவாரா? இதன் மூலம், தமிழக பாஜக உயிர்ப்போடு உள்ளது என்பதை அவர் நிரூபிப்பாரா என்று அடுத்தடுத்த கேள்விகள் எழுகின்றன.\nதமிழகத்திற்கு எதிராக போராட்டம் நடத்தப்போகும், நிர்மலா சீதாராமன், கஜா புயல் பாதித்த காவிரி டெல்டா மாவட்டங்களில்2நாட்கள் தங்கி பார்வையிட்டார். புயல் பாதித்த பல நாட்கள் கழித்துதான் என்றபோதிலும், இவரது வருகை பெரிதாக பேசப்பட்டது. ஆனால், அதே காவிரி டெல்டா மாவட்டங்களை பாலைவனமாக்கும் திட்டத்திற்காக நிர்மலா சீதாராமன் வரிந்து கட்டி நிற்பதை பார்க்கும்போது, டெல்டா மீதான பாசம் வெறும் கண் துடைப்புதானா என்ற கேள்வி எழுகிறது. காவிரி டெல்டா மீது உண்மையான அக்கறை இருக்குமானால் இவர் மேகதாது அணை கூடாது என்று அல்லவா சொல்லியிருக்க வேண்டும்?\nமத்திய அமைச்சராக நடுநிலை இல்லை\nகர்நாடக ராஜ்யசபா எம்.பி. என்ற ஒரே காரணத்திற்காக, இவர் கர்நாடகத்திற்கு ஆதரவான நிலைப்பாட்டைக் கடைப்பிடித்தால் மத்திய அமைச்சர் என்ற நடுநிலையுடன இருக்க வேண்டிய பொறுப்பிலிருந்து தவறுகிறார். சதானந்தகவுடாவும் அதே தவறைத்தான் செய்கிறார். குறைந்தபட்சம் அவர் லோக்சபா எம்.பி. பெங்களூர் வடக்கு தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர். மக்களின் கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டியவர். எனவே வேறு வழியின்றி இதை செய்வதாக எடுத்துக்கொண்டாலும், நிர்மலா சீதாராமனுக்கு இதற்கான அவசியம் என்ன வந்தது என்ற கேள்வி எழாமல் இல்லை. நிர்மலா சீதாராமனின் தமிழகத்திற்கு எதிரான செயல்பாட்டுக்கு, தமிழக பாஜக எப்படி பதிலடி கொடுக்கப்போகிறது? அனைவர் மனதிலும் இப்போது எழுந்துள்ள ஒரே கேள்வி இதுதான்.\nmekedatu nirmala sitharaman மேகதாது நிர்மலா சீதாராமன்\nWill the Tamilnadu BJP condemn union minister Nirmala Sitharaman for her stand against Tamilnadu in Cauvery issue?\nStory first published: Thursday, December 20, 2018, 15:42 [IST]
முற்றிலும் CORELDRAW X7 ஐ நீக்க எப்படி - எப்படி செய்வது - 2019\nமுற்றிலும் உங்கள் கணினி இருந்து CorelDraw நீக்க எப்படி\nஉள்நுழைவு - இது கணக்கின் தனிப்பட்ட அடையாளங்காட்டி, இது கடவுச்சொல்லுடன், அனைத்து தளங்களிலும் மற்றும் அங்கீகாரத்திற்கு தேவைப்படும் பயன்பாடுகளிலும் உள்ளது. நிச்சயமாக, அவர் Odnoklassniki உள்ளது, இன்று நாம் அவரை அடையாளம் எப்படி சொல்ல வேண்டும்.\nஎங்கள் உள்நுழைவை சமூக நெட்வொர்க்கில் சரி\nசமீப காலம் வரை, பயனர்பெயர் சுயவிவர அமைப்புகளில் குறிப்பிடப்பட்டுள்ளது, ஆனால் இப்போது இந்தத் தகவல் இல்லை. மேலும், கணக்கு அடையாளங்காட்டி இப்போது எல்லோரும் அதை தேடும் நினைப்பற்ற இடத்திலேயே மறைக்கப்பட்டுவிட்டால், அதைச் செய்தால், நினைவில் வைக்க முடியாது. ஆனால், முதல் விஷயங்கள் முதலில்.\nசிறிது கீழே Odnoklassniki வீட்டில் பக்கம் கீழே உருட்டும்.\nகிடைக்கக்கூடிய சமூக நெட்வொர்க் அம்சங்களின் தடுப்பில், தேர்ந்தெடுக்கவும் கொடுப்பனவுகள் மற்றும் சந்தாக்கள்.\nஅடுத்த, தொகுதி "கணக்கு எண் சரி"ஒரு பணப்பையை மாதிரி குறிக்கப்பட்ட, பொத்தானை கிளிக் செய்யவும் "வைப்பு நிதிகள்".\nபாப் அப் விண்டோவில் தோன்றும் கணக்கு நிரப்பு வடிவத்தில், தாவலுக்குச் செல்க "டெர்மினல்கள்".\nஆதரவு செலுத்தும் முறைகளின் பட்டியல் மற்றும் அவற்றின் முனையங்கள் கீழே உள்ள தகவலைப் படியுங்கள். இந்த சாளரத்தின் கீழ், மினியேச்சர் லேபலின் வலதுபுறத்தில் "முனையத்தில் செலுத்த உங்கள் உள்நுழைவு" எங்களுக்கு ஆர்வமுள்ள ஒரு அடையாளங்காட்டி இருக்கும்.\nமிகவும் எளிமையானது என்றாலும் மிகவும் எளிமையானது என்றாலும், நீங்கள் OK.RU சமூக நெட்வொர்க்கில் உங்கள் சொந்த உள்நுழைவை கண்டுபிடிக்க முடியும். துரதிருஷ்டவசமாக, இந்த (சில நேரங்களில்) தேவையான தகவலைப் பெறுவதற்கான பிற விருப்பங்களும் வழங்கப்படவில்லை. அண்ட்ராய்டு மற்றும் iOS இயங்கும் சாதனங்களில் இருந்து, பயன்பாட்டு கடையில் தொடர்புடைய அட்டை கட்டணம், டேப் பயன்படுத்தப்படுகிறது "டெர்மினல்கள்" மற்றும் பிற அல்லாத மொபைல் வங்கி விருப்பங்கள் அங்கு காணவில்லை.\nஇது எங்கள் கட்டுரையை முடிக்கிறது. இது உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறோம் மற்றும் உங்கள் கேள்விக்கு பதில் கண்டுபிடிக்க உதவியது. இப்பொழுதெல்லாம், நாங்கள் மதிப்பாய்வு செய்துள்ள கேள்விகளில் கேள்விகள் இருந்தால், அவற்றை கருத்துக்களில் கேட்கலாம்.\nவிண்டோஸ் 10, 8 மற்றும் விண்டோஸ்7இல் ரேம் வட்டை உருவாக்க எப்படி\nWord இல் ஒரு பக்கத்தை நீக்குவது எப்படி?\nPDF எடிட்டிங் ஆன்லைன்\nபின்னணி, தீம், ஸ்கிரீன்சேவர், சின்னங்கள், மெனு START என்பதை எப்படி மாற்றுவது? விண்டோஸ்7ஐ உருவாக்குதல்.\nஃபோட்டோஷாப் ஒரு அடுக்கு நகலெடுக்க எப்படி\nசமூக நெட்வொர்க்குகள் மற்றும் பல பிற வளங்களின் ஒரு பயனரின் வாழ்க்கையில், பல்வேறு காரணங்களுக்காக, உங்கள் விருப்பமான மற்றும் சுவாரஸ்யமான தளத்திற்கு அணுகல் மூடியுள்ளது. எடுத்துக்காட்டாக, நிர்வாகத்தின் திசையில் எந்த அமைப்பின் அலுவலகத்திலும், கணினி நிர்வாகி Odnoklassniki வலைத்தளத்தை தடைசெய்தார், வெளிப்படையாக உற்பத்தித்திறனை அதிகரிக்க. மேலும் படிக்க\nFixWin இல் விண்டோஸ் 10 பிழை திருத்தம்\nகணினிக்கு மானிட்டரை இணைக்கிறது
கரையோரங்களில் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற கோரிக்கை! - Vanakkam London\nஅம்பாறை கடற் கரையோரங்களில் பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவு பொருட்கள், அதிகளவாக தென்படுவதை அவதானிக்க கூடியதாக இருக்கின்றது.\nஅம்பாறை- பாண்டிருப்பு முதல் கல்முனை உள்ளிட்ட பகுதிகளில் இவ்வாறான கழிவு பொருட்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.\nகழிவு பரவலானது கரையோர மீனவர்களது மீன்பிடி தொழிலுக்கு பெரும் சிரமங்களை கொடுக்கின்றது.\nஆகவே இவ்விடயத்தில் சம்மந்தப்பட்ட அதிகாரிகள், உடனடியாக விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.\nPrevious articleமலையக தலைமைகள் பொதுவானதொரு நிலைப்பாட்டுக்கு வந்தால் கை கோர்க்க தயார்!\nNext articleபிரியங்கா காந்தி கடும் தாக்கு-கோழையை போல் செயல்படும் மோடி!
லிச்சனுக்கும் மைக்கோரைசாவிற்கும் இடையிலான வேறுபாடு\nலிச்சென் மற்றும் மைக்கோரைசே ஆகியவற்றுக்கு இடையேயான முக்கிய வேறுபாடு என்னவென்றால், லிச்சென் என்பது ஒரு ஆல்கா / சயனோபாக்டீரியம் மற்றும் ஒரு பூஞ்சைக்கு இடையில் இருக்கும் ஒரு பரஸ்பர சங்கமாகும், அதே நேரத்தில் மைக்கோரைசா என்பது ஒரு உயர் தாவரத்தின் வேர்களுக்கும் பூஞ்சைக்கும் இடையில் நிகழும் பரஸ்பர தொடர்பு.\nபரஸ்பரவாதம் என்பது இரண்டு வகையான உயிரினங்களுக்கு இடையில் நிகழும் மூன்று வகையான கூட்டுவாழ்வுகளில் ஒன்றாகும். மற்ற இரண்டு வகைகளைப் போலன்றி, பரஸ்பரவாதம் சங்கத்தில் இருக்கும் இரு கூட்டாளர்களுக்கும் பயனளிக்கிறது. லிச்சென் மற்றும் மைக்கோரைசே ஆகியவை பரஸ்பர சங்கங்களின் இரண்டு பொதுவான எடுத்துக்காட்டுகள். இரண்டும் சூழலியல் ரீதியாக முக்கியமான உறவுகள். லிச்சனின் இரண்டு கட்சிகள் ஆல்கா அல்லது சயனோபாக்டீரியம் மற்றும் ஒரு பூஞ்சை. மறுபுறம், மைக்கோரைசாவின் இரண்டு கட்சிகள் உயர்ந்த தாவரத்தின் வேர்கள் மற்றும் ஒரு பூஞ்சை.\n1. கண்ணோட்டம் மற்றும் முக்கிய வேறுபாடு 2. லிச்சன் என்றால் என்ன 3. மைக்கோரைசே என்றால் என்ன 4. லிச்சனுக்கும் மைக்கோரைசாவிற்கும் இடையிலான ஒற்றுமைகள் 5. பக்கவாட்டு ஒப்பீடு - அட்டவணை வடிவத்தில் லைச்சென் Vs மைக்கோரைசே 6. சுருக்கம்\nலிச்சென் என்றால் என்ன?\nலிச்சென் என்பது ஒரு ஆல்கா / சயனோபாக்டீரியம் மற்றும் ஒரு பூஞ்சைக்கு இடையில் இருக்கும் பரஸ்பர உறவு. இந்த சங்கத்தில், ஒளிச்சேர்க்கை மூலம் உணவு உற்பத்தி செய்வதற்கு ஒரு தரப்பினர் பொறுப்பேற்கிறார்கள், மற்ற தரப்பினர் தண்ணீரை உறிஞ்சுவதற்கும் தங்குமிடம் வழங்குவதற்கும் பொறுப்பாவார்கள். ஒளிச்சேர்க்கை என்பது லைச்சனின் ஒளிச்சேர்க்கை கூட்டாளர். ஒளிச்சேர்க்கை மூலம் கார்போஹைட்ரேட்டுகள் அல்லது உணவை உற்பத்தி செய்வதற்கு இது பொறுப்பு. இது ஒரு பச்சை ஆல்கா அல்லது சயனோபாக்டீரியமாக இருக்கலாம். இருவருக்கும் குளோரோபில்ஸ் இருப்பதால் ஒளிச்சேர்க்கை செய்ய முடிகிறது.\nஇருப்பினும், பச்சை ஆல்கா மற்றும் சயனோபாக்டீரியாவை ஒப்பிடும் போது, ​​ஆல்காக்கள் சயனோபாக்டீரியாவை விட பூஞ்சைகளுடன் லைகன்களை உருவாக்குவதற்கு அதிக பங்களிப்பு செய்கின்றன. மைக்கோபியோன்ட் என்பது லிச்சனின் பூஞ்சை கூட்டாளர். இது தண்ணீரை உறிஞ்சுவதற்கும், ஒளிச்சேர்க்கைக்கு நிழலை வழங்குவதற்கும் பொறுப்பாகும். வழக்கமாக, அஸ்கொமைசெட்டுகள் மற்றும் பாசிடியோமைசீட்களின் பூஞ்சைகள் ஆல்காவுடன் அல்லது சயனோபாக்டீரியாவுடன் இந்த வகையான கூட்டுறவு தொடர்பை உருவாக்குகின்றன. பொதுவாக, லிச்சனில், ஒரு வகை பூஞ்சைகளை மட்டுமே காண முடியும் - இது ஒரு அஸ்கொமைசீட் அல்லது ஒரு பாசிடியோமைசீட்டாக இருக்கலாம். மரத்தின் பட்டை, வெளிப்படும் பாறை மற்றும் உயிரியல் மண் மேலோட்டத்தின் ஒரு பகுதியிலும் லைச்சன்களைக் காணலாம். அது மட்டுமல்லாமல், உறைந்த வடக்கு, சூடான பாலைவனங்கள், பாறை கடற்கரைகள் போன்ற தீவிர சூழல்களின் கீழ் லைகன்கள் வாழ முடியும்.\nலைச்சன்கள் பல முக்கியமான செயல்பாடுகளை வழங்குகின்றன. அவர்கள் தங்கள் சுற்றுப்புறங்களுக்கு மிகவும் உணர்திறன் உடையவர்கள். எனவே, அவை சுற்றுச்சூழல் குறிகாட்டிகளாக செயல்படும் மாசுபாடு, ஓசோன் குறைவு, உலோக மாசுபாடு போன்ற நிகழ்வுகளை குறிக்க முடியும். மேலும், லைகன்கள் இயற்கை நுண்ணுயிர் எதிர்ப்பிகளை உற்பத்தி செய்கின்றன, அவை மருந்துகளை தயாரிக்க பயன்படுகின்றன. மேலும், வாசனை திரவியங்கள், சாயங்கள் மற்றும் மூலிகை மருந்துகளை தயாரிக்க லைகன்கள் பயனுள்ளதாக இருக்கும்.\nமைக்கோரைசே என்றால் என்ன?\nமைக்கோரிசா ஒரு பரஸ்பர உறவின் மற்றொரு எடுத்துக்காட்டு. இது ஒரு உயர்ந்த தாவரத்தின் வேர்களுக்கும் பூஞ்சைக்கும் இடையில் நிகழ்கிறது. வேர்களுக்கு தீங்கு விளைவிக்காமல் பூஞ்சை உயர்ந்த தாவரத்தின் வேர்களில் வாழ்கிறது. உயர்ந்த ஆலை பூஞ்சைக்கு உணவை வழங்குகிறது, அதே நேரத்தில் பூஞ்சை மண்ணிலிருந்து தாவரத்திற்கு நீர் மற்றும் ஊட்டச்சத்துக்களை உறிஞ்சிவிடும். எனவே, இந்த பரஸ்பர தொடர்பு இரு கூட்டாளர்களுக்கும் நன்மைகளை வழங்குகிறது. மைக்கோரைசே சுற்றுச்சூழல் ரீதியாக முக்கியமானது. ஏனென்றால், தாவர வேர்களுக்கு ஊட்டச்சத்துக்கள் கிடைக்காதபோது, ​​பூஞ்சை ஹைஃபாக்கள் பல மீட்டர் வளர்ந்து நீர் மற்றும் ஊட்டச்சத்துக்களை, குறிப்பாக நைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டாசியம் ஆகியவற்றை வேர்களுக்கு கொண்டு செல்லக்கூடும். எனவே, இந்த கூட்டுவாழ்வு சங்கத்தில் உள்ள தாவரங்களில் ஊட்டச்சத்து குறைபாடு அறிகுறிகள் ஏற்படுவது குறைவு. வாஸ்குலர் தாவரங்களில் சுமார் 85% எண்டோமிகோரிஹைசல் சங்கங்களைக் கொண்டுள்ளது. மேலும், பூஞ்சை தாவரத்தை வேர் நோய்க்கிருமிகளிலிருந்து பாதுகாக்கிறது. எனவே, மைக்கோரைசே சுற்றுச்சூழல் அமைப்புகளில் மிக முக்கியமான சங்கங்கள்.\nமைக்கோரைசாவின் இரண்டு முக்கிய வகைகள் எக்டோமிகோரிர்ஹை மற்றும் எண்டோமிகோரிஹைசே. எக்டோமிகோரிஹைசே ஆர்பஸ்குலஸ் மற்றும் வெசிகிள்களை உருவாக்குவதில்லை. மேலும், அவற்றின் ஹைஃபாக்கள் தாவர வேரின் கார்டிகல் செல்களுக்குள் ஊடுருவுவதில்லை. இருப்பினும், எக்டோமிகோரிஹைசே மிகவும் முக்கியமானது, ஏனெனில் அவை மண்ணில் உள்ள ஊட்டச்சத்துக்களை ஆராயவும், வேர் நோய்க்கிருமிகளிடமிருந்து தாவர வேர்களைப் பாதுகாக்கவும் தாவரங்களுக்கு உதவுகின்றன. இதற்கிடையில், எண்டோமிகோரிஹைசில், பூஞ்சை ஹைஃபாக்கள் தாவர வேர்களின் கார்டிகல் செல்களுக்குள் ஊடுருவி வெசிகிள்ஸ் மற்றும் ஆர்பஸ்குல்களை உருவாக்குகின்றன. எக்டோமிகோரிர்ஸை விட எண்டோமிகோரிஹைஸ் மிகவும் பொதுவானது. அஸ்கோமிகோட்டா மற்றும் பாசிடியோமிகோட்டாவைச் சேர்ந்த பூஞ்சைகள் எக்டோமிகோரிஹைசல் அசோசியேஷனை உருவாக்குவதில் ஈடுபட்டுள்ளன, க்ளோமெரோமைகோட்டாவிலிருந்து வரும் பூஞ்சைகள் எண்டோமிகோரிஹைசேவை உருவாக்குவதில் ஈடுபட்டுள்ளன.\nலிச்சனுக்கும் மைக்கோரைசாவிற்கும் உள்ள ஒற்றுமைகள் என்ன?\nலிச்சென் மற்றும் மைக்கோரைசே இரண்டு வெவ்வேறு இனங்களுக்கு இடையில் இருக்கும் இரண்டு வகையான பரஸ்பர கூட்டுவாழ்வு உறவுகள். மேலும், இரண்டு கூட்டாண்மைகளும் எப்போதும் ஒரு பூஞ்சை சம்பந்தப்பட்டவை. இரு தரப்பினரும் இரு உறவுகளிலும் பயனடைகிறார்கள். மேலும், லைச்சென் மற்றும் மைக்கோரைசா இரண்டும் சுற்றுச்சூழல் ரீதியாக வாழ்வாதாரத்திற்கு சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்தவை.\nலிச்சனுக்கும் மைக்கோரைசாவிற்கும் உள்ள வேறுபாடு என்ன?\nலிச்சென் மற்றும் மைக்கோரைசா இரண்டு பொதுவான பரஸ்பர உறவுகள். லிச்சன் ஒரு பூஞ்சைக்கும் சயனோபாக்டீரியம் அல்லது பச்சை ஆல்காவிற்கும் இடையில் நிகழ்கிறது, அதே நேரத்தில் மைக்கோரைசா ஒரு பூஞ்சை மற்றும் தாவர வேர்களுக்கு இடையில் நிகழ்கிறது. எனவே, இது லிச்சனுக்கும் மைக்கோரைசாவிற்கும் உள்ள முக்கிய வேறுபாடு. மேலும், பெரும்பாலும் அஸ்கொமைசெட்டுகள் மற்றும் பாசிடியோமைசெட்டுகள் லைகன்களை உருவாக்குவதில் பங்கேற்கின்றன, அதே நேரத்தில் பாசிடியோமைசீட்கள், குளோமரோமைசீட்கள் மற்றும் சில அஸ்கொமைசெட்டுகள் மைக்கோரைசாவை உருவாக்குவதில் பங்கேற்கின்றன. எனவே, இதுவும் லிச்சனுக்கும் மைக்கோரைசாவிற்கும் உள்ள வித்தியாசம்.\nசுருக்கம் - லிச்சென் Vs மைக்கோரிஹை\nலிச்சென் என்பது ஒரு ஆல்கா / அல்லது சயனோபாக்டீரியம் மற்றும் ஒரு பூஞ்சைக்கு இடையிலான தொடர்பு. மறுபுறம், மைக்கோரிசா என்பது ஒரு பூஞ்சைக்கும் உயர்ந்த தாவரத்தின் வேர்களுக்கும் இடையிலான தொடர்பு. எனவே, இது லிச்சனுக்கும் மைக்கோரைசாவிற்கும் உள்ள முக்கிய வேறுபாடு. இரு சங்கங்களும் பரஸ்பரவாதத்தின் பொதுவான எடுத்துக்காட்டுகள். மேலும் அவை சுற்றுச்சூழல் முக்கியத்துவத்தையும் கொண்டுள்ளன.\n1. “லைச்சென் என்றால் என்ன?” பிரிட்டிஷ் லைச்சென் சொசைட்டி, இங்கே கிடைக்கிறது. 2. “மைக்கோரிசா.” ஆஸ்திரேலிய தேசிய தாவரவியல் பூங்கா, இங்கே கிடைக்கிறது.\n1. “எங்கள் ஜப்பானிய சரிகை இலை மேப்பிளில் பார்மேலியா லிச்சென்” பிளிக்கர் வழியாக ஜே ப்ரூ (சிசி பிஒய்-எஸ்ஏ 2.0) எழுதியது.\nஐசி சாம்பியன்ஷிப்பிற்கான மல்யுத்த 25 இல் விளாடிமிர் கோஸ்லோவ் வெர்சஸ் ஜேபிஎல்?உங்களுக்கு பிடித்த ஜெரிகோ Vs HBK போட்டி எது?10 புள்ளிகளை யார் விரும்புகிறார்கள்? 18 சர்வதேச நட்பு மற்றும் 20 ECQ போட்டிகளுக்கான வெற்றியாளர்களை (அல்லது உறவுகளை) கணிக்கவும்!தளபதி எஃகு டி.சி.dennis vs usஎளிய மற்றும் கெட்ட vs vs கெட்டில் பெல் நுழைகிறதுதரம் vs அளவுஃப்ரெடி வி.எஸ். ஜேசனுக்கு இறுதி வரவுகளில் உள்ள பாடல் என்ன?\nவேதியியல் மற்றும் பிசிசார்ப்ஷன் இடையே வேறுபாடுவடித்தல் மற்றும் பிரித்தெடுத்தல் இடையே வேறுபாடுஏலம் மற்றும் சலுகைக்கு இடையிலான வேறுபாடுஅனுமதிக்க மற்றும் அனுமதிக்கும் வித்தியாசம்மண்டை ஓடு மற்றும் கிரானியம் இடையே வேறுபாடுவரலாறு மற்றும் புராணங்களுக்கு இடையிலான வேறுபாடுமுட்டை நூடுல்ஸ் மற்றும் பாஸ்தா இடையே வேறுபாடுஅடினோமா மற்றும் அடினோகார்சினோமா இடையே வேறுபாடு
Todays Oracle Speaks Rasi palan 19th April 2022 | தெய்வீக வாக்கு: இந்த ராசியினருக்கு புதிய பணிக்கான வாய்ப்பு உருவாகும்... (ஏப்ரல் 19, 2022) – News18 Tamil\nதெய்வீக வாக்கு: இந்த ராசியினருக்கு புதிய பணிக்கான வாய்ப்பு உருவாகும்... (ஏப்ரல் 19, 2022)\nRasi palan | உங்களால் தீர்வு காண முடியாத பிரச்சினையை மறந்து விடுவது நல்லது. உங்களுடன் இணைந்து பணியாற்ற ஆர்வம் உள்ள ஒருவரை நீங்கள் இன்று சந்திக்கக் கூடும்.\nLast Updated : April 19, 2022, 08:03 IST\nஉண்மையை வெளிப்படுத்த இன்று அழகான நாள் ஆகும். இதற்கு முன்பே இதுபோன்ற வாய்ப்புகள் உங்களுக்கு கிடைத்திருந்தாலும், அது இந்த அளவுக்கு திறன் வாய்ந்ததாக இருந்திருக்காது. மனதில் அடக்கி வைத்திருப்பதை கொட்டி விடுங்க. இனி புதியதொரு தொடக்கம் வர இருக்கிறது.\nஉங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - கழுகு\nநீங்கள் ஏற்கனவே எடுத்த முடிவை மறு பரிசீலனை செய்வது அரிதான ஒன்றுதான். ஆனால், இப்போது மறு யோசனை செய்வதை நீங்கள் உணர்வீர்கள். பிறர் நலனுக்காக உடனடி முடிவு எடுக்க வேண்டியிருக்கலாம். நீங்கள் முன்பு செய்த உதவிக்கு பலன் கிடைக்க இருக்கிறது.\nஉங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - மிளகு\nநீங்கள் மாபெரும் காரியத்தை செய்து முடித்திருந்தாலும் அதற்கு உடனடி அங்கீகாரம் எளிதாக கிடைக்காது. பணியிடத்தில் நேர்மறையான போக்கு தென்படலாம். ஆனால், அது வழக்கத்தை விட மெதுவானது தான். உங்கள் பதிலடிக்காக சிலர் காத்துக் கொண்டிருக்கின்றனர்.\nஉங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - பழைய சைக்கிள்\nமிகுந்த சிக்கலான விஷயங்களுக்கும் கூட உங்கள் அனுபவத்தால் தீர்வு காண்பீர்கள். உங்களுக்கான நல்ல காலம் பெருகி வருவதை நீங்களே உணர முடியும். இந்த வாரத்தில் உடல் நலக் கோளாறுகள் ஏற்படலாம்.\nஉங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - பெரிய கப்\nஉங்கள் பழைய தவறுகளால் சில வடு ஏற்பட்டிருக்கலாம். ஆனால், அனைத்தையும் மன்னிக்க வேண்டிய நேரமிது. இன்றைக்கு திடீர் ஆச்சரியம் ஏற்படலாம். பெரும்பாலும் பழைய நண்பர் அந்த ஆச்சரியத்தை தர கூடும். நீண்ட காலமாக மனதில் நீடித்த குழப்பத்திற்கு தீர்வு கிடைக்கலாம்.\nஉங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - மயில் இறகு\nமிக ஆழமான, அர்த்தமுள்ள விவாதங்கள் நடைபெறுவதற்கு உகந்த நாள் இதுவாகும். அதனை பயனுள்ளதாக மாற்றி கொள்ள உங்கள் பங்களிப்பை சரியாக வழங்க வேண்டும். ஒருமுக மனதுடன் செயல்பட்டீர்கள் என்றால் அதற்குரிய பலன் கிடைக்கும்.\nவாழ்வில் தற்போதைய சிக்கலுக்கு மத்தியில் புதிய அத்தியாயம் தொடங்க இருக்கிறது. உங்கள் பணியிடத்தில் பாராட்டு கிடைக்கலாம். குறுகிய பயணம் ஒன்றை மேற்கொள்வீர்கள். உங்களுடன் காதலில் உள்ள நபருடன் கூடுதல் நேரம் செலவழிப்பீர்கள்.\nஉங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - பிரமிடு\nஉங்களைப் பற்றிய செய்தி ஒன்று வேகமாகப் பரவி கொண்டிருக்கிறது. உங்களை இதுவரையில் சந்திக்காத ஒருவர் இப்போது சந்திக்க நேரிடலாம். டூல்ஸ் அல்லது ஸ்பேர் பார்ட்ஸ் சார்ந்த தொழில் செய்து வருகிறீர்கள் என்றால், பணியாளர்களுக்கு பற்றாக்குறை ஏற்படலாம்.\nஉங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - மரகத கல்\nநீண்ட காலத்திற்குப் பிறகு உங்கள் மனதிற்கு சற்று ஆறுதல் கிடைக்கலாம். புதிய பணிகளுக்கான வாய்ப்புகள் உருவாக இருக்கிறது. அதை என்னவென்று கவனியுங்கள். உங்கள் உடன் பிறந்தவர்களுக்கு நிதி சார்ந்த நெருக்கடி ஏற்படலாம்.\nஉங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - வாத்து\nஉங்களால் தீர்வு காண முடியாத பிரச்சினையை மறந்து விடுவது நல்லது. உங்களுடன் இணைந்து பணியாற்ற ஆர்வம் உள்ள ஒருவரை நீங்கள் சந்திக்கக் கூடும். உங்கள் மனதில் இப்போது புத்தாக்க சிந்தனைகள் நிறைய உருவாகிக் கொண்டிருக்கும்.\nஉங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - பட்டு நூல்\nமிக எளிமையான கண்ணோட்டம் கொண்டிருப்பதால் உங்கள் பணியும் எளிமையாக நிறைவு பெறலாம். மிகுந்த எதிர்பார்ப்பு தான் சில சமயங்களில் தேவையற்ற சிரமங்களை கொண்டு வரும். சின்ன கொண்டாட்ட நிகழ்வு ஒன்று நடைபெற இருக்கிறது. அதில், அனைவரின் கவனத்தையும் பெறுவீர்கள்.\nஉங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - டிசைனர் கடிகாரம்\nபுதிய பணி வாய்ப்பு கிடைக்க இருக்கிறது. அதை கவனமுடன் பரிசீலனை செய்யுங்கள். உங்களிடம் சில விஷயங்களை பேசுவதற்கு சரியான தருணம் எதிர்ப்பார்த்து உங்கள் பெற்றோர் காத்திருக்கின்றனர். வீட்டிற்கு விருந்தினர்கள் வர கூடும். பண வரவு அதிகரிக்கும்.\nஉங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - புறா
மிதாலி ராஜ் 10000 ரன்கள் பூர்த்தி செய்து புதிய சாதனை! - தினசரி தமிழ்\nஏப்ரல் 22, 2021, 4:16 மணி வியாழக்கிழமை\nமிதாலி ராஜ் 10000 ரன்கள் பூர்த்தி செய்து புதிய சாதனை!\n12/03/2021 1:51 மணி\nசர்வதேச கிரிக்கெட்டில் 10,000 ரன்களைப் பூர்த்தி செய்துள்ளார் இந்திய கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜ்.\nஇந்திய கிரிக்கெட்டில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி, சர்வதேச அளவில் முன்னணி அணிகளில் ஒன்றாக இருப்பதற்கு முக்கியக் காரணமாக இருப்பவர், மூத்த வீராங்கனை மிதாலி ராஜ்.\nஒரு வீராங்கனையாகவும் கேப்டனாகவும் இந்திய மகளிர் கிரிக்கெட்டில் பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளார் மிதாலி ராஜ். 1999-ம் ஆண்டு தனது முதல் ஒருநாள் கிரிக்கெட்டை விளையாடிய மிதாலி ராஜ் மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் 200 ஒருநாள் ஆட்டங்களை விளையாடிய முதல் வீராங்கனை என்கிற சாதனையைச் சமீபத்தில் நிகழ்த்தினார்.\n2017-ல் மகளிர் ஒரு நாள் கிரிக்கெட்டில் 6,000 ரன்கள் குவித்த முதல் வீராங்கனை என்ற உலக சாதனையைப் படைத்தார். இதுவரை 10 டெஸ்டுகளிலும் 211 ஒருநாள், 89 டி20 ஆட்டங்களிலும் விளையாடியுள்ளார்.\n2005, 2017 ஒருநாள் உலகக் கோப்பைப் போட்டிகளின் இறுதிச்சுற்றுகளில் இந்திய அணிக்குத் தலைமை தாங்கிய பெருமையும் மிதாலி ராஜுக்கு உண்டு.\nசர்வதேச கிரிக்கெட்டில் தனது 21-வது வருடத்தைக் கடந்த ஜூன் மாத இறுதியில் பூர்த்தி செய்தார் மிதாலி. இவ்வளவு காலம் வேறு எந்த வீராங்கனையும் சர்வதேச கிரிக்கெட்டில் நீடித்ததில்லை என்பதே அவருடைய பெருமையை நன்கு உணர்த்தும். 1999, ஜூன் 26 அன்று, 16 வயதில் அயர்லாந்து அணிக்கு எதிராகச் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார் மிதாலி ராஜ். ஜெட் வேகத்தில் 21 வருடங்கள் ஓடிவிட்டன.\nஇந்நிலையில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது ஒருநாள் ஆட்டத்தில் 36 ரன்களை எடுத்தபோது சர்வதேச கிரிக்கெட்டில் 10,000 ரன்களைப் பூர்த்தி செய்தார் மிதாலி ராஜ்.\nசர்வதேச கிரிக்கெட்டில் 10,000 ரன்களை எடுத்த 2-வது வீராங்கனை மற்றும் முதல் இந்திய வீராங்கனை ஆகிய பெருமைகளை அவர் பெற்றுள்ளார். இங்கிலாந்தைச் சேர்ந்த சார்லோட் எட்வர்ட்ஸ் முதல் வீராங்கனையாக 10,000 ரன்கள் எடுத்துள்ளார். அவர் 309 ஆட்டங்களில் 10,273 ரன்கள் எடுத்துள்ளார்.\nசர்வதேச கிரிக்கெட்டில் மிதாலி ராஜ் – 10,001 ரன்கள், சராசரி – 46.73\nடெஸ்டுகள்: 663 ரன்கள், சராசரி 51.00\nஒருநாள்: 6974 ரன்கள், சராசரி 50.53\nடி20: 2364 ரன்கள், சராசரி 37.52
பட்டி மன்றங்களும் கருத்துக் களமாடல்களும் தமிழ் மக்களை விடுவிக்க உதவுமா? | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்\nமக்கள் நீதி மய்யத்தின் 2ஆம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு\nபிரிட்டிஷ் கொலம்பியாவின் பல்வேறு பகுதிகளுக்கு பனிச்சரிவு எச்சரிக்கை!\nசோமாலிய தாக்குதல்: உயிரிழப்புகள் 11ஆக அதிகரிப்பு\nநாடாளுமன்ற தொகுதியில் பிரதமரை எதிர்த்து விவசாயிகள் போட்டி\n‘இடாய்’ சூறாவளி தாக்கம்: மொசாம்பிக்கில் உயிரிழப்புகள் அதிகரிப்பு\nபட்டி மன்றங்களும் கருத்துக் களமாடல்களும் தமிழ் மக்களை விடுவிக்க உதவுமா?\nJanuary 20, 2019 8:34 am GMT\nகடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் ஒரு கருத்தரங்கு நடந்தது. அதில் ஓர் ஊடகவியலாளர், ஒரு மருத்துவர், ஒரு பொறியியலாளர் ஒரு மதத்தலைவர். ஒரு பட்டிமன்றப் பேச்சாளர் ஆகியோர் உரையாற்றினர். இதில் ஊடகவியலாளர் சார்பில் உரையாற்றிய வித்தியாதரன் கூட்டமைப்பை நோக்கிப் பல கூரான கேள்விகளைக் கேட்டார். முடிவில் தம்மை நோக்கிக் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு சுமந்திரன் பதில் கூறினார்.\nஇதிலவர் கூறிய பதில்களைக் குறித்து விவாதிப்பதென்றால் ஒரு கட்டுரை போதாது. அது இக்கட்டுரையின் நோக்கமன்று. மாறாக இவ்வாறான கேள்வி பதில் கருத்தரங்குகள் பற்றிய ஒரு தொகுக்கப்பட்ட பார்வையை இக்கட்டுரை முன்வைக்கின்றது. கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த கூட்டத்தைப் போன்றதொரு கூட்டம் கடந்த ஆண்டு யாழ்ப்பாணத்தில் நடந்தது. அதில் சுமந்திரனின் ஜூனியர் சயந்தன், சுமந்திரன் மீது பரவலாக முன்வைக்கப்படும் கேள்விகளைத் தொகுத்து முன்வைத்தார். அங்கேயும் சுமந்திரன் கடைசியாகப் பதில் கூறினார்.\nஇவ்விரு கூட்டங்களுக்கும் இடையில் மற்றொரு கூட்டம் கடந்த மாதம் கொழும்பில் இடம்பெற்றது. கம்பன் கழகம் அதை ஒழுங்குபடுத்தியது. முதலில் கொழும்பு தமிழ்ச்சங்கத்தில் அது இடம்பெறுவதாகவிருந்தது. ஆனால் தமிழ்ச் சங்கத்தின் நிர்வாகக் குழுவில் உள்ள சிலர் கடுமையாக எதிர்த்தனர். அதனால் கூட்டம் வேறொரு மண்டபத்திற்கு மாற்றப்பட்டது. தமிழ் மக்களின் துயரங்களைப் பொழுது போக்கு விவாதமாக மாற்றுவது சரியா? என்று அதை எதிர்த்தவர்கள் கேட்டார்கள்.\nதமிழ்ச்சங்கத்தின் நிர்வாகக் குழுவிலிருந்து வழக்கறிஞரும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் முக்கியஸ்தருமாகிய ஒருவர் அந்நிகழ்வை முன் கூட்டியே புறக்கணித்து விட்டார். ஈ.பி.ஆர்.எல்.எவ்வும் தமிழ் மக்கள் கூட்டணியும் அதைப் புறக்கணிக்க வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டது. எனவே ஈ.பி.ஆர்.எல்.எவ் பங்குபற்றவில்லை. ஆனால் விக்னேஸ்வரனின் சார்பாக அருந்தவபாலன் பங்குபற்றினார்.\nஏற்கனவே வாக்குறுதியளித்ததன் பிரகாரம் வாக்குத்தப்பக் கூடாது என்பதற்காகவும் அதோடு இது போன்ற மேடைகளை எதிர்கொண்டு தமது கட்சியின் தரப்பு நியாயங்களை முன்வைக்க வேண்டும் என்பதற்காகவும் தாம் கலந்து கொண்டதாக அருந்தவபாலன் எனக்குக் கூறினார். அவர் அவ்வாறு கலந்துகொள்வதை விக்னேஸ்வரனும் ஊக்குவித்ததாக அறிய முடிகிறது.\nஅம்மேடையில் அருந்தவபாலன் தன் தரப்பு நியாயங்களை முன்வைத்தார். அவரைக் குறுக்கிட்டு கேள்வி கேட்ட கம்பன் கழகத்தவர்களையும் நன்கு சமாளித்தார். எனினும் கம்பவாருதி ஜெயராஜ் கேட்ட சில கேள்விகளுக்கு அவர் கூறிய பதில்கள் அழுத்தமாக இருக்கவில்லை என்றும் ஓர் அவதானிப்பு உண்டு.\nமேற்கத்தைய ஜனநாயகப் பண்பாட்டில் இது போன்ற விவாதங்களுக்கு அதிக முக்கியத்துவம் உண்டு. அவை சுவாரஸ்யமானவையும், ஆழமானவையும் கூட. அங்கே பொய் கூறித் தப்ப முடியாது. உணர்ச்சி பொங்கப் பேசி பார்வையாளர்களை உசுப்பேத்தவோ திசை திருப்பவோ முடியாது. ஏனெனில் அவ்விவாதங்கள் மேற்கத்தைய ஜனநாயகப் பண்பாட்டின் சிறப்பியல்புகளில் ஒன்றாகும். மேற்கத்தைய ஜனநாயகமானது ஆசிய ஆபிரிக்கா லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கு எப்படிப்பட்ட ஜனநாயக அனுபவத்தை வழங்கியது என்பதில் விமர்சனங்கள் உண்டு.\nஆனாலும் தமது சொந்தப் பிரசைகளுக்கு அந்நாடுகள் ஒப்பீட்டளவில் ஆகக்கூடிய பட்ச ஜனநாயகத்தை வழங்கியிருக்கின்றன. கிராம்சி கூறுவது போல அந்த ஜனநாயகம் கூட நாடாளுமன்றத்தின் பின் மறைவெடுத்திருக்கும் ராங்கிகளால் பாதுகாக்கப்படும் ஒன்றுதான் என்பதில் உண்மையுண்டு. ஆட்சியதிகாரத்திற்கு ஆபத்து வரும்போது மறைவிலிருக்கும் ராங்கிகள் வெளிவரும்.\nஎனினும் ஜனநாயகம் எனப்படுவது ஐரோப்பியப் பண்பாட்டின் ஒரு கனிதான். அது அந்த நாகரீகத்தின் வரலாற்று வளர்ச்சிப்போக்கில் உருவாகிய ஒரு கனி. அது ஐரோப்பிய அறிவியல் பண்பாட்டின் ஒரு விளைவு. அதனால் அதன் இதயம் அதிகபட்சம் அறிவுபூர்வமானது. பெரும்பாலான மேற்கத்தைய ஜனநாயகப் பரப்புக்களில் அறிவே அதிகபட்சம் அடித்தளமாயுள்ளது. உணர்ச்சி அல்ல. இவ்வாறு அதிகபட்சம் அறிவை அடிச்சட்டமாகக் கொண்ட ஒரு ஜனநாயகப் பரப்பில் நடக்கும் மேற்சொன்ன விவாதங்களும் அதிகபட்சம் அறிவு பூர்வமானவை.\nஆனால் ஆசிய ஆபிரிக்க லத்தீன் அமெரிக்க ஜனநாயகங்களில் அறிவை விட உணர்ச்சிகரமாக விடயங்களே அதிகம் ஆதிக்கம் செலுத்துவதுண்டு. இனம், மதம், சாதி பிராந்தியம் போன்றவற்றை உணர்ச்சிகரமாகக் கையாளும் ஜனநாயகப் பரப்புக்களே இங்கு அதிகம். இவ்வாறான ஒரு ஜனநாயகப் பண்பாட்டில், நிகழக்கூடிய விவாதங்களும் அதிகம் அறிவுபூர்வமானவைகளாக இருப்பது குறைவு. இந்நாடுகளில் தேர்தல் காலங்களில் வழங்கப்படும் வாக்குறுதிகள் பெருமளவுக்கு உணர்ச்சிகரமானவை அல்லது கவர்ச்சி கருதிச் சோடிக்கப்பட்டவை.\nஇந்த இடத்தில் ஓர் உள்ளுர் உதாரணத்தைக் கூறலாம். வட மாகாணசபையின் பதவிக்காலம்; முடிந்தபின் அச்சபையின் அடைவுகளைப் பற்றிய மதிப்பீட்டைச் செய்யும் நோக்கத்தோடு ஒரு சிறு சந்திப்பு ஒழுங்கு செய்யப்பட்டது. ‘வண் டெக்ஸ்’ எனப்படும் ஓர் அரசசார்பற்ற நிறுவனத்தால் ஒழுங்குபடுத்தப்பட்ட இச்சந்திப்பு யாழ் பொது நூலகத்தின் குவிமாட மண்டபத்தில் இடம்பெற்றது. இதில் பங்கு பற்றிய வடமாகாணசபை எதிர்க்கட்சித்தலைவர் தவராசா ஒரு விடயத்தைச் சுட்டிக்காட்டிப் பேசினார். அது விக்னேஸ்வரனின் அரசியல் அறம் பற்றியதாகும்.\nஎந்தத்தேர்தல் விஞ்ஞாபனத்திற்கு மக்கள் வாக்களித்தார்களோ அதற்கு தான் விசுவாசம் இருக்க வேண்டும் என்று விக்னேஸ்வரன் கூறுகிறார். ஆனால் தவராசா மேற்படி சந்திப்பில் கூறினார் அப்படி யதார்த்தத்தில் யாரும் தேர்தல் விஞ்ஞாபனத்துக்கு நூறுவீதம் நேர்மையாக நடந்து கொள்ள முடியாது என்று.\nஏனெனில் தேர்தல் விஞ்ஞாபனங்கள் வாக்குவேட்டை இலக்குடன் எழுதப்படுபவை என்பதே பிரதான காரணம் ஆகும். இப்படிப்பட்டதோர் ஜனநாயகப்பரப்பில் பகிரங்க விவாதங்கள் எப்படி தர்க்கபூர்வமானவைகளாகவும் நேர்மையானவைகளாகவும் இருக்கும்?\nஓர் ஆங்கில முது மொழி உண்டு. தர்க்கத்தின் நோக்கம் எதிரியை வெல்வதல்ல. உண்மையை நிலநாட்டுவதே என்று. ஆனால் மேற்படி விவாதங்களில் எந்த உண்மையை நிலைநாட்டப்படுகிறது? அல்லது எந்த உண்மையை நிலைநாட்டுவதற்காக மேற்படி விவாதங்கள் ஒழுங்கு செய்யப்படுகின்றன?\nஇக்கட்டுரையின் தொடக்கத்தில் கூறப்பட்ட இரு நிகழ்வுகளிலும் சுமந்திரனே நடுநாயகம். இவ்வாறான விவாதங்களை எதிர்கொள்ளத் தேவையான துணிச்சலும் அனுபவமும் அவருக்குண்டு. கடந்த ஒக்ரோபர் ஆட்சிக்குழப்பத்தின் போது மகிந்த – மைத்திரி அணிக்கு எதிராக நீதிமன்றம் ஏறி வாதாடியதன் மூலம் அவருடைய புகழ் மேலும் அதிகரித்துள்ளது. எனவே அவர் துணிந்து இப்படிப்பட்ட விவாத அரங்குகளை எதிர்கொள்கிறார். இதில் ஒரு ஜனநாயக ஒழுக்கம் உண்டு.\nஅரசியலைத் தர்க்கபூர்வமாக அணுகவிழையும் ஓர் அறிவியல் ஒழுக்கம் உண்டு. ஆனால் மேற்சொன்ன இரு நிகழ்வுகளிலும் சுமந்திரனுக்குச் சாதகமான ஒரு களமே திட்டமிட்டு உருவாக்கப்பட்டதாகக் கருதப்படுகிறது. சயந்தன் கேட்ட கேள்விகள் ஏற்கனவே முகநூல்ப்பரப்பில் பரவலாகப் பகிரப்படுபவை. சயந்தன் சுமந்திரனின் ஜூனியர். எனவே ஒரு இளம் சட்டத்தரணி மூத்த சட்டத்தரணியிடம் கேட்ட கேள்விகள் அவை.\nஆனால் அவை கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த கூட்டத்தில் வித்தியாதரன் கூராகக் கேள்வி கேட்டார். அதே சமயம் சுமந்திரனுக்கு நோகக் கூடாது என்று இடைக்கிடை அவருக்கு சாமரம் வீசினார். ஒரு புறம் சுமந்திரனை அளவுக்கு மிஞ்சிப்புகழ்ந்தபடியே இன்னொரு புறம் அவரை நோக்கிப் பலமான கேள்விகளையும் கேட்டார். சுமந்திரன் எல்லாக் கேள்விகளுக்கும் பதில் கூறவில்லை. சில பதில்களை போகிடி போக்காகக் கூறிச் சென்றார். சில பதில்களைச் சுற்றிவளைத்துச் சொன்னார். ஓர் அரசியல்வாதியாக அவர் கேள்விகளை எதிர்கொண்டார்.\nஒரு சட்டத்தரணியாக கேள்விகளை எதிர்கொண்டார். ஆனால் ஒரு தமிழ்த்தேசியவாதியாக கேள்விகளை எதிர்கொண்டாரா? அதேசமயம் வித்தியாதரன் சுமந்திரனைப் புகழாமல் கேள்விகளைக் கேட்டிருந்திருந்தால் அந்த இடத்தில் அவருடைய ஊடக தர்மம் இன்னும் அதிகமாக நிலைநாட்டப்பட்டிருக்கும்.\nஎனவே மேற்சொன்ன இரண்டு கூட்டங்களும் பதில் கூறுபவருக்கு சாதகமான ஓர் ஒழுங்கமைப்பை கொண்டிருந்ததாகப் பொதுவான ஓர் அவதானிப்பு உண்டு. இதுதவிர இக் கூட்டங்களில் சுமந்திரன் கிட்டத்தட்ட சம்பந்தரின் மரபைப் பின்பற்றியதாகவும் ஓர் அவதானிப்பு உண்டு. சம்பந்தர் தான் கலந்து கொள்ளும் கூட்டங்களில் எல்லாரையும் பேச விட்டு கடைசியாகப் பேசுவார். அது ஏறக்குறைய ஒரு தொகுப்புரை போல இருக்கும். ஆனால் அதற்குப்பின் யாரும் கேள்வி கேட்பதற்கு இடமளிக்கப்படுவதில்லை.\nஒரு கட்சித் தலைவர் என்ற அடிப்படையில் கட்சிக்கூட்டங்களுக்கு இது பொருந்தக்கூடும். ஆனால் பகிரங்கக் கேள்வி பதில் விவாதங்களுக்கு இது பொருந்தாது. சுமந்திரனின் கூட்டங்களும் இப்படித்தான் முடிகின்றன. அவர் பதில் சொன்னபின் கேள்வி கேட்கும் ஒழுங்கு இருப்பதில்லை. இது மேற்சொன்ன கூட்டங்களில் காணப்படும் அடிப்படைப் பலவீனம்.\nஅதே சமயம் மேற்கத்தைய ஜனநாயகப் பரப்பில் நிகழும் விவாதங்களோடு இப்படிப்பட்ட கூட்டங்களை ஒப்பிட முடியாமலிருப்பதற்கு வேறொரு பலமான காரணமும் உண்டு. அது என்னவெனில் தமிழில் ஏற்கெனவே பலமாகக் காணப்படும் பட்டிமன்றப் பாரம்பரியத்தின் சாயல் இவற்றிற்கு உண்டு என்பது. பட்டிமன்றப் பாரம்பரியம் எனப்படுவது அதிகபட்சம் பொழுது போக்குக்கானது.\nபழந்தமிழ் இலக்கியங்களில் ஈடுபாடு கொண்டவர்கள் அல்லது ஒரு பொழுது போக்காக விவாதங்களை ரசிப்பவர்கள் அல்லது விவாத முடிவுகளை சொந்த வாழ்க்கைக்கோ அல்லது பொது வாழ்க்கைக்கோ உரிய வழிகாட்டுதல்களாக எடுத்துக்கொள்ளாதவர்கள் மேற்படி பட்டிமன்றங்கள் அல்லது சொல்லாடு களங்கள் அல்லது சுழலும் சொற்போர்கள் போன்றவற்றை ரசிக்கிறார்கள். ஆனால் ஓர் இனப்படுகொலையிலிருந்து தப்பிப்பிழைத்த மக்கள் கூட்டத்தின் அரசியலை விவாதப் பொருளாக்கி ரசிக்கக்கூடாது என்று கடந்த மாதம் கம்பன் கழகத்தின் நிகழ்வைப் புறக்கணித்தவர்கள் கூறுகிறார்கள்.\nஇவ்வாறான விமர்சனங்களின் பின்னணிக்குள் வைத்தும் தமிழ் மக்கள் மத்தியில் இடம்பெற்று வரும் விவாத அரங்குகளையும், கேள்வி பதில் அரங்குகளையும் பார்க்க வேண்டும். ஆயுதப் போராட்டத்திற்கு முன்னரான அப்புக்காத்து அரசியலின் தோல்விகள் தந்த அநுபவத்தின் பின்னணியில் வைத்தும் இதைப் பார்க்க வேண்டும். பொன்னன் ஒரு விண்ணன் என்று சொல்வார்கள். ஆனால் எல்லாத் தமிழ் விண்ணர்களையும் சிங்கள அரசியல்வாதிகள் ஏமாற்றியிருக்கிறார்கள்.\nஎனவே நீதிமன்றத்தில் விண்ணர்களாக ஜொலித்தவர்கள் நாடாளுமன்றத்தில் வெள்ளி நாக்குகளால் கர்ஜித்தவர்கள் நடைமுறை அரசியலில் என் தோல்வியுற்றார்கள் என்ற கேள்வியின் பின்னணிக்குள் வைத்தும் மேற்படி கருத்தாடல் களங்களையும் பார்க்க வேண்டும்.\nஜெனீவாக்கூட்டத் தொடரின் பின்னணியில் வடக்கு கிழக்கில் நடந்த போராட்டங்கள்\nகடந்த செவ்வாய்க்கிழமை கிழக்கில் கடையடைப்பு. ஆர்ப்ப...\nகிளிநொச்சியிலிருந்து ஜெனீவா வரையிலுமான ஆர்ப்பாட்டங்கள்\nஜெனீவாவில் ஈரமான தரையில் நூற்றுக்கணக்கான தமிழர்கள்...\nஜெனீவாக்கூட்டத் தொடரின் பின்னணியில் வடக்கு கி...\nகிளிநொச்சியிலிருந்து ஜெனீவா வரையிலுமான ஆர்ப்ப...\nகாணாமலாக்கப்பட்டோரின் போராட்டம் வெளிப்படுத்து...\nகோடீஸ்வரனுக்குக் கிடைக்காத வெற்றியும் சுமந்தி...\nகூட்டமைப்பின் அடுத்த தலைவர் சுமந்திரனா?...\nசுதந்திர தினத்தை கரிநாளாக அனுஸ்டித்த தமிழர்கள...
தாரமாக, தாயாக வாழ்ந்தவர் இப்போது கோயிலில் இருக்கும் குலதெய்வம், தமிழ்நாடு செய்திகள் - தமிழ் முரசு Tamil Nadu News in Tamil, Tamil Murasu\nதாரமாக, தாயாக வாழ்ந்தவர் இப்போது கோயிலில் இருக்கும் குலதெய்வம்\n13 Sep 2019 18:05 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 15 Sep 2019 14:12\nசென்னை: தாம்பரத்தை அடுத்த எருமையூர் கிராமத்தை பூர்வீகமாகக் கொண்டவர் ரவி. சென்னை மாநகராட்சியில் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி ரேணுகா கடந்த 2006ம் ஆண்டு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் இறந்துவிட்டார்.\nமனைவியை விட்டு ஒரு நாளும் பிரியாத ரவி ரேணுகாவின் இறப்பை மறக்க துன்பப்பட்டார். சொந்த வீடு கட்ட வேண்டும் என்று மனைவியின் ஆசையை அவரது மரணம் வரை ரவியால் நிறைவேற்ற இயலவில்லை. இப்போது மனைவிக்காக9அடி நீளம்9அடி அகலத்தில் 16 அடி உயரத்தில் கோயில் ஒன்றை ரவி எழுப்பி உள்ளார்.\n‘ரேணுகா அம்மாள் திருக்கோயில்’ என்று அதற்கு பெயர் சூட்டியுள்ளார். மனைவியின் உருவத்தை பளிங்குக் கல்லால் செதுக்கி சிலையாக்கி கோயிலினுள் வைத்து தினமும் வணங்கி வருகிறார் ரவி. மேலும் தமது கைக்கடிகாரம், மோதிரம் ஆகியவற்றில் மனைவி ரேணுகாவின் உருவத்தைப் பொறித்துள்ளார். அவரது சட்டைப் பையில் எந்நேரமும் மனைவியின் படம் இருக்கிறது. ரவி-ரேணுகா தம்பதிக்கு விஜய், சதீஷ் என்னும் இரு மகன்கள். அவர்களும் அன்றாடம் தங்களது தாயை கோயிலில் வணங்கி வருகின்றனர்.\n“மனைவி உயிருடன் இருந்தபோது அவ்வப்போது சண்டையிட்டாலும் ஒரு மணி நேரத்தில் சமாதானம் ஆகி சகஜ நிலைக்கு வந்துவிடுவோம். ஆனால் இன்று அவர் இல்லாத நிலையில் நானும் இறந்திருப்பேன். இரண்டு மகன்களின் நலன் கருதி நான் வாழ்ந்து வருகிறேன்” என்று கண்களில் கண்ணீர் கொப்பளிக்க செய்தியாளரிடம் ரவி கூறினார். “தாரமாகவும் தாயாகவும் பாசம் காட்டிய ரேணுகா இப்போது எங்களது குலதெய்வமாக மாறிவிட்டார்,” என்று அவர் மேலும் தெரிவித்தார்.
தாயின் கருவறையில் சிசு அடிக்கும் லூட்டிகள்..!! - Tinystep\nதாயின் கருவறையில் சிசு அடிக்கும் லூட்டிகள்..!!\nதாயின் கருவறையில் பத்து மாதங்களாய் வளரும் குழந்தைகள் எப்பொழுதும் 24*7 என உறங்கிக்கொண்டே இருக்கிறார்கள் என்று எண்ணினால், நாம் நினைப்பது பெரிய தவறு ஆகும். பின் குழந்தைகள் தாயின் இருட்டு கருவறையில் என்ன செய்யும் என்று நீங்கள் எண்ணலாம்?! அவர்கள் அழுவர்களா? உணவு உண்பார்களா? இது போன்ற கேள்விகள் உங்கள் மனதில் எழலாம்.\nஉங்களின் இக்கேள்விகளுக்கெல்லாம் பதிலளிக்கும் வகையிலே இப்பதிப்பினை சமர்ப்பிக்கிறோம். இந்த பதிப்பில் தாயின் கருவறையில் குழந்தைகள் என்னென்ன சேஷ்டைகளை புரிகின்றனர் என்பதை நீங்களே படித்தறியலாம்; புகைப்படங்களையும் காணொளியையும் கண்டும் அறியலாம்.\nகருவறையில் உள்ள குழந்தைகள், தாயின் குரலை தவிர எந்தவொரு சப்தம் மிகுந்த ஒலியை கேட்க நேரிட்டாலும் அவர்கள் பயம் கொள்வர்.\nகருவறையில் உள்ள குழந்தைகளுக்கும் விக்கல் எடுக்கும்; அப்படி கருவிற்கு விக்கல் ஏற்பட்டால், தாயின் வயிறு ஏறி இறங்குவதை பெண்களால் உணர முடியும்.\nதாய் உட்கொள்ளும் அத்தனை உணவு வகைகளையும், தொப்புள் வாயிலாக பெற்று குழந்தை சுவை பார்க்கிறது.\n4. சிறுநீர் கழித்தல்\nஆம்! குழந்தைகள் தாயின் கருவறையில் சிறுநீர் கழித்து, அந்நீரையே பருகுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.\nகுழந்தைகள் பிறந்தவுடன் அழுவதை நம்மால் கேட்க முடிகிறது; ஆனால், அவர்கள் தாயின் வயிற்றிலேயே அழுகின்றனர், அதை நம்மால் செவியுற இயலாது.\nகுழந்தைகள் என்னதான் முழுமையாய் வளர்ச்சியடையாத செவிகளை பெற்றிருந்தாலும், தன் தாயின் இதயத்துடிப்பு மற்றும் தாயின் குரலை கருவில் உள்ள குழந்தையால் கேட்க இயலும்.\nகுழந்தைகளின் பார்வை பிறந்த 1 வயதில் தான் முழுமையான வளர்ச்சியை பெறும்; இருப்பினும் கருவறையில் வளரும் குழந்தையால் மிகவும் பிரகாசமான ஒளியை உணர முடியும். கருவின் கண் 26-28 வாரங்களில் திறக்கப்பட்டு, குழந்தை பார்க்க முயலும்.\nகருவிலுள்ள குழந்தை தனக்கு வரும் மலத்தினை இருக்காமல் அடக்கி வைத்துக்கொண்டே இருக்கும்; பிறந்தவுடன் தான் முதன்முதலாக குழந்தை மலம் கழிக்கும்; அந்த மலத்தில் முடி, தோல், புரதம், WBC போன்றவை வெளியேறி காணப்படும்.
Thread: பஞ்சமுக லிங்கங்கள்\nஸ்ரீ ருத்ர மஹாமந்திரத்தில் பரமசிவனுக்கு ஐந்து மந்திரங்கள் கூறப்பட்டுள்ளன.\nகிழக்குப் பாத்திருக்கும் முகம் தத்புருஷம். இது ரிக் வேதத்திற்குரியது.\nதெற்குப் பாத்திருக்கும் முகம் அகோரம். யஜூர் வேதத்திற்குறியது.\nமேற்குப் பாத்திருக்கும் முகம் ஸத்யோஜாதம். ஸாம வேதத்திற்கு உரியது.\nவடக்கு பாத்திருக்கும் முகம் வாமதேவம். அதர்வண வேதத்திற்குரியது.\nஐந்தாவது ஈசானம் ஆகாயத்தை நோக்கி ஜோதிர்மயமாக உருவமில்லாமல் காணப்படுவது.\nஸ்ரீகாளகஸ்தீஸ்வரர் ஆலயத்திற்கு அடுத்தாற்போல் உள்ள பரமக்குடி என்ற குன்றின் மேல் பஞ்சமுக லிங்கம் இருக்கிறது. ஸ்ரீ பரமாசாரியாள் 1932இலும் பிறகு 1939இலும் அப்பஞ்சமுக லிங்கத்தை தர்சனம் செய்து கொண்டார்கள். 1966ஆம் வருடம் ஸ்ரீ பரமாசாரியாளும் ஸ்ரீ ஜெயேந்திர பெரியவாளும் சாதுர்மாஸிய காலத்தில் இந்தப் பஞ்ச முக லிங்கத்தை தர்சனம் செய்துள்ளார்கள்.\nஇது போன்ற பஞ்சமுக லிங்கம் திரு ஆனைக்காவல் வடக்கு வீதி ஸ்ரீகாமகோடி பீட்த்தின் சங்கரமடத்தின் பின்புறம் – ராஜராஜேஸ்வரர் ஆலயத்தில் உள்ளது. 1943இல் ஸ்ரீ பரமாச்சாரியாள் அங்கு விஜயம் செய்தபொழுது முன்பு பரமக்குடி பஞ்சலிங் கத்தைக் கண்டுபிடித்துச் சொன்னது போல் இந்த லிங்கத்தையும் கண்டுபிடித்துச் சொல்லி நித்ய பூஜை நடத்த ஏற்பாடு செய்தார்கள்.\nவாதாபியில் “ஐகோளை” என்னுமிடத்தில் இம்மாதிரி பஞ்சமுக லிங்கம் இருப்பதாக கூறப்படுகிறது.\nநேபாளத்திலுள்ள பஞ்சமுக பசுபதீஸ்வரர் லிங்கம் ஜகத் பிரசித்தம். அர்ஜுனன் பரமசிவனைக் குறித்துக் கடும் தவம் செய்து பாசுபதாஸ்திரம் பெற்ற ஸ்தலம்.\nஸ்ரீ காஞ்சிபுரத்தில் ஸ்ரீ கச்சபேசுவரர் ஆலயத்தில் நுழைந்தவுடன் வலப்புறமாக உள்ள சந்நிதியில் பஞ்சமுக லிங்கம் இருக்கிறது. இருந்தாலும் நான்கு முக லிங்கம் என்று எழுதியிருக்கிறது. (அவருக்கு ஊர்த்வ முகமும் இருக்கத்தான் வேண்டும்.)\nஞாயிற்றுகிழமைகளில், அதுவும் கார்த்தி மாத ஞாயிற்றுக்கிழமைகளில் கோயில் குளத்தில் நீராடி கச்சபேசுவரரை தர்சனம் செய்துகொள்வது ரொம்ப விசேஷம்.\nதேவர்களும் அசுரர்களும் அமிர்தத்திற்கு வேண்டி திருபாற்கடலைக் கடையும்பொழுது ஆமை வடிவம் எடுத்து பகவான் விஷ்ணு சஹாயம் செய்தார். அப்பொழுது அநேக ஜந்துக்களுக்கு ஹிம்சை ஏற்பட்டுவிட்டதற்குப் பிராயச்சித்தமாக இந்த ஈஸ்வரனை வழி பட்டதால் ஈஸ்வரனின் நாமம் கச்சபேசுவரனாகி விட்டது. சூரிய பகவானுக்கு வெளிப்புறம் தனி சந்நிதி இருக்கிறது. வியாதிகளை யெல்லாம் குணப்படுத்தும் ஈஸன் கச்ச பேசுவரன். காஞ்சி செல்பவர்கள் அவசியம் இந்த லிங்கத்தை தரிசிக்க வேண்டும். காஞ்சிபுர பஸ் நிலையத்திலிருந்து மிக அருகில் இருக்கிறது.\nஐந்து முகங்களுக்கும் உள்ள வேத மந்திரங்கள் ‘தைத்ரிய” உபநிஷதின் ஒரு பகுதியான நாராயணவல்லியில் இருக்கின்றன. நாராயணவல்லி என்று கூறப்படும் இப்பாகம் மஹா நாராயாண உபநிஷத் என்றும் வழங்கப்படும்.\n(ப்ரம்மஸ்ரீ ஸாம்பமூர்த்தி சாஸ்திரிகள் தொகுத்த ஜகத்குரு திவ்ய சரித்திரம்.)\n« Who invented Thermometer? | “அதெப்படி முடியும்? »\nகோயில், பசு, விஜயம், விஷ்ணு, chana, com, files, http, img, lingams, pancha
மதுரைக்கு வெள்ள அபாயம் நீங்கியது | Madurai out of flood danger - Tamil Oneindia\nசெம்பரம்பாக்கத்தில் இன்று ஒரே நாளில் 20 செ.மீ மழை பெய்யும்- மத்திய நீர் வளத் துறை வார்னிங்\nமதுரைக்கு வெள்ள அபாயம் நீங்கியது\nவைகை அணைக்கு வரும் நீரின் அளவு வெகுவாக குறைந்துள்ளதால் மதுரை உள்ளிட்ட5மாவட்டங்களில் வெள்ள அபாயம்நீங்கியது.\nமதுரை உள்ளிட்ட5தென் மாவட்டங்களின் பாசனத்திற்கு வைகை அணைதான் உயிர் நாடியாக உள்ளது. மேலும், திண்டுக்கல்,தேனி மாவட்டங்களின் குடிநீர்த் தேவையையும் வைகை அணை பூர்த்தி செய்கிறது.\nஇந்த நிலையில் வைகை அணை நீர்ப்பிடிப்புப் பகுதியில், தொடர்ந்து கன மழை பெய்து வந்ததால் அணை வேகமாக நிரம்பிவந்தது. இதனால் அணை உடைவதைத் தடுக்கும் வகையில் அணையைத் திறக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் முடிவுசெய்தனர்.\nஇதையடுத்து வைகை ஆற்றங்கரையோரம் உள்ள தேனி, மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய ஐந்துமாவட்டங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.\nஅணையின் மொத்த கொள்ளளவு 71 அடி ஆகும். இங்கு பொதுவாக 66 அடியை எட்டியதும் முதல் வெள்ள அபாய எச்சரிக்கைவிடப்படும். 68.5 அடி ஆனதும் 2வது வெள்ள அபாய எச்சரிக்கை விடப்படும். அதனை தொடர்ந்து 69 அடியை தொட்டதும்3வது வெள்ள அபாய எச்சரிக்கை விடப்படும். பின்னர் அணைக்கு வரும் நீர் அப்படியே திறந்து விடப்படும்.\nஇந்த நிலையில் வைகை அணைப் பகுதியில் பெய்து வந்த பேய் மழை ஓய்ந்தது. இதனால் அணைக்கு வரும் நீரின் வரத்துவெகுவாகக் குறைந்தது. இன்று காலை அணைக்கு விநாடிக்கு 2000 கன அடி நீர் வந்து கொண்டிருந்தது. இது பிற்பகலில் 1671கன அடியாக குறைந்தது.\nஇதைத் தொடர்ந்து வெள்ளப் பெருக்கு ஏற்படக் கூடிய வாய்ப்பு குறைந்தது. மேலும், வெள்ள அபாயம் நீங்கியுள்ளதாகபொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nவைகை அணையில் தற்போது 68.41 அடி நீர் இருப்பு உள்ளது. மேலும் இது குறைய வாய்ப்புள்ளதால் மதுரைக்கு வெள்ளஅபாயம் நீங்கியுள்ளது.
கிணற்றில் விழுந்த தொழிலாளி பலி | Dinakaran\nதர்மபுரி, அக்.10: தர்மபுரி நாகரசனஅள்ளி பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன்(40), தொழிலாளி. இவருடைய மனைவி முருகம்மாள். இவர்களுக்கு 2மகன், ஒரு மகள் உள்ளனர். கடந்த 17ம் தேதி கிருஷ்ணாபுரம் திப்பம்பட்டி அருகே உள்ள விவசாய கிணற்றில் மாரியப்பன் தூர்வாரும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது திடீரென கிணற்றினுள் மாரியப்பன் தவறி விழுந்தார். இதில் படுகாயமடைந்த மாரியப்பனை மீட்ட அங்கிருந்தவர்கள், தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் மாரியப்பன் உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில், கிருஷ்ணாபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\n× RELATED தொழிலாளிக்கு கத்திக்குத்து
ஹார்ட் அட்டாக் ஏற்பட்டவர்களை காப்பாற்றும் வீட்டு மருந்து\nby T.N.Balasubramanian Fri Jan 16, 2015 10:30 am\n60 செகண்டுகளில் ஹார்ட் அட்டாக் ஏற்பட்டவர்களை காப்பாற்றும் வீட்டு மருந்து....!!\nஇயற்கை மருத்துவர் ஜான் கிறிஸ்டோபரின் 35 வருடங்கள் மருத்துவ சேவையில், ஹார்ட் அட்டாக் ஏற்பட்டு பாதிக்கபட்டவர்கள் இந்த எளிய மருத்துவத்தால் ஒரு நபர் கூட இறந்ததில்லை என்று சொல்கிறார். ஆனால் பாதிக்கப்பட்டவரின் மூச்சு நின்று விடாமல் இருக்க வேண்டும். இவருடைய மிளகாய் பொடி தேநீர் 60\nசெகண்டுகளில் பழைய நிலைக்கு திரும்ப கொண்டு வந்து, சில நிமிடங்களில் பாதிக்கப்பட்டவர்கள் நடமாட தொடங்கிவிடுவார்கள் என்கிறார்.\nஅதனால் வீட்டில்மிளகாய் பொடி தயாராக வைத்திருக்க வேண்டும் என்று பரிந்துரைக்கிறார்.\nஒரு டீஸ்பூன் மிளகாய்பொடியை மிதமான சுடு தண்ணீரில் நன்றாக கலக்கி குடிக்க வைக்க வேண்டும். பாதிக்கப்பட்டவர் நினைவுடன் இருந்தால் சிறிதளவு பொடியை விரல்களில் எடுத்து நாக்கின் அடியில் வைக்க வேண்டும். இது ஒரு முதலுதவி மருந்து போன்றது. மருத்துவமனைக்கு உடனடியாக கொண்டு செல்ல\nவேண்டும். மருத்துவமனைக்கு செல்லும் வழியில் இறந்துவிடாமல் உதவும். இவ்வாறு செய்வதால் அவர்களை காப்பாற்றுவது உறுதி என்கிறார். எவ்வாறு வேலை செய்கிறது:\nநன்றி : முகநூல் .\nஇதன் நம்பகத்தன்மை அறிந்தவர் யாராவது கூறமுடியுமா ?\nLast edited by T.N.Balasubramanian on Fri Jan 16, 2015 10:32 am; edited 1 time in total (Reason for editing : correction)\nRe: ஹார்ட் அட்டாக் ஏற்பட்டவர்களை காப்பாற்றும் வீட்டு மருந்து\nby ayyasamy ram Fri Jan 16, 2015 11:02 am\nநம்பகத்தன்மை தான் கொஞ்சம் இடிக்கிறது...\nநகைச்சுவை உணர்வுடன் இருந்தால் ஹார்ட் அட்டாக் வராதாம்...\nஅதனால் ஒரு நகைச்சுவை:\nமாமியார் இறந்து போனதற்கு துக்கம் விசாரிக்க\nஒரு பெண் போனாள். '\n'எப்படி இறந்து போனார்?,'' என கேட்க அந்த மருமகளோ,\n''கிணற்றில் மாமியார் விழுந்து இறந்து விட்டார்,'' என்றார்.\nஇந்த பெண்ணோ, ''எங்க வீட்டிலும் தான் கிணறும் இருக்கு,\nமாமியாரும் இருக்கு, ஆனா ஒன்னும் நடக்கமாட்டேங்குதே!,''\nஎன அலுத்து கொண்டாள்.\n''அதுவா எப்படி நடக்கும் நாம தான் தள்ளிவிடணும்,'' என்றாளாம்\nby T.N.Balasubramanian Fri Jan 16, 2015 11:56 am
ரதி அக்னி ஹோத்ரி\nகரிசக் காட்டு பாத வழி\nபரிசம் பண்ணி போறவளே !\nஉன்னோட நெஞ்சுக் குள்ள\nகுடியிருக்க என்ன வெல\nகேட்குறேனே சொல்லு புள்ள\nகேட்காட்டி நான் மண்ணுக்குள்ள !\nகோடியே மாமன நீ '\nகொஞ்சாம தான் போவியா\nபக்கத்துல வாரியா ?\nமார்கழியில் தேதி பார்த்தேன்\nதானடி ! கள்ளு\nகுடிக்கையில் நீவேருவ தேனடி !
1.வேகமாக ஓங்கி வளரும் பனைமரம் ஒருவனுக்கு நிழலைத் தரமுடியாது.நிதானமாக செழித்துவளரும் ஆலமரமோ அரசனது படை பரிவாரங்களுக்கும் இடம் தரும். வேகமிருந்தால் போதாது. விவேகமும் தேவை.நிதானமான வளர்ச்சி நிலையான புகழைத் தரும்.\n2.உடலை சுத்தமாக வைத்திருப்பவனிடம் நோய் அண்டாது. உள்ளம் சுத்தமாக இருப்பவனிடம் தீமை அண்டாது.\n3.மீனுக்கு பலம் நீரினிலே குளவிக்கு பலம் அதன் கொடுக்கினிலே மனிதனுக்கு பலம் அவன் மூளையிலே மனிதனின் பலவீனம் அவன் நாக்கினிலே!\n4.தோண்டதோண்ட நீர் சுரக்கும். முயல முயலவே வெற்றி கிடைக்கும்.வெட்டுப்பட்ட மரமும் துளிர்க்கும் குட்டுப்பட்ட நீயும் நிமிர்வாய் நம்பு.\n5.மையில்லா எழுதுகோலால் எழுத முடியாது. தூய்மையில்லா மனிதனிடத்தில் நம்பி பழகுதல் கூடாது.\n6.மேகமானது வானில் ஒளிவீசும் சூரியனைக் கூட சில நிமிடங்கள் தன் முயற்சியால் மறைத்துவிடுகிறது.அதுபோல விடாமுயற்சி இருப்பின் அடைய முடியாதது எதுவும் இல்லை.\n7.தண்ணீர் ஊற்றியவனின் தாகம் தீர்க்கும் தென்னை போல உனக்கு உதவியவனுக்கு சமயத்தில் உதவுவது உன் கடமை.\n8.ஒர் அறையின் மையத்தில் ஏற்றிவைக்கப்படும் ஊதுபத்தி அறையைமட்டுமின்றி அதனையும் தாண்டி தன் வாசனையை பரப்புவது போல நாம் கற்கும் கல்வி நமக்கு மட்டுமின்றி நாட்டு மக்கள் அனைவருக்கும் பயனளிப்பதாய் இருக்கவேண்டும்.\n9.கற்றறியா மரம் கூட மற்றவர்களுக்கு பயனைத்தறுகிறது நிழலாக உணவாக உறைவிடமாக கற்றறிந்த மூடர் நாம் அதை வெட்டலாமோ? சிந்திப்போம் சந்திகள் தோறும் சாலைகள் ஒரம் மரம் வளர்ப்போம்\n10.கொழுத்த மீனுக்கு காத்திருக்கும் கொக்கைப்போல உன் இலக்கிற்கு கவனம் சிதறாமல் காத்திரு. காலம் கட்டாயம் கனியும்.\nஅலோ வாசகர்களே என்னுடய டியுசன் செண்டரில் மாணவர்களுக்கு போதித்த அட்வைஸ் சிலதுதான் இது. பிடித்திருந்தால் பாராட்டினால் பொன்மொழிகள் தொடரும்.
Chittarkottai Sunnath Jamath: கௌதுல் அஃலம் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் வரலாற்றுச் சுருக்கம் !!!\nகௌதுல் அஃலம் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் வரலாற்றுச் சுருக்கம் !!!\nஇலங்கை வானொலி முஸ்லிம் உலகம்,\nஜனாப் ஃபஜ்ஹான் நவாஸ் அவர்களின் உரை.\nPosted by Ghanimathullah ibnu Salahuddin aalim at 11:43 AM\nLabels: கௌதுல் அஃலம் அவர்களின் சரித்திரச் சுருக்கம்\nSpecial interview with Afzalul Ulama Maulana Hazra...\nயோகா ... ஆகா! ( யோக பற்றி இஸ்லாமியப் பார்வை )\nமதுரை கோரிப்பாளையத்தில் மாபெரும் மீலாதுப் பெருவிழா...\nமெய் நிலை கண்ட தவஞானிகள்.\nசமஸ்த கேரளா ஜம்மியத்துல் உலமா சபையின் தலைவரும் ஆன்...
ஐஎஸ்எல் கால்பந்து தொடர் முதல்கட்ட அரை இறுதியில் கோவா - மும்பை 5-ம் தேதி மோதல் | - hindutamil.in\nஐஎஸ்எல் கால்பந்து தொடர் முதல்கட்ட அரை இறுதியில் கோவா - மும்பை 5-ம் தேதி மோதல்\nகோவாவில் நடைபெற்று வரும் ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் இம்முறை 11 அணிகள் கலந்துகொண்டு விளையாடிய நிலையில் தற்போது லீக் சுற்றுகள் முடிவடைந்துள்ளன. இதில் முதல்4இடங்களை பிடித்த மும்பை, ஏடிகே மோகன் பகான், நார்த் ஈஸ்ட் யுனைட்டெடு, கோவா ஆகிய4அணிகள் அரை இறுதி சுற்றுக்கு முன்னேறி உள்ளன. அரை இறுதி சுற்று வரும் 5-ம் தேதி தொடங்குகிறது.\n40 புள்ளிகள் குவித்து பட்டியலில் முதலிடம் பிடித்த மும்பை அணி தனது முதற்கட்ட அரை இறுதி சுற்றில் கோவா அணியை சந்திக்கிறது. இந்த ஆட்டம் வரும் 5-ம் தேதி பதோர்தாவில் உள்ள பிஜேஎன் மைதானத்தில் நடைபெறுகிறது. கோவா அணி லீக் சுற்றில் 20 ஆட்டங்களில்7வெற்றி, 10 டிரா3தோல்விகளுடன் 31 புள்ளிகள் பெற்றிருந்தது.\nஇந்த இரு அணிகளும் தங்களது 2-வது கட்ட அரை இறுதியில் 8-ம் தேதி மீண்டும் பலப்பரீட்சை நடத்தும். இந்த ஆட்டம் பம்போலிமில் உள்ள ஜிஎம்சி மைதானதில் நடத்தப்படுகிறது. இந்த இரு ஆட்டத்திலும் அடிக்கப்படும் கோல்களின் சராசரி விகிதப்படி வெற்றி பெறும் அணி இறுதி சுற்றில் கால்பதிக்கும். சாம்பியன் கோப்பையை வெல்வது யார்? என்பதை தீர்மானிக்கும் இறுதி சுற்று வரும் 13-ம் தேதி பதோர்தாவில் நடைபெறுகிறது.
Thamizharivom - Kalithokai (4)\nJul 23, 2015 04:31:49pm498 Views\nதலைவி தோழியிடம் கூறும் கூற்று\n51ம் பாடல் – சுடர்த்தொடீஇ கேளாய்… துறை விளக்கம் தலைவன் தலைவியைக் காண வேண்டும் என ஆசையுற்றான். அதனால்தான் புகுதற்குத் தகுயல்லாத பகற்பொழுதில் தலைவன், உணவு நேரத்தில் தலைவியின் வீட்டுக்குள் புகுதல். அவ்வாறு புகுந்தவனை தலைவி காட்டிக்கொடுக்காமல் தாயின்முன் சமாளித்து ஏற்றுக்கொள்ளல். புகாஅக்காலை : உணவு உண்ணும் நேரம். பகல் சாப்பிடும் நேரம் பார்த்து ஒரு வீட்டிற்குள் புகுதல். பகாஅ விருந்து : ஆனால் தலைவன் விலக்கப்படாத விருந்தாக தலைவி (காதலி) ஏற்றுக் கொள்கிறாள். இந்நிகழ்ச்சி ஒரு திரைப்படம் போல விரிகிறது. இப்பாடற் பொருளைக் காண்போம். தலைவி தோழியிடம் பின் வருமாறு இக்காட்சியை விளக்குகிறாள். ஒளிமிக்க வளையல் அணிந்த தோழி. ஒளிமிக்க வளையல் அணிந்த தோழி நான் சொல்வதைக் கேள். தெருவில் நாம் மணலால் செய்த சிறுவீட்டைத் தன்காலால் கலைத்தும் நாம் கூந்தலில் சூடிய மலர்மாலையை அறுத்தும், வரியை உடைய நாம் விளையாடிக் கொண்டிருந்த பந்தைப் பறித்துக் கொண்டு ஓடியும் நாம் வருந்தத் தக்க செயல்களைச் செய்யும் சிறியவனாக கட்டுக்கடங்காமல் திரிந்தான். முன்பு ஒருநாள் தாயும் (அம்மாவும்) நானும் வீட்டில் இருந்த போது வந்தான். வீட்டின் வாசலில் இவ்வாறு குரல் கொடுத்தான். “வீட்டில் இருப்பவர்களே! உண்ணும் நீரை உண்ண விரும்பினேன். (குடிக்கக் கொஞ்சம் தண்ணீர் வேண்டும் எனக் கேட்டல்) என்றான். அவ்வாறு வந்து கேட்டவனுக்கு என்தாய், என்னிடம் விளங்கும் ஒளி வீசும் அணி (நகை முதலிய ஆபரணம்)யை அணிந்தவளே. உண்ணத் தகுதியான நீரைத் தகட்கும் பொன்னால் ஆன கலத்தில் (தங்கத்தாலான குவளை அல்லது செம்பு (குடுவை)) கொண்டுபோய்க் கொடுத்து வா என்றாள். அவ்வாறு தாய் சொன்னதால் வந்தவன் சிறு பட்டியாய் இருக்கும் தன்மை அறியாமல் தண்ணீர் கொண்டு போனேன். நான் சென்றதும் வளையல் அணிந்த முன்கையைப் பிடித்து (கையைப் பிடித்து இழுத்தான்) வருத்தினான். (சிறுபட்டி எனில் பட்டியில் அகப்படாத மாடு போன்றவன் எனப் பொருள். வாப்பட்டி என்பது வாப்பட்டி என வாயாடும் பெண்களை அழைக்கும் பழக்கம் இன்றும் உள்ளது) அதனால் நான் வருந்தி அம்மா என அலறி இவன் செய்த செய்த செயலைப் பார்த்தாயா?“ என்றேன். அம்மா அலறிக்கொண்டு ஓடி வந்தாள். நான் அவன் செய்த குறும்புச் செயலை மறைத்து, இவன் நீர் குடிக்கும் போது விக்கல் எடுத்து வருந்தினான், அதனால் கத்தினேன்” என்றேன். நான் மறைத்துக் கூறியதை ஏற்று அம்மாவும் அவன் முதுகைப் பலமுறை தடவிக் கொடுத்தாள். முதுகின் பக்கம் நின்று நெஞ்சைத் தடவிக் கொடுத்தாள் தாய் என நச்சினார்க்கினியார் கூறுவார். அப்போது அக்கள்வன் மகன் (அந்தத் திருடன்) தன் கடைக்கண்ணால் என்னைக் கொல்வது போல் திருட்டுப்பார்வை பார்த்தான். தன் புன்முறுவலால் என்னை மயக்கி என்னுள்ளத்தில் புகுந்தான். இது அற்புதமான திரைப்படக் காதல் காட்சிபோல் உள்ளது. இந்தப் பாடலுக்கு “நகைக்கூட்டம் செய்தான் கள்வன் மகன்” எனத் தலைப்பிட்டுள்ளார் இக்கால உரையாசிரியர் அ.மாணிக்கம்.\nஇத்தகைய சுவையான காட்சியைச் சித்தரிக்கும் அந்தப் பாடலைக் காண்போம்: (பாடல் எண் – 51)\n“சுடர்த்தொடீஇ! கேளாய்! தெருவில் நாம் ஆடும்\nமணற் சிற்றில் காலின் சிதையா, அடைச்சிய\nகோதை பரிந்து, வரிப்பந்து கொண்டு ஓடி\nநோதக்க செய்யும் சிறுபட்டி, மேல் ஓர்நாள்\nஅன்னையும் யானும் இருந்தேமா”, இல்லிரே,\n“உண்ணுநீர் வேட்டேன்” என வந்தாற்கு, அன்னை\nஅடர் பொற் சிரகத்தா வாக்கி, சுடரிழாய்\nஉண்ணுநீர் ஊட்டி வா” என்றாள், என யானும்\nவளைமுன்கை பற்றி நலிய, தெருமந்திட்டு\nஅன்னாய்! இவன் ஒருவன் செய்தது காண் என்றேனா\nஉண்ணு நீர் விக்கினான் என்றேனனோ, அன்னையும்\nகடைக் கணால் கொல்வான் போல் நோக்கி\nநகைக் கூட்டம் செய்தான் அக் கள்வன் மகன்!!\nபாடல் குறித்து சில குறிப்புகள்: பொற்சிகரம் – பொற்கலம் : இதனால் தலைவியின் செல்வச் செழிப்பும், தாயின் விருந்தோம்பும் அறப்பண்பும் விளங்கும். யானும் வாக்கி – வார்த்து (தண்ணீர் வார்த்தல்), யானும் தன்னை அறியாது சென்றேன் என்பது யானும் அவன் சிறுபட்டி என்பதை அறியாமல் சென்றேன் எனவும், யானும் அவனது குரல் கேட்டதால் மெய்மறந்து மயங்கிச் சென்றேன் எனவும் இருபொருள் பட நின்றது. நகைக்கூட்டம் : தன்புன்முறுவலால் என் உள்ளத்தில் புகுந்து என்னோடு இணைந்தான் (உள்ளத்தால் புணர்வது உள்ளப் புணர்ச்சி என்பதை உணர்த்தும் நகைக் கூட்டம்) நகை – மகிழ்ச்சி புன்முறுவல், கூட்டம் – புணர்ச்சி, மனம் இணைந்த காதலர் இருவர் வாழ்வு, நகைக் கூட்டம் – மகிழ்ச்சிக்குரிய சந்திப்பு என்றும் கொள்ளலாம். தோழியிடம் தானும் தலைவன் உள்ளத்தில் நுழைந்துவிட்டேன் எனக் குறிப்பிடுகிறாள். “ஒருவரை ஒருவர்தம் உள்ளம் ஈர்த்தலால் இருவரும் மாறிப்புக்கு இதயம் எய்தினார்” என இராமனும் சீதையும் சந்தித்த காட்சியைக் கம்பர் நினைவூட்டுவது இங்கே நினைக்கத்தக்கது. சேர்ந்து இல்லறத்தில் வாழ்வதாகிய புணர்தலும், புணர்தல் நிமித்தமும் ஆகிய மலைநில வாழ்வு பற்றிய சான்றைக் கண்டோம். – தொடர்ந்து தமிழறிவோம்.\nThamizharivom – Kalithokai (4) : Pulavar Aru.Mey. Meyyandavar\nindia news India today latest india news latest tamil news nadappu nadappu news nadappu.com Pulavar Aru.Mey. Meyyandavar tamil news tamilnadu news tamilnadu today தமிழகச் செய்தி தமிழ்ச்செய்தி நடப்பு நடப்பு.காம்\nPrevious Postதவறான அடையாளத்துடன் பரப்பப்பட்ட கலாம் : தோழர் குமரேசன் Next Postபிற்படுத்தப்பட்ட மக்களுக்கு பேராபத்து! - ரவிக்குமார்
தாராள பிரபு விமர்சனம்... அடல்ட் கன்டென்ட்தான்... கொஞ்சம் அப்படி இப்படி சொல்லியிருக்காங்க..! -Oneindia-Filmi Reviews-Tamil-WSFDV\nOneindia | 13th Mar, 2020 08:48 PM\nடாக்டர் விவேக், ஒரு ஹோம் நடத்துகிறார். குழந்தை இல்லாதவர்களுக்கு உயிரணுதானம் பெற்று குழந்தை பாக்கியம் தரும் கிளினிக். ஆஃபர்கள் குவிய, ஆரோக்கியமான டோனர் தேவை. மாட்டுகிறார் ஹரிஷ் கல்யாண். புட்பால் பிளேயர், எந்த கெட்ட பழக்கமும் இல்லாத ஸ்டிராங்கான டோனர். துரத்தி துரத்தி விஷயத்தைச் சொல்லி, சம்மதிக்க வைக்கிறார். பிறகு அவர் காட்டில் பண மழை.\nடாக்டர் விவேக்கின் திருவிளையாடலால் ஹரிஷ், தான்யா கல்யாணம் நடக்கிறது. பின்னர்தான் பிரச்னை. வருமானத்துக்கு அதிகமாக சேர்த்த சொத்துகளின் விவரம் கேட்டு கதவை தட்டுகிறது போலீஸ். தான்யாவுக்கு குழந்தை பாக்கியம் இல்லை என்று மருத்துவம் கைவிரிக்க, ஹரிஷ், உயிரணு டோனர் என்பது தெரிய வருகிறது. ஒன்றன் பின் ஒன்றாக வரும் சிக்கலை, விவேக் எப்படி தீர்த்து வைக்கிறார் என்பதுதான் படத்தின் அடுத்த பகுதி.\nஹரிஷ் கல்யாண் அந்த கேரடக்ரில் நன்றாக நடிக்கிறார். வீட்டில் செல்லமாகச் கொஞ்சுகிறார், காதலியிடம் வழிகிறார், விந்து டோனர் என்கிறதில் வெட்கம் கொள்கிறார். நடிப்பிலும், உடல் மொழியிலும் முன்னேற்றம். வாழ்த்துகள் பாஸூ!\nதான்யா ஹோப்பின் நடிப்பு, கிளாஸ். தன்னைப் பற்றிச் சொல்லிவிட்டு ஹரிஷின் பதிலுக்காக காத்திருக்கும் அந்த தருணத்தை அழகாக வெளிப்படுத்துகிறார்.\nஹரிஷ் பற்றிய உண்மை தெரிந்த பிறகு 'உனக்கு ஊரெல்லாம் குழந்தை, எனக்கு குழந்தை பாக்கியம் இல்லை' என்று உருகவும் செய்கிறார். ஆனால் சில காட்சிகளில் அவருக்கு அக்கா போலவும் தெரிகிறார். விவேக் படம் முழுக்க வரும் இன்னொரு ஹீரோ. நீண்ட இடைவெளிக்கு பிறகு கவனிக்க வைக்கிற கேரக்டர் அவருக்கு. அவ்வப்போது அவர் பேசும் இரட்டை அர்த்த வசனங்கள் தியேட்டரை அதிர வைக்கிறது.\nஒரு டாக்டராக, தன் கடமையையும், தன்னால் பாதிக்கப்பட்டவனை பாதுகாப்பதில் பொறுப்பையும் காட்டுகிறார். பொதுவாக ரீமேக் படங்களை சொதப்புவதுதான் நம் சினிமாவின் வழக்கம். ஆனால் இந்தப் படத்தைக் கச்சிதமாகத் தந்திருக்கிறார், கிருஷ்ணா மாரிமுத்து. எஸ்.கே.செல்வகுமாரின் ஒளிப்பதிவு குளிர்ச்சி.5பேர் இசை அமைத்திருக்கிறார்கள். பின்னணி இசை சிறப்பு.\nவிந்துதானம் குறித்து தமிழ்நாட்டில் அதிக அறிமுகமில்லை. அதை கொஞ்சம் முகச் சுழிப்போடுதான் எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது. விவேக், டோனர் தேடி அலைவதும், அதற்காக அவர் போடும் திட்டங்களும் நாடக காட்சிகளை போல இருக்கிறது. விந்து தானத்தைவிட தத்தெடுப்புதான் நம் நாட்டுக்கு உகந்தது என்பதை படம் அழுத்தமாக பேசவில்லை என்றாலும் கவனிக்க வைக்கிறார் இந்த தாராள பிரபு.\nStar Cast: ஹரிஷ் கல்யாண், தன்யா ஹோப், விவேக், அனுபமா குமார், சச்சு\nDirector: கிருஷ்ணா மாரிமுத்து\nசென்னை: இந்தியில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆன விக்கி டோனரை, அப்படியே தமிழுக்கு அழைத்து வந்திருக்கிறார்கள். மக்களால் அதிகம் அறியப்படாத 'உயிரணு தானம்தான்'தான் கதை களம்.\nவேலை தேடும் ஹரிஷ் கல்யாணுக்கு காதல் கிடைக்கிறது. அம்மா நடத்தும் பாரம்பரிய சித்த வைத்திய நிலையத்தில் இருந்து மசாஜ் ஆயிலை டெலிவரி செய்யச் சென்ற இடத்தில் தன்யா ஹோப்புடன் லவ். இது ஒரு பக்கம்...
IdlyVadai - இட்லிவடை: "தல" சிறப்பு கேள்வி பதில்கள் - தேர்தல் 2009\n"தல" சிறப்பு கேள்வி பதில்கள் - தேர்தல் 2009.\nபடிக்க, சிரிக்க :-)\nகேள்வி : பகுத்தறிவு என்பது??\nபதில் : ஓயாமல் அடுக்குமொழி பேசி அடுத்தவரை இம்சிப்பவர். பெரிய உடம்புக்காரர். இன்னமும் நாயகனாக நடித்து எல்லோரையும் பயமுறுத்துபவர்.ஓட்டை பாத்திரத்தில் ஓராயிரம் லிட்டர் தண்ணீர் சேமிக்க நினைப்பவர்.\nகேள்வி : கேப்டன் விஜயகாந்த்??\nபதில் : அவர் எந்த டீமுக்கு கேப்டன்? அவரை பழுப்பு எம்.ஜி.ஆர் என்றே அழையுங்கள். அரசியலில் அரிச்சுவடி படிக்க வந்துள்ள குழந்தை. இருக்கு அதனிடம் நிறைய அகந்தை.\nபதில் : மானாட மயிலாட...கவர்ச்சி கட்டழகி நமீதா.\nபதில் : கையூட்டு என்றால் என்ன?? சிறு வயதில் என் தாய் என் கையில் வைத்து ஊட்டிய சோறுதானே??\nபதில் : நான் இதுவரை கேள்விப்படாதது. என் மனைவி எனக்காக எப்போதும் வேண்டுவது. என் மஞ்சள் துண்டுக்கும் கடவுள் பக்திக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.\nபதில் : வாழும் வள்ளுவன், கம்பனின் இளைய பேரன்.\n( நன்றி: ஜோக்கிரி பதிவு )\nPosted by IdlyVadai at 3/18/2009 12:26:00 PM\nஅட வேஸ்டியை கூட உருவலாம்\nசும்மா டைபாஸ் மச்சி..... sorry... soryy...பழக்க...தோஸத்துலா வந்துடுச்சி\nசெம்ம Hot மச்சி\n'தல' தீபாவாளி சொல்லுவாங்களா?\nநீங்கதான் எழுதிட்டீங்களோன்னு பயந்துட்டேன் ;)\n" தல " போல வருமா .. சும்மாவா சொன்னாங்க .. முத்தமிழ் வித்தகர் , தமிழ் நாட்டை வித்தவர்னு ... " தல நீங்க போட்டு தாக்குங்க " மஞ்சள் துண்டிருக்க பயமேன் ! நீங்க என்ன சொன்னாலும் நாங்க எல்லாம் கேட்டுட்டு .. வாழும் வள்ளுவர் , அய்யன் ( அய்யர் இல்லைங்க ) தமிழை காக்க வந்த சின்ன கம்பன் .. பகுத்தறிவு சிங்கம்னு பட்டம் குடுதுடே இருப்போம் .. நீங்க வழக்கம் போல சங்க தமிழை மிஞ்சும் தமிழில் கவிதை எழுதிதே இருங்க .. அதோடு வருசத்துக்கு ஒரு திரைப்படத்துக்கு கதை வசனம் எழுதினால் கலை சேவை புரிஞ்ச மாதிரியும் இருக்கும் .. தமிழ்நாட்டில் மக்கள் தொகை குறைஞ்சமதிரியும் இருக்கும் .. வலைபதிபளர்கள் உங்களை கிண்டல் பண்ணிட்டு தான் இருபாங்க .. நீங்க கவலை படாதிங்க .. அப்பாவி தமிழர்கள் உங்களை கை விடார் .. உங்கள் சேவை தமிழ் நாட்டிற்கும் .. தமிழுக்கும் மிக்க தேவை ... வாழ்க உங்கள் சேவை மனப்பான்மை .. வளர்க உம் கவி புகழ்\nகேள்வி : எப்படி இந்த பதிவு\nபதில் : செப்படி வித்தையில் ஒரு செருப்படி .... சாரி சிறப்படி\nகேள்வி : யார் இந்த ஜோக்கிரி\nபதில் : விவர கவி விவகார கவி விரசல் கவி . (மஞ்சள் துண்டு போட்டுருப்பாரோ இல்லை கவி காவி துண்டா)\nகேள்வி : நன்றி யாருக்கு\nபதில் : இட்லி வடைக்கு - படித்ததில் பிடித்ததை படை ததற்கு\nநீங்கதான் எழுதிட்டீங்களோன்னு பயந்துட்டேன் ;)//\nBoston Bala....... bayandhu, bayam thelindha Boston Bala avargale!!!?\nIdhil bayappada enna ulladhu?? IV-yum indha maadhi neraiya ezhudhi irukkarey?\nMarch 18, 2009 5:19 PM\nபயந்து !!! பயம் தெளிந்த !!! பாஸ்டன் பாலா (தேங்க்ஸ் அனானிமஸ் )\nபட்டியலிட்ட பதிவின் பதில்களை பார்த்து பக்குவமாய் பகிர்ந்த பாலா பங்காளியை பாடா படுத்தாமல் பட்டும் படாமலும் பாலை பருக பணிகிறேன். படுக்காளி படுத்துக்கெடகேன் பரிதாபமாய் பாயிலே (எல்லாமே பா தான் )\nபட்டியலிட்ட பதிவின் பதில்களை பார்த்து பக்குவமாய் பகிர்ந்த பாலா பங்காளியை பாடா படுத்தாமல் பட்டும் படாமலும் பாலை பருக பணிகிறேன். படுக்காளி படுத்து க்கெடகேன் பரிதாபமாய் பாயிலே (எல்லாமே பா தான் )\nMarch 18, 2009 6:44 PM
எந்த சொத்துகளில் முதலீடு செய்வது உங்களுக்கு ஏற்றது? இந்த நான்கில் இருக்கிறது விடை! - 55 | how to chooseabest investment option to create wealth -asimple guide - Vikatan\nPublished: 08 Dec 20219AM Updated: 08 Dec 20219AM\nஎல்லா முட்டைகளையும் ஒரே கூடையில் வைப்பதைத் தவிர்க்க வேண்டும் என்பது போல, நம்மிடம் உள்ள பணத்தை ஒரே வித சொத்தில் முதலீடு செய்வதையும் தவிர்க்க வேண்டும். நம் பணத்தை வெவ்வேறு விதமான முதலீடுகளில் பிரித்துப் போடுவதே அஸெட் அலொகேஷன்.\nநம் வாழ்வை வளமாக்க உதவும் பலவித முதலீடுகள் பற்றி விரிவாகப் பார்த்தோம். இந்தப் பலவிதமான முதலீடுகளில் எதை எவ்வளவு வைத்துக்கொள்வது என்ற கேள்வி எழுவது இயற்கைதான். இரண்டு விதங்களில் இதை நாம் செயல்படுத்தலாம்.\nரியல் மற்றும் ஃபைனான்ஷியல் அஸெட்கள்\nதங்கம் /வீடு / மனை / கடன் (ஃபிக்ஸட் டெபாசிட்டுகள் மற்றும் பாண்டுகள்) /மியூச்சுவல் ஃபண்ட் / பங்குகள் / கிரிப்டோகரன்சி போன்ற அனைத்து முதலீடுகளும் ரியல் அஸெட் மற்றும் ஃபைனான்ஷியல் அஸெட் என்ற இரு பெரும் பிரிவுகளில் அடங்குகின்றன.\nரியல் அஸெட்களில் ரிஸ்க்கும் குறைவு; ரிட்டர்னும் குறைவு. ஃபைனான்ஷியல் அஸெட்களில் ரிஸ்க் அதிகம்; ரிட்டர்னும் அதிகம். மேற்கண்ட முதலீடுகளில் முதல் மூன்றும் தொட்டுரணக்கூடியவையாக இருப்பதால் ரியல் அஸெட் என்று அழைக்கப்படுகின்றன.\nகடன் முதலீடு ஃபைனான்ஷியல் அஸெட்தான் என்றாலும், அதில் ரிஸ்க் குறைவு என்பதால் இங்கு அதுவும் ரியல் அஸெட்டாகப் பார்க்கப்படுகிறது. மற்ற மூன்றும் ஃபைனான்ஷியல் அஸெட் என்று அழைக்கப்படுகின்றன.\nஇளம் வயதினர் தங்கள் பொருளாதார இலக்குகளை அடைய வேண்டி, ரிஸ்க் நிறைந்த முதலீடுகளில் ஈடுபட்டே ஆக வேண்டும்; அதில் இழப்பு நேரும் பட்சத்தில் அதைச் சரிகட்டவும், விழுந்த வேகத்தில் எழுந்து ஓடவும் அவர்களால் இயலும். ஆனால், அதிக ரிஸ்க் உள்ள ஒரு முதலீட்டில் இறங்கிய பின், அது ஏதேனும் நஷ்டத்தை விளைவித்தால் புதிதாக சம்பாதித்து அந்த இழப்பை சரிகட்ட 60 வயதினரால் இயலாது. ஆகவேதான் நமக்கு வயது ஏற, ஏற ரிஸ்க் அதிகமுள்ள முதலீடுகளைக் குறைக்க வேண்டியுள்ளது.\nபொருளாதார ஆலோசகர்கள் கூறுவது என்ன?\nபொருளாதார ஆலோசகர்கள், முப்பது வயதினர் தங்கள் முதலீட்டில் 30 சதவிகிதத்தை ரியல் அஸெட்களிலும், மீதி 70 சதவிகிதத்தை ரிஸ்க் நிரம்பிய ஃபைனான்ஷியல் அஸெட்டுகளிலும் முதலீடு செய்யும்படி அறிவுறுத்துகிறார்கள். அதன்படியே நாற்பது வயதினர் 40 : 60;\n- ஐம்பது வயதினர் 50 : 50;\n- அறுபது வயதினர் 60 : 40;\n- எழுபது வயதினர் 70 : 30 என்ற விகிதாசாரத்தில் ரியல் அஸெட்டுகளிலும், ஃபைனான்ஷியல் அஸெட்டுகளிலும் முதலீடுகளை மேற்கொள்வது நல்லது.\nஇன்னொரு விதமான அஸெட் அலொகேஷன்\nஇன்னொரு முறையில் சொத்துகளை,\n- வருமானம் தரும் சொத்துகள்,\n- செலவுகளைக் குறைக்க உதவும் சொத்துகள்,\n- பணத்தின் மதிப்பு குறைந்து விடாமல் பாதுகாக்கும் சொத்துகள் மற்றும்\n- பணமதிப்பை சிதைக்கும் சொத்துகள் என்று நான்கு விதங்களாகப் பிரிக்கலாம்.\nவருமானம் தரும் சொத்துகள்\nஃபிக்சட் டெபாசிட்கள் / பாண்டுகள், பங்குகள், மியூச்சுவல் ஃபண்ட், வீடு ஆகியவை வட்டி, டிவிடெண்ட் மற்றும் வாடகை என்பது போன்ற பேசிவ் வருமானம் தரக்கூடியவை. ரிட்டயர் ஆகி சம்பளம் வராத நிலையில் இருக்கும் காலத்தில் இவை தரும் வருமானம் மிகவும் உதவியாக இருக்கும்.\nசெலவைக் குறைக்க உதவும் சொத்துகள்\nஇன்ஷூரன்ஸைப் பொதுவாக சொத்து வகையில் சேர்ப்பதில்லை. ஏனெனில், அது வருமானம் தருவதோ, பண மதிப்பைக் காப்பதோ இல்லை. ஆனால், ஹெல்த் இன்ஷூரன்ஸ் மட்டும் மருத்துவச் செலவுகளைக் குறைக்க உதவுவதால் இங்கு இடம் பெறுகிறது. வீடும் ஒரு செலவைக் குறைக்கும் சொத்தாக இருக்க வாய்ப்புண்டு. போகப் போக வாடகை அதிகமாகும் சூழலில் வாடகைச் செலவைக் குறைக்க வீடு உதவுவதால் அதுவும் இங்கு இடம்பெறுகிறது.\nபண மதிப்பைக் காக்கும் சொத்துகள்\nதங்கம், வீடு, மனை இவை மூன்றும் நம் முதலீட்டின் மதிப்பைக் காக்கும் சொத்துகள். இவை மூன்றுக்கும் உள்ள ஸ்பெஷாலிட்டி என்ன என்றால் லிமிடெட் அவைலபிலிட்டி - அதாவது குறிப்பிட்ட அளவே உலகில் கிடைப்பது (தங்கம் மற்றும் நிலத்தை நாம் உருவாக்க முடியாது). ஆகவேதான் இவை நம் முன்னோர்களால் மிகவும் மதிக்கப்பட்டன.\nபண மதிப்பை சிதைக்கும் சொத்துகள்\nஅதிகப் பணமதிப்புள்ள பைக், கார், செல்போன் போன்றவற்றை தேவை ஏற்படும்போது விற்றுப் பணமாக்க முடியும் என்பதால் சொத்துகளாக சிலர் எண்ணுகிறார்கள். ஆனால், இவை மேற்கூறிய (வருமானம், செலவு குறைப்பு, பண மதிப்பைக் காப்பாற்றுவது) எந்தப் பலனையும் தருவதில்லை என்பதோடு, வாங்கிய மறு நிமிடமே அவற்றின் பண மதிப்பும் குறைந்து விடுகிறது.\nஉங்கள் வயதைக் கணக்கில் கொண்டு ரியல் அசெட் முதலீடு மற்றும் ஃபைனான்ஷியல் அஸெட் முதலீடு ஆகியவற்றின் விகிதாசாரத்தை தீர்மானிக்கலாம். மேலும், இப்போது உங்களிடம் இருக்கும் சொத்துகளை வருமானம் தருபவை, செலவைக் குறைப்பவை, பண மதிப்பைக் காப்பவை, பண மதிப்பை சிதைப்பவை என்று வகைப்படுத்தி வரக்கூடிய பத்து வருடங்களில் இன்னும் எந்த வகை சொத்தை வாங்குவதால் உங்கள் போர்ட்ஃபோலியோ மேம்படும் அல்லது முழுமை அடையும் என்பதைத் திட்டமிட்டு செயல்படுத்தலாம்.\n- அடுத்து வெள்ளிக்கிழமை காலை9மணி சந்திப்போம். அத்துடன் இந்த தொடர் நிறைவு பெறுகிறது.
தமிழ் சினிமாவின் கலாசார வறுமை, சிந்தனை வறுமை.. – வல்லமை\nJune 11, 20120\nநினைவுகளின் சுவட்டில் பாகம் – II (பகுதி – 45)\nபகுதி 44 ஐப் படிக்க இங்கே சொடுக்கவும்\nஎனக்கு இப்போது நினைத்துப் பார்க்க ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. “கல் தோன்றி மண் தோன்றாக் காலத்து….” என்று எதற்கெடுத்தாலும் கோஷமிட்டு தன் தாய் நாட்டுப் பற்றையும் தமிழ்ப் பற்றையும், தம் பெருமையையும் இரைச்சலிட்டுச் சொல்லும் அந்த கோஷத்திலேயே எல்லாம் முடிந்து விட்டதாக நினைக்கும் ஒரு இயக்கம் முளை விட்டு இன்று ஒரு பலத்த சக்தியாக விளங்கும் நிலையில் தமிழும் தமிழ் நாடும் எந்த நிலையில் இருக்கிறது எனபது நமக்குத் தெரியும்.\nஒரு கலாசார வறுமை. சிந்தனை வறுமை. இதை நான் எழுத ஆரம்பித்ததிலிருந்தே சொல்லி வருகிறேன்.\nஆனால் இன்றும் கூட அந்த கோஷங்களைக் கற்காத ஒடிஷாவில் பழம் குடிகள் வசிக்கும் பிராந்தியத்தில் ஒரு முகாமில், பல பிராந்தியக் காரர்களும், பல மொழி பேசுபவர்களும் ஒரு சில வருட பிழைப்பிற்காகக் குழுமியுள்ள அந்த முகாமில், கலை என்றும், இலக்கியம் என்றும் சிந்தனை உலகம் என்றும் என்ன சாத்தியம்?ஆனால் ஆச்சரியப் படும் வகையில் கலை, இலக்கியம், சினிமா பற்றியெல்லாம் எனது ஆரம்பப் பாடங்களைக் கற்றதும், அவற்றில் அன்றைய சிகரங்களை அறிமுகப்படுத்திக்கொண்டது, பின் என் வாழ்க்கை முழுதுமான தேடலின் பாதையை நிர்ணயித்ததும் அந்த முகாமில் கழித்த ஆறு வருடங்களில் தான்.\nஒரு பஞ்சாபி தன் பிழைப்புக்காக தாற்காலிகமாக எழுப்பிய தார்ப்பாலின் கொட்டகையில் தான் (நினைவில் மறுபடியும் பதித்துக் கொள்ளவும் நான் பேசுவது 1952 – 1956 காலத்தில்) அந்தப் பஞ்சாபிக்கு வரவு செலவு கணக்குப் பார்க்கத் தெரியும். அவன் சினிமா அந்தக் காலத்து வெகு ஜன ஹிந்தி சினிமாவை விட மோசம்.\nஅந்த முகாமின் கலவையான மக்கள் கூட்டத்தில் ஒரிய மக்கள் தான் அதிகம். பின் வங்காளிகள், பஞ்சாபிகள், தமிழர், மலையாளிகள் எல்லாம் சேர்த்தால் கொஞ்சம் முன் பின்னாக ஒரே அளவில் ஒரிய மக்களின் எண்ணிக்கைக்கு சமமாக இருப்பார்கள். ஆனால் சினிமா பார்ப்பது ஒரிய மக்கள் இல்லை. மற்ற மொழிக் காரர்கள் தான்.\nஅங்கு தான் அந்தக் கொட்டகையில் தான் மார்லன் ப்ராண்டோ நடித்த On the Water Front பார்த்தேன். Paul Muni நடித்த Good Earth பார்த்தேன். ரஷ்ய இரண்டாம் உலக யுத்தத்தில் ஸ்டாலினின் சாகஸம் நிறைந்த தலைமையை பிரசாரம் செய்த Fall of Berlin பார்த்தேன்.\nJudgement at Nueremberg பார்த்தேன். நியூ தியேட்டர்ஸின் பி.ஸி. பருவா தேவதாஸாக நடித்த வங்க மொழி தேவதாஸ் படமும். கே.எல். சைகல் தேவதாஸாக நடித்த ஹிந்தி படமும் பார்த்தேன்.\nஒரு சிறைச்சாலையையே களனாகக்கொண்டு அதில் சிறையிருந்த ஆயுட் கைதிகள் ஒவ்வொருவரின் வாழ்க்கை யையும் சொல்லும் தபன் சின்ஹாவின் லோஹோ கொபொட் (இரும்புக் கிராதி) என்ற படமும் பார்த்தேன்.கொலைக் குற்றவாளிகள் தான், ஆனால் அவர்கள் மனமும் அன்பு நிறைந்தது. அவர்கள் மனம் இளகும் தருணங்களும் இருந்தன அவர்கள் நேசித்த உயிர்களும் இருந்தன. அவர்களும் மனித ஜீவன்கள் தான் என்று சொல்லும் படம். அந்த காலத்துக்குச் சற்றுப் பிந்தி இந்த நூற்றாண்டின் ஆரம்பத்திலோ அல்லது 19-ம் நூற்றாண்டின் பின் வருடங்களிலோ வங்காளத்தில் பிரபலமாக இருந்த போவல் சன்யாசி கதையை தபன் சின்ஹா எடுத்திருந்த ரத்ன தீப் என்ற படமும் பார்த்தேன். அதுவே ரத்னதீபம் என்று தமிழிலும் வந்தது என்ற செய்தியை பத்திரிகைகளில் படித்தேன். ஜோகன் என்ற\nமிகச்சிறந்த ஹிந்தி படமும் அங்கு தான் பார்த்தேன். ஸ்ரீ ஸ்ரீ ராமக்ருஷ்ண பரமஹம்ஸா என்ற வங்காளிப் படம் அவருடைய வாழ்க்கையை ஆதாரித்தது, விவேகானந்தர் அவருடைய சீடரானதும், அவர் காலத்திய கிரீஷ் சந்திர கோஷ் நடத்திய நாடக வாழ்க்கையும் அவர் நாடகத்தைப் பார்க்க பரமஹம்சர் வந்ததும், அதில் பரம ஹம்சர் தன் நினைவிழ்ந்து பரவசமானதும் ஒரு பரம புருஷரின் வாழ்க்கையும் அவரது காலத்தையும் வெகு சிரத்தையுடன் சித்தரித்திருந்த படம் அது. கிரிஷ் சந்திர கோஷ் அவரை அழைத்துச் செல்வதும், பரம ஹம்சர் டிக்கட் வாங்கணுமே என்று சொல்வதும், நீங்கள் ஒன்றும் கொடுக்க வேண்டாம், வாருங்கள் போதும், என்பதும் பரமஹம்ஸர், “கீ ரே, கேனோ(ம்) திபோ நா, பூரோ ஏக் டகா திபோ”, என்று அவர் சொல்லும் அந்த வெகுளித்தனம் மிகுந்த, சாது பாவனையில் சொல்லும் அழகும் இன்றும் என் நினைவிலிருந்து அழியவில்லை. இந்த டார்ப்பாலின் கொட்டகையில் தான் சத்யஜித் ரேயின் பாதேர் பஞ்சலி பார்த்தேன். வருடம் அனேகமாக 1955.\nஇதற்கு முன் என் நண்பன் மிருணால் காந்தி சக்கரவர்த்தி கல்கத்தாவுக்கு விடுமுறையில் சென்ற போது பாதேர் பஞ்சலி பார்த்துவிட்டு வந்து ஒருபெரிய கூத்தடித்தான். இந்த மாதிரி ஒரு படம் இந்தியாவில் எந்த மொழியிலும் வந்ததே கிடையாது. இந்த சிகரத்தைத் தொடுவது இனி எந்த மொழியிலும் சாத்தியமில்லை. வங்காளியில் வேண்டுமானால் இந்த சிகரத்தைத் தொட எல்லாரும் முயல்வார்கள்” என்று சொல்லிக்கொண்டே இருந்தான். ஆபீஸில் மற்ற நண்பர்கள் எல்லாம், “ஏய் பங்காலி பாபூ, பஸ் கர், பஹூத் ஹோகயா, ஜ்யாதா பக் பக் ந கர்” “போதும் ரொம்பவும் துள்ளாதே,” என்று அவன் வாயடைப்பார்கள். “ நீ பெங்காலி படமே அத்தனையும் பார்த்தது கிடையாது. இனி இருக்கு, பஞ்சாபி, தமிழ், ஹிந்தி எல்லாம். அதுவும் பார்த்தது கிடையாது. பின்னே எப்படி இது வரைக்கும் இந்தியாவிலே இந்த மாதிரி படமே வந்தது கிடையாதுன்னு சொல்றே. இது வரைக்கும் நீ எத்தனை படம் பாத்திருக்கே” ஒரு பங்காளி படம் சரி பாத்துட்டே நல்லாருக்கு. உனக்குப் பிடிச்சுப் போச்சு. அதோட நிறுத்து” என்று சொல்வேன்.\nஆனால் அது புர்லாவில் அந்த தார்ப்பாலின் கொட்டைகைக்கு வந்து பாதேர் பஞ்சலி பார்த்ததும், மிருணாலின் உற்சாகம் எனக்குப் புரிந்தது. அது ஒரு அனுபவம். இதுகாறும் கிட்டியிராத அனுபவம். இது போன்று ஒரு படம் வந்ததில்லை தான். பின் நான் மிருணாலிடம் அவன் உற்சாகத்தைப் பகிர்ந்து கொண்டேன். பின் அவனோடு அங்கு வரும் எல்லா வங்காளிப் படங்களுக்கும், செல்வது வழ்க்கமாயிற்று. அந்த தார்ப்பாலின் கொட்டகை தான் எனக்கு ஒரு பயிற்சித்தளமாக, என் ரசனையை வளர்த்துக் கொள்ள வழிகாட்டிய என்னைப் பண்படுத்திய ஒன்றாக இருந்தது.\nஅதே தார்ப்பாலின் கொட்டகையில் தான் நான் சிவாஜி கணேசனின், அவருக்கும் கதைவசனம் எழுதிய மு.கருணாநிதிக்கும் பெரும் புகழையும் சம்பாத்தியத்தின் உச்சத்தையும் அடையும் பாக்கியத்தைத் தந்த பராசக்தி ஆபாச இரைச்சலை அங்கேதான் பார்த்தேன். அந்த பஞ்சாபி பிழைப்புக்குத் தான் அந்த சினிமா கொட்டகை நடத்தினான். கலைச் சேவைக்கு அல்ல. ஆனாலும் அங்கு சத்யஜித் ரேயின் பாதேர் பஞ்சலியும் பார்க்க முடிந்தது மார்லன் ப்ராண்டோவின் On the Water Front – ம் பார்க்க முடிந்தது. ஒரு சகாப்த புருஷனாக, நடிப்பின் உச்சமாக, நாம் கொண்டாடும், தமிழ் சினிமாவின் புரட்சி கர திருப்பமாக நாம் கொண்டாடும் பராசக்தியையும் அங்கு நான் பார்த்தேன். 1953 என்று நான் நினைக்கிறேன். வங்காளம் அந்த சமயத்தில் ஒரு சத்யஜித் ரேயைத் தந்து ஒரு புதிய நாம் எண்ணிப் பாராத திருப்பத்தைத் தந்தது. நாமும், கலை முதலாக தொழில் முறையாவும் காத்து வளர்ப்பது தமிழ் நாடாச்சே. கல் தோன்றி மன் தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்த குடியாயிற்றே. அங்கே ஒரு சத்யஜி ரே என்றால், இங்கு நாமும், கண்களைப் பிதிக்கிக்கொண்டு, மூஞ்சியைச் சுளுக்கி, அடுக்கு மொழியில் இரைச்சலிடும் ஒரு நடிகர் திலகத்தைத் தரவேண்டாமா? தந்தோம். எது எது சினிமா அல்லவோ, அது அத்தனையையும் அங்கே தெரிந்துகொண்டேன். அதைக்கண்டு வெகுதூரம் ஒதுங்கவும் அந்த தார்ப்பாலின் கொட்டகையும், சிவாஜி கணேசனும், மு.கருணாநிதியும் தான் எனக்குக் கற்றுத் தந்தார்கள். ஒரு படம், என்ன வென்று நினைவில் இல்லை, ஜெமினி கணேசனும், சிவாஜி கணேசனும் ஒருத்தருக்கொருத்தர் உரக்க இரைச்சலிட்டுக்கொண்டு வசனம் பேசி சண்டை யிடுவார்கள். அவர்கள் ஒவ்வொருவர் கையில் ஒரு துப்பாக்கி எதிராளியைக் குறி வைத்திருக்கும். ஆனால் இவர்கள் நீண்ட வசனங்கள் பேசி ஒருத்தரை ஒருத்தர் வசை மாறி பொழிந்து கொள்வாரகள். என்ன செய்ய? வசனம் பேச, மூஞ்சியை எத்தனை விதமாக கோணலாக்கிக் கொள்ள முடியுமோ அத்தனை விகாரமாகக் கோணலாக்கிக் கொண்டு… அடக்க வயிற்றுப் போக்கு இருந்தால் தான் மூஞ்சி அத்தனை கோணலாகும். விழிகள் பிதுங்கும். ஜெமினி கணேசனும் உச்சத்தில் இருக்கும் மூன்று நடிகர்களில அவரும் ஒருத்தராயிற்றே,. சிவாஜி கணேசனுக்கு ஈடு கொடுக்க வேண்டாமா? அவரும் துப்பாக்கியைக் குறி வைத்து வீர வசனம் பேசவேண்டாமா? கருணாநிதி காட்டியவழியில் வசனம் அரை மணிநேரம் மூச்சு விடாமல் கத்தினால் தானே அது கலைப் படமாகும். வெற்றிப் படமாகும். அந்தக் கொட்டகை தான் எனக்கு எங்கு ஆபாசமும் இரைச்சலும் நிறைந்திருக்கும் என்றும், எதை ஒதுக்க வேண்டும் என்றும் கற்றுக் கொடுத்தது.\nஇதற்கு எதிராக புரட்சி செய்கிறேன் என்று மூக்கின் மேல் ஒரு விரலை வைத்து சிந்தனைச் சிற்பி போஸ் கொடுக்கத் தொடங்கிய, அந்த போஸுக்கு உரியவரான ஸ்ரீதருக்கு தமிழ் நாட்டில் தகுதிப் பத்திரம் வழங்கக் காரணமான “கல்யாண பரிசு” படத்தையும் அந்த கொட்டகையில் தான் பார்த்தேன். இதற்குப் பிறகு ஸ்ரீதர் இன்னொரு வகை கலைஞர் ஆகிவிட்டார். தமிழ் நாட்டில் கலை என்றால் கோமாளித்தனமும் உடன் வரவேண்டுமே. ஒரு பத்திரிகையில் ஒரு கேள்வி ஸ்ரீதரிடம். “நீங்கள் சத்யஜித் ரே மாதிரி படமெடுப்பீர்களா?” அதற்கு, மூக்கின் மேல் ஒரு விரல் வைத்த சிந்தனை போஸ் கொண்ட புகைப்படத்தின் பக்கத்தில் அவர் பதில் “ ஏன் முடியாது? ஏன் முடியாது? ஏன் முடியாது?” எதையும் மூன்று முறை சொல்வது தான் தமிழ் சினிமா மரபு. தமிழ் பஜனை சம்பிரதாயம். அப்போது தானே மக்கள் மனதில் பதியும்? இதே மரபில் தான் பாலசந்தர் என்ற ஏதோ ஒரு இமையம், படங்களில் இங்கிலீஷ் தமிழ் இரண்டிலும் வசனம் பேசுவார்கள். “ What I mean is, என்று சொல்லி உடனே, நான் என்ன சொல்றேனா…” என்று இழுக்க வேண்டும். தமிழ் தெரிந்தவர்களுக்க் இங்கிலீஷ் வசனம் புரியாமல் போய் விடக்கூடாது. இங்கிலீஷ் படம் பார்த்து அங்கங்கே சிரித்துவிட்டு வருபவர்களுக்கு தமிழ் புரியாமல் போய்விடக்கூடாது என்று இங்கிலீஷ் வசன்ம். இதுவும் ஒரு புரட்சி தான். இப்படிக் கழிந்தது என் புர்லா வாசம்.\nதமிழ் நாட்டில், புர்லா மாதிரி ஏதோ ஒரு தாற்காலிக குடியிருப்பு வேண்டாம். 1950- 1956 என்று அரை நூற்றாண்டு பின்னால் தள்ளிப் போகவும் வேண்டாம். ஒரு பஞ்சாபி தன் தார்ப்பாலின் கொட்டகையில் காட்டிய மாதிரி ஒரு புறநகர் பார்வையாளருக்கு மார்லன் ப்ராண்டோ, பால் முனி, சத்யஜித் ரே, தபன் சின்ஹா, ஸ்ரீதர், சிவாஜிகணேசன் என்று அவரவர்க்கு வேண்டியதை எடுத்துக் கொள்ளட்டும் என்று ஒரு கலவை கிடைக்க இன்றாவது தமிழ் நாட்டில் சாத்தியமா? இந்தக் கேள்வியை நான் நியாயமாக 1950-களின் தமிழ் நாட்டில் என்று கேட்டிருக்க வேண்டும். 1961-.ல் நான் சென்னைக்கு விடுமுறையில் வந்திருந்த போது அதாவது புர்லாவில் பார்த்த 7/8 வருடங்கள் கழித்து, ப்ராட்வேயில் ஒரு சின்ன தியேட்டரில் சத்யஜித் ரே படம் ஓடுவதாக பத்திரிகையில் படித்து போனேன். எனக்கு சென்னை பரிச்சயமில்லை. தி.நகரிலிருந்து ப்ராட்வேக்கு தேடிப் போனேன். மாடியில் ஒரு சின்ன ஹாலில் தான் அந்த தியேட்டர் இருந்தது. அதிகம் போனால் 100 பேர் உட்காரலாம். சுமார் இருபது பேர் படம் பார்க்க வந்திருப்போம். மேலே நான் எதுவும் சொல்ல வேண்டிய தில்லை. எது எது நம்மைப் பாதிக்கும், எதில் நம் ரசனை இருக்கிறது என்று ஒரு சமாசாரம் இல்லையா.? 1946ல் ரத்தன் என்ற ஒரு ஹிந்தி சினிமா வந்தது. மதுரை சித்ரகலா ஸ்டுடியோவில் பார்த்தேன். அதன் பிறகு தமிழ் படங்கள் ஹிந்தி சினிமா மெட்டுக்களை போட்டி போட்டுக்கொண்டு காப்பி அடித்தன. அவாரா என்ற ஹிந்தி படத்தில் ராஜ் கபூர் போட்டிருந்த பிரம்மாண்ட செட்டைப் பார்த்த பிறகு, தமிழ் படங்களும் செட் போட ஆரம்பித்தன. இதெல்லாம் உடனே பற்றிக் கொள்ளும். ரசனை என்கிற வஸ்து இருக்கிறதே அது தான் நமக்கு ஒத்துக் கொள்ளாது. ஒவ்வொரு மனித சமுதாயத்துக்கும் ஒரு கலாசார முகம், ரசனை வாசனை இருக்குமே தனித்து. நமக்கு என்று இருக்கும் கலாசாரம் என்னதான் முக்கி முக்கி எடுத்தாலும், அது தனக்கு வேண்டியதைத் தான் எடுத்துக்கொள்ளும்.\n1956 – களின் கடைசியில் நான் தில்லி வந்ததும், எனக்கான தேர்வுகளைச் செய்துகொள்ள தில்லி நிறைய வாய்ப்புக்களை அள்ளிக் கொடுத்தது. தில்லியில் சினிமா தியேட்டருக்கு நான் போவது என்பது வெகு அபூர்வமாகவே ஆயிற்று. வந்ததும் இரண்டு பில்ம் சொசைட்டியில் உறுப்பினராகப் பதிவு செய்து கொண்டேன். மாதம் எட்டு ஒன்பது உலகத்து எல்லா நாடுகளிலிருந்தும் வரும் சிறந்த படங்களை மிகக் குறைந்த செலவில் நான் பார்க்கமுடிந்தது. ஒரு பெர்க்மன் படம் பார்க்க ஐந்தாறு மைல் பின் இரவில் நடந்து போய் பின் நடு இரவில் திரும்ப வேண்டுமென்றால் நடக்கத் தயங்கியதில்லை. பாகவத மேளா பார்க்க வேண்டுமென்றால், மழையில் நனைந்து கொண்டே வயல்களினூடே ஆறுமைல் நடந்து அங்கேயே இரவு ஒரு திண்ணையில் படுத்து பின் காலை எழுந்து நடக்கவும் தயங்கியதில்லை. சந்தோஷமாகவும் உற்சாகமாகவும் இருந்த நாட்கள் அவை.\nவெங்கட் சாமிநாதன் எழுத்தாளர்\nRelated tags : வெங்கட் சாமிநாதன்\nSeptember 10, 20140\n-ருத்ரா காதல் இதைக் கீறாத நிப்புமுனைகள் எழுத்துலக அனாதைகள். மயில் இறகு சவப்பெட்டியின் மேல் கூட‌ இது இருக்கலாம். காதலின் சாவுக்கு அடையாளமாய். சன்னல்\nஇங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . . .(26)\nசக்தி சக்திதாசன் அன்பினியவர்களே ! சிலநேரங்களில், சில பொழுதுகளில் ஏதோ உணர்வுகள் மனதினில் ஊசலாடும். கண்முன்னே, ஊடகங்களில் என்று பலவழிகளில் நாம் பார்த்தும் கேட்டும் அறிந்து கொண்ட நிகழ்வுகள் மனதை ஏதோ செ\nவிண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலவே – கவிஞர் ஆத்மநாதன்\nகாவிரி மைந்தன் காற்றினிலே மிதக்கும் கானங்கள் ஆயிரம்.. அந்தக் காற்றே காதலிக்கும் கானங்களும் அதில் உண்டு! இந்தப் பாடல் அந்த ரகம்! இன்ப லயம்! இயற்கையின் வடிவில் இன்பத்தை எடுத்துச்சொல்லும் அற்புதக் கவி
பருப்பு வகைகளுக்கான விலை முன்னறிவிப்பு - ValarTamil Publications\nபருப்பு வகைகளுக்கான விலை முன்னறிவிப்பு\nகோவை, மார்ச் 11\nஇந்தியா உலகின் மிகப்பெரிய பருப்பு உற்பத்தியாளர் மற்றும் நுகர்வோராக திகழ்வது மட்டுமல்லாது இறக்குமதியாளராகவும் உள்ளது. இந்திய அரசின் வேளாண் நல அமைச்சகத்தின் முதலாவது முன்கூட்டிய மதிப்பீட்டின் படி, 2021-2022ஆம் ஆண்டின் 26.96 மில்லியன் டன்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. மேலும், 2019-2020ஆம் ஆண்டில் நாட்டின் மொத்த பருப்பு உற்பத்தியில் 23.02 மில்லியன் டன்களை எட்டியுள்ளது. இதில் உளுந்து மற்றும் பச்சைப் பயறு, நாட்டின் மொத்த பருப்பு உற்பத்தியில் 16.93 மற்றும் 10.04 சதவீதம் பங்களிக்கின்றது.\nவேளாண் நல அமைச்சகத்தின் முதல் முன்கூட்டிய மதிப்பீட்டின் படி, 2021-2022ஆம் ஆண்டின் 2.66 மில்லியன் டன்கள் உளுந்து இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மத்தியபிரதேசம், ஆந்திரபிரதேசம், உத்திரபிரதேசம், தமிழ்நாடு, ஜார்கண்ட் மற்றும் மகாராஷ்டிரா ஆகியவை உளுந்து அதிக அளவில் பயிரிடப்படும் முக்கிய மாநிலங்களாகும். இம்மாநிலங்கள் சேர்ந்து நாட்டின் மொத்த உளுந்து உற்பத்தியில் 89 சதவீதம் பங்களிக்கின்றன. இந்தியா, சீனா, பாகிஸ்தான், ஜப்பான் மற்றும் தாய்லாந்து ஆகியவை உளுந்து இறக்குமதி செய்யும் முக்கிய நாடுகளாகும். இந்த நாடுகள் முக்கியமாக மியான்மா், தாய்லாந்து, கனடா மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்கின்றன.\nதமிழ்நாட்டில் பொதுவாக 4.05 இலட்சம் எக்டர் பரப்பளவில் உளுந்து பயிரிடப்பட்டு 3.17 இலட்சம் டன்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. கடலூர், நாகப்பட்டினம், விழுப்புரம், தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் ஆகியவை உளுந்து உற்பத்தி செய்யும் முக்கிய மாவட்டங்களாகும். ஏ.டி.டீ 3, ஏ.டி.டீ 4, ஏ.டி.டீ 5, கே.கே.எம் 1, கோ 6, வம்பன்5மற்றும் வம்பன்6ஆகிய உளுந்து இரகங்கள் அதிகளவில் பயிரிடப்படுகின்றன. தற்போது, உளுந்து வரத்தானது ஆந்திரபிரதேசம் மற்றும் மத்தியபிரதேசம் ஆகிய மாநிலங்களிலிருந்து வரத்தொடங்கியுள்ளது. மேலும், தமிழ்நாட்டிலிருந்து வரத்தானது வரும் மார்ச் முதல் வாரத்திலிருந்து வரத்தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மியான்மரிலிருந்து இறக்குமதி செய்யப்படும் உளுந்தானது உள்நாட்டு சந்தையின் விலையை பாதிக்கும் என வர்த்தக மூலகங்கள் கூறுகின்றன.\nவேளாண் நல அமைச்சகத்தின் முதல் முன்கூட்டிய மதிப்பீட்டின் படி, 2021-2022ஆம் ஆண்டின் 3.06 மில்லியன் டன்கள் பச்சைபயிறு இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இராஜஸ்தான், மத்தியபிரதேசம், மகாராஷ்டிரா, கா்நாடகா, பீகார், ஆந்திரபிரதேசம் மற்றும் தமிழ்நாடு ஆகியவை பச்சைப் பயறு உற்பத்தி செய்யும் முக்கிய மாநிலங்களாகும். இம்மாநிலங்கள் சேர்ந்து நாட்டின் மொத்த பச்சைப் பயறு உற்பத்தியில் 79 சதவீதம் பங்களிக்கின்றன. மியான்மர், சீனா, தான்சானியா, மொசாம்பிக் மற்றும் இந்தோனேசியா ஆகியவை பச்சைபயிறு இறக்குமதி செய்யும் முக்கிய நாடுகளாகும்.\nதமிழ்நாட்டில் சுமார் 1.71 இலட்சம் எக்டர் பரப்பளவில் பச்சைப் பயறு பயிரிடப்பட்டு 0.76 இலட்சம் டன்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. திருவாரூர், நாகப்பட்டினம், தூத்துக்குடி, கடலூர், திருவள்ளூர், சேலம் மற்றும் தஞ்சாவூர் ஆகியவை தமிழகத்தில் பச்சைப் பயறு உற்பத்தி செய்யும் முக்கிய மாவட்டங்களாகும். கோ 6, கோ 7, கோ 8 மற்றும் வம்பன்3ஆகிய பச்சைப் பயறு இரகங்கள் அதிகளவில் பயிரிடப்பட்டு வருகின்றன.\nஇந்தியாவின் தேசிய விவசாய கூட்டுறவு சந்தைப்படுத்தல் கூட்டமைப்பு ஆனது இப்பயிர்களை கொள்முதல் செய்யும் நிறுவனம் ஆகும். தூத்துக்குடி, விருதுநகர் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் பச்சைப்பயிர் கொள்முதல் ஏற்கனவே பிப்ரவரியில் தொடங்கிவிட்டது மற்றும் உளுந்து திருநெல்வேலி, திண்டுக்கல், புதுக்கோட்டை, அரியலூர், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம் மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் இருந்து கொள்முதல் செய்யப்படுகிறது.\nஇச்சூழலில், விவசாயிகள் விற்பனை முடிவுகளை எடுக்க ஏதுவாக தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வு மையத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு பாசன விவசாய மேம்பாட்டு திட்டத்தின் விலை முன்னறிவிப்புத் திட்டம், கடந்த 20 ஆண்டுகளாக விழுப்புரம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நிலவிய உளுந்து மற்றும் பச்சைப்பயறு விலை மற்றும் சந்தை ஆய்வுகளை மேற்கொண்டது. ஆய்வுகளின் அடிப்படையில், அறுவடையின் போது தரமான உளுந்தின் சராசரி பண்ணை விலை கிலோவிற்கு ரூ.65-67 வரை இருக்கும் மற்றும் நல்ல தரமான பச்சைப் பயறு சராசரி பண்ணை விலை கிலோவிற்கு ரூ.63-65 வரை இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. மேலும், பிற மாநிலங்களிருந்து வரும் வரத்து மற்றும் இறக்குமதியை பொறுத்து விலையில் மாற்றம் இருக்கும். தற்போது, நெல் தரிசு பகுதிகளில் உளுந்து மற்றும் பச்சைப் பயறு அறுவடை தொடங்கியுள்ளது. எனவே, விவசாயிகள் மேற்கூறிய சந்தை ஆலோசனை அடிப்படையில் விற்பனை முடிவுகளை எடுக்குமாறு பரிந்துரைக்கப்படுகின்றனர்.\nமேலும் விவரங்களுக்கு, உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி சந்தைத் தகவல் மையம், வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வு மையம் அல்லது இயக்குனர் மற்றும் முனை அதிகாரி, தமிழ்நாடு பாசன விவசாய நவீன மாயமாக்கல் திட்டம், நீர் தொழிட்நுட்ப மையம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர்-641 003. தொலைபேசி -0422-2431405. தொழில்நுட்ப விவரங்களுக்கு, பேராசிரியர் மற்றும் தலைவர், பயறுவகைத் துறை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர்-641 003. தொலைபேசி – 0422-2450498 தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nPrevious நார்த்தங்காய் மற்றும் மா மர நோய்களுக்கான தீர்வு\nNext காஞ்சிபுரம் மற்றம் செங்கல்பட்டு மாவட்ட வானிலை சார்ந்த வேளாண் ஆலோசனைகள்
கருப்பு உடையில் நீண்ட தாடியுடன் சிம்பு வெளியிட்ட சூப்பர் கூல் புகைப்படம்!!! - சினி கதிர்\nஇளம் முன்னணி நடிகரான சிலம்பரசன் தற்போது சுசீந்திரன் இயக்கும் ஈஸ்வரன் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் டைட்டில் அறிவிப்பு போஸ்டர் சமீபத்தில் வெளியாகி இணையத்தில் வைரலானது. மேலும் சிம்பு உடற் பயிற்சியின் மூலம் தனது உடல் எடையை முழுவதுமாக குறைத்துள்ளார்.\nசிலம்பரசன் டி ஆர் என்ற யூ டியூப் சேனலையும் துவக்கியிருக்கிறார் சிம்பு. இதற்கிடையே தற்போது தனது புகைப்படத்தை வெளியிட்டுள்ள சிம்பு தனது டிவிட்டர் பக்கத்தில் ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பதிவொன்றைப் பகிர்ந்துள்ளார்.\nஅதில்,”என்னுடைய இந்த முழு மாற்றத்திற்கும் வழிகாட்டிய மற்றும் உதவிய உச்ச சக்திக்கு நன்றி, மற்றும் நிபந்தனையற்ற அன்பைப் பொழிந்த எனது ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி, உங்கள் அன்பு எனக்கு உலகம் என்று பொருள்” என்று பதிவிட்டுள்ளார். கருப்பு உடையில், நீண்ட தாடியுடன் உலாவரும் இந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.\nPrevious லாரன்ஸ் பிறந்த நாளில் வெளியான புதிய பட அறிவிப்பு!!!\nNext இசைப்புயலுடன் தனுஷ் வெளியிட்ட அட்டகாசமான புகைப்படம்!!! மகிழ்ச்சியில் ரசிகர்கள்!!!
அதிர்ச்சி அளிக்கிறது... எஸ்.பி.பி மறைவுக்கு ரஜினிகாந்த் இரங்கல்! | s p balasubramaniam - rajini - | nakkheeran\nPublished on 25/09/2020 (15:53) | Edited on 25/09/2020 (16:26) Comments\nஉடல்நலக்குறைவு காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியன், 25.09.2020 வெள்ளிக்கிழமை பிற்பகல் காலமானார். அவருடைய மறைவுக்குத் திரையுலகினர், ரசிகர்கள், அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.\nநடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள வீடியோவில், 'இன்னைக்கு ரொம்ப சோகமான நாள். கடைசி நிமிஷம் வரைக்கும் உயிருக்காக போராடி, மதிப்பிற்குரிய எஸ்.பி.பி அவர்கள் நம்மை விட்டுப் பிரிந்திருக்கிறார். அவருடைய பிரிவு மிகுந்த வேதனையையும், அதிர்ச்சியையும் அளிக்கிறது. எஸ்.பி.பி அவர்களுடைய பாட்டுக்கும் குரலுக்கும் ரசிகர்களாக இல்லாதவர்கள் இந்தியாவில் இல்லை.\nஎஸ்.பி.பி.யின் பாடலையும், குரலையும் விட அவரது மனித நேயத்தை அனைவரும் நேசித்தார்கள். சின்னவங்க, பெரியவங்க என எல்லோரையும் மதித்தார். அன்பு கொடுத்தார். இந்திய திரையுலகம் எத்தனையோ பெரிய பாடகர்களை உருவாக்கியிருக்கிறது. அவர்களுக்கு இல்லாத ஒரு சிறப்பு நம்முடைய எஸ்.பி.பி.க்கு இருக்கிறது. அவர்கள் எல்லோருமே குறிப்பிட்ட மொழியில்தான் பாடினார்கள். ஆனால் எஸ்.பி.பி பல மொழிகளில் பாடியுள்ளார். அவரது இனிமையான, கம்பீரமான குரல் நூற்றாண்டுக்கும் மேல் ஒலித்துக்கொண்டே இருக்கும். எனினும், அவர் இன்று நம்முடன் இல்லை என்பது மிகுந்த வருத்தமளிக்கிறது. அவரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்' என்று தனது இரங்கல் செய்தியை வெளியிட்டுள்ளார்.
துருவ நட்சத்திரத்தின் உணர்வை நம் உயிரிலே மெருகேற்றிக் கொள்ள வேண்டும்\nPosted on 25/12/2020 by Ahileswaran\nஅதிகாலை நான்கு மணிக்கெல்லாம் துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் பேரருள் உணர்வைச் சூரியனின் காந்த சக்தி கவர்கிறது. நம் பூமி துருவத்தின் வழி அதை இழுத்துக் கவர்கிறது. “துருவத்தில் அந்த அடர்த்தியின் தன்மை அடைகிறது…!”\nஅகஸ்தியன் துருவனாகித் துருவ மகரிஷியாகித் துருவ நட்சத்திரமான அந்தப் பேரருள் பேரொளியை\n1.அந்த நேரத்தில் நாம் கவர்ந்து நம் உடலுக்குள் இருக்கும் எல்லா அணுக்களுக்குள்ளும் இணைக்க வேண்டும்.\n2.துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கிச் சுவாசிக்க வேண்டும்.\nநம் உடலில் இருக்கும் எல்லா அணுக்களுக்குள்ளும் கணங்களுக்கு அதிபதி கணபதியாக அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை அதிபதியாக்கிடல் வேண்டும்.\nஅப்பொழுது நாம் சுவாசித்த உணர்வு நந்தீஸ்வரன் அதனின் உணர்வின் இயக்கமாக தீமையை நீக்கிடும் உணர்வாக நமக்குள் உருவாகிறது.\nதுருவ நட்சத்திரத்தின் உணர்வை அடிக்கடி நுகர்ந்தோம் என்றால் நந்தீஸ்வரன் சிவனுக்குக் கணக்குப்பிள்ளை என்று சொல்வது போல்\n1.தீமையை நீக்கும் உணர்வின் கணக்குகள் கூடி\n2.நாம் அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்புக்குச் செல்வோம்.\nகுருநாதர் காடு மலைகள் எல்லாம் எம்மை (ஞானகுரு) அலையச் செய்தார். ஒவ்வொரு சந்தர்ப்பத்திலேயும் பல இன்னல்களை ஏற்படுத்தினார்.\n1.அதை நுகரும் போது உன் உடலுக்குள் மாறுபடும் உணர்வுகள் எப்படி வருகிறது…?\n2.பயத்தின் எல்லை கடந்து செல்லும் போது அந்த உணர்வின் தன்மை எப்படி இயக்குகிறது…?\n3.உன் உடலில் பதட்டங்கள் எப்படி வருகிறது…? சிந்தனைகள் எப்படிச் சிதறுகிறது…?\n4.சிந்தனையில்லாத நிலையில் உன் உடலுக்குள் என்னென்ன மாற்றங்கள் வருகிறது…?\n5.உடலில் இரத்த அழுத்தங்கள் (BLOOD PRESSURE) எப்படி அதிகமாகிறது…?\n6.அதை எல்லாம் மகரிஷிகளின் அருள் சக்தி கொண்டு எப்படி மாற்ற வேண்டும்…? என்று நேரடியாக அனுபவ வாயிலாகத் தெளிவாக்கினார்.\nகுருநாதர் காட்டிய அருள் வழியில் அந்த மகரிஷிகளின் அருள் உணர்வை உங்களுக்குள்ளும் பதிவாக்குகின்றோம். அது பதிவானால் உங்களுக்குள் சிந்திக்கும் ஆற்றல் கூடும்.\n1.நாம் தவறு செய்கின்றோமா…?\n2.நாம் நுகர்ந்த உணர்வு தவறு செய்ய வைக்கிறதா…? என்று\n3.நீங்கள் சிந்தித்துச் செயல்படுவதற்கு இது உங்களுக்கு உதவியாக இருக்கும்.\nஏனென்றால் ஞானத்தின் வழியில் நீங்கள் வழி நடந்து தீமைகள் புகாது தடுக்கும் அந்த வல்லமைகளை நீங்கள் பெற வேண்டும் என்பதற்குத்தான் எனக்குக் குருநாதர் எப்படி உபதேசித்தாரோ அதே உணர்வைப் பதிவாக்குகின்றேன். பொறுமையாக இருந்து பதிவாக்க வேண்டும்.\nகடவுளின் அவதாரத்தில் கூர்மை அவதாரம் என்று கண்களின் ஆற்றலைக் காட்டியுள்ளார்கள் ஞானிகள். அது போல் யாம் உபதேசிக்கும் உணர்வுகளைக் கூர்மையாகப் பதிவாக்கி கொண்டால் துருவ நட்சத்திரத்தின் உணர்வின் கணக்குகள் உங்களுக்குள் கூடும்.\nஅந்தக் கணக்கின் பிரகாரம் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் வலுவாகி அதன் வழி வாழச் செய்து தீமைகளிலிருந்து விடுபடும் உணர்வின் சக்தியை உங்களுக்குள் பெருக்கிக் கொள்ள முடியும்.\n1.உங்கள் உயிர் கடவுள்\n2.உங்கள் உடல் ஆலயம்\n3.ஆண்டவன் வீற்றிருக்ககூடிய அந்த ஆலயத்தில் அருள் உணர்வுகளை ஊட்டப்படும் பொழுது\n4.இதை நீங்கள் உற்றுக் கேட்டு நுகர்ந்தால் தீமைகளை அகலச் செய்யும்…\n5.உங்கள் உடலான ஆலயத்தைப் பரிசுத்தமாக்கும்.\nஅத்தகைய தூய்மைப்படுத்தும் உணர்வின் தன்மை உங்களுக்குள் அணுக்களாக விளையும். பரிசுத்தமான எண்ணங்களை உங்களுக்குள் தோற்றுவிக்கும்.\nஆகவே உங்கள் உயிரான கடவுளை நீங்கள் மதிக்க வேண்டும்.\n1.அவன் வழியே அவனுடன் சேர்த்து ஒளியின் உணர்வாக இருந்து\n2.இருளை நீக்கிப் பொருளைக் காணும் செயல்படுத்திய அந்த உணர்வுடன்\n3.நீங்கள் ஒன்றி வாழ வேண்டும் என்பதற்குத்தான் இதைச் சொல்கிறேன்.\nநீங்கள் அந்த அருள் சக்தி பெறவேண்டும் என்று நான் (ஞானகுரு) சொல்லும் பொழுது எனது ஈசனும் அதே வழியில் செயல்படுத்தும்.\nஎத்தனையோ பேரிடம் பழகினாலும் அவர்களும் அருள் உணர்வுகள் பெற வேண்டும்… பொருள் காணும் உணர்வுகள் அவர்கள் பெற வேண்டும்… என்ற இந்த உணர்வுகளைச் சேர்க்கப்படும் பொழுது நான் என்னும் இந்த உணர்வுகளை உயிரான ஈசன் எனக்குள் இதை உருவாக்குகின்றான்.\nஅதே வழியில் நீங்களும் செயல்படுத்திப் பாருங்கள். பேரானந்த நிலை பெறுவீர்கள்.\nஇந்த உடல் நமக்குச் சதமல்ல… ஆனால் உயிர் அழியாதது….! அதைத் தான் நாம் சொந்தமாக்க வேண்டும். உயிரைப் போன்றே உணர்வை ஒளியாக்கி அதைச் சொந்தமாக்க வேண்டும்.\n1.ஆகவே ஒவ்வொரு நிமிடமும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை\n2.நமக்குள் செருகேற்றிக் கொள்ள வேண்டும்… உயிரிலே மெருகேற்றிக் கொள்ள வேண்டும்.
நெற்றியில் விபூதி பூசுவதால் உண்டாகும் பயன்கள்(பகுதி- 21) « Siragu Tamil Online Magazine, News\nநெற்றியில் விபூதி பூசுவதால் உண்டாகும் பயன்கள்(பகுதி- 21)\nவிபூதியானது ‘திருநீறு’ என்றும் அழைக்கப்படுகிறது.விபூதி என்றால் ‘ஐசுவரியம்’ என்று பொருள் உண்டு. சிவனை தெய்வமாக வணங்கும் அனைவரும் விபூதியை நெற்றியில் தரித்துக்கொள்வது வழக்கம். நெற்றி மட்டுமின்றி திருநீறு உச்சந்தலை, தொப்புளுக்கு சற்று மேல், இடது மற்றும் வலது தோள்பட்டை, இடதுகை மற்றும் வலக்கை நடுவில், இடது மற்றும் வலது இடுப்பு பகுதியிலும் இடுவது வழக்கம். பசுமாட்டின் சாணத்தை எடுத்து, அதை உருண்டையாக்கி, வெயிலில் காயவைத்து, அதன் பின்னர் உமியினால் மூடி நெருப்பினால் புடம் போட்டால் விபூதி கிடைக்கும்.\nவிபூதிக்கு நல்ல அதிர்வுகளை மட்டும் உள்வாங்கும் திறன் உண்டு. இரு புருவங்களுக்கு இடையேயுள்ள நெற்றி பகுதியில் மிக நுண்ணிய நரம்புகள் உள்ளன. விபூதியை எடுத்து அந்த நெற்றி பொட்டில் சிறிய அழுத்தம் கொடுத்து வைக்கும்போது மன ஒருமைப்பாடு தோன்றும். விபூதி அணிவதால் மனதில் இறைபக்தி மேலோங்கி, நம்மிடம் இருக்கும் தீய எண்ணங்கள் விலகும். நல்ல எண்ணங்கள் தோன்றும். உடல், ஆரோக்கியம் அடையும். தகாத செயல்களை செய்வதில் இருந்து மனம் விலகும். எனவே விபூதி முக்கியமாக நெற்றிப் பகுதியில் வைக்கப்படுகிறது.\nநெற்றியில் விபூதி வைத்து இறைவனை தமிழர்கள் வழிபாடு செய்கின்றனர். ஆஸ்திரேலிய பழங்குடியினர் இன்றும் பண்டிகை நாட்களில் முப்பட்டைத் திருநீறை உடலெங்கும் அணிகின்றனர். தலையில் நீர் கோர்த்திருப்பதை விபூதி உறிந்து விடுவதால் இதற்கு மருத்துவ குணமும் உண்டு.\nதமிழ்நாட்டில் பெண்கள் நெற்றியில் பொட்டு வைக்கும் பழக்கம் உள்ளது. சில ஆண்களும் நெற்றியில் திலகம் இடுவது வழக்கம். முற்காலத்தில், வட்ட பொட்டுதான் வைக்க வேண்டுமென, பெண்களுக்கு எந்தக் கட்டாயமும் இருந்ததில்லை. அனைவருமே ஏதோ ஒரு சின்னத்தை நெற்றியின் நடுவில் அதாவது புருவ மத்தியில் இட்டுக் கொள்வது பழங்குடிகள் காலத்திலிருந்தே வழக்கமாயிருந்திருக்கிறது. அவை, பெரும்பாலும் குலச்சின்னங்களாக இருந்திருக்கின்றன. அதன் பிறகு வேத கால மன்னர் பரம்பரைகள் வரத்தொடங்கியபின் சூரிய, சந்திர, லச்சினைகளை நெற்றி நடுவில் வைத்துக்கொள்ளத் தொடங்கினர். இப்படித் திலகமிடுவதற்கென்றே அரண்மனைகளில் அக்கலையில் தேர்ந்த சூதர்கள் என்று சொல்லப்படக்கூடிய பணியாளர்களை அப்போது அரசர்கள் வேலைக்கு அமர்த்தியிருந்தனர்.\nபொதுவாக திருமணமான பெண்கள் நெற்றியில் மட்டுமல்ல நெற்றி வகிட்டிலும் சிந்தூரம் இட்டுக் கொள்வது வட இந்தியப்பழக்கம். தென்னிந்தியாவிலும் சுமங்கலிகள் நெற்றி வகிட்டில் குங்குமம் வைத்துக் கொள்கிறார்கள். இது அவர்களை இளம்பெண்கள் மற்றும் திருமணமாகாத பெண்களில் இருந்து வேறுபடுத்திக் காட்டுவதோடு ஆண்களின் பிறழ் பார்வையில் இருந்து தப்புவதற்கும் உதவுவதாகப் பெண்கள் நம்புகின்றனர். விதவைகள் பொட்டு வைத்துக் கொள்ளக் கூடாது எனும் நம்பிக்கையை உடைத்து தற்போது சிறு திலகம் அல்லது கருப்புச் சாந்திட்டுக் கொள்வது வழக்கமாகியிருக்கிறது. கணவனை இழந்த பெண்களும் பொட்டு வைப்பது நல்ல விசயமாகும். பாழ் நெற்றி என்பது இந்தியர்களிடையே ஆரோக்யமான விசயமாகக் கருதப்படவில்லை.\nகுங்குமம், சந்தனம், திருநீறு, கரிய நிற மை அல்லது நாமக்கட்டியால் திலகம் இவற்றில் ஏதேனும் ஒன்று ஆண்கள் மற்றும் பெண்களின் நெற்றியில் இடம்பெற வேண்டும் என்பது மங்கலச் சின்னங்களாகக் கருதப்படும் என்ற நம்பிக்கையும் மக்களிடையே நிலவுகிறது.\nபுருவ மத்தி என்பது ‘ஆக்னேய சக்கரம்’ இருக்குமிடம். அந்த ஆக்னேய சக்கரம் என்பது நமது உடலில் உள்ள 7சக்தி மையங்களில் ஒன்று. நம்முடைய உடலில் ஏழு சக்தி மையங்கள்/சக்கரங்கள் உள்ளன. அவையாவன, மூலாதாரம், ஸ்வாதிஷ்தானம், மணிப்பூரகம், அனகதம், விசுத்தி, ஆக்னேய சக்கரம், சஹஸ்ரரம். ஏழு சக்கரங்களில் முதலாவது சக்கரமாகிய ‘மூலாதாரம்’ முதுகுத்தண்டின் அடிப்பாகத்தில் உள்ளது. மூலாதார சக்கரத்திற்கு சற்று மேலே தொப்புளுக்கு சற்று கீழே இரண்டாவது சக்கரமாகிய ‘ஸ்வாதிஷ்தானம்’ அமைந்துள்ளது. தொப்புள் பகுதியில் மூன்றாவது சக்கரமாகிய ‘மணிப்பூரகம்’ அமைந்துள்ளது. அடுத்து இருதயப்பகுதியில் நான்காவது சக்கரமாகிய ‘அனகதம்’ அமைந்துள்ளது. கழுத்துப்பகுதியில் ஐந்தாவது சக்கரமாகிய ‘விசுத்தி’ அமைந்துள்ளது. புருவ மத்தியில் ஆறாவது சக்கரமாகிய ‘ஆக்னேயம்’ உள்ளது. அடுத்து தலை உச்சியில் ஏழாவது சக்கரமாகிய ‘சஹஸ்ரரம்’ உள்ளது, இந்த ஏழு சக்கரங்களிலும் சக்திகள் இருப்பதாக கூறப்பட்டிருக்கிறது.\nஅது மட்டுமின்றி, புருவ மத்தியில் பொட்டு வைத்துக் கொண்டால் பிறர் நம்மை வசியம் செய்வது கடினம் என்றொரு நம்பிக்கையும் மக்களிடையே காணப்படுகிறது.. மருத்துவ ஆராய்ச்சிகளின்படி, ‘புருவ மத்தி’ என்பது நினைவாற்றலுக்கும் சிந்திக்கும் திறனுக்கும் உரிய இடம். இதனால்தான் ‘யோகக்கலை’ இதனை ‘ஆக்னேயச் சக்கரம்’ என்கிறது. இந்தச் சக்கரத்தின் இயல்பு மின்காந்த அலைகளை புருவ மத்தி மற்றும் நெற்றிப் பொட்டில் வெளிப்படுத்தக் கூடியதாக இருப்பதால் இங்கு பொட்டு இட்டுக் கொள்வதின் மூலம் சக்தி விரயமாவதைத் தடுக்கலாம் என்கிறது யோகக்கலை.\nஅதனால்தான், நம் மனம் கவலையால் வாடும்போது, இந்தப் பகுதியானது சூடாகித் தலைவலி அதிகமாவதை உணர்கிறோம். நெற்றியில் இடும் திலகம், அந்தப் பகுதியைக் குளிர்விப்பதோடு நம் உடலின் சக்தி வெளியேறி விரயமாவதையும் தடுக்கிறது. விஞ்ஞான ரீதியாகப் பார்த்தால்; புருவ மத்தியில் பொட்டு வைத்துக் கொள்வதால்; மனம் அமைதி பெறுகிறது என்பது நிரூபிக்கப்பட்ட உண்மைகளில் ஒன்று. ஆண்கள் இருபுருவங்களையும் இணைத்தாற் போல் குங்குமம் அணிவது தன்னம்பிக்கையை அதிகரிக்கும். குங்குமம் வைத்துக் கொள்வதால் உடல் குளிர்ச்சி அடைவதோடு மனதில் எதிர்மறை எண்ணங்களின் தாக்கம் குறைந்து ஆரோக்கியமான எண்ணங்கள் மேம்படும் என்பதும் பல்வேறு சந்தர்பங்களில் நிரூபிக்கப்பட்ட உண்மைகளே!\nவங்காள தேசத்தில் இஸ்லாமிய பெண்கள் நெற்றியில் குங்குமம் வைக்கும் பழக்கம் இன்றுவரை உள்ளது. மத்திய கிழக்கு ஆசிய நாடுகளிலும் விபூதி பூசும் பழக்கம் இருந்துள்ளது. எபிரேயர்கள் 40நாட்கள் தவம் இருப்பதை பழக்கமாக கொண்டிருந்தனர். இக்காலம் ‘தவக்காலம்’ என்றழைக்கப்படுகிறது. இந்த காலத்தில், தங்களை பாவியாக உணர்ந்தவர்கள் தங்கள் பாவங்களை அறிக்கையிட்டு பின்னர் தலையில் விபூதி பூசி கோயிலில் இருந்து ஊருக்கு வெளியே துரத்தி விடப்பட்டிருக்கிறார்கள். இந்த 40நாட்களில் அவர்கள் அவர்களை கோயிலுக்குள்ளும் ஊருக்குள்ளும் அனுமதிக்க மறுத்திருக்கிறார்கள். இவ்வாறு ஊருக்கு வெளியே அனுப்பப்பட்டவர்கள், தங்களை கடந்து கோயிலுக்கு செல்பவர்களிடம் தங்களுக்காக கடவுளிடம் வேண்டிக்கொள்ளும்படி மன்றாடுவார்களாம். தவக்காலம் புதன் கிழமை ஆரம்பிக்கப்பட்டது. அன்றுதான் பாவிகள் விபூதிகளை பூசிக்கொள்வார்கள். இதனையே ‘விபூதி புதன்’ என்று அழைக்கின்றனர்.\nகி.மு.விலேயே நோன்பு கடைபிடிக்கும் வழக்கமும் அவர்களிடையே இருந்துள்ளது. அக்காலத்தில், ஆன்மா மற்றும் உடலை ஒடுக்க, பாவங்களை போக்க, போரில் வெற்றி பெற, நோயிலிருந்து விடுதலை பெற, மனந்திரும்பி இறைவனிடம் வருவதற்காகவும் மற்றும் வேண்டுதல் நிறைவேறுவதற்காகவும் நோன்புகள் கடைபிடித்தனர். நோன்பு மட்டும் நம் பாவங்களை திருத்தவோ, மன்னிக்கப்படவோ உதவாது. உண்ணாமல் இருந்தால் அது பட்டினியாகும். பட்டினிக்கும் நோன்பிற்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன. நோன்புடன் சேர்த்து இறைவனை எண்ணி தவம் செய்ய வேண்டும். அதுதான் பலனைத்தரும்.\nதிருவிவிலியம், பல இடங்களில் நெற்றியில் அடையாளம் இடுவது நல்லது என்றே குறிப்பிடுகிறது. நெற்றியில் அடையாளம் போடாதவர்களே பெரும்பாலான இடங்களில் கொல்லப்பட்டனர் என்றும் குறிப்பிடுகிறது.\nஒருமுறை, இறைவன் கோபத்துடன் உரத்த குரலில், ‘நகருக்குத் தண்டனை வழங்குவோரே!நீங்கள் ஒவ்வொருவரும் உம் கொலைக் கருவியைக் கையிலேந்தி நெருங்கி வாருங்கள்’ என்றார். உடனே ஏழு ஆட்கள் வடக்கு நோக்கி இருக்கும் மேல் வாயிலின் வழியாக வந்தனர். அவர்களில் ஆறுபேர் கையில் கொலைக் கருவி இருந்தது. அந்த 7பேரில், எழுதும் மைக்கூட்டை இடையில் வைத்திருந்த ஒருவனும் இருந்தான். அவர்கள் உள்ளே வந்து வெண்கலப் பீடத்தின் அருகில் நின்றனர். அப்பொழுது இறைவன், நார்ப்பட்டு உடுத்தி எழுதும் மைக்கூட்டைத் தம் இடையில் வைத்திருந்த அம்மனிதனை நோக்கி, ‘நீ எருசலேம் நகரெங்கும் சுற்றிவந்து அதனுள் செய்யப்படும் எல்லா அருவருக்கத்தக்க செயல்களுக்காகவும் பெருமூச்சு விட்டுப் புலம்பம் மனிதர்களுக்கு நெற்றியில் அடையாளம் இடு’ என்றார். இறைவன் மற்றவர்களை நோக்கி, ‘நீங்கள் அவர் பின்னால் நகரெங்கும் சுற்றி வந்து அடையாளம் இடப்பட்ட மனிதர்களை தவிர மற்ற அனைவரையும் தாக்குங்கள். உங்கள் கண்களினின்று யாரையும் தப்பவிடவேண்டாம்; இரக்கம் காட்டவேண்டாம் என்றார். அவர்களும் அப்படியே செய்தனர்.\nமற்றொரு பகுதியில், சீயோன் மலைமீது ஆட்டுக்குட்டி நிற்கக் கண்டேன். அதன் பெயரையும் அதனுடைய தந்தையின் பெயரையும் தங்களது நெற்றியில் பொறித்திருந்த ஓர் இலட்சத்து நாற்பத்து நான்காயிரம்பேர் அதனுடன் இருந்தனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆட்டுக்குட்டி என்பது ஈசனாகிய இயேசுவையும், தந்தை என்பது எல்லாம் வல்ல பரமேசுவரனாகிய இறைவனையும் குறிக்கிறது. அதாவது, இறை மக்கள், இறைவன் மற்றும் இறை மகன் நாமத்தை மக்கள் நெற்றியில் அடையாளமாக பொறித்தியிருப்பார்கள் என்று அர்த்தம்.\nஇன்னொரு பகுதியில், மோசே தான் அழைத்து வந்த மக்களிடம், ‘இறைவன் நம்மை, அவருடைய பலத்த கையினால் எகிப்து தேசத்தில் இருந்து புறப்படப் பண்ணியதற்கு அடையாளமாக இது உங்கள் கண்களுக்கு நடுவே ஞாபகக் குறியாகவும், இது உங்கள் கையில் அடையாளமாகவும் இருக்கக்கடவது’ என்றார்.\nஆனால், ஒரே ஒரு பகுதியில் மட்டும், மூன்றாம் வானதூதர் உரத்த குரலில், “விலங்கையும் அதன் சிலையையும் வணங்கி, தங்கள் நெற்றியிலோ கையிலோ குறி இட்டுக்கொண்டோர் அனைவரும். இறைவனின் கோபம் காரணமாக அவர்கள் தூய வானதூதர் முன்னிலையிலும் ஆட்டுக்குட்டியின் முன்னிலையிலும் நெருப்பாலும் கந்தகத்தாலும் வதைக்கப்படுவார்கள்’ என்று கூறியதாக எழுதப்பட்டுள்ளது.\nஇதன் மூலம், நெற்றியில் அடையாளம் இடுவது என்பது நல்லதே. ஆனால், படைத்தவனை மறந்து படைப்புகளின் முன்பாக மற்றும் சிலைகளின் முன்பாக நின்று நெற்றியில் அடையாளம் இடுபவர்களை இறைவன் வெறுக்கிறார் மற்றும் இது இறைவனுக்கு அருவருப்பானது என்று அறிகிறோம்..\nதமிழர்கள் விபூதியுடன் சந்தனத்தையும் உடலிலும் நெற்றியிலும் பூச பயன்படுத்தினர். நமது உடலின் அனைத்து நாடி நரம்புகளும் மூளையுடன் இணைக்கப்பட்டுள்ளது. அவற்றில் பெரும்பாலான நரம்புகள் நெற்றி பொட்டின் வழியாக செல்கின்றன. எனவே, நெற்றி பகுதி எப்பொழுதும் சூடாகவே இருக்கும். நமது அடி வயிற்றில் நெருப்பு சக்தியிருக்கிறது. அந்த சூட்டின் வெப்பம் அதிகமாக உணரப்படுவது நெற்றி பொட்டில்தான். அதனால்தான் நமக்கு காய்ச்சல் வரும்போது நெற்றியில் கைவைத்து காய்ச்சலின் தன்மையை அறிகிறோம். அதனால்தான், நம் முன்னோர்கள் மூளையையும் அதை இணைக்கும் நரம்புகளையும் குளிர்ச்சி செய்வதற்காக நெற்றியில் சந்தனம் பூசினர். வட இந்தியாவில் விபூதி பிரபலமில்லை. ஆனால், அவர்களிடம் நெற்றியில் சந்தனம் வைக்கும் வழக்கம் உள்ளது.\nசந்தனம் மருத்துவ குணம் உள்ள ஒரு மரம். இதனை அரைத்து நெற்றியில் பொட்டு வைத்தால் உடல் குளிர்ச்சி அடையும். பெண்கள் மற்றும் ஆண்கள் அனைவரும் சந்தன பொட்டு வைக்கும் பழக்கம் தமிழர்களிடம் உள்ளது. மொட்டை போட்ட பின்னர் குழந்தைகளும் ஆண்களும் தலையில் சந்தனம் தேய்க்கும் பழக்கமும் நடைமுறையில் உள்ளது. மொட்டை போட்டால் தலை சூடாகும். இதனை தவிர்க்க குளித்த பின்னர் தலையில் சந்தனம் தடவுகிறோம்.\nசந்தனம் அனைத்து மதத்தினராலும் பயன்படுத்தப்படுகிறது. இந்துக்களும், கிறிஸ்தவர்களில் ரோமன் கத்தோலிக்க பிரிவை சேர்ந்தவர்களும் நெற்றியில் பொட்டு வைப்பது வழக்கம். இந்த பிரிவை சேர்ந்தவர்கள் ஆண்கள் பெண்கள் வேறுபாடின்றி அனைவரும் நெற்றியில் சந்தனம் இடுவார்கள். இது தவிர, பிற கிறிஸ்தவர்கள் கொண்டாடும் விழாக்களில் சந்தனம் அவசியம் இடம் பெற்றிருக்கும். சந்தனக்கூடு திருவிழா என்பது தமிழ்நாட்டில் உள்ள இசுலாமியர்கள் கொண்டாடும் ஒரு விழாவாகும். மதங்களைத் தாண்டி நிற்பதால் சந்தனம் மணக்கிறது. ஆனால், மனிதன்?மதத்தின் பின்னல் செல்லாமல் இறைவன் வழி நடந்தால் மனிதனும் வாழ்வில் பிரகாசிப்பான்.\nநன்றி: ஆர். கே. வி. புருவ மத்தியில் பொட்டு வைத்துக் கொள்வது ஏன்? 27செப்டம்பர் 2019. தினமணி.\nகருத்துக்கள் பதிவாகவில்லை- “நெற்றியில் விபூதி பூசுவதால் உண்டாகும் பயன்கள்(பகுதி- 21)”
உடலில் வெடிகுண்டுகளைக் கட்டி இருவரை கொன்ற ஐஎஸ்ஐஎஸ்! | www.patrikai.com\nஉடலில் வெடிகுண்டுகளைக் கட்டி இருவரை கொன்ற ஐஎஸ்ஐஎஸ்!\nதங்கள் இயக்கத்தவர்கள் போல் நடித்து, வேவு பார்த்ததாக இரண்டு ஆண்களை, அவர்களுத உடலில் குண்டு வைத்து வெடிக்கச் செய்து கொலை செய்திருக்கிறார்கள் ஐ.எஸ். ஐ.எஸ். பயங்கரவாதிகள். இதை பதிவு செய்து, இணையதளங்களில் உலவவிட்டிருக்கிறார்கள்.\nஈராக், சிரியா ஆகிய நாடுகளை தளமாக கொண்டு இயங்கி வரும் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத இயக்கம், உலகையே அச்சுறுத்தி வருகிறது. பொது இடங்களில் மனிதர்களை துடிக்கத்துடிக்க கழுத்தை அறுத்து கொல்வது, பெண்களை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு அவர்களை சந்தையில் ஏலம் போட்டு விற்பது என்று பல்வேறு கொடூரங்களை செய்துவருகிறது இந்த இயக்கம்.\nஆனாலும் இந்த இயக்கத்தின் மீது ஈர்ப்பு ஏற்பட்டு உலகின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்கள் இணைந்துவருகிறார்கள். அப்படி சமீபத்தில் இந்த இயக்கத்தில் சேர்ந்த இருவர், உளவு பார்க்க வந்திருப்பதாக ஐ.எஸ்.ஐ.எஸ். தலைமை நினைத்தது.\nஆகவே அவர்களை கொடூரமாக கொலை செய்ய முடிவு செய்து, அதை வீடியோ எடுத்து இணையத்தில் பரவவிடவும் தீர்மானித்தது.\nஅந்த வீடியோவில் வரும் காட்சிகள் பதைபதைக்க வைக்கின்றன. ஒரு சிதைந்த கட்டிடத்தின் உள்ளே இரண்டு ஆண்கள் கயிறால் கட்டப்பட்டு அமரவைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் கண் முன்னே, குண்டுகள் பற்ற வைக்கப்படுகின்றன. மரண பீதியில் அந்த இருவரும் அமர்ந்திருக்கிறார்கள். பிறகு ஒரே புகை மண்டலம். அதன் பிறகு ஒரு கட்டிடம் இடிந்து விழும் காட்சி வருகிறது. அதாவது அந்த இருவரும் கட்டி வைக்கப்பட்டிருந்த பகுதி வெடிகுண்டால் சிதறுகிறது. இருவரும் உள்ளேயே சமாதி ஆகிவிட்டார்கள் என்பதை உணர்த்துகிறது.\nதங்களை வேவு பார்த்தால் இதுதான் தண்டனை என்று உலகிற்கு காண்பிப்பதற்காக இந்த வீடியோவை ஐ.எஸ் ஐ.எஸ். பயங்கரவாதிகள் வெளியிட்டிருக்கிறார்கள்.\nPrevious articleஅஜீத்துக்கு ஜோடியா… நோ சொல்லும் நடிகை!\nNext articleவிஷால் அணியினர் பொய்யர்கள்!: சரத்குமார் தாக்கு
விஞ்ஞானம் விழித்திடுமுன் விந்தை நபியின் விண்வெளிப்பயணம் « சுவனப்பாதை\n« மிஃராஜ் – இஸ்ரா (வீடியோ)\nஜித்தா இஸ்லாமிய நிகழ்ச்சி – அழைப்பிதழ் (நாள்: 24.05.2013) »\nஇறைமொழியும் நபிமொழியும் : தன் அடியாரை (கஃபாவாகிய) சிறப்பு பள்ளியிலிருந்து (பைத்துல் முகத்தஸிலுள்ள) மஸ்ஜிதுல் அக்ஸாவிற்கு, இரவின் ஒரு பகுதியில் பயணம் செய்வித்தானே அத்தகையவன் மிகவும் பரிசுத்தமானவன், (மஸ்ஜிதுல் அக்ஸாவாகிய) அது எத்தகையெதென்றால் நாம் அதனைச்சுற்றியுள்ள பகுதிகளை அபிவிருத்தியடையச் செய்திருக்கின்றோம், நம்முடைய அத்தாட்சிகளை அவருக்கு காண்பிப் பதற்காகவே (அழைத்துச் சென்றோம்) நிச்சயமாக உமது இரட்சகனாகிய அவனே செவியேற்கிறவன் பார்க்கிறவன். (அல் குர்ஆன் – 17.1)\nஅன்புள்ள சகோதர சகோதரிகளே! – இதுவரைக்கும் இஸ்ரா-மிஃராஜ் பற்றி குர்ஆன் மற்றும் ஹதீது கூறும் செய்திகளைப் படித்தீர்கள். இஸ்ரா என்பது இரவில் பிரயாணம் செய்தல் என்பதாகும், அதாவது நபி (ஸல்) அவர்கள் மக்காவிலிருந்து பைத்துல் மக்திசுக்கு புராக்கில் சென்ற பிரயாணத்திற்கு சொல்லப்படும். மிஃராஜ் என்பது ஏழு வானங்களை கடந்து சென்றதற்கு சொல்லப்படும். இஸ்ரா குர்ஆனிலும் ஹதீதிலும் கூறப்பட்டிருக்கின்றது, மிஃராஜ் என்பது ஹதீதில் மாத்திரம் கூறப்பட்டிருக்கின்றது. இவ்விரண்டும் குர்ஆன் ஹதீதின் மூலம் கூறப்பட்ட செய்தி என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. ஆனால் அது எந்த மாதம் எத்தனையாம் தேதி நிகழ்ந்தது என்பது பற்றி குர்ஆனிலோ ஹதீதிலோ கூறப்படவில்லை. அது எப்போது நிகழ்ந்தது என்பது பற்றி அறிஞர்கள் பல கருத்துக்கணிப்புகளைக் கூறுகின்றார்கள். அவைகள் பின்வருமாறு.\nTags: ஆதம் (அலை), இத்ரீஸ் (அலை), இப்ராஹீம் (அலை), இஸ்ரா, இஸ்லாம், ஈஸா (அலை), தொழுகை, பித்அத், புராக், பைத்துல் முகத்தஸ், மர்யம் (அலை), மஸ்ஜிதுல் அக்ஸா, மிஃராஜ், முஸ்லிம், மூஸா (அலை), மௌலவி K.L.M.இப்ராஹீம் மதனீ, யஹ்யா (அலை), யூசுஃப் (அலை), ரஜப், விஞ்ஞானம், விண்வெளிப்பயணம், ஜிப்ரஈல் (அலை), ஸகரிய்யா (அலை), ஸம்ஸம், ஹாரூன் (அலை)\nPosted in இஸ்லாம், தொழுகை, நபி(ஸல்), பொதுவானவை, முஸ்லிம், ரஜப், விஞ்ஞானம்
அரசியல் பிரச்சினையினை சட்டப்பிரச்சினையெனும் கூட்டமைப்பு! - www.pathivu.com\nHome / சிறப்புப் பதிவுகள் / யாழ்ப்பாணம் / அரசியல் பிரச்சினையினை சட்டப்பிரச்சினையெனும் கூட்டமைப்பு!\nஅரசியல் பிரச்சினையினை சட்டப்பிரச்சினையெனும் கூட்டமைப்பு!\nடாம்போ May 10, 2019 சிறப்புப் பதிவுகள், யாழ்ப்பாணம்\nகடந்த 03 ம் திகதி வெள்ளிக்கிழமைபடையினர் யாழ் பல்கலைக்கழகத்தில் மேற்கொண்டதேடுதல் நடவடிக்கையின் போதுமாணவர் ஒன்றியஅலுவலகத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் பழைய புகைப்படத்தை வைத்திருந்தனர் என்பதற்காகவும்,மருத்துவபீடசிற்றுண்டிச்சாலையில் தியாகி திலீபனின் படத்தை வைத்திருந்தார் என்பதற்காகவும் யாழ் பல்கலைக்கழகமாணவர் ஒன்றியத் தலைவர்,செயலாளரையும்,சிற்றுண்டிச்சாலை நடத்துனரையும் பங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்துசிறையில் அடைத்துள்ளனர். இப்புகைப்படங்கள் இருந்தமைக்காக கைது செய்வது அற்பத்தனமான நடவடிக்கை ஆகும். ஆயுதங்களைத் தேடவந்தவர்கள் அற்பத்தனமான காரணங்களுக்காக கைது செய்தமையை பல தரப்புக்களையும் சீற்றங்கொள்ள வைத்துள்ளது.\nதென்னிலங்கையில் ஆயுதப்போராட்டத்தை நடாத்திய ஜே.வி.பி இன் தலைவர் ரோகண விஜேவீராவின் படத்தினை அக்கட்சியினர் பட்டிதொட்டியெங்கும் வைத்திருக்கின்றனர். அங்குஎவரும் கைது செய்யப்படவில்லை. இங்கு மட்டும் கைது செய்திருப்பது அற்பத்தனமான அரசியல் காரணங்களுக்காகவே ஆகும். தங்களுடைய ஆட்சி அதிகார நலன்களுக்கு புலிகள் மீளஎழுச்சியடைகின்றனர் என்ற கற்பனைக்கதை அவர்களுக்கு தேவையாக உள்ளது. அதற்காக மாணவர்கள் பழிவாங்கப்பட்டுள்ளனர்.\nமாணவர்களும் சிற்றுண்டிச்சாலை நடத்துனரும் கைது செய்யப்பட்டமை சட்டப்பிரச்சனையல்ல. அரசியல் பிரச்சனையே ! அரசியல் பிரச்சனையை அரசியல் வழிமுறைகளின் மூலமே தீர்க்கவேண்டும். எமது அரசியல் தலைமை இதனை ஜனாதிபதி பிரதமரோடு பேசித்தீர்ப்பதற்கு பதிலாக சட்டமா அதிபருடன் பேசி சட்டப்பிரச்சனையாக திசை திருப்பமுற்படுகின்றது. இந்த திசை திருப்பலையும் வன்மையாகக் கண்டிக்கின்றோம். அரசின் பங்காளிகளாகச் செயற்பட்டு அவசரகாலச் சட்டத்திற்கு ஆதரவளித்த எமது அரசியல் தலைமைக்கு இது விடயத்தில் பொறுப்புணர்வு இல்லாதது மிகவும் கவலையளிக்கின்றது.\nமுஸ்லிம் தீவிரவாதிகள் தமிழ்த்தரப்பின் அமெரிக்கதலமையிலானமேற்குலகசார்புஅரசியலுக்காகதமிழ்க் கிறிஸ்தவர்களையேபெருமளவு இலக்குவைத்தனர்,தொடர்ந்தும் இலக்குவைப்பதற்குவாய்ப்புக்கள் இருக்கின்றன. படையினர் போர்க்காலமனோநிலையிலேயேதற்போதும் இருக்கின்றனர். ஆட்சிஅதிகாரத்திற்குவரத்துடிக்கும் தரப்பினர் தமிழ்ப் பிரதேசத்தின் அமைதிநிலையைக் குழப்பவிரும்புகின்றனர். சொற்பகாலம் நடைமுறையிலிருந்த ஜனநாயகவெளிதமிழ் மக்களுக்குதற்போதுமுழுமையாகஅடைக்கப்பட்டுள்ளது. காணிப் பறிப்புவிவகாரம்,அரசியல் கைதிகள் விவகாரம்,காணாமல் போனோர் விவகாரம்,அரசியல் தீர்வுவிவகாரம்,அனைத்தும் கிடப்பில் போடப்பட்டுள்ளன. நிலைமாறுகாலநீதிக்கான ஜெனிவாத் தீர்மானங்களும் நடைமுறைக்குவருவதற்கானவாய்ப்புக்கள் அருகியுள்ளன இந்நிலையில்தற்போதுஉயிர் பாதுகாப்புபிரச்சினையும் ஏற்பட்டுள்ளது. மறுபக்கத்தில் அரசியல் செயற்பாடுகள் அனைத்தும் பலவந்தமாக முடக்கப்பட்டுள்ளன.\nகட்டமைப்புசார் இன அழிப்புக்கள் தொடரக்கூடிய சூழலேஉண்டு. எனவேஎந்தவிதபாதுகாப்புமற்று இருக்கும் தமிழ் மக்களுக்குசர்வதேசப் பாதுகாப்பைகோருகின்றோம்.குறைந்தபட்சம் ஐ.நா கண்காணிப்புஅலுவலகம் உடனடியாகதமிழ்ப் பிரதேசங்களில் உருவாக்கப்படவேண்டும் எனக் கோருகின்றோம். சாட்சியமற்றமுள்ளிவாய்க்கால் அழிவுபோல இன்னோர் அழிவுவருவதைதமிழ் மக்கள் அறவேவிரும்பவில்லைஎன்பதையும் இது விடயத்தில் சுட்டிக்காட்டுகின்றோம்.\nமேலும் ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்தின் தாக்குதலில் தமிழ் கிறிஸ்தவர்களும்,சிங்களகிறிஸ்தவர்களும்,வெளிநாட்டவர்களும் இலக்குவைக்கப்பட்டுள்ளனர். ஒருவெளிநாட்டுவிவகாரத்திற்காக இத்தாக்குதல்கள் இடம் பெற்றுள்ளன. சர்வதேசபுலனாய்வுப் பிரிவினர்களின் முன்கூட்டியஎச்சரிக்கைகள் அசட்டைசெய்யப்பட்டுள்ளமையினால் ஆட்சியாளர்களுக்கும் முஸ்லிம் தீவிரவாதிகளுக்குமிடையில் தொடர்புள்ளதாஎன்றசந்தேகம் எழுகின்றது. இந் நிலையில் இலங்கைமட்டம் விசாரணையில் பாதிக்கப்பட்டவர்களுக்குநீதிகிடைக்கும் எனக் கூற முடியாதுஎனவே இது விடயத்தில் சர்வதேசவிசாரணைவேண்டும் எனக் கோருகின்றோமென சமூக விஞ்ஞான ஆய்வு மையம் கோரியுள்ளது.
Junior Vikatan - 01 April 2012 - சாத்தியம் ஆகுமா விஷன் 2023? | Will be success vision 2023 - Vikatan\nஜெயலலிதாவின் கனவைப் படிக்கும்​போது பெருமையாக இருக்கிறது. ஆனால், அவை அத்தனையும் சாத்தியம் ஆகுமா என்ற சந்தேகமும் வருகிறது!\nதனி நபர் வருமானம் ஆறு மடங்காக உயரும், உலகத் தரத்தில் உள்கட்டமைப்பு வசதிகள், அனைத்துக் கிராமங்களிலும் இன்டர்நெட், இரண்டு கோடி இளைஞர்களுக்கு தொழில் பயிற்சி, சிறந்த மருத்துவச் சுற்றுலா மையம், இரண்டு மருத்துவ நகரங்கள், சென்னை அருகே கிரீன்ஃபீல்டு விமான நிலையம், சென்னை - கோவை - மதுரை - கன்னியாகுமரி இடையே அதிவேக ரயில் போக்குவரத்து, 2,000 கிமீ தூரத்துக்கு ஆறு மற்றும் எட்டு வழிச் சாலைகள், 20 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தயாரிக்க புதிய மின் திட்டங்கள் என்று தன்னுடைய 'விஷன் - 2023’ திட்டத்தை அறிவித்து இருக்கிறார் முதல்வர் ஜெயலலிதா. 'தமிழ்நாடு தொலைநோக்குத் திட்டம் 2023’ (விஷன் 2023) என்கிற அறிக்கை எந்த அளவுக்குச் சாத்தியம் என்று பொருளாதார நிபுணர்கள் சிலரிடம் பேசினோம்.\nநாகப்பன் (நிதி ஆலோசகர்): ''முதல்வரின் தொலைநோக்குத் திட்ட அறிக்கை கச்சிதமாக இருக்கிறது. இந்த இலக்கை எட்டுவதற்கான பணத்தை எப்படிச் சமாளிக்கப்போகிறார்கள் என்பதையும் குறிப்பிட்டு இருக்கிறார்கள். வரி வருவாயையும் மத்திய அரசு வசூலிக்கும் வரியில் மாநிலத்துக்கு கிடைக்கக்கூடிய தொகுப்பையும் வைத்து சமாளிப்போம் என்கிறார்கள். மத்திய அர​சோடு இருக்கும் சுமுகமான சூழ்நிலையைப் பொறுத்தே நிதி உதவி கிடைக்கும் என்பதை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். முந்தைய அ.தி.மு.க. ஆட்சியின்போது, 2002-2003-ல் பற்றாக்குறை 4.26 சத விகிதமாக இருந்தது. ஆட்சியின் இறுதிக் காலத்தில் அதாவது 2005-2006-ல் அதை 0.8 சதவிகிதமாகக் குறைத் தார்கள். அதற்குக் காரணமே வருவாயை அரசு\nஉயர்த்தியதுதான். இப்போதும் மனது வைத்தால் செய்ய முடியும்.\nஅரசு வாங்கும் கடனைத் திருப்பி அளிக்க வேண்டுமானால், வரி விதித்தால் மட்டுமே முடியும். கடனை முழுவதுமாக அடைப்பது பற்றி தெளி​வாகக் குறிப்பிடவில்லை. இலவசங்களையும் மானியங்​களையும் அரசு குறைத்தால்தான், தொலைநோக்கை எட்ட முடியும். ஆனால், அதற்கு அரசியல் தன்னம்பிக்கை அவசியம். ஒரு முன்மாதிரி சமூகம் உருவாவதற்கான அனைத்து அம்சங்​களும் இந்த தொலை​நோக்கில் இருக்கிறது.\nஆனால், அதை எட்ட பணம்தான் சவா​லானவிஷயம். பணத்தைத் திரட்ட முடிந்தால், இது சாத்தியமே!''\nஎம்.ஆர்.வெங்கடேஷ் (ஆடிட்டர்): ''அடிப்படைக் கட்டமைப்புகள் மற்றும் உற்பத்தித் துறைக்கு முக்கியத்துவம் கொடுத்​திருப்பது வரவேற்கத்தக்க விஷயம். விவசாயம், நீர்ப்பாசனத் திட்டங்கள் பற்றி விரிவாக அலசப்படவில்லை. மனிதவள வளர்ச்சி பற்றியும் இந்த அறிக்கையில் எதுவும் இல்லை. திறமையான பணியாளர்களின் எண்ணிக்கை குறைந்துகொண்டே வரு​கி றது. கல்வி நிலையங்களின் கல்வித் தரம் உயர்ந்தால் மட்டுமே, திறமையான பணி​யாளர்கள் கிடைப்பார்கள். இதற்கு எந்த வழி​வகையும் தொலைநோக்குத் திட்டத்தில் சொல்லப்படவில்லை.\nமின்சார உற்பத்தித் திட்டங்கள் பற்றி விரிவாகச் சொல்லி இருந்தாலும், அதை எப்படி நடைமுறைக்குக் கொண்டுவருவார்கள் என்பது தெரியவில்லை. முதல்வர் நினைத்தால் இதைச் செயல்படுத்த முடியும் என்றாலும், எல்லா விஷயங்களுக்கும் முதல்வரால் மட்டுமே முடியும் என்பது சரியான பாதையாக இருக்காது. முதல்வருடன் இருக்கும் அமைச்சர்களும் சேர்ந்து உழைக்க வேண்டும். சச்சின் மட்டுமே ஆடி மேட்ச்சை ஜெயிக்க வைக்க முடியாது. 11 பேரும் விளையாடினால்தான் வெற்றி கிடைக்கும். அதனால், இது நடைமுறைக்கு வருமா என் பதை செயல்பாட்டில் இருந்துதான் பார்க்க முடியும்.\nஇன்னொரு பக்கம் அதிகாரிகள் செயல்​திறனும் முக்கியம். 2,000 கி.மீ தூரத்துக்கு ஆறு மற்றும் எட்டு வழிச் சாலைகள் அமைக்கப்படும் என்று சொல்லி இருக்கிறார்கள். சென்னை சாலைகளில் இருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கே திறன் இல்லாத அதிகாரிகளை வைத்துக்கொண்டு, இதெல்லாம் சாத்தியமா என்று தெரியவில்லை.\nதொலைநோக்கு அறிவிப்புகளை நிறை​வேற்றுவதற்குப் பணம் தேவை. இலவசங்​களைக் கட்டுப்படுத்தினால் மட்டுமே இந்த அறிவிப்புகளை நிறைவேற்றுவது பற்றி யோசிக்க முடியும். குவார்ட்டர் இலவசமாகக் கிடைக்குமா என்று மக்களை பழக்கி வைத்துவிட்ட நிலையில், இலவசத்தைத் துறக்க மக்கள் முன்வருவார்களா? ஆட்சி​யாளர்கள், அதிகாரிகள், மக்கள் மூவரும் சரியாக இருந்தால் மட்டுமே தொலைநோக்கை எட்ட முடியும்.''\nமாணிக்கம் ராமசாமி (நிர்வாக இயக்குநர், லாயல் டெக்ஸ்): தொலைநோக்கில் சொல்லப்பட்டுள்ள விஷயங்களில் 50 சதவிகிதம் நடந்தாலே, தமிழ்நாட்டுக்கு நல்லது. பாராட்டத்தக்க தொலைநோக்குத் திட்டம் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. மின்சாரப் பற்றாக்குறை இருக்கும்போது, எப்படி புதிய வர்த்தகம், புதிய முயற்சிகள் சாத்தியம் ஆகும்? விவசாய மேம்பாட்டுக்கு அடிப்​படையாக இருப்பதே நீர்தான். நீர் வளத்தை உருவாக்காதபோது எப்படி விவசாயம் வளரும்? சில அம்சங்களுக்கு முதலில் நாம் முன்னுரிமை கொடுக்க வேண்டும். இந்த இலக்கை எட்டுவதற்கு சரியான நிர்வாகம் இருக்க வேண்டும். 1965-க்கு முன்பு இருந்த காமராஜர், கக்கன், வெங்கட்ராமன் போன்ற ஆட்சியாளர்களின் காலத்தைப்போல இப்போதும் ஆட்சி நிர்வாகம் நடந்தால், இலக்கை எளிதாக எட் டலாம். நேர்மையான லஞ்ச ஊழல் இல்லாத அரசில் இது சாத்தியம். குஜராத்தை இதற்கு உதாரணமாகச் சொல்ல முடியும். இலக்கை எட்டுவதற்காக அடிப்படைக் காரணமே சரியான நிர்வாகம்தான்!''\nஜெயலலிதாவின் செயல்பாடு இந்தக் குறைபாடுகளைத் தவிர்ப்பதாக அமைந்தால்... விஷன் பூர்த்தியாகும்!
- ஜூன் 14, 2014\nகதைக்குள் நிச்சயம் ஒரு சிங்கம் இருந்தாக வேண்டும். மரங்கள், அருவிகள், மலைகள் இருந்தாக வேண்டும். காட்டுக்குள் மழை பெய்தாக வேண்டும். யானையோ, புலியோ, முயலோ, மானோ, கரடியோ - இதில் ஏதொன்றுக்காவது பிறந்தநாள் கொண்டாடவேண்டும். கதையில் சண்டை இருக்கக்கூடாது. சிங்கமும் மானும் நண்பர்களாக இருக்கவேண்டும். அவனது நண்பர்கள் சிலரின் பெயரைச் சொல்லவேண்டும். அரவம் கூடாது. பறவைகள் பற்றி பேசலாம்.\nவிண்வெளி பற்றி பேசவேண்டும். அவன் விஞ்ஞானி என்று கூறவேண்டும். இறுதியில் அவனுக்கு…
இப்படியும் ஒரு கலைஞன் - ரகுவரன்! பிறந்த தினம் டிசம்பர் 11 | இப்படியும் ஒரு கலைஞன் - ரகுவரன்! பிறந்த தினம் டிசம்பர் 11 - hindutamil.in\nPublished : 12 Dec 2014 16:51 pm\nUpdated : 12 Dec 2014 16:51 pm\nPublished : 12 Dec 2014 04:51 PM\nLast Updated : 12 Dec 2014 04:51 PM\nஇப்படியும் ஒரு கலைஞன் - ரகுவரன்! பிறந்த தினம் டிசம்பர் 11\nசென்னையின் தரமணியை இன்று ஐடி காரிடார் என்று அழைக்கிறார்கள். ஆனால் அதன் அழுத்தமான அடையாளம் அரசுத் திரைப்படக் கல்லூரி. அது அபூர்வமாகக் காணக் கிடைக்கிற பல கலைஞர்களைத் தமிழ்த் திரையுலகத்துக்குக் கொடுத்திருக்கிறது. அவர்களில் ஒருவர்தான் ரகுவரன்.\nஅந்தத் திரைப்படக் கல்லூரிக்கு வருகை தரும் பேராசிரியராக இருந்தவர் கே. ஹரிஹரன் புனே திரைப்படக் கல்லூரியில் இயக்கம் பயின்றவர், ஆற்றல் மிக்க திரை விமர்சகர், எழுத்தாளர், பல இந்திய மொழிகளில் அழுத்தமான படைப்புகளைத் தந்த இயக்குநர் என அறியப்பட்ட தமிழ்த் திரைப்பட ஆளுமை. இலக்கியத்தையும் தமிழ் சினிமாவையும் இணைக்க முயன்ற இவர் தனது இரண்டாவது தமிழ்ப் படமாக ‘ஏழாவது மனித’னை இயக்கினார். கதையின் நாயகனை அவர் தேடியபோது திரைப்படக் கல்லூரியில் நடிப்பு பயிலும் மாணவர்களில் ஒருவருக்கே அந்த வாய்ப்பைக் கொடுக்க விரும்பினார்.\nஅதனால் தரமணிக்கு வரும்போதெல்லாம். நடிப்பு பயிற்சி வகுப்புகள் முடிந்து போய்க்கொண்டிருந்த மாணவர்களைக் கவனிக்க ஆரம்பித்தார். ஏழடி உயரத்தில், ஒல்லி உடலோடும், தீர்க்கமான கண்களோடும் போய்க்கொண்டிருந்த ரகுவரன் அவரது கண்களில் பட அவரை அழைத்தார் ஹரிஹரன். அவரை ஏற்கனவே அறிந்திருந்த ரகுவரன் அருகே சென்று வணக்கம் சொன்னார். இவன்தான் நமது நாயகன் என்று அந்த நிமிடத்தில் முடிவு செய்த ஹரிஹரன் ‘ ஏழாவது மனிதன்’ படத்தில் நடிக்க உனக்கு விருப்பமா என்று கேட்டார்.\n“நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும். ஆனால் எனக்கு நடனமும் தெரியாது, சண்டை போடவும் வராது. கண்டிப்பாக இவை இரண்டுமே உங்கள் படத்தில் இருக்காது என்று தெரியும்” என்றார். அந்தக் கணமே ரகுவரனின் நேர்மை ஹரிஹரனுக்குப் பிடித்துப் போய்விட்டது. ரகுவரனைப் பற்றி அதே கல்லூரியில் படித்த இயக்குநர் ராஜேஷ்வரும், அருள்மொழியும் ஏற்கனவே ஹரிஹரனிடம் சொல்லியிருந்தார்கள்.\nசரியான ஆளைத்தான் பரிந்துரை செய்திருக்கிறார்கள் என்று எண்ணிக்கொண்டார் ஹரிஹரன். நடிப்பு பயிற்சியில் சேர்ந்து ஆறு மாதங்களே முடிந்திருந்த நிலையில் அறிமுகப் படத்திலேயே பல பரிமாணங்களை வெளிப்படுத்தும் கதாபாத்திரம் அமைந்தது ரகுவரனுக்கு. தனது கிராமத்தைச் சுற்றுச்சூழல் சீர்கேட்டுக்கு ஆளாக்கும் சிமெண்ட் தொழிற்சாலையை எதிர்த்துப் போராடும் கோபக்கார இளைஞன் கதாபாத்திரம்.\nஅந்தத் தொழிற்சாலையில் மேலதிகாரியாக இருந்துகொண்டே, அதில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்காகப் போராடும் மனசாட்சியுள்ள இளைஞன்; ஒரு கண்ணியமான காதலன். அந்தக் கிராமத்தின் ஆற்றில் தவழ்ந்து செல்லும் பரிசலில் காதலி அமர்ந்திருக்க அவரைவிட்டு சற்றுத் தள்ளி அமர்ந்தபடி, பாரதியின் ‘காக்கைச் சிறகினிலே நந்தலாலா உந்தன் கரிய நிறம் தோன்றுதடா நந்தாலா’ எனப் பாடியபடி செல்லும்போது அவரது உடல்மொழி ஈரம் காயாத களிமண் தன்மையோடு பார்வையாளர்கள் மனதில் பசுமையாக ஒட்டிக்கொண்டது.\nஆனால் உலகப்பட விழாக்களில் கவுரவிக்கப்பட்ட ‘ஏழாவது மனித’னுக்கு (1982) தேசிய, மாநில விருதுகள் கிடைத்தது மட்டுமல்ல, ரகுவரன் எனும் உயர்ந்த கலைஞனைத் தமிழ் சினிமாவுக்குத் தனித்து அடையாளம் காட்டியது. இதன் பிறகு ‘ஆர்ட் பிலிம் ஆக்டர்’ என்ற முத்திரை ரகுவரன் மீது விழுந்தாலும், கதாபாத்திரத்தைக் கண்முன் நிறுத்தும் கதாநாயகனாக அவரது கலைப் பயணம் தொடங்கியது.\nதிரைப்படக் கல்லூரி சினிமா பற்றி அள்ளிக் கொடுத்த அறிவும் அங்கே கிடைத்த நண்பர்களின் அன்பும் ரகுவரனை மாறுபட்ட வசன உச்சரிப்பும், தேர்ந்த உடல்மொழியும் கொண்ட ரசனையான கலைஞனாக உருவாக்கியிருந்தன. கதாநாயகனாக அறிமுகமான அடுத்த ஆண்டே ‘சில்க் சில்க் சில்க்’ என்ற படத்தில் ஒரு எதிர்மறைக் கதாபாத்திரத்தில் துணிச்சலாக நடித்தார். இது கிட்டத்தட்ட வில்லன் வேடத்துக்கு நெருக்கமானது என்று சொல்லிவிடலாம். இதனால் ரகுவரனை வில்லனாகவும் தேர்ந்துகொள்ளத் தொடங்கியது தமிழ் சினிமா.\nநாயகன், வில்லன் என்று தொடக்கத்தில் மாறி மாறிப் பயணித்த ரகுவரன் நடித்து 1986-ல் வெளியான படம் மந்திரப் புன்னகை. வில்லனாக நடித்து நாயகன் அந்தஸ்து பெற்ற சத்யராஜ் நடித்த இந்தப் படத்தில் வில்லனாக நடித்தார் ரகுவரன். இப்படி ஆச்சரியகரமான பல முரண்களைக் கொண்டது ரகுவரனின் திரைப்பயணம். அதுவரை தமிழ் சினிமாவில் வில்லன் வேடங்கள் என்றாலே பெரும்பாலும் தன் புஜபலம் காட்டும். காது கிழியும் அளவுக்குக் கத்திப் பேசி, கூலிப்படை திரளாகக் கையில் மிரட்டும் ஆயுதங்களோடு திரையைக் கிழித்துக்கொண்டு மிரட்டும்.\nஆனால் அளவாகவும் தேவைப்படும் இடங்களில் மிகையாகவும், கூர்மையான பார்வையை முன்னிறுத்தி வசன உச்சரிப்பிலும் சிரிப்பிலும் எதிர்மறைப் பாத்திரத்தின் நோக்கத்தைப் புதிய வடிவத்துக்குள் வார்த்துக் கொடுத்தார் ரகுவரன். கிழிந்து தொங்கும் கிளிஷேவாகிவிட்ட வில்லன் கதாபாத்திரங்களுக்குப் புதிய அடையாளம் கிடைத்தது. இப்படி இளம் கிளாசிக் வில்லனாக நடித்துக் கொண்டே இன்னொரு பக்கம் கதையின் நாயகனாகப் பொருந்திக் காட்டிய நடிகராகவும் இருந்த ரகுவரனைக் குறைத்து மதிப்பிட முடியாது.\nஇயக்குநர் ஆர்.சி சக்தியின் ‘கூட்டுப் புழுக்கள்’ படத்தில் வேலையில்லா ஒரு நடுத்தர வர்க்க இளைஞனின் இயலாமை, கோபம், ஏக்கம், கையறுநிலை, காதல் ஆகிய நுண்ணுணர்வுகளை ரகுவரன் தனது உடல்மொழியின் வழியாக வெளிப்படுத்திய விதம் கதாபாத்திரத்துக்கு மிகவும் நேர்மையாகவும் நெருக்கமாகவும் இருக்கும். ஒரு கட்டத்தில் வில்லன் கதாபாத்திரங்களிலிருந்து விலகியும் விலகாமலும் முழுநீளக் குணசித்திரக் கதாபாத்திரங்களில் அதிக ஆர்வம் காட்டியபோது அவருக்குப் போதும் போதும் என்கிற அளவுக்கு வாய்ப்புகள் குவிந்தன.\nவில்லன் கதாபாத்திரங்கள் வழியே எத்தகைய வெறுப்பையும் தமிழ் ரசிகர்களிடம் சம்பாதித்துக்கொள்ளாத ரகுவரன், தான் ஏற்ற குணச்சித்திரக் கதாபாத்திரங்களுக்கு அழுத்தமான பரிமாணத்தை வழங்கினார். இப்படியும் ஒரு கலைஞன் என்று பாராட்டும் விதமாக இயல்பும் எளிமையுமாக அத்தகைய கதாபாத்திரங்களைக் கண்முன் நிறுத்தினார். அவரது கதாபாத்திரங்களைப் பற்றி எழுத ஆரம்பித்தால் இங்கே இடம் போதாது.\nசம்சாரம் அது மின்சாரம், லவ் டுடே, முதல்வன் என்று இடைவெளியின்றி தனது ஆளுமையை வெளிப்படுத்தி வந்த ரகுவரன், தென்னிந்திய மொழிகளைத் தாண்டி இந்திப்பட உலகிலும் கால் பதித்தார். ராஜீவ்மேனன் இயக்கத்தில் வெளியான ‘கண்டு கொண்டேன், கண்டு கொண்டேன்’ திரைப்படத்தில் ஒரு ஐடி நிறுவனத்தில் உயரதிகாரியாக வருவார்.\nகறாரும் கனிவும் கலந்த ஒரு சித்திரத்தை அந்தப் பாத்திரத்துக்கு வழங்கியிருப்பார் ரகுவரன். மொத்தப் படத்திலும் பத்து நிமிடங்கள்கூட இல்லாத அந்தக் கதாபாத்திரம் முதன்மைப் பாத்திரங்களை மீறி நினைவில் நிற்க ரகுவரன் எனும் கலைஞனின் ஆகிருதியே காரணம். திரைநடிப்புக்கு வெளியே கவிதை வாசிப்பு, இசையமைப்பு இரண்டிலும் ஆர்வம் கொண்டிருந்த ரகுவரன், தலைமுறைகளைத் தாண்டியும் ஆகர்சிக்கும் அபூர்வக் கலைஞன். டிசம்பர் 11 அவரது 56 வது பிறந்த தினம்.\nஇப்படியும் ஒரு கலைஞன்ரகுவரன்பிறந்த தினம்\nகவுரவ கொலைகளை தடுக்கக் கோரி நல்லகண்ணு உண்ணாவிரதம்
Browse: Home » நோய் எதிர்ப்பு சக்தி\nநோய் எதிர்ப்பு சக்தி(Immunity) எமது உடலில் எவ்வாறு செயல்பெறுகின்றது\nநாம் உள்வாங்கும் மூச்சுக்காற்று, அருந்தும் தண்ணீர், உண்ணும் உணவு, தோலில் ஏற்படும் வெடிப்பு இப்படி அனைத்தின் வழியாகவும் நோயை விளைவிக்கும் பாக்டீரியாக்கள், வைரஸ்கள், நுண் கிருமிகள் போன்றவை நமது உடலுக்குள் எப்போதும் நுழையத் தயாராகவே உள்ளன.\nஆனால் இவை அனைத்தையும் நம் உடலுக்குள் நுழைய முடியாமல் தடுக்கும் அற்புத சக்தி ஒன்று நம் உடலுக்கு உள்ளது. அதனையே நோய் எதிர்ப்பு சக்தி (Immunity) என்கிறோம்.\nநமது உடலில், இயற்கையான எதிர்ப்பு சக்தி (Innate Immunity), தகவமைக்கப்படும் எதிர்ப்பு சக்தி (Adaptive Immunity), உடன்பாட்டு எதிர்ப்பு சக்தி (Passive Immunity) என மூன்று வகை எதிர்ப்பு சக்திகள் உள்ளன. இந்த மூன்று எதிர்ப்பு சக்திகள் பற்றி இப்போது தெரிந்துகொள்வோம்.\nஇந்த எதிர்ப்பு சக்தி, பிறக்கும்போதே ஒருவரது உடலில் அமைவது. மனித உடலுக்கு தோல் எப்படி ஒரு மிகப்பெரிய தடுப்பு சுவர் போல் உள்ளதோ, அதைப் போலவே மூக்கு, தொண்டை மற்றும் உணவு செல்லும் பாதை போன்ற பகுதிகளில் உள்ளே உள்ள சவ்வுகளும் தடுப்புக் கவசம் போல் செயல் படுகின்றன. இந்த கவசங்கள் நம்மை நோய் கிருமிகளிடம் இருந்து காப்பாற்றக்கூடியவை.\nஅடுத்தபடியாக உடலுக்குள் நுழையும் நோய்த் தொற்றுக் கிருமிகளை தாக்கி அழிக்கக் கூடியவைகளான வெள்ளை அணுக்கள் (Neutrophils, Bosophils, Eosinophils) தூங்காத படை வீரனைப் போல் நம் உடலுக்குள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. இவை அனைத்தும் நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்திகளாகும்.\nதகவமைக்கப்படும் எதிர்ப்பு சக்தி (Adaptive Immunity)\nஇரண்டாவது வகையான தகவமைக்கப்படும் எதிர்ப்பு சக்தி, நம்முடைய உடல் தன்னை நோய்க் கிருமிகளிடமிருந்து காப்பாற்றிக் கொள்வதற்காக, தாக்கும் நோய்களுக்குக் காரணமான ஒவ்வொரு பாக்டீரியாக்களுக்குத் தகுந்தவாறு வேறுபட்ட நோய் எதிர்ப்புத் தன்மையை உருவாக்கும். இந்த நோய் எதிர்ப்பு சக்தியில் முக்கிய பங்கு வகிப்பது Lymphocytes என்ற ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்கள்.\nமூன்றாவது வகையான உடன்பாட்டு எதிர்ப்பு சக்தி என்பது தேவைப்படும்போது, இன்னொரு இடத்திலிருந்து எதிர்ப்பு சக்தியை தற்காலிகமாக பெறுதல். உதாரணமாக, தாய்ப்பால் அருந்தும் குழந்தைக்கு தாய்ப்பாலில் இத்தகைய நோய் எதிர்ப்பு சக்தி தற்காலிகமாக கிடைக்கிறது. மஞ்சள் காமாலை நோய் எதிர்ப்பு மருந்து மற்றும் டெட்டானஸ் நோய் எதிர்ப்பு மருந்துகள் இந்த நோய்கள் வராமல் தடுக்க வைக்கும்.\nஎதிர்ப்பு சக்தி எவ்வாறு செயல்படுகிறது? நோய்க் கிருமிகள் நுழையும்போது, அதனை எதிர்த்து போரிடுவதற்கான நுட்பமான கட்டமைப்பு நமது உடலில் செயல்படுகிறது. இந்த செயல்பாட்டின்போது உயிரணுக்கள், திசுக்கள், நுண்ணுயிரிகள் அனைத்தும் பரஸ்பர ஒத்துழைப்போடு விரைந்து செயல்படுகின்றன. நாளமில்லா சுரப்பிகள், மண்ணீரல், எலும்புகளின் அடியில் உள்ள மஜ்ஜை ஆகிய உறுப்புகள் இந்த செயல்பாட்டில் முக்கிய பங்கு வகிக்கின்றன.\nரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்கள், பாதுகாப்பு அரணாக செயல்படுகின்றன. வெவ்வேறு வகையான வேதிப் பொருள்களும், சுரப்பிகளும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் உறுதுணையாக இருக்கின்றன. இவை ரத்தம் மற்றும் நிணநீர் வழியாக பயணித்து, நோய்க்குக் காரணமான கிருமிகளை அழிக்கின்றன.\nநம் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி 24 மணி நேரமும் செயல்படுகிறது. அதன் பெரும்பாலான செயல்பாடுகள் நம்மை அறியாமலே நிகழ்கின்றன. சில நேரங்களில் நோய்க்கிருமிகளை எதிர்க்க முடியாமல், எதிர்ப்பு சக்தி தோல்வியடையும் போதுதான் அதன் அறிகுறிகள் நமக்குத் தெரியத் தொடங்குகின்றன.\nகாய்ச்சல், சளி, மூக்கில் நீர் ஒழுகுதல் இவையெல்லாம் நோயை எதிர்த்து நம் உடல் போராடுகிறது என்பதற்கான அடையாளங்களே ஆகும். அப்போது ஏற்படும் அதிகபட்ச வெப்பநிலைதான் காய்ச்சலாக உணரப்படுகிறது. சளியின் வழியாக கிருமிகள் அப்போது வெளியேற்றப் படுகின்றன.\nபுண், கட்டி, ரணம் போன்றவை ஏற்படும்போது அந்தப் பகுதியில் நோயை எதிர்ப்பதற்கான செல்கள் அதிக அளவில் வந்து குவிகின்றன. இவை, அந்த புண்ணின் வழியாக கிருமிகள் தொற்றுவதைத் தடுக்கின்றன.\nவெள்ளை அணுக்களில் (Neutrophils, Bosophils, Eosinophils ), ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் நோய்க்கிருமிகளை எதிர்த்து போராடுகின்றன. நோய் எப்போது ஏற்படுகிறது? உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறையும்போது நோய்க் கிருமிகள் எளிதில் தொற்றிக் கொள்கின்றன. ஊட்டச்சத்துக் குறைவினாலும் நோய் ஏற்படுகின்றன.\nநம் உடலில் நோய் எதிர்க்கும் திறன் குறைவதற்கு நிறைய காரணங்கள் உள்ளன. அவற்றில் சில:\n2. மன அழுத்தத்தைக் கொடுக்கும் வேலைகள்\n4. மது, போதைப்பொருள் பழக்கம்\n7. சர்க்கரை நோய் , இவை அனைத்தும் நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்தி நோய் எதிர்ப்பாற்றலை இல்லாமல் செய்கிறது.\nநோய் தொற்றைத் தவிர்க்கசாக்கடை, கழிவு நீர் தேங்குதல், சாலையோரத்தில் கொட்டப்படும் காய்கறி மற்றும் வீட்டு உபயோகக் கழிவுகள் ஆகியவற்றின் மூலம் எளிதாக நோய்க் கிருமிகள் உருவாகி நம்மைத் தாக்குகின்றன. அதனால் நாம் தங்குமிடத்தை சுகாதாரமாக வைத்திருந்து நோய்த் தொற்றைத் தவிர்க்க வேண்டும்.\nகை குலுக்குதல், தொலைபேசி உபயோகித்தல், கதவின் கைப்பிடியை தொடுதல், வாய், மூக்கை கையால் தொடுதல் இவற்றின் மூலம் கிருமிகள் தொற்ற வாய்ப்புள்ளது. இந்த ஒவ்வொரு செயல்பாட்டிற்குப் பின்னரும் கைகளை சோப்பு அல்லது வெந்நீர் கொண்டு சுத்தமாக கழுவ வேண்டும்.\nகையுறைகள் போன்றவற்றை அணியும்முன் அவை முறையாக சுத்தப்படுத்தப்பட்டுள்ளதா என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.\nமன அழுத்தத்தைத் தவிர்க்க வேண்டும். நெகிழ்வாகவும் மகிழ்ச்சியுடனும் இருக்க பழக வேண்டும். தவறாமல் தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். இதனால் உடலில் உள்ள நச்சுத்தன்மை வெளியேற்றப்பட்டுஉடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.\nநோயற்ற வாழ்வுக்கு ஆழ்ந்த உறக்கம் அவசியமான ஒன்று. ஆழ்ந்த உறக்கம் கொள்ளும் போது நம் உடலில் உள்ள இறுக்கங்கள் மாறி நோய் எதிர்ப்புத் திறன் செயல்பட ஏதுவாகிறது.\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பால், தயிர், நெய், சோயா பீன்ஸ் இவற்றை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். முட்டையின் வெள்ளைக்கரு, மீன் இவற்றை வாரத்தில் மூன்று முறையாவது கட்டாயம் சாப்பிட வேண்டும்.\nஅனைத்து பழங்களும், காய்களும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக்கூடியவை. இவற்றில் Anti oxidants அதிகமாக உள்ளது. கடலை, சூரியகாந்தி விதைகள் போன்றவை துத்தநாகம் கால்சியம் போன்ற எதிர்ப்பு சக்திக்கு ஆதாரமான சத்துக்களை அதிகரிக்க உதவும்.\nவேதிப்பொருள்கள் (Chemicals), பூச்சி மருந்துகள் (Pesticidies) போன்றவை படிந்த பொருட்கள், மற்றும் வண்ணம் பூசப்பட்ட பொருட்கள், பதப்படுத்தப்பட்ட டின் பொருட்கள் போன்றவற்றை உண்பதை தவிர்க்க வேண்டும்.\nஎண்ணெயில் வறுத்த உணவுப்பண்டங்களை உண்ணக் கூடாது. அவை உடலில் நச்சுத் தன்மையை (Free radicals) உண்டாக்குகிறது. சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும். சர்க்கரையின் அளவு அதிகமானால் உடலில் நோய் எதிர்ப்புத் திறனை 15 மணி நேரத்திற்கு குறைத்துவிடுகிறது.\nகாபி, டீ இவற்றை அளவுக்கு மீறாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.\nஅடிக்கடி காய்ச்சல், சளி போன்ற உபாதைகள் ஏற்படத் தொடங்கினால் மருத்துவரை அணுகி உடலை பரிசோதித்துக்கொள்ள வேண்டும். மருத்துவ பரிசோதனை மூலம் உடலுக்கு என்ன தேவை என்பதை மருத்துவர் மூலமாக அறிந்துகொள்ள முடியும்.\nநோயில்லா பெருவாழ்வு வாழ நாம் செய்ய வேண்டியது, நம் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை வலுவாக்க வேண்டும். அதற்கு சரியான நேரத்தில் சமச்சீர் உணவு (Balance diet) உண்டு நல்ல வாழ்வியல் பழக்கங்களோடு (Healthy life style) வாழ்வதே.\n← இரத்தம் பற்றிய தகவல்கள்\nமிளகு -மருத்துவபயன்கள் →
Tamil Sex Story | Tamil Kama Kathaikal - Part 32\nமுதலில் கன்னி கழிய போவது யார்..? 0\nநண்பன் செய்த துரோகம் மனைவி செய்த தியாகம் 0\nஎன் தோழி யாமினியும், அவள் வீட்டு வேலைக்காரியும் 0\nPosted by admin on September 3, 2016 in ஆண்டி, ஓல் கதைகள்\nதித்திக்கிற வயசு, பத்திக்குற மனசு 0\nPosted by admin on September 2, 2016 in ஆண்டி, ஓல் கதைகள்\nஅப்போது நான் சிதம்பரத்தின் மிக பிரபலமான ஒரு தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படிச்சிட்டிருந்தேன்.\nபால் முகம், மழலை சிரிப்பு, வெகுளி பேச்சு, கள்ளமில்லா மனம் என தேவதை வம்சமாக சிறகடித்த சின்னக்குயில் நான்.\nகவிதாவை கர்ப்பமாக்கிய கதை 0\nPosted by admin on September 1, 2016 in ஆண்டி, ஓல் கதைகள்\nஅஞ்சலி ஒரு எந்திரி..!! 0\nPosted by admin on August 31, 2016 in ஆண்டி, ஓல் கதைகள்\n“ங்கப்பாடா..!!” என்று பெருமூச்சு விட்ட்படி வேலு குப்புறப்படுத்துக் கொண்டான். “என்னமா வலிக்குது..!!” என்றபடி தொடையைப் பிடித்துக் கொண்டான்.\nஇனி சுகம்.. சுகம்.. சுகம்.. 0\nPosted by admin on August 29, 2016 in ஆண்டி, ஓல் கதைகள்\nகுண்டியில் ஓக்க ஆசை..!! 0\nமுதலில் என்னை பற்றி தெரிந்து கொள்வோம். (more…)\nமுதலாம் சந்திப்பில் 0
காடு- கடிதம் | எழுத்தாளர் ஜெயமோகன்\nஇலக்கியம் நாவல் காடு- கடிதம்\nஅன்புள்ள ஜெயமோகன் சார் அவர்களுக்கு ,\nதங்களின் ‘காடு’ நாவல் வாசித்தேன்.\nஓராண்டுக்கு முன்னர் காடு நாவலை வாசிக்கத் தொடங்கினேன் . ஏனோ அச்சமயத்தில் சில காரணங்களினால் வாசிப்பு தடைப்பட்டு விட்டது .\nபெங்களூரில் கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து மழை பொழிந்து வருகிறது . அலுவலகத்தில் ஈரமேறிய தோட்டத்தின் ஊடே நடக்கையில் சட்டென காடு நாவல் பற்றிய எண்ணம் வந்தது . வீடு திரும்பியவுடன் காடு நாவலை எடுத்து வாசிக்கத் துவங்கினேன். வெளியே மழை சட சடக்கும் ஒலியை கேட்டவாறே நாவலை வாசித்து முடித்தேன். (மழையின் சட சடப்பை கேட்டுகொண்டே தான் இக்கடிதத்தையும் எழுதிக் கொண்டு இருக்கிறேன் .)\nநாவலின் சிறப்பம்சங்களுள் ஒன்று , கதை மாந்தர்கள் பேசும் வட்டாரமொழி. நான் நாகர்கோவிலைச் சார்ந்தவன். நாவலில் வரும் அப்பேச்சு வழக்கில் உரையாடும் மக்களோடு பழகிய காரணத்தினால் அவ்வட்டார மொழி எனக்கு கொஞ்சம் பரிச்சயம் . இதனால் வாசிப்பு எனக்கு மேலும் சுவையானதாக இருந்தது.\nமலையடிவார வனத்தின் வனப்பை விளக்கும் விவரணைகள் , காடு குறித்தும் , காட்டு விலங்குகள் பறவைகள் குறித்தும் வரும் தகவல்கள் அந்த காட்டின் ஊடே பயணித்த அனுபவத்தை அளித்தன . தங்கள் மனதில் இருந்த காடு குறித்த அனுபவங்கள் சொற்களாக உருப்பெற்றிருகின்றன . சொற்களின் காடாக நாவல் உள்ளதெனவும் சொல்லத்தோன்றுகிறது .\nசிறுவயதில் என் வீட்டிற்கு வெளியூரிலிருந்து யாரேனும் உறவினர்கள் வந்தால் அவர்களை அழைத்துக் கொண்டு இந் நாவலில் வரும் இடங்களுக்கு சென்றதுண்டு. காலையில் கிளம்பி முதலில் பத்மநாதபுரம் அரண்மனை . அதன் பின் திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில் . அதன் பின் மதிய வேளையில் திற்பரப்பு அருவிக்குளியல். பின்னர் மாத்தூர் தொட்டி பாலம் ,பேச்சிப்பாறை . மறுநாள் கன்னியாகுமரி சுசீந்தரம் . பல ஆண்டுகளாயினும் இந்த நிகழ்ச்சி நிரல் மாறியதில்லை. ஆனால் எப்போதும் அப்பகுதிகளில் உள்ள மலையடிவாரக் காடுகளில் பயணித்த அனுபவம் எனக்கு இருந்தது இல்லை. ஒரு முறை பள்ளி சுற்றுலா செல்லுகையில் , அங்குள்ள ரப்பர் மரங்களடர்ந்த தோப்பில் வெகு நேரம் நடந்தோம் . இந்த நாவல் வாசிப்பு ஒரு அடர் வனத்தில் அலைந்து திரிந்த அனுபவத்தை அளித்து விட்டது.\nசாலைகள் ஒருவித தந்திரம் . கட்டின் ஊடே முதலில் பாதையாக நுழைந்து மெல்ல காட்டையே விழுங்குகிறது என்று நாவலில் ஓர் இடம் வருகிறது. அக்கணத்தில் ரெசாலம் ஆசையோடு வளர்த்து வரும் தேவாங்கை சிறுத்தை கவ்விக் கொண்டு ஓடுகிறது. காட்டில் தன் கூட்டத்தில் இருந்து தப்பி அலைந்து கொண்டிருக்கும் கீறக்காதன் வன அதிகாரியின் துப்பாக்கிக்கு பலியாகிறது. அழியப்போகும் காட்டின் சின்னங்களாகவே இவை மனதில் நிற்கின்றன.\nஒரு மலைவாழ் பெண்ணின் மீது கிரிதரனுக்கு ஏற்படும் ஆழமான பிடிப்பே (obsession ) நாவலின் மையக்கரு . கடுமழையில் அவள் கையைப் பற்றிக்கொண்டு குறிஞ்சிப்பூவைத் தேடி அடர் காடுகளின் ஊடே ஓடுகிறான். கபிலரின் கவித்துவம் ததும்பும் வரிகள் குறிஞ்சி மலர் குறித்து ஒரு மிகு கற்பனையை அவனுள் வளர்த்து இருக்கின்றன . அந்தக் கற்பனை எண்ணங்களும் ,குறிஞ்சி பூவைக் கண்டு விட வேண்டுமென்ற மன உந்துதலும் அவனைக் கடினமான காட்டு பாதைகளினூடே பித்தேறி ஓடச் செய்கின்றன .அவ்வளவு தூர கடும் பயணத்திற்கு பின் குறிஞ்சிப் பூக்களைக் மிகுந்த ஆர்வத்துடன் காண ஆயத்தமாகிறான் . ஆனால் அவற்றைக் காணும் போது மனதில் எவ்வித உற்சாகமும் கிரிதரனுக்கு எழவில்லை .மாறாக ஒரு அபத்த உணர்ச்சியே மனதை நிறைக்கிறது . குறிஞ்சியைக் கபிலர் சற்று மிகைப்படுத்தி விட்டாரோ என்று கூட அவனுக்குத் தோன்றுகிறது . நீலி குறித்து கிரியின் மனதில் உள்ள obsession இந்த குறிஞ்சியை போன்றே அபத்தமானதோ என்ற கேள்வி எழுகிறது . நாவலின் மிக அற்புதமான இடம் இது .\nநன்றிகள் .காடு நாவலின் மூலம் கொடுத்த அற்புத வாசிப்பனுபவத்தை அளித்தமைக்கு . காடு மனதிற்கு மிக நெருக்கமான நாவலாக அமைந்து விட்டது.\nமுந்தைய கட்டுரைகாண்டவம் நாவல்\nஅடுத்த கட்டுரைமகாராஜாவின் இசை
Home » இதழ் 10 » * எகிப்து2– என். நடேசன்\n“அந்த ஜக் டானியல் போத்தல் உள்ள பெட்டியை கையில் எடு” என நண்பன் கூறினான். நானும் அதேபோன்ற சிங்கிள் மோல்ட் விஸ்கி இரண்டு போத்தல் வைத்திருந்தேன். ஏனைய பெட்டிகளை அகமட் விமான நிலய பெல்டில் இருந்து தூக்கினார். குதிரையையும் வாளையும் துருக்கியர்கள் மற்றவர்களிடம் கொடுக்கமாட்டார்கள். அது போலத்தான் எங்களது விஸ்கி போத்தல்களை மற்றவர் கைகளில் கொடுக்க நாங்கள் தயாரில்லை. இரண்டு பேருமே குடிகாரர்கள் என நினைக்க வேண்டாம். அந்தப் போத்தில்கள் தனியாக கதை சொல்லும். கம்பன் வீட்டு கைத்தறிபோல\nஎகிப்தில் எந்த குடிவகையும் குடிக்க முடியாது என்பதும் எங்களுக்குச் சொல்லப்பட்ட தகவல்களில் ஒன்று. அது இஸ்லாமிய நாடு. இதன் காரணத்தால் துபாயில் ஆளுக்கு இரண்டு போத்தல்கள் வாங்கியபோது அதற்கு உபரியாக எடுத்துச் செல்ல தள்ளிக்கொண்டு செல்லும் அழகான பெட்டியையும் தந்திருந்தார்கள். அந்தப் பெட்டியை எப்படியும் எகிப்துக்கு எடுத்துச் செல்வது எமது நோக்கமாக இருந்தது.\nமனிதர்களை எப்பொழுதும் கூர்ந்து பார்ப்பது எனது இயல்பு. அவுஸ்திரேலியாவில் உலகத்தில் உள்ள எல்லா நாடுகளையும் சேர்ந்த மக்கள் வாழ்கிறார்கள். கருப்பு நிறமான அவுஸ்திரேலிய ஆதிவாசிகள் இருந்த இடத்தில் சகல கண்டங்களையும் சேர்ந்தவர்கள் வந்துவிட்டார்கள். மனிதர்களின் நிறம் மூக்கு கண் என்ற பனரோமிக்கான இந்த வித்தியாசங்கள் வெவ்வேறு சீதோசணத்திற்கு ஏற்ப பரிணாமமடைந்தபோது உருவாகியது. ஆனால் இப்பொழுது இந்த வித்தியாசங்கள் ஒரே இடங்களில் வாழும்போது விஞ்ஞானிகளின் பரிணாமக் கருத்தும் கட்டுடைபடுகிற வேளையில் படைப்பு கருத்தாக்கமும் கேள்விக்குள்ளாகிறது. இனிமேல் அவுஸ்திரேலியாவில் ஆண்டவனால் படைக்கப்படுபவர்கள் ஏன் வித்தியாசப்படவேண்டும்? அதேபோல் வெள்ளையர்கள் எல்லோரும் அவுஸ்திரேலிய சீதோசணத்திற்கேற்ப பரிணாம கருத்துப்படி கருமையாவார்களா?\nஎகிப்தியர்கள் பாதிரிமாரின் நீண்டஅங்கியைப்போன்ற ஆடைகளை அணிகிறார்கள். அந்த உடைகள் பாலைவன வெப்பத்திற்கு ஏற்றதாக இருக்கும் என நினைக்கிறேன். எங்கள் பகுதி வேட்டி சேலை போல் உள்ளே சென்ற காற்று வெப்பத்தை வெளியேற்றும் காற்றோட்டத்தை உருவாக்கும் உடுப்பு என நினைத்தேன். பெரும்பாலான பெண்களும் முகத்தை தவிர்த்து மற்ற பகுதிகளை ஆடைகளினால் மூடியிருந்தார்கள்; ஆண்களிலும் பெண்களிலும் பெருந்தொகையினர் ஐரோப்பிய உடை அலங்காரத்தில் காணப்பட்டார்கள்.\nஅகமது இலகுவாக விசாவையும் எடுத்துக்கொண்டு, எங்கள் பெட்டிகளையும் எடுத்துவர உதவி செய்ததால் விமான நிலையத்தை விட்டுச் செல்வது மிகவும் இலகுவாக இருந்தது. மேலும் விமான நிலையத்தில் ரக்சியில் பேரம் பேசுவது போன்ற விடயங்கள் அவசியப்படவில்லை. ஒரு விதத்தில் இந்த பேரம் பேசும் சந்தர்ப்பம் கிடைக்காதது கவலையை அளித்தாலும் அரபிய மொழி தெரியாமல் பேரம் பேசுவது இமயமலை ஏறுவது போல் இருந்திருக்கும்.\nசிகப்பு கலந்த மண்நிற கட்டிடங்கள் நகரமெங்கும் அடுக்கு மாடியாக இருந்தன. வண்ணக் கலவையில் பச்சைக்கு பஞ்சம் இருந்தது. கண்களுக்கு அதிகமான வித்தியாசங்கள் இல்லை.\nஎகிப்து7கோடி மக்களைக் கொண்ட பெரியதேசமாக இருந்த போதிலும் நைல் நதியை அண்டிய பிரதேசத்தில் மட்டுமே மக்கள் வாழ்கிறார்கள்.\nஉலகவரலாற்றில் பல போர்களையும் பல படையெடுப்புகளையும் பார்த்த தேசத்தின் தலைநகர் கெய்ரோ. அதன் சரித்திரத்தை மேலோட்டமாகவேனும் பார்க்காவிடில் மக்களையோ நகரத்தையோ புரிந்து கொள்ள முடியாது\nஇப்போது உள்ள கெய்ரோவை புரிந்து கொள்ள சரித்திரத்தின் சில சுவடிகளைப் கொஞ்சம் பார்ப்போம்….\nதற்போதைய எகிப்து இஸ்லாம் மதத்தையும் இஸ்லாமிய கலாச்சாரத்தையும் பிரதிபலிப்பதால் நாம் பார்க்கும் சரித்திரம் இஸ்லாமிய மதத்தின் வருகையில் இருந்து தொடங்குகிறது. AD 640 அரேபியாவில்-அக்கால அரேபியா இக்கால சிரியா, ஜோர்டான், ஈராக் மற்றும் அரேபிய வளைகுடா நாடுகளைக் கொண்டது. இந்தப் பகுதியில் இருந்து இஸ்லாம் எகிப்திற்கு சென்றது. சிரியாவின் ஒரு மாகாணமாக மாறியது. அக்காலத்தில் கெய்ரோ தலைநகராக இருக்கவில்லை. புராதன காலத்தில் இருந்து எகிப்தில் பல தலைநகர்கள் இருந்தன. புராதன எகிப்தின் தலைநகரம் மெம்பிஸ். கிரேக்கர் ஆண்டபோது அலெக்சாண்டிரா. கெய்ரோ பிற்காலத்தில்தான் எகிப்தின் தலைநகராகியது. AD 969 எகிப்துக்கு படை எடுத்த ருனிசியர்கள் அதனைக் கைப்பற்றினார்கள். (The Fatimid Caliphate– பத்திமா முகமது நபியின் மகளாகவும் அலியின் மனைவியாகவும் இஸ்லாத்தின் முக்கியமான இடத்தை வகிப்பவர். இவரது பெயரில்தான் அக்காலத்தில் உருவாகிய வட ஆபிரிக்காவில் பெரிய பிரதேசத்தை உள்ளடக்கிய இராச்சியம் இருந்தது.) கைப்பற்றியதும் அல்-கயிரோ(AL Qahira) பெயரிட்டு உருவாக்கிய நகரம் திரிபடைந்து பிற்காலத்தில் கெய்ரோவாகியது(Cairo). இந்த பாத்திமா கலிப்பேட் அரசு இஸ்லாத்தின் சியா எனப்படும் பகுதியில் இஸ்மயிலியை (Ismailism) சேர்ந்தவர்கள். ஆனால் அக்காலத்தில் பெரும்பாலான எகித்திய மக்கள் சுனி இஸ்லாமியர்கள். மற்றவர்கள் கொப்ரிக் கிறிஸ்துவர்கள். இவர்கள் எகிப்தை சிலுவை யுத்தகாலம் வரை ஆண்டார்கள்.\nசிலுவை யுத்தம் ஜெருசலேத்தை கைப்பற்ற மேற்கு ஐரோப்பா ரோமன் கத்தோலிக்க அரசுகளால் 1096 தொடங்கிய போது பாலஸ்தீனம் பத்திமா கலிப்பேட்டின் சுயாதீனமான ஒருபகுதியாக இருந்தது. இந்த சிலுவை யுத்தம் இரு நூறு வருடங்கள் நடந்தது.\nஜேருசலேத்தை ஐரோப்பியரிடம் இருந்து மீண்டும் கைப்பற்றிய சலாடினால்(Saladin) எகிப்து சிரியாவில் ஒரு மாகாணமாகியது. இதன்பின்பு இதன் இடைப்பட்ட சில காலம் பிரான்சிய மன்னன் லுயிஸ் எகிப்தை(1249-1250) ஆளமுயன்றாலும் விரைவில் மாமலுக்கால் (Mamaluke) தோற்கடிக்கப்பட்டார். மாமலுக்கர்கள் சலாடினோடு போர்வீரர்களாக வந்த கோக்கேசிய இனத்தை சேர்ந்தவர்கள். இவர்கள் எகிப்தை பல நூற்றாண்டுகளாக ஆண்டார்கள்\n1798 பிரான்சிய தளபதியாக நெப்போலியன் வந்து மலுக்கை தோற்கடித்தாலும் அவர்கள் அதிக காலம் நிற்கவில்லை. இங்கிலாந்தால் தோற்கடிக்கப்பட்டதால் பிரான்ஸ் வெளியேற 1801இல் அந்த இடத்தை ஓட்டமான் பேரசு என அக்காலத்தில் சொல்லப்பட்ட துருக்கியர் பிரான்சின் வெற்றிடத்தை நிரப்பவந்தார்கள். அப்படி வந்த துருக்கிய படையணியின் தளபதி ஆர்மேனியாவை பிறப்பிடமாக கொண்ட முகமட் அலி. அவரே தற்போதைய நவீன எகிப்தின் தந்தையாவார். இவர் அன்னியராக இருந்த போதிலும் எகிப்தை ஐரோப்பிய நாடுகள் போன்ற அரசை உவாக்குவதற்கு அரச நிர்வாகிகள் தேவை என நினைத்து மாணவர்களை ஐரோப்பா அனுப்பினார். தொழிற்சாலைகள் பாதைகள் பாதுகாப்பு படைகள் என்று ஒரு நவினமான தேசத்துக்கு தேவையான விடயங்களை கட்டமைப்பதிலும் ஈடுபட்டார்.\nஉலக வரலாற்றில் எகிப்தின் இடம் எவ்வளவு முக்கியமானது எனப் புரிந்து கொள்ள சிறிய தகவல் போதுமானது. வரலாறு பதிவாகிய காலத்திலிருந்து பேசப்படும் வீரர்களில் முக்கியமானவர்கள் மகா அலக்சாண்டர், ஜுலியஸ் சீசர் என்போர் கிறீஸ்துவிற்கு முன்பாக எகிப்துக்கு வந்து போனார்கள். சிலுவை யுத்தத்தை வென்ற கேடிஸ் முஸலீம் ஹீரோ சலாடின் பின்பு நெப்போலியன் இருவரும் பிற்காலத்தில் வந்து போனார்கள். இப்படியான வீரர்கள் நடந்த மண்ணில் நாம் காலடி எடுத்து வைக்கிறோம் என்பது பெருமையாக இருந்தது.\nஐரோப்பாவுக்கும் ஆசியாவுக்கும் நடந்த வாணிபம்; ஆரம்பகாலத்தில் சில்க் ருட் எனப்படும் மத்திய ஆசியா வழியே நடந்தது. பல போரால் அந்தப் பாதை மூடப்பட்டபோது பெரும்பாலான கிழக்கு – மேற்கு- வாணிபம் எகிப்து வழியே நடந்தது. இந்த வியாபாரத்தை அக்காலத்தில் எகிப்தை ஆண்ட மாம்லுக்கியர் தங்கள் கையில் வைத்திருந்தார்கள். இதனால் எகிப்து செல்வச் செழிப்பான நாடாக இருந்தது. இந்த ஒற்றைப்படையான வர்த்தகத்தை உடைக்கவே 1498ல் வாஸ்கொடிகாமா கீழைத் தேசங்களிற்கு புதியவழி தேடி தென் ஆபிரிக்காவை சுற்றி இந்தியா வந்தார். அதனால்;தான் இலங்கைக்கு போர்த்துக்கேயர் வந்தனர். பின்னாட்களில் கோட்டை அரசனையும் சங்கிலி மன்னனையும் தோற்கடித்தனர்.\nஎனது நண்பன் பிரயாண ஒழுங்கை செய்திருந்ததால் நான் கடைசிவரையும் எந்த ஹோட்டல் என்று கூட பார்க்கவில்லை. பிரயாண விடயங்களை ஒழுங்காக செய்வதில் அவனில் எனது நம்பிக்கை பலமானது. ஆனால் கிரடிட் கார்ட் பசிபிக் சமுத்திரத்தின் ஆழத்தில் இருக்க வேண்டும.; மற்றும்படி எந்தக் குறையும் இல்லை.\nஎங்களை சுமந்து கொண்டு வந்த வாகனம் வந்து சேர்ந்த இடம் கெய்ரோ மரியட். நைல் நதிக்கு மிக அருகாமையில் மட்டுமல்ல கெய்ரோவின் பிரதான பகுதியிலும் உள்ளது. அவுஸ்திரேலியாவில் இருந்து பல மணித்தியால பயணம் என்பதால் விரைவாக அறைகளுக்கு போய் இளைப்பாறுவது என்பதுதான் எமது நோக்கமாக இருந்தது.\nஎமது அறையிலிருந்து நைல் நதியை பார்க்கக் கூடியதாக இருந்தது. நாங்கள் வெளியே பார்க்கிறோமோ இல்லையோ அறையின் ஜன்னல் ஊடாக என்ன தெரிகிறது என்பது முக்கியமானது. ஒரு முறை சென்னையில் ஒரு ஹோட்டலில் நடு இரவில் சென்று தங்கிவிட்டு காலை எழுந்ததும் அருகில் ரயில்வே தண்டவாளங்களை பார்த்துவிட்டு உடனே அந்த ஹோட்டலை காலி செய்தேன். அதேபோல் சைகோனில் எங்களுக்குத் தந்த அறையில் ஜன்னலே இருக்கவில்லை . மூன்று பக்கமும் சுவராக இருந்தது. இவ்வளவிற்கும் அமெரிக்கர்கள் கடைசியாக இருந்துவிட்டு தப்பிப்போன ஹோட்டல் சைகோன். உடனே காலிசெய்தேன். இணையத்தில் பதிவு செய்யும்போது எல்லாவற்றையும் காட்டுவார்கள். ஜன்னலைத்தவிர.\nதொலைபேசியில் கஸ்ரமர் சேர்விஸில் கேட்டபோது அந்தக் குரல் “நீங்கள்தானே அந்த இந்திய பெண்மணியோடு வந்தவர். இன்னும் ஐந்து நிமிடத்தில் உங்கள் பொதிகள் வந்து சேரும்.” எனச்சொன்னது.\nஒரு விதத்தில் ஆச்சரியமாக இருந்தது. மறுபுறத்தில் கோபமாக வந்தது. ஒரு இந்திய அயிட்டத்தை தள்ளிக்கொண்டு வந்த எகிப்தியன் என்ற அர்த்தமா. இல்லை இஸ்லாமிய நாகரீகத்துக்கு ஏற்ப முடிந்தவரை உடலை மறைத்துப் போடும்படி சொன்னதால் பஞ்சாபி உடையை அணிந்து என் மனைவி வந்ததால்; வந்த குழப்பமா என்பது தெரியவில்லை. அவன் சொன்னதை எனது மனைவிக்கு சொல்லியிருந்தால் என்ன நடக்கும் என நினைத்துவிட்டு அமைதியை வேண்டியதால் சொல்லாமல் “விரைவில் பொதிகள் வரும்” என்றேன்.\nநாங்கள் ஐரோப்பிய கலாச்சாரத்தை ஏற்று உடைகளை அணிந்து கொண்டு பெண்களை மட்டும் நமது கலாச்சாரத்தை சுமக்கும் சுமைதாங்கியாக மாற்றிவிடுகிறோம். அவுஸ்திரேலியால் ஏதாவது விசேடத்திற்கு நான் சூட் போட்டால் எனது மனைவி பட்டுச்சேலை கட்டுவது எனக்கே வியப்பாக இருக்கும். இதேமாதிரியான காட்சிகள் எகிப்தில் மட்டுமல்ல துபாயிலும் கண்டேன். ஏவாளால் தடை செய்யப்பட்ட பழத்தை சாப்பிட காலத்தில் இருந்து இனப்பெருக்கத்தின் சுமையுடன் இந்த கலாசார சுமையையும் அவர்களிடம் கொடுத்துவிட்டு ஹாயாக முன்னால் நடக்கிறோம். குறைந்தபட்சம் ஐரோப்பியர் பக்கத்தில் நடக்கிறார்கள். ஆசியர்கள் சில அடி முன்னால் நடக்கிறார்கள்.\nBy admin in இதழ் 10, தொடர் கட்டுரை, நோயல் நடேசன் on March 18, 2013
மறுதயாரிப்பு படத்தில் சசிகுமாருடன் இணையும் ஆர்யா? – மின்முரசு\nதமிழில் முன்னணி நடிகர்களாக இருக்கும் ஆர்யாவும், சசிகுமாரும் ரீமேக் படம் ஒன்றில் இணைந்து நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.\nஇந்நிலையில், இப்படத்தில் சசிகுமார், ஆர்யா ஆகியோர் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் பிருத்விராஜ் வேடத்தில் ஆர்யாவும், பிஜூமேனன் வேடத்தில் சசிகுமாரும் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. கொரோனா ஊரடங்கு முடிவுக்கு வந்தபின் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னையில் இன்று மின்தடை செய்யப்படும் பகுதிகள்.... உங்க ஏரியா இருக்கானு செக் பண்ணிக்கோங்க.....!!!!! • Seithi Solai\nசென்னையில் இன்று மின்தடை செய்யப்படும் பகுதிகள்…. உங்க ஏரியா இருக்கானு செக் பண்ணிக்கோங்க…..!!!!!\nதமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. அந்த வகையில் சென்னையில் இன்று காலை9மணி முதல் மதியம்2மணி வரை பராமரிப்பு பணி காரணமாக மின் விநியோகம் நிறுத்தப்படும் இடங்கள் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.\nஅதன்படி, அடையார்பகுதி: பெசன்ட் நகர் ருக்குமனி தெரு, லட்சுமிபுரம், எம்.ஜி ரோடு, சாஸ்திரி நகர், வெங்கடேஷ்வரா நகர், கக்கன் காலனி, காமராஜர் சாலை மற்றும் சுற்றியுள்ள பகுதிகள். மணலிபகுதி: சடையன்குப்பம் , பர்மா நகர் , இருளர் காலனி .\nசெம்பியம் பகுதி : சிம்சன் குரூ கம்பெனி , பெரியார் நகர் , மூலக்கடை , டீச்சர்ஸ் காலனி , காந்தி நகர் , டி . எச் ரோடு , அருள் நகர் , வெங்கடேஸ்வரா காலனி , சுப்ரமணியம் கார்டன் , பின்னி நகர் , பேங்க் காலனி , ராய்நகர் , குமரன் நகர் , வாசு நகர் , தணிகாச்சலம் 80 அடி ரோடு , சாமிராமலிங்கம் காலனி ஏ . பி . சி பிளாக் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள் .\nகிண்டி பகுதி : ராஜ்பவன் , கிண்டி பகுதி , நங்கநல்லுர் , மடிப்பாக்கம் , முவரசம்பேட்டை , முகலிவாக்கம் , ராமாபுரம் , சென்ட் தாமஸ் மௌன்ட் பகுதி , ஆலந்து h ர் , ஆதம்பாக்கம் , டி . ஜி நகர் , வானவம்பேடு , புழுதிவாக்கம் பகுதி மற்றும் சுற்றியுள்ள பகுதிகள் . கே . கே நகர் பகுதி : கர்ணன் தெரு , குருதேவ் தெரு , ஜே . ஜே நகர் , பாரதி நகர் , ஆண்டவர் தெரு , பெரியார் நகர் , சரஸ்வதி நகர் , ஜெயராம் நகர் , தசரதபுரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள் . திருவேற்காடு பகுதி : பொன்னியம்மன் நகா , ராஜன்குப்பம் , விஜிஎன் மகலட்சுமி , மெட்ரோ சிட்டி , அகரஹாரம்.\nTags: அறிவிப்பு, சென்னை, பகுதிகள், மின்தடை\nவாக்காளர் அடையாள அட்டை பெறுவது இனி ரொம்ப ஈஸி….. வாங்க எப்படினு பார்க்கலாம்….!!!!
MGR Pandiyanahigh budget politico commercial entertainer produced and directed by Adham Bhava\nபழைய திரைப்படங்களின் பெயர்களிலேயே புதிய திரைப்படங்கள் வந்துகொண்டிருக்கும் இந்த வேளையில், எம்.ஜி.ஆர். என்ற ஒரு மாபெரும் அரசியல் தலைவரின் பெயரையும், பாண்டியன் - என்ற சூப்பர்ஸ்டாரின் திரைப்பட பெயரையும் இணைத்து, எம்.ஜி.ஆர். பாண்டியன் என்று பெயர் சூட்டப்பட்டுள்ள இத்திரைப்படம் டைட்டிலிலேயே அதிரடியை கிளப்பியிருக்கிறது.\nஇத்திரைப்படம் அமைதிப்படைக்குப்பிறகு மீண்டும் ஒரு பென்ச் மார்க் அரசியல் படமாக இருக்கும். எம் ஜி ஆர் நூற்றாண்டை சிறப்பாக கொண்டாடிவரும் இவ்வேளையில் ஒரு உண்மையான எம் ஜி ஆர் ரசிகனை இப்படத்தில் காணலாம். அமீரின் முழு ஒத்துழைப்பில் படம் சிறப்பாக வந்துள்ளது.\nகதையின் தேவைக்கேற்ப நடிகர்கள் ஆனந்தராஜ், பொன்வண்ணன், கஞ்சா கருப்பு, இமான் அண்ணாச்சி, மற்றும் மகதி சங்கர், ராஜ் கபூர், கசாலி, ராஜசிம்மன், சம்பத் ராம், பாவா லக்ஷ்மணன், வின்சென்ட் ராய், செவ்வாழை, சுஜாதா, ஜீவிதா, சரவண சக்தி ஆகியோர் நடிக்கிறார்கள். தேவராஜ் ஒளிப்பதிவு செய்ய வைரமுத்து, பா.விஜய் பாடல்கள் எழுத வித்யாசாகர் இசையமைக்கிறார்.\nஏற்கனவே நான்கு கட்ட படப்பிடிப்பு முடிந்த நிலையில், அமீர் வட சென்னை மற்றும் சந்தனத்தேவன் படத்திலும் பிசியாக இருப்பதால் இரண்டிற்கும் இடையில் தேதிகள் பாதிக்காமல் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார். தேனி, மதுரை பகுதிகளில் தொடர்ந்து படப்பிடிப்பு நடைபெற உள்ளது.\nதமிழ் திரையுலகின் அமீர், ஒரு சிறந்த இயக்குனர், தயாரிப்பாளர், மற்றும் நடிகர். அவரது நான்கு படைப்புகளில், மூன்று மிகச்சிறந்ததாக அங்கீகரிக்கபட்டு, மௌனம் பேசியதே, ராம் மற்றும் பருத்திவீரன், அவருக்கு நிறைய பாராட்டுகளையும், விருதுகளையும் பெற்றுத்தந்தது. கடந்த 2009ம் ஆண்டு அவர் நடிகராக களம் கண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஜுரிச் திரைப்பட விழாவில் கௌரவிக்கப்படவிருக்கும் ஜேக்!\nதொடை காட்டுவது எங்கள் ஜீனிலேயே உள்ளது - பிரியங்கா சோப்ரா
சிவாஜிக்கு மனோ நோய்: சீறும் டெலோ? - www.pathivu.com\nHome / சிறப்புப் பதிவுகள் / மட்டக்களப்பு / சிவாஜிக்கு மனோ நோய்: சீறும் டெலோ?\nடாம்போ October 08, 2019 சிறப்புப் பதிவுகள், மட்டக்களப்பு\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தமிழீழ விடுதலை இயக்கத்தின் தவிசாளர் சிவாஜிலிங்கம், அனந்தி சசிதரனுடன் இணைந்து நடைபெறப் போகும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கலும் செய்துள்ளார் .\nசிவாஜிலிங்கம்இதேபோன்று கடந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் குருநாகல் மாவட்டத்தில் போட்டியிட்டார். அப்போதே இவருக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ள கட்சியினால் முடிவெடுக்கப்பட்டது.\nஇருப்பினும் எமது சகோதர கட்சிகளைச் சேர்ந்த சில தலைவர்களின் ஆலோசனைக்கமைவாக அச்செயற்பாடு நிறுத்தப்பட்டது. ஆனால் அவர் திரும்பவும் இவ்வாறானதொரு செயற்பாட்டினைச் செய்திருக்கின்றார்.\nஇதனை இவ்வாறே விட்டுவிட முடியாது இவருக்கான தகுந்த நடவடிக்கை எடுத்தே தீருவோம். எந்தத் தேர்தல் அறிவிக்கப்பட்டாலும் வேட்பாளராக களமிறங்க வேண்டும் என்ற ஒருவகையான மனநோய்க்கு சிவாஜிலிங்கம் உள்ளாகியுள்ளாரோ தெரியவில்லை’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
பெரணமல்லூரில் வங்கியின் ஆமைவேக சேவையால் ஊராட்சி பணிகள் பாதிப்பு ஊராட்சி நிர்வாகத்தினர் புகார் | Dinakaran\nபெரணமல்லூர், ஜன.12: பெரணமல்லூரில் இயங்கி வரும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் ஆமைவேக சேவையால் ஊராட்சி பணிகள் பாதிக்கப்படுவதாக ஊராட்சி நிர்வாகத்தினர் புகார் தெரிவித்துள்ளனர்.பெரணமல்லூர் பேரூராட்சியில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி கிளை செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் பொதுமக்கள் முதல் அரசுத்துறைகள் வரை கணக்குகள் வைத்து பராமரிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக பெரணமல்லூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் மூலம் ஊராட்சி நிர்வாக கணக்குகள் பெரும்பாலும் இந்த வங்கியில் தான் பராமரிக்கப்படுகிறது. ஆனால் இந்த வங்கியின் ஆமைவேக சேவை பணியால், நிர்வாக பணிகள் பெரிதும் பாதிப்படைந்து வருவதாக ஊராட்சி நிர்வாகத்தினர் புகார் தெரிவித்தனர். இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்தினர் கூறியதாவது: பெரணமல்லூரில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி கிளை உள்ளது. இந்த கிளையில் பெரணமல்லூர் ஒன்றியத்தில் உள்ள ஏழு கிராம ஊராட்சிகளின் கணக்குகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக கடந்த ஓராண்டாக தலைவர்கள் பதவி ஏற்றது முதல் ஊராட்சி வளர்ச்சிக்கு மத்திய, மாநில அரசுகள் நிதிகள் ஒதுக்கியுள்ளது.\nஅவ்வாறு ஒதுக்கப்பட்ட நிதிகள் அனைத்தும் பொதுநிதி மேலாண்மை திட்டத்தின் (பிஎப்எம்எஸ்) கீழ் பராமரிக்கப்படுகிறது. இதன் மூலம் எந்த ஒரு வரவு, செலவு கணக்கு வங்கிக்கு சென்று தான் பணத்தை கோரமுடியும். இதில் குடிநீர், மின்விளக்கு பராமரிப்பு ஊழியர்களின் சம்பளம் மற்றும் நூறு நாள் திட்ட பணிகள் உள்ளிட்ட அனைத்து திட்டப்பணிகள் இவ்விதமாக பண பரிவர்த்தனை நடைபெற்று வருகிறது. இதில் நாங்கள் போட்டு கொடுக்கும் பில் வங்கிக்கு சென்று குறிப்பிட்ட நபரின் கணக்குக்கு செல்ல வேண்டும். ஆனால் அவ்வாறு கொடுக்கப்படும் பில்கள் அனைத்தும் சுமார் ஒரு வாரம் கழித்து அந்த நபர்களின் கணக்கில் சேர்கிறது. இதனால் ஊராட்சி நிர்வாக பணிகள் தாமதமாகிறது.\nஇதனால், எங்களால் குறிப்பிட்ட பணியை சரியான நேரத்தில் செய்ய முடியாமல் தவித்து வருகிறோம். மேலும், எங்களின் சம்பள பில்லினை கொடுத்து அனுப்பினாலும் இதே நிலைமை ஏற்படுவதால், குறிப்பிட்ட நேரத்தில் சம்பளம் வாங்குவதும் திண்டாட்டமாக உள்ளது. இதுகுறித்து நாங்கள் வங்கி மேலாளரிடம் தெரிவித்தால் அவரும் நடவடிக்கை எடுப்பதாக எங்களிடம் கூறிவிட்டு மெத்தனம் காட்டுகிறார். இதனால் வங்கியின் சேவை ஆமை வேகத்தில் தான் நடைபெறுகிறது. மேலும், வேறு தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளுக்கு செலுத்தும் பில்கள் வேகமாக நடவடிக்கை மேற்கொண்டு, சில மணி நேரத்திலேயே பணம் பரிவர்த்தனை நடந்து முடிகிறது. இதுபோன்ற நிலைமையால், எங்களால் ஊராட்சி பணிகள் சரிவர செய்யமுடியாமல் அவதிக்குள்ளாகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
இலங்கையில் மேலும்3கொரோனா மரணங்கள் பதிவு - கொழும்பு 13, மருதானை, கொழும்பு 12 ஐ சேர்ந்தவர்கள் - News View\nHome உள்நாடு இலங்கையில் மேலும்3கொரோனா மரணங்கள் பதிவு - கொழும்பு 13, மருதானை, கொழும்பு 12 ஐ சேர்ந்தவர்கள்\nஇலங்கையில் மேலும்3கொரோனா மரணங்கள் பதிவு - கொழும்பு 13, மருதானை, கொழும்பு 12 ஐ சேர்ந்தவர்கள்\nஇலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும்3மரணங்கள் பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தற்போது (02) அறிவித்துள்ளார்.\nஇலங்கையில் ஏற்கனவே 208 கொரோனா மரணங்கள் பதிவான நிலையில், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள3மரணங்களுடன், இலங்கையில் இதுவரை 211 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇவ்வாறு அறிவிக்கப்பட்டவர்களில் ஒருவர் இன்றும் (02) ஒருவர் கடந்த (31) மற்றையவர் கடந்த புதன்கிழமையும் (30) மரணமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nகொழும்பு 13 (கொட்டாஞ்சேனை/ கொச்சிக்கடை) பிரதேசத்தைச் சேர்ந்த, 93 வயதான பெண் ஒருவர், வீட்டில் மரணமடைந்துள்ளார். அவரது மரணம் கடந்த செவ்வாய்க்கிழமை (30) நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 தொற்றினால் ஏற்பட்ட பல்வகை சிக்கல் நிலை, என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஅடையாளம் உறுதிப்படுத்தப்படாத மருதானையில் அடையாளம் காணப்பட்ட, 70 வயதான ஆண் ஒருவர், மரணமடைந்துள்ளார். அவரது மரணம் கடந்த செவ்வாய்க்கிழமை (30) நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 தொற்று, என அறிவிக்கப்பட்டுள்ளது.\nகொழும்பு 12 (வாழைத்தோட்டம்/ புதுக்கடை) பிரதேசத்தைச் சேர்ந்த 76 வயதான ஆண் ஒருவர், கொழும்பு தனியார் வைத்தியசாலையிலிருந்து, கொவிட்-19 தொற்றாளராக அடையாளம் காணப்பட்ட நிலையில், ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு மரணமடைந்துள்ளார். அவரது மரணம் இன்று (02) நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 நியூமோனியா மற்றும் சிக்கலான சிறுநீரக தொற்று, என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஅந்த வகையில், இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றியதாக தற்போது அடையாளம் காணப்பட்டுள்ள 44,371 பேரில் தற்போது 7,443 நோயாளிகள் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதோடு, சீனப் பெண் உள்ளடங்கலாக இது வரை 36,717 பேர் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். அத்துடன் இது வரை 211 பேர் மரணமடைந்துள்ளனர்.\nஇதேவேளை, மருத்துவமனைகளில் கொரோனா வைரஸ் தொடர்பிலான சந்தேகத்தின் அடிப்படையில் 586 பேர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக, சுகாதார மேம்பாட்டுப் பணியகம் அறிவித்துள்ளது.\nஅடையாளம் - 44,371\nகுணமடைவு - 36,717\nநேற்று அடையாளம் - 557\nஇன்று அடையாளம் - 515\nஇன்று குணமடைவு - 562\nசிகிச்சையில் - 7,443\nமரணம் - 211
Monday, November 14, 2011 | தமிழ் பேப்பர்\nஅண்ணா நூற்றாண்டு நூலகம்: நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?\n‘என்ன சொல்வதென்றே தெரியவில்லை! நண்பர் ஒருவரை அழைத்துச் செல்வதற்காக முதல் முறையாக இன்றுதான் வந்தேன். இதை அரசு நூலகம் என்று சொன்னால் யாரும் நம்பமாட்டார்கள். ஸ்பென்சர்ஸ், எக்ஸ்பிரஸ் அவென்யூ, சிட்டி சென்டர் என்று பல ஷாப்பிங் மால்களுக்குச் சென்றிருக்கிறேன். இத்தனை வசதிகளை எங்கும் பார்த்ததில்லை!’ உமருக்கு இது முதல் வருகை என்பதால் அவரால் உற்சாகத்தைக் கட்டுப்படுத்திக்கொள்ளமுடியவில்லை. ‘இனி ஒவ்வொரு வாரமும் குழந்தைகளுடன் வந்திருந்து முழு நாள் செலவிடப்போகிறேன்.’ நூலக இடமாற்றம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? ‘வெளிநாடுகள் பலவற்றுக்குச் சென்றிருக்கிறேன். உண்மையாகவே இது முதல் தரம். இந்தியாவுக்கே பெருமை அளிக்கக்கூடிய இந்த அடையாளத்தை என்ன நடந்தாலும் விட்டுக்கொடுக்கக்கூடாது.’\nபிரஸிடென்சி கல்லூரியைச் சேர்ந்த பார்வை குறைபாடு கொண்ட 70 மாணவர்களுக்கு அண்ணா நூலகத்தின் தரைத்தளத்தில் அமைந்துள்ள பிரைல் பகுதி இரண்டாவது வீடாக மாறியிருக்கிறது. தமிழ் செவ்விலக்கியத்தில் முனைவர் படிப்பு படிக்கும் மாணவர் கே. சுதன் ஒவ்வொரு நாளும் குறைந்தது ஐந்து அல்லது ஆறு மணி நேரம் இங்கே செலவிடுகிறார். ‘நற்றினை பற்றிய நூல்களைத் தேடும்போது, பேராசிரியர் பொற்கோவின் ஆடியோ ரிக்கார்டிங் ஒன்று கிடைத்தது. என்னால் விரைவாக குறிப்புகள் எடுக்கமுடியாது என்பதால் இந்த ஆடியோ பதிவுகள் மிகவும் உபயோகமாக இருக்கின்றன. நல்ல பல பிரைல் புத்தகங்கள் வைத்திருக்கிறார்கள். என்னைப் போன்றவர்களுக்கு மிகவும் உபயோகமான இடம் இது.’ (தி இந்து, நவம்பர் 11).\nபார்வைத் திறன் தேவைப்படாத தொடுதிறை கணிணிகள் (NVDA : Non-visual Desktop Access) இப்பகுதியின் முக்கியமான ஓர் அம்சம். எழுத்துகளை ஒலிகளாக மாற்றியமைக்கக்கூடிய மென்பொருளைப் பயன்படுத்தி பல நூல்களை கேட்டு மகிழ்கிறார்கள். ‘ஜெயகாந்தனின் நாவலை டெக்ஸ்ட் டு ஸ்பீச் முறையில் வாசித்தேன். மறக்கமுடியாத அனுபவம்.’ என்றார் ஒரு மாணவர்.\nஇரண்டாவது மாடியில் பதினான்கு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான தளம் அமைந்துள்ளது. சில நிமிடங்கள் சுற்றிவர அனைவரும் தற்போது அனுமதிக்கப்படுகிறார்கள் என்றாலும், எதிர்காலத்தில் ஒரு குழந்தையுடன் ஒரு மூத்தோர் மட்டுமே உள்நுழையலாம். குளிர் அறையின் நடுவே கண்ணைப் பறிக்கும் அழகுடன் படர்ந்து விரிந்திருக்கும் அந்த பிளாஸ்டிக் மரத்தின் அடியில் சுகமாக குழந்தைகள் அமர்ந்திருக்கிறார்கள். இரண்டு பக்கங்களில் விரிந்திருந்த ஒரு காண்டாமிருகத்தின்மீது தன் இரு கைகளையும் படரவிட்டு ரசித்துக்கொண்டிருந்தாள் ஒரு சிறுமி.\nஒவ்வொரு மூலையும், ஒவ்வொரு அடுக்கும் குழந்தைகள் நினைவில் அழுத்தமாகப் பதிந்திருந்ததால் ‘டாம் அண்ட் ஜெர்ரி இடம்’ எங்கிருக்கிறது என்றும் ‘அமர் சித்ர கதா வரிசை’ எங்கிருக்கிறது என்றும் ‘ரோபோ நாய் புத்தகம்’ எங்கிருக்கிறது என்றும் அவர்களுக்குத் துல்லியமாகத் தெரிந்திருக்கிறது. சென்றமுறை படிக்க ஆரம்பித்து இடையில் நிறுத்திய பக்கத்தைத் தேடிப்பிடித்து, விட்ட இடத்தில் இருந்து தொடர்கிறார்கள்.\nகார்டூன்ஸ், பஞ்ச தந்திரக் கதைகள், நாடுகள், தலைவர்கள், அறிவியல், பொது அறிவுக் களஞ்சியம், தேவதைக் கதைகள் என்று ஆயிரக்கணக்கான நூல்கள் பொந்து போன்ற அடுக்குகளில் சீராக அடுக்கிவைக்கப்பட்டுள்ளன. கட்டைவிரல் அளவுக்கு எழுத்துகள் கொண்ட பெரிய புத்தகங்களைக் கண்கள் விரிய குழந்தைகளும் பெரியவர்களும் ஒருங்கே எடுத்து பார்க்கிறார்கள். வண்ண வண்ண எபிசிடி, ஸ்பைடர் மேன், டின்டின், கோஸ்ட் ரைடர் தொடங்கி டால்ஸ்டாய், ஆஸ்கர் ஒயில்ட், மார்க் ட்வைன் வரை வயதுக்கேற்ற புத்தகங்கள் காணக்கிடைக்கின்றன.\nசனிக்கிழமை காலை 10.30 மணிக்குள் கிட்டத்தட்ட நூறு குழந்தைகள் திரண்டுவிட்டார்கள். பள்ளி மாணவர்கள் பலர் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை இங்கே தவறாமல் வந்துவிடுகிறார்களாம். மினி சறுக்கு மரம், சீசா என்று சிறு விளையாட்டுத் திடலும் உள்ளது. குழந்தைகள் பிரிவில் மட்டும் கிட்டத்தட்ட ஒன்றரை லட்சம் புத்தகங்கள் உள்ளன. பெரும்பாலானவை ஆங்கிலம். தமிழ் மற்றும் பிற மொழி ஆக்கங்கள் சில ஆயிரம் இருக்கும். பிரிக்கப்படாத புத்தகக் கட்டுகள் ஒரு சிறு மலை போல் ஓரத்தில் காத்திருக்கின்றன. ‘மேலும் பல புத்தகங்களை ஆர்டர் செய்திருக்கிறோம், எப்போது வேண்டுமானாலும் வரலாம்.’ என்றார் அந்தப் பகுதியின் பொறுப்பாளர்.\nகுழந்தைகளின் உயரத்துக்கு ஏற்ற புத்தக அடுக்குகள், அமர்ந்து வாசிப்பதற்கு ஏற்ற வட்ட மேசைகள், பல வண்ண நாற்காலிகள் என்று கவர்ந்திழுக்கும் அம்சங்கள் பற்பல. பதினான்கு வயதுக்கு உட்பட்டவர்களுக்கான தனியோர் உலகம் அது. டிவி, கம்ப்யூட்டர் கேம்ஸ் என்றே வளர்ந்து பழகிய ஒரு தலைமுறைக்கு வாசிப்பின் ஈர்ப்பை இதைவிட சிறந்த முறையில் அறிமுகப்படுத்தமுடியாது.\nநூலகப் பதிவேட்டின்படி ஞாயிற்றுக் கிழமைகளில் சராசரியாக 2500 பேர் வருகை தருகிறார்கள். முந்தைய வாரத்தோடு ஒப்பிடும்போது இது இரு மடங்கு அதிகரிப்பு. முதல் முறையாக வருபவர்களின் எண்ணிக்கையும் மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்திருப்பது ஒரு காரணம். பள்ளி, கல்லூரி மாணவர்களோடு சேர்ந்து, குடும்பமாக வருபவர்களின் கூட்டமும் அதிகரித்திருக்கிறது. இந்த ஆண்டு ஜனவரி தொடங்கி அக்டோபர் வரை 26,500 பேர் நூலகத்துக்கு வருகை தந்திருக்கிறார்கள். (தி இந்து, நவம்பர் 9.)\nசெய்தித் தாள்கள், பத்திரிகைகள் தனியே ஒரு தளத்தில். கொண்டுவரும் புத்தகங்களைப் படிக்க ஒரு பிரிவு. மற்ற நூலங்களில் இல்லாத ஒரு வசதி இது. எப்போது சென்றாலும் இங்கே கூட்டம் நிரம்பியிருக்கிறது. ஒரு தளம், தமிழ் நூல்களுக்கானது. குடும்ப நாவல்கள், துப்பறியும் கதைகள், இலக்கியம், கவிதை, பயண நூல்கள், கட்டுரைத் தொகுப்புகள், செவ்விலக்கியம், இலங்கைத் தமிழர் படைப்புகள், ஆன்மிகம், அம்பேத்கர் தொகுப்புகள் (பெரியார் அகப்படவில்லை!), வரலாறு என்று மாறுபட்ட ரசனைகளுக்கேற்ற தலைப்புகள் தொகுக்கப்பட்டுள்ளன. நியூ செஞ்சுரி, கிழக்கு, உயிர்மை, காலச்சுவடு, அலைகள், விடியல் என்று பல்வேறு பதிப்பாளர்களின் புத்தகங்கள் ஒவ்வொன்றும் குறைந்தது நான்கு பிரதிகள் துறைவாரியாகப் பிரித்து அடுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அடுக்கிலும் எழுத்தாளர்களின் பெயர்கள் அச்சிடப்பட்டுள்ளதால், வண்ணதாசனையோ, ஜெயமோகனையோ, ஜெயகாந்தனையோ, பொன்னீலனையோ தேடியெடுப்பது சிரமமாக இருக்காது.\n‘பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று ஒவ்வொரு நாளும் தள்ளிப்போட்டுக்கொண்டே இருந்தேன். நூலகத்தை மாற்றப்போவதாக அறிவிப்பு வந்தவுடன், உடனே பார்த்துவிடவேண்டும் என்று முடிவு செய்து வந்துவிட்டேன்.’ எம். சரண்யா சென்னை பல்கலைக்கழகத்தில் ஃபார்மகாலஜி படிக்கும் மாணவி. ‘நான் பெரும்பாலும் ஐந்தாவது தளத்தில்தான் இருப்பேன்’ என்கிறார் டாக்ஸிகாலஜி படிக்கும் பொற்பாதம். ‘என் துறை சார்ந்த புத்தகங்கள் என் கல்லூரி நூலகத்தைவிட அதிகமாக இங்கே இருக்கின்றன.’ ‘நூலகங்கள் மட்டுமல்ல, புத்தகக் கடைகளிலும்கூட கிடைக்காத பல எஞ்சினியரிங் புத்தகங்கள் இங்கே கொட்டிக்கிடக்கின்றன!’ என்கிறார் மெக்கானிகல் எஞ்சினியரிங் மாணவர், செல்வம். (தி இந்து, நவம்பர் 9).\n‘நல்ல வெளிச்சம், இதமான குளிர், அற்புதமான மேசை, நாற்காலிகள் என்று வாசிப்பவர்களுக்கான சொர்க்கம் இது. வீடு, ஆபிஸ் எல்லாவற்றையும் மறந்துவிட்டு, மணிக்கணக்கில் இங்கே வந்து படிக்கமுடியும்.’ என்கிறார் மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரியும் பார்கவி. ‘எனக்குத் தெரிந்து, சாஸ், ஸ்டாடிஸ்டிக்ஸ், புரோகிராமிங் என்று என் பணிக்குத் தேவைப்படும் அத்தனை புத்தகங்களையும் இப்படி ஒரே இடத்தில் இதற்கு முன்னால் பார்த்ததில்லை. ஒவ்வொரு புத்தகமும் கிட்டத்தட்ட ஆயிரம் ரூபாய்க்குக் குறையாமல் இருக்கும். வசதியில்லாதவர்களுக்கு இது பொக்கிஷம்.’\nநூலகத்தை முழுமையாகப் புரிந்துகொள்ள குறைந்தது நான்கைந்து முறை வரவேண்டும் என்று நினைக்கிறேன். தமிழுக்கான தளம் தவிர்த்து பிற தளங்களில் துறை வாரியாக ஆங்கில நூல்கள் தொகுக்கப்பட்டுள்ளன. மதங்கள் என்னும் பிரிவில், சூஃபிஸம் பற்றிய களஞ்சியம் மட்டும் இருபது பாகங்களில் உள்ளது. இந்தியத் தத்துவம் என்றால் வேதங்கள், உபநிஷத்துகள், லோகாயதம், நியாயா தத்துவம், வைசேஷிகம், சாங்கியம், சமணம், பௌத்தம், பகவத் கீதை, யோகம், வேதாந்தம், பக்தி இயக்கம் என்று ஒவ்வொரு தலைப்பிலும் நூற்றுக்கணக்கான பிரதிகள் உள்ளன. எந்தவொரு தேவாலயமும் பொறாமை கொள்ளும் வகையில் கிறிஸ்தவம் குறித்தும் தேவாலயங்களின் வரலாறு குறித்தும் பல ஆயிரம் நூல்கள். Baptists, Calvinism, Adventists, Puritans, Mormons, Pietism, Methodists, Lutherans, Anglicanism, Syrian Malabar Nasranis, Oriental Orthodox, Assyrian Church, Syrian Rites, Saint Thomas Christian groups, Vatican Council History, Restorationism என்று பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது.\nஐந்தாவது தளத்தில் உள்ள துறைகள் இவை. Natural Sciences, Mathematics, Astronomy, Physics, Chemistry, Earth Sciences, Palaeontology, Biology, Medicine & Health, Botany, Zoology. கன்னிமரா உள்ளிட்டநூலகங்களிலும் இந்தத் துறைகள் கிடைக்கும் என்றாலும் இங்குள்ள வகைகளும் பிரிவுகளும் பிரமிக்க வைக்கக்கூடியவை. வேறு எங்கும் காணவியலாத பல துறைகள் இங்கே அநாயசமாக நிறைந்துள்ளன. உதாரணத்துக்கு, Metal Working, Lumber (Wood) Technology, Paper Technology, Elastomers, Precision Instruments, Printing Technology, Beverage Technology, Design Source Books, Video Production, Stenciling, Glass Art, Remote Sensing, Military Engineering, Calligraphy. பெயருக்கு ஒரு சில நூல்கள் அல்ல, ஒவ்வொன்றையும் பற்றிய மிக விரிவான சேகரிப்புகள் இங்குள்ளன. Metal Working என்று எடுத்துக்கொண்டால், Casting, Mechanical Working, Welding என்று உள்ளுக்குள் புகுந்து தலைப்புகள் விரிகின்றன.\nஇசை என்று எடுத்துக்கொண்டால், Instruments, Classical, Pop, Jazz, Country, Blues, Instrumental Ensembles, Keyboard Instruments, Electrophones, Percussion Instruments, Stringed Instruments, Wind Instruments, Recreational and Performing Arts என்று பிரிவுகள் படர்கின்றன. ஒவ்வொன்றிலும் குறைந்தது சில நூறு நூல்கள். மேஜிக் பற்றி எந்தவொரு புத்தகத்தையும் இதுவரை நான் பார்த்ததில்லை. இங்கே பி.சி. சர்க்கார் தொடங்கி பல நாடுகளில் உள்ள புகழ்பெற்ற நிபுணர்கள் பற்றியும் அவர்களுடைய கலை பற்றிய விவரங்களும் வரலாறுகளும் தனி அடுக்குகளில் உள்ளன.\nகன்னிமராவில் வரலாற்றுக்கு ஒரு வரிசை இருக்கும். அதில் தோராயமாக பத்து அடுக்குகள் இருக்கும். ஐரோப்பா, ஆசியா, அமெரிக்கா, பிரிட்டன், இந்தியா என்று பிரித்து வைத்திருப்பார்கள். இங்கே வரலாற்றுக்குத் தனியொரு தளம். ஏழாவது மாடி முழுவதும் வரலாற்று நூல்கள். Historical Periods என்னும் வகையில் நாற்பதுகள், ஐம்பதுகள், அறுபதுகள், எழுபதுகள், எண்பதுகள் என்று தேடிக்கொண்டே போகலாம். லிபியா, எகிப்து, சூடான், கம்போடியா, வியட்நாம், இந்தோனேசியா, காமன்வெல்த் நாடுகள் என்று ஒவ்வொரு நாட்டுக்கும் குறைந்தது நூறு, நூற்றைம்பது நூல்கள். அல்ஜீரியா பற்றியும் மொராக்கோ பற்றியும் பெரு பற்றியும் பாலினேஷியா பற்றியும் ஆர்க்டிக் தீவுகள் பற்றியும் இங்குள்ளது போன்ற நூல்களை வேறு எங்கும் கண்டதில்லை. நூற்றாண்டுகள் அடிப்படையிலும் காலவரிசையிலும்கூட பிரிவுகள் உள்ளன. 6th century to 12th centuries, 13th century, 14th century என்று தொடங்கி Modern History வரை தனித்தனி வரிசைகள். இரண்டாம் உலகப் போர் என்று எடுத்துக்கொண்டால் சில நூறு நூல்கள். படங்களும் வரைடபங்களும் அடங்கிய பெரிய அளவு புத்தகங்கள் தனி.\nசிறிது நடந்தால், Earth – Physical Geography, Historical and persons treatment. நாடு வாரியாக, லோன்லி பிளாணட் வழிகாட்டிகள். அது போதாது என்றால் வேறு இரு பதிப்பகத்தாரின் நாடு வாரியான வழிகாட்டிகளை நாடலாம். அரசியல் அறிவியல் பிரிவில் Local Government, City Government, Political Situation & Conditions போன்ற தலைப்புகள் கிடைக்கின்றன. Political Situations என்னும் பிரிவில், ரஷ்யா, நார்வே, ஸ்வீடன், கிரீஸ், சீனா, இந்தியா, பாகிஸ்தான், இரான், மத்திய ஆசியா, பிலிப்பைன்ஸ், போலந்து என்று நாடுவாரியாக வரிசைகள் பிரிக்கப்பட்டுள்ளன.\nஆங்கிலப் புதினப் பிரியர்களுக்கு ஒரு மாடிப் புத்தகங்கள் காத்திருக்கின்றன. அமெரிக்க, பிரிட்டிஷ், லத்தீன் அமெரிக்க, இந்திய இலக்கியங்களுக்கு இணையாக, ஆப்பிரிக்கா, சீனா, ஜப்பான், மொராக்கோ, ஜெர்மன் நாட்டுப் படைப்புகளும் நிறைந்துள்ளன. மற்ற தளங்களைக் காட்டிலும் இங்கே கூட்டம் அதிகம்.\nImmigration Law and Procedure, Law of Income Tax, Commentaries on Indian Constitution என்று பல ஆயிரம் பக்க நூல்களின் அணிவகுப்புகள் ஒரு பக்கம். சட்டம், பொருளாதாரம் இரண்டுக்கும் தனிப் பெரும் தடுப்புகள். மலைப் பாம்பு போல் நீண்டு விரிந்திருக்கிறது தத்துவத்துறை. Knowledge என்னும் அடக்கமான தலைப்பின் கீழுள்ள பகுதிகள் இவை. Structure of Knowledge, Origin and Sources of Knowledge, Belief, Causation, Determination and indeterminism, Chance, Freedom, Necessity, The Self, Soul, Mind, Attributes and faculties.\nஇங்குள்ள ஹிப்னாடிசம் பிரிவை ஒருமுறை வெறுமனே கடந்து சென்றிருந்தால்கூட ஏழாம் அறிவு போன்ற விபத்துகள் தவிர்க்கப்பட்டிருக்கும். இது ஒரு சுருக்கமான பட்டியல் மட்டுமே. Perceptual Processes, Will (Self Contol), Intelligence and Aptitudes, Reasoning, Subconscious and altered states and process, Daydreams, fantasies, reveries, Sleep phenomena, Differential and developmental psychology, Individual psychology.\nஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் காணப்படுவதைப் போன்ற வரவேற்பறைகள் ஒவ்வொரு தளத்திலும் அமைந்துள்ளன. குறிப்பிட்ட துறை சார்ந்த புத்தகம் எங்கே கிடைக்கும் என்பதை இங்குள்ள நிர்வாகிகளிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம். ஒவ்வொரு அறையிலும் நுழைவுப் பதிவேடும் ஆலோசனைப் புத்தகமும் வைக்கப்பட்டுள்ளது. பத்து பக்கங்களைப் புரட்டினால் நூலகத்தை யாரெல்லாம் பயன்படுத்துகிறார்கள் என்பது தெரிந்துவிடும். மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், மென்பொருள் பணியாளர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள், வடிவமைப்பாளர்கள், புகைப்படக்காரர்கள், ஓவியர்கள்… இன்னும் பலர். மாணவர்களும் ஆய்வாளர்களும் அதிக எண்ணிக்கையில் நூலகத்தைப் பயன்படுத்துகிறார்கள்.\nநூலக இடமாற்றத்தை எதிர்க்கும் ஆயுதமாக ஆலோசனைப் புத்தகம் மாறியிருந்தது. ‘தயவு செய்து நூலகத்தை மாற்றாதீர்கள்’ என்னும் மென்மையான ஆதங்க வெளிப்பாடுகள் தொடங்கி, ‘சென்னைக்குப் பெருமை சேர்க்கும் அண்ணா நூற்றாண்டு நூலகத்தை நாம் விட்டுக்கொடுக்கக்கூடாது’, ‘நூலகத்தை மாற்றினால் ஒன்றிணைந்து தடுப்போம்’ போன்ற போராட்டக் குரல்களும் பதிவாகியுள்ளன. ‘It’s senseless to shift this beautiful library’ என்றும் ‘நூலகத்தை இடமாற்றம் செய்ய வேண்டும் என்று ஒரு பாசிஸ்ட் கூட சிந்திக்கமாட்டான்.’ என்றும் பலர் சீறியிருக்கிறார்கள். ஆ.சுப்பிரமணியன் என்பவர் இவ்வாறு எழுதியிருந்தார். ‘நூலகம் மாற்றுவது, என் கண்ணின் பார்வையை பிடுங்குவது போலிருக்கிறது. மாற்ற வேண்டாம்.’\nஇடிக்கவேண்டும் என்று சொல்பவர்கள் மட்டுமல்ல, இருக்கவேண்டும் என்று சொல்பவர்களும் ஒருமுறை நூலகத்தை வந்து பார்த்துவிடவேண்டும். முதல் பார்வையிலேயே அதன் பிரமாண்டமும் வீச்சும் முக்கியத்துவமும் விளங்கிவிடும். ஒரே ஒருமுறை, ஒரு சில தளங்களை மட்டும் பார்த்துவிடுங்கள். புத்தக அடுக்குகளைக்கூட நீங்கள் நெருங்க வேண்டியதில்லை. எந்தவொரு பிரதியையும் தீண்டவேண்டியதில்லை. பரந்து விரிந்திருக்கும் கார்பெட் தரையில் அமைதியாக நடை போட்டால் போதும். அண்ணா நூற்றாண்டு நூலகத்தைத் திருத்தியமைக்கவேண்டும் என்று ஜெயலலிதா துடித்துக்கொண்டிருப்பது ஏன் என்பது விளங்கிவிடும்.\nநூலகத்தைவிட்டு வெளியேறி, சிறிது தூரம் நடந்தபோதுதான் சட்டென்று உறைத்தது. எம்ஜிஆர் பேட்டிகளும், வாழ்க்கை வரலாறுகளும், நினைவுக் குறிப்புகளும் இருந்தன. ஜெயமோகனின் புனைவுகளும் அபுனைவுகளும் இருந்தன. ஜெயகாந்தன், வாலி, வைரமுத்து ஆய்வுக் கோவை தொடங்கி சங்க இலக்கியங்கள் வரை பல்லாயிரம் பிரதிகள் இருந்தன. கருணாநிதி பெயர் தாங்கிய ஒரு புத்தகத்தையாவது பார்த்தேனா? அல்லது கவனக்குறைவால் கடந்து வந்துவிட்டேனா? அல்லது அவர் நூல்கள் இன்னமும் அடுக்கப்படவில்லையா? அல்லது அவற்றுக்கான அடுக்குகள் தயாராகவில்லையா? அல்லது ஆர்டர் செய்து இன்னமும் வரவில்லையா? அல்லது இன்னமும் திறக்கப்படாமல் இருளில் மூழ்கிக்கிடக்கும் ஒரு சில பகுதிகளில் அவருடைய புத்தகங்களும் தேங்கிக்கிடக்கின்றனவா?\nதெரியவில்லை. ஆனால், ஒரு புத்தகம், ஒரே ஒரு புத்தகம்கூட அவர் பெயரில் பார்த்த நினைவில்லை. எந்தவோரிடத்திலும் அவர் முகம் பார்த்த நினைவில்லை. அமர்ந்துவாசிக்கும் அண்ணாவின் உருவச்சிலை முகப்பில் இருக்கிறது. திறந்து வைத்தவர் என்னும் முறையில் முதல்வர் கருணாநிதியின் பெயர். அவ்வளவுதான்.\nஅண்ணா நூற்றாண்டு நூலகம், கன்னிமரா நூலகம், கருணாநிதி, கோட்டூர்புரம், ஜெயலலிதா, நூலகம், புத்தகங்கள் 35 Comments\nஎழுத்துரு அளவை மாற்ற\tA A A அண்மை இடுகைகள்\tக்யூபா காட்டும் வழி\nபகுதிகள்\t2013 தொடர்கள் (26)\nக்யூபா காட்டும் வழி\tசாதியை ஒழிக்கமுடியவில்லை!\tபிரமிப்போடு நிறுத்திவிடாதே!\tஸ்பார்டகஸ் : பாட்டாளி வர்க்கத்தின் பிரதிநிதி – II\tகார்ப்பரேட் சி.இ.ஓவும் சில கலைப்படங்களும்\tஇருண்ட கண்டம், இருண்ட உண்மை\tசாதிகளும் உட்சாதிகளும்\tஜிம் பாடம்\tஸ்பார்டகஸ் : பாட்டாளி வர்க்கத்தின் பிரதிநிதி\tச்சே என்றொரு நச்சுப்பாம்பு\tRecent Comments\nதிருடன் நம்பும் போலீஸ் - 15,368 viewsகத்தோலிக்கம்: காதல், காமம், ஊழல் - 9,000 viewsபோதி தருமரின் குறைப்பிரசவம் – உபயம்: முருகதாஸ் அன்கோ - 7,488 viewsசெல்ஃபோனில் ஆபாசப் படம் - 7,320 viewsஎக்ஸைல் : ஆண்களை அம்பலப்படுத்தும் நாவல் - 6,509 viewsசாரு நிவேதிதாவின் எக்ஸைல் – ஒரு பின்நவீனத்துவ விமர்சனம் - 6,199 viewsமணவாக்குமூலம் : மீனா கந்தசாமி - 4,922 views\tMost Commented
VanniOnline News: ஜி.எஸ்.பி. பிளஸ் (GSP+) வரிச்சலுகை வழங்க தகுதியாய்வுக் குழு இலங்கை வருகை!\nஜி.எஸ்.பி. பிளஸ் (GSP+) வரிச்சலுகை வழங்க தகுதியாய்வுக் குழு இலங்கை வருகை!\nபதிந்தவர்: தம்பியன் 11 April 2017\nஐரோப்பிய நாடுகளுக்கான ஏற்றுமதி தொடர்பில், அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளுக்கு வழங்கப்படும் ஜி.எஸ்.பி. பிளஸ் (GSP+) வரிச்சலுகையை இலங்கைக்கு வழங்குவது தொடர்பில் ஆராய்வதற்காக, தகுதியாய்வுக் குழு உறுப்பினர்கள் இலங்கை வந்துள்ளனர்.\nநாட்டில் நிலவும் அரசியல் நிலைத்தன்மை, மனித உரிமைகள் மற்றும் தொழிலாளர் சட்டங்கள் உள்ளிட்ட ஏதுநிலைகள் பலவற்றை அவர்கள் அவதானிக்கவுள்ளனர்.\nஏற்கனவே சில பிரதிநிதிகள் குழுக்கள் இலங்கைக்கு வந்து கண்காணிப்புகளை மேற்கொண்டனர். அவர்களின் பரிந்துரைகளுக்கு அமைய இலங்கைக்கு ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை வழங்குவதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கைககள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளன.\nஇதேவேளை குறித்த வரிச்சலுகை தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று எதிர்வரும் 19ஆம் திகதி பெல்ஜியத்தின் பிரசல்ஸ் நகரில் நடைபெறவுள்ளது.\n0 Responses to ஜி.எஸ்.பி. பிளஸ் (GSP+) வரிச்சலுகை வழங்க தகுதியாய்வுக் குழு இலங்கை வருகை!\nCopyright 2009 : VanniOnline News: ஜி.எஸ்.பி. பிளஸ் (GSP+) வரிச்சலுகை வழங்க தகுதியாய்வுக் குழு இலங்கை வருகை!
ஹூண்டாய் அல்காசர் முக்கிய அம்சங்கள் வெளியீடு || tamil news Hyundai Alcazar specs revealed ahead of official debut\nபதிவு: ஏப்ரல் 08, 2021 14:02 IST\nஹூண்டாய் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்டு7சீட் எஸ்யுவி அல்காசர் மாடலில் பல்வேறு அசத்தலான அம்சங்கள் வழங்கப்படுகின்றன.\nஆட்டோமொபைல் சந்தையில் 2021 ஆண்டின் அதிகம் எதிர்பார்க்கப்படும்7சீட் எஸ்யுவியாக அல்காசர் இருக்கிறது. கடந்த மாதம் அல்காசர் மாடலின் வரைபடங்களை ஹூண்டாய் வெளியிட்டது. அந்த வரிசையில் தற்போது இந்த காரின் அம்சங்கள் வெளியிடப்பட்டு இருக்கிறது.\nஅதன்படி புதிய ஹூண்டாய் அல்காசர் மாடலின் வீல்பேஸ் 2760 எம்எம் ஆக இருக்கிறது. புதிய ஹூண்டாய் கார் 2.0 லிட்டர் பெட்ரோல், யு2 1.5 விஜிடி என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இவை முறையே 155 பிஹெச்பி மற்றும் 112 பிஹெச்பி திறன் வழங்குகின்றன. இவற்றுடன்6ஸ்பீடு மேனுவல் அல்லது6ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.\nமுந்தைய தலைமுறை என்ஜினை விட புதிய என்ஜின்7பிஹெச்பி கூடுதல் திறன் மற்றும் சிறப்பான மைலேஜ் வழங்கும் என ஹூண்டாய் தெரிவித்து உள்ளது. ஹூண்டாய் அல்காசர் மாடல் இகோ, சிட்டி மற்றும் ஸ்போர்ட் என மூன்றுவித டிரைவ் மோட்களை கொண்டிருக்கிறது.
#BREAKING : நேர்மையான மனிதர், உதவும் குணம் கொண்டவர் ஜெட்லி..! டுவிட்டரில் உருக்கமாக பதிவிட்ட கோலி..!\nபாஜக மூத்த தலைவரும் ,முன்னாள் மத்திய நிதி அமைச்சருமான அருண் ஜெட்லி கடந்த 9-ம் தேதி உடல்நலக்குறைவால் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை கொடுக்கப்பட்டு வந்த நிலையில் இன்று கால சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.\nஇந்நிலையில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கலை தெரிவித்து உள்ளார்.அதில் கோலி கூறியது, அருண் ஜெட்லி காலமானதைப் பற்றி கேள்விப்பட்டேன் . அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன். அவர் நேர்மையான மனிதர், எப்போதும் மற்றவர்களுக்கு உதவும் குணம் கொண்டவர். 2006-ம் ஆண்டு எனது தந்தை மறைவின் போது நேரில் வந்து அஞ்சலி செலுத்தியவர். அவரின் ஆத்மா நிம்மதியாக ஓய்வெடுக்கட்டும் என தெரிவித்துள்ளார்.
“கைது, சிறை, பிணை” – எதற்கு இந்த அடக்குமுறை ? – மக்கள் முன்னணி\n“கைது, சிறை, பிணை” – எதற்கு இந்த அடக்குமுறை ?\nadmin\t12 Aug 2018\nமே 22 அன்று ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தியதோடு தொடங்கிய அடக்குமுறை படலம் இன்றுவரை தொடர்ந்து கொண்டிருக்கிறது. மே 22 அன்று 12 பேர் கொல்லப்பட்டனர். மே 23 அன்றும் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு ஒருவர் கொல்லப்பட்டார். இந்த துப்பாக்கிச் சூடுகளில் உயிரிழந்தவர்கள் மட்டுமின்றி பலர் கை, கால்களை இழந்து வாழ்நாள் துயருக்கு ஆளாகியுள்ளனர். மே 22,23,24 ஆகிய நாட்களில் போராடிய மக்களை கிராமம், கிராமமாகச் சென்று வகைதொகையின்றி கைது செய்து அடித்து உதைத்து சிறையில் அடைத்தது காவல்துறை. பின்னர் சில நாட்களில் அவர்கள் பிணையில் வந்ததோடு ஸ்டெர்லைட்டுக்கு எதிராகப் போராடியவர்கள் மீதான அடக்குமுறை தணிந்துவிட்டதா? என்றால் அதுவும் இல்லை. அடுத்த சுற்று கைதுப் படலம் தொடங்கியது. கிராமம், கிராமமாகச் சென்று எண்ணற்ற வழக்குகளில் ஆண்களைக் கைதுசெய்து சிறையிலடைத்தது அரசு. கிராமங்களில் மக்கள் இரவு நேரங்களில் விழித்துக்கிடந்து காக்கிகளின் வருகையை எண்ணி அஞ்சிக் கொண்டிருந்தனர். வேதாந்தா குழுமத்திற்கு எதிராக வீரஞ்செறிந்தப் போராட்டம் நடத்தியவர்கள் மீது வன்மத்தோடு பழிவாங்கிக் கொண்டிருக்கிறது அரசு.\nதூத்துக்குடியோடு அரசின் கொடுங்கரங்கள் நின்றுவிட வில்லை!\nதமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் தோழர் தி.வேல்முருகன் மே 25 வாக்கில் தூத்துக்குடி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டதில் இருந்தே அரசின் அணுகுமுறை மாறியது தெரியத் தொடங்கிவிட்டது. நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள், மக்கள் அதிகாரம் தோழர்கள், வழக்கறிஞர்கள் வாஞ்சிநாதன், அரிராகவன், மக்கள்மன்றம் ஒருங்கிணைப்பாளர் மகேஷ் மற்றும் தோழர்கள், தமிழ்த்தேச மக்கள் கட்சியின் தோழர் வெற்றித்தமிழன், தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் செரீஃப், நடிகர் மன்சூரலிகான், சூழலியல் செயற்பாட்டாள் பியூஷ், மாணவ செயற்பாட்டாளர் வளர்மதி, இயக்குநர் வ.கெளதமன், ஆம் ஆத்மி கட்சித் தலைவர் வசீகரன், சி.பி.ஐ.(எம்) தோழர்கள், நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் என நேற்று வரை கைது செய்யப்பட்டோர் பட்டியல் நீள்கிறது. இதில் மக்கள் அதிகாரம் தோழர்கள்6பேர் மீது தேசப் பாதுகாப்பு சட்டம் போடப்பட்டது. சேலம் – சென்னை எட்டுவழிச் சாலைக்கு எதிராகப் பேசினாலே ’கைது’ என்ற அளவுக்கு கருத்துரிமையைப் பறிப்பதில் அரசு வெற்றி கண்டுள்ளது.\nவெறும் 105 எம்.எல்.ஏ. க்களை வைத்துள்ள பலவீனமான அரசு இம்மாநிலத்தில் இத்தனையையும் நிகழ்த்திக் கொண்டிருக்கிறது. 89 எம்.எல்.ஏ. க்களை வைத்துள்ள எதிர்க்கட்சியோ செயலற்று நிற்கிறது. அடையாளமாக சட்டசபை புறக்கணிப்பு, வெளிநடப்பு என்பதோடு நிறுத்திக்கொண்டது. அது மட்டுமல்ல. ”தமிழகத்தில் பயங்கரவாதிகள் பெருகிவிட்டனர்” என மத்திய அமைச்சர் பொன். இராதாகிருஷ்ணனின் கருத்தையே வழிமொழிந்தார் எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின். அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய இரு கட்சிகள் போக எஞ்சியிருப்பதில் ஒரு பிரிவினர் தேர்தலில் பங்குபெறும் பெரிய கட்சிகள். இக்கட்சிகளும் சூழலை முறியடிக்க முனைப்புடன் செயல்படவில்லை. தேர்தலில் பங்கு பெறாத இயக்கங்கள் அல்லது இன்னும் மைய நீரோட்டக் கட்சிகளாக மாறாதவைகள் மீதே அடக்குமுறை நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தி.மு.க., தவிர்த்தப் பிற பெரிய கட்சிகள் அடக்குமுறை எதிர்ப்புக்கு தலைமை கொடுத்து சூழலை எதிர்கொள்ள முன்வரவில்லை. சிறு இயக்கங்கள்( fringe elements) என்று சொல்லப்படும் அமைப்புகள் இப்படி அரசால் அடக்குமுறைக்கு உள்ளாக்கப்படுவதை அந்தப் பெரிய கட்சிகள் விரும்புகின்றனவோ என்ற ஐயம் எழுகின்றது. ’இயக்கங்களின் ஊடுருவல்’ என்று ஆளும்வர்க்கம் செய்துவரும் பரப்புரைக்கு இது வலுசேர்த்துக் கொண்டிருக்கிறது.\nஇந்நிலையில் அடக்குமுறையை எதிர்கொண்டு வரும் அமைப்புகள் செய்து வருவது என்ன? இந்த இரண்டரை மாத கால ’கைது, சிறை, பிணை’ படலத்தில் கடைசியாக தோழர் திருமுருகன் கைது செய்யப்பட்டுள்ளார். அறியப்பட்ட நபர்கள் கைது செய்யப்படும்போது அதை எதிர்த்துக் குரல் எழுப்புவதோடு நாம் கடந்துபோய் விடுகிறோம். சல்லிக்கட்டுப் போராட்டத்தின் முடிவில் நடத்தப்பட்ட அரச வன்முறை தொடங்கி தூத்துக்குடி அரச வன்முறை வரை பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்றைக்குவரை நீதி கிடைக்கவில்லை. இந்நிலையிலேயே, அரச அடக்குமுறைக்கான காரணங்களை, அதன் பொதுவான தன்மையை மக்களிடம் அம்பலப்படுத்த வேண்டியது இன்றியமையாததாகிறது.\nஐ.நா. மனித உரிமை மன்றத்தில் அல்ல தமிழ்நாட்டில் இருந்தபடி அயனாவரத்தில் துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்துப் பேசியிருந்தாலும் தூத்துக்குடி சென்று மக்களுக்கு ஆறுதல் கூற முயன்றிருந்தாலும்கூட கைது செய்யப்பட்டிருப்பார். இப்படியான கைதுகள் பலவற்றையும் இந்த இரண்டரை மாதத்தில் நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். மொத்தத்தில் அரசு இப்படி கைது செய்து சிறையிலடைக்கும் அணுகுமுறையை மேற்கொள்ள காரணம் என்ன? என்பதைத் தான் புரிந்துகொண்டு மக்களிடம் கொண்டு செல்ல வேண்டியுள்ளது.\nஅடக்குமுறையின் வடிவம் என்ன?\nதமிழ்நாட்டில் தேர்தல் அரசியலுக்கு வெளியே போராட்ட அரசியல் வளர்ந்து வருகிறது. பேரழிவுத் திட்டங்களுக்கு எதிராக சிறு நகரங்களிலும் கிராமங்களிலும் மக்கள் தன்னெழுச்சியாகப் போராடுகின்றனர். அதற்கு ஆதரவாக நகர்ப்புறம் சார்ந்த நடுத்தர வர்க்கப் பிரிவினர் போராட்டக் களத்தில் இணைந்துள்ளனர். இந்த கவனிக்கத்தக்க மாற்றம் அரசியல் களத்தில் ஏற்பட்டுள்ளது.\nஇப்படியானப் போராட்ட அரசியல் மக்கள் முகாமின் போராட்ட வலிமையாக அரசை அச்சுறுத்தும் அளவுக்கு வளர்த்துவிட்டதா? என்றால் அதுவும் உண்மை இல்லை. ஆனால், அரசின் மக்கள் விரோத திட்டங்களுக்கு எதிராக பொதுக்கருத்தை உருவாக்கும் அளவுக்கு இவ்வரசியல் வளர்ந்துள்ளது. அரசின் கொள்கைகளை வரவேற்றுக் கொண்டிருந்த மக்கள் அதை எதிர்த்து கேள்வி எழுப்புவதும், தடுத்து நிறுத்தப் போராடுவதுமான நிலைமை ஏற்பட்டுள்ளது. அரசின் பொருளியல் கொள்கை மற்றும் அதன் நடைமுறை பற்றி மக்களிடையே தனக்கு இருந்த கருத்தியல் மேலாண்மையை அரசு இழந்துள்ளது. இதை மீண்டும் பழையபடி சீர் செய்வதற்கு இத்தகைய ஓர் அடக்குமுறை அதற்கு தேவைப்படுகிறது. அடக்குமுறை வடிவம் எப்படி உள்ளது? ஆள் கடத்தல், இயக்கங்களுக்கு தடை, காணாமல் அடிக்கப்படுதல், அடித்து உதைத்து சித்திரவதை செய்தல், இயக்க அலுவலகங்களை முடக்கிப் பூட்டுதல், இயக்கங்களின் தலைவர்களைத் தேடித்தேடி கைதுச் செய்தல், ’ஜெலட்டின் குச்சிகள், வெடிகுண்டுகளோடு சிக்கினார்கள்’ என்று பரப்புரை மேற்கொள்ளுதல், சட்ட விரோத செயல்கள் தடுப்புச் சட்டத்தின்(UAPA) கீழ் பலரையும் கைது செய்தல், பல மாதங்களுக்குப் பிணை மறுத்து சிறையில் வைத்தல் போன்றவை எல்லாம் அடக்குமுறை வடிவங்கள் தான். அவையெல்லாம் இப்போதைக்கு நடக்கவில்லை. அடுத்தஅடுத்த சுற்றுப் போராட்ட வளர்ச்சியில் அடக்குமுறையின் தன்மையும் தீவிரம் பெற்றுவரும். இன்றைக்கு நடப்பது வேறு? அது என்ன?\nஅனுமதியின்றி நடத்தப்படும் ஒன்றுகூடல், சாலை மறியல், இரயில் மறியல், முற்றுகை ஆகிய போராட்டங்களுக்கு வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைப்பது. பொது சொத்துக்கு சேதம் இல்லாத போதும் சிறையிலடைப்பதை ஒரு வழக்கமாக கடைபிடிப்பது. எனவே, சிறை செல்லும் அளவுக்கு தத்துவார்த்த பலமும் அமைப்பு வலிமையும் ஒருங்கே வாய்க்கப் பெறாத இயக்கங்களை அனுமதியோடுதான் எதையும் செய்தாக வேண்டும் என்ற நிலைக்கு தள்ளுவது\nஅனுமதிகேட்டு காவல்துறையை அணுகினால் அனுமதி மறுப்பது. இவ்விடத்தில் அனுமதி பெறுவதற்காக எல்லா அமைப்புகளும் நீதிமன்றம் செல்ல இயலாது. பெரிய கட்சிகள் மற்றும் சிற்சில இயக்கங்கள்தான் அடுத்தக்கட்டமாக நீதிமன்றம் சென்று அனுமதி பெற முடியும்.அதற்கான வழக்கறிஞர் மற்றும் பொருளாதார துணை வேண்டுமாகையால். சிறு இயக்கங்கள் பெருமளவு வடிகட்டப்பட்டு விடும்.\nமுகநூல் பதிவுகள், தொலைக்காட்சிப் பேட்டிகள், மக்களை நேரடியாக சந்திப்பது, துண்டறிக்கை விநியோகம் செய்வது என எல்லாவகை மக்கள் தொடர்பு வழிகளையும் சட்ட விரோதம் என்று சொல்லி மக்களிடம் இருந்து இயக்கங்களைத் தனிமைப்படுத்துவது.\nஇதில் கைது செய்யப்படுபவர்கள் எல்லோருக்கும் அதிகபட்சம் ஒரு மாதத்திற்குள் பிணை கிடைத்துவிடுகிறது. உயர்நீதிமன்றத்தில் பிணை மறுக்கப்பட்டு உச்சநீதிமன்றம் வரை செல்லும் தேவை யாருக்கும் எழவில்லை. எனவே, நீண்ட நாளைக்கு சிறையில் அடைப்பது என்பதைவிட ஒரு சில நாட்கள் சிறையில் அடைப்பதால் ஒருவித அச்சவுணர்வை ஏற்படுத்தி புதிதாக அரசியலுக்கு வந்துள்ளவர்களை மீண்டும் பழைய இடத்திற்கு நகரச் செய்வது. மக்களை ஆதரவற்றவர்களாகக் களத்தில் நிறுத்துவது.\nஇதுதான் இப்போது அரசு எடுத்திருக்கும் அடக்குமுறை வடிவமாகும். அரசு என்னும் இரக்கமற்ற அடக்குமுறை எந்திரந்தின் கோர வடிவத்தின் நிழல் போன்றதுதான் இது. வளர்ச்சித் திட்டங்களுக்கு எதிராக கருத்தை உருவாக்க கூடிய இயக்க ஆற்றல்களுக்கு வாய்ப்பூட்டுப் போடுவது, மக்களிடம் இருந்து தனிமைப்படுத்துவது, எதிர்ப்பு வளர்ந்துவிடாமல் முளையிலேயே கிள்ளும் அணுகுமுறையாக இதை கையில் எடுத்துள்ளது. அதன் ஒரு பகுதிதான், இந்த இரண்டரை மாதங்களில் பல ஆற்றல்மிகு தனிநபர் செயற்பாட்டாளர்களும் இயக்கத் தலைமைகளும் கைது செய்யப்பட்டதாகும்.\nசேலம் – சென்னை எட்டுவழிச் சாலையின் அவசியம், ஸ்டெர்லைட்டின் தேவைப் பற்றி தங்கு தடையின்றி மக்களிடம் கருத்துகளை எடுத்துச் செல்லுதல், வளர்ச்சித் திட்டங்கள் இல்லாமல் தமிழ்நாடு சுடுகாடு ஆகிவிடும் என்று மிரட்டுதல் போன்ற பரப்புரைகள் வேகமாக நடந்துவருகிறது. இன்னொரு பக்கம் இதை கேள்விக்குள்ளாக்குவோரின் வாயை அடைத்துள்ளது அரசு. இதன்மூலம் உலகமய, தாராளமய, தனியார்மயப் பொருளியல் கொள்கைகள் குறித்து அரசு மக்களிடம் செலுத்தி வந்த செல்வாக்கை மீள்கட்டமைப்பதாகும்.\nஇந்நேரத்தில் நாம் செய்ய வேண்டியவை குறித்த சில முன்வைப்புகள்.\nதுண்டுதுண்டாக பேரழிவுத் திட்டங்களை எதிர்த்து வந்த கடந்தகால செயல்பாட்டு முறைக்கு மாறாக அரசின் வளர்ச்சிக் கொள்கையின் கார்ப்பரேட் சார்பு பற்றிய உரையாடலை நடத்தும் வழிவகைகளைக் கண்டறிய வேண்டியுள்ளது. கூடவே, அரசின் வர்க்க சார்பு, அடக்குமுறை தன்மை ஆகியவற்றை மக்களிடம் அம்பலப்படுத்தி இந்த அரசு, அரசமைப்பு குறித்து இருக்கும் நம்பிக்கைகளை கேள்விக்குள்ளாக்க வேண்டும்.\nஇந்த அடக்குமுறைக் கட்டத்தின் முதல் இலக்கு புதிதாக அரசியல் களத்திற்கு வந்துள்ள நடுத்தர வர்க்க இளைஞர்களை மிரட்டி உருட்டி ‘தன் பெண்டு, தன் பிள்ளை , தன் குடும்பம்” என வாழும்படி வீட்டுக்குள் முடக்குவதாகும். எனவே, ஏற்கெனவே அமைப்புகளை நோக்கி வந்தவர்களை மேலும் அரசியல்படுத்தி இந்த நிலைமையை எதிர்கொள்வதற்கு களத்தில் நிற்க வேண்டும். தமிழ்நாடு தன்னுடைய சொந்த போராட்ட வரலாற்றில் இதைவிட பெரிய அடக்குமுறைகளை எதிர்கொண்டுள்ளது. ஆண்டுக்கணக்கில் சிறையில் அடைக்கப்பட்டாலும் அசராமல் போராட்டக் களத்தில் ’நாட்-அவுட்’ பேட்ஸ்மேனாக இருக்கும் முன்னோடித் தலைவர்கள் பலர் உண்டு. தோழர்கள் நல்லக்கண்ணு, தியாகு, கொளத்தூர் மணி, கோவை இராமகிருஷ்ணன், பொழிலன், பாலன் உள்ளிட்டப் பலர் இன்றும் காலூன்றி களத்தில் நிற்பதுவே நமக்குள்ள முன்மாதிரிகளாகும்.இப்படி உறுதிகுன்றாமல் நிற்பதற்கு தத்துவமே அடிப்படையாகும். தத்துவத்தில் ஊன்றி நின்று அதன் துணையுடன் வரலாற்றின் மீதும் மக்கள் மீதும் நம்பிக்கை ஏற்பட்டுவிட்டால் சூறைக் காற்றாலும் பெரும்புயலாலும்கூட ஒருவரை அசைத்துவிட முடியாது.! 300 நாட்களுக்கு மேலாக சிறையில் அடைக்கப்பட்ட தோழர் முகிலன், தனக்கு கிடைத்த சில மணித்துளி இடைவெளியில் அடக்குமுறைக்கு எதிராக ஊடகத்தில் முழங்கவில்லையா? சிறை அவர் போர்க்குணத்தை சின்னாபின்னமாக்கிவிட்டதா என்ன? இந்த தருணத்தில் நமக்கு எடுத்துக்காட்டாக அருந்தியாகத்திற்கு சொந்தக்காரரான தோழர் முகிலன் மதுரை சிறையில் இருந்து கொண்டுதானே உள்ளார். .\nகாவி-கார்ப்பரேட் சர்வாதிகார ஆட்சியின் அடக்குமுறைக்கு எதிரான பரந்த ஐக்கியத்தைக் கட்டமைக்க வேண்டிய தேவையுள்ளது.தனியொரு இயக்கத்தின் மீதான அடக்குமுறையாக ஆளும்வர்க்கம் இதை தொடுக்கவில்லை. எனவே,தனியொரு இயக்கமாக இதை எதிர்கொண்டு முன்னகர முடியாது. கூட்டாய் நின்றுதான் இதை சந்திக்க முடியும். அடக்குமுறைக்கு எதிராக ஒன்றுபட்ட செயல்பாடுகளுக்காக முன்னெடுக்கப்பட்ட ஆலோசனைக் கூட்டங்களில்கூட இயக்கங்களின் பங்கேற்பு ஊக்கமுடன் இல்லை. இக்காலப்பகுதியில் எடுக்கப்பட்ட ஓரிரு முயற்சிகளும் குறிப்பிடத்தகுந்த செயல்வடிவம் பெறவில்லை. இதற்கு மாறாக ஒன்றுபட்ட முயற்சிகள் குறித்து சிந்தித்து செயல்பட வேண்டியுள்ளது.\nஸ்டெர்லைட் ஆலை மூடல்கூட அரசின் நாடகம்தான். வேதாந்தா குழுமம் ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவாக தனது பரப்புரை எந்திரத்தை கட்டவிழ்த்துள்ளது. வேதாந்தா குழுமத்தின் இலாப வெறிக்கு ஸ்டெர்லைட் ஆலைத் திறப்பது சமரசம் செய்ய முடியாத ஒன்றாக இருக்கிறது. மக்களைப் பொருத்தவரை ஸ்டெர்லைட் ஆலை மூட வேண்டியது வாழ்வா? சாவா? பிரச்சனையாகும். இன்னொரு சுற்றுப் போராட்டம் காத்திருக்கிறது. இத்தனை அடக்குமுறைக்குப் பிறகும் தூத்துக்குடி மக்கள் துணிவுடன் எதிர்கொள்வர் என்பதில் ஐயமில்லை. அந்நேரத்தில் ஸ்டெர்லைட் ஆலை மூடக் கோரி தமிழகம் தழுவிய அளவில் ஆதரவைக் கட்டியெழுப்ப வேண்டிய கடமை நம்முன் இருக்கிறது.\nஎனவே, கருத்துரிமை, பேச்சுரிமை, எழுத்துரிமை, மக்களை சந்திக்கும் உரிமை, பரப்புரை செய்யும் உரிமை, போராடும் உரிமை, போராட்டங்களுக்கு மக்களை அணி திரட்டும் உரிமை, மக்கள் ஓரிடத்தில் ஒன்றுகூடும் உரிமை ஆகிய அடிப்படை உரிமைகளை, அரசமைப்பு சட்ட உரிமைகளை கேள்விக்கு உள்ளாக்கி இருக்கும் இந்த அடக்குமுறைக்கு எதிராய் ஒன்றுபட்டு நிற்போம்! அரசு குறித்த அனைத்தளாவிய உண்மைகளைக் இந்த குறிப்பான தருணத்தின் வழியாக விளக்கிடுவோம்! கருத்தியல் மேலாண்மையைத் தக்கவைத்து போராட்ட வலிமைக்கான சமூக அடித்தளத்தை வளர்க்கத் திட்டமிடுவோம்!\nஅடக்குமுறை செய்திட முடியும் – கொள்கை\nஅழிக்குமுறை எவ்வாறு முடியும்?\nஒடுக்கு சிறை காட்டுதல் முடியும் – உணர்\nவொடுக்குதல் எவ்வாறு முடியும்?\n– புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்\nகொரோனா தொடர்பான அன்றாட அறிக்கைகளைத் தமிழில் தர இயலாதா?\nadmin 12 Apr 2020\nகார்ப்பரேட் இந்தியா Vs புலம்பெயர் தொழிலாளர்களின் இந்தியா…….. கொரோனா தடுப்பில் மோடி யாருக்கு பிரதமர்?\nadmin 01 Apr 2020\nஎன்ன தப்பு செஞ்சேன்\nபத்திரிக்கை செய்தி – சென்னைக்குள்ளே அத்திப்பட்டு ?\nadmin 03 May 2019\nநக்சல்பாரி புரட்சியாளர் தோழர் சிவி ரங்கநாதன் அவர்களுக்கு எமது செவ்வணக்கம்!\nஓயாத இமாலய சாகசம் – இந்திய சீன எல்லையில் போர் பதட்டத்திற்கான காரணமும் போக்கும்\nadmin 18 Sep 2020\nமே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் கைதுக்கு தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் மீ.த.பாண்டியன் கண்டனம்!\nadmin 10 Aug 2018
சிவத்தமிழோன்: திருநீறு அணியும் இலக்கணம்\nHome ஆறுமுகநாவலர் திருநீறு அணியும் இலக்கணம்\n6 comments: on "திருநீறு அணியும் இலக்கணம்"\nபடித்தவுடன் புரிந்தது திருநீரின் அருமை.\nமேலும் பல இடுகைகள் இடுங்கள்.தொடரந்து படிக்க காத்திருக்கிறேன்.\nநன்றி தங்களின் பின்னூட்டத்திற்கு. சிவனருள் எழுதத் தூண்டவும் எழுதச் சூழல் ஊட்டவும் துணை நிற்கட்டும்.\nஎன்றிர்கள், இன்னுமொரு கட்டுரையில் கோயிலில் ஆசாரியர்களை விழுந்து வணங்க கூடாது என்று படித்தேன். கோயிலில் ஆசாரியார் திருநீறு தரும் போது விழுந்து வணங்கி பெறுவதா அல்லது அது தவறானதா?\nதிருக்கோயிலில் இறைவனைத் தவிர பிறரை வணங்குதல்,துதிசெய்தல்,முகஸ்துதி பாடல் தவறு. அந்தணரின் காலில் வீழ்ந்து வணங்குதல் கூட தவறே ஆகும்.எக்காரணம் கொண்டும் இறைவனைத் தவிர ஏனையோரை வீழ்ந்து வணங்குதல் கூடாது. அது அந்தணருக்கும் பாவத்தை ஊட்டும் செயலாகும். "நான்"என்னும் அகந்தையை அறிந்தோ அறியாதோ அவருள் ஊட்டிவிடும் பாவத்தை செய்தவராவோம்.\nதிருநீறை வாங்கும்போது இறைவனை வீழ்ந்து வணங்கி கும்பிட்டு வாங்குதல் வேண்டும்.ஆலயம் தவிர்ந்த ஏனைய ஆதீனங்கள் போன்றவற்றில் ஆதீன முதல்வரை வீழ்ந்து வணங்கி வாங்க வேண்டியது முறை. அங்கு அவர் சிவவடிவமே! அந்தணர் சிவயோகிகள் சிவனடியார்களையும் ஆலயம் தவிர்ந்த ஏனைய சூழலில் வீழ்ந்து வணங்கி பெற்றுக் கொள்வது அழகாகும். திருநீறை பயபக்தியுடன் அணிவதே முதன்மையானது.\nஆறுமுகநாவலரின் திருநீற்று இயலில் திருக்கோயில் தவிர்ந்த ஏனைய இடங்களில் பொதுவாக திருநீறை சிவனடியாரோ அல்லது குருவோ அல்லது சைவாச்சாரியார்களோ தரும்போது( சமய வைபவங்கள், ஆதீன நிகழ்வுகள், வீட்டு சமய வைபவங்கள் போன்ற சந்தர்பங்களில்) எப்படிப் பெற்றுக் கொள்ளவேண்டும் என்பதையே சுட்டுகின்றது.\nஆறுமுகநாவலர் வேதங்கள்,சிவாகமங்கள்,சைவ சித்தாந்த சாத்திரங்கள்,திருமுறைகள் என யாவும் கற்றுணர்ந்த சீரிய சிவனடியார். நாயன்மார் வரிசையில் வைத்துப் போற்றத்தக்க பேறு பெற்றவர். சைவ ஆகமங்களின் விதிப்படி சிவாலயங்களில் இறைவனைத் தவிர வேறு யார் காலிலும் விழுந்து வணங்குதலோ அல்லது யாரேனுக்கும் துதிபாடுவதோ தவறு எனப்பட்டிருக்கையில், நாவலர் பெருமான் சைவ வினாவிடையில் "ஆலயம் தவிர்ந்த ஏனைய இடங்களில்" திருநீறு பெற்றுக் கொள்ளும்போது எங்கனம் பெறவேண்டும் என்பதையே சுட்டுகின்றது என்பதை உய்த்துணரலாம்.\nஆர்வமான தங்கள் கேள்விக்கு நன்றி. மேன்மைகொண்ட எமது சைவநெறியை நெறிபிறழாது ஒழுகி மேன்மை பெறுவோமாக.\nதிருநீறு பற்றிய அழகான தெளிவாக புரிகிறது.வாழ்த்துக்கள். உங்களுக்கு சிவனருள் உண்டாகட்டும்.வாழ்த்துக்கள்\nஉங்கள் திருநீறு பற்றிய இடுகை பயனுள்ளதாக இருந்தது. உங்களுக்கு சிவனருள் கிட்டட்டும்
« புதிய தீர்மானத்திற்கு இணை அனுசரணை வழங்க இலங்கை மறுப்பு!\nஜெர்மனி பிராங்க்போட் விமான நிலையத்தில் மர்ம பெட்டியை வைத்துவிட்டு தப்பிச்செல்ல முயன்ற நபர் கைது »\nJanuary 17th, 2021 | Author: முழக்கன்\nஇத்தாலி நாட்டின் தலைநகர் ரோம் அருகே உள்ள லனுவியோ என்ற நகரில் வில்லா டெய் டைமெண்டி என்ற முதியோர் இல்லம் உள்ளது. இங்கு 10-க்கும் அதிகமான முதியோர்களும் அவர்களுக்கு உதவியாக மருத்துவ ஊழியர்களும் செயல்பட்டு வந்தனர்.\nஇந்நிலையில், அந்த முதியோர் இல்லத்தில் நேற்று அதிகாலை திடீரென கார்பன் மோனாக்சைடு என்ற விஷவாயு கசிவு ஏற்பட்டுள்ளது. முதியோர் இல்லத்தில் அனைவரும் உறங்கிகொண்டிருந்தபோது இந்த வாயுவை சுவாசித்ததால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு சுயநினைவை இழந்தனர்.\nமுதியோர் இல்லத்திற்கு காலை வேலைக்கு வந்த ஊழியர் சக ஊழியர்கள் மற்றும் தங்கியிருந்தோர் மயங்கி கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.\nஉடனடியாக, அவர் மீட்பு குழுவினர்களுக்கு தகவல் தெரிவித்தார். அந்த தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்புக்குழுவினர் மயங்கிக்கிடைந்த அனைவரையும் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர்.\nமயங்கி இருந்தவர்களை பரிசோதனை செய்த மருத்துவர்கள் விஷவாயு தாக்கியதில் முதியோர் இல்லத்த்ல் இருந்த5பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக அறிவித்தனர்.7பேர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nஇந்த சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக இத்தாலி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
பேய்க்கும், எலுமிச்சைக்கும் என்ன தொடர்பு?... பேய் பிடிக்காமல் இருக்க எலுமிச்சையா? கட்டாயம் படியுங்கள் !! - Online90Media\nApril 7, 2021 Online90LeaveaComment on பேய்க்கும், எலுமிச்சைக்கும் என்ன தொடர்பு?… பேய் பிடிக்காமல் இருக்க எலுமிச்சையா? கட்டாயம் படியுங்கள் !!\nபேய் பிடிக்காமல் இருக்க ……\nமாந்திரீக தந்திரங்களில் கெட்ட ஆவிகளை வி ர ட்டும் விஷயத்தில் எலுமிச்சை பழம் மட்டும் ஏன் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் நினைப்பது போல் எலுமிச்சையும் ஆவிகளும் சொந்தக்காரர்கள் கிடையாது. பரம எதிரிகள். ஆவிகளுக்கு எவ்வளவு சக்தி இருந்தாலும் நம் அம்மா சுத்திப்போடும் ஒரு எலுமிச்சை பழத்தை மீறி எந்த ஆவியாலும் நம்மை எதுவும் செய்துவிட முடியாது.\nஎலுமிச்சை தீயஆவிகளை நீக்கும் தந்திரத்தில் பயன்படுகிறது. தீயஆவிகளை அகற்ற எலுமிச்சையானது திரி சூலம், மூர்த்திகள், யாக குண்டம் மற்றும் கதவின் இரு புறங்களிலும் வைக்கப்படுகிறது. கண் திருஷ்டியை நீக்கி பாதுகாப்பை அளிக்க இது இந்தியாவில் மிளகாயுடன் சேர்த்து பயன்படுத்தப்படுகிறது. மேலும் இதனை நோய்வாய்பட்ட மக்களின் அருகில் தொங்கவிடும் போது, இது தீயஆவிகளை வி ர ட்டி அவர்களை நோய்களிலிருந்து குணமடைய செய்யும் என்று நம்பப்படுகிறது.\nதுர்கா பூஜையின் போது எலுமிச்சை விளக்குகள் பயன்படுத்தப்படுகின்றன. எலுமிச்சை தோல் மெல்லியதாக இருக்க வேண்டும். (ஒற்றை எண்களில், அதிகபட்சம் 9) அதனை நெகிழ்வாக உருட்டிக் கொள்ள வேண்டும். அதனை செங்குத்தாக சரிபாதியாக வெ ட் டி கொள்ளவேண்டும், கிடைமட்டமாக வெ ட் டக்கூடாது. சாற்றினைப் பிழிந்து வெளியேற்ற வேண்டும். பின் அந்த பாதி எலுமிச்சையை உள்புறம் வெளியே வருமாறு திருப்பி, ஒரு கிண்ணம் போல் செய்து கொள்ள வேண்டும். பின் அதனை எண்ணெய் அல்லது நெய் கொண்டு நிரப்பி திரியிட்டு விளக்கேற்ற வேண்டும்.!\nஎலுமிச்சை விளக்கின் முக்கியத்துவம்.\nஎலுமிச்சை நம்மை ஒத்ததாகும். மேலும் நாம் நமது உட்பகுதியை கடவுளுக்கு காட்ட வேண்டும். மாயை, பேராசை, காமம் மற்றும் கோ ப ம் ஆகியவற்றை கடவுளுக்கு முன்பாக வெளியே ஏறிய வேண்டும். எலுமிச்சைக்கு உள்ளே இருக்கும் வெள்ளை தோல் நமது தூய மனதையும், இருண்ட பகுதி (மறைந்திருக்கும் பச்சை விதைகள்) மாயையையும் குறிக்கும்.\nபேயை வி ர ட் டும்\nஆவிகளை வி ர ட்டும் மாந்திரிகத்தில் சிவனின் வடிவமாக எலுமிச்சையையும் அதில் மஞ்சள் மற்றும் குங்குமத்தை சக்தியின் வடிவமாகவும் கருதப்படுகிறது. அதனால் தான் நாம் எங்காவது வெளியில் சென்றாலோ வேறு ஏதேனும் பயணம் மேற்கொண்டாலோ அம்மா நம்முடைய பையில் ஒரு எலுமிச்சை பழத்தைப் போட்டு அனுப்புகிறார்கள்.\nஅதோடு, வெள்ளி, அமாவாசை, பௌர்ணமி நாட்களிலும், ஏதேனும் நல்ல காரியத்திற்கு வண்டியில் செல்லும்போது நமக்கும் வண்டிக்கும் சேர்த்து எலுமிச்சையை சுற்றி நான்கு திசைகளிலும் வீசுகிறார்கள். நான்கு திசைகளில் இருந்தும் எந்த கெட்ட சக்தியும் நெருங்கிவிடக் கூடாது என்பதற்காகத் தான் நான்கு மூலையிலும் வீசுகிறார்கள்.
பெரிய மீனுக்கு ஆசைப்பட்டு பெருமையிழந்த நயன்தாராவின் காதலர்! - Cinemapettai\nபெரிய மீனுக்கு ஆசைப்பட்டு பெருமையிழந்த நயன்தாராவின் காதலர்!\nஒருவழியாக சூர்யாவின் காம்பவுன்டுக்குள் கமுக்கமாக செட்டில் ஆகிவிட்டார் விக்னேஷ் சிவன். இந்த இடத்தை பிடிக்க அவர் பட்ட பாடு… ஹப்பப்பாவ்…! ஆனால் ‘நானும் ரவுடிதான்’+படம் வந்த சில நாட்களுக்குள்ளேயே ஒரு நல்ல முன் பணம் கொடுத்து தனது கம்பெனிக்கு படம் செய்து தர அழைத்தவர் ஏ.எம்.ரத்னம். விஜய் சேதுபதி நயன்தாரா மீண்டும் ஜோடியாக நடிக்க, விக்னேஷ் சிவன் இயக்குவதாக ஏற்பாடு.\nஎன்ன காரணத்தாலோ அந்த படத்தை பற்றிய அக்கறையே இல்லாமலிருந்த விக்னேஷ்சிவன், சூர்யா வீட்டுக்கு நடையாய் நடந்து அவரை கரைத்துவிட்டார். இத்தனைக்கும் அவர் இயக்கப் போவது ஒரு ரீமேக் படம் என்கிறது தகவல்கள். இந்த நிலையில்தான், விக்னேஷ்சிவன், சூர்யா கூட்டணியை கண்டு அப்செட் ஆகியிருக்கிறார்கள் விஜய் சேதுபதியும் ஏ.எம்.ரத்னமும். வேறொரு தயாரிப்பாளராக இருந்திருந்தால், சிவகார்த்திகேயனை அழ விட்ட மாதிரி விக்னேஷ் சிவனை அழ விட்டிருப்பார்கள். ஆனால் ரத்னம், ஒரிஜனல் ரத்னமாச்சே!\nஅமைதியாக விட்டுவிட்டார். அதே விஜய் சேதுபதி கொடுத்த தேதியில் அதே நயன்தாரா ஜோடியாக நடிக்க, ரேணி குண்டா பன்னீர் செல்வம் இயக்கப் போகிறாராம். ஏ.எம்.ரத்னத்திற்கு அல்வா கொடுத்துவிட்டுதான் விக்னேஷ் சிவன் நம்ம காம்பவுன்டில் ஒதுங்கியிருக்கிறார் என்ற தகவலே, சற்று தாமதமாகதான் தெரிய வந்ததாம் சூர்யாவுக்கு.\nவிஷயத்தை பெருசு பண்ணாமல் விட்ட ரத்னம் பெரிய மனுஷனா? ‘அவரு வரலேன்னா பரவால்ல சார். நீங்க சொல்ற டைரக்டருக்கு நடிச்சுத் தர்றேன்’ என்று இறங்கி வந்த விஜய் சேதுபதி பெரிய மனுஷனா? நெகிழ வைக்கிறாங்களேப்பா…
மூன்று பாகமாக உருவாகிறதா `தல 57'? - Cinemapettai\nமூன்று பாகமாக உருவாகிறதா `தல 57′?\n`சிறுத்தை’ சிவா இயக்கத்தில் அஜித் – காஜல் அகர்வால் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம் `தல 57′. நாளுக்கு நாள் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாய் தயாரித்து வரும் `தல 57′ படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்கப்படாத நிலையில் படத்தின் பெயர் குறித்து வதந்திகள் பரவி வருகிறது. இந்நிலையில், `தல 57′ படம் குறித்த முக்கிய அறிவிப்பு ஒன்று நாளை வெளியிடப்படும் என்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.\nஇந்நிலையில், இப்படத்தை3பாகங்களாக எடுக்க படக்குழு முடிவு செய்துள்ளதாக புதிய தகவல் பரவி வருகிறது. இப்படத்தில் அஜித், ஜேம்ஸ் பாண்ட் போல அரசு உளவாளியாக நடித்து வருவதாகவும், 2வது, 3வது பாகங்களுக்குமான கதையையும் ஏற்கனவே உருவாக்கிவிட்டதாவும் கூறப்படுகிறது.\nஇப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் அக்‌ஷரா ஹாசன், பாலிவுட் பிரபலம் விவேக் ஓபராய் உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். அனிருத் இசையமைத்து வருகிறார்.\nரம்ஜான் வெளியீடாக ஜுன் 23-ம் தேதி `தல 57′ படம் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆர்.ஜே. பாலாஜி அடுத்த படம் யாருடன்.. மேடையிலேயே அறிவித்தார் - Cinemapettai\nஆர்.ஜே. பாலாஜி அடுத்த படம் யாருடன்.. மேடையிலேயே அறிவித்தார்\nரேடியோவில் தொடங்கிய பாலாஜி வாழ்க்கை பின்பு ஆர்.ஜே. பாலாஜி ஆக மாறினார். வேகமாக பேசும் ஆர்.ஜே. பாலாஜி காமெடிக்கு பல ரசிகர்கள் இருக்கிறார்கள்.\nஆர்.ஜே. பாலாஜி அடுத்த படம் யாருடன்\nரேடியோவில் தொடங்கிய பாலாஜி வாழ்க்கை பின்பு ஆர்.ஜே. பாலாஜி ஆக மாறினார். வேகமாக பேசும் ஆர்.ஜே. பாலாஜி காமெடிக்கு பல ரசிகர்கள் இருக்கிறார்கள். ரேடியோவை விட்டு சினிமாவில் ஏற்றுக் கொள்வார்களா என்று பார்த்தால் கண்டிப்பாக திறமை இருந்தால் ஏற்றுக் கொள்வார்கள் என்று நிரூபித்து விட்டார்.\nஎல்லாம் விஜய் டிவி, சன் டிவி என தொலைக்காட்சிகளில் புகழ்பெற்று பின்பு நடிகராக மாறினார்கள். ஆனால் ஆர்.ஜே. பாலாஜி ரேடியோவில் புகழ்பெற்று இப்ப்ழுது சினிமாவில் கல்லா கட்டி. இன்னும் இரண்டு ஹிட் படங்களை கொடுத்தார் சிவகார்த்திகேயன் இடத்திற்கும் போகலாம்.\nஎல்கேஜி படத்தின் ட்ரைலர் வெளிவந்த பின் அவருக்கு நான்கைந்து பட தயாரிப்பாளர்கள் அழைத்து பேசியுள்ளார்கள். ஆனால் அவர் அதற்கெல்லாம் இடம் கொடுக்காமல் படம் வெளிவரட்டும் என பொறுமையாக இருந்தார். இப்பொழுது படம் வெளிவந்த பின் படம் வெற்றி பெற்றது.\nஎல்கேஜி படத்தின் வெற்றி விழாவில் பேசிய ஆர்.ஜே. பாலாஜி “என்னுடைய அடுத்த படம் கண்டிப்பாக ஐசரி கணேஷ் ஒத்துக்கொண்டால் அவருடன் மட்டும்தான் பண்ணுவேன். இனிவரும் படங்களையும் அவருடன் விவாதித்து பின்புதான் நான் முடிவெடுப்பேன் என்று கூறியிருக்கிறார்.\nஆமாம் ரேடியோவில் இருந்தது, சினிமாவில் காமெடியாக சுற்றி வந்த ஆர்.ஜே. பாலாஜியை ஒரு கதாநாயகனாக மாற்றியவர் ஐசரி கணேஷ். இவர் வேல்ஸ் நிறுவனத்தின் சேர்மன் ஆவார்.\nRelated Topics:LKG, ஆர்.ஜே. பாலாஜி, எல்கேஜி
Misbah-ul-Haq appointed as head coach of Pakistan cricket team || பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக மிஸ்பா உல்-ஹக் நியமனம்\nபாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக மிஸ்பா உல்-ஹக் நியமனம் + "||" + Misbah-ul-Haq appointed as head coach of Pakistan cricket team\nபாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக மிஸ்பா உல்-ஹக் நியமனம்\nபாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராகவும், தேர்வு குழு தலைவராகவும் முன்னாள் கேப்டன் மிஸ்பா உல்-ஹக் நியமிக்கப்பட்டுள்ளார்.\nபதிவு: செப்டம்பர் 05, 2019 05:56 AM\nஇங்கிலாந்தில் நடந்த உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி லீக் சுற்றுடன் வெளியேறியதைத் தொடர்ந்து அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் மிக்கி ஆர்தரின் ஒப்பந்தம் நீட்டிக்கப்படவில்லை.\nஇதையடுத்து புதிய பயிற்சியாளரை தேர்வு செய்ய5பேர் கொண்ட கமிட்டியை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நியமித்தது. இந்த கமிட்டி, பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்த ஆஸ்திரேலியாவின் டீன் ஜோன்ஸ், பாகிஸ்தானின் மொசின் கான் உள்ளிட்டோரிடம் நேர்காணல் நடத்தியது. இதில் கடைசி நேரத்தில் விண்ணப்பித்த பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் மிஸ்பா உல்-ஹக்குக்கு அதிர்ஷ்டம் அடித்துள்ளது. எதிர்பார்த்தது போலவே அவரே பாகிஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டு இருப்பதாக நேற்று அறிவிக்கப்பட்டது.\nபாகிஸ்தானின் 30-வது தலைமை பயிற்சியாளராக மிஸ்பா இருப்பார். அத்துடன் தேர்வு குழு தலைவர் பொறுப்பும் அவரிடம் வழங்கப்பட்டுள்ளது. பயிற்சியாளரே தேர்வு குழு தலைவராகவும் இருக்கும் நடைமுறை பாகிஸ்தான் கிரிக்கெட்டில் பின்பற்றப்படுவது இதுவே முதல் முறையாகும். இதன் மூலம் பாகிஸ்தான் கிரிக்கெட்டில் அதிகாரமிக்கவராக மிஸ்பா உல்-ஹக் இருப்பார். அவரது பதவி காலம்3ஆண்டுகள் ஆகும்.\nஇதே போல் மிஸ்பா உல்-ஹக்கின் பரிந்துரைப்படி பந்து வீச்சு ஜாம்பவான் வக்கார் யூனிஸ், பாகிஸ்தான் அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டு இருக்கிறார். மிஸ்பா உல்-ஹக் பாகிஸ்தான் அணியின் கேப்டனாக இருந்த போது, வக்கார் யூனிஸ் தலைமை பயிற்சியாளராக பணியாற்றியது நினைவு கூரத்தக்கது.\nபாகிஸ்தான் கிரிக்கெட் அணி சொந்த மண்ணில் இலங்கை அணியுடன்3ஒரு நாள் போட்டி மற்றும் மூன்று இருபது ஓவர் போட்டிகளில் (செப்டம்பர் 27 முதல் அக்டோபர் 9-ந்தேதி வரை) விளையாடுகிறது. இதில் இருந்து மிஸ்பா உல்-ஹக்கின் பயிற்சியாளர் பணி தொடங்கும். அதன் பிறகு பாகிஸ்தான் அணி நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு சென்று டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ளது.\n45 வயதான மிஸ்பா உல்-ஹக், பாகிஸ்தான் அணியின் வெற்றிகரமான டெஸ்ட் கேப்டன் என்ற பெருமைக்குரியவர் ஆவார். அவரது தலைமையில் அந்த அணி 56 டெஸ்டுகளில் விளையாடி 26-ல் வெற்றியும், 11-ல் டிராவும், 19-ல் தோல்வியும் கண்டுள்ளது. அவர் 75 டெஸ்ட் போட்டிகளிலும், 162 ஒரு நாள் போட்டிகளிலும், 20 ஓவர் கிரிக்கெட்டில் 39 ஆட்டங்களிலும் பாகிஸ்தான் அணிக்காக விளையாடி இருக் கிறார். 2017-ம் ஆண்டு கிரிக்கெட்டில் இருந்து விடைபெற்ற மிஸ்பா உல்-ஹக், கிரிக்கெட்டில் தனது 2-வது இன்னிங்சை தொடங்க இருக்கிறார்.\nமிஸ்பா உல்-ஹக் கூறுகையில், ‘பயிற்சியாளர் மீது எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கும் என்பதை அறிவேன். பாகிஸ்தான் கிரிக்கெட்டில் மிகவும் சவால் மிக்கதும், அதிகமானோர் விரும்பக்கூடியதுமான இந்த பொறுப்பை ஏற்க நான் தயாராக இருக்கிறேன். எங்களிடம் மிகவும் திறமையான சில வீரர்கள் இருக்கிறார்கள். சாதிக்கதுடிக்கும் இளம் வீரர்களும் இருக்கிறார்கள். அவர்களை சாதுர்யமான, அச்சமின்றி விளையாடக்கூடிய வீரர்களாக உருவாக்குவதற்கு எனது பயிற்சி மற்றும் ஆலோசனை மூலம் உதவுவேன்’ என்று குறிப்பிட்டார்.\nஐ.சி.சி. தரவரிசையில் பாகிஸ்தான் அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் 7-வது இடத்திலும், ஒரு நாள் போட்டியில் 6-வது இடத்திலும், 20 ஓவர் கிரிக்கெட்டில் முதலிடத்திலும் இருப்பது குறிப்பிடத்தக்கது.\n1. பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தேர்வு குழு தலைவர் பதவியில் இருந்து இன்ஜமாம் விலகல்\n2. இந்தியாவிடம் தோல்வி : பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு தடை விதிக்கக்கோரி ரசிகர் வழக்கு\nஇந்தியாவிடம் தோற்ற பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு எதிராக அந்நாட்டு நீதிமன்றத்தில் ரசிகர் ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.
பேரணி, பொதுக்கூட்டம் நடத்த அமித் ஷா, ஆசம் கானுக்கு தடை | பேரணி, பொதுக்கூட்டம் நடத்த அமித் ஷா, ஆசம் கானுக்கு தடை - hindutamil.in\nLast Updated : 11 Apr, 2014 10:06 PM\nPublished : 11 Apr 2014 10:06 PM\nLast Updated : 11 Apr 2014 10:06 PM\nபேரணி, பொதுக்கூட்டம் நடத்த அமித் ஷா, ஆசம் கானுக்கு தடை\nபாஜக தலைவரும், நரேந்திர மோடிக்கு நெருக்கமானவருமான அமித் ஷா, சமாஜ்வாதி தலைவரும், உத்தரப் பிரதேச அமைச்சருமான ஆசம் கான் ஆகியோர் உத்தரப் பிரதேசத்தில் பிரச்சாரம் செய்யவும், பொதுக் கூட்டம் நடத்தவும் தேர்தல் ஆணையம் நேற்று தடை விதித்தது.\nபிரசாரத்தின்போது வன்முறை, வெறுப்புணர்வை தூண்டும் வகையிலும் பிரிவினையை ஏற்படுத்தும் வகையிலும் பேசியதற்காக அவர்கள் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் இருவர் மீதும் குற்ற வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.\nஆசம் கான் மீது நடவடிக்கை எடுப்பதில் உத்தரப் பிரதேசத்தில் ஆளும் சமாஜ்வாதி கட்சி மென்மையான போக்கை கையாண்டுள்ளதாகவும் தேர்தல் ஆணையம் குற்றம்சாட்டியுள்ளது. பிரச்சினை ஏற்படுத்தும் விவகாரத்தை மாநில அரசு எச்சரிக்கையுடன் கையாளவில்லை என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nடெல்லியில் தலைமை தேர்தல் ஆணையர் வி.எஸ்.சம்பத் தலைமையில் நேற்று நடைபெற்ற தேர்தல் ஆணைய அதிகாரிகள் கூட்டத்தில் அமித் ஷா, ஆசம் கான் ஆகியோருக்கு தடை விதிக்கும் முடிவு எடுக்கப்பட்டது. கார்கில் போரை வென்று கொடுத்தது முஸ்லிம் ராணுவ வீரர்கள்தான் என்று தேர்தல் பொதுக் கூட்டத்தில் ஆசம் கான் பேசினார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.\nமுசாபர் நகர் கலவரத்துக்கு காரணமானவர்களை பழி வாங்கவேண்டும் என்றால் பாஜகவுக்கு வாக் களிக்க வேண்டும் என்று தேர்தல் பிரசாரத்தின்போது அமித் ஷா பேசினார். இவர்கள் இருவர் பேசியதுமே மக்களிடையே வெறுப்புணர்வையும், விரோதத்தையும், பிரி வினையும் தூண்டும் வகையிலானது என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.\nமுதல்வர் அகிலேஷ் யாதவ் தலைமையிலான உத்தரப் பிரதேச அரசை தேர்தல் ஆணையம் கடுமையாக குறை கூறியுள்ளது. முக்கியமாக ஆசம் கான் மீது முதல் தகவல் அறிக்கை கூட பதிவு செய்யப்படவில்லை என்று சுட்டிக்காட்டப் பட்டுள்ளது.