text
stringlengths
57
183k
அத்தை மகளுடன் வீடியோ காலில் பேச தடை... ஆத்திரத்தில் பெண் காவலரின் மண்டையை பிளந்த போலீஸ் கணவர்! | Angry husband attacks his police wife over family issues in Chennai - Tamil Oneindia\npolice chennai crime சென்னை குற்றம் போலீஸ் காவலர்\nசென்னை: சென்னையில் அத்தை மகளுடன் வீடியோ காலில் பேச தடை விதித்ததால் ஆத்திரம் அடைந்த கணவர் தனது மனைவியை(பெண் காவலர்) மண்டையை உடைத்தார். இதையடுத்து போலீசார் பெண் காவலரின் கணவரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nசென்னை எழும்பூர் காவலர் குடியிருப்பில் வசிப்பவர் ராஜூ (42). இவர் சென்னை மாநகர காவல் துறையில் நுண்ணறிவு பிரிவில் காவலாக பணியாற்றி வருகிறார். இவரின் மனைவி கனிமொழி (40), தேனாம்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் காவலராக வேலை பார்த்து வருகிறார்.\nராஜபாளையத்தில் உள்ள தனது அத்தை மகளுடன் ராஜூ, அடிக்கடி வீடியோ காலில் பேசி வந்துள்ளார். இதுபற்றி அறிந்த கனிமொழி, இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கணவனை கண்டித்துள்ளார். ஆனால், இதை கேட்காமல் ராஜி தொடர்ந்து தனது அத்தை மகளுடன் பேசி வந்துள்ளார்.\nஅதன்படி, நேற்று முன்தினம் இரவு ராஜூ, அத்தை மகளுடன் வீடியோ காலில் பேசியிருக்கிறார். இதனால் கோபமடைந்த கனிமொழி, கணவனை கண்டித்ததாக சொல்லப்படுகிறது. இதனால், அவர்களிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த ஜூ, உருட்டுக்கட்டையை எடுத்து வந்து, கனிமொழியின் தலையில் ஓங்கி அடித்தாராம்.\nஇதில், மண்டை உடைந்து ரத்த வெள்ளத்தில் துடித்த அவரை, அக்கம் பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து கனிமொழி கொடுத்த புகாரின்படி, எழும்பூர் போலீசார் நுண்ணறிவு காவலர் ராஜூவிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்,\nIn Chennai, an angry husband attacked his wife after she was banned from talking on video footage with her aunt's daughter.
சபரிமலை ஐயப்ப ஆலயத்தின் பாரம்பரியத்தை சிதைக்கும் பெண்ணின் உண்மை முகம்! | Thinachsudar\nHome இந்திய செய்திகள் சபரிமலை ஐயப்ப ஆலயத்தின் பாரம்பரியத்தை சிதைக்கும் பெண்ணின் உண்மை முகம்!\nசபரிமலை ஐயப்ப ஆலயத்தின் பாரம்பரியத்தை சிதைக்கும் பெண்ணின் உண்மை முகம்!\nPosted By: Thina Sudaron: October 19, 2018 In: இந்திய செய்திகள், பிரதான செய்திகள்No Comments\nஏ-9 வீதியில் யாழ் நபருக்கு நேர்ந்த கோரம்!\nவவுனியாவில் குளத்திற்கு சென்ற மாணவன் சடலமாக மீட்பு…!!
கரையெல்லாம் செண்பகப் பூ ~ மேய்ச்சல் மைதானம்\nஇராஜராஜேஸ்வரி May 29, 2013 at 8:41 AM\nதொடர்கதையாகவும் படித்து , திரைப்படமாகவும் ரசித்த அருமையான கதையை பகிர்ந்தமைக்குப் பாராட்டுக்கள்..\nபால கணேஷ் May 31, 2013 at 6:34 AM\nதிண்டுக்கல் தனபாலன் May 29, 2013 at 8:42 AM\nஒரு வாக்கியம் (கல்யாணராமன் மிகவும் விரும்பினான்) பலமுறை வந்துள்ளது குறிப்பிட்டது, உங்களின் நுணுக்கமான ஆர்வமும் ரசனையும் வியக்க வைக்கிறது...\nவியந்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!\nகீதமஞ்சரி May 29, 2013 at 11:55 AM\nசுஜாதா அவர்களின் எழுத்தில் கண்ட வேறுபாட்டை அழகாக அலசிவிட்டீர்கள். கரையெல்லாம் செண்பகப்பூ படத்தை பல வருடங்களுக்குமுன் பார்த்திருக்கிறேன். அப்போது அவ்வளவாக ரசிக்கவில்லை. கதையாகப் படித்தால் ரசிக்கும் என்பதை உங்கள் பதிவே பறைசாற்றுகிறது. வாய்ப்பு அமையும்போது கட்டாயம் வாசிப்பேன். நன்றி கணேஷ்.\nபால கணேஷ் May 31, 2013 at 6:36 AM\nஅவசியம் வாசிக்கிறேன் என்ற உங்களுக்கு என் மனம் நிறைய நன்றி!\nஸ்ரீராம். May 29, 2013 at 12:45 PM\nஇங்கேயும் க.செ. தானா?\nபால கணேஷ் May 31, 2013 at 6:38 AM\nஒரு முறையாவது டபுள் ஷாட்டாக அடிக்க வேண்டும் என்று நீண்ட நாளாக நினைத்ததுண்டு. இப்ப இப்படி வெடிச்சுட்டேன் ஸ்ரீராம். நல்லாருக்குதானே...!\nதி.தமிழ் இளங்கோ May 29, 2013 at 1:32 PM\nஎனது வாலிப வயதில், ஓவியர் ஜெயராஜ் அவர்களின் ஓவியங்களை ரசித்தபடி படித்த தொடர் சுஜாதாவின் “ கரையெல்லாம் செண்பகப் பூ”. உங்கள் விமர்சனம், இளமை ததும்பும் அந்த நாவலை மீண்டும் படிக்கத் தூண்டுகிறது. சிறப்பான விமர்சனம்.\nபால கணேஷ் May 31, 2013 at 6:42 AM\nவிமர்சனத்தை ரசித்த உங்களுக்கு என் மனம் நிறைய நன்றி!\nVOICE OF INDIAN May 31, 2013 at 11:54 AM\nகலியபெருமாள் புதுச்சேரி May 29, 2013 at 2:24 PM\nஎனக்கு ஏனோ தெரியவில்லை சுஜாதா நாவல்களின் மீது பெரிதாக ஈர்ப்பு வந்ததில்லை..இனிமேல் படிக்க முயற்சிக்கிறேன்..\nபால கணேஷ் May 31, 2013 at 6:43 AM\nபடிக்க ஆரம்பித்தால் ஈர்த்து விடுவார் மனுஷன். படித்துப் பாருங்கள் ஐயா. மிக்க நன்றி!\nஅப்பாதுரை May 30, 2013 at 5:01 AM\nஇதுவும் சினிமாவா வந்துச்சா?\nபடம் ஏதோ வந்துச்சு... போச்சு...! ஹா... ஹா...!\nVOICE OF INDIAN May 31, 2013 at 11:55 AM\nவெங்கட் நாகராஜ் May 30, 2013 at 8:34 PM\nநல்லதோர் கதை பற்றிய உங்கள் கேப்சூல் சுவையோ சுவை!\nமிகவும் [!] ரசித்தேன் கணேஷ்.\nபால கணேஷ் May 31, 2013 at 6:45 AM\nரசித்த உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி!\nவல்லிசிம்ஹன் May 31, 2013 at 9:24 AM\nபுதுமை இனிமை இரண்டுக்கும் ரைட்டர் சார் காரண்டி.\nகதை ஒருபக்கம்.ஜெ அவர்களின் ஓவியம் ஒருபக்கம்.\nகவர்ந்திழுத்தகதை.படமாக்கியவிதம் ஒத்துப் போகவில்லை என்று நினைக்கிறேன். கதையும் திரைகதையும் கவர்ச்சியாக மாறியிருந்தால் ஒருவேளை எடுபட்டிருக்கும். நல்ல விமர்சனம் கணேஷ்.\nVOICE OF INDIAN May 31, 2013 at 11:40 AM\nஅனைவருக்கும் அன்பு June 19, 2013 at 10:54 AM\nபடத்தை பார்த்து திகிலுற்ற நினைவுகளை இப்போது நினைத்தால் சிரிப்பாக இருக்கு ஒரு எதிர்பார்ப்புடன் நகரும் அந்த படத்தை பார்த்து இருக்கிறேன் உங்கள் பதிவை படித்தபின் நாவலை தேடி போகிறேன் உங்கள் விமர்சனங்கள் சிறப்பு
எரிமலையில் ஏறி காணிக்கை செலுத்தும் விநோத திருவிழா\nஇந்தோனேசியாவில் எரிமலைகள் அதிகம். அதை பார்க்கவே சுற்றுலா பயணிகள் அங்கு அதிக அளவில் செல்கின்றனர். ஒரு வருடத்தில் சராசரியாக3கோடி பேர் அங்கு சுற்றுலா சென்று தீவுகளை சுற்றி பார்க்கிறார்கள்.\nகுகைக்குள் சிக்கிய இளம் கால்பந்து வீரர்கள்9நாட்களுக்கு பிறகு கண்டுபிடிப்பு\nதாய்லாந்தின் வடக்கு பகுதியில் உள்ள தாம் லுவாங் மலைப்பகுதியில் கடந்த மாதம் 23-ம் திகதி 12 கால்பந்து விளையாட்டு வீரர்கள் மற்றும் ஒரு பயிற்சியாளர் மலையேற்ற பயிற்சி மேற்கொண்டனர். அப்போது மலைப்பகுதியில் கனமழை பெய்ததன் காரணமாக 13 பேரும் அங்குள்ள குகை ஒன்றில் ஒதுங்கியுள்ளனர்.\nகார் குண்டு வெடிப்பு தாக்குதலில்5பேர் பலி\nஆப்கானிஸ்தான் நாட்டின் லாகர் மாகாணத்தில் நேற்று கார் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் குழந்தைகள், பெண்கள் உள்பட5பேர் உடல் சிதறி உயிரிழந்தனர் என போலீசார் தெரிவித்தபர்.\nஅமெரிக்க வெளியுறவு துறை செயலாளர் ஜூலை 5ல் வடகொரியா செல்கிறார்\nஅமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன் ஆகியோரது வரலாற்று சிறப்புமிக்க சந்திப்பு கடந்த மாதம் சிங்கப்பூரில் நடைபெற்றது. அப்போது அணு ஆயுத ஒழிப்பு, பொருளாதார தடைகளை நீக்குதல் உள்ளிட்டவை பற்றி பேசினர்.\nலிபியா படகு விபத்தில் 103 அகதிகள் பலி\nஆப்பிரிக்க நாடான லிபியாவில் இருந்து கடந்த 29-ந் திகதி 123 அகதிகள் ஐரோப்பிய நாடுகளுக்கு ஒரு ரப்பர் படகில் மத்திய தரைக்கடல் வழியாக பயணம் மேற்கொண்டனர். அவர்களுடைய படகு தஜோரா கடற்கரையோரம் சென்றபோது திடீரென படகுக்குள் நீர் புகுந்து அது கடலில் மூழ்கியது.\nஅமெரிக்கா வணிக வளாக துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி\nஅமெரிக்காவின் டென்னிசி நகருக்கு உட்பட்ட நாஷ்வில்லே பகுதியில் ஆப்ரி மில்ஸ் என்ற வணிக வளாகம் அமைந்துள்ளது.\nஆப்கனில் பிபிசி பத்திரிகையாளர் சுட்டுக் கொலை\nஆப்கானிஸ்தானில் பிபிசி செய்தி நிறுவனத்தின் பத்திரிகையாளர் அகமது ஷா சுட்டுக்கொல்லப்பட்டார்.\n11 குழந்தைகள், 10 பத்திரிகையாளர்கள் உட்பட 37 பேர் கொலை;ஆப்கானில் கொடூரம்\nஆப்கானிஸ்தான் நாட்டின் காபூல் நகரில் திங்கட்கிழமை நிகழ்ந்த பல்வேறு குண்டுவெடிப்புச் சம்பவங்களில் 37 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.\nஇவர்களில் 11 குழந்தைகளும் 10 பத்திரிகையாளர்களும் அடங்குவர்.\nஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த 19 ரஷியப் பெண்களுக்கு ஆயுள் தண்டனை\nபிரிட்டன் நாட்டின் பிரதமராக பதவி வகித்து வருபவர் தெரசா மே. இவரது அமைச்சரவையில் உள்துறை மந்திரியாக இருந்து வருபவர் ஆம்பர் ரூட். சமீபத்தில் எதிர்க்கட்சிகள் இவர் மீது ஊழல் புகார் சுமத்தினர்.\nபங்களாதேஷில் மின்னல் தாக்கி 14 பேர் பலி\nஇந்நிலையில் வங்காளதேசத்தில் நேற்று மின்னல் தாக்கியதில் பெண்கள், கல்லூரி மாணவிகள் உள்பட 14 பேர் பலியாகினர்.\nஉலகப் போரில் நாட்டுக்காக பணியாற்றிய பிரபல மொடல் அழகி கோர மரணம்\nசவூதி அரேபியாவில், கடந்த நான்கு மாதங்களில் மட்டும் 48 பேருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது.\nகுழந்தைகளின் எச்சங்களை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களினால் மீட்பு\nபெரு நாட்டில் பலிகொடுக்கப்பட்டதாக கருதப்படும் குழந்தைகளின் எச்சங்களை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.\nமனித வரலாற்றில் பாரியளவில் குழந்தைகள் பலிகொடுக்கப்பட்ட சம்பவமாக இது இருக்கலாம் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.\nபள்ளியில் இருந்து வீடு திரும்பிய ஏழு மாணவர்கள் கத்தியால் குத்தி கொலை\nசீனாவின் வடக்கு பகுதியில் அமைந்துள்ளது ஷாங்க் மாகாணம். இங்குள்ள மிசி கவுண்டி பள்ளியில் மாணவர்கள் படித்து வருகின்றனர்.\nடிரம்ப் ஜூலை மாதம் பிரிட்டன் செல்கிறார்\nஇங்கிலாந்து தலைநகர் லண்டனில் எண் 10, டவுனிங் தெருவில் பிரதமரின் அலுவலகம் செயல்பட்டு வருகிறது.\nஇந்நிலையில், பிரதமர் அலுவலகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஜூலை மாதம் 13-ம் தேதி பிரிட்டனில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.\nசீனாவில் இரவுநேர கேளிக்கை விடுதியில் தீ விபத்து ; 18 பேர் பலி\nசீனாவின் குவாங்டாங் மாகாணத்தின் குயிங்யுவான் நகரில் இசை நிகழ்ச்சியுடன் கூடிய நைட் கிளப் ஒன்று அமைந்துள்ளது. இங்கு திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.\nஇந்த சம்பவத்தில் 18 பேர் சிக்கி பலியாகி உள்ளனர்.5பேர் காயமடைந்து உள்ளனர். அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.\nஉலக போர் துவங்கும் சூழல் அதிகரித்துள்ளது - ரஷ்ய தொலைக்காட்சி\nசிரியாவில் போர் பதற்றம் நிலவி வருகிரது. சிரியாவில் அரசு தரப்பிற்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் போர் நடபெற்று வருகிறது. இதனால், மக்கள் பலர் உயிரிழந்து வருகின்றனர்.\nஇந்தோனேசியாவில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. அபேபுரா நகருக்கு தெற்கே 109 கி.மீட்டர் தொலைவில் மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 5.3 அலகாக பதிவாகி உள்ளது. நிலநடுக்கம் காரணமாக அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் குலுங்கின.\nபடம் பிடித்த பத்திரிகையாளர் சுட்டுக் கொல்லப்பட்டார்.\nமத்திய அமெரிக்க நாடான நிகரகுவாவில், ஓய்வூதிய சீர்திருத்தம் காரணமாக அரசாங்கத்துக்கு எதிராக கடந்த சில தினங்களாக போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்த போராட்டங்களில் வன்முறை மூண்டது.\nஆப்கன் வாக்குப்பதிவு மையத்தில் குண்டு வெடிப்பு;31 பேர் பலி\nஆப்கானிஸ்தானின் காபூலில் தீவிரவாதி நடத்திய தற்கொலைத் தாக்குதலில் 31 பேர் பலியாகி உள்ளனர்.\nஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகரான காபூலில் உள்ள வாக்குப்பதிவு மையத்தில் தீவிரவாதி ஒருவன் இன்று தற்கொலை குண்டு வெடிப்பு நிகழ்த்தினார். இத்தாக்குதலில் 31 பேர் பலியாகியுள்ளனர்.\nஅனைத்து ஏவுகணை சோதனை, அணுஆயுத சோதனை நிறுத்தப்படும்\nஅனைத்து ஏவுகணை சோதனைகளையும் நிறுத்திவிட்டு, அணுஆயுத சோதனை தளத்தையும் உடனடியாக மூடப் போவதாக வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன் தெரிவித்துள்ளார்.\nஅமெ­ரிக்க அதி­பர் ட்ரம்ப் – வட­கொ­ரிய அதி­பர் கிம் ஜோங் உன் இரு­வ­ருக்­கும் இடை­யில் அடுத்த மாதம் சந்­திப்பு இடம்­பெ­ற­வுள்ள நிலை­யில், ‘‘அணு­வா­யு­தங்­கள் தொடர்­பில் அமெ­ரிக்­கா­வின் நிபந்­த­னையை கிம் ஜோங் உன் ஏற்­கா­வி­டில் நான் பேச்­சில் இருந்து வெளி­ந­டப்­புச் செய்­வேன்’’ என்று தெரி­வித்­தார்\nசவூதி அரேபியாவில் 12 துறைகளில் தொழில் செய்யத் தடை
இதழ்கள்: January 2011\nசுடச் சுட மழை\nபிரிந்து நடக்கையில் தான்\nஅருகிலிருக்கும் கூரை தேடி ஓடி\nநீர் சொக்கும் ஆடைகளில்\nஇன்னும் முடிவடையாத நாளின் ஓரத்தில்\nஇறுகிக்கிடக்கும் மண் முடிச்சுக்கள்\nரோட்டோரத்து செம்மண் நீர்\nநகரமெங்கும் பரவி பெய்யும் மழையில்\nநனைவதற்கும் ஒதுங்கி நிற்பதற்குமான\nPosted by Anitha Jayakumar at 3:08 PM 8 comments:\nகப்பல் செய்து தரச் சொல்லி\nகாகிதத்தை நீட்டுகிறாள் குழந்தை\nநீள் காகிதத்தை சதுரமாய் கிழித்த பிறகு\nகப்பல் செய்வது சட்டென மறந்துவிட்டது\nமூளைக்குள் காகிதங்களை விடாமல் மடித்துப் பார்க்கிறேன்\nகாத்திருந்தால் தானாய் வெளிப்பட\nகசங்கிய காகிதத்தை பார்த்தபடியே\nகப்பலுக்காய் காத்திருக்கும் மகளுக்கு\nநான் படித்த கப்பல் கதைகளெல்லாம்\nகாகிதம் மெல்ல கப்பலாக உருமாறிக்கொண்டிருந்தது\nPosted by Anitha Jayakumar at 3:05 PM4comments:\nஇந்த வலைப்பூவை துவங்கையில் இத்தனை நீண்ட இடைவேளை விழும் என நினைக்கவில்லை.\nபடித்துக்கொண்டிருப்பது மட்டுமே பிரதானமாய் இருந்தது அப்போது.\nஅலுவலகம் செல்கையில், தேநீர் பருகுகையில், விடுதியின் தனிமையில், பேருந்து பயணங்களில் என எப்பொழுதும் இடத்திற்கேற்றவாறு புத்தகங்கள் தேடிப் படித்துக்கொண்டிருந்தேன்.\nதினம் தினம் கவிதை எழுதுவதெல்லாம் எனக்கு என்றுமே கைவந்ததில்லை. மெல்ல உணர்வாய் உருவாகி வார்த்தைகள் சேர்ந்து மனதை அழுத்திக்கொண்டிருந்து பின் தானாய் வெளிப்படும் வரை காத்திருப்பேன்.\nஅந்த நிலை உலகளாவிய செய்கைகளிலிருந்து அப்பார்பட்டதாகவே இருந்திருக்கிறது.\nகவிதை தோன்றி எழுதும் வரை வேறு பிரதேசத்தில் உலவிவிட்டு, கவிதை முடிந்ததும் தரையிறங்குவது போன்ற மனநிலை. எதிர்பார்ப்புகளற்றுக் கழிந்துக்கொண்டிருந்த காலம் திருமணமானதும் மாறத்துவங்கியது. பிடித்தது பிடிக்காதது, எதை ஒப்புக்கொள்வது எதில் நிலைபாடுகள் மாறாமல் நிற்பதென தினம் புதிய கோணமாய் யோசனைகள் இத்தனை காலமாய் என்னை பற்றிய என்னுடைய புரிதல்களை கேள்வியெழுப்பத்துவங்கின..\nவிளிம்பிலிருந்து சற்று உள்ளே வந்து இருவர் இருக்கும் உலகிற்குள் இழைந்துக்கொள்வது எப்படியென புரிந்தபிறகு இருத்தல் அழகாகத்துவங்கியது. பிறகு அனன்யா பிறந்தாள். அதுவரை கூட என் கவிதைகள் என் இருத்தலை நோக்கித் திரும்பவில்லை. குழந்தை வந்த பிறகு அவளின் உலகம் புதியதாய் இருந்தது. அதனை அருகிருந்து பார்ப்பது இந்நிமிடம் வரை மாறாத ஆச்சர்யங்களை தந்துக்கொண்டு தான் இருக்கிறது. அது கவிதைக்குள்ளும் புகுந்துக்கொண்டது.\nஇப்பொழுது மீண்டும் ஒரு குழந்தை. இம்முறை அழகான ஆண் குழந்தை. இந்த பத்து மாதங்களும் நான் வலைப்பூ பக்கம் வரவில்லை.. ஏனெனில் இந்த குழந்தையும் அவளைப்போலவே எந்த சங்கடங்களும் இன்றி ஆரோக்கியமாய் இருக்கவும், குழந்தையுடன் முழு பொழுதையும் கழித்து நினைவுகள் சேகரிப்பதிலும் உறுதியாயிருந்தேன்.\nஇன்று கணவர், ஒரு பெண் ஒரு ஆண் குழந்தை என வாழ்க்கை முழுமைபெற்றிருக்கிறது.\nஎன்னுடன் என் வலைப்பூவும் நல்ல நண்பர்களும் பயணித்துக்கொண்டிருப்பது பெரும் பலமாயிருக்கிறது.\nPosted by Anitha Jayakumar at 2:45 PM4comments:\nஇந்த வலைப்பூவை துவங்கையில் இத்தனை நீண்ட இடைவேளை...
சபரிமலையில் இன்று மகரஜோதி காலை 8:14க்கு மகர சங்கரமபூஜை| Dinamalar\nAdded : ஜன 14, 2021 01:19\nசபரிமலை:சபரிமலையில் இன்று மகரவிளக்கு விழா நடைபெறுகிறது. முக்கிய பூஜையான மகரசங்கரமபூஜை காலை 8:14 மணிக்கு நடக்கிறது.கொரோனா கட்டுப்பாடுகளுடன் நடைபெறும் மகரவிளக்கு சீசனின் முக்கிய நிகழ்வான மகரவிளக்கு விழா இன்று நடைபெறுகிறது. பந்தளத்திலிருந்து புறப்பட்ட திருவாபரண பவனி இன்று மாலை 5:30 மணிக்கு சரங்குத்தி வந்தடையும். அங்கு திருவிதாங்கூர் தேவசம்போர்டு அதிகாரிகளின்\nசபரிமலை:சபரிமலையில் இன்று மகரவிளக்கு விழா நடைபெறுகிறது. முக்கிய பூஜையான மகரசங்கரமபூஜை காலை 8:14 மணிக்கு நடக்கிறது.\nகொரோனா கட்டுப்பாடுகளுடன் நடைபெறும் மகரவிளக்கு சீசனின் முக்கிய நிகழ்வான மகரவிளக்கு விழா இன்று நடைபெறுகிறது. பந்தளத்திலிருந்து புறப்பட்ட திருவாபரண பவனி இன்று மாலை 5:30 மணிக்கு சரங்குத்தி வந்தடையும். அங்கு திருவிதாங்கூர் தேவசம்போர்டு அதிகாரிகளின் வரவேற்புக்கு பின்னர் சன்னிதானத்துக்கு கொண்டுவரப்படும்.\nமாலை 6:25 மணிக்கு 18- படி வழியாக சோபானத்திற்கு வந்ததும் தந்திரியும், மேல்சாந்தியும் திருவாபரணத்தை வாங்கி நடை அடைத்து சிலையில் ஆபரணங்கள் அணிவிப்பர். தொடர்ந்து நடை திறந்து தீபாராதனை நடைபெறும். தீபாராதனை முடிந்து சில வினாடிகளில் பொன்னம்பல மேட்டில் மகர நட்சத்திரம் காட்சி தரும். தொடர்ந்து மகரஜோதி மூன்று முறை காட்சி தரும்.\nமகரவிளக்கு நாளில் நடைபெறும் முக்கிய பூஜைகளில் ஒன்று மகரசங்கரமபூஜை. சூரியன் தனுசு ராசியில் இருந்து மகரராசிக்கு கடக்கும் முகூர்த்தத்தில் ஐயப்பனுக்கு இந்த பூஜை நடத்தப்படுகிறது. இது இன்று காலை 8:14 மணிக்கு நடைபெறுகிறது. இந்த நேரத்தில் திருவிதாங்கூர் மன்னர்களின் அரண்மனையான கவடியாரில் இருந்து கொடுத்துவிடப்படும் நெய் தேங்காய் உடைக்கப்பட்டு பாத்திரத்தில் ஊற்றாமல், நேரடியாக சிலையில் அபிஷேகம் செய்யப்படும்.\nகொரோனா கட்டுப்பாடுகளால் சபரிமலையில் பக்தர்கள் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும் ஜோதி தெரியும் அட்டத்தோடு, பஞ்சிப்பாறை, இலவுங்கல் போன்ற இடங்களில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சபரிமலை ரோடுகளில் போக்குவரத்து கட்டுப்பாடுகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.\nதிருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் வாசு நிருபர்களிடம் கூறியதாவது: கடந்த 54 நாட்களில் 1,32,673 பேர் தரிசனம் நடத்தியுள்ளனர். 16.30 கோடி ரூபாய் வருமானம் கிடைத்து உள்ளது. கடந்த ஆண்டு வருமானத்தை ஒப்பிடும் போது மண்டல காலத்தில் ஆறு சதவீதமும், மகரவிளக்கு காலத்தில் 10 சதவீதமும் கிடைத்துள்ளது.\nதேவசம்போர்டுக்கு ஏற்பட்டுள்ள வருவாய் இழப்பை சரி செய்ய முயற்சி மேற்கொள்ளப்படும். நிலைமையை சமாளிக்க தேவைப்பட்டால் வங்கியில் கடன் பெறப்படும். அடுத்து மாசி மாத பூஜைக்கு எவ்வளவு பக்தர்களை அனுமதிக்க வேண்டும் என்பது பற்றி அரசுடன் ஆலோசித்து முடிவு அறிவிக்கப்படும்.\nமகரவிளக்கு சீசனில் புதிதாக மூன்று பேருக்கு மட்டுமே தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்களும் மண்டல காலத்தில் சபரிமலை வந்தவர்கள். ஆர்.டி.பி.சி.ஆர்., சோதனை கட்டாயமாக்கப்பட்ட பின்னர் கொரோனா தாக்கம் சபரிமலையில் குறைந்துள்ளது. பாடகர் வீரமணி ராஜூவுக்கு இன்று ஹரிவராசனம் விருது வழங்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.\nபெரியாறு, வைகை அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு
↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2013-03-01 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2015-12-15 அன்று பார்க்கப்பட்டது.\n↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2018-12-24 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2015-12-15 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)\n↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2018-12-25 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2015-12-15 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)\n"https://ta.wikipedia.org/w/index.php?title=திவேர்_மாகாணம்&oldid=3427380" இருந்து மீள்விக்கப்பட்டது\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 மே 2022, 03:38 மணிக்குத் திருத்தினோம்.
டோனிக்காக மிக விலை உயர்ந்த பரிசை வாங்கி காத்திருக்கும் மனைவி..! – தாகம்\nடோனிக்காக மிக விலை உயர்ந்த பரிசை வாங்கி காத்திருக்கும் மனைவி..!\nஇந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் டோனிக்கு அவரது மனைவி சாக்க்ஷி, 1 கோடி ரூபாய் மதிப்புள்ள காரை பரிசாக வழங்குவதற்க காத்திருக்கிறார் டோனிக்கு எப்போது வாகனங்கள் மீது அலாதிப் பிரியம் உண்டு. பைக்குகள், கார்கள் என ஏராளமானவற்றை வாங்கி குவித்திருக்கிறார். தற்போது இந்திய ராணுவத்துடன் பயிற்சியினை ஜம்மு காஷ்மீர் பகுதியில் மேற்கொண்டு வரும் டோனியின் பயிற்சி காலம் ஆகஸ்ட் 15ம் திகதி முடிவடைகிறது. இந்நிலையில் அவரது மனைவி சாக்‌ஷி டோனிக்காக விலை உயர்ந்த புதிய கார் ஒன்றினை வாங்கி அவரது வீட்டில் நிறுத்தியுள்ளார்.அந்த காரை புகைப்படம் எடுத்து தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், உங்களின் புதிய விளையாட்டு பொருளாக இந்த கார் நம் வீடு வந்து சேர்ந்து விட்டது\nமுதல் நபர் மகி..!! உங்களை பெரிதும் மிஸ் செய்கிறேன். இந்த கார் இந்தியாவின் குடிமகன் என்ற அடையாளத்துக்காக காத்திருக்கிறது, ஏன் என்றால் இந்த காரை வைத்திருக்கும் முதல் இந்தியர் நீங்கள் தான் என்று கூறியிருக்கிறார். இந்த காரின் விலை இந்திய மதிப்பில் 1 கோடி ரூபாய் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.மேலும் அந்த கார் கிராண்ட் செரோக்கே வகை கார் ஆகும். டோனியிடம் ஏற்கனவே, பெராரி 599 GTO, ஹம்மர் H2 ஆகிய கார்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது\nவவுனியாவில் திடீரெனக் கொட்டிய மழை…!! பெருமகிழ்ச்சியில் பொதுமக்கள்..\nதெருவில் குப்பை பொறுக்கிய சிறுவனை படிக்க வைத்து பெரியவனாக்கி அழகு பார்த்த பிரித்தானியர்கள்…. இந்தக் காலத்தில் இப்படியும் மனிதர்களா…?
‘தல 57’ படத்தின் பூஜை நேற்று நடந்ததா? - Cinemapettai\n‘தல 57’ படத்தின் பூஜை நேற்று நடந்ததா?\nவீரம், வேதாளம் படங்களின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து அஜித் – சிவா கூட்டணி மூன்றாவது முறையாக ஒரு புதிய படத்தில் இணையவிருப்பதும் ‘சத்யஜோதி பிலிம்ஸ்’ சார்பாக டி.ஜி.தியாகராஜன் இப்படத்தை தயாரிக்கவிருப்பதும் நாம் ஏற்கனவே அறிந்ததுதான்.\nஇந்நிலையில் நேற்று இப்படத்துக்கான பூஜை சத்தமே இல்லாமல் நடந்து முடிந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இது எந்தளவு உண்மை என்பது தெரியவில்லை. ஜூலை முதல் வாரத்தில் இதன் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.\nRelated Topics:அஜித், சிவா
Mohamed Razmi’s Dreams :வான் குளக்கரையோரம் எப்படி அமையும்..? ஒரு வேட்பாளரின் இனிமையான கனவு – PuttalamToday\nMohamed Razmi’s Dreams :வான் குளக்கரையோரம் எப்படி அமையும்..? ஒரு வேட்பாளரின் இனிமையான கனவு\nகுடும்பத்துடன் எமது நேரங்களை மிக ரம்மியமான சூழலில் அமைத்துக்கொள்ள. சிறுவர் பூங்கா, வாசிகசாலை மற்றும் திறந்த மேடை.\nஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் 4ஆம் வட்டார வேட்பாளராகிய எமது எதிர்கால திட்டங்களில் ஒன்றான.\nகுளக்கரை சிறுவர் பூங்கா (Spill Children Family Park) ஒன்றை அமைத்தல்.\nவான் சந்தியில் இருந்து ஹஸனாத் பள்ளி நோக்கி செல்லும் பாதையில் நிசார் மௌலவி வீட்டின் முன்னால் பிரதான பாதைக்கும் குலத்துக்கும் இடைப்பட்ட பகுதியில் சிறுவர் பூங்காவும், வாசிகசாலையும் அதனோடு இணைந்த வகையில் திறந்த மேடை ஒன்றையும் அமைத்தல்.\nஎமது இந்த திட்டத்தை செயலுருவில் செய்து தருவதாக இன்ஷா அல்லாஹ் எமது எதிர்கால நகரபிதா K, A. Baiz அவர்கள் அனுமதித்ததை அடுத்து உங்களுக்கு நாங்கள் இதனை சமர்ப்பிக்கின்றோம்.
HomeArticleசுமைதாங்கி வந்ததால், சுமைநீங்கும் சகோதரர்கள்!\nWeb Administrator Tuesday, July 13, 2021\nநாமொன்று நினைக்க நாட்டில் இன்னொன்று நடக்கிறதே என்று, சிறுபான்மை அபிமானிகள் சிலர் சிந்திக்கின்றனர். தமது எண்ணங்கள் யதார்த்தமாகி நிறைவேற வேண்டுமென எதிர்பார்த்த சிலரின் உளத்துடிப்புக்கள் தான் இவை. பாராளுமன்றத்துக்கு பஷில் ராஜபக்ஷ வந்தகையோடு அமைச்சரவை மாற்றம், அந்த மாற்றங்களுக்குள் சில புதிய முகங்கள், இவைகள்தான் கடந்தவாரப் பேசுபொருள். பெரும்பாலும், சிறுபான்மைச் சமூகங்களின் தளங்களில்தான் இப்படிப் பேசப்பட்டன. அதிலும், முஸ்லிம் சமூகப் பேசுபொருளே இதுவாகத்தானிருந்தது.\nஅரசியலமைப்பின் இருபதாவது திருத்தம், இரட்டைப் பிரஜாவுரிமை சட்டமூலங்களை தனித்துவக் கட்சிகளின் முஸ்லிம் எம்.பிக்கள் ஆதரித்த பின்னர், படிப்படியாக வளர்ந்த அல்லது வளர்க்கப்பட்ட மனநிலைகள்தான் இவை. ஆனால், இப்போது நடந்திருப்பவையும் சில செய்திகளைக் கிளறச் செய்திருக்கின்றன. அரசாங்கத்தை ஆட்டங்காணச் செய்யும் சக்திகள் உள்ளுக்குள்ளோ அல்லது வெளியிலோ இனி அதிகம் பேசுவதைத் தவிர்க்க வேண்டும் என்பதே அந்தச் செய்தி. அரசாங்கத்திற்குள் அதிரடியாக உள்வாங்கப்பட்டுள்ள மற்றொரு ஆளுமையின் வருகை, இதைத்தான் பறைசாற்றுகிறது. இவரின் அசைவுகளால் எழும்பிய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனதானே, நாட்டின் பிரதான இரண்டு தேசிய கட்சிகளின் முதுகெலும்பை முறித்து படுக்கையிலும் போட்டுள்ளது. இதற்கான விளம்பரமாகப் பயன்படுத்தப்பட்டவர் வேறாக இருக்கலாம். பயன்படுத்திய முறைகள் எல்லாம் இவருடையதுதானே! இப்படியொருவரின் தேவை, அரசுக்கு அவசரமாகத் தேவைப்பட்டிருக்கிறதே! ஏன்?இதுதான் இன்று எழுந்துள்ள கேள்வி?\nசட்டத்தின் பார்வையில் எப்படியெல்லாம் அலசப்பட்டும், பட்டப்பகலில் வர்த்தமானி வெளிவந்து, அனைத்தையும் அரசு முடித்ததில் பல அர்த்தங்கள் இருக்கின்றன. இனியேற்படப் போகும் அனைத்துக்கும் பஷில்தான் சுமைதாங்கி. இவருக்கு மேலுள்ள மூன்று சகோதரர்களும் இனி சுமைநீங்கிகள். இவ்வாறான, பார்வைகளையே பஷிலின் பாராளுமன்றப் பாய்ச்சல் தோற்றுவித்திருக்கிறது. எம்.பி பதவியை, பஷிலுக்காக துறந்த ஜெயந்த கெடகொடவும் இதைத்தான் எதிர்வு கூறியிருந்தார். "எம்.பி பதவியை விட எனக்கு நாட்டின் பலம்தான் பிரதானம் என்றார்". அவ்வாறானால் நாடு, இப்போது பலவீனப்பட்டா இருக்கிறது? இந்தக் கேள்விக்குரிய விடைகளும் இதற்குப் பின்னர் நிகழவுள்ள மாற்றங்களில் இருக்கின்றன.\nபஷிலின் பிரவேசத்தைப் பாராட்டிப் பேசிய, தனித்துவ எம்.பிக்களின் தொனிகளிலும், அவரது ஆளுமைக்கான ஆதாரங்கள்தானே தென்பட்டிருந்தன. ஒன்று மட்டும் உண்மை, இவர்கள் அரசுக்குள் வருவதற்கான வாசலை பஷில்தான் திறக்க வேண்டியுள்ளது. சட்டமூலங்களை ஆதரிப்பது, அதற்கான அனுகூலங்கள் பற்றியெல்லாம் பேசப்பட்டதும் இவரிடம் தானே!\nசமூக அபிலாஷைகளை அடைவது, பிராந்திய மற்றும் பிரதேச ஆபத்துக்களை அரசின் ஆதரவுடன் இல்லாமல் செய்தலுக்காகத்தான், அரசாங்கத்தை அணுகிச் சென்றிருந்தனர் இவர்கள். இந்த அணுகுமுறைகள் கால ஓட்டத்தில் அரசியல் களங்களை மாற்றி, புதிய நட்புக்களை ஏற்படுத்துமென்ற நம்பிக்கைகள், பஷிலை நாடுவோரிடம் இல்லாமலிருக்காது. இதற்காக களங்கள் மாறும் வரை இவர்கள் காத்திருக்கவே வேண்டும். இங்குதான், எண்ணத்திற்கும் யதார்த்தத்திற்கும் இடையிலான வேறுபாடுகளை நாம் புரிந்துகொள்வது அவசியப்படுகிறது.\nகிட்டத்தட்ட 150 ஆசனங்களுள்ள இந்த அரசாங்கத்திற்கு (ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன பெரமுன முன்னணி) தேசிய அரசாங்கத்தை அமைக்கும் தேவை ஏன் எழ வேண்டும்? பத்து பங்காளிக் கட்சிகள் உள்ள இந்த அரசில், முக்கியமான சிலருக்கே இன்னும் அமைச்சுக்கள் வழங்கப்படவில்லை. இதற்குள், வேறு கட்சிகளையும் இணைத்து வம்பை விலைக்கு வாங்குவற்கு யார்தான் விரும்புவர்? தீர்க்கப்படாமல் இழுத்தடிக்கப்படும் தேசிய பிரச்சினையைத் தீர்த்து வைத்தல் அல்லது போதிய பலமில்லாது கவிழவுள்ள அரசைக் காப்பாற்றல், சம அளவிலான அரசியல் பலங்கள் தொடர்ச்சியாக தேர்தலில் நிலைப்படுதல், மேலும், இனம் அல்லது மதத்தின் வேற்றுணர்வுகளால் பெருந் தேசம் பிளவுபடல் போன்ற நிலைமைகள், நெருக்கடிகளில்தான் தேசிய அரசாங்கத்தின் தேவைகள் உணரப்படுவதுண்டு. இப்போது, இந்தத் தேவைகள் எதுவும் நாட்டில் இருக்கிறதா?\nஇல்லை என்பதற்கும் இல்லைதான்.\nஇப்போதுள்ள ஆளுமைகளின் போக்குகள் சர்வதேசம் ஏற்றுக்கொள்ளும் அளவிலில்லை. இதற்கான நியாயங்களை சர்வதேசத்துக்கு எடுத்துச் சொல்லும் நிலைமையிலும் இவரது சகோதரர்கள் இல்லை. இதனால், மத்தளத்தின் மேனிபோல் இரண்டு பக்கமும் அடிதாங்கப் போகிறார் பஷில். கடும்போக்குகளைக் கட்டுப்படுத்துவது, கட்டுப்படாவிடின் கரையேற்றுவது, சர்வதேசத்தை சமாளிப்பது, சங்கடம் ஏற்பட்டால் சகோதர சமூகங்களைச் சேர்த்துக்கொள்வது. பங்காளிகளைக் கரையேற்றிவிட்டாலும் கை கொடுக்கத்தான் கட்சிகளிருக்கிறதே!\nஇதில், இன்னுமொன்றும் உள்ளதுதான். தென்னிலங்கையின் இருப்புக்களை தொடர்ந்தும் கடும்போக்கில் வைத்திருக்க முடியாத நிலை ஏற்படுமானால், மாற்று வழிகளுக்கான மருந்தாகத்தான் பஷில் பாவிக்கப்படப்போகிறார். ராஜபக்ஷக்களின் செல்வாக்குகளை இந்த நாட்டில் நிலைப்படுத்தவே இந்தச் சகோதரர்கள் விரும்புகின்றனர். இதுதான் இவர்களின் வியூகம். இல்லாவிட்டால் 'அண்ணன், தம்பிகளுக்குள் குழப்பம், அமெரிக்காவுக்கு பஷில் தப்பிச் சென்றுவிட்டார்' என, நமது தளங்களில் பேசப்பட்ட அதே பஷில், நாட்டின் சுமைதாங்கியாக எப்படி வருவது?\nஇலங்கையில் மாற்று ஆளுமைகளை வளர்ப்பதை விட, அடையாளங்காணப்பட்ட ஆளுமைகளை வளர்ப்பதுதானே அமெரிக்கா, அயல் நாடு, உட்பட்ட அனைவருக்கும் இலகுவானது. இதனால்தான், இந்தச் சுமைதாங்கி, தோள்பட்டையை தூக்கப் போகிறாரோ தெரியாது
களமிறங்கும் அதிமுகவின் முக்கிய புள்ளி.. களைகட்டும் திருப்பரங்குன்றம் தொகுதி இடைத் தேர்தல் | Natham viswanathan try to get Thiruparankundram assembly constituency - Tamil Oneindia\n| Published: Saturday, April 20, 2019, 11:41 [IST]\nசென்னை: மே19 நடைபெற உள்ள, திருப்பரங்குன்றம் சட்டசபை இடைத்தேர்தலுக்கு முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் போட்டியிட வாய்ப்பு கேட்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nமதுரை மாவட்டத்தில் உள்ளது, திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினராக இருந்த ஏ.கே. போஸ் திடீரென உடல்நலக் குறைவால் இறந்தார். இதையடுத்து அத்தொகுதிக்கு வரும், மே 19ம் தேதி இடைத்தேர்தல் நடக்க உள்ளது.\nஇந்த இடைத்தேர்தலில் சீட் பெற, அதிமுகவில் கடும் போட்டாபோட்டி நடந்து வருகிறது. ஏனெனில், இது அதிமுக எம்எல்ஏ மறைந்த தொகுதியாகும்.\nஇயல்பாகவே, அதிமுகவுக்கு அதிகம் ஆதரவு உள்ள தொகுதி, இதுவாகும். எனவே கோதாவில் களமிறங்க நத்தம் விஸ்வநாதன் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. 2016 சட்டசபை தேர்தலின்போது, நத்தம் விஸ்வநாதன், தனது தொகுதியான நத்தம் தொகுதியில், போட்டியிட ஜெயலலிதாவிடம் கேட்டிருந்தார். ஆனால், நத்தமும் தரப்படவில்லை, அதன்பிறகு அவர் விரும்பிய திருப்பரங்குன்றம் தொகுதியைும் தரவில்லை.\nநத்தன் விஸ்வநாதனுக்கு, கடந்த சட்டசபை தேர்தலில், ஆத்தூர் தொகுதியை ஒதுக்கினார் ஜெயலலிதா. ஆத்தூர் தொகுதி திமுகவின் கோட்டையாக உள்ளது. எனவே, திமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமிடம் போட்டியிட்டு நத்தம் விஸ்வநாதன் தோல்வியடைந்தார். இதன்பிறகு அரசியலில் சரிவர ஆர்வம் காட்டாமல் இருந்தார் நத்தம் விஸ்வநாதன்.\nஆனால், ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஓபிஎஸ் அணியில் சேர்ந்த அவர், தற்பொழுது ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவரிடமும் நெருக்கமாக இருக்கிரார். எனவே, திருப்பரங்குன்றம் தொகுதியில் போட்டியிட நத்தம் விஸ்வநாதன் விரும்புகிறார். தனக்கு சீட் கிடைக்கும் என நம்புகிறார்.\nஎனவேதான், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில், முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் சீட் கேட்கிறார் என்ற பேச்சு அதிமுகவினர் மத்தியில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. விஸ்வநாதனின் ஆதரவாளர்கள் இந்த கோரிக்கையை முன்வைத்து வருகிறார்கள் என்ற பேச்சு மாவட்ட அளவில் பரவலாக பேசப்பட்டும் வருகிறது.\nthiruparankundram natham viswanathan tamil nadu by election 2019 திருப்பரங்குன்றம் நத்தம் விஸ்வநாதன் தமிழக இடைத் தேர்தல் 2019\nNatham viswanathan try to get Thiruparankundram assembly constituency for by election, says sources.\nStory first published: Saturday, April 20, 2019, 11:41 [IST]
தனிமைப்படுத்தலா? தவிப்பு வேண்டாம் நான் இருக்கிறேன்! ஆறுதலாக\nதனிமைப்படுத்தலா? தவிப்பு வேண்டாம் நான் இருக்கிறேன்! ஆறுதலாக பேசும் "கிரேஸ் ரோபோ"!!\nசீனாவில் புதிது புதிதாக கண்டுபிடிப்புகள் வெளியானதை தொடர்ந்து தற்போது கிரேஸ் என்ற ரோபோவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது\nதற்போது உலகில் உள்ள மக்களுக்கு மிகப்பெரிய பாதிப்பை உண்டாக்கி வரும் நோயான கொரோனா முதன் முதலில் சீனாவில் உருவானதாக பல்வேறு பத்திரிகை நிறுவனங்கள் கூறுகின்றன. மேலும் இந்த நோயின் தாக்கம் தற்போது உலகிலுள்ள பல பகுதிகளில் அதிகமாகக் காணப்படுகிறது. இதனால் உயிரிழப்புகளும் அதிகமாக உள்ளன. எனவே சீனாவில் அவ்வப்போது புதிய புதிய கண்டுபிடிப்புகளையும் சர்ச்சைகளையும் எழுப்பி வருகின்றன. இந்நிலையில் சீனாவில் மனித முகத் தோற்றத்துடன் ரோபோ ஒன்று உருவாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் அதற்கு கிரேஸ் என்றும் பெயரிடப்பட்டு உள்ளது.\nமேலும் தனிமைப்படுத்தப்பட்ட அவர்களுக்கு ஆறுதலாக இருக்கும் என்றும் கூறுகிறது .அதன்படி அந்த நான்தான் கிரேஸ் முதியவர்களுக்கு தேவையான உதவிகளையும் செய்வேன் என்று மனிதனின் குரலில் பேசுகிறது. மேலும் மக்களை சந்தித்து பேசி அவர்களுடைய நாளை பிரகாசமாக மாற்றுவேன் என்றும் அந்த கிரேஸ் ரோபோ கூறியுள்ளது. மேலும் தனிமை படுத்தலா? தவிப்பு வேண்டாம் நான் இருக்கிறேன். மேலும் இது ரோபோவானது மருத்துவ பணியாளராக வலம்வரும் என்றும் கூறப்படுகிறது.\nமேலும் இந்த ரோபோவை தயாரிக்க ஒரு சொகுசு கார் உருவாக்குவதற்கு தேவையான செலவாகும் என்று இதனை வடிவமைத்தவர் கூறியுள்ளார். மேலும் வரும் நாட்களில் இந்த ரோபோவின் வரவு அதிகரிக்கும் அதன் செலவு குறைய வாய்ப்புள்ளதாகவும், பிற்காலத்தில் இந்த ரோபோ அதிகமாக இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்துவது இல்லை என்றும் கூறியுள்ளார். மேலும் கொரோனா பாதித்த முதியவர்களுடன் பேசி ஆறுதல் அளிக்கும் ரோபோவாக இது காணப்படுகிறது. மேலும் இவை உபயோகிக்கப்பட்ட மருத்துவர்களுக்கு நோய் பாதிப்பு ஏற்படுவதிலிருந்து தவிர்க்கப்பட்டு அவர்களின் உயிர் பாதுகாப்பு படுவதாகவும் இதைக் கூறுகின்றனர்.
ஒட்டிகள் மற்றும் பசை வரலாறு\nபசைகள் மற்றும் பசை - என்ன குச்சிகள்?\n4000 கி.மு. இருந்து புதைக்கப்பட்ட தளங்கள் அகழ்வாராய்ச்சி தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் மரம் SAP இருந்து பசை சரி செய்யப்பட்டது களிமண் தொட்டிகளில் கண்டுபிடிக்கப்பட்டது. பழங்கால கிரேக்கர்கள் தச்சுப் பயன்பாட்டில் பசையைப் பயன்படுத்துவதற்குப் பக்குவப்படுத்தியுள்ளனர் என்பதை அறிவோம், மேலும் அவை பின்வருபவை உட்பொருட்களை உள்ளடக்கிய உருப்படிகளை உருவாக்குகின்றன: முட்டை வெள்ளை, இரத்தம், எலும்புகள், பால், சீஸ், காய்கறிகள் மற்றும் தானியங்கள். தார் மற்றும் தேனீக்கள் ஆகியவை ரோமரால் பசைக்காகப் பயன்படுத்தப்பட்டன.\n1750 இல், முதல் பசை அல்லது பிசின் காப்புரிமை பிரிட்டனில் வெளியிடப்பட்டது.\nபசை மீன் தயாரிக்கப்பட்டது. இயற்கையான ரப்பர், விலங்கு எலும்புகள், மீன், ஸ்டார்ச், பால் புரதம் அல்லது கேசீன் ஆகியவற்றைப் பயன்படுத்தி பசைகள் விரைவாக வெளியிடப்பட்டன.\nசூப்பர்வலை - செயற்கை பசை\nசூப்பர்லூவ் அல்லது கிரீஸ் க்ளூ என்பது சனனோக்ரிலேட் என்றழைக்கப்படும் பொருள் ஆகும். டாக்டர் ஹாரி கோவர் கோடாக் ஆராய்ச்சி ஆய்வகங்களில் 1942 ஆம் ஆண்டில் துப்பாக்கி சூடுகளுக்கு ஒரு தெளிவான தெளிவான பிளாஸ்டிக் ஒன்றை உருவாக்கினார். கோனோவர் சினோனாகிரிலேட்டை நிராகரித்தார் ஏனெனில் இது மிகவும் ஒட்டும்.\n1951 ஆம் ஆண்டில், சனோனோ மற்றும் டாக்டர் ஃப்ரெட் ஜாய்னர் ஆகியோரால் சைனானாகிரிலேட் மீண்டும் கண்டறியப்பட்டது. டென்னெஸில் ஈஸ்ட்மேன் கம்பெனியில் இப்போது கூபேர் ஆராய்ச்சிக்கு மேற்பார்வை செய்தார். ஜொவ்னர் ஜெட்னர் ஜெயினெர் சினோனாகிரிலேட்டிற்கான ஒரு ரிஃப்ராக்டோமீட்டர் ப்ரீஸ்ஸைக் கொண்ட ஒரு படத்தைப் பரப்பும்போது ஜொன்னர் மற்றும் ஜொன்னர் ஆகியோர் ஜீட் கேனபிகளுக்கான ஒரு வெப்ப-எதிர்ப்பு ஆக்ரிலேட் பாலிமர் ஆராய்ச்சியை மேற்கொண்டனர்.\nசைனோயாகிரிலேட் என்பது ஒரு பயனுள்ள தயாரிப்பு என்று முடிவெடுத்தது, 1958 ஆம் ஆண்டில் ஈஸ்ட்மேன் கலவை # 910 விற்பனை செய்யப்பட்டு பின்னர் சூப்பர்குளியாக தொகுக்கப்பட்டது.\nஹாட் க்ளூ - தெர்மோபிளாஸ்டிக் பசை\nசூடான பசை அல்லது சூடான உருகிய பசைகள் ஆகியவை தெர்மோபிளாஸ்டிகளாக இருக்கின்றன, இவை சூடாகவும் (அடிக்கடி பசை துப்பாக்கிகள் பயன்படுத்தி) பின்னர் குளிர்ச்சியாகவும் கடினமாகின்றன. சூடான பசை மற்றும் பசை துப்பாக்கிகள் பொதுவாக கலை மற்றும் கைவினைகளுக்கு பொதுவாக பயன்படுத்தப்படுகின்றன.\nProcter & Gamble வேதியியல் மற்றும் பேக்கேஜிங் பொறியாளர், பால் கோப் 1940 ஆம் ஆண்டில் தெர்மோபிளாஸ்டிக் பசை கண்டுபிடித்தார்.\nவேறு எதுவும் பசை எதையும் பயன்படுத்த என்ன சொல்கிறது என்று ஒரு வெள்ளி தளம். வரலாற்றுத் தகவலுக்காக ட்ரிவியா பிரிவைப் படிக்கவும். "தி டட் டு தட்" இணையத்தளத்தில், எல்மெரின் பசை தயாரிப்புகளில் வர்த்தக முத்திரையாகப் பயன்படுத்தப்படும் புகழ்பெற்ற பசு உண்மையில் எல்சி என்ற பெயரைக் கொண்டது, மேலும் அவர் எல்மர், எல்மர் என்ற மனைவியின் பெயர், அந்த நிறுவனம் பெயர் பெற்ற எருமை (ஆண் மாடு).
அதிமுகவின் எதிர்காலம் ; அதிருப்தியில் நிர்வாகிகள் : தினகரனுடன் சமரசம்?\nசெவ்வாய், 28 ஆகஸ்ட் 2018 (15:25 IST)\nஅதிமுகவின் எதிர்காலம் கருதி டிடிவி தினகரனுடன் இணைந்து செயல்படுவது நல்லது என ஏராளமான அதிமுக நிர்வாகிகள் கருதுவதாக செய்தி கசிந்துள்ளது.\nமுதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோரின் அணிக்கு எதிராக அரசியல் களத்தில் அதிரடி ஆட்டம் காட்டி வருகிறார் தினகரன். ஆர்.கே.நகரில் ஆளும் கட்சியான அதிமுக வேட்பாளரையே அவர் தோற்கடித்தார். அவர் செல்லும் இடமெங்கும் கூட்டம் கூடுகிறது. தொடர்ந்து பல மாவட்டங்களுக்கும் அவர் சுற்றுப்பயணம் செய்து அவரின் ஆதரவாளர்களையும், பொதுமக்களையும் சந்திக்கிறார். செய்தியாளர்கள் எப்படிப்பட்ட கேள்விகள் எழுப்பினாலும் சிரித்துக்கொண்டே எதிர்கொள்கிறார். மொத்தத்தில் அரசியல் களத்தில் ஆக்டிவாக இருக்கிறார்.\nஅதிமுகவை பொறுத்தவரை ஜெயலலிதா போன்ற தலைமை இல்லாமல் தடுமாறிக்கொண்டிருக்கிறது. எடப்பாடி மற்றும் ஓபிஎஸ்ஸின் தலைமை மீது மக்கள் அதிருப்தியில் உள்ளனர். இப்போதுள்ள நிலைமையில் தேர்தல் நடத்தினால் பல தொகுதிகளில் அதிமுக படு தோல்வியை சந்திக்கும் என அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.\nபாஜகவின் தயவில் ஆட்சியை காப்பாற்றிக்கொண்டாலும், அதிமுக என்கிற கட்சி வலுவாக இல்லை. இது மூத்த தலைவர்களை கலக்கம் அடைய வைத்துள்ளது. இந்த விவகாரம் சமீபத்தில் நடந்த அதிமுக செயற்குழு கூட்டத்தில் எதிரொலித்தது. அப்போது பேசிய பல நிர்வாகிகள் அதிமுக பலவீனமடைந்து வருவதை சுட்டிக் காட்டி பேசினார்களாம்.\nகுறிப்பாக, 2019ம் ஆண்டு நடக்கவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைக்க பெரும்பாலான கட்சிகள் முன்வராது என அவர்கள் கூறியுள்ளனர். காங்கிரஸ் கண்டிப்பாக திமுகவுடன் கூட்டணி வைக்கும். விடுதலை சிறுத்தை, கம்யூனிஸ் உள்ளிட்ட கட்சிகளும் அதிமுகவுடன் சேராது. ஏன்? திமுகவின் கூட்டணியை பெற பாஜகவே காய் நகர்த்தி வருவதாக கூறப்படுகிறது. இது அதிமுக பலவீனமடைந்து வருவதை தெளிவாக காட்டுகிறது என நிர்வாகிகள் கூறியுள்ளனர்.\nபாஜக ஆதரவோடு ஆட்சியை தக்க வைத்துக்கொண்டாலும், பாராளுமன்ற தேர்தலில் தோல்வி அடைந்தால் அது அதிமுகவின் எதிர்காலத்தை பாதிக்கும் என அதிமுக நிர்வாகிகள் கலக்கம் அடைந்துள்ளனர். எனவே, இப்போதுள்ள சூழ்நிலைக்கு தினகரனுடன் சமாதானமாக செல்வதே சிறந்தது என பலரும் பேச தொடங்கியுள்ளனராம்.\nஅதிமுகவினரை பொறுத்தவரை யாரேனும் ஒருவர் தலைமையில் அடைக்கலமாகி எம்.எல்.ஏ, அமைச்சர் என பதவிகளில் நீடித்து காலத்தை ஓட்டுவதே வழக்கம். அந்த தலைமைக்கு ஈ.பி.எஸ் மற்றும் ஓ.பி.எஸ்-ஐ விட தினகரன் சரியாக இருப்பார் எனவும், அவரது தலைமையில் நாடாளுமன்ற தேர்தலை சந்திப்பதே சிறந்தது என வட மாவட்ட அதிமுக நிர்வாகிகள் பேச தொடங்கியுள்ளனராம். விரைவில் அவர்கள் இதுதொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து பேச முடிவெடுத்துள்ளதாகவும் தெரிகிறது.\nமகாரஷ்டிர பாஜக துணைத்தலைவர் சாலைவிபத்தில் பலி\nஅதிமுகவில் இருந்து விலகுகிறாரா மதுசூதனன்?...\nஅதிமுகவில் இருந்து விலகுகிறாரா மதுசூதனன்? அதிமுகவில் பரபரப்பு\nரோடு இருந்தா அமெரிக்காவிற்கு கூட சைக்கிள்ல போவேன்: கெத்து காட்டும் அதிமுக அமைச்சர்\nபாஜக தலைவரை பொளேரென அறைந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ. - வைரலாகும் வீடியோ
Chandrababu Naidu: ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவிற்கு இப்படியொரு அசிங்கம்; பஸ்ஸில் ஏற்றி அனுப்பி வைப்பு! - chandrababu naidu denied vip vehicle to reach aircraft at vijayawada airport | Samayam Tamil\nchandrababu naidu denied vip vehicle to reach aircraft at vijayawada airport\nஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவிற்கு இப்படியொரு அசிங்கம்; பஸ்ஸில் ஏற்றி அனுப்பி வைப்பு!\nSamayam Tamil | Updated: 15 Jun 2019, 08:20:00 PM\nமுன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவிற்கு, விஜயவாடா விமான நிலையத்தில் இப்படியொரு அசிங்கம் ஏற்பட்டுள்ளது.\nசமீபத்தில் நடைபெற்ற மக்களவை தேர்தலுடன், ஆந்திர மாநிலத்தில் சட்டமன்ற தேர்தலும் நடைபெற்றது. இதில் ஆளுங்கட்சியான சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் படுதோல்வியை சந்தித்தது.\nமொத்தமுள்ள 175 சட்டமன்ற தொகுதிகளில் 151 தொகுதிகளில் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி அபார வெற்றி பெற்றது. இதேபோல் மக்களவை தேர்தலில் பெருவாரியான தொகுதிகளைக் கைப்பற்றியது.\nஆந்திர மாநிலத்தில் புதிய அரசு பதவியேற்ற பின், பல்வேறு நலத்திட்டங்களை முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி தொடங்கி வைத்தார். இந்திய அரசியல் வரலாற்றில் இல்லாத வகையில்,5துணை முதலமைச்சர்களை நியமித்து அதிரடி காட்டினார்.\nஇந்நிலையில் ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவிற்கு யாரும் எதிர்பார்க்காத அசிங்கம் நடந்துள்ளது. அதாவது, நாயுடுவிற்கு இசட் பிளஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது.\nஇந்த சூழலில் ஐதராபாத் நகரில் கட்சி கூட்டத்தில் பங்கேற்க விஜயவாடா விமான நிலையத்திற்கு சென்றுள்ளார். அங்கு பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை நடத்தினர். பின்னர் விமான நிலையத்தில் இருந்து விமானம் ஏறுவது வரை தனி வாகனம் அளிக்கப்படவில்லை.\nஇதுகுறித்து கேட்டதற்கு, நீங்கள் பொதுமக்களுடன் பேருந்தில் செல்லலாம் என்று கூறியுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த சந்திரபாபு நாயுடு, வேறுவழியின்றி பயணிகளுடன் சேர்ந்து தானும் பேருந்தில் பயணித்தார்.\nஇந்த சம்பவம் தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு அவமதிக்கப்பட்டதாக கருதப்படுகிறது. இதனால் ஆந்திர மாநிலத்தில் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. பாஜகவிற்கு எதிரான நிலைப்பாட்டை தெலுங்கு தேசம் கட்சி கொண்டுள்ளது.\nஎனவே பாஜக உடன் சேர்ந்து கொண்டு, ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் ஓரவஞ்சனை உடன் செயல்படுவதாக குற்றம்சாட்டப்படுகிறது. இதுகுறித்து கருத்து தெரிவித்த ஆந்திர மாநில உள்துறை அமைச்சர் சின்ன ராஜப்பா, சந்திரபாபு நாயுடு எதிர்க்கட்சி தலைவராகவும் இருந்துள்ளார்.\nஆனால் ஒருபோதும் இப்படியொரு அவமதிப்பை சந்தித்ததில்லை. சந்திரபாபு நாயுடுவின் பாதுகாப்பை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு, சந்திரபாபு நாயுடு கான்வாயில் இரண்டு போலீஸ் ஜீப்கள் குறைக்கப்பட்டன. இந்தச் சூழலில் மற்றொரு சர்ச்சை வெடித்துள்ளது.\nகொரோனா 2ஆம் அலை வரப்போகுது: பீதியை கிளப்பும் எச்சரிக்கை...\nபிரசாந்த் கிஷோர் நிறுவனத்திடம் ஆலோசனை கேட்கும் முதல்வர்? அடுத்த செய்தி\nசந்திரபாயு நாயுடு ஆந்திர முதல்வர் chandrababu naidu vip chandrababu naidu frisking Chandrababu Naidu Andhra Pradesh chief minister Chandrababu Naidu\nWeb Title : chandrababu naidu denied vip vehicle to reach aircraft at vijayawada airport\nகோவையில் நடிகர் சூர்யாவுக்கு எதிராக நூதன போராட்டம்!\nஇந்தியாதுடிப்பு மிக்க சமுதாயத்தை புதிய கல்விக் கொள்கை உருவாக்கும்: ராம்நாத் கோவிந்த் புகழாரம்\nராமநாதபுரம்முதல்வர் எதுக்கு வராரு, இப்ப வரவேற்பு தேவையா?- மக்கள் கேள்வி!\nவிருதுநகர்சிகிச்சை பலனின்றி பெண் மரணம்: போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்கள்!\nகோயம்புத்தூர்கோவையில் கொலு பொம்மை கண்காட்சி கோலாகலம்!
Title: வெப்பநிலையை அளக்கப் பயன்படும் கருவி?\nDescription: This isaMost important question of gk exam. Question is : வெப்பநிலையை அளக்கப் பயன்படும் கருவி? , Options is : 1. அனிமோ மீட்டர், 2. தெர்மோ மீட்டர், 3.பாரோ மீட்டர், 4. டில்ட் மீட்டர், 5. NULL\nThis isaMost important question of gk exam. Question is : வெப்பநிலையை அளக்கப் பயன்படும் கருவி? , Options is : 1. அனிமோ மீட்டர், 2. தெர்மோ மீட்டர், 3.பாரோ மீட்டர், 4. டில்ட் மீட்டர், 5. NULL\n1) அனிமோ மீட்டர்\n2) தெர்மோ மீட்டர்\n3) பாரோ மீட்டர்\n4) டில்ட் மீட்டர்
நிலவு நண்பன்: ஒரு காலாட்படையே கவிழ்ந்துகிடக்கின்றதே?\nஅய்யா நிலவு நண்பா, அவுரு மேலே தப்பில்லப்பா. எங்காவது தமிழ்மணத்தை இந்த பத்து நாளா படிச்சிருப்பாரு. புட்டுக்கிச்சு,சாஞ்சுட்டாரு. போலி,அல்லக்கையி,டோண்டு, டூண்டு,நோண்டு எல்லாத்தையும் பாத்துட்டு வாழ்க்கை வெறுத்துட்டாரு. லுசுல உடு நண்பா.\nதமிழ்நாட்டின் ஒரு மிகப் பெரிய அவலத்தைச் சொல்லியிருக்கிறார்,அதிலே போய் கும்மி அடிக்கிறார்.\nகுடி ஒரு மன நோய் என்பதை உலகெங்கும் ஏற்றுக் கொண்டு அவர்களுக்கு மருத்துவ உதவி அளிக்க அனைத்து வழி முறைகளையும் செய்து வருகிறார்கள்.\nஇது ஒரு தனி மனித வேதனையல்ல.ஒரு குடும்பப் போராட்டம்,குடும்பப் புற்று நோய்.வாடும் பல குடும்பங்களைக் காப்பாற்ற,இள வய்தினரைத் தடுக்க,புகை பிடித்தலுக்குக் கொடுக்கும் தடுப்பு ஏற்பாடுகள் குடி,போதைப் பொருள்களுக்கும் செய்வது முக்கியம்.சமுதாயத் தொண்டர்கள் வழி காட்டுவார்களாக.\nசராசரி இந்தியனின் பொறுப்பும் சில வெறுப்புகளும் உங்கள் பதிவில் பளிச்சிடுகிறது. நல்ல வேளை. அவர சரியான இடத்தில் படுக்க வைத்தீர்களே அதுவே உங்கள் மனிதாபிமானத்துக்கு சான்று\nசராசரி இந்தியனின் பொறுப்பும் சில வெறுப்புகளும் உங்கள் பதிவில் பளிச்சிடுகிறது. நல்ல வேளை. அவர சரியான இடத்தில் படுக்க வைத்தீர்களே அதுவே உங்கள் மனிதாபிமானத்துக்கு சான்று //\nதடுமாறிப் போன மனிதரைப் பற்றிய உங்கள் தடுமாறாத விமர்சனத்திற்கு நன்றி இளா\nஇது ஒரு தனி மனித வேதனையல்ல.ஒரு குடும்பப் போராட்டம்,குடும்பப் புற்று நோய்.வாடும் பல குடும்பங்களைக் காப்பாற்ற,இள வய்தினரைத் தடுக்க,புகை பிடித்தலுக்குக் கொடுக்கும் தடுப்பு ஏற்பாடுகள் குடி,போதைப் பொருள்களுக்கும் செய்வது முக்கியம்.சமுதாயத் தொண்டர்கள் வழி காட்டுவார்களாக. //\nநன்றி தமிழன்...உங்கள் எண்ணப்படி நடக்க பிரார்த்திக்கின்றேன்...\nஎங்காவது தமிழ்மணத்தை இந்த பத்து நாளா படிச்சிருப்பாரு. புட்டுக்கிச்சு,சாஞ்சுட்டாரு. போலி,அல்லக்கையி,டோண்டு, டூண்டு,நோண்டு எல்லாத்தையும் பாத்துட்டு வாழ்க்கை வெறுத்துட்டாரு. லுசுல உடு நண்பா. //\nதமிழ்மணப் பதிவுகள் அந்த அளவுக்கு தடுமாறுதுன்னு சொல்றீங்களா..? :)
நிலவுக்கே சென்ற மனித சக்தியால் இந்த இடத்திற்கு மட்டும் செல்லவே முடியாதாம்! எந்த இடம் தெரியுமா? - TamilSpark\nநிலவுக்கே சென்ற மனித சக்தியால் இந்த இடத்திற்கு மட்டும் செல்லவே முடியாதாம்! எந்த இடம் தெரியுமா?\nBy Web Team Sat, 10 Nov 2018 18:00:19 IST\nWorld most dangerous ocean challenger deep\nவிஞ்ஞான வளர்ச்சியில் அணைத்து நாடுகளும் அபார முன்னேற்றம் அடைந்துள்ளது. பூமியை போன்று வேறு எங்கையாவது மனிதர்கள் வாழ்கிறார்கள்? வேறு பூமி, சூரியன் போன்றவை உள்ளதா என நாளுக்கு நாள் அது சம்மந்தமான ஆராய்ச்சிகள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. மேலும் செவ்வாய் கிரகத்தில் மனிதனால் வாழ முடியுமா என்றும் ஆரய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.\nஇவ்வாறு பூமியை விட்டு வேறு கோள்களுக்கு சென்ற மனிதர்களால், இதுவரை இந்த இடத்திற்கு மட்டும் செல்லவே முடியவில்லை என்பது ஆச்சர்யமான ஓன்று. சேலஞ்சர் டீப் என்ற பகுதி உலகிலே அதிகமான ஆழம் கொண்ட கடல் பகுதி. சராசரியாக கடலின் ஆழம்4கி.மீ. வரைதான் இருக்கும். ஆனால், இந்த பகுதியில் மட்டும் கிட்டத்தட்ட 11 கி.மீ. வரை கடலின் ஆழம் உள்ளதாம்.\nஅதிகப்படியான கடல் நீரின் அழுத்தம் காரணமாகவே மனிதனால் இந்த இடத்திற்குச் செல்ல முடியவில்லை என்று கூறப்படுகிறது. பொதுவாக கடலில் 10 மீட்டர் ஆழத்திற்கு சென்றால் கடல் நீரின் அழுத்தம்2மடங்கு இருக்கும். அதுவே 20 மீட்டர் என்றால்3மடங்கு இருக்கும். அதேபோல் 30 மீட்டர் ஆழத்தில்4மடங்கும்,4கி.மீ. கடல் ஆழத்தில் 400 மடங்கும் கடல் நீரின் அழுத்தம் இருக்கும்.\nஇந்த அழுத்தமானது நம்மை படுக்க வைத்து நம் மேல் சுமார் 50 சிமெண்ட் மூடைகளை மேலே அடுக்குவது போல் அழுத்தம் கொண்டது. இதுவே 10,000 மீட்டர் ஆழத்தில் 1,100 மடங்கு இருக்கும். அப்படியானால் அந்த இடத்தில் மனிதனின் உடலை நீர் ஊடுருவிச் செல்லும். இதனால் மரணம் ஏற்படும். மேலும் கடலில் 800 மீட்டர் ஆழத்திலே இருள் சூழ்ந்து இருப்பதால் எதையும் நம்மால் பார்க்க முடியாது.\nTags: #challenger deep #Human cant enter into this #challenger deep ocean
கூடவே படிக்கும் மாணவர்களை கொன்று ரத்தம் குடிக்க திட்டம்போட்ட சிறுமிகள்... - Kathiravan.com\nPosted by: S. Athavan in உலகச் செய்திகள் October 26, 2018 9:14 pm\t0\nஅமெரிக்கப் பள்ளி ஒன்றில் சகமாணவர்களைக் கொன்று அவர்களின் ரத்தத்தைக் குடிக்க இரண்டு பள்ளிச் சிறுமிகள் திட்டமிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் மத்திய புளோரிடா பகுதியில் இயங்கி வரும் நடுநிலைப் பள்ளியில், கடந்த செவ்வாயன்று இரண்டு மாணவிகள் கழிப்பறையில் பதுங்கி இருப்பதாக சக மாணவிகள் மூலம் ஊழியர்களுக்கு தகவல் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து சந்தேகம் அடைந்த பள்ளி ஊழியர்கள், அச்சிறுமிகள் இருவரையும் பிடித்து சோதனை செய்தனர்.\nஅப்போது அவர்கள் இருவரும் கத்திகளை மறைத்து வைத்திருந்தது கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தற்கொலை முயற்சிக்காக அவர்கள் கத்தி வைத்திருந்தனரோ என்ற சந்தேகத்தில், அவர்களிடம் ஊழியர்கள் விசாரணை நடத்தினர். அதில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அதாவது, சம்பந்தப்பட்ட இரண்டு சிறுமிகளும் மனித ரத்தம் குடிக்க விரும்பியுள்ளனர். அதற்காகத் தான் பள்ளிக்கு அவர்கள் கத்தியும் வந்துள்ளனர்.\nஉடன் படிக்கும் சக மாணவர்களின் குரல்வளையை அறுத்து, அவர்களைக் கொலை செய்து அவர்களின் ரத்தத்தைக் குடிக்க அவர்கள் திட்டமிட்டுள்ளனர். மேலும், அவர்களின் சதையை கடித்து தின்ன விரும்பியதாகவும், அதன் பின்னர் தாங்களும் தற்கொலை செய்து கொள்ளவும் திட்டமிட்டிருந்ததாகவும் தெரிவித்துள்ளனர். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பள்ளி நிர்வாகம் உடனடியாக இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.\nவிரைந்து வந்த போலீசார் சிறுமிகளைக் கைது செய்து, அவர்களிடம் விசாரணை நடத்தினர். பின்னர் அவர்களை மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிறுமிகளின் மனநிலை குறித்த சோதனைகளையும், சிகிச்சையையும் மருத்துவர்கள் அளித்து வருகின்றனர். ஏன் அம்மாணவிகளுக்கு இது போன்ற விபரீத ஆசை ஏற்பட்டது என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nPrevious: மஹிந்த ராஜபக்ஷ சற்றுமுன்னர் பிரதமராக பதவிப்பிரமாணம் செய்தார்… கொழும்பு அரசியலில் அதிரடி\nNext: பாடகி சின்மயி பாலியல் புகார் பதிவால் சிக்கிய அந்த7பேர்… நேர்ந்த கதி என்ன தெரியுமா?
பாசமாக வளர்த்த நாய் இறந்ததால் சைவத்துக்கு மாறிய கருணாநிதி || Karunanidhi turns vegetatian after his dogs death\nதி.மு.க. தலைவர் கருணாநிதி அசைவத்தில் இருந்து சைவ உணவுக்கு மாறியதற்கு அவர் பாசமாக வளர்த்த நாய் இறந்ததே காரணம். #DMKLeader #Karunanidhi #BlackDog\nதி.மு.க. தலைவர் கருணாநிதி அசைவ பிரியராக இருந்தார். தினமும் அவரது உணவில் ஏதாவது அசைவ உணவு இருக்கும்.\nஅந்த நாய் திடீர் என்று இறந்து விட்டது. இதனால் கருணாநிதி துயரம் அடைந்தார். அதன் பிறகு அசைவம் சாப்பிடுவதை நிறுத்தி விட்டு சைவ உணவுக்கு மாறினார்.\nஇதுகுறித்து கனிமொழி கூறுகையில், “கருப்பு நாய் மீது அதிகம் பாசம் வைத்திருந்த கலைஞர் அது இறந்ததால் சோகம் அடைந்தார். அதன் உடலை ஆலிவர் சாலையில் இருந்த வீட்டின் பின்புறம் புதைத்தோம். அது நினைவாக ஒரு மரக்கன்று நட்டு வைத்தோம்.\nகவிஞர் இளையபாரதி கூறுகையில், “ஒருமுறை ராஜாத்தி அம்மாள் கீழே கிடந்த உலர் திராட்சையை மிதித்து வழுக்கி விழுந்து காலில் காயம் அடைந்தார். அன்று முதல் அந்த கருப்பு நிற நாய் உலர்திராட்சையை வீசினாலும் சாப்பிடாது. அந்த அளவுக்கு பாசத்துடன் இருந்தது” என்றார். #DMKLeader #Karunanidhi
Junior Vikatan - 18 April 2012 - ''பிரபாகரனுக்குப் பின்னால் உள்ள படத்தைப் பாருங்கள்..!'' | ltte case in hight court. See back of prabakaran photo vaikoo - Vikatan\nபுலி வக்கீல் வைகோ\nவிடுதலைப் புலிகளின் வக்கீலாகவே மாறி​விட்டார் வைகோ.\nஇந்தியாவில் விடுதலைப் புலிகள் அமைப்பு தடை செய்யப்பட்டு இருப்பது சரியா... தவறா என்று சட்டரீதியாக நடக்கும் போராட்டங்களில் சென்னைக்கும் டெல்லிக்குமாக அலைகிறார் வைகோ. கடந்த 9-ம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தபோது, கறுப்புக் கோட்டை மாட்டிக்கொண்டு கோர்ட் படி ஏறிய வைகோ, சுமார் ஒன்றரை மணி நேரம் தனது வாதங்களை எடுத்துவைத்தார். 'நீதிமன்றத்தையே பொதுக்கூட்ட மேடையாக்கிவிட்டார் வைகோ’ என்று வழக்​கறிஞர்கள் சொல்லும் அளவுக்கு இருந்தன வாதங்கள்.\nஇந்தியாவில் விடுதலைப் புலிகள் இயக்கம் 1992-ம் ஆண்டு தடை செய்யப்பட்டது. இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்தத் தடைக்கான நீட்டிப்பை மத்திய அரசு பிறப்பித்து வருகிறது.\nகடைசியாக 14.2.2010 அன்று மத்திய அரசு தடை விதித்தது. புலிகள் அமைப்புக்கு விதிக்கப்பட்ட தடையை நீட்டிக்கலாமா என்று விசாரணை நடத்து​வதற்காக டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி விக்ரம்ஜித் சென் தலைமையில் தீர்ப்பாயம் அமைக்கப்பட்டது. இதில் வைகோ, நெடுமாறன், வழக்கறிஞர்கள் புகழேந்தி மற்றும் ராதாகிருஷ்ணன் ஆகியோர் ஆஜரானார்கள். புலிகள் அமைப்பு மீது விதிக்கப்பட்ட தடை சரியானதுதான் என்று நீதிபதி விக்ரம்ஜித் சென், கடந்த 12.11.2010 அன்று தீர்ப்பு அளித்தார்.\nஇந்தத் தீர்ப்பை ரத்து செய்யவேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வைகோ மனுத் தாக்கல் செய்து இருந்தார். இதேபோன்று ஒரு மனுவை வழக்கறிஞர் புகழேந்தியும் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கின் விசாரணை நீதிபதிகள் எலிப்பி தர்மாராவ், வேணுகோபால் அடங்கிய பெஞ்ச் முன்பாக 9-ம் தேதி வந்தபோதுதான், வைகோவின் குரல் எதிரொலித்தது.\n''விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்குங்கள் என்று வாதம் வைப்பதற்கு வைகோவுக்கு எந்த உரிமையும் இல்லை என்று மத்திய அரசு சார்பில் பதில் கூறப்பட்டு உள்ளது. நான் விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர் அல்ல என்றும் மத்திய அரசு கூறுகிறது. புலிகள் அமைப்பை ஏன் தடை செய்திருக்கிறோம் என்பதற்கு ஆதாரம் காட்டும்போது என்னுடைய பேச்சுக்களை, அதற்காகப் போடப்பட்ட வழக்குகளை, என்னுடைய கட்சியைக் குறிப்பிட்டு உள்ளார்கள். எனவே இந்தத் தடை தவறானது என்று வாதிடுவதற்கு எனக்கு எல்லா உரிமையும் இருக்கிறது'' என்று தன்னுடைய வாதங்களை முன்வைக்கத் தொடங்கினார் வைகோ.\n''தமிழ்நாட்டையும் சேர்த்து சுதந்திரத் தமிழீழம் அமைக்க புலிகள் இயக்கம் முயற்சிக்கிறது. எனவேதான், இந்தியாவில் புலிகளைத் தடை செய்திருக்கிறோம்'' என்று மத்திய அரசு குறிப்பிட்ட வாதத்தை வைகோ கடுமையாக மறுத்தார்.\n''விடுதலைப் புலிகள் தமிழ்நாட்டிலோ, இந்தியா​விலோ ஓர் அங்குல நிலத்தைக்கூட இணைக்க முயற்சிக்கவில்லை. அவர்கள் இலங்கையில் உள்ள வடக்கு மாகாணத்தையும், கிழக்கு மாகாணத்தையும் மட்டுமே தமிழீழம் என்கிறார்கள். பெரும்பான்மைத் தமிழர்கள் வசிக்கும் பகுதிகள் அவை. இலங்கையின் மற்ற பகுதிகளைக்கூட அவர்கள் கைப்பற்ற நினைக்கவில்லை. அப்படி இருக்கும்போது இந்தியப் பகுதியை எப்படிக் கைப்பற்ற நினைப்பார்கள்? மத்திய அரசு இப்படிச் சொல்வது கற்பனையான ஜோடிக்கப்பட்ட குற்றச்சாட்டு. உண்மையில் இந்தியப் பகுதியையும் சேர்த்துத்தான் தமிழீழம் உருவாக்க பிரபாகரன் நினைத்தார் என்பதை மத்திய அரசு நிரூபிக்குமானால், இந்த இடத்தில், இப்போதே என்னுடைய வாதங்களை நிறுத்திவிடத் தயாராக இருக்கிறேன்'' என்று உணர்ச்சிவசப்பட்ட வைகோ, நீதிபதியைப் பார்த்து...\n''நான் தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரத்தில் பிரபாகரனின் படத்தை இணைத்துள்ளேன். அவருக்குப் பின்னால் தமிழீழ நாட்டின் வரைபடம் இருக்கிறது. அதைப் பாருங்கள். அதில் இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்கள்தான் இருக்கிறதே தவிர, தமிழ்நாட்டின் எந்தப் பகுதியும் இல்லை என்பதை நீங்களே உணரலாம்'' என்று சொல்ல... அதை உற்றுக் கவனித்தார்கள் நீதிபதிகள்.\n''புலிகளை ஆதரித்துப் பேசும் எங்​களால் இந்தியாவின் ஒற்றுமைக்கும் ஒருமைப்​பாட்டுக்கும் ஆபத்து என்று தடைக்கான காரணமாக மத்திய அரசு கூறுகிறது. தடை செய்யப்பட்ட இயக்கத்தை ஆதரித்துப் பேசுவதில் தவறு இல்லை என்று 2004-ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் நான் தாக்கல் செய்த வழக்கில் ஏற்கெனவே தீர்ப்பு வழங்கப்​பட்டுள்ளது. கொளத்தூர் மணி மீதான வழக்கில் நீங்களே அப்படி ஒரு தீர்ப்பினைத் தந்துள்ளீர்கள். எனவே, தடை செய்யப்பட்ட இயக்கத்தை ஆதரித்துப் பேசுவது, சட்டப்படி தவறு அல்ல.\nபுலிகள் அமைப்பினால் வி.வி.ஐ.பி-களின் உயிருக்கு ஆபத்து என்று, 2007-2008 ஆண்டுகளில் இலங்கையில் நடந்த சம்பவங்களை மத்திய அரசு பட்டியலிட்டு உள்ளது. இலங்கையில் வாழ்ந்த ஈழத் தமிழினத்தை வேரோடு கருவறுக்க சிங்கள ராணுவம் முயற்சித்த காலகட்டம் அது. அந்த நேரங்களில் என்ன நடந்தது என்பதை ஐ.நா. மன்றம் அமைத்த மூவர் குழு வெளியிட்ட அறிக்கையை முழுமையாகப் படித்தால், ரத்தக் கண்ணீர் வரும். இதற்கு சாட்சியாக சேனல்4தொலைக்காட்சி இருக்கிறது'' என்று சொல்லி ஒவ்வொரு காட்சியாக விவரித்தார் வைகோ.\n''இப்படி ஒரு சூழ்நிலையில் தடை வேண்டாம் என்று சொல்வதற்கு ஒரே ஒரு காரணம்தான். இலங்கையில் வாழ முடியாத நிலையில் ஈழத் தமிழர்கள் உலகமெங்கும் நாதியற்று அலைகிறார்கள். தொப்புள் கொடி உறவுகள் என்று சொல்லப்படும் தமிழ்நாட்டுக்குத்தான் அவர்களால் வர முடியவில்லை. தடையை நீக்கினால் இங்கு வந்து வாழவும் படிக்கவும் எதிர்காலத்திலாவது அவர்களால் முடியும். அதற்காகத்தான் தடையை நீக்கக் கேட்கிறோம்'' என்று முடித்தார்.\nஅடுத்து புகழேந்தி சார்பில் வழக்கறிஞர் ராதா​கிருஷ்ணன் வாதாடினார். அப்போது மத்திய அரசு தரப்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எம்.ரவீந்திரன் ஆஜராகி, ''எந்த இயக்கம் தடை செய்யப்பட்டதோ, அந்த இயக்கத்தின் உறுப்பினரோ அல்லது நிர்வாகியோதான் எதிர்த்து வழக்குப் போட முடியும். வைகோ, புலிகள் அமைப்பின் உறுப்பினரும் அல்ல... நிர்வாகியும் அல்ல. மேலும் தேசியத் தீர்ப்பு ஆணையத்தின் முடிவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில்தான் வழக்குப் போட முடியுமே தவிர, உயர் நீதிமன்றத்தில் வழக்குப் போட முடியாது'' என்றும் சொன்னார்.\nஒன்பதாம் தேதி இவ்வாறு முடிந்த விவாதம் 11-ம் தேதியும் தொடர்ந்தது...\nமத்திய அரசின் சார்பில் வழக்கறிஞர் ரவீந்திரன் அன்றும் வாதாடினார். ''விடுதலைப் புலிகள் அமைக்க விரும்பிய தமிழீழம் என்பது, தமிழ்நாட்டில் உள்ள சில பகுதிகளையும் உள்ளடக்கியதாக இருந்தது. இது இந்திய இறையாண்மைக்கு எதிரானது. புலிகளின் ஆதரவாளர்கள், தமிழகத்தில் இருந்த சில ஏஜென்டுகள் அவர்களுக்காகக் கடத்தலில் ஈடுபட்டனர். செல்போன்கள், சிம்கார்டுகள், அம்மோனியம் நைட்ரேட், பெட்ரோல், டீசல், மோட்டார் உதிரி பாகங்களைக் கடத்தும் வேலையில் ஈடுபட்ட அவர்கள் மீது சென்னை, மதுரை, ராமநாதபுரம், மண்டபம் உள்ளிட்ட பல இடங்களில் கியூ பிராஞ்ச் மற்றும் லோக்கல் போலீஸ் வழக்கு பதிவு செய்துள்ளது. அந்த அமைப்பைச் சேர்ந்தவர்களுக்கு மாவோயிஸ்ட் தீவிரவாதிகளுடன் தொடர்பு இருந்ததை மத்திய உளவுத்துறை உறுதி செய்துள்ளது. மாவோயிஸ்ட் அமைப்பு இந்தியாவின் அமைதிக்கும் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்துகிற அமைப்பு. இது போன்ற காரணங்களால் இந்தியாவின் பாதுகாப்பையும் அருகில் உள்ள நட்பு நாடுகளின் பாதுகாப்பையும் கருத்தில் கொண்டே புலிகள் அமைப்புக்கு தீர்ப்பாயம் தடைவிதித்துள்ளது'' என்று வாதாடினார்.\nதடையை நீக்கக் கோரி வழக்கறிஞர் புகழேந்தி தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில் அவர் சார்பாக வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன் வாதாடி​னார். ''ஒரு இயக்கத்தை சட்டப்படி தடை செய்ய வேண்டுமானால், அப்போது அந்த இயக்கம் செயல்பட்டுக் கொண்டிருக்க வேண்டும். ஆனால் இந்திய மற்றும் இலங்கை அரசுகளின் கூற்றுப்படி 2009-லேயே விடுதலைப் புலிகள் இயக்கம் அழிந்துவிட்டது. அப்படியானால் செயல்படாத இயக்கத்துக்கு எப்படி தடை விதிக்க முடியும்? எனவே தீர்ப்பாயத்தின் இந்த தடை உத்தரவை ரத்து செய்ய வேண்டும்'' என்று வாதாடினார். தனது தரப்பு வாதங்களை வைகோ மீண்டும் வைத்தார்.\nஇருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ''2009க்குப் பிறகு விடுதலைப்புலிகள் இந்தியாவின் அமைதிக்கு பாதகம் ஏற்படுத்தக்கூடிய நடவடிக்கை​களில் ஈடுபடவில்லை என்றாலும், அதுபோல் எதிர்காலத்தில் நடந்துவிடக்கூடாது என்பதைக்கருத்தில் கொண்டுதான் இந்தத் தடையை விதித்துள்ளது. இந்த வழக்கில் உள்நாட்டு, வெளிநாட்டு பாதுகாப்பு மற்றும் அமைதி ஆகியவற்றை பரிசீலனை செய்தே தீர்ப்பு வழங்க முடியும். ஏனென்றால் வருமுன் காப்பது தான் சிறந்தது'' என்று கூறி இறுதித் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்துள்ளனர்.\nபுலிகள் விவகாரம் எப்போதுமே சர்ச்சையாகத் தொடர்ந்து கொண்டு உள்ளது!
மீண்டும் துவங்கிய கால் சென்டர் டாஸ்க் – ஆரிக்கு கால் செய்தது யாருன்னு பாருங்க.\nவிஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசன் 57 நாட்களை நிறைவு செய்து இருக்கிறது இதுவரை ரேகா வேல்முருகன் சுரேஷ் சக்ரவர்த்தி சுசித்ரா ஆகியோர் வெளியேறிய நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியேறி இருந்தார் மற்ற போட்டியாளர்கள் வெளியேறியது வெளியேற்றம் தான் கொஞ்சம் பரபரப்பாக பேசப்பட்டது அதற்கு முக்கிய காரணமே இவர் வெளியேறுவதற்கு முன்பாக இவருக்கு குறும்படம் போடப்பட்டு இருந்தது.\nமற்ற போட்டியாளர்கள் வழி அனுப்பி வைக்கப்பட்ட விதத்தை விட சம்யுக்தாவை மற்ற போட்டியாளர்கள் வழியனுப்பி வைத்த விதம் மிகவும் நன்றாக இருந்தது என்று தான் சொல்ல வேண்டும். இதனிடையே நேற்றய நிகழ்ச்சியில் கடந்த வாரம் நடைபெற்ற டாஸ்கில் சிறந்த போட்டியாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட ரம்யா, ஜித்தன் ரமேஷ், பாலாஜி ஆகிய மூவருக்கும் இந்த வார தலைவர் பதவிக்கான போட்டி நடைபெற்றது. இதில் ஜித்தன் ரமேஷ் இந்த வாரம் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன் மூலம் அவர் இந்த வார இறுதியில் இருந்து தப்பித்து விட்டார்.\nநேற்று வாரத்தின் முதல் நாள் என்பதால் நாமினேஷன் வேலைகள் துவங்கியது. வழக்கம் போல போட்டியாளர்கள் நாமினேட் செய்ததர்க்கான காரணத்தை கூறி கொஞ்சம் பற்ற வைத்தார் பிக் பாஸ். நேற்று நடைபெற்ற நாமினேஷன் அடிப்படையில் இந்த வாரம் ஆரி, சனம் ஷெட்டி, அனிதா, ஆஜித், சிவானி, ரம்யா, நிஷா ஆகிய7பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதில் கண்டிப்பாக அஜித், சிவானி, நிஷா, அனிதா ஆகிய4பேருக்கு கடும் போட்டிகள் எழுப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nதற்போது பல்வேறு தனியார் வலைத்தளங்களில் நடத்தப்பட்டு வரும் ஓட்டிங்கில் அனிதாவிற்கு தான் வாக்குக்கள் குறைவாக இருந்து வருகிறது. அனிதா கடந்த வாரமே நாமினேஷனில் இடம்பெற்றார். ஆனால், கடந்த வாரம் கொடுக்கப்பட்ட Nomination Topple Card-ஐ வெற்றி பெற்றதால் தனக்கு பதிலாக சம்யுக்தாவை நாமினேட் செய்து கடந்த வாரம் தப்பித்தார் அனிதா என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி ஒரு நிலையில் இன்றைய முதல் ப்ரோமோவில்,கடந்த வாரம் பாதியில் நிறுத்தப்பட்ட கால் சென்டர் டாஸ்க் மீண்டும் துவங்கியுள்ளது. அதில் ஆரிக்கு பாலா கால் செய்து இருக்கிறது.\nPrevious articleபாலா உங்களுக்கு அண்ணனா ? கேள்வி கேட்ட பாலா-ஷிவானி ஆர்மி. கடுப்பாகி சுச்சி கொடுத்த பதில்.\nNext articleஅக்ஷரா ஹாசன் அந்தரங்க புகைப்படங்களை வெளியிட்டது முன்னாள் காதலரான இந்த நடிகரா ? அதுவும் அவர் இந்த கமல் பட நடிகையின் மகனா ?\nபிக்பாஸ் நிகழ்ச்சிக்காக கஸ்தூரிக்கு சம்பளம் தரவில்லையா? விஜய் டிவி விளக்கம்\nஎன்னப்பா, இது கடைசில பாவனிக்கே இப்படி குறும்படம் போட்டுட்டு இருக்காங்க – வைரலாகும் வீடியோ.
தேனி: `கறுப்பு கவுணி புட்டு; சிவப்பு அவல் உப்புமா!’ - அசத்தும் சித்த மருத்துவ சிகிச்சை மையம் | Traditional Foods Served At Theni Siddha Covid Care centre - Vikatan\nகொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு, சித்த மருந்துகளால் சிகிச்சை அளிக்கும் மையத்தில், தமிழர்களின் பாரம்பர்ய உணவுகள் கொடுக்கப்பட்டுவருவது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.\nநம்மிடையே பேசிய மாவட்ட சித்த மருத்துவ அலுவலர், “சித்த மருந்துகள் கொடுப்பதால், உடலில் நல்ல முன்னேற்றம் காண முடிகிறது. மருந்துகள் ஒருபுறம் என்றால், அவர்களுக்கு சத்தான உணவுப் பொருள்கள் கொடுப்பது மிகவும் அவசியம். அந்த வகையில், மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தலின் பேரில், திங்கள் முதல் ஞாயிறு வரை தினமும் விதவிதமான நம் பாரம்பர்ய உணவுகளைக் கொடுத்து வருகிறோம். காலை7மணிக்கு மூலிகை டீ அல்லது காபி கொடுக்கப்படும். இதில், கொத்தமல்லி, அதிமதுரம், துளசி, கருப்பட்டி, இஞ்சி, லெமன் ஆகியவை இருக்கும். 8 மணிக்கு காலை டிபன். இதில், ஒரு நாள், மாப்பிள்ளை சம்பா இட்லி, ஒரு நாள் திணை பொங்கல், நிலக்கடலை சட்னி, இன்னொரு நாள் சாமை பொங்கல் ஆகியவை கொடுக்கிறோம். காலை 11 மணிக்கு லெமன் ஜூஸ் அல்லது நெல்லிக்காய் ஜூஸ் கொடுக்கிறோம்.\n1 மணிக்கு மதிய உணவு. இதில், எள்ளு சாதம், கருவேப்பிலை சாதம், பருப்பு சாதம், உளுந்து சாதம் என ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சாதம் இடம்பெறும். கூடவே, ஒவ்வொரு வகையான கீரைக் கூட்டு இருக்கும். அதனோடு, ஐயங்காய பொடி கலந்த மோர், சீரக தண்ணீர் கொடுக்கிறோம். மாலை4மணிக்கு சூப் கொடுக்கப்படும். தட்டாம்பயறு சூப், கொள்ளு சூப் கொடுத்து, அதனோடு கறுப்பு கவுணி புட்டு, கேழ்வரகு புட்டு எனத் தினம் தினம் ஒவ்வொரு வகையான புட்டு கொடுக்கிறோம். இரவு7மணிக்கு முருங்கை தோசை, புதினா ஊத்தாப்பம், சிவப்பு அவல் உப்புமா, லட்சகெட்ட கீரை தோசை, கேரட் தோசை, கருவேப்பிலை பொடி தோசை எனக் கொடுக்கிறோம். இரவு தூங்கும் முன்னர்,9மணிக்கு மிளகுப்பால் அல்லது பூண்டு பால் அவசியம் குடித்துவிட்டுதான் உறங்கச் செல்ல வேண்டும். இப்படி, தினம் தினம் விதவிதமாக நம் பாரம்பர்ய உணவுகளைக் கொடுத்துவருவதால், தேனி சித்த மருத்துவ சிகிச்சை மையத்தில் உள்ள அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கின்றனர்” என்றார்.
நயி அல் அலி - தமிழ் விக்கிப்பீடியா\nநயி அல் அலி\nநயி அல் அலி (Naji Salim al-Ali), அரபி: ناجي سليم حسين العلي; பிறப்பு: கி. 1938 – 29 ஆகத்து 1987) பாலசுதீனத்தைச் சேர்ந்த கேலி சித்திர ஓவியர் ஆவார்.இவரின் கேலி சித்திரங்கள் பாலஸ்தீன மக்கள் அடைந்த துயரங்களையும் ஒடுக்குமுறையையும், இசுரேலிய ராணுவ ஆக்கிரமிப்பு மற்றும் அரசியல் காரணங்களுக்கான படுகொலைகள் என்று தீவிரமான அரசியல் பிரக்ஞையோடு உருவானவை. நஜி அல் அலி முப்பதாயிரத்திற்கும் அதிகமான கேலி சித்திரங்களை வரைந்திருக்கிறார். தொடர்ந்த அச்சுறுத்தல்கள். கடுமையான தணிக்கை, சிறை தண்டனை என்று அதிகாரம் அவரை முடக்கிய போதும் அவரது செயல்பாடுகள் முடங்கவில்லை. முப்பது ஆண்டுகாலம் புகழ்பெற்ற கேலி சித்திரக்காரராக செயல்பட்டிருக்கிறார்.\n29 ஆகத்து 1987\nஇவர் உருவாக்கிய கற்பனை பாத்திரமான கன்சாலா மிகவும் பிரபலமானதாகும். பத்துவயது தோற்றமுடைய கன்சாலா எப்போதும் முதுகை காட்டிக் கொண்டு கையை பின்னால் மடித்தபடியே தான் நிற்பான். அவன் முகம் யாருக்கும் தெரியாது.\n1987 ம் ஆண்டு லண்டனில் ஒரு சாலையை கடந்துசெல்லும் போது அடையாளம் தெரியாத நபர்களால் கொல்லப்பட்டார் நஜி அல் அலி. ஆனால் இன்றும் அவரது கேலி சித்திரங்கள் தொடர்ந்து மறுபிரசுரம் செய்யப்பட்டு வருகின்றன. உலக அரங்கில் அவரது குரல் இப்போதும் ஒலித்துக் கொண்டுதானிருக்கிறது.\n"https://ta.wikipedia.org/w/index.php?title=நயி_அல்_அலி&oldid=2733848" இருந்து மீள்விக்கப்பட்டது\nLast edited on 16 மே 2019, at 12:30\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 மே 2019, 12:30 மணிக்குத் திருத்தினோம்.
ஓவியா-இனியாவின் பக்கங்கள்: ஓவியாவின் பள்ளிக்கூட அனுபவங்கள் - 1\nஇந்த வலைப்பூவில் எனது இரு மகள்களின் ஆக்கங்கள் மற்றும் அவர்களைப் பற்றிய செய்திகளும் இடம்பெறும்.\n(முதல் நாள் பள்ளிக்கூட வளாகத்தில்)\n(வகுப்பறையை நோக்கி செல்லுதல்)\n(வகுப்பறையில் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள இடத்தில் பையை மாட்டுதல். பைக்குள் புத்தகங்கள் எல்லாம் இருக்காது. அவர்களின் லஞ்ச் பாக்ஸ், ஜாக்கெட் போன்றவைகள் தான் இருக்கும்)\nஇந்த தொடர் பதிவில் ஓவியா, பள்ளிக்கூடத்தில் நடந்த விஷயங்களை எங்களிடம் பகிர்ந்து கொண்டதையும், இங்கு அவருக்கு எவ்வாறு தொடக்க கல்வி (primary education) சொல்லிக்கொடுக்கப்படுகிறது என்பதையும் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். (இங்கு நான் சொல்வதெல்லாம் இங்கில்பெர்ன் பள்ளிக்கூடம்(Ingleburn Public School) பற்றி தான் ).\nஓவியா பள்ளிக்கு செல்ல ஆரம்பித்து முதல் பருவம்(TERM) முடிந்து இப்போது இரண்டு வார விடுமுறையில் இருக்கிறார். இங்குள்ள பள்ளிக்கூடங்கள் எல்லாம் சனவரி மாத கடைசியில் ஆரம்பித்து டிசம்பர் மாதம் பதினைந்து தேதிகளில் முடிவு பெரும். ஒவ்வொரு மூன்று மாதமும் ஒரு பருவமாக (TERM) சொல்லப்படுகிறது. முதல் மூன்று பருவங்கள் முடிவடையும்போது, இரண்டு வார விடுமுறை அளிக்கப்படுகிறது. கடைசி பருவத்தில் தான் ஆறு வார விடுமுறை அளிக்கப்படுகிறது. காலை9மணிக்கு தொடங்கி மதியம்3மணிக்கு முடிவடைகிறது. இதில் 11 மணியிலிருந்து 11.30 மணிக்கு இடைவேளை. பிறகு மதிய உணவிற்கான இடைவேளை 1மணியிலிருந்து 1.40 மணி வரை. இதில் முதல் பத்து நிமிடம் சாப்பிடுவதற்கான நேரம். அடுத்து வரும் முப்பது நிமிடங்களும் விளையாட்டு நேரம். பத்து நிமிடத்திற்குள் சாப்பிட வேண்டும் என்று அவசியமில்லை, 40 நிமிடத்திற்குள் சாப்பிட்டு முடிக்க வேண்டும். ஆனால் எல்லா குழந்தைகளும் முதல் 10 நிமிடத்திற்குள் என்ன சாப்பிடுகிறார்களோ,அது தான் அவர்களின் மதிய உணவு. பிறகு விளையாட ஆரம்பித்து விடுகிறார்கள். இதில் பள்ளியிலேயே உணவகமும் இருக்கிறது. அதற்கு காலையிலேயே ஆர்டர் செய்து விடவேண்டும். "பள்ளி வங்கி"(School Banking) ஒன்று ஒவ்வொரு செவ்வாய்க்கிழமை காலையில் "Common Wealth Bank" என்ற வங்கி நடத்துகிறது. இதில் குழந்தைகள் தங்கள் பெற்றோர்கள் தங்களுக்கு கொடுக்கும் பணத்தை, தங்களின் பெயரிலியே அந்த வங்கியில் கணக்கை ஆரம்பித்து சேமிக்கலாம்.\nஒவ்வொரு திங்கட் கிழமை காலையிலும் எல்லா வகுப்பு மாணவ மாணவியரும் ஒருங்கிணைத்து அசெம்ப்ளி (assembly) நடக்கும். அப்போது கொடியேற்றம் நடக்கும். இந்த அசெம்ப்ளியையும், கொடியேற்றத்தையும் பள்ளித் தலைவர்களாக (School Leader) விளங்கும் மாணவ மாணவியர்களே நடத்துவார்கள்.அப்போது ஆஸ்திரேலியாவின் தேசிய கீதத்தையும் , பள்ளிக்கான பாடலையும் படுவார்கள்.\nஓவியா இப்போது பாலர் பள்ளியில் (kinder garden) படிக்கிறார். ஐந்து வயதில் பாலர் கல்வி (kinder garden), ஆறு வயதில் ஒன்றாம் வகுப்பு என்று படிக்க ஆரம்பிப்பார்கள். தொடக்க பள்ளியானது (Primary School ) பாலர் வகுப்பிலிருந்து ஆறாம் வகுப்பு (Kinder to Year6) வரை உள்ள பள்ளிக்கூடம். உயர் நிலைப் பள்ளியானது (High School) ஏழாம் வகுப்பிலிருந்து பனிரெண்டாம் வகுப்பு வரை உள்ள பள்ளிக்கூடம்.\nஇங்குள்ள தொடக்க கல்வி முறை சற்றே வித்தியாசமாக இருக்கிறது. அதாவதுபாலர் வகுப்பிற்கு, ஆங்கிலம் மற்றும் கணிதம் தான் பாடங்கள். அந்த இரண்டு பாடங்களையும் எவ்வாறு சொல்லிக்கொடுக்கிறார்கள் என்பதை இனி வரும் பகுதிகளில் பார்க்கலாம்.\nஇடுகையிட்டது Chokkan Subramanian நேரம் முற்பகல் 5:53\n‘தளிர்’ சுரேஷ் 15 ஏப்ரல், 2014 ’அன்று’ முற்பகல் 6:45\nகொடுத்து வைத்த குழந்தைகள்! இங்கு இரண்டரை வயதிலேயே பள்ளி என்னும் சிறையில் தள்ளி தேவையில்லாததையெல்லாம் திணித்து குழந்தையை கொடுமை படுத்துகிறார்கள்! தொடர்ந்து பகிருங்கள்! நன்றி!\nகரந்தை ஜெயக்குமார் 15 ஏப்ரல், 2014 ’அன்று’ முற்பகல் 7:50\nநமது நாட்டிலும் ஒரு காலத்தில் ஐந்தாவது வயதில்தான் குழந்தைகளைச் சேர்த்தார்கள். இன்று Lower Kinder Garden. Upper Kinder Garder இருப்பது போதாதென்று Pre Kinder Garden வேறு வந்துவிட்டது.\nதிண்டுக்கல் தனபாலன் 15 ஏப்ரல், 2014 ’அன்று’ முற்பகல் 10:37\n// வங்கியில் கணக்கை ஆரம்பித்து சேமிக்கலாம் // அட...!\nIniya 15 ஏப்ரல், 2014 ’அன்று’ பிற்பகல் 7:36\nநல்ல விடயம் சீருடை அணிவது அத்துடன் சேமிப்புப் பழக்கம் ம்...ம்//ம் நல்லது. அத்துடன் நல்ல மகிழ்ச்சியாகவே உள்ளார். so cute நன்றாக படிக்கவேண்டும் ஓவியா சரிதானே. good girl.\nவாழ்த்துக்கள் ... ! ஓவியா\nChokkan Subramanian 18 ஏப்ரல், 2014 ’அன்று’ முற்பகல் 3:31\nThank you aunty - oviya\nஇராஜராஜேஸ்வரி 15 ஏப்ரல், 2014 ’அன்று’ பிற்பகல் 8:14\nஅம்பாளடியாள் வலைத்தளம் 16 ஏப்ரல், 2014 ’அன்று’ முற்பகல் 12:35\nகுழந்தையின் மகிழ்வில் மனம் மயங்கிப் போகிறது ஓவியாவிற்கு\nஎன் இனிய வாழ்த்துக்கள் .திட்டமிட்டு வாழும் வாழ்வே தித்திக்கும்\nஎன்ற கருத்தைத் தாங்கி நிற்கிறது பகிர்வு உங்களுக்கும் என் இனிய\nChokkan Subramanian 18 ஏப்ரல், 2014 ’அன்று’ முற்பகல் 3:35\nBagawanjee KA 16 ஏப்ரல், 2014 ’அன்று’ முற்பகல் 7:39\nநம்ம ஊர் பள்ளிகளில் குழந்தைகளின் சேமிப்பு ஆர்வத்தை ஊக்குவிக்க சஞ்சாயிகா திட்டம் இருப்பதைப் போன்றே அங்கேயும் பள்ளி வங்கி இருப்பது அறிய மகிழ்ச்சி !\nMythily kasthuri rengan 17 ஏப்ரல், 2014 ’அன்று’ பிற்பகல் 7:28\nஇனியாவிற்கு என் வாழ்த்துக்கள் !\nசேமிப்பு பழக்கம் அருமை சகோ!\nஇதில் சில விஷயங்கள் நம் அரசுப்பள்ளிகளிலும் உள்ளன சகோ(trimester)\nChokkan Subramanian 18 ஏப்ரல், 2014 ’அன்று’ முற்பகல் 3:39\nThank you aunty - iam oviya\nவெங்கட் நாகராஜ் 18 ஏப்ரல், 2014 ’அன்று’ முற்பகல் 6:30\nபுதிய தகவல்கள்.... இந்தியாவில் மூன்று வயதிலேயே பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பி விடுகிறார்கள். அதுவும் தில்லியில் காலை ஏழு மணிக்கே பிள்ளைகளை அழைத்துச் செல்ல பேருந்து/வாகனம் வந்து விடுகிறது!\nMathu S 19 ஏப்ரல், 2014 ’அன்று’ முற்பகல் 5:08\nவாழ்த்துக்கள் ஓவியா ...\nநான் தொடர்ந்து வாசிக்க ஆவலுடன் காத்திருக்கும் பதிவுகள் இவை ...நன்றி\nChokkan Subramanian 24 ஏப்ரல், 2014 ’அன்று’ முற்பகல் 4:24\nThank you uncle - oviya\nஎங்களின் வலைப்பூவிற்கு வந்தவர்கள்
பிறந்த நாளில் சோகம்! கார் விபத்தில் உயிரிழந்த நிருபர் ஷாலினிக்கு ஊடகத்தினர் கண்ணீர் அஞ்சலி! - தினசரி\nபிறந்த நாளில் சோகம்! கார் விபத்தில் உயிரிழந்த நிருபர் ஷாலினிக்கு ஊடகத்தினர் கண்ணீர் அஞ்சலி!\nதிண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள,பள்ளபட்டியில் வசிக்கும் சின்ன மருதுபாண்டியன் மகள் அங்கையர்கரசி, சென்னை மாலை முரசு அலுவலகத்தில் பணிபுரிகிறார்.\nஅவரைப் பார்க்க அவரது அலுவலகத்தில் பணிபுரியும் நண்பர்கள் ஷாலினி, ராம்குமார், சதீஸ், கோகுல், பிரபுராஜ் ஆகியோர் பள்ளபட்டி வந்து சந்தித்து விட்டு, பள்ளப்பட்டியிலிருந்து சென்னை செல்ல கிளம்பினார்கள். மதுரை – திண்டுக்கல் சாலையில் பொட்டிகுளம் அருகில் வந்த போது வாகனம் கட்டுபாட்டை இழந்து இடது புற பள்ளத்தில் விழுந்ததில் அனைவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.\nகாயமடைந்தவர்களை ஆம்புலன்ஸ் மூலம் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் செய்தியாளர் ஷாலினி மரணம் அடைந்தார். அவர் தனது பிறந்த நாளை அன்றுதான் கொண்டாடினார்.\nஇந்த விபத்து தொடர்பாக அம்மைய நாயக்கனூர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nமாலைமுரசு டிவி செய்தியாளர் ஷாலினியின் கோர மரணம் குறித்து அமைச்சர் ஜெயக்குமார் உருக்கமான இரங்கல் தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பாக அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தி: மாலைமுரசு தொலைக் காட்சியின் நிருபர் ஷாலினி விபத்தில் உயிரிழந்தார் என்ற செய்தி கேட்டு ஒருகணம் நிலைகுலைந்து போனேன். தினமும் காலைநேரத்தில் நான் அலுவலகம் கிளம்பும் முன் எனது வீட்டருகே செய்தியாளர்களை சந்திப்பது வழக்கம்.\nபோய் வா ஷாலினி, புதிய பிறவியில் இன்னும் பொலிவுடன் வா…\nமுதல்வர் எடப்பாடி இரங்கல்- நிதியுதவி அறிவிப்பு: இதற்கிடையே ஷாலினியின் மறைவு குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் மரணமடைந்த ஷாலினி குடும்பத்துக்கு ரூ.3லட்சம் நிதியுதவியையும் அவர் அறிவித்துள்ளார்.\nஷாலினி கடைசியாகக் கொண்டாடிய பிறந்த நாளில்…\nபத்திரிகையாளர் ஷாலினியின் மறைவுக்கு ஊடக உலகத்தினர் பலரும் தங்கள் கண்ணீர் அஞ்சலியை செலுத்தி வருகின்றனர். சமூக வலைத்தளங்களில் தங்கள் அனுபவங்களையும் கண்ணீரையும் மறைந்த பெண் நிருபருக்கு காணிக்கை ஆக்கி வருகின்றனர்.\nஜூனியர் விகடனில் ஆசிரியராகப் பணிபுரிந்த பத்திரிகையாளர் திருமாவேலன் வரைந்த கண்ணீர் மடல் இது…\nஒரு விபத்து ஒரு பத்திரிக்கையாளரின் வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி வைத்துவிட்டது. நான்கு பத்திரிக்கையாளர்களின் எதிர்காலத்தை துயரமானதாக ஆக்கி இருக்கிறது.\nஇந்தத் தகவலை வினோத்ராஜ் அனுப்பியபோது ஏற்பட்ட அதிர்ச்சி தமிழ் அதை விவரித்தபோது அதிகமானது.\nஇறந்து போன பத்திரிக்கையாளர் ஷாலினிக்கு அன்று தான் பிறந்தநாள். இன்னொரு பத்திரிகை தோழியின் வீட்டுக்கு சென்றுவிட்டு திரும்புகிறார்கள். இன்றைய தினம் அவர்கள் அனைவரும் வேறொரு நிறுவனத்தில் பணிக்குச் சேர வேண்டும்.\nகாலம் இவர்களது கனவை நிறைவேற்றித் தரத் தயாரான நேரத்தில் விபரீத விபத்து நடந்துள்ளது. சதீஷ் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nபத்திரிக்கையாளன் என்ற தொழிலே போராட்டமானது. தனக்கானது அல்ல. சமூகத்துக்கானது. ஷாலினியின் குடும்பத்துக்கு ஏற்பட்ட இழப்பு அல்ல. சமூகத்துக்கானது.\nஇந்த நேரத்தில் சொல்வதற்கு இருப்பது ஒன்றுதான்.. செய்திக்காகவும் விருப்பத்தின் பொருட்டும் தம்பி/ தங்கைகள் அதிகமாய் பயணம் செல்கிறார்கள். அவசரப் பயணம்/ விரைவுப் பயணம்/ இரவுப் பயணம் எப்போதும் வேண்டாம்.\nநம்மைவிட நாம் செல்லும் வாகனம் சரியாக இருக்கிறதா எனப் பாருங்கள். என்ன தான் திறமையாக வாகனம் ஓட்டத் தெரிந்தவராக இருந்தாலும் தூரப் பயணங்களுக்கு தனி ஓட்டுநர்களை வைத்துக் கொள்ளுங்கள். பயணங்கள் இனிமையானது மட்டுமல்ல துயரமானது.\nபத்திரிகையாளர் ஷாலினியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தும், தமிழக அரசு நிதி உதவி அறிவித்ததற்கும் நன்றி தெரிவித்து தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு நலச் சங்கத்தின் சார்பில் வெளியிடப் பட்ட அறிக்கை…\nமாலைமுரசு டிவி செய்தியாளர்
போராடி ஜெயிச்சுட்டு.. 12 லட்சம் அபராதம் கட்டிட்டு வந்த விராட் கோலி! எதுக்கு தெரியுமா? | IPL 2019 KXIP vs RCB : Virat Kohli fined for slow over rate - myKhel Tamil\n» போராடி ஜெயிச்சுட்டு.. 12 லட்சம் அபராதம் கட்டிட்டு வந்த விராட் கோலி! எதுக்கு தெரியுமா?\nபோராடி ஜெயிச்சுட்டு.. 12 லட்சம் அபராதம் கட்டிட்டு வந்த விராட் கோலி! எதுக்கு தெரியுமா?\nPublished: Sunday, April 14, 2019, 13:10 [IST]\nபெங்களூரு அணி கேப்டன் கோஹ்லிக்கு ஐபிஎல் நிர்வாகம் அபராதம்\nமொஹாலி : 2019 ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணி, பஞ்சாப் அணியை வீழ்த்தி தன் முதல் வெற்றியை போராடி பதிவு செய்தது.\nதான் ஆடிய முதல் ஆறு போட்டிகளிலும் தோல்வி அடைந்த பெங்களூர் அணி, ஏழாவது போட்டியில் தான் முதல் வெற்றியை பதிவு செய்தது. ஆனால், இதே போட்டிக்குப் பின் பெங்களூர் அணி கேப்டன் கோலிக்கு அபராதம் விதித்தது ஐபிஎல் நிர்வாகம்..\nராயுடு, தோனி, ரிஷப் பண்ட்.. யாருமே வேணாம்.. இவரைக் கூட்டிட்டு வாங்க.. கம்பீர் அதிரடி!\nஐபிஎல் ஓவர் விதி\nஐபிஎல் விதிகளின்படி குறிப்பிட்ட நேரத்திற்குள் பந்துவீசும் அணி ஓவர்களை வீசி முடிக்க வேண்டும். குறிப்பிட்ட கால அளவைத் தாண்டி இன்னிங்க்ஸ் நீண்டு கொண்டே சென்றால், எந்த பந்துவீசும் அணி அதிக நேரம் எடுத்துக் கொண்டதோ அந்த அணியின் கேப்டனுக்கு அபராதம் விதிக்கபடுகிறது.\nஅந்த வகையில் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பந்துவீசிய பெங்களூர் அணி அதிக நேரம் எடுத்துக் கொண்டது. அதனால் முதல் இன்னிங்க்ஸ் முடிய இரவு 9.45 ஆனது. சுமார் 15 நிமிடம் அதிக நேரம் எடுத்துக் கொண்டுள்ளது பெங்களூர்.\n12 லட்சம் அபராதம்\nஎனவே, முதல் முறையாக இந்த தவறை செய்யும் பெங்களூர் அணி கேப்டன் கோலிக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. இந்தத் தொகையை கேப்டன் தனது கணக்கில் இருந்து கொடுக்கமாட்டார். ஐபிஎல் அணி உரிமையாளர்களே இதை ஏற்றுக் கொள்வார்கள் என சிலர் கூறுகிறார்கள்.\nஇது சாமானிய மக்களுக்கு பெரிய தொகையாக தெரிந்தாலும், ஐபிஎல் அணிகளுக்கு சாதாரணத் தொகை மட்டுமே. வெற்றி பெற்றால் போதும். இந்த "இதர செலவினங்கள்" எல்லாம் அவர்களுக்கு பொருட்டல்ல என்பது போலத் தான் இருக்கிறது.\nஏற்கனவே, இந்த சீசனில் ராஜஸ்தான் கேப்டன் ரஹானே, மும்பை கேப்டன் ரோஹித் சர்மா ஓவர்களை வீசி முடிக்க அதிக நேரம் எடுத்துக் கொண்டதற்காக அபராதம் கட்டி இருக்கிறார்கள். கோலி அந்த வரிசையில் இணைந்துள்ளார்.\nஎன் ஓவர்-லயே தாறுமாறா அடிக்கிறீங்களா.. வரிசையாக விக்கெட் எடுத்து பழி தீர்த்த ஹர்பஜன் சிங்!\nகேதார் ஜாதவ்வுக்கு இனி ஐபிஎல் இல்லை.. உலகக்கோப்பையும் சந்தேகம் தான்.. பதறும் ரசிகர்கள்.. என்ன ஆச்சு?\nசின்னப்புள்ள மாதிரி தப்பு செய்த ராகுல்.. கூலிங் கிளாஸ் வழியே நெருப்பை கக்கிய கேப்டன் அஸ்வின்!\nசிஎஸ்கே காலை வாரி விட அஸ்வின் போட்ட திட்டம்.. கீழே விழுந்தாலும் மீசை-ல மண் ஒட்டல.. தோனி குஷி!\nஎன்னங்க.. பேசிட்டே இருந்தாரு.. படக்குன்னு கேட்ச்சை பிடிச்சுட்டாரு.. ஆச்சரியத்தில் ரசிகர்கள்!!\nநாங்க பிளே-ஆஃப் போகணும்னா.. ஹைதராபாத் தோற்கணும் சாமி.. பரிதாப நிலையில் சிக்கிய3அணிகள்!!\nஐபிஎல்லில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்படுகிறது பஞ்சாப் அணி? பின்னணியில் போதை பொருள்… ரசிகர்கள் ஷாக்\nRead more about: kings xi punjab royal challengers bangalore ipl 2019 indian premier league cricket கிங்ஸ் லெவன் பஞ்சாப் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஐபிஎல் 2019 இந்தியன் பிரீமியர் லீக்\nIPL 2019 KXIP vs RCB : Virat Kohli fined for slow over rate\nStory first published: Sunday, April 14, 2019, 13:10 [IST]
கமல் அருவருப்பான மனிதர்: ஏகப்பட்ட குற்றச்சாட்டுடன் மிர்ச்சி சுசித்ரா! - தினசரி தமிழ்\nMay 8, 2021, 10:18 am Saturday\n22/01/2021 5:57 PM\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் இறுதிப்போட்டியில் தனக்கு வழங்கப்பட்ட ஆடை குறித்தும், நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய நடிகர் கமல் குறித்தும் பாடகி சுசித்ரா கடுமையாக விமர்சித்துள்ளதாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nரேடியோ ஜாக்கி, பாடகி என சினிமாவில் புகழ்பெற்ற சுசித்ரா, சில வருடங்களுக்கு முன் சுசிலீக்ஸ் என்ற பெயரில் திரையுலக பிரபலங்கள் பற்றி வெளியிட்ட கருத்துக்கள் கடும் சர்ச்சைகளை கிளப்பியது. இதனைத் தொடர்ந்து அவர் கடந்தாண்டு தொடங்கிய தனியார் தொலைக்காட்சியின் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4வது சீசனில் கலந்து கொண்டார்.\nஆனால் எதிர்பார்த்த அளவு அவரிடம் இருந்து நிகழ்ச்சிக்கான எந்த விளைவும் ஏற்படாததால்2வாரங்களில் அவர் வெளியேற்றப்பட்டார்.\nஇந்நிலையில் கடந்த ஜனவரி 18 ஆம் தேதி பிக்பாஸ் நிகழ்ச்சியின் இறுதி நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது சுசித்ரா உள்ளிட்ட பிக்பாஸ்-4ல் பங்கேற்ற அனைவரும் கலந்து கொண்டனர்.\nஅந்த நிகழ்ச்சியில் நெசவாளர்களின் நலன் கருதி, கமல்’House Of Khaddar’ என்ற புதிய பிராண்டை அறிமுகப்படுத்தினார். அதுமட்டுமல்லாமல் போட்டியாளர்களுக்கு அந்த பிராண்டில் தயாரான ஆடைகளை வழங்கி அணிந்துகொள்ள சொன்னார்.\nஆனால் நிகழ்ச்சியில் தனக்கு வழங்கப்பட்டது கதர் ஆடை இல்லை என்றும், சிந்தெடிக் உடை என்றும் சுசித்ரா பெயரில் வெளியான இன்ஸ்டாகிராம் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் ஒரு அருவருப்பான மனிதர் என்றும், கைப்பாவை மாஸ்டர் என்றால் அது கமல் தான் எனவும் அந்த பதிவில் தெரிவித்ததாகவும், சிறிது நேரத்தில் அந்த பதிவு நீக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.\nஇதன் ஸ்கிரீன்ஷாட் தற்போது இணையத்தில் பரவி வருவதால், சுசித்ரா எதிராக பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.\nஆசிரியர் என்பவர் தெரியாத விஷயங்களை மாணவர்களுக்கு கற்று தருபவர். இதற்காக ஆசிரியர்கள் சிறப்பு கல்வியும் பயிற்சியும் பெற்றவர்களாக இருக்கின்றனர். அப்படிப்பட்ட ஆசிரியர்களைப் பற்றி பொதுவாக குழந்தைகள் மற்றும் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு கனவு வருவது உண்டு. இப்படி கனவு வருவதினால் கிடைக்கும் பலன்களை குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.\nநீங்கள் மாணவர்களுக்கு அல்லது யாருக்காவது கற்பிக்கும் ஒரு ஆசிரியர் என்று கனவு கண்டால், அந்த கனவு பெரும்பாலும் உங்களுக்குத் தெரிந்த ஒன்றை மற்றவர்களுக்கு கற்றுக்கொடுக்க நீங்கள் விரும்புவதை குறிக்கும் அல்லது உங்கள் அறிவை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள உங்களுக்கு இருக்கும் விருப்பத்தை இது பிரதிபலிக்கிறது.\nSuprasanna Mahadevan - 07/05/2021 1:06 PM\nSuprasanna Mahadevan - 07/05/2021 12:51 PM\nSuprasanna Mahadevan - 06/05/2021 1:52 PM\nSuprasanna Mahadevan - 06/05/2021 12:39 PM\nSuprasanna Mahadevan - 06/05/2021 11:55 AM
பாலியல் தொல்லை தந்த காவலர்... பேருக்கு நடவடிக்கை எடுத்த காவல்துறை... சாட்டையைச் சுழற்றிய நீதிமன்றம்! - Madurai high court bench condemns lack of action in woman sexual abuse case - Vikatan\nபெண்ணிடம் அத்துமீறி நடந்துகொண்ட காவலர் மீது பேருக்கு நடவடிக்கை எடுத்த தென்காசி மாவட்ட காவல்துறை.\nதென்காசி மாவட்டம் சில்லிகுளத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன், மணிமுத்தாறு பட்டாலியனில் காவலராகப் பணியாற்றி வருகிறார்.\nஇவர் கடந்த 3-ம் தேதி மது போதையில் சங்கரன்கோயில் பேருந்து நிலையத்தில், பாசி மாலை வியாபாரம் செய்யும் பெண்ணுக்குப் பாலியல் தொல்லை கொடுத்தார். இதை அங்கிருந்த மக்கள் தடுத்து, அப்பெண்ணை அவரிடமிருந்து மீட்டனர்.\nபட்டப்பகலில் பொதுமக்கள் முன்னிலையில் காவலர் ராமச்சந்திரன் பெண்ணிடம் கேவலமாக நடந்துகொண்ட இந்தச் செயலை சிலர் வீடியோ எடுத்து சமூக ஊடகங்களில் பகிர்ந்ததால் இதைப் பார்த்து மக்கள் மத்தியில் அதிர்ச்சியும் பரபரப்பும் ஏற்பட்டது.\nஇந்தத் தகவல் இத்தனை தூரம் பரவியும், தென்காசி மாவட்ட காவல்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்தனர்.\nஇந்த நிலையில்தான் கடந்த 4-ம் தேதி உயர் நீதிமன்றம் மதுரைக்கிளை நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு, சமூக வலைதளத்தில் வந்த இந்தத் தகவலை, தாமாக முன்வந்து வழக்காக எடுத்து விசாரித்தனர்.\n"பெண்களுக்குப் பாதுகாப்புத் தர வேண்டிய காவலர், பெண்ணிடம் இப்படி நடந்து கொண்டதை ஏற்றுக்கொள்ளவே முடியாது. பொது இடங்களில் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது. இந்தச் சம்பவத்தில் தென்காசி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பதில் அளிக்க வேண்டும்" என்று உத்தரவிட்டார்கள்.\nமேலும், ''இதுபோன்ற மோசமான சம்பவங்கள் சமூக வலைதளங்கள், பத்திரிகைகளில் வெளியாகும்போது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்டவர் புகார் கொடுப்பார்கள் என்று காத்திருக்கக்கூடாது. உடனடியாக சம்பந்தப்பட்டவர்களைக் கைது செய்ய வேண்டும்.\nஅதுமட்டுமல்லாமல் இதுபோன்ற தகவல்கள் சமூக ஊடகங்கள், பத்திரிகைகளில் வெளிவருவதைக் கண்காணிக்கக் குழு ஒன்றை ஏற்படுத்த வேண்டும். உயர் அதிகாரிகளும் இதைக் கண்காணிக்க வேண்டும்.\nஅரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள் மீது அவதூறு பரப்பும் வகையில் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டால் உடனே சம்பந்தப்பட்டவர் மீது நடவடிக்கை எடுக்கும் காவல்துறையினர், அதுபோல் பொதுமக்கள் காவல்துறையினரால் பாதிக்கப்படும்போது நடவடிக்கை எடுப்பதில்லை. கேட்டால், யாரும் புகார் தரவில்லை என்று கூறுகிறார்கள். இதுபோன்ற சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர் யாரும் புகார் கொடுக்க வரமாட்டார்கள். காவல்துறை அதிகாரிகள்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று நீதிபதிகள் கடுமையுடன் தெரிவித்தனர்.\nஇந்த வழக்கில் பதில் அளிக்கும்படி தமிழக தலைமைச் செயலாளர், காவல்துறை தலைவர் ஆகியோரையும் எதிர் மனுதாரராகச் சேர்த்து வருகிற 11-ம் தேதிக்கு வழக்கை தள்ளிவைத்து உத்தரவிட்டனர்.\nஉயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவு மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற நிலையில், சுதாரித்துக்கொண்ட தென்காசி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உத்தரவால், சங்கரன்கோயில் நகர் காவல்துறையினர் பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவரிடம் புகார் பெற்று காவலர் ராமச்சந்திரன் மீது வழக்குப் பதிவு செய்தனர்.\nஐ.பி.சி 294 (பி), 323 ஆகிய பிரிவுகளில் மட்டும் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், சொந்த ஜாமீனில் ராமச்சந்திரனை விடுவித்தது தற்போது மேலும் சர்ச்சையாகியுள்ளது.\nபட்டப்பகலில் பெண்ணுக்குக் காவலரே பாலியல் தொல்லை கொடுக்கும் அளவுக்குத்தான் இங்கு பெண்களின் பாதுகாப்பு இருக்கிறது. இந்தச் சம்பவத்துக்கு காவல்துறையும் அரசும் வெட்கித் தலைகுனிய வேண்டும்.
சிலிர்க்க வைக்கும் அம்சங்களுடன் புதிய மெர்சிடிஸ் மேபக் ஜிஎல்எஸ் 600 உயர்ரக எஸ்யூவி அறிமுகம்! - Tamil DriveSpark\nசிலிர்க்க வைக்கும் அம்சங்களுடன் புதிய மெர்சிடிஸ் மேபக் ஜிஎல்எஸ் 600 உயர்ரக எஸ்யூவி அறிமுகம்!\nமெர்சிடிஸ் மேபக் பிராண்டில் மிக உயர்ரக எஸ்யூவி மாடல் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.\nமெர்சிடிஸ் மேபக் ஜிஎல்எஸ் 600 என்ற பெயரில் இந்த புதிய சொகுசு எஸ்யூவி வந்துள்ளது. பென்ட்லீ பென்டைகா, ரோல்ஸ்ராய்ஸ் கல்லினன் மற்றும் மஸேரட்டி லெவன்டே ஆகிய மிக உயர் ரக எஸ்யூவி மாடல்களுக்கு போட்டியாக நிலைநிறுத்தப்படுகிறது.\nஇந்த எஸ்யூவியின் முகப்பில் பிரம்மாண்ட க்ரில் அமைப்பு, எல்இடி ஹெட்லைட்டுகள் இடம்பெர்றுள்ளன. இதன் க்ரோம் பூச்சுடன் கூடிய க்ரில் அமைப்பு மிக பிரம்மாண்டமான முகப்புத் தோற்றத்தை வழங்குகிறது. பம்பர் பகுதியிலும், ஸ்கிட் பிளேட்டிலும் க்ரோம் பூச்சு பாகங்களுடன் வசீகரிக்கிறது. இதன் பானட் அமைப்பு சாதாரண ஜிஎல்எஸ் எஸ்யூவியை ஒத்திருக்கிறது.\nஇந்த காரில் மிக பிரம்மாண்ட வீல் ஆர்ச்சுகள், 23 அங்குல அலாய் சக்கரங்கள், ரூஃப் ரெயில்கள் என மிக பிரம்மாண்டமாக இருக்கிறது. க்ரோம் பூச்சுடன் காரின் பி பில்லரும், டி பில்லரில் மெர்சிடிஸ் மேபக் பிராண்டின் முத்திரை சின்னமும் இடம்பெற்றுள்ளன.\nஇந்த எஸ்யூவியானது4சீட்டர் மற்றும்5சீட்டர் மாடல்களில் கிடைக்கும். மேலும், பின் இருக்கைகள் சாய்மான வசதி, மசாஜ் வசதிகளை பெற்றிருக்கும். இது பயணத்தின்போது சோர்வை போக்கும் விதமாக அமையும்.\nஇந்த காரின் உட்புறம் மிக தாராள இடவசதியை பெற்றிருக்கிறது. இந்த காரில் உயர்ரக நப்பா லெதர் வேலைப்பாடுகளுடன் உன்னத உணர்வை தருகிறது. பின்புறத்தில் இரண்டு அல்லது மூன்று இருக்கைகள் கொண்ட மாடல்களில் கிடைக்கிறது. இதில், இரண்டு பக்கவாட்டு இருக்கைகளும் சாய்மான வசதியுடன் கிடைக்கும்.\nஇந்த கார் 3,135 மிமீ வீல் பேஸ் நீளத்தை பெற்றிருக்கிறது. இதன்மூலமாக, பின்புற இருக்கையில் அமரும் பயணிகள் 1,103 மிமீ லெக் ரூம் இடவசதியை பெறும் வாய்ப்பை பெற முடியும். இதன்4சீட்டர் மாடலில் நடுவில் இரண்டு இருக்கைகளுக்கும் இடையில் தடுப்பு அமைப்பு கொடுக்கப்பட்டு இருக்கிறது.\nஇந்த தடுப்பு அமைப்பு ஆர்ம் ரெஸ்ட் ஆக இருப்பதுடன், இதில் கப் ஹோல்டர், ரியர் ஏசி வென்ட்டுகள், மடக்கி விரிக்கும் சிறிய அளவிலான மேஜைகள் ஆகியவை இடம்பெற்றுள்ளன. இது பயணத்தின்போது மிக சொகுசான அனுபவத்தையும், வசதிகளையும் தரும்.\nஇந்த காருக்கு ஆப்ஷனலாக ஏர் பேலன்ஸ் என்ற விசேஷ பேக்கேஜ் வழங்கப்படுகிறது. இதன்மூலமாக, வாடிக்கையாளரின் விருப்பத்தின் பேரில் நறுமணம் வழங்கும் திரவியம் காருடன் வழங்கப்படும். அழகிய வேலைப்பாடுகள் மற்றும் கட்டுப்பாட்டு அமைப்புடன் கூடிய டேஷ்போர்ட் மற்றும் ஸ்டீயரிங் வீல் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன.\nஇந்த காரில் ஏர்மேட்டிக் ஏர் சஸ்பென்ஷன் அமைப்பு, அடாப்டிவ் டேம்பிங் சிஸ்டம், இ-ஆக்டிவ் பாடி கன்ட்ரோல் சிஸ்டம் உள்ளிட்ட உயர் வகை சஸ்பென்ஷன் தொழில்நுட்பங்கள் உள்ளன. இதனால், அலுங்கல், குலுங்கல் இல்லாத மிக சொகுசான பயண அனுபவத்தை பெற முடியும்.\nமேலும், ஏதாவது ஒரு சக்கரம் பள்ளத்தில் விழுந்தால், அதன் அதிர்வுகள் டேம்பர் மூலமாக தானாக சரிசெய்து கொள்ளும். இதனால், அதிர்வுகள் இல்லாத பயணத்தை இந்த கார் வழங்கும் என்று மெர்சிடிஸ் மேபக் தெரிவித்துள்ளது. மொத்தத்தில் மெர்சிடிஸ் மேபக் ஜிஎல்எஸ் 600 எஸ்யூவி உயர்ரக சொகுசு எஸ்யூவி மாடல்களை வாங்க திட்டமிட்டிருப்போரின் எதிர்பார்ப்புகளை நிச்சயம் பூர்த்தி செய்யும் என்று நம்பலாம்.\nMercedes-Maybach has revealed of its GLS 600 luxury SUV and it will enter the international market by next year.
புதிய பஸ்நிலையத்தில் ஓட்டுநர், நடத்துனர்களுக்கு முகக்கவசம் | Dinakaran\nபுதுச்சேரி, மார்ச் 19: உலகம் முழுவதும் ஆட்கொல்லி நோயான கொரோனா வைரஸ் வேகமாக பரவுகிறது. இந்தியாவிலும் இந்நோயின் தாக்கம் தீவிரமடைந்து வருகிறது. புதுச்சேரி மாநிலம் மாகேவில் மூதாட்டி ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பரவாமல் தடுக்க அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, புதுச்சேரி புதிய பேருந்து நிலையத்தில் ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கு முகக்கவசம், கை கழுவும் திரவம் வழங்கப்பட்டது. இதனை அமைச்சர் ஷாஜகான் வழங்கினார். நிகழ்ச்சியில் போக்குவரத்து ஆணையர் சிவக்குமார் மற்றும் பேருந்து உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.\nதொடர்ந்து, அமைச்சர் ஷாஜகான் நிருபர்களிடம் கூறும்போது, கொரோனா வைரஸ் கோவிட்-19 உலகம் முழுவதும் பரவி வருகிறது. நடத்துநர்கள் டிக்கெட் வாங்குவது, பேருந்து கம்பிகளை பிடிப்பதன் மூலம் வைரஸ் பரவ வாய்ப்புள்ளது. அதனால், ஓட்டுநர், நடத்துநர் பாதுகாப்பாக இருக்க வேண்டும். முகக்கவசம் அணிந்து கொள்ள வேண்டும். கிருமி நாசினிகளை பயன்படுத்த வேண்டும். புதுச்சேரி மாநில பேருந்துகள் மட்டுமின்றி, தமிழகம் உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து வரும் பேருந்துகளுக்கும் கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது. கொரோனா வைரசில் இருந்து பொதுமக்கள் விழிப்புணர்வோடும், பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும் என்றார்.\nTags : bus stand ,drivers ,conductors ,
father who killed his son in Madurai\nதிருமணநாளன்று மணமகனை வெட்டிக் கொன்ற தந்தை...மதுரையில் பரபரப்பு!\nமதுரை அருகே திருமணத்தன்று மணமகனைத் தந்தையே வெட்டி கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nUpdated on : 11 July 2021, 02:59 PM\nமதுரை மாவட்டம், கவுண்டன் பட்டி பகுதியைச் சேர்ந்தவர் இளங்கோவன். இவரது மகன் பிரதீப். இவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 18 வயது ஆகாத சொந்தக்கார பெண்ணை அழைத்துச் சென்று திருமணம் செய்துள்ளார். இது பற்றி தகவல் அறிந்த போலிஸார் அவரை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.\nஇந்நிலையில் ஜாமீனில் வெளியே வந்த பிரதீப்புக்கும், அந்த பெண்ணுக்கும் இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து வைப்பது என முடிவு செய்து, ஞாயிறன்று திருமணம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.\nஇதையடுத்து, திருமணத்திற்கு முந்தைய நாளான சனிக்கிழமையன்று குடிபோதையிலிருந்த பிரதீப்புக்கும், தந்தை இளங்கோவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த இளங்கோவன் அங்கிருந்த கோடாரியால் மகன் பிரதீப்பைச் சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் மகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.\nபின்னர், இளங்கோவன் நேரடியாகக் காவல்நிலையம் சென்று நடந்த சம்பவத்தைக் கூறி போலிஸாரிடம் சரணடைந்துள்ளார். பின்னர் சம்பவ இடம் பெற்ற போலிஸார் பிரதீப் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணத்திற்கு முந்தைய நாளன்று மகனைத் தந்தையே அடித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nசென்னையில் 6ம் வகுப்பு படிக்கும் சிறுமி தூக்கிட்டு தற்கொலை; போலிஸ் விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்!
"சொகுசு ஹோட்டலை மருத்துவமனையாக்கி இலவச சிகிச்சை"... கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்காக ரொனால்டோவின் மகத்தான உதவி! - TopTamilNews\nHome உலகம் "சொகுசு ஹோட்டலை மருத்துவமனையாக்கி இலவச சிகிச்சை"... கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்காக ரொனால்டோவின் மகத்தான உதவி!\n“சொகுசு ஹோட்டலை மருத்துவமனையாக்கி இலவச சிகிச்சை”… கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்காக ரொனால்டோவின் மகத்தான உதவி!\n16/03/2020 4:01:01 AM\nசீனாவின் வூகான் மாகாணத்தில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ்,5ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்களின் உயிரைப் பறித்துள்ளது.\nசீனாவின் வூகான் மாகாணத்தில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ்,5ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்களின் உயிரைப் பறித்துள்ளது. மொத்தமாக 120 நாடுகளில் பரவியுள்ள இந்த வைரஸின் தாக்கம் தீவிரமடைந்துள்ளது. சீனாவை அடுத்து அதிகமாக பாதிக்கப்பட்ட நாடு இத்தாலி மற்றும் ஜெர்மனி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் தான்.\nஇதன் காரணமாக உலக நாடுகளின் பொருளாதாரம் முடங்கியுள்ளது. அதுமட்டுமல்லாமல், கொரோனா பாதிப்படைபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகி வருவதால் போதிய மருத்துவ வசதி இல்லாத சூழலும் ஏற்பட்டு வருகிறது.\nஇந்நிலையில், பிரபல கால்பந்து வீரரான கிறிஸ்டியனோ ரொனால்டோ போர்ச்சுகல் நாட்டில் உள்ள தனது ஹோட்டலை கொரோனா பாதிப்படைந்தவர்கள் சிகிச்சை அளிக்கும் மருத்துவ மனையாக மாற்றவும், அதற்கான மருந்துகள், பணியாளர்களுக்குச் சம்பளம் என அனைத்து செலவையும் தானே ஏற்றுக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளார். உலகமே கொரோனவால் முடங்கியுள்ள நிலையில் ரொனால்டோ இவ்வாறு அறிவித்துள்ளது, அவரது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. மேலும் அவருக்குப் பலரும் பாராட்டுக்கள் தெரிவித்து வருகின்றனர்.
பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் 14 ஆம் தேதி தொடக்கம் – Chennaionline\nபாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் 14 ஆம் தேதி தொடக்கம்\nபாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர், வருகிற 14-ந்தேதி தொடங்கி அக்டோபர் 1-ந்தேதி வரை நடைபெற உள்ளது. மொத்தம் 18 நாட்கள் இத்தொடர் நடக்கிறது. முதல்முறையாக, மக்களவையும், மாநிலங்களையும் இரு வெவ்வேறு ஷிப்ட்களில் நடக்கிறது. கொரோனா கால கட்டுப்பாடுகளை பின்பற்றி இரு அவைகளும் நடத்தப்பட உள்ளன. சமூக இடைவெளியுடன் இருக்கைகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.\nமழைக்கால கூட்டத் தொடரின் செயல்பாடுகள் குறித்து மக்களவை செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கூட்டத்தொடரின் முதல் நாளில் (செப்-14) மட்டும் காலை9மணி முதல் மதியம் வரை கூட்டம் நடைபெறும் என்று கூறி உள்ளார். மற்ற நாட்களில் அதாவது, செப்டம்பர் 15 முதல் அக்டோபர் 1ம் தேதி வரை பிற்பகல்3மணி முதல் இரவு7மணி வரை நடைபெறும் என்றும் கூறி உள்ளார்.\nமாநிலங்களவை கூட்டம் முதல் நாளில் பிற்பகல்3மணி முதல் இரவு7மணி வரையிலும், மற்ற நாட்களில் காலை9மணி முதல் மதியம் 1 மணி வரையிலும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கேள்வி நேரம், தனி நபர் மசோதா கிடையாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஎம்பிக்கள் முக்கிய பிரச்சினைகளை எழுப்ப வாய்ப்பாக இருந்த கேள்வி நேரத்தை ரத்து செய்திருப்பது எதிர்க்கட்சி எம்பிக்களிடையே அதிருப்தியை உருவாக்கி உள்ளது.\n← தமிழகத்தில் 11 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்\nசசிகலாவுக்கு சொந்தமான ரூ.300 கோடி சொத்து முடக்கம் – வருமான வரித்துறை நடவடிக்கை →
சிறந்த சீன ஸ்மார்ட்வாட்ச்\n🥽; விஆர் விர்ச்சுவல் ரியாலிட்டி கண்ணாடிகள்\nPCக்கான மெய்நிகர் ரியாலிட்டி கண்ணாடிகள்\nகஃபாஸ் விஆர் பெட்டி\nகஃபாஸ் விஆர் பிஎஸ்4\n❤;️; செயல்பாட்டு மணிக்கட்டுகள்\nAmazon இல் குறைந்த விலை\n【Fácil de Uso y Compatibilidad Amplia】Solo necesita escannear el Código QR en el manual de usuario y conecta con tu móvil, Compatible con iOS 8.0, Android 4.4, புளூடூத் 4.0 y superior(no apto para PC, iPad o tableta),APP soporta lengua español.\nTecniteasy.com அமேசான் துணை நிரலைப் பயன்படுத்துகிறது. இந்தத் திட்டம் பயனருக்குத் தகவல் மற்றும் கூடுதல் மதிப்பை வழங்குவதன் மூலம் Amazon தயாரிப்புகளை விளம்பரப்படுத்துகிறது.. இந்த டெக்னிடீசி திட்டத்தின் மூலம் நீங்கள் Amazon இலிருந்து கமிஷன்களைப் பெறுவீர்கள், மேலும் அனைத்து தகவல்களும் படங்களும் பெறப்படுகின்றன lacomparacion.com\n©; 2022 tecniteasy &காளை; கொண்டு கட்டப்பட்டது ஜெனரேட் பிரஸ்\nஇந்த இணையதளம் பயனர் அனுபவத்தை மேம்படுத்த குக்கீகளைப் பயன்படுத்துகிறது. நீங்கள் ஒப்புக்கொண்டால், ஏற்கும் பொத்தானை அழுத்துவதன் மூலம் ஏற்றுக்கொள்ளலாம்.ஏற்றுக்கொள் மேலும் படிக்க\nஇணையதளம் சரியாகச் செயல்பட தேவையான குக்கீகள் முற்றிலும் அவசியம். இணையதளத்தின் அடிப்படை செயல்பாடுகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்களை உறுதி செய்யும் குக்கீகளை மட்டுமே இந்த வகை கொண்டுள்ளது. இந்த குக்கீகள் எந்த தனிப்பட்ட தகவலையும் சேமிக்காது.\nஇணையதளம் செயல்படுவதற்குத் தேவையில்லாத குக்கீகள் மற்றும் பகுப்பாய்வு மூலம் பயனர் தனிப்பட்ட தரவைச் சேகரிக்க குறிப்பாகப் பயன்படுத்தப்படும்., விளம்பரங்கள், மற்ற உட்பொதிக்கப்பட்ட உள்ளடக்கங்கள் தேவையற்ற குக்கீகள் என அழைக்கப்படுகின்றன. உங்கள் இணையதளத்தில் இந்த குக்கீகளை இயக்குவதற்கு முன் பயனர் ஒப்புதலைப் பெறுவது கட்டாயமாகும்.
'ஆடர்லி' பணியில் அரசு பள்ளி மாணவர்கள்!\nகோவையில் நடக்கும், மாநில அளவிலான குடியரசு தின தடகள போட்டியில், அரசு பள்ளி மாணவர்களை, 'எடுபிடி' வேலைக்கு பயன்படுத்திய சம்பவம் அரங்கேறியது.மாநிலம் முழுவதும் உள்ள மேல்நிலை மற்றும் உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்கான, 2014 - 15ம் ஆண்டுக்கான, மாநில அளவிலான குடியரசு தின தடகள போட்டிகள், தமிழக பள்ளிக்கல்வித்துறையால், கோவை நேரு ஸ்டேடியத்தில் நடத்தப்படுகிறது.\nமூன்று நாட்கள் நடக்கும் தடகள போட்டி துவக்கவிழா நேற்று நடந்தது. போட்டி துவக்க விழாவுக்கு, பூத்தொட்டிகள் அடுக்குவது, வி.ஐ.பி.,க்கள் நடக்கும் பகுதியில், தரை விரிப்பு விரிப்பது போன்ற பணிகளில், கோவை அரசு பள்ளி மாணவர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். கலை நிகழ்ச்சி முடிந்ததும், சிதறிக்கிடந்த குப்பையை மாணவர்கள் அகற்றினர்.துவக்க விழா முடிந்ததும், அடுக்கிய பூந்தொட்டிகளையும், தரை விரிப்புகளையும் மாணவர்களே அகற்றினர். ஸ்டேடியத்தில், வி.ஐ.பி.,க்கள் மற்றும் உடற்கல்வி இயக்குனர்கள் அமர்வதற்காக இருக்கைகளை மாணவர்களே அங்கும் இங்கும் மாறி மாறி துாக்கிக்கொண்டு அலைந்தனர்.\nஇதுதவிர, ஸ்டேடியம் வளாகத்தில், 20 லிட்டர் தண்ணீர் கேன்களை தேவையான இடங்களை வைத்து பராமரிக்கும் பணியில் மாணவர்கள் ஈடுபட்டனர்.\nகாலையில், டிபன், டீ, பிஸ்கட், வடை போன்றவற்றை, நிகழ்ச்சிக்கு சீருடையில் வந்திருந்த மாணவர்கள் சப்ளை செய்தனர். மதியம், 'பப்பே' முறையில், அரசு பள்ளி மாணவர்களே, சாப்பாடும் பரிமாறினர்.தங்கள் வயதுள்ள மாணவர்கள் விளையாடும் போது, அவர்கள் முன்னிலையில், குப்பை பொறுக்குவது, தண்ணீர் கொடுப்பது, சாப்பாடு சப்ளை என, எடுபிடி வேலைகளுக்கு, கோவை மாணவர்கள் பயன்படுத்தப்பட்டதால், மன ரீதியான பாதிப்பில் இருந்து தப்ப முடியாது.\nபெயர் வெளியிட விரும்பாத அரசு பள்ளி உடற்கல்வி ஆசிரியர் ஒருவர் கூறுகையில், ''தடகள விளையாட்டு போட்டிக்கு, வெளி மாவட்டத்தில் இருந்து ஆயிரக்கணக்கான மாணவர்கள் வந்துள்ளனர். தடகள போட்டியின் போது, உடற்கல்வி ஆசிரியர்களுக்கு 'டேப்' பிடித்து உதவ, கோவை அரசு பள்ளி மாணவர்கள், 50 பேரை அழைத்து வந்தனர்.\n''ஆனால், உயர் அதிகாரிகள் வீடுகளில், 'ஆடர்லி' வேலைக்கு, பணியாளர்களை நியமிப்பதை போன்று, தடகள போட்டியில் அரசு பள்ளி மாணவர்களை நியமித்து விட்டனர். இந்த வேலைகளை செய்யவும், தடகள போட்டியை நடத்தவும் அரசு நிதி ஒதுக்குகிறது. அப்படியிருக்கையில், சக வயதுள்ள மாணவர்கள் முன்னிலையில், இதுபோன்ற வேலைகளில் ஈடுபடுத்துவதை தவிர்த்திருக்க வேண்டும்,'' என்றார்.\nதடகள போட்டிகளுக்கான ஏற்பாடுகளை செய்திருந்த முதன்மை கல்வி அலுவலர் அருள்முருகனிடம் கேட்டபோது, ''துப்புரவு பணி, சாப்பாடு சப்ளை, தண்ணீர் கேன் எடுப்பதற்கு தனியாக ஆட்களை நியமித்துள்ளோம். உடற்கல்வி ஆசிரியர்களுக்கு சிறு சிறு உதவிகள் செய்வதற்காக, என்.எஸ்.எஸ்., மாணவர்கள் வந்துள்ளனர். அவர்களுக்கு கடினமான வேலைகள் எதுவும் வழங்கப்படுவதில்லை,'' என்றார்.-\nPosted by ANTONY ANBARASU at 8:42 முற்பகல்
கொப்பி அடிக்கவேண்டுமா மதம் மாறுங்கள் ~ வெங்காயம்\nlatest, news, religion, slider, வெங்காயம் » கொப்பி அடிக்கவேண்டுமா மதம் மாறுங்கள்\nகொப்பி அடிக்கவேண்டுமா மதம் மாறுங்கள்\nPosted by நீதுஜன் பாலசுப்பிரமணியம் on 5/29/2012 in latest, news, religion, slider, வெங்காயம் |0comments\nபரீட்சை மண்டபம். வினாத்தாள்மேல் ஏறி இருந்து வாட்டு வாட்டென்று வாட்டுகிறார்கள் மாணவர்கள். ஒரு மாணவன் மட்டும் கூலாக அமர்ந்து புத்தகத்தைப் பார்த்து விடைகளை எழுதிக்கொண்டிருக்கிறான். மேற்பார்வையாளர் வந்து காட்டுக் கத்தல் கத்துகிறார். “என்ன துணிச்சல் இருந்தால் இப்படி செய்வாய்?” என்று அவன் சாந்தமாக தனது மத அடையாளத்தை எடுத்துக் காட்டுகிறான். உடனே அவரும், “இதை முதலிலேயே சொல்லக்கூடாது?” எனக் கேட்டவாறே நகருகிறார்.\nதிருட்டுகளில் கேவலமானது உழைப்பையே திருடுவது. நம்பிக்கைகளுள் கேவலமானது மதநம்பிக்கை. உள்ள கூத்துக்கள் போதாதென்று உழைப்பை திருடுவதே அடிப்படை மார்க்கமாகக் கொண்டு ஒரு மதம் உருவாக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே உழைப்பவன் ஒருவன், மதிக்கப்படுபவன் ஒருவன் என்பதாக ஒரு மதம் மக்களை வதைத்துக்கொண்டிருக்கிறது. (அதுதான் இந்துமதம்.) போதாததற்கு இதுவேறு.\nThe Missionary Church of Kopimism என்கிற திருப்பெயரைக் கொண்ட இது, ஸ்வீடனில் ஐசக் கேர்சன் (Isac Gerson) என்கிற ஒரு 19 வயது தத்துவவியல் மாணவரால் உருவாக்கப்பட்டது. (உப்ஸாளா பல்கலைக்கழகம். இவருடன் குட்ஸவ் நைப் என்று இணை ஸ்தாபகர்.)3முறை விடாபிடியாக விண்ணப்பித்து விண்ணப்பித்து அரச அங்கீகாரம் வேறு பெற்றுவிட்டார்கள். இந்த ஐடியா எங்கிருந்து கிடைத்தது பாருங்கள்.....\n“Copy me, my brothers, just as I copy Christ himself” 1 கொரிந்தியன்ஸ் 11: 1 இல் வரும் ஒரு வேதவசனம்தான் அவர்களை கொப்பி பண்ண ஊக்குவிக்கிறதாம்.\nஇம்மதம் பிடித்துப் போய்விடவே, அள்ளுகொள்ளையாக வந்து இந்த மதத்தை தழுவினார்கள் மக்கள். இப்போதுவரையே 3000 தாண்டிவிட்டது. வழிபாட்டு முறை என்ன தெரியுமா? கொப்பி பண்ணுவது. மதத்தை பின்பற்றுபவர்கள் கொப்பிமிஸ்ட் எனப்படுவார்கள். எல்லா தகவல்களும் எல்லா மக்களுக்கும் பொதுவானது என்பதுதான் இவர்களின் சமத்துவக் கொள்கை. இம்மதத்தவர்கள் கள்ள DVD விற்றாலோ, பரீட்சையில் பார்த்து எழுதினாலோ, புத்தகங்கள், பாடல்கள் போன்றவற்றின் பதிப்புரிமை சட்டத்தை மீறினாலோ சட்டப்படி தண்டிக்க முடியாது. அது இவர்களின் மத உணர்வுகளை காயப்படுத்துவது போலாகும். உதாரணமாக நாம் இரவிரவாக லவுட் ஸ்பீக்கர்களில் பாட்டுக்கள் போட்டு படிக்கும் மாணவர்களையும், மக்களையும் துன்பப்படுத்துவதையும், வீதிகளில் தவ்வல்கள் விளையாடுவதுபோல ஒரு சிலையை தூக்கிக்கொண்டு திரிந்து போக்குவரத்தை இடைஞ்சல் பண்ணுவதையும் தட்டிக்கேட்பது நமது மத உணர்வை கொச்சைப்படுத்துவதாக இல்லையா? அதுபோலத்தான்.\nஇந்த மதத்துக்கு கடவுள் என்று யாரையும் இன்னும் finalise பண்ணவில்லை. மதத்தின் முக்கிய குறியீடு பின்வரும் ctrl+c மற்றும் ctrl+v தான்.\n2012 ஜனவரி5இல் அரச அனுமதி கிடைத்ததும் மதமாக ஆகிவிட்ட இது இதற்குரிய தேவாலயங்களுடன் இயங்குகிறது. செர்பியா வரைக்கும் பரவி அங்கு இந்த மதம் நடத்துகின்ற முதலாவது திருமணமும் முடிந்துவிட்டது. father மணமக்களுக்கு என்ன சொன்னார் தெரியுமா??\n“நாங்கள் இன்று மிக்க மகிழ்ச்சியாக உள்ளோம். காதல் என்பது பகிருவதுதான். நீங்கள் உங்கள் DNA க்களை share பண்ணி, copy பண்ணி, remix பண்ணி புது மனிதரை உருவாக்குகிறீர்கள். சந்தோஷத்தை அனைவரும் கொப்பி பண்ணுங்கள்.”\nஇப்போதுதான் SOPA சட்டத்தை அமெரிக்கா கொண்டுவரப் படாத பாடு பட்டு தோற்றுவேறு விட்டது. இடையில் இதுவேறு. மதம் என்றாலே தொல்லைதான் போல. இப்படியே போனால், ரேப்பிமிசம் என்று கற்பழிப்பதைக்கூட மாத வழிபாடாக்கும் மதங்கள் கூட வந்துவிடும்.
விலங்குக்கு பொன் நாணயம் வெளியிட்டவன் தமிழன்| Dinamalar\nவிலங்குக்கு பொன் நாணயம் வெளியிட்டவன் தமிழன்\nUpdated : ஜன 15, 2017 11:51 | Added : ஜன 13, 2017 23:44\nஉலகில் தோன்றிய தலைசிறந்த நாகரிகங்கள் அனைத்து நிலைகளிலும் உயர்நிலையை எய்து, பொருளாதார நிலையில் தன்னிறைவு பெற்று விளங்கும் போது, கலைகளுக்கும், விளையாட்டுகளுக்கும், விழாக்களுக்கும் சிறப்பிடம் கொடுத்து விளங்கும் என்பது, வரலாறு வெளிப்படுத்தும் உண்மையாகும். இதில், தமிழர் நாகரிகமும் விதிவிலக்கல்ல. சங்க காலத்தில் கடல் வாணிகத்தில் கொடிகட்டி வாழ்ந்த தமிழர்களின் கஜானாக்கள், ரோமாபுரியின் பொற்காசுகளால் நிரம்பி வழிந்தன. ரோமானிய வணிகர்கள் பொன்னோடு வந்து, கரியை பெற்றுச் சென்றனர்; பொற்காசை கரியாக்கினர். வாசனை உணவுப் பொருளான மிளகைத்தான் கரி என, நம் புலவர்கள் குறித்தனர்.\nஸ்டாரபோ என்ற ரோம வரலாற்று ஆசிரியர், தமிழக மிளகிற்காக ரோம அரசின் கருவூலம் காலி ஆகிறதே எனக் கவலைப்பட்டாராம். ஆனால், நம் தமிழச்சியோ காதில் அணிந்திருந்த தோடை எடுத்து, கோழியை விரட்டின செய்தி, சங்க இலக்கியத்தில் குறிக்கப்பட்டு உள்ளது. அத்தகைய வளமான பண்டைய தமிழகத்தில், பொழுதுபோக்கு அம்சங்களுக்கும் எவ்வித குறையும் இல்லை.\n5,000 ஆண்டு வரலாறு :\nதமிழகத்தில் செய்யப்பட்ட அகழாய்வுகளில், பெண்கள் பொழுதுபோக்காக விளையாடிய, பாண்டி விளையாட்டு வட்டச் சில்லுகள் மிகுந்த அளவில் கிடைத்து உள்ளன. அத்துடன் பகடை விளையாடும், தாயக் கட்டைகளும், செஸ் விளையாடும் கட்டப் பொருள்களும் மிகுந்த அளவில் கிடைத்துள்ளன. அண்மையில் நடைபெற்ற, கீழடி அகழாய்வில் இவை கிடைத்திருப்பதும் சிறப்புக்குரியது. சிறப்பான பொழுதுபோக்கு பொது விளையாட்டுகள், திருவிழாக்களின்போது நடத்தப்பட்டன. அத்தகைய வீர விளையாட்டுகளில் முதன்மையாக விளங்கியது, ஏறு தழுவுதல் எனப்படும் ஜல்லிக்கட்டு. தமிழர்களின் வீர விளையாட்டுகளில் தலையானதாக விளங்கி வந்தது ஜல்லிக்கட்டு. சங்க இலக்கியங்களில் பெரிதும் பேசப்படுகிற தொறுப்பூசல், ஆநிரை கவர்தல், ஆநிரை மீட்டல், ஆகொள் போன்ற குறிப்புகள், தமிழரின் தன்மானத்தைக் காக்கும் செயல்களாகக் கருதப்பட்டன. எருதுகளும், பசுக்களும் தெய்வமாகப் போற்றப்பட்டன. இதன் தொடர்ச்சியாக ஏறு தழுவுதல் வீர விளையாட்டாககருதப்பட்டு போற்றப்பட்டது.\nஏறு தழுவுதல் குறித்த சான்றுகள், திராவிட நாகரிகமாகக் கருதப்படும் சிந்துவெளிப் பகுதிகளில் கிடைத்த முத்திரைகளில் கிடைத்துள்ளன. தமிழகத்தில் கிடைத்த சில நடுகற்களிலும், ஏறு தழுவுதல் குறித்து குறிப்புகள் உள்ளன. தமிழகத்தின் ஒவ்வொரு ஊரிலும், ஊரின் மையமாக விளங்கும் மந்துப் பகுதியில் மாட்டுப் பொங்கல் அன்று, வீட்டில் உள்ள எருதுகளையும், பசுக்களையும் ஓடச் செய்து, மந்தைவெளியின் நடுவில் நடப்பட்டு இருக்கும் வழிபடு கல்லில் நீர் தெளித்து சுத்தம் செய்து, கால்நடைகளை சுற்றி வரச் செய்து வழிபட்டு மகிழ்ந்தனர். தமிழர்களின் வீர விளையாட்டாக விளங்கும் ஜல்லிக்கட்டு, மாடு பிடி, எருது பிடி, காளைப்போர், மஞ்சு விரட்டு, மஞ்சு வெருட்டு, மைந்து விரட்டு என, பல்வேறு பெயர்களால் இது வழங்கப்படுகிறது. தமிழர்களின் விளையாட்டான ஜல்லிக்கட்டு, 5,000 ஆண்டுகளுக்கும் முற்பட்ட சிந்துவெளி நகரங்களில் கிடைத்த முத்திரைகளில் காணப்படுகின்றன. சிந்துவெளிப் பகுதியில் கிடைத்த முத்திரைகளில், ஜல்லிக்கட்டில் மாடுகளை அடக்கி வீரர்கள் வெற்றி வாகை சூடும் உருவங்கள் காணப்படுகின்றன.\nசங்க இலக்கியங்களில் ஒரு முத்திரையில், வீரன் ஒருவன் கூர்மையான தடியால் எருதின் முன்னின்று அதை விரட்டுகிறான். அவ்வெருதின் கொம்புகளில் கட்டப்பட்டுள்ள பரிசுப் பொருளை எடுக்கும் முயற்சியாக, இம்முத்திரை புடைப்புச் சிற்பம் அமைந்துள்ளது. பிறிதொரு சிற்பம், தமிழகத்தில் தொடர்ந்து நடைபெற்று வந்த ஜல்லிக்கட்டை நினைவுகூர்வதாக அமைந்துள்ளது. இச்சிற்பத்தில், ஆடவர்கள் சூழ்ந்து ஓர் எருதை பிடிக்க முயற்சி செய்கின்றனர். அவ்வெருது தனது பிடரியை உயர்த்தி, ஒவ்வொரு வீரரையும் விரட்டுகிறது.காளையை முன் சென்று அடக்கும் வீரர்கள், காளையின் மிரட்டலால் நான்கு புறமும் சிதறி ஓடுகின்றனர். இதை அழகாக சிந்துவெளி முத்திரைச் சிற்பம் சுட்டுகிறது. இக்காட்சிகள் சங்க இலக்கியங்களில் ஒன்றான கலித்தொகையில், முல்லைக் கலிப் பாடல்களில், சோழன் நல்லுருத்திரனார் என்ற புலவரும் குறிப்பிடுகிறார்.கொல் ஏறு, கொலை ஏறு, நல் ஏறு, வெள் ஏறு எனப் பல்வேறு பெயர்களில் இவ்விளையாட்டு குறிக்கப்பட்டது. ஆடவரின் வீரத்தைப் போற்றும் வகையில் ஏற்றினை வெல்லுகின்ற ஆடவனை, சங்க கால மகளிர் திருமணம் செய்தனர்.\nஆயர் குல வீட்டில் பெண் பிறந்தால் அவ்வீட்டில் காளையையும் வளர்ப்பர். திருமண வயதை எட்டும்போது பெண் வீட்டாரும், அவரது சுற்றமும் கூடிப் பறை அறிவித்து ஏறு தழுவுதலை அறிவிப்பர். பறக்கும் பட்டுப்பூச்சியின் சாம்பல் நிறக் காளையும், நெற்றியில் நிலவு போன்று சுழி உடைய கருநிறக் காளையும், காதுகட்குப் பின்புறம் செம்புள்ளிகளையுடைய காளையும், வெள்ளை நிறக் காளையும், செவலைக் காளையும் ஏறு தழுவும் களத்தில் வகை வகையாக நிற்கின்றன.ஏறு தழுவுகிற இடம் ஊரின் மையத்தில் அமைந்திருக்கும். இதை ஊற்றுக்களம் எனக் குறித்திடுவர். பரண்கள் அமைத்து அவற்றின் மீது மகளிரும், மற்றொருவரும் அமர்ந்து காளைகளை அடக்கும் வீர விளையாட்டைக் கண்டுகளிப்பர். களத்தில் விடப்படும் காளைகளின் கொம்புகள் கூர்மையாக சீவி விடப்படும். காளைகளுடன் சண்டையிட்டு அடக்கும் காட்சியில் அப்பகுதியே துாசி மண்டலமாக மாறும். பல இளைஞர்கள் இவ்வீர விளையாட்டில் மரணம் அடைவர். சில வீரர்கள் எருதின் கழுத்தை இறுக்கி, அதன் கழுத்தின் மேல் பகுதியில் உள்ள திமில் மீது ஏறி அமர்ந்து காளையை அடக்குவர். எருதின் உரிமையாளர், அவ்வெருது படும் துன்பத்தைக் கண்டு துயரமும் கோபமும் கொள்வார். இவ்வேறுகளை பாய்ந்து அடக்கி வெற்றி பெறும் ஆடவரை, ஆயர் குல மகளிர் மாலை சூடி மணப்பர்.\nஉலக நாடுகள் பல விலங்குகளை வைத்து பொழுதுபோக்காக விளையாடுகிற வீர விளையாட்டுகள் தேசிய விளையாட்டுகளாக இன்றளவும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, எருதுகளை வைத்து விளையாடும் வீர விளையாட்டுகள் ஸ்பெயின், போர்ச்சுக்கல், மெக்சிகோ நாடுகளில் தேசிய விளையாட்டாகக்கருதப்பட்டு அரசால் போற்றப்படுகின்றன. விழுப்புரம் அருகில், செஞ்சி சாலையில் அரசலாபுரம் என்ற ஊர் உள்ளது. இவ்வூரில் கோழிச் சண்டையில் இறந்த கோழிக்கு நடுகல் எடுக்கப்பட்ட கல்வெட்டொன்று உள்ளது. இக்கல்வெட்டு கி.பி., 5ம் நுாற்றாண்டைச் சார்ந்தது.முகையூர் என்ற ஊரில் இருந்த சண்டைக்கோழி, மேல்சேரியில் நடைபெற்ற கோழிச் சண்டையில் போட்டியிட்டு வெற்றி பெற்று இறந்து விடுகிறது. வீர மரணம் அடைந்த அந்த வெற்றிக் கோழிக்கு நடுகல் எடுக்கப்படுகிறது. கோழியின் உருவத்துடன் உள்ள இந்நடுகல் தற்போது விழுப்புரம் பொதுப்பணித்துறை அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது.\nநாய்க்கு நடுகல் :\nஇதே போன்று செங்கல்பட்டை அடுத்த அச்சிறுபாக்கத்திற்கு அருகிலுள்ள இந்தளூரில் உள்ள நடுகல் ஒன்று, கீழ்ச்சேரிக் கோழி ஒன்று கோழிச் சண்டையில் வெற்றி பெற்று இறக்கிறது. இதற்காக ஊர்மக்கள் கோழிக்கு நடுகல் எடுக்கின்றனர். 'கீழ்ச்சேரி கோழி பொடுகொத்த' என கல்வெட்டு வாசகம் சொல்கிறது. புறப்பொருள் வெண்பா மாலை என்னும் தமிழ் இலக்கிய நுாலில், கீழ்ச்சேரிக் கோழி மேல்சேரிக் கோழி இரண்டிற்கும் நடத்தப்பட்ட கோழிச் சண்டையைப் பற்றிய குறிப்புகள் உள்ளன. தமிழர்கள் விலங்குகளை பாதுகாத்தும் பராமரித்தும் வாழ்ந்துள்ளனர். நன்றியுள்ள நாய்க்கு நடுகல் எடுத்தவன் தமிழன். திருவண்ணாமலை அருகிலுள்ள எடுத்தனுார் என்ற இடத்தில் திருட வந்த கள்வர்களை விரட்டிக் கடித்து, வீர மரணம் அடைந்த அந்த நாய்க்கு நடுகல் எடுக்கப்பட்டது. நாயின் உருவம் அக்கல்லெழுத்தில் பொறிக்கப்பட்டுள்ளது.மாடை என்ற பொன் நாணயத்தை வெளியிட்டவன் தமிழன். ஆகவே, விலங்கினங்களை பாதுகாத்துப் போற்றியவர் தமிழர்; அவற்றிற்கு நன்றி செய்யும் விழாவே ஜல்லிக்கட்டு. அத்தகைய மரபு சார்ந்த விளையாட்டை இனியேனும் காலந் தாழ்த்தாமல் நடத்த அனுமதி வழங்க வேண்டும் என்பதே, தமிழர் அனைவரின் கருத்து.- முனைவர் சு.இராசவேலுதஞ்சை தமிழ் பல்கலை பேராசிரியர்\n50 ஆண்டுகளுக்கு முன் எம்.ஜி.ஆர்., இறந்திருந்தால்...(4)\nவாங்க பழகலாம்: கிருஷ்ணமூர்த்தி ராமசுப்பு, துணை ஆசிரியர், 'தினமலர்' (2)\n50 ஆண்டுகளுக்கு முன் எம்.ஜி.ஆர்., இறந்திருந்தால்...\nவாங்க பழகலாம்: கிருஷ்ணமூர்த்தி ராமசுப்பு, துணை ஆசிரியர், 'தினமலர்'
நான் வலிமையான பெண் : சமந்தா - I am strong woman says Samantha\n07 டிச, 2021 - 18:48 IST\n2017ம் ஆண்டு சமந்தாவும், நாக சைதன்யாவும் திருமணம் செய்து கொண்ட னர். நான்கு ஆண்டுகள் நீடித்த இவர்களது திருமண உறவு சமீபத்தில் முறிந்தது. சமந்தா அளித்துள்ள ஒரு பேட்டியில், நாக சைதன்யாவை பிரிந்து செல்ல முடிவெடுத்தபோது நான் அடைந்த மன உளைச்சலுக்கு அளவே இல்லை என்று கூறியிருக்கிறார். அதோடு, விவகாரத்துக்கு சென்றால் நான் மனம் நொறுங்கி இறந்து விடுவேன் என்று தான் நினைத்தேன். அந்த அளவுக்கு என்னை பலவீனமானவள் என்று கருதி வந்தேன். ஆனால் நான் நினைத்தது போல் எதுவும் நடக்கவில்லை.\nநான் ரொம்ப வலிமையுடனும் மன உறுதியுடனும் இருக்கிறேன். இவ்வளவு வலிமையாக இருப்பேன் என்று கருதவில்லை. நான் வலிமையாக இருக்கிறேன் என்பதை நினைக்கையில் ரொம்ப பெருமையாக உள்ளது எனறு தெரிவித்துள்ளார். மேலும் அல்லு அர்ஜூன் நடித்துள்ள புஷ்பா படத்தில் முதன்முறையாக ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ள சமந்தா, தற்போது கதையின் நாயகியாக நடிக்கும் யசோதா என்ற ஐந்து மொழிப் படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து சர்வதேச படமான அரேஞ்மென்ட்ஸ் ஆப் லவ் என்ற படத்திலும் நடிக்கப்போகிறார்.\nஅதர்வாவின் குருதி ஆட்டம் படத்திற்கு ... டிசம்பரில் தமிழரசன் ரிலீஸ் : ...
இளம் பெண் இசையமைப்பாளர் அறிமுகமாகும் ஆண்டனி\nஇளம் பெண் இசையமைப்பாளர் அறிமுகமாகும் ‘ஆண்டனி’\nMay 16, 2018 375\nஆண்டனி புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் குட்டி குமார் இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் ‘ஆண்டனி’.\nஇந்த படத்தில் ‘சண்டக்கோழி’ புகழ் லால், நிஷாந்த், வைசாலி, ரேகா, சம்பத் ராம், ‘வெப்பம் ‘ ராஜா, சேரன் ராஜ் மற்றும் பலர் நடித்துஉள்ளனர்.\nஇந்த படத்திற்கு 19 வயதே ஆன ஷிவாத்மிகா இசை அமைத்துள்ளார்.\nஇப்படத்தின் இசை வெளியீட்டு விழா, சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக எஸ்.ஏ.சந்திரசேகர், ஜெயசித்ரா ஆகியோர் கலந்துகொண்டனர் .\nவிழாவில் பேசிய எஸ்.ஏ. சந்திரசேகர்,\n“இந்த படக்குழுவில் உள்ள அனைத்து கலைஞர்களும் சிறிய வயதுடையவர்கள். படத்தின் ட்ரைலர் பிரமிக்க வைக்கிறது. எடிட்டிங் மிக அருமையாக உள்ளது. படம் மிகப்பெரிய வெற்றியடைய வேண்டும்,” என்றார்.\nஜெயசித்ரா பேசும் போது,\nபடக் குழுவில் உள்ள இளைஞர்கள் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட்டு குறுகிய காலத்தில் இவ்வளவு அருமையான படத்தினை கொடுத்துள்ளனர். இந்த படம் மாபெரும் வெற்றியடைய வேண்டும். தயாரிப்பாளர் ராஜா அவர்களுக்கும் படக்குழுவினருக்கும் வாழ்த்துக்கள்,” என்றார்.\n‘வெப்பம்’ ராஜா பேசியதாவது,\nபடத்தில் அனைவரும் அவர்களது வேலைகளை மிகச் சிறப்பாக செய்துள்ளனர். இயக்குனர் குட்டி குமார் குறுகிய காலத்தில் படத்தினை முடித்துஉள்ளார்.19 வயது உடைய ஷிவாத்மிகா அருமையாக இசை அமைத்துள்ளார். ஒளிப்பதிவாளர் பாலாஜி ரொம்பவே சூப்பரா பன்னிருக்கார்.,PC ஸ்ரீ ராம் அவைகளை போல் இவரும் மிகப் பெரிய ஒளிப்பதிவாளராக வருவார் என்பதில் எந்த வித மாற்றமும் இல்லை. படத்தின் நாயகன் நிஷாந்த் பட்ட கஷ்டங்கள் அதிகம். கண்டிப்பா அவர் மிகப் பெரிய நடிகராக வருவார். ஒரு நடிகன் 10 படங்கள் நடித்தால் தான் ‘ஆண்டனி’ படத்தில் இவர் நடித்துஉள்ள கதாபாத்திரத்தை பண்ண முடியும். மிகச் சிறப்பாக நடித்துள்ளார்,” என்றார்.\nஇயக்குனர் குட்டி குமார் பேசுகையில்,\n“இந்த படத்தினை உருவாக்கக் காரணமாக இருந்த ஆண்டனி ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனத்திற்கு மிகப் பெரிய நன்றி. இந்த படத்தில் லால் அவர்களை நிஷாந்த் அப்பாவாக நடிக்க வைத்துள்ளோம். ஒரு தந்தை மகன் பற்றிய அன்பை இந்த படத்தில் காட்டி இருக்கிறோம். இரண்டு வித்தியாசமான படக் காட்சிகள் இந்த படத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. பூமிக்கு மேல், மற்றும் பூமிக்குக் கீழ் என காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது.\nஉயிரைப் பணயம் வைத்து நடித்து இருக்கிறார் நடிகர் நிஷாந்த். மேலும்படத்தில் நடித்த அனைவரும் அருமையான நடிப்பினை வெளிப்படுத்தி உள்ளனர். ஷிவாத்மிகாவிடடம் நல்ல திறமை உள்ளது. நன்றாக இசையமைத்திருக்கிறார்,” என்றார்.\nஇசை அமைப்பாளர் ஷிவாத்மிகா பேசும் போது,\n“படத்தில் வாய்ப்பு தந்த குட்டி குமார் அவர்களுக்கு மிகப் பெரிய நன்றி. இந்த படத்தில் நாங்கள் அனைவரும் அறிமுகக் கலைஞர்களாக பணியாற்றி உள்ளோம். வேறுபட்ட இசையை இந்த படத்தில் தந்துள்ளேன். உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் என நம்புகிறேன்,” என்றார்.\nTags: antony kutti kumar shivathmika\nWhat is the meaning of Kavan ?\nBy vetrivel kasinathan Oct 21, 2016\nமீண்டும் நடிக்க வந்தார் ஜோதிகா…\nBy vetrivel kasinathan Nov 17, 2014\nஅருண் வைத்யநாதன் இயக்கத்தில் அர்ஜுன் – விரைவில் ஆரம்பம்
Tag Archive: ஆற்றல்\nஅனுபவம், கேள்வி பதில், புகைப்படம்\nஅன்புள்ள ஜெ, நான் எழுதும் இந்த விஷயங்களை நீங்கள் எப்படிப்புரிந்துகொள்வீர்கள் என்று தெரியவில்லை.நான் சிறுவயதிலேயே ஒரு நோயாளி என்பதை அறிவீர்கள். என்னுடைய ஈரல் பழுதடைந்தது. அதைச் சரிசெய்ய முடியாது என்று டாக்டர்கள் சொல்லிவிட்டிருகிறார்கள். ஆனால் என் குடும்பத்தாரின் நம்பிக்கை காரணமாக நான் சில அறுவைசிகிழ்ச்சைகளைச் செய்துகொண்டேன். அவற்றால் எனக்கு கடுமையான வலியும் தனிமையும்தான் ஏற்பட்டது. இப்போது சாதாரண இயற்கை உணவு சிகிழ்ச்சை செய்கிறேன். பிரச்சினைகள் இருந்தாலும் வலியும் கஷ்டமும் கிடையாது. நோய் கொண்டிருப்பது என்பது ஒரு சாதாரணமான …\nTags: அனுபவம், ஆற்றல், கேள்வி பதில், புகைப்படம்\nPermanent link to this article: https://www.jeyamohan.in/5239/
சினிமாவில் ரீ-என்ட்ரி க�\n‘மணல் கயிறு’, ‘வண்ண வண்ண பூக்கள்’ உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமான நடிகை வினோதினி தற்போது சினிமாவில் மீண்டும் நடிக்க வருகிறார்.நடிகை வினோதினி. ‘வண்ண வண்ண பூக்கள்’ உள்ளிட்ட பல படங்கள் மற்றும் சீரியல்கள் மூலம் புகழ்பெற்றவர். அவர் அளித்த பேட்டியில் இருந்து...\nசினிமாவிலிருந்து நீண்ட காலம் விலகியிருக்க என்ன காரணம்?”\n“கல்யாணமாகி குழந்தைப் பிறந்ததும், பொறுப்பான அம்மாவா இருக்கிறதுதான் முக்கியம்னு நினைச்சேன். அதனால்தான் நடிக்க வேண்டாம்னு முடிவுபண்ணினேன்.\nநடிச்சே ஆகணும் என்கிற சூழ்நிலை எனக்கு எப்போதும் ஏற்பட்டதில்லை. என்னைத் தேடிவந்த வாய்ப்புகளைச் சரியா பயன்படுத்தி குறிப்பிட்ட காலம் நடிச்சேன். கல்யாணத்துக்குப் பிறகு சினிமாவிலிருந்து விலகியிருந்தேன். இப்போதான் மறுபடியும் நடிக்க முடிவெடுத்திருக்கேன். அடுத்த வரு‌ஷத்திலிருந்து நடிக்க முடிவு செய்திருக்கேன்.\nஉங்க சினிமா என்ட்ரி எப்படி நடந்துச்சு?”\n“என் அம்மா, டிராமா ஆர்டிஸ்ட். அதனால், சினிமா துறையினர் பலருக்கும் என்னைப் பற்றி தெரியும். நாலரை வயசுல குழந்தை நட்சத்திரமா ஆரம்பிச்சது. ‘மணல் கயிறு’, ‘புதிய சகாப்தம்‘ உள்ளிட்ட பல படங்களில் நடிச்சேன். சில வருட இடைவெளிக்குப் பிறகு, ‘ஆத்தா உன் கோயிலிலே’ படம் மூலம் ரீஎன்ட்ரி கொடுத்தேன்.\nபாலுமகேந்திரா சாரின், ‘வண்ண வண்ண பூக்கள்’ படத்தில் ஹீரோயினா நடிச்சது நல்ல அடையாளத்தைக் கொடுத்துச்சு. தொடர்ந்து, கன்னடத்தில் பிஸியாகிட்டேன். ‘உனக்காக எல்லாம் உனக்காக’ உள்பட சில படங்களில் கேரக்டர் ரோல் பண்ணியிருக்கேன்.”\nஎனக்கு நல்லா சாப்பிடப் பிடிக்கும். அதனால், மத்தவங்களை தொந்தரவு செய்யாமல் நானே செய்துக்க நினைச்சேன். அப்போ சோஷியல் மீடியா கிடையாது. அதனால், சமையல் புக், தெரிஞ்சவங்க சொல்ற டிப்ஸ் எனத் தேடி தேடி கத்துப்பேன்.\nசீரியல்களில் நடிச்சுட்டிருந்தப்போ, ஷூட்டிங் ஸ்பாட்ல சக ஆர்டிஸ்டுகளோடு சேர்ந்து சமைப்பேன். ரொம்ப சந்தோ‌ஷமா இருக்கும். இப்போ, என் குழந்தைகள் மற்றும் கணவருக்குப் பிடிச்ச உணவுகளை சமைச்சு கொடுக்கிறேன். அவங்க ரசிச்சு சாப்பிடுறதைப் பார்த்து சந்தோ‌ஷப்படறேன்.
கிருபாநிதி அரிகிருஷ்ணன்: அடையாளமாதல் - 208 * தனி ஆளுமையை களையும் கரங்கள் *\nபதிவு : 208 / 287 / தேதி :- 08 அக்டோபர் 2017\n* தனி ஆளுமையை களையும் கரங்கள் *\n“தனியாளுமைகள் - 34 ”\nஇளைஞர் அமைப்பின் கருதுகோள்-12\nவல்சராஜ் உங்களிடம் ஏதாவது பேசினாரா? என கேட்டார் . ஊருக்கெல்லாம் ஒரு ஜாதகமென்றால் எனக்கென ஒன்று தனியாக இருக்கும் . வாய்ப்புகளைப்போல, பாதைகளைப்போல , உபத்திரவங்களும் தனியானவைகள்தான். நான் அவரை கூர்ந்தபடி , “நீங்கள்தான் அவரை என்னிடம் பேசச்சொன்னதா?” என்றேன் . அவர் “ஐயையோ இந்த விளையாட்டிற்கு நான் வரவில்லை” என விலகியவர் “நான் அப்படி சொல்வேன் என் நீங்கள் நினைக்கிறீர்களா “ என்றார்.\nசூர்யநாராயணன் என்னிடம், வல்சராஜ் காலையில் கூப்பிட்டிருந்தாரா ? என்றார் . காலையில் என்னிடம் அவர் கேட்டதையும் நான் பதிலளித்ததையும் சொன்னேன் . முகத்தில் எந்த உணர்வுமின்றி அமைதியாய் இருந்தார் . நான் மெல்ல காலையில் இருந்த அதே மனநிலைக்கு சென்றுகொண்டிருந்தேன் . “வல்சராஜிக்கு உங்கள் மனநிலை புரியும் , நீங்கள் அவரிடம் ஒன்றும் சொல்லாததுதான் சரி என நினைக்கிறேன்” என்றார்.\nசூர்யநாராயணனிடம் உள்ள பழக்கம், எந்த அரசியல் விளையாட்டினுள்ளும் அவர் நுழைவதில்லை . அனைத்திற்கும் வெளியே அவர் ஒரு மௌன சாட்சி மட்டுமே . ஆனால் அவரிடமுள்ள சிக்கல் நாம் எங்காவது முட்டி நின்று திண்டாடி மீண்டு வரும்போது, நாம் மீள வேண்டிய வழி இதுவல்ல ,இது என பிறிதொன்றை சுட்டுவார் . இதை முதலில் சொல்லியிருக்கலாமே? என்றால் , நீங்கள் என்னிடம் கேட்கவில்லையே என்பார் . நான் எப்போதும் அவரிடம் அறிவுரை கேட்பதில்லை . அரசியாலில் யாரையாவது கேட்டு நடக்கவேண்டுமென்றால் அவன் அமர்ந்திருக்கும் இடம் தாண்டி நகரவே இயலாது. சூர்யநாராயணன் என்னிடம் அவர் அறையின் பேக்ஸ் தொடர்பு சாதனத்திடம் அருகில் யாரையும் அனுமதிக்க வேண்டாம் என்றும் , தில்லியிலிருந்து முக்கிய தகவல் வரலாம் என தலைவர் தன்னிடம் சொல்லியிருப்பதை கூறினார் , நான் அவரிடம் “நீங்கள் அறையை பூட்டிக் கிளம்புங்கள் , எனக்கு இதில் ஆர்வமில்லை” என்றேன் . ஒரு புது தகவல் வரலாம் என்று சொன்னார் . எதையும் கேளாது நான் கிளம்பி செல்வதை திகைப்புடன் பார்த்தார் . என்னை முன்னிறுத்தி தற்போது எனக்கு திட்டமேதுமில்லை என்பதால் . நான் அடுத்து ஆற்றவேண்டியதை என் ஊழ் எடுத்து கொடுக்கட்டும் என நினைத்தபடி வீடு வந்து சேர்ந்தேன் .\nகாலை 5:45 மணி அலைபேசி அழைப்பு . அது வல்சராஜ் என் யூகித்திருந்தேன் . அது அடித்துக்கொண்டிருக்கட்டும் என விட்டேன் . இவர்களின் விளையாட்டு என்னை எரிச்சலுற செய்தது அலைபேசி சிறிது நேரம் அடித்து ஓய்ந்துபோனது . நான் தேவையற்று பிகு பண்ணுகிறேனோ என்கிற எண்ணம் எழுந்ததும் . நான் அவரை தொடர்பு கொள்வதற்குள் எழுந்தேன் , மறுபடி அழைத்தார் . நான் எடுத்தேன் . நேரடியாக “வாழ்த்துக்கள்” என்றார். எனக்கு சிறிது பதட்டமெழுந்தது . வெளிக்காட்டாது “எதற்கு” என்றேன் . “நீங்கள் மூத்த பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டிருக்கிறீர்கள்” என்றார் . முதலில் கொஞ்சம் திகைத்தேன் . எனக்கான இடமென எனக்கு சரியாக கிடைக்கும் என உள் மனதின் ஆழத்தில் எங்கோ அறிந்திருந்தேன். ஆனால் இதை இப்படி எதிர்பார்க்கவில்லை. “நீங்கள் தானே பரித்துரைத்தீர்கள் . உங்களுக்கு எனது நன்றி” , என்னால் ஆற்றக்கூடியதை செய்வேன்” என்றேன் .\nசிறிது நேர அமைதிக்கு பிறகு , இந்த இடத்திற்கு தலைவர் வேறு ஒருவரை சொல்லியிருந்தார் . நான்தான் அவரிடம் சொல்லாது கடைசி நேரத்தில் இந்த மாற்றம் செய்தேன் என்றார் வல்சராஜ் , நான் எந்த உணர்வையும் வெளிப்படுத்தாதிருந்தேன் . “என்ன நான் சொல்வதை நம்பமுடியவில்லையா ?” என்றார் . “அரசியலில் அவரவர்க்கு ஒவ்வொரு கணக்கிருப்பதை நான் புரிந்து கொள்ள முயற்சிக்கிறேன்” . “எதன் அடிப்படையிலும் யார் மீதும் கசப்படைவதை நான் விரும்பவில்லை” , “குறிப்பாக பதவி விஷயத்தில் அது தேவையற்றது என நினைக்கிறேன் . ஆனால் நீங்கள் சொன்னது உண்மை என்பதை அறிந்திருக்கிறேன் . அதனால் தான் என்னளவில் நான் என்ன செய்யமுடியுமோ அதை செய்கிறேன் என முன்பே சொல்லோவிட்டேன்” என்றேன் . தான் மறுநாள் காலை புதுவைக்கு வந்து நிர்வாகிகள் பட்டியலை வெளியிட்டு பின்னர் மாஹே செல்லவிருப்பதை சொன்னார் . நான் பிறிதொரு முறை என் நன்றியை தெரிவித்தேன்.\nவழமை போல மறுநாள் காலை 6:00 மணிக்கு அலைபேசியில் என்னை வல்சராஜ் அழைத்தார் , தான் புதுவைக்கு வந்துவிட்டதையும் . காலை தலைவர் வீட்டில் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகளின் பட்டியல் வெளியிட இருப்பதை சொன்னார் , நான் தலைவரை சந்திக்கும் முன்னராக தன்னை அவரது அறையிலிருந்து அழைத்துப்போக சொன்னார் . இருவரும் அவரது அறையிலிருந்து தலைவர் வீட்டை அடைந்த போது அங்கு எங்களை எதிர்நோக்கி பெரிய கூட்டம் கூடிருந்தது . எல்லோருக்கும் தகவல் போயிருக்கிறது . இப்போது அனைவரின் மத்தில் நாங்கள் இருவரும் எனது காரில் வந்திருங்குவதை பாக்கப்போகிறார்கள் . நான் வல்சராஜிடம் என்னோமோ செய்து இந்த பதவியை அடைந்ததாக அனைவரையும் குமையச்செய்யும் . வல்சராஜ் தான் எப்போதும் அனைத்திலிருந்து விலகி நிற்கும் அரசியல் நிலையிலேயே தான் என்றும் நிற்பதாக இப்போதும் சொல்லாமல் சொல்லியதாகிறது .\nஇதை நான் வலராஜ் அறையிலிருந்து கிளம்பும்போது அறியாது போனாலும் . இங்கு வந்து சேர்ந்த அந்த நொடியில் அந்த புரிதலை அடைந்தேன் . இப்படி எல்லாவற்றிலும் கணக்கோடு செயல்படுபவர்களை பார்த்து நான் பரிதாபப்படுவதுண்டு . மனிதன் தன் விழைவுப்படியெல்லாம் நடந்து கொள்ளும் சுதந்திரன் அல்லன் , இப்புடவி பெருநெறியிக்கு கட்டுப்பட்டவன் . அதை எல்லோரும் உணரும் ஒரு காலம் வந்தே தீரும் அப்போது நரகமென்ற ஒன்று எங்கோ தனித்து இருப்பதில்லை வாழும் இந்த உலகில் நமக்கு அருகிலேயே இருப்பதை உணர்ந்துக்கொள்வார்கள் .\nநான் யாருடனும் பேசாது தலைவரை பார்த்து வணங்கி அவர் முன்பு போடப்பட்டிடுந்த நாற்காலியில் அமராது என் எதா ஸ்தானமான அவர் வீட்டின் பின்கட்டுக்கு சென்றுவிட்டேன் . வழமை போல என்னை பார்த்ததும் ரவி டீ தந்தார் . பிறகு வாழ்த்து சொன்னார் . எனக்கு அது ஆச்சயர்யமில்லை அவர்களுக்கு தெரியாத ரகசியமென்று ஒன்றில்லை . நான் அமைதியாக அதை ஏற்றுக்கொண்டேன் .\nஏனோ மிகவும் வெறுமையாக உணர்ந்தேன் . தலைவர் யாரை சிபாரிசு செய்தாரோ அவரை நான் அறிவேன். அவர் அமரவேண்டிய பதவியிது . சபாபதி இன்னும் அந்த பழைய வஞ்சத்தை சுமந்தலைகிறார் . அப்படி செய்வதுதான் அரசியலென நினைகிறார்கள் போலும் . அது அனாவசிய பொதி அதை தள்ளினால் அவர்களுக்கான உலகம் தனக்கென தனித்து விரிவதை ஒருநாளும் அவர்கள் உணரப்போவதில்லை . எது எப்படி இருந்தாலும் இந்த பதவி பலரின் கண்களுக்கு எனது தகுதியற்று இனாமாக பெற்றதாக இருகப்போகிறது. தலைவரும் வல்சராஜூம் தங்களின் கைகளால் என்னை தாங்குவதாலேயே நான் இந்த உயரங்களை எட்டுகிறேன் என அவர்கள் நினைப்பதை போல என்னை அவமானமானமடையச் செய்வது பிறிதொன்றில்லை . அது என் ஆற்றலை கொச்சைப்படுத்துவது . அது எப்போதும் எனக்கான பாதையை மலினப்படுத்துவது . என்னை எப்போதும் சோர்வடைய செய்வது .\n- அக்டோபர் 08, 2017
- புதியமாதவி -( மும்பை) -\n'சென்னையிலிருந்து கொண்டு இங்கே மும்பையில் வந்து இளையராஜாவைப் பார்க்கனும் என்று துடிக்கிறீர்களே?'\nஅவள் கேள்வியைக் கேட்டு சிரித்தார் அவர்களுடன் வந்திருந்த உதவி இயக்குநர் லெனின். 'அய்யோ சென்னையில் இளையராஜாவை எல்லாம் எங்களால் பார்க்க முடியுமா.. இன்றைக்கு மும்பைக்கு வந்ததில் எங்களுக்கு கொடுத்து வைத்திருக்கிறது' என்று அவர்கள் அனைவரும் சந்தோசத்தில் மிதந்தார்கள்.\nஇளையராஜா ரொம்ப சிம்பிளாக இருந்தார். வெள்ளை வேட்டியில் தலையில் அங்கொன்றும் இங்கொன்றுமாக எட்டிப்பார்க்கும் வெள்ளை முடிகளுக்கு நடுவில் சிரித்த முகத்துடன். அந்த அறையில் பெரிய பெரிய ராட்சச கீ போர்டுகள் மாதிரி என்னவெல்லாமோ இருந்தது. இத்தனை அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு நடுவில், நுணுக்கமாக பலநூறு மாற்றங்களைச் செய்யும் வசதிகளுடன் பாட்டு இசையமைக்கப்படுவதை அப்போதுதான் அவள் பார்க்கிறாள். "ஒகோ இவ்வளவு இருக்கிறதா.. இந்த இசைத்திரைக்குப் பின்னால்" என்று அதிசயமாய்ப் பார்த்துக் கொண்டிருந்தாள். அந்தக் கண்ணாடி அறையில் மனிதர்கள் எல்லாம் ரொம்பவும் சின்ன பொம்மைகள் மாதிரி நிற்பதாகவும் அந்த ஆயிரத்தெட்டு ஒயர்கள், கணினி வசதிகள், இன்னும் ராட்சத உருவத்தில் இருந்த பெரிய பெரிய பெயர்த்தெரியாத இசைக்கருவிகள் , இவைகளை இயக்கும் இளம் ரோபட் மனிதர்கள் .. அவர்கள் ஒரு சின்ன பொத்தானை அமுக்கி இளையராஜா சரி என்று தலையாட்டும்வரை என்னவெல்லாமோ செய்து கொண்டிருந்தார்கள்.\nஅன்று சனிக்கிழமை. அம்மாவைப் பார்க்க ஆபிஸிலிருந்து அப்படியே கிளம்பினாள். அந்த சர்ச்கேட் நிலவறைப் பாதை வழியாக நடந்து கொண்டிருந்த போது அங்கேயும் இப்போதெல்லாம் நிறைய கடைகள் வந்துவிட்டது. கூட்டமும் முன்பை விட அதிகமாகவே இருந்தது. அந்தப் புல்லாங்குழலிசை தவழ்ந்த இடம் இதுதானா? அந்தக் கூட்டமும் கடைகளின் நெரிசலும் முதல் முறையாக அவளுக்கு ரொம்பவே\nஎரிச்சலை ஏற்படுத்தியது. 'உச்ச்' கொட்டிக்கொண்டாள். இந்த தடவை அம்மா வீட்டுக்குப் போகும்போது தன்னுடைய பழைய புத்தகங்களில் எங்காவது அந்த இந்தியன் எக்ஸ்பிரஸ் பேப்பர் கட் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். எங்கே இருக்கப்போகிறது? அண்ணி எல்லாவற்றையும் எடுத்து பழைய பேப்பர் கடைக்காரனிடன் இன்னுமா போடாமல் வைத்திருக்கப் போகிறார்கள்? அவர்களைச் சொல்லியும் குற்றமில்லை. 550 sq.ft வீட்டில் நாங்கள் அக்கா தங்கைகள் எல்லோரும் எங்கள் பொருட்களை அப்படி அப்படியே விட்டுவிட்டு சென்றால் அண்ணிக்கும் பிள்ளைகளுக்கும் எங்கே இடமிருக்கும்? அதுவும் இருபத்து ஐந்து வருடங்கள் கழித்து இந்தியன் எக்ஸ்பிரஸ் பேப்பர் கட் புத்தகத்தில் அப்படியே இருக்க வேண்டும் என்று அவள் எதிர்பார்ப்பதும் கொஞ்சம் ஓவராகத்தானே இருக்கிறது.\n' வயசு ஆன இந்த வியாதி எல்லாத்துக்கும் வரும்னு சொல்றியே, இந்த ஊருலேதானே இப்படி எல்லாம் வியாதியும் வந்து டாக்டர் மருந்து ஊசினு காலந்தள்ள வேண்டி இருக்கு. நம்ம ஊர்லே யாருக்குடீ சர்க்கரை வியாதியும் பிளட் பிரஷ்ஷரும்? மாசத்துக்கு ஒரு தடவை பிளட் செக்கப் பண்ணுமாம். சொல்ல வந்துட்டா. ஊர்லே யாருடீ இதெல்லாம் செய்துக்கிட்டு இருக்காங்க. '\nபோரிவலி ஸ்டேஷன் வந்தவுடன் கூட்டத்துடன் கூட்டமாய் அந்தச்சிறுமியும் அவனும் இறங்குவதற்கு நின்றார்கள். அவன் கிழிந்த துணிப்பையில் நீட்டிக்கொண்டிருந்த புல்லாங்குழல் கூட்டத்தில் யாரையோ இடித்துவிட்டது .அதற்காக அவனையும் அந்தச் சிறுமியையும் இறங்குவதற்கு வாசலருகே நின்ற பெண்களின் கூட்டம் திட்டித் தீர்த்தது அவரவர் மொழியில். 'சரியான ந்யுசன்ஸ்' என்று சொல்லிக்கொண்டே அவளும் கூட்டத்துடன் கூட்டமாய் இறங்கினாள்.
ரஜினி- எஸ்.பி.பி கூட்டணி சென்டிமென்ட்..!! : Athirady Cinema News\nரஜினி- எஸ்.பி.பி கூட்டணி சென்டிமென்ட்..!!\nகார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் புதிய படத்தில், ரஜினியின் அறிமுகப் பாடலை எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாட இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.\nபா.இரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்த காலா படம் எதிர்பார்த்த அளவு மக்களிடையே வரவேற்பைப் பெறாமல் கலவையான விமர்சனத்தைப் பெற்றது. ஆனபோதும், தற்போது தனது அடுத்த பட வேலைகளில் இறங்கியுள்ளார் ரஜினி. கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் இப்படத்தை, சன் பிக்சர்ஸ் தயாரித்து வருகிறது. மேலும் இப்படத்திற்கான படப்பிடிப்பும் வேகமாக நடந்து வருகிறது. இதுவரை கார்த்திக் சுப்புராஜ் படங்களுக்கு சந்தோஷ் நாராயணன்தான் இசையமைத்து வந்தார். ஆனால், இப்படத்தின் மூலம் முதன்முறையாக அனிருத்துடன் இணைகிறார் கார்த்திக் சுப்புராஜ்.\nஇது ஒருபுறம் இருக்க, இப்படத்தில் ரஜினியின் அறிமுகப் பாடலை எஸ்.பி.பி. பாட இருப்பது தெரிய வந்துள்ளது. பெரும்பாலும் ரஜினியின் அறிமுகப் பாடலை எஸ்.பி.பி. பாடிய படங்கள் அனைத்தும் வெற்றி பெற்றுள்ளன. அதற்கு மாறாக பாபா, கபாலி, காலா உள்ளிட்ட சில படங்களில் ரஜினியின் அறிமுகப் பாடலை எஸ்.பி.பி. பாடவில்லை. இப்படங்கள் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் சரிவைச் சந்தித்தன. ( அதேநேரம், பெரிய வெற்றியைத் தந்திராத கோச்சடையான் மற்றும் லிங்கா போன்ற படங்களிலும் எஸ்.பி.பியே பாடியிருந்தார் என்பது தனிக்கதை)\nஇந்தக் காரணங்களினாலோ என்னவோ தற்போது கார்த்திக் சுப்புராஜ் படத்தில் ரஜினியின் அறிமுகப் பாடலை மீண்டும் எஸ்.பி.பியே பாட இருக்கிறார். சென்டிமென்டிற்காக படக்குழு இந்த முடிவை எடுத்ததா அல்லது கதாபாத்திரத்திற்கு அவரது குரல் தேவைப்பட்டதா என்பது தெரியவில்லை. கிட்டத்தட்ட 30 ஆண்டுகால வெற்றிக் கூட்டணியான ரஜினி – எஸ்.பி.பி மீண்டும் இப்படத்தின் மூலம் இணைவது, இருவரது ரசிகர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
விமான ரகசியங்கள்! - NEWS TODAY\nHome / GENERAL / விமான ரகசியங்கள்!\nவிமானப் பயணத்தின்போது நிறைய திகிலான விஷயங்கள் உங்களுக்குக் காத்திருக்கின்றனவிமானம் என்றாலே சுவாரஸ்யம்தான். விமானத்தைப் பற்றி படிக்க விமானத்தில் சென்றிருக்க வேண்டுமா என்ன? விமானிகளிடமும் விமானப் பணியாளர்களிடமும் வேலைபார்த்த, வேலைபார்க்கிற சிலரிடமும் மனம்விட்டுப் பேசியபோது கிடைத்த ரகசியங்கள் இவை. ஒருவேளை படித்த பிறகு, இனி எங்கே போனாலும் பொடிநடையாகப் போய்விடலாம் என்று நீங்கள் நினைத்தால் நாங்கள் பொறுப்பல்ல.
சுதந்திர தினத்தன்று காந்தி என்ன செய்துகொண்டிருந்தார்? | What was Gandhi doing on Independence Day?\nPublished : 18 Sep 2019 10:33 am\nUpdated : 18 Sep 2019 10:33 am\nLast Updated : 18 Sep 2019 10:33 AM\nஅதற்கும் முன்னதாக இந்தியாவுக்கு சுதந்திரம் கொடுக்க வேண்டும் என்ற பணிக்காகப் புதிய வைஸ்ராயை அப்போதைய பிரிட்டிஷ் பிரதமர் கிளமெண்ட் அட்லி பிப்ரவரி-20 அன்று நியமித்தார். மவுண்ட்பேட்டன் பிரபுதான் அந்த வைஸ்ராய். இதனை அடுத்து மார்ச் 22-ம் தேதியன்று மவுண்ட்பேட்டன் இந்தியாவுக்கு வந்தார். வந்த உடனே காந்தியைச் சந்திக்க விருப்பம் தெரிவித்தார். காந்தி அப்போது பிஹாரில் இருந்தார். பிஹாரில் மோசமான இனக் கலவரத்தால் ஏராளமான முஸ்லிம்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தனர். நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவரும் முயற்சியில், அங்கிருந்த காந்திக்கு மவுண்ட்பேட்டன் தன்னைச் சந்திக்க விரும்புகிறார் என்பது தெரியவருகிறது.\nஅதனையடுத்து டெல்லிக்கு மார்ச் 31-ல் காந்தி செல்கிறார். அங்குள்ள துப்புரவுத் தொழிலாளர்கள் குடியிருப்பில் காந்தி தங்குகிறார். ஏப்ரல் முதல் தேதியன்று மவுண்ட்பேட்டனை காந்தி சந்திக்கிறார். இந்தியா இரண்டாகப் பிரியப்போகிறது என்ற அச்சத்தில் இருந்த காந்தி, மவுண்ட்பேட்டனிடம் ஒரு யோசனையை முன்வைக்கிறார். ஜின்னா தலைமையில் முஸ்லிம் லீக் கட்சியே ஆட்சியை அமைக்கட்டும். தான் விரும்பியவர்களையே ஜின்னா அமைச்சரவையில் நியமிக்கட்டும். காங்கிரஸ் இந்த நடவடிக்கைகளுக்கு ஆதரவாக இருக்கும் என்றார் காந்தி.\nஏற்கெனவே, கடுமையான இந்து-முஸ்லிம் கலவரங்களைப் பார்த்து மிகுந்த மனவுளைச்சலுக்கு ஆளாகியிருந்த காந்தி, தேசப் பிரிவினை என்பது பெருமளவில் ரத்தம் சிந்த வைக்கும் ஒரு நடவடிக்கையாகத்தான் இருக்கும் என்று தீர்க்கதரிசனமாகத் தெரிந்திருந்தது. அதைத் தடுப்பதற்காகத்தான் ஜின்னா தலைமையில் முஸ்லிம் லீகே ஆட்சியை அமைக்கட்டும் என்றார். ஆனால், இதை நேரு, படேல் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் ஏற்கவில்லை.\nஆம்! காங்கிரஸுக்கு வேறு வழியே இல்லை. 1946-லிருந்து நடைபெற்றுவரும் இனக் கலவரங்களைப் பார்த்த பிறகு பிரிவினை என்பது தவிர்க்க முடியாதது என்ற நிதர்சனம் காங்கிரஸ் தலைவர்களுக்குப் புரிந்திருக்கும். மேலும், இரு மதத்தினரும் என்றென்றுமாக ஒருவரையொருவர் அடித்துக் கொன்று குவித்துக்கொண்டிருப்பதை நாடு தாங்க முடியாது என்பதால், தேசப் பிரிவினைத் தீர்மானத்தை வேறு வழியின்றி காங்கிரஸ் ஒப்புக்கொண்டது. ஆனால், காந்திதான் இறுதிவரை தேசப் பிரிவினையை எப்படியாவது தவிர்த்துவிட வேண்டும் என்று துடியாய்த் துடித்துக்கொண்டிருந்தார்.\n“பாகிஸ்தான் கோரிக்கையை காங்கிரஸ் ஏற்றுக்கொண்டுவிட்டது. பஞ்சாபையும் வங்கத்தையும் பிரிக்க வேண்டும் என்றும் அது கோரியிருக்கிறது. இந்தியாவைப் பிரிப்பதற்கு நான் எப்போதும்போல எதிரானவன். ஆனால், என்னால் என்ன செய்துவிட முடியும்? என்னால் செய்யக்கூடிய ஒரே ஒரு விஷயம் எதுவென்றால், இந்தத் திட்டத்திலிருந்து என்னைத் துண்டித்துக்கொள்வதுதான். கடவுளைத் தவிர, வேறு யாராலும் இதை ஒப்புக்கொள்ளும்படி என்னை வலியுறுத்த முடியாது” என்று காந்தி கூறியது விரக்தியின் உச்சம்.\nதேசப் பிரிவினை உறுதியான பிறகு, எந்தெந்த இடங்கள் எந்தெந்த நாட்டுக்குப் போக வேண்டும் என்று தீர்மானிப்பதற்கு சிறில் ராட்கிளிஃப் என்ற பாரிஸ்டர் ஜூன் இறுதியில் நியமிக்கப்பட்டார். இந்தியாவைப் பற்றிச் சிறிதும் தெரியாத, இந்தியாவில் காலடியே வைத்திராத ஒருவரிடம் இந்தியாவைப் பிரிக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது விசித்திரம்.\nஜூலை மாதம் ராட்கிளிஃப் இந்தியாவுக்கு வந்தார். ஆகஸ்ட் 15 சுதந்திர தினமாகக் குறிக்கப்பட்டுவிட்டதால், ராட்கிளிஃபிடம் இருந்ததெல்லாம் சில வாரங்களும் ஒரு வரைபடமும் சில உதவியாளர்களுமே. மக்கள்தொகைக் கணக்கெடுப்பு உள்ளிட்ட தகவல்களைக் கையில் வைத்துக்கொண்டு வரைபடத்தில் கோடு கிழிக்க ஆரம்பித்தார் ராட்கிளிஃப்.\nஅவருடைய பென்சில் உண்மையில் தேச வரைபடத்தில் விளையாடியிருக்கிறது. வயல் ஒரு நாட்டிலும் வீடு ஒரு நாட்டிலும், முன்வாசல் ஒரு நாட்டிலும் பின்வாசல் ஒரு நாட்டிலும், தெருவின் எதிரெதிர் சாரிகள் வேறு வேறு நாட்டிலும் என்று தேச வரைபடம் இரண்டாகப் பிரிக்கப்பட்டது. ராட்கிளிஃபின் பென்சில் கிழித்த கோடுகளை காந்தி பார்த்திருந்தால் ரத்தக் கண்ணீர் வடித்திருப்பார்.\nசுதந்திர தினமும் வந்துவிட்டது. இந்தியா இரண்டு நாடுகளாகப் பிரிக்கப்பட்டும்விட்டது. வன்முறைகளுக்குச் சிறிது இடைவெளி விட்டு, நாடு முழுதும் சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. அப்படிக் கொண்டாடாத ஒரு நபர் காந்திதான். சுதந்திர தினத்தன்று அவர் கல்கத்தாவில் இருந்தார். கல்கத்தாவில் நடந்த கலவரங்களைத் தணிப்பதற்காக அங்கு சென்றிருந்த காந்தி, சுதந்திர தினத்தன்று உண்ணாவிரதம் இருந்தார். ராட்டையில் நூல் நூற்றார்.\nகல்கத்தாவில் அவர் சுஹ்ரவர்த்தி என்ற முஸ்லிம் தலைவருடன் தங்கியிருந்தார். காந்தி வந்த பிறகு அங்கே கலவரம் தணிந்தது. சுதந்திர தினத்தன்று இந்துக்களும் முஸ்லிம்களும் ஒன்றாக சுதந்திரத்தைக் கொண்டாடினார்கள். மாணவர்கள் மத நல்லிணக்க அணிவகுப்புகளை நடத்தினார்கள். தொடர்ந்துவந்த நாட்களிலும் அப்படியே. அதைப் பற்றிக் குறிப்பிடுகையில் மவுண்ட்பேட்டன், “பஞ்சாபில் கலவரத்தை அடக்க முடியாமல் நமது ராணுவ வீரர்கள் 50 ஆயிரம் பேர் திணறிக்கொண்டிருக்கிறார்கள்.\nஆனால், கல்கத்தாவில் நமது ராணுவம் ஒரே ஒரு நபரை (காந்தியை) உள்ளடக்கியது. ஆனால், அங்கு கலவரமே இல்லை” என்றார். அப்போது வங்கத்தின் ஆளுநராக இருந்த ராஜாஜி, “மகாத்மா காந்தி தன் வாழ்நாளில் எத்தனையோ விஷயங்களைச் சாதித்திருக்கிறார். ஆனால், கல்கத்தாவில் சாதித்த அளவுக்கு மிக அற்புதமாக வேறெதையும் அவர் சாதித்திருக்கிறார் என்று நான் கருதவில்லை” என்று நெகிழ்ந்துபோனார். அதுதான் காந்தியின் வல்லமை!\nசுதந்திர தினம்காந்திகாங்கிரஸ்காங்கிரஸ் தீர்மானம்ரத்தம்துப்புரவுத் தொழிலாளர்கள்தீர்மானம்\nபுதுவை முதல்வர் நாராயணசாமியை மாற்றும் வரை போராட்டம் தொடரும்: காங்கிரஸில் இருந்து தற்காலிக...
உலக அளவில் கொரோனாவுக்கு நேற்று ஒரே நாளில் 2791 பேர் பலி.. ஸ்பெயின் முதலிடம்.. டாப் நாடுகள் விவரம் | Worldwide Total COVID-19 Yesterday's total death toll 2791 , countrywide details - Tamil Oneindia\n| Updated: Friday, March 27, 2020, 18:15 [IST]\nலண்டன்: உலக அளவில் கோவிட் -19 என்ற கொரோனா வைரஸ் தொற்றால் இதுவரை 24,089 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று ஒரே நாளில் 2791 பேர் உயிரிழந்தனர். இன்று காலைக்குள் 24089 ஆக அதிகரித்துவிட்டது. உலகிலேயே நேற்று மிக அதிகபட்சமாக ஸ்பெயினில் 718 பேர் உயிரிழந்துள்ளனர்.\nகொரோனா: உலக அளவில் அமெரிக்காவில்தான் அதிக பாதிப்பு\nஉலகம் முழுவதும் கோவிட் 19 என்ற கொரோனா வைரஸ் பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. இன்று காலை நிலவரப்படி 5,32,909 பேர் இந்த ஆட்கொல்லி நோயால் பாதிக்கப்பட்டனர். இதில் 24,090 பேர் உயிரிழந்துள்ளனர். அதேநேரம் 1,24,349 பேர் குணமாகி உள்ளனர்.\nஇந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்று அமெரிக்காவில் படுவேகமாக அதிகரித்து வருகிறது. சீனா , இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளை எல்லாம் பின்னுக்குத்தள்ளி அமெரிக்கா 82757 பேருடன் முதலிடத்தை பிடித்துள்ளது எனினும் உயிரிழப்பு என்பது அங்கு மிககுறைந்த அளவில் ஏற்பட்டுள்ளது. இதுவரை அங்கு 1194 பேர் இறந்துள்ளனர்.\nஇரண்டாவது இடத்தில் உள்ள சீனாவில் 81299 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 3287 பேர் இறந்தனர். மூன்றாவது இடத்தில் உள்ள இத்தாலியில் 80595 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 8215 பேர் இறந்துள்ளனர். 4வது இடத்தில் உள்ள ஸ்பெயினில் 56347 பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர், 4154 பேர் இறந்துள்ளனர் இந்த நான்கு நாடுகளில் மட்டும்3லட்சத்துக்கும் அதிகமான மக்கள் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஸ்பெயினில் 718 பேர் பலி\nஇந்நிலையில் உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்றால் நேற்று ஒரே நாளில் 2791 பேர் உயிரிழந்துள்ளனர். அதிகபட்சமாக ஸ்பெயினில் 718 பேர் உயிரிழந்தனர். இத்தாலியில் 712 பேர் உயிரிழந்தனர். பிரான்சில் நேற்று 365 பேர் உயிரிழந்தனர். அமெரிக்காவில் நேற்று 268 பேர் உயிரிழந்தனர். ஈரானில் 157 பேரும், இங்கிலாந்தில் 115 பேரும், நெதர்லாந்தில் 78 பேரும் இறந்தனர்.\nஇந்தியாவில் 8 பேர் பலி\nஇதேபோல் ஜெர்மனியில் நேற்று 61 பேரும், பெல்ஜியத்தில் 42 பேரும், சுவிட்சர்லாந்தில் 39 பேரும், இந்தோனேசியாவில் 20 பேரும், ஆஸ்திரியாவில் 18 பேரும்,\nபிரேசில் நாட்டில் 18 பேரும், போர்ச்சுகல் நாட்டில் 17 பேரும், துருக்கியில் 16 பேரும், சுவீடனில் 15 பேரும், அயர்லாந்து நாட்டில் 10 பேரும் இறந்தனர். நேற்று இந்தியாவில் ஒரே நாளில் 8 பேர் இறந்தனர்.\nமக்களுக்கு மருத்துவர்கள் எச்சரிக்கை\nகொரோனா வைரஸ் நோய்க்கு இதுவரை எந்த மருந்தும் கண்டுபிடிக்கப்படாத நிலையில் வயதானவர்கள், உடலில் ஏற்கனவே பாதிப்பு உள்ளவர்களுக்கு இந்த கொரோனா வைரஸ் எமனாக உள்ளதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று சமூக தொற்றாக மாறவில்லை. இதனால் சமூக தொற்றாக மாறாமல் தடுப்பதற்காக மத்திய அரசு நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு பிறப்பித்துள்ளது. இந்த ஊரடங்கை கடைபிடித்து 21 நாட்கள் வீட்டிலேயே இருந்தால் இந்தியாவே காப்பாற்றப்படும் என்பதால் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த அரசு முயன்று வருகிறது. மக்கள் அரசின் உத்தரவை கடைபிடிக்காவிட்டால் அமெரிக்கா, இத்தாலி நிலைமை இந்தியாவுக்கும் ஏற்படும் என மருத்துவ ஆய்வாளர்கள் எச்சரிக்கிறார்கள்.\ncoronavirus india usa கொரோனா வைரஸ் இந்தியா அமெரிக்கா\nWorldwide Total COVID-19 deaths till yesterday 24,073 night, Yesterday's total death toll 2791. countrywide details
உறுப்பினர் இளம் படி அம்மா செக்ஸ் எவ்வளவு கஷ்டப்பட்டாலும், அவர் பின்னர் எழுந்திருக்கவில்லை | அம்மா மகன் காம\nசூடான ஆபாச » உறுப்பினர் இளம் படி அம்மா செக்ஸ் எவ்வளவு கஷ்டப்பட்டாலும், அவர் பின்னர் எழுந்திருக்கவில்லை\nபிரான்சில் இருந்து ஒரு பாதுகாப்பற்ற நபர் நெடுஞ்சாலையில் ஒரு கருப்பு விபச்சாரியைக் கழற்றி அவளை தனது குடியிருப்பிற்கு அழைத்துச் சென்றார். படுக்கையறையில் ஒரு மறைக்கப்பட்ட கேமரா நீண்ட நேரம் தயாரிக்கப்பட்டது, கறுப்பின பெண் கொள்ளை பெற்றவுடன், உடனடியாக வேலைக்குச் சென்றார். இரண்டு நிமிடங்கள் வாடிக்கையாளருக்கு சுயஇன்பம் செய்த இளம் படி அம்மா செக்ஸ் பின்னர், சேரி முட்டைகளை நக்க ஆரம்பித்தது. அவள் நீண்ட நேரம் முயன்றாள், ஆனால் இறுதியில் ஒரு உறுப்பினரைத் தூண்ட முடிந்தது. ஆண்குறி ஆணுறை மீது வைத்து, அன்பின் பாதிரியார் தனது சிவப்பு ஷார்ட்ஸை கழற்றி, கால்களை விரித்து ஆணுக்கு சேவை செய்யத் தொடங்கினார். உடலுறவின் செயல்பாட்டில், ஒரு உறுப்பினருக்கு சிக்கல் ஏற்பட்டது - அவர் விழுந்தார், பின்னர் ஒரு மனிதனைப் போல கவனமாகத் துடித்தார், அவர் ஒருபோதும் எழுந்திருக்கவில்லை. ஃபக்கின் முடிவில், பையன் ஒரு மறைக்கப்பட்ட கேமராவில் அவளைப் படம்பிடிப்பதாக ஒப்புக் கொண்டு, லென்ஸுக்கு முன்னால் காட்ட முன்வந்தான்.\nஇணையதளம் பிரிவுகள் : கவர்ச்சி இந்திய , கவர்ச்சி பிரஞ்சு , கவர்ச்சி முதிர்ந்த பெண்கள் , பெரிய துண்டுகளையும் செக்ஸ் , இளம் படி அம்மா செக்ஸ் ,\nஒரு அழகான பெண் தொந்தரவுகளில் ஒரு சோபாவில் விழுந்து, அவளது உள்ளாடைகளை கழற்றி விரல்களால் தொடங்குகிறாள், பின்னர் ஒரு இளஞ்சிவப்பு அதிர்வுடன் இந்திய மகன் மற்றும் தாய் செக்ஸ் வீடியோக்கள் தன் காதலியைப் புண்படுத்துகிறாள்.\nஅவரது முதல் ஆபாச நடிப்பில், ஒரு அழகான அழகி ஒரு எதிர்மறையான அலங்காரத்தில் வந்தது. சிறுமி ஒரு குறுகிய பாவாடை மற்றும் ஒரு சிறிய பெக்கான் அணிந்திருந்தார். படுக்கையின் மூலையில் உட்கார்ந்து, குஞ்சு முற்றிலும் அறிமுகமில்லாத சீன தாய் மற்றும் மகன் செக்ஸ் வீடியோ வகையுடன் நன்றாக பேச ஆரம்பித்தது. தனக்கும் பையனுக்கும் பாலியல் பசியைப் பிடித்ததால், அந்த இளம் பெண் அவனுக்கு முன்னால் மண்டியிட்டு, அவளது பேன்ட் மற்றும் பேண்ட்டைக் குறைத்து, பின்னர் மெதுவாக தன் கையால் முட்டைகளை பிசைந்தாள். இந்த உறைகளில் இருந்து, ஆண் உடனடியாக ஒரு டிக் கிடைத்தது, மற்றும் பிறப்புறுப்பு தலையில் உள்ள துளையிலிருந்து கிரீஸ் சொட்ட ஆரம்பித்தது. இதைக் கவனித்த கறுப்பு ஹேர்டு பிச் உடனடியாக பிசுபிசுப்பு திரவத்தை நக்க ஆரம்பித்தது. சுவைக்குள் நுழைந்த பெண், ஒரு சிறந்த உறிஞ்சலைச் செய்தார். படுக்கைக்கு நகரும் அந்த பெண்மணி, ஒரு சீஸ்கேக்கில் எப்படிப் பழகுவது என்று தனக்குத் தெரியும் என்பதைக் காட்டினார்.\nநீண்ட காலமாக, ஒரு முன் வகை ஒரு கருப்பு ஹேர்டு இருபத்தி நான்கு வயது எவெலினா என்ற பெண்ணை துரத்தி கேமராவில் சுட்டது. சிறுமி எந்த பீதியையும் எழுப்பவில்லை, மாறாக, லென்ஸுக்கு முன்னால் தனது இடுப்பை மிகவும் பாலியல் ரீதியாக முறுக்கியது. அவர்கள் அவளைப் பிடிக்க விரும்புகிறார்கள் என்று பிச் நன்கு அறிந்திருந்தார், இந்த எண்ணங்களிலிருந்து சிறந்த அம்மா மகன் செக்ஸ் அவள் மிகவும் காயமடைந்தாள். இளம் பெண் காரில் ஏறியவுடனேயே, அவள் ஆடைகளை அவிழ்த்துவிட்டு ஃபக் செய்யத் தொடங்கினாள். அழகி அழகைக் காட்டிய பிறகு, ஆபரேட்டர் ஒரு உறுப்பினரை வெளியே இழுத்து சுயஇன்பம் செய்யத் தொடங்கினார். பரத்தையர் அதிர்ச்சியடையவில்லை, அவள் கண்ணியத்தைத் தாக்கி உறிஞ்ச ஆரம்பித்தாள். தலை மற்றும் முட்டைகளுடன் விளையாடிய பிறகு, பிச் தன்னை ஒரு புண்டையில் விட்டுவிட்டார்.\nதுரதிர்ஷ்டவசமான மாணவர் ஆசிரியரிடமிருந்து ஒரு எண்ணிக்கையைப் பெற்றார், ஆனால் பதிவு புத்தகத்தில் அல்ல, ஆனால் கழுதையில். தாய் மகன் செக்ஸ் xxx\nதோழர்களே இரண்டு கவர்ச்சியான அம்மா மற்றும் சான் பக்கங்களிலிருந்தும் அந்தப் பெண்ணுடன் இணைக்கப்பட்டிருந்தனர் - ஒருவர் தனது டிக்கை கழுதையிலும், மற்றொன்று ஊன்றுகோலிலும் வைத்தார்.\nஎன்ன ஒரு குஞ்சு, நான் அதை முயற்சி செய்கிறேன், போலி டாக்ஸிகளை மீண்டும் சொல்கிறேன், பெண்ணை நெருங்குகிறேன். "குட் மதியம், நீங்கள் ஒரு டாக்ஸியை அழைத்தீர்களா?" அவர் கேட்கிறார். சிறுமி ஏதோ தவறாக இருப்பதாக சந்தேகிக்கிறாள், ஏனென்றால் சில நிமிடங்களுக்கு முன்புதான் டாக்ஸியை அழைத்தாள். ஒரு மனிதன் உறுதியளித்து, எல்லாம் தூங்கும் அம்மா பையன் செக்ஸ் நன்றாக இருக்கிறது என்று உறுதியளிக்கிறான், பயப்பட ஒன்றுமில்லை. ஒன்றாக இரவு உணவருந்தும் திட்டத்திற்கு சாதகமான பதில் கிடைக்கவில்லை. ஆனால், நிறைய பணம், தனது உறுப்பினரின் கையில் வேலை செய்வதற்கான திட்டம் முடிவைக் காண்கிறது. விரைவில், எல்லாவற்றிற்கும் ஒப்புதல் பெறப்பட்டது. இது ஏற்கனவே இருட்டாகிவிட்டது, உணர்ச்சிவசப்பட்ட செக்ஸ் தொடர்கிறது.\nநாகரீகமான பச்சை குத்தப்பட்ட ஒரு இளம் பெண் தனது உள்ளாடைகளில் அறையைச் சுற்றி பல நிமிடங்கள் ஓடி, பின்னர் ஒரு நாற்காலியில் உட்கார்ந்து, அவளது பிறப்புறுப்புகளை விரல்களால் பயமுறுத்தத் தொடங்கினாள். இந்த நேரத்தில், அவளுடைய தோழி அறைக்குள் சென்று ஒரு அமெச்சூர் கேமராவில் நடக்கும் அனைத்தையும் சுட ஆரம்பித்தாள். குஞ்சு அவளது ப்ராவை அகற்றி, நீட்டிய முலைக்காம்புகளைக் காட்டியவுடன், ஒரு நண்பர் உடனடியாக அவளுடன் சேர்ந்து, தனது சேவலை வெளியே எடுத்து உறிஞ்சும்படி கேட்டார். பிச் அவளது கண்களை பாலியல் ரீதியாகத் தட்டியது, முழங்கால்களில் சரிந்து ஒரு சிறந்த தனியாவை உருவாக்கத் தொடங்கியது. உறிஞ்சும் போது, ​​பிச் தனது நண்பரின் முட்டைகளை அடித்தார் கவர்ச்சியான தூக்க அம்மா மற்றும் சில நேரங்களில் அவளது புண்டை மற்றும் குத துளை ஆகியவற்றை விரல்களால் தொட்டார்.\nஒரு பெரிய ஃபார்ட் கொண்ட ஒரு பெண் ஒரு தாய் மகன் கவர்ச்சியான வீடியோ பெரிய அமெச்சூர் வீடியோவில் தனது புண்டையை மறைக்கிறாள்.\nவீட்டை சுத்தம் தாயும் மகனும் செக்ஸ் நேசிக்கிறார்கள் செய்வதில் சோர்வாக இருந்த ரஷ்ய பணிப்பெண் முதலாளியின் அலுவலகத்தைப் பார்த்து, மேசையிலிருந்து ஒரு கண்ணாடி காக்னாக் எடுத்து ஆவலுடன் மது அருந்தத் தொடங்கினார். குடிபோதையில், குறும்புப் பெண் சுவருக்கு எதிராக நின்று, அவளது குறுகிய பாவாடையைத் தூக்கி, பின் பேன்டிஹோஸில் கையை வைத்து ஆவேசமாக அவளது புண்டையில் சுயஇன்பம் செய்ய ஆரம்பித்தாள். சிறுமி வேன்களால் எடுத்துச் செல்லப்பட்டாள், உரிமையாளர் எப்படி அறைக்குள் நுழைந்தாள் என்று கூட அவள் கேட்கவில்லை. ஹேரி மனிதன் என்ன நடக்கிறது என்று திகைத்துப்போனான், ஆனாலும் கத்தவில்லை. அதற்கு பதிலாக, அவர் பசு மாடுகளை தனக்குத்தானே அழுத்தி, உதட்டில் முத்தமிட்டார், பின்னர் குளிர்ச்சியான உடலுறவில் ஈடுபடுகிறார். ஊன்றுகோலில் விந்தணுக்களைப் பெற்ற அந்த இளம் பெண் உடனடியாக தன்னை ஒழுங்கமைத்து, ஒரு தூரிகையை எடுத்து சுத்தம் செய்து கொண்டே இருந்தாள்.\nவர்ணம் பூசப்பட்ட அழகி அனஸ்தேசியா வூட்மேனிடம் ஆபாச நடிப்பிற்காக வந்தார். அத்தகைய அழகு அவரது வீட்டில் தோன்றியதில் பியர் மகிழ்ச்சியடைந்தார், ஒரு அம்மாவுடன் சமையலறை செக்ஸ் குறுகிய உரையாடலுக்குப் பிறகு, இருவரும் அந்த இடத்திற்கு முன்னேறினர்.\nஇரண்டு இளம் தொழிலதிபர்களுடன் ஒரு துணை பெண் ஹோட்டல் அறைக்கு வந்தார். ஆனால் விருந்து பல மணி நேரம் ஒத்திவைக்கப்பட்டது. ஆண்கள் கொஞ்சம் குடிக்க முடிவு செய்தார்கள், அழகான பொன்னிறத்தைக் கண்டதும், ஒருவரை ஒருவர் தாய் மற்றும் மகன் பாலியல் கட்டாயப்படுத்துகிறார்கள் பார்த்துக் கொண்டனர், அதே எண்ணம் அவர்களின் தலையில் பிறந்தது என்பது தெளிவாகத் தெரிந்தது. சில நிமிடங்களுக்குப் பிறகு, அந்த பெண் ஏற்கனவே முழங்காலில் இருந்தாள், உற்சாகமான ஸ்டாலியன்களின் கடினமான உறுப்பினர்களைத் திருப்பிக் கொண்டாள். ஆண்கள் கூச்சலிட்டு இன்பத்துடனும் ஆனந்தத்துடனும் வளர்ந்தார்கள், குறிப்பாக ஒரே நேரத்தில் அவள் புண்டை மற்றும் கழுதைக்குள் நுழைந்த பிறகு. ஓ, அவர்கள் இன்று விருந்து மண்டபத்திற்கு வர வாய்ப்பில்லை. ஒருவர் சிறுமியை குத துளைக்குள், இரண்டாவது வாயை வாயில் தாழ்த்துவது ஆகியவற்றுடன் வீடியோ முடிகிறது.\nஇந்த அழகான பிச்சை தனிப்பட்ட முறையில் அறிந்த அனைத்து ஆண்களும் அவளைப் பிடிக்க விரும்புகிறார்கள், ஆனால் அந்த பெண் xxx செக்ஸ் அம்மா மற்றும் சூரியன் யாரையும் அனுமதிக்கவில்லை. எல்லோருக்கும் கீழ் படுக்கைக்கு செல்வதை விட அவள் சுயஇன்பம் செய்வதில் சிறந்தவள்.\nஆபாசப் படங்கள் மற்றும் வீடியோக்களைத் தொடர்ந்து சோர்வடையச் செய்து, பையன் தனது ஓய்வு நேரத்தில் அழைத்து முதிர்ச்சியடைந்த செயின்ட் பீட்டர்ஸ்பர்க் விபச்சாரிக்கு உத்தரவிட்டார். மெல்லிய பரத்தையர் விரைவாக வந்து, பணத்தை எடுத்து, தனது வாடிக்கையாளர் எந்த வகையான செக்ஸ் விரும்புகிறார் என்பதில் ஆர்வம் காட்டினார். ஒரு பரத்தையரை ஊதுவதற்கு அம்மா மகன் காம கதை முன்பு கனா அவளுக்கு ஆல்கஹால் சிகிச்சை அளித்தது, பின்னர் அவிழ்த்து படுக்கையறைக்கு அழைத்துச் சென்றது. அங்கு, பெரிய படுக்கைக்கு நேர் எதிரே ஒரு அறையில், ஒரு மறைக்கப்பட்ட கேமரா பொருத்தப்பட்டது. சந்தேகத்திற்கு இடமில்லாத எந்தப் பெண்ணும் ஒரு வழுக்கை மனிதனை முதுகில் வீசி, ஒரு உறுப்பினர் மீது கை மற்றும் தொண்டையின் உதவியுடன் வேலை செய்யத் தொடங்கினர். அழகி உறிஞ்சுவதை விட மோசமாக இல்லை. வாடிக்கையாளர் மிகவும் திருப்தி அடைந்தார் மற்றும் பல புணர்ச்சிகளுக்குப் பிறகு, ஒரு பிச் செலுத்தி, இரவு முழுவதும் அவளை விட்டு வெளியேறினார்.\nஇரண்டு வாத்துகள் பையனை ஒரு நாற்காலியில் கட்டி, அவரது பெண் தூக்கி எறியப்பட்டார். bangla தாய் மற்றும் மகன் செக்ஸ் வீடியோ
யோனா : 1\n1 : அமித்தாயின் குமாரனாகிய யோனாவுக்குக் கர்த்தருடைய வார்த்தை உண்டாகி, அவர்:\n2 : நீ எழுந்து மகா நகரமாகிய நினிவேக்குப் போய், அதற்கு விரோதமாகப் பிரசங்கி; அவர்களுடைய அக்கிரமம் என் சமுகத்தில் வந்து எட்டினது என்றார்.\n3 : அப்பொழுது யோனா கர்த்தருடைய சமுகத்தினின்று விலகி, தர்ஷீசுக்கு ஓடிப்போகும்படி எழுந்து, யோப்பாவுக்குப் போய், தர்ஷீசுக்குப் போகிற ஒரு கப்பலைக்கண்டு, கூலி கொடுத்து, தான் கர்த்தருடைய சமுகத்தினின்று விலகும்படி, அவர்களோடே தர்ஷீசுக்குப் போகக் கப்பல் ஏறினான்.\n4 : கர்த்தர் சமுத்திரத்தின்மேல் பெருங்காற்றை வரவிட்டார்; அதினால் கடலிலே கப்பல் உடையுமென்று நினைக்கத்தக்க பெரிய கொந்தளிப்பு உண்டாயிற்று.\n5 : அப்பொழுது கப்பற்காரர் பயந்து, அவனவன் தன்தன் தேவனை நோக்கி வேண்டுதல்செய்து, பாரத்தை லேசாக்கும்படிக் கப்பலில் இருந்த சரக்குகளைச் சமுத்திரத்தில் எறிந்துவிட்டார்கள்; யோனாவோவென்றால் கப்பலின் கீழ்த்தட்டில் இறங்கிபோய்ப் படுத்துக்கொண்டு, அயர்ந்த நித்திரைபண்ணினான்.\n6 : அப்பொழுது மாலுமி அவனிடத்தில் வந்து: நீ நித்திரைபண்ணுகிறது என்ன? எழுந்திருந்து உன் தேவனை நோக்கிவேண்டிக்கொள்; நாம் அழிந்து போகாதபடிக்குச் சுவாமி ஒருவேளை நம்மை நினைத்தருளுவார் என்றான்.\n7 : அவர்கள் யார்நிமித்தம் இந்த ஆபத்து நமக்கு நேரிட்டதென்று நாம் அறியும்படிக்குச் சீட்டுப்போடுவோம் வாருங்கள் என்று ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டு சீட்டுப்போட்டார்கள்; யோனாவின் பேருக்குச் சீட்டு விழுந்தது.\n8 : அப்பொழுது அவர்கள் அவனை நோக்கி: யார்நிமித்தம் இந்த ஆபத்து நமக்கு நேரிட்டதென்று நீ எங்களுக்குச் சொல்லவேண்டும்; உன் தொழிலென்ன? நீ எங்கேயிருந்து வருகிறாய்? உன் தேசம் எது? நீ என்ன ஜாதியான் என்று கேட்டார்கள்.\n9 : அதற்கு அவன்: நான் எபிரெயன்; சமுத்திரத்தையும் பூமியையும் உண்டாக்கின பரலோகத்தின் தேவனாகிய கர்த்தர் இடத்தில் பயபக்தியுள்ளவன் என்றான்.\n10 : அவன் கர்த்தருடைய சமுகத்தினின்று விலகி ஓடிப்போகிறவன் என்று தங்களுக்கு அறிவித்ததினால், அந்த மனுஷர் மிகவும் பயந்து, அவனை நோக்கி: நீ ஏன் இதைச் செய்தாய் என்றார்கள்.\n11 : பின்னும் சமுத்திரம் அதிகமாய்க் கொந்தளித்துக்கொண்டிருந்தபடியால், அவர்கள் அவனை நோக்கி: சமுத்திரம் நமக்கு அமரும்படி நாங்கள் உனக்கு என்ன செய்யவேண்டும் என்று கேட்டார்கள்.\n12 : அதற்கு அவன்: நீங்கள் என்னை எடுத்துச் சமுத்திரத்திலே போட்டு விடுங்கள்; அப்பொழுது சமுத்திரம் உங்களுக்கு அமர்ந்திருக்கும்; என்னிமித்தம் இந்தப் பெரிய கொந்தளிப்பு உங்கள்மேல் வந்ததென்பதை நான் அறிவேன் என்றான்.\n13 : அந்த மனுஷர் கரைசேரும்படி வேகமாய்த் தண்டுவலித்தார்கள்; ஆனாலும் சமுத்திரம் வெகு மும்முரமாய்க் கொந்தளித்துக்கொண்டேயிருந்தபடியால் அவர்களால் கூடாமற்போயிற்று.\n14 : அப்பொழுது அவர்கள் கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டு: ஆ கர்த்தாவே, இந்த மனுஷனுடைய ஜீவனிமித்தம் எங்களை அழித்துப்போடாதேயும்; குற்றமில்லாத இரத்தப்பழியை எங்கள்மேல் சுமத்தாதேயும்; தேவரீர் கர்த்தர்; உமக்குச் சித்தமாயிருக்கிறபடி செய்கிறீர் என்று சொல்லி,\n15 : யோனாவை எடுத்துச் சமுத்திரத்திலே போட்டுவிட்டார்கள்; சமுத்திரம் தன் மும்முரத்தைவிட்டு அமர்ந்தது.\n16 : அப்பொழுது அந்த மனுஷர் கர்த்தருக்கு மிகவும் பயந்து, கர்த்தருக்குப் பலியிட்டுப்பொருத்தனைகளைப்பண்ணினார்கள்.\n17 : யோனாவை விழுங்கும்படி ஒரு பெரிய மீனைக் கர்த்தர் ஆயத்தப்படுத்தியிருந்தார்; அந்த மீன் வயிற்றிலே யோனா இராப்பகல் மூன்று நாள் இருந்தான்.
மே 7ஆம் தேதி பதவி ஏற்கவில்லை... பொறுப்பை ஏற்றேன்.... போட்டி போடும் அமைச்சர்கள்... முதல்வர் ஸ்டாலின் உரை!! • Seithi Solai\nகடந்த மே மாதம் 7ஆம் தேதி நான் பதவி ஏற்கவில்லை, பொறுப்பை ஏற்றேன் என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.\nமேலும் அவர், கடந்த மே மாதம் 7ஆம் தேதி நான் பதவி ஏற்கவில்லை, பொறுப்பை ஏற்றேன் என்றுதான் சொல்லவேண்டும். அன்று முதல் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டு தொடங்கப்பட்டு வருகின்றன. தற்போது அமைச்சர்கள் போட்டி போட்டுக் கொண்டு தங்கள் துறையின் பணிகளை செய்து வருகின்றனர். விவசாய உற்பத்தியை மேம்படுத்தும் வகையில் புதிய மின் இணைப்புகள் விவசாயிகளுக்கு வழங்கப்படுகின்றன. இதை விட வேகமான ஆட்சி இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இருக்காது என்று பெருமையுடன் பேசினார்..\nTags: இலவச மின் இணைப்பு, திமுக, முக.ஸ்டாலின்
அரிசோனா மாநில பல்கலைக்கழகத்தில் பாம் வாக் (அதிகரிக்க புகைப்படத்தில் கிளிக் செய்யவும்). புகைப்பட கடன்: சிசிலியா கடற்கரை\nஅரிசோனா மாநில பல்கலைக்கழகம் நான்கு ஆண்டு, பொது பல்கலைக்கழகம் ஆகும். அமெரிக்காவின் மிகப்பெரிய கல்லூரிகளில் ஒன்றான இந்த நுழைவு வாயிலாக, ஏ.எஸ்.யூ.யூ 72,000 மாணவர்கள், அரிசோனாவில் உள்ள டெம்பே நகரில் உள்ள முக்கிய வளாகத்தில் சுமார் 60,000 மாணவர்களை ஆதரிக்கிறது. ASU இளங்கலை, முதுகலை, முனைவர் மற்றும் சட்டக் கல்லூரிகளில் ஒரு பாடசாலையிலும் கல்லூரிகளிலும் வழங்குகிறது. மாணவர்களுக்கு 25 முதல் 1 மாணவர் / ஆசிரிய விகிதம் ஆதரிக்கப்படுகிறது.\nமேலே உள்ள படம் பாம் வாக், பனை மரங்களால் முனைகள் நிறைந்த ஒரு நடைபாதை நடை, சிலவற்றில் 90 அடி உயரத்தில் உள்ளன. இந்த நடைபாதையானது டெம்பெக் கேம்ப்ஸின் அழகிய புகைப்படம் எடுத்தது.\nஅரிசோனா மாநில பல்கலைக்கழகத்தைப் பற்றிய மேலும் தகவலுக்கு, ASU சுயவிவரம் மற்றும் பள்ளியின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்க்கவும்.\nபுகைப்பட உலாவைத் தொடரவும் ...\nஅரிசோனா மாநில பல்கலைக்கழகத்தில் பழைய முதன்மை\nஅரிசோனா மாநில பல்கலைக்கழகத்தில் பழைய முதன்மை (அதிகரிக்க புகைப்படத்தில் கிளிக் செய்யவும்). புகைப்படக் கடன்: ஜான் எம். விரைவு / ஃப்ளிக்கர்\nவளாகத்தில் உள்ள மிக பழமையான மற்றும் மிகவும் வரலாற்று கட்டிடம் ASU அல்முனிமி அசோசியேஷனுக்கு சொந்தமான ஓல்ட் மைன் ஆகும். டெம்பிளியில் மின் விளக்குகள் இருப்பதாக பழைய மெயின் முதல் கட்டிடம் இருந்தது, மேலும் இது வரலாற்று இடங்களின் தேசிய பதிவேட்டில் பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த சிறிய வரலாற்றை ASU பெருமையாகக் கருதுகிறது மற்றும் கட்டிடத்தை பாதுகாக்க கடினமாக உழைக்கிறது.\nஅரிசோனா மாநில பல்கலைக்கழகத்தில் சூரிய பேனல்கள்\nஅரிசோனா மாநில பல்கலைக்கழகத்தில் சூரிய பேனல்கள் (அதிகரிக்க புகைப்படத்தில் கிளிக் செய்யவும்). புகைப்பட கடன்: கெவின் டூய்லி / ஃப்ளிக்கர்\nகேம்பஸ் நிலைத்தன்மையின் பரப்பளவில், ASU விளையாட்டின் முன்னோடியாகும், மேலும் நாட்டில் உள்ள "பச்சை" கல்லூரிகளில் அதிக இடங்களை வகிக்கிறது. ஏ.எஸ்.யூ.வில் 61,000 க்கும் அதிகமான சூரிய மண்டலங்கள் உள்ளன, இவை 15.3 மெகாவாட்டிற்கு மேலாக உற்பத்தி செய்யப்படுகின்றன. முக்கிய வளாகத்தில் 59 சூரிய அமைப்புகள் மற்றும் 66 சூரிய அமைப்புகள் மொத்த உதவி ASU ஆற்றல் திறனை வைத்து. கூடுதலாக, கல்லூரி ஒவ்வொரு ஆண்டும் சுமார் 800 டன் மறுசுழற்சி செய்யப்படுகிறது. கேம்பஸ் வளர்சிதை மாற்றத்திற்கான அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களை நீங்கள் ஆராய்ந்து பார்க்க முடியும்.\nASU இல் Wrigley ஹால்\nASU இல் Wrigley Hall (அதிகரிக்க புகைப்படத்தை கிளிக் செய்யவும்). புகைப்படக் கடன்: ஏஜெனேஷன் / ஃப்ளிக்கர்\nASU இன் Wrigley ஹால் கல்லூரி பேண்தகைமை முன்முயற்சியின் மற்றொரு எடுத்துக்காட்டு. ரிக்லி ஹால் பெரும்பாலும் மறுசுழற்சி செய்யப்பட்ட பொருட்களிலிருந்து தயாரிக்கப்பட்டது மற்றும் கூரை மீது காற்று விசையாழிகள் மின்சாரத்தை உருவாக்குகின்றன. இது பள்ளியின் உலகளாவிய நிறுவனம் நிலைத்தன்மை மற்றும் பள்ளியின் நிலைத்தன்மை ஆகியவற்றிற்கும் உள்ளது. வளாகத்தின் வளர்சிதைமாற்ற திட்டத்திற்கு இங்கே கட்டியெழுப்ப எவ்வளவு சக்தி தேவைப்படுகிறது என்பதை நீங்கள் காணலாம்.\nஅரிசோனா மாகாணத்தில் Brickyard\nஅரிசோனா மாநிலத்தில் Brickyard (அதிகரிக்க புகைப்படத்தை கிளிக் செய்யவும்). புகைப்பட கடன்: robynspix / Flickr\nடெம்பிள் டெம்பில் அமைந்திருக்கும் Brickyard ASU இன் ஆர்ட்ஸ் ஸ்கூல் ஆப் ஆர்ட்ஸ், மீடியா மற்றும் இன்ஜினியரிங் மற்றும் ஸ்பேட்டல் மாடலிங் (PRISM), அரிசோனா டெக்னாலஜி எண்டர்பிரைசஸ் (அ.ச.டி.இ.) ஆராய்ச்சி மற்றும் ஆராய்ச்சி அறிவியலுக்கான மையம் (CUbiC) ).\nஅரிசோனா மாநில பல்கலைக்கழகத்தில் ஹேடன் நூலகம்\nஅரிசோனா மாநில பல்கலைக்கழகத்தில் ஹேடன் நூலகம் (அதிகரிக்க புகைப்படத்தில் கிளிக் செய்யவும்). புகைப்பட கடன்: சிசிலியா கடற்கரை\nசார்லஸ் ட்ரம்பூல் ஹேடன் நூலகம் டெம்பே நிறுவனர் நிறுவனத்திற்கு பெயரிடப்பட்டுள்ளது, மற்றும் கட்டிடம் விரிவான ASU லைப்ரரி சிஸ்டத்தின் பகுதியாக உள்ளது. மொத்தத்தில், ASU நூலகங்கள் ஏறக்குறைய5மில்லியன் புத்தகங்கள் மற்றும் அத்துடன் 300,000 மின்புத்தகங்கள் மற்றும் 78,000 விஜயங்களுக்கான அணுகலைக் கொண்டுள்ளன. இந்த நூலகமானது, தகவல் மையம் போன்றது, ஒரு தோட்டத்தில் முற்றத்தில் மற்றும் "ஒளியின் பெக்கான்" என்று பெயரிடப்பட்ட ஒரு பள்ளிக்கூட மைல்கல்.\nஅரிசோனா மாநிலம் நினைவு சங்கம்\nஅரிசோனா மாநில நினைவு சங்கம் (அதிகரிக்க புகைப்படத்தை கிளிக் செய்யவும்). புகைப்பட கடன்: robynspix / Flickr\n800+ மாணவர் கிளப்புகளில் ஒரு நிறுவனத்தில் சேர விரும்புவோருக்கு, ஒரு சகோதரத்துவம் அல்லது மகளிர் சங்கம், அல்லது மாணவர் அரசாங்கம், நினைவு சங்கம் செல்ல வேண்டிய இடம். மெட்ரிக் யூனியன் பாட் டில்மேன் வெர்டன்ஸ் சென்டர் மற்றும் சன் டிவைல் இன்வெல்வென்மென்ட் மையம் மற்றும் ஸ்பார்க்கி'ஸ் டென் எனப்படும் மாணவர் பொழுதுபோக்கு மையம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.\nASU இல் பைபர் எழுத்தாளர்கள் ஹவுஸ்\nASU இல் பைபர் ரைட்டர்ஸ் ஹவுஸ் (அதிகரிக்க புகைப்படத்தை கிளிக் செய்யவும்). புகைப்பட கடன்: சிசிலியா கடற்கரை\nகிரியேட்டிவ் எழுத்தாளர்கள் வர்ஜீனியா ஜி. பைபர் ரைடர்ஸ் ஹவுஸில் வசதியான ஜனாதிபதியின் குடிசையில் வீட்டில் சரியாக உணர்கிறார்கள். கிரியேட்டிவ் ரைடிங்கிற்கான வர்ஜீனியா ஜி. பைபர் மையம் மற்றும் வகுப்பறைகள், நூலகம் மற்றும் எழுத்தாளர் தோட்டம் ஆகியவற்றை நீங்கள் அங்கு காணலாம். இந்த வரலாற்று வரலாற்றுப் பகுதியின் தேசிய பதிவேட்டில் உள்ளது, ராபர்ட் ஃப்ரோஸ்ட் இருமுறை விஜயம் செய்யப்பட்டது.\nASU ஃபுல்டன் மையம்\nASU இல் Fulton மையம் (புகைப்படத்தை பெரிதாக்குவதற்கு கிளிக் செய்யவும்). புகைப்பட கடன்: seantoyer / Flickr\nASU அறக்கட்டளை 2005 ஆம் ஆண்டில் நவீன ஃபுல்டன் மையத்தை உருவாக்கியது, அது பல்கலைக்கழக நிர்வாகம், லிபரல் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் நிர்வாக கல்லூரி, மற்றும் அறக்கட்டளை ஆகியவற்றையும் நடத்தியது. 1955 ஆம் ஆண்டு முதல், ASU அறக்கட்டளை கல்லூரிக்கு நன்கொடைகளை வழங்கும் ஒரு இலாப நோக்கற்ற நிறுவனமாகும்.\nASU காமகேஜ் (அதிகரிக்க புகைப்படத்தை கிளிக் செய்யவும்). புகைப்பட கடன்: நிக் பாஸ்டியன் / ஃப்ளிக்கர்\nASU காமகேஜ் ஒரு கலை மையமாகவும் முழு சமூகத்திற்காகவும் ஒரு பிரபலமான இடமாகவும் உள்ளது. காமகேஜ் நடனக் கலைஞர்களையும், இசைக்கலைஞர்களையும், கலைஞர்களையும் கல்லூரி மற்றும் உலகெங்கிலும் இருந்து கொண்டுள்ளது. கட்டிடத்தின் கட்டிடக்கலை குறிப்பிடத்தக்கது - இது ஃபிராங்க் லாய்ட் ரைட் வடிவமைக்கப்பட்டது.\nஅரிசோனா மாநிலத்தில் தீர்ப்பு தியேட்டர்\nஅரிசோனா மாநிலத்தில் தீர்ப்பு நாடகம் (அதிகரிக்க புகைப்படத்தை கிளிக் செய்யவும்). புகைப்பட கடன்: robynspix / Flickr\nASU தீர்ப்பு தியேட்டர் என்பது தொழில்நுட்ப ரீதியாகவும் விஞ்ஞான ரீதியாகவும் ஒருங்கிணைந்த முடிவெடுக்கும் ஒரு இடமாக உள்ளது. அவர்களது ஒரு வகையான ஒரு "ஏழு திரை ஆழமான சூழ்நிலை" முடிவு தயாரிப்பாளர்கள் தரவு சிக்கலான தொகுப்புகளை ஆய்வு செய்ய அனுமதிக்கிறது. முடிவெடுக்கும் தியேட்டரின் புதுமையான வடிவமைப்பு கூட்டு முடிவெடுக்கும் செயல்முறைகளில் கணிசமான முன்னேற்றங்களைக் குறிக்கிறது.\nASU நெல்சன் ஃபைன் ஆர்ட்ஸ் சென்டர்\nASU நெல்சன் ஃபைன் ஆர்ட்ஸ் மையம் (புகைப்படத்தை பெரிதாக்குவதற்கு கிளிக் செய்யவும்). புகைப்பட கடன்: சிசிலியா கடற்கரை\nASU வளாகத்தில் உள்ள எந்த கலைஞர்களோ அல்லது கலைஞர்களோ நெல்சன் ஃபைன் ஆர்ட்ஸ் சென்டர் பார்வையிட வேண்டும். இந்த மையம் ASU ஆர்ட் மியூசியம் மற்றும் கால்வின் பிளேஹவுஸ் ஆகிய இரண்டையும் கொண்டுள்ளது. இந்த கட்டிடத்திற்கான வடிவமைப்பும் கலையாகும், மேலும் இது 1989 ஆம் ஆண்டு அமெரிக்கன் ஆர்கிடெக்ட் ஆஃப் ஆர்கேக்கர்ஸ் ஹானர் விருது வென்றது.\nஅரிசோனா மாநில பல்கலைக்கழகத்தில் கைவினைஞர் நீதிமன்றம்\nஅரிசோனா மாநில பல்கலைக்கழகத்தில் கைவினைஞர் நீதிமன்றம் (அதிகரிக்க புகைப்படத்தில் கிளிக் செய்யவும்). புகைப்பட கடன்: robynspix / Flickr\nஆர்ட்டன் கோர்ட் பிரிகியார்டின் பகுதியாகும் மற்றும் Ira A. Fulton Schools of Engineering. கலைஞர் நீதிமன்றம் தொலைதூரக் கற்றல் திறன்களைக் கொண்ட பாடசாலை, கணினி மற்றும் தீர்த்த சிஸ்டம்ஸ் இன்ஜினியரிங் ஆகியவற்றிற்கான அரசு-ன்-கலை வகுப்பறைகளைக் கொண்டுள்ளது.\nASU இசை கட்டிடம்\nASU மியூசிக் கட்டிடம் (அதிகரிக்க புகைப்படத்தை கிளிக் செய்யவும்). புகைப்பட கடன்: சிசிலியா கடற்கரை\nஏஎஸ்யு ஸ்கூல் ஆஃப் மியூசிக் இசைக் கட்டிடத்தில் உள்ளது, ASU மாணவர்கள் "பிறந்த நாள் கேக் கட்டிடம்" என்று அழைக்கப்படுகிறது. கட்டிடம் வகுப்பறைகள், நடைமுறையில் அறைகள் மற்றும் நினைவு சின்னங்கள், அதே போல் ஈவ்லின் ஸ்மித் இசை அரங்கம், ரபேல் மென்டஸ் நூலக அருங்காட்சியகம், காட்சின் கச்சேரி மண்டபம் மற்றும் இசை ஆராய்ச்சி வசதி ஆகியவையும் இந்த கட்டிடமாகும். கூடுதலாக, மியூசிக் கட்டடம் இசை கல்வி மற்றும் சிகிச்சை ஆய்வகங்கள், மின்னணு இசை ஸ்டூடியோக்கள், பியானோ பழுது கடைகள் மற்றும் ஒரு ஆடை கடை உள்ளது.\nஅரிசோனா மாகாணத்தில் பாரெட் ஹான்சர்ஸ் கல்லூரி\nஅரிசோனா மாநிலத்தில் பாரெட் கெளரவ கல்லூரி (புகைப்படத்தை பெரிதாக்குவதற்கு கிளிக் செய்யவும்). புகைப்பட கடன்: சிசிலியா கடற்கரை\nBarrett Honors College Academic Complex ஒன்பது ஏக்கர் வளாகம், ASU கெளரவ மாணவர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. இது நாட்டிலுள்ள ஒரு உயர் மட்ட பொது பல்கலைக்கழகத்திற்குள் ஒரே குடியிருப்பு, நான்கு வருட கல்லூரி ஆகும், அது ஒரு சமூக மையம், ஒரு காஃபி, ஒரு உடற்பயிற்சி மையம் மற்றும் பாரெட்டில் உள்ள உயிருக்கோள் இல்லம் ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது.\nASU வில் வெல்ஸ் ஃபார்கோ அரினா\nஆசஸ் மணிக்கு வெல்ஸ் ஃபர்கோ அரினா (அதிகரிக்க புகைப்படத்தை கிளிக் செய்யவும்). புகைப்பட கடன்: நிக் பாஸ்டியன் / ஃப்ளிக்கர்\n1974 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட வெல்ஸ் ஃபார்கோ அரினா ASU இன் பல அணிகள் பலவற்றிற்கு அமையும். ASU Sun Devils NCAA பிரிவு I பசிபிக்-12 மாநாட்டில் (Pac-12) போட்டியிடுகின்றன, மேலும் 20 NCAA சாம்பியன்ஷிப் ( வாட் இஸ் அன் சன் டெவில்? ) வென்றது. வெல்ஸ் ஃபார்கோ அரினா 14,000 க்கும் அதிகமான இடங்கள் மற்றும் நிகழ்ச்சிகள், இசை நிகழ்ச்சிகள் மற்றும் பட்டமளிப்பு விழாக்கள் ஆகியவற்றில் மேலதிக விளையாட்டுகள் உள்ளன.\nASU சன் டெவில் ஸ்டேடியம்\nASU சன் டெவில் ஸ்டேடியம் (புகைப்படத்தை பெரிதாக்குவதற்கு கிளிக் செய்யவும்). புகைப்பட கடன்: நிக் பாஸ்டியன் / ஃப்ளிக்கர்\nASU சன் டெவில் ஸ்டேடியம் 75,000 பேரைக் கொண்டிருக்கும் மற்றும் நான்கு முறை புதுப்பிக்கப்பட்டுள்ளது. ஸ்டேடியம் 2008 இன்சைட் பவுல் மற்றும் 1996 NFL சூப்பர் பவுல் ஆகியவற்றிற்கு விருந்தளித்தது. 2008 இல், ஸ்போர்ட்ஸ் இல்லஸ்ட்ஸ்ட்ரேட்டட் ASU இடம் "நேஷன் இன் தடகளத் துறை" என்ற தலைப்பில் பல பல்கலைக்கழக மாணவர்களுக்காக கவர்ச்சிகரமானதாக அமைந்தது.\n"ஸ்பிரிட்" சிற்பம் மற்றும் ASU Carey School of Business\n"ஸ்பிரிட்" சிற்பம் மற்றும் ASU Carey School of Business (அதிகரிக்க புகைப்படத்தை கிளிக் செய்யவும்). புகைப்பட கடன்: சிசிலியா கடற்கரை\nWP கேரி ஸ்கூல் ஆஃப் பிசினஸ் வெளியே "ஆவி," பக் மெக்கெய்ன் ஒரு அழகான சிற்பம் உள்ளது. 2009 ஆம் ஆண்டில் கேரி ஸ்கூல் ஆஃப் பிசினஸில் 14 அடி உயர கலை வேலைகள் வழங்கப்பட்டன, மேலும் ASU இன் விரிவான கலை சேகரிப்பின் ஒரு பகுதியாக மாறியது. "ஆவி" என்பது ASU சமுதாயத்திற்கு உத்வேகம் தருகிறது. நீங்கள் நிறுவன மைய வலைத்தளத்தின் ஆன்மீகத்தில் மேலும் தகவலைக் காணலாம்.\nஅரிசோனா மாநில சுயவிவரம்\nASPA சேர்க்கைக்கான GPA, SAT மற்றும் ACT Graph\nமவுண்டன் மாநிலங்களின் உயர்ந்த கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள்\nபிற பொது பல்கலைக்கழகங்களை ஆராயுங்கள்:\nUCLA புகைப்பட டூர்\nUNC சேப்பல் ஹில் ஃபோட்டோ டூர்\nபுளோரிடா பல்கலைக்கழக புகைப்படம் டூர்\nஓஹியோ மாநில பல்கலைக்கழக புகைப்படம் டூர்\nமேலும் புகைப்படம் சுற்றுப்பயணங்கள் ...\nவட கரோலினா பல்கலைக்கழகம் சேப்பல் ஹில் Photo Tour\n20 நிறுவனங்களைக் கற்பிக்கும் மேற்கோள்கள் மரியாதை கொடுங்கள், மதிக்க வேண்டும்\nஜெனிபோபியாவின் உதாரணங்கள்: இனரீதியான விவரக்குறிப்புகள் இருந்து இண்டர்நெட் வரை\nஜேன் பர்ன்ஸ், கெட்டிஸ்பர்க் சிவில் ஹீரோ\nஎரின் ஹில்ஸ் கோல்ஃப் பாடலை சந்திக்கவும்\nபல மதங்கள் முழுவதும் சாத்தானிய புள்ளிவிவரங்கள்\n6 குரல் பயிற்சிகள் மிக் பதிவு செய்கிறது\nSelf-deportation என்றால் என்ன?\nவிளையாட்டு காஸ்டிங் காட்சிகள் காட்டு\nபாக்ஸர் கலகத்தின் காலவரிசை\nஅமெரிக்க ஆங்கிலம் ஆங்கிலத்தில் ஆங்கில ஆங்கில சொற்களஞ்சியம்
சோனியா அகர்வால் டூப் இல்லாமல் சண்டை போட்டு நடித்த படம் ‘சாயா’ - Tamil Cinema ReporterTamil Cinema Reporter\nநட்சத்திரக் கூட்டணியில் உருவாகியுள்ள படம் ‘விழித்திரு’\nசோனியா அகர்வால் டூப் இல்லாமல் சண்டை போட்டு நடித்த படம் ‘சாயா’\nAugust 2, 2016 Admin செய்திகள்\nஒரு மனிதன் இறந்த பின், அந்த ஆத்மாவால் அந்த உடலை பார்க்க முடியுமா..?? அப்படியே பார்க்க முடிந்தாலும் அந்த ஆத்மா என்ன செய்யும்..??\nமுழுக்க முழுக்க மாணவர்களை மையப்படுத்தி எடுக்கப்பட்ட ஒரு மாணவியின் ஆத்மா சம்பந்தப்பட்டது. அந்த மாணவியின் ஆத்மா விட்ட சவாலில் ஜெயித்து காட்டியதா..??? அதனால் ஏற்படும் விளைவுகளை எப்படி அந்த ஆத்மா சமாளித்தது என்பது தான் இந்த ”சாயா”. அம்மா அப்பா சினி பிக்சர்ஸ் வெளியிட்ட முதல் படம் விஜயநகரம். அடுத்ததாக சாயா படத்தை தயாரித்து வருகிறது.\nஒய்.ஜி. மகேந்திரன் ஆத்மாவின் தந்தையாக நடித்துள்ளார். கிராமத்து பின்னணியில் எடுக்கப்பட்ட இப்படத்தில் கிராமத்து பஞ்சாயத்தர்களாக ஆர்.சுந்தரராஜன், பயில்வான் ஆகியோர் நடித்துள்ளனர்.\nமேலும், பாய்ஸ் ராஜன், நெல்லை சிவா, கிரேன் மனோகர், கொட்டாச்சி ஆகியோர்களும் நடித்துள்ளனர்.\nபாலாசிங், மூகாம்பிகை ரவி, கராத்தே ராஜா ஆகிய மூவரும் வில்லன்களாக மிரட்டியுள்ளனர்.\nபடத்தின் நாயகனாக புதுமுகம் சந்தோஷ் கண்ணா, நடிப்பிலும் சண்டைக்காட்சியிலும் திறமையாக நடித்துள்ளார். நாயகியாக டூரிங் டாக்கீஸ் படத்தில் நடித்த காயத்ரி படம் முழுக்க அனுபவப்பட்ட நடிகை போல் அசத்தி உள்ளார்.\nவன இலாகா அதிகாரியாக வரும் சோனியா அகர்வால், விஜய சாந்தி இடத்தை நிரப்பும் அளவுக்கு, க்ளைமாக்ஸ் சண்டைக் காட்சிகளில் டூப் இல்லாமல் அதிரடியாக நடித்து பிரமிக்க வைத்து உள்ளார்.\nகதை, இயக்கம், பாடல்கள், பின்னணி இசை: வி.எஸ். பழனிவேல்\nடான்ஸ்” ரமேஷ் கமல்\nதயாரிப்பு மேற்பார்வை: மது பாலன்\nதயாரிப்பு : வி.எஸ்.சசிகலா பழனிவேல்\n“ உன்னால் என்னால் “படத்தில் வில்லியான ...
கச்சா எண்ணெய் விலை உயர்வால் பங்கு சந்தை, பொருளாதார வளர்ச்சி அதிகம் பாதிக்கப்படும்! | Rising oil prices may affect Sensex, Nifty - Tamil Goodreturns\n» கச்சா எண்ணெய் விலை உயர்வால் பங்கு சந்தை, பொருளாதார வளர்ச்சி அதிகம் பாதிக்கப்படும்!\nகச்சா எண்ணெய் விலை உயர்வால் பங்கு சந்தை, பொருளாதார வளர்ச்சி அதிகம் பாதிக்கப்படும்!\nUpdated: Tuesday, November 7, 2017, 13:33 [IST]\nபாகிஸ்தானோடு போருக்கு போகலாம், ஆனால் ஒரு மாதத்துக்கான கச்சா எண்ணெய் இருக்கா..! RAW கேள்வி..!\nஇனி ஈரானிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்க முடியாது..!\nஉலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதன் பாதிப்பு இந்திய பங்கு சந்தைபில் இருக்கும் என்று வல்லுநர்கள் கூறி வருகின்றனர். அதுமட்டும் இல்லாமல் ஆர்பிஐ வங்கி டிசம்பர் மாதம் வட்டி விகிதத்தினைக் குறைக்கும் என்பதால் முதலீட்டாளர்கள் தங்களது நிலைப்பாட்டினை மறு ஆய்வு செய்து வருகின்றனர்.\nசெவ்வாய்க்கிழமையான இன்று பிரெண்ட் கச்சா எண்ணெய் பேரல் ஒன்றுக்கு 64.27 டாலராக உள்ளது, இதுவே WTI கச்சா எண்ணெய் பேரல் ஒன்றுக்கு விலை 57.35 ரூபாயாக உள்ளது.\nநேற்று புதிய உச்சத்தினைத் தொட்ட சென்செக்ஸ் மற்றும் நிப்டி இரண்டும் செவ்வாய்கிழமையான இன்று சரிவை சந்தித்துள்ளன. இன்று பிற்பகல் 1:20 மணி நிலவரத்தின் படி சென்செக்ஸ் 187.89 புள்ளிகள் என 0.56 சதவீதம் சரிந்து 33,536.46 புள்ளிகளாகவும், நிப்டி 52.30 புள்ளிகள் என 0.50 சதவீதம் சரிந்து 10,399 புள்ளிகளாக வர்த்தகம் செய்யப்பட்டு வருகின்றது.\nஅதிக அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்வது என்பது பணவீக்கத்தினை அதிகரிக்கும், அன்றாடத் தேவைக்கான பல பொருட்கள் மீதான விலைகள் உயரும்.\nஜிஎஸ்டி மற்றும் பண மதிப்பு நீக்கம்\nகடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி ஜூன் மாதம் 5.7 சதவீதமாகக் குறைந்துள்ளது. இது நவம்பர் மாதம் எடுக்கப்பட்ட பண மதிப்பு நீக்க நடவடிக்கை மற்றும் ஜூலை மாதம் ஜிஎஸ்டி அமலுக்குக் கொண்டு வரப்பட்டதால் ஏற்பட்ட சரிவாகும்.\nகச்சா எண்ணெய் விலை 1 பேரலுக்கு 10 டாலர் வரை உயர்ந்தால் வளர்ச்சி விகிதம் 0.15 சதவீதம் சரியும் என்று ஆர்பிஐ தெரிவித்துள்ளது. மேலும் இது மொத்த விலை குறியீட்டையும் நேரடியாகப் பாதிக்கும்.\nகச்சா எண்ணெய் விலை உயர முக்கியக் காரணம்?\nகடந்த நான்கு வாரங்களாகக் கச்சா எண்ணெய் விலை தொடர் உயர்வைச் சந்தித்துள்ளது. மேலும் மத்திய கிழக்கு நாடுகளின் எண்ணெய் நிறுவனங்கள் கச்சா எண்ணெய் உற்பத்தியினைக் குறைக்கவும் முடிவு செய்துள்ளதால் தற்போதைக்குப் பெட்ரோலியம் பொருட்கள் விலை குறைய வாய்ப்பில்லை என்றே கூறப்படுகின்றது.\nசவுதி அரேபியா எண்ணெய் நிறுவனங்கள் எடுத்துள்ள இந்த முடிவால் மட்டும் 2017-ம் ஆண்டில் கச்சா எண்ணெய் விலை 9.98 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.\nஉலகளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதில் மூன்றாம் மிகப் பெரிய நாடாக இந்தியா உள்ளது. அதே நேரம் இந்தியாவில் இருந்து நேப்பால், வங்க தேசம், மியான்மர், பூட்டான் உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்யப்படுகின்றது. ஒரு நாளைக்கு இந்தியாவில் 4.2 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப்படுகின்றது.\nஇந்தியா தனக்குத் தேவையான 80 சதவீத கச்சா எண்ணெய்யினை இறக்குமதி செய்வதால் கச்சா எண்ணெய் விலை உயரும் போது இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சி விகிதம் 6.75 முதல் 7.50 சதவீதமாக 2017-2018 ஆண்டில் இருக்கும் என்று கூறப்படுகின்றது.\nRead more about: கச்சா எண்ணெய் விலை உயர்வு இந்தியா பங்கு சந்தை பொருளாதார வளர்ச்சி sensex nifty\nRising oil prices may affect Sensex, Nifty\n1 USD = 68.99639 (USD to INR)\n1 EUR = 77.78377 (EUR to INR)\n1 GBP = 91.14734 (GBP to INR)
14வது கிராண்ட்ஸ்லம் பட்டம் வென்றார் ஜோகோவிச் | தினகரன்\nHome 14வது கிராண்ட்ஸ்லம் பட்டம் வென்றார் ஜோகோவிச்\n14வது கிராண்ட்ஸ்லம் பட்டம் வென்றார் ஜோகோவிச்\nஅமெரிக்க பகிரங்க டென்னிசின் இறுதிப் போட்டியில் டெல் போட்ரோவை வீழ்த்தி குரோஷியா நாட்டைச் சார்ந்த நோவக் ஜோகோவிச் சம்பியன் பட்டம் வென்றார்.\nஅமெரிக்க பகிரங்க ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நோவக் ஜோகோவிச் பட்டம் வென்றார். கிராண்ட்ஸ்லம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க பகிரங்க டென்னிஸ் நியூயோர்க்கில் நடந்தது முடிந்துள்ளது. மகளிர் ஒற்றையர் பிரிவில் ஜப்பானை சேர்ந்த ஒசாகா சம்பியன் பட்டத்தை கைப்பற்றியிருந்தார்.\nஇந்நிலையில், ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதி போட்டியில் குரோஷியா நாட்டைச் சார்ந்த நோவக் ஜோகோவிச் சம்பியன் பட்டத்தை கைப்பற்றி அசத்தியுள்ளார். இது அமெரிக்க பகிரங்க டென்னிசில் அவரது 3-வது கிராண்ட்ஸ்லம் பட்டம் ஆகும்.\nதரவரிசையில் 6-ம் இடத்தில் உள்ள ஜோகோவிச், 3-வது இடத்தில் உள்ள ஆர்ஜெண்டினா வீரர் டெல் போட்ரோவை இறுதிப்போட்டியில் எதிர் கொண்டார். இந்த போட்டியில் ஜோகோவிச் கையே ஓங்கி இருந்தது. ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய ஜோகோவிச், 6-–3, 7-–6(4), 6-–3 என்ற நேர் செட்களில் டெல் போட்ரோவை வீழ்த்தி பட்டம் வென்றார்.\nஇதுவரை ஜோகோவிச் ஒட்டுமொத்தமாக 14 கிராண்ட்ஸ்லம் பட்டம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவர்களின் பட்டியலில் சுவிச்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர் 20 கிராண்ட்ஸ்லம் பட்டங்களுடன் முதலிடத்தில் உள்ளார்.\nரபேல் நடால் 17 கிராண்ட்ஸ்லம் பட்டங்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார்.\nஅமெரிக்க பகிரங்க டென்னிசில் பட்டம் வென்றதன் மூலம் 14 கிராண்ட்ஸ்லம் பட்டங்களுடன் 3-வது இடத்தை பீட் சாம்ப்ராஸ் உடன் பகிர்ந்துகொண்டார் ஜோகோவிச்.
திசை ஈர்ப்பு விசை: இருபத்தொன்றாம் நூற்றாண்டின் 15 அரபு கவிஞர்கள்\n21 ஆம் நூற்றாண்டின் 15 அரபு கவிஞர்கள்\nகவிதை சில நேரங்களில் "அரேபியர்களின் மொழி" என்று குறிப்பிடப்படுகிறது. வாய்வழி பாரம்பரியமாக, கவிதை இஸ்லாத்தை முன்னரே முன்வைக்கிறது. அரபு உலகின் கையொப்பக் கவிதை உட்பட பல உலகளாவிய இலக்கிய மரபுகளை பாதித்துள்ளது. இது அரபு கவிதைகளின் ஒரு மூலக்கல்லாகவும், உணர்ச்சிவசப்பட்ட, உணர்ச்சிபூர்வமான வெளிப்பாட்டின் சின்னமாகவும் உள்ளது.\nஆரம்பகால அரபு சமூகங்கள் அழகு, தெய்வீகம் மற்றும் விசுவாசத்தின் பதிவுகள் ஆகியவற்றை வெளிப்படுத்த கவிதைகளைப் பயன்படுத்தின. கவிஞர்கள் சமூகத்தின் மரியாதைக்குரிய உறுப்பினர்களாக இருந்தனர், அவர்களின் கதைகளையும் பாடங்களையும் இசை மூலம் தெரிவித்தனர்.\nஇந்த நூற்றாண்டின் அரபு கவிஞர்கள் அனைவரும இந்த பாரம்பரியத்தைத் தொடர்ந்தனர் மற்றும் அதன் வடிவங்களையும் வெளிப்பாட்டு முறைகளையும் அடிப்படையில் மாற்றியுள்ளனர். கீழேயுள்ள கவிஞர்கள் காதல் , நெருக்கம் முதல் ஒடுக்குமுறை மற்றும் துன்புறுத்தல் வரையிலான பாடங்களை பிரதிபலிக்கிறார்கள், அனைவருமே ஒரு தனித்துவமான குரலையும் அடையாள உணர்வையும் நிறுவ முற்படுகிறார்கள். அவர்களின் பணி அவர்கள் அனுபவித்த சமூக அநீதி, பாகுபாடு , அரசியல் மோதல்கள் பற்றிய ஒரு நெருக்கமான கதையைச் சொல்கிறது. அரசியல் மற்றும் கலாச்சார பதற்றம் அதிகரிக்கும் சமயங்களில், கவிதை என்பது ஒரு சிறந்த வெளிப்பாடாகும், அத்தியாவசிய மனித உணர்வுகள் மற்றும் போராட்டங்களை நிவர்த்தி செய்வது பிற ஊடகங்கள் செய்ய முடியாத வழிகளில் பிரித்தல் ஆகியவை கவிதையின் பணிகளாகும்.\n1. அடோனிஸ் (1930-)\nசிரியா கிராமப்புறங்களில் பிறந்த அடோனிஸ் , அலி அஹ்மத் சைட் எஸ்பர், ஒரு இளைஞனாக தனது கவிதைத் வாழ்க்கையைத் தொடங்கியபின், கருவுறுதலின் கிரேக்க தெய்வத்தின் பெயரைப் பெற்றார். இந்த முயற்சியில் அவரது தந்தை அவருக்கு உதவினார், அவர் அவரைப் படிக்கக் கற்றுக் கொடுத்தார், மேலும் கவிதைகளை மனப்பாடம் செய்ய ஊக்குவித்தார். சிரியாவின் ஜனாதிபதியிடம் ஒரு கவிதையை ஓதிய பின்னர், டமாஸ்கஸ் பல்கலைக்கழகத்தில் சேர நிதி பெற்றார்.\nஅடோனிஸ் தனது டீன் ஏஜ் ஆண்டுகளில் அரசியல் ரீதியாக தீவிரமாக இருந்தார், இதன் விளைவாக, ஒரு வருடம் சிறையில் அடைக்கப்பட்டார். அவரது தண்டனை முடிந்ததும், அவர் பெய்ரூட்டுக்குச் சென்று, இரண்டு முக்கிய இலக்கிய பத்திரிகைகளைக் கண்டுபிடிக்க உதவினார்.அவை ஷீர் மற்றும் மவாகிஃப் ஆகியவை ஆகும்.\nஅடோனிஸின் பாணி சோதனை மற்றும் புதுமையானது, சுதந்திர வசனம், உரைநடை மற்றும் மாறுபட்ட மீட்டரைப் பயன்படுத்துகிறார். "கவிதை என்பது சிந்தனையின் ஒரு கயிற்றைக் காட்டிலும் ஒரு பிணையமாக இருக்க வேண்டும்" என்று அவர் நம்புகிறார். அவரது பாலைவன கவிதை அவரது பரிசோதனையை எடுத்துக்காட்டுகிறது, ஏனெனில் இது கட்டமைப்பில் தனித்துவமானது மற்றும் உள்ளடக்கத்தில் சக்தி வாய்ந்தது.\nசர்வதேச கவிதை மன்றத்தின் சிரியா-லெபனான் விருதை வென்ற டமாஸ்கஸின் மிஹார்: அவரது பாடல்கள் (2008) மற்றும் தி பிளட் ஆஃப் அடோனிஸ் (1971) ஆகியவை அவரது மிகவும் பிரபலமான தொகுப்புகள் ஆகும்்.\nஅவர் நாஜிம் ஹிக்மெட் கவிதை விருது மற்றும் இலக்கியம் மற்றும் வெளிப்பாட்டின் சுதந்திரத்திற்கான நோர்வே அகாடமி ஆஃப் ஜோர்ன்சன் பரிசையும் பெற்றவர். பேராசிரியர், கவிதை கோட்பாட்டாளர் மற்றும் கட்டுரையாளராக பணியாற்றிய இவர் தற்போது பாரிஸில் தனது மனைவி மற்றும் இரண்டு மகள்களுடன் வசித்து வருகிறார்.\nசாம்பல் ரோஜாக்களுக்கு இடையில் ஒரு நேரம்\nஒரு குழந்தை தடுமாறும், யாஃபாவின் முகம் ஒரு குழந்தை / வாடிய மரங்கள் எவ்வாறு மலர முடியும்?\nசாம்பல் ரோஜாக்களுக்கு இடையில் ஒரு நேரம் வருகிறது,\nபோது எல்லாம் தொடங்கும்\n2. அஹ்லம் மோஸ்டேகனேமி (1953-)\nஅஹ்லாம் மோஸ்டேகனேமி துனிஸில் பிறந்தார். முதலில் அல்ஜீரிய வம்சாவளியைச் சேர்ந்தவர், அவரது தந்தை, ஒரு போர்க்குணமிக்க அரசியல் ஆர்வலர், அல்ஜீரிய விடுதலைப் போரின்போது துனிசியாவுக்கு நாடுகடத்தப்பட்டார். அவள் ஒன்பது வயதில், அவளுடைய குடும்பம் மீண்டும் அல்ஜீரியாவுக்குச் சென்றது. 1970 ஆம் ஆண்டில், அவரது தந்தை ஒரு படுகொலை முயற்சியில் பலத்த காயம் அடைந்தார், அஹ்லாமை தனது குடும்பத்திற்கு வழங்குவதற்காக விட்டுவிட்டார்.\n17 வயதில் அவர் பிரபல வானொலி நிகழ்ச்சியான ஹம்மாசாட் (விஸ்பர்ஸ்) நிகழ்ச்சியைத் தொடங்கினார். 1973 ஆம் ஆண்டில் அரபு மொழியில் ஒரு புத்தகத்தை வெளியிட்ட முதல் அல்ஜீரிய பெண் என்ற பெருமையைப் பெற்றார், மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு தனது இரண்டாவது பதிப்பை வெளியிட்டார். பிரெஞ்சு காலனித்துவ ஆக்கிரமிப்பின் முடிவில் அரேபிய மொழியைப் படிக்க அனுமதிக்கப்பட்ட அல்ஜீரியாவின் முதல் தலைமுறையினரில் மோஸ்டெபனேமி ஒருவராக இருந்தார், இது பெரும்பாலும் பிரெஞ்சு மொழி பேசும் சமூகத்தின் முக்கிய படியாகும். அவர் ஒரு அரபு மொழி பேசும், பெண் எழுத்தாளராக கடும் விமர்சனத்தையும் பாலியல் உணர்வையும் எதிர்கொண்டார். அல்ஜியர்ஸ் பல்கலைக்கழகத்தில் தனது இலக்கிய பி.ஏ. பட்டத்தை பெற்ற பிறகு, முதுநிலைபள்ளி ஒரு முதுநிலை திட்டத்தில் சேர மறுத்துவிட்டது, அவரது பெண்ணிய வேலை மாணவர் அமைப்புக்கு தீங்கு விளைவிப்பதாக வாதிட்டார். இணக்கமின்மை காரணமாக அல்ஜீரிய எழுத்தாளர்களின் ஒன்றியத்திலிருந்து அவர் வெளியேற்றப்பட்டார்.\n1976 ஆம் ஆண்டில் அவர் பாரிஸில் ஒரு லெபனான் மனிதரை மணந்தார் மற்றும் சோர்போனில் படிக்கத் தொடங்கினார். 1982 இல் சமூகவியலில் முனைவர் பட்டம் பெற்றார். அவரது ஆய்வறிக்கை அல்ஜீரிய சமுதாயத்தில் பாலின பாத்திரங்களை ஆராய்ந்தது. 1993 ஆம் ஆண்டில் அவர் மீண்டும் லெபனானுக்குச் சென்று, விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட, ஆத்திரமூட்டும் நாவலான “மெமரி ஆஃப் தி ஃபிளெஷ்” ஐ வெளியிட்டார். கவிதைப் படைப்பு, பெண்களின் உரிமைகள் மற்றும் காலனித்துவத்திற்கு பிந்தைய தலைமுறையின் போராட்டங்கள் குறித்த அரசியல் பிரதிபலிப்புகளுடன் ஊக்கமளிக்கும் ஒரு நகரும் காதல் கதையைச் சொல்கிறது. அவரது குரல் அரபு உலகம் முழுவதும் மில்லியன் கணக்கான வாசகர்களுடன் பிரதிபலித்தது மற்றும் எதிரொலித்தது.\nதனது அசல் நாவலின் தொடர்ச்சியையும் முத்தொகுப்பையும் வெளியிடுவதன் மூலம் தொடர்ச்சியான இலக்கிய வெற்றியைத் தொடருவார். அவரது பின்னர் வந்த இரண்டு புத்தகங்களும் பெரும் வரவேற்பைப் பெற்றன. அவரது படைப்புகள்2மில்லியனுக்கும் அதிகமான பிரதிகள் விற்றுள்ளன. 2006 ஆம் ஆண்டில் ஃபோர்ப்ஸ் பத்திரிகை மோஸ்டேகனெமியை மிகவும் வெற்றிகரமான அரபு எழுத்தாளராக அடையாளம் காட்டியது. மிக சமீபத்தில், 2016 ஆம் ஆண்டில், யுனெஸ்கோ அமைதி வேறுபாட்டிற்கான மதிப்புமிக்க கலைஞரை அவருக்கு வழங்கியது.\n3. பத்ர் ஷாகிர் அல் சயாப் (1926-1964)\nஅரபு உலகெங்கிலும் மிகவும் பிரியமான கவிஞர்களில் ஒருவரான பத்ர் ஷாகிர் அல் சயாப் ஈராக் கிராமப்புறங்களில் தேதி விவசாயிகளின் குடும்பத்தில் பிறந்தார். சயாப் ஆறு வயதாக இருந்தபோது, ​​அவரது தாய் பிரசவத்தின்போது காலமானார். அவரது மரணம் சயாப் மற்றும் அவரது எதிர்கால கவிதைப் படைப்புகளில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும், இது பெரும்பாலும் அவரது எழுத்தில் தாய்மை மற்றும் தாயகத்தைப் பிரதிபலிக்கிறது.\nஅவர் தனது தாயின் மரணத்திற்குப் பிறகு தனது தாத்தா பாட்டிகளுடன் சென்றார், அந்த சமயத்தில் அவர் மேல்நிலைப் பள்ளியில் சேரத் தொடங்கினார். இந்த நேரத்தில் வகுப்புகளுக்கு இடையிலான ஏற்றத்தாழ்வுகள் குறித்த அவரது அவதானிப்புகள் அவரது பிற்கால மார்க்சிய படைப்புகளுக்கு ஊக்கமளிக்கும். 1940 களில் சயாப் கம்யூனிஸ்ட் கட்சியுடன் மேலும் மேலும் வலுவாக அடையாளம் காட்டினார்.\n1946 ஆம் ஆண்டில் அவர் அரபு வசனக் கவிதைகளின் மரபுகளை முறித்துக் கொண்டு சக கவிஞர் நாசிக் அல்-மலாக்காவுடன் அரபு இலவச வசன இயக்கத்தை நிறுவினார். இந்த இயக்கத்தின் அடித்தளம் ஈராக்கை அதன் இலக்கிய மற்றும் அரசியல் துறையில் நவீனத்துவத்தை ஏற்றுக்கொள்ளத் தள்ளியது. 1948 ஆம் ஆண்டில் அவர் தனது முதல் தொகுப்பை வாடிய பூக்கள் என்ற தலைப்பில் வெளியிட்டார் . அவர் ஒரு ஆசிரியராக சுருக்கமாக பணியாற்றினார், ஆனால் பின்னர் அவரது கம்யூனிச இணைப்புகளுக்காக சிறையில் அடைக்கப்பட்டார். சிறைவாசத்தைத் தொடர்ந்து அவர் பல ஒற்றைப்படை வேலைகளைச் செய்தார், அரசியல் ரீதியாக தீவிரமாக இருந்தார்.\nஇருப்பினும், இறுதியில் அவர் தனது கவிதைகளில் அரசியல் செய்தியை கைவிட்டார். அவர் 1955 இல் திருமணம் செய்து கொண்டார், அடுத்த ஆண்டு ஒரு மகள் பிறந்தார். 1958 ஆம் ஆண்டில் அவர் அரசியல் ரீதியாக ஊக்கமளிக்கும் கவிதைகளுக்காக "14 ஜூலை 1958 புரட்சியின் நபி" என்று பெயரிடப்பட்டார். இந்த நேரத்தில் எழுதப்பட்ட அவரது இறுதி, ஆனால் மிகவும் பிரபலமான கவிதைகளில் ஒன்று அவரது படைப்பு மழை பாடல் .\n4. ஃபத்வா துக்கான் (1917-2003)\nஃபத்வா துக்கான் நாப்ளஸ் நகரில் ஒரு பணக்கார பாலஸ்தீனிய குடும்பத்தில் பிறந்தார். அவரது கவிதைகள் சமூகத்திலிருந்து அரசியலுக்கு மாற்றமடையும், குறிப்பாக அவரது தாயகத்தின் அழிவைத் தொடர்ந்து. எவ்வாறாயினும், தனது வாழ்க்கையின் ஆரம்ப கட்டங்களில், அவர் முதன்மையாக ஒரு அரபு பெண்ணாக தனது நிலையைப் பற்றி எழுதினார். அவரது கவிதை கட்டமைப்பு ரீதியாகவும் மாறியது, கிளாசிக்கல் பாணியில் தொடங்கி பின்னர் நவீன இலவச வசன பாணியில் உருவானது. காதல் கருப்பொருள்கள் மற்றும் சமூக எதிர்ப்பின் கலவையில், மஹ்மூத் டார்விஷ் அவளுக்கு "பாலஸ்தீனிய கவிதைகளின் தாய்" என்று பெயரிட்டார்.\n1967 இல் நாப்லஸ் இஸ்ரேலிய படைகளுக்கு வீழ்ந்ததைத் தொடர்ந்து, துக்கான் தனது கவிதைகள் மூலம் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பை எதிர்ப்பதில் தனது ஆற்றலை மையப்படுத்தினார். அவர் பன்னிரண்டு திவான்கள் அல்லது கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டார். 1990 ஆம் ஆண்டில் தனது சுயசரிதை எழுதினார், ஒரு பெண்ணாக அவர் தாங்கிய வரம்புகளையும் கட்டுப்பாடுகளையும் மீண்டும் வெளிப்படுத்தினார். 1999 இல், துக்கானின் வாழ்க்கையைப் பற்றி ஒரு படம் தயாரிக்கப்பட்டது. துக்கான் திருமணமாகாமல் இருந்தார் , 2003 இல் அவர் இறக்கும் வரை தொடர்ந்து எழுதுவார்.\nதியாகான் தனது இன்டிபாடாவின் தியாகிகள் என்ற கவிதையில் , பாலஸ்தீனிய கல் வீசுபவர்களைப் பற்றி துக்கான் பிரதிபலிக்கிறார்.\nஅவர்கள் நின்று இறந்தனர், சாலையில் எரியும்\nநட்சத்திரங்களைப் போல பிரகாசிக்கிறார்கள், அவர்களின் உதடுகள் வாழ்க்கையின் உதடுகளுக்கு அழுத்துகின்றன\nஅவர்கள் மரணத்தின் முகத்தில் எழுந்து நின்றனர்,\nபின்னர் சூரியனைப் போல மறைந்துவிட்டார்கள்.\n5. கடா அல்-சம்மன் (1942-)\nகடா அல் சம்மன் சிரியாவில் பிறந்தார். அவரது தாயார் இளம் வயதிலேயே இறந்துவிட்டார், ஆனால் அவரது தந்தை, பல்கலைக்கழக பேராசிரியர், அவரது வாழ்க்கையிலும் எதிர்கால வேலைகளிலும் ஒரு கருவியாகப் பங்கு வகித்தார். அவர் தனது மகளுக்கு மேற்கத்திய மற்றும் அரபு இலக்கியங்களைப் பாராட்டினார். அவர் டமாஸ்கஸில் உள்ள ஒரு பிரெஞ்சு பள்ளியில் படித்தார், பின்னர் பெய்ரூட்டின் அமெரிக்க பல்கலைக்கழகத்தில் படித்தார். அவர் 1962 ஆம் ஆண்டில் சிறுகதைகள் புத்தகமான யுவர் ஐஸ் மை டெஸ்டினியை வெளியிட்டார் . பட்டம் பெற்ற பிறகு, அவர் ஒரு பத்திரிகையாளராக பணிபுரிந்தார், மேலும் தனது இரண்டாவது தொகுப்பான நோ சீ இன் பெய்ரூட்டில் 1965 இல் வெளியிட்டார். 1966 ஆம் ஆண்டு தொடங்கி அவர் ஒரு நிருபராக பணிபுரியத் தொடங்கினார், பயணம் செய்தார் உலகம் மற்றும் அவரது எழுத்துக்கான பொருள் பெறுதல்.\nஇஸ்ரேலுக்கும் எகிப்துக்கும் இடையில் 1967 ல் நடந்த பேரழிவுகரமான ஆறு நாள் போரினால் அவர் குறிப்பாக பாதிக்கப்பட்டார். மோதலுக்கு பதிலளிக்கும் விதமாக லண்டனில் ஐ கேரி மை ஷேம் என்ற அவரது கட்டுரை மிகவும் பிரபலமானது, அதன் யதார்த்தமான தொனியைப் பாராட்டியது. இந்த கட்டத்திற்குப் பிறகு, சமூக உண்மைகளை தனது பத்திரிகைத் துண்டுகளில் சித்தரிப்பதில் சம்மன் கவனம் செலுத்துவார், கற்பனை உலகத்தை விட்டுவிடுவார். 1973 ஆம் ஆண்டு வெளியான தி டிபார்ச்சர் ஆஃப் ஓல்ட் போர்ட்ஸில், அரபு புத்திஜீவிகளின் போராட்டங்கள் மற்றும் உள் சிந்தனைக்கும் வெளிப்புற நடவடிக்கைக்கும் இடையிலான மோதல் குறித்து விவாதித்தார். இந்த தத்துவப் பணிக்கு அவள் மிகவும் மதிக்கப்படுகிறாள்.\n1960 ஆம் ஆண்டில் தனது திருமணத்திற்கு முந்தைய இடைக்காலத்தில், சம்மன் ஒரு வகையான "வீழ்ந்த பெண்கள்" என்று கருதப்பட்டார், ஒரு தந்தை அல்லது கணவர் இல்லாமல் அவளைக் கவனித்துக்கொள்வதற்கும், குழந்தைகள் வளர்ப்பதற்கும் இல்லை. இந்த களங்கம் அவளை தொந்தரவு செய்தது மற்றும் அவரது பெண்ணிய எழுத்துக்களை ஊக்குவித்தது. அவரது பணி மற்றும் அவரது வெளிப்படையான ஆளுமை மிகவும் விமர்சிக்கப்பட்டன, இருப்பினும் அவர் இறுதியில் தனது சொந்த பதிப்பகத்தை நிறுவினார் மற்றும் பாரிஸில் உள்ள தனது வீட்டிலிருந்து துண்டுகளை தொடர்ந்து வெளியிடுகிறார்.\n6. காசன் ஜக்தான் (1954-)\nபாலஸ்தீனத்தில் பிறந்த காசன் ஜக்தான் சிரியா, ஜோர்டான், லெபனான் மற்றும் துனிசியாவில் வசித்து வருகிறார். அவர் பல தொகுப்புகளை வெளியிட்டுள்ளார், பெரும்பாலும் அரபு மொழியில் எழுதப்பட்டவர் மற்றும் அவரது சொந்த நினைவுகள் மற்றும் தனிப்பட்ட அனுபவங்களின் அடிப்படையில்.\nஜக்தான் தனது சொந்த பாலஸ்தீனத்திற்குள் உள்ள இலக்கியக் காட்சியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார். எதிர்ப்பின் முக்கிய ஆதரவாளராக, ஜக்தான் பி.எல்.ஓவின் பத்திரிகையான பேயடரின் ஆசிரியராக பணியாற்றினார் . ரமல்லாவில் உள்ள கவிதை மன்றத்தின் நிறுவனர் மற்றும் இயக்குனராகவும் உள்ளார், முன்பு பாலஸ்தீன கலாச்சார அமைச்சகத்தின் இலக்கிய மற்றும் வெளியீட்டுத் துறையின் இயக்குநராகவும் பணியாற்றினார்.\nஜாக்தானின் மிகவும் பிரபலமான படைப்பான லைக் எ ஸ்ட்ரா பறவை, இது என்னைப் பின்தொடர்கிறது.\n7. மஹ்மூத் டார்விஷ் (1942-2008)\n"பாலஸ்தீனத்தின் கவிஞர்" என்று அழைக்கப்படும் மஹ்மூத் டார்விஷ் கலிலியில் வளர்ந்தார். அவரது கிராமம் அழிக்கப்பட்ட பின்னர், அவர் சட்டவிரோதமாக ஒரு "உள் அகதியாக" பயணம் செய்தார், எல்லா நேரங்களிலும் கவிதைகளை ஓதினார். அடையாள அட்டை ஒரு புரட்சிகர பாடலாகப் பயன்படுத்தப்பட்ட பின்னர் டார்விஷ் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டு இறுதியில் அப்பகுதியிலிருந்து நாடுகடத்தப்பட்டார் .\n1970 இல் அவர் மாஸ்கோவிற்கும், ஒரு வருடம் கழித்து கெய்ரோவிற்கும் சென்றார். அவர் எகிப்தில் இருந்தபோது அல்-அஹ்ரம் செய்தித்தாளில் பணியாற்றினார் . 1973 இல் பெய்ரூட்டிற்குச் சென்று பாலஸ்தீனிய விவகார இதழுக்காக எழுதினார் . பாலஸ்தீனிய காரணத்திற்காக அர்ப்பணிக்கப்பட்ட அவர் 1973 முதல் 1982 வரை பாலஸ்தீனிய விடுதலை அமைப்பின் செயற்குழுவில் பணியாற்றினார். 1996 இல், அவரது நாடுகடத்தப்பட்டது நீக்கப்பட்டு அவர் இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்திற்கு திரும்பினார்.\nஇயற்கையாகவே, டார்விஷின் கவிதைகள் பெரும்பாலும் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பையும் பாலஸ்தீனிய நிலத்தின் அழிவையும் இழிவுபடுத்துகின்றன. அவரது கவிதைகள் இழப்பு மற்றும் வெளியேற்றத்தை சித்தரிக்கின்றன. ஃபார்ச் மற்றும் ரன்னீர், டார்விஷின் 2003 தொகுப்பின் அறிமுகத்தில், துரதிர்ஷ்டவசமாக, இது வாஸ் பாரடைஸ், இதை எழுதுங்கள்:\n"டார்விஷ் பாலஸ்தீனிய புலம்பெயர்ந்தோரின் குரலாக இருப்பதால், அவர் துண்டு துண்டான ஆன்மாவின் குரல்."\nமுப்பதுக்கும் மேற்பட்ட கவிதை புத்தகங்களை வெளியிட்டுள்ள இவர், லன்னன் கலாச்சார சுதந்திர பரிசு உட்பட பல விமர்சன விருதுகளைப் பெற்றவர் ஆவார்.\nபயங்கரவாதத்தையும் அடக்குமுறையையும் எதிர்கொள்ளும் அடையாளத்தின் தன்மையைப் பிரதிபலிப்பதில், டார்விஷ் தனது ஜெருசலேம் என்ற கவிதையில் எழுதுகிறார் :\nஆனால் நான் என்னையே நினைக்கிறேன்:\nதனியாக, நபிகள் நாயகம்\nகிளாசிக்கல் அரபு பேசினார். "அப்புறம் என்ன?"\nபிறகு என்ன? ஒரு பெண் சிப்பாய் கூச்சலிட்டார்:\nநீங்கள் மீண்டும்? நான் உன்னைக் கொல்லவில்லையா?\nநான் சொன்னேன்: நீ என்னைக் கொன்றாய்… உன்னைப் போலவே நான் இறக்க மறந்துவிட்டேன்.\n8. மாலக் ஹிஃப்னி நாசிப் (1886-1918)\nமாலக் ஹிஃப்னி நசிப் ஒரு எகிப்திய எழுத்தாளர் மற்றும் பெண்ணியவாதி. கெய்ரோவில் ஒரு நடுத்தர குடும்பத்தில் பிறந்த நசிப்பின் பெற்றோர் அவரது கல்விக்கு மிகவும் உறுதுணையாக இருந்தனர். அவள் சிறு வயதிலிருந்தே கவிதை படிக்கவும் எழுதவும் ஆரம்பித்தாள். அவர் தனது வகுப்பின் உச்சியில் உள்ள சனியா ஆசிரியர் பயிற்சி கல்லூரியில் பட்டம் பெற்றார். அவர் தனது பழைய தொடக்கப்பள்ளியில் வேலை கற்பித்தல் பெற்றார், ஆனால் 1907 இல் திருமணமான பிறகு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அவளும் அவரது கணவரும் பாலைவனத்திற்கு குடிபெயர்ந்தனர், அங்கு அவர் ஒரு புனைப்பெயரில் எழுதத் தொடங்கினார்.\nஇருப்பினும், தனது கணவருக்கு இரண்டாவது மனைவி மற்றும் குடும்பம் இருப்பதைக் கண்டுபிடித்தவுடன், சமூகத்தின் பெண்களை மோசமாக நடத்துவது குறித்த தனது கவலைகளை வெளிப்படுத்த அவர் தனது எழுத்தைப் பயன்படுத்தினார். பலதார மணத்தை நேரடியாக விமர்சிக்க அவரது அனுபவம் அவளைத் தூண்டியது. விவாகரத்து செய்ய பெண்களுக்கு உரிமை இருக்க வேண்டும் என்றும், திருமணத்தின் சட்டபூர்வமான வயது 16 ஆக உயர்த்தப்பட வேண்டும் என்றும் அவர் நம்பினார்.\nநாட்டின் வரலாற்றில் ஒரு முக்கியமான நேரத்தில், பெண்களின் அறிவுசார் மற்றும் அரசியல் நிலை மிகவும் விவாதத்திற்கு உள்ளானபோது, ​​பெண்ணிய சொற்பொழிவுக்கு நசிஃப் பங்களித்தார். அவரது காலத்தின் பிற பெண்ணியவாதிகள் விடுதலையின் அடையாளமாக அவிழ்ப்பதைப் பயன்படுத்தினாலும், நசிப் இந்த பாரம்பரியத்தை எதிர்த்தார். முக்காட்டை முன்னறிவிப்பது வெறுமனே மேற்கத்திய பேஷன் போக்குகளின் அனுமானம் என்று அவர் நம்பினார், தனிப்பட்ட சுதந்திரத்தின் உண்மையான அதிகரிப்புக்கு பிரதிநிதி அல்ல. பெண்களை ஆண்களால் எளிதில் மறைப்பதற்கு கட்டளையிட முடியும் என்று அவர் சுட்டிக்காட்டினார். நடைமுறையில் பேசும்போது, ​​ஒரு கலாச்சார பாரம்பரியமாக முக்காடு கைவிடுவது கடினம் என்று அவர் வாதிட்டார்.\nநசிப் பெண்கள் கல்வியின் பெரும் ஆதரவாளராக இருந்தார். எவ்வாறாயினும், அவளுக்கு விருப்பமான முறை மற்றும் அறிவுறுத்தல் நடைமுறை அவரது வாழ்நாளில் மாறுபட்டது. பாரம்பரிய கல்வியில் அவரது பின்னணி முறையான பள்ளிப்படிப்புக்கான தனது ஆதரவைத் தெரிவித்த போதிலும், நடைமுறை மற்றும் தார்மீக மறு கல்வியை பெண்கள் மற்றும் சிறுமிகளின் அடக்குமுறைக்கு சிறந்த தீர்வாக அவர் கருதினார். கலாச்சார ரீதியாக அடக்குமுறை மிஷனரி பள்ளிகளை கைவிட்டு, எகிப்து தனது பள்ளி அமைப்பின் மீது கட்டுப்பாட்டை மீண்டும் பெற வேண்டும் என்று அவர் நம்பினார். மேலும், அந்த நேரத்தில் குழந்தை வளர்ப்பு நடைமுறைகள் இளம் குழந்தைகளின் கல்வி நிலைகளுக்கு தீங்கு விளைவிக்கும் என்று அவர் நம்பினார். சரியான உடல் மற்றும் மனநல சுகாதார நடைமுறைகளுக்கு மேலதிகமாக குழந்தைகளுக்கு முதலில் பச்சாத்தாபம் மற்றும் பிற தார்மீக பண்புகளை கற்பிக்க வேண்டும் என்று நசிஃப் நம்பினார். பெண்களுக்கான சுகாதாரத்துக்கான அதிக அணுகலுக்காகவும், வீட்டிலேயே இஸ்லாத்தின் தொடர்ச்சியான அறிவுறுத்தலுக்காகவும் அவர் வாதிட்டார்.\n2015 சர்வதேச மகளிர் தின “பேச்சு கொண்டாட்டம்” நிகழ்வில் நசீப்பின் படைப்புகளைப் படிக்க இங்கே கிளிக் செய்க .\n9. மே ஜியாட் (1886-1941)\nமே ஜியாட் ஒரு லெபனான்-பாலஸ்தீனிய கவிஞர் மற்றும் எழுத்தாளர் ஆவார், அவருடைய படைப்புகள் பெண்ணிய நிகழ்ச்சி நிரலை அறிமுகப்படுத்தவும் வலுப்படுத்தவும் உதவியது. நாசரேத்தில் பிறந்த இவர் 14 வயதில் ஒரு பிரெஞ்சு கான்வென்ட் பள்ளிக்கு சிறுமிகளுக்காக அனுப்பப்பட்டார். அங்கு அவர் பிரெஞ்சு மற்றும் காதல் இலக்கியங்களை வெளிப்படுத்தினார். 1908 ஆம் ஆண்டில் அவரது குடும்பம் எகிப்துக்கு குடிபெயர்ந்தது, அங்கு அவரது தந்தை "அல் மஹ்ரூசா" செய்தித்தாளை நிறுவினார், அதற்கு ஜியாட் பல கட்டுரைகளை வழங்குவார். வலுவான பெண் கதாபாத்திரங்களுடன் கற்பனையான படைப்புகளையும் எழுதினார். அவர் அடிக்கடி பெண்களின் பிரச்சினைகள் மற்றும் சுதந்திரங்களைப் பற்றி பிரதிபலித்தார் ,\n"கிழக்கின் ஆண்களே, உங்கள் மனைவியும் மகள்களும் பிரதிநிதித்துவப்படுத்தும் உங்கள் வீடுகளில் அடிமைத்தனத்தின் மையத்தை வைத்திருந்தால், அடிமைகளின் குழந்தைகள் சுதந்திரமாக இருப்பார்களா?"\nகவிதைகளுடன், ஜியாட் ஒரு நல்ல மரியாதைக்குரிய பத்திரிகையாளராகவும், தீவிர மொழியியலாளராகவும் இருந்தார். தனது வாழ்நாளில், தனது சொந்த அரபு மற்றும் சரளமாக பிரெஞ்சு மொழிக்கு கூடுதலாக ஆங்கிலம், இத்தாலியன், ஜெர்மன், ஸ்பானிஷ் மற்றும் லத்தீன் மொழிகளில் பணிபுரியும் அறிவைப் பராமரித்தார்.\nஜியாட் முக்கியமாக தனது பெண்ணியக் கருத்துக்களை எழுதப்பட்ட படைப்புகள் மூலம் தொடர்புகொண்டார், ஆனாலும் பழைய, அறியாமை மரபுகளை ஒழிப்பதன் மூலம் பெண்கள் விடுதலை என்ற எண்ணத்தில் அவர் வெறி கொண்டார். பெண்மையும் பெண் அதிகாரமளிப்பதும் கைகோர்த்து செயல்படுவதாக அவர் நம்பினார், ஒருவர் மற்றவரின் செலவில் வர வேண்டியதில்லை. தன்னை மிகவும் பண்பட்ட மற்றும் படித்த பெண்ணாக இருந்த அவர், குறிப்பாக பெண்களின் கல்வி, வாக்குரிமை மற்றும் சமமான அரசாங்க பிரதிநிதித்துவத்திற்காக வாதிட்டார்.\nஅவரது மாறுபட்ட இலக்கிய திறன்கள் பல கல்வி வட்டங்களில் அவரை நன்கு அறியப்பட்ட எழுத்தாளராக்கியது. 1912 ஆம் ஆண்டில் அவர் நிறுவிய இலக்கிய வரவேற்புரை மிகவும் பிரபலமானது மற்றும் ஜியாட் உடன் ஒத்துழைக்க ஆர்வமுள்ள பிரபல புத்திஜீவிகளால் பெரிதும் அடிக்கடி வந்தது. அரபு உலகில் மேற்கத்திய அறிவுசார் வட்டாரங்களில் பிரபலமான இத்தகைய கலாச்சார மையத்தை முதன்முதலில் நிறுவியவர் இவர். அவர் ஒருபோதும் திருமணம் செய்து கொள்ளவில்லை என்றாலும், சக கவிஞர் கலீல் ஜிப்ரானுடன் எழுத்துப்பூர்வ காதல் கடிதத்தை தொடர்ந்து பராமரித்தார் . அவரது படைப்புகளை எகிப்தியர்களுக்கு அறிமுகப்படுத்துவதற்கு அவள் ஒரு பகுதியாக இருக்கிறாள். சிரியா துயரத்தை வருந்துவதற்கு Ziade செய்ய கிப்ரான் கடிதம் படிக்க இங்கே .\nஜியாட் 1928-1932 ஆண்டுகளில் அவரது பெற்றோர், நண்பர்கள் மற்றும் ஜிப்ரான் ஆகியோரின் மரணம் உட்பட பெரும் இழப்பை சந்தித்தார். அவர் மனச்சோர்வடைந்து லெபனானுக்குத் திரும்பினார், அங்கு அவரது குடும்ப உறுப்பினர்கள் அவரது விருப்பத்திற்கு எதிராக ஒரு மனநல வார்டுக்கு கட்டாயப்படுத்தினர். "பெண்ணிய உணர்வுகளை" வெளிப்படுத்தியதற்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உறவினர்கள் அவரது இலக்கிய அபிலாஷைகளுக்கும் விடுதலைக்கான வேண்டுகோளுக்கும் எதிராக தொடர்ந்து போராடினர். இறுதியில், சக கவிஞர் அமின் அல்-ரிஹானி ஜியாடியை நிறுவனத்திலிருந்து விடுவித்தார், அவர் நல்ல மனநலம் கொண்டவர் என்பதை நிரூபிக்க உதவினார். ஜியாட் 1941 இல் கெய்ரோவுக்குத் திரும்பி, அந்த ஆண்டின் பிற்பகுதியில் அங்கேயே இறந்தார்.\n10. முசாபர் அல்-நவாப் (1934-)\nமுசாபர் அல்-நவாப் ஈராக்கின் மிகவும் பிரபலமான கவிஞர்களில் ஒருவராக கருதப்படுகிறார். பாக்தாத்தில் பிறந்த அல்-நவாபின் வாழ்க்கையும் வேலையும் அவரைச் சுற்றியுள்ள மோதல்களால் ஆழமாக பாதிக்கப்படுகின்றன. அவர் பாக்தாத் பல்கலைக்கழகத்தில் பயின்றார், சிறிது நேரத்திலேயே அவர் ஈராக் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தார். கட்சியுடன் இருந்த காலத்தில் அல்-நவாபை ஹஷெமிட் ஆட்சி சித்திரவதை செய்தது. ஈராக் புரட்சியைத் தொடர்ந்து 1958 இல் அவர் கல்வி அமைச்சராக நியமிக்கப்பட்டார், ஆனால் 1963 இல் அவர் ஈராக்கை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. தப்பி ஓடுவதற்கு முன்பு, ஈரானிய ரகசிய போலீசாரால் பிடிக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டார்.\nஅவரது ஒரு கவிதையானது கொடுங்கோன்மை அரசாங்கத்தின் கீழ் அவருக்கு மரண தண்டனையைப் பெற்றது, பின்னர் அவரது தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்தது. அல்-நவாப் சிறைச்சாலையிலிருந்து தப்பி ஒரு நிலத்தடி சுரங்கப்பாதையைத் தோண்டி சதுப்பு நிலங்களுக்கு தப்பிச் சென்று, அரசாங்கத்தை கவிழ்க்க தீர்மானித்த ஒரு கம்யூனிச பிரிவில் சேர்ந்தார். சிரியா, லெபனான், எகிப்து மற்றும் எரிட்ரியா ஆகிய நாடுகளில் 2011 ல் ஈராக்கிற்குத் திரும்புவதற்கு முன்பு அவர் பல ஆண்டுகள் நாடுகடத்தப்பட்டார்.\nஅவரது பணி புரட்சிகர எண்ணம் கொண்ட மற்றும் அரசியல் ரீதியாக குற்றம் சாட்டப்பட்டதாகும், கொடுங்கோன்மை மற்றும் ஒடுக்குமுறையுடன் அவர் பெற்ற அனுபவங்களை பிரதிபலிக்கிறது. அவர் அரபு சர்வாதிகாரிகளை கடுமையாக விமர்சிக்கிறார், 1970 களில் அவரது அழற்சி வேலை அரபு உலகம் முழுவதும் தடை செய்யப்பட்டது. எவ்வாறாயினும், இடதுசாரிகள் அவரது அரசியல் உணர்வுகளுடன் இணைந்தனர், மேலும் அவரது கவிதைகள் சட்டவிரோதமாக விநியோகிக்கப்பட்டன, அவை கேசட் நாடாக்களில் பதிவு செய்யப்பட்டன. அவரது பணி பேசும் பேச்சுவழக்கைப் பயன்படுத்துவதில் புதுமையானது, தெற்கு ஈராக்கின் அன்றாட பேச்சிலிருந்து கவிதைகளை வடிவமைக்கிறது. இவரது படைப்புகளில் பெரும்பகுதி இசைக்கு அமைக்கப்பட்டுள்ளது.\nஅல்-நவாபின் படைப்புகளின் உத்தியோகபூர்வ தொகுப்பு எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை, ஏனெனில் அவர் நாடுகடத்தப்பட்ட காலத்தில் பிரதான ஊடகங்களையும் வெளியீடுகளையும் அவமதித்தார். அவரது மிகவும் பிரபலமான கவிதைகளில் தி டேவர்ன் , 1970 ஆம் ஆண்டில் அவரது நாடுகடத்தலின் மத்தியில் எழுதப்பட்டது. சாப்பாட்டு குறிப்பு என்பது சூஃபி மரபுக்கு ஒரு ஒப்புதலாகும், இதில் விடுதிகள் மற்றும் மது குடிப்பது உண்மையான, தெய்வீக அன்பின் சர்ச்சைக்குரிய உருவகங்களாக செயல்படுகின்றன.\n11. நாசிக் அல்-மலாக்கா (1923-2007)\nஅரபு சுதந்திர வசன இயக்கத்தின் முக்கிய நிறுவனர் என்ற முறையில் , 20 ஆம் நூற்றாண்டில் ஈராக்கின் கலாச்சார மறுமலர்ச்சியின் தலைவர்களில் நாசிக் அல்-மலாக்காவும் ஒருவர். ஷேக்ஸ்பியர் மற்றும் கிளாசிக்கல் அரபு கவிதை இரண்டிலிருந்தும் தாக்கங்களை இணைத்து, கருத்து வெளிப்பாட்டிற்கும் வடிவத்திற்கும் அதிக சுதந்திரத்தை அனுமதிக்கும் ஒரு வகையை அவர் முன்னோடியாகக் கொண்டார். புதிய வடிவம் மிகவும் சக்திவாய்ந்த அரசியல் வெளிப்பாட்டை செயல்படுத்தியது. மரியாதைக் கொலைகள் மற்றும் பெண்கள் உரிமைகள் குறித்து மலாக்கா அடிக்கடி எழுதினார். அவரது மிகவும் பிரபலமான கவிதைகளில் ஒன்றான, டூ வாஷ் அவமானம் , ஒரு ஆணாதிக்க சமுதாயத்தால் உணரப்பட்ட "மரியாதை" என்ற மகத்தான தியாகங்களைப் பற்றி விவாதிக்கிறது.\nமலாக்கா பாக்தாத்தில் எழுத்தாளர்கள் குடும்பத்தில் பிறந்தார். அவரது தாயார் ஒரு கவிஞர் மற்றும் அவரது தந்தை ஒரு ஆசிரியர் மற்றும் அரபு ஆசிரியர். அவர் தனது 10 வயதில் கிளாசிக்கல் அரபு கவிதைகளை எழுதத் தொடங்கினார். பாக்தாத்தில் உள்ள உயர் ஆசிரியர் பயிற்சி கல்லூரியில் கிளாசிக்கல் அரபு கவிதை மற்றும் நவீன இலக்கியங்களைப் பயின்றார். பட்டம் பெற்றதும் பிரின்ஸ்டனுக்கு உதவித்தொகை பெற்றார், ஆனால் அதற்கு பதிலாக விஸ்கான்சின் பல்கலைக்கழகத்தில் ஒப்பீட்டு இலக்கியத்தில் தனது முதுகலைப் பெற்றார்.\nஅவர் மீண்டும் பாக்தாத்திற்கு குடிபெயர்ந்தார், தனது எஜமானரை முடித்தவுடன் திருமணம் செய்து கொண்டார். அவளும் அவரது கணவரும் சேர்ந்து பாஸ்ரா பல்கலைக்கழகத்தை நிறுவி பின்னர் குவைத் சென்றனர். எவ்வாறாயினும், 1990 ல் சதாம் ஹுசைனின் படையெடுப்பிற்குப் பிறகு இருவரும் ஈராக்கிற்குத் திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. வளைகுடா போர் முடிவடைந்ததைத் தொடர்ந்து 1991 ல் அவர் கெய்ரோவுக்குச் சென்றார்.\nஅவரது மிகவும் பிரபலமான கவிதைத் தொகுதி, ஷ்ராப்னல் மற்றும் ஆஷஸ் , 1949 இல் வெளியிடப்பட்டது. கிளாசிக்கல் அரபு கவிதைகளில், ஒவ்வொரு வசனமும் ஒரே ரைம் திட்டத்துடன் முடிவடைகிறது, மேலும் ஒவ்வொரு வரியிலும் ஒரே எண்ணிக்கையிலான துடிப்புகள் உள்ளன. இலவச வசனத்தை முதன்முதலில் பரிசோதித்தவர்களில் மலாக்காவின் தொகுப்பு ஒன்றாகும், இதில் வரிகளும் வசனங்களும் பெரும்பாலும் ஒழுங்கற்றதாகவும், அளவிடப்படாமலும் செல்கின்றன. இந்த தொகுப்பில் அவரது பணி அரசியல் முதல் மிகுந்த உணர்ச்சிவசமானது, பெரும்பாலும் அந்நியப்படுதலின் தன்மை மற்றும் தனிமையின் பயம் ஆகியவற்றைப் பிரதிபலிக்கிறது .\nஅவரது கவிதையில் சன் எதிராக கிளர்ச்சி , அவர் பலவீனமான மற்றும் அழுது எளிதாக அகற்றப்பட்ட பெண்கள், நையாண்டி திறனற்று பொதுவான கருத்து கேலி செய்கிறார்.\n12. நிசார் கபானி (1923-1998)\nநிசார் கபானி ஒரு சிரிய கவிஞர், இராஜதந்திரி மற்றும் வெளியீட்டாளர் ஆவார், அவர் பெரும்பாலும் "சிரியாவின் தேசிய கவிஞர்" என்று குறிப்பிடப்படுகிறார். அவர் டமாஸ்கஸில் ஒரு வணிகக் குடும்பத்தில் பிறந்தார், அறிவியல் கல்லூரி பள்ளி மற்றும் டமாஸ்கஸ் பல்கலைக்கழகத்தில் படித்தார். கல்லூரியில் படிக்கும் போது தனது முதல் கவிதைத் தொகுப்பான தி ப்ரூனெட் டோல்ட் மீ என்ற புத்தகத்தை எழுதினார் .\nசட்டத்தில் பட்டம் பெற்ற பிறகு, எகிப்து, துருக்கி, லெபனான், பிரிட்டன், சீனா மற்றும் ஸ்பெயினில் உள்ள சிரிய தூதரகங்களுக்கு தூதராக பணியாற்றினார். 1966 ஆம் ஆண்டில் அவர் லெபனானுக்கு ஓய்வு பெற்று மன்ஷுரத் நிசார் கபானி பதிப்பக நிறுவனத்தை நிறுவினார்.\nலெபனானில் வாழ்ந்தபோது அவர் தனது பெரும்பாலான கவிதைகளை எழுதினார். அவர் ஆரம்பத்தில் கிளாசிக் அரபு மீட்டரில் எழுதியிருந்தாலும், இலவச வசனத்தில் அவரது பிற்கால படைப்புகள் நவீன பாணியை பாரம்பரிய அரபு கவிதைகளில் ஒருங்கிணைக்க உதவியது.\nஅவரது கவிதை காதல் மற்றும் சிற்றின்பம், எளிமையான, நேர்த்தியான மொழியைப் பயன்படுத்தி அன்பின் அர்த்தத்தையும் மர்மத்தையும் ஆராயும். அவரது வசனங்கள் அரபு உலகம் முழுவதும் மிகவும் பிரபலமாகி, இசையின் பெரும்பகுதி இசைக்கு அமைக்கப்பட்டன. அன்றாட சிரிய பேச்சின் தாளத்தைக் கைப்பற்றுவதில் அவர் பிரபலமானவர்.\nகபானிக்கு 15 வயதாக இருந்தபோது, ​​அவர் விரும்பாத ஒருவரை திருமணம் செய்வதைத் தவிர்ப்பதற்காக அவரது மூத்த சகோதரி தற்கொலை செய்து கொண்டார். தனது சகோதரியின் மரணத்தால் கபானி மிகவும் பாதிக்கப்பட்டார். பாரம்பரிய சமுதாயங்களில் முஸ்லீம் பெண்களின் காதல் போராட்டங்கள் மற்றும் உணர்வுகள் பற்றி அவர் எழுதுவார். அவரது பணிகள் அதன் பெண்ணிய மற்றும் சமூக நீதி முயற்சிகளின் அடிப்படையில் அதன் நேரத்தை விட முன்னதாகவே இருந்தன. அவர் சில சமயங்களில் தனது தாயகத்தின் நிலை மற்றும் பாலஸ்தீன வெளியேற்றத்தைப் பற்றி புலம்பும்போது ஒரு அரசியல் தொனியைப் பெற்றார் . கலாச்சார பிளவில் சிக்கிய பெண்களின் கண்ணோட்டத்தில் அவர் அடிக்கடி எழுதினார், இறுதியில் பெண்களுக்கு அதிக தனிப்பட்ட சுதந்திரங்களை வழங்க வேண்டும் என்று வாதிட்டார். அவர் வாதிட்டார்:\nஅரபு உலகில் காதல் ஒரு கைதியைப் போன்றது, நான் அதை விடுவிக்க விரும்புகிறேன். எனது கவிதை மூலம் அரபு ஆன்மா, உணர்வு மற்றும் உடலை விடுவிக்க விரும்புகிறேன்.\nஇவரது மிகவும் பிரபலமான படைப்பு 1961 ஆம் ஆண்டு ஹபீப்டி (என் அன்புக்குரியது) என்ற தலைப்பில் தொகுப்பாகும் . 1993 இல் அவர் அரேபிய காதல் கவிதைகள் என்ற தலைப்பில் ஒரு விரிவான தொகுதியை வெளியிட்டார் . கபானி தனது வாழ்நாளில் இரண்டு முறை திருமணம் செய்து கொண்டார். அவருக்கு ஐந்து குழந்தைகள் இருந்தன , அவர்களில் இருவர் இன்று அவருக்குப் பின் வருகிறார்கள்.\n"என் காதலன் என்னைக் கேட்கிறான்:"\nஎன் காதலன் என்னிடம் கேட்கிறான்:\n'எனக்கும் வானத்துக்கும் என்ன வித்தியாசம்?'\nவித்தியாசம், என் அன்பே, நீங்கள் சிரிக்கும்போது,\nநான் வானத்தைப் பற்றி மறந்துவிடுகிறேன்.\n13. சாதி யூசெப் (1934-)\nஈராக்கில் பிறந்த சாதி யூசெப் மிக முக்கியமான சமகால அரபு கவிஞர்களில் ஒருவர். ஈராக்கில் அரசியல் கைதியாக தண்டிக்கப்பட்ட அவர் தனது வாழ்நாளின் பெரும்பகுதி நாடுகடத்தப்பட்டார். நாடுகடத்தப்பட்ட காலத்தில், அவர் மெனா பகுதி முழுவதும் ஒரு பத்திரிகையாளராக பணியாற்றினார். அவர் தற்போது லண்டனில் வசிக்கிறார், அங்கு அவர் ஆங்கில இலக்கியத்தை அரபு மொழியில் மொழிபெயர்க்கிறார்.\nஅமெரிக்கா, அமெரிக்காவிலிருந்து அவர் எழுதிய கவிதை ஈராக் மீதான அமெரிக்க படையெடுப்பு மற்றும் அதன் குடிமக்களின் மனித நேயத்தை பிரதிபலிக்கிறது.\n14. சல்மா ஜெயுசி (1926-)\nசல்மா ஜெயுசி ஒரு பாலஸ்தீனிய கவிஞர் மற்றும் மொழிபெயர்ப்பாளர் ஆவார், 1980 ஆம் ஆண்டில் அரபு மொழியிலிருந்து மொழிபெயர்ப்பின் திட்டத்தை (புரோட்டா) உருவாக்கியதில் மிகவும் பிரபலமானவர், இது அரபு இலக்கியத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கிறது. ஜோர்டானிய நகரமான அல்-சால்ட்டில் பிறந்த இவர், பெய்ரூட்டின் அமெரிக்க பல்கலைக்கழகத்தில் பயின்றார், அங்கு அவர் அரபு மற்றும் ஆங்கில இலக்கியங்களைப் படித்தார். அவர் ஒரு ஜோர்டானிய தூதரை மணந்தார், அவருக்கு மூன்று குழந்தைகள் இருந்தன.\nஅவரது சில சமகால கவிஞர்களைப் போலல்லாமல், ஜெயுசி பாரம்பரிய வடிவங்களை விட நவீனத்துவத்தின் மேன்மையை நம்பவில்லை. பெய்ரூட்டில் உள்ள பாரம்பரிய மற்றும் நவீன வெளியீடுகளுக்கு எழுதுகின்ற பாரம்பரிய பாடல் வசனங்களின் நேர்மைக்காக அவர் போராடினார். 1990 ஆம் ஆண்டில் அவர் கிழக்கு-மேற்கு நெக்ஸஸை உருவாக்கினார், அரபு மற்றும் இஸ்லாமிய கலாச்சாரத்தின் உண்மைகளை ஆங்கிலத்தில் முன்வைப்பதன் மூலம் தவறான ஸ்டீரியோடைப்களை சரிசெய்ய அர்ப்பணிக்கப்பட்ட ஒரு அமைப்பு. புரோட்டா மற்றும் கிழக்கு-மேற்கு நெக்ஸஸ் ஆகியவை அரபு கலாச்சாரம் மற்றும் இலக்கியம் குறித்த 50 தொகுதிகளைத் தொகுத்துள்ளன.\n1960 ஆம் ஆண்டில், அவர் தனது தொகுப்பான ரிட்டர்ன் ஃப்ரம் தி ட்ரீமி நீரூற்றை வெளியிட்டார். கார்ட்டூம் மற்றும் அல்ஜியர்ஸ் பல்கலைக்கழகங்களில் பேராசிரியராக பல ஆண்டுகள் பணியாற்றினார். அவர் தற்போது ஜோர்டானில் வசித்தாலும் லண்டன் மற்றும் அமெரிக்காவிலும் சுற்றுப்பயணம் செய்து கற்பித்திருக்கிறார்.\nஅவரது கவிதை தி ஷிப் ஆஃப் லவ் , பாரம்பரிய மற்றும் சமகால பாணிகளின் கலவையை உணர்ச்சி வசப்பட்ட ஒரு துண்டுக்கு எடுத்துக்காட்டுகிறது.\n15. தாஹா முஹம்மது அலி (1931-2011)\nதாஹா முஹம்மது அலி 1931 இல் பாலஸ்தீனத்தின் கலிலீவில் பிறந்தார். அரபு-இஸ்ரேலியப் போரின்போது, ​​அவர் தனது குடும்பத்தினருடன் லெபனானுக்கும், பின்னர் நாசரேத்துக்கும் ஒரு நினைவு பரிசு கடையைத் திறந்தார். கிளாசிக்கல் அரபு மற்றும் அமெரிக்க இலக்கியங்களில் தன்னைப் பயிற்றுவித்த பின்னர் 1970 களில் கவிதை எழுதத் தொடங்கினார்.\nமோதலில் கிராம வாழ்க்கையை தெரிவிக்க அலி அடிக்கடி இருண்ட நகைச்சுவையைப் பயன்படுத்துகிறார். அவரது பாணி முறையான ஃபுஸ்ஹா அரபு மற்றும் பேச்சுவழக்கு மொழியின் தனித்துவமான கலவையாகும் . அவரது கவிதைகள் பெரும்பாலும் அளவிடப்படாதவை மற்றும் ஒழுங்கற்றவை, ஆனால் அரசியல் உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் சக்திவாய்ந்தவை.\nஅங்கீகாரத்தைப் பெற்ற பிறகு, அலி அமெரிக்கா மற்றும் ஐரோப்பா வழியாக தனது படைப்புகளை உரக்கப் படிக்கச் சென்றார்.\nஒரு விமான நிலையத்தில் நடந்த தனது புகழ்பெற்ற மற்றும் நகரும் கவிதை கூட்டத்தில் , அலி தனது குழந்தை பருவ அன்பான அமிராவுடன் லெபனானை விட்டு வெளியேறிய பின்னர் பிரிந்திருந்த தனது தீவிரமான உணர்ச்சி ரீதியான மீள் கூட்டத்தை நினைவு கூர்ந்தார். இந்த உறவின் தூரமும் ஏக்கமும் அவரது பாலஸ்தீனிய தாயகத்தின் இழப்புக்கு ஒரு பெரிய உருவகமாகும்.
ஜனாதிபதி செயலணிக் குழு கூட்டத்தில் பங்கேற்கும் முடிவை மாற்ற முடியாது! - சம்பந்தன் - Kala Neethy - கள நீதி\nHome புதிய பதிவுகள் ஜனாதிபதி செயலணிக் குழு கூட்டத்தில் பங்கேற்கும் முடிவை மாற்ற முடியாது! - சம்பந்தன்\nஜனாதிபதி செயலணிக் குழு கூட்டத்தில் பங்கேற்கும் முடிவை மாற்ற முடியாது! - சம்பந்தன்\nவடக்கு - கிழக்கு அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணிக் கூட்டத்தில் பங்கேற்பதால், அரசியல் தீர்வு முயற்சியில் எந்தத் தாமதமும் ஏற்படாது.ஐ.நா. மனித உரிமைகள் சபையின் போர்க்குற்ற விசாரணைக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது என்று எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.\nவடக்கு - கிழக்கு அபிவிருத்திச் செயலணியில் பங்கேற்பது என்ற கூட்டமைப்பு நாடாளுமன்றக் குழுவின் முடிவை மாற்ற முடியாது. வடக்கு - கிழக்கு மக்களின் நன்மை கருதியும், போரினால் பாதிக்கப்பட்ட தமிழர் தாயகத்தின் அபிவிருத்தியைக் கருதியுமே இந்த முடிவை நாம் எடுத்துள்ளோம்.\nவடக்கு - கிழக்கு தமிழ் மக்கள் தங்களின் ஏகபிரதிநிதிகளாக எங்களைத் தெரிவு செய்துள்ளனர். மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய வேண்டியது எங்களின் கடமை.அதனடிப்படையில், போரினால் பாதிக்கப்பட்ட பிரதேசத்தைக் கட்டியெழுப்புவதற்கு கூட்டத்தில் கலந்து கொள்ளவுள்ளோம்.\nகூட்டத்தில் கலந்து கொண்டாலும், அரசியல் தீர்வு உள்ளிட்ட ஏனைய விடயங்களை நாங்கள் ஒவ்வொன்றாக முன்னெடுப்போம்.இந்தச் செயலணியில் பங்கேற்பதால் அரசியல் தீர்வு முயற்சியில் எந்தத் தாமதமும் ஏற்படாது. ஐ.நா. மனித உரிமைகள் சபையின் போர்க்குற்ற விசாரணைக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது. எங்களின் ஒற்றுமைக்கு எந்தக் களங்கமும் வராது.\nஇந்தச் செயலணியின் கூட்டத்தில் நாம் பங்கேற்பதை விரும்பாதவர்கள் இதனைப் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.\nஇதேவேளை, அபிவிருத்திப் பணி தொடரும் அதேநேரத்தில் அரசியல் தீர்வுக்கான முயற்சியும் தொடரும். கூட்டமைப்பை விமர்சிக்கும் சம்பந்தப்பட்ட தரப்புக்களுக்கு இதனைத் தெரியப்படுத்துகின்றேன் என்றும் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கூறியுள்ளார்.
Following GM announcement on new talks with Magna The world socialist web site\nMagna உடன் புதிய பேச்சுக்கள் என்று GM அறிவித்ததைத் தொடர்ந்து\nஜேர்மனிய கார் தொழிலாளர் சங்கம் ஓப்பலுக்கு இன்னும் அதிக சலுகைகளை கொடுக்கின்றது\nமீண்டும், ஜெனரல் மோட்டார்ஸ் மற்றும் கார் பாகங்கள் அளிக்கும் Magna இவற்றிற்கு இடையே GM ன் துணை நிறுவனமான ஐரோப்பிய ஓப்பல் கிளையை எடுத்துக் கொள்ளுவதற்கான பேச்சுவார்த்தைகளுக்கான முன்மொழிவானது ஓப்பலை "மீட்பதற்கு" என்று காட்டப்படுகின்றன.\nகடந்த வியாழனன்று GM குழு ஓப்பல் விற்பனை குறித்த பேச்சுவார்த்தைகளை மாக்னா, ரஷ்ய Sberbank வங்கி மற்றும் ரஷ்ய GAZ கார் உற்பத்தியாளர்கள் மூன்றும் அடங்கிய ஒரு குழுவுடன் நடத்தியது. ஜேர்மனிய அரசியல் வாதிகள் மற்றும் செய்தி ஊடகத்துடன் சேர்ந்து ஓப்பலில் இருக்கும் பணிக்குழுக்கள், தொழிற்சங்கங்கள், GM மற்றும் மாக்னா ஆகியவை ஏற்கனவே ஐரோப்பிய ஓப்பலை எடுத்துக் கொண்டுவிட்டது போல் விடையிறுத்தன.\nஇந்த மாதம் இறுதியில் நடக்க இருக்கும் கூட்டாட்சித் தேர்தல்களில், SPD (சமூக ஜனநாயகக் கட்சி) யின் அதிபர் வேட்பாளரும், வெளியுறவு மந்திரியுமான பிரான்ஸ்-வால்டர் ஸ்ரைன்மையர் கூறினார்: "இது ஓப்பலுக்கு நல்ல நாளாகும்." CDU வைச் சேர்ந்த தற்பொழுதைய கூட்டாட்சி அதிபர் அங்கேலா மேர்க்கெல் "பொறுமையும் உறுதிப்பாடும்" வெற்றி பெற்றுவிட்டதாகக் கூறி "மாக்னா பற்றிய GM முடிவை" அவர் வரவேற்றார்.\nவெள்ளியன்று, ஓப்பலின் பணிக்குழுத் தலைவர் Klaus Franz ன் கருத்துக்களை எதிரோலிக்கும் அமைப்பாக பல மாதங்கள் சேவைசெய்திருக்கும் Frankfurther Rundschau, "மகிழ்ச்சிகரமான முடிவு" என்ற தலைப்பில் செய்தியை வெளியிட்டது.\nமே மாத இறுதியில் ஓப்பல் "மீட்கப்பட்டதாக" கூறப்பட்டதைத்தான் இது நினைவு படுத்துகிறது. ஆனால், மூன்று மாதங்களுக்கு முன்பு இருந்ததைப் போலவே உறுதியாக எதுவும் முடிவெடுக்கப்படவில்லை. GM மாக்னாவுடன் பேச்சுவார்த்தைகளை தொடரத்தான் தன் விருப்பத்தை தெரிவித்துள்ளது.\nஒரு உடன்பாடு இன்னும் கையெழுத்திடப்பட வேண்டும். "நாங்கள் மீண்டும் பேச்சு வார்த்தைகளை தொடர வேண்டும்" என்று GM குழுவின் துணைத் தலைவரும் நிறுவனத்தின் தலைமை பேச்சுவார்த்தை நடத்துபவருமான ஜோன் ஸ்மித் கூறினார். ஓப்பல் விற்பனை பற்றி GM ன் முடிவை Sberbank கும் இறுதியானது என்று நினைக்கவில்லை. Sberbank ன் தலைவரான German Gref பேச்சுக்கள் கடினமாக இருக்கும் என்றும் வரவிருக்கும் நிறுவனத்தின் கட்டமைப்பு சிக்கல் வாய்ந்ததாக இருக்கும் என்றும் கூறினார். பேச்சுவார்த்தைகள் நடத்தவேண்டும் என்று கூறும் ஆவணம் மட்டுமே 1,000 பக்கங்களுக்கு மேல் உள்ளது.\nSuddeutsche Zeitung உடன்பாடு முடிய இன்னும் பல பாக்கி இருப்பதாகக் கூறியது. "மாறாக, கடந்த சில மாதங்களாக உள்ள பரபரப்பு வெட்கமின்றித் தொடர்கின்றன--இம்முறை உயர்மட்டத்தில்."\nஇத்தகைய புதிய அட்லான்டிக் கடந்த தந்திர உத்திகள் கூட்டாட்சி தேர்தல்கள் தினமான செப்டம்பர் 27 க்கும் மேல் நீடிக்கும். "உறுதியாகக் கூறக்கூடியது எதுவும் உறுதியில்லை என்பதுதான்" என்று Suddeutsche Zeitung எழுதியது. "முழு பேச்சுவார்த்தைகளும் வியத்தகு அளவில் சரியக்கூடும். இதுவரை பேச்சுவார்த்தைகளில் சட்ட பூர்வமாகக் கட்டுப்படுத்தும் உடன்பாடு ஏதும் இல்லை."\nGM ன் முக்கிய பேச்சுவார்த்தை நடத்துநர் ஸ்மித், மாக்னா, Sberbank உடனான பேச்சுக்கள் நவம்பர் வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகக் கூறினார்.\nஜேர்மனிய ஓப்பல் பணிக்குழுக்களும் IG Metall தொழிற்சங்கமும் GM ன் அறிவிப்பை தங்கள் சொந்த வெற்றிக்கான சான்று போல் வரவேற்றன. ஏனெனில் மாக்னா தற்போதைக்கு நான்கு ஜேர்மனிய ஓப்பல் ஆலைகள், Rüsselsheim, Bochum, Eisenach, Kaiserslautern ஆகியவற்றில் இருப்பவற்றை தக்க வைக்கும் விருப்பத்தை அறிவித்துள்ளது. ஆனால் ஸ்மித் அவ்வளவு உறுதியாக இல்லை. "இது இப்பொழுது மாக்னாவின் திட்டம்" என்றார் அவர்.\nஓபலின் பெல்ஜியம் ஆன்ட்வெர்ப்பில் இருக்கும் பணிகள் அடுத்த ஆண்டு மூடப்படும் என்பதுதான் உறுதி. லூடனில் இருக்கும் British Vauxhall பணியிடம் இரண்டு ஆண்டிற்குள் மூடப்படலாம்; வடக்கு ஸ்பெயினில் Saragosa விற்கு அருகே உள்ள Figueruelas ன் GM ஆலையில் இருக்கும் 7,500 வேலைகளில் 1,650 க்கும் மேற்பட்டவை பாதிப்பின் அச்சுறுத்தலில் உள்ளன.\nஉத்தியோகபூர்வத் தகவல்படி, ஐரோப்பாவில் இருக்கும் கிட்டத்தட்ட 54,000 தொழிலாளர்களில் 11,000 பேர் வேலையிழக்கக்கூடும்; இதில் ஜேர்மனியில் 2,500 பேர் இருக்கக்கூடும். ஆனால் Klaus Franz இடம் இருந்து தன்னுடைய ஐரோப்பிய பணிக்குழு சக ஊழியர்களுக்கு வந்த உட்கடிதம் ஒன்றை Bild மேற்கோளிட்டுள்ளார்; இதன்படி மாக்னா திட்டம் செயல்படுத்தப்பட்டால் 21,000 வேலைகள் இழக்கப்படும் என்று அவர் கணக்கிட்டுள்ளார்.\nபணிக்குழுக்களும் IG Metall உம் இதன் பொருள் இன்னும் கூடுதலான ஆலைகள் மூடப்படும் என்பதா என்பது பற்றி மெளனம் சாதிக்கின்றன.\nசெவ்வாய் அறிவிப்பைத் தொடர்ந்த ஆரம்ப அறிக்கைகள் பெரும் வேலை இழப்புக்கள் உறுதியெனக் காட்டுகின்றன. மாக்னாவின் தலைவரான Frank Stronach, "ஒரு கடினமான மறுகட்டமைப்பு வழிவகை" வரவிருப்பதாகக் கூறினார். Österreich செய்தித்தாள் ஓப்பல் நீண்ட காலமாக இலாபம் காணவில்லை என்றும் பொருளாதாரம் ஏற்றதாக இல்லை என்றும் எழுதியுள்ளது. இந்த எடுத்துக் கொள்ளும் நடவடிக்கை "சம்பந்தப்பட்டவர்கள் அனைவருக்கும் ஒரு கடின வழிவகை" என்று அது கூறியுள்ளது.\nபணிக்குழுக்களும் IG Metall அலுவலர்களும் ஓப்பல் தொழிலாளர்களால் கடந்த காலத்தில் வென்னெடுக்கப்பட்ட பணி நிலைமைகளில் உள்ள அனைத்து முன்னேற்றங்களும் புதிய மாக்னா நிர்வாகத்திற்கு தியாகம் செய்யப்பட்டுவிடும் என்று அடையாளம் காட்டியுள்ளன.\nIG Metall ன் பிராங்பேர்ட்டிற்கான வட்டார மேற்பார்வையாளரும் ஓப்பல் மேற்பார்வைக்குழுவின் உறுப்பினருமான Amin Schild, மாக்னா ஒரு "கடுமையான, இரும்பு போன்ற உறுதி கொண்ட ஆங்கிலோ சாக்சன் முதலாளித்துவ வகையாகும்" என்றார். மேலும், "அவர்கள் நேரடியாக சங்கிலி ரம்பத்தைத்தான் பயன்படுத்துவர்" என்றும் சேர்த்துக் கொண்டார்.\nIG Metall ன் தலைவரான Berthold Huber நிறுவனம் மறு கட்டமைப்பிற்கு உட்படுவதற்கு மாற்றீடு ஏதும் இல்லை என்றார். வருங்காலத்திற்கு நின்று பிடிக்கும் வகையில் கிறிஸ்துமஸ், விடுமுறை ஊதியங்கள் கோரிக்கை கைவிடப்படல் போன்ற இன்னும் சலுகைகள் ஓப்பல் ஊழியர்களிடம் இருந்து கிடைக்கும் என்றும் அவர் கூறினார்".\nதான் எப்படி தொழிலாளர்களின் பைகளில் இருந்து எவ்வளவு எடுத்துக் கொள்ளத் தாயர் என்பது பற்றி Klaus Franz தெளிவாக அடையாளம் காட்டினார்: ஆண்டு ஒன்றுக்கு நூற்றுக்கணக்கான மில்லியன் யூரோக்கள். அடுத்த ஐந்து ஆண்டுகளில் 1.65 பில்லியன் யூரோக்கள் வேலைகள் அகற்றப்படுதல், ஊதியக் குறைப்புக்கள், கிறிஸ்துமஸ், விடுமுறை ஊதியங்கள் தவிர்க்கப்படல் ஆகியவற்றால் சேகரிக்கப்படும். இந்த சேமிப்புக்கள் "நிறுவனத்தில் தொழிலாளர்கள் மூலதனப் பங்கீடு" என்று அழைக்கப்படுவதின் கருவூலத்திற்குச் செல்லும்."\nஇந்த நிறுவனத்தில் நிர்வாக, மேற்பார்வைக் குழுக்கள் ஜேர்மனியில் உள்ள பல ஓப்பல் ஆலைகளில் இருக்கும் பணிக்குழுக்களின் தலைவர்களைக் கொண்டிருக்கும்; மற்றும் IG Metall அலுவலர்களையும் கொண்டிருக்கும். ஓப்பலின் பங்குகளில் 10 சதவிகிதத்தை கொள்ளப் போகும் நிர்வாகக் குழுவின் தலைவர், Klaus Franz தான்.\nபுதிய ஓப்பல் நிறுவனத்தில் 55 சதவிகிதப் பங்குகள் மாக்னா மற்றும் Sberbank ன் கூட்டு உடைமையாக இருக்கும், GM இடம் 35 சதவிகிதம் இருக்கும்.\nஇத்தகைய வெட்டுக்கள் அனைத்தும் இருந்தாலும், ஓப்பல் திவால் தன்மை என்று பதிவு செய்யக்கூடும். ஓபலை விற்பதற்கான முடிவானது நிறுவனம் உண்மையில் காப்பாற்றப்பட்டது என்று அர்த்தப்படுத்தவில்லை என்றார்.\nபேச்சுவார்த்தைகள் இன்னும்கூட சரிந்து போகலாம். டிட்ரோயிட்டில் கடந்த செவ்வாய், புதனில் GM குழுக் கூட்டத்திற்கு முன்பு, GM ஓபலைத் தக்க வைத்துக் கொள்ளும் திட்டத்தைக் கொண்டிருந்ததாகத் தெரிகிறது. ஆனால் KPMG என்னும் தணிக்கை நிறுவனத்தின் அறிக்கை குழுவின் மனத்தை மாற்ற வைத்தது.\nஇந்த அறிக்கை ஓப்பலை GM குடும்பத்திற்குள் வைத்துக் கொள்ளுவதற்கு GM கிட்டத்தட்ட 6.1 பில்லியன் அமெரிக்க டாலர்களைக் கொடுக்க வேண்டியிருக்கும் என்று வெளிப்படுத்தியது. GM ன் முந்தைய கணிப்பான, ஓப்பலின் மறுகட்டமைப்பு $4.64 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருக்கும் என்று இருந்தது நம்புவதற்கு அரியதாக இருந்ததாக KPMG சுட்டிக் காட்டியுள்ளது.\nஇப்பொழுது ஓப்பலை மாக்னா மற்றும் அமெரிக்க $4.5 பில்லியன் என்று ஜேர்மனிய கூட்டாட்சி அரசாங்கம் உறுதியளித்துள்ள வரிப்பணத்தைக் கொண்டு மறுகட்டமைக்க GM தயாராக இருக்கிறது. "ஜேர்மனிய கூட்டாட்சி மற்றும் மாநில அரசாங்கங்களில் இருந்து பிரத்தியேகமான நிதியத் தொகுப்பு" என்பது ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என்று GM கூறியுள்ளது.\nஆனால் பில்லியன் கணக்கான யூரோக்கள், GM, Opel ஆகியவற்றின் தொழில்நுட்பம் ரஷ்யாவிற்கு செல்வதைத் தடைசெய்யும் வகையில் வெளிப்படையாக நிபந்தனைகளை GM போட்டுள்ளது இவ்விதத்தில் ஜேர்மனிய அரசாங்கம் கொடுக்கும் நிதிய உத்தரவாதங்கள் ரஷ்யாவிற்கு பொருந்தாது.\n"இந்த இருப்புக்கள் புதிய ஓப்பல் நிறுவனம் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். ரஷ்யாவில் முதலீடு என்பது மற்ற நிதிய இருப்புக்கள் மூலம் செய்யப்பட வேண்டும்" என்று ஓப்பல் அறக்கட்டளை ஆலோசனைக் குழுவின் அமெரிக்கப்பிரிவுத் தலைவரான Frederick வலியுறுத்தினார். ரஷ்யப் பங்காளிகள் GM ன் காப்புரிமைகளைப் பயன்படுத்துவது பற்றி தடை செய்யும் அதிகாரம் GM ற்குக் கொடுக்கப்படும்.\nGM ன் செயற்பாடுகளில் ஓப்பல் தொடர்ந்து ஒருங்கிணைக்கப்படும். இது மாக்னாவுடன் ஒருங்கிணைக்கப்படாது; மாறாக ஒரு சுதந்திர அமைப்பாக நிர்வகிக்கப்படும். GM ன் ஐரோப்பிய பிரிவின் தற்போதைய தலைவரும், ஓப்பல் கண்காணிப்புக் குழுவின் தலைவருமான Carl-Peter Forster, New Opel ன் தலைவராக வரவிருக்கிறார்.\nவல்லுனர் Willi Diez உடைய கருத்தின்படி, ஓப்பல் தப்பிப்பிழைப்பதற்கான வாய்ப்பு மிகவும் கேள்விக்கு உரியது, அது அடுத்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில்தான் நிர்ணயமாகும்.
பத்திரிகை உலகில் ஒரு வலுவான இடத்தை விட்டுச் சென்ற பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ்!\nமூத்த கன்னட பத்திரிகையாளர், சமூக ஆர்வலர், திரைப்படத் தயாரிப்பாளர், பிரபலமான நாடக நடிகர் மற்றும் சிறந்த அரசியல் விமர்சகருமான கௌரி லங்கேஷ் செவ்வாய்க்கிழமை இரவு அவரது இல்லத்தில் கொல்லப்பட்டார். முகம் தெரியாத நபரால் சுடப்பட்டார்.\nகெளரி லங்கேஷ் 1962ல் கவிஞர்-பத்திரிகையாளரான பி. லங்கேஷ்க்கு மகளாக பிறந்தார். முதல் முதலில் 'டைம்ஸ் of இந்தியா' பத்திரிக்கையில் இணைந்து ஒரு பத்திரிகையாளராய் தன் பயணத்தை தொடங்கினார். 2000-ல் தன் தந்தையை பறிகொடுத்த கௌரி அவர் நடத்தி வந்த லங்கேஷ் பத்திரிக்கையை தனது சகோதரருடன் இணைந்து நடத்தினார். தன் தந்தை இறந்த பொழுதே 16 வருடம் ஊடகத்தில் பணிப்புரிந்திருந்தார். தன் சகோதரருடன் ஏற்பட்ட வேறுப்பாட்டால் லங்கேஷ் பத்திரிக்கையில் இருந்து வெளியேறி “கௌரி லங்கேஷ் வார பத்திரிக்கை” என்ற பெயரில் தொடர்ந்தார்.\nகௌரி லங்கேஷ் வார பத்திரிக்கையில் சர்ச்சைக்குரிய பல செய்திகளை பாரபட்சமின்றி எழுதியவர். வலதுசாரி இந்துத்துவ கட்சியின் கடுமையான விமர்சகர். தனது பத்திரிக்கை மற்றும் எழுத்தின் மூலம் அச்சமின்றி பல வலுவான செய்திகளை கௌரி கொடுத்துள்ளார்.\nஅவரது ‘Kanda Hagey’ நான் பார்ப்பதை போல என்ற பத்தியில் அரசியல் அல்லது சர்ச்சைக்குரிய பல செய்திகளை தான் பார்த்தவாறே எழுதுவார். இறுதியாக அவரது கடைசி நிரலில் போலி செய்தி மற்றும் பொய்களை பரப்பும் ஆளும் கட்சியின் பரந்த பிரச்சாரத்தை பற்றி எழுதி இருந்தது குறிப்பிடத்தக்கது.\n2008-ல் கௌரி மீது அதிக வெளிச்சம் படத் தொடங்கியது, காரணம் தன் பத்திரிக்கையில் அவர் சில அரசியல் தலைவர்களை பற்றி விமர்சித்து எழுதியதே ஆகும். அதனால் அவர்மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டது, பின் அதற்காக அவருக்கு ஆறு மாதம் சிறை தண்டனை மற்றும் 10000 ரூபாய் அபராதம் வழங்கப்பட்டது. இருப்பினும் முன்கூட்டியே ஜாமீன் பெற்று வெளியேறினார் கௌரி. அவருக்கு எதிரான வழக்கை எதிர்த்து ஒரு பத்திரிகையாளர் தன் கட்டுரையின் ஆதாரத்தை வெளிப்படுத்த வேண்டும் என்பது பொருத்தமற்றதாக இருப்பதாகக் கூறி அவரது கூற்றுகளுக்கு ஆதாரங்களை வழங்க மறுத்துவிட்டார்.\nஒரு பத்திரிக்கையாளராய் என்றும் நிலையாக நின்று எந்த பக்கமும் பரிந்து பேசாமல் துணிச்சலாய் பல பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்துள்ளார். பத்திரிகை மற்றும் பத்திரிகையாளர் சுதந்திரத்திற்கு ஒரு முன்னோடியாய் இருந்தார் கௌரி லங்கேஷ்.\nஅவரது இந்த கொடூர மரணத்தை தொடர்ந்து பலர் தங்கள் அனுதாபங்களை ட்விட்டர் மூலம் தெரியப்படுத்தி வருகின்றனர். அரசியல்வாதிகள் முதல் சினிமா பிரபலங்கள் வரை பலர் கௌரி லங்கேஷ்க்கு இரங்கல் தெரிவித்த வண்ணம் இருக்கின்றனர்.\nநாடெங்கிலும் பத்திரிகைத்துறை, ஊடகத்துறையைச் சேர்ந்த பலரும் கெளரி லங்கேஷ் கொலைக்கான நீதி கிடைக்கவேண்டும் என்றும் பத்திரிகை சுதந்திரத்தை ஒடுக்குபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் போராட்டமும், இரங்கல் கூட்டங்களும் நடத்தி வருகின்றனர்.\nமேற்கு வங்க முதல் அமைச்சர் மம்தா பானர்ஜி\nபெங்களூரில் பத்திரிகையாளர் கௌரி லங்கேஷைக் கொன்றது மிகவும் வருத்தமளிக்கிறது. மிகவும் துரதிர்ஷ்டம் மற்றும் ஆபத்தானது, இதற்கு நிச்சயம் நீதி தேவை என ட்வீட் செய்துள்ளார்.\nகர்நாடக முதல் அமைச்சர்,\nமூத்த பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் படுகொலை செய்தியை கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். இந்த கொடூர செயல் கண்டனத்திற்குரியது எனவும். மேலும் நான் டிஜிபி யுடன் பேசியிருக்கிறேன், குற்றவாளிகளை உடனடியாக நீதிக்கு முன் கொண்டு வருமாறும் மற்றும் முழுமையான விசாரணையை உறுதி செய்யும்படி அறிவித்துள்ளேன் என்று ட்வீட் செய்துள்ளார்.\nஒரு பக்கம் அவருக்கு இரங்கல் தெரிவிக்க பலர் அவருக்கு எதிரான சர்ச்சைக்குரிய பல செய்திகளை ட்விட்டரில் பரப்பி வருகின்றனர். கௌரி லங்கேஷ் ஒரு குற்றவாளி என்றும் அவருக்கு இறுதி மரியாதை தேவை இல்லை என்று ஒரு சில முக்கிய பிரபலங்கள் ட்வீட் செய்து வருகின்றனர்.\nஅவரது இறுதி சடங்கு எந்த வித மதச்சார்பின்றி நிறைவேற்றப் பட்டது. அவரது அடக்கத்தில் கௌரியின் சகோதரர் இந்தரஜித் லங்கேஷ், அவரது தாயார், குடும்பம், நண்பர்கள், நடிகர் பிரகாஷ் ராஜ் மற்றும் பசவ குரு ஜெயு சுவாமி ஆகியோர் கலந்துக்கொண்டனர்.\n"கௌரி ஒரு பகுத்தறிவாளராக இருந்தார், எந்த மத பழக்கவழக்கத்திலும் நம்பிக்கை வைக்கவில்லை, சடங்கின் போது அவரது கருத்தாக்கத்திற்கு எதிராக நாங்கள் செல்லமாட்டோம்,”\nஎன்று அவரது சகோதரர் ஊடகங்களுக்கு பேட்டி அளித்தார்.\nகௌரி லங்கேஷ் இறுதி சடங்கு\nகௌரி லங்கேஷ் இறுதியாக தனது ட்விட்டர் பக்கத்தில்,\n“நாம் அனைவரும் போலி செய்திகளை பரப்பி தவறு செய்கிறோம் நாம் ஒருவருக்கொருவர் எச்சரித்துக்கொள்வோம்...” என்று ட்வீட் செய்துள்ளார்.\nமேலும் நமது பெரிய எதிரி யாரென்று தெரியும் ஏன் நமக்குள் சண்டைப் போட்டு கொள்கிறோம் எனவும் கேள்வி எழுப்பி இருந்தார். இதன் மூலம் அவரக்கு ஆபத்துகள் உள்ளது என்று அவர் ஏற்கனவே அறிந்திருப்பார் என பலர் யூகிக்கின்றனர்.\nகத்தி முனையை விட பேனா முனை வலிமை வாய்ந்தது என்ற பழமொழிக்கு மாறாக இன்று கத்தி முனையே கூர்மையானது என நிரூபனமானது. ஓங்கி நின்ற குரல் இன்று அடங்கியது.
Brinjal Recipes in tamil: Brinjal Gravy Recipe making in tamil\nkathirikai gothsu recipe in tamil: கத்தரியில் காணப்படும் போட்டோ நியூட்ரியெண்ட்ஸ் நினைவாற்றலை அதிகரிக்க உதவுகின்றன. இதிலுள்ள ஆன்டிஆக்ஸிடன்ட் கொழுப்பைக் கரைக்கின்றன.\nJuly 29, 2021 7:15:00 am\nBrinjal Recipes in tamil: நம்முடைய பகுதியில் எளிதில் கிடைக்கும் இந்த கத்திரிக்காய் ஏகப்பட்ட பயன்களை உள்ளடக்கிய ஒன்றாக உள்ளது. இவை வாதநோய், ஆஸ்துமா, ஈரல் நோய்கள், கீல்வாதம், சளி, பித்தம், தொண்டைக்கட்டு, மலச்சிக்கல், கரகரப்பானகுரல், உடல் பருமன் போன்ற நோய்களை குணப்படுத்தும் காய்கறிகளுள் ஒன்றாகவும் உள்ளன.\nகத்தரியில் காணப்படும் போட்டோ நியூட்ரியெண்ட்ஸ் நினைவாற்றலை அதிகரிக்க உதவுகின்றன. மேலும் இதிலுள்ள ஆன்டிஆக்ஸிடன்ட் கொழுப்பைக் கரைக்கவும் உதவுகின்றன.\nஇப்படி நிறை ஆரோக்கிய பயன்களையும், மருத்துவ குணங்களையும் கொண்டுள்ள கத்திரியில் எப்படி கொத்சு தயார் செய்யலாம் என இங்கு பார்க்கலாம்.\nசிதம்பரம் ஸ்டைல் கத்திரிக்காய் கொத்சு செய்ய தேவையான பொருட்கள்\nமல்லி விதை –2டேபிள் ஸ்பூன்\nகடலை பருப்பு – 1டேபிள் ஸ்பூன்\nஉளுந்தம் பருப்பு – 1டேபிள் ஸ்பூன்\nகாய்ந்த மிளகாய் – 8 (கரத்திற்கேற்ப)\nகடுகு, உளுந்து – 1/2 டீ ஸ்பூன்\nகத்தரிக்காய் – 1/2 கிலோ (4துண்டுகளாக நறுக்கியது)\nபுளி – 1 எலுமிச்சை அளவு (10 நிமிடங்களுக்கு ஊற வைத்தது)\nகத்திரிக்காய் கொத்சு செய்முறை\nஅடுப்பில் ஒரு பேன் வைத்து சூடானதும் அதில் அரைக்க வழங்கப்பட்டுள்ள பொருட்களை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து மிதமான சூட்டில் வைத்து நன்கு வசம் வரும் வரை வறுத்துக் கொள்ளவும். பிறகு அவற்றை நன்கு ஆற வைத்து மிக்சியில் இட்டு அரைத்து கொள்ளவும்.\nஇந்த மசாலாவை ஒரு டப்பாவில் அடைத்து வைத்து6முதல்7மாதங்களுக்கு பயன்படுத்தி வரலாம். தவிர, இவற்றை கார குழம்பு, மீன் குழம்பு, புளி குழம்பு ஆகிவற்றுடனும் சேர்த்து ருசிக்கலாம்.\nஇப்போது ஒரு பாத்திரம் எடுத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு உளுந்து சேர்த்து பொரிய விடவும். காய்ந்த மிளகாய், கருவேப்பிலை சேர்த்து கிளறிய பின்னர் சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும். தொடர்ந்து பூண்டு சேர்த்து வதக்கவும்.\nஇவை ஓரளவு வதங்கிய பிறகு அவற்றோடு நறுக்கி வைத்துக்க வைத்துள்ள கத்தரிக்காயை சேர்த்து வதக்கவும். கத்தரிக்காய் நன்கு வதங்கிய பிறகு அவற்றோடு நறுக்கிய தக்காளியைச் சேர்த்து வதக்கவும்.\nதக்காளி சாஃப்டாக வதங்கிய பிறகு அவற்றோடு மஞ்சள் தூள், மிளகாய் தூள் முன்னர் அரைத்து வைத்துள்ள குழம்பு தூள் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து நன்கு கிளறிய பிறகு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து ஒரு மூடியால் மூடி5நிமிடங்களுக்கு வேக விடவும்.\nஇவை நன்கு வெந்த பிறகு பருப்பு கடையும் கட்டையால் நன்கு மசிந்து விடவும். பிறகு முன்பு ஊற வைத்துள்ள புளி கரைசலை சேர்த்து கொள்ளவும். இவை நன்கு சுண்டிய பிறகு சாப்பாடு, இட்லி, தோசை என அனைத்திற்கும் டிஷ்ஷாக பயன்படுத்தி ருசித்து மகிழவும்.\nfood receipefood recipesfood tipshealthyhealthy foodHealthy Food tamil newshealthy food tipsHealthy Lifelifestyletamil food recipeTamil Lifestyle Update\nWeb Title: Brinjal recipes in tamil brinjal gravy recipe making in tamil
`கட்டியணைப்பதில் உள்ள வித்தியாசத்தை இங்குதான் உணர்ந்தேன்!’ - 16வது மக்களவையின் கடைசி நாளில் மோடி உரை | Narendra modi speaks lok sabha on its last working day\nவெளியிடப்பட்ட நேரம்: 18:09 (13/02/2019)\nகடைசி தொடர்பு:18:09 (13/02/2019)\n`கட்டியணைப்பதில் உள்ள வித்தியாசத்தை இங்குதான் உணர்ந்தேன்!’ - 16வது மக்களவையின் கடைசி நாளில் மோடி உரை\n`அன்பாகக் கட்டியணைப்பதற்கும் கட்டாயப்படுத்தி கட்டிபிடிப்பதற்குமான வித்தியாசத்தை இந்த அவையில்தான் உணர்ந்துகொண்டேன். மக்களவை சகாக்களுக்கு என்னுடைய நன்றிகள்!' என்று லோக் சபாவின் கடைசி அலுவல் நாளில் பிரதமர் மோடி பேசினார்.\n2019-20 ம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் மீதான விவாதம் இன்றுடன் நிறைவடைந்தது. அதுமட்டுமன்றி, பிரதமர் மோடி தலைமையிலான 16வது லோக் சபாவின் பதவிக்காலம் காலவதியாகியுள்ளது. விரைவில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, தேர்தல் நடைபெற உள்ளது. புதிய அரசு பதவி ஏற்ற பிறகுதான் மீண்டும் லோக்சபா கூட உள்ளது. இந்நிலையில் லோக்சபாவின் கடைசி அலுவல்நாளில் பிரதமர் மோடி உரை நிகழ்த்தினார். அவர் பேசுகையில், `நான் முதல்முறை இந்த அவைக்கு வந்தபோது நிறைய புதிய விஷயங்களைக் கற்றுக்கொண்டேன். கட்டியணைப்பதற்கும் கட்டாயப்படுத்தி கட்டிப்பிடிப்பதற்குமான வித்தியாசத்தையும் நான் இங்குதான் உணர்ந்துகொண்டேன்.\n30 ஆண்டுகளுக்குப் பிறகு என் தலைமையிலான ஆட்சி நிலையான ஆட்சி அமைந்ததில் மகிழ்ச்சி. 16-வது லோக்சபாவின் ஓர் அங்கமாக இருப்பதில் பெருமைப்படுகிறேன். தேசமே எங்கள் அரசின் மீது முழு நம்பிக்கை கொண்டுள்ளது. உலகம் இப்போதுதான் உலகமயமாதல் பற்றிப் பேச ஆரம்பித்துள்ளது. ஆனால், இந்தியாவோ சோலார் மூலம் இந்தப் பிரச்னைக்குத் தீர்வை தொடங்கிவிட்டது. கடந்த4ஆண்டுகளைப் பொறுத்தவரை ஏராளாமான செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தபட்டுவிட்டன. எனது ஆட்சியில் வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு கூடுதல் மரியாதை கிடைத்துள்ளது. இதே லோக்சபாவில் கறுப்புப் பணத்துக்கும் ஊழலுக்கும் எதிரான சட்டங்கள் நிறைவேற்றபட்டுள்ளன. இங்குதான் ஜி.எஸ்.டி வரிவிதிப்புச் சட்டம் இயற்றபட்டது.\nகட்சிகளின் ஆதரவு இந்தச் சட்டம் மூலம் வெளிப்பட்டது. ஐ.நா அவையில் இந்தியாவுக்கான பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றபட்டுவிட்டன. பாதுகாப்பு மற்றும் வெளியுறவுத்துறையில் பெண்கள் அமைச்சர்களாக இருப்பது பெருமையாகக் கருதுகிறேன். அவர்களுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். வெளிநாட்டுத் தலைவர்கள் தற்போது இந்திய தலைவர்களை மதிக்கத் தொடங்கியுள்ளனர். மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் பங்கு இந்த அவைக்கு மிக முக்கியமானதாகக் கருதுகிறேன். என்னுடைய பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். அதேபோல வெங்கைய நாயுடுக்கும் எனது வாழ்த்துகள். 85 சதவிகிதம் மனநிறைவோடு இந்த அவையிலிருந்து விடைபெறுகிறேன். மக்களவை சகாக்கள், அமைச்சர்கள் அனைவருக்கும் எனது நன்றி!' என்று பேசி முடித்தார்.\nmodibjpபாஜகமோடிparliament election 2019
ஸ்டாலின் அதிரடி- அதிமுக உறுப்பினர்களை சட்டமன்ற ஆலோசனை குழுவில் இணைத்தார்- ஒரே பரபரப்பு ! – ATHIRVU.COM\nஸ்டாலின் அதிரடி- அதிமுக உறுப்பினர்களை சட்டமன்ற ஆலோசனை குழுவில் இணைத்தார்- ஒரே பரபரப்பு !\n/ 9144 Views\nதமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சி பிரதிநிதிகளைக் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவது குறித்து தேவையான ஆலோசனைகள் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சட்டமன்ற உறுப்பினர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவில் சட்டமன்றத்தில் இடம் பெற்றுள்ள 13 கட்சிகளைச் சேர்ந்தவர்களும் இடம் பெற்றுள்ளார்கள் என்பது அதிரடியான விடையம்.\nஇந்த குழுவில் திமுக சார்பில் மருத்துவர் எழிலன், அதிமுக சார்பில் முன்னாள் சுகாதார துறை அமைச்சர் மருத்துவர் சி விஜய பாஸ்கர் இடம் பெற்றுள்ளனர். அதேபோல ஏ எம் முனி ரத்தினம் (காங்கிரஸ்), ஜி கே மணி (பாமக), நயினார் நாகேந்திரன் (பாஜக), மருத்துவர் சதன் திருமலை குமார் (மதிமுக) எஸ் எஸ் பாலாஜி (விசிக) ஆகியோர் இந்த ஆலோசனைக் குழுவில் இடம் பெற்றுள்ளனர். அதேபோல, நாகை மாலி (சிபிஎம்), ராமசந்திரன் (சிபிஐ), ஜவாஹிருல்லா(மமக), ஈஸ்வரன் (கொமதேக), வேல்முருகன் (தவாக), பூவை ஜெகன் மூர்த்தி (புரட்சி பாரதம்) ஆகியோர் இந்தக் குழுவில் இடம் பெற்றுள்ளனர்.\nகொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள் பற்றி ஆலோசனைகள் பெற இந்தக் குழு அவ்வப்போது கூடி விவாதிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த ஆலோசனைக் குழுவின் உறுப்பினர் செயலராக பொதுத்துறைச் செயலர் செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது எதிர்கட்சியாக இருந்தாலும் தற்போது அவர்களுக்கும் ஆழும் கட்சியின் அதிகாரங்களை கொடுத்துள்ளார் ஸ்டாலின். இதனை அதிமுக சற்றும் எதிர்பார்க்கவில்லை. போற போக்கில் அதிமுக கட்சியினரே ஸ்டாலினை வாழ்த்த ஆரம்பித்து விட்டார்கள் என்பது தான் தற்போதைய நிலையாக உள்ளது. அனைத்துக் கட்சிகளையும் அரவணைத்துக் கொண்டு செல்கிறார் ஸ்டாலின். என்பது ஒரு புதிய திருப்பு முனையாக உள்ளது.\nபோர் நடந்துச்சுன்னா…’ கண்டிப்பா ‘நீங்க’ தோத்துடுவீங்க…! ‘வல்லரசு நாட்டிற்கு எச்சரிக்கை விடுத்த சீனா…’ – என்ன காரணம்…?\nபேஸ்புக் நட்பால் விபரீதம்.. காதல் வலையில் சிக்க வைத்து 22 வயது பெண்ணை வேட்டையாடிய 25 காம இளைஞர்கள்
நாச்சியார்: பொறுமையின் பலம் 5\nஉப்பிலி அப்பனைத் தொழுது , தம்பிகளும் ,மனைவிகளும் ,அவர்களது செல்வங்களும் மனம் நிறை மகிழ்ச்சியுடன்\nபந்தல்குடிக்குத் திரும்பினர் .\nகாலையில் கிளம்புவதற்கு முன் ,தம்பிகள் இருவரும்\nஅக்காவிடம் கேட்டார்கள். ஏன் மைலி, நாங்கள் தானே திருமாங்கல்யம் வாங்கணும்.\nநீ யேன் வாங்கினே என்றதும் ,மைதிலி விளக்கினாள். நம் அம்மாவுக்கு\nபெற்றோர் இல்லைடா. நான் அந்த ஸ்தானத்துல செய்கிறேன்.\nசெய்யச் சொன்னது உங்க அத்திம்பேர்தான் என்று சிரித்தாள்.\nஓ. அப்போசரி. என்றபடி வெற்றிலை,பாக்கு, மஞ்சள் ,மஞ்சள் வாழைப் பழங்களை\nவைத்து அக்கா அத்திம்பேர் இருவரையும் வணங்கி,\nஒருவாரம் முன்னயே வந்து நடத்தி வைக்கணும் என்று\nசீரியசாக முகத்தை வைத்துக் கொண்ட தம்பிகள் அணைத்துக் கொண்டாள்\nவந்துடறோம் டா. நீங்கள் பத்திரமாகப் போய் வாருங்கள்\nஎன்று அனுப்பி வைத்தாள்.\nவாரிஜாவின் அடுத்த பக்கத்தைப் பார்க்கலாம்.\nபிடிவாதம் உண்டு தான். ஆனால் பாசம் வைப்பதிலும் சளைத்தவள் இல்லை.\nமைதிலி அம்மாவை விட மங்கா பாட்டியையும், விஜயராகவன் தாத்தாவையும் மிகவே\nஅம்மாவின் கண்டிப்பு இல்லாமல் சொகுசாகப் பாட்டி வீட்டில் வளைய வரப் பிடிக்கும்.\nபாட்டியின் திருநெல்வேலிப் பழக்கங்கள் பிடிக்கும்.\nதாத்தாவின் சாமர்த்தியம் பிடிக்கும்.\nமாமாக்களின் செல்லம் சற்றே அதிகம்.\nஇதோ இப்போது நடக்கப் போகிற விழாவில் ராஜகுமாரியாக வளைய வரப் போவதும் அவள தான். இரண்டு குடும்பங்களுக்கும் ஒரே பேத்தி .\nமற்ற குழந்தைகள் எல்லாம் பசங்களாகப்\nபோனதில் அப்பாவின் பெற்றோருக்கும்,\nஅம்மாவின் பெற்றோருக்கும் அவள்தான் முக்கியம்.\nஅவளுக்குத் தெரியாததது மங்காப் பாட்டியின் கண்டிப்பு.\nஅதைப் பந்தல்குடிக்கு வந்த அடுத்த நாளே உணர்ந்தாள்.\nபொண்ணே அங்க இங்க நிக்காதே. நிறைய பேர் வருவா போவா.\nநீ உங்க அம்மா, மாமிகள் நிழலை விட்டுப் போகாமல் உதவி செய்ய வேண்டும்.\nவாசல் பக்கம் பந்தல் பக்கம் அலைய வேண்டாம்.\nஎன் பிறந்து வீட்டு மனிதர்களும் வந்திருக்கிறார்கள்.\nஎன் அக்கா,திருவேங்கடம் அவள் பேத்தியை அழைத்து வந்திருக்கிறாள்.\nஇன்னோரு தங்கை அவள் பேரனை பாம்பேலிருந்து அழைத்துக் கொண்டு வந்திருக்கிறாள்.\nஇந்தக் கோமளம் அத்தைகள்ட்ட வாயாடாதே.\nஇதோ பாரு வரானே திருமலை அவந்தான்\nபாம்பே பெரியம்மா பேரன். சட்டம் படித்துக் கொண்டிருக்கிறான்\n\_என்றதுமே வாரிஜாவின் கவனம் திரும்பியது.\n22 வயது இளங்காளையாக ,நெடு நெடு உயரத்தோடு\nஅங்கு வந்து தன் பாட்டியோடு பேசியவனிடம் உடன் அவள் மனம் ஒன்றியது.\n16 வயது சிம்முவும் , எட்டு வயது ஆண்டாளும் ஆமாம் அப்பொழுதே என்னைக் கண்டு கொண்டதாகப் பின்னாளில் கேலி செய்வார்.எனக்கு நினைவில்லை.//அவள் கண்ணில்\nதிருமலை மற்றவர்கள் கவனம் தன்னிடம் இல்லாத போது\nவாரிஜாவின் அழகை ரசித்தான். அவளின் அமரிக்கையான பேச்சு பிடித்திருந்தது. // ஓ வாரிஜாவைன் துடுக்கு வால் எங்கே போச்சு என்ற கேள்வி வரும். அவள் சிந்தை முழுவதும் திருமலையிடம் போய் விட்டது.\nஅவள் அவனிடம் பாம்பே பற்றி விசாரிக்க, அவன் கும்பகோணமும், காவிரியும், கோவில்களும் தன்னைப் பிடித்துக் கொண்டதைச் சொல்ல\nஅடுத்து வந்த நாட்கள் பறந்தன.\nமங்காப் பாட்டிக்கும் விஜயராகவன் தாத்தாவுக்கும் முறையோடு\nவேதமந்திரங்கள் ஒலிக்க, திருமங்கல்ய தாரணம் ஆயிற்று.\nபளிச்சென்று பாரம்பரிய உடையில் அனைவரும் மிளிர்ந்தார்கள்.\nஆசீர்வாதம் சொல்லிக் குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கப் படும்போது\nமைதிலிக்கும் உப்பிலிக்கும் பட்டுப்புடவை, வேஷ்டி , சிகப்புக் கல் பதித்த\nநெக்லஸ் தந்தை தாயை இருவரும் வணங்கினார்கள்.\nஅடுத்த சம்பந்திகள் சம்பாவனையாக எல்லா சம்பந்திகளுக்கும்\nமைதிலியின் தம்பிகளுக்கும் மனைவிகளுக்கும் நகையும் பட்டும் வேஷ்டியுமாகக்\nகண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.\nபேத்தி பேரன் களை அருகில் அழைத்து அவர்களுக்குப் பொருத்தமான பரிசுகளை வழங்கினார்\nதாத்தா. வாரிஜாவுக்கு தனியாக கெட்டியான சங்கிலியில் அன்னப் பட்சி கோர்த்த செயின்.\nஅதைப் போட்டுக்கொண்ட அடுத்த நிமிடம் வாரிஜாவின் கண்கள் திருமலையைத் தேடின.\nஅவன் முகத்தில் தெரிந்த ஆமோதிப்பைப் பெருமையாக\nஏற்றுக் கொண்டாள். இதை யெல்லாம் பார்க்க வேண்டிய கண்கள் கவனித்துக் கொண்டன.\nஉப்பிலி, மைதிலி அருகே வந்து //நாடகம் எல்லாம் கண்டேன் உந்தன் ஆடும்\nவிழியிலே.// என்று சிரிக்காமல் சொல்ல, //சட்டப் படிப்பு என்னாச்சு என் அருமை\nமாமா// மைதிலி கேட்க அது கல்யாணத்தில் வந்து முடிந்தது //.\nஉங்க பெண்ணின் வீராப்பு என்று வினவ, அது சொக்கன் கண்ட மீனாட்சி\nபோலக் காற்றோடு போச்சு என்று பலமாகச் சிரிக்க\nமச்சினர்களும் வந்து கலந்து கொண்டார்கள்.\nஎப்பொழுது திருமணம். /இதோ திருவேங்கடம் பாட்டியிடமும்\nஸ்ரீனிவாசன் தாத்தாவிடமும் கேட்டு விடலாம்.\nமதிய பூரண உணவுக்குப் பின் அனைவரும் உட்கார்ந்து பேச\nஅன்றே சம்ப்ரதாயமாகப் பாக்கு வெற்றிலை\nவரப்போகும் தை மாதத்தில் இதே பந்தல் குடியில்\nதிருவாளர் உப்பிலியின் மகளும், பந்த நல்லூர் சாரங்கபாணி அய்யங்காரின் பௌத்திரியுமான\nவாரிஜா என்கிற விஜயவல்லியை, திருநெல்வேலி ஸ்ரீனிவாச அய்யங்காரின் தௌஹித்ரனும்\nஸ்ரீ சுந்தரராஜனின் புத்திரனுமான திருமலை என்கிற அழகிய நம்பிக்குத்\nதிருமணம் நடத்த உப்பிலியப்பன், திருக்குறுங்குடி நம்பி ஆசிகளுடன்\nவாரிஜாவின் வாய்த்துடுக்கு எல்லாம் எங்கே போனது என்று தெரியவில்லை.\nமும்முரமாகச் சமைக்கக் கற்றுக் கொண்டாள்.\nபாம்பே தபாலாபீஸும், கும்பகோணம் தபால் ஆபீசும்\nஉறங்கவே இல்லையாம்.அவ்வளவு கடிதங்கள்.\nகதை முடிந்தது. வாரிஜா வின் ஆசையான பட்ட படிப்பும் பூர்த்தியானது.\nபாம்பேயில் திருமணம் முடித்த கையேடு கல்லூரியில் சேர்க்கப் பட்டாள் .\nLabels: பொறுமையின் பலம் 5\nஒப்பிலியப்பன் எங்கள் குல தெய்வம். சமீபத்தில் எங்கள் பையன் இந்தியா வந்திருந்த பொழுது தரிசித்து விட்டு வந்தோம்.\nபாட்டியின் திருநெல்வேலி பழக்கங்களும் பிடிக்கும்\nதாத்தாவின் சாமர்த்தியமும் பிடிக்கும்.\nசிவப்புக் கல் பதித்த நெக்லஸ் (அது என்ன எப்பப் பார்த்தாலும் சிவப்புக்கல் பதித்த..? அந்த காலத்து ராசியோ?)\nகெட்டியான சங்கிலியில் அன்னபட்சி கோர்த்த செயின்\n(கண் முன்னேயே டாலடிக்கறது!)\nதிருவளர்ச் செல்வன் உப்பிலிக்கும்\nதிருவளர்ச் செல்வி வாரிஜாவுக்கும்\n-- அட! அதுக்குள்ளேயே டும் டும்ம்ம்மா....\nநீங்களும் கும்பகோணமா. சரிதான்.\nஎன் மாமியார் பாண்டி நாடு. மாமனார் சோழ நாடு.\nதாத்தாவின் சாமர்த்தியமும் பிடிக்கும்.//\nஆமாம் ஜீவி சார்.\nவெட்டிண்டு வான்னு சொன்னால் கட்டிக் கொண்டு வந்துவிடும் சுறு சுறுப்புத் தாத்தா. ஹாஹா.\nஅப்போது சிகப்புக்கல் ரொம்ப பிரபலம். கெம்ப் கல்லாக இருந்தது என்றால் இன்னும் சிறப்பு.\nஅப்பாவுடைய அம்மாவை நினைத்தால் கழுத்தும் அட்டிகையும் நினைவுக்கு வரும்.\nஇந்தத் திருமணம் முன்பே முடிவானது தான். வாரிஜா,திருமலைக்கு\nமட்டும் தான் தெரியாது.பாட்டிகளும் தாத்தாக்களும் எடுத்த முடிவு.🙏🙏🙏🙏\nகாலை வணக்கம் அம்மா...\nநாங்கள் கூட இதோ ஆண்டவன் அருளோடு வரும் பதினேழாம் தேதி ஒப்பிலியப்பனை தரிசிக்க வேண்டி காத்து நிற்கிறோம்.\nகனடா பயண திட்டத்தால் சடசடவென வாரிஜாவின் திருமணம் முடிந்துவிட்டது! வாரிஜா... இது மாதிரி பெயர் இதுவரை கேள்விப்படாதது.\nஎன்றும் நிற்கும் ஒப்பில்லா அப்பனை நல்ல படியாகச் சேவித்து வாருங்கள்.\nஇந்தப் பயணத்திற்கு முன்பே முடித்திருக்க வேண்டும்.\nடிடைல்ஸ் இல்லாமல் எழுத முடியவில்லை.\nஅதனால் நீண்டது கதை.\nஎன் வீட்டு சம்பந்தமாக சில வேலைகளை முடிக்க வேண்டி இருந்தது.\nபயணம் சென்று வந்து முடிக்க மனமில்லை.\nஅப்பாடி இப்போது தெரிகிறதா.\nவாரிஜா இன்னும் இருக்கிறார் சதாபிஷேகம் செய்து கொண்டு.\nதாமரையின் இன்னோரு பெயர் வாரிஜம் என்று நினைக்கிறேன்.\nமங்காப் பாட்டியை அடிக்கடி பார்த்துப் பழகிப் பேசிய மாதிரி இருக்கு. வாரிஜாவின் துடுக்குத்தனம் போய் நல்லபடியாக மாறியது குறித்து சந்தோஷம். கொஞ்சம் பயம்மாகவே இருந்தது. சஷ்டி அப்தபூர்த்தியில் என்ன வாய்த்துடுக்கைக் காட்டப் போகிறாளோ என்பதை நினைத்துக் கவலையாக இருந்தது. நல்லபடியாக முடித்துவிட்டீர்கள். கனடா பயணமும் நல்லபடியாகப் போகட்டும். நல்லபடியாகப் போய் எல்லாவற்றையும் பார்த்து ரசித்துவிட்டு வாருங்கள்.\nநிகழ்விற்கு ஏற்ற பாடல்... அருமை அம்மா...\nஅன்பான குடும்ப விழா. விழாவிற்கு அந்த பையன் , விழாவிற்கு வந்த பெண் திருமணமுடிவது முன்பு வழக்கம் தானே! சொல்லி சென்ற விதம் மிக அருமை.இன்னும் இரண்டு மூன்று நாள் கதையை அருமையான பாடல்களுடன் கொண்டு போய் இருக்கலாம் என்று தோன்றவைக்கும் எழுத்து.\nபயணம், வேலை குறுக்கே வந்து விட்டது.\nவாரிஜாவிற்கு கதை வேறு முறையில் தொடருங்கள்.\nபயணமும், வேலையும் இனிதாக முடிய உப்பிலி அப்பன் துணை செய்வார்.\nஆஹா... சுபமாக முடிந்தது வாரிஜா திருமணம்.\nபதிவினை மிகவும் இரசிக்க முடிந்தது வல்லிம்மா....\nஉங்கள் பயணம் சிறக்க வாழ்த்துகள். சென்று திரும்பியதும் பயணம் பற்றியும் எழுதுங்கள்.\nசுபமான இறுதிப்பகுதி ஒப்பிலியப்பன் அருள் புரியட்டும். வாழ்க நலம்.\nஅட! அதுக்குள்ள வாரிஜா திருமலை மனம் பரிமாறி கல்யாணமும் நடந்துவிட்டதா?!!! ரொம்பவே சீக்கிரமோ? அது சரி வயது வந்த பெண்ணை எல்லாம் வீட்டில் வைத்துக் கொண்டா இருப்பார்கள் பொறுப்பா ஒருவனிடம் ஒப்படைத்துவிடணும் என்று மங்கா பாட்டி சொல்வது கேட்கிறது!!!\nமும்பை தபால் நிலையமும், கும்பகோணம் தபால் நிலையமும் இன்னும் கொஞ்ச நாட்கள் கூட உறங்காமல் இருந்திருக்கலாமோ என்று ஹா ஹா ஹா..\nஎப்படியோ வாரிஜாவின் துடுக்கு மறைந்து எல்லாம் நல்லபடியாக முடிந்தது. வாரிஜாவின் துடுக்கினால், அத்தைகளினால் ஏதேனும் கொஞ்சம் மனத்தாங்கள் பகுதி வருமோ என்று நினைத்திருந்தேன். சுமூகமாகப் போய் டக்கென்று டும் டும்...\nரசித்தேன் வல்லிம்மா...நன்றாக இருந்தது ஆனால் விரைவில் முடிந்துவிட்டதே என்றும் இருந்தது!!\nநிறைய வரிகளை ரசித்தேன் வல்லிம்மா...\n//உப்பிலி, மைதிலி அருகே வந்து //நாடகம் எல்லாம் கண்டேன் உந்தன் ஆடும்\n//உங்க பெண்ணின் வீராப்பு என்று வினவ, அது சொக்கன் கண்ட மீனாட்சி\nபோலக் காற்றோடு போச்சு //\nஅட நம்மூரு பையன்!!!\nபட்டப் படிப்பு பூர்தியானது மகிழ்சியே.\nஅன்பு கீதாமா. பயணம் இனிதே முடிந்து இதோ வீடு வந்து விட்டோம்.\nஇன்னும் கண்ணிலேயே நிற்கும் வட அமெரிக்கப் பசுமை.\nமங்காப் பாட்டியாகத் தோற்றம் தருவது என் நாத்தனார் பத்மா பார்த்தசாரதி.\nஉள்ளத்தாலும் உடலாலும் அவ்வளவு உழைத்தவர்,. நல் வாழ்வு\nவாழ்ந்து கடந்த கார்த்திகையில் இறைவனடி சேர்ந்தார்.\nவாரிஜாவின் வாய்த்துடுக்கு பெற்றோருடன் முடிந்தது.\nஎப்பொழுதும் அடைக்கலம் கொடுக்கும்\nமங்காப்பாட்டியே எச்சரித்து விட்டதால்\nஅவள் விருப்பப்பட்ட படியே சட்டக் கல்லூரியிலும்\nசேர்ந்து படிக்க முடிந்தது.\nஇன்னும் எழுத ஆசைதான். ஆனால் சரியாகக் கேட்டு எழுத வேண்டும் . கிளம்பும் அவசரத்தில்\nமுடித்தால் விவரம் பற்றாமல் போய் விடும்.\nஅதனால் தான் சுருக்கமாக முடித்தேன்.\nமீண்டும் எழுதலாம். நம் ஊரில் பாடல்களுக்கா\nஅதுவும் உங்களைப் போல ரசிப்பவர்கள் இருக்கும் போது\nஎழுதுவதற்குத் தானே உற்சாகம் வந்து விடுகிறது.\nஅன்பு தனபாலன் இனிய காலை வணக்கம் மா.\nபாடல்கள் அதுவும் பழைய பாடல்கள் என்றும்\nஅருமை. நன்றி மா.\nஇனிய காலை வணக்கம் மா. நீங்கள் எல்லோரும் வாழ்த்தியபடி\nபயணம் சென்று திரும்பி வந்து விட்டோம்.கொண்டு வந்த\nதுணிகள் தோய்த்து , பள்ளி வேலைகள்\nதொடர்ந்து படித்துப் பின்னூட்டம் இட்டதற்கும் நன்றி.\nபயணத்தில் எடுத்த படங்களை\nசீரமைத்துப் பிறகே பயணக் கதைகளை\nமுதலில் மற்றப் பதிவுகளைப் படிக்க வேண்டும்.
payment : English to Tamil dictionary translation online | Tamilcube\nTamil translation from Modern English to Tamil dictionary online for the word payment:\npayment : பண வழங்கீடு , பணங்கொடுப்பு , கொடுக்கப்படும் பணம் , ஊதியம் .\npayment : கொடுப்பனவு .\npayment : கொடுப்பு .\npayment : செலுத்தல் .\npayment : செலுத்துதல் , செலுத்தும் பணம் , சம்பளம் .\npayment : பணம் வழங்கல் .\npayment by installments : தவணைக் கொடுப்பனவு .\npayment change date : கொடுப்பனவு மாற்றத் திகதி .\npayment frequency : கொடுப்பனவுத் தவணைக்கூறு .\npayment in cash : ரொக்கம் செலுத்தல் .\nadhoc payment : தற்காலிகப் பணக் கொடுப்பு , குறிப்பிட்ட நோக்கத்திற்கான பணக்கொடுப்பு .\nadvance payment : முற்பணம் , முன்கூட்டியே செலுத்தப்படும் பணம் .\ncash payment : காசாக செலுத்தல் .\ncertificate of credit payment : கடன் பற்றுக்கான சான்றிதழ் .\nconditions of payment : பணம் செலுத்தும் தவணைகள் .
கவனிச்சீங்களா? லைட்டை மட்டும் தான் அணைக்கச் சொன்னாரு பிரதமர் மோடி! - A1 Tamil News\nஷாக் அடிக்கும் மின் கட்டணம்! அதிர்ச்சியில் பொது மக்கள்!!\n10ம் வகுப்பு தேர்வுகள் முடிந்த பிறகே பள்ளிகள் திறப்பதைப் பற்றி யோசிக்க முடியும்! அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்!\nதிமுக எம்.எல்.ஏ.வுக்கு கொரோனோ தொற்று!\nகருணாநிதி நினைவிடத்தில் இலவச திருமணம்!மு.க.ஸ்டாலின் அஞ்சலி!\nமின்வாரியம் பகல் கொள்ளையடிக்கிறது! பிரபல நடிகரின் பரபரப்பு குற்றச்சாட்டு!\nசொந்த ஊர் திரும்பும் தொழிலாளர்களுக்கு இலவச ஆணுறை வழங்கும் அரசு! அதிர்ச்சிக் காரணம்!\nநிகர்சா புயல்! இந்த மாநிலங்களுக்கு எல்லாம் ரெட் அலர்ட்! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!\nமுன்பதிவு டிக்கெட் கட்டணங்களைத் திரும்ப பெற சேவை மையங்கள்!\nவார்த்தைக்கு வார்த்தை ‘கலைஞர்’ என்று நெகிழ்ந்த அன்றைய முதல்வர் எம்ஜிஆர்!\n10 ஜிபி டேட்டா இலவசம்! செல்போன் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி!!\nதலைமைச் செயலகம், எடப்பாடி வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்! காவல் துறை தீவிர விசாரணை!\nகுட் நியூஸ்! கொரோனாவிற்கு தடுப்பூசி தயார்! மருத்துவ விஞ்ஞானிகள் அறிவிப்பு!\nசென்னையில் கொரோனாவைக் கட்டுப்படுத்துவது மிகவும் சிரமம்! அமைச்சர் ஜெயக்குமார் கவலை!\nதெற்கிலிருந்து வீசிய கதிரொளி! கலைஞரின் மூச்சுக்கூட சமூகநீதி பேசும்!!\nவெளிநாட்டு பயணிகளுக்கு பிசிஆர் பரிசோதனை கட்டாயம்! தமிழக அரசு அறிவிப்பு!\nகலைஞர் ஒரு போராளி!!\nஇந்தியப் பெண்களுக்கு சொத்துரிமை பெற்றுத் தந்தவர் கலைஞர்!\nகணிணித் துறையை தமிழகத்திற்கு மீட்டுத் தந்த ‘நாயகன்’ கலைஞர்!\nமத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி – கலைஞரின் ஆட்சி முழக்கம்!!\nராணுவத்தை வரவழைப்பேன்! டிரம்ப் ஆவேசம்!!\nஇளையராஜா எப்படி “இசைஞானி” ஆனார்?\nஇந்தியாவில்2லட்சத்தைத் தாண்டியது கொரோனா தொற்றின் எண்ணிக்கை! வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்!\nதொடரும் கனமழை! உயரும் பலி எண்ணிக்கை!\nஇன்று இரவு9மணிக்கு9நிமிடங்கள் நேரத்திற்கு லைட்டை அணைத்து விட்டு, விளக்கு ஏத்துங்க, செல்போன் டார்ச் லைட் அடியுங்கன்னு பிரதமர் மோடி கோரிக்கை விடுத்தாரு.\nபிரதமரின் இந்த கோரிக்கையை ஆளாளுக்கு மீம்ஸ் போட்டு சிரிச்சாலும், சீரியஸா விளக்கம் கொடுத்தும் சிலர் வீடியோ போட்டுருக்காங்க. ஒய்.ஜி.மகேந்திரன் பொண்ணு மதுவந்தி பிரதமர் எதைச் செய்தாலும் அதுக்கு ஒரு காரணம் இருக்குன்னு சொல்லி, ஜோதிடர்களும் சொன்னாங்கன்னு ஏதேதோ சொல்லியிருக்காங்க. நெட்டிசன்ஸ் இந்த வீடியோவைப் போட்டு கண்ணாபின்னான்னு கமெண்ட்ஸ் போட்டு வர்றாங்க.\n9 நிமிஷம் லைட்டை அணைச்சிட்டா மின்சாரத்துறையே முடங்கிவிடும்ன்னு இன்னோரு பக்கம் வாட்ஸ் அப் மெசேஜ்கள் ஓடிகிட்டு இருக்கு. இதப்பத்தி மின்சாரத் துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற மூத்த அதிகாரியிடம் கேட்ட போது, லைட்டை மட்டும் அணைப்பதால் ஒன்னும் ஆகாது.\nஆனா, ஏசி, ஃபேன், ஃப்ரிட்ஜ், ஹீட்டர், மோட்டார் ன்னு ஓடிக்கிட்டு இருக்கிற மத்த மின் சாதனங்களை ஆஃப் செய்யத் தேவையில்லை என்று அறிவுறுத்தினார். நல்லா கவனிச்சீங்களா, பிரதமர் மோடியும் லைட்டை மட்டும் தான் அணைக்கச் சொன்னார். மத்த மின் சாதனங்கள் எதையும் ஆஃப் பண்ணாதீங்கப்பா.\nTags: பிரதமர் மோடிலைட்டை அணைத்தல்விளக்கு ஏற்றுதல்\nகொரோனா பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் அறிவிக்கப்பட்டிருந்த ஊரடங்கில் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. கொரோனா பாதிப்பு பகுதிகள் மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. தொடர் ஊரடங்கு காரணமாக பள்ளி,...\nஆயுள் காப்பீட்டு கழகமான எல்.ஐ.சி.யில் பணியிடங்கள் நிரப்பப்படுவதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பணியிடத்திற்கான தலைமையிடம் டெல்லி. தகுதியும், திறமையும் உடைய விண்ணப்பதாரர்கள் நேரடி மற்றும் எழுத்துத் தேர்வின்...\nஇந்தியாவில் கொரோனா பரவலைத் தடுக்க பல்வேறு தடுப்பு முறைகளும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மத்திய, மாநில அரசுகளால் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வந்த போதிலும் பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள்...\nதிமுக வின் தலைவரும்,முன்னாள் முதல்வருமான கருணாநிதியின் 97வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. மெரினாவில் உள்ள கலைஞர் கருணாநிதி நினைவிடத்தில் தற்போதைய தலைவர் மு.க.ஸ்டாலின், துரைமுருகன், டி.ஆர்.பாலு,...\nகொரோனாவைக் கட்டுப்படுத்த அறிவிக்கப்பட்டிருந்த ஊரடங்கு முடிவடைந்த நிலையில் படிப்படியாக இந்தியா முழுவதும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. பாதிப்பு அதிகம் உள்ள மண்டலங்களில் மட்டும் மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில்...\nஇந்தியா கொரோனாவுடன் போராடிக் கொண்டிருக்கும் வேளையில் தற்போது அரபிக் கடலில் நிசர்கா புயல் உருவாகியுள்ளது. இந்தியாவிலேயே பெருமளவு கொரோனாத் தொற்று நோயாளிகளைக் கொண்டுள்ள மகாராஷ்டிரா மாநிலத்திற்கு ரெட்...\nதொலைத் தொடர்பு நிறுவனங்களில் மிகக் குறைந்த காலத்திலேயே அதிக வாடிக்கையாளர்களை பெற்றிருக்கும் நிறுவனங்களில் ரிலையன்ஸ் ஜியோ முதலிடத்தில் இருக்கிறது. வாடிக்கையாளர்களைத் தக்க வைக்க அவ்வப்போது அதிரடி திட்டங்களை...\nஉலகம் முழுவதும் உள்ள பல நாடுகளும் கொரோனாவுடன் போராடி வரும் அதே வேளையில் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி கண்டறியவும் தேவையான முயற்சிகளை செய்து வருகின்றன. இந்நிலையில் ரஷ்யா...\nதெற்கின் சூரியனுக்கு தாய்தந்தையர் வைத்த பெயர் தட்சிணாமூர்த்தி! பதினான்கே வயதில் அரசியல். அதன்பின், கடந்த எண்பது ஆண்டுகளாக கருணாநிதி என்ற அவரின் பெயரைச் சுற்றித்தான் தமிழக அரசியல்...\nஆங்கிலேய அரசு, அப்போதைய காலகட்டத்தில் அலுவல் நடைமுறைகளுக்காகவும், ஆளுகைவசதிக்காகவும், நிலப்பரப்புகளை மாகாணங்களாக உருவாக்கியது. மாகாண உருவாக்கங்களின் அடிப்படை இதுவேயன்றி பண்பாட்டு ஒற்றுமையோ, புவியியல் தொடர்போ அல்ல. அதுவே...
உங்களுக்கு ஏற்படும் ஞாபக மறதி அபாயத்தைக் குறைக்க உங்க உணவில் செய்ய வேண்டிய மாற்றங்கள் என்ன தெரியுமா? | Diet Tips to cut down the risk of dementia - Tamil BoldSky\nநீங்கள் சாப்பிடும் உணவு உங்கள் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை பாதிக்கிறது. உங்கள் கவலையைத் தளர்த்துவதிலிருந்து டிமென்ஷியா அபாயத்தைக் குறைப்பது வரை, நன்கு சீரான மற்றும் ஆரோக்கியமான உணவை உட்கொள்வது சிறந்த மன ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம். டிமென்ஷியா எனப்படும் ஞாபக மறதி நோய் இன்றைய நவீன காலத்தின் பொதுவான கவலையாக மாறியுள்ளது. உங்கள் ஆரோக்கியமான உணவு முறை மட்டும் பல்வேறு வகையான டிமென்ஷியா உருவாகும் அபாயத்தை சுமார் 53 சதவீதம் குறைத்து அறிவாற்றல் வீழ்ச்சியைக் குறைக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.\nபழங்கள், காய்கறிகள் மற்றும் முழு தானியங்கள் உட்பட அனைத்து வகையான இயற்கையின் விளைபொருட்களும் உங்கள் தட்டின் ஒரு பகுதியாகவும் ஆரோக்கியமற்றதாகவும் இருக்க வேண்டும். மேலும் குப்பை உணவு அதிலிருந்து வெளியேற வேண்டும். ஆனால் டிமென்ஷியாவின் போது, மன ஆரோக்கியத்துடன் இருக்க நீங்கள் பின்பற்ற வேண்டிய சில குறிப்பிட்ட உணவு விதிகள் உள்ளன. நீங்கள் கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் பற்றி இக்கட்டுரையில் காணலாம்.\nமுழு தானியங்கள் மற்றும் பீன்ஸ்\nகார்போஹைட்ரேட் சாப்பிடுவதால் உடல் எடை அதிகரிக்கும் என்று நினைத்து பெரும்பாலான மக்கள் பயப்படுகிறார்கள். ஆனால் கார்போஹைட்ரேட்டுகள் உங்கள் உடலுக்கு புரதம் மற்றும் பிற வைட்டமின்கள் போலவே அவசியம். நமது உணவில் கார்போஹைட்ரேட்டின் முக்கிய ஆதாரம் ஓட்ஸ், கோதுமை, பார்லி மற்றும் அரிசி போன்ற முழு தானியங்கள் ஆகும். இது நம் மூளையை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது. அவை வைட்டமின் பி நிறைந்தவை, இது மூளையில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்கவும் உங்கள் நினைவாற்றலைப் பாதுகாக்கவும் உதவும் ஊட்டச்சத்து ஆகும். முழு தானியங்களை ஒரு நாளைக்கு மூன்று பரிமாணங்கள் மற்றும் வாரத்திற்கு மூன்று முறைக்கு மேல் பீன்ஸ் சாப்பிடுங்கள்.\nஇலை கீரைகள் ஊட்டச்சத்துக்களின் சக்தி மையம். அவற்றில் வைட்டமின் கே, இரும்பு, வைட்டமின் சி மற்றும் பல ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன. அவை உங்கள் மூளையை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். ப்ரோக்கோலி, கீரை, முட்டைக்கோஸ் மற்றும் காலிஃபிளவர் போன்றவற்றைத் தேர்வு செய்ய நிறைய விருப்பங்கள் உள்ளன. ஆய்வின் படி, வாரத்திற்கு ஆறு முறை பச்சை இலை காய்கறிகளை எடுத்துக்கொள்வது டிமென்ஷியா அபாயத்தை குறைக்கும்.\nபழங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லது. ஆனால் மன ஆரோக்கியத்தில் பெர்ரி விதிவிலக்கானது. இந்தியாவில் பொதுவாகக் காணப்படும் ஸ்ட்ராபெர்ரி, காட்டு ப்ளூபெர்ரி அல்லது கேப் நெல்லிக்காய், ஃபிளாவனாய்டு ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன. வாரத்திற்கு இரண்டு முறை அவற்றை உட்கொள்வது வீக்கத்தைக் குறைத்து ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தைக் குறைக்கும். மூளை செல்களுக்கு இடையேயான தொடர்பை மேம்படுத்தவும் அவை உதவுகின்றன.\nமீன், கோழி மற்றும் முட்டை\nஅசைவ உணவுகள் என்று வரும்போது, மீன், கோழி மற்றும் முட்டைகள் உங்கள் வாராந்திர உணவு திட்டத்தின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும். மீன்களில் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் உள்ளன. அவை மூளை செல்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகின்றன. அதே நேரத்தில் கோழி இறைச்சியில் வைட்டமின் பி கள் உள்ளன. அவை மூளையில் வீக்கத்தைக் குறைக்கும். டிமென்ஷியா அபாயத்தைக் குறைக்க, வாரத்திற்கு ஒரு முறை மீன் மற்றும் குறைந்தது இரண்டு வாரங்களுக்கு கோழி இறைச்சியை சாப்பிடவும்.\nகடல் உணவைப் போலவே, நட்ஸ்களும் ஆரோக்கியமான ஒமேகா -3 கொழுப்பு அமிலங்களின் வளமான ஆதாரமாகும். பல்வேறு வகையான நட்ஸ்கள் மற்றும் விதைகளை வாரத்திற்கு ஐந்து முறை எடுத்துக்கொள்வது ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தைக் குறைக்கும். வயதான காலத்தில் மூளை ஆரோக்கியத்தை ஆதரிக்கும் வைட்டமின் ஈ அவற்றில் நிறைந்துள்ளது.\nசில உணவுகள் உங்கள் மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் அதே வேளையில், சில உணவுகள் உங்களை மனநலம் தொடர்பான பிரச்சினைகளுக்கு ஆளாக்கும். இந்த உணவுகளை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்வது உங்களை டிமென்ஷியா, மனநிலை மாற்றங்கள், மனச்சோர்வு மற்றும் கவலைக்கு ஆளாக்குகிறது. எனவே, ஆபத்தை குறைக்க இந்த உணவு பொருட்களை சாப்பிடுவதை குறைக்கவும்.\nசிவப்பு இறைச்சியை வாரத்திற்கு நான்கு முறைக்கு குறைவாக சாப்பிடுங்கள்\nவாரத்திற்கு ஒரு முறைக்கு குறைவாக வறுத்த அல்லது துரித உணவை உட்கொள்ளுங்கள்\nவாரத்திற்கு ஒருமுறை சீஸ் உணவை எடுத்துக்கொள்ளுங்கள்\nவாரத்திற்கு ஐந்து பேஸ்ட்ரிகள் அல்லது இனிப்புகள் குறைவாக உட்க்கொள்ளுங்கள்\nஒரு நாளைக்கு ஒரு முறை மட்டுமே மது அருந்துதல்\nRead more about: health wellness brain food nuts diet chicken beans egg ஆரோக்கியம் மூளை உணவு இறைச்சி பீன்ஸ் முட்டை\nDiet Tips to cut down the risk of dementia\nHere we are talking about the tweaks to make in your diet to cut down the risk of dementia.
Bust Size கொண்ட பயனர் அனுபவம் - மார்பகங்களின் விரிவாக்கம் சோதனையில் உண்மையிலேயே வெற்றிகரமாக உள்ளதா?\n10/10 0:19 Ilja Becker\nஒவ்வொரு முறையும் மார்பகங்களை பெரிதாக்கும்போது, Bust Size தவிர்க்க முடியாமல் இந்த தலைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது - அது ஏன்? வாடிக்கையாளர்களின் கருத்துக்களை நீங்கள் பார்த்தால், "ஏன்" மிகவும் நேரடியானது: Bust Size மிகவும் எளிமையானது மற்றும் நம்பகமானது. மார்பக வளர்ச்சியில் தீர்வு எந்த அளவிற்கு, எவ்வளவு நம்பகத்தன்மையுடன் செயல்படுகிறது, பின்வரும் கட்டுரையில் நாங்கள் உங்களுக்கு முன்வைக்கிறோம்.\nBust Size நீங்கள் என்ன Bust Size?\nதீர்வு ஒரு இயற்கை சூத்திரத்தை அடிப்படையாகக் கொண்டது. இது நன்கு அறியப்பட்ட விளைவுகளைப் பயன்படுத்துகிறது மற்றும் குறைந்த விரும்பத்தகாத பக்க விளைவுகளுடன் முடிந்தவரை செலவு குறைந்ததாக உருவாக்கப்பட்டுள்ளது.\nமேலும், தயாரிப்பாளர் மிகவும் நம்பகமானவர். வாங்குதல் ஒழுங்குமுறை இல்லாமல் உணரக்கூடியது மற்றும் பாதுகாப்பான இணைப்பு மூலம் நிறுவப்படலாம்.\nBust Size வாடிக்கையாளராக உங்களுக்கு பொருத்தமானதா?\nஎந்த நுகர்வோர் குழு Bust Size வாங்கக்கூடாது?\nBust Size அளவை எடுத்துக்கொள்வது எடை இழப்பில் ஒவ்வொரு இறுதி பயனரையும் ஒரு படி மேலே கொண்டு செல்வது உறுதி. டஜன் கணக்கான இறுதி பயனர்கள் அதை உறுதிப்படுத்துவார்கள்.\nஆனால் நீங்கள் ஒரு மாத்திரையை மட்டுமே எடுத்து உங்கள் விவகாரங்கள் அனைத்தையும் இப்போதே மாற்ற முடியும் என்று நீங்கள் நினைத்தால், உங்கள் அணுகுமுறையை நீங்கள் மறுபரிசீலனை செய்ய வேண்டும்.\nநீங்கள் பொறுமையாகவும் விடாமுயற்சியுடனும் இருக்க வேண்டும், ஏனென்றால் கார்பஸ் தொடர்பான மாற்றங்கள் சிக்கலானவை.\nBust Size இலக்குகளை அடைவதை துரிதப்படுத்துகிறது. ஆயினும்கூட, நீங்கள் உங்கள் வீட்டுப்பாடத்தை செய்ய வேண்டும். நீங்கள் ஒரு பெரிய Bust Size தேடுகிறீர்களானால், நீங்கள் Bust Size பெறுவது மட்டுமல்லாமல், Bust Size கொடுப்பதற்கு முன்பு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பெற வேண்டும். விரைவில் அடையக்கூடிய வெற்றிகள் உங்களுக்கு உந்துதலைக் கொடுக்க வேண்டும். இருப்பினும், நீங்கள் ஏற்கனவே சட்டப்பூர்வ வயதுடையவராக இருந்தால் மட்டுமே இதைச் செய்ய முடியும். இது அநேகமாக Testo Fuel விட அதிக அர்த்தத்தைத் தரும்.\nBust Size மிகவும் கவர்ந்திழுக்கும் பண்புகள்:\nBust Size ஒரு உன்னதமான மருந்து அல்ல, எனவே நன்கு பொறுத்துக்கொள்ளக்கூடியது மற்றும் தோற்றத்துடன் இருக்கும்\nஉங்கள் பிரச்சினையைப் பற்றி யாரும் கற்றுக்கொள்ளவில்லை & அதை ஒருவருக்கு விளக்கும் தடையை நீங்கள் எதிர்கொள்ளவில்லை\nஉங்களுக்கு மருத்துவரிடமிருந்து ஒரு மருந்து தேவையில்லை, ஏனென்றால் அதற்கான தீர்வை மருத்துவ அறிவுறுத்தல் இல்லாமல் வாங்கலாம் மற்றும் ஆன்லைனில் மலிவாகவும் வாங்கலாம்\nபேக்கேஜிங் மற்றும் முகவரி எளிமையானவை மற்றும் அர்த்தமற்றவை - அதற்கேற்ப ஆன்லைனில் ஆர்டர் செய்து, நீங்களே அங்கேயே பெறுவீர்கள்\nBust Size வாக்குறுதியளிக்கப்பட்ட விளைவு கீழே உள்ளது\nநிச்சயமாக, உற்பத்தியின் குறிப்பிட்ட எதிர்வினை தனிப்பட்ட பொருட்களின் குறிப்பிட்ட தொடர்பு மூலம் வருகிறது.\nஏற்கனவே இருக்கும் வழிமுறைகளைப் பயன்படுத்தி உங்கள் உடலின் மிகவும் சிக்கலான கட்டுமானத்தை இது பயன்படுத்திக் கொள்கிறது.\nமனித உடலில் மார்பகங்களை பெரிதாக்க சாமான்களில் எல்லாவற்றையும் கொண்டுள்ளது, மேலும் இந்த செயல்முறைகளைப் பெறுவது பற்றியது.\nதயாரிப்பாளரின் வணிக இணைய இருப்பின் படி, மேலும் விளைவுகள் முன்னிலைப்படுத்தப்படுகின்றன:\nதயாரிப்பு முதல் பார்வையில் இப்படித்தான் பார்க்க முடியும் - ஆனால் அதற்கு அது இல்லை. விளைவுகள் நீங்கள் அறிந்திருக்க வேண்டிய தனிப்பட்ட முறைகேடுகளுக்கு உட்பட்டவை, இதன் விளைவாக முடிவுகள் பலவீனமாகவோ அல்லது தீவிரமாகவோ இருக்கலாம்.\nBust Size பக்க விளைவுகள்\nதயாரிப்பாளர் மற்றும் மதிப்புரைகள் மற்றும் ஆன்லைன் போக்குவரத்தில் மதிப்புரைகள் இரண்டும் ஒப்புக்கொள்கின்றன: உற்பத்தியாளர், மதிப்புரைகள் மற்றும் நிகரத்தின் படி Bust Size எந்த மோசமான விளைவுகளையும் ஏற்படுத்தாது.\nஎல்லாவற்றையும் உள்ளடக்கிய உத்தரவாதம் மட்டுமே உள்ளது, தயாரிப்பு பயன்படுத்தும் போது பரிந்துரைக்கப்பட்ட பயன்பாட்டை நீங்கள் கண்டிப்பாக பின்பற்றுவதற்கு உட்பட்டது, ஏனெனில் தயாரிப்பு மிகவும் சக்தி வாய்ந்தது.\nகூடுதலாக, நம்பகமான சில்லறை விற்பனையாளர்களிடம் மட்டுமே Bust Size அளவை ஆர்டர் செய்வதை நீங்கள் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும் - எங்கள் வாடிக்கையாளர் சேவையைப் பின்பற்றுங்கள் - நகல்களை (போலிகளை) தடுக்க. ஒரு போலி தயாரிப்பு, ஒரு மலிவான விலை உங்களை கவர்ந்திழுக்கும் பட்சத்தில், துரதிர்ஷ்டவசமாக சிறிய விளைவைக் கொண்டிருக்கிறது மற்றும் தீவிர நிகழ்வுகளில் ஆபத்தானது.\nதனிப்பட்ட கூறுகளின் சுருக்கமான பார்வை இங்கே\nலேபிளின் ஒரு தீவிரமான பார்வை, உற்பத்தியின் பயன்படுத்தப்பட்ட கலவை பொருட்களைச் சுற்றி கட்டப்பட்டதாக தெரிவிக்கிறது.\nBust Size சோதனை ஓட்டத்திற்கு முன்னர் குறிப்பாக வாகனம் ஓட்டுவது என்பது தயாரிப்பாளர்2நன்கு அறியப்பட்ட செயலில் உள்ள பொருட்களை தொடக்க புள்ளியாகப் பயன்படுத்தும் சூழ்நிலையாகும்: இது தொடர்பாக.\nபொதுவாக, இது துரதிர்ஷ்டவசமாக டோஸின் அளவு காரணமாக இருக்கிறது, ஆனால் இந்த தயாரிப்புடன் அல்ல.\nஇனி காத்திருக்க வேண்டாம், Bust Size க்கான தற்போதைய சலுகையைத் தவறவிடாதீர்கள்.\nசில வாசகர்கள் நிச்சயமாக ஆச்சரியப்படுகிறார்கள், ஆனால் நீங்கள் தற்போதைய ஆய்வுகளுக்குச் சென்றால், இந்த பொருள் ஒரு பெரிய மார்பளவு அளவை அடைய உகந்ததாகத் தெரிகிறது.\nகருதப்படுகிறது, நன்கு சரிசெய்யப்பட்ட பொருள் செறிவு மற்றும் மார்பளவு அளவை திறம்பட விரிவாக்குவதற்கு அதே அர்த்தத்தில் பங்களிக்கும் பிற பொருட்களால் வழங்கப்படுகிறது.\nBust Size நேர்மறையான விளைவுகளைப் பற்றி மேலும் அறிய நீங்கள் செய்ய வேண்டிய மிக முக்கியமான விஷயம், உற்பத்தியாளரின் வழிமுறைகளைப் பார்ப்பது.\nஇந்த கட்டத்தில் பயன்பாட்டைப் பற்றி கவலைப்படுவது வெறுமனே தவறான முடிவுகளுக்கு வழிவகுக்கிறது. நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், உங்கள் பாரம்பரிய வாழ்க்கையில் தயாரிப்புகளை ஒருங்கிணைப்பது மிகவும் எளிதானது.\nBust Size பயன்படுத்துவதன் மூலம் மார்பகங்களின் குறிப்பிடத்தக்க விரிவாக்கத்தை அனுபவித்த பலரால் இது வெளிப்படையாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.\nபயன்பாடு, அளவு மற்றும் ஆற்றல் தொடர்பான எந்தவொரு தகவலும் கட்டுரையின் மேலதிக தகவல்களும் பேக்கேஜிங்கில் சேர்க்கப்பட்டுள்ளன, மேலும் அவை வலையிலும் தெரியும். TestRX முயற்சிக்க TestRX.\nமுதல் முன்னேற்றம் எப்போது எதிர்பார்க்கப்படும்?\nமுதல் பயன்பாட்டில் நிவாரணம் இருப்பதை நீங்கள் கவனித்ததாக நூற்றுக்கணக்கான நுகர்வோர் தெரிவிக்கின்றனர். மேலும், ஒப்பீட்டளவில் குறுகிய காலத்திற்குப் பிறகு ஏற்கனவே முன்னேற்றம் அடைவது வழக்கமல்ல.\nBust Size நீண்ட நேரம் நுகரப்படும், முடிவுகள் அதிகமாக வெளிப்படும்.\nபயனர்கள் தயாரிப்பைப் பற்றி மிகவும் உறுதியாக நம்புகிறார்கள், சிறிது நேரத்திற்குப் பிறகும் அதை இரண்டு வாரங்களுக்கு எடுத்துக்கொள்கிறார்கள்.\nஎனவே சான்றுகளை மிகப் பெரிய இறுதி முடிவுகளைப் பாராட்டும் மிக முக்கியமான மதிப்பைக் கொடுப்பது நல்ல யோசனையல்ல. பயனரைப் பொறுத்து, உண்மையில் தெளிவான முடிவுகளைப் பெற சிறிது நேரம் ஆகலாம்.\nBust Size போன்ற ஒரு தீர்வு செயல்படுகிறது என்பதில் சந்தேகமில்லை, மற்றவர்களிடமிருந்து மன்றங்கள் மற்றும் சான்றுகளின் பங்களிப்புகளைக் கவனிப்பது நல்லது. துரதிர்ஷ்டவசமாக, அவற்றைப் பற்றி மிகக் குறைவான விஞ்ஞான அறிக்கைகள் உள்ளன, ஏனெனில் அவை மிகவும் விலை உயர்ந்தவை மற்றும் பெரும்பாலும் மருந்துகள் மட்டுமே.\nமருத்துவ ஆய்வுகள், மதிப்பீடுகள் மற்றும் தனிப்பட்ட விளைவுகளை ஆராய்ச்சி செய்வதன் மூலம், Bust Size உண்மையில் எவ்வளவு நன்மை பயக்கும் என்பதை நான் நிவர்த்தி செய்ய முடிந்தது:\nBust Size நன்றி\nBust Size மூலம் செய்யப்பட்ட அனுபவங்கள் பொதுவாக திருப்திகரமாக இருக்கும். காப்ஸ்யூல்கள், களிம்புகள் மற்றும் பல வைத்தியம் போன்ற வடிவங்களில் நீண்ட காலமாக இத்தகைய தயாரிப்புகளின் தற்போதைய சந்தையை நாங்கள் கட்டுப்படுத்தி வருகிறோம், ஏற்கனவே ஏராளமான அறிவைப் பெற்றுள்ளோம், மேலும் நம்மீது முயற்சித்தோம். இருப்பினும், Bust Size சோதனைகள் அரிதானவை என திட்டவட்டமாக உறுதிப்படுத்துகிறது.\nதேவையான முன்னேற்றம் தீர்வுக்கு முயற்சித்த அனைவராலும் கையொப்பமிடப்பட்டுள்ளது என்பது உண்மைதான்:\nஎங்கள் முடிவு: தயாரிப்பை உடனடியாக சோதிக்கவும்.\nஒரு தயாரிப்பு அதே போல் Bust Size, அது பெரும்பாலும் விரைவில் கிடைக்காது, ஏனெனில் இயற்கையாகவே பயனுள்ள தயாரிப்புகள் சில வட்டங்களில் காண தயங்குகின்றன. எனவே வாய்ப்பை இழக்காதபடி, விரைவில் ஒரு ஆர்டரை வைக்க வேண்டும்.\nஎனது முடிவு: பரிகாரத்தை ஆர்டர் செய்ய எங்களால் பரிந்துரைக்கப்பட்ட விற்பனையாளரைப் பாருங்கள், இதன்மூலம் உங்களுக்கு அதிக வாய்ப்புகள் இல்லை, போதுமான விற்பனையின் வழிமுறைகள் மற்றும் கடைசியாக ஆனால் குறைந்தபட்சம் ஒரு மரியாதைக்குரிய சப்ளையர் வாங்க.\nசெயல்முறை முழுவதுமாகச் செல்வதற்கான உங்கள் திறனை நீங்கள் சந்தேகித்தால், நீங்கள் அதை விட்டுவிடலாம். எல்லாவற்றிற்கும் மேலாக, தீர்மானிக்கும் காரணி என்னவென்றால், நீங்கள் பெரிய படைப்புகளை வலிமையுடன் செய்யவில்லை, ஆனால் விடாமுயற்சியுடன். ஆனால் உங்கள் கோரிக்கைக்கு போதுமான ஊக்கத்தொகையை நீங்கள் கண்டுபிடிப்பதற்கான வாய்ப்புகள் நல்லது, இதன் மூலம் நீங்கள் தயாரிப்பின் மூலம் உங்கள் இலக்கை அடைய முடியும்.\nதயாரிப்பு வாங்குவது பற்றி மேலும் அறிக\nமேலே குறிப்பிட்டுள்ளபடி, தீர்வு வாங்கும்போது நீங்கள் எப்போதும் கவனமாக இருக்க வேண்டும், ஏனெனில் இதுபோன்ற வெற்றிகரமான தயாரிப்புகளில் சாயல்கள் திடீரென்று தோன்றும்.\nநாங்கள் அடையாளம் கண்ட வலைத்தளத்திலிருந்து வாங்க முடிவு செய்தால், பயனற்ற கலவைகள், பாதுகாப்பற்ற பொருட்கள் அல்லது விலையுயர்ந்த விலைகள் போன்ற சிக்கல்களைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை என்று நாங்கள் உத்தரவாதம் அளிக்கிறோம். இந்த நோக்கத்திற்காக, உங்களுக்காக தற்போதைய மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட உருப்படிகளை மட்டுமே நாங்கள் எப்போதும் பட்டியலிட்டுள்ளோம். Trenbolone ஒப்பிடுகையில் இது மிகவும் போதுமானது.\nநம்பகத்தன்மை மற்றும் உங்கள் விருப்பப்படி வழக்கமாக இந்த விஷயத்தில் உத்தரவாதம் அளிக்க முடியாது என்பதால், ஈபே அல்லது அமேசான் போன்ற ஆன்லைன் சில்லறை விற்பனையாளர்களிடமிருந்து இதுபோன்ற பொருட்களை வாங்க வேண்டாம் என்பது எங்கள் பரிந்துரை. நீங்கள் ஒரு மருந்தகத்தில் கட்டுரைகளை வாங்க விரும்பினால், நீங்கள் அதிகமாக எதிர்பார்க்க முடியாது.\nஉண்மையான மூலத்திலிருந்து மட்டுமே Bust Size வாங்கவும் - வேறு எங்கும் நீங்கள் குறைந்த விற்பனை விலை, அதே நம்பகத்தன்மை மற்றும் பெயர் தெரியாததை வழங்க முடியாது, அல்லது அது உண்மையில் தயாரிப்பு என்று உத்தரவாதம் அளிக்க முடியாது.\nநாங்கள் வழங்கிய இணைப்புகள் மூலம், எதுவும் கையை விட்டு வெளியேற முடியாது.\nசேமிப்பு இவ்வளவு பெரியது மற்றும் எல்லோரும் புத்திசாலித்தனமான பின்தொடர்தல் ஆர்டர்களைச் சேமிப்பதால், முடிந்தவரை பெரிய அளவைப் பெறுவதற்கு இது பணம் செலுத்துகிறது. இந்த அணுகுமுறை இந்த வகையின் அனைத்து தீர்வுகளிலும் நிரூபிக்கப்பட்டுள்ளது, ஏனெனில் நீண்டகால உட்கொள்ளல் மிக உயர்ந்த வெற்றியை அளிக்கிறது.\nநீங்கள் Bust Size -ஐ வாங்க விரும்புகிறீர்களா? பின்னர் அதை அதிகாரப்பூர்வ கடையிலிருந்து வாங்கி போலியைத் தவிர்க்கவும்.
அமெரிக்காவில் ஜீனோபோபியா | Makkal Osai - மக்கள் ஓசை\nHome சிறப்புக் கட்டுரை அமெரிக்காவில் ஜீனோபோபியா\nபெஞ்சமின் பெரியசாமி அலசுகிறார்\n-அதிபர் ஜோ பைடன் வன்மையாகக் கண்டிப்பு\nஇன்றைய உலகின் மிக மோசமான செயலாகக் கருதப்படுவது ஒன்றிருக்கிறது. அதுதான் இனவெறி. ஜீனோபோபியா என்று இதனைக் குறிப்பிடுகின்றனர்\nஇவ்வாண்டு ஜனவரி மாதத்தில் ஒரு நல்ல செய்தியை அமெரிக்கா முன் வைத்தது. அதாவது இந்திய வம்சாவளிகளுக்கு கூடுதல் பதவிகள் என்றும், அரசு தலைமைப் பீடங்களில் முக்கிய இடங்களும் வழங்கப்படும் என்பதுதான் அது. அதுபோலவே அதிபர் ஜோ பைடன் வென்றதும் வார்த்தையைக் காப்பாற்றி பதவிகளும் வழங்கினார்.\nஅமெரிக்க துணை அதிபர் கமாலா ஹாரிஸ் இதற்கு பிள்ளையார் சுளி போட்டவர் என்றும் கூறலாம். இவர் இந்தியாவை பூர்வீகமாகக் கொண்டவர் என்பதும் காரணம் என்பதைவிட, ஜோ பைடனின் வெற்றிக்கு இவர் தீவிரமாக பணியாற்ரியிருக்கிறார் எனபதும் ஒரு காரணம்.\nஇந்திய வம்சாவளி என்றால் ஆசியாவைச் சேர்ந்தவர்கள் என்பது தெளிவாகப்புரிந்துவிடும். அதே போலத்தான் கீழை நாட்டவர்களும். இதில் சீன நாட்டவர்கள் விதிவிலக்கல்ல. சீனா மீது அமெரிக்காவுக்கு இருக்கும் கோபம் இன்னும் வற்றிய பாடில்லை.\nஅமெரிக்க அதிபர் தேர்தலுக்குப்பின் என்பதைவிட தேர்தலுக்கு முன்னும் ஒரு பிரச்சினை பூதாகரமாக, பனி போர்த்திக்கொண்டிருந்தது. அமெரிக்கர்களின் கவனமெல்லாம் கோவிட்-19 மீதே இருந்ததால் அதுபற்றியே அங்கு அதிகமாகப் பேசப்பட்டது.\nஇனப்பிரச்சினை அவ்வப்போது எழுந்து அடங்கிப்போனது அல்லது அடக்கப்பட்டது என்றும் சொல்லலாம். இந்த இனப்பிரச்சினையில் அமெரிக்க கருப்பினத்தவர்களே சம்பந்த்தப்பட்டிருந்ததால் ஆசிய மக்கள் மீதான பார்வை ஆழமாக இல்லை.\nஆனால், கோவிட் 19 தொற்று அமெரிக்காவை ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கும் வேளையில் உயிரழப்புகளிலும் அமெரிக்கா முன்னிலை வகித்தது. இது இன்னும் அதிகமாகிக்கொண்டிருக்கிறது. இதற்குக் காரணம் ஆசிய நாடுகளிலிருந்து வருகின்றவர்கள் தாம் என்ற ஆழமான எண்ணம் அமெரிக்க மனங்களில் வேரூன்றி விட்டது.\nஅமெரிக்க கறுப்பர்கள் மீது விழுந்துள்ள அதே இனவெறி ஆசிய மக்கள் மீதும் திரும்பியிருக்கிறது என்று அதிபர் ஜோ பைடனும் ஒப்புக்கொள்கிறார். இதை வன்மையாகவும் அவர் கண்டித்திருக்கிறார்.\nஇந்த எண்ணம் இன்னும் வேரூன்றி மோசமாகிவிடக்கூடாது என்பதில் ஜோ பபைடன் மிகத்தெளிவாகவே காய் நகர்த்துகிறார் என்பதைச் சொல்லாமல் இருக்க முடியாது.\nஅமெரிக்காவுக்குப் போய்வருகின்ற ஆசிரியர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்றும் இன வாதத்திற்கு இடம்கொடுத்துவிடவேண்டாம் என்றும் பெஞ்ச் பெரிய சாமி (பெஞ்சமின் பெரியசாமி)\nஅமெரிக்கர்களின் கோபம் கொரோனா மீது என்றாலும் அதைக்கொண்டு வருகின்றவர்கள் ஆசிரியர்களாகத்தானிருக்கும் என்று நம்புவதால் இனப்பிரச்சினை பெரிதாகலாம்.\nஇதற்கெல்லாம் அதிபர் ஜோ பைடன். துணை அதிபர் கமலா ஹாரிஸ் தக்க நடவடிக்கை எடுப்பார்கள் என்று நிச்சயம் நம்பலாம்.\nPrevious articleநேரு உள் விளையாட்டரங்கில் முகாம்\nNext articleதமிழ்ப்பள்ளி ஆசிரியை கோமதிக்கு அனைத்துலக சாதனைப் பெண் விருது\nசட்டம் யாருக்கும் வளைந்து கொடுக்காது!\nநெல்லையில் இறந்த பறவைகளின் மாதிரி எடுத்து பரிசோதனை-கால்நடை துறை அதிகாரிகள் ஆய்வு\nபுதுடில்லியில் சிஏஏ போராட்டம்\nFebruary 26, 2020 6:10 am\nடிரம்பின் பேஸ்புக் (முகநூல்) கணக்கு2வருடத்திற்கு முடக்கம்?\nடெல்லியை பிற மாநிலங்கள் பின்பற்ற வேண்டும் – பிரதமர் மோடி\nApril 20, 2021 10:40 am\nசித்திரம் தீட்ட சுவர் வேண்டும்\nMay 26, 2021 9:10 am
எதனோடு எதை சேர்த்து சாப்பிடக் கூடாது? | What to eat with something - Dinakaran\nஉணவு உண்ணும் நேரம் உழைப்பாளிகளும் உடல் திடகாத்திர சரீரமுள்ளவர்களுக்குமான3வேளை உணவை...\nஒரு சில உணவுகளோடு ஒருசிலவற்றைச் சேர்த்து சாப்பிட்டால் ஒவ்வாமை மற்றும் விஷத்தன்மையை ஏற்படுத்தும். அவற்றிற்கு சில உதாரணங்கள்... இவற்றை சேர்த்து உண்டால் விஷமாக மாற அதிக வாய்ப்புள்ளது. எனவே, நீக்கிக் கொள்ளு தல் நன்மையை தரும். அனைத்துப் பொருட்களிலும் சிறிதளவு நஞ்சும் உண்டு. அதனை நீக்குவதன் பொருட்டு அதனுடைய எதிர் பொருட்களால் நஞ்சினை நீக்கி நற்குணமுள்ள பொருட்களோடு உண்ண வேண்டும்.\nஉதாரணமாக... குறிப்பிட்ட சில உணவு பொருட்களை உண்ணும்போதுமயக்கம், வயிற்றுவலி, ஒவ்வாமை போன்ற குறிகுணங்கள் ஏற்படலாம். இதனை தவிர்க்க அதன் எதிர் பொருட்களை அறிந்து சேர்த்து சாப்பிட வேண்டும். நிலக்கடலையை வெல்லம் (கருப்பட்டி) சேர்த்து சாப்பிட வேண்டும். அதுபோல பலாப்பழத்தை தேன் அல்லது நெய்யுடனும், கரும்புச் சாறை சிறிதளவு மிளகாய்ச் சாறுடன் அருந்த வேண்டும்.\n* ஏலம் - இனிப்பு வகைகளுக்கும் சேர்க்கலாம்.\n* மஞ்சள் - இனிப்பு தவிர மற்ற அனைத்துப் பொருட்களிலும் பொடித்து சேர்க்கலாம்.\n* சீரகம் - முக்கனிகளாலும் பிறவற்றாலும் ஏற்படும் மந்தம் நீக்கும்.\n* பெருங்காயம் - பருப்பு வகைகளின் குற்றங்களை நீக்கப் பயன்படுத்தப்படும்.\n* சுக்கு - எருமைத் தயிர், கிழங்கு வகைகள் இவற்றின் குற்றங்களை நீக்கப் பயன்படுத்தப்படும்.\n* வெந்தயம் - கார்ப்பு சுவையுள்ள வைகளின் குற்றங்களை நீக்கும்.\n* பூண்டு - கிழங்கு, பருப்பு வகைகளின் குற்றங்களை நீக்கப் பயன்படுத்தப்படும். (உபயோகப்படுத்தும் முன் தோலையும் முளையையும் நீக்க வேண்டும்.)\n* மிளகு - எல்லாப் பொருட் களின் தீங்குகளை நீக்கக் கூடியது.\neat with something
Gaja Cyclone Death: Cyclone Gaja: உயிரிழந்தோரின் எண்ணிக்கை 46 ஆக உயர்வு! - gaja cyclone death rate increased | Samayam Tamil\ngaja cyclone death rate increased\nCyclone Gaja: உயிரிழந்தோரின் எண்ணிக்கை 46 ஆக உயர்வு!\nSamayam Tamil | Updated: 17 Nov 2018, 03:37:00 PM\nதமிழகத்தில் கஜா புயலின் பாதிப்புக்கு இதுவரை 46 பேர் உயிரிழந்துள்ளனர்.\n#CycloneGaja கஜா புயலின் பாதிப்புக்கு இதுவரை 35 பேர் உயிரிழப்பு!\nதமிழகத்தில் கோரத்தாண்டவமாடிய கஜா புயலின் பாதிப்புக்கு இதுவரை 46 பேர் உயிரிழந்துள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.\nவங்கக்கடலில் உருவான கஜா புயல் நேற்று அதிகாலை நாகப்பட்டினத்துக்கும் வேதாரண்யத்துக்கும் இடையே தீவிரப் புயலாகக் கரையைக் கடந்தது. புயல் கரையைக் கடக்கும்போது மணிக்கு 100 முதல் 110 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசியது. இதனால் கடலூர், நாகப்பட்டினம், ராமநாதபுரம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கடும் சேதம் ஏற்பட்டுள்ளது.\nபுயலால் பாதிக்கப்பட்ட ஏழு மாவட்டங்களில் 29,500 மின் கம்பங்கள், 102 துணை மின் நிலையங்கள், 495 மின் கடத்திகள், 205 மின் மாற்றிகள், 500 கி.மீ. மின் வழித்தடங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.\nஇதனிடையே கஜா புயலின் பாதிப்புக்கு தமிழகம் முழுவதும், 26 ஆண்கள், 17 பெண்கள்,3குழந்தைகள் உட்பட 46 பேர் உயிரிழந்துள்ளதாக பேரிடர் கட்டுப்பாட்டு மையம் அறிவித்துள்ளது. மேலும் புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மரங்கள் சாய்ந்துள்ளதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.\nதற்போது புயல்-மழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் சீரமைப்பு பணிகள் முழுவீச்சில் முடுக்கி விடப்பட்டுள்ளன. சாய்ந்து கிடந்த மரங்கள், மின்கம்பங்களை அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு உள்ளனர். அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நேரில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.\n‘நெல்’ ஜெயராமன் முழுமையான நலம்பெற வேண்டும்- வைகோ அறிக்கை அடுத்த செய்தி\nகஜா புயல் Tamilnadu Gaja Cyclone Death gaja cyclone cyclone gaja\nWeb Title : gaja cyclone death rate increased
Exodus 1 in Tamil - Tamil Christian Songs .IN\nExodus 1 in Tamil\n1 எகிப்துக்குப் போன இஸ்ரவேலுடைய குமாரரின் நாமங்களாவன: ரூபன், சிமியோன், லேவி, யூதா,\n2 இசக்கார், செபுலோன், பென்யமீன்,\n3 தாண், நப்தலி, காத், ஆசேர் என்பவைகளே.\n4 இவர்கள் யாக்கோபுடனே தங்கள் தங்கள் குடும்பத்தோடுங் கூடப்போனார்கள்.\n5 யோசேப்போ அதற்கு முன்னமே எகிப்தில் போயிருந்தான். யாக்கோபின் கர்ப்பப் பிறப்பாகிய யாவரும் எழுபது பேர்.\n6 யோசேப்பும் அவனுடைய சகோதரர் யாவரும், அந்தத் தலைமுறையார் எல்லாரும் மரணமடைந்தார்கள்.\n7 இஸ்ரவேல் புத்திரர் மிகுதியும் பலுகி, ஏராளமாய்ப் பெருகிப் பலத்திருந்தார்கள்; தேசம் அவர்களால் நிறைந்தது.\n8 யோசேப்பை அறியாத புதிய ராஜன் ஒருவன் எகிப்தில் தோன்றினான்.\n9 அவன் தன் ஜனங்களை நோக்கி: இதோ, இஸ்ரவேல் புத்திரராகிய ஜனங்கள் நம்மிலும் ஏராளமானவர்களும், பலத்தவர்களுமாய் இருக்கிறார்கள்.\n10 அவர்கள் பெருகாதபடிக்கும், ஒரு யுத்தம் உண்டானால், அவர்களும் நம்முடைய பகைஞரோடே கூடி, நமக்கு விரோதமாக யுத்தம்பண்ணி, தேசத்தைவிட்டுப் புறப்பட்டுப் போகாதபடிக்கும், நாம் அவர்களைக் குறித்து ஒரு உபாயம் பண்ணவேண்டும் என்றான்.\n11 அப்படியே அவர்களைச் சுமைசுமக்கிற வேலையினால் ஒடுக்கும்படிக்கு, அவர்கள்மேல் விசாரணைக்காரரை வைத்தார்கள்; அப்பொழுது அவர்கள் பார்வோனுக்காகப் பித்தோம், ராமசேஸ் என்னும் பண்டசாலைப் பட்டணங்களைக் கட்டினார்கள்.\n12 ஆனாலும் அவர்களை எவ்வளவு ஒடுக்கினார்களோ அவ்வளவாய் அவர்கள் பலுகிப் பெருகினார்கள். ஆகையால் அவர்கள் இஸ்ரவேல் புத்திரரைக்குறித்து எரிச்சல் அடைந்தார்கள்.\n13 எகிப்தியர் இஸ்ரவேல் புத்திரரைக் கொடுமையாய் வேலை வாங்கினார்கள்.\n14 சாந்தும் செங்கலுமாகிய இவைகளைச் செய்யும் வேலையினாலும், வயலில் செய்யும் சகலவித வேலையினாலும், அவர்களுக்கு அவர்கள் ஜீவனையும் கசப்பாக்கினார்கள்; அவர்களைக்கொண்டு செய்வித்த மற்ற எல்லா வேலைகளிலும், அவர்களைக் கொடுமையாய் நடத்தினார்கள்.\n15 அதுவுமன்றி, எகிப்தின் ராஜா, சிப்பிராள் பூவாள் என்னும் பேருடைய எபிரெய மருத்துவச்சிகளோடே பேசி:\n16 நீங்கள் எபிரெய ஸ்திரீகளுக்கு மருத்துவம் செய்யும்போது, அவர்கள் மணையின்மேல் உட்கார்ந்திருக்கையில், பார்த்து, ஆண்பிள்ளையானால் கொன்று போடுங்கள், பெண்பிள்ளையானால் உயிரோடிருக்கட்டும் என்றான்.\n17 மருத்துவச்சிகளோ, தேவனுக்குப் பயந்ததினால், எகிப்தின் ராஜா தங்களுக்கு இட்ட கட்டளைப்படி செய்யாமல், ஆண்பிள்ளைகளையும் உயிரோடே காப்பாற்றினார்கள்.\n18 அதினால் எகிப்தின் ராஜா மருத்துவச்சிகளை அழைப்பித்து: நீங்கள் ஆண்பிள்ளைகளை உயிரோடே காப்பாற்றுகிற காரியம் என்ன என்று கேட்டான்.\n19 அதற்கு மருத்துவச்சிகள் பார்வோனை நோக்கி: எபிரெய ஸ்திரீகள் எகிப்திய ஸ்திரீகளைப்போல் அல்ல, அவர்கள் நல்ல பலமுள்ளவர்கள்; மருத்துவச்சி அவர்களிடத்துக்குப் போகுமுன்னமே அவர்கள் பிரசவித்தாகும் என்றார்கள்.\n20 இதினிமித்தம் தேவன் மருத்துவச்சிகளுக்கு நன்மை செய்தார். ஜனங்கள் பெருகி மிகுதியும் பலத்துப் போனார்கள்.\n21 மருத்துவச்சிகள் தேவனுக்குப் பயந்ததினால், அவர்களுடைய குடும்பங்கள் தழைக்கும்படி செய்தார்.\n22 அப்பொழுது பார்வோன், பிறக்கும் ஆண்பிள்ளைகளையெல்லாம் நதியிலே போட்டுவிடவும், பெண்பிள்ளைகளையெல்லாம் உயிரோடே வைக்கவும் தன் ஜனங்கள் எல்லோருக்கும் கட்டளையிட்டான்.\nHome » Tamil Bible » Exodus » Exodus 1
கூகுளின் புதிய செயலி Triangle: இனிமேல் டேட்டாக்களை மிச்சப்படுத்தலாம்! - Kathiravan.com\nPosted by: Mithushan in தொழிநுட்பச் செய்திகள் July 6, 2017 9:21 am\t0\nஸ்மார்ட்போன்களின் டேட்டாக்கள் தேவையில்லாமல் விரயமாவதை தடுக்க கூகுள் புதிய ஆப் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.\nதற்போது பிலிப்பைன்ஸில் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, இதன் பெயர் Triangle.\nஉங்களுக்கே தெரியாமல் பின்புலத்தில் இயங்கி கொண்டிருக்கும் ஒருசில டேட்டாக்களை கட் செய்து, உங்களுடைய டேட்டாவை மிச்சப்படுத்தும்.\nஎந்த ஆப் அதிக டேட்டாவை எடுத்துக் கொள்கிறது, எது குறைவாக எடுத்துக் கொள்கிறது என்பதையும் தெரியப்படுத்தும்.\nமேலும் பயன்படுத்திய டேட்டாவின் அளவு, மீதமுள்ள டேட்டாக்களையும் தெரிந்து கொள்ளலாம், விரைவில் அனைத்து நாடுகளுக்கும் அறிமுகம் செய்யப்படவுள்ளது\nPrevious: குழந்தை எப்படி வேண்டும்? பெற்றோரே டிசைன் செய்து கொள்ளலாம்\nNext: மாதவிலக்கு உதிரப்போக்கின் நிறம்: உணர்த்துவது என்ன?
07.08.2019 ராசி பலன் – Kiru Tamil News : kirutamilnews.com\n07.08.2019 ராசி பலன்\nமீனம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் செலவுகளைக் குறைக்க முடியாமல் திணறுவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்கள் யாரும் தன்னைப் புரிந்துக் கொள்ளவில்லை என ஆதங்கப்படுவீர்கள். அவசரப்பட்டு அடுத்தவர்களை விமர்சிக்க வேண்டாம். நயமாகப் பேசுபவர்களை நம்பாதீர்கள். வியாபாரத்தில் ஒப்பந்தங்கள் தள்ளிப் போகும். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் அளவாக பழகுங்கள்
வீடியோகான் 1GB ரேம் மொபைல்கள் கிடைக்கும் 2021 ஆம் ஆண்டின் - Gizbot Tamil\nவீடியோகான் 1GB ரேம் மொபைல்கள்\nஇந்தியாவில் கிடைக்கும் போன்களின் முழு பட்டியல் இதோ. 14-ம் தேதி, ஏப்ரல்-மாதம்-2021 வரையிலான சுமார்2புதுப்பிக்கப்பட்ட பட்டியல் இங்கே உள்ளது. உங்களின் ஸ்டைலிற்கு ஏற்ப பட்ஜெட் விலையில் கிடைக்கும் உங்கள் தேவையைப் பூர்த்தி செய்யும் மொபைல்களை கண்டறிய கிஸ்போட் உதவுகிறது. முக்கிய விவரக்குறிப்புகள், தனித்துவமான சிறப்பம்சங்கள் மற்றும் படங்கள் அனைத்தையும் பார்த்து. இந்த பிரிவின் கீழ் ரூ.2,999 விலையில் விடியோகான் ஸ்டார்r 100 விற்பனை செய்யப்படுகிறது அதேபோல் அதிகப்படியான விலையின் கீழ் விடியோகான் Graphite2 V45GD போன் 4,290 விற்பனை செய்யப்படுகிறது. விடியோகான் ஸ்டார்r 100, விடியோகான் Graphite2 V45GD மற்றும் ஆகியவை சமீபத்திய மொபைல்கள் ஆகும். மேலும் இந்தியாவில் அறிமுகமாகும் வீடியோகான் 1GB ரேம் மொபைல்கள் உடனுக்குடன் இந்த தளத்தில் நீங்கள் காண முடியும்.\n1GB - 2GB x videocon x Launched x\nவிவோ 1GB ரேம் மொபைல்கள்
தமிழ் பேசினால் தப்பா? சீறும் சினேகா சினேகா கொஞ்ச நாட்களாக படு கோபமாக இருக்கிறார். யார் மீது தெரியுமா? தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், நடிகர்கள் மீதுதான். சினேகாவின்கோபத்தில் ரொம்பவே நியாயம் இருப்பது போலவும் தெரிகிறது. குடும்பப் பாங்கான ரோல்களிலேயே நடித்து வந்தவர் சினேகா. அவரது அம்சமான முகமும், அட்டகாசமான புன்னகையும், அவருக்கு அதுபோன்றரோல்களையே வாரிக் கொடுத்தன. ஆனாலும் என்ன புரயோஜனம்? அதிக அளவில் படங்கள் வந்து குவியவில்லை.நல்லாத்தானே நடிக்கிறோம், அப்படியும் வாய்ப்பு ஏன் சரியாக இல்லை என்று சினேகா ஒரு நாள் உட்கார்ந்து பார்த்தபோது, ரகஸ்யா, கிரண், வண்டார்குழலி ஸ்மிதா என ஏகப்பட்ட குத்தாட்ட நாயகிகள் அவரது மனக் கண் முன்பு வந்து போனார்கள்.இதுதான் காரணமா என்ற தெளிவுக்கு வந்த சினேகாவும், கிளாமர் களத்தில் குதித்தார். லேசு பாசாக அவர் கவர்ச்சி காட்டத் தொடங்கவே ரசிகர்கள்அதிருப்தி அடைந்தனர். நீங்க போய் இப்படியெல்லாம் நடிக்கலாமா என்று செல்லமாக அவர்கள் கோபிக்கவே, குழப்பமாகிப் போனார் சினேகா.ஆனாலும் இப்போது தெளிவாகி விட்டார். நடித்தால், டீசன்ட்டாக நடிப்பது என்ற முடிவுக்கு அவர் வந்துள்ளார். இதனால் வருகிற ரோல்களை எல்லாம்ஏற்காமல், தனக்குப் பெயர் வாங்கிக் கொடுக்கும்படியான, நல்லதனமான கேரக்டர்களை மட்டுமே பார்த்து பார்த்துச் செய்கிறார்.இப்போது சினேகா வசம் இரண்டு படங்கள் உள்ளன. புதுப்பேட்டையில் விலைமாது கேரக்டரிலும், ஏபிசிடியில் விதவை ரோலிலும் கலக்கிவருகிறாராம். குறிப்பாக புதுப்பேட்டை பட கேரக்டர் அவருக்கு விருதையே வாங்கிக் கொடுக்கலாமாம்.ஒரு வழியாக மனக் குழப்பம் நீங்கி படு உற்சாகமாக நடித்து வரும் சினேகாவிடம், கவர்ச்சிப் போட்டியை எப்படித் தாக்குப் பிடிக்கிறீங்க என்றுகேட்டதுதான் தாமதம், பொறிந்து தள்ளி விட்டார் இந்த புன்னகை இளவரசி.ஏங்க, தமிழ்ப் பொண்ணா பொறந்தது தப்பா? இல்லை தமிழில் பேசினாலே தப்பா? ஏன் தான் நம்ம ஊர் சினிமாக்காரங்க கவர்ச்சியின் பின்னால் இப்படிஅலையறாங்களோ தெரியவில்லை. அதிலும் தமிழ் பேசும் நடிகை என்ற ஒரே காரணத்திற்காகவே என்னை ரொம்பவே கடுப்படிக்கிறாங்க.என்னைப் பத்தி எத்தனையோ வதந்திகள். இவற்றை பரப்புவது சில நடிகர்களும், தயாரிப்பாளர்களும்தான். என்னோட கால்ஷீட் கிடைக்காத, என்கிட்டே எதிர்பார்த்தது கிடைக்காத காரணத்தால் இவற்றை பரப்பி விட்டுட்டாங்க.ஒரு நடிகருடன் (ஸ்ரீகாந்த்) காதல், விரும்புகிறேன் பட இயக்குநருடன் மோதல், துபாயில் எனக்கு கல்யாணமாகி விட்டது, நடிகர் ஷாம் எனது உதடுகளைகடித்து விட்டார் என ஏகப்பட்ட வதந்திகள். எல்லாமே பொய் என்பதை சொல்லி விளக்க வேண்டிய அவசியம் இல்லை என்று நினைத்துத்தான் இவைஎவற்றுக்குமே பதில் சொல்லவில்லை.கடந்த வாரம் கூட வடபழனியில் ஒரு நட்சத்திர ஹோட்டலில் நானும், ஒரு நிறுவன அதிபரும் ரகசியமாக சந்தித்து இரவு விருந்து சாப்பிட்டதாக செய்திகள்வந்தன. இது மாதிரியான செய்திகளால் நான் விரக்தியடைந்துள்ளேன். சினிமாவில்தான் தாஜ் கோரமண்டல், சோழா போன்ற நட்சத்திர ஹோட்டல்களைப் பார்த்துள்ளேன். இந்த ஹோட்டல்களுக்கு நான் இதுவரை போனதேஇல்லை. எனது வீட்டில் கூட இரவு சாப்பாட்டுக்கு எங்காவது போக வேண்டும் என்று சொன்னால் கூட நான் மறுத்து விடுவேன். எங்கே போனாலும்,பகலிலேயே போகலாம். இல்லாவிட்டால் நான் இவருடன் போனேன், அவருடன் போனேன் என்று கதை கட்டி விடுவார்கள் என்று கூறி விடுவேன்.என்னைப் பற்றி இத்தனை வதந்திகள் வருவதற்கு ஒரே காரணம்தான் உள்ளது. அது நான் தமிழ் பேசும் பெண், தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண் என்பதுதான்.இதுவே நான் மும்பையிலிருந்தோ அல்லது கேரளாவிலிருந்தோ வந்திருந்தால் என்னைத் தாம்பாளத்தில் வைத்துத் தாங்கியிருப்பார்கள். நான் என்னகேட்டாலும் செய்து கொடுப்பார்கள், விழுந்து விழுந்து கவனிப்பார்கள்.துரதிர்ஷ்டவசமாக நான் தமிழச்சியாகப் போய் விட்டதால் என்னை வதந்திகளால் துரத்துகிறார்கள். இது மிகவும் மோசமானது. தமிழ் நாட்டுப் பெண்ணுக்குதமிழகத்திலேயே இத்தனை அவலங்கள் என்றால் நான் எங்கே போய் முறையிடுவது என்று புலம்புகிறார் சினேகா.சினேகா புலம்பலிலும் ஒரு நியாயம் இருக்கத்தான் செய்கிறது. தமிழுக்கும், தமிழர்களுக்கும் வெளியூரில் கிடைக்கும் மரியாதையில் துக்கனூண்டு கூடதமிழகத்தில் கிடைப்பதில்லை என்பதை சினேகாவுக்கு யாராவது எடுத்துச் சொன்னால் தேவலை! | Sneha fumes about the rumours! - Tamil Filmibeat\nதமிழ் பேசினால் தப்பா? சீறும் சினேகா சினேகா கொஞ்ச நாட்களாக படு கோபமாக இருக்கிறார். யார் மீது தெரியுமா? தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், நடிகர்கள் மீதுதான். சினேகாவின்கோபத்தில் ரொம்பவே நியாயம் இருப்பது போலவும் தெரிகிறது. குடும்பப் பாங்கான ரோல்களிலேயே நடித்து வந்தவர் சினேகா. அவரது அம்சமான முகமும், அட்டகாசமான புன்னகையும், அவருக்கு அதுபோன்றரோல்களையே வாரிக் கொடுத்தன. ஆனாலும் என்ன புரயோஜனம்? அதிக அளவில் படங்கள் வந்து குவியவில்லை.நல்லாத்தானே நடிக்கிறோம், அப்படியும் வாய்ப்பு ஏன் சரியாக இல்லை என்று சினேகா ஒரு நாள் உட்கார்ந்து பார்த்தபோது, ரகஸ்யா, கிரண், வண்டார்குழலி ஸ்மிதா என ஏகப்பட்ட குத்தாட்ட நாயகிகள் அவரது மனக் கண் முன்பு வந்து போனார்கள்.இதுதான் காரணமா என்ற தெளிவுக்கு வந்த சினேகாவும், கிளாமர் களத்தில் குதித்தார். லேசு பாசாக அவர் கவர்ச்சி காட்டத் தொடங்கவே ரசிகர்கள்அதிருப்தி அடைந்தனர். நீங்க போய் இப்படியெல்லாம் நடிக்கலாமா என்று செல்லமாக அவர்கள் கோபிக்கவே, குழப்பமாகிப் போனார் சினேகா.ஆனாலும் இப்போது தெளிவாகி விட்டார். நடித்தால், டீசன்ட்டாக நடிப்பது என்ற முடிவுக்கு அவர் வந்துள்ளார். இதனால் வருகிற ரோல்களை எல்லாம்ஏற்காமல், தனக்குப் பெயர் வாங்கிக் கொடுக்கும்படியான, நல்லதனமான கேரக்டர்களை மட்டுமே பார்த்து பார்த்துச் செய்கிறார்.இப்போது சினேகா வசம் இரண்டு படங்கள் உள்ளன. புதுப்பேட்டையில் விலைமாது கேரக்டரிலும், ஏபிசிடியில் விதவை ரோலிலும் கலக்கிவருகிறாராம். குறிப்பாக புதுப்பேட்டை பட கேரக்டர் அவருக்கு விருதையே வாங்கிக் கொடுக்கலாமாம்.ஒரு வழியாக மனக் குழப்பம் நீங்கி படு உற்சாகமாக நடித்து வரும் சினேகாவிடம், கவர்ச்சிப் போட்டியை எப்படித் தாக்குப் பிடிக்கிறீங்க என்றுகேட்டதுதான் தாமதம், பொறிந்து தள்ளி விட்டார் இந்த புன்னகை இளவரசி.ஏங்க, தமிழ்ப் பொண்ணா பொறந்தது தப்பா? இல்லை தமிழில் பேசினாலே தப்பா? ஏன் தான் நம்ம ஊர் சினிமாக்காரங்க கவர்ச்சியின் பின்னால் இப்படிஅலையறாங்களோ தெரியவில்லை. அதிலும் தமிழ் பேசும் நடிகை என்ற ஒரே காரணத்திற்காகவே என்னை ரொம்பவே கடுப்படிக்கிறாங்க.என்னைப் பத்தி எத்தனையோ வதந்திகள். இவற்றை பரப்புவது சில நடிகர்களும், தயாரிப்பாளர்களும்தான். என்னோட கால்ஷீட் கிடைக்காத, என்கிட்டே எதிர்பார்த்தது கிடைக்காத காரணத்தால் இவற்றை பரப்பி விட்டுட்டாங்க.ஒரு நடிகருடன் (ஸ்ரீகாந்த்) காதல், விரும்புகிறேன் பட இயக்குநருடன் மோதல், துபாயில் எனக்கு கல்யாணமாகி விட்டது, நடிகர் ஷாம் எனது உதடுகளைகடித்து விட்டார் என ஏகப்பட்ட வதந்திகள். எல்லாமே பொய் என்பதை சொல்லி விளக்க வேண்டிய அவசியம் இல்லை என்று நினைத்துத்தான் இவைஎவற்றுக்குமே பதில் சொல்லவில்லை.கடந்த வாரம் கூட வடபழனியில் ஒரு நட்சத்திர ஹோட்டலில் நானும், ஒரு நிறுவன அதிபரும் ரகசியமாக சந்தித்து இரவு விருந்து சாப்பிட்டதாக செய்திகள்வந்தன. இது மாதிரியான செய்திகளால் நான் விரக்தியடைந்துள்ளேன். சினிமாவில்தான் தாஜ் கோரமண்டல், சோழா போன்ற நட்சத்திர ஹோட்டல்களைப் பார்த்துள்ளேன். இந்த ஹோட்டல்களுக்கு நான் இதுவரை போனதேஇல்லை. எனது வீட்டில் கூட இரவு சாப்பாட்டுக்கு எங்காவது போக வேண்டும் என்று சொன்னால் கூட நான் மறுத்து விடுவேன். எங்கே போனாலும்,பகலிலேயே போகலாம். இல்லாவிட்டால் நான் இவருடன் போனேன், அவருடன் போனேன் என்று கதை கட்டி விடுவார்கள் என்று கூறி விடுவேன்.என்னைப் பற்றி இத்தனை வதந்திகள் வருவதற்கு ஒரே காரணம்தான் உள்ளது. அது நான் தமிழ் பேசும் பெண், தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண் என்பதுதான்.இதுவே நான் மும்பையிலிருந்தோ அல்லது கேரளாவிலிருந்தோ வந்திருந்தால் என்னைத் தாம்பாளத்தில் வைத்துத் தாங்கியிருப்பார்கள். நான் என்னகேட்டாலும் செய்து கொடுப்பார்கள், விழுந்து விழுந்து கவனிப்பார்கள்.துரதிர்ஷ்டவசமாக நான் தமிழச்சியாகப் போய் விட்டதால் என்னை வதந்திகளால் துரத்துகிறார்கள். இது மிகவும் மோசமானது. தமிழ் நாட்டுப் பெண்ணுக்குதமிழகத்திலேயே இத்தனை அவலங்கள் என்றால் நான் எங்கே போய் முறையிடுவது என்று புலம்புகிறார் சினேகா.சினேகா புலம்பலிலும் ஒரு நியாயம் இருக்கத்தான் செய்கிறது. தமிழுக்கும், தமிழர்களுக்கும் வெளியூரில் கிடைக்கும் மரியாதையில் துக்கனூண்டு கூடதமிழகத்தில் கிடைப்பதில்லை என்பதை சினேகாவுக்கு யாராவது எடுத்துச் சொன்னால் தேவலை!\nசினேகா கொஞ்ச நாட்களாக படு கோபமாக இருக்கிறார். யார் மீது தெரியுமா? தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், நடிகர்கள் மீதுதான். சினேகாவின்கோபத்தில் ரொம்பவே நியாயம் இருப்பது போலவும் தெரிகிறது.\nகுடும்பப் பாங்கான ரோல்களிலேயே நடித்து வந்தவர் சினேகா. அவரது அம்சமான முகமும், அட்டகாசமான புன்னகையும், அவருக்கு அதுபோன்றரோல்களையே வாரிக் கொடுத்தன. ஆனாலும் என்ன புரயோஜனம்? அதிக அளவில் படங்கள் வந்து குவியவில்லை.\nநல்லாத்தானே நடிக்கிறோம், அப்படியும் வாய்ப்பு ஏன் சரியாக இல்லை என்று சினேகா ஒரு நாள் உட்கார்ந்து பார்த்தபோது, ரகஸ்யா, கிரண், வண்டார்குழலி ஸ்மிதா என ஏகப்பட்ட குத்தாட்ட நாயகிகள் அவரது மனக் கண் முன்பு வந்து போனார்கள்.\nஇதுதான் காரணமா என்ற தெளிவுக்கு வந்த சினேகாவும், கிளாமர் களத்தில் குதித்தார். லேசு பாசாக அவர் கவர்ச்சி காட்டத் தொடங்கவே ரசிகர்கள்அதிருப்தி அடைந்தனர். நீங்க போய் இப்படியெல்லாம் நடிக்கலாமா என்று செல்லமாக அவர்கள் கோபிக்கவே, குழப்பமாகிப் போனார் சினேகா.\nஆனாலும் இப்போது தெளிவாகி விட்டார். நடித்தால், டீசன்ட்டாக நடிப்பது என்ற முடிவுக்கு அவர் வந்துள்ளார். இதனால் வருகிற ரோல்களை எல்லாம்ஏற்காமல், தனக்குப் பெயர் வாங்கிக் கொடுக்கும்படியான, நல்லதனமான கேரக்டர்களை மட்டுமே பார்த்து பார்த்துச் செய்கிறார்.\nஇப்போது சினேகா வசம் இரண்டு படங்கள் உள்ளன. புதுப்பேட்டையில் விலைமாது கேரக்டரிலும், ஏபிசிடியில் விதவை ரோலிலும் கலக்கிவருகிறாராம். குறிப்பாக புதுப்பேட்டை பட கேரக்டர் அவருக்கு விருதையே வாங்கிக் கொடுக்கலாமாம்.\nஒரு வழியாக மனக் குழப்பம் நீங்கி படு உற்சாகமாக நடித்து வரும் சினேகாவிடம், கவர்ச்சிப் போட்டியை எப்படித் தாக்குப் பிடிக்கிறீங்க என்றுகேட்டதுதான் தாமதம், பொறிந்து தள்ளி விட்டார் இந்த புன்னகை இளவரசி.\nஏங்க, தமிழ்ப் பொண்ணா பொறந்தது தப்பா? இல்லை தமிழில் பேசினாலே தப்பா? ஏன் தான் நம்ம ஊர் சினிமாக்காரங்க கவர்ச்சியின் பின்னால் இப்படிஅலையறாங்களோ தெரியவில்லை. அதிலும் தமிழ் பேசும் நடிகை என்ற ஒரே காரணத்திற்காகவே என்னை ரொம்பவே கடுப்படிக்கிறாங்க.\nஎன்னைப் பத்தி எத்தனையோ வதந்திகள். இவற்றை பரப்புவது சில நடிகர்களும், தயாரிப்பாளர்களும்தான். என்னோட கால்ஷீட் கிடைக்காத, என்கிட்டே எதிர்பார்த்தது கிடைக்காத காரணத்தால் இவற்றை பரப்பி விட்டுட்டாங்க.\nஒரு நடிகருடன் (ஸ்ரீகாந்த்) காதல், விரும்புகிறேன் பட இயக்குநருடன் மோதல், துபாயில் எனக்கு கல்யாணமாகி விட்டது, நடிகர் ஷாம் எனது உதடுகளைகடித்து விட்டார் என ஏகப்பட்ட வதந்திகள். எல்லாமே பொய் என்பதை சொல்லி விளக்க வேண்டிய அவசியம் இல்லை என்று நினைத்துத்தான் இவைஎவற்றுக்குமே பதில் சொல்லவில்லை.\nகடந்த வாரம் கூட வடபழனியில் ஒரு நட்சத்திர ஹோட்டலில் நானும், ஒரு நிறுவன அதிபரும் ரகசியமாக சந்தித்து இரவு விருந்து சாப்பிட்டதாக செய்திகள்வந்தன. இது மாதிரியான செய்திகளால் நான் விரக்தியடைந்துள்ளேன்.\nசினிமாவில்தான் தாஜ் கோரமண்டல், சோழா போன்ற நட்சத்திர ஹோட்டல்களைப் பார்த்துள்ளேன். இந்த ஹோட்டல்களுக்கு நான் இதுவரை போனதேஇல்லை. எனது வீட்டில் கூட இரவு சாப்பாட்டுக்கு எங்காவது போக வேண்டும் என்று சொன்னால் கூட நான் மறுத்து விடுவேன். எங்கே போனாலும்,பகலிலேயே போகலாம். இல்லாவிட்டால் நான் இவருடன் போனேன், அவருடன் போனேன் என்று கதை கட்டி விடுவார்கள் என்று கூறி விடுவேன்.\nஎன்னைப் பற்றி இத்தனை வதந்திகள் வருவதற்கு ஒரே காரணம்தான் உள்ளது. அது நான் தமிழ் பேசும் பெண், தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண் என்பதுதான்.இதுவே நான் மும்பையிலிருந்தோ அல்லது கேரளாவிலிருந்தோ வந்திருந்தால் என்னைத் தாம்பாளத்தில் வைத்துத் தாங்கியிருப்பார்கள். நான் என்னகேட்டாலும் செய்து கொடுப்பார்கள், விழுந்து விழுந்து கவனிப்பார்கள்.\nதுரதிர்ஷ்டவசமாக நான் தமிழச்சியாகப் போய் விட்டதால் என்னை வதந்திகளால் துரத்துகிறார்கள். இது மிகவும் மோசமானது. தமிழ் நாட்டுப் பெண்ணுக்குதமிழகத்திலேயே இத்தனை அவலங்கள் என்றால் நான் எங்கே போய் முறையிடுவது என்று புலம்புகிறார் சினேகா.\nசினேகா புலம்பலிலும் ஒரு நியாயம் இருக்கத்தான் செய்கிறது. தமிழுக்கும், தமிழர்களுக்கும் வெளியூரில் கிடைக்கும் மரியாதையில் துக்கனூண்டு கூடதமிழகத்தில் கிடைப்பதில்லை என்பதை சினேகாவுக்கு யாராவது எடுத்துச் சொன்னால் தேவலை!\nRead more about: sneha fumes about the rumours
செம்பருத்தி சீரியல் கார்த்திக்… ஹீரோவாக நடிக்கும் முதல் படம்… படப்பிடிப்பு தொடங்கியது ! | Sembaruthi Serial karthik raj starts shooting for his Movie - Tamil Filmibeat\n| Published: Wednesday, November 17, 2021, 21:19 [IST]\nசென்னை : செம்பருத்தி சீரியல் கார்த்திக் ராஜ், கே ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகி வரும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கி உள்ளதாக கூறியுள்ளார்.\nகார்த்திக் ராஜ் 2020 டிசம்பர் மாதம் சில காரணங்களால் செம்பருத்தி தொடரிலிருந்து விலகினார்.\nசமீபத்தில் கார்த்திக் ராஜ் தன்னை எந்த திரைப்படத்திலும் நடிக்கவிடாமல் சிலர் சதி செய்வதாக குற்றம்சாட்டி இருந்தார்.\nஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் செம்பருத்தி சீரியல் டிஆர்பியில் முக்கிய இடத்தில் இருந்து வரும் ஒரு சீரியல் ஆகும். இதற்கு மிக அதிக அளவில் ரசிகர்களும் இருக்கிறார்கள். தற்போது வரை கிட்டத்தட்ட 900 எபிசோடுகளை தொட இருக்கும் இந்த சீரியலில் முக்கிய ரோலில் கார்த்திக் ராஜ் நடித்து வந்தார். அந்த தொடரில் அவர் ஆதித்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். இந்த சீரியலில் ஆதி மற்றும் பார்வதியின் காதல் அனைவரையும் கவர்ந்தது. மேலும் ஜீ5 தயாரித்த முகிலன் வெப் சீரிஸில் நடித்திருந்தார்.\nஇதையடுத்து, அந்த தொடரிலிருந்து கார்த்திக் ராஜ் வெளியேறினார். இதனால், அவரின் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தார்கள். இவர் திரைப்படத்தில் நடிப்பதற்காக சீரியலிலிருந்து வெளியேறியதாக கூறப்பட்டது. ஆனால் தன்னை எந்தத் திரைப்படத்திலும் நடிக்க விடாதபடி சிலர் சதி வேலை செய்து கொண்டிருப்பதாக இவர் குற்றம் சாட்டி இருந்தார்.\nசொந்தமாக ஸ்டூடியோ ஒன்றை தொடங்கிய இவர், ரசிகர்களின் ஒத்துழைப்போடு படத்தை முடித்துக் காட்டுவேன் என்று சபதமிட்டு ரசிகர்களிடம் இன்ஸ்டாகிராமில் உதவி கேட்டிருந்தார். அவருக்கு பல ரசிகர்கள் உதவி செய்தனர். இதையடுத்து தற்போது படத்தை தொடங்கி உள்ளார்.\nஇந்நிலையில், நடிகர் கார்த்திக் ராஜ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், எங்கள் திரைப்படத்தின் முதல் ஷெட்யூலைத் தொடங்கிவிட்டோம் என்பதை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். உங்கள் அன்பும் ஆதரவும் இல்லாமல் இது சாத்தியமில்லை. என பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படத்தையும் பகிர்ந்து உள்ளார். அவரது ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.\nMORE ஜீ தமிழ் டிவி NEWS\nRead more about: zee tamil television sembaruthi serial karthik raj ஜீ தமிழ் டிவி செம்பருத்தி கார்த்திக் ராஜ்\nSembaruthi Serial karthik raj starts shooting for his Movie, செம்பருத்தி சீரியல் கார்த்திக் ராஜ், படத்தின் படப்பிடிப்பை தொடங்கினார்.\nStory first published: Wednesday, November 17, 2021, 21:19 [IST]
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் ஆரம்பம் செய்கிறேன் !\nநான் ஒரு நாள் வாகனத்தில் நபி(ஸல்) அவர்களுக்குப் பின்னால் அமர்ந்திருந்தேன். அப்பொழுது அவர்கள் சிறுவரே! உமக்கு சில வார்த்தைகளை கற்றுத் தருகிரேன்.அல்லாஹ்வின் கட்டளைகளை பேணிக் கொள்ளும். அல்லாஹ் உம்மை பாதுகாப்பான். அல்லாஹ்வின் கட்டளைகளை பேணிக் கொள்ளும் அல்லாஹ் உமக்கு உதவுவான், எதைக்கேட்டாலும் அல்லாஹ்விடம் கேட்பீராக ! உதவி தேடினால் அல்லாஹ்விடம் உதவி தேடுவீராக !அறிந்து கொள்க !மக்கள் அனைவரும் ஒன்றுக் கூடி ஏதாவதொரு பொருள் கொண்டு உமக்கு பயன் வழங்க நாடினாலும், அல்லாஹ் உமக்கு எதை எழுதியுள்ளானோ அப்பொருளைக் கொன்டேத் தவிர வேறு எதனை கொண்டும் அவர்களால் உமக்கு பயன் அளிக்கவும், முடியாது இடர் இழைக்கவும் முடியாது. எழுதுகோல்கள் உயர்த்தப்பட்டு விட்டன, ஏடுகள் காய்ந்து விட்டன, தக்தீர் எனும் விதி ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டு விட்டது. நூல்- திர்மிதி\nமற்றொரு அறிவிப்பில்அல்லாஹ்வின் கட்டளைகளைப் பேணிக்கொள் !அவனை உமக்கு முன்னால் பெற்றுக்கொள்வாய் !உமது செழிப்பான காலங்களில் அவனுக்கு நன்றி செலுத்துவாயாக !உமது கஷ்டமான காலத்தில் அவன் உமக்கு உதவுவான்.அறிந்து கொள்க !உம்மை எது வந்தடையாமல் சென்று விட்டதோ, அது உமக்கு சேர வேண்டியதல்ல.உம்மை எது வந்தடைந்து விட்டதோ அது உம்மை விட்டு தவறி சென்று விடக் கூடியதுமல்ல.அறிந்து கொள்க !நிச்சயமாக உதவி பொறுமையுடன் உள்ளது,\nநிச்சயமாக மகிழ்ச்சி கஷ்டத்துடன் உள்ளது,\nஇடுகையிட்டது என்சமையல், இஸ்லாம் நேரம் முற்பகல் 2:42 1 கருத்து:\nஅல்லாஹும் மஜ் அல் பீ(F ) கல்பீ(B ) நூரன், வ பீ(F ) பஸரீ நூரன் , வபீ(f)\nஸம்யீ நூரன்,வ அன் யமீனீ நூரன் ,வ அன் யஸாரி நூரன் ,வ ப(F)வ் கீ நூரன்\nவ(த்)தஹ்தீ நூரன் ,வ அமாமீ நூரன், வகல்பீ(F ) நூரன் வஜ்அல் லீ நூரன் .\nஇறைவா ! என் உள்ளத்தில் ஒளியை ஏற்படுத்து ! எனது பார்வையிலும் ,\nஎனதுசெவியிலும் , எனது வலப்புறமும், எனது இடப்புறமும் , எனக்கு மேலேயும்,\nஎனக்கு கீழேயும், எனக்கு முன்புறமும்,எனக்கு பின்புறமும் ஒளியை\nஎற்ப்படுத்து ! எனக்கு முழுமையாக ஒளியை எற்ப்படுத்து!\nஇடுகையிட்டது என்சமையல், இஸ்லாம் நேரம் முற்பகல் 8:25 கருத்துகள் இல்லை:\nநபி (ஸல் )அவர்கள் காய்ச்சலால் அவதி பட்டுக் கொண்டு இருந்த போது அவர்களிடம் நான் சென்றேன் .இறைதூதர் அவர்களே நீங்கள் கடும் காய்ச்சலால் சிரமப்பட்டுக் கொண்டு இருக்கிறீர்களே என்று கேட்டேன் .அதற்க்கு நபி(ஸல் அவர்கள் : ஆம் உங்களில் இரண்டு மனிதர்கள் காய்ச்சலால் அடைகிற துன்பத்தை நான் ஒருவன் அடைந்து இருக்கின்றேன் என்று கூறினார்கள் .\nநான் கேட்டேன் இதற்க்கு பதிலாக தங்களுக்கு இரண்டு மடங்கு நற்ப்பலன் கிடைக்கும் என்பதாலா? அதற்க்கு நபி (ஸல் ) அவர்கள் ; ஆம் , அப்படிதான் 'ஒரு முஸ்லிமை தைக்கும் ஒரு முள்ளாயினும் ,அதற்க்கு மேலான துன்பம் எதுவாயினும் அதற்க்கு பதிலாக ; ஒரு மரம் தன் இலைகளை உதிர்த்து விடுவதைப் போன்று அவரின் பாவங்களை அல்லாஹ் மன்னிக்காமல் விடுவதில்லை ' என்று கூறினார்கள் .அறிவிப்பவர் :அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி) . ஆதாரம்: புகாரி\nஉஸாமா இப்னு ஸைத்(ரலி) கூறினார்\nநபி(ஸல்) அவர்களின் புதல்வியார் (ஸைனப்(ரலி) அவர்கள் தங்களின் மகள் (அல்லது மகன்) இறக்கும் தறுவாயில் இருப்பதாகவும், எனவே அங்கு வந்து சேர வேண்டும் என்றும் நபி(ஸல்) அவர்களுக்குச் செய்தி அனுப்பினார்கள். அப்போது நபி(ஸல்) அவர்களுடன் நானும் ஸஅத் இப்னு உபாதா(ரலி) அவர்களும் இருந்தோம். உபை இப்னு கஅப்(ரலி) அவர்களும் இருந்ததாகவே நாங்கள் கருதுகிறோம். உடனே நபி(ஸல்) அவர்கள் தம் புதல்விக்கு சலாம் (முகமன்) சொல்லி அனுப்பியதோடு, 'அல்லாஹ் எடுத்துக் கொண்டதும் கொடுத்ததும் அவனுக்கே உரியது. ஒவ்வொன்றுக்கும் அவனிடம் ஒரு குறிப்பிட்ட தவணை உண்டு. எனவே, நன்மையை எதிர்பார்ப்பாயாக் பொறுமையைக் கைக்கொள்வாயாக' எனக் கூறியனுப்பினார்கள். அப்போது அவர்களின் புதல்வியார் அல்லாஹ்வின் மீது ஆணையிட்டு (கண்டிப்பாக வரவேண்டுமென மீண்டும்) கூறியனுப்பினார்கள். உடனே நபி(ஸல்) அவர்கள் எழுந்தார்கள். நாங்களும் அவர்களுடன் எழுந்தோம்.\n(தம் புதல்வியின் வீட்டுக்குச் சென்ற) நபி(ஸல்) அவர்களின் மடியில் சுவாசிக்க முடியாமல் மூச்சுத் திணறிக்கொண்டிருந்த குழந்தை கிடத்தப்பட்டது. அப்போது நபி(ஸல்) அவர்களின் இரண்டு கண்களும் நீர் சொரிந்தன. உடனே அவர்களிடம் ஸஅத் இப்னு உபாதா(ரலி) 'இறைத்தூதர் அவர்களே! என்ன இது? (அழுகிறீர்களே!)' என்று கேட்டார்கள்.\nஅதற்கு நபி(ஸல்) அவர்கள், 'இது அல்லாஹ் தன் அடியார்களில் தான் நாடியவர்களின் உள்ளங்களில் அமைத்துள்ள இரக்க உணர்வாகும். அல்லாஹ் தன் அடியார்களில் இரக்கமுடையவருக்கே இரக்கம் காட்டுகிறான்' என்று கூறினார்கள்.\nநபி(ஸல்) அவர்கள் நோயுற்றிருந்தபோது அவர்களை உடல் நலம் விசாரிப்பதற்காகச் சிலர் வந்தனர். (அப்போது தொழுகை நேரம் வந்துவிடவே) நபி(ஸல்) அவர்கள் உட்கார்ந்தபடியே அவர்களுக்குத் தொழுகை நடத்தினார்கள். மக்களோ நின்றபடி தொழலாயினர். அப்போது நபி(ஸல்) அவர்கள் 'உட்காருங்கள்' என்று மக்களுக்கு சைகை செய்தார்கள். தொழுகை முடிந்தபோது, '(தொழுகையை முன்நின்று நடத்தும்) இமாம் பின்பற்றப்பட வேண்டியவராவார். எனவே, அவர் (தொழுகையில்) குனிந்தால் நீங்களும் குனி(ந்து 'ருகூஉ' செய்)யுங்கள். அவர் (தம் தலையை) உயர்த்தினால் நீங்களும் (தலையை) உயர்த்துங்கள். அவர் அமர்ந்து தொழுதால் நீங்களும் அமர்ந்தே தொழுங்கள்' என்று கூறினார்கள்.\nஇடுகையிட்டது என்சமையல், இஸ்லாம் நேரம் முற்பகல் 10:04 கருத்துகள் இல்லை:\n"விசுவாசிகளே ! நீங்கள் தொழுவதற்காக நிற்க நாடினால் (அதற்கு முன்னர்) உங்கள் உங்கள் முகங்களையும் ,கைகளை முழங்கை வரையும் கால்களை கணுக்கால்கள் வரையும் கழுவிக் கொள்ளுங்கள் .உங்கள் தலைகளை ( ஈரக்கையால்) தடவிக் கொள்ளுங்கள் " .(5 :6 )\nஉளூ செய்யும் போது உறுப்புகளை ஒரு தடவை கழுவுவது தான் கட்டாயம் என்பதை நபி(ஸல்) அவர்கள் தெளிவுபடுத்தி உள்ளார்கள் .மேலும் அவர்களே அவ்வுறுப்புகளை இரண்டிரண்டு தடவைகளும், மும்மூன்று தடவைகளும் கழுவி உளூ செய்து இருகிறார்கள் .மூன்று தடவைக்கு மேல் அதிகப்படுத்தியது இல்லை .\nநுஅய்ம் அல் முஜ்மிர் கூறியதாவது :\nபள்ளி வாசலின் மேற்புறத்தில் அபூஹுரைரா(ரலி) அவர்கள் உடன் நானும் ஏறிச் சென்றேன் .அபூஹுரைரா (ரலி)அவர்கள் உளூ செய்தார்கள் .( உளூ செய்து முடித்ததும் ) " நிச்சயமாக எனது சமுதாயத்தவர்கள் மறுமை நாளில் உளூ உடைய சுவடுகளால் முகம், கை ,கால்கள் ஒளிமயமானவர்களே ! என்று அழைக்கப்படுவார்கள் .\nஎனவே உங்களில் எவருக்குத் தமது ஒளியை (அவர் உளூ செய்யும் உறுப்புகளில் ) நீளமாக்கிக் கொள்ள முடியுமோ அதனைச் செய்து கொள்ளட்டும் "என நபி (ஸல்) அவர்கள் கூறியதைக் கேட்டு இருக்கிறேன் என்றார்கள் .\nஅப்துல்லாஹ் பின் ஸைத் பின் ஆசிம் (ரலி) கூறியதாவது :\nதொழும் போது காற்று பிரிவது போன்ற உணர்வு ஏற்படுவதாக நான் நபி(ஸல்) அவர்களிடம் முறையிட்டேன் . அதற்கு நபி அவர்கள் " நாற்றத்தை உணரும் வரை அல்லது சப்தத்தை கேட்கும் வரை தொழுகையில் இருந்து திரும்ப வேண்டாம் "என்றார்கள் . (ஆதாரம் : புஹாரி)\nஇடுகையிட்டது என்சமையல், இஸ்லாம் நேரம் முற்பகல் 3:49 கருத்துகள் இல்லை:\nநாம்தாம் மறுமை நாளில் (காலத்தால்) பிந்தியவர்களாகவும் (அந்தஸ்தால்) முந்தியவர்களாகவும் இருப்போம். மேலும் அல்லாஹ்வின் மீதாணையாக! (உங்களில் ஒருவர் தம் குடும்பத்தார் (துன்புறும் வகையில் அவர்கள்) தொடர்பாகத் தாம் செய்த சத்தியத்தில் பிடிவாதமாக இருப்பது பெரும் பாவமாகும். (அந்தச் சத்தியத்தை முறித்துவிட்டு) அதற்காக அவரின் மீது அல்லாஹ் கடமையாக்கியுள்ள பரிகாரத்தைச் செய்வது சிறந்ததாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.\nபுஹாரி :6624-6625 அபூஹூரைரா (ரலி).\nஎன் நண்பர்கள் என்னை இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று, தமக்காக (பயண) வாகனம் கேட்கும்படி அனுப்பினார்கள். அப்போது அவர்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்களுடன் உஸ்ரா(ப் போரின்) படையுடன் செல்லவிருந்தனர் - உஸ்ராப் போரே தபூக் போராகும் - அப்போது நான், ‘இறைத்தூதர் அவர்களே! என் நண்பர்கள் தமக்காக வாகனம் கேட்கும்படி என்னைத் தங்களிடம் அனுப்பி வைத்துள்ளனர்” என்று சொன்னேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களுக்கு எந்த வாகனத்தையும் என்னால் தரவியலாது” என்று கூறினார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கோபத்திலிருந்த சமயத்தில் நான் அவர்களிடம் சென்றுவிட்டேன். நான் அதை அறிந்திருக்கவில்லை. நபி (ஸல்) அவர்கள் (வாகனம் தர) மறுத்ததனாலும் என் மீது அவர்கள் வருத்தம் கொண்டிருப்பார்கள் என்ற அச்சத்தினாலும் நான் கவலை கொண்டவனாகத் திரும்பினேன். நபி (ஸல்) அவர்கள் கூறியதை என் நண்பர்களிடம் வந்து தெரிவித்தேன். சிறிது நேரம் தான் கழிந்திருக்கும். அதற்குள், ‘அப்துல்லாஹ் இப்னு கைஸே!” என்று பிலால் (ரலி) அழைப்பதைக் கேட்டேன். உடனே நான் பதிலளித்தேன். அப்போது அவர்கள், ‘உங்களை இறைத்தூதர் (ஸல்) அவர்கள்அழைக்கிறார்கள். அவர்களின் அழைப்பை ஏற்றுச் செல்லுங்கள்” என்று கூறினார்கள்.. நான் நபி (ஸல்) அவர்களிடம் சென்றபோது அவர்கள், ‘ஒரே ஈற்றில் பிறந்த இந்த இரண்டு ஒட்டகங்களையும்,ஒரே ஈற்றில் பிறந்த இந்த இரண்டு ஒட்டகங்களையும்…” என்று ஆறு ஒட்டகங்களைக் காட்டி, ‘பிடித்துக்கொள்” என்று கூறினார்கள்.\nஅவற்றை அப்போதுதான் ஸஅத் இப்னு உபாதா (ரலி) அவர்களிடமிருந்து விலைக்குவாங்கியிருந்தார்கள். உங்கள் நண்பர்களிடம் இவற்றை (ஒட்டிக்) கொண்டு சென்று அவர்களிடம், ‘அல்லாஹ்’ அல்லது ‘இறைத்தூதர்’ அவர்கள் இந்த ஒட்டகங்களை உங்கள் பயணத்திற்காக அளித்துளளார்கள். எனவே, இவற்றிலேறிப் பயணம் செய்யும்படி சொல்லக் கூறினார்கள்’ எனத் தெரிவியுங்கள்” என்று கூறினார்கள். அவர்களிடம் நான் அவற்றை(ஓட்டி)க் கொண்டு சென்று, ‘நபி (ஸல்) அவர்கள் இவற்றின் மீது உங்களைப் பயணம் செல்லும்படி கூறினார்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களில் சிலர் என்னுடன் வந்து இறைத்தூதர் (ஸல்) அவர்கள் (’நான் எந்த வாகனமும் தர மாட்டேன்’ என்று) கூறியதைக் கேட்டவர்களிடம் விசாரிக்கும் வரையில் உங்களை நான் விடமாட்டேன். ஏனெனில், நான் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் சொல்லாத ஒன்றை உங்களிடம் சொல்லிவிட்டதாக நீங்கள் நினைத்துவிடக் கூடாதல்லவா?’ எனக் கூறினேன். அதற்கு என் நண்பர்கள், ‘(அதற்கெல்லாம் அவசியமில்லை.) உங்களை உண்மையாளர் என்றே நாங்கள் கருதுகிறோம். (இருந்தாலும், நீங்கள் விரும்புகிறீர்கள் என்ற காரணத்தால்) நீங்கள் விரும்பியபடி நாங்கள் செய்கிறோம்” என்று கூறினார்கள். நான் அவர்களுக்குத் தரமாட்டேன்’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் (முதலில்) மறுத்ததையும், பிறகு அவர்களே தந்ததையும் அறிந்த சிலரிடம் அழைத்துச் சென்றேன். அப்போது அந்தச் சிலர், நான் மக்களிடம் சொன்னதைப் போன்றே கூறினார்கள்.\nபுஹாரி :4415 அபூமூஸா (ரலி).\nஇடுகையிட்டது என்சமையல், இஸ்லாம் நேரம் முற்பகல் 12:58 1 கருத்து:\nவருகை தரும் அனைவருக்கும் அஸ்ஸலாமுஅலைக்கும் (வர்ரஹ்)\nகுர்ஆன் ஆயத்துக்கள் (3)\nகுர்ஆன் வசனங்கள் (2)\nதிருக்குர்ஆனைப் பொருளுணர்ந்து படியுங்கள் ...வஸ்ஸலாம்
Cable சங்கர்: கொத்து பரோட்டா-20/12/10\nவிமர்சனக் கூட்டம் சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள்...........\nமொத தத்துவம் ஹா ஹா ............ சிப்பு சிப்பா வருது தல.........\nஹை............ வட என்னக்குத்தான்.........\n// டெக்னாலஜி இம்ப்ரூவ்ட் வெரி மச்\nஇது பழசு பாஸ்!\n//ஒரு கர்பிணி பெண்ணை சுலபமாய் "உள்ளிக்க" வைக்க முடியாது //\n"உள்ளிக்க" இன்று புதிதாய் ஒரு வார்த்தை கற்று கொண்டேன். நன்றிக்க..\nவிமர்சனக் கூட்டத்திற்கு வாழ்த்துக்கள்!\nஇயக்குனரும் ராஜ் கபூர்தானே?\nஇம்முறையும் தொய்வில்லை சகோதரம்.. அதிலும் விளம்பரம் அருமை..\nஇயக்குனரை யாரென்று தெரியல...\nவிஜய் விசயம் செம ஹொட் நியுஸ் நிஜத்தின் பிரதிபலிப்பு... வாழ்த்துக்கள்...\nநண்பர்கள் சொன்னார்கள் சகோதரம்... இம்முறை சமூகம் தர முடியாமல் போய்விட்டது... அடுத்த முறை நிச்சயம் சந்திப்போம்... தங்கள் பாசத்திற்கு மிக்க நன்றிகள்..\nஅண்ணா இந்த வர தத்துவம் அருமை...\njoke super boss...\nvijay may look like 'aval' right now.....definatly he'll not do the same mistake as rajini( varave illa)\nor vijaya kanth( Late-a athum thaniya vanthutaru)...\nvijay move konjam different-a irrukku parpom ...but neenga sonnamathiri nadakkathonnu oru thought avlothan.,...\nas usual kothu super...\nLLA பில்டிங் ... முடிந்தால் நிச்சயம் வருகிறேன்\n"வெறும் சைட் டிஷ்சை மட்டும் சாப்பிடும் ஆளாய் இருப்பது தான் கொஞ்சம் இடிக்கிறது"\nஅடடா ...நீங்க வரை டி கடைக்கு கூட்டிட்டு போயிருக்கனும் ...அப்ப தெரிஞ்சு இருக்கும்\n“அய்யோ.. அம்மா” என்று வலிக்காமல் போட்ட சத்தம் கேட்டது.. வாழ்க குடும்பஸ்த்ரீகள்"\nஇசை போதையை மட்டும் தான் என்னால் அனுபவிக்க முடியும் ...வேறு போதை என்றால் அம்மா அடிப்பாங்க\nஏ ஜோக் ரொம்ப சும்மார் ரகம் :)))))))\nதல உங்க சினிமா வியாபாரம் இப்ப தான் படிச்சு முடிச்சேன் ..நல்லாயிருக்கு\nஅடடா, இந்த வாரம் நான் சென்னையில் இல்லை..உங்க விழாவிற்கு வரமுடியாமைக்கு வருந்துகிறேன்.\n// மற்றவர்கள் முன் நீ திறமையானவனாக இரு. உன் மனைவியிடம் மட்டும் முட்டாளாகவே இரு. வாழ்கையில் சிறக்க அதி புத்திசாலித்தனமான யுக்தி. //\nஇதுல ஏதோ உள்குத்து இருக்குற மாதிரி தெரியுதே....\n//கேட்டால் நாமும் கரைந்து போய் அழ ஆரம்பித்துவிடுவோம். ///\nஎன்னது கரைஞ்சு போயிடுவமா?\nகொத்து பரோட்டா வழக்கம் போலவே நன்றாக இருந்தது....\n“மேரா நாம் ஜோக்கர்” டைரக்டர் ராஜ்கபூர்....\nகொத்து வழமைபோலவே அருமை அண்ணே. ஸ்ரீ லங்கா பதிவர் கிரிக்கட் போட்டிகளும், சந்திப்பும் இனிதே நிறைவடைந்தது. இங்கே தங்கள்மேல் அனைவருமே பாசமும், நன் மதிப்பும் வைத்துள்ளனர். நன்றி அண்ணே.\n'சினி சிட்டி' அறிமுகத்திற்கு நன்றி.\n"நண்பர் கார்த்திகை பாண்டியன் வந்திருந்தார் அத்திரியுடன். இரண்டு பேரையும் ஒரு அருமையான பாருக்கு நானும் பதிவுலக பயில்வான் பெஸ்கியும் அழைத்துச் சென்றோம்."\nஅதுவும் அதே பாரா ? கேப்போமில்ல detailu ....\nதத்துவம் அருமை,பெண்கள் ஜோக் எல்லாமே அருமை,டெக்னாலாஜியும் சூப்பர்.பாடல் பிடிச்சிருக்கு.\nகமலுடன் ரஜினியை கம்பேர் செய்தது சரியில்லை என உங்களுக்கே தோன்றி விட்டது..\nஇபோது ரஜினியுடன் விஜயை ஒப்பிட ஆரம்பித்து விட்டீர்கள்.. இதை ரஜினி, விஜய் இருவருமே ஏற்க மாட்டார்கள்..\nகமல் காப்பி அடித்தது படம் எடுக்கிறார்.. அவரை மக்கள் ஏற்கவில்லை... என்பதெல்லாம் உண்மை என்றாலும் அவரிடம் ஒன்றிரண்டு நல்ல விஷயங்கள் இருக்க கூடும்...\nஅதை பற்றி சொல்லுங்கள்...\nஅதை விட்டுவிட்டு, கமலை மேம்படுத்தி காட்டுவதற்காக , ரஜினியை தேவையில்லாமல் சீண்டுவது நகைப்புக்கு உரியது...\nகொத்துபரோட்டா வழமையான சுவையுடன். இலங்கைப் பதிவுலகமும் இவ்வாரம் நன்றாகவே கழிந்தது. உங்களுடன் கதைத்ததும் மகிழ்ச்சி.\nஇவ்வளவு வாசகர்கள் கொண்ட நீங்கள், பாருக்கு போவதையும், மது அருந்துவதையும், நாசுக்கு கலந்த பெருமையுடன் குறிப்பிடுவது நல்லதா? நீங்கள் உண்மையை மறைப்பவர் இல்லைதான். நானும் மது அருந்துபவந்தான். இருந்தாலும், இப்பிடி எழுதலாமா? இப்பொழுதெல்லாம், பொது இடங்களிலும், எழுத்திலும் கெட்டவார்த்தை உபயோகிப்பது, இந்த மாதிரி விஷயங்களை நாசுக்காக ஒப்புக்கொள்வது எல்லாம் பெரிய மனுஷத்தன் என்று ஆகிவிட்டதோ???\nகலக்கல் ஜோக்ஸ் அண்ணே :)\nஇந்த MLM ஆளுங்களை சமாளிக்க அவங்களை மாதிரியே நாமளும் பேச ஆரம்பிக்க வேண்டும்.. முக்கியமா அவங்களுக்கு நம்ம மிஸ்டுகால் குடுத்து பேசினால் ஜென்மத்துக்கும் உங்க பக்கம் வர மாட்டாங்க..\n//எடுத்தவுடன் தான் செய்யும் ஏதோ ஒரு நெட்வொர்க் மார்கெட்டிங் பற்றி சொல்ல ஆரம்பிப்பார்.//\nசரி விடுங்க விடுங்க , நீங்க "பிரமிட்" நடராஜன் சாருக்கு நெருக்கம்னு தெரிஞ்சு தப்பா புரிஞ்சுகிட்டு இருக்காரு போல,.\nஇப்ப எழுதிட்டீங்கில்ல இனிமே தொந்தரவு பண்ண மாட்டாரு ;)\nஅண்ணே நல்லா இருக்கீங்களா???\nஎப்பவும் அது புதுசா இம்ப்ரூவ் ஆயிட்டுதானேருக்கு\nமுடிஞ்சா ஒரு புத்தக விமர்சனம் போடுங்க..\nஓகே அடுத்த வாரம் மீட் செய்வோம்\nகரைந்து என்பதன் மறுவூ\n//கமலுடன் ரஜினியை கம்பேர் செய்தது சரியில்லை என உங்களுக்கே தோன்றி விட்டது..//\nஆமாம்.. கமலுடன் ரஜினியைப் போய் கம்பேர் செய்தது சரியில்லைதான்.\n//இபோது ரஜினியுடன் விஜயை ஒப்பிட ஆரம்பித்து விட்டீர்கள்.. இதை ரஜினி, விஜய் இருவருமே ஏற்க மாட்டார்கள்..//\nஅதை சொல்ல நீங்கள் யார்?\n//கமல் காப்பி அடித்தது படம் எடுக்கிறார்.. அவரை மக்கள் ஏற்கவில்லை... என்பதெல்லாம் உண்மை என்றாலும் அவரிடம் ஒன்றிரண்டு நல்ல விஷயங்கள் இருக்க கூடும்...//\nஆமா எந்திரம் மட்டும் சொந்தமா மல்லாக்க படுத்து யோசிச்சதாக்கும்\n//அதை பற்றி சொல்லுங்கள்...\nஅதை விட்டுவிட்டு, கமலை மேம்படுத்தி காட்டுவதற்காக , ரஜினியை தேவையில்லாமல் சீண்டுவது நகைப்புக்கு உரியது..//\nரஜினி என்ன விமர்சனத்துக்கு அப்பார்பட்டவரா..?\nசுந்தர்.. வாசகர்களுக்கு தெரியும் அவரவர் வாழ்கைய எப்படி ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்று. வாழ்கையை அதன் போக்கில் வாழ வேண்டும். அதுவும் ஒரு அனுபவ்ம் தான்.. இதை பெரிய மனுஷத்தனமாகவும் பார்கக்லாம். சில்லியாகவும் பார்க்கலாம். எல்லாமே உங்களுடய பர்செப்ஷன் தான்.\nஅதை பண்ணி நீங்க தான்ணே கூப்பிடீங்கன்னு சொல்லிட்டா..\nசரி ஓனர்.. நல்லாருக்கேன்
தமிழின் குரல்: காணொளி: ஈழத்து தமிழ் முஸ்லீம்கள்\nகாணொளி: ஈழத்து தமிழ் முஸ்லீம்கள்\nசொந்த மண்ணில் வாழ்வையிழந்த தமிழ்பேசும் முஸ்லீம்கள். அடுத்தவன் சுதந்திரத்தைப் பறித்து நம்முடையதையும் இழந்த சோகம் மீண்டும் வரக்கூடாது. தமிழன் தனக்குத்தானே செய்த துரோகத்தோடு ஒப்பிட்டுப் பாருங்கள். இவர்கள் செய்த குற்றம்தான் என்ன?!\nPosted by Sathyan at 05:31\nLabels: ஈழம், தமிழ் முஸ்லீம்கள்
(சு)வாசிக்கப் போறேங்க!: வேப்பம் பழம் -- நா.பார்த்த சாரதி\nChitra June 19, 2010 at 8:25 PM\nசுவாரசியம் குறையாமல் தொகுத்து எழுதி இருக்கீங்க... பகிர்வுக்கு நன்றி.\nகிருஷ்ணமூர்த்தி June 19, 2010 at 8:43 PM\nவாருங்கள் திருமதி சித்ரா!\nகொஞ்சம் வெட்டிப் பேச்சு, தம்பட்டம் தாயம்மா என்று வலைச்சரம் ஆசிரியராகப் போனவாரம் ஒரு கலக்கு கலக்கியிருக்கிறீர்கள்! உங்களுக்கும் இந்தப் பதிவு பிடித்துப் போனதில் மகிழ்ச்சியே!\nஜீவி June 20, 2010 at 1:13 AM\nவாழ்க்கையின் கசப்புகளை இனிப்பாக இல்லையேயாயினும் அசட்டுத் தித்திப்பாகவாகவேனும் மாற்றிக் கொண்டவள் பட்டு.வேப்பமரத்தின் இலையிலிருந்து பழம் வரை சகலமும் மருத்துவ குணம் கொண்டது. சமூகத்தின் வம்புப்பேச்சு நோயைப் புறந்தள்ளித் தீர்வுகாணும் மருந்தாகத்தான் அவளது அந்த 'பட்டினி கிடந்தா ஏன்னு கேட்க...' பதிலும் இருக்கிறது.\nநா.பா.வைப் பற்றிய பகிர்வு அவரைப் பற்றிய நினைவுகளை நினைக்கச் செய்தது. மிக்க நன்றி,சார்!\nகிருஷ்ண பிரபு June 20, 2010 at 7:21 AM\nIs it possible to buy this short story book? If yes, send me the getails. I am searching for this particular short story. I red crtics about this story in pavanan essay.\nகிருஷ்ணமூர்த்தி June 20, 2010 at 7:38 AM\nஉங்களுடைய பூவனம் தளத்தில் அகிலனைப் பற்றி எழுதிக் கொண்டிருந்த தருணத்திலேயே நா.பார்த்தசாதியைப் பற்றி எழுத நினைத்திருந்தது, இப்போது தான் நேரம் வந்திருக்கிறது. அகிலன் பக்கம் வீசிய அதிர்ஷ்டக் காற்றில் ஒரு சிறு பகுதி கூட நா.பாவுக்குக் கிடைத்ததில்லை. மாணவனாக, அரசியல் ஈடுபாடு கொள்ள ஆரம்பித்த தருணங்களில் நா.பாவை சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்திருக்கிறது. வல்லிக் கண்ணன் ஒருவரைத் தவிர வேறு எவரும் நா.பாவின் "தீபம்" இதழைக் குறித்து அதிகம் பேசியதில்லை. பொள்ளாச்சி நசனின் தமிழம்டாட்நெட் தளத்தில் தீபம் பழைய இதழ்கள் பிடிஎப் கோப்புக்களாகக் கிடைத்ததைப் படித்தபோது, இன்றைக்கும் சுவாரசியமான இதழாக இருப்பதைப் பார்க்க முடிந்தது.\nநா.பாவைப் பற்றி இந்தப் பக்கங்களில் இன்னும் நிறையப் பேச ஆசை.\nகிருஷ்ணமூர்த்தி June 20, 2010 at 7:53 AM\nகாலத்துக்கு வணக்கம் சிறுகதைத் தொகுதி தற்சமயம் கிடைப்பது கடினமே. தமிழ்ப் புத்தகாலயத்தில் கேட்டுப் பாருங்கள். சென்னை லைப்ரரிடாட்காம் தளத்தை நடத்தும் திரு சந்திர சேகரன், நா.பார்த்தசாரதியின் படைப்புக்களை பிடிஎப் கோப்புக்களாக, குறுந்தகடில் 99 ரூபாய் விலையில் தருகிறார். அது கூட இப்போது இரண்டு பகுதிகளாக வருகிறது என்றும், முதற்தொகுதியில் இந்த சிறுகதைத் தொகுப்பு இல்லை என்று தான் அறிகிறேன்.. 96888 29900 என்ற எண்ணிலோ admin@gowthampathippagam.com/ இந்த மின்னஞ்சல் முகவரியிலோ திரு கோ.சந்திர சேகரனைத் தொடர்பு கொண்டால், இன்னும் கொஞ்சம் பயனுள்ள விவரங்களைத் தருவார்.\nchandra June 28, 2010 at 12:56 AM\nதாங்கள் குறிப்பிட்டது போல் எமது புதிய வெளியீடான "தமிழ் புதினங்கள்-1" குறுந்தகடில் கீழ்க்கண்ட நூல்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளன.\n1. பொன் விலங்கு - நா. பார்த்தசாரதி\n2. குறிஞ்சி மலர் - நா. பார்த்தசாரதி\n3. வெற்றி முழக்கம் (உதயணன் கதை) - நா. பார்த்தசாரதி\n4. சமுதாய வீதி - நா. பார்த்தசாரதி (சாகித்ய அகாதமி பரிசு)\n5. சாயங்கால மேகங்கள் - நா. பார்த்தசாரதி\n6. ஆத்மாவின் ராகங்கள் - நா. பார்த்தசாரதி\n7. நெஞ்சக்கனல் - நா. பார்த்தசாரதி\n8. துளசி மாடம் - நா. பார்த்தசாரதி (ராஜா சர் அண்ணாமலைப் பரிசு)\n9. ராணி மங்கம்மாள் - நா. பார்த்தசாரதி\n10. பிறந்த மண் - நா. பார்த்தசாரதி\n11. கபாடபுரம் - நா. பார்த்தசாரதி\n12. வஞ்சிமா நகரம் - நா. பார்த்தசாரதி்\n13. நெற்றிக் கண் - நா. பார்த்தசாரதி\n14. பாண்டிமாதேவி - நா. பார்த்தசாரதி\n15. சத்திய வெள்ளம் - நா. பார்த்தசாரதி\n16. ரங்கோன் ராதா - அறிஞர் அண்ணா\n17. ஊருக்குள் ஒரு புரட்சி - சு. சமுத்திரம்\n18. ஒரு கோட்டுக்கு வெளியே - சு. சமுத்திரம்\n19. வேருக்கு நீர் - ராஜம் கிருஷ்ணன்\n20. ஆப்பிள் பசி - சாவி\nஅடுத்து வெளிவர இருக்கும் குறுந்தகடில் சிறுகதைகளை இணைக்க முயல்கிறேன். அதே போல் கூடிய விரைவில் சிறுகதைகளை எமது சென்னைநூலகம்.காம் இணையதளத்திலும் வெளியிட முயற்சிக்கிறேன்.\nகிருஷ்ணமூர்த்தி July 17, 2010 at 7:41 PM\nஇந்தப்பக்கங்களில், தமிழ்ப் புத்தகாலயம்-தாகம் வெளியீடாக நா.பார்த்தசாரதியின் சிறுகதைத் தொகுப்பு இருக்கிறது. விலை.ரூ.475/- எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்தத் தொகுப்பில் காலத்துக்கு வணக்கம் தொகுப்பில் வந்தவையும் அடக்கமா என்பது தெரியவில்லை.
Monday, 12 June 2006 06:35\nஆளரவமற்ற அடர்ந்த காடு. இருபுறமும் புதர்கள் மண்டிய ஒற்றையடிப் பாதையில் அம்மண்ணின் மைந்தரான மர்விந்தாவும் அவரது குடும்பமும் தமது கிராமத்தை நோக்கி வேகமாக நடந்து கொண்டிருந்தனர். தமது வீட்டையும் தோட்டத்தையும் பார்த்து விட்டு மாலைக்குள் திரும்பிவிட வேண்டுமென்ற அவசரத்தில் அவர்கள் வேகமாக நடந்தனர். இருளிபலாம் கிராமத்தை அடைந்த போது துக்கம் அவர்களது தொண்டையை அடைத்தது. அங்கே எரிந்து சாம்பலாகிக் கிடக்கும் தமது குடிசையைக் கண்டதும் ""ஓ''வெனக் கதறி அழுதனர்.\nபின்னர் ஒருவாறு தேற்றிக் கொண்டு, தமது குடிசையை ஒட்டியுள்ள தோட்டத்தில் முளைவிட்டுள்ள கிழங்குகள் பயிர்களுக்குத் தண்ணீர் ஊற்றி, வேலிகளைச் சரிசெய்து விட்டு கனத்த இதயத்துடன் நிவாரண முகாமுக்குத் திரும்பினார்.
வார்ப்புரு பேச்சு:இந்திய பாலூட்டிகள் - தமிழ் விக்கிப்பீடியா\nவார்ப்புரு பேச்சு:இந்திய பாலூட்டிகள்\nஇந்திய பாலூட்டிகள் என்ற இக்கட்டுரை, விக்கித் திட்டம் இந்தியத்துணைக்கண்டப் பாலூட்டிகள் என்னும் திட்டத்துள் அடங்கியதாகும்.\nஇந்த வார்புருவில் ஆங்கில பெயருக்கு அடுத்து "/" குறிக்கு பிறகு ஒத்த தமிழ் பெயர் கொடுக்கப்பட்டுள்ளது. அனைத்து ஆங்கில பெயர்களுக்கும் தமிழாக்கம் செய்துவிட்டு, அனைத்து பெயர்களும் அனைவருக்கும் ஒப்புதல் என்ற பிறகு, ஆங்கில பெயர்களை நீக்கி விடலாம் என்பது என் கருத்து. தமிழில் பாலூட்டிகள் இனத்திற்கு குடும்ப அளவில் பெயர் வைப்பது இதுவே முதன்முறை என நினைக்கிறேன் ஆதலால் முடிந்த அளவிற்க்கு மிகப் பொருத்தமாக செய்ய முயலுவோம். மேலும் பின்னாளில் இந்திய பாலூட்டிகள் போன்ற புத்தகங்கள் தயாரிக்கும் போதும் இவை பெரிதும் பயன்படும். அனைவரின் கருத்தும் ஆக்கமும் வரவேற்கப்படுகிறது. இந்த திட்டத்தின் பெயல்பாடுகள்: முதலில் குடும்பம்-பெயர்களில் கட்டுரைகள் எழுதிவிட்டு பின் துணைக்குடும்பம், பேரினம், சிற்றினம் என மேலிருந்து கீழ் முறையில் கட்டுரைகள் இயற்றலாம் என இருக்கிறேன். இந்த வார்ப்புரு சரிசெய்த பின் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒவ்வொரு வார்ப்புரு என்ற திட்டமும் இருக்கிறது.-கார்த்திக் 04:02, 27 ஜூலை 2009 (UTC)\nஏற்றுக்கொள்ளப்பட்ட சொற்களுக்குரிய, ஆங்கிலச்சொற்களை உடன் நீக்குதல் நலம்.--த* உழவன் 06:30,5ஜனவரி 2010 (UTC)\nகார்த்திக், நல்ல திட்டம். வகைப்பாட்டில் மேலுள்ள பிரிவுகளைப் பற்றி எழுதிப் பின் படிப்படியாய் கீழுள்ள பிரிவுகளைப் பற்றி எழுதலாம். இப்பொழுது கீழ்க்கண்ட வரிசைப் பெயர்கள் குழப்பம் இல்லாதவை, ஓரளவுக்கு விளக்கங்களும் உள்ளன.\ncarnivora = ஊனுண்ணிகள்/கொன்றுண்ணிகள்=en:predators\nprimates = முதனிகள்\nChiroptera = வௌவால்கள் (வரிசை என்னும் வகையில் விளக்கவில்லை)/கைச்சிறகிகள்\nPerissodactyla = ஒற்றைப்படைக் குளம்பிகள்\nArtiodactyla = இரட்டைப்படைக் குளம்பிகள்\nRodentia = கொறிணிகள்\nநாய்ப்பேரினம் அல்லது நாய்க்குடும்பம், பூனைப்பேரினம் அல்லது பூனைக்குடும்பம், குதிரைப்பேரினம் அல்லது குதிரைக் குடும்பம் என்னும் படி எளிமையாகப் பெயர் வைக்கலாம். குடும்பம், துணைக்குடும்பம் முதலியவற்றை குடு., து.கு. என்று பின்னொட்டும் இட்டு எழுதலாம். --செல்வா 04:54, 27 ஜூலை 2009 (UTC)\nநல்ல முன்மொழிவு. இதே வரிசையில் Bovids என்பதை மாட்டுப்பேரினம் எனலாமா? --சுந்தர் \_பேச்சு 07:24, 27 ஜூலை 2009 (UTC)\nஆப்பேரினம் எனலாம் (ஆவின் பால் நினைவிருக்கா?). அல்லது ஆன்பேரினம் எனலாம். ஆன் என்றாலும் ஆ தான். போ'விட்' என்பதற்குச் சரியான சொல்லா இருக்கும். −முன்நிற்கும் கருத்து செல்வா (பேச்சு • பங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.\nஆப்பேரினம் நன்றாக உள்ளது. ஆவின் பாலை மறக்க முடியுமா? :) -- சுந்தர் \_பேச்சு 12:57, 28 ஜூலை 2009 (UTC)\nஆப்பேரினம் அருமை. சுருக்கமாக, அழகாக, ஆழமாக உள்ளது. தமிழின் சிறப்பு ஒற்றைச்சொல்லல்லவா.தமிழின் ஒற்றைச் சொற்கள்த* உழவன் 07:41,5ஜனவரி 2010 (UTC)\nதமிழாக்கம் செய்தவையும்- செய்ய வேண்டியவை[தொகு]\nகீழ்காணும் ஆங்கில சொற்களுக்கு நிகரான தமிழ் சொற்கள் உருவாக்கப்பட்டுள்ளது, எவரேனும் வேறு பொருத்தமான பெயர் இடவிரும்பினால் தற்போதுள்ள பெயரை அடுத்து "/" க்கு பிறகு இடலாம்.\nen:Insectivora = பூச்சியுண்ணிகள் /\nen:Hedgehogs = முள்ளெலிகள் /\nen:Moles = துள்ளெலிகள் /\nen:Shrews = அணத்தான்கள் /\nen:Treeshrews = மரஅணத்தான் /\nen:Chiroptera = வெளவால்கள் /கைச்சிறகிகள்\nen:Fruit Bats = பழந்திண்ணி வௌவால்கள் /கனிவௌவால்கள்\nen:Primates = முதனிகள் /\nen:Lorises = தேவாங்குகள் /\nen:Carnivora = கொன்றுண்ணிகள்(predator) / ஊனுண்ணிகள்\nen:Dogs = நாய்க்குடும்பம் /\nen:Bears = கரடிக்குடும்பம் /\nen:Civets = புனுகு பூனைக்குடும்பம் /புனுகுக்குடும்பம்\nen:Mongooses = கீரிப்பிள்ளைக்குடும்பம் /கீரிக்கும்பம்\nen:Hyenas = கழுதைப்புலிக்குடும்பம் /\nen:Felines/en:Cats = பூனைக்குடும்பம் /\nen:Cetacea = நீற்பாலூட்டிகள் /\nen:Delphinidae = கடல் ஓங்கில்கள் /கடலோங்கிகள்\nen:River Dolphins = ஆற்றிட ஓங்கில்கள் /ஆற்றோங்கிகள்\nen:Balaenoptridae = நகமியகற்றை திமிங்கலங்கள் /\nen:Ziphiidae = அலகுத்திமிங்கலங்கள் /\nen:Phocoenidae = கேழல்திமிங்கலங்கள் /\nen:Dugongidae = ஆவுளிக்குடும்பம் /\nen:Elephants = யானைக்குடும்பம் /\nen:Perissodactyla = ஒற்றைப்படைக் குளம்பிகள் /\nen:Horses = குதிரைக்குடும்பம் /\nen:Rhinoceroses = காண்டாமிருகக்குடும்பம் / (மூக்குக்கொம்பன்கள்??)-அதிக பயன்பாடில்லை.\nen:Artiodactyla = இரட்டைப்படைக் குளம்பிகள் /\nen:Pigs = பன்றிக்குடும்பம் /\nen:Camelidae = ஒட்டகக்குடும்பம் /\nen:Deer = மான்குடும்பம் /\nen:Bovids = ஆக்குடும்பம் / (ஆன்குடும்பம்??)\nen:Rodentia = கொறிணிகள் /\nen: squirrels = அணில் குடும்பம் /\nen:Flying squirrels = பறக்கும் அணில் குடும்பம் /சிறகணில் குடும்பம்\nen:Hares and Rabbits = முயல்குடும்பம் /\nகீழ்காணும் ஆங்கில சொற்களுக்கு நிகரான தமிழ் சொற்கள் உருவாக்கபடவேண்டும். அனைவரின் பங்களிப்பும் பெரிதும் வரவேற்க்கப்படுகிறது.\nen:Moles = அகழெலிகள்\nen:Mouse-tailed Bats = இவ்விணைப்புத் தவறென நினைக்கிறேன்.இதுவா? வால்வௌவால்கள்\nen:Sheath-tailed Bats =உறைவால் வௌவால்கள்\nen:False Vampire Bats =\nen:Horseshoe Bats = குளம்பி வௌவால்கள்\nen:Leaf-nosed Bats = இணைப்பில்லையே?\nen:Evening Bats = அந்தி வௌவால்\nen:free-tailed Bats =\nen:Old World monkeys = தொல்குரங்கினம்\nen:Lesser apes (gibbons) = நீள்கைக்குரங்கினம்/கிப்பன்கள்??\nen:Pandas = பாண்டா\nen:Pangolins = எறும்புண்ணி\nen:Old World Rats =தொல்லெலிகள்\nen:Jumping mice =\nen:Old World Porcupines = தொல்முள்ளம்பன்றிகள்\nபேச்சு:ஓங்கில்லில் இருந்து எடுக்கப்பட்டது: "தற்கால" இலத்தீன் (modern Latin) சொல்லாகிய cetus என்பது திமிங்கிலம் என்று பொருள் படும். ஆங்கிலத்தில் cetacea என்பது "திமிங்கிலம் போன்ற" அல்லது "திமிங்கிலம் அனைய" என்னும் பொருள் உடையது. இதன் அடிப்படையில் உயிரினங்களின் பெயர்களில் -acea என முடியும் சொற்களுக்கு "-அனையி" என்னும் பின்னொட்டு சேர்ப்பது சரியாக இருக்கும் என நினைக்கிறேன். இதே போல -dae என்று முடியும் சொற்களுக்கு வகையி என்று கூறலாம் என்று நினைக்கிறேன். எனவே இங்கே cetacea என்பதற்கு திமிங்கிலமனையி (= திமிங்கிலம் + அனை+இ) என்று எழுதியிருக்கின்றேன். --செல்வா 14:50,6ஜனவரி 2009 (UTC)\nசெல்வா மேற்கூறிய கருத்தை இங்கு பெயரிடலுக்கு பின்பற்றலாம்--கார்த்திக் 17:50,3ஆகஸ்ட் 2009 (UTC)\nஇப்படி ஒரு முறையுடன் செய்வது நல்லது. இன்னும் சில பின்னொட்டுகளையும் சேர்ந்தெண்ணி ஒரே முறைப்பாட்டில் செய்யலாம். அல்லது குடும்பம், துணைக்குடும்பம், கிளைக்குடும்பம், மேற்குடும்பம் (superfamily) முதலியவற்றுக்கு கு, துகு, கிகு, மேகு என்றும் தனியாக இணைக்கலாம். எடுத்துக்காட்டாக நாய்க்குடும்பம் என்பதை நாய்வகையி என்பதற்கு மாறாக நாய்.கு என்றும், ஊர்சிடீ என்பதை கரடிவகையி என்பதற்கு மாறாக கரடி.கு எனலாம். புலிபூனைவகையி என்பதற்கு மாறாக புலிபூனை.கு எனலாம். எது செய்தாலும் கூடிய மட்டிலும் ஒரே சீராக செய்வது நல்லது.--செல்வா 19:00,3ஆகஸ்ட் 2009 (UTC)\nகரடி.கு (கரடிவகையி என்பதற்கு மாறாக) என்பது போல அமைத்தால் சிறப்பாக இருக்குமென்று கருதுகிறேன். இலத்தீன் முறையில் பெயரிடல் முறை ஏறத்தாழ 400 முன் தோன்றியது. அறிஞர்களுக்கு இடையே குழப்பங்களைத் தவிர்க்க இம்முறை அன்றும், இன்றும் குறைவாகப் பயனாகிறது. மேலும், வகைப்பாட்டியலில் பல மாற்றங்கள், முறைகள் வளர்ந்து வருகிறது. நமது இலக்கு அறிஞர்கள் அல்ல, மாணவர்கள்; சாதாரண மக்கள்.\nஅவர்கள் சுலபமாகப் புரிந்து கொள்ள மட்டுமே ஆவண செய்ய வேண்டும். எளிமையே வன்மை. எக்காலத்தையும் கடக்கும் குறள் போன்று என்பது என் கருத்து.த* உழவன் 07:41,5ஜனவரி 2010 (UTC)\n"https://ta.wikipedia.org/w/index.php?title=வார்ப்புரு_பேச்சு:இந்திய_பாலூட்டிகள்&oldid=1079285" இருந்து மீள்விக்கப்பட்டது\nஇப்பக்கத்தைக் கடைசியாக4ஏப்ரல் 2012, 06:21 மணிக்குத் திருத்தினோம்.
07/28/10 | Tamil Islam:தமிழ் முஸ்லீம்\nதிருப்பதியில் திகில் சம்பவம்-குழந்தையை கவ்வி ஓடிய ...\nகோழியில் இருந்துதான் முட்டை வந்ததாம் : விஞ்ஞானிகள்...\nமூன்று சிம்காட் போன் அறிமுகம்\nதிருப்பதியில் திகில் சம்பவம்-குழந்தையை கவ்வி ஓடிய சிறுத்தை-பாய்ந்து பிடித்து மீட்ட தந்தை\nதிருப்பதி: திருப்பதி மலைப் பாதையில்,2வயதுக் குழ்நதையை சிறுத்தை ஒன்று கவ்விக் கொண்டு ஓட முயன்றபோது, குழந்தையின் தந்தை மிகவும் துணிச்சலுடன் சிறுத்தையிடமிருந்து தனது குழந்தையை மீட்டார்.\nஆந்திர மாநிலம் காளஹஸ்தியை சேர்ந்தவர் சோபன்பாபு (35). இவருக்கு6வயதில் ஒரு பெண் குழந்தையும், கோகிலா என்ற2வயது பெண் குழந்தையும் உள்ளனர். இவர் நேற்று மாலை தன்னுடைய மனைவி, மாமியார் மற்றும்2பெண் குழந்தைகளுடன் காளஹஸ்தியில் இருந்து திருப்பதிக்கு வந்தார்.\nஅலிபிரியில் இருந்து திருமலைக்கு கால்நடையாக சென்றனர். முதலாவது மலைப்பாதை வழியாக நடந்து சென்று கொண்டிருந்தனர். தனது இரு கைகளிலும் இரு குழந்தைகளைப் பிடித்து நடக்க வைத்தபடி வந்து கொண்டிருந்தார் சோபன்பாபு.\nஇரவு ஏழரை மணியளவில் அவர்கள் 7வது மைல் அருகே வந்தனர். அப்போது மலைப்பாதை வேலிக்கம்பிக்கு அருகே விற்றுக் கொண்டிருந்த வேர்க்கடலையை மகள் கோகிலா கேட்டதால் வாங்கிக் கொடுத்தார் சோபன்பாபு. பின்னர் பர்ஸிலிருந்து பணத்தை எடுப்பதற்காக கோகிலாவின் கையை விலக்கி பணத்தை எடுத்துக் கொண்டிருந்தார்.\nஅந்தசமயத்தில் திடீரென வேலிக்கு அப்பாலிருந்து ஒரு சிறுத்தை திடீரென வெளியே பாய்ந்தோடி வந்தது. சிறுமி கோகிலாவை அப்படியே வயிற்றில் கவ்விய சிறுத்தை மீண்டும் வேலியைத் தாண்டி ஓட எத்தனித்தது.\nஇதைப் பார்த்து பதறிப் போன சோபன் பாபு, மகா துணிச்சலுடன் தனது இன்னொரு மகளின் பிடியை உதறி விட்டு விட்டு கோகிலாவின் கால்களைப் பிடித்து வேகமாக இழுத்தார். அவரது கதறல் குரலைக் கேட்ட அப்பகுதி வியாபாரிகளும், பக்தர்களும் திரண்டு வந்து சத்தமாக குரல் கொடுக்கவே பயந்து போன சிறுத்தை, குழந்தையை கீழே போட்டு விட்டு ஓடி விட்டது.\nகண் இமைக்கும் நேரத்திற்குள் நடந்து விட்ட இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. குழந்தையின் வயிற்றில் சிறுத்தையின் பற்கள் பதிந்திருந்தன. உடனடியாக குழந்தையை திருப்பதி ரூயா மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு குழந்தைக்கு அவசர சிகிச்சை அளிக்கப்பட்டது.\nரத்த வாடை பார்த்து விட்டதால் மறுபடியும் சிறுத்தை வரலாம் என்ற அச்சத்தால் மலை மீதிருந்த பக்தர்கள் கீழே இறங்க வேண்டாம் எனவும், கீழிருந்து மலைப் பாதை வழியாக யாரும் வர வேண்டாம் எனவும் கோவில் நிர்வாகம் எச்சரிக்கை தகவல் விடுத்தது.\nஏற்கனவே சிறுத்தை நடமாட்டம் இங்கு இருந்திருக்கிறது. அப்போது புகை போட்டும், நெருப்பை மூட்டியும் சிறுத்தையை விரட்டி வந்துள்ளனர்.\nஆனால் தற்போதுதான் முதல் முறையாக மனிதர்கள் மீது சிறுத்தை தாக்குதல் நடத்தியிருக்கிறது.\nகடவுள்தான் தனது குழந்தையை காப்பாற்றியதாக அதிர்ச்சி இன்னும் விலகாத நிலையில் இருந்த சோபன்பாபு கூறினார்\nகோழியில் இருந்துதான் முட்டை வந்ததாம் : விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு\nமுட்டையில் இருந்து கோழி வந்ததா? அல்லது கோழியில் இருந்து முட்டை வந்ததா? என்ற கேள்விக்கு நீண்ட நாட்களாக பதில் அளிக்க முடியாமல் இருந்த நிலையில், தற்போது கோழியில் இருந்துதான் முட்டை வந்ததாக விஞ்ஞானிகள் கண்டு பிடித்து உள்ளனர். இங்கிலாந்தில் உள்ள ஷெப்பீல்டு, வார்விக் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் இதுபற்றி ஆய்வு நடத்தினார்கள். முட்டையின் செல்களை சூப்பர் கம்ப்யூட்டர் மூலம் ஆய்வு செய்ததில் முட்டையின் செல்கள் வோக்லெடின்-17 என்ற புரோட்டின் மூலம் உருவாகி இருந்தது. இந்த வோக்லெடின்-17 செல் கோழியின் உடலில் இருப்பதாகும். அதுதான் முட்டையாக மாறி இருக்கிறது. வோக்லெடின்-17 புரோட்டின், கிறிஸ்டல், நியூகிளீசாக மாறி தானாக வளர்ச்சி பெற்று முட்டை செல்களாக மாறுவது இதன் மூலம் கண்டு பிடிக்கப்பட்டது. எனவே கோழியில் இருந்துதான் முட்டை வந்துள்ளது என்று அடித்துக்கூறுகின்றனர் அந்த விஞ்ஞானிகள்!\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 6:27 AM இந்த இடுகையின் இணைப்புகள்0கருத்துரைகள்\n3ஜி இணைந்த நெட்புக் கம்ப்யூட்டர் மற்றும் ஆலிவ் பார் எவர் ஆன் என்ற இருவகை சிம்களை ஏற்றுக் கொள்ளக் கூடிய மொபைல் போனையும் விற்பனைக்கு அறிமுகப்படுத்திய ஆலிவ் டெலிகம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் ஆலிவ் விஸ் (Olive Wiz) என்ற சோஷியல் நெட்வொர்க் மொபைல் போன் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் மூன்று (2 ஜி.எஸ்.எம். + ஒரு சி.டி.எம்.ஏ) சிம்களை இணைத்துப் பயன்படுத்தலாம்.\nஇதில் ஆப்பரா மினி பிரவுசர் தரப்பட்டுள்ளது. ஒரு கிளிக் மூலம் பேஸ்புக் மற்றும் ட்விட்டர் தளங்களுகுச் செல்லலாம்; பிரவுசிங் மேற்கொள்ளலாம். குவெர்ட்டி கீ போர்டு உள்ளது. எளிதாக இமெயில்களைக் கையாள இது உதவுகிறது. ஒரு மொபைல் போனில் காணப்படும் அனைத்து அடிப்படை வசதிகளுடன்,2மெகா பிக்ஸெல் கேமரா,4ஜிபி வரை அதிகப்படுத்தக்கூடிய எஸ்.டி.கார்ட் ஸ்லாட்,2.2 அங்குல வண்ணத் திரை, இமெயில் பிரவுசிங், WAP/MMS/GPRS தொழில் நுட்ப வசதிகள், ஸ்டீரியோ ஹெட்செட், ஸ்பீக்கர் போன்,எப்.எம். ரேடியோ ஆகியவை உள்ளன. இதன் விலை ரூ.6,000க்கும் குறைவாகத்தான் இருக்கும் என இதனைத் தயாரித்த நிறுவனம் அறிவித்துள்ளது.\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 4:38 AM இந்த இடுகையின் இணைப்புகள்0கருத்துரைகள்
ஊழியர்களின் சம்பளத்தில் 25 சதவீதம் வெட்டு - ஜெட் ஏர்வேஸ் அதிரடி.. ஊழியர்கள் விரக்தி..! | Jet Airways To Cut Employees Salary By Up to 25% - Tamil Goodreturns\nPublished: Thu, Aug 2, 2018, 12:34 [IST]\nஜெட் ஏர்வேஸ் நிறுவனம் ஊழியர்களின் சம்பளத்தில் 25 சதவீதத்தைக் குறைக்க முடிவு செய்துள்ளது. கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் ரூபாய் மதிப்பு வீழ்ச்சி காரணமாக இந்தக் கடினமான முடிவுக்கு வந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.\nஊழியர்கள் மற்றும் விமானிகள் கலந்து கொண்ட கூட்டத்தில் இதற்கான முடிவு அறிவிக்கப்பட்டது. தற்போது பெற்று வரும் சம்பளத்தில் 25 சதவீதத்தை விட்டுககோடுக்குமாறு நிர்வாகம் கேட்டுக்கொண்டதாகக் குட் ரிட்டன் தளத்துக்கு வந்த தகவல்கள் உறுதிப்படுத்தியுள்ளன.\n25 விழுக்காடு சம்பள வெட்டு\nஆண்டுக்கு 12 லட்சம் ரூபாய் பெறும் ஊழியர்களின் சம்பளத்தில் இருந்து 12 சதவீதம் வெட்டப்படவுள்ளது. 1 கோடி ரூபாய் மற்றும் அதற்கு மேல் சம்பளம் பெறும் அதிகாரிகளின் ஊதியத்திலிருந்து 25 சதவீதம் குறைக்கப்படவுள்ளது. விமானிகள் வாங்கி வரும் ஊதியத்தில் 17 விழுக்காட்டை வெட்டவும் தீர்மானித்துள்ளது.\nஅதிரடி நடவடிக்கை தொடக்கம்\nஜெட்ஏர்வேஸ் செயல் அதிகாரியின் ஊதியப் பிடிப்பிலிருந்து சம்பள வெட்டு நடவடிக்கை இந்த மாதத்தில் இருந்து தொடங்குகிறது. இந்த அதிரடி நடவடிக்கைக்குக் கால வரம்புகள் எதையும் நிர்ணயிக்காத அந்த நிறுவனம், பிடித்தம் செய்யப்பட்ட தொகை மீண்டும் வழங்கப்படுமா என்பதையும் தெளிவாக அறிவிக்கவில்லை.\nசம்பள வெட்டு ஒரு முன்மாதிரி\nதிட்டமிட்ட வணிக இலக்குகளை எட்டுவதற்கு இந்தச் சம்பளக் குறைப்பு சரியான நடவடிக்கை என ஜெட்ஏர்வேஸ் நம்புகிறது. இந்த நடவடிக்கை மற்ற நிறுவனங்களுக்கு ஒரு முன்மாதிரியாக இருந்து விளைவைகளை ஏற்படுத்தக்கூடியது.\nநரேஷ் கோயல் தலைமையிலான ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் ஆண்டுக்கு 3000 ஆயிரம் கோடி ரூபாயைச் சம்பளமாக வழங்கி வருகிறது. ஊதிய வெட்டு மூலம் 500 கோடி ரூபாயைக் குறைக்கத் திட்டமிட்டுள்ளது. இதற்கு விமானிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. மற்ற நிறுவனங்கள் ஊதிய உயர்வு அளிக்கும்போது, ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் சம்பள வெட்டு ஜீரணிக்க முடியாதது என்கின்றனர்.\nRead more about: ஜெட்ஏர்வேஸ் ஊழியர்கள் சம்பளம் குறைப்பு\nJet Airways To Cut Employees Salary By Up to 25%
Revitol Hair Removal Cream உடனான அனுபவங்கள் - முடி வளர்ச்சியின் ஒரு முகமூடி ஆய்வில் உண்மையிலேயே சாத்தியமா?\n5.1/10 1:03 Dalia Perry\nRevitol Hair Removal Cream உண்மையில் வேலை செய்யும் என்று நீங்கள் கிட்டத்தட்ட நினைக்கலாம். எனவே, எல்லாவற்றிற்கும் மேலாக, ஒரு பக்கச்சார்பற்ற பார்வையாளர் சமீபத்தில் இலக்கு வாங்குபவர்களால் தொடர்பு கொள்ளப்பட்ட இந்த தயாரிப்பைப் பயன்படுத்தி எண்ணற்ற உறுதிப்படுத்தும் சான்றுகளைக் குறிப்பிடுவதன் மூலம் முடிக்கிறார்.\nRevitol Hair Removal Cream பெரும்பாலும் உங்கள் பிரச்சினைக்கு தீர்வாக இருக்கும். தயாரிப்பு செயல்படுகிறது என்பதை பல்வேறு பயனர்கள் ஏற்கனவே நிரூபித்துள்ளனர். பின்வரும் மதிப்பாய்வில், இது எந்த அளவிற்கு உண்மை என்பதை நாங்கள் தேடினோம், மிகச் சிறந்த இறுதி முடிவுகளுக்கு நீங்கள் எவ்வாறு தீர்வைப் பயன்படுத்த வேண்டும்.\nRevitol Hair Removal Cream பற்றிய மிக முக்கியமான தகவல்\nமுடி வளர்ச்சியை அதிகரிக்கும் திட்டத்துடன் உற்பத்தி நிறுவனம் Revitol Hair Removal Cream உருவாக்கியது. உங்கள் குறிக்கோள்களைப் பொறுத்து, தயாரிப்பு நிரந்தரமாக அல்லது குறுகிய காலத்திற்கு பயன்படுத்தப்படும்.\nஆசை மகிழ்ச்சியான இறுதி நுகர்வோர் Revitol Hair Removal Cream மூலம் தங்கள் சிறந்த வெற்றியைப் பற்றி Revitol Hair Removal Cream. நீங்கள் அதை ஆன்லைன் ஸ்டோரில் வாங்குவதற்கு முன் தெரிந்து கொள்வது எது?\nமறந்துவிடக் கூடாது: நீங்கள் இந்த முறையைத் தேர்வுசெய்தால், தயக்கமின்றி பயன்படுத்தக்கூடிய இயற்கை பொருட்களின் அடிப்படையில் ஒரு தயாரிப்பு கிடைக்கும். Revitol Hair Removal Cream பின்னால் உள்ள நிறுவனம் நன்கு அறியப்பட்ட மற்றும் நீண்ட காலமாக அதன் தயாரிப்புகளை இணையத்தில் விற்பனை செய்து வருகிறது, எனவே நிறுவனம் ஏராளமான அறிவை குவித்துள்ளது.\nRevitol Hair Removal Cream டெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிப்பதில் மட்டுமே கவனம் செலுத்துகிறது. இது சிறப்பு. போட்டியிடும் தயாரிப்புகள் பெரும்பாலும் எல்லா சிக்கல்களுக்கும் ஒரு பீதி என்று புகழப்படுகின்றன, ஆனால் இது அரிதாகவே செயல்படுகிறது.\nஆரோக்கியமான பொருட்கள் குறைவாகவே சேர்க்கப்படுகின்றனவா இல்லையா என்பதற்கு இது வழிவகுக்கிறது, இது பயன்பாட்டை நேரத்தை வீணடிக்கும்.\nRevitol Hair Removal Cream ஆன்லைன் ஸ்டோரில் உற்பத்தி நிறுவனத்திடமிருந்து கிடைக்கிறது, இது இலவசம், விரைவானது மற்றும் அனுப்ப எளிதானது.\nஇந்த காரணங்களுக்காக, Revitol Hair Removal Cream வாங்குவது உறுதியளிக்கிறது:\nமுடி வளர்ச்சியை அதிகரிக்க உதவும் தயாரிப்புகள் பெரும்பாலும் ஒரு Revitol Hair Removal Cream மட்டுமே கிடைக்கின்றன - Revitol Hair Removal Cream வாங்க எளிதானது மற்றும் ஆன்லைனில் மிகவும் மலிவானது\nரகசிய இணைய வரிசைப்படுத்துதலால் உங்கள் அவல நிலையைப் பற்றி யாரும் கேட்கத் தேவையில்லை\nRevitol Hair Removal Cream விளைவுகள் குறிப்பாக தயாரிப்புகளின் பண்புகளை கண்காணிக்க போதுமான விஷயத்தை கையாள்வதன் மூலம் புரிந்துகொள்ள விரைவாக இருக்கும்.\nசிக்கலை நீங்கள் எங்களிடம் Revitol Hair Removal Cream : ஆகவே, அறிக்கைகள் மற்றும் பயனர் சோதனைகளை கணக்கில் எடுத்துக்கொள்வதற்கு முன், Revitol Hair Removal Cream விளைவு Revitol Hair Removal Cream உள் தகவல் இங்கே:\nRevitol Hair Removal Cream விளைவுகள் பற்றிய Revitol Hair Removal Cream அதிகாரப்பூர்வ மற்றும் நுகர்வோர் ஆகியோரால் சான்றளிக்கப்பட்டன, மேலும் அவை முகப்புப்பக்கங்களிலும் அச்சு ஊடகங்களிலும் காணப்படுகின்றன.\nRevitol Hair Removal Cream என்ன பொருட்கள் காணப்படுகின்றன?\nRevitol Hair Removal Cream ஒவ்வொரு மூலப்பொருளையும் Revitol Hair Removal Cream செய்வது மேலே இருக்கும், அதனால்தான் மிக முக்கியமான3இல் கவனம் செலுத்துகிறோம்:\nஅத்தகைய உணவு நிரப்பும் முகவரியில் எந்த கரிம பொருட்கள் சரியாக சேர்க்கப்பட்டுள்ளன என்பதைத் தவிர, அந்த பொருட்களின் அளவின் துல்லியமான அளவு மிக முக்கிய பங்கு வகிக்கிறது.\nஅதிர்ஷ்டவசமாக, Revitol Hair Removal Cream, வாடிக்கையாளர்கள் நிச்சயமாக அளவைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை - இதற்கு மாறாக: இந்த பொருட்கள் ஆய்வுகளில் கவனம் செலுத்துகின்றன.\nஅதன்படி, Revitol Hair Removal Cream என்பது மனித உடலின் இயல்பான வழிமுறைகளைப் Revitol Hair Removal Cream ஒரு வளமான தயாரிப்பு என்று முடிவு செய்ய வேண்டும். இது Trenbolone போன்ற பிற கட்டுரைகளிலிருந்து இந்த தயாரிப்பை வேறுபடுத்துகிறது.\nபோட்டி தயாரிப்புகளுக்கு மாறாக, Revitol Hair Removal Cream உங்கள் உடலுடன் செயல்படுகிறது. இது பெரும்பாலும் தோன்றாத பக்க விளைவுகளையும் நிரூபிக்கிறது.\nமுதல் பயன்பாடு சற்று வழக்கத்திற்கு மாறானதாக உணர வாய்ப்பு உள்ளதா? சிறிது நேரம் ஆகுமா, அதனால் முழு விஷயமும் நன்றாக இருக்கிறது?\nஉண்மையைச் சொல்வதற்கு, இதற்கு சிறிது நேரம் ஆகும் என்று நீங்கள் சொல்ல வேண்டும், மேலும் பயன்பாட்டின் ஆரம்பத்தில் ஒரு அசாதாரண உணர்வு ஏற்கனவே ஏற்படலாம்.\nRevitol Hair Removal Cream வாங்குவதை நீங்கள் அனுபவிப்பீர்களா?\nநிச்சயமாக, முடி வளர்ச்சியை அழகுபடுத்தும் எவரும் அல்லது எவரும் Revitol Hair Removal Cream வாங்குவதன் மூலம் சிறந்த முன்னேற்றத்தை Revitol Hair Removal Cream.\nநீங்கள் எளிதாக Revitol Hair Removal Cream எடுத்துக் கொள்ளலாம் என்று Revitol Hair Removal Cream வேண்டாம் மற்றும் ஒரே இரவில் அனைத்து பிரச்சினைகளும் தீர்க்கப்படும். பொறுமையாக இருங்கள். அது உங்களுக்கு தெளிவாக இருக்க வேண்டும்.\nஅவர்களுக்கு ஒவ்வொரு வகையிலும் பொறுமையும் விடாமுயற்சியும் தேவை, ஏனென்றால் உடல் மாற்றங்கள் நீண்ட நேரம் எடுக்கும்.\nRevitol Hair Removal Cream இலக்குகளை உணர உதவுகிறது. இருப்பினும், ஒருவர் இன்னும் முதல் படியை தனியாக மேற்கொள்ள வேண்டும். நீங்கள் இறுதியாக உங்கள் முடி வளர்ச்சியை மேம்படுத்த விரும்பினால், Revitol Hair Removal Cream உருவாக்கவும், Revitol Hair Removal Cream, விரைவில் வெற்றிபெற மகிழ்ச்சியாக இருக்கலாம்.\nஇது உண்மையிலேயே செயல்படுகிறது என்பதை நீங்கள் இப்போது உறுதிப்படுத்த விரும்பினால், உறுதியளிக்கவும்: விஷயம் அனைவருக்கும் மிகவும் எளிதானது மற்றும் இயங்கக்கூடியது.\nஎனவே பயன்பாட்டைப் பற்றி கவலைப்படுவது பரிந்துரைக்கப்படவில்லை. உங்கள் தனிப்பட்ட தொகையை எப்போதும் மற்றும் சுயாதீனமாக எடுத்துக்கொள்வது மிகவும் எளிதானது என்று நிறுவனம் தெளிவாகக் கூறுகிறது.\nஅதிக எண்ணிக்கையிலான வாங்குபவர்களின் சான்றுகளால் இது நிரூபிக்கப்பட்டுள்ளது.\nவழங்கப்பட்ட விளக்கத்திலும், இணைக்கப்பட்ட வலைத்தளத்திலும், கட்டுரையை திறம்பட மற்றும் திறம்பட கையாள வேண்டிய அனைத்து விஷயங்களையும் நீங்கள் படிக்க இலவசம்.\nஇந்த நோக்கத்திற்காக ஆரம்ப நிலை இன்னும் துல்லியமாக ஆராயப்பட வேண்டுமானால், எந்தவொரு குற்றச்சாட்டையும் ஆதாரங்களின் அடிப்படையில் இங்கே தெளிவாக நிராகரிக்க வேண்டும்.\n> Revitol Hair Removal Cream -ஐ மிகக் குறைந்த விலையில் ஆர்டர் செய்ய கிளிக் செய்க <\nஉங்களுக்கு எத்தனை வாரங்கள் ஆகும்? முயற்சி செய்து அனுபவத்தை உருவாக்குங்கள்! Revitol Hair Removal Cream உடனடியாக உதவும் பயனர்களில் நீங்களும் இருக்கலாம்.\nசிலர் உடனடியாக மாற்றத்தைக் காணலாம். மற்றவர்கள் முடிவுகளைப் பார்க்க இரண்டு மாதங்கள் ஆகலாம்.\nஉங்கள் புதிய சுயமரியாதையை நீங்கள் நிச்சயமாகக் காண்பீர்கள். உங்களுக்காக, நிச்சயமாக, மாற்றம் ஏற்படாது, ஆனால் மற்றவர்களுக்கு நீங்கள் எதிர்பாராத முகஸ்துதி தருகிறீர்கள்.\nதயாரிப்புடன் மற்றவர்கள் எவ்வளவு திருப்தியடைகிறார்கள் என்பதைக் கண்டறிய இது மிகவும் பரிந்துரைக்கப்படுகிறது. வெளிநாட்டினரின் பக்கச்சார்பற்ற மதிப்புரைகள் ஒரு உயர் தரமான தயாரிப்புக்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டு.\nநேரடி ஒப்பீடுகள், பாதிக்கப்பட்டவர்களின் கருத்துக்கள் மற்றும் மதிப்புரைகளை மதிப்பாய்வு Revitol Hair Removal Cream விளைவாக, Revitol Hair Removal Cream உடன் நேர்மறையான முடிவுகளின் தொகுப்பைக் கண்டேன்:\nRevitol Hair Removal Cream முன்னேற்றம்\nRevitol Hair Removal Cream மூலம் Revitol Hair Removal Cream அனுபவம், பொது ஆச்சரியத்திற்கு, முற்றிலும் உறுதிப்படுத்தக்கூடியது. GenF20 Plus மதிப்பாய்வைக் கவனியுங்கள். இதுபோன்ற தயாரிப்புகளுக்கான தற்போதைய சந்தையை காப்ஸ்யூல்கள், பால்சம் மற்றும் பல தயாரிப்புகளின் வடிவத்தில் நாங்கள் ஏற்கனவே கட்டுப்படுத்தி வருகிறோம், ஏற்கனவே அதிக அறிவைப் பெற்றுள்ளோம், மேலும் நம்மை நாமே பரிசோதித்தோம். இருப்பினும், கட்டுரையின் விஷயத்தைப் போலவே தெளிவாக உறுதிப்படுத்தும் ஆய்வுகள் மிகவும் அரிதானவை.\nமுடி வளர்ச்சியை அதிகரிப்பதில் நீண்டகால வெற்றியைப் பற்றி கிட்டத்தட்ட அனைத்து நுகர்வோர் பேசுகிறார்கள்\nஒரு அனுபவமிக்க நுகர்வோர் ஏற்கனவே செயலில் உள்ள பொருட்களின் கலவையிலிருந்து குறிப்பிடத்தக்க தரத்திற்கு கவனத்தை ஈர்ப்பார். பல பயனர் அறிக்கைகள் மற்றும் கொள்முதல் விலை ஆகியவற்றைச் சேர்க்கவும்: இவை கையகப்படுத்துதலுக்கான நல்ல உந்துதல்.\nஎனவே, நீங்கள் அவற்றில் ஆர்வமாக இருந்தால், Revitol Hair Removal Cream பயனுள்ளதாக இருக்கும். நீங்கள் உற்பத்தியாளரிடமிருந்து Revitol Hair Removal Cream என்பதை நினைவில் கொள்க. சரிபார்க்கப்படாத விற்பனையாளர்களால் விளம்பரப்படுத்தப்பட்ட தயாரிப்பு போலியானது அல்ல என்பதை ஒருபோதும் எதிர்பார்க்க முடியாது.\nRevitol Hair Removal Cream வக்கீல்கள் வாதிடும் அனைத்து வாதங்களையும் பகுப்பாய்வு செய்வதில் ஆர்வமுள்ள எவரும், தயாரிப்பு அனைத்து மட்டங்களிலும் வாக்குறுதியளிப்பதை Revitol Hair Removal Cream என்பதைக் காணலாம்.\nநான் பல தயாரிப்புகளை விரிவாக ஆராய்ச்சி செய்து பரிசோதித்ததன் காரணமாக, Revitol Hair Removal Cream உண்மையிலேயே தொழில்துறையில் முதலிடம் வகிக்கிறது என்பதை Revitol Hair Removal Cream முடியும்.\nஇந்த தயாரிப்பு வாங்குவதில் அனைவரும் என்ன கருத்தில் கொள்ள வேண்டும்\nநம்பத்தகாத இணைய கடைகளில் பேரம் ஷாப்பிங் செய்யும்போது கேள்வி இல்லாமல் தவிர்க்க வேண்டும்.\nஇந்த வலைத்தளங்களில் பயனற்றதாக இருக்கும் கருத்துத் திருட்டுத்தனத்தைப் பெறுவதும் மோசமான சூழ்நிலையில் தீங்கு விளைவிப்பதும் சாத்தியமாகும். மேலும், பாதிக்கப்பட்டவர்கள் தவறான வாக்குறுதிகளால் ஈர்க்கப்படுகிறார்கள், இது நெருக்கமான பரிசோதனையில் மோசடியாக மாறும்.\nஆபத்து இல்லாத மற்றும் பயனுள்ள தயாரிப்பைப் பெறுவதற்கு, பரிந்துரைக்கப்பட்ட கடை முயற்சிக்கப்பட்ட மற்றும் சோதிக்கப்பட்ட வழியாகும்.\nநான் ஏற்கனவே வலையில் உள்ள அனைத்து மாற்று வழங்குநர்களையும் சரிபார்த்துள்ளேன்: ஆன்லைனில் சில்லறை விற்பனையாளரால் இணைக்கப்பட்டதில் மட்டுமே, அசலைப் பெறுவீர்கள் என்று நீங்கள் உறுதியாக நம்பலாம்.\nபின்வரும் உதவிக்குறிப்புகள் மிகவும் நம்பகமான அணுகுமுறையை விளக்குகின்றன, நீங்கள் தீர்வை முயற்சிக்க விரும்பினால்:\nவலையில் கவனக்குறைவான ஆராய்ச்சி அமர்வுகளை நீங்கள் தவிர்க்க வேண்டும் - நாங்கள் மதிப்பாய்வு செய்த சலுகைகளைப் பயன்படுத்தவும். இணைப்புகளை புதுப்பித்த நிலையில் வைத்திருக்க நான் என்னால் முடிந்த அனைத்தையும் செய்கிறேன், எனவே நீங்கள் பாதுகாக்கப்படுவீர்கள், எனவே குறைந்த விலை மற்றும் சிறந்த விநியோக நிலைமைகளுக்கு ஆர்டர் செய்யலாம்.
கடைசிகாலத்தில் யாரும் இன்றி இவ்வளவு கஷ்டப்பட்டாரா நடிகை காந்திமதி? இவர் வாழ்க்கையில் இவ்வளவு பெரிய சோ க ங் களா..? – News44Times\nகடைசிகாலத்தில் யாரும் இன்றி இவ்வளவு கஷ்டப்பட்டாரா நடிகை காந்திமதி? இவர் வாழ்க்கையில் இவ்வளவு பெரிய சோ க ங் களா..?\nதமிழ் சினிமாவில் யதார்த்தமான நடிப்புக்கு பெயர் பெற்றவர்களில் நடிகை காந்திமதியும் ஒருவர். சுவர் இல்லாத சித்திரங்கள், மண்வாசனை, கரகாட்டக்காரன், 16 வயதினிலே, முத்து ஆகிய படங்கள் காந்திமதியின் சினிமா கேரியரில் மிக முக்கியமான படங்கள்.\nநடிகை காந்திமதி, மனோரம்மாவுக்கே ஒரு காலத்தில் டப் கொடுத்தவர். இருந்தும் மனோரம்மா அளவுக்கு தன்னால் புகழ்பெற முடியவில்லை என்ற வருத்தம் காந்திமதிக்கு ஆழமாக உண்டு. குணச்சித்திர வேடம் என்றில்லாமல், காந்திமதி துவங்க காலங்களில் கிளாமர் நடிகையாகவும், ஹீரோயினாகவும் கூட நடித்தார். சீரியல்களிலும் மை டியர் பூதம், கோலங்கள் ஆகிய தொடர்களிலும் நடித்து இருந்தார்.\nஅடுத்தடுத்து சினிமா என ஓடிக்கொண்டே இருந்ததால் காந்திமதி திருமணம் செய்துகொள்ளவில்லை. இதனால் அவரது உடன்பிறந்த சகோதிரியையே சார்ந்து இருந்தார். தன் சகோதிரியின் பிள்ளைகளை தத்தெடுத்து வளர்த்தார். காந்திமதி நன்றாக சினிமவில் சம்பாதித்தவரை அவரைக் கண்ணும், கருத்துமாகப் பார்த்துக்கொண்டனர். ஆனால் சினிமாவில் வருமானம் நின்ற் ஒரு கட்டத்தில் கேன்சரும் வந்து பாதிக்கப்பட்டார் காந்திமதி. அதன் பின்னர் குடும்பம் அவரைக் கவனிக்காமல் விட்டுவிட்டது. கடைசிக்காலத்தில் தண்ணீர் குடுக்கக் கூட ஆள் இல்லாமல், கவனிக்கவும் ஆள் இன்றி ரொம்பவே பரிதாபமாக இ ற ந் தி ரு க்கிறார் நடிகை காந்திமதி. இந்த சம்பவம் இப்போது தெரிய வந்து அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.\nஎன்னதான் சினிமாவே வாழ்க்கையாகிப் போனாலும் சொந்த வாழ்விலும் ஒருவர் எந்த அளவுக்கு சிரத்தை எடுக்க வேண்டும் என்பதற்கு நடிகை காந்திமதியின் வாழ்க்கையே ஒரு உதாரணம்!
உடலில் உள்ள கொழுப்பைக் குறைக்க இந்த பழத்தை சாப்பிடுங்கள்! | Bhoomitoday\nபப்பாளியை உண்பவர்கள் பெரும்பாலும் அழகு கூடும். தேகம் பளபளப்பாகும் என்ற எண்ணத்திலேயே அதை எடுத்து கொள்கிறார்கள். ஆனால், ’வைட்டமின் ஏ’ அதிகளவு நிறைந்துள்ள பப்பாளியைச் சாப்பிடுவதால் செரிமானத் திறன் அதிகரிக்கும். உடலின் ரத்தத்தைச் சுத்திகரித்து வயிற்றுப் புழுக்களை அழிக்கும். தினம் ஒரு துண்டு பப்பாளிப்பழம் சாப்பிட்டு வரக் கண்பார்வை பளிச்சிடுவதோடு மலச்சிக்கலும் தடைப்படுகிறது.\nபப்பாளியில் நார்ச்சத்து, விட்டமின் C மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்கள் நிறைய உள்ளன. அவை தமனிகளில் கொழுப்பைத் தடுக்கிறது. அதிகப்படியான கொழுப்பு தமனிகளில் உருவாவதைத் தடுக்கிறது. இதனால் மாரடைப்பு ஏற்படும். ஆனால் பப்பாளியை சாப்பிட்டால் நன்மை உண்டாகும். இயற்கையாகவே கொழுப்பின் அளவை குறைக்கும் தன்மை பப்பாளிப் பழத்திற்கு உண்டு.\nபல் சம்மந்தமான குறைபாட்டிற்கும், சிறுநீர்ப்பையில் உண்டாகும் கல்லைக் கரைக்கவும், பப்பாளி சாப்பிட்டால் போதும். மேலும் நரம்புகள் பலப்படவும், ஆண்மை தன்மை பலப்படவும், ரத்த விருத்தி உண்டாகவும், ஞாபக சக்தியை உண்டு பண்ணவும் பப்பாளி சாப்பிடுங்கள்.\nபப்பாளிப் பாலை குழந்தைகளின் தலையில் ஏற்படும் புண்களில் பூசி வர புண்கள் ஆறும். பப்பாளி இலைகளை அரைத்துக் கட்டி மேல் போட்டு வர கட்டி உடையும். பப்பாளிக் காயின் பாலை வாய்ப்புண், புண்கள் மேல் பூச புண்கள் ஆறும். பப்பாளிப் பாலை, பசும்பாலுடன் கலந்து சேற்றுப் புண்கள் மேல் தடவி வர புண்கள் ஆறும்.\nஇது மலச்சிக்கலை நீக்கி, செரிமானத்திற்கு உறுதுணையாக இருக்கும். பப்பாளி குறைவான கலோரிகளும், வளமையான ஊட்டச்சத்துக்களும் நிறைந்த பப்பாளியைச் சேர்த்துக் கொள்ளுங்கள். செரிமானத்திற்கு உதவி செய்வதால், இது உடல் எடையைக் குறைக்கவும் உதவும்.\nRelated Topics:papayapapaya benefitspapaya caloriespapaya in englishpapaya nutritionpapaya treepapaya vitaminunripe papaya
துாத்துக்குடி அருகே புதிய சமுதாய நலக்கூடம் : சண்முகநாதன் எம்.எல்.ஏ. பார்வை\nவியாழன் 12, அக்டோபர் 2017 6:12:22 PM (IST)\nசெய்துங்கநல்லூர் எஸ்.என்.பட்டி 20 லட்ச ரூபாயில் சமுதாய நலக்கூடம் கட்டும் பணியை சண்முக நாதன் எம்.எல்.ஏ. பார்வையிட்டார்.\nகருங்குளம் ஒன்றியம் செய்துங்கநல்லூர் எஸ்.என்.பட்டியில் எம்.எல்.ஏ தொகுதி மேம்பாட்டு நிதிசார்பில் கடந்த 2015&16 ல் சமுதாய நலம் கட்ட 20 லட்சம் ஓதுக்கீடு செய்யப்பட்டது. இந்த பணி தற்போது கட்டி முடிக்கப்பட்டு வண்ணம் தீட்டும் பணிநடந்து வருகிறது. இந்த பணியை ஸ்ரீவைகுண்டம் எம்.எல்.ஏ சண்முகநாதன் பார்வையிட்டார்.மேலும் அவர் கூறியதாவது, எஸ்.என்.பட்டி கிராமத்தில் சுமார் 100 குடும்பங்கள் உள்ளன. இந்த குடும்ப மக்கள் தங்களது கோயில் கொடைவிழா மற்றும் திருமண விழா போன்ற நிகழ்ச்சிகள் நடந்த போதுமான இடம் இல்லாமல் தவித்து வந்தனர்.\nநான் இவ்வூர் கோயில் கொடைவிழாவிற்கு கடந்த 2015 ஆம் ஆண்டு வந்த போது அப்போதைய மாவட்ட கவுன்சிலர் திருப்பாற்கடல் மூலமாக மனு அளித்தனர். உடனடியாக அவர்கள் பயன்பெற 20 லட்ச செலவில் எனது தொகுதி மேம்பாட்டு திட்டம் சார்பில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணி நடந்து முடிந்துள்ளது. வருகிற மாதத்தில் இதன் திறப்பு விழா நடைபெறும். இதற்கான நடவடிக்கை நடந்து வருகிறது என்று கூறினார்.அவருடன் முன்னாள் மாவட்ட கவுன்சிலர் திருப்பாற்கடல், வி.கோவில்பத்து அதிமுக ஊராட்சி செயலளர் அந்தோணிகுமார், ராஜா உள்பட பலர் வந்தனர்.
'மாநாடு' படத்தில் மாறுபட்ட கோணத்தில் சிம்பு, திரைச்செய்தி - தமிழ் முரசு Cinema/Movie news in Tamil, Tamil Murasu\n'மாநாடு' படத்தில் மாறுபட்ட கோணத்தில் சிம்பு\nவெங்கட் பிரபு இயக்கும் மாநாடு படத்தில் சிம்புவின் நாயகியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரங்களில் பாரதிராஜா, எஸ்.ஏ.சந்திரசேகர் நடிக்க உள்ளனர். சுரேஷ் காமாட்சி தயாரிக்க, யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். கோப்புப்படம்\n14 Jan 2020 06:10 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 14 Jan 2020 10:34\n‘மாநாடு’ திரைப்படம் சிம்பு ரசிகர்களை நூறு விழுக்காடு திருப்திப்படுத்தும் வகையில் உருவாகி வருவதாகச் சொல்கிறார் இயக்குநர் வெங்கட் பிரபு.\nமிகவும் சவாலான ஒரு கதையைக் கையாள இருப்பதாகவும் தமிழ் சினிமாவுக்கு இது ஒரு புதுமையான கதைக்களமாக இருக்கும் என்றும் அவர் கூறுகிறார்.\nஎதிர்வரும் பிப்ரவரியில் ‘மாநாடு’ படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. இதில் கல்யாணி பிரியதர்ஷன் நாயகியாகவும், முக்கிய கதாபாத்திரங்களில் பாரதிராஜா, எஸ்.ஏ.சந்திரசேகர் நடிக்க உள்ளனர். சுரேஷ் காமாட்சி தயாரிக்க, யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.\nபடத்திற்கு யார் வில்லன் என்பது மட்டும் இன்னும் உறுதியாகவில்லையாம். இது தொடர்பாக முன்னணி நடிகர்களுடன் பேச்சுவார்த்தை நடந்துவருவதாகத் தகவல். இந்நிலையில், சினிமாவுக்காக தான் இதுவரை எழுதிய கதைகளில் மிகவும் சவாலான கதை‘மாநாடு’தான் என்கிறார் வெங்கட் பிரபு.\n“இந்தப் படத்தைத் தொடங்கியபோதே சில பிரச்சினைகளை எதிர்கொண்டோம். நாங்கள் எதிர்பாராத வகையில் சில திருப்பங்கள் நிகழ்ந்தன. இதனால் பலவிதமான செய்திகள் பரவின. படத்தைக் கைவிட்டதாகவும்கூட கூறப்பட்டது. ஆனால், இந்தக் கதை எங்கள் அனைவரையும் மீண்டும் இணைத்துள்ளது. அதனால் மகிழ்ச்சியாக உணர்கிறோம். படம் திட்டமிட்டபடி வெளியீடு காணும்,” என்கிறார் வெங்கட் பிரபு.\nபொதுவாக ஒரு படத்தின் நாயகனை வித்தியாசமான கோணத்தில் காட்டப்போவதாக இயக்குநர்கள் சொல்வது வழக்கமான ஒன்றுதான். வெங்கட் பிரபுவும் அதற்கு விதிவிலக்கல்ல.\n‘மாநாடு’ படத்தில் வித்தியாசமான ஒரு கதைக் களத்தில் முற்றிலும் மாறுபட்ட சிம்புவைக் காணமுடியும் என்கிறார்.\n“அப்படி என்ன வித்தியாசம்? என்ற கேள்வி எழக்கூடும். சிம்புவக்கு என்று சில தனித்துவமான அம்சங்கள் உள்ளன. அவர் திரையில் தோன்றினால் அவற்றையெல்லாம் ரசிகர்கள் எதிர்பார்ப்பார்கள். ஆனால், அவர் வழக்கமாகச் செய்யக்கூடிய விஷயங்கள் எதுவுமே இந்தப் படத்தில் இருக்கக்கூடாது என முடிவு செய்துள்ளேன்.\n“இதற்கு முன்பு ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ படத்தில் கௌதம் மேனன் தனக்கே உரிய பாணியில் சிம்புவை வித்தியாசமாகக் காட்டினார். அது மக்களுக்கும் பிடித்திருந்தது,” என்று சுட்டிக்காட்டுகிறார் வெங்கட்பிரபு.\nகௌதம் மேனனைப் பின்பற்றி இவரும் தனக்கே உரிய பாணியில் வித்தியாசமான சிம்புவைத் திரையில் காட்டப் போகிறாராம். அது சிம்பு ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் அனைத்துத் தரப்பினருக்கும் பிடிக்கும் என நம்புகிறாராம்.\n“அதுமட்டுமல்ல! இது வித்தியாசமான கதைக்களம் என்று முன்பே கூறிவிட்டேன். இந்த வார்த்தைகளை நியாயப்படுத்தும் வகையில் இந்தப் படம் உருவாகும். திரையில் காணும்போது நான் சொல்வது எந்தளவு உண்மை என்பது உங்களுக்கும் புரியும்.\n“சிம்பு மிகுந்த திறமைசாலி. அவரைச் சரியான முறையில் பயன்படுத்திக்கொள்வது இயக்குநரின் பொறுப்பு. அதைக் கச்சிதமாகச் செய்யும் பட்சத்தில் ஒரு படைப்பு நிச்சயம் வெற்றிகரமாக உருவாகும்,” என்கிறார் வெங்கட்பிரபு.\nஇவர் சொன்ன கதையைக் கேட்ட சிம்பு, மிகவும் நன்றாக இருக்கிறது என்றும் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரு வெற்றிப் படத்தைத் தன் ரசிகர்களுக்குத் தர முடியும் என்ற நம்பிக்கை அதிகரித்துள்ளது என்றும் கூறினாராம்.\nசிம்புவுக்காக கதை எழுதாமல், கதைக்கு ஏற்ப சிம்புவை நடிக்க வைப்பதுதான் வெங்கட் பிரபுவின் திட்டம் என்கிறது அவரது தரப்பு.\nமாநாடு படப்பிடிப்பை வெளிநாடுகளிலும் நடத்த திட்டமிட்டுள்ளாராம் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி. அதற்கான ஏற்பாடுகள் தற்போது நடைபெற்று வருகின்றன. அநேகமாக பிப்ரவரியில் சென்னையில் முதற்கட்ட படப்பிடிப்பைத் தொடங்கும் மாநாடு படக் குழு, மார்ச் மாதம் வெளிநாடு பறக்கும் என எதிர்பார்க்கலாம். நீண்ட இடைவெளிக்குப் பிறகு தங்கள் அபிமான நாயகனின் வெற்றிப் படத்துக்காக சிம்பு ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கிடக்கிறார்கள்.\nகதாபாத்திரமே முக்கியம் என்கிறார் சுனு லட்சுமி\nகட்டணம் அதிகரிப்பு; விமானப் பயணிகள் தவிப்பு
வறுமை-குடி: மேக்கப்மேன் தற்கொலை! | Cinema makeup man commits suicide - Tamil Filmibeat\nவறுமை-குடி: மேக்கப்மேன் தற்கொலை!\n| Published: Thursday, November 15, 2007, 14:28 [IST]\nவீட்டில் வறுமை தலைவிரித்தாடியதாலும், குடிப்பழக்கத்தாலும் சினிமா மேக்கப்மேன் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.\nசென்னை கே.கே.நகர் அருகே உள்ள எம்.ஜி.ஆர். நகர் காந்தி நகரில் வசித்து வந்தவர் முருகன் (32). இவருக்கு தேன்மொழி என்ற மனைவியும், இரு குழந்தைகளும் உள்ளனர்.\nமுருகன், உதவி மேக்கப்மேனாக பணியாற்றி வந்தார். ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுக்கு மேக்கப் போட்டுள்ளார். கடந்த 10 வருடமாக மேக்கப் மேனாக இருந்த இவர் 50க்கும் மேற்பட்ட படங்களில் பணியாற்றியுள்ளார்.\nதற்போது தசாவதாரம், நான் கடவுள் உள்ளிட்ட படங்களில் மேக்கப் மேனாக பணியாற்றி வந்தார்.\nதிரை நட்சத்திரங்களை அழகுபடுத்தி ஜொலிக்க வைத்த இவரின் வாழ்க்கை மட்டும் மங்கலாகவே இருந்தது. போதிய வருமானம் இல்லாததால் வீட்டில் எப்போதும் வறுமை தாண்டவமாடியது. இதில் குடிப்பழக்கமும் அவருடன் சேர்ந்து கொண்டது.\nதினசரி குடித்து விட்டுத்தான் வீட்டுக்கு வருவார். இதனால் முருகனுக்கும், தேன்மொழிக்கும் தினசரி சண்டை நடக்குமாம். வழக்கம் போல நேற்று முன்தினமும் குடித்து விட்டு வீட்டுக்கு வந்துள்ளார். இதனால் அவருக்கும் மனைவிக்கும் சண்டை மூண்டுள்ளது. விரக்தியிலும், கோபத்திலும் கணவரை கடுமையாக திட்டி விட்டார் தேன்மொழி.\nபின்னர் டியூஷனுக்குப் போயிருந்த மகனை கூட்டி வருவதற்காக வீட்டை விட்டு வெளியேறினார். பின்னர் வீட்டுக்குத் திரும்பி வந்த அவர், தனது கணவர் மின்விசிறியில் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து அலறித் துடித்தார்.\nமுருகனின் தற்கொலையால் அந்தப் பகுதியே சோகத்தில் மூழ்கியது. கணவரைப் பறிகொடுத்த தேன்மொழி தனது இரு குழந்தைகளையும் கட்டிக் கொண்டு கதறி அழுதது அப்பகுதியினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது.\nமுருகனின் தற்கொலைக்கு வறுமைதான் முக்கிய காரணம் என மேக்கப் மேன் சங்க தலைவர் ராஜு கூறியுள்ளார். சினிமாவில் மேக்கப் ேமனாக இருப்பவர்களுக்கு தினசரி ரூ. 225 மட்டுமே சம்பளமாக கொடுக்கப்படுகிறதாம். வாரத்திற்கு ஐந்து நாட்கள் மட்டுமே வேலை கிடைக்கும் என்றார் ராஜு. முருகன் குடும்பத்திற்கு சங்கத்தின் சார்பில் ரூ. 45 ஆயிரம் குடும்ப நல நிதியாக தரப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.\nRead more about: cinema makeup man\nStory first published: Thursday, November 15, 2007, 14:28 [IST]\nஒரு பெண்ணை கெடுத்தா சின்ன படம், பொள்ளாச்சி மாதிரி 40 பேரை கெடுத்தா பெரிய படம்: ராதாரவி\nகதிர் கொலைக்கு பழி வாங்கும் விஜய்: இது தான் தளபதி 63 கதையா?
ஹிந்தி பேசியதால் அவமானப்படுத்தப்பட்ட சத்யபால்,6ஆங்கில நாவல்களை எழுதி பிரபல எழுத்தாளர் ஆன கதை!\nபீஹார் மாநிலம் கயா மாவட்டத்தில் உள்ள மல்ஹரி என்ற கிராமத்தில் இருந்த வந்த சத்யபால் சந்திரா; வறுமை, இயலாமை மற்றும் வன்முறையில் நடுவே வளர்ந்தவர். அவரின் பெற்றோர் வருமானம் ஈட்டவே கஷ்டப்பட்ட நிலையில், சத்யபாலை படிக்கவைக்க தடுமாறினர். நக்சலைட் ஆதிக்கம் கொண்ட அந்த சமயத்தில் பல பிரச்சனைகளுக்கு நடுவில் ஜார்கண்டில் உள்ள ஒரு உயர்நிலைப் பள்ளியில் படித்தார் சத்யபால். அரசுப்பள்ளியில் படிப்பை முடித்த அவருக்கு குடும்பத்தின் நிதிநிலை பற்றி நன்கு புரிந்ததால் அவர்களுக்கு கூடுதல் சுமை அளிக்க விரும்பமால் இருக்கின்ற வசதியில் வாழ்ந்தார்.\nபடிப்பில் ஆர்வம் இருந்ததால், பாட்னாவில் உள்ள அனுக்ரஹ் நாரயண கல்லூரியில் சேர்ந்து கல்வியை தொடர்ந்தார். ஹிந்தி வழியில் பாடங்களை படித்த சத்யபாலுக்கு ஆங்கில மொழி எட்டாக்கனியாக இருந்தது. டெல்லியில் அவர் ஒருமுறை பெரிய ஹோட்டல் ஒன்றுக்கு சென்ற போது, அவர் ஹிந்தியில் பேசியதை கண்டு அங்கு ஒருவர் அவரை கேலி செய்துள்ளார். இந்த நிகழ்வால் மனதளவில் பெரிதும் பாதிக்கப்பட்ட சத்யபால், ஆங்கிலத்தை எப்படியாவது ஆறு மாதங்களில் கற்க முடிவெடுத்தார்.\nசத்யபால் டெல்லியில் பணிபுரிந்து கொண்டே ஆங்கில மொழியை கற்றார். எப்படியோ மொழியில் நல்ல புலைமை பெற்றதும் ஆங்கிலத்தில் புத்தகம் எழுத தீர்மானித்தார். ’தி மோஸ்ட் எலிஜிபிள் பாச்சலர்’ என்ற நாவலை 2011-ல் எழுதத்தொடங்கினார். புத்தகம் நன்கு விற்க தொடங்கி, சத்யபால் பிரபல எழுத்தாளர் ஆனார். அதன் பின்னர்6நாவல்கள் எழுதி அடுத்த ஆண்டே வெளியிட்டார். தன் நண்பர்களுடன் இணைந்து ‘OnlyLoudest’ என்ற ஆன்லைன் தளம் மற்றும் கேளிக்கை போர்டலை தொடங்கினார்.\nசத்யபால், எழுத்தாளர் மட்டுமின்றி பாடலாசிரியர், கதையாசிரியர் மற்றும் இயக்குனர் ஆகும். தன் வன்முறை நிறைந்த பின்னணியை தன் வாழ்க்கையில் தடையாக கருதாமல் தனக்கான பாதையை அவரே வகுத்துக்கொண்டு வாழ்க்கையில் முன்னேறிய சத்யபால் பலருக்கு ஊக்கமாக இருக்கிறார்.
ஸ்காட்லாந்து போலீஸுக்குத் தண்ணி காட்டிய பொம்மைப் புலி... 45 நிமிட காமெடிக் கதை! | Armed cops in 45-minute standoff with ‘TIGER’ only to find it wasagiant teddy\nவெளியிடப்பட்ட நேரம்: 15:15 (09/02/2018)\nகடைசி தொடர்பு:15:21 (09/02/2018)\nகாக்கிச் சட்டை தமிழ்த்திரைப்படங்களில் அடிக்கடி உச்சரிக்கிற வசனம் “ஸ்காட்லாந்து போலீஸுக்கு அடுத்து நாங்கதான்”. ஏனெனில் உலகின் நம்பர் ஒன் காவல்துறை ஸ்காட்லாந்து. ஆனால் அவர்களையே கதற வைத்திருக்கிறது ஒரு புலி, இல்லை பொம்மைப் புலி….\n24 வயது புரூஸ் க்ரப் ஸ்காட்லாந்தின் அபர்டன்சயர் மாகாணத்தில் பீட்டர்ஹெட் என்கிற பகுதியில் மாட்டுப் பண்ணை நடத்தி வருகிறார். அங்குப் பல பசுக்கள் கர்ப்பமாக இருந்தன. அவற்றின் நடவடிக்கைகளைக் கவனிக்க கடந்த6தேதி இரவு பண்ணைக்கு வந்தவருக்குத் தூக்கி வாரிப் போட்டது. காரணம் பண்ணைக்குப் பக்கத்தில் பெரிய புலி ஒன்று படுத்திருந்தது.\nPHOTO CREDIT : UKCOPHUMOUR\nபுலியைப் பார்த்தவருக்குப் பதற்றம் தொற்றிக்கொள்கிறது. புலி பண்ணைக்குள் புகுந்துவிடுமோ என்கிற பயம் அதிகரிக்க ஸ்காட்லாந்தின் நார்த் ஈஸ்ட் காவல்துறைக்கு போன் செய்துவிட்டார். காவல்துறை புலி என்றதும் துப்பாக்கிகளை எடுத்துக்கொண்டு சம்பவ இடத்திற்குக் கிளம்பியது. வனத்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்படுகிறது. பீட்டர் ஹெட் பரபரப்பாகிறது. துப்பாக்கிகளை எடுத்துக்கொண்டு ஆறு கார்களில் சம்பவ இடத்திற்கு வருகிறார்கள் போலீஸார். சம்பவ இடத்தைத் துப்பாக்கி முனையில் சுற்றி வளைக்கிறார்கள். புலி படுத்திருப்பது உறுதிசெய்யப்படுகிறது.\nபுரூஸ் க்ரப்பிடம் விசாரணை நடக்கிறது. பக்கத்தில் இருக்கிற தேசியப் பூங்காவிலிருந்து ஏதேனும் விலங்கு தப்பித்துச் சென்றிருக்கிறதா என விசாரிக்கிறார்கள். சில துப்பாக்கிகள் புலியின் நடவடிக்கையைக் கவனித்துக்கொண்டிருக்கின்றன. சுமார் 45 நிமிடங்கள் புலியின் அசைவுக்காகக் காத்திருக்கிறார்கள். ஆனால் புலியிடமிருந்து எந்த அசைவும் இல்லாமல் இருக்கிறது. புலியின் நடவடிக்கையில் சந்தேகமான காவல்துறை புலியை நெருங்க ஆரம்பிக்கிறார்கள். பதற்றத்தோடு பக்கத்தில் போனவர்களுக்கு மிகப் பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. ஏனெனில் அங்கே படுத்திருந்தது புலி அல்ல, பொம்மைப் புலி. ஒட்டு மொத்தக் குழுவும் கொலைவெறியோடு புலி என்று போன் செய்த புரூஸ் க்ரப் பக்கம் திரும்புகிறார்கள். புரூஸ் க்ரப் சரக்கடித்திருக்கிறாரா எனச் சோதனை செய்கிறார்கள். ஆனால் அவர் “என் பண்ணையில் 200 பசுக்கள் கர்ப்பமாக இருக்கின்றன. அவை எப்போது வேண்டுமானாலும் குட்டி போடலாம், ஒவ்வொரு நொடியும் காத்திருக்கிறேன், இப்படியான சூழ்நிலையில் எப்படிக் குடிக்க முடியும் எனச் சொல்கிறார். யார் பொம்மைப் புலியை இங்கே கொண்டு வந்து வைத்தது என்கிற கோணத்தில் விசாரித்தார்கள். ஆனால் எந்தத் தகவலும் கிடைக்கவில்லை.\nஇவ்வளவு காவல்துறை அதிகாரிகள் வந்தும் 45 நிமிடங்களுக்குப் பிறகே அது பொம்மை எனக் கண்டுபிடிக்க முடிந்தது. புரூஸ் க்ரப் என்ன செய்வார். அவர் செய்தது சரி எனச் சொல்லிவிட்டு காவல்துறை பொம்மைப் புலியைப் பறிமுதல் செய்து எடுத்துச் செல்கிறார்கள்.\nஅடுத்தநாள் நார்த் ஈஸ்ட் காவல்துறையின் அதிகாரபூர்வ ஃபேஸ்புக், டிவிட்டர் பக்கத்தில் “சம்பவம் நடந்தது உண்மைதான். நல்ல நோக்கத்திற்காகத்தான் அந்தத் தகவல் சொல்லப்பட்டது. கடினமான சூழ்நிலைகளில் மக்களைப் பாதுகாப்பதே எங்களின் பணி, இந்தமாதிரியான சூழ்நிலையையும் நாங்கள் கருத்தில்கொண்டு துரிதமாகச் செயல்படுவோம்” எனப் பதிவிடுகிறார்கள்.\nபுலியைப் பார்த்து பயப்படாமல் இருந்தால் அப்புறம் புலிக்கு என்ன மரியாதை?
”வாழ்க்கை வாழ்வதற்கே”: ரங்கு\nஎந்திரன் - என் பார்வையில்...\nகல்மாடியோடு ஒரு (கற்பனை) சந்திப்பு\nகாந்தி பிறந்த நாள்...காமராஜர் இறந்த நாள்.\nஅவரை எல்லோரும் ரங்கு என்றுதான் கூப்பிடுவார்கள், உண்மையான பெயர் ரங்கநாதன். எப்போதும் சிரித்த முகத்தோடுதான் இருப்பார், கோபப்பட்டு எவரும் பார்த்ததே கிடையாது. அந்த ஊரில் எல்லோருக்கும் அவரை கண்டிப்பாகத் தெரியும், குறிப்பாய் குழந்தைகளுக்கு. ஆம் குழந்தைகள் என்றால் அவருக்கு கொள்ளைப் பிரியம். பார்க்கும்போதெல்லாம் கண்டிப்பாய் மிட்டாய் தருவது அவரது வழக்கம்.\nகுழந்தைகளுக்கு தங்களது அப்பாக்களை விடவும் ரங்கு மாமாவை அதிகம் பிடிக்கக் காரணம் அவரும் ஒரு குழந்தையாய் மாறிப் பழகுவதும், கண்டிப்பை கண்டதில்லை என்பதாலும், அதைவிட அவர் தரும் மிட்டாய்க்காகவும் இருக்கலாம்.\nமாநிறம், மீசையில்லாத மழிக்கப்பட்ட முகம், மொச்சை மொச்சையாய் வெண்ணிற பற்கள். சராசரியான உயரத்தில் ஒடிசலான தேகம். எப்போதும் மங்கலான வெள்ளை வேட்டி, கதரில் ஒரு சட்டை... இதுதான் இவரின் அடையாளம்.\nஅப்பா ஊரில் பெரிய மிராசுதார், நிறைய சம்பாத்து வைத்திருந்தார். ரங்குவின் செலவுக்கென அவரால் முழுமையால் பார்த்துக்கொள்ளப்படும் ஒரு மாவுமில். மூன்று பேஸ் கரண்ட் என்றால் மட்டும் மாவரைத்துக் கொடுத்துவிட்டு மற்ற நேரங்களில் ஊர் வேலை செய்ய கிளம்பிவிடுவார். வசதி குறைவானவர்களுக்கு கொடுக்கும் காசினை வாங்கிகொண்டு மாவினை அரைத்துக்கொடுப்பார். கரண்ட் பில் கட்டியது போக மீதம் அவரின் செலவுக்கு சரியாய் இருக்கும்.\nபேசும் பேச்சில், செயல்களில் அவரிடம் பெண்மைத்தனம் மிகுந்து இருக்கும். விழாக்களில் பெண்கள் செய்யும் சடங்குகளை அவர்களைவிட சிறப்பாய் செய்வார்.தண்ணீர் குடத்தினை பெண்கள் போல் அழகாய் சுமந்து வருவார். எவரேனும் கிண்டல் செய்தால் கண்டுகொள்ளவே மாட்டார். அவரை 'போடா பொட்டையா' எனத் திட்டினாலும், 'ஆமாம் இவரு மட்டும் ஆம்பள சிங்கம், தர்மன் கிட்டே உதை வாங்கினது தெரியாது?' என அவர் எப்போதோ நடந்த சம்பவத்தைச் சொல்லி சொன்னவரின் வாயை அடைப்பார்.\nஜாதி பேதமெல்லாம் பார்க்கவே மாட்டார். எல்லோரரையும் மாமா, மச்சான், அண்ணா, அண்ணி, மதனி, அத்தை என உறவுமுறையோடுதான் அழைப்பார். ஊரில் யாருக்கேனும் உடம்புக்கு சுகமில்லை என்றால் சரியாகும் வரை தினமும் சம்மந்தப்பட்டவரின் வீட்டுக்கு சென்று பார்த்து வருவார். அங்கிருப்பவர்களுக்கு ஆறுதல் சொல்லுவது, வியாதிக்கான விளக்கமான தகவல்களைப் பரிமாறி அவர்களை சீக்கிரம் குணமடைய ஆறுதல் சொல்லுவார். முடிந்த அளவுக்கு அவராலான உதவிகளை தயக்கமின்றி செய்வார்.\nஅதே போல்தான் ஏதேனும் விஷேசமென்றால். வலியச் சென்று, கடைசிவரை பம்பரமாய் சுழன்று எல்லா வேலைகளையும் செய்து தருவார். வயது ஐம்பதுக்கு மேல் என்றாலும் அவர் திருமணமே செய்துகொள்ளவில்லை.கேட்டால் சிரித்துக்கொண்டே 'நமக்கெல்லாம் எதுக்கு? எல்லோரும் நல்லாருந்தா சரி' என சொல்லுவார்.\nஅவரின் உடன் பிறந்தோரெல்லாம் சொத்தில் பாகத்தினைப் பிரித்துக்கொண்டு அவருக்கு சொற்பமாய் நிலத்தினையும், ஓட்டினால் வேயப்பட்ட ஒரு வீட்டினையும், பார்த்துக்கொண்டிருந்த மாவு மில்லையும் ஒதுக்கிவிட, எந்த ஒரு கேள்வியும் கேட்காமல் ஏற்றுக்கொண்டார். அவருக்கு ஆதரவாய் அவரின் அம்மா இருந்ததார்கள்.\nதனது இளைய மகன் திருமணம் செய்துகொள்ளவில்லையே என எல்லோரிடமும் சொல்லிச் சொல்லி அங்கலாய்த்துக்கொண்டிருந்தார், அந்த கவலையோடு கண்மூடியும் விட்டார். அன்றுதான் ரங்குவை சோர்ந்த முகத்தோடு அந்த ஊரில் உள்ள எல்லோரும் பார்த்தார்கள்.\nஅதன் பின்னும் அவர் அவரின் வழக்கமான வேலைகளை செய்தவண்ணம்தான் இருந்தார், ஆனாலும் அவரின் முகத்தில் முன்பிருந்த மலர்ச்சி இப்போது இல்லை. ஊரில் மற்றொரு நவீன மாவு மில் வந்துவிட அவருக்கான வருமானம் குறைய ஆரம்பித்தது. அவருக்கென ஒதுக்கிய கரம்பு நிலத்தில் ஏதும் விளைவிக்காததால், விளையாததால் அவரின் அன்றாட செலவுக்கே தடுமாற வேண்டியிருந்தது.\nஊரில் எல்லோருக்கும் வந்த ஒரு வித காய்ச்சல் அவரை மட்டும் விட்டு பிரியாமல் ஒட்டிக்கொள்ள, படுக்கையில் வீழ்த்தியது. எல்லோரும் அவரை சென்று பார்த்துவந்தார்கள், முடிந்த அளவுக்கு பார்த்துக்கொண்டார்கள்.\nவிருந்தும் மருந்தும் மூன்று வேளைக்கு என்பது போல் ஒரு வாரத்திற்கு பிறகு அவரை எவரும் கண்டுகொள்ளவில்லை. அவர் இனிமேல் தேறமாட்டார் என எல்லோரும் கைவிட்டுவிட அவரின் உடல் நிலை இன்னும் மோசமானது. அந்த நிலையில் அவரின் சின்னம்மா(சித்தி) ஒரு வண்டியில் ஏற்றி அழைத்துக்கொண்டு சென்றுவிட்டார், எல்லோரும் பெங்களூர் சென்றுவிட்டதாய் பேசிக்கொண்டார்கள்.\nஅவரைப் பற்றிய எந்த ஒரு தகவலும் சில மாதங்களுக்கு இல்லை. ஒரு வருடத்திற்குப்பின் ரங்கு திருமணக்கோலத்தில் வந்து இறங்கினார். புதிதாய் பெரிதாய் மீசையெல்லாம் வைத்திருந்தார். இந்த வயதிலா என எல்லோரும் ஆச்சர்யப்பட தனது மனைவியின் தோளில் கைபோட்டபடி பாரதியின் கூற்றுப்படி நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வை என கம்பீரமாக இருந்தார்.\n: இட்ட நேரம் : 12:17 AM\n4 : பேர் படிச்சிட்டு சொல்றாங்க...:\nரங்கு மாமா போன்றவர்கள் வசித்த மண்ணில் வசிக்கிற பெருமை நமக்கு இருக்கிறது. வேறென்ன வேண்டும்?
In Salem,agovernment school teacher committed suicide || சேலத்தில், அரசு பள்ளி ஆசிரியை தற்கொலை\nசேலத்தில், அரசு பள்ளி ஆசிரியை தற்கொலை + "||" + In Salem,agovernment school teacher committed suicide\nசேலத்தில், அரசு பள்ளி ஆசிரியை தற்கொலை\nசேலத்தில் அரசு பள்ளி ஆசிரியை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.\nபதிவு: மார்ச் 06, 2019 03:30 AM மாற்றம்: மார்ச் 06, 2019 04:45 AM\nசேலம் மாசிநாயக்கன்பட்டி, முத்துசாமி நகரை சேர்ந்தவர் விசுவநாதன். சேலத்தில் அரசு பள்ளி ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் மெயின்ரோடு, கங்கைகொண்ட சோழபுரத்தை சேர்ந்த புஷ்பலதா (வயது 30)வுக்கும் கடந்த4ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.\nபுஷ்பலதா சேலத்தில் உள்ள ஒரு அரசு பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று கணவன்-மனைவி இருவருக்கும் தகராறு ஏற்பட்டு உள்ளது. இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த புஷ்பலதா கணவரிடம் கோபித்துக்கொண்டு வீட்டில் உள்ள ஒரு அறைக்கு சென்று திடீரென்று தூக்கு போட்டுக்கொண்டார். இதில் உயிருக்கு போராடிய அவரை மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.\nஇது குறித்து அம்மாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து புஷ்பலதா தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர். முதல் கட்ட விசாரணையில் விசுவநாதனுக்கும், புஷ்பலதாவின் பெற்றோருக்கும் இடையே பணம், கொடுக்கல், வாங்கல் தகராறு இருந்து உள்ளது.\nசம்பவத்தன்று, இவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு உள்ளது. இதனால் மனவேதனை அடைந்த புஷ்பலதா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இருப்பினும் வேறு ஏதாவது காரணமா? என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம் என்று போலீசார் தெரிவித்தனர். மேலும் அவர்களுக்கு திருமணம் ஆகி4ஆண்டுகளே ஆவதால் உதவி கலெக்டர் செழியன் விசாரணை நடத்தி வருகிறார்.
Heavy rains in Mudumalai: For wildlife due to overcrowding No drinking water shortage || முதுமலையில் பரவலாக மழை: நீர்நிலைகள் நிரம்பியதால் வனவிலங்குகளுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது - வனத்துறையினர் தகவல்\nமுதுமலையில் பரவலாக மழை: நீர்நிலைகள் நிரம்பியதால் வனவிலங்குகளுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது - வனத்துறையினர் தகவல் + "||" + Heavy rains in Mudumalai: For wildlife due to overcrowding No drinking water shortage\nமுதுமலையில் பரவலாக மழை: நீர்நிலைகள் நிரம்பியதால் வனவிலங்குகளுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது - வனத்துறையினர் தகவல்\nமுதுமலையில் பரவலாக மழை பெய்து வருவதால், நீர்நிலைகள் நிரம்பி உள்ளன. இதனால் வனவிலங்குகளுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.\nபதிவு: மே 08, 2020 03:30 AM மாற்றம்: மே 08, 2020 09:12 AM\nஆண்டுதோறும் ஜனவரி மாதம் முதல் மே மாதம் வரை முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் வறட்சியான காலநிலை நிலவும். அப்போது வனத்தில் புற்கள் காய்ந்தும், நீர்நிலைகள் வறண்டும் காணப்படும். இதனால் வனவிலங்குகளுக்கு உணவு மற்றும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும். மேலும் சில நேரங்களில் காட்டுத்தீ பரவி வனப்பகுதி எரிந்து நாசமாகிறது.\nமுதுமலை புலிகள் காப்பகம் 688 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டதாக உள்ளது. இங்கு முதுமலை, கார்குடி உள்ளிட்ட வனச்சரகங்களை தவிர மீதமுள்ள வனச்சரகங்களில் கடந்த சில வாரங்களாக கடும் வறட்சி நிலவி வந்தது. இதனால் வனவிலங்குகளுக்கு பசுந்தீவனம், குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதையடுத்து காட்டுயானைகள், காட்டெருமைகள், மான்கள் உள்ளிட்ட வனவிலங்குகள் கூடலூர், பந்தலூர் தாலுகா பகுதியில் உள்ள விவசாய நிலங்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வந்தன.\nஇந்த நிலையில் கூடலூர், முதுமலை பகுதியில் கடந்த சில நாட்களாக மாலையில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதேபோல் நேற்று முன்தினம் மற்றும் நேற்றும் பரவலாக மழை பெய்தது. இதனால் வனப்பகுதி பசுமைக்கு திரும்புகிறது. மேலும் முதுமலை புலிகள் காப்பக வனத்துக்குள் இருக்கும் அனைத்து குளங்கள் உள்பட நீர்நிலைகள் நிரம்பி காணப்படுகிறது. இதனால் வனவிலங்குகளுக்கு தேவையான குடிநீர் வனத்துக்குள் உள்ளதா? என வனச்சரகர் ராஜேந்திரன் தலைமையிலான வனத்துறையினர் ஆய்வு நடத்தினர். அப்போது போதிய அளவுக்கு நீர்நிலைகளில் குடிநீர் இருப்பு உள்ளது தெரியவந்தது. இதேபோல் வனவிலங்குகளுக்கு தேவையான பசுந்தீவனமும் வளர்ந்து உள்ளது. இதுகுறித்து வனத்துறை யினர் கூறியதாவது:-\nமுதுமலை புலிகள் காப்பக வனத்துக்குள் சுமார் 40-க்கும் மேற்பட்ட குளங்கள் உள்ளன. வழக்கமாக கோடை காலத்தில் குளங்கள் வறண்டு விடும். இதனால் காப்பகத்துக்கு உட்பட்ட பகுதியில் கட்டி வைக்கப்பட்டுள்ள சிமெண்டு தொட்டிகளில் வனத்துறை வாகனம் மூலம் தண்ணீர் நிரப்பப்பட்டு வந்தது. தொட்டிகளை தேடி வனவிலங்குகள் வந்து தாகத்தை தணித்து வந்தது.\nதற்போது கூடலூர், முதுமலை, மசினகுடி பகுதியில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் முதுமலையில் உள்ள அனைத்து குளங்களும் தண்ணீரால் நிரம்பி உள்ளது. மேலும் தென்மேற்கு பருவமழையும் வெகுவிரைவில் பெய்ய உள்ளது. இதனால் நடப்ஆண்டில் வனவிலங்குகளுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு இல்லை.
2. இந்திய மதக் கருத்து – விவேகானந்தரைக் கற்போம்!\n2. இந்திய மதக் கருத்து\nMarch 19, 2021 March 13, 2021 by learnvivekananda, posted in இந்து மதம்\nஇந்திய மதக் கருத்து\nப்ரூக்ளின், 30 டிசம்பர் 1894\nஅமெரிக்க ஐக்கிய நாடுகளின் அளவில் பாதியே இருந்தாலும் இந்தியாவின் மக்கள் தொகை இருபத்தொன்பது கோடியாகும். மூன்று மதங்கள் அங்கே ஆட்சி செலுத்துகின்றன. அவை இஸ்லாம், பௌத்தம், இந்து மதங்கள். முதலாவதைச் சுமார் ஆறுகோடி பேரும், இரண்டாவதைத் தொண்ணூறு லட்சம் பேரும், கடைசியை இருபது கோடியே அறுபது லட்சம் பேரும் பின்பற்றுகின்றனர்.\nஇந்து மதத்தின் முக்கிய அம்சங்கள் வேத நூல் தொகுப்பி லுள்ள தியானமயமான, சிந்தனைமயமான தத்துவங்கள், மற்றும் நீதிநெறிக் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டது. பிரபஞ்சம் பரப்பைப் பொறுத்தவரை எல்லையற்றது, காலத்தைப் பொறுத்தவரை என்றும் இருப்பது என்று வேதங்கள் வலியுறுத்துகின்றன. வேதங்களுக்குத் தொடக்கம் இருந்ததில்லை, முடிவும் ஒருபோதும் இருக்காது. ஆன்மாவின் சக்தி ஜடப்பொருள் தளத்தில், எல்லையற்ற பரம்பொருளின் ஆற்றல் எல்லைக்கு உட்பட்ட பிரபஞ்சத்தில் கணக்கிலடங்காத வகைகளில் வெளிப்பட்டுள்ளன. அந்த எல்லையற்ற ஆன்மா தானே இருப்பது, என்றும் இருப்பது, மாறாதது. கழிந்து செல்லும் காலம், என்றென்றும் உள்ளதான அந்தக் கடிகாரத் தின் முகத்தில் எந்த அடையாளத்தையும் ஏற்படுத்துவதில்லை. மனித அறிவால் புரிந்துகொள்ள முடியாத, புலன்களுக்கு அப்பாற்பட்ட அந்தப் பகுதியில் இறந்தகாலமும் கிடையாது, எதிர்காலமும் கிடையாது.\nமனிதனின் ஆன்மா அழியாதது என்று வேதங்கள் போதிக் கின்றன. வளர்ச்சி மற்றும் அழிவு நியதிகளுக்கு உட்பட்டது உடல். எது வளர்கிறதோ அது அழிந்தேயாக வேண்டும். ஆனால் உள்ளே இருக்கும் ஆன்மாவோ எல்லையற்றதோடும், என்றுமுள்ள வாழ்க்கையோடும் சம்பந்தப்பட்டது. அதற்கு ஆரம்பமும் கிடையாது, முடிவும் ஒருநாளும் இருக்காது. இந்து மற்றும் கிறிஸ்தவ மதங்களிடையே உள்ள முக்கியமான வித்தியாசங்களுள் ஒன்று என்னவென்றால், மனிதன் பிறப்பது தான் அவனது ஆன்மாவின் ஆரம்பம் என்று கிறிஸ்தவ மதம் சொல்கிறது; ஆனால் இந்து மதமோ மனித ஆன்மா அழிவற்ற பரம்பொருளிலிருந்து வந்தது, எப்படிக் கடவுளுக்கு ஆரம்பம் கிடையாதோ அதேபோல் ஆன்மாவிற்கும் ஆரம்பம் இல்லை என்று கூறுகிறது. அது ஒரு பிறவியிலிருந்து இன்னொரு பிறவிக்குச் செல்லும்போது, ஆன்மீகத்தின் மாபெரும் பரிணாம விதிப்படி, எண்ணற்ற விதமாக வெளிப்படுகிறது; வெளிப்படும். கடைசியில் நிறைநிலையை அடைந்தபிறகு ஒரு மாற்றமும் இருக்காது.\nஅப்படியானால் நமக்கு ஏன் முற்பிறவிகளின் நினைவு இல்லை என்று அடிக்கடி கேட்கப்படுகிறது. அதற்கான விளக்கம் இதோ: மனக் கடலின் மேல்பாகம் மட்டும்தான் உணர்வுப் பகுதி. அதன் அடியாழங்களில் இன்பம் தருபவையும் வேதனை மிக்கவையுமான நமது எல்லா அனுபவங்களும் சேர்த்து வைக்கப்பட்டுள்ளன. மனித ஆன்மா நிலையான ஒன்றைக் கண்டுபிடிக்க ஆசைப்படுகிறது. மனமும் உடலும், ஏன் இயற்கையின் எல்லாமே தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கின்றன. மாறாத ஒன்றை, நிரந்தரமான நிறைநிலையை அடைந்துவிட்ட ஒன்றைக் காண்பதுதான் நமது ஆன்மாவின் மிக உயர்ந்த நோக்கமாக உள்ளது. அதனால்தான் மனித ஆன்மா எல்லையற்றதைத் தேடுகிறது. நம்முடைய ஒழுக்கமும், அறிவு வளர்ச்சியும் நுண்மையாகின்ற அளவுக்கு, அந்த மாறாத, அழிவற்ற ஒன்றை அடைவதற்கான ஆவலும் வலுவாக இருக்கும்.\nஐம்புலன்களால் அறியப்படாதவை எல்லாம் உண்மையில் இல்லை , மனிதன் ஒரு தனி நபர் என்று நினைப்பதே மனமயக்கம் என்று தற்கால பௌத்தர்கள் கூறுகிறார்கள். அதற்கு மாறாக, ஒவ்வொரு மனிதனும் ஒரு தனி நபர் என்றும், புற உலகம் அவனது மனத்தின் படைப்பு, அதற்கு வெளியில் இல்லை என்றும் லட்சியவாதிகள் கூறுகின்றனர். இந்தப் பிரச்சினைக்குச் சரியான தீர்வு என்னவென்றால், இயற்கை என்பது சார்பின்மைசார்பு, உண்மை -லட்சியம் இவற்றின் கலப்பு என்பதாகும். நமது மனமும் உடலும் புற உலகைச் சார்ந்துள்ளன; அந்தச் சார்பு அவற்றின் தொடர்பின் தன்மையைப் பொறுத்து மாறு கிறது. கடவுள் சுதந்திரமாக இருப்பதுபோல் உள்ளுறையும் ஆன்மா சுதந்திரமாக இருக்கிறது. அது நம் மனம், உடல் இவற்றின் இயக்கங்களை, அவற்றின் வளர்ச்சிக்கேற்ப, அதிக மாகவோ குறைவாகவோ கட்டுப்படுத்தக் கூடியது.\nபாம்பு மரணம் என்பது ஒரு நிலைமாற்றம், அவ்வளவுதான். மரணத்திற்குப் பின்னரும் அதே பிரபஞ்சத்தில், முன்னைய அதே நியதிகளுக்கு உட்பட்டுத்தான் இருக்கிறோம். அப்பாற் பட்ட நிலையை அடைந்து அழகிலும் அறிவிலும் மேலான நிலையை எய்தியவர்கள், தங்களைப் பின்தொடர்ந்து வருகின்ற ஒரு மாபெரும் படையின் முன்னால் செல்லும் காவலர்களே. மிகமிக உயர்ந்தோரின் ஆன்மாவும், மிகமிக இழிந்தோரின் ஆன்மாவும் தொடர்புடையவை, எல்லோரிலும் எல்லை யற்ற பூரணத்துவத்தின் கரு உள்ளது. இன்பநோக்கு மனப்பான்மையையும், எல்லோரிடமும் நல்லதையே பார்க்கும் பாங்கையும் நாம் வளர்க்க வேண்டும். நமது மனத்திலும் உடம்பிலும் உள்ள குறைபாடுகளை நினைத்து, நாம் உட்கார்ந்து அழுவதில் எந்த லாபமும் இல்லை. பிரதிகூலமான சூழ்நிலை களை அடக்குகின்ற வீர முயற்சியே நம் ஆன்மாவை மேலே கொண்டுசெல்லும். ஆன்மீக முன்னேற்றத்தின் விதிகளை அறிவதே வாழ்வின் குறிக்கோள். கிறிஸ்தவர்கள் இந்துக்களிட மிருந்தும் இந்துக்கள் கிறிஸ்தவர்களிடமிருந்தும் கற்றுக் கொள்ளலாம். உலகின் அறிவொளிக்கு இரண்டுபேரும் உயர்ந்த கருத்துக்களை வழங்கியுள்ளனர்.\nஉண்மையான மதம் ஆக்கபூர்வமானது, எதிர்மறையானது அல்ல; தீமை செய்யாமல் இருந்தால் மட்டும் போதாது, தொடர்ந்து உயர்ந்த செயல்களைச் செய்ய வேண்டும் என்று உங்கள் பிள்ளைகளின் மனத்தில் பதிய வையுங்கள். மனிதர் களின் போதனைகளிலிருந்தோ, நூல்களைப் படிப்பதாலோ உண்மை மதம் வருவதில்லை; தூய்மையான வீரச் செயல்களின் காரணமாக நம்முள் உள்ள ஆன்மா விழித்தெழும்போதுதான் அது உருவாகிறது. பிறக்கின்ற ஒவ்வொரு குழந்தையும் தான் முற்பிறவிகளில் சேர்த்து வைத்துள்ள அனுபவத்தைக் கூடவே கொண்டுவருகிறது. அதன் உடல் அமைப்பிலும் மன அமைப்பிலும் அந்த அனுபவத்தின் தாக்கத்தைக் காண முடியும். ஆனால் நம் எல்லோரிடமும் உள்ள சுதந்திர உணர்ச்சி, நம்மிடம் உடலையும் மனத்தையும் தவிர வேறு ஒன்று உள்ளது என்பதைக் காட்டுகிறது. உள்ளே ஆட்சி செய்யும் ஆன்மா சுதந்திரமானது, அதுதான் சுதந்திர தாகத்தை எழுப்புகிறது. நாம் சுதந்திரர்களாக இல்லாவிட்டால் உலகை எப்படி முன்னேற்ற முடியும்? மனித ஆன்மாவினுடைய செயல்பாடுகளின் விளைவே மனித முன் னேற்றம் என்று நாங்கள் சொல்கிறோம். உலகின் நிலைமையும் நம் நிலைமையும் ஆன்ம சுதந்திரத்தின் விளைவுகளே.\nகடவுள் ஒருவரே என்று நாங்கள் நம்புகிறோம். அவர் நம் எல்லோருக்கும் தந்தை, அவர் எங்கும் நிறைந்தவர், எல்லாம் வல்லவர், எல்லையற்ற அன்புடன் அவர் தமது குழந்தைகளைக் காப்பாற்றுகிறார், வழி நடத்துகிறார். கிறிஸ்தவர்களைப் போலவே நாங்கள் சகுணக் கடவுளை நம்புகிறோம்; ஆனால் இன்னும் மேலே சென்று அவரே நாங்கள் என்று நம்புகிறோம். அவரது ஆளுமை எங்களில் வெளிப்பட்டுள்ளது, அவர் எங்களில் இருக்கிறார், நாங்கள் அவரில் இருக்கிறோம் என்று நம்புகிறோம். எல்லா மதங்களிலும் உண்மையின் கரு இருக்கிறது என்று நாங்கள் நம்புகிறோம். இந்து அவை எல்லாவற்றிற்கும் தலைவணங்குகிறான். ஏனெனில் விலக்குவதால் அல்ல, இணைப்பதால்தான் இந்த உலகில் உண்மையைப் பெற முடியும். மாறுபட்ட மதங்களான அழகிய மலர்களைச் செண்டாகத் தொடுத்து, அதைக் கடவுளுக்கு அர்ப்பணிக்க நாங்கள் விரும்பு கிறோம். வெகுமதியை எதிர்பார்த்து அல்ல, அன்பிற்காகவே கடவுளிடம் அன்பு செலுத்த வேண்டும் வெகுமதிக்காக அல்ல, கடமைக்காகக் கடமை செய்ய வேண்டும்; வெகுமதிக்காக அல்ல, அழகிற்காக அழகை வழிபட வேண்டும். இப்படி நம் இதயம் தூய்மை பெற்றதும் நாம் கடவுளைக் காண்போம். பலியிடுவதும், முழந்தாளிடுவதும், முணுமுணுப்பதும், ஓது வதும் மதம் ஆகாது. மாபெரும் வீரச் செயல்களைத் துணிந்து செய்வதற்கும், தெய்வீக நிறைநிலையைப் புரிந்துகொள்ளும் அளவிற்கு நம் சிந்தனைகளை உயர்த்துவதற்கும் தூண்டுமானால் இவை பயனுள்ளவைதான்.\nநம் பிரார்த்தனைகளில் கடவுள் நம் எல்லோருக்கும் தந்தை என்று ஒப்புக்கொண்டுவிட்டு, தினசரி வாழ்க்கையில் மற்றவர் களை நம் சகோதரர்கள்போல் நடத்தாவிட்டால் என்ன பயன்? உயர் வாழ்க்கைக்கு வழிகாட்டுவதற்காகத்தான் நூல்கள் உள்ளன, அந்த வழியில் நாம் தளராமல் செல்லாவிட்டால் ஒரு நன்மையும் கிடையாது. ஒவ்வொரு மனித ஆளுமையையும் ஒரு கண்ணாடிக் கோளத்திற்கு ஒப்பிடலாம். ஒவ்வொன்றின் நடுவிலும் இறைவனிடமிருந்து வெளிப்படும் தூய வெள்ளொளி இருக்கிறது. ஆனால் கண்ணாடிகள் பல நிறங்களிலும், பல கனங்களிலும் இருப்பதால் வெளிவரும் கதிர்கள் பல்வேறு தோற்றங்களைப் பெறுகின்றன. எல்லா நடு ஒளிகளும் ஒரே மாதிரியானவை, ஒரே அழகைக் கொண்டவை. வித்தியாசமாகத் தோன்றுவதற்குக் காரணம் அது வெளிப்படுகின்ற புறக் கருவி களில் உள்ள குறைபாடுகளே. நாம் மேலே உயரஉயர, அந்தக் கருவி மேலும் தெளிவாக ஒளி வீசும் தன்மையை அடைகிறது.\nமேற்கோள்கள்: எழுந்திரு! விழித்திரு! பகுதி7I. உலக மதங்கள் – 1. இந்து மதம் 2. இந்திய மதக் கருத்து\nTagged இந்திய மதக் கருத்து, இந்து மதம், இந்துமதம் பற்றி சுவாமி விவேகானந்தர்\nNext postபுத்த மதம் இந்து மதத்தின் நிறைவு
இதற்காக ஒரு கோடி நன்கொடை கொடுத்த நடிகர் கார்த்தி\nBy Anbarashi | Jun 07, 2019 12:48 PM\nதென்னிந்திய நடிகர் சங்க கட்டிடத்தின் கட்டுமானப்பணி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், நடிகர் கார்த்தி ரூ.1 கோடி நன்கொடை வழங்கியுள்ளார்.\nசென்னை தியாகராயநகர் அபிபுல்லா சாலையில் உள்ள நடிகர் சங்கத்துக்கு சொந்தமான இடத்தில் புதிய கட்டிடம் கட்டும் பணி கடந்த 2017ம் ஆண்டு தொடங்கி நடைபெற்று வருகிறது. ஒரு சில காரணங்களால் தற்காலிகமாக கிடப்பில் இருந்த கட்டிட பணிகள் மீண்டும் தொடங்கி தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.\n4 மாடி கட்டிடத்தில் ஆடிட்டோரியம், சங்க அலுவலகம், உடற்பயிற்சி கூடம், திருமண மண்டபம் உள்ளிட்டவை இடம்பெறவுள்ளது. இதன் கட்டுமான பணிக்காக சென்னையில் செலிப்ரிட்டி கிரிக்கெட், மலேசியாவில் கலை நிகழ்ச்சிகளை நடத்தி நிதி திரட்டினர். தற்போது இறுதிக்கட்ட பணிகளை விரைந்து முடிக்க பணத்தேவை இருப்பதால் மீண்டும் ஒரு கலை நிகழ்ச்சி நடத்த திட்டமிட்டிருப்பதாக கூறப்பட்டது. ஆனால், நடிகர் சங்க தேர்தல் வரும் ஜூன்.23ம் தேதி நடைபெறவுள்ளதால் கலை நிகழ்ச்சி நடப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.\nஇதனால், கட்டிட பணிகளை விரைந்து முடிக்க நடிகர் சங்க பொருளாலரும், நடிகருமான கார்த்தி தனது சொந்த நிதியில் இருந்து ரூ.1 கோடியை நன்கொடையாக வழங்கியுள்ளார். அதேபோல் நடிகர் விஷாலும் ரூ.25 லட்சம் நன்கொடை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nTags : Karthi, Vishal, Nadigar sangam, 1 crore donation\nPeople looking for online information on 1 crore donation, Karthi, Nadigar sangam, Vishal will find this news story useful.
8 நிமிடத்திற்கு ரூ. 70 கோடி செலவு செய்த பிரபாஸ் படம்... எதற்கு தெரியுமா? | saaho movie expenses 70 crores for 8 minutes chasing scene | nakkheeran\nPublished on 16/07/2019 (12:38) | Edited on 16/07/2019 (12:44) Comments\nபாகுபலி2படத்தை தொடர்ந்து நடிகர் பிரபாஸ் சாஹோ என்ற ஆக்‌ஷன் படத்தில் நடித்து வருகிறார். கடந்த இரண்டு வருடங்களாக ஷூட்டிங் பணிகளில் இருக்கும் இந்த படத்தின் இறுதிக்கட்ட பணிகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. அண்மையில்தான் இப்படத்தின் டீஸர் நான்கு மொழிகளில் வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 40 மில்லியன்களுக்கும் மேல் பார்வையாளர்கள் இந்த டீஸரை சமூக வலைதளத்தில் பார்த்துள்ளது சாதனையாகியுள்ளது.\nஇளம் இயக்குநரான சுஜீத்தின் இரண்டாவது படமாக உருவாகும் இந்த படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக ஷ்ரத்தா கபூர் நடித்துள்ளார். நீல் நிதி முகேஷ், அர்ஜூன் விஜய், ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்ட நடிகர்கள் வில்லன்கள் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.\nநிறைய சண்டை காட்சிகள் இடம்பெற்றிருக்கும் என்று படத்தின் டீஸரை பார்க்கும்போதே தெரிந்திருந்தது. அபுதாபியில் கார் சேஸிங் காட்சி ஒன்று படமெடுக்கப்பட்டுள்ளது. இது சுமார் 8 நிமிடங்கள்தான் படத்தில் இடம்பெறுகிறதாம். ஆனால், மொத்தமான இந்த காட்சியை எடுப்பதற்கான செலவு எவ்வளவு தெரியுமா சுமார் 70 கோடி. சமூகவலைதளத்தில் இச்செய்தி வைரலாகி வருகிறது. வருகிற ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி இப்படம் வெளியாகிறது குறிப்பிடத்தக்கது.
முதலமைச்சர் ஜெயலலிதா முழுமையாக குணமடைந்து விட்டார்,90 சதவீதம் தாமாகவே சுவாசிக்கிறார்: அப்பல்லோ தலைவர் பிரதாப் ரெட்டி பேட்டி - Support AIADMK\nHome / News / முதலமைச்சர் ஜெயலலிதா முழுமையாக குணமடைந்து...\nமுதலமைச்சர் ஜெயலலிதா முழுமையாக குணமடைந்து விட்டார்,90 சதவீதம் தாமாகவே சுவாசிக்கிறார்: அப்பல்லோ தலைவர் பிரதாப் ரெட்டி பேட்டி\nமுதலமைச்சர் ஜெயலலிதா நலமாக இருக்கிறார். அவர் 90 சதவீதம் இயல்பாக சுவாசிக்கிறார் என்று அப்பல்லோ மருத்துவமனையின் தலைவர் டாக்டர் பிரதாப் சி ரெட்டி கூறினார்.\nசென்னை பெரும்பாக்கத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் உடல் உறுப்புகள்தானம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.நிகழ்ச்சி முடிந்ததும் அப்பல்லோ ஆஸ்பத்திரியின் தலைவர் டாக்டர் பிரதாப் சி ரெட்டி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.\nஅப்போது முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நலன் குறித்து அவர் கூறியதாவது;\nஅப்பல்லோ மருத்துவர்கள் குழுவினர் முதல்வருக்கு சிறப்பான சிகிச்சையை அளித்துள்ளனர். 6,7வாரங்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்ட பின்பு, அவர் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளார்.\nஏற்கெனவே வழங்கப்பட்ட அதே சிகிச்சையே அவருக்குத் தொடர்ந்து தேவைப்படுகிறது. மருத்துவமனையைச் சேர்ந்த இருதயவியல், சிறுநீரகவியல், நுரையீரல் சிகிச்சை உள்ளிட்டத் துறை மருத்துவ நிபுணர்கள் இணைந்து முடிவெடுத்ததன் அடிப்படையில் அவர் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளார். சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்ட பின்பு முதல்வர் கூடுதல் மகிழ்வுடன் உணரக்கூடும்.\nமருத்துவமனையில் முதல்வருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களில் சிலர்2வாரங்கள் கூட வீட்டுக்குச் செல்லாமல் தொடர்ந்து சிகிச்சை அளித்தனர். மருத்துவர்களின் தொடர் சிகிச்சையால் தற்போது முதல்வரின் அனைத்து உடல் உறுப்புகளும் சீராக இயங்குகின்றன.\nமுதல்வர் தன்னுடைய இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புவதே மீதம் உள்ளது. சாதாரணமாக ஒருவர் 12 மணி நேரம் தொடர்ச்சியாக உறங்கினாலே, அடுத்த நாள் உடல் இயக்கத்துக்கு உடற்பயிற்சி தேவைப்படும். தீவிர உடல்நலக் குறைவால் முதல்வர் பல வாரங்கள் படுக்கையில் இருந்துள்ளார்.\nஎனவே, அவரது ஒட்டுமொத்த உடலுக்கும் இயன்முறை சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வோர் உறுப்புக்கும் ஒவ்வொரு விதமான இயன்முறை சிகிச்சையை நிபுணர்கள் கையாள்கின்றனர். முதல்வர் தாமாகவே உடற்பயிற்சிகளைச் செய்வதற்கான முயற்சிகளில் இயன்முறை நிபுணர்கள் ஈடுபடுகின்றனர்.\nஅடுத்தகட்டமாக, முதல்வர் எழுந்து நின்று, நடக்க வேண்டும். அதன் பின்பு அவர் வீடு செல்வதற்கு தயாராகிவிடுவார்.\nமுதல்வர் ஜெயலலிதா மிகவும் மன வலிமை மிக்கவர். எனவே, வீடு திரும்புவதை அவரே உங்களுக்கு அறிவிப்பார்.\n90 சதவீதம் சுவாசிக்கிறார்: சுவாசத்தைச் சீராக்குவதற்காக அறுவைச் சிகிச்சை (டிரக்யாஸ்டமி) செய்யப்பட்டு கழுத்தில் பொருத்தப்பட்ட குழாய் இன்னும் அகற்றப்படவில்லை. அந்த குழாயினால் அவர் அசௌகரியமாக உணரவில்லை. தற்போது முதல்வர் தாமாகவே 90 சதவீதம் சுவாசிக்கிறார்.\nகழுத்தில் பொருத்தப்படும் குழாயின் காரணமாக நோயாளிகளால் பேசமுடியாது. எனவே, அந்தக் குழாயில் ஒலிபெருக்கி பொருத்தப்பட்டுள்ளது. அதனைப் பயன்படுத்தி அவர் பேசி வருகிறார். மூச்சைப் பிடித்துக் கொண்டு பேச வேண்டும் என்பதால், குழாயில் உள்ள ஒலிபெருக்கியைக் கொண்டு பேசுவது அவ்வளவு சுலபம் அல்ல. முதல்வர் தற்போது சில நொடிகள், சில நிமிஷங்கள் மட்டுமே பேசுகிறார்.\nசில நோயாளிகளுக்கு கழுத்தில் நிரந்தரமாக குழாய் பொருத்தப்படும்போது, அவர்களுக்கு ஒலிபெருக்கி மூலம் பேசுவதற்காகப் பயிற்சி அளிப்போம். ஆனால் முதல்வருக்கு அது தாற்காலிகமாகவே பொருத்தப்பட்டுள்ளது.எனவே, அவர் பூரண நலத்துடன் உள்ளார். வீடு திரும்புவது குறித்து முதல்வரே தீர்மானிப்பார்.இவ்வாறு அப்பல்லோ தலைவர் டாக்டர் பிரதாப் சி ரெட்டி கூறினார்.