text
stringlengths
57
183k
இணையத்தில் லீக் ஆன மடிக்கக்கூடிய ஐபோன் விவரங்கள் || Apple is Actively Working to Launch Its First Foldable iPhone in September 2022 Report\nபதிவு: நவம்பர் 18, 2020 12:13 IST\nஆப்பிள் நிறுவனம் மடிக்கக்கூடிய ஐபோனினை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.\nஸ்மார்ட்போன் சந்தையில் ஹூவாய், சாம்சங், சியோமி என பல்வேறு நிறுவனங்கள் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து விட்டன. மேலும் புதிய மாடல்களை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.\nசாம்சங் சமீபத்தில் தனது கேலக்ஸி இசட் போல்டு2 5ஜி மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. இந்த வரிசையில் ஆப்பிள் நிறுவனமும் மடிக்கக்கூடிய ஐபோனை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. மடிக்கக்கூடிய ஐபோன் பற்றி ஆப்பிள் சார்பில் இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை.\nஎனினும், சீன உற்பத்தியாளர்களான பாக்ஸ்கான் மற்றும் நியூ நிக்கோ உள்ளிட்ட நிறுவனங்கள் ஆப்பிள் நிறுவனத்திற்கு மடிக்கக்கூடிய போன்களின் மாதிரி வடிவத்தை அனுப்பி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் காரணமாக ஆப்பிள் நிறுவனமும் மடிக்கக்கூடிய போனினை உருவாக்க திட்டமிட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.\nமடிக்கக்கூடிய ஐபோனில் OLED அல்லது மைக்ரோஎல்இடி என இரு வகை டிஸ்ப்ளேக்களில் எதை வழங்கலாம் என பரிசீலனை செய்து வருவதாக கூறப்படுகிறது. மடிக்கும் திரை மற்றும் ஹின்ஜ் கொண்ட சாதனங்களை ஆப்பிள் விரைவில் சோதனை செய்ய துவங்கலாம் என்றும் கூறப்படுகிறது.\nஆப்பிள் நிறுவனம் மைக்ரோஎல்இடி பேனலை தேர்வு செய்யும் பட்சத்தில் உற்பத்தி பணிகளில் பெருமளவு வித்தியாசமான ஒன்றாக இருக்கும். தற்சமயம் மைக்ரோஎல்இடி ரக பேனல்கள் குறைந்த மின்திறனில் அதிக பிரைட்னஸ், சாட்யூரேஷன் வழங்குகிறது.
தெலுங்கில் செட்டிலாக போகும் தனுஷ்.. சிவப்புக் கம்பளதுடன் வரவேற்கும் தயாரிப்பாளர்கள்.! | MyThirai\nதமிழ் சினிமாவில் முண்ணனி நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். தலைவர் ரஜினி காந்தின் மருமகனும் ஆவார். மேலும் இயக்குனர் பாடகர் பாடலாசரியர் தயாரிப்பாளர் என பன்முகத்தன்மை கொண்டவர்.\nதமிழ் சினிமாவின் ஒப்பற்ற பல்வேறு படங்களை தனது ரோலுக்காக தில்லாக எடுத்து அதிலும் தூள் கிளப்பியிருக்கிறார். தமிழில் ஏற்கனே பல்வேறு கமிட்மெண்ட்களில் பிசியான செட்யூலில் இருக்கும் தனுஷை தெலுங்கு சினிமாவோ சிவப்பு கம்பள வரவேற்பு தருகிறது.\nஏற்கனவே தமிழில் இருந்து ஐஸ்வர்யா தனுஷ் இயக்கத்தில் வெளிவந்த3படத்தின் வாயிலாக இந்தி திரையுலகம் வரை திரும்பிப்பார்க்க வைத்ததும் மேலும் இந்தியில் சோனம் கபூருடன் ரஞ்சனா எங்கிற படமும் நடித்ததும் பழைய கதையாகிப்போனது.\nஊரடங்கில் வெளியான கர்ணனும் ஜகமே தந்திரமும் பலதரப்பட்ட பாராட்டுக்களை வாரிக்குவித்த அதே தருணத்தில் திருச்சிற்றம்பலம் மற்றும் மாறன் படங்கள் படமாக்கப்பட்டு வருகின்றன.\nதெலுங்கு இயக்குனர் சுரேஷ் கும்மாலாவும் அவர் பங்கிற்கு தனுஷிடம் கேட்க சட்டென சம்மதம் தெரிவித்தாராம் நம்ம தனுஷ் இது ஒரு தெலுங்கு படம் தான். அடுத்ததாய் நிதின் கீர்த்தி சரேஷ் நடிப்பில் ரங்தே படத்தை இயக்கிய வெங்கி அட்லூரி ஒரு படத்திற்காக பேசியுள்ளாராம் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என்று தகவலும் கசிய துவங்கியுள்ளது.\nமேலும் இன்னொரு தெலுங்கு இயக்குனர் ஒருவர் கதை சொல்லியிருப்பதாகவும் தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன.\nவிஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் அனைத்தும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதில் நடிக்கும் நடிகர் நடிகைகளும் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்துள்ளனர். அந்த வகையில் ...\nவைகைப்புயல் வடிவேலு தயாரிப்பாளர் இயக்குனர் ஷங்கருக்குமான பிரச்சினை இப்போது பேசி முடிக்கப்பட்டு விட்டது. அதனை தொடர்ந்து நடிகர் வடிவேலு இப்போது இயக்குனர் சிம்புதேவன் இயக்கத்தில் 23ஆம் புலகேசி படத்தின் இரண்டாம் பாகம் உருவாகும் செயல்பாடுகள் ...
அதில் நான் உடன்படுகிறேன்.. சி.வி.சண்முகம் பேச்சுக்கு தமிழிசை தடாலடி ஆதரவு! – Tamilkilavi\nசென்னை: அமைச்சர் சி.வி. சண்முகத்தின் கருத்தில் எனக்கும் உடன்பாடு உண்டு என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தராஜன் தெரிவித்துள்ளார்.\nஜெயலலிதா இறந்து2வருஷங்கள் ஆகிவிட்டது. இது சம்பந்தமாக விசாரணை கமிஷன் நியமிக்கப்படும் வருடங்கள் ஓடிவிட்டன. கமிஷனின் விசாரணையும் இறுதி கட்டத்தில் உள்ளது.\nஇந்த நேரத்தில் வந்து அமைச்சர் சிவி சண்முகம், “மருத்துவமனையில் ரூ 1 கோடிக்கும் மேல் உணவு சாப்பிட்டது யார்? என்று கேள்வி எழுப்பிய அவர், ஜெயலலிதாவுக்கு முறையாக மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டிருந்தால் உயிரோடு இருந்திருப்பார்.\nஅவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை ஏன் செய்யவில்லை? செய்யவேண்டாம் என சொன்னது யார்? ஜெயலலிதாவை வெளிநாட்டிற்கு அழைத்து சென்று சிகிச்சை அளிப்பதை தடுத்திருக்கிறார்கள் என்று பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.\nமாநில சட்ட அமைச்சரே இப்படி பகீர் புகார் கூறியுள்ளதால் தமிழகம் முழுவதும் உள்ள அதிமுக தொண்டர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது. இதுபோதாதென்று, சசிகலாவின் குடும்பத்தினர் மருத்துவமனையில் தங்கியிருந்து சாப்பிட்டதால் தான் ரூ 1 கோடிக்கு மேல் செலவு வந்தது என்று அமைச்சர் ஜெயக்குமாரும் தெரிவித்துள்ளார்.\nஇப்படி ஒரே நாளில் இரு அமைச்சர்கள் இத்தனை குற்றச்சாட்டுகள் சொல்லுகிறார்கள் என்றால், அதற்கேற்றார்போல், தமிழிசை சவுந்தராஜனும் சிவி சண்முகம் கருத்தினை ஆமோதித்துள்ளார். இது சம்பந்தமாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:\n“அமைச்சர் சி.வி. சண்முகத்தின் கருத்தில் எனக்கும் உடன்பாடு உண்டு. வெளிநாட்டுக்கு கொண்டு சென்று ஆஞ்சியோ செய்திருந்தால் சில அரசியல் அழுத்தங்களிலிருந்து விடுபட்டு ஜெயலலிதா சிகிச்சை பெற்றிருக்க முடியுமோ என்னவோ?”- என்று பதிவிட்டுள்ளார். இவ்வளவு நாள் கழித்து அதிமுக அமைச்சர்கள்தான் குற்றச்சாட்டுகளை முன் வைக்கிறார்கள் என்றால், தமிழிசை சவுந்தராஜன் ஏன் இவ்வளவு காலம் அமைதியாக இருந்தார்? என்ற சந்தேகம் எழுகின்றது.\nஅப்போலோ ஆஸ்பத்திரியில் உலகத்தரம் வாய்ந்த எல்லா வசதிகளும் இருக்கும்போது ஆஞ்சியோவுக்கு சிறந்த சிகிச்சை இல்லையா என்ற கேள்வியும் எழுகிறது. அதோடு, எய்ம்ஸ் மருத்துவக்குழுவை அப்போலோவுக்கு அனுப்பி வைத்ததே மத்திய அரசுதான் என்கிறபோது, அந்த மருத்துவ குழு மீது தமிழிசைக்கு நம்பிக்கை இல்லையா?\nகட்சி வேறு என இருந்தாலும், ஒரு மருத்துவர் என்ற முறையில் இதெல்லாம் அன்றைக்கே தமிழிசைக்கு தெரியாதா? என்பன போன்ற சந்தேகங்கள் நிறைந்த கேள்விகள் எழுந்து செல்கின்றன. ஏற்கனவே அமைச்சர்கள் இவ்வளவு காலம் அமைதியாக இருந்துவிட்டு, இன்று வந்து ஏன் இப்படி சொல்கிறார்கள் என்று தமிழக மக்கள் விழித்துகொண்டிருக்கும்போது, தமிழிசையின் ஆதரவு தரும் கருத்து மேலும் மக்களை குழப்பிதான் விடுகிறது.
Legal Struggle to Exempt from NEET Exam: Resolution at All Party Meeting | நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற சட்டரீதியாக போராட்டம்: அனைத்து கட்சி கூட்டத்தில் தீர்மானம்\nநீட் தேர்வில் இருந்து விலக்கு பெற சட்டரீதியாக போராட்டம்: அனைத்து கட்சி கூட்டத்தில் தீர்மானம்\nநீட் தேர்வில் இருந்து விலக்கு பெற சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க அனைத்து கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\nநீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவது தொடர்பாக சட்டசபை அனைத்து கட்சி கூட்டம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. சட்டசபையில் நிறைவேறிய நீட் விலக்கு மசோதா மீது கவர்னர் இன்னும் முடிவு எடுக்காததால் அனைத்து கட்சி கூட்டம் இன்று நடைபெற்றது.\nநீட் விலக்கு மசோதாவை ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு கவர்னர் அனுப்பாமல் வைத்துள்ளதால் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முதல்-அமைச்சர் ஆலோசனை மேற்கொண்டார். சட்டசபையில் அங்கம் வகிக்கும் 13 கட்சிகளின் உறுப்பினர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.\nஇதனைத்தொடர்ந்து நீட் விலக்கு தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த அனைத்துக்கட்சி கூட்டம் நிறைவடைந்தது. நீட் விலக்கு தீர்மானம் தொடர்பாக அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் சந்திப்பில் பேசிய மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், “நீட் விலக்கு மசோதாவை தமிழக கவர்னர் இன்னும் ஜனாதிபதிக்கு அனுப்பாமல் இருப்பது பேரவை மாண்பை சிதைப்பதாக உள்ளது.\nநீட் நுழைவுத்தேர்வு பள்ளிக்கல்வியை அர்த்தமற்றதாக ஆக்குகிறது. கூட்டாட்சி தத்துவத்தை சீரழிக்கும் வகையில் உள்ள நீட் தேர்வு, வசதி வாய்ப்பு உள்ளவர்களுக்கு சாதகமானது. நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற சட்ட ரீதியாக போராட்டம் நடத்தப்படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. நீட் தேர்வுக்கு எதிராக சட்ட போராட்டத்தை முன்னெடுப்பது என அனைத்துக்கட்சி கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\nமூத்த சட்ட வல்லுநர்களுடன் கலந்தாலோசித்து பின் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். நீட் தேர்வுக்கு எதிரான சட்டப்போராட்டம் தீர்மானத்துக்கு, அனைத்து கட்சி கூட்டத்தில் பாஜகவை தவிர மற்ற 12 கட்சிகளும் நீட் விலக்கிற்கு ஆதரவு அளித்துள்ளது. நீட் விலக்கு குறித்து தமிழக கவர்னர், மத்திய உள்துறை மந்திரியை மீண்டும் சந்திக்க நடவடிக்கை எடுக்கப்படும். நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் பெற கவர்னரை அனைத்துக்கட்சிகள் சார்பில் சந்திக்க ஏற்பாடு செய்யப்படும்.\nநீட் தேர்வு, மாணவர்களின் மருத்துவ கனவை சிதைப்பதாக உள்ளது. மாநில அரசு நிதியில் இருந்து நடத்தப்படும் மருத்துவ கல்லூரிகளின் மாணவர் சேர்க்கை உரிமையை மத்திய அரசு பறித்து விட்டது. நடப்பாண்டு மருத்துவ மாணவர் சேர்க்கை கலந்தாய்வு திட்டமிட்டபடி நடைபெறும்” என்று அவர் தெரிவித்தார்.
கொரோனாவால் கடுமையாக பாதிப்படைந்த பெல்ஜியம்! மே-3 வரை ஊரடங்கு நீட்டிப்பு | Belgium has been hit hard by Corona virus – News18 Tamil\nகொரோனாவால் கடுமையாக பாதிப்படைந்த பெல்ஜியம்! மே-3 வரை ஊரடங்கு நீட்டிப்பு\nஉயிரிழப்பு விகிதம் அதிகம் உள்ள நாடுகளில் ஒன்றானது பெல்ஜியம்\nLast Updated : April 14, 2020, 11:00 IST\nஉலகின் சின்னஞ்சிறிய நாடுகளில் ஒன்றான பெல்ஜியம், கொரோனா பெருந்தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்புகள் அதிகமானதை அடுத்து மே3வரை ஊரடங்கை பெல்ஜியம் அரசு நீட்டித்துள்ளது.\nமேற்கு ஐரோப்பியாவில் 30 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவில், ஒரு கோடியே 15 லட்சம் மக்கள் தொகையுடன் உள்ள சின்ன நாடு தான் பெல்ஜியம். கடந்த பிப்ரவரி4ஆம் தேதி பெல்ஜியத்தில் முதல் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.\nஅதன்பின்னர் வேறு தொற்று கண்டறியப்படாமலே இருக்க, மார்ச் ஒன்றாம் தேதி இரண்டாவது தொற்று உறுதியானது. படிப்படியாக பாதிப்பு அதிகரித்து வந்த நிலையில், தற்போதைய நிலவரப்படி பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 30 ஆயிரத்தை கடந்துள்ளது. பெல்ஜியத்தில் கொரோனாவின் உயிரிழப்பு கணக்கு மார்ச் 11 ஆம் தேதி தொடங்கியது.\nஒரு மாதம் முடிந்துள்ள நிலையில் உயிரிழப்பு 4000ஐ எட்டியுள்ளது. இதன்மூலம் உலகில் கொரோனா பாதிப்பால் ஏற்படும் உயிரிழப்பு விகிதம் அதிகம் உள்ள நாடுகளில் ஒன்றாக பெல்ஜியம் மாறியுள்ளது. இந்த நிலையில் கொரோனா பரிசோதனைகளை பெல்ஜியம் துரிதப்படுத்தியுள்ளது. கடந்த வாரம் நாளொன்றுக்கு அதிகளவாக 4000 பரிசோதனைகள் மட்டுமே மேற்கொள்ளப்பட்ட நிலையில், தற்போது பரிசோதனை எண்ணிக்கை நாளொன்றுக்கு 10,000ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.\nஏப்ரல் 19ஆம் தேதி வரை விதிக்கப்பட்டிருந்த ஊரடங்கு, பாதிப்புகள் அதிகரிப்பதை அடுத்து மே3ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. உணவு மற்றும் மருந்து பொருட்களை வாங்குவது போன்ற அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அனுமதிக்கப்படுகின்றனர்.\nவிதிகளை மீறுவோருக்கு இருபதாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது. ஊரடங்கால் சுமார் 600 மரணங்கள் தவிர்க்கப்பட்டுள்ளதாக ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. ஊரடங்கை நீட்டிப்பதன் மூலம் கொரோனா பரவும் வேகத்தை கட்டுப்படுத்த முடியும் என பெல்ஜியம் அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.\nFirst published: April 14, 2020, 11:00 IST
தமிழ் எழுத்துச் சீர்மை: சீர்திருத்தம் செய்து கிழிக்கப் போகிறார்களாம்\nஇடுகை வகை: முத்துக்கிருஷ்ணன்\nஅருமையான கருத்து. என் சிந்தனையை அப்படியே பிரதிபலிக்கிறது. தற்கால தொழில் நுட்பத்தில் கணினியைச் சீரமைக்க வேண்டுமே தவிர மொழியை அல்ல.\n22 செப்டம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 4:01\nநல்ல மறுமொழி.ஊமையராய்க் குருடராய் வாழ்ந்திடாமல் எழுத்துச்சீர்திருத்த எண்ணங்களை முளையிலேயே கிள்ளி எறியவேண்டும்.இளைதாக முள்மரம் கொல்வதே குறள்நெறி.\n22 செப்டம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 9:00\n23 செப்டம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 4:56
கிடுகிடு உயர்வு! ஒரே நாளில் 685 பேர் பலி!இந்தியாவில் தொடரும்\nகிடுகிடு உயர்வு! ஒரே நாளில் 685 பேர் பலி!இந்தியாவில் தொடரும் சோகம்!\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1.26 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று உறுதியாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது!\nமக்கள் மத்தியில் ஆட்கொல்லி நோய் என்றாலே முதலில் அனைவருக்கும் நினைவு வருவது இந்த கொரோனா நோய்தான். கொரோனா முதலில் சீனா நாட்டில் உருவானதாக தகவல் வெளியானதைத் தொடர்ந்து சீன நாட்டிலிருந்து கொரோனா பல நாடுகளுக்கும் பரவியது. குறிப்பாக இந்தியாவிலும் கடந்த ஆண்டின் தொடக்கத்திலேயே கொரோனா பரவத் தொடங்கியது. இந்திய அரசானது நாடு முழுவதும் ஊரடங்கு திட்டத்தினை அமல்படுத்தியது.\nஇந்நிலையில் தமிழகத்தில் சில நாட்களாக கொரோனா தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். மேலும் அனைவர் மனதிலும் மீண்டும் ஊரடங்கு அமல் படுத்தப்படும் என்ற பயமும் உள்ளது. இந்நிலையில் தற்போது தமிழகம் மட்டுமின்றி இந்தியாவிலும் கொரோனா தொற்றானது அதிகரித்துள்ளதாக தகவல். மேலும் இந்திய அளவில் கடந்த 24 மணி நேரத்தில் காரணத்தினால் 685 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் உள்ளது.\nமேலும் இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 1.26 லட்சம் பேருக்கு இந்த கொரோனா உறுதியான தகவல் வெளியாகி உள்ளது. மேலும் ஒரே நாளில் 58 ஆயிரத்து 258 பேர் குணமடைந்து வீடு திரும்பியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்தியாவில் 92.11 சதவீதம் பேர் குணமடைந்துள்ளனர். 1.30 சதவீதம் உயிரிழப்பு விகிதம் தகவல் வெளியாகியுள்ளது.மேலும் தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு அமல் படுத்தப்படும இல்லையா என்ற கேள்வியும் குழப்பமும் தமிழக மக்கள் மத்தியில் நிலவுகிறது.
நவராத்திரி டிப்ஸ்! | வாரமலர் | Varamalar | tamil weekly supplements\nநவராத்திரி என்பது, பிறந்த வீடு தேடி வரும் பெண்ணான அம்பாளை, வரவேற்று கொண்டாடும் வைபவம் என்பதால், இவ்விழாவின் போது வீட்டில், மாவிலை தோரணம் கட்டுவது அவசியம்.\nஇந்த ஒன்பது நாளும், தேவி, நம் வீட்டில் இருப்பதால், வீட்டில் இரைச்சல், சண்டை மற்றும் அழுகைச் சத்தம் கூடாது; இனிய சங்கீதமும், அம்பாள் துதிகளும் தான், இருக்க வேண்டும்.\nமேலும், இந்நாட்களில், யாருக்கும் பணமோ, நகையோ கடன் கொடுக்கவோ, வாங்கவோ கூடாது.\n* தற்போது, பல வண்ணங்களில், விலை மலிந்த பேப்பர் தட்டுக்கள் கிடைக்கின்றன. அவற்றை, நட்சத்திரம், மலர்களின் இதழ்கள் மற்றும் நாம் விரும்பும் டிசைன்களில் வெட்டி, கொலு வைக்கும் அறையில் தொங்க விடலாம்.\n* சின்னச் சின்ன ஸ்லோகங்களை எழுதி அல்லது பிரின்ட் எடுத்து பெரிய பேப்பர் தட்டுக்களில் ஒட்டி கொலு அறையில், ஆங்காங்கே வைக்கலாம். இது, பார்க்க வித்தியாசமாக இருப்பதுடன், கொலுவிற்கு வருவோர், அதில் என்ன எழுதியுள்ளனர் என்று ஆர்வமாக படிப்பர்.\n* சுண்டல்களை பிளாஸ்டிக் கவர் மற்றும் பேப்பரில் சுற்றிக் கொடுப்பதை தவிர்த்து, முடிந்த வரை, தொன்னை அல்லது வாழையிலையில் வைத்துக் கொடுங்கள்.\n* ஒரு நோட்டு புத்தகத்தில், கொலுவுக்கு வருவோரின் பெயர், முகவரி, மொபைல் எண் மற்றும் இ - மெயில் முகவரி போன்றவற்றை வாங்கிக் கொண்டால், அடுத்த ஆண்டு, மறவாமல் அவர்களை கூப்பிட உதவும்.\n* தற்போது, பலருக்கும் மூட்டு வலி உள்ளதால், பொம்மைகள் வைத்துள்ள அறையில், இரண்டு நாற்காலிகளை போட்டால், வயதானவர்கள் உட்கார, உதவியாக இருக்கும்.\n* வெற்றிலை பாக்கு கொடுக்கும் போது, வாங்குவோரை மரப்பலகை அல்லது விரிப்பில் உட்கார வைத்து, அமர்ந்தவாறு கொடுப்பதே சிறந்தது. நின்று கொண்டே கொடுப்பதை தவிருங்கள்.\n* பிளாஸ்டிக் பைகளுக்கு பதில், சின்ன துணிப்பை அல்லது நார் அல்லது சணல் பைகளை தரலாம்.\n* மட்டை உரிக்காத முழு தேங்காய் கொடுப்பது நல்லது தான்; ஆனால், அதை உரிக்க சிரமப்படுவர். அதனால், மட்டை உரித்த தேங்காய் கொடுக்கலாம்.\n* வீட்டிற்கு வரும் இளம் பெண்களுக்கு, பூச்செடிகளை அளிக்கலாம்.\n* வீட்டில் எப்போதும் கல்கண்டு வைத்திருப்பது நல்லது. சில நேரங்களில், சுண்டல் காலியானால், அவசரத்திற்கு இது கை கொடுக்கும்.\n* கொலுவை பார்க்க வருவோருக்கு, ஸ்லோக புத்தகங்கள் அல்லது பொன்மொழி புத்தகங்களை, கொடுக்கலாம்.\n* வீட்டிற்கு வருவோரை, உங்கள் வீட்டினர் அனைவருக்கும் அறிமுகப்படுத்துவது அவசியம். தற்போது, பலர், அழைப்பு மணியை அடித்ததும், தங்களது அறைக்குள் சென்று, ஒளிந்து கொள்கினறனர் இப்பழக்கத்தை, இளையோர் தவிர்க்க வேண்டும்.\n* நவராத்திரி கொலு முடிந்ததும், 'அவ்வளவு தான்... இனி அடுத்த ஆண்டு பார்த்துக் கொள்வோம்...' என்பது போல, பொம்மைகளை அலட்சியமாக ஏறக் கட்டக் கூடாது. ஒவ்வொரு பொம்மையையும் பிரியத்துடன் எடுத்து, 'அடுத்த ஆண்டும் வாருங்கள்...' என மானசீகமாய் விடை கொடுத்து, நேர்த்தியாய் பேப்பரில் சுற்றி வைக்க வேண்டும்.\n03-அக்-201615:43:31 IST Report Abuse\nஇப்பவும் லேட் இல்லை. கொஞ்சமா மூணு படி வச்சி , கலசம் குத்து விளக்கு வைத்து ஆரம்பிங்க, அவருக்கு பிடித்த பொம்மையை கீழ் படியில் வையுங்க. அம்மி நகரும் .\n03-அக்-201603:53:56 IST Report Abuse\nஎங்கள் வீட்டுலே கொலு வைக்கிறேன். 62 வருஷமா. எனக்கு அவ்ளோ இஷ்டம். ஆனால் என் கணவருக்கு எரிச்சல் தான் வருது. விடவே முடியலே. நானும் என் மருமகளும் அவ்ளோ ஆசையா செய்வோம். இந்தாண்டு ஆரம்பம் முதலே பிடுங்கல் ஆரம்பமாச்சு , அதற்கு ஏத்தாப்புலே நெருங்கிய உறவு இறந்துட்டதால் கொலு வைக்க முடியலே. இப்படியும் மனிதர்கள் என்று மனதுக்கு கஷ்டமா இருக்கு. தினம் தினம் நாம் நமது பிரெண்ட்ஸ் உறவுகளை மீட் பண்றதே இந்த 10 நாட்களில் தான். என்ஜாய் பண்றோம். அடுத்து மீட் பண்றதே நெக்ஸ்ட் தசராலே தான். இது எதனால் இந்த புருஷாளுக்கு புரியலே , என் தந்தை எல்லாம் அவ்ளோ ஆர்வம் காட்டுவர் ஹெல்ப் ம் பண்ணுவாங்க ,இது தான் வருத்தம் தருது . நான் தாம்பூலம் வாங்கப்போகும் வீடுகள்லே ஜென்ட்ஸ் ஆல்சோ ஹெல்பிங் தேர் மனைவிகள் , இவா ஹெல்ப் பண்ணவேண்டாம் குறைஞ்சது குற்றம் சொல்லாமல் பிடுங்காமல் இருக்கலாமே\n03-அக்-201612:51:46 IST Report Abuse\nபுரியவைங்க இல்லேன்னா கண்டுக்காதிங்க...
கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: May 2, 2022\n(1988 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) “இந்திய அமைதிப்படை எல்லா ரையும் நல்லூர்க் கந்தசுவாமி கோயிலுக்குப் போகட்டாம், கெதியாய் வெளிக்கிடுங்கோ” கதிரைவேற்பிள்ளை இந்தச் செய்தியைச் சொன்ன போது அவருடைய முகம் சாவெடிலடித்தது போல் காட்சி அளித்தது. அவரது உடல் அவரை அறியாமலே கிடுகிடு வென்று நடுங்கியது. கண்களிலே அளவிடமுடியாத பீதி! “எங்கையிருந்தாலும் நடப்பது நடந்துதான் தீரும். அண்டைக்கு எழுதின விதியை அழிச்செழுத ஏலுமே? என்ன வந்தாலும் ஒண்டாய் அனுபவிப்பம்” என்று
இலங்கை குண்டு வெடிப்பு 200-க்கும் மேற்பட்டோர் பலி |\nin / — by —\tApril-21-19\nஇலங்கை தலைநகர் கொழும்புவில் 8 இடங்களில் நிகழ்ந்த தொடர் குண்டு வெடிப்புகளில் சிக்கி 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். உலகையே உலுக்கியுள்ள இந்ததாக்குதலை அடுத்து அந்நாட்டில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கபட்டுள்ளது.\nஉலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் ஈஸ்டர்பண்டிகை கொண்டாட்டத்தை நள்ளிரவில் தொடங்கி கொண்டாடிக் கொண்டிருந்தனர். இலங்கையின் தலை நகர் கொழும்புவிலும் கிறிஸ்தவர்கள் ஈஸ்டர் பண்டிகை கொண்டாட்டத்திற்காக தேவாலயங்களில் திரண்டிருந்தபொழுது, அடுத்தடுத்து குண்டுகள் வெடித்துச் சிதறின.\nகொழும்புவில் உள்ள புனித அந்தோணியார் தேவாலயம், நெகோம்போ பகுதியில் உள்ள புனித செபஸ்தியார் தேவாலயம், மட்டக்களப்பு பகுதியில் உள்ள இவாஞ்சலின் தேவலாலயம் ஆகிய3தேவாலயங்களிலும், கொழும்புவில் உள்ள ஷங்ரி லா, சின்ன மோன் மற்றும் கிங்ஸ்பரி ஆகிய3நட்சத்திர விடுதிகள் ஆகிய6இடங்களில் அடுத்தடுத்து குண்டு வெடிப்புகள் நிகழ்ந்தன. இதில் வெளிநாட்டினர் 35 பேர் உட்பட 215 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கணக்கானோர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.\nஅதனையடுத்து பிற்பகலில் கொழும்புவில் மேலும்2இடங்களில் குண்டு வெடிப்புகள் நிகழ்ந்தன. இந்நிலையில் 8வது தாக்குதல் மட்டும் மனித வெடிகுண்டு தாக்குதல் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nதொடர் குண்டுவெடிப்பு தாக்குதல் குறித்து தொடர்ந்து கவனித்து வருவதாக தெரிவித்துள்ள இந்திய வெளியுறவுத்துறை, பாதிக்கப்பட்ட இந்தியர்கள் தொடர்பு கொள்வதற்காக இலவச தொலைப்பேசி எண்களை அறிவித்துள்ளது.\nதாக்குதல்குறித்து பாதுகாப்பு உயர் அதிகாரிகளுடன் அந்நாட்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்கே அவசர ஆலோசனையில் ஈடுபட்டார். இதனைத் தொடர்ந்து இலங்கையில் பேஸ்புக், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் அனைத்தும் முடக்கப்பட்டுள்ளன.\nமேலும் காலவரையற்ற ஊரடங்குஉத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தாக்குதலுக்கு இதுவரை எந்தஅமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இந்தத் தாக்குதல் தொடர்பாக7பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சர் ரூவன் விஜயவர்த்தன தெரிவித்துள்ளார்.
கன்னடர்களை அசர வைத்த சிம்பு!\nஏப்ரல் 11, 2018\t838\nசென்னை (12 ஏப் 2018): நடிகர் சிம்பு பதிந்த ஒரு ட்விட்டர் பதிவு கன்னடர்களையே அசர வைத்துள்ளது.\n« ரஜினி கர்நாடகத்தை ஆதரிக்கிறாரா? - அமீர், தமிமுன் அன்சாரி கேள்வி! கறுப்பு பலூன் பறக்க பிரதமர் மோடி சென்னை வந்தார்! »
Sri Ranganathar Temple - Devadanam /ஸ்ரீ ரங்கநாதர் கோயில் - தேவதானம்\nஸ்ரீ ரங்கநாதர் கோயில் – தேவதானம்\nSri Ranganathar Temple- Devadanam\nவடஸ்ரீரங்கம் என்று பக்தர்களால் அழைக்கப்படும் ஒரு திவ்ய க்ஷேத்ரம். சாளுக்கிய மன்னர்களால் கட்டப்பட்ட கோயில் . இங்குள்ள பெருமாள் சாளிகிராம கல்லால் ஆன 18 அடி நீளத்தில்5அடி உயரத்தில் ஐந்து தலை கொண்ட ஆதிசேஷன் மீது சயன கோலத்தில் பள்ளிகொண்ட நிலையில் ஸ்ரீனிவாச பெருமாள் காட்சி தருகிறார் .\nமுதலில் நாம் ராஜகோபுரத்தை தரிசனம் செய்துவிட்டு உள்ளே நுழைந்தால் கொடி மரமும், கருடாழ்வார் ஆகியோரை தரிசனம் செய்யலாம் . அடுத்ததாக ஆஞ்சநேயரை தரிசனம் செய்துவிட்டு உள்ளே சென்றால் துவாரகா பாலகர்கள் நம்மை வரவேற்கிறார்கள் .அவர்களது வலது புறத்தில் பன்னிரு ஆழ்வார்கள் ,மணவாள முனிவர் ,ராமானுஜர் மற்றும் தேசிகர் ஆகியோர் உள்ளனர் .\nபின்பு நாம் உள்ளே சென்றால் ஆதிசேஷன் மீது சயன கோலத்தில் ஸ்ரீ ரங்கநாத பெருமாள் பள்ளிகொண்ட நிலையில் காட்சியளிக்கிறார் .இவரின் நாபின் மீது பிரம்மா உள்ளார் . இறைவனின் பாதத்தின் அருகில் ஸ்ரீதேவி ,பூதேவி தாயார் இருவரும் அமர்ந்து களைப்பில் இருக்கும் பெருமாளுக்கு சேவை செய்கிறார்கள் .\nஅவரின் திருவடியை சேவித்தவாறு தும்புரு மகரிஷியும் ,பக்த ஆஞ்சநேயரும் காட்சி தருகின்றனர் . 18 அடி நீளம்5அடி உயரத்துடன் காணப்படும் இறைவன் சாளக்ராம கல்லால் செய்யப்பட்டது .\nஇவ்விடம் தேவர்களால் தானம் செய்யப்பட்ட இடம் என்பதால் தேவதானம் என்று அழைக்கப்படுகிறது .இவ்வோரின் அழகில் மயங்கிய சாளுக்கிய மன்னன் இந்த இடத்தை பார்த்து அதிசயித்து நின்றான்.\nஅவன் தென் இந்தியாவின் மீது படையெடுத்து வந்தபோது ஸ்ரீரங்கத்தில் உள்ள பெருமாளை கண்டு அவர் அழகில் மயங்கி அதைபோல் ஒரு கோயில் கட்ட வேண்டும் என்று நினைத்தான் ,காவேரி கரையில் ஸ்ரீரங்கம் எவ்வாறு பச்சை பசேலென்று இருந்ததோ அதே போல் இந்த இடமும் இருந்ததால் இங்கேயே பெருமாளுக்கு கோயில் கட்ட தீர்மானித்தான் . அங்கு ஒரு விவசாயி அறுவடை செய்யப்பட்டு ,கதிரடிக்கப்பட்டு காலத்தில் போடப்பட்டிருந்த நெல் மணிகளை மரக்கால் கொண்டு அளந்து கொண்டிருந்தார் . அரசர் பார்க்கும் போது அவரை காணவில்லை . திடீரென அவர் மறைந்தார் , மன்னன் விவசாயியை தேடினார் , களைப்பின் காரணமாக மரக்காலை தலைக்கு வைத்து ஓரிடத்தில் படுத்து உறங்கிக்கொண்டிருந்தார் .சாய்கோஇலத்தில் பெருமாள் மன்னனுக்கு காட்சி கொடுத்து மறைந்தார் .இதனால் மகிழ்ச்சி அடைந்த மன்னன் இவ்விடத்தில் கோயில்கட்ட எண்ணி நேபாள நாட்டில் இருந்து சாளிக்ராம கல்லை கொண்டு வந்து இறைவனுக்கு சிலையை வடித்து வழிபட்டான் . ஸ்ரீரங்கத்தில் உள்ளது போல் பெரியதாக பெருமாள் பெரியதாக உள்ளதால் வட ஸ்ரீரங்கம் என்று அழைக்கப்படுகிறது .\nபெருமாளுக்கு இடது புறம் ரங்கநாயகி தாயார் மற்றும் அருகில் சக்கரத்தாழ்வார் சன்னதி உள்ளது .\nஇவ் பெருமாளை அம்மாவாசை மற்றும் வெள்ளிக்கிழமைகளில் தொடர்ந்து7வாரம் நெய் தீபம் ஏற்றி வழிபட்டு வந்தால் பணக்கஷ்டம் , திருமணத்தடை நீங்கும் ,குழந்தை பாக்கியம் கிட்டும் .\nகாலை7.00 – 12 .00 , மாலை4.30 –7.00 மணி வரை\nசென்னை மீஞ்சூரில் இருந்து சுமார்6km தொலைவில் தேவதானம் உள்ளது . அனுப்பம்பட்டு ரயில் நிலையத்தில் இருந்து3km தொலைவில் உள்ளது . தச்சூர் கூட்ரோடு இருந்து பொன்னேரி வழியாக தேவதானம் 16 km தொலைவில் உள்ளது .\nCategories Chennai Temples, Perumal Temples\tTags chennai perumal temples, Devadanam, indiatempletour, ponneri, ponneri temples, Ranganathar, tamil history, thiruvallure district temples\nPrevious: Sri Agatheeswarar Temple – Pancheshti\nNext: Sri Balasubramaniya Swamy Temple – Siruvapuri
வானிலை முன்னறிவிப்பு: புதிய காற்றழுத்த தாழ்வு நிலையால் மழை வாய்ப்பு |\nதென்மேற்கு வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள புதிய காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக தமிழகத்தில் அடுத்த2நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சமீபத்தில் பெய்த மழையின் பாதிப்பில் இருந்தே இன்னும் மீளாத நிலையில், மீண்டும் மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் மக்கள் கவலை அடைந்துள்ளனர்.\nதமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலைகள் காரணமாக கடந்த2வாரங்களாக கொட்டித் தீர்த்த மழையால் முதலில் கடலூர் மாவட்டமும் பிறகு சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களும் கடுமையான பாதிப்பை சந்தித்தன. வீடுகளை வெள்ளம் சூழ்ந்தததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.\nமீட்புப்பணியில் ராணுவத்தின் முப்படைகளும் ஈடுபடுத்தப்பட்டன. கடலோர காவல் படை, கடற்படை மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படையினரும் தீயணைப்பு படை யினரும் படகு, ஹெலிகாப்டர்கள் மூலம் மக்களை மீட்டனர். மீட்கப் பட்டவர்கள் பள்ளிகள் மற்றும் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். மழை சற்று ஓய்ந்த தால் பெரும்பாலான பகுதிகளில் வெள்ள நீர் வடிந்து, மெல்ல மெல்ல பொதுமக்கள் இயல்பு நிலைக்கு திரும்பிக்கொண்டிருந்தனர்.\nஆனால், அரபிக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக தமிழகத்தின் வட மற்றும் உள் மாவட்டங்களில் கடந்த2நாட்களாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தென்கிழக்கு மற்றும் அதை ஒட்டிய கிழக்கு மத்திய அரபிக் கடல் பகுதியில் நீடிக்கிறது\nஇந்நிலையில், இலங்கையை அருகே தென்மேற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகியுள்ளது. அத்துடன் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியும் இணைந்துள்ளதால் மீண்டும் கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் ஸ்டெல்லா, நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:\nதென்மேற்கு வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள புதிய காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்யும். கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மற்றும் மிக கனமழையும், உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் சுற்று வட்டாரங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் வானம் மேகமூட்டத்துடன் Buy Viagra Online No Prescription காணப்படும். சில நேரங்களில் இடியுடன் கூடிய மழையை எதிர்பார்க்கலாம். ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.\nஏற்கெனவே பெய்த மழையின் பாதிப்பில் இருந்து இன்னும் முழுமையாக மீளாத நிலையில், புதிய காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகி இருப்பது கடலோர மாவட்ட மக்களை மீண்டும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.\nராணுவம், கடலோர காவல் படை, கடற்படை மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படையினரும் தீயணைப்பு படையினரும் தயார் நிலையில் உள்ளனர்.\nதமிழகத்தில் நேற்று காலை நிலவரப்படி, அதிகபட்சமாக நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு பகுதியில்9செ.மீ. மழை பெய்துள்ளது. நாங்குநேரியில்7செ.மீ. தூத்துக்குடி மாவட்டம் சங்கரி, அரியலூர் மாவட்டம் ஜெயம்கொண்டம், காஞ்சிபுரம் மாவட்டம் கேளம்பாக்கம், வேலூர், கும்பகோணம் ஆகிய பகுதிகளில்6செ.மீ. மழை பதிவாகியுள்ளது.\nசென்னையில் கிண்டி, பெரம்பூர், சோழிங்கநல்லூர், வேளச்சேரி, எண்ணூர், தாம்பரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று அதிகாலையில் இருந்தே விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. இதனால் ஏற்கெனவே வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதியில் மீண்டும் மழை நீர் தேங்குவதும் வடிவதுமாக இருந்தது.\n232 பேர் உயிரிழப்பு\nதமிழகம் முழுவதும் மழைக்கு இதுவரை 232 பேர் உயிரிழந் திருப்பதாகவும், அதிகபட்சமாக கடலூர் மாவட்டத்தில் 53 பேரும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 39 பேரும், சென்னையில் 32 பேரும், விழுப்புரத்தில் 20 பேரும் உயிரிழந்திருப்பதாக காவல் துறை கணக்கெடுப்பில் தெரியவந் துள்ளது.
Aval Vikatan - 13 August 2013 - நமக்குள்ளே... | namakkulle editor page - Vikatan\n'தங்கச் சங்கிலியை அறுக்க முயன்றபோது, கழுத்து அறுபட்டு ஆசிரியை பலி'\n- இந்தச் செய்தியைப் படித்ததுமே... அன்றைய தின தூக்கம் தொலைத்த உங்களைப் போன்ற பலரில், நானும் உண்டு.\nமதுரையைச் சேர்ந்த 52 வயது கணித ஆசிரியை ஜெயராணி, வழக்கம்போல தன் மொபெட்டில் பள்ளிக்குச் சென்றிருக்கிறார். மோட்டார் சைக்கிளில் வந்து வழிமறித்த இரண்டு கொடூரர்கள், தங்கச் சங்கிலியைப் பறிக்க முயல... ஜெயராணி போராட... தடுமாறி அவர் கீழே விழுந்திருக்கிறார். இதைப் பார்த்து தப்பிச் சென்றுள்ளனர் அந்தக் கொடூரர்கள். சங்கிலியில் இருந்த கொக்கி கழுத்தில் குத்திக்கொண்டதால், அது பறிபோகவில்லை... ஆனால், அளவுக்கு அதிகமாக ரத்தம் வெளியேறியதால், அந்த இடத்திலேயே உயிர் பறிபோய்விட்டது!\nஇதைப் பற்றித்தான் அன்று நீண்ட நேரம் எங்கள் வீட்டில் பேச்சே..!\nசங்கிலி பறிப்பு பற்றிய செய்திகள் தொடர்கதையாகத்தான் உள்ளன. 'இன்றைய சங்கிலி பறிப்பு' என்று நாளேடுகளில் ஒரு பக்கத்துக்கு எழுதும் அளவுக்கு, மாநிலம் முழுக்கவே தினமும் நடக்கின்றன. எதிர்போராட்டம் நடத்தும்போது கழுத்து அறுபட்டு, காயம்பட்டு என ரத்தம் சிந்தும் சோக சம்பவங்களும் பதிவாகின்றன.\nஆயிரம் சங்கிலிகள் பறிபோயிருந்தால்... எப்போதாவது ஒன்றிரண்டு பேரை பெயருக்குக் கைது செய்கின்றனர். 'சங்கிலி திருடர்கள் இனி வாலாட்ட முடியாது' என்று எச்சரிக்கை செய்திகளை வெளியிடுகின்றனர். ஆனால், முந்தைய நாள் இப்படியரு சம்பவம் நடந்த அதே இடத்தில், மறுநாளே அதேபோன்றதொரு கொடுமை ஆரம்பித்துவிடுகிறது. 'உள்ளூர் போலீஸாருக்கும்... சங்கிலி திருடர்களுக்கும் பங்கு உண்டு. திட்டமிட்டே இத்தகைய செயல்கள் எல்லாம் நடக்கின்றன' என்று வரும் செய்திகள் உண்மையோ... என்று நம்பும் அளவுக்கு இத்தகைய சம்பவங்கள் தொடர்கின்றன!\n'எல்லோரும் துப்பாக்கி வைத்துக் கொண்டு நடமாடக்கூடிய சூழ்நிலை தமிழகத்தில் வந்து கொண்டிருக்கிறது' என்று சில அரசியல்வாதிகள் பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், இதெல்லாம் சாத்தியமா தோழிகளே?!\nமதுரை தோழி ஜெயராணிக்கு நேர்ந்த கொடூரம்... இனி ஒரு பெண்ணுக்குக்கூட நேரக்கூடாது என்றால்... அரசாங்கத்திடமும் போலீஸிடமும் பாதுகாப்பு கேட்டுக் கொண்டிருப்பதில் பலன் இருக்கும் என்றா நினைக்கிறீர்கள்? இதுபோன்ற சம்பவங்கள் நமக்குச் சொல்லும் பாடமே... 'நீ எச்சரிக்கையாக இரு' என்பதைத்தான். வேறென்ன சொல்ல?
Tamil Kamakathaikal - Tamil Kamakathaikal – பிரசவத்திற்கு பின் பிறப்புறுப்பில் வலி ஏற்படுவதற்கான காரணங்கள் !!\nHome » Tamil Kamakathaikal • இன்ப கதைகள் » Tamil Kamakathaikal – பிரசவத்திற்கு பின் பிறப்புறுப்பில் வலி ஏற்படுவதற்கான காரணங்கள் !!\nPosted in Tamil Kamakathaikal, இன்ப கதைகள் By Tamilkamakathaikal On July 14, 2018\nபிரசவத்திற்கு பின் பெண்களின் உடல் முழுவதும் காயமாக இருக்கும். இதனால் உடல் முழுவதும் வலியுடன் இருக்கும். இத்தகைய வலிகள் குறைந்தது 1-2 வாரத்திற்கு மேலாவது இருக்கும். அதிலும் பிரசவத்திற்கு பின், பிறப்புறுப்பில் ஏற்படும் வலிக்கு அளவே இருக்காது.மேலும் இந்த வலியானது ஏற்படுவதற்கு சில காரணங்கள் இருக்கின்றன. குறிப்பாக இந்த வலி, குழந்தை பிறப்புடன் தொடர்புடையது. இப்போது இந்த பிறப்புறுப்பு வலி ஏற்படுவதற்கான காரணங்கள் என்னவென்று பட்டியலிட்டுள்ளோம். அதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.* சுகப்பிரசவத்தின் போது, குழந்தையை வெளியே தள்ளுவதற்கு அதிகப்படியான அழுத்தத்தை பெண்கள் தரவேண்டியிருக்கும். அழுத்தமானது போதாமல் இருந்தால், குழந்தையின் தலையானது யோனி குழாயில் நீண்ட நேரம் இருக்க வேண்டியிருக்கும். ஆகவே அதிகப்படியான அழுத்தத்தை பெண்கள் தருவதால், பிறப்புறுப்பில் வீக்கம் மற்றும் வலியானது சில வாரங்களுக்கு இருக்கும்.\n* சில நேரங்களில் சுகப்பிரசவத்தின் போது குழந்தையை வெளியேற்ற பெண்கள் கொடுக்கும் அழுத்தத்தினால், குழந்தையின் தலை வெளியே வரும் போது, www.tamilkamakathaikal2018.infoபிறப்புறுப்பின் தசையை கிழித்துக் கொண்டு வெளிவரும். இதனால் பிறப்புறுப்பில் காயமானது ஏற்பட்டு, அதிகப்படியான வலியை ஏற்படுத்தும். அதிலும் சிறுநீரை வெளியேற்றும் போது தான் அதிகப்படியான வலியை உணர நேரிடும்.\n* கர்ப்பிணிகள் சிலரால் போதிய அழுத்தத்தைக் கொடுக்க முடியாததால், குழந்தையின் தலை வெளிவராமல் சிக்கிக் கொள்ளும். அப்போது மருத்துவர்கள், பெண்ணின் பிறப்புறுப்பை லேசாக வெட்டி விட்டு, குழந்தையை வெளியே எடுப்பார்கள். இதனால், சருமம் மட்டுமின்றி, தசையும் வெட்டுப்படுவதால், காயமானது அதிகமாகி வலியை உண்டாக்கும். அதிலும் இந்த நிலைமை முதல் பிரசவத்தின் போது தான் நிகழும்.\nஇத்தகைய நிலை உள்ள பெண்களுக்கு, காயமானது காய்வதற்கு 1 மாதத்திற்கு மேல் ஆகும். இவையே பிறப்புறுப்பில் வலி ஏற்படுவதற்கான காரணங்கள். அதேப் போன்று, சிசேரியன் பிரசவத்தை மேற்கொண்டவர்களுக்கு, பிறப்புறுப்பில் வலி ஏற்படுவதற்கு பதிலாக, அடிவயிற்றில் வலி ஏற்படும்.
அட்ரா சக்க : பிரைட் ஆப் தமிழ் சினிமா! - ஜி.தனஞ்செயன்\nபிரைட் ஆப் தமிழ் சினிமா! - ஜி.தனஞ்செயன்\nசி.பி.செந்தில்குமார் 11:00:00 PM பிரைட் ஆப் தமிழ் சினிமா! - ஜி.தனஞ்செயன் No comments\n1931 இல் வெளியான முதலாவது பேசும் படமான "காளிதா'ஸில் இருந்து, 2013 இல் உருவாகி, திரைப்பட விழாக்களில் இடம்பெற்றாலும், ஏதோ சில காரணங்களால் இன்னும் திரையரங்கை எட்டாத "குற்றம் கடிதல்' வரையில், தேசிய அளவில் விருதுகளைப் பெற்ற 203 படங்கள் சம்பந்தமாக இந்த "பிரைட் ஆப் தமிழ் சினிமா' புத்தகத்தில் விரிவாக ஆராயப்பட்டுள்ளது. இணையத்தில் தேடினாலும் கிடைக்காத பல அரிய தகவல்களை இந்தப் புத்தகத்தில் பார்க்க முடிந்தது. நூலாசிரியர் ஜி.தனஞ்ஜெயனை இந்தப் புத்தகத்திற்காக எவ்வளவு பாராட்டினாலும் தகும். நூலாசிரியரும், "யு.டிவி மோஷன் பிக்சர்'ஸின் இயக்குநருமான தனஞ்செயனை அவரது அலுவலகத்தில் சந்தித்தோம்.\nஇந்தப் புத்தகம் எழுதுவதற்கான ஆரம்ப விதை எப்படி விழுந்தது...? தமிழ் சினிமாவைப் பற்றி அறிய முற்படும் வேறு மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கோ, இல்லை வேறு நாட்டைச் சேர்ந்தவர்களுக்கோ உதவும்முகமாக தமிழ் சினிமா சம்பந்தமான சரியான ஆவணங்கள் ஆங்கிலத்தில் இல்லை. வெளிநாடுகளில் இருந்து தமிழ் சினிமாவை ஆய்வு செய்யும் நோக்கத்துடன் வரும் பல ஆய்வு மாணவர்கள் சரியான தகவல்கள் ஆங்கிலத்தில் கிடைக்காமல் திண்டாடுவதை கண்கூடாகக் கண்டுள்ளேன்.\nதமிழ் சினிமாவை ஒட்டுமொத்தமாகப் பிரதிபலிக்கக் கூடியவகையில் ஒரு புத்தகத்தை ஆங்கிலத்தில் எழுத விரும்பினேன். சுமார்3வருடங்களுக்கும் மேலாக உழைத்து பலராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட சிறந்த படங்களை "பெஸ்ட் ஆப் தமிழ் சினிமா' என்ற பெயரில் நூலாக வெளியிட்டேன்.\nரஜினி, கமல் உள்பட திரையுலகினர் பலரிடமிருந்தும், இன்னும் பல்வேறு முகம் தெரியாத நபர்களிடமிருந்தும் அந்தப் புத்தகம் எனக்குப் பாராட்டுதல்களைப் பெற்றுத் தந்தது. தமிழ் சினிமாவின் சிறந்த படங்களை எனது பார்வையில் இருந்துதான் தேர்ந்தெடுத்தேன். எனக்கு சிறப்பாகத் தெரியும் ஒரு படம் இன்னொருவருக்கு சராசரியாகவும், எனக்கு சராசரியாகத் தெரியும் ஒரு படம் இன்னொருவருக்கு சிறப்பாகவும் தெரியலாம் இல்லையா...? இந்த மாதிரியான நடைமுறைப் பிரச்னையை அப்புத்தகம் வெளிவந்தவுடன் எதிர்கொண்டேன். இந்தப் படத்தை சேர்த்திருக்கலாம், இதை சேர்க்காமல் விட்டிருக்கலாம் என்பது போன்ற பல தரப்பட்டவர்களின் கருத்துக்களால் தான் இம்முறை, தேசிய அளவில் விருது பெற்ற படங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து "பிரைட் ஆப் தமிழ் சினிமா'வாக எழுதினேன்.\nதேசிய அளவிலான விருதுகளை அளவுகோலாக எடுக்கக் காரணம் என்ன? ஒரு நடிகரைப் பற்றி எழுத ஆரம்பிக்கிறீர்கள். அவர் தேசிய விருது பெற்றவராக இருந்தால் "தேசிய விருது பெற்ற நடிகர்...' என்று ஆரம்பிப்பீர்கள் இல்லையா...? இந்தியாவில் தேசிய விருதுதான் சுப்பீரியர். அதனால்தான், இந்தப் புத்தகத்திற்கு தேசிய விருது என்பதை ஒரு அளவு கோலாக எடுத்தேன். அத்துடன் மிகவும் மதிக்கப்படும் இந்தியன் பனோரமாவில் தேர்வாகிய படங்கள், ஆஸ்கருக்காக பரிந்துரை செய்யப்பட்ட படங்கள் என தேசிய அளவில் கவனம் பெற்ற படங்களையும் இந்தப் புத்தகத்தில் உள்ளடக்கினேன்.\nபுத்தகத்தை எப்படி எழுதினீர்கள்...?\nபெஸ்ட் ஆப் தமிழ் சினிமா புத்தகத்தை மீண்டும் திருத்தி எழுதினேன். அதிலிருந்த பல படங்கள் இந்தப் புத்தகத்தில் இல்லை. அலுவலக நேரம் தவிர்த்து, இரவு பகலாக புத்தக வேலையில் மூழ்கி இருப்பதைப் பார்த்து, என் வீட்டிலிருந்தவர்களே கடுப்பாகிவிட்டனர். 1940, 1950 களில் வெளியான பழைய படங்களின் படச்சுருளை தேடிப் பிடித்து வாங்கி வந்து வீட்டில் போட்டுப் பார்த்தால், அது எழுப்பும் "டொயிங்' என்ற ஒலிக்கே வீட்டிலுள்ள அனைவரும் ஓடிச் சென்று விடுவார்கள். ஆனால், நான் புத்தகத்தை எழுதி முடித்தபோது என்னை விட எனது குடும்பத்தினரே அதிகம் சந்தோஷப்பட்டார்கள். (சிரிக்கிறார்).\nவிருதுகள் சம்பந்தமாக அரசால் வெளியிடப்பட்ட ஆவணங்களைத் தேடியெடுத்துப் பயன்படுத்தினேன். எந்த விதமான தகவல் பிழைகளும் புத்தகத்தில் இடம் பெறக் கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருந்தேன். ஒவ்வொரு படம் சம்பந்தமாகவும் பல அபூர்வ தகவல்களை திரட்டினேன். ஒரு நாளுக்கு குறைந்தது சுமார்6மணி நேரம்வரை வேலை செய்தேன். நாம் தேடிப்படிக்கும் தகவல்கள் முழுவதும் உண்மையாக இருக்கும் என எந்த நிச்சயமும் இல்லை. பெரும்பாலும் சுயசரிதைப் புத்தகங்களைப் தேடிப் படித்து தகவல் திரட்டினேன். மாடர்ன் தியேட்டர்ஸ் சுந்தரம் குடும்பம் வெளியிட்ட புத்தகத்தைப் பயன்படுத்தினேன். ஏவி.எம் நிறுவனத்தில் இருந்து வெளிவந்த புத்தகங்களைப் பயன்படுத்தினேன். ஒரு சம்பவம் சொல்கிறேன்... உயர்ந்த மனிதன் படத்தினை ஏ.சி.திருலோகச்சந்தர் இயக்கியிருப்பார். ஆனால், படத்தில் கதை என எவரின் பெயரும் இருக்காது. படத்தின் கதை சம்பந்தமாக படத்தில் எங்கேயும் பதிவு இருக்காது. படத்தின் கதையை நான் இணையத்தில் தேடி அது உத்தர் புருஷ் என்ற பெங்காலிப் படத்தின் ரீமேக் என அறிந்து கொண்டேன். பின்பு ஏவி.எம் பாலசுப்ரமணியணை தொடர்பு கொண்டபோது அவரும் அதை ஏற்றுக் கொண்டார். களத்தூர் கண்ணம்மா படத்திற்காக கமல் தேசிய விருது வாங்கினார் என பல பத்திரிகைகள் எழுதுகின்றன. அது உண்மையில்லை. தனி கார்டு போட்டு, டைட்டில் மரியாதை கமலுக்கு வழங்கப்பட்டது. ஏவி.எம் பெருமையுடன் அறிமுகப்படுத்தும் இளம் நாயகன் கமல் என அந்தக் கார்டில் இருக்கும். களத்தூர் கண்ணம்மா படத்தில் கமல் நடித்த பாத்திரத்தில் டிசி என்ற பெண்ணை நடிக்க வைக்க இறுதி செய்து வைத்திருந்தனர். ஆனால், இயக்குநர் அந்தப் பெண்ணின் நடிப்பில் திருப்தி அடையவில்லை. மெய்யப்ப செட்டியாரின் மனைவியான ராஜேஸ்வரி அம்மாள் மூலமாக தகவல் தெரிந்து கொண்ட பரமக்குடியை சேர்ந்த ஒரு டாக்டர் குடும்பம்தான் கமலை மெய்யப்ப செட்டியாரிடம் அறிமுகப்படுத்தி வைத்தது. கமல் மெய்யப்ப செட்டியாரை சந்தித்து, வீரபாண்டிய கட்டபொம்மன் வசனத்தை பேசிக் காட்டினார். கமலின் வசன உச்சரிப்பில் மிகவும் கவரப்பட்டு, முதல் படத்திலேயே கார்டு போடவைத்தார் மெய்யப்ப செட்டியார். உங்கள் பதிவை தேசிய அளவிலான அங்கீகாரத்தின் அடிப்படையில் தேர்ந்தெடுத்துள்ளீர்கள்..ஆனால், தேசிய அளவில் கவனம் பெறாத பல நல்ல படங்கள் உண்டே...? அவை உங்கள் புத்தகத்தில் தவறிப் போனது பற்றிக் கவலை இல்லையா...? நியாயமான கேள்விதான். எல்லாப் படங்களையும் உள்ளடக்கி எழுதினால் அது "என்சைக்ளோபீடியா'. என்னால் "என்சைக்ளோபீடியா' எழுத முடியாது. 2013-ம் வருடத்தில் பல நல்ல படங்கள் வந்தன. ஆனால், "தலைமுறைகள்', "தங்க மீன்கள்', "வல்லினம்' ஆகிய மூன்று படங்கள்தான் தேசிய விருதைப் பெற்றன. இந்த மூன்று படமும்தான் அந்த ஆண்டின் சிறந்த படங்களா என்றால் நிச்சயமாக இல்லை. ஆனால், இந்திய அளவில் தமிழ் சினிமாவின் "பிரைட்' என்றால் அவை தேசிய விருது பெற்ற படங்களேயாகும். இதைத் தவிர வேறு பெருமைக்குரிய படங்கள் இல்லையா...? நிச்சயமாக இருக்கும். ஆனால், ஒரு நியாயமான தலைப்புக்குள் படங்களை அடக்க முயற்சிக்கும் போது என்ன செய்வது...? இப்படியாக சிலவற்றை ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும். சைக்கோலாஜிக்கல் லவ்வரை வைத்து பல படங்கள் வந்துள்ளன. ஆனால், அவற்றுக்கெல்லாம் ஆரம்பமாக அமைந்த "குணா' படத்தை என்னால் இந்தப் புத்தகத்தில் இடம்பெறச் செய்ய முடியவில்லை. "குணா'விற்கு தேசிய அளவில் எந்தவிதமான அங்கீகாரமும் கிடைக்கவில்லை. நான் மிகவும் விரும்பிப் பார்த்த படம் என்பதால் கொஞ்சம் மன வருத்தமாக இருந்தது. ரஜினியின் "எங்கேயோ கேட்ட குரல்' எனக்கு மிகவும் பிடித்த படம். துரோகம் செய்து இன்னொருவனுடன் ஓடிச் சென்ற மனைவிக்கு, ரஜினி இறுதிச் சடங்கு செய்யும் காட்சி அவ்வளவு உயிர்ப்பாக இருக்கும். ஆனால், தேசிய அளவில் அங்கீகாரத்தைப் பெறாததால் அந்தப் படத்தையும் என்னால் உள்ளடக்க முடியவில்லை. "துலாபாரம்' அளவுக்கு என்னைக் கவர்ந்த படம் இல்லை. அந்தப் படத்தையும் என்னால் உள்ளடக்க முடியவில்லை. தேசிய விருதுகளுக்குப் பின்னால் பல லாபிகள் உண்டு என குற்றச் சாட்டு உள்ளதே... எந்த விருதுக்குப் பின்னால்தான் லாபி இல்லை...? சில டி.விகள் விருதுகளை மொய் எழுதுவதுபோல வருபவர்கள் எல்லோருக்கும் கொடுக்கிறார்கள். ஆனால், என்னதான் லாபி இருந்தாலும் தேசிய விருதை மற்றைய விருதுகளை விட அதிகம் மதிக்கலாம். கேரளாவில் தேசிய விருதைப் பெற்றவர்களின் இறுதிச் சடங்குகள் அரசு மரியாதையுடன் துப்பாக்கிக் குண்டுகள் முழங்கவே நடத்தப்படுகிறது. தமிழ் நாட்டில் இந்த முறை இன்னும் வரவில்லை. நிரந்தரமான பதிவாக இருக்கப்போகின்றவை தேசிய விருதுகள்தான் என்பதில் மாற்றுக் கருத்துக்கிடமில்லை. மக்களின் விருப்பத்தைப் பெற்ற படம் தேசிய விருதைப் பெறாது, அதேபோல தேசிய விருதைப் பெற்ற படம் மக்களின் விருப்பத்தைப் பெறாது என சினிமா வட்டாரத்தில் பொதுவாகக் கூறுவார்களே... நாம் எதையுமே பொதுவாகத் தரப்படுத்த முடியாது. தரப்படுத்தவும் கூடாது. "பாசமலர்', "வீரபாண்டிய கட்டப்பொம்மன்', "நெஞ்சத்தைக் கிள்ளாதே', "உதிரிப்பூக்கள்', "அஞ்சலி', "தேவர் மகன்', "ஆடுகளம்' போன்ற பல படங்கள் வசூல் ரீதியிலும் வெற்றி பெற்றன. தேசிய விருதைப் பெற்ற சில படங்கள் வணிக ரீதியில் தோல்வியடைந்ததும் உண்மை. திரையுலக வட்டாரத்தில் புத்தகம் சம்பந்தமாக எப்படியான எதிர்வினை இருந்தது...? புத்தகம் வெளி வந்து சில நாட்களே ஆன படியால் முழுமையாகத் தெரிந்து கொள்ள முடியவில்லை. இந்தப் புத்தகம் இன்னும் சில வருடங்களில் திருத்தப்பட்டு வெளியிடப்படும்போது அந்தப் பதிப்பில் தமது படமும் இடம்பெற விரும்புவதாக பல இளம் இயக்குநர்கள் சொன்னார்கள். டெல்லியில் உள்ள தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சகத்திற்கு அழைத்துப் பாராட்டி, இது மாதிரியான புத்தகங்கள் எல்லா மொழியிலும் வர வேண்டியது அவசியம் என்றார்கள். மராத்தியில் இதே போல புத்தகம் கொண்டுவரப் போவதாக சாந்தாராமின் மகன் கிரண் சாந்தாராம் கூறினார். அடூர் கோபாலகிருஷ்ணன், புத்தகத்தைப் பாராட்டியதோடு, "இப்படியான புத்தகம் மலையாள சினிமாவுக்கும் அவசியம்' எனக் கூறினார். மகிழ்ச்சியாக இருந்தது. - அருளினியன்.\n"பிரைட் ஆப் தமிழ் சினிமா' புத்தகத்தைப் பற்றி... • இந்தியாவின் முதலாவது பேசும் படமான "ஆலம் அரா' (ஹிந்தி)- வின் படப்பிடிப்பிற்காக போடப்பட்ட செட்டில்தான், தமிழின் முதலாவது பேசும் படமான "காளிதாஸ்' படமாக்கப்பட்டது. படம் வெளியான 1931 இல் மெட்ராஸ் பிரசிடன்சியில் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளும் பேசப்பட்டதால், படத்தில் தெலுங்கு மொழியில் அமைந்த பாடல்களும் பல தெலுங்கு வசனங்களும் இடம்பெற்றன. • "காளிதாஸ்' படம் வெளியாவதற்கு ஒரு நாள் முன்பாகவே "சுதேச மித்திரன்' பத்திரிகையில் படத்தின் விளம்பரமும், விமர்சனமும் இடம்பெற்றது. அதாவது பத்திரிகையாளர்களுக்கு படத்தை போட்டுக்காட்டும் பிரஸ் ஷோ நடை முறையானது தமிழின் முதல் பேசும் படத்தில் இருந்தே ஆரம்பமாகியுள்ளது. • தமிழ் சினிமாவின் முதலாவது முத்தக்காட்சி 1934 இல் வெளியான "மேனகா' படத்தில் இடம்பெற்றது. நாயகன் டி.கே.சண்முகம் மொத்தமாக 12 தடவைகள் நாயகி கே.டி.ருக்மணியை முத்தமிட்டார். வலது கரத்தில் ஆரம்பித்து, தோள்பட்டை வரை நீண்ட ஒரு முத்தக் காட்சியானது அந்தக் காலத்தில் மிகப் பெரிய சர்ச்சையை கிளப்பி இருந்தது. • 1936 இல் வெளியாகி பெரு வெற்றி பெற்ற "சதிலீலாவதி' படமும் அதே ஆண்டு வெளியான "பதி பக்தை' படமும் ஒரே மாதிரியான கதையைக் கொண்டிருந்தன. "பதி பக்தை' படத்தின் தயாரிப்பாளர்கள் கதை உரிமைப் பிரச்னையை எழுப்பி நீதிமன்றம் சென்று "சதி லீலாவதி' படத்தின் வெளியீட்டை நிறுத்தி வைக்குமாறு கோரினார்கள். ஆனால், "சதி லீலாவதி' படத்தின் கதாசிரியர் எஸ்.எஸ்.வாசன் அவர்கள், இரண்டு படமுமே ஆங்கில நாவலான "டான்பியூரி ஹவு'ஸின் தழுவல்தான் என நீதிமன்றத்தில் பதில் மனுத்தாக்கல் செய்தார். வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. அதாவது கதைத் திருட்டு, கதை உரிமைப் பிரச்னை எல்லாம் 1936 இலேயே ஆரம்பித்துவிட்டது.\n• 1939 இல் பி.யூ.சின்னப்பா நடிப்பில் வெளியாகிய "உத்தம புத்திரன்'தான், தமிழ் சினிமாவில் வெளிவந்த முதலாவது டபுள் ஆக்க்ஷன் படம். • எம்.ஜி.ஆர் பெற்ற முதல் சம்பளம் 300 ரூபாய். "சதி லீலாவதி' படத்திற்காக 300 ரூபாய் பேசி அதில் 100 ரூபாய் அட்வான்ஸôகக் கொடுத்தனர். • 1953 இல் அறிமுகப்படுத்தப்பட்ட தேசிய அளவிலான சிறந்த படத்திற்கான "தங்கத் தாமரை' விருதை 1990 இல் "மறுபக்க'மும், 2007 இல் "காஞ்சிவர'மும் மட்டுமே தமிழில் பெற்றன. இன்றுவரை வேறு எந்தப் படமும் "தங்கத் தாமரை' விருதைப் பெறவில்லை. • 1967 இல் அறிமுகப்படுத்தப்பட்ட சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை அதே ஆண்டில் "கந்தன் கருணை' படத்திற்காக கே.வி.மகாதேவன் பெற்று, தமிழுக்குப் பெருமை சேர்த்தார். • "துணைவன்' படத்திற்காக கே.பி.சுந்தராம்பாள் 1969 இல் தேசிய விருதைப் பெற்றார் என்பது பலருக்கும் தெரியாத விஷயமாகும்.\nநன்றி - சினிமா எக்ஸ்பிரஸ்
கனவு காதலி : மனைவியின் மன்மத லீலைகள் - பகுதி - 10\nஇருவரும் முழு நிர்வாணமா கண் மூடிக்கிடக்க ...\nஅப்ப அனிதா செல் ரிங் ஆனது ... பண்ணது யாரு நான் தான் ....\nபோச்சி மாட்டுனேன் !\nசும்மா பேசுடி ...\nஎன்ன பண்றீங்க எப்புடி இருக்கீங்க ...\nஎப்ப வருவீங்க ...?\nசன்டே மார்னிங் வந்துடுவேன் ...\nதனியா இருக்க பயமா இருக்கா ?\nஅதெல்லாம் ஒன்னுமில்லை அதான் திலீப் இருக்காரே ?\nசரி சரி ராஜு எப்டி இருக்கான் ...\nஆங் திடீர்னு அழுதான் அதான் சமாதானப்படுத்தி படுக்க வச்சிட்டேன் ...\nஓகே ஓகே சீக்கிரம் வாங்க ...\nஓகே பாய் குட் நைட் ...\nஇந்தா உம்மாவில் சத்தம் மட்டுமே எனக்கு மத்தபடி அவள் உம்மா குடுத்தது திலீப்புக்கு ...\nநான் போனை கட் பண்ண ...\nஎன்ன சொல்றான் ?\nடேய் மரியாதையா பேசு அவரு என் புருஷன் !\nஎப்பா இந்த மரியாதையாச்சும் இருக்கே ...\nநான் போன வச்சதும் அவர்களின் காம களியாட்டம் மீண்டும் ஆரம்பம் ஆனது ...\nவேணாம்னு சொன்னா கேக்கவா போற ...\nபின்ன எதுக்கு கேக்குற ....\nஎல்லாம் ஒரு முறைக்காக கேட்டேன்னு அவளை இழுத்து அணைக்க ...\nஎன் மனைவி அவன் குத்துகளை வாங்க தயார் ஆனாள் !\nமுழு அம்மணமாக கிடந்த என் பொண்டாட்டிய அப்படியே ஆட்கொண்டான் !!!\nஎன் மனைவியின் உடலெங்கும் முத்தமிட்டு நான் மட்டுமே அனுபவிக்க வேண்டிய அவள் கனிகளை அவன் வாயால் கவ்வாமல் கவ்வி மெல்ல சப்ப அந்த இன்பத்தில் என் மனைவி இன்ப முனகல்களை வெளிப்படுத்தினாள் !!!\nஅனிதா அப்படியே அவனை இறுக்கி கட்டிக்கொள்ள ...திலீப் அவளின் கண்ணம் கழுத்து காதுன்னு சப்பியே ஒருவழியாக்கி அதிரடியான ஒரு ஓலுக்கு அவளை மீண்டும் முழுதுமாக தயார்படுத்திட்டான் !\nஇதோ அவன் பூளை என் மனைவியின் கூதிக்குள் சொருக மீண்டும் அந்த இன்பத்தை வாரி வழங்கினான் ...\nசலக் புலக்குன்னு .... சத்தம் ஹா ஆஅ ...\nம்க்கும் ம்க்கும் ! குத்துடா ... அவனும் வேகத்த கூட்டி அவ கூதியை\nகுத்தி கிழிச்சிட்ட்டான் !\nஆஹ் ! .....\nசூடான திரவத்தை அவள் புண்டையில் பாய்ச்சி கலைத்து ஓய்ந்தான் !\nஇருவரும் மறுபடி கண் மூட ...\nமுடிஞ்சது போல ...\nஆனா என் நினைப்பு பொய் ஆனது ...\nமெல்ல எழுந்த திலீப் கண் விழித்து பாத்ரூம் போனான் !\nஅவன் போயிட்டு வர அனிதாவும் எழுந்து பின்னாடியே வந்து கதவருகில் நிற்க ....\nஅவன் வெளியில் வந்து என்ன மேடம் இங்கே நின்னுட்டீங்க உள்ள வாங்க ...\nபோடா ... அவள் உள்ளே போக எத்தனிக்க ... அவள் பேருக்கு சுற்றி இருந்த டவலை உருவி எடுக்க ... அனிதா கூச்சமின்றி நிர்வாணமாகவே உள்ளே சென்றாள் ... நல்லவேளை கதவ சாத்தினா ...\nஅனிதா எல்லாம் முடித்து வந்து திலீப்பை கட்டிப்பிடிக்க ...\nஹனி சரக்கடிக்கலாமா ?\nம் அடி ...\nநான் சரக்கடிக்கலாமான்னு கேட்டேன் !\nநானும் அடிச்சிக்கன்னு சொல்லிட்டேன் ...\nநாம சேர்ந்து அடிக்கலாமா ?\nஆஹா அதெல்லாம் முடியாது ...\nசும்மா லைட்டா இங்க பாரு உனக்காக வோட்கா வாங்கிட்டு வந்துருக்கேன் ...\nவேணாம் தில் !\nசொல்றத கேளு லைட்டா அடி !!!\nதில் வேண்டாம் !\nஅனி பல வருஷ ஏக்கம் இன்னைக்கு நிறைவேறி இருக்கு சோ நாம இதை கொண்டாடியே ஆகனும் ...\nசொன்னா கேளு தில் !\nபேசாம அடி ...\nஅனிதா சொல்வதை கேட்க்காமல் அவன் பாட்டுக்கு எல்லாத்தையும் அடுக்கினான் !\nஅப்டின்னா அனிதா இப்ப சரக்கடிக்க போறாளா ?\nடிரிங்க்ஸ் சைட் டிஷ் ... எல்லாம் அரேஞ்ச் பண்ணிட்டான் ...அதுல சிகரெட் கூட இருந்தது !!\nஓகே டியர் நாம ஆரம்பிக்கலாம் !\nஅனிதா அதுக்கு மேல மறுக்க விரும்பல போல அவளும் வந்து உக்கார்ந்துவிட்டாள் !\nஇதுல குறிப்பிடத்தக்க அம்சம் ரெண்டு பேரும் நிர்வாணமா உக்கார்ந்திருப்பது தான் ...\nஓகே டியர் ஃபஸ்ட் ரவுண்டு போடலாமா ?\nம் கைல எடு !\nஅனிதாவும் கையில் எடுக்க ...\nஓகே இது நம்மளோட கள்ளக்காதலுக்காக கமான் சியர்ஸ் ...\nசியர்ஸ் .... சிரித்தபடி அவளும் மெல்ல ஸிப் பண்ண ! எதோ ஜூஸ் மாதிரி குடிச்சா ....\nஇருவரும் பேசி சிரித்து முதல் ரவுண்டை காலி பண்ண ... அடுத்த ரவுண்டை ஊற்றினான் !\nஅவளும் அடுத்த ரவுண்டுக்கு ரெடியாக அவளோட போன் மீண்டும் ரிங் ஆனது ....\nநான் தான பண்ணனும் இப்ப யாரு பண்றா ?\nநானும் ஆச்சர்யமாக பார்த்தேன் ...\nயாருன்னு பார்த்துட்டு பேச ஆரம்பித்தாள் ...\nஅய்யயோ இவன் ஏன் இந்நேரத்துல போன் பண்றான் !\nசரி பேசிடுவோம் .... ஹலோ !\nஉடனே போனை கட் பண்ணிட்டு ... திலீப்பை பார்க்க அவன் எதுவும் கண்டுக்காம\nரெண்டாவது ரவுண்ட ஊத்தி ... யாருடி ?\nம்! சொல்றேன் !\nஇந்நேரத்துல போன் பண்றான் !\nஹே அது ஆம்பிளைன்னு நீயா முடிவு பண்ற ...\nஇல்லைடி இருக்கார்னு சொல்லி கட் பண்ற ...\nசோ புருஷன் இருக்காரான்னு அவன் கேட்ருக்கணும் நீயும் இருக்கார்னு சொல்லி கட் பண்ற அப்ப அது ஆம்பிளை தான் !\nஓகே ஆம்பிளை தான் !\nஎன்ன எதுனா பிராப்ளமா மிரட்ரானா ?\nஇல்லை இல்லை சும்மா கால் பண்ணான் !\nஅதெல்லாம் உனக்கு ஏன் ? திலீப் அதுக்குமேல\nஅதைப்பத்தி பேசாம அடுத்த ரவுண்ட அனிதா கையில் வைக்க ...\nஅனிதா ஒரே கல்புல அதை காலி பண்ணிட்டா !\nஎன்னடி டக்குன்னு முடிச்சிட்ட ...\nஇது போதும் தில் எனக்கு ஒரு மாதிரியா இருக்கு ...\nஇருடி இன்னொரு ரவுண்டு போடு அப்பத்தான் கரெக்டா இருக்கும் !\nபேசிக்கொண்டே மூனு ரவுண்டை காலி செய்து ... போதையில் மிதக்கத்துவங்கினாள் !\nதிலீப் பெண்கள் தண்ணி போடுறது பாவம் தான ....\nஅதெல்லாம் இனிமே யோசிக்காத ... இந்தா இன்னொரு ரவுண்டு போடு !\nஅனிதா போன் வந்த பிறகு ஒரே கல்ப்பா அடிச்சது இப்ப தண்ணி போடுறது தப்பான்னு கேக்குறது சம்திங் ராங் ! சரி அவ பேசுறத முதல்ல கேப்போம் !\nஎன்னால முடியாது எனக்கு போதும் !\nஅப்ப நம்ம ரவுண்ட ஆரம்பிக்கலாமா ?\nசீ ! பேட் பாய் ! தண்ணி அடிச்சிட்டு செக்ஸா ?\nஅதுல தனி கிக் இருக்கு\nம்! வாடி போலாம்!\nதள்ளாடியபடி எழ ! திலீப் அனிதாவை தூக்கி பெட்ல படுக்க வச்சிட்டு அப்டியே அவள் மீது படர்ந்தான் !\nஅப்படியே அவளை புரட்டி தன மேல் போட்டுக்கொள்ள .... என் மனைவியின் முலைகள் அவன் நெஞ்சில் நசுங்க அவன் என் பொண்டாட்டியின் சூத்தை தடவ ...\nபோதையில் இருந்த இருவரும் இப்ப காம போதையில் மிதக்க ஆரம்பித்தனர் !\nஅனிதா அவனை அப்படியே கட்டிக்கொள்ள .... திலீப் அவளை மீண்டும் புரட்டி மெத்தையில் கிடத்தினான் ...\nஅதோடு நிற்காமல் அவளை மெத்தையின் ஓரத்திற்கு இழுத்து அவள் கால்களை தொங்கவிட்டபடி வந்து நிறுத்தினான் !\nஎங்கடி புண்டை ?\nஇந்தா இருக்கு பாருன்னு அவள் தன் புண்டையை தூக்கி காட்ட ... அவன் புளுத்திக்கொண்டிருந்த அவன் சுன்னியை என் மனைவியின் புண்டை துவாரத்தில்\nவைத்து அமுக்க ...\nஅது வழுக்கிக்கொண்டு உள்ளே போனது !\nசலக் புலக்குன்னு அவன் குத்த ...\nஅனிதா அவனை காலோடு சேர்த்து பின்னிக்கொள்ள ....\nமாங்கு மாங்குன்னு குத்தி அவள் கூதியை கிழிக்க ....\nஆஹ் ஆஹ் !\nசீக்கிரம்டா என்னால தாங்க முடியலை ....\nஅவனும் வேகத்தை கூட்டி கும்மு கும்முன்னு குத்தினான் !\nகிட்டதிட்ட 10 நிமிஷம் கேப் விடாம குத்தி அவள் கூதியை அவன் கஞ்சி கொண்டு\nஉணர்ச்சி வெள்ளத்தில் அவனை கட்டிப்பிடித்து முத்தமிட்டாள் !!\nஐ லவ் யூ ....\nமி டு லவ் யூடா ....\nஎன்னடி ஓவராகிடிச்சா ....\nம்! போதும் போதும்?\nஇருடி இன்னும் கொஞ்ச நேரம் கழிச்சி இன்னொரு ஷாட் போட்டுட்டு\nஅப்புறம் படுக்கலாம் !\nம்! நீ நடத்துடா ...\nஅப்டியே உனக்கு ஆசை இல்லாத மாதிரி சீன போடாதடி ....\nஆசை எல்லை மீரிடிச்சி ....\nஆங் அப்டி பேசி பழகு ....\nஇருவரும் இணைந்து ஆனந்தமாக படுத்தனர் ...\nமெல்ல அவன் கண்விழிக்க ...\nமீண்டும் ஆரம்பித்தது அவர்களின் விளையாட்டு...\nசெல்லசெல்ல சின்ன சின்ன சீண்டல்களோடு மீண்டும் விளையாடி ... மறுபடி அவளை\nஓக்க தயார் ஆனான் !\nச்ச இன்னைக்கு ஒரே நாள்ல இது நாலாவது தடவையா ? எத்தனை வாட்டி ???\nமுதல்ல வாய்ல போட்டா ! அப்புறம் ரெண்டு மூனு இப்ப சரக்கடிச்சிட்டு அப்புறம் இப்ப ... ஆக அவனுக்கு கஞ்சி வந்தது5தடவை ...இவ\nபுண்டைக்குள்ள விட்டது4தடவை ...\nஎப்பாடி ... செம பவர் தான் ... ஸ்போர்ட்ஸ் மேன் இல்லையா அதான் !\nஇப்ப அனிதாவை குனிந்த நிலையில் டாகி ஸ்டைலில் நிப்பாட்டி ... அவனோட ஏவுகணையை வெளில எடுக்கஅது இம்முறை அவ்வளவா எந்திரிக்கலை ....\nஅடடா நாமளே கண்ணு வச்சிட்டோம் !\nஅனிதா நிமிர்ந்து பார்க்க ... என்னாச்சிடா ...\nஎன்ன என்ன ஆச்சி ?\nஇல்லை சார் இன்னும் ரெடி ஆகலை போலன்னு துவண்டு கிடந்த அவன் சுன்னிய\nகையால் உருட்ட ...\nநீ கொஞ்சம் என் சுன்னிய ஊம்புனா போதும் சார் ரெடி ஆகிடுவாரு ...\nம்! ஆசை யார விட்டிச்சி ஒரே நாள்ல எல்லாத்தையும் தீத்துக்கனும்னு நினைக்கிற ....\nகொஞ்சம் இருன்னு அவன் பெட்ல உக்காந்து அவன்\nசுன்னியை காட்டி ம் இப்ப ஊம்புடி ...\nஎன் பொண்டாட்டியும் நல்லா முட்டி போட்டு அவன் சுன்னியை நாக்கால நக்க ....\nஅவன் அவள் தலையை அமுக்கிக்கொள்ள அவளோ தன் வாய்க்குள் விட்டு அவன் சுன்னியை போட்டு ஊம்பினாள் !\nசலப்பு சலப்புன்னு ஊம்பும் சத்தம் அந்த ரூமே எதிரொலிக்க ...\nஆகா அந்த ஏவுகணை எவ தயாராகி விட்டது ...\nஎன்னடா போதுமா சார் ரெடி !\nநீண்ட அவனுடைய தடி அனிதாவின் முலைகளை தொட்டுக்கொண்டு நிற்க ,...\nதிலீப் அவன் சுன்னி மொட்டை என் மனைவியின் முலைக்காம்பில் வைத்து அழுத்த ....\nம்! ... நடத்து நடத்துன்னு அவளே அவன் சுன்னியை தன் மார்பு முழுக்க வைத்து உருட்ட அது மேலும் மேலும் தடித்தத்து ...\nபிறகு அவர்களின் ஆலிங்கனம் ஆரம்பம் ஆனது ....\nமறுபடி அனிதாவை டாகி பொசிஷன்ல நிப்பாட்டி சுன்னியை ஒரே சொருகா சொருகிட்டான் !\nமெல்ல வேகம் கூட்டி ஓல் பஜனையை ஆரம்பித்தான் ...\nமீண்டும் சுகம் எத்தனை முறை ஓத்தாலும் இன்பவெறி அடங்காது போல ...\nசலக் சலக்குன்னு குத்த வழுக்கிக்கொண்டு அவனும் முன்னேறி குத்த அவளின் முலைகள் குலுங்க ....\nஇம்முறை ரொம்ப நேரம் ஆனது ....\nவேர்க்க விருவிருக்க இருவரும் ஒத்து மகிழ்ந்தனர் !\nகால் மணி நேரம் விடாம ஓத்துருப்பான் !\nஒருவழியாக அவனுக்கு கஞ்சி லீக் ஆக அடுத்த உச்சத்தை அடைந்தனர் !\nஅப்படியே இருவரும் பெட்ல சரிந்தனர் !\nஎன்னடி போதுமா ?\nபோதும்பா இந்த வாழ்க்கைக்கே போதும் !\nஎப்புடி இருந்திச்சி அதை சொல்லு ...\nம்! நல்லா இருந்துச்சின்னு அவன் நெற்றியில் முத்தமிட ...\nஅப்பா இதான் சர்டிபிகேட் ! இது போதும் இந்த சந்தோஷத்துக்கு ஒரு தம் அடிக்கலாம் !\nஅவன் மட்டும் எழுந்து வந்து ஒரு சிகரெட்ட பத்த வச்சி அதை அவள் முகத்தில் ஊத...\nசீ ... என்னது இது எங்க பாஸ் மாதிரி ...\nஎன்ன சொன்ன உங்க பாஸ் மாதிரியா ?\nதிலீப் அதிர்ச்சியாக கேட்க அதுக்கு மேல பெரிய அதிர்ச்சியில் நான் உறைந்தேன்...\nஇது தாங்க அனிதா எனக்கு குடுத்த அதிர்ச்சி ... முன்னாடியே சொன்னேனே ... அனிதா இப்டி பண்ணுவா பண்ணிருப்பா அப்டின்னு நான் நினைக்கவே இல்லை !\nஅங்க திலீப் அவளிடம் அது என்ன பாஸ் என்ன மேட்டர்னு அரிக்க ஆரம்பிக்க நானும் அதிர்ச்சி விலகாமல் அதை கவனிக்க ஆரம்பித்தேன் !!!\nஇனி அந்த பாஸ் கதைய அனிதாவே சொல்லட்டும் ...\nஇதோ கதையின் அடுத்த பகுதி !!!\nகதை அனிதாவின் பார்வையிலேயே சொல்லப்படும் !!!\nமுதல் பாகம் முற்றும் !!!\nby Tamil Girl Divya நேரம் பிற்பகல் 1:15
அடுத்தடுத்த நிகழ்ச்சிகளால் சஸ்பென்ஸ் காட்சிகளால் நகரும் ‘ரீல்’! - AanthaiReporter.Com | Tamil Multimedia News Web\nஅடுத்தடுத்த நிகழ்ச்சிகளால் சஸ்பென்ஸ் காட்சிகளால் நகரும் ‘ரீல்’!\nஸ்ரீமுருகா மூவி மேக்கர் நிறுவனம் தயாரிப்பில் தயாரான ‘ரீல்’ படத்தில் நாயகன் உதய்ராஜ் மற்றும் நாயகி அவந்திகா இருவரும் காதலர்கள் என்கிற கதாபாத்திரத்தில் நடிக்க. KPY புகழ் சரத் இப் படத் தில் முழு நேர நகைச்சுவை நடிகராக மட்டுமில்லாமல், ஒரு குணச்சித்திர நடிகராகவும் நடித்து இருக்கிறார். இந்தப் படத்திற்கு சந்தோஷ் சந்திரன் பாடல்களையும், அச்சு ராஜாமணி பின்னணி இசையும் கவனிக்கின்றனர். சுனல் பிரேம் ஒளிப்பதிவு செய்ய, சாய் சுரேஷ் படத் தொகுப்பு செய்கிறார். படத்தின் கதையை T.N.சூரஜ் எழுத, முனுசாமி என்னும் அறிமுக இயக்குநர் இந்த ‘ரீல்’ படத்தை இயக்கி இருக்கிறார்.\nதற்போது ரிலீஸூக்கு தயாரான “ரீல்” படக் குழுவினர் அண்மையில் மீடியாக்களை மீட் செய்தனர். இந் நிகழ்வில் பேசிய இயக்குனர் முனுசாமி , “இந்த திரைப்படத்தில் மிகப்பெரிய தொழில்நுட்ப கலைஞர்கள் பணியாற்றி உள்ளனர். இது வழக்கமான கதையாக இருந்தாலும், கதை சொல்லலில் வித்தியாசமான மற்றும் தனித்துவமான முயற்சியை மேற்கொண்டிருக்கிறோம். குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சி. இந்தப் படம் வேலையில்லாத ஒரு பையனுக்கும், கிராமத்து பெண்ணுக்கும் இடையே நிகழும் காதலையும், சமூகம் அவர்களை எப்படி நடத்துகிறது என்பதையும் பேசும் படம். இந்த படத்தில் உதயராஜ் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார், பல யோசனைகளுக்குப் பிறகு அவர் நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவந்திகா இந்த படத்தில் கதாநாயகியாக அறிமுகம் ஆகிறார்.\nநடிகர் உதயராஜ் கூறும்போது, “இந்த படத்தில் நடிக்க எனக்கு வாய்ப்பளித்த மொத்த குழுவுக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இந்த படம் இரண்டு வித்தியாசமான வாழ்க்கை முறைகளை சுற்றியது. துல்லியமாக சொல்வதென்றால், வசதியான குடும்ப பின்னணியில் இருந்து வந்த ஒரு பையனை பற்றியும், கிராமத்தில் இருந்து தன் வாழ்வாதாரத்திற்காக நகரத்துக்கு வந்த பெண்ணை பற்றியும் பேசும் படம். அவளது அப்பாவியான தன்மையால் அவளை அனைவரும் ஏமாற்றுகிறார் கள். இந்த இருவரும் எவ்வாறு சந்தித்துக் கொள்கிறார்கள், அதற்கு பிறகு என்ன ஆகிறது என்பது மீதிக்கதை.\nஇத்திரைப்படம் அடுத்தடுத்த நிகழ்ச்சிகளால் சஸ்பென்ஸ் காட்சிகளால் நகர்கிறது. சினிமா துறை யில் என் பயணம் துவங்கியது, மலையாளத்தில் நான் நடித்த சில குறும்படங்களின் மூலம் தான். அங்கு இன்னும் பல வாய்ப்புகள் கிடைத்தன. இருப்பினும், என் முக்கிய நோக்கம் தமிழ் படத்தில் நடிப்பதே. இப்போது ‘ரீல்’ படத்தின் மூலம் அது நிறைவேறி இருக்கிறது.\nதிரைப் படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் ஏற்கனவே முடிந்து, படத்தை பிப்ரவரி மாத இறுதியில் வெளியீடு செய்ய பணிகள் முழு மூச்சில் நடந்து வருகின்றன என்ற தகவலையும் வெளியிட்டார் இயக்குனர் முனுசாமி.\nPrevious திருமுருகன் காந்தியை காதலைப் பற்றி பேச வைச்சிட்டோம்! – விஜய்சேதுபதி!\nNext கேன்சர் நோயாளிகளுடன் அளவளாவிய கெளதமி!
வேலூர்: `நான் ஜெயிச்சா... என் சமூகத்துக்கே பெருமை!' - திருநங்கைக்கு அங்கீகாரம் கொடுத்த திமுக | vellore corporation election - dmk gives opportunity to transgender - Vikatan\nவேலூர்: `நான் ஜெயிச்சா... என் சமூகத்துக்கே பெருமை!' - திருநங்கைக்கு அங்கீகாரம் கொடுத்த திமுக\n``நான் ஜெயிச்சு வந்தவுடனேயே 63 தெருக்கள்லயும் அடிப்படை வசதிகளை சிறப்பாக செஞ்சு தருவேன்’’ என்கிறார் தி.மு.க-வின் திருநங்கை வேட்பாளர் கங்கா.\n60 வார்டுகளுக்கான வேலூர் மாமன்றத் `தேர்தல் திருவிழா’ களைகட்டியிருக்கிறது. ஓல்டு டவுன் பகுதியை உள்ளடக்கிய 37-வது வார்டில், தி.மு.க சார்பில் கங்கா என்ற திருநங்கை கவுன்சிலர் வேட்பாளராகக் களமிறக்கப்பட்டிருப்பது, பொதுமக்களிடம் வியப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தி.மு.க-வில் அடிப்படை உறுப்பினர், தென்னிந்திய திருநங்கைகள் கூட்டமைப்பின் செயலாளர் என்பது மட்டுமே கங்காவின் பின்னணி.\nஅப்படியிருக்க, ‘தேர்தலை எப்படி எதிர்கொள்ளப்போகிறார்?’ என்பது குறித்து திருநங்கை கங்காவிடமே பேசினோம்.\n``எனக்கு 49 வயசாகுது. ஓல்டு டவுன் பகுதியிலதான் வீடு இருக்கு. நான்கைந்து தலைமுறையா இங்கதான் வசிக்கிறோம். ஊர் முழுக்க என் சொந்தக்காரங்கதான் அதிகமா இருக்கிறாங்க. பல சமூக மக்களும் இங்க வசிக்கிறாங்க. அவுங்க எல்லாருக்குமே என்னைத் தெரியும்.\nவேலூர் மாநகராட்சி அலுவலகம்\nஎன் அப்பா இறந்துட்டாரு. அம்மா மீனாட்சி என்கூட இருக்காங்க. எனக்குக் கல்யாணம் ஆகி 29 வருஷம் ஆகுது. கணவர் பேரு சரவணன். வேலூர்ல இருக்கிற டார்லிங் ஹோட்டல்ல வேலை செய்யுறாரு. என் தம்பியும் இறந்துட்டான். அவனுக்கு ஒரு பையன், ஒரு பொண்ணு இருக்கிறாங்க. ரெண்டு பேரையும் நான்தான் வளர்த்துப் படிக்கவெச்சேன். பையன் மார்க்கெட்டிங் வேலையில இருக்கிறான். பொண்ணை நல்ல இடத்துல கல்யாணம் பண்ணிக் கொடுத்திருக்கிறேன். தென்னிந்திய திருநங்கைகள் கூட்டமைப்புல செயலாளர் பொறுப்புல இருக்கிற நான், கலைக்குழுவும் நடத்துறேன். அதுல, 30 திருநங்கைகள், 20 ஆண்கள் இருக்குறாங்க. கோயில் திருவிழாவில் கரகாட்டம், துக்க நிகழ்வில் பறையிசை வாசிப்பு போன்ற நிகழ்ச்சிகளை நடத்துறேன்.\nஅதுமட்டுமில்லாம... சொந்தமா காளி கோயில் கட்டி பல்வேறு சமூக சேவைகளையும், ஓல்டு டவுன் பகுதியில செஞ்சுக்கிட்டு வர்றேன். கலைஞர் ஐயாதான் மூன்றாம் பாலினத்தவர்களை `திருநங்கை’னு பெயர் வெச்சு பெருமைப்படுத்துனாரு. இப்போ, ஸ்டாலின் ஐயா... எனக்கு வாய்ப்பு வழங்கி, எங்க சமூகத்துக்கு மேலும் பெருமை சேர்த்திருக்கிறாரு. கொரோனா காலத்துல நகர்ப்புறத் தேர்தல் அறிவிச்சு கேன்சலாச்சே... அப்பவே நான் விருப்ப மனு கொடுத்தேன். என் வார்டு... பெண்களுக்கு ஒதுக்கப்பட்டது. பெண் பாலினத் தகுதியிலதான் எனக்கு வாய்ப்பு வழங்கியிருக்கிறாங்க. என்னுடைய பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் போன்ற அனைத்து அடையாளச் சான்றிதழ்களிலும் என்னுடைய பாலினம் `பெண்’ என்றே குறிப்பிடச் செஞ்சுருக்கேன்.\nஅந்த பாஸ்ஸ்போர்ட்டைவெச்சு, சிங்கப்பூர், மலேசியாவுக்கு விமானத்துல அடிக்கடி போயிட்டு வர்றேன். அந்த நாடுகள்ல இருக்கிற என் சமூகத்தினர் பல பேர் என்னுடன் தொடர்பில் இருக்கிறாங்க. அவர்களைச் சந்திப்பதற்காகத்தான் அடிக்கடி போயிட்டு வர்றேன்’’ என்றவர், தேர்தல் களப்பணி குறித்தும் பேசத் தொடங்கினார்.\n‘‘என்னுடைய வார்டில், 63 தெருக்கள் இருக்குது. அதில் 20 தெருக்கள்லதான் தண்ணி வசதி, ரோடு, கால்வாய் போன்ற அடிப்படை வசதிகள் கொஞ்சம் நல்லாயிருக்கு. நான் ஜெயிச்சு வந்த உடனேயே அடிப்படை வசதிகளை 63 தெருக்கள்லயும் சிறப்பா செஞ்சு தருவேன். கொரோனா காலத்துலேயே, ரெண்டு கட்டமா ரெண்டாயிரம் பேருக்கு அரிசி, பருப்பு, காய்கறி கொடுத்திருக்கிறேன். வருஷா வருஷம் 500 பேருக்கு வேட்டி, சேலை கொடுத்திருக்கிறேன். என் வார்டுல நல்லது கெட்டதுன்னா முதல் ஆளா ஓடிப்போய் நின்னு உதவி செய்யறேன். என் மக்கள் என்னை நம்புறாங்க. என் வீட்டை அடகுவெச்சுதான் செலவுக்குப் பணம் ரெடி பண்ணியிருக்கிறேன். நான் ஜெயிச்சா, என் சமூகத்துக்கே பெருமை. ஜெயிச்சிட்டு வந்து உங்ககிட்ட பேசுறேன்’’ என்றார் நம்பிக்கையோடு!
அதிர்ச்சி : நடிகர் சேது மாரடைப்பில் மரணம் | Shocking, Kanna Laddu Thinna Aasaiya star Dr Sethu dies of cardiac arrest - The Subeditor Tamil\nby Chandru, Mar 27, 2020, 09:50 AM IST\nசந்தானம் நண்பர் மற்றும் டாக்டர்..\nநடிகர் சந்தானத்தின் நெருங்கிய நண்பர் டாக்டர் சேது. நடிகராக வேண்டும் என்ற ஆசை இருந்த நிலையில் சேதுவை கண்ணா லட்டு தின்ன ஆசையா படம் மூலம் நடிகராக அறிமுகம் செய்தார் சந்தானம். அப்படம் அவருக்கு நல்ல பெயரை பெற்றத் தந்தது. வாலிப ராஜா, சக்க போடு போடு ராஜா, 50/50 ஆகிய படங்களிலும் நடித்தார். தோல் சிகிச்சை டாக்டரான இவர் வெளிநாடு சென்று லேசர்முறையில் தோல் சிகிச்சை மற்றும் உடல் அழகு அறுவை சிகிச்சை பயிற்சி பெற்றார். சென்னையில் மருத்துவமனை ஒன்றையும் சேது தொடங்கினார். சில நடிகைகள் அவரிடம் அழகு சிகிச்சை பெற்றனர். இந்நிலையில் நேற்று இரவு 8.30 மணி அளவில் சேது திடீர் மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார். அவருக்கு வயது 36.\nஇளம் வயதிலேயே நடிப்பு, மருத்துவ துறையில் சிறந்த விளங்கிய சேதுவின் திடீர் மரணம் திரையுலகினரையும், மருத்துவ துறையினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. அவருக்கு திரையுலகினர், டாக்டர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.கடந்த 2013ம் ஆண்டே கண்ணா லட்டு திண்ண ஆசையா படத்தில் சேது அறிமுகமாகியிருந்தாலும் அதன்பிறகு படிப்பதற்காக வெளிநாடு சென்று விட்டார். ஒரு வருடத்தில் திரும்பி விடுவார் என்று எதிர்பார்த்த நிலையில் கார் விபத்தில் சிக்கி உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சைக்கு பின் உயிர் பிழைத்தார். அதன்பிறகு மீண்டு வந்து3வருடங்களுக்கு பின்னர் அதாவது 2016ம் ஆண்டு வாலிப ராஜா என்ற படம் உள்ளிட்ட மேலும்2படங்களில் நடித்தார். கடந்த 2016ம் ஆண்டு சேதுவுக்கு உமா என்பவருக்கும் திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது.\nஒருநாள் முதல்வர் அர்ஜுன் புது தகவல்..
காவிரி உரிமை நிலைநாட்டப்பட்டிருக்கிறது - அமைச்சர் ஜெயக்குமார் | Virakesari.lk\nகாவிரி உரிமை நிலைநாட்டப்பட்டிருக்கிறது - அமைச்சர் ஜெயக்குமார்\nPublished by Priyatharshan on 2018-05-22 05:32:37\nகாவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டிருப்பதன் மூலம் காவிரி உரிமை நிலைநாட்டப்பட்டிருக்கிறது. இதை ஸ்டாலினால் பொறுத்துக் கொள்ளமுடியவில்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்திருக்கிறார்.\nஇது தொடர்பாக அவர் சென்னையில் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது,\n‘ ஆட்சியிலும் கட்சியிலும் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் ஒரே கட்சி அதிமுக மட்டும் தான். கட்சி அரசு நிர்வாகத்தில் பெண்களுக்கு அதிக இடங்களை ஒதுக்கீடு செய்தவர் ஜெயலலிதா. ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும் தமிழக அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.\nகாவிரி நதி நீர் பங்கீடு விவகாரத்தில் நல்ல தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு அனைத்து அதிகாரங்கள் உள்ளது. மு க ஸ்டாலின் கற்பனை உலகில் சஞ்சரிக்கிறார்.\nஅறிவாலயத்தை தலைமை செயலகமாக நினைத்துக் கொண்டு அனைத்துக்கட்சிக் கூட்டத்தை தினமும் நடத்தி வருகிறார். காவிரி உரிமை நிலைநாட்டப்பட்டிருப்பதை ஸ்டாலின் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. ’ என்றார்.\nகாவிரி உரிமை காவிரி மேலாண்மை ஆணையம் ஸ்டாலின் சென்னை ஜெயலலிதா
இன்று தங்கம் விலை நிலவரம் என்ன.. கூடிருக்கா குறைஞ்சிருக்கா.. இனி எப்படி இருக்கும்..! | Gold prices today gain amid rising coronavirus cases - Tamil Goodreturns\n» இன்று தங்கம் விலை நிலவரம் என்ன.. கூடிருக்கா குறைஞ்சிருக்கா.. இனி எப்படி இருக்கும்..!\nஇன்று தங்கம் விலை நிலவரம் என்ன.. கூடிருக்கா குறைஞ்சிருக்கா.. இனி எப்படி இருக்கும்..!\nUpdated: Monday, June 8, 2020, 11:44 [IST]\nடெல்லி: தங்கம் மற்றும் வெள்ளியின் விலையானது வாரத்தின் முதல் நாளான இன்று சற்று அதிகரித்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் வீழ்ச்சி கண்டு வரும் பொருளாதாரமே.\nஆக முதலீட்டாளார்கள் மத்தியில் வீழ்ச்சி கண்டு பொருளாதாரத்தினால் பங்கு சந்தைகள் வீழ்ச்சியடையும் என்ற உணர்வே நிலவி வருகிறது. இதன் காரணமாக தங்கத்தின் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.\nஇதனை இன்னும் வேகமெடுக்கும் வகையில் கொரோனாவின் தாக்கமும் இன்னும் அதிகரித்து வருகிறது. இது எந்தளவுக்கு பொருளாதாரத்தில் தாக்கத்தினை ஏற்படுத்துமோ என்ற எண்ணமும் நிலவி வருகிறது.\nஅதிலும் தற்போது இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் 2.5 லட்சத்தினை நெருங்கியுள்ளது. பலி எண்ணிக்கையும் கிட்டதட்ட 7000 நெருங்கியுள்ளது. இந்த நிலையில் சர்வதேச அளவில் கொரோனாவின் தாக்கம் 70 லட்சத்தினை நெருங்கியுள்ளது. பலி எண்ணிக்கையும்4லட்சத்தினை தாண்டியுள்ளது. இதனால் விலை உயர்ந்த உலோகத்தின் விலையானது சற்று நிலையானதாகவே காணப்படுகிறது.\nசர்வதேச சந்தையில் தங்கத்தின் விலையானது கடந்த வாரம் முழுக்க சற்று சரிவினைக் கண்டு வந்த நிலையில், வாரத்தின் முதல் நாளான இன்று சற்று ஏற்றம் கண்டுள்ளது. தற்போது தங்கத்தின் விலையானது அவுன்ஸூக்கு 9.50 டாலர்கள் குறைந்து, 1692.65 டாலராக வர்த்தகமாகி வருகிறது. இது 0.58% ஏற்றமாகும்.\nசர்வதேச தங்கத்தின் விலையின் எதிரொலியாக, எம்சிஎக்ஸ் சந்தையில் 10 கிராமுக்கு 174 ரூபாய் அதிகரித்து 45,880 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது. கடந்த வாரத்தில் தொடர்ச்சியான சரிவுக்கு பின்பு விலை இன்று தங்கம் விலை சற்று அதிகரித்துள்ளது. இதில் கவனிக்கதக்க விஷயம் என்னவெனில் தங்கம் விலையானது இன்று அதிகரித்து இருந்தாலும் 46,000 ரூபாய்க்கு கீழாகத் தான் உள்ளது குறிப்பிடத்தக்கது.\nசர்வதேச சந்தையில் வெள்ளியின் விலையானது, 2.02 சதவீதம் ஏற்றம் கண்டுள்ளது. தற்போது விலை 0.356 டாலர் அதிகரித்து 17.832 டாலர்களாக அதிகரித்துள்ளது. வெள்ளியின் விலையும் கடந்த ஒரு வார சரிவுக்கு பிறகு, முதல் நாளாக இன்று ஏற்றம் கண்டு வருகிறது.\nசர்வதேச சந்தையின் எதிரொலியாக எம்சிஎக்ஸ் சந்தையிலும் வெள்ளியின் விலை அதிகரிக்க தொடங்கியுள்ளது. எம்சிஎக்ஸ் சந்தையின் எதிரொலியாக வெள்ளியின் விலையானது 701 ரூபாய் அதிகரித்து, 48052 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது.\nசென்னையில் இன்று கிராம் தங்கத்தின் விலை 4,435 ரூபாயாகவும், இதே சவரன் தங்கத்தின் விலையானது 35,480 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதே வெள்ளியின் விலையானது கிராமுக்கு 52.90 ரூபாயாகவும், 1 கிலோ வெள்ளியின் விலையானது 52,900 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா காரணமாக விலை இன்னும் நீண்டகால நோக்கில் விலை அதிகரிக்கவே வாய்ப்புகள் உள்ளது.\nGold prices today gain amid rising coronavirus cases\nGold and silver prices today gain amid rising coronavirus cases in the country.
world news5overnight developments from around the globe | Indian Express Tamil\nUpdated: November 20, 2021 10:14:37 am\n1.25 மணிநேரம் அமெரிக்க அதிபராக இருந்த கமலா ஹாரிஸ்\nவாஷிங்டனில் உள்ள வால்டர் ரீடு ராணுவ மருத்துவ மையத்தில், அதிபர் ஜோ பைடனுக்கு பெருங்குடல் தொடர்பான கொலோனோஸ்கோபி சிகிச்சை நேற்று அளிக்கப்பட்டது. இச்சிகிச்சையின் போது அவருக்கு மயக்க மருந்து செலுத்தப்படும் என்பதால், அமெரிக்க அதிபரின் அதிகாரப் பொறுப்பு, துணை அதிபர் கமலா ஹாரிசுக்கு வழங்கப்பட்டது. அவருக்கு அமெரிக்க ஆயுதப் படைகள் மற்றும் அணு ஆயுதக் கிடங்கின் மீது நடவடிக்கை எடுக்கவும் அதிகாரம் இருக்கும் என தெரிவிக்கப்பட்டது. சிகிச்சையில் இருந்து குணம் அடைந்து வீடு திரும்பிய பிறகு மீண்டும் அதிபர் பொறுப்பு ஜோ பைடனுக்கு வழங்கப்பட்டது.\nஅமெரிக்க வரலாற்றில் அதிபர் பதவியை வகிக்கும் முதல் பெண்மணி என்ற பெருமை கமலா ஹாரிசுக்கு கிடைத்துள்ளது. சுமார் 1.25 மணிநேரம் அமெரிக்க அதிபராக கமலா ஹாரிஸ் இருந்துள்ளார்.\nஅமெரிக்க இளைஞர் பிரிவினைவாத கொலை விசாரணைக்குப் பிறகு விடுவிப்பு\nஅமெரிக்காவில் இன நீதிக்காக நடத்தப்பட்ட போராட்டத்தில் இரண்டு நபர்களை சுட்டுக்கொன்றதால் கைது செய்யப்பட்ட இளைஞர் கைல் ரிட்டன்ஹவுஸ் குற்றவாளி அல்ல என விடுதலை செய்யப்பட்டுள்ளார். 18 வயதாகும் அவர் மீது சுமத்தப்பட்ட இரண்டு கொலைக் குற்றச்சாட்டுகள், கொலை முயற்சி, போராட்டத்தில் கலவரத்தை ஏற்படுத்தியது என அனைத்து விதமான வழக்குகளிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். இந்த தீர்ப்பு விவாத பொருளாக மாறியுள்ளது.\nகனடா கனமழை: எரிபொருள், நெடுஞ்சாலை பயணத்தில் கட்டுப்பாடு\nகனடாவில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகளை அந்நாட்டு அரசு விதித்துள்ளது. அதன்படி, மாகாணத்தின் சில பகுதிகளில் உள்ள எரிவாயு நிலையங்களில் மக்கள் வாங்கக்கூடிய எரிபொருளின் அளவைக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. நெடுஞ்சாலைகள் மீண்டும் திறக்கப்பட்டாலும், அத்தியாவசிய பயணத்தைத் தவிர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nஅத்தியாவசியமற்ற வாகனங்களுக்கு பெட்ரோல் நிலையத்திற்கு ஒரு பயணத்திற்கு சுமார் 30 லிட்டர் மட்டுமே வழங்கப்படவுள்ளது. இந்த கட்டுப்பாடுகள் டிசம்பர் 1 ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளத்தால் எரிபொருளுக்கு ஏற்பட்ட பற்றாக்குறை காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.\nபோராட்டத்தில் வன்முறை: டச் போலீசாரின் துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயம்\nரோட்டர்டாமில் கொரோனா தொற்று நடவடிக்கைகளுக்கு எதிரான போராட்டத்தில், திடீரென வன்முறை ஏற்பட்டது. போராட்டக்காரர்கள், கார்களை உடைத்தும், அங்கிருந்து காவலர்கள் மீதும் கற்களையும் வீசத் தொடங்கினர். அவர்களை கட்டுப்படுத்த போலீசார் துப்பாக்கிச் சூடு, தண்ணீரும் பீய்ச்சி அடித்தனர். இதுகுறித்து காவல் துறை தரப்பில் கூறுகையில், ” வன்முறையை அடக்க வானத்தை நோக்கிய துப்பாக்கியால் சுட்டோம். அதே சமயம், நிலைமை கைமீறிப் போனதால், நேரடி துப்பாக்கி சூடு நடத்தினோம். இரண்டு பேர் காயமடைந்தது எங்களுக்குத் தெரியும். இது எச்சரிக்கை துப்பாக்கிச் சூட்டின் போது ஏற்பட்டிருக்கலாம். இருப்பினும், உண்மையான காரணத்தை அறிய விசாரணை நடத்தி வருகிறோம்.\nகொரோனா பாஸ் வைத்திருக்கும் நபர்களும் உள் அரங்கத்தில் நுழைய அரசு விதித்திருக்கும் தடைக்கு எதிராக, நூற்றுக்கணக்கானோர் குரல் எழுப்பினர். கொரோனா பாஸ் என்பது அவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர் அல்லது நோய் தொற்றிலிருந்து குணமாகிவந்தவர்கள் என்பது தான். ஆனால், இந்த பாஸ் தடுப்பூசி முழுமையாக செலுத்தாத நபர்களிடமும் இருப்பதால், கொரோனா பரிசோதனையில் நெகட்டிவ் சான்றிதழ் வைத்திருந்தால் மட்டுமே அனுமதி என அரசு அண்மையில் அறிவித்தது.\n4 ஆவது முறையாக டிக்டாக் தடையை நீக்கிய பாகிஸ்தான்\nபாகிஸ்தானின் ஊடக ஒழுங்குமுறை ஆணையம் டிக்டாக் செயலி மீதான தடையை மீண்டும் நீக்கியுள்ளது. அவதூறான பதிவுகள் பதிவிடுவதை கட்டுப்படுத்தப்படும் என டிக்டாக் நிறுவனம் உறுதியளித்ததைத் தொடர்ந்து, டிக்டாக் செயலி4மாத தடைக்கு பிறகு செயல்பாட்டுக்கு வந்துள்ளது. கடந்த 15 மாதங்களில்,நான்கு முறையாகப் பாகிஸ்தான் தொலைத்தொடர்பு அதிகாரிகள் டிக்டாக் மீது தடை விதித்து நீக்கியுள்ளனர்.\nWeb Title:5overnight developments from around the globe
எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத காட்சி !! இரட்டை குழந்தைகளின் குறும்புகளை சற்று பாருங்க !! – Online90Media\nMarch 11, 2021 Online90LeaveaComment on எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத காட்சி !! இரட்டை குழந்தைகளின் குறும்புகளை சற்று பாருங்க !!\nஇரட்டை குழந்தைகளின் குறும்பு……..\nஓடி விளையாடு பாப்பா – நீ ஓய்ந்திருக்க லாகாது பாப்பா. கூடி விளையாடு பாப்பா” என்பது பாரதியின் கூற்று. விளையாட்டு அனைத்து மனிதர்களும் இயல்பாக விரும்பி ஈடுபடும் செயற்பாடுகளில் ஒன்று விளையாட்டு ஆகும். இதில் குழந்தைகள் தன எப்பொழுதும் முதலிடத்தில் இருப்பார்கள். ஆரம்ப காலங்களில் இருந்த மனிதனின் மனநிலைக்கும் தற்போதைய மனிதர்களின் மனநிலைக்கும் உள்ள இடைவெளி மிக தூரம் என்று தான் சொல்ல முடியும்.\nதற்போதைய காலங்களில் புதிய அப்டேட்களும் ஒவ்வொரு நாளும் மாறிக்கொண்டு வருகிறது, அது மட்டும் இன்றி புதிதாக உருவாகும் சந்ததிகள் கூட நாளுக்கு நாள் அப்டேட்களை மட்டுமே விரும்புகிறார்கள். இதனால் புதிதாக சிந்திக்க வேண்டும் என்கிற மன நிலைக்கு மனிதன் தள்ளப்படு வருகின்றான். பொதுவாக குழந்தைகள் என்றாலே சுட்டித்தனம் நிறைந்தவர்களாகவே இருப்பார்கள். அவர்களின் பேச்சு, செயல் அனைத்துமே கொள்ளை அழகாகவே காட்சியளிக்கும். அவர்கள் செய்யும் குறும்புத்தனத்தினால் வீட்டில் உள்ளவர்களின் கவலைகள் எல்லாம் காணாமல் போய்விடும்.\nசிறு குழந்தைகள் எப்பொழுதும் துரு துறுதுறுவென எதையாவது செய்து கொண்டு தான் இருப்பார்கள். அதிலும் இரட்டையர்களின் குறும்புகள் இன்னும் அழகாக இருக்கும் தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் இரட்டையர்களின் குறும்புகள் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது. குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ள்ளது.
#INDvAUS : 8-3 உலகக்கோப்பை வரலாற்றை மாற்றி எழுதுமா கோலியின் படை #INDvAUS\nDavid Warner ( Aijaz Rahi, AP )\nஇன்றைய போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால், அரையிறுதிக்கு சென்றுவிடலாம். ஏனெனில் டாப்4அணிகள் இவை தான்.\n'இறுதிவரை போராடு' என்பது தான் என்றும் ஆஸ்திரேலியாவுக்கான தாரக மந்திரம். அவர்களது முதல் போட்டியில் அஃப்கானிஸ்தானை வென்றதில் 'ஆஸ்திரேலிய ஸ்பெஷல்' என எதுவும் இல்லை. ஆனால், ஆஸ்திரேலியாவின் இரண்டாவது போட்டி எப்போதும் நடக்கும் 'ஆஸ்திரேலிய ஸ்பெஷல்' போட்டி. ' சொடக்கு பால் போட்டு அவுட்டாக்குவது போல்' இந்த சீசனில் வெஸ்ட் இண்டீஸ் ஷார்ட் பாலை பயன்படுத்த ஆரம்பித்திருக்கிறது.\nமுதல் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக வெஸ்ட் இண்டீஸ் பயன்படுத்தியது இதுதான். அப்போதே , 'இதே எண்ணத்தோட ஆஸ்திரேலிய பக்கம் போயிடாதீங்க, டெரரா இருப்பாணுக' என அட்வைஸ் செய்தனர் விமர்சகர்கள். ஆனாலும், மீண்டும் அதைப் பயன்படுத்தியது வெஸ்ட் இண்டீஸ்.\n38/4 என தத்தளித்த ஆஸ்திரேலியா, ஸ்டீவ் ஸ்மித், அலெக்ஸ் கேரியின் புண்ணியத்தால் 100 ரன்களைக் கடந்தது. எல்லாவற்றையும் முடித்துவிட்டோம் என நினைத்தது வெஸ்ட் இண்டீஸ். ஆனால், ஆஸ்திரேலியாவின் கடைசி வீரரால்கூட வெஸ்ட் இண்டீஸின் வெற்றியைப் பறிக்க முடியும் என்பதை அவர்கள் அப்போது உணர்ந்திருக்க மாட்டார்கள். உள்ளே நுழைந்தார் கூல்டர் நைல். அவர் களமிறங்கியபோது ஸ்கோர் 147-6. அவர் அவுட்டான போது ஸ்கோர் 284-9.\nஅதற்கும் அந்தப் போட்டிக்கு முன்னர் கூல்டர் நைலின் ODI சராசரி 12.83.\n60 பந்துகள்...4சிக்ஸர்... 8 பவுண்டரி... 92 ரன்கள். அந்த நாளின் ஹீரோவானார் நைல்\nஇறுதியில் 15 ரன்கள் வித்தியாசத்தில் ( உபயம் மிட்சல் ஸ்டார்க் 10-1-46-5 ) வெஸ்ட் இண்டீஸை வென்றது. இதுதான் ஆஸ்திரேலியா. இந்தத் தொடரில்2போட்டிகளிலும் வெற்றி பெற்றிருக்கிறது.\nஆஸ்திரேலிவுக்கும் இந்தியாவுக்கும் ஒரு எழுதப்படாத புரிந்துணர்வு ஒப்பந்தம் இருக்கிறது. அவர்கள் என்றெல்லாம் ஃபார்மில் இல்லையோ, அன்றெல்லாம் அவர்களை மீண்டும் ஃபார்மாக்கி அழகு பார்க்கும் இந்தியா.\nபேக் ஃபூட்டில் பந்துகளை எதிர்கொள்ள வீரர்கள் சிரமப்படுகிறார்கள். அதைவிடவும், ஷார்ட் பிட்ச் பந்துகளை அவர்கள் எதிர்கொள்வது கவலை அளிக்கிறது\n2017ம் ஆண்டில் இருந்து 2019 மார்ச் வரை, ஆஸ்திரேலியா விளையாடிய 33 ஒரு நாள் போட்டிகளில் 8ல் மட்டுமே வெற்றி பெற்று இருந்தது. 23 தோல்விகள். 2018ம் ஆண்டு ஆரம்பத்தில், ஆஸ்திரேலியா பயணித்தது இங்கிலாந்து அணி. மெல்போர்ன், பிரிஸ்பேன், சிட்னி, பெர்த் என எல்லா இடங்களிலும் மண்ணை கவ்வியது ஜாம்பவான் ஆஸ்திரேலியா. மீண்டும் ஜூனில் இங்கிலாந்துடன் போட்டி. அதுவும் இந்த முறை இங்கிலாந்து மைதானங்களில். ஓவல், கார்டிஃப், நாட்டிங்ஹாம், மான்செஸ்டர் என மைதானங்களின் பெயர்கள் மட்டுமே மாறின. ஆஸ்திரேலிவுக்கான வீழ்ச்சி எழுதப்படிருந்த சமயம் அது.\nஅவ்வளவு ஏன், இந்தியாவே 2019ம் ஆண்டின் தொடக்கத்தில் அடிலெய்டு, மெல்போர்னில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. 2-1 என அந்தத் தொடரை ஆஸ்திரேலியாவில் வென்றது இந்தியா. ஆனால், உலகக் கோப்பைக்கு ஒரு மாதத்துக்கு முன், மீண்டும் ஃபீனிக்ஸ் பறவையானது ஆஸ்திரேலியா. சில ஆண்டுகளுக்கு முன்னர், 2015 உலகக் கோப்பைக்கு முன், மைக்கல் கிளார்க்கை ஃபார்முக்கு அழைத்து வந்தது இந்தியா. இந்த சீசனில் நாம் ஃபார்முக்கு திருப்பிய பிளேயர் தற்போதைய கேப்டனான ஆரோன் ஃபிஞ்ச்\nநாக்பூரிலும், ஐதராபாத்திலும் தோற்ற ஆஸ்திரேலிவை மீண்டும் வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றது இந்தியா. 3-2 அந்தத் தொடரை வென்றது. பின்னர், பாகிஸ்தானை 5-0 என வீழ்த்தியது. தொடர்ச்சியாக பத்து வெற்றிகள் பெற்றிருக்கிறது ஆஸ்திரேலியா.\nஇந்தியாவைப் பொறுத்தவரை, அட்டகாசமாக உலகக்கோப்பையை ஆரம்பித்திருக்கிறது. 2011ம் ஆண்டு உலகக்கோப்பையை சேவாக் சதத்துடன் ஆரம்பித்துவைத்தார். இந்த முறை ரோஹித் அதை செய்திருக்கிறார். பும்ரா அசத்தல் ஃபார்மில் இருக்கிறார். மிடில் ஓவர்களில் இந்தியா அதன் ரிஸ்ட் ஸ்பின்னர்களை பெரிதும் நம்பியிருக்க வேண்டும்.\nஷார்ட் பாலை எதிர்கொள்வது எல்லா வீரர்களுக்கும் கடினமான ஒன்று தான். அதை வைத்து ஆஸ்திரேலியாவைக் குறைத்து மதிப்பீடு செய்ய முடியாது\nஇந்தியாவின் மிடில் ஆர்டர் இன்னும் அச்சம் தரும் ஒன்றாகவே இருக்கிறது. தவான், ரோஹித், கோலி அவுட் ஆனால் இந்தியாவுக்கு எல்லாம் முடிந்தது. ஆபத்பாந்தவன் தோனியை இன்னும் எத்தனை போட்டிகளுக்கு இந்தியா நம்ப வேண்டும் என தெரியவில்லை.\nஇன்றைய போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால், அரையிறுதிக்கு சென்றுவிடலாம். நான் சாட்சி!.\nஇந்தியா கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் ஓவல் மைதானத்தில் விளையாடுகிறது. ஐசிசி சாம்பியன்ஸ் டிராஃபி ஃபைனலை நாம் அவ்வளவு எளிதாக மறந்துவிடமுடியாது. ஓர் ஐசிசித் தொடரில் பாகிஸ்தான் இந்தியாவை வென்றது அப்போதுதான். சாம்பியன்ஸ் டிராஃபி ஃபைனலில் 158 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி பாகிஸ்தானிடம் பரிதாபமாகத் தோற்றது இந்தியா.\nஉலகக் கோப்பையின் ஆரம்ப போட்டி ( ENGvRSA ) நடந்த மைதானம் இது. டாஸ் வென்ற சவுத் ஆப்பிரிக்கா , இங்கிலாந்தை பேட் செய்ய அழைக்க 300+ அடித்தது இங்கிலாந்து. மீண்டும் தென் ஆப்பிரிக்காவுக்கு ஓவலில் போட்டி. இந்த முறையும் டாஸ் வெல்கிறது தென் ஆப்பிரிக்கா. மீண்டும் தலை கீழாகக் குதித்தது. இந்த முறை வங்கத்தை பேட் செய்ய அழைத்தது. மன்னனின் அம்பைப் பார்த்து கரடி துப்பியது போல் 330 எடுத்தது வங்கம். பங்கம் ஆனது தென் ஆப்பிரிக்கா.\nஓவலில் டாஸ் வெல்லும் அணி, பேட்டிங் எடுப்பது தான் நல்லது. 300+ ஸ்கோரும் அடிக்க வேண்டும். வங்கதேசம் எடுத்த 244 ரன்களைத் திக்கித் திணறி சேஸ் செய்தது நியூஸிலாந்து. இல்லையெனில் கத்துக்கிறேன் சார் என போட்டி முடித்ததும் பேட்டி கொடுக்க வேண்டியதிருக்கும்.\nஉத்தேச அணி : ஆஸ்திரேலியா\nவார்னர், ஃபிஞ்ச், உஸ்மான் கவாஜா, ஸ்மித், மேக்ஸ்வெல், ஸ்டோய்னிஸ், அலெக்ஸ் கேரி, கூல்டர் நைல், பேட் கம்மின்ஸ், ஸ்டார்க், ஜாம்பா\nஉத்தேச அணி : இந்தியா\nபுவிக்கு பதிலாக முகமது ஷமி களம் இறக்கப்படலாம். இல்லை சஹால், குல்தீப் ஒருவருக்குப் பதிலாக ஜடேஜாவையும் இறக்க இருக்கிறார்களா என்பது இன்னும் சற்று நேரத்தில் தெரிந்துவிடும்.\nஆஸ்திரேலிவுக்கான எதிரான போட்டி, ஷமி டிரம்ப் கார்டாக இருப்பார்\nரோஹித், தவான், கோலி, ராகுல், தோனி, ஜாதவ், பாண்டியா, ஷமி/ புவி, குல்தீப், பும்ரா, சஹல்.
அச்சச்சோ..! - தொபுக்கட்டீர்னு சாணியில் போய் விழுந்து அசிங்கப்பட்ட VJ மணிமேகலை..! - வைரலாகும் வீடியோ இதோ..! - Tamilanmedia.in\nHome Don't Miss அச்சச்சோ..! – தொபுக்கட்டீர்னு சாணியில் போய் விழுந்து அசிங்கப்பட்ட VJ மணிமேகலை..! – வைரலாகும்...\nஅச்சச்சோ..! – தொபுக்கட்டீர்னு சாணியில் போய் விழுந்து அசிங்கப்பட்ட VJ மணிமேகலை..! – வைரலாகும் வீடியோ இதோ..!\nதற்போது தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக வருபவர்கள் தான் பின்னல் சினிமா துறையில் காணப்படுகிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும். அந்த வரிசையில் பலர் உள்ளார்கள். இந்நிலையில், பிரபல மியூசிக் சேனலில் தொகுப்பாளினியாக பணியாற்றி பிரபலமான மணிமேகலை வெளியிட்ட புகைப்படத்தினை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.\nஇந்தியா முழுவதும் ஊரடங்கு சட்டத்தினால் கடந்த மார்ச் 25-ம் தேதி முதல் முடக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவால் வீட்டில் உள்ள பிரபலங்கள் இருந்து பல்வேறு விதமான புகைப்படம், காணொளிகளை வெளியிட்டு வருகின்றனர். இந்த நிலையில் பிரபல தொகுப்பாளினி மணிமேகலை வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதில் அவரின் உடல் எடை முன்பு பார்த்ததை விடவும் அதிகரித்துள்ளது.\nமேலும், தன்னுடைய சுற்றத்தாருடன் விளையாடும் போது சாணியில் போய் விழுந்துவாரியுள்ளார். அந்த வீடியோவை அவரே தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.\nEnna oru villathanam 🐒 ivlo naal nalla pillaingala maari irunthunthu ipo ennaye yemathuraanga indha siruvandu pasanga 🤯 Saani la thalli vittathuku next game la revenge edukanum 🚶‍♀️Ennoda chinna vayasu favourite game – gopi bis gokana bis 😃 Ana na keela vizhunthadhu pathi kuda kavala padama saani ku close up vacha pathiya, dei hussain uh 😡 unakku irukuda 🔪 – @mehussain_7\nPrevious articleஏப்ரல் 29ம் தேதி உலகிற்கு காத்திருக்கும் பே ரா பத்து…! எச்சரிக்கும் நாசா..! என்ன நடக்கப் போகிறது?\nNext article“நீச்சல் குளத்தில் உல்லாச குளியல் போ டும் சீரியல் நடிகை சிவானி”..! – இணையத்தில் வைரலாகும் வீடியோ இதோ..!\nமார்டர்ன் உடையில் ஹாட் போஸ் கொடுத்துள்ள பிரபல சீரியல் நடிகை ரச்சிதா..! வர்ணிக்கும் இணையவாசிகள்..!\nசேலையில் செம்ம கு த்து டான்ஸ் போட்டுள்ள ‘கண்மணி’ சீரியல் நடிகை..! வைரலாகும் வீடியோ உள்ளே…!\nசொட்ட சொட்ட நனைந்த உடை !! ஒரு பக்கம் கழட்டி விட்டு ரசிகர்களை வெறியேற்றிய அனுபமா !!\nகுடும்ப குத்துவிளக்காக இருந்த நடிகை வாணி போஜனா இது..? – வைரலாகும் க வர்ச்...\nதாறு மாறு க வர் ச்சி காட்டி, ரசிகர்களை மிரள வைத்த பிரபல நடிகை...\nபுதிதாக டாட்டூ குத்தி-யுள்ள இடத்தை காண்பித்த சாட்டை பட நடிகை..!!ஷாக்கான ரசிகர்கள்..!! வைரலாகும் புகைப்படங்கள்...\nமில்லியன் பேர் பார்த்து ரசித்த அழகிய குழந்தையின் செயல்! எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்காத...\nஅமலா பால் – விஜய் விவாகரத்துக்கு காரணம் நடிகர் தனுஷ் தான்..!! உண்மையை போட்டு...\nலோ ஹிப் புடவை அணிந்து, படு சூடான புகைப்படத்தை வெளியிட்டுள்ள பிக் பாஸ் ரித்விகா..!...\nகல்யாணம் முடிஞ்சி நாங்க வீட்டுக்கு போகல..!! இவன் ஆஸ்ப்பிட்டலுக்கு போனான்… நான் அழுதுட்டேன்..!!...\nமுதல் முறையாக தனது மனைவி மற்றும் மகள் புகைப்படத்தை வெளியிட்ட பரோட்டா சூரி.! இவ்வளவு...
Apixaban பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள்\nApixaban in Tamil\nApixaban நன்மைகள் & பயன்கள் - Apixaban Benefits & Uses in Tamil- Apixaban nanmaigal & payangal\nApixaban மருந்தளவு & எப்படி எடுத்து கொள்வது - Apixaban Dosage & How to Take in Tamil - Apixaban marundhalavu & eppadi eduthu kolvadhu\nApixaban பக்க விளைவுகள் - Apixaban Side Effects in Tamil- Apixaban pakka vilaivugal\nApixaban தொடர்புடைய எச்சரிக்கைகள் - Apixaban Related Warnings in Tamil- Apixaban thodarbudaiya echarikkaigal\nபிற மருந்துகளுடன் Apixaban-ன் தீவிர சேர்க்கை - Severe Interaction of Apixaban with Other Drugs in Tamil- pira marundhukaludan Apixaban-n theevira serkkai\nApixaban முரண்பாடுகள் - Apixaban Contraindications in Tamil- Apixaban muranpaadugal\nApixaban பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் - Frequently asked Questions about Apixaban in Tamil- Apixaban patri adikkadi ketkappadum kelvigal\nApixaban உணவு மற்றும் மதுபானத்துடனான சேர்க்கை - Apixaban Interactions with Food and Alcohol in Tamil- Apixaban unavu matrum madhubaanathudanaana serkkai\nApixaban நன்மைகள் & பயன்கள் - Apixaban Benefits & Uses in Tamil - Apixaban nanmaigal & payangal\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Apixaban பயன்படுகிறது -\nApixaban-ற்கான கலவைக்கூறுகள் - Apixaban Active Ingredients in Tamil - Apixaban-rkaana kalavaikkoorugal\nApixaban பக்க விளைவுகள் - Apixaban Side Effects in Tamil - Apixaban pakka vilaivugal\nஆராய்ச்சியின் அடிப்படையில் Apixaban பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nApixaban தொடர்புடைய எச்சரிக்கைகள் - Apixaban Related Warnings in Tamil - Apixaban thodarbudaiya echarikkaigal\nஇந்த Apixaban பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா?\nApixaban ஆனது கர்ப்பிணிப் பெண்கள் மீது தேவையற்ற தாக்கங்களை ஏற்படுத்தலாம். அத்தகைய பக்க விளைவுகள் எதையேனும் நீங்கள் சந்தித்தால், Apixaban எடுத்துக் கொள்வதை உடனே நிறுத்துங்கள். அதனை மீண்டும் எடுத்துக் கொள்வதற்கு முன்பாக உங்கள் மருத்துவரின் அறிவுரையை பெறவும்.\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Apixaban பயன்படுத்துவது பாதுகாப்பானதா?\nநீங்கள் தாய்ப்பால் கொடுத்துக் கொண்டிருந்தால், Apixaban-ன் சில ஆபத்தான தாக்கங்களை நீங்கள் சந்திக்கலாம். இவற்றில் எதையாவது நீங்கள் சந்தித்தால், உங்கள் மருத்துவரை சந்திக்கும் வரை அவற்றை உட்கொள்வதை நிறுத்தவும். உங்கள் மருத்துவர் பரிந்துரைப்பதை செய்யவும்.\nகிட்னிக்களின் மீது Apixaban-ன் தாக்கம் என்ன?\nApixaban மிக அரிதாக சிறுநீரக-க்கு தீமையை ஏற்படுத்தும்.\nஈரலின் மீது Apixaban-ன் தாக்கம் என்ன?\nகல்லீரல் மீது Apixaban எந்தவொரு பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாது.\nஇதயத்தின் மீது Apixaban-ன் தாக்கம் என்ன?\nApixaban ഹൃദയം மீது ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தலாம். அத்தகைய விளைவு ஏற்பட்டதாக நீங்கள் உணர்ந்தால், இந்த மருந்தை எடுத்துக் கொள்வதை நிறுத்துங்கள். மருத்துவரின் அறிவுரைக்கு பின் மீண்டும் எடுத்துக் கொள்ளுங்கள்.\nபிற மருந்துகளுடன் Apixaban-ன் தீவிர சேர்க்கை - Severe Interaction of Apixaban with Other Drugs in Tamil - pira marundhukaludan Apixaban-n theevira serkkai\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Apixaban-ஐ உட்கொள்ள கூடாது -\nApixaban முரண்பாடுகள் - Apixaban Contraindications in Tamil - Apixaban muranpaadugal\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Apixaban-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nApixaban பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் - Frequently asked Questions about Apixaban in Tamil - Apixaban patri adikkadi ketkappadum kelvigal\nஇந்த Apixaban எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா?\nஇல்லை, Apixaban உட்கொள்வது உங்களை அதற்கு அடிமையாக்காது.\nApixaban உட்கொண்ட பிறகு உங்களுக்கு தூக்க கலக்கம் ஏற்படும். அதனால் இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுவது பாதுகாப்பானது அல்ல.\nஆம், ஆனால் மருத்துவரின் அறிவுரையின் பெயரில் மட்டும் Apixaban-ஐ உட்கொள்ளவும்.\nஇல்லை, மனநல கோளாறுகளுக்கு Apixaban-ன் பயன்பாடு பயனளிக்காது.\nApixaban உணவு மற்றும் மதுபானத்துடனான சேர்க்கை - Apixaban Interactions with Food and Alcohol in Tamil - Apixaban unavu matrum madhubaanathudanaana serkkai\nஉணவு மற்றும் Apixaban உடனான தொடர்பு\nஉணவுடன் சேர்த்து Apixaban எடுத்துக் கொள்ளலாம்.\nமதுபானம் மற்றும் Apixaban உடனான தொடர்பு\nஆராய்ச்சி மேற்கொள்ளப்படாததால், Apixaban உட்கொள்ளும் போது மதுபானம் பருகுவதன் பக்க விளைவுகள் பற்றி எதுவும் கூற முடியாது.
வரலாறு மற்றும் Mousetrap பற்றி உண்மை\nமுதல் ஸ்பிரிங்-லோடட் மௌட்ராப்: தி "லிட்டில் நிப்பர்"\nஒரு mousetrap என்பது எலிகள் பிடிக்க முதன்மையாக வடிவமைக்கப்பட்ட ஒரு வகை விலங்கு பொறியாகும்; இருப்பினும், இது தற்செயலாக அல்லது இல்லாமலும் இருக்கலாம், மற்ற சிறிய விலங்குகளிலும் சிக்கல். Mousetraps வழக்கமாக எங்காவது உட்புறமாக அமைக்கப்படுகின்றன, அங்கு எலியின் சந்தேகத்திற்குரிய தொற்று உள்ளது.\nமுதன்முதலில் காப்புரிமை பெற்ற மரணம் mousetrap எனப் பெயரிடப்பட்ட பொறி, "ராயல் நம்பர் 1" என்று பெயரிடப்பட்ட வசந்த-ஏற்றப்பட்ட நடிகர்கள்-இரும்பு தாடைகள். 1879 ஆம் ஆண்டு நவம்பர்4ம் தேதி ஜேம்ஸ் எம்.\nநியூயார்க் வைத்திருங்கள். காப்புரிமை விவரத்திலிருந்து, இது இந்த வகைக்கான முதல் mousetrap அல்ல என்பது தெளிவாகும், ஆனால் காப்புரிமை இந்த எளிய, எளிதான தயாரிப்பு, வடிவமைப்பிற்காக உள்ளது. இது இறப்புப்பகுதியின் பொறியின் தொழிற்துறை வயது வளர்ச்சி ஆகும், ஆனால் புவியீர்ப்புக்கு மாறாக ஒரு காயத்தின் வசந்தத்தை நம்பியுள்ளது.\nஇந்த வகை தாடைகள் ஒரு சுருக்கப்பட்ட வசந்தத்தால் இயங்குகின்றன, தூண்டுதலாக அமைந்திருக்கும் தூண்கள், எலுமிச்சை எங்கு நடக்கும் இடையில் உள்ளன. பயணம் தாடைகள் மூடப்பட்டு, எலினைக் கொன்றது.\nஇந்த பாணியின் லைட்வெயிட் பொறிகளை இப்போது பிளாஸ்டிக் அமைப்பில் இருந்து உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பொறிகளுக்கு மற்ற வகைகளைப் போன்ற சக்திவாய்ந்த புகைப்படம் இல்லை. மற்ற உயிர்க்கொல்லி பொறிகளைக் காட்டிலும் அவற்றை அமைக்கும் நபரின் விரல்களுக்கு அவர்கள் பாதுகாப்பானவர்கள், மேலும் ஒரு விரல் அல்லது ஒரு கால் மூலம் ஒரு தாவலில் பத்திரிகையில் அமைக்க முடியும்.\nஜேம்ஸ் ஹென்றி அட்கின்சன்\nகிளாசிக் வசந்த-ஏற்றப்பட்ட mousetrap முதன் முதலில் 1894 ஆம் ஆண்டில் தனது வடிவமைப்பிற்கான காப்புரிமையை பெற்ற இல்லினாய்ஸ், ஆபிங்டனின் வில்லியம் சி. ஹூக்கரால் காப்புரிமை பெற்றது.\nஒரு பிரிட்டிஷ் கண்டுபிடிப்பாளர் ஜேம்ஸ் ஹென்றி அட்கின்சன், 1898 ஆம் ஆண்டில் "லிட்டில் நிப்பர்" என்றழைக்கப்பட்ட இதேபோன்ற பொறிக்கு காப்புரிமை பெற்றார், இதில் பயணம்\nலிட்டில் Nipper நாம் அனைத்து சிறிய பிளாட் மர தளம், வசந்த பொறி, மற்றும் கம்பி fastenings என்று அனைத்து தெரிந்திருந்தால் என்று கிளாசிக் முறிவு mousetrap உள்ளது.\nசீஸ் பயமுறுத்தும் இடமாக இருக்கலாம், ஆனால் ஓட்ஸ், சாக்லேட், ரொட்டி, இறைச்சி, வெண்ணெய் மற்றும் வேர்க்கடலை வெண்ணெய் போன்ற மற்ற உணவுகளை பொதுவாகப் பயன்படுத்தலாம்.\nலிட்டில் நிப்பர் 38,000 வது வயதில் மூடுவதைத் தடுக்கிறார், அந்தப் பதிவு இதுவரை தாக்கப்படவில்லை. இது இன்றுவரை நிலவிய வடிவமைப்பு. இந்த mousetrap பிரிட்டிஷ் mousetrap சந்தை மட்டும் ஒரு 60 சதவீதம் பங்கு கைப்பற்றப்பட்டது, மற்றும் சர்வதேச சந்தை ஒரு மதிப்பிடப்பட்டது பங்கு பகிர்ந்து.\nஜேம்ஸ் அட்கின்சன் 1913 ஆம் ஆண்டில் தனது mousetrap காப்புரிமையை 1,000 பவுண்டுகளுக்கு Procter நிறுவனத்திற்கு விற்றார், அதன் பின்னர் "லிட்டில் நிப்பர்" தயாரிக்கப்பட்டு, அவர்களது தொழிற்சாலை தலைமையகத்தில் 150-ஆடல் மியூசட்ராப் அருங்காட்சியகம் கூட கட்டப்பட்டது.\n1899 ஆம் ஆண்டில் பென்சில்வேனியாவிலுள்ள லிட்ஜ்ஸின் அமெரிக்கன் ஜான் மேஸ்ட், தனது ஒத்த துப்பாக்கி சூடு mousetrap மீது காப்புரிமை பெற்றார்.\nஆஸ்டின் கென்னஸ் 1920 களில் சிறந்த மெசெத்ராபிற்கு மீண்டும் ஒரு யோசனை இருந்தது. கென்னெஸ் கெட்ச்-ஆல் மல்டி பச் mousetrap பயன் இல்லை. இது எலிகள் உயிருடன் பிடிக்கும் மற்றும் மீட்டமைக்கப்படுவதற்கு முன்னர் பலவற்றைப் பிடிக்கலாம்.\nகாப்புரிமை அலுவலகம் 4,400 mousetrap காப்புரிமைகளை வெளியிட்டுள்ளது என்று உங்களுக்குத் தெரியுமா? இருப்பினும், அந்த 20 காப்புரிமைகளில் 20 மட்டுமே பணம் சம்பாதித்ததா? எங்கள் mousetrap கேலரியில் mousetraps வெவ்வேறு வடிவமைப்புகளை ஒரு சில ப.\nதி ஹிஸ்டரி ஆஃப் தி வைட்டமின்கள்\nயார் கடன் அட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டது?\nராபர்ட் ஃபுல்டன் மற்றும் தி இன்வென்ஷன் ஆஃப் தி ஸ்டேம்போட்\nகனடாவில் தயாரிக்கப்பட்ட சிறந்த 100 கண்டுபிடிப்புகள்\nமேற்கோள் வரையறை மற்றும் எடுத்துக்காட்டுகள்\n"நாடு சோல்" என்றால் என்ன?\nவாட்டர்கலர் பெயிண்ட் வகைகள்\nநவீன உலகத்தை வடிவமைத்த மறுமலர்ச்சி எழுத்தாளர்கள்\nஹீப்ரு பெயர்கள் (LP)\nஸ்டீவ் ஷிங்கிங்கின் தி நோபியோ பெனடிக்ட் அர்னால்ட்\nகோல்ப் விதிகள் - விதி 30: மூன்று பந்து, சிறந்த பந்து, நான்கு பந்து போட்டி விளையாட்டு\n"பிரி" முறைகளைப் பயன்படுத்துதல்
உஷாராய்யா உஷாரு... பேடிஎம் வாடிக்கையாளர்களுக்கு கேஷ் பேக்....\nJun 4, 2021 - 09:29 Updated: Jun 4, 2021 - 09:30\nகொரோனா தொற்று அதிகரிப்பால் ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நிலையில், நாட்டு மக்கள் அனைவரும் வேளைகளை இழந்து பொருளாதார ரீதியாக மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.\nஇந்த நிலையை சமாளிக்க பல்வேறு மாநில அரசுகள் தங்கள் மக்களுக்கு நிவாரண நிதியுதவி என பல செயல்களை செய்துவருகிறது.\nஇதுபோன்ற இக்கட்டான நிலையில் மோசடி கும்பல்களின் செயல்களும் அதிகரித்து கொண்டுதான் இருக்கிறது. நமது மொபல் நம்பருக்கு திடீரென ஒரு மெசேஜ் வரும் அதில் நீங்கள் 1,0000 ரூபாய் வென்றுவிட்டீர்கள் இந்த லிங்க்கை கிளிக் செய்யுங்கள் உங்களுக்கு பணத்தை பெற்றுக்கொள்ளலாம் என மோசடி கும்பல் மெசேஜ் முலம் செயல்படுவதாக ரிசர்வ் வங்கி எச்சரித்துள்ளது.\nஆனால் இந்த மெசேஜ் முலமும் பலர் தங்களது பணத்தை பரிகொடுத்த அவலமும் நேர்ந்துள்ளது. பலவிதமாக மக்களை மோசடி செய்யது ஏமாற்றும் கும்பல்கள் மத்தியில் தற்போது புதுவிதாமன மோசடி செய்வதற்கு யோசித்துள்ளனர் மோசடி கும்பல்.\nபேடிஎம் பெயரில் பொய்யான மெசேஜ் வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த மெசேஜில் பேடிஎம் வெப்சைட்டை கிளிக் செய்து உள்ளே சென்றால் உங்களுக்கு கேஷ் பேக் சலுகை என்ற செய்தி வருகிறது. அதன் கீழே send gift to paytm என்று குறிப்பிட்டுள்ளது. அதை கிளிக் செய்தால் மற்றொரு போலியான வெப்சைட்டுக்குச் செல்கிறது.\nஇதுபோன்ற போலியான மெசேஜ்களில் வாடிக்கையாளர்கள் முன எச்சரிக்கையாக இருக்க அறுவுறுத்தப்படுள்ளது. பேடிஎம்களில் இதுபோன்ற கேஷ் பேக் சலுகைகள் உண்மையிலேயே வழங்கப்படும் ஆனால் அது பேடிஎம் ஆப்களில் மட்டுமே. என்று வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Resistance to the construction of Karnataka dam in Meghatadavu || மேகதாதுவில் கர்நாடகம் அணை கட்ட எதிர்ப்பு; அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் ஆவேசம்\nமேகதாதுவில் கர்நாடகம் அணை கட்ட எதிர்ப்பு; அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் ஆவேசம் + "||" + Resistance to the construction of Karnataka dam in Meghatadavu\nமேகதாதுவில் கர்நாடகம் அணை கட்ட எதிர்ப்பு; அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் ஆவேசம்\nமேகதாதுவில் காவிரியின் குறுக்கே கர்நாடகம் அணைகட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து புதுவை அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் ஆவேசமாக பேசினர்.\nபதிவு: டிசம்பர் 15, 2018 05:47 AM\nமேகதாதுவில் அணை கட்ட திட்ட அறிக்கை தயாரிக்க அனுமதி அளித்ததை திரும்பப்பெறக்கோரி மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்ற சிறப்பு சட்டமன்ற கூட்டம் நேற்று நடந்தது. அப்போது அரசின் தீர்மானத்தை முதல்-அமைச்சர் நாராயணசாமி கொண்டுவந்தார். இந்த தீர்மானத்தின் மீது அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், பாரதீய ஜனதா கட்சியை சேர்ந்த நியமன எம்.எல்.ஏ.க்கள் தங்களது கருத்துகளை தெரிவித்தனர்.\nஅவர்கள் தெரிவித்த கருத்துகள் வருமாறு:-\nஅமைச்சர் நமச்சிவாயம்: கர்நாடகாவில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி இருந்தாலும் நாம் நமது மாநில உரிமையை விட்டுக்கொடுக்கவில்லை. காவிரியில் நமது உரிமையை பெற தொடர்ந்து போராடி7டி.எம்.சி. தண்ணீரை பெற்றோம். காவிரியின் குறுக்கே எந்தவித கட்டுமான பணிகளை மேற்கொண்டாலும் காவிரி பாயும் மாநிலங்களிடம் கலந்து ஆலோசிக்கவேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு இருக்கையில் மேகதாது திட்ட அறிக்கைக்கு மத்திய அரசு எப்படி அனுமதி அளித்தது? இங்குள்ள பாரதீய ஜனதா கட்சியை சேர்ந்த நியமன எம்.எல்.ஏ.க்கள் மத்திய மந்திரிகளை சந்தித்து தடையில்லா சான்றிதழை திரும்பப்பெற நடவடிக்கை எடுக்கவேண்டும்.\nஅமைச்சர் கமலக்கண்ணன்: மேகதாது அணை பிரச்சினை தொடர்பாக காவிரி ஆணைய கூட்டத்தில் நமது அரசின் வளர்ச்சி ஆணையர் கலந்துகொண்டு எதிர்ப்பினை தெரிவித்துள்ளார். தங்கள் மாநில மக்களுக்காக குரல் கொடுப்பது அந்தந்த மாநிலத்தவர்களின் உரிமை. மேகதாது அணை தொடர்பான அறிவிப்பு வந்ததும் நமது முதல்-அமைச்சர் நாராயணசாமி அதைக்கண்டித்து போராட்டம் நடத்தி தனது எதிர்ப்பினை பதிவு செய்தார். சட்டரீதியான நடவடிக்கைகளும் எடுத்து வருகிறார். நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.\nஇதுதொடர்பான கோப்புகளை கவர்னர் மக்களை மதிக்காமல் மறுத்தால் அதற்குரிய பதிலை மக்கள் அளிப்பார்கள். அப்போது சிலரது வேஷம் வெளியாகும்.\nஅன்பழகன் (அ.தி.மு.க.): கர்நாடகத்தில் ஆட்சிசெய்யும் காங்கிரஸ் ஆட்சியை கருத்தில்கொண்டு புதுவை காங்கிரஸ் அரசு இப்பிரச்சினையில் மெத்தனப்போக்கை கடை பிடித்து வருகிறது. ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பினை அமல்படுத்தாத மத்திய அரசின் மீது நீதிமன்ற அவ மதிப்பு வழக்கினை தமிழகம் தொடுத்தபோது புதுச்சேரி அரசு அந்த வழக்கில் தன்னை இணைத்துக்கொள்ளவில்லை.2தினங்களுக்கு முன்பு அணைகட்ட தடையுத்தரவு வழங்க சுப்ரீம் கோர்ட்டு மறுத்துள்ளது.\nசுப்ரீம்கோர்ட்டு வழக்கிற்கு முன்பே நாமும் தீர்மானம் நிறைவேற்றியிருந்தால் நம் தரப்பு வாதத்துக்கு வலுசேர்த்ததாக இருந்திருக்கும். காவிரி பிரச்சினைகளில் அரசியல் ரீதியில் பார்க்காமல் காரைக்கால் மாவட்ட விவசாயிகளின் ஜீவாதார பிரச்சினையாக கருத்தில்கொண்டு தமிழகம் எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளிலும் புதுவை அரசும் துணையாக இருக்கவேண்டும். மத்திய நீர் ஆணையத்தின் தலைவராக இருக்கும் மசூத் உசைன், காவிரி நீர் மேலாண்மை வாரியத்திற்கும் தலைவராக இருப்பதால் ஒருதலைபட்சமாக செயல்படு கிறார். எனவே அவரை நீக்கிவிட்டு காவிரி மேலாண்மை வாரியத்துக்கு நிரந்தர தலைவரை மத்திய அரசு நியமிக்கவேண்டும்.\nசிவா (தி.மு.க.): காவிரி பிரச்சினை தொடர்பாக தமிழகத்தில்2முறை தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர். 52 எம்.பி.க்களும் ஒன்றாக சென்று பிரதமரை சந்தித்து ஒரே குரலில் வலியுறுத்தினார்கள். தற்போது மேகதாதுவில் அணை கட்டுவது சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு எதிரானது. இதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது மிகப்பெரிய துரோகம்.\nகர்நாடகம் தண்ணீர் தராததால் தமிழகம், புதுச்சேரி விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். கஜா புயலால் காவிரி டெல்டா விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அணைகட்ட அனுமதி அளிப்பது வேதனை அளிப்பதாக உள்ளது.\nஅனந்தராமன் (காங்): கர்நாடகத்தில் காங்கிரஸ் கூட்டணி அரசு இருந்தாலும் புதுவை அரசு நமது மாநில மக்களுக்காக இந்த தீர்மானத்தை கொண்டு வந்துள்ளது. மேகதாது அணை கட்டுவதற்கான திட்ட அறிக்கை தயாரிக்க அனுமதி கொடுத்ததற்கு சுப்ரீம்கோர்ட்டில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும்.\nஎம்.என்.ஆர்.பாலன் (காங்): கர்நாடக மாநிலத்தில் அவர்கள் மாநில உரிமையை கேட்கிறார்கள். அது தவறு என்று நாம்தான் அவர்களுக்கு சுட்டிக்காட்ட வேண்டும். சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பினை மதிக்காமல் பாரதீய ஜனதா அரசுதான் உள்ளது.\nசங்கர் (பா.ஜனதா): புதுவை அரசு கொண்டு வந்த தீர்மானத்தை நிறைவேற்றுவதில் எங்களுக்கு மாற்று கருத்து இல்லை. இதற்கு தீர்மானம் மட்டுமே முடிவாக இருக்காது. முதலில் பேச்சுவார்த்தை நடத்துங்கள். கர்நாடகாவில் ஆட்சியில் இருப்பவர்களும், நீங்களும் அண்ணன், தம்பி கட்சிகள்தானே. பேச்சுவார்த்தைக்கு அவர்களும் தயாராக உள்ளனர். அவர்களை மனுவை திரும்பப்பெற சொல்லுங்கள். அங்கு இருப்பதும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சிதானே.\nசாமிநாதன் (பா.ஜனதா): மேகதாதுவில் அணை கட்டக்கூடாது என்பதில் நாங்கள் தெளிவாக உள்ளோம். ஆனால் இந்த திட்டத்தை கொண்டுவந்ததே காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அமைச்சர்தான்.\nசெல்வகணபதி (பா.ஜனதா): நாங்கள் தீர்மானத்துக்கு எதிராக இல்லை. ஆதரிக்கிறோம்.\nஇவ்வாறு கருத்துகள் தெரிவிக்கப்பட்டன.
சமூக வலைதளங்களால் குடிகாரனாக்கபட்ட காவலர் சலீம் - Puthiya Vidial, Puthiya Vidiyal\nசமூக வலைதளங்களால் குடிகாரனாக்கபட்ட காவலர் சலீம்\nBy Wafiq Sha on\t March 22, 2016 இந்தியா செய்திகள் தற்போதைய செய்திகள்\nபல்வேறு நேரங்களில் பல நல்ல காரணங்களுக்காக சமூக வலைதளங்கள் பயன்படுத்தப்பட்டாலும் ஒரு கொடிய தொற்று நோய் நாட்டில் பரவுவதை விட புரளிகளையும் பொய்யான தகவல்களையும் வேகமாக பரவச் செய்யவும் அது உதவுகிறது. இதனால் சமீபத்தில் பாதிக்கப்பட்டவர் டில்லி காவல்துறையின் தலைமை காவலர் சலீம்.\n40 வயதான சலீம் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் குடி போதையில் டில்லி மெட்ரோவில் பயணித்ததாக வீடியோ ஒன்று வைரலாக பரவியது. அந்த வீடியோவில் சலீம் நிலை தடுமாறி நிற்க கஷ்டப்படுகிறார். பின்னர் தரையில் விழுகிறார். இந்த வீடியோ ஒரே நாளில் இரண்டு லட்சம் பார்வையாளர்களை சென்றடைந்தது. இதனையடுத்து இவர் மேல் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் குரல் எழுப்பினர். தொலைகாட்சி சானல்களும் போட்டிப் போட்டுக்கொண்டு அவர் தரப்பின் நியாயங்கள் எதையும் அறிய முற்படாமல் குடிபோதையில் காவல்துறை அதிகாரி, டெல்லி மெட்ரோ பயணிகள் பாதுகாப்பாக பயணிக்க முடிகிறதா என்று விவாதத்தில் குதித்தனர். அடுத்தடுத்து பல்வேறு தரப்பில் இருந்து குற்றச்சாட்டு எழவே இவரது மதிப்பு சரியத்தொடங்கியது. இவர் பணியில் இருந்தும் இடை நீக்கம் செய்யப்பட்டார். இதனால் இவரது மனைவிக்கு மாரடைப்பு ஏற்பட்டது.\nஆனால் உண்மையில் சலீம் அன்று குடிபோதையில் இருந்திருக்கவில்லை. பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்டிருந்தார். மூன்று வருடங்களுக்கு முன்னர் பயங்கர பக்கவாதம் அவரை தாக்கி மூளைக்கு செல்லும் நரம்புகளை பாதித்து மூலையில் இரத்த கசிவு ஏற்படுத்தியுள்ளது. இதனால் அவரது உடலின் இடப்புறம் பாதிக்கப்பட்டது. டெல்லி மெட்ரோவில் சலீம் காணப்பட்ட நிலையும் இந்த பாதிப்பினால் ஏற்பட்டதே.\nஇந்த சம்பவம் குறித்து நடத்தப்பட்ட விசாரணை இதனை உறுதி செய்தது. மேலும் சலீமின் கண்ணியமிக்க பணி அவரை குற்றமற்றவர் என்றும் நிரூபித்தது. அவர் பணியில் மீண்டும் அமர்த்தப்பட்டார். அவரை இடை நீக்கம் செய்யப்பட்ட நாட்கள் பணியில் இருந்த நாட்களாக கணக்கிடப்பட்டன.\nஆனால் இந்த சம்பவத்தால் தன் கண்ணியம் தாக்கப்பட்டதாக உணர்ந்த சலீம் உச்ச நீதி மன்றத்தின் உதவியை நாடியுள்ளார். அதில் டில்லி அரசு, காவல்துறை கமிஷனர், டில்லி மெட்ரோ ரயில் கார்பரேசன், இந்திய பிரஸ் கவுன்சில் ஆகியவற்றிடம் முறையிட்டு தனது இழந்த கண்ணியத்தை மீட்டுத் தருமாறு முறையிட்டுள்ளார்.\nஇது குறித்து சலீமின் வழக்கறிஞர் கூறுகையில் “சலீமின் வீடியோ வைரலான போது செய்தித்தாள்களின் முதல் பக்கத்தில் செய்திகள் வெளியாயியான. ஆனால் அவர் குற்றமற்றவர் என்று நிரூபணம் ஆன போது எந்த செய்தித்தாளும், தொலைகாட்சி சானலும் அந்த செய்தியை வெளியிடவில்லை, பொதுமக்களின் பார்வைக்கு அவர் இன்னும் குடித்துவிட்டு ரயிலில் பயணித்த காவலர் என்றும் இன்னும் பணி நீக்கத்தில் உள்ளவர் என்றுமே அறியப்படுகிறார்.”\nதற்பொழுது சலீம் கேரளாவில் தனது சொந்த ஊரில் மருத்துவ சிகிச்சை மேற்கொண்டு வருகிறார். இன்னும் அவருக்கு பேச்சு தடுமாற்றம் உள்ளது. சமூக வலைதளங்களின் ஊடக தீர்ப்பு குணத்தின் இருண்ட பக்கத்தையும் தங்கள் டி.ஆர்.பி. கூட வேண்டும் என்பதற்காக உண்மையை பற்றி சற்றும் கவலைப் படாத தொலைகாட்சி சானல்களையும் இந்த சம்பவம் தோலுரித்து காட்டிஉள்ளது.\nTags: ஊடக தீர்ப்புசமூக வலைத்தளங்கள்சலீம்டில்லி காவல்துறை\nPrevious Articleஷேக் அஹமது யாசின் – எதிர்ப்பு போராட்டத்தின் முன்னோடி\nNext Article தங்களது தோல்விகளை மறைக்க தேசியவாத அச்சுறுத்தலை எழுப்புகிறது பா.ஜ.க: மனிஷ் திவாரி\nAkbar Basha on பதான்கோட் தாக்குதல்: பஞ்சாப் எஸ்.பி. சல்விந்தர் சிங் பக்கம் திரும்பும் விசாரணை\nAkbar Basha on வெடிகுண்டு சாமியார் அசீமனந்தாவிற்கு பிணை: மேல்முறையீட்டை கிடப்பில்போட்ட NIA\nAkbar Basha on இந்தியாவில் 90% குழந்தைகளுக்கு போதிய ஊட்டச்சத்து கிடைபப்தில்லை: ஆய்வறிக்கை\nAkbar Basha on மோடிக்கு நேரடி கேள்வி விடுக்கும் BSF வீரர் தேஜ் பகதூரின் மற்றொரு வீடியோ\nAkbar Basha on சென்னை – 26 வருடங்கள் கழித்து கஸ்டடி மரணம் வழக்கில் தண்டனை
தாறுமாறான தோற்றத்தில் 2021 ஹூண்டாய் ஐ20 என்... 1.6 லிட்டர் டர்போ என்ஜின் உடன் வருகிறது... - Tamil DriveSpark\n1 hr ago அதிகாரப்பூர்வ ஆக்ஸஸரீகள் பொருத்தப்பட்ட 2020 மஹிந்திரா தார் இவ்வாறுதான் இருக்கும்!! விரிவாக காட்டும்\n2 hrs ago ஹார்லி டேவிட்சன் & ஹீரோ மோட்டோகார்ப் கூட்டணி சேர்ந்தன!! இனி இவற்றின் பைக்குகள் எவ்வாறு வரப்போகிறதோ..\n3 hrs ago ரூ. 36 ஆயிரத்தில் அட்டகாசமான காராக மாறிய டாடா நானோ... தமிழகத்தில் அரங்கேறிய ஆச்சரியம்... வீடியோ!\nதாறுமாறான தோற்றத்தில் 2021 ஹூண்டாய் ஐ20 என்... 1.6 லிட்டர் டர்போ என்ஜின் உடன் வருகிறது...\nUpdated: Saturday, October 10, 2020, 10:40 [IST]\nஹூண்டாய் மோட்டார் நிறுவனம் அதன் புதிய தயாரிப்பு காரான புதிய தலைமுறை ஐ20-ஐ பற்றிய விபரங்களை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. இதன் மூலம் என் லைன் உடையில் வெளிவரவுள்ள இந்த புதிய தலைமுறை ஹூண்டாய் காரை பற்றி விரிவாக இந்த செய்தியில் பார்ப்போம்.\nபுதிய ஹூண்டாய் ஐ20 முழு-நீள என் லைன் கார் கிடையாது. கூடுதல் ஆற்றல்மிக்க என்ஜின் மற்றும் ஸ்போர்ட்டியான பண்பை வைத்துதான் இது என் லைன் காராக அழைக்கப்படுகிறது.\nஹூண்டாய் நிறுவனம் ஒரு வழியாக புதிய ஐ20 என் காரின் முதல் டீசர் படங்களை தற்போது வெளியிட்டுள்ளது. இதனை தொடர்ந்து அடுத்த வருட இரண்டாம் பாதியில் குறிப்பிட்ட சில வெளிநாட்டு சந்தைகளை ஹூண்டாயின் இந்த என் லைன் கார் சென்றடையலாம்.\nமுன்னதாக இந்த ஆண்டு துவக்கத்தில் ஸ்வீடன் நாட்டில் பனி நிறைந்த பகுதியில் இந்த ஹாட் ஹேட்ச்பேக் கார் சோதனை செய்யப்படும் வீடியோவை ஹூண்டாய் நிறுவனம் வெளியிட்டு இருந்தது. இதன்மூலம் ஐ20 என் மாடல் பெரிய உருவம் கொண்ட ஹூண்டாய் ஐ30 என் மாடலின் டிசைன் தத்துவத்தின் அடிப்படையில் உருவாகுவதை அறிந்திருந்தோம்.\nஇதன்படி அகலமான மற்றும் நீளமான காற்று டேம்களை புதிய ஐ20 என் லைன் கார் பெற்றுள்ளது. இந்த ஏர்-டேம் சிவப்பு நிற அவுட்லைன்களை கொண்டுள்ளதை இந்த டீசர் படங்களில் பார்க்க முடியும். அதேபோல் இதன் 18 இன்ச் அலாய் சக்கரங்களில் ஹீண்டாய் என் லைன் கார்களுக்கே உண்டான விதத்தில் ப்ரேக் காலிபர்கள் சிவப்பு நிறத்தில் வழங்கப்பட்டுள்ளன.\nஇவை மட்டுமின்றி மேற்கூரையின் மீது ஒருங்கிணைப்பட்ட ஸ்பாய்லர் மற்றும் பெரிய எக்ஸாஸ்ட் குழாய்களுடன் சிவப்பு நிற பக்கவாட்டு ஸ்கிர்ட்களையும் என் லைன் உடையில் வந்துள்ளதால் புதிய தலைமுறை ஐ20 ஏற்றுள்ளது. மேலும் மொத்த காரும் வெளிப்புறத்தை ட்யூல்-டோன் பெயிண்ட் அமைப்பில் இந்த படங்களில் பெற்றுள்ளது.\nஇந்த வகையில் என் கார்களின் செயல்திறனை குறிக்கும் வகையில் நீல நிற பெயிண்ட் அமைப்பை இந்த கார் பெற, காரின் மேற்கூரை, ஸ்கிர்ட்ஸ், பின்பக்கம் பார்க்கும் பக்கவாட்டு கண்ணாடிகள் மற்றும் பில்லர்கள் உள்ளிட்டவை பாண்டோம் கருப்பு நிறத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளன.\nஉட்புற கேபினும் ஹூண்டாயின் என் பிராண்டிற்கே உரிதான உள்ளமைவு மற்றும் சுற்றிலும் சிவப்பு நிற ஹைலைட்களுடன் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. உட்புறத்தில் முக்கியமான அப்கிரேட் என்று பார்த்தால், உடலை ஒட்டிய இருக்கை அமைப்பை ஹூண்டாய் நிறுவனம் புதிய தலைமுறை ஐ20 காரில் வழங்கியிருக்கலாம்.\nசெயல்திறனை கருத்தில் கொண்டு ஐ20 ஹேட்ச்பேக் கார் என் லைனிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதால் இதன் புதிய தலைமுறையில் ஆற்றல்மிக்க 1.6 லிட்டர் 4-சிலிண்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் என்ஜின் பொருத்தப்படவுள்ளது. அதிகப்பட்சமாக 200 பிஎச்பி பவரை வெளிப்படுத்தக்கூடிய இந்த டர்போ என்ஜின் உடன் 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டிருக்கும்.\nஇந்த ட்ரான்ஸ்மிஷன் அமைப்பு லிமிடேட்-ஸ்லிப் டிஃப்ரென்ஷியல் உடன் செயல்படும். 0-வில் இருந்து 100kmph என்ற வேகத்தை வெறும் 6.7 வினாடிகளில் எட்டிவிடக்கூடியதாக வெளிவரும் இந்த என் லைன் காரின் அதிகப்பட்ச வேகம் 230kmph ஆகும். ஏனெனில் காரின் மொத்த எடை வெறும் 1,200 கிலோ மட்டுமே.\nசஸ்பென்ஷன் பணியினை மேற்கொள்ள முன்புறத்தில் வலுவூட்டப்பட்ட மெக்பெர்சன் ஸ்ட்ரட் செட்அப்-பும், பின்புறத்தில் தடிமனான டோரிசன் பீம்-மும் கொடுக்கப்படவுள்ளன. 320மிமீ முன்பக்க டிஸ்க் ப்ரேக்குகள் ப்ரேக்கிங் பணியினை கவனிக்கவுள்ளன. ஏற்கனவே கூறியதுபோல், ஹூண்டாய் ஐ20 என் கார் அடுத்த ஆண்டு மத்தியில் ஐரோப்பா உள்பட சில வெளிநாட்டு சந்தைகளில் விற்பனைக்கு சென்றுவிடும்.\nஇந்தியாவை பொறுத்தவரையில், புதிய ஐ20 என் அடுத்த ஆண்டு இறுதிக்குள் அறிமுகமாகுவதற்கு கூட வாய்ப்பில்லை. தற்சமயம் விற்பனையில் ஐ20-ன் புதிய தலைமுறை தான் வருகிற அக்டோபர் 28ஆம் தேதி அறிமுகமாகவுள்ளது. ஹூண்டாய் இந்தியா நிறுவனத்தின் இந்த புதிய தலைமுறை ஹேட்ச்பேக் காரும் கடந்த வாரம் ஐரோப்பாவில் வெளியிடப்பட்ட என்-லைன் தொகுப்புகளை பெற்றுவரவுள்ளது குறிப்பிடத்தக்கது.\n2021 Hyundai i20 Most Powerful N Variant Teased – 1.6 L Turbo 200 BHP
African Mango Plus ஆய்வு | பக்கவிளைவுகள், மருந்தளவு & எச்சரிக்கை\nAfrican Mango Plus பிளஸைப் பயன்படுத்தி எடை குறைக்கவா? அது உண்மையில் பிரச்சனையற்றதா? நடைமுறையில் இருந்து முடிவுகள்\n5.9/10 0:24 Bianca Mullen\nஈர்க்கப்பட்ட மக்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவது போதைப்பொருள் மற்றும் இந்த தயாரிப்பைப் பயன்படுத்துவதில் அவர்கள் பெற்ற வெற்றியைப் பற்றியும் தெரிவிக்கிறது. பகிரப்பட்ட மதிப்புரைகள் எங்களுக்கு ஆர்வமாக உள்ளன என்பது புரிந்துகொள்ளத்தக்கது. உங்கள் பிரதிபலிப்பை மீண்டும் மகிழ்ச்சியுடன் பார்க்க விரும்புகிறீர்களா? தேவையற்ற பவுண்டுகளை நிரந்தரமாக அகற்ற விரும்புகிறீர்களா?\nசோதனை அறிக்கைகள் தயாரிப்புக்கு உதவ முடியும் என்பதை நிரூபிக்கின்றன. இந்த முகப்புப்பக்கத்தில் நீங்கள்> தாக்கம், பயன்பாடு மற்றும் சாத்தியமான முடிவுகள் பற்றிய பல முக்கியமான தகவல்களைக் கற்றுக்கொள்வீர்கள்.\nநீங்கள் நன்றாக இருப்பீர்கள், விரைவில் நீங்கள் நன்றாக இருப்பீர்கள்?\nஉங்கள் உள்ளார்ந்த தேவைகளைத் தீர்மானித்து, படிப்படியாக மீண்டும் கேள்வியைக் கேளுங்கள். நீங்கள் சரியான பதிலைக் காண்பீர்கள்: நிச்சயமாக, ஆம்!\nஎல்லாவற்றிற்கும் மேலாக, அவர்களின் கொழுப்பு உள்ளடக்கம் உடல் முழுவதும் மிகப்பெரியது என்பதை அவர்கள் ஒப்புக்கொள்கிறார்கள். நிலையான முறையில் புறப்படுவதற்கான சிறந்த வழியைக் கண்டுபிடிப்பது இப்போது "மட்டும்" முக்கியமானது.\nபாரம்பரிய எடை இழப்பு திட்டங்கள் தங்களுக்குள்ளிருக்கும் சிரமங்களையும், மிகுந்த விரக்தியுடன் உணரும் தீவிர சுமையையும் நீங்கள் அறிவீர்கள் என்பதில் சந்தேகமில்லை.\nநீங்கள் எப்போதும் விரும்பிய அனைத்தையும் அலங்கரிக்கவும் - உங்களைப் பார்த்து, முழுமையாக கவர்ச்சியாக உணர, அதுதான் முக்கியம். மேலும்:\nமூலம், நீங்கள் உங்கள் சூழலில் ஒரு பெரிய விளைவைக் கொண்டிருப்பீர்கள், ஏனெனில் நீங்கள் மிகச் சிறப்பாக செய்கிறீர்கள்.\nAfrican Mango Plus முடியும் - வல்லுநர்கள் சரியாக இருந்தால் - இந்த தடையை மிகவும் எளிதாக்குங்கள். இது சில மருந்துகள் உங்களுக்கு விரைவாக உடல் எடையை குறைக்க உதவும் என்ற உண்மையைப் பற்றியது மட்டுமல்ல, ஆனால் இதுபோன்ற எடை இழப்பு வெறுமனே முற்றிலும் உந்துதல் தருகிறது.\nஇதன் விளைவாக, எங்கள் பரிந்துரை: சாத்தியமான மாற்றத்தை சவால் செய்யுங்கள்!\nAfrican Mango Plus எந்தவொரு வெளிப்படையான பொருட்களையும் கொண்டிருக்கவில்லை மற்றும் நிறைய பயனர்களால் முயற்சிக்கப்பட்டுள்ளது. பற்றாக்குறை பக்க விளைவுகளுக்கான வழிமுறைகள் மற்றும் அதன் நல்ல செலவு-பயன் விகிதம் அறியப்படுகிறது. Revitol Skin Tag Removal மாறாக, இது மிகவும் நன்மை பயக்கும்.\nஅதற்கு மேல், வழங்குநர் மிகவும் நம்பகமானவர். வாங்குதல் மருந்து இல்லாமல் உணரக்கூடியது மற்றும் பாதுகாப்பான வரி வழியாக ஏற்பாடு செய்யலாம்.\nஉற்பத்தியைப் பொறுத்தவரை, இது குறிப்பாக இருக்கும் கூறுகளும் ஆகும், அவை விளைவின் சிங்கத்தின் பங்கிற்கு முக்கியமானவை.\nஅத்துடன் எடை இழப்பிலும் நிரூபிக்கப்பட்ட மருந்துகள் பல கூடுதல் பொருட்களில் சேர்க்கப்பட்டுள்ளன.\nஆனால் இந்த பொருட்களின் சரியான அளவு என்ன? பிரமாதம்! உற்பத்தியின் முக்கிய பொருட்கள் ஒரு சீரான அளவில் முழுமையாக வருகின்றன.\nஇது ஏன் ஒரு செயலில் உள்ள பொருளாக பயன்படுத்தப்பட்டது என்று நான் முதலில் யோசித்திருந்தாலும், உறுதியான பரிசோதனையின் பின்னர், எடை இழப்பில் இந்த பொருள் குறிப்பிடத்தக்க பங்கை வகிக்க முடியும் என்பதில் நான் உறுதியாக நம்புகிறேன்.\nஎனவே தயாரிப்பில் பயன்படுத்தப்படும் பொருட்களைப் பற்றிய எனது முந்தைய அபிப்ராயம் என்ன?\nவேண்டுமென்றே, நன்கு மாற்றியமைக்கப்பட்ட பொருள் செறிவு மற்றும் நிலையான உடல் கொழுப்பு இழப்புக்கு தங்கள் பங்கை சமமாக செய்யும் பிற பொருட்களுடன் உதவுகிறது.\nபெரும்பாலான பாதிக்கப்பட்டவர்கள் African Mango Plus மகிழ்ச்சியாக இருப்பது ஏன்:\nதயாரிப்பின் விரிவான மதிப்பீடு மற்றும் ஏராளமான வாடிக்கையாளர் அனுபவங்களின்படி, எண்ணற்ற பிளஸ்கள் மிகச் சிறந்தவை என்பதை நாங்கள் தெளிவாகக் கூறுகிறோம்:\nAfrican Mango Plus ஒரு உன்னதமான மருந்து அல்ல, எனவே நன்கு ஜீரணிக்கக்கூடியது மற்றும் அதே நேரத்தில் குறைந்த பக்க விளைவுகள்\nஉங்கள் நிலைமை பற்றி யாருக்கும் தெரியாது & அதை வேறு ஒருவருடன் விவாதிக்க உங்களுக்கு சவால் இல்லை\nதொகுப்பு மற்றும் சேனல்கள் தெளிவற்றவை மற்றும் அர்த்தமற்றவை - ஏனென்றால் நீங்கள் இணையத்தில் அதற்கேற்ப வாங்குகிறீர்கள், மேலும் நீங்கள் அங்கு வாங்குவதை நீங்களே வைத்திருங்கள்\nAfrican Mango Plus பயன்படுத்தும் போது வழக்கமான அனுபவம் என்ன?\nAfrican Mango Plus எவ்வாறு இயங்குகிறது என்பதைப் புரிந்துகொள்வது, நீங்கள் சுயாதீன ஆராய்ச்சி முடிவுகளைப் பார்த்து, தீர்வின் பண்புகளை உற்று நோக்கினால்.\nஅதிர்ஷ்டவசமாக நாங்கள் அதை உங்களுக்காக முன்கூட்டியே செய்தோம். தாக்கத்தின் முடிவுகள் துண்டுப்பிரசுரத்தால் சரிபார்க்கப்பட்டன, அதைத் தொடர்ந்து நோயாளியின் அறிக்கைகளை நாங்கள் பரிசோதித்தோம்.\nAfrican Mango Plus பொருட்கள் இயற்கையான மனநிறைவை உருவாக்குகின்றன, இது பசி வெகுவாகக் குறைக்கிறது\nAfrican Mango Plus பற்றி மேலே குறிப்பிடப்பட்ட விஷயங்கள் அனைத்தும் உத்தியோகபூர்வ மற்றும் நுகர்வோர் ஆகியோரால் கையொப்பமிடப்பட்டுள்ளன, மேலும் அவை ஆராய்ச்சி மற்றும் ஆராய்ச்சியில் கூட பிரதிபலிக்கின்றன.\nAfrican Mango Plus என்பது சாதாரண உடல் செயல்முறைகளைப் பயன்படுத்தும் ஒரு சரியான தயாரிப்பு என்பதைப் புரிந்துகொள்ள இப்போது நேரம் வந்துவிட்டது.\nபல போட்டி தயாரிப்புகளுக்கு மாறாக, African Mango Plus நமது உயிரினத்துடன் ஒரு அலையாக செயல்படுகிறது. இது பக்க விளைவுகளை ஏற்படுத்தாததால் இது நியாயப்படுத்துகிறது.\nஆனால் நிச்சயமாக! உடல் மாற்றங்கள் தெளிவாக கவனிக்கத்தக்கவை, இது ஒரு ஆரம்ப மோசமடைதல் அல்லது அசாதாரணமான உடல் உணர்வு - இது பரவலாக உள்ளது மற்றும் நீண்ட காலத்திற்குப் பிறகு தன்னைக் கட்டுப்படுத்துகிறது.\nபின்வரும் சூழ்நிலைகள் African Mango Plus எந்த சூழ்நிலையிலும் பயன்படுத்தப்படக்கூடாது என்பதாகும்:\nபின்வரும் சூழ்நிலைகளில், தயாரிப்பைப் பயன்படுத்துவதற்கு எதிராக நான் கடுமையாக அறிவுறுத்துகிறேன்: நிலைமையை தானே மாற்ற விரும்பவில்லை.\nஇந்த எந்த புள்ளிகளிலும் நீங்கள் உங்களைக் கண்டுபிடிக்க மாட்டீர்கள் என்று கருதுகிறேன். உங்கள் பிரச்சினையையும் இந்த காரணத்திற்காக ஏதாவது செய்ய நீங்கள் தயாராக உள்ளீர்கள். உங்கள் சிக்கலைச் சமாளிப்பது பொருத்தமானது!\nAfrican Mango Plus உங்களுக்கு ஒரு சிறந்த ஆதரவாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்!\nஅதன் பணியை தீவிரமாக செய்ய முடியும் என்பதை இப்போது உறுதிப்படுத்த விரும்பினால், கவலைப்படுவதற்கு எந்த காரணமும் இல்லை:2நிமிடங்களுக்குள், உங்களுக்கு யோசனை வந்தது.\nஎனவே பொதுவாக அளவைப் பற்றி கவலைப்படுவது நல்லதல்ல. நகர்வின் போது, வேலையின் போது அல்லது வீட்டிலேயே கட்டுரையைப் பயன்படுத்துவது மிகவும் எளிதானது என்பதை நீங்கள் உறுதியாக நம்பலாம்.\nபெரும்பாலான வாடிக்கையாளர்களின் வாடிக்கையாளர் கருத்துக்களால் இது உறுதிப்படுத்தப்படுகிறது. இதன் விளைவாக, இது Raspberry விட அதிக அர்த்தமுள்ளதாகத் தெரிகிறது.\nபதிலளிக்கப்படாத அனைத்து கேள்விகளுக்கும், தயாரிப்பு குறித்த துல்லியமான உதவிக்குறிப்புகள் மற்றும் இந்த உரையில் குறிப்பிடப்பட்டுள்ள தயாரிப்பாளரின் அசல் வலைத்தளம் உள்ளன.\nAfrican Mango Plus பயன்பாடு தெளிவுபடுத்துகிறது\nஎடை குறைப்பு மிகவும் எளிது, African Mango Plus நன்றி\nபல மகிழ்ச்சியான வாடிக்கையாளர்கள் மற்றும் போதுமான சான்றுகள் இந்த உண்மையை என் கருத்தில் நிரூபிக்கின்றன.\nமுன்னேற்றம் எந்த அளவிற்கு, எவ்வளவு விரைவாக செல்கிறது? இது மிகவும் தனிப்பட்ட மற்றும் பாத்திரத்திலிருந்து பாத்திரத்திற்கு வேறுபட்டது.\nஆயினும்கூட, மற்ற பயனர்களைப் போலவே நீங்கள் மயக்கப்படுவீர்கள் என்பதில் நீங்கள் உறுதியாக இருக்க முடியும், மேலும் சில நாட்களில் எடை இழப்பில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை நீங்கள் கொண்டாடுகிறீர்கள் .\nஒரு சிலரால் உடனடியாக மாற்றத்தை கவனிக்க முடியாது. மற்றவர்கள் முன்னேற சில மாதங்கள் ஆகும்.\nநீங்கள் ஒரு வித்தியாசமான மனிதர் என்பதை நீங்கள் இனி மறைக்க முடியாது. எல்லாவற்றிற்கும் மேலாக, விளைவுகளை நீங்கள் தானாக அடையாளம் காணவில்லை, ஆனால் வேறு ஒருவர் உங்களுடன் பேசுகிறார்.\nAfrican Mango Plus உட்கொள்வது குறித்த ஆராய்ச்சி முடிவுகள்\nநேர்மறையான அனுபவங்களைப் புகாரளிக்கும் நுகர்வோரின் அறிக்கைகளுக்குப் பிறகு ஒருவர் இன்னும் துல்லியமாகப் பார்த்தால். தர்க்கரீதியாக, குறைவான கருத்துகள் என்று பிற கருத்துக்கள் உள்ளன, ஆனால் சுருக்கமாக, பின்னூட்டம் நன்மை பயக்கும்.\nAfrican Mango Plus பற்றி உங்களுக்கு இன்னும் சந்தேகம் இருந்தால், இறுதியாக விஷயங்களைச் சரியாகச் செய்வதற்கான ஆர்வம் உங்களுக்கு இல்லாமல் இருக்கலாம்.\nஆயினும்கூட, பிற பயனர்கள் வழிமுறைகளைப் பற்றி என்ன சொல்ல வேண்டும் என்பதற்கு நம் கவனத்தை மாற்றுவோம்.\nவிற்கப்பட்ட தயாரிப்பின் உதவியுடன் அற்புதமான சாதனைகள்\nஇவை தனிநபர்களின் பொருத்தமற்ற கருத்துகள் என்று கருதுங்கள். இருப்பினும், இதன் விளைவாக மிகவும் கவர்ச்சிகரமானதாக இருக்கிறது, நான் நினைப்பது போல, பெரும்பான்மையானவர்களுக்கு இது பொருந்தும் - பின்வருவனவற்றில் மற்றும் உங்கள் நபருக்கும்.\nஉற்பத்தியின் வாடிக்கையாளராக நீங்கள் பின்வருவனவற்றைப் பற்றி மகிழ்ச்சியாக இருப்பீர்கள்:\nஉடல் எடையை குறைத்தல் மற்றும் புதிய வாழ்க்கைத் தரத்தைப் பெறுதல்\nவழக்கமான உணவுகளின் உதவியுடன் எடையைக் குறைக்க குறிப்பிடத்தக்க நேரமும் பொறுமையும் தேவை. இது நீண்ட நேரம் எடுக்கும், பொறுமை தேவைப்படுகிறது, மேலும் பாத்திரத்தை கடினமான சோதனைக்கு உட்படுத்துகிறது.\nஉங்கள் திட்டத்தை நீங்கள் அணுகினால், எதையும் ஆபத்தில்லாமல், இங்கே பரிந்துரைக்கப்பட்டவை போன்ற ஆதாரங்களைப் பயன்படுத்துவதன் மூலம் நீங்கள் முன்னேற்றத்தை கணிசமாக வேகமாக அடைவீர்கள்.\nஉடல் எடையை குறைக்க போர்டில் ஒரு சிறிய வீரரைப் பெறுவதற்கு நீங்கள் ஒருபோதும் வெட்கப்படக்கூடாது.\nஅதிர்ஷ்டவசமாக, பக்க விளைவுகள் எடுக்கப்படும்போது அவசியமானதாகத் தெரியவில்லை. இந்த முடிவில், ஏராளமான நல்ல அர்த்தமுள்ள அனுபவங்கள் மற்றும் மதிப்புரைகள் மற்றும் நன்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பொருட்கள் பற்றிய எனது பகுப்பாய்வில் நான் அடித்தளமாக இருக்கிறேன்.\nநீங்கள் தற்போது சொன்னால்: "நிச்சயமாக நான் உடல் எடையை குறைத்து ஏதாவது செய்ய விரும்புகிறேன், ஆனால் கொஞ்சம் பணத்தை வீணடிக்க விரும்புகிறேன்". சரி, நீண்ட காலத்திற்கு உடல் எடையை குறைப்பதற்கான அளவு உங்களுக்கு மதிப்பு இல்லை என்றால், அதை வாங்க வேண்டாம்.\nமீண்டும் ஒருபோதும் டயட் செய்யாதீர்கள், மீண்டும் ஒருபோதும் வடிகட்டாதீர்கள் மற்றும் ஒவ்வொரு நாளும் கவர்ச்சிகரமான கனவு உருவத்துடன் அனுபவிக்கவும். இந்த கட்டுரையை Green Coffee போன்ற பிற கட்டுரைகளிலிருந்து வேறுபடுத்துகிறது.\nஎனவே, புத்திசாலித்தனமாக இருங்கள், African Mango Plus போதைப்பொருளில் இதுபோன்ற மலிவான ஒப்பந்தங்கள் இருக்கும்போது உங்களை நிரூபிக்க ஒரு வாய்ப்பைக் கொடுங்கள்.\nஅது எங்களுக்கானது - தயாரிப்புடன் ஒரு சோதனை ஓட்டம், அது ஒரு நல்ல யோசனை!\nAfrican Mango Plus அடங்கிய நம்பிக்கைக்குரிய தயாரிப்புகள் ஒரு குறுகிய காலத்திற்கு பெரும்பாலும் எரிச்சலூட்டுகின்றன, ஏனெனில் இயற்கையாகவே பயனுள்ள தயாரிப்புகள் தொழில்துறையின் சில பங்குதாரர்களுடன் செல்வாக்கற்றவை. யார் முயற்சி செய்ய விரும்புகிறார்கள், எனவே அதிகம் காத்திருக்கக்கூடாது.\nநாங்கள் காண்கிறோம்: தயாரிப்பு வாங்க நாங்கள் இணைக்கும் வழங்குநரைப் பாருங்கள், எனவே தாமதமாகிவிடும் முன், African Mango Plus ஒரு நியாயமான தொகை மற்றும் புகழ்பெற்ற விற்பனையாளர் மூலம் நீங்கள் அதை விரைவில் முயற்சி செய்யலாம். கொள்முதல்.\nநீண்ட காலத்திற்கு விண்ணப்பத்தை நிறைவேற்ற தேவையான ஒழுக்கம் உங்களிடம் இல்லையென்றால், நீங்கள் அதை விட்டுவிடுவது நல்லது. இறுதியில், வெற்றிக்கான திறவுகோல்: தொடங்குவது எளிதானது, விடாமுயற்சி கலை. இதை Green Coffee ஒப்பிட்டுப் பார்த்தால் இது சுவாரஸ்யமாக இருக்கலாம். இருப்பினும், African Mango Plus பிளஸுடன் நிலையான மாற்றத்தை அடைய உங்கள் அக்கறையுடன் போதுமான ஊக்கத்தொகையை நீங்கள் காணக்கூடிய வாய்ப்புகள் நல்லது.\nதயாரிப்பு விற்பனையாளர்களை ஆராய்ச்சி செய்யும் போது பின்வரும் விஷயங்களை கவனித்துக்கொள்ள வேண்டும்\nஇணையத்தில் சந்தேகத்திற்குரிய சப்ளையர்களிடம் விலைகளை நிர்ணயிப்பதில் ஒரு தவறு இருக்கும்.\nசரியான நேரத்தில் மற்றும் ஆபத்து இல்லாத முடிவுகளுக்கு, நீங்கள் உற்பத்தியாளரின் தரப்பில் பிரத்தியேகமாக தயாரிப்பைக் குறிப்பிட வேண்டும்.\nபிற சலுகைகள் குறித்த முழுமையான ஆன்லைன் ஆராய்ச்சியின் அடிப்படையில் காட்டப்பட்டுள்ளது: இந்த கலப்படமற்ற முகவரை உற்பத்தியாளரிடம் மட்டுமே காண முடியும்.\nAfrican Mango Plus நீங்கள் சோதிக்க விரும்பினால், பின்வரும் படிகள் மிகவும் நம்பகமான நடைமுறையை விவரிக்கின்றன:\nGoogle இல் ஆபத்தான கிளிக்குகளை நீங்கள் தவிர்க்க வேண்டும் - நாங்கள் சோதித்த சலுகைகளைப் பயன்படுத்தவும். தலையங்கம் குழு எப்போதும் இணைப்புகளைச் சரிபார்க்க முயற்சிக்கிறது, இதன்மூலம் நீங்கள் குறைந்த விலையிலும், உகந்த விநியோக நிலைமைகளிலும் ஆர்டர் செய்கிறீர்கள் என்பதில் உறுதியாக இருக்க முடியும்.\nஇந்த கட்டுரையை Goji Cream போன்ற பிற தயாரிப்புகளிலிருந்து வேறுபடுத்துகிறது.
ஜல்லிக்கட்டு நடத்தும் வரை ஓயக்கூடாது: சிம்பு – மின்முரசு\nஅமராவதி: ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி ஒரு சைக்கோ என முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் மகன் நாரா லோகேஷ் கடுமையாக விமர்சித்துள்ளார். ஆந்திரத்தில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்தது. ஏற்கெனவே சந்திரபாபு நாயுடுவுக்கும்...\nஜல்லிக்கட்டு நடத்தும் வரை ஓயக்கூடாது: சிம்பு\nநடிகர் சிம்பு தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் பதிவு செய்துள்ள கருத்து வருமாறு:-\n“ஜல்லிக்கட்டு தமிழனின் கலாசார அடையாளம். இந்த வீர விளையாட்டு நமது வாழ்வில் ஒருங்கிணைந்து பயணித்து வந்துள்ளது. ஏதோ சில தனிப்பட்ட நபர்களும், சில தன்னார்வ அமைப்புகளும் தங்களுடைய விலாச தேவைக்காக அதிகாரத்தில் இருப்போரையும், நீதித் துறையையும் தவறான தகவல்கள் மூலம் வழி நடத்தி நமது பாரம்பரிய விளையாட்டான ஜல்லிகட்டை நடத்தவிடாமல் செய்கின்றனர்.\nஜல்லிக்கட்டு என்பது தமிழர்களின் வீர உணர்வை பறைசாற்றும் கெத்தான விளையாட்டு மட்டும் அல்ல; நம் நாட்டு மாட்டினங்கள் அழியாமல் காத்திடும் பாரம்பரிய முறை. ஆனால், உச்சநீதிமன்ற தடை காரணமாக, இரண்டு ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு நடத்த முடியாமல் போய்விட்டது.\nஇந்திய நாட்டின் குடிமகனாக ஒவ்வொரு தமிழனும் நீதித்துறையை மதிக்கத்தான் செய்கிறான். ஆனால், அது தமிழ் கலாசாரத்தை மீறிய மதிப்பாக இருக்காது, இருக்கவும் முடியாது. நமது கலாசாரத்துக்கு எதிராக திணிக்கப்படும் எந்தச் சட்டமும் நமது தேசத்தின் இறையாண்மையை பாதிக்கும் என்பதை சம்பந்தப்பட்டவர்கள் உணர்வார்கள் என்று நம்புகிறேன். தனி ஒரு எஸ்.டி.ஆராக மட்டுமே இந்தக் கருத்தை தெரிவிக்கவில்லை. இந்த மண்ணின் மைந்தனாக, இந்த மண்ணின் கலாசாரத்தையும் பண்பாட்டையும் போற்றும் ஒரு கடைநிலை தூதுவனாகக்கூட என் கருத்தை உரக்கத் தெரிவிக்கிறேன்.\nதமிழகத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி ஜல்லிக்கட்டு விழாவை நடத்த பல்வேறு அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் போன்ற போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்த விவகாரத்தில் மத்திய-மாநில அரசுகள் மெத்தனம் காட்டாமல் ஜல்லிக்கட்டு நடத்த தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nநாம் வணங்கும் தமிழ்க் கடவுளின் அருளால் வருகின்ற தைப்பொங்கல் திருநாளில் நமது பாரம்பரியம் மீட்டெடுக்கப்பட்டு, நமது கலாசார அங்கீகாரம் மீண்டும் வெளிப்படுத்தப்படும் என நம்புகிறேன். ஜல்லிக்கட்டு நடத்தும் வரை ஓயக்கூடாது. இது நம்மொழி, நம் கலாசாரம், நம் பாரம்பரியம் எவருக்கும் எப்பொழுதும் வீட்டுக் கொடுக்க மாட்டோம்.”\nஇவ்வாறு அவர் கருத்து பதிவு செய்துள்ளார்.
வாதநாராயண இலை | பசுமைகுடில்\nவாதநோய்களை குணமாக்கும் வாதநாராயண இலை\nமனித உடலில் வாய்வு அதிகமானால் ஆர்த்தரைடீஸ் நோய் ஏற்படும் என்கிறது ஆயுர்வேதம். அளவுக்கு மீறி உடற்பயிற்சி செய்வது, இரத்தப் போக்கு, அதிக பாலியல் உறவினால் ஏற்படும் இழப்பு, இரவு அதிக நேரம் கண் விழித்தல், இயற்கை வேகங்களை தடை செய்தல், கவலை, எலும்பு முறிவு, மழைக்கால குளிர்காற்று போன்ற காரணங்களால் வாயு அதிகமாகி ஆர்த்தரைடீஸ் ஏற்படும் வாய்ப்புள்ளது.\nஅஜீரணமும் மலச்சிக்கலும் இணைந்து கழிவுப்பொருளை உடலை விட்டு நீக்க முடியாமல் போனால், உடலில் மூட்டு வலியை ஏற்படுத்தும். இதனை ஆமவாதம்’ என்கிறது ஆயுர்வேதம். ‘ஆமவாதம் என்பது ருமாடிஸத்தை குறிக்கும்.\nவறண்ட நிலப்பகுதிகளில் வளரும் வாதநாரயண மரம் வலிமை குன்றிய மரமாகும். இதன் கிளைகளை வெட்டி நட்டுவைத்தாலே நன்கு வளரும்.\nவாதாநாராயண மரம் சிறந்த மருத்துவ குணம் கொண்டது. இதனால் வாதவலி, கைகால் குடைச்சல், கணுச்சூலை எல்லாம் குணமடையும்.\nவாத நாராயணன் இலைகள் வாதத்தை அடக்கும் குணமுடையவை. இலைகளை சிற்றாமணக்கு நெய் விட்டு வதக்கி வீக்கங்கள், கட்டிகள் இவற்றுக்கு ஒத்தடம் கொடுக்கலாம். இந்த இலைகளின் சாறு, வாதநோய்களுக்கான தைலங்களில் சேர்க்கப்பட்டால், வாதநோய் எளிதில் போகும் என்பது சித்த, ஆயுர்வேத வைத்தியர்களின் அபிப்பிராயமாகும்.\nவாயுத் தொல்லை நீங்கும்\nவாயுத் தொல்லையினால் சிலருக்கு கை, கால் குடைச்சல் அதிகமாக இருக்கும். மூட்டு, கை, கால், கணுக்களில் வாயு உட்கார்ந்து கொண்டு தொல்லை தரும்.\nஇந்த நோய் உள்ளவர்களுக்கு .வாதநாராயண எண்ணெய் சிறந்த மருந்தாகும்\nகாலை எழுந்த உடன் 30 மில்லி வாதநாராயணன் எண்ணெயை வெந்நீரில் கலந்து குடித்து வர ஒரு மணி நேரத்தில் பேதி போகும். ஐந்து, ஆறுமுறை பேதி போனால் நல்லது. சோர்வை மறைக்க கஞ்சி சாப்பிடலாம். பின்னர் ஒரு டம்ளர் மோர் சாப்பிட பேதி நின்றுவிடும்.\nஇந்த எண்ணெய் சாப்பிடும் நாளில் புளி, நல்லெண்ணெய், கடுகு, மீன், கருவாடு கோழிக்கறி சாப்பிடக் கூடாது. பரங்கிக்காய் , பூசணிக்காய், அகத்திக்கீரை, பாகற்காய் சாப்பிடாமல் தவிர்க்கவும். இந்த எண்ணெயை மூன்று முதல் ஆறு நாட்கள் தினமும் காலையில் சாப்பிட நன்கு பலன் கிடைக்கும்.\nஎலும்புத் தேய்மானம் குணமடையும்\nசிறுநீர்ப்பாதையில் தோன்றும் அரிப்பு, புண் உடலில் உஷ்ணம் தொடர்பான நோய்களை குணமாக்கும் கை,கால் எரிச்சல் குணமடையும். பெண்களுக்குத் தோன்றும் வெட்டை நோய் குணமடையும்.\nஇம்மருந்து சாப்பிடும் நாளில் கத்தரிப்பிஞ்சு, முருங்கைப் பிஞ்சு. அவரைக்காய், பீர்க்கங்காய், போன்றவைகளைக் சேர்த்துக்கொள்ளலாம். மூன்று நாட்கள் இந்த மருந்தை சாப்பிட்டு வர மூட்டு வீக்கம் குணமடையும். எலும்பு தேய்மானம் குணமடையும்.\nமூட்டு வீக்கத்தை குணமாக்க வாதநாராயண மரத்தின் இலைகளை பறித்து கஷாயமாக்கி அதனை வீக்கம் உள்ள இடத்தில் சூடாக ஊற்றி கழுவ வேண்டும். பிறகு கசாயத்தில் உள்ள இலைகளை மூட்டையாக கட்டி கசாயத்தில் போட்டு ஒத்தடம் தரவேண்டும். இதனால் மூட்டுவலி குணமடையும்\nஉடைந்த எலும்பு சரியாகும்\nமுடக்கற்றான் இலையில் அடை தட்டி சாப்பிடுவது போல வாதநாராயண மரத்தின் இலைகளையும் அரியில் போட்டு அரைத்து சூடாக அடை தட்டி சாப்பிடலாம். இந்த இலையில் ரசம் வைத்தும் அருந்தலாம்.\nஇந்த மரத்தின் பிசினை எடுத்து தண்ணீரில் கரைத்துக் குழைத்து வலி உள்ள இடத்தில் பத்து போட வேண்டும். சில நாளில் வலி குறையும். எலும்பு முறிந்த இடத்தில் இந்த பிசினைத் தடவிக் கட்டினால் மிக விரைவில் எலும்பு கூடும்.\nPrevious Post:நாட்டு கோழி\nNext Post:முசுமுசுக்கை கீரை\nவாதநாராயண எண்ணெய் எங்கு கிடைக்கும்?\nநீங்கள் எங்கிருக்கிறீர் ஏன்றால், தகவல் கூற வசதி…
சுயமாக சிந்திக்கத் தொடங்கிய ரோபோக்கள்… பதறிய ஃபேஸ்புக்..! - Puttalam Online\nசுயமாக சிந்திக்கத் தொடங்கிய ரோபோக்கள்… பதறிய ஃபேஸ்புக்..!\nஏதோ உளறலாகத் தோன்றும் அந்த இரு வாக்கியங்களுக்குள் புதைந்து கிடக்கும் பொருளை AI ஏஜெண்டுகளை வைத்துக் கண்டறிந்திருக்கிறார்கள். இதில் ‘I’ மற்றும் ‘to me’ என்ற வார்த்தைகள் பலமுறை பயன்படுத்தப்பட்டுள்ளன. வார்த்தைகளை அதன் உண்மையான பொருளை வைத்து உபயோகிக்காமல், ஒரு சில வார்த்தைகளுக்கு அந்த இரண்டு ரோபோக்கள் தங்களுக்குள் ஒரு பொருளை ஒதுக்கிக் கொண்டு அதன்படி பேசத் தொடங்கியுள்ளன. அதன் படி இங்கே முதல் வாக்கியத்திற்கான விளக்கம்: “I’ll have three and you have everything else” (நான் மூன்று பொருள்களை எடுத்துக் கொள்கிறேன். மீதி அனைத்தையும் நீ எடுத்துக் கொள்) என்பதுதான்.\nShare the post "சுயமாக சிந்திக்கத் தொடங்கிய ரோபோக்கள்… பதறிய ஃபேஸ்புக்..!"
₹1.30 கோடி மோசடி செய்த பெங்களூரு புரோக்கருக்கு கத்திக்குத்து போளூரில்4பேர் கைது;2பேருக்கு வலை ராணுவத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி | Dinakaran\nபோளூர், மார்ச் 7: ராணுவத்திலும், ராணுவ கேன்டீனிலும் வேலை வாங்கி தருவதாக கூறி ₹1.30 கோடி மோசடி செய்த பெங்களூரு புரோக்கருக்கு போளூர் அருகே கத்திக்குத்து விழுந்தது. இதுதொடர்பாக,4பேரை கைது செய்த போலீசார்,2பேரை தேடி வருகின்றனர். பெங்களூரு காசிப்பாளையத்தை சேர்ந்தவர் யோகேஸ்வரன் என்ற ஜான்பீட்டர்(54). இவர் ராணுவத்திலும், ராணுவ கேன்டீனிலும் வேலை வாங்கி தருவதாக பலரிடம் கூறி வந்துள்ளார்.\nஇதையறிந்த திருவண்ணாமலை மாவட்டம், போளூர் அடுத்த பாடகம், மன்சுரபாத் பகுதியை சேர்ந்த ராமசாமி, செல்வமுத்து(24), எழிலரசன்(31), அரிதாஸ்(31), அருள், பூபாலன் உள்ளிட்ட 43 பேர், கடந்த ஒராண்டுக்கு முன்பு நபருக்கு ₹3 லட்சம் வீதம் மொத்தம் ₹1.30 கோடி பணம் கொடுத்ததாக கூறப்படுகிறது.\nஆனால், சொன்னபடி ஜான்பீட்டர் வேலை ஏதும் பெற்று தரவில்லையாம். பணம் தந்தவர்கள் தொடர்ந்து நெருக்கடி கொடுத்ததால் போலி பணி நியமன ஆணையை தயாரித்து அவர்களிடம் கொடுத்துள்ளார். பின்னர், இதையறிந்து அதிர்ச்சி அடைந்த 43 பேரும் திருவண்ணாமலை மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்தனர். ஆனால், போலீசார் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. ஆனால், பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் நடவடிக்கை எடுக்கக்கோரி தொடர்ந்து போலீசாரிடம் வற்புறுத்தி வந்ததால், ஜான்பீட்டரை பெங்களூரு சென்று நீங்களே அழைத்து வாருங்கள், அவரிடம் விசாரணை நடத்தி பணத்தை பெற்றுத்தருகிறோம் என போலீசார் கூறினார்களாம்.\nஅதன்பேரில், நேற்று முன்தினம் செல்வமுத்து உள்ளிட்ட6பேரும் பெங்களூரு சென்று, ஜான்பீட்டரிடம் போளூர் வாருங்கள் அங்கு வைத்து பேசிக் கொள்ளலாம் அழைத்துள்ளனர். அதன்பேரில், போளூருக்கு வந்த ஜான்பீட்டரிடம் செல்வமுத்து உள்ளிட்ட6பேரும் தங்களது பணம் எப்போது கிடைக்கும் என கேட்டுள்ளனர். அப்போது, வாக்குவாதம் ஏற்பட்டதில் ஜான்பீட்டரை,6பேரும் சேர்ந்து சரமாரியாக தாக்கியதுடன், கத்தியாலும் குத்தியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த அவர் அவர்களிடம் இருந்து தப்பித்து தனியார் மருத்துவமனையில் சேர்ந்து, போளூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி, சப்-இன்ஸ்பெக்டர் தரணி ஆகியோர் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். பின்னர் ராமசாமி, செல்லமுத்து, எழிலரசன், அரிதாஸ் ஆகிய4பேரையும் கைது செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள அருள், பூபாலனை தேடி வருகின்றனர்.
ஜோரம் வான்: வெறுப்பிலிருந்து இஸ்லாத்தை நோக்கிய பயணம் - Puthiya Vidial, Puthiya Vidiyal\nBy Wafiq Sha on\t February 14, 2019 புதிய விடியல்\nஅன்று வரை உமர் (ரலி) அவர்கள் குர்ஆன் ஓதப்படுவதை நேரடியாக கேட்டிருக்கவில்லை. ஹம்ஸா (ரலி) இஸ்லாத்தை தழுவியபோது உமர் தீர்மானித்துவிட்டார், இனி முஹம்மதை (ஸல்) சும்மா விடக்கூடாது. குறைஷிகளில் சிலர் தங்களது பாரம்பரியத்தை கைவிட்டு களம் மாறுகிறார்கள். தங்களுடைய ஒற்றுமையையும், முன்னோர்களின் நம்பிக்கை, சடங்கு, சம்பிரதாயங்களையும் முஹம்மது புறக்கணிக்கிறார். தங்களுடைய தெய்வங்களை ஒழிக்கப்பார்க்கிறார். -குறைஷிகளின் இந்த குற்றச்சாட்டுகள் உமரை கொந்தளிப்பில் ஆழ்த்தியிருந்தது.\nஒரு நாள் ஏக இறைவனின் தூதுச் செய்தியை எத்தி வைக்கும் முஹம்மதை கொன்றே தீரவேண்டும் என்ற துடிப்புடன் தனது வாளை உருவியவாறு வீட்டை விட்டு கிளம்பினார் உமர்! வழியில் சந்தித்த நுஐம் (ரலி) அவர்களிடம் முஹம்மதை கொன்றுவிட்டு கஃபாவில் உள்ள தமது தெய்வங்களுக்கு ஏற்பட்ட அவமானத்தை துடைக்கப் போகின்றேன் என்று கர்ஜித்தார். உடனே நுஐம் (ரலி) ‘‘உன் சகோதரியும் மைத்துனரும் முஸ்லிம்களாகி விட்டார்கள். அவர்கள் இந்நேரம் குர்ஆன் வசனங்களை வாசித்துக் கொண்டு கூட இருக்கலாம், அவர்களைப் போய் கவனியும்’’ என்று கூறினார்.\nஇந்த செய்தி உமரின் கோபத்தை அதிகரிக்கச் செய்தது. அவர் இதனை சற்றும் எதிர்பார்க்கவில்லை. உடனே தனது பயணப்பாதையை தங்கையின் வீட்டை நோக்கி திருப்பினார். கோபாவேசத்துடன் தங்கையின் வீட்டை நோக்கிச் சென்றவர் அங்கே தனது மைத்துனர் குர்ஆனின் வசனங்களை ஓதிக்கொண்டிருப்பதை கண்டார். சிறு கைகலப்பிற்கு பின் சற்று அமைதியடைந்த உமர், குர்ஆனின் வசனங்களை ஓத ஆரம்பிக்கிறார்… கல் நெஞ்சம் கரைகிறது, உள்ளம் பிரகாசிக்கிறது. உடனே சற்றும் யோசிக்காமல் ஸஃபா குன்றினை நோக்கி, அதாவது தாருல் அர்க்கம் நோக்கி, மாமனிதர் முஹம்மது (ஸல்) அவர்களை சந்திக்க விரைந்தார். … முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்கு இங்கு செல்லவும்\nTags: 2019 பிப்ரவரி 16-28 புதிய விடியல்புதிய விடியல்\nPrevious Articleஎங்கே எனது வேலை?\nNext Article இந்திய யூதர்கள்
ராஜபாளையம் அருகே 10-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை: டிராக்டர் டிரைவர் கைது || 10th class student molestation arrested tractor driver in rajapalayam\nராஜபாளையம் அருகே 10-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை: டிராக்டர் டிரைவர் கைது\nபதிவு: ஜூலை 07, 2019 16:53 IST\nராஜபாளையம் அருகே கண்மாய்க்கு அழைத்து சென்று 10-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டிராக்டர் டிரைவர் கைது செய்யப்பட்டார்.\nராஜபாளையம் அருகே உள்ள கிறிஸ்துராஜ புரத்தில் அரசு மேல் நிலைப்பள்ளி உள்ளது. இங்கு அதே ஊரைச் சேர்ந்த மாணவி 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இவரை அதே பகுதியைச் சேர்ந்த டிராக்டர் டிரைவர் சுரேஷ்குமார் (வயது35) அவ்வப்போது தொந்தரவு செய்து வந்துள்ளார். இதற்கு பள்ளி உதவியாளர் கலா(40) உடந்தையாக இருந்துள்ளார். மாணவியின் வீடும், சுரேஷ்குமாரின் வீடும் அருகருகே உள்ளன.\nசம்பவத்தன்று சுரேஷ் குமார் மாணவியை தனது மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு பள்ளிக்கு அழைத்து சென்றார்.\nஆனால் அவர் பள்ளிக்கு செல்லாமல் ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருந்த கண்மாய்க்கு அழைத்து சென்றார். அங்கு வைத்து மாணவியை சுரேஷ்குமார் பாலியல் தொந்தரவு செய்ததாக தெரிகிறது.\nஇதில் மாணவி அழுது அடம்பிடித்ததை பார்த்து பயந்துபோன சுரேஷ்குமார் அவரை அங்கேயே விட்டு விட்டு சென்று விட்டார். பின்னர் மாணவி தனியாக வீடு திரும்பினார்.\nஅலங்கோல நிலையில் வந்த மாணவியிடம் தாயார் கேட்டபோது மாணவி நடந்த சம்பவத்தை விளக்கினார்.\nஇதுகுறித்து மாணவியின் தாயார் ராஜபாளையம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் வனிதா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.\nபின்னர் டிராக்டர் டிரைவர் சுரேஷ்குமாரையும், பள்ளி உதவியாளர் கலாவையும் கைது செய்தார். மாணவி மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
பிரபல தொகுப்பாளினி கீர்த்தியின் அப்பா அம்மா யாரு தெரியுமா? வெளியான குடும்ப புகைப்படம் – Mediatimez.co.in\nபிரபல தொகுப்பாளினி கீர்த்தியின் அப்பா அம்மா யாரு தெரியுமா? வெளியான குடும்ப புகைப்படம்\nதமிழ் சினிமாவில் நடிகர், இயக்குனர், இசையமைப்பாளர் என பல முகம் கொண்டவர் பாக்கியராஜ் அவர்கள். புதிய வார்ப்புகள் என்னும் படம் மூலம் நடிகராக அறிமுகமாகி தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்தார். மேலும் இயக்குனர் பாக்கியராஜ் என்றால் நியாபகம் வருவது அந்த முருங்கைக்காய் காட்சிகள் தான். பாக்கியராஜ் அவர்கள் பல வெற்றி படங்களில் நடித்து அன்றைய ரசிகர்கள் மத்தியில் தன்கென்று ஒரு தனி ரசிகர்கள் கூட்டத்தை வைத்துள்ளார்.\nகடந்த தீபாவளிக்கு விஜய் நடிப்பில் வெளியாகி ரசிகர்களால் மிகவும் கொண்டாடப்பட்ட படம் மாஸ்டர். இப்படம் ரூ.125 கோடி வசூலை எட்டியுள்ளது ரசிகர்களுக்கு மிகவும் மகிழ்ச்சி அளித்துள்ளது. கேங்ஸ்டர் கதை கொண்ட இப்படத்தில் கல்லூரி மாணவராக பார்கவ் வேடத்தில் நடித்தவர் சாந்தனு. விஜய்யின் தீவிர ரசிகரான இவர் சிறிய கதாபாத்திரம் என்றாலும் விஜய் அண்ணாவுக்காக தான் இப்படத்தில் நடித்தேன் என அவரும் கூறியிருந்தார்.\nசாந்தனு நடனம், உடற்பயிற்சி என கொரோனா காலத்தில் மிகுந்த கவனம் செலுத்தி வந்தார். மேலும் அவர் தன் மனைவி விஜே கீர்த்தியுடன் இணைந்து பாடல் ஆல்பத்தில் நடித்ததோடு, நடனப்பள்ளியையும் நடத்தி வருகிறார்கள். கலக்கலாக டிவியில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் கீர்த்தி சுரேஷ் தன் அப்பா அம்மாவுடனும், கணவருடனும் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் ரசிகர்களின் பார்வைக்கு வந்துள்ளன.\nPrevious Post:நடிகை சிம்ரனின் கணவரை பார்த்துள்ளீர்களா? ஹீரோ போல இருக்கிறாரே! இதுவரை பலரும் பார்த்திராத புகைப்படம் இதோ\nNext Post:திருடுறத பார்த்துடாங்களே..! சிசிடிவி கேமராவிற்கு சாரி சொன்ன தி ரு ட ன்.. வைரல் வீடியோ
Aval Kitchen - 01 June 2020 - கலக்கல் மக்(mug) ரெசிப்பிகள்!|Different variety of Mug recipes - Vikatan\nசமையற் கலைஞர் ப்ரியா சதீஷ்\nஒரு ‘மக்’கை வைத்துக்கொண்டு அதிகபட்சமாக என்ன செய்துவிட முடியும்... காபி அல்லது தேநீர் பருகலாம். இல்லை யென்றால் சில்லென்று ஜூஸ் அருந்தலாம். அப்படித்தானே?\nஉங்களிடம் மைக்ரோவேவ் அவனும், கூடவே அதில் பயன்படுத்த பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டிருக்கும் ‘மக்’(Mug)-ம் இருந்தால் சில நிமிடங்களிலேயே கேக், ஃப்ரைடு ரைஸ், சூப், ஆம்லெட் என்று விதவிதமாகத் தயாரித்துவிடலாம் என்கிறார் கனடாவில் வசிக்கும் சமையற் கலைஞர் ப்ரியா சதீஷ். இவரது கைவண்ணத்தில் உருவான டேஸ்ட்டி & வெரைட்டி ‘மக்’ ரெசிப்பிகள் இதோ!\nபீநட் பட்டர் மக் கேக்\nபீநட் பட்டர் –3டேபிள்ஸ்பூன்\nஉலர்திராட்சை –5அல்லது 6\nபொடியாக நறுக்கிய முந்திரி – சிறிதளவு\nஒரு மக்கில் முட்டையை உடைத்துச் சேர்க்கவும். இத்துடன் சர்க்கரையைச் சேர்த்து ஒரு முட்கரண்டியால் கலவையை நன்கு அடித்துக்கொள்ளவும். பிறகு இதனுடன் பீநட் பட்டரையும் சேர்த்து நன்கு கலக்கவும். பின்பு இக்கலவையில் பொடியாக நறுக்கிய முந்திரி, உலர் திராட்சையைச் சேர்க்கவும். பின்னர் `மக்’கை மைக்ரோவேவ் அவனில் ஒரு நிமிடம் வைத்து எடுத்து சூடாகப் பரிமாறவும்.\nகலவையை மைக்ரோவேவ் அவனில் வைத்து எடுக்கும் நேரம், நீங்கள் எடுத்துக்கொண்டிருக்கும் ‘மக்கின் அளவைப் பொறுத்தும், நீங்கள் எடுத்துக்கொண்டிருக்கும் பொருள்களின் அளவைப் பொறுத்தும் மாறுபடும். எனவே, அதற்கேற்ப `மக்’கை மைக்ரோவேவ் அவனில் வைக்கும் நேரத்தை அட்ஜஸ்ட் செய்து கொள்ளவும்.\nபீநட் பட்டரில் புரதம், மெக்னீசியம், செலினியம், பொட்டாசியம், கால்சியம், செம்பு, இரும்பு, மற்றும் பி வைட்டமின்கள் அடங்கியுள்ளன.\nசீஸி மக் ஃப்ரைடு ரைஸ்\nசாதம் – அரை கப்\nபொடியாக நறுக்கிய குடமிளகாய் –\nபொடியாக நறுக்கிய வெங்காயத்தாள் –\nவெங்காயப்பொடி, பூண்டுப்பொடி – தலா\nஇத்தாலியன் சீஸனிங் – அரை டீஸ்பூன்\nஒன்றிரண்டாகப் பொடித்த மிளகு –\nசெடார் சீஸ் – ஒன்றரை டேபிள்ஸ்பூன்\nமைக்ரோவேவில் வைத்துப்பயன்படுத்தும் `மக்’கில் சமைத்த சாதம், பொடியாக நறுக்கிய குடமிளகாய், வெங்காயத்தாள் ஆகியவற்றைச் சேர்க்கவும். இதை மைக்ரோவேவ் அவனில் ஒரு நிமிடம் வைத்து எடுக்கவும். இதற்கிடையில் ஒரு பவுலில் முட்டையை உடைத்துச் சேர்க்கவும். இதனுடன் சோயா சாஸைச் சேர்த்து நன்கு அடித்துக்கொள்ளவும். பின்னர் இதில் வெங்காயப்பொடி, பூண்டுப்பொடி, இத்தாலியன் சீஸனிங், ஒன்றிரண்டாக உடைத்த மிளகு, தேவையான உப்பு ஆகியவற்றைச் சேர்த்துக் கலக்கவும்.இக்கலவையை `மக்’கில் வைத்திருக்கும் சாதக் கலவையுடன் சேர்த்து நன்கு கிளறிவிடவும். பின்னர் `மக்’கை மைக்ரோவேவ் அவனில் ஒரு நிமிடம் வைத்து எடுக்கவும். பின்னர் `மக்’கில் இருக்கும் சாதக் கலவையின்மேல் செடார் சீஸைத் தூவி மறுபடியும் 30 விநாடிகள் வைத்து எடுக்கவும். சூடாகப் பரிமாறவும்.\nகுடமிளகாயில் வைட்டமின் சி சத்து அதிகமுள்ளது. ஏ, ஈ, பி6 வைட்டமின்களும் இதில் உள்ளதால் உடல்நலத்துக்கு உகந்தது.\nதக்காளி மக் சூப்\nதக்காளி ப்யூரி –4டேபிள்ஸ்பூன்\nசோள முத்துகள் – ஒன்றரை டேபிள்ஸ்பூன்\nபூண்டுப்பொடி – சிறிதளவு\nவெஜிடபிள் ஸ்டாக் அல்லது சிக்கன் ஸ்டாக் – அரை கப்\nஉலர் ஒரிகானோ – ஒரு சிட்டிகை\nஉலர் பேஸில் இலைகள் – ஒரு சிட்டிகை\nஉலர் பார்ஸ்லி இலைகள் – ஒரு சிட்டிகை\nபர்மேசன் சீஸ் பவுடர் – ஒரு டீஸ்பூன் (பாஸ்தா, பிட்சா, சூப் போன்றவற்றில் பயன்படுத்தப்படும் பிரத்யேக சீஸ் பவுடர் இது)\nபர்மேசன் சீஸ் பவுடரைத் தவிர மற்ற அனைத்துப் பொருட்களையும் ஒரு `மக்’கில் ஒன்றாக எடுத்துக்கொள்ளவும். பின்னர் `மக்’கை மைக்ரோவேவ் அவனில் ஒரு நிமிடம் வைத்து எடுக்கவும். பின்னர் `மக்’கில் இருக்கும் கலவையை நன்கு கலந்துவிட்டு அதில் பர்மேசன் சீஸ் பவுடரைச் சேர்த்து மறுபடியும் மைக்ரோவேவ் அவனில் ஒரு நிமிடம் வைத்து எடுக்கவும். பொரித்த பிரெட் துண்டுகளுடன் பரிமாறவும்.\nகுறிப்பு: கொதிக்கும் நீரில் தக்காளியைப் போட்டு ஓரிரு நிமிடங்கள் வேகவிட்டு பின்பு அதன் தோலை உரித்து எடுத்துவிட்டு தக்காளி ப்யூரி செய்யலாம். தக்காளியை முக்கிய உணவுப் பொருளாகக்கொண்டு தயாரிக்கப்பட்ட பாஸ்தா சாஸையும் பயன்படுத்தலாம். அதுமட்டுமல்லாமல் இந்த சூப்பில் வேகவைத்த பாஸ்தாவையும் சேர்க்கலாம்.\nதக்காளியின் தாயகம் தென் அமெரிக்கா, நடு அமெரிக்கா மற்றும் வட அமெரிக்காவின் தென் பகுதியாகும். குறிப்பாக பெரு, மெக்ஸிகோவில் இருந்து அர்ஜெண்டைனா வரையான பகுதி.\nஆப்பிள் மக் கேக்\nதோல் நீக்கப்பட்டு பொடியாக நறுக்கிய ஆப்பிள் – அரை கப்\nபொடித்த வெல்லம் – ஒன்றரை டேபிள்ஸ்பூன் + ஒரு டீஸ்பூன்\nபொடித்த லவங்கப்பட்டை – கால் டீஸ்பூன்\nகாய்ச்சிய பால் -2டேபிள்ஸ்பூன்\nவெனிலா எசென்ஸ் – கால் டீஸ்பூன்\nமேப்பிள் சிரப் - அலங்கரிக்க\nஒரு `மக்’கில் பொடியாக நறுக்கிய ஆப்பிளைச் சேர்க்கவும். இதனுடன் பொடித்த லவங்கப்பட்டை மற்றும் ஒரு டீஸ்பூன் பொடித்த வெல்லத்தைச் சேர்த்து மைக்ரோவேவ் அவனில் 30 விநாடிகள் வைத்து எடுத்து நன்கு கலந்து கொள்ளவும்.பின்னர் இதனுடன் மீதமுள்ள தேவையான எல்லாப் பொருட்களையும் சேர்த்து நன்கு கலந்து மறுபடியும் `மக்’கை மைக்ரோவேவ் அவனில் வைத்து ஒரு நிமிடம் கழித்து எடுக்க வும். பின்னர் மேப்பிள் சிரப்பால் அலங்கரித்து சூடாகப் பரிமாறவும்.\nஐஸ்க்ரீமுடன் சேர்த்தும் இதைப் பரிமாறலாம்.\nஆப்பிள் முதலில் மத்திய ஆசியாவில்தான் பயிரிடப்பட்டது. இப்போது உலகின் எல்லாவிதமான குளிர்ப்பகுதிகளிலும் வளர்க்கப் படுகிறது.\nவாழை பாதாம் மக் கேக்\nநடுத்தர அளவிலான வாழைப்பழம் – ஒன்று\nபாதாம் பவுடர் –4டேபிள்ஸ்பூன்\nசர்க்கரை – ஒன்றரை டேபிள்ஸ்பூன்\nசூரியகாந்தி விதைகள் அல்லது பொடியாக நறுக்கிய முந்திரிப்பருப்பு -5அல்லது 6\nஒரு `மக்’கில் வாழைப்பழத்தை எடுத்துக்கொள்ளவும். பின்னர் அதை ஒரு முட்கரண்டியின் உதவியோடு கட்டிகள் இல்லாமல் நன்கு மசித்துக்கொள்ளவும். பிறகு இதனுடன் முட்டையைச் சேர்த்து நன்கு அடித்துக்கொள்ளவும். பின்பு இதில் பாதாம் பவுடர், சர்க்கரை மற்றும் முந்திரிப்பருப்புத் துண்டுகளைச் சேர்த்து நன்கு கலக்கவும். பின்னர் `மக்’கை மைக்ரோவேவ் அவனில் ஒரு நிமிடம் வைத்து எடுக்கவும். ஐஸ்க்ரீமுடன் பரிமாறவும்.\nபழங்காலத்தில் வாழைப்பழம் விரல் நீளமே இருந்திருக்கிறது. அரபு மொழியில் பனானா என்றால் விரல் என்று பொருள். அதனால்தான் இந்தப் பெயர்.\nஒரு நிமிட மக் கேக்\nசர்க்கரை – ஒரு டேபிள்ஸ்பூன் + ஒரு டீஸ்பூன்\nகோக்கோ பவுடர் –2டீஸ்பூன்\nகாய்ச்சிய பால் –2டேபிள்ஸ்பூன்\nஎண்ணெய் – முக்கால் டீஸ்பூன்\nஒரு `மக்’கில் பாலை எடுத்துக்கொள்ளவும். பின்னர் அதனுடன் எண்ணெய் மற்றும் வெனிலா எசென்ஸைச் சேர்க்கவும். ஒரு முட்கரண்டியால் இக்கலவையை நன்கு கலந்து, இதனுடன் பேக்கிங் பவுடர், சர்க்கரை, கோக்கோ பவுடர் மற்றும் உப்பு ஆகியவற்றைச் சேர்த்து நன்கு கலக்கவும். பின்னர் `மக்’கை மைக்ரோவேவ் அவனில் ஒரு நிமிடம் வைத்து எடுக்கவும். பின்னர் சூடாகப் பரிமாறவும்\nகோக்கோ பயிர் அமெரிக்கப் பிராந்தியத்தின் அடர்த்தியான வெப்ப மண்டலத்தைத் தாயகமாகக் கொண்டது.\nசேவரி மக் இட்லி\nபொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - அரை டீஸ்பூன்\nபொடியாக நறுக்கிய மஞ்சள் அல்லது சிவப்பு குடமிளகாய் - ஒரு டேபிள்ஸ்பூன்\nஇட்லி மிளகாய்ப்பொடி - ஒரு டேபிள்ஸ்பூன்\nதுருவிய இஞ்சி - அரை டீஸ்பூன்\nசெடார் சீஸ் – ஒரு டேபிள்ஸ்பூன்\nஒரு `மக்’கில் எண்ணெய், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், மஞ்சள்தூள், குடமிளகாய் மற்றும் இஞ்சித்துருவல் ஆகியவற்றைச் சேர்க்கவும். பின்னர் இதனுடன் இட்லி மாவு மற்றும் தேவையான உப்பு ஆகியவற்றைச் சேர்த்து கலவையை நன்கு கலக்கவும். பின்னர் இதன்மேலே இட்லி மிளகாய்ப்பொடி மற்றும் செடார் சீஸைத் தூவவும். பின்னர் `மக்’கை மைக்ரோவேவ் அவனில் ஒரு நிமிடம் வைத்து உடனடியாகப் பரிமாறவும்.\nமைக்ரோவேவ் அவனின் வெப்பநிலையைப் பொறுத்து உணவானது வேகும் நேரம் அமையும் என்பதால், இட்லி சரியாக வேகவில்லை என்றால் மைக்ரோவேவ் அவனில் இன்னுமொரு 30 விநாடிகள் வைத்திருந்து `மக்’கை எடுக்கவும். அதேபோல பிளெயின் இட்லியை `மக்’கில் தயாரிக்க நினைத்தால் `மக்’கில் சிறிது எண்ணெய் தடவி அதில் ஒரு கரண்டி இட்லி மாவை அதில் ஊற்றவும். அதன் பின்னர் `மக்’கை 40 விநாடிகள் முதல் ஒரு நிமிடம்வரை மைக்ரோவேவ் அவனில் வைத்து எடுக்கவும். அதேபோல மைக்ரோவேவ் அவனில் இருந்து எடுத்தவுடனேயே இட்லியைப் பரிமாறிவிடவும்.\nநல்லெண்ணெய் இந்திய மருத்துவ முறைகளில் பல விதங்களில் பயன்படுகிறது. எதிர் ஆக்சிகரணியாகச் செயல்பட்டு ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது.\nஸ்பகட்டி மக் ஆம்லெட்\nஸ்பகட்டி குச்சிகள் – 10 (சிறிய துண்டுகளாக உடைத்துக்கொள்ளவும்)\nபொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் –\nஹெவி க்ரீம் – ஒரு டீஸ்பூன் (விருப்பமெனில்)\nசெம்மறியாட்டின் பாலிலிருந்து பெறப்படும் (Feta Cheese) அல்லது ஏதேனும் ஒரு துருவிய சீஸ் – ஒரு டேபிள்ஸ்பூன்\nதுருவிய சீஸ் – அலங்கரிக்க\nஒரு `மக்’கில் உடைத்த ஸ்பகட்டி குச்சிகளை போடவும். அதனுடன் தண்ணீர் சேர்த்து மைக்ரோவேவ் அவனில் இரண்டு நிமிடங்கள் வைத்து எடுக்கவும். பின்னர் ஒரு மூன்று நிமிடங்கள் கழித்து மறுபடியும் `மக்’கை இரண்டு நிமிடங்கள் மைக்ரோவேவ் அவனில் வைக்கவும். அல்லது `மக்’கில் உள்ள ஸ்பகட்டியானது தண்ணீரை முழுமையாக உறிஞ்சும் வரை மைக்ரோவேவ் அவனில் வைத்து எடுக்கவும். பிறகு இதனுடன் மீதமுள்ள தேவையான பொருட்கள் அனைத்தையும் சேர்த்து நன்கு கலக்கவும். மறுபடியும் `மக்’கை மைக்ரோவேவ் அவனில் வைத்து ஒன்றரை நிமிடங்கள் கழித்து எடுக்கவும். கலவையின் மேலே துருவிய சீஸ் தூவி சூடாகப் பரிமாறவும்.\nகாயங்களைக் குணப்படுத்தவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவும் துத்தநாகம், முட்டையில் உள்ளது.\nபிரெஞ்சு டோஸ்ட் இன் எ மக்\nபிரெட் துண்டுகள் –2அல்லது3(`மக்’கின் அளவுக்கேற்ப)\nலவங்கப்பட்டை – ஒரு சிட்டிகை\nமேப்பிள் சிரப் – கால் கப்\nஉலர்திராட்சை – அலங்கரிக்க\nபிரெட்களில் வெண்ணெய் தடவி சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். ஒரு பவுலில் முட்டையை உடைத்துச் சேர்க்கவும். இத்துடன் பால், பொடித்த லவங்கப்பட்டை, பாதியளவு மேப்பிள் சிரப் ஆகியவற்றைச் சேர்த்து நன்கு கலக்கவும். பின்னர் ஒரு ‘மக்’கில் வெண்ணெய் தடவிய பிரெட் துண்டுகளை எடுத்துக்கொள்ளவும். அதன் மீது கலந்துவைத்திருக்கும் முட்டைக் கலவையை ஊற்றி நன்கு கிளறிவிடவும். பிறகு ‘மக்’கை மைக்ரோவேவ் அவனில் ஒன்றரை நிமிடங்கள் வைத்து எடுக்கவும். இதன்மேல் திராட்சைகளைத் தூவி அதன் மீத் மீதமுள்ள மேப்பிள் சிரப்பை ஊற்றி அலங்கரிக்கவும். உடனே பரிமாறவும்.\nபழத்துண்டுகள், சாக்கோ சிப்ஸ் மற்றும் ஐஸ்க்ரீம் போன்றவற்றால் அலங்கரித்தும் இதைப் பரிமாறலாம்.\nஅதிக அளவு வெண்ணெய் பயன்படுத்துவோர் பட்டியலில் பிரான்ஸ் மக்கள் முதலிடம் பெறுகிறார்கள்.\nமக் சேமியா உப்புமா\nபொடியாக நறுக்கிய இஞ்சி – அரை டீஸ்பூன்\nபொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் – அரை டீஸ்பூன் முதல் ஒரு டீஸ்பூன் வரை\nபொடியாக நறுக்கிய வெங்காயம் –\nபொடியாக நறுக்கிய தக்காளி –\nவறுத்த சேமியா – அரை கப்\nஒரு `மக்’கில் எண்ணெய், உளுத்தம்பருப்பு, சீரகம், பெருங்காயத்தூள் ஆகியவற்றைச் சேர்க்கவும். பின்னர் இதை மைக்ரோவேவ் அவனில் ஒரு நிமிடம் வைத்து எடுக்கவும். பின்பு இதில் பொடியாக நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய், வெங்காயம், தக்காளி ஆகியவற்றைச் சேர்க்கவும். பின்னர் இதை மைக்ரோவேவ் அவனில் 30 விநாடிகள் வரை வைத்து எடுக்கவும். இதனுடன் வறுத்த சேமியா, தேவையான தண்ணீர் மற்றும் தேவையான உப்பு ஆகியவற்றைச் சேர்க்கவும். கலவையை நன்கு கலந்து மறுபடியும் இதை மைக்ரோவேவ் அவனில் ஒரு நிமிடம் வைத்து வெளியே எடுக்கவும். பின்னர் `மக்’கைச் சில நிமிடங்கள் அப்படியே வைத்துவிட்டு மேலே கொத்தமல்லி தூவி, சட்னியுடன் பரிமாறவும்.\n100 கிராம் சேமியாவில் 331 கலோரி ஆற்றல் கிடைக்கும். இதில் கால்சியமும் இரும்புச்சத்தும் ஓரளவு காணப்படுகிறது.
Q3 GDP to be worse: Chidambaram || 3-வது காலாண்டிற்கான ஜி.டி.பி. இன்னும் மோசமடையும் ; ப.சிதம்பரம் எச்சரிக்கை\n3-வது காலாண்டிற்கான ஜி.டி.பி. இன்னும் மோசமடையும் ; ப.சிதம்பரம் எச்சரிக்கை + "||" + Q3 GDP to be worse: Chidambaram\n3-வது காலாண்டிற்கான ஜி.டி.பி. இன்னும் மோசமடையும் ; ப.சிதம்பரம் எச்சரிக்கை\n3-வது காலாண்டிற்கான ஜி.டி.பி. இன்னும் மோசமடையும் என ப.சிதம்பரம் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.\nபதிவு: நவம்பர் 30, 2019 16:52 PM\nஇந்தியாவின் பொருளாதார வளர்ச்சி6வருடங்களில் இல்லாத வகையில் கடந்த ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான 2-வது காலாண்டில் 4.5 சதவீதம் என்ற அளவில் வீழ்ச்சி அடைந்தது.\nமத்திய அரசு, நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம் 2-வது காலாண்டில் 4.5 சதவீதம் என்ற அளவில் உள்ளது. எட்டு முக்கிய தொழிற்சாலைகளின் உற்பத்தி கடந்த அக்டோபரில் 5.8 சதவீதமாக குறைந்துள்ளது என நேற்று தெரிவித்து இருந்தது.\nஇதுபற்றி பேசிய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், நாட்டின் பொருளாதார நிலை மிகவும் கவலையளிக்கிறது. ஆனால் அதனை விட நமது சமூகத்தின் நிலை மிகவும் கவலைக்குரிய வகையில் உள்ளது என கூறினார்.\nஅவர் தொடர்ந்து கூறும்பொழுது, முதல் காலாண்டில்5சதவீதம் என்ற அளவில் இருந்த நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2-வது காலாண்டில் 4.5 சதவீதமாக கடும் வீழ்ச்சி அடைந்திருப்பது வருத்தத்திற்கு உரியது. இது முற்றிலும் ஏற்க இயலாதது. வளர்ச்சியானது 8 முதல்9சதவீதம் என்ற அளவில் இருக்க வேண்டும் என கூறினார்.\nஇந்நிலையில், முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், பரவலாக முன்பே கணித்ததன்படி, 2-வது காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜி.டி.பி.) 4.5 சதவீதம் ஆக குறைந்துள்ளது. அரசானது அனைத்தும் நன்றாக உள்ளது என இன்னும் கூறி வருகிறது.\nமூன்றாவது காலாண்டில் இந்த சரிவு இன்னும் கூடுதலாகும். எல்லா வகையிலும் மிக மோசமடையும் என தெரிவித்து உள்ளார்.\nஜார்க்கண்ட் மக்கள் பா.ஜ.க.வுக்கு எதிராக வாக்களித்து பா.ஜ.க.வின் கொள்கைகள் மற்றும் அரசு நடத்தும் விதம் ஆகியவற்றை புறக்கணிக்கிறோம் என பதிவு செய்ய வேண்டும். அதற்கான முதல் சந்தர்ப்பம் அவர்களுக்கு உள்ளது என்றும் டுவிட்டரில் தெரிவித்து உள்ளார்.\nஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவன முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் மீது சி.பி.ஐ.யும், அமலாக்கப்பிரிவும் தனித்தனியாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன. இந்த வழக்கில் சி.பி.ஐ. அதிகாரிகளால் கடந்த ஆகஸ்டு 21-ந்தேதி கைது செய்யப்பட்டு ப.சிதம்பரம் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.\nஅவரது சார்பில் ப.சிதம்பரத்தின் குடும்பத்தினர் டுவிட்டரில் செய்திகளை வெளியிட்டு வருகின்றனர்.\n1. அரசுக்கு பொதுமக்கள் ஒத்துழைக்காவிட்டால் புதுவையில் மீண்டும் முழு ஊரடங்கு முதல்-அமைச்சர் எச்சரிக்கை\nசெப்டம்பர் மாதம் வரை தொற்றின் வேகம் அதிகரிக்கும். கொரோனாவை ஒழிப்பதில் அரசுக்கு பொதுமக்கள் ஒத்துழைக்காவிட்டால் புதுவையில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று நாராயணசாமி தெரிவித்தார்.\n2. கேரள கரிப்பூர் விமான நிலையம் பாதுகாப்பற்றது;9வருடங்களுக்கு முன்பே விடப்பட்ட எச்சரிக்கை\nகேரள கரிப்பூர் விமான நிலையம் பாதுகாப்பற்றது என9வருடங்களுக்கு முன்பே எச்சரிக்கை விடப்பட்டு இருந்தது.\n3. ‘வயது மோசடியில் ஈடுபடும் வீரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் எச்சரிக்கை\n‘வயது மோசடியில் ஈடுபடும் வீரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.\n4. ‘இ-பாஸ்’ முறைகேட்டில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை; அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் எச்சரிக்கை\n‘இ-பாஸ்’ முறைகேட்டில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூறினார்.\n5. வரும் மாதத்தில் கொரோனா பரவல் அதிகரிக்க வாய்ப்பு நாராயணசாமி எச்சரிக்கை\nவரும் மாதத்தில் கொரோனா பரவல் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக முதல்-அமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்.
`ரசாயனத்தை தவிருங்கள்; நாட்டு விதையே மூலதனம்!'- ஓங்கி ஒலித்த விவசாயிகளின் குரல் - Seeds Festival in Ariyalur District - Vikatan\n`ரசாயனத்தைத் தவிருங்கள்; நாட்டு விதையே மூலதனம்!'- ஓங்கி ஒலித்த விவசாயிகளின் குரல்\n``விதைக்காகப் பன்னாட்டு நிறுவனங்களை நாடுவதை விவசாயிகளும் தவிர்க்க வேண்டும். ஒவ்வொரு விவசாயியும் நாட்டு விதைகளை தங்களுக்குள் பரிமாறிக்கொள்ள வேண்டும்.''\n``இனியும் நாம் விதைகளுக்காக கார்ப்பரேட்டிடம் கையேந்தக் கூடாது. நமது பாரம்பர்ய விதைகளை நாமே மீட்டெடுத்து விதைப்போம். விதைகளே நம் பேராயுதம்” என அரியலூரில் நடந்த விதைத் திருவிழாவில் இயற்கை விவசாயிகள் எடுத்த சபதம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஅரியலூரில் தமிழ்க்காடு இயற்கை வேளாண்மை இயக்கத்தின் சார்பில் விதைத் திருவிழா, கண்காட்சி மற்றும் இயற்கை வேளாண்மை கருத்தரங்குகள் நடைபெற்றன. கண்காட்சியில் பாரம்பர்ய நெல் விதைகள், சிறுதானிய விதைகள், பருத்தி விதைகள், அரிய மூலிகைச் செடிகள் உள்ளிட்டவை கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்தன. மேலும், இயற்கை இடுபொருள்கள் தயாரித்தல், வீட்டுத்தோட்டம், மாடித் தோட்டம் அமைப்பது குறித்த ஆலோசனைகளும் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.\nநாட்டுவிதைகளின் முக்கியத்துவம் குறித்து குமிழியத்தைச் சேர்ந்த முன்னோடி இயற்கை விவசாயி வீரமணி, ``நமது பாரம்பர்ய நாட்டு விதைகள் மறைந்து வீரிய ஒட்டுரக விதைகளையே விவசாயிகள் அதிகம் பயன்படுத்துகின்றனர். இதனால், பல்வேறு பாதிப்புகள் ஏற்படுவதால் இதைத் தவிர்க்க வேண்டும். நம் கைவிட்டுப்போன பாரம்பர்ய நாட்டு விதைகளை மீட்டெடுக்கும் முயற்சியாக இதுபோன்ற விதைத் திருவிழாக்கள் நடத்தப்படுவது வரவேற்கத்தக்கது.\nTraditional Seeds Saving technique\nவிவசாயிகள் நாட்டு விதைகளை மறந்து வீரியரக விதைகளை விதைப்பதால் நோய் மற்றும் பூச்சித்தாக்குதல்களும் அதிகமாகிறது. தீமை செய்யும் பூச்சிக்களின் பெருக்கத்தால் நன்மை செய்யும் பூச்சிகளின் எண்ணிக்கை குறைகிறது. எத்தனை வகை ரசாயனப் பூச்சிக்கொல்லி மருந்துகள் தெளித்தாலும், மண் சத்துக் குறைந்ததாக மாறிவிடுகிறது. இதைத் தவிர்த்திட இயற்கை முறை விவசாயம் ஒன்றே தீர்வு. பாரம்பர்ய ரக விதைகளைப் பயன்படுத்துவதால் நோய் தாக்குதல் ஏற்படுவதில்லை. ரசாயன உரங்களின் பயன்பாடும் தவிர்க்கப்படுகிறது.\nசூழலியல் செயற்பாட்டாளர் ரமேஷ் கருப்பையா, ``ஒவ்வொரு விவசாயியும் விதைகளில் தற்சார்பு நிலையை அடைய வேண்டும். விதைக்காகப் பன்னாட்டு நிறுவனங்களை நாடுவதை விவசாயிகளும் தவிர்க்க வேண்டும். ஒவ்வொரு விவசாயியும் நாட்டு விதைகளை தங்களுக்குள் பரிமாறிக்கொள்ள வேண்டும். இதன்மூலம் நாட்டு விதைகளைப் பெருக்கிக்கொள்ள முடியும். விவசாயத்திற்கு விதைகளே மூலதனம். அந்த விதைகளை நாமே தேர்வுசெய்ய வேண்டும்.\nவருங்காலத்தில் விதைக்காகப் பன்னாட்டு நிறுவனங்களிடம் விவசாயிகள் கையேந்தும் நிலை ஒழிக்கப்பட வேண்டும்.\nசூழலியல் செயற்பாட்டாளர் ரமேஷ் கருப்பையா\nAriyalur Seeds Festival\nஇவ்வகையான நாட்டு விதைகளை நம் தலைமுறைக்கும் பயன்படுத்திக்கொள்ளலாம். அதிக விளைச்சல் என்ற நினைப்பில் வீரிய ஒட்டுரக விதைகளைப் பயன்படுத்துவதால் அதற்கான சாகுபடி செலவும் அதிகரித்து விவசாயிகள் பெருமளவு நட்டத்துக்குத் தள்ளப்படுகின்றனர். வருங்காலத்தில் விதைக்காகப் பன்னாட்டு நிறுவனங்களிடம் விவசாயிகள் கையேந்தும் நிலை ஒழிக்கப்பட வேண்டும். விவசாயத்தில் உற்பத்தி செய்யக்கூடிய பொருள்களை மதிப்புக் கூட்டுப் பொருளாக மாற்றி விற்பனை செய்வதன் மூலம் விவசாயத்தில் இருமடங்கு லாபம் அடையலாம்” என்றார். `விதைகளே பேராயுதம்’ என நம்மாழ்வார் சொன்னதைப்போல மீண்டும் நாட்டு விதைகள் பரவலாக்கம் செய்தால் மட்டுமே `உணவே மருந்து' என வாழமுடியும்'' என்றார்.
தனிமை விரும்பிகளா நீங்கள் ? -அப்போ இதைப்படிங்க !!! - IN4NET\nதனிமை விரும்பிகளா நீங்கள் ? -அப்போ இதைப்படிங்க !!!\nJune 14, 2018 Author Partha\nநீங்களும் அதிகமாக தனிமையை விரும்புபவரா ? – அப்போ நீங்கள் இதை கண்டிப்பாக படிங்க!!\nசிலர் தனிமையை வரம் என்றும் இன்னும் சிலர் சாபம் என்றும் சொல்வதை நாம் கேட்டிருப்போம். இந்தகாலத்தில் தனிமை என்பது நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டு தான் வருகிறது.\nகணவன் வேலைக்கும், பிள்ளைகள் பள்ளிக்கும் சென்ற பின் தனியே இருக்கும் மனைவி, வெளிநாட்டில் கணவனும் வீட்டில் தனிமையுமாக இருக்கும் மனைவி, பிள்ளைகளுக்கு திருமணம் செய்துக் கொடுத்துவிட்டு தனிமையில் வாடும் பெற்றோர்கள், காதல் தோல்வியால் தனக்குத் தானே தனிமையை தண்டனையாகக் கொடுத்துக் கொள்பவர்கள் இங்கு அதிகம்.\nதனிமை ஒன்று தான் பிரச்னைகளில் இருந்து விடுபட சிறந்த வழி என பலர் தப்புக் கணக்குப் போட்டுக் கொள்கிறார்கள். நீங்கள் பெரும் பிரச்னையில் இருக்கும் போது தனியாக இருந்ததுண்டா? தேவையில்லாமல் எதை எதையோ மனம் யோசிக்கும்.\nசெத்து மண்ணோடு மண்ணாகப் போன விஷயங்கள் கூட நமது நினைவுகளில் மீண்டெழுந்து, நம்மை பயமுறுத்தும்.\nஇதனால் இன்னும் மன அழுத்தத்திற்கும் மன சிதைவுக்கும் ஆளாகுவோம். இதனால் பிரச்னைகளின் போது தனிமையில் இருப்பது மிகத் தவறான ஒன்று. குடும்பத்தினர், நண்பர்கள் என நம்மைச் சுற்றி அன்பானவர்கள் இருப்பது இந்த சமயத்தில் அவசியம்.\nஆனால் இதற்கு எதிர்மறையாக காதல் வயப்பட்டவர்களுக்கு இந்த தனிமையை வரம் என்றே சொல்ல முடியும். ஃபோனில் மணி கணக்காகப் பேசுவதோ, தூக்கம் தொலைத்த குறுஞ்செய்திகளோ நிச்சயம் காதலை வளர்க்காது.\nசரி இப்போது விஷயத்திற்கு வருவோம். டென்மார்க்கிலுள்ள கோபென்ஹஜென் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி மாணவி, ஆன்னே வின்கார்டு கிறிஸ்டென்சன் ஓர் ஆய்வை மேற் கொண்டார்.\nஅதில் தனிமையில் இருக்கும் இதய நோயாளிகள் மற்றும் டிப்ரஷனில் இருப்பவர்களின் இறப்பு காலம் சராசரியை விட இரண்டு மடங்கு விரைவுப்படுவது தெரிய வந்துள்ளது. இதற்காக 13,463 பேரிடம் ஆய்வு மேற்கொண்டுள்ளார் ஆன்னே.\nஇனி டுவிட்டர் டைம்லைனிலும் செய்திகள் படிக்க புதிய வசதி!\nஆடை கட்டுப்பாடு அறிக்கைக்காக மாணவிகள் செய்த மோசமான செயல்
அதிமுக பாஜக கூட்டணி வெற்றிக்கூட்டணி...234 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் - ஈபிஎஸ் நம்பிக்கை | AIADMK-BJP alliance success We will win in 234 constituencies says EPS - Tamil Oneindia\n| Updated: Tuesday, March 30, 2021, 16:08 [IST]\nதிருப்பூர் : இந்தியாவை வல்லரசாக்கும் கனவை பிரதமர் மோடி நிறைவேற்றி வருகிறார் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். அதிமுக கூட்டணி வேட்பாளர்கள் 234 தொகுதிகளிலும் வெற்றி பெறுவார்கள் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.\nஏப்ரல் 6ஆம் தேதி தமிழகத்தில் சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தேர்தல் பிரசாரம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. பிரதமர் மோடி இன்று தாராபுரத்தில் பிரம்மாண்ட தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்று பேசினார். தாராபுரத்தில் போட்டியிடும் பாஜக மாநிலத்தலைவர் எல். முருகன் உள்ளிட்ட 13 தொகுதி வேட்பாளர்களை இன்று அறிமுகம் செய்து வைத்து பேசினார் பிரதமர் மோடி.\nபொதுக்கூட்டத்தில் முன்னதாக பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, உலக அளவில் இந்தியாவின் பெருமையை உயர்த்திப் பிடித்தவர் பிரதமர் மோடி. அவரது உழைப்பால் உலக அரங்கில் இந்தியா உயர்ந்து நிற்கிறது எனவும் புகழாரம் சூட்டினார்.\nஇந்தியாவை வல்லரசாக்கும் கனவை நிறைவேற்றி வருகிறார் பிரதமர் மோடி. நாட்டின் உயர்வுக்காக ஒரு நிமிடத்தை கூட வீணாக்காமல் பாடுபட்டு வருகிறவர் மோடி. தமிழகத்துக்கு தேவையான திட்டங்களை எல்லாம் கொடுத்து கொண்டிருக்கிறது மத்திய பாஜக அரசு எனவும் தெரிவித்தார்.\nஅதிமுக கூட்டணி வெற்றி கூட்டணி, நாட்டுக்கு நன்மை செய்யக் கூடிய கூட்டணி என்றும் அதிமுக கூட்டணி வேட்பாளர்கள் 234 தொகுதிகளிலும் வெற்றி பெறுவார்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.\nசிறந்த உள்கட்டமைப்பு வசதி இருப்பதால் தான் தடையில்லா மின்சாரம் தமிழகத்தில் கிடைக்கிறது. சிறந்த உள்கட்டமைப்பு கொண்ட மாநிலமாக தமிழகம் திகழ மத்திய பாஜக அரசு காரணம் எனவும் கூறினார்.\nநொய்யல் ஆற்றை சீரமைக்க ரூ.230 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதுபோன்று கனவு திட்டமான அத்திக்கடவு அவினாசி திட்டம் நிறைவேற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது என்றார்.\nதமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை மத்திய அரசின் ஆலோசனையுடன் கட்டுப்படுத்தினோம். கொரோனா காலத்தில் ரேசன் அட்டைதாரர்களுக்கு ரூ1,000 கொடுத்த ஒரே அரசு அதிமுக அரசு தான் என பல்வேறு திட்டங்களைப் பட்டியலிட்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தாராபுரம் பொதுக்கூட்டத்தில் பேசினார்.\nmodi eps ops tamil nadu assembly election 2021 மோடி இபிஎஸ் ஒபிஎஸ் தமிழக சட்டசபைத் தேர்தல் 2021\nChief Minister Edappadi Palanisamy has expressed confidence that the AIADMK BJP candidates will win in all 234 constituencies.
நீட் தேர்வு ரத்து செய்யக்கோரி ராஜ்யசபாவில் தி.மு.க., மசோதா | Dinamalar Tamil News\nநீட் தேர்வு ரத்து செய்யக்கோரி ராஜ்யசபாவில் தி.மு.க., மசோதா\nமாற்றம் செய்த நாள்: டிச 04,2021 06:32\nபுதுடில்லி : லோக்சபாவில் நேற்று 153 தனிநபர் மசோதா தாக்கல் செய்யப்பட்டன. தமிழகத்தைச் சேர்ந்த தி.மு.க., - எம்.பி., வில்சன், 'நீட்'\nதமிழகக்துல இருக்குற மருத்துவ கட்டமைப்பு அம்புட்டு ஒஸ்தின்னா அப்புறம் எதுக்கு டிரீட்மென்டுக்கு லண்டன் அமெரிக்கா சிங்கப்பூருக்கு ஓடணும். அது கூட வேண்டாம். இங்கியே ஓடம்புக்கு ஒண்ணுன்னா தனியார் அதுவும் கார்பொரேட் ஆஸ்பத்திரிக்குத் தானே போறாங்க. பதவியில் இருக்கிற ஆல்லது பதவியில் இல்லாத எந்த அரசியல்வியாதியாவது கவர்மென்ட் ஆஸ்பிட்டல்ல சிகிச்சை எடுத்துக்கிறதா கேள்விபட்டிருக்கோமா.\nஇங்குள்ள பதிவுகளை பார்க்கும் போது நாம் ஏன் நீட் ஐ எதிர்கிறோம் என புரிகிறது. ஆனால் உண்மை வேறாக உள்ளன. நீட்க்கு முன்னும் பின்னும் 85 இடம் அந்தந்த மாநில மக்களுக்கே. 15 அகில இந்திய அளவிலானது. இதில் எங்கிருந்து தமிழக இடம் மற்ற மாநில மக்களுக்காக போகிறது. இந்த அடிப்படை கூட புரியாத இவர்கள் எப்படிப்பட்ட புத்திசாலித்தனமான மக்கள்.
மேலாடையை தூக்கி தொப்புளை காட்டும் ரைசா - குப்பெனே வியர்த்து போன ரசிகர்கள் - அதிரும் இன்ஸ்டா..! - Tamizhakam\nHome Raiza wilson மேலாடையை தூக்கி தொப்புளை காட்டும் ரைசா - குப்பெனே வியர்த்து போன ரசிகர்கள் - அதிரும் இன்ஸ்டா..!\nமேலாடையை தூக்கி தொப்புளை காட்டும் ரைசா - குப்பெனே வியர்த்து போன ரசிகர்கள் - அதிரும் இன்ஸ்டா..!\nJune 30, 2021 Raiza wilson\nரைசா வில்சன் பெயர் சமீப காலமாக பல்வேறு சர்ச்சைகளில் பேசப்பட்டு வந்தது. மருத்துவர் ஒருவர் முகத்தில் தவறான சிகிச்சை அளித்ததால் ரைசாவின் முகம் வீங்கி கருப்பாக மாறி இருந்தது. அதனால் ஒரு கோடி ருபாய் நஷ்ட ஈடு கேட்டு ரைசா நோட்டீஸ் அனுப்பி இருந்தார்.\nஇந்த விஷயம் பெரிய சர்ச்சை ஆனது. மேலும் சில மாதங்களுக்கு முன்பு வெளிநாட்டில் ரைசா காதலர் உடன் நெருக்கமாக இருக்கும் போட்டோ என கூறி ஒரு புகைப்படம் வைரல் ஆனது. ஆனால் ரைசா தான் சிங்கிள் தான் என கூறி வருகிறார்.\nசோசியல் மீடியாவில் அதிகம் ஆக்டிவாக இருந்து வரும் ரைசா வில்சன் அவ்வப்போது அவரது கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோகளை வெளியிட்டு வருகிறார்.\nகுறிப்பாக அவர் மாலத்தீவிற்கு சுற்றுலா சென்று இருந்த போது அவர் எடுத்த பிகினி புகைப்படங்கள் அதிகம் வைரல் ஆனது.இந்நிலையில் ரைசா வில்சன் மேலாடை போடாமல் வெறும் சட்டையை மட்டும் போட்டுகொண்டு போஸ் கொடுத்திருந்த கவர்ச்சி புகைப்படங்கள் அதிகம் வைரலானது.\nஅதை பார்த்த நெட்டிசன்கள் அவரை ட்ரோல் செய்யவும் ஆரம்பித்தார்கள். ஒரு தரப்பினர் அவரை விளாசினாலும், மற்றொரு தரப்பனார் அவருக்கு ஆதரவாகவும் பேசினார்கள்.\nஇந்நிலையில், டீசர்ட்-ஐ தூக்கி தொப்புளை காட்டி ஒரு குட்டி வீடியோ கிளிப் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார் அம்மணி. இதனை பார்த்த ரசிகர்கள் எக்குதப்பாக அம்மணியின் அழகை வர்ணித்து வருகிறார்கள்.\nமேலாடையை தூக்கி தொப்புளை காட்டும் ரைசா - குப்பெனே வியர்த்து போன ரசிகர்கள் - அதிரும் இன்ஸ்டா..! Reviewed by Tamizhakam on June 30, 2021 Rating: 5
பாலைவனத் தூது: அஜ்மல் கசாப்பை புனே ஏரவாடா சிறைக்கு மாற்ற முடிவு\nHome இந்தியா அஜ்மல் கசாப்பை புனே ஏரவாடா சிறைக்கு மாற்ற முடிவு\nஅஜ்மல் கசாப்பை புனே ஏரவாடா சிறைக்கு மாற்ற முடிவு\nPost under இந்தியா நேரம் 15:37 இடுகையிட்டது பாலைவனத் தூது\nமும்பை,பிப்.19:மும்பை தீவிரவாதத் தாக்குதல் வழக்கில் அஜ்மல் கசாப் தாக்கல் செய்த அப்பீல் மனு மீது வரும் 21ம் தேதி தீர்ப்பு வழங்கப்படுவதையொட்டி பாதுகாப்பு முன்னேற்பாடாக கசாப்பை மும்பையிலிருந்து புனேவில் உள்ள எரவாடா சிறைக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.\nமும்பையில் தாக்குதல் நடத்திய தீவிரவாதி கசாப்புக்கு தனி நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்துள்ளது. இந்த தண்டனையை எதிர்த்து மும்பை உயர் நீதிமன்றத்தில் அப்பீல் செய்துள்ளான். வரும் 21ம் தேதி இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்படுகிறது.\nஇப்போது மத்திய மும்பையில் உள்ள ஆர்தர் ரோடு சிறையில் அடைக்கப்பட்டுள்ளான். அங்கு அவனுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் கசாப்பை எரவாடா சிறைக்கு மாற்ற போலீசார் முடிவு செய்துள்ளனர். இதையடுத்து எரவாடா சிறையில் மிக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.\nஎரவாடா சிறை மகாராஷ்டிர மாநிலத்தில் மிகப் பெரிய ஜெயிலாகும். இந்தச் சிறையில் குற்றவாளிகளை தூக்கில் போடவும் வசதிகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\n0 கருத்துகள்: on "அஜ்மல் கசாப்பை புனே ஏரவாடா சிறைக்கு மாற்ற முடிவு"
வரிசையூர் ஊராட்சி - தமிழ் விக்கிப்பீடியா\nவரிசையூர் ஊராட்சி (Varisaiyur Gram Panchayat), தமிழ்நாட்டின் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள நரிக்குடி வட்டாரத்தில் அமைந்துள்ளது. இந்த ஊராட்சி, திருச்சுழி சட்டமன்றத் தொகுதிக்கும் ராமநாதபுரம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம்7ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து7ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 792 ஆகும். இவர்களில் பெண்கள் 410 பேரும் ஆண்கள் 382 பேரும் உள்ளனர்.\n"https://ta.wikipedia.org/w/index.php?title=வரிசையூர்_ஊராட்சி&oldid=3257340" இருந்து மீள்விக்கப்பட்டது
இன்றைய ராசிபலன் 21-04-2018 - Yarldeepam News\nஇன்றைய ராசிபலன் 21-04-2018\nமேஷம்: தன்னம்பிக்கை அதிகரிக்கும். மன உறுதியுடன் செயல்படுவீர்கள். இளைய சகோதரர்களால் செலவுகள் ஏற்படும். திடீர் பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. புதிய முயற்சி சாதகமாக முடியும். உறவினர்கள் வகையில் அனுகூலம் உண்டாகும். அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலையே காணப்படும்.வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்ததை விடவும் கூடுதலாகக் கிடைக்கும். அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் நன்மை உண்டாகும்.\nரிஷபம்: மனதில் இனம்புரியாத குழப்பம் ஏற்படக்கூடும். திடீர் செலவுகளால் சிலர் கடன்படவும் நேரிடும். தந்தை வழியில் வீண் மனஸ்தாபம் ஏற்பட வாய்ப்பு இருப்பதால் பொறுமையைக் கடைப்பிடிக்கவும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். வியாபாரத்தில் சக வியாபாரிகளால் பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பிருப்பதால் கவனமாக இருக்கவும். கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும்.\nமிதுனம்: மனம் உற்சாகத்துடன் காணப்படும். எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. சிலருக்குக் குலதெய்வக் கோயிலுக்குச் சென்று பிரார்த்தனையை நிறைவேற்றும் சந்தர்ப்பம் கூடி வரும். வாழ்க்கைத்துணை உங்கள் தேவையை பூர்த்தி செய்வார். அலுவலகத்தில் உற்சாகமாகச் செயல்படுவீர்கள். எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடியே இருக்கும். மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டு.\nகடகம்: திடீர் செலவுகள் ஏற்படக்கூடும் என்றாலும் சமாளித்துவிடுவீர்கள்.. தாய்வழி உறவுகள் உதவி கேட்டு வருவார்கள். நண்பர்கள் உங்கள் தேவையறிந்து உதவி செய்வார்கள். சிலருக்கு வெளியூர்ப் பயணம் மேற்கொள்ள நேரிடும். அலுவலகத்தில் சக பணியாளர்களின் சொந்த விஷயங்களில் தலையிடவேண்டாம். வியாபாரத்தில் பங்குதாரர்களால் பிரச்னை ஏற்படக்கூடும். பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சியில் ஈடுபடுவதையும் பயணங்களையும் தவிர்க்கவும்.\nசிம்மம்: கணவன் – மனைவிக்கிடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். நவீன டிசைனில் ஆடைகள் வாங்கும் வாய்ப்பு சிலருக்கு ஏற்படும். எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடி இருக்கும். மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.\nகன்னி: எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். தந்தையின் உடல்நலனில் கவனம் தேவை. சிலருக்கு வெளியூர்ப் பயணம் மேற்கொள்ள நேரிடுவதுடன், அதனால் உடல் அசதி உண்டாகும். உங்கள் முயற்சிக்கு சகோதரர் ஒத்துழைப்புத் தருவார். அலுவலகத்தில் பணிகளில் கூடுதல் கவனம் தேவை. வியாபாரத்தில் விற்பனை வழக்கம்போலவே இருக்கும். அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்கள் வகையில் ஆதாயம் ஏற்படக்கூடும்.\nதுலாம்: தேவையான பணம் இருந்தாலும் வீண் செலவுகளால் மனதில் சஞ்சலம் உண்டாகும். முக்கிய முடிவு எடுப்பதைத் தவிர்க்கவும். வீண் அலைச்சலைத் தவிர்ப்பது நல்லது. உறவினர்களிடம் அனுசரணையாக நடந்துகொள்ளவும். அலுவலகத்தில் உங்கள் பணிகளில் சக ஊழியர்களின் உதவி கிடைக்கும்.வியாபாரத்தில் பணியாளர்களால் பிரச்னைகள் ஏற்படக்கூடும். சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.\nவிருச்சிகம்: வழக்கமான பணிகளில் மட்டுமே ஈடுபடவும். எதிர்பாராத செலவுகளைச் சமாளிக்கக் கடன் வாங்கவேண்டி வரும். சிலருக்கு எதிர்பாராத பயணங்களால் அலைச்சலும் சோர்வும் உண்டாகும். அலுவலகத்தில் உங்கள் பணிகளை மற்றவர்களிடம் ஒப்படைக்க வேண்டாம். வியாபாரத்தில் பங்குதாரர்களால் சில பிரச்னைகள் ஏற்படும். வாடிக்கையாளர்களிடம் கனிவாக நடந்துகொள்ளவேண்டியது அவசியம். அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருக்கவும்.\nதனுசு: தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். அதனால் உங்களுக்கு மறைமுக ஆதாயம் உண்டா கும். கணவன் – மனைவிக்கிடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். உங்களுடைய முயற்சிக்கு வாழ்க்கைத்துணையின் ஒத்துழைப்பு கிடைக்கும். அலுவலகத்தில் மேலதிகாரிகளால் பாராட்டப்படுவீர்கள். வியாபாரத்தில் விற்பனை அமோகமாக இருக்கும். பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு விருந்து விசேஷங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படக்கூடும்.\nமகரம்: எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. கொடுத்த கடன் திரும்பக் கிடைக்கும். குடும்பத்தில் உறவினர்கள் வருகை மகிழ்ச்சி தரும். குடும்பம் தொடர்பான முக்கிய முடிவு எடுப்பீர்கள். அலுவலகத்தில் எதிர்ப்புகள் நீங்கும். உற்சாகமாகப் பணிகளில் ஈடுபடுவீர்கள். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடியே இருக்கும். பணியாளர்கள் கேட்ட உதவியைச் செய்வீர்கள். அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் பணவரவுக்கு வாய்ப்பு ஏற்படக்கூடும்.\nகும்பம்: புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். பிள்ளைகளுக்காக செலவு செய்ய வேண்டி வரும். சிலருக்கு வயிறு தொடர்பான பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால் கவனம் தேவை. அலுவலகத்தில் சக ஊழியர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். வியாபாரத்தில் பணியாளர்களின் ஒத்துழைப்பால் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும். சக வியாபாரிகளின் ஆதரவு கிடைக்கும். பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகள் ஏற்படக்கூடும்.\nமீனம்: காரியங்களில் தடை தாமதங்கள் ஏற்படக்கூடும். நீண்ட நாள்களாகப் பார்க்காமல் இருந்த தாயைப் பார்க்கவும், அவருடைய தேவையை நிறைவேற்றவும் வாய்ப்பு கிடைக்கும். ஆனால், உடல் நலனில் கவனம் தேவை. அலுவலகத்தில் உங்கள் வேலையில் மட்டும் கவனம் செலுத்த வும். வியாபாரத்தில் அவசர முடிவுகளைத் தவிர்க்கவும். பணியாளர்களைத் தட்டிக்கொடுத்து வேலை வாங்கவும். ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் பணவரவுக்கு வாய்ப்பு ஏற்படக்கூடும்.
சைவ சமயம் போற்றும் திருப்பெருந்துறை! கி. ஸ்ரீதரன்- Dinamani\nசைவ சமயம் போற்றும் திருப்பெருந்துறை! கி. ஸ்ரீதரன்\nBy DIN | Published on : 25th February 2020 02:13 PM | அ+அ அ- | |\nசைவ சமயம் போற்றும் அடியார்களுள் மாணிக்கவாசகரும் ஒருவர் ஆவார். மதுரைக்கு அருகிலே உள்ள திருவாதவூரிலே இவர் பிறந்தார். வாதவூரன் என்னும் பெயரிட்டு அழைக்கப்பட்டார். கல்வி கேள்விகளில் சிறந்திருந்த இவர் வரகுண பாண்டியனிடம் அமைச்சராக பணியாற்றினார். கீழக்கடற்கரையில் வந்துள்ள குதிரைகளை வாங்கி வரும்படி ஏராளமான பொன்னையும் பொருளையும் கொடுத்து பாண்டிய மன்னன் மாணிக்கவாசகரை அனுப்பினான். வழியில் திருப்பெருந்துறை என்னும் தலத்தை அடைந்தார். சிவபெருமான் இவரை ஆட்கொண்டருள, அங்கே ஒரு குருந்த மரத்தின் கீழ் சிவயோகி வடிவம் கொண்டு எழுந்தருளியிருந்தார். சிவபெருமானின் அருளைப் பெற்றார். சிவஞானம் பெற்ற வாதவூரர் கல் மனமும் கரைந்து உருகும்படி திருவாசகத்தைப்பாடி அருளினார். ஒவ்வொரு வாசகமும் "மாணிக்கம்' போல் அமைந்தது. அதனால் "மாணிக்கவாசகர்' என்று இறைவன் பெயர் சூட்டியருளினார்.\nதிருப்பெருந்துறையில் பெருங்கோயில் அமைத்து பணி செய்து வந்தார் மாணிக்கவாசகர். வந்த காரியத்தை மறந்துவிடவே பாண்டியன் அவரை தாம் வாங்கிய குதிரைகளுடன் வந்து சேரும்படி ஓலை அனுப்பினான். நரியைப் பரியாக்கி திருவிளையாடல் செய்தான் இறைவன். வைகைக் கரையை அடைக்க இறைவனே பிட்டுக்காக மண்சுமந்து, பிரம்படி பெற்று மாணிக்கவாசகரின் பெருமையை உலகுக்கு உணர்த்தினார்.\nதிருவாதவூரர், அமைச்சர் பதவியைத் துறந்துனீ திரு உத்திரகோச மங்கை, திருவிடை மருதூர், திருவண்ணாமலை, திருக்கழுகுன்றம், காஞ்சிபுரம் முதலிய தலங்களுக்கு சென்று, இறுதியாக சிதம்பரம் சென்றடைந்தார். இறைவனே வேண்டிக் கொண்டதின்படி திருச்சிற்றம்பலக் கோவையார் என்னும் ஞான நூலைப்பாடி அருளினார். "திருவாசகம்', "திருக்கோவையார்' என்ற இரண்டையும் இறைவன் தமது திருக்கைகளால் எழுதிக்கொண்டு "அழகிய திருச்சிற்றம்பலம் உடையான்' எனக் கையெழுத்திடடு மறைந்தார். தில்லை வாழ் அந்தணர்கள் அவற்றை எடுத்து மாணிக்கவாசகரிடம் காண்பித்து பொருள் விளக்கம் கூறும்படி பணிந்து வேண்டினர். "தில்லைக்கூத்தனைக் காண்பித்து இவனே பொருள்' என அவர்களுக்குக்கூறி, ஆனி மகத்துத் திருநாளில் இறைவனோடு கலந்தார்.\nமாணிக்கவாசகர் பெருமான் திருவண்ணாமலையில் திருவெம்பாவையைப் பாடி அருளினார். மார்கழி மாதத்தில் சிவாலயங்களில் திருவெம்பாவை பாடப்படுகிறது. திருவெம்பாவை தொன்றுதொட்டு பல கோயில்களில் பாடப்பட்டு வந்தமை கல்வெட்டுகளால் அறியமுடிகிறது. சென்னைக்கு அடுத்துள்ள திருவொற்றியூரில் "திருப்பள்ளியெழுச்சி' பாடப்பட்டதாக ஒரு கல்வெட்டு கூறுகிறது. திருவாதிரை நாள் அன்று திருவெம்பாவையும் ஓதப்பட்டதாக மேலும் அக்கல்வெட்டு கூறுகிறது. திருக்கோவிலூரில் சிவன் கோயிலில் மார்கழித் திருவாதிரை நாளில் திருவெம்பாவை பாடுவதற்கு நிலம் தானமளிக்கப்ட்டதாக இரண்டாம் இராசேந்திரன் காலக் கல்வெட்டினால் அறிகிறோம்.\nஅட்ட வீரத் தலங்களுள் வழுவூரும் ஒன்று. வழுவூர் வீரட்டானேசுவரர் கோயிலில் உள்ள இரண்டாம் இராசாதிராசன் கல்வெட்டில் மூலங்குடியைச் சேர்ந்த ஒருவனால் மார்கழித் திருவாதிரை நாளில் "திருவாதவூரளி நாயனார்" முன்பு திருவெம்பாவை ஓதுவதற்காக நிலம் தானம் அளிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இங்கே மாணிக்கவாசகர் பெருமான் "திருவாதவூரளி நாயனார்' என அழைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. நாங்குனேரி சிவன் கோயிலிலும் திருவெம்பாவை பாடப்பட்டு வந்ததையும் அங்கு உள்ள கல்வெட்டினால் அறிகிறோம்.\nமாணிக்கவாசகரின் வரலாற்றினை ஓவியங்களிலும் காணலாம். சிதம்பரம் கோயிலில் சிவகாமி அம்மன் ஆலய முன் மண்டபத்தில் ஓவியங்கள் காணப்படுகின்றன. இதில் மாணிக்கவாசகர் குழந்தையாகப் பிறந்து, குழந்தையை நீராட்டுவது, திருப்பெருந்துறையில் உபதேசம் பெற்றது, நரியைப் பரியாக்கிய படலம் ஆகிய காட்சிகள் காணப்படுகின்றன. திருப்பெருந்துறை என்னும் ஆவுடையார் கோயிலிலும் மாணிக்கவாசகரின் வரலாற்றினை ஓவியமாக தீட்டியுள்ளதைக் காணலாம்.\nமாணிக்கவாசகரின் செப்புத் திருமேனிகளை கோயில்களில் ஆடவல்லான் திருமேனியோடு வைத்து வழிபடுவதைக் காணலாம். வலது கை ஞானம் போதிக்கின்ற (சின் முத்திரை) நிலையிலும், இடது கை சுவடியை ஏந்திய நிலையிலும் காணப்படும். சில செப்புத்திருமேனிகளில் அவர் ஏந்தியுள்ள சுவடிகளின் மீது "திருச்சிற்றம்பலம்' எனவும் "நமசிவாய' எனவும் பொறிக்கப்பட்டுள்ளதைக் காணலாம்.\nமாணிக்கவாசகரின் வரலாற்றில் முக்கிய இடம் பெற்று விளங்கும் திருப்பெருந்துறைக் கோயிலைக் காண்போம்! இக்கோயில் ஆவுடையார் கோயில் என அழைக்கப்படுகின்றது. புதுக்கோட்டை மாவட்டத்தில் அறந்தாங்கியிலிருந்து 12 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது இத்தலம். இங்கு கோயில் கொண்டு விளங்கும் இறைவனை தில்லைவாழ் கூத்தா, சிவப்புரத்தரசே, திருப்பெருந்துறை சிவனே எனப் போற்றுகின்றார் மாணிக்கவாசகர்.\nஅற்புத சிற்ப, ஓவிய கலைப்படைப்புகளாலும், வழிபாட்டு முறையாலும் ஆவுடையார் கோயில் தனித்தன்மை பெறுகிறது. இக்கோயில் மாணிக்கவாசகர் பெருமானாலேயே அமைக்கப்பட்டதாகும். பின்னர் பாண்டிய மன்னர்கள், இராமநாதபுரம் சேதுபதி மன்னர்கள், புதுக்கோட்டை தொண்டைமான் மன்னர்கள் ஆகியோர் கோயிலின் பல பகுதிகளைக் கட்டியும், விரிவுப்படுத்தியும் திருப்பணி செய்துள்ளனர்.\nபொதுவாக சிவன் கோயில்கள் கிழக்கு அல்லது மேற்கு முகமாக நோக்கி இருக்கும். இக்கோயில் தெற்கு முகமாக நோக்கி உள்ளது. இக்கோயிலில் உருவ வழிபாடு இல்லை. கருவறையில் ஆவுடையார் மட்டுமே உள்ளது. நந்தி, கொடிமரம் ஆகியவையும் இல்லை. அம்மன் சந்நிதியிலும் உருவம் ஏதுமில்லை. தீப வழிபாடு மட்டும்தான்! மாணிக்கவாசகர் ஜோதியில் கலந்திருப்பதால் தீப ஆராதனையினை பக்தர்கள் தொட்டு வணங்க அனுமதிக்கப்படவில்லை.\nஇறைவன் சந்நிதிக்கு முன்னர் படையலுக்கு என்று ஒரு பெரிய கற்பலகை உள்ளது. இதில் படையல் அமுதினை கொட்டிவைக்கிறார்கள். அமுதிலிருந்து வரும் ஆவி மட்டுமே ஆண்டவனுக்கு படைக்கப்படுகிறது. புழுங்கல் அரிசியில் அன்னம் செய்து, பாகற்காயும் கீரையும் சேர்த்து படைக்கின்ற பழக்கமும் இருந்து வருகிறது.\nகட்டடக்கலை, சிற்பக்கலை சிறப்பு\nஆவுடையார்கோயில் கட்டடக்கலைக்கும், சிற்பக்கலைக்கும் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது. இக்கோயிலில் உள்ள மண்டபங்கள் ஆனந்த சபை, கனக சபை, சிற்சபை, நடன சபை, பஞ்சாட்சரம், என சிறப்பாக அழைக்கப்படுகின்றன. திருக்கோயிலின் வாயிலின் அருகில் உள்ள மண்டபத்தில் வீரபத்திரர், அகோர வீரபத்திரர், காளி, ஊர்த்துவ தாண்டவ மூர்த்தி, பிட்சாடணர், சங்கரநாராயணர், இடபாரூடர் சிற்பங்கள் இடம் பெற்று விளங்குகின்றன. ஒரே கல்லில் ஆன தூண்களில் இச்சிற்பங்கள் கலையழகுடன் காட்சி தருகின்றன.\nஇதனை அடுத்துள்ள பஞ்சாட்சர மண்டபத்தில் குதிரை மீது இறைவன் வரும் காட்சி அற்புதமாக வடிக்கப்பட்டுள்ளது. அர்ச்சனனுக்கு பாசுபதம் கொடுக்கும் புராணவரலாறும் அழகிய சிற்பமாக விளங்குகிறது. இங்கே மாணிக்கவாசகரை அமைச்சராகவும், ஞானமே வடிவாக விளங்கும் சிவபக்தராகவும் காட்சி அளிக்கும் தோற்றத்தையும் - அற்புத இரு தோற்றங்களையும் கண்டு வழிபடலாம்.\nமாணிக்கவாசகருக்கு என்று தனிசந்நிதி உள்ளது. எல்லா கோயில்களிலும் உற்சவ மூர்த்தியாக இறைவனே இருப்பார். ஆனால் இக்கோயிலில் மாணிக்கவாசகரே உற்சவமூர்த்தியாக இருப்பது குறிப்பிடத்தக்கது. இக்கோயில் திருச்சுற்றில் உள்ள தியாகராஜ மண்டப விதானத்தில் உள்ள 12 ராசிகளும், அதன் அருகே காணப்படும் கல் சங்கிலி வளையங்கள் அற்புத வேலைப்பாடுடன் காட்சி அளிக்கின்றது.\nஇக்கோயில் மண்டபங்களின் "கொடுங்கை' அமைப்பு உலகப்புகழ் பெற்றது. பண்டைக்காலத்தில் சிற்பிகள் ஒரு கோயிலைக் கட்டுவதற்கு முன்னர் "ஆவுடையார்கோயில் கொடுங்கை நீங்கலாக' என ஒப்பந்தத்தில் எழுதித் தருவார்களாம். ஏனெனில் ஆவுடையார் கோயில் கொடுங்கையின் சிற்ப வேலை அமைப்பு அத்தகைய சிறப்பு வாய்ந்தது.\nகொடுங்கையின் கீழ்ப்பகுதியில் மரச்சட்டங்களைப் போல கருங்கல்லை இழைத்து, அதனிடையே குறுக்காக நான்கு பட்டை, ஆறு பட்டை, உருண்டை கம்பிகளை இணைத்து, மரச்சட்டங்களில் குமிழ் உள்ள ஆணிகளை அடித்தது போல சிற்ப வேலைப்பாடு உள்ளது. கல்லிலே, மர வேலைப்பாடு போன்று செய்துள்ள சிற்பிகளின் கைத்திறனை எவ்வளவு போற்றினாலும் தகும்!\nமண்டபத்தில் கொடுங்கை துவங்கும் இடத்தில் கனமாகவும் வர வர முடியும் இடத்தில் ஒரு அங்குல கனமாக சன்னமாக செதுக்கி அமைக்கப்பட்டுள்ளது. மரத்திலே கூட இவ்வளவு சிறப்பாகச் செய்ய முடியுமா என்று எண்ணத் தோன்றும்!\nவழிபாட்டு முறையிலும், கலைச் சிறப்பிலும் தனிப்பெருங்கோயிலாக திருப்பெருந்துறைக் கோயிலாக ஆவுடையார்கோயில் விளங்குகிறது.\nகட்டுரையாளர் : தொல்லியல் துறை (ஓய்வு) சென்னை
ரஹீம் கஸாலி: பெண்களை நிலவோடு ஒப்பிடுவது ஏன் தெரியுமா?\n12 பெண்களை நிலவோடு ஒப்பிடுவது ஏன் தெரியுமா?\nபெண்களை பெரும்பாலான கவிஞர்கள் நிலவோடு ஒப்பிட்டு நிறைய பாடல்கள் எழுதியிருக்கிறார்கள். அது ஏன் என்று நம்ம மரமண்டை யோசித்ததில் வந்த விடை இது.\nபெண்களை நிலவோடு ஒப்பிடுவது ஒரு ஆணாத்திக்க சிந்தனையின் வெளிப்பாடுதான். எப்படி....நிலவுக்கென்று தனியாக ஒளி கிடையாது.சூரியனை சார்ந்து தான் நிலவு இருக்கிறது. சூரியனிடமிருந்து ஒளியை கிரகித்து ஒளிவீசுகிறது. சூரியன் இல்லையேல் நிலவும் இல்லை. அதேபோல்தான் பெண்களும் அவர்களுக்கென்று தனியாக ஒன்றுமில்லை. ஆண்களை சார்ந்துதான் அவர்கள் இருக்க வேண்டும். ஆண்களை விட்டு நீங்கிவிட்டால் பெண்கள் பூஜ்யம்தான். அப்படியானால் இது ஆணாதிக்க சிந்தனையின் வெளிப்பாடல்லாமல் வேறென்னவாம்?.....................\nயோசித்தது: ரஹீம் கஸாலி -யோசித்த நேரம்: 10/16/2010 01:39:00 PM\nChitra Oct 16, 2010, 7:43:00 PM\nரஹீம் கஸாலி Oct 16, 2010, 8:00:00 PM\nஉங்களின் லிங்கை பார்த்து ஒரு நிமிடம் ஆடிப்போயிட்டேன். எங்கே நம்ம பதிவு உங்களோட காப்பின்னு சொல்லிடுவீங்களோன்னு.\nபடித்தேன். நல்லவேளை. உங்கள் பதிவுக்கும் என் பதிவுக்கும் சம்பந்தமில்லைன்னு தெரிந்ததும் தான் நிம்மதியடைந்தேன்.ஆனால், லேசான ஒற்றுமை இருப்பதென்னவோ நிஜம்.\ntamillinux Oct 16, 2010, 9:05:00 PM\nநிலவுக்கு களங்கம் உண்டு என்று சொல்வார்கள். அது தான் போல இருக்கு. லொள் :-)\nராம்ஜி_யாஹூ Oct 17, 2010, 9:24:00 AM\nits wrong, i completely disagree with your post\nரஹீம் கஸாலி Oct 17, 2010, 5:07:00 PM\n@ராம்ஜி_யாஹூits wrong, i completely disagree with your post///\nஎன் கருத்துதான் இது. உங்களுக்கு உடன்பாடு இல்லையெனில், உங்கள் கருத்தை சொல்லலாமே?\nஹுஸைனம்மா Oct 17, 2010, 6:31:00 PM\nஇந்த ஒரு பதிவு போதும், நீங்க பிரபலமாகுறதுக்கு!! காத்துகிட்டு இருங்க, கம்போட வருவாங்க நிறைய பேர்!! :-))\nநானும், ஏதோ அழகுக்காகத்தான் நிலவோட பெண்ணை ஒப்பிடுறாங்கன்னு நினைச்சேன்!! இதுதான் காரணமா!! :-)))\nஎன்.ஆர்.சிபி Oct 17, 2010, 7:18:00 PM\nஅடடே! சூப்பர் டவுட்டுங்க!\nஎன்.ஆர்.சிபி Oct 17, 2010, 7:19:00 PM\n//மாங்கு மாங்குன்னு என்னத்த எழுதினாலும் ஓட்டுதான் போட மாட்டேங்குறீங்க...காசா பணமா ஒரு கருத்தையாவது சொல்லிட்டு போங்களேன்.தயவு செய்து பின்னூட்டத்தில் ஆபாச வார்த்தைகளை தவிர்க்கவும். அப்படி எழுதினால் அந்த பின்னூட்டம் வெளியிடப்படாது. இது ஆபாச வார்த்தைகளை பயன்படுத்தும் பன்றிகளுக்கான தளமல்ல...பண்புள்ளவர்களுக்கான தளம்.ஆதங்கத்தை கூட பின்னூட்டமிடலாம். ஆபாசத்தை பின்னூட்டமிடலாமா?// இதே ஒரு பதிவு அளவுக்கு இருக்கே!\nஎன்.ஆர்.சிபி Oct 17, 2010, 7:20:00 PM\nபோட்டாச்சு போட்டாச்சு! எத்தனை\nரஹீம் கஸாலி Oct 17, 2010, 8:02:00 PM\n@என்.ஆர்.சிபி//மாங்கு மாங்குன்னு என்னத்த எழுதினாலும் ஓட்டுதான் போட மாட்டேங்குறீங்க...காசா பணமா ஒரு கருத்தையாவது சொல்லிட்டு போங்களேன்.தயவு செய்து பின்னூட்டத்தில் ஆபாச வார்த்தைகளை தவிர்க்கவும். அப்படி எழுதினால் அந்த பின்னூட்டம் வெளியிடப்படாது. இது ஆபாச வார்த்தைகளை பயன்படுத்தும் பன்றிகளுக்கான தளமல்ல...பண்புள்ளவர்களுக்கான தளம்.ஆதங்கத்தை கூட பின்னூட்டமிடலாம். ஆபாசத்தை பின்னூட்டமிடலாமா?// இதே ஒரு பதிவு அளவுக்கு இருக்கே!//\nஅந்த கொடுமையை ஏன் கேட்கறீங்க...ஒரு அனானி பன்றி வந்து பதிவில் ஏற்றமுடியாத வார்த்தைகளை பின்னூட்டம் போட்டுட்டு போயிருச்சு. அதான் பார்த்தேன்...இவனுக்கெல்லாம் தனியா ஒரு பதிவு போட்டு நேரத்தை வீணடிக்க வேணாம்ன்னு இங்கே எழுதிட்டேன். பதிவு போட்டா ஒரு நாளைக்குள் வேறு பதிவு மாற்றிடுவோம். இங்கே போட்டுட்டா மாற்ற மாட்டோம்ல...அதான். அச்சச்சோ....இதுவே ஒரு பதிவு மாதிரி போச்சே...\nஅழகி Oct 18, 2010, 9:32:00 AM\nநிலவின் ஒளி குளிர்ச்சி​​யைத் தரும்... அதனால்தான் ​சொல்லி இருப்பார்க​ளோ?\nkunthavai Feb 22, 2011, 11:59:00 AM\nரொம்ப பழைய பதிவென்றாலும் நான் இப்போதுதான் பார்த்தேன்.நல்லதொரு விளக்கம்தான். வேறென்னதான் இருக்கமுடியும் நிலவாய் பெண்ணை சொல்ல ?ஆணாதிக்க சிந்தனைகளை வெளியிடும் தைரியம்......நன்று.இன்னும் அடி ஒன்றும் விழவில்லையே நண்பரே ?
"ஜெயலலிதா குறித்து அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியது உளறல் அல்ல உண்மை" என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கருத்து தெரிவித்துள்ளார்.\nதிண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் அதிமுக சார்பில் காவிரி மீட்பு போராட்டம் வெற்றி பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது, ஜெயலலிதா கொள்ளையடித்த பணத்தை டிடிவி தினகரன் திருடி விட்டார். ஜெயலலிதாவால் கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை தினகரன் திருடி 18 எம்.எல்.ஏ.க்களுக்கு கொடுத்துள்ளார்.\nஅ.தி.மு.க. பொதுக்கூட்டத்தில் அமைச்சர் சீனிவாசன் இப்படி பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அமைச்சரின் பேச்சை கேட்டு மேடையில் இருந்தவர்களும் கூட்டத்தில் இருந்தவர்களும் அதிர்ச்சியடைந்தனர். இந்நிலையில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் இந்த பேச்சு குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் கருத்து தெரிவித்துள்ளார். ஜெயலலிதா குறித்து அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியதை தனது டிவிட்டர் பக்கத்தில் மேற்கோள் காட்டியுள்ள ராமதாஸ், அது குறித்து தனது கருத்தையும் தெரிவித்துள்ளார்.\nஅதாவது, "ஜெயலலிதா கொள்ளையடித்த பணத்தை சசிகலா தரப்பு சுருட்டிக் கொண்டது: அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் - இது உளறல் அல்ல. உண்மை. நீண்டநாட்களாக மனதுக்குள் மறைத்து வைக்கப்பட்ட உண்மைகள் இப்படித் தான் உண்மையாக வெளிவரும்!" என ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதேபோல் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சை வைத்து சமூக வலைதளங்களில் நெட்டிசன்களும் கலாய்த்து வருகின்றனர். ஜெயலலிதா குறித்து அக்கட்சியை சேர்ந்த அமைச்சரின் பேச்சு தமிழக அரசியலில் பெரும் விவாதப்பொருளாகியுள்ளது.\nசாமிJun 19, 2018 - 05:34:28 PM | Posted IP 162.1*****\nஅன்புமணி கொள்ளை அடித்தது ஏராளம்
kisan vikas patra, பண மழை பொழியும் போஸ்ட் ஆபீஸ் திட்டம்.. உங்களுக்கு சூப்பர் வாய்ப்பு! - this post office scheme will double your investment in quick time - Samayam Tamil\nthis post office scheme will double your investment in quick time\nபண மழை பொழியும் போஸ்ட் ஆபீஸ் திட்டம்.. உங்களுக்கு சூப்பர் வாய்ப்பு!\nSenthil Kumar | Samayam Tamil | Updated: Apr 8, 2022, 7:43 AM\nஉடனே கணக்கு தொடங்குங்க!\nஇந்த போஸ்ட் ஆபீஸ் திட்டத்தில் நீங்கள் போட்டு வைக்கும் பணம் குறுகிய காலத்திலேயே இரு மடங்காகப் பெருகிவிடும்.\nமுதலீடு செய்ய நிறைய இடங்கள் உள்ளன. பங்குச் சந்தையில் கூட முதலீடு செய்யலாம். ஆனால் அதில் ரிஸ்க் அதிகம். ரிஸ்க் எடுக்க விரும்பாமல், பணத்தை இரட்டிப்பாக்க விரும்பும் முதலீட்டாளராக நீங்கள் இருந்தால், உங்களுக்கு ஒரு சிறப்புத் திட்டம் உள்ளது. இந்த சிறப்பு திட்டத்தில் டெபாசிட் செய்யும் பணத்தின் பாதுகாப்புக்கும் உத்தரவாதம் அளிக்கப்படுகிறது. தபால் அலுவலகத்தின் சிறு சேமிப்புத் திட்டமான கிசான் விகாஸ் பத்ரா (கேவிபி) உங்களுக்கு சிறந்த தேர்வாக இருக்கும்.\nதபால் அலுவலகத்தின் கிசான் விகாஸ் பத்ரா திட்டத்தில், தனிப்பட்ட முறையில், ஒரு சிறுவரின் பெயரில்கூட முதலீடு செய்யலாம். இரண்டு பெரியவர்கள் சேர்ந்து சேர்ந்து கூட்டுக் கணக்கையும் திறக்கலாம். கிசான் விகாஸ் பத்திரா திட்டத்தில் முதலீடு செய்ய, குறைந்தது 1000 ரூபாயில் தொடங்க வேண்டும். இதில் முதலீடு செய்ய அதிகபட்ச வரம்பு எதுவும் இல்லை.\nகிசான் விகாஸ் பத்ரா திட்டத்தில் நீங்கள் முதலீடு செய்யும் பணம் 124 மாதங்களில் இரட்டிப்பாகிவிடும். கிசான் விகாஸ் பத்திரா திட்டத்தில் முதலீடு செய்தால் கூட்டு வட்டி கிடைக்கும். தற்போது, இந்தத் திட்டத்தில் நீங்கள் செய்யும் முதலீட்டுக்கு 6.9 சதவீத வட்டி கிடைக்கிறது. கிசான் விகாஸ் பத்ரா திட்டத்தில் நாடு முழுவதும் உள்ள எந்த தபால் நிலையத்திலும் கணக்கு தொடங்கலாம்.\nகணக்கை மாற்ற முடியும்!\nநீங்கள் விரும்பினால், உங்கள் கிசான் விகாஸ் பத்ரா கணக்கை ஒரு தபால் அலுவலக கிளையிலிருந்து மற்றொரு கிளைக்கு மாற்றலாம். அதேபோல, இந்தக் கணக்கை ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கும் மாற்றலாம். இதில் நாமினி வசதியும் உள்ளது.\nகிசான் விகாஸ் பத்ரா திட்டத்தின் முதிர்வு 30 மாதங்களுக்குப் பிறகு, அதாவது சான்றிதழ் வழங்கப்பட்ட நாளிலிருந்து இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு பணமாக்கப்படலாம். கிசான் விகாஸ் பத்திராவில் முதலீடு செய்யும் போது வரி விலக்கு சலுகையும் உங்களுக்குக் கிடைக்கும். இதில், வருமான வரிச் சட்டத்தின் 80சி பிரிவின் கீழ் வருமான வரி விலக்கு பெறலாம்.\nகிசான் விகாஸ் பத்ரா திட்டத்தில் கணக்கு தொடங்க ஆதார் அட்டை, குடியிருப்புச் சான்று, கேவிபி விண்ணப்பப் படிவம், வயதுச் சான்று, பாஸ்போர்ட் அளவு புகைப்படம் மற்றும் மொபைல் எண் ஆகியவை தேவைப்படும். கிசான் விகாஸ் பத்ரா அரசாங்கத்தின் சார்பாக தபால் அலுவலகம் மூலம் கிடைக்கிறது. கேவிபி சான்றிதழ்களை பணம், காசோலை அல்லது டிமாண்ட் டிராஃப்ட் மூலம் நீங்கள் வாங்கலாம்.\nஅடுத்த செய்திகம்மி விலையில் சிலிண்டர் வாங்கலாம்! உடனே புக் பண்ணுங்க!\nWeb Title : this post office scheme will double your investment in quick time
ரஷ்ய பிரதிநிதிகளால் தாக்கப்பட்டார் அதிபர் புடினை கொல்ல முயற்சி: உக்ரைன் உளவுத்துறை தலைவர் தகவலால் பரபரப்பு - Dinakaran\nரஷ்ய பிரதிநிதிகளால் தாக்கப்பட்டார் அதிபர் புடினை கொல்ல முயற்சி: உக்ரைன் உளவுத்துறை தலைவர் தகவலால் பரபரப்பு\nகீவ்: ரஷ்ய அதிபர் புடினை கொலை செய்ய முயற்சி நடந்ததாக உக்ரைன் உளவுத்துறை தலைவர் கூறியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நேட்டோ அமைப்பில் இணைய எதிர்ப்பு தெரிவித்து, கடந்த பிப். 24ம் தேதி உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தது. போர் தொடங்கிய முதல்நாளே ரஷ்ய படைகள், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி மற்றும் அவரது குடும்பத்தினரை கொலை செய்யும் நோக்கில் பாராசூட் மூலம் இறங்கி தாக்குதல்கள் நடத்தியதாகவும், அவர்களிடம் இருந்து முதலில் குடும்பத்தினரும், தொடர்ந்து ஜெலன்ஸ்கியையும் பத்திரமாக மீட்கப்பட்டதாகவும் உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். இந்நிலையில்,2மாதம் முன்பே ரஷ்ய அதிபர் புடினை கொலை செய்யும் முயற்சி நடந்ததாக உக்ரைன் உளவுத்துறை தலைவர் கைரிலோ புடானோவ் தெரிவித்துள்ளதாக ரஷ்யாவின் உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.\nஇதுகுறித்து அவர் கூறுகையில், ‘உக்ரைன் மீது படையெடுத்த பின்னர் ரஷ்ய அதிபர் புடினை, ஆர்மீனியா, அஜர்பைஜான், ஜார்ஜியா மற்றும் தெற்கு ரஷ்யாவின் சில பகுதிகளை உள்ளடக்கிய காகசஸ் பிராந்தியத்தின் பிரதிநிதிகள் படுகொலை செய்ய முயன்றனர். காகசஸின் பிரதிநிதிகளால் தாக்கப்பட்டார். இது ஒரு முற்றிலும் தோல்வியுற்ற முயற்சி. இது சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்பு நடந்தது’ என்று தெரிவித்தார். புடின் ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டும் நிலையில், இந்த தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nரஷ்ய வீரருக்கு வாழ்நாள் சிறை\n* உக்ரைன் போரில் ஏராளமான ரஷ்ய வீரர்களை உக்ரைன் ராணுவம் சிறை பிடித்துள்ளது. அவர்களிடம் போர் குற்றம் தொடர்பான விசாரணை தொடங்கி நடந்து வருகிறது. இதில், தலைநகர் கீவ்வில் சைக்கிளில் சென்ற சாமானியர் ஒருவரை, 21வது ரஷ்ய வீரர் சுட்டுக்கொன்றதாக கூறப்படுகிறது. இது, போர் குற்றமாக கருதப்பட்டு அவரிடம் விசாரணை நடந்தது. அவருக்கு வாழ்நாள் சிறை தண்டனை விதித்து உக்ரைன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உக்ரைன் போர் குற்ற வழக்கில் தண்டனை வழங்கப்படுவது இதுவே முதல் முறையாகும். 2,500 உக்ரைன் வீரர்களை ரஷ்யா சமீபத்தில் கைது செய்துள்ளது. அவர்களிடமும் ரஷ்யா போர் குற்ற விசாரணை நடத்த இருப்பது குறிப்பிடத்தக்கது.\n* போரை தீவிரப்படுத்தி உள்ள ரஷ்யா மீது அதிகளவிலான தடைகளை விதிக்க வேண்டும் என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கோரிக்கை விடுத்துள்ளார். குறிப்பாக, அனைத்து ரஷ்ய வங்கிகள், ரஷ்ய எண்ணெய் ஏற்றுமதி, ரஷ்யாவுடனான அனைத்து வர்த்தகங்களுக்கும் தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.\nஅதிபர் புடின் கொல்ல முயற்சி உக்ரைன்
திருமண கேக்கில் மணமக்கள் தலை அதிர்ந்து போன உறவினர்கள்\nடெக்சாஸ்: திருமணங்களில் கேக் வெட்டும் கலாச்சாரம் இப்போது தான் இந்தியாவில் பரவி வருகிறது. ஆனால், மேலை நாடுகளிலோ இது தொன்று தொட்டு இருந்து வருகிற பழக்கம். காலப்போக்கில் எல்லாவற்றிலேயும் வித்தியாசத்தை விரும்பும் மனிதர்கள், தங்களது சினிமா ரசனையையும் அதில் புகுத்த ஆரம்பித்து விடுகிறார்கள்.\nஆரம்பகாலத்தில் வெறும் கேக்காக ஆரம்பிக்கப் பட்ட இப்பழக்கம், பின்னர் அதில் வித்தியாசமாக மணமக்கள் உருவ பொம்மைகளை, புகைப்படங்களை புகுத்தும் அளவிற்கு முன்னேறியது. தற்போது அதிலும் ஒரு படி முன்னேறி அமெரிக்க திகில் பட ரசிகர் தனது திருமண கேக்கை வடிவமைத்த முறையைப் பார்த்து திருமணத்திற்கு வந்திருந்த உறவினர்கள் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள். அப்படி என்ன மாடல் என்று நீங்களும் பாருங்களேன்ஸ\nவித்தியாசமான திருமண கேக்ஸ .\nஅமெரிக்காவில் டெக்சாஸ் பகுதியைச் சேர்ந்த டேவிட் சைடுசெர்ப்-நதாலே என்ற இளம் தம்பதியர் தங்களது திருமண ‘கேக்’கை நண்பர்கள் பார்த்து அதிர்ச்சியுறும் வகையில் உருவாக்கி இருக்கிறார்கள்.\nமணமக்களின் முக சாயலில் என்றால் ஆண்-பெண் துண்டிக்கப்பட்ட தலையை மேஜையில் வைத்திருப்பது போன்ற இவர்களது திருமண கேக்கை பார்த்து திருமணத்திற்கு வந்திருந்த உறவினர்கள், நண்பர்கள் எல்லாம் திகிலடைந்து விட்டன்ர்.\nஅதோடு கேக்கின் அருகில், ‘மரணம் வரையில் எங்களுக்குள் பிரிவு இல்லை’ என்ற வாசகத்தையும் எழுதி வைத்தனர் இந்த வித்தியாசமான தம்பதியர்.\nமணப்பெண் தயாரிப்புஸ .\nஇந்தக் கேக்கில் மற்றொரு விஷேஷம் என்னவென்றால், இது மணப்பெண் நதாலேயே கைப்பட தயாரித்தது ஆகும்\n40 மணி நேரம்ஸ.\nஅக்கலையில் வல்லுனரான நதாலே, சுமார் 40 மணிநேரம் செலவிட்டு அதை வெண்ணிலா, சாக்லெட் சுவையில் பட்டர்கிரீம் கொண்டு தயாரித்துள்ளார்.\nபாட்டி சொல்லைத் தட்டாதேஸ\nமணமக்கள் மற்றும் விருந்தினர்களை இந்த கேக் கவர்ந்தாலும் அவருடைய பாட்டிக்கு கொஞ்சமும் பிடிக்கவில்லையாம்.\nதிகில் பட ரசிகர்ஸ.\nஇந்த வித்தியாச கேக் தயாரிக்கும் யோசனை ஏற்பட்டது குறித்து நதாலே கூறும்போது, ‘கணவர் டேவிட் திகில் சினிமாப்பட பார்ப்பதில் தீவிர ரசிகர். அவரை மகிழ்விக்கவே இதை தயாரித்தோம். இது அனைவரையும் வியக்க வைத்தது உண்மை’ எனத் தெரிவித்துள்ளார்.
கீழடியில் 2880 ஆண்டுகள் பழமையான சிவலிங்கம் கிடைத்ததா ?| உண்மை என்ன ? - You Turn\nஇன்று கீழடியில் கண்டுபிடிக்கப்பட்ட 2880 வருட பழமையான சிவலிங்கம், அபிஷேக பானையும், கற்பகிரக அமைப்பும்… உண்மை வெளிவரக்கூடாது , மீடியா கவனம் பெறக்கூடாது என்று ஞாயிற்றுக்கிழமை தோண்டிய அவலம்.\nஇன்றுவரை கீழடியை சுற்றி பெருமை கொள்ளும் கருத்துக்களும், வதந்திகளும் சுற்றித் திரிய முக்கிய காரணம் 2,600 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த சமூகம் சாதி, மத அடையாளங்கள் இன்றி நகர நாகரீயகத்துடன், எழுத்தறிவுடன் இருந்தே. எனினும், கீழடியை மையமாக் கொண்டு வலம் வரும் வதந்திகளின் எண்ணிக்கை அதிகரித்தே வருகிறது.\n” இன்று கீழடியில் கண்டுபிடிக்கப்பட்ட 2880 வருட பழமையான சிவலிங்கம், அபிஷேக பானையும், கற்பகிரக அமைப்பும்… உண்மை வெளிவரக்கூடாது , மீடியா கவனம் பெறக்கூடாது என்று ஞாயிற்றுக்கிழமை தோண்டிய அவலம் ” என்பதுடன் சில புகைப்படங்கள் இடம்பெற்று இருக்கும் மீம் பதிவு சமீபத்தில் வைரலாகி வருகிறது.\nகாவியத்தலைவன் தலைவன் என்ற முகநூல் பக்கத்தில் கீழடியில் 2880 ஆண்டுகள் பழமையான சிவலிங்கம் கிடைத்ததாக பதிவிட்ட மீமில் பலரும் ஆதாரம் கேட்டும், போலியான தகவல் என்றும் குறிப்பிட்டு கமெண்ட் செய்து இருந்தனர். இருப்பினும், அந்த பதிவு7ஆயிரம் ஷேர்களை பெற்று வேகமாக பரவி வருகிறது.\nகீழடியில் மத அடையாளங்கள் குறித்த பொருட்களோ அல்லது கடவுள் சிலைகளோ கிடைக்கவில்லை என்ற தகவல் ஆய்வாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. எனினும், சிவலிங்கம் கிடைத்தது வெளி உலகிற்கு தெரியக்கூடாது என மறைக்கப்பட்டதாக மீம் பதிவில் கூறி இருக்கிறார்கள்.\nஆக, மீம் பதிவில் இருக்கும் மூன்று புகைப்படங்களின் உண்மைத்தன்மையை ஆராய்ந்து பார்த்தோம். முதலில் அகழாய்வு பணிகளில் தோண்டும் புகைப்படம் இடம்பெற்று இருக்கிறது. அப்புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்து பார்க்கையில் 2017 ஜூன் மாதம் தி ஹிந்து உள்ளிட்ட முதன்மை செய்திகளில் மேற்கண்ட புகைப்படமும் இடம்பெற்று இருக்கிறது. ஆனால், தமிழகம் அல்ல.\n2017 ஜூன் மாதம் ஜான்கான் மாவட்டம் பெம்பார்தி கிராம பகுதியில் அமைந்து இருந்த ஹைதராபாத்-வாராங்கால் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் பூமிக்கு அடியில் சிவலிங்கம் புதைந்து இருப்பதாக அப்பகுதியை சேர்ந்த சிவபக்தர் லாகான் மனோஜ்(காவி வேட்டி அணிந்து இருப்பவர்) கூறியுள்ளார். தன்னுடைய கனவில் சிவன் அருள்பொழித்து அப்பகுதியில் லிங்கம் புதைந்து இருப்பதாகவும், அதனை எடுத்து கோவில் கட்டி வழிபடுமாறு கூறியதாக கூறியுள்ளார்.\nஇதனை நம்பி அப்பகுதி மக்களும் சிவலிங்கத்தை தேடி குழியை தோண்டி உள்ளனர். அவ்வப்போது சாமி அருள் தருவது போன்றும் செய்துள்ளார் மனோஜ். ஆனால், 20 அடிகள் வரை குழியை தோண்டியும் லிங்கம் கிடைக்கவில்லை. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்ட பிறகு காவல்துறை அங்கு விரைந்தனர். அங்கு நடைபெற்ற பணிகளை நிறுத்தியதோடு, இதற்கு காரணமான லாகான் மனோஜ் என்பவரையும் கைது செய்து உள்ளனர்.\nஅடுத்தாக, சிவலிங்க சிலை இருக்கும் புகைப்படம் குறித்து தேடிய பொழுது 2013-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியான தமிழ் மற்றும் ஆங்கில செய்தி நமக்கு கிடைத்தது.\nதிருவள்ளுவர் மாவட்டத்தில் உள்ள காட்டுப்பள்ளி என்ற கிராமத்தில் வீடு கட்ட தோண்டிய பொழுது3பழங்கால சிலைகள் கிடைத்ததாக வெளியாகி இருக்கிறது. அதில், சிவலிங்கம், அம்மன் சிலை, சண்டிகேஸ்வரர் சிலை என மூன்று சிலைகள் கிடைத்து உள்ளதாக கூறப்பட்டுள்ளது.\nபூமிக்கு அடியில் புதைந்து இருந்த மூன்று சிலைகளும் 1200 ஆண்டுகள் பழமையான பல்லவ காலத்து சிலைகள் என ஹிந்து ஆங்கில செய்தியில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.\nமீம் பதிவில் இடம்பெற்று இருக்கும் பானை புகைப்படம் உண்மையில் கீழடியில் இருந்து எடுக்கப்பட்டதே. கீழடியில் பல்வேறு வகையான பழமையான பானைகள் எடுக்கப்பட்டுள்ளன. அதில் ஒன்று தான் மேற்கண்ட புகைப்படத்தில் இருப்பது. போலியான செய்தியை உருவாக்கும் பொழுது உண்மையான பானை புகைப்படத்தையும் பயன்படுத்தி உள்ளனர்.\nநம்முடைய தேடலில் இருந்து, கீழடியில் 2,880 ஆண்டுகள் பழமையான சிவலிங்கம் கிடைத்ததாக கூறுவது தெரிந்தே பரப்பப்படும் வதந்தி. கீழடியில் சிவலிங்கம் கிடைக்கவில்லை.\nமுதல் புகைப்படம் ஹைதராபாத் தேடிய நெடுஞ்சாலையில் சிவலிங்கத்தை தேடிய பொழுது எடுக்கப்பட்டது. இரண்டாவது திருவள்ளுவர் மாவட்டத்தில் வீடு கட்ட பள்ளம் தோண்டிய பொழுது கிடைத்த பல்லவ கால சிலைகள்.\nஇப்படி போலியான தகவல்களை இணைந்து வதந்திகளை பரப்புவர்களிடம் ஆதாரங்களை வலுவாக கேளுங்கள். சரியான தகவலை மக்களிடம் கொண்டு சேர்க்க யூடர்ன் செய்தியை பகிருங்கள்.\nTelangana Man Dreams Of Shiva Linga, Digs Up An Entire National Highway To Get It Out\nKattupalli (Inde): Ancient idols unearthed\nancient tamil keezhadi keezhadi fact check keezhadi religious keezhadi report keezhadi rumors keezhadi sivalingam keezhadi tamils religion social media tamil fact check tamils tamils culture\nபெரியார் உறுதிமொழி கூறி நடைபெற்ற திருமணமா?| வைரலாகும் தவறான வீடியோ!
ராஷ்மிகாவை இப்படி பாத்திருக்க மாட்டீங்க!…ஹை வோல்ட்டேஜில் சூடான ரசிகர்கள்… - CineReporters\nராஷ்மிகாவை இப்படி பாத்திருக்க மாட்டீங்க!…ஹை வோல்ட்டேஜில் சூடான ரசிகர்கள்…\n‘அர்ஜூன் ரெட்டி’ திரைப்படம் மூலம் தெலுங்கு ரசிகர்கள் மட்டுமின்றி தமிழ் சினிமா ரசிகர்களையும் கவர்ந்தவர் நடிகர் விஜய் தேவரகொண்டா. அவருடன் ‘கீதாகோவிந்தம்’ உள்ளிட்ட சில படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை ராஷ்மிகா மந்தனார். அப்படத்திற்கு பின் மகேஷ்பாபு உள்ளிட்ட சில நடிகர்களுடன் அவர் நடித்துவிட்டார்.\nதற்போது அல்லு அர்ஜூன் நடித்துள்ள புஷ்பா படத்தில் இதுவரைக்கும் நடிக்காத வேடத்தில் அவர் நடித்துள்ளார். அதாவது பாவாடை ஜாக்கெட் மட்டும் அணிந்து தொப்புளை காட்டிக்கொண்டே படம் முழுக்க வருகிறார். இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.\nஇந்நிலையில், இப்படம் தொடர்பான அவரின் கவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி நெட்டிசன்களை சூடாக்கியுள்ளது.
தாய்மடி: உழைப்பு பட்டுது...\n“என்ன முதலாளி, இப்ப கடும் உழைப்புப் போல... ஆளைக் காணவே கிடைக்குதில்லை...”\n“சும்மா போடா, இருக்கிற வயித்தெரிச்சலைக் கிண்டாத... நானே எப்ப கடையை இழுத்து மூடுவன் எண்டிருக்கிறன்... நீ வேற விசர்க்கதை கதைக்கிறாய்... நான் மட்டுமில்லை இஞ்ச கன பேர் உந்த எண்ணத்திலதான் இருக்கிறாங்கள்.”\nநான் இந்தப் பதிலை சற்றும் எதிர்பார்க்கேல்ல.\n“அண்ணே, இப்பதானே பாதை திறந்திருக்கு சமான் மலிவா வரூது எல்லாச் சாமானும் எடுக்கலாம். விதம் விதமா உடுப்புகளை இந்தியாவிலேந்து கூட றக்கலாம். பிறகேன் இப்பிடிச் சலிக்கிறியள்”\n“உங்க எல்லாரும் இப்பிடித்தான் நெச்சுக் கொண்டிருக்கிறியள் போல... நேற்றும் ஒருத்தன் போனில கதைக்கேக்க இப்ப உங்கட பிசினஸ் ஆத்தலுக்குப் போகும் தானே எண்டான். உங்களுக்கு எங்கயடா எங்கட நிலை விளங்கப்போகுது. உங்களைச் சொல்லித் தப்பில்லை.”\n“அண்ணே, விஷயத்தைச் சொல்லன் அப்பத்தானே என்ன நடக்குதெண்டு எங்களுக்கும் விளங்கும்.”\n“பாதை திறந்தாலும் திறந்தாங்கள். எங்கட உழைப்புப் பட்டுது. வேற இடத்து வியாபரிகள் நடைபாதையில கடையைப் போட்டு மலிவா விக்கிறான். எங்கட சனம் வாயைப் பிழந்து கொண்டு அங்கதானே போய் நிக்குதுகள். அவனுகள் அங்கனேக்க தரம் குறைஞ்ச, பாவிச்ச பொருட்களை பூசி மினுக்கிக் கொண்டு வந்து சோவுக்கு அடுக்கி வச்சிருக்கிறான். எங்கட சனம் பாய்ஞ்சு விழுந்தடிச்சுக் கொண்டு போய் அவனுகளட்ட தானே வாங்குதுகள்.”\n“அது சரி... ஆனா உங்களுக்கெண்டு இருக்கிற கிறவுட் இருக்குத் தானே அண்ணே...”\n“அந்த பிரச்சினையான காலத்திலயே நாங்கள் எவ்வளவு கஸ்டப்பட்டு சாமானுகளை றக்கி ஓரளவுக்கேனும் மலிவான விலையில நாங்கள் நட்டப்பட்டாலும் பரவாயில்லையெண்டு கடையை நடத்தின்னாங்கள். இப்ப என்னடா எண்டா எங்கட வாடிக்கையாளர்கள் அத மறந்திட்டு இஞ்சேந்து பஸ் ஏறிப் போய் மலிவா சாமான் வாங்கி வரீனம். நாங்கள் கடையைத் திறந்து வச்சிட்டு ஈ ஓட்ட வேண்டியதுதான்... வசந்தம் எண்டது எங்களுக்கில்லைத் தம்பி, அந்த வியாபாரிகளின்ர வாழ்க்கைக்குத் தான்... அத இன்னும் நீ விளங்கிக் கொள்ளேல்லையோ...”\n“விளங்குது விளங்குது வசந்தத்தை நம்பி இல்லையண்ணே... எண்டாலும் இப்பிடி நீங்கள் ஈ ஓட்டுற நிலை வருமெண்டு நினைக்கேல்ல... எங்கட சனம் இதோட எண்டாலும் பொருளாதார கஸ்டங்களை மறந்து வாழத் தொடங்கும் எண்டெல்லே நினைச்சன்.”\n“நீயே இப்பிடிச் சொன்னா எப்பிடி தம்பி? சாமானுகளை எங்கட சனம் வாங்குது.. சரி.. காசெங்க போகுது? அவன்ர பெட்டிக்குள்ளையெல்லே போகுது. அத எங்களுக்கு தந்தா எங்கட பசி ஆறும் தானே... நாங்களும் சந்தோசப் படுவம் தானே... இண்டைய நிலை என்னெண்டா தம்பி, மலிவா சாமன் வரூது. தரம் குறைஞ்ச சாமானுகள் தான்.. ஆனாலும் வரூது.. எங்கட சனம் சாமானுகளை வாங்கிக் கொண்டு ஆருக்கோ காசைக் குடுக்குதுகள். அவன் பெட்டீக்க போட்டுக் கொண்டு சந்தோசமாப் போய்ச் சேர்றான் . அவன் தன்ர ஊருக்குப் போய் தன்ர பிள்ளை குட்டியோட சந்தோசமா இருக்கிறன்.\nகாலம் காலமா வியாபாரம் செய்யுற எங்கட நிலையை யாரெண்டாலும் யோசிச்சுப் பாத்தனீங்களே? வியாபாரிகளுக்கு மட்டுமில்லைத் தம்பி... விவசாயிகளுக்கும் கடற்தொழிலாளர்களுக்கும் இதே நிலை தான். எங்களால நம்பி ஒரு தொழில செய்ய முடியேல்லத் தம்பி. எங்கட உற்பத்திகளை சனம் வாங்குதில்லை. வெளீலேந்து பாக்கேக்க எங்கட சனத்தின்ர தரம் உயருது... கஸ்டம் குறையுதெண்டு சொல்லிக் கொண்டிருக்கீனம், உண்மை அதில்லைத் தம்பி. எங்கட உழைப்புக் கேற்ற ஊதியம் எங்களுக்கு இல்லாமல் போகுது.”\n“எனக்கு விளங்குது உங்கட நிலை... இனி உங்களுக்குப் பிரச்சினியில்லை. தற்காலிக கடையெல்லாத்தையும் மூடச் சொல்லி மாநகர சபை உத்தரவு போட்டிருக்காமே...”\n“நீ அடுத்தனீயடா தம்பி... உது நடக்குமெண்டு நினைக்கிறியே? அடே.. சபைக்கு ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 20 000 ரூபா வருமானம் இதால வரூது. விட்டுடுவாங்கள் எண்டு நினைக்கிறியே... அது போக இவங்கள் முடிவெடுத்தாலும் நடைமுறைப் படுத்துறது இவங்கட கையில இல்லையே... இப்பிடித் தான் எல்லாமே... அடே உனக்கொரு விசயம் சொல்லுறன். உந்த சபை தான், தனக்குச் சொந்தமான நிலத்தை மூண்டு நட்சத்திர ஹோட்டல் கட்டுறதுக்கு தெற்குப் பக்க கொம்பனி ஒண்டுக்கு குடுத்திருக்கு. எங்கட சனம், வெளி நாட்டுச் சனம் எத்தினையோ பேர் கேட்டுக் குடுக்காதத அவங்களுக்கு குடுத்திருக்காம். எங்கட சனம் வருமானம் ஈட்டுறத அவங்களே விரும்பேல்லப் போல... ஆரட்டை இதெல்லாத்தையும் சொல்லியழ...”\nthalaivan 05 April, 2010 14:29\nமாறன் 05 April, 2010 21:24\nமெத்தச் சரியாச்சொன்னியள், சில மரமண்டையளுக்கு உது விளங்குதில்லை... ஏதோ வசந்தமாம். எல்லாம் கொஞ்சக்காலத்துக்கு ஆடித்தான் ஓயும் போல கிடக்கு...\nஇருக்கிற நல்லதுகளை காப்பாத்தோணும் கண்டியளோ.....\nwww.bogy.in 14 April, 2010 09:11\nவடலியூரான் 17 April, 2010 15:03\nஅது மட்டுமா நண்பரே யாழ்ப்பாணத்துக்கான பேருந்து சேவை முதற்கொண்டு எத்தனைகளில் அவர்களுக்கு வசந்தம் வீசுகின்றது
Serenace Injection 1ml in Tamil பயன்பாடு, பக்க விளைவுகள், கலவை, மாற்றுகள், முன்னெச்சரிக்கைகள் மற்றும் அறிவுரை - Serenace Injection 1ml ke fayde, nuksan, use, upyog, price, dose, side effects in Tamil। 1mg\nSerenace Injection க்கான பயன்கள் (Uses of Serenace Injection in Tamil)\nSerenace Injection இன் பக்க விளைவுகள் (Side effects of Serenace Injection in Tamil)\nSerenace Injection யை எப்படி உபயோகிப்பது (How to use Serenace Injection in Tamil)\nSerenace Injection எப்படி செயல்படுகிறது (How Serenace Injection works in Tamil)\nSerenace Injection 1ml டோபமைன் நடவடிக்கை, எண்ணங்கள் மற்றும் மனநிலை பாதிக்கிறது என்று மூளையில் ஒரு இரசாயன தூதர் தடுப்பதன் மூலம் வேலை.\nSerenace Injection 1ml -ஐ மதுவுடன் அருந்துவது பரிந்துரைக்கப்படமாட்டாது.\nSerenace Injection 1ml கர்ப்பகாலத்தின்போது பயன்படுத்துவதற்கு பாதுகாப்பற்றதாக இருக்கலாம்.\nSerenace Injection 1ml தாய்ப்பாலூட்டும் போது அநேகமாக பாதுகாப்பற்றதாக இருக்கக்கூடும். குழந்தைக்கு குறிப்பிடத்தக்க இடரை மருந்து குறிக்கிறது என்று வரம்புமிக்க மருத்துவ தரவுகள் பரிந்துரைக்கின்றன.\nSerenace Injection 1ml எடுத்துக்கொள்ளும் போது நீங்கள் தலைச்சுற்றலாக, தூக்கம் வருவது போல அல்லது களைப்பாக உணரலாம். இது நிகழ்ந்தால், வாகனம் ஓட்டாதீர்கள்.\nSerenace Injection 1ml சிறுநீரக நோயுடன் கூடிய நோயாளிகளில் பயன்படுத்தப் பாதுகாப்பானது. Serenace Injection 1ml க்கான மருந்தளவு சரிசெய்தல் ஏதும் பரிந்துரைக்கப்படவில்லை.\nகல்லீரல் நோயினால் அவதிப்படும் நோயாளிகளில் Serenace Injection 1ml எச்சரிக்கையுடன் பயன்படுத்தப்பட வேண்டும்.Serenace Injection 1mlக்கான மருந்தளவு சரி செய்தல் தேவைப்படலாம். உங்கள் மருத்துவரிடம் அணுகவும்.\n₹6.38/ml of Injection\nSerenace இவற்றில் எந்த மருந்துடனும் உட்கொள்வதால் இரண்டில் மருந்துகளிலிருந்து ஒன்றின் பொறிமுறைகள் மாறலாம் மற்றும், சில விரும்பத்தகாத பக்க விளைவுகள் ஏற்படலாம்.\nSerenace Injection 1ml குறித்து கேள்விகள் உள்ளனவா?\n*ஒரு நாளில் ஒருமுறை , ஒரு மாதத்திற்கு ஒருமுறை , ஒரு வாரத்திற்கு ஒருமுறை , ஒரு நாளில் மூன்றுமுறை , ஒரு நாளில் இரண்டுமுறை , ஒரு வாரத்திற்கு இருமுறை\nநீங்கள் Serenace Injection எதற்காக பயன்படுத்துகிறீர்கள்?\nSerenace Injection 1ml இன் பயன்படுத்தும் போது என்ன பக்க விளைவுகள் இருந்தன?\n*ஆர்தோஸ்டேடிக் ஹைப்போடென்ஷன் (குறைந்த இரத்த அழுத்தம்), எண்ணிய இயக்கத்தில் அசாதாரணத்தன்மை\nSerenace Injection எப்படி எடுத்துக்கொள்கிறீர்கள்?\nSerenace Injection 1ml இன் விலையை மதிப்பிடவும்.\nMRP₹32.35 Get 15% OFF
கனவுத்தமிழகம் | எழுத்தாளர் ஜெயமோகன்\nசென்ற ஆண்டு கனடாவுக்குச் சென்றிருந்தபோது என்னுடைய நண்பரும் அறிவியலாளருமான வேங்கடரமணனைச் சந்தித்தேன். வேங்கடரமணன் அதற்கு முந்தையவருடம் வெஸ்ட் இண்டீஸ் தீவுகளுக்கு ஒரு சுற்றுப்பயணம் செய்து வந்திருந்தார். உங்களுக்குச் சுவாரசியமான ஒரு விஷயத்தைக் காட்டுகிறேன் என்று சொல்லி தன் செல்பேசியில் பதிவுசெய்திருந்த ஒரு பாடலை ஒலிக்கவிட்டார்.\nமுதலில் நான் நன்கு அறிந்த நாட்டுப்புறத் தமிழ்ப்பாடல் போலிருந்தது. அதன்பின் அது வேறு ஏதோ மொழி என்பது தெளிவாகியது. ஒரு சொல்கூட புரியவில்லை. கூர்ந்து கேட்டுக்கொண்டே இருந்தேன். ஒரு தமிழகப்பூசாரி பாடுவதுபோலவே இருந்தது. எந்த மொழி? ஐரோப்பிய மொழி அல்ல. ஆப்ரிக்க மொழியா? அல்லது ஏதாவது பழங்குடி மொழியா?\n“தமிழேதாங்க.. . கேளுங்க” என்றார் வேங்கடரமணன். ”கடைசிவார்த்தைகளை மட்டும் கவனியுங்க”. மெல்ல ஒரு சொல் பிடிகிடைத்தது. ”போற்றி!” பின்னர் அடுத்த வார்த்தை “காத்தவராயா”. அப்படி ஓரிரு சொற்கள். “ஓம்” நன்றாகவே கேட்கத்தொடங்கியது. “இதைப் பாடுவது யார்?” என்றேன். சிரித்தபடி அவர் விளக்கினார்.\nஅதைப்பாடியவர் தமிழர். காத்தவராயன் கோயிலின் பூசாரி. உடுக்கடித்து பூசைக்காக அவர் பாடியதுதான் அந்தப்பாடல். ஆனால் அவருக்கும் தமிழ்நாட்டுக்கும் ஒரு தொடர்பும் இல்லை. அவரது முன்னோர் தமிழகத்தைவிட்டுச்சென்று மூன்றுநூற்றாண்டுகள் ஆகிவிட்டன. 1776ல் தமிழகத்தைச் சூழ்ந்த முதல் தாதுவருடப் பஞ்சத்தில் கோடிக்கணக்கானவர்கள் செத்து அழிந்தனர்.\nவெள்ளைய அரசின் கொடூரமான வரிவசூல் முறைகளின் விளைவாக நம் ஊர்களில் இருந்த பஞ்சகாலத்துக்கான சேமிப்புகள் முழுமையாகச் சூறையாடப்பட்டமையால் அந்த பஞ்சம் ஏற்பட்டது. அப்படி பஞ்சத்தில் சிதறிய மக்களை கூட்டம் கூட்டமாக விலைக்கு வாங்கி கப்பலில் ஏற்றிக்கொண்டு கிழக்கே நியூசிலாந்து முதல் மேற்கே வெஸ்ட் இண்டீஸ் தீவுகள் வரை கொண்டு சென்று தோட்டங்களை உருவாக்கினர். அவர்களில் பத்தில் ஒருவரே உயிர்பிழைப்பது வழக்கம். ஆகவே பத்துமடங்குபேரை கொண்டுசென்றனர்.\nஅப்படிச்சென்ற தமிழர் உலகம் முழுக்கப்பரவியிருக்கிறார்கள். அவர்களில் மலேசியா, இலங்கை தமிழர்களே தமிழ்நாட்டுடன் உறவுடன் உள்ளனர். பர்மா, ஆப்ரிக்கா, நீயூசிலாந்து, செஷல்ஸ், ஃபிஜி, கரீபியன் தீவுகளைச் சேர்ந்தவர்களுக்கு நம்முடன் எந்த உறவும் இல்லை. அவர்களின் மொழி மறைந்துவிட்டது. பெயர்கள் கூட மாறிவிட்டன. ஆனால் பெயரில் இந்துமதம் சார்ந்த சில தடங்கள் மட்டும் எஞ்சியிருக்கும். வெஸ்ட் இண்டீஸின் புகழ்பெற்ற கிரிக்கெட் ஆட்டக்காரர் காளிச்சரண் ஓர் உதாரணம்.\nஅவர்களிடம் மாரியம்மன் வழிபாடு, காத்தவராயன் வழிபாடு போன்றவை சற்று எஞ்சியிருக்கின்றன. அவற்றில் தமிழ் இப்படி நீடிக்கிறது. கரித்தாள் வைத்து பிரதி எடுக்கும்போது மிகமிக அடியிலிருக்கும் பிரதிபோல. தமிழ் என ஊகிக்கமுடியும், அவ்வளவுதான்\nஅத்தகைய ஒரு குடும்பத்தை நான் 1988ல் ஒருமுறை சந்தித்தேன். பங்களாதேஷ் அருகே உள்ள மாவட்டத்தில் —- என்னும் ஊரில். சிறிய ஊர். அருகே கங்கை பெருகி ஓடிக்கொண்டிருந்தது. நான் காசியிலிருந்து படகில் கங்கைவழியாக செல்லவேண்டும் என்பதற்காக அந்தப்பயணத்தைச் செய்தேன். அலகாபாத்தில் ஒரு சரக்குப்படகில் நூற்றைம்பது ரூபாய் கட்டணம் பேசி ஏறிக்கொண்டேன்.\nஎன் வாழ்க்கையின் மறக்கமுடியாத நான்கு இரவுகள் கங்கையின் நீரின்மேல் கழிந்தன. அன்றெல்லாம் ஏராளமான சரக்குப்படகுகள் அலஹாபாத் முதல் பங்களாதேஷ் எல்லைவரை சென்றுகொண்டிருந்தன. பெரும்பாலும் விவசாய விளைபொருட்கள். அந்தப்படகுப் போக்குவரத்து இன்று மிகமிகக் குறைந்துவிட்டது. அந்தப் படகுப் பயணத்தின் பலவகையான சித்திரங்களை என் வெண்முரசு என்னும் மகாபாரத நாவல்களில் விரிவாக விவரித்திருக்கிறேன்\nஇரவெல்லாம் சுழன்றடிக்கும் காற்றில் அமர்ந்திருந்தேன். விடியற் காலையில் காய்ச்சல் வந்ததுபோல உடல் நடுங்கி கண்கள் எரிந்தன. உதடுகள் உலர்ந்திருந்தன. கரையிலிறங்கிய பின்னரும் உடலில் ஆட்டம் எஞ்சியதனால் நடக்கமுடியாமல் தள்ளாடினேன். அங்கே நதிக்கரையோரம் சேறு மிதிபட்டு சாணியுடன் கலந்து வீச்சமடித்தது. எங்கும் பலவண்ணத் தலைப்பாகை கட்டிய மக்கள் கூச்சலிட்டபடியும் சுருட்டு பிடித்தபடியும் கூடிநின்றனர்.\nஎன்னுடன் அந்தப்படகில் இருபது எருமைகளும் வந்திருந்தன. வயோதிக எருமைகள். அவற்றை கரையிறங்கச் செய்து மந்தையாக்கிக் கூட்டிச் சென்றனர். ஏராளமான எருமைகள் வந்திறங்கியிருந்தன. அவை எல்லைகடந்து பங்களாதேஷுக்கு இறைச்சிக்காகக் கொண்டுசெல்லப்படுபவை. சட்டவிரோத எல்லைகடத்தல் என்பது அங்கே ஒரு வணிகம் அல்ல, வாழ்க்கைமுறை.\nஉள்ளூர் புல் ஒன்றால் கூரையிடப்பட்டிருந்த பெரிய கொட்டகை ஒன்று பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்தது. நடுவே பெரிய ஹூக்கா ஒன்றை வைத்திருந்தார்கள். சுற்றிலும் குந்தி அமர்ந்து அந்த குழாயை வாங்கி மாறி மாறி இழுத்தார்கள். வாயை வைக்கவில்லை. கைகளால் பொத்தியபடி இழுத்து மூக்கு வாய்வழியாக மேகம்போல புகை விட்டனர். மண்கோப்பைகளில் டீ. அது அன்று ஒரு ரூபாய். ஹூக்கா இலவசம்.\nநான் ஒரு ரூபாய்க்கு டீ வாங்கி குடித்தேன். சமூசா இருந்தது. எனக்கு அன்றுமின்றும் சமூசா அதன் பின்நவீனத்துவ வடிவமான பப்ஸ் போன்றவை கொஞ்சம் கூட பிடிக்காதவை. அந்தக்காலை நேரத்திலேயே சப்பாத்தி சாப்பிடவும் பிடிக்கவில்லை. இன்னொரு டீ குடித்தேன். ஆனால் பால் சற்றுப்பழையது. நன்றாகச் சுண்டவைத்தபோது அது குமட்டல் தரும் கசப்பு கொண்டிருந்தது.\nநால்வருக்குச் சோறு வந்தது. துணைக்கு மீன்குழம்பு. மீன் தலையை அப்படியே குழம்பில் போடுவது வங்கப்பண்பாடு. மிகப்பெரிய மீன் புன்னகைபுரிந்தபடி உலகை நோக்கியது. பெரிய அலுமினிய ஏனத்தில் மீன்குழம்பு. அதை சுற்றி தட்டுகளுடன் அமர்ந்து சாப்பிட்டனர். நானும் சோறு சாப்பிடலாம் என எண்ணினேன். மீன்குழம்பின் வாசனையின் ஈர்ப்புதான் காரணம்\nகடைக்காரரிடம் அதைச்சுட்டிக்காட்டி அது வேண்டும் என்றேன். பங்காளியில் ஏதோ கேட்டார். புரியவில்லை என்றதும் இந்தியில் கேட்டார். இந்தியும் தெரியவில்லை என்றதும் கண்களைச் சுருக்கியபடி “எந்த ஊர்?” என்றார். “தமிழ்நாடு” என்றேன். அவர் சிலகணங்கள் ஸ்தம்பித்தது போலிருந்தார். “தமிழ்நாடா?” என இந்தியில் மீண்டும் கேட்டார். “ஆமாம்” என்றேன்.\nஅவர் தொண்டை ஏறியிறங்கியது. மூச்சிழுக்க சிரமப்படுபவர் போலத்தோன்றினார். பின்னர் பொரித்த மீன் தலையுடன் வந்த அவரது மனைவியிடம் வங்காளியில் “இவர் தமிழ்நாட்டுக்காரர்” என்றாள். அந்த அம்மாள் கணீர் குரலில் “தமிழாளா?” என்றார். “ஆமாம்” என்றேன். “நீங்கள் தமிழ்நாடா?”. கடைக்காரர் “ஆமாம், தமிழ்நாடு.. . ” என்றார். நான் ”தமிழ்நாட்டில் எங்கே?” என்றேன். “தெரியாது” என்றார். “தமிழ்கூட பேசத்தெரியாது” என்று சொல்லி மூச்சிளைத்தார்\nஇருவருக்குமே தமிழில் உதிரிச்சொற்கள் மட்டுமே தெரிந்தன. ”ஆமாவா?” என்றனர். ஆகவே அவர்கள் தமிழகக் கர்நாடக எல்லையில் ஏதோ ஊரைச்சேர்ந்தவர்கள் என்று ஊகித்தேன். பேசினால் புரிந்துகொண்டனர். பேசப்பேச அவர்களுக்குள் இருந்து தமிழ் ஊறிப்பெருகி வந்தது. கொஞ்ச நேரத்திலேயே ஒருமாதிரி சமாளித்துப் பேசத் தொடங்கிவிட்டார்கள்\nஅவர்களுக்கும் தமிழ்நாட்டுக்கும் ஒரு தொடர்பும் இல்லை. அவர்களின் முன்னோர் இருநூறாண்டுகளுக்கு முன்பு பர்மாவுக்கு தோட்டத் தொழிலாளர்களாக கொண்டு செல்லப்பட்டவர்கள். பலமுறை பல தோட்டங்களுக்கு இடம் மாறினர். இரண்டாம் உலகப்போரில் அவர்கள் தோட்டமே அழிந்தது. அவரது தாத்தா ரங்கூன் அருகே ஒரு சிற்றுரில் கூலித்தொழிலாளராக வந்து குடியேறினார்.\nபோர் முற்றியபோது பர்மா ஜப்பானியரால் கைப்பற்றப்பட்டது. அவரது கொள்ளுத்தாத்தா ஜப்பானிய கூலியாகக் கொண்டு செல்லப்பட்டார். காட்டில் கடும் உழைப்பு முகாம்களில் குடும்பத்துடன் இருந்தனர். பிரிட்டிஷ் பட குண்டுவீச்சில் அவரது குடும்பம் மீண்டும் சிதறியது. அங்கிருந்து பங்களாதேஷ் வந்து குடியேறி அங்கே துப்புரவுத் தொழிலாளராக பணியாற்றினார்கள். ஐம்பதுகளில் பங்களாதேஷில் இந்துத் தொழிலாளர்கள் கொல்லப்பட்டபோது அவரது குடும்பம் மீண்டும் சிதறியது.\nஎழுபதுகளில் பங்களாதேஷில் இருந்து அகதியாக இந்தியா வந்தனர். சட்டவிரோத குடியேற்றம்தான். அந்த ஊரில் கூலிவேலை செய்து மெல்ல வேரூன்றினர். டீக்கடை வைத்து எட்டு ஆண்டு காலமாகிறது. நான்கு குழந்தைகள். மூத்தபெண் ஒரு வங்காளியைத் திருமணம் செய்திருக்கிறாள். இரண்டாவது பையன் வேலை பார்க்கிறான். இரு சிறுவர்கள் படிக்கிறார்கள்.\nஇருநூறாண்டுக்காலமாக அவர்களில் எவருக்கும் தமிழகத்துடன் தொடர்பில்லை. இந்தியாவந்தபின் பிற தமிழருடனும் தொடர்பில்லை. அவர்கள் கிளம்பியபின் இருபெரும்போர்கள் நிகழ்ந்தன. பஞ்சங்கள் வந்தன. தேசங்கள் உடைந்தன. புதியதேசங்கள் பிறந்தன. வரலாறு பெரும்பிரவாகமாக அவர்களைச் சுழற்றியடித்துக்கொண்டுசென்றது. எதுவும் எஞ்சவில்லை.\nஆனால் மூதாதையரின் சொற்களாக பிறந்த மண் அவர்களிடம் எஞ்சியிருந்தது. தங்கள் ஊர் அருகே கடல் உண்டு என்றும் சித்ராபௌர்ணமிக்கு வண்டி கட்டிச்சென்று கடலோரம் அமர்ந்து சாப்பிடுவதுண்டு என்றும் சொன்னார்கள். பெரிய கோபுரம் கொண்ட ஒரு கோயிலும் அதேபோல வண்டிகட்டிச் செல்லும் தொலைவில் இருந்தது. இரண்டு கண்மாய்களால் விவசாயம் நிகழ்ந்தது.\nதீபாவளியும் பொங்கலும் அவர்கள் நினைவில் இருந்தன. இரண்டையும் வங்கமுறைப்படி கொண்டாடினர். பிள்ளைகள் அவர்களிடமிருந்து பெற்ற சிலநூறு தமிழ்ச்சொற்களைப் பேசின. ”ஆனால் அவர்கள் வங்காளிகளைத்தான் திருமணம் செய்துகொள்வார்கள். வேறுவழி இல்லை” என்றார் ரத்தினம். அவர் மனைவில் வள்ளியும் அதையேதான் சொன்னார். அவர்களின் பேரக்குழந்தையின் பெயர் மாணிக். வங்கப்பெயர்\n“ஊருக்குப்போகலாம்னு தோணும். ஆனா எந்த ஊருக்கு போறது? அங்க யாருக்கு நம்மளத் தெரியும்?” என்றார் ரத்தினம். “அதனால நானே ஒரு ஊரை கற்பனை செஞ்சுகிடுவேன். அங்க இருக்கிற ஆட்களை எல்லாம் தெளிவா நானே மனசுக்குள்ள உண்டு பண்ணிக்கிடுவேன். ராத்திரி நினைச்சுகிட்டா கண்ணீர் வந்திடும் சார். அழுதிட்டே தூங்கினா ஒரு பெரிய நிம்மதி”\nநான் அன்று அவர்களுடன் தங்கினேன். வள்ளி சோறும் மீன்குழம்பும் தந்தார்கள். அவர்கள் சுவரில் துர்க்கை படம் வைத்திருந்தனர். அதை கும்பிடும்போது ஓரிருவரிகள் தமிழில் பாடினர். மாரியம்மன் பாட்டு அது. சொல் மழுங்கிப்போய் வங்கம் போல இருந்தது.\nஅன்றிரவு வெளியே கட்டில் போட்டு விண்மீன்களைப்பார்த்தபடி படுத்திருந்தபோது நான் கேட்டேன், “உங்களுக்கு பர்மிய மொழி தெரியுமா?” ரத்தினம் சிரித்துக்கொண்டு “இல்ல சார், அங்க இருந்ததைக்கூட சொல்லிகேட்டுத்தான் தெரியும். ஒரு ஊரோ முகமோ ஞாபகமில்லை” நான் “பங்களா தேஷுக்கு மறுபடியும் போனீர்களா?” என்றேன். “இல்லசார். அது நமக்கு எதுக்கு? யாருதோ ஊருல்ல அது”\nஆனால் தமிழகம் இன்றும் அவர்களின் ஊர்தான். அவர்களுக்குள் நுண்ணிய கனவாக அது மரம்பூத்து மண்மணக்க வாழ்ந்துகொண்டே இருக்கிறது. அது அழியாது என நினைத்துக்கொண்டேன். அவர்கள் திரும்பி வருவார்கள். தலைமுறைகள் கடந்தாலும்கூட\nசென்ற ஆண்டு எனக்கு ஒரு மின்னஞ்சல் வந்தது. பர்மாவில் உள்ள தமிழர்களின் கூட்டமைப்பு ஒன்று பொங்கல் கொண்டாடுவதைப்பற்றி அவ்வமைப்பின் செயலாளரான தியாகராஜன் என்பவர் எழுதியிருந்தார். உலகம் தொழில்நுட்பத்தால் இணைக்கப்படுகிறது. வரலாற்றால் சிதறடிக்கப்பட்டவர்களும் அதனூடாக இணையக்கூடும்.\nமுந்தைய கட்டுரைகோரதெய்வ வழிபாடு ஏற்புக்குரியதா?\nஅடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 50
ஞானி-21 | எழுத்தாளர் ஜெயமோகன்\nஇந்த நினைவுகளை தொகுத்துக்கொள்கையில் ஞானிக்கு இணையாகவே சுந்தர ராமசாமியும் வந்துகொண்டிருப்பதைக் கவனித்தேன். அது இயல்புதான். அவர்கள் இருவரும் இரு எல்லைகளாக இருந்து ஒரு காலகட்டத்தில் என்னை ஆட்கொண்டிருக்கிறார்கள். ஞானியை எப்போது பார்த்தாலும் “என்ன சொல்றார் உங்க சுரா?” என்றுதான் கேட்பார். சுரா பலசமயம் “என்ன சொல்றார்?” என்று கேட்பார், பெயர்கூடச் சொல்வதில்லை. ஒருவர் சொன்ன ஒரு கருத்தை இன்னொருவரிடம் சொன்னால் உடனே மறுத்துப் பேச ஆரம்பித்துவிடுவார்கள்.\nஞானியின் பார்வையில் சுந்தர ராமசாமி எல்லா பிரச்சினைகளையும் தனிமனித அகப்பிரச்சினைகளாக மாற்றிக்கொண்டவர். “வீட்டுக்கண்ணாடியிலே தெரியற வெளியுலகத்தை மாத்தணும்னா அந்தக்கண்ணாடியை மாத்திட்டாபோதும்னு நம்பறவர்”. சுந்தர ராமசாமியின் பார்வையில் ஞானி “எல்லாத்தையும் வரையறை செஞ்சு வகுத்துக்கலாம்ங்கிற மூடநம்பிக்கைக்குப் பலியானவர்”\nசுந்தர ராமசாமி மேலோட்டமான நுண்அவதானிப்புகளால் அலைக்கழிபவர் என்றார் ஞானி. ஞானி எல்லாவற்றையும் உடைத்து புரிந்துகொள்ளமுடியும் என்று நினைப்பவர் என்றார் சுரா. “கோழிமுட்டையைக்கூட உடைச்சாத்தான் அவராலே புரிஞ்சுகிடமுடியும். கடைசிவரை ஆம்லெட்டையே முட்டைன்னு நினைச்சிட்டிருந்தார் .பாவம்” ஆனால் அவர்களுக்கிடையே கடைசிவரை நல்லுறவும் இருந்தது. அது அந்தக்கால வழக்கம்.\nஇருவரில் எவர் எனக்கு அணுக்கமானவர்? எவர் எனக்கு அதிகமாகக் கற்றுத்தந்தவர்? சிறு ஐயத்துடன் சுந்தர ராமசாமிதான் என்றே சொல்வேன். ஞானி எனக்கு என் காலகட்டத்தைய கருத்தியல் விவாதத்தை முழுமையாக அறிமுகம் செய்தவர், அவற்றை என்னுடன் தொடர்ந்து விவாதித்தது வழியாக என்னை முன்னெடுத்தவர். என் படைப்பியக்கத்தில் நான் முன்னகர்ந்தபோது அதை அடையாளம் கண்டுகொண்டவர், இடமளித்தவர். மாறாக சுந்தர ராமசாமி என்னை மட்டுமல்ல, என் காலகட்டத்தின் புதிய நகர்வுகள் எதையும் ஏற்கமுடியாதவராகவே இருந்தார். அஞ்சினார் என்றும் ஆகவே பதறினார் என்றும் சொல்வேன்.\nஆனாலும் சுந்தர ராமசாமி எனக்கு முன்னுதாரணமானவர். ஏனென்றால் ஒவ்வொரு அன்றாடச் செயலிலும் நுண்ணிய படைப்புத்தன்மையுடன் ஊடுருவும் பார்வை கொண்டவராக இருந்தார். அதன்பொருட்டு தீட்டப்பட்ட புலன்கள் கொண்டவர் அவர். [அந்தக் கோயிலிலே தீபம் அணைஞ்சு மணம் வருது, எண்ணையிலே பாமாயில் சேர்ந்திருந்தாத்தான் இந்த மணம் வரும்]. ஒவ்வொரு கணமும் தான் பேசும் மொழியைக்கூட கவனித்துக் கொண்டே இருந்தார். [பட்டுங்கிற சொல்லுக்கு வேர் படுறதாத்தான் இருந்திருக்கும். பட்டோட இனிமை மென்மையா படுறதிலேதான்] அழகியல் என்பதில் சமரசமற்றவராக வாழ்க்கையை அமைத்துக்கொள்ள முயன்றார். [வாழையிலையை தட்டிலே வட்டமா வெட்டிவைக்கிறதிலே ஒரு வன்முறை இருக்கு. நீளவாழையிலைன்னா நீட்டின கை மாதிரி. அதிலே சாப்பிட்டா வாழையே பரிமாறுற மாதிரி தோணும்].\nஇலக்கியம் என்னும் இயக்கம் மீது முழுநம்பிக்கை கொண்டவராக, அதன்பொருட்டு வாழ்க்கையையே அளிக்கச் சித்தமானவராக இருந்தார் சுந்தர ராமசாமி. ஆனால் அத்தனை தீவிரத்திலும் அதன்பொருட்டு தன்னை ஒன்றாகக் குவித்துக் கொள்ளாதவராக, இறுக்கமாக ஆக்கிக் கொள்ளாதவராக இருந்தார். இயல்பான நகைச்சுவையும், பெரிதாக அலட்டிக்கொள்ளாத விளையாட்டுத்தனமும் கொண்டிருந்தார். எண்ணும்போது சுந்தர ராமசாமியிடமே மனம் மேலும் அணுக்கம் கொள்கிறது. என் பேச்சில் எப்போதும் எழுந்துவருவனவாக சுந்தர ராமசாமியின் சொற்களே திகழ்கின்றன\nஞானியுடனான என் உறவு சுந்தர ராமசாமியினுடனான உறவு போல தனிப்பட்ட சந்திப்புகள், விளையாட்டுப் பேச்சுகள் ஆகியவை நிறைந்ததாக இருக்கவில்லை. விளையாட்டும் வேடிக்கையும் சீண்டல்களும் என் இயல்பென்பதனால், அவருக்கு அவை விருப்பம் என்பதனால், அவை இருந்தன. ஆனால் அவருக்கும் எனக்குமிடையே பருவடிவான தூரம் என்று ஒன்று ஒன்று இருந்தது. நான் கோவையில் வாழவில்லை. அவ்வப்போது சென்று சில மணிநேரங்கள் கழிப்பதாகவே அவருடன் நான் நேரடி உரையாடல் இருந்தது. நாள் முழுக்க அவரிடம் இருப்பதும் அவருடன் நடை செல்வதுமெல்லாம் இயல்வது அல்ல.பலதருணங்களில் அவருடன் சென்று பேசிக்கொண்டிருக்கும்போதே வேறுவேறு நண்பர்கள் அங்கு வருவதும் அந்தரங்கமான பேச்சுகள் நிகழாமல் போவதும் வழக்கம்\nமேலும் அவருடைய் உள்ளம் என்பது பெரும்பாலும் கோட்பாடுகள், கொள்கைகள், அரசியல் சார்ந்து இருந்ததனால் அது சார்ந்த விவாதங்களே மிகுதியாக நிகழ்ந்திருக்கின்றன. புனைவிலக்கியம் சார்ந்த பேச்சுக்கள்கூட அந்தக் கோட்பாடுகள் சார்ந்த விவாதங்களாகவே அமைந்தன. இன்று இக்குறிப்புகளை ஒட்டுமொத்தமாகப் பார்க்கையில் நான் அவருடைய ஒரு பக்கத்தையே அறிந்திருக்கிறேன் என்று படுகிறது. அவர் ஒரு மார்க்சியச் சிந்தனையாளர், ஆனால் அது சார்ந்து குறைவாகவே பேசியிருக்கிறோம். இலக்கியம் என்னும் களத்திலேயே நாங்கள் சந்தித்துக் கொண்டோம். என்னுடைய புனைவுலகு சார்ந்தே பெரும்பாலும் பேசினோம். அவருடைய மார்க்ஸிய நண்பர்களை எனக்கு அறிமுகமே இல்லை. அவர் அவர்களிடம் என்ன பேசினார், எப்படி வெளிப்பட்டார் என்றே எனக்குத்தெரியாது.\nஅவரை நான் என் படைப்புகளுக்கு அவர் அளித்த சிந்தனைப் பங்களிப்பு சார்ந்து மட்டுமே நினைவுகூர முடிகிறது. ஆகவே என்னுடைய ஆளுமையில் எஞ்சியிருக்கும் ஞானி எவர் என்றே நான் எழுதமுடியும். அவரைப்பற்றி ஒட்டுமொத்தமாக எதையும் என்னால் சொல்ல முடியாது. அவருடன் நெடுங்காலம் உடனிருந்த அறிவன் போன்ற நண்பர்கள் ஒருவேளை முழுமையாக அவரைப்பற்றி எழுதக்கூடும். அவர்கள் பார்வையில் ஒருவேளை ஞானியின் படைப்பிலக்கியம் சார்ந்த இந்த முகம் வெளிப்படாமலும் போகலாம். ஓர் ஆளுமை அப்படி பல பார்வைகள் வழியாகத் துலங்கி வரலாம்.\nஆனால் தீயூழ் என்பது ஞானி வாழ்நாளெல்லாம் எதிர்த்த இயந்திரவாத அணுகுமுறை கொண்டவர்களிலேயே ஒருசாரார் இன்று அவரை ஆதரித்துக் கொண்டாடுகிறார்கள், இன்னொரு சாரார் அவரை விமர்சித்துப் பழிக்கிறார்கள் என்பது. இந்நூல் அவர்கள் உருவாக்கும் போற்றல் தூற்றல்களுக்கு அப்பால் அவருடைய சிந்தனையும் ஆளுமையும் எப்படி இருந்தன என்று காட்டும் நோக்கம் கொண்டது.\nஇது புனைவிலக்கிய வாசகர்களுக்கு உரியது. புதியவாசகர்களை முன்னால் கண்டு எழுதப்படுவது. ஆகவே இந்நூலில் அன்றைய அரசியல் சூழலையும், கருத்தியல் விவாதச் சூழலையும் அடிப்படை நிலையிலேயே விளக்கியிருக்கிறேன். பலவற்றை முடிந்தவரை எளியவடிவில் அறிமுகம் செய்திருக்கிறேன். ஞானி எந்தெந்த சூழல்களில் இருந்து தன் அடிப்படை வினாக்களை அடைந்தார், அவற்றினூடாக எப்படி முன்னகர்ந்தார் என்று காட்ட முயன்றிருக்கிறேன்.\nஞானி என்னிடம் எப்போதுமே ஒரு மைந்தனுக்குரிய அணுக்கத்தை கொண்டிருந்தார். அதற்குரிய மோதல்கள் எப்போதும் இருந்தன. குறிப்பாக ஒவ்வொரு முறை நான் ஞானியை சந்திக்கும்போதும் அவர் ஏதோ ஒருவகை மனத்தாங்கலில் இருப்பதை தெரிந்து கொள்வேன். எனக்கும் அவருக்குமான உறவு அவரை சூழ்ந்திருந்த மார்க்சிய நண்பர்களுக்கும், பிற்பாடு அவரைச் சூழ்ந்துகொண்ட தமிழ்த்தேசியர்களுக்கும் மிகப்பெரிய உறுத்தலாக இருந்தது. அவர் எனக்களித்த இடம் பல இளம் எழுத்தாளர்களுக்கு ஒவ்வாமையை அளித்தது. ஆகவே எப்போதுமே ஞானியிடம் என்னைப் பற்றிய ஒர் எதிர்மறைப் பேச்சு சென்றபடியே இருந்தது.\nஞானியும் அவருடைய உடல்நிலையால், தனிமையின் சோர்வால் அவர்களின் சொற்களுக்கு ஏற்ப எளிதில் திசைதிருப்பப் படுபவராகவே இருந்தார். நான் கூறியவை பலவாறாக திரிந்து அவரை சென்றடையும். அவரை நான் இழித்தும் பழித்தும் பேசியதாக பொய்யாக கூறப்பட்ட தருணங்களும் உண்டு. பெரும்பாலும் அவர் அவற்றை நம்புவதில்லை என்றாலும் தொடர்ச்சியாகக் கேட்கையில் மெல்ல மெல்ல உணர்ச்சிக் கொந்தளிப்பை அடைவார். அவருடைய தனிமை அதை பெருக்கும். கையறு நிலையின் இயல்பான சோர்வுகளில் அது பேருருக்கொள்ளும். என்னை மிக கடுமையாக அவர் வசைபாடிக் கொண்டிருக்கிறார் என்பதை வேறு சிலர் என்னிடம் சொல்வார்கள்.\nபிறகு நான் நேரில் செல்வேன். முதல் இரண்டு நிமிடங்கள் வேறெங்கோ முகத்தை திருப்பிக் கொண்டிருப்பார். அருகமர்ந்து அவர் கையைப் பற்றும் வரைதான் அது நீடிக்கும். கைகளில் அவர் கைகளை எடுத்துக் கொண்டதும் என் கைமேல் தன் இன்னொரு கையை வைத்தவுடனே அவர் முகம் மலர்ந்துவிடும். அதன்பிறகு சீண்டல்கள் சிரிப்புகள் தொடங்கும். அவருடைய மனத்தாங்கலையே வேடிக்கையாகவும் கேலியாகவும் சொல்வார். அதற்கு நான் வேடிக்கையாகப் பதில் சொல்வேன். பின்னர் பேச்சு வளர்ந்து விவாதமாகி கொஞ்சல்கள் கூரிய முரண்பாடாகி கடைசியில் பேச்சை நிறுத்திக் கொள்வோம். பிறகு மீண்டும் பொதுவாகப் பேசுவோம். அன்புச் சொற்களில் விடைபெறுவோம். “அடிக்கடி வாங்க” என்று சொல்லி கைகளை தட்டி விடை கொடுப்பார். தொடர்ந்து இதுவே பலமுறை நிகழ்ந்திருக்கிறது.\nலக்ஷ்மி மணிவண்ணன் சென்னையில் நிகழ்த்திய ‘ஒற்றை இந்துத்துவா கருத்தியலுக்கு எதிரான கண்டன கூட்ட’த்தில் நான் கலந்து கொண்டு சில நாட்களுக்குப் பிறகு ஞானியை சந்தித்தேன். இந்துத்துவம் இந்துமெய்யியலின் பன்மைத்தன்மையை ஒற்றை அரசியல் கோட்பாடாக சுருக்குகிறது, அதை எதிர்ப்பதே அந்த கருத்தரங்கின் நோக்கம். அது ஞானி சொல்லிவந்ததுதான். ஆனால் ஞானியிடம் எவரோ நான் இந்து மதத்தை ஒற்றை சக்தியாக திரட்டவேண்டும் என்று சொல்லி ஒரு கருத்தரங்கை கூட்டியதாக சொல்லியிருந்தார்கள்.\nநான் ஞானியை சந்தித்தபோது “என்ன முழுமூச்சாக கட்சியில சேந்தாச்சா? மீட்புவாதி ஆகிட்டிங்க போல?” என்று கேட்டார். “என்ன?” என்று நான் கேட்டேன். “அதென்ன ஒற்றை இந்துத்துவம்?” என்றார். முதல் சில கணங்கள் எரிச்சலூட்டிய போதுகூட அவரிடம் எவரோ மொத்தத்தையும் தவறாக சொல்லியிருக்கிறார்கள் என்று உணர்ந்தபின் என்ன நிகழ்ந்தது என்று நான் விளக்கினேன். ஞானி நான் ஏற்கனவே அதை சொல்லி வருபவன் என்பதனால் நான் கூறுவதைப் புரிந்துகொண்டார்.\nஞானி தனிப்பட்ட முறையில் எழுதிய கடிதங்களில் எஸ்.வி.ராஜதுரை பற்றிய கடுமையான வரிகள் இருப்பதைக் காண்கிறேன். அவற்றை அவருடைய தரப்பாக என்னால் எடுத்துக்கொள்ள முடியாது, ஏனென்றால் எஸ்.வி.ராஜதுரை ஞானியை கடுமையாக விமர்சனம் செய்தாலும்கூட ஞானி ஒருபோதும் எஸ்.வி.ராஜதுரையை மானசீகமாக விட்டுக்கொடுக்கமாட்டார் என்றும், எஸ்.வி.ஆர் அவருக்கு உள்ளூர மிக அணுக்கமானவர் என்றும் நான் அறிவேன். இதை அறிவதுதான் அவரை அறிவது.\nஎஸ்.வி.ராஜதுரை குறித்து நான் எழுதிய குறிப்பு நீதிமன்ற வழக்கு வரைச் சென்றபோது ஞானி எனக்கு என்னை கடுமையாகக் கண்டித்து ஒரு கடிதம் எழுதியிருந்தார். நான் அவரைச் சந்தித்த போதும் கடுமையாகப் பேசினார். ‘எஸ்.வி.ராஜதுரை பற்றி அவருடைய இடதுசாரித் தோழர்கள் சொன்னதையே நான் சொன்னேன், என்னிடமிருக்கும் சான்றுகளெல்லாம் அவர்கள் எழுதியவைதான், அவர்கள் உங்களுக்கும் நெருக்கமானவர்களே’ என்றேன். “அது இடதுசாரிக் கூட்டத்தோட மனநோய். ஆனா அவங்கள்லாம் ஒரே தலைமுறை. நீங்க அவரோட மாணவர் நிலையிலே இருக்கிறவர்’ என்றார் ஞானி.\nஎரிச்சலுடன் “நான் என்ன செய்யணும்?” என்றேன். “நேரா கோத்தகிரிக்குப் போய் மன்னிப்பு கேட்டு சரணடையுங்க. நான் அதைத்தான் சொல்வேன்” என்றார் ஞானி. நான் “நான் நேர்ல போயி அவர்ட்ட திட்டு வாங்கணும்னு சொல்றீங்க” என்றேன். “திட்டமாட்டார், அவருக்கு நீங்க யாருன்னு தெரியும்” என்றார் ஞானி. நான் ஒன்றும் சொல்லவில்லை. “என்ன?” என்றார் ஞானி. “அவர் எனக்கு பெரிசா ஒண்ணும் கத்துக்குடுக்கலை” என்றேன். “அது பொய், உங்களுக்கே தெரியும்”. நான் அதன்பின் ஒன்றும் சொல்லவில்லை. ஞானியும் அதன்பின் என்னிடம் அதைப் பற்றிப் பேசியதில்லை.\nதொடர்ச்சியாக இத்தகைய உரசல்களும் முரண்பாடுகளுமாக எங்கள் உறவு சென்று கொண்டிருந்தது. எனக்கும் சுந்தர ராமசாமிக்குமான முரண்பாடு வந்தபோது ஞானி நான் சுந்தர ராமசாமியின் உறவை எக்காரணம் கொண்டும் சிதிலமடைய விடக்கூடாது என்று தொடர்ந்து வலியுறுத்திவந்தார். சுந்தர ராமசாமியின் உறவை வன்முறையாக மாற்றுவதில் சிலர் ஆற்றிய பங்களிப்பை நான் ஞானியிடம் கூறினேன். ஞானி அது இயல்பானதுதான், அதை ஒன்றும் செய்யமுடியாது என்றார்.\nசுந்தர ராமசாமியின் நட்பைப் பற்றி சில ஆண்டுகளுக்குமுன் பேசிக்கொண்டிருந்த போது “ஒண்ணும் செஞ்சிருக்க முடியாது அப்படி செஞ்சிருக்கலாம் என்று தோணும். ஆனா காலம்கடந்த பிறகு தெரியும் அதெல்லாம் அப்படித்தான் நடந்திருக்க முடியும்னு” என்றார். “பேர்யாற்று நீர்வழிப்படும் புணைபோல” என்று சொல்லி புன்னகைத்தார்\n”நல்லவேளை சார், அதேமாதிரி உங்ககூட ஆகல்ல” என்று நான் அவரிடம் சொன்னேன். “அவர்ட்ட ஒரே முறை அப்படி பெரிசா ஆச்சு. நம்மகிட்ட நூறுமுறை குட்டிகுட்டியா ஆச்சு. அதனாலே அப்டியே கடந்து போயிடுச்சு” என்று சொல்லி ஞானி சிரித்தார். “அதோட நான் அடிப்படையிலே வாத்தியார். பசங்களை மேய்ச்சு மேய்ச்சு பழகிப்போனவன். உங்களைவிட பொறுக்கிப் பசங்கள்லாம் எங்கிட்ட படிச்சிருக்காங்க”\nஒட்டுமொத்தமாக ஞானியின் தத்துவ முயற்சிகளை ஒருங்கிணைப்புவாதம் என்று சொல்லலாம். சிந்தனையின் இயங்கியலிலேயே இரண்டு போக்குகள் உண்டு. பிரிந்து தனித்துவம் கொள்ளல், தொகுத்துக்கொண்டு ஒருங்கிணைவை அடைதல். மதங்களின் வரலாற்றை பார்த்தால் இது தெரியும். ஒரு தத்துவக்கொள்கை அல்லது தரிசனம் தனக்கென ஓர் அடையாளத்தைக் கண்டடைந்ததும் அதுவரையிலான பொதுப்போக்கிலிருந்து பிரிகிறது. தன்னை பிரித்துக் காட்டவும், தனித்து வரையறை செய்துகொள்ளவும் முயல்கிறது. அதுவே அதன் உருவாக்கக் காலகட்டம்\nஉருவாக்கக் காலகட்டம் முழுக்க அத்தனை தத்துவங்களும் தரிசனங்களும் தங்கள் தனியடையாளங்களையும் தனிப்போக்குகளையும் வலியுறுத்துவதிலேயே குறியாக இருக்கின்றன. தங்கள் தரப்பை தெளிவாக வரையறை செய்கின்றன. தங்களுக்கு எதிரானவற்றை திட்டவட்டமாக மறுக்கின்றன. அந்த வேகம் காரணமாக தங்களுடன் முரண்படுவனவற்றையும் கடுமையாக எதிர்க்கின்றன. ஆகவே கருத்துப்பூசல் தன்மை [polemics] அவற்றில் ஓங்கியிருக்கும். வளரும் தன்மைகொண்ட சிந்தனைகளிலெல்லாம் இந்த கூறு உண்டு. ஆகவே சிறிய சிந்தனைக் குழுக்களின் இயல்பு இது.\nதத்துவமோ தரிசனமோ உரியவளர்ச்சியை அடைந்தபின் அவற்றின் இயல்பில் மாறுதல் உருவாகிறது. அவை பெரிய அடித்தளக் கட்டமைப்பு கொண்டவையாக ஆகிவிட்டிருக்கும். அவற்றில் உட்பிரிவுகளும் உள்விவாதங்களும் பெருகியிருக்கும். தொடர்ச்சியான உள்சமரசங்கள் நிகழ்ந்துகொண்டும் இருக்கும். அந்நிலையில் அவை தொகுப்பு- ஒருங்கிணைவு என்னும் வடிவை கைக்கொள்கின்றன. தன் அடிப்படைகளை கொஞ்சம் நெகிழ்வாக்கிக் கொள்கின்றன. தன்னுடன் ஒத்துப்போகும் அனைத்தையும் உள்ளிழுத்துக்கொள்ள முயல்கின்றன.\nஇந்து மதத்தின் வரலாற்றிலேயே அப்படி பல தொகுப்பு- ஒருங்கிணைவு காலகட்டங்களைக் காணலாம். பகவத்கீதை அப்படிப்பட்ட ஒரு தொகுப்பு- ஒருங்கிணைப்பு நூல். சங்கரர் நிகழ்த்தியதும் அதுவே. பின்னர் வித்யாரண்யர் நிகழ்த்தியது அந்த ஒருங்கிணைப்பு. பதினெட்டாம் நூற்றாண்டின் இந்துமறுமலர்ச்சியும் அதையே நிகழ்த்தியது. இதை சமன்வயம் என்னும் சொல்லால் குறிப்பிடுகிறார்கள். பௌத்த, சமண மதங்களிலும் தொகுப்பு–ஒருங்கிணைப்புக் காலகட்டம் உண்டு. அடிப்படைகளை இறுக்கமாக வைத்திருக்கும் கிறிஸ்தவ, இஸ்லாமிய மதங்களிலேயே தொகுப்பு – ஒருங்கிணைப்பு காலகட்டங்கள் உண்டு\nமார்க்ஸியத்தின் தொடக்க காலகட்டம் முடிந்துவிட்டது, அது உலகளாவியதாக ஆகிவிட்டது, ஆகவே அதை ஒரு வலுவான மாற்றுத்தரப்பாக இறுக்கி வரையறுத்து நிலைநிறுத்தும் முயற்சிகளை கடந்து செல்லவேண்டும் என ஞானி நினைத்தார் என புரிந்துகொள்கிறேன். மார்க்ஸியத்தின் அடித்தளம் உலகளாவ நிறுவப்பட்டுவிட்டது, அதன் இறுக்கமான நிலைபாடு பயன்தராது என ருஷ்ய- சீன முயற்சிகள் காட்டிவிட்டன, ஆகவே அது தன்னை மாபெரும் தொகுப்பு- ஒருங்கிணைப்புச் செயல்பாட்டுக்கு தன்னை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று அவர் எண்ணினார்\nதொகுப்பு – ஒருங்கிணைப்பு என்பது எப்போதுமே உள்ளிழுத்துக் கொள்வதாகவே நிகழ்கிறது. இணையானவற்றை உள்ளிழுத்துக் கொள்வது, எளியவற்றை உருமாற்றி உள்ளிழுத்துக்கொள்வது தத்துவத்திலும் தரிசனத்திலும் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. மார்க்ஸியம் அதன் மானுட சமத்துவம், சேவை, உலகியல்தளத்து விடுதலை ஆகிய மூன்று அடிப்படை இலட்சியங்களிலும் ஒத்துப்போகும் அத்தனை சிந்தனைகளையும் தன்னுடன் இணைத்துக் கொள்ளவேண்டும். அவற்றை மார்க்சிய மெய்யியலின் பகுதியாக உருமாற்றிக் கொள்ளவேண்டும். அதன் வழியாக உலகிலுள்ள அத்தனை செயலூக்கம் கொண்ட சிந்தனைகளிலும் மார்க்ஸியம் ஊடுருவிவிடவேண்டும்– ஞானி சொன்னது இதுதான்.\nஆனால் இதில் ஒரு கேள்வி உண்டு. எப்போதுமே இந்த தொகுப்பு- ஒருங்கிணைப்பு முயற்சி நிகழ்கையில் ‘தூய்மைவாதிகள்’ அல்லது ‘அடிப்படைவாதிகள்’ அது கரைத்தழிப்பு முயற்சி என்றும், கொள்கைகளை நீர்த்துப்போகச் செய்வது என்றும் குற்றம் சாட்டுவார்கள். அது ஒருவகையில் உண்மையும்கூட. ஏனென்றால் சமரசம் இல்லாமல் ஒருங்கிணைப்பு இல்லை. எந்த எல்லைவரை சமரசம் நிகழலாம்? மார்க்சியம் பிற சிந்தனைகளை எந்த அளவுக்கு உள்ளிழுக்கலாம்?\nஞானியிடம் அதைப்பற்றி ஒருமுறை பேசினேன். ஞானி “தத்துவத்துக்கு ரெண்டு அமைப்பு உண்டு. ஒண்ணு, அதோட ஐடியல், இன்னொண்ணு பிராக்டிக்கல். மார்க்சிய இலட்சியவாதம்னு ஒண்ணு இருக்கு. அதுக்கு அடிப்படையான வரலாற்று ஆய்வுமுறையும் இருக்கு. அதான் ஐடியல். அதை அடையறதுக்காக அது ஒரு அமைப்பை உருவாக்கியிருக்கு. அந்த அமைப்புக்கு பல சட்டங்களும் வழக்கங்களும் இருக்கு. அந்த அமைப்பிலே மாற்றங்கள் வரலாம், அந்த இலட்சியத்திலேயும் வரலாற்றுப் பார்வையிலேயும் அது மாறாம இருக்கணும்” என்றார். ஆனால் இதெல்லாம் எங்கே இத்தனை தெளிவாக இரண்டாக இருக்கிறது என்பதெல்லாம் எனக்கு ஐயம்தான்.\nஅதோடு ஞானி பேசிக் கொண்டிருந்ததெல்லாம் ஓர் உயரிய தளத்தில். இந்தியாவின் அனைத்துச் சிந்தனைகளிலும் மார்க்ஸியம் ஏதோ ஒருவகையில் ஊடுருவி உள்ளே வாழ்வதைப்பற்றி, அதன்விளைவாக இந்தியாவின் எல்லா செயல்பாடுகளிலும் வரும் மாற்றம் பற்றி அவர் கனவுகண்டார். ஆனால் நடைமுறையில் மார்க்சியத்தின் அன்றாட அரசியலுக்கு அப்பால் எதையேனும் பேசுபவர்கள் இன்று எவருமில்லை.\nசொல்லப்போனால் மார்க்ஸிய இலட்சியவாதம், மார்க்ஸிய வரலாற்றுவாதம் இரண்டுக்குமே இங்கே இன்று எந்த இடமும் இல்லை. ஒருவார்த்தைகூட இன்று அவற்றைப்பற்றிப் பேசப்படுவதில்லை. மார்க்ஸியம் பிற சிந்தனைகளை உள்ளிழுப்பதை ஞானி கனவு கண்டார், மார்க்சியம் இன்று எளிமையான திராவிட இனவாத அரசியலால் உள்ளிழுக்கப்பட்டு, இரண்டாம்நிலை திராவிடவாதமாக வெளிப்பட்டுக் கொண்டிருப்பதையே நாம் காண்கிறோம்.\nஞானி பேசிய கருத்தியல் தளம் ஏற்கனவே கரைந்து போய்விட்டது. ஞானி கடைசிநாட்களில் அந்தரத்தில், வெறுமையில் நின்றார். எதிர்காலத்தில் ஒருவேளை சூழலின் அழுத்தத்தால் ஞானி கனவுகண்ட செயலூக்கம் கொண்டதும் எங்கும் ஊடுருவி நிறையும்தன்மை கொண்டதுமான மார்க்சியம் இங்கே வருமென்றால் அரசியல் கோட்பாட்டுத் தளத்தில் அவருடைய பங்களிப்பு நியாயப்படுத்தப்படுகிறது. இல்லையென்றால் அவரை நவீன இலக்கியத்தில் அவர் ஆற்றிய செல்வாக்கு காரணமாக மட்டுமே நினைவுகூர வேண்டியிருக்கும்.\nஇன்று ஞானியின் நினைவுக்ளை தொகுத்துக் கொள்ளும்போது அவரை மார்க்சியத்தின் மெய்யியல் என்ன என்று தேடியவராக, இந்தியாவின் மெய்யியலுடன் உரையாடி அதை உள்ளிழுத்துக் கொண்டு மார்க்சியத்தை மக்களின் மெய்யியலாக வருங்காலத்தில் மாற்றுவதற்கான முயற்சியில் ஈடுபட்டவராக, அதன் பொருட்டு இலக்கியத்தை ஆய்வு செய்தவராக, அந்த மெய்யியலை தமிழர் மெய்யியலாக மறுவரையறை செய்து கொண்டவராக, தமிழர் மெய்யியலின் சில அடிப்படைப் பார்வைகளை துலக்க முயன்ற முன்னோடி அறிஞராக, அதன்பொருட்டு வெவ்வேறு சிந்தனைகளை ஒருங்கிணைக்க முயன்றவராக மதிப்பிடுகிறேன்.அதற்கப்பால், வாங்கக் கலம் நிறைக்கும் வள்ளல் பெரும்பசு என எனக்கு தானறிந்த அனைத்தையும் வழங்கியவராக. அவருக்கு என் வணக்கம்.\nமுந்தைய கட்டுரைவிஷ்ணுபுரம்விருது,சுரேஷ்குமார இந்திரஜித்- கடிதங்கள் -9\nஅடுத்த கட்டுரைதிருமந்திரம் பற்றி…
க்ரோ எனும் கிழவர் | திண்ணை\nஎழுதியது admin தேதி March 27, 20220பின்னூட்டம்\nசார்ல்ஸ் டு லிண்ட்\n(சார்ல்ஸ் டு லிண்ட் என்பவர் எழுதிய ஒரு அதிபுனைவுக் கதையை மொழி பெயர்த்துள்ளேன். இவர் அதிபுனைவுலகில் சற்று நன்கு தெரிய வந்தவர்.\nகதை பற்றிய விவரங்கள் கடைசியில் கொடுத்திருக்கிறேன். தலைப்பில் உள்ள க்ரோ என்பதை மொழிமாற்றம் செய்யாததற்கு ஒரு காரணம், க்ரோ என்ற பழங்குடி அமெரிக்கர்களின் சமூகக் குழுவை அது பூடகமாகச் சுட்டுகிறது என்பது ஒரு காரணம். ஆனால் அதி புனைவு என்பதால் இந்த கனடிய/ டச்சு எழுத்தாளர் மையப் பாத்திரத்தை கருப்பினத்தவராகச் சித்திரிக்கிறார்.\nகதைக்குள்ளும் க்ரோ என்பதை அவர் பெயர் போலவே பயன்படுத்தியுள்ளேன்.\nமொழிபெயர்ப்புகளை முழுதும் தமிழ் போலவே மாற்ற வேண்டும் என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. சிறிது அன்னியத் தன்மை தெரிவது அவற்றின் மாற்றுப் பண்பாட்டுத் தளத்தை நமக்குப் பரிச்சயப்படுத்தும் என்பதும், எப்படியும் பாத்திரப் பெயர்களும், கதைக்களமும் அன்னியம்தான் என்பதும் என் காரணங்கள். )\nகிழவர் க்ரோ இலைமக்கில் வளர்ந்த பாசியும், பைன் மரத்தின் உதிர்ந்த ஊசி இலைகளும் சேர்ந்த தலையணையிலிருந்து தன் தலையை உயர்த்தி, காற்றை முகர்ந்து பார்த்தார். அவரைச் சுற்றி இருந்த பைன் மரக் காட்டில், காற்றைப் போலக் கண்ணுக்குத் தென்படாமலும், சிலந்திக் கடியை விடவும் குறைவான ஒலியோடும், ஏதோ நடந்து போனது. அவரோ கிழவர் க்ரோ, காற்றில் அசையும் சிலந்தி வலையை விட சப்தமின்றி அவரால் இருக்க முடியும். அவர் எழுந்து அமர்ந்தபோது, ஒலியின் கிசுகிசுப்பு கூட அங்கு இல்லை. அவருடைய கரிய பார்வை மரங்களின் அடியிலிருந்த நிழல்களில் தேடியது. உயரத்துக் கிளைகளூடே காக்கைக் குடும்பத்தைச் சார்ந்த நீலக் கழுத்துக் காக்கையின் பறப்புப் பாதையை அவர் பார்த்தார், பின் பன்னெடுங்காலத்துக்கு முன்னர் காட்டின் தரைக்குள்ளிருந்து முட்டி எழுந்த விலா எலும்பு போன்ற கருங்கற்கள் உண்டாக்கி இருந்த குழிகளைப் பரிசீலித்தார்.\n“சின்னத் தங்கச்சி, சின்னத் தங்கச்சி,” என்று விளித்தார். “நீ அங்கே இருக்கேன்னு எனக்குத் தெரியும். இந்தக் கிழக் காக்கையை நீ பதுங்கி, ஒளிஞ்சு மறைஞ்சு ஏமாத்த முடியாது.”\n“அத்தனை சின்னவளும் இல்லை, உன்னோட தங்கையும் இல்லை,” ஒரு கரகரப்பான குரல் கிட்டத்தட்ட அவர் காதுக்குள்ளேயே பேசியது. “இப்ப யாரு ஏமாந்தாங்க இங்கே?”\nஅவர் திரும்பிப் பார்த்தபோது, தனக்குத் தெரியாமல் இவ்வளவு நெருங்கி ஒருவர் வர முடிந்ததிலும், தன்னை விடவும் ஒலியின்றி ஒருவரால் நகர முடிந்தது என்பதிலும் அவருக்கு எழுந்த வியப்பதிர்ச்சியைக் காட்டாமல் அவருடைய முகம் மறைத்திருந்தது.\n“உன்னை எனக்குத் தெரியாதே,” என்றார்.\nபைன் ஊசி இலைகள் மீது சம்மணமிட்டு அமர்ந்த அந்தப் பெண் புன்னகைத்தாள். அவள் பெரிய உருவினள்- அவரை விடப் பெரிய உரு, கிட்டத்தட்ட அவர் அளவு உயரம். அவளுடைய தலைமுடி வகிட்டில் இருந்து கால் சுண்டு விரல் வரை தோல் வெள்ளையாக இருந்தது, சூரிய ஒளியில் பனித் துகள் குவியல் தோன்றுவது போல அவளுடைய முடி இருந்தது, கண்கள் சவக்காட்டின் ரகசியங்களைப் போல இருண்ட நிறத்தில் இருந்தன. அவளுடைய மூச்சில் ஆப்பிளின் இனிப்பு இருந்தது.\n“கிழவர் க்ரோவுக்கு எல்லாம் தெரியும்னுதான் எங்கிட்டெ சொன்னாங்க,”என்றாள் அவள்.\n“அப்படீன்னா நீ தப்பான ஆட்கள் கிட்டே பேசிக்கிட்டிருக்கே.”\nஅவள் தோள்களைக் குலுக்கி அதை நிராகரித்தாள், அவளுடைய முலைகள் அந்த அசைவில் எழுந்து அமர்ந்தன.\n“உனக்கு ஆட்சேபணை இல்லைன்னா ஏதோ துணியைப் போட்டுக்கிட முடியுமா?” என்றார் அவர்.\nஅவள் புரியாததைக் கேட்டமாதிரி நோக்கினாள். “என்னைப் பார்க்கிறப்போ உனக்கு என்ன தெரியுது?”\n“ஒரு பெரிய, வனப்பான பொண்ணு- இப்படி நிர்வாணமா நடந்து திரியக் கூடாத அளவுக்கு ரொம்பவே வசீகரமா இருக்கறவள்.”\n“அட, இதெப்படி ஆச்சு,” என்றாள்.\n“இதை இச்சகப் பேச்சா நினைக்கறதா இல்லை அவமரியாதையாப் பார்க்கணுமான்னு தெரியல்லை எனக்கு.”\nஇப்போது கிழவர் க்ரோவுடைய முறை வந்தது, அவர் ஏதும் புரியாமல் நோக்கினார்.\n“ஜோயி க்ரீல், நான் பெண்ணே இல்லை. நான் இந்த ஆவிகளோட ஏரிக்குப் பக்கத்திலெ வசிக்கறவ.”\nகிழவர் க்ரோ பைன் மரத்தின் மீது சாய்ந்து கொண்டார்.\n“அட, அப்படியா,” என்றார். “அது வேற மாதிரி விஷயம்தான். நான் உனக்கு என்ன செய்யணும், சகோதரமே?”\nவிழித்திருக்கும் உலகில் அவருடைய பெயர் என்னவென்று அவளுக்குத் தெரிந்திருந்தது என்பது அவருக்கு வியப்பளிக்கவில்லை. ஆவிகளின் ஏரியின் பனிப்பாறை மூடிய கரைகளருகே மலைமீது வசிக்கும் ஆவிக் கரடிகள் அப்படித்தான் இருந்தன. நாம் ஒரு வார்த்தை கூடப் பேசாமலே நம்மைப் பற்றிய விஷயங்களைத் தெரிந்து கொள்ள அவர்களுக்கு வழிகள் தெரியும் என்று சொல்லப்பட்டது. ஐந்து விரல்கள் கொண்ட பிராணிகளின் உலகத்தில் உலாவுகையில் சகோதரங்களுக்கும் இப்படி எல்லாம் தெரிகிறார்போலத்தான் அதுவும்.\n“நீங்க ஒண்ணைப் பார்க்கணும்னு இருக்கு எனக்கு,” என்றாள்.\nஅவள் எழுந்து நின்றபோது, அது தண்ணீர் ஓடுவதைப் பார்ப்பதைப் போலிருந்தது. அவள் ஒரு கையை அவரிடம் நீட்டினாள், தன்னைப் பற்றி மேலிழுக்க அவர் அனுமதித்தார். எந்த அளவுக்கு ஒலி எழுப்பாமலும், துரிதமாகவும் அவள் இயங்கினாளோ அந்த அளவு வலு மிக்கவளாகவும் இருந்தாள்.\n“என்ன மாதிரி —” அவர் துவங்கினார்.\nஆனால் அப்போது அந்த பைன் மரக்காடு கரைந்து போனது, ஒரு குறுக்குச் சாலையில் அவர்கள் நின்றிருந்தனர், அவர்களைச் சுற்றி கண் பார்வைக்கு எட்டும் தூரம் வரையிலும் எங்கும் கார்கள் நின்றிருந்தன. மென் பளபளப்பாகவும், பண்டைக்காலத்து மரங்கள் அளவு உயரமாகவும் கட்டடங்கள் எழுந்திருந்தன. அவையும் முடிவில்லாமல் எங்கும் இருப்பதாகத் தெரிந்தன, தொடுவான் வரையிலும், நாற்திசைகளிலும் இருந்தன.\nகிழவர் க்ரோவால் இதைப் பார்த்துத் தனக்கெழுந்த வியப்பை அடக்க முடியவில்லை. கண்ணைக் கொட்டிக் கொண்டார், தன்னைச் சுற்றிலும் பார்த்தார். எல்லாக் கார்களும் அசைவின்றி நின்றன, பலவற்றின் கதவுகள் திறந்தபடி இருந்தன. அவருக்கு நிறைய நாழிகை கழித்துத்தான் புரிந்தது, அந்தத் தெரு முற்றிலும் அசைவின்றி இருந்தது. அவரும், அந்த கரடி உரு ஆவியும், ஒரு ஒளிப்படத்தின் நடுவில் காலடி எடுத்து வைத்து நுழைந்தது போல இருந்தது. அப்புறம், தங்களுடைய சூழலை ஏற்கும் நிலைக்கு அவர் வந்தபோது, அவருக்கு இன்னொன்று புரிந்தது.\n“ஜனங்கள் எல்லாம் எங்கே போய்ட்டாங்க?” அவர் கேட்டார்.\nஅவள் தெரியாதென்பது போல தோள்களைக் குலுக்கினாள், அவர் தன் பார்வையை அவள் முகத்திலேயே நிறுத்தி வைத்திருந்தார்.\n“இதே போலத்தான் இருக்கப்போறது,” அவள் சொன்னாள், “நாம் ரொம்ப காலம் பின்னே போய்க் காலடி எடுத்து வைத்தோமானால்.”\n“அதாவது இந்தக் கட்டடங்கள், கார்கள், மற்றப் பல குப்பைகளை ஒதுக்கி விட்டால் மிஞ்சறதா?”\nஅவள் மௌனமானாள். கிழவர் க்ரோ காத்திருந்தார், ஆனால் அவளோ, அந்தத் தெருவில் அசைவில்லாத காலி வாகனங்களின் நடுவில் அவரோடு நின்றிருப்பது போதுமானது என்பது போல இருந்தாள்.\nஅந்த வாகனங்களில் ஜனங்கள் இருந்திருந்தாலும், இப்படி ஒரு பிரதாபம் பொருந்திய பெண் அவர்கள் முன்னே திடீரெனத் தோன்றினால், அவர்களெல்லாமே அப்படியே ஸ்தம்பித்துப் போயிருப்பார்கள் என்று அவர் நினைத்தார்.\n“இதை ஏன் எங்கிட்டெ காட்டறெ?” என்று கேட்டார்.\n“உங்களுக்கு இது சுவாரசியமாக இருக்கும்னு நினைச்சேன்.”\n“இதை விட அந்த பைன் காடுகளைத்தான் எனக்கு அதிகம் பிடிச்சுது.”\n“இதையெல்லாம் நீங்க சரி செய்ய முடியும்னு நான் நினைச்சேன்.”\n“எதைச் சரி செய்யணும்?”\n“இங்கே என்ன நடக்கப் போகுதோ, அதை.”\nஜோயி க்ரீல் தனக்குப் பழக்கமான படுக்கையில், தனக்குப் பழக்கமான அடுக்ககத்தில், நகரத்தின் பழக்கமான ஒலிகள் அவருடைய படுக்கையறையின் ஜன்னல்கள் வழியே உள்ளே வழிந்தோடியிருக்க, விழித்தெழுந்தார். போக்குவரத்து, ஜனங்கள் உரையாடுவது, குப்பைத் தொட்டிகளின் தடால் புடால், தொலை தூரத்தில் ஒரு பொலீஸ் சைரன்.\nஎழுந்தவர், அந்த கரடியின் ஆவி இன்னும் தன்னோடு இருக்கும் எனப் பாதி எதிர்பார்ப்புடன் அமர்ந்தார், ஆனால் அந்த அறையில் அவர் தனியராகத்தான் இருந்தார்.\nஎழுந்திருந்து, குளியலறைக்குள் போனார், காலை நேரத்து ஒன்றுக்கிருப்பதை நீண்ட நேரம் செய்தார். தன் கைகளைக் கழுவிக் கொண்டவர், தன் பிரதிபலிப்பைக் கண்ணாடியில் பார்த்தார். அவருடைய தாடி அத்தனை நரையோடி இருந்ததால், அவருடைய கருத்த தோலில் அது முழு வெண்மையாகவே தெரிந்தது. தன் முள்முடிகளை ஒரு முறை அழுந்தத் துடைத்து விட்டு, முடியைத் தன் முகத்திலிருந்து அகற்றித் தள்ளி வைத்தார்.\nதன் கனவைப் பற்றி நினைத்துப் பார்த்தார், கரடி உரு ஆவி தனக்கு விதித்த அந்த வேலையைப் பற்றி யோசித்தார், தன் தலையை உலுக்கிக் கொண்டார். அது ஒரு சக்தி மிக்க கனவு – சக்திக் கனவு -அவருக்கு அதில் எதுவும் புரியவில்லை.\n“கடைசில நமக்கு வயசாகிப் போச்சுன்னுதான் தோணுது,” தன் பிம்பத்திடம் அவர் சொன்னார்.\nதன் படுக்கை அறைக்குத் திரும்பியவர், உடுப்புகளை எடுத்து அணிந்தார். கருநிற கால்சராய்கள், கௌபாய் காலணிகள், ஒரு பழைய வெள்ளைச் சட்டை. உடுப்பு அலமாரியிலிருந்து சில்லறைகளைத் தேற்றி எடுத்தார், தன் பைக்குள் போட்டுக் கொண்டார். முந்திய நாள் இரவு சோஃபா ஒன்றின் பின்புறம் தான் போட்டு வைத்திருந்த மேலங்கி-சட்டையை எடுத்துக் கொண்டார், காலை உணவுக்கும், காஃபிக்குமென்று தெரு மூலையிலிருந்த ஒரு சிற்றுண்டிக் கடைக்குப் போனார். தன் அடுக்ககத்துக் கதவைப் பூட்டுவது பற்றி அவர் கவலைப்படவில்லை. அங்கு திருடுவதற்கு எதுவும் இருக்கவில்லை- அவருடைய பழைய கிடார் வாத்தியம் கூடச் சிறிதும் மதிப்புப் பெறாதது.\nஅவரிடம் இருந்த மதிப்புள்ள எதுவும், அவர் தன் தலைக்குள்ளேயே சுமந்திருந்தார்.\n“நேத்தி ராத்திரி எனக்கு வந்த கனவு ரொம்ப விசித்திரமா இருந்தது,” அவர் அமர்ந்திருந்த தடுப்புக்குள் நுழைந்த பரிசாரகப் பெண் ரூபி சொன்னாள்.\nஒரு தட்டில் வெந்த முதிரைகள், வறுத்த ரொட்டித்துண்டுகளோடு வேகவைத்த முட்டையுடன், கோப்பையில் காஃபியையும் அவள் கொண்டு வந்திருந்தாள். தான் எப்போது கடைசியாக தனக்கு இன்னது வேண்டுமென்று உத்தரவிட்டோம் என்று அவருக்கு நினைவில்லை. அவருக்கு என்ன கொடுக்கவேண்டுமென்று ரூபி நினைத்தாளோ அதை அவள் கொண்டு வந்து விடுவாள். எது எப்படி இருந்தாலும் அதில் காஃபி இருந்த வரை, ஜோயி அவளே தீர்மானிக்க விட்டு விடுவார்.\n“அதில் ஒரு பெரிய, நிர்வாணமான வெள்ளைப் பெண் இருந்தாளா?” ஜோயி கேட்டார்.\nரூபி வாய்விட்டுச் சிரித்தாள். “கனவு காண்றதுக்கு எத்தனை வயசானாலும் பரவாயில்லை, அப்படித்தானே?”\n“என்னை நானே கிழவன்னு சொல்லிக்கிறதே கேவலம். இப்ப நீ வேற ஆரம்பிக்கிறியா, வேண்டாம்.”\nரூபி கவர்ச்சியான, தேவையான உருட்சி திரட்சியெல்லாம் இருந்த இளசு – இருபதுகளில் இருப்பவள், சரசமாடுவதில் தேர்ந்தவள், கோலாகலமாகக் கலைந்த தங்க நிறத் தலை முடியோடு, கையின் மேல் பகுதியில் ஒரு கரிச்சான் காக்கையின் உருவையும் பச்சை குத்திக் கொண்டிருந்தாள். பரிமாறும் பகுதியின் முகப்புமேஜைக்குப் பின் புறமிருந்த அலமாரியில் மேல் தட்டில் எதையாவது எடுக்க அவள் கை உயர்த்தும்போது, அவளுடைய சட்டையின் கைப்பகுதிக்குக் கீழே அந்தக் கரிச்சான் காக்கையின் நீண்ட வால் நீட்டிக் கொண்டிருப்பது தெரியும்.\nஅவள் அந்தச் சிற்றுண்டிச் சாலையைச் சுற்றிலும் பார்த்தாள், வேறு யாருக்கும் தான் கவனம் செலுத்த வேண்டியிருக்கவில்லை என்று உறுதி செய்து கொண்டாள், பிறகு ஜோயியின் தடுப்பறைக்குள் நுழைந்து எதிரே அமர்ந்தாள்.\n“பாருங்க, இந்தக் கனவுல,” அவள் சொன்னாள், “ஜே-ஸி இந்தப் பேட்டையில வசிக்கிறாரு. அவர் இந்த டைனருக்குள்ளே நேர வர்றாரு, நான் அவரோட புது விடியோவுல ஆட வருவேனான்னு கேட்கறாரு.”\n“அவர் ஓய்வு பெற்றுப் போயிட்டாருன்னுல்ல நான் நினைச்சேன், இப்ப ஏதோ ரிகார்ட் கம்பெனியை நடத்தல்லியா?”\nஅவள் தலையை ஆட்டி மறுத்தாள். “அதெப்படி உங்களுக்குத் தெரியும்? உங்களுக்கு எப்பவுமே ஏதோ வினோதமான விஷயமெல்லாம் தெரியறது.”\n“நான் நிறையப் பார்த்தவன்,” ஜோயி சொன்னார்.\nஅவர் அப்படியே பார்த்துமிருந்தார். ஒருகால் பின்னே பண்டைக் காலத்துக்குப் போய், அண்டங்காக்கை தன் பிரும்மாண்டமான பானையிலிருந்து உலகத்தை வெளியே உருவி எடுத்த அந்தக் காலத்த்தைப் பார்த்திருக்க மாட்டார். அல்லது பழங்குடி சிவப்பிந்தியர்கள் இந்த நிலங்களுக்குத் திரிந்தலைந்து சேர்ந்த காலத்தைப் பார்த்திருக்க மாட்டார், ஆனால் அவர் வெகுகாலமாக இங்கே சுற்றியிருக்கிறார். அவர் பெயரும் ஒன்றும் ஜோயெல் க்ரீல் இல்லை, எப்படி கிழவர் க்ரோ என்பதும் அவர் பெயரில்லையே அதே போலத்தான் அதெல்லாம். ஆனால் அந்த இரண்டும் இப்போது அவருடைய கதையின் ஒரு பகுதியாக ஆகி விட்டன.\nகோர்பே என்ற பழைய காகக் கூட்டத்தைச் சேர்ந்த இவருக்குப் பொருத்தமான பெயராக இது இருந்திருக்கும்: கதை சொல்லி. அவர் கதைகளைச் சேகரித்தார்- அல்லது கதைகள் என்று அவர் அழைத்தவற்றைச் சேகரித்தார். அவை எப்படி ஆரம்பித்தன அல்லது முடிந்தன என்பது அவருக்கு அரிதாகவே தெரிந்திருந்தது, ஏனெனில் அவை அவருக்குத் துண்டும் துக்கடாவுமாகத்தான் கிட்டின. பஸ் நிறுத்தத்தில் தற்செயலாகக் கேட்டது. செய்தித்தாளில் எங்கோ படித்தது, அல்லது மளிகைக்கடையில் தர வேண்டிய தொகைப்பட்டியல் போடும்போது அங்கே காட்சியாக இருந்த பத்திரிகையில் படித்தது. ஒரு மதுக் கடையில் குடிகாரர் ஒருவர் சொன்னது. சில அணில் சகோதரங்கள் புறாக்களோடு கதைத்தது, இப்படித்தான்.\nகதைகள் எங்குமிருந்தன, அல்லது அவற்றின் சில்லுகள் இருந்தன, கோர்பே (காக) இனமே இப்படித் துண்டுகளைச் சேகரித்தவைதான். இவர் சேகரித்த துண்டுகள் வார்த்தைகளாக இருந்தன, பளபளக்கும் அல்லது மின்னும் துண்டங்களாக இல்லை.\n“அப்ப நீ ஜே-ஸி கிட்டே என்ன சொன்னே?” அவர் ரூபியிடம் கேட்டார்.\n“நான் அந்த மாதிரிப் பொண்ணில்லைன்னு சொன்னேன்.”\n“ஆனா நீ எந்த மாதிரிப் பொண்ணு?”\nஅவள் புன்னகைத்தாள். “திமிர் இருக்கற நல்ல பொண்ணு.”\n“அது எனக்குப் புரியுது. நான் மேலெ சொல்றதைக் கேளு. என்னோட கனவுகள்லெ எப்பவாவது வந்துட்டுப் போ. இன்னும் கொஞ்சம் வயசானவளா இருக்கணும், நான் அப்ப கொஞ்சம் இளைஞனா இருக்கேன் – அப்போ என்ன நடக்கும்னு யாருக்குத் தெரியும்.”\n“சும்மாக் கனவுதான் கண்டுகிட்டு இருக்கணும் நீங்க.”\n“நான் அதைத்தானே இப்ப சொன்னேன்.”\n“அதெல்லாம் நடக்காது. நான் இன்னும் கைல் என்னை வந்து கூப்பிடுவான்னு காத்துகிட்டிருக்கேன்.”\n“என்னது? அந்தப் பையன் என்ன குருட்டுப் பயலா? அவன் கிட்டே நான் பேசப் போறேன்.”\n“அதை நினைச்சுக் கூட பார்க்காதீங்க!”\nஅவர் உதடு விரியப் புன்னகைத்தார், சரியென்றும் சொல்லாமல், இல்லை என்றும் சொல்லாமல்.\n“உங்க விஷயம் என்ன ஆச்சு?” அவள் கேட்டாள். “நீங்க நெசம்மாவே ஒரு பெரிய நிர்வாணமான வெள்ளைக்காரப் பொண்ணைப் பத்தி நேத்திக்கிக் கனவு கண்டீங்களா என்ன?”\nஜோயி ஆமோதித்துத் தலை அசைத்தார், யோசனையில் ஆழ்ந்தார்.\n“அவ நிஜத்துல மனுஷி ரூபத்தில இருந்த கரடி ஆவி,” அவர் சொன்னார். “வேடிக்கை என்னன்னா, அவளுக்குத் தான் மனுஷி ரூபத்தில இருக்கோம்னு தெரிஞ்சிருக்கல்லை. அவ எனக்கு ஒரு தரிசனம் கொடுக்க வந்தா.”\n“ஆமா, நான் பைன் மரக்காட்டுல தூங்கிக்கிட்டிருந்தேன், அங்கேயிருந்து என்னை நகரத்துக்குள்ளெ கொண்டு வந்தாள், இந்த மாதிரி,” அவர் இரண்டு விரல்களைச் சொடுக்கினார். “அங்கே இடம் மொத்தமும் காலியாக இருந்தது. ஒரு மனுசனைக் கூடக் காணோம். சத்தமே இல்லை. ஒரு பறவைக் கூவல் கூட இல்லை.”\n“சில நாள்லெ அந்த மாதிரி இருந்தா ரொம்ப நல்லா இருக்கற மாதிரி எனக்குத் தோணும்.”\n“இது வேற மாதிரி,” அவர் சொன்னார். “அங்கே தெரு நடுவுலெ காரெல்லாம் நின்னுது, எல்லாத்தோட கதவும் திறந்து கிடந்தது- ஆனா எதும் மோதிக்கிட்டு நொறுங்கி இருக்கல்லை. ஏதோ ஜனங்களெல்லாம் அவங்க செய்துக்கிட்டிருந்ததை நிறுத்திப் போட்டுட்டு காணாமப் போயிட்ட மாதிரி இருந்தது.”\n“உங்களோட நிர்வாணப் பெண் இதைப் பத்தி என்ன சொன்னாங்க?”\n“நான் அதைச் சரி செய்யணும்னாங்க.”\nரூபி தன் தலையை உலுக்கினாள். “உங்களுக்கு ரொம்பவே வினோதமாத்தான் சொப்பனம் வருது.”\nஅவர் ஆமோதித்துத் தலையசைத்தார். அவர் சொல்லியிருக்க முடியும், “கோர்பே சகோதரங்களுக்கு இது மாதிரி நிறையவே வரும் – உனக்குத் தெரியுமே, என்னை மாதிரி காகங்களுக்கு. வரப் போகிற நிகழ்ச்சிகள் பற்றி, உற்பாதங்களைப் பத்தி எங்களுக்குச் சூசகம் கிட்டும், தீர்க்கதரிசனமும் கிட்டும். ஜனங்களை இந்த உலகிலேர்ந்து மாத்தி மத்த உலகுக்கு எடுத்துப் போகிறதும் பெரும்பாலும் நாங்கதான். மத்த உலகுன்னா, கனவுகளோட உலகங்களைச் சொல்றேன்.”\nஆனால் அவர் சொன்னது என்னவோ இதுதான், “ஆமாம், அப்படித்தான்னு சொல்லணும்.”\nமுகப்பு மேஜையில் ஒரு மணி அடித்தது, ரூபிக்கு அவளின் வாடிக்கையாளருக்குப் பண்டங்கள் தயாராகி விட்டன என்று தெரிவிக்க அது. பரிமாறுதலில் தன் தேர்ச்சியைத் தெரிவிக்கும் விதத்தில் அவள் நான்கு காலையுணவுத் தட்டுகளோடு, பழச்சாறுகள், காஃபிக் கோப்பைகளையும், ஒரு துளி கூடச் சிந்தாமல் தூக்கி வந்தாள்.\n“இன்னக்கி மாலைல உங்களுக்கு நேரம் இருக்குமா?” அவள் கேட்டாள்.\n“உல்லாசமாச் செலவழிக்க என்னைக் கூப்பிடறியா?”\n“ஐயே, ஆசையைப் பாரு. இல்லை, எனக்கு ஒரு புதுப் பாட்டைக் காட்டுவீங்களான்னு பார்க்கிறேன். போனதடவை கொடுத்த பாட்டை அனேகமா ஒழுங்காப் பழகிட்டேன்னு நினைக்கிறேன்.”\n“அதுக்கென்ன, செய்துடலாம். எனக்கு அதைச் செய்யப் பிடிக்கும்,” அவர் அவளிடம் சொன்னார். “மதியச் சாப்பாட்டுக்கு அப்புறம் வீட்டுல இருப்பேன் – அந்தக் கரடி ஆவி மட்டும் என்னை மறுபடி தேடிக்கிட்டு வராமல் இருக்கணும்.”\nரூபி தன் கையில் மேல்புறத்தில் பச்சை குத்தப்பட்ட கரிச்சான் காக்கை உருவைத் தொட்டுக் கொண்டாள். அவர்களுடைய உரையாடல் சகோதரங்களைத் தொடும்போதெல்லாம் அவள் அப்படிச் செய்வாள், வழக்கமாகி விட்டது. அது ஒரு தன்னிச்சையான செயல், அவளுக்குத் தான் அதைச் செய்கிறோம் என்பதே தெரியாது என்று அவருக்குத் தெரிந்திருந்தது.\n“நீங்க ஏன் எப்பவும் இந்த மாதிரியெல்லாம் ஏதாவது சொல்றீங்க?”\n“உங்களுக்குத் தெரியும். கரடி ஆவி, தரிசனம் இப்படி. நேத்திக்கி ஒரு பூனை உங்க கிட்டே ஏதோ சொன்னதுன்னு எங்கிட்டே சொல்லப் பார்த்தீங்க.”\n”சிவிங்கிப் பூனை சகோதரம்.”\n“என்னவாவது இருக்கட்டும். இப்படிப் பேசறது என்ன மாதிரி இருக்குங்கறது உங்களுக்கு தெரியுமில்லையா?”\n“நான் மத்த ஜனங்களை விட உலகத்திலெ நிறைய விஷயங்களைப் பார்க்கிறேன்னு தெரியுதா?”\nஅவள் சிரித்தாள். “இருக்கலாம். இல்லைன்னா நீங்க முழுசா நல்ல நிலையில இல்லைன்னும் தோணலாம்.”\nஅவள் நெற்றிப் பொட்டில் விரலை வைத்துக் காட்டினாள்.\n“நான் ஒரு போதும் முழுக்க அங்கே இருக்கறதில்லை,” அவர் அவளிடம் சொன்னார். “என் ஒரு கால் எப்பவுமே இன்னொரு உலகத்திலெதான் இருக்கு.”\n“ஆனா, வேற உலகம்னு எதுவும் இல்லைன்னு…”\nஅவள் தான் சொல்ல வந்ததை முடிக்காமல் விட்டு விட்டாள்.\n”இங்கே பாரு, நீ நிஜம்னு நினைக்க இங்கெ ஒண்ணு இருக்கு,” அவர் சொன்னார். ”கட்டிளங்காளை, அழகன் கைல் இன்னக்கி மதியச் சாப்பாட்டுக்கு வரும்போது, நீ ஏன் அவனை உன்னோட பேசிப்பழகறத்துக்கு அழைக்கக் கூடாது?”\n“என்னால அதைச் செய்ய முடியாது.”\n“ஏன்னுதான் கேட்கறேன். அதென்ன அப்படி ஒரு அடம்?”\nஅவள் பதிலளிக்க வாய் திறந்தாள், மாறாகச் சிரித்தாள்.\nஜோயி குறும்பாக நகைத்தார். “ஒரு நல்ல காரணத்தைக் கூட உன்னால யோசிக்க முடியல்லை, இல்லியா? முடியுதா?\n“இல்லை,” அவள் ஒத்துக் கொண்டாள். “எனக்கு ஒண்ணும் தோணல்லை.”\n“நீ இதை நினைவு வச்சுக்கணும்,” அவர் அவளிடம் சொன்னார், “வங்கியில உனக்கு இன்னொரு வாழ்க்கை சேமிச்சு வைக்கப்படல்லை. நீ எதை இப்ப வாழறியோ அதை வச்சு எத்தனை செய்ய முடியுமோ அதைத்தான் செய்யப் பார்க்கணும்.”\nரூபி மக்காலே, ஜோயி அந்த உணவகத்தை விட்டுப் போவதைப் பார்ப்பதற்குச் சற்று நின்றாள். ஜன்னலருகே இருந்த ஒரு தடுப்பறையின் மேஜையைத் துடைத்துக் கொண்டிருந்தாள், சாய்மானத்தின் மீது சரிந்து நின்றாள், ஒரு கால் முட்டியை அங்கு சோஃபாவின் மீது வைத்திருந்தாள், அவர் தெருவைக் கடப்பதைப் பார்த்திருந்தாள். அவர் இடது பக்கம் திரும்பினார், லீ தெருவில் தெற்குப் பக்கம் போனார். அவரைப் பார்க்க முடியாத தூரம் அவர் போன பிறகு, அவள் முன்பு செய்து கொண்டிருந்ததைத் தொடர்ந்தாள்.\nஅந்தக் கிழவரை அவளுக்கு ஏனோ பிடித்திருந்தது, அது எதனால் என்று அவளுக்குச் சொல்லத் தெரிந்திருக்கவில்லை. அவளுடைய தினம் படு மோசமாக இருந்திருக்கும் – கடுகடு வாடிக்கையாளர்கள், மோசமான இனாம், அவளுடைய முதுகும், ஆடுதசையும் வலியெடுத்திருக்கும்- ஆனால் அவர் அந்தக் கடையில் நுழைந்ததும், அந்த உணவகத்தில் அவர் அமர்ந்ததும், அவை எல்லாம் புறந்தள்ளப்பட்டு விடும். அவளுக்கு ஆகியிருந்த இருபத்து மூன்று ஆண்டுகளை அவர் எப்படியோ மாற்றி, அவளைப் பல வருடங்கள் இளையவளாக ஆக்கி விடுவார், அவள் ஒரு சிறுமி போல, மிக்க உற்சாகம் கொண்டவளாக, உலகமே அவள் முன்னால் விரிந்து கிடந்து அவளுக்காகக் காத்திருப்பது போல உணரச் செய்து விடுவார்.\nமற்றவர்கள் எல்லாருமே இப்படி உணர்ந்ததாகத் தெரியவில்லை.\n“ஐயோ, அவர் வந்தாலே எனக்கு அருவருப்பா இருக்கு,” எய்லீன் ஒரு காலையில் சொன்னாள், சில வாரங்கள் முன்பு.\nஜோயீ அப்போதுதான் வெளியே போய்க் கொண்டிருந்தார், அவள் தன் முறை வேலை நேரத்துக்காக உள்ளே வந்திருந்தாள். கேட்டதும் அசந்து போன ரூபி, அவளைப் பார்க்கத் திரும்பினாள்.\n“காமக் கிழவன்கள் கொணரும் அருவருப்பா?” அவள் கேட்டாள். “அவர் உண்மையில் கொஞ்சம் கூட கெடுதலே இல்லாதவர்.”\nஎய்லீன் தலையை ஆட்டி மறுத்தாள். “அவர் கெட்டவர்னு நான் நினைக்கல்லை. அவரோட தலைமுறை ஆட்களெல்லாம் பெண்கள் கிட்டே சரசம் பேச விரும்புவாங்க, ஆனா அதுக்கெல்லாம் ஒண்ணும் அர்த்தமில்லேன்னு எனக்குத் தெரியும், ஆனாக்க… சரி, அது இல்லை நான் நினைக்கறது.”\n”பின்னே வேறென்ன அதுல?”\n“அவர் கொஞ்சம்… அவருக்கு ரொம்ப நிறைய தெரிஞ்சிருக்கு. எல்லாத்தையும் பத்தி அவருக்கு ஏதோ தெரிஞ்சிருக்கு, அது என்ன விஷயம்னே இல்லை. எல்லாமே.”\n“அவர் ரொம்ப விவரமானவர், அவ்வளவுதான்.”\n“அதோட சிலநேரம், அவர் என்னைப் பார்க்கும்போது, அவர் என் தலைக்குள்ளே பூந்துகிட்டிருக்கற மாதிரி இருக்கும்.”\nரூபி ஆமோதிப்பாக மெல்லத் தலையசைத்தாள். எவ்வளவோ தடவைகளில் அவள் ஒரு வார்த்தை கூடப் பேசாதபோதே, அவள் என்ன நினைக்கிறாள் என்பதை அவர் எப்படியோ தெரிந்து கொண்டிருப்பார், அது கொஞ்சம் அச்சமூட்டுவதாகத்தான் இருந்தது. ஒரு தடவை அவள், அவரைப் பிறரின் எண்ணங்களை எப்படியோ தெரிந்து கொள்பவர் என்று குற்றம் சாட்டியபோது, அவர் சிரித்தார், பிறகு சொன்னார், தான் மனிதர்களைத்தான் படிப்பதாக. ஜனங்களைப் பற்றிப் பலதும், அவர்கள் எப்படித் தம்மை நடத்துகிறார்கள், மற்றும் தம் தோலுக்குள் எப்படிப் பொருந்துகிறார்கள்- இப்படிச் சொல்வது விசித்திரமாகவே அவளுக்கு அந்த நேரம் தெரிந்தது, இப்போதும் அப்படித்தானிருந்தது- என்பதிலிருந்து தனக்குத் தெரிவதாகச் சொன்னார்.\nஆனால் அவளுக்கு அதுவும் பிடித்துத்தான் இருந்தது – எப்படி அவருக்கு எல்லாச் சமயங்களிலும் சரியானதைச் சொல்லத் தெரிந்திருந்தது என்பதும், அவள் சர்க்கரை பூசிச் சொல்ல நினைக்கும்போதோ, சும்மாவே கதை விடும்போதும் அவர் எப்படி அவளை உடனே நேரடியாகக் கேட்டு விடுவார் என்பதும்.\n“ஆனா அது உனக்குத் தொல்லையா இருக்கா?” எய்லீன் அதற்கு மேல் ஏதும் சொல்லாததால், ரூபி அவளிடம் கேட்டாள்.\n“கடவுளே, ஆமாம். அது உனக்குத் தொல்லையா இல்லையா?”\nரூபி தலையைக் குலுக்கி மறுத்தாள்.\n“இருக்காது. உன்னை ஒண்ணும் செய்யாதுன்னுதான் நினைச்சேன்,” எய்லீன் சொன்னாள், “இந்தக் கடைக்கு வெளியேயும் நீ அவரைச் சந்திக்கிறியே, அதுலெயே தெரியறது. அப்படி நீங்க என்னதான் செய்வீங்க?”\n“நான் உன் கிட்டே சொல்லியிருக்கேனே. அவர் எனக்குப் பாட்டுகள் சொல்லிக் கொடுக்கறார். அவருக்கு ஆயிரக்கணக்கா பாட்டுகள் தெரியும்போலிருக்கு.”\n“நீ எப்ப வெளியில போய் அதையெல்லாம் பாடப் போகிற?”\n“ஒரு பாட்டு நிகழ்ச்சி போலன்னு சொல்றியா?”\nஎய்லீன் தலையை ஆட்டி ஆமோதித்தாள்.\n“நான் அதுக்காகக் கத்துக்கல்ல,” ரூபி சொன்னாள். “ஜோயியோட காலம் ஆனப்பறம், யாராவது அதையெல்லாம் இன்னும் நினைவு வச்சிருக்கணுமேன்னுதான் கத்துகிட்டிருக்கேன்.”\nஎய்லீன் தலையைக் குலுக்கி மறுத்தாள்.\n“இப்ப நீயும் அவரை மாதிரியே விசித்திரமாயிக்கிட்டிருக்கே,” என்றாள், ஆனால் புன்னகைத்தாள்.\n“இல்லைமா,”ரூபி சொன்னாள். “எல்லா விசித்திரத்தையும் ஜோயியே கட்டிச் சேர்த்துச் சுமந்துகிட்டிருக்காரு.”\n“யார் சொல்றாங்க பாரு,”\nஅந்தச் சம்பவத்தை நினைவு கொண்ட ரூபி, சிரித்துக் கொண்டாள். மேஜைகளைத் துடைப்பதை பூர்த்தி செய்தாள், நடுப்பகல் உணவுக்கு வரப் போகும் கூட்டத்துக்குத் தேவையான உப பதார்த்தங்கள் மேஜைகளில் இருக்கின்றனவா என்று சோதித்துக் கொண்டிருந்த ஆன்னாவுக்கு உதவி செய்யப் போனாள்.\nஇது சிரிப்புக்குரியது என்று அவள் நினைத்தாள். ஆன்னாவையும், அவளையும் அருகருகே பார்த்தால் எப்போதுமே ஆன்னா அடங்கியவளாகத் தெரிவாள். எப்போதுமே அவள் தன்னுடைய பழுப்பு நிறக் கூந்தலை பின்னே இழுத்துக் கட்டி குதிரைவால் கொண்டையாக்கி இருப்பாள், காண்டாக்ட் லென்ஸுக்குப் பதில் மூக்குக் கண்ணாடி அணிவாள், வேலை பார்க்கும்போது ஒரு போதும் முகஒப்பனை செய்து கொள்ள மாட்டாள், மாறாக ரூபியின் தலை முடி அடங்காமல் திரியும், அவள் பச்சை குத்திக் கொண்டிருந்தாள், அவள் அந்த உணவகத்தில் வேலை பார்க்கும்போது மட்டுமே முக ஒப்பனை செய்துகொள்வாள். அல்லது அவளுக்கு யாராவது ஆணுடன் மாலை நேரச் சந்திப்பு இருந்தாலும் ஒப்பனை உண்டு.\nஇரண்டு பேரில், ஆன்னாதான் சுதந்திரப் பிறவி, என்ன வேண்டுமானாலும் முயற்சி செய்யத் தயாரானவள். இந்த வருஷம் மட்டுமே அவள் கட்டற்ற வேகத்தில் இறங்கி ஓடும் கிக்காஹாஸ் ஆற்றில் படகு ஓட்டிப் போயிருந்தாள், முதல் தடவையாக விமானத்திலிருந்து பாரசூட் அணிந்து குதித்திருந்தாள், தாய்லாந்தில் இங்கிலிஷ் சொல்லித் தரும் வேலைக்கு விண்ணப்பித்திருந்தாள்.\nரூபியோ அதே ஊரில் வீட்டில் கிடார் வாசிப்பதோடு நிறுத்திக் கொண்டிருந்தாள்.\nஅவள் நெருங்கியபோது ஆன்னா நிமிர்ந்து பார்த்தாள்.\n“ஹேய்,” என்றாள் ஆன்னா.\n“உனக்கும் ஒரு ஹேய்,” என்றாள் ரூபி.\nசர்க்கரை இருந்த ஒரு குடுவையின் மூடியைத் திறந்து அதில் சர்க்கரை நிரப்பத் தொடங்கினாள்.\n“நீ எப்பவாவது ஒரு ஆணை மாலையில சந்தித்துப் பேசலாம்னு கூப்பிட்டிருக்கியா?”அவள் கேட்டாள்.\nஆன்னா சிரித்தாள். “நிச்சயமா. எனக்குப் பிடிச்சவரோட பேசிக்கிட்டிருக்க வேற எப்படி முடியும்?” சொன்னவள் தலையை ஒரு புறம் சாய்த்துப் பார்த்தபடி அகலமாகப் புன்னகைத்தாள். “ஏன்? நீ ஜோயியை அப்படிக் கூப்பிடப் போறியா?”\n“அட, அப்பிடிச் செய்வேனா. அவர் எனக்குத் தாத்தாவா இருக்கற வயசுக்காரர்.”\nஆன்னா தலையசைத்து ஒத்துக் கொண்டாள். “தாத்தா மாதிரி நல்லவரும் கூட.”\n“அப்ப வேற யாரை நீ – இரு, சொல்ல வேணாம். எனக்கு ஏற்கனவே தெரியும். அது அந்த கைல் பையன் தானே?”\n“அவன் அழகன்னு நினைக்கறேன்.”\n“உன்னோட சேர்த்து அவனைப் பார்க்கற எல்லாப் பெண்களும் அப்படித்தான் நினைப்பாங்க.”\n“ஆனா அது அவனுக்குத் தெரியாதுன்னு நினைக்கறேன்.”\n“இல்லைன்னா, அது நல்ல நடிப்பு.”\n“அப்ப, நான் அவனை சந்திப்புக்குக் கூப்பிடலாம்னு நினைக்கிறியா?”\nஆன்னா சிரித்தாள். “நீ என்ன விளையாடறியா? சும்மா போ, சொல்றேன். அவன் அப்பிடி மோசமா என்ன சொல்லிடப் போறான்?”\n“பாரு, இதுலதான் நீயும் நானும் வேற வேற,” ஆன்னா சொன்னாள். “நீ என்னவெல்லாம் நடக்குமோ அதையெல்லாம் வாய்ப்புன்னு பொத்தி வச்சுகிட்டிருப்பே, நான் நேரப் போய் வாழ்க்கையைக் குண்டியைப் பிடிச்சு இழுத்துடுவேன்.” நல்லதொரு நகைச்சுவை நடிகனைப் போல, ஒரு கணம் இடைவெளி விட்டவள், தொடர்ந்தாள், “இல்லைன்னா ஒரு அழகனை.”\nஎக்களிப்போடு, மேஜையின் மீது விரல்களால் அடித்துத் தாளமிட்டாள்.\n“ஒருவேளை நான் உன்னை ஆச்சரியப்படுத்துவேனோ என்னவோ,” ரூபி சொன்னாள்.\n“நீ அப்படிச் செய்வேன்னு நான் முழுசா எதிர்பார்க்கிறேன்,” ஆன்னா அவளிடம் சொன்னாள்.\nகைல் ஃபாஸ்டர் ‘ஃப்ரீவீலிங்’ கில் வேலை பார்த்தான், அது அதே தெருவில் கிழக்கே இருந்த, சைக்கிள்கள் பழுதுபார்க்கும் கடை. இந்த உணவகத்தில் தினம் மதியச் சாப்பாட்டுக்கு வந்து போவான். எப்போதும் ரூபியின் பொறுப்பில் இருந்த மேஜைப் பகுதிகளில் உட்காருவதையே குறிப்பாகச் செய்தான். ஆறு வாரங்களாக இப்படியே செய்கிறான். அவன் அந்தக் கடையில் வேலை பார்க்க ஆரம்பித்து ஆறுவாரங்களே ஆகி இருந்தன, அதிலிருந்து அவன் வரத் தொடங்கி இருந்தான். மென்மையாகப் பேசுபவன், தப்பாமல் மரியாதையாக நடப்பவன் – அது அவனுடைய கூச்ச சுபாவத்தால்தான், தன்னிடம் அவனுக்கு ஈடுபாடு இல்லாததைக் குறிக்கவில்லை என்றே ரூபி நம்பினாள்.\nஅவன் வந்த போது ஒரு மணி ஆக இன்னும் கால் மணி இருந்தது, அவளும் ஆன்னாவும் முன் மேஜைக்குப் பின் புறம் நின்றிருந்தனர். வருபவர்கள் தம் தேவையைத் தெரிவிப்பதை வாங்கிக் கொள்வதற்காகக் காத்திருந்தனர். ஆன்னா அவனைப் பார்த்ததும் ரூபியை இலேசாக இடித்தாள், ஆனால் ரூபி ஏற்கனவே அவனைப் பார்த்திருந்தாள்.\n“அவனோட உலகத்தை நீ புரட்டிப் போடப் போறே,” ஆன்னா அவளிடம் சொன்னாள்.\nருபி தலையசைத்து ஆமோதித்தாள்- அதைத் தான் கேட்டதாக ஆமோதிக்கத்தானே தவிர, அந்தக் கருத்தைத் தான் ஏற்றதற்காக இல்லை. ஒரு கண்ணாடிக் கோப்பையில் ஐஸ் தண்ணீரை எடுத்துக் கொண்டாள், முன்மேஜைக்குப் பக்கவாட்டுப் பெட்டி ஒன்றிலிருந்து உணவுப் பட்டியலை உருவி எடுத்தாள், அவனுடைய மேஜையை நோக்கி நடந்தாள்.\nஆன்னாவிடம் எதையும் சொல்லி இருக்கக் கூடாதென்று நினைத்தாள், ஏனெனில் இப்போது அவள் அதைச் செய்யவேண்டிய கட்டாயத்தில் அகப்பட்டுக் கொண்டிருந்தாள்.\n“ஹேய், கைல்!” என்றபடி தண்ணீரையும், உணவுப் பட்டியலையும் அவன் முன் மேஜையில் வைத்தாள்.\nசரி, இதுவரை நல்லது. அர்த்தமில்லாதது. தீதில்லாததும் கூட. குறைந்தது, அவள் திக்கித் திணறவில்லை, இன்னமும்.\nஅவன் நிமிர்ந்து அவளைப் பார்த்துச் சிரித்தான். “ரொம்ப வேலையா இன்னிக்கிக் காலைல?” என்று கேட்டான், ஆனால் தன் பார்வையை உடனே தாழ்த்திக் கொண்டான்.\n“வழக்கத்தை விட அதிகமில்ல.”\nஅவன் மூடியிருந்த உணவுப் பட்டியல் மீது கையை வைத்தான், மேஜை மீது அதை அவளை நோக்கி மெதுவாகத் தள்ளினான்.\n“எனக்கு என்ன வேணும்னு தெரியும்,” என்றான். “பாலாடைக் கட்டி, தக்காளித் துண்டுகள் எல்லாவற்றையும் சேர்த்து வாட்டின ரொட்டித் துண்டங்கள், கூடவே ஒரு சாலட் கிண்ணம்.”\n“உடனே கொண்டு வரேன்,” என்றாள், ஆனால் அவன் மேஜை அருகே நின்றபடி இருந்தாள்.\n“எல்லாம்…. ஆ… நல்லபடியா இருக்கா?” அவன் கேட்டான்.\nரூபி மூச்சை நீளமாக இழுத்துக் கொண்டாள், பிறகு கொட்டி விட்டாள், “நீங்க ஒரு மாலை விருந்துக்கோ அல்லது வேறெதற்கோ என்னோட சேர்ந்து போக வருவீங்களா?”\n”உங்களுக்குப் பிடிக்கல்லைன்னாக்க இல்லை உங்களுக்கு ஏற்கனவே ஒரு பெண் தோழி இருக்காள்னாலோ, விட்டுடுங்க, பரவாயில்லை – நான் என்ன சொல்லிக்கிட்டிருக்கேன், நிச்சயமா உங்களுக்கு ஒரு பெண் தோழி இருக்கத்தான் போறா.”\nஐயோ கடவுளே, அவள் உளறிக் கொண்டிருக்கிறாள்.\n“எனக்கு யாரும் பெண் தோழி இல்லை.” என்றான்.\n“அது எனக்கும் பிடிக்கும்.”\n“உங்களுக்குச் சரிதானா? நான் சொல்றது… ஓ, நல்லது. அது நல்ல விஷயம்.”\n“இன்னிக்கி ராத்திரி போகலாமா?” அவன் கேட்டான்.\n“இன்னிக்கேன்னா, பிரமாதம்.” அவள் உணவுப் பட்டியலை எடுத்துக் கொண்டாள். “நான்… இப்படி நான் கேட்டது விசித்திரமா இருக்குன்னு நினைச்சீங்களா… உங்களுக்கு நான் கேட்கறது புரியறதில்லியா?”\nஅவன் தலையைக் குலுக்கி மறுத்தான். “எத்தனையோ வாரமா நானே கேட்கணும்னு தைரியத்தை வரவழைச்சுக்க முயற்சி பண்ணிக்கிட்டிருந்தேன்.”\nஅவன் தலையசைத்து ஆமோதித்தான். “நிச்சயமா உங்களுக்கு ஒரு ஆண் நண்பர் இருப்பார்னு நான் நினைச்சேன்.”\nஅவள் சிரித்தாள். “எனக்கு இல்லை. நா போய் உங்களோட தேவையைத் தெரிவிச்சுட்டு வரேன்.”\nமுன்மேஜைக்கு மிதந்துதான் போகிறோம் என்பது அவளுக்கு உறுதியாக இருந்தது.\n“ஏ பொண்ணே!” என்றாள் ஆன்னா. “அந்த இளிப்பு உன் மூஞ்சில இருக்கறதைப் பார்த்தாலே தெரியுது, என்ன ஆச்சுன்னு நான் கேட்கவே வேண்டியதில்லை.”\n“அவனே என்னை அழைக்கறதா இருந்தானாம். ஆனா அவனுக்கு ரொம்பக் கூச்சமா இருந்திருக்கு.”\n“உனக்கு வேணுமுன்னா நானும் கூட வரட்டுமா- நீங்க ரெண்டு பேரும் இப்படி ஆசையைக் காட்டத்தான் சேர்ந்திருக்கீங்க, அதனாலெ ஒருத்தரோட ஒருத்தர் நிஜம்மா பேசணுங்கறதை உங்களுக்கு நினைவுபடுத்த ஒருத்தர் வேண்டிருக்குமா?”\nரூபி தன் நாக்கைத் துருத்தி அழகு காட்டி விட்டு, சமையலறை ஜன்னலுக்குப் போய் கைல் வேண்டியதைச் சொன்னாள்.\nரூபி வருவதற்கு முன் ஒரு குட்டித் தூக்கம் போடலாமென்று ஜோயி எண்ணினார். தன் கிடாரைச் சரியாகச் சுருதி மீட்டினார், அதை இருக்கையின் பக்கத்தில் சாய்த்து வைத்தார். நீட்டிப் படுத்தார், கண்கள் மீது ஒரு கையை வைத்து மூடிக் கொண்டார். தூக்கத்தில் ஆழ அவருக்கு ஒருபோதும் தொல்லை இருந்ததில்லை, வேண்டும்போது விழிப்பதும் அவருக்கு எளிதாக இருந்தது, இந்த மாலையும் அதேபோலத்தான் இருந்தது.\nகிழவர் க்ரோவுக்கு ஒரு யோசனை வந்தது அதனால், இந்தத் தடவை மற்ற உலகத்துக்குக் கடந்து போனபோது, அவர் கருப்புச் சிறகுகளால் பறந்தார். பைன் காட்டுக்குள் போகவில்லை, ஆனால் நகரத்திலேயே இருந்தார், இரவு ஏற்கனவே வந்திருந்த அந்த மற்ற உலகத்திலேயே தங்கினார். ஓர் உலகுக்கும் மற்ற உலகுக்கும் நேரம் நேர்நிலையாகப் பொருந்தி வருவதில்லை.\nஅவர் ஒரு விளக்குக் கம்பத்தில் அமர்ந்தார், இரவு மனிதர்கள் தம் வேலைகளைச் செய்யப் போய் வருவதைப் பார்த்திருந்தார், டாக்ஸி ஓட்டுபவர்கள், கேளிக்கை விடுதிகளுக்குப் போவோர், போதைப் பொருள்களை விநியோகிப்பவர்கள், பொலீஸ் ரோந்து வண்டிகள், நாய்களுக்கு நடை பழக அழைத்துப் போவோர், மற்றும் மக்கென்னிட் தெருவில் அட்டைகளால் தற்காலிகத் தங்குமிடங்களை நிறுவிக் கொண்டிருக்கும் வீடற்ற மனிதர், எல்லாரையும் பார்த்தார்.\nஆனால் அந்நேரம், ஒரு கணத்துக்கும் அடுத்ததுக்கும் இடையில், திடீரென்று அங்கு ஒரு மனிதர் கூட இல்லை, எல்லாம் அமைதியாகிப் போயிற்று. சலனமின்மை, நிச்சலனம், ஆழ்ந்த ஸ்தம்பிதம். இது பின்னிரவின் அமைதி இல்லை, ஏனெனில் இரவு எத்தனை நேரமானாலும், அந்த நகரம் உறங்குவதே இல்லை. அங்கு எப்போதுமே காற்றில் ஒரு ரீங்கரிப்பு இருக்கும் – கம்பிகளில் பாயும் மின்சாரம், ஒரு காலடி ஓசை, மக்கள் விடும் மூச்சின் ஒலி.\nஇன்றிரவோ, அங்கு எதுவுமே இல்லை. தெருக்களில் கார்கள் என்னவோ இன்னும் இருந்தன, ஆனால் அவை எல்லாம் காலியாக இருந்தன, அவற்றின் கதவுகள் திறந்தபடி கிடந்தன- கரடி ஆவி நேற்று இரவு அவருக்குக் காட்டிய மாதிரியே எல்லாம் இருந்தது. அவர் கவனத்தோடு உற்று நோக்கித்தான் இருந்தார், ஆனால் கார்களை விட்டு விட்டு ஜனங்கள் போனதை அவரால் பார்க்கவில்லை.\nகடைசியில், அவர் ஓர் ஒலியைக் கேட்டார். தெருவில் மெத்தென்ற பாதங்களின் நடையொலி கேட்டது, அவர் மேலே நோக்கினார், அவளைப் பார்த்தார், நின்றிருந்த கார்களின் இடையே நடந்து வந்தாள். கரடி ஆவி, இப்போது தன் உரோமமடர்ந்த தோலைப் போர்த்தி இருந்தாள், நான்கு கால்களாலும் நடந்து வந்தாள்.\nஅவள் வருவாளா என்றும், அப்படியே வந்தால், கருப்பு இறகுகளில் போர்த்திய முதிய காகத்தைச் சந்திக்க என்ன உருவில் வருவாள் என்றும் யோசித்திருந்தார்.\nஅவர் விளக்குக் கம்பத்திலிருந்து மிதந்து இறங்கி, அங்கு நின்ற கார் ஒன்றின் மீது அமர்ந்தார், அதன் திறந்த கதவின் விளிம்பைக் கால் நகங்கள் கிடுக்கிப் பிடியாகப் பிடித்திருந்தன. கரடி ஆவி அவரருகே நின்றாள்.\n“பாருங்க,” என்றவள் தன் கூம்பு முகத்தால் மேலே சுட்டினாள்.\nகிழவர் க்ரோ மேலே பார்த்தார், அவள் என்ன சுட்டுகிறாள் என்பதை அறிந்தார். கட்டடங்களின் மேல் பகுதிகள் காணப்படவில்லை. பத்து, பதினைந்து அடுக்குகளுக்கு மேலே அவை கரைந்து காணாமல் போயிருந்தன.\n“நீங்க அதை நிறுத்தணும்,” அவள் அவரிடம் சொன்னாள்.\n“எதை நிறுத்தணும்? அங்கே என்ன நடக்கிறது?”\n“எல்லாம் போய்கிட்டே இருக்கு. மக்கள், நகரம் எல்லாம்.”\n“மரியாதைக் குறைவாச் சொல்ல வரல்லை,” அவர் சொன்னார், “ஆனால் அஞ்சு விரல் ஜீவன்கள் என்ன செய்றாங்கன்னு எப்போலேருந்து உங்களுக்கு அக்கறை வந்தது?”\n“நான் அக்கறைப்படல்லை. நீங்க படணும்.”\n“அதெல்லாம் எதனாலெ நடக்குது?”\n“அங்கே உயரே ஏதோ இருக்கு,” அவள் தன் முகத்தை மேலுயர்த்திக் காட்டிச் சொன்னாள். “அப்புறம் உங்க கிட்டே இருக்கற ஏதோ விஷயமும் காரணம்.”\nஅவள் மூன்றாவது முறையாக, கட்டடங்களை விழுங்கிக் கொண்டிருக்கும் இருண்ட இரவுக்குள் மேலே சுட்டினாள்.\nஅங்கே எதுவோ சரியாகத்தான் இல்லை- கிழவர் க்ரோவுக்கு அது தெரிந்திருந்தது. அவருடைய வயதாகிப் போன எலும்புகளுக்குள் வரை கூட அவருக்கு அது உணர்த்தப்பட்டிருந்தது. ஒருவேளை அவருடைய எலும்புகளுக்குள் அவர் உணர்ந்ததும், மேலே ஆகாயத்தை மூடிய இருட்டும் ஒன்றேதானோ என்னவோ, அப்படியானால் அவள் சரியான இலக்கைத்தான் தொட்டுச் சுட்டியிருக்கிறாள்.\nஅவர் தன் கரிய இறகுகளை விரித்தார், கார்க் கதவிலிருந்து மேலே எழும்பினார். ஒரு மாடி, மூன்று மாடிகள், மேலெழுந்து போனவர் உடனே இருளுக்குள் சென்று விட்டார். எங்கே பார்த்தார் என்பது இப்போது ஒரு பொருட்டாக இல்லை, மேலே, கீழே, இருபுறமும் பக்கவாட்டில். எல்லாமே இருட்டு.\nஅவருடைய நெஞ்சில் இறுகலாக உணர்ந்தார், அவருடைய இடது புறச் சிறகுக்கு ஏதோ ஆயிற்று. அது மரத்துப் போயிற்று, அவரால் அதை அசைக்க முடியவில்லை. கீழே விழத் தொடங்கினார். தன் வலது சிறகால் கீழே விழுவதை மெதுவாக்க முயன்றார், ஆனால் அது அவரைச் சுழற்சியில் தள்ளியது, சுற்றிச் சுற்றி, கீழே கீழே…\nஜோயி விழித்தபோது பார்த்த ஒளி அவரைக் குருடாக்குவது போலிருந்தது. அதனால் கண்களை மறுபடி மூடினார்.\n”ஜோயீ?” பழக்கமான ஒரு குரல் விளித்தது.\nஅவரால் அதை அடையாளம் காண முடியவில்லை. அது பொருந்தாத இடத்திலிருந்து வந்தது. இது என்ன இடமாக இருந்தாலும் இங்கு அவர் பொருந்த மாட்டார்.\nஅவர் தான் மிருதுவான எதன் மீதோ படுத்திருப்பதை அறிந்தார். அது ஒரு மெத்தை போல இருந்தது. படுக்கை.\nஅவர் கண்களை மறுபடி திறந்தார், அந்த பிரகாசமான ஒளியால் கண்களை வருத்தாமல் இருக்கக் குறுக்க வேண்டி இருந்தது. ரூபியின் முகம் அவர் பார்வையை நிறைத்தது, பின் அவரால் ஏதும் பார்க்க முடியவில்லை, அது அவள் குனிந்து அவரை அணைத்ததால் என்று உணர்ந்தார்.\n“கடவுளுக்கு நன்றி சொல்லணும், நீங்க திரும்பி வந்ததுக்கு,” அவள் சொன்னாள்.\nஅப்போது அவருக்கு நினைவு வந்தது. தான் எல்லை தாண்டியது. கரடி ஆவி. தன்னை விழுங்கிய இருள்.\n“என்ன ஆயிற்று?” அவர் கேட்டார்.\nரூபி நிமிர்ந்து அமர்ந்தாள், தான் எங்கே இருக்கிறோம் என்று அவருக்குத் தெரிந்தது. ஒரு மருத்துவ மனையில். நான்கு படுக்கைகளில் ஒன்றில். ரூபி அருகே இருந்த ஒரு நாற்காலியில் அமர்ந்திருந்தாள்.\n“உங்க அடுக்ககத்துக்கு என்னோட பாட்டு வகுப்புக்காக வந்தேன்,” அவள் சொன்னாள், “நீங்க கீழே விழுந்திருந்தீங்க, உங்களோட முன் அறையில நடுப்பற கீழே கிடந்தீங்க, அதனாலெ நான் 9-1-1 ஐக் கூப்பிட்டேன்.”\n“ஓ, அப்படியா, அதான் கீழே விழுந்திட்டீங்க போல இருக்கு. இங்கே நர்ஸ்களோட மையத்தில நான் உங்க பேத்தின்னு சொன்னேன், அதான் இங்கே என்னை இருக்க விட்டாங்க.”\nரூபி புன்னகைத்தாள். அவள் என்ன நினைத்தாள் என்று அவருக்குத் தெரிந்திருந்தது. ஆமாம், இந்த கருப்பினக் கிழவனும், பிடாரி போல இருக்கற வெள்ளைக்காரப் பெண்ணும் ரொம்பவே உறவுதான் என்று நினைப்பாள்.\n“அப்படீன்னு ஏன் சொல்றீங்க?” அவள் கேட்டாள்.\nஅவர் தன் கையை உயர்த்தி அவளுடைய சட்டையின் கையைத் தொட்டார், அது அவள் அங்கே குத்திக் கொண்டிருந்த பச்சையை மறைத்திருந்தது.\n“கரிச்சான் காக்கையும், காகமும். நாம் இருவரும் காக்கைக் குடும்பம்- நான் இதை உனக்கு முன்னமே சொல்லி இருக்கேன்.”\nஅவள் மறுபடியும் புன்னகைத்தாள். “நீங்க எனக்கு நிறைய சொல்லி இருக்கீங்க, ஜோயீ.”\n“ஆனா, நீ எதையும் நம்பினதில்லையே.”\nஅவரால் இதை இப்போது காண முடிந்தது, தன்னை ஒரு முட்டாளென உணர்ந்தார். அவர்களிருவரிடையே ஒரு உறவு இருந்ததாக அவர் நினைத்திருந்தார். அவளும் அந்த உறவை உணர்ந்திருந்தாள் என்றும் நினைத்தார். இல்லையென்றால் ஒரு கிழவரோடு அத்தனை நேரத்தை அவள் ஏன் செலவழிக்கப் போகிறாள்? எதற்காகப் பழைய பாடல்களைக் கற்க விரும்பப் போகிறாள்?\nஇப்போது அவள் தன்னிடம் காட்டியது பரிவு என்று புரிந்தது. அது தாராள மனதால் செய்யப்பட்ட தானம், உறவுப் பிணைப்பில்லை.\nஇப்போது அவருக்கு இருந்த ஒரே ஒரு நம்பிக்கை, அவளுக்கு இசை மீதிருந்த ஆர்வம் நிஜமானதுதான் என்று பாவிப்பதுதான். அந்த மாதிரி ஆர்வத்தை மறைக்க முடியாது.\n“உங்களோட கதைகள் எனக்குப் பிடிக்கும்,” என்றாள்.\n“அதெல்லாம் வெறும் கதைகளில்லை.”\n“அவை கதைகளில்லை என்று எனக்குத் தெரியும்- உங்களுக்கு அப்படி இல்லை. ஆனால் எனக்கு வேற மாதிரிதான் இருந்தன.”\n“நான் ஏன் அதை எல்லாம் உனக்கு மறுபடி மறுபடி சொல்லிக்கிட்டிருந்தேன்னு எப்பவாவது யோசிச்சிருக்கியா?”\n“உங்களுக்கு அப்படிச் செய்யப் பிடிக்குங்கறதாலெ.”\nஅவர் தலையைக் குலுக்கி மறுத்தார். “உனக்குள்ளெ தூங்கிக்கிட்டிருக்கிற தாயாதி ரத்தத்தை எழுப்பறதுக்காக. உனக்கு நினைவில்லைன்னாலும், அதுக்கு நினைவிருக்கு.”\n“நீ எதுக்காக கரிச்சான் காக்கையைப் பச்சையாக் குத்திக்கிட்டே?”\nஅவளுக்கு இப்போது ஆச்சரியம் எழுந்தது.\n“எனக்கு விளக்கித்தான் பாரேன்.”\n“எனக்குத் தெரியலை. எனக்கு அதுங்களை எப்பவுமே பிடிக்கும்.” அவரை நோக்கி ஒரு சிறு புன்னகை புரிந்தாள், ஏதோ அவரிடம் மன்னிப்பு கோருவது போல இருந்தது அது. “அதுங்களோட எனக்கு ஏதோ தொடர்பு இருக்கற மாதிரி எனக்கு இருக்கு. நீங்க எனக்குச் சொல்லிக் கொடுத்த அந்தப் பாட்டுல வர மாதிரி.”\nஅவள் மென் குரலில் அதைப் பாடினாள்:\nஊசியிலை மரத்தில் கரிச்சான் குருவி\nபாடுகிறாய், உண்மையன்பே, வருவாயா என்னிடம்\nஅவளின் நீளக் கரும் வாலும், வெண்பனி நெஞ்சும்\nஅவள் மீது காதல் கொண்டதே என் நெஞ்சம்.\nஜோயி ஆமோதிப்பாகத் தலையசைத்தார். பெருமூச்சு விட்டவர், கண்களை மூடிக் கொண்டார்.\n“நல்லது, என்னால முடிஞ்சதைப் பண்ணினேன்,” என்றார்.\nஅவர் தன் கண்களை மூடியபடி இருந்தார். அது நடந்து விட்டது, என்று நினைத்தார். சில சமயங்களில் ஏற்கப்படுவது நேர்வதில்லை. சில சமயங்களில் பழைய ரத்தம் இன்னும் ஒளிந்திருக்கவே விரும்புகிறது. அது யாருடைய பிழையும் இல்லை.\n“அப்படி இருக்காதீங்க.” அவளுடைய கை தன் கரத்தின் மீது படுவதை அவர் உணர்ந்தார். “நான் உங்கள் மனசை நோகடிக்க நினைக்கல்லை. நீங்க நல்லாயிடுவீங்கன்னு தெரிஞ்சு எனக்கு ரொம்பவே மகிழ்ச்சியா இருக்கு.”\nஅவர் அவளை மறுபடி பார்த்தார்.\n“டாக்டர் உங்களுக்கு வந்தது வாத வலிப்பு இல்லைன்னு சொன்னார். ஆனால் அவர் இன்னும் சில சோதனைகளின் முடிவுகள் தெரிவதற்குக் காத்திருக்கிறார்.”\n“நீங்க ரொம்ப நேரம் நினைவில்லாம கிடந்தீங்க, ஜோயீ.”\nஅவர் அங்கீகரிப்பாகத் தலையசைத்தார். இருள் அவரைப் பற்றிக் கொண்டு போயிருந்தது. அவர் அதை நினைவு கூர்ந்தார். அவருடைய சிறகு மரத்துப் போயிருந்தது, அவர் கீழ் நோக்கிச் சுழன்று சுழன்று சரிந்து வீழ்ந்து கொண்டிருந்தார்.\n“நீங்க மயக்கமடிச்சு விழுந்திருப்பீங்கன்னு அவர் நினைக்கிறார்- ஆனா உங்களோட வயசுல அது தீவிரமான பிரச்சினைதான், ஏன்னா அது ஏன் நடந்ததுன்னு அவங்களாலெ புரிஞ்சுக்க முடியல்லை.”\n“நம்ம குடும்பத்துக்காரங்க பொதுவா நோய்வசப்படுவதில்லை- ஐந்து விரல் ஜீவன்கள் மாதிரி இல்லை நாம.”\nஅவள் அவரைக் குழப்பத்தோடு பார்த்தாள், பிறகு புரிந்தது போலத் தலையசைத்தாள்.\n“சரி,” என்றாள். “ஆனா உங்களுக்கு ஏதோ நடக்கத்தான் செய்தது. அதனாலெ அவங்க உங்களைக் கவனிப்புல வச்சிருக்காங்க.”\n“கவனிக்க எதுவுமே இல்லை. நிறைய கதைகளோட இருக்கற ஒரு கிழவன், அதுவும் புத்தி அதிகம் இல்லாதவன், அவ்வளவுதான்.”\n“ஓ, ஜோயீ. நான் சொன்னதுக்கு அப்படி ஏதும் அர்த்தமில்ல-”\n“நாம வேற எதையாவது பத்திப் பேசலாமே. அந்தப் பையனைச் சந்திப்புக்கு அழைச்சியா?”\nஅவளுடைய கவனத்தைத் திருப்ப அதுதான் மிகப் பொருத்தமான விஷயம்.\n“அவன் சரீன்னு சொல்லிட்டான்!” என்றாள். “நாங்க போகப் போறோம் – ஓ, கடவுளே!” அவள் தன் கைக்கடிகாரத்தைப் பார்த்தாள். “அவன் வேலை முடிஞ்சு வரப்போ நான் அவனைப் பார்க்க வரேன்னு சொல்லி இருந்தேன்.”\n“இல்லை. நான் உங்களை விட்டுப் போக முடியாது.”\n“நான் நல்லாத்தான் இருக்கேன்,” அவர் சொன்னார். “ஹாஸ்பிடல்லெ இருக்கேன். அவங்களுக்கு ஜனங்களை எப்படிப் பார்த்துக்கிடறதுன்னு நல்லாத் தெரியும். நீ இப்போவே போகணும், அப்புறம், நாளைக்கு நான் இங்கேயே இன்னும் இருந்தாக்க, நீ என்ன நடந்ததுங்கற விவரத்தை எனக்குச் சொல்லணும்.”\nஅவள் உடனேயோ, விருப்பத்தோடோ போகவில்லை, ஆனால் கடைசியாக அவர் அவளை ஒத்துக்கொள்ளச் செய்தார். அவள் எழுந்து நிற்கு முன், சாய்ந்து, அவருடைய நெற்றியில் ஒரு முத்தமிட்டாள்.\n“உங்களுக்கு இது சரியாப்படுதா,” அவள் மீண்டும் துவங்கினாள்.\nஅவர் அவளைப் பார்த்துச் சிரித்தது பளீரென்று துலங்கியது. “எனக்கு நிச்சயமாத் தெரியும். போ, போ. எனக்கு எப்படியும் கொஞ்சம் ஓய்வு தேவை. இன்னிக்கு எனக்கு ஏற்கனவே நிறைய அதிசயமா நடந்துட்டுது.”\n“என்னோட முறை வேலை முடிஞ்சதும் நாளைக்குப் பார்க்க வரேன். உங்களை நானே ஒருகால் வீட்டுக்கு அழைச்சுப் போக முடியலாம்.”\nஅவர் ஆமோதித்துத் தலையசைத்தார். “நீ வரும்போது ஒரு கப் காஃபி கொண்டு வா, வரியா? இங்கே என்ன மாதிரி காஃபி வச்சிருப்பாங்கன்னு எனக்கு ஊகிக்க முடியுது.”\nஅவள் போனபோது அவர் கண்களை மூடிக் கொண்டார்.\nகிழவர் க்ரோ மறுபடியும் மறு பக்கத்துக்குக் கடந்தார், கருப்புச் சிறகுகளால் இரு உலகுகளுக்கு இடையே இருந்த காற்றைக் கிழித்துக் கொண்டு போனார். இந்த முறை அவர் கரடி ஆவி அவரைக் கண்டு பிடிக்கக் காத்திருக்கவில்லை, ஆனால் மலையில் உயரத்தில், பனிப் பாறைகளால் நீரூட்டப்பட்டு, மறைவாக இருந்த அந்த ஏரியருகே அவளைத் தேடினார். அது ஆவிகளின் ஏரி.\nஅவர் மலைகளிடையே உயர உயர எழுந்து, பைன் காடுகளுக்கு மேலே பறந்தார், கனவுப் பரப்புகளூடே வடதிசையை நோக்கிப் போனார். மரங்களின் வரம்புக் கோட்டைத் தாண்டி மேலே போனவர், அங்கே காற்று வெளியின் அடர்த்தி குறைவாக ஆனதால், இன்னும் மேலெழுவதற்குப் பிரயாசை கூட்ட வேண்டியதைக் கண்டார், மேலும் அங்கே காற்றில் மிதந்து போக உதவும் காற்று ஓட்டங்களும் இல்லை. ஆனால் நகரத்தில் அவரைச் சூழ்ந்து இறுக்கிய இருளும் அங்கு இல்லை, எனவே அவர் தனக்கு அதிர்ஷ்டம் என்று நினைத்துக் கொண்டார்.\nஇறுதியாக ஒரு கணவாய் வழியே மிதந்து போனார், பசுமையான நீண்ட பள்ளத்தாக்கு ஒன்றுக்குள் இறங்கினார், அங்கு காடாக வளர்ந்த பைன் மற்றும் டாமராக் மரங்கள் ஓர் பதுங்குமிடம் போல உருவாக்கியிருந்த பகுதியில் பெருமதிப்புள்ள அணிகலன் போல அந்த ஆவிகளின் ஏரி கனவுகளால் மூடப்பட்டிருந்தது. நீண்டதொரு சுழற்சியில் அவர் வழுக்கிச் சரிந்து இறங்கும்போது தன் சிறகுகளுக்கு ஓய்வளித்திருந்தார், அப்போது அவரால் அந்த ஏரிக்கரையின் எல்லாப் பகுதிகளையும் பார்க்க முடிந்தது. அவர் ஏரியின் வடபகுதியைப் பார்த்து நின்ற, காய்ந்து போன ஒரு பைன் மரத்தின் ஒரு கிளையில் அமர்ந்தார்.\n“நீஙக இங்கே இருக்கீங்கன்னு எனக்குத் தெரியும்,” மூச்சு வாங்கியது நின்று சமநிலை திரும்பியதும், அவர் சொன்னார்.\nஅவர் தன் கிளையில் திரும்பி மறுபுறம் நோக்கி அமர்ந்தார், பைன் மரங்களின் நிழலிலிருந்து தன்னைப் பார்த்துக் கொண்டிருக்கும் கரடி ஆவியைக் கண்டார்.\n“ஆமாம்,” என்றார். “இப்பவாவது தெரிஞ்சுகிட்டேன்.”\nஅவளுடைய கண்களில் நகைப்பின் கீற்று மின்னியதைப் பார்த்தார், அப்போது அவள் காட்டுக்கும், அவளுக்காகக் கிழவர் க்ரோ காத்திருந்த அந்தக் காய்ந்து போன பைன் மரத்துக்கும் இடையில் துருத்தி நின்ற சுண்ணாம்புப் பாறைக்கு தடம் பதித்து வந்தாள்.\n“என்னை என்ன செய்தீங்க நீங்க?” அவர் கேட்டார். “போன தடவை நான் கனவு கண்டுகிட்டிருந்தப்போ.”\n“நான் எதுவும் செய்யல்லை. உங்களுக்கு அதைக் காட்டத்தான் வந்தேன்.”\n“அந்த இருளை, ஆமாம். அது என்னை அப்படியே விழுங்கிடுத்து.”\n“எனக்குத் தெரியும், நான் பார்த்தேன்.”\n“அதுதான் என்ன? அது எல்லாத்தையும் அழிச்சுகிட்டு வருது, எனக்குள்ளே அது இருக்குன்னு சொன்னீங்க இல்லையா?”\nகரடி ஆவி தலையசைத்து ஆமோதித்தாள்.\n“எனக்குப் புரியல்லே. நீங்க ஏன் நேரா எங்கிட்டெ சொல்ல மாட்டேங்கிறீங்க?”\nஅவள் அவரை ஒரு நீண்ட கணம் உற்றுப் பார்த்தாள், பின் மறுபடி தலையசைத்தாள்.\n“நீங்க தான் ஒரு காகம்னு கனவு காண்கிற மனுசனா மாறிட்டீங்க,” என்றாள் இறுதியாக.\n“நீங்க ஒரு காகமா இருந்தீங்க, மனுசனா இருக்கறதைப் பத்திக் கனவு கண்டுகிட்டிருந்தீங்க, உங்களோட பழைய ரத்தம் வலுவா ஓடிக்கிட்டிருந்தது. ஆனா இப்ப?” அவள் எதிர்மாறாக ஆனதைச் சுட்டும்படி தோள்களைக் குலுக்கினாள். “உங்களோட அந்த நீண்ட வாழ்க்கையை நீங்க வாழவே இல்லைங்கற மாதிரி ஆயிட்டுது. நீங்க இப்ப ஒரு அஞ்சு விரல் பிராணியாகிட்டீங்க, வயசாயிப் போய், உங்களோட வாழ்க்கையின் அந்திம காலத்துக்கு வந்துட்டீங்க.”\n“இது எப்படி ஆச்சு?”\nகிழவர் க்ரோ இந்தக் கேள்வியை கரடி ஆவியிடம் மட்டும் கேட்கவில்லை, தன்னிடமும் கேட்டுக் கொண்டார், ஏனெனில் அவளுடைய சொற்களில் இருந்த உண்மையின் கனம் அவருக்குத் தெரிந்தது. அவர் பெருமளவு மனிதனாகவும் சொல்பமே காகமாகவும்தான் ஆகி விட்டார். இது நடந்து பல வருடங்களாகி விட்டன. மனிதனாக வாழ்ந்தபடி, கனவுகளில் மட்டுமே பறந்து கொண்டு வாழ்ந்திருக்கிறார்.\n“நான் உங்களுக்கு அதைச் சொல்லணுமா?”\nஅவர் தலையை ஆட்டி மறுத்தார்.\n“இது யாருக்கு வேண்டுமானாலும் நடக்கக் கூடும்,” அவள் சொன்னாள். “இரண்டு கால்களில் நடந்து கொண்டு, பேசிப் பேசிப் பேசி, மறு உலகில் ரொம்ப காலம் வாழ்ந்தால்.”\n“காகங்கள் எப்போதுமே பேசிக் கொண்டுதான் இருக்கின்றன.”\nஅவள் ஆமோதித்துத் தலையசைத்தாள். “தங்களுக்குள். ஐந்து விரல் பிராணிகளோடு இல்லை. இல்லை என்பதோடு, தாம் பேசுவது அவர்களுக்குப் புரியும் என்றும் எதிர்பார்ப்பதில்லை.”\n“ஆனால் அவர்களில் சிலரிடம் பழைய ரத்தம் ஓடுகிறதே, மெலிதாக ஆகி, கனவுகிறதாகவும் இருக்கிறது. அதற்கு விழிப்பூட்டினால் போதும்.”\n“அவர்கள் நடுவே வாழாமலே அவர்களுக்கு நீங்கள் சொல்லிக் கொடுத்து விட முடியும்.”\n“நான் உங்கள் மனச்சாட்சியோ, தாயாரோ இல்லை,” கரடி ஆவி அவரிடம் சொன்னாள். “உங்கள் வாழ்க்கையை நீங்கள் விரும்புகிறபடி செலவழிக்கலாம்.”\nஅதை ஏற்று அவர் தலையசைத்தார்.\n”தவிர, நான் அனேகமாக காகக் குடும்பங்களின் காரணங்களையும், அவை எங்கே இருக்கின்றன என்பனவற்றையும் பற்றி அக்கறை கொள்வதுமில்லை.”\nஆனால் அவள் புன்னகைத்தாள். “இருந்தாலும், தூங்குகிற சொந்தக்காரர்களை விழிக்க வைக்கிறதுல உங்களுக்கு ஆர்வம் இருக்கிற மாதிரி, காகங்களின் உறவுகாரர்களுக்கு அவர்கள் யார்- அல்லது யாராக முன்பு இருந்தனர் – என்பதை நினைவுபடுத்துவதற்கு எனக்கு ஈடுபாடு வருகிறது.”\n“அந்த இருள்,” கிழவர் க்ரோ சொன்னார். “அது என் மரணம்தான், இல்லையா?”\n“எல்லாம் கரைஞ்சு போகிறதா நீங்க சொன்ன போது, என்னோட உணரும் திறமையெல்லாம் போய்க் கொண்டிருக்குன்னு சொல்ல வந்தீங்க. அதனாலெதான் நான் ஒரு ஆஸ்பத்திரிப் படுக்கையில விழிச்சு எழுந்தேன். நான் செத்துப் போயிட்டிருந்தேன்.”\nஅவள் மறுபடியும் ஆமோதித்துத் தலையசைத்தாள்.\n“நான் இன்னமும் செத்துகிட்டிருக்கேனா?”\n“நாம எல்லாருமே செத்துகிட்டிருக்கோம், காகக் கிழவா. ஒவ்வொரு நாளும். ஐந்து விரல் பிராணிகளுக்கும் காகங்களுக்கும் இதெல்லாம் பொது. ஆனா நாம வாழ்ந்துகிட்டும் இருக்கோம். சில சமயம் நமக்கு அது மறந்து போயிடுது.”\nஅவர்கள் கொஞ்ச நேரம் பேசாமல் இருந்தனர். இங்கே நிசப்தமாக இருக்கிறது, கிழவர் க்ரோ எண்ணினார், ஆனால் இது இயற்கையான அமைதி. பைன் கிளைகளூடே தென்றல் பெருமூச்சு விட்டுக் கடந்தது. கரையில் ஏரி நீரலைகள் சலசலத்தன.\n“இதனாலெ மனிதர்களுக்கு உதவறதை நீங்க நிறுத்தணும்னு இல்லை,” கரடி ஆவி சொன்னாள்.\nகிழவர் க்ரோ தலையசைத்து ஏற்றார். “ஆனா, நான் யாருங்கறத்தையும் நான் நினைவு வச்சிருக்கணும், அதானே.”\n“நீங்க அதைச் செய்யணும்.”\n“சரி, இப்ப அடுத்ததென்ன?”\nஅவள் தோள்களைக் குலுக்கினாள். “நீங்க காகமா இருக்க முயற்சி செய்துகிட்டு, மனுசனா இருக்கறதைப் பத்திக் கனவு மட்டும் காணலாம்.”\nலீ தெருவுக்குப் போகும் தரையடி ரயிலைப் பிடிக்கையில் ரூபியின் மனம் உற்சாகமாக இருந்தது. முன்னம் ஜோயியின் இடத்தில் முன்னறையில், தரையில் விழுந்து கிடந்த அவரைப் பார்த்தது அவளை நிறையவே பயமுறுத்தி இருந்தது. ஆனால் அவள் இப்போது தெம்பாக உணர்ந்தாள். மருத்துவ மனையை விட்டுச் செல்லுமுன், மருத்துவர் அவளிடம் ஜோயிக்கு சாவு அவ்வளவு சீக்கிரமாக வராது என்று நம்பிக்கை ஊட்டி இருந்தார்.\n“உங்க தாத்தா, குதிரை மாதிரி ஆரோக்கியமாத்தான் இருக்கார்,” அவர் அவளிடம் சொன்னார்.\n“அப்ப அவர் ஏன் அப்படி விழுந்து கிடந்தார்?”\n“எனக்கு இன்னும் தெரியல்லை. சோதனைகளோட முடிவு தெரியறதுக்கு நான் காத்துகிட்டிருக்கேன். ஆனா, இப்போதைய நிலையைப் பார்த்தா, அவரை நாளைக் காலையில வீட்டுக்கு அனுப்பலாம்னு நிச்சயமாச் சொல்வேன்.”\nஆனால் கவலைப்பட இன்னும் ஏதோ கொஞ்சம் இருக்கவே செய்தது, இருந்தாலும் இப்போதைக்கு, அவர் நலமாக இருக்கிறார், திறமையானவர்களின் மேற்பார்வையில் இருக்கிறார் என்று அவளுக்குத் தெரிந்திருந்தது. மேலும் அவள் கைலை ஒருவழியாக இப்போது சந்திக்கவிருக்கிறாள். அவள் திரும்பி, ஜன்னலில் தன் பிரதிபலிப்பைச் சோதித்தாள், ஆனால் அந்த ஜன்னல் அத்தனை அழுக்காகவும், கறை படிந்தும் இருந்ததால், அவளுடைய முகம் என்ன நிலையில் இருக்கிறது என்று அவளுக்குத் தெரியவில்லை. ஒப்பனைக்காக அவளிடம் இருந்த சிறு பேழையைத் திறந்து, தன் உதட்டுச் சாயப் பூச்சைப் புதுப்பித்துக் கொண்டாள், கன்னங்களில் வண்ணப் பூச்சை இலேசாக ஒற்றிக் கொண்டாள், அதற்குள் அவள் சேர வேண்டிய நிறுத்தம் வந்திருந்தது, அவள் இறங்க வேண்டியிருந்தது, படிகள் மேலேறித் தெருவை நோக்கி நடந்தாள்.\nஅந்த சைக்கிள் கடை, ஃப்ரீவீலிங், மூடிப் பத்து நிமிடங்கள் ஆகி இருக்கும். கைல் அங்கே இல்லை என்றால் என்ன செய்ய? அவள் வராமல் அவனை ஏமாற்றி விட்டதாக அவன் நினைத்திருந்தால்?\nஆனால் கடைக்கு வெளியில் கைல் காத்திருப்பதை அவள் பார்த்து விட்டாள், அவளைக் கண்டதும் அவன் முகம் மகிழ்ச்சியில் பிரகாசமாக ஆனது தெரிந்தது, அவள் தன்னை மீறி வாய் அகன்று சிரித்தாள். ஒரு கணத்தில் அவன் முன்னால் நின்றிருந்தாள், திடீரென்று இருவருக்கும் பேச ஏதுமே இருக்கவில்லை.\nஆனால் அவள் ஜோயியைப் பற்றி நினைத்தாள் – அவர் அவளுக்குக் கொடுத்த அந்த அச்சம், தன் கதைகளோடு அவர் எப்போதுமே அவளுக்குக் கொடுத்து வந்த புத்திமதிகள். வாய்ப்பைத் தேடிப் போகாவிட்டால், எப்படி யாருக்குமே எதுவுமே கிட்டாது என்று அவர் சொல்லிக் கொடுத்ததை.\nதான் நல்ல நிலையில் இருப்பதாக உணர்ந்தாள், கைலிடம் தான் அப்படி உணர்வதைச் சொல்ல இருந்தாள். அவனோடு ரொம்ப ஒட்டிக் கொண்டு, விசித்திரமாக நடந்து கொள்ளப் போவதில்லை அவள், ஆனால் அவள் அவனிடம் ஒளிவு மறைவு ஏதும் காட்டப் போவதுமில்லை.\n“இந்த மாதிரி வேலை செய்கிற இடத்துக்கு வெளியிலும் நாம பழகப் போகிறோம்ங்கறதுல எனக்கு மகிழ்ச்சியா இருக்கு,” என்றாள்.\n“எனக்கும் கூட. நான் அப்பவே சொன்ன மாதிரி…நான்.. உனக்குத் தெரியுது இல்லியா.. உன்னை இப்படிச் சந்திக்க அழைக்கணும்னுதான் ஆசைப்பட்டிருந்தேன்…”\nஅவள் புன்னகைத்தாள். “உனக்கும் இது விசித்திரமா இருக்கா? எத்தனையோ வாரமா உனக்கு நான் சாப்பாடு கொடுத்துகிட்டிருந்தேன் அந்த விடுதியில, ஆனா திடீர்னு, நாம இங்கே இப்படி இருக்கோம், இது இனிமே ரொம்பவே வித்தியாசமான விளையாட்டு..”\nஅவன் ஒரு புருவத்தை உயர்த்தினான். “நீ விளையாட்டுப் போட்டிகளை எல்லாம் விரும்பிப் பார்க்கிறவளா?”\n“ஆ, அப்படி ஒண்ணும் இல்லை.”\nஅவன் அவளுடைய கையைப் பற்றிக் கொண்டான். “நாம ஒரு ரெஸ்ட்ராண்டுக்குப் போகலாம். வேற ஒரு பரிசாரகி நமக்குச் சாப்பாட்டைக் கொண்டு வரட்டும். உனக்கு என்ன மாதிரி சாப்பாடு வேணும்?”\n“தெரியல்லியே – உனக்கு என்ன பிடிக்கும்?”\n“கிட்டத் தட்ட எல்லாமே பிடிக்கும். டேனி – என்னோட வேலை செய்யறான் – மக்கென்னிட் தெருவுக்குத் தெற்கா ஒரு புது வியத்நாம் கடை இருக்குன்னு சொன்னான். அதை நாம போய்ப் பார்க்கலாம். அங்கே சாப்பாடு நல்லாவும் இருக்கு, மலிவாவும் இருக்குன்னான்.”\n“அது நல்ல சேதியா இருக்கே. எனக்கு பட்ஜெட் குறைச்சலாத்தான் இருக்கு. ஒரு புது கிடார் வாங்கறதுக்கு நான் பணம் சேர்க்கறேன்.”\n“ம்ம்ம்ம். நான் அதை வாசிக்கும்போது உலகமே கச்சிதமா ஆயிட்ட மாதிரி எனக்கு இருக்கும்- நான் வாசிக்கிறபோது கம்பிகளைத் தவற விட்டாலும் சரி, பாட்டுல சில வார்த்தைகளை மறந்து போனாலும் கூட அது மாறாது.”\n“ஒரு பாட்டுக் குழுவுல, நான் முன்னெ மாண்டொலின் வாசிச்சிருக்கேன்,” அவன் சொன்னான். “நகரத்துக்கு நான் வரதுக்கு முன்னால…”\nஅதற்குப் பிறகு எல்லாம் அப்படியே போயிற்று, பேச்சில் அவர்கள் ஆழ மூழ்கிப் போனார்கள், ரெஸ்ட்ராண்டுக்குப் போகும்போதும், சாப்பிடும்போதும் நெடுக அப்படியே இருந்தது. சாப்பாடு மிக நன்றாக இருந்தது, ஒருவருக்கொருவர் துணை அதை விட மேலாக இருந்தது, ஆனால் சாப்பாட்டுக் கட்டணத் தொகை கிட்டுவதற்கு அவர்கள் காத்திருக்கையில், ரூபிக்கு ஜோயியின் நினைவு வந்தது. அவர் ஆஸ்பத்திரியில் படுத்திருப்பார், தனியாகக் கிடப்பார். ஒருகால் அந்த ரெஸ்ட்ராண்டின் ஜன்னலருகே வெளியே நடந்து போன கருப்பின மனிதர் அந்த நினைவைத் தூண்டினாரா. ஒருகால் அவள் குத்தியிருந்த பச்சையைப் பற்றி கைல் சொன்னது காரணமா, அல்லது அவனது பழைய இசைக்குழுவில் அவர்கள் இசைத்த ஒரு பாடலை அது நினைவூட்டியது என்று அவன் சொன்னதா, அந்தப் பாட்டும் ஜோயியிடம் அவள் பாட்டு கற்றுக் கொள்ளத் துவங்கியபோது அவர் சொல்லிக் கொடுத்த முதல் பாட்டாக வேறு இருந்ததா. அல்லது டாக்டர் அவளுக்குக் கொடுத்த நம்பிக்கையைத் தாண்டி, ஜோயியை அவரது வீட்டில் முன்னறையில் தரையில் விழுந்து கிடந்த நிலையில் பார்த்ததால் அவளுக்கு எழுந்த கவலை இன்னமும் அவள் நெஞ்சிலேயே தங்கி இருந்தது, அவளால் அதை நீக்க முடியவில்லை என்பதா.\n“எல்லாம் நல்லபடியா இருக்கா?” என்றான் கைல்.\n“என்ன? ஓ, மன்னிச்சுக்க. நான் ஜோயியைப் பத்தி நினைச்சுகிட்டு இருந்தேன் – எங்க உணவகத்துக்கு வாடிக்கையாளர் அவர். அவர் எனக்கு நண்பரும் கூட, அவருக்கு… என்னது அதுன்னு இன்னிக்கி எனக்குத் தெரியல்லை. ஆனா அவரை ஆஸ்பத்திரிக்குக் கொண்டு விடும்படி ஆச்சு, அவரை இன்னிக்கி ராவுக்கு கவனிப்பில வச்சுகிட்டிருக்காங்க.”\n”எனக்கு அவரைத் தெரிஞ்சிருக்குமா?”\nஅவள் ஜோயியைப் பற்றி வர்ணிக்கத் தொடங்கிய போது, கைல் தலையசைத்தான்.\n“அவரோட கண்கள் எல்லாத்தையும் பார்க்கிற மாதிரி இருக்கும், அவர்தானே.”\n“அது ஜோயிதான், சரியாச் சொன்னே.”\nஅவரை அன்று முன்மாலையில் அவள் எப்படிக் கண்டு பிடித்தாள் என்பதைச் சொன்னாள், அவர் அவளுக்கு எப்படிப் பழைய பாடல்களைச் சொல்லித் தருகிறார் என்பதையும், சாப்பிட அவளுடைய கடைக்கு ஒவ்வொரு தடவையும் வரும்போது அவர் எப்படி அவளுடைய நாளை நல்ல நாளாக மாற்றுகிறார், ஏன் அதனால் அவளுக்கு அவரைப் பிடிக்கும் என்பதையும் சொன்னாள்.\n“பார்வையாளர் நேரம் அங்கே எப்போது முடியும்?” என்றான் கைல்.\nஅவன் தன் கைக்கடிகாரத்தைப் பார்த்தான். “இன்னும் நேரம் இருக்கு. உனக்குப் பிடிக்கும்னா, நாம அங்கே கொஞ்சம் நின்னு அவரைப் பார்க்கலாம்.”\nஅவன் தலையசைத்து ஆமோதித்தான். “நமக்கு முக்கியமானவங்களாத் தெரியறவங்களைப் பராமரிக்கிறது நல்லது.”\n“இப்பத்தான் அவரைப் பார்க்கப் போனேன்,” அவர்கள் நர்ஸ்களின் மையத்துக்குப் போன போது அங்கிருந்த நர்ஸ் சொன்னார், “அவர் இன்னமும் தூங்கிக்கிட்டிருக்கார். ஆனால் உங்களுக்கு வேணுமுன்னா அங்கே அவர் பக்கத்திலே உட்கார்ந்திருக்கலாம். ஒன்பது மணி வரைக்கும் பார்வையாளர் நேரம் உண்டு.”\nரூபி புரிந்தவளாகத் தலையசைத்தாள். “எனக்குத் தெரியும். உங்களுக்கு நன்றி.”\nகைலை அவன் யார் என்று நர்ஸ் கேட்குமுன்னர், அவள் அந்த நடை வழியே ஜோயி இருந்த அறைக்கு அழைத்துப் போனாள். ஆனால் அவர்கள் அந்த அறைக்குப் போன போது, ஜோயியின் படுக்கை காலியாக இருந்தது. மற்ற மூன்று படுக்கைகளிலும் வேறு மனிதர்கள் உறங்கினார்கள், ஆனால் அவர்களில் யாரும் ஜோயி இல்லை. அவர் படுக்கையை மாற்றி விடவுமில்லை. கழிப்பறைக் கதவு திறந்திருந்தது, அவர்களால் அங்கே யாருமில்லை என்று பார்க்க முடிந்தது.\n“இது விசித்திரம்தான்,” என்றாள் ரூபி.\nகைலுடன் அவள் நர்ஸ்களின் மையத்துக்குத் திரும்பிப் போனாள், அவர்கள் சரியான அறைக்குத்தான் போயிருந்தனரா என்று சோதிக்க.\n“அவர் இன்னும் 318 இல்தான் இருக்கிறார், அன்பே.”\nரூபி மறுபடியும் பீதி எழுவதை உணர்ந்தாள் – அவருக்கு ஆம்புலன்ஸ் வருவதற்காகக் காத்திருந்த போது அப்படித்தான் அவளுக்கு இருந்தது.\n“இப்ப இல்லை, அங்கே பார்த்தோம்,” என்றாள் அவள்.\nபுரியாதவளாக நர்ஸ் அவளைப் பார்த்தாள். “நான் இப்பத்தானே அவரோட அறையில இருந்தேன். அந்த நடை வழியே யாரும் இதுவரைக்கும் வரவில்லையே.”\nஅவள் அவர்களை மறுபடி 318 ஆம் எண் அறைக்கு அழைத்துப் போனாள், ஆனால் ஜோயி அங்கே இப்போதும் இருக்கவில்லை. அவள் உதவிக்கு ஆட்களை அழைக்க அவசரமாகப் போனாள், ரூபி அந்தப் படுக்கையைப் பார்க்கப் போனாள். ஜோயி இன்னமும் இறக்கவில்லை என்றாலும், தான் அவரை மறுபடி பார்க்கப் போவதில்லை என்று ஏதோ வினோதமாக அவளுக்குத் தோன்றியது.\n“அது என்னது?” கைல் கேட்டான்.\nஅவன் தலையணையைச் சுட்டினான். அங்கே ஒரு நீண்ட கருப்பு இறகு கிடந்தது.\nஒரு காகத்தின் இறகு, என்று ரூபி எண்ணினாள். தன் கையில் பச்சை குத்தியிருந்த கரிச்சான் காகத்தின் உருவைத் தடவிப் பார்த்தாள், அவளுடைய தலைக்குள் ஜோயியின் குரல் கேட்ட மாதிரியே இருந்தது அவளுக்கு.\nகரிச்சானும், காகமும். நாம் இருவரும் காக்கைக் குடும்பம் – நான் இதை முன்னமே உனக்குச் சொல்லியிருக்கேன்.\nஅவளுடைய நெஞ்சுக்குள் ஒரு குறுகுறுப்பான உணர்வு எழுந்தது, ஏதோ அவளுக்குள் விரிகிறது என்பதைப் போலிருந்தது. மேலும் அவளால் கேட்க முடிந்தது… கேட்க முடிந்தது..\n“இது விசித்திரம்தான்,” என்றான் அவள் பக்கத்திலிருந்த கைல், அவன் குரல் மென்மையாக இருந்தது. “அதை உன்னால் கேட்க முடிந்ததா?”\nரூபி அவனைப் பார்க்கத் திரும்பினாள். “அது என்ன மாதிரி ஒலி?”\n“இறகுகளின் படபடப்பைப் போலிருந்தது.”\nரூபி ஆமோதித்தாள். அவளும் அதைத்தான் கேட்டிருந்தாள். நகரத்தின் ஆரவாரம் சற்று அடங்கி அங்கே ஓர் அமைதி நிலவியபோது, ஒரு பெரிய பறவை தலைமேல் பறந்தால் நமக்குக் கேட்கிற வீசப்படுகிற சிறகுகளின் படபடப்பு.\nஒரு புறாவோ அல்லது கடல் நாரையோ. ஒரு காக்கை.\nஅல்லது ஒரு கரிச்சான்.\nஅவள் அந்தக் கருமிறகை எடுத்துக் கொண்டாள், கைலின் கையைப் பற்றினாள்.\n“உன்னோட நண்பரைப் பத்தி என்ன செய்யணும்?”அவள் அவனைக் கதவை நோக்கி இழுத்தபோது அவன் கேட்டான்.\n”அவர் ஏற்கனவே போயிட்டார்னு நினைக்கிறேன்.”\n“ஷ்ஷ்ஷ்,”அவள் சொன்னாள். “நீ அதை மறுபடி கேட்டியா?”\nகைல் ஆமென்று தலையாட்டினான், மேலே பார்த்தான், இந்த மருத்துவ மனையினுள் ஒரு பறவையை எதிர்பார்த்தவன் போல. ரூபியோ தன் மார்க்கூட்டுக்குள் மறுபடி அந்த எழுச்சியை உணர்ந்தாள், அவளுக்கு இப்போது அந்த ஒலி எங்கேயிருந்து வருகிறது என்று புரிந்திருந்தது.\n“அவர் என்னிடம் சொன்ன அந்தக் கதைகளெல்லாம் உண்மைதான் என்று தோன்றுகிறது,” அவள் சொன்னாள்.\n“நீ என்ன சொல்ல வர்ரே?”\nஅவன் கையை விட்டாள், அவளுடைய கையை அவனுடைய கையின் மடிப்புக்குள் நுழைத்துக் கொண்டாள்.\n“நாம் போற போது சொல்றேன்,” என்றாள்.\n“எங்கே போகப் போறோம்?”\nஅவள் சும்மாவென்று தோள் குலுக்கினாள், சிரித்தாள்.\n“நாம் எங்கே போறோம்னு நமக்குத் தெரியறதோ, அங்கே,” என்றாள்.\nஇக்கதை ஒரு சிறுகதைத் தொகுப்பிலிருந்து எடுக்கப்பட்டது.\nதொகுப்பின் தலைப்பு: த வெரி பெஸ்ட் ஆஃப் சார்ல்ஸ் டு லிண்ட்.\nபிரசுரகர்: டாகியான். ஆண்டு: 2010.\nமூலக்கதையின் தலைப்பு: ஓல்ட் மேன் க்ரோ. (2006 இல் ட்ரிஸ்கெல் பிரசுரம் வெளியிட்ட ஒரு புத்தகத்திலிருந்து தொகுப்பில் சேர்க்கப்பட்டிருக்கிறது.)\nதமிழாக்கம்: மைத்ரேயன் / மார்ச் 2022\nமூலக் கதாசிரியர் பற்றி அறிய: https://charlesdelint.com/ மற்றும் https://www.honestreaders.com/charles-de-lint-books-in-order/ பக்கங்கள் உதவும்.\nஅவருக்கான விக்கிபீடியா பக்கம் இது: https://en.wikipedia.org/wiki/Charles_de_Lint\nSeries Navigation வானவில்(இதழ் 135) வெளிவந்துவிட்டதுஆடும் அழகே அழகு\nPrevious:வானவில்(இதழ் 135) வெளிவந்துவிட்டது\nNext: எமிலி டிக்கின்சன் கவிதைகள் – 30
ரூ.6கோடி விலையுள்ள ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு ஒரு நாள் முதலாளியான சாதாரண இளைஞன்.. ஒரு நாள் உரிமையாளர் கதை..! - Tamil DriveSpark\nPublished: Friday, February 21, 2020, 16:33 [IST]\nமுதல்வன் படத்தில் நடிகர் அர்ஜூனைப்போல் இளைஞர் ஒருவர் ரூ.6கோடி மதிப்புள்ள ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் II காருக்கு ஒரு நாள் முதலாளியாக இருந்துள்ளார். இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.\nதிரை நட்சத்திரங்கள், செல்வந்தர்கள் மற்றும் தொழிலதிபர்கள் ஆகியோரின் ஆடம்பர வாழ்க்கையைப் பார்த்து பொறாமைப்படாதவர்களே இருக்க மாட்டார்கள். அவர்களின் பகட்டான ஆடம்பர வாழ்க்கையைப் பார்க்கும்போதெல்லாம், ஒரு நாளாவது அந்த வாழ்க்கையை வாழ்ந்து பார்த்தே ஆக வேண்டும் என நம்மில் பலருக்கு தோன்றலாம்.\nஅந்தவகையில், பலருக்கு ஆப்பிள் போனை சொந்தமாக வாங்க வேண்டும், சொந்தமாக ஒரு வீடு கட்ட வேண்டும், லக்சூரி கார் வாங்க வேண்டும் என ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான எண்ணமும், லட்சியமும் இருக்கின்றது.\nஏன், ஒரு சிலருக்கு ஒரு முறையாவது விமானத்தில் பறக்க வேண்டுமென்பது லட்சியமாக இருக்கின்றது.\nஅந்தவகையில், ஆடம்பரத்தின் முழு உருவமாக இருக்கும் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் ஏதாவது ஒரு மாடல் காரைப் பயன்படுத்தி பார்த்தே தீர வேண்டும் என்ற எண்ணம் நம்மைப் போல சாதாரணமான வாழ்க்கையை வாழும் ஓர் இளைஞனுக்கு தோன்றியுள்ளது.\nஇதனடிப்படையில், ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் கோஸ்ட் II என்ற மாடலை அந்த இளைஞர் ஒரு நாள் வாடகைக்கு எடுத்து பயன்படுத்தியுள்ளார். அதன் அனுபவத்தையும் வீடியோ வாயிலாக வெளியுலகிற்கு தெரியப்படுத்தியுள்ளார்.\nரோல்ஸ் ராய்ஸ் காரை வாங்க நினைப்பது மிகப்பெரிய விஷயம். ஏனென்றால், அதன் விலை பல பிரபலங்களுக்கே மலையளவில் காட்சியளிக்கின்றது. ஆகையால், அதை விலைக்கு வாங்குவதெல்லாம் நினைத்துகூட பார்க்க முடியாத ஓர் காரியம்.\nஇதை உணர்ந்த அந்த இளைஞர் ஒரு நாளைக்கு மட்டும் வாடகை எடுத்து அதன் உரிமையாளராகியுள்ளார். இதுகுறித்த வீடியோவை "ஓகே டெஸ்டெட்" என்ற யுடியூப் தளம் வெளியிட்டுள்ளது.\nஅக்ஷய் என்பவர்தான் ரோல்ஸ் ராய்ஸ் காரை ஒரு நாளைக்கு வாடகைக்கு எடுத்தவர். இவர் தலைநகர் டெல்லியைச் சேர்ந்தவர் ஆவார்.\nஅவர் வாடகைக்கு எடுத்து பயன்படுத்திய கார் இந்தியாவில் ரூ.6கோடி என்ற விலையில் விற்பனைச் செய்யப்பட்டு வருகின்றது. இந்த மதிப்பிலான காருக்காக ஒரு நாள் வாடகையாக எத்தனை ஆயிரங்களை அவர் செலவு செய்தார் என்பதைப்பற்றிய தகவல் வெளியிடப்படவில்லை.\nஇருப்பினும், ஒரு நாள் முழுவதும் அந்த காரின் உரிமையாளராக இருந்து அளவுகடந்த சிறப்பாக மகிழ்ச்சியைப் பெற்றுள்ளார். இது அந்த வீடியோவின் வாயிலாக நமக்கு தெரிகின்றது. மேலும், அவர் பின் புறத்தில் ஓர் எஞமானரைப் போல் ஒய்யாரமாக அமர்ந்து வருவதையும் வீடியோவின் ஊடாக நம்மால் காண முடிகின்றது.\nஇந்த ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் II காரின் உற்பத்தியை அந்நிறுவனம் கடந்த 2014ம் ஆண்டில் தொடங்கியது. தற்போதுவரை இது உற்பத்தியில் இருக்கின்றது.\nஇதற்கு, இந்த காருக்கு சந்தையில் கிடைத்து வரும் அதீத வரவேற்பும், அதில் காணப்படும் லக்சூரியஸ் வசதிகளுமே முக்கிய காரணமாக இருக்கின்றது.\nகுறிப்பாக, பல சொகுசு விடுதிகளில்கூட காணக்கிடைக்காத அம்சங்கள் இந்த காரில் காட்சியளிக்கின்றது. இதுபோன்ற, பல்வேறு காரணங்களினாலயே சொகுசு பயண விரும்பிகளின் முக்கிய தேர்வில் இந்த கார் முதன்மை வகிக்கின்றது.\nஇத்தகைய காரைதான் 27 மதிக்கத்தக்க அக்ஷய் பின்னிருக்கையில் அமர்ந்து எஞ்ஜாய் செய்துள்ளார். இந்த பயணத்தின் தொடக்கத்தில், காரின் ஒரு சில சொகுசு அம்சங்களை அக்ஷய் சோதனைச் செய்து பார்க்கின்றார். குறிப்பாக, ஒரு பட்டன்மூலம் காரின் உயரம் மற்றும் சாயும் தன்மையை அட்ஜெஸ்ட் செய்தல் உள்ளிட்ட செயல்பாடுகளைச் செய்து பார்கின்றார்.\nதொடர்ந்து, கெத்துகாட்டுவதற்காக அந்த காரின் ஓட்டுநரிடம் நகரத்தைச் சுற்றி வலம் வருமாறு கூறுகின்றார். ஆனால், பெரியளவில் பலன் கிடைக்கவில்லை. ஆகையால், சாலையோரத்தில் அந்த காரை நிறுத்தக் கூறிய அவர் அங்கிருந்த சாதாரண டீ கடையில் தேநீர் வாங்கி அருந்துகின்றார்.\nஅங்கு அவர் எதிர்பார்த்தது நடைபெற்றுவிட்டது. அந்த பகுதியில் நின்றுக் கொண்டிருந்த அக்ஷய்யை வியப்புடன் பார்ப்பதை நம்மால் காண முடிகின்றது.\nஇவ்வளவு பெரிய பணக்காரர் இங்கு வந்து டீ குடிக்கிறாரா என்ற எண்ணே பலருடையதாக அங்கிருந்திருக்கும். ஆனால், அவர் ஒரு நாள் எஜமானர் என்பது அக்ஷய், ஓட்டுநர் மற்றும் நமக்கு மட்டுமே தெரியும்.\nஇந்த சம்பவத்திற்கு முன்பாக சிக்னலில் நின்றுக்கொண்டிருந்த இருசக்கர வாகன ஓட்டியிடும் காருக்கே உரிமையாளரைப் போல் கடலைப் போடுவதையும் அக்ஷய் செய்கின்றனர்.\nஇதையடுத்து, காரின் ஒரு சில சொகுசு வசதி மற்றும் மைலேஜ் போன்ற தகவல்களை ஓட்டுநரிடம் இருந்து அவர் கேட்டறிந்துகொண்டார்.\nஇதைத்தொடர்ந்து, அக்ஷய் அவரது நண்பருக்கு சர்பிரைஸ் அளிக்கும் விதமாக திடீர் விசிட் கொடுத்து ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். பின்னர் இருவரும் சேர்ந்தவாறு ஓர் வலம் பெற இந்த பயணம் இனிதாய் முடிகின்றது. இதனிடையே, பயணத்தின் அனுபவத்தையும், மகிழ்ச்சியையும் அவர்கள் பகிர்ந்துகொள்வதை நம்மால் அறிந்துகொள்ள முடிகின்றது.\nகுறிப்பாக, ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட்II காரில் பயணிப்பது கப்பலில் மிதப்பதைப் போன்று இருப்பதாக அவர்கள் சுட்டுக்காட்டுகின்றனர்.\nதொடர்ந்து, பள்ளம் மேடுகளில் சென்றதைப் போன்று துளியளவும் அவர்கள் உணரவில்லை என தெரிவிக்கின்றனர். மேலும், இந்த வீடியோவில் இரு தவறான விஷயங்களை அவர்கள் பகிர்ந்துள்ளனர். முதலில், ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் காரை விற்பனைச் செய்வதற்கு முன்னதாக வாடிக்கையாளரின் சுய விவரத்தை பரிசோதிப்பதாக கூறுகின்றனர். ஆனால், அது அப்படியில்லை, நீங்கள் மிகுந்த செல்வம் படைத்தவராக இருந்தாலே போதும் ரோல்ஸ் ராய்ஸ் காரை வாங்க தகுதியானவர்.\nஓட்டுநர், 97 ஆக்டேன் (97 Octane) ப்யூவல் ஜெட்களில் பயன்படுத்துவதாக கூறினார். இது தவறு ஆகும். உண்மையில் ஜெட்களில் பெட்ரோல் பயன்படுத்தப்படுவதில்லை, மண்ணெண்ணய் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றது.\nஇவையிரண்டும் வீடியோவில் தவறான பதிவாக செய்யப்பட்டுள்ளது.\n27 Year Old Young Man Shares His Experience About Rolls Royce Ride. Read In Tamil.\nStory first published: Friday, February 21, 2020, 16:33 [IST]
தைராய்டு பிரச்சனை, தப்பிக்கும் வழிகள் - AYURVEDHAM\nதைராய்டு சுரப்பி என்பது ஒரு வகை நாளமில்லாச் சுரப்பியாகும். இது நமது உடலில் கழுத்துப் பகுதியில் மூச்சுக் குழாய் முன் பக்கம் அமைந்துள்ளது. இந்த தைராய்டு சுரப்பியானது கருவிலேயே அதாவது 30 வது நாளிலேயே உருவாகி விடுகிறது. இது நாக்கின் பின் பகுதியிலிருந்து உற்பத்தியாகி கீழ இறங்கி தொண்டைப் பகுதி வரை வந்து மூச்சுக் குழலுக்கு முன்பாக வண்ணத்துப் பூச்சி வடிவத்தில் அமைகிறது. உடம்பில் உள்ள எல்லாச் சுரப்பிகளையும் கட்டுப்படுத்தும் ஆற்றல்மிக்கது தைராய்டு சுரப்பி. இதனை சுரப்பிகளின் அரசன் என்று கூறலாம். தைராய்டு சுரப்பியில் அயோடின் சத்து உள்ளது.\nஒரு அவுன்ஸ் அயோடின் உடலுக்கு ஒரு ஆண்டிற்கு போதுமானதாகும். அயோடின் சுரப்பிகளை ஒழுங்காக செயல்படச் செய்கிறது. மனதிற்கு சக்தியை அளிக்கிறது. சுயசிந்தனை, சுயமாக செயலாற்றும் திறன், கற்றல், தன்னம்பிக்கை இவற்றைத் தருகின்றது. கழுத்தில் உண்டாகும் கழலையானது, ஆரோக்கிய வழியை பின்பற்றாததால் சுயமாக ஏற்படும் விஷ மயக்கம், நரம்புக் கோளாறு, தலை சுற்றல், வழுக்கை ஆகியவற்றைத் தடுக்கிறது. என்றும் இளமையாக இருக்க அயோடின் உதவுகிறது.\nஉடம்பை சமநிலைப் படுத்துகிறது. அயோடின் குறைந்தால் தோல் சுருக்கம், முகத்தில் சோகம், கடுமை ஆகியவை உண்டாகும். அயோடின் இல்லாமல் இரத்தமானது, இரத்தக் குழாய்களில் பாயாது. இரத்தச் சோகை, நரம்புக்கோளாறு, ஒழுங்கற்ற சீதோஷ்ணம் கொண்ட உடல் நிலை, நீரிழிவு, சிறுநீரக வீக்கம், தேவையற்ற பயம், தொந்தி, வெறுப்பான செயல்கள், கடுமையான நீர்க்கோல், கொடிய பசி உணவு, மன ஒருமையின்மை போன்றவை அயோடின் குறைவினால் ஏற்படக் கூடியவை.\nதைராய்டு சுரப்பியில் ஏற்படும் கோளாறினால் 90 வகையான நோய்கள் ஏற்படும். மிகை தைராய்டு, குறை தைராய்டு, தைராய்டு வீக்கம் ஆகியவை அதிகமாகக் காணப்படும். தைராய்டு சுரப்பி அதிகமாக சுரந்தால் அது மிகை தைராய்டு நோய் எனப்படும். இதன் அறிகுறிகள் பசி அதிகமாக இருக்கம். அடிக்கடி சாப்பிடுவார்கள். ஆனால் உடல் இளைத்துக் கொண்டே போகும். கை, கால்கள் ஒடுக்கம் இருக்கும். சில நேரங்களில் உடல் முழுவதும் நடுங்கும். காரணம் இல்லாமல் கோபம் வரும். மலம் கழியும். தூக்கமின்மை ஏற்படும் கண் விழிகள் பெரிதாகி முட்டிக்கொண்டு நிற்கும். இதய படபடப்பு இருக்கும்.\nதைராய்டு சுரப்பி குறைவாக சுரந்தால் அது குறை தைராய்டு எனப்படும். இதன் அறிகுறிகள் உடல் பருமனாகும். மந்தமாக இருக்கும். சோம்பலாக இருக்கும். மலச்சிக்கல் உண்டாகும். கால் வீக்கம் ஏற்படும். கொழுப்பு அதிகமாகும். இது தவிர மூட்டு வலி உண்டாகும். சிலருக்கு கர்ப்பம் தங்காமல் போகவும் வாய்ப்புண்டு. மேலும் சிலருக்கு ஞாபக சக்தி குறைந்து மறதி ஏற்படும். பெண்கள் பூப்பெய்வது தாமதமாகும்.\nதைராய்டு நீர் அதிகமாக சுரந்தால் நஞ்சு கலந்த வீக்கமும் விஷக் கட்டியும் தோன்றும். இது மாக்சிக் காய்ட்டர் என்று அழைக்கப்படுகிறது. இந்த ரக கட்டிகள் முதலில் சிறியதாக தோன்றும். ஆரம்பக் கட்டத்தில் வளர்ச்சி இருக்காது. ஆனால் திடீரென பெரிதாக வலி ஏற்படத் தொடங்கும். இதனால் மூச்சு விடுவதற்கு கஷ்டப்பட வேண்டியிருக்கும். சில சமயங்களில் பேச்சு நரம்பு பாதிக்கப்பட்டு பேச்சுத்திறன் பாதிக்கப்படும் அபாயமும் நேரிடும். வீக்கம் வரும் போதே கவனித்து சிகிச்சை அளிக்க எளிதாக கட்டுப்படுத்தி விடலாம். இத்தகைய கட்டிகளை கவனிக்காமல் விட்டுவிட்டால், மிகவும் நச்சுத் தன்மை கொண்டதாக மாறி புற்று நோயாக மாறிவிடும் அபாயம் உண்டு. அயோடின் சத்துக்கள் அடங்கிய உணவுகளை நாம் அடிக்கடி உட்கொள்ள தைராய்டு சுரப்பி பிரச்சனைகளிலிருந்து தப்பிக்கலாம். அயோடின் முழு அரிசி, நீரிலும், நீரைச் சுற்றிலும் வளர்பவன, வெங்காயம், அன்னாசி, பட்டாணி, பசலைக்கீரை, பீட்ரூட், காளான், வெட்டூஸ், தக்காளி, உருளைக் கிழங்கு தோல், கடல் நுரை, கடல் அருகே விளையும் காய்கறிகள் கடல் மீன்களில் காணப்படுகிறது.\nCategories Diseases - Treatments Tags Causes, health tips, Remedies, Thyroid, Thyroid Problems, Treatment Post navigation
மத அரசியல்-46: ஆசீவகம்- விநாயகர், முருகன் எப்படி ஆசீவக நெறியின் கடவுளர்? - Dinamani\nBy C.P.சரவணன்| DIN | Published: 12th January 2019 10:48 AM\nஆசீவகர்கள் உருவ வழிபாடற்ற அறிவியல் சார்ந்த நெறியை தழுவியுள்ளனர். பகுத்தறிவின் அடிப்படையிலான ஒரு சமயத்தை நிறுவ முயன்றவருக்கு கடவுள் தேவையில்லாமல் போனார். அறிவர்கள் ஒரு கடவுள் மறுப்பாளராக இருந்திருக்கிறார்கள் என்பது மட்டுமல்லாது, இந்த நாத்திகச் சிந்தனையைத் தனது சீடர்கள் பிறருக்கும் போதிக்க வேண்டும். பிற்காலத்திய நாத்திகவாதிகள் கடவுளை மறுக்கச் சொல்லிய காரணங்கள் பலவற்றையும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சொல்லியிருக்கிறார் என்பது மிகுந்த வியப்புக்குரிய விஷயமாகும். இத்தோடு விடவில்லை அவர்கள், கடவுளின் இருப்பை நிறுவ முன் வைக்கப்படும் வேறு சில வாதங்களையும் தகர்த்தெறிகிறார்கள்.\nயானை ஏன் ஆசீவக நெறியின் அடையாளமாக உள்ளது?\nயானையின் கற்றுக்கொள்ளும் திறன், நினைவாற்றல், பொறுமை, மனவலிமை, குழுவாக இயங்கும் பண்பு போன்றவற்றை ஒரு ஆசீவகர் பெற்றால்தான் பல படிநிலைகளைக் கடந்து நிறமிலி(கழிவெண்நிலை)யை அடையமுடியும்.அதனைக் குறிக்கவே சாத்தன் கோயில்களில் வெள்ளையானைச் சிற்பங்கள் உள்ளன.\nஆசீவக மதத்தவர்களின் சின்னமாக யானை இருந்துள்ளது. அதன்படியே, திருப்பட்டூர் அரங்கேற்ற ஐயனார் கோயிலில் சுவாமிக்கு எதிர்புறம் உள்ள வாகனமாக யானை சிலை வடிக்கப்பட்டுள்ளது. இதேபோல, திருவெள்ளறை கோயிலின் கருவறை இரண்டு வெள்ளையானைகளின் மீதே அமைக்கப்பட்டுள்ளது. சித்தன்னவாசல் குடைவறை ஓவியத்திலும் யானை இடம்பெற்றுள்ளது. சமயச் சண்டைகள் நிலவிய காலத்தில், வேதங்களை எதிர்த்த ஆசீவக சமயத்தின் குறியீடான யானையை, சைவ மத குறியீடான முதலை கடிப்பது போன்ற சிற்பங்களும் காணப்படுகின்றன. இதன் மூலம் ஆசீவக மதம் அழிக்கப்பட்டு, சைவ மற்றும் வைணவ மதங்கள் தமிழகத்தில் தழைத்தோங்கியதை காண முடிகிறது.\nயானை, தான் பிறக்கும் பொழுது கருப்பு நிறமாக இருக்கும்(முதல் நிலை). பிறகு அது வளர வளர அதன் நிறம் கருப்பு நிறத்திலிருந்து சாம்பல் (Grey) நிறத்திற்கு சிறிது சிறிதாக மாறும். யானை, தான் குட்டியாக(கருப்பு நிறம்) இருக்கும் பொழுது, தன் தாயை (சாம்பல் நிறம்) ஒழுக்கத்துடன் பணிவாகப் பின்பற்றிச் சென்று தன் சிறுவயதிலேயே தன் வாழ்விற்கான பாடங்களையும் ஆதாரங்களையும் தன் தாயிடமிருந்துக் கற்றுக்கொள்ளும் அறிவைக் கொண்டது. தாய் யானையும் தன் குட்டியானைக்கு ஒழுக்கத்தைக் கற்றுக்கொடுத்தும் தவறு செய்யும் பொழுது திருத்தவும் குட்டிக்கு உதவியாகவும் பரிவுடனும் இருக்கும். அந்தக் குட்டியானை, தான் வளரும்பொழுது அது தன் வாழ்வில் சந்திக்கும் சிக்கல்களுக்கு விடைதேடி அலைவதினை இது குறைக்கும். மேலும், தான் கற்றுக்கொண்டதைப் பிற்காலத்தில் தன் குட்டிக்கும் கற்றுக்கொடுக்கும். மேலும், ஆனை பிற உயிரினங்களிடம் பரிவுடன் இருக்கும்.\nஇதே போல, ஆறு படிநிலைகளில் கீழ் நிறப்படிநிலையில் உள்ள ஆசீவகர்கள், தனக்கு மேல் நிறப் படிநிலையில் உள்ளவர்களிடமிருந்து தன் பாடங்களைக் கற்றுக்கொள்வர். பிறகு அடுத்தப் படிநிலைக்குச் செல்வர். தான் கற்றப் பாடங்களை தனக்குக் கீழ் உள்ள படிநிலைகளில் உள்ள ஆசீவகர்களுக்குச் சொல்லிக்கொடுப்பர். ஆசீவகப் பள்ளியில் பயிற்சி பெற்ற பின்னரே இல்லறத்திற்குச் செல்லும் வழக்கமிருந்தது. வாழ்வியல் சிக்கல்களுக்கு விடைதேடி அலைவதினை இது குறைக்கும் என்பதும் அதன் சிறப்பு. ஆசீவகர்கள் பிற உயிரினங்களிடம் பரிவுடன் இருப்பர்.\nயானையின் இந்தப் பண்புகளை(மனப்பாங்கை – Attitude) ஒரு ஆசீவகர் பெற்றால்தான் வாழ்வில் மேன்மை அடைந்து நிறமிலி எனும் தெய்வத் தன்மையை அடையமுடியுமென்பதால், ஒவ்வொரு ஆசீவகருக்கும் இப்பண்புகள் முக்கியம். அதனால், ஆனையின் தலையையும் மாந்தரின் உடலையும் சேர்த்து ஆசீவக நெறியின் கடவுளான விநாயகர் உருவாக்கப்பட்டார். ஒவ்வொரு ஆசீவகருக்கும் விநாயகர் உருவம் ஒரு கடவுளாகவும்(உள்ளே கடப்பது) வாழ்வில் மேன்மை அடைந்து தெய்வத் தன்மையை அடைய தேவையானவற்றிற்கு ஒரு பற்றுகோலாகவும் (Inspiration) இருக்கிறது. ஆசீவக நெறியின் நிறக் கோட்பாடும் இதிலிருந்தே தோன்றி வளர்ச்சியடைந்திருக்கலாம்.\nஅது ஒரு தத்துவ உருவமே தவிர கடவுள் இல்லை. ஆசிவர்கர்கள் கடல்கடந்து ஆராய்ச்சிக்குச் செல்ல வணிகச் செட்டியார்கள் உதவினர். அதன்படி, ஆசீவகச் சின்னம் யானை. ஆசீவகத்துக்கு உதவிகள் புரிந்து, உறுதுணையாய் நின்றவர்கள் வணிகர்களாகியச் செட்டியார்கள். ஆகவே, செட்டியார் உடலில் யானைத் தலையைப் பொருத்தி "வினாயகர்" தோற்றம் உருவானது.\nமேலும், ஜைன, புத்த நெறிகளிலும் கி.பி. ஏழாம் நூற்றாண்டில் ஆசீவக நெறியை அழிக்க முற்பட்ட சிவநெறியிலும் விநாயகர் வழிபாடு பொதுவாக உள்ளது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. கி.பி. ஏழாம் நூற்றாண்டில் சிவநெறி ஆசீவக நெறியை அழிக்க முற்பட்டது என்றால், பின்பு எப்படி ஆசீவக நெறியின் கடவுளான விநாயகர் சிவநெறியில் வந்தார் என நீங்கள் கேட்கலாம். கி.பி. ஏழாம் நூற்றாண்டில் ஆசீவகர்களை சிவநெறியினர் தங்கள் நெறிக்கு மாற்ற முயன்றனர். சில ஆசீவகர்கள் மாறினர். பலர் மாறவில்லை. அதனால், எண்ணாயிரம் (8000) ஆசீவகர்கள் கழுவேற்றம் செய்து கொல்லப்பட்டனர். இப்படி சிவநெறியில் சேர்ந்த ஆசீவகர்களால் தான் விநாயகர் வழிபாடு, பிள்ளையார் சுழி, ஊன் உண்ணாமை, உண்ணா நோன்பு, பல அறிவியல் கோட்பாடுகள் முதலிய ஆசீவக நெறிக் கோட்பாடுகள் சிவ நெறியில் நுழைந்தன. அதனால் தான், கி.பி. ஏழாம் நூற்றாண்டுக்கு முன் இயற்றப்பட்ட(ஏதேனும் இயற்றப்பட்டிருந்தால்) சிவ நெறியாளர்கள் இயற்றிய நூல்களில், விநாயகர் பற்றிய குறிப்புகள் இருந்திருக்காது.\nமேலும், பிள்ளையார்பட்டி (காரைக்குடி) கற்பக விநாயகர் கோயில் சிலை அதன் மேல் உள்ள பழங்கால எழுத்தை வைத்து கி.மு. 400ஆம் ஆண்டின் காலத்தியது எனலாம். விநாயகர் வழிபாடு இவ்வளவு பழமையானதாக இருந்தும் கி.பி. 7ஆம் நூற்றாண்டு வரை(1200 ஆண்டுகள்) விநாயகர் பற்றி சிவ நெறியாளர்கள் இயற்றிய இலக்கியங்களில் ஒரு பாடல் கூட இல்லையென்றால், விநாயகர் சிவ நெறியைச் சார்ந்த கடவுள் இல்லை என்றே பொருள்.\nபிள்ளையார் = புல் + ஐ + ஆர் = வியக்கத்தகு அருகம்புல் கொண்ட் ஆன்றோன்\nவிநாயகக் கடவுள்களுக்கு பூசை சமஸ்கிருதத்தில் செய்யும் பொழுது ‘சுக்லாம்பரதரம், விஷ்ணும், சசிவர்ணம், சதுர்புஜம்|’ என்றுக் கூறுவர். “சசிவர்ண” அப்படியென்றால், ‘நிலா மாதிரி நிற’ என்றால் ‘வெள்ளை நிற உடை அணிந்தவனே’ என்று பொருள். ஆசீவகத்தில் கடை நிலையில் உள்ளவர்கள் மட்டும் தான் வெள்ளை நிற உடை அணிவர். வெள்ளை நிறத்திற்கு அப்படி ஒரு சிறப்பு. மேற்கூறியவற்றை வைத்து, விநாயகர் ஆசீவக நெறியைச் சார்ந்த கடவுள் என்று நாம் ஆணித்தரமாகக் கூறலாம். விநாயகரை முழுமுதற்கடவுள், வினை(கட்டம்) தீர்த்தான் என நாம் அழைக்கிறோம். அதனால் தான், எந்தப் பெரிய கோயில்களுக்கும் சென்றால் முதலில் விநாயகரை வழிபட்டுவிட்டு தான் பின் மற்ற தெய்வங்களை வணங்குவது வழக்கமாக இருந்து வருகிறது. மேலும், எந்தச் செயலை தொடங்கும் முன்பும் திருமணத்திற்கு முன்பும் விநாயகரை வழிபடுவது நம் வழக்கமாக இருந்து வருகிறது.\nமுருகன், சிவன், முதலிய தெய்வங்களை வணங்கும் முன்பு வணங்க வேண்டும் என நெறிகளை வகுக்கவேண்டும்?. ஏனென்றால், விநாயகர் ஆசீவக நெறியின் கடவுள். முருகன், சிவன், முதலியவர்கள் தெய்வ நிலையை அடைந்த ஆசீவக சித்தர்கள். அதற்காக, சிவன் என்ற தெய்வம் இல்லை என்பதில்லை. அவரும் தெய்வ நிலையை அடைந்த ஒரு ஆசீவக சித்தர் தான். மேலும், ஆசீவக நெறியின் பிற அடையாளங்களான பிள்ளையார் சுழி, சுழற்றியம் (ஸ்வஸ்திகா – சத்தியகம் எனும் தமிழ்ச்சொல்லிலிருந்து திரிந்திருக்கலாம்).\nஅனைத்து கோயில்களிலும் முதலில் விநாயகரை வணங்கிய பின்பே உள்ளே செல்லும் வழக்கம் இன்று உள்ளது. இது ஆசீவகத்தின் செல்வாக்கு மறையவில்லை என்பதனை உணர்த்துகிறது. பழந்தமிழரின் குரு (சாத்தன்) வணக்கமே தற்போது பிள்ளையார் வழிபாடாக மாறியுள்ளது.\nமுருகன் எப்படி ஆசீவக நெறியின் தெய்வம்\nபல்லாயிரம் ஆண்டுகளாக இருக்கும் ஆசீவக நெறியின் அடையாளங்கள் அழிக்கப்பட்டாலும் மாற்றப்பட்டாலும் அதை முழுவதுமாக அழிக்க முடியாது. அதேபோல் தான் ஆசீவக சித்தர்களின் அடையாளங்களும். முருகன் எப்படி தெய்வ நிலையை அடைந்த ஒரு ஆசீவக சித்தன் என்பர்.\nவிநாயகரை முழுமுதற்கடவுள், வினை(கட்டம்) தீர்த்தான் என நாம் அழைக்கிறோம். அதனால் தான், எந்தப் பெரிய கோயில்களுக்கும் சென்றால் முதலில் விநாயகரை வழிபட்டுவிட்டு தான் பின் மற்ற தெய்வங்களை வணங்குவது வழக்கமாக இருந்து வருகிறது. மேலும், எந்தச் செயலை தொடங்கும் முன்பும் திருமணத்திற்கு முன்பும் விநாயகரை வழிபடுவது நம் வழக்கமாக இருந்து வருகிறது. முருகன், சிவன், முதலியவர்கள் தெய்வ நிலையை அடைந்த சித்தர்கள் (ஆசீவக சித்தர்கள்). இதைப் பற்றி இப்பொழுது பார்ப்போம். முதலில், சங்க இலக்கியங்கள் முருகன் எனும் அரசனைப் பற்றித் தரும் செய்திகளைப் பார்ப்போம்\n1.முருகன் என்னும் மன்னன் சங்ககாலத்தில் பொதினி என்னும் ஊரைத் தலைநகராகக் கொண்டு ஆண்டுவந்தான். ஆறு மலைமுகடுகளைக் கொண்டது ஆனைமலை. அவற்றுள் ஒரு முகடு பொதினி. இந்தப் பொதினி இக்காலத்தில் பழநி என வழங்கப்படுகிது, அக்காலத்தில் இவ்வூரில் வயிரக் கற்களை அரக்கில் பதித்துப் பட்டை தீட்டும் தொழில் நடைபெற்றுவந்தது. இந்த முருகனைக் குதிரைமலைக் குடிமக்கள் மழவர் தாக்கினர். அரசன் முருகன் இவர்களை ஓட ஓட விரட்டியடித்தான். பொதினி குன்றம் மகளிர் மார்பக முகடு போல் பொலிவுடன் திகழ்ந்தது. அத்துடன் பொன்வளம் கொழிக்கும் ஊராகவும் விளங்கிற்று. இதன் அரசன் நெடுவேள் ஆவி. நெடுவேள் ஆவி என்பது முருகன் பெயர்களில் ஒன்று. இப்பெயரைக் கொண்டவன் இந்த அரசன். மற்றும் வையாவிக்கோப்பெரும் பேகன், வேளாவிக்கோமான் பதுமன் ஆகியோரும் இவ்வூர் ஆவியர் குடிமக்களின் அரசன்.\n2.முருகன் குறுஞ்சி நிலத்து(மலை) அரசன். அங்கு, வாழும் மக்கள் குறவர் (குறத்தி, குறவன்), பொருப்பன், வெற்பன், சிலம்பன், நாடன், கொடிச்சி, வேம்பன், கானவர்.\n3.ஆவியர் என்போர் சங்ககாலக் குடிமக்களில் ஒருசாரார். இவர்கள்(ஆவியர்குடி) வாழ்ந்த ஊர் ஆவினன்குடி என வழங்கப்பட்டது. பொதினியின்(பழநியின்) இன்னொரு பெயர் திருவாவினன்குடி(திரு+ஆவினன்குடி). ஆவியர் குடியினர் “அருந்திறல் அணங்கின் ஆவியர்” எனக் குறிப்பிடப்படுவதால் இவர்களின் உடல் தோற்றமே வலிமை மிக்கதாக அமைந்து பகைவரை அச்சுறுத்தியதை உணரமுடிகிறது. இவர்களது அரசன் ஆவிக்கோ, ஆவியர் பெருமகன் என்றெல்லாம் குறிப்பிடப்படுகிறான். ‘முருகன் நற்பேர் ஆவி’ என்பவன் இவர்களில் குறிப்பிடத் தக்கவன். வையாவி என்பது இம்மக்கள் வாழ்ந்த மற்றொருபகுதி. இப்பகுதி அரசன் வையாவிக்கோ என்றும், வையாவிக்கோமான் என்றும் குறிப்பிடப்படுகின்றனர்.\nஆறு மலைமுகடுகளைக் கொண்டது ஆனைமலை. அவற்றுள் ஒரு முகடு பொதினி (பழநி). இந்த ஆறு முகடுகளை ஆறுமுகம்(ஆறு+முகம்(முகடு-மலை)) என அழைக்கிறோம். இதை ஆண்டதால், முருகனை ஆறுமுகன் என அழைக்கிறோம். ஆனால், தமிழ் மொழித் தெரியாதவர்கள் ஆறுமுகன் என்றால் ஆறு முகங்களைக் கொண்டுள்ளவன் என தவறாகக் கருதி முருகனுக்கு ஆறு தலைகள் உள்ளது போல கதைகளைப் புனைந்து ஷண்முகன் (ஷண் - சமஸ்கிருதத்தில் ஆறு) என உருவாக்கினர். முருகன், தன் மக்களைக் காக்கும் அரசனாக இருந்துகொண்டு ஆசீவக நெறியைப் பின்பற்றியவன். பின்பு தெய்வ நிலையை அடைந்தான். முருகனை ஆசீவக சித்தன் என நாம் நிரூபிக்க வேண்டுமென்றால், முதலில் முருகன் யார் என்பதை நாம் பார்க்க வேண்டும்.\nமுருகன் யார் என்று நாம் தெரிந்துகொள்ள வேண்டுமென்றால், முதலில், படைவீடு, வேல், சேவல், மயில், காவடி, தண்டம், தலையில் மொட்டை அடிப்பது ஆகிய முருகனுக்குத் தொடர்புடைய விடயங்கள் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும்.முதலில், முருகனின் அறுபடைவீடு என்பதை விளக்க வேண்டுமென்றால், முதலில், வீடு என்ற சொல்லின் பொருள் என்ன என்பதைப் பார்க்கவேண்டும்.\nஅருவி – உயரத்திலிருந்து விழும் நீர்அதாவது, மலைமேல்(உயரமான இடம்) இருக்கும் வசிக்கும்/தங்கும் இடங்களை முதலில் வீடு என்றழைத்தனர். பின்பு அச்சொல், பொதுவான தங்குமிடங்களைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டது.\nஇந்த, சுரன் என்ற வடசொல்தான் சூரன் என மருவியது. அப்பொழுது, முருகன் ஆரியர்களை எதிர்த்துப் போர் புரிந்தானா என்பது ஆயத்தக்க விடயம்.முருகனின் அறுபடைவீடு என்றால், முருகன் போர் புரிந்து வென்ற இடங்களைக் குறிக்கும் என்பது தெளிவாகிறது. அடுத்து, முருகனுக்கு அடையாளங்களாக வேல், மயில், சேவல் என்பன எப்படி வந்தன என்பதைப் பார்ப்போம்.\nவேல் எப்படி வந்தது எனப் பார்ப்போம். வேல் எனும் தமிழ்ச்சொல்லின் பொருளைக் காண்போம்.வெல்>வேல் – வெல்லும் தன்மையைத் தன்னுள் கொண்டது வேல். வெல்லுவது வேல் எனப்பட்டது. அதாவது, போரில் வெற்றிபெறுவதற்கு உதவி செய்வது வேல் எனப்பட்டது. வெற்றியைத் தருவது வேல். ஆகையால், வேல் என்பது வெற்றி மற்றும் வீரத்தின் அடையாளம் எனவும் கூறலாம். வேல் என்ற உடனே நமக்கு முருகன் கையில் உள்ள வேலின் வடிவம் தான் நினைவுக்கு வரும். ஆனால், இதுமட்டும் வேல் அல்ல. சுமேரியாவில் பேல்(Bel) என்ற ஒரு சொல் உண்டு. அதைப் பார்த்தீர்களென்றால் சூலத்தை ஒரு கம்பின் இருபுறமும் வைத்ததைப் போல இருக்கும். இதை, ஆசீவகத்தில் ‘இருபுற முத்தலைக் கோல்’ என்பர். ஆசீவக நெறியின் அடையாளங்களுள் இதுவும் ஒன்று. வைணவத்தில் நாமமிடும் பழக்கம் இதிலிருந்துதான் தோன்றியது(நாமத்தின் நடுவில் இருக்கும் சிவப்பு நிறம் பகைவரின் குருதியைக் குறிக்கும்). இந்த ‘இருபுற முத்தலைக் கோல்’ம் வேல் தான். வேல் எனும் செந்தமிழ்ச்சொல்தான் பேல் என சுமேரியாவில் திரிந்தது.\nஇதிலிருந்து, முருக வழிபாட்டின் தொன்மையை நம்மால் அறிய முடியும். இதைப் பற்றி பிறகு விளக்கமாகப் பார்ப்போம். மயிலும் சேவலும் எப்படி முருகனின் அடையாளங்களாகினவென்றால், இவை தன் எதிரிகளுடன் தந்திரமாகச் சண்டையிடும்(Martial Arts) தன்மையைக் கொண்டவை. ஆகையால், சேவலும் மயிலும் முருகனின் போர்த்திறனைக் குறிக்கும் அடையாளங்கள் ஆகின. பொதினி மலையில்(பழநி மலையில்) மேல் உள்ள முருகனுக்கு தண்டாயுதபாணி எனப் பெயர். அதாவது, கையில் தண்டம் எனும் போர்க்கருவியை(சங்ககாலப் போர்க்கருவி) வைத்திருப்பவன் எனப் பொருள்படும். இதிலிருந்து, முருகன் என்பவன் சங்ககால அரசன். அவன் போர் புரிவதில் வல்லவன். போர் புரிந்து பல வெற்றிகளை பெற்றுள்ளான் என்பது தெளிவாகிறது. தமிழர்களுக்கு முருகன் வீரத்தின் அடையாளமாக உள்ளவன்.\nபழனி மலைமேல் உள்ள தண்டாயுதபாணி(முருகன்) தலையில் மொட்டை அடித்துள்ளவர். முருகன் ஏன் தலையில் மொட்டை அடித்திருக்க வேண்டும் என நாம் ஆய்ந்தால், ஆசீவகர், சமணர்கள் மற்றும் பௌத்த நெறியைச் சேர்ந்தவர்கள் தலையில் மொட்டை அடித்துக்கொள்ளும் வழக்கம் உள்ளவர்கள் என நமக்குப் புலப்படும். ஆரம்பக்காலத்தில் பழநி முருகன் கோயிலில் தலையில் மொட்டை அடிக்கும் வழக்கம் வந்தது, முருகன் ஆசீவக சித்தன் என்பதால் மட்டுமே என்பதும் புலப்படும். இதனால் தான், முருகனது பக்தர்கள் காவடி(காவுதடி) தூக்கும் வழக்கமும் தலையில் மொட்டை அடித்துக்கொள்ளும் வழக்கமும் வந்திருக்கலாம். இதற்குப் பொருள், முருகனை குருவாக ஏற்று, அவனிடம் சரணடைந்து கற்றுக்கொள்ள வருகிறோம் என்பதே (ஆசீவக சித்தர்களிடம் கற்றுக்கொள்ளும் மாணவர்களைப் போல்).\n(சமணம்(ஆசீவகம், ஜைனம்) மற்றும் பௌத்தத்தில் ஏன் மொட்டை அடிக்கிறார்கள் அதாவது முருகன் ஏன் தலையில் மொட்டை அடித்துள்ளார் என்பதன் அறிவியல் விளக்கம் பற்றி சிறிது ஆயவேண்டும்.) ஆசீவக நெறியில் தீர்த்தங்கரர் என்றால் தீர்வைத் தருபவர் (அ) தீர்வு தருவதைக்(தீர்த்தம்) கையில் வைத்திருப்பவர் எனப் பொருள்.\nஇதேச் சொல்லாடல் ஜைனத்திலும் உண்டு. இத்தீர்த்தங்கரரை அவர்கள் அருகன்(அருகன்>Arhat) எனவும் அழைப்பர். அதனாலேயே ஜைனர்களுக்கு, அருகர்/ஆருகதர் எனும் பெயரும் வந்தது. இப்பொழுது ஏன் இதைக் கூறுகிறேன் எனப் பார்க்கிறீர்களா?. அருகன் என்பது நம் முருகனின் வேறுபெயர்களுள் ஒன்று. நம் முருகனின் பெயரான அருகன் எனும் பெயர் ஜைனத்தில் அனைத்து தீர்த்தங்கரரைக் குறிக்கும் பொதுச்சொல். ஆசீவக முருகன் என்பவன் தீர்த்தங்கரர்(அருகன்) எனும் பெயரில் ஆசீவகத்திலும் ஜைனத்திலும் கந்தன்(ஸ்கந்தா/கந்தாஸ் – Skanda(Sanskrit)/Khandas(Pali)) எனும் பெயரில் பௌத்தத்திலும் உள்ளவன். இதனால் தான், கதிர்காமத்தில் உள்ள கந்தன் கோயிலை இந்துக்கள் மட்டுமல்லாது பௌத்தர்களும் வழிபடுகின்றனர். சீனாவிலும் பௌத்த நெறியில் Skanda(Skanda Bodhisattva/Wei Tuo) வழிபாடு உள்ளது. அங்கு, Skandaவை போதிசத்துவர்(Bodhisattva) எனக் குறிப்பிடுவர். போதிசத்துவர் என்பது ஆசீவக சித்தர்களின் வேறுபெயர்களுள் ஒன்று. இதன் பொருள் என்னவென்றால், ஆசீவகத் துறவிகள் வழிவழியாக (தலைமுறைகளாக) மக்களுக்கு நன்னெறிகளைப் போதித்து அவர்களை வழி நடத்தினர். போதனைகள் எனும் நன்னெறிகளை யீந்த இடமாகையால் ‘போதி சத்துவர்’ எனப் பெயர் பெற்றனர். இங்கு நாம் புத்தர் ஞானம் அடைந்த போதி மரத்தையும் போதிதர்மரையும் ஒப்புநோக்கவேண்டும்.\nஆசீவக முருக வழிபாடு எப்படி இந்து (தற்போதைய) நெறியிலும் ஜைன பௌத்த நெறிகளிலும் வந்தது என நீங்கள் கேட்கலாம். முருக வழிபாடு எப்படி ஜைன பௌத்த நெறிகளுக்கு வந்தது என்றால், ஜைனக் கோட்பாடுகளும் பௌத்தக் கோட்பாடுகளும் ஸ்ரமணம்(அமணம்>சமணம்>ஸ்ரமணம்) எனும் சமணத்தின் திரிபிலிருந்து தோன்றியவை. அதற்கு முன் சமணம் எனும் சொல் ஆசீவகத்தை மட்டுமேக் குறிக்கும். அதாவது, ஜைனம் தோன்றுவதற்கு முன்பு சமணம் (அமணம்) என்றால் ஆசீவகம், ஆசீவகம் என்றால் சமணம்(அமணம்) என்றே பொருள். ஜைனம் தோன்றிய பின்பு சமணம் எனும் சொல் ஆசீவகம் மற்றும் ஜைனம் ஆகிய இரண்டையுமே சேர்த்துக் குறிக்கும் என்பர்.\nபொதுச்சொல்லானது. ஏன் பொதுச்சொல்லாக வேண்டும்?. அதற்குக் காரணம், ஆசீவகத்திற்கும் ஜைனத்திற்க்கும் பொதுவாக உள்ள கோட்பாடுகளால் தான். ஜைனக் கோட்பாடுகள் ஆசீவகக் கோட்பாடுகளிலிருந்து உருவாக்கப்பட்ட கோட்பாடுகள். ஆனால், சிறிது வேறுபாடுகள் உண்டு. இதனால் தான், முருக வழிபாடு, ஜைனத்திலும் பௌத்தத்திலும் உள்ளது. சமணம் எனும் சொல் ஜைனம் தோன்றிய பின்பு ஆசீவகம் மற்றும் ஜைனம் ஆகிய நெறிகளைச் சேர்த்துக் குறிக்கும் பொதுச்சொல் என்று இருந்தால், பின்பு எப்படி சமணம் எனும் சொல் ஜைனம் எனும் சொல்லின் தமிழ்ச் சொல்லானது என நீங்கள் கேட்கலாம். இதற்கு விடை, முன்பு கூறப்பட்ட ஆசீவக நெறியின் சான்றுகளில் உள்ளது. அதாவது, இதற்குக் காரணம், ஆசீவகக் கோட்பாடுகள் மற்றும் வழிபாடுகள், ஆசீவகர்கள் நம்பிய, முன்பே முடிவு செய்யப்பட்ட விதி எனும் கொள்கையினாலும், வைதீக ஜைன பௌத்த நெறிகள் தங்கள் நெறியை புராணங்கள் மூலம் பரப்பியதாலும், வைதீக ஜைன பௌத்த நெறிகளால் ஆசீவகக் கோட்பாடுகளை இழுத்துக்கொள்ளப்பட்டதால் ஏற்ப்பட்ட குழப்பங்களாலும், ஆசீவகக் கோட்பாடுகள் வைதீக இந்து நெறிக்குச் சென்று பிற்கால வைதீக நெறியினர்களால் திரிக்கப்பட்டதாலும், பிற்காலத்தில் வைதீக இந்து நெறியின் செல்வாக்கு உயர்வாலும், மக்களிடம் வெகுவாகக் குறைந்த ஆசீவக நெறியின் செல்வாக்காலும், வழிவழியாக வந்த ஆசீவக நெறியைப் பற்றிய அறிவு குறைந்ததாலும், ஆரியர்களால் தமிழர்களின் வரலாற்று திரிப்புகளாலும் அழிப்புகளாலும், தற்காலத்தில் அப்படி ஒரு நெறியே இல்லை என்றளவிற்கு ஒரு நிலையை உருவாக்கிவிட்டது. அக்காலத்திலிருந்தே, ஜைன பௌத்த வைதீக நெறிகள் புராணங்கள் மூலம் தங்கள் நெறியை மக்களிடம் பரப்பின. ஏன், இந்நாட்களில் கூட தொலைக்காட்சிகளில் வைதீக இந்து நெறியினர், இராமாயணம் மகாபாரதம் முதலிய வைதீக இந்துக்களால் திரித்து(புனைந்து அல்ல) எழுதிய புராணங்களை திரையிடுகின்றனரே. ஏற்கனவே உள்ளவர்களிடம் மத நம்பிக்கையை வலுப்படுத்தவும் வழிவழியாக வரும் அடுத்த தலைமுறையினருக்கு தங்கள் மதத்தைப் பரப்புவதற்கும் பலப்படுத்துவதற்கும் தான் இந்த செயல். ஆசீவக வழிபாடுகள் வைதீக இந்து நெறிக்குச் சென்ற பின் வைதீக நெறியினர்களால் புராணங்களாகத் திரிக்கப்பட்டன.\n1. விநாயகர் வழிபாடு\n2. முருகன் வழிபாடு\n3. ஓம் எனும் மந்திரச் சொல்\n4. சுழற்றியம் (ஸ்வஸ்திகா)\n5. ஊன் உண்ணாமை\n6. உண்ணா நோன்பு\n7. தலையில் மொட்டை அடிப்பது\nசமணம்(ஆசீவகம், ஜைனம்), பௌத்தம், தற்போதைய வைதீக இந்து நெறிகள் அனைத்திற்கும் இடையே இவ்வளவு ஒற்றுமைகள் இருக்கின்றதென்றால்,தற்செயலாக இது நிகழ்ந்திருக்க வாய்ப்பில்லை. முருகன் ஆனைமலையை ஆண்ட அரசன் எனப் பார்த்தோம். முருகனின் அறுபடைவீடுகளில் மலைமேல் உள்ள ஐந்து படைவீடுகள் அனைத்திலும் சமண குகைகள் உள்ளன என்பது இங்கு நோக்கத்தக்கது. சமணர் என்றால் இங்கு ஜைனரா ஆசீவகரா என நாம் பார்க்கவேண்டும். ஜைன நெறியினருக்கும் ஆசீவக நெறியினருக்கும் உள்ள வேறுபாடுகளுள் ஒன்று, ஜைன நெறியினர் மலை மேல் தங்கமாட்டார். அவர்கள் மலையின் அடிவாரத்தில் உள்ள குகைகளில் தங்குபவர்கள். ஆனால், ஆசீவகர்கள் மலைமேல் கற்படுக்கைகள் அமைத்துத் தங்குபவர். இதன்மூலம், இக்குகைகள் ஆசீவக சித்தர்கள் தங்கிய இடங்கள் எனத் தெளிவாகிறது.\nஇதன்மூலம், முருகன் ஆசீவக நெறியின் தெய்வ நிலையை அடைந்த சித்தன் எனத் தெரிகிறது. மேலும், முருகனை சித்தன், ஐயன் (எடுத்துக்காட்டு: முருகையன், வேலையன், சுப்பையன்), ஐயா என ஆசீவக சித்தர்களைக் குறிப்பிடும் சொற்களை வைத்து அழைப்பதும் இங்கு நோக்கத்தக்கது.\n"டிரேகன்" (DRAGON) பற்றிய உண்மை வரலாறு அறிவோம்!\nகீழை நாடுகளில் அறியப்படும் "ட்ரேகன்" என்பது முருகனையேக் குறிக்கிறது எனும் ஆய்வுக்கட்டுரை. "ட்ரேகன்" என்பது கிழக்கு நாடுகளில் நல்ல சக்தியாகவும், மேற்கு நாடுகளில் தீய சக்தியாகவும் கருதப்படுகிறது. நல்ல சக்தியாக விளங்கும் கிழக்கு நாடுகளின் "ட்ரேகன்" பற்றி முதலில் காண்போம். சிவன், ஏறத்தாழ 20,000 ஆண்டுகளுக்குமுன் வாழ்ந்த ஒரு சித்தர் மற்றும் புராதனக் கடவுள். உலகத்தின் அனைத்து மனித குலங்களிலும் நிறைந்து இருப்பவர் சிவனே!\nகிட்டத்தட்ட 10,000 ஆண்டுகளுக்குமுன் வாழ்ந்த அடுத்த சித்தர் மற்றும் புராதன கடவுள் முருகன். லெமூரியாக் கண்டம் எனப்படும் குமரிக் கண்டம் கடலில் மூழ்கியபோது வாழ்ந்தவர். சிவனைப் போலவே உலகின் அனைத்து நாகரிகங்களிலும் நிறைந்திருப்பவர். குமரிக் கண்டம் கடலில் மூழ்கியபோது மக்களைக் காப்பாற்றியவர். குமரிக் கண்டத்தில் வாழ்ந்த அவர், கடல் அழிவுக்குப்பின் இலங்கைப் பகுதிக்குள் தன் மக்களுடன் குடியேறினார்.\n"கும்பலாய் மரித்த கண்டம்" என்பதிலிருந்து உருவானதே "குமரன்" என்ற முருகனுக்கான இன்னொரு பெயர்.\nகடலில் மூழ்கி மக்கள் இறந்ததை ஈடுகட்ட, அவர் மக்கள் இனப்பெருக்கத்தை ஊக்கப்படுத்தினார். அதனால், இனப்பெருக்கத்திற்கான கடவுளானார்.\nமுருகன் விவசாயத்தைக் கண்டுபிடித்தவர்; முதன்முதலாய் உலகத்துக்கு விவசாயத்தைக் கற்றுக்கொடுத்தவர். விவசாய விளைபொருள்கள் திருடர்களால் களவாடப் படுவதைத் தடுக்க போர்க்கலைகளை முதலில் உருவாக்கியவர். ஆதலினால், அவர் "போர்க்கடவுள்" எனவும் அழைக்கப்பட்டார். போர்க்கலைகளை உருவாக்கிய முருகன் மயில், சேவல், ஆடு ஆகியவற்றுடன் அடையாளம் காணப்பட்டார். குண்டலினி யோகக் கலையை மேம்படுத்தியவர் என்றமுறையில் பாம்பு அடையாளப்படுத்தப்பட்டது. விவசாயம் கண்டுபிடிக்கப்படுவதற்குமுன், அவர் மாடு மேய்ப்பவராகவும், மேய்ச்சல் சமூகத்தின் அரசராகவும் விளங்கினார்.\nவிவசாயம் மழை சார்ந்ததாகையால், அவர் பருவ நிலை சார்ந்த ஒரு காலண்டரை உருவாக்கினார்.\nசிவனின் முதலாம் தமிழ்ச் சங்கத்தையடுத்து, அவர் இரண்டாம் தமிழ்ச் சங்கத்தைத் தோற்றுவித்தார். "கவாடபுரம்" அவரது தலை நகரமாக விளங்கியது. கவாடம் என்றால் முத்து.\nமுருகன் "முத்து"டன் சம்பந்தப்பட்டவர் என்பதால் அவர் முத்துக்குமரன், முத்தரசன், முத்துசாமி என்றெல்லாம் அழைக்கப்பட்டார்.\nவிவசாயம் செய்வதற்காக பனைமரங்கள் நிறைந்த காட்டை எரித்து விளை நிலங்களை முருகன் உருவாக்கியதால் இலங்கை மலைக்குறவர்கள் அதனை எதிர்த்தார்கள். அதன்பொருட்டு நடந்த போரில் முருகன் வென்றதைக்குறித்தே பங்குனி மாதம் பௌர்ணமி நாளன்று "பங்குனி உத்திரம்" கொண்டாடப்படுகிறது. பங்குனி உத்திரம் என்றால் வீரத்துடன் வெற்றிபெறுதல் (Valiantly Subduing) என்று பொருள்.\nமேலும், முருகன் நிறத்தை அடிப்படையாகக் கொண்டு சப்த கன்னிகள் என்ற ஆசீவகக்கோட்பாடை உருவாக்கினார். அதில் ஒரு கன்னி விவசாயத்தைக் குறிக்கும் பச்சையம்மா. பச்சையம்மாவை வெள்ளி கிரகத்துடனும் உருவகப்படுத்தினர். போரின் வெற்றி விவசாயத்தின் வெற்றியானதால் விவசாயத்தைக் குறித்த வள்ளியை (வெள்ளி) முருகன் மணந்ததாக கூறப்பட்டது. முருகன் விளை நிலம் வேண்டி பனைமரக்காட்டை எரிக்க தீமூட்டியதால் அவர் "அக்னிதேவன்" எனவும் அழைக்கப்பட்டார்.\nகுமரிக் கண்டம் கடலில் மூழ்கிய காலத்தைச் சேர்ந்தவர் முருகன் என்பதால் அவர் மனிதகுலம் அனைத்தும் அறிந்தவராக இருக்கிறார். ஆனால், வேறு, வேறு பெயர்களில், முறைகளில் அவர் அறியப்படுகிறார்.\nஉதாரணமாக, யாசிதியர் அவரை "தவுசி மேலக்" என்றும் மயிலாகவும் வழிபடுகின்றனர். எகிப்தியர்கள் அவரை "ஆமுன்" என்றழைத்தனர்; ரேம் என்று வழிபடுகின்றனர். பிளிஸ்டியன்கள் அவரை மீன்கடவுள் என்றும் டாகன் என்றும் மனித மீனாகவும் வழிபடுகின்றனர். பாபிலோனியன்கள் அவரை "மர்துக்" என்றும் சுமேரியர்கள் "தம்முஸ்" என்றும் கானனைன்கள் "பால்காடு" என்றும் அழைகின்றனர்.\nஇஸ்லாமியர்கள் முருகனை "அல்கிதிர்" என்று வழிபடுகின்றனர். ஆப்கானிஸ்தானின் "கந்தகார்" நகரத்தின் பெயரும் முருகனான கந்தனைக் குறித்தே பெயரே! இப்போது டிரேகன் உருவானவிதம் காண்போம். முருகனின் குண்டலினி யோகக் கலையைக் குறித்த பாம்புடன், மயிலின் இருகால்கள், சேவலின் இரு கால்கள், ஆட்டின் இரு கொம்புகள் அனைத்தையும் இணைத்தால் கிடைப்பது, "ட்ரேகன்". முருகன் அக்னி தேவன் என்பதால் ட்ரேகன் நெருப்பைக் கொட்டுகிறது. முருகனின் தலை நகரம் கவாடபுரம் என்கின்ற முத்து நகரம் ஆனதால் சீன ட்ரேகன் முத்துடன் காணப்படுகிறது. முருகன் பெரும் அரசன் என்பதால், சீன அரசர்களின் அடையாளமாக ட்ரேகன் காணப்படுகிறது.\nமுருகன் தோற்றுவித்த விவசாயத்தால் மக்கள் செழிப்புற்று விளங்கியதால் ட்ரேகனை செல்வச்செழிப்புடனும், முருகன் மழைக்காலம் அறிந்து விவசாயம் செய்த மழைக்கடவுள் என்பதால் ட்ரேகனை மழையுடனும், அடைப்படைக் காலண்டரை உருவாக்கியவர் என்பதால் சீன வருடப்பிறப்பன்று ட்ரேகனுடன் நடனமாடியும் உருவகப்படுத்தி முருகனை நினைவு கூறுகின்றனர்.\nஆதியில் இலங்கையிலிருந்து இடம்பெயர்ந்தவர்கள் சீனர்கள் என்பதால் அவர்கள் தங்களை முருகன் வழித்தோன்றல்கள் என்பதைக்குறிக்கும் "ட்ரேகனின் வழிவந்தவர்கள்" எனக் குறிப்பிடுகின்றனர்.\nமுருகன் வாழ்ந்த காலத்தில் மக்கள் மலைகளில் வசித்ததால் மலை அரசர்களே மிகுதியாக இருந்தனர். குமரிக்கண்டம் கடலில் மூழ்கிக்கொண்டிருந்தபோது மக்களைக் காப்பாற்றி இலங்கையில் குடிபுகுந்தபோது அவர்களுக்கு மலையில் குடியேற இடமில்லாமல் மலைக்குறவர்கள் நிரம்பியிருந்ததால் தரையில் தங்கவேண்டிய நிலைமை ஏற்பட்டது. உலகின் முதல் தரை அரசனாக முருகன் விளங்கினான்.\nஇப்படியாக முருகனே "ட்ரேகன்" என அழைக்கப்பட்டான். ட்ரேகன் என்பது தரை அரசனான முருகனையே குறிக்கிறது.\n(ஆசீவகம் பற்றிய மேலும் அறிய, புத்தகமாக விரைவில்)\nமுனைவர். பாண்டியன், தமிழ்ச் சிந்தனையாளர் பேரவை ஆய்வுகள்
இளையராஜா ரெக்கார்டிங் தியேட்டர் பூட்டு உடைப்பு.. பிரசாத் ஸ்டுடியோவில் பரபரப்பு.. - The Subeditor Tamil\nby Chandru Dec 28, 2020, 13:27 PM IST\nஇசைஞானி இளையராஜா. கடந்த பல ஆண்டுகளாக சென்னையில் உள்ள பிரசாத் ஸ்டுடியோவில் மியூசிக் கம்போஸ் செய்து வந்தார். காதுக்கினிய, மனதுக்கினிய பல்லாயிரம் பாடல்களை இந்த இசைக் கூடத்திலிருந்து தான் இளையராஜா கம்போஸிங் செய்தளித்தார். 80களின் பாடல்கள் என்றால் இளையராஜா என்ற முத்திரை பதிந்துவிட்டது. அவரது பாடல்கள் ஒலிக்காத நாளே கிடையாது. 80 காலகட்ட படங்கள் இப்போது உருவாக்கப்பட்டாலும் இளையராஜா பாடலை பின்னணியில் சுழல்விட்டுத் தான் படமாக்குகின்றனர். கடந்த சில வருடங்களாக இளையராஜாவுக்கும் பிரசாத் ஸ்டுடியோ நிர்வாகத்துக்கும் மோதல் நிலவி வருகிறது. பல்லாயிரக்கணக்கான பாடல்களை ஒலிப்பதிவு செய்த இசை கூடத்திலிருந்து இளையராஜாவை ஸ்டுடியோ நிர்வாகம் வெளியேறச் சொல்லி இருக்கிறது. கடந்த ஆண்டு இதை எதிர்த்து இயக்குனர் பாரதிராஜா, ஆர்.கே. செல்வமணி போன்ற பிரபல இயக்குனர்கள் பிரசாத் ஸ்டுடியோ முன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஆனாலும் சமாதான பேச்சு வார்த்தை எடுபடவில்லை. இளையராஜா இசை அமைத்து வந்த ஒலிப்பதிவு கூடத்தை நிர்வாகம் பூட்டிவிட்டது. அதை எதிர்த்து இளையராஜா கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருக்கிறார். அதில், என்னுடைய உடைமைகள் இசைக் கூடத்தில் உள்ளன. அதை எடுக்க ஸ்டியோவிற்குள் என்னை அனுமதிக்க உத்தர விட வேண்டும் என்று கேட்டிருந்தார். ஆனால் அதற்கு ஸ்டுடியோ நிர்வாகம் மறுப்பு தெரிவித்துருக்கிறது. அவர்கள் தரப்பில் கூறும்போது, இசை கம்போஸ் செய்யும் எண்ணத்துடன் இளையராஜாவை ஸ்டுடியோவிற்குள் அனுமதிக்க முடியாது என்று பதில் அளித்துள்ளது. இதுகுறித்து ஸ்டுடியோ தரப்பு வெளியிட்டுள்ள மெசேஜில், இளையராஜா தொடர்ந்த வழக்கு தொடர்பாக கோர்ட்டில் எங்கள் தரப்பில் பதில் அளிக்கப்பட்டிருக்கிறது. தனது உடைமைகளை எடுக்க அனுமதிக்க வேண்டும் என்று இளையராஜா கேட்டிருக்கிறார். ஆனால் அங்கிருப்பவை ஏற்கனவே பழுத்தாகிவிட்டது.\nஅவருடைய உடைமைகள் நிர்வாகம் அப்புறப்படுத்தி விட்டது. அந்த கட்டிடத்தை நிர்வாகம் இடிக்க தீர்மானித்துள்ளது. இசை கம்போஸ் செய்யும் எண்ணத்துடன் இளையராஜாவை ஸ்டியோவுக்குள் அனுமதிக்க முடியாது என்று கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் இளையராஜா, பிரசாத் ஸ்டுடியோ மோதல் முடிவை நெருங்கியது. பிரசாத் ஸ்டுடியோவில் இருந்து தனது உடமைகளை சேகரிக்க உதவுமாறு கோரி இளையராஜா சமீபத்தில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இசையமைக்கும் நோக்கத்துடன் வந்தால் இளையராஜாவை ஸ்டுடியோ அனுமதிக்காது என்று ஸ்டுடியோ நிர்வாகம் வழக்கு பதிவு செய்தது. பிரசாத் ஸ்டுடியோஸ் பின்னர் இசையமைப்பாளரை நிபந்தனைகளுடன் அனுமதிப்பதாக கூறப்பட்டது. தற்போது இளையராஜா தனது உடமைகளை சேகரித்து ரெக்கார்டிங் தியேட்டரை ஸ்டுடியோவில் விட்டு வெளியேற ஒப்புக் கொண்டார்.\nஇசையமைப்பாளர் தனது உடமைகளை சேகரித்த பின்னர் ஸ்டுடியோவை விட்டு வெளியேறுவார் என்று இளையராஜாவின் செய்திக் குறிப்பு தெரிவித்தது. அந்த அறிக்கையில், நான் பிரசாத் ஸ்டுடியோவில் எனது இடத்தை கோர மாட்டேன். நான் எனது உடமைகளை எடுத்துக்கொள்வேன் என்றார். பிரசாத் ஸ்டுடியோஸ் இளையராஜாவை நிபந்தனைகளுடன் மட்டுமே அனுமதிப்பதாக கூறபட்டது. இசை அமைப்பாளர் ஸ்டுடியோ நிர்வாகத்திற்கு எதிராக தொடரப்பட்ட அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெற வேண்டும், எதிர்காலத்தில் அவர்களின் விவகாரங்களில் தலையிடக்கூடாது என்று தெரிவித்திருந்தனர். இளையராஜா முன்னதாக தனது பொருட்களை சேதம் செய்ததற்காக பிரசாத் ஸ்டுடியோ நிர்வாகம் 50 லட்சம் தரவேண்டும், என்னை மன உளைச்சல் ஏற்படுத்தியதாக நஷ்டஈடு தர வேண்டும் என கோரியிருந்தார்.\nஇந்த வழக்கில் கோர்ட் இளையராஜவுக்கு பிரசாத் ஸ்டுடியோவிற்குள் செல்ல ஒரு நாள் அனுமதி வழங்கி உள்ளது. காலை9மணிமுதல்4மணிவரை இருக்கலாம் எனத் தெரிவித்திருக்கிறது. இதையடுத்து இன்று இளையராஜா பிரசாத் ஸ்டுடியோ வருவதாக தகவல் பரவியது. அங்கு டிவி கேமாரா மேன்கள், மீடியாக்கள் காலையிலேயே குவிந்தனர். நேரம் செல்லச் செல்ல கூட்டம் அதிகரித்தது. ஆனால் அங்கு வந்த இளையராஜா பி ஆர் ஓ வந்து, இளையராஜா இன்றைக்கு வரவில்லை என்று தகவல் தெரிவித்தார். இளையராஜா தரப்பில் அவரது வழக்கறிஞர்கள் வந்தனர். அவர்களுடன் இளையராஜா உதவியாளர்கள் வந்தனர். அவர்கள் உள்ளே சென்று விட்டு திரும்பிய போது இளையராஜா பூட்டி வைத்திருந்த ரெக்கார்டிங் தியேட்டர் அறை பூட்டு உடைக்கப்பட்டிருக்கிறது என்றனர். இது இளையராஜாவுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தியது.\nYou'r reading இளையராஜா ரெக்கார்டிங் தியேட்டர் பூட்டு உடைப்பு.. பிரசாத் ஸ்டுடியோவில் பரபரப்பு.. Originally posted on The Subeditor Tamil\nகொரோனா தடுப்பூசி4மாநிலங்களில் இன்று ஒத்திகை
நவராத்திரியில் ஒன்பது நாள் வழிபாடு எதற்காக? | Navarathri Special\nPosted Date : 10:41 (02/10/2016)\nLast updated : 10:38 (02/10/2016)\nமதுகைடபர், மகிஷாசுரன், தூம்ரலோசனன், சண்டமுண்டன், சும்பநிசும்பர், ரக்த பீஜன் இப்படியோர் அசுரக் கூட்டம் அண்டத்தை ஆட்டிப்படைத்தது.\nமுப்பத்து முக்கோடி தேவர்கள், மும்மூர்த்திகள், இந்திரன், திக்பாலகர்கள் ஆகிய எவராலும்அசுரர்களை அடக்க முடியவில்லை. உலகைக் காக்கும் பொறுப்பை சுமப்பவர்கள் தேவர்கள். சும்மா இருக்க முடியுமா? சிந்தனையில் ஆழ்ந்தார்கள்!\nஈசன் விழித்துக்கொண்டார். தனது உடலில் ஒன்றியிருக்கும் தேஜஸை அதாவது சக்தியைப் பிரித்து வெளியே எடுத்தார். அதைப் பார்த்து, மற்ற தேவர்களும் தங்களது தேஜஸை ஆற்றலை வெளியே கொண்டு வந்தார்கள். அனைத்து தேவர்களது சக்தியும் ஒன்றாகத் திரண்டு ஒரு பேரொளியாக மாறியது. அந்தப் பேரொளியின் பெயர் துர்கை! ஆண்மையில் உறைந்திருந்த சக்தி, அவசரத்துக்கு உதவவில்லை. எனவே, அந்தப் பேரொளி பெண்மையாகத் தோற்றமளிப்பதையே தேவர்கள் விரும்பினர்.\nஉண்மையில்... ஆண் பெண் என்பது வெளித் தோற்றத்தில் தென்படும் மாறுபாடே. உள்ளே உறைந்திருக்கும் ஆற்றல், ஆக்கப் பிறந்ததாக இருக்க வேண்டும். இதை மெய்ப்பிப்பதே துர்கையின் தோற்றம். தேவர்களின் ஆற்றல் மட்டுமின்றி, அவர்களது ஆயுதங்களும் அம்பாளை வந்தடைந்தன. சுருங்கச் சொன்னால், அனைத்துத் தேவர்களின் ஒட்டுமொத்த வடிவமே அம்பாள் என்ற தகவலை ‘தேவி மகாத்மியம்’ விவரிக்கிறது.\nபிரம்மனின் சக்தி இணைந்திருப்பதால் அவள் ப்ராம்மீ. அவளிடம் மகேசனின் பங்கும் உள்ளதை மாகேஸ்வரி என்ற பெயர் சுட்டிக்காட்டுகிறது. இதைப்போல், முருகப்பெருமான், விஷ்ணு மற்றும் இந்திரன் ஆகியோரது சக்தியையும் தன்னில் கொண்டவள் என்பதை... கௌமாரீ, வைஷ்ணவி, வாராஹி (வராக மூர்த்தியின் அம்சமானவள் என்பதால்) இந்திராணி என்ற தேவியின் பெயர்கள் சுட்டிக்காட்டுகின்றன.\nபோரில் ஒவ்வொரு எதிரி விழும்போதும் அந்த வெற்றியைக் குதூகலமாகக் கொண்டாடுவதுண்டு. தேவி, உலகின் எதிரிகளான ஒன்பது அசுரர்களை அழித்தவள். ஆதலால், அவளை ஒன்பது நாட்களாவது கொண்டாடுவோம். அவள் மக்களுக்காகச் செயல்பட்டவள்; மக்கள்\nதுன்பத்தை அகற்றி, இன்பம் சேர்த்தவள்!\nபேரொளியின் பூரண மகத்துவம் இரவில் பளிச்சிடும். இரவில், அவளைத் தரிசிப்பது கண்ணுக்கு விருந்து. ஒளிமயமான வாழ்க்கைக்கு ஒளிமயமானவளை வழிபடுவது சிறப்பு. சூரியன், பகலில் ஒளி தருவான். இவள், இருளிலும் ஒளி தருபவள். மனதில் மண்டிக் கிடக்கும் அறியாமை இருளை அகற்ற ஆதவனால் இயலாது; தேவியால் இயலும். மற்றவர்களைவிட அம்பாளிடம் தனித் தகுதி உறைந்திருப்பதை உணர முடிகிறது.\nமக்கள் மனதிலிருந்து பயம் அகல வேண்டும். அவர்களை, ஏழ்மை தழுவக் கூடாது. அவர்களது அறியாமை அகன்று, அறிவொளி மிளிர வேண்டும். ஆக... மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு ஆதாரமான வீரம், செல்வம், கல்வி ஆகிய மூன்றையும் எல்லோருக்கும் பகிர்ந்தளிப்பவள் அவள்.\nஉலகின் தாய் அவள். பிள்ளைகளில் பாகுபாடு பார்க்காது தாயுள்ளம். பிள்ளை களின் உள்ளத்தில் கெட்ட எண்ணம் தென்படலாம். ஆனால், கெட்ட எண்ணம் கொண்ட தாயுள்ளம் உலகில் இல்லவே இல்லை என்று ஆதிசங்கரர் கூறுவார்!\nமனதில் நினைத்தால் போதும்; அவள், மரண பயத்தை அகற்றி விடுவாள். அவளின் திருவுருவை அலங்கரித்து அடிபணிய வேண்டாம்; உள்ளம் அவளை நினைத்தாலே போதும்... அவளின் அருள் கிடைக்கும்.\nஇல்வாழ்வில் இன்னல் தோன்றாமல் இருக்க பயம் அகல வேண்டும். உலகையே பயத்தால் நடுங்க வைத்தவர்களையும் அழித்தவள் அவள். பயம் அகன்றவர்களுக்கு சிந்தனை வளம்பெற அறிவூட்டுபவள் அவள். வாழ்க்கையின் அடித் தளத்தையே தகர்க்கும் ஏழ்மை, மக்களை பற்றாமல் பார்த்துக்கொள்பவள் அவள். ‘பயம், ஏழ்மை ஆகியவற்றை அகற்றி, அறிவொளி அளிக்க எப்போதும் கருணை உள்ளத்துடன் விழித்துக் கொண்டிருக்கும் தாய் துர்கை’ என்று மார்க்கண்டேய புராணம் கூறுகிறது (துர்கே ஸ்ம்ரு தாஹரஸி...).\nபயம் போக்கும் துர்கை வடிவத்துக்கு மூன்று நாள், ஏழ்மையை அகற்றும் லட்சுமி வடிவத்துக்கு மூன்று நாள், அறிவொளி தரும் சரஸ்வதி வடிவத்துக்கு மூன்று நாள்... இப்படி ஒன்பது நாட்கள் அம்பாளை வழிபடுவது சிறப்பு! மூன்று தடவை சொன்னால் முற்றுப்பெற்றதாக எண்ணலாம். ‘ஓம் சாந்தி சாந்தி சாந்தி’ என்று வேதம் மும்முறை சொல்லும். மூன்று நாட்களில் பயம் அகன்றது. அடுத்த மூன்று நாட்களில் ஏழ்மை அகன்றது. கடைசி மூன்று நாட்களில் அறிவொளி நிலைத்தது. ஆகையால், அம்பாளுக்கு ஒன்பது நாள் பணிவிடை செய்வது விசேஷம்!\nவருடத்தில் நான்கு வகை நவராத்திரிகள் உண்டு. அவை: பங்குனி மாதம் அமாவாசைக்குப் பிறகு, பிரதமையில் தொடங்கும் ‘லலிதா நவராத்திரி’, மாசி மாதம் வரும் ‘ராஜ மாதங்கி நவராத்திரி’, ஆடியில் வரும் ‘மகா வராஹி நவராத்திரி’, புரட்டாசியில் வரும் ‘சாரதா நவராத்திரி’.\nராமபிரான் நவராத்திரி விரதத்தைக் கடைப்பிடித்த பிறகுதான், அவருக்குச் சீதை இருக்குமிடம் தெரிந்தது என்று ‘தேவி பாகவதம்’ சொல்கிறது.\nதமிழகத்தைப் பொறுத்தவரை, பிற்காலச் சோழர் காலத்தில் இருந்துதான் நவராத்திரி திருவிழா அரசு விழாவாக அங்கீகரிக்கப் பட்டது என்பார்கள்.\nஉத்தரப்பிரதேசம், உத்தராஞ்சல் மாநிலங்களில் ‘ராம லீலா’ என்ற பெயரில் நவராத்திரி கொண்டாடப்படுகிறது. அந்த விழா வில், ராவணன் மீது ராமர் அம்பு எய்து, தீயவை அழிக்கப் படுவதாகச் சொல்வது சிறப்பம்சம்.\nநவராத்திரியின் ஒன்பது நாட்களும்; ஒன்பது விதமாக அம்பிகையை பூஜித்து வழிபாட வேண்டும். இதனால், நம் வாழ்க்கை இன்னும் அழகாகும், நலம் பெறும் என்பதே இவ்விழாவின் தாத்பரியம் Navarathri specialNavarathri special | நலம் தரும் நவராத்திரி விழா! - VIKATAN
Deepa Lakshmi | Aug 21, 2019\nசென்னை திருவான்மியூர் மற்றும் நீலாங்கரை கடல் கடந்த 19ம் தேதி அன்று திடீரென வைரலானது. காரணம் அங்கு இரவு நேரத்தில் கடல் திடீரென நைட் லாம்ப் போட்டது போன்ற நீல வண்ணத்தில் மிளிர்ந்தது.\nவிடுமுறை என்பதால் மக்கள் மாலையில் இருந்து அங்கே குழுமி இருந்தனர். இரவு ஆரம்பித்ததும் கடல் ஒரு அழகிய நீல வண்ணத்தில் மின்னியது கண்டு மக்கள் ஆச்சரியப்பட்டனர். உடனடியாக வாட்சப் போன்ற சமூக ஊடகங்களில் இது பரவவே மக்கள் அங்கே வேகமாக படையெடுத்தனர்.\nசாண்டிக்கு பிறந்த பொண்ணு சும்மா நிக்குமா! நடனமாடும் மழலை தேவதை லாலா !\nடாய்னப்லெட்ஜெஸ் என்கிற ஒரு விதமான கடல் பாசி தான் இந்த நீல நிறத்திற்கு காரணம் என்று தெரிய வந்துள்ளது. தனக்கு ஆபத்து என்று வரும்போது இந்த கடல்பாசி ஒருவித நீல வண்ணத்தை உமிழுமாம். அதனால் இதனை உண்ண வந்த உயிரினங்கள் திசை திருப்பப்படுகிறது.\nசிறு மீன்கள் இந்தப் பாசி வகையை உண்ண வரும்போது இந்த ஒளியினை அது உமிழ்கிறது. அதனால் ஈர்க்கப்பட்ட பெரு மீன்கள் அங்கே வரும் சமயம் சிறு மீன்கள் பெரு மீன்களுக்கு இரையாகின்றன. கடல் பாசிகள் தப்பிக்கின்றன.\nஎதற்கடி வலி தந்தாய்..துருவ்வின் மென்குரலில் 50 லட்சம் வியூக்களை கடந்து சாதனை படைத்த பாடல்!\nஇப்படி ஒரு காரணம் கூறப்பட்டாலும் அண்மையில் பெய்த மழையால் கடலில் கழிவுகள் சேர்ந்திருக்கலாம் என்றும் அதில் இருந்த நைட்ரஜன் பொருள்களால் கடல் இந்த நிறத்தை உமிழ வேண்டி வந்திருக்கலாம் என்றும் தேசிய கடலோர ஆராய்ச்சி மையமான NCCR விஞ்ஞானி பிரவாக் மிஸ்ரா தெரிவித்திருக்கிறார்.\nகடந்த வருடம் மும்பை beachல் இதே போல நடந்ததாகவும் சுட்டி காட்டப்பட்டிருக்கிறது. சம்பந்தப்பட்ட விஞ்ஞானிகள் குழு இதனை நேரில் சென்று ஆராய்ந்து வருகின்றனர்.
12 பாடல்கள், 6000 தியேட்டர்கள்.... பட்டைய கிளப்பும் மாஸ்டர்!\nபிகில் படத்தின் பிரமாண்ட வெற்றிக்குப் பிறகு கைதி இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ள படம் மாஸ்டர். தளபதி விஜய் நடிப்பில் உருவாக்கப்பட்டுள்ள மாஸ்டர் படம் 6000க்கும் அதிகமான திரையரங்குகளில் உலகம் முழுவதும் வெளியாக இருப்பதாக செய்தி வெளியாகி வருகிறது.\nஇந்தப் படத்தில், விஜய் உடன் இணைந்து விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, சஞ்சீவ், நாசர், அர்ஜூன் தாஸ், சாந்தனு, ரம்யா சுப்ரமணியன், தீனா, ஸ்ரீமன், கௌரி கிஷான், பிரிகிதா, ரமேஷ் திலக், அழகம் பெருமாள், பிரேம் குமார் என்று ஏராளமான நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். சேவியர் பிரிட்டோ தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.\nமொத்தம் 12 பாடல்கள் இடம்பெற்றுள்ள இந்த படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே அமோக வரவேற்பு பெற்று யூடியூப்பில் சாதனையும் படைத்துவிட்டது. அண்மையில், இப்படத்தின் தெலுங்கு டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. அண்மையில், இந்தப் படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது என்று செய்தியும் வெளியானது. அந்தளவிற்கு இந்தப் படத்தில் ஆக்‌ஷன் காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.\nமாஸ்டர் படம், கமல் ஹாசன் நடித்த நம்மவர் படத்தின் காப்பி என்றெல்லாம் தகவல் பரவியது. அதே போன்று தான் காட்சிகளும் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது. இந்த 2020 ஆம் ஆண்டு தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல்9ஆம் தேதி மாஸ்டர் படம் திரைக்கு வரும் அறிவிக்கப்பட்டது. ஆனால், நாடு முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்திய கொரோனா லாக்டவுன் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டதால், மாஸ்டர் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டது.
நோக்கியாவும் ரகசிய குறியீடுகளும்.\nநோக்கியா போன்களுக்கான சில ரகசிய குறியீடுகள்\nஇங்கு உள்ளன. இதன் மூலம் சில பிரச்சனைகளை\nநாம் எளிதில் கையாளலாம். அந்த ரகசிய குறியீடுகள்\nஎன்ன என்ன என்பதை இப்போது காணலாம்.\n#73# போன் டைமரை மாற்றவும. விளையாடிக்கொண்டு\nஇருக்கும் கேம்ஸில் பெற்ற மதிப்பெண்களை\nபுதிதாக செட் செய்திடவும் பயன்படும்.\n#147# நீங்கள் நோக்கியாவில் வோடபோன் சர்வீஸ்\nபயன்படுத்தினால் இறுதியாக பயன்படுத்திய போன்\nஎண் விவரங்களை அறிந்துகொள்ளலாம்.\n#7760# உங்கள் மொபைல்போன் எண்ணின் தயாரிப்பு\n#7780# கம்யூட்டரில் ரீ-ஸ்டோர் செட்டிங்போன்று இதில்\nபழைய செட்டிங்கை மீண்டும் கொண்டு வரலாம்.\n#67705646# மொபைல் போன் ஆபரேட்டர் லோகோ தெரி\nகின்றதை இந்த எண்கொண்டு மாற்றிவிடலாம்.\n#746025625# சிம் மூலம் ஓடிக்கொண்டிருக்கின்ற\n#92702689# மொபைல் போனின் வாரண்டிகுறித்த தகவல்கள்\nசீரியல் எண்-வாங்கிய நாள்-ரீப்பேர் செய்தநாள்-\nஒடியுள்ள லைப்டைம் ஆகியவைகளை அறிய\nஇந்த எண் பயன்படும்.\n#7328748263373738# போனில் பதிந்து தரப்பட்டுள்ள டிபால்ட்\nசெக்யூரிட்டி கோட்டினை அறிய.\n#DELSET# ஜி.பி.ஆர்.எஸ் மற்றும் இ-மெயில் செட்டிங்ஸை\n#PW+1234567890+1# மொபைல் போன் லாக் செட்டிங்ஸ்\nபயன்படுத்துங்கள். ஓட்டுப்போடுங்கள். கருத்துக்களை\nPosted by ALAARAVALLI at 6:09 AM2comments\nLabels: நோக்கியாவும் ரகசிய குறியீடுகளும்.
வெண்முரசு - தீயின் எடை - 43 - வெண்முரசு\nதீயின் எடை - 43\nகுருக்ஷேத்ரத்தின் தெற்குக்காட்டைச் சென்றடைந்தபோது அவர்கள் முற்றாகவே சொல்லடங்கி வெறும் காலடியோசைத் தொடராக இருளுக்குள் நிகழ்ந்துகொண்டிருந்தார்கள். தெற்குக்காடு சீவிடுகளின் ஒலிகூட இன்றி அமைதியாக இருட்குவைகளின் பரப்பாக சூழ்ந்திருந்தது. கிருபர் தொண்டையைச் செருமி, குரல்கொண்டு “அங்கே எந்த ஓசையுமில்லை” என்றார். அஸ்வத்தாமன் அதைக் கேட்டும் மறுமொழி உரைக்கவில்லை. கிருபர் தானாக தொடர்ந்தார். “நாய்நரிகளின் ஊளையால் களம் இப்போது நிறைந்திருக்கும் என எண்ணினேன். அங்கே வெறும் இருள்வெளியே எஞ்சியிருக்கிறதுபோலத் தோன்றுகிறது” என்றார். அஸ்வத்தாமன் மறுமொழி சொல்லவில்லை எனக் கண்டு “ஆம், களம் முழுமையாகவே சேறால் மூடப்பட்டிருக்கிறது. ஆயினும் நாய்கள் நான்கடி ஆழம்வரை தோண்டி எடுக்கக்கூடியவை அல்லவா?” என்றார். அவருடைய அச்சொற்கள் அவருக்கே ஒவ்வாமையை உருவாக்க “அறநிலம் என்கிறார்கள் அதை” என்றார்.\nஅவருடைய பேச்சு இருளில் ஒலித்து அமைந்தது. சேற்றுப்பாதையிலிருந்து நடைவழியினூடாகக் குறுங்காட்டுக்குள் சென்றனர். மழையில் அங்கே சிதைகள் அனைத்தும் முற்றாகவே அணைந்து, சாம்பலும் கரைந்தோடியிருக்க, வெற்றுக்குழிகளாக எஞ்சியிருந்தன. புரவி இருட்டுக்குள் நோக்கி மடுக்களை ஒழிந்து சேற்றுக்குழிகள் அருகே நின்று சினைப்பொலி எழுப்பி அவர்களை எச்சரித்து அப்பால் சென்றது. அஸ்வத்தாமன் கர்ணனின் சிதை இருந்த இடத்தை நோக்கி அதைச் செலுத்தினான். கிருபர் அப்போதுதான் அந்த இடத்தை அடையாளம் கண்டார். “இது அங்கன் எரிந்த சிதை” என்றார். “ஆம், அச்சிதையிலேயே அரசரையும் ஏற்றுவோம்” என்று அஸ்வத்தாமன் சொன்னான். கிருபர் பெருமூச்சுடன் “அது உகந்ததே” என்றார். பின்னர் சிரித்து “விந்தையான உறவு அவர்களுக்குள். அனைத்தும் அளிக்கப்பட்டவர் அனைத்தும் மறுக்கப்பட்டவரிடம் கொண்ட நட்பு” என்றார். அதை ஏன் சொன்னோம் என உடனே உள்ளம் சலித்தது. ஏன் பேசிக்கொண்டே இருக்க விரும்புகிறோம்? பேசாமலிருக்கையில் இவ்விருளில் இல்லாமலே இருக்கிறோம் என்று தோன்றுகிறது.\nஅஸ்வத்தாமன் பேசவிரும்பவில்லை என தெரிந்தது. குதிரையிலிருந்து துரியோதனனின் உடலைக் கட்டியிருந்த முடிச்சுகளை அவிழ்க்கத்தொடங்கினான். அது களைப்புடன் நீள்மூச்செறிந்தது. துரியோதனன் துயிலில் இருந்து எழப்போகிறவன்போல உடல் அசைந்தது. கிருபர் “நான் பிடிக்கிறேன்” என்று ஓடிவந்தார். “இல்லை, அவருடைய எடை மிகவும் கூடியிருக்கிறது. நாமிருவரும் கூட அவரை பிடிக்கவோ தூக்கவோ முடியாது… நான் முடிச்சுகளை தொட்டு அவை இருக்குமிடத்தை மட்டும் பார்த்துக்கொள்கிறேன். அவற்றை எளிதில் அவிழ்க்கவேண்டும். ஆகவே நெகிழ்த்தி வைக்கிறேன்” என்றான். “என்ன செய்வது?” என்று கிருபர் கேட்டார். “சிதைகூட்டுவோம். சிதைக்குமேல் இப்புரவியையே கொண்டுசென்று அதிலிருந்து அவர் உடலை அங்கே நேரடியாக இறக்கி அமைப்போம்” என்றான் அஸ்வத்தாமன்.\n“இங்கே எரியும் விறகென ஏதுமில்லை… மழையில் ஊறியிருக்கின்றன அனைத்தும்” என்றார் கிருபர். “தேவதாருப் பசுமரம் அனலுறைவது. நேற்று சுழல்காற்று அடித்திருக்கிறது. மரங்கள் கடைபுழங்கி விழுந்துள்ளன. விழுந்துகிடக்கும் தேவதாருக்களை கண்டுபிடிப்போம். அவற்றிலிருந்து உருகிச்சொட்டிய அரக்கு அடியில் மண்ணில் சிறு குவைகளாக அமைந்திருக்கும். அவை நெய்க்கு மேலாகவே நின்று எரிபவை. நறுமணம் கொண்டவையும்கூட” என்று அஸ்வத்தாமன் சொன்னான். அவர்கள் தங்கள் உடைவாட்களை கைகளில் எடுத்துக்கொண்டு காட்டுக்குள் சென்றனர். இலைகளிலிருந்து ஈரம் சொட்டிக்கொண்டிருந்த ஓசை மட்டும் காட்டில் நிறைந்திருந்தது. நீரில் ஊறிய சருகுகள் சேறு என, செத்த விலங்கின் உடல் என மிதிபட்டன. ஆனால் காடு உயிரற்றிருந்தது. “சீவிடுகளின் ஒலிகள் கூட இல்லை” என்றார் கிருபர். அஸ்வத்தாமன் மறுமொழி கூறாமையை உணர்ந்து “பதினெட்டு நாள் எரிந்த அனலில் உயிர்கள் அனைத்தும் அகன்றிருக்கும்” என்று சொல்லிக்கொண்டார்.\nஅஸ்வத்தாமன் முதலில் ஒரு தேவதாருவைக் கண்டான். அதன் முறிவுப்பகுதிக்கு கீழே குனிந்து நோக்கி “இங்குள்ளது அரக்கு” என்றான். அதற்குள் கிருபரும் முறிந்த தேவதாரு ஒன்றைக் கண்டுவிட்டார். “இங்குமுள்ளது…” என்று அவர் சொன்னார். அந்த அரக்குக் கூம்புகளை எடுத்து அகன்ற வாழையிலையை வெட்டிப்பரப்பி அதில் சேர்த்தனர். “கிளைமட்டும் முறிந்த தேவதாருக்களும் அரக்கு சூடியிருக்கும்” என்று அஸ்வத்தாமன் சொன்னான். “ஆம், நான் மணத்தாலேயே அவற்றை கண்டடைகிறேன்” என்றார் கிருபர். அரக்குக்கூம்புகளை இலைகளில் அடுக்கியபின் தேவதாருவின் சிறுகிளைகளை தறித்து விலக்கினான். மலையிலிருந்து உருண்டு வந்து இலைகள் நடுவே புதைந்தன போலக்கிடந்த உருளைப்பாறைகளை உந்திப்புரட்டிக் கொண்டுவந்து அடிமரத்துக்கு அடியில் வைத்து அவற்றின்மேல் அதை ஏற்றி உருட்டி உந்தி கொண்டுசென்றான் அஸ்வத்தாமன்.\nஅடிமரத்தின் முகப்பு உருளைப்பாறைகளில் இருந்து வெளிவந்தபோது பின்னாலிருந்து உருளைப்பாறைகளைத் தூக்கி அடியிலிட்டு மீண்டும் உந்தினான். பன்னிரு முறை அவ்வாறு உந்தியபோது அடிமரம் சிதையருகே வந்தது. அதை கொண்டுசென்று சிதைமேடைமேல் அமைத்தான். கிருபரிடம் “நான் உதவிக்கு வரவா?” என்றான். “நீ செய்வதை நோக்கினேன்… நானும் கற்றுக்கொண்டேன்” என்று கிருபர் சொன்னார். அவரும் ஒரு அடிமரத்தை அங்கே உந்தியும் இழுத்தும் கொண்டுவந்தார். “ஓடையில் சில மரங்கள் விழுந்துள்ளன. அவற்றை சேற்றினூடாகவே எளிதில் இழுத்துக் கொண்டுவரமுடியும்” என்றார். மேலும் இரு மரங்களை கொண்டுவந்து மேல் மேலாக இழுத்து அடுக்கி சிதைகூட்டினார்கள். அடிமரங்கள் மேடைபோல அமைய இருபுறமும் பசுங்கிளைகள் நீட்டி நின்றிருக்க அச்சிதை இருளில் வடிவின்மைகொண்டு தெரிந்தது.\n“பசுஞ்சிதை…” என்று கிருபர் பெருமூச்சுடன் சொன்னார். “எரியாச் சிதை மண்ணில் விழைவு அடங்காதவர்களுக்குரியது என்பார்கள்.” அஸ்வத்தாமன் “இவை நன்றாகவே எரியும்… சற்று பிந்தும், ஆனால் எரிந்தபின் எதையும் எஞ்சவிடாமல் நீறு பெருகிக் கிடக்கும்” என்றான். கிருபர் மேற்கொண்டு அதைப் பேச விழையாமல் இருளை நோக்கினார். “கிருதவர்மன் சென்று சேர்ந்திருப்பானா?” என்றார். “அவனால் முறையாக இச்செய்தியை அரசருக்கு அறிவிக்க முடியுமா? அவன் சொல்வலன் அல்ல. நேரடியாகச் சொன்னால் அரசர் கொந்தளித்து எழக்கூடும். அவருடைய கைவட்டத்திற்குள் நின்றிருந்தால் அள்ளிப்பற்றி நொறுக்கிக் கொல்லவும்கூடும்.” அஸ்வத்தாமன் “அவருடன் சஞ்சயன் இருக்கிறான். அவன் அறிவான்” என்றான். கிருபர் “ஆம், அவன் சொல்லறிந்தவன்” என்றார். “சொல்லறிந்தவன் மானுட உள்ளத்தையும் அறிவான் என்பார்கள்” என்று சொல்லிக்கொண்டார்.\nஅஸ்வத்தாமன் குதிரையைத் தட்டி செலுத்தி சிதையருகே கொண்டுசென்று நிறுத்தினான். அதை சரிந்திருந்த தேவதாருவின் மரநுனியில் ஏறச்செய்தான். அது பலமுறை காலெடுத்துவைத்துத் தயங்கியது. குதிரையின் மொழியில் கனைத்துப்பேசி அதை மேலேறச் செய்தான். இழுத்துக்கட்டப்பட்ட கம்பிமேல் நடப்பதுபோல அது நான்கு குளம்புகளையும் நீள்கோட்டு வரிசை என மெல்ல எடுத்துவைத்து நடந்தது. சிதைக்குமேல் சென்று நின்றதும் தலை சிலுப்பி செருக்கடித்தது. மரத்தில் தொற்றி ஏறிய அஸ்வத்தாமன் குதிரையின் தோளிலும் புட்டத்திலும் இருந்த கட்டுகளை அவிழ்த்தபோது துரியோதனன் உடல் நழுவியதுபோல பக்கவாட்டில் சரிந்து மெல்ல இறங்கி சிதைமேல் அமைந்தது. மரங்கள் மெல்ல முனகியபடி அதைப் பெற்றுக்கொண்டன.\n“கற்சிலைபோல் எடைகொண்டிருக்கிறார்” என்று கிருபர் சொன்னார். உடல் தடிகளின் இடைவெளியில் பொருந்தியது. அஸ்வத்தாமன் அரக்குக் குவைகளைக் கொண்டுவந்து உடலைச் சுற்றியும் உடல்மேலும் அமைத்தான். சிறுசுள்ளிகளையும் மரத்துண்டுகளையும் கொண்டுவந்து ஊடே செருகினான். “இவையே எரியுமா என்ன?” என்று கிருபர் ஐயத்துடன் கேட்டார். அஸ்வத்தாமன் “ஆம்” என்று மட்டும் மறுமொழி சொன்னான். சிதையை நன்கு ஒருக்கியபின் அஸ்வத்தாமன் இறங்கி கைகளை தட்டிக்கொண்டு “மூதரசர் வந்ததும் எரியேற்றிவிட வேண்டியதுதான்” என்றான். “நம் கடன்” என்று கிருபர் சொன்னார். அவர்கள் விலகிச்சென்று நின்றிருந்த சாலமரம் ஒன்றின் அடிவேரில் அமர்ந்தனர். கிருபர் “இதைப்போன்ற களைப்பை நான் உணர்ந்ததே இல்லை” என்றார். அஸ்வத்தாமன் அதற்கும் மறுமொழி சொல்லவில்லை. தன் கைகளை மார்புடன் கட்டிக்கொண்டான். அவர்கள் இருளை நோக்கியபடி அமர்ந்திருந்தனர்.\nசிதைக்கு அப்பால் ஓர் அசைவை அஸ்வத்தாமன் கண்டான். எவரோ நடந்து வந்துகொண்டிருந்தார்கள். “கிருதவர்மரே, நீங்களா?” என்று அஸ்வத்தாமன் கேட்டான். அவ்வுருவம் மறுமொழி சொல்லவில்லை. அஸ்வத்தாமன் எழுந்து நின்று கூர்ந்து நோக்கியபோது அவன் உடல் மெய்ப்புகொண்டது. சீரான அடிகளுடன் துரியோதனன் அணுகி வந்தான். அவன் முன் வந்து நின்று புன்னகை செய்தான். அவனுடைய உடலின் உயரத்தால் அப்புன்னகை வானிலிருந்து எனத் தோன்றியது. “அரசே!” என்று அஸ்வத்தாமன் அழைத்தான். கிருபர் திடுக்கிட்டு எழுந்து “யார்?” என்றார். அவரும் துரியோதனனைக் கண்டுவிட்டார். “அரசர்!” என்றபடி அவர் பின்னடைந்தார். அவருடைய கை நீண்டு வந்து அஸ்வத்தாமன் தோளைப் பற்றிக்கொண்டபோது அவன் திடுக்கிட்டான். கிருபரின் கை அவன் உடல்மேல் அமர்ந்து நடுங்கிக்கொண்டிருந்தது.\nதுரியோதனன் “உத்தரபாஞ்சாலரே, இப்போர் முடியவில்லை” என்று சொன்னான். மயக்குற்றவனைப்போல அவனை நோக்கியபடி “ஆம்” என்று அஸ்வத்தாமன் சொன்னான். “இதில் நாம் கொண்டிருந்த நம்பிக்கை மெய் என்றால் இது தொடர்ந்தாகவேண்டும். இறுதிக் கணம் வரை, இறுதி வீரன் எஞ்சுவது வரை நிகழவேண்டும்” என்று துரியோதனன் சொன்னான். “நமது படைகள் எழுக! நாளைப் புலரியில் நம்முடைய போர்ச்சங்கம் முழங்கியாக வேண்டும்.” அஸ்வத்தாமன் உணர்வெழுச்சியுடன் “முழங்கும், அரசே. நான் களம்செல்கிறேன். நான் உள்ளவரை இப்போர் முடிவடையாது…” என்றான். “உங்களுடன் ஆசிரியர் இருக்கிறார். அந்தணர் உடனிருக்கும் ஷத்ரியன் முழு அரசுக்கும் நிகரானவன் என்கின்றன மரபுகள்… கௌரவ அரசு இனி நீங்களே. பொருதுக, வெல்க” என்று துரியோதனன் சொன்னான். அஸ்வத்தாமன் “நான் என் கடமையைச் செய்து வெல்வேன். அரசே, என் குருதியால் இச்சொல்லை அளிக்கிறேன்” என்றான்.\nதுரியோதனன் கிருபரிடம் “ஆசிரியரே, என் இளவலும் வணக்கத்திற்குரிய ஆசிரியரின் மைந்தருமான அஸ்வத்தாமனை கௌரவ குடியின் முதன்மைப் படைத்தலைவராக நான் அறிவிக்கிறேன். என் சார்பில் நீர்முழுக்காட்டி அவரை அவ்வண்ணம் நிலைநிறுத்துக” என்றான். அஸ்வத்தாமன் நடுக்கத்துடன் நிற்க துரியோதனன் உரத்த குரலில் “இவரே என் படைத்தலைவர், என் கொடியை ஏந்தவேண்டியவர். தெய்வங்கள் அறிக! மூதாதையர் அறிக! பாரதவர்ஷம் அறிக!” என்றான். கிருபர் கைகூப்பினார். பின்னர் அங்குமிங்கும் நோக்கி தடுமாறியபின் நேராகச் சென்று அங்கே மண்ணில் திறந்துகிடந்த குவளை ஒன்றை எடுத்தார். அது ஒரு மண்டை ஓடு என எடுத்த பின்னரே அறிந்தார். ஓடிச்சென்று அப்பால் சரிந்தோடிய ஓடையில் இருந்து அதில் நீரை அள்ளிக் கொண்டுவந்தார். வரும் வழியிலேயே இரண்டு தளிரிலைகளைக் கிள்ளிக்கொண்டார்.\nஇலைகளை அவர் துரியோதனன் கைகளில் அளித்தார். நீர்மண்டையை தன் கையில் வைத்துக்கொண்டார். அஸ்வத்தாமன் கைகூப்பி மண்டியிட்டு அமர கிருபர் வேதச் சொல் ஓதி நீரை அஸ்வத்தாமன் தலைமேல் ஊற்றினார். துரியோதனன் அவ்விலைகளை அஸ்வத்தாமனின் தலையில் சூட்டினான். “இதோ பரத்வாஜகுலத்தவரும் துரோணரின் மைந்தரும் உத்தரபாஞ்சாலத்தின் அரசருமாகிய அஸ்வத்தாமனை என் படைத்தலைவராக நிறுத்துகிறேன். வான்கீழ் இது நிகழ்க! மண்மேல் இது நிகழ்க! விண்ணவரும் மண்ணவரும் இதை அறிக! அஸ்தினபுரியின் சார்பில் அஸ்வத்தாமனின் வாளும் சொல்லும் செயல்படுக! யயாதியின் குருதிமரபில் ஹஸ்தியின் அரசமரபில் குருவின் மணிமுடி அளிக்கும் அனைத்து தொல்லுரிமைகளும் அவரிடம் அமைக! ஆம், அவ்வாறே ஆகுக!” என்று துரியோதனன் சொன்னான். அஸ்வத்தாமன் மும்முறை தலைவணங்கினான்.\nஇருவரையும் நோக்கி புன்னகையுடன் கைகூப்பியபின் துரியோதனன் திரும்பிச் சென்றான். அவனுக்குரிய சீரான யானைநடை. எடைமிக்க அடிகள் ஓசையின்றி விழுந்தன. இருளுக்குள் கரைந்ததுபோல் அவன் மறைவதை அவர்கள் கூப்பிய கைகளுடன் நோக்கிக் கொண்டிருந்தனர். அவன் உருவம் மறைந்த பின்னர் அஸ்வத்தாமன் திரும்பி கிருபரிடம் “அவர் அரசர் என்றால்…” என்றபின் திடுக்கிட்டு எழுந்துகொண்டான். அருகே கிருபரும் எழுந்துகொண்டார். “ஒரு கனவு!” என்று அவர் சொன்னார். பின்னர் அச்சத்துடன் “உன் தலையில்… அது தளிரிலை அல்லவா?” என்றார். அஸ்வத்தாமன் தொட்டு நோக்கி “ஆம்” என்றான். “என் கனவில் அதை நான் உனக்குச் சூட்டினேன். அரசரின் ஆணைப்படி அஸ்தினபுரியின் முதன்மைப் படைத்தலைவராக உன்னை அமைத்தேன்” என்றார் கிருபர்.\nதிகைப்புடன் மீண்டும் தன் தலையிலிருந்த தளிரிலைகளைத் தொட்டுநோக்கிவிட்டு “அதே கனவை நானும் கண்டேன்…” என்று அஸ்வத்தாமன் சொன்னான். “ஆனால் இதோ என் அருகே நின்றிருக்கும் செடியின் இலைகள்தான் இவை. நானே எடுத்துச் சூட்டிக்கொண்டேனா என்ன?” இருளை நோக்கியபின் “அது கனவென்றால்…” என்று கிருபர் தொடங்க “அது எவ்வண்ணமேனும் அமைக… நாம் அதை சொல்லால் சிதைக்கவேண்டியதில்லை” என்று அஸ்வத்தாமன் தடுத்தான். “ஆம், அரசரின் ஆணை. பாஞ்சாலனே, நீ இனி கௌரவப் படைத்தலைவன். இப்போரை நாம் முன்னெடுத்தாக வேண்டும். ஒருவர் எஞ்சினாலும்கூட போர் நிகழவேண்டும்…” என்றார் கிருபர். “ஆம், அது அவருடைய ஆணை” என்று அஸ்வத்தாமன் சொன்னான்.\nஅவர்கள் இருளை நோக்கிக்கொண்டு மீண்டும் அமர்ந்தனர். சில கணங்களில் கிருபரின் குறட்டையோசையை அஸ்வத்தாமன் கேட்டான். தானும் மெல்ல துயிலில் ஆழ்ந்தான். ஓர் அசைவுகூட இல்லாமல் வெட்டவெளியாக அரையிருள் பரவி விரிந்த குருக்ஷேத்ர நிலத்தை கண்டான். அதில் நிலையழிந்து அலைந்துகொண்டிருந்த ஓர் உருவம் சேய்மையிலேயே துரியோதனன் எனத் தெரிந்தது. “அரசே” என்று கூவியபடி அவன் அருகே ஓடிச்சென்றான். துரியோதனன் களத்தில் தன்னந்தனியாக நின்றிருந்தான். கைகளால் தலையில் அறைந்தபடியும் விண்ணோக்கி விரித்தபடியும் அவன் ஓசையில்லாமல் அழுதுகொண்டிருந்தான். “அரசே, அரசே!” என்று அஸ்வத்தாமன் அழைத்தான். “அரசே, என்னைப் பாருங்கள். அரசே, நான் உங்கள் ஆணையை கொண்டவன். உங்கள் படைத்தலைவன்! உங்கள் பொருட்டு களம்நின்று வெல்லவிருப்பவன்!”\nஆனால் துரியோதனன் அவனை அறியவில்லை. அந்தக் களத்தில் தன்னந்தனியாக நின்று அவன் நெஞ்சிலும் தோள்களிலும் மாறி மாறி அறைந்துகொண்டான். அந்தப் பெருந்துயரை கையசைவுகள் வழியாகவே அறியமுடிவதை எண்ணி அஸ்வத்தாமன் வியந்தான். அப்போதுதான் தான் அக்களத்தில் இல்லை என்பதை அவன் உணர்ந்தான். களத்தில் எஞ்சியிருந்தது துரியோதனன் மட்டுமே. அவன் இன்னொருவருக்காக தேடித் தவித்துக்கொண்டிருந்தான். தன் குரலை எவரேனும் கேட்கவேண்டும் என்று தவிப்பு கொண்டிருந்தான். அவன் உடல் அலைக்கழிவது அதனால்தான். சொல்லின்றி அந்த அலைபாயும் கைகளையும் தள்ளாடும் நடையையும் அஸ்வத்தாமன் நோக்கிக்கொண்டிருந்தான்.\nகிருபர் எழுந்து ஏதோ சொல்வதைக் கேட்டு அஸ்வத்தாமன் கண்விழித்தான். அக்கனவின் உணர்வலைகள் நீடிக்க அவன் நெஞ்சு விம்மிக்கொண்டிருந்தது. கண்களிலிருந்து நீர் வழிந்து காதுகளை அடைந்திருந்தது. “என்ன?” என்றான். “கிருதவர்மன் வந்துகொண்டிருக்கிறான்” என்று கிருபர் சொன்னார். “எங்கே?” என்றபடி அஸ்வத்தாமன் எழுந்து நின்றான். பின்னர் சித்தம் தெளிவடைந்து “மூதரசரும் வருகிறாரா? தேரின் ஒலி கேட்கவில்லையே” என்றான். “அவன் மட்டும்தான் வருகிறான்” என்றார் கிருபர். அதற்குள் அஸ்வத்தாமன் கிருதவர்மனின் காலடிகளைக் கேட்கத்தொடங்கினான். “என்ன நடந்தது?” என்றான். அக்கேள்வியின் பொருளின்மையை உணர்ந்தும்கூட “அவர் ஏன் வரவில்லை?” என்றான்.\nகிருதவர்மன் புதர்களுக்குள் இருந்து தோன்றினான். வலக்கையில் ஒரு கலத்தை ஏந்தியிருந்தான். அது மூடப்பட்டிருந்தது. இடைவெளியினூடாக புகை எழுந்தது. அருகணைந்து “பாஞ்சாலரே, ஆசிரியரே, கௌரவ மூதரசர் வரவில்லை. அவர் தொட்டு அளித்த அனலைக் கொண்டுவந்திருக்கிறேன்” என்றான். மூச்சிரைக்க நின்று “நான் மலையேறிச் சென்று அரசரின் குடிலை அடைந்தேன். அங்கே எவருமில்லை என்று கண்டேன். மென்மழை பொழிந்துகொண்டிருந்தது. வேறெந்த ஓசையுமில்லை. என்ன நிகழ்ந்தது என்று புரியாமல் நின்றேன். அரசரும் சஞ்சயனும் அரண்மனைக்கு மீண்டிருப்பார்கள் என தோன்றியதுமே அரசர் உயிர்நீத்திருக்கக்கூடுமோ என்றும் தோன்றியது. நெஞ்சு அதிர இருளில் நின்று விம்மினேன். பின்னர் அவ்வண்ணம் நிகழாது என உறுதிகொண்டேன். சஞ்சயன் உடனிருக்கிறான். அவன் சொல்லின் மானுட வடிவம். சொல்லைப்போல் துணை வேறில்லை. வழிகாட்டியும் ஆற்றுப்படுத்தியும் மாயம்காட்டியும் சொல் மானுடரை ஆட்கொள்கிறது… ஆனால் அவர்கள் எங்கே? எவரிடம் உசாவுவது என்று தெரியவில்லை” என்று கிருதவர்மன் தொடர்ந்தான்.\nஅங்கிருந்து திரும்புவதற்கு முன் காட்சிமாடத்திற்குச் சென்று நோக்கலாம் என்று முடிவுசெய்தேன். அங்கே அரசரும் சஞ்சயனும் இருந்தார்கள். நான் தொலைவிலேயே அங்கே ஒளியிருப்பதைக் கண்டேன். அருகே அணுகியபோது சஞ்சயனின் பேச்சுக்குரலைக் கேட்டேன். மேலும் அருகணைந்தபோது அவன் பேசுவதென்ன என்று புரிந்துகொண்டேன். அவன் அப்போதும் போர்நிகழ்வுகளைச் சொல்லிக்கொண்டிருந்தான். நான் அருகே சென்று நின்றபோதுதான் என்னைக் கண்டான். திகைத்து என்னை நோக்கினான். நான் அவனிடம் பேசவிழைவதாகக் கைகாட்டினேன். அவன் அரசரிடம் சற்றுப் பொறுக்கும்படிச் சொல்லிவிட்டு என்னிடம் கையசைவால் உரையாடினான்.\nஅவனிடம் “குருக்ஷேத்ரத்தில் போர் முடிந்துவிட்டது, அரசர் வீழ்ந்துவிட்டார்” என விரல்மொழியால் சொன்னேன். சஞ்சயன் திகைப்புடன் “இல்லையே, அரசர் களம்நின்று பொருதிக்கொண்டிருக்கிறார். அதைத்தான் பேரரசரிடம் இதுவரை சொல்லிக்கொண்டிருந்தேன்!” என்றான். அவன் சித்தம் பிறழ்ந்துவிட்டது என்று நினைத்தேன். “நோக்குக” என அவன் ஆடியைச் சுட்டிக்காட்டினான். நான் அந்த விந்தையான பீதநிலத்து ஆடி வழியாக நோக்கினேன். ஆடிகளை பொருத்திக் காட்சியைக் குவித்து நோக்கியபோது இருண்ட களத்தை நோக்கமுடிந்தது. வானின் மெல்லொளியில் அது அசைவிலாத அலைகளாக விரிந்துகிடந்தது. அதில் சிறு நிழலுருவாக அரசர் அலைந்துகொண்டிருந்தார். அந்தச் சிற்றுருவிலேயே அவருடைய வெறியையும் துடிப்பையும் கண்டு நான் மெய்ப்பு கொண்டு உறைந்து நின்றுவிட்டேன்.\nசெத்து மீள்வதுபோல மெல்லமெல்லச் சித்தம் கொண்டேன். என் கண்களுக்கு முன் குருக்ஷேத்ரம் தெரிந்தது. உறைந்த சேற்றுக்கடல். அவ்வப்போது எழுந்த மின்னல்துடிப்புகளின் ஒளியில் தெளிவாகவே கண்டேன், அது அரசரின் உருவம்தான். கைகளை விரித்து எவரிடமோ அறைகூவுவதுபோல சுழன்றது… அதன்பின் தெளிந்தேன், அது அரசரின் பாவை என. அதை சஞ்சயனிடம் சொன்னேன். அவனால் நம்ப இயலவில்லை. மீளமீள நோக்கிக்கொண்டே இருந்தான். அரசரின் உடலை நாங்கள் கொண்டுவந்திருப்பதை சொன்னேன். பேரரசர் வந்து சிதையேற்றவேண்டும் என்று கோரினேன். அவன் குழம்பினான். அரசரிடம் அதை அப்போது கூற இயலாது என்றான். அவர் சொல்வதைக் கேளுங்கள் என சுட்டினான்.\nபேரரசர் கைகளை அசைத்தபடி பேசிக்கொண்டிருந்தார். “சஞ்சயா, என்ன செய்கிறாய்? சொல். என்ன செய்கிறாய்? விரிவாகச் சொல். என் மைந்தனை எதிர்க்க எவரேனும் வந்தனரா? அவனை வெல்லும் ஆற்றல் எவருக்காவது இருப்பதாகத் தோன்றுகிறதா?” என்றார். அவருடைய குரல் அடைத்திருந்தது. சஞ்சயனிடம் பேசிப்பேசி அவர் குரல் தனக்குள் பேசுவதாகவே மாறிவிட்டிருந்தது. “அவனை வெல்ல தெய்வங்களாலும் இயலாது. இளைய யாதவனாலோ பீமனாலோ இயலாது…” என்று நகைத்தார். கைகளை தூக்கி ஆட்டி “அவன் வென்று நின்றிருக்கிறான். அக்களத்தில் அவன் மட்டுமே எஞ்சியிருக்கிறான். பிறர் அனைவரும் வீழ்ந்துவிட்டனர். வீழாதோர் ஓடிவிட்டனர். அக்களம் என் மைந்தனுக்குரியது! ஆம், அவனே வென்றான்!” என்றார். இருளில் அவர் பற்களின் வெண்மையை கண்டேன்.\nநான் சஞ்சயனிடம் “அவரிடம் சொல்லியே ஆகவேண்டும்” என்றேன். “அவரை அக்கனவிலிருந்து நாம் எழுப்ப இயலாது. அதை தெய்வங்கள்தான் செய்யவேண்டும்” என்றான் சஞ்சயன். “ஆனால் எரிகடன் இயற்றுவது அவருடைய பொறுப்பு… அவருடைய உரிமை அது” என்று நான் சொன்னேன். “ஆம், ஆனால் அவர் சொற்கள் உருவாக்கும் கனவில் இருக்கிறார். அதிலிருந்து எளிதில் மீள இயலாது. அவராகவே மீளட்டும்…” என்று சஞ்சயன் சொன்னான். “அவர் அனலிடவேண்டும், அவ்வளவுதானே? அவர் கையால் அனல்தொட்டு அளிக்கச் சொல்கிறேன்” என்றான். அரசரின் வலப்பக்கம் இருந்த விளக்கை ஊதி அணைத்துவிட்டு மூதரசரிடம் “அரசே, இரு கைகளாலும் ஆடியைப் பற்றியிருக்கிறேன். வலப்பக்க விளக்கு அணைந்துவிட்டது. எரியூட்டுக” என்றான்.\nஅரசர் “விரைந்து நோக்கு… என் மைந்தனை நோக்கிக் கூறு!” என்றபடி இடப்பக்க விளக்கிலிருந்து ஒரு திரியை கொளுத்தி வலப்பக்கம் இருந்த விளக்கை கொளுத்தினார். அதை எடுத்துக்கொள்க என சஞ்சயன் என்னிடம் கைகளால் சொன்னான். நான் அதை எடுத்துக்கொண்டேன். “இங்கே எவர் வந்தது?” என்று அவர் கேட்டார். “இங்கே எவருமில்லை. ஆனால் போர்க்கதைகளைச் சொல்லுமிடத்தில் கந்தர்வர்கள் நடமாடுவதுண்டு” என்று சொன்ன சஞ்சயன் “அரசர் தன் கைகளால் அறைகூவியபடி களத்தைச் சுற்றி வருகிறார். மின்னலின் ஒளியில் அவருடைய முகத்தை காண்கிறேன். அதில் இவ்வுலகை இன்னும் நூறுமுறை அழிக்கும் வஞ்சினம் நிறைந்துள்ளது” என்று சொல்லத் தொடங்கினான். நான் பின்னடி எடுத்து வைத்து இருளுக்குள் நகர்ந்தேன்.\nகிருதவர்மன் கையில் காட்டுக்கொடியில் கட்டி தொங்கவிடப்பட்டிருந்த கலத்திற்குள் எரிந்த சிற்றகலை எடுத்தான். அதன் சுடர் செம்மணி என ஒளிர்ந்து அப்பகுதியெங்கும் நிழல்களை எழுப்பியது. அவன் கையசைவுக்கு ஏற்ப நிழல்கள் சுழன்றன. “ஆம், சஞ்சயன் சொல்வதும் சரிதான். அவருடைய உள்ளத்தில் நிகழும் போரை நாம் ஒரு சொல்லால் மாற்றிவிடமுடியாது” என்று அஸ்வத்தாமன் சொன்னான். “அரசரின் கைதொட்ட எரி. இதுவே சடங்குக்குப் போதும்” என்றபின் “வருக” என்றான். சிதை நோக்கிச் செல்லும்போது “ஒரு விழிபோலத் தோன்றுகிறது அச்சுடர்” என்றார் கிருபர். சிதையை அணுகியதும் கிருபர் “எவர் நெருப்பிடவேண்டும் என்று அரசரே வந்து கூறிவிட்டார். பாஞ்சாலனே, உன் பணி அது” என்றார். அஸ்வத்தாமன் பெருமூச்சுடன் “ஆம்” என்றான்.\n“தன்னந்தனிமையில் எரிகிறான் அரசன்…” என்று கிருபர் சொன்னார். “நூறு உடன்பிறந்தாரும் ஆயிரம் மைந்தரும் பல்லாயிரம் உற்றவரும் கொண்டவன்.” கிருதவர்மன் “ஆம், ஆனால் எதிரிகளால் அவர் எரியூட்டப்படவில்லை” என்றான். சுடரை சிதையின் காலடியில் கொண்டு வைத்த அஸ்வத்தாமன் சிதையின் கால்தொட்டு வணங்கினான். கிருபர் செடிகளிலிருந்து பறித்துவந்து இலைகளில் பரப்பி தன்முன் வைத்த இலைத்தளிர்களை எடுத்து துரியோதனனின் காலடியில் இட்டு விழிமூடி வழிபட்டான். காடு ஓசையின்றி கன்னங்கரிய பாறைபோல் சூழ்ந்திருந்தது. சென்று அதில் முட்டிக்கொள்ளமுடியும் என்பதுபோல. “ஓர் உயிரசைவுகூட இல்லை” என்றார் கிருபர். “தெய்வங்களே, ஒரு சிறு உயிரோசையேனும் கேட்டால் நன்று.”\nகிருதவர்மன் நெஞ்சில் கைவைத்து விம்மி அழுதுகொண்டிருந்தான். கிருபர் அமைதியில்லாமல் உடலை அசைத்துக்கொண்டிருந்தார். விழிதிறந்த அஸ்வத்தாமன் அகல்விளக்குடன் மும்முறை சுற்றிவந்து சிதைமேல் ஏறி அரக்குக்குவையில் நெருப்பைப் பொருத்தினான். இளநீலமாக அரக்கு பற்றிக்கொண்டது. உருகும் வாடையுடன் அனல் பரவி சுள்ளிகளை கவ்வியது. “எந்தையே! எந்தையே!” என்று கிருதவர்மன் நெஞ்சிலறைந்து வீறிட்டலறினான். “என் அரசே! என் இறையே!” கிருபர் அங்கு நிற்க முடியாமல் திரும்பி மரத்தடிக்குச் சென்றார். கிருதவர்மன் கால்மடித்து அமர்ந்து கைகளை விரித்து “விண்புகுக, தேவா! பெருந்தந்தையர் சென்றமையும் உலகில் வாழ்க! பிரஜாபதிகளுடன் அமர்க!” என்று கூவினான்.\nஎரி ஏறத்தொடங்கியதும் அஸ்வத்தாமன் சிதையிலிருந்து இறங்கி வணங்கிவிட்டு விலகினான். கிருபர் மீண்டும் சிதையருகே வந்து நின்றார். இருவரும் சென்று மீண்டும் மரத்தடியில் அமர்ந்தனர். எரி பெருகி எழுந்து கொழுந்தாடியது. அடிமரம் பற்றிக்கொண்டபோது அரக்கு உருகும் பச்சைவாடை எழுந்தது. மரம் உறுமியபடி வெடித்தது. அதன் பச்சைப்பட்டையில் நீலநிறமாக எழுந்த சுடர் கரி உமிழ்ந்தபடி தன்னை வானில் உதறிக்கொண்டது. அவர்களின் முகங்கள் எரியாலானவைபோலத் தெரிந்தன. கிருதவர்மன் கூவி அழுதபடி சிதையை நோக்கி நின்றான். பின்னர் தளர்ந்து ஒருக்களித்து சேற்றுப்பரப்பில் படுத்தான்.\nதீயின் எடை - 42 தீயின் எடை - 44
வாசிப்பு!! – One Minute One Book\nதொடக்கமே வாசிப்புனு போட்டுட்டு, என்னடா எல்லாரும் சொல்ற மாதிரி, பாடப்புத்தகத்த வாசிக்க சொல்லிருவாங்களோனு நினைச்சு பயந்திராதிங்க! இது பாடப்புத்தகத்தையும் தாண்டிய வாசிப்பு.\nஇந்த வாசிப்பு பழக்கம் தான் பெரியார், அண்ணா, அப்துல் கலாம், காந்தி மற்றும் நேரு போன்ற பெரிய மனிதர்களை உலகிற்கு அடையாளம் காட்டுச்சு.\n“ஊருக்கு நல்லது சொல்வேன்” புத்தகத்திலிருந்து சில உண்மை வரிகள்.\nஉலக வரலாற்றில் சில புத்தகங்கள் சரித்திர நதியின் போக்கையே மாற்றி இருக்கிறது. ஒரு சில புத்தகங்கள் மனித குலத்தை நல்வழிப்படுத்தின. ஒரு சில புத்தகங்கள் இனப் படுகொலைக்கும், உலகப் போருக்கும் வழிவகுத்தன. வால்டேர், ரூசோவின் படைப்புகள் பிரெஞ்சுப் புரட்சிக்கு வழித்தடம் அமைத்தன. ஹிட்லரின் ‘மெயின் காம்ப்’பும், நீஷேவின் தத்துவ சிந்தனைகளும் ஜெர்மனியை போர் வெறி கொள்ளச் செய்தன. இதிலிருந்தே நீங்க தெரிஞ்சுக்கலாம் ஒரு புத்தகத்தோட வலிமை என்னனு..?\nநல்ல புத்தகங்களைத் தேடிப் படிக்கும் மனோபாவம் மக்களிடையே மலர வேண்டும். புத்தகம் இல்லாத வீடு ஜன்னல் இல்லாத அறை போன்றது. புத்தகங்களின் நடுவில் தான் குழந்தைகள் வளர்க்கப்பட வேண்டும். படிப்பதன் மூலம் தான் அறிவுக்கண் திறக்கும்.\nநம்மை சிந்திக்க செய்யும் புத்தகங்களே நல்ல புத்தகங்கள். இசையின் இனிமை இசைக் குறிப்பில் இல்லை; அதைக் கேட்டு சிலிர்க்கும் இதயத்தில் இருக்கிறது. அதே போன்று, புத்தகத்தின் பெருமை அதன் உள்ளடக்கத்தில் இல்லை; அது நமக்குள் உருவாக்கும் உந்துதலில் இருக்கிறது. ஆனால், புத்தகங்களைத் தேர்ந்தெடுப்பதில் நாம் விழிப்புடன் இருக்க வேண்டும். மோசமான புத்தகத்தை விட நம் நேரத்தைக் களவாடும் தீய திருடன் வேறு ஒருவரும் இல்லை.\n“சில புத்தகங்களைச் சுவைக்க வேண்டும். சிலவற்றை அப்படியே விழுங்கிவிட வேண்டும். சில புத்தகத்தை மட்டும் கொஞ்சம் கொஞ்சமாக அசைபோட்டு ஜீரணிக்க வேண்டும்”.\n-ஆங்கில அறிஞர் பேகன்.\n#one minute one book #tamil #book #review #vaasippu\nbook, one minute one book, review, tamil, vaasippu\n5 thoughts on “வாசிப்பு!!”\nYeah very nice da..keep it up machaan ..much love\nNalla pati vu
ஆச்சரிய வீடியோ: ஸ்டைலா, கெத்தா சிகரெட் பிடிக்கும் நண்டு- புகையை உள்ளே இழுத்து விடும் அவலம்! | Crab Smokes Cigratte: Cancer TakingaCancerous Puff- Video Viral in Social Media! - Tamil Gizbot\n3 hrs ago Samsung Galaxy A22 5G இந்தியாவில் அறிமுகம்.. விலை என்ன தெரியுமா? உடனே வாங்கலாம் போலயே.!\n4 hrs ago PUBG இந்தியா கேமில் ப்ரோ பிளேயர் போல விளையாட இது தான் பெஸ்டான செட்டிங்ஸ்.. உடனே ட்ரை செய்யுங்க..\n5 hrs ago மலிவு விலையில் நோக்கியா 110 4ஜி சாதனம் இந்தியாவில் அறிமுகம்.! முழு விவரம்.!\n6 hrs ago போக்கோ எஃப்3 ஜிடி ஸ்மார்ட்போன் அறிமுகம்.! தரமான அம்சங்கள்-பட்ஜெட் விலை.! மிஸ் பண்ணிடாதீங்க.!\nNews அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது ஆளுநரிடம் பாமக அளித்த ஊழல் புகார்.. ஹைகோர்டில் தமிழக அரசு பதில்\nஆச்சரிய வீடியோ: ஸ்டைலா, கெத்தா சிகரெட் பிடிக்கும் நண்டு- புகையை உள்ளே இழுத்து விடும் அவலம்!\n| Published: Friday, September 25, 2020, 14:47 [IST]\nமனிதர்களை ஆச்சரியத்திலும் வியப்பிலும் உள்ளாக்கும் விலங்குகளின் வீடியோ அவ்வப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வகையில் தற்போது நண்டு சிகரெட் பிடிக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.\nகுரங்குகளின் சேட்டைகளில் சில நம்மை வியக்கவைக்கும் விதமாகவே இருக்கும். குரங்கு மட்டுமல்ல பொதுவாக ஒரு சில விலங்கினங்களே நாம் நினைத்துக் கூட பார்க்கமுடியாத செயல்களை செய்து நம்மை வியப்பில் ஆழ்த்துவதோடு நெகிழ வைக்கும்.\nவிலங்குகளும், பறவைகளும் செய்யும் வித்தியாசமான செயல்கள்\nபல்வேறு நாடுகளில் இருந்து விலங்குகளும், பறவைகளும் செய்யும் வித்தியாசமான செயல்கள் வீடியோவாக பதிவு செய்து சமூகவலைதளங்களில் வைரலாகும். அதன்படி தற்போது நண்டு சிகரெட் பிடிக்கும் வீடியோ இணையத்தை கலக்கி வருகிறது.\nபுகை உடல்நலத்திற்கு தீங்கு விளைக்கும்\nபுகை உடல்நலத்திற்கு தீங்கு விளைக்கும், மது நாட்டிற்கும் வீட்டிற்கும் கேடு., இந்த வசனம் திரைப்படத்தில் தொடங்கி பல இடங்களில் வாசித்திருப்போம். மனிதர்கள் பிடிக்கும் புகை அவர்களுக்கு ஏற்படும் பாதிப்பை விட சுற்றத்தார்களுக்கே அதிக பாதிப்பை ஏற்படுத்துகிறது என்றே கூறலாம்.\nசிகரெட் பிடிக்கும் நண்டு\nமனிதர்கள் பிடித்துப்போட்ட சிகரெட் துண்டை கீழே கிடந்து எடுத்த நண்டு அதை தனது கொடுக்கின் மூலம் இருவிரல்களில் பிடிப்பதுபோல் வாயில் வைத்து புகையை இழுக்கிறது. இந்த வீடியோவை சுஷாந்த் நந்தா என்பவர் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.\nஎன்னா ஸ்பீடு: செல்போனை திருடி லுங்கிக்குள் மறைத்து சிட்டாக பறந்த மர்மநபர்!\nபுகையை உள்ளே இழுக்கும் நண்டு\nசுஷாந்த் நந்தா இந்தியா வனத்துறை அதிகாரி என கூறப்படுகிறது. இவர் அந்த வீடியோவில் நண்டு சிகரெட்டை தனது வாயில் வைத்து புகைக்கிறது. கொடுக்கின் மூலம் இரு விரல்களை வைத்து பிடிப்பதுபோல் சிகரெட்டை பிடித்து புகைக்கிறது. வீடியோ எடுக்கும்போது ஃப்ளாஷ் லைட் நண்டுமேல் படுகிறது அதை உணர்ந்த அந்த நண்டு சிகரெட்டை கீழே போடாமல் அந்த இடத்தில் இருந்து நகர்கிறது.\nThis is likeabad dream. Our wastage being picked by crab. We can spoil any ecosystem with our attitude.... pic.twitter.com/HOhowVPgyM\nகெட்ட கனவுபோல் உள்ளது\nஇந்த வீடியோவில் தனது கருத்து குறித்து பதிவிட்ட சுஷாந்த் நந்தா, நண்டு சிகிரெட் பிடிக்கிறது. இது கெட்ட கனவுபோல் உள்ளது. மனிதர்கள் தூக்கி எரிந்தத் துண்டை நண்டு பயன்படுத்துகிறது. நமது செயல் அனைத்து சுற்றுச்சூழல் அமைப்பையும் கெடுத்திருக்கிறோம் என பதிவிட்டுள்ளார்.\nவருத்தம் தெரிவிக்கும் கருத்துகள்\nஇந்த வீடியோவை இதுவரை சுமார் 35 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர். வீடியோவை பார்த்த பலரும் வேதனையுடன் தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். மனிதர்களால் விலங்குகளும் இந்த பழக்கத்தை தொடங்கிவிட்டது எனவும் இது அழிவுக்கான பாதை எனவும் கருத்துகள் பதிவிட்டு வருகின்றனர்.\nசெல்பி எடுத்த குரங்கு\nஅதேபோல் சமீபத்திய சில நாட்களுக்கு முன்பு குரங்கு ஒன்று மலேசியாவில் உள்ள வீட்டுக்குள் புகுந்து செல்போனை திருடிச் சென்று செல்பி எடுத்தது. பின் அந்த செல்போனை காட்டுப்பகுதியிலேயே விட்டுவிட்டு சென்றுவிட்டது. தொடர்ந்து தற்போது நண்டு சிகரெட் பிடிக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.\nPUBG இந்தியா கேமில் ப்ரோ பிளேயர் போல விளையாட இது தான் பெஸ்டான செட்டிங்ஸ்.. உடனே ட்ரை செய்யுங்க..\nமூன்று தாஜ்மஹால் அளவு பெருசு: 18,000 மைல் வேகத்தில் பூமியை நோக்கி நகரும் சிறுகோள்- நமக்கு ஆபத்தா?\nமலிவு விலையில் நோக்கியா 110 4ஜி சாதனம் இந்தியாவில் அறிமுகம்.! முழு விவரம்.!\nஉயிரினங்கள் வாழ்ந்ததா., ஏதாவது அறிகுறி இருக்கா?- செவ்வாய் கிரகத்தில் தொடங்கும் ஆய்வு: நாசா அறிவிப்பு\nமீண்டும் பீதியைக் கிளப்பும் சீனா: 15,000 ஆண்டு பழமையான வைரஸ்கள் அழியாமல் கண்டுபிடிப்பு.. திடுக்கிடும் தகவல்.!\nடோக்கியோ ஒலிம்பிக் 2021: போட்டிகளை எந்த சேனல்களில் பார்க்கலாம்? இதோ பட்டியல்.!\nஅடுத்த போட்டி ஐபாட் உடன்: சியோமி எம்ஐ பேட்5குறித்த முக்கிய விவரங்கள்!\nCrab Smokes Cigratte: Cancer TakingaCancerous Puff- Video Viral in Social Media\nStory first published: Friday, September 25, 2020, 14:47 [IST]\nTickTack பெயரில் டிக்டாக் செயலி மீண்டும் அறிமுகமாக வாய்ப்பு.!\nFlipkart Big Saving Days Sale:ஸ்மார்ட்போன்கள், ஸ்மார்ட் டிவிகளை குறைந்த விலையில் வாங்க நல்ல வாய்ப்பு.!\nதிடீரென வாட்ஸ்அப் அறிமுகம் செய்த புதிய அம்சம்: இனி உங்கள் விருப்பம் தான் முக்கியம்.! அப்படியென்ன புதிய அம்சம்?
100 திமிங்கிலங்களை அதிரடியாக சிறை வைத்த ரஷ்யா...விடுதலைக்காக குவிந்த கையெழுத்துகள்! என்ன காரணம்? - Lankasri News\n100 திமிங்கிலங்களை அதிரடியாக சிறை வைத்த ரஷ்யா...விடுதலைக்காக குவிந்த கையெழுத்துகள்! என்ன காரணம்?\n100 திமிங்கிலங்களை சிறை வைத்த ரஷ்யா, சமூகவலைத்தளங்களில் குவிந்த எதிர்ப்பு குரலால் தற்போது அதை விடுவிப்பதற்கான முயற்சியில் இறங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nரஷ்யாவில் சமீபத்தில் சுமார் 100 திமிங்கிலங்களை அதிகாரிகள் பிடித்து வைத்திருப்பதாக கூறி புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகின.\nஇது சூழலியலாளர்கள், விஞ்ஞானிகள் மத்தியில் பெரும் எதிர்ப்புகளை உருவாக்கியது. மட்டுமின்றி திமிங்கிலங்களை வணிக நோக்கங்களுக்காக விற்பதற்கு அதிகாரிகள் சிறைபிடித்து வைத்திருப்பதாகவும் புகார்கள் கூறப்பட்டது.\nஇதனால் பிடித்து வைத்துள்ள திமிங்கிலங்களை ரஷ்யா உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று கூறி, பிரபல இணையதளமான change.org இணையதளத்தில் ஒரு ஆன்லைன் மனு உருவாக்கப்பட்டது.\nஅதன் பின் அந்த மனு சமூகவலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டது. ஹாலிவுட் நடிகர் லியோனார்டோ டிகாப்ரியோ உள்ளிட்ட பல்வேறு பிரபலங்களும் இணையத்தில் மனுவைப் பகிர்ந்திருந்தனர். ஹாலிவுட் நடிகை பமீலா ஆண்டர்சன், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்குக் இது குறித்து கடிதம் ஒன்றையும் எழுதியிருந்தார்.\nஅதன் பின் இந்த மனு வெகு விரைவில், 15 லட்சம் பேரால் கையெழுத்திடப்பட்டது. திமிங்கலம் விடுவிக்கப்பட வேண்டும் என்று தொடர்ந்து அழுத்தம் எழுந்ததால், தற்போது ரஷ்யா திமிங்கிலங்களை விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nரஷ்யாவில், ஆராய்ச்சி நோக்கங்களுக்காக மட்டுமே முன்அனுமதியுடன் திமிங்கிலங்களைப் பிடிக்க முடியும். சமூக ஊடகங்களில் உருவான அழுத்தம் காரணமாக, திமிங்கிலங்களின் விடுதலை சாத்தியப்பட்டிருப்பதாகவும், இதனால் இணையதளம் எவ்வளவு சக்தி வாய்ந்தது என்பதை உணர முடிகிறது என இணையவாசிகள் பலரும் தெரிவித்து வருகின்றனர்.
கொரோனா தொற்று இரட்டிப்பு காலம் 30 நாட்களுக்கும் கீழ் குறைவு – என்ன காரணம்?\nCoronavirus Doubling Time Growth Rate Maharashtra Punjab Delhi Corona\nIndia Coronavirus Cases Numbers: ஆகஸ்ட் 20ம் தேதி நாட்டில் புதிதாக 69 ஆயிரம் பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 29.05 லட்சமாக அதிகரித்துள்ளது\nBy: WebDesk\tAugust 21, 2020, 2:32:39 PM\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு பரவல் தொடர்ந்து குறைந்து வரும் நிலையில், அதன் பாதிப்பு இரட்டிப்பாகும் நாட்கள் தற்போது 30 நாட்களாக சரிவடைந்துள்ளது. ஆகஸ்ட் 20ம் தேதிப்படி, இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 29.05 லட்சமாக உள்ளது. ஜூலை 27ம் தேதி, இந்த பாதிப்பு எண்ணிக்கையில் பாதியளவை எட்டியிருந்தது. தற்போது பாதிப்பு இரட்டிப்பு விகிதம் 24 நாட்களாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த பாதிப்பு இரட்டிப்பு விகிதம், அடுத்த 30 நாட்களில் கொரோனா பரவல் விகிதத்தை பொறுத்தே அமையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகொரோனா இரட்டிப்பு விகிதம் என்பது பாதிப்பு குறைந்த அளவில் இருந்து அதிகளவிற்கு மாற எடுத்துக்கொள்ளும் காலஅளவே ஆகும். ஒரு குறிப்பிட்ட அளவிலான மக்கள்தொகையில், நோய்த்தொற்று பரவும்விகிதத்தை, தற்போது இந்த அளவில் அளக்கப்படுகிறது. ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் கொரோனா தொற்று அதிதீவிரமாக பரவியது. அப்போது பாதிப்பு இரட்டிப்பு விகிதம் 10 நாட்களாக இருந்தது.\nமே முதல் வாரத்தில் பாதிப்பு இரட்டிப்பு விகிதம் 10 நாட்களாக இருந்தநிலையில்,நாட்கள் செல்ல செல்ல, அது சீராக அதிகரித்துக்கொண்டே வந்தது.\nகொரோனா தொற்று பரவல் வெவ்வேறு அளவில் தொடர்ந்ததால், பாதிப்பு இரட்டிப்பு விகிதத்திலும் தொடர்ந்து மாற்றம் ஏற்பட்டு வந்தது. தலைநகர் டெல்லியில், பாதிப்பு இரட்டிப்பாக மாற ஆகும் நாட்கள் 100 நாட்களாக உள்ளது. ஏனெனில், அங்கு நீண்டநாட்களாக கொரோனா பரவல் விகிதம் 1 சதவீத்ததிற்கும் குறைவாகவே உள்ளது.\nபஞ்சாப், கேரளா, ஒடிசா, ஜார்க்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், அங்கு பாதிப்பு இரட்டிப்பு நாட்கள் 20 நாட்களுக்கு குறைவாக உள்ளது.\nமகாராஷ்டிராவில் கடந்த2நாட்களாக கொரோனா தொற்று பாதிப்பு மிக அதீதமாக உயர்ந்து வருகிறது. ஆகஸ்ட் 19ம் தேதி, புதிதாக 13 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு தொற்று ஏற்பட்டிருந்த நிலையில், 20ம் தேதி 14,600க்கும் மேற்பட்டோருக்கு புதிதாக தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 6.43 லட்சமாக உள்ளது. இவர்களில், 4.6 லட்சம் பேர் அதாவது 72 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர்.\nஆந்திர பிரதேச மாநிலத்தில் நீண்ட நாட்களாக கொரோனா பாதிப்பு விகிதம்9சதவீதத்திற்கு மேல் இருந்த நிலையில், அது தற்போது3சதவீதமாக குறைந்துள்ளது. அங்கு தினமும் புதிய பாதிப்புகளின் எண்ணிக்கை 8 ஆயிரம் முதல் 10 ஆயிரம் என்ற அளவில் உள்ளது. அங்கு தற்போதைய நிலையில், மொத்த கொரோனா பாதிப்பு 3.25 லட்சமாக உள்ளது. தினசரி புதிய பாதிப்பு எண்ணிக்கையில், மகாராஷ்டிராவுக்கு அடுத்த நிலையில் ஆந்திரா உள்ளது.\nபீகார் மற்றும் உத்தரபிரதேச மாநிலங்களில் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வரும் நிலையில், பஞ்சாப் மற்றும் ஒடிசா மாநிலங்களில் இது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அங்கு தினசரி பாதிப்பு விகிதம் 4.5 சதவீதமாக உள்ளது. ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் பஞ்சாப் மாநிலத்தில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் இருந்தநிலையில், ஜூலை இறுதியில் இருந்து அங்கு நாள் ஒன்றுக்கு 500க்கும் குறையாத அளவில் புதிய பாதிப்புகள் கண்டறியப்பட்டு வருகின்றன.\nஆனால், அங்கு கடந்த 10 நாட்களாக, நாள் ஒன்றுக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு புதிய தொற்றுக்கள் கண்டறியப்பட்டு வருகின்றன. கடந்த3நாட்களில் மட்டும் அங்கு தினசரி 1700க்கும் மேற்பட்டோருக்கு புதிதாக பாதிப்பு கண்டறியப்பட்டு வருகின்றன. பஞ்சாப் மாநிலத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 37 ஆயிரமாக உள்ள நிலையில், அங்கு பாதிப்பு இரட்டிப்பு காலம் 16 நாட்களாக உள்ளது குறிப்பிடத்தக்கது.\nஆகஸ்ட் 20ம் தேதி நாட்டில் புதிதாக 69 ஆயிரம் பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 29.05 லட்சமாக அதிகரித்துள்ளது. இவர்களில் 21.6 லட்சம் பேர், கொரோனா தொற்றில் இருந்து குணம் அடைந்துள்ளனர். கொரோனா காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 55 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.\nஇந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க – India coronavirus numbers explained: Covid-19 doubling time down to 30 days\nWeb Title:Coronavirus doubling time growth rate maharashtra punjab delhi corona
திருவிழா Archives • Seithi Solai\n20 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற மீன்பிடி திருவிழா…!!\nராமநாதபுரத்தில் 20 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற மீன்பிடி திருவிழாவில் சமூக விலகலை பின்பற்றாமல் ஏராளமானோர் குவிந்து மீன் பிடித்தனர். ராமநாதபுரம் மாவட்டம்…\n10 கிராம மக்கள் பங்கேற்ற மீன்பிடி திருவிழா …!!\nவிழுப்புரம் அருகே ஏரியில் நடைபெற்ற மீன்பிடி திருவிழாவில் 10 கிராமங்களை சேர்ந்த ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர். விழுப்புரம் அருகே உள்ள…\nஊரடங்கு உத்தரவால் கூவாகம் கூத்தாண்டவர் கோவில் திருவிழா ரத்து.. திருநங்கைகள் வருத்தம்..!!\nதிருநங்கைகள் அதிக அளவில் திரண்டு நடத்தும் ஒரே விழாவான கூவாகம் திருவிழா இந்த ஆண்டு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. கள்ளக்குறிச்சி மாவட்டம்…
Tamil Cine Talk – ‘ஏலே’ படத்தைத் தொடர்ந்து ‘மண்டேலா’ படமும் டிவிக்கு வருகிறதாம்..!\nயோகிபாபு நடித்திருக்கும் ‘மண்டேலா’ திரைப்படமும் நேரடியாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.\nகொரோனா காலக்கட்டத்திற்குப் பிந்தைய தற்போதைய சூழலில் தியேட்டர்களுக்கு ரசிகர்களின் வருகை மிகவும் குறைந்துள்ளது. ‘மாஸ்டர்’ படம் மட்டுமே தியேட்டர் வசூலை அள்ளியுள்ளது. அதற்குப் பின்பு வெளியான எந்தப் படமும் தியேட்டர்களில் கூட்டத்தை வரவழைக்கவில்லை.\nஇதனால் தியேட்டர் அதிபர்களும், தயாரிப்பாளர்களும் மிகுந்த கவலைக்குள்ளாகியுள்ளனர். கூட்டத்தை வரவழைக்க என்ன செய்வது என்பதே புரியாமல் தவித்துக் கொண்டிருக்கின்றனர்.\nஒரு படத்தை தியேட்டர்களில் வெளியிட்டுவிட்டு அந்தப் படத்திற்கு வெற்றி கிடைக்குமா.. வசூல் வருமா.. வராதா என்கிற குழப்பத்தில் கோடிக்கணக்கில் பணத்தையும் செலவிட்டு… வசூல் கிடைக்காமல் போனால் நிறைய நஷ்டமாகுமே என்பதால் நேரடியாக தொலைக்காட்சியில் வெளியிட்டுவிட்டு ஒரே செக்காக கிடைக்கின்ற பணத்தை வாங்கிப் போடுவது நல்லது என்ற நினைப்பிற்கு பல தயாரிப்பாளர்களும் வந்துவிட்டார்கள்.\nஅதோடு தியேட்டர் உரிமையாளர்கள் இப்போது எந்தப் படத்தை தியேட்டர்களுக்கு கொண்டு வந்தாலும் படம் வெளியாகி 30 நாட்களுக்குள் ஓடிடிக்கு இந்தப் படத்தைத் தர மாட்டோம் என்கிற சான்றிதழையும் கேட்க ஆரம்பித்துவிட்டார்கள். இதுவும் தயாரிப்பாளர்களுக்கு சிக்கலைத் தந்திருக்கிறது.\nஇதனாலேயே தான் தயாரித்த ‘ஜெகமே தந்திரம்’ படத்தை ஓடிடியில் வெளியிட முடிவெடுத்துவிட்டார் தயாரிப்பாளர் சசிகாந்த். இந்த முடிவு படத்தின் நாயகனான தனுஷுக்கு பிடிக்கவில்லையென்றாலும், தயாரிப்பாளர் தன்னுடைய நலனை முன் வைத்து இந்த முடிவையெடுத்துவிட்டார்.\nஇதற்கிடையில் தான் தயாரித்த ‘ஏலே’ படத்தை நேரடியாக விஜய் தொலைக்காட்சியில் வெளியிட்டுவிட்டார் தயாரிப்பாளர் சசிகாந்த். இந்தப் படம் நேற்று மதியம்3மணிக்கு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது.\nகதை, திரைக்கதை, இயக்கம் என்று அனைத்துமே இந்தப் படத்தில் சிறப்பாக இருந்ததால் இந்தப் படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.\nஇதனைத் தொடர்ந்து தற்போது மீண்டும் ஒரு படத்தை இதே விஜய் டிவியிலேயே வெளியிட தயாரிப்பாளர் சசிகாந்த் முடிவெடுத்திருக்கிறாராம்.\nஅந்தப் படம் ‘மண்டேலா’ என்ற திரைப்படம். நடிகர் யோகிபாபு நாயகனாக நடித்திருக்கும் இந்தப் படத்தை இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கியிருக்கிறார்.\nஇந்தப் படம் அநேகமாக ஏப்ரல் 14-ம் தேதியன்று விஜய் டிவியில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதே ஏப்ரல் 14-ம் தேதியன்று சன் தொலைக்காட்சியும் தியேட்டர்களுக்கே வராத புத்தம் புதிய படமாக ‘வணக்கம்டா மாப்ளை’ என்ற படத்தையும் வெளியிடவுள்ளதாம்.\nஆக மொத்தத்தில், கொஞ்சம் கொஞ்சமாக தியேட்டர்கள் தங்களது ரசிகர்களை இழந்து கொண்டிருக்கின்றன என்பது மட்டும் உண்மை.\nactor yogi babu director madone ashwin mandela movie slider இயக்குநர் மடோன் அஸ்வின் சசிகாந்த் மண்டேலா திரைப்படம்\nPrevious Postசென்னை சர்வதேச திரைப்பட விழாவில் வரவேற்பைப் பெற்ற ‘அமலா’ திரைப்படம் Next Postகுழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைச் சொல்ல வரும் ‘மாரீசன்’ திரைப்படம்
அஜீவன் உடனான தீபம் தொலைக்காட்சியின் நேர்காணல் - Page2- வாழும் புலம் - கருத்துக்களம்\nவணக்கம் அஜீவன் ...என்னத்துக்கு இந்த கோபம்.....ஏன் வெளியேற வேண்டும். தொடர்ந்து உங்கள் கருத்துகளை தாருங்கள் ,,,,\nயாழ் கள விவாத்த்தில் அதிகம் கலந்து கொள்ளாமால் ...உங்கள் கருத்துகளை வாசிக்க விரும்பும் அல்லது அறிய விரும்பும் என்னைப் போல இருக்கும் மற்ற வாசகர்களும் அப்படியே தான் எண்ணுவார்கள் என்று நினைக்கிறேன்\nதேசியவாதிகள் இறுதியில் வெற்றிக்கிண்ணத்தை தட்டிச்சென்றுள்ளார்கள். வாழ்த்துகள்!\nஅஜீவன் அண்ணா உங்கள் பணி சிறக்க வாழ்த்துகள்!\nதேசியவாதம் என்பது ஒரு சிலரின் சொத்தல்ல. ஒரு இனத்திற்கானது. தமிழ் தேசிய உணர்வு என்பது தமிழினத்தின் உணர்வு.\nஅஜீவனிடம் கேட்கப்படாது விட்ட கேள்விக்கு விடை வரவில்லை. மாறாக விலகல் என்று வருகிறது. இது எதையோ தவிர்த்துவிட செய்யப்படுகிறது என்றே தோன்றுகிறது.\nதமிழ் தேசியம் என்பது புலிகள் சார்பு என்பதாக அஜீவனும் நினைத்து வைத்திருக்கிறார் போல. ஏனெனில் அவரும் இறுதியில் புலிகளைப் பற்றி நாலு வரி இழுத்துவிட்டு விலகிக் கொள்கிறேன் என்றிருக்கிறார்.\nமக்கள் எதிர்பார்ப்பது.. தங்களின் விடுதலைப் போராட்டம் பற்றிய பதிவுகளை ஏன் செய்யக் கூடாது என்பதுதான். அதையே தான் சாதாரண தமிழ் குடிமகனாகா நான் இங்கு கேட்டேன். தமிழ் மக்களின் போராட்டத்தை புலிகளின் போராட்டம் என்பதாகவே இவர்கள் இன்னும் எண்ணிக் கொண்டு செயற்படுகின்றனர் என்பது அவர்களின் வரிகள் உணர்த்துகின்ற உண்மையாக இருப்பது வேதனை தருகிறது. தமிழ் மக்களின் உணர்வுகளை இவர்களே புரிந்து கொள்ளவில்லை எனும் போது தென்னிலங்கை சிங்களவர்களைக் குறை கூறி என்ன பயன்..!\nதேசியவாதம் என்பது ஒரு சிலரின் சொத்தல்ல ஒரு இனத்திற்கானது என்று ஒரு சிலர் சொல்லிச்சொல்லியே ஒருசிலரை ஒதுக்கி ஒதுக்கி தமிழ்தேசிய உணர்வை பலரது உள்ளங்களில் இருந்து அந்த ஒருசிலர் அகற்றி வருகின்றார்கள்.\nதேசியவாதம் என்பது ஒரு சிலரின் சொத்தல்ல ஒரு இனத்திற்கானது என்று ஒரு சிலர் சொல்லிச்சொல்லியே ஒருசிலரை ஒதுக்கி ஒதுக்கி தமிழ்தேசிய உணர்வை பலரது உள்ளங்களில் இருந்து அகற்றி வருகின்றார்கள்.\nஅவர்கள் ஒதுங்குவது தமிழ் தேசியத்துக்காக குரல்கொடுப்பவர்களை கண்டல்ல. தாங்கள் தமிழ் தேசியத்தை ஒதுக்கி வாழ்ந்து வருவது வெளிச்சத்துக்கு வந்திடுமோ என்ற பயத்திலாக இருக்கலாம். ஏனெனில் இப்படி முன்னரும் நடந்திருக்கிறது.\nநான் நினைக்கிறேன்.. நீங்களும் இது விடயத்தில் தவறாக புரிதல் கொண்டிருக்கிறீர்கள் என்று. தமிழ் தேசியம் தமிழர்களின் தேசியம். அது ஒரு சிலருக்கு சொந்தமானதல்ல. தமிழ் தேசியத்துக்காக குரல் கொடுப்பது விடுதலைப்புலிகளுக்காக குரல் கொடுப்பதல்ல. ஒட்டுமொத்த தமிழர்களின் தேசியக்குக்கான உணர்வு தான் தமிழ் தேசிய உணர்வு.\nசிலர் அதிலிருந்து விலகி இருப்பதுதான்.. கேள்விக் கணைகளைத் தொடுக்க வைக்கிறது. சிங்கள மக்கள் சிங்கள தேசிய விசுவாசிகளாக இருக்கின்றனர். இந்திய மக்கள் இந்திய தேசிய விசுவாசிகளாக இருக்கின்றனர். ஆனால் ஈழத்தமிழர்களில் சிலர் தமிழ் தேசிய உணர்வாளர்களாக இருக்க மறுக்கின்றனர். அது தான் ஏன் என்று புரியவில்லை...??! தமிழ் தேசியம் மற்றும் தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தின் நியாயங்களைத் தெரிந்திருந்தும்.. அவற்றில் இருந்து விலகி இருப்பதற்கான காரணம் என்ன..??!\nசிங்கள தேசியத்தை நேசிப்பவர்களின் அவலங்களை வெளிக்கொணர முயலும் அதேவேளை தமிழ் தேசியத்தை நேசிக்கும் மக்களின் துயரங்களை வெளிக்கொணர மறுக்கிறோம். காரணம்.. அவர்கள் விடுதலைப்புலிகள் சார்ந்து நிற்பதாகக் கருதுவதாலா..???! எனக்கு இதில் இருக்கும் சூட்சுமம் புரியவில்லை. நீங்களாவது அதை விளக்கலாமே...??! ஒருவர் மீது ஒருவர் குற்றம் சுமத்தி.. விலகிறவருக்கு ஆதரவாகவும்.. பிறருக்கு ஆதரவில்லாமலும்.. குரல் கொடுப்பதாகக் காட்டிக் கொண்டிருப்பதிலும்.. எழும் கேள்விகளுக்கு அவர்கள் கருதும் நியாயபூர்வமான அவர்களின் நிலைப்பாட்டுக்கான பதிலை பெற்றுத்தர முயற்சிக்கலாமே..!\nஇங்கே போட்டியே நடக்கவில்லை. பின் எப்படி வெற்றிக்கிண்ணத்தை தட்டிப் பறித்தாக நீங்கள் நினைக்கின்றீர்கள். தேசியம் என்ற போர்வையில்ஒருவரை விமர்சித்து அவரை முடமாக்க முனைந்திருக்கின்றார்கள். உண்மையில் ஒரு படைப்பாளியின் படைப்புகள் பற்றிய சந்தேகங்கள் இருந்தால் அவற்றை முன்பு நீங்கள் குறிப்பிட்டது போல் நேரடியாக அப்படைப்பாளியிடமே கேட்டிருக்கலாம். ஆனால் இங்கு நோக்கம் அதுவல்ல விமர்சனம் என்ற போர்வையில் விசத்தை விதைக்கின்றார்கள். விதைப்பதை இவர்கள் என்றோ ஒருநாள் அறுவடை செய்யும் போது அதன் தார்ப்பரியத்தை அவர்களும் புரிந்து கொள்வார்கள்.\nஇதற்காக அஜீவன் களத்தை விட்டு வெளியேற வேண்டிய அவசியமில்லை. ஒரு படைப்பாளிக்கு சுயமும், சுதந்திரமும் முக்கியம். அதை எவருக்காகவும் எந்த நிலையிலும் விட்டுக் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. இங்கே தேசியம் பேசுவோர்கள் தேசியம் என்ற போர்வைக்குள் குளிர்காய்கின்றார்களே ஒழிய உண்மையான தேசியவாதிகளல்ல.\nவசம்பண்ணன்.. ஒரு படைப்பாளி.. சில விசயங்களை திட்டமிட்டு தவிர்ப்பதாக தோன்றும் போது அவற்றை வெளிப்படையாகக் கேட்பது.. உங்களுக்கு விசத்தை விதைப்பதாகவா தெரிகிறது.\nஇங்கு கேட்கப்பட்ட கேள்வி என்ன என்பதும்.. அதற்கு இதுவரை பதில்கள் வரவில்லை என்பதும்.. படைப்புக்கு படைப்பியலுக்கு வெளியில் சென்று பதில்கள் சொல்லப்பட்டிருப்பதும்.. தான் கேள்விகளுக்குப் பயப்பிடுகிறார்களோ என்ற எண்ணத்தை ஏற்படுத்தி இருக்கிறது.\nஎன்னைப் பொறுத்தவரை.. அஜீவன் என்ற படைப்பாளியை.. இக்களத்தில் வந்த பின் தான் அறிவேன். தாயகத்தில் இருந்த போது இப்படி ஒருவர் இருக்கிறார் என்றே தெரியாது. ஒரு தமிழ் தேசியக் களம் அறிமுகம் செய்து வைத்த ஒரு படைப்பாளியிடம் தமிழர்களின் விடுதலைப்போராட்டம் பற்றிய ஒரு படைப்பும், பார்வைகளும் இல்லையே என்று வினவுதல்.. விசத்தை விதைப்பதாக நீங்கள் கருத இடமளிக்கிறதா....???!\nஅஜீவன் உங்களின் படைப்புக்கள் அனைத்தும் திறமை. அவை உங்களை தமிழ் தேசியவாதி என்று இனங்காட்டுகிறது என்று சொல்வது.. பாராட்டு என்றும்.. அதுவே சிறந்தது என்றுமா நீங்கள் கருதுகிறீர்கள். இப்படியான போலிப் பாராட்டுக்கள் தான் என்னைப் பொறுத்தவரை விசம்.\nமற்றும்படி.. என்னைப் பொறுத்தவரை இக் களத்தில் இருந்து எவரும் விலகிச் செல்வதில் எனக்கு உடன்பாடில்லை. அது அஜீவன் விடயத்திலும் பொருந்தும்.\nநானும் இதில் கருத்துப் பகர்ந்தவன் என்ற வகையில் இக்கருத்தை முன் வைக்கிறேன். ஒருவேளை எனது கருத்தின் அடிப்படையில் தான் அஜீவன் வெளியேற்றப்படுகிறார் என்றும் நாளை கருத்துக்கள் முன் வைக்கப்படலாம். ஆனால் ஏலவே செய்தி ஒட்டும் விடயத்தில் அஜீவன் நிர்வாகத்தோடு சிறிது குழம்பி இருந்த வேளையில்.. செய்தி ஒட்டுவதை தவிர்த்திருந்த வேளையில் இதுவும் வர.. எல்லாம்.. தமிழ் தேசியம் பேசியே விரட்டினம் என்ற தோற்றத்தை ஏற்படுத்தும் வகைக்கு இங்குள்ள விடயங்களை திசை திருப்ப அனுமதிக்க முடியாது.\nநான் எனது மக்கள் கூட்டத்தில் ஒருவனாக இருந்து கேட்ட கேள்விக்கும் அஜீவனின் வெளியேற்ற முடிவுக்கும் தொடர்பிருப்பதாக நான் கருதவில்லை. நான் கேட்ட கேள்வி ஒரு படைப்பாளியிடம் பதிலை எதிர்பார்த்தே அன்றி.. வெளியேற்றத்தை அல்ல. அதில் விசம் இருப்பதாக எண்ணுவதும் தவறு. வேறு யாராவது அப்படி செய்திருப்பின் அதற்கு நான் பொறுப்பல்ல..!\nநீங்கள் உண்மையில் சில சந்தேகங்கள் இருந்து அவற்றை தீர்க்க விரும்பியிருந்தால், அவரை விமர்சித்துக் கருத்தெழுத முன் அவரிடமே உங்கள் சந்தேகங்களை கேட்டிருக்கலாமே?? அதை நீங்கள் முதலில் செய்திருந்தால் உங்கள் கேள்வியில் நியாயம் இருந்திருக்கும். ஒருவரை யோக்கியர் அல்ல என்று விமர்சித்தவிட்டு பின் அவரிடம் பதில் பெற முனைவதை எப்படிச் சொல்லலாம்??\nஇங்கே அஜீவனை எவரும் தேசியவாதியென்றோ மிகச்சிறந்த படைப்பாளியென்றோ போற்றி புகழவில்லையே. நீங்களாகவே ஏன் பலதையும் கற்பனை பண்ணுகின்றீர்கள்.\nவசம்பண்ணன்.. கீழ் உள்ளது தான் நான் இச்செவ்வியைக் கண்ணுற்ற பின் எழுதிய கருத்தும்.. எனது வினவல்களும்.\nஇதில் அஜீவன் பற்றிய தனிப்பட்ட விமர்சனங்கள் எங்குள்ளன.. எனது பின் வந்த கருத்துக்களில் அவரின் படைப்புகள் மற்றும் அவற்றின் தன்மைகளுக்கு அப்பால் அவரின் தனிப்பட்ட நிலைப்பாடுகள் சார்ந்து விமர்சனங்கள் எங்கு எழுதப்பட்டுள்ளன என்று ஒருக்கா சுட்டிக்காட்டுகின்றீர்களா..??!\nஅப்படிச் செய்திருப்பின் நிச்சயம் அது கள நிர்வாகத்தால் அகற்றப்பட்டிருக்கும்.\nநான் சொல்லவில்லையே இப்படித்தான் பாராட்டிகிறார்கள் அல்லது பாராட்டினார்கள் என்று. இப்படிப் பாராட்டுவதையா எதிர்பார்க்கிறீர்கள் என்றுதான் கேட்டேன்.\nஒரு படைப்பாளியிடம் செவ்வி என்பது செவ்வி காணப்படுபவரை குசிப் படுத்த அல்லது நேரடியாக அவரை விளம்பரப்படுத்த என்று செய்யப்படுவதல்ல. அவரிடமிருந்து தகவல்களை விடயங்களை அறியவும் மக்கள் மத்தியில் எழக்கூடிய அவரின் படைப்புக்கள் மற்றும் படைப்புக்களின் தன்மைகள் பற்றிய பார்வைகள் மற்றும் சந்தேகங்கள் பற்றியும் கேட்டு அறிந்து கொள்ளச் செய்யப்படுவதே அது.\nஇங்கு நான் உங்களை மட்டுமே குறைசொல்லவில்லை. உங்களைப்போல் எழுதிய மற்றவர்களுக்கும் சேர்த்துத் தான் எழுதினேன். ஆனாலும் நீங்கள் நேரடியாக தாக்காமல் பொதுப்படையாக தாக்கி பல எழுதியுள்ளீர்கள். நீங்கள் எழுதிய கருத்துக்களை மீண்டும் வாசித்துப் பாருங்கள் நிச்சயம் உங்களுக்குப் புரியும்.\nவசம்பண்ணன்.. நேரடியாகவும் அல்ல பொதுப்படையாகவும் அல்ல. எமது தயாக மக்களின்3தசாப்த கால விடுதலைப் போராட்ட தேவைகள் அனுபவங்கள் அம்மக்கள் சந்தித்த அவலங்களைப் பதிவு செய்ய முன்வராத எல்லா கலைஞர்களையும் தான் பார்த்து கேள்வி கேட்டிருக்கிறேன்..! அதை நீங்கள் கலைஞர்களைத் தாக்கி எழுதுவதாகக் கருதுவது தவறு. படைப்புக்களை ரசிப்பவன் என்ற வகையில் எனக்குள் எழுந்த சந்தேகத்தை வினாவாக்கினேன் அவ்வளவும் தான்..! அதில் ஒரு குறிப்பிட்டவரே அடக்கப்பட்டார் என்று குறிப்பிடுவது எனது தவறல்ல. அது நீங்கள் கருத்தை எடுத்துக் கொண்ட விதத்தில் இருந்த தவறு என்றே சொல்ல முடியும். அதற்காக வருந்தத்தான் முடியுமே தவிர வேறென்ன செய்யலாம்.\nநெடுக்காலபோவான் இது என்ன குழந்தைப்பிள்ளைத்தனமா இருக்கிது உங்கட கேள்வி:\nஇஞ்ச படைப்பாளிகளாக இருக்கட்டும், கருத்து எழுதுபவராக இருக்கட்டும்.. ஒருவரை மற்றவர் பாராட்ட அல்லது அவர் பற்றிபேச வெளிக்கிட்டால் எல்லாரும் அவரை Background Check (பின்புலம் ஆராய்தல்) செய்கின்றார்கள்.\nகருத்து எழுதுபவர் - அல்லது ஒரு படைப்பாளி முன்பு PLOTE இல இருந்தாரா அல்லது TELO இல இருந்தாரா என்று செவிவழி மற்றும் எம்.எஸ்.என் உரையாடல்கள் மூலம் பெற்ற கதைகளின் அடிப்படையில் தாமாக ஒரு புதியகதையை உருவாக்கிவிட்டு பின் அதன் அடிப்படையில் தமது விமர்சனங்களை முன்வைக்கின்றார்கள். இதுதான் இங்கு நடக்கின்றது. இப்படியானவர்கள் தான் தம்மை தமிழ்தேசியவாதிகள் என்று சொல்லாமல் சொல்லிக்கொள்கின்றார்கள்.\nவிடுதலைப்புலிகளே முன்பு மாற்றுக்குழுக்களில் இருந்தவர்களை தம்முடன் அணைத்து வைத்துள்ள இன்றைய காலகட்டத்தில் ஒரு சிலர் அரைகுறையாக எல்லாவற்றையும் விளங்கி வைத்துக்கொண்டு கல்லில் தோசைபோடப்பார்க்கின்றார்கள். ***\nஒரு படைப்பாளியாக இருக்கட்டும்... யாழில் கருத்து எழுதும் ஒரு சக உறவாக இருக்கட்டும்.. இங்கு என்ன தேவை? விமர்சனம் என முன்வைக்கப்படும்போது கவனிக்கப்படவேண்டியவை எவை?\nகருத்து ஒன்றே...! Background Check அல்ல. இங்கு என்ன Background Check செய்யப்பட்டு Green Card ஆ கொடுக்கப்படுகின்றது. அல்லது Background Check செய்யப்பட்டு அவர் தேசியவாதி எனக்கணிக்கப்படும் சந்தர்ப்பத்தில் அவருக்கு UN இல் பதவி ஏதுமா பெற்றுக் கொடுக்கப்படுகின்றது? இல்லையே... இந்த வேலைகளைப் பார்க்க காவல்துறை இருக்கின்றது. அப்படியானால் இனி காவல்துறையை அழைத்து படைப்புக்கள் பற்றிய விமர்சனங்களை கேட்பது சிறப்பானதாக தெரிகின்றது.\nஒரு படைப்பாளியின் படைப்பை எப்படி விமர்சனம் செய்வது என்றே பலருக்கு தெரியவில்லை. இந்தநிலையில் தேசியம் என்று கோசங்கள் வேறு.\nஎனது கேள்வி என்ன என்றால் விமர்சனம் செய்கின்ற தேசியவாதிகளால் படைப்பு என்றால் இப்படித்தான் என ஒரே ஒரு படைப்பு செய்து காட்டமுடியுமா? ரெண்டு வசனத்தில ஆ, ஊ என்று கத்திவிட்டு வெற்றிக்கிண்ணங்களை (?) பெற்றுச்செல்கின்றார்கள். இவர்கள்தான் எதிர்கால சமூகத்தை வழிநடாத்தப்போகின்றார்களாம். நாம் உருப்பட்ட மாதிரித்தான். சிரிப்பாக இருக்கின்றது.\nஎன்னைப் பொறுத்தவரை எனக்கு எம் எஸ் என் ஐடியும் கிடையாது.. இவர்கள் பற்றி தனிமடலில் பேசிக் கொள்வதெல்லாம் கிடையாது. இங்கு எழுதப்படும் விடயங்கள் தவிர அஜீவன் போன்றவர்களின் பின்னணியும் தெரியாது.\nஅவரை இக்களத்தில் அவரின் கருத்துக்கள் மற்றும் படைப்புக்களூடே அறிவேன்.\nபேட்டியில் "தேசம்" சஞ்சிகை என்று வந்தது. அச் சஞ்சிகையை ஒரு தடவை வாசிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. அது எந்த ஒரு அரசியல் இலக்கற்று விடுதலைப்புலிகளை மிகக் கீழ்த்தரமாக வரிக்கு வரி விமர்சிப்பதை கண்டிருந்தேன். அதன் பின்னர் அச்சஞ்சிகை யாரால் அச்சிடப்படுகிறது என்று எனது பல்கலை தமிழ் நண்பர்களிடம் கேட்ட போது அவர்கள் தான் சொன்னார்கள் முன்னாள் தேச விரோதக் கும்பல்கள் தங்களின் காழ்புணர்வைக் கொட்ட அதனை லண்டனில் அச்சிடுகின்றனர் என்று. அதனால் தான் கேட்டேன் "தேசம்" என்பது எதனை என்று..??!\nமற்றும் படி அஜீவன் பல படைப்புக்களை செய்திருந்த போதும்.. சுனாமி பற்றி தென்னிலங்கைக்குச் சென்று விபரணம் ஒன்றைச் செய்து இங்கு செய்தியாக்கி அதனை அண்மையில் வாசிக்கக் கிடைத்த போதும்.. தமிழ் மக்களின் அவலங்களை வெளிக்கொணர அவர் போன்ற கலைஞர்கள் முன்வராத சந்தர்ப்பங்களையும் அவதானித்தே என் வினவலைக் கேட்டேன். அவரின் படைப்புக்கள் புலம்பெயர் தமிழ் சமூகம் சார்ந்து குடும்பப் பிரச்சனைகளை.. இளைஞர்களின் தனிமைப் பிரச்சனைகளை.. தொழில்பிரச்சனைகளைச் சொல்லி இருக்கின்றன. ஆனால் தாயக மக்களின் உணர்வுகளை அவர் படைப்புக்களில் பதிவு செய்யத் தயங்குவதும்.. தாயகக் குறும்படங்கள்.. திரைப்படங்கள் குறித்து விமர்சனங்களை.. ஆரோக்கியமான கருத்துக்களை ஒரு திரைப்படக் கலைஞன் என்று முன் வைக்க தயங்குவதையும் அவதானித்தே என் வினவலைக் கேட்டேன். இவரைப் போல இன்னும் சில கலைஞர்கள் இவ்வாறு நடந்து கொள்கின்றனர்.\nஅதற்கான உண்மைக் காரணத்தை அவர்கள் வெளியிடும் போது.. மக்களும் சம்பந்தப்பட்ட தரப்புகளும் இவர்களின் நியாயங்களை அல்லது தவறுகளை இனங்காண ஒரு சந்தர்ப்பம் கிடைக்கும் என்பதே எனது எதிர்பார்ப்பாக இருந்தது..\nமற்றும்படி.. அஜீவனுடன் போட்டி போடும் கலைத்துறையை சேர்ந்தவனல்ல நான். அவருடன் தனிப்பட்ட நட்போ.. அல்லது அறிமுகமோ கொண்டவனல்ல நான். அவரை ஒரு கலைஞனாக இக்களத்தில் கண்டது மட்டும் தான். எனவே உங்களின் மேற்குறிப்பிட்ட பார்வை எனக்குப் பொருந்த எவ்வகையிலும் வாய்ப்பில்லை..!\nநான் உங்களை சொல்லவில்லை நெடுக்காலபோவான். பொதுவாகச் சொன்னேன். இங்கு யாழில இதுதானே நடக்கிது? இல்லையெண்டு சொல்லுங்கோ பார்க்கலாம்? ஏதாவது வித்தியாசமாக சொல்லப்பட்டால் அடுத்தகணமே துரோகி பட்டம் காத்து இருக்கிது. நம்மண்ட ஆக்களிண்ட சிந்திக்கும் திறன் இவ்வளவுதான். இவர்களைத்தான் விமர்சகர்கள் மற்றும் தேசியவாதிகள் என்றும் சொல்கின்றார்கள்\nபனைக்குக் கீழிருந்து பால்தான் குடித்தேன் என்று சொல்பது சுலபம், ஆனால் அதை நம்பவைப்பது கடினம்.\nகொஞ்சம் விளக்கமாக சொல்லுங்கள் பிரபா. தேசியத்சொத்தான பனைமரத்தின் கீழ் இருந்து தேசியமாகிய கள்ளைக் குடித்ததால் ஏற்படுகின்ற வெறியைப்பற்றி சொல்கின்றீர்களா?\nஅஜீவன் படைப்பாளி, பல்வேறு தடைகளை எதிர்கொண்டு முன்னேறியவர்.\nஆனால் அவரின் யாழ்கள விலகலினை இத்திரியினை விட அவர் ஆரம்பித்த "பதில் தேவை" என்ற திரியே தீர்மானித்திருக்கவேண்டும்.\nஏனெனில் அவர் சீறிக்கொண்டு ஆரம்பித்த திரி\nயாழ் களத்தின் நிர்வாகிகள் யார் யார்?\nஏதாவது பிரச்சனை என்றால் யாரோடு பேச வேண்டும்?\nஎப்படி தொடர்பு கொள்வது?\nதிரை மறைவில் விளையாட நான் விரும்பவில்லை?\nஅஜுவன் வேலை மினக்கெட்டு செய்திகளில் நேரங்களை மாற்ற வேண்டிய தேவை இங்கு யாருக்கும் இல்லை.\nநீங்கள் இணைத்த செய்தி:\nஅதாவது புதினத்தின் பதிவு 414675 எனவும் உங்கள் செய்தியின் பதிவு 414688 எனவும் பதியப்பட்டுள்ளது. நீங்கள் குறிப்பிடும் ஏனைய பழைய செய்திகளையும் இப்படி சென்று பாருங்கள்.\nஅது தவிர நேரத்தினையும் சரியாகக் கவனியுங்கள். மேலே இளைஞன் கூறியது போன்று நீங்கள் எந்த நாட்டில் இருப்பதாக அங்கு நேரத்தினைத் தெரிவு செய்துள்ளீர்களோ அதன்படியே நேரம் காண்பிக்கப்படும். உதாரணமாக இலண்டனில் இருக்கும் ஒருவர் நான்கு மணிக்கு ஒரு செய்தியினை இணைத்தால் சுவிசில் இருக்கும் ஒருவருக்கு ஐந்து மணிக்கு இணைத்ததாகக் காண்பிக்கும். (கவனிக்க: இது களத்தில் உறுப்பினராக உள்ள ஒருவர் உள்நுழைந்திருக்கும் போது மட்டும் இப்படிக் காண்பிக்கும்). களத்தில் உள்நுழையாத ஒருவருக்கு பொதுவாக இலண்டன் நேரமே அவர் எங்கிருந்தாலும் காண்பிக்கும்.\nஇதற்கு முன்னும் இது போன்ற தன்மைகளை பல முறை கண்டுள்ளேன் என்று கூறியுள்ளீர்கள். தயவு செய்து மேற்கூறிய முறைப்படி எவ் இலக்கங்களில் பதியப்பட்டுள்ளது என்று பாருங்கள்.\nஅடிப்படை தொழில்நுட்பங்களை அறியாமல் நீங்களும் குழம்பி சக கள உறுப்பினர்களையும் குழப்பத்திற்கு உள்ளாக்கி நிர்வாகத்திற்கும் அசெளகரியத்தை உள்ளாக்கும் இதுபோன்ற செயல்களைத் தவிர்த்துக் கொள்ளுங்கள்.\nசந்தேகங்கள் இருந்தால் அதனைக் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். தயவு செய்து இனி வரும் காலங்களிலாவது அவசரப்பட்டு அவசியமில்லாது குற்றஞ்சாட்டுவதைத் தவிர்த்துக் கொள்ளுங்கள்.\nநீங்கள் எங்கு எப்படி நேரத்தினை மாற்றினாலும் ஒரே கருத்துக்களை இணைக்கும் போது மேற்கூறியபடி கருத்து இலக்கங்களை அடிப்படையாக வைத்தே இணைக்கும்படி இதனை (இந்த script) உருவாக்கியவர்கள் செய்துள்ளார்கள்.\nமீளவும் கேட்டுக் கொள்வது அடிப்படை தொழில்நுட்பங்களை அறியாமல் நீங்களும் குழம்பி சக கள உறுப்பினர்களையும் குழப்பத்திற்கு உள்ளாக்கி நிர்வாகத்திற்கும் அசெளகரியத்தை உள்ளாக்கும் இதுபோன்ற செயல்களைத் தவிர்த்துக் கொள்ளுங்கள்.\nதன் விளக்கமின்மையை ஒத்துக்கொள்ளாது\nநான் வேலை மினக்கெட்டு எழுதவில்லை\nயாரையும் முதன்மைப்படுத்த வேண்டாம்.\nஅது நானாக இருந்தாலும் சரி!\nநட்பு - குடும்பம் என்பது வேறு\nபொது வாழ்வு என்பது வேறு\nநான் தவறு செய்தாலன்றி\nநான் குடும்பத்தை பார்க்கும் பார்வையோடு\nபொது வாழ்வை பார்ப்பதில்லை.\nஅது வேறு இது வேறு!\nமுகமூடி அணியாது களம் வருபவன் எனக் கூறும் இவருக்கு இது களங்கத்தினை ஏற்படுத்தியிருக்கலாம்.\nகலைஞனும் அஜீவனை பேட்டி எடுத்துள்ளார். அதன் youTube இணைப்பை தர முடியுமா\nஏற்கனவே என்னால் இணைக்கப்பட்டுள்ளதே? யாழ் கள நிர்வாகிகளை கேளுங்கள்.(linux}\nஇதோ நீங்கள்கேட்ட மாண்புமிகு Dr. நுணாவிலான்அவர்களால் இணைக்கப்பட்ட இணைப்பு.\nநெடுக்க்கால போனவர் கேட்ட கேள்விகளுக்கு அஜீவன் அண்ணா பதில் சொல்லாமல் விலகல் என்ற திரைமறைப்பை செய்துள்ளார்.\nதனிப்பட்ட முறையில் என்னை அஜீவன் அண்னாவுக்கு தெரியாது ஆனால் எனது மச்சானின் திருமணவைபகத்தத ஒளிப்பதுவு செய்ய வந்தார்( சுவிஸில்) அபோது எனது மச்சான் முலம் அறிமுகம்( நான் யார் என்று சொல்ல மட்டேன் அஜீவன் அண்ணா)\nஇங்கு நீங்கள் சக கருத்தாடளனே
Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: ஜனாதிபதியின் கட்டளையின் பேரில் தவறுகள் நிவர்த்தி செய்யப்படும்! - இராணுவத் தளபதி\nஜனாதிபதியின் கட்டளையின் பேரில் தவறுகள் நிவர்த்தி செய்யப்படும்! - இராணுவத் தளபதி\nதனிமைப்படுத்தலுக்கு உள்ளான அனைவரையும் விடுவிப்பதற்கு முன்னர் PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் கட்டளையிட்டுள்ளதாக, இராணுவத் தளபதி லுதினன் ஜெனரல் கவேந்திர சில்வா குறிப்பிட்டுள்ளார்.\nஜனாதிபதியின் ஆலோசனைக்கேற்ப, தற்போது அதனைச் செயற்படுத்துவதற்கு ஆவன செய்வதாக ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார். மேலும், இலங்கையில்தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட கிட்டத்தட்ட 1500 பேரில் முதல் பிரிவினர் PCR சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.\nஏற்கனவே, இராணுவத்தளபதியின் பிரயத்தனத்தினாலேயே நேற்று முன்தினம் புத்தளத்திலுள்ள தனிமைப்படுத்தல் முகாமிலிருந்து 16 நோயாளர்கள் கண்டுபிடிக்ப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. எவ்வாறாயினும், ஏற்கனவே தனிமைப்படுத்தப்பட்டு அனுப்பி வைக்கப்பட்ட 3500 பேருக்கு PCR பரிசோதனை நடக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
வயிற்றுக்குள் 100 மீன் முட்கள் !! வழக்கத்துக்கு மாறான கே ஸ் என எண்ணி தி கை த் து ப்போன வைத்தியர்கள் !! – Online90Media\nDecember 5, 2020 Online90LeaveaComment on வயிற்றுக்குள் 100 மீன் முட்கள் !! வழக்கத்துக்கு மாறான கே ஸ் என எண்ணி தி கை த் து ப்போன வைத்தியர்கள் !!\nவ யிற் று க் குள் சி க் கி ய ஊ சி போன்ற 100 மீன் முட்களை அ று வை சி கிச்சை மூலம் அக ற்றி யு ள்ளனர் சீனாவைச் சேர்ந்த வைத்தியர்கள்.சீனாவின் சிச்சுவான் மாகாணத்தைச் சேர்ந்தவர் ஷோவ். வயது 63. இவர் அலாதியான மீன் பிரியர். ஏகப்பட்ட சிறு மீன்களைப் இ ட் டு சூப் வைத்துக் குடித்தார். மீன் முட்கள் வயிற்றில் இருந்து தானாக வெளியேறிவிடும் என நினைத்தார்.\nநினைத்ததெல்லாம் நடந்துவிடுகிறதா என்ன? மறுநாள் காலையில் தொ ண் டை யி ல் சின்னதாக வ லி க் க மீன் மு ள் தா ன் என்று புரிந்தது. ’தன்னால சரியாயிரும்’ என்று நினைத்துக்கொண்டு அதைக் கவனிக்காமல் விட்டுவிட்டார். பிறகு சில நாட்கள் க ழி த் து வயிற்றின் அடிப்பகுதியில் வ லி அ தி க ரி க்க, சிகிச்சைக்காக சிச்சுவான் மாகாண மருத்துவப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார்.\nடாக்டர்கள், ஸ் கே ன் எ டுத்துப் பார்த்தனர். அ தி ர் ச் சி அவரது ம லக் கு லில் ஒன்று இரண்டல்ல, நூற்றுக்கும் மேற்பட்ட முட்கள்.இரண்டு மணி நேரம் போ ரா டி, ஊசி போன்ற அந்த மீன் முட்களை எடுத்துள்ளனர் டாக்டர்கள்.\nஅதிகமான மீன் முட்கள் காரணமாக அவரது ம லக்குடல் ப ய ங் க ர மா க வீ ங் கி வி ட் ட து. ஒரே நேரத்தில் அனைத்தையும் எடுக்க முடியாது என்பதால் வீட்டுக்கு அனுப்பி கொஞ்ச நாள் ரெஸ்ட் எடுத்துவிட்டு வரச் சொன்னோம். அந்த நாட்களில் பாதியாவது வெளியேறியிருக்கும் என நினைத்தோம்’ என்றார் டாக்டர் ஹுவாங் ஜியின்.\nஇது வழக்கத்துக்கு மாறான கே ஸ் என்கிறார்கள் அங்குள்ள மற்ற டாக்டர்கள்.ஷோவ், இப்போது நலம். இனி மீன் வாசம் வந்தால் கூட அந்தப் பக்கம் தலை வைத்துப் படுக்கமாட்டார்!
உறவுகள்: காதலில் யார் சிறந்த தியாகி? | உறவுகள்: காதலில் யார் சிறந்த தியாகி? - hindutamil.in\nPublished : 25 Sep 2015 14:19 pm\nUpdated : 25 Sep 2015 14:19 pm\nPublished : 25 Sep 2015 02:19 PM\nLast Updated : 25 Sep 2015 02:19 PM\nஉறவுகள்: காதலில் யார் சிறந்த தியாகி?\nஎன் வயது 25. தற்போது கல்லூரி ஒன்றில் படித்துவருகிறேன். எனக்கு ஓவியம், இசை, நடனம் உள்ளிட்ட பல துறைகளில் ஆர்வம் உள்ளது. இதனால் எனக்குப் பிடித்த அனைத்துத் துறைகளிலும் கவனம் செலுத்த விரும்புகிறேன். ஆனால் என்னிடம் ஒரு பிரச்சினை இருக்கிறது. எந்தத் துறையாக இருந்தாலும் தொடக்கத்தில் சில நாட்களுக்கு அந்தத் துறைமீது எனக்கிருக்கும் ஆர்வம் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்துவிடுகிறது. பிறகு அந்தத் துறையின் மீது இருக்கும் நாட்டம் முற்றிலும் இல்லாமல் போய்விடுகிறது. பிறகு வேறு சில துறைகளைத் தேர்வுசெய்து அதில் கவனம் செலுத்த ஆரம்பித்துவிடுவேன். பின்னர் பழைய குருடி கதவைத் திறடி என்னும் கதை தான். அதிலும் ஆர்வமற்றுப்போகும். இப்படியே நான் பல துறைகளிலும் என் கவனத்தைச் செலுத்தி, பிறகு அதில் இருந்து வெளியேறிவிட்டேன்.\nஇதனால் எந்தத் துறை எனக்கு ஏற்ற துறை என்று தெரியாமல் தவிக்கிறேன். இதன் காரணமாக ஒரு பெண்ணான எனக்கு எதிர்காலத்தைப் பற்றிப் பயமாகவும், கவலையாகவும் உள்ளது. மனம் ஒரு துறையில் நிலையாக நில்லாமல் அலைந்துகொண்டேயிருப்பது சரிதானா இல்லையெனில் இது எதுவும் பிரச்சினையா எனத் தெரியாமல் குழம்பிப்போயிருக்கிறேன். மனம் அலைபாயும் இந்த நிலைமைக்கு என்ன காரணம் இருக்க முடியும்? எனக்கேற்ற துறையை எப்படித் தேர்ந்தெடுப்பது? இந்த அலைபாயும் தன்மையிலிருந்து நான் வெளியேற என்ன செய்ய வேண்டும்?\nகல்லூரியில் உங்களுக்குப் பிடித்த துறையில் படிக்கிறீர்கள் என்று நம்புகிறேன். அலைபாயும் தன்மை கல்வி, மற்றும் புறப் பாடத் துறைகளில் (Extra-curricular activities) மட்டும்தானா? உறவுகளைப் பேணுவதில் அலைபாயும் குணம் இருந்தால், தொடர்ந்து எந்த உறவும் நிலைக்காது. உடனடியாக ஒரு உளவியல் நிபுணரைச் சந்தித்து அவர் உதவியை நாடுங்கள்.\nபுறப் பாடத் துறைகளில் எதையும் தொடர்ந்து செய்ய இயலாமைக்குக் காரணம், ஊக்கம் குறைவதுதான்! ஊக்கம் ஏன் குறைகிறது? எடுத்த எடுப்பிலேயே கடைசிப் படியை அடைய நினைக்கிறீர்கள். அது எப்படி சாத்தியம்?\nஒரு குழந்தை தவழ்ந்து, நின்று, நடந்த பின்தான் ஓட முடியும்! அதுபோல் பல படிகள் ஏறினால்தான் உச்சத்தை அடைய முடியும்! வெகு தொலைவில் உள்ள இலக்கைப் பார்க்காதீர்கள். அதை அடைய உதவும் முந்தைய இலக்கைக் குறிவைத்து முயலுங்கள். பெரிய பாடகி ஆக வேண்டும் என்று நினைத்தால், முதல் படி ஒரே சுரத்தில் பயிற்சி, இரண்டாவது சுரக்கோர்வைகளைப் பாடுவது, மூன்றாவது எளிய பாடல்கள், நான்காவது கீர்த்தனைகள், ஐந்தாவது ராகம், தாளம் என்று எளியதிலிருந்து கடினமானதுவரை தேர்ச்சி பெற்றால்தான், கடைசி இலக்கான பாடகி என்ற லட்சியத்தை அடைய முடியும்.\nஉங்கள் ஊக்கம் குறையாமலிருக்க, கடைசி இலக்கை ஆழமாகக் கற்பனையில் உருவகித்துக்கொள்வது உதவும். ஆனால் செயலில் உங்கள் நோக்கு முதல் படியில் உடனடியாக அடைய வேண்டிய இலக்கில், இருக்க வேண்டும். முதல் குறிக்கோளை விரைவில் அடைந்துவிடுவதால், ஜெயித்துவிட்ட திருப்தி கிடைக்கும். அதன் பின் அடுத்த இலக்கில் கவனம் செலுத்தலாம். இப்படி ஒவ்வொரு படியாக ஏறுவது மலைத்துப்போய் நிற்பதைத் தவிர்க்கும்!! எந்தத் துறை உங்களுக்கு உகந்தது என்று அறிய ஒரு தொழில் வழிகாட்டியிடம் (Career Guidance Counsellor) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.\nஎன் வயது 24. நான் வேலை செய்த நிறுவனத்தில் ஒருவனுடன் எனக்குக் காதல் ஏற்பட்டது. ஒரு நாள் நான் என் காதலைத் தெரிவித்தேன். அவன் என் வயதையும் அவனது குடும்பச் சூழலையும் இருவருடைய மன வேறுபாடுகளையும் தெளிவாக விளக்கினான். இப்போது அவனால் எந்த ஒரு முடிவும் எடுக்க முடியாது என்பதையும் தனக்கு இன்னும் தெளிவு வேண்டும் என்பதையும் எனக்குப் புரியவைத்தான்.\nஅவனுடைய இந்த அணுகுமுறை எனக்கு அவர் மேல் இருந்த மரியாதையையும் பாசத்தையும் அதிகமாக்கியது. எங்கள் உறவு தொடர்ந்தது. என் நண்பர்கள் என்னிடம் எந்தப் பதிலும் சொல்லாத ஒருவரிடம் தொடர்ந்து பேசாதே என என்னைப் பலமுறை எச்சரித்தார்கள். ஆனால் எனக்கு அவன் மேல் உள்ள அன்பு மரியாதை, ஈர்ப்பு எதுவுமே குறையவில்லை.\nஅவன் மிகவும் கடுமையாக உழைப்பவன். சீக்கிரமாக முன்னேற வேண்டும் என்ற முனைப்போடு இருப்பவன். அதனால் எப்போதும் அவனை பற்றிய அக்கறை அவனுக்கு இருந்ததே இல்லை. பல நேரங்களில் அவன் மனச் சோர்வு அடையும்போதெல்லாம் நான் அவனுக்கு ஆறுதலாக இருந்து அவனது தன்னம்பிக்கை உணர்வு குறைந்து விடாமல் பார்த்துக்கொண்டிருக்கிறேன். ஆனால் இதுவரைக்கும் ஒருமுறைகூட என்னைக் காதலிப்பதாக அவன் நேரடியாகக் கூறியதில்லை.\nஇப்படியே5ஆண்டுகள் ஆகிவிட்டன. கடந்த6மாதங்களுக்கு முன்பு அவன் துபாய் சென்று ஒரு வேலையில் சேர்ந்துவிட்டான். ஆனால் அங்கு உள்ள இயந்திரத்தனமான வாழ்க்கையும் தனிமையும் அவனை மிக மோசமான மன உளைச்சலுக்கு ஆளாக்கிவிட்டன. இப்போது அவன் விரக்தியின் உச்சத்துக்கே சென்றுவிட்டதைப் போல் தோன்றுகிறது.\n“இனிமேல் நாம் பேசவே வேண்டாம். எனக்காகக் காத்திருந்து நீ உன் வாழ்க்கையையும் கெடுத்துக்கொள்ளாதே. நான் எப்படியோ இருந்துகொள்கிறேன். முடிந்தவரை இங்கிருந்து என் குடும்பத்திற்கு என்னால் முடிந்ததைச் செய்கிறேன். உன்னை ஏமாற்றுவதற்காக நான் பழகவில்லை. என்னை மன்னித்துவிடு. என்னால் சாகும்வரை உன்னை மறக்க இயலாது. சீக்கிரமாகச் செத்துவிடுவேன் என்று தோன்றுகிறது. ஒவ்வொரு நாளும் சென்னையில் இருந்த ஞாபகங்களே வருகின்றன” என்று என்னிடம் மிகுந்த வேதனையோடு பேசினான். அதன் பின் இரண்டு வாரங்களாக வேறு எந்தத் தொடர்பும் இல்லை. மிகுந்த வேதனையாக இருக்கிறது. யாரிடமும் சொல்லி அழக்கூட முடியவில்லை. உள்ளே நிம்மதியின்றி வெளியே சிரித்துக்கொண்டு வாழ்வில் ஒரு பிடிப்பே இல்லாமல் இருக்கிறேன். அவனை இப்படி ஒரு நிலைமையில் விட்டுவிட்டு என்னால் எப்படி வேறு ஒருவருடன் எந்தக் குற்ற உணர்ச்சியும் இல்லாமல் வாழ முடியும்? இப்போதைக்குத் திருமணம் பற்றிய எண்ணம் இல்லை. இரண்டு ஆண்டுகள் ஆகட்டும் என்று எங்கள் வீட்டில் கூறிவிட்டேன். இப்போது நான் என்ன செய்வது?\nதோழியே, நீங்கள் இந்த உறவைக் காதல் என்று சொல்வதால், நான் அந்த அடிப்படையில் பதில் சொல்கிறேன். நீங்கள் இருவரும் ‘யார் சிறந்த தியாகி?' என்பதில் போட்டிபோட்டுக்கொண்டு வாழ்க்கையை வீணடித்துக் கொண்டிருக்கிறீர்கள்.\nஅதிலும் உங்கள் நண்பர்/ காதலர் பிறருக்காக வாழ்வதுதான் தன்னுடைய குறிக்கோள் என்று நம்புகிறார். அவர் பிறருக்காக வாழ்ந்துவிட்டுப்போகட்டும்; உங்களையும் ஏன் தன் வாழ்வோடு கோத்துவிட்டார்? விரும்பித் தியாகம் செய்பவர் ஒரு உயர்ந்த மனநிலையில் இருப்பார். புலம்பிக்கொண்டிருக்க மாட்டார்.\nஅவருக்குள் இரட்டை மனம் இருக்கிறது-ஒன்று தியாகம் செய் என்கிறது; மற்றொன்று, பிறருக்காகவே வாழப்போகிறாயா என்று வருந்துகிறது. மணம் முடித்துக்கொண்டால் நீங்களும் அவரது தியாகத்தில் பங்கேற்கலாமே! அவருக்கு ஒரு தெளிவு வர வேண்டும். நீங்களும் அந்தத் தெளிவை அவருக்குக் கொடுக்காமல் அவரைத் துதிபாடிக்கொண்டிருக்கிறீர்கள்.\nபொறுத்தது போதும் பெண்ணே! அவருக்கு ஒரு கெடு வையுங்கள். அதற்குள் அவர் உங்களை குறிப்பிட்ட மாதத்தில்/ வருடத்தில் மணம் செய்துகொள்வேன் என்று உறுதியாகத் தெரிவிக்க வேண்டும். இல்லாவிட்டால் நீங்கள் அவர் வாழ்விலிருந்து விலகி விட வேண்டும். நடக்குமா என்றுகூடத் தெரியாமல், எவ்வளவு காலம் அவருடன் பயணித்துக் கொண்டிருப்பீர்கள்? அவர் நல்லவர்தான். ஆனால் துணிச்சல் இல்லாதவர்! காதலுக்கு வலு இருந்தால் எதிர்கொள்ளும் சோதனைகளைத் தவிடுபொடியாக்கிவிடும்.\nகிளம்புங்கள் போராட! துபாயில் தனிமையில் வாடுபவருக்கு மூளைச் சலவை செய்யுங்கள். இரு தரப்புப் பெற்றோரது சம்மதத்தைப் பெற வழி தேடுங்கள். செயல்பட வேண்டிய நேரமிது. மயிலே, மயிலே என்றால் இறகு போடாது!\nபெண் டிஎஸ்பி வீட்டில் வைகோ அஞ்சலி\nவிமான நிலையங்களில் மோசமான கட்டுமானப் பணி: மத்திய அமைச்சர் குற்றச்சாட்டு
ஸ்டாலின் – அழகிரி திடீர் சந்திப்பு !! புதிய கட்சிகளை கூட்டணிக்குள் கொண்டு வருவது குறித்து ஆலோசனை !!\nChennai, First Published 7, Feb 2019, 8:27 AM\nதமிழக காங்கிரஸ் தலைவராக இருந்த திருநாவுக்கரசர் மாற்றப்பட்டு புதிய தலைவராக நியமிக்கப்பட்ட கே.எஸ்.அழகிரி திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து பேசினார். அப்போது கூட்டணி குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.\nதமிழக காங்கிரஸ் கட்சித் தலைவராக இருந்த திருநாவுக்கரசர் மாற்றப்பட்டு, அவருக்கு பதிலாக கே.எஸ்.அழகிரி புதிய தலைவராக நியமிக்கப்பட்டார். வசந்தகுமார், மயூரா ஜெயக்குமார், விஷ்ணு பிரசாத், ஜெயக்குமார், மோகன் குமாரமங்கலம் ஆகியோர் செயல் தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.\nபுதிய தலைவராக நாளை பொறுப்பேற்க உள்ள கே.எஸ்.அழகிரி, சென்னை அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து பெற்றார். இவருடன் செயல் தலைவர்களாக நியமிக்கப்பட்டவர்களும் வாழ்த்து பெற்றனர்.\nஇதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கே.எஸ்.அழகிரி, “தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் தொகுதி பங்கீடு, எந்தெந்த இடங்களில் போட்டியிடுவது உள்ளிட்டவை முடிவு செய்யப்படும் என தெரிவித்தார்.\nஎங்களது கூட்டணியில் மேலும் சில கட்சிகள் சேர விரும்புகின்றன. இதுதொடர்பாக திமுக தலைமையும் எங்களுடைய கட்சித் தலைமையும் கூடி முடிவெடுக்கும். எத்தனை பேர் மக்களவை உறுப்பினர்கள், எந்தக் கட்சிக்கு எத்தனை இடங்கள் என்பதை விட மத்திய அரசை தூக்கி ஏறிய வேண்டும் என்பதுதான் எங்கள் கூட்டணியின் நோக்கம். ஒன்று அல்லது இரண்டு தொகுதிக்காக வருத்தம் வரக்கூடிய அளவுக்கு கூட்டணி கட்சிகள் நடந்துகொள்ளாது என்றும் அழகிரி தெரிவித்தார்.\nதமிழகத்திற்கு எதுவும் செய்யாத பாஜகவுடன் கூட்டணியா என்று அதிமுகவினரே அவர்களது கட்சித் தலைவர்களை பார்த்துக் கேட்கிறார்கள் என்றும் கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.\nLast Updated 7, Feb 2019, 8:27 AM
பெல்லுக்கு வாழ்வு தந்து இந்தியாவுக்கு ஆப்பு வைத்த தோனி!\nநாட்டிங்காம்: டிரன்ட் பிரிட்ஜில் நடந்து வரும் 2வது டெஸ்ட் போட்டியில் நேற்று பெரும் திருப்பங்கள் ஏற்பட்டன. இங்கிலாந்து வீரர் இயான் பெல் நூதன முறையில் ரன் அவுட் செய்யப்பட்டார். இருப்பினும் இங்கிலாந்து கேப்டன் உள்ளிட்டோர் கெஞ்சிக் கேட்டதால் அந்தக் கோரிக்கையை இந்திய கேப்டன் டோணி திரும்பப் பெற்றார். இதனால் ரன் அவுட் ரத்து செய்யப்பட்டு மீண்டும் ஆடினார் இயான் பெல். அவரது அபார ஆட்டத்தால் தற்போது ஆட்டம் இங்கிலாந்துப் பக்கம் திரும்பி விட்டது. இதனால் டோணியின் முடிவால் இந்திய ரசிகர்கள் பெரும் அதிருப்தி அடைந்துள்ளனர்.\nஇந்த நீதிமன்றம் இப்படி ஒரு விசித்திரத்தை இதுவரை கண்டதில்லை என்று பராசக்தி படத்தில் சிவாஜி கணேசன் வசனம் பேசுவார். அதேபோல ஒரு காட்சி நேற்று நாட்டிங்காமில் நடந்தேறியது.\nஇயான் பெல் நேற்று ரன் அவுட் செய்யப்பட்ட விதம், அதை பின்னர் இந்திய அணி திரும்பப் பெற்ற செயல், மீண்டும் இயான் பெல் ஆட வந்த காட்சி ஆகியவை கிரிக்கெட் உலகையே பெரும் சலசலப்புக்குள்ளாக்கி விட்டது.\nநாட்டிங்ஹாம்,ஆக.1:சர்ச்கைக்குரிய முறையில் ரன் அவுட் கொடுக்கப்பட்ட இங்கிலாந்து வீரர் இயான் பெல்லை மீண்டும் இந்திய கேப்டன் டோனி ஆட அழைத்தது விளையாட்டு உணர்வை மேம்படுத்தும் செயல் என்று அனைவரும் பாராட்டி உள்ளனர்.\nஇங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் 3வது நாளான நேற்று இங்கிலாந்து தனது 2வது இன்னிங்ஸை ஆடிக் கொண்டிருந்தது. தேநீர் இடைவேளைக்கு முன்பாக கடைசி பந்து வீசப்பட்டது. அப்போது இங்கிலாந்து வீரர் மார்கனுக்கு இஷாந்த் சர்மா பந்து வீசினார். அந்தப் பந்தை அடித்த மார்கன், பந்து வேகமாகப் போனதைப் பார்த்து சரிதான், பவுண்டரிக்குத்தான் போகிறது என நினைத்து விட்டார். அதைப் பார்த்த மறு முனையில் நின்றிருந்த இயான் பெல் பெவிலியனை நோக்கி நடையைக் கட்ட ஆரம்பித்தார்.\nஆனால் பந்தை தடுத்து நிறுத்திய பிரவீன்குமார் அதை பீல்டரிடம் வீச, இயான் பெல் ரன் அவுட் செய்யப்பட்டார். ஆனால் நடுவர்கள் என்ன முடிவு சொல்வது என்று தெரியாமல் திகைத்து நின்றனர். பின்னர் 3வது நடுவரின் முடிவை எதிர்நோக்கினர். அவரும் டிவியில் ரீப்ளே பார்தது அவுட் என்று அறிவித்தார். இதனால் இயான் பெல் ரன் அவுட் என அறிவிக்கப்பட்டது.\nபெவிலியனை நோக்கி போய்க் கொண்டிருந்த இயான் பெல் ராட்சத ஸ்கோர்ட் போர்டுக்கு மேல் அவுட் என்று அறிவிக்கப்பட்டதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இங்கிலாந்து அணியும் குழப்பமடைந்தது.\nபார்த்துக் கொண்டிருந்த இங்கிலாந்து ரசிகர்களும் அதிர்ச்சி அடைந்தனர். இந்திய வீரர்களைப் பார்த்து ஆவேசமாக குரல் எழுப்பினர். திட்டினர், கிண்டலடித்தனர். தேநீர் இடைவேளைக்காக இரு அணியினரும் பெவிலியன் திரும்பி விட்டனர்.\nகூடிப் பேசிய பயிற்சியாளர்கள்-கேப்டன்கள்\nபெவிலியன் திரும்பிய பின்னர் இந்திய, இங்கிலாந்து அணிகளின் பயிற்சியாளர்களும், கேப்டன்களும் சந்தித்துப் பேசினர். இயான் பெல்லுக்கு கொடுக்கப்பட்ட ரன் அவுட் குறித்து ஏமாற்றம் தெரிவித்த கேப்டன் ஸ்டிராஸ், இந்தியா தனது முடிவை திரும்பப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.\nஇதையடுத்து கேப்டன் டோணி தனது அணியின் மூத்த வீரர்களுடன் ஆலோசித்தார். அதன் பிறகு முடிவை திரும்பப் பெறுவதாக அவர் நடுவர்களிடம் தெரிவித்தார். இதையடுத்து பெல்லுக்குக் கொடுக்கப்பட்ட ரன் அவுட்டும் திரும்பப் பெறப்பட்டது. இதனால் அவர் மீண்டும் ஆட அழைக்கப்பட்டார்.\nஇதைத் தொடர்ந்து தேநீர் இடைவேளை முடிந்து இங்கிலாந்து வீரர்கள் களம் இறங்கியபோது பெல் மீண்டும் ஆட வந்தார். இதைப் பார்த்து இன்ப அதிர்ச்சி அடைந்தனர் இங்கிலாந்து ரசிகர்கள். இந்திய வீரர்களைப் பார்த்து திட்டிய வாய்கள், இந்திய வீரர்களை கைதட்டி புகழ்ந்து வரவேற்றனர்.\nமேலும் இங்கிலாந்து வீரர்களும் இந்தியாவின் பெருந்தன்மையைப் பாராட்டும் வகையில் தங்களது காலரியிலிருந்து எழுந்து நின்று களத்திற்குள் வந்த இந்திய பீல்டர்களை கை தட்டி வரவேற்றனர்.\nடோணி முடிவு சரியா?\nஇந்தியாவின் பெருந்தன்மையால் மீண்டும் ஆட வந்த இயான் பெல் அடித்து நொறுக்கி சதத்தைக் கடந்து 159 ரன்களைக் குவித்து இங்கிலாந்துக்கு வலுவான நிலையை ஏற்படுத்தி விட்டார். இதை சலனமில்லாமல் இந்திய வீரர்கள் பார்த்துக் கொண்டிருந்தனர். நேற்றைய ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி இந்தியாவை விட 374 ரன்கள் முன்னிலை பெற்று விட்டது. இந்தப் போட்டியில் இங்கிலாந்து வென்றால், இந்தியா தனது முதலிடத்தை இழக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இந்திய ரசிகர்கள் பெரும் ஏமாற்றமும், அதிருப்தியும் அடைந்துள்ளனர்.\nஇதற்கிடையே, இந்தியாவின் முடிவு குறித்து இரு விதமான கருத்துக்கள் எழுந்துள்ளன. பலர் இந்த முடிவைப் பாராட்டியுள்ளனர். பலர் விமர்சித்துள்ளனர்.\nஇந்தியாவின் முடிவு தவறு-மைக்கேல் ஹோல்டிங்\nமுன்னாள் மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் பந்து வீச்சாளர் மைக்கேல் ஹோல்டிங் இதுகுறித்துக் கருத்து தெரிவிக்கையில், என்னைப் பொறுத்தவரை இயான் பெல் ரன் அவுட் ஆகி விட்டார். மீண்டும் அவரை ஆட அழைத்த முடிவு தவறானது. ஏன் டோணி இந்த முடிவை எடுத்தார் என்பது புரியவில்லை என்றார்.\nமேலும் அவர் கூறுகையில், இயான் பெல் பந்து பவுண்டரிக்குப் போவதாக நினைத்து நடக்க ஆரம்பித்து விட்டார். அதாவது அவரே நடுவராக மாறி விட்டார். இதனால் ஏற்பட்ட குழப்பத்திற்கு இந்தியா பொறுப்பேற்க முடியாது. உண்மையில் களத்தில் இருந்த நடுவர்கள்தான் இந்தக் குழப்பம் ஏற்படாத வகையில் செயல்பட்டிருக்க வேண்டும். அவர்களே இதை 3வது நடுவரின் முடிவுக்கு விட்டிருக்க வேண்டும். ஆனால் அவர்கள் அப்படிச் செய்யவில்லை என்றார்.\nடோணி முடிவு பாராட்டுக்குரியது-கவாஸ்கர்\nஇந்திய அணியின் முன்னாள் கேப்டன் கவாஸ்கர் டோணியைப் பாராட்டியுள்ளார். அவர் கூறுகையில், விளையாட்டுதான் இங்கு முக்கியமானது. அதன் நெறிகள், மதிப்பு பாதுகாக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் டோணியின் முடிவு பாராட்டுக்குரியதே.\nஅதேசமயம், இந்தியாவின் முடிவை இயான் பெல் வரவேற்றுப் பாராட்டி, நல்லது, அதேசமயம், நான் தவறு செய்து விட்டேன். எனவே நான் விளையாட மாட்டேன் என்று கூறியிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். இது இந்தியாவின் முடிவை விட மிகச் சிறந்ததாக மாறியிருக்கும் என்றார் கவாஸ்கர்.\nடோணியின் முடிவால் கிரிக்கெட் ஆட்டத்தின் பெருமையும், கவுரவமும் நிலை நிறுத்தப்பட்டிருப்பதாக ஷான் வார்ன் கூறியுள்ளார். இது 20 நிமிடத்தில் நடந்த ஒரு நிகழ்வு. இதில் தொடர்புடைய அனைவருமே பாராட்டுக்குரியவர்கள். விளையாட்டின் பெருமையை நிலை நிறுத்தியுள்ளனர் என்றார்.\nடோணியின் செயல் இந்தியா, இங்கிலாந்து வீரர்கள் இடையே கடந்த சில நாட்களாக நிலவி வரும் கசப்புணர்வுகள், பதிலுக்குப் பதில் பேட்டிகள் ஆகியவற்றை அடியோடு தணித்திருப்பதாக பல்வேறு முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும் இந்திய அணிக்கும் சர்வதேச அளவில் பெரும் பாராட்டுக்கள் குவிந்துள்ளன. சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலும் இந்திய அணியைப் பாராட்டியுள்ளது.\nஇதுகுறித்து ஐசிசி தலைமை செயல் தலைவர் ஹாரூண் லோர்காட் கூறுகையில், கேப்டன் டோணி மற்றும் அவரது அணியினரின் முடிவு பெரும் பாராட்டுக்குரியது, முதிர்ச்சியானது. கிரிக்கெட்டின் பெருமையை அவர்கள் நிலை நிறுத்தியுள்ளனர். கிரிக்கெட் ஆட்டத்திற்குப் பெருமை சேர்த்துள்ளனர். இது மிகவும் சிறப்பானது என்றார்.\nஇந்தக் குழப்பத்துக்கெல்லாம் காரணமான இயான் பெல் இந்த விவகாரம் குறித்து பின்னர் கருத்துத் தெரிவிக்கையில், பந்து பவுண்டரிக்குப் போவதாக நான் நினைத்து நடக்க ஆரம்பித்து விட்டேன். ஆனால் நான் அவசரப்பட்டு விட்டதை ஒப்புக் கொள்கிறேன். இது எனக்கு நல்ல பாடம். எனது பக்கம்தான் தவறு என்பதை ஒப்புக் கொள்கிறேன். விதிப்படி நான் அவுட்தான். இருப்பினும் இந்திய வீரர்கள் கிரிக்கெட்டின் பெருமையை நிலை நிறுத்தும் வகையில் நடந்து கொண்டுள்ளனர். இதனால்தான் நான் மீண்டும் ஆட முடிந்தது என்றார்.\nபெல்லுக்கு புதுவாழ்வு கொடுத்து விட்டார் டோணி. ஆனால் பெல்லோ, இந்திய அணிக்கு 'மணி' அடித்து விட்டார் தனது அபார ஆட்டத்தால்.\nடிஸ்கி நான் சொந்த வேலையாக வெளியூர் செல்வதால் இரண்டு நாட்களுக்கு பதிவிட இயலா நிலையில் உள்ளேன். எனது கொடுமையான பதிவுகளை படிப்பதிலிருந்து உங்களுக்கு இரண்டு நாட்கள் விடுதலை அளிக்கிறேன். ஆதரவு தரும் அனைத்து வாசகர்களுக்கும் நன்றி!\naalunga August 3, 2011 at 6:57 PM\nபோட்டியில் வெற்றி தோல்வியை விட மிகவும் முக்கியம் தகைமை.\nதோனி எடுத்த முடிவால் இந்தியா போட்டியில் தோற்றாலும், உலக கிரிக்கெட் ரசிகர்கள் மனதை வென்றது..\nஇந்திய ஆதரவாளர்கள் வீறுநடை போடலாம் தங்கள் அணித் தலைவரின் பெருந்தன்மையினால்!!\nமக்கள் மனதை வெல்வதை விட பெரிய வெற்றி ஏது?
Because she was forced to marry the daughter A girlfriend committed suicide by hanging herself Complain against Avadi policeman || மகளை திருமணம் செய்து கொடுக்க வற்புறுத்தியதால் கள்ளக்காதலி தூக்குப்போட்டு தற்கொலை ஆவடி போலீஸ்காரர் மீது புகார்\nமகளை திருமணம் செய்து கொடுக்க வற்புறுத்தியதால் கள்ளக்காதலி தூக்குப்போட்டு தற்கொலை ஆவடி போலீஸ்காரர் மீது புகார் + "||" + Because she was forced to marry the daughter A girlfriend committed suicide by hanging herself Complain against Avadi policeman\nமகளை திருமணம் செய்து கொடுக்க வற்புறுத்தியதால் கள்ளக்காதலி தூக்குப்போட்டு தற்கொலை ஆவடி போலீஸ்காரர் மீது புகார்\nமகளை திருமணம் செய்து கொடுக்க வற்புறுத்தியதால் கள்ளக்காதலி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுதொடர்பாக ஆவடி போலீஸ்காரர் மீது போலீசில் புகார் செய்யப்பட்டது.\nபதிவு: அக்டோபர் 12, 2018 04:49 AM\nவேலூர் மாவட்டம், வாலாஜாவை அடுத்த மேல்புதுப்பேட்டை காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ரமேஷ்குமார். இவரது மனைவி கல்பனா (வயது 34). இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். கணவன் - மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கணவர் ரமேஷ்குமாரை பிரிந்து மகளுடன் கல்பனா தனியாக வசித்து வந்தார்.\nஇந்த நிலையில் கல்பனாவிற்கு காவேரிப்பாக்கத்தை அடுத்த பெரிய கிராமத்தை சேர்ந்த பரதேசி என்பவரது மகன் குமரேசனுடன் (28) பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. குமரேசன் சென்னை ஆவடியில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல்படையில் கடந்த2ஆண்டுகளாக வேலை செய்து வருகிறார். நாளடைவில் கல்பனாவின் மகள் மீது விருப்பப்பட்ட குமரேசன், கல்பனாவிடம் உனது மகளை எனக்கு திருமணம் செய்து வை என கூறி வற்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது.\nதொடர்ந்து கடந்த 10-ந் தேதி செல்போன் மூலம் தொடர்பு கொண்டு குமரேசன் மீண்டும் கல்பனாவிடம் மகளை தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு கேட்டதாக தெரிகிறது.\nஇதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த கல்பனா தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், கல்பனா ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.\nஇதுகுறித்து கல்பனாவின் மகள் வாலாஜா போலீசில் கொடுத்துள்ள புகாரில், தனது தாய் தற்கொலை செய்து கொண்டதற்கு குமரேசனே காரணம் என்று கூறியுள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழ் ஓவியா: வதந்திகள் முடிவதில்லை....\nஆனந்த விகடன் (8.10.2008) வார ஏட்டில் காலம் (Column) எழுதும் ஒருவர் வதந்திகளைப் பற்றி எழுதி, வழக்கமாக எழுதும் வகையில் மீன், கருவாடு பற்றியும் எழுதியுள்ளார். பல வதந்திகளைப் பற்றி எழுதியவர், நிறைய வதந்திகளை வசதியாக மறந்து விட்டார். மறைத்து விட்டார்.\nஅவருக்கும் மற்றவர்களுக்கும் தெரிவதற்காகச் சில வதந்திகளை நினைவு படுத்துகிறோம்.\nமகாபாரதத்தில் யானை இறந்ததை வதந்தியாக தருமனே பரப்பியது முதல் வதந்தியா? அதற்கு முன்பே பூப்புக்கு வராத குந்தி குழந்தை பெற்றது வதந்தியல்லவா?\nதொடர்ந்து அய்ந்து குழந்தை பெற்று விட்டுக் கடவுள் கொடுத்தாகச் சொன்னது வதந்தியல்லவா?\nசூரியனைச் சக்கரத்தால் நிறுத்திப் பொழுதை நீட்டித்துச் சண்டை போட்டனர் என்பது வதந்தியல்லவா?\nமரத்திலிருந்து கீழே அடித்து வீழ்த்தப்பட்ட நெல்லிக்கணி மீண்டும் மேலே சென்று ஒட்டிக் கொண்டது வதந்தியல்லவா?\nஅய்ந்து கணவன் போதாது என்று ஆறாவதாக கர்ணன் மீது ஆசைப்பட்டதைத் திரவுபதி எடுத்துச் சொன்னதும் கீழே விழுந்த பழம் மேலே, போனது என்று இருப்பது வதந்தி அல்லவா? (நியூட்டன் விதியை எழுதி விளக்க வேண்டமா?)\nதொப்புள் இல்லாத சீதா (அயோனிஜா தானே) லட்சுமியின் அவதாரம் என்பது வதந்தி அல்லவா?\nஏர் உழும்போது கலப்பையில் மாட்டியது குழந்தை சீதா என்பது வதந்தியல்லவா?\nஓர் ஆள், குடிசையோடு அடி மண்ணையும் பெயர்த்து எடுத்துத் தூக்கிக் கொண்டு போனான் என்பது வதந்தி அல்லவா?\nஒரு குரங்கு மலையையே பெயர்த்து எடுத்துக் கொண்டு பறந்து வந்தது என்பது வதந்தியல்லவா?\n30 கி.மீ. தூரத்தை இந்தப் பக்கம் ஒரு காலும் அந்தப் பக்கம் ஒரு காலும் வைத்து குரங்கு நின்றது என்பது வதந்தியல்லவா?\nகோட்டை மதில் உயரமாக இருந்ததால் நிலவு அதைத் தாண்டிப்போக முடியாமல் தேங்கி விட்டது என்றது வதந்தியல்லவா?\nராமன் விட்ட அம்பு இராவணனின் மார்பில் தையல் மிசின் போலத் துளைத்துச் சல்லடைக் கண்களாக்கி சீதையின் நினைப்பு எங்கே, எங்கே என்று தேடியது வதந்தி அல்லவா?\nஇராவணனின் மார்பைத் துளைத்து அலுத்துப் போன அம்பு கூலில் குளித்துக் கழுவிக் கொண்டு மீண்டும் ராமனின் அம்பறாத் தூளியில் வந்து புகுந்து கொண்டது வதந்தி அல்லவா?\nஉடலின் அழுக்கைத் திரட்டிப் பொம்மை செய்து உயிராக்கிக் காவலுக்கு வைத்தாள் பார்வதி என்பது வதந்தியல்லவா?\nஅழுக்குப் பொம்மையின் தலைவெட்டப் பட்டு அதில் யானைத் தலை ஒட்டப்பட்டது என்பது வதந்தியல்லவா?\nயானை புணர்வதைப் பார்த்துக் கொண்டே புணர்ந்ததால் பார்வதியின் பிள்ளைக்கு யானைத் தலையுடன் மகன் பிறந்தான் என்றது வதந்தியல்லவா?\nசனி (பகவானின்)ப் பார்வை பட்டதால் குழந்தையின் தலை டக் என்று காணாமல் போய்விட்டது, கிருஷ்ணன் யானைத் தலையைக் கொண்டு வந்து ஒட்டவைத்தான் என்பது வதந்தியல்லவா?\nஆற்றில் விட்ட ஆணின் விந்து, ஆறு முகமாகப் பிறந்தது என்பது வதந்தியல்லவா?\nதாமரைப் பூவில் சரசுவதி நிற்கிறாள் என்பது வதந்தியல்லவா?\nபாம்பில் பரந்தாமன் படுத்துத் தூங்குகிறான் என்பது வதந்தியல்லவா?\nமயில்மேறி ஏறிப் பறக்கிறான் முருகன் என்பது வதந்தியல்லவா?\nஎலிமேல் ஏறித் தொந்திக் கணபதி வலம் வருகிறான் என்பது வதந்தியல்லவா?\nபிரம்மாவின் நாக்கில் அவனது மகளும் மனைவியுமான சரசுவதி வசிக்கிறாள் என்பது வதந்தியல்லவா?\nயானையின் காலைப் பிடித்த முதலை, விஷ்ணு வரும் வரை காத்திருந்து சுதர்சனச் சக்கரத்தால் அரியப்பட்டது என்பது வதந்தியல்லவா?\nஆதிசங்கரனின் காலைக் கடித்த முதலை அவன் அம்மா ஆர்யாம்பா சந்நியாசத்துக்கு அனுமதி தரும்வரை காலைத் துண்டாக்காமல் விட்டு வைத்தது என்பது வதந்தியல்லவா?\nஅவிநாசியில் சிறுவனை விழுங்கிய முதலை மூன்று ஆண்டுகள் கழித்து சட்டை, துணிமணியுடன் அப்படியே கக்கியது என்பது வதந்தியல்லவா?\nஎரிந்த எலும்புத் துண்டுகள் பூம்பாவையாக உருக்கொண்டது என்பது வதந்தியல்லவா?\nஆண் பனை மரங்கள் பதிகம் பாடியதும் பெண் பனை மரங்களாகின என்பது வதந்தி அல்லவா?\nநரி குதிரையாகி அணிவகுத்ததும், இரவில் நரியாகி ஊளையிட்டதும் வதந்தியல்லவா?\nவிருத்தாசலம் ஆற்றில் போட்ட பொன் கட்டி திருவாரூரில் குளத்தில் எடுக்கப்பட்டது என்பது வதந்தியல்லவா?\nநெருப்பில் போடப்பட்ட பனை ஏடுகள் எரியாமல் இருந்தன என்பது வதந்தியல்லவா?\nஆற்றில் வீசப்பட்ட ஏடுகள் எதிர் நீச்சல் அடித்தன என்பது வதந்தியல்லவா?\nவெறும் கையில் வாட்ச் வரவழைத்தான் புட்டபர்த்தி சாய்பாபா என்பது வதந்தியல்லவா?\nரமண ரிஷி சாகும்போது அலாரம் கடிகாரம் நின்று விட்டது என்பது வதந்தியல்லவா?\nநாஞ்சில் நாடன் எவ்வளவோ எழுதலாம் - எழுதும் போது நிதானம் வேண்டும். கூடவே அறிவும் வேண்டும்.\n-------------------------சார்வாகன் அவர்கள் "உண்மை' அக்டோபர் 16-31 2008 இதழில் எழுதியது
சிவகார்த்திகேயனின் வாழ் "ஆஹா" பர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ்!\nவாழ் படத்தின் "ஆஹா" பர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ்\nதமிழ் சினிமாவில் மிகக்குறுகிய காலத்திலேயே உச்சத்தைத் தொட்டுள்ளார் சிவகார்த்திகேயன். சிவகார்த்திகேயன் நடித்துள்ள எந்த படங்களும் மிகப்பெரிய அளவில் விமர்சன ரீதியாக பாராட்டுகளை பெறவில்லை என்றாலும் வசூலில் வெற்றி மழை பொழிகின்றன.\nகாரணம், அவரது நகைச்சுவையான பேசும், நடிப்பும் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரையும் ஈர்த்து நிறைய பேமிலி ஆடியன்ஸ் அவருக்கென உருவாகிவிட்டனர். இதனால் ரஜினி, கமல், விஜய் மற்றும் அஜித்துக்கு பிறகு அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவராக அவர் உள்ளார். நடிப்பு மட்டுமின்றி பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டு சிறந்து விளங்கி வருகிறார்.\nஇந்நிலையில் தற்போது சிவகார்த்திகேயனின் சொந்த நிறுவனமான எஸ்.கே புரொடுக்ஷன் சார்பில் "'வாழ்" என்ற படம் உருவாகி வருகிறது அருண்பிரபு புருஷோத்தமன் இயக்கும் இப்படத்தின் 'ஆஹா' என்ற முதல் சிங்கள் இன்று மாலை5மணிக்கு வெளியிட்டனர். இதோ அந்த லிங்க் ...
காஸ் சிலிண்டர் வெடித்து வீடு சேதம்| Dinamalar\nகாஸ் சிலிண்டர் வெடித்து வீடு சேதம்\nUpdated : செப் 23, 2013 18:34 | Added : செப் 23, 2013 18:25\nநாகர்கோவில்: காஸ் சிலிண்டர் வெடித்ததில் டாக்டரின் வீடு முழுமையாக சேதம் அடைந்தது. நாகர்கோவில் புதுக்குடியிருப்பு ரேச்சல் தெருவில் வசிப்பவர் ஜோசப் ஆபிரகாம். இவரது மனைவி ரேச்சல். இருவரும் டாக்டர்கள். இவர்கள் வீடு பழமையான ஓட்டு வீடு ஆகும். இன்று காலையில் இருவரும் ஆஸ்பத்திரிக்கு சென்று விட்டனர். காலை 11 மணிக்கு இவர்களது வீட்டிலிருந்து குண்டு வெடித்தது போல் சத்தம் கேட்டது. தொடர்ந்து புகை மண்டலம் ஏற்பட்டு தீ பிடித்து எரிந்தது. தகவலறிந்து வந்த தீயணைப்பு படையினர் தீயை அணைத்தனர். வீட்டில் சமையல் செய்யும் பெண் விறகு அடுப்பில் தீயை அணைக்காமல் சென்றதால் கனல் பறந்து சிலிண்டரில் விழுந்து தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த விபத்தின் வீட்டின் மேற்கூரைகளும், பக்கவாட்டு சுவர்களும் இடிந்து விழுந்தது. வடசேரி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
தங்கவேல் மாணிக்கம்: நிலம் (72) - தேனி கம்பம் போடி நாயக்கனூர் தென்னை தோட்டங்கள்\nகோவிட் இந்தியாவில் பல்கி பெருகிக் கொண்டிருக்கிறது. குளிர் காலம் ஆரம்பித்துள்ளது. இனிமேல் தான் பாதிப்புகள் அதிகரிக்கும் ஆபத்து வரும். ஆகவே அனைவரும் முடிந்த வரையில் பாதுகாப்பாக இருக்கவும்.\nமத்திய அரசும், மாநில அரசும் இனி ஒன்றும் செய்யாது. அவர்களுக்கு பலப் பிரச்சினைகள். மக்களாகிய நாம் கையறு நிலையில் நிற்கிறோம். அது தான் உண்மை.\nஇந்தியப் பொருளாதாரமா? மக்களின் உயிரா? என்று வருகையில் அரசு பொருளாதாரத்தை தான் முன்னெடுக்கும் என்று நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.\nகல்விக்கும் பல்வேறு தடைகளை உருவாக்கி இந்தியர்களில் குறிப்பாக தமிழர்களை படிக்க விடாமல் செய்வதில் மத்திய அரசு அதீத முனைப்புக் காட்டுகிறது. சுற்றிச் சுற்றி அடிக்கிறது மத்திய அரசு நீதிமன்றத்தின் துணை கொண்டு.\nஇத்தனை தேர்வுகள் நடத்த காரணம் அரசியல்வாதிகள் கல்வி மூலம் கருப்பு பணம் சம்பாதிக்கின்றார்கள் என்றுப் பேசுகின்றார்கள். கல்வியை அரசுடைமை ஆக்கி விட்டால் கருப்பு பணம் ஒழிந்து போகும். பிரதமர் நரேந்தர் மோடி அவர்கள் நினைத்தால் முடியும். ஆனால் அவரால் செய்ய இயலுமா என்பது கேள்விக் குறி. ஒவ்வொரு மதத்தின் பெயராலும் கல்விச் சாலைகள் இயக்கப்படுகின்றன. சாத்தியக்கூறுகள் இல்லவே இல்லை.\nஆனாலும் எது வரினும் தாங்கி நிற்கும் தன்னம்பிக்கையும் தைரியமும் நம்மிடம் உண்டு.\nதமிழகத்துக்கு மிக நல்ல தலைவர் வருவார் என்பதில் எனக்கு மிக்க நம்பிக்கை உண்டு.\nஇனி தேனி கம்பம் போடி விஷயத்துக்கு வந்து விடலாம்.\nகோல்ட் ஆன்லைன் மூலமாக தென்னந்தோப்பு நிலங்கள் விற்பனைக்கு பட்டியலிட்டு இருந்தேன் அல்லவா?\nஇந்த நிலங்கள் தண்ணீர் வசதி, மண்ணின் தரம், லீகல், வாஸ்து, எதிர்கால வளர்ச்சி, வருமானம் ஆகியவைகள் பார்த்து தேர்ந்தெடுக்கப்பட்டு பட்டியலிடப்படுகின்றன.\nபெரும்பாலும் பொள்ளாச்சி, ஆனைமலை, ஆழியார் பகுதிகளில் தென்னந்தோப்புகள் தேர்ந்தெடுக்கப்பட்டன. சமீபத்தில் தேனி, கம்பம், போடி ஆகிய பகுதிகளுக்குச் சென்று வர நேரிட்டது. அங்கிருந்தும் ஒரு சில நிலங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு நமது கோல்ட் ஆன்லைனில் லிஸ்ட் செய்யப்பட்டிருக்கிறது.\nநல்ல தண்ணீர் வசதி, மண் வளம், லீகல், வாஸ்து பார்க்கப்பட்டு அப்டேட் செய்யப்பட்டிருக்கின்றன.\nநான் பெரும்பாலும் தென்னைத் தோப்புகளைத் தேர்ந்தெடுக்க காரணம் முதலீடு செய்த 40வது நாளில் வருமானம் வந்து விடும். குறைவான பராமரிப்பு, நிரந்தர வருமானம். எதிர்காலத்தில் நல்ல முதலீடு பயன் கிடைக்கும் என்பதால் அடியேன் இவ்வகை நிலங்களையே தேர்ந்தெடுக்கிறேன்.\nஒரு ஐந்து ஏக்கர் வேண்டும், ஆனால் பணம் குறைவாக இருக்கிறது என நினைப்பவர்களுக்கு கடன் வசதி செய்து தரப்படும். நமது நிறுவனம் பல வங்கிகளில் DIRECT SELLING AGENT அனுமதி பெற்றிருக்கிறோம். ஆகவே லோன் தொடர்பாக எந்த உதவி வேண்டுமானாலும் என்னை அழைக்கலாம்.\nஇனிமேலும் தேனி, கம்பம், போடியில் விரைவில் நிலங்கள் பதிவேற்றம் செய்யப்படும். அனைத்தும் அற்புதமான பலனையும், நல்ல வருமானத்தையும் தரும் நிலங்கள். கொஞ்சம் காசு சேருங்கள். ஆளுக்கு இரண்டு ஏக்கர், நான்கு ஏக்கர் என வசதிக்கு ஏற்ப முதலீடு செய்யுங்கள்.\nதோட்ட பராமரிப்பு, வருமானம் பற்றி எல்லாம் கவலைப் படாதீர்கள். நமக்கு அங்கே அலுவலகம் உண்டு. அடியேன் கவனித்துக் கொள்கிறேன். கொஞ்சமே கொஞ்சம் கட்டணம் உண்டு.\nவிரைவில் தென்னைத் தோட்டங்களுக்கு உரிமையாளராக வாழ்த்துகிறேன். எவரிடமும் கைகட்டி நிற்க வேண்டியதில்லை. மாதா மாதம் வருமானம். அழகான வாழ்க்கை. நிரந்தரமான நிம்மதியான வருமானம். வேறு எந்த வேலையிலும் கிடைக்காத சந்தோஷம் நிச்சயம் உங்களுக்கு கிடைக்கும்.\nகோவை தங்கவேல் - 96005 77755\nLabels: Bodi Coconut Farms for sale, Theni Coconut Farms, Theni Farms, தென்னை தோட்டங்கள், நிலம், நிலம் தொடர்
தெகிவளை விலங்கியல் பூங்கா - தமிழ் விக்கிப்பீடியா\n10.1 ha / 0.10 km2\n6°51′24.5″N 79°52′22.4″E / 6.856806°N 79.872889°E / 6.856806; 79.872889ஆள்கூறுகள்: 6°51′24.5″N 79°52′22.4″E / 6.856806°N 79.872889°E / 6.856806; 79.872889\n~1.5 million (2008)\nMammals, reptiles, நீர்வாழ் விலங்குs, birds\nதெகிவளை விலங்கியல் பூங்கா கொழும்பு நகரின் புறநகர்ப் பகுதியான தெகிவளைப் பிரதேசத்தில் அமைந்துள்ளது. இந்த விலங்கியல் பூங்கா தேசிய விலங்கியல் பூங்கா என்றும் அழைக்கப்படுகின்றது. 1936 ஆம் ஆண்டு இந்த விலங்கியல் பூங்கா அமைக்கப்பட்டது. 2005 ஆம் ஆண்டு நிலவரப்படி பூங்காவில் 3000 விலங்குகளும், 350 இனங்களும் காணப்படுகின்றது. அத்துடன் பூங்காவின் ஆண்டு வருமானம் சுமார் நாற்பது மில்லியன் இலங்கை ரூபாய்களாகும்.\nஇந்த விலங்கியல் பூங்கா ஏனைய விலங்கியல் பூங்காக்களுடன் விலங்கினங்களின் இனப்பெருக்கத்திற்காக விலங்குகளைப் பரிமாறிக்கொள்வதுண்டு.\n2 மிருகக்காட்சி சாலை\n1920களில் ஜோன் கெகன்பேக் என்பவரால் இந்த பூங்கா முதலில் ஸ்தாபிக்கப்பட்டது. ஆயினும் 1939இல் உலக யுத்தம் இரண்டுக் காலப்பகுதியில் இந்த விலங்கியல் பூங்கா மூடப்பட்டது. இதற்கான காரணம் இதன் தாபகர் ஒரு ஜேர்மன் நாட்டவர் என்பதனாலாகும். இந்த நிறுவனம் மூடப்படவுடன் இந்த நிறுவனத்தின் பல பகுதிகளை அரசுடமையாக்கி தெகிவளை விலங்கியல் பூங்காவிற்கு அரசு மாற்றியது. 1939இல் இந்தப் பூங்கா உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டாலும் அதற்குப் பல வருடங்களுக்குமுன்பே ஜோன் கெகன்பேக் கம்பனியில் இருந்து பெறப்பட்ட விலங்குகளுடன் மக்கள் பார்வைக்குத் தொழிற்படத் தொடங்கியிருந்தது.\nமேஜர் அவ்பிரே நெயில் வெய்மென், ஓபிஇ என்பவரே இந்த விலங்கியில் பூங்காவின் முதல் நிர்வாகியாவார். இவரது காலப்பகுதியில் பல புதிய உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விலங்கினங்கள் விலங்கியல் பூங்காவிற்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டன.\n1960 ஆகும் போது பெரும்பாலான முலையூட்டிகள் இங்கு இருந்ததுடன், விலங்கியல் பூங்காவின் பாதி விலங்குகள் உள்நாட்டிற்கு உரியவையாகும். 1973 இல் 158 முலையூட்டிகள், 259 பறவை இனங்கள், 56 ஊர்வன மற்றும் ஏழு மீன் இனங்கள் இங்கே பராமரிக்கப்பட்டன. 1980 வரை விலங்கியல் பூங்காவின் வளர்ச்சியில் பெரிய மாற்றங்கள் ஏற்படவில்லை.\nவிலங்கியல் பூங்காவில் உள்ள வங்காளப் புலி\nதெகிவளை விலங்கியல் பூங்கா ஆசியாவின் மிகப்பழைய மிருகக்காட்சி சாலைகளில் ஒன்றாகும். ஆண்டு முழுவதும் இது பொதுமக்கள் பார்வைக்காகத் திறக்கப்பட்டு இருப்பதுடன், பொதுப் போக்குவரத்து முறைகளினூடாக மிருகக்காட்சி சாலையை இலகுவாக அடைந்துவிடலாம்.\nதெகிவளை விலங்கியல் பூங்காவின் மேலும் ஒரு சிறப்பான விடயம் அங்குள்ள வண்ணாத்திப்பூச்சித் தோட்டம். இங்கு 30 வகையான வண்ணாத்திப் பூச்சிகள் வாழ்ந்து வருவதுடன், கல்வியியல் தேவைகளுக்காக பல்வேறு பருவநிலையில் உள்ள வண்ணாத்திப் பூச்சிகளையும் அவதானிக்கலாம்.\n முலையூட்டிகள் 100 450\n பறவைகள் 110 1000–1500\n மீன்கள் 65 1000\n ஊர்வன 34 250\n ஈரூடகவாளி320\n வண்ணாத்திப்பூச்சி 30 100\n Marine Invertebrates 10 25\nபின்னவலை திறந்த விலங்குக் காட்சிச்சாலை\n↑ "National Zoological Gardens of Sri Lanka". Sunday Observer (2005-07-31). பார்த்த நாள் 2009-04-10.\n↑ name="daily news>\n↑ "Dehiwala Zoo Breaking Records". srilankanewsnetwork.com (2009-09-11). பார்த்த நாள் 2010-04-17.\n"https://ta.wikipedia.org/w/index.php?title=தெகிவளை_விலங்கியல்_பூங்கா&oldid=2232112" இருந்து மீள்விக்கப்பட்டது\nஇலங்கையின் விலங்கியல் பூங்காக்கள்\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 மார்ச் 2017, 06:56 மணிக்குத் திருத்தினோம்.
நல்ல சேதி!: 2/3/08 - 2/10/08\nதொழிலாளியாக இருந்து முதலாளி ஆனவரின் கதை\nஎல்.எம்.எல் நிறுவனத்தில் வேலை பார்த்தவர் வடிவமைத்து விற்பனை செய்யும் எலக்ட்ரானிக் ஸ்கூட்டர் விற்பனை சூடு பறக்கிறது.\nஅவதேஷ் மிஸ்ரா...எல்.எம்.எல் நிறுவனத்தில் வேலை பார்த்தவர். இந்த நிறுவனம் மூடப்பட்டதை அடுத்து வேறு வேலைக்கு முயற்சி செய்தார். புதுவகையில் ஒரு ஸ்கூட்டர் தயாரிக்கும் எண்னம் அவருக்கு தோன்றியது. வேலை தேடலை விட்டு வெளிநாடுகளில் எலக்ட்ரானிக் ஸ்கூட்டர் தயாரிக்கும் நிறுவனங்களை நேரடியாக பார்க்க முடிவு செய்தார். சீனா, ஜெர்மனி நடுகளுக்கு சென்றார்.\nஜெர்மனியில் ஜி.பி.செஸ்கெர் இன்டர்நேஷனல் என்ற நிறுவனம் சீனாவின் ஷாங்காயில் ஸ்கூட்டர்கள் தயாரிக்கிறது. அந்த நிறுவன அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தி உடனடியாக கூட்டு முயற்சியில் இந்தியாவில் அவற்றை தயாரிக்க உடன்படிக்கை ஏற்பட்டது. 50 லட்சம் முதலீட்டில் ஜிஈ ஆட்டோ துவக்கப்பட்டது. டேராடூனில் சலகுயி தொழிற்பேட்டையில் தொழிற்சாலை உருவானது. ஜி பைக்ஸ் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனைக்கு வந்தது.\nஇதற்கு பெரிய வரவேற்பு கிடைத்ததை ஒட்டி பீஹார் பாட்னாவில் 1.5 கோடியில் இன்னொரு தொழிற்சாலை உருவானது. இரண்டிலும் சேர்த்து மாதம் 7,500 ஸ்கூட்டர்கள் தயாராகின்றன. இதே போல் மோட்டார் பைக்குகள் தயார் ஆகின்றன. ரகத்தை பொருத்து ஒரு முறை சார்ஜ் செய்தால் 50 முதல் 100 கி.மீ ஒடுகின்றன. சார்ஜ் தீர்ந்தாலும் பெட்ரோலில் பத்து கிமீ செல்ல பாதுகாப்பு வசதியும் உண்டு.\nசுற்று சூழலுக்கு ஏற்ற இவை முதல் கட்டமாக உ.பி, ம.பி, பீகார், அஸாம், ஜார்கண்ட் மாநிலங்களில் விற்பனை ஆகின்றன. மற்ற மாநிலங்களில் விற்பனை செய்ய திட்டங்கள் உள்ளன.தொழிலாளியாக இருந்து முதலாளி ஆனவரின் கதை\nசுற்று சூழலுக்கு ஏற்ற இவை முதல் கட்டமாக உ.பி, ம.பி, பீகார், அஸாம், ஜார்கண்ட் மாநிலங்களில் விற்பனை ஆகின்றன. மற்ற மாநிலங்களில் விற்பனை செய்ய திட்டங்கள் உள்ளன.\nதினமலர் புதுவை பக்கம் 4\nஅரவிந்த் கண் மருத்துவ மனையில் செயற்கை விழி ஆபரேஷன்.\nஉலக அலவில் இந்த சிகிச்சை 200 பேருக்குத்தான் செய்யப்பட்டு உள்ளது. ஒரு லட்சத்துக்கும் அதிகமாக செலவாகும் என்பதால் இந்தியர் பலர் தேவை இருந்தும் செய்து கொள்ள முடியவில்லை. அமேரிக்க மருத்துவர் ஆன்டணி ஆல்டேவ் செயற்கைகருவிழி பொருத்த சிறப்பு பயிற்சி அளித்தார். பயிற்சி பெற்றோர் ஒரு மணி நேரத்தில் இதை செய்ய இயலும். இப்போது இதன் செலவு 22 ஆயிரம்தான்.\nதினமலர் புதுவை 06-02-2008 பக்கம் 16\nகாப்பி அடிக்கும் மாணவர்களை திருத்த தண்டிப்பதைவிட அவர்களுடைய அம்மாவை அழைத்து அவர்கள் மூலமாக திருத்தும் பணியை மத்திய பிரதேச பல்கலை நூதன திட்டம் வகுத்து உள்ளது.\nவட மாநிலங்களில் காப்பி அடிப்பது தொழிலாகவே நடை பெறுகிறது. இதில் பிடிபட்ட மாணவர்களின் அம்மாக்களை பல்கலை ஒரு கூட்டத்துக்கு அழைத்து உள்ளது. அம்மாக்கள் தம் பிள்ளைகள் காப்பி அடிக்க மாட்டார்கள் என உறுதி மொழி தருவர். இதையும் மீறி காப்பி அடித்து பிடிபட்டால் அந்த மாணவர்கள் தண்டிக்கப்படுவர்.\nதுணை வேந்தர் போபால் சிங்க் தான் உஜ்ஜயினியில் கலெக்டராக இருந்த போது இதை நடை முறை படுத்தியதாகவும் அது நல்ல பலனை அளித்ததாகவும் கூறினார்.\nதினமலர் புதுவை 06-02-2008 பக்கம் 5\nமும்பை: டில்லியை அடுத்து, சென்னையில் இ - செக்' முறை அமலுக்கு வருகிறது. காசோலை, கிளியர்' ஆவதற்கு மூன்று நாள் ஆகும் நிலை போய், மின்னணு முறையில், மூன்று மணி நேரத்தில், கிளியர்' ஆகி விடும்.\nஅமெரிக்கா உட்பட, பல நாடுகளில் இந்த, எலக்ட்ரானிக் செக்' முறை தான் அமலில் உள்ளது. அதனால், எவ்வளவு தூரமாக இருந்தாலும், ஒரு வங்கிக் கணக்கில் இருந்து, இன்னொரு வங்கிக் கணக்குக்கு பணத்தை மாற்ற சில மணி நேரமே பிடிக்கிறது. இதனால், வாடிக்கையாளர்களுக்கு மிக சுலபமாக, தங்களின் செக்'குகளை மாற்ற முடிகிறது.\nவங்கிகளில், செக் பரிமாற்றத்துக்கு இப்போது கடைபிடிக்கும் முறைக்கு, மேக்னடிக் இங்க் கேரக்டர் ரெகக்னேஷன்' (எம்.ஐ.சி. ஆர்.,) என்று பெயர். இதில் காகித வடிவில் காசோலையை சமர்ப்பிக்க வேண்டும்.\nஇந்த காசோலையை பரிசீலித்து, அந்த காசோலை உண்மையானது தான் என்பதை வங்கி உறுதி செய்து கொண்டு, செக் போக வேண்டிய குறிப்பிட்ட வாடிக்கையாளர் கணக்கு உள்ள வங்கிக்கு அனுப்பும். அந்த வங்கி அந்த காசோலையை வாங்கி, வாடிக்கையாளர் கணக்கில் சேர்க்கும். இதற்கு மூன்று நாட்கள் பிடிக்கும். உள்ளூர் காசோலையாக இருந்தால், 24 மணி நேரம் பிடிக்கும்.\nமின்னணு தொழில் நுட்பத்தின் மூலம் கையாளப்படும் , இ- செக்' பரிமாற்றம், செக் ட்ரன்கேஷன் சிஸ்டம்' (சி.டி.எஸ்.,) முறை மூலம் கையாளப்படுகிறது. இப்போதுள்ள நடைமுறை போல, காசோலையை காகித வடிவில், வங்கியில் சமர்ப்பிக்க வேண்டிய அவசியம் இல்லை. வங்கிக்கு சென்று, இ -செக்' கை போட்டால், போதும், வாடிக்கையாளர், தான் யாருக்கு அனுப்ப விரும்புகிறாரோ அவர் கணக்குக்கு பணத்தை வங்கி அனுப்பி விடும். இதற்கு மூன்று மணி நேரம் தான் ஆகும்.\nடில்லியில், ஒரு மாத சோதனைக்கு பின், அமல் செய்யப்பட்டுள்ளது. ஸ்டேட் பாங்க், பஞ்சாப் நேஷனல் வங்கி, சிண்டிகேட் வங்கி, ஐசிஐசிஐ.,வங்கி, ஸ்டாண்டர்டு சார்ட்டர்டு வங்கி, பேங்க் ஆப் அமெரிக்கா, கரூர் வைஸ்யா வங்கி ஆகிய வங்கிகளின் 72 கிளைகளில், இ - செக்' முறை அமலுக்கு வந்துள்ளது.விரைவில், மும்பை மற்றும் சென்னையில், இந்த புதிய முறையை அமல்படுத்த ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது.\nநாடு முழுவதும் இந்த இ - செக்' முறை அமல்படுத்தப்பட்டால், அதிகம் பேருக்கு பலன் கிடைக்கும். காசோலை கிளியர்' ஆவதற்கு தாமதம் ஆவதும் குறையும்; வாடிக்கையாளர்களுக்கும் நேர, பணம் இழப்பு ஏற்படாது' என்று வங்கி அதிகாரிகள் கூறினர்.\nதின மலர் ஈபேப்பர் 06-02-2008\nஇந்தியாவில் புதிய கண்டுபிடிப்புகள் அதிக அளவில் இருந்தாலும் அவற்றின் பேடன்ட் உரிமை பதிவு செய்யவோ அல்லது அதை வெற்றிகரமாக சந்தைப்படுத்தவோ முடியாத நிலை ஏற்பட்டுள்லது.\nஅசாம் மாநில முகமது உசேன் பழைய டயர் மற்றும் மூங்கிலைக்கொண்டு குறைந்த செலவில் காற்றாலையை வடிவமைத்து உள்ளார். கஷ்மீர் முஸ்டாக் அகமது தார் மரங்களில் வேகமாக ஏற கருவி கண்டு பிடித்தார். கையில் எடுத்துச்செல்லக்கூடிய இந்த கருவியை பயன்படுத்தி 50 அடி உயரத்தை5நிமிஷத்தில் ஏறிவிடலாம். ஆனால் இதை யாரிடம் சொல்வது என்று தெரியவில்லை. தமிழக முருகானந்தம் மினி சானிட்டரி நாப்கின் தயாரிக்க கருவி கண்டுபிடித்தார். இதன் மூலம் தயாரிக்கும் நாப்கின் விலை ஒரு ரூபாய் மட்டுமே.\nஇப்படி ஏராளமான திறமை இருந்தும் பயனாகாத நிலையை தடுக்க தடைகள் பேடன்ட் பதிவு செய்ய தெரியாததும் முடியாததும் நிதி ஆதாரம் திரட்ட முடியாததும்தான்.\nஇந்தியாவில் 2002 இல் 9000 விண்ணப்பங்கள் பேடன்ட் பதிவுக்கு வந்தன. அதே சமயம் சீனாவில் 80,000. அமேரிக்காவில் ஒரு கோடிக்கும் அதிகம்.\nஐ.ஐ.எம்.ஏ பேராசிரியர் அனில் குப்தா கூறியதாவது:\nஅந்த குறையை போக ஒரு அமைப்பு உருவாகி உள்ளது. கண்டு பிடிப்புகள் முறைப்படி பதிவு செய்யப்படும். நிதி மற்றும் தொழில்நுட்ப உதவியும் தரப்படும். இத்தகைய மையங்கள் 200 க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் துவக்கப்பட்டுள்ளது.\nதினமலர் 05-02-2008 புதுவை பதிப்பு பக்கம் 4\nசென்னையில் சென்ற சனிக்கிழமை "லிவ் எனேபில் 08” என்ற சிறப்பு வேலை வாய்ப்பு நிகழ்ச்சி எம்சிசி பள்ளியில் நடந்தது. கண் பார்வையிலும் உடல் ரீதியாகவும் திறன் குறைந்த 350 பேர் வந்திருந்தார்கள். 120 பேர் பேட்டிகளில் இறுதிச்சுற்றை அடைந்தனர். பல வங்கிகளும் கால் சேவை மையங்களும் வேலை வாய்ப்பை வழங்கின.\nடெக்கான் கிரானிகிள் 03-02-2008 பக்கம் 5
வைரலாகுது மெழுகு சிலையுடன் உள்ள பிரியங்கா சோப்ராவின் போட்டோஸ். ஆறு வித்தியாசம் கண்டு பிடிங்க மக்களே. - Cinemapettai\nவைரலாகுது மெழுகு சிலையுடன் உள்ள பிரியங்கா சோப்ராவின் போட்டோஸ். ஆறு வித்தியாசம் கண்டு பிடிங்க மக்களே.\n2000 ஆம் ஆண்டில் உலக அழகிப் பட்டம் பெற்றபிறகு சினிமா வாயிலாக மிகவும் பிரபலமானார். பாலிவுட்டில் புகழுடன் இருக்கும் போதே, ஹாலிவுட் பக்கம் சென்றவர் பிரியங்கா சோப்ரா. தன்னை விட 10 வயது குறைவான பாடகர் நிக் ஜோனாஸ் அவர்களை காதலித்தார். டிசம்பர்-1 அன்று திருமணம் செய்துக்கொண்டனர்.\n🤯 <– Me when I saw my new wax figure at Madame Tussauds in NYC @nycwax (Coming to other locations soon!!) @TussaudsSydney @MTsSingapore @TussaudsBK @TussaudsHK @nycwax @MadameTussauds pic.twitter.com/XzRw9LjHJW\nஇந்நிலையில் மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில் உள்ள தன்னுடைய மெழுகு சிலையை பார்வையிட்டார்.\nஅங்கு க்ளிக்கிய போட்டோஸ் வைரலாகி வருகின்றது. மேலும் தான் எங்கெங்கு அடுத்து செல்லும் தகவல்களையும் பகிர்ந்துள்ளார்.\nRelated Topics:நடிகைகள், பிரியங்கா சோப்ரா
பொருளாதார வீழ்ச்சியால் யாரும் பட்டினியாக இல்லை.. எந்த பாதிப்பும் இல்லை.. எஸ்வி சேகரே சொல்லிட்டாரு! | S ve Shekher speaks about Indian Economy slowdown - Tamil Oneindia\n| Published: Sunday, January 12, 2020, 15:48 [IST]\nதிருக்கடையூர்: பொருளாதார வீழ்ச்சியால் யாரும் பட்டினியாக இல்லை என்றும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் பாஜக பிரமுகர் எஸ்வி சேகர் தெரிவித்தார்.\nஇதுகுறித்து திருக்கடையூரில் பத்திரிகையாளர்களை எஸ்வி சேகர் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் தமிழக பாஜக தலைவர் நியமனத்திற்கான பெயர் பட்டியலில் எனது பெயரும் உண்டு.\nஎன்னை தமிழக பாஜக தலைவராக நியமித்தால் நான் சிறப்பாக செயல்படுவேன். ஜாதி அரசியல் செய்ய மாட்டேன். தமிழகத்தில் மோடியின் புதிய திட்டங்கள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த தவறிவிட்டனர்.\n1970-ஆம் ஆண்டுக்கு முன்னர் இந்தியாவில் இருந்த முஸ்லீம்களுக்கு குடியுரிமை சட்டத்தால் எந்த பாதிப்பும் இல்லை. இந்தியாவின் பொருளாதார வீழ்ச்சியால் யாரும் பட்டினி கிடக்கவில்லை. எந்த பாதிப்பும் இல்லை.\nமுன்பெல்லாம் பள்ளிகளில் நீதி போதனை வகுப்பு இருந்தது. அதனால் நாட்டில் மக்கள் ஒழுக்கத்துடன் வாழ்ந்தனர். தற்போது நீதி போதனை வகுப்பு இல்லாததால் ஒழுக்கம் கெட்டு விட்டது. 2021-ஆம் ஆண்டு ரஜினி அரசியலுக்கு வரும் அதிசயம் நிச்சயம் நிகழும் என்றார்.\nதமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சவுந்திரராஜன் தெலுங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார். இதையடுத்து அப்பதவி காலியாக இருக்கிறது. தமிழக பாஜக தலைவருக்கான ரேஸில் எச் ராஜா, சிபி ராதாகிருஷ்ணன், கேடி ராகவன், வானதி சீனிவாசன், குப்புராமு ஆகியோரின் பெயர்கள் இருந்தன.\nஇந்த நிலையில் கடந்த வாரம் சென்னையில் நடைபெற்ற பாஜக தலைவருக்கான கருத்துக் கேட்பு கூட்டத்தில் ராமநாதபுரத்தைச் சேர்ந்த குப்புராமு நியமிக்கப்படுவார் என்ற பேச்சு அடிப்பட்டது. இந்த நிலையில் தனது பெயரும் லிஸ்டில் இருப்பதாகவும் தலைவர் பதவி தனக்கு வழங்கினால் எப்படி செயல்படுவார் என்பது குறித்தும் எஸ் வி சேகர் பேசியுள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.\ns ve shekher bjp tamilnadu எஸ் வி சேகர் பாஜக தமிழகம்\nActor S ve Shekher says that if he would have been become Tamilnadu BJP President then he will not do caste politics. He also said that no one in the country starved because of economic slowdown.\nStory first published: Sunday, January 12, 2020, 15:48 [IST]
ஈரானிய ஏவுகணைகளால் விமானம் தவறாக சுட்டுவீழ்த்தப்பட்டது: கனடா பிரதமர்! - Onlinejaffna Sri Lankan Tamil News Web Site\nHome › ஈரானிய ஏவுகணைகளால் விமானம் தவறாக சுட்டுவீழ்த்தப்பட்டது: கனடா பிரதமர்!\nஈரானிய ஏவுகணை தாக்குதலிலேயே உக்ரேனிய விமானம் வீழ்த்தப்பட்டதாக சான்றுகள் சுட்டிக்காட்டுவதாகவும், இந்த தாக்குதல் “தற்செயலாக நடந்திருக்கலாம்” என்றும் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். நேற்று வியாழக்கிழமை இதனை தெரிவித்தார்.\nகனேடிய உளவுத்துறை அந்த தகவலை உறுதி செய்வதாக அவர் தெரிவித்தார்.\n“ எங்கள் கூட்டாளிகள் மற்றும் எங்கள் சொந்த உளவுத்துறை உட்பட பல ஆதாரங்களில் இருந்து இந்த தகவலை உறுதி செய்தோம். ஈரானிய மேற்பரப்பில் இருந்து வான்வழி ஏவுகணையால் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது என்பதற்கான சான்றுகள் சுட்டிக்காட்டுகின்றன. இது தற்செயலாக நடந்திருக்கலாம்.”என ஒட்டவாவில் செய்தியாளர்களிடம் பேசும்போது கூறினார்.\nமுன்னதாக, ஈரானிய விமான எதிர்ப்பு ஏவுகணை விமானத்தை வீழ்த்தியது, விமானத்தில் இருந்த 176 பேரும் கொல்லப்பட்டிருக்க “அதிக வாய்ப்பு” என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர். அது தொழில்நுட்ப பிழையாக இருந்திருக்கலாம் என்று அவர்கள் தெரிவித்தனர். பிரிட்டிஷ் பிரதமர் பொரிஸ் ஜோன்சன் “ஈரானிய மேற்பரப்பில் இருந்து வான் ஏவுகணையால் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக தகவல் கிடைத்தது. இது தற்செயலாக நடந்திருக்கலாம்” என்று கூறினார்.\nஎனினும், ஈரான் அந்த அறிக்கைகளை “நியாயமற்ற வதந்திகள்” என்று நிராகரித்தது.\n“உக்ரேனிய விமானத்தை ஒரு ஏவுகணை தாக்கியது என்பது சாத்தியமில்லாதது” என்று ஈரானின் சிவில் விமானப் போக்குவரத்துத் தலைவர் கூறியதை ஈரானின் ஐஎன்எஸ்ஏ செய்தி நிறுவனம் மேற்கோளிட்டுள்ளது.\nஅமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான பதட்டங்கள் அதிகரித்துள்ள நிலையில், உக்ரைன் தலைநகர் கெய்வ் நகருக்கு புறப்பட்ட உக்ரைன் இன்டர்நஷனல் ஏர்லைன்ஸ் விமானம் தெஹ்ரானில் உள்ள இமாம் கோமெய்னி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புதன்கிழமை புறப்பட்ட சில நிமிடங்களில் விபத்துக்குள்ளானது. விமானத்தில் 63 கனடியர்கள் இருந்தனர்.\nஈரானிய புலனாய்வாளர்கள் வியாழக்கிழமை ஒரு ஆரம்ப அறிக்கையை வெளியிட்டனர், விமானம் தீப்பிடித்தது மற்றும் திரும்பிச் செல்ல முயன்றது, ஆனால் அதன் குழுவினர் ஒருபோதும் உதவிக்காக வானொலி அழைப்பு விடுக்கவில்லை என குறிப்பிடப்பட்டது. அந்த அறிக்கை சம்பவத்தை ஒரு விபத்து என்று வகைப்படுத்தியது. விமான பேரழிவுகள் குறித்த ஆழமான விசாரணைகள் முடிய பொதுவாக பல மாதங்கள் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.
600 காலி பணியிடங்களில் தமிழக அரசு வேலை.... உடனே அப்ளை பண்ணுங்க....!!!! • Seithi Solai\n600 காலி பணியிடங்களில் தமிழக அரசு வேலை…. உடனே அப்ளை பண்ணுங்க….!!!!\nதமிழ்நாடு அரசின் மீன்வளத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது,\nபணி- Sagar Mitras\nகாலி பணியிடங்கள்- 600\nவயது- 18 முதல் 35\nசம்பளம்- 15,000 ரூ – 70,000 ரூ\nவிண்ணப்பிக்க கடைசி தேதி- ஜன 12\nமேலும் விவரங்களுக்கு WWW.fisheries.tn.gov.in என்ற இணைய பக்கத்தை அணுகலாம்.\nTags: காலி பணியிடங்கள், பல்சுவை, மீன்வளத்துறை, வேலைவாய்ப்பு\nJUSTIN : நள்ளிரவு பிரார்த்தனைகளுக்கு தடையில்லை…. காவல் ஆணையர் விளக்கம்….!!!\n“பாகிஸ்தான் கோவில்கள்”…. பாதுகாக்க குழு வந்தாச்சு…. வெளியான தகவல்….!!!
ஜெமினிக்கான வருடாந்திர கண்ணோட்டம் - ஜோதிடம்.காம் - ஜாதகம்\nஜெமினி 2021 ஆம் ஆண்டுக்கான ஜாதகம்\nமிகவும் சிறப்பு வாய்ந்த ஆண்டான ஜெமினிக்கு வருக. உங்கள் இரட்டையர்களின் அடையாளம் 2021 க்குள் புதிய கண்ணோட்டத்துடனும், அற்புதமான தருணங்களுடனும் செல்கிறது. ஜனவரி 8 ஆம் தேதி உங்கள் வீட்டு கிரகம் அக்வாரிஸின் மின்சார அடையாளத்திற்குள் நுழைந்து, இந்த ஒளிரும் ஆற்றல்களைச் சேர்ப்பதன் மூலம் ஆண்டு திறக்கிறது. உங்கள் ஒளி வீசுகிறது, உங்களுடன் தொடர்பு கொள்ளும் அனைவரும் உங்கள் பிரகாசத்தை அடையாளம் காண்கிறார்கள்.\nதிடீர் மற்றும் விதிக்கப்பட்ட நிகழ்வுகள் உங்களை நேர்மறையான வழியில் நேரடியாக பாதிக்கும். முன்னெப்போதையும் விட நீங்கள் மிகவும் சீரமைக்கப்பட்டதாகவும், இருப்பதாகவும் உணருவீர்கள், குறிப்பாக விதி சுழற்சியின் முனைகள் உங்கள் அடையாளத்தின் மூலம் நேரடியாக. உங்கள் அற்புதமான சுயத்தை நேரடியாக உள்ளடக்கிய சில மாயாஜால அருமையான நிகழ்வுகளின் மூலம் மற்றவர்கள் உங்களை உற்சாகமான வார்த்தைகளுக்காகப் பார்ப்பதால் நீங்கள் கவனத்தின் மையமாக இருக்கலாம்! ஒரு மாற்றத்தை செய்ய வேண்டிய அவசியத்தை நீங்கள் உணர்ந்தால், உங்கள் விதிக்கு செல்லத் தயாராக இருந்தால், கொக்கி மற்றும் சவாரி அனுபவிக்கவும். 2021 ஆம் ஆண்டில் உங்களுக்காக ஒரு டன் போகிறது!\nமகரத்தில் வியாழன், சனி மற்றும் புளூட்டோவுடன் கடந்த ஆண்டு மிகச் சிறந்த இணைப்புகள் அனைவருக்கும் மிகவும் கனமாக இருந்தன-குறிப்பாக நீங்கள், ஏனெனில் 2020 உங்கள் தனிப்பட்ட எட்டாவது உளவியல் துறைகளில் மிகவும் கடினமாக இருந்தது. பல ஜெமினி ஆழ்ந்த மனச்சோர்வு அல்லது ஒருவித பெரிய இழப்பை சந்தித்தது. உங்கள் இரட்டை இயல்புடன் கூட, நீங்கள் ஒரே நேரத்தில் பல குறுக்கு வழிகளில் செல்கிறீர்கள் என்றால் நம்பிக்கையுடன் இருப்பது உங்களுக்கு கடினமாக இருந்திருக்கும்.\n2020 ஆம் ஆண்டில் இந்த குறிப்பிட்ட இணைப்புகள் சனி மற்றும் புளூட்டோ (ஜனவரி 12), வியாழன் மற்றும் சனி (ஏப்ரல் 4, ஜூன் 30 மற்றும் நவம்பர் 12) இடையே நடந்தன; மற்றும் அக்வாரிஸில் சனி மற்றும் வியாழன் (டிசம்பர் 21), இவை அனைத்தும் கடந்த ஆண்டு முழு உலகிற்கும் ஆற்றல்மிக்க விதிகளை நிர்ணயித்தன. இது சுழற்சி செய்வதற்கான எளிதான செயல் அல்ல, பலவீனமானவர்களிடமிருந்து வலுவானவர்களை களையெடுத்தது. உங்கள் வரம்புகளுக்கு அப்பால் நீங்கள் சோதிக்கப்பட்டீர்கள், இதனால் நீங்கள் புயலின் மறுபுறம் செல்ல முடியும். தொடர்புகொள்வதற்கான உங்கள் வலுவான திறனின் மூலம் இந்த பாடங்களை முன்னோக்கி எடுத்துச் செல்வதே உங்கள் காற்று அடையாளம். பல இரட்டையர்கள் தொழில்களையும் ஒட்டுமொத்த வாழ்க்கைத் தடங்களையும் மாற்றியிருக்கலாம்.\nஉங்களுக்கு முன்னால் என்ன வருடம் இருக்கிறது, ஜெமினி! உங்களால் செய்யவோ சாதிக்கவோ எதுவும் இல்லை. மெர்குரி பிற்போக்கு கட்டங்களில் நீங்கள் அடிக்கும் சில ஸ்னாக்ஸுடன் கூட, இவ்வளவு குறுகிய காலத்தில் நீங்கள் இவ்வளவு கற்றுக்கொள்வீர்கள். பல இரட்டையர்கள் பொதுவாக அதை முழுமையாக மாற்றிக் கொள்ளலாம். உங்கள் ஆத்மாவைத் தணிக்கும் ஒரு வேலை அல்லது புதிய வாழ்க்கை சூழ்நிலைக்காக நீங்கள் இடம் பெயர்கிறீர்கள். உங்கள் உள்ளுணர்வு ஹன்ஸ்களைப் பின்தொடர்வதும் நம்புவதும் சரியான நடவடிக்கையாக இருக்கும்! வரவிருக்கும் கிரகண சுழற்சிகள் சில சீரமைக்கப்பட்ட சூழ்நிலைகளைக் கொண்டிருக்கின்றன, அங்கு எல்லாம் சீரமைப்பில் விழுகின்றன; இருப்பினும், இது உங்கள் வாழ்க்கை முறைக்கு இனி சேவை செய்யாத ஒன்றை விட்டுவிட வேண்டும்.\nபிற புற்றுநோய்களுடன் இணக்கமான புற்றுநோய்கள்\nமீன் மற்றும் ஸ்கார்பியோ காதல் பொருந்தக்கூடிய தன்மை\nதுலாம் மற்றும் தனுசு இணக்கமானது\nஜெமினி மற்றும் மீனம் இணக்கமானவை\nதுலாம் மற்றும் மகர காதல் பொருந்தக்கூடிய தன்மை 2016\nதுலாம் மற்றும் மீன் இணக்கமானவை
மேகம் News : இலங்கைக்குள் குட்டி சீனாவை உருவாக்க முனைகிறது நல்லாட்சி -கூட்டு எதிர்க்கட்சி குற்றச்சாட்டு\nஇலங்கைக்குள் குட்டி சீனாவை உருவாக்க முனைகிறது நல்லாட்சி -கூட்டு எதிர்க்கட்சி குற்றச்சாட்டு\nசீன நிறுவனத்திற்கு 15,000 ஏக்கர் காணியை வர்த்தக நடவடிக்கைகளுக்காக வழங்குவதால் நாட்டிற்குள் இன்னொரு நாடு உருவாகு மென கூட்டு எதிர்க்கட்சி எச்சரித்துள்ளது.\nகொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அக்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் விவசாய நிலத்தை சீன நிறுவனத்திற்கு வழங்குவதால் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் பாதிக்கப்படுமெனவும் தெரி வித்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது\nநாட்டிற்கு வரும் வெளிநாட்டு முதலீடுகளுக்கு முழுமையான ஒத்துழைப்பை மஹிந்த ராஜபக்ச வழங்குவார். அதில் அவருக்கு மகி ழ்ச்சியே. எனினும் நாட்டின் வளங்களை விற்பனை செய்வதற்கும், முதலீடுகளை வரவேற்பதற்கும் இடையில் வித்தியாசம் காண ப்படுகின்றது.\nஇந்த திட்டம் தொடர்பில் அப்போதையை அரசாங்கத்தின் கொள்கையை மஹிந்த ராஜபக்ச மிகத் தெளிவாக சீன அதிகாரிளுக்கு தெளிவுபடுத்தியிருந்தார். இந்த திட்டத்தை 750 ஏக்கரிலேயே ஆரம்பிப்பது என்று தீர்மானிக்கப்பட்டிருந்தது. மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் இதனை எவ்வாறு முன்னெடுத்துச் செல்வது என்பது தொடர்பில் நாங்கள் கலந்துரையாடியிருந்தோம்.\nஎனினும் 15,000 ஏக்கரில் இந்த திட்டத்தை ஆரம்பித்தால் மக்கள் எதிர்ப்பினை வெளியிடுவார்கள் என நாங்கள் சீன நிறுவனத்திற்கு எச்சரித்திருந்தோம். இதனை தடுக்க முடியாது. ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு அவர்களது நிலங்கள் இல்லாமல் போகும், அவர்கள் நிர்க்கதிக்குள்ளாவார்கள். 15,000 ஏக்கரும் விவசாய நிலங்கள், அம்பாந்தோட்டை என்பது விவசாய பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு மாவட்டம். ஆகவே மிகப்பெரிய சிக்கல் தோன்றும்.\nஆயிரக்கணக்கான குடும்பங்கள் தங்கள் வாழ்வை புதிதாக ஆரம்பிக்க வேண்டிய நிலை ஏற்படும். 40 சதுரகிலோமீற்றர் நிலப்பகுதி யின் வர்த்தக மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் அனைத்தும் சீன நிறுவனத்திற்கு உரித்தானதாக அமையும். ஆகவே நாட்டிற்குள் ஒரு நாடு உருவாகும். எனினும் அதற்கான தேவை இல்லைஎன அவர் மேலும் தெரிவித்தார்.
மருந்துகள் மீது குறுக்கீடு செய்யும் மரக்கறிகள் உள்ளது என்று உங்களுக்கு தெரியுமா?…. | Tamil Ayurvedic\nHome > இயற்கை மருத்துவம் > சமையல் குறிப்புகள் > மருத்துவ கட்டுரைகள் > மருந்துகள் மீது குறுக்கீடு செய்யும் மரக்கறிகள் உள்ளது என்று உங்களுக்கு தெரியுமா?….\nsangika sangika December 5, 20182018-12-05T21:31:09+05:302018-12-05T21:31:09+05:30 இயற்கை மருத்துவம், சமையல் குறிப்புகள், மருத்துவ கட்டுரைகள் No Comments\nஇதனால் ஏற்படும் பாதிப்புகளின் அளவுகள் உங்கள் உடல் வலிமையை பொறுத்து மாறுபடும். இந்த பதிவில் முட்டைக்கோஸால் ஏற்படும் பகைவிளைவுகள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.\nஅவை உங்கள் பெருங்குடலை அடைந்தவுடன் அவற்றின் மீது ஏற்படும் பாக்டீரியா தாக்குதல் வாயுவை உண்டாக்கும். உங்கள் வயிற்றில் வீக்கமோ அல்லது அடிக்கடி வாயுவெளியேறும் பிரச்சினையோ இருந்தால் அதற்கு காரணம் முட்டைக்கோஸாகத்தான் இருக்கும்.\nஇந்த கையை சாப்பிடாமல் தவிர்ப்பதே இதிலிருந்து தப்பிக்க ஒரே வழியாகும்.\nஅதிகளவு முட்டைகோஸ் சாப்பிடுவது உங்கள் தைராய்டு சுரப்பியின் இயல்பான செயல்பாட்டில் தலையிடக்கூடும்.\nஇதற்கு காரணம் முட்டைகோஸ் உங்கள் தைராய்டு சுரப்பி போதுமான அளவு அயோடின் சத்தை எடுத்துக்கொள்ள விடாமல் தடுக்கிறது.\nஅப்படி இருக்கும்போது அதிகளவு முட்டைகோஸ் சாப்பிடுவது உங்களுக்கு அயோடின் பற்றாக்குறையை ஏற்படுத்தும், இதனால் உங்களுக்கு ஹைப்போதைராய்டு ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.\nஇதனை எப்போதாவது சாப்பிடுவது பாதிப்பை ஏற்படுத்தாது ஆனால் அதிகம் சாப்பிடுவதை தவிர்க்கவும்.\nகுறிப்பாக காலிப்ளவர், கீரை, பருப்புகள், ப்ரோக்கோலி போன்ற உணவுகள் சாப்பிடும்போது இதனை சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. ஏனெனில் இது தைராய்டு சுரப்பியில் பிரச்சினையை ஏற்படுத்தும்.\nசெரிமான மண்டல கோளாறுகள் மற்றும் வயிற்றெரிச்சல் போன்ற பிரச்சினைகள் இருப்பவர்கள் முட்டைகோஸ் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. இதற்கு காரணம் இதிலுள்ள ரெபினோஸ் என்னும் பொருளாகும், இது எளிதில் செரிக்காது.\nமுட்டைகோஸில் அதிகளவு எளிதில் கரையாத நார்ச்சத்துக்கள் உள்ளது, 100 கிராம் முட்டைகோஸில் 2.5 கிராம் நார்ச்சத்துக்கள் உள்ளது.\nபொதுவாக நார்ச்சத்துக்கள் உங்கள் செரிமான மண்டலத்திற்கு அதிக நன்மைகளை வழங்கக்கூடியது, ஆனால் அதிகளவு நார்ச்சத்து நிச்சயம் பிரச்சினைதான்.\nஇரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த வேண்டும் என்னும்போது முட்டைகோஸ் எவ்வளவு நன்மைகளை வழங்குகிறதோ அதே அளவு தீங்கையும் ஏற்படுத்தக்கூடியது.\nஇரத்தத்தில் இருக்கும் குளுக்கோஸ் அளவை குறைக்கும் தன்மை இருப்பதால், அதிகமாக சாப்பிடும்போது அது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை மிகவும் குறைக்கக்கூடும்.\nநீங்கள் எச்சரிக்கையாக இல்லையென்றால் இது ஹைபோக்லேசமியா குறைபாட்டை ஏற்படுத்தக்கூடும்.\nபெரியவர்களுக்கு முட்டைகோஸ் எப்படி வீக்கத்தையும், வாயுக்கோளாறையும் ஏற்படுத்துகிறது என்பதை முன்னரே பார்த்தோம். நீங்கள் பாலூட்டும் தாயாக இருந்தால் நீங்கள் சாப்பிடும் உணவுகள் உங்கள் குழந்தையின் மீதும் பாதிப்பை ஏற்படுத்தும்.\nபொதுவாகவே குறிப்பிட்ட காலம் வரை குழந்தைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் உணவுகளிடம் இருந்து விலகி இருக்க வேண்டும் என்று அம்மாக்களுக்கு பரிந்துரைக்கப்படுகிறது.\nநீங்கள் இரவு நேரத்தில் முட்டைகோஸ் சாப்பிட்டால் அது குழந்தைகளை இரவு முழுவதும் அழவைக்கும்.\nஇரத்தத்தை உறையவைக்க வைட்டமின் கே என்பது அத்தியாவசியமான ஊட்டச்சத்தாகும். முட்டைகோஸில் உள்ள வைட்டமின் கே இதற்கு சிறந்த தேர்வாக உள்ளது ஆனால் அதேசமயம் இரத்தம் உறைய சில மருந்துகள் எடுத்துக்கொள்பவர்கள் இதனை தவிர்ப்பது நல்லது.\nஒரு கப் முட்டைகோஸில் 53 மைக்ரோகிராம் வைட்டமின் கே உள்ளது. ஊட்டச்சத்து நிபுனர்களின் கூற்றுப்படி ஆண்கள் ஒருநாளைக்கு 120 மைக்ரோகிராமும், பெண்கள் ஒரு நாளைக்கு 87 மைக்ரோகிராம் வைட்டமின் கே எடுத்துக்கொள்ள வேண்டும்.\nஇந்த அளவு அதிகரிக்கும்போது அது பல பக்கவிளைவுகளை ஏற்படுத்தும்.\nமுடி அடர்த்தியாக வளர—இய‌ற்கை வைத்தியம்
மாஸ்டர் தந்த நம்பிக்கையால் தனது படத்தை வெளியிடும் விஷால் Vijay's master response makes vishal to release chakra– News18 Tamil\nVIJAY MASTER RESPONSE MAKES VISHAL TO RELEASE CHAKRA SCS\nமாஸ்டர் தந்த நம்பிக்கையால் தனது படத்தை வெளியிடும் விஷால்\nகொரோனா லாக்டவுனுக்குப் பிறகு நவம்பரில் தியேட்டர்கள் திறக்கப்பட்டாலும், பெரிதாக மக்கள் கூட்டம் வராமல் இருந்தது.\nLast Updated : January 24, 2021, 13:17 IST\nபொங்கலுக்கு வெளியான மாஸ்டர் திரைப்படம் மீண்டும் திரையரங்குகளை நோக்கி பார்வையாளர்களை படையெடுக்கச் செய்திருக்கிறது.\nநடிகர் விஜய்யின் நடிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்த ‘மாஸ்டர்’ திரைப்படம் பொங்கலுக்கு வெளியானது. இதில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, சாந்தனு, கெளரி கிஷன் உள்ளிட்டவர்கள் நடித்திருந்தனர். எக்ஸ்பி பிலிம் கிரியேட்டர்ஸ் தயாரித்திருந்த இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார்.\nகொரோனா லாக்டவுனுக்குப் பிறகு நவம்பரில் தியேட்டர்கள் திறக்கப்பட்டாலும், பெரிதாக மக்கள் கூட்டம் வராமல் இருந்தது. இந்நிலையில் பொங்கலுக்கு வெளியான மாஸ்டர் மீண்டும் மக்களின் கவனத்தை திரையரங்கை நோக்கி வரச் செய்திருக்கிறது. 50% பார்வையாளர்களுடன் திரையிடப்பட்ட மாஸ்டர் திரைப்படம் உலகம் முழுவதும் 200 கோடி வசூலித்திருக்கிறது.\nஇதனால் மற்ற படங்களும் ரிலீஸுக்கு தயாராகி வருகின்றன. அந்த வகையில் நடிகர் விஷால் நடித்துள்ள சக்ரா திரைப்படம் வருகிற பிப்ரவரி 12-ந் தேதி திரையரங்குகளில் ரிலீசாகிறது. இந்தப் படத்தை ஓடிடி-யில் வெளியிட பேச்சுவார்த்தை நடைப்பெற்ற நிலையில், மாஸ்டர் படத்துக்கு கிடைத்த வரவேற்பால், திரையரங்குகளில் வெளியிட முடிவு செய்துள்ளனர் படக்குழுவினர்.\n’சக்ரா’ படத்தை எம்.எஸ்.ஆனந்த் இயக்கியுள்ளார். விஷால் தயாரித்திருக்கும் இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக, ஜோடியாக ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.\nFirst published: January 24, 2021, 13:17 IST\nActor vijayActor vishal
தமிழகத்துக்கு ஏப்ரலில் தேர்தல்.. தமிழகத்துக்கு ஏப்ரலில் தேர்தல்..\nHome/தமிழ்நாடு/தமிழகத்துக்கு ஏப்ரலில் தேர்தல்..\nதமிழக சட்டமன்றத்தின் பதவிக்காலம் வருகிற மே 24ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. எனவே, 234 தொகுதிகளில் சட்டமன்ற தேர்தலை நடத்த வேண்டியுள்ளது.\nதமிழக சட்டப்பேரவை தேர்தல் தொடர்பான ஆலோசனையை இந்தியத் தலைமை தேர்தல் ஆணையம்2நாட்களாக சில தினங்களுக்கு முன்னர் சென்னையில் நடத்தியது.\nஇந்தியத் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தலைமையிலான இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அரசியல் கட்சிகளை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். தமிழகத்தை தொடர்ந்து, புதுவையிலும் தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்தியது. அதிகாரிகள் டெல்லி சென்ற பின்னர் தேர்தல் தேதி தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்பட்டது.