text
stringlengths
57
183k
பசி அல்லது ருசி எதுவாக இருந்தாலும் நொடியில் செய்து சாப்பிட சீஸ் பிரெட் சாண்ட்விச் | make cheese bread sandwich recipe for chat – News18 Tamil\nபசி அல்லது ருசி எதுவாக இருந்தாலும் நொடியில் செய்து சாப்பிட சீஸ் பிரெட் சாண்ட்விச்\nசீஸ் பிரெட் சாண்ட்விச்\nஎப்போதும் அவசரத் தேவைக்கு சீஸ் மற்றும் பிரெட் வீட்டில் வைத்துக்கொள்ளுங்கள். இப்படி பசியின் தேவைக்கோ, ருசியின் தேவைக்கோ பயன்படுத்திக்கொள்ளலாம்.\nLast Updated : November 15, 2021, 19:43 IST\nசீஸ் என்பது சாட் உணவு மட்டுமல்லாது நம் பசியை அவ்வப்போது ஆற்றவும் உதவும். அதுவும் பசியின் போது ருசியாகவும் கிடைத்தால் அதுதான் நமக்கு விருந்து. அந்த வகையில் எப்போதும் அவசரத் தேவைக்கு சீஸ் மற்றும் பிரெட் வீட்டில் வைத்துக்கொள்ளுங்கள். இப்படி பசியின் தேவைக்கோ, ருசியின் தேவைக்கோ பயன்படுத்திக்கொள்ளலாம்.\nபிரெட் - 2\nவெங்காயம் -2tbsp\nமிளகுப் பொடி - கொஞ்சம் சுவைக்காக\nசீஸ் -2tbsp\nவெண்ணெய் - 1 tsp\nஒரு கிண்ணத்தில் முட்டையை உடைத்து ஊற்றி நன்கு அடித்துக்கொள்ளுங்கள்.\nபின் அதில் வெங்காயம், பச்சை மிளகாய், மஞ்சள், உப்பு சேர்த்து கலக்கிக்கொள்ளுங்கள். பின் சீஸ் துருவி அதையும் கலந்துகொள்ளுங்கள்.\nவெஜிடபிள் வெள்ளை குருமா செய்ய ரெசிபி!\nஇதை தற்போது முட்டை ஆம்லெட்டாக தவாவில் ஊற்றி பெப்பர் தூவி வாட்டி எடுக்கவும்.\nஅடுத்ததாக பிரெட்டை வெண்ணெய் தடவி இரு புறமும் வாட்டி எடுத்து அதன் நடுவே ஆம்லெட்டை இரண்டாக பிரித்து ஒன்றன் மேல் ஒன்றாக வைக்கவும்.\nதற்போது மீண்டும் தவாவில் வைத்து பிரட்டை அழுத்தியவாறு இரு புறமும் வெண்ணெய் ஊற்றி வாட்டி எடுக்கவும். அவ்வளவுதான் சீஸ் ஆம்லெட் சாண்ட்விச் தயார்.\nFirst published: November 15, 2021, 19:52 IST\nChat RecipesCheeseSandwich recipes
பச்சை நிற லுங்கி ... கண்ணில் கூலிங் கிளாஸ்...சுட்டெரிக்கும் வெயிலில் அதர்வா நாயகி ...! ரோட்டில் நடந்த போட்டோ ஷூட்!!!\nபச்சை நிற லுங்கி … கண்ணில் கூலிங் கிளாஸ்…சுட்டெரிக்கும் வெயிலில் அதர்வா நாயகி …! ரோட்டில் நடந்த போட்டோ ஷூட்!!!\nமெட்ராஸ் கபேயில் என்ற ஒரு ஹிந்தி படத்தின் மூலம் ஒரு துணை நடிகையாக அறிமுகம் ஆனவர் நடிகை ராசி கண்ணா. அதன் பிறகு பல மொழி படங்களில் நடித்து ஒரு நல்ல நடிகை என்ற பெயரில் வலம் வந்தவர். தற்போது அவர் பச்சை நிற லுங்கி போன்ற உடையுடன் கண்ணில் பெரிய கூலிங் கிளாஸ் போட்டு கொண்டு உள்ள புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார்.\nஹிந்தி, தெலுங்கு , தமிழ், மலையாளம் என பல மொழி படங்களில் நடித்து உள்ளார் நடிகை ராசி கண்ணா. தமிழில் அதர்வாக்கு ஜோடியாக இமைக்கா நொடிகள் படத்தில் நடித்து உள்ளார். அதை தொடர்ந்து ஜெயம் ரவியின் அடங்க மறு ,விஜய் சேதுபதியின் சங்கத்தமிழ் உட்பட பல படங்களில் நடித்து உள்ளார். மேலும் இவர் கைவசம் நிறைய தமிழ் படங்கள் மற்றும் பிற மொழி படங்களும் இருக்கிறது. மேலும் பல விருதுகளையும் பெற்று உள்ளார்.\nஅவ்வப்போது அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் பல புகைப்படங்களை வெளியிட்டு அவரின் ரசிகர்கள் மகிழ்வில் ஆழ்த்தி வருகிறார். அந்த வகையில் அவரின் தற்போதைய புகைப்படத்தில் பச்சை நிற பெயிண்ட் ஆர்ட் உடையில் கண்ணில் பெரிய கூலிங் கிளாஸ் அணிந்து கொண்டு வெயிலில் போட்டோ ஷூட் நடத்தி உள்ளார். இந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவேற்றி உள்ளார். இந்த புகைப்படத்திற்கு அவரின் ரசிகர்கள் கமெண்ட்களை வாரி வழங்கி வருகின்றனர்.\nPrevious articleஒரு முறை பாத்தேன் தலைக்கீழ் ஆனேன்.. மறுமுறை பாத்தால் அய்யயோ.. மாடர்ன் உடையில் அன்பே வா சீரியல் நாயகியின் கடற்கரை ஆட்டம்!!!\nNext articleதனது இரண்டு மகள்களுடன் பாரதி கண்ணம்மா நடிகர் – யாருனு நீங்களே பாருங்க!!\nஅந்த பரதேசிக்கிட்ட போயிருக்கியே அவன் உன்ன பாத்துக்குவானா?? கேவலமாக கழுவி ஊற்றிய மௌனராகம் சீரியல் நடிகை!!\nடோக்கியோ ஒலிம்பிக் அரையிறுதியில் தோல்வி அடைந்த பி.வி.சிந்து – வெண்கல பதக்கம் ஆச்சு வெல்வாரா??
சோ உயிரோடு இருந்திருந்தால் இப்போது என்ன கூறுவார்? ஒரு சுவையான கற்பனை - Tamil Nadu News, Chennai News, Tamil Cinema News, Tamil News, Tamil Movie News, Power Shutdown in Chennai, Petrol and Diesel Rate in Chennai\nசோ உயிரோடு இருந்திருந்தால் இப்போது என்ன கூறுவார்? ஒரு சுவையான கற்பனை\nBy Chennaivision in Tamil News April 16, 2019\nசமூக வலை தளங்களில் உலா வரும் பல பதிவுகள் சிரிக்க மட்டுமில்லாமல் சிந்திக்கவும் வைக்கின்றன. அப்படி ஒன்று தான் கீழே நீங்கள் பார்க்கப் போகும், சுவாமிநாதன் ராமசுப்பிரமணியன் என்னும் பெயரில் வாட்சாப், ஃபேஸ்புக்கில் வேகமாக பரவும் ஒரு பலே பதிவு:\nசொர்க்கத்திலிருந்து ஒரு போன் கால்\nசோ : என்ன சார், நாலு மிஸ்டு கால் பார்த்தேன். ரொம்ப அர்ஜெண்டா?\nஆமா சார், இன்னும் மூன்று நாட்கள் தான் இருக்கு. நீங்க இல்லாம போயிட்டீங்களேன்னு ரொம்ப வருத்தமா இருந்தது சார்.\nசோ : ம். ற்…ற் (அதே கனைப்பு)… எலெக்ஷன் எப்படி போயிண்டுருக்கு?\nஅது விஷயமாத்தான் உங்களுக்கு போன் போட்டேன். என்ன சார் இது, துக்ளக் பத்திரிக்கையிலேயே திமுக ஸ்வீப்னு எழுதுறாங்களே சார்..\nசோ : நல்ல செய்திதானே!!\nஎன்ன சார் இப்படி சொல்றீங்க?\nசோ : துக்ளக் கருத்து கணிப்பு என்னிக்கு சார் சரியா வந்திருக்கு? சொல்லப்போனால் துக்ளக்கும் லயோலாவும் ஒண்ணா ஒத்துப்போறது இந்த ஒரு விஷயத்தில தான். என்னுடைய கருத்தும் என் ஆபீஸ்ல இருக்கறவங்க கருத்தும் ஒரே மாதிரி இருந்ததே இல்லை. அவங்க பார்த்த மக்களை சந்தித்து எழுதுவாங்க. அவ்வளவு தான்.அதனால ரொம்ப மனசை போட்டு கஷ்டப்படுத்திக்காதீங்க.\nநீங்க என்ன சார் நினைக்கறீங்க? மோடி வந்துடுவாரா?\nசோ : அஞ்சு வருஷத்திலே கடுமையா உழைச்சிருக்கார். சில கஷ்டமான முடிவுகளை நாட்டு நலன் கருதி தையிரியமா எடுத்துருக்கார். அதனுடைய பாதிப்பு இல்லாமல் இருக்காது. அதை மீறியும் மக்கள் ஒரு உறுதியான லீடரா, ஊழல் செய்யாத நேர்மையாளரா மோடியை ஜனங்க பார்க்க ஆரம்பிச்சிட்டாங்க. இது அவருக்கு ஒரு பலம். எதிர்க்கட்சியில் மோடி ஸ்டேச்சருக்கு இணையா ஒரு தலைவரை அவங்களால காட்ட முடியலை என்பது மற்றொரு ப்ளஸ் பாயிண்ட். போன முறை வந்த அளவுக்கு சீட் கிடைக்காட்டியும் தேவைப்படக்கூடிய 273 சீட் தனியாவே வரக்கூடும் என்றே நான் நினைக்கிறேன். NDA க்கு 320 முதல் 330 வரை கிடைக்கும் என்பதே என் எதிர்பார்ப்பு.\nதமிழகத்தில் எப்படி சார் இருக்கும்?\nசோ : ஜெயலலலிதா, கருணாநிதி போன்ற பெரிய தலைவர்கள் இல்லாமல் இருக்கின்ற சூழலில் இந்த முறை கணிப்பது சற்று கடினமான பணிதான். என் பார்வையில் ஆரம்பத்தில் அதிமுக அரசு கொஞ்சம் சறுக்கினாலும் கடைசி ஒன்றரை ஆண்டுகாலங்களில் எடப்பாடி அரசை சரியானபடி கொண்டு செல்வதாகவே நான் பார்க்கிறேன்.\nஜெ பாணியை விட எம் ஜி ஆர் பாணி அரசியலை நடத்தறார்னு தான் எனக்கு தோணுறது. புத்திசாலித்தனமாக ஒரு நல்ல கூட்டணியை உருவாகியிருக்கார். அது பெருமளவு பலனளிக்கும்னு தான் நான் நினைக்கிறேன். அதிமுக அதிக இடங்களில் வெற்றி பெறுவதற்கு வாய்ப்பு உள்ளதாகவே நான் கருதுகிறேன்.\nதினகரன் வாக்குகளை பிரிப்பார்னு சொல்றாங்களே சார்?\nசோ : சமுதாய வாக்குகள் நிறைந்திருக்கும் இரண்டு மூன்று தொகுதிகளில் வேண்டுமானால் அவருடைய பாதிப்பு இருக்கலாம். மற்றபடி பெரிய தாக்கம் இருக்கும்னு நான் நினைக்கல சார்.\nஅப்ப திமுக வராதுன்னு சொல்றீங்களா?\nதிமுகவின் நடவடிக்கைகளை பார்க்கும்போது அப்படித்தான் தோன்றுகிறது. கலைஞர் ஜெயித்தால் அண்ணா வழி , தோற்றால் பெரியார் வழின்னு தானே சொல்வார். கிருஷ்ணரை கேவலப்படுத்தி வீரமணி பேசறதும், ஹிந்து நம்பிக்கைகளை ஸ்டாலின் கொச்சைப்படுத்தறதும், ஆங்காங்கே கடைகளை உடைப்பதும், போலீசை மிரட்டுவதும், பெண்களிடம் முறையின்றி நடப்பதும், அசிங்க அசிங்கமான வார்த்தைகளை கொண்டு பிரதமர், முதலமைச்சர், அவரின் கூட்டணி கட்சியினரை கீழ்த்தரமாக பேசும் வீடியோக்களை பார்க்கும்போது ஸ்டாலின் பெரியார் வழிக்கு தன்னை தயார்படுத்தி கொள்வதாகவே தெரிகிறது.\nஅதிமுகவில் ஊழலே இல்லையா. நேத்தி வரைக்கும் பாமக அவர்களை திட்டியவர்கள் தானே, இவர்களுடன் மாற்று அரசியலை முன் வைக்கும் பாஜக கூட்டணி சேர்ந்ததை எப்படி சார் நியாயப்படுத்த முடியும்?\nசோ : இந்த கொள்கை. கூட்டணி தர்மம் இதெல்லாம் சுத்த ஹம்பக், பம்மாத்துன்னு உங்களுக்கு தெரியாதா? இருக்கவே இருக்கு “அரசியலில் நிரந்தர நண்பர்களும் இல்லை, நிரந்தர எதிரிகளும் இல்லை”. தேர்தலுக்காக மட்டுமே கூட்டணி..\nவாஸ்தவம் தான். அதிமுக ஆட்சியில் கொஞ்சமல்ல நிறையாவே ஊழலே இருக்கு. நான் நிறையதடவை சொல்லியிருக்கேன். ஜனநாயகம்ங்கறது நாலு ராஸ்கலில் நல்ல ராஸ்கலை தேர்ந்தெடுக்க வேண்டும். அவ்வளவுதான். கொள்ளையடிக்கும்போது ஒரு கொள்ளைக்காரன் அகப்பட்டுண்டுட்டான். போலீஸ் வரும்வரை எல்லாரும் சேர்ந்து அடிக்கும்போது அதில் ரெண்டு பிக்பாக்கெட்டும் சேர்ந்து அவனை ரெண்டு மொத்து மொத்துவான்.. அப்ப போய் எல்லா உத்தமர்களையும் ஊர்ல போய் கூட்டிக்கொண்டு வருகிறேன், பிறகு அடிக்கலாம் என்று காலம் தாழ்த்த முடியுமா?. இப்போதைக்கு கொள்ளைக்காரனை அடி .. பிக்பாக்கெட்டை பின்னாடி பார்த்துக்கலாம். அவனை மிரட்டலாம். சொல்லி நல்வழிப்படுத்தலாம். அவன் குடுமி நம்ம கிட்ட இருந்தால் சிண்டை பிடிச்சு உலுக்கலாம். அதிமுகங்கறது பிக்பாக்கெட் மாதிரி. இதுல போய் ரெண்டு பேருமே யோக்கியமில்லை, நான் நோட்டாவிற்கு போடறேன்னு பைத்தியக்காரத்தனம் பண்ணப்படாது. அது பல சமயங்களில் கொள்ளைக்காரனுக்குத்தான் சாதகமா முடியும், சொல்லப்போனால் அப்படி நோட்டாவிற்கு போடுவதற்கு பதில் அந்த கொள்ளைக்காரனுக்கு வாக்களிக்கலாம். இரண்டிற்கும் பெரிய வித்தியாசம் இல்லை.\nஉங்க நண்பர் ரஜினிகாந்த், என்ன சார் ஆட்சி தர்பாருக்கு வருவார்னு பார்த்தா கடைசியில் அவருக்கு தெரிஞ்ச சினிமா தர்பாருக்கு போயிட்டார்? நீங்க இருந்தால் அவரை சரியாக வழி நடத்தியிருப்பீர்கள்ன்னு பேசிக்கிறாங்க சார்..\nசோ : ரஜினிக்கு யாருடைய ஆலோசனையும் தேவையில்லை. அவருக்கே சொந்தமாக சரியாக முடிவெடுக்கும் திறமை உண்டு. மோடிக்கு அவர் நேரடியாகவே சப்போர்ட் பண்ணியிருக்கணும் என்பதே என்னுடைய அபிப்ராயம். அவர் நேரடியாக சொல்லலைங்கறதுக்காக என் அபிப்ராயத்தை மாத்திக்க முடியாது.\nஅவர் எதிர்கால சட்டசபை தேர்தலை மனதில் வைத்து சில கணக்குகள் போடறார். பார்ப்போம். மொத்தத்தில் அவர் மூலம் தமிழகத்திற்கு நல்லது நடந்தால் சரி\nசார், செத்துப்போன காங்கிரஸ் கட்சி கூட காமராஜர் ஆட்சின்னு சொல்றாங்க, பி ஜெ பி யும் கூட காமராஜரை தூக்கி பிடிக்கிறது. எடப்பாடியோ அம்மா ஆட்சிங்கறாங்க. வராவிட்டாலும் கூட ரஜினியும் கூட எம் ஜி ஆர் ஆட்சின்னு சொல்றார், கமலும் வாத்யார் மடியில்தான் வளர்ந்தேன்னு சொல்லி டி வி யை கூட உடைக்கிறார். ஸ்டாலின் உள்பட யாருமே “கலைஞர் ஆட்சி மலரும்னு ” சொல்ல மாட்டேங்கறாங்களே?\nசோ : ஓ , கமல் டி வி யை எல்லாம் உடைக்கிறாரா? சபாஷ். கலைஞர் இல்லாத குறையை அவர்தான் தீர்த்து வைக்கிறார் போலிருக்கே. இனி சத்யா பாடு கொண்டாட்டம்தான்!\nகருணாநிதி ஆட்சின்னு சொன்னால், விஞ்ஞான முறைப்படி ஊழல்,2ஜி, நில அபகரிப்பு, வன்முறை, ரவுடியிசம், சினிமாத்துறையையே தன் கைக்குள் கொண்டுவந்து தமிழகத்தையே சுரண்டுவது, கஜானா காலி, ஜாக்ட்டோ ஜியோ போன்ற அரசாங்க அமைப்பை கைக்குள் வைத்து மக்களை மிரட்டுவது , பெண்கள் பாதுகாப்பின்மை , இருட்டு, திருட்டு இப்படி திமுகவின் பல சாதனைகள் மக்கள் கண்ணு முன்னாடி வந்துபோனால் அவருடைய ஆசை எப்படி நிறைவேறும்? அதுக்காகத்தான் திமுக என்றாலே ஹிந்து என்றுதான் பொருள் , கலைஞர் குல்லா அணியாத முல்லா. கேளுங்கள் பெறப்படும் தட்டுங்கள் மீண்டும் பெறப்படும்னு என்று புதிய கருத்தை உருவாக்குவது தானே சார் முறை. தேர்தல் காலம் இல்லையா!\nசரி, நான் போனை வச்சுடறேன். மே 23 “சோற்றாலடித்த பிண்டங்கள்”, “பண்டார பரதேசிகள் ஆட்சி கட்டிலில்”,”வாக்கு இயந்திரத்தை நம்பி மோசம் போனோம்”, “பார்ப்பன சூழ்ச்சிக்கு தமிழன் பலி” இப்படடிப்பட்ட தலைப்புகளோடு பத்திரிகைகளோட வாங்க சந்திப்போம்.\nசீறிய லாரன்ஸ், சிதறிய‌ சீமான்: பின்னணியில் ரஜினி?\nDMK sacks senior leader from party
தடுப்பூசியால் இதுவரை யாரும் உயிரிழக்கவில்லை ராதாகிருஷ்ணன்\nதடுப்பூசியால் இதுவரை யாரும் உயிரிழக்கவில்லை ராதாகிருஷ்ணன் பேட்டி!\nகொரோனா தடுப்பூசியால் இதுவரை யாரும் உயிரிழக்கவில்லை என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டி அளித்துள்ளார்!\nமக்கள் மத்தியில் ஆட்கொல்லி நோயாக வைரஸ் கிருமிகள் கண்ணுக்கு தெரியாமல் பல்வேறு தரவுகளை கொடுக்கும் நோயாக கொரோனா உள்ளது. கொரோனா நோய் சீனாவில் உள்ள ஒரு மாகாணத்தில் கண்டறியப்பட்டது. அதன் பின்னர் சீன நாட்டில் முழுவதும் நோயின் தாக்கம் இருந்தது தெரிய வந்தது. அதன் பின்னர் உலக நாடுகளிலும் பரிசோதித்துப் பார்த்தபோது உலக நாடுகளிலும் கொரோனா நோயின் தாக்கம் இருந்தது தெரியவந்தது.இதனால் உலக நாடுகளே மிகவும் அச்சத்தில் இருந்தனர்.\nமேலும் இந்தியாவிலும் நோய் பரவ தொடங்கியது. ஆனால் இந்திய அரசானது எந்த ஒரு அச்சமுமின்றி நாடெங்கும் முழு ஊரடங்கு திட்டத்தை அமல்படுத்தி கடந்த ஆண்டின் இறுதிக்குள் கொரோனா நோயின் தாக்கத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. தற்போது இந்நோயின் தாக்கம் அதிகம் பரவத்தொடங்கியது மிகவும் சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்தியாவில் பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளன. மேலும் இந்தியாவில் குறிப்பாக டெல்லி மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் நோயின் தாக்கம் அல்லது வீரியம் உள்ளதாக அதிகமாக பரவுகிறது.\nமேலும் தமிழகத்தில் நோயின் தாக்கம் அதிகமாக போவதாக தகவல் வெளியாகி உள்ளது. குறிப்பாக சென்னையில் கொரோனாநோயின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது மிகவும் வேதனை அளிக்கிறது. தற்போது தமிழகத்தில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளார். அவர் தற்போது செய்தியாளர்களை சென்னையில் சந்தித்து பேட்டி அளித்துள்ளார். அப்பொழுது அவர் கூறினார் இதுவரை கொரோனா தடுப்பூசியினால் யாரும் உயிரிழக்கவில்லை எனவும் அவர் கூறியுள்ளார். மேலும் தடுப்பு ஊசி செலுத்தியவர்களுக்கு தீவிர பாதிப்பு ஏற்படுவதும் இல்லை எனவும் அவர் கூறினார்.
11 ஆம் வகுப்பு கணக்குப்பதிவியல் மாதிரித்தேர்வு கேள்விகள் ( 11th standard Accountancy Model Question Paper ) | 11th Standard STATEBOARD " /> -->\n11 ஆம் வகுப்பு கணக்குப்பதிவியல் மாதிரித்தேர்வு கேள்விகள் ( 11th standard Accountancy Model Question Paper ) Dec-24 , 2018\nநடவடிக்கைகளை முறையாகப் பதிவு செய்தல்\nவணிகத்தின் இலாபம் ஈட்டும் திறனை அறிந்து கொள்ளுதல்\nநிறுவனத்தின் நிதி நிலையை அறிந்து கொள்ளுதல்\nவரிவிதிக்கும் அதிகாரிகளிடம் வரித்தொடர்பான பிரச்சினைகளைத் தீர்த்தல்\nபேரேட்டுக் கணக்குகளின் சரித்தன்மையை உறுதி செய்ய,அதன் இருப்புகளைக் கொண்டு தயாரிப்பது ஆகும்.\nரொக்க ஏடு பதிவு செய்வது\nஅனைத்து ரொக்கப் பெறுதல்கள்\nஅனைத்து ரொக்கச் செலுத்தல்கள்\n(அ), (ஆ) ஆகிய இரண்டும்\nஅனைத்து கடன் நடவடிக்கைகள்\nதேய்மான விகிதமானது சமமாக இருக்கும் போது நேர்கோட்டு முறைப்படி உள்ள தேயமானத் தொகை மற்றும் குறைந்து செல் இருப்பு முறையுடன் ஒப்பிடும் போது\nஎல்லா ஆண்டுகளிலும் சமமாசமமாக இருக்கும்.\nமுதலாண்டில் சமமாகவும், ஆனால், பின்வரும் ஆண்டுகளில் அதிகமாகவும் இருக்கும்\nமுதலாண்டில் சமமாகவும், ஆனால், பின்வரும் ஆண்டுகளில் குறைவாகவும் இருக்கும்.\nமுதலாண்டில் குறைவாகவும், ஆனால், பின்வரும் ஆண்டுகளில் சமமாகவும் இருக்கும்.\nபழைய சீருந்தை புதுப்பிக்கச் செலவு செய்தது_______________\nஇலாப நட்டக் கணக்கின் வரவுப் பக்கம்\nஇருப்புநிலைக் குறிப்பின் சொத்துகள் பக்கம்\nஏதேனும்7வினாவிற்கு விடை தருக. வினா எண் 21க்கு கட்டாயம் விடையளிக்கவும்\nசான்றுச்சீட்டு என்றால் என்ன?\nகணக்கியல் காலக் கருத்து - குறிப்பு வரைக.\nஇருப்பாய்வு தயாரித்த பின் கண்டறியப்பட்ட பின்வரும் பிழைகளை திருத்துவதற்கான குறிப்பேட்டுப் பதிவுகளைத் தரவும்:\n(அ) விற்பனை ஏட்டில் ரூ.1,000 குறைவாகக் கூட்டப்பட்டுள்ளது.\n(ஆ) ரூ.500 கூலி செலுத்தியது தவறாக இயந்திரக் கணக்கில் எடுத்து எழுதப்பட்டுள்ளது.\nஏதேனும்7வினாவிற்கு விடை தருக. வினா எண் 31க்கு கட்டாயம் விடையளிக்கவும்\nகுறிப்பேட்டில் பதிவு செய்யும் படிநிலைகளை விவரி.\nகீழ்க்கண்ட இருப்பாய்வில் சில பிழைகள் உள்ளன. அவற்றைவற்றை சரிசெய்து மீண்டும் ஒரு இருப்பாய்வைத் தயாரிக்கவும்.\n31-03-2017 -ஆம் நாளைய இருப்பாய்வு\nகொள்முதல் திருப்பம் 2,600\nபெற்றெற்றத் தள்ளுபடி 3,000\nவங்கி மேல்வரைப்பற்று 10,000\nவட்டி பெற்றெற்றது 2,600\nரொக்க ஏட்டில் தள்ளுபடியைப் பதிவு செய்வது பற்றி குறிப்பு வரைக\nபின்வரும் விவரங்களிலிருந்து டிசம்பர் 31, 2017-ம் நாளுக்குரிய வங்கிச் சரிகட்டும் பட்டியலை தயார் செய்து வங்கி அறிக்கையின் படியான இருப்பைக் கண்டறிக\n(i) வங்கி அறிக்கையின் படி இருப்பு 6,000\n(ii) டிசம்பர் 28, 2017 அன்று வங்கியில் செலுத்திய காச�ோலை இன்னும் வரவு வைக்கப்பட்டவில் 2,000\n(iii) டிசம்பர் 20, 2017 அன்று விடுத்த காசோலை இன்னும் செலுத்துகைக்கு முன்னிலைப்படுத்தபடவில்லை 3,000\n(iv) வங்கியால் நேரடியாக வசூலிக்கப்பட்ட கடனீட்டுப் பத்திரம் மீதான வட்டி ரொக்க ஏட்டில் பதியப்படவில்லை 4,000\n(v) கட்டடம் மீதான காப்பீட்டு முனைமம் வங்கியால் நேரடியாகச் செலுத்தப்பட்டது 1,000\n(vi) வங்கியால் தவறுதலாலாக வரவு வைக்கப்பட்ட தொகை 500\nஅனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும் .\nபின்வரும் விவரங்களிலிருந்து ஆனந்த் என்பவரின் கணக்கைத் தயாரிக்கவும்.\n2017 ஜூலை 1 ஆனந்த் கணக்கின் வரவு இருப்பு 4,000\n15 ஆனந்துக்கு ரொக்கம் செலுத்தியது 2,000\n18 ஆனந்திடமிருந்து கடனாகக் கொள்முதல் செய்தது 8,000\n20 ஆனந்துக்கு ரொக்கம் செலுத்தியது 3,960\nஅவர் அளித்த தள்ளுபடி 40\n25 ஆனந்திடமிருந்து கடனுக்கு கொள்முதல் செய்தது 5,000\nகார்த்திக் என்பவரது ஏடுகளிலிருந்து எடுக்கப்பட்ட கீழ்க்காணும் இருப்புகளிலிருந்து கொண்டு 31.3.2017 ஆம் நாளுக்குரிய இருப்பாய்வு தயாரிக்கவும்.\nமற்றும் வரிகள் 5,000 வாடகை 6,000\nஅளித்த தள்ளுபடி 350 பொதுச் செலவுகள் 3,100\nமுதல் 10,000 சட்டச் செலவுகள் 2,000\nகாப்பீட்டு முனைமம் 4,000 கொள்முதல் 40,000\nஎடுப்புகள் 5,000 விற்பனை 55,350\nபின்வரும் நடவடிக்கைகளை எழுது பொருள் வியாபாரம் செய்யும் இராம் நிறுவனத்தின் விற்பனை ஏட்டில் பதிவு செய்க.\nஜனவரி 1 அன்புவிற்கு கடனுக்கு விற்றது ரீம் ஒன்று ரூ. 150 வீதம் 20 ரீம்கள் வெள்ளைத்தாள்.\nஜனவரி2ஜெகதீஷ் நிறுவனத்திற்கு ஒரு டஜன் ரூ. 360 வீதம்6டஜன்கள் எழுதுகோல் கடனுக்கு விற்றது.\nஜனவரி 10 பழைய செய்தித்தாளை ரொக்கத்திற்கு விற்றது ரூ. 620\nஜனவரி 15 இளங்கோவிற்கு கடனுக்கு விற்றது ஒன்று ரூ. 170 வீதம் 10 வரைவு அட்டைகள்\nஜனவரி 20 கனி விற்பனையகத்திற்கு ஒன்று ரூ. 1,520 வீதம்4எழுது மேசைகளை ரொக்கத்திற்கு விற்றது\nகீழ்கண்ட நடவடிக்கைகளைக் கொண்டு குணசேகரன் அவர்களின் முப்பத்தி ரொக்க ஏட்டைத் தயாரிக்கவும்.\n1 ரொக்க இருப்பு 50,000\n1 வங்கி இருப்பு 90,000\n2 ரோகினி என்பவருக்கு கடனுக்குச் சரக்கு விற்றது 15,000\n5 ரோகினியிடமிருந்து ரூ 14,500 க்கான காசோலைப் பெறப்பட்டு அவர்\nகணக்கு தீர்க்கப்பட்டது. அக்காசோலை உடனே வங்கியில் செலுத்தப்பட்டது\n6 ரொக்கம் வைப்பு இயந்திரத்தின் மூலம் வங்கியில் பணம் செலுத்தியது 18,000\n7 ஸ்ரீதருக்கு விற்ற சரக்கு ரூ12,000. அவர் ரூ 11,800 எடுப்பு அட்டை\nமூலம் செலுத்தி கணக்கு தீர்த்துக்கொண்டார்.\nஅவர் பெற்ற தள்ளுபடி ரூ 200.\n10 வங்கியிலிருந்து அலுவலகச் செலவுகளுக்காக பணம் எடுத்தது 2,000\n12 ராஜா என்பவரிடமிருந்து சரக்சரக்கு வாங்கியது ரூ10,000\nரூ 9,800 கடன் அட்டை மூலம் செலுத்தப்பட்டு கணக்குத் தீர்க்கப்பட்டது. அவரிடமிருந்து பெற்ற தள்ளுபடி ரூ 200.\n14 நதியா தேசிய மின்னணு பணப்பணப் பரிமாற்றம்மூலம் அனுப்பியது 18,000\n27 ரோகினியின் காசோலை மறுக்கப்பட்டது.\nரொக்க ஏட்டின் வங்கிப் பத்தி மற்றும் வங்கி அறிக்கையிலுள்ள பதிவுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. 2017 அக்டோபர் 31 -ஆம் நாளன்றைய வங்கி சரிகட்டும் பட்டியலைத் தயார் செய்க\n2017 அக். 1 இருப்பு கீ/கொ 20,525 2017\nஅக். 8 கமலா க/கு 12,000\n18 ராம் க/கு 6,943 26 மகேஷ் க/கு 9,740\n19 விற்பனை க/கு (ரவி) 450 28 மாலா க/கு 11,780\n20 கழிவு க/கு (கலா) 200 30 சம்பளம் க/கு 720\n20 நிர்மலா க/கு 7,810 31 இருப்பு கீ/இ 1,688\nநவ. 1 இருப்பு கீ/கொ 1,688\nபற்று / வரவு\n1.10.17 இருப்பு கீ/கொ 20525 வ\n9.10.17 கமலா 12,000 8525 வ\n19.10.17 ராம் 6943 15468 வ\n25.10.17 ரவி 450 15918 வ\n26.10.17 மகேஷ் 9,740 6178 வ\n27.10.17 கலா 200 6378 வ\n28.10.17 ராஜன் (சம்பளம்) 720 5658 வ\n30.10.17 பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு 20,000 25658 வ\nமுதலீடுகள் மீதான வட்டி 1,820 27478 வ\n31.10.17 செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டு 4,000 23478 வ\nபின்வரும் செலவுகளை முதலினம் அல்லது வருவாயினம் எனக் கூறவும்.\n(i) கட்டடம் கட்டியதற்கான தொகை ரூ 10,00,000.\n(ii) அறைகலன் பழுதுபார்த்தது ரூ 50,000.\n(iii) கட்டடத்தை வெள்ளை அடிப்பதற்கானச் செலவு ரூ 80,000.\n(iv) பழைய கட்டடத்தை இடித்து புதிய கட்டடம் கட்டியது ரூ 4,00,000.\nகீழ்க்கண்ட விவரங்கள் இருபாய்விலிருந்து பெறப்பட்டபெறப்பட்டன\nஐயக்கடன் ஒதுக்கு 5,000\n(அ) கூடுதல் வாராக்கடன் ரூ 3,000\n(ஆ) பற்பல கடனாளிகள் மீது 10% வாரா ஐயக்கடன் ஒதுக்கு உருவாக்கவும்.\nதேவையான சரிக்கட்டுப் பதிவுகள் தந்து இவ்விவரம் எவ்வாறு இலாப நட்டக் கணக்கு மற்றும் இருப்புநிலைக் குறிப்பில் தோன்றும் எனக் காட்டவும்.\nReviews & Comments about 11 ஆம் வகுப்பு கணக்குப்பதிவியல் மாதிரித்தேர்வு கேள்விகள் ( 11th standard Accountancy Model Question Paper )\nRegister & Get the solution for 11 ஆம் வகுப்பு கணக்குப்பதிவியல் மாதிரித்தேர்வு கேள்விகள் ( 11th standard Accountancy Model Question Paper )
கவர்ச்சியில் கதி கலங்கவைக்கும் நிதி அகர்வால்.. சிம்பு நடிகையின் அட்டகாசம்! - Cinemapettai\nகவர்ச்சியில் கதி கலங்கவைக்கும் நிதி அகர்வால்.. சிம்பு நடிகையின் அட்டகாசம்!\nமாடல் நடிகையான நிதி அகர்வால் பாலிவுட்டில் ‘முன்னா மைக்கேல்’ என்ற திரைப்படத்தின் மூலம் சினிமா உலகிற்கு கதாநாயகியாக அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து டோலிவுட்டில் சில படங்களில் நடித்தார்.\nதற்போது ‘பூமி’ திரைப்படத்தின் மூலம் கோலிவுட்டில் கால் பதித்திருக்கும் நிதி அகர்வால், தொடர்ந்து ஈஸ்வரன் படத்திலும் சிம்புவுக்கு ஜோடியாக நடித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் மகிழ்திருமேனி இயக்கவுள்ள புதிய படத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாகவும் நடிக்க உள்ளாராம் நிதி.\nஇந்த நிலையில் நிதி அகர்வால் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு இருக்கும் கவர்ச்சியான புகைப்படம் இணையத்தில் வைரலாகி, இளசுகளை உசுப்பேத்தி உள்ளது.\nஅதாவது தமிழ், தெலுங்கு என மாறி மாறி பிசியாக நடித்துக் கொண்டிருக்கும் நிதி அகர்வால் சோசியல் மீடியாக்களிலும் ஆக்டிவாக இருந்து வருகிறார் என்பது அனைவருக்கும் தெரிந்தது தான். அதேபோல், ரசிகர்களை கூட்டுவதற்காக நிதி தனது சமூகவலைத்தள பக்கத்தில், அவ்வப்போது கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.\nஅந்த வகையில் நிதி, தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடை அழகை காட்டி மெழுகுடாலை போல் கவர்ச்சியாக போஸ் கொடுத்திருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு, பலரை மயக்கி உள்ளார்.\nஇதைப் பார்த்த ரசிகர்கள் பலர், ‘தொடையழகி ரம்பாவே தோத்துருவாங்க போல’ என்று நிதி அகர்வாலின் அழகை வர்ணித்து கொண்டிருக்கின்றனர்.\nRelated Topics:இன்றைய சினிமா செய்திகள், இன்றைய செய்திகள், சினிமா கிசுகிசு, சினிமா செய்திகள், சிம்பு, செய்திகள், தமிழ் சினிமா, தமிழ் செய்திகள், தமிழ் நடிகைகள், தமிழ் படங்கள், நடிகர்கள், நடிகைகள், நிதி அகர்வால்
தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் – அரையிறுதிக்கு முன்னேறினார் பி.வி.சிந்து – மின்முரசு\nதாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் தொடர் பாங்காக்கில் நடைபெற்றது. இதில் நேற்று நடைபெற்ற காலிறுதி சுற்றில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்துவும், ஜப்பானைச் சேர்ந்த நம்பர் 1 வீராங்கனை அகானே யமகுச்சியும் மோதினர்.\nதொடக்கம் முதல் சிறப்பாக ஆடிய பி.வி.சிந்து முதல் செட்டை 21 -15 என கைப்பற்றினார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் அகானே யமகுச்சி 22 – 20 என வெற்றி பெற்றார்.\nஇதையடுத்து, வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது சுற்றில் 21 -13 என கைப்பற்றி அரை இறுதிச்சுற்றுக்க்கு முன்னேறினார்.\nஇன்று நடைபெற உள்ள அரையிறுதிப் போட்டியில் பிவி சிந்து, சீன வீராங்கனை யு பெய் சென்னுடன் மோதுகிறார்.
அதெல்லாம் பழசு! அஜித் பாணியை பின்பற்றும் தளபதி விஜய்!\nChennai, First Published 2, Feb 2019, 7:27 PM\nதமிழ் சினிமாவை பொறுத்தவை அதிக படியாக தன்னுடைய ஒர்ஜினல் கெட்டப்பை மாற்றி கொள்ளாமல், எதார்த்தமாக நடித்து வருபவர் நடிகர் அஜித். இதனாலேயே இவருக்கு பல ரசிகர்கள் உள்ளனர்.\nரஜினிகாந்த், முதல் பல நடிகர்கள் வரை, தங்களை இளமையாக கட்டிக்கொள்ள, மேக்அப் மற்றும் தலையில் டை அடித்துக் கொள்ளும் நிலையில், அஜித் மட்டும் வெள்ளை தலைமுடி, தாடியுடன் நடித்து சால்ட் அண்ட் பெப்பர் என புதிய கெட்டப்பை உருவாக்கினார்.\nதற்போது இதே பாணியை பின்பற்ற உள்ளார் நடிகர் விஜய். இவர் நடித்து வரும் படங்களில் தன்னை இளமையாகவே வெளிப்படுத்திக்கொள்ளும் விஜய் தற்போது அட்லி இயக்கத்தில் நடிக்கும் 63வது படத்தில், சால்ட் அண்ட் பெப்பர் கெட்டப்பில் நடித்து வருகிறார். இதே கெட்டப்பில் சமீபத்தில் துணை இயக்குனர் திருமண நிகழ்ச்சி ஒன்றிலும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.\nவிஜய் 63வது படத்தில் விஜய் பயிற்சியாளராக நடிப்பதால் அவருக்கு ஆங்காங்கே தெரியும் நரை முடிக்கு கறுப்பு கலர் அடிக்காமல் இயற்கையாக நடிக்க வைத்து வருகிறாராம் அட்லி.\nஎகனாவே மெர்சல் மற்றும் சர்கார் ஆகிய படங்களில் லேசான நரை முடியுடன் விஜய் நடித்திருந்தாலும் இந்தப்படத்தில் சற்று கூடுதலாகவே சால்ட் அண்ட் பெப்பர் போட்டுருக்கிறாராம் அட்லீ. இதனால் தற்போது இளமை கெட்டப்பெல்லாம் பழசாகி, அஜித் பாணியை பின் பற்றியுள்ளார் விஜய்.\nLast Updated 2, Feb 2019, 7:27 PM\nsalt and pepper getup
ஐபிஎல்: வெளியேறிய கோலி அணி! - தினசரி\n12/10/2021 8:50 AM\nகொல்கத்தா அணி டெல்லி அணியோடு மீண்டும் ஒரு எலிமினேட்டர் போட்டியில் விளையாடும் வாய்ப்பைப் பெற்றது.\nஇன்று ஷார்ஜாவில் நடைபெற்ற எலிமினேட்டர் ஐபிஎல் கிரிக்கெட் மேட்சில் பெங்களூரு அணியும் கொல்கத்தா அணியும் விளையாடின. பூவா தலையா வென்ற பெங்களூரு அணி முதலில் மட்டையாட முடிவு செய்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் தேவதத் படிக்கல், கோலி இருவரும் நன்றாக ஆடினார்கள்.\nஆனால் படிக்கல் ஆறாவது ஓவரிலும், அடுத்து வந்த பரத் பத்தாவது ஓவரிலும், பத்தாவது ஓவரிலும் கோலி பதிமூன்றாவது ஓவரிலும் அவுட் ஆனார்கள். அதன்பிறகு வந்த வீரர்கள் சரியாக விளையாடவில்லை. எனவே பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில்7விக்கெட் இழப்பிற்கு நூற்றி முப்பத்தி எட்டு ரன் எடுத்தது.\nஅடுத்து விளையாட வந்த கொல்கத்தா அணி மிகச் சிறப்பாக விளையாடியது. அந்த அணியின் தொடக்க வீரர்களான கில், வெங்கடேஷ் இருவரும் தலா இருபத்தி ஒன்பது இருபத்தி ஆறு ரன்கள் எடுத்தனர். அவர்களுக்குப் பின்னர் வீரர்கள் அடுத்தடுத்து அவுட்டாகி வந்தனர்.\nபதினோராவது ஓவர் முடிவில் வெங்கடேச ஐயர் அவுட்டானார். அப்போது விளையாட வந்த சுனில் நரேன் வரிசையாக மூன்று சிக்ஸர்கள் அடித்து கொல்கத்தா அணியின் டென்ஷனை குறைத்தார். அதற்குப் பிறகு திடீரென 18வது ஓவர் ஓவரில் நரேன் கார்த்திக் இருவரும் அவுட் ஆகினர். ஆனால் அதன்பிறகு விளையாட வந்த ஷாகிப் மற்றும் மோர்கன் இருவரும் நிதானமாக ஆடி கொல்கத்தா அணியை வெற்றிபெற வைத்தனர்.\nஇதனால் கொல்கத்தா அணி டெல்லி அணியோடு மீண்டும் ஒரு எலிமினேட்டர் போட்டியில் விளையாடும் வாய்ப்பைப் பெற்றது. பெங்களூரு அணி தோல்வியடைந்து போட்டியை விட்டு வெளியேறியது.
கருணை கலந்த தைரியம் தேவை\nஎத்தனை பூஜ்யங்கள் இருப்பினும் அவற்றுக்கு முன்னால் 1 என்ற எண்ணைச் சேர்க்காவிடில் அவற்றுக்கு இயல்பான மதிப்பில்லை. இதைப் போன்றே நீங்கள் இறையருள் சார்ந்த ஆன்மிகச் செல்வத்தை அடைய கடும் முயற்சி செய்யாவிடின், உங்களையே நீங்கள் அறிந்து கொள்ள முயற்சி எடுக்காவிடின், மூவுலகங்களின் செல்வங்களும் மதிப்பற்றவைகளாகவே இருக்கும். ஆகவே, ஆன்மிக வாழ்க்கையை மேற்கொள்ளுங்கள். உங்களில் உறையும் பரம்பொருளை முதலில் நாடுங்கள்.\nவாழ்க்கைப் பயணம் என்பது தூய்மையின்மையிலிருந்து தூய்மைக்கும், வெறுப்பிலிருந்து அன்புக்கும், இறப்பிலிருந்து அழியாமைக்கும், அடிமைத்தனத்திலிருந்து விடுதலைக்கும், முழுமையற்ற நிலையிலிருந்து முழுமைக்கும், தொல்லைகளிலிருந்து அழிவற்ற பேரின்பத்துக்கும், வேற்றுமையிலிருந்து ஒற்றுமைக்கும், அறியாமையிலிருந்து நிலைத்த அறிவுக்கும், பலவீனத்திலிருந்து வலிமைக்கும் செல்லும் பயணமாகும். ஒவ்வொரு எண்ணமும் உங்களைப் பரம்பொருளுக்கு அருகில் கொண்டு செல்ல வேண்டும். ஒவ்வொரு செயலும் வளர்ச்சிக்கு இட்டுச் செல்ல வேண்டும்.\nபுத்தரைப் போல் கருணையும், பீஷ்மரைப் போல் தூய்மையும், அரிச்சந்திரனைப் போல் வாய்மையும், பீமனைப்போல் தைரியமும் கொள்ளுங்கள். உங்கள் கண்கள் அன்பாகப் பார்க்கட்டும். நாக்கு இனிமையாகப் பேசட்டும். கைகள் மிருதுவாகத் தொடட்டும். உங்கள் காதுகள் இறைவன் புகழால் நிறையட்டும். களைப்பின்றித் தொண்டாற்றுவதன் மூலம் வறுமையிலும், துயரங்களிலும் உள்ளவர்களைத் தேடிக் கண்டுபிடித்து, உற்சாகப்படுத்தி ஆறுதலைத் தாருங்கள்!
கங்கணா ரணாவத் வெளியிட்ட கவர்ச்சிப் புகைப்படங்கள் - Royalreporter - Tamil Cinema News, Tamil Political News, Cinema Reviews\nஹிந்தித் திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் கங்கனா ரணவத். அடிக்கடி சர்ச்சைக் கருத்துக்களைப் பதிவிட்டு செய்திகளில் பரபரப்பாக அடிபடுபவரும் கூட. தமிழில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றுப் படமான ‘தலைவி’ படத்தில் நடித்து முடித்திருக்கிறார் கங்கனா. அடிக்கடி அவரது இன்ஸ்டாகிராம் தளத்தில் விதவிதமான புகைப்படங்களைப் பகிர்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்.\nஆனால், இதுவரையில் இல்லாத அளவிற்கு இரண்டு கவர்ச்சிகரமான புகைப்படங்களைப் பதிவிட்டு அதிர்ச்சி கொடுத்துள்ளார். மெல்லிய மேலாடை அணிந்து அவர் பதிவிட்டுள்ள போட்டோக்கள் எட்டு லட்சம் லைக்குகளைக் கடந்து கொண்டிருக்கின்றன.\nஅந்த புகைப்படங்களைப் பகிர்ந்து, “வாழ்வதற்கும் இறப்பதற்கும் இடையில் காதலில் எந்த வித்தியாசமும் இல்லை, நம்பிக்கையில்லாமல் இறக்கும் ஒருவரை மட்டுமே பார்த்து நாம் வாழ்கிறோம் – காலிப்,” என்றும் பதிவிட்டுள்ளார்.
அணியின் கேப்டனுக்கே கொரோன உறுதி….மகளிர் கிரிக்கெட் அணி அதிர்ச்சி….தற்போதைய நிலை என்ன?\nIndia women T20 captain Harmanpreet Kaur tests COVID-19 positive.\nலக்னோ: இந்திய மகளிர் டி20 அணியின் கேப்டன் ஹர்மன் ப்ரீத் கவுருக்கு கடந்த4நாட்களாக லேசான காய்ச்சல் இருந்ததை தொடர்ந்து கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் மீண்டும் அதிகரித்து வரும் கொரோனா பரவலால் பொதுமக்கள் மட்டுமின்றி கடும் பாதுகாப்புடன் வைக்கப்பட்டிருக்கும் விளையாட்டு வீரர்களும் பரவத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் தனக்கு கொரோனா உறுதியாகியுள்ளதாக இந்திய டி20 அணியின் கேப்டன் ஹர்மன் ப்ரீத் கவுர் தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.\nஇந்தியாவில் கடந்த சில மாதங்களாக கட்டுப்பாட்டில் இருந்து வந்த கொரோனா வைரஸ் மீண்டும் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. இதனால் சினிமா நட்சத்திரங்கள், அரசியல் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள் என பல்வேறு பிரபலங்களும் பாதிப்படைந்து வருகின்றனர். அந்த வகையில் சமீபத்தில் இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர கிரிக்கெட் வீரர்கள் சச்சின், யூசப் பதான்,பத்ரிநாத் உள்ளிட்டோருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டது.\nஇந்நிலையில் கடும் பாதுகாப்பு வைக்கப்பட்டிருந்த இந்திய மகளிர் அணி கேப்டன் ஹர்மன் ப்ரீத் கவுருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர் கடைசியாக தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் பங்கேற்றார்.காயம் காரணமாக அந்த அணிக்கு எதிரான 20 ஓவர் போட்டி தொடரில் இருந்து விலகினார். அதன் பின்னர் கடந்த4நாட்களாக சிறிய காய்சல் ஏற்பட்டதாகவும், அவருக்கு செய்த பரிசோதனையில் இன்று கொரோனா உறுதியாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.\nஇதனைத்தொடர்ந்து லக்னோவில் உள்ள அவரது வீட்டில் அவர் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் தொடர்ச்சியாக ஹர்மன்ப்ரீத் கவுருக்குப் பரிசோதனைகள் நடத்தப்பட்டன. இதனால் கொரோனா பாதுகாப்பு வளையத்தை விட்டு வெளியேறிய பிறகே அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கும் என்று கூறப்படுகிறது.\nஇதுகுறித்து ட்வீட் செய்துள்ள ஹர்மன் ப்ரீத் கவுர், எதிர்பாராத விதமாக எனக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. நான் இப்போது நலமாக இருக்கிறேன். மருத்துவர்களின் ஆலோசனை படி தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். என்னுடன் கடந்த7நாட்களாக தொடர்பில் இருந்தவர்களும் பரிசோதனை செய்து கொள்வது அவசியம். உங்கள் அன்பினாலும், கடவுளின் அருளினாலும் பூரண குணமடைந்து விரைவில் களத்திற்கு திரும்புவேன் என தெரிவித்துள்ளார். அவருக்காக ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.\nஇதேபோல் சமீபத்தில் ராய்ப்பூர் மற்றும் மும்பையில் நடந்த சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு உலக சீரிஸ் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய ஜாம்பவான் அணியின் கேப்டன் சச்சின் தெண்டுல்கர் மற்றும் அந்த அணியில் அங்கம் வகித்த முன்னாள் வீரர்கள் யூசுப் பதான், பத்ரிநாத் ஆகியோர் கொரோனா பாதிப்புக்கு ஆளானார்கள்.\nBe the first to comment on "அணியின் கேப்டனுக்கே கொரோன உறுதி….மகளிர் கிரிக்கெட் அணி அதிர்ச்சி….தற்போதைய நிலை என்ன?"
இயக்கத்தின் ஆன்மா – உயிர்ப்பு சக்தி : சத்தியாகிரகம்\n(டெலிகாம் இதழ் தலையங்கம்)\nசத்தியாகிரகம் காந்திய போராட்டத்தின் ஒரு வடிவம் என அனைவரும் அறிவோம். அது ஒத்துழையாமையையும், சிவில் சட்ட மறுப்பையும் உடன் அழைத்து வரும். அந்தப் புதிய ஆயுதத்தை முதலில் தென்னாப்பிரிக்காவில் பயன்படுத்திய காந்தி, இந்தியாவில் அதனை இன்னும் ஆழமாகச் சோதித்துச் சுதந்திரத்தைச் சாதிக்க, லட்சம் லட்சமாய் மக்களை இயக்கத்தின் பால் ஈர்த்தார். இந்தவகைப் போராட்டம் ஒருவரை வீரஉணர்ச்சி பெற வைக்கிறது. எதற்கு வீரம்? எதிரியை வெட்டி வீழ்த்த அல்ல, உண்மையை ஓங்கி ஒலித்து, கோரிக்கையின் சத்தியத்தை நிலைநாட்ட; சர்வபரித் தியாகத்திற்கும், எத்தகைய இன்னல்களையும் தாமே மனமுவர்ந்து ஏற்கும் நெஞ்சுரத்தைப் பெறுவதற்கு; சத்தியாகிரகிகளின் ஒரே நம்பிக்கை, தங்களின் சத்தியாகிரகம், தங்கள் கோரிக்கையின் நியாயம் வென்றே தீரும் என்பதுதான். சத்தியாகிரகத்தின் நோக்கம் சத்தியத்தை, உண்மையை நிலைநாட்டுவதுதான்.\nநம்முடைய பிரச்சனையைப் பொருத்தவரை சத்தியம் என்பது, BSNL நிறுவனத்தின் நட்டத்திற்குக் காரணம், நிச்சயமாக ஈடுபாட்டோடு உழைக்கும் இரண்டு லட்சம் ஊழியர்கள் அல்ல என்பதை உரக்க உலகத்திற்குச் சொல்வதுதான். நட்டத்திற்குக் காரணம், அரசின் கொள்கைகள்; நட்டத்திற்குக் காரணம், பொதுச் சொத்துக்களின் முதலீட்டில் முதலாளிகளின் கழுத்தறுக்கும் போட்டி மூலம் வாரிச்சுருட்டும் லாப வேட்டையும், மோசமான நிர்வாகமும்தான். ஊழியர்களின் தவறு ஏதுமில்லை; அவர்கள் தொலைத்தொடர்புத் துறையில் மாறிவரும் காட்சிகளுக்கேற்ப –எந்தவித முறையான பயிற்சியையும் புதிய தொழில்நுட்பத்தில் தராது போனாலும்-- எந்தப் பணியையும் ஏற்றுச் செய்வதற்கு சித்தமாகவே உள்ளார்கள்.\nஇந்தச் சூழ்நிலையில் BSNL--ன் அனைத்துச் சங்கங்களும், அஸோசியேஷன்களும் தங்களுக்குள் ஆழமாக விவாதித்து, காந்தி நினைவு நாளில் சத்தியாகிரகப் போராட்டத்திற்கும், DOT அலுவலகம் நோக்கிப் பேரணி இயக்கத்திற்கும் அறைகூவல் விடுத்துள்ளனர். உடனடியாகத் தீர்வு காண வேண்டும் என வற்புறுத்தி முன் வைத்துள்ள கோரிக்கைகள்: ஊதிய மாற்றம், அரசின் துணை டவர் கம்பெனி முடிவைத் திரும்பப் பெறுதல், VRSவிருப்ப ஓய்வுத் திட்டத்தைக் கைவிடுதல் மற்றும் ஓய்வுபெறும் வயதை 58 ஆகக் குறைக்கும் எந்த முடிவையும் கைவிடுதல் என்பதாகும்.\nஜனவரி 2017லிருந்து 15 சதவீத ஃபிட்மெண்ட் பலனுடன் ஊதிய மாற்றம் என்பது பல கூடுதல் அம்சங்களைச் சுட்டிக் காட்டுவது. BSNL நிர்வாகமோ அதிகாரிகளுக்கான தங்கள் சிபார்சுகளை DOT–க்கு அனுப்பி வைத்துள்ளதாக விளக்கம் கூறுகிறது; ஆனால் அந்தச் சிபார்சுகள் யாவை, அவை எந்த அம்சங்களின் அடிப்படையில் முடிவெடுக்கப்பட்டன என்பது குறித்து நமக்குத் தகவல் ஏதும் இல்லை.\nஇன்றைக்குள்ள DPE--வழிகாட்டுதல்களின்படி BSNL போர்டுக்கு அது பற்றி நடவடிக்கை எடுக்கும் எந்த அதிகாரமும் கிடையாது. அந்த DPE--வழிகாட்டுதல்களைப் பரிசீலித்துத் தங்கள் சிபார்சுகளை வழங்க நடவடிக்கை எடுக்கும்படி, DOT ஒப்புதல் தந்து, அதனை BSNL--க்கு அனுப்பியுள்ளதா என்பதும் நமக்குத் தெரியாது. அப்படியே BSNL சிபார்சுகளில் எந்தவொன்றையும் ஏற்று மேல்நடவடிக்கை எடுக்க குடியரசுத் தலைவரின் ஒப்புதல் குறிப்பாணையை வழங்கும் அதிகாரம் DOT--க்கு இல்லை. அந்த அதிகாரம் அமைச்சரவைக்கே உள்ளது. அதுவும் அமைச்சரவையின் முடிவையும், அதையொட்டி வெளியிடப்பட்ட DPE—வழிகாட்டுதல்நெறிகளையும் மீறிச் செயல்பட முடியுமா?\nஆகவே செய்ய வேண்டியது என்ன? DOT அமைச்சரவைக் குறிப்பு ஒன்றைத் தயாரித்து இரண்டு அம்சங்களில் BSNL--க்கு விலக்குப் பெற முயற்சிக்க வேண்டும். ஒன்று, வரிகட்டுவதற்கு முந்தைய லாபம் PBT என்பதோடு ஊதிய மாற்றம் இணைக்கப்பட்டதிலிருந்து விலக்கு ; இரண்டு, 15 சதவீத ஃபிட்மெண்ட் பலனுடன் கூடிய ஊதிய மாற்றத்திற்கானச் செலவை வரிகட்டுவதற்கு முந்தைய லாபம் PBT யின் மேல் உச்சவரம்பு சதவீதத்துடன் இணைப்பதிலிருந்து விலக்கு.\nஅதிகாரிகள் அல்லாத ஊழியர்களின் (நான்--எக்ஸிகியூடிவ்) 15% கூடிய ஊதியமாற்ற உடன்பாடு என்பது பல நடைமுறைகளை உள்ளடக்கியது. அதற்கு BSNL நிர்வாகம் ஊதிய மாற்று இருதரப்பு பேச்சுவார்த்தைக் குழு ஒன்றை அமைக்க வேண்டும். அல்லது தற்போது அதிகாரிகளுக்காக அமைக்கப்பட்டுள்ள குழுவையே அங்கீகரிக்கப்பட்ட சங்கப்பிரநிதிகளுடன் பேச்சுவார்த்தை துவக்க அனுமதிக்க வேண்டும். BSNL அதற்காகத் தாங்கள் ஏற்கனவே DOT--யை வேண்டியுள்ளோம் எனச் சொல்கிறது. அப்படி அந்தக்குழு சங்கங்களுடன் பேச்சு நடத்தி உடன்பாடு காண வேண்டும். புதிய ஊதிய விகிதங்களை முடிவு செய்து அதை 15% பலன்களோடு பொருத்தி புதிய ஊதிய நிர்ணயம் செய்யவேண்டும். அந்த உடன்பாட்டை DOT--யின் ஒப்புதலுக்கு அனுப்பி தேவையான குடியரசுத் தலைவர் குறிப்பாணையை BSNL--க்கு வழங்கிட வேண்டும்.\nதுரதிருஷ்டவசமாக, நட்டத்தை நோக்கி நடக்கும் எந்த நிறுவனத்தின் ஊதிய மாற்றமும், சம்பந்தப்பட்ட அமைச்சரகத்தினுடைய அந்நிறுவனத்திற்கான மறுபுத்துயிர்ப்புத் திட்டங்களை வரையறை செய்து, திட்ட ஒப்புதல் பெறுதலுடன் முடிச்சுப் போடப்பட்டிருக்கிறது. நம்மைப் பொறுத்தவரை அது DOT துறையாகும். BSNL-க்கான அத்தகைய திட்டங்கள் எதையும் DOT தயாரித்திருக்கிறதா? அல்லது திட்ட ஒப்புதல் பெறப்பட்டுள்ளதா என்பதும் நமக்குத் தெரியாது. ஆனால்BRPSC பொதுத்துறை மறுகட்டமைப்பு போர்டின் விருப்பத்திற்கிணங்க, நிர்வாகமும் DOT யும் அந்த முயற்சியில் இறங்கி டெலாய்டிஇ ஆலோசனைக் குழுவின் சிபார்சுகள் பெறப்பட்டுள்ளன என்று கூறுகிறது.\nதனி துணை டவர் கம்பெனி\nஅரசாங்கம் தற்போது முடுக்கி விட்டுள்ள தனி துணை டவர் கம்பெனி நடவடிக்கைகள், BSNL நிறுவனத்தின் பொதுமக்கள் உரிமையான கோபுரங்கள் சொத்தின் எதிர்காலம் பற்றி மிகுந்த பல சந்தேகங்களை எழுப்புகிறது. IAS அந்தஸ்து உடைய அதிகாரியின் தலைமையில் தனி துணை டவர் கம்பெனி அமைக்கப்பட்டுள்ளதானது ஒரு அபாய சமிக்கையே. டவர் கம்பெனிக்கான நிர்வாக போர்டு BSNL போர்டின் அதிகாரத்தை மீறி தனிச்சையாகச் செயல்படத் துவங்கிவிடும். IAS அதிகாரியின் தலைமையில் என்னும்போது நிச்சயம் அது தாய் நிறுவனமான BSNL-–ன் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கப்போவதில்லை. கோபுரங்களின் பட்டா உரிமை மட்டும் BSNL-லிடம் முழுமையாக இருப்பதாகச் சொல்லப்படும், ஆனால் பயிர் வைக்கும் வேளாண்மை BSNL---ன் விருப்பத்திற்கு இருக்காது. கோட்டு என்னுடையது என நாம் சொல்லிக் கொண்டிருக்கலாம், ஆனால் அதை அணிந்து கொள்ளும் மாப்பிள்ளை வேறொருவராக இருப்பார். DOT--யும் BSNL--நிர்வாகமும் இதுபற்றி எல்லாம் வெளிப்படையாக இருப்பதில்லை; அங்கீகரிக்கப்பட்டச் சங்கங்கள் அசோஸியேஷன்களுடன் ஆரோக்கியமான விவாதங்களையும் நடத்துவதில்லை. ஆரோக்கியமற்ற இந்தத் தொழிலுறவுச் சூழல் நம்மை மிகவும் கோபமூட்டும் செயலேயாகும்.\nVRS மற்றும் ஓய்வு வயது 58\nவிருப்ப ஓய்வுத் திட்டம் மற்றும் ஓய்வு பெறும் வயதை 58 ஆகக் குறைக்கும் பிரச்சனை MTNL--ஐப் பொருத்தவரைப் போதுமான அளவு விவாதங்கள் DOT மட்டத்தில் நடந்துள்ளன; அது குறித்து அறிக்கைகளும்கூட வெளியிடப் பட்டுள்ளன. ஆனால் BSNL--ஐப் பொருத்தவரை ஓய்வு பெறும் வயதை 58 ஆகக் குறைக்கும் பிரச்சனை BSNL நிறுவனத்தின் புத்துயிர்ப்புத் திட்டத்தின் ஒரு பகுதியா அல்லது தனியாக அந்தப் பிரச்சனை துவக்கப்பட்டுள்ளதா எனத் தெரியவில்லை. ஆனால் DOT--யோ BSNL—லோ, அமைச்சரவையின் ஒப்புதல் பெறாமல், அத்தகைய முடிவெடுக்க முடியாது. குவியலாக நீடிக்கும் இந்தக் குழப்பங்கள் DOT/BSNL மட்டத்தில் தொடர்ச்சியாக விவாதித்தால் மட்டுமே நீங்கும்.\nதீர்வுக்கான போராட்டம் சத்தியாகிரகம்\nதொழிலாளர்களின் ஒன்றுபட்ட இயக்கங்களே இவற்றிற்குத் தீர்வுகாணும் நிச்சயமான வழிமுறை என்பதை NFTE பேரியக்கம் எப்போதும் உணர்ந்து ஒற்றுமைப் பதாகையை உயர்த்திப் பிடிக்கும். அதே நேரத்தில் தீர்வை நோக்கி நகராது நீடிக்கும் எந்த இணைந்த போராட்டத்தையும் தொழிலாளர்கள் காலஓட்டத்தில் கண்டுகொள்வதில்லை என்பதையும் கவனத்தில் கொள்ளும். DOT--யையும் BSNL நிர்வாகத்தையும் ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தை மேஜைக்கு வரச்செய்வதே இன்றைய தலையாய கடமை. நமது இயக்கத்தின் மரபார்ந்த வரலாறு பேச்சுவார்த்தை, பேச்சுவார்த்தைக்கானப் போராட்டம், பேச்சுவார்த்தில் தீர்வு காண்பது என்பதே. அதுவே காந்தியின் சத்திய சோதனையாய் நாம் சோதித்து வெற்றி பெற்ற நிச்சயமான வழிமுறை.\nஅந்த நெடிய பாரம்பரித்தின் அறைகூவலே இன்றைய சத்தியாகிரகப் போர்முழக்கம். அதன் பேரொலி ”செய் அல்லது செத்து மடி”, ”அமைதிவழிப் போராட்டம் வலிமையானவர்களின் ஆயுதம்”, எல்லாம் காந்தி மகாத்மா கூறியது.\nசத்தியாகிரகத்தின் வெற்றி பெருந்திரள் பங்கேற்பே! நாடு நகரமென நாற்புறமிருந்தும் ஊழியர்களைத் திரட்டி உற்சாகத்துடன் பங்குபெறச் செய்வோம்! தேக்கமுடைத்து முன்னேறுவோம், உண்மையை நிலைநாட்டி!\n“ சட்டமறுப்பு (சத்தியாகிரகம்) புனிதக் கடமையாகிறது,\nஅரசு ஊழல் மிக்கதாய் அல்லது சட்டத்திற்குப் புறம்பாய்\n” மக்கள் கருத்தைத் திரட்டும் ஒரு வழிமுறையே சத்தியாகிரகம்!\nஅது சமூகத்தின் சகலபகுதியினரையும் ஈர்த்து, கடைசியில்,\n(அதிகாரத்தால்) அதனை எதிர்க்க முடியாததாக\nஎழுச்சி கொள்கிறது ”\n” சத்தியாகிரகி எல்லையற்ற பொறுமைசாலி!\nமற்றவர்களின் மீது எல்லையற்ற விசுவாசம் கொண்டவன்!\nஏராளமாய் எதிர்கால நம்பிக்கை உடையவன்”\n” இயக்க நடவடிக்கையில் ஈடுபடாமல், நீங்கள்\nசென்றடையப் போகும் இடம் எதுவுமில்லை!”\n--- மகாத்மா காந்தி பழமொழிகள்\nPDF வடிவில் காண/நகல் எடுக்க\nPosted by nftecuddalore at 21:11\nபணி ஓய்வு நாள் சிறக்க வாழ்த்துகிறோம்!!<!--[if gte ...\nஅனைத்து சங்க கூட்டமைப்பு சார்பாகஜனவரி 30 முதல் – ப...\nஇயக்கத்தின் ஆன்மா – உயிர்ப்பு சக்தி : சத்தியாகிரகம...\nBSNL அனைத்துத் தொழிற்சங்கங்கள் கூட்டமைப்புகடலூர்மா...\nபுதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்துக்கள்.....\nவருந்துகிறோம் நம்முடன் பணிபுரியும் தோழர் R.நந்தக...\nதோழர்களே.வரும்12-01-2018 அன்று நடைபெறவிருந்த நமது...\nBSNLநிறுவனத்தில் உள்ள 66000 செல் கோபுரங்களைப்பிரித...\nமாவட்ட செயற்குழு ஒத்தி வைக்கபடுகிறது.. நமது நிறுவ...
மக்களின் நம்பிக்கைகளும் பழக்க வழக்கங்களும் இலக்கியங்களில் உத்திகளாகவும் பயன்படுத்தப்படுகின்றன, காக்கை நாம் அன்றாடம் பார்க்கிற பறவை. அதனைக் குறித்துச் சில நம்பிக்கைகளும் பழமொழிகளும் வழக்கில் உள்ளன. ‘காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு’ என்பது பழமொழி. காக்கைக்கு உணவளித்து விட்டு பிறகு உண்ணும் பழக்கமும் ஒரு சில சமூகத்தாரிடம் காணப்படும் சமயப் பழக்கமாகும்.\nநமது மூதாதையினரே காக்கை வடிவத்தில் வந்து அவ்வுணவை அருந்தி விட்டுச் செல்வதாக நம்பி மக்கள் நிறைவு கொள்கின்றனர். காக்கை நம் வீட்டு முற்றத்தில் வந்து கரைந்தால் விருந்தாளி யாரோ வரவிருப்பதை முன்கூட்டியே அறிவிப்பதாக நம்புகின்றனர். இது மூடநம்பிக்கையாகவே இருந்துவிட்டுப் போனாலும் மிகப் பழங்காலமாகவே இருந்து வருகிறது. இலக்கியங்களில் உத்தியாக இடம் பெற்றுள்ளது. பிற மொழி இலக்கியங்களிலும் இவ்வுத்தி காணப்படுகிறது.\nகாக்கைப்பாடினியார் என்று ஒரு சங்ககாலப் புலவர் காக்கையைப் பாடியதனால் காக்கைப்பாடினி ஆனார்; காக்கைக் கரைந்தால் விருந்தாளி வருவர் என்ற நம்பிக்கையில் ஓர் அகப்பாடல் புனைந்துள்ளார். பாடல் முல்லைத் திணைக்குரியது. தோழி கூறுவதாக அமைந்துள்ளது. தலைவியைப் பிரிந்து சென்ற தலைவன் தன் வினை (பணி) முடித்துத் திரும்பி வந்தான்.\nஅவன் தலைவியைப் பிரிந்துசென்ற காலத்தில் அவளைத் தோழி நன்றாகக் கவனித்துக் கொண்டாள். ‘தலைவியை நன்கு ஆற்றுவித்திருந்தாய்’ என்று அவன் தோழியைப் புகழ்ந்துரைத்தான். அதற்குத் தோழி பதில் கூறுவதாகப் பாடல் அமைந்துள்ளது. பாடல் பொருள் பின்வருமாறு: ‘வலிமையான தேரையுடைய நள்ளி என்னும் வள்ளலது காட்டில் இடையர்கள் வாழ்ந்தனர். அவர்தம் பசுக்கள் நெய்யை உண்டாக்கின.\nஅந்த நெய்யோடு வெண்ணெல் அரிசியால் ஆக்கிய வெம்மையான சோற்றை ஏழு கலங்களில் இட்டு அவற்றைக் காக்கைக்கு அளித்தேன். அது எதற்காகவென்றால் என் தலைவியின் பெரிய தோள்களை நெகிழச் செய்த துன்பத்தை நீக்கும் பொருட்டாகும். விருந்தினர் வருமாறு கரைதலைச் செய்த காக்கைக்குரிய பலிச்சோறானது மிகவும் சிறிய அளவினதே ஆகும்.\nஎழுகலத்து ஏந்தினும் சிறிதென் தோழி\nவிருந்துவரக் கரைந்த காக்கையது பலியே (குறுந். 210)\nதலைவனுடைய வருகைக்குக் காக்கையின் கரைதல் நன்னிமித்தமாகும். அதனைச் செய்த காக்கைக்குத் தோழி சேரிடுகிறாள். தலைவியும் மகிழ்ந்து அமைதி கொள்கிறாள். பலிச் சோறானது சிறிய அளவினதே என்று கூறும் தோழியின் தன்னடக்கம் பொதிந்த பாடலாக விளங்குகிறது.\nஐங்குறுநூற்றிலும் காக்கை குறித்த நம்பிக்கை கொண்ட இன்னொரு பாடல் வந்துள்ளது. பாடல் தாய் கூற்றாக அமைந்துள்ளது. அவள் காகத்திடம் அதனை விளித்து வேண்டுகோள் விடுப்பதாகப் பாடல் செல்கிறது. “மாசில்லாத கரிய தூவியை உடைய காகமே! நீ அன்பு கொண்ட மரபினையுடைய உன் சுற்றத்தோடு உண்ணும் வழக்கத்தினை உடையாய்! நீங்கள் வயிறார உண்பதற்குப் பச்சை ஊன் கறிகளைக் கொண்டு சமைத்த அரிசிச் சோற்றைப் பொன் தட்டில் தருவேன். (நீ எனக்கோர் உதவி செய்ய வேண்டும்) என் மகளின் காதலன் வீரம் செறிந்த ஆண்மகன். அவன் அழகிய மகளை அழைத்துக் கொண்டு என்னிடம் (விரைவில்) வருவான் என்று கரைவாயாக” என்று தாய் வேண்டுகிறாள்.\nமறுவில் தூவிச் சிறு கருங் காக்கை\nவெஞ்சின விறல்வேற் காளை யோடு\nஅஞ்சில் ஓதியை வரக்கரைந் தீமே\nஉடன் போகிய தலைமகள் மீளற் பொருட்டு தாய் காகத்திற்குப் பராய்க்கடன் ஈத்தது’ என்று துறை விளக்கம் அமைந்துள்ளது.\nகாக்கை குறித்தான இந்த நம்பிக்கை ஓர் அபபிரம்சா பிராகிருதப் பாடலிலும் கையாளப்பட்டுள்ளது. ஆனால் பாடல் சற்று வித்தியாசமாக அமைந்துள்ளது. அதனைப் பார்ப்போம்.\n“காகம் கரைதலைக் கண்ட தலைவி அதனை விரட்டித் துரத்துகிறாள் (ஏனெனில் காகம் கரைதல் தலைவனுடைய வருகைக்கு நன்னிமித்தம் என்பது அவளுக்குத் தெரியும். ஆனால் அந்நேரத்தில் அவள் அதை நம்பவில்லை). அவ்வாறு காகத்தைத் துரத்திக் கொண்டேயிருக்கையில் தனது மெலிந்த கைகளிலிருந்த வளையல்கள் பாதி கழன்று தரையில் விழுந்தன.\nதிடீரென்று தன் தலைவன் வருவதைக் கண்ணுற்றாள். தலைவியின் உடலும் கைகளும் மகிழ்ச்சியில் பருத்துவிடுகின்றன. அதன் விளைவாக அவள் கையிலிருந்த மீதி பாதி வளையல்கள் உடைந்து சிதறுகின்றன”.1 இது அபபிரம்சா பாடல். காகம் தனக்குப் பொய்யான நம்பிக்கையூட்டுவதாகக் கருதி தலைவி காகத்தை விரட்டுகிறாள்.\nதமிழ்ப் பாடல்களில் பறவைகளுக்கு (காகத்திற்கு) உணவளிக்கும் பண்பு வெளிப்படுகிறது. ‘வெண்ணெல் வெஞ்சோறு’ என்ற தொடரில் மனிதருக்கு சூடாக உணவு பரிமாறும் விருந்தோம்பல் பறவையிடத்திலும் காட்டுவதைக் காணமுடிகிறது.\nமாசில்லாத கரிய தூவியை உடைய காகம் என்றும், அவை உறவுகளோடு உண்ணும் உயர்ந்த பண்புடையவை என்றும் அழகாக வர்ணிக்கப்படுகின்றது. கலம் என்ற பெயர் பொலம் புனைகலம் (பொன்னாலாகிய வட்டில்) என்றும், காளை என்ற பெயர் ‘வெஞ்சின விறல் வேல் காளை’ என்றும் ஓதி என்ற பெயர் ‘அஞ்சில் ஓதி’ என்றும் சிறப்பான அடைமொழிகளைப் பெற்று வந்துள்ளன.\nஇலங்கு வளை நெகிழ்தல்\nமேற்கண்ட அபபிரம்ச பிராகிருத பாடலில் ‘வளையல் நெகிழ்தல்’ குறித்தும் வந்துள்ளது. நமது அகப்பாடல்களில் பல இடங்களில் வளைநெகிழ்தல் குறித்து வந்துள்ளது. அதுகுறித்தும் தொடர்ச்சியாகக் காண்போம். பழந்தமிழ் மகளிர் வளையல் அணிந்தனர். இதுகுறித்த ஆதாரங்கள் பல பாடல்களில் வருகின்றன. ஒரு பாடலில் தலைவன் தலைவியின் அழகைக் குறிப்பிடும்போது இளமையுடையவள்; ஒளி பொருந்திய பற்களை உடையவள்; வளையல் அணிந்த கையை உடையவள் என்று வர்ணிக்கிறான்.\nவளையுடைக் கையள் எம்அணங்கியோளே (குறுந். 119)\nவளையலின் பயன்பாடு அதிகமாக இருந்ததனால் உடைந்த வளையலைப் பிறை நிலாவுக்கு உவமையாகவே கூறியுள்ளார் ஒரு புலவர் (குறுந். 307). தலைவனைப் பிரிந்த தலைவியின் உடல் மெலிவதும் அதனால் கைவளைகள் நெகிழ்ந்து மண்ணில் விழுவதும் அகப்பாடல்களில் அடிக்கடி காணமுடிகிறது.\n‘சங்கினை அறுத்துச் செய்யப்பட்ட கைவளை உடல் மெலிவினால் நெகிழ்கிறது. நாள்தோறும் இமை பொருந்துதல் இல்லாமையால் உறக்கமின்றி கலங்குகிறேன்’ (குறுந். 11) என்று தலைமகள் சொல்கிறாள். இன்னொரு பாடலில் தலைவனால் ‘என் கைகளிலுள்ள வளைகள் கழல மேனியில் பசலை பரக்கப் பெற்றேன்’ (குறுந். 371) என்று புலம்புகிறாள்.\n‘காமநோய் வளர்பிறையைப் போல மேலும் மேலும் வளர்ந்து பெருகித் தோளில் அணிந்த வளையலை நெகிழச் செய்து துன்பத்தைத் தருகிறது’ (குறுந். 289) என்று இரங்குகிறாள். இது மற்றொரு பாடல்: ‘என் வளைகள் நெகிழ்ந்தன; தோள்கள் மெலிந்தன; என் நாணமும் முன்பே கழிந்தது இனி விடுவதற்கு ஒன்றுமில்லை’ (குறுந். 239) என்று கூறித் திருமணம் செய்துகொள்ள வற்புறுத்துகிறாள். இவையாவும் குறுந்தொகையில் வரும் செய்திகள்.\nஐங்குறுநூற்றில் ‘வளைப்பத்து’ என்ற பகுதியில் வளை அணிகலன் குறித்து செய்திகள் இடம்பெற்றுள்ளன. ‘கடல் சங்கினை அறுத்துச் செய்த வளையலை முன்னங்கையில் அணிந்திருப்பவள்’ (ஐங். 191) என்று தலைவன் கூறுகிறான். ‘அணிந்து கொள் என்று நீ தந்த வளையல்கள் நல்லவைதானா (கழன்று போகும்படி நீ பிரியாமல் இருப்பாயா’ - என்பது பொருள்) என்று தோழி வினவுகிறாள் (ஐங். 193). ‘சங்கில் அறுத்த ஒளி வீசும் வளையலை உடையவள் தலைவி’ (ஐங். 196) என்று மற்றுமோர் இடத்தில் தோழி விவரிக்கிறாள்.\n‘வளையல்களைக் கழலச் செய்தவன் தலைவன்’ (ஐங்.199) என்று இன்னொரு பாடலில் வருகிறது. சங்கப் பாடல்கள் அனைத்திலும் தேடினால் வளையல்கள் குறித்த விவரங்கள் ஏராளம் கிடைக்கும்.\nஒரு ஐங்குறுநூறு பாடல் மட்டும் மேலே எடுத்துக்காட்டிய அபபிரம்சா பாடலைச் சற்று ஒத்துக் காணமுடிகிறது. ‘மரக்கலங்களைச் செலுத்தும் துறையையுடைய தலைவன் பிரிந்திருக்கிறான் என்று கழன்றோடிய என் வளையல், வந்திருக்கிறான் என அறிந்து வீங்கும் என் தோளில் செறிந்து கிடக்கின்றன’ என்று தலைவி கூற்றாக வந்துள்ளது.\nவீங்கின மாதோ தோழி-என் வளையே (ஐங். 192)\nமெலிந்தபோது கழன்று விழும் வளையல்கள் தலைவனைக் கண்டவுடனே (கைகள் பருத்ததால்) வெடித்துச் சிதறின என்பதும் செறிந்தன என்று சொல்வதும் மிகைபடக் கூறல் (Hyperbole) என்ற இலக்கிய உத்தியில் அமைந்துள்ளன.\nஇன்னொரு அபபிரம்சா பாடல் வளை நெகிழ்தல் குறித்து அருமையான கற்பனையுடன் அமைந்துள்ளது.\n“வளையல்கள் தரையில் நெகிழ்ந்துவிடும் என்ற அச்சத்தினால் தலைவி கைகளை மேலே உயர்த்தியவாறே நடக்கிறாள். (அவ்வாறு செய்வது) தலைவனைப் பிரிந்து வாழும் பிரிவு என்கிற பெரிய குளத்தின் ஆழத்தைப் பிறருக்கு உணர்த்துவது போல (அக்காட்சி) இருக்கிறதாம்.2 நீர்நிலைகளில் நீந்தத் தெரியாதவர்கள் மூழ்கிவிட்டால் கைகளை உயர்த்தியவாறு தன்னைக் காப்பாற்றுமாறு சைகை செய்வரல்லவா? அத்தகைய ஒரு காட்சியைப் புலவர் நயத்துடன் வெளிப்படுத்தியுள்ளார்.\nசெறிவளை (குறுந். 190), இறைவளை (குறுந், 289), இலங்குவளை (குறுந். 50), கோடு ஈர் இலங்கு வளை (குறுந். 11,31) ஆய்வளை, எல்வளை என்றெல்லாம் சிறந்த அடைமொழிகளுடன் வளையல் என்ற சொல் சிறப்பிக்கப்பட்டுள்ளது. அபபிரம்சா பாடல்கள் வேறு வகையில் சிறப்பானதாக காணப்படுகின்றன.
ரியல்பிளேயர் - RealPlayer - புத்தம்புதிய பதிப்புகளை இலவசமாகப் பதிவிறக்கம் செய்க 2020 ⭐⭐⭐⭐⭐\nரியல்பிளேயர் - RealPlayer\nசமீபத்தியப் பதிப்பு 18.1.19.201\nபயன்பாடுகள் >‏ ஒலியும் இசையும் >‏ ஊடக இயக்கிகள் >‏ ரியல்பிளேயர் - RealPlayer\nரியல்பிளேயர் - RealPlayer புதிய பதிப்பு18.1.19.201\nரியல்பிளேயர் - RealPlayer 18.1.19.201\nரியல் பிளேயர் 1990 களின் மத்தியில் திறந்த சந்தையில் வெளியான பொழுது புதிய சாதனைகளைப் படைத்தது. வேறுபட்ட வடிவமைப்புகள் கொண்ட அசைபடங்களையும் ஒலிக்கோப்புகளையும் பயனாளிகள் இரசிக்க இது உதவியது.\nரியல்பிளேயர் இன்றும் முண்ணனி ஊடக இயக்கிகளில் ஒன்றாகவேத் திகழ்கிறது. இதன் போட்டியாளர்கள் இதன் சந்தையை வேகமாக அபகரிக்கத் தொடங்கினாலும், இது இன்றும் பலராலும் அங்கீகரிக்கப்படும் ஊடக இயக்கி மென்பொருளாகும்.\nஇணைய அசைபடங்களை இயக்குகிறது மற்றும் வடிவமாற்றம் செய்கிறது.\nரியல்பிளேயர், திரைப்படங்களைப் பார்க்கவும், இணையத்திலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளவும், புத்தக அடையாளமிட்டு வைத்துக் கொள்ளவும் உதவுகிறது. இது வேகமாகச் செயல்படுவதோடு, இணையத்தில் உள்ள ஆயிரக்கணக்கான அசைபடங்களில் நீங்கள் விரும்புவதைத் தேர்ந்தெடுக்கவும் உதவுகிறது. இந்த அசைபடங்களை, எளிய, சீரான முறையில் ரியல்பிளேயர், ஒருங்கிணைக்கிறது. மேலும் இவற்றைக் கீச்சொலி(ட்வீட்டர்) மற்றும் முகப்புத்தகம் போன்ற, சமூக ஊடகக் கணக்கு வழியாக பகிர்ந்து கொள்ளும் வசதிகளையும் தருகிறது.\nரியல் பிளேயர், பலவகைக் கோப்பு வடிவங்களை ஒன்றிலிருந்து இன்னோன்றாக மாற்றிக்கொள்ள உதவுகிறது. உங்களது அசைபடக் கோப்புகளை கணினியில் இருந்து கைப்பேசிகளுக்கு மாற்றிக் கொள்ளவும் இது உதவுகிறது.\nரியல்பிளேயர் - RealPlayer மென்பொருளுக்கு மாற்று – மென்பொருள் ஒப்பீட்டு வரைவு\nபல அம்சங்கள் கொண்ட ஒரு ஊடக இயக்கி. நீலக்கதிர் வட்டு படிக்கவல்ல, ஒரு ஊடக இயக்கி. குறி-ஆக்கி-நீக்கிகளுடன் கட்டுமானம் செய்யப்பட்ட, ஒரு பல்லூடக இயக்கி. அசைபடங்கள் மற்றும் இசையை இயக்குகிறது.\n0\t 6\t 5\t 4\nரியல்பிளேயர் - RealPlayer மென்பொருளைப் பதிவிறக்கம் செய்த பயனாளிகள், இந்த மென்பொருள்களையும் பதிவிறக்கம் செய்தார்கள்\nஉங்களுக்கு ரியல்பிளேயர் - RealPlayer போன்ற மற்ற பயனாளிகள் விரும்பிய மென்பொருட்களை பரிந்துரைப்பதில் மகிழ்கிறோம். ரியல்பிளேயர் - RealPlayer மென்பொருளுக்கு ஒத்த மென்பொருட்கள்:\nஉளவு மற்றும் விளம்பரப் பொருட்களின்றி ரியல் பிளேயரிலிருந்து கோப்புகளை FLV வடிவிற்கு மாற்றுங்கள்.\nரியல் பிளேயரிலிருந்து ஷாக் வேவிற்கு கோப்புகளை எளிதில், விரைவில் மாற்றுங்கள்.\nஒரு வேகமான மற்றும் எளிய ஊடக இயக்கி.\nசிறந்த வட்டு பதிவெரிப்பான்.\nகுறுவட்டு இயக்கித் துறையின் முதல் நினைவுகள்.\nவெறுப்பேற்றும் பலவிளம்பரங்கள் இருப்பது மிக மோசமானது.\nமதிப்பீடு:6( 24605)\nதரவரிசை எண் ஊடக இயக்கிகள்: 1\nஇறுதியாக மதிப்பீடு செய்த தேதி: 27/02/2020\nகோப்பின் அளவு: 62.60 MB\nகடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது: 6/12/2019\nபதிவிறக்க எண்ணிக்கை (தமிழ்): 10\nபதிவிறக்க எண்ணிக்கை (உலகளவில்): 156,431\nரியல்பிளேயர் - RealPlayer 15.0.6.14 (ஆரம்பப் பதிப்பு)\nரியல்பிளேயர் - RealPlayer 18.1.18.202 (முந்தையப் பதிப்பு)\nபடைப்பாளி பெயர்: : RealNetworks\nRealNetworks நிறுவனத்தின் மென்பொருள் எண்ணிக்கை : 1\n1. ரியல்பிளேயர் - RealPlayer\nரியல்பிளேயர் - RealPlayer நச்சுநிரல் அற்றது, நாங்கள் ரியல்பிளேயர் - RealPlayer மென்பொருளின் சமீபத்திய பதிப்பை 50 நச்சுநிரல் தடுப்பான் மென்பொருட்களைக் கொண்டுச் சோதித்ததில் எந்த நச்சுநிரல் பாதிப்பும் அறியப்படவில்லை.
எஸ்.பி.பியின் அந்த சூப்பர் ஹிட் பாடலை பாடச் சொல்லி விஜய்யை தொந்தரவு செய்தேன்- வைரலாகுது வனிதா விஜயகுமாரின் ட்வீட் - Cinemapettai\nஎஸ்.பி.பியின் அந்த சூப்பர் ஹிட் பாடலை பாடச் சொல்லி விஜய்யை தொந்தரவு செய்தேன்- வைரலாகுது வனிதா விஜயகுமாரின் ட்வீட்\nபிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் கடந்த 25ஆம் தேதி மாரடைப்பால் மருத்துவமனையில் மரணமடைந்த நிலையில் அவரது உடல் நேற்று போலீஸ் மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. எஸ்பிபியின் பண்ணை தோட்டத்தில் அவரது இறுதி சடங்குகள் நடந்தது. பலரும் நேரில் சென்று தங்கள் இறுதி மரியாதையை செலுத்தினர்.\nபல சினிமா நட்சத்திரங்கள் வீடியோ, சமூகவலைத்தள பக்கங்கள் வாயிலாக தங்களின் இரங்கல் செய்தி, SPB அவர்களின் நினைவுகள், பாடல்கள் பற்றி பதிவிட்டு வருகின்றனர்.\nvanitha vijakumar tweet\nஅந்தவகையில் எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த நடிகை வனிதா விஜயகுமார் ட்வீட் செய்தார். இன்று நடிகர் விஜய் குறித்தும் ட்வீட் செய்துள்ளார். நேற்று பாலசுப்பிரமணியத்தின் இறுதி சடங்கிற்கு விஜய் சென்று தனது மரியாதையை செலுத்தினார். அப்புகைப்படம் இணையதளங்களில் வைரலானது.\nவிஜய்யுடன் சந்திரலேகா படத்தில் நாயகியாக அறிமுகமானவர் வனிதா விஜயகுமார். அந்த காலகட்டத்தில் அர்ஜுனின் கர்ணா படத்தின் பாடல் செம ஹிட்.\n“எஸ்பிபி பாடிய மலரே மெளனமா பாடலை பலமுறை பாட சொல்லி விஜய்யை நச்சரிப்பேன். அவர் என்னை ஒரு மாதிரி பார்த்து விட்டு, பின்னர் எனக்காக பாடினார். நினைவுகள்.. ”\nஒரே ட்வீட்டில் எஸ்.பி.பியையும் விஜய்யையும் பற்றி பதிவிட்டு வைரலாகி வருகிறார் வனிதா விஜயகுமார். நீங்க நடத்துங்க மேடம் என்கின்றனர் நெட்டிசன்கள்.\nRelated Topics:SPB, vijay, இந்தியா, இந்தியா செய்திகள், இன்றைய சினிமா செய்திகள், இன்றைய செய்திகள், இன்றைய முக்கிய செய்திகள், எஸ்பி பாலசுப்பிரமணியம், சினிமா செய்திகள், செய்திகள், தமிழ் சினிமா, தளபதி விஜய், நடிகர்கள், நடிகைகள், பிக் பாஸ், மாஸ்டர், முக்கிய செய்திகள், வனிதா விஜயகுமார், விஜய் டிவி
திண்ணையில் நான் | நாகூர் மண்வாசனை\nCategory Archives: திண்ணையில் நான்\nஇந்த வாரத்து என் திண்ணை கட்டுரை\nபடிக்க (இங்கே) சொடுக்கவும்\nPosted by அப்துல் கையூம் on February 8, 2010 in திண்ணையில் நான்\nகவிராஜர்களின் பார்வையில் விலைராணிகள்\nநன்றி : திண்ணை Jan 1, 2010\nவிலைமாதரைப் பாடாத கவிஞர்களே உலகில் இல்லை எனலாம். ஒவ்வொரு கவிஞனின் கண்ணோட்டத்திலும்தான் எத்தனை மாறுபட்ட சிந்தனைகள்?\nஎதையும் கலைக் கண்ணோட்டதிலேயே நோக்கும் கவியரசர் கண்ணதாசன் தாய்லாந்தில் தான் கூடிக்குலாவிய ‘தாய்’க்கிளிகளை,\n“பொன்னடங்கிய பெட்டகம் கனி\nஎன்று வருணனை செய்வதோடு நிற்காமல், ஒரு படி மேலே சென்று\n“நெய்திரண்டன மேனியில் சில\nகொய்துகொண்டது கைவழி கலை\nகூடிநின்றது ‘தாய்க்’ கிளி”\nஎன்று சொற்சிலம்பம் ஆடுகிறார்.\n‘மறைக்க வேண்டியவற்றை எல்லாம் மறைக்காமல் எழுதுகிறோமே அதனால் நம் மதிப்பு பாழாகுமே’ என்றெல்லாம் அவர் கவலைப் பட்டதாகத் தெரியவில்லை.\nஆசைப்பட்டவளை அடைவதற்கு அருந்தமிழையே ஆயுதமாக்கிய இலக்கிய கர்த்தாக்களை என்னவென்றுத் திட்டித் தீர்ப்பது?\nகாளமேகப்புலவர் இஞ்சிகுடி என்ற ஒரு சிற்றூரில் கலைச்சி என்ற தாசியிடம் உறவு கொள்ள ஆசைப் பட்டாராம். இவரது ஆசைக்கு அவள் இணங்க மறுத்ததால், அவள் உதாசீனப் படுத்தி அறம் ஒன்றையும் பாடி விட்டார்.\nகுக்கலிச்சிக் கும்கலைச் சிக்கு.” என்று.\nஅவலட்சணம் பொருந்திய மூதேவி கலைச்சியை நாய்தான் விரும்பும் என்ற அர்த்தத்தில் பாடித் தொலைக்க, பயந்துப் போன கலைச்சி அவருடைய ஆசைக்கு சம்மதம் தெரிவிக்க, உடனே காளமேகம்\n“நஞ்சுகுடி கொண்டகணை நாலுந் தெரிந்துமதன்\nஇஞ்சிகுடி தன்னினும்வந்து எய்வானோ – விஞ்சு\nமுலைச்சிகரத் தால்அழுத்தி முத்தமிட்டுச் சற்றே\nகலைச்சிகரத் தால்அணைத்தக் கால்”.\nஎன்று ‘பெரிய மனது’ பண்ணி, ‘அந்தர் பல்டி’யடித்து அவளைப் புகழ்ந்து பாடினாராம் கவிஞர் காளமேகம்.\nபுதுக்கவிதை புறப்பெடுத்த யுகத்தில்\nஎன்ற நா.காமராசனின் வரிகள் இலக்கிய வட்டத்தில் பெரும் பரபரப்பையும் வாசகர்கள் மனதில் ஆழ்ந்த பாதிப்பையும் ஏற்படுத்தியது.\nராட்சஸ ராட்டினத்தில் அமர்ந்து சவாரி செய்கையில், மேலிருந்து கீழ் இறங்கும்போது, உள்ளுக்குள் ‘கிலுக்’ என்ற அதிர்ச்சியோடு தூக்கி வாரிப் போடும். சில கவிதை வரிகளும் இப்படித்தான். நம் மனதில் சொல்ல முடியாத ஒரு விளைவை நிகழ்த்தும்.\nபுதிய மாதவியின் வரிகளைப் படிக்கையில் காமப்பித்து பிடித்த ஆண்களை சம்மட்டியால் அடிப்பதைப் போலிருக்கிறது.\nஎன்கிறார் இந்தப் பெண் கவிஞர்.\n“விலங்குகளை விடக் கேவலமாகி இறைவனின் உயர்ந்த படைப்பான பெண்ணினத்தை காம இச்சையோடு பார்ப்பாரேயானல் அந்த ஆணினம் அடியோடு அழிந்து விடுவதே மேல் என்று நான் நினைப்பேன்” என்று எழுதுகிறார் மகாத்மா காந்தியடிகள்.\nகவிக்கோ அப்துல் ரகுமான் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றிய காலத்தில் தன்னிடம் பயின்ற மாணவர்களிடையே ஒரு போட்டி வைத்தாராம். அதாவது ஒரு விலைமாதுவின் சமாதியில் ஒரு வாசகம் எழுதவேண்டும். என்ன வாசகம் எழுதலாம் என்பதே அந்த போட்டி.\nமுதலாம் மாணவன் “பால்வினை நோய் விருட்சம்” என்ற சொற்றொடரை வழங்க, இரண்டாமவன் “சுக கிடங்கின் நித்திரை” என்று கூற\nமூன்றாம் மாணவன் “வாடகை மனைவியின் உறக்கம்” என்று கூறியிருக்கிறான்.\nஇறுதியான ஒரு மாணவன் சொன்ன வாசகம் : “இன்றுதான் இவள் தனியாக தூங்குகிறாள்”. பரிசு பெற்ற வாசகம் இதுதான்.\nபோகத்திற்காக தேகம் விலை பேசப்படுவது மாபெரும் சோகம். இச்சைக்காக பெண்ணினத்தையே கொச்சைப் படுத்தும் அவலம் இது. உடலுறவு என்பது உணர்வோடு சம்பந்தப் பட்டது. காசுக்காக மாசுபடுகிறது இங்கே கற்பு. ..“கற்பாம், மானமாம், கண்ணகியாம், சீதையாம், கடைதெருவில் விற்குதடா அய்யோ பாவம்” என்ற திரைப்படப் பாடல்தான் சட்டென்று நினைவுக்கு வருகிறது.\nஇரவுக்குப்பின்தான் விடியல் வரும். இவர்களுக்கோ இரவில்தான் விடியல். படுக்கை அறையை மாத்திரமல்ல, வாழ்க்கையையும் சேர்த்தே இவர்கள் இருட்டாக்கிக் கொள்கிறார்கள்.\nஎன்று இவர்களை வருணிக்கிறார் கவிஞர் தமிழ்தாசன். அல்லி மலர்வது ஆகாயம் கருக்கையில்தானே?\nகவிஞர் மு.மேத்தாவின் சிந்தனை இன்னும் சற்று ஊடுருவி அவர்களின் கருப்பை வரை சென்று விடுகிறது.\nபட்டினியிடும் மாதர்” என்று பாடுகிறார்.\nபிள்ளைப்பேறு என்பது பெரும் பேறு. தன் வாழ்க்கைச் சுமையைக் குறைக்கும் வயிற்றுப் பிழைப்புக்காக தன் வயிற்றுச் சுமையை ஏற்க மறுக்கிறார்கள் இந்தச் சுமைதாங்கிகள்.\nGreat men think alike என்பார்கள். கவிஞர் வைரமுத்துவின் சிந்தனையும் கவிஞர் மு.மேத்தாவின் கருத்தோடு ஒத்துப் போகிறது.\nஎன்று கவிஞர் வினா தொடுக்க அதற்கு பால்வினையாளி பதில் சொல்கிறாள்.\n“சில உறுப்புகள் அனாவசியம்\nஆஹா.. என்ன ஓர் அற்புதமான சிந்தனை! வெறுப்பு மிகுதியால் கருப்பையையே உபயோகமில்லா உறுப்பு என்கிறாள் அவள்.\nதனக்குள்ள இலக்கியப் பரிச்சயத்தை வெளிக்காட்ட குறள் ஒன்றையும் அவள் திரித்துக் கூறுகிறாளாம்.\n“எச்ச”த்தை “உச்ச”மாக்கி கூறும் போதும் சரி , கவிஞர் அவளை “எடை பார்க்கும் எந்திரம்” என்று வருணிக்கும்போதும் சரி, நமக்கு விரசம் தோன்றுவதில்லை. மாறாக அவள் மீது பரிவும், பச்சாதாபமுமே ஏற்படுகிறது.\nவிலைமாதர் உருவாவதற்கு காரணம்\nஎன்று அதனைத் தொடர்ந்து வரும் வைரமுத்துவின் வரிகள் அதற்கு சான்று பகர்கிறது.\nபால்வினையாளியின் தொழில் எதுநாள் வரைக்கும் நீடிக்கிறது என்றால்\n“திருமணம் – எய்ட்ஸ்\nஇரண்டிலொன்று முந்தும்வரை.. ..” என்கிறார்.\nமணம் அல்லது மரணம் இதில்தான் முடிகிறதாம். வாழ்க்கை ஒன்று ஆனந்தமாகிறது அல்லது அஸ்தமனமாகிறது. ஒரு படத்தில் எழுத்தாளராக வரும் பார்த்திபன் விபச்சாரம் பண்ணும் ஒரு பெண்ணைத் திருமணம் செய்துக் கொள்வார். நிஜ வாழ்க்கையில் எத்தனை இளைஞர்கள் இதுபோல் முன்வருவார்கள் என்பதைச் சொல்லத் தெரியவில்லை.\nமுந்தித் தவங்கிடந்து முந்நூறு நாட்சுமக்கும் மாதருக்கு இயற்கை ஏற்றமுடன் அளிக்கும் பதவி உயர்வு “தாய்” என்ற ஒப்பற்ற ஸ்தானம். இதை அழகாகச் சொல்கிறார் பெண்கவிஞர் புதிய மாதவி.\nவாழ்க்கையின் உயிர்க்குடம்’ என்று.\nவிலைமாதர்கள் தொடர்பினால் சீரழிந்துப்போகும் சமுதாயத்தை எண்ணி “சிற்பியே உன்னைச் செதுக்குகின்றேன்” என்ற நூலில் கண்ணீர் வடிக்கிறார் கவிஞர் வைரமுத்து. அவருடைய கவலையெல்லாம் நாளைய நட்சத்திரங்களாக உருவாகப்போகும் இளைய சமுதாயத்தைப் பற்றியதாகவே இருக்கிறது\n“இளைஞனே! உன்னைப் பற்றி எனக்கு வரும் தகவல்கள் என் குதூகூலத்தையே குழிதோண்டிப் புதைக்கின்றன! எங்கே போகின்றோம் இளைஞர்களே?\nஅடிப் பாவிப் பெண்ணே! நீ மனத்தை நிரப்ப வந்தாயா? அல்லது மடியை நிரப்ப வந்தாயா?\nவைரமுத்துவின் நியாயமான ஆதங்கம் எழுதுகோலை ஆயுதமாக ஏந்தி இலக்கிய உலகில் உலா வரும் ஒட்டுமொத்த கவிராஜர்களின் ஏகோபித்தக் குரலாக இங்கே எதிரொலிக்கிறது.\nPosted by அப்துல் கையூம் on January 2, 2010 in திண்ணையில் நான்\n(திண்ணை இதழில் வெளிவந்த நகைச்சுவைக் கட்டுரை)\nPosted by அப்துல் கையூம் on December 21, 2009 in திண்ணையில் நான்\nPosted by அப்துல் கையூம் on October 20, 2007 in திண்ணையில் நான்\nTags: Humorous Essays in Thinnai by Abdul Qaiyum
கோதுமை மாவில் வண்டு, காலிஃப்ளவரில் புழு எப்படி நீக்குவது தெரியுமா? இன்னும் சூப்பரான வீட்டுக் குறிப்புகள்! - Times Tamil News\nகோதுமை மாவில் வண்டு, காலிஃப்ளவரில் புழு எப்படி நீக்குவது தெரியுமா? இன்னும் சூப்பரான வீட்டுக் குறிப்புகள்!\nநம் வாழ்வில் இன்றியமையாத விஷயங்களில் முக்கியமான ஒன்று உணவு...\nநாம் செய்யும் உணவும், உணவு சமைக்க பயன்படுத்தும் சமையலறையும் மிக மிக முக்கியமே... அந்த வகையில் நாம் சமைக்கும் உணவுகளையும், சமையல் பொருட்களையும் எப்படி பாதுகாத்துக் கொள்வது? என்பதை பற்றிய சில குறிப்புகளை தெரிந்துக் கொள்வோம்.\nகோதுமை மாவில் சில சமயங்களில் வண்டுகள் இருக்கும். இந்த வண்டுகள் வராமல் தவிர்த்துக்கொள்ள கோதுமை மாவில், தூள் உப்பு இரண்டு ஸ்பூன் சேர்த்து நன்றாக கிளறி வைத்தால், கோதுமை மாவில் வண்டுகள் வருவதை தவிர்த்துக்கொள்ள முடியும். கோதுமை மாவின் அளவுக்கு ஏற்ப உப்பு சேர்த்து கலந்து வைத்துக்கொள்ளுங்கள்.\nஆப்பிளை நறுக்கி வைக்கும்போது சிறிதளவு உப்பை அவற்றில் தடவி வைத்தால் ஆப்பிள் நிறம் மாறாமல் இருக்கும்.\nபித்தளை மற்றும் செம்பு பாத்திரங்களை துலக்கும்போது எலுமிச்சை சாற்றில் உப்பு சேர்த்து பேஸ்ட்டு போல் கலந்து வைத்துக்கொண்டு, இந்த கலவையை கொண்டு பித்தளை பாத்திரத்தை துலக்கினால் தங்கம் போல் ஜொலிக்கும்.\nசாதாரணமாக நாம் காலிஃபிளவரில் இருக்கும் புழுவை எடுப்பதற்கு வெந்நீரில் வேக வைப்போம். அப்போது சிறிதளவு உப்பையும் சேர்த்து வேக வைத்தால், அவற்றில் இருக்கும் புழு மற்றும் கிருமிகள் அனைத்தும் வெளியேறிவிடும். காலிஃபிளவரும் வெள்ளையாகவே இருக்கும்.\nமிக்சி ஜாரில் உள்ள பிளைடு ஷார்ப்பாக இல்லையென்றால், அப்போது ஒரு கப் கல் உப்பை மிக்சி ஜாரில் போட்டு அரைத்தால் போதும்.\nகேஸ் அடுப்பை எண்ணெய் பிசுக்கு இல்லாமல் சுத்தமாக வைத்திருக்க.... அடுப்பிலும், சமையல் மேடையிலும் திரவ சோப்பை ஊற்றி நன்கு தேய்த்து ஊறவிட வேண்டும். அதன் பின் தண்ணீர் ஊற்றி சுத்தமாக துடைத்தால் அடுப்பு, மேடை இரண்டுமே பளிச்சென காட்சியளிக்கும்.\nமுட்டை கீழே விழுந்து உடைந்துவிட்டால், அதன் மீது சிறிதளவு உப்பைத் தூவி, பிறகு துடைத்து எடுத்தால் சுத்தம் செய்வதும் எளிது, முட்டையின் வாடையும் இருக்காது.\nகண்ணாடிப் பாத்திரங்களை உப்பும், வினிகரும் கலந்த கலவையைக் கொண்டு சுத்தம் செய்யலாம். உப்பு ஜாடியில் சிறிதளவு சோள மாவைப் போட்டுவைத்தால், உப்பு நீர்த்துப்போகாமல் இருக்கும்.
டாஸ்மாக் கடைகளில் பார் எடுத்து நடத்திவந்த நபர் அரசியல் கட்சியினர் நெருக்கடியால் தற்கொலை செய்துகொண்டார் பல அரசு அதிகாரிகள் சிக்குகின்றனர். - Tnnews24\nடாஸ்மாக் கடைகளில் பார் எடுத்து நடத்திவந்த நபர் அரசியல் கட்சியினர் நெருக்கடியால் தற்கொலை செய்துகொண்டார் பல அரசு அதிகாரிகள் சிக்குகின்றனர்.\n2nd June 2019 Tnnews24 #24 Exclusive, சமுகவலைத்தளம் 0\nதிருப்போரூரில் உள்ள டாஸ்மாக் கடைகளிலும் பார் எடுத்து நடத்தி வந்த நெல்லை அவர்களுக்கு உள்ளூர் அரசியல் பிரமுகர்கள் சிலர் மாமூல் கேட்டு தொந்தரவு கொடுத்ததால் மனமுடைந்து இன்று மதியம்2மணியளவில் மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அவரை அரசு மருத்துவமனையில் சேர்ந்தனர்.\nஆனால் சிகிச்சை பலன் இன்றி அவர் உயிர் இழந்தார். இந்நிலையில் அவர் யார் யார் தன்னை லஞ்சம் கேட்டு மிரட்டினார்கள். யாருக்கு மாதம் எவ்வளவு லஞ்சம் கொடுத்திருக்கிறேன் என்ற பட்டியலையும் விடியோவாக பதிவு செய்து வெளியிட்டுள்ளார்.\nஇதில் குறிப்பாக இனி டாஸ்மாக் கடைகளில் காலை மற்றும் இரவில் ப்ளாக்கில் மதுபானங்கள் விற்கவேண்டாம் என்றும் அனைத்து அரசியல் கட்சி தலைவர்களுக்கும் கோரிக்கை விடுதிருப்பது. பலரது மனதிலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nBar owner sucide\nஇந்தியர்களை பற்றி கருத்து ஒன்றை பதிவிட்ட இங்கிலாந்து நிறுவனம் இப்போ ட்விட்டரில் இது தான் ட்ரெண்ட் !\nஇன படுகொலை நாள் ஒன்று சேர்ந்த உலக தமிழர்கள் ராகுல், ஸ்டாலினுக்கு சாபம்.
ரூ. 25 கோடி வசூலித்த 96 - 96 film collected Rs.25 crore\nரூ. 25 கோடி வசூலித்த '96'\n17 அக், 2018 - 15:34 IST\nஅறிமுக இயக்குனர் பிரேம்குமார் இயக்கத்தில் விஜய்சேதுபதி, த்ரிஷா மற்றும் பலர் நடிக்க இரண்டு வாரங்களுக்கு முன்பு வெளியான படம் '96'. உணர்வுபூர்வமான காதல் கதையாக இருந்த இந்தப் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது.\n'96'ம் வருடத்தை மையமாக வைத்தும், பள்ளிக் காலத்தை மையமாக வைத்தும் பலரும் அவர்களது கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தனர். அது சம்பந்தமான பல மீம்ஸ்களும் வந்தது படத்திற்கு இலவச விளம்பரமாகவும் அமைந்தது. தற்போது தீபாவளி கலெக்ஷனில் த்ரிஷா படத்தில் அணிந்திருந்து மஞ்சள் நிற சுடிதாரும் கடைகளுக்கு வந்துவிட்டது.\nஇப்படி பலரின் மனதை கொள்ளை கொண்ட '96' படம், இந்த இரண்டு வாரங்களில் 25 கோடி ரூபாயை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் மட்டும் சுமார்5கோடி ரூபாயை இப்படம் வசூலித்திருக்கிறதாம். படத்தை வாங்கிய அனைவருக்கும் லாபத்தைக் கொடுத்துள்ள இந்தப் படம் தமிழ் சினிமாவின் மறக்க முடியாத காதல் படங்களில் ஒன்று என்ற இடத்தைப் பிடித்துவிட்டது.\nஎன்ஜிகே ரிலீஸ் எப்போது? : ... சீதக்காதி படத்திற்கு யு சான்றிதழ்
அவள் வீட்டிற்கு அடி க்கடி செல்வதும் உண் டு - Tamil Doctor Tamil Doctor Tips\nHome இரகசியகேள்வி-பதில் அவள் வீட்டிற்கு அடி க்கடி செல்வதும் உண் டு\nஅவள் வீட்டிற்கு அடி க்கடி செல்வதும் உண் டு\nஎனக்கு, வயது, 24. மாதம், இருபது ஆயிரம் ரூபாய் சம்பளத்தில், உ.பி.,யில் வேலை செய்து வருகிறேன். இதற்கு முன், புதுச்சேரி யில், ஒரு கம்பெனி யில் வேலை செய்யும் போது, எனக்கு, ஒரு பெண்ணுடன் காதல் ஏற்பட்டது. நானும், அவளும் நிறைய இடத் திற்கு சென்று, தனிமை யில் இருந்திருக்கி றோம். அவள் வீட்டுக் கும் என்னை நன்றாக தெரியும். காதலனாக அல்லாமல், நண்பனாக, அவள் வீட்டிற்கு அடி க்கடி செல்வதும் உண் டு.\nPrevious articleபல்கலைகழக மாணவிகள் செய்யும் அசிங்கத்தை பாருங்கள்!!\nNext articleஆபாச படங்களால் அழகி பட்டத்தை இழந்தவர்
இந்தியாவின் கைக்குள் வந்தது கொரோனா!: பாதிப்பு, குணமடைந்தோர், உயிரிழந்தோர் நிலவரம்; - Tamil Minutes\nஇந்தியாவின் கைக்குள் வந்தது கொரோனா!: பாதிப்பு, குணமடைந்தோர், உயிரிழந்தோர் நிலவரம்;\nசில மாதங்கள் முன்பு உலகிற்கே மிகப்பெரிய அச்சத்தை கொடுத்து வேகமாக பரவிய வைரஸ் கிருமி கொரோனா. ஆனால் தற்போது கொரோனா இந்தியாவின் கட்டுப்பாட்டிற்குள் வந்தது என்றே கூறலாம்.\nஇந்தியாவின் பெரும் முயற்சியால் இந்த கொரோனா நோயின் விகிதம் படிப்படியாக குறைந்துள்ளது. இந்த நிலையில் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில்9ஆயிரத்து 765 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 477 பேர் கொரோனா பாதிப்பால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதனால் இந்தியாவில் கொரோனாவால் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை4லட்சத்து 69 ஆயிரத்து 724 ஆக உயர்ந்துள்ளது.\nஇந்தியாவில் கொரோனா வைரஸ்க்கு சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை 99 ஆயிரத்து 763 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் இதுவரை3கோடியே 40 லட்சத்து 37 ஆயிரத்து 054 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினர்.\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 8548 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினர். இந்தியாவில் நேற்றைய தினம் மற்றும் 80 லட்சத்து 36 ஆயிரத்து 261 கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாக ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் அளித்துள்ளது. இந்தியாவில் இதுவரை 124 கோடியே 96 லட்சத்து 19 ஆயிரத்து 515 கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
கோட்டியா - தமிழ் விக்கிப்பீடியா\nகோட்டியா என்பது இந்தியாவில் சரக்குப் போக்குவரத்துக்காகப் பயன்படும் சிறிய அளவிலான கப்பல்கள் ஆகும். தமிழகத்தின் கடலூர் துறைமுகத்தில் சிறிய அளவிலான கோட்டியா கட்டும் பணி நடந்து வருகிறது. தமிழகத்தில் கடலூர், தூத்துக்குடி ஆகிய இடங்களில் மட்டுமே கோட்டியா என அழைக்கப்படும் சிறிய கப்பல்கள் கட்டப்படுகின்றன. கடலூரில் மீன்பிடித் துறைமுகத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் கோட்டியா கட்டுவது, பழுது பார்ப்பது ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. தரை வழி அனுப்பப்படும் சரக்குகளுக்கு எரிபொருள் செலவு, இயந்திரத் தேய்மானம் போன்றவற்றால் கூடுதல் செலவாகிறது. அதனால் அதிகமான சரக்குகளை அனுப்ப கடல்வழியைத் தேர்வு செய்கின்றனர். அதனால் கடலில் சரக்குகளை ஏற்றிச்செல்லும் கோட்டியாக்களுக்கு அதிக தேவை ஏற்படுகிறது.\n‘கோட்டியா’ என்றால், கடலில் புலி போல வேகமாகச் செல்லுகின்ற கப்பல். கோட்டியா என்றால், இலங்கையில் புலி என்று பொருள். அது சோழர்களைக் குறிப்பது.\nதுறைமுகத்திற்கு வரமுடியாத பெரிய கப்பல்களில் இருந்து சரக்குகளைக் கையாள இவை பயன்படுகின்றன. சிறிய அளவிலான கோட்டியாக்கள் சுமார் 10 டன்கள் வரை எடை தாங்கும் ஆற்றல் கொண்டவை. கடலூர் துறைமுகப் பகுதிகளில் தற்போது 100 டன் முதல் 400 டன் வரையிலான சரக்குகளைக் கையாளும் திறன் கொண்ட பெரிய அளவிலான கோட்டியாக்கள் கட்டப்படுகின்றன. கிசிறப்பான வேலைப்பாடுகள், ஆள் கூலி குறைவு, கோட்டியா உருவாக்கத் தேவையான மரங்கள் எளிதாக கிடைப்பது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கடலூர் பகுதிகளுக்கு வெளியூர்களில் இருந்து கோட்டியா செய்வதற்காக ஆணைகள் வருகின்றன. இவ்வகை கோட்டியா தயாரிப்பதற்கு தூத்துக்குடி, அந்தமான் பகுதிகளிலிருந்தும் கோழிக்கோடு, மங்களூர் பகுதியிலிருந்தும் பெரும்பாலான ஆணைகள் பெறப்படுகின்றன. இங்கு தயாரிக்கப்படும் கோட்டியாக்கள் பெரும்பாலானவை லட்சத்தீவுகளுக்கு உணவு பொருட்கள், கட்டுமான பொருட்கள் ஆகியவற்றைக் கொண்டு செல்லவும் அரபிக்கடலில் உள்ள மங்களூர், மும்பை, போர்பந்தர் ஆகிய துறைமுகங்களில் சரக்குக் கையாளவும் பயன்படுத்தப்படுகின்றன.\nகிடைப்பதற்கு அரிதான ஆயில் கோங்கு, இலுப்பை முதலான மரங்களில் தான் இவை தயாரிக்கப்படுகின்றன. தேவையைப் பொறுத்து கோட்டியாவின் கட்டுமானப்பணிகளை முடிக்க ஒருவருடம் முதல் ஐந்து ஆண்டுகள் வரை ஆகும். இதற்கான மரங்கள் மலேசியா மியான்மர் ஆகிய இடங்களிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. 400 டன் சரக்கைக் கையாளும் திறன் கொண்ட கோட்டியா உருவாக்க 350 டன் அளவிற்கு இலுப்பை மரங்களும், 3,000 சதுர அடி கோங்கு மரங்களும் பயன்படுத்தப்படுகின்றன. சுமார் 20 அடி நீளமும் 50 அடி உயரமும் கொண்ட கோட்டியா செய்ய 50 இலட்சம் முதல் 1 கோடி வரை செலவாகும். பின்னர், கப்பலுக்குத் தேவையான இயந்திரப்பொறிகள், தொழில்நுட்பப் பொறிகள் ஆகியவை பொருத்தப்பட்டு நீரில் இறக்கப்பட்டு நீர்க்கசிவு உள்ளிட்ட பல்வேறு சோதனைக்குப் பிறகு துறைமுக அதிகாரிகளின் உரிமம் பெற்று இயக்கப்படுகின்றன. 400 டன் சரக்குக் கையாளும் திறன் கொண்ட கோட்டியாக்களை உருவாக்க2கோடி ரூபாய் வரை செலவிடப்படுகிறது.\n↑ தமிழ் மீனவன்\n"https://ta.wikipedia.org/w/index.php?title=கோட்டியா&oldid=1467373" இருந்து மீள்விக்கப்பட்டது\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 சூலை 2013, 11:23 மணிக்குத் திருத்தினோம்.
✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪: ஜெபமாலை யாருக்காக சொல்லப்படுகிறது? யாரை மகிமைப்படுத்த சொல்லப்படுகிறது?\nஜெபமாலை யாருக்காக சொல்லப்படுகிறது? யாரை மகிமைப்படுத்த சொல்லப்படுகிறது?\nஜெபமாலை தமத்திரித்துவத்தை போற்றிப் புகழத்தான் சொல்லப்படுகிறது.\nவெளிப்பார்வைக்கு மாதாவை புகழ்வது போல் தோன்றினாலும் உண்மையில் புகழப்படுவது தமத்திருத்துவமே.\nஅதனால்தான் ஜெபமாலைக்கு இத்தனை சக்தி.\nசர்வ வல்லமை படைத்த தமதிருத்துவத்தின் சக்தி வெளிப்படுவதால்தான் சாத்தான் அஞ்சி நடுங்கி ஒட்டம் பிடிக்கிறான்.\nநாம் சொல்லும் ஒவ்வொரு அருள் நிறை மந்திரத்திலும் பிதாவாகிய சர்வேசுவரன்; சுதனாகிய இயேசு; பரிசுத்த ஆவியானவர் மகிமைப்படுத்தப்படுகிறார்கள்.\nபிதா கற்றுக்கொடுத்த " அருள் நிறை மரியே வாழ்க கர்த்தர் உம்முடனே " ( கபரியேல் தூதரை மாதாவிடம் அனுப்பி நீ சென்று என் மகளைப்பார்த்து இப்படித்தான் வாழ்த்த வேண்டும் என்று பிதா சொல்லி அனுப்பியதால் அருள் நிறை மந்திரத்தின் முதல் இரண்டு வரிகளை இயற்றியவர் பிதாவாகிறார்)\nபரிசுத்த ஆவியானவர் கற்றுக்கொடுத்த " பெண்களுக்குள் ஆசீர்வதிக்கப்பட்டவர் நீரே ! உம்முடைய திருவயிற்றின் கனியாகிய இயேசுவும் ஆசீர்வதிக்கப்பட்டவரே " ( எலிசபெத்தம்மாள் பரிசுத்த ஆவியால் ஆட்கொள்ளப்பட்டு சொல்லியதால் அடுத்த இரண்டு வரிகளை இயற்றியவர் பரிசுத்த ஆவியானவராகிரார்)\nஅடுத்த வாக்கியங்களில் “ அர்ச்சிஷ்ட்ட மரியாயே ! சர்வேசுவரனுடைய மாதாவே ! “ என்று வாழ்த்தி விட்டு அவருடைய திருக்குமாரனிடம்தான் நம் தாயை மன்றாட கேட்கிறோம்.\nமேலும் மற்ற ஜெபமாலை மந்திரங்களான நம் இயேசு சுவாமி கற்றுக்கொடுத்த பரலோக மந்திரம், நம் தேவ மாதா கற்றுக்கொடுத்த “ ஓ என் இயேசுவே ( 1917, பாத்திமா) , இருப்பதால் ஜெபமாலை மகிமை பெறுகிறது; வல்லமையும் பெறுகிறது.\nமேலும் பரலோக மந்திரமும், அருள் நிறை மந்திரமும் பன்மையில் ஜெபிக்கப்படுவதால் அதாவது “ பரலோகத்தில் இருக்கிற எங்கள் பிதாவே” “ பாவிகளாக இருக்கிற எங்களுக்காக “ என்று நாம் ஜெபிப்பதால் நமக்காகவும், இந்த உலகத்தில் வாழும் அனைத்து மக்களுக்காகவும் நாம் சொல்லும் ஒவ்வொரு பர-அருள் மந்திரங்கள் அமைவதாலும் அதற்கு அவ்வளவு மகிமை; வலிமை.\nஇப்போது புரிகிறதா ? மாதா தன் ஒவ்வொரு காட்சியிலும் " ஜெபமாலை சொல்லுங்கள் " பாவிகள் மனந்திருந்த " ஜெபமாலை சொல்லுங்கள் " என்று ஏன் கேட்கிறார்கள் என்று.\nமாதா கேட்காத விசயங்களான அவர் சொரூபத்திற்கு சேலை கட்டுவோம்; வேளாங்கன்னி, பூண்டி சென்று மொட்டை போடுவோம் ( தவறல்ல) ஆனால் அன்னை அவர்கள் விரும்பி கேட்கும் ஜெபமாலையை மட்டும் சொல்ல மாட்டோம் என்றால் இது என்ன நியாயம்?\nநாம் எப்படி சொல்ல முடியும் " நாங்கள் மாதாவின் பிள்ளைகள் " " நாங்கள் மாதாவை நேசிக்கிறோம் " என்று. அப்படி சொன்னால் அது பொய்தானே?\n" ஜெபம் செய்வோம்; தினம் ஜெபமாலை சொல்வோம்; பாவத்திற்காக பரிகாரம் புரிவோம் " என்று மாதாவே சரணம் பாட்டில் நாம் அடிக்கடி சொல்லும் பொய் போலத்தான் இந்த பொய்யும். அதனால் இனி பொய் சொல்ல வேண்டாம்.\nஜெபமாலை ஜெபிக்காதவர்கள் ஜெபமாலையை துவக்கிவிடுங்கள்.\nதமத்திருத்துவம் மகிமை பெறும், நம் அன்னை விரும்பிக்கேட்கும் ஜெபமாலையை அடிக்கடி ஜெபிப்போம். குடும்ப ஜெபமாலையை நம் குடும்பத்தில் கட்டாயமாக்குவோம்.\nநம் குடும்பமும், இந்த உலகமும் வாழ நாள் தோறும் ஜெபிப்போம் ஜெபமாலை... தமத்திருத்துவத்தின் அன்பில் நம் அன்னையின் பாதுகாப்பில் வாழ ஜெபிப்போம்... ஜெபமாலை... ஜெபிப்போம்...
Home News மக்களுக்காக கமல் வீடு அர்ப்பணிப்பு!\nதமிழகத்தில் கொரோனவின் கோரத்தாண்டவத்தை முன்னிட்டு தமிழக அரசு 144 தடை உத்தரவை பிறப்பித்தது. அதிக மருத்துவ வசதி இல்லாத நம் இந்தியாவில் மருத்துவமனைகளும் மிக குறைவு தான், இதை அறிந்த நம் உலக நாயகன் கமல் மக்கள் நீதி மய்யதில் உள்ள மருத்துவர்களை கொண்டு தனது வீட்டை தற்காலிக மருத்துவ மையமாக்கி கொள்ள உத்தரவிட்டுள்ளார். கொரோனவை பார்த்து உலகமே அஞ்சி வரும் இந்நேரத்தில் கமல்ஹாசன் அவர்கள் துணிச்சலுடன் இப்படி செய்தது பாராட்டப்பட வேண்டிய செயல்.\nமேலும் பல திரையுலக பிரபலங்கள் பொது மக்களிடம் தங்களின் ரசிகர்கள் வாயிலாக பல உதவிகள் செய்து வருகின்றனர். அதுமட்டுமின்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த பல காணொளிகளையும் வெளியிட்டுள்ளார்கள்.\nசூர்யா, சிவகார்த்திகேயன் மற்றும் விஷால் ஆகிய முன்னணி நடிகர்கள் மக்களுக்காக தங்களால் முடிந்த பணத்தை கொடுத்து உதவி வருகின்றனர்.\nகாவல்துறை, மருத்துவர்கள் மற்றும் அரசாங்கம் அனைவரும் கூறுவது மக்களாகிய நம் நன்மைக்காக தான் பொது மக்கள் அதற்கு ஆதரவை நிச்சயம் தெரிவித்தால் அவசியம். வெளிநாடுளுள்ள மக்கள் ஆரம்ப காலகட்டத்தில் நம்மை போலதான் அலட்சியமாக இருந்தார்கள். இப்போது அலட்சியப்படுத்த அவர்கள் அங்கு உயிருடன் இல்லை. எனவே மக்களே அரசாங்கம் கூறுவதை பின்பற்றி நம் பாரத நாட்டை அதில் வசிக்கும் மக்களையும் காப்பாற்றுங்கள்.
திருக்குறள் பரிமேலழகர் உரை/பொருட்பால்/61.மடியின்மை - விக்கிமூலம்\nதிருக்குறள் பரிமேலழகர் உரை/பொருட்பால்/61.மடியின்மை\n1 திருக்குறள் பொருட்பால்- 1. அரசியல்- அதிகாரம் 61. மடியின்மை\n3 குறள் 601 (குடியென்னுங்)\n4 குறள் 602 (மடியை)\n5 குறள் 603 (மடிமடிக்கொண்)\n6 குறள் 604 (குடிமடிந்து)\n7 குறள் 605 (நெடுநீர்)\n8 குறள் 606 (படியுடையார்)\n9 குறள் 607 (இடிபுரிந்)\n10 குறள் 608 (மடிமை)\n11 குறள் 609 (குடியாண்மை)\n12 குறள் 610 (மடியிலா)\nதிருக்குறள் பொருட்பால்- 1. அரசியல்- அதிகாரம் 61. மடியின்மைதொகு\nஅஃதாவது, கருதியன செய்யுங்கால் சோம்புதல் இல்லாமை. ஊக்கமுடையார்க்கு ஒரோவழிக் குணவயத்தான் மடிவருதல் நோக்கி இஃது ஊக்கமுடைமையின் பின் வைக்கப்பட்டது.\nகுறள் 601 (குடியென்னுங்)தொகு\nகுடியென்னுங் குன்றா விளக்க மடியென்னுகுடி என்னும் குன்றா விளக்கம் மடி என்னும்\n'மாசூர மாய்ந்து விடும். (01)'மாசு ஊர மாய்ந்து விடும்.\nகுடி என்னும் குன்றா விளக்கம்= தான் பிறந்த குடியாகிய நந்தாவிளக்கு; மடி என்னும் மாசு ஊர மாய்ந்து கெடும்= ஒருவன் மடியாகிய இருள் அடர நந்திப்போம்.\nஉலகநடையுள்ள துணையும் இடையறாது தன்னுள் பிறந்தாரை விளக்குதலின், குடியைக் 'குன்றா விளக்கம்' என்றும், தாமதகுணத்தான் வருதலின் மடியை 'மாசு' என்றும், அஃது ஏனை இருள்போலாது, அவ்விளக்கைத் தான் அடர்ந்து மாய்க்கும் வலியுடைமையின், 'மாசூர மாய்ந்துகெடும்' என்று கூறினார். 'கெடு'தல் பெயர்வழக்கமும் இல்லையாதல்.\nகுறள் 602 (மடியை)தொகு\nமடியை மடியா வொழுகல் குடியைக் /மடியை மடியா ஒழுகல் குடியைக்\n'குடியாக வேண்டு பவர். (02) /'குடியாக வேண்டுபவர்.\nகுடியைக் குடியாக வேண்டுபவர்= தாம் பிறந்த குடியை மேன்மேலும் நற்குடியாக வேண்டுவார்; மடியை மடியா ஒழுகல்= மடியை மடியாகவே கருதி முயற்சியோடு ஒழுகுக.\nமுயற்சியோடு என்பது அவாய்நிலையான் வந்தது. நெருப்பிற் கொடியது பிறிதின்மைபற்றி நெருப்பை நெருப்பாகவே கருதுக என்றாற்போல, மடியின் தீயது பிறிதின்மைபற்றிப் பின்னும் அப்பெயர்தன்னானே கூறினார். அங்ஙனம் கருதியதனைக் கடிந்து முயன்று ஒழுகவே தாம்உயர்வர்; உயரவே குடியுயரும் என்பார், 'குடியைக் குடியாக வேண்டுபவர்' என்றார். அங்ஙனம் ஒழுகாக்கால், குடிஅழியும் என்பது கருத்து. இனி 'மடியா' என்பதனை வினையெச்சமாக்கிக் கெடுத்தொழுகுகІ என்று உரைப்பாரும் உளர்.\nகுறள் 603 (மடிமடிக்கொண்)தொகு\nமடிமடிக் கொண்டொழுகும் பேதை பிறந்த/மடி மடிக்கொண்டு ஒழுகும் பேதை பிறந்த\n'குடிமடியுந் தன்னினு முந்து. (03)'/குடி மடியும் தன்னினும் முந்து.\nமடி மடிக்கொண்டு ஒழுகும் பேதை பிறந்த குடி= விடத்தகுவதாய மடியைத் தன்னுள்ளே கொண்டொழுகும் அறிவில்லாதான் பிறந்த குடி; தன்னினும் முந்து மடியும்= அவன்தன்னினும் முந்துற அழியும்.\nஅழிவு தருவதனை அகத்தேகொண்டு ஒழுகதலின் 'பேதை' என்றும், அவனால் புறந்தரப்படுவது ஆகலின், குடிதன்னினும் முந்துற அழியும் என்றும் கூறினார். ஆக்கத்திற் பிற்படினும், அழிவின் முற்படும் என்பதாம்.\nகுறள் 604 (குடிமடிந்து)தொகு\nகுடிமடிந்து குற்றம் பெருகு மடிமடிந்துகுடி மடிந்து குற்றம் பெருகும் மடி மடிந்து\n'மாண்ட வுஞற்றில வர்க்கு. (04)'மாண்ட உஞற்று இலவர்க்கு.\nமடி மடிந்து மாண்ட உஞற்று இலவர்க்கு= மடியின்கண்ணே வீழ்தலான் திருந்திய முயற்சி இலராயினார்க்கு; குடி மடிந்து குற்றம் பெருகும்= குடியும் மடிந்து குற்றமும் பெருகும்.\n'மடிந்து' எனத் திரிந்துநின்ற வினையெச்சம் 'இலவர்' என்னும் குறிப்புவினைப் பெயர் கொண்டது. குற்றங்கள் முன்னர்க்கூறுப.\nஇவை நான்கு பாட்டானும் மடியின் தீமை கூறப்பட்டது.\nகுறள் 605 (நெடுநீர்)தொகு\nநெடுநீர் மறவி மடிதுயி னான்குங்நெடுநீர் மறவி மடி துயில் நான்கும்\n'கெடுநீரார் காமக் கலன். (05)'கெடும் நீரார் காமக் கலன்.\nமடி நெடுநீர் மறவி துயில் நான்கும்= மடியும், விரைந்துசெய்வதனை நீட்டித்துச் செய்யும் இயல்பும், மறப்பும், துயிலும்ஆகிய இந்நான்கும்; கெடும் நீரார் காமக் கலன்= இறக்கும் இயல்பினை உடையார் விரும்பி ஏறும் மரக்கலம்.\nமுன்னிற்கற்பாலதாய 'மடி' செய்யுள் நோக்கி இடைநின்றது. நெடுமையாகிய காலப்பண்பு, அதன்கண்நிகழ்வதாய செயன்மேல் நின்றது. காலநீட்டத்தையுடைய செயல் முதல் மூன்றும் தாமதகுணத்தின் தோன்றி உடன்நிகழ்வதாகலின், மடியோடு ஒருங்கு எண்ணப்பட்டன. இறக்கும் இயல்பு- நாள்உலத்தல். இவை துன்புறு நீரார்க்கு இன்புறுத்துவபோன்று காட்டி, அவர் விரும்பிக்கொண்டவழித் துன்பத்திடை வீழ்தலின், நாள் உலந்தார்க்கு ஆக்கம்பயப்பது போன்று காட்டி, அவர் விரும்பி ஏறியவழிக் கடலிடை வீழ்க்கும் கலத்தினை ஒக்கும் என்னும் உவமைக் குறிப்புக் 'காமக்கலன்' என்னு்ம் சொல்லான் பெறப்பட்டது. இதற்கு விரும்பிப் பூணும் ஆபரணம் என்று உரைப்பாரும் உளர்.\nகுறள் 606 (படியுடையார்)தொகு\nபடியுடையார் பற்றமைந்தக் கண்ணு மடியுடையார்படி உடையார் பற்று அமைந்தக் கண்ணும் மடி உடையார்\n'மாண்பய னெய்த லரிது. (06)'மாண் பயன் எய்தல் அரிது.\nபடி உடையார் பற்று அமைந்தக்கண்ணும்= நிலம் முழுதும் ஆண்டாராது செல்வம் தானே வந்து எய்தியவிடத்தும்; மடி உடையார் மாண் பயன் எய்தல் அரிது= மடியுடையார் அதனான் மாண்ட பயனை எய்துதல் இல்லை.\nஉம்மை எய்தாமை விளக்கிநின்றது. மாண்பயன்- பேரின்பம். அச்செல்வம் அழியாமல் காக்கும் முயற்சிஇன்மையின் அழியும்;அழியவே, தம்துன்பம் நீங்கா என்பதாம். இதற்கு நிலம் முழுதுமுடைய வேந்தர் துணையாதல் கூடியவிடத்தும்₡ என்று உரைப்பாரும் உளர்.\nகுறள் 607 (இடிபுரிந்)தொகு\nஇடிபுரிந் தெள்ளுஞ்சொற் கேட்பர் மடிபுரிந்துஇடி புரிந்து எள்ளும் சொல் கேட்பர் மடி புரிந்து\n'மாண்ட வுஞற்றி லவர். (07)'மாண்ட உஞற்று இலவர்.\nமடி புரிந்து மாண்ட உஞற்று இலவர்= மடியை விரும்புதலான் மாண்ட முயற்சி இல்லாதார்; இடி புரிந்து எள்ளும் சொல் கேட்பர்= தம் நாட்டார்முன் கழறுதலை மிகச்செய்து அதனாற் பயன் காணாமையின் பின் இகழ்ந்து சொல்லும் சொல்லைக் கேட்பர்.\n'இடி'$ என்னும்முதனிலைத் தொழிற்பெயரான், நட்டார் என்பது பெற்றாம். அவர் இகழ்ச்சி சொல்லவே, பிறர்இகழ்ச்சி சொல்லாமையே முடிந்தது. அவற்றிற்கு எல்லாம் மாறுசொல்லும் ஆற்றல் இன்மையின், 'கேட்பர்' என்றார்.\n$. குறள்- 784.\nகுறள் 608 (மடிமை)தொகு\nமடிமை குடிமைக்கட் டங்கி்ற்றன் னொன்னார்க்மடிமை குடிமைக் கண் தங்கின் தன் ஒன்னார்க்கு\n'கடிமை புகுத்தி விடும். (08)'அடிமை புகுத்தி விடும்.\nமடிமை குடிமைக்கண் தங்கின்= மடியினது தன்மை குடிமை உடையான்கண்ணே தங்குமாயின்; தன் ஒன்னார்க்கு அடிமை புகுத்தி விடும்= தன் பகைவர்க்கு அடியனாம் தன்மையை அடைவித்து விடும்.\n'மடியி'னது தன்மை காரியக்கேடு. 'குடிமை', குடிசெய்தல்தன்மை. அஃது அதனை உடைய அரசன்மேற்றாதல், 'தன் ஒன்னார்க்கு' என்றதனான் அறிக. அடியனாந்தன்மை, தாழ்ந்துநின்று ஏவல் கேட்டல்.\nஇவை நான்கு பாட்டானும் மடிமைக் குற்றங்கள் கூறப்பட்டன.\nகுறள் 609 (குடியாண்மை)தொகு\nகுடியாண்மை யுள்வந்த குற்றம் ஒருவன்குடி ஆண்மையுள் வந்த குற்றம் ஒருவன்\n'மடியாண்மை மாற்றக் கெடும். (09)'மடி ஆண்மை மாற்றக் கெடும்.\nஒருவன் மடி ஆண்மை மாற்ற= ஒருவன் தன் மடியாளும் தன்மையை ஒழிக்கவே; குடி ஆண்மையுள் வந்த குற்றம் கெடும்= அவன் குடியுள்ளும், ஆண்மையுள்ளும் வந்த குற்றங்கள் கெடும்.\n'மடியா'ளும் தன்மை, மடியுடைமைக்கு ஏதுவாய தாமதகுணம். 'குடியாண்மை' என்பது, உம்மைத்தொகை. அவற்றின்கண் வந்த 'குற்றம்' என்பது, மடியானன்றி முன்னே பிறகாரணங்களான்♣ நிகழ்ந்தவற்றை. அவையும் மடியாண்மையை மாற்றி முயற்சி உடையனாக நீங்கும் என்பதாம்.\n♣ . காலம், இடம், செய்வினையின் மூலம், முடிவு முதலிய அறியாதிருத்தலும், சூழ்வன சூழாதிருத்தலும், துணைவலிமை தெரியாமையும் முதலானவை.\nகுறள் 610 (மடியிலா)தொகு\nமடியிலா மன்னவ னெய்து மடியளந்தான்மடி இலா மன்னவன் எய்தும் அடி அளந்தான்\n'றாஅய தெல்லா மொருங்கு. (10)'தாஅயது எல்லாம் ஒருங்கு.\nஅடி அளந்தான் தாஅயது எல்லாம்= தன் அடியளவானே எல்லாவகை உலகையும் அளந்த இறைவன் கடந்த பரப்பு முழுதையும்; மடி இலா மன்னவன் ஒருங்கு எய்தும்= மடியிலாத அரசன் முறையான் அன்றி, ஒருங்கே எய்தும்.\n'அடியளந்தான்' என்றது, வாளா பெயராய் நின்றது. தாவியது என்பது இடைக்குறைந்த நின்றது. எப்பொழுதும் வினையின்கண்ணே முயறலின், இடையீடு இன்றி எய்தும் என்பதாம்.\nஇவை இரண்டு பாட்டானும், மடியிலாதான் எய்தும் பயன் கூறப்பட்டது.\n"https://ta.wikisource.org/w/index.php?title=திருக்குறள்_பரிமேலழகர்_உரை/பொருட்பால்/61.மடியின்மை&oldid=483548" இருந்து மீள்விக்கப்பட்டது\nLast edited on 22 செப்டம்பர் 2016, at 15:38
மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு நீட்டிப்பு? காய்கறி பழக்கடைகளுக்கு அனுமதி!\n7 பேரின் விடுதலைக்கு இப்படி ஒரு வாய்ப்பு இருக்கு: பிறகு ஏன் கடிதம்? சீமான் கேள்வி!\nநாளை ஒரு நாள் அரசு அறிவித்துள்ள புதிய தளர்வுகள் என்னென்னெ?
தன் இன்பமயமான உறவின் ரகசியங்களை கூறிய கஜோல்! | kajol Devgan Reveals Secret of Her Love Life! - Tamil Boldsky\nதன் இன்பமயமான உறவின் ரகசியங்களை கூறிய கஜோல்!\n| Updated: Wednesday, September 6, 2017, 15:37 [IST]\nதனது துறையில் முதன்மை நாயகியாக வளம் வந்துக் கொண்டிருந்த போது கஜோல் அஜய் தேவ்கானை திருமணம் செய்துக் கொண்டார். திருமணம் செய்துக் கொண்ட போது கஜோலின் வயது 25. இவர்கள் இருவருக்கும் திருமணமாகி 18 ஆண்டுகள் ஆகின்றன.\nஎன்னதான் ஒருபுறம் வேலை, தொழில் முக்கியம் என்றாலும், சரியான வயதில் திருமணம் செய்துக் கொள்ள வேண்டியதும் அவசியம். அதில் கஜோல் சரியான முடிவை எடுத்தார்.\nவேலை - குடும்பம்!\nவேலை எவ்வளவு முக்கியமோ, அதே அளவிற்கு குடும்பமும் முக்கியம். கஜோல் திருமணத்திற்கு முன்னர் வருடத்திற்கு நான்கைந்து படங்கள் நடித்து வந்தார்.\nஆனால், திருமணத்திற்கு பிறகு வருடத்திற்கு ஒரு படம் மட்டுமே நடிப்பேன் என அஜய் தேவ்கனுக்கு வாக்களித்தார். இதனால், தான் இல்லறத்திலும் போதுமான அளவு நேரம் செலவழிக்க முடியும் என கருதினார்.\nகஜோல் - அஜய், இருவரின் இல்லறம் 18 வருடங்கள் ஆரோக்கியமாக இருப்பதற்கு இது ஒரு முக்கிய காரணமாக இருந்து வருகிறது.\nதிருமணத்திற்கு முன் ஒன்பது வருடங்களாக நடித்து வந்தார் கஜோல். திருமணத்திற்கு பிறகு வருடத்திற்கு ஒரு படம் என கூறிய போதும். ஒரு இடைவேளை எடுத்துக் கொண்டார் கஜோல்.\nஇந்த நேரத்தில் ஒரு அமைதி அவருக்கு தேவைப்பட்டது. அதே போல தனது குடும்பத்தில் தனது பங்கை உணர்ந்து நல்ல மனைவியாகவும் விளங்கினார் கஜோல்.\nதிருமணத்திற்கு பிறகு, நடிப்பை காட்டிலும், இல்லறத்தில் மனைவி, தாய் என தனது பங்கு பெரியது என்பதை உணர்ந்த கஜோல். ஒரு சிறந்த துணையாக தனது கடமையை கடைப்பிடித்து வந்தார்.\nஅதே போல, பிள்ளைகள் ஒரு வயதை எட்டிய பிறகு, மீண்டும் தான் நடிக்க சரியான நேரம் ஒதுக்கி, மீண்டும் தனது நடிப்பில் தனது கவனத்தை செலுத்தி, வேலையிலும் சிறந்து விளங்கினார்.\nபுரிந்துக் கொள்ளும் கணவர்!\nஒரு பிரபலமாக இருந்துக் கொண்டு, வீடு, நடிப்பு என இரண்டையும் சமாளிப்பது மிகவும் கடினம். இந்த தருணத்தில் தான் அஜய் தேவ்கான் கஜோலை சரியாக புரிந்துக் கொண்டு அவர் அழுத்தம் இன்றி தனது வேலைகளை செய்ய பெரும் காரணியாக இருந்தார்.\nஅஜய் மற்றும் கஜோல் திருமணம் செய்துக் கொண்ட போது, பலரும் இவர்களது திருமணம் விவாகரத்தில் தான் முடியும் என புரளி பேசினார்கள். ஆனால், அவர்கள் முகத்தில் கரி பூசுவது போல 18 ஆண்டுகள் வெற்றிகரமாக சந்தோசமான தம்பதியாக, மற்ற நட்சத்திர ஜோடிகளுக்கு ஒரு முன்னுதாரணமாக வாழ்ந்து வருகிறார்கள் கஜோல் மற்றும் அஜய்.\nஎங்கள் உறவு மிகவும் ஆரோக்கியமாக இருப்பதற்கு காரணம், நான் அதிகம் பேசுவேன், அஜய் அமைதியாக அதை பொறுமையுடன் கேட்பார் என கூறுகிறார் கஜோல்.\nஇந்த சூப்பர் ஜோடிக்கு நைசா மற்றும் யாக் எனும் இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள்.\nRead more about: marriage love celebrities திருமணம் காதல் பிரபலங்கள்\nkajol Devgan Reveals Secret of Her Love Life!
வெளியானது 'பேட்ட' ட்ரைலர்\nவெளியானது 'பேட்ட' ட்ரைலர்\tFeatured\n- டிச 28, 2018\nஇந்த காளியோட ஆட்டத்த பார்க்கத்தான போறீங்க என பழைய ரஜினியாக நமக்கு பேட்டயில் அறிமுகம் ஆகிறார் ரஜினி.\nநவசுதீன் சித்திக், விஜய் சேதுபதி மெயின் வில்லன்கள். சப்போர்ட் வில்லனாக பாபி சிம்ஹா நடித்துள்ளார். கொலையே தொழிலாக கொண்டவர்கள் போல் பல படங்களில் நடித்தவர்கள் பேட்ட படத்தில் வில்லன்களாக வலம் வருகிறார்கள். சிம்ரன் ரஜினிக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். த்ரிஷாவுக்கு என்ன ரோல் என்பது தெரியவில்லை. ஒரு வேளை சிம்ரன் கொல்லப்படும் காட்சிகள் இருக்கலாம். ரஜினியின் கூடவே வரும் கதாபாத்திரத்தை சமுத்திரக்கனிக்கு பதில் இந்த படத்தில், சசிக்குமார் ஏற்று நடித்துள்ளார்.\nஇரத்தக்கறை மிகுந்த படமாக பேட்ட இருக்கும் எதிர்பார்க்கப்படுகிறது. ஹாஸ்டல் வார்டனாக இருக்கும் ரஜினி, எதற்காக விஜய் சேதுபதி கூட்டத்துடன் மோதுகிறார். அதற்கு வலுவான காரணங்கள் என்ன என்பதை டிரெய்லரில் மறைமுகமாக கூட சொல்லவில்லை. விஜய் சேதுபதிக்கு எப்படிப்பட்ட வில்லன் ரோல் என்பதை மறைத்து வைத்திருக்கிறார் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ். படத்தின் முக்கியமான, ரஜினிக்கு நிகரான ரோல் விஜய் சேதுபதிக்குத்தான் என்பது பேட்ட ஆடியோ ரிலீசிலேயே தெரிந்துவிட்டது. எனவே காளியின் ஆட்டத்தையும், விஜய் சேதுபதியின் வேட்டைத்தனத்தையும் பார்க்க ஜனவரி 10 வரை நாம் காத்திருக்க வேண்டும்.\nரஜினி மொத்த டிரெய்லரும் தூக்கி சாப்பிட்டு இருக்கிறார். கேட்டவுடன் மயிற்கூசச் செய்யும் பஞ்ச் வசனங்கள், மிரட்டலான நடிப்பு ரஜினியால் மட்டுமே இது சாத்தியம். மாசு, மரணம், மாசு மரணம், அதுவுக்கு அவந்தா பொறந்துவரணும் என்று அனிருத் பாடிய வரிகள் டிரெய்லரை பார்த்தவுடன் கண்முன்னே வந்து செல்கிறது. ரஜினி ஒருவரால் தான் ஒவ்வொரு முகபாவணையில் ஒரு ஸ்டைலை காட்ட முடியும். சும்மாவா சொன்னாங்க ரஜினியை ஸ்டைல் மன்னன் என்று... 'பார்க்கத்தான போறீங்க இந்த காளியோட ஆட்டத்த, ’சிறப்பான தரமான சம்பவங்களை இனிமேதான் பார்க்கப்போறீங்க' என ரஜினி பேசும் இரண்டு வசனமும் ஏதோ உள் அர்த்தத்துடன் வைக்கப்பட்டுள்ளதா என சந்தேகம் வந்துபோவதை தவிர்க்க முடியவில்லை. இந்த ட்ரெய்லர் 10ஆயிரம் வாலா பட்டாசு மனக்குள் வெடித்தது போன்ற உணர்வை ரஜினி ரசிகர்களுக்கும் நிச்சயம் கொடுத்திருக்கும். ..\n'பேட்ட', ட்ரைலர் வெளியானது, ரஜினி,விஜய் சேதுபதி,\nMore in this category: « தயாரிப்பாளர் சங்கத்தில் முற்றும் மோதல் : நடிகர் விஷால் கைது\tதிரைப்பட இயக்குநர் மிருனாள் சென் காலமானார் »\nஇணைப்பில் உள்ளவர்கள்: 80 விருந்தினர்கள் மற்றும் உறுப்பினர்கள் இல்லை
சிவகார்த்திகேயனுடன் கைகோர்த்த ஹிப் ஹாப் ஆதி!! – 247tamil.com\nYou are at: Home » News » சிவகார்த்திகேயனுடன் கைகோர்த்த ஹிப் ஹாப் ஆதி!!\nசிவகார்த்திகேயனுடன் கைகோர்த்த ஹிப் ஹாப் ஆதி!!\nசிவகார்த்திகேயன் நடிப்பில், ஞானவேல் ராஜா தயாரிப்பில், ராஜேஷ் இயக்கும் படத்தின் இசை அமைப்பாளராக “ஹிப் ஹாப்” ஆதி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.\nசிவகார்த்திகேயன் நயன்தாரா ஜோடியாக நடிக்கும் இந்த படம் , அறிவிக்க பட்ட முதல் நாளில் இருந்தே பெரிய அளவில் எதிர்பார்ப்பை உருவாக்கி வரும் படம் தற்காலிகமாக SK 13 என்று அழைக்க படுகிறது. ராஜேஷ் இயக்க, வெற்றி பட தயாரிப்பாளர் கே.ஈ. ஞானவேல் ராஜா தயாரிக்கும் இந்த படத்தின் இசை அமைப்பாளராக ஹிப் ஹாப் ஆதி ஒப்பந்தமாகி உள்ளார்.\nS K 13 படத்தின் படப்பிடிப்பு துரிதமாக நடைபெற்று வருகிறது.\n← கௌதமி அடாவடி ; கொதிக்கும் ‘சிவா மனசுல புஷ்பா’ இயக்குனர்!!\nபடப்பிடிப்பில் சாமியாடிய புதுமுக நடிகை!! →\nசிவகார்த்திகேயன்13 படம் பூஜையுடன் துவங்கியது!
நத்தத்தில் சூரியகாந்தி சாகுபடி| Dinamalar\nநத்தத்தில் சூரியகாந்தி சாகுபடி\nAdded : ஆக 27, 2021 05:52\nதிண்டுக்கல் : நத்தம் பகுதியில் சூரியகாந்தி சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.திண்டுக்கல், நத்தம், பழநி சுற்றுவட்டாரப் பகுதிகளில் சூரியகாந்தி சாகுபடியாகிறது. சமீப காலமாக பறவைகள் தொல்லை, போதிய விலை கிடைக்காதது போன்ற காரணங்களால் அதன் சாகுபடி பரப்பு குறைந்து வருகிறது. தற்போது நத்தம் பகுதிகளில் சூரியகாந்தி சாகுபடியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.\nதிண்டுக்கல் : நத்தம் பகுதியில் சூரியகாந்தி சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.\nதிண்டுக்கல், நத்தம், பழநி சுற்றுவட்டாரப் பகுதிகளில் சூரியகாந்தி சாகுபடியாகிறது. சமீப காலமாக பறவைகள் தொல்லை, போதிய விலை கிடைக்காதது போன்ற காரணங்களால் அதன் சாகுபடி பரப்பு குறைந்து வருகிறது. தற்போது நத்தம் பகுதிகளில் சூரியகாந்தி சாகுபடியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.\nநத்தம் மணக்காட்டூர் அருகே செடிகளில் பெரிய அளவில் பூக்கள் பூத்து விளைச்சல் கண்டுள்ளது. இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் சூரியகாந்தி பூக்களுடன் செல்பி எடுத்து மகிழ்கின்றனர்.\nதிண்டுக்கல் : நத்தம் பகுதியில் சூரியகாந்தி சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.திண்டுக்கல், நத்தம், பழநி சுற்றுவட்டாரப் பகுதிகளில் சூரியகாந்தி சாகுபடியாகிறது. சமீப காலமாக பறவைகள்\nகள்ளக்குறிச்சி நகராட்சியில் சிறப்பு மருத்துவ முகாம்
வகுப்பறையை சுத்தம் செய்யும் போது கால் விரல் இழந்த மாணவனுக்கு ரூ.1 லட்சம் இழப்பீடு | HC orders for Rs.1 lakh compensation toastudent who lost his toe while cleaning the classroom in School - hindutamil.in\nLast Updated : 28 Dec, 2021 10:40 PM\nPublished : 28 Dec 2021 10:40 PM\nLast Updated : 28 Dec 2021 10:40 PM\nவகுப்பறையை சுத்தம் செய்யும் போது கால் விரல் இழந்த மாணவனுக்கு ரூ.1 லட்சம் இழப்பீடு\nபள்ளி வகுப்பறையை சுத்தம் செய்யும் பணியில் மேஜை விழுந்து கால் விரல் துண்டான மாணவனுக்கு ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.\nமதுரை கீழ உறப்பனூரைச் சேர்ந்தவர் பி.ஆதிசிவன், மாநில மனித உரிமை ஆணையத்தில் தாக்கல் செய்த மனு:\nஎன் மகன் சிவநிதி. திருமங்கலம் பகுதியிலுள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 2015-ல் 8-ம் வகுப்பு சி படித்து வந்தார். கடந்த 24.6.2015-ல் வகுப்பாசிரியர் மாணவர்களை வகுப்பறையை சுத்தம் செய்ய வைத்துள்ளார். அப்போது மேஜை விழுந்து சிவநிதியில் இடது கால் பெரு விரலுக்கு பக்கத்து விரல் துண்டானது. என் மகன் ராணுவத்தில் சேர விரும்பினார். கால் விரல் துண்டானதால் அவரது கனவு நிறைவேறாமல் போய்விட்டது. உரிய இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும்.\nஇந்த மனுவை விசாரித்து நீதிபதி டி.ஜெயச்சந்திரன் பிறப்பித்த உத்தரவு:\nதமிழகத்தில் பல்வேறு பள்ளிகளில் மாணவர்கள் சு்த்தம் செய்யும் பணியில் ஈடுபடுத்தப்படுவதாக புகார்கள் வருகின்றன. பள்ளி நிர்வாகத்தின் மெத்தனத்தால் மனுதாரின் மகனின் காலில் ஒரு விரல் துண்டாகியுள்ளது. இதனால் மனுதாரருக்கு அரசு4வாரத்தில் ரூ.ஒரு லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்.\nதமிழகத்தில் பள்ளிகளில் வகுப்பறை, கழிப்பறை சுத்தம் செய்யும் பணியில் மாணவர்கள் ஈடுபடுத்தப்படாமல் இருப்பதை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் உறுதி செய்ய தமிழக அரசு உத்தரவிட வேண்டும்.\nகடற்கரை தற்காலிகப் பாதை; பெரிய மாற்றத்துக்கான தொடக்கம்: முதல்வர் ஸ்டாலின்\nபுதுச்சேரியில் இருவருக்கு ஒமைக்ரான் தொற்று: தடுப்பு நடவடிக்கைகளை முடுக்கிவிட ஆளுநர் தமிழிசை உத்தரவு\nடிசம்பர் 28- தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை- முழுமையான பட்டியல்\nடிசம்பர் 28: தமிழக நிலவரம்; மாவட்ட வாரியாக கரோனா தொற்றுப் பட்டியல்
8-ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு மே 31-ல் சியோமி கொடுக்கும் சர்ப்ரைஸ்;என்னது அது.? | Leaked Xiaomi Mi 8 video shows in screen fingerprint sensor in action - Tamil Gizbot\nPublished: Saturday, May 19, 2018, 16:02 [IST]\nபோதுமான அளவில் சூப்பர் பட்ஜெட், பட்ஜெட் மற்றும் மிட்-ரேன்ஜ் விலையிலான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துவிட்ட சியோமி நிறுவனம், மெல்ல மெல்ல விஸ்வரூபம் எடுத்து ஹை-எண்ட் ஸ்மார்ட்போன்களை சந்தையில் களமிறக்கி வருகிறது.\nஅந்த வரிசையில் சியோமி நிறுவனத்தின் அடுத்தகட்ட ஸ்மார்ட்போன்கள், வருகிற மே 31 ஆம் தேதி அன்று நடக்கும் நிகழ்வொன்றில் வெளியாக உள்ளது. இந்த நிகழ்வில், மி 7, மி 8 மற்றும் மி பேண்ட்3ஆகியவைகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஒரு ஸ்பெஷல் எடிஷன் ஆகும்.!\nவெளியாகவுள்ள மி7ஸ்மார்ட்போன் தான் நிறுவனத்தின் அடுத்தக்கட்ட ஸ்மார்ட்போன் என்பதில் குழப்பம் இல்லை. அப்படி இருக்க உடனடியாக மி 8 ஸ்மார்ட்போனும் வெளியாவது ஏன்..? என்பது தான், இங்கு எழும் ஒரே கேள்வி. மி8 ஆனது சியோமி நிறுவனத்தின் 8-வது ஆண்டு விழாவை கொண்டாடும் முனைப்பின் கீழ் வெளியாகும் ஒரு ஸ்பெஷல் எடிஷன் ஆகும்.\nஅண்டர்-டிஸ்பிளே கைரேகை சென்சாரை கொண்டிருக்கும்.!\nசியோமி மி 8 தொடர்பாக நிறுவனத்திடமிருந்து எந்த ஒரு உத்தியோகபூர்வ உறுதிமொழியும் இன்னும் வெளியாவையை என்றாலும் கூட, அதன் அம்சங்கள் பற்றிய விவரங்கள் வெளிவந்துள்ளன. விபோ தளம் வழியாக வெளியாகியுள்ள லீக்ஸ் தகவலின்படி, மி 8 ஆனது அண்டர்-டிஸ்பிளே கைரேகை சென்சாரை கொண்டிருக்கும்.\nநிறுவனத்தின் மியூஐ 9-ஐ கொண்டு இயங்கும்.!\nவெளியானது மிகவும் குறுகிய வீடியோ கிளப் தான் என்றாலும் கூட, போதுமான தகவல்களை அறிய முடிகிறது. காட்சிப்படும் மி 8 ஆனது மிகவும் கடினமானதாக உள்ளது. உடன் ஹோம் ஸ்க்ரீனை பார்க்கும் போது, மி 8 ஆனது நிறுவனத்தின் மியூஐ 9-ஐ கொண்டு இயங்கும் என்றே தோண்றுகிறது. உட்பொதிக்கப்பட்டுள்ள கைரேகை சென்சார் ஆனது, பயனரின் கட்டைவிரலை ரீட் செய்யும். டிஸ்பிளேவின் குறிப்பிட்ட பகுதியின் கீழ் பொருத்தப்பட்டிருக்கும். அதை காட்சிப்படுத்தும் வண்ணம் அந்த இடம் ஒளிரும் என்பதும் குறிப்பிடத்தக்கது.\n3டி பேஷியல் ரிக்ககனைசேஷன்.!\n(வெளியான அறிக்கையின்படி) இந்த சியோமி பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் ஆனது, ஆப்பிள் நிறுவனத்தின் சமீபத்திய வெளியீடான ஐபோன் எக்ஸ்-ல் இடம்பெற்றுள்ள 3டி பேஷியல் ரிக்ககனைசேஷன் அம்சத்தினை கொண்டுள்ளது. ஒரு சில நாட்களுக்கு முன், மி 8 ஸ்மார்ட்போனில், இருப்பது போன்ற ஒரு புகைப்படம் வெளியானதும் இங்கு குறிப்பிடத்தக்கது. இந்த செயல்முறையானது மிகவும் பாதுகாப்பான வகையில் இருக்க வேண்டும்என்பதால், 2டி படத்திற்குப் பதிலாக பயனர் முகத்தின் ஒரு 3டி வரைபடத்தை இந்த தொழில்நுட்ப்பம் உருவாக்கும்.\nமி 8 ஸ்மார்ட்போனில் இருந்து என்ன எதிர்பார்க்கலாம்.?\nநிறுவனத்தின் 8-வது ஆண்டு பதிப்பு என்பதால், இந்த ஸ்மார்ட்போன் மிகவும் சிறப்பான அம்சங்களை பெறும் என்பதில் சந்தேகம் வேண்டாம். குறிப்பாக க்வால்காம் ஸ்னாப்ட்ராகன் 845 SoC பயன்படுத்துவதாகக் கூறப்படுகிறது. டிஸ்பிளேவை பொறுத்தவரை ஒரு OLED டிஸ்பிளே இடம்பெற அதிக வாய்ப்புள்ளது. இந்த ஸ்மார்ட்போன் தொடர்பான பிற விவரங்கள் இன்னும் வெளிச்சத்திற்கு வரவில்லை. வந்ததும் அதை உடனுக்குடன் அறிந்து கொள்ள, தமிழ் கிஸ்பாட் தளத்தின் மொபைல் பிரிவின் கீழ் இணைந்திருக்கவும்.\nLeaked Xiaomi Mi 8 video shows in-screen fingerprint sensor in action. Read more about this in Tamil GizBot.\nStory first published: Saturday, May 19, 2018, 16:02 [IST]
உங்கள் உடல் எடையை சீக்கிரம் குறைக்க விரும்புகிறீர்களா? அப்போ தினமும் இதை உண்ணுங்கள்! - Times Tamil News\nஉங்கள் உடல் எடையை சீக்கிரம் குறைக்க விரும்புகிறீர்களா? அப்போ தினமும் இதை உண்ணுங்கள்!\nநமது வேக வாழ்க்கையில் நாம் மறந்து போன வரகை நாம் மீண்டும் பயன்படுத்த ஆரம்பித்தால் நம் வாழ்க்கைக்கு மீண்டும் புத்துயிர் ஊட்டுவதாக அமையும்.\nவரகு அரிசி ரத்தத்தில் அதிகளவு சேர்ந்துள்ள‍ ச‌ர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தி, மிதமான அளவுடன் பராமரிக்கிறது. வரகில் புரதம், கால்சியம், வைட்டமின் பி ஆகியன இருக்கின்றன. தாதுப்பொருட்களும் நிரம்ப உள்ளன. மேலும், விரைவில் செரிமானம் அடைவதுடன் உடலுக்குத் தேவையான சக்தியையும் கொடுக்கும்.\nநடுவயது, முதிர்ந்த வயதினருக்கு வரக்கூடிய மூட்டுவலியைக் கட்டுப்படுத்தி, ஆரோக்கியத்தைத் தருகிறது. மாதவிடாய்கோளாறுகளால் அதிகளவு பாதிப்பைச் சந்திக்கும் பெண்கள் இந்த வரகைச் சமைத்து சாப்பிடுவது நல்லது. இரத்த‍ போக்கு சீரடையும், வயிற்று வலியும் குறையும் என்கிறார்கள் சித்த‍ மருத்துவர்கள்.
சென்னையில் அசத்தலான5நாள் நாடகவிழா - கவின் மலர்\nநாசர், ரோகிணி, குரு சோமசுந்தரம், விமல், கலைராணி, வேல.ராமமூர்த்தி ஆகியோர் ஓராள் நாடகங்களை நிகழ்த்தவுள்ளனர்.\nசென்னை மிகப்பெரும் கொண்டாட்டத்துக்குத் தயாராகிக்கொண்டிருக்கிறது. அக்டோபர்2முதல்6வரை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கமும் சென்னை கேரள சமாஜமும் இணைந்து நடத்தவிருக்கும் தென்னிந்திய மக்கள் நாடக விழா ஏற்பாடுகள் மும்முரமாக நடந்துவருகின்றன. கடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பே மத்தியில் பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது என மக்களை எச்சரித்து பா.ஜ.க.வுக்கு வாக்களிக்கவேண்டாம் என மக்களைக் கோரி, அகில இந்திய அளவில் 600க்கும் அதிகமான நாடகக் கலைஞர்கள் கையெழுத்திட்ட அறிக்கை வெளியானது. சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் இப்படியொரு கோரிக்கையை இதற்குமுன் நாடகக் கலைஞர்கள் வைத்ததில்லை. ஆனால் பா.ஜ.க. மிருக பலத்தோடு ஆட்சியில் அமர்ந்துவிட்டது. மிக நுட்பமாக மதவாதத்தைப் பரப்புகிறது. நாளும் ஓர் அபாயஅறிவிப்பு, சர்வாதிகாரத் தலையிடல்கள் என பாசிசத்தின் கொடுங்கரங்கள் நம் கழுத்தை நெருக்கிக்கொண்டிருக்கின்றன. இவ்வேளையில் தென்னிந்தியா மட்டுமே தெளிவாக தன் அரசியலை முன்வைக்கிறது. அது கடந்த நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளிலும் பெரும்பாலும் எதிரொலித்தது. இத்தகைய அரசியல் சூழலில் கலைஞர்கள் தங்கள் கலையை ஆயுதமாக ஏந்தி மக்கள் முன் வருகிறார்கள்.\nஇந்நாடக விழா குறித்து சென்னை கலைக்குழுவின் நிறுவனரும் இந்நாடக விழாக்குழுவின் செயலாளருமான பிரளயனிடம் கேட்டபோது, “தமிழ்நாடு, கேரளா, பாண்டிச்சேரி, தெலங்கானா, ஆந்திரப்பிரதேசம், கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து 34 நாடகக்குழுவினர் இவ்விழாவில் நாடகங்களை நிகழ்த்தவிருக்கின்றனர். இக்குழுக்கள் மேடை நாடகங்கள், குறுநாடகங்கள், ஓராள் நாடகங்கள் ஆகியவற்றை நடத்துபவை. சர்வதேச அளவில் நாடக விழாவில் பங்கேற்கும் குழுக்களும் உண்டு; சிறுநகரங்களில், கிராமங்களில் மட்டுமே செயல்படும், திறந்தவெளி நாடகங்களையும் வீதி நாடகங்களையும் செய்யக்கூடிய குழுக்களும் உண்டு” என்றார். திரைக்கலைஞரும் விழாக்குழுவின் தலைவருமான ரோகிணி, “மும்பையில் பிருத்வி நாடக விழாவைப் பார்த்திருக்கிறேன். சென்னையில் இப்படி ஒரு விழா நடக்காதா என்று ஏக்கமாக இருந்தது. அதை நிஜமாக்க இன்று இந்த நாடகவிழா நடைபெறவிருக்கிறது.” என்கிறார். இவ்விழாவிற்கான வரவேற்பு மிகச் சிறப்பாக இருப்பதாகக் கூறுகிறார் தோழர் பிரளயன். “இந்த முறை கூட்டாளர்கள் எனப்படும் மீடியா பார்ட்னர்களைக் கண்டுபிடித்தோம். அச்சு ஊடகங்கள், பண்பலை சேனல்களோடு த.மு.எ.க.ச வலைதளத்தில் பணியாற்றும் தோழர்களும் விழா செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கின்றனர்.3மாதங்களாக பலரை சந்தித்து ஆதரவும் நிதியுதவியும் கேட்டுள்ளோம். குறிப்பாக திரைக்கலைஞர்கள் இந்த நாடகவிழாவுக்குப் பெருமளவில் ஆதரவு தந்திருக்கிறார்கள்\n“அக்டோபர்2அன்று காந்தியின் 150ஆவது பிறந்தநாள். அன்று இரவு ‘காந்தியும் அம்பேத்கரும்’ என்கிற மராட்டிய நாடகத்தின் கன்னட வடிவம், டி.எஸ். ஜோக்லேவின் மொழிபெயர்ப்பில் நிகழ்த்தப்படவிருக்கிறது. மறைந்த கவிஞர் இன்குலாபின் ‘அவ்வை’ நாடகத்தை மரப்பாச்சி குழுவும், கவிஞர் தமிழ் ஒளியின் ‘வீராயி’ காவியத்தை விழாவின் முதல் நாடகமாக சென்னை கலைக்குழுவும் நிகழ்த்தவிருக்கின்றன. இவை அல்லாமல் திரைக்கலைஞர்களின் பல ஓராள் நாடகங்கள் நிகழ்த்தப்படவிருக்கின்றன” என்கிறார். “திரைக்கலைஞர்களாக இருந்தாலும் நாடகத்திற்காக மேடையேறும்போது அவர்கள் முழுவதும் நாடகக் கலைஞர்களாகத்தான் இருக்கிறார்கள். புகழ் வீச்சு வேண்டுமானால் திரைக்கலைஞர்கள் பங்கேற்கிறார்கள் என்கிற கூடுதலான செய்தியாக மக்களுக்குத் தோன்றலாம். அரங்கத்தில் நாடகம் நிகழ்த்தும் கலையை எல்லா நடிகர்களாலும் எளிதாகச் செய்துவிட முடியாது. இதற்குத் தனியான மனநிலை, மொழி, தயாரிப்பு இருக்கவேண்டும். பேசுமொழி, உடல்மொழி, மனதின் மொழி, சிந்தனை மொழி, அரசியல் மொழி அனைத்தும் உள்ள கலைஞர்களால்தான் நிகழ்த்துக் கலையில் ஈடுபட முடியும்” என்கிறார் ரோகிணி. “தன் மண்ணின் வாசனையோடும், மொழியோடும் கற்றுக்கொண்ட கலையோடும் எளிமையான கலைஞர்கள் உருவாகி வருகின்றனர். அவர்கள் இந்த விழாவில் பங்கெடுக்கின்றனர். அதே நேரத்தில் சர்வதேச அரங்கில் தன் திறமையை வெளிப்படுத்தும் வாய்ப்பைப் பெற்றவர்களும் இவ்விழாவில் பங்கேற்கிறார்கள். இருதரப்பினருக்கும் மற்ற தரப்பிலிருந்து பெற்றுக்கொள்ளவும் கொடுக்கவும் நிறைய இருக்கிறது. இதுவே இவ்விழாவின் சிறப்பம்சம்” எனக் கருதுகிறார் ரோகிணி.\n“இது போன்ற பண்பாட்டு நிகழ்வுகள் மூலம் நாம் சொல்ல விழைவது என்ன? பிரபல ஊடகங்கள், திரைப்படங்கள், தொலைக்காட்சி என அனைத்தும் பொழுதுபோக்குக்காக மட்டுமே என்றாகிப்போன நிலையில், பேசப்படவேண்டிய விஷயங்கள் பேசப்படாமல் இருக்கின்றன. ஆங்காங்கே ஒரு சில திரைப்படங்கள் வருகின்றன. ஆனால் இந்த நாடகவிழா இன்று நாட்டில் என்ன நடந்துகொண்டிருக்கிறதோ அதன் பிரதிபலிப்பாக இருந்து முக்கியமான வேலையைச் செய்யப்போகிறது. புத்தகங்கள், கவிதைகள் செய்கின்ற வேலையை இந்த நாடகங்கள் இன்னும் அழுத்தமாக, இன்னும் எளிதாகச் செய்யவிருக்கின்றன” என்ற நம்பிக்கையையும் தெரிவிக்கிறார் ரோகிணி. விழாவுக்கான சிறப்பு ஏற்பாடுகள் பற்றி பிரளயன் கூறினார். “ஒரு நாளில் நாடகம் நிகழ்த்த வரும் குழுக்களுக்கு தங்குமிடம் நிகழ்வு நடைபெறும் கேரள சமாஜத்துக்கு அருகிலேயே ஏற்பாடு செய்யப்படுள்ளது. கேரள சமாஜத்தில் மூன்று தளங்கள் உண்டு. அவை ஒவ்வொன்றிலும் ஓர் அரங்கம் உண்டு. அனைத்திலும் நாடகங்கள் நடைபெறவுள்ளன. முதியவர்களுக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கும் லிஃப்ட் வசதி உண்டு. பார்க்கிங் வசதி இல்லாததால் நிகழ்வுக்கு வருவோர் அருகில் உள்ள நேரு பூங்கா மெட்ரோ ஸ்டேஷனில் தங்கள் வாகனங்களை நிறுத்திக்கொள்ளலாம். ஆயிரம் பேர் அமர்ந்து நாடகம் பார்க்க வசதியுண்டு. சென்னை கேரள சமாஜம் 80 ஆண்டுகளாக செயல்படுகிறது. சென்னையில் உள்ள மலையாளிகளுக்கான பண்பாட்டு வெளிக்காக உருவான அமைப்பு. இதனால் மிகப்பெரிய அளவில் அரங்கங்களை உருவாக்கி இருக்கிறது. அதன் தலைவர் பி.கே.என். பணிக்கர், செயலாளர் பாலகிருஷ்ணன் என அமைப்பின் பெரும்பாலானோர் மதச்சார்பற்ற அரசியலில் நம்பிக்கையுடைவர்கள். இவர்களின் இந்த அரசியலும் நாடகவிழாவில் பெரும்பங்கை ஆற்றுகிறது” . த.மு.எ.க.ச இந்த நாடகவிழாவை நடத்தவேண்டிய நோக்கம் என்ன? என்ற வினாவுக்கு விடையாக... “2017ல் நீண்ட நாட்களுக்குப் பின் தஞ்சையில் நடத்தினோம். இது இரண்டாவது முறை. நாடகவிழா ஏற்கெனவே மதுரையில் 1975ல், தஞ்சையில் 1979ல், சென்னையில் 1984ல், மதுரையில் 1986ல் கருத்தரங்கத்துடன் கூடிய நாடக விழா, மீண்டும் மதுரையில் 1988ல் அரசியல் நாடகவிழா நடந்துள்ளன. 1997ல் சென்னை கலைக்குழுவின் 12ஆவது ஆண்டு நிறைவு விழாவை அகில இந்திய அளவிலான நாடகவிழாவாக நடத்தியது. இப்படி பல நாடக விழாக்களை நடத்திய அனுபவம் த.மு.எ.க.ச.வுக்கு உண்டு.\nஇந்த நாடகவிழாவுக்கு வரும் 34 குழுக்களில் 10 குழுக்கள்தான் தமுஎகசவோடு சேர்ந்து செயல்படுபவை. அழைக்கப்பட்டிருக்கும் பிற குழுக்களும் சமூக மாறுதலுக்கானதே கலை என நம்புகின்றவை. பெரும்பாலும் நவீன நாடகவெளியில் முற்போக்காளர்களே இருக்கிறார்கள். இவர்களை ஒருங்கிணைக்கவேண்டிய தேவை இருக்கிறது. தென்னிந்தியாவில் நிறைய குழுக்கள் உள்ளன. நடைமுறையில் ஒரு குழுவின் செயல்பாட்டை அறிந்துகொள்ள மற்ற குழுக்களுக்கு வாய்ப்பிருப்பதில்லை. தெரிந்துகொள்ள முயற்சிகளும் இல்லை. ஒரு நெகிழ்வான இணைப்பை ஏற்படுத்தவும், நாடகக்கலை வாழ்ந்துகொண்டு இருக்கிறது என்று தெரியப்படுத்தவும், நாங்கள் இருக்கிறோம் -இங்கு ‘ஆட்கள் வேலை செய்கிறார்கள்’ என்று சொல்லவும் இந்த விழா ஒரு வாய்ப்பாக இருக்கும். கைபேசி யுகமென்றாகிவிட்ட காலத்தில், பொழுதுபோக்குக்கென தனியாக ஓரிடத்திற்குச் செல்ல அவசியம் இல்லை. ஆனால் ஒரு நாடகத்தைக் காண்பது போன்ற நேரடி அனுபவம் போல நீங்கள் அதை பதிவு செய்து எவ்வளவு பெரிய திரையில் பார்த்தாலும் கிடைக்காது. அதை அனுபவிக்க வேண்டுமென்றால் குறிப்பிட்ட இடத்தில் குறிப்பிட்ட நேரத்தில் நாடகம் நிகழ்கையில் இருக்கவேண்டும். இந்த நேரடித்தன்மை, தொட்டுணரும் அனுபவம்தான் நாடகக் கலையின் தனித்தன்மை. நாடகம் உடனடி விளைவுகளை ஏற்படுத்துவது. நாடகத்திற்கான பார்வையாளர்கள் கடந்த காலத்தைவிட இப்போது அதிகரித்திருத்திருக்கிறார்கள். கடந்த காலத்தைவிட அதிகமான நாடகச் செயல்பாடுகள் இப்போது உள்ளன. பல இளைஞர்கள் நாடகத்துறையில் இயங்கி வருகிறார்கள். பல கல்லூரிகளில் போட்டிகள், விழாக்கள் என நாடகச் செயல்பாடுகள் உண்டு. மாற்றங்கள் நடக்கின்றன. இப்படியொரு சூழலில் நாடகம் நடக்கிறது” என்கிறார் பிரளயன்.\nமிகப்பெரும் திருவிழாவாக இந்நாடகவிழா மாறப்போகிறது என்பதற்கான அறிகுறிகள் தென்படத் தொடங்கிவிட்டன. வடசென்னை, தென்சென்னை த.மு.எ.க.ச தோழர்கள் இரவு பகலாக விழாவுக்கான ஏற்பாடுகளை செய்துகொண்டிருக்கிறார்கள். சமூக வலைதளங்களிலும் விழா குறித்த செய்திகளைப் பலர் ஆர்வமாகப் பகிர்வதைக் காண முடிகிறது. “உண்மைகளைப் பேசக்கூடிய ஐந்து நாட்களாக இவ்விழா இருக்கும். தயாரிப்பு வேலைகளில், செயல்பாடுகளில் பங்கேற்றதன் மூலம் இந்த நம்பிக்கை கிடைத்திருக்கிறது. தொடர்ந்து இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை நாடக விழாவை நடத்துவதற்கான தெம்பை இந்த விழா தரும். சமத்துவத்தை நம்புகிற எல்லோருக்கும் தொடர்ந்து பணியாற்றுவதற்கான நம்பிக்கையைக் கொடுக்கும் . இவ்விழா தொடர்ந்து நடத்தப்படவேண்டும். சென்னையில் ஆண்டுதோறும் நடைபெறும் சர்வதேசத் திரைப்பட விழா ஆரம்பத்தில் ஒரு சிலர் இணைந்து சின்ன இயக்கமாகத்தான் தொடங்கப்பட்டது. அது இப்போது சர்வதேசத் திரைப்பட விழாவாக உலகப் பிரசித்தி பெற்று இருப்பதற்கு சென்னை மக்கள் தந்த ஆதரவே காரணம். ஊடகங்களும் மக்களும் அவ்விழா குறித்துப் பேசத் தொடங்கியதே முக்கியமான காரணம். அப்படியான ஒரு தன்மையை இந்த நாடக விழாவிலும் காண்கிறேன். சர்வதேச அளவில், முக்கியத்துவம் பெற்ற நாடகவிழாவாக வருங்காலத்தில் இவ்விழா மாற்றப்படவேண்டியது அவசியம்.” என்கிறார் ரோகிணி.\nTags Festival in Chennai Drama Festival in Chennai5நாள் நாடகவிழா
2014 – Page 18 – திருமந்திரம்\n» 2014 (Page 18)\nஇரு வரிக் கதை – 11\n15 Jan 2014\tRie\nதங்கக் கடிகாரம் ஒன்றை கண்காட்சியில் இருந்து திருடினான். பிறகு அவனுக்கு நிறைய நேரம் இருந்தது.\n7 Jan 2014\tRie\nநுனிப்புல் மேய்வது ஒரு கலை\nநுனியோடு நிறுத்திக் கொள்வது தவம்\n(வயது வந்தவர்களுக்காக எழுதப்பட்டது)\nஇரு வரிக் கதை – 10\n3 Jan 2014\tRie\n“காலேல அங்க வாசல் பெருக்கிகிட்டிருந்த பொண்ணு கிட்ட ப்ரப்போஸ் பண்ணப் போனியே! என்ன ஆச்சு”.\n“ஆம் ஆத்மிக்கு ஓட்டு போடச் சொன்னா!”\nநாமெல்லாம் உப்பு பொம்மைகள்\nஅப்பினில் கூர்மை ஆதித்தன் வெம்மையால்\nசெப்பினிற் சீவன் சிவத்துள் அடங்குமே. – (திருமந்திரம் – 136)\nகடல் நீரில் உள்ள உப்புத் தன்மை சூரியனின் வெப்பத்தினால் உப்பு என்கிற பெயருள்ள உருவம் பெறுகிறது. அந்த உப்பு மறுபடியும் நீரில் கலக்கும் போது நீரோடு நீராக மாறி விடும். அது போலவே நம்முடைய சீவனும் சிவத்தினில் இருந்து உருவம் பெற்று வந்துள்ளது. நமது ஆயுள் முடியும் போது, நாம் மறுபடியும் சிவத்தினுள் கலந்து விடுவோம் .\nஇரு வரிக் கதை – 09\n2 Jan 2014\tRie\n”எல்லாரும் அமைதியா வரிசைல வாங்கப்பா!” சலிப்புடன் சொன்னார் சித்ரகுப்தர். “நீங்க என்ன எங்கள வரிசப்படியா கூட்டிட்டு வந்திருக்கீங்க?” வரிசையில் இருந்து ஒரு இளவயதுக் குரல் கேட்டது.\nநமக்கு வேறு போக்கிடம் கிடையாது\nசத்தமுதல் ஐந்துந் தன்வழித் தான்சாரில்\nசுத்த வெளியிற் சுடறிற் சுடர்சேரும்\nஅத்தம் இதுகுறித் தாண்டுகொள் அப்பிலே. – (திருமந்திரம் – 135)\nபஞ்ச பூதங்களால் ஆன நம்முடைய உடல், ஐந்து தன்மாத்திரைகளான சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் ஆகியவற்றைச் சார்ந்திருக்கின்றன. ஆனால் நமது ஆன்மாவிற்கு பரமாத்மாவான சிவனை விட்டால் சேர்விடம் வேறு ஏது? சுத்தமான பரவெளியில் நம்முடைய ஆன்மா என்னும் சுடர், பேரொளியாகிய அந்த சிவனைச் சேரும். இதைப் புரிந்து கொண்டு, அந்த சிவனது அருட்கடலில் நாம் கலந்திருப்போம்.\nநம்முடைய உடல் தன்னுடைய மூலமான ஐம்பூதங்களைச் சார்ந்திருக்கிறது. அது போல நம்முடைய ஆன்மா, தன்னுடைய மூலமான பரமாத்மாவை சார்கிறது.
அதிக மரபணு உள்ளவர்களுக்கு உடல் மெலிந்துவிடும்! D N A ஆய்வில்! ~ தினக்ஸ்\nஅதிக மரபணு உள்ளவர்களுக்கு உடல் மெலிந்துவிடும்! D N A ஆய்வில்!\n3:34 AM mondia dinaex 1 comment\nலண்டன்: சிலர் உடல் மெலிந்த நிலையில் காணப்படுகின்றனர். அதற்கு மரபணு அதிக அளவில் இருப்பதே காரணம் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nலண்டனில் உள்ள இம்பீரியல் கல்லூரி பேராசிரியர் பிலிப் புரோகல் தலைமையிலான குழுவினர் இது குறித்து ஆய்வு மேற்கொண்டனர். இதற்காக 95 ஆயிரம் பேரிடம் மரபணு (டி.என்.ஏ.) சோதனை மேற்கொள்ளப்பட்டது.\nஅதில், உடல் நலத்தை பேணி காக்கும் குரோமோ சோம்-16ல் மரபணு அதிக அளவில் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. மேலும், அவற்றில் உள்ள “ஜீணோம்” என்ற மூலக்கூறில் அதிக துவாரங்கள் இருப்பதாலும் இழப்பு ஏற்படுகிறது. அதனால் தான் நோய் ஏற்பட்டு உடல் மெலிகிறது.\nபொதுவாக மரபணு அதிகம் உள்ள குழந்தைகள் சாப்பாட்டை விரும்பி சாப்பிட மாட்டார்கள். அதனால் உடல் ஆரோக்கியமின்றி மெலிந்து காணப்படுகிறார்கள் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.\nSeptember 3, 2011 at 10:45 AM Reply
2.O Tamil Review :2பாயிண்ட் ஓ விமர்சனம்.!\nHome Latest News 2.O விமர்சனம்.!\n2.O Tamil Review : லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அக்ஷய் குமார், எமி ஜாக்சன் என பலர் நடித்து வெளியாகியுள்ள படம்2பாயிண்ட் ஓ.\nஷங்கர் பிரம்மாண்டமாக இயக்கியுள்ள இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். நீரவ் ஷா அவர்கள் ஒளிப்பதிவு செய்துள்ளார்.\nதொலைபேசியின் கதிர்வீச்சுகளால் பறவையினங்களை அழித்தவர்களை வில்லனான அக்ஷய் குமார் பழி வாங்க துடிக்கிறார். இவரிடம் இருந்து மக்களை காப்பாற்ற போராடுகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ( சிட்டி ). இவர்களுக்கு இடையில் நடக்கும் விஞ்ஞான யுத்தமே இப்படத்தின் கதைக்களம்.\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் :\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மீண்டும் தன்னுடைய முழுமையான நடிப்பாற்றலுடன் ரசிகர்களை மிரள வைத்துள்ளார். தன்னுடைய ரசிகர்களை ஆரவாரத்துடன் கொண்டாட வைத்துள்ளார்.\nஅக்ஷய் குமார் :\nஅக்ஷய் குமார் இப்படத்திற்காக அதிகமான ரிஸ்க் எடுத்துள்ளார். அவருடைய மேக்கப் பிரம்மிக்க வைத்துள்ளது.\nரிஸ்க்கான கதாபாத்திரத்தில் அக்ஷய் குமார் தன்னுடைய துணிச்சலான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.\nஅக்ஷய் குமாருக்கு பிரபல தமிழ் நடிகரான ஜெய பிரகாஷ் குரல் கொடுத்துள்ளார்.\nஎமி ஜாக்சன் :\nஎமி ஜாக்சன் தனக்கு பெரிய அளவிலான கதாபாத்திரம் இல்லை என்றாலும் தன்னுடைய பகுதியை அருமையாக முடித்து கொடுத்துள்ளார். அவருடைய ஒல்லியான உடலமைப்பு ஸ்டண்ட் காட்சிகளுக்கு பெரிதும் உதவியாக அமைந்துள்ளது.\nஇயக்குனர் ஷங்கர் :\nஇயக்குனர் ஷங்கரின் விறுவிறுப்பான திரைக்கதை நம்மை பரபரப்படைய செய்கின்றன. ஷங்கர் அவர்களின் இந்த பிரம்மாண்ட முயற்சி இந்திய சினிமாவையே பெருமை கொள்ள வைத்துள்ளது.\nமேலும் ஷங்கரின் இந்த முயற்சி மிக பெரிய வெற்றியாகவே அமைந்துள்ளது. அவருக்கு ரசிகர்களின் சார்பாக மிக பெரிய பாராட்டுகள்.\nஏ.ஆர்.ரஹ்மானின் இசை வழக்கம் போல இப்படத்திற்கு மிகப் பெரிய பலமாக அமைந்துள்ளது. மற்ற படங்களை காட்டிலும்2பாயிண்ட் ஓ படத்திற்காக புதுப்புது வகையான இசையை படத்தில் சேர்த்து கொடுத்துள்ளார். படத்தின் பாடல்கள் அனைத்தையும் சரியான இடத்தில் சேர்த்து படத்திற்கு மெருகூட்டியுள்ளனர்.\nநீரவ் ஷாவின் ஒளிப்பதிவு, 3D தொழிநுட்பம், ரசூல் பூக்குட்டியின் சவுண்ட் எஞ்சினீயரிங் ஆகியவை தரமானவையாக அமைந்துள்ளது. நிச்சயம் இவர்களுக்கு பல விருதுகள் கிடைக்கும் வாய்ப்புகள் உள்ளன.\nபரபரப்பாக்கும் கிளைமாக்ஸ் காட்சிகள்\nதமிழ் சினிமாவை ஹாலிவுட் தரத்தில் கொடுத்தது.\nரஜினிகாந்த், அக்ஷய் குமாரின் திறமையான நடிப்பு\n2 பாயிண்ட் ஓ விமர்சனம்\nமொத்தத்தில் 2.O அபரீத வளர்ச்சி அடைந்து வரும் தொழிநுட்பங்களால் ஏற்படும் அழிவுகளையும் சுட்டி காட்டும் படமாக அமைந்துள்ளது. படம் முடிந்த பிறகு நமக்கே செல் போனை தொடலாமா? வேண்டாமா? என தோன்றும் அச்ச உணர்வே படக்குழுவினருக்கு கிடைத்த வெற்றி.\n2.O Tamil Review\nPrevious article2 பாயிண்ட் வெறித்தனம் – தமிழ் ரசிகர்கள் விமர்சனம்.!\nNext articleகுறைந்து வரும் பெட்ரோல், டீசல் விலை.!\nபடமா இது? படு மொக்கை – 2.O படத்தை மோசமாக விமர்சனம் செய்த பிரபலம்.!\n2 பாயிண்ட் வெறித்தனம் – தமிழ் ரசிகர்கள் விமர்சனம்.!\n2 பாயிண்ட் ஓ முதல் பாதி மினி விமர்சனம்.!
குர்ஆனை எளிதில் ஓதிட... - Page 2\nby பானுஷபானா on Sat 8 Nov 2014 - 15:55\nLast edited by பானுஷபானா on Mon 10 Nov 2014 - 14:06; edited2times in total\nRe: குர்ஆனை எளிதில் ஓதிட...\nby பானுஷபானா on Fri 21 Nov 2014 - 14:37\nபானுஷபானா wrote: நன்றி நன்றி இன்னும் இருக்கு\nஉள்ளதை பதியுங்கள் அக்கா பயனுள்ளதாய் அமையும்\nகண்டிப்பா நன்றீ தம்பி\nby Nisha on Sat 22 Nov 2014 - 0:44\nபானு! நீங்கள் ஏன் நன்றி என எழுதுவதற்கு பதில் நன்றீ என எழுதுகின்றீர்கள்?\nby பானுஷபானா on Sat 22 Nov 2014 - 9:15\nNisha wrote: பானு! நீங்கள் ஏன் நன்றி என எழுதுவதற்கு பதில் நன்றீ என எழுதுகின்றீர்கள்?\nநான் என்ஹெசெம் ரைட்டர் உபயோகித்து தான் சேனையில் பதிவு போடுகிறேன். சிலநேரம் பெரிய ற வுக்கு caps lock on செய்து டைப் செய்துட்டு ஆஃப் செய்ய மறந்துட்டு டைப் செய்யும்போது இதுபோல ஆகிடுது. கவனிச்சா திருத்துவேன். கவனிக்காமலும் சில நேரம் விட்டுடுவேன்.\nby நேசமுடன் ஹாசிம் on Sat 22 Nov 2014 - 9:20\nநானும் இந்த NHM தான் அதனால் சிலநேரம் அவசரத்தில் கவனிக்காமல் விடப்பட்டுவிடும் அதில் POOO எழுதமுடிவதில்லை நீங்கள் எப்படி எழுதுகிறீர்கள்\nby பானுஷபானா on Sat 22 Nov 2014 - 10:59\nதமிழில் என்ன வார்த்தை என சொல்லுங்க ஹாசிம்\nby நேசமுடன் ஹாசிம் on Sat 22 Nov 2014 - 11:10\nஅதுதான்பா பு வில் வரும் Poovanna\nby பானுஷபானா on Sat 22 Nov 2014 - 11:15\nஅதற்கு puu என டைப் செய்ங்க பூ வரும்\nஅதாவது நேரடித் தமிழ் தட்டெழுத்தில் எந்த கீயை அழுத்த வேண்டும் என்பது எனது கேள்வி\nநேசமுடன் ஹாசிம் wrote: அதாவது நேரடித் தமிழ் தட்டெழுத்தில் எந்த கீயை அழுத்த வேண்டும் என்பது எனது கேள்வி\nஅது எனக்குத் தெரியாது ஹாசிம். nhm ல இப்படித் தான் டைப் செய்வேன்\nby நேசமுடன் ஹாசிம் on Sat 22 Nov 2014 - 11:27\nஅப்போ nhm ல ஆங்கிலத் தமிழ் அடித்துத்தான் எழுதுறிங்க போல மிக நீட காலமாக நானும் முயற்சிக்கிறேன் முடியலப்பா\nby பானுஷபானா on Sat 22 Nov 2014 - 11:29\nசேனை வந்ததிலிருந்து nhm ல தான் டைப் செய்றேன். கொஞ்ச நாள் சேனை எழுத்துருவி உபயோகித்தேன். இப்போது அதுவும் வருவதில்லை. அதிலிருந்து nhm ல தான் டைப் செய்றேன்\nby நேசமுடன் ஹாசிம் on Sat 22 Nov 2014 - 11:33\nபடித்த காலத்தில் ஆங்கில தட்டச்சு கோஸ் செய்திருந்தேன் தமிழில் செய்திருக்கவில்லை ஆங்கிலத்தில் D தரமான உயர் தரத்தில் சான்றிதழையும் பெற்றிருந்தேன் அதன் பயன் இங்கு வந்து இவ்வாறு இணையங்களில் எழுத ஆரம்பித்த போது தமிழ் எழுத்துக்களையும் கற்றுக்கொண்டு வேகமாக தட்டெழுத்திட முடிகிறது எனக்கெல்லாம் ஆங்கிலத்தமிழ் எழுதுவது மிகச்சிரமம் நேரடித்தமிழ் தட்டெழுத்தில்தான் இலகுவாக அமைகிறது அதனாலேயே கவிதைகளையும் அதிகமாக எழுத ஆரம்பித்தேன்\nby பானுஷபானா on Sat 22 Nov 2014 - 11:48\nகிரேட் தான் . எனக்கும் ஆசை ஆனா போக நேரம் இல்லை. என் பொண்ணு ஆங்கில டைப்பின் லோயர் ஹையர் ரெண்டுமே முடிச்சிட்டா. 10 வது முடிஞதும் ஷார்ட் ஹேண்டும், தமிழும் கத்துக்க சொல்லனும்னுஇருக்கேன்.\nby நேசமுடன் ஹாசிம் on Sat 22 Nov 2014 - 12:22\nநல்லது ஆங்கிலம் கத்திண்டாலே போதும் தமிழில் எழுத்துக்களைப் பார்த்துக்கொண்டால் தட்டெழுத்திடலாம் தனியாக கோஸ் செய்ய தேவையில்லை
வார ராசிபலன்: 29.11.2019 முதல் 05.12.2019 வவார ராசிபலன்: 29.11.2019 முதல் 05.12.2019 வரை! வேதா கோபாலன்ரை! வேதா கோபாலன் | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon\nவார ராசிபலன்: 29.11.2019 முதல் 05.12.2019 வரை! வேதா கோபாலன்\nவீட்டில் யாருக்காச்சும் திருமணம் நிச்சயமாகும் அல்லது நிகழும். யார் கண்டதுங்க.. அது உங்களுக்கே கூட இருக்கலாம். அலுவலகத்தில் உங்களை மேலிடத்தில் பாராட்டுவாங்க. அப்டியே சிறகு முளைச்சு வானத்தில் பறப்பது போல் உணர்வீங்க. அரசியல்வாதிகள் உங்க தொண்டர்களின் பிரச்னைகளைத் தீர்த்து வைப்பீங்க. மேலிடத்தில் உள்ளவங்க அந்தப் பொறுப்பை உங்க கிட்ட குடுப்பாங்க. கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் வரும். ரசிகர்களின் ஆதரவு கிடைக்கும். நீங்க ரொம்ப காலமாய்க் கனவு கண்டுக் கிட்டிருந்த விஷயங்கள் ஒவ்வொன்றாய் நிறைவேற ஆரம்பிக்கும். பெண்மணிகள் குடும்பத்தில் ஒற்றுமையை நிலைநாட்டுவீங்க. பேச்சுவார்த்தை இல்லாமல் இருந்த உறவினர்கள் மெல்ல வந்து சேருவாங்க். வார்த்தைகளில் நிதானம் வந்திருக்கிறது உங்களுக்கு. வெரி குட். இப்டியே இருந்துக்குங்க.\nஅலைச்சலும் வேலைப்பளுவினால் ஏற்படும் தொந்தரவுகளும் சற்றே… லேசாக… வழக்கத்தைவிடவும் அதிகரிக்கும். அதனால் என்னங்க? இறுதியில் இத்தகை நிலைமைகள் எல்லாம் தன்னிச்சையாய் மாறும். உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பயணங்களால் நன்மை உண்டாகும். வீண் வாக்குவாதங்கள் வேணாங்க. அதுபோன்ற சூழல்கள் ஏற்பட்டால் அந்த இடத்தைவிட்டே விலகிடுங்க. அலுவலகவாசிகள் அங்குள்ள பிராப்ளம்ஸைச் சாதுர்யத்துடன் சமாளிப்பார்கள். சிலருக்கு விரும்பிய இடமாற்றமும் பதவி உயர்வும் கிடைக்க சான்ஸ் இருக்குங்க. ஆனால் வேலைப்பளு காரணமாய் , ஏண்டா இந்த மாற்றல் கேட்டு வாங்கினோம்னு யோசிக்க ஆரம்பிப்பீங்க. வெயிட் வெயிட். பொறுமையா இருந்தீங்கன்னா, அப்பாடா சூப்பர் இடத்திற்கு வந்திருக்கோம் என்று ரியலைஸ் செய்வீங்கப்பா. ஷ்யூர். நீங்கவேணா பாருங்களேன்.\nசந்திராஷ்டமம்: நவம்பர் 28 முதல் நவம்பர் 30 வரை\nநீங்க பிசினஸ் செய்பவரா? எனில் வியாபாரத்தை தங்கள் நேரடிப் பார்வையில் செய்து வந்தால் நல்ல முன்னேற்றம் உண்டாகுமுங்க. மற்றவர்களை நம்பி வியாபாரத்தை விட்டீங்கன்னா, அவங்க உண்மையில் நம்பகமானவர்தானான்னு உறுதி செய்துக்கிட்டு அப்புறம் விடுங்க. விவசாயிகளுக்கு மகசூல் அருமையாய் இருக்கும். அலுவலகவாசிகள்உங்க புதிய முயற்சிகளிலும் துணிந்து ஈடுபடலாம். மேலிடத்திலிருந்து பாராட்டுக் கிடைக்கும். ஆனால் அதை உடனடியா எதிர்பார்க்காதீங்க. சிறிது காலம் உங்களை உன்னிப்பாய் கவனித்துவிட்டுப்பிறகுதான் பாராட்டுவாங்க. வெறும் வாய் வார்த்தையாய் அமைந்த பாராட்டு மட்டும் இல்லீங்கோ. அவார்ட்.. ரிவார்ட்னு ஏதாச்சும் கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு பெயரும் புகழும் அதிகரிக்கும்.\nசந்திராஷ்டமம்: நவம்பர் 30 முதல் டிசம்பர்3வரை\nநீங்க ஸ்டூடன்ட்டாய் இருந்தால் உங்க கோரிக்கைகள்.. அல்லது எதிர்பார்ப்புகள் அல்லது விருப்பங்கள் நிறைவேறும். ஆசிரியர்கள், பெற்றோர் சொல்படி கேட்டு நடக்க ஆரம்பிப்பீங்க. எனவே திடீர்னு நல்லபெயர் எடுக்க ஆரம்பிச்சு.. இதனால் உங்க டாடி மம்மிக்கும் நிம்மதியும் சந்தோஷமும் ஏற்படும். சிறிய நோய்கள் உள்ளவங்க உடற்பயிற்சி மேற்கொள்வது நல்லது. நீங்க உங்க ஆரோக்யத்தை கவனிக்க முடியாதபடி வேலை பளுவும் அலுவலகப் பொறுப்புகளும் இருக்கத்தான் செய்யும். ஆனால் அதைவிட உடல்நிலை முக்கியம்னு உறுதிய உங்ககிட்ட நீங்களே சொல்லிக்குங்க. குடும்பத்தில் வீண் விவாதங்கள் அவ்வப்போது ஏற்படும். அப்போ வாயை டைட்டா.. ஜிப் போட்டு மூடிக்குங்க. அலவலகவாசிகள் அதிகப்படியான வேலைப்பளுவை சுமக்க நேரிடும். பட்.. சந்தோஷமா செய்வீங்க.\nசந்திராஷ்டமம்: டிசம்பர்3முதல் டிசம்பர்5வரை\nகுடும்ப உறுப்பினர்கள் மற்றும் ரொம்பவும் நெருங்கிய உறவினர்களளோடு அனுசரித்து நடந்துக்கறீங்க. சூப்பர். அப்படி நடந்து கொள்வதின் மூலம் தேவையற்ற பிரச்சனைகளை தவிர்க்கவும் செய்யறீங்க. குட். குட். உங்களின் பொருளாதார நிலையில் ஷ்யூராய் நல்ல முன்னேற்றங்கள் இருக்கும். நீங்கள் எதிர்பார்க்கும் உதவிகளும் சரியான காலத்தில் உங்களுக்கு கிடைக்கும். சில சமயங்களில் காலில் லேசான பாதிப்புகள் ஏற்பட்டு சிறிய சிகிச்சைக்குப் பிறகு அது சரியாகிவிடும். தொலைதூர டிராவல்ஸ்ஸால் நல்ல ஆதாயங்கள் இருக்கும். பர்சனல் விஷயங்களைப் பொருத்த வரைக்கும் உங்களின் அனைத்து விருப்பங்களும் நிறைவேறும். குறிப்பாய்க் குழந்தைப் பேறு வேணும்னு ஏங்கிக்கிட்டிருந்தவங்களுக்கு சாக்லேட் செய்தி காத்திருக்கு. ஏற்கனவே டாடி மம்மி ஆகிவிட்டவர்களுக்குக் குழந்தைகள் வயிற்றில் ஐஸ் மில்க் வார்ப்பார்கள்.\nஉடல்நலம் மற்றிக் கொசுக்கடி சைஸுக்குச் சின்னச் சின்ன குறைபாடு இருந்தாலும் உங்கள் மனம் மட்டும் உற்சாகத்துடன் இருக்கும். எனவே செயல்களில் வெற்றி இருக்கும். பிறருக்கு நீங்கள் கொடுத்த கடன்கள் சற்று தாமதமானாலும் வட்டியுடன் வந்து சேரும். உறவினர்களுடன் சற்று விட்டுக்கொடுத்து செல்வது அனைவருக்கும் நன்மையை தரும்.ஈடுபடும் முயற்சிகள் அனைத்தும் சிறப்பாக நடந்து முடியும். வெளிநாட்டு தொடர்புடைய தொழில், வியாபாரங்களில் உங்களுக்கு நல்ல லாபங்கள் இருக்கும். பிறரிடம் பணம் சம்பந்தமான கொடுக்கல் வாங்கலில் முன்னெச்சரிக்கை அவசியம். பணியிடங்களில் சக பணியாளர்கள் உங்களுக்கு எதிராக மறைமுகமான சதிகளை செய்வார்கள்.\nபிசினஸில் ஈடுபடுபவர்கள் சற்று கூடுதலான உழைப்பை கொடுக்க வேண்டியிருக்கும். கொடுப்பீங்க. எனவே நல்ல கனிபறிப்பீங்க. செல்வாக்கும் அதிகாரமும் பொறுப்பான பதவியும் உங்களை ‘கெத்’தாக வைக்கும். அதுக்காக ஓவரா அலட்ட வேண்டாம். டாடிக்கும் உங்களுக்கும் இடையே பிரச்சனைகள் ஏற்படக்கூடும். தயவு செய்து பணிஞ்சு போங்களேன். அவருக்கு ஒரு கஷ்டம் என்றால் நீங்கதானே முதல்ல விரைந்து உதவப்போறீங்க? உள்ளே நிறையப் பாசம் கொட்டிக்கிடக்குதில்லையா? அதை அவருக்குப் புரிய வைங்க. சந்தோஷப்படுவாரு. திருமண வயது கொண்ட இள வயது ஆண்கள் மற்றும் பெண்களுக்கு அருமையான முறையில் மேரேஜ் நடக்கும். கல்லூரி மற்றும் ஸ்கூல் ஸ்டூடன்ட்ஸ் ரொம்பவே நல்ல பெயர் எடுப்பீங்க .\nவாகனங்கள், இயந்திரங்கள் இயக்கும் போது சற்று எச்சரிக்கையாக இருப்பது அவசியமாகும். சற்றே கவனக்குறைவாய் இருக்க வாய்ப்பிருக்குங்க. ஜாக்கிரதைங்க. வீணான செலவுகளை தவிர்த்து சேமிப்பை உயர்த்த முயற்சி செய்ங்க. என்னதான் உங்களுக்கு நல்லநேரம் கூடிய சீக்கிரம் ஏற்படப்போகுதுன்னாலும், இப்போதைக்க கவனமாய் இருக்க வேண்டிய காலகட்டமாச்சேங்க. சகோதர சகோதரிகளுக்குப் பெரிய பெரிய நன்மைகளும் லாபங்களும் ஏற்படுமுங்க. அவங்க உங்களை நன்றியோடு நினைப்பாங்க. அவங்களோட நீங்க ஜாலியா நாலு இடம் சுற்றுவீங்க. அதே சமயம் சண்டையே போடக்கூடாதுன்னு உறுதியா இருங்க. ஒரு வேளை அவங்க நடந்துக்கும் முறையில் சண்டை போட கோதாவில் இறங்குவாங்கன்னு டவுட் ஏற்பட்டுச்சுன்னா.. இதமாய்ப் பேசித் தோளில் கைபோட்டு சமாதானம் பேசிடுங்க. அதுதாங்க பலவகையில் நல்லது.\nஉங்களுக்குப் பண வரவு அதிகரிக்கப்போகுது என்பதால் தனி நபர் மற்றும் குடும்ப பொருளாதார நிலை உயரும். நீங்க குடும்பத்தின் தலைவரா? எனில் குடும்பத்தின் தேவைகள் அனைத்தையும் நிறைவு செய்வீர்கள். உங்க குழந்தைகளால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். இத்தனை காலம் அவங்களைப் பற்றிக் கவலைப் பட்டுக்கிட்டிருந்தீங்களே? எல்லாம் சரியாயிடுச்சில்ல? உறவினர்கள் உங்களை தேடி வந்து உதவி கேட்கும் நிலை உண்டாகும். நீங்களும் பெரிய மனசுடன் அவர்களை ஏற்பீங்க. இதனால் பலகாலத்துப் பகை எரேசர் வெச்சு அழிச்ச மாதிரிக் காணாமல் போகும். டோன்ட் ஒர்ரி. உங்க மனசு விசாலமாயிருப்பது நல்லதுக்குத்தாங்க. நீங்க நிதி சம்பந்தப்பட்ட பிசினஸ் அல்லது ஜாப் செய்பவர் என்றால் கொடுக்கல் வாங்கல் சீராக இருக்கும். பாவ சிந்தனைகள் காணாமல் போயிடுங்க.\nபணியிடங்களில் உடனடி பாஸ்களை அனுசரித்து செல்வதால் நன்மைகள் உண்டாகும். ஈகோவைத் தூக்கிக் குப்பைத் தொட்டியில் போடுங்க. ஆஃபீசில் கூடுதலான உழைப்பை தர வேண்டியிருப்பதால் உடல் மற்றும் மனதில் அசதி உண்டாகும். அதுக்கெல்லாம் இடம் கொடுக்கவே செய்யாதீங்க. வெளியூர் வெளிநாடுகளில் உற்ற உறவினர் அல்லது ஃப்ரெண்ட்ஸ்ங்ககிட்டேயிருந்து இருந்து நல்ல செய்திகள் வரப்போகுதுங்க. காதைத்தீட்டிக்கிட்டு அல்லது மெயிலைத் திறந்து வெச்சுக்கிட்டுக் காத்திருங்க. திருமண வயதுள்ள ஆண்கள் மற்றும் பெண்களுக்கு நல்ல இடத்திலிருந்து சம்பந்தம் அமையுங்க. வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். நீங்க விரும்பிய வேலை கிடைக்கலைன்னு முகத்தைத் தூக்கி வெச்சுக்காதீங்க. வெயிட் பண்ணுங்க.\nகலைத்துறையில் உள்ளவங்க எல்லாருக்கும் பொருள், புகழ் போன்றவற்றை சம்பாதிக்க கூடிய சூழல் உருவாகும். உங்களைத் தேடி வந்து சான்ஸ் கொடுப்பாங்க. பிசினஸ் செய்பவர்களுக்கும் அலுவலகத்தில் வேலை பார்ப்பவங்களுக்கும் வெளிவட்டார தொடர்புகள் விரிவடையும். உத்தியோகஸ்தர்களுக்கு விரும்பிய பதவி உயர்வுகள் மற்றும் இடமாற்றங்கள் கிடைப்பதில் லேசான தாமதம் ஏற்பட்டால் உடனே டென்ஷனாகித் தூக்கத்தைக் கெடுத்துக்காதீங்க. மெல்ல மெல்ல எல்லாம் வெற்றிகரமாய் அமையும்,. கொஞ்சம் பொறுமையாத்தான் இருங்களேன். என்ன இப்ப? எது எப்படியோ.. குடும்பத்தினரின் புத்திசாலித் தனத்தால் உறவினர் மத்தியில் ஒற்றுமையும் நன்மையும் ஏற்படுவது போலவே ..அலுவலகத்தில் நீங்க புத்திசாலித்தனமாய் நடந்து கொண்டு கம்பெனிக்கு லாபம் ஏற்படச்செய்வீங்க.\nபேச்சிலும், செயலிலும் கொஞ்சம் நிதானத்தை கடைபிடிப்பது நல்லதுங்க. விரும்பிய பயன்களை பெறணும் என்றால் எல்லாவற்றிலும் கடினமாக செயல்பட்டே அதைச் செய்ய முடியும். தொழில், வியாபாரங்களில் நல்ல வாய்ப்புகள் சற்றே தாமதமாகக் கிடைக்கும். நீங்க ரொம்பவும் முயன்று உழைத்தாலும் அதற்கேற்ற பலன்களை உடனடியாகப் பெற முடியாதுங்க. அவசரப்படாதீங்க. புதிய வீடு, நிலம் வாங்குவதில் இவ்ளோ காலமாய் இருந்து வந்த பிரச்சனைங்க ஒரு வழியாத் தீரும். உங்க கூட வேலை பார்க்கறவங்ககிட்ட சற்று எச்சரிக்கையாக இருப்பது நல்லதுங்க. மனசுவிட்டுப் பேசறதாய் நினைச்சுக்கிட்டு ரகசியங்களைக் கொட்டாதீங்க. உத்தியோகங்களில் ஊதிய உயர்வு மற்றும் பதவி உயர்வு கொஞ்சம் தாமதமாகக்கூடும். ஆனால் கிடைச்சுடும்.\nவார ராசிபலன்: 15.11.2019 முதல் 21.11.2019 வரை! வேதா கோபாலன் வார ராசிபலன்: 22.11.2019 முதல் 28.11.2019 வரை! வேதா கோபாலன் வாரராசிபலன்: 6.12.2019 முதல் 12.12.2019 வரை! வேதா கோபாலன்\nTags: rasi, rasi palan, vedha gopalan, weekly rasi palan, வார ராசிபலன், வார ராசிபலன்: 29.11.2019 முதல் 05.12.2019 வரை! வேதா கோபாலன், வேதா கோபாலன்\nPrevious வார ராசிபலன்: 22.11.2019 முதல் 28.11.2019 வரை! வேதா கோபாலன்\nNext ஹோரை சாஸ்திரம் அறிந்தவன் ஒரு வெற்றியாளன்!\nவார ராசிபலன்: 05-02-2011 முதல் 11-02-2021 வரை! வேதாகோபாலன்
தற்காலிக தங்குமிடங்களை அமைத்து வரும் கனடா போராட்டகாரர்கள்.. அதிர்ச்சியில் ஜஸ்டீன் ட்ரூடோ.. - Top Sky News\nதற்காலிக தங்குமிடங்களை அமைத்து வரும் கனடா போராட்டகாரர்கள்.. அதிர்ச்சியில் ஜஸ்டீன் ட்ரூடோ..\nFebruary 4, 2022 February 4, 2022 top skynews\t0 Comments\tCanada Prime Minister, Canadian Parliament, Freedom Convoy, Justin Trudeau, Truckers Protest\nகனடாவில் ட்ரக் டிரைவர்கள் கொரோனா தடுப்பூசி கட்டாயம் போடவேண்டும் என கனடா பிரதமர் ஜஸ்டீன் ட்ரூடோ கூறியதால் அவருக்கு எதிராக ஆயிரகணக்கான ட்ரக் டிரைவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும் போராட்டகாரர்கள் தற்காலிக தங்கும் இடங்களை அமைத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.\nகனடா அமெரிக்காவுடன் தனது எல்லையை பகிர்ந்துள்ளதால் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி சாலை வழியாகவே நடைபெறுகிறது. இந்தநிலையில் ஜனவரி 15, 2022 அன்று கனடா எல்லைக்குள் நுழையும் ட்ரக் ஓட்டுநர்கள் தடுப்பூசி சான்றிதழை காட்ட வேண்டும். இல்லையென்றால் அவர்கள் 14 நாட்கள் தனிமைபடுத்தப்படுவார்கள் என கனடா அரசாங்கம் அறிவித்தது.\nஇதனால் கோபமடைந்த ட்ரக் டிரைவர்கள் கடந்த சனிக்கிழமை அன்று 2700 டிரக்குகளுடன் சுமார் 50,000 பேர் வான்கூவரில் இருந்து ஒட்டாவிற்குள் நுழைந்தனர். போராட்டகாரர்கள் பிரதமரின் இல்லத்தையும் முற்றுகையிட்டதால் ஜஸ்டீன் ட்ரூடோ தனது குடும்பத்துடன் இல்லத்தை விட்டு வெளியேறி ரகசிய இடத்திற்கு சென்றார்.\nகனடா நாடாளுமன்றத்தையும் முற்றுகையிட்டு நாடாளுமன்றத்திற்கு அருகில் உள்ள பெரிய சாலையை மறித்து அனைத்து பக்கங்களிலும் ட்ராக்டர் குவிக்கப்பட்டது. கனடா எதிர்கட்சிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளதால் போராட்டம் கனடா முழுவதும் பரவி வருகிறது. இந்த போராட்டத்தை போராட்டகாரர்கள் சுதந்திர கான்வாய் என அழைக்கிறார்கள்.\nஇந்த நிலையில் சிட்டி ஹால் அருகில் உள்ள கான்ஃபெடரேஷன் பூங்காவில் போராட்டகாரர்கள் தற்காலிக தங்கும் இடங்களை அமைத்து வருவதாக உள்ளுர் செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பூங்காவை சுற்றிலும் ட்ராக்டர்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இதுதவிர சமையலுக்கு தேவையான சிலிண்டர்கள், டீசல் எரிபொருள் தொட்டிகள் ஆகியவை வைக்கப்பட்டுள்ளன.\nஇதேபோல் கடந்த 2020 ஆம் ஆண்டு இந்திய அரசு இயற்றிய மூன்று விவசாய சட்டத்தை எதிர்த்து விவசாய அமைப்புகள் நவம்பர் மாதம் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தன. தற்காலிக தங்குமிடம் அமைத்து போராட்டம் நடத்தி வந்த நிலையில், இந்த போராட்டம் சுமார் 378 நாட்கள் நடைபெற்றது. இந்த நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் 19 அன்று பிரதமர் மோடி மூன்று விவசாய சட்டங்களை திரும்ப பெறுவதாக அறிவித்ததை அடுத்து போராட்டம் முடிவுக்கு வந்தது.\nஅப்போது இந்திய விவசாய அமைப்புகள் நடத்திய போராட்டம் தொடர்பாக இந்தியாவின் உள்விவகாரங்களில் தலையிட்டு கருத்து தெரிவித்த கனடா பிரதமர் ஜஸ்டீன் ட்ருடோ, விவசாய போராட்டத்திற்கு தனது ஆதரவை தெரிவித்தார். இது ஒரு அமைதியான போராட்டம் என்றும், அதே நேரத்தில் மனித உரிமை பிரச்சனை என்றும் கூறினார்.\nதற்போது கனடாவில் நடைபெற்று வரும் போராட்டத்தால் ஜஸ்டீன் ட்ரூடோ குடும்பத்துடன் தலைமறைவாகிவிட்டார். இது அராஜகக் கூறுகளின் தொகுப்பு என அழைத்த ட்ரூடோ, கவலைப்படாத சிறுபான்மையினர் என போராட்டம் நடத்தும் ட்ரக்கர்களை அழைத்தார். அடுத்த நாட்டில் போராட்டம் நடந்தால் ஆதரவு, சொந்த நாட்டில் நடந்தால் தலைமறைவு என நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.\n← பலூசிஸ்தானில் பயங்கரவாதிகள் உடனான மோதலில் 100 பாகிஸ்தான் வீரர்கள் பலி..?\nசீனா 38,000 சதுர கிமீ இந்திய நிலப்பரப்பை சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ளது.. அமைச்சர் தகவல்.. →\nகனடாவின் எதிரி அமெரிக்கா தான்.. கனடா உளவுத்துறை அறிக்கை தாக்கல்..?
கால் இறுதி போட்டியில் பிரேசில் 2-1 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்திடம் தோல்வி | தகவல் உலகம்\nகால் இறுதி போட்டியில் பிரேசில் 2-1 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்திடம் தோல்வி\nPosted by டிலீப் On Friday, July 2, 2010 1 comments\nஉலகக் கிண்ண உதைப்பந்தாட்ட போட்டியில் கால் இறுதி போட்டியில் பிரேசில் 2-1 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்திடம் தோல்வியடைந்து உலகக் கிண்ண தொடரில் இருந்து வெளியேறியது.\nநெதர்லாந்தை பொறுத்த வரை இந்த உலகக் கிண்ண உதைப்பந்தாட்ட போட்டியில் அனைத்துப் போட்டியிலும் வெற்றி பெற்றுள்ள அணி. மேலும் அந்த அணியின் நட்சத்திர வீரர் ஆர்ஜான் ராபனின் காயம் முற்றிலும் குணமடைந்து களம் இறங்கிருந்தார். சுலோவேகியாவுக்கு எதிராக ராபன் ஒரு கோல் அடித்ததும் குறிப்பிடத்தக்கது. ஆர்ஜான் ராபன்தான் எங்களின் ஒரே பயம் என்று பிரேசில் பயிற்சியாளர் துங்காவே கூறியது போன்று இன்றைய போட்டியில் நெதர்லாந்து வெற்றி பெற்றுள்ளது.\nபிரேசில் அணியின் இளம் வீரர் எலானோ காயம் காரணமாக இன்றைய ஆட்டத்தில் களம் இறங்கவில்லை. பிரேசில் அணியின் பேபியானோ,காகா போன்ற வீரர்கள் நல்ல பயிற்சியில் இருப்பது அணிக்கு கூடுதல் பலமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த போட்டியில் 2க்கு1 என்ற கோல் கணக்கில் பிரேசிலுக்கு வெற்றி வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டது. இருப்பினும் 2-1 என தோல்வியை தான் தழுவியது.\nபோர்ட் எலிசபெத் நகரில் நடைபெற்ற முதல் கால் இறுதி போட்டியில் ஆட்டத்தின் 9ஆவது நிமிடத்தில் ரொபின்கோ பிரேசிலுக்கான முதல் கோலை அடித்து முன்னிலை தேடி கொடுத்தார்.\n53ஆவது நிமிடத்தில் நெதர்லாந்தின் பிலிப் மெலோ சேம்சைடு கோல் அடித்ததால் ஆட்டம் டிராவில் இருந்தது. தொடர்ந்து வெஸ்லி ஸ்னெட்ஜிகர் அடித்த கோலால் 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று நெதர்லாந்து அரை இறுதி போட்டிக்கு முன்னேறியது.\nகடந்த கால போட்டிகள் ஒரு பார்வை\nஇதுவரை நடைபெற்ற உலகக் கிண்ண உதைப்பந்தாட்ட போட்டியில் நெதர்லாந்தும் பிரேசிலும்3முறை மோதியுள்ளன. இதில் பிரேசில்2முறையும் நெதர்லாந்து ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளன.\nகடந்த 1974ஆம் ஆண்டு ஜெர்மனியின் நடந்த உலகக் கிண்ண உதைப்பந்தாட்ட போட்டியில் இரண்டாவது சுற்றில் நெதர்லாந்தும் பிரேசிலும் மோதின.டோர்ட்மன்ட் நகரில் நடந்த இந்த போட்டியில் நெதர்லாந்து 2-0 என்று வெற்றி பெற்றது.\n1994ம் ஆண்டு அமெரிக்காவில் நடந்த உலகக் கிண்ண உதைப்பந்தாட்ட கால் இறுதி ஆட்டத்தில் பிரேசிலும் நெதர்லாந்தும் மீண்டும் சந்தித்தன. டல்லாஸ் நகரில் நடந்த இந்த போட்டியில் பிரேசில் 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.\nசரியாக 24 ஆண்டுகள் கழித்து பிரான்ஸ் உலகக் கிண்ண உதைப்பந்தாட்ட போட்டியில் மீண்டும் இரு அணிகளும் அரை இறுதியில் மோதின. இந்த போட்டி 1-1 என்று டிராவில் முடிந்தது. டைபிரேக்கரில் பிரேசில் 4-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. ,
25 இடங்களில் மருத்துவ முகாம்- Dinamani\n25 இடங்களில் மருத்துவ முகாம்\nதொடா் மழையை அடுத்து கடலூா் மாவட்டத்தில் 25 இடங்களில் மருத்துவ முகாம்கள் நடைபெறுகின்றன.\nகடலூா் மாவட்டத்தில் பெய்து வரும் பலத்த மழையால் பல்வேறு பகுதிகளிலும் தண்ணீா் தேங்கியுள்ளது. இதனால், நோய்த் தொற்றுகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் மாவட்ட சுகாதாரத் துறை மூலமாக மருத்துவ முகாம்கள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் எம்.கீதா கூறியதாவது:\nமாவட்டத்தில் திங்கள்கிழமை 25 இடங்களில் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. கடலூா் மாவட்ட சுகாதாரத் துறையுடன், புதுச்சேரி வெங்கடேஸ்வரா மருத்துவக் கல்லூரி, அறுபடை மருத்துவக் கல்லூரி, மகாத்மா காந்தி மருத்துவக் கல்லூரி நிா்வாகங்கள் இணைந்து இந்த முகாமில் பங்கேற்றுள்ளன. இந்த மருத்துவக் கல்லூரிகளிலிருந்து மொத்தம் 25 மருத்துவா்கள் தலா ஒரு செவிலியா், மருந்தாளுநருடன் முகாமில் பங்கேற்றுள்ளனா்.\nமாவட்ட நிா்வாகம் சாா்பில் 29 நடமாடும் மருத்துவ வாகனங்களில் மருத்துவா்கள், செவிலியா்கள், மருந்தாளுநா்களைக் கொண்டு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த சிறப்பு முகாமை2நாள்களுக்கு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என்றாா் அவா்.
Title: கோள்களின் இயக்கம் பற்றிய கெப்ளரின் முதல் விதியின் மற்றொரு பெயர்?\nDescription: This isaMost important question of gk exam. Question is : கோள்களின் இயக்கம் பற்றிய கெப்ளரின் முதல் விதியின் மற்றொரு பெயர்? , Options is : 1. தொலைவுகளின் விதி, 2. பரப்புகளின் விதி, 3.காலங்களின் விதி, 4. சுற்றுப்பாதைகளின் விதி, 5. NULL\nThis isaMost important question of gk exam. Question is : கோள்களின் இயக்கம் பற்றிய கெப்ளரின் முதல் விதியின் மற்றொரு பெயர்? , Options is : 1. தொலைவுகளின் விதி, 2. பரப்புகளின் விதி, 3.காலங்களின் விதி, 4. சுற்றுப்பாதைகளின் விதி, 5. NULL\n1) தொலைவுகளின் விதி\n2) பரப்புகளின் விதி\n3) காலங்களின் விதி\n4) சுற்றுப்பாதைகளின் விதி
தொடரை வென்றது இந்தியா - 72 ஆண்டுகளுக்கு பிறகு ஆஸ்திரேலிய மண்ணில் சாதனை - Punnagai.com\nதொடரை வென்றது இந்தியா - 72 ஆண்டுகளுக்கு பிறகு ஆஸ்திரேலிய மண்ணில் சாதனை\n1/7/2019 3:50:30 PM\nஇந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான கடைசி டெஸ்ட் போட்டி மழை காரணமாக டிராவில் முடிந்ததையடுத்து, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி வென்று சாதனை படைத்துள்ளது.\nஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா, முதல் இன்னிங்சில்7விக்கெட் இழப்பிற்கு 622 ரன்கள் எடுத்திருந்த நிலையில் டிக்ளேர் செய்தது. பின்னர் விளையாடிய ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 300 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆகி பாலோ-ஆன் ஆனது.\n31 ஆண்டுகளுக்கு பிறகு சொந்த மண்ணில் ஆஸ்திரேலியா பாலோ-ஆன் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த நிலையில் 322 ரன்கள் முன்னிலைப் பெற்ற இந்தியா, பாலோ-ஆன் வழங்கியது. இதனால் ஆஸ்திரேலியா தொடர்ந்து 2-வது இன்னிங்ஸில் பேட்டிங் செய்தது.\nநேற்று 4-வது நாள் ஆட்டத்தின் போது, 2-வது செசனில் தேனீர் இடைவேளைக்குப்பிறகு போதிய வெளிச்சமின்மை காரணமாக ஆஸ்திரேலியா இரண்டாவது இன்னிங்சில் விக்கெட் இழப்பின்றி6ரன்கள் எடுத்திருக்கும்போது போட்டி நிறுத்தப்பட்டது. அத்துடன் 4-வது நாள் ஆட்டம் முடிவிற்கு வந்தது.\nஇதன்மூலம் 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றிருந்த இந்திய அணி தொடரை வென்று சாதனை படைத்துள்ளது. 72 ஆண்டுகளுக்கு பிறகு ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியா டெஸ்ட் தொடரை வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Innocent men should not be affected Actress Pooja Bhatt says || ‘மீ டூ’வினால் அப்பாவி ஆண்கள் பாதிக்க கூடாதுநடிகை பூஜாபட் சொல்கிறார்\n‘மீ டூ’வினால் அப்பாவி ஆண்கள் பாதிக்க கூடாதுநடிகை பூஜாபட் சொல்கிறார் + "||" + Innocent men should not be affected Actress Pooja Bhatt says\n‘மீ டூ’வினால் அப்பாவி ஆண்கள் பாதிக்க கூடாதுநடிகை பூஜாபட் சொல்கிறார்\nமீ டூ வில் ஆண்களின் பாலியல் தொல்லை குறித்து நடிகைகள் பதிவு செய்து பரபரப்பு ஏற்படுத்துகிறார்கள். இதனால் அப்பாவி ஆண்களுக்கு பாதிப்பு வரக்கூடாது என்று பிரபல இந்தி நடிகை பூஜா பட் கூறினார்.\nபதிவு: அக்டோபர் 13, 2018 22:59 PM\nபிரபல இந்தி நடிகை பூஜா பட் அளித்துள்ள பேட்டி வருமாறு:–\n‘‘பெரும்பாலான பெண்கள் பாலியல் கொடுமைகளை பேச ஆரம்பித்து உள்ளனர். நானும் ஒரு காலத்தில் சினிமாவில் நடித்தபோது மதுவுக்கு அடிமையான ஒருவனுடன் தொடர்பில் இருந்தேன். அவன் உடல் ரீதியாக எனக்கு மிகவும் தொல்லை கொடுத்தான். ஆனாலும் நான் பயப்படவில்லை.\nமீ டூ போராட்டம் ஒரு பக்கம் நல்லதுதான். நானும் ஆதரிக்கிறேன். பெண்கள் தங்கள் பிரச்சினைகளை இதில் சொல்ல முடிகிறது. ஆனால் ஆணாக பிறப்பதே குற்றம் என்ற உணர்வோடு செயல்படுவது சரியல்ல. பாலியல் பிரச்சினையில் ஆண்களும் பெண்களும் சமம்தான். ஆண்கள் மட்டும் கெட்டவர்கள் என்று சொல்லி விடமுடியாது.\nசில நேரம் அவர்கள் கூட எந்த தவறும் செய்யாமல் அநியாயமாக பாலியல் குற்றச்சாட்டில் சிக்கும் சந்தர்ப்பங்கள் இருக்கிறது. நீதிமன்றங்களிலும் அவர்களுக்கு நீதி கிடைக்காத நிலைமைகளும் உள்ளன. அப்படி நடக்கும்போது அவர்கள் குடும்பங்களின் நிலைமை என்னவாகும் என்பதை நினைத்து பார்க்க வேண்டாமா? அப்பாவி ஆண்கள் பாதிக்கப்படக் கூடாது. பெண்களும் சில சமயங்களில் அவர்கள் தேவைக்காக தவறுகள் செய்கிறார்கள். பாலியல் தொல்லைகள் எல்லா இடங்களிலும் இருக்கிறது.’’\n5. அஜய் ஞானமுத்து டைரக்‌ஷனில் விக்ரம் நடிக்கும் 58-வது படம்
எஷ்னாபூரின் புலி.\n« ஏழு குறும்படங்கள்\nபுகழ்பெற்ற ஜெர்மனிய இயக்குனரான ப்ரிட்ஜ் லாங்கின் இந்திய காவியங்கள் என்று போற்றப்படும் The Tiger of Eschnapur மற்றும் The Indian Tomb ஆகிய இரண்டு படங்களை சமீபமாக பார்த்தேன்.\n1959ம் ஆண்டு வெளியான இந்தப் படங்கள் ஜெர்மனியில் பெரிய வெற்றிபெற்றவை. இந்தியாவில் படமாக்கபட்ட வெளிநாட்டு படங்களில் லாங்கின் இந்தப் படங்களே மிக பிரம்மாண்டமான முயற்சியாகும். ராஜஸ்தானில் பெரும்பகுதியான படப்பிடிப்பு நடைபெற்றிருக்கிறது. மற்றவை ஜெர்மனிய ஸ்டுடியோக்களின் அரங்கில் உருவாக்கபட்டிருக்கின்றன. ஈஸ்ட்மென் கலரில் உருவாக்கபட்ட இந்த இரண்டு படங்களையும் ஒரு சேர மூன்றரை மணி நேரம் பார்த்து முடிந்த போது அடைந்த வியப்பும் மனஎழுச்சியும் மிகுந்த சந்தோஷம் தரக்கூடியது. இவை ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு வெளியான திரைப்படங்கள் என்ற ஜாடையே படத்தில் இல்லை.\nஇன்டியா ஜோன்ஸ் படங்களை பார்ப்பது போன்ற அதே விறுவிறுப்பு, கதைவேகம், சாகசங்கள். ஆனால் வழக்கமான ஹாலிவுட் படங்கள் எதிலும் காணமுடியாத காட்சிகோணங்கள். அரங்குகள், மற்றும் வண்ணங்களை திறம்பட பயன்படுத்தியுள்ள அழகு என்று படத்தின் ஒவ்வொரு காட்சியும் தனித்த ஒவியம் ஒன்றை போலவே இருந்தது.\nஐரோப்பாவின் நிலக்காட்சிகளை பார்த்து நாம் வியந்ததை மாற்றி இந்தியா எவ்வளவு அழகானது என்று ப்ரிட்ஜ் லாங்கின் காட்சிகள் நமக்கு அறிமுகம் செய்கின்றன. குறிப்பாக ராஜஸ்தானின் பாலைவெளியும், கோட்டை சூழ்ந்த நகரங்களும் மிதக்கும் அரண்மனைகளும் அதன் உயர்ந்த மதில்சுவர்களுமாக மிக புராதனமான நகரம ஒன்றை காண்பது போன்று கண்முன்னே இந்தியா விரிகிறது\nபடத்தின் முக்கிய கதாபாத்திரமாக நடித்தவர்களில் பலரும் ஜெர்மனியை சேர்ந்தவர்கள். அவர்களை இந்திய அரசவம்சத்தின் சாயலோடு தேர்வு செய்து மிகையற்ற இயல்பான நடிப்பை வெளிக்கொண்டுவந்திருப்பது லாங்கின் சாதனை.\nஐம்பது வருடங்களுக்கு முந்தைய ஹாலிவுட் படங்களில் இந்தியர்களை சித்தரிக்க வேண்டுமென்றால், கருத்த உருவமுள்ள ஆதிவாசிகள் போன்ற தோற்றம் கொண்டவர்களாகவோ மஞ்சள் முகம் கொண்ட சீனர்களையோ தான் பயன்படுத்துவார்கள். அசலான இந்திய முகம் எதையும் ஹாலிவுட் சினிமாவில் நான் பார்த்தேயில்லை. ஆனால் இந்தப்படத்தில் அரசனாக முக்கிய கதாபாத்திரம் ஏற்றுள்ள வால்டர் ரேயர் ஒரு ஜெர்மனிய நடிகர் என்பது வியப்பாகவே இருக்கிறது. அந்த அளவு பொருத்தமான கதாபாத்திரம். குறிப்பாக ராஜஸ்தானிய உடற்கட்டு, நடைஉடை பாவனைகள். பேசும்விதம். உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் பாங்கு யாவும் அப்படியே ராஜ வம்சத்து மனிதரை நினைவு கொள்ள வைக்கின்றன.\nஇந்த கதையை லாங் தனது திரை வாழ்வின் துவக்கத்திலே எழுத துவங்கியிருந்தார்.ஆனால் அதை திரைப்படமாக்கும் முயற்சியில் ஈடுபடவில்லை. சில வருசங்களுக்கு பிறகு இதே கதை படமாக்கபட்ட போதும் கூட லாங்கிற்கு பதிலாக இன்னொரு இயக்குனர் இப்படத்தை இயக்கினார். அந்த வருத்தம் அவருக்குள் நிறையவே இருந்தது. ஆகவே வெற்றிபெற்ற இயக்குனரானதும் ப்ரிட்ஜ் லாங் தனது இந்திய காவியங்களை உருவாக்க முனைந்தார். ஹாலிவுட் ஸ்டுடியோக்களே தயாரிப்பிற்கு முன்வந்தன. பெரும்பொருட்செலவில் இவை இந்தியாவில் உருவாக்கப்பட்டன. ஜெர்மன் ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளில் படம் வெளியானது.\nலாங், மெட்ரோபாலிஸ், எம் போன்ற திகிலூட்டும் படங்களையே அதிகம் உருவாக்கியவர் .தனது வழக்கமான பாணியிலிருந்து விலகி இந்த இரண்டு படங்களையும் இயக்கியுள்ளார்.. படத்தின் கதை எளிமையானது.\nஎஷ்னாபூரை ஆண்டு வருகிறார் சந்திரா என்ற அரசன். இது பண்டைய ராஜஸ்தான் என்று வைத்துக்கொள்ளலாம். இங்கே கோவில் ஒன்றை கட்டுவதற்காக ஹரால்டு என்ற கட்டிடக்கலைஞரை லண்டனில் இருந்து வரவழைக்கிறார் அரசர். சந்திரனின் அரண்மனையில் சீதா என்ற அழகான நாட்டியக்காரியிருக்கிறாள். அவள் மீது சந்திரனுக்கு காதல். ஆனால் அதை அறியாமல் ஹரால்டு சீதாவின் மேல் காதல் கொண்டுவிடுகிறான். அவளும் ஹரால்டை காதலிக்க துவங்குகிறாள். இது அரசனுக்கு பிடிக்கவில்லை.\nஹரால்டின் சகோதரியும் அவளது கணவர் ரோட்ஸ் இருவரும் கட்டிடக்கலை நிபுணர்கள். அவர்களும் இதே பணிக்காக வந்து இந்தியா வந்து சேர்க்கிறார்கள். சீதா ஒரு வெள்ளைகாரனை காதலிப்பதை தாங்க முடியாத அரசன் அவர்களை பிரித்து வைக்க சூழ்ச்சி செய்கிறான். ஆனால் சீதாவை கூட்டிக் கொண்டு அரண்மனையில் இருந்து ஒடிவிடுகிறான் ஹரால்டு.\nஇதனால் ஆத்திரமான சந்திரன் அவளுக்காக ஒரு நினைவுமண்டபம் ஒன்றை கட்ட திட்டமிடுகிறான். தாஜ்மஹால் போன்ற இந்த கனவின் பின்னே ஒரு குரூரம் ஒளித்திருக்கிறது. அது என்னவென்றால் சீதாவை உயிரோடு பிடித்து வந்து சமாதியாக்க வேண்டும் என்பதே. இதற்கு ரோட்ஸ் ஒத்துக் கொள்ள மறுக்கிறார். இதற்கிடையில் பாலைவனத்தில் சிக்கிக் கொள்கிறார்கள் சீதாவும் ஹரால்டும். பாலைப்புயல் காரணமாக மயங்கி விழும் அவர்களை காப்பாற்றி அடைக்கலம் தருகிறது ஒரு சிறிய கிராமம்.\nசந்திரனின் சகோதரன் ராமிதாமிக்கு அண்ணனை கொன்றுவிட்டு அரண்மனையை கைப்பற்ற வேண்டும் என்ற ஆசையிருக்கிறது. அதற்காக அவன் சதிவேலை செய்கிறான். அவன் அண்ணனை கொல்ல சீதா மீதான காதலை பயன்படுத்தி கொள்ள முடிவு செய்கிறான். அதனால் அவனே சீதாவை தேடி கண்டுபிடிக்கிறான். அவளை சிறைப்படுத்தி அரண்மனைக்கு கொண்டுவருகிறான்\nபிடிபட்ட ஹரால்டை பாதாளச் சிறைச்சாலையில் அடைத்து வைக்கிறான். தனது அண்ணன் காணமல் போய்விட்டதை அறிந்த ரோட்ஸின் மனைவி அவனை தேடித் திரிந்து உண்மையை அறிகிறாள். அரண்மனைக்குள் அடைத்து வைக்கபட்ட அண்ணனை கண்டுபிடிக்க முயற்சிக்கிறாள். இதே நேரம் சந்திரன் சீதாவை கல்யாணம் செய்து கொள்ள போவதாக அறிவிக்கிறான். அதை எஷ்னாபூரின் பாரம்பரிய கோவில் சாமியாடிகள் ஏற்றுக் கொள்வதில்லை. வெளிப்படையாக எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.\nசீதா அரசனை திருமணம் செய்து கொள்ள முடியாது என்று மறுக்கிறாள். அவளிடம் ஹரால்ட் உயிரோடு இருக்கும் உண்மையை சொல்லி அவன் உயிர்தப்பி சொந்தநாடு போக வேண்டும் என்றால் சீதா அரசனை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்கிறான் ராமிதாமி.\nஇந்த நிலையில் எஷ்னாபூரை கைப்பற்ற அண்டை நாடுகளின் மன்னர்கள் ரகசியமாக சுரங்கம் வழியாக அரண்மனைக்குள் வருகிறார்கள். ரோட்ஸின் மனைவி தன் அண்ணனை ஒளித்து வைத்த பாதாள சிறையை சீதாவின் உதவியால் கண்டுபிடிக்கிறாள். திருமணம் நடைபெற உள்ள நேரத்தில் அரண்மனையினுள் கலவரம் ஏற்படுகிறது. சந்திரன் சிறைபிடிக்கபடுகிறான். ஆனால் விசுவாசமான படைத்தளபதி உதவியால் தப்பி அந்த கலவரத்தை அடக்கி நாட்டை மீட்கிறான். முடிவில் சீதா ஹரால்டையே கல்யாணம் செய்து கொள்கிறாள்.\nசதி முக்கோண காதல் காதலியோடு தப்பியோடுவது பிடிபடுவது பாதாள சிறைகள், என்று படம் மிக விறுவிறுப்பான திரைக்கதையமைப்பை கொண்டிருக்கிறது.\nபடத்தின் இரண்டு முக்கிய காட்சிகள் உள்ளன. ஒன்று சீதா பாம்பின் முன்னால் உடம்பில் ஒட்டு துணி மட்டுமே அணிந்து ஆடும் மிக சிறந்த நடனம். பாம்பின் சீற்றம் போல துள்ளுவதும் நெளிவதுமாக டெபரா போகட்டின் நடனம் அன்று எப்படி தணிக்கையின் கையிலிருந்து தப்பி திரைக்கு வந்தது என்ற ஆச்சரியமாக இருக்கிறது.\nமற்றொன்று சுரங்கவழியை கண்டுபிடித்து தப்பிவரும் ரோட்ஸின் மனைவி எதிர்பாராமல் சுரங்கத்தின் அடைத்து வைக்கப்பட்ட தொழுநோயாளிகளிடம் மாட்டிக் கொள்வது. இரண்டும் லாங்கால் மட்டுமே உருவாக்கபட முடியும் என்பது போன்ற காட்சிகள்.\nப்ரிட்ஜ் லாங் எப்போதுமே நிழலை ஒரு கதாபாத்திரம் போல பயன்படுத்துகிறவர். இருள் படிந்த முகங்கள் அவரது விசேசமான முத்திரை.இதிலும் மன்னர் சந்திரன் முகத்தில் எப்போதுமே நிழலாடுகிறது. பாதி இருண்டேயிருக்கிறது. அதிலும் அவன் மூர்க்கம் கொள்ளும் போது அவனது முகத்தில் மாறி செல்லும் ஒளியமைப்பு அற்புதமானது.\nலாங் கதாபாத்திரங்களின் மனஇயல்பின் வழியே கதையை முன்நகர்த்துகிறார். ஆகவே ஒவ்வொரு கதாபாத்திரமும் என்ன நினைக்கிறது என்பது படத்தின் ஆதார தொனியாக உள்ளது. சிறு கதாபாத்திரங்கள் கூட கச்சிதமாக உருவாக்கபட்டிருக்கின்றன. சகோதர சூழ்ச்சி முக்கோண காதல், புலிக் கூண்டு , சுரங்கவழி, கத்திசண்டைகள் என்று இந்திய சரித்திர புனைகதையின் கதை சொல்லும் முறையை அப்படியே பின்பற்றியிருக்கிறார் லாங்\nஇந்த படத்தினை பார்க்கையில் மொகலே ஆசாம் தான் நினைவிற்கு வந்தது. இரண்டும் ஒரே ஆண்டில் தான் தயாரிக்கபட்டிருக்கின்றன. இரண்டுமே ரஜபுத்திர வம்சத்து கதைகளே. இன்னும் நெருங்கி ஆராய்ந்தால் இரண்டின் கதைகளும் ஒன்றே. அதில் அனார்கலி சலீம் இதில் சீதா ஹரால்ட். சலீம் போர்களத்தில் வளர்ந்து இளைஞனாக வீடு திரும்புகிறான். ஹரால்ட் பொறியியல் படித்து எஷ்னாபூர் திரும்புகிறான். அனார்கலி ஒரு நடனக்காரி. சீதாவும் ஒரு நடனக்காரியே. அவர்கள் காதல் அக்பருக்கு பிடிக்கவில்லை. இங்கே அவர்கள் காதலை அரசன் சந்திரன் வெறுக்கிறான்\nஅனார்கலியை உயிரோடு சமாதி வைக்க முயற்சிக்கிறார் அக்பர். அதையே செய்ய நினைக்கிறான் மன்னன் சந்திரன். இரண்டிலும் போர் சதி இரண்டும் வருகின்றன. மொகலே ஆசாம் வெளியாகி இந்தியாவெங்கும் வெற்றிகரமாக ஒடிக்கொண்டிருந்த போது லாங்கின் படங்கள் ஜெர்மனியில் வெளியாகி மிக பெரிய வெற்றியை பெற்றன.\nமொகலே ஆசாம் படத்தை கலரில் தயாரிக்க விரும்பி இயலாமல் கறுப்புவெள்ளையில் படமாக்கினார்கள். ஆனால் லாங் முழுப்படத்தையும் ஈஸ்ட்மென் கலரிலே படமாக்கினார். லாங் இந்திய மனதின் கதை சொல்லும் தன்மையை சரியாக உள்வாங்கியிருக்கிறார். படத்தின் இசையும், பிரம்மாண்டமான அரங்க அமைப்பும் பின்னாளில் பல ராஜ்கபூர் மற்றும் குருதத் படங்களின் அரங்குகளுக்கு முன்மாதிரியாக இருந்திருக்கின்றன.\nஜெர்மனிய நவ சினிமாவின் முன்னோடி இயக்குனர் ப்ரிட்ஜ் லாங். இருண்ட உலகின் சித்திரங்கள் என்று வகைபடுத்தபடும் இவரது படங்களின் பாதிப்பு ஹிட்ச்காக், துவங்கி ஸ்பீல்பெர்க், பீட்டர் ஜாக்சன், லூகாஸ், கேமரூன் என பலரிடம் காணப்படுகிறது.\nகுறிப்பாக இவர் படங்களில் வடிவமைக்கபட்ட அரங்க நிர்மாணங்களின் பிரம்மாண்டமும், எளிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி விசித்திரமான ஒளிவிநோதங்களை உருவாக்கி காட்டும் முறையுமே இன்று லார்ட் ஆப் தி ரிங்ஸ் மற்றும் ஏலியன்ஸ் வகை படங்களுக்கு முன்உதாரணமாக இருக்கின்றன.\n1890ல் வியன்னாவில் பிறந்த ப்ரிட்ஜ் லாங் சில ஆண்டுகாலம் பொறியியல் படித்தார். பின்பு கலையில் ஆர்வமாகி ஒவியம் பயின்றார். ஜெர்மனிய ஸ்டுடியோக்களில் உதவியாளாக பணியாற்ற துவங்கி சில ஆண்டுகளிலே திறமையான இயக்குனராக உருவாகினார். நாஜி அரசு இவரது படத்தை தடை செய்தது. அத்துடன் இவரை கோயபல்ஸ் உருப்படியில்லாத இயக்குனர் என்று மிரட்டவும் துவங்கினார். தன்னை சிறையில் அடைத்துவிடுவார்களோ என்று பயந்த ப்ரிட்ஜ் லாங் இரவோடு இரவாக ஜெர்மனியில் இருந்து தப்பி பாரீஸ் போய் சேர்ந்தார்.\nகையில் காசில்லாமல் அலைந்து திரிந்து மறுபடியும் பாரீஸில் படங்களை இயக்க துவங்கினார். அங்கிருந்து பயணித்து அமெரிக்கா சென்று 1936ல் ஹாலிவுட்டின் எம்ஜிஎம் ஸ்டுடியோவில் சேர்ந்து படங்களை இயக்க துவங்கினார். இந்தியாவில் அவர் படமாக்கியபோது இங்குள்ள படப்பிடிப்பு அரங்குகளின் போதாமையை உணர்ந்திருக்கிறார். அதே நேரம் சினிமா மீது இந்திய மக்கள் கொண்டுள்ள மோகத்தையும் துல்லியமாக உணர்ந்திருக்கிறார்\nதன்னுடைய திரைப்படங்களுக்கு முக்கிய ஆதாரம் திரைக்கதையே. அதை உருவாக்குவதையே தனது பிரதான சவாலாக சொல்லும் லாங் தனது படங்களுக்கான திரைக்கதைகளை அவரது மனைவியும் எழுத்தாளருமான தியோ வான் ஹர்போவுடன் இணைந்து உருவாக்கியிருக்கிறார்.\nதன்னால் தப்பித்துக் கொள்ள முடியாத சூழல் ஒன்றிற்குள் மாட்டிக் கொள்ளும் ஒருவன் எப்படி அதை எதிர்கொள்கிறான். அதிலிருந்து எப்படி மீள்கிறான் என்பதே அவரது திரைக்கதையின் பொதுசரடு. லாங் கண்ணாடியையும் அதிலிருந்து வெளிப்படும் பிம்பங்களையும் தனது படங்களின் முக்கிய குறியீடாக வெளிப்படுத்துகிறார்.\nலாங்கின் எம் திரைப்படம் பெரும்பான்மை உலக சினிமா பார்வையாளர்களின் கவனத்திற்கும் விருப்பத்திற்கும் உள்ளாகியிருக்கிறது. அந்த படம் தந்த அதே உற்சாகத்தையும் சந்தோஷத்தையும் இதிலும் நாம் பெற முடிகிறது. லாங்கின் The Tiger of Eschnapur மற்றும் The Indian Tomb ஆகிய இரண்டு படங்களை இன்று இந்தியாவில் திரையிட்டாலும் பலத்த வரவேற்பு கிடைக்க கூடும் என்றே தோன்றுகிறது.\n· The Shadow vs. the Thousand Eyes of Dr. Mabuse\n· The Indian Tomb\n· The Tiger of Eschnapur\n· BeyondaReasonable Doubt\n· While the City Sleeps\n· Human Desire\n· The Blue Gardenia\n· Clash by Night\n· Rancho Notorious\n· The Woman in the Window\n· Dr. Mabuse: The Gambler\n· American Guerrilla in the Philippines
ஹூண்டாய் வென்யூவில் புதிய ஐஎம்டி கியர்பாக்ஸ்... டெஸ்ட் ட்ரைவ் விமர்சனம் இதோ... - Tamil DriveSpark\nஹூண்டாய் வென்யூவில் புதிய ஐஎம்டி கியர்பாக்ஸ்... டெஸ்ட் ட்ரைவ் விமர்சனம் இதோ...\nUpdated: Tuesday, September 1, 2020, 1:28 [IST]\nஹூண்டாய் மோட்டார்ஸ் இந்தியா நிறுவனம் அதன் காம்பெக்ட் எஸ்யூவி ரக காரான வென்யூவில் புதியதாக ஐஎம்டி (இண்டெலிஜண்ட் மேனுவல் ட்ரான்ஸ்மிஷன்)-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த நிலையில் இந்த புதிய ட்ரான்ஸ்மிஷன் உடன் நாங்கள் மேற்கொண்ட டெஸ்ட் ட்ரைவின் விமர்சனத்தை இந்த செய்தியில் பார்ப்போம்.\nஇந்தியாவில் க்ளட்ச் இல்லாமல் மேனுவல் ட்ரான்ஸ்மிஷனை பெறும் முதலாக காராக வென்யூ ஐஎம்டி விளங்குகிறது. மேலும் ஐஎம்டி கியர்பாக்ஸ் உடன் புத்தம் புதிய ஸ்போர்ட் ட்ரிம்-மும் வென்யூவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nவென்யூவில் எதற்காக மேனுவல் ட்ரான்ஸ்மிஷன்? விடை மிக எளிமையானது, ஆட்டோமேட்டிக் காரில் கிடைக்கும் சவுகரியத்தை மேனுவல் கார்களிலும் எதிர்பார்க்கும் வாடிக்கையாளர்களுக்காக இந்த புதிய கியர்பாக்ஸ் கொண்டுவரப்பட்டுள்ளது.\nவெளிப்புறத்தில் மற்றும் உட்புறத்தில் சில காஸ்மெட்டிக் மாற்றங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ள புதிய ஸ்போர்ட் ட்ரிம் உடன் வென்யூவில் புதியதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஐஎம்டி, க்ளட்ச் இல்லாத 6-ஸ்பீடு ட்ரான்ஸ்மிஷன் ஆகும்.\nமுன்புறத்தில் இருந்து ஆரம்பித்தோமேயானால், காரின் முன்பக்கத்தை வைத்து தான் புதிய ஸ்போர்ட் ட்ரிம்-ஐ அடையாளப்படுத்த முடியும். ஏனெனில் இந்த ட்ரிம்மில் வென்யூவின் கருப்பு நிற க்ரில் பகுதியின் இடதுபுறத்தில் சிவப்பு நிறத்தில் முத்திரை வழங்கப்பட்டுள்ளது.\nமுன்புற பம்பருக்கு அடிப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள ஹெட்லைட் அமைப்பானது, ஒளி பிரதிபலிப்பான் உடன் அடர்த்தி குறைந்த மற்றும் அடர்த்தி அதிகமான ஒளி பிரகாசத்திற்காக ஹலோஜன் ப்ரோஜெக்டர் செட்அப்-ஐ கொண்டுள்ளது. க்ளஸ்ட்டரை சுற்றியுள்ள எல்இடி டிஆர்எல்கள் ஹெட்லைட்டிற்கு கீழே ப்ரோஜெக்டர் ஃபாக் விளக்குகளாக ஹலோஜன் தரத்தில் உள்ளன.\nடர்ன் இண்டிகேட்டர்கள் ஹெட்லைட்டிற்கு மேற்புறத்தில் பொருத்தப்பட்டுள்ளன. பக்கவாட்டு பகுதிக்கு சென்றால், சக்கர ஆர்ச்கள், ரன்னிங் போர்டு மற்றும் மேற்கூரை ரெயில்களில் சிவப்பு நிற ஹைலைட் உடன் வென்யூ ஸ்போர்ட் ட்ரிம் வெளிவந்துள்ளது.\nC மற்றும் D பில்லர்களுக்கு இடையே உள்ள ‘ஸ்போர்ட்' முத்திரைகளை தவிர்த்து காரின் ஹேண்டில்கள் க்ரோம்-ஆல் வடிவமைக்கப்பட்டுள்ளன. சிவப்பு நிற காலிபர்கள் உடன் முன்புற டிஸ்க் ப்ரேக் மற்றும் 16 இன்ச் அலாய் சக்கரங்கள் உண்மையில் அட்டகாசமான அம்சங்களாக காரில் உள்ளன.\nஇதன் சக்கரங்களில் எம்ஆர்எஃப் நிறுவனத்தின் 215/60/ஆர்16 என்ற முகவரியை கொண்ட டயர்கள் பொருத்தப்பட்டுள்ளன. பின்புறத்தில் நிறுவனத்தின் லோகோ, காரின் பெயர் உள்ளிட்டவற்றுடன் பொருத்தப்பட்டிருப்பது டர்போ என்ஜின் என்பதை உணர்த்தும் விதமாக ‘டர்போ' முத்திரையும் கொடுக்கப்படுகிறது.\nஇந்த முத்திரையை பூட்டின் வலதுபுறத்திலும் பார்க்கலாம். காரில் பின்பக்க பார்க்கிங் கேமிரா மற்றும் சென்சார்கள் உடன் போக்குவரத்து மிகுந்த பகுதியிலும் பின்பக்கமாக சென்று காரை நிறுத்துவதற்கு உதவியாக அடாப்டிவ் வழிகாட்டுதலும் உள்ளது.\nகாரின் உட்புறத்தில் எதிர்பார்க்கும் அளவிற்கு விசாலான கேபின் கொடுக்கப்பட்டுள்ளது. சன்ரூஃப் உடன் வெளிவரும் இதன் கேபினில் ஏசி துவாரங்கள் மற்றும் க்ளைமேட் கண்ட்ரோல் டயல்களை சுற்றிலும் புதிய ஸ்போர்ட் ட்ரிமிற்காக சிவப்பு நிறம் கொண்டுவரப்பட்டுள்ளது.\nஇதே சிவப்பு நிற ஹைலைட் உடன் லெதரால் மூடப்பட்டு இருக்கும் இதன் ஸ்டேரிங் சக்கரம் இயக்குவதற்கு உண்மையில் நமக்கு நல்ல பிடிமானத்தை தருகிறது. மேலும் தாழ்வாக கொடுக்கப்பட்டுள்ளதால், ஸ்டேரிங் தான் மொத்த கேபினிற்கும் ஸ்போர்ட்டியான தோற்றத்தை வழங்குகிறது.\nஇந்த ஸ்டேரிங் சக்கரத்தின் வலதுபுறத்தில் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டத்திற்கான கண்ட்ரோல்களும், இடதுபுறத்தில் ஓட்டுனருக்கு தேவையான கண்ட்ரோல்களை வழங்கக்கூடிய திரை கண்ட்ரோல் பொத்தான்களும் க்ரூஸ் கண்ட்ரோலும் கொடுக்கப்பட்டுள்ளன.\nஇரட்டை நிறத்தில் அலங்கரிக்கப்பட்டுள்ள இதன் இருக்கைகளில் முன்புறத்தில் உள்ளவை, அட்ஜெஸ்ட் செய்யும் விதத்தில் உள்ளன. ஓட்டுனருக்கு காரை வளைவுகளில் திரும்பும்போது தேவையான சவுகரியத்தை வழங்கக்கூடியதாக உள்ள இந்த முன்புற இருக்கைகளில் இருந்து அப்படியே இரண்டாவது வரிசை இருக்கைகளுக்கு சென்றால், அங்கு அதிகப்பட்சமாக மூன்று நபர்களும், சவுகரியமாக இரண்டு நபர்களும் அமரலாம்.\nமைய ஆர்ம்ரெஸ்ட் மற்றும் கப் ஹோல்டர்கள் மட்டுமின்றி பின் இருக்கை பயணிகளுக்காகவும் ஏசி வென்யூ ஸ்போர்ட் ட்ரிம்மில் வழங்கப்பட்டுள்ளது. இதன் 350 லிட்டர் கொள்ளவு சேமிப்பிடத்தில் பயணம் செய்யும் நான்கு நபர்களது பொருட்களை எந்த பிரச்சனையுமின்றி அடுக்கி வைக்கலாம்.\nமேலும் கூடுதலான பொருட்களை வைப்பதற்கு பின் இருக்கை வரிசை 60:40 என்ற விகிதத்தில் பிரிக்கும் விதத்தில் வழங்கப்பட்டுள்ளது. அனலாக் டயல்களுடன் உள்ள டச்சோமீட்டர் மற்றும் வேகமானிகளுக்கு இடையே கொடுக்கப்பட்டுள்ள 4.5 இன்ச் எல்சிடி திரை ஆனது பயண தூரம், டிஜிட்டல் வேகமானி, எரிபொருள் அளவு மற்றும் நேரம் உள்ளிட்ட தகவல்களை ஓட்டுனருக்கு வழங்குகிறது.\nசெங்குத்தான வடிவில் சூரிய ஒளியினால் பிரதிபலிக்காத இதன் 7-இன்ச் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோவுடன் இணைக்கும் விதத்தில் உள்ளது. இந்த இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டத்தின் கீழ்பகுதியில் க்ளைமேட் கண்ட்ரோலுக்கான டயல்களும், மையத்தில் வெப்பநிலை அமைப்புகளும் வழங்கப்பட்டுள்ளன.\nஎன்ஜின் & ஹேண்ட்லிங்\nவென்யூ ஐஎம்டி காரில் வழக்கமான 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் பிஎஸ்6 என்ஜின் தான் பொருத்தப்பட்டுள்ளது. அதிகப்பட்சமாக 120 பிஎச்பி மற்றும் 170 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் இந்த டர்போ என்ஜின் உடன் 6-ஸ்பீடு ஐஎம்டி கியர்பாக்ஸ் ஆனது 2-பெடல் ட்ரான்ஸ்மிஷன் உடன் செயல்படுகிறது.\n6-ஸ்பீடு ஐஎம்டி கியர்பாக்ஸில் மின்-இயந்திரவியல் க்ளட்ச் உள்ளது. நீங்கள் ஒரு கியரை மாற்றப் போகிற போதெல்லாம் அல்லது கியர் நெம்புகோலை ஒரு சுற்றுக்கு 10 சதவிகிதம் நகர்த்தியவுடன், நீங்கள் கிளட்ச் திறப்பைக் காலில் வைப்பீர்கள், இது, கியரை நீங்கள் மேல் அல்லது கீழ்நோக்கி மாற்றத் தயாராக இருப்பதாக காருக்கு சொல்வதை போன்றது.\nஇந்த கியர் மாற்றங்களுக்கு இடையில், ஆற்றலில் ஒரு சிறிய வீழ்ச்சி இருக்கும், அதை உங்களால் உணர முடியும், ஆனால் அது உண்மையில் மிகக் குறைவு. ஏனெனில், கியர்களை மாற்றும் போது தலை தள்ளாக்கும் விளைவு முற்றிலும் இல்லாமல் போய்விடுகிறது.\nஇந்த கியர்பாக்ஸில் கியரை மாற்றுவது ஒன்றும் அவ்வளவு சிரமமான காரியமாக இல்லை. ஆக்ஸலரேட்டரில் கால் வைக்காமல் கியரை மாற்றும்போது தான் கியர்பாக்ஸ் சற்று வலிமையாக இருப்பதுபோல் எங்களுக்கு தோன்றியது. இதற்கு காரணம், கியர்பாக்ஸ் அப்போதும் சில அழுத்தத்திற்கு உள்ளாகி இருக்கும்.\nஅதேநேரம் வழக்கமான மேனுவல் கியர்பாக்ஸில் செயல்படுவதை போன்று ஐஎம்டி-லும் மென்மையாக செயல்பட முடியும். ஆனால் மேனுவல் கியர்பாக்ஸ் சில சமயங்களில் காரை நிறுத்திவிடுகிறது. ஆனால் ஐஎம்டி கியர்பாக்ஸில் கார் அவ்வாறு நின்று போக வாய்ப்பில்லை.\nஅதேபோல் ஒரிடத்தில் நின்று கொண்டிருக்கும்போது அதிகப்பட்ச கியரில் காரை எடுக்க நினைத்தாலும், அது முடியாது. உடனடியாக திரையில் ‘குறைந்தப்பட்ச கியரை தேர்தெடுங்கள்' என்ற குறுந்தகவல் வந்து நிற்கும். ஹில் ஸ்டார்ட் வசதியையும் வென்யூ கொண்டுள்ளதால் மலை பாதைகளில் வாகன நிறுத்துவது கடினமானதாக இருக்காது.\nசஸ்பென்ஷன் வென்யூ ஐஎம்டி காரில் சற்று விரைப்பானதாக கொடுக்கபட்டுள்ளதால் குழிகள் மற்றும் வேகத்தடைகளை தெளிவாக உணர முடிந்தது. 215 பிரிவு டயர்கள் காருக்கு நல்ல பிடிமானத்தை வழங்குகின்றன. இவற்றுடன் ஏபிஎஸ் மற்றும் ஸ்விட்ச் செய்யக்கூடிய ட்ராக்‌ஷன் கண்ட்ரோல் உள்ளிட்டவையும் உள்ளன. இதற்கு மேல் வேறென்ன வேண்டும்.\nஇதன் சஸ்பென்ஷன் அமைப்பால் இயக்கத்தின்போது கார் பெரிய அளவில் குலுங்கவில்லை. ஸ்டேரிங் சக்கரத்தின் செயல்பாடு அதிவேகத்தின்போது மிகவும் சிறப்பாக உள்ளது. இவற்றுடன் தரமான மின்காப்பு மற்றும் என்விஎச் நிலைகளையும் வென்யூ கார் பெற்று வருவதால், என்ஜினினாலும், வெளிப்புறத்தில் இருந்தும் பெரிய அளவில் எந்த இரைச்சலும் உட்புற கேபினுக்கு வருவதற்கு வாய்ப்பில்லை.\nவென்யூ ஐஎம்டி, மூன்று விதமான வேரியண்ட்களில் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இவற்றின் ஆரம்ப விலை ரூ.9.99 லட்சம் என்று இருக்க, இதன் புதிய ஸ்போர்ட் ட்ரிம் வேரியண்ட் அதிகப்பட்சமாக ரூ.11.58 லட்சத்தை விலையாக பெற்றுள்ளது.\nவென்யூவிற்கு விற்பனையில் போட்டியளிக்க தற்சமயம் மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா, ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட், மஹிந்திரா எக்ஸ்யூவி300, டாடா நெக்ஸான் மற்றும் கியா செல்டோஸ் போன்ற பிற காம்பெக்ட் எஸ்யூவி கார்களும் சந்தையில் உள்ளன.\nஹூண்டாய் வென்யூ, இந்தியாவில் பிரபலமான காம்பெக்ட் எஸ்யூவிகளுள் ஒன்று. கடந்த ஆண்டு அறிமுகத்தின்போது இந்த ஹூண்டாய் கார் மீது ஏற்பட்ட கவனம் தற்போது மீண்டும் புதிய ஐஎம்டி ஸ்போர்ட் ட்ரிம் மூலமாக உருவாகியுள்ளது. இது வாடிக்கையாளர்களின் வரவேற்பை நிச்சயம் அதிகரிக்கும் என்பதால், இது ஹூண்டாயின் நல்ல முடிவே ஆகும்.\nஅதுமட்டுமில்லாமல், வென்யூ மேனுவல் காரின் விலையில் இருந்து, புதிய ஐஎம்டி-ன் விலை வெறும் ரூ.25,000 மட்டுமே அதிகமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால் முதல் காரை வாங்க விரும்புவோருக்கு ஏற்றதாக விளங்கும் வென்யூவை ஐஎம்டி ஸ்போர்ட் ட்ரிம்மில் வாங்கினால் இன்னும் ஸ்டைலிஷான ஆளாக விளங்குவீர்கள்.\nHyundai Venue iMT Sport Review
ஜீவா, ராஜுமுருகனின் ‘ஜிப்ஸி’ படப்பிடிப்பு நிறைவு\nNews Date: 5th Nov, 18\n‘குக்கூ’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான ராஜுமுருகன், அதன்பிறகு ‘ஜோக்கர்’ படத்தை இயக்கினார். அரசியலை வெளிப்படையாக நையாண்டி செய்யும் வகையில் எடுக்கப்பட்ட இந்தப் படம், மக்கள் மத்தியில் அரசியல் குறித்த விவாதத்தையும் ஏற்படுத்தியது.\n‘ஜோக்கர்’ படத்தைத் தொடர்ந்து, ஜீவாவை நாயகனாக வைத்து ஒரு படத்தை இயக்கி வந்தார் ராஜுமுருகன். ‘ஜிப்ஸி’ என்று தலைப்பு வைக்கப்பட்ட இந்தப் படத்தில், இமாச்சலப் பிரதேச மாடல் அழகி நடாஷா சிங் ஹீரோயினாக நடித்துள்ளார்.\nஇந்தப் படத்தில், நடனமாடப் பழக்கப்பட்டக் குதிரை ஒன்றும் நடித்துள்ளது. சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இந்தப் படத்துக்கு, யுகபாரதி பாடல்கள் எழுதுகிறார். எஸ்.கே.செல்வகுமார் ஒளிப்பதிவு செய்ய, ரேமண்ட் டெரிக் கிராஸ்டா எடிட் செய்கிறார்.\nஒலிம்பியா மூவிஸ் சார்பில் அம்பேத்குமார் ‘ஜிப்ஸி’ படத்தைத் தயாரிக்கிறார். கடந்த ஜூன் 11-ம் தேதி காரைக்காலில் இதன் படப்பிடிப்பு தொடங்கியது. அதன்பிறகு இமாச்சலப் பிரதேசத்தில் படப்பிடிப்பு நடைபெற்ற நிலையில், நேற்றுடன் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.\n21st Jun, 19\nVijay Sethupathi's 'Sindhubaadh' release postponed\nரசிகர்களுக்கு விஜய் பிறந்த நாள் விருந்தாக 'தளபதி 63 பர்ஸ்ட் லுக்\nVijay Sethupathi's Sindhubaadh Censored with 'U/A' certificate\nகதிர், சூரி இணைந்து நடிக்கும் திரைப்படம் "சர்பத்"\n‘Jayam’ Ravi is playingacameo role in ‘Thumbaa’\n14th Jun, 19\nVijaysethupathy & Amalapaul starring new titled shooting started today\nசிம்பு நடிக்கும் ‘மாநாடு’ அதிரடி அரசியல் படம் - வெங்கட் பிரபு\nToday Releases (14-06-2019)\n13th Jun, 19\nவிஜய் சேதுபதியின் மகன் தான் படத்தில் ராக்ஸ்டார் - யுவன் சங்கர் ராஜா\nBaahubali star prabhas’s next Action Thriller Teaser Out\nசர்வதேச அளவில் வெற்றிப் பயணத்தை தொடரும் விஜய் சேதுபதியின் சூப்பர் டீலக்ஸ்\n12th Jun, 19\nAjithKumar’s ‘Nerkonda Paarvai’ Trailer Released Today\nVijay Sethupathi’s Malayalam Movie Marconi Mathai First Look\nஅஜித்தின் 'நேர்கொண்ட பார்வை' முன்னோட்டம் இன்று வெளியாகிறது\n11th Jun, 19\nVijay Sethupathi's 'Sindhubaadh' Audio released today\nவிஜய் சேதுபதியுடன் மீண்டும் இணைகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்\n10th Jun, 19\nVijay Sethupathi’s ‘Sindhubaadh’ Movie to release on 21st June\nசீனாவை தொடர்ந்து ரஷியாவில் வெளியாகும் ரஜினியின் ‘2.0’\nVimal & Oviyaa starring Kalavani2release date\n2nd May, 19\nJyothika and Revathy’s starring ‘Jackpot’ First Look Poster
குழலி…: தமிழர்களே.. தமிழர்களே.. ஏமாளி தமிழர்களே...\nசமீபத்தில் மலையாளத்தானுக, ஓணம் வாழ்த்துக்கள்( மலையாளிகள் படிக்க வேண்டாம்), போன்ற தமிழர்களின் புலம்பல் பதிவுகளையும், ஓரு வார இதழில் மலையாளர்களின் குணங்களை பற்றிய கட்டுரையையும் படிக்க நேர்ந்தது. அதன் பின்னர் என் எண்ணங்களை எழுதாமல் இருக்க முடியவில்லை. இந்த எண்ணத்தில் எவ்வளவுதூரம் உண்மை இருக்கிறது என தமிழர்கள் நடுநிலையோடு பதிலளியுங்கள்\nமலையாளிகள் மட்டுமல் மற்ற எல்லா மொழியினரும் தமிழனை இழிவாகதான் பேசுவார்கள். ஏன் தமிழர்களாகிய நாம் கூட மற்ற மொழியினரை விட நாம் தான் சிறந்தவர்கள் என்று பேசுவதில்லையா? நாம் தான் சிறந்தவர்கள் என மறைமுகமாக நாம் பிறரை இகழ்கிறோம். அவர்கள் எங்களை தவிர எல்லோரும் இழிவானவர்கள் என நேரடியாக இகழ்ந்துகொள்கிறார்கள். அவ்வளவு தான் வேறுபாடு.\nசரி நான் சொல்லவந்த உண்மை இது தான். இதை தமிழர்கள் வாதபிடிவாதத்திற்காக ஏற்க மறுத்தாலும் முழுமுதல் வரலாற்று உண்மை இது தான்.\nதமிழர்கள் தங்களுக்குள் முதன்மையானவானக ஒரு தமிழனோ, நிறுவனமோ வர முயற்சித்தால் விடமாட்டார்கள். ஆயிரம் குறை சொல்வார்கள். அந்த சமயம் பார்த்து வேறுமொழி நபரோ அல்லது துக்கடா நிறுவனமோ நுழைந்தால் உடனே அதை உலகமாக அதிசயமாக போற்றி தலையில் தூக்கிவைத்து ஆடுவார்கள். அந்த வேற்றுமொழி நபர் அல்லது நிறுவனம் தான் சிறந்தது என விழாவைத்து கொண்டாடுவார்கள். இதை சரியாக பயன்படுத்தும் அந்த நபர் அல்லது நிறுவனம் குறுகிய காலத்திலேயே தமிழர்களின் தலைசிறந்த நபர் அல்லது நிறுவனத்தை பின்னுக்கு தள்ளி முதலிடத்துக்கு வந்துவிடும். அதன் பின்னர் தான் அந்த நிறுவனம் தமிழர்களுக்கு எதிராக தன் வேலையை காண்பிக்கும். அப்போது குதிப்பார்கள் தமிழர்கள் எங்களை அடக்குகிறார்கள், இழிவாக்குகிறார்கள். ஏமாற்றுகிறார்கள் என.\nஇதற்கு சமீபத்திய ஆதாரங்கள் பல இருக்கிறது. தமிழகத்தில் இருக்கும் தமிழர்களின் தலைசிறந்த செய்திநிறுவனங்களுக்கு இடையில் ஒரு மளையாள, இந்தி செய்தி நிறுவனம் வந்ததும் அதை தான் தமிழ்ர்கள் தூக்கிவைத்து கொண்டாடுகிறார்கள். நாளைக்கு தமிழனுக்கு ஒரு பிரச்சனை என்றால் குரல்கொடுப்பது வேற்று நிறுவனங்கள் அல்ல தமிழர் நிறுவனங்கள் தான் என தமிழர்களுக்கு புரிவதில்லை ஏன்? அடுத்து தமிழகத்தில் இல்லாத உணவுமுறைகளா, பேக்கரிகளா? ஆனால் அதே ஊரில் ஒரு கேரள பேக்கரி வரட்டும். நம்மவர்கள் அனைவரும் வரிந்து கட்டி அதை பிரபலமாக்குவார்கள். அதோடு நிற்பார்களா? காலாகாலமாக வைத்திருக்கும் தமிழர் கடைகளை எந்த அளவுக்கு இழிவுபடுத்தவேண்டுமோ அநத அளவுக்கு செய்வார்கள். காலங்கள் ஓட அதே கேரளா பேக்கரி சுடுதண்ணீரில் சக்கரை போட்டு கொடுத்தாலும் வாயை பொத்திக்கொண்டு குடித்துவிட்டு வருவார்கள் தமிழர்கள். இது உதாரணத்துக்காக இரண்டு எடுத்துக்காட்டுகள் இதுபோல வரலாற்றில் சமஸ்கிருத அதிக்கம், வேற்று இனத்தவரின் கையாடல் உட்பட தமிழர்களின் இழிவுக்கு ஆயிரம் ஆயிரம் சம்பவங்கள் இருக்கிறது.\nஇங்கு தமிழர்களை இழிவாக சொல்லவில்லை. வந்தோரை வாழவைப்பது நமது பெருந்தன்மையாக இருக்கலாம். அதற்காக வருபவர்கள் ஏற்கனவே வாழ்ந்துகொண்டிருக்கும் நம்மில் ஒருவனை அழிக்கும்போது நாம் கைகட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது எவ்வளவு பெரிய கேவலம் தெரியுமா? இந்த கேவலமான புத்தி தமிழ்ர்கள் தவிர வேறு யாருக்கும் கிடையாது.\nதமிழர்களே அவரவருக்கு அவரவர் குணாதிசயங்கள் நியாயதர்மமாக படும். எனவே நீங்களாகவே அடிமைகளாகிவிட்டு பின்னர் அவன் என்னை இப்படி இகழ்கிறான் இப்படி ஏமாற்றுகிறான் என நீங்கள் புலம்புவதை பார்த்து உலகே சிரிக்கிறது.\nதமிழ்ர்களே உங்களை நீங்கள் மதிக்க கற்றுக்கொள்ளுங்கள். அப்போது தான் மற்றவர்கள் உங்களை மதிப்பார்கள். உங்களை நீங்களே அடிமைகளாகவும் ஏமாளிகளாகவும் சித்தரித்திருக்கும் காலம் மட்டும் வடமொழி ஆதிக்கம், மலையாளத்தவரின் இழிவுபடுத்தல், கன்னடர்களின் அடி, சிங்களர்களின் பிரித்தாளும் சூழ்ச்சி இப்படி தொடர்ந்து கொண்டுதான் இருக்கும்.\nPosted by அறிவகம் at 7:52 PM\nLabels: உலகே சிரிக்கிறது., கன்னடர், மலையாளத்தவர்\n//காலங்கள் ஓட அதே கேரளா பேக்கரி சுடுதண்ணீரில் சக்கரை போட்டு கொடுத்தாலும் வாயை பொத்திக்கொண்டு குடித்துவிட்டு வருவார்கள் தமிழர்கள்//\nமலையாளிகள் எப்பவுமே தங்கள உயர்வா தமிழன அறிவு கொறஞ்சவன்னு நெனைக்கிறவங்க, நெறய இடத்தில தமிழன பட்டி அப்படீன்னு பேச்சுவழக்கில பேசுவாங்க, அப்படீன்னா நாய் என்னு சொல்லுவாங்க, சேரனும் இத ஒரு படத்தில எடுத்துக்காட்டியிருக்காரே.\nஇந்தியால அவுங்க தான் அறிவாளி தமிழன் இழிச்சவாயன்னு நெனச்சா தமிழன் ஏன்யா அப்துல்கலாமையோ சிதம்பரத்தையோ நெனைக்க முடியல? இன்னைக்கு ஒரு வல்லரசுன்னு பேரு வாறதுக்கு இவங்க உழைப்பு எவ்ளோ?\nதமிழனுக்கு எப்பவுமே தாழ்வுமனப்பான்மைங்க, இத போக்கிறது றொம்ப கஸ்டம். கேரளாவிலேர்ந்து நடிகைகள கொண்டாந்து லீட்டர் கணக்கில ஜெள்ளு விட்டா தலைல ஏறி உக்காரமா என்ன பண்ணுவாங்க?\nசிங்கிள் மலையாளி நல்லவன், கடும் உழைப்பாளி, ஆனால்2பேருக்கு மேல் போனால் அடுத்தவர்களுக்கு குழிபறிப்பான்\nதிராவிட கருப்பு சட்டை வெறி நாய்களுக்கு இருக்கும் மொழி/இன வெறியால் தான் ஏனைய மாநிலத்தவர் தமிழர்கள் என்றாலே அகம்பாவம் பிடித்தவர்கள்,பொறிக்கிகள்,அராஜகம் செய்பவர்கள் என்று கருதுகின்றனர்.இங்க கூட பாருங்க.ஏதோ இந்த தமிழ் முண்டங்கள் தான் வந்தாரை வாழ வைக்கும் பரம்பரை என்பதைப் போல் பீற்றிக் கொள்வார்கள்.சொல்லப் போனால் ஏகப்பட்ட தமிழ் முண்டங்கள் தான் புலம் பெயர்ந்து நல்ல விதமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.ஆகையால் இப்படி பேசுவது கடைந்தெடுத்த அயோக்யத்தனம்,அகம்பாவம் அல்லாமல் வேறு என்ன என்று கேட்கிறேன்.\nதிரு. பழமைபேசி அருமையா எழுதியிருக்கீங்க.. தமிழர்கள் முதலில் தங்களுக்குள் உள்ள தாழ்வு மனப்பான்மையை விடவேண்டும். நம்மில் ஒருவன் முன்னேற முயற்சித்தால் அவனை தூக்கிவிடாவிட்டாலும் பரவாயில்லை, காலைவாரி விடக்கூடாது.\nதமிழர்கள் தங்கள் பெருநதன்மையை பணிவாக காட்டுவது சிறந்த பண்பாடுதான். அதேநேரத்தில் பணிவை மற்றவர்கள் இழிவாக மதிப்பிடுவார்களானால், பணிவது பயந்து அல்ல பண்பாடுக்காக என்பதை தைரியமாக சொல்லும் தன்னம்பிக்கை தமிழனுக்கு என்று வருகிறதோ அன்று தமிழினம் தலைநிமிர்ந்து நிற்கும்.\nதமிழர்களே பணிவு காட்டுங்கள் அதற்காக பணிந்துவிடாதீர்கள்.\nகருத்து பகிர்ந்தமைக்கு நன்றி திரு. பாபு., திரு. கூடுதுறை., திரு. அனானிஸ்.\narimai- karuppusami, sakthy.
பலாத்காரத்தை தடுக்க பலே ஐடியா கொடுத்த நடிகை: நடக்குமா? | Rakhi Sawant wants ban on rape scenes in movies - Tamil Filmibeat\n| Published: Tuesday, October 30, 2018, 6:00 [IST]\nமும்பை: இந்தியாவில் பலாத்காரத்தை ஒழிக்க என்ன செய்ய வேண்டும் என்று பாலிவுட் நடிகை ராக்கி சாவந்த் தெரிவித்துள்ளார்.\nஇயக்குனர் சஜித் கான் மீது பாலியல் புகார் எழுந்ததை அடுத்து அவர் இயக்கி வந்த ஹவுஸ்ஃபுல்4படத்தில் நடித்து வந்த அக்ஷய் குமார் படப்பிடிப்பை நிறுத்தினார். மேலும் பாலியல் புகாரில் சிக்கிய நானா படகேர் ஹவுஸ்ஃபுல்4படத்தில் இருந்து விலகினார்.\nஇந்நிலையில் நானா படேகரின் ஆதரவாளரான ராக்கி அக்ஷய் குமாரை விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது,\nநான் அக்ஷய் குமார் மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளேன். ஆனால் அவர் ஹவுஸ்ஃபுல்4படப்பிடிப்பை நிறுத்தியதை பார்த்து அப்செட் ஆகிவிட்டேன். அவர் இப்படி செய்வார் என்று நான் எதிர்பார்க்கவில்லை.\nநானா படேகர் மற்றும் சஜித் கான் ஆகியோர் அப்பாவிகள். இளம் வயதில் எதுவும் செய்யாத ஆலோக் நாத்தால் வயதான காலத்தில் எதுவும் செய்ய முடியாது. அவர் நல்லவர். வின்டா நந்தா ஊதினாலே ஆலோக் நாத் பறந்துவிடுவார். அந்த அளவுக்கு வின்டா குண்டாக இருக்கிறார். நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் ரொம்ப கூச்ச சுபாவம் உள்ளவர். அவர்கள் பெண்களுடன் பேசினால் நிமிர்ந்து கூட பார்க்க மாட்டார்.\nதிரையுலகில் ஆண்கள் அல்ல மாறாக பெண்கள் தான் மோசமான விஷயங்களை பரப்புகிறார்கள். என் ரசிகர்கள் என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும். ஆனால் எனக்கு தற்போது அவர்களை பிடிக்கவில்லை. ஏனென்றால் அவர்கள் தனுஸ்ரீ தத்தாவை ஆதரிக்கிறார்கள். தனுஸ்ரீ தத்தாவை ஆதரிக்கிறவர்களை சபிக்கிறேன்.\nஇந்தியாவில் பாலியல் பலாத்காரத்தை நிறுத்த வேண்டும் என்றால் முதலில் படங்களில் பலாத்கார காட்சிகள் வைக்க தடை விதிக்க வேண்டும் என்கிறார் ராக்கி. பாலியல் புகாரில் சிக்கிய ஆண்களுக்கு அவர் தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வருவதுடன் புகார் கூறிய பெண்களை அசிங்கப்படுத்தியும் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nRead more about: rakhi sawant me too mumbai ராக்கி சாவந்த் மீ டூ மும்பை\nBollywood actress Rakhi Sawant said that, ' if one has to stop rape in India, then one should ban rape scenes in films.'\nStory first published: Tuesday, October 30, 2018, 6:00 [IST]
காணாமல் போன பல் ''மூக்கில் வளரும் வினோதம்'' மருத்துவர்கள் வியப்பு ...!! • Seithi Solai\nகாணாமல் போன பல் ”மூக்கில் வளரும் வினோதம்” மருத்துவர்கள் வியப்பு …!!\nமூச்சுவிடமுடியவில்லை என்று மருத்துவமனையில் பரிசோதித்த நபருக்கு, நாசியில் பல் வளர்ந்துள்ளதைக் கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.\nசீனாவில் வசித்து வருபவர் ஜாங் பின்ஷெங் (Zhang Binsheng)(30). இவருக்குச் சமீப காலங்களாக மூச்சு விட முடியாமல் தவித்து வந்துள்ளார். மேலும், மூக்குப் பகுதியில் அழுகிப் போன துர்நாற்றம் வருவதைக் கவனித்துள்ளார். இதைத் தொடர்ந்து, மருத்துவரை அணுகிய ஜாங்க்கு மிகப் பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. அவரது மூக்குப் பகுதியை எக்ஸ்-ரே எடுத்து பார்த்த போது, அங்குப் பல் வளர்ந்திருப்பதை மருத்துவர்கள் கண்டுபிடித்தனர்.\nஇதுகுறித்து மருத்துவர்கள் கூறுகையில், ஜாங் 10 வயது இருந்த போது மூன்றாவது மாடியிலிருந்து கீழே விழுந்துள்ளார். அப்போது, அவர் வாய் பகுதியிலிருந்து இரண்டு பற்கள் காணாமல் சென்றுள்ளது. ஒரு பல் கீழே கிடப்பதைப் பார்த்த ஜாங், இன்னொரு பல் எங்காவது இருக்கும் என விட்டு விட்டார். ஆனால், இரண்டாவது பல் எப்படியோ, அவரது நாசியில் வேரூன்றி வளர்ந்துள்ளது. இதை இருபது வருடங்களாக ஜாங் கண்டுபிடிக்காமல் இருந்துள்ளார் எனத் தெரிவித்தார்.மருத்துவர்கள் ஜாங்க்கு 30 நிமிடங்கள் அறுவை சிகிச்சை செய்து, ஒரு சென்டி மீட்டர் நீளமுள்ள பல்லை வெளியே எடுத்தனர். தற்போது, அவர் மருத்துவச் சிகிச்சையிலிருந்து மீண்டு வருகிறார்.\nTags: #Viral, China, World, Zhang Binsheng\nகைதி வசூல்: அண்ணன் சூர்யாவை தொடர்ந்து தம்பி கார்த்தி புதிய சாதனை!\nBreaking : ”ரயில் மோதி4மாணவர்கள் உயிரிழப்பு” கோவையில் சோகம் …!!
சும்மா: ஆஸ்டியோ போரோசிஸ்.. ஒரு விழிப்புணர்வு.. டாக்டர் வேல்ராணி..\nசென்னையில் இருக்கும் சுபம் நர்சிங்ஹோமில் பெண்களுக்கு ஆஸ்டியோ போரோசிஸுக்காக ஒரு நாள் இலவச சிகிச்சை முகாம் பக்ரீத் அன்று நடத்தப்பட்டது. அங்கு சென்று டாக்டர் வேல்ராணி அவர்களிடம் நம் வாசகியருக்காக ஆஸ்டியோ போரோசிஸ் பற்றி தகவல்கள் தந்துதவி விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு கேட்டுக் கொண்டோம். டாக்டர் கூறியவற்றை தொகுத்துள்ளேன்.\nஎலும்பின் அடர்த்தி 30 வயதுக்குப் பிறகு குறைய ஆரம்பிக்கிறது. எலும்புக்குள் இருக்கும் பல்ப் வயசு ஆகக் குறையும். எனவே எலும்பின் அடர்த்தி குறைந்து வலுவிழக்க ஆரம்பிக்கிறது. இதில்\n1. ப்ரைமரி டைப் 1 மற்றும்\n2. ப்ரைமரி டைப்2மற்றும்\n3. செகண்டரி ஆஸ்டியோ போரோசிஸ் என மூன்று வகை உள்ளது.\nப்ரைமரி ஆஸ்டியோ போரோசிஸ் டைப் 1 என்பது போஸ்ட் மெனோபாஸுவல் ஆஸ்டியோ போரோசிஸ்.. அதாவது மாத விடாய் நின்ற பிறகு கிட்டத்தட்ட 45 வயதில் வருவது. மேலும் கர்ப்பப்பை எடுத்த பெண்களுக்கும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் குறைபாடு காரணமாக இது வரும்.\nப்ரைமரி ஆஸ்டியோ போரோசிஸ் டைப்2அல்லது செனைல் ஆஸ்டியோ போரோசிஸ் என்பது 75 வயது உள்ள பெண்களுக்கும் ஆண்களுக்குமே கூட 2:1 என்ற சதவிகிதத்தில் வருவது.\nசெகண்டரி ஆஸ்டியோ போரோசிஸ் என்பது எந்த வயதிலும் வரக் கூடியது. ஆண்., பெண் இருபாலாரையும் பாதிக்கக் கூடியது. இந்த வகை வரக் காரணம் நாட்பட்ட நோய்க்காக எடுத்துக் கொள்ளும் சில மருந்துகள். ஆஸ்டியோ போரோசிஸ் வந்தால் நம் வாழ்க்கைத் தரத்தைப் பாதித்து எதற்கும் அடுத்தவரை எதிர்பார்க்கும் சூழலைக் கொண்டு வரும். வாழும் ஆவலைக் குறைக்கும். சந்தோஷத்தோடு வாழ்வதற்குப் பதில் வலியோடும்., மாத்திரைகளோடும் வாழும் படி ஆகிவிடும். எனவே வரும் முன் காப்பதே சிறந்தது.\nசரியான ஆகாரம் எடுத்துக் கொள்ளாமலிருத்தல்., அதனால் ஏற்படும் கால்சியம் குறைபாடு., எக்சர்சைஸ் செய்யாமலிருத்தல்., வெய்யில் நம் உடம்பில் படாமல் இருத்தல்., இது எல்லாம் இதை உருவாகும் காரணங்கள்..\nகோலா போன்ற பானங்களை அதிகமாக எடுத்துக் கொள்வதும் உடலில் பொட்டாசியக் குறைவை ஏற்படுத்தி எலும்பு வலுவிழக்க காரணமாகிறது. அதனால் போன் டென்சிட்டி( எலும்பு அடர்த்தி) குறைந்து கூடு மாதிரி ஆகிவிடும். பீர்க்கங்காய்க் கூடு பார்த்திருப்பீர்கள் வெறும் நாராய்.. அது போல் ஆகிவிடும். லேசாக எங்காவது இடித்துக் கொண்டாலே ரொம்ப வலிக்கும். சட்டென்று உடையக்கூடிய தன்மை இருக்கும். இருப்பது தெரியாமல் முறிந்தபின்தான் தெரியும்., இது எலும்புத் தேய்மானம் என்று. இதுதான் சிம்ப்டம்.\nஒபிசிட்டி எனப்படும் உடற்பருமனும் ஒரு காரணம். பெரியவர்களுக்கு உயரம் குறைவு ஏற்படுவதும் இதனால்தான்., ஸ்பைனல் போன் ஷார்ட்டர் ஆவதால்தான். முக்கியமாக ( WEIGHT BEARING PARTS ) ( இடுப்பு., கால் பாகம் ) இடுப்பெலும்பு ., கால் எலும்பு., மணிக்கட்டு எலும்பு இவற்றில்தான் ஏற்படுகிறது முறிவு.\nதொடர்ந்த இடுப்புவலி இருந்தால் பார்க்க வேண்டும். இதனால்தானா ., வேறு காரணமா என்று. கழுத்து வலி., மூட்டு வலி., குதிகால் வலி தொடர்ந்து இருந்தாலும் பார்க்க வேண்டும். பொதுவாக 40 வயது ஆகிவிட்டாலே இரண்டு வருடத்துக்கு ஒரு முறை ஹெல்த் செக்கப் செய்து கொள்வது நல்லது.\nஇரண்டு டெஸ்ட்டுகள் செய்யப்படுகின்றன. (BMD TEST ) போன் மாஸ் டென்சிட்டி டெஸ்ட் ., ப்ளட்டில் கால்சியம் ., இரும்பு சத்து ஆகியவற்றின் அளவை சோதிக்கும் டெஸ்ட்.\nஇது வந்துவிட்டால் அதிகம் படிகளில் ஏறாமலிருப்பது., தசைகளை முறுக்கி செய்யும் எக்சர்சைஸுகளை செய்யாமலிருப்பது., வெஸ்டர்ன் டாய்லெட் உபயோகிப்பது., சமதரையில் சிறிது தூரம் நடப்பது., நாற்காலியில் அமர்வது என்பதைக் கடைப்பிடிக்க வேண்டும்.\nஆரம்ப நிலையில் வலி நிவாரண மருந்துகள்., மூட்டுக்களை வலுப்படுத்தும் பிஸியோதெரபி., பயிற்சிகள் தரப்படும். அடுத்த நிலையில் ( KNEE CAPS., KNEE BRACE ) மூட்டுமேல் போடப்படும் உறைகள் போட்டுக் கொள்ள வேண்டும். முற்றிய நிலையில்தான் ஹிப் ரீப்ளேஸ்மெண்ட்., நீ ரீப்ளேஸ்மெண்ட் ( HIP REPLACEMENT ., KNEE REPLACEMENT ) போன்ற அறுவை சிகிச்சைகள் செய்யப்படுகின்றன.\nபால்., சோயாபீன்ஸ்., மொலாசஸ்., முட்டைக்கோஸ்., லோ ஃபாட் மில்க்., அதிகம் நார்ச்சத்துக்கள் உள்ள அனைத்துக் காய்கறிகளும்.. கீரை மட்டுமல்ல., எல்லா நிறக் காய்களும்., ( பச்சை ., ஆரஞ்சு., சிவப்பு., மஞ்சள்) மற்றும் பழங்களும் முக்கியமா ப்ரோட்டீன் அதிகமுள்ள முளைவிட்ட பயறு வகைகள்., முட்டை., காளான்., தானியங்கள் எடுத்துக் கொள்ள வேண்டும்.\nஃபாட் ஃப்ரீ டயட் இருக்கணும். எண்ணெய் ., கொழுப்புச்சத்து குறைக்கணும். விட்டமின் கே மற்றும் டி மற்றும் கால்சியம் உள்ள உணவு வகைகள் அவசியம். அதிக உப்பு., இனிப்பு குறைப்பது அவசியம். ட்ரை ஃப்ரூட்ஸ் நல்லது. காட் லிவர் ஆயிலும் சாப்பிடலாம்.\nஆல்கஹால் அருந்தும் பழக்கம் ., சிகரெட் புகைக்கும் வழக்கம் இருந்தால் விட்டுவிடுவது நல்லது. ஆரோக்கியத்தை விலை கொடுத்து வாங்க முடியாது. முறையான உணவுப் பழக்கம்., சரிவிகித உடற்பயிற்சி., நடைப் பயிற்சி., கால்சியம்., விட்டமின் டி., கே உள்ள உணவு., சூரிய ஒளி நம்மேல் சிறிது நேரமாவது படுதல்., நார்மல் வேலைகள்., இவைகளை செய்து ஹெல்த்தி லைஃபை வாழ்வது நம் கையில்தான் உள்ளது.\nடிஸ்கி..1 :- எலும்புத் தேய்மானம் எப்படி வருகிறது ..? ஆஸ்டியோ போரோசிஸ் .. ஒரு விழிப்புணர்வு (1) என்ற தலைப்பில் என்னுடைய இந்தக் கட்டுரை டிசம்பர் மாத லேடீஸ் ஸ்பெஷலில் வெளிவந்துள்ளது ..\nடிஸ்கி2:- பின்பற்றுபவர்கள் 250 ஆனது குறித்து மகிழ்ச்சி. என்னை படித்தும்., தமிழ் மணம்., இண்ட்லியில் வோட் செய்தும் ஊக்குவிக்கும் அனைத்து நல்லிதயங்களுக்கும் நன்றி.. ! நன்றி !!..\nமிகவும் பயனுள்ள மருத்துவத் தகவல்களை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிங்கம்மா....\nதொடரட்டும் உங்களின் இந்த பணி....\n28 டிசம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 7:52\nஉங்களுக்கும் குடும்பத்தினருக்கும் எனது இதயங்கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அம்மா\n28 டிசம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 7:53\nதேவையான தகவல்கள்,பகிர்வுக்கு நன்றி அக்கா.\n28 டிசம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 8:31\nதேனம்மை,நல்ல பயனுள்ள அனைவரும் அறிந்து கொள்ள அவசியமானதை பகிர்ந்துள்ளீர்கள்.பத்திரிகை,பேட்டி..ஆஹா..கலக்கறீங்க.வாழ்த்துக்கள்.வளர்க உங்கள் பணி.\n28 டிசம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 9:24\nமிகுந்த பயனுள்ள கட்டுரை.நன்றி. பாராட்டுதல்கள்.\n28 டிசம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 10:24\nமிகவும் பயனுள்ள இடுகை தேனம்மை. நன்றி.\nதொடருபவர் 250 ஆனதற்கும் வாழ்த்துக்கள்.\n28 டிசம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 10:31\nஇதுக்காக தொடர்ந்து வலி நிவாரண மாத்திரைகளை எடுக்கும்போது அது அசிடிட்டியில் கொண்டுபோய் விட்டுவிடுகிறது..\n28 டிசம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 11:15\nமிகவும் பயனுள்ள பகிர்வு சகோதரி..\n29 டிசம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 5:17\nதொடர்ச்சியாக நல்ல விசயங்களை கொடுத்துக் கொண்டுருக்கும் தேனம்மைக்கு என் வாழ்த்துகள்.\n29 டிசம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 5:40\nபக்ரீத் அன்றுதான் எனக்கொரு அறுவை சிகிச்சை நடந்தது...\nமிகவும் பயனுள்ள பதிவு ஜி :)\n29 டிசம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 12:03\nபத்திரிகையப் படிக்க முடியாதவர்களும் பயன்பெற நினைத்து இங்கும் வெளியிடுவதுக்கு நன்றி தேனக்கா!!\nநல்ல பயனுள்ள பதிவு தேனம்மை.\nஅன்பால் இணைந்தவர்கள் 250 என்றுக் கேட்டு மகிழ்ச்சி.\n29 டிசம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 12:33\nரொம்ப அருமையான பகிர்வு. அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய விஷயம். முக்கியமா கோக் பெப்சி பிரியர்கள் அறிந்து கொள்ள வேண்டிய விஷயம்.\n29 டிசம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 4:56\nமிகவும் தேவையான பதிவு தேனக்கா.பரவி நிற்கிறது உங்கள் பணி.வாய்ப்புக் கிடைத்திருக்கிறது.\nதொடரட்டும் சேவை !\n29 டிசம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 7:41\n29 டிசம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 8:40\nஆஸ்டியோ போரோசிஸ் பற்றி மிகவும் பயனுள்ள மருத்துவத்தகவல்கள். பகிர்வுக்கு நன்றி அக்கா.\n30 டிசம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 7:57\nநன்றி மாணவன்., ஆசியா., ஸாதிகா., இறையனார்., ராமலெக்ஷ்மி., அமைதிச்சாரல்., ( அத்துடன் ஒரு விட்டமின் மாத்திரையும் எடுத்துக்குங்கப்பா.. சாரல்., பீ காம்ப்ளக்ஸ் அல்லது பிஃளெக்ஸ் ஃபோர்டி மற்றும் ரிபோஃப்ளேவின் எடுத்துக்கலாம் .. தினம் ஒன்று. ) ஜெயந்த்., ஜோதிஜி., அஷோக் ( என்னாச்சு அஷோக்..??) ., ஹுஸைனம்மா., கோமதி., இளம் தூயவன்., ஹேமா., சண்முககுமார்.., ஜிஜி..\n7 ஜனவரி, 2011 ’அன்று’ பிற்பகல் 8:13\n7 ஜனவரி, 2011 ’அன்று’ பிற்பகல் 8:14\nமிக அருமையான பகிர்வு தேனக்கா.\nஎல்லாரும் சொல்வதால் பழகி விட்டது, தேனக்கா, எனக்கு நீங்க தங்கையா அக்காவானு தெரியல்.\n8 ஜனவரி, 2011 ’அன்று’ பிற்பகல் 8:04\n28 மே, 2011 ’அன்று’ பிற்பகல் 10:40\n12 டிசம்பர், 2017 ’அன்று’ பிற்பகல் 7:21
கோபா அமெரிக்கா கால்பந்து: பெருவை 3-1 என வீழ்த்தி பிரேசில் சாம்பியன் || Brazil win copa america cup Brazil vs Peru\nகோபா அமெரிக்கா கால்பந்து: பெருவை 3-1 என வீழ்த்தி பிரேசில் சாம்பியன்\nபதிவு: ஜூலை 08, 2019 15:21 IST\nபிரேசில் நாட்டில் நடைபெற்று வந்த கோபா அமெரிக்கா கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில் பெருவை 3-1 என வீழ்த்தி பிரேசில் சாம்பியன் பட்டம் வென்றது.\nகால்பந்து விளையாடும் தென்அமெரிக்கா கண்டத்தில் உள்ள நாடுகளுக்கிடையே கோபா அமெரிக்கா கால்பந்து தொடர் நடைபெற்றது. இந்திய நேரப்படி நேற்று நள்ளிரவு நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் பிரேசில் - பெரு அணிகள் மோதின.\nஆட்டம் தொடங்கிய 15-வது நிமிடத்தில் பிரேசில் அணியின் எவர்டன் முதல் கோலை பதிவு செய்தார். அதன்பின் முதல் பாதி நேரத்தின் கடைசி இரண்டு நிமிடங்கள் வரை இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. 44-வது நிமிடத்தில் பெரு அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. அதை பயன்படுத்தி பவலோ குயேர்ரேரோ கோல் அடித்தார். முதல் பாதிக்கான இன்ஜூரி நேரத்தில் பிரேசில் அணியின் கேப்ரியல் ஜீஸஸ் கோல் (45+3) அடித்தார்.\nஇதனால் பிரேசில் முதல் பாதி நேரத்தில் 2-1 என முன்னிலைப் பெற்றது. 2-வது பாதி நேர ஆட்டத்தில் இரு அணிகளும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதனால் கோல் அடிக்கும் வாய்ப்பு இரு அணிகளுக்கும் கிடைக்கவில்லை.\nஆட்டத்தின் 70-வது நிமிடத்தில் பிரேசில் அணியின் நட்சத்திர வீரரான கேப்ரியல் ஜீஸஸ் ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்டார். இதனால் பிரேசில் 10 வீரர்களுடன் விளையாட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. என்றாலும் பெரு அணி வீரர்களை கோல் அடிக்க அனுமதிக்க வில்லை. ஆட்டத்தின் கடைசி நிமிடமான 90-வது நிமிடத்தில் பிரேசில் அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. பெனால்டியை பயன்படுத்தி ரிச்சார்லிசன் கோல் அடிக்க பிரேசில் 3-1 என வெற்றி பெற்றது.
Tamilonline - Thendral Tamil Magazine - நிகழ்வுகள் - BATM: முத்தமிழ் விழா 2018\nசெப்டம்பர் 29, 2018 அன்று வளைகுடாப் பகுதித் தமிழ் மன்றம் மில்பிடாஸ் ஜெயின் கோவில் கலையரங்கில் முத்தமிழ் விழாவைச் சிறப்பாக நடத்தியது. பல்வேறு கலை நிகழ்ச்சிகள், நாடகம், சிறப்புரைகள் மற்றும் இசை நிகழ்வுகளுடன் இவ்விழா நடைபெற்றது.\nமன்றச் செயலாளர் திரு. ரமேஷ் குப்புசாமி நிகழ்ச்சியைத் துவக்கி வைக்க, சங்கத் தலைவர் திரு. தயானந்தன் வெங்கடாச்சலம், பொருளாளர் திரு. சங்கர் நடராஜன் ஆகியோர் துவக்கவுரை ஆற்றினர். இசைப்பள்ளி மாணவர்களின் கர்நாடக சங்கீதத் தமிழிசைக் கச்சேரியுடன் நிகழ்ச்சிகள் துவங்கின. மிருதங்கம், வயலின் ஆகிய வாத்தியங்களுடன், குழந்தைகள் தங்களது இனிய குரலில் தமிழிசை பாடினர்.\n'இசை வடிவில் திருக்குறள்' நிகழ்ச்சி அவையோரை மெய்சிலிர்க்க வைத்தது. மேலும், 'மனதில் உறுதி வேண்டும், 'நின்னைச் சரணடைந்தேன்', 'காக்கைச் சிறகினிலே' போன்ற பாரதியார் பாடல்களையும், பல்வேறு தமிழ்த் திரையிசைப் பாடல்களையும், இனிமையாகப் பாடி அவையோரை வசியப்படுத்தினர்.\nதமிழ் மன்ற முன்னாள் தலைவர் திரு. குணா 'தமிழ் எண்கள்' குறித்துச் சிறப்புரை ஆற்றினார். தமிழ் எண்கள் உலகின் பல்வேறு பகுதிகளில் பயன்படுத்தப்பட்ட மற்றும் தற்பொழுது பயன்படுத்தப்பட்டு வரும் எண்களுக்கு முன்னோடியாக விளங்கியமை பற்றி வரலாற்று பின்னணியுடன் விளக்கினார். சிறப்பு விருந்தினர் திரு. விக்டர் 'தமிழின் தொன்மையும், பெருமையும்' என்ற தலைப்பில், சங்க காலத்திற்கும் முந்தைய தமிழ்மொழியின் தொன்மையைப் பற்றி வரலாற்று ஆதாரங்களுடன் பேசினார்.\nகுழந்தைகள் அவ்வையாராகவும், திருவள்ளுவராகவும், பாரதியாராகவும், கண்ணகியாகவும் நடித்து வழங்கிய நாடகங்களைக் கண்டு அரங்கமே கரவொலியால் அதிர்ந்தது.\nசிறியோர் முதல் பெரியோர் வரை பங்கேற்ற பரதநாட்டியம், பின்னலாட்டம் போன்ற பாரம்பரிய நடன நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை மகிழ்வித்தன. இடையே நடைபெற்ற 'முத்தமிழ் வார்த்தைகளைத் தேடி' என்னும் புதிர்ப் போட்டியில் பார்வையாளர்கள் ஆர்வமாக பங்கேற்றனர்.\nகேரள வெள்ள நிவாரணத்திற்காகத் தமிழ் மன்றத்தின் சார்பாக திரட்டப்பட்ட நிதியான 1750 டாலர் தொகையை MANCA அமைப்பின் பிரதிநிதி திரு. சாஜன் அவர்களிடம் மன்ற நிர்வாகிகள் அளித்தனர்.\nதுணைத்தலைவர் திரு. ரமேஷ் சத்தியமூர்த்தி, தொடர்ந்து ஆதரவு தரும் புரவலர்களுக்கு நன்றி கூறினார்.\nநிறைவாக 'முத்தமிழும் கலைஞரும்' என்ற நிகழ்ச்சியில் கலைஞர் இயல், இசை மற்றும் நாடகத் தமிழுக்கு ஆற்றிய பங்களிப்புக் குறித்து திரு. இளங்கோ மெய்யப்பன், திரு. ஜெயக்குமார் முத்தழகு, திரு. உதயபாஸ்கர் நாச்சிமுத்து, திரு. அபு கான் ஆகியோர் உரையாற்றினர். பின்னர் பல்வேறு போட்டிகளின் வெற்றியாளர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. மன்றத் தலைவர் திரு. குமார் நல்லுசாமி அவர்களின் நன்றியுரையுடன் நிகழ்ச்சி நிறைவு பெற்றது.
லோக்சபா தேர்தலின்போது கம்யூனிஸ்டுகளுக்கு ரூ.25கோடி வாரி வழங்கிய திமுக! சர்ச்சை | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon\nHome»தமிழ் நாடு»லோக்சபா தேர்தலின்போது கம்யூனிஸ்டுகளுக்கு ரூ.25கோடி வாரி வழங்கிய திமுக! சர்ச்சை\nலோக்சபா தேர்தலின்போது கம்யூனிஸ்டுகளுக்கு ரூ.25கோடி வாரி வழங்கிய திமுக! சர்ச்சை\nPosted on September 25, 2019 at 12:35 pm by A.T.S Pandian\nநடைபெற்று முடிந்த லோக்சபா தேர்தலில், கம்யூனிஸ்டு கட்சிகளான சிபிஎம் கட்சிக்கு ரூ.15 கோடி, சிபிஐக்கு ரூ.10 கோடி என மொத்தம் ரூ.25 கோடி திமுக வாரி வழங்கி உள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.\nபொதுமக்களுக்கு திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகள் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து வெற்றி பெற்றதா என கேள்வி எழுப்பப்பட்டு உள்ளது.\nநடைபெற்று முடிந்த லோக்சபா தேர்தலின்போது திமுக கூட்டணி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் போட்டியிட்ட நிலையில் 39 தொகுதிகளை அதிரடியாக கைப்பற்றி சாதனை படைத்தது. இந்த தேர்தலில் போட்டியிட்ட கம்யூனிஸ்டு கட்சித் தலைவர்களும் வெற்றி பெற்றனர்.\nஇந்த நிலையில், கம்யூனிஸ்டு கட்சி உள்பட கூட்டணி கட்சிகளுக்கு திமுக கோடிக்கணக்கான பணத்தை வாரி இறைத்த தகவல் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.\nதேர்தல் செலவு தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் அரசியல் கட்சிகள் தாக்கல் செய்துள்ள செலவின விவரங்களில் இந்த தகவல் வெளியாகி உள்ளது.\nலோக்சபா தேர்தல் செலவிடம் தொடர்பாக திமுக தலைமை கடந்த மாதம் (ஆகஸ்டு) 27ந்தேதி தேர்தல் ஆணையத்திடம் பிரமாணப் பத்திரம் சமர்பித்தது.\nஅதில், சிபிஎம் மற்றும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு தலா 15 கோடி ரூபாயும், சிபிஎம்மிற்கு 10 கோடி ரூபாயும் நன்கொடையாக வழங்கியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.\nஅதேவேளையில், சிபிஎம் சார்பில் ஜூலை 10 மற்றும் செப்., 13 ஆகிய தேதிகளில் தேர்தல் ஆணையத்திற்கு சமர்ப்பித்த பிரமாணப் பத்திரத்தில், நாடு முழுவதும் அக்கட்சியின் செலவினம் சுமார் ரூ. 7.2 கோடி என்று கூறப்பட்டு உள்ளதாக தககவல் வெளியாகி உள்ளது.\nஅதேவேளையில் சிபிஐ சார்பில் இதுவரை தேர்தல் செலவுகளை சமர்ப்பிக்கவில்லை.\nதிமுக வழங்கியாக கூறப்படும் நன்கொடை குறித்து சிபிஎம் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கூறுகையில், மாநில பிரிவின் மூலம் பெறப்பட்ட விவரங்களை மத்திய குழுவுக்கு அனுப்பி உள்ளதாகவும், அடுத்த பிரமாண பத்திரத்தில் அந்த விபரங்கள் தாக்கல் செய்யப்படும் எனக் கூறினார்.\nஇந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த சிபிஐ மாநில செயலாளர் முத்தரசன், நாங்கள் பெற்ற பணம் ஊழல் பணமல்ல. தேர்தலின் போது கூட்டணி கட்சிகள் உதவினர், இது வழக்கமான ஒன்றுதான் என்று தெரிவித்து உள்ளார்.\nஇந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, திமுக நிர்வாகி ஒருவர், இதுபோன்று நிதி வழங்கப்படுவது தேர்தல் சமயத்தில் நடைபெறும் வழக்கம் என்றும், இந்தமுறை அந்த விவரங்களை திமுக தேர்தல் செலவினங்களில் சேர்த்துள்ளது என்று கூறினார்.\nமேலும் திமுக தாக்கல் செய்த செலவின பிரம்மான பத்திரத்தில்,\nதேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட நட்சத்திர பேச்சாளர்களுக்கு ரூ. 58.94 லட்சமும்,\nஊடகங்கள் வாயிலான பிரசாரத்திற்கு ரூ. 15.46 கோடியும் செலவாக காட்டியுள்ளது.\nமேலும், லோக்சபா வேட்பாளர்களுக்கு தலா ரூ. 50 லட்சமும், சட்டமன்ற வேட்பாளர்களுக்கு தலா ரூ. 25 லட்சமும் செலவு செய்ததாகவும் கூறப்பட்டு உள்ளது.\nஇந்த விவகாரம் தற்போது தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. சமூக வலைதளங்களி லும் கடும் விவாதப்பொருளாகி வருகிறது.\nஉண்டியல் ஏந்தி கட்சி நடத்தும் கம்யூனிஸ்டு கட்சிகள் ரூ.15 கோடி, ரூ.10 கோடி என பணம் வாங்கியிருப்பது மக்களிடையே அதிருப்தியையும், சலசலப்பையும் ஏற்படுத்தி உள்ளது.\nமதுரை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ஊழல்: திமுக எம்எல்ஏ குற்றச்சாட்டு\nகொரோனா தடுப்பு நிதி: திமுக எம்.பி.க்கள், அன்புமணி ராமதாஸ், ரவீந்திரநாத் உள்பட பலர் தாராளம்…\nகஜா புயல் நிவாரணத்துக்கு அதிமுக சார்பில் ரூ.1 கோடி நிதி வழங்கல்\nTags: communist parties, CPI, CPM, DMK paid Rs 25 crore, lok sabha election
குழந்தைகள் ஸ்பெசல் | arusuvai\npradeebala - November 25, 2008 - 20:05\nஇந்த கட்டுரை நான் குமுதம்சிநேகிதியில் படித்தேன்.தோழிகள் அனைவருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று இங்கு பதிவு செய்கிறேன்.\nஇந்த கட்டுரை கொஞ்சம் பெரிது தான் ஆனால் எல்லோரும் படிக்க வேண்டியது.\nநம் வீட்டுக் குழந்தைகள் கொஞ்சம் பெரிய மனுஷத்தனமாகப் பேச ஆரம்பித்துவிட்டாலே அவர்களைப் பெரியவர்கள் லிஸ்ட்டில் சேர்த்து, அவர்கள் உணவின்மீது நாம் சரியான கவனம் செலுத்தாமல் விட்டுவிடுகிறோம்.\nஆனால் குழந்தைகள் தினத்துக்கு சொந்தக்காரரான நேருஜி, ஒரு குழந்தை பதினான்கு வயதைக் கடக்கும்வரை அவர்கள் குழந்தைகள்தான் என்கிறார். எனவே, பதினான்கு வயது வரைக்கும் குழந்தைகளை குழந்தைகளாகவே பாருங்கள், அவர்கள் உணவில் அதிக கவனம் எடுத்துக் கொள்ளுங்கள். இதோ எந்தெந்த வயதுக்குழந்தைகளுக்கு, என்னென்ன மாதிரியான உணவு கொடுக்க வேண்டும் என்பதைச் சொல்கிறார் டயட்டீஷியன் வீணாசேகர்.\n0-6 மாதங்கள் வரை :\nதாய்ப்பால் மட்டுமே கொடுக்கவேண்டும். தாய்ப்பால் பற்றாக்குறை எனும் பட்சத்தில் அரிசிக்கஞ்சி, பருப்புத் தண்ணீர், ஆப்பிள், ஆரஞ்சு ஜூஸ், காய்கறி சூப் கொடுக்கலாம். அதிலும் பாதிக்குப் பாதி ஆறிய வெந்நீர் சேர்த்து, முதன் முறையாக கொடுக்கும்போது அரை டீஸ்பூன் மட்டுமே கொடுக்க வேண்டும். குழந்தை உடல் அதை ஏற்றுக் கொண்டு, மறுநாள் எந்தத் தொந்தரவுமின்றி ஆரோக்கியமாக இருந்தால், அதே அரை டீஸ்பூன் மறுநாளும் கொடுங்கள். மெது மெதுவாக அதை ஒரு டீஸ்பூன் அளவாக உயர்த்திக் கொள்ளலாம். ஆனால், எது கொடுத்தாலும் பாதிக்குப் பாதி தண்ணீர் கலப்பதை மறந்துவிட வேண்டாம். அப்போதுதான் குழந்தையால் ஜீரணிக்க முடியும்.\n6 லிருந்து 8 மாதம் வரை :\nஇந்தத் தருணத்தில் குழந்தைக்கு இரும்புச் சத்து, புரதச்சத்து அதிகம் தேவைப்படும். எனவே கொழுப்பில்லாத மட்டன் சூப்பில் மூன்று பங்கு தண்ணீர் சேர்த்து முதல் நாள் சிறிதளவு கொடுத்துப் பாருங்கள். குழந்தைக்கு ஜீரணமானால் இந்த சூப்பை வாரத்தில் மூன்று அல்லது நான்கு நாட்கள் கொடுக்கலாம். இதைத்தவிர சிக்கன் சூப், வேகவைத்து மசித்த பசலைக்கீரை, முருங்கைக்கீரை, பருப்புசாதம் கொடுக்கலாம்.\n9லிருந்து 10 மாதம் வரை :\nஇந்த சமயத்தில்தான் குழந்தைக்குப் பல்முளைக்கும். மென்று சாப்பிடும் உணவுகளை ரசித்துச் சாப்பிட ஆரம்பிப்பார்கள். சிப்ஸ் போன்றவைகளை அதிகம் வாங்கிக் கொடுத்துப் பழக்கிவிட்டால், குழந்தைகள் லைஃப்லாங் அந்தப் பழக்கத்திற்கு அடிமையாகிவிடுவார்கள். எனவே குழந்தைக்கு ஊளைச்சதை போட்டுவிடாதபடியும், அவர்கள் சிப்ஸ் மாதிரியான உணவுகளை ருசித்துப் பார்த்துவிட முடியாதபடியும் கவனமாக இருங்கள். குழந்தைகள் கடிப்பதற்கு வசதியாக ஆப்பிள், காரட் போன்று கொடுத்துப் பழக்குங்கள். வீட்டில் செய்த இனிப்பு, லேசான காரம், லேசான புளிப்பு உணவு வகைகளையும் கொடுத்து பழக்கப்படுத்துங்கள். அப்போதுதான் குழந்தை எல்லா சுவைக்கும் பழக்கப்படும்.\n10லிருந்து 12 மாதங்கள் வரை :\nஇந்தப் பருவத்தில் குழந்தைகள் உணவின் கலரை பிடித்துப்போய் சாப்பிட ஆசைப்படுவார்கள். இந்த தருணத்தில் நமது பாரம்பரிய உணவையே வகைவகையாக சமைத்துச் சாப்பிடக் கொடுக்கலாம். கலர்கலரான காய்கறிகளைச் சாப்பிட வைக்கலாம். ஸ்நாக்ஸுக்கு கடைகளில் விற்கும் சிப்ஸ் அது இதுவென்று கொடுக்காமல், வேகவைத்த வேர்க்கடலை, எண்ணெயின்றி வறுத்த வேர்க்கடலை, எனர்ஜி மில்க், வேகவைத்த தானியங்கள், முளை கட்டிய தானியங்களை பவுடராக்கி கஞ்சி வைத்து, இப்படி விதவிதமாகக் கொடுக்கலாம். காரணம், இந்தச்சமயம் குழந்தைகளின் வளர்ச்சி ஆரம்பிக்கும் சமயம். தண்ணீர் அதிகம் கொடுக்க வேண்டும். மலச்சிக்கல் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மேற்கண்ட உணவுமுறை இல்லாவிட்டால் குழந்தைக்கு மலச்சிக்கல் ஏற்படும். தினம் அதிகாலை மலம் கழிக்கும் பழக்கம் இல்லாமலே போய்விடும். இதனால் உடல்வளர்ச்சி, மூளைவளர்ச்சி பாதிக்கப்படும். எனவே இந்தச் சமயம் குழந்தைகள் உணவில் அதிக கவனம் எடுத்துக் கொள்ளுங்கள்.\n1லிருந்து3வயது வரை :\nஇந்தக் காலகட்டத்தில் குழந்தைகளுக்கு உணவின்மேல் ஈர்ப்பை உருவாக்கி உணவு ஊட்டுவது என்பது மிகக் கடினமான வேலை. புதிது புதிதாக சுவையை மாற்றி மாற்றிக் கொடுத்து உணவின்மேல் ஈர்ப்பை உருவாக்கவேண்டும். நிறைய கலர்ஃபுல்லான காய்கறிகள், பழங்கள் என்று சாப்பிடும் ஆசையைத் தூண்டிவிடலாம். சாண்ட்விச், முந்திரி, பாதாம், உலர்ந்த திராட்சை, வேகவைத்த வேர்க்கடலை போன்ற கால்சியம், புரோட்டீன் மற்றும் வைட்டமின்கள் நிறைந்த உணவுகளைச் சாப்பிடக் கொடுக்க வேண்டும்.\n3 வயதிற்கு மேல் :\nகுழந்தைகள் பள்ளி செல்ல ஆரம்பிக்கும் வயது. என்னதான் நீங்கள் பார்த்துப் பார்த்து லன்ச் கட்டிக் கொடுத்தாலும், அவர்கள் சாப்பிடுகிறார்களா, கொட்டிவிடுகிறார்களா என்று தெரியாது. எனவே காலை ப்ரேக் ஃபாஸ்ட், மாலை ஸ்நாக்ஸ், இரவு டின்னரில் நீங்கள் வெகு அலர்ட்டாக இருக்கவேண்டும். நீங்கள் கவனிக்காமல் விட்டுவிட்டீர்கள் என்றால் போதிய நியூட்ரிஷியன்ஸ் இல்லாமல் குழந்தைகள் நார்மல் சுறுசுறுப்பை இழந்து எப்போதும் தூங்கிவழிந்து கொண்டே இருப்பார்கள். ரொம்ப அசதியாகவும் காணப்படுவார்கள். மூளைத்திறனும் குறைவாகவே இருக்கும்.\nஇட்லி, தோசை, பால் குறைவான மில்க்ஷேக் சப்பாத்தி, சாண்ட்விச், தானிய சுண்டல், முட்டை, பருப்புசாதம், மிக்ஸ்ட் ரைஸ், பழங்கள் சாப்பிடக் கொடுத்துப் பழக்க வேண்டும்.\nபுளிக்காத, ஃப்ரிட்ஜில் வைக்காத தயிர்சாதம் குழந்தைகளுக்குக் கட்டாயம் கொடுக்க வேண்டும். இதுபோன்ற தயிரில் நல்ல பாக்டீரியா இருப்பதால் உடல்நலனுக்கு மிகவும் நல்லது.\n12லிருந்து 14 வயது வரை :\nஇந்தப் பருவத்தில் குழந்தைகளுக்கு அபார வளர்ச்சி உண்டாகும். பெண் குழந்தைகளுக்குத்தான் அபாரவளர்ச்சி இந்த சமயத்தில் ஏற்படும். எனவே நிறைய நியூட்ரிஷியன்ஸ், புரதம், இரும்புச்சத்து, விட்டமின்ஸ், மினரல்ஸ் என எல்லாவிதமான சத்துகளும் தேவைப்படும். சில பெண் குழந்தைகள் பூப்பெய்துவிடும் வயது என்பதால் நிறைய அயர்ன் தேவைப்படும். இரும்புச் சத்து நிறைந்த உணவுகள் (முருங்கைக் கீரை, பேரீச்சை, வெல்லம்) போன்றவற்றை உணவில் அதிகம் சேருங்கள்.\nஅதே சமயம் நிறைய ஊளைச்சதைபோடும் இந்த வயதில் ஜங்க் ஃபுட் தவிர்த்தால்தான் உடலில் எதிர்ப்புச்சக்தி கூடும். பின் நாட்களில் நோய் அணுகாமல் தடுக்க இந்த வயதில் குழந்தைகள் சாப்பிடும் உணவுதான் தாங்கிப் பிடிக்கும். எனவே கவனமாக இருங்கள். வீட்டிலேயே விதவிதமான உணவுகளை குழந்தைகளுக்குத் தயாரித்துக் கொடுத்து அவர்களை சாப்பிட வைத்து அவர்களின் வளர்ச்சியைப் பார்த்து ரசியுங்கள்.\nஆண் குழந்தைகளுக்கும் இதுதான் அபார வளர்ச்சி பீரியட் என்பதால், அவர்களுக்கும் மேற்கண்ட உணவுமுறைகளைப் பின்பற்றச் செய்து வளருங்கள்.\nசரியான டயட்டின்றி டீன்ஏஜில் ஏற்படும் பிரச்னைகள் என்னென்ன?\nஃப்ரெண்ட்ஸுடன் சேர்ந்து வீட்டுச் சாப்பாட்டைத் தவிர்த்து ஹோட்டல்களில் சாப்பிடுவதால் உண்டாகும் இந்த பிரச்னைக்குக் காரணம் ஹோட்டல்களின் கலர் கெமிக்கல்ஸ், ஃபேட்டி ஆயில்ஸ் உணவுகள்.\nமுடி உதிருதல் :\nசெல்ஃப் இமேஜை வளர்த்துக் கொள்ள இளைக்கிறேன் பேர்வழி என சாப்பிடாமல் தவிர்ப்பது. பசிக்கிறது என கண்டதை வெளியில் சாப்பிட்டு விடுவது... இவைகளால் மலச்சிக்கல். அதன் பாதிப்பாக முடிஉதிருதல்.\nே கருவளையமும் மேற்கண்ட உணவு முறையில் வருவதுதான். நிறைய சீஸ், வெண்ணெய் சாப்பிட்டு செரிக்கும் தன்மையிழந்து மலச்சிக்கல் வந்து, உடல் ஆரோக்கியம் கெட்டு கண்களைச் சுற்றி கருவளையம் உண்டாகிறது.\nே தண்ணீர் நிறையக் குடிக்க வையுங்கள்.\nே பச்சைக் காய்கறிகளை சாலட் செய்து கொடுங்கள்.\nே பழ வகைகளைச் சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்துங்கள்.\nபடங்கள் : எஸ். சுரேஷ்\nஇந்தக்கால பொடிசுகளிடம் கண்ணை உருட்டி, கோபத்தைக் காட்டியெல்லாம் உங்கள் பேச்சை கேட்க வைக்க முடியாது. கொஞ்சம் புத்திசாலித்தனமான அப்ரோச்தான் இந்த விஷயத்தில் உங்களுக்கு உதவி செய்யும்.\nஸ ``ஹோம் வொர்க் முடிச்சவுடன் நீயே கார்ட்டூன் சேனல் வச்சி பார்த்துப்பியாம்'' என்று டி.வி. ரிமோட்டை பிள்ளைகளிடமே கொடுத்துப் பாருங்கள். நீங்கள் சொல்லாமலேயே ஹோம்வொர்க் நோட்டும் கையுமாக உட்கார்ந்து விடுவார்கள்.\nஸ ``ஏன் எதுக்குனு கேள்வி கேட்காம சொன்னதைச் செய்'' என்று அதிகாரம் செய்யாமல், ``அம்மா எது சொன்னாலும் உன்னோட நல்லதுக்குதானே சொல்வேன் கண்ணம்மா'' என்று சொல்லிப் பாருங்கள். பிள்ளைகள் நீங்கள் கிழித்த கோட்டைத் தாண்டாது.\nஸ அழகாக படம் வரையும் உங்கள் குழந்தையிடம் ``எதிர் வீட்டு நிஷா எவ்ளோ அழகா டான்ஸ் ஆடுறா. நீயும் இருக்கியே'' என்று தயவு செய்து பேசி விடாதீர்கள். ரோஜாச் செடியிடம் கத்தரிக்காயை எதிர்பார்க்கும் உங்களுடைய இந்த குணத்தால், உங்கள் பிள்ளை உங்கள் பேச்சுக்குக் காது கொடுக்காமலே போய்விடலாம்.\nஸ உங்கள் வீட்டு வாண்டின் லூட்டி உங்களை ரொம்ம்ம்...ப வெறுப்பேற்றும்போது, குழந்தைகளை அடித்தோ அல்லது உங்கள் தலையில் அடித்துக் கொண்டு கத்தியோ கோபத்தை வெளிப்படுத்தாதீர்கள். கொஞ்ச நேரம் மௌனமாக இருங்கள். கோபத்தைவிட உங்கள் மௌனத்துக்கு அதிகமாகக் கீழ்ப்படிவார்கள் உங்கள் குழந்தைகள்.\nஸ இந்த மௌனத்துக்கும் பயப்படாத `படா வாலு'களும் இருக்கிறது. இதுகளிடம் `நீ என்ன வால்தனம் செய்தாலும் அம்மா உம்மேல அன்பாத்தான் இருப்பேன்' என்பதை செயலில் காட்டி வாருங்கள். அந்தப் பொல்லாத பொடிசுகளே தங்கள் வால்களை வெட்டிப் போட்டு விடும்!\nஸ ரொம்பவே முக்கியம்... குழந்தைகளைக் குறை சொல்லிக் கொண்டே இருக்காதீர்கள். அவர்கள் நல்லது செய்யும்போது உடனே பாராட்டி விடுங்கள்.\nகருவிலிருக்கும் ஒரு குழந்தை தனக்குத் தேவை யான உணவு, ஆக்ஸிஜன், வெப்பம் ஆகியவற்றைத் தாயிடமிருந்து எடுத்துக் கொள்வதாலும், மலம், சிறுநீரை தாயின் மூலமே வெளியேற்றுவதாலும் கருவிலிருக்கும் போது குழந்தையின் சுவாசப்பை, ஈரல் இரண்டுக்குமே வேலையில்லையாம்! அந்தக் குழந்தை இந்த உலகில் பிறந்தவுடனேதான், தானாக மூச்சுவிடுகிறது. மலம், சிறுநீர் கழிக்கிறது. கர்ப்பப்பையிலிருந்து வெளிவந்தவுடனே வெளியுலகுக்கு தன்னைத் தயார்படுத்திக்கொள்கிறது. புத்தம் புதிதாய்ப் பிறந்த அந்தப் பிஞ்சுக் குழந்தையை கண்ணும் கருத்துமாய் பராமரிக்க நாம் நம்மைத் தயார் படுத்திக் கொள்ள வேண்டாமா? இதோ பராமரிக்க சில யோசனைகள் சொல்கிறார் பச்சிளம் குழந்தை நிபுணர் டாக்டர். ரமேஷ்.\nே 37-லிருந்து 42- வாரங்கள் வரை கர்ப்பப்பையில் வளர்ந்த சிசுவையே முழுவளர்ச்சியடைந்த குழந்தை என்கிறோம். 37 வாரங்களுக்கு முன்பாக பிறக்கும் குழந்தை குறைப்பிரசவ குழந்தை. எனவே அந்தக் குழந்தைக்கு சிறப்புக் கவனம் தேவை.\nே குழந்தை பிறந்ததும் இரண்டரை கிலோவிலிருந்து மூன்றரை கிலோ வரை இருக்க வேண்டும்.\nே சராசரி எடையுடன் முழுவளர்ச்சியடைந்த குழந்தை பிறந்த5நிமிடத்திற்குள் அழவேண்டும். குழந்தை அழுதால்தான் சுவாச உறுப்புகள் வேலை செய்ய ஆரம்பித்துவிட்டன என்று அர்த்தம்.\nே குழந்தையின் உடல் வெளிர் ரோஜா நிறத்தில் இருக்க வேண்டும். அப்படியிருந்தால்தான் குழந்தையின் இதயம் ஆரோக்யமாக இருக்கிறது என்று அர்த்தம்.\nே பிறந்தவுடன் குழந்தை தன் கை, கால்களை அசைக்கும், தும்மும்... அப்படியிருந்தால்தான் குழந்தையின் நரம்பு மண்டலமும் தசைகளும் நன்றாக வேலை செய்கிறது என்று அர்த்தம்.\nே பிறந்தவுடன் குழந்தை சிறுநீர், மலம் கழித்தால்தான் ஜீரண சக்தி, சிறுநீரகம், ஈரல் நன்றாக இருக்கிறது என்று அர்த்தம். சில குழந்தைகளுக்கு 24 மணிநேரம் கழித்தும் ஏற்படலாம். எனவே பயப்படத் தேவையில்லை.\nே பிறந்ததிலிருந்து மூன்று நாட்களுக்கு மலம் கறுப்பாக இருக்கும். பிறகுதான் நார்மல் நிறம் வரும்.\nே குழந்தை பிறந்த3நாட்கள்வரை கண்கள் லேசான மஞ்சள் நிறத்தில்தான் இருக்கும். சில சமயம் உடல்கூட மஞ்சள் நிறத்தில் இருக்கும். மஞ்சள் காமாலையோ என்று பயந்துவிட வேண்டாம். குழந்தையின் ஈரல் வளர்ச்சி குறைபாடாகக்கூட இருக்கலாம். இந்தக் குறைபாடு குறைமாதக் குழந்தைக்கு ஏற்படலாம்.\nே குழந்தை சுணக்கமாக இருந்தாலும், சரியாகப் பால் குடிக்காவிட்டாலும், மலம் வெள்ளையாக இருந்தாலும், அது2வாரத்திற்குள் சரியாகாவிட்டால் உடனே மருத்துவரிடம் காண்பியுங்கள்.\nே பிறந்து ஒருவாரம் வரை உடலிலுள்ள நீர் வற்றுவதால் குழந்தை எடைகுறையும். எடை குறைந்த குழந்தைகளை முக்கியமாக குளிர்காலங்களில் கம்பளி உடை உடுத்தி கதகதப்பாக வைத்திருத்தல் அவசியம்.\nே குழந்தையின் உடல் சில சமயங்களில் சூடாக இருக்கும். அதிக அளவு உடை, சுற்றுப்புறச்சூழல், எப்போதும் தாய் அணைத்தே வைத்திருத்தல் போன்ற காரணங்களால் உடல் சூடாக இருக்கும். ஜுரமோ என்று பயந்துவிடாமல், காற்றோட்டமாக வைத்திருப்பதன் மூலமும், தாய்ப்பால் அடிக்கடி கொடுப்பதன் மூலமும் இதைத் தவிர்க்கலாம்.\nே குழந்தை பிறந்த அரை மணி நேரம் வரை விழித்திருக்கும். அந்த அரை மணி நேரத்தில் தாய்ப்பால் கொடுக்க ஆரம்பித்துவிட வேண்டும். இல்லாவிட்டால் அரை மணிநேரத்திற்குப் பின் தூங்க ஆரம்பித்துவிடும்.\nே குழந்தை பிறந்தவுடன் தாய்ப்பால் கொடுக்க ஆரம்பித்தால், தாய்க்கும் பால் சுரப்பது எளிதாகும்.\nே தாயின் முதல் பாலான சீம்பால் கொடுப்பதன் மூலம், குழந்தைக்கு நோய் எதிர்ப்புச் சக்தி கிடைக்கிறது.\nே தாய்ப்பால் கொடுப்பதால் ஒருவித அன்னியோன்யம் ஏற்பட்டு தாய்-சேய் உறவும் பலப்படுகிறது.\nே குழந்தை பாலுக்கு அழும்போதெல்லாம் தாய்ப்பால் புகட்டவேண்டும்.\nே குழந்தையும், தாயும் ஒரே படுக்கையில் படுப்பது அவசியம்.\nே பால் கொடுக்கும்போது தாய் முடிந்தவரை உட்கார்ந்த நிலையில் குழந்தையை மார்போடு அணைத்து, மார்புக்காம்பை மட்டும் குழந்தையின் வாயில் வைக்காமல் காம்பைச் சுற்றிய கறுப்புப் பகுதியையும் குழந்தையின் வாயில் வைத்துக் கொடுக்க வேண்டும்.\nவேலைக்குச் செல்லும் தாய்மார்களுக்கு...\nே வேலைக்குப் போகும் தாய்மார்கள், முதல் நான்கு மாதங்களுக்கு கட்டாயம் தாய்ப்பால் கொடுத்தே ஆக வேண்டும்.\nே வேலைக்குச் செல்ல நேரும்போது தாய்ப்பாலை பீய்ச்சி எடுத்து ஒரு சுத்தமான கிண்ணத்தில் வைத்துவிட்டுச் செல்லலாம். குழந்தைக்குப் பசிக்கும்போது அந்தப்பாலை மற்றவர்கள் புகட்டலாம். ஃப்ரிட்ஜில் வைக்க அவசியம் இல்லை. இது3அல்லது4மணி நேரங்கள் தாங்கும்! அதற்கு அப்புறம் தேவைப்பட்டால் வேறு ஏதேனும் உணவை குழந்தைக்கு தாருங்கள்!\nபுத்தம்புதுக் குழந்தைகள்... அதன் பிரச்னைகள்...\nே அடிக்கடி தும்முவது... மூக்கடைத்து திக்குமுக்காடுவது... மூக்கு, தொண்டையில் கரகரவென்ற சப்தம்... மூக்கிலிருந்து சில சமயம் நீர்வடிதல்... சீராக மூச்சு விடாமல் வேகமாக அல்லது மெதுவாக மூச்சுவிடுவது... சில வினாடிகள் மூச்சுவிடாமல் இருப்பது... இவையெல்லாம் இயற்கைதான். இதனால் எந்த பாதிப்பும் வராது. நன்றாகப் பால்குடிக்கும். எப்போதும்போல் குழந்தை நார்மலாகவேஇருக்கும்.\nே குழந்தை படுத்திருக்கும்போது முகத்தில் நேராக ஃபேன் காற்றோ, ஏசியோ படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.\nசிறுநீர், மலம் போவது பற்றி:\nே சிறுநீர், மலம் அடிக்கடி கழித்தல் என்பது புதிதாய்ப் பிறந்த குழந்தைக்கு இயற்கைதான்.\nே சிறுநீர், மலம் போகும் போது குழந்தை உடலை முறுக்குவதும், அழுதுகொண்டே போவதும் இயற்கைதான். வயிற்றில் போதுமான அளவு அழுத்தத்தை உருவாக்கி மலம், அல்லது சிறுநீர் கழிக்கும். படுத்த நிலையில் குழந்தை இருப்பதால், இந்த அழுத்தம் தேவையாகிறது.இதனை தவறாக மலச்சிக்கல், ஜீரணக்கோளாறு, சிறுநீர்போக கஷ்டப்படுகிறது என்று நினைக்க வேண்டாம்.\nே ஆரம்ப மூன்று மாதம் முதல் குழந்தை 10 தடவைகளுக்கு மேல் சிறிது சிறிதாக மலம் போவது நார்மல்தான். பால் குடித்தவுடனே மலம்போவதும் இயற்கைதான். இதனை வயிற்றுப்போக்கு என நினைக்கக் கூடாது.\nே சில குழந்தைகள் மூன்று நாட்களுக்கொருமுறை மலம் போகும். இதனை மலச்சிக்கல் என நினைத்து மருந்தோ, சோப்போ, குச்சியோ குழந்தையின் ஆசனவாயில் வைக்கக் கூடாது. காற்று நன்றாகப் பிரிந்து கொண்டும், தேவையான அளவு எடைகூடிக் கொண்டும் இருந்தால் கவலை வேண்டாம். இது, தாய்ப்பால் மட்டுமே பருகும் குழந்தைக்கு மட்டும்தான் பொருந்தும்.\nகுழந்தைக்கு தாய்ப்பால் போதுமான அளவு கிடைக்கிறதா என்பதை நீங்களே தெரிந்துகொள்ள சில கேள்விகள்.\nே ஒரு நாளைக்கு6தடவையாவது குழந்தை சிறுநீர் கழிக்கிறதா?\nே ஒரு நாளைக்கு2அல்லது3முறை குழந்தை மலம் கழிக்கிறதா?\nே ஒவ்வொரு மார்பிலும் குறைந்தது 15 நிமிடம் பால் குடிக்கிறதா?\nே போதுமான அளவு எடை கூடுகிறதா? அதாவது மாதத்துக்கு சுமார் 600 கிராம் வரை எடை கூடுகிறதா?\nமேற்கண்ட கேள்விகளுக்கு உங்கள் பதில் ``ஆம்'' என்றால் உங்கள் குழந்தைக்குத் தேவையான பால், உங்களிடம் சுரக்கிறது என்று அர்த்தம்.\nபச்சிளம் குழந்தைகளை பாட்டி வைத்தியத்தின் மூலம் எப்படி பராமரிப்பது என்று சொல்கிறார் மூத்த குடும்பத் தலைவி பி.பத்மா.\nே குழந்தைக்கு சாஃப்ட்டான காட்டன் துணிகளிலேயே டிரஸ் போடுங்கள்.\nே குழந்தைகளின் உடையில் ஷோல்டரில் முடிபோடுவது மாதிரியான உடைகளை மட்டுமே பார்த்து தேர்ந்தெடுங்கள். பட்டன், ஹுக் பொருத்திய உடைகளைத் தவிர்க்கவும்.\nே அடிக்கடி தொட்டிலிலேயே போட்டுவிடாமல், சாஃப்ட்டான படுக்கையில் படுக்க வைக்கவும். இரண்டு பக்கமும் அரவணைப்புக்கு தலையணை வைக்கவும்.\nே பால் சுரக்கவில்லை என்று சும்மா சொல்லிக் கொண்டிருக்காமல், குழந்தையை நன்றாகப் பால்குடிக்க வைத்து, மார்புக்காம்பை சப்ப வைத்தால், பால் தானே ஊற ஆரம்பித்து விடும்.\nே குழந்தை அயர்ந்து தூங்கும்போது கோடைக்காலம் என்றால் பாதங்களை மட்டும், குளிர்காலம் என்றால் உடல்முழுவதையும் சாஃப்ட்டான துணியால் போர்த்தி வையுங்கள்.\nே குழந்தை தூங்கும் அறை காற்றோட்டம் உள்ளதாகவும், வெளிச்சம் நிறைந்ததாகவும் இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள்.\nே குழந்தையின் அறையில் நுழைந்து விருந்தாளிகள் அடிக்கடி பார்ப்பது, அல்லது அந்த அறையில் நிறைய பொருள்களைக் குவித்து வைத்திருப்பது போன்றவற்றைத் தவிருங்கள். இதனால் குழந்தைக்கு ஏதாவது இன்ஃபெக்ஷன் வரலாம்.\nே குழந்தையின் அறையில் தொலைக்காட்சி, ரேடியோ சப்தங்கள் இருக்கக்கூடாது.\nே குழந்தைக்கு எந்த தொந்திரவுகளும் இல்லாத ஆழ்ந்த உறக்கம் மிகமிக முக்கியம்.\nே குழந்தைகளை பசிக்கு நிறைய நேரம் அழவிடாமல் உடனே பால் கொடுத்து விட வேண்டும். காரணம், நிறைய நேரம் அழுவதால் காற்றும் உள்ளே போய் குழந்தையின் வயிறு உப்பி விடும்.\nே குழந்தை சிறுநீர் கழித்து ஈரமாக்கியிருந்தால், உடனே துணியை மாற்றுங்கள்.\nே கடைகளில் விற்கும் குழந்தைகள் நாப்கினை வாங்க முடியாதவர்கள் மெல்லிய காட்டன் துணிகளை உபயோகிக்கலாம். துவைத்து அலசும் போது, டெட்டால் கலந்த நீரில் ஒருமுறை அலசவேண்டும்.\nேஅதிகாலையில் தேங்காய் எண்ணெயை உடல் முழுக்கத் தடவி, காலை இளம்வெயிலில் குழந்தைக்கு சன் பாத் எடுக்க வேண்டும். சூரிய ஒளியின் `விட்டமின் டி' குழந்தைக்கு முக்கியத்தேவையாகிறது. வெளிநாடுகளின் மருத்துவமனைகளில் `விட்டமின் டி' விளக்கு பயன்படுத்துகிறார்கள்.\nே தாய்ப்பால் மட்டுமே குழந்தைக்கு மிக சுத்தமான உணவு என்பதை உணருங்கள்.\nே குளிப்பாட்டியவுடன் கூடுமானவரை பவுடர் போடுவதைத் தவிர்ப்பது நல்லது. இது குழந்தையின் மூக்கில் நுழைந்தால் சுவாசத்தை பாதிக்கும். கவனமாகப் பவுடரைத் தொட்டுத் தடவத் தெரியாதவர்கள் பவுடரைத் தவிர்ப்பதே நல்லது.\nே குழந்தைகளுக்கான தடுப்பூசி முறைகளைத் தவறாமல் பின்பற்றுங்கள்.\nே உறவினர்கள் பரிசளிக்கும் நகைகளை, நீங்கள் கையில் வாங்கி வைத்துக் கொள்வது நல்லது. குழந்தைக்கு நகையே வேண்டாம்.\nே கடைகளில் விற்கும் கண் மைகளால் குழந்தைக்கு இன்ஃபெக்ஷன் ஏற்படலாம். எனவே குழந்தைக்கு மையிடுவதைத் தவிர்க்கவும்.\nே எப்போதும் தூக்கி வைத்துக் கொண்டே இருக்காதீர்கள்.\nே பால் கொடுத்தவுடன் தோளில் போட்டு தட்டிக்கொடுங்கள். ஏப்பம் வந்தபிறகு சிறிது நேரம் கழித்து படுக்கையில் போடுங்கள்.\nே குழந்தையின் அருகில் மற்ற சிறு குழந்தைகளை விடாதீர்கள்.\nே குளிப்பாட்டியவுடன் ஓமம் மற்றும் வெற்றிலையைத் தட்டி, வடிகட்டி அந்தச்சாறுடன் வசம்பைச் சுட்டு இழைத்து கலந்து அதோடு பூண்டையும் உரசி தாய்ப்பால் கலந்து குழந்தைக்கு அரை டீஸ்பூன் அளவு பாலாடையில் புகட்டினால், குழந்தையின் உடல்நலம் நன்றாக இருக்கும். அயர்ந்து தூங்கும்.\nே பெரிய மருத்துவமனைகளில் இளம் தாய்மார்களுக்கு குழந்தைகளை எப்படிப் பேண வேண்டும். தங்கள் உடல்நலனை எப்படிப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்றெல்லாம் டிரெயினிங் தருகிறார்கள். பெரிய மருத்துவமனைகளில் இதைத் தவறாமல் தாய்மார்கள் கற்றுக்கொள்ள வேண்டும்.\nே ஜாதிக்காய், மாசிக்காய், திப்பிலி, ஓமம், வெல்லம், கஸ்தூரி மஞ்சள், பிள்ளை மஞ்சள், சீரகம், மிளகு சேர்த்து அரைத்து உருண்டையாக்கி தாய்க்கு சாப்பிடக்கொடுத்தால், அல்லது இவைகளில் வற்றல்குழம்பு வைத்து சாப்பிட்டால், தாய்-சேய் நலம் கிடைக்கும்.\nபிறந்த குழந்தைக்கு நகை வேண்டாமே...\n``என் குழந்தைக்கு சிவப்புக்கல் மோதிரம் ஒன்றை உறவினர் ஆசையோடு அணிவித்தார். திடீரென்று மோதிரத்தைக் காணவில்லை. குழந்தைதான் விழுங்கிவிட்டதோ என்று ஸ்கேன் செய்து பார்த்தபோது, குழந்தையின் வயிற்றில் இல்லை. வேலைக்காரி மேல் சந்தேகப்படும்படி ஆகிவிட்டது. கடைசியில் மூன்று நாட்கள் கழித்து மோதிரம் குழந்தையின் கட்டிலின் அடியில் கிடைத்தது. நகைஅணிந்ததால் குழந்தைக்கும் ஸ்கேன் அது இதுவென்று அலைச்சல். நல்ல வேலைக்காரியையும் மனம்புண் படும்படி பேசிவிட்டோம். எனவே பச்சிளம் குழந்தைகளுக்கு நகைகள் அணிவித்து விடுவதைத் தவிர்க்கவும்.''\nஇன்றைய சூழலில் கணவனை இழந்த (பிரிந்த) பெண்ணோ, அல்லது மனைவியை இழந்த ஆணோ மறுமணம் செய்து கொள்வது என்பது இயல்பான விஷயமாகிவிட்டது. அவர்கள் குழந்தைகளோடு இருக்கும் பட்சத்தில் தன் புதுத் துணை சம்பந்தமாக குழந்தைகளிடம் மிக நாசூக்காக ஹாண்டில் செய்வதே குழந்தைகள் மனசில் பாதிப்பு ஏற்படுத்தாமல் இருக்கும். துணையிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வரும்போதோ நேரில் சந்திக்கும் போதோ அந்த சூழ்நிலையை ஹாண்டில் செய்ய இதோ சில நாசூக்கான வழிமுறைகள்!\nவீட்டில் சாதாரணமாக உங்கள் முன்னாள் துணையுடன் எப்படி நடந்து கொள்வீர்களோ அப்படியே மறுமணம் செய்துகொள்ளப் போகும் துணையுடனும் குழந்தையின் கண்முண்னே நடந்து கொள்ளுங்கள். முன்னாள் துணையுடன் தள்ளி நின்று பழகிய நீங்கள், புதுத் துணையுடன் தொட்டுப் பேசிப் பழகினால் இந்த வித்தியாசம் உங்கள் குழந்தையின் மனதை உறுத்தலாம்.\nபுதுத்துணையுடனான உங்கள் பர்சனல் நேரம் தவறியும் கூட உங்கள் குழந்தையின் பார்வையில் படாதவாறு கவனமாக நடந்து கொள்ளுங்கள்.\nகுழந்தையின் எதிரே முன்னாள் வாழ்க்கைத் துணையைப் பற்றி, புதுசாக வரப்போகும் துணையிடம் தரக்குறைவாகப் பேசாதீர்கள். உங்களுக்கு வேண்டுமானால் முன்னாள் வாழ்க்கைத் துணை முடிந்துபோன கதையாகவோ, கசப்பான நினைவாகவோ இருக்கலாம். ஆனால் உங்கள் குழந்தைக்கு அவர்தானே அம்மா(அப்பா)!\nநீங்கள் மறுமணம் செய்து கொள்ளப்போகும் நபரை அறிமுகப்படுத்தும் போது, உங்கள் குழந்தை அந்தப் புது நபரை ஏற்றுக் கொள்ள மறுத்து அழுதாலோ, அடம் பிடித்தாலோ கோபப்படாதீர்கள். குழந்தை அவரிடம் பேசித்தான் ஆகவேண்டும் என்று வற்புறுத்துவது குழந்தையின் மனசில் ஒரு விரிசலை ஏற்படுத்தி விடலாம். தவிர, உங்கள் புது துணைக்கும் குழந்தைக்கும் இடையேயான உறவில் ஒரு அழுத்தமான கீறல் விழுந்துவிடலாம்.\nமறுமணம் செய்து கொள்வதாக நீங்கள் ஏற்கெனவே தீர்மானித்து விட்டிருந்தால் அதன் பிறகு உங்கள் குழந்தையிடம் நீங்கள் மறுமணம் செய்து கொள்ள பர்மிஷன் கேட்காதீர்கள். உங்கள் விருப்பத்தை குழந்தை மறுத்து நீங்கள் அதை மீறி திருமணம் செய்தால், குழந்தை பாதுகாப்பில்லாத நிலையில் ஃபீல் செய்யலாம்!\nவாசகி ஒருவர் நம் குமுதம் சிநேகிதிக்கு உருக்கமாக ஒரு நீண்ட கடிதத்தை எழுதி இருந்தார். அதில் குருவிக்கூடு போல் இருந்த அவரது அழகான குடும்பம் சிதறிப் போனதற்கான காரணத்தை கண்ணீருடன் குறிப்பிட்டிருந்தார். அந்தக் கடிதத்தின் சுருக்கம் இதுதான். ``நான், என் கணவர், இரண்டு மகள்கள், எனது நாத்தனார், அவருடைய மகன்கள் என கூட்டுக்குடும்பமாக மிகமிக சந்தோஷமாக வாழ்ந்து வந்தோம். என் முதல் பெண்ணை என் நாத்தனாரின் மூத்த பையனுக்கே திருமணம் செய்து வைத்தோம்.\nஎன்னுடைய இரண்டாவது மகள் எங்கள் வீட்டின் குட்டி தேவதை. அழகு, அறிவு, குணம் என்று அவளுக்கு எதிலும் குறை வைக்கவில்லை ஆண்டவன். ஆனால் அவள் 17 வயது வரையிலும் பூப்பெய்தவே இல்லை. டாக்டரிடம் காண்பித்ததில், என் மகளுக்கு கருப்பை வளர்ச்சி அடையவில்லை என்று கூறிவிட்டார். இதற்குப் பிறகு நடந்ததுதான் கொடுமையிலும் கொடுமை. இந்த விஷயத்தைத் தெரிந்து கொண்ட என் கணவரின் நண்பரொருவர் (வயது 55), `உங்கள் பெண்ணை இனி யார் திருமணம் செய்து கொள்ளப் போகிறார்கள்? பேசாமல் எனக்குப் பண்ணிக் கொடுத்துடுங்களேன்' என்றார். இந்தக் கொடுமையைப் பார்க்க சகிக்காத என் நாத்தனார், அவருடைய இரண்டாவது மகனுக்கு என் மகளை திருமணம் செய்து வைத்து விட்டார். மகளின் திருமணக் கோலத்தைப் பார்த்த சந்தோஷத்தில் என் கணவரும் கண்ணை மூடிவிட்டார்.\nஎன் மருமகன் சும்மா சொல்லக்கூடாது. சாட்சாத் தெய்வக் குழந்தைங்க. என் மகளை, வயதுக்கு வராத குறையைக் கூட பெரிதுபடுத்தாமல் அவள் மீது பாசத்தைப் பொழிந்து வந்தான். இப்படியே 15 வருடங்கள் ஓடிவிட்டன.\nதன் மீது இப்படி பாசத்தைப் பொழியும் கணவனுக்கு தன்னால் ஒரு குழந்தையைப் பெற்றுத்தர முடியவில்லையே என்று அடிக்கடி புலம்பிக் கொண்டிருப்பாள் என் மகள். பாவி மகள் என்ன நினைத்தாளோ ஒரு நாள் மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்துக் கொண்டாள். தடுக்கப் போன மருமகனும் தீயில் சிக்கி இறந்துவிட்டார். கருகிப்போன என் தங்கங்களை நினைத்து வாழ்க்கை வெறுத்துப்போனது எனக்கு.\nஇவ்வளவு காலம் கழித்து இப்போது, என் பெரிய மகள் வீட்டில் வேலை செய்யும் ஒரு பெண்ணும் (வயது 28) இதுவரை பூப்பெய்தவில்லை என்று கேள்விப்பட்டேன். உடனே என் சின்ன மகள் ஞாபகம் வந்துவிட்டது! இப்போது என் மனதில் எழுந்திருக்கும் கேள்விக்கு நீங்கள்தான் பதில் சொல்ல வேண்டும்.\nஒரு பெண் பூப்பெய்தாமல் போவதற்கு என்ன காரணம்?\nஉருக்கமான இந்த வாசகியின் கேள்வியைச் சுமந்தபடி மகப்பேறு மருத்துவர் சாந்தியைச் சந்தித்தோம். பெண்கள் வயதுக்கு வர தாமதமாவதன் காரணத்தையும், சில பெண்கள் வயதுக்கு வராமலேயே போவதற்கான காரணத்தையும் விரிவாகவே பேசினார் டாக்டர் சாந்தி.\nயார் டாக்டரைப் பார்க்க வேண்டும்?\nபொதுவாக நம் நாட்டில் பெண்கள் 12 1/2 அல்லது பதின்மூன்று வயதில் பூப்பெய்தி விடுவார்கள். ஆனால் இந்தக் கால குழந்தைகள் அதிக ஊட்டச்சத்து, ஜங்க்ஃபுட் ஆகியவற்றால்9வயதில்கூட பூப்பெய்தி விடுகிறார்கள்.\n14 வயது வரை பெண்கள் பூப்பெய்தவில்லை என்றால் இதை ஒரு பிரச்னையாக எடுத்துக் கொள்ள அவசியம் இல்லை. அதிலும் 14 வயதில் அவள் வெளித் தோற்றம் அந்த வயதுக்கு ஏற்ப நார்மலாக இருந்தால் பயப்படத் தேவையில்லை. ஆனால் அந்த வயதில் வெறும் 7, 8 வயதுப் பெண்ணுக்குரிய உடல் வளர்ச்சியுடன் இருந்தால் கட்டாயம் டாக்டரைப் பார்க்க வேண்டும்.\nஎப்படியாயினும் 17 வயதுக்கு மேலேயும், ஒரு பெண் பூப்பெய்தவில்லை என்றால் சற்று சீரியஸாகத்தான் எடுத்துக் கொள்ள வேண்டும். 17 வயதில் அந்தப் பெண்ணுடைய வெளித்தோற்றம் நார்மலாக இருந்தாலும் கூட தாமதிக்காமல் உடனே டாக்டரைப் பார்த்துவிடுங்கள்.\nபூப்பெய்தாமல் போவதற்கு என்ன காரணம்?\nஒருவேளை பெண்களின் யூட்ரஸ், ஓவரீஸ் போன்ற இனப்பெருக்க உறுப்புகள் சரியான வளர்ச்சி அடையாமல் இருந்தால் பெண்கள் வயசுக்கு வராமல் போகலாம்! அல்லது வஜைனாவில் அடைப்பு இருந்தாலும் இப்படி நேரலாம். பெண்களின் பிட்யூட்டரி சுரப்பியில் கட்டி இருந்தாலும் பூப்பெய்துவதில் பிரச்னை வரும்.\nஓவரியில் கட்டி இருந்தாலும்கூட இந்தப் பிரச்னை வரும். மிக முக்கிய சுரப்பிகளான தைராய்டு, அட்ரினல் சுரப்பிகள் சரியாக வேலை செய்யாவிட்டாலும்கூட பெண்கள் பூப்பெய்த முடியாது. குழந்தை உருவாகும் போது, தாயின் உடலில் இருந்து 23X குரோமோசோம்களும், தந்தையின் உடலில் இருந்து 23X குரோமோ சோம்களும் சேர்ந்து ஒரு பெண்ணின் உடலில் 46XO என்ற எண்ணிக்கையில்தான் குரோமோசோம் இருக்க வேண்டும். ஆனால், இந்த குரோமோசோம்கள் ‘45xo (Intter Sex) என்ற எண்ணிக்கையில் குறைந்து இருந்தாலும் கூட ஒரு பெண்ணால் பூப்பெய்த முடியாது!\nஇதற்கு ட்ரீட்மெண்ட் உள்ளதா?\nஉள்ளது. இதுபோன்ற பிரச்னைகளோடு பெண்கள் வருவது சகஜம்தான். அதனால் பயப்படத் தேவையில்லை. ட்ரீட்மெண்ட் என்று பார்த்தால், ஒருவேளை வஜைனாவில் அடைப்பு இருந்து அதனால் வயதுக்கு வர இயலாமல் போயிருந்தால், அதைச் சரிசெய்ய நவீன மருத்துவத்தில் வழியிருக்கிறது! ஒருவேளை தைராய்டு குறைவாக சுரந்து, அதனால் வயதுக்கு வர முடியாமல் போனாலும் கூட மருத்துவத்தில், சரி செய்ய முடியும்.\nயூட்ரஸில் நீர்க் கட்டிகள் இருந்தாலும் ட்ரீட்மெண்ட் உண்டு.\nஆனால் ஒருவேளை அந்தப் பெண்ணுக்கு யூட்ரஸ் சரியாக வளர்ச்சி அடையவில்லை என்றால் மட்டும் அந்தப் பெண்ணுக்கு இது குறித்து ட்ரீட்மெண்ட் தருவது கடினம்!\nகடிதம் எழுதிய வாசகியின் மகளுக்கும் இந்தப் பிரச்னை இருந்ததால்தான் டாக்டர்களால் அவருக்கு ட்ரீட்மெண்ட் தர முடியவில்லை!\nஅதே போல, குரோமோசோம் எண்ணிக்கையில் மாறுபாடு இருந்தாலும் கூட மருத்துவத்தில் ட்ரீட்மெண்ட் இல்லை.\nவாசகி தன் கடிதத்தில் குறிப்பிட்டு இருந்த அந்த இன்னொரு பெண்ணின் ரிப்போர்ட்டை படித்துப் பார்த்ததில் அந்தப் பெண்ணுக்கு ஓவரியில் நீர்க்கட்டி இருப்பது தெரிகிறது. அதனால்தான் 28 வயதாகியும் இன்னும் அவர் வயதுக்கு வரவில்லை! இதற்கு மருத்துவத்தில் ட்ரீட்மெண்ட் உண்டு. கவலை வேண்டாம்.\n- ஆ. சாந்தி\nபொதுவாகக் குழந்தைகள் `பூ மாதிரி' என்போம். ``ஆனால் சமீபகாலமாக அந்தப் பூக்களில் முள் முளைத்தது போல முரட்டுத்தனமாக நடந்து கொள்கிறார்களே, ஏன்?'' என்று மனநல மருத்துவர் சுரேஷ்குமாரிடம் கேட்டோம்.\nஇன்றைய காலகட்டத்தில் குழந்தைகள் விஸ்தாரமாக ஓடி விளையாட இடங்கள் உள்ள வீடுகள் குறைந்துபோய், ஃப்ளாட்ஸ் மயமாகிவிட்டது. அதனால் குழந்தைகளின் ஓடியாடும் திறன் முடக்கப்பட்டு கம்ப்யூட்டர், வீடியோ கேம்ஸ் என்று மூழ்கிப் போகிறார்கள். ஓடியாடி விளையாடும் போது மன அழுத்தம் வராது. இதெல்லாம் இல்லாமல் மென்கருவி விளையாட்டால் ஒரு இலக்கு மட்டுமே கண்ணுக்குத் தெரிகிறது. போலீஸ், திருடன் கேம்ஸ் என்றால், திருடனை விரட்டிப்பிடிக்க வேண்டும். கராத்தே, குங்-பூ விளையாட்டென்றால், ஒருவர் மற்றவரைத் தாக்கி வெற்றி பெற்றால் மட்டுமே பாய்ண்டுகள் கிடைக்கும்.\nஇப்படிப்பட்ட கம்ப்யூட்டர் கேம்ஸை விளையாடும்போது, நம் பிள்ளைகளின் விளையாடும் திறன் கட்டுப்படுத்தப்படுகிறது. இப்படி வீட்டின் நான்கு சுவர்க்குள்ளேயே இருக்கும் போது மன அழுத்தம் அதிகமாகி மனசுக்குள் இருக்கும் மற்றொரு ஸ்விட்ச் ஆன் ஆகிறது. அப்போது பிடிவாத குணம் அதிகமாகிறது. நார்மலாகவே குழந்தைகளுக்கு பிடிவாத குணம் இருக்கத்தானே செய்கிறது. இவ்வளவு ஏன்...\nபள்ளிக்கூடங்களில் கூட நல்லா படிக்கும் பிள்ளைகளைத் தட்டிக் கொடுக்கும் ஆசிரியர்கள் படிப்பில் பின்தங்கியிருக்கும் குழந்தைகளை நல்லா படிக்கும் பிள்ளைகளோடு ஒப்பிட்டு மட்டம் தட்டுகிறார்கள். அப்போது குழந்தைகளிடம் தாழ்வு மனப்பான்மை உருவாகி, அது பொறாமையாக வளர்ந்து கடைசியில் மனசுக்குள் இயல்பாகவே வயலன்ஸ் வந்துவிடுகிறது.\nஸ்கூல் விட்டு வீடு வந்தால் டி.வி. டி.வி.டி தான். டி.வி.யை ஆன் செய்தவுடன் சீரியல் எனும் சித்ரவதை ஆரம்பமாகிறது. சித்ரவதையில் சிறுவர்களும் சிக்கிக் கொள்கிறார்கள். சீரியலிலும் சினிமாவிலும் ஹீரோவின் குடும்பம் வில்லனை ஏதோ ஒரு காரணத்திற்காக பழிவாங்கும் காட்சிகள் அமைகிறது. இது போன்று தொடர்ச்சியாகப் பார்க்கும் போது, குழந்தைகளிடம் முரட்டுத்தனம் அதிகமாகிறது.\nசீரியலும் சினிமாவும்தான் இப்படி என்றால், விளம்பரங்களும் இப்படித்தான் இருக்கின்றன. அது ஒரு வாஷிங் பவுடர் விளம்பரம்... ஸ்கூல் விட்டு வரும் ஒரு குழந்தை தவறி கீழே சேற்றில் விழுந்து விடுகிறது. உடனே அக்குழந்தையின் அண்ணன் அந்த சேற்றை அடித்து என் ``தங்கச்சிய அடிப்பியா? அடிப்பியா?'' என்று மிரட்டுவான். பிறகு ``சாரி சொல்லிடுச்சு'' என்பான் அக்குழந்தை அழுகையை நிறுத்தும். நமக்கு ஒருவர் தீங்கு செய்யும் போது தாக்கலாம், என்பதுடன் எதிர்க்கும் குணத்தையும் உருவாக்குகிறதே. வேடிக்கையாக இருந்தாலும், இந்த விஷயம் குழந்தைகளின் மனநிலையை இது எதிர் திசையில் திருப்பி விடும்.\nஎனவே குழந்தைகளுக்கு எது நல்லது? எது கெட்டது? என்று பெற்றோர்கள் உணர்த்த வேண்டும். எல்லா விஷயத்திலும் வயலண்ட் இருக்கக்கூடாது என்றும், எதிர்க்கும் எண்ணம் கூடாது என்றும் புரிய வைக்க வேண்டும்.\nே குழந்தை பிறந்த மூன்று மாதத்தில் தலை நிற்கிறதா,5மாதத்தில் குப்புத்துக் கொள்கிறதா, 6,7 மாதங்களில் தவழ்கிறதா, 10,12 மாதங்களில் நடக்க ஆரம்பிக்கிறதா என்றெல்லாம் தொடர்ந்து கண்காணித்துக் கொண்டிருக்க வேண்டும்.\nே மேற்சொன்னவைகள் சில நாட்கள் வேண்டுமானால் தள்ளிப் போகலாம், சில மாதங்கள் எல்லாம் தள்ளிப்போனால் உடனே குழந்தை நிபுணரிடம் ஆலோசனை கேளுங்கள்.\nே பிறந்த குழந்தைக்கு முதல் ஒரு வருடம் மிக மிக முக்கியமானது. ஹைஃபீவர், மஞ்சள் காமாலை, ஃபிட்ஸ் வராமல் பார்த்துக் கொள்ளுங்கள்.\nதேவிர்க்க முடியாமல் அப்படி ஹைஃபீவர், மஞ்சள் காமாலை, ஃபிட்ஸ் போன்றவை வந்துவிட்டால், அந்தக் குழந்தைகளை வெகு கவனமாகப் பார்த்துக் கொள்ளுங்கள்; அதன் வளர்ச்சியில் முழு அக்கறை காட்டுங்கள்.\nே உங்கள் குழந்தைக்கு ஒரு வயது ஆகிவிட்டதா? மென்மையாக பல்துலக்கும் வழக்கத்தை பழக்கப்படுத்துங்கள்.\nே குழந்தைகளின் அறிவு வளர்ச்சி, மனவளர்ச்சி இரண்டுமே அவர்கள் வயதிற்கேற்றவாறுதான் இருக்க வேண்டும். தேவையில்லாமல் ஒன்றிரண்டு வயதிலேயே அது, இது என்று சொல்லிக் கொடுத்துத் திணிக்காதீர்கள்.\nே இரண்டு வயதுவரை குழந்தைகள் எதையுமே தொட்டுத் தடவிப் பார்த்துத் தெரிந்து கொள்வதாக மட்டுமே இருக்கட்டும். தேவையில்லாமல் எழுத்துப் பயிற்சியெல்லாம் கொடுத்துவிடாதீர்கள்.\nே ப்ளே ஸ்கூலாக இருந்தாலும்கூட சுமார் இரண்டு அல்லது3மணி நேரம் மட்டுமே இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.\nே உங்கள் குழந்தைக்கு மூன்று வயது ஆகிவிட்டதா? குழந்தைகளிடம் நிறையப் பேசுங்கள். அப்போதுதான் காதுகொடுத்துக் கேட்கும் பழக்கம் குழந்தைக்கு வளரும். அதே போல குழந்தை எந்தப் பொருளைக் கேட்டாலும் உடனே வாங்கிக் கொடுத்துவிடாதீர்கள். சிறிது கால அவகாசத்தில் கொடுங்கள். அப்போதுதான் வாழ்க்கையில் எதுவுமே சுலபமாகக் கிடைக்கும்'' என்கிற எண்ணம் வராது.\nே குழந்தையிடமிருந்து நீங்கள் என்னென்ன நல்ல குணங்களை எதிர்பார்க்கிறீர்களோ, அந்தக் குணங்களுடன் நீங்கள் இருக்கிறீர்களா என்பதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள். அந்த குணநலன்களுக்கு குழந்தைகளுக்கு நீங்கள் முன்னோடியாக இருக்க வேண்டும் என்பதை உணருங்கள்.\nே டி.வி.யை ஓடவிட்டு குழந்தையை அதற்கு முன் உட்கார வைத்து விடாதீர்கள். ஓடியாடி விளையாடும் குழந்தைகள்தான் பின்னாளில் ஆரோக்கியத்தில் ஜொலிப்பார்கள்.\nே குழந்தைக்கு அடிக்கடி சளி பிடித்தால் கவனம் ப்ளீஸ்... இல்லையென்றால் இந்த சளி காதை பாதித்துவிடும்.\nே வாரம் ஒருமுறை குழந்தையின் நகத்தை வெட்டுங்கள். நகம் இருந்தால் அவர்கள் அதைக் கடித்துக் கொண்டே இருப்பார்கள்.\nே 11லிருந்து 14 வயதுவரை குழந்தைகளின் உடலில் அபார வளர்ச்சியிருக்கும் ஆனால் உடல்வளர்ச்சிக்கேற்ற மூளை முதிர்ச்சி (மெச்சூரிட்டி) இருக்காது. அதனால் ``ஆள்தான் வளர்ந்துருக்கியே தவிர...'' என்கிற ரீதியில் குழந்தையை திட்டிப் பேசாதீர்கள்.\nே 11லிருந்து 14 வரை ப்ரீ டீனேஜ் என்று சொல்வார்கள். எனவே அவர்களைப் பற்றி அவர்கள் அறிந்துகொள்வதே சிரமமாக இருக்கும். இதில் நீங்கள் வேறு, கண்ணாடி முன்னாடியே நிற்கிறியே... பாத்ரூமில் நுழைந்தால் சீக்கிரம் வரமாட்டேங்கிறியே... ரொம்ப நேரம் ஃபிரெண்ட்ஸ்கிட்ட என்ன பேச்சு?என்கிற குற்றச்சாட்டெல்லாம் வைத்து குழந்தைகளை சங்கடத்துக்குள்ளாகக்காதீர்கள். இந்த வயதில் நீங்கள் எதைச் சொன்னாலும் முரண்டு பிடித்துக் கொண்டே இருப்பார்கள்.\nே ப்ரீ டீனேஜில் எதையுமே செய்து பார்க்க வேண்டும், பார்த்ததெல்லாம் கற்றுக் கொள்ள வேண்டும் என்கிற பரபரப்பு, ஆவல் குழந்தைகளிடம் இருக்கும். அவர்களின் இந்த ஸ்பீடை கன்ட்ரோல் செய்து, வழிக்குக் கொண்டு வருவது உங்கள் கையில் இருக்கிறது.\nே செல்ஃப் கான்ஃபிடன்ஸ், கம்யூனிகேஷன் ஸ்கில்ஸ் போன்றவற்றில் உங்கள் குழந்தை பெஸ்ட்டாக வளர உதவியாக இருங்கள்.\nே வாசிக்கும் பழக்கம் போன்ற அற்புதமான விஷயம் வேறு எதுவும் இல்லை. மூளையின் செயல்திறனை அதிகப்படுத்தும் இந்த விஷயம் உங்கள் குழந்தைக்கு மிகவும் தேவை.\nே சில குழந்தைகள் பயந்த சுபாவத்துடனே இருப்பார்கள். அவர்களின் பயத்தைப் போக்கும் மிகப் பெரிய பொறுப்பு உங்களுக்கு இருக்கிறது.\nே நேர்மை, பொறுமை, பகிர்தல், பரந்த மனப்பான்மை போன்ற பண்புகளை பாப்பாவுக்குச் சொல்லிக் கொடுங்கள்.\nே கடைசியாக ஒன்று... உங்கள் குழந்தைக்கு நீங்கள் தரும் சரிவிகித உணவுதான் மேலே சொன்ன எல்லாவற்றையும் சரிப்படுத்த உதவும்!\nபுதுசாகப் பிறந்த குட்டிப் பாப்பாவை குடும்பத்தில் உள்ளவர்கள் எல்லாம் மாற்றி மாற்றிக் கொஞ்சும்போது, ஏற்கெனவே அந்தக் குடும்பத்தில் உள்ள மூத்த குழந்தை, ஏக்கத்தில் சவலைக் குழந்தையாவதும், குட்டிப்பாப்பாவிடம் கொஞ்சம் முரட்டுத் தனமாக நடந்து கொள்வதும் நமக்குத் தெரிந்த விஷயம்தான்! இதை மாற்றி மூத்த குழந்தை, புதுசாகப் பிறந்த பச்சிளம் பாப்பாவிடம் பாசமாக நடந்து கொள்ள வைப்பதெப்படி?\nே முதல் குழந்தையுடன் முதலில் இருந்ததைவிட கூடுதலாகவே நேரம் செலவழியுங்கள்.\nே ``உன் கூட விளையாடத்தான் அம்மா உனக்கு ஒரு புதுப்பாப்பா தரப்போறேன்'' என்று `தனக்காகத்தான் புதுப்பாப்பா வரப்போகிறது' என்று முதல் குழந்தையை நம்ப வையுங்கள்.\nேபிறக்கப் போகும் குழந்தைக்கு பெட் மற்றும் தேவையான பொருட்களை வாங்க வேண்டுமென்றால்,2மாதத்துக்கு முன்னபாகவே வாங்கி விடுங்கள். அல்லது முதல் குழந்தையே ரொம்பவும் சிறியதாக (2 -3 வயது) இருந்து, அதனுடைய பெட் மற்றும் குழந்தை சாமான்களைத்தான் 2வது குழந்தைக்கும் யூஸ் பண்ணப் போகிறீர்கள் என்றால், குழந்தை பிறப்பதற்கு இரண்டு மாதம் முன்பாகவே மெல்ல மெல்ல முதல் குழந்தையிடம் இருந்து இந்தப் பொருட்களை அப்புறப்படுத்திவிடுங்கள்! இதனால், தன்னுடைய பொருட்களையெல்லாம் குட்டிப்பாப்பாவுக்கு தந்துவிட்டார்கள் என்று முதல் குழந்தை நினைப்பதைத் தடுக்க முடியும்.\nே ``தம்பி பாப்பாவுக்கு உன் கையால பால் பாட்டில் எடுத்துக் கொடு பார்க்கலாம்'' என்பது போன்று குட்டிப் பாப்பாவுக்கான சிறுசிறு விஷயங்களில் முதல் குழந்தையையும் இணைத்துக் கொள்ளுங்கள்.\nே உங்கள் கண்காணிப்பில் முதல் குழந்தையின் மடியில் கொஞ்ச நேரம் குட்டிப் பாப்பாவை படுக்க வைப்பதாலும், இரண்டு பொடிசுக்கும் இடையில் ஒரு அட்டாச்மெண்ட்டை ஏற்படுத்த முடியும்.\nகுழந்தைகள் உலகத்தில் அம்மாவுக்கு எப்போதுமே தனி இடம் உண்டு. அப்படிப்பட்ட அம்மாவிடம் குழந்தைகள் என்னவெல்லாம் எதிர்பார்க்கிறார்கள் அதற்கு நீங்கள் என்ன செய்யவேண்டும்?\nே என்னதான் தலைபோகிற அவசரம் என்றாலும் குழந்தைகள் பேச்சுக்கு உங்கள் இரண்டு காதையும் கொடுங்கள்.\nே குழந்தைகளின் சின்னச் சின்ன ஆசைகளை முடிந்தவரை நிறைவேற்றப் பாருங்கள்.\nே அவர்களுடைய ஃப்ரெண்ட்ஸை நல்லபடியாக ட்ரீட் செய்யுங்கள்.\nே விளையாட்டாகக் கூட அவர்களின் ஃப்ரெண்ட்ஸ் எதிரே, அவர்களை `இவன் தத்தி' என்கிற ரேஞ்சில் மட்டம் தட்டிப் பேசாதீர்கள்.\nே உங்கள் பிள்ளை படிப்பில் வீக்காகவும், ஸ்போர்ட்ஸ் போன்ற ஏதோவொரு எக்ஸ்ட்ரா ஆக்ட்விட்டீஸில் ஸ்ட்ராங்காகவும் இருந்தால், அந்தத் துறையில் அவர்களை உற்சாகப்படுத்துங்கள்.\nே உங்கள் குழந்தை இருட்டுக்கு பயந்தாலும் சரி... கிளாஸ் டீச்சருக்கு பயந்தாலும் சரி... உடனே அவர்களின் பயத்தைத் தெளிய வையுங்கள்.\nே ``நீ தான்டா எனக்கு முக்கியம்'' எனபதை உங்கள் செயல்களின் மூலம் முடிந்த போதெல்லாம் உணர்த்துங்கள்.\nே அம்மாவிடம் எந்த பிரச்னையானாலும் பேசலாம். எல்லா விஷயங்களையும் ஷேர் பண்ணலாம் என்கிற நம்பிக்கையை எல்லாக் குழந்தைகளும் எதிர்பார்க்கிறார்கள்.\nே நம் அம்மா வேலை செய்யும் ஆபீஸை பார்க்க வேண்டுமென்பது நிறைய குழந்தைகளின் எதிர்பார்ப்பு.\nே குழந்தைகள் ஹோம்வொர்க் செய்யும்போது முடிந்தவரை அவர்களுடன் இருங்கள்.\nே எல்லாக் குழந்தைகளுக்குமே, அவர்களுடைய அம்மாதான் `மிஸ். இண்டியா', `மிஸ்.யூனிவர்ஸ்' எல்லாமே. அதனால் குழந்தைகள் படிக்கும் ஸ்கூலுக்குப் போகும் போது கவனத்துடன் `நீட்'டாக டிரஸ் செய்து கொண்டு போங்கள்.\nகுழந்தைகளுக்கான சினிமா மட்டும் அல்ல; குழந்தை களுக்கான எந்த விஷயமுமே இந்தியாவில் அவர்களுக்கு அளிக்கப்படுவதில்லை. ஒரு கால் நூற்றாண்டுக்கு முன்பு கூட குழந்தைகளுக்குக் கதைகள் சொல்ல தாத்தா பாட்டி என்று வீட்டில் ஆட்கள் இருந்தார்கள். இந்தக் கதைகள் அவர்களின் மன நலனையும், மன ஆரோக்கியத்தையும் வளர்த்தன.\nகுழந்தைகள் எதிர்கொள்ளும் மிகப் பெரிய பிரச்னை, காலம். அவர்களுக்குக் கிடைக்கும் அபரிமிதமான நேரத்தை என்ன செய்வது? இது குழந்தைகளுக்கும் புரிவதில்லை. துரதிர்ஷ்டவசமாக, குழந்தைகளை நல்ல முறையில் வளர்க்க வேண்டிய பொறுப்பில் உள்ள பெற்றோருக்கும் புரியவில்லை. ஆனால் நம்முடைய தாத்தா பாட்டிகளுக்குப் புரிந்திருந்தது. அதனால்தான் அப்போது அவர்கள் குழந்தைகளுக்கு ஏராளமான கதைகளைச் சொன்னார்கள்.\nஇப்போது காலமும் சூழலும் மாறிவிட்டன. தாத்தா பாட்டிகளை முதியோர் இல்லத்துக்கு அனுப்பிவிட்டோம். குழந்தைகளைக் காப்பகங்களுக்கு அனுப்பிவிட்டு தாய் தந்தை இருவருமே அலுவலகம் செல்கிறார்கள்.\nதங்கள் குழந்தைகளின் எதிர்கால முன்னேற்றத்துக்காக அதாவது, பணம் சம்பாதிப்பதற்காக - அக்குழந்தை தாயின் கருவில் இருக்கும் போதே நல்ல உயர்தர பள்ளிகளில் `முன்பதிவு' செய்துவிடும் பெற்றோர், அக்குழந்தைகளின் மனநலன் பற்றி அக்கறையே எடுத்துக் கொள்வதில்லை. இத்தகைய பெற்றோர்தான் அதே பள்ளிகளில் தங்கள் குழந்தைகள் `கல்யாணம்தான் கட்டிக் கிட்டு ஓடிப் போலாமா, இல்லே ஓடிப் போயி கல்யாணம்தான் கட்டிக்கலாமா?' என்று இலக்கிய நயம் பொருந்திய பாடலைப் பாடி, இடுப்பை `அசைத்து' தங்கள் குழந்தைகள் நடனம் ஆடும் போது கைதட்டி ரசிக்கிறார்கள்.\nகுழந்தைகள் நல்லபடியாக வளர்க்கப் பட்டால் மட்டுமே குற்றங்கள் இல்லாத சமூகத்தை நம்மால் உருவாக்க முடியும். அதற்கு இப்போதைய தமிழ் சினிமா எவ்விதத்திலும் உதவுவதாக இல்லை. வயது வந்தவர்கள் மட்டுமே பார்க்க வேண்டிய படங்களைத் தமிழ்நாட்டின் எல்லா விடுகளின் வரவேற்பறையிலும் தாத்தா பாட்டியிலிருந்து பேரன் பேத்தி வரை பார்த்துக் களிக்கிறார்கள்.\nசிம்புவும் நயன்தாராவும் ஏன் பிரிந்தார்கள், சிம்புவும் அவருடைய முன்னாள் காதலியும் கடைசியாகப் பிரிந்த போது என்ன பேசிக் கொண்டார்கள் என்பதைப் பதிவு செய்யப் பட்ட ஒலி நாடாவில் கேட்காத மாணவ மாணவியை நான் இன்னும் சந்திக்கவில்லை.\nஇதற்கெல்லாம் அடிப்படையான காரணம், குழந்தைகளுக்கான சினிமாவை நாம் உருவாக்கவில்லை. ஆனால் உலக மொழிகளில் நூற்றுக் கணக்கான எண்ணிக்கையில் குழந்தைகளுக்கான சினிமா உருவாக்கப் பட்டு வருகின்றன. அவற்றில் சில படங்களைப் பற்றிப் பார்ப்போம்.\nE.T (அல்லது எக்ஸ்ட்ரா டெரஸ்ட்ரியல்): புகழ் பெற்ற ஹாலிவுட் இயக்குனர் ஸ்டீவன் ஸ்பீல்பர்க் இயக்கிய படம். பூமியிலுள்ள தாவரங்கைளப் பற்றி ஆய்வு செய்வதற்காக வேற்றுக் கிரகத்தைச் சேர்ந்த சில உருவங்கள் பூமிக்கு வருகின்றன. அப்போது வேற்றுக் கிரகவாசி ஒன்று அவர்களிடமிருந்து பிரிந்து விடுகிறது.\nஇந்த வேற்றுக் கிரகவாசியை (ஈ.டி.) எலியட் என்ற சிறுவன் சந்திக்கிறான். நண்பர்களும் விளையாட்டும் இல்லாத அவனுக்கு ஈ.டி. நெருங்கிய நண்பனாகி விடுகிறது. ஈ.டி.யைத் தன் வீட்டுக்கு அழைத்து வந்து தன் தங்கைக்கும் அறிமுகப் படுத்தி வைக்கிறான். மாடியில் ஏதேதோ வினோதமான சத்தமெல்லாம் கேட்கிறதே என்று விசாரிக்கும் தன் அம்மாவிடமிருந்து ஈ.டி.யை மறைத்து வைக்கிறார்கள் இருவரும்.\nஏதோ ஒரு வேற்றுக் கிரக மொழி பேசும் ஈடிக்கு இருவரும் ஆங்கிலம் சொல்லித் தருகிறார்கள். இதற்கிடையில் ஈடி பற்றித் தெரிந்து கொண்ட அரசாங்கம் ஈடியைக் கைப்பற்ற முயற்சி செய்கிறது. அவர்களிடமிருந்து ஈடியைக் காப்பாற்றத் தன் சகோதரன் மைக்கேலுடன் திட்டமிடுகிறான் எலியட். ஈடியை அழைத்துக் கொண்டு சைக்கிளில் தப்புகிறது சிறுவர் கூட்டம்.\nஈடியை ஒரு காட்டுக்கு அழைத்துச் சென்றுவிட்டால் ஈடியின் சகாக்கள் விண்வெளிக் கப்பலில் வந்து அதை மீட்டுக் கொண்டு விடுவார்கள். போலீஸ், சிறுவர்களை நெருங்கி விடுகிறது. அப்போது பூலோகத்து மனிதர்களிடம் இல்லாத சக்தியைப் பயன்படுத்தி அப்படியே அந்தச் சிறுவர்களை அந்தரத்தில் பறக்கச் செய்து காட்டுக்குச் சென்று தன் கிரகத்துக்குத் தப்பிவிடுகிறது ஈடி.\nஒரு சிறிதும் அலுப்புத் தட்டாத, படு விறுவிறுப்பான ஈடி வெறும் சாகசக் கதையாக மட்டுமில்லாமல் எல்லா உயிர்களையும் நேசிக்க வேண்டும் என்ற அருமையான செய்தியையும் உள்ளடக்கி இருக்கிறது.\nவால்ட் டிஸ்னி நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட `தி லயன் கிங்' என்ற கார்ட்டூன் படம் உலக அளவில் சிறுவர்களால் ரசிக்கப்பட்டது. இசை மற்றும் பாடல்களுக்காகவும் சிலாகிக்கப்பட்ட இந்த படத்தின் மூலம், ஷேக்ஸ்பியர் எழுதிய ஹேம்லட் நாடகம். இதுவரை வந்த கார்ட்டூன் படங்களிலேயே மிக அதிக வசூலைக் கொடுத்திருக்கும் படம் இது.\nதசாவதாரத்தில் நாம் பார்த்த கேயாஸ் தியரி தான் இந்தப் படத்தின் அடிப்படை. இந்த உலகில் படைக்கப்பட்டுள்ள புழு பூச்சியிலிருந்து மான்கள் வரை எல்லாவற்றுக்குமே இந்தப் பிரபஞ்ச இயக்கத்தில் ஒரு பங்கு இருக்கிறது என்பது தான் கேயாஸ் தியரி. இதில் வரும் சிங்க அரசன் இதைத் தனதுமகனுக்குச் சொல்கிறான். உடனே மகன் கேட்கிறான்.\n``ஆனால் தந்தையே, நாம் அந்த மான்களை அடித்துத் தின்று விடுகிறோமே?''\n``ஆம்; மான்களை அடித்துத் தின்னும் நாம் வயதாகி இறந்து இந்த மண்ணோடு மண்ணாக மக்கிப் புற்களாக முளைக்கிறோம். அந்தப் புல்தான் மான்களின் உணவாகிறது.''\nவால்ட் டிஸ்னி நிறுவனத்தின் மற்றொரு சிறுவர் படம் `அலாவுதீன்.' நமக்கெல்லாம் தெரிந்த `அலாவுதீனும் அற்புத விளக்கும்' என்ற அரபிக் கதை. அக்ரபா என்ற நாட்டில் ஜாஸ்மின் என்ற இளவரசி வாழ்கிறாள். வெறும் பதவிக்காகவும், அந்தஸ்துக்காகவும் வேறோர் அரசனுக்கு மனைவியாக ஆவதை வெறுக்கும் ஜாஸ்மின், உண்மையான அன்பும், காதலும் உள்ளவனையே மணம் செய்து கொள்வதென்று முடிவு செய்கிறாள்.\nஅரண்மனையிலிருந்து தப்பி வெளியே வரும் ஜாஸ்மின் அலாவுதீனைச் சந்திக்கிறாள். அவர்கள் இருவரையும் கண்டுபிடித்து விடும் ஜாஃபர் என்ற அமைச்சன் அலாவுதீனைக் கைது செய்கிறான். அரசனைக் கொன்றுவிட்டு ஜாஸ்மினைத் திருமணம் செய்து இதற்கிடையில் அலாவுதீனுக்கு ஒரு அற்புத விளக்கும் கிடைக்கிறது. அதைத் தேய்க்கும் போது ஒரு பூதம் வருகிறது. அவனுடைய மூன்று ஆசைகளை நிறைவேற்றி வைப்பதாகக் கூறுகிறது பூதம். அப்படி நிறைவேற்றி வைத்தால் பூதத்துக்கு விடுதலை அளித்து விடுவதாக வாக்களிக்கிறான் அலாவுதீன்.\nமுதல் ஆசை, தான் ஒரு இளவரசனாகி ஜாஸ்மினை மணக்க வேண்டும். இளவரசனாகி சுல்தானின் அரண்மனைக்கு வரும்போது அவனைச் சிறை செய்து மலை உச்சியிலிருந்து கடலில் தள்ளி விடுகிறான் அமைச்சன். அப்போது அலாவுதீனின் கை ஏதேச்சையாக விளக்கில் பட்டு அவன் முன்னே தோன்றும் பூதம் அவனைக் காப்பாற்றி விடுகிறது.\nமூன்றாவது ஆசையையும் பூதம் நிறைவேற்றி வைக்கும்போது அலாவுதீன் தான் வாக்களித்தபடி பூதத்துக்கு விடுதலை அளிக்காமல் ஏமாற்றி விடுகிறான். அப்போது அந்த அற்புத விளக்கை அலாவுதீனிடமிருந்து திருடி விடும் ஜாஃபர் அதன் மூலம் பூதத்தைத் தனது அடிமையாக்கி சுல்தானையும் மற்றவர்களையும் சிறை வைக்கிறான்.\nகடைசியில் அலாவுதீன் வென்று சுல்தானாகி, பூதத்துக்கு விடுதலை அளிப்பதாக முடிகிறது கதை.\nA Little Princes: ஒரு அற்புதமான படம்: சாரா என்பவள் ஒரு பிரிட்டிஷ் ராணுவ அதிகாரியின் மகள். அவள் பிறக்கும் போதே அவளுடைய அம்மா இறந்துவிடுகிறார். சாரா இந்தியாவில் வளர்கிறாள். முதலாம் உலகப் போர் நடக்கும் கால கட்டம் அது. சாராவின் தந்தை போருக்குச் செல்வதால் சாரா நியூயார்க் நகரில் ஒரு குழந்தைகள் பள்ளியில் சேர்க்கப்படுகிறாள்.\nமிகவும் கெடுபிடியான அந்தப் பள்ளிக்கூடமும், ஹாஸ்டலும் சாராவுக்கு ஒரு சிறையைப் போல் இருக்கின்றன. இதற்கிடையில் அவள் தந்தை போரில் இறந்துவிட்டதாகத் தகவல் வருகிறது. குடும்பச் சொத்துக்கள் அனைத்தும் அரசாங்கத்தின் வசம் சென்றுவிடுவதால் சாரா இந்தியா திரும்பி ஒரு வேலைக்காரியாக வாழ நேர்கிறது.\nராமனின் கதையும் சீதையின் கதையும் அவளுக்கு மிகப் பெரிய உந்துசக்தியைக் கொடுக்கின்றன. எவ்வளவு பெரிய துன்பம் நேர்ந்தாலும் ஒரு பெண் தனது சுய கௌரவத்தையும், வாழ்வின் மீதான நம்பிக்கையையும் இழக்கக் கூடாது என்று அந்தக் கதையின் மூலம் தெரிந்து கொள்கிறாள் சாரா.\nஇந்தப் படத்தின் முக்கியமான அம்சம் என்னவென்றால், எல்லா வசதிகளும் நிறைந்த நியூயார்க் போன்ற ஒரு அமெரிக்க நகரிலுள்ள பள்ளியில் படித்தபோது கிடைக்காத சந்தோஷத்தை சாரா இந்தியாவில் ஒரு வேலைக்காரியாக வாழும்போது அனுபவிக்கிறாள் என்பதுதான்.\nஹாரி பாட்டரை எழுதிய ஜே.கே. ரௌலிங் உலகம் முழுவதும் பிரபலமான சிறுவர் எழுத்தாளராக இருக்கலாம். ஆனால் அவரைவிடத் தேர்ந்த ஒரு குழந்தை எழுத்தாளராகக் கருதப்படுபவர் ரொவால்ட் டால் (Roald Dahl). இவரது சிறுவர் படங்களைப் பார்ப்பதே ஒரு தனி அனுபவமாக இருக்கும். இவர் அளவுக்கு விறுவிறுப்பாகக் கதை சொல்பவர்களை என் அனுபவத்தில் நான் கண்டதில்லை. தமிழில் சுஜாதாவைச் சொல்லலாம்.\nடாலின் பல குழந்தைக் கதைகள் சினிமாவாக எடுக்கப்பட்டிருக்கின்றன. The Witches என்று ஒரு படம். சிறுவன் ல்யூக் விடுமுறையைக் கழிக்க ஊருக்குப் போகிறான். அங்கே சூன்யக்காரிகளைப் பற்றி எச்சரித்து வைக்கிறாள் அவனுடைய பாட்டி. சூன்யகாரிகளுக்குக் குழந்தைகளைப் பிடிக்காது. ஆனாலும் சூன்யக்காரிகளை எளிதில் அடையாளம் கண்டுபிடித்துவிடலாம். அவர்களுக்குக் கால்கள் தரையில் பாவாது.\nஊரைச் சுற்றிப் பார்க்கக் கிளம்புகிறான் ல்யூக். ஒரு இடத்தில் ஒரு பெரிய அரங்கத்தில் பலரும் கூடிப் பேசுவதைப் பார்க்கிறான். குழந்தைகள் மீதான கொடுமையை நிறுத்தக்கோரும் சங்கத்தினரின் கூட்டம் அது. ஆனால் கடைசியில்தான் தெரிகிறது அவர்கள் அத்தனை பேரும் சூன்யக்காரர்கள் என்று. சாக்லேட்டில் ஏதோ ஒரு பொடியைத் தடவி அதைக் குழந்தைகளிடம் கொடுத்து எல்லாக் குழந்தைகளையும் எலிகளாக மாற்றிவிடுவதுதான் அவர்களின் திட்டம்.\nஇதைத் தெரிந்துகொண்டு வெளியேறும்போது ல்யூக் அவர்களிடம் மாட்டிக்கொள்கிறான். ல்யூக் எலியாக மாறுகிறான். கடைசியில் அவன் எப்படி மீண்டும் சிறுவனாக மாறி, மற்ற சிறுவர்களையும் சூன்யக்காரர்களிடம் இருந்து தப்பிக்கச் செய்கிறான் என்பதே கதை.\nடாலின் கதையில் வந்த மற்றொரு சுவாசியமான படம், Willy Wonka and the Chocolate Factory வில்லி வோங்கா என்பவர் ஒரு புகழ்பெற்ற சாக்லேட் நிறுவன அதிபர். அவர் குழந்தைகளுக்காக ஒரு பரிசை அறிவிக்கிறார். ஏதாவது ஐந்து பாக்கெட்டுகளில் ஐந்து தங்க டிக்கெட்டுகள் வைக்கப்படும். அந்த டிக்கெட்டுகளைக் கிடைக்கப்பெற்ற அதிர்ஷ்டசாலிகளுக்கு வோங்கா சாக்லேட் தொழிற்சாலை சுற்றிக் காண்பிக்கப்படும். இதுவரை அந்தத் தொழிற்சாலையில் வெளியாட்கள் யாருமே நுழைந்ததில்லை என்பதே அதன் விசேஷம்.\nநான்கு டிக்கெட்டுகள் நான்கு பணக்காரச் சிறுவர்களுக்கும், கடைசி டிக்கெட் சார்லி என்ற ஏழைச் சிறுவனுக்கும் கிடைக்கிறது. ஆனால் அந்தத் தொழிற்சாலையைச் சுற்றிப் பார்க்க வேண்டுமானால் அதற்கு ஏகப்பட்ட கட்டுப்பாடுகளும், விதிமுறைகளும் உண்டு. உதாரணமாக, அங்கே இருக்கும் சாக்லேட்டுகளை எடுத்துத் தின்னக்கூடாது. இவ்விதிகளை அந்த நான்கு சிறுவர்களும் மீறி விடுகிறார்கள். சார்லி மட்டுமே பொறுமையாக இருக்கிறான்.\n``உண்மையான போட்டி என்பது அந்தத் தங்க டிக்கெட்டை வென்றது இல்லை; இப்போது தொழிற்சாலைக்குள் நடந்ததே அது. பொறுமை, நேர்மை, பேராசை கொள்ளாதிருத்தல் போன்ற நற்பண்புகளைக் கொண்ட ஒரு சிறுவனை எனது வாரிசாகத் தேடிக் கொண்டிருந்தேன்; நீதான் அவன்'' என்று கூறும் வோங்கா அந்தத் தொழிற்சாலையையே சார்லிக்குப் பரிசளிக்கிறார்.\nமேலே குறிப்பிடப்பட்டுள்ள சிறுவர் படங்களெல்லாம் குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்களும் பார்த்து இன்புறத்தக்கவை என்பது எனது சொந்த அனுபவம்\nPermalink pradeebala - November 25, 2008 - 20:08\nPermalink jayasri - November 25, 2008 - 20:34\nvery very nice and useful informations\nam havinga5 month old baby\nthis is vry nice\nthanks for sharing and sorry for not typing in tamil...my baby is crying\nPermalink jayalakshimi_s - November 25, 2008 - 22:39\nஹாய் பிரதீபாலா, எப்ப்டி இருகிஙக? உண்மையிலேயே உஙகளுக்க்கு ரொம்ப் பொறுமை அதிகமா?இவ்வள்வு அழகா டைப் பண்ணியிருகிஙக.எல்லோருக்கும் ரொம்ம்ப பயனுள்ள்தாக இருக்கிற்து பா. ரொம்பா ரொம்பா நன்றி பா\nPermalink santho - November 26, 2008 - 00:47\nபிரதீபாலா அசத்திடீங்க..எனக்கு படிச்சு முடிக்கவே 1/2 மணி நேரம் ஆச்சுபா..தான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகமும் என்று என்னைப்போன்ற படிக்க முடியாத ஆனால் அவசியம் படிக்க வேண்டிய கட்டுரைய தொகுத்து கொடுத்திருக்கீங்க..வாழ்த்துக்கள்..நன்றிகள்..\nPermalink arunkavi - November 26, 2008 - 01:43\nஉண்மையில் ரொம்ப யூஸ் புல்லாக இருக்கிறது..\nPermalink pradeebala - November 26, 2008 - 02:08\nஹாய் ஜெயஸ்ரீ நலமா?ரொம்ப சந்தோசம் உங்களுக்கு இந்த கட்டுரை பயனுள்ளதாக இருந்தது அறிந்து மகிழ்ச்சி.உங்க குழந்தை பெயர் என்ன?\nஹாய் ஜெயா நான் நலமே. நீங்க?எனக்கும் பொறுமைக்கும் ரொம்ப தூரம்ப்பா.இது நான் காப்பி பன்னி பேஸ்ட் பன்னியது(அச்சச்சோ உண்மைய சொல்லிட்டனே நீங்க நான் ஏதோ ரொம்ப கஷ்டப்பட்டு டைப் பன்னியதாக நினைத்திருப்பீர்கள்)உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தது அறிந்து மகிழ்ச்சி.\nஹாய் சந்தோ நலமா?நீங்க சொன்னதை போல எண்ணி தான் இதை பதிவு செய்தேன்.நீங்க பயன் பெற்றால் எனக்கு மகிழ்ச்சியே.\nஹாய் அருண்கவி நலமா?உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தது அறிந்து மகிழ்ச்சி கொண்டேன்\nPermalink jayasri - November 26, 2008 - 02:23\nஎன் குழந்தையின் பெயர் ஸ்ரீஹிதா...நாங்கள் பாஸ்டனில்,குவின்சியில் வசிக்கின்றோம்...நீங்கள் எங்கு வசிக்கின்றீர்கள்\nPermalink இலா - November 26, 2008 - 02:53\nகுயின்ஸியில் எங்க இருக்கீங்க.. எந்த அபார்ட்மென்ட்.. நான் நிப்பான்செட் லேண்டிங் அபார்ட்மென்டில் இருக்கிறேன். நார்த் குயின்சி டிரெயின் ஸ்டேஷன்க்கு பக்கத்தில்...\nPermalink thalika - November 26, 2008 - 09:57\nஇன்னும் முழுக்க படிக்கலை ஆனால் ஆச்சரியத்தில் பதில் போட வந்து விட்டேன் இதை எத்தனை நேரமா டைப் பன்னினீங்க??உபயோகமா இருக்கும்னு மறக்காம அலுப்பில்லாம டைப் பன்னின பாருங்க..அரும...நன்றி தீப்ஸ்\nPermalink இலா - November 26, 2008 - 22:14\nப்ரதீபா!!! சூப்பர் போங்க.. நேத்தே போடனும்ன்னு நினச்சேன் முழுதும் படித்ததும் சொல்கிறேன்.. அருமை அருமை...
“மூன்று முடிச்சு” பாணியில் நண்பரால் நடுக்கடலில் தள்ளி விடப்பட்ட மீனவர்... ரோந்து வீரர்கள் மீட்டனர்! | Navy rescues drowning fisherman off Nagapattinam coast - Tamil Oneindia\n| Published: Monday, September 26, 2016, 9:59 [IST]\nசென்னை: மீன் பிடிக்கச் சென்ற போது ஏற்பட்ட மோதலால், நண்பரால் நடுக்கடலில் தள்ளிவிடப்பட்ட மீனவரை கடற்படை ரோந்து வீரர்கள் பத்திரமாக மீட்டனர்.\nநாகை நம்பியார் நகரை சேர்ந்த மீனவர் சிந்துராஜ் (64). இவர் தனது நண்பருடன் மீன் பிடிப்பதற்காக ஒரே படகில் கடலுக்கு சென்றுள்ளார். நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக சிந்துராஜுக்கும் அவரது நண்பருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.\nஇதில் ஆத்திரமடைந்த அவரது நண்பர் சிந்துராஜை படகில் இருந்து கடலில் தள்ளி விட்டுள்ளார். பின்னர் சிந்துராஜ் கடலில் தத்தளிப்பதைக் கண்டும் மனம் இறங்காமல் தனது படகை எடுத்துக் கொண்டு வேறுபக்கம் சென்றுள்ளார்.\nஇதனால் தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டிருந்துள்ளார் சிந்துராஜ. இதனை நாகை கடல் பகுதியில் இருந்து3கி.மீ தூரத்தில் கடற்படை அதிகாரி எஸ்.மாண்டல் தலைமையில் சென்ற கடற்படை ரோந்து வீரர்கள் கண்டனர்.\nஉடனடியாக சிந்துராஜ் அருகில் சென்ற வீரர்கள், உயிர் காக்கும் மிதவையை வீசி சிந்துராஜை பத்திரமாக மீட்டனர். நீரில் தத்தளித்த படியே இருந்ததால், பசியாலும், அதிக களைப்பாலும் சோர்வாக இருந்த சிந்துராஜுக்கு அவர்கள் குடிநீரும், பிஸ்கெட்டும் கொடுத்தனர்.\nபின்னர் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், நடந்த சம்பவம் தெரிய வந்துள்ளது. அதனைத் தொடர்ந்து சிந்துராஜ் கடலோர போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.\nகடற்படை ரோந்து வீரர்கள் உடனடியாக செயல்பட்ட காரணத்தால், கடலில் மூழ்கி கொண்டிருந்த சிந்துராஜ் காப்பாற்றப்பட்டு, பத்திரமாக கரை திரும்பினார்.\nஇந்தத் தகவல் இந்திய பாதுகாப்புத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டு உள்ளது.\nindian navy fishermen nagapattinam fight நாகப்பட்டினம் மீனவர்\nIndian Navy has rescuedadrowning fisherman off the Nagapattinam coast, after he was allegedly pushed into the water byacolleague followingascuffle.\nStory first published: Monday, September 26, 2016, 9:59 [IST]
anmegam | www.patrikai.com | Page 3\nதிருப்பதி: புரட்டாசி பிரமோற்சவம் முதல்நாள்..\nதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரமோற்சவம் இன்று தொடங்கியது. இன்று முதல் 11–ந்தேதி வரை9நாட்கள் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடைபெறும். திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு முதல் நாளான இன்று சேனாதிபதி...\nநிறைவான வாழ்வு தரும் ஸ்ரீ புவனேஸ்வரி மந்திரம்!\nசெல்வமும் புகழும் பெற ஸ்ரீ புவனேஸ்வரி மந்திரம் சொல்லி வழிபடுங்கள். எவ்வளவு மோசமான தரித்திரனும் புவனேஸ்வரியை வழிபட செல்வமும் உயர்வும் பெறுவான் என்பது ஐதிகம். இந்து சம்பிரதாயத்தில் ஸ்ரீ புவனேஸ்வரி அன்னை மிக உயர்ந்த தெய்வமாகப் போற்றப்படுகிறாள்....\nவாழ்க்கையை வளமாக்கும் விநாயகர் சதுர்த்தி பூஜை நேரம்! விநாயகர் சதுர்த்தி அன்று விநாயகப் பெருமானை வழிபட உகந்த நேரம். காலை 9.00 – 10.00 செவ்வாய் ஓரை அல்லது 12.00 – 1.00 புதன் ஓரை அல்லது...\nகாங்கேயம்: சிவன்மலை ஆண்டவர் உத்தரவு பெட்டியில், பூ மாலை வைத்து பூஜை செய்யப்பட்டுள்ளது. இதனால், திருமண கனவோடு காத்திருக்கும் காளையருக்கும், கன்னியருக்கும் விரைவில் திருமணம் கைக்கூடும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டம், காங்கேயம்...
பொதுமக்களின் பொருளாதாரப் பாதிப்புகளை மட்டுப்படுத்த அரசு என்ன செய்ய வேண்டும்? | economical devastation of covid 19 virus - hindutamil.in\nPublished : 23 Mar 2020 07:19 am\nUpdated : 23 Mar 2020 07:19 am\nLast Updated : 23 Mar 2020 07:19 AM\nபொதுமக்களின் பொருளாதாரப் பாதிப்புகளை மட்டுப்படுத்த அரசு என்ன செய்ய வேண்டும்?\nநின்றுபோவதற்கான அறிகுறியோடு வணிகத் துறையின் சக்கரங்களிலிருந்து கிரீச்சிடும் சப்தம் எழுந்துகொண்டிருப்பதைக் கேட்டுக்கொண்டிருக்கிறீர்கள். கரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவதற்காக அரசு எடுத்துவரும் கடுமையான நடவடிக்கைகள், அதன் தொடக்கமாக இருக்கிறது. பிரதமர் மோடி ஆற்றிய உரையில், கொள்ளைநோயின் பொருளாதாரப் பாதிப்புகளை மதிப்பிடவும், நோய்த்தடுப்பு நடவடிக்கைகளைப் பரிந்துரைக்கவும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் பணிக் குழு தொடங்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்திருந்தார். நிதியமைச்சர் தலைமையிலான பணிக் குழுவும், தமிழ்நாடு அரசும் தன்னுடைய நடவடிக்கைகளில் எடுத்துக்கொள்வதற்காகச் சில பரிந்துரைகள் இங்கே அளிக்கப்படுகின்றன.\nவாடகை டாக்ஸி ஓட்டுநர்கள், உணவக உபசாரகர்கள், பேரங்காடி ஊழியர்கள், வீட்டு வேலை பார்ப்பவர்கள், ஊர் ஊராகச் சுற்றும் சில்லறை வியாபாரிகள் ஆகியோரும், மற்ற வழக்கமான பணிகளைச் செய்துவரும் ஊழியர்களும் ஏற்கெனவே வேலையும் வருமானமும் இல்லாமல் இருக்கிறார்கள் அல்லது விரைவில் அந்த நிலைக்கு ஆளாகப்போகிறார்கள்.\nமிகவும் பாதிப்புக்கு ஆளாகியிருக்கும் இந்தப் பிரிவினருக்குக் குறிப்பிட்ட தொகையைப் பரிமாற்றம் செய்வது மோசமான கருத்தாக இருக்க முடியாது. பிரதம மந்திரியின் ‘ஜன் தன் யோஜனா’ திட்டத்தின் கீழ் உள்ள 33 கோடி கணக்குகளையும் இதற்காகப் பயன்படுத்திக்கொள்ள முடியும். பண உதவி செய்வதற்காகப் பயனாளிகளை அடையாளம் காண்பதன் வாயிலாக, பெரும்பாலான மாநிலங்களில் பொது விநியோகத் திட்டத்தையும் திறன்பட செயல்படுத்த முடியும். தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்டத்தின் இணையதள விவரங்களின்படி, நாடு முழுவதும் 25 கோடியே 53 லட்சம் குடும்ப அட்டைகள் உள்ளன. அனைத்து குடும்பங்களையுமே வறுமைக் கோட்டுக்குக் கீழே இருப்பதாகக் கருதி, குறைந்தபட்சம் ரூ.1,000 அளித்தால் மத்திய அரசுக்கு ஏற்படக்கூடிய செலவினம் ரூ.23,500 கோடி. மிகவும் அத்தியாவசியமான தொகையாக இருந்தாலுமேகூட இதற்கான நிதித் தேவை அதிகமாக இருக்கிறது. இவ்வகையில், நிதி ஒதுக்குவதற்கான வாய்ப்புகளைப் பற்றி நாம் பரிசீலிக்க வேண்டும்.\nகடந்த மாதத்தில், ஹாங்காங் தனது நாட்டில் நிரந்தரமாகக் குடியிருக்கும் ஒவ்வொருவருக்கும் அவர்களை ஆதரிக்கும் வகையில் 10,000 ஹாங்காங் டாலர்கள் கொடுக்கப்படும் என்று அறிவித்தது. அமெரிக்காவும் தனது குடிமக்களுக்கு 250 அமெரிக்க டாலர்கள் வழங்குவது குறித்து ஆலோசித்துவருகிறது.\nவிமானப் போக்குவரத்து, உணவகங்கள், தங்கும் விடுதிகள், சுற்றுலா போன்ற சேவைத் தொழில் துறைகள் சிரமங்களை உணரத் தொடங்கியுள்ளன; சிறிது காலத்தில் இந்தச் சிரமங்கள் உற்பத்தித் தொழில் துறைக்கும் பரவும். சேவைத் தொழில் துறையின் உடனடிப் பிரச்சினை என்பது அதற்குப் பணம் கிடைக்கும் வாய்ப்புகள் அடைபட்டுவிட்டன என்பதுதான். வருமானம், லாபம் குறித்த பிரச்சினைகளை எல்லாம் பின்னர் விவாதித்துக்கொள்ளலாம். அத்துறையின் உடனடிப் பிரச்சினை பணப்புழக்கம் மட்டுமே. இத்துறையில் பணப் பரிமாற்றப் பதிவேடுகள் புரட்டப்படுவது நின்றுவிட்டால் ஊதியங்கள், குத்தகைத் தவணைகள், கடன் திரும்பச் செலுத்துவது என்று தொடர்புடைய அனைத்துச் செலவுகளுமே சிக்கலாகிவிடும்.\nஇந்தத் தொழில்களை மீட்டெடுக்கும் வகையில் நலிவுகாலக் கடன்களை வழங்கி வங்கிகள் எதுவும் ஆதரிக்காது என்பது தெரிந்த விஷயம்தான். மேற்குலகில் நோய்ப் பாதிப்புக்கு ஆளாகியிருக்கும் பெரும்பாலான நாடுகள் இவ்விஷயத்தில் என்ன செய்திருக்கின்றன என்பதையும் அரசு கருத்தில் கொள்ள வேண்டும். மேற்கு நாடுகள் பாதிக்கப்பட்ட தொழில்களுக்குக் கடன் உத்தரவாதங்களை அளித்துள்ளன.\nபிரிட்டன் 330 பில்லியன் பவுண்ட் கடன் மற்றும் உத்தரவாதங்களை அளிப்பதாக உறுதியளித்துள்ளது. பிரான்ஸ், ஸ்பெயின் நாடுகள் முறையே 300 பில்லியன் யூரோ, 100 பில்லியன் யூரோ நிதியுதவி செய்யப்படும் என்று அறிவித்துள்ளன.\nஇந்நாடுகள் பெருமளவிலான தொகைக்கு உத்தரவாதம் அளிப்பதற்குக் காரணம், இத்தொழில்களில் பணம் புழங்குவது குறையக் கூடாது என்பதற்கு முக்கியத்துவம் கொடுப்பதுதான். இத்தகைய சிக்கலான நேரங்களில் பணப்புழக்கம் குறைந்துவிடாத வகையில் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு உண்டு. அதன் தொடக்கமாக, அன்றாடத் தேவைகளுக்கான கடன்களுக்கு உத்தரவாதம் அளிப்பதோடு, அக்கடன்களைப் பெற்றவர்களிடமிருந்து அவர்களது நிறுவனங்களில் பணியாற்றுபவர்களின் பணிப் பாதுகாப்பையும் உறுதிசெய்ய வேண்டும்.\nஅடமானக் கடன்களுக்கு விடுமுறை\nமாதாந்திரக் கடன் தவணைகளுக்கு விடுமுறையை அறிவிப்பது வேலையிழப்பு, ஊதிய வெட்டு அல்லது வருமானக் குறைவை எதிர்கொண்டிருக்கும் தொழில் துறையைச் சேர்ந்தவர்களுக்கு மிகப் பெரும் ஆறுதல் அளிக்கக் கூடியதாக இருக்கும். பாதிப்புக்கு ஆளாகியுள்ள தொழில்கள் மற்றும் அவற்றில் பணிபுரிபவர்களுக்கு மூன்று மாத அடமானக் கடன் விடுமுறையை அளிக்குமாறு கடன் அளித்த நிறுவனங்களுக்கு அரசு உத்தரவிட வேண்டும்.\nஇந்தத் தொழில் துறைகள் சார்ந்த சொத்துகளை மதிப்பிடும்போது, வங்கிகள் துணைக் கடன்களைத் தவிர்க்கும் வகையில் இந்திய ரிசர்வ் வங்கி வழிகாட்டும் நெறிமுறைகளை உருவாக்க வேண்டும். இந்தச் சிக்கல் முடிவுக்கு வரும் வரையிலான தற்காலிகமான ஏற்பாடுதான் இது என்பதையும் தெளிவாகச் சொல்ல வேண்டும்.\nஅப்படி நடந்துவிடக் கூடாது என்றாலும், ஒருவேளை மேலும் சில வாரங்களுக்கு தொழில் நடவடிக்கைகள் நிறுத்தப்படும்பட்சத்தில், தொழில் துறையினருக்குத் தற்காலிக வரிச் சலுகைகளை அளிப்பதைப் பற்றியும் அரசு கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். சற்றும் எதிர்பாராத வகையில் வருமானம் குறைந்து, பணப்புழக்கம் பூஜ்ஜியமாகிவிட்ட நிலையை நாம் பார்த்துக்கொண்டிருக்கிறோம். இந்நிலையில், அரசு தன்னுடைய கடன்களை உடனடியாகத் திருப்பியளிப்பது, முன்கூட்டியே பெறப்பட்ட வரியில் மிச்சமிருப்பதைத் தாமதமின்றி திருப்பி வழங்குவது, ஏற்கெனவே திட்டமிட்டுள்ள நேரடி பணப் பயன்களை விரைந்து அளிப்பது என்பன போன்ற பயனுள்ள திட்டங்களையும் செயல்படுத்தலாம். தேவையென்றால், பாதிக்கப்பட்ட தொழில் துறையினர் சட்டப்படியாகத் தாங்கள் செலுத்த வேண்டிய வருங்கால வைப்பு நிதி, தொழிலாளர் சேம நல நிதி ஆகியவற்றின் நிலுவைகளைத் தாமதமாகக் கட்டுவதற்கும் தற்காலிகமாக அனுமதிக்கலாம்.\nநிதிக்கு என்ன செய்வது?\nகடினமானதுதான் என்றாலும் சாத்தியமான வழிமுறைகள் நிறைய இருக்கின்றன. விரிவடைந்துகொண்டிருக்கும் இந்தப் பொருளாதாரத் துயரத்தைத் தேசிய அளவில் எதிர்கொள்ளும் வகையில் மத்திய மாநில அரசுகளின் நிதியாதாரங்களை ஒருங்கிணைத்து மேம்படுத்த வேண்டும். உதாரணத்துக்கு, கேரள அரசு ஏற்கெனவே ரூ.20,000 கோடிக்குத் திட்டங்களை அறிவித்துள்ளது. மற்ற மாநிலங்களும் அதைப் பின்பற்றக்கூடும். மாநிலங்கள் தங்களது நிதியாதாரங்களைத் தாங்களே பயன்படுத்திக்கொள்ள மத்திய அரசு ஊக்குவிப்பது சரியானதாக இருக்கும்.\nஅடுத்ததாக, நிதியுதவித் திட்டங்களை வகுக்கும்போது அதில் தனியாரையும் அரசு இணைத்துக்கொள்ள வேண்டும். தனியார்த் துறையில் மிகவும் நிபுணத்துவம் வாய்ந்தவர்களும் மதிநுட்பம் கொண்டவர்களும் இருக்கிறார்கள், புதுமையான திட்டங்களை வகுக்க அவர்களைப் பயன்படுத்திக்கொள்ள முடியும்.\nமிக முக்கியமான விஷயம், ஒரு மாதத்துக்கு முன்பு போடப்பட்ட பட்ஜெட் அறிக்கையின் கணக்குகளை கரோனா வைரஸ் தின்று தீர்த்துவிட்டது. அந்த எண்கள் இப்போது நடைமுறைக்குத் தொடர்பில்லாதவை. எதிர்பார்க்கப்பட்ட வரி வருமானங்கள் மட்டுமல்ல; பொதுத் துறைப் பங்குகளை விற்பதன் மூலம் ரூ.2.10 லட்சம் கோடி கிடைக்கும் என்ற கணக்கும் இப்போது சாத்தியமல்ல. ‘பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன்’ நிறுவனமும், ‘ஏர் இந்தியா’ நிறுவனமும் எதிர்வரும் காலத்தில் மீண்டும் அரசுத் துறை நிறுவனங்களாகிவிடும் என்றே தோன்றுகிறது. இந்தப் பின்னணியில், தொழில் துறையை ஊக்குவிக்கும் திட்டங்களுக்கான நிதியை உருவாக்குவது சாத்தியமானது அல்ல. நிதிநிலை அறிக்கையைத் தாண்டியும் உதவிகள் தேவைப்படும்; அப்போது அரசுக் கடன் பத்திரங்களை வெளியிடும் யோசனை உருவாகும்.\nமிகவும் சரியான முறையில் கட்டமைக்கப்பட்டு, வரிச் சலுகை அளிக்கும் வகையில் கடன் பத்திரங்களை வெளியிடுவது உள்நாட்டுச் சேமிப்புகளைத் திரட்ட உதவும். வெளிநாடுகளில் வசிக்கும் பெருந்திரளான இந்தியர்களும் கடன் பத்திரங்களை வாங்குவார்கள். 1998-ல் பொக்ரான் நிகழ்வுக்குப் பிறகான ‘ரீசர்ஜன்ட் இந்தியா’ கடன் பத்திரங்களின் அனுபவங்கள் நினைவில் வருகிறதா? பாரத ரிசர்வ் வங்கி, வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களிடமிருந்து4பில்லியன் அமெரிக்க டாலர்களைத் திரட்டியது. இந்தியாவுக்கு உதவக் கூடாது என்று விதிக்கப்பட்டிருந்த தடைகளையும் தாண்டி அது நடந்தது. அதேபோல இப்போதும் ஏன் நடக்காது? அனைத்துக்கும் மேலாக, 1998-ல் விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடைகளுக்குப் பிறகு நாடு முற்றிலும் எதிர்பார்க்காத ஒரு சூழல் இது.\nCovid 19 virusEconomical devastationபொதுமக்களின் பொருளாதாரப் பாதிப்புஅரசு என்ன செய்ய வேண்டும்\nகரோனா வைரஸ் அச்சத்தினால் முதியவரை சேர்க்க மறுத்த தனியார் மருத்துவமனை: மும்பையில் புகார்
மீண்டும் அரசியலில் குதித்தார் நாஞ்சில் சம்பத்..! | Ottrancheithi\n/அரசியல் படமான எல்கேஜிஅரசியல்வாதி வேடத்தில் நாஞ்சில் சம்பத்ஆர்ஜே பாலாஜிநாஞ்சில் சம்பத்ப்ரியா ஆனந்த்\nமீண்டும் அரசியலில் குதித்தார் நாஞ்சில் சம்பத்..!\nஆர்ஜே பாலாஜி புதிதாக ‘எல்கேஜி’ எனும் அரசியல் படத்தில் ஹீரோவாக நடிக்கவிருக்கிறார். இந்த படத்திற்காகத்தான் கடந்த சில நாட்களாக சுவர் விளம்பரம் மற்றும் கட்சி கொடி ஆகியவை வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.\nஆர்ஜே பாலாஜி ஐசரி கணேஷ் தயாரிக்கும் அரசியல் படம் ஒன்றில் நடிக்கவுள்ளார். அந்தப் படத்தின் டைட்டில் ‘LKG’. இந்தப் படத்தின் நாயகி குறித்த அறிவிப்பை ஆர்ஜே பாலாஜி வெளியிட்டார். நடிகை ப்ரியா ஆனந்த் இப்படத்தின் ஹீரோயினாக நடிக்கிறார்.\nவெளியான படத்தின் புகைப்படத்தில் ஆர்ஜே பாலாஜி அணிந்திருக்கும் மோதிரத்தில் நாஞ்சில் சம்பத் படம் உள்ளது. இதனையடுத்து, படத்தில் நாஞ்சில் சம்பத் நடிப்பதை உறுதி செய்துள்ளார் ஆர்ஜே பாலாஜி.\nஅரசியலில் இருந்து சிறிது காலம் ஒதுங்கியிருந்த நாஞ்சில் சம்பத் ஆர்ஜே பாலாஜியுடன் இணைந்து ஒரு புதிய பயணத்தைத் தொடங்கவுள்ளதாக சமீபத்தில் அறிவித்திருந்தார். நாஞ்சில் சம்பத் ‘எல்கேஜி’ படத்தில் ஆர்ஜே பாலாஜிக்கு அப்பாவாக நடித்திருப்பதாக ஆர்ஜே பாலாஜி தெரிவித்துள்ளார்.\nமதிமுக-வில் முக்கியப் பொறுப்பில் இருந்துவந்த பேச்சாளர் நாஞ்சில் சம்பத் பிறகு அ.தி.மு.க-வில் இணைந்தார். அதன்பிறகு, அவர் பேசிய பல விஷயங்களை நெட்டிசன்கள் கலாய்த்து தள்ளினர். அவர் கூறிய பல கருத்துகள் பலரும் விமர்சிக்கும்படி இருந்ததால் அரசியல் வாழ்க்கையில் சறுக்கலைச் சந்தித்தார். இதையடுத்து, தீவிர அரசியலை விட்டு ஒதுங்கிக் கொள்வதாக சமீபத்தில் அறிவித்தார்.\nஇந்நிலையில், ஆர்ஜே பாலாஜிக்காக மீண்டும் அரசியல்வாதியாகியிருக்கிறார் நாஞ்சில் சம்பத். அரசியல் படமான ‘எல்கேஜி’ படத்தில் அரசியல்வாதி வேடத்தில் நாஞ்சில் சம்பத் நடிக்கவிருக்கிறார்.\nTags:அரசியல் படமான எல்கேஜிஅரசியல்வாதி வேடத்தில் நாஞ்சில் சம்பத்ஆர்ஜே பாலாஜிநாஞ்சில் சம்பத்ப்ரியா ஆனந்த்\nநாங்கள் இணைவோமா? இல்லையா? ரஜினிகாந்த் குறித்து கமல் கருத்து..!
May 10, 2020 – Charuonline\nMay 10, 2020 May 10, 2020 by Charu Nivedita\nடியர் சாரு, எவ்வளவோ முறை பேசவேண்டும் என நினைத்திருக்கிறேன். தயக்கமா, பயமா என்ன என்று தெரியவில்லை, இவ்வளவு நாள் உங்களை வாசித்துக் கொண்டிருந்தாலும் பேச முடியவில்லை. இன்றுதான் (10/05/2020) எனக்கு Zoom-ல் முதல்முறையாக உங்களோடு பேசும் வாய்ப்பு கிடைத்தது. என்னை வாசிக்க வைத்தது, வைப்பது எல்லாம் நீங்கள்தான் என்று சொல்லுவேன். ஸீரோ டிகிரியில் தொடங்கி, எக்ஸிஸ்டன்ஷியலிசமும் ஃபேன்சி பனியனும் வாசித்து, இப்போது ராஸ லீலா வாசித்துக் கொண்டிருக்கிறேன். சினிமா: அலைந்து திரிபவனின் அழகியல், மெதூஸாவின் மதுக்கோப்பை தனிக் கணக்கு! ஒவ்வொரு … Read more\nபுதுவகை எழுத்தின் முன் உள்ள சவால்கள்\nMay 10, 2020 May 10, 2020 by ஸ்ரீராம்\nமாயா இலக்கியச் சந்திப்பு – இன்று மாலை – பீச் சிறுகதை\nஇந்திய நேரம் மூன்றரை மணி. சிங்கப்பூர் நேரம் ஆறு மணி. ரயிலைப் பிடிக்கும் அவசரத்தில் படித்துக் கொண்டிருந்தபோது ஒரு நண்பரின் சந்தேகம். இன்றைய சந்திப்பு பற்றி. உள்வட்டத்தைச் சேர்ந்தவர் என்பதால் என்னால் அவர் சந்தேகத்தைப் புறக்கணிப்பது பற்றி நினைத்துக் கூட பார்க்க முடியாது. இன்றைய சந்திப்பு பற்றிய சென்ற வார அறிவிப்பில் ஆலன் ராப் க்ரியேவின் பீச் சிறுகதையைப் படித்து விட்டு வரச் சொல்லி அதன் லிங்கைக் கொடுத்திருந்தேன். லிங்கைக் கொடுப்பதெல்லாம் என் கூட்டத்தில் பலரும் அ-பிராமணர்கள் … Read more
அவனைப்போல் இன்னொருவன் |\n← அந்த அயனி மரம்\nஇந்தக் கணம். →\nகாமத்துப் பால் என\nதிறமைகள் வற்றியவன் என\nகாரியம் சாதிப்பவன் என\nகிசு கிசுக் கதைகளை\nஎழுதிக் குவிப்பவன் .\nநெருங்கி வந்து விட்டான்.\nபுன்னகை எடுத்து அணிந்து கொள்வான்.\nஎடுத்து உடுத்திக் கொள்.\nகோரமாய் வெளிப்பட்டு விடக் கூடும்.
மணி ரியூசன் சென்ரரில் நான் – ஊஞ்சல்\nமணி ரியூசன் சென்ரரில் நான்\nநேற்று பசங்க படம் பார்த்தேன்.. நல்ல ஒரு அழகான படம். பாடசாலை மாணவர்களிடம் காணப்படும் நட்புரீதியான போட்டியை மையப்படுத்தி செதுக்கப்பட்டிருந்தது\nபசங்க படம். பள்ளிப் பசங்களின் கதையினூடு இன்னும்மொரு மெல்லியதாக ஒரு காதல் நுாலையும் கோர்த்திருந்தார் இயக்குனர். சரி விடையத்திற்கு வருவோம்,\nஇங்கே அந்தப் படத்திற்கு விமர்சனம் எழுதுவதோ அல்லது விளம்பரம் செய்வதோ என் நோக்கம் அல்ல. படத்தினை நீங்கள் பார்த்து அதனை நீங்கள் இரசிக்க\nவேண்டும். எனது விமர்சனங்கள் உங்களின் அந்த இரசிப்பில் கலங்கத்தை ஏற்படுத்தக் கூடாது. படத்தினை ஒருமுறை நீங்களே பாருங்களேன். படத்தினைப் பார்க்கப்\nபார்க்க என் மாணவப்பருவ நாட்களினை என் ஞாபகத்திற்குக் கொண்டுவந்திருந்தது அந்தப் படம்.\nமிகவும் மகிழ்ச்சியாக நாங்கள் ஓடித்திருந்த அந்தப் பருவம். வெறும் பத்து பதினொரு வருடங்கள்தான் ஓடிக்கழிந்துள்ளன. ஆனாலும் நீண்ட பயணம் போன்ற ஒரு\nஉணர்வு. அந்த மணி ரியூசன் சென்ரரில் நண்பர்கள் செய்த குறும்புகள், பரீட்சைகளில் கூடிய மதிப்பெண் பெறவேண்டும் என்பதற்காய் போட்ட போட்டிகள்,\nவேலாயுதம் சேரிடம் வாங்கிய பாராட்டுக்கள் என எல்லாமே இன்னும் பசுமையாக இருக்கின்றன என் ஞாபகத்தில். பாடசாலை விட்டதும் கிழமை நாட்களில் செவ்வாய்\nமற்றும் வியாழனில் முன்று மணிக்குத் தொடங்கும் வகுப்புக்கள் மாலை ஐந்து மணிக்கு முடிவடையும். சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் அனேகமாக மதியம் ஒரு\nமணியிலிருந்து மாலை வரை நடைபெறும். கணிதம், விஞ்ஞானம், தமிழ் மொழியும் இலக்கியமும், சமூகக் கல்வியும் வரலாறும், கணக்கியலும் வணிகக்\nகல்வியும் மற்றும் ஆங்கிலம் ஆகிய முக்கியமான பாடங்களே நாங்கள் அங்கே கற்றோம்.\nநான் அங்கே போய்ச் சேர்ந்தது 2000ம் ஆண்டின் நடுப்பகுதியல் என்று நினைக்கின்றேன். அப்போது அங்கே எனக்கு என் பள்ளி நண்பர்களை விட வேறுயாரையும்\nதெரியாது. அங்கு சேர்ந்த பின்னர் புதிய பல நண்பர்கள் எனக்கு அறிமுகமானார்கள். மூன்றுமணிக்கு வகுப்பு என்றால் நான் வீட்டில் இருந்து புறப்படுவதே 2:55\nஇற்குத்தான். அடுத்த பத்து நிமிடத்தில் மணி வாசலில் நிற்பேன். அங்கே வகுப்புக்கள் அனேகமாக ஆரம்பித்து இருக்கும். கரும்பலகையில் வேலாயுதம் சேர்\nசோக்கட்டியுடன் நின்றுகொண்டு இருப்பார். நான் வருகின்ற அவசரத்தில், வேகத்தில் தடார் என எனது சைக்கிளினை நிறுத்துகின்ற அந்தச் சத்தத்தில் அனைவரும்\nஎனனை ஒருகணம் திரும்பிப் பார்ப்பார்கள். ( ஒரு நாளுக்கேனும் வகுப்புத் தொடங்க முன்னர் வராத இவன் எல்லாம் எங்கே உருப்படப்போறான் என்று நினைத்துப்\nபார்த்திருப்பார்களோ யார் கண்டது.. ).\nவாங்கோ லெக்சரர் என்று செல்லமாக அழைப்பார் வேலாயுதம் சேர். வேறு ஒன்றும் இல்லை எனது அப்பா பௌதீகவியல்\nலெக்சரர் என்பதனால் அவரது நண்பரான வேலாயுதம் சேர் என்னை லெக்சரர் என்றுதான் செல்லமாக அழைப்பார். (லெக்சரர்மார்தான் பிந்தி வருபர்கள் என்பதனால்\nஎனக்கு உறுத்துவதற்காகவே பயன்படுத்தியிருந்தாரோ தெரியாது. அவரை மீண்டும் சந்திக்கும் போது நிட்சயமாக இதைத் தெளிவுபடுத்திக் கொள்ளவேண்டும்.).\nஅங்கே எனக்காக முதலாவது வாங்கு காத்துகிடக்கும். வாங்கில் போயிருந்து மெல்லப் பாடத்திற்குள் நுழையும் போது திரும்ப இன்னும் ஒரு சைக்கிளச் சத்தம்\nஅங்கேயிருப்பர்களைக் குழப்பும். எஸ்கியூஸ்மி சேர் எனக் கேட்டுக்கொண்டு ஒரு பெண் உள் நுழைவாள். நான்தான் எப்போதும் பிந்திவருவேன் என்று பார்த்தால்\nஎனக்குப் பின்னாலும் வருவதற்து ஆள் இருக்கிறாள் என ஊள்ளூர சின்ன மகிழ்ச்சி பொங்கும் அப்போது. அவளைப் பார்த்து நன்றிக்காக சின்னப் புன்னகையொன்று\nபுரிவேன் பதிலாக சின்ன முறைப்புத்தான் வரும்…\nவேலாயுதம் சேரிடம் கணிதம் கற்பதற்கே கொடுத்து வைத்திருக்க வேண்டும். அவ்வளவு அழகாகவும் நேர்த்தியாகக் கற்பிப்பார். “அப்பு.. ராசா.. வாடா..” என\nஅவர் செல்லமாக அழைப்பதைக் கேட்பதே பேரானந்தம். சின்னச் சின்னக் கணக்குத் தருவார் அதனை முதலாவதாக செய்து காட்டுபவர்களுக்கு தன் கையிலுள்ள\nமோதிரம் பரிசாகத்தருவேன் என்பார். கடைசி வாங்கில் உள்ள நண்பர்கள் அண்டப் புழுகு விடுகிறார் சேர் எனக் குரல் எழுப்புவார்கள்.. அவர் சிரித்து விட்டு\nசெய்யுங்கடா கணக்கை என செல்லமாக வெருட்டுவார். நாமதான் கணக்கில புலியாச்சே ( நமக்கு இது கொஞ்சம் ஓவர்தான். என்ன சுயதம்பட்டம்\nபோலக்கிடக்குதா.. பரவாயில்லை.. இருந்தால் இருக்கட்டுமே!) வெளுத்துக்கட்டி முதலாதாகச் செய்து காட்டிவிடுவோம். அவரும் பார்த்துவிட்டு ”மணிக்காயடா”\nஎன்பார் கனிவாக.. என்ன ஒரு ஆனந்தமாக இருக்கும். சின்னச் சின்னப் பெருமைகளுக்கு மயங்காதவர் யாரோ… நானும் என்ன விதிவிலக்கா.!\nபின்வாங்குகளில் இருந்து சேர் மோதிரத்தைக் கொடுங்கோ என்று குரல்கள் எழும். போட இது என் கல்லாண நிட்சயதார்த்த மோதிரம் கழற்றினால் மனைவி\nகோவிப்பாடா என்று நைசாகக் கழன்றுவிடுவார். சிலசமயங்களில் கழற்றமுடியுதில்லைடா.. இந்தா கழற்றி எடுத்துக்கோடா என்று கையையும் நீட்டிவிட்டுச் சிரிப்பார்.\nசிலசமயங்களில் நண்பிகள் சிலரும் எனக்குப் போட்டியாக வந்துவிடுவதும் உண்டு.\nஎல்லோரும் எடுங்கள் ஐந்து ரூபாய் என்று ஒரு ரியூட்டை நீட்டுவார். இருபது கேள்விகள் முத்து முத்தாய் இருக்கும் என்பார். நாளை வரும்போது இருபது\nகேள்விகளுக்கும் பதில் எழுதிக்கொண்டு வரவேண்டும் என்பார். அந்தக் கேள்விகள் அனைத்தும் எமது கணக்குச் செய்யும் வேகத்தை அதிகரிப்பதற்கான பயிற்சிகள்தான்.\nபின்னால் இருந்து பகற்கொள்ளை பகற்கொள்ளை எனக் கத்துவார்கள். இல்லடா இது உங்களுக்குப் பயிற்சி தான் என சிரித்து விட்டுப்போவார். அவரின் வகுப்பில்\nஇருக்கும் போது நேரம் போவதே தெரியாது. அந்த அளவிற்கு சுவாரசியங்கள் நிறைந்தாக இருக்கும். வேலாயுதம் சேர் அடிக்கடி சொல்லுவார், மணி ஒரு\nகோவிலடா.. என்று! உண்மைதான் அப்போது நாங்கள் சிரிப்போம் இப்போது உணருகின்றேன் அவரின் சொற்களில் உள்ள அர்த்தங்களை.\nஎன்னைப்போல் அந்த மணியென்னும் கோவிலிற் படித்தவர்களுக்குப் புரியும் அதன் அருமை பெருமைகளைப்பற்றி.\nஇந்தப்பதிவு சற்று சுயதம்பட்டப் பதிவாக இருந்தாலும் பரவாயில்லை என்று என் மாணவப்பருவத்தின் இனிய நினைவுகளைத் தூசி தட்டி உங்களோடு பகிர்வதற்காக எழுதுகின்றேன். வாழ்க்கையில் எங்குசென்றாலும் எந்த நிலையில் இருந்தாலும் என்றும் மறக்கமுடியாது அந்தக் கோவிலையும் அதில் குடியிருந்து என்னை இந்த நிலைக்கு உயர்த்திவிட்ட தெய்வங்களையும். அவர்கள் என்றும் சந்தோமாக வாழ இறைவன் அருள்புரிய வேண்டும்.!\nCategories: சுயதம்பட்டம், பாதித்தவை\nICUTS June 24, 2009 at 6:43 AM -\nஅன்புக்குரிய எம் சொந்தங்களே, A/L பரீட்சைக்கு இன்னும் சில நாட்களே உள்ளன. இவர்களுக்குதவ முடியாதா?\nதுபாய் ராஜா June 24, 2009 at 7:52 AM -\n\_\_"அவளைப் பார்த்து நன்றிக்காக சின்னப் புன்னகையொன்று புரிவேன் பதிலாக சின்ன முறைப்புத்தான் வரும்… "//\nசுபானு June 24, 2009 at 9:38 AM -\nசும்மா அம்புவிட்டதிற்கே முறைக்சாளே… மிச்சத்தைக் சொல்லவும் வேண்டுமா..!\nகண்ணன் - Kannan June 25, 2009 at 2:58 AM -\n\_\_"எஸ்கியூஸ்மி சேர் எனக் கேட்டுக்கொண்டு ஒரு பெண் உள் நுழைவாள்"\_\_\nஎங்களுக்கு தெரிந்த அதே பெண்ணா???\nசுபானு June 25, 2009 at 3:00 AM -\n@கண்ணன் – Kannan\n// எங்களுக்கு தெரிந்த அதே பெண்ணா???\nஇருக்கலாம் இல்லாமலும் இருக்கலாம்..\nறாஜ் June 25, 2009 at 3:07 AM -\nஎன்னை என் பள்ளிப்பருவத்திற்கு\nசொல்லாமல் அழைத்துச் செல்கின்றது\nஎனது தமிழ் ஆசிரியரின் பெயரும் வேலாயுதபிள்ளை,\nஎன்றும் பசுமையான நினைவுகள்\nதுபாய் ராஜா June 25, 2009 at 3:21 AM -\nசும்மா அம்புவிட்டதிற்கே முறைச்சாளே… மிச்சத்தைக் சொல்லவும் வேண்டுமா..!"//\nஆஹா !! ஆஹா !!.\nதமிழ் எப்படி விளையாடுது !!!!.\nஇதுதான்யா நம்ம தமிழ்மொழியோட\nசுபானு June 25, 2009 at 3:26 AM -\nஆமாம் என்றும் பசுமையான நினைவுகளை மீட்டிப் பார்ப்பது ஒரு சந்தோசம் தான்..\nசுபானு June 25, 2009 at 3:30 AM -\n//தமிழ் எப்படி விளையாடுது !!!!.\nஉண்மைதான்… தமிழ் எவ்வளவு அழகான மொழி.. தனித்துவமானது..!\nவேத்தியன் June 25, 2009 at 5:21 AM -\nசுபானு June 25, 2009 at 5:28 AM -\nவந்தியத்தேவன் June 25, 2009 at 5:36 AM -\nமணி ரீயூசன் எங்கே இருக்கு? சிலர் கொஞ்சம் பிந்தி வாறதே எல்லோரும் தன்னைத் திரும்பிப் பார்க்கத்தான் என்ற எண்ணம் எங்கட வகுப்பு பொடியளிடமும் இருந்தது அதிலும் ஒரு பெட்டை அடிக்கடி பிந்தித்தான் வருவாள் ஆனாலும் மாஸ்டர்மார்களில் வகுப்பு பிந்தி வரும் ஒரு மாஸ்டர் இருக்கின்றார்3மணி வகுப்பிற்க்கு 3.30க்கு போனால் காணம் மனிசன் எப்படியும் 3.45க்குத்தான் வருவார். என்னதான் இருந்தாலும் என் குரு என்பதால் பெயர் வேண்டாமே. கண்டுபிடிக்கலாம்\nசுபானு June 25, 2009 at 5:45 AM -\nமணி ரீயூசன் நாச்சிமார் கோவில் அடியிலேயும், மற்றயது பிறவுண் வீதியிலும் உள்ளது.\n//சிலர் கொஞ்சம் பிந்தி வாறதே எல்லோரும் தன்னைத் திரும்பிப் பார்க்கத்தான் என்ற எண்ணம் எங்கட வகுப்பு பொடியளிடமும்..\nஎனக்கும் அப்படி இருந்திருக்குமோ… இருக்கலாம்..\nமுகுந்தன் June 25, 2009 at 5:45 AM -\n//ஆனாலும் மாஸ்டர்மார்களில் வகுப்பு பிந்தி வரும் ஒரு மாஸ்டர் இருக்கின்றார்3மணி வகுப்பிற்க்கு 3.30க்கு போனால் காணம் மனிசன் எப்படியும் 3.45க்குத்தான் வருவார். //\nScience Hall குமரன் சேர்3மணி வகுப்பிற்கு 3.45 க்கு முதல் வரமாட்டார் 🙂 ஆனா அவரின் படிப்பித்தல் முறை தனி அழகு.\nசுபானு June 25, 2009 at 5:46 AM -\n//மாஸ்டர்மார்களில் வகுப்பு பிந்தி வரும் ஒரு மாஸ்டர் இருக்கின்றார்3மணி வகுப்பிற்க்கு 3.30க்கு போனால் காணம் மனிசன் எப்படியும் 3.45க்குத்தான் வருவார். என்னதான் இருந்தாலும் என் குரு என்பதால் பெயர் வேண்டாமே. கண்டுபிடிக்கலாம்..?\nயாராயிருக்கும்.. எந்த இடம் என்று சொல்லமுடியுமா?\nசுபானு June 25, 2009 at 5:47 AM -\nஓ.. அவரா… ?\nவலசு - வேலணை June 25, 2009 at 5:51 AM -\nஎனக்குப் பின்னாலும் வருவதற்து ஆள் இருக்கிறாள் என ஊள்ளூர சின்ன மகிழ்ச்சி\nஓ! அப்பிடிப் போகுதோ கதை?\nவந்தியத்தேவன் June 25, 2009 at 5:54 AM -\nகுமரன் சேர் அல்ல. இவரும் கெமிஸ்ரி ரீச்சர்தான்.\nஎவனோ ஒருவன் June 25, 2009 at 6:44 AM -\nஎன்னுடைய 5ம் வகுப்பு நினைவுகளை மீட்டியதிற்க்கு மிக்க நன்றி சுபானு …..\nசுபானு June 25, 2009 at 7:40 AM -\n// Science Hall குமரன் சேர்3மணி வகுப்பிற்கு 3.45 க்கு முதல் வரமாட்டார் 🙂 ஆனா அவரின் படிப்பித்தல் முறை தனி அழகு.\nவருகைக்கும் கருத்துரைக்கும் நன்றிகள் முகுந்தன்.\nஉண்மைதான்.. பெளதீகவியல் என்னும் கடலை என்ன அழகாகப் படிப்பிபார்..\nசுபானு June 25, 2009 at 7:41 AM -\n// ஓ! அப்பிடிப் போகுதோ கதை?\nகனக்கக் கற்பனை வேண்டாம் ஐயா.. 🙂\nசுபானு June 25, 2009 at 7:43 AM -\n//குமரன் சேர் அல்ல. இவரும் கெமிஸ்ரி ரீச்சர்தான்.\nஅப்ப கெமிஸரி மகேஸ்வரன் சேரா..? அவர் சரியான நேரத்திற்கு வருபவராச்சே.. வேறுயார்?\nசுபானு June 25, 2009 at 7:45 AM -\n// என்னுடைய 5ம் வகுப்பு நினைவுகளை மீட்டியதிற்க்கு மிக்க நன்றி சுபானு …..\nஎல்லோருக்குள்ளும் இப்படியான பசுமைநினைவுகள் இருக்கும்.. உங்களுக்கும் நன்றிகள்..\nRamanan Satha June 25, 2009 at 9:17 AM -\n//எனக்குப் பின்னாலும் வருவதற்து ஆள் இருக்கிறாள் என ஊள்ளூர சின்ன மகிழ்ச்சி //\nஅடே, உனக்கே இது கொஞ்சம் ஓவரா இல்ல?\nசிலேடையா மெசேஜ் பாஸ் பண்ணுறியா??\nசுபானு June 25, 2009 at 9:04 PM -\n//அடே, உனக்கே இது கொஞ்சம் ஓவரா இல்ல?\nஅதான் ஏற்றனவே சொல்லீட்டமல்ல சுயதம்பட்டப் பதிவு என்று.. பின்ன என்ன… சும்மா ஒரு "பந்தா"வுக்குத்தான்… இதெல்லாம் கண்டுக்கக் கூடாதப்பா….
மின்னம்பலம்:வாக்கு வங்கி அரசியலே காங்கிரஸின் கொள்கை!\nவாக்கு வங்கி அரசியலே காங்கிரஸின் கொள்கை!\nமுத்தலாக் தடை மசோதா மாநிலங்களவையில் விவாதிக்கப்படாமல் போனதற்கு, காங்கிரஸின் வாக்கு வங்கி அரசியலே காரணம் என்று குற்றம்சாட்டியிருக்கிறார் மத்திய சட்ட அமைச்சர் ரவிஷங்கர் பிரசாத்.\nநாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத் தொடர் நேற்றுடன் (ஜனவரி 5) முடிவடைந்தது. இந்த கூட்டத் தொடரில் முத்தலாக் தடை மசோதாவை நிறைவேற்றிவிட வேண்டுமென்று மத்திய பாஜக அரசு முனைப்பு காட்டியது. கடந்த வாரம் மக்களவையில் வெற்றிகரமாக இந்த மசோதா நிறைவேறியது. ஆனால், மாநிலங்களவையில் நிறைவேறவில்லை.\nஇதற்கு காங்கிரஸ் கட்சியினரின் வாக்கு வங்கி அரசியலே காரணம் என்று கூறியிருக்கிறார் மத்திய சட்ட அமைச்சர் ரவிஷங்கர் பிரசாத். மக்களவையில் காங்கிரஸ் தனது ஆதரவைத் தெரிவித்துவிட்டு, மாநிலங்களவையில் எதிர்ப்பு காட்டியது பற்றியும் தனது பேச்சில் குறிப்பிட்டிருக்கிறார். “1986இல் ஷா பானோ விவகாரம் முதல் 2017இல் சயாரா பானோ வரை, காங்கிரஸின் செயல்பாடு ஒரே மாதிரியாகத்தான் உள்ளது. நாங்கள் ஆலோசனைகளைக் கேட்கத் தயாராக உள்ளோம்; நாடாளுமன்றத்தில் விவாதம் நடக்க வேண்டுமென்பதிலும் உறுதியாக இருக்கிறோம். காங்கிரஸின் நடத்தை என்னவென்பது இப்போது நாட்டுக்கே தெரிந்துவிட்டது” என்று சொல்லியிருக்கிறார்.\nமாநிலங்களவைத் தேர்வுக் குழுவுக்கு முத்தலாக் தடை மசோதாவை அனுப்ப வேண்டும் என்ற எதிர்கட்சிகளின் கோரிக்கை பற்றிய கேள்விக்கு, அப்படிச் செய்தால் மசோதா வீரியமற்றதாகிவிடும் என்று பதில் தெரிவித்திருக்கிறார் ரவிஷங்கர். “முத்தலாக் முறையில் விவாகரத்து செய்யப்படுவது குற்றமில்லை என்றாக்க முயற்சிக்கிறது காங்கிரஸ். நீதிமன்றம் கடுமையான உத்தரவுகளைப் பிறப்பித்தபோதிலும் இந்தப் பழக்கம் தொடர்ந்து வருகிறது. இந்தக் குற்றம் தொடர்ந்து நடைபெறுவதைத் தடுக்க நாம் சிறப்பு வழிகளைக் கண்டறிந்தாக வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.
மாதவனுடன் நீத்து! | Madhavan hopes on 'Yavarum Nalam' - Tamil Filmibeat\n| Published: Thursday, January 24, 2008, 18:06 [IST]\nஎவனோ ஒருவன், வாழ்த்துகள் என அடுத்தடுத்து இரு படங்கள் வசூல் ரீதியாக சரியாக போகாததால், தான் அடுத்து நடித்துள்ள யாவரும் நலம் படத்தை அதிகம் நம்பியுள்ளார் மாதவன்.\nஒரே நேரத்தில் தமிழ் மற்றும் இந்தியில், உருவாகி வரும் படம் யாவரும் நலம். விக்ரம் கே.குமார் இயக்கியுள்ளார். தெலுங்கிய்ல இஷ்டம், சிம்புவை வைத்து தமிழில் அலை ஆகிய இரு படங்களை இயக்கியவர் விக்ரம் குமார்.\nஇந்தியில் இப்படத்திற்கு சப் கயிரியாத் என்று பெயரிட்டுள்ளனர். இதில் மாதவனுக்கு ஜோடியாக நீத்து சந்திரா நடித்துள்ளார்.\nதமிழ் பதிப்பில் மலையாள நடிகர் சித்திக்கும், நடிகை சரண்யாவும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.\nஆட்லேப்ஸ் தயாரித்துள்ள படம்தான் யாவரும் நலம். சங்கர் ஈசான் லாய் இசையமைத்துள்ளனர். பி.சி.ஸ்ரீராம் கேமராவைக் கையாண்டுள்ளார்.\nஇப்படம் குறித்து மாதவன் கூறுகையில், விக்ரம் மீதும், அவரது கதை மீதும், எனது நடிப்பின் மீதும் நான் நம்பிக்கை வைத்துள்ளேன். இப்படத்தை எனது மார்க்கெட் எழுச்சிக்கான படிக்கட்டாக கருதுகிறேன் என்றார் நம்பிக்கையுடன்.\nRead more about: எவனோ ஒருவன் நீத்து சந்திரா மாதவன் வாழ்த்துகள் evano oruvan madhavan neethu vaalthukal\nStory first published: Thursday, January 24, 2008, 18:06 [IST]
திரு. ஸ்ரீபத் நாயக் Archives • Seithi Solai\nதிரு. ஸ்ரீபத் நாயக்\nTag: திரு. ஸ்ரீபத் நாயக்\nஆயுஷ் அமைச்சர் ஸ்ரீபத் நாயக்கிற்கு கொரோனா அறிகுறி …..!!\nமத்திய ஆயுஷ் துறை அமைச்சர் திரு. ஸ்ரீபத் நாயக்கிற்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பரவலும், உயிரிழப்புகளும் நாளுக்கு…
தினகரனை ஓரம்கட்ட சின்னம்மாவிடம் சமரம் செய்து கொள்ளலாம்! ஈ.பி.எஸ்சின் மாஸ்டர் பிளான்!\nChennai, First Published 1, Sep 2018, 11:37 AM\nஅ.தி.மு.கவில் தனது எதிர்காலத்தை தக்க வைத்துக் கொள்ள சசிகலாவுடன் சமாதானம் செய்து கொள்ளும் முடிவில் ஈ.பி.எஸ் உள்ளதாக கூறப்படுகிறது.\nஅ.தி.மு.கவில் இருந்து ஓரங்கப்பட்ட பிறகு தினகரன் ஒழிந்துவிடுவார் என்பதே ஓ.பி.எஸ் மற்றும் ஈ.பி.ஸ்சின் எண்ணமாக இருந்தது. ஆனால் அதற்கு முற்றிலும் மாறாக தனியாக கட்சி துவங்கி காங்கிரசுடன் கூட்டணி பேசும் அளவிற்கு தினகரன் வளர்ந்துவிட்டார். அதே சமயம் அ.தி.மு.கவை பொறுத்தவரை சொல்லிக் கொள்ளும்படி எந்த முன்னேற்றமும் இல்லை. ஆட்சியை தக்க வைத்துக் கொள்வதில் அதிக கவனம் செலுத்தப்படுவதால் ஈ.பி.எஸ்ஸால் கட்சி வளர்ச்சி குறித்து பெரிய அளவில் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை.\nபல கோடி ரூபாய் செலவு செய்து நடத்திய எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவின் போது கூட அ.தி.மு.க தொண்டர்களிடம் எழுச்சியை பார்க்க முடியவில்லை. இந்த நிலையில் இரண்டு தொகுதிகளில் இடைத்தேர்தல் மற்றும் நாடாளுமன்றத்திற்கு பொதுத் தேர்தல் வர உள்ளது. இந்த தேர்தலை எப்படி எதிர்கொள்வது என்பது தான் அ.தி.மு.கவிற்கு தற்போது பெரும் சவாலா உள்ளது. ஏனென்றால் அ.தி.மு.கவுடன் கூட்டணிக்கு எந்த கட்சியும் தயாராக இல்லை.\nமக்களை கவர்ந்த வகையிலான தலைவர்களும் அ.தி.மு.கவில் இல்லை. அ.தி.மு.க தொண்டர்களும் கூட தங்கள் தலைமையின் மீது பெரிய அளவில் நம்பிக்கை இல்லாமல் இருக்கின்றனர். பா.ஜ.கவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்ளலாம் என்றால் அந்த கட்சி தொகுதிப் பங்கீடு முதல் தொகுதி ஒதுக்கீடு வரை அனைத்திலும் ஆதிக்கம் செலுத்தும் வகையில் உள்ளது. இதனால் தினகரனுடன் மீண்டும் சமாதானமாக சென்றுவிடுவது நல்லது என்று அ.தி.மு.க 2ம் கட்ட தலைவர்கள் பேச ஆரம்பித்துள்ளனர்.\nஆனால் தன்னை மிக கடுமையாகவும், கேவலமாகவும் விமர்சித்து வரும் தினகரனுடன் சமரசமாக செல்வதற்கு எடப்பாடி பழனிசாமி தயங்குவதாக கூறப்படுகிறது. மேலும் தினகரன் குறித்தும் எடப்பாடி பழானிசாமி கடந்த காலங்களில் மிக கடுமையாக விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.\nஇந்த நிலையில் தற்போதைக்கு சமரசம் செய்து கொண்டாலும், எதிர்காலத்தில் தினகரன் தன்னை பழிவாங்குவார் என்று எடப்பாடி கருதுகிறார். எனவே தினகரனை ஒதுக்கி வையுங்கள் என்கிற நிபந்தனையுடன் சசிகலாவுடன் சமரசம் பேசும் முடிவிற்கு எடப்பாடி வந்துவிட்டதாக கூறப்படுகிறது. இதற்காக விரைவில் சிறையில் உள்ள சசிகலாவை அ.தி.மு.க முக்கிய நிர்வாகி சந்திக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
தலைதெறிக்க ஓடித்தப்பிய ஐ.எஸ். தீவிரவாதிகள் ! பஸ்களைப் பிடித்து சிரியா சென்றுள்ளதாக அதிர்ச்சித் தகவல் - ATHIRVU.COM\nHome Unlabelled தலைதெறிக்க ஓடித்தப்பிய ஐ.எஸ். தீவிரவாதிகள் ! பஸ்களைப் பிடித்து சிரியா சென்றுள்ளதாக அதிர்ச்சித் தகவல்\nதலைதெறிக்க ஓடித்தப்பிய ஐ.எஸ். தீவிரவாதிகள் ! பஸ்களைப் பிடித்து சிரியா சென்றுள்ளதாக அதிர்ச்சித் தகவல்\nலெபனான் ராணுவத்துடன் செய்துகொண்ட சமாதான உடன்படிக்கையின்படி அந்நாட்டு எல்லையில் முகாமிட்டிருந்த ஐ.எஸ். தீவிரவாதிகள் தங்களது குடும்பத்தினருடன் வெளியேறி சிரியாவுக்கு சென்றனர். லெபனான் எல்லையில் இருந்து ஐ.எஸ். தீவிரவாதிகள் ஓட்டம் - பஸ்கள் மூலம் சிரியா சென்றனர் பெய்ருட்: சிரியா மற்றும் லெபனான் நாடுகளுக்கிடையில் உள்ள மலைப்பகுதிகளில் முகாமிட்டுள்ள ஐ.எஸ். தீவிரவாதிகளை வேட்டையாடும் பணியில் சிரியா படைகளுடன் லெபனானை சேர்ந்த ஹெஸ்புல்லா போராளிகளும் கடந்தவாரம் களமிறங்கினர்.\nஅதேவேளையில், சிரியா படைகளுடன் சேராமல் லெபனான் நாட்டு எல்லைப்பகுதியில் அந்நாட்டு ராணுவம் ஐ.எஸ். தீவிரவாதிகள் பதுங்கியுள்ள இடங்களை குறிவைத்து ஆவேச தாக்குதலை தொடங்கியுள்ளது. இந்நிலையில், சிரியா-லெபனான் எல்லைப்பகுதியை ஒட்டியுள்ள கலாமோன் பகுதிக்குள் முன்னேறிச் சென்ற ஹெஸ்புல்லா கூட்டுப் படையினர் ஐ.எஸ். தீவிரவாதிகளின் பிடியில் இருந்த பெரும்பான்மை நிலப்பகுதியை கைப்பற்றியுள்ளனர். இதையடுத்து,\nஅங்கிருந்த ஐ.எஸ். தீவிரவாதிகள் லெபனான் ராணுவத்துடன் கடந்த ஞாயிற்றுக்கிழமை போர் நிறுத்தத்துக்கான உடன்படிக்கை செய்து கொண்டனர். லெபனான் நாட்டின் எல்லையோரம் ஆக்கிரமித்து வைத்துள்ள பகுதியை விட்டு வெளியேறி விடுவதாகவும், சிரியாவில் தங்களது கட்டுப்பாட்டில் உள்ள பகுதிக்கு செல்ல அனுமதிக்க வேண்டும் என்றும் ஐ.எஸ். தீவிரவாதிகள் கேட்டுக் கொண்டனர்.\nஇதற்கு லெபனான் ராணுவம் அனுமதி அளித்தது. இதைதொடர்ந்து, லெபனான் எல்லையில் முகாமிட்டிருந்த ஐ.எஸ். தீவிரவாதிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் அனைவரும் பஸ்களில் ஏற்றி வெளியேற்றப்பட்டனர். சிரியாவின் கிழக்கு பகுதியில் தங்களது கட்டுப்பாட்டில் உள்ள பகுதியை நோக்கி அவர்கள் சென்ற பஸ்களுக்கு பாதுகாப்பாக சிரியா ராணுவ வாகனங்களும், ஆம்புலன்ஸ்களும் அணிவகுத்து சென்றதாக ஹெஸ்புல்லா அமைப்புக்கு ஆதரவான ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.\nதலைதெறிக்க ஓடித்தப்பிய ஐ.எஸ். தீவிரவாதிகள் ! பஸ்களைப் பிடித்து சிரியா சென்றுள்ளதாக அதிர்ச்சித் தகவல் Reviewed by Man one on Wednesday, August 30, 2017 Rating: 5
Kumurum MALAYAKAM: 05/31/16\nஅர­சாங்­கத்­தி­ட­மி­ருந்து சம்­ப­ளத்தை பெறுவது சாத்­தி­ய­மற்­றது\nகடந்த 18 வரு­டங்­க­ளாக கூட்டு ஒப்­பந்தம் மூலமே தோட்டத் தொழி­லா­ளரின் சம்­பளம் அதி­க­ரிக்­கப்­பட்டு வந்­துள்­ளது. தொழி­லா­ளரின் சம்­ப­ளத்தை அர­சாங்­கத்­தி­ட­மி­ருந்து சுல­ப­மாகப் பெற்றுக் கொள்­ளலாம் என்றும் கூட்டு ஒப்­பந்த முறை­மையை மிக மோச­மாக விமர்­சனம் செய்தும் வந்­த­வர்கள், தற்­போது அர­சாங்­கத்­தி­ட­மி­ருந்து சம்­பள உயர்வைப் பெற்றுக் கொள்­வது எந்­த­ளவு கடி­ன­மா­னது என்­ப­தையும் சாத்­தி­ய­மற்­றது என்­ப­தையும் அனு­பவ ரீதி­யாக உணர்ந்­தி­ருப்­பார்கள் என்று பெருந்­தோட்டத் தொழிற்­சங்க கூட்டுக் கமிட்­டியின் செய­லாளர் நாய­கமும் லங்கா தோட்டத் தொழி­லாளர் யூனியன் பொதுச்­செ­ய­லா­ள­ரு­மான எஸ். இரா­ம­நாதன் தெரி­வித்தார்.\nகூட்டு ஒப்­பந்­தத்தில் கைச்­சாத்­திடும் தொழிற்­சங்­கங்கள், தோட்டக் கம்ப­னி­களின் பிர­தி­நி­திகள் அர­சாங்­கத்தின் அமைச்­சர்கள், ஆகி­யோ­ருக்கு இடையே இடம்­பெற்ற பேச்­சு­வார்த்­தையின் விப­ரங்­களை கூட்டுக் கமிட்­டியின் தோழமைச் சங்க தலை­வர்­க­ளுக்கு விளக்­கு­வ­தற்­காக கண்டி இலங்கை தொழி­லாளர் செங்­கொடிச் சங்கக் காரி­யா­ல­யத்தில் நடத்­தப்­பட்ட கூட்­டத்தில் பேசி­ய­போதே அவர் இவ்­வாறு தெரி­வித்தார். செங்­கோடிச் சங்­கத்தின் தலைவி மேனகா கந்­த­சாமி தலை­மையில் நடை­பெற்ற இக்­கூட்­டத்தில் கே.எம். கிருஷ்­ண­மூர்த்தி, எஸ். முரு­கையா, ஏ. முத்­து­லிங்கம், எஸ். ஆனந்தி, எஸ். கந்­தையா, ஆர். சிரில் ஆகிய முக்­கி­யஸ்­தர்கள் கலந்து கொண்­டி­ருந்த இக்­கூட்­டத்தில் திரு இரா­ம­நாதன் தொடர்ந்து கருத்து தெரி­வித்­த­போது;\nகூட்டு ஒப்­பந்­தத்தில் யார் கையொப்­ப­மி­டு­வது என்­பது முக்­கி­ய­மல்ல. யார் கையொப்­ப­மிட்­டாலும் தொழி­லா­ளர்­களின் சம்­ப­ளத்தை அதி­க­ரித்துக் கொள்­வ­தற்கு கூட்டு ஒப்­பந்த முறை­மையே சிறந்­த­தாகும் என்­பதும் தொழி­லா­ளர்­களின் பலத்தின் மூலம் பேரம்­பேசி சம்­பள உயர்­வையும் ஏனைய உரி­மை­க­ளையும் பெற்றுக் கொள்ள முடி­யுமே தவிர சந்­தர்ப்­ப­வாத அர­சி­யல்­வா­தி­களை நம்பி தொழி­லா­ளரின் உரி­மை­களை வென்­றெ­டுக்க முடி­யாது.\nஇன்று முத­லா­ளித்­துவ தோட்டக் கம்­ப­னி­களும் முத­லா­ளித்­துவ அர­சி­யல்­வா­தி­களும் ஒன்­று­பட்டு செயற்­ப­டு­கின்­றனர். தொழி­லா­ளரின் பிரச்­சி­னைகள் தீர்க்­கப்­ப­டாமல் இழுத்­த­டிக்­கப்­ப­டு­வ­தற்கு கார­ணம் அர­சி­லுள்ள பெரும் புள்­ளி­களின் ஆத­ரவும் அனு­ச­ர­ணையும் தோட்டக் கம்ப­னி­க­ளுக்கு இருக்­கின்றமையே­யா­கும். இதனால் தான் என்­று­மில்­லா­த­வாறு தோட்டக் கம்­ப­னிகள் முரட்டுப் பிடி­வா­த­மாக நடந்து கொள்­கின்­றன. தோட்டக் கம்­ப­னிகள் தமது இறு­மாப்பைக் கைவிட்டு தொழி­லா­ளரின் சம்­பள உயர்வுக் கோரிக்­கையில் நியா­ய­மான தீர்­வினை மேற்­கொள்ள முன்­வர வேண்டும். தொழி­லா­ளர்­க­ளது அடிப்­படை சம்­பள உயர்வு, வரவு போனஸ், விலை­யேற்ற அல வன்ஸ், மேல­திக தேயிலை இறப்­ப­ருக்­கான கொடுப்­ப­ன­வு­களின் அதிகரிப்பையே நாம் முன்வைத்துள்ளோம்.\nஇக் கோரிக்கையினையே நாம் தொடர்ந்தும் வலியுறுத்தி வருகிறோம். இக் கோரிக்கையினை வென்றெடுப்பதற்காக எதிர்வரும் நாட்களில் தோட்டக் கம்பனிகளுக்கும் அரசாங்கத்துக்கும் அழுத் தங்களைப் பிரயோகிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட தீர்மானிக்கப் பட்டிருப்பதாக வும் கூறினார்.\nஅர­சாங்­கத்­தி­ட­மி­ருந்து சம்­ப­ளத்தை பெறுவது சாத...
சர்வதேச விண்வெளி நிலையத்தில் முள்ளங்கி அறுவடை... நாசா அசத்தல்! | Radish Harvest at the International Space Station - Tamil Oneindia\nவாஷிங்டன்: சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தில் முள்ளங்கி பயிர் வளர்த்து அதனை வெற்றிகரமாக நாசா அறுவடை செய்துள்ளது. இது தொடர்பான வீடியோ வெளியிட்டது.\nவிண்வெளி வீரர்களுக்கு ப்ரெஷ் ஆன உணவு அளிக்க வசதியாக சோதனை முறையில் இதனை பயிரிட்டு அறுவடை செய்துள்ளது நாசா.\nசர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையம் புவியீர்ப்பு வளையத்துக்கு மேலே அமைந்துள்ளதால் அங்கு புவியீர்ப்பு சக்தி கிடையாது. அங்கு மனிதர்கள் கவச உடை இன்றி தங்கி இருக்க முடியாது. அங்கு தங்கி இருக்கும் விண்வெளி வீரர்களுக்கு ப்ரெஷ் ஆன உணவு அளிக்க வசதியாகக் காய்கறிகளை விண்வெளி நிலையத்தில் பயிரிட நாசா முடிவு செய்தது. அதையொட்டிசோதனை முறையில் முள்ளங்கி பயிரிடப்பட்டுள்ளது.\nபிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட பெட்டியில் நன்கு உரம் மற்றும் நீர் கிடைக்கும் வகையில் முள்ளங்கி பயிர்கள் வளர்க்கப்பட்டன. பயிர்களுக்கு வெப்பம் ஊட்ட சிவப்பு மற்றும் நீல ஒளி உமிழும் விளக்குகள் அமைக்கப்பட்டன.\nஇந்த பயிர்கள் வளர்ச்சியை அமெரிக்காவில் உள்ள விண்வெளி கட்டுப்பாடு அறையில் இருந்து விஞ்ஞானிகள் கண்காணித்தனர். வெற்றிகரமாக வளர்ந்துள்ள முள்ளங்கி தற்போது ௨௭ நாட்களுக்கு பிறகு அறுவடை செய்யப்பட்டு உள்ளது. இந்த முள்ளங்கி சாகுபடி குறித்தது நாசா வீடியோ ஒன்றையும் வெளியிட்டு உள்ளது.\nnasa washington harvest நாசா வாஷிங்டன்\nNASA has successfully grownaradish crop at the International Space Station and harvested it. Postedarelated video
நயன்தாராவிற்கு திருமணம் எப்போது தெரியுமா? -\nநயன்தாராவிற்கு திருமணம் எப்போது தெரியுமா?\nMarch 29, 2018 82 Views\nதென் இந்தியாவின் முன்னணி நடிகை நயன்தாராவின் திருமணம் பற்றி அறிவிப்புக்கள் வெளியிடப்பட்டுள்ளன.\nநயன்தாராவுக்கும், விக்னேஷ் சிவனும் காதலித்து வரும் நிலையில், இந்த வருட இறுதியில் இருவருக்கும் திருமணம் நடக்க இருப்பதாக, இருவருக்கும் நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளனர்.\nPrevious காஜல் அகர்வாலின் விருப்பம்?\nNext காவிரி பிரச்சினைக்கு ரஜினியின் தீர்வுத் திட்டம்\nஇசைப்பாளர், நடிகர் விஜய் ஆண்டனி நடித்துள்ள ‘காளி’ படத்திற்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது. கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘காளி’ படத்திற்கு வித்திக்கப்பட்ட தடையை நீக்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடித்துள்ள படம் “காளி”.\nநடிகை ஷிவானியின் மெய்யான ஹீரோ யார் தெரியுமா?\nதெலுங்கில் அறிமுக நாயகி ஷிவானியின் உண்மையான ஹீரோ யார் என்பதனை மனம் திறந்து சொல்கின்றார். பிரபல தெலுங்கு நடிகர் ராஜசேகரின் மகள் ஷிவானி சினிமாவில் அறிமுகமாகியிருக்கும் நிலையில், அப்பா தான் தனது திரை உலக, உண்மையான ஹீரோ என்று கூறியிருக்கிறார். டாக்டர்
குஷ்பூவுக்கு முக்கிய பொறுப்பு கிடைக்குமா? – Cinema Murasam\nகுஷ்பூவுக்கு முக்கிய பொறுப்பு கிடைக்குமா?\nதெலுங்கானாவில் விஜயசாந்திக்கு முக்கியமான பதவியைக் கொடுத்திருக்கிறது காங்கிரஸ். தேர்தல் பிரச்சார தலைமைப் பொறுப்பு வி.சாந்திக்குத்தான்! தெலுங்கானா காங்கிரஸ் தலைவர்கள் பிரமித்துப் போய் இருக்கிறார்கள். முதலமைச்சர் சந்திரசேகரராவின் சொந்தஊர் இருக்கிற மேடக் பாராளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பும் விஜயசாந்திக்குத் தான் என்கிறார்கள்,\nவிஜயசாந்திக்கு தெலுங்கானாவில் நல்ல செல்வாக்கு இருக்கக்கூடும். தமிழகத்திலும் குஷ்பூவுக்கு நல்ல செல்வாக்கு இருக்கிறது. சிறந்த நட்சத்திரப் பேச்சாளராகவும் இருக்கிறார். சின்னத்திரையிலும் மிகவும் முக்கியமான இடத்தில் இருக்கிறார். இவருக்கு காங்கிரஸ் தலைமை முக்கிய பொறுப்புக் கொடுக்குமா என்பது தெரியவில்லை.\nதமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் அதை தடுக்காமல் இருப்பாரா? கோஷ்டி அரசியல் நடத்தியே நலிந்து கிடக்கும் காங்கிரசில் ஒற்றுமை என்பது கோவைக்காய் இனித்தால் மட்டுமே கைகூடும். தனித்து நிற்கும் அளவுக்கு காங்கிரசை தமிழகத்தில் யாரும் வளர்க்கவில்லை . பெருந்தலைவர் காமராஜருடன் கட்சியின் வளர்ச்சி நின்று விட்டது என்றே கூறலாம்.\nஇவை தொடர்பாக படப்பிடிப்பில் இருந்த குஷ்பூவிடம் கேட்டோம்.\n“தெலுங்கானாவில் விஜயசாந்திக்கு காங்கிரசில் முக்கிய பதவி கிடைத்திருக்கிறது. தலைமைப் பிரச்சாரப் பொறுப்பு அவருக்குத்தான்” என்று சொன்னதுமே இடை மறித்தார் குஷ்பூ ” மன்னிக்கனும். விஜயசாந்தி அரசியலில் சீனியர். தெலுங்கானாவில் அவருக்கு சிறந்த செல்வாக்கு இருக்கிறது.தேர்தல் பற்றி நன்கு அறிந்தவர்.ஆனால் நான் காங்கிரசுக்கு வந்து நான்கு வருசம்தான் ஆகிறது. உங்களின் கேள்வி எனக்கு புரிகிறது. காங்கிரசில் தற்போது மாற்றங்கள் நடந்து கொண்டிருக்கிறது. வலிமையுள்ள கட்சி என்பது தெரிய வரும்” என்றார்.\n“வளர்ச்சிக்கு காங்கிரசில் உள்ள கோஷ்டிகள்தான் காரணம் மேடம்?”\n“அதிமுகவைப் பார்த்துக் கேட்கவேண்டிய கேள்வியை என்னிடம் கேட்கிறீர்கள். நாங்கள் ஜனநாயக அமைப்பு என்பதால் நாங்கள் கருத்துகளை சொன்னால் கூட அதற்கு ஒரு காரணம் சொல்கிறீர்கள். காங்கிரஸ் நன்கு வளர்ச்சி பெற்றிருக்கிறது.அதன் வலிமை தேர்தலில் தெரியும்.” என்றார்.
பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்ட ரசிகலாவிற்கு நடந்தது என்ன? தாயும் குழந்தையும் பலியாகிய சோகம் - Tamilwin\nபிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்ட ரசிகலாவிற்கு நடந்தது என்ன? தாயும் குழந்தையும் பலியாகிய சோகம்\nமட்டக்களப்பு - படுவான்கரை பிரதேசத்தில் போரினால் பாதிக்கப்பட்ட பிரதேச மக்களுக்கு மருத்துவ சேவையை வழங்கி கொண்டிருக்கும் மகிழடித்தீவு வைத்தியசாலையில் பிரசவத்திற்காக சென்ற இருபது வயதுடைய இளம் யுவதி ரசிகலா மரணமடைந்திருந்தார்.\nஒரே பிரேதப் பெட்டியில் ரசிகலாவும் குழந்தையும் வைக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி, பார்ப்பவர்களை கலங்க செய்திருந்தது.\nஇந்த மரணம் தொடர்பாக பலத்த சர்ச்சை மற்றும் மாறுபட்ட கருத்துக்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.\nபின்தங்கிய கிராமமான காஞ்சிரங்குடாவை சேர்ந்தவர் ரசிகலா. திருமணம் செய்து முதல் பிரசவத்திற்காக 28.08.2017ம் திகதி அதிகாலை 12.30க்கு சாதாரண பிரசவவலி காரணமாக அவரது தாயாரால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nதன் மகளுடன் நிற்பதற்கு அங்கு பணிபுரியும் சுகாதார பணியாளர்களிடம் அனுமதி கேட்டுள்ளார்.\nவைத்தியசாலை விதிமுறை அதற்கு அனுமதிக்காது என்பதால், அவர்கள் மறுத்து விட்டனர். தாயார் தொடர்ந்து கேட்க, திட்டி வெளியில் விட்டு கதவை சாத்தியுள்ளனர்.\n“என்ட மகள் பிரசவத்திற்காக மகிழடித்தீவு ஆஸ்பத்திரிக்கு கொண்டு போனம். அங்கபிறசர் மற்ற எல்லா செக்கிங்கும் பண்ணி போட்டு நாலு மணிக்கு பிள்ளை பிறக்க கூடியசாத்தியக் கூறு இருக்கு என்டு சொன்னாங்க. பிள்ளைய வாட்டுல வச்சாங்க. பிறகுநான் மகளோட நிக்கபோறன் என்டு அங்க வேல செய்யிற ஆக்களிட்ட கேட்டன்.\nஎன்ட மகளுக்கு காலெல்லாம் வீங்கி இருக்கு. நான் நிக்கட்டா என்டு. அதுக்கு ஒருவேலை செய்யிற ஆள் நீ நிக்கிறன்னடா நாங்க என்னத்துக்கு இருக்கம் என்டு ஏசினாங்க. பிறகு என்னை வெளியில விட்டு கதவ சாத்தி போட்டாங்க. நான் வரும் போது மகளுக்கு பக்கத்தில் பிரசவத்திற்காக இருந்த இன்னுமொரு பிள்ளையிர போன் நம்பர வாங்கிகொண்டு வீட்டபோய்த்தன்' என்றார் ரசிகலாவின் தாயார்.\nரசிகலாவிற்கு மகபேற்றுக்கான திகதி 22.09.2017 ஆகும். ஆனால் இவர் செல்லும் கிளினிக்கில் 29.08.2017ஆம் திகதி வைத்தியசாலைக்கு பிரசவத்திற்காக செல்ல வேண்டும் என்ற அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது.\nகூறிய திகதிக்கு முன்னரே அடிவயிற்றில் சாதாரண வலி ஏற்பட வைத்தியசாலைக்கு சென்றுள்ளனர்.\nவைத்தியசாலையில் ரசிகலாவை அனுமதித்து விட்டு வீட்டுக்கு சென்ற தாயார், அதிகாலை3மணியளவில் தொலைபேசி இலக்கம் வாங்கிய பெண்ணை தொலைபேசியில் அழைத்து நிலவரத்தை கேட்டுள்ளார்.\nரசிகலாவிற்கு வலி சற்று அதிகமாக இருப்பதாக அவர் கூறியுள்ளார். வைத்தியசாலையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டிருந்த பண்டாரிய வெளியை சேர்ந்த பெண்ணொருவர் அதிகாலை5மணியளவில் தன்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, ரசிகலாவிற்கு வலிப்பு வந்து கட்டிலில் இருந்து விழுந்து இரத்தம் வந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படுகிறார் என்ற தகவலை வழங்கியதாக ரசிகலாவின் தாயார் கூறுகிறார்.\nஎனினும் தகவலை கூறியதாக கூறப்படும் பெண், தற்போது அதனை மறுத்து வருகிறார்.\n'மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு சென்று ஒவ்வொரு மகப்பேற்று வாட்டாக தேடினேன். எங்கேயும் கிடைக்கவில்லை. பின்னர் தீவிர சிகிச்சைப்பிரிவில் சென்றுகேட்டேன். இருக்கிறார் என்றார்கள். மகிழடித்தீவு வைத்தியசாலையில் இருந்து என்ட மகள கட்டையாத்தான் கொண்டு போயிருக்காங்க' எனவும் தாயார் தெரிவித்தார்.\nகட்டிலில் இருந்து கர்ப்பிணி தாயான ரசிகலா விழுந்தாரா இல்லையா என்பதுதான் தற்போதுள்ள பிரச்சினை.\nவலிப்பு ஏற்பட்டதால் கட்டிலில் இருந்து விழுந்து ரசிகலா இறந்தார் என்ற தாயாரின் குற்றச்சாட்டை வைத்தியசாலை நிர்வாகம் மறுத்து வருகிறது.\nஅப்படியொரு சம்பவம் நடக்கவில்லையென்கிறார்கள். இந்த விடயம் தொடர்பாக வைத்தியசாலை பொறுப்பதிகாரி வைத்தியர் தி.தவநேசனிடம் தொலைபேசியூடாக வினவியபோது-\n“அந்தப் பெண் 28ம் திகதி அதிகாலை ஒரு மணியளவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். மறுநாள் நிகழ்வொன்றிருந்ததால் நானும் வைத்தியசாலையில் தங்கியிருந்தேன்.\nரசிகலாவை நேரில் சென்று பார்த்தேன். மீண்டும் 4.30 மணியளவில் ரசிகலாவிற்கு வலிப்பு வந்துவிட்டது என்று தொலைபேசி அழைப்பு வந்தது.\nஉடனடியாக அவரை மட்டக்களப்பிற்கு இடமாற்றம் செய்தேன். பின்னர் நடந்தது ஒன்றும் எனக்கு தெரியாது. உங்களுடைய வைத்தியசாலையில் கர்ப்பிணிதாய் இறந்ததாக முகப்புத்தகங்களில் காரசாரமாக செய்திகள் வெளியாகி கொண்டிருக்கின்றன என்று 03ஆம் திகதி (செப்ரெம்பர்) தொலைபேசி அழைப்புக்கள் வந்தன.\nஅந்த கர்ப்பிணிதாய் 28ம் திகதி (ஒக்ரோபர்)அதிகாலை வைத்தியசாலைக்கு பிரசவத்திற்காக வந்தார். வலிப்பு வந்ததால் அதே தினத்தில் அதிகாலை 4.30 மணியளவில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு இடமாற்றிவிட்டேன் என்பதை சொன்னேன்” என்றார்.\nதமது மகளுக்கு வலிப்பு வருவதில்லை என்பது ரசிகலாவின் தாயாரின் வாதம்.\nதாயாரின் கருத்தும், வைத்தியசாலை கருத்தும் வேறுவேறாக இருப்பதால் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nஅந்த விடயம் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் கருத்துக்கள் தொடர்பாக வைத்தியர் தி.தவநேசன் கவலை தெரிவித்தார்.\n“கர்ப்பிணி தாய் கட்டிலில் இருந்து கீழே விழுந்ததென முகப்புத்தகத்தில் பதிவிட்டு வருகிறார்கள். அது தவறானது. இந்த வைத்தியசாலை தற்போதுதான் விரைவாக அபிவிருத்தியடைந்து வருகிறது.\nஇப்படியான செய்திகள் வைத்தியசாலையின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவது. இந்த பிரச்சனையை விசாரிக்க குழு ஒன்று அமைக்கப்படும். அந்த விசாரணை முடிந்ததும் நான் இடமாற்றம் பெற்று சென்று விடுவேன். யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வன்னியில் இருந்துதான் நானும் சேவை செய்ய இங்கு வந்தேன். அதை கலைத்து விட்டார்கள்” என்றார்.\nரசிகலாவின் தாயாரின் கருத்தும், வைத்தியசாலையில் கருத்தும் வேறுவேறாக இருப்பதால், முறையான விசாரணை ஒன்றின் மூலமே உண்மையை கண்டறியலாம்.\nரசிகலா என்ன நேரம் வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்பட்டார்? அப்போது வைத்தியர்கள் கடமையில் இருந்தனரா? ரசிகலாவிற்கு வலிப்பு வந்ததா? கட்டிலில் இருந்து கீழே விழுந்தாரா? வலிப்பு வந்ததாக அங்குள்ள பெண்மணி தொலைபேசியில் தெரிவித்தாரா? அப்படி தெரிவித்திருந்தால், பின்னர் என் மறுத்தார்? தெரிவிக்கவில்லையாயின், ரசிகலாவின் தாயார் ஏன் அப்படி சொன்னார்? மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டபோது என்ன நிலையில் கொண்டு செல்லப்பட்டார்? என்ற வினாக்களிற்கு முறையான விடைகள் கண்டறியப்பட வேண்டும். தனியே மருத்துவதுறை சார்ந்த விசாரணைக்கு அப்பால், புலன் விசாரணையும் அவசியம். அப்படியென்றால்தான் மக்களின் சந்தேகங்கள் நியாயமாக தீர்க்கப்படும்.\nஇந்த கட்டுரை ஒரு பொது எழுத்தாளர் Reeron அவர்களால் வழங்கப்பட்டு 11 Sep 2017 எமது செய்திப்பிரிவால் பிரசுரிக்கப்பட்டது. இந்த கட்டுரையின் எந்தவொரு தயாரிப்பிலும் தமிழ்வின் செய்திப்பிரிவு பங்கேற்கவில்லை. இக் கட்டுரை சம்பந்தமான கருத்துக்களை Reeron என்பவருக்கு அனுப்ப இங்கே கிளிக் செய்யவும்.
Nanayam Vikatan - 12 January 2014 - அசத்தல் முதலீட்டு திட்டங்கள்! | Senior Citizen, investments, money, Chockalingam Palaniappan - Vikatan\n60 வயது மேலானவர்களுக்கு...\nசீனியர் சிட்டிஸன்கள் ரேட்டிங் இல்லாத கார்ப்பரேட் டெபாசிட்களில் முதலீடு செய்யவேண்டாம்!\nஅறுபது வயது வரைக்குமான முதலீட்டுத் திட்டங்களைப் பற்றி அடிக்கடி நாணயம் விகடன் வாசகர்களுக்குச் சொல்லியிருக்கிறோம். பணி ஓய்வுபெற்று அறுபது வயதைத் தாண்டியவர்கள் முதலீட்டுத் திட்டங்களை எப்படி அமைத்துக் கொள்ள வேண்டும் என்பதைப் பற்றி இப்போது பார்ப்போம்.\n• ரிஸ்க் இல்லாத முதலீடுகள்!\nபொதுவாக, இந்த வயதில் நிரந்தர வருமானம் என்பது இன்றியமையாத ஒன்றாகும். அந்த நிரந்தர வருமானத்தைத் தரக்கூடியது ஃபிக்ஸட் டெபாசிட்கள் மற்றும் பிற கடன் பத்திரங்கள் சார்ந்த உபகரணங்களாகும். வருமான வரி வரம்புக்குள் வராதவர்கள், தங்களின் மாதாந்திர அத்தியாவசியத் தேவைகளுக்கான தொகையை ஈட்டுவதற்கு கீழ்க்கண்ட உபகரணங்களில் முதலீடு செய்யலாம்:\n1. வங்கி டெபாசிட்கள்.\n2. AA மற்றும் அதற்குமேல் ரேட்டிங் கொண்ட கார்ப்பரேட் டெபாசிட்கள்.\n3. AA மற்றும் அதற்குமேல் ரேட்டிங் கொண்ட என்சிடி-கள் (NCD – Non Convertible Debentures).\nஇந்தவகையான முதலீட்டாளர் களுக்கு ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்கு குறைவாக இருப்பதால், மூலத்தில் வரிப் பிடித்தம் செய்வதை 15பி விண்ணப்பம் கொடுத்து, பிடிக்காமல் இருக்கச் செய்யலாம். இந்தவகையான விண்ணப்பத்தை வங்கிகள், கார்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும் என்சிடி வெளியிடும் நிறுவனங்களிடம் பூர்த்தி செய்து கொடுக்கவேண்டும். பல சிறிய வங்கிகள் சீனியர் சிட்டிஸனுக்கு கவர்ச்சியான வட்டி விகிதத்தைக் கொடுக்கின்றன. கீழே அட்டவணையில் கண்ட கார்ப்பரேட் டெபாசிட்களில் தங்களின் ஒருபகுதி முதலீட்டை சீனியர் சிட்டிஸன்ஸ் வைத்துக்கொள்ளலாம்.\nரேட்டிங் இல்லாத நிறுவனங்களில் முதலீடு செய்யவேண்டாம். அவ்வாறு செய்தால், யோசித்து முடிவெடுங்கள். பொதுவாக, நமது ரிசர்வ் பேங்க் மேற்பார்வைக்கு கீழ்வரும் நிறுவனங் களில் முதலீடு செய்வது நல்லது.\nவருமான வரி செலுத்துபவர்களுக்கு வரி செலுத்தத் தேவையில்லாத அல்லது மிகவும் குறைவான வரி செலுத்தக்கூடிய பலவகையான கடன் திட்டங்கள் உள்ளன. அவற்றில் முதலீடு செய்யலாம். தற்போது சந்தையில் பல வகையான டாக்ஸ் ஃப்ரீ (Tax Free) பாண்டுகள் உள்ளன. இவை ஏறக்குறைய ஆண்டுக்கு 9% வரியில்லா வட்டியை வழங்குகின்றன. இந்த பாண்டுகளில் உள்ள ஒரே அசௌகரியம் – 10, 15, அல்லது 20 ஆண்டுகள் இதன் முதிர்வு காலமாகும். ஆனால், வட்டி வருடாவருடம் வழங்கப்படும்.\nஃபிக்ஸட் டெபாசிட்களுக்கு நிகரான குறுகியகால முதலீட்டையும், அதேசமயத்தில் வரும் வருமானத்துக்கு குறைவான வருமான வரியையும் செலுத்த விரும்புபவர்கள் மியூச்சுவல் ஃபண்டு நிறுவனங்கள் வெளியிடும் எஃப்.எம்.பி (FMP – Fixed Maturity Plans) திட்டங்களில் முதலீடு செய்யலாம். இந்தத் திட்டங்கள் 12, 18, 24, 36 மாதங்களுக்கு வெளியிடப்படுகின்றன. ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கு நிகரான வருமானத்தைத் தருகின்றன. அதேசமயத்தில், பணவீக்கத்தைக் கழித்து வருமானம் பார்க்கப்படுவதால், வருமான வரி மிகவும் குறைவாக அல்லது சில சமயங்களில் இல்லாமல்கூட இருக்கிறது.\n• எப்பொழுதும் தேவைப்படும் பணம்:\nஅறுபது வயதுக்கு மேல் உள்ளவர்கள் தங்களுக்கு திடீரென்று பணம் தேவைப்பட்டால் என்ன செய்வது என்று எப்பொழுதும் ஒரு கணிசமான தொகையை தங்களது வங்கி சேவிங்க்ஸ் கணக்கில் வைத்திருப்பார்கள். சேவிங்க்ஸ் கணக்குக்கு வருட வட்டி 4% ஆகும். மேலும், அதிகமான தொகை உங்களது சேவிங்க்ஸ் கணக்கில் இருப்பதைப் பார்த்துவிட்டு, பல வங்கிகள் உங்களை இன்ஷூரன்ஸ் திட்டங்களில் முதலீடு செய்யச் சொல்லி தொந்தரவு செய்வார்கள். அதற்கும் மேல் ஆன்லைன் மூலமாக திருட்டு ஏற்பட வாய்ப்புள்ளது. அவ்வாறு ஏற்பட்டால், இந்தியாவில் வங்கிகள் பொறுப்பு ஏற்றுக்கொள்வதில்லை.\nஆகவே, இந்தப் பிரச்னைகளை எல்லாம் தவிர்ப்பதற்கும், அதிக வருவாயை ஈட்டுவதற்கும், தேவைக்கு அதிகமாக இருக்கும் பணத்தை மியூச்சுவல் ஃபண்டுகள் நடத்தும் அல்ட்ரா ஷார்ட் டேர்ம் ஃபண்டுகளில் (Ultra Short Term Funds) முதலீடு செய்துகொள்ளுங்கள். இந்தத் திட்டங்கள் ஆண்டுக்கு தற்போது 8-9% வருவாயைத் தந்துகொண்டிருக்கின்றன. தேவைப்படுகிறபோது முழுவது மாகவோ அல்லது ஒரு பகுதியாகவோ எடுத்துக்கொள்ளலாம். எந்தவிதமான அபராதத் தொகையும் கிடையாது. வேண்டும் என்கிறபோது, வார நாட்களில், ஒரேநாளில் உங்கள் வங்கிக் கணக்குக்கு பணம் வந்துவிடும். முதலீட்டுக்கு உகந்த சில திட்டங்களை முன்பக்கத்தில் கொடுத்துள்ளேன்.\n• ரிஸ்க் உள்ள முதலீடுகள்:\nரிஸ்க் எடுக்க முடிந்தவர்கள் மற்றும் நிலையான வருமானத்தை எதிர்பார்க்காதவர்கள், டைவர்சிஃபைட் மியூச்சுவல் ஃபண்டு திட்டங்களில் (டிவிடெண்ட் ஆப்ஷனில்) முதலீடு செய்யலாம். சில நல்ல பங்கு சார்ந்த மியூச்சுவல் ஃபண்டு திட்டங்கள் கடந்த பல ஆண்டுகளாக தொடர்ந்து டிவிடெண்டை வழங்கி வருகின்றன. ஃபிக்ஸட் டெபாசிட் வருமானத்துக்கு சமமாக இந்த டிவிடெண்ட் வருமானம் உள்ளது. அதுதவிர, உங்கள் முதலீடும், பங்குச் சந்தை வளர்ச்சியைப் பொறுத்து, ஓரளவு வளர்ந்துகொண்டிருக்கும்.\nஇதில் பெரிய கவர்ச்சி என்னவென்றால், வரும் டிவிடெண்ட் டாக்ஸ் ஃப்ரீ ஆகும். ஒரு பைசாகூட வருமான வரி கட்டத் தேவையில்லை. ஆனால், இந்த டிவிடெண்டுக்கு எந்த ஃபண்டு நிறுவனமும் கேரன்டி தருவதில்லை. சட்டப்படி செய்யவும் கூடாது. மேலே சில நல்ல டிவிடெண்ட் வருமானம் தொடர்ந்து தந்துகொண்டிருக்கக்கூடிய மியூச்சுவல் ஃபண்டு திட்டங்களை கொடுத்துள்ளேன். உங்கள் ரிஸ்க் எடுக்கும் திறனைப் பொறுத்து முதலீடு செய்துகொள்ளுங்கள். அதேபோல், மாதந்தோறும் ஒரு சிறிய தொகை உங்கள் செலவுகள்போக மீதமாகும் என்றால், எஸ்ஐபி (SIP–Systematic Investment Plan) முறையில் இந்த ஃபண்டுகளில் மாதாமாதம் முதலீடு செய்துகொள்ளலாம்.\nஇந்தத் திட்டங்கள் ஒரு முடிவல்ல. நீங்கள் அலசினால் இன்னும் பல நல்ல திட்டங்கள் உங்களுக்கு கிடைக்கும். தேடி ஆராய்ந்து முதலீடு செய்யவும்.\n• செய்யக்கூடாத முதலீடுகள்:\nமேற்சொன்ன இந்தத் திட்டங்களைத் தவிர, குறுகியகாலத்தில் பணத்தை இரட்டிப்பாகத்தரும் பொன்ஸி திட்டங்களில் அறுபது வயதுக்கு மேற்பட்டவர்கள் தயவுசெய்து முதலீடு செய்யவேண்டாம். குறுகிய காலநோக்கில் செய்யப்படும் பங்குச் சந்தை முதலீடுகள் இவர்களுக்கு ஒத்துவராது என்பதால் அந்த ஆஃப்ஷனை நாடவேண்டாம். எஃப் அண்டு ஓ, கமாடிட்டி போன்றவற்றை பொழுதுபோக்காக நினைத்துக்கொண்டு இந்தப் பிரிவைச் சேர்ந்த சிலர் செய்து வருகிறார்கள். இதனால் உங்களது பலநாள் உழைப்பு போகிற இடம் தெரியாமல் மறைந்துவிடும், ஜாக்கிரதை! அதேபோல, அறுபது வயதுக்குமேல் இருப்பவர்களுக்கு ரியல் எஸ்டேட் முதலீடும் கூடாது!\n• 60+ போர்ட்ஃபோலியோ:\nஉங்களின் போர்ட்ஃபோலியோவில் கடன் சார்ந்த, ரிஸ்க் இல்லாத நிரந்தர வருமானம் தரக்கூடிய திட்டங்கள் அதிக சதவிகிதத்தில் இருக்கட்டும். (உங்களிடம் பணம் நிறைய இருக்கிறது என்றால், நீங்கள் தாராளமாக ரிஸ்க் உள்ள முதலீடுகளில் அதிகமாக முதலீடு செய்யலாம்.) சார்ட்டில் கொடுக்கப்பட்டுள்ள வகையில் உங்கள் முதலீடுகளை வைத்துக்கொள்ளலாம்.\nஉங்களது இளமைக்காலத்தில் ஓடிக்கொண்டிருந்திருப்பீர்கள். சுற்றுலா செல்ல உங்களுக்கு நேரமிருந்திருக்காது. ஆனால், இப்போதோ உங்களிடம் நேரத்துக்குப் பஞ்சமிருக்காது. உங்களின் குழந்தைகளைப் பார்க்கச் செல்வது, ஆன்மிக ஸ்தலங்களுக்குச் செல்வது, திருமண நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளச் செல்வது என அடிக்கடி டூர் செல்லவேண்டியிருக்கும்.\nஇதற்காக உங்களுக்கு ஆகும் வருடாந்திர செலவை உத்தேசித்து, அதை 12ஆல் வகுத்து நாம் மேலே கூறிய அல்ட்ரா ஷார்ட் டேர்ம் ஃபண்டுகளில் முதலீடு செய்துகொள்ளுங்கள். உங்களுக்கு வேண்டும்போது எடுத்து செலவு செய்துகொள்ளலாம்.
மதுரை வைகை ஆற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்டியது வீணானதா? கழிவுநீர் தேங்குவதால் பரவும் தொற்று நோய்கள் | Madurai smart city plan - hindutamil.in\nPublished : 15 Apr 2021 19:35 pm\nUpdated : 15 Apr 2021 19:35 pm\nPublished : 15 Apr 2021 07:35 PM\nLast Updated : 15 Apr 2021 07:35 PM\nமதுரையில் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்ட நிதி ரூ.21 கோடியைக் கொட்டி வைகை ஆற்றில் தடுப்பணைகள் கட்டியது வீணாகியுள்ளது.\nதற்போது அந்த தடுப்பணைகளில் கழிவு நீர் மட்டுமே தேங்குவதால் அருகில் உள்ள குடியிருப்புகளில் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.\nதென்தமிழகத்தின் முக்கிய நதிகளில் வைகை ஆறு முக்கியமானது. மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள மேகமலையில் உற்பத்தியில் இந்த ஆறு, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய6மாவட்டங்களை செழிக்க செய்து கடலில் சென்று கலக்கிறது.\nகடந்த 25 ஆண்டிற்கு முன் வரை, வைகை அணையில் தண்ணீர் திறந்துவிடாவிட்டாலும் ஆங்காங்கே ஆற்று வழித்தடத்தில் இணையும் கிளை நீரோடைகளில் இருந்து வரும் தண்ணீர் ஆற்றில் கலந்து ஆண்டுமுழுவதும் வைகை ஆற்றில் நீரோட்டம் காணப்படும்.\nஅணையில் தண்ணீர் திறந்துவிட்டால் இரு கரைகளையும் தொட்டப்படி வைகை ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடும். காலப்போக்கில் ஆற்று வழித்தடத்தில் உள்ள கிளை நதிகள் மாயமானதோடு வைகை ஆற்றின் மணலும் பெருமளவு கொள்ளைப்போனதால் ஆற்றின் நீரோட்டம் தடைப்பட்டது.\nமேலும், மழைப்பொழிவும் குறைந்ததால் வைகை ஆறு வறட்சிக்கு இலக்காக தொடங்கியது. அதனால், கடந்த 10 ஆண்டுகளாக மழைக்காலத்தில் கூட வைகை அணையில் தண்ணீர் திறந்துவிட்டால் மட்டுமே வைகை ஆற்றில் நீரோட்டம் காணப்படுகிறது. மற்ற நாட்களில் வைகை ஆற்றில் கழிவு நீர் மட்டுமே சிறுநீரோடைபோல் ஓடுகிறது.\nஇந்நிலையில் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தில் மதுரை நகர்ப்பகுதி வைகை ஆற்றில் ஆண்டு முழுவதுமே நீரோட்டம் காணப்படுவதற்கும், தண்ணீரை தேங்கி நகர்ப் பகுதியில் நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தவும் இரு தடுப்பணைகள் கட்டப்பட்டன.\nஏவி மேம்பாலம் அருகே ஒரு தடுப்பணையும், ஒபுளாபடித்துறையில் மற்றொரு தடுப்பணையும் ரூ. 21 கோடியில் கட்டப்பட்டன. தடுப்பணை கட்ட2ஆண்டுகளாகியது. இதுவரை இந்த தடுப்பணையால் வைகை ஆற்றில் வரும் தண்ணீரைத் தேக்கி வைக்கவும் முடியவில்லை. அதன் மூலம் நகரில் ஆண்டு முழுவதும் வைகை ஆற்றில் நீரோட்டத்தைப் பராமரிக்கவும் முடியவில்லை.\nதற்போது வரை தடுப்பணைகளில் ஆங்காங்கே நகர்ப் பகுதியில் திறந்துவிடப்படும் கழிவு நீரை மட்டுமே தேக்கி வைக்க முடிகிறது. அதில் கொசுக்கள் உற்பத்தியாகி அருகில் உள்ள குடியிருப்புகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவுகிறது.\nவைகை அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடும்போது மட்டும் தடுப்பணைகளில் தண்ணீர் ஒரளவு தேங்கி நிற்கிறது. அந்தத் தண்ணீரையும் உடனடியாக அதிகாரிகள் திறந்துவிட்டுவிடுகின்றனர். அதனால், எந்த நோக்கத்திற்காக வைகை ஆற்றில் ரூ.21 கோடியில் ‘ஸ்மார்ட் சிட்டி’ நிதியை கொட்டி தடுப்பணையை மாநகராட்சி கட்டியதோ அந்த நோக்கம் நிறைவடையாமல் போய்விட்டது.\nமாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘தடுப்பணைகள் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. ஆற்றில் தண்ணீர் திறந்துவிடும்போதுதான் தற்போது தடுப்பணைகளில் தண்ணீரை தேக்கி தெப்பக்குளத்திற்கு திருப்பி விடப்படுகிறது.\nமற்ற நாட்களில் தண்ணீரைத் தேக்கினால் சாக்கடை நீர் தேங்கிவிடும் என்பதால் திறந்துவிட்டுவிடுகின்றனர். இன்னும் தடுப்பணைகள் முழுமையான பயன்பாட்டிற்கு வரவில்லை.\n‘ஸ்மார்ட் சிட்டி’ பணிகளும் நிறைவடையவில்லை. அனைத்துப்பணிகளும் நிறைவடைந்தபிறகு தடுப்பணைகளால் மதுரைக்கு பலன் கிடைக்கும், ’’ என்றனர்.\n'ஒரு 100 ரூபாய் கூட வைக்க மாட்டியா'?- திருடச் சென்ற வீட்டில் பணம் இல்லாததால் திருடர்கள் விரக்தி\nமதுரை வைகை ஆறுஸ்மார்ட் சிட்டிபரவும் தொற்று நோய்கள்ரூ.21 கோடி
அழகு Archives | Kuruvi\nகண்ணை சுற்றிலும் கருப்பா அசிங்கமா இருக்கா? இதனை போக்க என்ன செய்யலாம்?\nEditor2- April 17, 2021 0\nமுகத்தின் அழகைக் கெடுப்பதில் முக்கியமான ஒன்று தான் கருவளையம். அத்தகைய கருவளையம் சிலருக்கு அதிகம் இருக்கிறது.இதற்கு பல காரணங்கள் உண்டு. அவற்றை மறைக்க பல அழகு சாதனப் பொருட்களை பயன்படுத்துகின்றனர். கருவளையங்கள் உண்மையில் வருவதற்கு...\nஉங்க உதடு கருப்பா இருக்கா? இதனை போக்க இதோ சூப்பரான டிப்ஸ்\nபொதுவாக பெண்கள் சிலருடைய முகத்தில் சரும துளைகள் காணப்படுவதுண்டு. இது ஆழமான புள்ளிகள் போன்றோ, தடிப்புகள் போன்றோ காட்சியளிக்கும். அதனால் அவர்களுடைய முகம் மிருதுவாக அல்லாமல் முரட்டுத்தனமாக தோன்றும். சருமத்தில் துளைகள் இருப்பது இயல்பானது தான்...\nகால்களை அசிங்கமாக்கும் பித்த வெடிப்பை தடுக்க வேண்டுமா? இதோ சூப்பரான வழிகள்\nபாத வெடிப்பு பிரச்சனை பொதுவாக கிருமிகளின் தொற்று மூலமாகவும், உடலின் ஊட்டச்சத்து குறைபாட்டினாலும் ஏற்படுகிறது. நாளடைவில் இது பாதத்தின் அழகும் குறைந்து,பாத வெடிப்பு புண்களாக மாறி வலியையும் ஏற்படுத்துகிறது. பாதத்தில் ஏற்படும் பாத வெடிப்புகளை ஒரு...\nபொதுவான இன்றைய காலத்தில் குழந்தைகளுக்கு கூட நரைமுடி பிரச்சினை வந்துவிட்டது. ஊட்டச்சத்துக்கள் பற்றாக்குறை, உணவு பற்றாக்குறை போன்றவையும் முன்கூட்டியே நரை விழ தொடங்க காரணங்களில் ஒன்றாகிவிடுகிறது. இதனை ஆரம்பத்திலே கட்டுப்படுத்துவதே நல்லதாகும். இல்லாவிடின் இது வளர...\nநகங்களை அழகாக பராமரிக்க இதோ சில சூப்பரான டிப்ஸ்!\nபொதுவாக நகம் வளர்ப்பது ஒரு சிலருக்கு பிடித்தமான ஒரு விஷயம். குறிப்பாக பெண்களுக்கு நீளமாக நகம் வளர்த்து அதில் விதவிதமாக நெயில்பாலிஷ் போட்டு அழகு பார்ப்பது அவர்களின் பொழுதுபோக்காக இருக்கக்கூடும். ஆனால் நகம் வளர்ப்பது...\nகூந்தலை பாதிக்கும் பொடுகு பிரச்சினைக்கு தீர்வு வேண்டுமா?\nபொதுவாக இன்றைக்கு பலர் பொடுகு பிரச்சினையால் அவதிப்பட்டு வருகின்றார்கள். இது ஏற்பட வறண்ட சருமம், ஹார்மோன்களின் அளவில் ஏற்படும் மாறுபாடு, பூஞ்சை போன்ற நுண்ணுயிரித் தொற்றுகள், மனஅழுத்தம் போன்றவை காரணமாக அமைகின்றது. பொடுகின் தொல்லை அதிகமானால்...
லேவியர் அதிகாரம் - 19 - திருவிவிலியம் - Catholic Gallery - Bible லேவியர் அதிகாரம் - 19 - திருவிவிலியம் - Catholic Gallery - Bible\nHome Tamil லேவியர் அதிகாரம் - 19 - திருவிவிலியம்\n2 “நீ இஸ்ரயேல் மக்களிடம் கூறவேண்டியது; தூயோராய் இருங்கள். ஏனெனில் உங்கள் கடவுளும் ஆண்டவருமாகிய நான் தூயவர்!\n3 நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் தாய் தந்தைக்கு அஞ்சுங்கள். என் ஓய்வு நாளைக் கடைப்பிடியுங்கள். நானே உங்கள் கடவுளாகிய ஆண்டவர்!\n4 சிலைகள் பக்கம் திரும்ப வேண்டாம். உங்களுக்கெனத் தெய்வப் படிமங்களை வார்த்துக் கொள்ள வேண்டாம். நானே உங்கள் கடவுளாகிய ஆண்டவர்!\n5 ஆண்டவருக்கு நல்லுறவுப்பலி செலுத்தினால் அதை மனமுவந்து செய்யுங்கள்.\n6 நீங்கள் பலி செலுத்தும் நாளன்றும், மறுநாளும் உண்டு, மூன்றாம் நாள் எஞ்சியதைச் சுட்டெரியுங்கள்.\n7 மூன்றாம் நாளில் எஞ்சியதை உண்டால், அது திகட்டும், விருப்பமாய் இராது.\n8 அவ்வாறு உண்போர் தம்பழியைத் தாமே சுமப்பர். ஏனெனில் அவர்கள் ஆண்டவரின் பார்வையில் தூய்மையானதை இழிவுக்குள்ளாக்கினர். அந்த மனிதர் அவர்கள் இனத்தில் இராதபடி அழிக்கப்படுவர்.\n9 உங்கள் நாட்டில் நீங்கள் பயிரிட்டதை அறுவடை செய்யும்போது, வரப்பு ஓரக் கதிரை அறுக்கவேண்டாம். சிந்திக் கிடக்கும் கதிரையும் பொறுக்க வேண்டாம்;\n10 திராட்சைத் தோட்டத்தில் பின்னறுப்பு வேண்டாம்; சிந்திக் கிடக்கும் பழங்களைப் பொறுக்க வேண்டாம். அவற்றை எளியோருக்கும் அன்னியருக்கும் விட்டுவிட வேண்டும். நானே உங்கள் ஆண்டவராகிய கடவுள்!\n11 களவு செய்யாமலும், பொய் சொல்லாமலும் ஒருவரை ஒருவர் வஞ்சியாமலும்,\n12 என் பெயரால் பொய்யாணையிட்டு, உங்கள் கடவுளின் பெயருக்கு இழுக்கு ஏற்படுத்தாமலும் இருங்கள். நான் ஆண்டவர்!\n13 அடுத்திருப்பவரை ஒடுக்கவோ அவருக்குரியதைக் கொள்ளையிடவோ வேண்டாம்; வேலையாளின் கூலி விடியும்வரை உன்னிடம் இருத்தல் ஆகாது.\n14 காது கேளாதோரைச் சபிக்காதே! பார்வையற்றோரை இடறச் செய்யாதே! உன் கடவுளுக்கு அஞ்சி நட. நான் ஆண்டவர்!\n15 தீர்ப்பிடுகையில், அநீதி இழைக்காதே. சிறியோர் பெரியோர் என முகம் பாராது, உனக்கு அடுத்து வாழ்வோர்க்கு நேர்மையுடன் நீதி வழங்கு.\n16 உன் இனத்தாருக்குள் புறங்கூறித் திரியாதே. உனக்கு அடுத்து வாழ்பவரின் குருதிப் பழிக்குக் காரணம் ஆகாதே! நான் ஆண்டவர்!\n17 உன் சகோதரரை உன் உள்ளத்தில் பகைக்காதே! உனக்கடுத்தவர் பாவம் செய்யாதபடி அவரைக் கடிந்து கொள்.\n18 பழிக்குப் பழியென உன் இனத்தார்மேல் காழ்ப்புக் கொள்ளாதே. உன் மீது நீ அன்புகூர்வதுபோல் உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்பு கூர்வாயாக! நான் ஆண்டவர்!\n19 என் கட்டளைகளைக் கடைப்பிடி. உன் கால்நடைகளை வேறுவகை விலங்குகளோடு பொலியவிடாதே. உன் வயலில் இருவகைத் தானியங்களை ஒரே நேரத்தில் விதைக்காதே! இருவகை நூலுள்ள உடை அணியாதே!\n20 ஒருவனுக்கு மண ஒப்பந்தமான, ஆனால் பிணை கொடுத்து விடுவிக்கப்படாத அடிமைப் பெண்ணோடு வேறொருவன் உடலுறவு கொண்டால் அவர்கள் தண்டிக்கப்படவேண்டும்; கொல்லப்பட வேண்டாம்; அவள் தன்னுரிமை பெற்றவளல்ல.\n21 அவன் தன் குற்றப்பழி நீக்கும் பலியாக ஆட்டுக்கிடாய் ஒன்றை ஆண்டவருக்குச் சந்திப்புக் கூடார வாயிலுக்குள் கொண்டுவர வேண்டும்.\n22 அதனால் அவன் செய்த குற்றத்திற்காக, ஆண்டவர் திருமுன் குரு கறைநீக்கம் செய்வார். அப்போது அவள் செய்த பாவம் மன்னிக்கப்படும்.\n23 நீங்கள் இந்நாட்டில் எவ்விதக் கனிமரங்களை நட்டாலும், அவற்றின் கனி துண்டிக்கப்பட வேண்டும்; அதாவது மூன்றாண்டு உண்ணப்படாமல் விலக்கப்பட்டிருக்கும்.\n24 நான்காம் ஆண்டு அவற்றின் கனி முழுவதும் ஆண்டவருக்குப் படைக்கப்பட்டுத் தூய்மையாகும்.\n25 ஐந்தாம் ஆண்டில் அவற்றின் கனியை உண்ணலாம். அதுமுதல் அவை உங்களுக்குப் பலன் அளித்துவரும். நான் உங்கள் கடவுளாகிய ஆண்டவர்!\n26 எந்த இறைச்சியையும் குருதியோடு உண்ண வேண்டாம்; குறி பார்க்க வேண்டாம்; நாள் பார்க்க வேண்டாம்.\n27 தலைமுடியைத் திருத்திக் கொள்ள வேண்டாம்.\n28 செத்தவனுக்காக உடலைக் கீறிக்கொள்ள வேண்டாம்; பச்சை குத்திக்கொள்ளவும் வேண்டாம்; நானே ஆண்டவர்!\n29 நாட்டில் விபசாரம் வளர்ந்து, ஒழுக்கக்கேடு பெருகாதபடி, உன் மகளை இழிவுபடுத்தி வேசித்தனம் பண்ண அனுமதியாதே!\n30 ஓய்வு நாள்களைக் கடைப்பிடித்து, என் தூயகத்தைக் குறித்து அச்சம் கொள்ளுங்கள்; நானே ஆண்டவர்!\n31 பில்லி சூனியம் பார்க்க வேண்டாம்; குறிகாரரை அணுகவேண்டாம்; அவர்களைத் தேடி அவர்களால் தீட்டாக வேண்டாம். நானே உங்கள் கடவுளாகிய ஆண்டவர்!\n32 நரை திரண்டவருக்குமுன் எழுந்து நில். முதிர்ந்தவர் முகத்தை மதித்து நட; உன் கடவுளுக்கு அஞ்சி வாழ்; நானே ஆண்டவர்!\n33 உங்கள் நாட்டில் தங்கியிருக்கும் அன்னியருக்குத் தீங்கிழைக்காதே!\n34 உங்களிடம் தங்கும் அன்னியர் உங்கள் நாட்டில் பிறந்தவரைப் போல் இருக்க வேண்டும். உங்கள் மீது நீங்கள் அன்புகூர்வதுபோல் அவர் மீதும் அன்புகூருங்கள். ஏனெனில், எகிப்தில் நீங்களும் அன்னியர்களாய் இருந்தீர்கள்; நானே உங்கள் கடவுளாகிய ஆண்டவர்!\n35 நீட்டல், நிறுத்தல், கொள்ளல் ஆகிய அளவுகளில் நேர்மையைக் கடைப்பிடியுங்கள்.\n36 தராசும், படிக்கல்லும், மரக்காலும் அளவு சரியான படியும் உங்களிடம் இருக்கட்டும்! உங்களை எகிப்து நாட்டினின்று வெளிக்கொணர்ந்த உங்கள் கடவுளாகிய ஆண்டவர் நானே!\n37 நீங்கள் என் எல்லா நியமங்களையும் கட்டளைகளையும் கடைப்பிடித்து ஒழுகுங்கள்; நானே ஆண்டவர்!
அதிகமானோர் கோவிட் தொற்றுக்குள்ளான நாடுகளின் பட்டியலில் இந்தியாவுக்கு 3ஆவது இடம் - Vanakkam Malaysia\nHome/Latest/அதிகமானோர் கோவிட் தொற்றுக்குள்ளான நாடுகளின் பட்டியலில் இந்தியாவுக்கு 3ஆவது இடம்\nபுதுடில்லி, ஜூலை 11 – கோவிட் தொற்றினால் அதிகமாக பாதிக்கப்பட்ட மக்களைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா தற்போது மூன்றாவது இடத்தை பெற்றுள்ளது. இந்தியாவில் இந்த உயிர்க்கொல்லி தொற்றுக்கு இதுவரை 822,603 பேர் உள்ளாகியுள்ளனர்.\nஅதோடு இதுவரை கோவிட் தொற்றினால் அந்நாட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 22,144 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை இந்த நோயினால் 516,206 பேர் முழுமையாக குணமடைந்துள்ளனர். கோவிட் தொற்றுக்கு உள்ளானவர்களில் இன்னும் 8.,944 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nஅமெரிக்காவில் இதுவரை 136,671பேர் கோவிட் தொற்றினால் உயிரிழந்துள்ளனர். அந்நாட்டில் இன்னமும் 15,000த்திற்கும் மேற்பட்டோர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்னர். இவர்களில் பலர் கவலைக்கிடமாக இருப்பதால் அமெரிக்காவில் கோவிட் தொற்று மேலும் பெரிய அளவில் உயிர்ச்சேதத்தை ஏற்படுத்தும் என மருத்துவர்கள் அஞ்சுகின்றனர். அமெரிக்காவில் இதுவரை கோவிட் தொற்றுக்கு 32 லட்சத்து 91,786 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்நாட்டில் தினசரி இந்த தொற்றின் பாதிப்பக்கு ஆளாகி வருபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.\nஅமெரிக்காவுக்கு அடுத்து உலகில் கோவிட் தொற்றினால் மோசமான பாதிப்புக்கு உள்ளான நாடாக பிரேசில் விளங்குகிறது.. அந்த தென் அமெரிக்க நாட்டில் இதுவரை 70,524 பேர் மரணம் அடைந்துள்ளனர். அந்நாட்டில் 18 லட்சத்து 4,338 பேர் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். 8,000த்திற்கும் மேற்பட்டோர் தீவிர சிகிக்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nலஞ்சம் வாங்கும் எல்லை பாதுகாப்பு அதிகாரிகள் துரோகிகள் – IGP சாடல்
ஐபிஎல் வீரர்களுக்கு அட்வைஸ் செய்த ஆஇஷிஷ் நெஹ்ரா – Chennaionline\nஐபிஎல் வீரர்களுக்கு அட்வைஸ் செய்த ஆஇஷிஷ் நெஹ்ரா\nஐபிஎல் டி20 கிரிக்கெட் லீக் செப்டம்பர் 19-ந்தேதியில் இருந்து நவம்பர் 10-ந்தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற இருக்கிறது. இதற்கு முன் வரும் 18-ந்தேதியில் இருந்து செப்டம்பர் 10-ந்தேதி கரீபியன் பிரிமீயர் லீக் நடக்கிறது.\nஇந்த தொடரில் பொல்லார்டு (மும்பை இந்தியன்ஸ்), இம்ரான் தாஹிர் (சென்னை சூப்பர் கிங்ஸ்), ரஷித் கான் (சன்ரைசர்ஸ் ஐதராபாத்) போன்ற முன்னணி வீரர்கள் விளையாடுகிறார்கள். இது அவர்களுக்கு ஐபிஎல் தொடரில் பயனளிப்பதாக இருக்கும் என ஆஷிஷ் நெஹ்ரா தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து ஆஷிஷ் நெஹ்ரா கூறுகையில் ‘‘கரீபியன் பிரீமியர் லீக்கில் விளையாடும் வீரர்கள், அங்கு காட்டிய திறமையை அப்படியே ஐபிஎல் தொடரில் காட்டுவார்கள் என்று சொல்லமாட்டேன். ஆனால், மற்ற வீரர்களை காட்டிலும் நிச்சயம் பயனடைவார்கள்.\nஒரு மாத காலம் விளையாடிய பின், ஐக்கிய அரபு அமீரகம் வரும்போது பொல்லார்டு, இம்ரான் தாஹிர், ரஷத் கான் ஆகியோருக்கு மாற்றத்தை ஏற்படுத்தும். இன்று கூட இம்ரான் தாஹிர் விக்கெட் வீழ்த்தினால், 18 வயது வீரர்கள் போல் சந்தோசத்தை வெளிப்படுத்துகிறார். அவர் ஒரு அர்ப்பணிப்பான வீரர்.\nவயதை பற்றி பேசும்போது, அதிகமான போட்டியில் விளையாடும்போது, இந்த வயதில் அதிக பயிற்சி அது எப்போதுமே சிறந்ததாக இருக்கும். கரீபியன் பிரிமீயர் லீக்கில் விளையாடிய பிறகு ஐபிஎல் தொடரில் விளையாடுவது அவருக்கு சிறப்பானதாக இருக்கும்’’ என்றார்.\n← இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் – 2வது நாள் முடிவில் பாகிஸ்தான் 9/223\nகிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக டோனி அறிவிப்பு! →
Rajinikanth: ஹைதராபாத்தே வேணாம்டா சாமி: ரஜினிக்காக சென்னையில் அண்ணாத்த ஷூட்டிங் - Annaatthe Shooting To Resume In Chennai » Tamil News Spot\nDec 30, 2020 Annaatthe, Chennai, Rajinikanth, resume, Shooting, அணணதத, சனனயல, சம, ரஜனககக, வணமட, ஷடடங, ஹதரபதத\nகொரோனா வைரஸ் பிரச்சனையால் பல மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அண்ணாத்த படப்பிடிப்பு கடந்த 14ம் தேதி துவங்கியது. ஹைதராபாத்தில் இருக்கும் ராமோஜிராவ் ஃபிலிம்சிட்டியில் பிரமாண்ட செட் போட்டு படப்பிடிப்பை நடத்தினார்கள்.\nகொரோனா பிரச்சனை இருப்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் செயல்பட்டனர். படப்பிடிப்பு தளத்தில் இருந்து யாரும் வெளியே செல்ல அனுமதிக்கவில்லை. அதே போன்று வெளியாட்கள் யாரையும் உள்ளே அனுமதிக்கவில்லை. அப்படி இருந்தும் படக்குழுவை சேர்ந்த4பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது.\nஇதையடுத்து படப்பிடிப்பை தற்காலிகமாக நிறுத்தி வைத்தனர். தன்னை தனிமைப்படுத்திக் கொண்ட ரஜினிக்கு உயர் ரத்த அழுத்த பிரச்சனை ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த வெள்ளிக்கிழமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் ஞாயிற்றுக்கிழமை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.\nகட்சியே வேணாம்னு ரஜினி சொல்லும் அளவுக்கு ஹைதராபாத்தில் நடந்தது என்ன?\nடிஸ்சார்ஜ் ஆனவுடன் ரஜினி சென்னை திரும்பினார். அவர் முழு ஓய்வில் இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் வலியுறுத்தியுள்ளனர். இதையடுத்து கட்சி துவங்கவில்லை என்று அறிவித்தார் ரஜினி. கொரோனா பிரச்சனை தற்போதைக்கு தீர்வதாக இல்லை. மேலும் கொரோனா புது உருவத்தில் வேறு வந்து மிரட்டுகிறது. அப்படி என்றால் அண்ணாத்த படப்பிடிப்பு என்னவாகும் என்று பலரும் கேள்வி எழுப்பினார்கள்.\nஇந்நிலையில் பிப்ரவரி மாதம் அண்ணாத்த படப்பிடிப்பில் கலந்து கொள்கிறாராம் ரஜினி. அவர் ஹைதராபாத் வரை பயணம் செய்ய முடியாது என்பதால் சென்னையிலேயே செட் போடுகிறார்களாம். சென்னையில் படப்பிடிப்பை நடத்தினால் மட்டும் கொரோனா வைரஸ் பாதிப்பு யாருக்கும் ஏற்படாதா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.\nஅண்ணாத்த படத்தில் ரஜினி தொடர்பான காட்சிகள் தான் படமாக்கப்பட வேண்டியுள்ளது. அதனால் அவர் இல்லாமல் படப்பிடிப்பை நடத்த முடியாது. முன்னதாக அண்ணாத்த படத்திற்காக சென்னையில் தான் செட் போட்டார்கள். அதன் பிறகே ஹைதரபாத்தில் செட் போட்டு படப்பிடிப்பை நடத்தினார்கள்.\nஅண்ணாத்த படத்தில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா, பிரகாஷ்ராஜ், சூரி, சதீஷ் என்று ஒரு நட்சத்திர பட்டாளமே நடிக்கிறது. படத்திற்கு இமான் இசையமைக்கிறார்.\n100% இருக்கையுடன் தியேட்டர்களில் படம் திரையிடுவது பற்றி உங்கள் கருத்து என்ன? #VikatanPoll
கொரோனா தொற்று ஏற்பட்டவர்களுக்கு காத்திருக்கும் ஆபத்து!- புதிய ஆய்வில் வெளியான தகவல் – ITN Tamil\nகொரோனா தொற்று ஏற்பட்டவர்களுக்கு காத்திருக்கும் ஆபத்து!- புதிய ஆய்வில் வெளியான தகவல்\nகொரோனா பாதிப்பால் நிரந்தர காது கேளா பிரச்சினை ஏற்படலாம் என புதிய ஆய்வில் தெரியவந்து உள்ளது.\n‘பி.எம்.ஜே கேஸ் ரிப்போர்ட்ஸ்’ இதழில் வெளியிடப்பட்ட ஆராய்ச்சியில் ஆஸ்துமா நோயாளியாக இருக்கும் 45 வயது மனிதர் ஒருவர் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. கொரோனா வைரஸால் கடுமையாக பாதிக்கப்பட்ட பின்னர், அவரது செவிப்புலன் திறன் திடீரென பறிபோனது.\nஆராய்ச்சியாளர்கள் ஒரு ஆய்வில், ‘அதிக எண்ணிக்கையிலான மக்கள் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதால், தொற்றால் காதுகளில் ஏற்படும் பிரச்சினை குறித்து மேலும் ஆராய்ச்சி தேவைப்படுகிறது.\nஆராய்ச்சிகள் மூலம்தான் இந்த பிரச்சினையின் மூலம் கண்டறியப்பட்டு அதற்கான நிவாரணத்தை நம்மால் கண்டுபிடிக்க முடியும்.’ என்று கூறியுள்ளனர்.\nபரீட்சையில் மயக்கமுற்ற மாணவி! வெளியான பகீர் தகவல் -நடந்தது என்ன‌?\nகர்ப்பமான யாழ் தாய்க்கு; அலுவலகத்தில் நடந்த கொடூரம்
Positive confrontation with awful motor motorcycles near Balugal;2people are seriously treated for another || பளுகல் அருகே பரிதாபம் மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதல்;2பேர் பலி மற்றொருவருக்கு தீவிர சிகிச்சை\nபளுகல் அருகே பரிதாபம் மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதல்;2பேர் பலி மற்றொருவருக்கு தீவிர சிகிச்சை + "||" + Positive confrontation with awful motor motorcycles near Balugal;2people are seriously treated for another\nகேரள மாநிலம் பாறசாலை மஞ்சவிளையை சேர்ந்தவர் சுபின்குமார் (வயது 42), பளுகல் பகுதியில் உள்ள டாஸ்மாக் மதுக்கடையில் ஊழியராக பணியாற்றி வந்தார். இவர் நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார். சந்தை அருகே சென்றபோது எதிரே மற்றொரு மோட்டார் சைக்கிள் வந்தது.\nஅதில் நெல்லை மாவட்டம் நாங்குநேரி கீழதேவநல்லூர் வடக்குத்தெருவை சேர்ந்த மாரி (24), ராமநேரியை சேர்ந்த சித்திரைவேல் (20) ஆகியோர் வந்தனர். இந்த நிலையில் கண்ணிமைக்கும் நேரத்தில்2மோட்டார் சைக்கிள்களும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இந்த விபத்தில்3பேரும் ரோட்டில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார்கள். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டு இருந்த3பேரையும் மீட்டு சிகிச்சைக்காக திருவனந்தபுரம் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.\nஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே சுபின்குமாரும், மாரியும் பரிதாபமாக பலியானார்கள்.\nபடுகாயம் அடைந்த சித்திரைவேலுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nஇச்சம்பவம் குறித்து பளுகல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் மாரியும், சித்திரைவேலும் பளுகலில் உள்ள உறவினர் வீட்டுக்கு செல்வதற்காக மோட்டார் சைக்கிளில் வந்துள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக இந்த விபத்து நடந்துள்ளது.\n1. ஜப்பானில் புயல் ருத்ரதாண்டவம்; 25 பேர் பலி - மீட்பு பணி தீவிரம்\nஜப்பான் நாட்டில் ‘ஹிகிபிஸ்’ புயல் ருத்ர தாண்டவமாடியது. 25 பேர் பலியாகினர். மீட்பு பணியில் ஹெலிகாப்டர்களும், படகுகளும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.\n2. கிராண்ட் ரோடு அடுக்குமாடி கட்டிடத்தில் பயங்கர தீ - வாலிபர் பலி: தீயணைப்பு வீரர்கள் காயம்\nகிராண்ட் ரோடு அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் வாலிபர் பலியானார். தீயணைப்பு வீரர்கள் காயமடைந்தனர்.\n3. மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதல்; கல்லூரி மாணவர் பலி தாயாருக்கு தீவிர சிகிச்சை\n4. கிருஷ்ணகிரியில் கோவில் குளத்தில் மூழ்கி பக்தர் பலி\nகிருஷ்ணகிரியில் கோவில் குளத்தில் மூழ்கி பக்தர் பலியானார்.\n5. தடுப்பு கட்டையில் ஸ்கூட்டர் மோதிய விபத்தில் திருச்சி என்.ஐ.டி. மாணவி பலி\nதடுப்பு கட்டையில் ஸ்கூட்டர் மோதிய விபத்தில் திருச்சி என்.ஐ.டி. மாணவி பலியானார்.
Kalakkapovadhu Yaaru Season5– Grand Finale- 17th July 2016 | Promo 2\nVijay Tv S Pagal NIlavu 28-07-2017 Vijaytv Serial 372802 - நந்தினி தேவசேனா யார் தெரியுமா?3- Keladi Kanmani 28-07-2017 Sun Tv Serial Online 159296 - Mahamayi 28-07-17 Zee Tamil 19905 - Chandira Nandhini 28-07-2017 – Vijay tv Serial 106897 - நான் பிக்பாஸை விட்டு போகிறேன்! ஓவியா அழுகை – ஜூலியின் சதியா2- பிரியமானவள் இசை யார் தெரியுமா?4- Kalyana Parisu 28-07-2017 – Sun TV Serial Watch Online 121608 - See all\nஉங்கள் பிறந்த தேதி என்ன? இந்த விலங்கினங்களின் குணங்கள் தான் இருக்குமாம்! 2123 - காகத்திற்கு சோறு வைப்பதன் ரகசியம் 420 - உங்கள் வீட்டில் யாரும் சாகக்கூடாதா.? உயிரை காப்பாற்றும் ஆப்..! 142 - உங்கள் எதிர்கால மனைவியின் பெயரை அறிய வேண்டுமா?? இதை மட்டும் ட்ரை பண்ணுங்க! 240 - See all
என்னதான் பாட்டு பாடினாலும்.. டான்ஸ் ஆடினாலும்.. டிக் டாக் சோனாலியை நிராகரித்த ஆதம்பூர் | haryana assembly election results 2019: Tik toc fame Sonali Phogat loses in Adampur - Tamil Oneindia\n| Updated: Thursday, October 24, 2019, 17:52 [IST]\nசண்டிகர்: டிக்டாக் பிரபலம் சோனாலி போகத் தோற்றுப் போய் விட்டார்.. இதுவும் இன்று ஹரியானாவில் முக்கியச் செய்திதான்.\nடிக்டாக் செய்தே பிரபலமானவர் சோனாலி. ஹரியானாவில் இவரது டிக்டாக் வீடியோக்களுக்கு அத்தனை மவுசு இருக்கிறது. பலரும் இவரது வீடியோக்களுக்கு பெரும் ரசிகர்கள்.\nரசிகர்கள் என்றால் சும்மா இருக்க வேண்டியதுதானே.. இவருக்கு பாஜகவில் சீட் கேட்டு ஒரு பிரச்சாரமே நடத்தி விட்டனர். விடுமா பாஜக .. சோனாலியை டக்கென உள்ளே இழுத்துப் போட்டு சீட் கொடுத்து ஆதம்பூர் தொகுதியில் நிறுத்தி விட்டது.\nஉற்சாகமான சோனாலி டிக்டாக் மூலமாகவும் தனது பிரச்சாரத்தை முன்னெடுத்து அனைவரையும் அசரடித்தார். "தொகுதி மக்களை கவர டிக் டாக் ஆப் மூலமாகவும் பிரச்சாரம் செய்ய போகிறேன், குறிப்பாக தேச பக்தி சம்பந்தமான வீடியோக்களை வெளியிட போகிறேன்" என்று சொல்லிதான் விறுவிறுப்பாக பிரச்சாரம் செய்தார். இவருக்காக இவரது ரசிகர்களும் இணைந்து பாஜகவினருடன் சேர்ந்து பிரச்சாரம் செய்து அசத்தினர். ஆனால் என்ன ஒரு துரதிர்ஷ்டம் பாருங்க.. சோனாலி தோற்றுப் போய் விட்டார்.\nஆதம்பூர் தொகுதியில் மூத்த காங்கிரஸ் தலைவர் குல்தீப் பிஷ்னாய் போட்டியிட்டார்.3முறை எம்எல்ஏவாக இருந்தவர் அவர். அவரை எதிர்த்து தீவிரமாக பிரச்சாரம் செய்தும் சோனாலியால் வெல்ல முடியாமல் போய் விட்டது. கிட்டத்தட்ட 30, 000 வாக்குகள் வித்தியாசத்தில்சோனாலி தோற்றுப் போய்விட்டார்.\nசோனாலி தோற்றாலும் கூட அதிலும் ஒரு சின்ன சாதனையைச் செய்துள்ளார். அரசியலுக்கு புதுமுகமான அவர் தற்போது ஹரியானாவில் கிங் மேக்கராக உருவெடுத்துள்ள ஜேஜேபி கட்சியின் வேட்பாளரை தனக்குப் பின்னால் தள்ளி அதிர வைத்து வட்டார்.\nஇந்த தேர்தலில் குல்தீப்புக்கு 51.66 சதவீத வாக்குகளும், சோனாலிக்கு 27.8 சதவீத வாக்குகளும், ஜேஜேபி வேட்பாளர் ரமேஷ் குமாருக்கு 12.55 சதவீத வாக்குகளும் கிடைத்தன. இதற்கு முன்பு பாஜக பெண் அரசியல்வாதிகள் நிறைய பேர் டிக் டாக் செய்துள்ளனர். ஆனால், சோனாலி டிக் டாக் செய்துவிட்டு அரசியலுக்குள் வந்துள்ளார்.\nஎந்தவித அரசியல் பின்புலம் இல்லாத ஒருவருக்கு, வெறும் டிக்டாக் பாப்புலாரிட்டியை வைத்து பாஜக சீட் தந்தது எந்த அளவுக்கு சரி என தெரியவில்லை. இருந்தாலும், டிக் டாக் செய்த ஒருவர் ஸ்ட்ரைட்டாக அரசியலுக்குள் என்ட்ரி தந்து.. தோல்வியையும் தழுவி உள்ளது, சோனாலிக்கு ஓரளவு அரசியல் அனுபவத்தை பெற்று தரும் என்றே நம்பலாம்!\nharyana assembly election results 2019: Tik toc fame Sonali Phogat loses in Adampur
அண்ணா சிலை அருகே சுரங்கப்பாதை அமைப்பது தான் முதல் வேலை!\nஜீப்பில் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபடும் திருச்சி கிழக்கு தொகுதி திமுக வேட்பாளர்!\nதமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் இந்த மாதம் ஆறாம் தேதி நடைபெற உள்ளது.தமிழகத்தில் மொத்தம் 234 தொகுதிகள் உள்ளன. இந்த 234 தொகுதிகளிலும் வேட்பாளர்கள் பலரும் தங்களது வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளனர். மேலும் தமிழகத்தில் தேர்தல் ஆணையம் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது.தமிழகத்தில் மிகவும் வலிமையான எதிர்க்கட்சியாக உள்ள திமுக, கம்யூனிஸ்ட் ,காங்கிரஸ் கட்சிகளை கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்க உள்ளன.\nதிமுக சார்பில் முதல்வர் வேட்பாளராக திமுக தலைவர் மு க ஸ்டாலின் அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் கடந்த தேர்தலில் போட்டியிட்ட கொளத்தூர் தொகுதியில் மீண்டும் தனது வேட்பு மனு தாக்கல் செய்து தொகுதியில் வேட்பாளராக களமிறங்கியுள்ளார். அவர் தமிழகம் முழுதும் சென்று தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.\nதிருச்சி கிழக்கு தொகுதியில் திமுக சார்பில் வேட்பாளராக இனிகோ இருதயராஜ் அறிவிக்கப்பட்டார். இன்று காலை முதல் ஜீப்பில் சென்று உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். மேலும் தொகுதிக்குட்பட்ட கீழ சிந்தமணி, மேலசிந்தாமணி, தொப்ப குளம் பகுதிகளில் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். மேலும் அவர் கூறினார்.\nதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் திருச்சி கிழக்கு தொகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான அண்ணா சிலை அருகே சுரங்கப்பாதை அமைக்கப்படும் எனவும் அவர் கூறினார்.மேலும் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வையுங்கள் உங்களில் ஒருவனாக இருப்பேன் உங்கள் குடும்பத்தில் ஒருவனாக இருப்பேன் எனவும் அவர் கூறினார்.
நமது வீட்டில் செல்வமும், சந்தோஷமும் எப்பொழுதும் நிலைத்திருக்க நாம் செய்ய வேண்டிய மிகச்சிறந்த பூஜை குபேர லக்ஷ்மி பூஜையாகும். இந்த பூஜையை செய்வதன் மூலம் செல்வத்திற்கு அதிபதியான குபேரனின் அருளையும்,மகாலட்சுமியின் அருளையும் ஒன்று சேர பெறமுடியும். மிக மிக எளிதான இந்த பூஜையை செய்வதனால் கிடைக்கும் பழங்கள் மிக மிக பெரியதாகும். இந்த குபேர லட்சுமி பூஜையை எப்படி செய்வதென்று பார்ப்போம் வாருங்கள்.\nஇந்த பூஜையை செய்ய நாம் இரண்டு நிபந்தனைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். அதாவது இந்த பூஜையை ஒன்பது வாரங்களோ, அல்லது ஒன்பது மாதங்களோ ஒரே நாட்களில் செய்யப்பட வேண்டும் எனவே இதை செய்ய நாம் சரியான நாளை தேர்ந்தெடுக்க வேண்டும். அதாவது ஒன்பது வாரங்கள் செய்ய போகிறோம் என்றால் வாரா வாரம் வெள்ளிக்கிழமைகளில் இதை செய்யலாம், அல்லது ஒன்பது மாதங்கள் செய்ய போகிறோம் என்றால் ஒவ்வொரு மாதமும் வரும் பவுர்ணமி நாட்களிலோ அல்லது அமாவாசை நாட்களிலோ இதை செய்யலாம். இந்த பூஜையை ஒருவரே தான் தொடர்ந்து செய்ய வேண்டும். ஆண், பெண் என எவர் வேண்டுமானாலும் இதைச் செய்யலாம். ஒருவேளை அவருக்கு உடல்நல குறைவு ஏற்பட்டால் அந்த குடும்பத்தை சேர்ந்த வேறொருவர் செய்யலாம்.\nஇரண்டாவது நிபந்தனை இதை செய்ய ஒரே மாதிரியான நாணயங்கள் 81 எடுத்துக்கொள்ள வேண்டும் அந்த நாணயங்கள் ஒரு ரூபாயாகவோ அல்லது வேறு எந்த நாணயமாக இருந்தாலும் எடுத்துக்கொள்ளலாம் ஆனால் அந்த 81 நாணயங்களும் ஒரே மதிப்பிலானவையாக இருக்க வேண்டும்.\nபூஜை எந்தவித தடையும் இல்லாமல் நடைபெறவும், வீட்டில் செல்வம் சேரவும் முழுமுதற்கடவுளான விநாயகரை வழிபடுங்கள்.\nஅந்த நாளில் நல்ல நேரத்தில் உங்கள் வீட்டு பூஜையறையில் ஒரு பலகையின் மீது முன்பக்கம் படத்தில் தரப்பட்டிருப்பது போன்று ஒரு கட்டத்தை குங்குமத்தால் வரைந்துக்கொள்ளுங்கள், எண்களை அரிசி மாவால் எழுதுவதும் சிறந்தது. திருமகளைக் குறிக்கும் விதமாக எழுதப்பட்டுள்ள “ஸ்ரீ’ எனும் எழுத்தை மஞ்சள் பொடியால் எழுதலாம்.\nஇதுவே குபேர யந்திரக் கோலம். அடுத்து, கட்டங்களில் எழுதப்பட்டுள்ளது எழுத்துக்களுக்குப் பக்கத்தில் கட்டத்திற்கு ஒன்று வீதம் ஒன்பது நாணயங்களை வையுங்கள். எழுத்தை அழித்தோ, மறைத்தோ வைக்கக்கூடாது. எனவே யந்திரத்தை வரையும் போதே அதற்கு ஏற்றபடி வரைந்து கொள்ளுங்கள்.\nஇந்தத் துதியைச் சொல்லி குபேரனைக் கும்பிடுங்கள்.தூப, தீபம் காட்டுங்கள். சர்க்கரை கலந்த பால் அல்லது பால் பாயசம் நிவேதனம் செய்யுங்கள்.அவ்வளவுதான். பூஜை செய்தாயிற்று. அன்று மாலை உங்களால் இயன்ற அளவுக்கு மங்களப் பொருள்களை பிறருக்கு வைத்துக் கொடுங்கள். வசதி குறைவாக இருப்பின் இதனை ஒன்பதாவது வார முடிவில் தந்தாலும் போதும்.\nஇப்படி ஒன்பது வெள்ளிக்கிழமைகள் அல்லது ஒன்பது பௌர்ணமிகள் பூஜை செய்து முடித்ததும், அடுத்து வரும் வெள்ளிக்கிழமை அல்லது பௌர்ணமி அன்று, சேர்ந்திருக்கும் எண்பத்தொரு காசுகளையும் எடுத்துக் கொண்டு சென்று ஏதாவது ஒரு சிவன் கோயில் உண்டியலிலோ அல்லது பெருமாள் கோயிலில் தாயார் சன்னதியில் உள்ள உண்டியலிலோ செலுத்துங்கள். சிவபெருமானே குபேரனுக்கு எல்லா செல்வஙகளையும் அளித்தவர். அதோடு அவரை நண்பனாகவும் ஏற்றவர். எனவே சிவன் கோயிலில் செலுத்துவது சிறந்ததாகும்.\nஅன்றையதினம் உங்களால் இயன்ற அளவு மங்களப் பொருட்களை பெண்களுக் வைத்துக் கொடுங்கள். அன்றைய தினம் மகாலட்சுமியே ஏதாவது ஒரு உருவில் அதனை பெற வருவாள் என்பது நம்பிக்கை. எனவே, குறைவாகக் கொடுத்தாலும் மனதாரக் கொடுங்கள்.ஒன்பதாவது வார (மாத) பூஜை முடிந்த நாள் முதல் உங்கள் வீட்டில் நிச்சயம் செல்வவளம் சேரும். நிம்மதி, சந்தோஷம், உற்சாகம் நிறையும். வருடத்துக்கு ஒருமுறை இந்த லட்சுமி குபேர யந்திர பூஜையைச் செய்யுங்கள். குறையாத செல்வதும், நிறைவான நிம்மதியான வாழ்வும் நிச்சயம் கிட்டும்.\n– காசிவாசி குருஸ்ரீ காளிதாஸ் மகரிஷி
கணினியில் கியர்ஸ் ஆஃப் வார்4கருப்பு திரை சிக்கல்களை எவ்வாறு சரிசெய்வது என்பது இங்கே - சரி\nகணினியில் கியர்ஸ் ஆஃப் வார்4கருப்பு திரை சிக்கல்களை எவ்வாறு சரிசெய்வது என்பது இங்கே\nகியர்ஸ் ஆஃப் வார் என்பது எக்ஸ்பாக்ஸ் மற்றும் பிசி இரண்டிலும் பிரபலமான விளையாட்டுத் தொடராகும், மேலும் இந்த விளையாட்டைப் பற்றிப் பேசும்போது, ​​பல பயனர்கள் தங்கள் கணினியில் கியர்ஸ் ஆஃப் வார்4ஐ இயக்க முயற்சிக்கும்போது கருப்புத் திரையைப் புகாரளித்தனர். இது ஒரு பெரிய பிரச்சினையாக இருக்கலாம், இன்றைய கட்டுரையில், இந்த சிக்கலை எவ்வாறு நிரந்தரமாக சரிசெய்வது என்பதை நாங்கள் உங்களுக்குக் காண்பிப்போம்.\nகியர்ஸ் ஆஃப் வார்4ஒரு சிறந்த விளையாட்டு, ஆனால் பிசி பயனர்கள் அதில் பல்வேறு சிக்கல்களைப் புகாரளித்தனர். சிக்கல்களைப் பற்றி பேசுகையில், பயனர்கள் புகாரளித்த பொதுவான சிக்கல்கள் இங்கே:\nகியர்ஸ் ஆஃப் வார்4தொடக்கத்தில் செயலிழக்கிறது, ஸ்பிளாஸ் திரை செயலிழப்பு - சில நேரங்களில் புதுப்பிப்புகள் இல்லாததால் கியர்ஸ் ஆஃப் வார்4தொடக்கத்தில் செயலிழக்கக்கூடும். இந்த சிக்கலை சரிசெய்ய, விண்டோஸ் 10 க்கான சமீபத்திய புதுப்பிப்புகளைப் பதிவிறக்கவும்.\nகியர்ஸ் ஆஃப் வார்4ஸ்கிரீன் பிசி ஏற்றுவதில் சிக்கியுள்ளது - உங்கள் கிராபிக்ஸ் அட்டை சில நேரங்களில் இந்த சிக்கல் தோன்றும். சிக்கலை சரிசெய்ய, உங்கள் பிரத்யேக கிராபிக்ஸ் பயன்படுத்த கியர்ஸ் ஆஃப் வார்4அமைக்கப்பட்டிருப்பதை உறுதிப்படுத்தவும்.\nகியர்ஸ் ஆஃப் வார்4பிசி முடக்கம் - உங்கள் இயக்கிகள் புதுப்பித்த நிலையில் இல்லாவிட்டால் இந்த சிக்கல் ஏற்படலாம். சிக்கலை சரிசெய்ய, சமீபத்திய இயக்கிகளை நிறுவுவதை உறுதிசெய்து, கியர்ஸ் ஆஃப் வார்4ஐ மீண்டும் இயக்க முயற்சிக்கவும்.\nகியர்ஸ் ஆஃப் வார்4பிசி தொடங்காது, தொடங்காது - மைக்ரோசாஃப்ட் ஸ்டோரில் ஆஃப்லைன் அனுமதிகள் அம்சம் இயக்கப்பட்டிருக்காவிட்டால் இந்த சிக்கல் தோன்றும். இந்த அம்சத்தை வெறுமனே இயக்கவும், கியர்ஸ் ஆஃப் வார்4இன் சிக்கல் தீர்க்கப்பட வேண்டும்.\nகணினியில் கியர்ஸ் ஆஃப் வார்4கருப்புத் திரை, அதை எவ்வாறு சரிசெய்வது?\nஉங்களிடம் சமீபத்திய புதுப்பிப்புகள் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்\nமைக்ரோசாஃப்ட் ஸ்டோரிலிருந்து வேறு விளையாட்டைப் பதிவிறக்க முயற்சிக்கவும்\nசரியான மின்னஞ்சலுடன் எக்ஸ்பாக்ஸ் பயன்பாட்டில் உள்நுழைந்துள்ளீர்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்\nவிளையாட்டை இயக்க உங்கள் பிரத்யேக கிராபிக்ஸ் பயன்படுத்துகிறீர்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்\nஆஃப்லைன் அனுமதிகள் அம்சத்தை இயக்கவும்\nமைக்ரோசாஃப்ட் ஸ்டோர் தற்காலிக சேமிப்பை மீட்டமைத்து தேவையான சேவைகளைத் தொடங்கவும்\nதீர்வு 1 - உங்களிடம் சமீபத்திய புதுப்பிப்புகள் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்\nகியர்ஸ் ஆஃப் வார்4ஐ இயக்க முயற்சிக்கும்போது நீங்கள் கருப்புத் திரையைப் பெறுகிறீர்கள் என்றால், சிக்கல் உங்கள் கணினியுடன் தொடர்புடையதாக இருக்கலாம். சில நேரங்களில் சில குறைபாடுகள் மற்றும் உங்கள் கணினியில் தோன்றும், இது இது மற்றும் பல சிக்கல்களுக்கு வழிவகுக்கும்.\nசிக்கலை சரிசெய்ய, விண்டோஸ் 10 ஐ சமீபத்திய பதிப்பிற்கு புதுப்பிக்க அறிவுறுத்தப்படுகிறது. இந்த செயல்முறை விண்டோஸ் 10 இல் மிகவும் நெறிப்படுத்தப்பட்டுள்ளது, பெரும்பாலும், விண்டோஸ் 10 தானாகவே காணாமல் போன புதுப்பிப்புகளை நிறுவுகிறது. இருப்பினும், பின்வருவனவற்றைச் செய்வதன் மூலம் நீங்கள் எப்போதும் புதுப்பிப்புகளை கைமுறையாக சரிபார்க்கலாம்:\nதிற அமைப்புகள் பயன்பாடு . அதற்கான விரைவான வழி பயன்படுத்த வேண்டும் விண்டோஸ் கீ + நான் குறுக்குவழி. பிறகுஅமைப்புகள் பயன்பாடுதிறக்கிறது, தலைகீழாக புதுப்பிப்பு மற்றும் பாதுகாப்பு பிரிவு.\nவலது பலகத்தில், கிளிக் செய்யவும் புதுப்பிப்புகளைச் சரிபார்க்கவும் பொத்தானை.\nவிண்டோஸ் இப்போது கிடைக்கக்கூடிய புதுப்பிப்புகளைச் சரிபார்த்து அவற்றை பின்னணியில் பதிவிறக்கும்.\nபுதுப்பிப்புகள் பதிவிறக்கம் செய்யப்பட்டவுடன், அவற்றை மீண்டும் நிறுவ உங்கள் கணினியை மறுதொடக்கம் செய்யுங்கள். உங்கள் கணினியை சமீபத்திய பதிப்பிற்கு புதுப்பித்த பிறகு, சிக்கல் இன்னும் இருக்கிறதா என்று சோதிக்கவும். இந்த எளிய தீர்வு பல பயனர்களுக்கு வேலை செய்தது, எனவே இதை முயற்சி செய்யுங்கள்.\nமேலும் படிக்க: விண்டோஸ் 10 இல் கர்சருடன் கருப்புத் திரையை எவ்வாறு சரிசெய்வது? [2019 புதுப்பிப்பு]\nதீர்வு2- உங்கள் கிராபிக்ஸ் அட்டை இயக்கிகளைப் புதுப்பிக்கவும்\nஉங்கள் இயக்கிகள் காரணமாக சில நேரங்களில் கியர்ஸ் ஆஃப் வார்4இல் கருப்பு திரை தோன்றும். உங்கள் கிராபிக்ஸ் அட்டை இயக்கிகள் மல்டிமீடியா மற்றும் கேம்களுக்கு முக்கியமானவை, மேலும் உங்கள் இயக்கிகள் காலாவதியானால், நீங்கள் பல்வேறு சிக்கல்களை சந்திக்க நேரிடும். இதையும் பிற சிக்கல்களையும் சரிசெய்ய, பயனர்கள் உங்கள் கிராபிக்ஸ் அட்டை இயக்கிகளைப் புதுப்பிக்க பரிந்துரைக்கின்றனர்.\nகிராபிக்ஸ் அட்டை இயக்கியைப் புதுப்பிப்பது ஒப்பீட்டளவில் எளிதானது, மேலும் உங்கள் கிராபிக்ஸ் அட்டை உற்பத்தியாளரின் வலைத்தளத்தைப் பார்வையிடுவதன் மூலமும், உங்கள் மாடலுக்கான சமீபத்திய இயக்கிகளைப் பதிவிறக்குவதன் மூலமும் இதைச் செய்யலாம். இருப்பினும், இந்த செயல்முறை சற்று சிக்கலானதாகத் தோன்றினால், அதை எவ்வாறு சரியாகச் செய்வது என்று உங்களுக்குத் தெரியாவிட்டால், நீங்கள் எப்போதும் மூன்றாம் தரப்பு கருவிகளைப் பயன்படுத்தலாம் ட்வீக் பிட் டிரைவர் அப்டேட்டர் உங்கள் இயக்கிகளை பதிவிறக்க.\nஇந்த கருவி உங்கள் கணினியை ஸ்கேன் செய்து, எந்த இயக்கிகள் காலாவதியானவை என்பதை உங்களுக்குத் தெரிவிக்கும், மேலும் அவற்றை இரண்டு கிளிக்குகளில் தானாகவே புதுப்பிக்க அனுமதிக்கும். உங்கள் கிராபிக்ஸ் அட்டை இயக்கிகள் புதுப்பித்தவுடன், சிக்கல் இன்னும் இருக்கிறதா என்று சோதிக்கவும்.\nதீர்வு3- மைக்ரோசாஃப்ட் ஸ்டோரிலிருந்து வேறு விளையாட்டைப் பதிவிறக்க முயற்சிக்கவும்\nஉங்கள் கணினியில் கியர்ஸ் ஆஃப் வார்4ஐ இயக்க முயற்சிக்கும்போது நீங்கள் கருப்புத் திரையைப் பெறுகிறீர்கள் என்றால், இந்த பணித்திறன் உங்களுக்கு உதவக்கூடும். இது ஒரு பணித்திறன் மட்டுமே என்பதை நினைவில் கொள்ளுங்கள், எனவே சிக்கல் ஏற்படும் போதெல்லாம் அதை மீண்டும் செய்ய வேண்டும்.\nபயனர்களின் கூற்றுப்படி, மைக்ரோசாஃப்ட் ஸ்டோரிலிருந்து வேறு விளையாட்டைப் பதிவிறக்க முயற்சிப்பதன் மூலம் அவற்றை தற்காலிகமாக சரிசெய்யலாம், பின்னர் பதிவிறக்க செயல்முறையை ரத்து செய்யலாம். இதைச் செய்வது மிகவும் எளிது, மேலும் இந்த வழிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் நீங்கள் இதைச் செய்யலாம்:\nதேடல் பட்டியில் உள்ளிடவும் கடை . இப்போது தேர்ந்தெடுக்கவும் மைக்ரோசாப்ட் ஸ்டோர் பட்டியலில் இருந்து.\nஇப்போது மைக்ரோசாஃப்ட் ஸ்டோரிலிருந்து எந்த இலவச விளையாட்டையும் பதிவிறக்க முயற்சிக்கவும்.\nபதிவிறக்க செயல்முறை இப்போது தொடங்கும். சுமார் 10 விநாடிகள் காத்திருந்து பின்னர் கிளிக் செய்யவும் கீழ்நோக்கிய அம்புக்குறி உங்கள் சுயவிவரப் படத்திற்கு அடுத்த ஐகான். இப்போது கிளிக் செய்யவும் எக்ஸ் பதிவிறக்கத்தை நிறுத்த பொத்தானை அழுத்தவும்.\nஅதைச் செய்த பிறகு, பதிவிறக்க செயல்முறை நிறுத்தப்படும். இப்போது நீங்கள் மீண்டும் கியர்ஸ் ஆஃப் வார்4ஐ இயக்க முயற்சி செய்யலாம், அது சிக்கல்கள் இல்லாமல் தொடங்க வேண்டும். பல பயனர்கள் இந்த முறை தங்களுக்கு வேலை செய்ததாக தெரிவித்தனர், ஆனால் இது ஒரு பணித்தொகுப்பு என்பதை நினைவில் கொள்ளுங்கள்.\nதீர்வு4- சரியான மின்னஞ்சலுடன் எக்ஸ்பாக்ஸ் பயன்பாட்டில் உள்நுழைந்துள்ளீர்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்\nபயனர்களின் கூற்றுப்படி, நீங்கள் உள்நுழையவில்லை என்றால் சில நேரங்களில் கியர்ஸ் ஆஃப் வார்4உடன் ஒரு கருப்பு திரை ஏற்படலாம் எக்ஸ்பாக்ஸ் பயன்பாடு சரியான கணக்குடன்.\nநீங்கள் எக்ஸ்பாக்ஸ் பயன்பாட்டில் உள்நுழைந்திருந்தால் பயனர்கள் தெரிவித்தனர் மைக்ரோசாப்ட் கணக்கு எக்ஸ்பாக்ஸ் கணக்கிற்கு பதிலாக, இந்த சிக்கலை நீங்கள் சந்திக்க நேரிடும். அதை சரிசெய்ய, நீங்கள் எக்ஸ்பாக்ஸ் பயன்பாட்டிலிருந்து வெளியேறி மீண்டும் உள்நுழைய வேண்டும். இதைச் செய்வது மிகவும் எளிது, மேலும் இந்த வழிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் நீங்கள் இதைச் செய்யலாம்:\nஅச்சகம் விண்டோஸ் கீ + எஸ் உள்ளிட்டு xbox . இப்போது எடு எக்ஸ்பாக்ஸ் முடிவுகளின் பட்டியலிலிருந்து.\nஎக்ஸ்பாக்ஸ் பயன்பாடு திறக்கும்போது, ​​அதில் இருந்து வெளியேறவும். அதை செய்ய, கிளிக் செய்யவும் கியர் இடது பலகத்தில் ஐகான். வலது பலகத்தில், கிளிக் செய்யவும் வெளியேறு பொத்தானை.\nஇப்போது கிளிக் செய்யவும் உள்நுழைக உங்கள் மைக்ரோசாஃப்ட் கணக்கில் உள்நுழையும்படி கேட்கப்பட்டால், கிளிக் செய்க நீங்கள் அல்ல மேல் இடது மூலையில் விருப்பம்.\nதேர்ந்தெடு வேறு கணக்கைப் பயன்படுத்தவும் விருப்பம் மற்றும் கிளிக் செய்யவும் தொடரவும் .\nஇப்போது உங்கள் மின்னஞ்சல் மற்றும் கடவுச்சொல்லை உள்ளிடவும், நீங்கள் எக்ஸ்பாக்ஸ் பயன்பாட்டில் உள்நுழைய வேண்டும்.\nமேலும் படிக்க: தீர்க்கப்பட்டது: விண்டோஸ் 10 இல் புராணங்களின் வயது கருப்பு திரை\nதீர்வு5- விளையாட்டை இயக்க உங்கள் பிரத்யேக கிராபிக்ஸ் பயன்படுத்துகிறீர்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்\nபல மடிக்கணினிகள் மற்றும் சில பிசிக்கள் அர்ப்பணிப்பு மற்றும் ஒருங்கிணைந்த கிராபிக்ஸ் ஆகியவற்றுடன் வருகின்றன, இது சில நேரங்களில் சிக்கலாக இருக்கலாம். ஒருங்கிணைந்த கிராபிக்ஸ் பயன்படுத்தி விளையாட்டை இயக்க உங்கள் பிசி கட்டமைக்கப்படலாம், மேலும் இது இந்த சிக்கலைத் தோன்றும்.\nசிக்கலை சரிசெய்ய, உங்கள் கிராபிக்ஸ் அட்டை அமைப்புகளை மாற்ற வேண்டும். அதைச் செய்ய, இந்த வழிமுறைகளைப் பின்பற்றவும்:\nஇடது பலகத்தில், தேர்ந்தெடுக்கவும் 3D அமைப்புகளை நிர்வகிக்கவும் . வலது பலகத்தில், செல்லவும் நிரல் அமைப்புகள் .\nகண்டுபிடி கியர்ஸ் ஆஃப் வார்4பட்டியலில். இது கிடைக்கவில்லை என்றால், கிளிக் செய்க கூட்டு அதைச் சேர்க்க பொத்தானை அழுத்தவும்.\nஇப்போது அமைக்கவும் இந்த நிரலுக்கு விருப்பமான கிராபிக்ஸ் செயலியைத் தேர்ந்தெடுக்கவும் க்கு உயர் செயல்திறன் கொண்ட என்விடியா செயலி . கிளிக் செய்யவும் விண்ணப்பிக்கவும் மாற்றங்களைச் சேமிக்க பொத்தானை அழுத்தவும்.\nஇந்த மாற்றங்களைச் செய்தபின், கியர்ஸ் ஆஃப் வார் எப்போதும் என்விடியா கிராபிக்ஸ் கார்டைப் பயன்படுத்தி இயங்கும், மேலும் பிரச்சினை நிரந்தரமாக தீர்க்கப்பட வேண்டும். நீங்கள் AMD கிராபிக்ஸ் பயன்படுத்துகிறீர்கள் என்றால், இந்த அமைப்புகளை நீங்கள் கண்டுபிடிக்க முடியும் வினையூக்கி கட்டுப்பாட்டு மையம் .\nதீர்வு6- ஆஃப்லைன் அனுமதிகள் அம்சத்தை இயக்கு\nபயனர்களின் கூற்றுப்படி, கியர்ஸ் ஆஃப் வார்4ஐ இயக்க முயற்சிக்கும்போது நீங்கள் கருப்புத் திரையைப் பெறுகிறீர்கள் என்றால், மைக்ரோசாஃப்ட் ஸ்டோரில் சில அமைப்புகளை மாற்றுவதன் மூலம் சிக்கலை சரிசெய்யலாம். அதைச் செய்ய, இந்த வழிமுறைகளைப் பின்பற்றவும்:\nதிற மைக்ரோசாப்ட் ஸ்டோர் .\nகிளிக் செய்யவும் மேலும் மேல் வலது மூலையில் உள்ள ஐகான் மற்றும் தேர்வு செய்யவும் அமைப்புகள் மெனுவிலிருந்து.\nஇப்போது கண்டுபிடி ஆஃப்லைன் அனுமதிகள் அம்சம் மற்றும் அதை இயக்கு.\nஅதைச் செய்தபின், சிக்கல் தீர்க்கப்பட வேண்டும், மேலும் நீங்கள் எந்த பிரச்சனையும் இல்லாமல் கியர்ஸ் ஆஃப் வார்4ஐ இயக்க முடியும்.\nதீர்வு7- மைக்ரோசாஃப்ட் ஸ்டோர் தற்காலிக சேமிப்பை மீட்டமைத்து தேவையான சேவைகளைத் தொடங்கவும்\nபயனர்களின் கூற்றுப்படி, சில நேரங்களில் மைக்ரோசாஃப்ட் ஸ்டோரில் உள்ள சிக்கல்கள் பிற பயன்பாடுகளை பாதிக்கலாம் மற்றும் கியர்ஸ் ஆஃப் வார்4இல் கருப்புத் திரை போன்ற சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும். இருப்பினும், விண்டோஸ் ஸ்டோர் கேச் மீட்டமைப்பதன் மூலம் அந்த சிக்கலை நீங்கள் சரிசெய்யலாம். அதைச் செய்ய, இந்த வழிமுறைகளைப் பின்பற்றவும்:\nஅச்சகம் விண்டோஸ் கீ + ஆர் திறக்கஓடுஉரையாடல்.\nஉள்ளிடவும் wsreset.exe அழுத்தவும் உள்ளிடவும் அல்லது கிளிக் செய்க சரி .\nஅதைச் செய்த பிறகு, நீங்கள் சில சேவைகளை இயக்க வேண்டும். அதைச் செய்ய, இந்த வழிமுறைகளைப் பின்பற்றவும்:\nதிறஓடுஉரையாடல் மற்றும் உள்ளிடவும் services.msc . இப்போது அழுத்தவும் உள்ளிடவும் அல்லது கிளிக் செய்க சரி .\nஎப்பொழுதுசேவைகள்சாளரம் திறக்கிறது, கண்டுபிடி Windows PushToInstall சேவை , அதை வலது கிளிக் செய்து தேர்வு செய்யவும் தொடங்கு மெனுவிலிருந்து.\nஅதைச் செய்தபின், கியர்ஸ் ஆஃப் வார்4ஐ மீண்டும் இயக்க முயற்சிக்கவும், சிக்கல் இன்னும் இருக்கிறதா என்று சோதிக்கவும்.\nகருப்புத் திரை ஒரு பெரிய பிரச்சினையாக இருக்கக்கூடும், மேலும் உங்கள் கணினியில் இயங்கும் கியர்ஸ் ஆஃப் வார்4ஐத் தடுக்கலாம். எவ்வாறாயினும், எங்கள் தீர்வுகளில் ஒன்றைப் பயன்படுத்தி இந்த சிக்கலை நீங்கள் சரிசெய்ய முடிந்தது என்று நாங்கள் நம்புகிறோம்.\nபிழை குறியீடு 0x80070456 - 0xa0019\nவிண்டோஸ் 10 ஏபிசி இன்டெக்ஸ் பொருந்தவில்லை
நூறு கதை நூறு படம்: 42 வீடு - Uyirmmai\nநூறு கதை நூறு படம்: 42 வீடு\nJuly 4, 2019 July 4, 2019 - ஆத்மார்த்தி · இலக்கியம் சினிமா தொடர்கள்\nசினிமாவில் ஆகச்சிறந்த வில்லன் சூழ்நிலைதான். மனித வில்லத்தனங்கள் யாவற்றையும்விட சூழ்நிலை தன் கருணையற்ற முகத்தோடு வாழ்க்கையை ஊடாடும்போது அபரிமிதமாய்ப் பெருகுகிறது. சினிமா கதைகள் என்றில்லை எந்தக் கலைவடிவமானாலும் கூட மகிழ்ச்சியை சாட்சியம் சொல்கிற படைப்புகள் குறைவாகவே காணப்படும். சோகத்தை துன்பத்தை சாட்சியம் சொல்கிற ஏராளமான படைப்புகள் காணப்படுவது கலையின் தன்மை. துன்பத்தை மீபார்வை பார்க்கிற மனிதன் அன்பை கருணையை நன்மை தீமைகளை எல்லாம் ஆழ்மனதின் கண்களால் காண முயலுகிறான். கலை துன்பத்தின் சாரதியாகவே செயல்படுகிறது. கலையின் பயண சேர்விடம் பண்பாடாகிறது.\nவீட்டைக் கட்டிப் பார் என்ற முதுமொழியின் கலையிருப்பு அலாதியானது. மேலோட்டமான நாடக முயல்வுகள் தொடங்கி மறக்க இயலாத படங்கள்வரை இந்த ஒற்றை வரியின் அலைதலும் அடைதலும் மெச்சத்தக்கது. பாலுமகேந்திரா இயக்கத்தில் வெளியான ‘வீடு’ திரைப்படம் அன்றைய நடுத்தர வர்க்கத்தின் பொதுமுதல் கனவான சொந்த வீடு கட்டி வாழ்தல் எனும் பெரும் பற்றுதலின்மீது தன் வினாக்களை நிகழ்த்திய படம். கலை மக்களை அச்சுறுத்துவதன் மூலமாகப் படிப்பிக்கும். படிப்பித்தலின் வழி அச்சுறுத்தல் விலகி வெறுமை பூக்கும். அத்தகைய வெறுமைக்கு அப்பால் கிட்டக்கூடிய வெளிச்சம் இன்றியமையாத வாழ்க்கை இடுபொருளாகவே மாறும்.\nநீதிக் கதைகளின் அதே பொறுப்பேற்றலுடன் தன் படத்தை ஆக்கினார் பாலு. குடும்பம் என்பது நாடு எனும் மாபெரிய அம்சத்தின் மாதிரியாகும். அப்படியாக வீடு என்பது சுதா எனும் ஒற்றை மனுஷியின் பிரச்சினையின் படிநிலைகளின் வழியாக அந்தக் காலகட்டத்தில் நாடு எவ்வாறான அரசியல் உச்ச நீச்சங்களுக்கு இடையிலான பரவலைத் தன்னகத்தே கொண்டிருந்தது என்பதை விளக்குகிற மாதிரியாகவும் கொள்ள முடிகிறது. வீடு திரைப்படம் சமூக அரசியலின் நுட்பமான அலசல்களுக்காகவும் முக்கியத்துவம் கொண்டதாகிறது. வலுக்கட்டாயமாகத் திணிக்கப்படும் கருணையற்ற சமரசங்களுக்கெதிரான பலவீனமான போராட்டத்தை எந்தவித சமரசமும் இல்லாமல் பதிவுசெய்ய முயன்று அதில் வெற்றியும் கண்டார் பாலுமகேந்திரா.\nபாலுமகேந்திராவின் திரைக்கதை, வசனம், ஒளிப்பதிவு, இயக்கம் ஆகிய பொறுப்பேற்றல்கள் மெச்சத்தகுந்த தரத்தில் அமைந்தன. அகிலா மகேந்திரா எழுதிய கதையை வீடு என்று திரைப்படமாக்கிய பாலுவுக்கு சரிநிகர் உபயோகமாகவே தன் பின்னணி இசையை வழங்கினார் இளையராஜா. சொக்கலிங்க பாகவதர், அர்ச்சனா, பானுச்சந்தர், செந்தாமரை ஆகியோரின் நிறைநடிப்பு இப்படத்திற்குப் பெரும்பலம் வீடென்பது கட்டிடம் அல்ல. வீடென்பது குடும்பம். மாதாமாதம் ஒரு தேதிக்கு முன்பின்னாய்க் கிளைத்து இரண்டுபடும் நடுத்தரவர்க்கத்தின் சம்சாரநதியை ஒரே சீராக்கும் மாமருந்து சொந்த வீடு. ஒரு பிடி மண்ணைக்கூட இவ்வுலகிலிருந்து எடுத்துச் செல்ல முடியாதென்ற வேதாந்த சித்தாந்தங்களுக்கு மத்தியில் தன்வழி தோன்றியவர்கள் வசம்விட்டுச் செல்வதற்கான கட்டிடக்கனாவின் பேர்தான் சொந்த வீடு. அதன் சாத்திய அசாத்தியங்களுக்கு நடுவே அல்லாடுவதன் மீதான எந்த ஆட்சேபமும் இல்லாமல் வாழ்வை அதன் போக்கில் எடுத்துக்கொள்ள பழகும் பெருங்கூட்டத்தின் மறுபெயர்தான் சாமான்ய சனம்.\nதன் தங்கையுடனும் தாத்தாவுடனும் வாடகை வீட்டில் வசித்து வரும் சுதா தாத்தாவுக்கு சொந்தமாக இருக்கும் இரண்டு மனைகளில் ஒன்றை விற்று மற்றதில் தங்களுக்கென்று சொந்தமாய் ஒரு வீட்டைக் கட்டி அதில் குடியேறிவிட வேண்டுமென்ற லட்சியத்துக்கு வருவதிலிருந்து தன் திரைப்படத்தைத் தொடங்கும் பாலுமகேந்திரா கட்டிடமாக ஒரு வீட்டின் அடுத்தடுத்த நிலைகள் பூர்த்தி வரைக்குமான ஏற்றத்தாழ்வுகள் மனித துரோகங்கள் மரணங்கள் கைவிடுதல் பொய் புரட்டு கடைசியில் எதிர்க்க முடியாத மாபெரும் யானை போல் நீ கட்டி இருக்கும் வீடு இருக்கிற அந்த இடத்தை மெட்ரோ வாட்டர் ப்ராஜெக்டுக்காக அரசாங்கம் கையகப்படுத்திவிட்டது. இதில் வீடு கட்டியது செல்லாது என்று அரசாங்க யானையின் ஒரு முகம் அவளை விரட்டுகிறது. தனக்கு அங்கே வீடு கட்ட அனுமதி அளித்த அதே யானையின் மறுமுகம் அவளைக் கைவிடுகிறது. தன் வீட்டைத் தனக்கே தந்தாக வேண்டுமென்று கையறு நிலையோடு அதே யானையின் கடைசி முகமான நீதிமன்றத்தில் மன்றாடிவிட்டுக் காத்திருப்பதோடு நிறைவடைகிறது பாலு மகேந்திராவின் வீடு திரைப்படம்.\nவாழ்க்கையின் இடவல மாற்றங்களும் அவற்றின் வருகையின் முன்பின் வித்யாசங்களும்தான் மனித அனுபவத்தின் சாரமாய் எஞ்சுகிறது. சின்னஞ்சிறு வயதில் சமூகத்தின் தனி மனித நம்பகத்தையும் கூட்டு நம்பகத்தையும் ஒருங்கே இழந்த பிறகு கசந்து வழியும் இக்கதையின் முற்றுக் கணத்தினை எதிர்கொண்டபடி வாழ்க்கையை வெறிக்கும் இந்தக் கதையின் நாயகியை மாத்திரம் அல்ல; எண்ணிலடங்கா சுதாக்களை மீண்டும் மீண்டும் உற்பத்தி செய்துகொண்டே இருப்பதுதான் மனசாட்சியற்ற மனிதர்களின் சுயநலம். விதிகளைக் கடுமையாக்குவதும் சட்ட திட்டங்களை மேலும் காத்திரமாக்குவதும் தவிர்த்து வேறொன்றும் செய்வதற்கில்லை. இந்தப் படத்தின் ஆகச்சிறப்பாக இதன் க்ளைமாக்ஸ் காட்சியை சொல்ல முடியும்.\nசெந்தாமரையை வந்து சந்தித்து தான், ஏமாற்றப்பட்டதைக் குமுறலோடு எடுத்துரைப்பார் அர்ச்சனா. உடன் பானுச்சந்தர் இருப்பார். அஞ்சு நிமிஷம் வெயிட் பண்ணுங்க என்று அவர்களை வேறொரு அறைக்கு அழைத்து வந்து அமர்வித்துவிட்டுத் தன் அலுவலக அறைக்குத் திரும்பும் செந்தாமரை தன் கீழ் பணிபுரியும் அலுவலரை வரச்சொல்லுவார். அவர் வந்ததும் செந்தாமரையின் கையெழுத்தை ஃபோர்ஜரி செய்தது குறித்தும் சட்டவிரோதமாய் அர்ச்சனா வீட்டுக்கு அனுமதி அளித்தது குறித்தும் மெல்லிய குரலில் கடிந்துகொள்வார். அப்போது அந்த அலுவலர் காலில் விழுவதுபோல பாவனை செய்வார். அவரே இத்தனை சீக்கிரம் கண்டுபிடிக்கப் படுவோம் என நினைக்கவில்லை என்றும் அதற்குள் ரிடையர் ஆகிவிடுவோம் என்ற நப்பாசையில் செய்துவிட்டதாகவும் சொல்வார். லஞ்சம் என்பதனுள்ளே இயங்கக் கூடிய சூது, வன்மம் அடுத்தவர் எக்கேடு கெட்டாலென்ன என்ற துர் எண்ணம் மேலதிகாரியின் கையொப்பத்தைக் கூடத் தானே போலி செய்யுமளவு தைரியம் எல்லாவற்றுக்கும் மேலாக அடுத்த அறையில் காத்திருக்கும் சுதாவுக்கு சொல்வதற்கு எதுவுமே தன்னிடத்தில் இல்லை எனத் தெரிந்த பிறகும் அவர்களைக் காத்திருக்க வைக்கும் மேலதிகாரி செந்தாமரையின் கையறு நிலை இவற்றோடு படம் முடியுமிடம் ஒரு கவிதை.\nஇந்தியாவில் எடுக்கப் பெற்ற உலகப் படம் வீடு: வாழ்க சினிமா!\nமுந்தைய தொடர்: https://bit.ly/2XHLsuY\nஇளையராஜா, சொக்கலிங்க பாகவதர், அர்ச்சனா, பானுச்சந்தர், செந்தாமரை, பாலுமகேந்திரா
எதிர்க்கட்சிகள் இல்லாமல் ஜனநாயகம் இல்லை &-அமித்ஷா Posted on 12-Jun-2018\nராய்பூர், ஜுன் 12-\nநாட்டில் ஜனநாயகம் தழைக்க, எதிர்க்கட்சிகள் தான் முக்கிய பங்காற்றுகின்றன என பாரதிய ஜனதா தலைவர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.\nசத்தீஸ்கர் மாநிலம், சர்குஜா மாவட்டத்தில் உள்ள அம்பிகாபூரில் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவர் கூறியதாவது :-‘காங்கிரஸ் இல்லாத இந்தியா’ எனும் பா.ஜ.க.வின் பிரச்சார முழக்கத்திற்கான அர்த்தம் இந்தியாவில் இருந்து காங்கிரஸ் கட்சியை முற்றிலுமாக அப்புறப்படுத்த வேண்டும் என்பது இல்லை. மாறாக, காங்கிரஸ் கட்சியின் கலாச்சாரம் மற்றும் கொள்கைகள் இல்லாத இந்தியா என்பது தான் அதன் பொருள்.\nஎதிர்க்கட்சிகள் இல்லாமல் ஜனநாயகம் சாத்தியம் இல்லை. நாட்டில் ஜனநாயகம் தழைக்க எதிர்க்கட்சிகள் தான் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஆனால், நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு சரிந்து வருவது வேறு விஷயம். மக்களிடத்தில் காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு சரியாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது என் கடமை அல்ல, அது ராகுல் காந்தியின் பொறுப்பாகும்.\nநடுத்தர மக்களுக்காக பா.ஜ.க அரசு ஒன்றுமே செய்யவில்லை என ராகுல் கூறுகிறார். பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, அனைத்து தரப்பு மக்களையும் கருத்தில் கொண்டு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறது. அதன் காரணமாகவே நடுத்தர மக்களின் ஆதரவுடன் 14 மாநிலங்களில் பா.ஜ.க ஆட்சியில் உள்ளது. எனவே, மக்களுக்காக நாங்கள் உழைத்தால் மக்கள் மீண்டும் எங்களை ஆதரிப்பார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
அவன் ஆணுறை போட்டு ஓத்ததால் நல்ல - Tamil Sex Stories\nPosted on மார்ச் 15, 2017 by tamilsexstories\nஅவன் ஆணுறை போட்டு ஓத்ததால் நல்ல\nநான் மணி(பெயர் மாற்றப்பட்டது). என் முதல் அனுபவத்தை உங்களிடம் சொல்லி அதற்கு நல்ல வரவேற்பு தந்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி.அன்று தோழி ஆரம்பித்து வைத்த என் முதல் காம அனுபவம் கடந்த ஏப்ரல் மாதம் 25 ம் தேதி ஒரு வருடத்தை தாண்டியது. அந்த ஒரு வருடத்தில் சுமார்6கன்னி பெண்களை ருசி பார்த்தேன். இப்போது என் இரண்டாவது அனுபவத்தை பகிர்ந்து கொள்கிரேன்.ஜெனியின்(பெயர் மாற்றப்பட்டது) திருமணத்திற்கு பின் தினமும் அவளையே நினைத்து கையடித்து கொண்டேன். இரண்டு மாதத்திற்கு பின் புதிதாக வேலையல் ஜோயின் செய்தாள் கோட்டயத்தை சேர்ந்த அஞ்சனா(பெயர் மாற்றப்பட்டது). பார்க்க அழகிய செக்ஸி பிகராக இருப்பாள். |அவள் வேலைக்கு சேர்ந்து 1 மாதம் வரை நான் அவளிடம் பேசவே இல்லை. பின் ஒரு நாள் அவளது ஒர்க்கில் ஹெல்ப் கேட்டு என்னிடம் வந்ததாள்.\nஅன்று முதல் இருவரும் நல்ல ப்ரண்ட்ஸ் ஆனோம். அவளுக்கு ஹாஸ்டல் சாப்பாடு பிடிக்காததால் அடிக்கடி என்னுடன் ஹோட்டலில் சாப்பிட வருவாள். ஆனால் அவளிடம் எனக்கு எந்த காம ஆசைகளும் வந்ததில்லை.\nPrevious PostPrevious தம்பி என் கூதியை பாருடா, தடவி குடுடா\nNext PostNext பிளவின் கீழிருந்து மேல் வரை நிதானமாய்
Q1. 2021 மெர்சர் சிஎஃப்எஸ் குளோபல் பென்ஷன் இன்டெக்ஸ் சர்வேயில் இந்தியாவின் ரேங்க் என்ன?\nQ2. உலக ஆஸ்டியோபோரோசிஸ் தினம் (WOD) ஆண்டுதோறும் ____________ அன்று கொண்டாடப்படுகிறது.\n(b) 21 அக்டோபர்\n(c) 20 அக்டோபர்\n(d) 19 அக்டோபர்\nQ3. பவானி தேவி ஒரு இந்திய தடகள வீரர் ஆவார், அவர் ____________ துறையில் நாட்டை பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.\n(c) பளு தூக்குதல்\nQ4. சர்வதேச சமையல்காரர்கள் தினம் ஆண்டுதோறும் எந்த நாளில் கடைபிடிக்கப்படுகிறது?\n(a) 17 அக்டோபர்\n(b) 18 அக்டோபர்\n(e) 21 அக்டோபர்\nQ5. உள்துறை அமைச்சர் அமித் ஷா ‘ சேவா ஹி சங்கதன் (Seva Hi Sangathan )’ திட்டத்தின் கீழ் மோடி வேன்களை எந்த மாவட்டங்களில் தொடங்கினார்?\nQ6. “Actually… I Met Them: A Memoir” புத்தகத்தின் ஆசிரியர் யார்?\n(a) ஏ ஆர் ரஹ்மான்\n(b) ஷபானா ஆஸ்மி\n(d) சங்கர் மகாதேவன்\nQ7. தொலைதூர கிராமங்களுக்கு அரசு சேவைகளை வழங்க ‘பிரசாசன் காவ் கே சங் (Prashasan Gaon ke Sang)’ பிரச்சாரத்தை எந்த மாநிலம் தொடங்கியுள்ளது?\nQ8. எந்த ஆயுள் காப்பீட்டு நிறுவனம் ‘‘ சரல் பச்சத் பீமா திட்டத்தை (Saral Bachat Bima Plan)’’ அறிமுகப்படுத்தியுள்ளது?\n(a) எஸ்பிஐ ஆயுள் காப்பீடு\n(b) இந்தியா முதல் ஆயுள் காப்பீட்டு நிறுவனம்\n(c) ஐசிஐசிஐ ப்ரூடென்ஷியல் ஆயுள் காப்பீடு\n(d) எச்.டி.எப்.சி ஆயுள் காப்பீடு\n(e) மத ஆரோக்கிய காப்பீடு\nQ9. இந்திய பளுதூக்கும் கூட்டமைப்பின் தலைவராக யார் நியமிக்கப்பட்டுள்ளனர்?\n(a) பெண்பா டீசேரிங்\n(b) டி வி நரேந்திரன்\n(c) உஜ்வாலா சிங்கானியா\n(d) சஹ்தேவ் யாதவ்\n(e) நரிந்தர் பாத்ரா\nQ10. தேசிய ஆராய்ச்சி மேம்பாட்டு கழகத்தின் புதிய தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ள நபரின் பெயரைக் குறிப்பிடவும்.\n(a) பவன் குமார் கோயங்கா\n(b) அமித் ரஸ்தோகி\n(c) பிரதிவா மோஹபத்ரா\n(d) எம் வேணுகோபால்\n(e) வினோத் கண்ணன்
உணவே மருந்து - மருந்தே உணவு: உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் பருப்புகள்:-\nஉடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் பருப்புகள்:-\nமேலும் பருப்புக்களில் புரோட்டீன் மட்டுமின்றி, வேறு சில ஊட்டச்சத்துக்களும் நிறைந்துள்ளன. அந்த வகையில் இதனை உணவுகளில் அதிகம் சேர்த்து வந்தால், உடலில் ஏற்படும் பல பிரச்சனைகளை தவிர்க்கலாம். அது மட்டுமல்லாமல், பருப்புகளிலேயே பல வகைகள் உள்ளன.\nதுவரம் பருப்பு.......... துவரம் பருப்பில் நல்ல அளவில் புரோட்டீன், ஃபோலிக் ஆசிட் மற்றும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. மேலும் இதில் காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட் மற்றும் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், குடல் இயக்கம் சீராக இருந்து, மலச்சிக்கல் பிரச்சினை ஏற்படுவதை தடுக்கலாம்.\nபாசிப்பருப்பு........... பாசிப்பருப்பில் வைட்டமின் `ஏ, பி, சி, ஈ' மற்றும் கனிமச்சத்துக்களான கால்சியம், இரும்புச்சத்து மற்றும் பொட்டாசியம் அதிகம் உள்ளது. மேலும் உடல் எடையை குறைப்பதற்கு உதவியாகவும் இருக்கும். அதுமட்டுமல்லாமல், அதிகப்படியான புரோட்டின் மற்றும் நார்ச்சத்தால், இது உடலில் உள்ள கொலஸ்ட்ராலின் அளவை குறைக்கும்.\nபச்சை பயறு............ இந்த பயறு மஞ்சள் நிறத்தில் இருக்கும். இதிலும் புரோட்டீன், கால்சியம், பொட்டாசியம், `பி' காம்ப்ளக்ஸ் வைட்டமின்கள் மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளது. எனவே இதனை சாப்பிட்டால், உடலில் உணவுகள் எளிதல் செரிமான மடைவதோடு, உடல் எடை மற்றும் கொலஸ்ட்ரால் குறையவும் உதவியாக இருக்கும்\nகொண்டைக் கடலை......... கொண்டைக் கடலையில் ஃபோலிக் ஆசிட், மாங்கனீசு, இரும்புச்சத்து, காப்பர், மக்னீசியம் போன்றவை அதிக அளவில் இருக்கிறது. ஆகவே கொலஸ்ட்ரால் குறைவதோடு, இதய நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பும் குறையும். மேலும் இது உடல் சக்தியையும் அதிகரிக்கும்.\nமைசூர் பருப்பு........... மைசூர் பருப்பின் சிறப்பு என்னவென்றால், அதில் கரையக்கூடிய நார்ச்சத்து இருப்பதால், அது உடலில் உள்ள பித்தக்கற்களை வெளியேற்றிவிடும். மேலும் ஃப்ளேவோன்ஸை அதிகம் கொண்டதால், புற்றுநோய் தாக்கத்தில் இருந்தும் காப்பாற்றும். அதுமட்டுமின்றி, இது உடலில் ரத்தத்தை அனைத்து உறுப்புகளுக்கும் சீராக கொண்டு செல்லும்.\nசுண்டல்...... கொண்டைக் கடலையில் ஒரு வகை தான், இந்த சுண்டல். இதனை உணவில் அதிகம் சேர்த்து வந்தால், இதயம் ஆரோக்கியமாக இருக்கும். புரோட்டீன், காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரோட், வைட்டமின்கள், இரும்புச்சத்து, கால்சியம், ஃபோலேட் மற்றும் நார்ச்சத்து அதிகம் நிறைந்திருப்பதால், அது கருப்பைக் குழாயில் பிரச்சினை ஏற்படுவதையும், ரத்த சோகை பிரச்சனையையும் தடுக்கும்.\nகடலைப் பருப்பு........... கடலைப் பருப்பில் ஃபோலிக் ஆசிட், மாங்கனீசு, இரும்புச்சத்து, காப்பர் மற்றும் மக்னீசியம் போன்றவை நிறைந்துள்ளது. இதில் செரிலை விட, இரண்டு மடங்கு அதிகமாக புரோட்டீன் நிறைந்திருப்பதால், இதனை அதிகம் சாப்பிட உடல் வலுவோடு ஆரோக்கியமாக இருக்கும். குறிப்பாக இதனை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், நீரிழிவு மற்றும் கரோனரி இருதய நோய் போன்றவை ஏற்படுவது குறையும் என்று கண்டுபிடிக்கப் ட்டுள்ளது.\nசிவப்பு காராமணி............ சிவப்பு காராமணியில் `பி' காம்ப்ளக்ஸ் வைட்டமின்கள் மற்றும் பல்வேறு கனிமச்சத்துக்கள் அடங்கியுள்ளது. மேலும் வைட்டமின் பி6, இரும்புச்சத்து, மக்னீசியம், பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் அதிகம் நிறைந்துள்ளது.\nதட்டை பயறு...... தட்டை பயறை குழம்பு வைத்து சாப்பிட்டால், அதன் சுவைக்கு ஈடு இணை எதுவும் இருக்க முடியாது. அத்தகைய தட்டை பயறில் கரையக்கூடிய நார்ச்சத்து இருப்பதால், இது இருதய நோய் ஏற்படுவதை தடுக்கும். மேலும் இதில் பொட்டாசியம், இரும்புச்சத்து, வைட்டமின் சி மற்றும் ஜிங்க் நிறைந்துள்ளது. இதனால் தசைச் சுருக்கம் ஏற்படுவதைத் தடுக்கும்.\nஉளுத்தம் பருப்பு...... இட்லிக்கும், தாளிப்பதற்கு பயன்படுத்தும் உளுத்தம் பருப்பில், கொழுப்பு குறைவாகவும், புரோட்டீன் மற்றும் நார்ச்சத்து அதிகம் அடங்கியுள்ளது. மேலும் இதில் அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் நிறைந்திருக்கிறது. சொல்லப்போனால், இது இறைச்சிக்கு பதிலாக ஒரு சிறந்த உணவுப் பொருள் என்று
சந்தோஷம் என்றுமே சலிக்காத பாடல்தான்! | சந்தோஷம் என்றுமே சலிக்காத பாடல்தான்!\nPublished : 29 Oct 2014 09:18 am\nUpdated : 29 Oct 2014 12:25 pm\nLast Updated : 29 Oct 2014 12:25 PM\nவாலி திரைப்படப் பாடல்கள் தவிர, புதுக்கவிதைகள் மற்றும் காவியங்களையும் எழுதியுள்ளார். திரைப்பாடல்களில் இவருக்கு இருந்த மரபின் செல்வாக்கு கவிதைகளில் எதிர் மறையான விளைவையே தந்தது. வெறுமனே எதுகை மோனைத் துணுக்குகளாக, டி. ராஜேந்தர் பாணி மொழி விளையாட்டாகவே இவரது பெரும்பாலான கவிதைகளை மதிப்பிட முடியும். வாலியின் படைப்பாற்றல் முழுமையாக வெளிப்பட்ட இடம் திரைப்பாடல்கள்தான்.\nவாலிகவிஞர் வாலி பிறந்தநாள்வெகுஜன கவிஞன்வைரமுத்துவாலி பாடல் வரிகள்\nதீபாவளிக்கு இன்று முதல் சிறப்பு பஸ்கள் இயக்கம்\nகட்டுமானக் குறைபாடுகளைத் தவிர்க்க முடியுமா?
கவினுலகம் - K's world: குட்டி மொட்டைகள்!\nகிண்டர்கார்டன் குழந்தைகளுக்கு மொட்டையடித்து துறவி வாழ்வு என்பது எப்படியிருக்கும்? என்று காட்ட முயல்கிறது கொரியா! வித்தியாசமான அணுகுமுறைதான். இந்தப் படத்தைப் பாருங்கள்.\nகுழந்தைக்களின் முதல் அதிசயம் தலைமுடியே இல்லாமல் மொட்டையாக இருப்பது. நம்மை நாமே பார்த்துக் கொள்ளும் போது மிகவும் வேடிக்கையாக இருக்கும் பொழுதுகள் இந்த மொட்டை அனுபவம். எனக்கு மொட்டையே அடித்ததில்லை. இப்போது ஆசையாக உள்ளது (எடுக்க என்ன உள்ளது என்று யாரோ பின்னாலிருந்து கேட்பது புரிகிறது!) இருந்தாலும் ஒரு ஆசை. அமெரிக்காவில் நிறைய ஆப்பிரிக்க ஆண்கள் மொட்டையடித்துக் கொள்வதை நளினமாக்கி வருகிறார்கள். ஆனால் மொட்டைத் தலையைப் பாராமரிப்பது கடினமா? என்று தெரியவில்லை! இளமையாக இருக்கும் போது முடியைப் பறி கொடுக்க யாருக்கும் மனம் வராது! அதனால்தான் மொட்டை அடித்துக்கொள்ளுதலை ஒரு நேர்த்திக்கடனாக தமிழர்கள் எண்ணுகின்றனர் போலும்!\nஆச்சர்யம் என்னவென்றால் கிறிஸ்தவ வழிமுறையில் இப்படி மொட்டையடித்தல் கிடையாது. ஆனால் வேளாங்கன்னி ஆலயத்தில் நிறையப் பேர் முடி காணிக்கையளிப்பதை சமீபத்தில் பார்த்தேன். இதுவொரு மிகப்பழமையான இந்திய ஆன்மீக வெளிப்பாடு என்று தோன்றுகிறது. அது மெல்ல, மெல்ல ஆசியா முழுவதும் பரவியிருக்கிறது! தாய்லாந்து, கம்போடியா போன்ற நாடுகளில் தினம் காலையில் மொட்டையடித்த புத்த சந்நியாசிகள் வருகிறார்கள். பொதுமக்கள் அவர்களை வணங்கி பிட்சை கொடுத்துவிட்டு ஆசீர்வாதம் வாங்கிக் கொள்கிறார்கள்.\nஎப்படியும் மொட்டை என்பது சுவாரசியமாகத்தான் உள்ளது! இக்குழந்தைகளின் கள்ளமற்ற சிரிப்பே அதற்கு அத்தாட்சி!\nkannabiran, RAVI SHANKAR (KRS) 5/05/2008 01:07:00 PM\nநட்சத்திர வாழ்த்துக்கள் கண்ணன் சார்!\nமீ த பர்ஷ்ட்டு! :-)\nகோவி.கண்ணன் 5/05/2008 01:07:00 PM\nநடசத்திர வாழ்த்துகள் ஐயா !\nkannabiran, RAVI SHANKAR (KRS) 5/05/2008 01:08:00 PM\nமொத நட்சத்திரப் பதிவிலேயே மொட்டையடிக்கத் துவங்கியாச்சா? :-))\nகோவிந்தா கோவிந்தா! :-))\nநா.கண்ணன் 5/05/2008 01:14:00 PM\nகண்ணன் பதிவிற்கு வேறு இரண்டு கண்ணன்கள் வாழ்த்தா? சபாஷ்!\nஎனக்கு நாள் ஆரம்பித்து பாதி ஓடிவிட்டது. எப்போதிலிருந்து தமிழ் மணத்தின் கணக்கு என்று தெரியவில்லை!\nசரி, மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போட்டுட வேண்டியதான் :-)\nஏதோ பெருமாளை வேண்டி, மொட்டையடிச்சு ஆரம்பிப்போம் என்று கொள்ள வேண்டியதுதானோ?\nஎனது துவக்கக் கட்டுரை இனிமேல்தான் வரும் :-)!\nkannabiran, RAVI SHANKAR (KRS) 5/05/2008 01:17:00 PM\nமொட்டை என்பது வியப்பான ஒரு நேர்த்திக் கடன் தான்!\nநாட்டுப்புற மக்களிடம் அதிகமாகக் காணப்படும் இவ்வழக்கம், மற்ற சமூகங்களிலும் பரவி உள்ளது!\nநாட்டுப்புற தெய்வங்கள் ஐயனார், சுடலை மாடன் போன்றோருக்கு மொட்டை,\nஎன்று தான் இவ்வழக்கம் பரவியிருக்கு!\nவேளாங்கண்ணி மாதாவுக்கு மொட்டை போடுவது பல நாள் வழக்கம்! என் நட்சத்திர வாரப் பதிவில், மாரியம்மனும் மேரியம்மனும்- என்று இதைப் பதிவில் குறிப்பிட்டு இருந்தேன்!\nமற்ற தெய்வங்களான சிவபெருமான், அம்பாள், ஐயப்பன், பிள்ளையார் போன்றவர்களுக்கு இவ்வழக்கம் அவ்வளவாக இல்லை என்பதும் ஒரு கருத்து!\nசமணமும் பெளத்தமும் மொட்டை விஷயத்தில் இன்னும் பரவலான வழக்கம் கொண்டவர்கள்!\nkannabiran, RAVI SHANKAR (KRS) 5/05/2008 01:18:00 PM\n//எப்போதிலிருந்து தமிழ் மணத்தின் கணக்கு என்று தெரியவில்லை!\nUS - Eastern Time!\n(எப்படி எங்க நியூயார்க்-கின் பவரு? :-))\nkannabiran, RAVI SHANKAR (KRS) 5/05/2008 01:19:00 PM\nமொட்டை முருகனுக்கும் ஃபேமஸ் அல்லவா?\nஅரோகரா! அரகரோகரா! :-))\nநா.கண்ணன் 5/05/2008 01:22:00 PM\n(எப்படி எங்க நியூயார்க்-கின் பவரு?\nஉங்களுக்கு இன்னும் 4ம் தேதிதானே! இந்திய நேரக்கணக்கோ?\nSP.VR. SUBBIAH 5/05/2008 01:23:00 PM\nஇரண்டு கண்ணன்கள் வாழ்த்தா என்று சந்தோசப்ப்ட்டுள்ளீர்கள்.\nஇதோ ஒரு சுப்பிரமணியத்தின் வாழ்த்து!\n(என் இயற்பெயர் சுப்பிரமணியன்)\nநட்சத்திரவாரம் சிறக்க வாழ்த்துக்கள் நண்பரே!\nkannabiran, RAVI SHANKAR (KRS) 5/05/2008 01:25:00 PM\nஅப்பறம் கேன்சரில் அவதிப்படும் குழந்தைகளுக்காக மொட்டை அடிக்கும் Corporate Event எங்கள் வங்கியில் உண்டு!\nSt Patricks Day-வை சும்மா St Baldricks Day-ன்னு மாற்றி, மொட்டை அடிக்கும் வைபவம் வைத்து நிதி திரட்டுவார்கள்! முடி ஏலம் போகும்!\nஒரு முறை திருமலைக்கு வேண்டிக் கொண்டு, ரொம்ப நாள் ஆகி விடவே, இங்கேயே குழந்தைகள் உதவிக்கு மொட்டை அடித்துக் கொண்டு அனுபவமும் உண்டு!\nதிருமலை எம்பெருமானுக்கு எங்கு நேர்த்தி செய்தாலும், அவனை நினைத்துச் செய்தால் உகப்பு தான் அல்லவா? "எங்கும்" திருவருள் பெற்று இன்புறுவ ரெம்பாவாய் தானே? :-)\nkannabiran, RAVI SHANKAR (KRS) 5/05/2008 01:27:00 PM\n//உங்களுக்கு இன்னும் 4ம் தேதிதானே! இந்திய நேரக்கணக்கோ?//\nஇல்லை இப்போ 5ஆம் தேதி! நள்ளிரவு 00:26 hours! :-)\nஉங்களுக்காகத் தான் முழிச்சிக்கிட்டு இருந்தேன்! ட்ரீட் கொடுங்க! :-))\nநா.கண்ணன் 5/05/2008 01:28:00 PM\nமால் மருகா! ஷண்முகா!! முருகா! குகா!\nநா.கண்ணன் 5/05/2008 01:32:00 PM\n//உங்களுக்காகத் தான் முழிச்சிக்கிட்டு இருந்தேன்! ட்ரீட் கொடுங்க! :-))//\nஅடடா! மிக்க மகிழ்ச்சி! உண்மையிலேயே எப்படி ஆரம்பிக்கப் போகிறதோ என்றொரு கவலை! கண்ணனும், விஜயனும் இருக்கும் இடத்தில் வெற்றி நிச்சயம் என்றொரு சொலவடையுண்டு. கண்விழித்திருந்து வாழ்த்திவிட்டீர்கள்! நன்றி! நன்றி!!\nஒரிஜினல் "மனிதன்" 5/05/2008 01:33:00 PM\nநா.கண்ணன் 5/05/2008 01:37:00 PM\nமனித குலத்தின் மாமேதை வாழ்க\nஅந்தக் குழந்தைகளைத்தானே! Child is the father of man என்பதொரு ஆங்கிலக்கவி வாக்கு :-)\nசதங்கா (Sathanga) 5/05/2008 01:40:00 PM\nநட்சத்திர வாழ்த்துக்கள் !!!! நல்ல பதிவுகளாகக் கொடுத்து சிறப்புறவும் வாழ்த்துக்கள்.\nramachandranusha(உஷா) 5/05/2008 02:44:00 PM\nகண்ணன் சார், உங்க உள்ளத்தில் இருக்கும் திருபாற்கடலானைப் பற்றி எழுதுவீங்க, அதில் சந்தேகமில்லை. அப்படியே நீங்க ஆராய்ச்சி செய்யும் கடலைப் பற்றியும் எழுதுங்களேன்\nநா.கண்ணன் 5/05/2008 04:21:00 PM\nஉஷா! நலமா? அறிவியல் எழுதுவது கடினம். அதிக கவனமும் தேவை. வேலைகளுக்கு நடுவே வலைப்பதிவு ஒரு சுமைகல். கொஞ்சம் பாரத்தை இறக்கி வைத்து ஜாலியாக இருக்குமிடம்! முழு அறிவியல் என்று எழுதாமல், பெரு தேசத்தில் கலந்து கொண்ட உயர் மட்டக் கூட்டத்தில் அலசப் பட்ட விஷயங்களைப் பகிர்ந்து கொள்கிறேன்.\nமஞ்சூர் ராசா 5/07/2008 10:16:00 PM\nகொஞ்சம் தாமதமாக வந்திருக்கிறேன்.\nமொட்டை அடிப்பதை கேலி செய்வது போய் சமீபக்காலமாக அது புதிய பாணியாக மாறிவிட்டது. பெண்களும் மொட்டையடிக்க ஆரம்பித்துள்ளார்கள். (அழகாகவும் இருக்கிறது என்பது வேறு விஷயம்)\nநா.கண்ணன் 5/07/2008 10:22:00 PM\nவாங்க மஞ்சூர். தாமதமானாலென்ன! வந்துட்டீங்களே! அதுதான் முக்கியம்.\nபெண்ணிற்கு மொட்டை அழகு!\nகொன்னுடுவாங்க! ஆனா, மாட்ரிக்ஸ் படத்து கதாநாயகி முடி இல்லாமல் அழகாகவே இருக்கிறாள். என்ன? பழக வேண்டும்! முன்பெல்லாம் திருப்பதி மொட்டைகளைக் கேலியாகப் பார்ப்பதுண்டு. ஆனால் அவர்கள் conviction-ஐ கிண்டல் செய்ய எனக்கென்ன உரிமை? அதில் அழகைக் காணக் கற்றுக் கொள்ள வேண்டும்!
தாக்கம் dowels / ஆணி நங்கூரங்கள் - விலைகள் மற்றும் பயன்பாடு குறித்த தகவல் - பொதுமேலும் வாசிக்க\nமுக்கிய பொதுதாக்கம் dowels / ஆணி நங்கூரங்கள் - விலைகள் மற்றும் பயன்பாடு குறித்த தகவல்\nதாக்கம் dowels / ஆணி நங்கூரங்கள் - விலைகள் மற்றும் பயன்பாடு குறித்த தகவல்\nசெயல்பாடு - நங்கூரம் தட்டு\nநாக் நங்கூரர்களின் சிறப்பு அம்சங்கள்\nFISCHER இலிருந்து ஆணி நங்கூரங்கள்\nWÜRTH இலிருந்து ஆணி டோவல்கள்\nகீல் டோவல்கள் மற்றும் ஆணி டோவல்களை வாங்கவும்\nகட்டுமானத் தொழிலைக் கற்றுக்கொண்ட எவரும், இந்த சொல் அறியப்படும்: "மேலும் எஜமானர் அதை நம்பமாட்டார் - சுத்தியலால் கூட நீங்கள் திருகலாம்". சரியான கருவியை எப்போதும் பயன்படுத்துவதற்கான இந்த நுட்பமான அறிவுரை இப்போது தொழில்நுட்ப வளர்ச்சியால் பெறப்பட்டுள்ளது: நாக்-இன் டோவல்கள் மற்றும் ஆணி டோவல்கள் உண்மையில் திருகு மற்றும் ஆணி ஆகியவற்றின் இணைவு ஆகும், இது ஒரு சுத்தி மற்றும் ஒரு ஸ்க்ரூடிரைவர் இரண்டையும் கொண்டு சிகிச்சையளிக்க முடியும். நாக் நங்கூரங்கள் மற்றும் ஆணி நங்கூரங்களைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தையும் இந்த கட்டுரையில் படியுங்கள்.\nடோவல்ஸ் - திடமான ஆனால் உழைப்பு\nஒரு சுவரில் ஒரு டோவலைச் செருகுவதற்கு பல்வேறு கருவிகள் தேவைப்படுகின்றன, எனவே இது மிகவும் சிக்கலானது: முதலில், ஒரு துளை துளையிடப்பட்டு, பின்னர் பிளாஸ்டிக் டோவலை அறிமுகப்படுத்தி, பின்னர் மர திருகு திருகப்பட்டது. நீங்கள் கையில் இரண்டு பயிற்சிகளைக் கொண்டிருக்க வேண்டும் அல்லது ஏற்கனவே இருக்கும் இயந்திரத்தை மீண்டும் உருவாக்க வேண்டும்: துளையிடுங்கள் - பிட் இன் மற்றும் நேர்மாறாக. இது மிகவும் எரிச்சலூட்டும் மற்றும் நீண்ட காலத்திற்கு அதிக நேரம் எடுக்கும். குறிப்பாக தொழில்முறை பயன்பாட்டில், மிகவும் திறமையான முறைக்கான அழைப்பு சத்தமாகவும் சத்தமாகவும் மாறியது. இந்த காரணத்திற்காக, டோவல் இணைப்பு உருவாக்கப்பட்டது, இது ஒரு கம்பியில்லா ஸ்க்ரூடிரைவர் மூலம் சுத்தப்படுத்தப்பட்டு வெளியிடப்படலாம்.\nஒரு சுத்தியல் டோவல் எவ்வாறு செயல்படுகிறது ">\nநாக்-இன் டோவல் அடிப்படையில் ஒரு சாதாரண டோவல் கூட்டு போன்ற அதே கூறுகளைக் கொண்டுள்ளது: ஒரு நைலான் அல்லது பிபி டோவல் ஒரு துளை துளைக்குள் செருகப்படுகிறது. செருகப்பட்ட திருகு டோவலை இதுவரை பரப்புகிறது, அது துளையிடப்பட்ட துளை உள் சுவருக்கு எதிராக நெரிசலானது. சாதாரண திருகு-பிளக் இணைப்பிலிருந்து நாக்-இன் டோவலுக்கான வித்தியாசம் என்னவென்றால், திருகு ஒரு சுத்தியல் அடியுடன் செருகப்படுகிறது. இது வேகமாகச் செல்வது மட்டுமல்லாமல், கம்பியில்லா ஸ்க்ரூடிரைவரின் எரிச்சலூட்டும் மறுகட்டமைப்பையும் சேமிக்கிறது. பணிப்பாய்வுகளில், கம்பியில்லா ஸ்க்ரூடிரைவர் அல்லது துரப்பணம் துரப்பண துளைகளை அமைக்க மட்டுமே பயன்படுத்த முடியும். ஒவ்வொரு சாதாரண பில்டருக்கும் அவரது பெல்ட்டில் ஒரு சுத்தி தொங்குவதால், பாதிப்பு நொடிகளில் இருக்கும்.\n"ஸ்க்லாக்டெபல்" மற்றும் "நாகெல்டெபல்" ஆகியவற்றின் சொற்கள் மிகவும் தேர்ந்தெடுக்கப்பட்டவை அல்ல. இந்த நேரத்தில், இரண்டு சொற்களும் ஒரே பொருளைக் குறிக்கின்றன. இந்த தயாரிப்பின் வகைகள் மிகவும் வேறுபட்டவை.\nசுவர்கள் மற்றும் கூரையுடன் கனமான பொருள்களை இணைக்க நீங்கள் விரும்பினால், கனரக-கடமை டோவல்களை நாங்கள் பரிந்துரைக்கிறோம் - கனரக-கடமை நங்கூரங்கள் மற்றும் அவற்றின் பயன்பாடு பற்றிய அனைத்தையும் இங்கே காணலாம்: //www.clubemaxiscootersdonorte.com/schwerlastanker-schwerlastduebel/\nசாதாரண டோவல் அதன் வடிவவியலால் சாதாரண டோவல் மூட்டுகளிலிருந்து வேறுபடுகிறது: சாதாரண டோவல்கள் டோவல்களை விட நீளமாகவும் மெல்லியதாகவும் இருக்கும். இதற்கு பின்வரும் காரணம் உள்ளது:\nதிருகு டோவலில் தட்டப்படுவதற்கு, அது நேராக மற்றும் சுவரில் பாதுகாப்பாக இருக்க வேண்டும். இதற்காக அவள் ஏற்கனவே தள்ளாடிய துளையில் ஏற்கனவே செருகப்பட்டிருக்கிறாள். இந்த நோக்கத்திற்காக, நீண்ட மற்றும் மெல்லிய வடிவியல் சிறந்தது. மற்றொரு காரணம் உராய்வு மற்றும் கிளம்பிங் சக்தி: இது டோவலுக்கும் சுவருக்கும் இடையிலான பிணைப்பு இணைப்பு, இது உறுதியான இணைப்பை நிறுவுகிறது. டோவலின் மேற்பரப்பு பெரியது, அது சுவரில் உட்கார முடியும். எனவே பெரிய திருகு டோவல்கள் ஒப்பீட்டளவில் குறுகிய துளையிடும் ஆழத்தை கையாள முடியும். ஆனால் அதே வலிமையை அடைய, நாக்-இன் டோவல் அதற்கேற்ப நீளமாக இருக்க வேண்டும். ஆயினும்கூட, நாக்-இன் டோவல்கள் திருகு செருகிகளின் சுமந்து செல்லும் திறனை எட்டவில்லை\nஇந்த டோவல்களில் தட்டுவதற்கான திறன் கூடுதலாக திருகு ஒரு பெரிய, தட்டையான தலையைக் கொண்டுள்ளது மற்றும் டோவல் அதன் தண்டு மீது ஒரு பரந்த வளையத்தையும் கொண்டுள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட திருகு தாக்கத்தைத் தணிக்கக்கூடிய ஒரு இடையகமாக மோதிரம் செயல்படுகிறது.\nஇது குறிப்பாக ஸ்க்ரூடிரைவர் மூலம் திருகு மீண்டும் மாற முடியும் என்பது தாக்க டோவல்கள் மற்றும் ஆணி டோவல்களுடன் தனித்துவமானது. இருப்பினும், இது ஒரு மோட்டார் இயக்கப்படும் ஸ்க்ரூடிரைவரை மட்டுமே பயன்படுத்த வேண்டும், இல்லையெனில் நீங்கள் கையேடு முறையில் தசைநாண் அழற்சியைப் பெறுவீர்கள்.\nதாக்க அறிவிப்பாளர்களின் முன்னணி உற்பத்தியாளர்கள் FISCHER மற்றும் WÜRTH நிறுவனங்கள். இந்த சப்ளையர்களிடமிருந்து மிகவும் பொதுவான வகை ஆணி டோவல்களை உங்களுக்கு அறிமுகப்படுத்த விரும்புகிறோம்.\nகிடைக்கும் டோவல் என்.எஸ்\nநாகெல்டெபல் என்எஸ் என்பது நைலான் டோவல்கள் மற்றும் அதிக வலிமை கொண்ட எஃகு செய்யப்பட்ட கால்வனைஸ் ஆணி திருகு ஆகும். சட்டசபை முடிந்தவரை திறமையாக செய்ய, இந்த நாக்-இன் டோவல்கள் ஏற்கனவே ஒரு யூனிட்டாக முன்பே கூடியுள்ளன. தொடர் நிறுவலுக்கு இது மிகவும் சாதகமானது. NS ஒரு ஒருங்கிணைந்த தாக்க பூட்டைக் கொண்டுள்ளது. இது பிளாஸ்டிக் நங்கூரம் முன்கூட்டியே பரவுவதைத் தடுக்கிறது. ஆணி தலையில் குறுக்கு-ஸ்லாட் வைத்திருப்பவர் இருப்பதால், கம்பியில்லா ஸ்க்ரூடிரைவர் மூலம் எளிதாக மாற்ற முடியும். மீண்டும் திருகும்போது, ​​ஸ்க்ரூடிரைவர் பரிந்துரைக்கப்படுகிறது.\n5 முதல் 10 மில்லிமீட்டர் வரையிலான கோர் விட்டம் மற்றும் 30 முதல் 230 மில்லிமீட்டர் நீளத்துடன் என்எஸ் கிடைக்கிறது. அவரது விலைகள் ஒரு துண்டுக்கு 0.06 யூரோவிலிருந்து தொடங்குகின்றன. இருப்பினும், இந்த குறைந்த விலைகள் ஒற்றை விலையில் கிடைக்காது, ஆனால் குறைந்தது 50 துண்டுகள் கொண்ட கொள்கலன்களில் மட்டுமே. உற்பத்தியாளர் பிஷ்ஷர் மொத்தம் 26 வகையான என்எஸ் டோவல்களை வழங்குகிறது.\nகையேடு NS வழியாக துளை பெருகுவதற்கு ஏற்றது என்று விவரிக்கிறது.\nகிடைக்கும் டோவல் என்.எஃப்\nஆணி நங்கூரம் NF நைலான் பிளக்கின் தண்டு மீது விரிவாக்கப்பட்ட ஸ்லாட்டைக் கொண்டுள்ளது. அவர் இதை NS ஐ விட அதிகமாக பரப்ப முடியும். தொழில்நுட்ப ரீதியாக, இரண்டு டோவல்களும் மிகவும் ஒத்தவை. NF ஒரு தாக்க பூட்டையும் கொண்டுள்ளது. உலோகம் அல்லது மரத்தால் செய்யப்பட்ட மூலக்கூறுகளுக்கு இது மிகவும் பொருத்தமானது. சுவர் இணைப்பிற்கான சுயவிவரங்கள் அல்லது ப்ளாஸ்டெரிங்கிற்கான துணை தண்டவாளங்கள் இதில் அடங்கும். கேபிள் இயங்குதளங்களுக்கு இது நிபந்தனைக்கு ஏற்றது: இங்கே, பேலோடுகளை துல்லியமாக கணக்கிட்டு கடைபிடிக்க வேண்டும். பாதுகாப்பான பக்கத்தில் இருக்க, காலவரையற்ற வெட்டு சக்திகளுக்கு வலுவான நங்கூரம் பயன்படுத்தப்பட வேண்டும். படலம், துளையிடப்பட்ட நாடாக்கள் அல்லது கவ்விகளை சரிசெய்ய நாக் நங்கூரம் NF நன்கு பயன்படுத்தப்படுகிறது. ஒரு துணை கட்டுமானப் பொருட்களாக, திடமான கொத்துக்கான அனைத்து சாதாரண பொருட்களும் அவற்றின் உயர் துளை வகைகளும் சேவை செய்ய முடியும். கூடுதலாக, NF பரவக்கூடிய திறனால் திட பிளாஸ்டர் மற்றும் காற்றோட்டமான கான்கிரீட்டிற்கும் ஏற்றது.\nNF முதல்5முதல் 8 மில்லிமீட்டர் விட்டம் மற்றும் 25 முதல் 120 மில்லிமீட்டர் நீளத்துடன் கிடைக்கிறது. அவரது விலைகள் ஒரு துண்டுக்கு 0.10 யூரோவிலிருந்து தொடங்குகின்றன. இருப்பினும், இந்த குறைந்த விலைகள் ஒற்றை விலையில் கிடைக்காது, ஆனால் குறைந்தது 50 துண்டுகள் கொண்ட கொள்கலன்களில் மட்டுமே. உற்பத்தியாளர் பிஷ்ஷர் மொத்தம் 19 வகையான என்எஃப் நங்கூரங்களை வழங்குகிறது.\nகையேடு NF வழியாக துளை பெருகுவதற்கு ஏற்றது என்றும் விவரிக்கிறது.\nகிடைக்கும் டோவல் என்.பி.\nநாக் நங்கூரம் NP இன் சிறப்பியல்பு அதன் பரந்த காளான் தலை. இது புலப்படும் வரம்பில் குறைந்த பொருள் தடிமன் கொண்ட கூறுகளின் இணைப்பிற்கு குறிப்பாக பொருத்தமானதாக அமைகிறது. பரந்த காளான் தலை மற்றும் அதற்கேற்ப டிரைவ் ஸ்க்ரூவின் பரந்த தலை ஆகியவை மெல்லிய பொருளின் குறிப்பாக வலுவான இணைப்பை உறுதி செய்கின்றன. கட்டிடத்தின் அதிர்வுகளுடன் கூட பொருளில் ஒரு கிழிப்பு பெரிய தொடர்பு மேற்பரப்பால் தடுக்கப்படுகிறது. இது பார்வைத் துறையில் இருந்தாலும் கூட, தாள்கள், படலம் மற்றும் அறிகுறிகளுக்கு நாகெல்டெபல் என்.பி.\nநிறுவலுக்கான அவரது அறிவுறுத்தல்கள் துளை வழியாக ஏற்றுவதற்கு ஏற்றது என்பதை விவரிக்கிறது.\nNP5முதல் 8 மில்லிமீட்டர் விட்டம் மற்றும் 30 முதல் 40 மில்லிமீட்டர் நீளத்துடன் கிடைக்கிறது. அவரது விலைகள் ஒரு துண்டுக்கு 0.06 யூரோவிலிருந்து தொடங்குகின்றன. ஒற்றை கொள்முதல் சாத்தியமாகும். உற்பத்தியாளர் பிஷ்ஷர் மொத்தம்6வகையான என்.பி டோவல்களை வழங்குகிறது.\nகிடைக்கும் டோவல் என்.பி கே\nஆணி நங்கூரம் NP K மிக முக்கியமான விவரத்தால் NP இலிருந்து வேறுபடுகிறது: நாக் நங்கூரம் NP K முற்றிலும் பிளாஸ்டிக்கால் ஆனது. இது அதன் சுமை திறனை கணிசமாகக் குறைக்கிறது என்றாலும். இருப்பினும், இந்த ஆணி பிளக் பெரிய சுமைகளை சுமக்க உருவாக்கப்படவில்லை. மின் நிறுவலை முடிந்தவரை பாதுகாப்பாக வைப்பதே அவரது வேலை. மின் நிறுவல்களை அமைப்பதற்கு முற்றிலும் கடத்தும் அல்லாத நாக் நங்கூரம் சிறந்தது. எல்லாவற்றிற்கும் மேலாக, மெல்லிய சுவர் தாள் உலோகம் அல்லது பிளாஸ்டிக் கொண்டிருக்கும் கேபிள் குழாய்கள், இந்த நாக்-இன் டோவலுடன் சிறந்த முறையில் இணைக்கப்படலாம். அவரது காளான் தலை மூலம் அவர் ஆணி நங்கூரம் NP போன்ற அதே நன்மைகள் உள்ளன.\nNP K இன் மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட பணி ஒரு பெரிய தேர்வு வகைகளை தேவையற்றதாக ஆக்குகிறது. அதனால்தான் பிளாஸ்டிக் நாக்-இன் நங்கூரம் ஒரே பதிப்பில் மட்டுமே வழங்கப்படுகிறது. விலைகள் ஒரு துண்டுக்கு 0.07 யூரோ.\nகிடைக்கும் டோவல் என்.எஸ் டி\nஆணி டோவல் என்எஸ் டி ஒரு உண்மையான கடின உழைப்பாளியான என்.பி கேக்கு மாறாக உள்ளது. அடிப்படையில், NS D ஒரு எளிய NF ஆகும். ஒருங்கிணைந்த சீல் வாஷர் மற்றும் அதிக வலிமை, கால்வனேற்றப்பட்ட மற்றும் எஃகு ஆகியவற்றால் செய்யப்பட்ட திருப்பு திருகு காரணமாக, இந்த தாக்க நங்கூரம் வெளிப்புற பயன்பாட்டிற்கு மிகவும் பொருத்தமானது. அவர் தன்னை அரிப்பை எதிர்ப்பவர் மட்டுமல்ல. பெரிய சீல் வட்டு ஒரு பரந்த தொடர்பு அழுத்தம் மற்றும் வெளியில் இருந்து உள்ளே ஒரு முத்திரையை உறுதி செய்கிறது. இது NS D குறிப்பாக வானிலை மற்றும் சவுக்கடி தண்ணீருக்கு வெளிப்படும் இடங்களுக்கு ஏற்றதாக அமைகிறது. தாள்கள் மற்றும் அறிகுறிகள் போன்ற மெல்லிய சுவர் பொருட்களை செயலாக்க பரந்த ஆதரவு மேற்பரப்பு சிறந்தது. திரைப்படங்கள் கூட அதை நன்றாக சரிசெய்ய முடியும்.\nஆணி பிளக் என்எஸ் டி இரண்டு வகைகளில் மட்டுமே கிடைக்கிறது. அவை முக்கியமாக சீல் வாஷரின் விட்டம் மற்றும் நீளத்தில் வேறுபடுகின்றன. அவை போர்ஹோலில் இருந்து6மில்லிமீட்டர் விட்டம் தேவை மற்றும் 40 மற்றும் 60 மில்லிமீட்டர் நீளம் கொண்டவை. விலைகள் தொடங்குகின்றன\nWÜRTH இலிருந்து வரும் ஆணி டோவல்கள் ஃபிஷர் தயாரிப்புகளிலிருந்து வேறுபடுகின்றன, அவை பெரும்பாலும் உலோகத்தால் ஆனவை. நிச்சயமாக அது அவர்களை மிகவும் விலை உயர்ந்ததாக ஆக்குகிறது. இருப்பினும், அவை முதன்மையாக உயர் வெட்டு சக்திகள் ஏற்படக்கூடிய சிறப்பு பயன்பாடுகளுக்காகவும் கருதப்படுகின்றன.\nதாக்கம் நங்கூரம் WS-D / வெளிப்புற நூல் WS-D / உள் நூல் WS-D\nஇந்த மெட்டல் டோவல் நடுத்தர கனமான சுமைகளுக்கு ஒளியின் உச்சவரம்பு ஏற்றுவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது முக்கியமாக வெப்ப காப்பு சரிசெய்ய பயன்படுத்தப்படுகிறது. சுமை இல்லாத பல ஃபாஸ்டென்சர்களுக்கு இது பயன்படுத்தப்படும் என்று அறிவுறுத்தல்கள் கூறுகின்றன. கூடுதலாக, அறிவுறுத்தல்களுக்கு காலர் பயிற்சிகளைப் பயன்படுத்த வேண்டும். வொர்த் WS-S ஐ ஐந்து அளவுகளில் வழங்குகிறது. டோவல் நீளம் 38 - 114 மில்லிமீட்டர். வொர்த் வர்த்தகர்களுக்கு மட்டுமே விற்கிறார், எனவே, விலைகள் குறித்த எந்த தகவலையும் தீர்மானிக்க முடியாது.\nபருமனான டிரெய்லர் சுமைகளை எளிதாக நிறுவ உள் அல்லது வெளிப்புற திரிக்கப்பட்ட டோவல் மிகவும் வசதியானது. இந்த டோவல்கள் ஒளி சுமைகளுக்கு மட்டுமே அறிவுறுத்தல்களின்படி வடிவமைக்கப்பட்டுள்ளன. போர்ஹோலுக்கு, காலர் பயிற்சிகள் தேவை. திடமான கான்கிரீட்டில் மட்டுமே அவற்றை அறிமுகப்படுத்த முடியும். WS-D dowels இன் சுமக்கும் திறன் உராய்வு சக்தியால் உருவாக்கப்படுகிறது. WS-D இன் நூல் பதிப்புகளுக்கான விலைகள் பதிவு செய்யப்பட்ட துணி பயனர்களுக்கு மட்டுமே தெரியும்.\nநாகெல்டெபல் W-SD WSS2/ L இடைநீக்கம் செய்யப்பட்ட கூரைகள் மற்றும் வெப்ப காப்புக்கான ஒருங்கிணைந்த பெருகிவரும் தொகுதிடன் WS-D டோவல்களை நீட்டிக்கிறது. இந்த சிஸ்டம் பிளக் மூலம் கட்டமைப்பால் பரவும் ஒலியின் துண்டித்தல் தயாரிக்கப்படுகிறது. இது பல குடும்ப வீடுகளுக்கு அதன் பயன்பாடு மிகவும் சுவாரஸ்யமானது. அறிவுறுத்தல்களுக்கு இந்த டோவலுக்கான காலர் பயிற்சிகளைப் பயன்படுத்த வேண்டும், இது சாத்தியமான துளை துளை தயாரிக்க முடியும். சுமைகள் உராய்வு சக்தியால் மட்டுமே நடத்தப்படுகின்றன. முழுமையாக கால்வனேற்றப்பட்ட டோவல் குறிப்பாக துருவை எதிர்க்கும். பதிவுசெய்யப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே இந்த சிறப்பு டோவலுக்கும் விலைகள் தெரியும்.\nடவர் W-SD WSS3/ L.\nஇந்த சிறப்பு டோவலில் டோவல் திருகு அலகுக்கு கூடுதலாக ஒருங்கிணைந்த பெருகிவரும் ரெயில் உள்ளது. இது முதன்மையாக காற்றோட்டம் குழாய்களை நேரடியாக ஏற்றுவதற்கு பயன்படுத்தப்படுகிறது\nடவல் W-SD WSS 1 / L.\nசிறப்பு டோவல் டபிள்யூ எஸ்டி டபிள்யூஎஸ்எஸ் 1 / எல் ஒலி உறிஞ்சும் இடைநீக்க அமைப்புகள் மற்றும் பெருகிவரும் தண்டவாளங்களை ஏற்றுவதற்கான ஒருங்கிணைந்த லக் பொருத்தப்பட்டுள்ளது. இது ஒரு ஒருங்கிணைந்த ரப்பர் இடையகத்துடன் பொருத்தப்பட்டிருக்கிறது, இது பெரும்பாலும் கட்டமைப்பால் ஏற்படும் சத்தத்திலிருந்து அதை துண்டிக்கிறது.\nஅனைத்து சிறிய அளவிலான கட்டுமான தயாரிப்புகளையும் போலவே, விலைகளும் வாங்கிய அளவை அடிப்படையாகக் கொண்டவை. நீங்கள் அதை வாங்கவோ அல்லது மலிவான விலையைத் தேடவோ கூடாது என்பது முக்கியம். கட்டமைக்கும் டோவல்கள் எப்போதும் அறிவுறுத்தல்களின்படி கண்டிப்பாக வைக்கப்பட வேண்டும். துளை எவ்வளவு ஆழமாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தல்கள் உங்களுக்குக் கூறுகின்றன. அறிவுறுத்தல்கள் பயன்படுத்தப்பட வேண்டிய பயிற்சியை பரிந்துரைக்கின்றன. தவறான மரணதண்டனை காரணமாக சட்டசபை தோல்வியடையாமல் இருக்க, இதில் மிகுந்த கவனமும் கவனமும் செலுத்தப்பட வேண்டும்.\nபெரிய தொடர்களுக்கு புல்-இன் டோவல்களைப் பயன்படுத்தவும்\nஎப்போதும் பொருத்தமான டோவல்களைப் பயன்படுத்துங்கள்\nவிலைகளை ஒப்பிட்டு, முடிந்தவரை பெரிய அளவைக் குறைக்கவும்\nஅறிவுறுத்தப்பட்டபடி எப்போதும் நிறுவவும்\nநீங்களே சேறு உருவாக்குதல் - DIY வழிமுறைகள் மற்றும் பசை இல்லாமல் மற்றும் இல்லாமல் செய்முறை\nபிளாஸ்டர் OSB பேனல்கள் - உள்ளேயும் வெளியேயும் வழிமுறைகள்\nபின்னல் ஹவுண்ட்ஸ்டூத் முறை - படங்களுடன் வழிமுறைகள்\nபின்னல் குழந்தை தொப்பி - இலவச முறை + பின்னல் முறை\nலே ஸ்கிரீட் - அறிவுறுத்தல்கள் மற்றும் அனைத்து செலவுகளும் ஒரே பார்வையில்\nகிரீஸ் கறைகளை அகற்று - கிட்டத்தட்ட எல்லா பொருட்களுக்கும் உதவிக்குறிப்புகள்\nஉள்ளடக்கம் மழலையர் பள்ளிக்கு பிரியாவிடை நீதிமொழிகள் மற்றும் கவிதைகள் குழந்தைகளுக்கு கல்வியாளர் / கல்வியாளர் மற்றும் குழுவுக்கு பெரும்பாலும் சிறியவர்கள் மழலையர் பள்ளிக்கு விடைபெறுவது அவ்வளவு சுலபமல்ல. பள்ளியின் வரவிருக்கும் தொடக்கத்தைப் பற்றி நிறைய மகிழ்ச்சியும் ஆர்வமும் இருந்தாலும், ஆரம்பத்தில் பிரிப்பு வலி ஆதிக்கம் செலுத்துகிறது. அழகான சொற்கள் மற்றும் கவிதைகள் மூலம் உங்கள் குழந்தைகளுக்கு உதவுங்கள். வெவ்வேறு தலைப்புகளில் இருந்து சில உத்வேகங்கள் இங்கே. இனிமையான சொற்கள் பாராயணம் அல்லது ஃப்ரேமிங்கிற்கும், பரிசுகளுக்காக அல்லது வீட்டில் வாழ்த்து அட்டைகள\nமரம், உலோகம் மற்றும் பிளாஸ்டிக் ஆகியவற்றிலிருந்து வண்ணப்பூச்சுகளை நீக்குதல் - இது எவ்வாறு இயங்குகிறது!\nதையல் தாவணி - பெரியவர்களுக்கு முக்கோண தாவணி - வழிமுறைகள் + முறை\nCopyright பொது: தாக்கம் dowels / ஆணி நங்கூரங்கள் - விலைகள் மற்றும் பயன்பாடு குறித்த தகவல் - பொதுமேலும் வாசிக்க
பூமிபுத்ரா - தமிழ் விக்கிப்பீடியா\nஒரு நாட்டிலோ அல்லது ஓர் இடத்திலோ தோன்றிய பூர்வக் குடியினரை பூமிபுத்திரா என அழைக்கலாம். இந்தச் சொல் மலேசிய நாட்டில் தோன்றிய பூர்வக் குடியினரைச் சுட்ட பயன்படுத்தப்பட்டு வருகின்றது. தீபகற்ப மலேசியாவிலும், கிழக்கு மலேசியாவிலும் தோன்றிய பூர்வக் குடியினர், மற்றும் மலாய்க்காரர்களைப் பூமிபுத்திரா என்று அழைக்கின்றனர். இச்சொல் சமஸ்கிருத மொழியில் இருந்து தோன்றியது. (பூமி=உலகம்/மண், புத்திரா=மகன்). அதாவது மண்ணின் மைந்தர்கள் என பொருள் கொள்ளலாம்.\nBumiputra என்பது ஒரு சமஸ்கிருதச் சொல்லாக இருந்தாலும், மலாய் மொழியில் இப்போதைக்கு ஒரு வழக்குச் சொல்லாகிவிட்டது. அந்தச் சொல்லை 'பூமிபுத்ரா' என்றுதான் மலேசியாவில் அழைக்கிறார்கள். 1969 மே மாதம் 13ஆம் தேதி மலேசியாவில் ஓர் இனக்கலவரம் நடைபெற்றது. அதை மே 13 கலவரம் என்று அழைக்கிறார்கள். பொதுவாக, மலாய்க்காரர்களுக்கும் சீனர்களுக்கும் இடையே நிலவிய பொருளாதாரப் பாகுபாடுகளே அந்தக் கலவரத்திற்கு மூல காரணம் என்று கருதப்படுகிறது.\nஇந்தக் கலவரத்தில் இந்தியர்களும் பெருமளவில் பாதிப்பு அடைந்தனர். மலாய்க்காரர்கள் மற்ற எல்லா இனங்களையும்விட முன்னேற்றம் அடைய வேண்டும் எனும் ஒரு புதுவாதக் கொள்கையை 1970களில் அரசாங்கம் அறிமுகம் செய்தது. மலாய்க்காரர்களுக்கு கூடுதலான பொருளாதார வாய்ப்புகளை வழங்க வேண்டும் என்று பல்வேறான தீவிரப் பொருளாதாரக் திட்டங்களை அமல்படுத்தியது. அந்தக் கட்டத்தில் மலாய்க்காரர்களுக்கும், மலேசியப் பூர்வீகக் குடிமக்களுக்கும் ‘பூமிபுத்ரா’ எனும் அந்தஸ்து வழங்கப்பட்டது.\nஅரசாங்கத்தின் அந்தப் புதுவாதக் கொள்கையினால் நகர்ப்புறங்களில், புற நகர்ப்புறங்களில் வாழ்ந்த மத்தியத் தர மலாய்க்காரர்கள் மட்டுமே மிகைப் பலன் அடைந்தனர். கிராமப்புற மலாய்க்காரர்கள் தொடர்ந்து ஏழ்மையிலேயே இருந்தனர். இருந்தும் வருகின்றனர். இந்தப் புதுவாதக் கொள்கை இந்தியர்களைப் பெரும் அளவில் பாதித்தது. இண்ட்ராப் எனும் இந்து உரிமைகள் போராட்டக் குழு உருவானதற்கும் அந்தப் புதுவாதக் கொள்கையே காரணமாகும்.\n↑ Bumiputra isaMalaysian term to describe Malay race and the indigenous peoples of Southeast Asia in Malaysia.\n↑ On May 13th 1969, simmering tension between the Malays and the Chinese burst on to the streets.\n↑ Malaysian Indian Community: Victim of ‘Bumiputera’ Policy.\n↑ Malaysia is probably the only country in the world with racial discrimination explicitly written into its constitution.\n"https://ta.wikipedia.org/w/index.php?title=பூமிபுத்ரா&oldid=1267163" இருந்து மீள்விக்கப்பட்டது\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 நவம்பர் 2012, 14:25 மணிக்குத் திருத்தினோம்.
கங்கையாற்றில் பெரு வெள்ளப் பெருக்கு; பீகார் மக்களுக்கு எச்சரிக்கை - lifeberrys.com Tamil இந்தி\nகங்கையாற்றில் பெரு வெள்ளப் பெருக்கு; பீகார் மக்களுக்கு எச்சரிக்கை\nBy: Nagaraj Wed, 19 Aug 2020 3:30 PM\nவெள்ள அபாய எச்சரிக்கை... கங்கை நதியில் பெருவெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதையடுத்து பீகாரில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nசோனே நதியில் கங்கையில் இருந்து சுமார் 60 ஆயிரம் கனஅடி நீர் பாய்ந்துக் கொண்டிருக்கிறது. இதே போன்று பீகாரின் இதர நதிகளான கன்டக், புர்ஹி, பாகமதி, கோசி, மகாநந்தா உள்ளிட்ட ஆறுகளிலும் வெள்ளப் பெருக்கு அதிகரித்துள்ளது.\nகங்கையாற்றின் பல்வேறு படித்துறைகளில் நீராட வேண்டாம் என்று பொதுமக்களிடம் பாட்னாவில் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். பீகாரின் தலைநகரில் நேற்று மாலை காந்தி காட் பகுதியில் வெள்ளப்பெருக்கு அபாயகரமான அளவைத் தாண்டிவிட்டது.\nவரும் நாட்களில் இந்த வெள்ளம் மேலும் அதிகரிக்கும் என்றும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். பக்கத்த நாடான நேபாளத்தில் பெய்து வரும் கனமழையால் பெரும் அளவுக்கு நீர் திறந்து விடப்பட்டு அதன் வெள்ளம் பீகாரை மிதக்க வைத்துக் கொண்டிருக்கிறது. இதுவரை மழை வெள்ளத்தால் 25 பேர் உயிரிழந்துவிட்டனர். சுமார் 81 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
GeminiGanesanumSuruliRajanum Movie news | Thirdeye Cinemas\nGeminiGanesanumSuruliRajanum Movie news\n“ஜெமினிகணேசனும் சுருளிராஜனும்” பற்றி இயக்குநர் ஓடம் இளவரசு பேசியது :-\nஜெமினிகணேசனும் சுருளிராஜனும் திரைப்படத்தின் முதல் நாள் படப்பிடிப்பை நாங்கள் மதுரையில் நடத்தினோம். அங்கே அதர்வா , ரெஜினா மற்றும் அதீதி ஆகியோரின் பகுதியை படமாக்கினோம். படப்பிடிப்பில் ரெஜினாவும் , அதீதியும் நல்ல நண்பர்களாகிவிட்டார்கள் . அவர்கள் இருவரும் சேர்ந்து கேரளாவுக்கு டூர் சென்றார்கள். அடுத்தகட்ட படப்பிடிப்பு ஊட்டியில் நடைபெற்றது அதில் அதர்வா , ஐஸ்வர்யா ராஜேஷ் , ப்ரணீதா ஆகியோர் கலந்து கொண்டார்கள். ஐஸ்வர்யாவும் , ப்ரணிதாவும் படப்பிடிப்பின் போது நல்ல நண்பர்களாகிவிட்டார்கள். படப்பிடிப்பின் அனைவரும் நன்றாக ஒருவரையொருவர் புரிந்து கொண்டு நன்றாக நடித்தனர். படத்தில் அனைத்து கதாபாத்திரங்களும் புதுமையாக இருக்கும். ஐஸ்வர்யா ராஜேஷின் கதாபாத்திரம் எல்லோருடைய கதாபாத்திரத்திலும் இருந்து வேறுபட்டு புதுமையாக இருக்கும். ரெஜினாவின் கதாபாத்திரம் நிச்சயம் பேசப்படும் இப்படத்தில் அவர் மதுரை பெண்ணாக நடித்துள்ளார். அதர்வா , ஐஸ்வர்யா , ப்ரணிதா மூவரும் ஊட்டியில் படிக்கும் கல்லூரி நண்பர்கள். ரெஜினா மற்றும் அதீதி ஆகியோர் அதர்வாவின் பக்கத்து வீட்டில். குடியிருக்கும் பெண்களாக வருகிறார்கள். படத்தில் 5தாவதாகவும் ஒரு ஹீரோயின் உள்ளார் அவருடைய பெயர் நேஹா மாலிக் , அவருடைய கதாபாத்திரத்தின் மூலம் நாங்கள் பார்ட் – 2வுக்கு லீட் வைத்துள்ளோம். ஜெமினிகணேசனும் சுருளிராஜனும் திரைப்படமும் பெண்களின் முதல் காதல் பற்றி அழுத்தமான ஒரு உணர்வை தரும். முதல் காதல் தான் சிறந்த காதல் என்பதை திரைக்கதையின் மூலம் அழுத்தமாக கூறியுள்ளோம். முதலில் ப்ரணீதா நடித்த கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பதாக இருந்தது. தமிழில் ஐஸ்வர்யா ராஜேஷ் பக்கத்து வீட்டு பெண் இமேஜ் உள்ளவர் என்பதால் அவர் அந்த கதாபாத்திரத்தில் நடிக்கவில்லை. படத்தில் அதர்வாவின் தந்தை தீவிர ஜெமினி கணேசன் ரசிகர் என்பதால் அவருக்கு ஜெமினி கணேசன் என்று பெயர் வைத்திருப்பார். சூரி சுருளி ராஜன் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படத்தில் ஜெமினி கணேசன் மற்றும் சுருளி ராஜன் ஆகியோருக்கு ட்ரிபியூட் ஒன்றை படத்தின் துவக்கத்தில் வைத்துள்ளோம். படத்தில் பாடல் காட்சிகளில் மட்டும் தான் சிறிய அளவு கிளாமர் இருக்கும் , முத்த காட்சி இருக்கும் ஆனால் விரசமாக இருக்காது. படத்தில் நான்கு கதாநாயகிகளுக்கும் நான்கு பாடல் இருக்கும்.2காட்சிகளை தவிர்த்து படத்தில் எல்லா காட்சிகளிலும் அதர்வா இருப்பார். படத்தில் மொத்தம் 74 காட்சி அதில் 72 காட்சியில் அதர்வா இருப்பார். படத்தின் எல்லா காட்சிகளிலும் ரொமான்டிக் காமெடி இருந்து காமெடி இருந்து கொண்டே இருக்கும். படத்தில் சீரியஸான காட்சி இரண்டு தான் அந்த காட்சிகளில் அதர்வா இருக்க மாட்டார் என்றார் இயக்குநர் ஓடம் இளவரசு.\nPrevious article12.12.1950 movie news\nNext articleNaan Aanaiyittal Theatrical Trailer
டி.என் இல் 1,196 மியூகோமிகோசிஸ் வழக்குகள், அதிக மருந்துகள் தேவை - ToTamil.com\nடி.என் இல் 1,196 மியூகோமிகோசிஸ் வழக்குகள், அதிக மருந்துகள் தேவை\nதமிழகத்தில் இதுவரை 25 மாவட்டங்களில் 1,196 மியூகோமிகோசிஸ் பாதிப்புகள் பதிவாகியுள்ளன. சென்னையில் அதிக எண்ணிக்கையிலான வழக்குகள் உள்ளன, 420 நோயாளிகள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nசுகாதாரத் துறை அதிகாரிகளின் கூற்றுப்படி, ஜூன்9ஆம் தேதி நிலவரப்படி, மாநிலத்தில் 1,196 நோயாளிகள் மியூகோமைகோசிஸால் பாதிக்கப்பட்டுள்ளனர், அதே நேரத்தில் மையத்திலிருந்து லிபோசோமல் ஆம்போடெரிசின்-பி மொத்த ஒதுக்கீடு 7,330 குப்பிகளைக் கொண்டுள்ளது. “புதன்கிழமை எங்களுக்கு கூடுதல் ஒதுக்கீடு கிடைத்தது. ஆனால் நாங்கள் இன்னும் போதைப்பொருளைக் குறைத்து வருகிறோம், ”என்று ஒரு சுகாதார அதிகாரி கூறினார். முன்னதாக, முதலமைச்சர் எம்.கே.ஸ்டாலின், மத்திய சுகாதார அமைச்சருக்கு கடிதம் எழுதியிருந்தார், மாநிலத்திற்கு குறைந்தது 30,000 குப்பிகளை உடனடியாக ஒதுக்குமாறு கோரினார்.\nஜூன்9நிலவரப்படி, மாநிலத்தில் மொத்தம் 25 மாவட்டங்களில் மியூகோமிகோசிஸ் நோய்கள் பதிவாகியுள்ளன – இது COVID-19 இலிருந்து மீண்டு வரும் நோயாளிகளை பாதிக்கும் ஒரு ஆக்கிரமிப்பு பூஞ்சை தொற்று. சென்னையில், 380 நோயாளிகள் அரசு மருத்துவமனைகளிலும், 40 பேர் தனியார் வசதிகளிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மதுரைக்கு 142 நோயாளிகளும், சேலத்தில் 139 நோயாளிகளும் உள்ளனர்.\nராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில், டீன் ஈ.தேரானிரஜன், தினமும் 10 முதல் 20 நோயாளிகள் மியூகோமைகோசிஸ் கிளினிக்கில் கலந்து கொள்கிறார்கள் என்றார்.\nமியூகோமைகோசிஸால் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு தற்போதைய மருந்துகள் வழங்குவதன் மூலம் சிகிச்சை அளிக்க முடிந்தது என்று அரசு மருத்துவமனைகளில் அதிகாரிகள் தெரிவித்தனர்.\nஒரு மூத்த மருத்துவர் கூறுகையில், மாநிலத்திற்கு வழங்கப்பட்ட லிபோசோமால் ஆம்போடெரிசின்-பி குப்பிகளின் எண்ணிக்கை “துக்ககரமாக குறைவாக” உள்ளது. ஒவ்வொரு நோயாளிக்கும் 50 முதல் 60 குப்பிகளை தேவைப்படுகிறது. “வழங்கல் சிறிய எண்ணிக்கையில் வருகிறது. லிபோசோமால் ஆம்போடெரிசின்-பி கிடைக்கவில்லை என்றாலும், ஆம்போடெரிசின்-பி குழம்பு. முந்தையவற்றில் குறைந்த நச்சுத்தன்மை உள்ளது. குழம்பு ஒரு மாற்றாகும், ஆனால் கவனமாக நிர்வாகம் தேவை. நோயாளிகளில் சிறுநீரக செயல்பாட்டை நாம் கண்காணிக்க வேண்டும். எங்களுக்கு தேவையானது லிபோசோமால் ஆம்போடெரிசின்-பி, ”என்று அவர் கூறினார்.\nமதுரை எம்.பி. சு. தமிழகத்துடன் ஒப்பிடும்போது கர்நாடகாவிற்கு அதிகரித்த மருந்து ஒதுக்கீட்டை சுட்டிக்காட்ட வெங்கடேசன் புதன்கிழமை ட்விட்டருக்கு அழைத்துச் சென்றார். கர்நாடகா, இதுவரை கிட்டத்தட்ட 40,000 குப்பிகளைப் பெற்றுள்ளது என்றார். “மத்திய மந்திரி சதானந்த கவுடா, சமீப காலம் வரை, மாநில வாரியாக பல வழக்குகளை வெளியிட்டு, குப்பிகளை ஒதுக்கீடு செய்தார். இது நிறுத்தப்பட்டுள்ளது. இந்திய அரசுடன் வெளிப்படைத்தன்மை இல்லை. ஒதுக்கீடு குறைந்தது வழக்குகளின் எண்ணிக்கையில் விகிதாசாரமாக இருக்க வேண்டும். தற்போதைய ஒதுக்கீடு மிகவும் சார்புடையது, ”என்றார்.\nஉள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க நேரம் எடுக்கும் என்பதால் இந்த மருந்தை இறக்குமதி செய்யுமாறு மத்திய சுகாதார அமைச்சருக்கு ஏற்கனவே கடிதம் எழுதியுள்ளதாக அவர் கூறினார்.\nவழக்குகளைப் பொருத்தவரை, மெட்ராஸ் ஈ.என்.டி ஆராய்ச்சி அறக்கட்டளையின் நிர்வாக இயக்குநரும், மியூகோமிகோசிஸிற்காக மாநில அரசால் அமைக்கப்பட்ட பணிக்குழுவின் உறுப்பினருமான மோகன் காமேஸ்வரன், “வழக்குகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு உள்ளது, நாங்கள் இன்னும் இருக்கிறோம் நோயாளிகளைப் பார்ப்பது. இது பொதுவாக COVID-19 க்கு வெளிப்பட்ட சில வாரங்களுக்குப் பிறகு நிகழ்கிறது. எனவே இது தொற்றுநோயைப் பின்தொடர்ந்து சிறிது நேரம் கழித்து நனைக்கும். ”\nஇருப்பினும், நோயாளிகள் இன்னும் தாமதமாக வருகிறார்கள் என்று அவர் கூறினார். “பார்வை இழப்புடன் வந்த நோயாளிகளை நாங்கள் பெற்றிருக்கிறோம். COVID-19 இலிருந்து மீண்டு வரும் நோயாளி, நீரிழிவு நோயாளியாகவும், ஸ்டெராய்டுகளில் இருந்தவராகவும் இருந்தால், முகம், சைனஸ்கள், கண்களைச் சுற்றி அல்லது கண்களுக்குப் பின்னால் ஒரு வாரம் அல்லது இரண்டு நாட்களுக்குப் பிறகு வலி ஏற்பட்டால், அவர்கள் உடனடியாக மருத்துவ உதவியை நாட வேண்டும், ”என்றார்.\nமருத்துவ மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மா. வியாழக்கிழமை மாலை செய்தியாளர்களிடம் பேசிய சுப்பிரமணியன், மாநிலத்திற்கு ஒதுக்கப்பட்ட லிபோசோமல் ஆம்போடெரிசின்-பி குப்பிகளின் எண்ணிக்கை 9,520 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.\nஐ.சி.எம்.ஆர் வழிகாட்டுதலின்படி பரிந்துரைக்கப்பட்ட 90,000 போசகோனசோல் மாத்திரைகளுக்கு அரசு பணம் செலுத்தியுள்ளது என்றும் அவர் கூறினார். “இவற்றில் 42,000 பெற்றுள்ளோம். எங்களிடம் 39,500 மாத்திரைகள் உள்ளன, ”என்று அவர் மேலும் கூறினார்.\ndaily newsworld newsஅதகஇலசெய்திடஎனதவமயகமகசஸமரநதகளவழகககள\nPrevious Post:இந்தியா 91,702 கோவிட் வழக்குகள், நேற்றையதை விட சற்றே குறைவு; 3,403 மரணங்கள்\nNext Post:பிளாக் லைவ்ஸ் மேட்டர்: பிரிட்டனின் ஜான்சன் 19 ஆம் நூற்றாண்டின் ஒழிப்புவாதி ஃபிரடெரிக் டக்ளஸின் பிடென் சுவரோவியத்தை பரிசாக வழங்கினார் | உலக செய்திகள்